| நூல் |
மனிதரும் சமூக வாழ்வும் |
| ஆசிரியர் |
சி. கா. செந்திவேல் |
| மின்னூலாக்கம் |
இ. பத்மநாப ஐயர் |
| மின்பதிப்பு | நூலகம் திட்டம் (நூல் எண்: 96) |
மனிதரும் சமூக வாழ்வும்
(சமூக வரலாற்றுக்
குறிப்புகள்)
சி. கா. செந்திவேல்
தாயக இல்ல
வெளியீடு
---------------------------------------------------------------------
முதற்
பதிப்பு: புரட்டாதி 1994
மனிதரும் சமூக வாழ்வும்;
சி. கா.
செந்தில்வேல்
அச்சுப் பதிப்பு :
கபிலா பதிப்பகம்,
கே. கே. எஸ்.
வீதி,
யாழ்ப்பாணம்.
வெளியீடு :
~ தாயகம் |
பருத்தித்துறை
வீதி,
சிறுப்பிட்டி வடக்கு,
நீர்வேலி.
அட்டை அமைப்பு : த.
நாகேந்திரம்
விலை ருபா
40/=
---------------------------------------------------------------------
தாய்
தந்தை நினைவிற்கு
1959-ல் தனது இளமைக் காலத்தில்
எம்;மை விட்டு
மறைந்த
தாய் நாகம்மா,
1994-ல் தனது முதுமைக் காலத்தில்
மறைந்து
கொண்ட
தந்தை காசிப்பிள்ளை
ஆகியோரின் நினைவிற்கு
இந் நூல்
சமர்ப்பணம்
---------------------------------------------------------------------
பதிப்புரை
~~
மனிதரும் சமூக வாழ்வும்; || நூலினை எமது தாய் தந்தையர் நினைவாக அண்மையில் மறைந்த
தந்தையின் முதல் மாத நினைவஞ்சலியின் போது வெளியிடுவதையிட்டு மிகுந்த
மகிழ்ச்சியடைகின்;றோம். இந்நூலினை எழுதியுள்ள சி. கா. செந்திவேல் எமது மூத்த
சகோதரர். அவர் தமது இளமைக் காலம் தொட்டு அரசியல் பொது வாழ்வில் ஈடுபட்டு
சமூதாயத்தின் பல்வேறு நிலைகளிலும் ஒடுக்கப்பட்டுவரும் மக்களின் விமோசனத்திற்காக
அயராது உழைத்து வருபவர். அவரது சமூக விடுதலை நோக்கிய பொது உழைப்பிற்கு நாம்
எப்பொழுதும் எங்களாலான ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளோம். அந்த வகையில் இன்றைய
சந்தர்ப்பத்தில் இத்தகைய ஒரு நூலினை வெளியிட்டு வைக்கும்படி அவர் விடுத்த
வேண்டுகோளை ஏற்று அதனை வெளியிடுகிறோம். இதுபோன்ற சமுதாய சார்பும் அறிவுப்
பெருக்கமும் கொண்ட மேலும் பல நூல்கள் வெளிவர வேண்டும். அத்தகைய முயற்சிகளுக்கு
தாயகம் இல்லத்தின் சார்பான எம்மால் முடிந்தளவு பங்களிப்பை வழங்குவோம். இந்நூல்
தக்கபடி பயன்பெறும் என நம்புகின்றோம்.
நன்றி
பிரான்ஸ்
30-09-94
கா.
சி.
கதிர்காமு
---------------------------------------------------------------------
பொருடளக்கம்
பக்கம்
நூல் பற்றி
மனிதரும் சமூக வாழ்வும்; 1
உலகின் தோற்றம்
4
உயிரின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் 7
மனிதர்கள் உருவாகினர் 12
சமூக
விஞ்ஞானக் கண்ணோட்டம் 16
ஆரம்பகால மனிதர்கள் 23
புராதன பொதுவுடமை அமைப்பு
32
அடிமை சமூக அமைப்பு 38
நிலப்பிரபுத்துவ அமைப்பு 44
முதலாளித்துவ சமூக
அமைப்பு 52
சோஷலிசமும் பொதுவுடமை அமைப்பும் 64
மனிதரும் மதங்களும்
73
---------------------------------------------------------------------
நூல்பற்றி
~~
உண்மையைத் தீர்மானிக்கும் ஒரே அளவு கோல் அது நிரூபிக்கப்படுவதாய் இருக்க வேண்டும்
என்பது தான். அதாவது உண்மை என்பது அறிவுக்குப் புறம்பானதாய் இருக்கக் கூடாது ||
இவ்வாறு உண்மையைக் கண்டறிய முற்படும் போது அவை ஆதாரங்களில் இருந்து பெறப்படல்
வேண்டும் என்பது மீற முடியாத நிபந்தனையைப் பெறுகின்றது. இதற்கு விஞ்ஞான
அடிப்படையும், வரலாற்றுக் கண்ணோட்டமும் அவசியமாகும்.
மனிதகுல நாகரிகத்தின்
வளர்ச்சிப் பரிமாணங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் பல்வேறு துறைகள் இன்று மேற் கூறிய
வகையிலேயே விரிவடைந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஆனால் இவற்றின் தாக்கம்
நமது சமூகச் சூழலில் மிகக் குறைந்தளவாதாகவே காணப்படுகிறது. கல்வித் தேவையின்
பொருட்டு புத்திஜீவிகள் மட்டத்திலே பல்வேறு அம்சங்கள் அறிந்து கொள்ளப்பட்ட போதிலும்
அவை நடைமுறையில் சமூக வாழ்வுக்குப் பயன்படாதவாறு இருட்;டில் விடப்படுகின்றன.
இதற்கான அடிப்படை நமது சூழல் பழமை வாதத்தின மீது கொண்டுள்ள இறுக்கமான
பிடிப்புத்தான் என்பது மிகையல்ல.
எவ்வளவிற்கு இல்லை என மறுத்து வாதிட
முற்பட்டாலும் நாம் வாழும் சமூகச் சூழல் மரபு வழி வந்த பழைமைவாதச் சிந்தனைகளாலேயே
பெருமளவிற்கு வழி நடத்தப்படுகின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் கார்ல் மார்க்ஸ்
எடுத்துக் கூறினார். ~~ இறந்து போன எல்லாத் தலைமுறைகளின் மரபும் உயிரோடிருக்கும்
தலைமுறையின் மூளையில் ஒரு பயங்கரக் கனவாகக் கனக்கின்றது. இக் கூற்று வாழ்ந்து
கொண்டிருக்கும் இன்றைய மனிதத் தலைமுறையினருக்குரியதாகினும் நமது பழமைவாதச்
சூழலுக்கு அதிகம் பொருந்தக் கூடியதொன்றாகும். இ;வ்வாறு கூறுவதன் மூலம் மரபையும்
அதன் வழிவந்த பழைமையின் மனித நேயக் கூறுகளையோ, சமூகச் சார்பு மிக்க நல்லம்சங்களையோ
பழைமை எதிர்ப்பின பேரால் நிராகரிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் மரபு, பழைமை
என்பவற்றை கேள்வி, நியாயங்களுக்கு அப்பால் புராண, இதிகாச இலக்கியங்கள் என்ற பெயரில்
அறிவியலுக்கு நேர் எதிரான கருத்துக்களாக மனித மூளையில் திணித்து வரும் போக்கே
நிராகரிக்கத்தக்கதாகும். அவை தான் இன்றைய வாழ்வியலுக்கு வழிகாட்;டுவன என்று
கூறப்படும் அபத்தமே விமர்சனத்திற்குரிய சுட்டிக் காட்டலாகும்.
இந்நிலையிலே
தான் சமூக அறிவியல் என்பதன் அவசியம் உணரப்படல் வேண்டும். அதன் ஓர் அம்சமே சமூக
வரலாறு பற்றிய அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளலாகும். ஓர் இனம் என்னும் அடிப்படையில்
தேசிய இன விடுதலைக்கான போராட்டம் உச்ச நிலையில் இருந்து வரும் இவ்வேளையில் அறிவு
ரீதியிலும் அறிவியல் அடிப்படையிலும் மனித சமூக வரலாறு பற்றி கற்றுக் கொள்வது ஒரு
தேவையாகின்றது.
எனவே ~ மனிதரும் சமூக வாழ்வும் | என்னும் இந்நூல் சமூக
வரலாற்றினை முடிந்தளவிற்கு சுருக்கமாக விளங்க வைக்கும் நோக்குடன் எழுதப்பட்டதாகும்.
பன்னிரண்டு தலைப்புகளிலே சிறு சிறு அத்தியாயங்களாக எழுதப்பட்டுள்ள இந் நூலை ஒரு
அறிமுக நூற் குறிப்புகள் என்றே கூற முடியும். இக் குறிப்புகளில் வரும்
ஒவ்வொருவசனமும் ஒவ்வோர் அத்தியாயமாக விரித்து விளக்கி எழுதப்படவேண்டியவையாகும்.
முடிந்தளவிற்கு சராசரி வாசிப்புத்திறன் கொண்ட சமூக அக்கறை மிக்கவர்களும்.
மாணவர்களும் படித்துப் பயன் பெறும் நோக்கினை மனதிற் கொண்டே எழுதப்பட்டதாகும். இதில்
எவ்வளவுக்கு எனது நோக்கம் வெற்றி பெறும் என்பதை நூலினைப் படிப்பவர்களே கருத்துக்
கூறத்தக்கவர்களாவர்.
இந்நூல் ஏற்கனவே எழுதப்பட்டிருப்பினும் அதனை நூலாக்கும்
சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எமது தந்தையார் அண்மையில் மறைந்த போது அவரது முதல் மாத
அஞ்சலி நிகழ்வின் போது தாய்தந்தையர் நினைவாக இந்நூலிலை வெளியிடலாம் என நினைத்த போது
அதற்குரிய பொருள் வசதி என்னை அச்சுறுத்தியது. இருப்பினும் எனது அச்சத்தை என்றும்
எனக்கு கை உதவும் தம்பியுடன் கலந்து பேசிய போது நூலை வெளியிடத் தான் உதவுவதாகக்
கூறி உற்சாகம் தந்தான். அந் நல்நோக்கின் வெளிப்பாடே இச்சிறிய நூலாகும். இந்நூல்
வெளிவருவதற்கு தகுந்த ஆலோசனைகளும்; அறிவுரைகளும் வழங்கிய தோழர்கள் க. தணிகாசலம்,
இ.செல்வநாயகம், சோ. தேவராஜா ஆகியோருக்கும் நூல் உருப்பெற உதவிய குமார், பிரதி
செய்து உதவிய செல்வி கமலா உட்பட மிகக் குறைந்த நாட்களில் பொறுப்புடன் அச்சுப்பதிவு
செய்து தந்த கபிலா அச்சகஊழியர்கள் உரிமையாளர் அனைவருக்கும் அன்பும் நன்றியும் கூறக்
கடமைப்பட்டவர்கள். முகப்பினை அழகுர அமைத்துத் தந்த த. நாகேந்திரம் மற்றும்
ஆலோசனையும் உதவியும் செய்த ஆனந்தன் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.
சி.கா.
செந்தில்வேல்
தாயகம்
சிறுப்பிட்டி வடக்கு,
நீர்வேலி,
இலங்கை
---------------------------------------------------------------------
மனிதரும்
சமூக வாழ்வும்
1
மனித குலம் மகத்தானது. அதில் அங்கமாகி நிற்கும் ஓவ்வொரு
பெண்ணும் ஆணும் மகோன்னதமானவர்கள். மனிதர்கள் தான் மனிதர்கள் மட்டுமே உலகின்
யாவற்றையும் விட மேம்பட்டவர்கள். மனிதர்களது உழைப்பும் சிந்தனையும் ஏனைய செயல்களும்
மலர்ச்சி பெற்று வளர்ச்சியடையவில்லை என்றால் இன்றைய மனிதகுல நாகாPகம் தோன்றியிருக்க
முடியாது. அவர்களது அபார சக்தியின் வெளிப்பாடாகத் தான் உலகில் பொருள் உற்பத்தியும்
அதனைத் தொடர்ந்து கலையும் கலாச்சாரமும், தத்துவங்களும், அரசியலும், சட்டமும்,
விஞ்ஞானமும், தொழில்நுட்பங்களும் இன்னும் பிற ஆக்கக் கூறுகளும் வரலாற்று
வளர்ச்சிகண்டன. இவை அனைத்தும் ஆரம்ப நிலையில் இருந்து உயர்ந்த நிலை நோக்கி முன்னேறி
வந்தன.
இயற்கை என்னும் பரந்த விளை நிலத்திலே உருவாகிய மனிதர்கள் அவ்
இயற்கைக்கு எதிராகப் போராடி, அதனைக் கட்டுப்படுத்தி, வாழ்க்கைக்கு இசைவாக்கி பல
முனைகளில் வெற்றிகொண்டு தமது சமூகவாழ்வை விரிவுபடுத்தி வந்ததில் திட்டவட்டமான
வளர்ச்சிப் போக்கைக் கொண்டிருந்தனர். இதனால் ஏனைய விலங்கினங்களில் இருந்து வேறுபட்ட
ஓர் தனித்தன்மை வாய்ந்த மனித சமூகமாகினர். இயற்கையின் செல்வாதாரங்களுக்கு எல்லைகாண
முடியாமை போன்றே மனித ஆற்றல்களுக்கும் எல்லை வகுக்க முடியாது என்பதினைப் பல லட்சம்
ஆண்டுகளிலான மனித குல வரலாற்றின் வளர்ச்சி எடுத்துக் காட்டியுள்ளது. இங்கே
காணப்படும் முக்கியத்துவம் மனிதர்களுக்கு மனிதர்கள் மட்டுமே நிகராக இருக்க முடியும்
என்பதுதான். அதனாலேயே மனிதர்களின் மகத்துவம் யாவற்றையும் விட மேலோங்கி
நிற்கின்றது.
இன்றைய உலகம் நவீன விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பவியலிலும்
அதிவிரைவான, அதி அற்புதமான வளர்ச்சி கண்டுவரும்; போக்;கைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
அதன் எதிர்விளைவுகளில் மனித குலத்திற்கு நாசம் விளைவிக்கும் அம்சங்கள்
உள்ளடங்கியிருப்பதையும், அதனை மனித சுய நலப்போக்கு தன் நோக்கிற்கு பயன்படுத்தி
வருவதையும் மறுக்க முடியாது. இருந்த போதிலும் விஞ்ஞான வளர்ச்சியானது மனித
ஆற்றல்களின் உயர் வெளிப்பாடாகவும் மனித குலத்திற்கான வளர்ச்சித் தேவையாகவும்
அமைந்துள்ளது. உலகியல் சார்ந்த நடைமுறைகளின் மூலமாக ஆதாரங்களைத் தேடுவதும் அவ்
ஆதாரங்களில் இருந்து உண்மைகளைத் கண்டறிவதும் என்ற அடிப்படையிலேயே விஞ்ஞானம் வேர்
ஊன்றி வளர்வதாயிற்று. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே விஞ்ஞானம்
தனது வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுந்தது, தீயை உருவாக்கியமையும்,
கல்லாயுதங்களைக் கண்டறிந்தமையும், உணவு, உடை, இருப்பிடத் தேவைகளை நோக்கி முன்சென்ற
அனைத்துமே மனிதரின் விஞ்ஞான முன் முயற்சிக்கான ஆரம்ப நிலைதான். அந்த வகையிலே மனித
வாழ்வின் சகலதுறைகளிலும் ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று நவீன விஞ்ஞான பூர்வ
வழியில் வளர்ச்சி பெற்றுக் கொண்டது.
பிரபஞ்சம் என்னும் மிகப் பரந்த இயற்கை
பற்றியும் அதில் உள்ளடங்கும் பூமி பற்றியும் முன்னோர் கொண்டிருந்த கற்பனைக்
கருத்தியல்கள் யாவும் இன்று விஞ்ஞானத்தினால் நிராகரிக்கப்பட்டுவிட்டன. அதே போன்று
உயிரினங்களினதும்-மனிதர்களினதும் தோற்றம், பரிணாம வளர்ச்சி, சமூக வாழ்வு என்பனவும்
விஞ்ஞானத்தால் தெளிவாக்கப்பட்டுவிட்டது. இதன் வாயிலாகக் கடவுள், படைப்பு, மறுஉலகம்,
ஆன்மா, ஊழ்வினை, மறுபிறப்பு போன்றவற்றைப் பற்றிய பழமை வாய்ந்த தத்துவங்களும்,
நம்பிக்கைகளும் அடி பெயர்க்கப்பட்டு விட்டன. இன்று யாவற்றையும் விஞ்ஞான நோக்குடன்
அணுகும் போக்கு முனைப்படைந்து வருகின்ற போதிலும் நமது சமூகச் சூழல் பழமைவாதக்
கருத்தியல்களுக்குள் கட்டுண்டு நிற்கும் தன்;மையையே கொண்டுள்ளது. இப்பழமைவாதக்
கருத்தியல் என்பது மனிதர்களின் முக்கியத்துவத்தையும் அவர்களது எல்லையற்ற
படைப்பாற்றலையும் தாழ் நிலைக்குள் வைத்து யாவற்றுக்கும் அப்பாற்பட்ட சக்தியான
கடவுளினால் தான் சகலதும் நிர்ணயிக்கப்படுவதாக நம்ப வைக்கப்படுவதாகும். இதனை
அச்சாணியாகக் கொண்டே சகல மதங்களும் அவற்றின் வரையறைகளும் தமது நம்பிக்;கைகளையும்,
செயல் முறைகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இக்கருத்தியல் ஆதிக்கத்தில் இருந்து
விடுபடுவது மிக இலகுவானதொன்றல்ல என்பது உண்மையே. ஏனெனில் பல்லாயிரம் வருடங்களாக
மனிதர்கள் பின்பற்றி வந்த நம்பிக்கைகளை விஞ்ஞான உண்மைகளின் நடைமுறைகளினால் மட்டுமே
படிப்படியாக மாற்றியமைக்க முடியும். அதற்குரிய சமூகச் சூழல் பல துறைகளிலும்
தோற்றுவிக்கப்படல் வேண்;டும். இன்று நமது சமூகத்தில் மூன்று வகையினரானவர்களை, இனம்
காண முடியும். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனித ஆற்றல்களின் வெளிப்பாடு என்று
ஏற்றுக்கொள்ளாது, பழமை வாதக் கருத்தியல்களில் மூழ்கி நிற்போர் முதல் வகையினர்
விஞ்ஞானத்தை தமது வாழிவின் தொழில், வருவாய் அந்தஸ்து என்பவற்றுக்காக மட்டும்
பயன்படுத்திக் கொள்ளும் அதேவேளை வாழ்வியலுக்கு பழைய வாத நம்பிக்கைகளின் மீது
தங்கியிருக்கும் போக்குடையோர் இரண்டாவது வகையினர். மூன்றாவது வகையினர் மட்டுமே
விஞ்ஞானத்தை நடைமுறை சார்ந்து வாழ்வியக்கத்திற்கு உரியதொன்றாகவும் மனித
விழிப்புணர்வு, முன்னேற்றம், வளர்ச்சி, விடுதலை, சமூக மாற்றம் என்பவற்றுக்கான
தொன்றாகவும் பயன்படுத்துவோராக உள்ளனர். இவர்கள் சமூகத்தில் சிறுபான்மையினராக உள்ள
போதிலும் அவர்களது நோக்கும் போக்கும் மட்டுமே வளர் திசை உண்மைகளைக்
கொண்டிருப்பதாகக் காணப்படுகின்றது.
அந்த வகையிலேயே சமூக
விஞ்ஞானத்தத்துவமும் தோன்றி மானிட வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் ஊடுருவி
விரிவான நடைமுறை உண்மைகளை முன் நிறுத்திவைத்தது. இச் சமூக விஞ்ஞானப் பார்வையானது
மனிதர்களினதும் அவர்களது சமூகவாழ்வினதும் வரலாற்று வளர்ச்சியை தெளிவுடன் எடுத்து
விளக்கியது. அதன் அடிப்படையில் மனித சமூக வாழ்வியக்கத்தின் பல்வேறு கூறுகளும் இன்று
விரிவான ஆய்வுகளுக்கு உள்ளாகி வருகின்றமையை காணமுடியும். இருப்பினும் நமது சூழலில்
இச்சமூக விஞ்ஞானப் பார்வையை எதிர்ப்பது, மழுங்கடிப்பது திசைதிருப்புவது போன்ற
முயற்சிகள் தொடரப்படுகின்றமையை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதலால் மனிதரும் அவர்களது
சமூக வாழ்வும் பற்றிய பொது அறிவினை அறிவியல் அடிப்படையில் பெற்றுக் கொள்வது
அவசியமாகிறது.
உலகின் தோற்றம்
2
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி
இன்றுள்ளது போன்று என்றென்றைக்கும் இருந்து வந்துள்ள ஒன்றல்ல ஒரு குறிப்பிட்ட
காலத்தில் யாவற்றுக்கும் அப்பாற்பட்ட சக்தியான கடவுள் அல்லது ஆண்டவன் மூலமாகத்
தோற்றுவிக்கப்பட்டதுமல்ல. பிரபஞ்சத்தில் பூமியின் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்து
மாறுதல்களுக்கு உள்ளாகி இன்றைய நிலைக்கு வந்தது என்பதினை வானியல் வல்;லுனர்கள்
இடையிறாது ஆராய்ந்து வந்ததோடு காலப் போக்கில் திட்டவட்டமான முடிவுகளுக்கும்
வந்தனர். இம்முடிவுகளின் உண்மைகள் உலகின் தொடர் ஆய்வு நடைமுறைகளால் இன்று
ஏற்கப்பட்டுள்ளன. ஆனால் கடவுள் தத்துவத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்ட மதவாதிகள்
பூமியின் தோற்றம் வளர்ச்சி பற்றிய விஞ்ஞான விளக்கத்தை அன்றும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இன்றும் ஏற்பதாகவில்லை. பூமி மற்றும் கோள்கள் என்பவற்றின் தோற்றம் இயக்கம் பற்றி
முதன் முதலில் ஆய்வு அடிப்படையில் எடுத்து விளக்கிய விஞ்ஞானிகள் அன்றைய
மதபீடங்களினாலும், மதத் தலைவர்களினாலும் பல்வேறு வித நிந்தனைகளுக்கும்,
தண்டனைகளுக்கும் ஆளாக்கப்பட்ட நிகழ்வுகள் கூட வரலாற்றில் இடம் பெற்றன. இருப்பினும்
இவ்வானியல் ஆய்வுகள் சகல தளைகளையும் மீறி தமது முன்;னேற்றப்பாதையில் வழி நடந்து
சந்திரனில் மனிதர் சென்று இறங்கித் திரும்பிய அதி உன்னதம்மிக்க மனித சாதனையை நிலை
நாட்டிய உச்ச நிலைக்கு அப்பாலும் தொடரச் செய்கிறது.
பல நூறு கோடி
ஆண்டுகளுக்கு முன்பாக இன்றைய பூமி என்பது பிரபஞ்சத்தில் இருக்கவில்லை. ஏன் சூரியன்
என்பது கூட மிகமிக நீண்ட காலத்தின் முன்தோன்றிய தொன்றேயாகும். சடப் பொருட்கள்
பிரபஞ்சத்தில் ஒன்றுடன் ஒன்று மோதியதன் மூலம் வெப்பம், சுழற்சி என்பவற்றைப் பெற்று
வெப்பமாகச் சுழல்கின்ற புகையுருக் கோளமாக மாறின. இதுவே அக்கினிக் குழம்பான மூலச்
சூரியனின் தோற்றமாகும். சூரியனைப் போன்று ஒளி விடும் நட்சத்திரங்கள் பல
பிரபஞ்சத்தில் இருக்கின்றன. அவை மிகத் தொலைவில் இருப்பதால் சிறியனவாகத் தெரிகின்றன.
நமக்கு சூரியன் குறிப்பிட்டளவு தூரத்தில் இருப்பதால் அதன் தோற்றம் பெரிதாக
இருப்பதுடன் அதிக வெப்பத்தையும் தருகின்றது. நட்சத்திரங்கள் இயல்பில் வெப்பமுடையன.
ஆனால் கோள்கள் அப்படியல்ல. சூரியக் குடும்பக் கோள்களுக்கு சூரியனே ஒளி, வெப்பம்
என்பவற்றை வழங்கி வருகின்றது.
இத்தகைய வெப்பக் கோளமான சூரியனின் அதிகரித்த
பெப்பச் சுழற்சி காரணமாக அதிலிருந்து சில அக்கினித் துண்டங்கள் பிரபஞ்;ச அண்ட
வெளியில் சிதறி வீசப்பட்டன. இவ்வாறு வீசப்பட்ட சிதறல் துண்டங்கள் சூரியனின்
ஈர்ப்புவட்டத்திற்குள் அமைந்த சூரிய மண்டலக் கோள்களாயின. அவையாவும் சூரியனை
ஒருங்கமைந்த ஓர் நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்ததுடன் தம்மைத் தாமே சுற்றிக்
கொள்வனவாகவும் அமைந்தன. சூரியனின் ஈர்ப்புக்கும் தாக்கத்திற்கும் உட்பட்ட ஒன்பது
கோள்களில் நாம் வாழ்ந்து வரும் பூமியும் ஒன்றாகும்.
இப் பூமி ஆரம்பத்தில்
தீக்குழம்பாகவே இருந்தது. இது சூரியனில் இருந்து சுமார் 15கோடி கிலோ மீற்றர்
தொலைவில் இருந்ததன் மூலம் நீண்டகாலத்தில் படிப்படியாக குளிர்வடைவதற்கு ஏதுவாயிற்று.
இவ்வாறு பூமியின் மேற்பரப்பு குளிர்வடைய ஆரம்பித்த அதேவேளை அதன் உட்பகுதி
வெப்பக்குழம்பாக இருந்து வந்தது. இதனால் அடிக்கடி எரிமலைகள் வெடித்து உள் இருந்த
அக்கினிக் குழம்புகள் வெளித்தள்ளப்பட்டன. அவ்வாறு வெளித்தட்டப்பட்டவைகள்
குளிர்ச்சியடைந்த மேற்பரப்பில் பாறைகளாகப் படிந்து இறுகிக் கொண்டன. அதே போன்று
வாயுக்களின் சேர்க்;கையால் பெருமழை உருவாகி பூமியின் மேற்பரப்புப் பள்ளங்களில் நீர்
நிலைகளை உருவாக்கியது. இத்தொடர் நிகழ்வுகளால் பாறைகளும், நீர்ப்பரப்புக்களும்
தோற்றம்பெற்றன. நீர்ப்பரப்புகள், கடல்கள், சமுத்திரங்களாகிக்கொண்டன. பாறைகள் அமைந்த
பரப்பில் மலைகளும் பள்ளத்தாக்குகளும் தோன்றின.
பூமியில் இருந்து பிரிந்து
தூரச் சென்ற ஒரு பகுதியே சந்திரனாகும். சந்திரன் ஒரு தனிக்கோள் அல்ல. ஏனைய
கோள்களுக்குப் பல துணைக் கோள்கள் உள்ள அதேநேரத்தில் பூமிக்கு சந்திரன் மட்டுமே ஒரே
ஒரு துணைக் கோளாகும். பூமியில் இருந்து பிரிந்து சந்திரன் துணைக்கோள் ஆகியதன் மூலம்
ஏற்பட்ட பெரும் பூமிப் பள்ளமே பசுபிக் சமுத்திரமாகியது
எனக்கணிக்கப்படுகிறது.
பூமிப் பரப்பின் பாறைகளும், சமூத்திரங்களும்
இன்றுள்ளது போன்று என்றும் ஒரே இடத்தில் இருந்ததாகக் கொள்ள முடியாது. பாறை
நகர்வுகளும் கடல் கொந்தளிப்புகளும் இடம் பெற்றதால் கண்டப் பெயர்வுகள் ஏற்பட்டன.
இதனால் சில நிலப்பரப்புகள் சமூத்திரத்தினால் விழுங்கப்பட்டன. அதன் வழியாக
கண்டங்களுக்கிடையிலான தொடர்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. புதிய கடற்பரப்புக்கள்
தோற்றம் பெற்றன.
அதே போன்று பாறைகளில் உருவாகிய தேய்வு, சீதோஷ்ண நிலையில்
ஏற்பட்ட மாற்றங்கள் கற்பாறைகளில் இருந்து மண் தோன்றுவதற்கு ஏதுவானது. பாறைகளும்
மண்ணின் தோற்றமும், நீர் நிலைகளின் தன்மையும் பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கான
அடிப்படைச் சூழலை உருவாக்கியது. பூமி தோன்றிய பின் தாவரங்களும் மிருகங்களும்
வாழ்வதற்கு உகந்தவகையில் போதுமான அளவுக்கு பூமி குளிர்ச்சியடைய பத்துக்கோடி
ஆண்டுகளுக்கும் சற்று அதிகமான காலம் கடந்தது எனக்
கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த சில நூற்றாண்டுகளில் பூமியின் தோற்றம், அதன்
அமைப்பு, இயக்கம் போன்றவற்றில் விஞ்ஞானிகளும் - வானியல்வல்லுனர்களும் புதிய புதிய
கண்டு பிடிப்புக்களை வெளிக்கொணர்ந்தனர். அவர்கள் முன் வைத்த முடிவுகள் ஆரம்பத்தில்
முழுமையானதாகவோ முடிந்த முடிவாகவோ இருக்கவில்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரின்
முயற்சிகளும் முடிவுகளும் பின்னால் வந்தவர்களின் முழுமையான ஆய்வுகளுக்கு
அடிப்படைகளாயின. அதனால் பின் வந்தவர்கள மிகவும் தெளிவான முடிவுகளுக்கு வரக்கூடியதாக
இருந்தது. இந்த வரிசையில் கிளோடியன் தொலமி, கொப்பர் நிக்கலஸ், கெப்ளர் கலிலியோ
கலிலி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பூமி உருண்டை வடிவானது என்றும் அது
சூரியக் குடும்பத்;தைச் சேர்ந்த ஒரு கோள் என்றும், தன்னைத் தானே சுற்றிக் கொண்டும்,
அதே வேளை சூரியனை சுற்றி வருகின்றது என்பதும் மிகவும் துல்லியமாகக்
கண்டறியப்பட்டது. அத்துடன் பூமியின் பருமன் அதன் புவி ஈர்ப்புத் தன்மை, அமைப்பு
முறை இயக்கவகை யாவும் இன்று வரை மேன்மேலும் மிக நுண் ஆய்வுகளால் நிரூபனம்
பெறலாயிற்று. இந்த நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சியின் அதிவேகத் தன்மைகளால் பூமி
பற்றிய உண்மைத் தகவல்கள் விரிவடைந்து வருவதுடன் ஏனைய கோள்கள், நட்சத்திரங்கள்
பற்றிய ஆய்வுகளிலும் பெரும் முன்;னேற்றங்கள் ஈட்டப்படுகின்றன.
இவ்வாறு
தோற்றம் பெற்று பல நூறுலட்ச வருடங்களில் மாற்றம் அடைந்து வந்த பூமியில் உயிரினங்கள்
எவ்வாறு தோன்றி வளர்ச்சி கண்டன என்பதை அடுத்த பக்கங்களில் பார்ப்போம்.
உயிரின்
தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்
3
உயிரினங்கள் தோற்றம், பரிணான வளர்ச்சி
பற்றிய மனித ஆய்வு முயற்சிகள் வௌ;வேறு காலகட்டங்களில் அவ்வக்காலச் சூழல்களில்
சேகரிக்கப்பட்ட மனித அறிவுத்திறன் அளவுக்கு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலும் அதற்கு பிந்திய காலப் பிரிவிலும் பல
தத்துவஞானிகளும் விஞ்ஞானிகளும் உயிரினத் தோற்றத்தையும், வளர்ச்சியையும் விளக்க
முற்பட்டனர். குறிப்பாக கிரேக்க நாட்டுத் தத்துவ ஞானிகளில் தேல்ஸ், அனெக்சிமாண்டர்,
சினோ பேண்ஸ், எம் பிடோக்கிள்ஸ், அரிஸ்ரோட்டில் போன்றவர்கள் உயிரினத் தோற்றம்;
பற்றிய தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர். உயிர் சடப்பொருளில் இருந்து தான்
தோன்றியிருக்க வேண்டும் என்ற மூலக் கருத்தை தத்துவ ஞானியான அரிஸ்ரோட்டில் முன்
வைத்தார். அக்காலத்தில் ஞானிகளின் உயிர்பற்றிய கருத்;துக்கள் முழுமை பெற்றனவையாகக்
காணப்படவில்லையாயினும் பிற்கால புதிய சிந்தனைகள் தோன்றுவகற்கான கருவூலங்களை அவை
கொண்டிருந்தன.
கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட காலத்தில் குறிப்பாக பதினைந்தாம்
நூற்றாண்டிற்குப் பின் இயற்கை தத்துவஞானிகள் அல்;லது விஞ்ஞானிகள் என்போர் தீவிர
ஆய்வுகளில் செயல்பட்டனர். இவர்கள் உயிரினங்களின் தோற்றம் பரிணாமம் என்பன பற்றிய பல
புதிய கண்டு பிடிப்புக்களை வெளிக் கொணர்ந்தனர். பிரான்சிஸ் பேக்கன், லிப்னிட்ஸ்,
டிமெய்லெட், லின்னேயஸ், புவோன், எசால்மஸ்டார்வின் போன்றோர் இத்துறையில்
குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வரிசையில் பிரான்ஸ் நாட்டின் இயற்கை விஞ்ஞானி லமார்க்
உயிரினங்களின்; தோற்றம், பரிணாமப் போக்கினை விபரித்தார். உயிர், முதன் முதலில்
உயிரில்லாத சடப்பொருளில் இருந்து தோன்றியிருக்க வேண்;டும் என்பது அவரது கருத்து.
அந்த உயிரற்ற பொருள் கூழ் போன்ற திரவமானதாகும். அதன் மேல் வெப்பம், மின்சாரம் போன்ற
சக்திகளின் தாக்குதலினாலும் மற்றும் அங்கக அல்லது கரிமப்பொருட்களின்
சேர்க்கையினாலும் பை அல்லது அறை போன்ற உருவம் தோன்றியது. இது தான் முதன் முதலில்
தோன்றிய உயிரியாக இருக்க வேண்டும். இந்த உயிரி நாளடைவில் சூழ்நிலைக்கேற்றவாறும்
மற்றும் சக்திகளுக்கேற்றவாறும் அனேக மாறுதல்கள் அடைந்து பல இன்னல்களுக்கு உள்ளாகி
உரு அமைப்பாலும் செயல் முறையாலும் பல விதமான உடல் அமைப்புக் கொண்ட உயிரினங்கள்
தோன்றின என்பதாகும். இவரது ஆய்வுக் கருத்;துக்களில் பின்வந்த விஞ்ஞானிகள் முழுமையாக
திருப்தி கொள்ளாது சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியதுடன் புதிய நோக்குடன் தொடர்
ஆய்வுகளில் ஈடுபட்டனர்.
மேலும் உயிரினங்கள் பற்றிய மிக விரிவான ஆய்வுகளைச்
செய்து புதிய திருப்பு முனை ஏற்படவும் அவை வளர்ச்சி பெற்றுச் செல்லவும் பிரதான
அடிப்படைகளை தோற்றுவித்ததில் சார்ல்ஸ்டார்வின் (1809 - 1882) முக்கியமானவராகத்
திகழ்ந்தார். ~~உயிரினங்களின் மூலத் தோற்றம்|| ~~உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி,
இயற்கையான தேர்வின் மூலம்|| போன்ற தனது பிரசித்தி பெற்ற முடிவுகளை நூல்களாக
டார்வின் வெளியிட்டார். மிருக மற்றும் தாவர உயிரின வகைகள் ஒi;றை ஒன்று எவ்விதமான
தொடர்பும் இல்லாமல் உள்ளவை, தற்செயலாக எதிர்பாராமல் நிகழ்பவை, கடவுளால்
உண்டாக்கப்பட்டவை, மாற்ற முடியாதவை: என்னும் பழைய கருத்தோட்டத்திற்கு டார்வின் ஒரு
முடிவு கட்டினார். ~~அவர் தான் முதன் முதலில் மிருக தாவர உயிரின வகைகள்
மாற்றத்திற்கு உள்ளாக்கக் கூடியவை, ஒன்றன் பின் ஒன்று மரபு வழியாக வளரும் என்று
ஸ்தாபித்து உயிரியலை முழுமையாக, சுத்தமான விஞ்ஞான அடிப்படையில் அமைத்து வைத்தவர்||
என்று டார்வின் போற்றப்பட்டார்.
உயிரின் மூலக் கூறுகளை விஞ்ஞானம்
கண்டறிந்து விட்டது. கடவுளின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறு உயிர்
தோற்றுவிக்கப்படுகிறது என்னும் மதவாதக் கருத்துக்கள் இன்று உடைக்கப்பட்டு விட்டன.
~~உயிர் பல மூலகங்களின் கூட்டுச்சேர்க்கையால் ஆனது. நமக்குத் தெரிந்த 95
மூலகங்களில் 20 மூலகங்கள் புரோட்டோ பிளாசத்தில் அடங்கியிருக்கின்றன என்பது உயிரியல்
வல்லுனர்களின் முடிவாகும். தண்ணீர், அனங்கக அல்லது கனிம உப்புக்கள், அங்ககப் பொருள்
(கரிமப் பொருள்கள்) போன்றவைகளின் கூட்டுச் சேர்க்கையால் உருவானது உயிர். நீர்
என்பது பிராண வாயுநீர், வாயு மூலகங்களினாலானது. அனங்கப் பொருள்களில் சோடியம்,
பொட்டாசியம், மங்கனீசியம், குளோரின், கல்சியம் போன்றவை முக்கியமானவையாகவும்,
இரும்பு, பித்தளை, மாங்கனீஸ், காரியம், கோபால்ட், நிக்கல், ஐயோடின், வனடியம்,
புளோரின், போரான், அலுமினியம், புரோமின் போன்றவை குறைந்த அளவினையுடையதாகவும்
இருக்கின்றன. அங்ககப் பொருட்களில் ஊட்டச் சத்துக்களான கார்போஹைடிரேட்
(மாப்பொருட்;கள்) கொழுப்பு, புரோட்டீன் (புரதம்) போன்றவை இன்றியமையாதவையாகும்.
மேலும் உட்கரு அமிலங்களும் உயிர் தோன்றுவதற்குக் காரணமாயிருக்கின்றன. சில அங்கக
அனங்ககப் பொருட்களின் கூட்டுச் சேர்க்கையால் நொதிகள், குரோமோசோம்கள் ஹீமோகுளோபின்,
பச்சயம், அல்லது பசுமம் போன்ற முக்கிய பொருட்களும் உண்டாகின்றன. இவையெல்;லாம்
உயிர்ப் பொருட்களின் முக்கிய கூறுகளாகும். பொதுவாக கார்பன், நீர்வாயு போன்ற
மூலகங்கள் கார்போஹைற்ரேட்டுக்களையும் கொழுப்புக்களையும் உண்டாக்குகின்றன. இந்த
மூன்று மூலகங்களுடன் நைட்ரஜன் சேர்ந்தால் புரதம் உண்டாவதற்கு
உறுதுணையாயிருக்கின்றது. இவையே உயிர்ப் பொருளில் பெரும்பாகப் பொருட்களாகும்.
அல்;லது பகுதிப் பொருட்களாகும். மேலும் மூலகங்கள் நிலையாக நிற்கும் தன்மையுடையவை.
அவை மற்ற மூலகங்களுடன் சேர்ந்து அணுத்திரல்கள் உண்டாகின்றன. அணுத்திரள்கள் மேலும்
நீண்டு கொண்டே போவதால் தொடர் அணுத்திரள்கள் கிடைக்கின்றன. இவை உயிர் வாழ் பண்பிற்கு
மிகவும் தேவைப்படுவதால் இந்த நான்கு மூலகங்களின் சேர்க்கை மற்ற மூலகங்களை விட
அதிகமாகவே காணப்படுகின்றன.||
உயிர் தோன்றுவதற்கு அங்ககப் பொருட்களின்
தோற்றம் அடிப்படையானதும் முதல் படிவமாகும். இரண்டாவது அதற்குரிய சூழலாகும்.
இவ்வங்ககப் பொருட்கள் சில விகிதங்களில் கூட்டுச் சேர்ந்து இயற்கையின் புறச் சூழலோடு
இணைந்ததன் மூலம் உயிரிகள் தோற்றம் பெற்றுக் கொண்டன.
எனவே பத்துக் கோடி
வருடங்களுக்கும் சற்று அதிகமான காலத்தில் நீர் நிலைகளில் நீர்ப்பாசி உருவாகியது.
அதுவே சகல உயிரினங்களின் தோற்றத்திற்கும் மூலமாக இருந்தது. இந்நீர்ப்பாசியில்
இருந்தே அமீபா என்னும் தசை வடிவம் கொண்ட ஒன்று தோற்றம் பெற்றது. இது தன்னுள்
இரண்டாகப் பிரிந்து பிரிந்து பல்லாயிரக் கணக்கில் பெருகிக் கொள்ளும் தன்மையுடையதாக
விளங்கியது. இவ்வமிபாவில் இருந்து தாவர உயிரினங்களும் விலங்கு உயிரினங்களும் இரு
வேறுபிரிவுகளாக வளர்ச்சியும் மாற்றமும், பெருக்கமும் கொண்டன. இவை நீண்ட நெடுங்கால
வளர்ச்சிப் பாதையில் நுண்ணங்கிகளாக (டீயநவநசயைள) வளர்ச்சி பெற்றுக் கொண்டன.
இவையனைத்தும் பின்பு கூட்டுத் தொகுப்பாகிக் கொண்டன. இதனால் உயிரணுக்கள் (உநடடள)
உருவாகின. பல உயிரணுக்கள் சேர்ந்து ஒரு தொகுப்பாகியதன் மூலம் உருவமைப்புகள்
வளர்வதாயிற்று. உதாரணத்திற்கு ஒரு மனிதரில் ஏறத்தாள முப்பதினாயிரம் லட்சத்திற்கு
மேற்பட்ட உயிரணுக்கள் இருக்கின்றன என்பது
கவனத்திற்குரியதாகும்.
இவ்விடத்;திலே அடிப்படையான ஒரு கேள்விக்கு
விடையளிப்பது அவசியம். அதாவது கடவுள் அல்லது ஆண்டவன் என்ற படைப்பு சக்தி
இல்லாவிடின் எவ்வாறு யாவும் தோன்றி மறைகின்றன? அதே நேரம் புதியன உருவாகின்றன?
இதற்குரிய விடையாகவே இயங்கியல் கோட்பாடு தெளிவாகப் பதில் அளிக்கின்றது. எதிர்
மறைகளின் போராட்டமும் அவற்;றுக்கிடையிலான ஒற்றுமையும் என்ற சர்வ வியாபகமான
அடிப்படைவிதிதான் பிரபஞ்சம், உலகம்;, இயற்கை, உயிரினங்கள், மனிதர், சமூகவாழ்வு
அனைத்தின் தோற்றம், இயக்கம், வளர்ச்சி, மாற்றம், மறைவு என்பவற்றின் மூலமாகும்.
உலகில் உள்ள எல்;லாப் பொருள்களிலும் இரண்டு எதிர் நிலை சக்திகளின் போராட்டம் என்பது
வியாபித்து நிற்கும் தன்மையைக் காணமுடியும். அது மட்டுமன்றி இத்தகைய எதிர்
மறைகளினிடையான போராட்டப் போக்கினால் தோற்றம் பெற்று வளர்ச்சி பெறும் ஒவ்வொன்றும்
பழைய நிலை மறுக்கப்பட்டு புதியநிலைக்கு வருவதும், மீண்டும் அந்நிலை மறுக்கப்பட்டு
புதியநிலை தோன்றுவதும் இடம் பெறுகின்றன. இதனையே நிலை மறுப்பின் நிலைமறுப்பு விதி
எனப்படுகிறது. அதாவது சகல வளர்ச்சிப் போக்கிலும் மாற்றம் என்பது ஏற்படும்; போது
மீண்;டும் மீண்டும் அவை ஒரே தன்மையுடையனவாக இருப்பதில்லை. அளவு குணாம்சமாக மாறி
மாற்றம், வளர்ச்சி, சிதைவு இடம் பெறுவது மட்டுமன்றி புதியன தோன்றுவதையும்
காணமுடியும். எனவே முன்பிருந்த நிலையை மறுக்காது புதியநிலை தோன்ற முடியாது என்பது
நியதியாகின்றது. இவை பற்றி அடுத்து வரும் பக்கங்களில் சற்று விரிவாகக்
காண்போம்.
மேற்கூறிய இயங்கியல் விதிக்கு உட்பட்டே பிரபஞ்சமும் அதிலிருந்து
பூமியும், பூமியில் உயிரினங்களும், இயற்கையும் தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டு
மாற்றம் அடைந்து வந்தன. இன்றும் இந்நியதி தொடர்வதுடன் எதிர் காலத்திலும் இவ்
இயக்கப் போக்கானது சர்வ வியாபகமான நியதியாகவே இருக்கும். அத்துடன் அந்தவிதி மேலும்
வளர்ச்சி பெற்று புதியனவற்றைத் தன்னுள் இணைத்துக் கொள்ளச்
செய்யும்.
உயிரினங்களில் ஒரு பிரிவான விலங்கினம் தனது வளர்ச்சிப் போக்கில்
பரிணாம மாற்றத்திற்கு உட்பட்டது. மாற்றமடைந்து கொண்டு வளரும் எந்தப் பொருளையும் அது
பரிணாம வளர்ச்சி கண்டு வருகின்றது எனக் கொள்ளலாம். இதன் படி உயிரிகளின் மாற்ற
நிலையினை உயிரிகளின் பரிணாமம் எனக் கூறமுடியும். இப்பரிணாமம் இயற்கைத்தேர்வின்
மூலமே இடம் பெறுகின்றது. இத்தகைய பரிணாம வளர்ச்சிப் போக்கில் சிறப்பினங்கள் தோன்ற
முடியும் என்பதையும் உயிரியல் விஞ்ஞானிகள் தமது ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள்ளனர்.
உயிரினங்களின் தோற்றமும் அவற்றின் பரிணாம வளர்ச்சியும் பல நூறு லட்சம் வருடங்களாக
இப் பூமியில் இடம் பெற்று வந்துள்ளமையை நோக்கும் போது உயிரிகளின் ஒரு பிரிவான
விலங்கினத்தில் இருந்து மனிதர் தோற்றம் பெற்றனர் என்பது மட்டுமல்லாது மனிதப்
பரிணாமம் என்பது தொடரவே செய்யும். இயற்கைத் தேர்வின் மூலம் இடம் பெறும் பரிணாம
வளர்ச்சியானது மனித குல வளர்ச்சியை அடுத்த நூறு லட்ச ஆண்;டுகளின் பின் எந்த
நிலையில் வைக்கும் அல்லது எவ்வகையான மனிதராக பரிணாமம் பெறுவார்கள் என்று
கூறிவிடமுடியாது. ஆனால் நிச்சயம் இன்றிருக்கும் மனிதராக இருக்க மாட்டார்கள் என்பது
மட்டும் உறுதியானதாகும். மேலும் சிறப்புத் தன்மை பெற்றவர்களாக சில உறுப்புக்கள்
மறைந்தோ அன்றி புதியன தோற்றம் பெற்றோ இருக்க மாட்டாது என்றும் கூறமுடியாது. ஏனெனில்
உயிரின மனிதப் பரிணாம வளர்ச்சியின் வரலாறு அதனையே நமக்குமுன் நிறுத்திக்
காட்டுகிறது. அடுத்து மனிதரின் தோற்றம் பற்றி நோக்குவோம்.
மனிதர்கள்
உருவாகினர்
4
மனிதர்களின் தோற்றம் பற்றி கடந்த நூற்றாண்டில் மிக விரிவாக
எடுத்து விளக்கியவர் சார்ல்ஸ் டார்வினேயாவார். அவர் விலங்கியலின் பல்வேறு
பிரிவுகளையும் ஆராய்ந்து சிமிடே (ளுiஅனைந) என்ற வகை விலங்குகளே இரு கிளைகளாகப்
பரிணமித்தன என்றார். அதில் ஒன்று புது உலகக் குரங்குகளையும் மற்றையது பழைய உலகக்
குரங்குகளையும் தோற்றுவித்தது என்றும், இப்பழைய உலகத்துக் குரங்குகளில் இருந்து
பரிணாமம் பெற்றவர்களே மனிதர்களாவர் எனவும் டார்வின்; நிறுவிக்காட்டினார். அதாவது
விலங்கினங்களின் நீண்ட காலப் பரிணாம வளர்ச்சிப் போக்கில் அவற்றிடையே
சிறப்பினங்களும், கிளைச்சிறப்பினங்களும் தோன்றி வளர்ச்சி பெற்று வந்துள்ளன. அந்த
வகையிலே அகன்ற நாசியுடைய குரங்குகள் புது உலகக் குரங்குகளாகவும் காணப்பட்டன.
கெரில்லா, சிம்பன்ஸி, ஓரன் குட்டான், கிப்பன் போன்றவை தற்காலக் குரங்குகளாகும்.
ஆனால் ஒடுங்கிய நாசியுடைய குரங்கினமே இன்றைய மனிதர்களின் மூதாதையர்களான மனிதக்
குரங்கினமாக விளங்கின என்பது பல்வேறு நாடுகளில் கண்டெடுக்கப்பட்டு ஆய்வுகளுக்கு
உட்படுத்தப்பட்ட குரங்கின உறுப்புகளின் (மண்டை ஓடுகள், பற்கள், எலும்புகள்)
வரலாற்று வளர்ச்சி எடுத்துக் காட்டி நிற்கிறது.
நான்கு கால்கள், ஒடுங்கிய
நாசி, உடல் முழுவதும் அடர்த்தியான ரோமம், காய் கனிகளை உணவாகக் கொண்டமை மரங்களில்
வாழ்ந்தமை, கூட்டமாக இருப்பது என்பன மனிதக் குரங்குகளின் ஆரம்ப காலத் தன்மைகளாயின.
ஆனால் அவற்றின் வளர்ச்சிப் போக்கானது காலம் செல்;லச் செல்ல மாற்றமடைந்து வந்தது.
தமது முன்னம் கால்கள் இரண்டையும்; படிப்படியாகக் கைகளாக மாற்றிக் கொண்டன. தமக்குரிய
காய் கனி உணவுகளைத் தேடும் முயற்சியிலும்;, தேவையின் அவசியத்தாலும் முன்னம் கால்கள்
கைகளாகப் பரிணமித்து வந்தன. இரு கைகளும தமது ஆரம்பகால முக்கியத்துவத்தைப் பெற்றுக்
கொண்டன. அன்றைய உழைப்புக்கு ஏற்றவாறு கைகளின் அமைப்பு முறையிலும் மாற்றம்
ஏற்படலாயிற்று. அதே வேளை பின்னம் கால்களில் எழுந்து நிற்கவும் பழகிக் கொண்டன.
காடுகளில் மரங்களில் வாழ்ந்து வந்த நிலையை விட்டு சமதரைகளில் வாழவும் தம்மை
இசைவித்துக் கொண்டன. வெறும் ஓசையை மட்டும் ஓலி எழுப்பி வந்த நிலையில் மாற்றம்
ஏற்படலாயிற்று. அத்துடன் மூளை வளர்ச்சியானது புதிய கட்டத்தினுள்
பிரவேசித்தது.
மூளை வளர்ச்சிக்கு மற்றொரு காரணமாக அமைந்தது அதன் செயல்களும்
பேச்சு முயற்சிகளுமாகும். இதனால் புலன்களின் வளர்ச்சியும் ஏற்பட்டது. பேச்சின்
முயற்சியால் தாடை எலும்புகளில் மாற்றம் ஏற்பட்டது போல கேட்கும் உறுப்பிலும் மாற்றம்
நிகழ்ந்தது. மொத்தத்தில் உடலமைப்பு முழுவதிலுமே மாற்றங்கள் நிகழ்ந்து வந்தன.
உழைப்பு, பேச்சுறுப்பு, மூளை (மூளை வளர்ச்சிக்கு மாமிச உணவு உட்கொள்ள ஆரம்பித்தமை
மேலும் உந்துதல் அளித்து செழிக்கச் செய்தது) என்பவற்றின் ஒருங்கிணைப்பான வளர்ச்சி
லட்சக் கணக்கான வருடங்களில் மனிதக் குரங்குகளில் இருந்து மனிதர்கள் மேன்மேலும்
வேறுபட்டு வளர்வதற்கு ஏதவாயிற்று. அத்துடன் உணவைத் தேடுவதாலும், அதனை உண்ணும்
முறைமைகளாலும் ஏனைய விலங்குகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்;துக் கொள்ளும்
தேவையினாலும் சிந்திக்கும் ஆற்றலை மனிதர் பெறலாயினர். அதாவது நடைமுறையில் இருந்து
அறிவைத் தேடுவதும் மீண்டும் நடைமுறைக்குச் செல்வதும் மீண்டும் அறிவைப் பகுத்தறிவாக
மாற்றிக் கொள்ளும் போக்கும் மனிதர்களிடையே தொடர் நிகழ்வாகியதன் மூலம் மனிதர்கள்
தமது ஆரம்ப நிலையை எடுத்து முற்றிலும் புதிய வகையாகிக் கொண்டனா. உழைப்புச் செயல்,
பேச்சுத் திறன், மூளைவளர்ச்சி ஆகிய அடிப்படையம்சங்களில் மனிதர் புதிய நிலைக்குப்
பரிணாமம் பெற்றனர். உடலமைப்பாலும் சிந்திக்கும் திறனாலும் மாற்றங்கள் காணப்பெற்று
கூட்டம் கூட்டமாக வாழும் மனிதக் கூட்டத்தினராக மாற்றம் பெற்றனர். இவர்கள்
இயற்கையோடும் சக விலங்கினங்களோடும் சதா போராடியே தம்மைத் தற்காத்துக் கொண்டனர்.
இதனால் பல லட்சம் ஆண்டுகளின் வளர்ச்சியாக - ஆரம்பகால மனித சமூகமாகிக் கொள்ளும்
நிலையை அடைந்தனர்.
இவ்வாறு மனிதக் குரங்குகளில் இருந்து மனிதர்கள்
தோன்றினார்கள் என்று எடுத்துக் காட்டும் போது இவ்விரண்டு நிலைகளுக்குமிடையே பல
வகைப் பரிணாம வளர்ச்சி நீண்டகால இடைவெளியில் இடம் பெற்று வந்துள்ளமையை கவனத்தில்
கொள்ளல் வேண்டும். மனிதக் குரங்கும், குரங்கு மனிதனும், மனிதனும் பல வகைப்பட்ட
நிலையில் வளர்ச்சி பெற்று வந்துள்ளமையை பல்வேறு ஆய்வாளர்கள் தொடராக எடுத்துக்
காட்டியுள்ளனர்.
மனிதக் குரங்கில் இருந்து தோன்றிய மனிதர்களையும் அவர்கள்
வாழ்ந்த காலங்களையும் விஞ்ஞானிகள் இது வரை கிடைத்த பாறைப் படிமங்களின் ஆதாரங்களைக்
கொண்டு கணித்துள்ளார்கள். சின்ஜான்த்ரோப்பஸ், ஆஸ்ட்ரலோபித்திகள் மனிதர் (6 25, 000
ஆண்டுகளுக்கு முன்) மெகான்த்ரோப்பஸ் மனிதர் (4, 25, 000 ஆண்டுகளுக்கு முன்) ஜீவா
மனிதர் (3, 50, 000 ஆண்டுகளுக்கு முன்) பீக்கிங் மனிதர் (2,25,000 ஆண்டுகளுக்கு
முன்) நியாண்டர்த்தலர் மனிதர் (80, 000 ஆண்டுகளுக்கு முன்) குரோமன்யான் மனிதர்
(10,000 ஆண்டுகளுக்கு முன்) மேலும் ரொட்சிய மனிதர், ஆரிக்நேசிய மனிதர்
போன்றவர்களின் உடலுறுப்புத் தடையங்கள் அவர்களது காலங்களை வரையறுத்துக்
கூறுகின்றன.
உலகம் பூராகவும் உள்ள மனிதர்களின் மூலச் சிறப்பினமாக ஹோமோ
சாம்பியன் (ர்ழஅழ ளுயிநைn) என்பது கொள்ளப்படுகிறது. இச்சிறப்பினத்தினுள் புவியின்
சிதோஷண நிலைக்கும் மண்ணியல் வளம் மற்றும் இயற்கை சூழலுக்கும் ஏற்ப
உட்சிறப்பினங்களாக மனிதர் வளர்ச்சி கண்டனர். அதவே குலங்களாகவும் இனங்களாகவும்
காணப்படுவதன் அடிப்படையாகும். இக்குல இனப் பிரிவினரை ஆறு பிரிவினராக பிரித்துக்
காட்டப்படுகிறது. (1) நீக்ரோக்கள் (2) புஸ்மான்கள் (3) காக்க சாயிகள் (4)
மங்கோலியர் (5) பொலினிசியர்கள் (6) ஆஸ்திரேலியர்கள். இவ்ஆறு வகையினரில் நீக்ரோக்கள்
காக்க சாயிகள், மங்கோலியர்கள் என்போர் மொத்த உலக சனத்தொகையில் பெருன்பாலானவர்களாக
உள்ளனர். தென் ஆசியாவிலும், இந்திய உபகண்டப் பகுதிகளிலும் வாழும் மக்கள் காக்க சாயி
குல இனப் பிரிவினரின் வழித் தோன்றல்களேயாகும்.
மேற்கூறிய மனிதப் பிரிவினரின்
உடல் உருவத் தோற்றங்கள், நிறங்கள் அங்க அடையாள வித்தியாசங்கள் என்பன அவர்கள்
வாழ்ந்த பூமிப் பிரதேசங்களின் வெட்ப தட்ப சூழ்நிலைகளுக்கு ஏற்பவே அமைந்திருந்தன.
அதிக வெப்பத்தைப் பெற்ற பிரதேசங்களில் வாழ்ந்த மனிதர் கறுப்பு நிறத்தையும் அதிக
குளிர்ப் பிரதேசங்களின் மக்கள் வெள்ளை நிறத்தையும் பெறலாயினர். அதே போன்றே மஞ்சள்,
சிகப்பு, பொதுநிறம் போன்றவற்றைப் பெறலாயினர். இவ்வாறே வௌ;வேறு மொழிகளின் தோற்றமும்
உலகில் வேறுபட்டனவாக வளர்ச்சி பெற்று வந்ததுடன் கலாச்சாரமும் வௌ;வேறு பட்டவையாக
மனிதர்களால் வளர்த்ததெடுக்கப்பட்டது.
இவ்வாறு மனிதர்களின் தோற்றத்துடன்
உருவாகிய மனித சமூக வாழ்வு பற்றி உலகில் பல்வேறு அய்வுகள் இடம் பெற்று வந்துள்ளன.
அவை பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் அதிக முக்கியத்துவம் கொண்டவையாக
அமைந்தன. அவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்ற சமூக விஞ்ஞானத் தத்துவமாகத் தோற்றம்
பெற்றதே மார்க்சியமாகும். மார்க்ஸ் என்ற மாமேதையாலும் அவரது நண்பரான ஏங்கல்சும்
இம்மார்க்சிய தத்தவத்தை தெளிவான விஞ்ஞான அடிப்படையில் உருவாக்கி முன்வைத்தனர்.
இயங்கியல் பொருள் முதல்வாத அடிப்படையில் மனித சமூக வாழ்வை வரலாற்று வளர்ச்சி ஊடே
ஆராய்ந்து சமூக வாழ்வியக்கத்தின் பல்வேறு கூறுகளையும் நடைமுறை ரீதியாக
விளக்கியதுடன் முழு மனித குலத்தின் மேம்பாட்டிற்குமான ஓர் மார்க்கத்தையும் முன்
வைத்தனர். இம் மார்க்சிச தத்துவத்தின் அடிப்படையாக விளங்கும் இயங்கியல் பொருள்
முதல்வாதம் என்பது பற்றி அடுத்துக் காண்போம்.
சமூக விஞ்ஞானக்
கண்ணோட்டம்
5
உலகின் பல்வேறு துறைகளில் விஞ்ஞான ஆய்வுகளும்,
வளர்ச்சிகளும், முடிவுகளும் உருவாகியமை போன்றே மனித சமூக வாழ்வுத் துறையிலும்
விஞ்ஞானக் கண்ணோட்டங்களும், முடிவுகளும் இடம் பெற்று வந்துள்ளன. உலகம், இயற்கை,
உயிரினங்கள், மனிதர் சமூக வாழ்வு பற்றிய பல்வேறு தத்துவங்கள் காலத்துக்குக்காலம்
முன் வைக்கப்பட்டு வந்தன. இத்தத்துவ விசாரணைகளில் ஈடுபட்டவர்களில் கிரேக்க தத்துவ
ஞானிகள் முதன்மையானவர்கள். அதே போன்று கிழக்குலகிலே வாழ்ந்தபல ஞானிகளும் பல்வேறு
தத்துவங்களை உருவாக்கினர், இவர்கள் அனைவரினதும் தத்துவ நோக்குகளில் அடிப்படை
நோக்குகளாக இரண்டினைக் குறிப்பிட முடியும். ஒன்று கருத்து முதல்வாத தத்துவ நோக்கு,
இரண்டாவது பொருள் முதல்வாத தத்துவ நோக்கு என்பதாகும். பெரும்பாலானவர்களின்
நோக்குகளும், விளக்கங்களும் முதல் வகையைச் சார்ந்தே அமைந்திருந்தன. அதே வேளை
குறிப்பிடத்தக்கவர்களின் நோக்கில் இரண்டாவது வகையைச் சார்ந்த பொருள் முதல் வாத
நோக்கு செறிந்து காணப்பட்டது. மேற்கிலே பொருள் முதல்வாத நோக்கினைக் கொண்ருந்த
கிரேக்க தத்துவ ஞானிகளான தேல்ஸ், டெமாகிரட்ஸ், அனக்ஸ, கோராஸ் போன்றவர்களும்
கிழக்கிலே இந்தியத் தத்துவ ஞானிகளான கபிலமுனிவர், கணாதமுனிவர், கௌதம புத்தர்,
வர்த்தமான மஹாவீரர் போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்களாகத்
திகழ்ந்தனர்.
இவ்வாறு மேற்குலகில் வாழ்ந்த தத்துவ ஞானிகளின் பொருள் முதல்வாத
நோக்கு பின் வந்தவர்களால் முன்னெடுத்து வளர்க்கப்பட்டது. அதன் வழியிலே ஜெர்மன்
தத்துவாசிரியரான ஹெகல் (1770 - 1881) முக்கியமானவராவார். அவரிடம் இருந்தே கார்ரஸ்
மார்க்சும் பிரடிக்ஸ் ஏங்கல்சும் பொருள் முதல் வாதத்தை தெளிவான இயங்கியல் பொருள்
முதல் வாதமாக வளர்த்தெடுத்து சமூக விஞ்ஞானத்துறையில் மாபெரும் புரட்சிகர விஞ்ஞானத்
தத்துவமாக மார்க்சிசத்தை தோற்றுவித்தனர். அதேவேளை கிழக்குலகில் தோற்றுவிக்கப்பட்ட
பொருள் முதல் வாத தத்துவ நோக்குகள் வளர்த்தெடுத்து முன்னெடுக்கப்படுவதற்குப் பதிலாக
மீண்டும் மீPண்டும் கருத்து முதல் வாத ஆதிக்கத்தின் மூலம் அமுக்கப்பட்டது.
முன்னவர்களிடம் இருந்து பெற்ற கௌதம புத்தரின் பொருள் முதல் வாதத் தத்துவம் பின்
வந்தவர்களால் முற்றாகத் திரிக்கப்பட்டு இறுதியில் அவர் கடவுள் ஆக்கப்பட்டார். அதே
போன்று ஏனையவர்களும் மதவாதிகளாக மாற்றப்பட்டு அவர்களது பொருள் முதல் வாத
சிந்தனைகளும் தத்துவங்களும் சீரழிக்கப்பட்டு சிதைவுகளுக்கு ஆளாக்கப்பட்டன. இந்திய
தத்துவ மரபில் தோற்றம் பெற்ற பொருள் முதல்வாத சிந்தனைகள் திட்டமிட்ட வகையில்
அழிக்கப்பட்டன என்று கூறுவது மிகையாகாது.
ஆனால் மேற்கிலே பொருள் முதல் வாதம்
கருத்து முதல் வாதத்துடன் போராடித் தனது நிலையை விரிவுபடுத்தி வலுவாக்கிக் கொண்டது.
இயங்கியல் பொருள் முதல் வாதம் என்ற இத்தத்துவ ஒளியில்தான் மார்க்கம் ஏங்கல்சும்
மனித சமூக வளர்ச்சியை வரலாற்று வழியில் தெளிவாக ஆராய்ந்து பெறுமதி மிக்க முடிவுகளை
வெளியிட்டனர். இச் சமூக விஞ்ஞானக் கண்டு பிடிப்பானது மனித குல வரலாற்றில் மகத்தான
பங்களிப்பாகியது. அவர்களது தத்துவ நோக்கு மார்க்சிச உலகக் கண்ணோட்டம் என்பதாகியது.
இதன் அடிப்படையில் கருத்து முதல்வாத, பொருள் முதல் வாத நோக்குகளை கண்டு
கொள்வோம்.
கருத்து முதல் வாதம் இவ்வுலகை இரண்டு வகையாகப் பிரிக்கின்றது.
ஒன்று கருத்தியல் உலகம், இரண்டாவது பொருளியல் உலகம். இக் கருத்தியல் உலகம் தான்
முதன்மையானது எனக் கொள்கிறது. அதாவது கருத்து என்பது மனித மனத்தின் விளை பொருளே
அன்றி பௌதீPகப் பொருட்களின் பிரதிபலிப்பு அல்ல என்றே வற்புறுத்துகிறது. அதேவேளை
பொருளியல் உலகு என்பது வெறும்மாயை என்றும் மனத்தினால்-கருத்தினால் உருவாக்கப்பட்ட
ஒரு பொய்த் தோற்றம் மட்டும் தான் எனக் கூறுகின்றது. எல்லா வகைப் பொருட்களும் கடவுள்
மூலமான கருத்துக்களைச் சார்ந்திருந்து அவற்றினால் தீர்மானிக்கப்படுகின்றன எனக்
கருத்து முதல் வாதம் கருதுகின்றது. இதன் வழியாக ~உலகம் மாயம் இந்த வாழ்வே மாயம்|
எனக் கூறி கடவுள் தான் ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெரும் சோதி எனக் கொள்கிறது.
மனிதரின் சிந்தனை செயல் அனைத்தையும் இயக்குவிப்பது கடவுள் என்று கொள்ளப்படுகிறது.
ஆன்மா அழிவற்றது. உடல் மட்டுமே அழியக் கூடியது என்று கூறி மறுபிறப்பு, மறுஉலகம்
என்பவற்றை வற்புறுத்துகின்றது. எனவே கருத்தை - எண்ணத்தை - மனத்தை முதன்மையாகக்
கொண்டு கடவுள் என்னும் மதக் கருத்தினை வலியுறுத்தும் போக்கையே கருத்து முதல் வாதம்
முதன்மைப்படுத்துகின்றது. இத் தத்துவத்தின் வாயிலாகவே உலகம், இயற்கை, மனிதர், சமூக
வாழ்வு அனைத்தையும் விஞ்ஞானப் பார்வைக்கு விரோதமானதாக வற்;புறுத்துகின்றது.
மனிதர்களால் அறியப்பட முடியாதவற்றை பின்பு ஒருக்கால் அறியப்பட முடியும்; என்று
கொள்வதற்குப் பதிலாக அவற்றை கடவுளின் பாற்பட்டது என இலகுவாகவே கருத்து முதல் வாதத்
தத்துவ நோக்கு பழமை வாய்ந்த கடவுள் - மதம் நம்பிக்கைகள் என்பனவற்றின் பேரால்
இன்றும் பல்வேறு நாடுகளின் மக்கள் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சாராம்சத்தில் கருத்து முதல் வாதம் மதவாத அணுகு முறையையும் மூட நம்பிக்கைகளையும்,
புதிர்த் தன்மை கொண்ட நம்பகத்தன்மைகளுக்கு அப்பாற்பட்டவையாகவும்; திகழ்ந்து
வருகின்றது.
கருத்து முதல் வாதத்தைப் பின்வரும் அம்சங்களில்
சாராம்சமாகத்
தொகுத்துக் கூற முடியும்;.
~~பொருளியல் உலகு, கருத்தியல் உலகைச்
சார்ந்துள்ளது எனக் கருத்து முதல் வாதம் உறுதியிட்டுக்
கூறுகிறது||
~~பொருளிலிருந்து தனித்தே சிந்தனை அல்லது கருத்து இருக்க இயலும்
என்றும் அப்படித்தான் இருக்கிறது என்றும் கருத்து முதல் வாதம் வற்புறுத்துகிறது.
பொருள் என்பதே கிடையாது என்றும் அது முழுமையான மாயை என்றும் உறுதியிட்டுக்
கூறுகிறது||
அறிவுக்குப் புலப்படாத வகையில் புதிரானவை உள்ளன என்றும்,
அறியவெண்ணாதவை உள்ளன என்றும், புலன்உணர்தல், அனுபவம், அறிவியல் ஆகியவற்றினால்
உணரப்பட்டதும் அறியப்பட்டதுமானவற்றுக்கும் ~~அப்பாற்பட்டு|| அல்லது ~~அவற்றைக்
கடந்தும்|| விடயங்கள் உள்ளன எனக் கருத்து முதல்வாதம் உறுதியிட்டுக்
கூறுகின்றது.
இக் கருத்து முதல் வாதத் தத்துவ நோக்கு மனித சமூக வளர்ச்சியோடு
இணைந்து வளர்ந்து வந்தமை போன்றே அதற்கு எதிரான தத்துவப் போக்காக பொருள் முதல் வாத
நோக்கு தோன்றி வளர்ந்து வந்துள்ளது. பொருள் முதல் வாதம் என்பது உலகம், இயற்கை,
மனிதர், பொருட்கள் அனைத்தையும் முதன்மையாகக் கொண்டு அவற்றில் இருந்தே கருத்து
உருவாகின்றது எனக் கொள்கிறது. அதாவது பொருட்கள் இன்றி அவற்றின் பிரதி பலிப்பான
கருத்து மனதில் தோன்ற முடியாது. கருத்து என்பது பொருட்கள் அற்ற சூனியத்தில் இருந்து
உருவாக முடியாது என்பதை பொருள் முதல் வாதம் அடிப்படையாக வற்புறுத்துகி;ன்றது.
அதாவது பொருளியல் உலகைச் சார்ந்த அம்சங்களின் வழியே நாம் பரிசோதித்து அறியக் கூடிய,
உணர்ந்து கொள்ள முடிகிற கட்டுப்படுத்தக் கூடிய அம்சங்களின் வழியே விளக்கத்தைத்தேடப்
பொருள் முதல் வாதம் முயல்கிறது. அதாவது மனிதரின் சமூக வாழ்வே அவர்களது சிந்தனையை
நிர்ணயிக்கின்றது என்பதன் வாயிலாக கருத்து என்பது உலக வாழ்வியலில் இருந்து
உருவாகிறதே அன்றி அதற்கு அப்பால் அல்ல என்பதைப் பொருள் முதல் வாதம்
நிறுவுகிறது.
பொருள் முதல் வாதத்தின் மூன்று அடிப்படை
அம்சங்களைக் கீழ்
வருமாறு காணமுடியும்
~~உலகம் என்பது அதன் இயல்பிலேயே பொருளியல் தன்மை
கொண்டதெனப் பொருள் முதல் வாதம் எடுத்துக் காட்டுகிறது. இருப்பில் உள்ள அனைத்தும்
பொருள் காரணங்களின் அடிப்படையில் தமது இயல்பான தன்மையையும்; உறுதிப்படுத்துகின்றன
என்றும், பொருளின் இயக்க விதிகளுக்குட்பட்டு அவை எழுகின்றன என்றும்;
வளர்ச்சியுறுகின்றன என்றும் விளக்குகின்றது.||
~~சிந்தனைக்கு வெளிப்புறத்திலும்
அதற்குச் சுயேட்சையாகவும் புறநிலை யதார்த்தத்தில் இருக்கும் ஒன்றாகப் பொருள்
இருக்கிறது எனப் பொருள் முதல் வாதம் கூறுகிறது. பொருளியல் இருப்பிலிருந்து சிந்தனை
தனியே இருக்கிறது என்பதற்கு மாறாக அனைத்து வகைச் சிந்தனை அல்லது கருத்தியல்
படைப்புக்கள் எல்லாம் பொருளியல் இயக்கப் போக்குகளின் படைப்புகள் எனப் பொருள் முதல்
வாதம் எடுத்துக் கூறுகிறது.
~~உலகமும் அதன் விதிகளும் முழுமையாக அறியப்படக்
கூடியவை என்றும் இதுவரை பெரும் பகுதி அறியப்படாதவையாக இருப்பினும் இயல்பிலேயே
அறியப்பட முடியாதவை என்று எதுவுமே இல்லை எனப் பொருள் முதல் வாதம்
கூறுகிறது.||
இவ்வாறு பொருள் முதல் வாதம், கருத்து முதல் வாதத்தின்
பொய்மையையும் ஏமாற்றுத் தனத்தையும் ஆதார பூர்வமான விஞ்ஞான வழி முறைகளில்
நிராகரித்து தனது உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்கிறது. அது தனியே அன்றி
இயங்கியலுடன் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் மேலும் ஆற்றலும், முழுமையும்
கொண்டதாகியது. அவ்வியங்கியல் என்பது பற்றி மார்க்சிச நோக்கில் சிறிது விளங்கிக்
கொள்வது அவசியமானதாகும்.
இப்பிரபஞ்சம் உலகம் இயற்கை அனைத்திலும் உள்ள சகல
பொருட்களின் இயக்கத்தையும் பரஸ்பர தொடர்புகளையும் புரிந்து கொள்வதையே இயங்கியல்
கோட்பாடு முன்னிறுத்துகின்றது. ஒவ்வொரு பொருளினதும் இயக்கம், வளர்ச்சி போன்றவற்றை
விவாதித்து தர்க்கித்து அதன் சாரம்சமான உண்மைகளைத் தேடிக்கொள்வதை இயங்கியல்
வற்புறுத்துகிறது. பண்டைய கிரேக்க தத்துவ ஞானியான சோக்கிரடீஸ் எதையும் ஏன்? எப்படி?
எதற்காக? என்பன போன்ற கேள்விகளுக்கு உட்படுத்தி விவாதிப்பதன் மூலமே உண்மைகளைக்
கண்டறிய முடியும் எனக் கூறினார். விவாதம் அல்லது தர்க்கம் என்பதினைக் குறிக்கும்
கிரேக்கச் சொல்லான (னுயைடநபழ) என்பதிலிருந்தே (னுயைடநநவநைள) என்னும் ஆங்கிலச் சொல்
உருவாகியதாகும். இந்திய தத்தவ ஞானமரபிலும் நியாயம் அதாவது தர்க்கம் என்பதன் ஊடாக
உண்மைகளைக் கண்டறியும் பொருள் முதல் வாதப் பார்வை கணாத முனிவரினால்
முன்வைக்கப்பட்டது என்பதும் கவனத்திற்குரியதாகும். இத்தகைய இயங்கியல் கோட்பாட்டை
மார்க்சும் ஏங்கல்சும் மேலும் விஞ்ஞான பூர்வமாகச்செழுமைப் படுத்திக் கொண்டனர்.
உலக இயற்கை, உயிரினங்கள், மனிதர், சமூக வாழ்வு அனைத்துமே சதா இயங்கிக்
கொண்டும், மாற்றமடைந்து கொண்டும் இருக்கின்றன. இவ்வியக்கப் போக்கு என்பது ஒவ்வொரு
பொருட்களிலும் அடங்கி இருக்கும் முரண்பாடு கொண்ட எதிர் நிலை சக்திகளுக்கிடையிலான
போராட்டத்தின் மூலமே இடம் பெறுகின்றது. இம் முரண்பாடும் போராட்டமும் சர்வவியாபகமாகி
இருப்பதன் காரணமாகவே இயக்கம் இடம் பெறுவதுடன் வளர்ச்சி, மாற்றம், பழையன சிதைந்து
புதியன தோன்றுதல் என்னும் தொடர் நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. இவ்வாறு முரண்பட்ட
சக்திகளின் போராட்டம் உள்ள அதே வேளை அவற்றிடையே ஒற்றுமையும் நிலவச் செய்வதையும்
காணலாம். இவ் முரண்பட்ட எதிர் நிலை சக்திகள் ஒன்றை ஒன்று நிராகரித்துச் செல்லாது
உடனிருந்தே தமது போராட்டத்தை நடாத்தி வருவதையும் காண முடியும். ஒரு பொருளின்
இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும், மாற்றத்;திற்கும் அதற்குள் அடங்கி நிற்கும் எதிர்
நிலை சக்திகளின் உள் முரண்பாடும் போராட்டமும் தான் அடிப்படையானதாக இருக்கும்.
அதேவேளை வெளிப்புறத் தாக்கமும் ஒரு காரணமாகின்றது. உதாரணமாக ஒரு கோழி முட்டை
அடைகாக்கப்படும் போது அதன் உட்கருவில் உள்ள ஆண் பெண் விந்துகளே முரண்பட்ட எதிர்நிலை
சக்திகளாக இருக்கும். அதே வேளை குறிப்பிட்டளவு வெப்பம் வெளியில் இருந்து கிடைக்கப்
பெறுவதாலேயே முட்டை குஞ்சாக மாற்றமடைகின்றது. இவ்வாறு நாம் அறிய முடிந்த ஒவ்வொன்றை
எடுத்து நோக்கினும் ஒன்றை ஒன்று எதிர்த்து நிற்கும் எதிர்நிலை சக்திகளை இனம் காண
முடியும். பௌதீகவியல், இரசாயனவியல், தாவரவியல் போன்ற அனைத்திலும் முரண்பட்ட
எதிர்நிலைகளை அடையாளம் காணமுடியும்.
முரண்பட்ட எதிர்நிலை சக்திகளின்
போராட்டம் என்பது முழுமையானதாகவும் ஒற்றுமை என்பது நிபந்தனைக்குட்பட்டதாகவும்
விளங்கும் அதே வேளை எந்த ஒரு பொருளும் ஏனைய பொருட்களுடன் பரஸ்பரத் தொடர்புடையதாகவே
விளங்கி வருகின்றமை கவனத்திற்குரியதாகும். அத்தகைய தொடர்பு இன்றி எந்தப் பொருளும்
தனது இயக்கத்தையோ அன்றி வளர்ச்சி மாற்றத்தையோ பெற்றுக் கொள்ள முடியாது என்பதும்;
விதியாகின்றது.
இயங்கியலின் மற்றொரு விதி தனது இயக்கப்போக்கில் அளவு
குணாம்சமாக மாறும் தன்மையாகும். எதிர்நிலைகளின் போராட்டத்தில் இயக்கம் ஏற்படும்
போது அளவில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த அளவு வளர்ச்சியை ஏற்படுத்தி ஒரு குறிப்பிட்ட
கட்டம் வந்ததும் அளவு குணாம்சமாக மாற்றமடைந்து புதியன தோன்றுகின்றன. முன் கூறிய
முட்டை அடையிடுதலையே உதாரணமாக கொள்ள முடியும். இருபத்தியொரு நாட்களின் பின் முட்டை
குஞ்சாக மாற்றம் பெறுவது மேற்கூறிய விதி வழியிலேயேயாகும். அதேபோன்று நீரைச்
சூடாக்கும் போது குறிப்பிட்ட நேரத்தின் பின் நீராவியாகும் தன்மை அளவு குணாம்சமாக
மாறுவதன் மற்றதோர் உதாரணமாகும்.
இவ்வளர்ச்சிப் போக்கின் ஒவ்வொரு
கட்டத்திலும் பழைய நிலை மறுக்கப்பட்டு புதிய நிலை தோற்றுவிக்கப்படுகிறது. அடுத்த
கட்டத்திலும் அதன் பழைய நிலை மறுக்கப்பட்டு புதியநிலை தோற்றம் பெறுகிறது. ஆனால்
அவற்றுக்கிடையிலான இடைத் தொடர்பு முற்றாக அறுபடுவதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று
தோன்றும் போது பழைய நிலையை விட மேம்பட்டதாகவே புதிய நிலை உருவாக்கப்படுகிறது. எனவே
நிலை மறுப்பின் நிலை மறுப்பு என்ற விதி செயலாற்றும் போது புதிய கட்ட வளர்ச்சி
என்பது அங்கே எய்தப்படும் நிலை தோன்றுகின்றது. இதுவும் இயங்கியல் போக்கின் ஓர்
அம்சமாகும்.
இவ்வாறு இயங்கியலையும் பொருள் முதல் வாதத்தையும் ஒன்றிணைத்து
முற்றிலும் விஞ்ஞான அடிப்படை கொண்ட தத்துவ நோக்கினை உருவாக்கிக் கொண்ட மார்க்ஸ்,
ஏங்கல்ஸ் ஆகிய இருவரும் அதன் ஊடே மனித சமூக வளர்ச்சியின் வரலாற்றை ஆய்வுக்கு
உட்படுத்திக் கொண்டனர். தமது புகழ்மிக்க வரலாற்றுப் பொருள் முதல் வாத நோக்கின் ஊடாக
மனித சமூகத்தின் வளர்ச்சிக் கட்டங்களை பகுத்துக் கொண்டனர். சார்ள்ஸ்டார்வின்
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி விதிகளைக் கண்டுபிடித்து மனிதரின் தோற்றத்தை
தெளிவுடன் முன் நிறுத்திக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக மார்க்கம், ஏங்கல்சும்
மனிதரின் தோற்றத்துடன் ஆரம்பித்த மனித குல வரலாற்றின் வளர்ச்சிக் கட்டங்களை தக்க
சான்றுகளுடன் வரலாற்றுப் பொருள் முதல்வாத நோக்கில் பகுப்பாய்வு செய்து கொண்டனர்.
இவ்வாய்வுக்கு இயங்கியல் பொருள் முதல் வாத அடிப்படை விதிகளையே அவர்கள்
பயன்படுத்திக் கொண்டனர்.
மனித சமூக வரலாற்றின் வளர்ச்சிப் படிகள்
குறிப்பிட்ட சில விதிகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு கட்டமாக வளர்ச்சி பெற்று
வந்துள்ளமையைத் துல்லியமாக எடுத்து விளக்கிய அவர்கள் நிகழ்காலப் போக்கின் ஊடே எதிர்
காலத்தின் வளர் திசையையும் சுட்டிக் காட்டினார்கள். இதனை அடுத்து வரும் பக்கங்களில்
நோக்குவோம்.
ஆரம்பகால மனிதர்கள்
6
நமது ஆதிகால மூதாதையர்களான ஆரம்பகால
மனிதர்களின் தொடக்க காலத்தை பின்நோக்கி, பல லட்சம் வருடங்களுக்கு முன்
நோக்குவோமாயின் நம்புவதற்கு சிரமமான ஒரு வாழ்வு முறையில் இருந்து மனித குலம்
வளர்ச்சி பெற்று வந்த வரலாற்றைக் கண்டு கொள்ள முடியும். இவ் ஆரம்பகால மனிதர்களின்
வாழ்வு முறையை ஆராய்ந்து தொகுத்தளித்தவர்களில் கடந்த நூற்றாண்டைச் சேர்ந்த லூவிஸ்
எச் மார்கன் (1818 - 1881) பாகோபென் யோன்யாக்கப் (1818 - 1887) ஆகியோர்
முக்கியமானவர்கள். அவர்களது ஆய்வுகளை அடிப்படையாகக் கெண்டெ கார்ஸ் மார்க்ஸ் (1818 -
1883) பிரெட்றிக் ஏங்கல்ஸ் (1818 - 1895) ஆகியோர் மனித குலத்தின் சமூக வளர்ச்சிக்
கட்டங்களை தமது வரலாற்றுப் பொருள் முதல் வாத கண்ணோட்டத்தின் ஊடேவகுத்து
அளித்தனர்.
ஆரம்ப கால மனிதர்களின் வாழ்வையும் அவர்களது வளர்ச்சிக்
கட்டங்களையும் மூன்று முக்கிய கட்டங்களாகப் பிரித்துக்கொள்ள முடிந்தது. 1.
காட்டுமிராண்டி நிலை, 2. அநாகரிக நிலை 3. நாகரீக நிலை. இவற்றின் ஒவ்வொன்றின் உப
பிரிவாக கடைக்கட்டம், இடைக்கட்டம், தலைக்கட்டம் எனவும் வகுத்துக்
காட்டப்பட்டது.
காட்டு மிராண்டி நிலையின் கடைக் கட்டம் எனக் கூறப்படும்
நிலையானது மனிதக் குரங்குகளிலிருந்து மனிதர்களாக மாறிய ஆரம்ப கட்டத்தையே
குறிக்கின்றது. மனிதர்கள் உஷ்ணப் பிரதேசங்களில் அல்லது அரை உஷ்ணப் பிரதேசங்களில்
அல்லது அரை உஷ்ணவலயக் காடுகளில் தான் தமது ஆரம்ப வசிப்பிடங்களைக் கொண்டிருந்தனர்.
மனிதர்களைக் கொன்று இரையாக்கும் கொடிய மிருகங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள
அவர்கள் அதிகளவுக்கு மரங்களில் தான் வசித்து வந்தார்கள். காய், கனிகள், விதைகள்,
கிழங்குகள் தான் அவர்களின் உணவாக விளங்கின. இந் நிலை பல்லாயிரக் கணக்கான வருடங்களாக
நீடித்து வந்தன. இக்கால கட்டத்தில் மனிதர்கள் அடைந்த ஒரே முன்னேற்றமும், சாதனையும்
யாதெனில் ஓசைச்சீPருள்ள பேச்சு அமையப் பெற்றதுதான். அத்தகைய பேச்சு அல்லது மொழி
என்பதன் ஆரம்ப கட்டத்;தை இன்றுள்ள பேச்சுடன் எவ்வகையிலும் ஒப்பிட முடியாது. சைகைகள்
காட்டி வந்த மனிதரின் தாடை எலும்புகள் ஓசைச் சீருள்ள பேச்சு உருவாகுவதற்கு ஏற்ப
மாற்றமடைந்த பல ஆயிரம் வருட நடைமுறையாவ பேச்சுத் திறனை தமது ஆரம்ப நிலையாக
அமைத்துக் கொண்டனர். இந்நிலையில் உடை என்பதோ ஒழுங்கான எந்த நிரந்தர இருப்பிடமோ
அவர்கள் மத்தியில் இருக்கவில்லை.
மேற்கூறிய கடைக் கட்டமானது பல்லாயிரம்
வருடங்கள் கடந்த பின்பே அடுத்து வந்த இடைக் கட்டத்தினுள் மனிதர் பிரவேசித்தனர்.
இக்காலத்தில் மனிதர்கள் நீர் நிலைகளில் உயிர் வாழ்ந்த மீPன், நண்டு, சங்கு
போன்றவற்றை உணவாகக் கொள்ளும் நிலைக்கு வந்தனர். அதே வேளை தீயையும் கண்டு
பிடித்தனர். மீன் உணவும் வேக வைக்கும் தீயின் உபயோகமும் ஒரு புதிய வளர்ச்சியை
தோற்றுவித்தது. இதனால் நதிகளின் வழியாக உலகின் பல்வேறு நிலப்பரப்புகளுக்கும்
அவர்கள் இடம் பெயர்ந்தார்கள். ஒருகுறிப்பிட்ட பிரதேசத்தில் வாழ்ந்த மனிதர்
அதிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகவே புதிய பிரதேசங்களுக்குப் பரவத் தொடங்கினார்.
இக்காலமே பாலியோலிதிக்யுகம் எனக் கூறப்படும் ஆரம்ப கற்காலமாகும். சீர் அமைவு இல்லாத
கரடு முரடு கொண்ட கல்லாயுதங்களும் அவை சார்ந்த கருவிகளும் இக்காலத்துகுரியனவாகும்.
இக் காலத்தில் வேட்டையாடுதல் ஒரு முழுமையான அல்லது நிச்சயமான தொழிலாக இருக்கவில்லை.
உணவுக்கு போதாமை ஏற்பட்ட போதெல்லாம் மனிதர்களையே கொன்று உண்ணும் முறை இக்கால
கட்டத்துக்குரிய ஒன்றேயாகும். இக்கட்டத்தில் இலைகள், மரப்பட்டைகள்
உடைகளாயின.
காட்டு மிராண்டி நிலையின் இறுதிக்கட்டமான தலைக்கட்டத்தில் நீPண்ட
காலத்தில் சேகரிக்கப்பட்ட மனித அனுபவத்தினாலும், புத்திக் கூர்மையாலும் அக்கால
மனிதரினால் அம்பும், வில்லும் நாணும் கண்டு பிடிக்கப்பட்டது. அவை கண்டறியப்பட்டமை
மனித வரலாற்றில் அன்றைய மிகப் பெரும் சாதனையாக அமைந்தது ~~அநாகரீக நிலைக்கு எப்படி
இரும்புவாள் நிர்ணயமான ஆயுதமாக விளங்கியதோ, நாகரீக நிலைக்குத் துப்பாக்கி வகைகள்
எவ்வாறு நிர்ணயமான ஆயுதமாக விளங்கியதோ அது போலவே காட்டுமிராண்டி நிலைக்கு வில்லும்,
அம்பும்நிர்ணயமான ஆயுதமாக விளங்கின.|| (பி. ஏங்கல்ஸ்) அத்துடன் நன்கு
சீரமைக்கப்பட்ட கற்கோசியும், நெருப்பும் கொண்டு மரத்தைக் குடைந்து, ஓடம்;
செய்யப்பட்டதுடன் கைவிரல்களால் துணி நெய்யவும் அவர்களால் முடிந்தது. ஆனால்
மட்பாண்டங்கள் எ