| ஈழநூல் 70 | |
| நூல் |
மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் |
| ஆசிரியர் |
சு.வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்) |
| மின்னூலாக்கம் |
இ. பத்மநாப ஐயர் |
| மின்பதிப்பு | ஈழநூல் |
மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்
பதிப்பாசிரியர் கலாநிதி
சு.வித்தியானந்தன்
இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக்குழு
வெளியீடு
---------------------------------------------------.
ARTS
COUNCIL TAMIL DRAMA
PANEL SERIES
Published under the
authority
of the
Arts Council of Ceylon
GENRAL
EDITOR
S.VITHIANANTHAN, M. A. ph. D.
Chairman, Tamil Drama Panel,
Arts
Council of Ceylon
SECOND EDITION 1962
Price Re.
1.00
-------------------------------------------------
இந்நூலில்
தோற்றுவாய்
பக்கம் 5
இரண்டாம் பதிப்புர ” 19
Introduction ” I-VI
கவிகள் ”
21-66
(அ). காதலன் கூற்றாய் உள்ளவை 21
(ஆ). காதலி கூற்றாய் உள்ளவை 41
(இ).
தோழி கூற்றாய் உள்ளவை 57
(ஈ). தாயார் கூற்றாய் உள்ளவை 63
பொதுப்பாடல்கள்
67-74
தொழில்முறைப் பாடல்கள் 75-80
(அ). பொலிப் பாட்டு 75
(ஆ). ஏர்ப்
பாட்டு 79
கொம்புவிளையாட்டுப் பாடல்கள் 81-82
இலங்கைக் கலழகத் தமிழ்
நாடகக்குழு வெளியீடு 4.
இரண்டாம் பதிப்பு : கார்த்திகை 1962
எல்லா
உரிமையும்
இலங்கைக் கலைக்கழகத்திற்கே.
கண்டி,
றோயல் அச்சகத்தில்
அச்சிடப்பட்டது.
தோற்றுவாய்
இயற்கையோடு ஒட்டிவாழும்
உள்ளத்தினையும் பண்பினையும் உடைய நாட்டு மக்களின் உணர்ச்சிiயையும் செயல்களையும்
வெளியிடும் பாடல்களே நாட்டுப்பாடல்கள், நாடோடிப்பாடல்கள், பாமரப்பாடல்கள்,
வாய்மொழிப்பாடல்கள் என்றெல்லாம் பெயரிடப்படும் இப்பாடல்கள் பெரும்பான்மையும்
எழுத்தறிவில்லாத நாட்டுப்புற மக்களிடையே வழங்கும் பலவிதப்பாடல்களைக் குறிக்கின்றன.
மக்கள் வாழ்க்கையில் உள்ள செய்திகளை, அவர்கள் இன்பதுன்பங்களை, விளையாட்டு
வேடிக்கைகளை உள்ள படியே எடுத்துக்காட்டுபன நாட்டுப்பாடல்கள்.
இவைபல
ஆண்டுகளளாக தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாகவும் கேள்வி மூலமாக பொதுமக்களிடையே
பயின்று வருகின்றன. காலத்துக்கு காலம் இடத்துக்கு இடம் பரவி, மாறியும் விரிந்தும்
சுருங்கியும் வழங்கும் இப்பாடல்களை யார் எப்பொழுது இயற்றினனார் எனக்கூறமுடியாது.
பாடலாசிரியர் யார் என கூற இயலாமை இவற்றின் இலக்கனங்களுள் ஒன்றாக அமைந்து விட்டது.
nhழிலாளர், குடிமக்கள், வேலைசெய்யும் பெண்கள் முதலியோர் தத்தம் வேலையினால்
உண்டாகும் அலுப்பைப் போக்கி கொள்ளப்படும் பாடல்கள் ஒரு வகை; குழந்தைகளை தொட்டிலில்
இட்டு தாழாட்டி நிலாக்காட்டி தலையையாட்டி தோழைவிசச் செய்து விளையாட்டுக்காட்டி
தாய்மார் குழந்தையோடு குழந்தையாய் பாடும் தாளட்டுப்பாடல்கள். ஓருவகை; புத்தாண்டு
பொங்கள் போன்ற விழாக்காலத்தில் மக்கள் ஒன்று கூடி ஆடிப்பாடி இசைக்கும் பாடல்கள்
ஒருவகை; சில பிள்ளைகள் ஆடும் விளையாட்டுக்களிடையே பாடும் பாடல்கள் ஒருவகை. திருமணம்
இழவு வீடு முதலியவற்றில் பாடும் பாடல்களும் ஒர் இனத்தவை. இவ்வாறு பலதுறைப்பட்டு
நிற்கும் நாட்டுப் பாடல்களை பாரதியார்.
மானுடப் பெண்கள் வளரும் ஒரு
காதலினால்
ஊனுருகப் பாடுவதிலூறிடுந் தேன்வாரியிலும்
ஏற்றநீர்ப்
பாட்டினிசையினிலும் நெல்லிடிக்குங்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சு
மொழியினிலும்
சுண்ணமிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
வட்டமிட்டுப
பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப்
பாட்டினிலும்
எனத் தான் பாடிய குயிற்பாட்டிற்
குறிப்பிடுகிறார்.
நாட்டுப் பாடல்களில் ஓசை இனிமையும் கருத்தழகும் மலிந்து
கிடக்கின்றன. வயல்வெளியிலே நாற்றுநடும் பொதுமக்கள் பாடும் பாடல்களைக் கவனித்தால்
இதன் உண்மை தெரியும். இசையுடன் நாற்று நடுகை நடைபெறுகின்றது. முறைமுறையாக யாவரும்
பாடுகின்றர்.இயற்கையான சங்கீதக் கச்சேரி இங்கு நடைபெறுகின்றது. முறைமுறையாக யாவரும்
பாடுகின்றனர் இயற்கையான சங்கீதகச்சேரி இங்கு நடைபெறுகின்றது. கச்சேரியை நடத்துபவர்
நாற்றுநடுவோர். நாற்றும் நடும்போது தாளம் பிறக்கப்படும் அந்தசங்கிதம்
ஒருகுறிப்பிட்டகலத்திற்குள் ஓர் இடத்திற்குள் சிறைப்படவில்லை அவர்கள்குனிந்து
நாற்று நடும்போது உண்டாகும் அலுப்பை அந்தச் இனிய பாட்டு மறக்கச்செய்யிறது. அவர்கள்
தொழிலுக்கு இன்பம் அளிக்கின்றன அவர்கள் பாடும் பாட்டுக்கள் அவர்களுக்கு
உணவேதேவையில்லை முறைமுறையாக அவர்கள்பாடும் பாட்டுக்கள். அவர்களுக்கு இன்பத்தை
கொடுக்கின்றன. ஓசை இனிமையிலும் கருத்தழகிலும் தம் உள்ளத்தைப் பறிகொடுத்து உவகைபொங்க
தொழிலாற்றுகின்றனர்.
ஒரு விசயத்தைப் பலவகையாக திருப்பித் திருப்பிச்சொல்வது
நாட்டுப்பாடல்களில் காணப்படும் ஒரு பண்பாகும். உதாரணமாகப் பின்வரும் பாடல்களை
கொள்ளலாம். சின்னப்பு என்பவன் தன் மச்சாள் லட்சுமிமேற் காதல்கொண்டிருந்தது அவன்
தாயாருக்கும் பிடிக்கவில்லை லட்சுமி வீட்டுக்குச் சென்ற சின்னப்புவின் வரவை
எதிர்பார்த்திருந்து. அவன் வந்ததும்.
இவ்வளவும் எங்கிருந்தாய்
சின்னப்பு
சின்னப்பு
இவ்வளவும் எங்கிருந்தாய்
சின்னப்பு சின்னப்பு
என்று
கேட்டாள். அவள்
அழகவல்லி லட்சுமியோடு
நாள் முழுதும் இருந்தேன்
இவன்
என்னை கவர்ந்துகொண்டாள்
அழகவல்லி லட்சுமி
என்று குசாமல் விடை அளித்தான்
சோறு கறி ஆக்குவாளா
சின்னப்பு சின்னப்பு
சோறு கறி ஆக்குவளா
ஏன்
சின்னப்பு சின்னப்பு
என்று கேட்டால் தாய்.
ஒடியல்கூழ்
காய்ச்சுவாள்
ஊழுத்தம் கழியும்ங் கிண்டுவாள்
அவள் என்னை கவர்ந்து
கொண்டால்
அழகவல்லி லட்சுமி
அன்று மறுமொழிகூறினான் அவன்.
சீதனமும்
கேளடா
சின்னப்பு சின்னப்பு
சீதனமும் கேளடா
என் சின்னப்பு
சின்னப்பு
என்று தாய்.
வன்னிவயலும் பரந்தன்காடும்
சீதனமாய்த்
தருகிறார்கள்
அவள் என்னை கவர்ந்துகொண்டாள்
அழகவல்லி லட்சுமி
என்று
அவன் மறுமொழி கூறக்கேட்ட தாய் இவர்களுக்கு குறுக்கே
நிற்கவிரும்பாது.
அப்படியே செய்யடா
சின்னப்பு சின்னப்பு
அப்படியே
செய்யடா
என்சின்னப்பு சின்னப்பு
என்று சம்மதத்தைத் தெரிவித்தாள்.
இப்பாடல்களில் ஒரேவி~யம் திருப்பித் திருப்பிச் சொல்லப்படுவதைக் காணலாம். இது
செந்தழிழ் இலக்கியத்தில் ஒருவேளை குற்றமாகலாம். ஆனால் நாட்டுப்பாடல்கள் இப்படி
அமைந்திருப்பது அப்பாடல்களின் பண்புகளுள் ஒன்றாகும். எத்தனைதரம் திரும்பித்
திரும்பிச் சொன்னாலும் சொல்பவனுக்கும் கேட்பவனுக்கும் இன்பமே உண்டாகின்றது. ஒரு
வரியை இன்னொரு வரியில் திருப்பிச் சொல்லக்கூடிய முறையில் இவை அமைந்திருப்பதும்
கவனித்தற்குரியது. இன்ன தென்றுசொல்லி விவரிக்கமுடியாத ஓசைநயம் பொதிந்துகிடக்கும்
இப் பாடல்கள் மக்கள் உள்ளத்தைத் தம்பால் இழுக்கும் அரிய பண்பைப்
பெற்றிருக்கின்றன.
கிராம மக்களின் உள்ளத் துடிப்புகளையும் உணர்ச்சிப்
பெருக்குகளையும் வெளியிடும் இப்பாடல்கள் பேச்சுவழக்கிலுள்ள சொற்களையும்
சொல்லுரவங்களையும் கொண்டு விளங்குவது இயல்பே.
புல்லைப்
புடுங்கிவெச்சேன்
புறவளவைத் துத்துவெச்சேன்
அன்னப் பசுங்கிளியின்
அடியழகைப் பார்ப்பதற்கு.
தோற்றுவாய்
தேருவால போவெண்ணா
தேன்போல
மணக்கிறது
உறவாட நான்வாறேன்-உன்ர
அண்ணன்மார் காவலாமே
என்ற பாடல்களில்
இப்பண்பைப் பெரிதும் காணலாம்.
நாட்டுப் பாடல்களுக்குத் தொடக்கமுமில்லை,
முடிவுமில்லை. அந்த அந்தக் காலத்துச் செய்திகளையும் முறைகளையும் அவை
ஏற்றுக்கொள்ளும். ஈழத்திற் பறங்கியர் ஆங்கிலேயர் முதலியோர் ஆண்டதன் பயனாக அவருடைய
பழக்க வழக்கம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டும். அவர்கள் மொழியிலுள்ள சொற்களைக்
கடன்வாங்கியும் பல நாட்டுப் பாடல்கள் எழுந்தன.
சிங்கிலிநோனா
சிங்கிலிநோனா
சீப்புக் கொண்டைக்காரி
பார்த்தபேர்கள் ஆசைகொள்ளும்
பந்துக்
கொண்டைக்காரி.
என்னபிடிக்கிறாய் அந்தோனி
எலிபிடிக்கிறேன்
சிஞ்ஙோரே
பொத்திப்பொத்திப் பிடிஅந்தோனி
புறிக்கொண்டோடுது
சிஞ்ஙோரே
போன்ற பாடல்கள் இவ்வகையாய் எழுந்தவையே.
இலக்கியத்திற்க்கும்
நாட்டுப் பாடல்களுக்கும் குறிப்பிடத்தக்க வேற்றுமை உண்டு. இலக்கியங்கள்
பெரும்பாலும் இலட்சிய வாழ்க்கையையே அடிபடபடைக் குறிக்கோளாகக் கொண்டவை. தமிழிலுள்ள
காவியங்கள் பல அதர்மத்தின் அழிவையும் தர்மத்தின் வெற்றியையும் கூற எழுந்தவையே.
இதனால் இலக்கியங்களுக்குத் தலைவராக அமைபவர் குற்றமே இல்லாதவராய்க் குணங்களுக்கு
இருப்பிடமாய் படைக்கப்படுகின்றனர்.
எல்லாக் காவியங்களிலும் இத்தகைய குணம்படைத்த
தலைவரையே நாம் காணுகின்றோம். இது உண்மையான வாழ்க்கைக்குப் பொருத்தமற்றதாக
இருக்கின்றது.
இதற்கு மாறாக மனிதனின் குறைகுற்றங்களையும் சமூக ஊழல்களையும்
உள்ளவாறே எடுத்து இயம்புகின்றன. நாட்டுப்பாடல்கள். கற்பின் சிறப்பை இலக்கியம் பாட,
உலகில் மலிந்து கிடக்கும் கள்ளக்காதல் வாழ்க்கையை நாட்டுப் பாடல்கள்
சித்திரிக்கின்றன. நாள்தோறும் வாழ்க்கையிற் காணப்படும் நிகழ்ச்சிகளைச் சுவைபடப்
பாடும் நாட்டுப் பாடல்கள் ஆபாசங்களை வெட்ட வெளிச்சமாக உள்ளபடி கூறுகின்றன. ஆகவே,
கல்வி, உருவம், ஒழுக்கம், வயது முதலியவற்றில் தம்மை ஒத்த ஆணையும் பெண்ணையும்
காவியங்கள் பாட, எந்த விதத்திலும் ஒவ்வாத இருவர் வாழ்கை நடத்துவதைக் கேலி செய்து
இயம்புகின்றன நாட்டுப்பாடல்கள்.
நடோடிப் பாடல்களில்வரும் பாத்திரங்கள்
நெர்லுக்குற்றும் பொன்னி, நாற்று, நடும் சின்னாச்சி, வண்டியோட்டும் சின்னப்பு,
ஏற்றம் மிதிக்கும் மாரிமுத்து, கஞ்சிகொண்டுவரும் வேலாயி, பொலிதுற்றும் சித்தி
போன்றவர்களே. இவர்களுக்கு என்ன காதல், இவர்களைப்பற்றி என்ன பாடல் என்று நாடோடிப்
பாவலன் ஒதுக்கிவிடகில்லை. அவன் பொன்னியின் காதலைப்பற்றிப் பாடுகின்றான்,
மாரிமுத்தனின் வீரத்தை விளம்புகின்றான், வேலாயியின் துக்கங்களை வியாக்கியானம்
செய்கின்றான். இத்தகையோரைப் பாத்திரங்களாக வைத்துப் பாடிய பாடல்களிலேயே நாம்
இலக்கியங்களிற் காணமுடியாத இன்பத்தை, உணர்ச்சிப் பெருக்கை, வாழ்க்கைப் பண்பைப்
பார்க்கின்றோம். இதற்க்கு உதாரணமாகத் தெம்மாங்கு என அமைந்தது எனக் கூறுவர்.
வண்டியோடும் வண்டிக்காரன் சுப்புவும் வண்டி இழுக்கும் மாடுகளும் மயக்கும்படி
பாடப்படும் அப்பாடல்கள் தேன்போலவே இனிக்கின்றன.
சின்னச்சின்ன
வண்டிகட்டிச்
சேவலைமாடு ரெண்டுபூட்டி
வாழக்காய்ப் பாரம்ஏற்றி
வாருண்டி
உன்புரு~ன்
மாடுமோ செத்தல்மாடு
மணலுமோ கும்பிமணல்
மாடிழுக்க
மட்டாமல்
மாய்கிறாண்டி உன்புரு~ன்.
என்று பாடும்போது இவை கேட்போருடைய
உள்ளத்தையும் பாடுவோர் உள்ளத்தையும் கவரகின்றன.
தமிழ் இலக்கியத்தில் அப்பொருள்
இலக்கியம் காதலைப்பற்றிப்பாடுகின்றது. இத்தகைய இலக்கியத்திற்கு தமிழில் குறைவே
இல்லை ஆயினும் இலக்கியத்தில் வரும் காதல் பெரும்பாலும் உலகில் நிகழ்வதன்று:
நாடகவழக்கும் சேர்ந்தே அமைந்துள்ளது. ஆனால் நடோடி காதல்ப் பாடல்கள் காதல் உலகில்
இயற்கையாக நடைபெறுவனவற்றை கூறுகின்றன. அதுவும் காதலன் காதலியைக் களவிற்
கூடும்பகுதியே கூடுதலானது. காதலன் காதலியை தேடிவருதல், அவள் குறியிடம் கூறல்,
குறித்த இடத்தில் குறித்த காலத்தில் காணயியலாது. துத்தலித்தல் முதலிய பகுதிகள்
உணர்ச்சிவாய்ந்தனவாக இருக்கும்.
அந்தி விடிந்து
சந்தையாற்
போறமச்சான்
நேரத்துக்கு கோருடுப்பு
நெய்கிறதோ வாங்கிறதோ
மாசம்
பதினாறு
வளவு நிறைந்தநிலா
சிற்றொழுங்கைக் குள்ளாலே - இரண்டு
செருப்பழுது
பேகுதுகா.
சந்தன மரத்தைச்
சந்திக்க
வேன்டும்மென்றால்
பூவலடிக்குப்
பொழுதுபட வாமயிலார்.
கடித்தநுளம்பு -
நான்
கத்திருந்த முளையும்
அடித்தமழையும் -எனக்கொரு
ஆள்வேனும்
சொல்லியழ
தாயாரும்மில்லை மச்சான்
தகப்பன் வெடிகாட்ட
அண்ணன்
தினைக்காவல்- என்
ஆணிமுத்தே வாமயிலார்.
போன்ற பாடல்கள்
நாட்டுப்பாடல்களின் அகப்பொருளை நன்கு விளக்க வல்லன.
நாடோடிப்பாடல்களுக்கு
முன்னோடியாக பழைய தமிழ் இலக்கியத்துக்கு சில பகுதிகளைக்;காணலாம். இளங்கோவடிகள்
பாடியசிலப்பதிகாரத்தில் அம்மனைவரிகந்துக வரி என்று வருபவை நாட்டுப் பெண்கள் அம்மானை
ஆடும்போது பாடும் பாட்டுக்களை ஒத்திருக்கின்றன. மணிக்கவாசக சுவாமிகள்
திருவாசகத்திற்பாடிய தோள் நோக்கம் சாழல் திருவுந்தி என்பன உருவத்திலும் ஓசையிலும்
நாட்டுப்பாடல் உலகத்திற்குரியன. குறவஞ்சி, பள்ளு முதலிய இலக்கியவகைகளும் நாடோடி
இலக்கியங்களே. பொதுமக்களுடைய வழ்க்கையையும் இன்ப துன்பங்களையும் படைத்துக்காட்டும்
இப்பிரபந்தங்கள் நாட்டுப்பாடல் இலக்கியத்தைச்
சேர்ந்தவையே.
தொல்காப்பியர் தமிழிலுள்ள செய்யுள் வகைகளைக்
குறிப்பிடும்மிடத்து பண்ணத்திச்செய்யுள் என்ற ஒருவகை இலக்கியத்தையும்
தருகின்றார்.
பாட்டிடைக் கலந்த பொருள் வாகிப்
பாட்டினியல பண்ணத்தி
யியல்பே
( செய்யுளியல் 180 )
என்பது அதன்
இலக்கணம்.
பழம்பாட்டினூடும் கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும்
உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என உரை கூறுவார் பேராசிரியர். எழுதும்
பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களை உடையது பண்ணத்தியென்றும் அதற்கு உதாரணமாக
வஞ்சிப்பாட்டு, மோதிரப்பாட்டு, கடகண்டு முதலியவற்றைக் கொள்ளலாமென்றும் அவர் மேலும்
கூறுவர். பண்ணத்தி என்று அக்காலத்தில் வழங்கியவையே நாட்டுப்பாடல்கள். எனவே
நூல்வடிவில் இல்லாது வாய்மொழியாகப் பரம்பரை பரம்பரையாக வழங்கிவரும்
நாட்டுப்பாடல்கள் அக்காலத்திலிருந்தே வந்தவை.
தொல்காப்பியர் காலத்திலிருந்து
பாரதி காலம்வரை பள்ளு குறவஞ்சி ஏசல் சிந்து கும்மி முதலிய செய்யுள் வகைகளைப் புலவர்
பயன்படுத்தி வந்திருக்கின்றனர். பாரதி பல இடங்களில் நாட்டுப் பாடல் மெட்டிற் பல
பாடல்கள் இயற்றி உள்ளார். புயற்காற்று புதியகோணங்கி போன்ற பாடற்பகுதிகளில் வரும்
பாடல்கள் இதற்குச்சன்றாகும் புயற் காற்றில்வரும்
காற்றடிக்குது கடல்
குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகநே
துற்றல் கதவு சாளர மெல்லாங்
தோலைத்
தடிக்குது பள்ளியிலே
வானஞ் சிவந்தது வைய நடுங்குது
வாழி பராசக்கி
காத்திடவே
தீனக் குழந்தைகள் துன்பப்படாதிங்கு
தேவி அருள் செய்ய
வேண்டுகின்றோம்
என்னும் பாடல்களும் புதியகோணங்கி என்னும் பகுதியில் வரும்
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்லகாலம் வருகுது நல்லகாலம்
வருகுது
சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
செல்லடி சக்தி
மாகாளீ
வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு
என்னும் பாடலும் போதிய
எடுத்துக்காட்டுக்;களாம்.
ஈழ நாட்டிலே கிராமியக் கவிதை நலம் நிறைந்துள்ள
பகுதி மட்டக்களப்பு. தேனுக்கும் பாலுக்கும் தழிழர் வீரத்திற்கும் பெயர் பெற்ற
மட்டக்களப்பு மக்கள் கலைகளைபேணி வளர்பதிலும் தலைசிறந்து விளங்குகின்றது. உணர்ச்சி
கவிதை நிறைந்த மட்டக்களப்பு நட்டுப் பாடல்கள் பல்வேறு துறைப்பாட்டு, நிறைந்து
வழங்குகின்றன. கிழக்கிலங்கையின் மூலை முடுக்குகளிலும் வயல்வெளிகளிலும் வீடுகளிலும்
வீதியிலும் உலவும் இப்பாடல்களை தொகுத்து வகைப்படுத்தி வெளியிடுவதில் ஒருவரும்
பெரிது கவனம் செலுத்தவில்லை. இயற்கை வழ்வில் நின்று விலகி நிற்கும் நாகரிகத்தில்
திளைத்து நிற்கும் பலருக்கு இப்பாடல்களின் அருமை தெரியாது. நாட்டுப்புற
பாமரமக்களுக்கும் நகரமக்களுக்கும் வாழ்க்கை முறையிலும் உள்ளப்பாங்கிலும் வேறுபாடு
வளர்ந்துகொண்டே வருவதனால்
பாமரமக்கள் பாடும் பாட்டை கேட்டு மகிழ்கிற மனநிலை
படித்தமக்களைவிட்டு ஒரளவிற்கு நீங்கிவிட்டது என்று கூறலாம். நாட்டுப்பாடல்களை
படுவோரின் தொகையும் நளுக்குநாள் குறைந்து கொண்டேவருகின்றது. நாளடைவில்
நாட்டுப்பாடல்கள் மறைந்து விடக்கூடும்.
இந்நிலையை மாற்றி அமைக்கும்
நோக்கத்துடநேயே இந்நு}ல் வெளியிடப்படுகின்றது. எமது நட்டில் பாமரமக்களே பெரும்
பகுதியினர். அவர்களுடைய பாடல்களை பயிலுவதே தக்கவழி. இக்கவிகளை அவர்கள் நாள்தோறும்
தாமேபாடித் தமேகேட்டு உள்ளத்தில் அமைத்து வளர்த்து வந்திருக்கின்றனர். அவர்களுடைய
கவிதைப் பெருக்கிலே ஓசை இன்பத்தையும் தாளக்கட்டையும் சொல்லாட்சியையும் காணலாம்.
உணர்ச்சி பெருக்கொண்றை அடிப்படையாகக்கொண்டு இப்பாடல்கள் இயங்குகின்றன. உணர்ச்சியே
இப்பாடல்களுக்கு உயிர் எனலாம்.
இத்தகைய உணர்ச்சிக் கவிதைகளைப் பாதுகாக்கும்
நோக்கத்துடநேயே இலங்கைக் கலைக்கழக நாடக நடனக்குழு இந் நூலை வெளியிடுகின்றது.
கிராமியப்பாடல்களையும் கூத்துவகைகளையும பேணி வளர்ப்பது இக்குழுவின் முக்கிய
நோக்கங்களுல் ஒன்றாகும். இப்பாடல்களை ஒன்றுசேர்த்துத்துறைப்படுத்தி எமக்கு உதவியவர்
பண்டிதர் வி .சீ. கந்தையா அவர்கள். அவர்களின் தழிழ்த் தொண்டுக்காக நாம் அவரை
வழ்த்துகின்றோம். பாடல்களை சேகரிப்பதில் திருவாளர்கள் ஏறாவூர் எம். ஏம் சாலி அக்
கரைப்பற்று எஸ். அப்துல் ஸமது மண்டூர் வி.விசுவலிங்கம் காரைதீவு வே. தம்பிராசா
ஆகியோர் அவருக்கு துனையாக இருந்தனர் அவர்களுக்கு எமது நன்றி
உரியது.
இந்நூலில் ஜஞ்நூறு பாடல்கள் வரை இடம்பெற்றுள்ளன அவை கவிகள்
பொதுப்பாடல்கள் தொழில் முறைப்பாடல்கள் கொம்பு விளையாட்டுப்பாடல்கள் என்ற நான்கு
பெருந்துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மட்டகளப்புபகுதியில் வழங்கும் நாட்டுப்
பாடல்களில் பெரும்பாலான அகத்தினையைச் சார்ந்தவையே. எல்லோருடைய காதல்
நிகழ்ச்சிகளையும் உணர்ச்சியுறக்காட்டும்
இவ்வகத்தினைப் பாடல்கள்
மட்டக்களப்பிற் கவிகள் என வழங்குகின்றன. பாடல் அனைத்தையும் குறிக்கும் கவி என்னும்
சொல் மட்டகளப்பிலே அகத்தினை நாட்டுப்பாடல்களைக்குறிக்கும் சிறப்புசொல்லாக
வழங்குகின்றது. இக்கவிகளில் அதிகம் ஈடுபாடுடையவர் மட்டக்களப்பு இஸ்லாமிய மக்களே.
சிறந்த கவிவளைப்பாடவல்லவர் இவர்களிடையே இன்றும் பலர் உளர்.
இத்தகைய
உணர்ச்சிமிக்க காதற்பாடல்களாகிய கவிகள் கூற்றுக்குரியோர் பெயராற் காதலன் கூற்றாய்
உள்ளவை, காதலி கூற்றாய் உள்ளவை, தோழி கூற்றாய் உள்ளவை, தாயார் கூற்றாய் உள்ளவை, என
நான்கு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. இக்காதற்கவிகள் தமிழிலுள்ள அகப்பொருள்
மரபுக்கு மாறாகஇருக்ககூடும் உதாரணமாகத் தமிழ் இலக்கியத்திற் களவு ஒழுக்கம்
பெரும்பாலும் தோழிதுணை கொண்டே நடக்கும். தலைவி ஒருபோதும் குறியிடம் கூறமாட்டாள்.
ஆனால் நாட்டுப்பாடலில் தலைவி தானே தலைவனிடம் குறியிடம்
கூறும்வழக்கைகாணலாம்.
சந்தன மரத்தை மச்சான்
சந்திக்க
வேன்டுமென்றால்
பூவலடிக்கு மச்சான்
பொழுதுபட வந்திடுங்கோ.
கடப்படியில்
வந்து நின்று
காளை கனைக்கும் மென்றால்
எங்கிருந்த போதும் நாகு
எழுந்துவர
மாட்டாதோ
போன்ற பாடல்கள் தலைவி தலைவனிடம் குறியிடம் கூறுவதைக்குறிக்கின்றன.
மட்டக்களப்புக் கவிகள் இவ்வாறு பழைய அகப்பொருள் மரபுக்கு முறண்பட அமைந்தபோதும், அவை
பொதுமக்கள் வழ்க்கையிலே இயற்கையாய் நடைபெறும் ஒழுக்கங்களை எடுத்துக் கூறுவதால்
மிகவும் நயம்பட அமைந்துள்ளன.
பொதுப்பாடல்கள் என்ற பகுதியிற் கண்டோர் கூற்று
அயலார் கூற்றுப் போன்ற பொதுக்கவிகளும், புறச்சுவை கலந்து பொதுவே வழங்கும்
நாடோடிப்பாடல்களும் இடம்பெறுகின்றன.
இதில் வரும் முதல் 31 கவிகள்
அகத்தினைச்சான்றவை 32-ம் பாடல் தொடங்கி 56 ம் பாடல்வரையுள்ளவை
புறத்தினைச்சான்றவை.
தொழில்முறைப்பாடல்கள் என்பது இன்நு}லின் மூன்றாம்
பகுதி, இதில் வயற்களத்துப் பாடல்களாகிய பொலிப்பாட்டும் ஏர் பாட்டும் இடம்
பெறுகின்றன. வயல் தொழில்களோடு நேரடியாக தொடர்பு கொள்ளாமையால் இவ்வாறு
வகுக்கப்பட்டுள்ளன. சூடுபோடும் களத்திலே பாடப்படுபவை பொலிப்பாடல்கள், பொலி என்று
சொல் நெல்லை தனியாகவும் தொகையாகவும் குறிக்கும். பொலியின் வளம்பெருகவேண்டி இரவிலே
சூடு போடும்போது இப்பாடல்கள் பாடப்படுகின்றன. வயற்களங்களிற் உழவுமிதிப்புப்போன்ற
தொழில்கள் செய்யுங் காலங்களில் மாடுகளைக்கொண்டு வேலை செய்வோர் பாடும்பாடல்களே
ஏர்ப்படலாகும்..
கொம்பு விளையாட்டுப் பாடல்கள் நன்காவது பகுதியாக
அமைந்துள்ளன. தன் கணவனை கள்வனெக் கொன்ற பான்டிய மன்னனின் தலைநகரமாகிய மதுரையைத்
தீக்கிரையாக்கிய பின்னரும் சீற்றம் தணியாது வந்து கண்ணகி முன்னிலையில், இடையர்கள்
காதல் கலந்த விளையாட்டு விழாவாக கொம்பு விளையாடலைச் செய்து அவளை குளிர்வித்தனர்
என்றும், அதன் தொடர்பாக எழுந்ததே இன்று மட்டகளப்பில் வளங்கும் கொம்புவிளையாட்டு
என்றும் கூறுவர் கோவலன் கட்சியாரும் கண்ணகி கட்சியாருமாக மக்கள் பிரிந்து, இரு வேறு
வளைந்த தடிகளை ஒன்றொடு ஒன்று கொழுவி இழுத்து கோவலன் அதை முறித்து கண்ணகிக்கு வெற்றி
காட்டி மகிழ்வித்தபோது, பத்தினி தெய்வம் சீற்றம் தணிந்து வழ்த்திசென்ற தென்றும்,
கொம்பு விளையாடி கண்ணகி அம்மனுக்கு குளுத்தி செய்து வரம் பெற்றனர் என்று கூறுவர்.
மட்டகளப்பில் - மழைவளம் குறைந்து பசியும் பிணியும் பெருகும் காலத்து கண்ணகி
தேவிக்குச் சாந்தி செய்யும் போது கொம்புவிளையாட்டு நடத்தி மகிழ்வர்.
கொம்புவிளையாட்டில் ஊர் முழுவதும் இருகட்சியாகப் பிரியும். ஒன்று கோவலன் கட்சி,
மற்றது கண்ணகி கட்சி. இக்கட்சிகள் வடசேரி தென்சேரி என்ற பெயர் பெறும். இவ்வாறாக
பிரிந்து, போட்டியாக ஒரு சேரியார் இன்னொரு சேரைப்பழித்து வசைப் பாடல்கள் பாடுவர்.
பால்போல்நிலவெறிக்கப் படலை திறந்தவன ஆர்தோழி
நான்தாண்;டிவடசேரியான்
உனக்கு நழிப்பணம் கொண்டுலாவுகிறேன்.
என்பன போன்ற தனி வசைப்பாடல்களும் பல உள.
இப்பாடல் இப்பொழுது மண்டூர் தமபிலுவில் காரைதீவு வந்தாறுமூலை போன்ற ஊர்களில்
மட்டும் ஆடப்படுகின்றது. துன்பத்தைப்போக்கி இன்பத்தை பெருக்கப் பாடப்படும்
இப்பாடல்கள் அழியாமற் காக்கப்படவேண்;டியவை.
இந்நுலின் இந்நான்கு
பகுதியிலும் தரப்பட்ட பாடல்களேயன்றி இன்னும் பல ஆயிரக்கணக்கான நாட்டுப்பாடல்கள்
பலதுறைப்பட்டு விளங்குகின்றன. அவற்றை அறிஞ்ஞர்கள் சேர்த்து அனுப்பிவைப்பின் இன்னொரு
நு}லாக அவற்றை வெளியிடுவோம். நாட்டுப்பாடல்களை இறவாமல் காப்பது எல்லோருடைய
கடமையாகும் தமிழரின் இலக்கிய செல்வத்திலே இப்பாடல்களுக்கு சிறந்த இடம்முண்டு.
தமிழில் எத்தனை யோ இலக்கிய நு}ல்களும் இலக்கண நு}ல்களும் இறந்து போய்விட்டன என்று
வரலாறு கூறுகின்றது. நாட்டுப்பாடல்களிலும் பலஅவ்வறே மறைந்து விட்டன. எஞ்சியுள்ள
சிலவற்றை யேனும் பாதுகாத்து, நு}ல்வடிவில் வெளியிட உதவுதல் தமிழ் மொழிக்குத்
தமிழர்இன்று எளிதிலே செய்யதக்க சிறந்த தொண்டாகும்.
இந்நு}லை நல்ல முறையில்
மிக விரைவில் அச்சிட்டுதவிய கிங்ஸ்லி அச்சகத்திற்கு எமது உளம் நிறைந்த நன்றி.
இவ்வச்சகத்தைசேர்ந்த திரு. ஜே . ஜார்ஜ் ரொட்ரிகஸ் அவர்களும் திரு. சா. தர்மசீலன்
அவர்களும் குறிப்பிட்ட சிறுகால எல்லையுள் இதனை வெளியிடுவதற்கு ஒத்துளைத்து ஊக்கம்
அளித்தனர். ஆவர்களுக்குப்பெரிய கடமைப்பட்டுள்ளோம் .
வழ்க்கையின் நயத்தையும்
அழகையும் அதிலே பொருந்தியுள்ள உண்மையான உணர்ச்சி பெருக்கையும் எடுத்துக்காட்டும்
நாட்டுப்பாடல்களை கொண்ட இந்நுலை பெரியோர்கள் அன்புடன் ஏற்று இப்பனியினை தொடர்ந்தும்
செய்வதற்கு ஆதரவும் ஊக்கமும் அளிப்பார்கள் என எதிர்பக்கின்றோம்.
சு.வித்தியானந்தன்
இரண்டாம் பதிப்புரை
இலங்கைக் கலை
கழகத்தின் முதல் வெளியிடாக மட்டக்களப்பு நாட்டுப்பாடல்களின் முதற் பதிவு 1960 ம்
ஆண்டில் வெளிவந்தது.. அதனை தொடர்ந்து இவ்வான்டில் சிலம்பு பிறந்தது அலங்கார ரூபன்
நாடகம் ஆகிய இரு நூல்கள் வெளிவந்தன. மட்க்களப்பு நாட்டுப்பாடல்களின் முதற்பதிவு
நூல் யாவும் மிகவிரைவில் விற்பனையாகிவிட்டன. புலரி வேண்;டுகோளுக்கு இணங்க இரண்டாம்
பதிப்பினை எமது குழுவின் நான்காவது வெளியிடாக தமிழ் கூறும் நல்லுலகிற்குச்
சமர்ப்;பிக்கின்றோம.;
இப்பதிப்பிற் சில மாற்றங்களை காணலாம். ஒன்றை ஒன்று
ஒத்திருந்த சில பாக்கள் நீக்கப்பட்டுள்ளன. முதலிற் பாடல்களை துறைப்படுத்திய போது
ஏற்பட்ட சில பிழைகளை இப்பதிப்பில் நீக்கியுள்ளோம் இரண்டாம் பதிப்பிற் பாக்கள்
யாவும் உரிய துறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் ஒரு முன்னுரையும்
இப்பதிப்பிற் சேர்க்கப்பட்டுள்ளது. கண்டி றோயல் அச்சகத்தார் இந்நு}லை குறுகிய கால
எல்லையில் வெளியிடப் பெரிதும் ஒத்துளைத்தள்ளார். அவ்வச்சக உரிமைக்காரன் திரு .ஜே.
ஜார்ஜ் ரொட் ரிகஸ் அவர்களுக்கும் அச்சகத்தை சேர்ந்த திரு .சா. தர்மசீலன்
அவர்களுக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
மக்கள் கலைகளிற் கவனம் செலுத்த
முயற்சி அண்மையில் ஏற்பட்டபோதும் நாட்டுப்பாடல்களை சேர்க்கும் முயற்சி சிலகாலமாக
இருந்து வந்திருக்கின்றது. ஈழத்திலுள்ள அறிஞ்ஞர் பலர் ஈழத்து நாடோடிபாடல்களை
அவ்வப்போது சேர்த்துப்பத்திரிகைகளிலும,; துண்டு பிரசுரங்களிலும் வெளியிட்டு
வந்துள்ளனர். இவர்களுள் திரு. மு. இராமலிங்கம் அவர்களின் சேவை
பாராட்டுக்குரியது.
இச்சு10ழ்நிலையிலேயே கலைக்கழக நாடகக்குழு பணியாற்ற
தொடங்கி மட்டக்களப்பு நாட்டுப்பாடல் என்னும் பெயரில் ஈழத்தில் வழங்கும்
நட்டுப்பாடல்கள் சிலவற்றை துறைப்படுத்தி முன்னுரையுடன் நூல்வடிவில் முதன் முதல்
1960 ம் ஆண்டில் வெளியிட்டது.
இம்முதல் முயற்சியின் விளைவாக வாய்மொழி
இலக்கியம், வட இலங்கையர் போற்றும் நாட்டார் பாடல்கள், ஈழத்து நாடோடிப்பாடல்கள்,
ஆகிய நு}ல்கள் ஈராண்டுகளுக்கு பின்பு வெளியாகியுள்ளன. மக்கள் கலையாகிய நாட்டு
கூத்திலும் கவனம் செலுத்தி, அலங்கார ரூபன் எனப் பெயரிய தென்மோடிக்கூத்து நு}லையும்
வெளியிட்டுள்ளோம். இதனை தொடர்ந்து பல கூத்து நூல்கள் வெளிவரும் என
எதிர்பாக்கின்றோம்.
மக்கள் கலையில் உள்ள ஆர்வம் நாளுக்கு நாள்
பெருகிக்கொண்டு வருகின்றது. கலை வளர்ச்சியிலும் எழுத்துத்துறையிலும்
விளிப்பெற்பட்டுள்ள இக்காலத்தில், மக்கள் கலைஇயக்கத்தை நல் வழியில் அமைக்க மக்கள்
கலைக்கழகம் ஒன்று அமைப்பது அவசியமாகின்றது. பிற நாடுகளில் இத்தகைய கழகங்களே மக்கள்
கலைகளை வளர்ப்பதில் முன்னணியில் நிற்கின்றன. தனிப்பட்ட முறையில் இயங்காது கூட்டாக
உழைக்கமுயன்றால் இத்துறையில் பயனளிக்ககூடிய பணிகள் செய்யலாம். நாட்டின்
பலபாகங்களில் இத்துறையில் ஆர்வமுள்ளோர் மக்கள் கலைக்கழகம் ஒன்றினை அமைத்து, அதன்
மூலம் இம்முயற்சிகளை நல்வளிப்படுத்தும் நாளை
எதிர்பாக்கின்றோம்.
சு.வித்தியானந்தன்
பல்கலைக்
கழகம்
பேராதனை
5-11-62
---------------------------------------------
INTRODUCTION
The
panel for Tamil Drama of the Arts Council of Ceylon took up for consideration
the question of publication of Folklore in various parts of the Island from the
very outset of its inception in 1958. Thiugh interest in Ceylon Tamil folklore
as such is of rather recent has been sporadic attempts to collect folk poems in
Batticaloa and jaffna from the beginning of the twenties. There has been more or
lessa a parallel move ment in south India too. The start was made by literary
men who brought the world Nattu patal into active usage, in literary
appreciation. With the beginning of such an interest in folk poetry. Folk song
movement can be said to have been under way. At the early period the interest in
folk poetry received an added impetuss from persong like swami vipulananda, who
in his researches into the origin and development of tmi music (Tal Nul) drew
attention both in his speeches and writings to the dynamic contribution of folk
music to classical music and also to the pans of the devotional poetry of the
pallava period such observations were essentially made from the literary point
of view and did not evolve the collection and study of folklore as a separate
branch of sociological discipline.
The intial interest taken in this
field by pure litterateur led to the development of one particalar trend which
did not help to make the study of folk poetry separate and understand folk
poetry a separate and specific field of research. The Traditionalists tride to
interpret and understand folk poetry in terms of classical literature and
laboured to discover similarities bet been the two rather than the peculiar
characteristic and features of folk poetry. For example, a few folk song
enthusiaststried to modif the words of their collected material according to
some metrical cxactness which
They imposed on the words of folk songs
destroyed something of their spontaneity and simplicity. Perhaps, these lovers
of country men ‘ s songs” did not really appreciate the simple art of the
traditional bards who fit a tune to the words and were indifferent to classical
prosody or metrical regularities and requirements. This resulted in these
studies becoming a sort of belles- letters.
Nevertheless, there have been
a few collections both in south India and in Ceylon which aimed at placing folk
poetry in a distinct perspective Mr. M. ramalingam and Mr. N. vanamamalai have
been prominent in this field. It was in this context that the panel for tamil
drama took up the question of publication of folk lore , and naturally the first
choice fell on folk poetry.
The present volume is an anthology of
selected folk poems collected in the villages of Batticaloa. The book is divided
into two broad sections: one dealing with love themes, and the other consisting
of labour songs arising out of games among the folk. The poems are printed as
they were recorderv and have been given the minimum notes and explanations. The
editors have thereby endeavoured to capture the true spirit of the folk
poetry.
A problem which the editor had to face was the question of
obscienity in folk poetry. The problem is certainly neither peculiar nor new .
most serious students of folk poetry have been best at some stage or other with
this problem of objection-able words and setiments in folk poetry. But following
the truism that has now come to be accepted the word over in dealing with this
problem, the editor was convinced that in most cases where such a problem arose,
the poems in question were not communal productions, but were the creations of
individuals. That being the case they were not considered genuine folk poems.
But the problem is not that simple. It has been discussed at length by cecil
sharp in his book, English folk songs, some conclusions.
But there also
latge number of folk songs, which trans gress the accepted conventions of the
present age, and which would shock the sus ceptibities of those who rank
reticence and reserve amongst the noblest of the virtues. These are not,
strictly speaking, bad songs; they contain nothing that is really wrong or
unwholesome. And they do not violate the communal sense of what is right and
proper. They are sung freely and openly by peasant singers, in entire innocence
of heart and without the shadow of a thought that they themselves are without
the shadow of a thought that they themselves are committing any offence against
propriety in singing them.
The question comes especially to the fore when
the most universal and elemental of all subjects is treated, that of love and
the relations of man to woman is very intimacy and mystery cause many minds to
shrink from expressing themselves openly on the subject as they would shrink
from desecrating a shrine. The ballad-maker has no such feeling. He has none of
that delicacy which, as often as not, degenerates into pruriency. Consequently
he treats the way of a man with a maid simply and directly, just as he treats
every other subject. Those, therefore, who would study ballad literature, must
realize that they will find in it, none of those feelings and unuttered
thoughts, which are characteristic of a more self conscious but by no means more
pure minded age.
While preparing this edition it was noted that a few
poems that were collected in battical with certain poems prevalent not only in
jaffna but also in south India . doubtless, there is a universality about folk
expressions and rhyme. But it there little differences and variations from
district to district and locale to locale that gives the folk literature their
peculiar characteristics and vividly portrays the power of improvisation of the
rural bards. This being the case, the editor felt that to start with, the best
method would be to bring out anthologies pertaining to particular geographical
areas. For example of Muslims authorship and social life and that is a
distinguishing feature of it in contrast to that of jaffna.
The fist
edition of this volume was pulished in 1960 and the copies were sold out faster
than all expectations. A second edition has now been called for. Consequent to
the publication of the fist edition a few anthologies of Ceylon tamil folk poems
have been brought out bay a few induals and it can be said that the time is very
ripe to start a folkore movement. The formation of a folklore society is in in
much ned of and only a spirited attempt can save the folk lore from extinction.
The folklore of jaffna, batticaloa and other places like mannar and chillaw
abound with all soart of forms and could be rich fields for collectors and
exponents. The folk drama has also attracted attention in recent years with a
revival in the traditional theatres and a themodif style folk play -
alankararupan natakam. Has been published as a companion valume in this series.
In this field too the present series have created an interest and a few folk
plays from the north westen province are currently being published by certain
individual lovers of folk art.
There are many folk song collectors in
the country and a co-ordinated effory of these enthusiasts can certainly lead to
good results. At a time when the development of the arts and letters of the
people of this country has becom a conscious aim and the pride of past heritage
has come to mould contemporary creations, a folk iore movement is in fact long
overdue.
But irrespective of that, the collections of folk poetry and
drama must be carried on with great speed. For as frank kidson one of the
pioneers of English folk music said in1891, the old traditional songs are fast
dying out never to be recalled. They are now seldom or never sung, but rather
remembered by old people.
S.VATHIANANTHAN
University of
Ceylon,
Peradeniya.
5-11-1962
------------------------------------------------
காதற்
பாடல்கள்
(அ) காதலன் கூற்றாய் உள்ளவை
(ஆ) காதலி கூற்றாய்
உள்ளவை
(இ) தோழி கூற்றாய் உள்ளவை
(ஈ) தாயார் கூற்றாய்
உள்ளவை
(அ) காதலன் கூற்றாய் உள்ளவை
1. பூவலைக்
கிண்டி
புதுக்குடத்தைக் கிட்டவைச்சி
ஆரம் விழுந்தகிளி
அள்ளுதுகா
நல்லதண்ணி.
2. தண்ணிக் குடமெடுத்து
தனிவழியே போறபெண்ணே
தண்ணி
குடத்தினுள்ளே
தளம்புதடி என்மனசு.
3. சன்டைபோட்டு
மார்பிறுக்கித்
தண்ணி சுமக்கும்மச்சி- உன்
சண்டை போட்ட கையாலே
கொஞ்சம்
தண்ணிதந்தா லாகாதோ?
4. சண்டைபோட்டுப்
பொட்டெழுதி
தண்ணிஎடுத்துப் போறமச்சி
சன்டைபோட்ட கையாலே-
கொஞ்சம்
தண்ணியைத்தா கண்மணியே.
5. புல்லுச் சவன்டிருக்கு
போனதடம்
தானிருக்கு
தண்டை பதிந்திருக்கு- என்ர
தங்கவண்டார் போனதெங்கோ?
6.
அக்கரையில் கொக்கே
அணில்கோதா மாம்பழமே
இக்கரைக்கு
வந்தியண்டா-ஒரு
இனித்தகனி நான்தருவேன்.
7. சுற்றிவர வேலி
சுழலவர
முள்வேலி
எங்கு மொரு வேலி
ஏதால்புள்ள நான்வரட்டும்.
8. தெருவால
போகவொண்ணா
தேன்போல் மணக்கிறது
கனியருந்த நான்வருவேன் -உன்ர
காக்காமார்
காவலுகா.
9. கண்டுக் கிளியாருக்குக்
கலியாணம் என்று சொல்லி
குண்டுமணி
தேடி- நான்
குந்தாத பத்தையில்லை.
10. என்னத்தைச்
சொன்னாலம்
ஏற்குதில்லை என் மனசு
சடலம் மறியவொரு
சத்தியந்தா
கண்மணியே.
11. நடையழகி நளினச்
சித்திர வாயழகி
இடையழகி
கதிஜா-ஒரு
இன்பமுத்தந் தாகிளியே.
12. வாழைப் பழமேஎன்ர
வலதுகையிற்
சர்க்கரையே.
ஏலக் கிராம்பேஉன்னை
என்னசொல்லி கூப்பிடட்டும்.
13. மாமி
மகளேஎன்ர
மருதங்கிளி வங்கிசமே
ஏலங் கிராம்போ உன்னை
என்னசொல்லி
கூப்பிடட்டும்.
14. வாய்பழமே என்ர
வலதுகையிற் சர்கரையே
உள்ளங்கைத்
தேனே- நான்
உருகிறண்டி உன்னாலே.
15. ஒண்;டுக்கு மில்லகிளி
உன்னைநான்
விரும்புறது
சங்குச் சட்டைக்கும்- உன்ர
சரிஞ்சநல்ல தேமலுக்கும்.
16.
பொடுபொடென்ற மழைத்து}ற்றல்
பூங்கார மானநிலா
சுடமிருட்டு மாலைவெள்ளி-
நீ
கதவுதிற கண்மணியே.
17. வங்காளம் போறனென்று
மனக்கவலை
வையாதே
சிங்காரக் கொண்டைக்கு-இரண்டு
சின்னச்சீப்பு வாங்கிவாறன்.
18.
கொச்சிப் பழத்தைக்
குறுக்கால வெட்டினாற்போல்
பச்சவடச்சேலை-
உன்ர
பால்முலைக்கு எற்றதுதான்.
19. சாயக்கொண்டை
கட்டுறதும்
சளிக்கஎண்னை பூசுறதும்
ஏவிஏவி நடக்கிறதும் -எந்த
இளந்தாரிக்கு
வாழவென்றோ.
20. ஓமணாப் பொண்டுகளே
உசந்தகொண்டைக் காறிகளே
மன்னாரான்
வாறானென்று
வழிமறிச்சி நில்லாதீங்க.
21. கண்டி கொழும்புமில்லை
கண்காணா
இடமுமில்லை
கீழக் கரையுமில்லை- உங்க
கிளி இருந்து போகிறது.
22. ஆசைக்
கிளியேஎன்ர
ஆசிபத்து உம்மாவே
ஓசைக் குரலாலே- உங்க
உம்மாவைக்
கூப்பிடுகா.
23. கடலே இரையாதே
காற்றே நீ வீசாதே
நிலவே எறியாதே-
என்ர
நீலவண்டு போய்ச்சேருமட்டும்.
24. மானமென்னுங் கண்ணாடி
மங்கிறல்ல
ஒரு போதும்
பூவிருக்கும் அல்லசெல்கு
பூச்சி எங்கிருந்தும்
தங்கவரும்.
25. தாலிக் கொடியே- என்ர
தாய்மாமன் ஈண்டகண்டே
மாமிக்
கொருமகளே- மச்சி
மறுதலை பண்ணுதகா.
26. குஞ்சி முகமும் -
உன்ர
கூர்விழுந்த மூக்கழகும்
நெற்றி இளம்பிறையும்- என்ர
நித்திரையில்
தோணுதுகா
27. வட்டமுகமும் உன்ர
வடிவிலுயர் மூக்கழகும்
கட்டு
உடலும்என்னைக்
கனவிலும் வாட்டுதுகா.
28. இஞ்சிகல்லப் போனஎன்ர
இளமையிலே
தாரவே
கண்கள் சிவந்து- நீ
கடுங் கோபம மானதென்ன.
29. இஞ்சி
மணங்காபுள்ள
இலாமிச்ச வேர்மணங்கா
மஞ்சள் மணங்காபுள்ள- உன்
மார்மூலையின்
சோடிரண்டும்.
30. திண்ணைக்குள் படுக்கவொண்ணு
தௌ;ளுக்கடி
பொறுக்கவொண்ணு
கதவுதிற கண்மணியே
கலசமறிக் கதைச்சிருப்போம்..
31.
மூணுநாள் மட்டிலேயும்
மூலையிலே வந்துநின்று
மண்ணுல் எறிஞ்சேன்-
உன்ர
மனசறிய வேண்டுமென்று.
32. காமக் கடலிலே
கைத்தோணி
உண்டுமென்றால்
சாமத்திற்கு சாமாம்
சாலமுறைப்பேன் காலடியில்.
33.
பாலென்றால் குடித்திடுவேன்
பழமென்றால் தின்றிடுவேன்
நு}லென்றால்
நெய்திடுவேன்- உன்னை
நோய்யவிளை யாடுவேனா.
34. என்ர கிளிக்கு
என்னோட
இரக்கம்மென்றால்
படுக்கும் தலமறிந்து- ஒரு
பாய்போட்டு வையாதோ.
35.
என்ர கிளிக்கு
என்னோடிரக்க மெண்டால்
இளனி வெட்டி மூள்திறந்து
இடைவழிக்குக்
கொண்டருமாம்.
36. மாமிமகள் மச்சிஎன்றால்
மனசறிஞ்சு
பாய்தருவாள்
மாவுலாப் பொடிச்சி என்ர
மனமறியப் போறதில்லை.
37. மனசை
மனசறியும்
வஞ்சகத்தை நெஞ்சறியும்
நெஞ்சிலுள்ள பூங்காரத்தை
யார்ரரியப்
போறார்களோ.
38. வட்டாப் படிக்கம்
வளைந்திருந்து
என்னசெய்ய-என்ர
செம்பகிளி வாயாலே
சிரிச்சிருந்தாப் போதாதோ.
39. தங்கத்
தகடே- என்ர
தகதகத்த பொன் தகடே
வெள்ளித் தகடே- உன்னை
விலைமதிக்கக்
கூடுதில்லை.
40. வஞ்சிக் கிளியே- உன்ர
வயிற்றிலையும்
ஒன்றுமில்லை
ஈரலிலே பாதி - நான்
ஈந்துதாறன் உண்ணுறியோ.
41. வாழையிலே
குழையிருக்க
வாழ்மையிலாள் சிறையிருக்கச்
சேனையிலே நானிருக்க-
உங்களுக்குச்
சென்பெடுக்க சம்மதமே.
42. மூணுநாள் மட்டிலேயும்
மூலையிலே
ஓடுவெச்சி
சோளன் வறுத்து- என்ர
தோகை பசியாறினம்கா.
43. கொட்டை
வறுத்துக்
கொண்டு வந்தேன் தட்டிலே
கொட்டுண்டு போச்சுதென்று
கூக்குரலும்
சத்தமுமாம்.
44. முந்திரியம் பழமும்
மூணுவகை முட்டாசியும்
கல்கண்டும்
தாறன்- நீ
கதவுதிற கண்மணியே.
45. கோடி உடுத்துக்
குளத்தோறம்
போறபெண்ணே- உன்ர
கோடிப்புடவையிலே
கொக்கு ரத்தம் பட்டதென்ன.
46.
முத்தலா முத்துரள
முகத்தாலே வேர்வை சிந்த
தங்ரெட்ண
மார்குலங்கத்
தனித்துலக்கை ஏனெறிங்சாய்.
47. இடுப்புச்
சிறுத்தபொட்ட
இருதடையும் நொந்தபொட்ட
கொக்கிச்சான பொட்ட-உனக்கு
கோபம்மென்ன
என்னோட..
48. கல்லோடு கல்லனையக்
கடலோடு திடலனைய
உன்னோடு நானணைய-
எனக்
குற்றவரம் தாமதினி.
49. அன்னப் பசுங்கிளியே-நீ
ஆக்கிவைத்த
சோறுகறி
சூத்திரத்து நூல்போல
சுத்துதடி நாவினிலே.
50. கோமெதகமே புள்ள-
என்ர
குளிர்ந்த வயிடூரியமே
முலகதமே நீலவண்டே
முரவச்சிரமோ
உன்கண்புருவம்.
51. தங்கச் சிலையே- மச்சி
தாமரை முகநிலவே
செங்கல்
வடிவே- நாங்க
சேருவது எப்பகிளி.
52. கைவிடுவேன்
என்றுஎண்ணிக்
கவலைப்படாதே கண்ணார்
அல்லா மேல்ஆனை- உன்னை
அடையாட்டி
காட்டுப்பள்ளி.
53. வீடிஞ்சி பொலியுமட்டும்
விறாந்தையிலே
காத்திருந்தேன்
புடையன் கடிச்சதுபோல்- என்ர
புடவையெல்லாம் ஆழததுக.
54.
சீனத்துச் செப்பே- என்ர
சங்காரப் பூநிலவே
வனத்தைப்பார்த்து- மச்சி
வாடுவது
என்னத்திற்கோ.
55. ஓதிப் படிச்சி
ஊர்புகழ வாழ்ந்தலும்
ஏழைக்கு
செய்ததீங்கை- அல்லா
ஏள்ளவும் ஏற்கமாட்டான்.
56. வட்ட
மதிமுகமும்
வடிவில் உயர்மூக்கும்
நெட்டை யழகும்- என்ர
நித்திலையில்
தோணுதுகா.
57. காத்தான் குடியிருந்து- ஒரு
கன்னிநாகு
வந்திருக்கு
காசைத்தா வாப்பா- நம்மட
கைமுதலாய் வாங்கிடுவோம்.
58.
புலலைப் புடுங்கிவைச்சேன்
புறவளைத் து}த்துவெச்சேன்
அன்னப்
பசுங்கிளியின்
அடியழகைப் பார்ப்பதற்கு.
59. வஞ்சி கொடியே
மனதுமெத்த
உன்னோட
பொழுதுதங்கி விளையாட-உங்கட
புருசன் எங்க போனதுகா.
60.
கண்டுவம்மிப் பூநிறத்தாள்
கவரிபுள்ளி மான்குயிலாள்
அரும்புகசு
பூமுலையாள்
ஆசைனையில் நித்திரையோ.
61. அட்டாலைக் காலி
அடுத்துக்கடுத்த
முக்காலி
பாக்குவெட்டிக்காலி- உன்னைப்
பார்க்கவர நேரமில்லை.
62.
மான்போல் நடைநடந்து
மயில்போல் சிறகொதுக்கித்
தேன்போல் குடிகிளம்பி-
என்ர
சின்னவண்டு போறதெங்கே.
63. அரிஞ்சரிஞ்சி நிலவெறிக்க
அவளிருந்து
பாயிழைக்க
துண்டுடுத்துத் துடைதெரிய
துடரமனம் தூண்டுதல்லா.
64. பூசின
செம்பே- என்ர
புழதிபடா வெண்கலமே
ஆசைக்கிளி விளக்கே- உன்னை
ஆருவெச்சி
ஆளவரோ?
65. காப்பெங்க கண்டார்- உன்ர
காதிலிடும் தோடுமெங்கே
மலைபதைக்க
மெங்கே- கண்டார்
மான்விரட்டிப் பார்வைஎங்கே?
66. ஆசான் குழலை
ஆழகாச்
சமைத்ததுபோல்
வாசினைக்கு உன்குரலை
வளர்த்தாரடி என்மதனி.
67. ஒண்டாய்
இருந்தோம்
ஒருகல்லையிலே சோறுதின்றோம்
ஆகாத காலம்வந்து-இப்ப
ஆளுக்கொரு
திக்கிலையாம்.
68. கண்டுக் கிளியே -என்ர
கதைபழகா நங்கணமே
கும்ப குலமே-
உன்ர
குரல்மதிக்கக் கூடுதில்லை.
69. என்ர கிளியும்
இன்னும்சில
பெண்டுகளும்
பாலாபழுத்த தெண்டு
பழமருந்தப் போகினமாம்.
70. கல்லால
ஊடுகட்டி
காசால ஓடுபோட்டு
அறைக்குள் ளிருந்தாலும்
அணில்போல
நான்வருவேன்.
71. கல்லால வேலிகட்டி
கதவுநிலை போட்டாலும்
பொல்லாத
நாகம்
போரறிஞ்சி முட்டையிடும்.
72. கடலை வளைத்துஒரு
கறுத்தவில்லுப்
போட்டதுபோல்-உன்ர
மார வளைச்சி-ஒரு
மஞ்சள்வில்லுப் போட்டதென்ன?
73.
மண்ணைக் குமிச்சிவெச்சி
மாங்கொட்டை நாட்டிவெச்சி
தேங்காய் உருவேற்றி-
உன்னைத்
தேடிவர வெச்சிடுவேன்.
74. பூட்டுப் பெலமோ
புர~னிடம்
தத்துவமோ
தாப்பாழ் பெலமோ- என்னைத்
தள்ளிவிட்டுக்கதவடைக்க.
75. போட்டு
மயிலே- என்ர
போலிசையிட நங்கணமோ
காட்டுவழி நடக்க- உங்க
காக்காமார்
காவலாமோ.
76. கோடாலி கொண்டு
கொள்ளிக்கு போறபெண்ணே
ஓடாவி
வேலை
உனக்கும் தெரியுமாகா.
77. கட்டை விரலழகி- என்ர
கமுகம்பூ
மார்அழகி
ஈச்சம் குரத்தழகி- நீ
இருந்துபொனால் என்னவரும்.
78. ஈச்சம்
குரத்துப்போல்
இனித்துவந்த பெண்மயிலார்
எலும்புருக்கிச் சதைகரைக்க-
நீ
என்னநோய் கொண்டாய்கா.
79. மாரெல்லாம் தேமல்
மடியெல்லாம்
துள்ளுமஞ்சள்
ராவெல்லாம் து}க்கமில்லை- என்ர
ராசதுரை பெண்மயிலால்.
80.
ஆறாயம் வெள்ளி
அசறாலே சாயுமட்டும்
காத்திருந்தேன் பெண்ணே- உன்ர
கதவுநிலை
சாட்சிசொல்லும்.
81. பச்சை மரகதமே
பலகாரம் மென்றாலும்
கல்பு
பொருத்தாமல்- நான்
கைநீட்டி வங்குவேனோ.
82. அன்புக்
களஞ்சியமே
அழகொழுகும் சித்திரமே
கற்புக் கணிகலமே - உன்னைச்
சந்திக்க
ஓடிவந்தேன்.
83. அன்புக் கழிவுமுண்டோ
ஆசைக்கோர் எல்லையுண்டோ
பருவம்
முதிர்ந்தாலும்
பற்றுத்தான் தீர்ந்திடுமோ.
84. தேகம்அன்பை
அறியாது
தெவிட்டுவதும் இல்லையது
உள்ள மறியுமதை
ஒதுக்கிவிட
முடியாது.
85. அன்று முளைத்துநாளை
அழிந்துவிடும் பூண்டோதான்
என்றும்
நிலைத்திருக்கும் -நல்ல
இன்பம்உண்மை அன்பாகும்.
86. ஆலையடி
வரவை
அதற்குகடுத்த நீள்வரவை
கதிர்விளைந்து நெல்விளைவு
காவலுக்குப்
போய்வாறேன்.
87. கொச்சிப் பழம்போலக்
கோழித்தலைப் பூப்போலே
பச்சைவடச்
சேலை- மச்சிஉன்
பால்முலைக்கு ஏற்றதுதான்.
88. குறுக்கால் பிளந்த
கோவம்
பழ மொன்றை
நறுக்கென்று கடித்துஉண்ண
நான்கனவு கண்டேனே.
89. மச்சி
மனதுமெச்ச
மதிப்பான பால்சோமன்
கச்சிக்கு வாங்கிவறன்
கவலைஎன்ன
வேறுனக்கு.
90. மாடப்புறாவே- என்ர
மலைநாட்டு நங்கணமே
மாமிக்கொரு மகளே-
என்னை
மறந்துவிட எண்ணாதே.
91. ஆளரவங் கண்டு
ஆக்காண்டி
கத்துதையோ
ஆராலுங்கண்டு கொண்டால்- என்
அன்புகிளி என்னசெய்யும்.
92.
நடவாக் கிடாமாடும்
நானும்இந்தப் பாடுபட்டால்
காயாப் புழங்கலும்-
என்
கண்மணியும் என்னபாடோ.
93. காவற் பரணிற்
கண்ணுறங்கும்
வேளையிலே
கண்ணான மச்சிவந்தென்
காலுன்றக் கண்டேனே.
94. முல்லைச்
சிரிப்பழகும்
முகத்தழகும் கண்ணழகும்
வல்லி இடையழகும்- என்
மனத்தைவிட்டுச்
செல்வதெங்கே.
95. ஆசைக்கிளி வளர்த்து
அக்கரையில்
கொண்டுவைத்துப்
பேசிப் பழகமுதல்- அதை
பிரிந்துவிட்டு வந்தேனே.
96.
உனக்கும் கூவவில்லை- உன்ர
கள்ளனுக்கும் கூவவில்லை
குமருப்
பெண்களுக்குக்
குடமெடுக்கக் கூவுறண்டி.
97. காசி
தரட்டோமச்சி
கதைத்திருக்க நான்வரட்டோ
தூதுவரக் காட்டிடட்டோ-
இப்போ
சொல்கிளியேஉன் சம்மதத்தை.
98. போட்டா வலம்பாலே
புறமேய்ந்து
போவதுபோல்
நாட்டவருக் கெல்லாம்- மச்சி
நடைவரம்போ உன்வாசல்.
99.
வண்ணான்ர கல்லோ
வடக்கத்திக் களைமாடோ
சாராயக் குத்தகையோ- மச்சி
தவறணையோ
உன்வீடு.
100. வானத்து வெள்ளியோ
மலைநாட்டுச் சாம்பிறாணியோ
சீனத்துக்
கண்ணாடியோ- என்
சீமாட்டி உன்னழகு.
101. மண்ணால்எறியவில்லை
மச்சிஎன்னை
மாறாக எண்ணாதே
மருதாணி தானுமச்சி- உன்
மலர்மேனி
தாங்காதே.
102. விடியா விடியளவும்
விடிஞ்சந்த நேரமட்டும்
காத்திருந்து
போனேனென்று- அந்தக்
கதவுநிலை சாட்சிசொல்லும.;
103. வெள்ளைப்
பொடிச்சி
வெள்ளிநகை பூண்டபுள்ள
கொள்ளிக்குப் போனாயென்டா-
உன்னைக்
கொடுங்கையில் தூக்குடுவேன்.
104. அக்கரைப் பற்றிலையோ
அங்குகரை
வாகிலையோ
சம்மாந் துறையிலையோ- என்ர
தங்கவண்டாhர் தங்கிறது.
105.
காலிவிளை பாக்கிற்கும்
களுதாவலை வெற்றிலைக்கும்
ஏலங்
கராம்பிற்கும்
ஏற்றதுதான் உன்னெழில்வாய்.
106. நாவற்
பழத்திலேயும்
நாற்காயம் பூவிலேயும்
காகச்சிறகிலேயும்- பெண்ணார்
நீ
கடுங்கறுப்பாய் ஆனதென்ன
107. கொண்டை அழகும்
கூர்விழுந்த
மூக்கழகும்
நெற்றி அழகும் பெண்ணார்- என்
நெஞ்சைவிட்டு மாறிடுமோ.
108.
ஆறு கடந்து
அயலு}ருக்கு போகவேண்டாம்
அடுத்தவீட்டில் நீயிருக்க
அனியாயம்
செய்துவிட்டார்.
109. ஆழிக் கடலினிலே
அலைக்குஅலை மீனெடுத்து
தீத்தி
வளர்த்தேன்மச்சி- என்ர
சீவனுக்குக் கூடாதென்று.
110. நாகம்
படம்மெடுக்க
நல்லமுத்தாள் வாய்பிளக்க
அன்னம் சிறகெடுக்க- நான்
அஞ்சுவேனோ
பூத்தொடுக்க.
111. கண்டுக்கிளி யாரைக்
கண்டுகதை பேசாமல்
உண்ணுகிற
சோறும்
உறங்கில்லை இப்பொழுது.
112. பாலைப்பழமே என்ர
பகலெறிக்கும்
செண்பகமே
கண்டுவம்பிப் பழமே- உன்னைக்
கண்டுகன காலமச்சே.
113.
பாலைப்பழமே என்ர
பகலெறிக்கும் செண்பகமே
நீலக்கடலே உன்ர
நினைவென்றும்
மாறாதே.
114. கட்டிக் கறந்த நாகு
கணுவடிக்கு வந்த நாகு
தட்டிச்
செறிந்த நாகு
இப்போ தலைகிளப்பி பார்க்குதில்லை.
115. வழைப்பழ
மெடுகா
வம்பரையில் தேனெடுகா
சாவால் வடிவெடுகா- உன்ர
தாயாருட்டப்
போறதற்கு.
116. பட்டியிலே நிற்குமந்த
பார்வைக்கு
ஏற்றநாகைக்
கட்டிஎனக்குத் தந்தால்
கையேடுத்துக் கும்பிடுவேன்.
117.
குளத்தைக் குறுக்கக்கட்டிக்
கொத்தமல்லி நான்விதைக்க
குளத்துதண்ணிர் வற்றவற்ற-
உங்கட
கொத்தமல்லி வாடுதுகா.
118. ஆத்தைக் குறுக்ககட்டி
அழகுசம்பா
நான்விதைக்க
ஆத்துத்தண்ணி வற்றவற்ற- என்ர
அழகுசம்பா வாடுதகா.
119.
ஒண்டுமில்லைகா இங்கு
உன்னுடைய மளிகைக்கு
கலிமாப்படித் துரைக்கக்
கருக்காக
வந்தேன்கா.
120. பொடியன் பொடியனென்று
புறகுதலை பேசாதே
சித்தலியன்
குட்டிஇது
சீக்கிரமாய் கைஎறியும்.
121. கத்தி எடுத்துக்
கதிர்அரியும்
வேளையிலே
கள்ளஎண்ணம் வந்து-என்ர
கையறுத்துப் போட்டுதடி.
122. பற்றை
இடறிப்
பசுமாட்டிற் கொண்;ழுந்து
இருட்டில் வழிநடந்தேன்- என்ர
இளவயதுப்
புத்தியாலே.
123. அஞ்சிலே பிங்சிலே
அறியாத நளையிலே
தொட்டிலாட்டி
நான்வளர்த்த- என்ர
தோகைமயில் எங்கமாமி.
124. ஓடிஓடிக்
காசுழைப்பேன்
ஓலைமட்டை நான் இழைப்பேன்
சேனைவெட்டிச்
சோறுகொடுப்பேன்
செல்லவண்டைத் தாமாமி.
125. அரிகடலே திரவியமே
ஆணிமுத்தே
அருந்தவமே
குரலின் சிரக்கொழுந்தே- என்
குரல்மதிக்க கூடாதோ.
126.
குடிக்கு தலையாரி
கொம்பான்யானை இரண்டு
கடலுக்குப் போனாலல்லோ
கலக்கமது
வந்துவிடும்.
127. கடலில் மடவழகி
கஸ்தூரி பொட்டழகி
வாழைமடலழகி-
உந்தன்
வாழ்வுகலி யாணமெப்போ.
128. கூண்டுக் கிளியாளே
கோலம்செய்
மச்சாளே
ஆசைக் கிளியே
அடுத்தநிலவில் நம்கல்யாணம.;
129. காட்டுக்
கிளியே- என்
கதைபழகும் நங்கணமே
கூண்டுக் கிளியே- நீ
சொல்மதனி
சம்மதத்தை.
130. காட்டுக் கிளிஎன்றால்
காட்டிலே தங்கும்
கூண்டுக்
கிளியே- நீ
கொப்பிலேன் தங்குவது.
131. கண்டுக் கிளியைக்
கண்டுவெகுநா
ளனதினால்
உண்ணுகிற சோறு- என்
உடலில் ஒட்டுதில்லை.
132. சோலைக்
கிளியாளே
சுந்தரம்சேர் மச்சாளே
ஆசைக்கிளியே- நான்
வந்துவிட்டேன்
உன்னருகே.
133. பூவையரே மச்சி
போரிச்சரிசி நிறத்தாளே-
உனது
சிரிச்சமுகம் காணாமல்
தியங்கித் தவித்தேனே.
134. சந்து
சவ்வாதோ
சரியான பன்னீரோ
குங்குமப் பூவே- உன்
கூந்தலிலே
வீசுவது.
135. கொஞ்சினால் இஞ்சிமணம்
கோவைசெய்தால் பால்மணம்
அள்ளி
அணைத்தாலும்- உன்னை
ஆசைதீருதில்லை மயிலே.
136. பழிகள்
வந்தாலும்
பத்தெட் டிறுத்தாலும்
காப்பேனே நானும்
கவலைவிடு
கண்மணியே.
137. அன்ன நடைதானோ இது
அவள் நடைதானோ
என்ன
நடையென்று
எடுத்தியம்பக் கூடுதில்லை.
138. சட்டைக்குமேல்
சட்டைநான்
தைச்சு வரக்காட்டுவேன்
சாயங்கள் போனாமச்சி
சண்டைவரும்
தப்பாமல்.
139. ஓடிவருவேன் கண்ணே
ஒழுங்கையிலே தங்கிநிற்பேன்
உன்னை
நினைப்பேன்- பெண்ணே
உங்கவீட்டவர நாட்டமில்லை.
140. சீவன்
கிடந்துஇந்தச்
சீமையிலே நான்கிடந்தால்
என்காயம் கிடக்குமென்றால்-
உன்னைக்
கண்ணிகுத்தி நான்பிடிப்பேன்.
141. தோட்டுப்பாய்
கொண்டுசெல்லும்
தோகை மயிலாலியிடம்
கேட்டுப் பாரண்ணநம்ம
கிறுகிறுப்பைத்
தீர்த்துவைக்கும்.
142. ஒக்கட்டான் பூவே
உசக்கருக்கும்
தாழம்பூவே
கண்டுவம்மிப் பூவே
உன்னைக் கண்டுவெகுநாளாச்சு.
143.
பென்னைக் குவித்துப்
புதமரைக்கா லாலளந்து
மனமுருகித் தந்தாலும்-
உன்ர
மாளிகைக்கு வாறதில்லை.
144. வேப்ப மரத்தில்
வேற்றிலையாற்
கூடுகட்டித்
தங்க வருவேன்- உன்ர
தம்பிமாரும் காவலாமோ.
145.
துவரம்பழமே- என்ர
தோட்டிகையிற் தேன்வதையே
இச்சைவைத்த கைப்பொருளே-
நீ
இல்லையென்றால் என்ன செய்வேன்.
146. ஏறப் பழுத்த
இரு சிவப்பு
மாம்பழத்தை
என்ன வந்தாலும்
எடுத்தருந்து என்கிளியே.
147. மருதவட்டான்
குளத்தருகே
மாடுமேய்க்கும் தம்பிமாரே
மலைப் பசுநாகு
மறியலுக்கு
வந்ததாமோ.
148. கட்டை விரலழகி
கமுகம்பூ மார்பழகி
வம்மிப்பூ மார்பழகி-
உன்னை
மணம்முடிக்கக் காத்திருந்தேன்.
149. இலந்தம் பழமே-
எந்தன்
இன்பமுள்ள தேன்வதையே
மருதங் கிளியே- மலை
நங்கணமே
எங்கபோக.
150. வனத்தைப் பார்த்தேன்
வளர்த்தேன் பலாமரத்தை- என்ர
சீனிப்
பலாவே- உன்னைத்
தின்னாமல் போகமாட்டேன்.
151. உன்னை மணந்து
உயர்ந்த
கட்டில்மேல்வைத்து
கன்னந் திருப்பிக்
கதைக்க வெகுநாட்களில்லை.
152.
ஓலையை வெட்டி
ஒழுங்கையிலே போட்டதுபோல்
வாடுகிறேன் கண்ணே- உன்ர
வண்ணமுகம்
காணாமல்.
153. அக்கரையிற் கொக்கே
அள்ளவொண்ணுத் தாராவே
வெட்டையிற்
கிளியே
விளையாட நல்லபிள்ளை.
(ஆ) காதலி கூற்றாய் உள்ளவை
1. ஓடையிலே
போறதண்ணி
தும்பிவிழும் தூசிவிழும்
வீட்டுக்கு வாங்கமச்சான்
குளாந்தண்ணி
நான்தாறேன்.
2. வாய்க்காலில் தண்ணி
வண்டுவிழும்
தும்பிவிழும்
வீட்டுக்கு வாங்கமச்சான்
வெந்ததண்ணி நான்தாறேன்.
3.
ஆதங்காக்கா ஆதங்காக்கா
அவரக்கண்டாற் சொல்லிவிடுங்க
பூவரசங்
கன்னியொன்று
பூமலர்ந்து வாடுதென்று.
4. ஓடிஓடி
வருவார்மச்சான்
ஒழுங்கையிலே வந்துநிற்பார்
என்னை நினைப்பார்மச்சான்-
எங்க
வீட்டவர நாட்டமில்லை.
5. வெற்றிலையை கைபிடித்து
வெறும்
புளகைவாயிலிட்டு
சுண்ணாம்பு தேடிநீங்க
சுற்றி வாங்கமச்சான்
6. காவல்
அரணோமச்சான்
கள்ளனுக்கு முள்ளரணோ
வேலியரணோ மச்சான்
வேணுமென்ற
கள்ளனுக்கு
7. கத்தாதே காகம்
கரையாதே புன்காகம்
எத்தாதே
காகம்நான்
எறிஞ்சிடுவேன் கல்லாலே.
8. காகம் இருந்துநீ
கால்கடுக்க
ஏனழுதாய்
மன்னன் சோதியைநீ
மனங்குளிரச் சொல்லாமல்.
9. என்னை என்னைப்
பார்த்துநீங்க
ஏகாந்தம் பேசாதீங்க
சின்ன எசமான்கண்டால்- என்ர
சீட்டைக்
கிளிச்சுவிடுவார்.
10. மச்சானே மாம்பழமே
மாமிபெத்த
பாலகனே
ஏலங்கிரம்பே-உன்னை
என்ன சொல்லிக்கூப்பிடட்டும்.
11. பூத்து
மலர்ந்து
பூவாசங் கொண்டிருக்கேன்
பூத்தமரம் காய்க்கும்மென்றால்
பூவலொன்றே
கைதருகும்.
12. ஓதக்குர் ஆனிருக்க
ஒழு வெடுக்கச் செம்பிருக்க
வேதமும்
இங்கிருக்க
வேறு ஹறாம் தின்னலாமோ.
13. சீப்பெடுத்துச்
சிக்கொதுக்கிச்
சிமிள்ப்போல கொண்டைகட்டி
வார்ந்து
முடிந்தகொண்டை
மகிழம்பூக் கொண்டையது
மார்பில் விழுகுது
மடியில்
விழுகுது
புளுதி புரளுது
புருசன் முகம்காணாமல்.
14. ஆடு
துடையிலே
அன்பான மேனியிலே
கட்டு வருத்தமொன்று-என்ர
கண்மணிக்குச்
சொல்லிடுங்க.
15. கடலே இரையாதே
கற்கிணறே பொங்காதே
நிலயே எறியாதே-
என்ர
நீலவண்டார் வருமளவும்.
16. தங்கமுலைக் கோட்டையில-
மச்சான்
தானருந்தத் தந்தனென்றால்
மானம்மென்னும் கண்ணாடி
மங்கிடதோ
நானறியேன.;
17. பூவிருக்கும் அல்லசல்கு
பூச்சி எங்கிருந்தும்
தங்கவந்தால்
பூவிலேயும் பிஞ்சி- மச்சான்
புடிச்சிடாதோ நானறியேன்.
18.
வாவென்று றழைப்பேன் மச்சான்
வாசலிலே பாய்தருவேன்
வாப்பா அறிஞ்சா
ரேண்டால்
வாளெடுத்து விசிவிடுவார்.
19. நித்;திலை
கண்ணிலேயும்
நினைவிலேயும் தோணுறது
“கலிமா” விரலும் மச்சான்
கல்பதித்த
மோதிரமும்.
20. அம்மி யடியிலே
அருகுவளைத் தொங்கலிலே
திறப்புச்
சொருகிருக்கும்
திறந்துவந்தாற் சம்மதந்தான்.
21. கோடியால
வந்துநின்று
கோக்கட்டாம் பண்ணாதீங்க
ஊடு நிறைஞ்சசனம்- எங்க
உம்மாவும்
திண்ணையிலே.
22. சாம மறிஞ்சி
தலைவாசலிலே வந்துநின்று
கோழிபோல்
கூவுராசா- உன்ர
குரல்மதித்துக் கூப்பிடுவேன்.
23. பாலோடா
நானுனக்கு
பழமோடா நானுனக்கு
நூலோடா மச்சான்- என்னை
நோய்ய
விளையாடுறது.
24. வாவென் றழைப்பேன் பாலா
வட்டாவைக்
கிட்டவைப்பேன்
தாகம் தணிப்பேன்- பாலா
தம்பியல்லோ ஒருமுறைக்கு.
25.
வந்தாரெண்டா ஓரழகு
வாசலெல்லாம் தங்கநிறம்
போட்டுட்டுப்
போனாரெண்டால்
பூப்பூத்து ஓய்ந்ததுபோல்.
26. குத்து விளக்கெரிய
குமாரன்
குர் ஆன் ஒத
பாலன் விளையாட- ஒரு
பாக்கியம் தா ஆண்டவனே.
27.
காற்றடிக்கத் தீப்பறக்க
கண்ணம் பூச்சோலையிலே
சாத்திவைச்சி
சதிசெய்ய
சண்டாளன் போறானுகா.
28. அள்ளினாள் தங்கம்
அணைத்தெடுத்தால்
அமிர்தகுணம்
கெஞ்சினால் இஞ்சிமணம்
கோவைசெய்தால் வேர்வைமணம்.
29.
தங்கமுடி ராசாடா
தடமழிஞ்சி போகுமெண்டு
ஓட்டால மூடிவைச்சேன்-
ராசா
உள்ளிரக்கம் வைப்பாரென்று..
30. குத்து விளக்காலே
குமிழ்நிறைய
எண்ணைஊற்றி
பத்தி எரிஞ்சாலும்- என்ர
பாட்டொழியப் போறதில்லை.
31.
பாட்டைப் படித்து
பழஞ்சாக்கில் கட்டிவைத்தேன்
எத்தனையோ
பாட்டையெல்லாம்
எலியறுத்து போட்டுதடா.
32. நடுக்கடலில்
புன்னைமரம்
நாலுதிக்கும் வேரோடி
பூத்து மலர்ந்தது போல்-
உங்கள்
புத்திமங்கிப்போனதென்ன.
33. நெற்றிக்கு நேரே
நிலாக்கிளம்பி
வாறதுபோல்
வேலிக்குமேலால- மச்சான்ர
வெள்ளைமுகம் காண்பதெப்போ.
34.
தென்னைமரமே உங்க
சிரசில் எழுதினதோ
மார்க்கமழிக்க
நாங்கள்
மட்டைதருவோமென்று.
35. கொக்குரெத்தம்
மில்லைமச்சான்
குரவிரெத்தம் மில்லைஇது
சிறுக்கனிருந்த- ஒரு
சில்லிரத்தம்
பட்டதுகா.
36. போட்டா வரம்பால
புறநடந்து
போறதுபோல்
நாட்டாருக்கெல்லாம்- ஒரு
நடைவரம்போ என்சாPரம்.
37. பாலால்
அரிசரிச்சிப்
பன்னீரால் உலைவாத்திருக்கு
நெய்யால் கறிசமைச்சி-
என்ர
நேசக்கிளி ரெண்டுசொறருந்து.
38. கோரகல்லு மாடுவந்து
கூரைவைக்கல்
மேயுதென்று
ஏசாதகா லாத்த- நம்மட
ஏருது வந்து போகுதுகா.
39. என்னதான்
நித்திரையோ
இளராசா வன்னிமைக்கு
கண்ணை முழித்து இந்தக்
கற்கண்டைத்
திண்டாலென்ன.
40. மச்சானே இன்பம்
மணக்கின்ற சீறாவே
உச்சால சாய-
வாப்பா
உறுகாமம் போகின்றார்.
41. கலங்காத மச்சான்
காசுபணம்
என்னசெய்யும்
குழலபோட்ட வாழைமரம்
கூடுமெண்டா சம்மதந்தான்.
42.
காட்டுப்பள்ளி அவுலியாட
காரணங்கள் உண்டுமானால்
மாடுகொல்லி இசுமானுக்கு-
ஒரு
மானபங்கம் உண்டாகணும்
43. சரிசாமம் ஆகுமட்டும்- உங்க
செருமுதலைக்
கேட்டிருந்தேன்
வந்துபேச வழியில்லாமல்- உம்மா
வழிப்பாட்டில்
படுத்திருந்தா.
44. சுட்டகட்டை போல நீ
சுடுகாட்டுப் பேய்போல
அட்டை
முகறா நீ
அடுப்படிக்கு மாகுமாடா.
45. எச்சிமுள்ளும்
சொத்தைகாரா
இருபுறமும் நாய்முகறா
மங்குறட்டிச் சூத்துக்காரா-
நீ
மாப்பிளைக்கு மாகுமாடா.
46. பள்ளத்து நிலவே என்ர
பிஞ்செழும்பும்
சூரியனே
கொவ்வம்பழமே ராசா
கொடிநிழலில் போய்வாகா.
47. போPச்சம்பழமே
என்ர
பேரியஇடத்துப் பொட்டகமே
சீறட்டுக்கும் செப்பே- உன்ர
சொல்லையுமோ
நம்பிஇருந்தேன்.
48. கிண்ணியிலே சந்தணமாம்
கிளிமூக்கு
வெற்றிலையாம்
தண்ணியிலே போறமச்சான்
தங்கமுகம் வாடினதென்ன.
49.
காத்தான் குடிப்புக்குக்
கரத்தை கொண்டு போறமச்சான்
சீத்தை இரண்டுமுழம்-
அந்தச்
சீமையிலே பஞ்சமோகா.
50. இந்தநேரம் வந்துராசா
எனக்கப்
பசிக்குதென்ற- உன்ர
பசியறிந்து சோறுதர
பண்ணிவச்ச பெண்மணியோ.
51.
கோட்டையிலே மூத்த என்ர
கொழும்பு மகராசாவே
வெள்ளிப் பிரம்பே-
ராசா
விடியுமோகா இன்றிரவு.
52. இரத்தக் கடலிலே
இரணவில்லுப்
போட்டதுபோல்
மரணவில்லுச் சிங்களவா- உன்ர
மகரிழந்தேன்
வார்த்தைசொல்லு.
53. சாமம் ஒருத்துச்
சரிசாமம் ஆனபின்பு
வாப்பா
படுத்தபின்னர்
வந்தழைத்தால் நான்வருவேன்.
54. மானகம்
வட்டைக்கு
மாடுதேடிப் போறமச்சான்
காரைமுள்ளுத் தைத்திடாமற்
கலந்தலப்பா
உன்காவல்.
55. வந்துவழி பண்ணிடுங்கோ
வம்புக்கிடம் வையாதிங்கோ-
இந்தப்
பூத்தமரம் காய்க்குமென்றால்
பூவலொன்றே கைதரும்.
56. வேலியிலே
வந்துநின்று
வேற்றுக் குரலெழுப்பி
விதியிலே போறமாட்டை
விரசிடுகா
நான்வருவேன்.
57. நன்றாகச் சொன்னீர்கள்
நான்பட்ட கயட்டமெல்லாம்
ஒன்றா
இரண்டா நான்
உங்களுக்குச் சொல்லிவிட.
58. கஞ்சா
உதிர்த்திக்
கறிசமைத்து உண்ணவைத்து
பஞ்சுத் தலையணைமேல்
படுக்கைவைத்து
நான்வந்தேன்.
59. ஆண்மைக் கரசே
அருளுக் கிருப்பிடமே
தருமத்திருவுருவே-
உன்னைச்
சந்திக்க ஓடிவந்தேன்.
60. மலை விளக்கெரிய
மணவாளன்
சோறுதின்னப்
பாலன் விளையாட- ஒரு
பாக்கியம்தா ஆண்டவனே.
61. இரவிலே
வீசும்
இளங்காற்றும் சந்திரனும்
அரவாத வாள்போல்- இப்போ
அறுக்குதே
என்மனசை.
62. வெள்ளி விடிவெள்ளி
வெள்ளாப்பில் மறையுமட்டும்
சொன்ன
கதைகளெல்லாம்
சொப்பனமாய் மறந்தாரோ.
63. வயிருந்தால் இந்த
வயதுவந்த
புளியமரம்
சொல்லாதோ எந்தன்
துரைசொன்ன உறுதிமொழி.
64. ஊரும்
அடங்கினபின்
ஒருசாம மாயினபின்
வாப்பா உறங்கினபின்
வந்தளைத்தால்
நான்வருவேன்.
65. கடப்பலில் வந்துநின்று
களை
கனைக்குமென்றால்
எங்கிருந்த போதும்நாகு
எழுந்துவர மாட்டாதோ.
66.
கதைப்பார் கதையெல்லாம்
கல்லுருகி நெல்விளையச்
சிரிப்பார் கொடுப்பால்-
உங்கள்
சொல்லையுமா நம்புறது.
67. சந்தனமரத்தை மச்சான்
சந்திக்க
வேண்டுமென்றால்
பூவலடிக்கு மச்சான்- இன்று
போழுதுபட வந்துபோங்க.
68.
வாண்டதெல்லாம் இந்த
வயிற்று கொடுமையினால்
இருமல் தலைவலியாம்-
கிழவனிடம்
என்னசுகம் எந்தனுக்கு.
69. கல்லாள் எறிஞ்சாள்
மச்சான்
காயம்வரும் என்றுசொல்லி
மண்ணால் எறிஞ்சி மச்சான்
மச்சிமுறைகொண்
டாமுகிறார்.
70. ஒரு போக வேளாண்மைக்கு
உயர்வனைப்
பார்ப்பதுபோல்
இருகண்ணும் சோர- எந்தன்
இராசாவைப்
பார்த்திருக்கேன்.
71. கோளாவில் மாடுவந்து
கூரையை இழுக்குதென்று
ஏசாத
காராத்தா- நம்மட
ஏருதுவந்து போகுதுகா.
72. பட்ச மிருக்கும்
பறக்கச்
சிறகிருக்கும்
எண்ணமிருக்கும் ராசா- நம்மட
எழுத்துவண்ணம்
எப்படியோ.
73. அறையறையாய் வேலிகட்டி
அதன்
நடுவேகிளிவளர்த்தேன்
பூனைபதுங்கிவந்து
போலியெடுத்துப் போட்டுதுகா.
74.
ஓடிவருவார் வந்து
ஒழுங்கையிலே தங்கிநிற்பார்
நாடிவருவார் உள்ளே
நாணம்
கொண்டார் கிட்டவர.
75. வெள்ளி வெலுட்டும்
விரல்நிறைய
மோதிரமும்
எங்கும் பொழுபொழுப்பு
எங்கமச்சான் வாறசெப்பம்.
76.
காற்றுக்கு காற்று
கமழும் மகிழமணம்
மூச்சிட்டுப் பார்த்தேன்-
அவர்
முண்டிலுள்ள பூமணந்தான்.
77. தம்பி கடையினிலே
தாடிபட்டி
மோட்டினிலே
வாறேனென்று சொன்னியண்டா
வந்து நிற்பேன் வாசலிலே.
78. உன்னை
மறப்பதுஎன்றால்
உயிரோட ஆகாது
மாண்டு மடிவதுதான்
மறப்பதற்கு
மாறுவழி.
79. கோழியடைத்து வைத்தேன்
கோழியரிசி
குத்திவைத்தேன்
தூழத்துலாத் தாழ்த்தி
தண்ணீர் நிறைத்துவைத்தேன்.
80.
தேங்காய் துருவிவைத்தேன்
தேவைக்கு அரைத்துவைத்தேன்
பாங்காய்ச்
சமைப்பதற்கு
பட்டகஸ்ரம் இவ்வளவோ.
81. ஆளுக்கொரு துணியாய்
அவர்வாங்கி
வந்திருக்கார்
நாளுக்கு உடுத்துனக்கு
நானழகு பார்ப்பனம்மா.
82.
மாதாளங் காயுமல்ல
மருக்காலம் காயுமல்ல
பாலன் குடிக்கும்- என்ர
பால்முலைடா
சண்டாளா.
83. மண்டூருக் கந்த- என்ர
மனக்கவலை
தீர்ப்பையெண்டால்
சாகுமளவு முன்னைச்
சாமிஎன்று கையெடுப்பேன்.
84.
கச்சான் அடிக்கக்
கயல்மீன் குதிபாய
மச்சானுக் கென்றே
வளர்த்தேன்
குரும்பமுலை.
85. வில்லுக் கரத்தையிலே
வெள்ளைமாடு
ரண்டுகட்டித்
தட்டிவிடுகா மச்சான்- நாங்கள்
சம்மாந்துறை
போய்வருவேம்.
86. கன்னிக் கிரான்குரவி
கடுமழைக்கு
ஆற்றாமல்
மின்னிமின்னிப் பூச்சாலே
விளக்கெடுக்கும் கார்காலம்.
87.
இந்த மழைக்கும்
இனிவாற கூதலுக்கும்
சொந்தப் புருசனென்றால்
சுணங்குவாரோ
முன்மாரியில்.
88. கண்ணன மச்சானுக்கு
காச்சல்விட்டுப்
போகுமெண்டால்
பொன்னாலே நூலிழுத்துப்
போய்வருவேன் சன்னிதிக்கு.
89.
ஒண்ணரைச்சாண் கட்டிலிலே
இரண்டரைச்சாண் மெத்தையிலே
தள்ளிப்படுமச்சான்
மற்றோர்
சள்ளுக்கிடம் வையாமல்.
90. எல்லாரிட கப்பலிலும்
எள்ளுவரும்
கொள்ளுவரும்
எங்கமச்சான் கப்பலிலே
ஏலங்கராம்பு வரும்.
91. சினட்டி
நெல்லரிசும்
சிவந