ஈழநூல் 065  
நூல் 

பனியும் ப்னையும் (பகுதி 1,  பகுதி 2)

ஆசிரியர்

எஸ். பொ., இந்திரா பார்த்தசாரதி (தொகுப்பாளர்கள்)

மின்னூலாக்கம்

இ. பத்மநாப ஐயர்

மின்பதிப்பு ஈழநூல்

பனியும் பனையும்

தொகுப்பு: இந்திரா பார்த்தசாரதி, எஸ்.பொ.

பகுதி 2

-----------------------------------------------------------------

அடுத்த தரிப்பு

__________________________________

லோகா
__________________________________

நித்திரையும் விழிப்பும் யாருக்கு வேண்டியிருக்கிறது? இந்தியாவில் இரண்டு வருட அகதி வாழ்க்கையில் எத்தனை அனுபவங்களை...

இந்தப் பயணங்கள் நளினிக்கு என்றுதான் முடியுமோ?

இன்றைய காலை நளினிக்கு பஞ்சாப்பில் விடிகிறது. நேற்றைய பயணத்தின் அசதியில் படுத்திருக்க சுகமாகத்தானிருக்கிறது.

எதிரே லதா படுத்திருக்கிறாள்.

'எழும்புவமே?'

'இப்ப எழும்பினா ரொயிலற்றுக்கு கியூவிலதான் நிக்கோணும். ராத்திரி வந்த சனமும் இப்ப எழும்பி நிற்கும்.'

'அம்மாவிற்கு கடிதம் ஒன்று எழுதோணும்...'

எத்தனை நாளைக்கெண்டு பொய்யைப் பொய்யை எழுதுவது? இரண்டு நாளில் போயிடலாம் எண்டுதான் ஏஜென்ஸ’ நம்பிக்கையூட்டினார். இப்ப மூன்று மாதமாய் டெல்ஹ’, பம்பாய் என்று இழுபட்டாச்சு. ஆனாலும், 'எங்கு நிண்டாலும் கட்டாயம் கடிதம் போடுபிள்ளை'

என்று அம்மா சொல்லி விட்டது...

அம்மாவை நினைக்கப் பரிதாபமாக இருக்கிறது.

அந்த அறையின் ஒரு மூலையில் அவர்கள் கொண்டு வந்திருந்த சூட்கேசுகள் திறப்பாரற்றுக் கிடந்தன. கையோடு வீட்டிற்குக் கடிதம் எழுதவெனக் கொண்டு வந்த 'ஏரோக்கிராம்'களும் கசங்கிய இந்திய ரூபாய்களும் மேசைமீது கிடந்தன.

சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கலண்டரில் பஞ்சாபி உடையில் தண்­ர் அள்ளிக் கொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணின் காட்சி. நேற்றிரவு இந்த ஹோட்டேலுக்கு வந்தபோது அந்தக் கவுண்டரில் இருந்தவன் பார்த்த பார்வை, இன்னும் ஏதோ சந்தேகமாகவும் பயமாகவும் இருந்தது.

டெல்ஹ’யில் நின்று போது அவளின் முன்னும் பின்னும் திரிந்த ஏஜென்ஸ’க்கு காசு கட்டிய பொடியன்களின் பாடல்களும், நக்கல் கதைகளும், சிலவேளை ஏஜென்ஸ’க்காரனின் ஒருவித பார்வையும் பெரும் நரகம். ஒரு பெண்ணின் விருப்பு வெறுப்புக்களை அறியாது அவளைக் கட்டிலுக்கு அழைக்கும் ஆண்களின் வெட்கமற்ற தனமும் அவளை அருவருக்க வைத்திருக்கின்றன.

தொடர்ந்து வரும் அவமானங்களினால் பெட்டி படுக்கைகளை எறிந்துவிட்டு சென்னைக்கு அம்மாவிடம் ஓடி விட வேண்டும் போல் இருந்தது. பயணம் புறப்பட்டபின்னர் ஒவ்வொரு இரவுகளும் பயத்துடன்தான் கழிகின்றன. எங்களோடு வந்த பொடியன்களும் சரி, ஏஜென்ஸ’யும் சரி, இவர்களுடன் போய்த் தங்கும் இடங்களின் ஆண்களும் சரி, எல்லோருமே வெறும் இச்சைக்கு அலையும் ஆண்களாகவே தெரிகின்றனர். தாய்க்குலம், தாய்க் குலம் என்று வாய்கிழியக் கத்தும் இந்திய மண்ணிலும் இந்த ஆண்களின்...

நேரம் இரவு பதினொன்று ஆகிவிட்டது. லதாவும், நளினியும் இந்த மூன்று மாதகாலங்களில் இருவர் பற்றிய தங்கள் அனைத்தும் செய்திகளையும் பரிமாறிக் கெண்டனர்.

ஜேர்மனி, பிரான்ஸ’லிருக்கு அண்ணன்மார்கள், அந்த இடங்களில் கலியாணம் பேசியிருக்கும் பொடியன்கள் பற்றிய தெரிந்த தகவல்கள் இன்னும், இன்னும்...

ஆனால் பேசிக்கொள்ள இன்னும் ஏதோ இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அடுத்த தரிப்பு பாகிஸ்தானாம்...

வெளியே யாரோ கதவை அண்மிக்கும் சத்தம் கேட்கிறது. மிக மெதுவாக இவர்களின் அறைக் கதவு தட்டப் படுகிறது. இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள மட்டும் முடிகிறது.

கதவை யார் தட்டினாலும் திறக்க வேண்டாம் என்று ஏஜென்ஸ’ வேறு சொல்லியிருக்கிறார்.

இவர்களின் ரிக்கற் விடயம் சரிவந்தால் இரவு வந்து சந்திப்பதாக ஏஜென்ஸ’ சொல்லி விட்டிருந்தார். அவராயிருக்குமோ?

'ஏஜென்ஸ’ 'என்று லதாவைப் பார்த்து வாயசைத்தாள் நளினி.

'ஊகூம், ஊகூம் பொடியள்' என்று மெல்லியதாக மறுதலித்தாள் லதா.

ஏஜென்ஸ’, அல்லது பொடியள் என்றால் கட்டாயமாகப் பேர் சொல்லியிருப்பார்கள்...

நீண்டநேர இடைவெளிக்குப்பின் மீண்டும் கதவு தட்டப் படுகிறது.

"யார்" எனக் கேட்டாள் நளினி. எதுவித பதிலுமில்லை. ஆனால் தொடர்ந்து தட்டப்பட்டது கதவு.

ஒருவித துணிவை வரவழைத்துக் கொண்டு கதவைத் திறந்தாள் நளினி.

அதே பஞ்சாப்காரன் அதிகாரத்துடன் அறைக்கதவைப் பூட்டினான்.

தொல்லை இரவுகள் மீண்டும் தொடர்கின்றன. இவனிடமிருந்து தப்பித்துக் கொண்டு இன்னும் எத்தனை, எத்தனை இரவுகளும் தப்பித்துக் கொள்ளலும்?

அகதி அ...

_______________________________

செல்வமதீந்திரன்
_______________________________

நான் சுவிஸ் வந்து ஐந்து முழுமையாக முடியவில்லை. அதற்கும், இன்னும் சில மணிநேரங்கள் பாக்கியிருக்கிறது. சுவிஸ் வந்தவுடன் முதல் வேலையாக மறக்காமல் மனைவிக்கொரு லெட்டர் எழுதினேன். அதுவும் முகவரியில்லாமல்தான் எழுதினேன். ஏனென்றால், இன்னமும் எனக்கு முகவரி தரவில்லை. எனது முகத்தை யவர்கள் முழுமையாக நம்பவில்லை. நம்ப வைப்பதில்தான் நான் இங்கு இன்னும் சிலகாலம் நிரந்தரமாக இருப்பது உறுதியாகும். அதன் பின்னர் மனைவியைப் பற்றிய முடிவினை மறுபரிžலனை செய்ய முடியும்.

எதெப்படியிருந்தும், இப்போது அரை மணித்தியாலத்துக்கு முன்னர், தற்காலிக முகவரி கொடுத்து 'அகதிகள் திணைக்களம்' எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தின் வாசகம் மனதுக்குள் ஒரு சின்ன அதிர்ச்சியையும், மறைக்க முடியாமல் முகத்திலொரு முனகலையும் ஏற்படுத்தியது. என்றாலும் அகதியந்தஸ்து வழங்கி ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை தளரவில்லை. ஏனென்றால், என்பக்கம் நிஜங்களை நிறுத்தியிருக்கின்றேன். அவற்றை நிரூபிப்பதுதான் எனது பொறுப்பு. இதில் பொறுமையும் தேவை. அறிவை அதிகளவு பயன்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. வந்துள்ள கடிதத்தின்படி, 'நாளை காலை 9,20 க்கு அகதியந்தஸ்து வழங்கும் அதிகாரியை நான் சந்தித்தேயாகவேண்டும்! குறிப்பிட்ட நேரத்துக்கு நேர்முகப் பரீட்சை நடைபெறும். அதில் எந்தவித மாற்றமுமில்லை. எப்படித்தான் இரவு தூக்கம் வந்ததோ தெரியாது. தூங்கிவிட்டேன்.

காலையில் எழுந்து கடிகாரத்தை பார்த்தேன் 9.05. இன்னும் பதினைந்து நிமிடத்தில் அகதிகள் திணைக்கள அதிகாரியின் அலுவலகத்துக்கு முன்னால் நின்றேயாக வேண்டும். பஸ்சில் போனால் ஐந்து நிமிடத்தில் போய்விடலாம். ஆனால் பஸ்சில் போகுமளவுக்கு மொழி தெரியாது. பரட்டைத் தல வளர்த்த பழைய 'காய்கள்' தான் (முதல் வந்த தமிழர்கள்) பஸ்சில் போவதாம். இருந்தும் ஆங்கிலத்தில் கதைத்தால் அதுவும் ஒரு சிலருக்குத்தான் புரியும். அதனால் ஓரளவு இலக்கை வைத்துக் கொண்டு அகதிகள் திணைக்கள அலுவலகத்தை நோக்கி நடந்து இடத்தை நெருங்கி விட்டேன். இன்னுமொரு நிமிஷத்தில் சென்று விடலாம். எதிரே தெரிந்த மணிக்கூட்டுக் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தேன். மைகாட்! குறிப்பிட்ட நேரத்துக்கும் ஒரு நிமிஷந்தானிருந்தது. வீதியை குறுக்கறுப்பதற்காக பச்சைச் சிக்னல் விழும்வரை பார்த்து நின்றேன். அதற்குள் மனசு பரபரக்கிறது. ஏற்கனவே 'கறுப்பர்களை' அவர்களுக்கு பிடிககாது. ஆனால், எங்கள் கருத்து அவர்களைக் கவருமா? கலியுகத்திலது நடக்காது. இதில் தாமதமானால்...இல்லை இது என் வர்ழக்கையின் தாமதம். சடாரென்று வீதியால் முன்னேறினேன். வேகமாகப் போன வாகனங்கள் பிரேக் போட்டு நின்று கோன் பண்ணின.

அலுவலகத்தின் முன்னறையை அடைய, எதிரே நின்ற வெள்ளைக்காரனிடம் வெறுப்பான பார்வை. 'வெளிநாட்டான் எங்களுடைய நாட்டை பழுதாக்கின்றான்' என்னும் அர்த்தத்தை அவரின் பார்வை படம்பிடித்திருந்தது. இருந்தும் எனக்கு அவசரம். உடனே கடிதத்தைக் காட்டினேன். அவரோ டொச்சில் சொன்னார். எனக்கு புரியவில்லை. அவருக்கும் தெரியும், இது இவனுக்குப் புரியாது என்பது! இருந்தும் ஏனிந்த இறுமாப்பு? கைவிரலால் சுட்டிக் காட்டினார்: 'அது தான் போக வேண்டிய அறை.'

கதவை மெதுவாக இரண்டு தடவைகள் தடடினேன். ஜேர்மன்மொழியில் ஏதோ சொன்னார்கள். புரியாததால் மீண்டும் தட்டினேன். 'யெஸ் கம் இன்' கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தபோது, மிடுக்கான அலங்காரத் தோரணையில் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த அதிகாரியிடமிருந்து 'குட்தன் மோர்க்கன்' (காலை வணக்கம்) பறந்து வந்தது. ஓ...மொழிப் பற்றா? இல்லை பண்பாடா? எது எப்படியிருந்தால் எனக்கென்ன? அதிகாரி தன்னை 'அல்வின்' என்று கைகுலுக்கிக் கொண்டார். நானும் என்னை 'சுகந்தன்' என அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

'ப்ளீஸ் சிட்டவுன்.'

'தங்க்கியூ சார்.'

'மிஸ்டர் சுகந்தன்.'

'யெஸ்சார்.'

'நீங்கள் எங்களது மொழி பெயர்ப்பை தேவையில்லை என்றீர்கள்.'

'ஆம்.'

'ஏன் எதற்காக?'

'என்னால் உங்களது கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியும். அதனால், இன்னொரு தமிழ் மொழி பெயர்ப்பாளர் தேவையில்லை. மேலும் என் பிரச்சனைகளை இன்னுமொருவர் அறிந்து கொள்வதை நான் விரும்பவில்லை.'

'வெரிகுட்...உங்களது பிரச்சினை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததா?'

'ஆம். அதை முடிவெடுப்பது உங்கள் கையில்.'

'நன்றாக பேசுகின்றீர்கள்...என்ன வேல€ செய்தீர்கள்?'

'நானொரு பொறியிலலாளன்.'

'ஏன் வேலையை விட்டீர்?'

'பிடிக்கவில்லை.'

'காரணம்?'

'அரசியல் தலையீடுகள் அதிகம்.'

'எப்படியான அரசியல் தலையீடுகள்?'

'எனது உயிருக்கு ஆபத்தான...!'

'எந்த வகையில் ஏற்பட்டது?'

'எனது தலைமையில் இயங்கிய இயந்திர பொறியியல் பகுதியில் சில சம்பவங்கள்.'

'நீங்கள் நாட்டைவிட்டு வெளியேறுமளவுக்கு அவை எவ்வாறு பாதித்தது?'

'எனது பொறியியல் பகுதிக்கு வருமானம் அதிகம். அவற்றில் அரசியல்வாதிகள் மறைமுகமாக பங்கு கேட்டனர்.'

'அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?'

'தரமுடியாது என்றேன்.'

'அவர்கள் என்ன சொன்னார்கள்?'

'தம்பிக்கு உயிர்மீதாசையில்லைப் போலென்றார்கள்.'

'பின்னர்...?'

'ஒரு மாதம் எந்தத் தலையீடுமிருக்கவில்லை.'

'அதற்குப் பின்னர்...?

'எனது இயந்திரங்கள் எரிக்கப்பட்டன.'

'எத்தனையாம் திகதி?'

'இதோ' என்று பேப்பர் கட்டிங்கைக் கொடுத்தேன்.'

'தங்க்கியூ' பெற்றுக் கொண்டார்.

'இதைவிட வேறு ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டதா?'

'ஆம். அதில் இரண்டு வகையான நிகழ்வுகளை எதிர் நோக்கினேன். நான் புரட்சிகர அமைப்புகளுக்கு ஆயுத உற்பத்திகளைச் செய்ததாக அரசு சார்பான பத்திரிகைகள் பொய்ச் செய்திகளை பிரசுரித்து...இயந்திரங்களை எரித்து ஒரு வாரங்களுக்குப் பின்னர் எனது வீட்டிற்குள் இனம் தெரியாத ஆயுத பாணிகள் புகுந்து வீட்டை நொருக்கினார்கள். நானும் மனைவியும் தலைமறைவாயி, ஓடி தப்பினோம். அதற்கு அடுத்த மூன்று நாட்களும் தொடர்ச்சியாக என்னைத் தேடி வலை விரித்தார்கள். மனைவியையும் அழைத்துக் கொண்டு நான் சிறிய காட்டுப்பகுதி ஒன்றில் தலைமறைவாக இருந்தேன்.'

'உங்களுக்கு தாய்நாட்டில் உயிர்வாழ முடியாத பிரச்சனை...'

அதனை ஆமோதித்தேன்.

'அங்கு வாழும் ஏனைய மக்களுக்கு பிரச்சனையில்லையா?'

'பொதுவாக பிரச்சனைதான்.'

'அப்படியானால் அவர்கள் ஏன் வெளியேறவில்லை?'

'அவர்கள் வெளியேற்றத்தை விரும்பாமலிக்கலாம்.'

'அப்படியானால், அவர்களுக்கு உயிர்வாழ ஆசையில்லையா?'

'அவரவரைப் பொறுத்த சில பிரச்சனைகளிருக்கலாம்'

'அதாவது எதனைச் சொல்ல வருகிறீர்கள்?'

'இதையவர்களிடம் கேட்க வேண்டும்.'

அல்வினில் முகம் மாறியது. ஆனால் அவர் மாறவில்லை. அதனை மறைக்க முனைந்தார்.

'மிஸ்டர் சுகந்தன், ஒரு உண்மையான அகதி எப்படியிருப்பானென்று சொல்ல முடியுமா?'

'நிச்சயமாக இப்படித்தான் இருக்க வேண்டுமென்றில்லை.'

'எங்கள் நாட்டுக்கு வருமகதிகளை பெரும்பாலும் இரண்டாக பிரித்துள்ளோம். அதாவது அரசியலகதி-பொருளாதாரகதி என்று. இதில் நீங்கள் எந்த ரகம்?'

'நிச்சயமாக நான் பொருளாதாரகதி யில்லை.'

இதனை என்னால் நிரூபிக்க முடியும். இதில்தான் எனது சாமர்த்தியமே தங்கியுள்ளது.' நான் சொல்லி முடிப்பதற்கிடையில் அல்வின் குறுக்கிட்டார். 'எங்கள் நாட்டில் 10 சுவிஸ்பிரஜைக்கு 3 அகதிகள் என்ற வீதத்தில் கணிப்பீடிருக்கிறது. அகதிகளில் உண்மையான அகதியை தேர்ந்தெடுத்து அவருக்கே அகதியந்தஸ்து வழங்க முடியும். நீங்கள் உண்மையைச் சொல்லுங்கள்.'

'உண்மையிலே நான் அரசியலகதி.'

'ஓ.கே. மிஸ்டர் சுகந்தன். உங்களுக்கு அரசியல் பிரச்சனை என்கிறீர்கள்...அப்படியானால்...உங்கள் மனைவிக்கு பிரச்சனையில்லையா?'

'மனைவி என்பதால் எனது பிரச்சனையின் பாதிப்பு.'

'ஏனவர் நாட்டைவிட்டு வெளியேறவில்லை?'

'அதற்கு பலகாரண முண்டு.'

'அதனை சொல்ல முடியுமா?'

'முடியும். மனைவி காப்பவதி. அதனால் பிரயாணம் பண்ண முடியாது...அதுவும் இப்போது மறைவிடம் ஒன்றில் வாழ்கிறார்...'

'அதே போல் உங்களால் ஏன் மறைந்திருந்து வாழ முடியாது?'

'எனது முகம் எல்லோருக்கும் பரிச்சயம்.'

'உங்கள்மனைவியழகானவரா?'

'இது அநாவசியமான கேள்வி.'

'அவசியத்துடன் கேட்கின்றேன். மனைவியின் பரத நாட்டியம் பார்த்த பத்திரிகையாளர்கள் சிறந்த அழகியென்று எழுதினார்கள். உங்களை விட உங்கள் மனைவியின் முகம் எல்லோருக்கும் பரிச்சயம். மிஸ்டர் சுகந்தன், உளவியல் ரீதியாக பார்க்கும் போது ஆண்களைவிட அழகிய பெண்களைத்தான் அதிகம் நினைவு வைத்திருப்பார்கள். இதுகூட உங்களுக்குத் தெரியாதா?'

நான் மௌனம் சாதித்தேன். 'உங்கள் மனைவிக்கு பிரச்சனையில்லை. உங்களுக்கு பிரச்சனையில்லை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள்?' என்று என்னை மடக்கிய தோரணையில் அல்வின் பேசியபோது எலாரம் அலறியது. மணி 11.30 'மீண்டும் 12 மணிக்கு தொடரலாம்...' என்று கைகுலுக்கிக் கொண்டு சாப்பிடச் சென்று விட்டார்.

முளைத்த தாடியைத் தடவிக் கொண்டு வெளியில் வந்த போது, எதிரே இருந்த பார்க் கண்ணில் பட்டது. கிட்டத்தட்ட என்னைப் போல் முகம் இழந்த அகதியாக, ஒரு நீளக்கதிரை, சருகுகள் மத்தியில் அனாதரவாக இருந்தது. அதுவும் இன்னொரு வகையில் என்னைப் போல்! அனாதைகளுக்கு அனாதைகள் தான் ஆறுதல் சொல்வார்கள் என்பதுபோல சருகைத் தட்டிவிட்டு கதிரையின் மேல் அமர்ந்தேன்.

'ஏங்க ..! எனக்கு இரண்டு தரம் மாரடைப்பு வந்து மயிரிழையில் தப்பிவிட்டேன். அதற்குள் வயிற்றில் குழந்தை. இதோட எனது வெளிநாட்டுப் பயணம் பயங்கரமானது. எதுக்கும் முதல்ல நீங்க வெளிநாட்டுக்கு போங்க. அப்போது எனக்கு நிம்மதி இருக்கும். நீங்கள் ஏதாவது ஒரு நாட்டுக்கு போன பின் அங்கு நிலமையை விளக்கி...வெளிநாட்டுத் தூதரகத்தின் மூலம் உங்களிடம் வரலாமுங்க...' மனைவியின் வார்த்தைகளிலே மிதந்தேன்.

கடிகாரம் 12.00 யைக் காட்டியது. அலுவலகத்துக்குள் நுழைந்தேன். அல்வின் அகம் மலர வரவேற்றார். எனக்குள்ளொரு சின்னத் திருப்தி. அகதியந்தஸ்து வழங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது. அப்போது அறைச் சுவர்களை அவதானித்தேன். சக்தி வாய்ந்தமைக் வகைகள் பொருத்தப் பட்டிருந்தது. இது எதற்கு என்பதுபோல் பார்த்தேன். அல்வினதனை புரிந்து கொண்டவர்போல் விளங்குகிறார். 'இந்த அறையினுள் நாம் உரையாடிய அனைத்தும் இன்னு ஏழு உயரதிகாரிகளுக்கு கேட்கும். அதனை வைத்து அவர்கள் என்ன முடிவு எடுப்பார்களோ தெரியாது? இப்போது உங்கள் பிரச்சினை ஆய்வு செய்யப்படுகின்றது. ஆனால் முன்னர் எல்லாம் ஆறுதலாகத்தான் அகதிகளின் விண்ணப்பங்களை விசாரிப்பது. இப்போது அகதிகள் அதிகம் வருவதால் உடனுக்குடன், விசாரணையை நடத்தி முடிவைச் சொல்லி விடுகிறோம்...'

றிங்...றிங்...!

அல்வின் தொலைபேசியை காதோடு கட்டியணைத்துக் கொண்டார். மறுமுனையில் ஆங்கிலத்தில் அதிகாரி ஒருவர் பேசினார். அவரது பேச்சு எனக்கு நன்றாக கேட்டது. 'மிஸ்டர் சுகந்தனுக்கு அகதியந்தஸ்து வழங்குவதில் சில பிரச்சனைகளுள்ளன. சுகந்தன் உண்மையான அகதி என்பது ஒரு பக்கம் உறுதிப் படுத்தப் படுகிறது. அடுத்த பக்கம் அரசியலில் அவருக்கு நிறையப் பிரச்சனைகளிருக்கின்றன. நமது அகதிகள் சட்டப்படி சுகந்தனுக்கு தஞ்சம் கொடுக்கும் பட்சத்தில் அவரது மனைவியை நமது தூதரகத்தின் மூலமாக அழைக்க வேண்டும். இதனை நாம் செய்வோமானால் அந்நாட்டு அரசாங்கத்துடன் சில மன முடிவுகளை சந்திக்க நேரிடலாம். அத்தோடு சர்வதேசச் சந்தையிலும் நாம் சில இழப்புகளை எதிர்கொள்ள நேரலாம்...இவற்றைச் žர்தூக்கிப் பார்த்து, சுகந்தனுக்கு அகதி அந்தஸ்து வழங்க முடியாது...' தொலை பேசி துண்டிக்கப்படுகிறது.

வரம்

______________________________

ஆதவன், க
______________________________

அவள் நிமிர்ந்து கிடந்தாள். நான் அதிர்ந்து போனேன். மயக்கமாய்...பேச்சுமூச்சற்று...! கீழ்ச் சொண்டு பெரிதாய் மொத்தமாய்த் தெரிந்தது! கண்கள் மேலே சொருகி இருந்தது. பயத்தை மேலும் அதிகரித்தது. கட்டிலின் மெத்தை தொக்கையாய் இருந்தது. ஆஸ்பத்திரி மணம் மூக்கைப் பிடுங்கியது. வெள்ளைநிற தாதிகளும் டொக்டர்களும் சுற்றிவர நின்று குசுகுசுத்தார்கள். மார்பகங்கள் இயக்கமேதுமிலாது இடமும் வலமுமாய் சிதைந்து தன் பாட்டில் கிடந்தன. அரை நிர்வாண கோலத்தில் அவளைக் கிடத்தினார்கள்.

காலையில் ஒன்றும் நடக்கவில்லை. இது நடந்து 2 மணிநேரம் இருக்கும். என்னவளைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது. அனாதரவானவள் போல்-யாருமற்ற அனாதைப் பிரேதம்போல்-கட்டையாய்...ஒருசருகாய்...கிடந்தாள்.

வேர்த்துக் கொட்டியது எனக்கு!

வேலை முடிந்து வந்த நான்-பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சேதியறிந்து துடித்துப் பதைத்து வந்து...ஆஸ்பத்திரி தேடி ward தேடி...வந்து பார்த்தபோது கண்ட தரிசனம்-இது.

ஒன்றுமே புரியவில்லை. யாரைக் கேடகலாம்? டொக்டரைக் கேட்கலாம். கேட்டேன்.

'You are Lucky' என்றார்.

'ஏன்?'

'கொஞ்சம் பிந்தியிருந்தால் ஆளைக் காப்பாற்றியிருக்க முடியாது' என்றார்.

'உற்பத்தியான கரு, கருப்பையில் தங்கவில்லை. வேறொரு குழாயில் தங்கியிருந்தது. அந்தக் குழாய் கருவைத் தாங்கும் வல்லமையற்றது. அது வெடிக்கும்! வெடித்தால் அது நஞ்சாகும். நஞ்சினை இரத்த நாடிகள் உடலெங்கும் கொண்டு செல்லும், உடலே நஞ்சாகும். பின்னர் ஆள் தப்புவதற்கான chances 0.01% தான்.

'எல்லாம் விளங்கிவிட்டேன் டொக்டர்' என்று மட்டும் சொன்னேன்.

ஆச்சரியமாய் இருந்தது எனக்கு. எல்லாம் தான். விளக்கமும்தான்.

'இதுக்கு என்ன வழி?'

அந்தக் குழாயை வெட்டவேண்டியது தான்.'

'வெட்டியாச்சோ?'

'இப்ப 1 மணித்தியாலமும் 38 நிமிசமும் ஆகுது' என்றார் சிரித்தபடி.

'இனி?'

'பிள்ளை பிறக்கிறதுக்கான chances ஐக் கேக்கிறீரோ?'

'--'

மனித உடலின் அமைப்பு இனப் பெருக்கத்திற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு குழாயை வெட்டினால் மறு குழாயிற் கூடாககருக்கட்டல் நடக்கும். 50% chances உண்டு. ஆனால் உம்மடை wife வின்ரை மற்றக் குழாயும் சற்றுப் பழுதடைந்துள்ளது இதனால் chances 12% வீதம்தான்.' நான் கேட்காமலே சொல்லி முடித்தார். எனக்கு ஏதோ வீதக் கணக்குப் படிப்பிப்பது போல் பட்டது.

எனினும் இனி குழ நதை கிடைக்காது என்பது மட்டும் ஏனோ தெளிவாய்த் தெரிந்தது.

எவ்வளவு ஆர்வத்துடனும் ஆசையுடனும் இருந்தாள் அவள். ஆண் குழந்தையே பிறக்குமெனத் திடமாக நம்பினாள். பெயர் வைப்பது வரை அவள் மனக் கோட்டை கட்டியிருந்தாள். பிள்ளைக்கான துணி மணிகள் சேகரிப்பதிலும் ஆர்வங் காட்டியிருந்தாள். அவளுக்கு இப்பிடி நடந்திருக்கக் கூடாது என மனம் சொல்லிற்று.

எப்படியெனினும் அவளைத் தேற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்துக் கொண்டேன். அவள் கண்விழிக்க இன்னும் 2 மணி நேரமாவது செல்லும் என்றான். தலையில் பெரிய வெள்ளை நீத்துப்பெட்டி போன்ற ஒன்றைக் கிளிப்" பண்ணிக் கொண்ட தாதி, அவள் தான் அங்கு பெரிய தாதியாக இருக்க வேண்டும். இல்லையெனின், அவளது குரலில் இவ்வளவு உறுதி தொனித்திருக்காது.

என்னவளின் தலையை மட்டும் ஒரு பாவியாய் வெளியே வருடிவிட்டு visiting hallலந்து 2 சிகரட்டுகளை ஒன்றன் பின் ஒன்றாகப் பற்றினேன்.

இரண்டு வாரங்கள் கழித்து ஆஸ்பத்திரியிலிருந்து கைத்தாங்கலாக அவளை Taxi யில் ஏற்றி வீட்டை நோக்கி வருகையில், 'உங்களுக்கு ஒரு Present வாங்கி வைச்சிருக்கிறேன். வீட்டை வந்து பாருங்கோ' என்றேன்.

'என்னது' என்றாள் சொண்டுகளை நாக்கால் நனைத்தபடி.

Taxi வீடு வரும்வரை அவள் துருவித்துருவிக் கேட்கவே இல்லை. முன்னை மாதிரி இருந்திருந்தால் இந்நேரம் நான் சொல்லியே விட்டிருப்பேன். அவ்வளவுக்கு என்னைத் துளைத் தெடுக்காமல் விட்டிருக்க மாட்டாள். அவளது இந்த நிலைக்காக நான் மிகவும் அனுதாபப்பட்டேன். இந்த 'அதிர்ச்சி' அவளை நன்றாகப் பாதித்து விட்டதை உணர்ந்தேன்.

வீட்டில் வந்து ஆற அமர இருந்த பின்னர்தான் கேட்டாள்.

'என்ன உங்கடை Present?'

முன்னால் இருந்த room ஐச் சுட்டிக் காட்டி 'அங்கை போய்ப் பாருங்கோ' என்றேன். நானும் பின்னால் தொடர்ந்தேன்.

கறுப்பு வெள்ளையில் ஒரு பெரிய கடதாசிப் பெட்டியின் மூலையில் அழகிய சிறிய பூனைக்குட்டி உறங்கிக் கொண்டிருந்தது.

'ஐயோ நல்ல வடிவப்பா' என்றபடி ...மலர்ந்தபடி பூனைக்குட்டியைத்தூக்கித்தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.

அவளின் சந்தோஷத்தில் நானும் என் தெரிவு பற்றிப் பெருமிதப் பட்டுக் கொண்டேன்.

'இது கடுவனோ பெட்டையோ' என்று கேட்டாள்.

'கடுவன்தான்' என்றேன் சிரித்தபடி.

'என்ன பேர் வைப்பம்?'

'சும்மா எல்லாரும் வைக்கிறது மாதிரி 'ஜிம்மி' 'ஜாக்கி' 'ரொமி' எண்டு வைக்காமல் தமிழ்ப் பேரொண்டு வைப்பம்' என்றேன்.

'ராஜா' என்று சொல்லிவிட்டு செல்லமாய் அதன் முகத்தருகே தன் முகத்தைக்கொண்டு சென்றாள். அது 'மியாவ்' என்றது தன் மழலையில் நாங்களிருவரும் எங்களை மறந்து சிரித்தோம்.

'ராஜா' நாம் இருவர் என்ற நிலையை நாம் மூவர் என்று மாற்றினான். துள்ளித் துள்ளி...அங்கம் இங்கும் ஓடித் திரிந்தான். T.V.க்கு மேலே பாய்ந்து ஒரு அழகிய ம்ண் சிலையை உடைத்து எங்களிடம் தாறுமாறாக ஏச்சுவாங்கினான்.

முகத்தைக் கைகளால் பொத்திக் கொண்டு விரல் இடுக்குகளால் பார்த்தாலும், தன்னைப் பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான். தனது உணவைத் தானே கேட்டுப் பெற்றுக் கொண்டான்.

பல ஏக்கங்களை இல்லாமற் செய்தான்.

ஒருநாள் எங்கள் வீட்டுக்கு ஒரு முதியவர் வந்தார். அவருக்கு மிருகங்களைப் பற்றி நன்கு தெரியும். அவர் 'ராஜா'வை உற்று பார்த்தார். நாங்களும் அவரைப் பார்த்தோம். அவர் ராஜாவைத் தூக்கிக் கால்களை அகட்டிப் பார்த்தார். 'பெட்டைப் பூனைக்கு ராஜா எண்டு பேர் வைக்கலாமோ' என்றார். நாங்கள் அதிர்ந்து போய் ஆளையாள் பார்த்தோம். 'பெட்டைப் பூணையளை வீட்டிலே வைச்சிருக்கக்கூடாது' என்றார். நாங்கள் ஆளையாள் பார்த்தோம். என்ன செய்வதென்று தெரியவில்லை. என்னவள் ஓடிச்சென்று 'ராஜா' வைத் தூக்கி அணைத்தபடி 'ராணி' என்றாள். எனக்கு ஒரே சந்தோஷமாயிருந்தது. பிரச்சினை ஏதும் இல்லாமல் இந்தப்பிரச்சினை ஒரு சிறிய அணைப்பில் பெயர் மாற்றத்தில் தீர்ந்து போனதை வேடிக்கையாக நினைத்தேன்.

party ஒன்றுக்குப் போய் வந்தோம். தல்ல Mood ல் இருவரும் இருந்தோம். 'கலவி' ஒன்று முடிந்து போயிற்று.

அந்த நேரத்தில் முன் room இலிருந்து 'ராணி' பெரிதாக அழுது கொண்டிருந்தாள். சோம்பலைப் பாராமல் எழுந்து சென்று பார்த்தேன்.

நிலத்தில் புரண்டு புரண்டு அழுதாள். என் கால்களை தன் முழு உடம்பினாலும் உரஞ்சித் தேய்த்தாள். உரத்த குரலில் 'மியாவ் வோய், மியாவ் வோய்' என்று கத்தினாள். அவளது குரல் ஒரு மாதிரியாய் இருந்தது. 'என்னப்பா நடந்தது?' என்றபடி என்னவளும் வந்து விட்டாள். அவளுக்குப் பயமாய் இருந்தது. கிட்டப் போய்த் தூக்க முயன்றாள். ராணி புரண்டு புரண்டு கத்தினாள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ராணி தன் நாலு கால்களையும் அகல விரித்து தன் வயிறு முழுவதும் தரையில் படும்படி உரஞ்சிக் கொண்டு அரைந்தாள். எங்கள் கண்களை நேரே பார்த்து ஏரோ சொல்ல முனைந்தாள். அதே குரலில் கத்தினாள். விடிந்ததும் நான் அந்த முதியவரைக் கூட்டிக் கொண்டு வந்தேன்.

ராணியை ஒரு தடவை பார்த்து விட்டுச் சொன்னார் 'ராணி வயதுக்கு வந்து விட்டாள்' என்று.

'இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னனான். பெட்டைப் பூனையளை வீட்டிலே வைச்சிருக்கப்படாது என்று' மேலும் தொடர்ந்தார்.

நாங்கள் ஆளையாள் பார்த்தோம்.

'இதுக்கு என்ன செய்யிறது?' என்றேன்.

'மனிசருக்குத் துணைமாதிரி அதுகளுக்கும் துணை வேணும், கலவி வேணும், பிள்ளை வேணும், இனம் பெருக வேணும் எண்ட நியதி இருக்குத் தம்பி. இதைக் கொண்டுபோய் காட்டிலே விடும். இல்லாட்டிக் 'கருத்தடை' மாத்திரை இருக்கு. ஒரு மிருகவைத்தியரிட்டைப் போய்க் கேட்டாத் தருவார். அதைக் குடுத்தீர் எண்டா இப்பிடிக் கத்தாது. ஏக்கம் இருக்காது. இது தான் வழி' என்றார். நாங்கள் ஆளையாள் பார்த்தோம்.

நான் ராணியைப் பார்த்தேன். அது ஏக்கத்துடன் என்னைப் பார்த்தது. நான் என்னவளைப் பார்த்தேன். அவளும் அதே மாதிரி என்னைப் பார்ப்பது போல் பட்டது.

மூக்குக் கண்ணாடிக்குள் கீழால் என்னைப் பார்த்தபடி குளிகைகளை என்னிடம் தந்தார் அந்த மிருக வைத்தியர். நான் அவரைப் பார்த்தேன்.

'என்ன பார்க்கிறீர்? இது Power ful ஆன Pills. பிள்ளை உண்டாகிறதுக்கான chances ஐக் கேட்கிறீரோ? 12% தான்' என்றார்.

Pills ஐக் குடுப்பதற்கு என்னவள் தடுத்து விட்டாள். இருவருமாக ஒரு முடிவெடுத்தபின் ராணியைத் தூக்கிச் சென்று காட்டில் விட்டுவிட்டு வந்தோம். நீண்ட நாட்களின் பின் என்னவள் சாமிப் படத்தருகே நீண்ட நேரம் நின்றிருந்தாள். தெரியாதவன் போலவும், நிலைமையைச் சகஜ நிலைக்குக் கொண்டு வருவதற்குமாய் 'உங்கை என்ன செய்யிறீர்' என்று கேட்டேன். மிகத் தெளிவாக இயல்பாக 'வரம்' என்று மட்டும் சொன்னாள்.

company வேலை முடிந்த களைப்பில் Carல் வந்து கொண்டிருந்தேன். தூரத்தில் றோட்டுக் கரையோரத்தில் பற்றைகளுக்கு அருகில் ஒரு பூனை செத்துக் கிடந்தது. கண்கள் இறுக மூடின. கால்கள் 120 Kump ல் car ஐ இயக்கின.

'நீர் உங்கை என்ன செய்யிறீர்?'

'வரம்'

'நீங்கள் உங்கை என்ன செய்யிறியள்?'

'நீர் செய்யிற அதே வேலைதான், ஆனா இது வீதக் கணக்கு', என்றேன்.

என்னையு மறியாமல் என்கண்கள் கலங்கின.

கதை தொடரும்

___________________________________

கரவைதாசன்
___________________________________

இப்பொழுது பாரதிநகரும் சிவாவின் அஞ்சலியில் பங்கு கொள்ளத் தயாராகி விட்டது.

போஸ்டர் ஒட்டி, கறுப்புக் கொடி கட்டியவர்கள் கீழே இறங்கி புறப்படத் தயாரானார்கள். ஆனால், அந்த ஒருவன் மட்டும்...? நிலத்தில் ஊன்றிய எஸ்.எல். ஆருடன் மூலையிலிருந்த கல் ஒன்றில் போஸ்டரையே வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். அங்கே சிவா கம்பீரமாக 'மண்ணைப் பிரிந்து விண்ணில் கலந்து விட்ட உத்தமவீரன்' என்ற பெரிய எழுத்துக்களின் மேல்...! தன்னைப் பார்த்து ஏதோ சொல்வதுபோல் இவன் உணர்ந்தானா? என்ன சொன்னான் சிவா? அவன் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. நடந்த கதைக்கு இவனே சாட்சியாகி இருந்தவன்தான். அது நடந்த கதை மட்டுமல்ல, ஒருவகையில் இன்றும் தொடரும் கதை கூட.

இவனது மனம் பின்னோக்கிச் சுழன்றது.

அந்த அழகிய கிராமத்தின் பெயர் செல்லப்பட்டி. ஒரு கோயில், ஒரு குளம், தெற்கால்போல வடலிக் காணிகள், மேற்குப் புறத்தே வயல்வெளி, அதற்கப்பால் கிளை பிரிந்ததுபோல் வேங்கைப்பட்டியும் செல்வபுரமும்.

செல்லப்பட்டி கிராமத்தின் சந்தை, கடை, கபே எல்லாமே பேபி அக்காவின் 'தேத்தண்ணி'க் கடைதான். கிராமத்தின் முக்கால்வாசிப் பேர்கள் பேபி அக்காவின் கணக்குக் கொப்பியின் பக்கங்களை நிறைத்துவிட்ட கடன்காரர்கள். அதில் அவனும் இவனும்கூட விதிவிலக்காகவில்லை.

அன்று அவனும் இவனும் பேபி அக்காவின் கடையிலே அமர்ந்திருந்து கடனுக்கு பாணும் தேத்தண்­ரும் வாங்கி பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென வோக்கி டோக்கி அலறியறு, செல்லப்பட்டி கிராமத்தை இராணுவம் சூழ்ந்து கொண்டதாக...

இருவரும் துப்பாக்கியிலிருந்து பாயும் ரவைபோல தமது இருப்பிடத்தினை அணுகினர். அங்கிருந்த தடயங்கள் யாவற்றையும் அகற்றிவிட்டு வேறிடம் செல்லத் தயாரானபோது வோக்கி டோக்கி மீண்டும் செய்தி தெரிவித்தது; தெற்குப் பகுதியிலுள்ள வடலிக்காணி தான் உங்களுக்கு தப்பிக்க வழி. மற்ற மூன்று புறங்களிலும் இராணுவம் சூழ்ந்து விட்டது.

சிந்திக்க நேரமற்றவர்களாக வடலிக் காணித் திசையை நோக்கி சைக்கிளை உளக்கினர். வடலிக் காணியில் சைக்கிளை மறைத்துவிட்டு அதனோடு சென்று வேங்கைத் திடலை அடைந்தனர்.

செல்லப்பட்டினதும் வேங்கைத் திடலினதும் எல்லையைக் குறிப்பதே அந்த உடையார் குடியிருப்பு பிள்ளையார் கோவில்தான். பல தலைமுறைகளாக பல அரசியல் தலைவர்கள் தலையிட்டும்கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறந்துவிடப்படாதிருந்த கோயில் அது. 1977 ம் ஆண்டு தேர்தல் காலத்தில் தமிழர் கூட்டணிக் கட்சியினர் தலையிட்டும் தர்மகர்த்தாவாக இருந்த வல்லிபுரம் உடையார் அந்தக் கோயிலை திறந்துவிட சம்மதிக்கவில்லை. இப்போது அவனும் இவனும் பூட்டியிருந்த சுற்றுமதில் பெருஞ்சுவர்க் கோயிலைப் பார்த்த படி மலைத்துப்போய் நின்றிருந்தனர். வேங்கைத் திடலையும் இராணுவம் சூழ்ந்துவிட்டிருந்த நிலையில் அவர்களால் செய்யக்கூடியது கோவிலுக்குள் நுழைந்து பதுங்கிக் கொள்வதுதான்.

இருவரும் மதிலைத் தாண்டி கோவில் வளாகத்துள் சென்றனர். வெளியே இராணுவ ராங்கிகள் மரம், செடி, கொடி, வீடுவாசல் யாவற்றையும் சின்னா பின்னம் செய்து கொண்டிருந்தன.

கோயில் மண்டபத்துள் நுழைந்தவர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். அங்கே, வல்லிபுரம் உடையார்! அவனையும் இவனையும் கண்டவர், 'ஐயோ ஐயோ, என்னைச் சுட்டுப்போடாதேயுங்கோ, நான் பிள்ளை குட்டிக்காரன், என்னை நம்பித்தான் வீட்டில அஞ்சு குமருகள் இருக்கு' என்று கதறத் தொடங்கிவிட்டார். தமது கையிலிருந்த துப்பாக்கிகளைக் கண்டுதான் உடையார் பயந்து போனார் என்பதை ஊகித்துக் கொண்ட இவன், 'சத்தம் போடாதயுங்கோ, அது நான் செல்வராசா தான்' என்றான். 'ஆர் தம்பித்துரையின்ர மோனே?' என்று தெரிந்த தெளிந்த குரலில் கேட்டபடி முன்னே வந்தார் உடையார்.

'தம்பி, நிலமை என்ன மாதிரி இருக்குது?'

'மோசமாய்த்தான் இருக்கு. இப்ப இதைவிட தப்பிக் கிறதுக்கு வேறு வழியில்லை.'

'அப்ப வா, உள்ள போயிடலாம்' என்று கூறி அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மூலப்பிரகாரத்தை நோக்கி விரைந்தார் உடையார்.

'பொறுங்கோ...பின்னால சிவா நிக்கிறான்' என்றான் இவன்.

'தெரியும். தெரிஞ்சுதான உன்னை மட்டும் கூப்பிட்டன்' என்றபடி இரண்டாவது மண்டபக் கதவைத் திறந்து கொண்டிருந்தார்.

கிராமம் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது. கொலை, கொள்ளை, கற்பழிப்புக்களால் எங்கும் ஒரே கூக்குரல். தீ நெடி! தீயில் தீய்ந்த சடல நெடி! அப்பப்பா!

இராணுவம் கோவிலைச் சமீபித்துவிட்டதை மூவரும் உணர்ந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் மூன்று பேரின் உயிர்களும் போய்விடப் போகின்றன. மூலப் பிரகாரத்துள் ஒளிந்து கொண்டால் தப்பிக்க வாய்ப்புத்தான். ஆனால், உடையார்...?

அந்த நிலைமையை உடையாரும் தெரிந்திருந்தார்தான். ஆனாலும், அந்த பிராணாபய காலத்தில் கூட சாதி வெறி அவரை விடவில்லை. உடையார் சொன்னார்; 'தம்பி செல்வராசா, இந்தளவு தூரம் அவனை நான் வரவிட்டதே நிலைமையைத் தெரிஞ்சபடியால் தான். செத்தாலும் சாவனேதவிர, இதுக்குமேல அவன் உள்ளவரச் சம்மதிக்க மாட்டன். தெரிஞ்சுகொள்?'

இவனது கண்கள் சிவக்கத் தொடங்கின. ஒரு அரக்கன் தன்முன்னே நின்று பேசுவதாக எழுந்த நினைப்பில் சினத் தீ எழுந்தது. ஆனால், ஏதொன்றையும் பொருட்படுத்தாத உடையார் தீடீரென அவனையும் சேர்த்து இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்து மூலப் பிரகாரக் கதவைச் சாத்திக் கொண்டார்.

கோயில் தேர் முட்டிக்கு தீ வைத்த இராணுவம் மதில் கதவை உடைத்து உள்ளே வர முயற்சித்துக் கொண்டிருந்தது. தனக்கிருந்த ஒரேயொரு வழியை சிவா நன்றாகத் தெரிந்து ஒரேயொரு வழியை சிவா நன்றாகத் தெரிந்து கொண்டான். வெளியே கதவையுடைக்கும் முயற்சியில் வெற்றி கொண்ட இராணுவம் திமுதிமுவென உள்ளே நுழைந்த மாத்திரத்தே சிவாவின் எந்திரத் துப்பாக்கி சடசடக்கத் தொடங்கியது.

வெளியே வர முயன்று கொண்டிருந்த இவனுக்கு சிவா என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரிந்து விட்டது. தான் வெளிவந்த சிவாவுக்குத் துணையாகச் சேர்ந்தே ஆகவேண்டும். இப்போது துப்பாக்கிச் சத்தங்கள் அடங்கத் தொடங்கிவிட்டிருந்தன. இவன் உடையாரை தள்ளிக்கொண்டு வெளியே வந்தான். அங்கே கோவில் முன் பிரகாரத்தில் விழுந்து கிடந்திருந்தான் சிவா.

கல் மேல் அமர்ந்திருந்து சிவா அமரமான அந்த நாளை நினைத்துக் கொண்டிருந்த இவனை யாரோ உசுப்பினார்கள். திடுக்கிட்டு பிரக்ஞையடைந்த இவன் சிவாவின் போஸ்டர் மீதிருந்த பார்வையை மீட்டு, தன் நண்பனைப் பார்த்துச் சிரித்தான் ஒருமுறை. பின் எழுந்து எஸ்.எல்.ஆருடன் அவர்களைப் பின் தொடர்ந்தான்.

அவர்கள் இராணுவத்துக் கெதிராகப்போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கெதிராக எத்தனை சக்திகள் திரண்டிருக்கின்றன! 'சிவா வீழ்ந்தது இராணுவத்திலா? அல்லது, அந்த இன்னொரு சக்தியாலா?'--நடந்து கொண்டிருந்த இவன் மனத்தில் கேள்விச் சிதறல்கள்.

சுழற்சி
__________________________

முல்லையுரான்
__________________________

என் அம்மா பழையவள்தான். ஆனால்-அவளின் முகச் சுருக்கங்கள் எனக்குப் புதியவை.

பொப்பல்வாய்-5

சிவா தினமும் பாடசாலைக்கு அதே புகையிரதத்தைத் தான் பிடிப்பான்.

அல்லது நேரத்தைக் கடைப்பிடிக்கத் தெரியாதவன் என்ற பெயர் கேட்க வேண்டிவரும். இவன் இலங்கையிலிருந்து வந்து அகதியாக டென்மார்க்கில் வாழுகிறானே தவிர அவனுடைய பழக்க வழக்கங்கள் எதுவுமே பெரிதாக மாறவில்லை. மாற்றிக் கொள்வதில் அவனுக்கு ஒன்றும் ஆட்சேபனை கூடக் கிடையாது. ஆனாலும் ஒன்றும் ஆட்சேபனை கூடக் கிடையாது. ஆனாலும் அவனால் அப்படி மாற முடியவில்லை. சிவாவைவிட டென்மார்க்குப் பிந்தி வந்தவர்களில் அனேகமானவர்கள் பெருமளவு மாற்றத்தை அடைந்திருந்தனர்.

இத்தகையவர்களுடன் சிவா அவ்வளவாகப் பேச்சுக் கொடுக்கப் பயந்தான், காரணம் அவர்களுடைய கிண்டலும் கேலியும் சிவாவுக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை.

சிவாவின் எதிர்காலம் பற்றி அவனே அதிகம் நினைத்துப் பார்ப்பதில்லை. அவ்வப்போது அவனுடைய சோசலொபீசர்-சமுக ஆலோசகர்-நினைவு படுத்தினாலுண்டு. எதிலுமே ஒரு பிடிப்பற்ற நிலையில் சிவா இருந்தான். ஊருக்கு காசு அனுப்பவேண்டும் என்கிற சுமை கூடக் கிடையாது.

ஆனாலும் நிறையவே கடிதத் தொடர்புகள் அவனுக்கும் அவனுடைய தாயாருக்குமிடையே இருக்கிறது. இந்தக் கடிதப்பாலம் ஒன்றே அவன் கடைப்பிடிக்கும் கட்டுப் பாடுகளுக்கு காரணமாக இருந்து வருகிறது. தாய், தகப்பனுக்கு சிவா ஒரே ஒரு பிள்ளை என்பதனால் தான்; அவனாவது உயிர்தப்பி வாழட்டும் என்ற அவனுடைய தாயாரின் விருப்பமும், சிவாவின் பயந்த சுபாவமும்தான் சிவா நாட்டிலிருந்து இடம் பெயரக் காரணமாக இருந்தன.

காலையில் வேலைக்குச் செல்பவர்கள் விரைந்து கொண்டிருந்தனர். அது ஒரு 'சமர்'காலம் என்பதனால் மனித முகங்களில் சந்தோஷமும், உற்சாகமும் தெரிந்தது. சிவாவைக் கடந்து கார்கள் வேகமாகச் சென்றன.

ரோவகெத-9

இந்த வீட்டில் ஒரு வயதான பெண்ணும் அவளுடைய கணவனும் தான் வசிக்கின்றனர். அந்த வீடு மிக விசாலமானதும், பெரிய ஒரு தோட்டத்தையும் கொண்டது. வகைவகையான மலர்கள் வளர்ப்பதே அவர்களுடைய வேலை. பச்சைப் புல் நடுவே மஞ்சள்ச் செவ்வந்திப் பூக்கள் நல்லவடிவாக இருக்கும். ஆனாலும் சிவாவுக்கு மிகவும் பிடித்தது அந்த வயதான அப்பிள் மரம் தான்.

ஒழுங்காக கத்தரிக்கப்பட்ட அந்தப் புல்வெளியில் திரண்டு நெறிந்து ஒரு நடனமாதுவைப் போல நிற்கும் அந்த அப்பிள் மரத்தை அடியோடு பிடுங்க அவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தனர். 'கிழடுகள்' என்று சபித்தபடி சிவா சென்று கொண்டிருந்தான்.

கிசோக சந்தி

சிவா உன்னிப்பாக பார்த்தான். அவனை இன்று காணவில்லை. செம்பட்டைத்தாடியும், மீசையுமாக கையில் ஒரு உல்ப் போத்திலுமாய் இந்தச் சந்தியில் தினமும் நிற்பவனைக் காணவில்லையே? என்று யோசித்தபடியே சிவா நடந்து கொண்டிருந்தான். 'இனித்தான் வருவானாக்கும்' என்று வாய் முணு முணுத்தது.

அந்தத் தாடிக்காரன் தான் சிவாவைக் கண்டு முதன் முதலில சிரித்தவனும்! அத்துடன் ஆவலுடனும் அனுதாபத்துடனும் சிவாவின் கதையைக் கேட்டவனுமாகும்.

அதனாலோ என்னவோ அந்தத் தாடிக்காரன் மீது சிவாவுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டிருந்தது. சிவாவின் தனிமையை, இழப்புகளை புரிந்துகொண்ட அவன் ஒருநாள் 'சில புதிதாக முயற்சி செய்' என்று சொல்லியிருக்கிறான். இது ஒரு பெரிய தாக்கத்தையும், சிவாவைச் சிந்திக்கவும் வைத்தது.

ஸ்ரேசன்

கொமுனில வேலை செய்யிற அந்த தொக்கை (நகர சபை) மனுஷ’. கிம்நாசியத்தில படிக்கிற அந்தப் பெட்டையள். காலுக்குச் சில்லுப்பூட்டிக் கொண்டு ஓடிவாற அந்த போலந்துக்காரன்-மாட்டின், பல்லு மிதந்த டோட்டா, எல்லாரும் இன்றும் நிற்கிறார்கள். இந்த முகங்கள் சிவாவுக்கு தினமும் பழக்கப்பட்ட முகங்கள். தினமும் வணக்கம் சொல்லும் அளவுக்கு மட்டும் பழக்கம் இருந்தது. கொஞ்சம் தூரம் தள்ளி அந்த ரைக்காரனும் நிக்கிறான். எப்பவும் முகம் 'உம்' எண்டுதான் கிடக்கும். 'கையில் கிடக்கிற சூட்கேசுக்கும் உவனுக்கும் என்ன வித்தியாசம்? சும்மாய் நிப்பான். உவனுக்கு பொஞ்சாதி குடும்பம் இல்லப்போல...?' சிவா வழமையாக நினைப்பதுபோலவே நினைத்த படியே வந்துநின்ற றெயினில் ஏறிக் கொண்டான்.

பயணம்

கோதுமை வயல்களையும், வீட்டுக் குவியல்களையும் சின்னச் சின்ன யோபயாத் தோட்டங்களையும் ஊடறுத்துக்கொண்டு செல்லும் அந்தப் புகையிரதத்தில் பயணம் செய்வது சிவாவுக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் அதே மனிதர்களுடனும், அதே வீதிகளிலும் தொடர்ந்து பயணம் செய்வது என்பது அவனுக்குப் பிடித்திருக்கவில்லை. அதனாலோ என்னவோ யூலண்டுக்கு மாறுகிற உத்தேசம் கூட வந்தது. சிவா பல குழப்பமான நினைவுகளில் இருப்பது புரிகிறது. மாற்றங்களை விரும்புகின்ற அதே வேளை, தனது பழைய உறவுகளையும், இழந்துவிட்ட எத்தனையோவற்றையும் நேசிக்கிறானே!

இடைக்கிடை புகையிரதம் நிற்பதும் சில புதியவர்களுடன், அதே பழையமுகங்கள் இறங்குவதும் ஏறுவதுமாக சிவாவின் புகையிரதப் பயணம் வழமையான அதே ஆலைச் சங்கொலியுடன் முடிந்தது.

வகுப்பு

அவனுடைய வகுப்பிலும் அதே மாணவர்கள், அதே ரீச்சர் அதே புத்தகங்கள். அதே...அதே சிவாவுக்கு எரிச்சலும் தலையிடியுமாக இருந்தது. சிவா ரீச்சரிடம் சொல்லிக் கொண்டு வகுப்பு முடிவதற்கு முன்னதாகவே வீடு செல்லும் திட்டத்துடன் ரீச்சரிடம் கதைத்தான். அவன் 'ஏன்?' என்று கேட்டாள். 'ஊரில இருந்து கடிதம் வரயில்ல. தலையிடிக்குது...அது தான்...' என்றான் சிவா.

'சரி, நீர் இன்றைக்குப் போகலாம். ஆனால் கடிதம் வந்ததனால் தலையிடி என்று நாளைக்கு வராமல் நிற்கக் கூடாது' என்ற ஒரு புத்திமதியுடன விடை கொடுத்தாள்.

மீண்டும் பயணம்

சிவா வீடுநோக்கி பயணமானான். இடைக்கிடை கிசோக் சந்தியில் நிற்கும் அந்த தாடிக்காரனின் ஞாபகம் வந்து போனது. 'ஏன் வரயில்லை உவன்...தண்ணி அடிக்கிறத விட்டிட்டானோ? அல்லது...புதிய இடம், புதிய குடிகார நண்பர்கள் என்று மாறி விட்டானோ? நிச்சயமாய் தண்ணி அடிக்கிறத விட்டிருக்கமாட்டான்! சாகும்வரை குடிப்பன் எண்டுதான் அண்டைக்குச் சொன்னவன்...சரி...என்ன இழவெண்டாலும் எனக்கென்ன?' என்று சிவாவினால் அந்த நினைவிலிருந்து தப்பமுடியவில்லை.

டென்மார்க் வாழ்க்கை. என்ன இது? ஊருக்கு வந்தால் உயிர் தப்பாது. இப்ப வரவேண்டாமெண்டு அம்மா கடிதம் எழுதினா...அப்ப...பாலாண்ண சொல்லுறது போல...இஞ்சினேக்க...பிளாயயெம்மில சாகிறதே? இப்படி பலவிதமான நினைவுகளில் மூழ்கியபடி தன் வாடகை வீடுள்ள அந்தச் சின்னக் கிராமத்தில் இறங்கினான்.

கிசோக் சந்தி

அந்தச் சந்தியில் இப்போதும் வழமைபோல அதிகம்பேர் நின்று உல் குடித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலரை சிவாவுக்குப் பழக்கம் என்பதனால் அருகிற் சென்று அந்தத் தாடிக்காரனைப் பற்றி விசாரித்தான். 'ஓ! நீர்...ஊலவைச் சொல்லுறாய் போல இருக்கு...அவன் நேற்றுச் செத்துப் போனான்...' என்றபடி அவர்கள் வேறு பக்கம் திரும்பிக் கொண்டனர். மாற்ற முடியாத அந்த மரணத்துக்கும் பிறப்புக்கும் யார் விதி விலக்கானார்கள். சிவா நடந்தான்.

ரோவகெத 9

சிவா வீடுநோக்கி தொடர்ந்தான். அவனுக்குப் பிடித்த அந்த பெரிய அப்பிள் மரம் அதே வளவுக்குள் பிரட்டி நடப்பட்டிருந்தது. அதன் அடிப்பாகத்தில் கீறல்களும் உராய்வுகளும் இருந்தன. முந்திய அழகு அதில் இப்போது இல்லை. அது வலிந்து அழிக்கப்பட்டிருந்தது. 'ஏன் இப்படி?' என்று கிழவியிடம் கேட்டான். இந்த மரம் நிழல் தருகிறது, அதனால் அதை புரட்டி விட்டோம். இதன் பழங்களும் சுவையானதல்ல.

'அந்த இடத்தில் பல புதிய பூக்களை நடலாமல்லவா?' என்றாள் கிழவி. சிவாவுக்கு தூக்கிவாரிப் போட்டது. 'என்ன உலகமிது'...அவரவர் விருப்பங்களுக்காக எவரெவரோ...எதுவெல்லாமோ...எங்கெங்கோ...எப்படி எப்படியோ...நகரவேண்டியதாய்ப் போயிற்று...புரட்டி எடுத்து சில மணி நேரங்களிலேயே ...அது சற்று வாடிவிட்டது. இது திரும்பவும் வேர் விடுமா? இளைய மரமென்றால் நிச்சயம் வேர் விடும். இது ஒரு பழைய மரமாயிற்றே.

கடிதம் பார்க்கும் ஆவலுடன் துரிதமானான்.

பொம்பல்வாய்-5

சிவா குடியிருக்கும் அந்த வாடகை வீடு வந்துவிட்டது. தன்னை யாரோ பெயர் சொல்லி அழைப்பது கேட்டு நின்றான்.

'அட உவன் புருசனை விட்டிட்டு இருக்கிறவள்...முன்னம் வண்டியத் தள்ளிக்கொண்டு திரிஞ்சாள்...இப்ப ஒரு வண்டிலத் தள்ளிக்கொண்டு வாறாள்...பிள்ள பெத்திட்டாள் போலகிடக்கு...ஆரது...பக்கத்த வாறது...உவன்தான் பழைய புருஷனோ?' என்று சிவா நினைத்துக் கொண்டு நிற்க, அவர்கள் அவனை நெருங்கினார்கள். அவள் அவனை அறிமுகப்படுத்தினாள். 'இது என் புதிய புருஷன்.' அவன் சிவாவோடு கைகுலுக்கினான். வண்டிலுக்குள் அந்தச் சின்னக் குழந்தை அழுதது.

தாடிக்காரன் செத்துப் போனான்.

பிள்ளை பிறந்து விட்டது.

அவளுக்குப் புதிய புருஷன்.

அப்பிள் மரம்? சிவா??

கலாச்சாரங்கள்

________________________________________

சந்திராதேவி
________________________________________

வெள்ளிக் கிழமை

'ஓமோரோ மூலை' என்று அழைக்கப்படும் இளைப்பாறும் அறையின் வலது பக்க மூலை மெள்ள மெள்ள உயிர்பெறத் தொடங்கியது. அந்த வைத்திய சாலையின் சலைவைப் பிரிவில் பணிபுரியும் கறுத்தத் தோல் வெளிநாட்டவர்கள் அனைவரும் அந்த மூலையில் வந்து அமர்வது ஒருவித வழமையாகி இருந்தது. பொதுவாக நோர்வேஜியர்கள் 'ஓமோரோ மூலைக்கு' வருவது குறைவு. அதற்காக அவர்களை இனவாதிகள் என்று கருதிவிட முடியாது. வெடிச் சிரிப்புகளாலும், சூடான விவாதங்களாலும் எப்போதும் அதிர்ந்து கொண்டிருக்கும் 'ஓமோரோ மூலை'. அமைதியாக இளைப்பாற விரும்புபவர்களுக்கு உகந்த இடமல்ல. மேலும் ஆங்கிலம் தான் 'ஓமோரோ மூலை'யின் உத்தியோக மொழியென்பதும் நோர்வோஜியர்கள் இங்கு வந்து அமராமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்.

இந்த மூலைக்கு இவ்வாறு பெயர் வரக் காரணமாக இருந்தவன் காம்பிய நாட்டவனான ஓமோரோ தான். பார்த்தால் நமது ஊர்க்கோவில்களில் இருக்கும் சூரன் சிலைபோல் இருப்பான். ஆனால் உருவத்திற்கு முற்றிலும் எதிரான இயல்பு. யாராவது ஒருவர் வேடிக்கையாக ஏதாவது சொல்லி விட்டால் இரண்டு மூன்று நிமிடங்கள் தொடர்ச்சியாகக் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பான். அரசியல் விவாதங்களில் ஆரம்பித்து விட்டால் நேரம், உணவு எல்லாவற்றையும் மறந்துவிட்டு நரம்புகள் கொதிக்கப் பேசுவான். அவனைவிட அகலமான அவனது மனைவி நியோ 'இடைவேளை முடியும் நேரமாகிவிட்டது ஓமோரோ! தயது செய்து சாப்பிடு' என்று அவனுக்கு உணவை நினைவு படுத்துவாள்.

'ஓமோரோ மூலையில் எப்படியும் அஞ்சாறு ரிக்கற்றாவது விக்கவேணும்' என்றவாறு மறவாமல் ரிக்கற் புத்தகத்தை எடுத்துக் கொண்டாள் ரஞ்சனி.

'அவங்கள் எல்லாரும் ரெண்டு மூண்று வேல செய்யிற ஆக்கள்...வருவாங்களெண்டு நான் நினைக்கையில்லை...' கௌரிக்கு நம்பிக்கையில்லை.

'ஒரு அஞ்சு ரிக்கற்றாவதுவிக்காட்டி மரியாதையில்லை. பிறகு ஒறே நக்கலடிப்பீனம் கௌரி!'

ரஞ்சனியின் பரிதாபத்தைப் பார்க்க கௌரிக்கு சிரிப்பாயிருந்தது. 'சரி வாருமன் கதைச்சுப் பாப்பம்...ஓமோரோவுக்கும் பெண்சாதிக்கும் இதுகள்ள நல்ல இன்றஸ்ற்தானே...கேட்டுப் பாப்பம்!'

இருவரும் 'ஓமோரோ மூலை'க்கு வந்த போது, ஓமோரோ பாண்பொதியை அநாதரவாகத் தவிக்க விட்டு அமெரிக்க ஜானாதிபதி ஜோர்ஜ்புஷ்ஷ’ன் சட்டையைப் பிடித்து ஆத்திரத்துடன் உலுக்கிக் கொண்டிருந்தான். நியோவுக்கு புஷ்ஷ’ன் சட்டை கிழிவதைப் பற்றிக் கவலையில்லை; ஆனால் இடைவேளை முடிவதற்குள் தன் கணவன் பாண்பொதியைத் திறக்காமல் விட்டு விடுவானோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். 'சதாம் ஹுசைன் செய்தது முட்டாள்தனமான காரியம் தான்... ஆனால் அதைக் கேட்பதற்கு இந்த முட்டாளுக்கு என்ன உரிமை இருக்கிறது?...கிரனடாவை எப்படி மறக்கலாம்...பனாமாவை எப்படி மறக்கலாம்...' என்று முழங்கிக் கொண்டிருந்தவனை 'ஒரு நிமிடம் ஓமோரோ!' என்று கௌரி நிறுத்தினாள்.

'இடையில் குறுக்கிடுவதற்கு மன்னித்துக் கொள்... ஆனால் இடைவேளை முடிவதற்குள் உங்களிடம் சொல்லியாக வேண்டிய விடயமொன்று ரஞ்சனியிடம் இருக்கிறது...'

'ஓ...சஞ்சனி என்ன சொல்லப் போகிறாள் என்று எனக் குத்தெரியுமே...அவளுக்கு ஒரு காதலன் கிடைத்து விட்டான்.'- புஷ்ஷை மறந்து குளிர்ந்துபோன ஓமோரோ குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தான். நியோ சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாண் பொதியைத் திறந்து அவனிடம் கொடுத்தான்.

ரஞ்சனி விஷயத்தைச் சொன்னபோது கௌரி எதிர் பார்த்தது மாதிரியே பலர் பின்வாங்கிக் கொண்டார்கள். வாழ்நாளில் நூறு குரோணர்களுக்கு ரிக்கற் வாங்கியறியாத இம்தியாஸ் 'நாளை நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு இன்று சொன்னால் எப்படி? நீ முன்னரே சொல்லியிருந்தால் நிச்சயமாய் வாங்கியிருப்பேன்' என்று சாதுரியமாக கழன்று கொண்டான். பர்வீஸ், தோமஸ் இருவரும் உண்மையிலே சனி, ஞாயிறு இரவுகளில் Taxi சாரதிகளாகச் சம்பாதிப்பவர்கள். சகூப்தா இந்த இரண்டு நாட்களிலுந்தான் கணவன் பிள்ளைகளுடன் வீட்டில் இருப்பவள். இந்தர்ஜித் தான் வருவது நிச்சயமில்லை. ஆனால் ரிக்கற் வாங்குவதாகக் கூறி வாங்கிக் கொண்டான். தமிழர்களின் கலாசார விழா என்றதும் ஆர்வத்தோடு வாங்கியது ஓமோரோ மட்டும்தான். சுகவீனமுற்றிருக்கும் சினேகிதி ஒருத்திக்கு வந்து உதவி செய்வதாக வாக்களித்திருந்ததனால் நியோ தன்னால் வரமுடியாதுள்ளது என்று வருந்தினாள்.

ரஞ்சனி இரண்டு ரிக்கற்றாவது விற்க முடிந்ததே யென்று ஆறுதற்பட்டுக் கொண்டாள்.

'நீங்கள் அங்கே நிற்பீர்கள் தானே...தெரிந்தவர்கள் ஒருவருமில்லாமல் நான் நின்று மிரளவேண்டி இருக்காதல்லவா?' ஓமோரோ கேட்டான்.

'அது பிரச்சனையில்லை...நீ சரியாக ஆறுமணிக்கு அரங்க வாசலுக்கு வா...நாங்கள் வந்து உன்னை அழைத்துப் போகிறோம்' கௌரி சொன்னாள்.

சனிக் கிழமை

ஒப்பனைக்கு உதவி செய்ய வேண்டியிருந்ததால் ஓமோரோவை அழைத்து வரும் பொறுப்பை ரஞ்சனி கௌரியிடம் ஒப்படைத்துவிட்டுப் போனாள். நேரம் ஆறு பத்தாகியும் ஓமோரோ வரவில்லை. சிலவேளை வர மாட்டானோ என்று நினைக்கையில் 'தேபானைத் தவறவிட்டுவிட்டேன்...மன்னித்துக்கொள்' என்றபடி மூச்சிரைக்க வந்து சேர்ந்தான் ஓமோரோ. 'பறவாயில்லை...இப்போதுதான் ஆரம்பித்தார்கள்' என்றபடி அவனை அரங்கத்தினுள் அழைத்துச்சென்றாள் கௌரி. வணக்கம் வாருங்கள் என்று வாசலில் நின்று பன்னீர் தெளித்தவர் கௌரியையும் ஓமோரோவையும் ஒன்றாய் கண்டதும் அவசரமாய் கண்களை இறுக்கிக் கொண்டார்.

* * * Paniyum 5-ன் தொடர்ச்சி * * *

பல நூற்றுக் கணக்கான கண்களினால் தான் பின் தொடரப் படுவதை அறியாத ஓமோரோ, அலாரிப்பின் அபிநயங்களைப் பார்த்து அதிசயித்தபடி கௌரியைப் பின்தொடர்ந்து அவளருகே அமர்ந்து கொண்டான். 'உடனே திரும்பிப் பார்ப்பதே...கொஞ்சம் செல்லத் திரும்பிப் பார்' என்ற சங்கேதச் செய்தி தொடைகளைச் žண்டியபடி அசுரவேகத்தில் பரவிக் கொண்டிருக்கையில் கௌரி அரங்கத்தில் அபிநயிக்கப்பட்டுக் கொண்டிருந்த நவரசங்கள் பற்றி ஆங்கிலத்தில் சிரமத்துடன் ஓமோரோவுக்கு விளக்கிக் கொண்டிருந்தாள்.

அவனின் பல கேள்விகளுக்குத் தெரியாது என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருந்தது. நிகழ்ச்சிகளின் இடைவெளிகளின் போது ஆபிரிக்க கிராம நடனங்களையும், தென்னமரிக்கத் தங்கோ, லம்பாடா நாட்டியங்களையும் பரதனாட்டியத்தின் அசைவுகளுடனும் ஒப்பிட்டுக் கொண்டிருந்தான் ஓமோரோ. தங்கள் நாட்டினைப்போல் வயது பால் வித்தியாசமில்லாமல் எல்லோரும் சேர்ந்து ஆடும் நாடடியங்கள் இல்லையா என்று அவன் கேட்ட போது 'முன்னர் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்...ஆனால் இப்போதைய எங்கள் கலாசாரத்தில் அப்படியெல்லாம் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது' என்று கௌரி சொன்னாள்.

முன் வரிசையில் இருந்தவர்களில் பலர் சாதாரணமாக பின்னால் பார்ப்பதுபோல் கழுத்தைத் திருப்பி ஒரு அரைவட்டம் அடித்து இவர்களைப் பார்த்துவிட்டு, வந்த செய்தி உண்மைதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டார்கள். திடீரென்று தலையை நிமிர்த்திய கௌரியின் பார்வையில் சிக்குண்டுபோன யாமினி, பிளாஸ்டிக் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.

பதினைந்து நிமிட இடைவேளை விட்டு சிற்றுண்டி வழங்கினார்கள். வடையைச் சாப்பிட்டுவிட்டு 'மிக அருமையாக இருக்கிறது' என்று கண்கலங்கியபடி ஓமோரோ சொன்னான். 'என்ன கௌரி உங்களக் காணக்கிடைக்குதில்லை...ஒரே பிஸ’ போல' என்று ஒரு மாதிரிச் சொல்லிவிட்டு ஓமோரோவுக்கு 'ஹய்' சொல்லிச் சென்ற கணேஷ் கூட்டமாய் நின்றவர்களிடம் ஏதோ சொல்வதையும் அவர்கள் திரும்பி தன்னைப் பார்ப்பதையும் பார்த்த பின்னர்தான் கௌரி உணர ஆரம்பித்தாள். சுருசுருவென மண்டையில் ஊசிகள் ஏற ஆரம்பித்தன.

இடைவேளை முடிந்து மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. கோலாட்டத்தை ஓமோரோ ரசிக்க ஆரம்பித்தான். 'என்னை எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள்...நீ தயவு செய்து எதிர்ப்புறமாக உள்ள ஆண்களோடு போய் இருக்கிறாயா?' என்று அவனிடம் எப்படிக் கேட்பது? அல்லது அவனருகில் இருக்காமல் எழும்பிப் போய் யாமினிக்குப் பக்கத்தில் இருந்தால் கொஞ்சக் கற்பனையாவது காப்பாற்றிக் கொள்ளலாம்! ஆனால் திடீரென்று எழுந்து போனால் இவன் என்ன நினைப்பான்? தன்னால் ஒரு அப்பாவிப் பெண் ஒரு நடத்தை கெட்டவளாகப் பிரகடனப் படுத்தப் பட்டுக் கொண்டிருப்பது தெரியாமல் தாள லயத்தில் தன்னை மறந்திருந்தான்.

ஆரம்பத்திலேயே அவனை ஆண்கள் பக்கம் இருக்கும் படி சொல்லியிருக்கலாம். இந்த மரத்தை மூளைக்கு ஏன் இந்த விசயம் நேரத்தோடு வெளிக்கவில்லை? இந்த ரஞ்சனி எங்கே போய்த் தொலைந்தாள்? இடையிடையே இரண்டொரு கேள்விகளை ஓமோரோ கேட்ட போது கேள்வியைக் காதில் வாங்காமலே தெரியாது என்று பதில் சொன்னாள்.

'மன்னித்துக்கொள் ஒரு சினேகிதியிடம் ஒரு முக்கிய விடயம் சொல்ல வேண்டும்' என்று இவனிடம் சொல்லி விட்டு யாமினிக்குப் பக்கத்தில் போய் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை! விழா முடிந்ததும் இவன் கண்களில் படாமல் மறைந்துவிட்டு திங்கட்கிழமை எதையாவது சொல்லிச் சமாளித்துவிடலாம்!...அவள் மீது பரவிக் கொண்டிருக்கும் கறையைச் சமாளிப்பதுதானே இப்போது முக்கியம்!

ஆனால் அவள் சொல்லும் முன்னர் நேரத்தைப்பார்த்த ஓமோரோ முந்திக் கொண்டான். நியோவின் சினேகிதி வீட்டுக்குப் போய் அவளை அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதனால் தான் போக வேண்டும் என்று சொன்னான்; இது ஒரு இனிமையான மாலையென்றும் தான் நிறையக் கற்றுக் கொண்டதாயும் மானžகமாகக் கூறினான். மறவாமல் ரஞ்சனிக்கும் தான் ஹலோ சொன்னதாகச் சொல்லச் சொல்லி விடைபெற்று, கௌரிக்கு நிம்மதியைக் கொடுத்தான்.

ஞாயிற்றுக் கிழமை

இது ஐந்தாவது தடவை.

இந்த முறை பேசியவன் அடித்தொண்டையில் பேசினான். 'ஹலோ'

'ஹலோ கௌரியா பேசுறது?'

'கௌரிதான்...நீங்க யாரு பேசுறீங்க?'

'நான்தான்...?'

'நானெண்டா...?'

'நானெண்டாத் தெரியாதே...அது சரி கறுப்பங்களோட கொண்டாட வெளிக்கிட்டவுடன எங்கள அடையாளம் தெரியாமல் போயிடும் என்ன...எப்படி அந்தக் கறுப்பன் நல்லா...'-சோர்ந்து போய் தொலைபேசியை வைத்தாள்.

இவர்கள் எந்த வகையான ஒரு மனிதர்களாக இருப்பார்கள்? தாயென்றும் சகோதரிகளென்றும் சில பெண்கள் இவர்கள் வாழ்வில் இருக்கமாட்டார்கள்? இவர்களால் எப்படிக் கூச்சமில்லாமல் ஒரு பெண்ணிடம் இப்படிப் பேச முடிகிறது?

தொலைபேசியை எடுத்துக் கீழே வைத்துவிடலாம் என்றால் ரஞ்சனி அதற்குச் சம்மதிக்கவில்லை. அக்காவிடமிருந்து போன் வருமாம்!

ரஞ்சனியின் போக்குத்தான் கௌரிக்கு அதிர்ச்சியாகவும் ஆத்திரமாகவும் இருந்தது. குழம்பிப் போயிருக்கும் தனக்கு ஆறுதலாகவோ ஆதரவாகவோ இருக்க வேண்டியவள் கௌரிக்கு அனாமதேயத் தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்ததும் திடீரென்று நிறம் மாறிப்போனாளே!

'எங்கட பெடியங்களிட குணம் உமக்குத் தெரியும் தானே! நீர் ஏன் ஓமோரோவோட...சோடி போட்டுக் கொண்டிருந்தனீர்? அவனை ஆம்பிளயள் இருந்த பக்கத்தில் போய் இருக்கச் சொல்லியிருக்கலாந்தானே!'

சினேகிதி என்று இன்று காலைவரை நம்பியிருந்த ரஞ்சனியிடமிருந்து இந்தவிதமான பேச்சைக் கௌரி எதிர்பார்த்திருக்கவில்லை. இவளுக்கும் இப்போ தொலைபேசியில் துணியைப் போட்டுக் கதைத்து இவளை அழவைத்து மகிழும் இந்த இரக்க மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

ஆறாவது தடவையாகத் தொலைபேசி அழைத்தது. ஜெர்மனியிலிருந்து சொந்தக் குரலில் கத்தினான். ஆனால் விடயம் ஒன்றுதான்.

'நான் மாப்பிள தேடி இங்க எல்லாருக்கும் பல்லைக் காட்டிக் கொண்டு திரியிறன். நீயென்னெண்டா உங்க காபிலியளோட சுத்திறியாம்.'

சில மணித்தியாலங்களுக்குள் கௌரியின். நடத்தை பற்றிய தகவல்கள் அடுத்த நாடுகளுக்கு போய்ச் சேருமளவுக்கு எவ்வளவு சுறுசுறுப்பாகச் செயற்பட்டிருக்கிறார்கள்?

கதவு மணி வழக்கத்துக்கு மாறாக இடைவிடாது அடித்தது. 'என்ன நாள் முழுக்க ரெலிபோன் எங்கேஜ்டாக இருக்கு...அப்படி யாரோட கதைக்கிறியள்?' என்று ஆத்திரத்துடன் கேட்டபடி ரஞ்சனியின் அக்காவின் கணவர் வந்தார். அக்கா அவர் பின்னால் மௌனமாக வந்து நின்றாள்.

'அத்தாருக்கு முன்னால அக்கா சத்தம் போட்டுக் கூடச் சிரிக்கமாட்டா' என்று ரஞ்சனி அக்காவைப் பற்றிக் கௌரியிடம் சொல்லியிருக்கிறாள். 'ரஞ்சனி வாரும்...உம்மோட கொஞ்சம் தனியாக் கதைக்கவேணும்...' அத்தார் காரம் குறையாமல் சொன்னார்.

கௌரி எழுந்து தனது அறைக்குள் சென்றாள்.

அத்தார் ஒரு நாகரீகத்திற்காக ரஞ்சனியிடம் தனியாகப் பேசவேண்டும் என்று சொன்னாரே தவிர அவரது முழு நோக்கமும் தான் பேசுவது கௌரிக்குக் கேட்க வேண்டும் என்பதுதான்.

'நாட்டவிட்டு வெளியால வந்திட்டால், நினைச்சபடி ஆடலாம் எண்டு நினைக்கிறதுகளோட நீர் இருந்தால் மற்றவர்கள் உம்மையும்தான் பிழையா நினைப்பினம்...'

அத்தார் முழங்க ரஞ்சனி எதுவும் கூறாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள். கௌரிக்கு நடப்பதெல்லாம் ஏதோ படம் பார்ப்பது மாதிரி இருந்தது. இன்று முழுவதும் இவளைப் படுத்தாது படுத்துகிறார்களே! அப்படி என்ன குற்றத்தை நான் செய்துவிட்டேன். யாருக்கு என்ன கெடுதல் செய்தேன் என்று யோசித்தாள். ஒரு அந்நியனுக்குப் பக்கத்தில் இருந்தேன். அதுவும் நூறு பேருக்கு மத்தியில்! ஒது ஒரு குற்றமா? அவன் என்னுடன் ஒன்றாக வேலை செய்பவன். திருமணமானவன். அது தவிர வேறு ஒரு தொடர்பும் எனக்கும் அவனுக்கும் இல்லையென்று எப்படி இந்த தொலைபேசிச் சண்டியர்களையும், அண்ணனையும், ரஞ்சனியின் அத்தாரையும் நம்ப வைப்பது?...என்று நினைத்தவளுக்கு திடீரென இன்னொரு விசயம் உதயமானது.

ஆனால் இவர்களை ஏன் தான் நம்பவைக்க வேண்டும்? அப்படி நினைத்துப் பார்ப்பதே புதுமையாக இருந்தது. இவர்கள் யார்? இவர்களெல்லாரும் எப்படி உனக்கும், என் வாழ்வுக்கும் எசமானனானார்கள்? இது எனது வாழ்வல்லவா? இவர்கள் யாரோடு போனார்கள், யார் யாருக்குப் பக்கத்தில் இருந்தார்கள் என்று நான் ஒரு நாளும் கவலைப்பட்டதில்லையே! இன்று இவர்கள் என்னோடு பேசியதுபோல் நான் இவர்களுடன் பேசியிருக்க முடியுமா? இல்லையே! அப்படியிருக்க இவர்கள் மட்டும் என்வாழ்வை ஏறிமிதிக்க நான் எப்படி அனுமதித்தேன்? உயிருக்குப் பயந்து ஊரைவிட்டு ஓடிவந்தவர்களெல்லாரும் என்னை, ஒரு பெண்ணை இம்சைப்படுத்த மட்டும் தீட்டிய வாளும் தினவெடுத்த தோளுமாக வீரம் கொப்பளிக்க அணிவகுத்து நிற்கிறார்கள். இவர்கள் குரல் மாற்றித் தொலைபேசியில் பேசியதும் நான் அழுதபடியால் தானே இவர்கள் தாங்கள் சண்டியர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்!...

நான் மட்டும் அழ மறுத்தால்...?

தனது அறையிலிருந்து கௌரி வெளியே வந்தாள்.

அத்தார் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு மானம் எவ்வளவு முக்கியமென்று மிக நுணுக்கமாக ரஞ்சனிக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

'அண்ண, என்னட்டச் சொல்ல விரும்புறத என்னட்டச் சொல்லுங்க...அவளைப் போட்டு ஏன் அறுக்கிறீங்க'.-கௌரி மரியாதைக் குறைவாய்ச் சொன்னதுபோல் அத்தாருக்குப் பட்டது.

'உம்மை மாதிரி ஆக்களுக்கு மானம் மரியாதையைப் பற்றிச் சொன்னால் விளங்கவே போகுது?' அத்தார் சூடாகினார்.

'மானம் மரியாதையைப் பற்றி நீங்க கதைக்காதீங்க...ஏஜன்சி நடத்திறனண்டு சொல்லி, நம்பி வந்த எத்தன பொம்பிளையலன்ர மானம் மரியாதய வாங்கினனீங்க கெண்டு எனக்குத் தெரியுமண்ண...உங்கட பெஞ்சாதி ஏன் நஞ்சு குடிக்க வெளிக்கிட்டவ எண்டதெல்லாம் மறத்திட்டீங்களா?...எனக்கு மானம் மரியாதயப் பற்றிச் சொல்ல உங்களுக்கு என்ன தகுதியிருக்கு?'- நாலு பக்கமும் மறிக்கப்பட்ட பூனையாய் பாய்ந்தாள் கௌரி.

அத்தாரின் தலைக்குள் ஷெல் விழுந்து வெடித்தது. ரஞ்சனியின் அக்காவின் முகத்தில் பளீரென்று ஒரு புன்னகை தோன்றிப் பின்னர் பதுங்கிக் கொண்டது. அத்தாரைப் பற்றி எப்போதோதான் சொல்லியிருந்த விசயங்களை கௌரி இப்படித் திடீரென்று எடுத்து வீசுவாள் என்பதை கனவிலும் எதிர்பார்த்திராத ரஞ்சனி திகைத்துப் போய் நின்றாள்.

அத்தார் குழம்பிப் போனார். தனது அசிங்கங்களையெல்லாம் ரஞ்சனி கௌரியிடம் சொல்லியிருப்பாள் என்று தெரிந்திருந்தால் மானம் மரியாதை பற்றி விளக்கம் கொடுக்க இவ்வளவு தூரம் வந்திருக்கமாட்டார். இப்போ என்ன செய்வது? 'என்னடி சொன்னனீ நாயே?' என்றபடி கௌரிமீது பாய்ந்தால் இதமாக இருக்கும். ஆனால் பதிலாக கௌரி எதை எடுத்து விடுவாளோ என்று தயக்கமாக இருந்தது. ரஞ்சனி எதைச் சொல்லியிருப்பாள், எதை விட்டிருப்பாள் என்று அவருக்கு எப்படித் தெரியும்.

எனவே, 'வயதுக்கு மூத்த ஆக்களோட எப்படிக் கதைக்கிறதெண்டு நெரியாததுகள் வீட்ட வந்தது நம்மட பிழை' என்று சொல்லியவாறு, வேண்டுமென்றால் கதவை ஓங்கிச் சாத்திவிட்டுப் போகலாம் என்று, இலாபம் இல்லாவிட்டாலும் நட்டமில்லாமல் தப்பிக் கொள்ள வேண்டும் என்று அவரது ஏணன்சிப் புத்தி அறிவுறுத்தியது.

அக்காவும் அத்தாரும் போனதும் ரஞ்சனி அழுதழுது சொன்னாள். 'கௌரி உம்மப் பற்றி இண்டைக்குத் தான் எனக்குத் தெரியுது...இனிமேல் நான் உம்மோட இருக்க மாட்டன்...நாளைக்கு நான் வேற இடம் பார்க்கப் போறன்.'

கௌரியும் சளைக்காமல் சொன்னாள். 'அது நல்ல விசயம்...நானே சொல்லவேணுமெண்டு நினைச்சனான்.'

திங்கட் கிழமை

தேனீர்க் கோப்பையுடன் 'ஓமோரோ மூலை'க்கு வந்த கௌரியை 'வாருங்க வணக்கம்' என்று ஓமோரோ வரவேற்றான்.

'நேற்று முழுவதும் உங்கள் கலாசார நிகழ்ச்சியைப் பற்றியே ஓமோரோ பேசிக் கொண்டிருந்தான். இவன் சொல்லச் சொல்ல ஒரு அருமையான சந்தர்ப்பத்தை இழந்துவிட்ட துக்கம் எனக்கு அதிகமாயிற்று...ஒரு உண்மை மட்டும் எனக்குத் தெரிந்தது. இன்னும் இரண்டு தடவை உங்கள் கலாசார நிகழ்ச்சிக்கு வந்தால் நிச்சயமாக இவன் தமிழனாக மாறிவிடுவான்'-எ