ஈழநூல் 68  
நூல் 

இலக்கணச் சுருக்கம் (பகுதி 1,  பகுதி 2)

ஆசிரியர்

ஆறுமுகநாவலர்

மின்னூலாக்கம்

இ. பத்மநாப ஐயர்

மின்பதிப்பு ஈழநூல்

இலக்கணச் சுருக்கம்

ஆறுமுகநாவலர்

பகுதி 2

-----------------------------------------

2. வினையியல்

228. வினைச் சொல்லாவது, பொருளினது, புடைப் பெயர்ச்சியை உணர்த்துஞ் சொல்லாம்.

புடைப்பெயர்ச்சியெனினும், வினை நிகழ்ச்சியெனினும், பொருந்தும். வினை, தொழில் என்பவை ஒரு பொருட் சொற்கள்.

தேர்வு வினாக்கள் - 228. வினைச் சொல்லாவது யாது? புடைப் பெயர்ச்சி என்பது என்ன? வினைக்கு பாரியாயநாமம் என்ன?

வினை நிகழ்ச்சிக்குக் காரணம்

229. வினையானது வினைமுதல், கருவி, இடம், செயல், காலம், செயப்படு பொருள் என்னும் இவ்வாறுங் காரணமாவேணும், இவற்றுட் பல காரணமாகவேனும், நிகழும்.

உ-ம்.
வனைந்தான்: இத்தெரிநிலை வினை, வினைமுதன் முதலிய ஆறுங் காரணமாக, வந்தது. வினைமதல் குயவன்; முதற்கருவி மண்; துணைக்கருவி தண்டசக்கர முதலியன் இடம் வனைதற்கு ஆதாரமாகிய இடம்; செயல் வனைதற்கு மதற்காரணமாகிய செய்கை; காலம் இறந்தகாலம்; செயப்படு பொருள் குட முதலியன.

இருந்தான்: இத்தெரிநிலை வினை, வினைமுதன் முதலிய ஆறுங் காரணமாக, வந்தது.

உடையன்: இக்குறிப்பு வினை, கருவியுஞ் செயப்படு பொருளுமொழிந்த நான்குங் காரணமாக வந்தது.


230. வினை முதன் முதலிய ஆறனுள்ளே, தெரிநிலை வினைமுற்றின் கண், விணைமுதலுஞ் செயலுங் காலமுமாகிய மூன்றும் வெளிப்படையாகவும், மற்றை மூன்றுங் குறிப்பாகவுந் தோன்றும்.

தெரிநிலை வினைப் பெயரெச்ச வினையெச்சங்களின்கண் செயலுங் காலமுமாகிய இரண்டும் வெளிப்படையாகவும், மற்றை நான்கும் குறிப்பாகவுந் தோன்றும்.

வினைமுதல் பால் காட்டும் விகுதியினாலும், செயல் பகுதியினாலும், காலம் இடைநிலையும் விகுதியும் விகாரப்பட்ட பகுதியுமாகிய மூன்றனுள் ஒன்றினாலுந் தொன்றும். எச்ச வினைகட்குப் பால் காட்டும் விகுதி யின்மையால், அவற்றில் வினைமுதல் வெளிப்படத் தோன்றதாயிற்று.

உ-ம்.

உண்டான்: இத்தெரிநிலை வினைமுற்றிலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும், விகுதியால் வினைமுதலும் வெளிப்படையாகவும், மற்றவை
உண்ட: இத் தெரிநிலைவினைப் பெயரெச்சத்திலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும் வெளிப்படையாகவும், குறிப்பாகவுந் தோன்றின.

உண்டு: இத்தெரிநிலை வினையெச்சத்திலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும் வெளிப்படையாகவும், குறிப்பாகவுந் தோன்றின.

231. வினைக்குறிப்பு முற்றிக்கண் வினை முதன் மாத்திரம் வெளிப்படையாகவும், மற்றவையெல்லாங் குறிப்பாகவுந் தோன்றும்.

வினைக்குறிப்பு வினையெச்சங்களின் கண், வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றும்.

உ-ம்.

கரியன்: இக்குறிப்பு வினைமுற்றிலே, விகுதியால் வினைமுதல் வெளிப்டையாகவும், மற்றவையெல்லாங் குறிப்பாகவுந் தோன்றும்.

கரிய: இக்குறிப்புவினைப் பெயலெச்சத்திலே, வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின.

இன்றி: இக்குறிப்புவினை வினையெச்சத்திலே, வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின.


தேர்வு வினாக்கள் - 229. வினையானது எவை காரணமாக நிகழும்? 230. தெரிநிலைவினைமுற்றிற்கண், வினைமுதன் முதலய ஆறும் எப்படித் தோன்றும்? தெரிநிலை வினைப் பெயரெச்ச வினையெச்சங்களின் கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படித் தோன்றும்? வினைமுதல், செயல், காலம், என்னும் மூன்றும் எவ்வௌ; வுறுப்புக்களினாலே தோன்றும்? யாது காரணத்தால் எச்ச வினைகளில் வினை முதல் வெளிப்படத் தோன்றாதாயிற்று? 231. வினைக்குறிப்பு, முற்றிக் கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படிப்த் தோன்றும்? வினைக்குறிப்புப் பெயரெச்ச வினையெச்சங்களின் கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படித் தோன்றும்?


காலம்

232. காலம், இறப்பு, நிகழ்வு, எதிர்வு, என மூவகைப்படும்.

இறப்பாவது தொழிலது கழிவு நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலமை. எதிர்வாவது தொழில் பிறவாமை.

தேர்வு வினாக்கள் - 232. காலமாவது யாது? இறப்பாவது யாது? நிகழ்வாவது யாது? எதிர்வாவது யாது?

வினைச்சொற்களின் வகை


233. இக்காலத்தோடு புலப்படுவனவாகிய வினைச்சொற்கள், தெரிநிலைவினையுங் குறிப்பு வினையும் என, இருவகைப்படும்.

234. தெரிநிலை வினையாவது, காலங்காட்டும் உருப்புண்மையினாலே, காலம் வெளிப்படத் தெரியும்படி நிற்கும் வினையாம்.

உ-ம்.

நடந்தான்: இது, தகரவிடை நிலையினால் இறந்தகாலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.

உண்கும்: இது, கும் விகுதியினால் எதிர்காலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.

பெற்றான்: இது, பெறு, பெற்று என விகாரப்பட்டு நின்ற பகுதியினால் இறந்தகாலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை வினை.

தெரிநிலை வினைகள் தோன்றுதற்குரிய முதனியடிகள் இவையென்பது பதவியலில் நாற்பத்தாறம் வசனத்திற் கூறப்பட்டது.

235. குறிப்பு வினையாவது, காலங்காட்டும் உறுப்பின்மையினாலே, காலம் வெளிப்படத் தெரிதலின்றிச் சொல்லுவோனது குறிப்பினாலே தோன்றும்படி, நிற்கும் வினையாம்.

உ-ம்.

பொன்னன்: இது, பொன்னையுடையனாயினான் என இறந்தகாலங் கருதியாயினும், பொன்னையுடையனாகின்றான் என நிகழ்காலங் கருதியாயினும், பொன்னையுடையனாவான் என எதிர்காலங் கருதியாயினுந் தன்னை ஒருவன் சொல்ல, அக்காலம் அவனது குறிப்பாட் கேட்போனுக்குத் தோன்றும் படி நிற்றலினாலே, குறிப்பு வினை.

பொன்னன் என்பது, பொன்னுடைமை காரணமாக ஒருவனுக்குப் பெயராய் நின்று எழுவாய் முதலிய வேற்றுமையுரு பேற்கும் போது பெயர்ச் சொல்; முக்காலம் பற்றிப் புடை பெயரும் ஒருவனது வினை நிகழ்ச்சியை உணர்த்திப் பெயருக்குப் பயனிலையாய் வரும் போது குறிப்பு வினைமுற்றுச் சொல்; அங்ஙனம் வினைமுற்றாய் நின்று பின் அவ்வினை நிகழ்ச்சி காரணமாக அவனுக்குப் பெயராகி எழுவாய் முதலிய வேற்றுமையுருபேற்கும் போது குறிப்பு வினையாலணையும் பெயர்.

குறிப்பு வினைகள் தோன்றுதற் குரிய முதனிலையடிகாள் இவையென்பது பதவியலில் நாற்பத்து நான்காம் வசனத்திற் கூறப்பட்டது.

236. தெரிநிலைவினை குறிப்புவினை என்னும் இரண்டும், முற்றும், பெயரெச்சமும், வினையெச்சமும், வினையெச்சமும் என்பன மும்மூன்று வகைப்படும். எனவே, தெரிநிலைவினைமுற்றும், தெரிநிலைவினைப் பெயரெச்சமும், தெரிநிலை வினையெச்சமும், குறிப்பு வினைமுற்றும், குறிப்பு வினைப்பெயரெச்சமும், குறிப்பு வினை வினையெச்சமும் என, வினைச்சொற்கள் அறுவகையாயின.

237.இவ்வறுவகை வினைச்சொற்களும், உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.

உடன்பாட்டு வினையாவது. தொழிலினது நிகழ்ச்சியை உணர்த்தும் வினையாம். உடன்பாட்டு வினையெனினும், பொருந்தும்.

உ-ம்.
நடந்தான் நடந்த நடந்து
பெரியன் பெரிய மெல்ல

எதிhமறை வினையாவது, தொழில் நிகழாமையை உணர்த்தும் வினையாம். எதிர்மறைவினையெனினும், மறைவினையெனினும், பொருந்தும்.

உ-ம்.
நடவான் நடவாத நடவாது
இலன் இல்லாத இன்றி

238. வினைச்சொற்கள், இருதிணையைம்பான் மூவிடங்களுள் ஒன்றற்கு உரிமையாகியும், பலவற்றிற்குப் பொதுவாகியும், வழங்கும்.

தேர்வு வினாக்கள் - 233. இக்காலத்தோடு புலப்படுவனவாகிய வினைச்சொற்கள் எத்தனை வகைப்படும்? 234. தெரிநிலை வினை யாவது யாது? 235. குறிப்பு வினையாவது யாது? பொன்னன் என்பது எத்தனை வகைச் சொல்லாகும்? அது எப்பொழுது பெயர்ச் சொல்? எப்பொழுது குறிப்பு வினைமுற்றுச் சொல்? எப்பொழுது குறிப்பு வினையாலணையும் பெயர்? 236. தெரிநிலை வினை குறிப்பு வினை என்னும் இரண்டும் தனித்தனி எத்தனை வகைப்படும்? 237. இவ்வறுவகை வினைச்சொற்களும் எவ்வெப் பொருளில் வரும்? உடன்பாட்டு வினையாவது யாது? எதிர்மறை வினயாவது யாது? 238. வினைச்சொற்கள் இருதிணையைம்பான் மூவிடங்களைப் பற்றி எப்படி வழங்கும்?

முற்று வினை

239. முற்று வினையாவது, பால் காட்டும் விகுதியோடு கூடி நிறைந்து நின்று பெயரைக் கொண்டு முடியும் வினையாம்.

இம்முற்றுவினை கொள்ளும் பெயர்களாவன் பொவுட் பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என்னும் அறுவகைப் பெயருமாம்.

உ-ம்.
செய்தான் சாத்தன் நல்லன் சாத்தன்
குளிர்ந்தது நிலம் நல்லது நிலம்
வந்தது கார் நல்லது கார்
குவிந்தது கை நல்லதுகை
பரந்தது பசப்பு நல்லது பசப்பு
ஒழிந்தது பிறப்பு நல்லது பிறப்பு

தேர்வு வினாக்கள் - 239. முற்று வினையாவது யாது? முற்று வினை கொள்ளும் பெயர்களாவன் எவை?

படர்க்கை வினைமுற்று

240. படர்க்கை வினைமுற்று, உயர்திணையாபாலொருமைப் படர்க்கை வினைமுற்றும், உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கை வினைமுற்றும், உயர்திணைப் பலர்பாற் படர்க்கை வினைமுற்றும், அஃறிணையொன்றன் பாற் படர்க்கை வினைமுற்றும், அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை வினைமுற்றும் என ஐந்து வகைப்படும்.

241. அன், ஆன், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.

உ-ம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அவன்
நடந்தனன்
நடந்தான் நடக்கின்றனன்
நடக்கின்றான் நடப்பன்
நடப்பான் குழையன்
குழையான்


242. து, று, என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுமாம்.

உ-ம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அவள்
நடந்தனள்
நடந்தாள் நடக்கின்றனள்
நடக்கின்றாள் நடப்பள்
நடப்பாள் குழையள்
குழையாள்

243. அர், ஆர் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், உயர்திணைப் பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுமாம்.

உ-ம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அவர்
நடந்தனர்
நடந்தார் நடக்கின்றனர்
நடக்கின்றார் நடப்பர்
நடப்பார் குழையர்
குழையார்


செய்யுளிலே பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுக்கு, இவ்விகுதிகளின்றி, ப, மார் என்னம் விகுதிகளும் வரும். அவை இடைநிலையின்றித் தாமே எதிர் காலங் காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.

உ-ம்.
நடப்ப நடமார் - அவர்
இவ்விரண்டற்கும் நடப்பார் என்பது பொருள்.

244. து, று என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் அஃறிணையொன்றன் பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம். இவற்றுள், றுவ்விகுதி, இறந்தகால விடைநிலையோடன்றி, நிகழ்கால வெதிர்காலவிடைநிலைகளோடு கூடி வராது.

உ-ம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி அது
நடந்தது
கூயிற்று நடக்கின்றது
---- நடப்பது
--- குழையது
அற்று

றுவ்விகுதி, வந்தன்று, உண்டன்று, சென்றன்று எனத்தடற வொற்றிடைநிலைகளின் முன்னும், புக்கன்று விட்டன்று, பெற்றன்று, என விகாரப்படடிறந்நகாலங் காட்டுங் கு, டு, று வீற்றுப் பகுதிகளின் முன்னும், அன்சாரியை பெற்று வரும். இவை, முறையே, வந்தது, உண்டது, சென்றது, புக்கது, விட்டது, பெற்றது எனப் பொருள்படும். றுவ் விகுதி, கூஙிற்று, ஓடிற்று என இன்னிடை நிலையின் முன் மாத்திரம், சாரியை பெறாது வரும்.

அற்று, இற்று, எற்று என்பவை, சுட்டினும் வினாவினும் வந்த வினைக்குறிப்பு முற்றுக்கள். இவை,

• தந்தின்று என, றுவ்விகுதி தகரவிடைநிலையின் முன் இன்சாரியை பெற்றதன்றோ எனின்; அன்று. அது, தந்தன்று, என்னும் உடன்பாட்டு வினையை மறுத்தற்குத் தகரவிடைநிலைக்கும் றுவ் விகுதிக்கும் இடையே இல்லென்னும் எதிர்மறையிடை நிலையேற்று வந்த மறைவினையென்றறிக. தந்தின்று தந்ததில்லையென பொருள்படும்.

முறையே, அத்தன்மைத்து, இத்தன்மைத்து, எத்தன்மையித்து எனப் பொருள் படும்.

டுவ் விகுதியை இறுதியில் உடைய வினைச் சொல் அஃறிணையொன்றன்பாற் படர்க்கை குறிப்பு வினைமுற்றாம், இவ் விகுதி தெரிநிலைவினைமுற்றிற்கு இல்லை.

உ-ம். பொருட்டு (ஸ்ரீ பொருளையுடையது)
ஆதிரைநாட்டு (ஸ்ரீ ஆதிரை நாளினிடத்தது)
குண்டுகட்டு (ஸ்ரீ ஆழமாகிய கண்ணையுடையது) அது

245. அ என்னம் விகுதியை இறுதியில் உடைய வினைச்சொல், அஃறிணைப் பலவின்பால் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுமா.

இவ்விகுதி, அன்சாரியை பெற்றும், பெறாதும், வரும்

உ-ம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. அவை
நடந்தன
நடந்த நடக்கின்றன
நடக்கின்ற நடப்பன
நடப்ப கரியன
கரிய

ஆ என்னும் விகுதியை இறுதியில் உடைய வினைச் சொல், அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை, யெதிர்மறைத் தெரிநிலைவிணை முற்றாம். இவ்விகுதி குறிப்பு வினை முற்றிற்கு இல்லை.

உ-ம்.

நடவா -- அவை

• நடப்ப என்னும் உயர்திணைப் பலர்பாற்படர்க்கைத் தெரிநிலை வினை முற்று, வேறு, நடப்ப என்னும் அஃறிணை பலவின்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும், வேறு, முன்னையது, நட என்னும் பகுதியும், பா என்னும், எதிர்கால பரர்பற்படர்க்கை விகுதியுமாகப், பகுக்கப்பட்டு வரும். பின்னையது, நட என்னும் பகுதியும், இப்பென்னும் எதிர்காலவிடைநிலையும், ஆ என்னும் பலவின்பாற் படர்க்கை விகுதியுமாக, பகுக்கப்பட்டு வரும்.

தேர்வு வினாக்கள் - 240. படர்கை வினைமுற்று எத்தனை வகைப்படும்? 241. உயர்திணை யாண்பாலொருமை படர்க்கை விணைமுற்றுக்கள் எவை? 242. பெண்பாலொருமை படர்க்கை விணைமுற்றுக்கள் எவை? 243. உயர்திணை பலர்பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை? பலர்பாற் படர்க்கை தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விகுதிகளின்றி வேறு விகுதிகளும் வருமோ? 244. அஃறிணையொன்றன்பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை? து, று, என்னும் இரு விகுதிகளும் முக்கால விடைநிலைகலோடும் வருமோ? றுவ்விகுதி எவ்விடங்களின் எச்சாரியை பெற்று வரும்? எவ்விடத்துச் சாரியை பெறாது வரும்? அஃறிணை யொன்றன்பாற் படர்க்கை வினைமுற்றுக்கு, து று என்னும் இரு விகுதிகளுமன்றி வேறு விகுதி இல்லையோ? 245. அஃறிணைப் பலவின் பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை? அஃறிணை பலவின்பாற் படர்க்கை வினைமுற்றுக்கு வேறு விகுதி இல்லையோ?

தன்மை வினைமுற்று

246. தன்மை வினைமுற்று, தம்மையொருமை, வினைமுற்றும் தன்மைப் பன்மை வினைமுற்றும் என, இரு வகைப்படும்.

247. என், ஏன், அன் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்றுமாம்.




உ-ம்.

இ. தெரி. நி. தெரி. யான்
உண்டனென்
உண்டேன்
உண்டனன் உண்கிறனென்
உண்கிறேன்
உண்கிறனன்
எ. தெரி. குறி
உண்குவென்
உண்பேன்
உண்பன் குழையினென்
குழையினேன்
குழையினன்

செய்யுளுளிலே தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விகுதிகள்களன்றி, ஆல் கு, டு து று என்னும் விகுதிகளும் வழங்கும்.

இவைகளுள், ஆல் விகுதி எதிர்காலவிடைநிலைகளோடு மாத்திரம் வரும். மற்றைநான்கு விகுதிகளும் இடைநிலையின்றி தாமே காலங்காட்டுதல் பதவியளிற் பெறப்பட்டது.


(உதாரணம்)

விகு. இ.தெ. எ.தெ. யான்
அல்
கு
டு
து
று -
-
உண்டு
வந்து
சென்று உண்பல்
உண்கு
-
வருது
சேறு

248. அம், ஆம், எம், ஏம், ஓம் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.

உ-ம்.

இ. தெரி. நி. தெரி. யாம்
உண்டனம்
உண்டாம்
உண்டெனம்
உண்டேம்
உண்டோம் உண்கின்றனம்
உண்கின்றாம்
உண்கின்றனெம்
உண்கின்றேம்
உண்கின்றோம்
எ. தெரி. குறி.
உண்பம்
உண்பாம்
உண்பெம்
உண்பேம்
உண்போம் குழையினம்
குழையினாம்
குழையினெம்
குழையினேம்
குழையினோம்

செய்யுளிலே, தன்மைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுக்கு, இவ் விகுதிகளின்றி, கும், டும், தும், றும் என்னும் விகுதிகளும் வழங்கும் இடைநிலையின்றித் தாமே காலங்காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.

விகு. இ. தெரி. எ. தெரி. யாம்
கும்
டும்
தும்
றும் -
உண்டும்
வந்தும்
சென்றும் உண்கும்
-
வருதும்
சேறும்


தேர்வு வினாக்கள் - 246. தன்மை வினைமுற்று எத்தனை வகைப்படும்? 247. தம்மையொருமை வினைமுற்றுக்கள் எவை? தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்வுகுதிகளின்றி வேறு விகுதிகளும் வழங்குமோ? ஆல் விகுதி எக்கால விடைநிலைகளொடு வரும்? 248. தன்மைப் பன்மை வினைமுற்றுக்கள் எவை? தன்மைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விகுதிகளின்றி வேறு விகுதிகள் வழங்குமோ?

முன்னிலை வினைமுற்று

249. முன்னிலை வினைமுற்று முன்னிலையொருமை வினைமுற்றும் முன்னிலைப் பன்மை வினைமுற்றுமென இரு வகைப்படும்.

250. ஐ ஆய் இ என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் முன்னிலையொருமைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.

உ-ம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. நீ
உண்டனை
உண்டாய்
உண்டி உண்கின்றனை
உண்கின்றாய்
உண்ணாநின்றி உண்பை
உண்பாய்
சேறி குழையினை
குழையாய்
வில்லி

இகரவிகுதி எதிர்காலத்தை இடைநிலையின்றி தானே காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.

251. இர், ஈர், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய விசை; சொற்கள். முன்னிலைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.

உ-ம்.

இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. நீர்
உண்டனிர்
உண்டீர் உண்கின்றனீர்
உண்கின்றீர் உண்பிர்
உண்பீர் குழையினிர்
குழையீர்

தேர்வு வினாக்கள் - 249. முன்னிலை வினைமுற்று எத்தனை வகைப்படும்? 250. முன்னிலையொருமை வினைமுற்றக்கள் எவை? 251. முன்னிலை பனடமை வினைமுற்றுக்கள் எவை?





எதிர்மறை வினைமுற்று

252. எதிர்மறை குறிப்பு வினைமுற்றுக்கள், ஆல், இல் என்னும் எதிர்மறைப் பன்படியாக தோன்றிப் பால் காட்டும் விகுதிகளை பெற்று வருவனாவாம்.

உ-ம்.

படர்க்கை - அல்லன், அல்லள், அல்லர் அன்று அல்ல ஜஅல்லனஸ
இலன் இலள் இலர் இன்று இல ஜ இல்லனஸ

தன்மை - அல்லேன் அல்லேம் இலேன் இலேம்

முன்னிலை - அல்லாய் அல்லீர் இலாய் இலீர்

இன்மை என்பது ஒரு பொருளினது உண்மைக்கும் ஒரு பொருளை உடமைக்கு மறுதலை உண்மை உளதாதல்.

உ-ம்.

உண்மை இன்மை
இங்கே சாத்தனுளன்
இவனிடத்தே அறமுண்டு இங்கே சாத்தானிலன்
இவனிடத்தே அறமின்று



உடமை இன்மை
இவன் பொருளுடையன்
இது குணமுடையது இவன் பொருளிலன்
இது குணமில்லது

அன்மையென்பது ஒரு பொருள் சுட்டியதொரு பொருளாதற்கு மருதலை, பிரிது பொருளாதலைக் காட்டும். என்றபடி

உ-ம்.

இவன் சாத்தனல்லன்: ஜ கொற்றன் ஸ
இஃதறனன்று: ஜ மறம் ஸ

253. எதிர்மறத் தெரிநிலை முற்றுக்கள், இல் ஆல், ஆ, என்னும் எதிர்மறையிடைநிலைகளோடு பால் காட்டும் விகுதிகளைப் பெற்று வருவனவாம். இவற்றுள் இல் இடைநிலை இறந்தகால இடைநிலையோடும் விகாரப்டிறந்த காலங்காட்டும் பகுதியோடும். நிகழ்கால விடைநிலையோடும். கூடி வரும். இனி இடைநிலையோடு கூடாது, இல் இடைநிலை குஞ்சாரியை பெற்றும் ஆல் இடைநிலை குஞ்சாரியை பெற்றும் பெறாதும் ஆகாரவிடைசாரியை பெறாதும் எதிர்காலம் உணர்த்தி வரும்.

உ-ம்.

நடந்திலன், பெற்றிலன், நடக்கின்றிலன், நடக்கிலன், எ-ம். நடக்கலன், உண்ணலன், எ-ம். நடவான், எ-ம். வரும். மற்ற விகுதிகளோடு இப்படியேயொட்டிக் கொள்க.

• இல், அல், ஆ, இவ் மூன்றையும் எதிர்மறை விகுதி என்பர் சிலர். எதிர்மறை இடைநிலையெனபதே சேனாவரையார். சிவஞான முனிவர். முதலியோர் துண்வு நடவா என்னும் அஃறிணைப்பலவின் பால் படர்க்கை வினைமுற்றில் ஆகாரம் வெரு விகுதி வேண்டாது தானே, எதிர்மறை பொருளோடு பலவின்பாற் படர்க்கைப் பொருளையுந் தந்து நிற்றலின், அங்கு மாத்திரம் விகுதியோ யென்றறிக.


அகரவிடைநிலை வருமெழுத்து உயிராயவழிக் கெடுதல் பதவியலிற் பெறப்பட்டது.

இங்ஙனமன்றி உடன்பாட்டு தெரிநிலை முற்றுக்களே ஆல் என்னும் பன்படியாக தோன்றிய எதிர்மறை சிறப்பு வினைக்குறிப்போடாயினும் இல்லை யென்னும் எதிர்மறைத்த தெரிநிலை வினைமுற்றுக்களாயும் வரும்.

உ-ம்.
உண்டானல்லன், உண்டேனல்லன், உண்டாயல்லை, எ-ம். வந்தானில்லை, வந்தேனில்லை, வந்தாயில்லை, எ-ம். வரும்.

தேர்வு வினாக்கள் - 252. எதிர்மறைத் குறிப்பு வினைமுற்றுக்கள் எவை? இன்மையென்பது என்னை? அன்மை யென்பது என்னை? 253. எதிர்மறைத் தெரிநிலை வினைமுற்றுக்கள் எவை? இவற்றுள் இல் இடைநிலை எப்படி வரும்? ஆல் இடைநிலை எப்படி வரும்? அகரவிடைநிலை எப்படி வரும்? எதிர்மறைத்தெரிநிலை வினைமுற்றுக்கள் இங்ஙனமன்றி, இன்னும் எங்ஙனம் வரும்?

முன்னிலையேவல் விiனுமுற்று

254. முன்னிலையேவல் வினைமுற்று, முன்னிலையேவலொருமை வினைமுற்று முன்னிலையேவற் பன்மை வினைமுற்றும் என இரு வகைப்படும்.

255. ஆய், இ, ஆல், ஏல், ஆல், என்னும் விகுதிகளை இருதியில் உடைய வினைச்சொற்களும் ஆய் விகுதி புணர்ந்து குன்றிப் பகுதி மாத்திரையாய் நிற்கும் விசை; சொற்களும் முன்னிலையேவாலொருமை தெரிநிலை வினைமுற்றுக்களாம். இவற்றுல் அல், ஏன், ஆல், என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையிடத்து வரும்.

உ-ம்.

உ-ம். உண்ணாய்
உண்ணல் உண்ணுதி
உண்ணேல் உண்
மாறல் நீ

ஏவல் விகுதிகள் இடைநிலையின்றி தாமே எதிர்காலங்காட்டல் பதவியலிற் பெறப்பட்டது.

எதிர்மறையாலொருமை வினைமுற்றுக்கள், உண்ணாதே, உண்ணாதீ, என எதிர்மறை ஆகாரவிடை நிலையின் முன் தகரவெழுத்து பெற்றோடு எகர விகுதி இகரவிகுதிகளுள் ஒன்று பெற்றும் வரும்.

256. ஈர், உம், மின், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுக்களாம்.

உ-ம்.
உண்ணீர், உண்ணும் உண்மின் - நீர்

எதிர்மநையேவற் பன்மைவினை முற்றுக்கள் உண்ணமின், நடவன்மின் என, பகுதிக்கும் வின் விகுதிக்கும் இடையே எதிர்மறை அல் இடைநிலை பெற்று வரும்.


(1) உண்ணாய், என்னும் முன்னிலையொருமை யெதிர்மறை தெரிநிலை வினைமுற்று வேறே: உண்ணாய் என்னும், முன்னிலையேவலொருமை தெரிநிலை வினைமுற்றும் வேறே: முன்னையது உண்ணென்னும் பகுதியும் பெற்று அகரவிடைநிலை கேட்டு முடிந்நது. பின்னையது உன் என்னும் பகுதியும் ஆய் விகுதியும் பெற்று முடிந்தது.
(2) உண்ணீர் என்னும் முன்னிலைப் பன்மையெதிர்மறை தெரிநிலை வினைமுற்றும், வேறே: உண்ணீர் என்னும் முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலைவினைமுற்று வேறே: முன்னையது உண் என்னும் பகுதியும் ஆவன என்னும் எதிர்மறை இடைநிலையும் ஈர் விகுதியும் பெற்று இடைநிலை ஆகாரம் கேட்டு முடிந்தது. பின்னையது உண் என்னும் பகுதியும் ஈர் விகுதியும் பெற்றும் முடிந்தது.

தேர்வு வினாக்கள் - 254. முன்னிலையேவல் வினைமுற்று எத்தனை வகைப்படும்? 255. முன்னிலையேவலொருமை தெரிநிலை வினை முற்றுக்கள் எவை? இவற்றுள் எவை எதிர்மறையிடத்து வரும்? எதிர்மறையேவலொருமை வினைமுற்றுக்கள் என்னும் எப்படி வரும்? 256. முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுக்கள் எவை? எதிர்மறையேவற் பன்மைவினைமுற்றுக்கள் எவை?

வியங்கோல் வினைமுற்று

257. க, இய, இயர், அ, அல், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் வியங்கோள் வினைமுற்றுக்களாம்.

வியங்கோளாவது, இருதிணையைம்பாண் மூவிடங்கட்கும் பொதுவாகிய ஏவல்.

ககரவிகுதி - வாழ்க
இயவிகுதி - வாழிய
அகரவிகுதி - வர
அல்விகுதி - ஒம்பல் உண்க
உண்ணிய
உண்ணியர்
உண்ண
எனல் யான்,யாம்
நீ, நீர்
அவன்,
அவள், அவர்,
அது, அவை

வாழிய என்பது, ஆ, வாழி, அந்தணர் வாழி எனப் பெரும்பாலும் ஈற்றுயிர் மெய் கெட்டு வரும்.

வா ஸ்ரீ வருக, உன்னை ஸ்ரீ உன்க
ஒம்பல் ஸ்ரீ ஒம்புக, எனல் ஸ்ரீ என்க

சிறுபான்மை, இவை, இக்காலத்து உலக வழக்கிலே நடக்கக்கடவுன், நடக்கக்கடவுள், எ-ம். நடப்பானாக நடப்பாளாக நடப்பாராக. எ-ம். பாலிடங்களுள் ஒன்றற் குரியாவாய் வருமெனவுங் கொள்க.

எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள், மறவற்க, உண்ணற்க அல் இடைநிலை பெற்று வரும்.

அன்றியும், ‘மகனெல்’ என்னுமிடத்து மகனென்று சொல்லற்க எனவும், ‘மாPஇயதொரால்’ என்னுமிடத்து மாPயதொருவற்க. எ-ம். பொருள்பட நிற்றலால், அல், ஆல் இரண்டும் எதிர்மறை வியங்கோள் விகுதிகளாய் வருமெனவும் அறிக.

மேற்கூறிய ஏவல் விகுதிகளும் இவ்வியங்கோள் விகுதிகளும் இடைநிலையின்றித் தாமே எதிர்காலங் காட்டல் பதவியலிற் பெறப்பட்டது.

தேர்வு வினாக்கள் - 257. வியங்கோள் வினைமுற்றுக்கள் எவை? வியங்கோளாவது என்ன? எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள் எவை? வியங்கோளாவது என்ன? எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள் எவை?

செய்யுமென் முற்று

258. செய்யுமென்னும் வாய்ப்பாட்டுத் தெரிநலை வினைமுற்றுச் சொற்கள், படர்க்கையிடத்தனவாகிய ஐம்பால்களுக்குள்ளே பலர்பாலொழிந்த நான்கு பால்களுக்கும் பொதுவாக வரும்.

உ-ம்.
அவண்ணும் அவளுண்ணும்
அதுவுண்ணும் அவையுண்ணும்

இம்முற்று வினைச் சொல்லில் உம் விகுதி நிகழ்காலமும் எதிர்காலமுங’ காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.

தேர்வு வினா - 258. செய்யுமென்னும் வாய்ப்பாட்டுத் தெரிநிலை முற்றுக்கள் எவ்வாறு பொதுப்பட வரும்?

பொதுவினைக் குறிப்பு

259. வேறு, இல்லை, உண்டு, என்னும் இம்மூன்று வினைக்குறிப்பு முற்றுச்சொற்களும், யார் என்னும் வினா வினைக்குறிப்பு முற்றுச் சொல்லும், இருதிணையம்பான் மூவிடங்கட்கும் பொதுவாகி வரும்.

உ-ம்.

அவன்
அது
யாம் அவள்
அவை
நீ அவர்
யான்
நீர் வேறு, இல்லை, உண்டு, யார்




இல்லையென்பது ‘எஞ்ஞான்னுமில்’ எனக் கடைக் குறைந்து வருதலுமுண்டு.

அஃறிணையொருமைக்குரிய டுவ்விகுதி பெற்று நிற்கும் உண்டு என்னம் வினைக்குறிப்பு முற்றும் வேறே: விகுதியின்றிப் பொதுச் சொல்லாயே நிற்கும் இவ்வுண்டென்னும் வினைக்குறிப்பு முற்றும் வேறே: முன்னையது இன்று என்பதற்கு மறுதலை: பின்னையது இல் என்பதற்கு மறுதலை: பின்னையது இல் என்பதற்கு மறுதலை.

யார் என வகரங்கெட்டு நிற்கும் பலாபாற் படர்க்கை வினைப் பெயரும் வேறே: யார் என்னும் இவ் வினா வினைக்குறிப்பும் வேறே: யார் என்னும் இவ் வினா வினைக்குறிப்பும் வேறே.

யாரென்பது ஆரென விகாரப்பட்டும் வரும்.

260. எவன் என்னும் வினைவினைக் குறிப்பு மற்றுச் சொல் அஃறிணையிருபாற்கும் பொதுவாகி வரும்.

உ-ம்
அஃதெவன் அவையெவன்.

எவன் என்னும் உயர்திணையாண்பாற் படர்க்கை வினாப்பெயரும் வேறே: எவன் என்னும் இவ்வினா வினைக்குறிப்பும் வேறே.

எவன் என்பது என், என்ன, என்னை, என விகாரப்பட்டும் வரும்.

தேர்வு வினாக்கள் - 259. வேறு, இல்லை, உண்டு என்னும் இம்மூன்று வினைக்குறிப்பு முற்றுச் சொற்களும், யார், என்னம் வினாவினைக் குறிப்புமுற்றுச் சொல்லும், எவ்வாறு பொதுப்பட வரும்? 260. எவன் என்னும் வினா வினைக் குறிப்பு முற்றுச் சொல் எவ்வாறு பொதுப்பட வரும்?

பெயரெச்சம்

261. பெயரெச்சமாவது, பாhல் காட்டும். முற்று விகுதி பெறாத குறைச்சொல்லாய்ப் பெயரைக் கொண்டு முடியும் வினையாம்.

இப்பெயரெச்சங் கொள்ளும் பெயர்களாவன், வினை, முதற்பெயர், கருவிப் பெயர், இடப்பெயர், தொழிற்பெயர், காலப்பெயர், செயற்பாட்டுப் பொருட்பெயர் என்னும் அறவகை பெயருமாம்

உ-ம்.

உண்டசாத்தன் - வினைமுதற்பெயர்
உண்ட கலம் - கருவிப்பெயர்
உண்ட வீடு - இடப்பெயர்
உண்ட ஊண் - தொழிற்பெயர்
உண்ட நாள் - காலப்பெயர்
உண்ட சோறு - செயப்படு பொருட்பெயர்

262. தெரிநிலைவினைப் பெயரெச்சம், செய்த வென்னும் வாய்ப்பாட்டிறந்தபாலப்பெயரெச்சம் எனவும் செய்கின்ற வென்னும் வாய்ப்பாட்டு நிகழ்காலப் பெயரெச்சம் எனவும் செய்யும் என்னும் வாய்ப்பட்டெதிர்காலப் பெயரெச்சம் எனவும் மூவகைப்படும்.

263. செய்தவென்னும் வாய்ப்பாட்டிறந்த காம், பெயரெச்சங்கள் இறந்த காலவிடைநிiயோடு வகாரப்பட்டிறந்தகாலங் காட்டும் தகுதியோடும் அகர விகுதி பெற்று வருவனவாம்.

உ-ம்.
வந்த குதிரை போய குதிரை
உண்ட குதிரை புக்க குதிரை
தின்ற குதிரை விட்ட குதிரை
வருந்தின குதிரை உற்ற குதிரை

264. செய்கின்ற வென்னும் வாய்ப்பாட்டு நிகழ்கால பெயரெச்சங்கள், நிகழ்கால, விடைநிலையோடு அகரவிகுதி பெற்று வருவனவாம்.

உ-ம்.
உண்ணாநின்ற குதிரை உண்கின்ற குதிரை
உண்கிற குதிரை

266. எதிர்மறைத் தெரிநிலை வினைப்பெயரெச்சங்கள், எதிர்மறை ஆகாரவிடைநிலையுந் தகரவெழுத்துப் போற்றோடு கூடிய அகரவிகுதியும் பெற்று வருவனவாம்.

செய்யாத என்பது செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் மூன்றற்கும் எதிர்மறையாம். இவ்வெதிர்மறை பெயரெச்சம் செய்கலாத, செய்கிலாத, என அல், இல் என்னும் இடைநிலைகளை ஆகாரச் சாரியையோடு பெற்று வரும்.

உ-ம்.
உண்ணாத குதிரை நடவாத குதிரை

உண்ணாக் குதிரை, வடவாக் குதிரை என ஈற்றுயிர் மெய்கெட்டும் வரும்.

267. குறிப்பு வினைப்பெயரெச்சங்கள் அகரவிகுதி பெற்று வருவனவாம்.

உ-ம்.
கரிய குதிரை, பெரிய களிறு, நெடியவில்
செய்ய மலர், தீய சொல், புதிய நட்கு
உள்ளபொருள் முகத்த யானை படத்த பாம்பு

268. எதிர்மறைத் குறிப்பு வினைப்பெயரெச்சங்கள் அல், இல. என்னம் பன்படியாகத் தோன்றி ஆகாரசச் சாரியையுந் தகரவெழுத்து பெற்றேடு கூடிய அகர விபுதியும் பெற்று வருவனவாம்.

உ-ம்.
அல்லாத குதிரை இல்லாத பொருள்

அல்லாக்குதிரை இல்லாப் பொருள் என ஈற்றுயிர் மெய் கெட்டு வரும்.

269. பெயரெச்சங்கள் இருதணையைம்பான் மூவிடங் கடகும் பொதுவாகவரும்.

உ-ம்.
உண்ட யான், யாம்
நீ நீர்
அவன், அவள், அவர், அது, அவை

தேர்வு வினாக்கள் - 261. பெயரெச்சமாவது யாது? பெயரெச்சம் கொள்ளும் பெயர்கள் எவை? 262. தெரிநிலை வினைப்பெயரெச்சம், எத்தனை வகைப்படும் எவை? 263. செய்தவென்னும் வாய்ப்பாட்டிறந்தகாலப் பெயரெச்சங்கள் எவை? 264. செய்கின்ற வென்னும் வாய்ப்பாட்டு நிகழ்காலப் பெயரெச்சங்கள் எவை? 265. செய்யுமென்னும் வாய்ப்பாட்டெதிர்காலப் பெயரெச்சங்கள் எவை? 266. எதிர்மறைத் தெரிநிலை வினைப் பெயரெச்சங்கள் எவை? செய்யாத வென்பது எவற்றிற்கு எதிர்மறை? இவ்வெதிர்மறைப் பெயரெச்சம் இன்னும் இங்ஙனம் வரும்? 267. குறிப்பு வினை பெயரெச்சங்கள் எவை? 268. எதிர்மறைக் குறிப்பு வினைப் பெயரெச்சங்கள் எவை? 269. பெயரெச்சங்கள் எவ்வாறு பொதுப்பட வரும்?

வினையெச்சம்

270. வினையெச்சமாவது பால் காட்டும் முற்றுவிகுதி பெறாத குறைசெ சொல்லாய் வினைச்சொல்லைக் கொண்டு முடியும் வினையாம்.

இவ்வினையெச்சங் கொள்ளும் வினைச்சொற்களாவன உடன்பாடும் எதிர்மறையும் பற்றிவரும் தெரிநிலையுங் குறிப்புமாகிய வினைமுற்றும் பெயரெச்சமும், வினையெச்சமும், வினையாலணையும், பெயரும், தொழிற்பெயரும் ஆகிய ஐ வகை வினைச்சொற்களுமாம்.

உ-ம்.
1. தெரிநிலைவினையெச்சந் தெரிநிலை வினை விகற்பங்கள் கொள்ளுதற்கு

உ-ம்.

உண்டு வந்தான்; உண்டுவாரான் - தெரிநிலை வினைமுற்று
உண்டுவந்த் உண்டுவராத - தெரிநிலைப்பெயரெச்சம்
உண்டுவந்து; உண்டுவராது - தெரிநிலை வினையெச்சம்
உண்டுவந்தவன்; உண்டு வாராதவன் - தெரிநிலை வினையாலணையும் பெயர்
உண்டுவருதல்; உண்டுவராதவன் - தெரிநிலைத் தொழிற் பெயர்

2. தெரிநிலை வினையெச்சங் குறிப்புவினை விகப்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-

கற்றுல்லவன் - குறிப்புவினைமுற்று
கற்றுவல்ல - குறிப்பு வினைப்பெயரெச்சம்
கற்றுவல்லவன் - குறிப்புவினையாலனையும் பெயர்
கற்று வன்மை - குறிப்புத் தொழிற்பெயர்

3. குறிப்பு வினையெச்சந் தெரிநிலைவினை விகப்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-


அறமன்றிச் செய்தான்; அறமன்றிச் செய்யான் - தெரிவினைமுற்று

அறமன்றிச் செய்த் அறமன்றிச் செய்யாத - தெரிபெயரெச்சம்

அறமன்றிச் செய்து; அறமன்றிச் செய்யாமை - தெரிதொழிற் பெயர்

4. குறிப்பு வினையெச்சங் குறிப்பு வினையெச்சங் குறிப்பு வினை விகப்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-

அறமன்றியிலன் - குறிப்பு வினைமுற்று
அறமன்றியில்லாது - குறிப்பு வினைப்பெயரெச்சம்
அறமன்றியில்லாது - குறிப்பு வினையெச்சம்
அறமன்யில்லாதவன் - குறிப்பு வினையாலணையும் பெயர்
அறமன்யின்மை - குறிப்புத் தொழிற்பெயர்



271. பதவியலிற் கூறப்பட்ட வினையெச்ச விகுதிகளும் உகர விகுதி இறந்தகால விடைநிலையோடு கூடிவரும் என விகுதி, இறந்தகாலவிடைநிலையோடும் விகாரப்பட்டிருந்த காலங்காட்டும் பகுதியோடும் கூடிவரும். மற்றை விகுதிதி யெல்லாம் இடைநிலையின்றித் தாமே காலங்காட்டும்.

272. தெரிநிலை வினையெச்சங்கள் செய்து என்னும் வாய்ப்பாட்டிறந்த கால வினையெச்சம் எனவும், செயவென்னும் வாய்ப்பாட்டு முகலத்திற்குமுரிய வினையெச்சம் எனவும் செயின் என்னும் வாய்பாட்டெதிர்கால வினையெச்சம் எனவும் மூவகைப்படும்.

273. செய்து என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள், உ, இ, ய் என்னும் விகுதிகளை இறுதியிற் பெற்று தன் கருத்தாவின் வினையையே கொண்டு முடிவனவாம்.

இங்கே இறந்தகாலம் என்பது முடிக்கும் சொல்லால் உயரப்படும் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படும். தொழில்முன்னிகழ்தலை.

(உதாரணம்)

உகரவிகுதி நடந்து
உண்டு
சென்று தேர்ந்து
கேட்டு
கற்று வந்தான்
இகரவிகுதி
யகரவிகுதி ஆடி
ஆய் எண்ணி
போய் வந்தான்


இங்கே வினையெச்சத்தால்உயரப்படுந் தொழிலை நிகழ்த்தினா வினைமுதலே முடிக்குஞ் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினைமுதலாகக் காண்க.

விகுதி விகரப்பட்டு, விகுதிபெறாது சில பகுதியே விகாரப்படும் இச்செய்தெனடவாய்ப்பட்டிறந்த கால வினையெச்சங்களாய் வரும்.

தழுவிக்கொண்டான்
மருவிவந்தான் தழீஇக்கொண்டான்
மாPஇவந்தான் விகுதி விகாரப் பட்டு வந்தன
புகு
விடு
பெறு புக்கு வந்தான்
விட்டு வந்தான்
பெற்று வந்தான் விகுதி பெறாது சில பகுதியே விகாரப்பட்டு வந்தன

இச்செய்னெச்சம், ஒரோவிடத்து காரப் பொருட்டாயும் வரும்.

உ-ம்.
கற்றறிந்தான்
அறம் செய்த புகழ்பெற்றான்

செய்யுளிலே இச்செய்தென்வாய்பபாட் டிறந்தகால வினையெச்சங்கள், பு, ஆ. ஊ, என்னும் விகுதிகளைப் பெற்றும் வரும்.

உ-ம்.

புகரவிகுதி
ஆவிகுதி
ஊவிகுதி உண்குபு
உண்ணா
உண்ணுh தேடுபு
தேடா
தேடு வந்தான்

274. செய என்னும் வாயடப்பாட்டு முக்காலத்திற்கும் உரிய வினை யெச்சம் அகரவிகுதியை இறுதியிற் பெற்றுத் தான் கருத்தாவின் வினையையும் பிறகருத்தாவின் வினையையும் கொண்டு முடிவதாம்.

(3) செய வெண் வாய்ப்பாட்டு வினையெச்சம் இறந்த காலத்திலே காரணப் பொருளில் வந்து தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் கொண்டு முடியும்.

காரணப் பொருளில் வருதலாவது முடிக்குந் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படுந் தொழில் காரணம் என்பது பட வருதல்.

உ-ம்.
மழை பெய்ய புகழ்பெற்றது - தன்கருத்தாவின் பெயர்
மழை பெய்ய நெல் விளைந்நது - பிறகருத்தாவின் வினை
மழை பெய்ய புகழ்பெற்றது என்றவிடத்து வினையெச்சந்தால் உணரப்படும் தொழிலை நிகழ்த்தின வினைமுதலே முடிக்குஞ் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினைமுதலாதல் காண்க.

மழைபெய்ய நெல்லு விளைந்தது எனற விடத்து வினையெச்சத் தால் உணரப்படும் தொழிலை நிகழ்த்தின வினைமுதலும் வேறே: முடிக்குஞ் சொல்லால் உணலப்படும் தொழிலை நிஷைகழ்த்தின வினைமுதலும் வேறேயாதல் காண்க.

செய்யுளிலே இச் செயன்வென்வாய்ப்பாட்டிறந்தகால வினையெச்சம் என என்னும் விகுதியை பெற்றும் வரும்.

உ-ம்.
மழை பெயடதெனப் புகழபெற்றது - தன்கருத்தாவின் பெயர்
மழை பெய்தென நெல் விளைந்நது - பிறகருத்தாவின் வினை

(4) செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம் எதிர்காலத்திலே கரியப் பொருளில வந்து தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் கொண்டு முடியும்.

காரியப் பொருளில் வருதலாவது முடிக்குஞ் சொல்லால் உணலப்படுந் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படும் தொழில். காரியம் என்பது பட வருதல்.

உ-ம்.

தானுண்ணவந்தான் - தன்கருத்தாவின் பெயர்
யானுண்ணத்தந்தான் - பிறகருத்தாவின் வினை

இச்செயவென்வாய்ப்பாட் டெதிர்கால வினையெச்சம் கு என்னும் விகுதியைப் பெற்றும் வரும்.

உ-ம்.

தானுணற்கு வந்தான் - தன்கருத்தாவின் பெயர்
யானுணற்குத் தந்தான் - பிறகருத்தாவின் வினை

உணணும்படி, உண்ணும் பொருட்டு, உண்ணும் வண்ணம், உண்ணும் வகை என்பன உணற்கென்னும் பொருள்பட வரும்.

செய்யுளிலே, இச்செயவென்வாய்ப்பாட் டெதிர்கால வினையெச்சம், இய, இயர், வான், பான், பாக்கு என்னும் விகுதிகளைப் பெற்றும் வரும். இவற்றுள் முன்னைய இரண்டு விகுதி பெற்றவை தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின்வினையையுங் கொண்டு முடியும்; பின்னைய மூன்று விகுதி பெற்றவை தன் கருத்தாவின் வினையைக் கொண்டு முடியும்.



உ-ம்.

இயவிகுதி நீரிவைகாணியவம்மின் - தன் கருத்தாவின் வினை
அவர் காணிய வம்மின் - பிற கருத்தாவின் வினை
இயர்விகுதி நாமுண்ணியர்வந்தேம் - தன் கருத்தாவின் வினை
நீருண்ணியர் வழங்குவேம் - பிற கருத்தாவின் வினை
வான்விகுதி - தான் கொல்வான் சென்றான்
பான்விகுதி - தானலைப்பான் புகுந்தான்
பாக்குவிகுதி - தான்றருபாக்கு வருவான் தன் கருத்தாவின் வினை


(5) செயவென்வாய்ப்பாட்டு வினையெச்சம், தனக்கென நியமமாக உரிய நிகழ்காலத்திலே, இது நிகழா நிற்க இது நிகழ்ந்தது என்னும் பொருள்பட வந்து, பிறகருத்தாவின் வினையைக் கொண்டு முடியும்.

இங்கே நிகழ்காலமென்றது, முடிக்குஞ் சொல்லால் உணரப்படுந் தொழிலோடு வினையெச்சத்தால் உயரப்படுந் தொழில் முற்பிற் பாடின்றி உடனிகழ்தலை.

உ-ம்.
சூரியனுதிக்க வந்தான் - பிறகருத்தாவின் வினை

275.செயின் என்னும் வாய்ப்பாட்டு எதிர்கால வினையெச்சங்கள், இன், ஆல், கால், கடை, வழி, இடத்து, உம் என்னும் விகுதிகளை இறுதியிற் பெற்றுக் காரணப்பொருளில் வந்து, தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் பிறகருத்தாவின் வினையையும் கொண்டு முடிவனவாம்.

இவ்வினையெச்சம், எதிர்காலச் சொல்லையே முடிக்குஞ் சொல்லாகக் கொள்ளும். இவ்வினையெச்சத்தால் உணரப்படுந் தொழில், ஒருதலையாகவே சொல்லுவான். சொற்குப் பின்னிகழ்வதாயும், முடிக்குஞ்சொல்லால் உணரப்படுந் தொழிற்குக் காரணமாகமுன்னிகழ்வதாயும் உள்ளது; ஆதலால், இவ்வினையெச்சம் எதிhடகாலம் பற்றிக் காரணப்பொருளில் வருவதாயிற்று. ஒருதலை - துணிவு.

(உதாரணம்)

இன் யாணுண்ணி னுவப்பேன்
உண்ணிற் பசிதீரும் தன்கரு பிறகரு
ஆல் நீ வந்தால் வாழ்வாய்
நீ வந்தான் யான் வாழ்வேன் தன்கரு பிறகரு
கால் நீ கற்றக்காலுவப்பாய்
உண்டக்காற் பசிதீரும் தன்கரு பிறகரு
கடை நல்வினை தானுற்றக் கடையுதவும்
நல்வினை தானுற்றக்கடைத் தீவினை வராது தன்கரு பிறகரு
வழி நல்வினை தானுற்ற வழியுதவும்
நல்வினை தானுற்றவழித் தீவினை வராது தன்கரு பிறகரு
இடத்து நல்வினை தானுற்றவிடத்துதவும்
நல்வினை தானுற்றவிடத்துத் தீவினைவராது தன்கரு பிறகரு
உம் உண்டலு முவப்பாய்
உண்டலும் பசி தீரும் தன்கரு பிறகரு


வந்தால் என்பது துச்சாரியை பெற்றது. உண்டக்கால் என்பது துச்சாரியையும் அகரச்சாரியையும் பெற்றது. உற்றக்கால், உற்றக்கடை, உற்றவழி, உற்றவிடத்து என்பன அகரச்சாரியை பெற்றன. உண்டலும் என்பது துச்சாரியையும் அல்லுச் சாரியையும் பெற்றது.

உண்பானேல் உண்பானெனின், உண்பானாயின், உண்பானேனும் என, முற்று வினைகள், ஏல், எனின், ஆயின், ஏனும், என்னும் நான்கனோடும் இயைந்து, ஒரு சொன்னீர் மைப்பட்டுச் செயின் என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சங்களாய் வருமெனவும் அறிக.

276. எதிர்மறைத் தெரிநிலை வினையெச்சங்கள் எதிர்மறை ஆகாரவிடைநிலையோடு உ, மல், மே, மை, மைக்கு, கால், கடை, வழி, இடத்து என்னும் விகுதிகளைப் பெற்று வருவனவாம்.

செய்யாது என்பது செய்து, செய்பு, செய்யா, செய்யூ என்பவற்றிற்கு, எதிர்மறையாம். செய்யாது என்பதிலே தகரம் எழுத்துப்பேறு. செய்யாது என்பது, செய்கலாது, செய்கிலாது என, அல் இல், என்னும் இடைநிலைகளை ஆகாரச்சாரியையோடு பெற்றும் வரும்.

செய்யாமல் என்hது, செய என்பதற்கு எதிர்மறையாம்.

செய்யாமல், செய்யாமே, செய்யாமை, செய்யாமைக்கு என்னும் நான்கும், செயற்கு, செய்யிய, செய்யியர் என்பவற்றிற்கும், செயற்கு என்பது படவருஞ் செயவேனெச்சத்திற்கும் எதிர்மறையாம்.

செய்யாக்கால், செய்யாக்கடை, செய்யாவழி, செய்யாவிடத்து என்னும் நான்கும், செயின் என்பதற்கும், அப்பொருள்பட வருவனவாகிய செய்தால், செய்தக்கால், செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து என்பனவற்றிற்கும் எதிர்மறையாம்.

(உதாரணம்)

விதிவினை யெச்சம் மறைவினையெச்சம்
உண்டு வந்தான் உண்ணாது வந்தான்
மழை பெய்யப் பயிர் தழைத்தது மழை பெய்யாமற் பயிர் வாடிற்று
இங்கே பெய்யாமல் என்பதற்கு
பெய்யாமையால் என்பது பொருள்
அவன் காணவந்தேன்
அவன் காணாமல் வந்தேன்.
இங்கே காணாமல் என்பதற்குக்
காணாதிருக்க என்பது பொருள்.
நீ வீடெய்தற்கு வணங்கு
நீ நரகெய்தாமல் வணங்கு
நீ நரகெய்தாமே வணங்கு
நீ நரகெய்தாமை வணங்கு
நீ நரகெய்தாமைக்கு வணங்கு
இஙகே எய்தாமல் என்பது முதலிய
நான்கிற்கும் எய்தாதொழியும் பொருட்டு
என்பது பொருள்
யானுணற்கு விதித்தான் யானுண்ணாமல் விதித்தான்
யானுண்ணாமே விதித்தான்
யானுண்ணாமை விதித்தான்
யானுண்ணாமைக்கு விதித்தான்
இங்கே உண்ணாமல் என்பது முதலிய
நான்கிற்கும் எய்தாதொழியும் பொருட்டு
என்பது பொருள்
யானுண்ணின்
மகிழ்வென் யானும்ணாக்கான் மகிழேன்
யானும்ணாக்கடை மகிழேன்
யானும்ணாவழி மகிழேன்
யானும்ணாவிடத்து மகிழேன்
இங்கே உண்ணாக்கால் என்பது முதலிய
நாந்கிற்கும் உண்ணாதொழியின் என்பது
பொருள்
உண்ணிற்
பசிதீரும் உண்ணாக்காற் பசி தீராது
உண்ணாக்கடை பசி தீராது
உண்ணாவழிப் பசி தீராது
உண்ணாவிடத்து பசி தீராது

277. உடன்பாட்டுக் குறிப்பு வினையெச்சங்கள், பண்படியாகத் தோன்றி அகரவிகுதியைப் பெற்று வருவனவாம்.

உ-ம்.
மெல்லப் பேசினான் சாலப்பல
பைய நடந்தான் உறக்கரிது
வலியப் புகுந்தான் மாணப் பெரிது

மெல்ல என்பது, ல, ளவொற்றுமைபற்றி, மௌ;ளவெனவும் வழங்கும்.

278. எதிர்மறை குறிப்புவினையெச்சங்கள், அல், இல் என்னும் எதிர்மைபண்படியாகத் தோன்றி, றி டு மல் மே மை ஆல் கால் கடை வழி இடத்து என்னும் விகுதிகளைப் பெற்று வருவனவாம்.

உ-ம்.

றி
து

மல்
மே
மை
ஆல்
கால்
கடை
வழி
இடத்து அறமன்றிச்செய்யான்
அறமல்லாதில்லை
அறமல்லதில்லை
அறமல்லாமலில்லை
அறமல்லாமேயில்லை
அறமல்லாமையில்லை
நீயல்லாலில்லை
அவனல்லாக்கானீயார்
அவனலடலாக்கடைநீயார்
அவனல்லாவழிநீயார்
அவனல்லாவிடத்து நீயார்
அருளின்றிச் செய்தான்
அருளில்லாது செய்தான்
---
யானில்லாமல் வந்தான்
யானில்லாமே வந்தான்
யானில்லாமை வந்தான்
--
யானில்லாக்கால் வருவான்
யானில்லாக்கடைவருவான் யானில்லாவழி வருவான்
யானில்லாவிடத்து வருவான்

இவ்வினையெச்சக் குறிப்புக்களில் வரும் ஆகாரமும் அகரமுஞ் சாரியை.

279. வினையெச்சங்கள், இருதிணையைம்பான் மூவிடங்கட்கும் பொதுவாக வரும்.

உ-ம்.
நடந்து வந்தான், வந்தேம்
வந்தாய், வந்தீர்
வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன

280. தன் கருத்தாவின் வினையே கொள்ளுதற்குரிய வினையெச்சங்கள் சினை வினையாயின், அவை அச்சினைவினையைக் கொண்டு முடிதலுமன்றி, ஒற்றுமைபற்றி முதல் வினையையும் கொண்டு முடியும்.

உ-ம்.
சாத்தன் காலொடிந்து வீழ்ந்தான். இங்கே ஒடிதல் சினைவினை; வீழ்தல் முதல் வினை ஆதலின் ஒடிந்து என்னுஞ் சினைவினையெச்சம் வீழ்ந்தான் என்னும் முதல் வினைகொண்டு முடிந்தது.

காலொடிந்து வீழ்ந்தது. இங்கே ஒடிதலுஞ் சினை வினை; வீழ்தலுஞ் சினைவினை. ஆதலின் ஒடிந்து என்னுஞ் சினைவினையெச்சம் வீழ்ந்தது என்னும் சினைவினை கொண்டு முடிந்தது.

மாடு காலொடிந்து வீழ்ந்தது. இங்கே வீழ்தல் மாட்டின் வினையாதலிற் சினைவினையெச்சம் முதல் வினைகொண்டு முடிந்தது.

281. பிற கருத்தாவின் வினையைக் கொள்ளும் வினையெச்சங்கள்; தன்கருத்தாவின் வினையைக்கொள்ளும் வினையெச்சங்களாக திரிந்தும் வரும். திரிபினும், அவற்றின் பொருள்கள் வேறுபடாவாம்.

உ-ம்.
ஞாயிறு பட்டு வந்தான். இங்கே பட வென்னுஞ் செயவென் வாய்ப்பாட்டுவினையெச்சம் பட்டு என திரிந்து நின்றது.

மழைபெய்து நெல் விளைந்தது. இங்கே பெய்ய என்னுங் காரணப் பொருட்டாகிய செயவென் வாய்ப்பாட்டிறந்தகால வினையெச்சம் பெய்து என திரிந்து நின்றது.

தேர்வு வினாக்கள் - 270. வினையெச்சமாவது யாது? வினையெச்சங் கொள்ளும் வினைச் சொற்களாவன எவை? 271. வினையெச்ச விகுதிகளுள், எவ்விகுதிகள் காலங்காட்டும் இடைநிலையோடு கூடிவரும்? எவ்விகுதிகள் இடைநிலையின்றி தாமே காலங்காட்டும்? 272. தெரிநிலை வினையெச்சங்கள் எத்தனை வகைப்படும்? 273. செய்து என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால விiயெச்சங்கள் எவை? இங்கே இறந்தகாலம் என்பது எவை? இச் செய்தென் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள் வேறு விகுதிகளைப் பெற்று வருமோ? 274. செயவென்னும் வாய்ப்பாட்டு முக்காலத்திற்குமுரிய வினையெச்சம் யாது? செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம், இறந்தகாலத்திலே எப்பொருளில் வந்து, எவ்வினையைக் கொண்டு முடியும்? காரணப்பொருளில் வருதலாவது என்னை? இச் செயவென் வாய்ப்பாட்டிறந்தகால வினையெச்சம் வேறு விகுதியைப் பெற்று வருமோ? செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம், எதிர்காலத்திலே எப்பொருளில் வந்து, எவ் விகையைக் கொண்டு முடியும்? காரியப் பொருளில் வருதலாவது என்னை? இச்செயவென் வாய்ப்பாட்டெதிர்கால வினையெச்சம் - வேறு விகுதியைப் பெற்றும் வருமோ? வேறெவைகள் உணற்கென்னும் வரும்? செய்யுளிலே செயவென் வாய்ப்பாட்டெதிர் கால வினையெச்சம் வேறு விகுதிகளைப் பெற்றும் வருமோ? இவற்றுள், எவ்வௌ; விகுதி பெற்றவை எவ்வௌ; வினையைக் கொண்டு முடியும்? இங்கே நிகழ்காலம் என்றது எதை? 275. செயினென்னும் வாய்ப்பாட்டு எதிர்கால வினையெச்சங்கள் எவை? இவ் வினையெச்சம் எக்காலச் சொல்லை முடிக்கும் சொல்லாகக் கொள்ளும்? செயினென்னும் வாய்ப்பாட்டு வினையெச்சங்களாய் வருவன பிறவும் உளவோ? 276. எதிர்மறை தெரிநிலை வினையெச்சங்கள் எவை? செய்யாது என்பது எவைகளுக்கு எதிர்மை? செய்யாது என்பது இன்னும் எப்படி வரும்? செய்யாது என்பது எதற்கு எதிர்மறை? செய்யாமல், செய்யாமே, செய்யாமை, செய்யாமைக்கு என்னும் நான்கும் எவைகளுக்கு எதிர்மறை? செய்யாக்கால், செய்யாக்கடை, செய்யாவழி, செய்யாவிடத்து என்னும் நன்கும் எவைகளுக் எதிர்மறை? 277. உடன்பாட்டு குறிப்பு வினையெச்சங்கள் எவை? 278. எதிhமறைக் குறிப்பு வினையெச்சங்கள் எவை? 279. விiயெச்சங்கள் எவ்வாறு பொதுப்பட வரும்? 280. தன் கருத்தாவின் வினையையே கொள்ளுதற்குரிய வினையெச்சங்கள் பிறகருத்தாவின் வினையைக் கொண்டு முடிதல் இல்லையோ? 281. பிறகருத்தாவின் வினையைக் கொள்ளும் வினை யெச்சங்கள் தன் கருத்தாவின் வினையெச்சங்களாக திரிந்து வருதல் இல்லையோ?

முற்றுவினை எச்சப்பொருளைத் தருதல்

282. தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுங் குறிப்பு வினைமுற்றும், தமக்குரிய பயனிலை கொள்ளுமிடத்து வினையெச்சத்திற்குரிய பயனிலை கொள்ளுமிடத்து வினையெச்சப் பொருளையும், பெயரெச்சத்திற்குரிய பயனிலை கொள்ளுமிடத்து வினையெச்சப் பொருளையும், பெயரெச்சத்திற்குரிய பணனிலை கொள்ளுமிடத்துப் பெயரெச்சப் பொருளையுந் தரும்.

உ-ம்.
கண்டனன் வணங்கினன்; இங்கே கண்டனன், என்னுந் தெரிநிலை வினைமுற்று, கண்டு என வினையெச்சப் பொருளைத் தந்நது.

உண்டான்சாத்தனூர்க்குப் போயினான்; இங்கே உண்டான் என்னுந் தெரிநிலை வினைமுற்று உண்டடெனப் பெயரெச்ச பொருளைத் தந்தது.
உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து இங்கே கையினார் என்னுங் குறிப்பு வினைமுற்று, கையையுடையனவராகி என வினையெச்சப் பொருளைத் தந்தது.

வெந்திறலினான் விரல் வழுதியோடு; இங்கே திரலினால் என்னும் குறிப்பு வினைமுற்று திறலினனாகிய எனப்பெயரெச்சப் பொருளைத் தந்தது.

தேர்வு வினா - 282. வினைமுற்றுக்கள் எச்சப் பொருளை தருதல் இல்லையோ?

இருவகைவினைக் குறிப்பு

283. வினாக்குறிப்புச் சொற்கள், ஆக்கவினைக் குறிப்பும் இயற்கை வினைக்குறிப்பும் என இரு வகைப்படும்.

அவற்றுள், ஆக்கவினைக் குறிப்பாவது காரணம்பற்றி வரும் வினைக்குறிப்பாம் அதற்கு ஆக்கச்சொல் விருந்தாயினும் தொக்காயினும் வரும்.

உ-ம்.
கல்வியாற் பெரியனாயினான் கல்வியாற் பெரியன்
கற்றுவல்லராயினார் கற்றுவல்லர்

இயற்கை வினைக்குறிப்பாவது காரணப்பற்றாது இயற்கையை உணர்த்தி வரும் வினைக்குறிப்பாம், அது ஆக்கச்சொல் வேண்டாதே வரும்.

உ-ம்.
நீர் தண்ணிது
தீ வெய்து

தேர்வு வினாக்கள் - 283. வினைக்குறிப்புச் சொற்கள் இன்னும் எத்தனை வகைப்படும்? ஆக்கவினைக்குறிப்பாவது யாது? இயற்கை வினைக்குறிப்பாவது யாது?

தெரிநிலை வினைப்பகுப்பு

284. தெரிநிலை வினைச் சொற்கள், செயப்பாடு பொருள் குன்றிய வினை, செயப்பாடு பொருள், குன்றாத வினை, எ-ம். தன்வினை, பிறவினை, எ-ம். செய்வினை, செயப்பாட்டு வினை, எ-ம். வௌ;வேறே வகையிற் பிரிவுபட்டு வழங்கும்.

285. செயப்படுபொருள் குன்றிய வினையாவது, செயப்பாடு பொருளை வேண்டாது. வரும்முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம்.

உ-ம்.
நடந்தான், வந்தான், இருந்தான், உறங்கினான்.

இவை, இதை நடந்தான், இதை வந்தான் எனச் செயப்படு பொருளேற்று வாராமை காண்க.

286. செயப்படு பொருள் குன்றாத வினையாவது செயப்படுபொருளை வேண்டி நிற்கும் முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம்.

உ-ம்.
உண்டான், கொடுத்தான், கண்டான், படித்தான், இவை, சோற்றையுண்டான், பொருளைக் கொடுத்தான் எனச் செயப்படும் பொருளேற்று, வருதல் காண்க.

287. தன்வினையாவது தன்னெழுவாய் கருத்தாவின் றொழிலை உணர்த்தி நிற்கும் முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம் இத்தன்வினை இயற்றுதற் கருத்தாவின் வினையெனப்படும்.

செயப்பாடு பொருள் கன்றிய முதனிலை செயப்பாடு பொருள் குன்றாத முதனிலை என்னும் இரு வகை முதலினையும் தன்வினைக்கு முதனிலையாக வரும்.

உ-ம்.
சாத்தனடைந்தான், தச்சன் கோயிலைக் கட்டினான்.

இவைகளிலே, நடக்கையுங் காட்டலுமாகிய முதனிலைத் தொழில்கள் எழுவாய்க் கருத்தாவின் றொழிலாதல் காண்க.

288. பிறவினையாவது தன்னெழுவாய் இக்கருத்தா வல்லாத பிறகருத்தாவின் தொழிலை உணர்த்தி நிற்கும் முதனிலையடியாக தோன்றிய வினையாம். இப்பிறவினை ஏவுதற் கருத்தாவின் வினை எனப்படும்.

செயப்படு பொருள் குன்றிய முதனிலை, செயப்படுபொருள் குன்றாத முதனிலை என்னும் இரு வகை முதனிலைகளும் பிறவினை விகுதி பெற்றேனும் தாம் விகாரப்பட்டேனும், விகாரப்பட்டு விகுதிபெற்றேனும், பிற வினைப் பகுதிகளாய், வருதல் பதவியலிற் கட்டுவித்தான்.

இவைகளிலே நடக்கையுங் கட்டலுமாகிய முதனிலை தொழில்கள், எழுவாய் கருத்தாவின் தொழிலாகாது பிறகரத்தாவின் தொழிலாதல் காண்க.

செயப்படு பொருள் குன்றிய முதனிலை அடியாகத் தோன்றிய பிற வினைகள், அம் முதனிலைக் கருத்தாவைக் தமக்குச் செயப்படு பொருளாக கொண்டு வரும்.

உ-ம்.
கொற்றான் சாத்தனைக் கடைப்படித்தான்
அரசன் றச்சனாற் கோயிலைக் கட்டுவித்தான்

289. தன் வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாக நிற்கும் முதனிலைகளுக்குஞ் சிலவுளவாம்.

உ-ம்.

முதனிலை தன்வினை பிறவினை
அழி நீ யழி காட்டை யழி
கெடு நீ கெடு அவன் குடியைக் கெடு
வெளு நீ யுடம்படுவெளு துணியை வெளு
கரை நீ கரை புளியைக் கரை
தேய் நீ தேய் கட்டையைத் தேய்


இம்முன்னிலைகளால் வினைச்சொற் பிறத்தல் வருமாறு.

முதனிலை தன்வினை பிறவினை
அழி அழித்தான்
அழிக்கின்றான்
அழிவான் அழித்தான்
அழிக்கின்றான்
அழிப்பான்
கெடு கெட்டான்
கெடுகின்றான்
கெடுவான் கெட்டான்
கெடுகின்றான்
கெடுப்பான்
வெளு வெளுத்தான்
வெளுக்கின்றான்
வெளுப்பான் வெளுத்தான்
வெளுக்கின்றான்
வெளுப்பான்
கரை கரைந்தான்
கரைக்கின்றான்
கரைவான் கரைந்தான்
கரைக்கின்றான்
கரைப்பான்
தேய் தேய்ந்தான்
தேய்கின்றான்
தேய்வான் தேய்ந்தான்
தேய்கின்றான்
தேய்ப்பான்


290. பிறவினைகள், ஒரோவிடத்துப் பிறவினைவிகுதி தொக்கும் வரும்.

உ-ம்.
அரசன் செய்த தேர்: இதிலே செய்வித்த என்னும் பிறவினை செய்த என விவ்விகுதி தொக்கு நின்றது.

கோழி கூலிப் பொழுது புலர்ந்தது: இதிலே கூவிலித்து என்னும் பிறவினை கூவி என விவ்விகுதி தொக்கு நின்றது.

291. செய்வினையாவது, படு விகுதி புணராத முதனிலை அடியாகத் தோன்றி, எழுவாய்க் கருத்தாவைக் கொண்டு வரும் வினையாம்.

உ-ம்.
சாத்தனடந்தான் நடப்பித்தான்
சாத்தன் கட்டினான் கட்டுவித்தான்

292. செயப்பாட்டு வினையாவது, படு விகுதி புணர்ந்த முதனிலை அடியாகத் தோன்றி, வினைமுதல் மூன்றாம் வேற்றுமையிலும், செயப்படு பொருள் எழுவாயிலும் வரப்பெறும் வினையாம்.

பிறவினை முதனிலைகளும், செயப்படு பொருள் குன்றாத தனவினை முதனிலைகளும், படு விகுதியோடும், இடையே அகரச்சாரியையேனும், குச்சாரியையும் அகரச்சாரியையுமேனும் பெற்று, செயப்பாட்டு வினை முதனிலைகளாக வரும்.

உ-ம்.
சாத்தனா லிம்மாடு நடப்பிக்கப்பட்டது
கொற்றான லிச்சோ றுண்ணப்பட்டது.

293. செயப்பாட்டுவினை, ஒரோவிடத்துப் படு விகுதி தொக்கும் வரும்.

உ-ம்.
“இல்வாழ்வானென்பான்“, இங்கே எனப்படுவான் என்னுஞ் செயப்பாட்டு வினை என்பான் எனப் படுவிகுதி தொக்கு நின்றது.

உண்டசோறு: இங்கே உண்ணப்பட்ட என்னுஞ் செயப்பாட்டு வினை உண்ட எனப் படு விகுதி தொக்கு நின்றது.


தேர்வு வினாக்கள் - 284. தெரிநிலை வினைச் சொற்கள் இன்னும் எவ்வௌ; வகையிற் பிரிவு பட்டு வழங்கும்? 285. செயப்படு பொருள் குன்றிய வினையாவது யாது? 286. செயப்படு பொருள் குன்றாத வினையாவது யாது? 287. தன்வினையாவது யாது? தன் வினைக்கு முதனிலையாக வருவன எவை? 288. பிற வினையாவது யாது? பிற வினைக்கு மதனிலையாக வருவன எவை? செயப்படு பொருள் குன்றிய முதனிலை அடியாகத் தோன்றிய பிறவினைகள் எதனைத் தமக்குச் செயப்படுபொருளாக கொண்டு வரும்? செயப்படு பொருள் குன்றாத முதனிலை அடியாகத் தோன்றிய பிறவினைகள் அம் முதனிலைக் கருத்தாவை யாதாகக் கொண்டு வரும்? 289. தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாய் நிற்கும் முதனிலைகள் உளவோ? 290. பிறவினைகள் ஒரோவிடத்து பிறவினை விகுதி தொக்கும் வருமோ? 291. செய்வினையாவது யாது? 292. செயப்பாட்டு வினையாவது யாது? எவ்வௌ; முதனிலைகள் எவ்வௌ;வாறு செயப்பாட்டு வினைக்கு முதனிலைகளாக வரும்? 293. செயப்பாட்டு வினை ஒரோவிடத்துப் படு விகுதி தொக்கும் வருமோ?

வினையாலணையும் பெயர் விகாரப்படுதல்

294. வினையாலணையும் பெயர்கள், சிறுபான்மை இயல்பாகியும், பெரும்பாலும் விகாரப்பட்டும் வரும்.

உ-ம்.
நடந்தானை, குழையானை, குழையினனை, எ-ம். நடந்தோன், குழையோன், நடந்தவன், குழையவன், எ-ம். நடந்தன, குழையன, எ-ம். நடந்தவை, குழையவை. எ-ம். வரும்.

தேர்வு வினா - 294. விணையாலணையும் பெயர்கள் எங்ஙனம் வரும்.

வினையியல் முற்றிற்று

3. இடையியல்

295. இடைச்சொல்லாவது, பெயரும் வினையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் இல்லாததாய், அப்பெயரையும் வினையையுஞ் சார்ந்து வருஞ் சொல்லாம்.

தேர்வு வினா - 295. இடைச் வொல்லாவது யாது?

இடைச்சொற்களின் வகை

296. இடைச் சொல்: 1. வேற்றுமையுருபுகள், 2. விகுதியுருபுகள், 3. இடைநிலையுருபுகளும், 4. சாரியையுருபுகளும், 5. உவமவுருபுகளும், 6. பிறவாறு தத்தமக்கரிய பொருள்களை உணர்த்தி வருபவைகளும், 7. ஒலி, அச்சம், விரைவு இவற்றைக் குறிப்பால் உணர்த்தி வருபவைகளும், 8. இசை நிறையே பொருளாக நிற்பவைகளும் என, ஒன்பது வகைப்படும்.

இவைகளுள், வேற்றுமையுருபுகள் பெயரியலிலும், விகுதியுருபுகளும் இடைநிலையுருபுகளுஞ் சாரியையுருபுகளும் பதவியலிலுஞ் சொல்லப்பட்டன.

இசைநிறை என்பது, வேறுபொருள் உணர்த்தாது செய்யுளில் ஓசையை நிறைத்து நிற்பது.

அசை நிலை என்பது, வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச்சொல்லோடும் வினைச்வொல்லோடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்பது. அசைத்தல் - சார்த்துதல்.

தேர்வு வினாக்கள் - 296. இடைச் சொல் எத்தனை வகைப்படும்? இசை நிறையென்பது யாது? அசைநிலையென்பது யாது?

உவமைவுருபிடைச் சொற்கள்

297. உவமைவுருபிடைச் சொற்களாவன, போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏயப்ப, நேர, நிகர, பொருவ, அன்ன, அனைய முதலியனவாம்.
இவைகளுள்ளே, போல எனபது முதலிய பதினொன்றும், இடைச் சொல்லடியாகப் பிறந்த வினையெச்ச வினைகள. அவைகளிலே, போல், புரை, ஒ, உறழ, மான், கடு, இயை, ஏய், நேர், நிகர், பொரு என்னு முதனிலைகளே இடைச் வொற்கள்.

அன்ன, அனைய என்பவைகள், இடைச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினைக் குறிப்புக்கள் அவைகளிலே, அ என்னு முதனிலையே இடைச்சொல் அன்ன என்பதில் னகரமெய் சாரியை: அனைய என்பதில் னகரமெய்யும் ஐகாரமும் சாரியை.

தேர்வு வினாக்கள் - 297. உவமவுருபிடைச் சொற்களாவன எவை? இவைகளுள்ளே, இடைச் சொல் அடியாகப் பிறந்த வினையெச்ச வினைகள் எவை? அவைகளிலே இடைச் சொற்கள் எவை? இடைச் சொல் அடியாகப் பிறந்த பெயரெச்ச வினைக்குறிப்பக்கள் எவை? அவைகளிலே எது இடைச் சொல்?

தத்தம் பொருளை உணர்த்தும் இடைச்சொற்கள்

298. பிறவாறு தத்தமக்குரிய பொருள்களை உணர்த்தி வருமென்ற இடைச்சொற்கள், ஏ, ஒ, உம் முதலியவைகளாம்.

299. ஏகாரவிடைச் சொல், தேற்றமும், வினாவும், எண்ணும் பிரிநிலையும், எதிர்மறையும் இசைநிறையும், ஈற்றசையுமாகிய ஏழுபொருளையுந் தரும்.

தேற்றம் உண்டேகடவுள், இங்கே உண்டென்பதற்கு
ஐயமில்லை என்னுந் தெளிவுப்பொருளைத்
தருதலாற் றேற்றம்.
வினா நீயே கொண்டாய். இங்கே நீயா கொண்டாய்
என்னும் பொருளைத் தருமிடத்து வினா
எண் நிலமே நீரே தீயே வளியே. இங்கே நிலமும் நீருந்
தீயும் வளியும் எனப் பொருள்பட எண்ணி நிற்றல் எண்.
பிரிநிலை அவருளிவனே கள்வன், இங்கே ஒரு கூட்டத்தி
னின்றும் ஒருவனைப் பிரித்து நிற்றலாற் பிரிநிலை.
எதிர்மறை நானே கொண்டேன். இங்கே நான் கொள்கிலேன்
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை.
இசைநிறை ’’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’ இங்கே வேறு பொருளின்றிச் செய்யுளில் இசை நிறைத்து நிற்றலால் இசை நிறை.
ஈற்றசை ’’ என்றுமேத்தித் தொழுவோ மியாமே.’’ இங்கே
வேறு பொருளின்றி இறுதியிலே சார்த்தப்பட்டு
நிற்றலால் ஈற்றசை.

300. ஒகாரவிடைச் சொல், ஒழியிசையும், வினாவும், சிறப்பும், எதிhடமறையும், தெரிநிலையும், கழிவும், பிரிநிலையும், அசைநிலையுமாகிய எட்டுப் பொருளையந் தரும்.

சிறப்பு உயர்வுசிறப்பும் இழிவுசிறப்பும் என இரு வகைப்படும். உயர்வுசிறப்ப ஒரு பொருளினது இழிவைச் சிறப்பித்தல. இங்கே சிறப்பித்தல் என்றது, உயர்வேயாயினும் இழிவேயாயினும் இழிவேயாயினும் அதனது மிகுதியை விளக்குதல்.

(உதாரணம்)






ஒழியிசை படிக்கவோ வந்தாய். இங்கே படித்தற்கன்று
விளையாடுதற்கு வந்தாய் என ஒழிந்த சொற்களைத்
தருவதால் ஒழியிசை
வினா குற்றியோ மகனோ. இங்கே குற்றியா மகனா என
வினாப் பொருளைத் தருதலால் வினா.
உயர்வு சிறப்பு ஒஓ பெரியன். இங்கே ஒருவனது பெருமையாகிய
உயர்வின் மிகுதியை விளக்குதலால் உயர்வுசிறப்பு
இழிவு சிறப்பு ஒஓ கொடியன். இங்கே ஒருவனது
கொடுமையாகிய இழிவின் மிகுதியை
விளக்குதலால் இழிவு சிறப்பு
எதிர்மறை அவனோ கொண்டான். இங்கே கொண்டிலன்
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை
தெரிநிலை ஆணோ அதுவுமன்று. பெண்ணோ அதுவுமன்று
இங்கே அத்தன்மையில்லாமையைத் தெரிவித்து நிற்றலாத் தெரிநிலை.
கழிவு உறுதியுணராது கெட்டாரை ஒஓ தமக்கோருறுதி யுணராரோ எனன்னுமிடத்துக் கழிவிரக்கப்பொருளைத் தருதலாற் கழிவு. கழிவிரக்கம் - கழிந்ததற்கிரங்குதல்
பிரிநிலை இவனோ கொண்டான். இங்கே பலருணின்றும் ஒருவணைப்பிரித்து நிற்குமிடத்துப் பிரிநிலை
அசை நிலை காணிய வம்மினோ இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசை நிலை.

301. உம் என்னுமிடைச் சொல், எதிர்மறையும், சிறப்பும், ஐயமும், எச்சமும், முற்றும், எண்ணும், தெரிநிலையும் ஆக்கமுமாகிய எட்டுப் பொருளையுந் தரும்.

எச்சம், இறந்தது தழீஇய எச்சமும், எதிரது தழீஇய எச்சமும் என இரு வகைப்படும்.

உ-ம்.

எதிர்மறை களவு செய்யினும் பொய்கூறலை யொழிக.
இங்கே களவு செய்யலாகாது என்னும் பொருளைத்