கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகங்களும் முகங்களும்
Page 1
Page 2
Page 3
அகங்களும் முகங்களும்
சு. வில்வரத்தினம்
5%) GalGiful
48. சுய உதவி வீடமைப்புத் திட்டம், குருநகர், யாழ்ப்பாணம்
Page 4
அலை வெளியீடு - 7
ஆவணி 1985
Ahankalum muhankalum (a collection of poems in tami) by su. vivara hthinam. published by alai velliyeedu. cover by a. marku, printed at punitha valan achhakam jaffna, sri lanka.
first edition: august 1985.
சமர்ப்பணம்
எல்லாமும் ஆகி எனதுள்ளும் சொல்லாமல் ஊடுருவி சுருதிப் பொருளாகி பொல்லா வினைகளைந்த ஞானப் புயலே
சொல்லிலே உந்தன் சுவடெழுதும் போதெல்லாம் தோற்றுப்போம் வீழுகிறேன் என்னைத் - தூக்கிவிடு
குருதேவா
நின் தொடுகழலில்
இது சரனே,
Page 5
2.
28.
30.
3.
3.
உள்ளடக்கம்
பதிப்புரை
முன்னுரை
என்னுரை
தியானம்
விடுகலைப் பொழுது
கோடை. மழையின் பொழிவில் நனையும் பொழுதுகள் அகங்களும் முகங்களும்-1 அகங்களும் முகங்களும்-2 வெறும் இறக்கை
வீழ்ச்சி
垩空度虚_*泛
கலப்பு
உராய்வு வெறுங் காற்றில் கலந்திடுமோ. இந்தியாவே நீ எங்கு செல்கிருப்? விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும் விமர்சக விகடங்கள் காற்றுள்ளபோதே.
மின்னியக்கம் எங்கள் வீதியை எமக்கென மீட்போம்
துது சிறகடிப்புகள் என்றும் சிறைப்படா புத்தரின் மெளனம் எடுத்த பேச்சுக்குரல் புது யுகச் சங்கொலி நிலவும் நெகிழ்வும் நிலவுக்கு எழுதல்
பொழிவு
எதிர்ப்பு இடிபாடுகளின்மேல் ஒரு படைவீடு தூரக் கடல் தாண்டி. சுழலின் மையம் தேடி. ஸ்தல புராணம் மீண்டும் உயிர்த்தல் விடுதலை ஒன்றே உடைமையாய்.
பதிப்புரை
நாட்டுப் பாடல், சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம், அரசியல் வர லாறு எனப் பல்வேறு துறைகள் சார்ந்த வெளியீடுகளைத் தொடர்ந்துவரும் இக் கவிதைத் தொகுப்பு, எமது ஏழாவது வெளியீடாகும்.
சமகாலக் கவிஞர்களில் சு. வில்வரத் தினம் முக்கியமான ஒருவர். அகவய மாணவன், புறவயமானவன் எனப் படைப் பாளனைப் ‘பெட்டிகட்டிப் பார்க்க முந் தும் நம் வரட்டு விமர்சகர்கள், இவரிடம் தோல்வியே காணுவர். அரசியல், சமூக, சமய, தன்னுணர்வுத் தளங்க ளிற் காலூன்றி இவரது அனுபவங்கள் கவிதா வெளிப்பாடு கொள்கின்றன. மரபுகளைச் சார்ந்து நவீன உலகினுள் பிரவேசிக் கின்றபோதும் "முகந்திருப்பாது எதையும் எதிர்கொள்கிருர்; மனஞ் சலிக்காது எதிர்ப்பில் முளைகொள்கிருர்". சொல் லாட்சி, புதிய சொற்புனைவு இவரிடம் காணும் தனித்திறன்கள்.
பல்வேறு அம்சங்களால் முக்கியங் கொண்டமையும் இந் நூலினை வெளிக் கொண்டு வருவதில், மகிழ்ச்சியடைகி ருேம்; அதற்கு இசைவுதந்த கவிஞருக்கு எமது நன்றிகள்.
முன்னுரை அளித்த மு. பொ., ஒவி யங்களை வரைந்த திரு. அ. மாற்கு, புனித வளன் அச்சகத்தினர் ஆகியோருக்கும் எமது அன்பு கலந்த நன்றிகள்.
©(ሀ)[ወሐዙ 7... -- N
Page 6
முன்னுரை
" ...... என்னேடு கூடவே இளைய பரம்பரையின் கலைஞனன
சு. வில்வரத்தினமும் இருந்தான்."
(p. 25.
("கலைஞனின் தாகம்’-மெய்யுள்
கலைஞன் சு. வில்வரத்தினத்தின் கவிதைத் தொகு தியைப் படித்தபோது எனக்குள் நேர்ந்த அனுபவம்
சந்தோஷம், ஆச்சரியம், நிறைவு.
நான் எழுதுபவை, எழுத நினைப்பவை என்கின்ற பகைப்புல கணிப்பீடுகளை உள்வாங்காத நிலையில், இன் றைய சமகாலத் தமிழ்க் கவிதைப் பரப்பில் நின்று படித்தபோது எனக்குள் நேர்ந்த அனுபவம் இது. எந்த விதமான எதிர்மன முற்சாய்வுகளுமின்றிப் படிக்கும் எவர்க்கும் வாய்க்கக்கூடிய அனுபவம் இது. புகழ்ச்சி யல்ல.
அதனுல் ஒன்று நிச்சயமாகிறது:
இன்றைய புதிய தலைமுறைக் கவிஞர்களுள் சு. வில் வரத்தினம் தனித்துவம் பெறுகிருர், இத் தனித்துவம் பற்றிய விளக்கம் இவரையொத்த இளந் தலைமுறைக் கவிஞர்களான யேசுராசா, சேரன், ஜெயபாலன், புஷ்ப ராஜன் போன்றவர்களை இவரோடு ஒப்பு நோக்குதலைக் கோருகிறது.
ஆளுல் இச் சிறு முன்னுரையில் அது சாத்தியப் படாததால் இக் கவிதைத் தொகுப்பின் முக்கியத்துவத் துக்குக் காரணமாய் இயங்கு ம் சூக்கும நிலைகளைப் பொதுவாகத் தொட்டுப் பார்ப்பது, இக் கவிதைத் தொகுப்பு எனக்களித்த அனுபவங்களைப் பரீட்சிக்கும் உரைகல்லாக அமையும்.
iii
இவரது சிருஷ்டிகளை ஆத்மார்த்த தளத்துக்கு உரி யவையாகவே நான் காண்கிறேன்.
ஆத்மார்த்த விஷயங்களை வெளிக் கொணரும் ஊடகங்களாகவே ஆதியில் கலை இலக்கியங்கள் தோன் றின. அதாவது மனித இருப்பின் அனுபவங்கள் சில சாதாரண வார்த்தைகளால் சொல்லக்கூடியவையாக வும், சில அப்படிச் சொல்ல முடியாதவையாகவும் நிற் கின்றன. அப்படிச் சொல்லமுடியாத உணர்வுகள் எண் ணங்களைச் சொல்லில் வடித்துக் காட்டும் ஊடகங்களா கவே ஆதியில் கலை இலக்கியங்கள் தோன்றின. ஆத் மீக, தத்துவச் சிந்தனைகளில் பரிச்சயமுள்ளவர்கள் இவற் றை வியவகாரிக, பரமார்த்திக என்ற பிரிவுகளுக்குள் அடக்கிப் பார்க்கக்கூடும். அதாவது வார்த்தைகளில் சொல்லக்கூடிய நடைமுறை விஷயங்களை வியவகாரிக என்றும்; அப்படி முடியாத இறைவன், மனித இருப்பு போன்ற நடைமுறைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை பரமார்த்திக என்றும் கூறலாம். ஆனல் எனது ஆத் மார்த்தத் தளம் இந்தப் பிரிவுக்குட்பட்டதல்ல. வியவ காரிக தளத்திலும் சரி பரமார்த்திக தளத்திலும் சரி நாம் பிறர்க்கு வார்த்தைகளாற் சொல்ல முடியாமல் எம்முள் பதிவுறும் அனுபவங்களின் தளத்தையே, நான் ஆத்மார்த்த தளம் எனக் கருதுகிறேன்,
இறைவன் பற்றி அல்லது நம் இருப்புப்பற்றி எழும் ஆத்மீக விஷயங்கள் வேண்டாம். வெகு சாதாரணமான, மண்ணில் தெறிக்கும் உண்மைகளையே சொல்ல முடியாத அவஸ்தை நமக்கு.
பள்ளிக்கூடத்துக்கு முன்னுல், விபத்தொன்று நேர்ந் ததின் பின்னர் அங்கே தனித்துக் கிடக்கும் ஒரு கால் சப்பாத்து.
வெட்ட வெளியில் தூரத்தில் நின்று சோழகத்தில் ஆடும் ஒற்றைப்பன.
Page 7
இப்படிப் பல. இத்த நிகழ்வுகள் எம்முள் கிளறி விடும் உணர்வு ரூபங்களை வெளிக்கொணர முடியாமல் தவிக்கும்போது எமக்குக் கைகொடுத்து நிற்கும் ஊடகங் களே கலை இலச்கியங்கள்! இந்த உணர்வுநிலைகளை வெற்றிகரமாக வெளிக்கொணரும் படைப்புகளே சிறந்த கலைச் சிருஷ்டிகளாகக் கொள்ளப்படுகின்றன; கருத்துக் களைக் கோஷித்தும் கொள்கைகளைப் போதித்தும் நிற்கும் படைப்புகள் அல்ல. ஆயினும் கோஷிப்பும் போதிப்பும் கூட இவ்வுணர்வுகளில் கலவையிடப்படும்போதே உத் வேகமும் நிமிர்வும் பெறுகின்றன. இத்தகைய அனுபவ வெளிப்பாடுகளையே நான் ஆத்மார்த்த தளத்தவை என் கிறேன். இந்த ஆத்மார்த்த அனுபவங்களின் உந்துதலே க3ல இலக்கியங்களின் தோற்றத்தின் ஆரம்பமாக இருந் திருக்கின்றன, இருக்கின்றன.
இந்த ஆத்மார்த்த உணர்வுகளின் மற்றுமொரு நிலை இன்னும் முக்கியமானதும் சுவையானதுமாகும். அதா வது பல்வேறு பன்முகப்பட்ட தளங்களிலிருந்து இந்த ஆத்மார்த்த உணர்வுகள் கிளறப்படுகின்றன. அப்படிக் கிளறப்படும் உணர்வுகள் அவ்வத் துறைக்கேற்ற கனதி களைப், பரிமாணங்களை ஏற்று வெளிக்கிளம்பி வரும் போதும் அவையெல்லாம் ஒன்றையொன்று தழுவி, ஒன்று விட்ட இடத்திலிருந்து மற்முென்று தொடர்ந்தும் நாணு பக்கமிருந்து வரும் ஆற்றின் கிளைகளைப்போல், ஒரே உணர்வுக் கடலை நோக்கிப் பாய்கின்றன.
ஒரே உணர்வுக் கடல். அதுதான் முக்கியம்.
பல்வேறு தளங்கள். அவற்றின் கனதிகள், தன்மை களுக்கேற்ப உணர்வுகளின் மேற்பூச்சுக்கள் வேறுபடுவன போல் தெரிந்தாலும், ஆழ நோக்கில் எல்லாம் ஒன்றை நோக்குவன போல்; ஒன்றைத் தேடுவன போல்.
ஒர் இனிமையான இசை,
தூரத்து மலைகளில் கவியும் முகில் திரள்.
v
ஓர் அடர்ந்த காட்டுள் ரகசியத்தைப் பொத்திக் கொண்டு ஓடுவதுபோல் கிளுகிளுத்துத் தலைமறையும் ஒர் அருவிக் கிளை. ペ
'வெள்ளி நாடாவாய்’ விரியும் நிலாக்கால ஒற்றை படிப் பாதை.
இந்தப் படிமங்கள் எம் இருப்பில் படியும்போது எமக்குள் வழியும் ஓர் இன்துயர்.
இன்பமும் துன்பமும்.
இந்த நிகழ்வுப் படிவுகளின்போது கிளறப்படும் எமது ஆழ உணர்வுகளிலிருந்து சந்தோஷமும் பின்னர் அதன் முடிவில் இருந்து வெளிக் கசியும் துயரமும் என் கின்ற இரு முரண்பட்ட உணர்வுகள் எம்முள். ஏன் இது ஏற்படுகிறது?
இந்த நிகழ்வுப் படிவுகளின் தூண்டுதலால் எமது ஆழமான பேரியல்பு கிளறப்படுவதால் சந்தோஷம் ஏற் படுகிறது. பின்னர் அப் பேரியல்போடு சதா ஒன்றி நிற்க முடியாத எமது இயலாமை வெளிக்கும்போது துயரம் மேலெழுகிறது. ஒரு பிரிவுத் துயர். எமது இயல்பை, இருப்பைப் பிரிந்த பிரிவுத் துயர்.
இதை இப்படி நோக்கலாம்
தனது காதலியோடு ஒருவன் கூடியிருந்த காலத்தில் அவன் கேட்ட பாடல்கள், இப்போ அவன் தனித்திருக் கும்போது எங்காவது இசைக்கப்படும்போது அவன் காதலி யின் நினைவை அது அவனில் தடவிச் செல்கின்ற ஒரு சந்தோஷத்தையும் பின்னர் அதன் முடிவில் அப்போது அவள் அங்கில்லையே என்கின்ற உண்மையில் ஏற்படும் பிரிவுத் துயரையும் போலவே இதுவும்.
எமது இருப்பாக உள்ளியங்கும் இப் பேரியல்பே எல்லா உயிர்களது இருப்பாகவும் இருப்பதால்தான் நாம் எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொள்ளவும் அவைபால்
Page 8
vi
ஈர்க்கப்படவும் செய்கிருேம். அதேநேரத்தில் அவ்வியல்பு பற்றிய சீரான புரிதல் இன்மையே பிறரில் கோபமும் குரோதமுமாய் வெடிக்கிறது. அதனுல்தான் எமக்குப் படுவிரோதியாக இயங்கும் ஒருவன் திடீரெனத் தன் பலவீனமான நிலையில் எம்மிடம் அகப்பட்டுப் பழிவாங் கப்படும்போது எங்காவது அவன் முகபாவத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சுழிப்பு, திடீரென எங்கோ எமக் கும் அவனுக்கும் பொதுவாக உள்ளியங்கும் எம் s2.ip இயல்பின் நரம்பை நெருடிவிட, இதுகாலவரை நாம் அவனுக்கெதிராக வைத்திருந்த முஸ்தீபுகளெல்லாம் அடி பட்டுப்போக, அவ னு க் கா க ம்ே நெஞ்சு கரைந்து கரைந்து நாம் பெறும் புது அனுபவம்.
என் எதிரியின் முகபாவத்தில் தெறித்த ஒரு சுழிப்பு எப்படி என் ஆழ இயல்பை அருட்டி விட்டதோ அவ் வாறே, நம் ஆழ இயல்புகளை அருட்டிச் செல்லும் கலை இலக்கியங்களும் சாகாத கலைச் சிருஷ்டிகளாகப் பரிண மிக்கின்றன. ஒரு சிறந்த கலைஞன் இந்த ஆழ இயல்போடு தொடர்புகொள்ளச் செய்யும் மின்னிணைப்பைத்தான் தன் படைப்பின் மூலம் செய்துவிட்டுப் போகிருன், அவனது படைப்புத் திறன் எவ்வளவு காலஞ்சென்றும் மின்னுற்றல் இறங்காத பற்றறிப் (Battery) பெட்டியாக அதை நுகர்பவன் எவனுக்கும் அந்தப் பேரியல்போடு தொடர்பு கொள்ளும் வல்லமையைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
இவ்வடிப்படையில் பார்க்கும்போது காலத்துக்குக் காலம் தோன்றும் கலை,இலக்கியக் கோட்பாடுகள் எல்லாம் ஒவ்வொரு கலைஞனின் கல்வி, அனுபவம், சிந்தனை ஆழம் என்பவற்றுக்கேற்ப அறிந்தோ அறியாமலோ மனிதனின் இவ் ஆழ இயல்பைத் தொடும் முயற்சிகளாகவே அமைந் துள்ளன. எக்ஸ்பிறஷனிசம், இம்பிறஷனிசம், நச்சுறலி சம், றியலிசம், சேர்றியலிசம் என்று கலைஇலக்கிய உலகில் அடிபடும் இக் கோட்பாடுகளெல்லாம் இதன் வெளிப்பாடு
vii
களே. ஆணுல் அப்படி நாம் கூறின் அக் கோட்பாடுகளை உருவாக்கியவர்களோ அதில் ஈடுபட்டவர்களோ அதை ஒத்துக்கொள்ளப்போவதில்லை. அவர்கள் தத்தம் காலத்து சமூக, தத்துவ, புறச் சூழல்களால் தம் இருப்பு யந்திர மயமாக்கப்படும்போது என்னென்ன நோக்குகள் தமக்கு விடுதலை அளிப்பனவாக இருக்கின்றனவோ அவற்றின் வெளிக்காட்டல்களே இவையெனக் கூறுவர். மனிதனின் ஆழ இயல்புகள் பற்றி அக்கறைப்படாதவர்களாகவோ அல்லது அறியாதவர்களாகவோகூட அவர்கள் இருக்க லாம், ஆணுல் நமக்கு ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்முல் அவர்கள் விடுதலைபற்றிப் பேசுவது.
விடுதலை: அது முக்கியமானது.
ஒவ்வொரு கலைஞனும் இந்த விடுதலைக்குத் தான் கொடுக்கும் அர்த்தம், ஆழம் என்கின்ற வரையறைகள் மூலம் நான் குறிப்பிட்ட மனிதனின் பேசியல்புக்கு அரு கிலா தூரத்திலா நிற்கின்றன் என்பதை, அறியலாம். காரணம் மனிதனின் பேரியல்புதான் அவனது பூரணமான விடுதலையாகவும் இருக்கிறது; அதுவே அவனது நிலையான இருப்பாகவும் ஆனந்தமேற்றுகிறது.
ஒரு சிறந்த கலைஞன் எந்தக் கோட்பாட்டுக்குள் தன்னைப் புகுத்திக்கொண்டாலும் ஒரு தேர்ச்சிபெற்ற சுழியோடிபோல் நேரடியாகவே இந்த மனித ஆழ இயல் புக்குள் இறங்கி, அந்த விடுதலையில் குளிப்பதோடு மற்ற வரையும் அங்கழைத்துக் குளிப்பாட்ட முயல்கிருன். அவன் ஆத்மார்த்தத் தளத்தின் சிறந்த பிரதிநிதியா வான்.
2
இந்தப் பின்னணியின் அடிப்படையில் சு. வி. யின் கவிதைகளை நோக்குவது, அவர் சிருஷ்டி ஆற்றலை நாம் புரிந்துகொள்வதற்கு எதிராக நிற்கும், சில தடைகளை அகற்றுவதற்கு உதவிபுரிவதாக அமையும்.
Page 9
viii
சு. வி. யின் கவிதைகளின் தனித்துவத்திற்கும் வெற் றிக்கும் காரணம் என்ன?
அவரது கவிதைகளில் காட்டப்படும் எல்லா உயிர் களுக்கும் பொதுவாக உள்ளியங்கும் பேரியல்பின் பரி மாணங்களும்; அப்படிக் காட்டுதலுக்குக் கருவியாகப் பெய்யப்படும் ஆத்மார்த்த உச்சங்களும்; அவற்றின் வெளிப்பாட்டு முறைகளுமாகும்.
ஏற்கனவே சமகாலத் தமிழ் இலக்கியத்தில் பல ஆத் மார்த்த வாதிகள் தேறியுள்ளனர். 'மெளனி'யின் கதை கள் இந்த ஆத்மார்த்தப் பண்பின் உயர் நிலைகளை எட்டி யிருக்கின்றன. ஆயினும் அவை "அவன்-அவள்’ என்னும் எல்லைக்குள் சிக்கி, ஒரே தன்மையொத்த உண்ர்வு நிலை களையே திரும்பத் திரும்ப எழுப்ப முயல்வனவாதலால் ஆத்மார்த்தப் பண்பின் பூரண சுற்ருேட்டத்தைத் தராத வையாகவே போய்விடுகின்றன.
ஆனல் கவிஞர் சு. வி.யின் கவிதைகள் அவற்றிற்கு மாருக, பன்முகப்பட்ட துறைகள் இவர் இருப்போடு நிகழ்த்தும் "உராய்வின் சிலிர்ப்பாகவே வெளிக் கிளம்பு கின்றன.
ஆனல் இப்படி வெளிக்கிளம்பும் உணர்வுகள் எல் லாம் பன்முகப்பட்ட தளங்களின் குணங்களை ஏற்றிருந்த போதும், நான் ஆரம்பத்தில் கூறியதுபோல, அவை யெல்லாம் ஒரே உணர்வுக் கடலை நோக்குவனபோல், ஒன்றையே தேடுவனபோல், ஒன்றையொன்று பின்னியும் தொடர்ந்தும் ஆத்மார்த்த உலகுக்குரியவையாகவே வெளிக் கிளம்புகின்றன.
இதோ விடுதலைப்பொழுது என்னும் கவிதையில் காலைப் பொழுதின் ரம்மியத்தைக் கூறும்
*நெஞ்சப்புலம் நெகிழ்ந்து அங்கு
புலரவிடு காலைப் பொழுதை"என்னும் வரிகள், அடுத்து வரும் "கோடை"யில் எழும் வெறுமையை அசை போடும்,
'கானல் அரவுகள் நெளிதரும்வயல் வெளி
மேய்தலிலாது வெறுமையை இரைமீட்டபடி காய்தலுறும் மாடுகள்' என்னும் வரிகள்,
ix
பின்னர் "ஊடாக" என்னும் கவிதையில் பிணக் குற்ற தாம்பத்திய உறவில் விழுந்த இரவு பற்றிப் பேசும் போது,
"உறைந்துபோய் நிற்கும் ஊமை இருளில் புதைந்து போய்விட்ட கால ஊர்தி” என்று வரும் படிமக் கலப்புகள், "பொழிவு' கவிதையில் வரும்,
"இலையுதிர்ந்த நெடுமரமாய்
ஏகப் பெரு வெளியின் சங்கீதம் குளித்திலையா?" என்று கேட்கும் வரிகள், * நிலவும் நெகிழ்வும்" என்னும் கவிதையில்
**எல்லாம் முடிந்து
நெற்பொதிகளுடன் வைக்கோற் போருஞ் சுமந்தபடி மெல்ல அசைநடைபோடும் மாட்டு வண்டிகள்: வண்டிகளின் பின்னே நாங்கள். திரும்பிப் பார்த்தால் பின்னிலவில், வளமெல்லாம் அள்ளித் தந்துவிட்ட வயல்வெளி வறிதே கிடக்கின்ற சோகம் நெஞ்சைப் பிழியும் துயர்-இன் இசையாய். " என்று கூறும் வரி களெல்லாம் நமக்கு என்ன கூறுகின்றன?
ஒவ்வொரு வரிகளும் வெவ்வேறு நிலைகளின் தளங் களின் பிரசவங்களாக வெளிக் கிளம்பிய போதும் அவை யெல்லாம அடிப்படையில் ஒன்ருேடொன்று பின்னிப் பிணைந்தும், தொடர்ந்தும் ஒரே உணர்வுக் கடலை நோக் குவனவாய், ஒன்றையே தேடுவனவாய் நிற்கின்றன. அப்படி நிற்கும்போதும் ஆனந்தமும், இனந்தெரியாப் பிரிவுத் துயருக்குமான ஆத்மார்த்தப் படிவுகளாகவுமே நிற்கின் பன.
ஆனல் இந்த ஆனந்தமும் துயரும் ஏனைய சிறந்த கலைஞர்கள் புலரிடம் காணப்படுவதுபோல, அடிக்கடி
Page 10
Χ
மனதை வந்துறுத்தும் வெறும் அருட்டல்களாக சு. வி. யிடம் நின்றுவிடவில்லை. இந்த இனங்காண முடியாத அருட்டல்களை வைத்தே வெவ்வேறு கோணங்களில் காலங்காலமாகக் கலைகள் யாத்தவர் உள்ளார். இடைக் கிடை மின்னும் தரிசன வீச்சால் சில வெளிச்சங் காட்டி ணு,லும் அனேகமானவை விளக்கமின்மையால் மூடுமந் திரங்களாகவே வீழ்ந்துள்ளன.
ஆணுல் சு. வி. ஏனையோர் போலல்லாது தம்மை அடிக்கடி அருட்டும் "இன் துயருக்குரிய காரணத்தைத் தெளிகிருர், நம் விடுதலை இருப்புப் பற்றிய தூண்டுதல் கள் ஆனந்தத்தையும் அதில் சதா நிலைகொள்ளாமை துன்பத்தையும் தருகின்றன என்ற தெளிவே, அவரது ‘விடுதலைப் பொழுது என்னும் கவிதையும்; "விடுதலை ஒன்றே உடைமையாய்' என்னும் கடைசிக் கவிதையு மாம். எல்லாப் புற விடுதலைகளோடும் நீ, நீயாக உன் "வீட்டில்’ இருப்பதுபோல் வேறு சுகம் வருமா? "வீட் டைப் பிரிந்தால் துயரந்தான். அதனுல்தான் அவர், விடுதலைப் பொழுதுக்காய்
*"திறந்து விடு கதவை முற்ருய்
உனதகம் ஒளி பெறட்டும்’ என்கிருர் வீரியம் தொனிக்க.
இனி கவிஞர் சு. வி. தனது ஆத்மார்த்த அனுபவப் படிவுகளை வெளிக்கொணரக் கையாளும் முறைகளைப் பார்ப்போம். இவர் ஏனைய ஆத்மார்த்தக் கவிஞர்கள் போலல்லாது பன்முகப்பட்ட அனுபவங்களைத் தரும் பல் வேறு தளங்களில் சஞ்சரிப்பவர். அப்படிச் சஞ்சரிக்கும் போது தான் பெறும் அனுபவங்களை அந்தந்தத் தளத் துக்குரிய ஆத்மார்த்தச் சொற்களின் தெரிவின் மூலம் பதிவு செய்கிறர். அதனுல் அவர் அனுபவங்கள் ஏனைய அனேக ஆத்மார்த்த கவிஞர்களின் படைப்புகள் போல் வெறும் மூடுமந்திரங்களாக வீழாமல் எல்லோர் நெஞ் சங்களிலும் உரையாடிச் செல்கின்றன. சிறந்த ஆக்கங் களாக வருவதற்குரிய கீற்றுக்கள் தெரிந்தும் அனேக
xi
படைப்புகள் வெறும் மூடுமந்திரங்களாக வீழ்வதற். குரிய காரணம், அந்தந்தத் தளங்கள் பற்றிய அறிவும்
அவற்றிற்குரிய சொற்களின் தேர்வும் இல்லாமையே.
தாமு சிவராமுவின் பலவீனத்துக்கு இது ஒரு முக்கிய
காரணமாகும். பல்வகைப்பட்ட தள அனுபவங்களை ஒரே
தளத்துக்குரிய வார்த்தைகளால், படிமங்களால் பேச
முயலும் போக்கு அவருடையது. இதனல் தளப் பிறழ் வும் சொற்திரிபும் மாருட்டமும் நிகழ்கின்றன. ஆனல்
தளமாருட்டமும் சொற்திரிபும் நிகழக்கூடாதென்றில்லை.
ஆனல் அப்படி நிகழும்போது அது வேருேர் புதுத்தள,
புதுக் கலை இலக்கிய உருவாக்கத்தின் தேவையில் நிகழ வேண்டும்.
கவிஞர் சு. வி. தான் தொடும் தளங்களுக்கேற்பச் சொற்களைத் தெரிவுசெய்து மிகக் கச்சிதமாக வாய்பேச முடியாத உணர்வுகளை எம்மோடு தன் கவிதை மூலம் பேசவைக்கிறர். இதோ விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும்" என்ற கவிதையில் பாரதியை நினைவூட்டி விடுதலைக் குருவியோடு அழகாகப் பேசுகிருர்,
பாரதி, விடுதலை அவாவிய நின் சிட்டுக் குருவி
எங்கள் வீட்டு முற்றத்திலும் மேய்தல் கண்டேன்.
விடுதலைத் தாகத்தின் துடிப்புன் குலென்ஞ் அதன் இதழ்களிலும்
விடு விடு' என்ற அதே துடிப்புத்தின்
முற்றத்தில் மேயும்- போதும் திண்ணையில் திரியும் போதும் வீட்டு வளையின் மேலும் விண்ணை அளக்கும் போதும் "விடு விடு" என்ற ஒரே ஜபம்தான்.
Page 11
xii
தலையை உருட்டுதலில், சிறகைக் கோதுதலில் காற்று வெளியில் "ஜிவ் வென்ற சிறகுதைப்பில் அதே துடிப்பு சதா துடிப்பு!” என்று பாரதியை நினைவுகூர்ந்து சிட் டு க் குருவியை அழைக்கும்போது விடுதலையின் துடிப்பும் தேவையும் புதுப் பரிமாணங்களுள் ஆழ்கின்றன. ஈற்றில்
'விடுதலைக் குருவீ!
வீடுதேடி வந்தாய் நீ வாழி! நின் அலகிதழ் முனையில் எம் இருள் துயரெல்லாம் கிழிபடுகிறது." என்று கூறிச் செல்லும்போது உண்மையாகவே கருத் துக்கள் காட்சிப் படிமமுறும் ரசவாதம் ஒன்று எம்முன் நடத்தேறுகின்றது போலவே உணர்கிருேம்.
வீழ்ச்சி" என்னும் இன்னேர் கவிதையில் தான் சோரம் போனதையும், அது எப்படித் தன் மனைவியின் முகத்தில் பிரதிபலிக்கிறது என்பதையும், அதேநேரத்தில் மனைவியின் குணவொழுக்கம் தனக்கு நேர்மாறனது என்பதையும் காட்ட அவர் தேர்ந்தெடுக்கும் அந்தத் தளத்துக்குரிய வார்த்தைகள்:
அவள் முகத்தில் வெடித்துச் சிதறின முன்னைநாள் ஒருத்தி உடைத்த சிலம்பின் உக்கிர மணிகள்" *அகங்களும் முகங்களும்-2 என்ற கவிதையில் இன்றைய நம் போலி அரசியல்காரர்களுக்கே உரிய, அவர்களை வைவதற்கே உரிய பாஷையில்
வெட்கம் கெட்டவர்கள்! வேற்ருர் இட்ட நெருப்பின் வெக்கை தணிந்து இன்னும் சாம்பல் அள்ளவில்லை. தூர்ந்து போன தேசத்தைத்
அதற்குள் தேர்தல் வெற்றி ஊர்வலம் வருகிருர்,
xiii
A is a to o இன்றைய இடிபாடுகளை நாளைய தேர்தலுக்கு படிக் கற்களாக்கும் பயன் தெரிந்தவர்கள்
அவர்கள். என்று நம் தமிழ்த் தலைவர்களைச் சாடும் அவர், இடி பாடுகளின்மேல் ஒரு படைவீடு' என்ற கவிதையில் இந்த இடிபாடுகளை வேறேர் தத்துவத் தளத்துக்கு இட்டுச் செல்கிருர்,
கோபுரங்கள் எழுப்பிய கோயில்களை விடவும் இடிபாடுற்றவைகளில் எனக்கு அதிகம் ஈடுபாடு.
எல்லாமே ஒருநாள் இடிவிழுந்த குண்டாகாதோ? எழும்பிய கோயில் வேறு. இடிவிழுந்தகுண்டு வேரு? இடிவிழுந்த குண்டினுள்ளும் நீரூற்று முகங்காட்டும்.’’ என்னும்போது கட்டடங் களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்ை விட இடிபாடுகளின் குவியலும் குழிகளும் இன்னும் ஆழத்துக்கு எம்மை இழுக்கின்றன.
அடுத்து 'புத்தரின் மெளனம் எடுத்த பேச்சுக் குரல்" என்ற கவிதையில், பேரினவாதச் குருவளியால் மனித இனத்தின் கலை, கலாசாரம், ஏன் மனித நாக ரிகமே இடியுண்டு வீழ்ந்த நிலையை புத்தர் மூலமே கூற வைப்பது மிக நேர்த்தியாக அமைகிறது.
**நெடுஞ் சாலைகள்தோறும் நிறுவிய எனது
சிலைகளின் முன்னே மனிதரின் நிணமும் குருதியும் எலும்பும் படையல் செய்தோரே
இதோ ஏற்றுக் கொள்ளுங்கள் எனது வெளிநடப்புக்கான பிரகடனம்.
பெளத்தத்தின் பேரால் தோரணம் கட்டிய வீதிகள் தோறும் நீங்கள் நிகழ்த்திய இன சங்காரப் பெரஹராக்களின் பின்னரும் இங்கே எனக்கு அலங்கார இருக்கையோ??
Page 12
xiv
என்று இனவாத வெடில் சூழலை விளக்கிக் கொண்டு வரும் கவிஞர் இடையில்
**விலகிச் செல்கையில்
கால்விரல்களில் ஏதோ தட்டுப்படுகிறது.
பேரினவாதப் பசிக்கு மனிதக் குருதியை ஏந்திப்
பருகி எறிந்த பிக்ஷா பாத்திரம்.
ஒருகணம்
அமுத சுரபி என் நெஞ்சில்
மிதந்து பின் அமிழ்கிறது." என்று விவரிக்கும் போது இவ்வரிகள் எத்தனையோ நினைவுத் தொடர்களை அவிழ்த்துச் செல்கின்றன. இக் கவிதை அரசியலாகவும், தத்துவமாகவும், சமயமாகவும் மாறி மாறி வளர்ந்து செல்கிறது.
"வெறுங் காற்றில் கலந்திடுமோ." என்ற கவிதை யில் பீகாரில், கீழ் வெண்மணியில் ஹரிஜனங்களை நெருப் பாக்கிய சாதிவெறித்தனங்களைச் சாடிய கவிஞர், இறு தியாக அதை முடிக்கும்போது ஆகுதி வளர்க்கும் புதிய வேதியன்போல் நெருப்பைப் பார்த்துக் கூறுகிறர்:
** அக்கினியே! இடம்மாறு.
அஞ்சி ஒடுங்கி அடங்கி வாழும் இந்த ஏழை எளியவரிடம் வந்து குடியேறு. அவர்கள் கண்களில் ஜுவாலி. நெஞ்சங்களில் ஞான நெருப்பாய் எரி. சொற்களில் கடுசரமாகு. செயல்களில் ஆலைக் கணல்பெருக்கு. மெய்ந் நெருப்பாக மேதினி எங்கும் திரிக.?? என்று கூறும்போது பாரதிபோல் வேதத்தின் புது வலு ஏற்றுமவர், 'தூது’ என்ற கவிதையில் இனவாதிகளால் கைதுசெய்யப்பட்ட ஒரு மார்க்சீய நண்பனுக்கு வேத உண்மையையே தூது விடுகிறர்:
'நடுங்கா நாட்டத்து நண்ப,
இது கேள்
நினக்கும் துயர் வதையுறும்
விடுதலை நேசர் எவர்க்கும் இது பொருந்தும்.
குளிரால் நடுங்குதலும் தீயால் சூடுறுதலும்
இலாதது
ஆத்மா!
இருமைகள் அதற்கில்லை
என்பது வேதம்.' என்று கூறும்போது வேத உண்மை வலுவுறும் சூழ லும்; அதன் வழிவந்த புரட்சிக்காரராகவும் சு. வி. நிற்கிருர்,
இப்படி அவர் கவிதைக்குக் கவிதை தன் அனுபவப் பதிவுகளை, நம் சூக்கும புரிதலைத் தூண்டிவிடும் சொற் கலவையால் புரியவைத்துச் செல்கிருர். இங்கு நான் மேலெழுந்தவாரியாக மேற்கோள் காட்டியவற்றை விட, மேற்கோள் காட்டல் என்னும் முறைக்குள் அடங்காது முழுமையான தரிசனத்துக்கே உரியவை என நிற்கும் படைப்புகளே அனேகம்,
3
இந்த ரீதியில் பார்க்கும்போது கவிஞர் சு. வி. யின் கவிதைத் தொகுப்பு ஒரு வெற்றிகரமான சாதனையே. அதற்குரிய காரணம் அவர் பல்வேறு பன்முகப்பட்ட தளங்களையும் தொடுகிருர் என்பது மட்டுமல்ல, அவர் பிரவேசிக்கும் தளங்களில் அவ்வப் பிரதேசங்களுக்குரிய முற்போக்குச் சக்திகளான ஆத்மார்த்த நிகழ்வுகள், அவற்றின் படிமங்கள், வார்த்தைகள் என்பவற்றேடும் அணிசேர்ந்துகொள்கிறர் என்பதுமே. இந்த நிலையில் அவர் தனது தலைமுறைக் கவிஞர்களான யேசுராசா, சேரன், ஜெயபாலன், புஷ்பராஜன் போன்ருேரையும் மிஞ் சியே நிற்கிருர் என்றே சொல்லவேண்டும். இதனுல்தான் இவர் கவிதைகள் சிலவற்றில் தனக்கு முற்பட்ட கவிஞர்
Page 13
xvi."
களின் செல்வாக்கின் பாதிப்பு நிகழ்ந்தபோதும் தன் தனித்தன்மையை இழக்காது நிற்கிருர், உதாரணமாக நீலாவணனின் கவிதை ஒன்றின் உவமைப் படிமத்தை (பரிதிக் குஞ்சு) இவரது "தியானம்’ கவிதையில் காண லாம். இவரது "சுழலின் மையம் தேடி. ', ‘நிலவுக் கெழுதல்" போன்றவற்றில் மு. பொ.வின் "பிரபஞ்சக் கும்மி", "பிறையொருகாலம் முழுநிலவாகும் போன்ற கவிதைகளின் அருட்டலைக் காணலாம். ஆயினும் இவ ரது படைப்புகள் தமக்கே உரிய தனித்துவத்தோடு நிமிர் கின்றனவென்றல் அதற்குரிய காரணம் இவரது வெளிப் பாட்டு முறையும், அதற்குரிய சொற் தேர்வுமே.
இவரது சாதனை தளங்களில் உடைவு நிகழாமல் சொற்களில் திரிபு ஏருமல் அந்தந்தத் தளங்களின் ஆத் மார்த்தத்தைக் கறந்தெடுத்தது என்ருல், தளங்களில் உடைவு நிகழ்த்தியும் சொற்களில் திரிபு விழுத்தியும் நிகழும் புதுத்தள இலக்கிய உருவங்களும் அதன் ஆத் மார்த்தமும் இதில் இல்லாது போனது, ஒரு குறையே எனலாம். மு. த*வின் ஆளுமையில் பயின்ற இவரின் இவ் வாக்கங்கள், ஏற்கனவே இசைவுற்றிருந்த புதுக்கவிதைப் பரப்பின் அகலத்தையும் ஆழத்தையும் விரிக்கின்ற அதே நேரத்தில், புதுத்தள ஊடறுப்புகளைக் காட்டவில்லைத் தான். என்ருலும் இவரது "ஸ்தல புராணம்" சிருஷ்டி அந்தத் திசையின் சமிக்ஞைகளை விழுத்துவதாகவே நிற் கிறது. சாதி அமைப்புக் கெதிராகப் போராடிய மு. த. வோடு தோளோடு தோள்போட்டு நின்று அவரோடு அடிபட்டுச் சிறைக்குச்சென்ற இவரின் அப் போராட் டத்தின் அனுபவ வடிப்பாக நிற்கும் இந்தப் படைப்பு, கூத்து நாடகம் கவிதை போன்ற பல்வகை உருவாக் கத்தின் கலப்பாக நிற்பது, இங்கு குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் இத் தொகுப்பு புதுக்கவிதை உலகில் ஒரு பெரும் பாய்ச்சலைக் காட்டுகிறது. ஆயினும் அதற் கெதிராகச் சிறு சிறு தடைகள் நிற்கின்றன, இவையே
xvii
சிலவேளை பின்னர் பெரும் தடைகளாகவும் மாறக்கூடும். அதாவது தத்துவ விஷயங்களைக் கவிதையில் சொல்ல வரும்போது இன்னும் எளிய, கூரான சொற்கள் பயன் படுத்தப்படவேண்டும். கவிதை என்பது கற்பனையில் இழு படும் றப்பர் போன்ற ஒரு குணத்தை உள்ளிருப்பாகக் கொண்டிருப்பதால், சிறந்த ஆய்வு நோக்கு இல்லாவிடில் செழுமையான தத்துவ பலத்தையும் தன் "இழுவல்" குணத்தால் பாழடித்து விடக்கூடும். உதாரணமாக, "சுழலின் மையம் தேடி. என்ற கவிதையில் வரும்
*மனதின் ஒரவிழி நோக்கில்
ஆழப் புதைகுழி நீத்துக் கிளர்வுறும் உணர்வுகளின் முளை மீறல்கள், கிளைத்துப் படர்ந்து பூச்சொரியும் இன் கனவுகள்.
y
என்ற வரிகளைக் காட்டலாம்.
அதோடு அகவயப்பட்ட சிந்தனைகளைக் கூறும்போது, * ஆணவம், மாயை, கன்மம் என்று சமயவாதிகள் சதா போட்டடிப்பதுபோல் திரும்பத் திரும்ப, இலை கொட்டி நிற்கும் மரம்போல் கருத்துவலுப் போய்விட்ட சொற் களையும், விவரணைகளையும் பாவிப்பது களையப்பட வேண் டும். இல்லாவிடில் நல்ல சிருஷ்டிக்குப் பதில், இச் சொற் கள் புகுந்து வெற்றுப்பானைக் கட கடப்பையே தரலாம். சு. வி. யின் இத் தொகுப்பில் இத்தகைய கடகடப்புகள் இல்லையென்ருலும் அவற்றுக்குரிய தாக்குதல்கள், கவனிப் புக் குன்றினல் நிகழலாம். இவைபோக, அகங்களும் முகங்களும் ஒரு வெற்றிகரமான சாதனையே.
- மு. பொ.
பிழை திருத்தம்
பக்கம் வரி பிழை Fif
55 நின்ற நிலா, நிறை நிலா
58 budi ellis :
Page 14
என்னுரை
எனது கவிதைகளின் தொகுப்பு இங்கே அலை வெளியீடாக முகங்கொள்கிறது. 6ניו ז%0 ז6% ז பாதித்தவற்றை உள்ளுறை அனுபவ ஒளிகொண்டு பின்னி இழைத்தெடுத்து வேய்ந்ததோர் சிறு கவிக்குடில் இது. சிறு குடி லேனும் அதன் இருப்போ ஒரு பரந்த பெருவெளியில் இது ஒன்றே எனக்குப் பரவசம் தருவது. 1970இல் ஆரம்பித்த நான் பதினைந்து வருடங்களின் பின் ஞல் ஒரு சிறுகுடில் போடல் சாத்தியமாகியுள்ள இவ்வேளையில், என் சிந்தனை சார்ந்துநின்ற பரந்த பெருவெளியில் நேர்ந்த தேடலின் காலவெளி யைத் திரும்பிப் பார்க்கிறேன். அப்படியான ஒரு திரும்பிப் பார்த்தலில், நான் போட்ட இச் சிறு குடில் இன்னுஞ் சிறுத்தே தெரிவதுபோல் தோற் றங்கொள்ளுகிறதேனும், சார்ந்து நின்ற பரந்த பெருவெளிதான் எனக்குப் பர நிம்மதி தருகிறது.
அந்தப் பரந்த பெருந்தள, விடுதலைவெளிக்கு என்னைக் கூவியழைத்த குரலை இத்தருணம் பெரு மிதத்துடன் நினைவுகூருகிறேன். இதோ காற்று வெளியிடை, பிரபஞ்சவெளியிடையிருந்து கூவும் அக் குரல்ஒலி எனக்குள்ளும் கேட்கிறது. அக் குரலுக்குரியவரை அ டை யா ளம் காண்கி றேன். திரு. மு. தளையசிங்கம். எனது வளர்பருவ காலத்தின் பள்ளி ஆசிரியராக வந்து என் வாழ் வின் அத்திவாரத்தையே ஒர் உலுப்பு உலுப்பிய வர். ஊன்றி நோக்கி உள்ளன்போடு என்னை அறிவால் தூண்டி நடாத்திய ஒரு தனிக்குரல் அவரது. சகல துறைகளிலும் ஒரு வழிகாட்டி யாய் இருந்து ஆத்மீக குருவிடம் என்னை ஆற்றுப் படுத்தியவர். கலைபற்றிய அவரது நோக்கின் பூரண பரிமாணத்தை எய்திய கலைஞளுய் வாழ்ந்து காட்டி எம்மையும் அவ்வழி இட்டுச் சென்றவர். "விடுதலை என்ற இலட்சியத்துக்குரிய வழிகளும் விடுதலை பயப்பனவாய் இருக்கவேண்டும்' என்று ஒலித்த பரந்த விடுதலைப் பெருவெளிக்குரிய அவ
ரின் குரல், இதோ இச் சிறுகுடிலினுள்ளும் ஒலித் துக்கொண்டேயுள்ளது!
சிறுகுடில் என்றேன? இச் சிறுகுடிலை நிமிர்த்
துவதில்தான் எத்தனை சிரமங்கள். இந்தச் சிர மங்களில் ஒன்றையேனும் என் முதுகு சுமந்த தில்லை! ஏழைமை நிரம்பிய இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கிய-கலாசாரக் குடிலை பல்துறை அடுக் குப் பரிமாணங்கொண்ட மாளிகையாய் நிமிர்த்த மனங்கொண்டவர், ஆத்மார்த்தமான உழைப் பைப் பிழிந்து தமிழியல் வளமூக்கியாய் நின்று செயல்படும் நண்பர் திரு. இ. பத்மநாப ஐயர். இதன் நிமிர்வுக்கும் முதுகு கொடுத்தவர் அவரே. இன்றைய ஈழத் தமிழ் இலக்கிய - பல்துறை வெளியீடுகளின் பின்னணியில் இவரின் ஆத்ம பர்த் தமான உழைப்பின் திறன் நின்றதை, அறிந் தோர் அறிவர். தன்னை முன்னிறுத்தாத அவரின் பங்களிப்பை ஒருநாள் தமிழுலகம் முற்ருய் அறிய வரும்போது, அதிசயப்படும் என்பது உண்மை.
மு. பொன்னம்பலம் நீண்டதொரு முன்னு ரையை இச் சிறுகுடிலின் முன்றலில் கோலமிட் டுள்ளார். அவர் எனது கவிதைகளைக் கையெழுத் துப் பிரதியிலேயே படித்த முதல் வாசகஞ கவும் விமர்சகனுகவும் இருந்து என்னை $நறிப் படுத்தியவர்தன் படைப்பாற்றலால் என்ஜ் நிரம் பவும் பாதித்தவர்; "அகங்களும் முங்களும்" என்பதையே கவிதைத் தொகுதியின் ஆலைப்பாகி வைக்கலாம் என்று அக் கவிதை இவளியான்ல போதே ஆலோசனை கூறியவர். ് னுரை எனது கவிதைகளின் போக்க கண்டு கொள்ளும் பின்னணியாய் க்கிறது பதற்கும் மேலாக, நானே என்னைSவிமர்ச யாகக் கண்டுகொள்ளும் வை ம் இம்ர் துள்ளது.
கனமான படைப்புகளை இங்கண்டு தேர்ந்து தெ ள் வி எ டுக் கும் கூரிய நோக்குடையவர், அ. யேசுராசா. தமது அலை இதழில் எனது கவிதை
Page 15
களைத் தேர்ந்து பிரசுரித்ததோடு, எனது தொகு தியையும் அலை வெளியீடு" நிறுவனத்தினூடாக வெளிக் கொணர்வதில் மிக முனைப்போடு செயல் புரிந்தவர். அவ்வப்போது விமர்சனங்களால் என்னை நெறிப்படுத்தியதில் அவருக்கும் பங்குண்டு. தக்க இடங்களில் மனமுவந்து பாராட்டும் பண் பைவிடவும், அவரின் சமநிலை நோக்கே, என்னை மிகக் கவர்ந்தது எனலாம். மற்றும் இ. ஜீவகா ருண்யன், மு. புஷ்பராஜன் ஆகியோரும் என்னை இவ்வகையான ஒத்துழைப்பால் கவர்ந்தவர்களே.
இவர்கள் எல்லோருக்கும் இதனுல் நன்றி கூறல் என்பது, வெறும் சம்பிரதாயமாகக் கீழிறங் கிவிடும் செயல் என்பதனல் அதைத் தவிர்த்து விடுகிறேன். அவர்கள் மேற்கொள்ளும் அரிய தமிழ் இலக்கியப்பணிகளில் எம்முடையவுமான ஆத்மார்த்த ஒத்துழைப்பை வழங்குதல் ஒன்றே, அதற்கான கைமாருகும்.
இத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் பல ஏற்கனவே பூரணி, அலை, மல்லிகை, புதுசு, வானம்பாடி இதழ்களில் பிரசுரமானவை. அவ் வேடுகளின் ஆசிரியர்களுக்கும் இதனுல் என் நன்றி உரியது.
இது என் முதல் வெளிப்பாடு: முதற் சுழல் வட்டத்தின் சிந்தனையை உள்ளடக்கியது. இதைத் தளமாய்க்கொண்டு இனிவரும் படைப்புகள் வேருெரு பரிமாணத்தைக் கொண்டதாய் அமை தலே என் விருப்பு அதை முனைப்போடு செயல் படுத்துதல் காலத்தின் கையில்தான் உள்ளது. ஒன்றுமட்டும் உண்மை என் அகப் புற வாழ்வின் ஒவ்வோர் அம்சங்களிலும்கூட ஒளிகூர்ந்த உக்கி ரம் தெறிக்க வாழ்தல் ஒன்றேதான்-வாழ்வை யே கலை வடிவமாக்கி நிற்றல் ஒன்றேதான், பூரண கலைஞன் என்ற பெருமைக்கு என்னை உரித்தாக் கும். மற்று இவை ஒன்றும் எனக்குப் பெருமை sprint.
சு. வில்வரத்தினம் 1980 --7 سے 31
தியானம்
உலகமே
இருளினுள் மூழ்கித் துயிலும் ஒரு கரிய பெரிய முட்டையா'
உறங்காது நானே உள்விழித்திருப்பேன்.
உள்திரளும் பரிதிக் குஞ்சின் உதயம் தியானித்து.
Page 16
விடுதலைப் பொழுது
எழுந்திரு பிள்ளாய் இது விடுதலைப் பொழுது
இருளின் துயில் கலைகிறது חf%Gu இழுத்துப் போர்த்தபடி இன்னம் உறங்குதியோ? எழுந்திரு.
இதோ விடியலில் கீழ் வானம் ஒளிமுடி தசிக்கும் உன்னதம் உனக்குத் தரிசனமாகவில்லை.
குருகினங்களின் உதயத்து இசை உனக்குத் தேனிப்பதில்லை.
மெல்லிதழ் மலர்த்தி வரும் தென்றல் உன் மேனி வருடச் சிலிர்ப்பதில்ஃ.
ஓ! நீ என்ன மனிதன் இன்னந் துயில் புணர்வாய்
புலர் பொழுதை ஸ்பரிசிக்காத நின் புலன்கள் பழுதுடைய,
இனியும், காலம் கடத்தாதே புலன்கள் தறையுண்ணும் பொழுதை மழிக்காதே.
ஒளியேத்தவிசியும் விழிகொன் விடியலின் குரலுக்குச் செவிகொடு. நெஞ்சப்புலம் நெகிழ்ந்து அங்கு புலரவிடு காஃலப் பொழுதை,
எழுத்திரு
சோம்பலே ஆதரிக்
சுருட்டிய பாயொடு ஆரவித,
வைகறை நீரT3 பொய்க8ை இருள் கழுவிப் புலரும் பொழுதை வர வேற்று மனதில் ஒரு 'கும்:ம் வை.
سي
நிஃ:களே ஒருங்குவி
தி: ളണ്
Fil:Ifj. Suurir Gf.
கதவிடுக்கில் ஒ:டாக உட் செல்லத் துடிக்கிறது திறந்து விடு கதவை முற்குப்
உதைகம் ஒளி பெறட்டும்.
Page 17
கோடை
ஒரு கோடை நடுப்பகல். நடுப் பகலின் வெக்கையின் தாக்கம் விளைவிக்கும் வெறுமை.
எங்கோ இருந்தொரு காக்கை வெறுமைக்குக் குரல் கொடுக்கும். கோடை உமிழும் குரல்.
எரிச்சல் பற்றி வர எழுந்து போய் காக்கையைக் கலைத்தால் கலைகிறதா வெறுமை ?
சுருதியறுந்த தந்தியின் அதிர்வாய் அதே வெறுமையின் மீட்டல்.
வலம்வந்தொருகால் மீண்டும் கொல்லை அமர்ந்ததுகாக்கை. மீட்டும் குரல் மாறிலது அதே வெறுமை எடுத்த குரல்.
வெளியில்
காற்றின் விழுக்காடு சோர்ந்து வழிகின்ற தென்னைகள், வெறிச் சோடிப் போன தெரு. கானல் அரவுகள் தெளிதரும்வயல் வெளி
மேய்தலிலாது வெறுமையை இரை மீட்டபடி
காய்தலுறும் மாடுகள்.
இவற்றுக் கெல்லாம் ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்ததாய் ஓர் குரலில் கோடை வறுக்கிறது காக்கை.
கானல் திரைவெளியில் வெறுமை நிழல் விழுத்தி உலர கண்கள் வெயில்கிறது. மூடி விழித்தால் காணலின் ஒவியம் கூடவே காக்கையின் குரலின் பின்னணி ராகம்,
கல்லெறிந்து மீண்டும் அதைக் கலைப் போமெனின் சாய்மனையோடு மல்லுக்கட்டி மாழுகிறது மனம்,
சொல்லெறிந்து மீண்டும் காக்கை சுற்றிச் சுற்றி எதையோ குத்திக் காட்டுவதாய் முற்றும் இலையுதிர்ந்த வொரு முள் முருக்கில் உலர் குரலில்.
சி சனியன், நரகம்.
நிச்சயமாக நான் வெறுக்கிறேன். இந்தக் கோடையை S. வெறுமை தின்னும் கோடை நடுப்பகலை.
குரல் கறுத்த காக்கையை.
நிச்சயமாக என்னையும் நான் சாய்ந்து கிடக்கும் சாய்வு நாற்காலியையுங்கூட.வே.
Page 18
மழையின் பொழிவில் நனையும் பொழுதுகள்
வான் முலை சுரந்தது வையம் அருந்திற்று ஓ! வான் மழையே! வையத் திருவே! வந்தனை நீ வாழி!
நீண்டெரிந்த கோடையில் தீக்குளித்த நிலமகஜ மழை முழுக்காட்ட வந்தனே! மாரி நீ ឯអាហ្វ្រី
வரண்டு வெடித்த வாய் பிளந்து பூமி வருந்தி அழைத்த குரல் உனக் கெட் டிற்ருே? இரங்கினே! அதனுல் எம்மிதயங் குளிக்கிறது.
நின் வரவால் நிகழும் அற்புதங்கள்தான் எத்தனை! எத்தனை
மலை எழில் போர்க்கும் துயிலும் நதியில் துரித விழிப்புப் பெருகும்
செடிகொடிகள் குளிக்கும் தென்றலின் அசைப்பில் மேனிகுலுங்கி நீர்த் திவலைகள் சிலும்பும்.
மண்ணில் நின் சங்கமத்தால் எழும் மண் வாசனை எங்கும் பரவும்! அது உழைப்பைக் கோருவது. உறங்கும் மனிதரின் நாசியின் உட்புகுந்து *எழுங்கள் ஏர் எடுங்கள்’ என உழுதுழுது பூமித்தாயை தொழுகை செய தூண்டி நடாத்தும் புனிதவாசனை! உழைப்பின் வாசனை! வான் மழையே மண்ணில் உயிர் வாசனை கிளர்த்தினுய் வாழி.
மழைத்தேவா வர்ஷித்தாய் இந்த மண்ணில் உயிர் பெய்தாய்
ஒங்கிய பெரும் ஒச்ையுடன் தாள பேத பாவங்களுடன் துமிதுமி துமி என நின் பாத துளிகள் இம் மண்ணில் பாவின,
பேதமிலாத நின் பெய்கையால் வான் மழையே நினக்கு மறுபெயர் ஞான மழை என்போம்.
ஞான மழையே நனி பொழிக இம்மண்ணின் பாவங்கள் கழுவுண்டோட பொருமை பொச்சரிப்பு வெப்பு நோய்கள் தணிய வரம்புகள் கடந்த வாழ் வொன்று செய்ய.
4விடியலில் மதியத்தில் அந்தியில் நள்ளிருளில் நாளெலாம் பொழிக பொழுதுகள் நனைக.
விண்ணின் றிழியும் அமிர்த தாரைகள் வீட்டுமுன்றலில் மீட்டும் சங்கீதம் உள்வாங்கி உள்வாங்கி உயிர் வீங்கி.
'பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்து தம் சங்கஞ் சிலம்ப சிலம்பு கலந்தார்ப்ப. s
நானே எனக்குள் மழையாய்ப் பொழிந்து நனைந்து நனைந்துருகி-ஏலோரெம்பாவாய்.
Page 19
அகங்களும் முகங்களும்-1
இடிந்து கிடந்த நினைவுத் தூண்களை எழுப்பி வைத்தீர் இடித்தவரை நினைவூட்ட
எழுபத்தியேழு ஓகஸ்டில் தெற்கில் இழந்த உயிர்களுக்கு நினைவுத் தூண்கள் நிறுவுவீரா? உங்கள்
இழிமைகளை நினைவூட்ட?
மலர் வளையங்கள், மாலைகள் சாத்தல் : இவை உதவப் போவதில்லை, எங்கள் நினைவுகளில் உங்களைச்செதுக்க, மலர்வளையங்களும் மாலைகளும் உதிர்ந்து விழும் உங்கள் சொல்லலங்காரங்கள் போல.
மாலைசாத்திய கைகள் மறுநாளே வாளெடுக்கும் நிகழ்ச்சிகள் பல s'. நடப்பிலே கண்டோம்.
மலர் தூவிய கைகளாலேயே துட்டகெமுனுவின் அஸ்தியும் தூவுவீர் வகுப்புவாத மேகங்கள் இருண்டு குருதி மழை பொழிய,
இரத்தச் சுவடுகள் பதிய ஒழிந்தோடி ஒர்மூலையில் பதுங்கி உடைமாற்றிவந்து ஒப்புக்கழுவீர்.
உடை மாற்றலேன்? உங்களை மாற்றுங்கள்.
இனவாதமணம் அருதவாயால் இன்னமுத மொழிகள்; "இதயத்தை உங்களிடமே விட்டுவிட்டுச் செல்கிறேன்' இப்படிப் பலப்பல.
எடுத்துச் செல்லுங்கள் உங்களிதயத்தை உங்களுடனேயே. எங்கள் நினைவுகளில் உங்களைச் செதுக்கமுன் உங்கள் இதயத்தைச் செதுக்குங்கள்.
காலங் காலமாய் இரத்தக் கறைபடிந்து துருப்பிடித்த இதயத்தை துருவி ஆராயுங்கள். போலித் தார்மீகப் போர்வை களைந்து உண்மை நிர்வாணம் பற்றுங்கள்.
Page 20
10
மஞ்சள் அங்கிகளுக்கும் மழித்த தலைகளுக்கும் புலப்படாது புதைக்கப்பட்டுவிட்ட புத்தரின் அன்பு துலங்கும்வரை செதுக்குங்கள்! உங்கள் இதயத்தைச் செதுக்குங்கள்
எடுத்துச் செல்லுங்கள் எங்கள் உபதேசமிதே.
1974 இல் யாழ்ப்பாணத்தில் நடத்த தமிழாராய்ச்சி மாநாட்டின்
போது இழக்கப்பட்ட ஒன்பது உயிர்களுக்கான நினைவுச்சின்னம். அவற்றை முந்திய ஆட்சியினர் காலத்தில் பொலிசார் உடைத்து விட்டனர். யூ. என். பி. பதவிக்கு வந்தபின் யாழ். விஜயம் மேற்கொண்ட பூனிலங்காப் பிரதமர் அத் தூண்களே எழுப்பி மலர்
வளையம் சாத்தியது செய்தி.
யாழ். விஜயம்செய்து ரீலங்கா திரும்புகையில் பிரதமர் சொன்
அகங்களும் முகங்களும்-2
வெடிகள் சிதறும் ஒலிகள் வேடிக்கை தெருவெல்லாம் என்ன வெளியே? எட்டிப் பார்த்தேன்.
தேர்தல் வெற்றித் திருவிழா இஊர்வலம்.
நம்மவர்,
மேளங்கொட்டுருர், குதிக்கிருர், விழுகிருர் . கோஷம் போடுவார்
நடுவே VMகோடியுடுத்த மாப்பிள்ளையர்க மா. அ. சபைத் தலைவர் வருகிருர் மாலை மரியாதையுடன்.
Page 21
12
வெட்கம் கெட்டவர்கள்! வேற்ருர் இட்ட நெருப்பின் வெக்கை தணிந்து இன்னும் சாம்பல் அள்ளவில்லை. தூர்ந்து போன தேசத்தை தூக்கி நிறுத்தத் தோள் கொடுப்பாரில்ஜல. அதற்குள்
தேர்தல் வெற்றி ஊர்வலம் வருகிருர்,
58இல் தொடங்கி அடுத்தடுத்து அடிவிழுந்த பின்னலும் என்ன செய்தார் இவர்கள் ? அடித்தாரைச் சொல்வி அழுதழுது வாக்குப் பெற்ருர்: கூட்டுச் சேர்ந்தும் கொள்கை முழக்கி வெற்றிகள் குவித்தார்.
தேர்தல் எனும் வேசி விடுதலைக் குழந்தை ஈவான் எனச்சொல்லி பாராளுமன்றத்தில் ‘கூடல்' செய்தார். மாவட்டந் தோறும் தங்கு மடங்கட்ட முண்டு கொடுப்போம் GroširОri. தேர்தல் பந்தல் சோடனைகள் ஒருபுறம் நடக்க மறுபுறம் தீண்டிற்றே நெருப்பு.
77இன் எரிதழற் காயங்கள் ஆமுேன்னம் மீண்டும் எரிநெருப்பில் தமிழ்-ஈழம்
காக்கி உடைகளும் காடையர் கூட்டமும் கூட்டுச் சேர்ந்து கொள்ளி வைத்தார் எரிமலைப் பிரதேசம் போல் எல்லாமே நாசம்
13
தற்காத்துக் கொள்ளத் தகுதியிலாத் தமிழரெல்லாம் ஒப்பாரி வைக்கிறர்: விடுதலை பெற வியலாத மலட்டுத் தலைவரெல்லாம் இன்னும் பாராளுமன்ற ஒட்டுண்ணிகளாய் பதவிகளை உதருமல் பகிஷ்கரிப்பு "ஊடல் செய்வார்.
பதவிகளை உதறி எறிந்திருந்தால் உலகின் மனச்சாட்சியையே உலுப்பியிருக்காதா? எமைச் சுற்றி நாமிட்ட வேலிகள் தகர்ந்து விடுதலைக்கு ஒரு வழி திறந்திருக்காதா?
ஆணுல், எதை உதறினுலும் பதவிகளை உதருேமென தோலரிலிட்ட துண்டுகளே எடுத்து உதறியவாறு இதோ வருகிருர் தலைவர்கள் ஊர்வலமாய்,
சவக்காட்டில் வெற்றிச் சங்கதி.
அதிலென்ன? இன்றைய இடிபாடுகளே நாளேய தேர்தலுக்கு படிக் கற்களாக்கும் பயன் தெரிந்தவர்கள் அவர்கள் பயணம் தொடரட்டும்!
Page 22
வெறும் இறக்கை
ரோட்டில் பலர் போவார் வருவார் ஆயினு ம் ஒரம் கிடக்தி mதே அக் காகத்தை பார் பார்ப்பார்?
மணலுள் தலை புதைத்து கழுத்தைச் சவுட்டியக் காகம் கிடக்கிறது. கருநீல வண்ணனுக்கு ஒப்பிட்ட கரிய நிறக் காக்கை; யார் பார்ப்பார்? போவோர் வருவோர் யாரேனும்?
விண்ணளந்த வீரருக்கு விழாக் கோலம். விண்ணளந்ததோடு இது மண்ணின் அழுக்குகயும் தன்னுள் விழுங்கிவந்த ஆகாயத் தோட்டியன்ருே. போவோர் வருவோர் யாரேனும்?
விமான இறக்கை விரிநிழலில் க்குண்டுத் ៥.ចំពោះ :தர இருப்பார்க்கு ரோட்டில் கிடக்கும் காக்கை நினைப்பெதற்கு? வெட்டுண்டு வீழ்ந்த நீ t سمصری مسدوم யார் நிஜனவார்?
t
نام
ற்கையதை
வெளியுலக மேடையிலே காகத்தைப் போற்றுவே: பெருஞ்சுவர் ரகசியக்த: வெள்ளை அன்னங்களோடு விருந்து உலா வருவோம்
Gai 'Nai வீழ்ந்த இயற்கை நினேவெ தற்கு? அதைவிடுத்து கட்டுப்பாடு, கண்ணியம், கடமை எனக் கோவிப்போம் காகம் கிடந்து நாறிப் புழுக்கட்டும்.
வீழ்ச்சி
என்னுள் 3ழுந்து பிளிறிற்று யானை
19தம் வ: முகம் பிய்த்து தும்பிக்கையாய் விகாரமாய்
aff), grup.
மூச்சிறைக்க மதநீர் நுரைத்திழிய மோப்பம் பிடித்தஃந்தேன்
தும்பிக்கை நீட்டி,
வேலி மீறினேன் றிேய முட்கள்
நடித்த காமத் தோலில்
தேக்குமா என்ன?
வேகதடை.
Page 23
6
வேலியினுள் விதைத்திருந்த பண்பாட்டுப் பயிர்கள் காலடியில் துவம்சமாச்சு.
குலைபோட்டிருந்த தெங்கின் இளநீர்மை வளைத் தெடுத்துத் தழுவ வழிந்த மதநீர் வடிகால் தேடிக் கலந்தது.
தின வடங்கிற்ற?
தும்பிக்கை உட்சுருள பூசி மெழுகிப் பண்பாடு காத்த உருத்திராட்சப் பூனையாய் மெல்லப் பதுங்கிப் பதுங்கி வேலி ஒரமாய் ஒசைகாத்து வீடு சேர்ந்து படுக்கையில் வீழவும் கீறியது மீண்டும் முட்களா ?
மனையாளின் கூரிய விழிகள்
குத்திக் குதறின. மனச் சாட்சியை ஊடுருவி.
அவள் முகத்தில் வெடித்துச் சிதறின முன்னைநாள் ஒருத்தி உடைத்த சிலம்பின் உக்கிர மணிகள்.
படைவீடிருந்த சிம்மாசனம் G530i diri
குப்புற வீழ்ந்தேன் கூடவே குரல் ஒன்று
அதிர்கிறது. 'யாணுே அரசன்? யானே கள்வன்.'
96.86
எனக்கும் உனக்கும் ஊடாக கட்புலனுகாக் கயிருென்றின் பிணைப்புளது.
எங்கெங்கோ அலைந்தாலும் சுண்டியிழுக்கும் அக் கயிற்றின் அதிர்வு என்னுள்.
எனினும் அப் பிணைகயிறு
சில வேளைகளில்
இதோ அறுகிறேன் என
நுண் புரியில் பயமுறுத்தும்
கணங்களை நினைந்தால்.
2
Page 24
l3
ஊடல் முற்றி மன மூட்டம் கெளவிய இருட்டறை மெளனத் துள்தான் எத்துணை கணம் உறைந்துபோய்நிற்கும் ஊமை இருளில் புதைந்து போய்விட்ட கால ஊர்தி வெறுமையின் கனம் தாளாமல்,
இருள் ஊர்ந்த மனமும் முகடூர்ந்த விழிகளும்சோர்ந்து போய் துயிலில் மூழ்கியதும் தெரியாது போன பின்னிரவில்
நெஞ்சில் வீழ்ந்த மென் கரத்தால் துயில் கலையும்; இருளில் மனுங்குகிற பொன்வளைகள் செவியருகில் மெல்லச் சிணுங்குகையில் சேர்த்தணைத்தேன்.
சிறுகச் சிறுக இறுகப் பிணைந்த கணங்களின் உருளலில்
உறைந்து போயிருந்த ஊமைஇருள் நெகிழ்ந்து மூச்சுவிடும்.
மீண்டும் உறவென்னும் ஒளிக்கயிற்றின் அதிர்வு தொடங்கிற்றே!
கலப்பு
அன்பே எனயுடையாய் காதல் இன்பமும் கனிவும் கலத்தொன்ருய் வந்தவளே நிச்சயமாய் நம்முறவு முந்தைத் தொடர்பின் புது முகிழ்ப்பு என்னல் பிழையன்று.
வெண்ணெய் எனத் திரண்டிருந்த பெண் மெய்யாய் நீ இருக்க ஓட்டைப் பாத்திரம் ஏந்தி ஊரெல்லாம் நெய்க் கலைத்தேன்.
நெய்க்கலைந்து நாயேன் நீண்ட வழி நடந்து மீளுகையில் தீண்ட வழி நெடுகிலும் அன்பு நிழல் தழைய நின்றிருந்தாய் நின்னிரு விழிகளிலும் தேக்கியிருந்தாய் காதற் தேன் வதைகள்.
Page 25
20
உட்குவிந்திருந்த காதல் இதழவிழ்ந்ததோர் விடியல் ஓ! இன்னமும் ஞாபகம் இருக்கிறது. பளிச் செனப் புலர்ந்த வெண்முறுவலில் என் இரவினை விழுங்கினை அன்று.
இன்றே எனது சுமைகள், அயர்வுகள், சோர்வுகள்
எல்லாம் உன்னிடம் கைமாறின.
நான் காலாற ஓர் நிழல் கனிந்த தருவாய், கை நிறைய அள்ளிப் பருக காலடியில் தெளிந்தோடும்
அன்பு ஒடையாய் நீ.
என் துயர் நின்துயராய் எனக்குற்ற அவமானம் நினக்குற்றதாய் நெகிழ்ந்துருகி நீ விட்ட கண்ணிராலேயே என் மாசுகள் கழுவுண்ண நான் மனிதனய் நிமிர்ந்தனன்.
என்னை மனிதனய் நிமிர்த்த உன்னுள் எல்லையற்ற துயர் சுமந்து நின்று புன்னகைக்கும் பேடே நினக்கு என்ன செய்தால் தகும்?
எதை வேண்டி நின்ருய் நீ ஏந்திழையாய் எனினும் என்ன செய்தல் தகும் நினக்கே? உன்னுட் பெருகும் உண்மை அன்புப் பெருக்குள் என்ஜனயே மூழ்கி இறும்பூது எய்தலன்றி.
உராய்வு
கோளங்கள் நகரும் போது ஒன்ருே டொன்றுராய்ந்து
கீதம் ஒன்றெழுப்புகுதாம்.
மானுடரின் காதுகளை எட்டாத கோளகிதம் கடவுளர்க்கே கேட்கும் என்ருர் கிரேக்கர்.
ஞாலமே தூங்கும் ஓர் நள் யாமம் தூங்காத நகஷத்திரங்கள். நான் முற்றத்தில் நிற்கிறேன் மனமோ முகையவிழ்ந்து பால் வழி முற்றத்தில் பவனிக்க.
திடீரென அதிர்ந்தன என் உட் செவி நரம்புகள் பேரண்ட ரீங்காரம் உள்ளுராய்ந்ததே கோளகிதம்.
மனங்கிழிந்து போனேன்; அக் கவனங்களிலே நான் மானுடன் அல்லன் மானுடனே அல்லன்.
நீங்களும் நின்று பாருங்களேன் ஒர் நக்ஷத்ர ராவில் மனங்கிழிந்து போக உள்ளுருவிச் செல்லும் கோள முட்டிகளின் கள்ளிரைச்சல்,
Page 26
வெறுங் காற்றில் கலந்திடுமோ. 怡 帕莎
முன்பு தமிழ்நாட்டில் ஒரு கீழ் வெண்மணி இன்று பீகாரில் இன்னுென்று.
சாதி வெறிக்கேது திக்கு ? தெற்கிலே பற்றியது வடக்கிலும் தீ நாக்குவளைத்தது.
பீகாரில் ஒரு கிராமத்தில் சாதி வெறியர் எளியவர்களுக்கு எரி கொள்ளிகளால் பதில் சொல்லியுள்ளார்.
கோயிலில் தீவட்டி ஏந்திய கைகள் தாழ்த்தப் பட்டவரின் குடிசைகள் கொளுத்த தீவட்டியோடு ஊர்வலம்போயின.
கொள்ளிவாய்ப் பேய்கள் சுற்றிவர குழுமி நின்று உமிழ்ந்த தீ பற்றிப் பிடிக்க குடிசைகளுள் துயின்ற பதிஞன்கு உயிர் வெண் மணிகள்பிஞ்சுப் பாலகர், நேற்றுத் தான் மஞ்சம் நுகர்ந்த மணமக்கள், முதியவர். பச்சை உடம்போடு பஸ்மீகரமாயின.
ஹரிஜனங்களை அவிர்ப் பொருளாக்கி சாதி வெறியர் வேள்விகள் செய்ய சந்நிதானங்கள், கோயில்கள், பீடங்கள் குத்துக் கல்லாய் குந்தியிருந்து ஸ்லோகம் சொரிந்தன.
23
ஆட்சி பீடங்களில் மாறி மாறிஆள்வோர் அமர்ந்தனர் போயினர் "கீழ் வெண்மணிகள் போயாவிட்டன? சாதிவெறியரின் ஏவலால் மன்னுயிர் தின்ற தீயே நீயும் விண்ணெழுந்து வெறுமனே போகுதியோ?
தீயே! ஆதிவேடன் பண்டொருநாள் கல்லோடு கல்லுரசக் கனன்றதீயே, உன்னை இங்கழைக்கிருேம்
மீள்க.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சாதி வெறியை ஊதிவளர்த்த தீயவர் கையில் நீ சேரற்க.
அக்கினியே! இடம்மாறு. அஞ்சி ஒடுங்கி அடங்கி வாழும் இந்த ஏழை எளியவரிடம் வந்து குடியேறு. அவர்கள் கண்களில் ஜ"வாலி. நெஞ்சங்களில் ஞான நெருப்பாய் எரி. சொற்களில் சுடு சரமாகு. செயல்களில் ஆலைக் கனல்பெருக்கு. மெய்ந் நெருப்பாக மேதினி எங்கும் திரிக.
ஆதிஜோதியே! அனற் கொழுந்தே நின்னை வேண்டினுேம் இந்த எளியவர் வாழ்வு வெளிச்சமுறும் பொருட்டாக,
தீயே உன்னை அழைத்தனம் தீயவரைச் சென்றுதீண்டுதற்காக,
சாதி இன, மத நிற வெறி எந்தெந்த மூலை முடக்கிலே காணினும் அவற்றை நீக்கமற எரித்து நீருக்கும் பொருட்டாக
Page 27
இந்தியாவே நீ எங்கு செல்கிறய
மீண்டும் மனிதன் இருண்ட குகையுட் புகுந்தான் வில்லும் அம்புமாய் வேட்டை விழையும் குணத்தினணுய். ஒரு வித்தியாசம் இப்போது அவன்குறி சக மனிதனேதான்.
அஸ்ஸாமில் பாய்ந்த அம்புகள் அதற்குச் சாட்சி. ஆயிரம் ஆயிரம் உயிர்களின் அவலக்குரல் விண்ணை நிறைக்க மீண்டும் மீண்டும் தொண்டைக் குழியைத் துளைத்துப் போன அம்புகள். துப்பாக்கிக் குண்டுகள்
பிஞ்சுகள், முதிர்ந்தவைபேதமின்றி எல்லாமே உதிர்ந்தன.
பிணக் காடு, இரத்த வெள்ளப் பெருக்கு இவற்றின் நடுவே கழுகுகள் வேறு.
பிணம் பொறுக்கிகளாய், பிணக்குவியலினிடையே உயிராடும் ஏதும் தலைநீட்டாவோ என வாக்குப் பொறுக்க நத்தி வட்டமிடும் கழுகுகள் என்றவை இருரகம்,
என்னே இவர் சிறுமை பிணக் குவியலின் நடுவே சிம்மாசனமிட விழையும் வேட்கை, வேட்டையாடும் மனிதனின் உச்சம்.
இருபுறமும் ஈட்டியும் வாளும் ஏந்தியவர் இடையே சமாதானம் வேண்டி நடந்த காந்தியின் யாத்திரை எங்கே? பிணக்காட்டில் தேர்தல் யாத்திரை செய்யும் இவர்கள் எங்கே?
25
இந்தியாவே, நீ எங்கு செல்கிருய்? இமயமலை உச்சி எங்கே? இன்றைய உன் வீழ்ச்சி எங்கே? இமயத்தினின்றும் வழிந்தோடும் உன் புண்ணியநதிகள்
(இன்று புலைமை குளிக்கிறதே அவற்றில் ஏனிந்த இரத்தவெடில்?
குடில்கள் தோறும் வளர்த்த அக்னியில் வாழ்வு சுடர்த்திய உன் பண்டையரிஷிகள், அண்மைக் காலம் வரை இருந்த ரமணர், அரவிந்தர் போய் மறைய
போலிகளும் பொய்மைகளும் அன்னக் காவடிகளும் பொய்க்கால் குதிரையாட்டப் புது மன்னர்களும் வாழ்வு தருவார் என்று வறுமை கொண்டாயே
"மன்னும் இமயமலை எங்கள் மலையே?’ என்று செருக்கோடு பாடிய நின் கவிகள் கருதியது வெறும் மலையைப்பற்றி மட்டுந்தானு? இல்லை யெனின், மாநிலமீதில் உன்னிலை இழிவதேன் இன்று?
உதறு! உன்சிறுமைகளை உதறிஎழு. உன்னில் நீ உறுதி கொள்.
பண்டைய ஞானத்தை இன்றைய காலத்தியல்புகளுட் பாய்ச்சும் வித்தை பயில் இருண்ட நின் வீட்டுள் சுடரேற்று.
விடிகாலைக்கதிர் ஒளியெழுதச் சுடரும் இமயத்தின் நெற்றியென வாழ்வு சுடர்த்தும் வழியறிக இந்தியமே.
Page 28
விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும்
பாரதி, விடுதலை அவாவிய நின் சிட்டுக் குருவி எங்கள் வீட்டு முற்றத்திலும் மேய்தல் கண்டேன்.
விடுதலைத் தாகத்தின் துடிப்புன் குரலென்ருல் அதன் இதழ்களிலும் ‘விடு விடு" என்ற அதே துடிப்புத்தான்.
முற்றத்தில் மேயும் போதும் திண்னேயில் திரியும் போதும் வீட்டு வளையின் மேலும் விண்ணை அளக்கும் போதும் *விடு விடு" என்ற ஒரே ஜபம்தான்.
துயிலும் கட்டிலில் தொற்றியும் தூங்கும் குழந்தையின் தொட்டில் கயிற்றினைப் பற்றியும் ‘விடு விடு" என்றே ஜபிக்கிறது.
27
தானியம் பொறுக்கும் போதும், கூடுகட்டக் குச்சுப் பொறுக்கும் போதும், ‘விடு விடு" என்ற ஜபத்தை அது விடவில்லை. அதன் சிற்றுடலே விடுதலைத்துடிப்பின் வேக இயக்கமாயிருக்கிறது.
தலையை உருட்டுதலில்,
சிறகைக் கோதுதலில், காற்று வெளியில் "ஜிவ்'வென்ற சிறகுதைப்பில் அதே துடிப்பு: சதா துடிப்பு:
நீ தேசித்த தேசத்திலும் அதன் ஒவ்வோர் அங்கங்களிலும் பெண்மையில், ஆண்மையில், பிணைக்கின்ற காதலில் மொழியில், இசையில், கவிதையில், உரைநடையில் அரசியலில், தொழிலில், ஆன்மீகத்தில்இதே துடிப்பை நீ உடுக்கொலித்தாய்.
குடு குடு குடு நல்லகாலம் வருகுது’’ என்று நாட்டுக்கு நல்ல குறி சொல்ல தூக்கிய நின் உடுக்கின் ஒவ்வொரு முழக்கிலும் விடுதலைக் குருவியின் வீச்சு நிகழ்ந்தது. "கொட்டு முரசு"வின் அதிர்விலும் அதே விட்டு விடுதலையாகும் வீச்சேதான்.
தூக்கம் எங்கெங்கு கெளவிற்ருே அங்கெல்லாம் துயிலெழுப்ப இந்தத் துடிப்புக் குருவியை நீ தூதுவிட்டாய். உயிர்த்துடிப்பின் உன்னதபடிமம், நின் விடுதலைக்குருவி.
அந்த விடுதலைக்குருவி எங்கள் வீட்டுமுற்றத்திலும் மேய்தல் கண்டேன்.
Page 29
28
சோம்பித் துயின்ற என்குழந்தைகளை எழுப்பி 'துரு துரு வென்ற குருவியைக் காட்டினேன். சோம்பலை உதறிய அவர்களில் தொற்றிய துடிப்பின் உயிரொளி கண்டேன். குருவியின் பின்னல் ஓர் கூட்டமே இயங்கிற்று.
விடுதலைக் குருவியோடு "சடுகுடு’ ஆடும் சிறுவரின் கூத்து. *விட்டேன் விடுதலை விட்டேன் விடுதலை’ என்றந் நாளில் "சடுகுடு ஆடிய இளமையின் வேகம் என்னுள்
புதுநடை பயிலும்,
விடுதலைக் குருவீ! வீடுதேடி வந்தாய் நீ வாழி! நின் அலகிதழ் முனையில் எம் இருள் துயரெல்லாம் கிழிபடுகிறது. மூலை முடக்குகள், நாடி நரம்புகள் தோறும் விடுதலை வீச்சோட்டம் நிகழ்கிறது.
சிட்டுக்குருவி! எட்டுத்திக்கும் பறந்தொரு சேதிசொல் விட்டு விடுதலையானுேம் நம் கட்டுகள் யாவும் அறுந்தன வாமென்று. குறி சொன்னனே அந்தக் குடுகுடுப்பைக் காரன்!
அவன் காதிலும் மெல்ல இச் சேதியைப் போடு!
விமர்சக விகடங்கள்
நூல் வெளியீடு ஒன்று நிகழ்ந்தது. நால் வகைக் கிரியைகளும் நடந்தேறியபின் "நூலை இவர் விமர்சிப்பார்" என்னவும் எழுந்தார் ஒருவர் எழுத்தாளர்.
வந்தார் அரங்கில் சபையை வடிவாக நோட்டம் விட்டே எங்கோ ஒரு மூலையில் இருப்போனை இலக்கியத்தில் எளியோனுகச் சிந்தையில் 'பாவம் கொண்டு சின்னச் செருமலோடு ஆரம்பித்தார்.
'.எளிமையாய் விளக்கப் போனல் இதற்கொரு கதை சொல்வேன்' என்று கதை சொல்லத் தொடங்கி மனுஷன் ஓர் கழுதையின் மேலே தொற்றி கழுதையை விட்டிறங்கிப் பின்னுெரு குதிரையின் பிடரி மயிர் பிடித்தேறிப் பெருவெளிச் சவாரி செய்து பின் குதிரை விட்டிறங்கி உடனே குரங் கொன்றின் வாலைப் பற்றி.
Page 30
30
இப்படியே கதை கதையாம் காரணமாம் காரணத்துக்கோர் கதையாம் என்று பலகுட்டி ஈன்றபன்றியைப் போல குட்டிக்கதைகளை ஈன்ற களைப்பில் குலைதள்ளி நின்றவேளை
குட்டிக் கதைகளின் கும்பலின் இடைநழுவி விமர்சனம் மெல்ல எங்கோ விடை யூர்ந்தேகிற்று.
விடை பெறுகிறேன் என்று இவரும் விமர்சனம் அன்று தமது
விகடனம் முடித்துக் கொண் டே, கதிரையில் அமர்ந் தார் அல்லர்
தமது கைவாகனம் இவர்ந்தாரன்றே
காற்றுள்ளபோதே.
தூற்றிக்கொள் நண்பு காற்ருேட்டம் சாதகமாய் உள்ள தருணமிது.
எத்தனை நாள்தான் சுப்பற்ற கொல்லைக்குள்ளேயே புரட்சிச் சுலோகங்கள் விதைத்தபடி..?
போக்கையும் மாற்றி புதுச் சுலோகங்களும் விதைக்கக் கற்போம் இல்லேயெனில் தாளே நமக்கெல்லாம் நாற்காலி யார்தருவார்?
வர்க்கக் கடலில் தூண்டி லிட்டு இதுகாறும் வயிற்றைக் கழுவிவந்தோம். பிச்சைப் பிழைப்புத்தான்
அண்மையில் பேரினவாதப் புயல்களினுல் காலநிஜ ஓரற்றுப் போயிற்றே என் செயலாம்?
Page 31
32
*செவ்வானம்" கருக்கலிலே செத்திருள பொய்மானுய்ப் போயிற்றே நம் "வர்க்கப் புரட்சி" இனியும்,
"முற்போக்கில்" வீணுய்
முதலை முடக்கிவைத்து
என்னபயன்?
சிந்தித்தாய்; "நீண்டபயணம் இடைநிறுத்தி வைத்துவிட்டு முகமூடி வேறணிந்து முகாமினை மாற்றிக்கொண்டாய். "இரவல் தாய்நாடு'தான் இன்று, எவர்க்கும் கை கொடுக்கிறதே!
காற்றுத் திசைமாறக் கடலோரம் நீரோட்டம் பார்த்து பாயிழுத்து விட்டீர் பக்குவமாய்; உங்கள் போலித்தனங்கள், ‘புனைகதைகள் சகிதம்,
இக்கணம் கலம் சேர்ந்திருக்கும் அக்கரையில். திரைகட லோடியுந் திரவியம் தேடுகென்ற பழந்தமிழர் வரிசையில் நீவிரெலாம் இன்றைய வாரிசென நானறிவேன். நிச்சயமாய் ஒருகால் வங்கக் கடல் முழுதும் கப்பல் விடுவீர் காண்!
எப்படி வியாபாரம்? எழுத்து விலை போகிறதா?
இங்குதான் எம்மவர் கொட்டிய செங்குருதியெலாம் குடம்குடமாய்ச் சேமித்திருப்பாயே நனவோடையிலே. உத்திகளில் வல்லவர் நீர் இனியென்ன? உங்கள்
செம்பொருள்' நன்ருய்ச் செலவாகும். ஊற்றுப் பேனை பின் உட்பெய் தெழுத காலம் முழுதும்தான் காணுமே எங்கள் கட்டிபடாப் பச்சைரத்தம்.
33
ஏதோ எங்கள் அயற்புலத்தில் குடியேறி ஏர்பிடித்தீர் ஏலேலோ எங்கள் பிரச்சினையை விதைத்துப் பயிராக்கிப் போரடித்து, பொலிஎடுத்துப் போஷாக்கோடு இருங்கள்.
மற்றுங்கள், ஏர்உழவர் பாட்டாளி இவரெல்லாம் பேரினவாதக் குருதிச் சகதியில்தான் நிதமும் புரள்கின்ருர், வாய்ஒயாமல் நீங்கள் எல்லாம் பேசிய தேசீயம் வர்க்கப்போராட்டம் இவையெல்லாம் திகைத்துப்போய் நிற்கிறது.
வேறென்ன? முன் கழற்றிவைத்துப்போன முகமூடிகள் வீட்டுக் கோடியுள் பக்குவமாய்க் கொழுவிக் கிடக்கிறது. பின்ணுெருகால்
திரும்பியும் அணிந்துகொள்ளத் தேவைப்படுமென்ற உங்கள்
தீர்க்கதரிசனம் வாழ்க.வாழ்க..!
Page 32
மின்னியக்கம்
நான் சந்தித்த ஒரு மானுட நேயன்மாற்றத்தை விரும்பும் என் மனதுட் சுழியோடி போர்த்திய பொய்ம் மேலோடுகள் பொடியுதிர "ஊற்றுக் கண் உனக்குள்ளே? உற்றுப் பார் என்றவன் இன்றென் புலனெதிர் இல்லையெனும் போது.
மூச்சடங்கிச் சாகிலும் முக்குளித் து ஆழ்கடலில் முத்துக்களை முயல்வோம் எனக் கத்தும் அலை கடலில் எனக்கோர் கட்டுமரம் தாங்கியவன் இன்றென் புலனெதிர் இல்லையெனும் போது.
தொடுவானைத் தொடமுன்னம் படகின் துடுப்புகளை இழந்ததென நான் கொண்ட துயரின் நடுக்கடல். நீத்த முடியா நெடுந் தொலைவு.
35
நிரப்ப முடியா ஓர் இடைவெளி நெஞ்சிலோர் பள்ளமாய்க் குழிய ஏக்கம் ஒன்றெழுந்து என்னுள் வெறுமை சுடும் காற்ருய் திரிந்தலைய.
வான் கொண்ட நகஷத்ரங்களொடும் வயல் கொண்ட வெளியோடும்
கண் சோர நின்று
விண்ணிழியும் தாரை வீழ்துகளில் வேதனையின் ஊசலிட்டு.
விழுதுகளின் மேலுயரப் பழுத்திருந்த அம் மானுடப் பழத்தை நினைந்து நினைந்து நெஞ்சம் பிழிந்தது சோகரசம்,
சோகம் பிழியவா அம்மானுடம் பழுத்தது? நெஞ்சக் குழியில் வந்துதைத்தது ஒரு மந்திரக் குரல் அதிர்வு.
*அல்ல" என்றடுத்த கணம் ஞானந் தெறிக்க மனரேகைகள் பளிச்சிட மேனிமுழுவதுமே ஓர் மின்னுேட்டம் நிகழ்ந்ததென.
"மின்னுயிர்ப்பை" என்னுள் முடுக்கியதார்? வெளிச்சமொன்று வெள்ளி வீதி கிழிக்க பின் திரும்பினேன் உலுக்கிற்று என்னை ஓர் உருவம்.
மீசை வருடியவாறு மின்னுயிர்க்கும் தூய ஒளிவிகCப்புக் கண்டேன் கணவன்று;
நிதர்சனந்தான்.
(மு. தளையசிங்கம் நினெவாக.)
Page 33
எங்கள் வீதியை எமக்கென மீட்போம்
வீதியில் போகும்போது விபத்து நேராதிருக்க விதிமுறை உள்ளன; விதிமுறை உள்ளன.
விதிமுறை இருந்தும் விதிமுறை இருந்தும் ஒதுங்கியே செல்லும் பாதசாரிகளின் உயிர்களுக்கு ஏதும் உத்தரவாதமே இல்லை.
உறுமியே செல்லும் ராணுவ உந்துகளின் உள்ளிருந்து இயங்கும் துவக்குகளாலே எந்தநேரமும் இவர்தலை சிதறலாம் எந்தச் சமயமும் எம்தலை உருளும்.
ஒதுங்கியே செல்லினும் ஒதுங்கியே செல்லினும் எம்முயிர்க்கு இங்கு உத்தரவாதமே இல்லை.
சேதிகள் வருவன நாள் தோறும் வீதியின் நடப்புகள் விபத்துகள் அல்லவே.
37
2 இப்போதெல்லாம் எமது நகரத்து வீதிகள் காவற் கருவிப் பேய்களுக்கென்றே எழுதப் பட்டதாய்ப் போனதே போலும்.
"எவரையும். சுடலாம் விசாரணையின்றியே எரிக்கலாம் அன்றிப் புதைக்கலாம்" என்று இயற்றப்பட்ட புதிய விதிகளால் குருதியில் தோயும் நிகழ்வுகள் இங்கே.
இருளுக்கும் இருட்புலையர்க்கும் என்றே
டப்பட்டுப் போன எங்கள் வீதிகளில் வெளிப்படுவோரெல்லாம் சுடப்படலாம் தெருநாய்களைப்போல. எக்கணமேனும் எக்கணமேனும் எமக்கிது நிகழலாம்.
குருதியை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தே கொழுத்துப் போகும் இரவுகள் நீளலாம்; கட்டித்த ரத்தமாய் இரவுகள் தடிக்கலாம்.
வீதிகளை இருளரக்கனே ஆள மின்விளக்கு அணைத்தே வீட்டினுள் கூடியிருந்து பீதி வளர்ப்பவர் மத்தியில் எத்தனை இரவுகள் இப்படிக் கழியலாம்?
குருதியை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தே கொழுத்துக் கிடக்கும் இருளரக்கனத் தறிக்க கோடரி ஏந்தி யார் வெளிவருவார்?
வீட்டினுள் பதுங்கி இருந்தே பீதியில் ஓரிரா ஈரிராக் கழியலாம்; எத்தனை இரவுகள் இப்படிக் கழியலாம்?
எத்தனைக் காலம் எங்கள் பூமியை இருளரக்கனிடமே ஒப்படைத்திருக்கலாம்?
Page 34
38
அதோ தூரத்தே வீழும் எரி நட்சத்திரமல்ல, உன் அயலவன் வீட்டு முகட்டிலே அரக்கர் வீசி எறியும் தீப்பந்தம்.
தூரத்து இடியல்ல அதோ அடுத்த வீதி வளைவில் அவன் தீர்க்கும் வேட்டொலி.
வீங்கிருள் நிகழ்வுகள் இவையே ஆக வீட்டினுள் உயிரோடு எத்தனை நாட்கள்? வீடு நிறைந்த பீதி விடுத்தே கோடரி ஏந்தி அனைவரும் வருக.
எங்கள் இரவை எமக்கென மீட்போம் எங்கள் வீதியை எமதே ஆக்குவோம்.
இன்றைய இரவை அவனிடம் இழந்தோம், இனிவரும் பகலும் எமதென்பதில்லை; எங்கள் வீதியை அவனிடம் இழந்தபின் எங்கள் முன்றிலும் எமதென்றில்லை.
எங்கள் முன்றிலும் எறித்த நிலவுமாய் இன்புறு நாட்கள் எங்கோ ெதாலைந்தன இருட்டுள் சீவியம் எத்தனை நாட்கள்?
வீடு நிறைந்த பீதி விடுத்தே கோடரி ஏந்தியே யாவரும் வருக விழுதுகள் ஊன்றிய இருளரக்கனைத் தறிப்போம்.
எங்கள் வீதியை எமக்கென மீட்போம்; எங்கள் முன்றிலை நிச்சயம் செய்வோம்.
தூது
நண்ப, நினக்காக நெகிழும் என் நெஞ்சு நின்னினிய துணைக்காகவுந்தான்.
துன்பமேசூழ முகாமிட்ட துயர்வதைக் கூடத் துள் நெடுந்துயருறும் விடுதலைநேசரின் நிலையெண்ணி நெகிழும்என் நெஞ்சே
யாரொடு நோகலாம்? யார்க் கெடுத்துரைக்கலாம்?
வீதியில் கண்ணுறும் நண்பரொடு உம் துயர் பேசவும் வாயெழாது குசுகுசுக்கும் எமக்குள் உணர்வின் நசிவே உறுத்தும் பெரிதாய்,
Page 35
40
நீட்டிய துவக்குகளின் நெருக்குறலில் மூட்டுகள் தேடி முடங்கும் பூச்சிகளாய் மானிடவர் நாமிங்கு மரணத்துடன் சம்பாஷிக்கிருேம்.
கூனிப் போன கொள்கையர் சொல்கிறர் "மழை காலத்தில் நுளம்புகளோடு பழக்கப்படுகிறது போல
படையினரோடும் பழக்கப்படுவோம்?? என்று, ஏதோ பெரிய பகிடி ஒன்றை உதிர்த்தவர் போல உரக்கச் சிரித்5ւմւգ.
தெரியாமல் கேட்கிறேன் நண்ப, நுளம்பின் கடியின் வலியா நுமக்கெலாம்? கொன்று போடும் கொடுமைகள் இங்கெலாம் கொசுக்கடி போல்வெதான்ரு? புகையிட்டு விரட்டினல் கலையுமோ கொசுக்களைப்போல் இக்கொடுமைகள்?
தலைவரும் அவர்கள் சிறுமையும் சிறுமதியும் இன்னும் இருந்தவாறே.
சிறையுளே வதைபடும் விடுதலை நேசர் நிஜல கண்டு நெகிழாதார் இவர் செய்கை, நெஞ்சுள் முள்ளாய் நெருடுமே.
p567t,
நினக்காக நெகிழும் என் நெஞ்சு
ன்னினிய ணைக்காகவுந்தான்.
ģ வுதத
நின் துயர் நிகழ்வு என் செவியுறு கணத்தில், நான்
துணுக்குற்றேன்
தொடர்ந்து நடுக்குறலாயிற்றென் நெஞ்சம்,
4 li
பேரினவாத ஒடுக்குமுறை அரசின் இராட்சதக் கரம் இளைஞரில் தொடங்கி மதகுருமார், கலைஞர்,புத்திஜீவிகள் மேலும் வீழ்ந்தாயிற்று. இனி என்ன? "பத்துத் தலைகளும் இருபது கரங்களும் திக்கெல்லாம் தேடிவரும்."
என் செய்தோம்? வெறும் வாய்ச் சொல்லில் வீரராய் வன்துயர்களையும் வலிமை இல்லோமாய் என்புதோல் போர்த்திருந்து என் செய்தோம்?
கையில் வெறுமனே எழுதுகோல் தரித்தோம்.
நண்பர் நினக்காக நெகிழும் என் நெஞ்சு நின்னினிய துணைக்காகவுந்தான்.
அந்தநள்ளிரவில், நட்சத்திரங்களும் நடுங்கித் துயருறும் அந்த நள்ளிரவில்
இருளின் புலையர்கள் வந்து கதவைத் தட்டினர்.
கதவைத் திறந்த கணத்தினில் நீட்டிய துவக்குகளின் கத்திமுனை உமது நெஞ்சில் அழுத்தவும், அவர்கள் நையப் புடைக்கையில் எலும்புகள் நறுக்கென்ற போதிலும் நடுக்குற்றிருப்பாயோ நண்ப அந்த நள்ளிரவின் திரட்சியில் நீயும் நின் துணையும்? - நானறிவேன் நீவிர் யார்க்கும் அஞ்சா நெஞ்சுரம் உடையீர்; எதையும் எதிர்கொள்ளும் ஆளுமை பெற்றீர்.
Page 36
42
எனினும்
நடுங்கா நாட்டத்து நண்ப,
இது கேள்
நினக்கும் துயர் வதையுறும் விடுதலை நேசர் எவர்க்கும் இது பொருந்தும். குளிரால் நடுங்குதலும் தீயால் குடுறுதலும் இலாதது ஆத்மா!
இருமைகள் அதற்கில்லை
என்பது வேதம்.
ஆதலின் நடுங்குதல் தவிர்க ஆத்ம நண்பனே,
வேதம் அபினி என்று நீ வியாக்கியானிப்பாய்
எனினும் இங்கு ஒதும் உண்மை உயிர்த் துணையாமே.
நடுங்குதல் வேண்டா.
நினது
சுயேச்சா வலுவின் கெட்டியால் உடல்-மனத் தள வலி கடந்தவன் ஆகுக'.
விலங்குகள் உமது கரங்களைப் பிணிக்கலாம் விடுதலை மூச்சை விலங்குகள் என் செயும்?
வீறு கொள்! வார்கடல் தாண்டிய ராமதுரதனின் ஓர்மமும் மூச்சும் உமக்குளும் எழுக!
விடுதலைப் பறவையின் தொலை நோக்கும் வீச்சும் உள்வாங்குக விறலோய்.
சிறகடிப்புகள்
என்றும் சிறைப்படா
இருள் அதிர்ந்தது வெலிக் கடைச் சிறையினுள் கைவிலங்குகளும் கதறிவிழ இருளதிர்ந்தது சிறையினுள்.
இங்கோ எங்கள் ஹிருதயம் அதிர்ந்தன.
கை வேறு கால் வேருக சிறகரிந்து கிடந்தவோ பறவைகள் துடித்திருப்பீரே தோழரே. நீங்கள் எழுப்பிய
இனக்குரலொலி, கேளாச் செவிடரின் மத்தியில் மெல்ல மெல்லத் தேய்ந்து போக மரணித்துக் கிடந்த மயான அமைதியில் மூலையிருட்டில் முக்காடிட்டு நீதி தேவதை தூக்கிலே தொங்கினள்.
Page 37
44
2
சொன்னர்கள் வெலிக்கடைச் சிறையினுள்ளிருந்து "ஐயோ அம்மா' என்று தமிழில் அலறும் குரல்கள் செவியைக் கிழித்ததாய் ஊசி இழைகளாய் உயிர் நரம்பையே ஊடுருவிய அக்குரல்கள் கேட்டது சில நிமிடங்களேதான்.
அதற்குள் சிறைக்கூடத்தின் மேலாய்ப் பறந்த *ஹெலிகொப்டரின்? இரைச்சலில் அவலக் குரல்கள் அமுக்கப்பட்டன.
காலந் தோறும் இப்படியேதான் எங்கள் குரல்கள் நசுக்கப்பட்டன இன்றே எமது குரல்வளைகளும்.
அரக்கன் விரித்த ஆயிரம் கரங்கள் திக்குகள் தோறும் முளைக்கத் தொடங்கின எங்கும் ஒடுக்கும் கரங்களின் இயக்கம் எங்கள் முதுகின் மேலாய் அதன் நிழல் இறக்கம்.
எங்கே திடீரென்று அவன் கரம் முளைக்கும், எப்போது எங்கள் குரல்வளை நெரியும் என்பதை அறியோம்.
சந்தியில் சாலையில் ஒழுங்கையில், முன்றலில் எங்கும் முளைக்கலாம் எங்கள் வீட்டினுள்ளும் முளைக்கலாம்.
துவக்கின் விசைகள் அழுத்தப் படுகையில் வீடுகள் தோறும் பிணங்கள் விழலாம் வீதிகள் சுடுகாடாய் மாறலாம்.
45
எங்கள் நாடே எமக்கு சிறைக் கூடமாயிற்று நாங்கள் கைதிகள் விடுதலை கெட்டோம்.
கைகளில் மட்டும் விலங்குகள் இல்லை ஆயினும் எம்மைச் சுற்றிலும் லிலங்குகள், விலங்குகள். விலங்குகள் என்பதும் தவறே:
• விலங்குகளும் கண் புதைக்கும்" நிகழ்வுகள் எமக்கிங்கு நேர்ந்த பின்னலும் ஆட்சிபீடங்களை அலங்கரித்திருக்கும் அலகைகள் ஆட்சியில் இனியும் அடிமைச் சிறைப்படு வாழ்வா? இனியும் நரகில் இடர்ப்படல் நன்ரு?
இல்லை இல்லை இல்லை என்றெழுவோம் இனிமேல் அடிமைகள் இல்லை என்ெறழுவோம் வீழ்ந்து கெட்டாலும் விடுதலை மண்ணின் புழுதியில் அனைவரும் ஒன்ருய் வீழ்வோம் இஃது உறுதி என்றெழுவோம்.
விடுதலைவானம் காணுது மடிந்த சிறைப் பறவைகளே உறுதிக் குன்றேறி நின்றிவை உரைத்தோம் எம் குரல் கேளிரே,
விடுதலை நோக்கி உந்தி எழுந்த உம் சிறகடிப்புகள் எமது உணர்வுகளில் இன்னும் இன்னும் துடிப்பை ஏற்றும், விடுதலை வீச்சை உடுக்கொலித்தே நடக்கும்.
(1983 ஜுலைக் கலவரத்தின்போது சிறையுள் கொலையுண்ட போராளிகளின் நினைவாக.)
Page 38
புத்தரின் மெளனம் எடுத்த பேச்சுக்குரல்
இதோ
எனது வெளிநடப்புக்கான பிரகடனம்
நெடுஞ் சாலைகள்தோறும் நிறுவிய எனது சிலைகளின் முன்னே மனிதரின் நிணமும் குருதியும் எலும்பும் படையல் செய்தோரே
இதோ ஏற்றுக்கொள்ளுங்கள் எனது வெளிநடப்புக்கான பிரகடனம்,
பெளத்தத்தின் பேரால் தோரணம் கட்டிய வீதிகள் தோறும் நீங்கள் நிகழ்த்திய இனசங்காரப் பெரஹராக்களின் பின்னரும் இங்கே எனக்கு அலங்கார இருக்கையோ?
சூழவும் நெருப்பின் வெக்கை தாக்கவும் போதிமரத்து நிழலும் என ஆற்றுமோ? வெக்கை தாழவில்லை; வெளிநடக்கிறேன்.
47
புழுதி பறந்த வீதிகள் எங்கும் குருதி தோய்ந்து புலைமையின் சுவடுகள்.
விலகிச் செல்கையில் கால்விரல்களில் ஏதோ தட்டுப்படுகிறது. பேரினவாதப் பசிக்கு மனிதக் குருதியை ஏந்திப் பருகி எறிந்த பிக்ஷா பாத்திரம்.
ஒருகணம் அமுத சுரபி என் நெஞ்சில் மிதந்து பின் அமிழ்கிறது.
எங்கும் வீதிகளில் இனசங்காரத்தின் மங்காத அடையாளங்கள் ஒ என்மனதை நெருடுகிறது.
இன்னும் காற்றிலேறிய அந்தப் படபடப்பும் பதகளிப்பும் அடங்கவேயில்லை.
எழும்பிய அவலக்குரல்களின் எதிரொலி காற்றிலேறிக் கலந்தெங்கும் ஏன்? ஏன்? இக்கொடுமை என்றறைகிறதே
இவை கெட்டதில்லையா உமக்கெலாம்?
எனக்குள் கேட்டதே! இதயம் முழுதையும் சாருய்ப் பிழிந்ததே!
. . . . . .
இதயமே இல்லா உங்களை இந்த எதிரொலி எங்கே உரசிச் செல்லும்? சந்திகள் தோறும் என்னைக் கல்லில் வடித்து வைத்துக் கல்லாய் இருக்கக் கற்றவர்மீது கருணையின் காற்று எப்படி உயிர்க்கும்?
Page 39
48
மனச்சாட்சி உயிரோடிருந்தால் வீதியெலாம் மனித இறைச்சிக் கடைகள் விரித்து மானுடத்தை விலை கூறியிருப்பீரா? குருதியால் என்னை அபிஷேகித் திருப்பீரா?
வெலிக்கடை அழுக்குகள் உங்கள் வீரத்தின் பெயரா? ஓ! எத்தனை குரூரம்.
இத்தனை குரூரங்களும் கொடுமைகளும் எனதுபேரில்தான் அர்ச்சிக்கப்பட்டன; அரங்கேறி ஆடின.
எனது பெயரால்தான் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை. எனது பெயரால்தான் இனப் படுகொலை குருதி அபிஷேகம் இவை எல்லாமும்,
உங்கள் ஆக்கிரமிப்பின் சின்னமாக நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இழிநிலை.
நான் போதித்த அன்பு, கருணை எல்லாம் கல்லறைக்குள் போக்கிய புதைகுழி மேட்டில் நின்று என்சிலைகளைப் பூசிக்கிறீர் உங்கள் நெஞ்சில் உயிர்க்காத என்னை கல்லில் உயிர்த்திருப்பதாய்க் காணும் உங்கள் கற்பனையை என்னென்பேன்?
நானுே கல்லல்ல; கல்லில் வடித்த சிலையுமல்ல.
கண்டதுண்டமாய் அவர்களை நீங்கள் வெட்டியெறிந்த போதெல்லாம் உதிரமாய் நானே பெருகிவழிந்தேன் நீங்கள் அதனைக் காணவேயில்லை.
49
கைவேறு கால்வேருய்க் காட்டிலே கிடந்து
தாகமாயிருக்கிறேன்" என்று கதறியதும் நானே அக் கதறல் உம் செவிகளில் விழவேயில்லை.
கல்லாய் இருந்தீர் அப்போதெல்லாம்.
ஆணவத் தடித்த உங்கள் பேரினவாதக் கூட்டுமனம் எனக்குள் மறைந்து கொண்ட எத்தனிப்பே என்னை வெறுங் கல்லில்மட்டும் கண்டதன் விளைவன்ருே?
நானே கல்லல்ல; கல்லில்வடித்த சிலையுமல்ல மாறுதல் இயற்கை நியதி என்ற உயிர்நிலை ஒட்டத்தின் உந்து சக்திநான். கல்லல்ல; கல்லே அல்ல.
எனது ராஜாங்கத்தையே உதறிநடந்த என்னைக் கல்லாக்கிவிட்டு உங்கள் சிங்கள பெளத்த ராஜாங்கத்துள் சிம்மாசனம் தந்து சிறைவைக்கப் பார்க்கிறீர்.
யாருக்கு வேண்டும் உங்கள் ஆக்கிரமிப்புக் குடைவிரிப்பின்கீழ் சிம்மாசனம்?
நான் விடுதலைக்குரியவன். நிர்வாணம் என் பிறப்புடன் கலந்தது.
சிங்கள பெளத்தத்துள் சிறையுண்ட உமக்கெலாம் எனது நிர்வாண விடுதலை ராஜாங்கத்தின் விஸ்தீரணம் புரியாது அன்பரே பிரபஞ்சம் மேவி இருந்த என்ராஜ்யம் பேரன்பின் கொலுவிருப்பு என்பதறியீர்: வழிவிடுங்கள் வெளிநடக்க.
4.
Page 40
50
நெஞ்சில் கருணையூக்காத நீங்கள் தூவிய பூக்களிலும் குருதிக்கறை: குழவும் காற்றிலே ஒரே குருதிநெடில்.
ஓ! என்னை விடுங்கள்
நான் வெளிநடக்கிறேன்
என்னைப் பின்தொடராதீர் இரத்தம்தோய்ந்த
சுவடுகளோடு.
நான் போகிறேன், காலொடிந்த ஆட்டுக்குட்டியும் தானுமாய் கையொடிந்த மக்களின் தாழ்வாரம் நோக்கி, அதுதான் இனி என்இருப்பிடம்,.
வருந்தி அழைத்த பெரும் பிரபுக்களை விடுத்து ஓர் ஏழைத்தாசியின் குடிலின் தாழ்வாரத்தில் விருந்துண்டவன் நான்.
அத் தாழ்வாரத்தில் உள்ளவர்களிடந்தான் எனக்கினி வேலையுண்டு.
நீங்கள் அறிவீர் வரலாற்றில் என்மெளனம் பிரசித்திபெற்றது. ஆனல், நான் மெளனித்திருந்த சந்தர்ப்பங்களோ வேறு.
இப்போதோ
என்மெளனத்துட் புயலின் கனம்.
ஒருநாட் தெரியும்
அடக்கப் பட்டவர் கிளர்ந்தே எழுவர் அப்போதென் மெளனம் உடைந்து சிதறும்; அவர்களின் எழுச்சியில் வெடித்தெழும் என்பேச்சு
புது யுகச் சங்கொலி
ஊதடா சங்கு! ஊதடா சங்கு
கலைஞான யுகமின்று விடிகின்ற காலம் கலிஎன்பான் அரசாட்சி மடிகின்ற காலம் கலிசெய்த பேதங்கள் கலிசெய்த பாவம் இனியில்லை எமக் கென்று ஊதடா சங்கு
ஊதடா சங்கு ஊதடா சங்கு
எழுத்தோடு நடைமுறை வேறு வேருக தொழுகையும் வாழ்க்கையும் வேறு வேருக நடிக்கிருர் அவர்போடும் வேஷங்களெல்லாம் பொடிப் பொடியாகுதென் றுதடா சங்கு
ஊதடா சங்கு ஊதடா சங்கு
வேதங்களைக் கூட சாட்சிக் கிழுத்து சாதி இனமத பேதம் விளைக்கும் சண்டாளரைத் தர்மம் சும்மா விடாதெனச் சத்தியமூச்செடுத் தூதடா சங்கு
ஊதடா சங்கு ஊதடா சங்கு.
தர்ம அதர்மப் போர் வந்து மூள்கையில் தர்மமே வெல்லும் எனப்பறை சாற்றியே வலம்புரி தூக்கினன் குருக்ஷேத்திரத்திலே வந்தனன் மீண்டு மென் றுதடா சங்கு வந்ததே புதுயுகம் ஊதடா சங்கு.
ஊதடா சங்கு! ஊதடா சங்கு
Page 41
நிலவும் நெகிழ்வும்
நிலாக் காலத்து வழிப்பயணங்கள் எனக்கு மிகவும் இனிமையுடையன.
மணல் போர்த்த வீதிகள் தோறும் நிழல் வீழ்த்தும் நெடு மரங்களூடே வழியும் நிலவில் நனைந்தவாறு நண்பர்களுடன் நடத்தல் எனக்குப் பிடிக்கும்.
பஞ்சுபோல ஒற்றி ஒற்றித் துன்பம் துடைக்கும் நிலவின் தூய்மை நெஞ்சு கழுவ நெகிழ்ந்தே நடந்த தனிவழிப் பயணங்கள்
இன்-துயர் geogutti இன்னும் நெஞ்சில் எதையோ கிளர்த்தும்.
53
நிலவே
இன்பம் தருகிருய் துயரும் சொரிகிருய்
இதனல்தான் நீ இனிமையுடையாயோ?
என்றே ஒருநாள் சித்திக்கும் நீள்வழிப் பயணங்களில் நினது கூட்டு ஓ! எவ்வளவு இனிது.
பாலத்தினூடே பேருந்தில் செல்லுகையில் கடலில் இருமருங்கும் வழிந்தூரும் வெள்ளி வார்ப்பில்தான் மனசு என்னமாய் உருகிப் போகிறது.
நெகிழ்ந்து நெகிழ்ந்து நெக்கு நெக்குருக துயரில் மொக்கு விடுமே இன்பத் துளிர் நிலா.
2 அந்நாளில் கிராமியம் உயிர்த்துக் கிடந்த அந்நாளில் இந்த நிலவுக்கும் எமக்குள்ளும் தான் எவ்வளவு சொந்தம் கொண்டாடல்; நிலாவொழுகும் முன்றல்களில்தான் எத்தனை நிகழ்வுகள்.
நிலாச்சோறு உண்ணல் நிலா ஊஞ்சல் ஆடல் பாயிழைத்தல், கிடுகு பின்னல் தோட்டத்துக் கிணற்றில் துலாமிதித்து நிலா இறைப்பு எல்லாமே நிலவின் குடை விரிப்பின்கீழ் நிகழ்ந்தவை. உழைப்பிலும் என்னவோர் உல்லாசம் இருந்தது.
Page 42
54
அறுவடை முடிந்த நெல்வயல்களில் நெற்போரடித்தல்
நிலவொளியின் கீழ்த்தான் எவ்வளவு ரம்மியமானது, வைக்கோற் போரின் மேலேறி நின்று பார்த்தால் வயல்வெளி எங்கும் பால்வார்த்துக் கிடக்கும் நிலவு தாய்முலையின் நினைவு தரும்.
எல்லாம் முடிந்து நெற்பொதிகளுடன் வைக்கோற் போருஞ் சுமந்தபடி மெல்ல அசைநடை போடும் மாட்டு வண்டிகள்; வண்டிகளின் பின்னே நாங்கள். வயற்காற்று வந்து முதுகை வருடும் பிரிவாற்றக் காதலியின் தொடுமென் கரமாய். திரும்பிப் பார்த்தால் பின்னிலவில், வளமெல்லாம் அள்ளித் தந்துவிட்ட வயல்வெளி வறிதே கிடக்கின்ற சோகம் நெஞ்சைப் பிழியும் துயர்-இன் இசையாய் எதையோ கிளர்த்தும்.
3
நிலவுக்கும் இசைக்கும் ஏதும் அத்யந்த உறவு உண்டா என்ன? நிலவிலே பாடலாம்; நிலவும் பாடுமே! எம்முள்ளே அது எதனையோ மீட்ட அதன் வெளிப்பாடு இசையாய்க் கிளருமே; உள்ளார்ந்த கீதத்தின் உருவெளிப்பாடு.
55
நின்றநிலா ஒர் இசைப் பந்தாய்த் தெரிவதில்லையா? எனக்கு அப்படித்தான் தோற்றும் ஓர் இசைத்தேறல் நிலவொழுக்கும் இசையொழுக்கே. வேண்டுமென்ருல் கேட்டுப் பாருங்களேன் நிலவொழுக்குண்ணும் சாதகப் பறவையை, நிறையச் சொல்லும்,
நிலவொழுக்குண்டு
இசைபயின்ற கதையை நானும் சொல்கிறேன் கேளுங்கள். ஒருநாள் இரவு நண்பர் மு.பொ.வும் நானும் ஒன்ருக ரயிலில் பயணித்தோம். நதியோரமாக ரயில் சென்று கொண்டிருந்தது. நதியோரம் காய்ந்த மென்மணற் பரப்பென நெளிதரு மேகத் திரைநீக்கி நிலாக்கீற்று எட்டிப் பார்த்தது.
யன்னல் ஊடாக, துயர்தோய்ந்த ஒரு தோற்றம்.
மு.பொ.*வுக்கு இது
நீலாவணனின் கவிதைக்** கீற்ருென்றை நினைவு படுத்திற்று.
"பிணியில் தேயும் நிலவின் நிழல்நம்
பின்னல் தொடரும் முன்னே ஒஓ வண்டிக் காரா
ஒட்டு வண்டியை ஒட்டு. ’’
Page 43
56
நான்கேட்டேன் : *இதற்கு இசை உருக்கொடுத்துப் பாடினல்..?" ʻʻ t urrLGUrrub.ʼʼ
பாடினுேம்.
இசைபிறந்து எமைமறந்து பாடினுேம். நிலவும் இசையும் ரயிலின் கதியும் ஒன்றை யொன்று W துயரில் தாலாட்ட : ரயிலும் "கோட்டை? சேர்ந்தபின்னலும் இசையின் நிழல்எம் பின்னல் தொடர்ந்தது.
நிலவின் கீற்றுக் கிளர்த்திய அந்த இசை நிலாக் காலங்களில் எல்லாம் என்னுள் எழுவதும் நெகிழ்வதும் இயல்பாயிற்று.
4 இப்போ தெல்லாம் நிலவுக்கும் எமக்குள்ளும் இருந்த உறவில் விரிசல்; ஒர் நெகிழ்வு. இசைகுலைந்த வாழ்வு எமது.
நிலவு பொழிந்து கொண்டுதான் உள்ளது கூடவே துப்பாக்கி வேட்டுகளும் பீரங்கிக் குண்டுகளும் பொழிகின்றனவே. முன்றலில் நின்றபடி நாங்கள் நிலவில் குளித்தே பலநாட்கள்.
நிலாக் காலப் பயணங்களும் நின்று போயிற்று, வீதிகளில் எல்லாம்-ஒழுங்கைகளில் கூட இருளின் புலையர்கள்.
திடீரென்று குண்டுகள் துப்பாக்கி வேட்டுகள் கொட்டும் ஓசைகளில் இரவின் சுருதி கலைகிறது.
57
இருந்தாற் போலெழும் தீயின் சுவாலைகள் விண்ணெழுந்து
நிலவைச் சுடுகிறது. எங்கள் நெஞ்சையும்தான்.
ஒளிபோயிற்று இருள்சூழ்ந்து வாழ்வு குடிபோயிற்று. வீதிக்கு வரவும் விடுதலை கெட்டபின் நிலவெங்கே பொழிந்தென்ன?
விடுதலைப் பூமியில் நின்றவாே மீண்டும் ሎ நிலாவொழுக் குண்ணும் நாளே எங்கள் திருநாளாகும். அதுவரையில் போய்த் துயிலாமல் அந்தநாள் நோக்கி நாம் நகர்வோம்,
ஒளிநிறை பூமி ஒன்றே குறியாக.
* கவிஞர் மு. பொன்னம்பலம்,
霉掌 ஈழத்து முன்னணிக் கவிஞர்களுள் ஒருவர்.
Page 44
நிலவுக்கு எழுதல்
யாரிட்டார் சாபம் இந்த நிலவுக்கு?
கறையோடு உடல் பிறந்தும் கண்ணே உறுத்தாது காலமெலாம் பொழிந்த நிலவுக்கு நேர்ந்த தென்ன?
காவிய காலக் கனவே சிதைந்ததென
இன்று வெறுங் குறுமதியாய். urrflu · L - smuGuorr?
காலங் காலமாய் கன்னியர்க்கு உதாரணித்தும் * நிலவின் துகிலேக் கலே** யென்று உடுத்தியும் உரிந்தும் வேசையாடித் தீர்த்த கவிஞரின் வெறித்தனம் ஒய *காவிய நிலா"வின் காலம் தேய்ந்தது.
கால வளர்ச்சியில்
காத்திருந்து,
இதோ பாரென்று கற்றை விரித்தது விஞ்ஞான நிலா மனிதக் காலடிச் சுவடுகள் ஏந்தி.
59
"சுவடு பற்றி எழுக!" என்ருர்த்தார்; எழுந்தவர் என்ன கண்டோம்?
விண்ணிலும் வேலி போடத் தொடங்கினர் விஞ்ஞானத்தார்.
நிலவின் குண்டு குழிகள் எங்கள் நெஞ்சிலும் கொண்டேகி நிலவுலாவிய நிகழ்வு என் செயும்?
அன்று ஆதி சிவன் சூடினுன் இன்று நாம் சூடுவோம் என்று வல்லரசுகள் எழுந்து வல்லூருய்ப் பறக்க வாழுகின்ற பூமியிலே
விஞ்ஞான யுத்த காண்டம் விளைவித்த மனுச் சாம்பல் புழுதி கண் மறைக்க நிலவெங்கே தோற்றும்?
நிலவின் கிரகணமே நித்திய தரிசனமாச்சு.
நிலவுக்கு எழுதலே இவரின் நீசத்தனங்களை மறைக்க எழுப்பும் மாயையாச்சு.
மாயை முகில் திரைகிழித்து கறையிலா நிலவினிக் காரிக்குமோ? நாமெல்லாம் தூவெண் மதி சூடும் நாளென்ன வெகு தொலைவோ?
Page 45
பொழிவு
புலன்கள் அதிர மின்னி முழங்கிப் பொழிந்தாற்ருன் பொழிவா?
பொழிந்த பெருமழைக்குப் பின்னல் காத்திருந்து மெல்ல எழுமே ஓர் பேர் மெளனப் பெருக்கு.
அடை மழைக்குப் பின் முளைக்கும் கதிர் விரி காலையில்
வழியுமே ஓர் எல்லையற்ற பேரமைதி.
கழுவித் துடைத்த வானின் நகஷத்ர விழிகள் சொரியுமே ஓர் ஸ்ருதி சுத்தம்,
புலன்கள் உறைந்து போக
இவற்றின் பொழிவில் நனைந்திலையா?
இலையுதிர்த்த நெடுமரமாய் ஏகப் பெரு வெளியின் சங்கீதம் குளித்திலையா?
எதிர்ப்பு
எதையும் எதிர்கொள் முகந் திருப்பாதே; மணஞ் சலிக்காதே.
தடைகள் புறத் தடைகள் மடைத்தனம், வாமன ரூபம் மூவுலகளந்ததே!
ஆகாயம் மேவிய பாய்ச்சலில், தடைகள் வெறுந் தோற்றம்.
மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் உருவிப் பாயும்,'-வெறும் பாறைப் பழம் மொழி தாமதத் தத்துவம்.
ஓடிவரும் கிளை நதிகள் உட் தேக்கி வேகமாய்ப் பாய் வீச்சோடு.
மனஞ் சலிக்காதே, முகந் திருப் பாதே, எதிர் கொள் எதையும்; எதிர்ப்பில் முளைகொள்.
Page 46
இடிபாடுகளின்மேல் ஒரு படைவீடு
கோபுரங்கள் எழும்பிய கோயில்களை விடவும் இடிபாடுற்றவைகளில் எனக்கு அதிகம் ஈடுபாடு.
இடிபாடு களிடையேயும் *இதோ நான் எழுந்தருளி என்று சிதிலங்களின் மேலாய்க் கூவும்குரலை நான் கேட்பதிங்கேதான் ஆதலினல்,
இடிபாடுகளிடையேயும் இறை காணுர் எழுப்புவார் கோபுரம்.
எல்லாமே இடிந்த வெளியில் திரு நடம் காண வேண்டும். பரந்தில்லை வெளியில் அந்த நடம் காணுப் பேர்வழிகள் இடிபாடுகள் நீக்க எழுகிருர் தூண்களாக. தூக்கி நிறுத்தும் ஒவ்வொரு தூணிலும் நாமம் பொறிக்கும் காமிகள் எழுகிறர்.
63
இடிந்து விழப் போகும் இந்த நடமாடுந் தூண்கள் , எழுப்பிய தூண்கள் நிற்கவா போகுது? கோபுரத்தை பொம்மைகளா தாங்கி நிற்குது? இளிச்சவாய்ப் பொம்மைகள்,
எல்லாமே ஒருநாள் இடிவிழுந்த குண்டாகாதோ? எழும்பிய கோயில் வேறு இடிவிழுந்தகுண்டு வேரு? இடிவிழுந்த குண்டினுள்ளும்
நீரூற்று முகங்காட்டும்.
அழிவிலும் ஆக்கமுண்டு தன்னின் அழிவு தரிசனம் காட்டும்
தன்னை எழுப்பினுல் சூரனின் தலைமாற்றம்.
2 குரன் போர் நடந்தது கோயில் ஒன்றில். கோபுரம் எழும்பிய கோயில்.
சூரன் வந்தான் வீதியெல்லாம் சுற்றித்திரிந்து தலைகாட்டின்ை. தலைகழற்றி தலைமாற்றி "கலை"யாடித் திரிந்தான். *உருவேறிய சூரனின் உடல் அற சேவலும் மயிலும் வரும்’ என்ருர் ஒருவர்.
(சேவலுக்கும் மயிலுக்குமா சூரன் உடல் கிழித்தான் முருகன்?)
"சூரன் யார்? யார் சூரன்?
"சூரனைச் செய்தவன் சூரன?" ‘சூரனைக் காவியவன் சூரன?
Page 47
64
சூரவிமர்சனங்களில் சுற்றி நின்றேர் ஈடுபட சூரனைக் காவினேரும் முருகனைக் காவினேரும் சுறுசுறுப்பாய் முன்பின்னய்ச் சுழன்று வர திடீரென்று
மோதுண்டு வீழ்ந்தார் கோயில் முதலாளி, குருக்கள், நாரத வேடர் பலரும் வீசுண்டு வீழ்ந்து முழங்காலில் நோவுண்டு எழுந்து மெல்ல நொண்டிநடக்க.
வானிலே என்ன அது? சூறைக் காற்றுச் சுழன்றடிக்க சூரணுய்ப் பருத்த மேகங்கள் கர்ஜிக்க பீறிவரும் வேலாயுதங்களென மின்னல் பெருக்குதிர பொழியும் மழைக்குருதி.
சூரன் போர் இப்போது வானில் இடமாற்றம் சுற்றிநின்றேர் அஞ்சி கோயிலின் உட்பதுங்க கோபுரமே தகர்ந்து கொட்டுவதாய் இடிமுழக்கம்.
கோபுரத்தில் இடிவிழக் கூடுமோ? என்று அஞ்சுந் தொனிகள்: ஏக்கம் கெளவிய முகங்கள் கற்சிலைகளாய் விறைத்துநிற்க
இடிவிழுந்தால் தான் என்ன? இடியும் இடி விழுந்த பள்ளமும். கடலும் கரைகடந்த வெள்ளமும். . தீயும் தீக்கடைந்த ஊழியும். ஊழிக்காற்றின் "ஹோ"வென்ற இரைச்சலும்.?
*உலகழிந்து போகுமே!’
உலகழிந்து போனல் தான் என்ன? சூரணுய்ப் பருத்துக் கிடக்கும் உலகு. சூரனின் அழிவில் சுகம் இல்லையா?
65
சூரனின் கோட்டை சுக்கு நூருய்ச் சிதற இடிபாடுகளையே படைவீடாக்கி இறை கொலுவிருக்காதா?
முப்புரங்கள் எரிந்த சாம்பரிடை மூன்ருவது கண் ஜுவாலித்ததே.
சருகுகள் “குபீரென்று பற்றி எரிகையிலும் ஓர் இசை எழல் உண்டன்றே.
எல்லாமே இடிந்த வெளியில் திருநடம் இந்த இசையின் பின்னணி லயத்திலே அன்ருே
இதனுல்தான் கோபுரங்கள் எழும்பிய கோயில்களைவிடவும் இடிபாடுகளில் எனக்குப் பிரியம் அதிகம்.
இடிபாடுகளிடையே எழும் புழுதியிடைத் தோயாச் சுவடுகளின் தூரத்துச் சிலம்பொலி காதில் விழுவது இங்கேதான்.
காது கொடுங்கள் அக்கழலொலிக்கு. எல்லாமே இடிந்த பரவெளியில் திருநடம் காண வாரும்.
Page 48
தூரக் கடல் தாண்டி . .
ஒடத்தில் ஏறிச் செல்வோமே தொடுவானம் குறியாக நீல நெடுங் கனவாய் விரிகடலில் ஒலமிடும் அலைகள் நடுவே.
பிரிந்து செல்லும் துறைமுகத்தில்-துயர் சொரிந்தெரியும் விளக்குகளில் எங்கள் நெஞ்சங்கள் ஏங்குவதோ? எங்குமே துன்பங்கள்தான் சொந்தமோ?
விடிவை நோக்கிய பயணமிது விடிவதெப்போ? பயணம் முடிவதெப்போ? ஒளியின் கீற்றுகள் வெளிப்படுமோ? இருளின் பாறைதான் தொடர் இருப்போ?
விடியும் விடியும் என்றெவரோ சொன்னர் இருளின் பாழில் எழுந்த குரல்களோ? மயங்கும் மனங்களின் மாயங்கள் தாண்டி துயிலும் நம்பிக்கைச் சுடர் தூண்டிப் போவோம்.
ஒளியும் இருளும் உலகின் விதி என்ற இருளின் வலையில் விழுந்து படாமல் துயிலும் நம்பிக்கைச் சுடர் தூண்டிப் போவோம் தோணி எடுத்தோம் துடுப்பை வலிப்போம்.
ஒளிக்கும் ஒளியாக உற்ற துயருக்கு விடிவாக வெளிக்கும் வெளியாக வெளிச்சமே வாழ்வாக உன்னதம் ஒன்றின் இருப்புளது துன்பக் கடல் தாண்டிப் போவோமே துன்பக் கடல் தாண்டிப் போவோமே.
சுழலின் மையம் தேடி.
அம்மா ஒவ்வொரு நாளும் முற்றம் பெருக்குவாள் குப்பைகள் சேரும் கொளுத்தி எரிப்பாள்.
கொளுத்தக் கொளுத்தக் குப்பைகள் சேரும் குப்பைகள் சேரச்சேர கொளுத்தலும் தொடரும் கொளுத்திய பின் எஞ்சிய சாம்பலை காற்றெடுத்துத் தூவ விழுந்த தூசிகள் விழிகளை உறுத்தும்.
பக்கத்து வீட்டில் குப்பைகள் சேர்ந்தால் வெட்டித் தாழ்ப்பார் பசளையாய் மாறும் பசளையின் மேலே பச்சை கொடி விடும் கொடிவிட்டுத் தளிர்த்தவை நாட்செல நாட்செல சருகுகள் உதிர்க்கும். தளிர்ப்பதும் உதிர்ப்பதும் உதிர்ப்பதும் தளிர்ப்பதும் ஒரே சுழல் வட்டம்.
Page 49
68
2
எப்போதிருந்து இவ்வுலகம் குப்பை கொட்ட ஆரம்பித்திருக்கும்? உலகங்கள் தானென்ன ஒன்ரு இரண்டா? அவையும் கொட்டிக் கிடக்குதே குப்பைக் கணக்கில்
வான மண்டலத்தில் தூசிகள் திரண்டு திணிந்து பெருத்து ஊதி வெடித்த ஒரு கணந் தொட்டு பருத்திக் கொட்டைப் பஞ்சுகளாய் இருட்டில் விழிக்கும் உலகங்கள்தான் எத்தனை எத்தனே!
பால் வழிப் பயணிகள், உடுக் கொத்து :ஊர்வல மத்தாப்பூச் சிதறல்கள், எண்ணுதற்கு எட்டாப் பெருவெளியில் பின்னிப் பின்னிக் கண்ணைச் சிமிட்டும் அரைவிழிப்பு, கால்விழிப்பு தூக்கக் கலக்கங்கள், ஒளிவருடத் திரைமறைப்புள் குருவிக் கிடக்கும் ரஹஸ்யங்கள் இன்னும் எம்மையே ஆளும் இயல்பினராய உன்னத நாகரீகத்து ஒளி விளக்குகள்.
இப்படி இப்படி எத்தனை உலகம் சித்துகள் போல.
எல்லையறு விண்வெளியின் ஏகாந்தத் தாலாட்டில் கண்ணயர்வன போல் காணும் அண்டமெலாம் அள்ளுண்ட வானப் பேராருய் எங்கோ எங்கோ எங்கோவாய் முடிவிலி என்னும் பரவையுட் பாய்ந்தபடி. ஒரே பிரபஞ்ச ஒட்டம்.
69
3 இங்கேயும் எமதகத்துள் எத்தனை நகர்வுகள்.
மனவெளியில் குரவையிடும் எண்ணத் துணுக்குகள் சிறுச் சிறு கணங்களின் சேர்க்கை வலங்கள்லய மெல்லொழுக்குகளாய் உடைப் பெடுத் தோடல்களாய்.
மனதின் ஒரவிழி நோக்கில் ஆழப் புதைகுழி நீத்துக் கிளர்வுறும் உணர்வுகளின் முளை மீறல்கள், கிளைத்துப் படர்ந்து பூச்சொரியும் இன் கனவுகள், துயர் சுமந்து கசியும் மென்பணித் தூறல்கள், சடைத்த இருட் தோப்புள் ஆழ்துயிலும் மர்மங்கள், இருட்தோப்பை ஊடுருவி நின்ற நிசப்தத்தின்
பேரிரைச்சல் மூச்சின் நரம்பதிரும் மின்வெட்டுகள்.
இருளிடை மின்மினி வலங்களாய், இப்படி ஒன்றையொன்று விழுங்கியும் உமிழ்ந்தும் துரத்திக் கொண்டோடும் எண்ணத் துணுக்குகளின் ஒட்டம் இடையரு ஓட்டம்.
ஜீவன் அறுந்தபின்னும் காற்று வெளியில் தூவிய கருத்தின் துகள்களாய் மனேகுக்குமத்தின் மாயப் பந்தயம்.
له அகவெளி முற்றந் தொட்டு அண்டவெளி முற்றம் வரையும் எத்தனை நிகழ்வுகள் எத்தனை நகர்வுகள்!
Page 50
70
அத்தனை நிகழ்வுப் புயல்களும் வாரிக் குப்பை கொட்ட தொங்கும் தொட்டிகளா இவ்வுலகங்கள்? பிரபஞ்சமே குப்பைமயம் தூசிமயமா? எனின் இந்தத் தூசிகள் அகல்வதெப்போ? குப்பைகள் ஒழிவதெப்போ?
அத்தனை உலகும் தீப்பட்டழிந்த ஊழியின் முடிவில் ஒழியுமா
நெஞ்சின் விழியுறு தூசி? பிரச்சனையின் முடிவு பிரபஞ்சத்தின் பிடிசாம்பரில் கிடைக்குமா?
பிடிசாம்பரிடையும் பிரபஞ்ச அணுவிலிருந்து அடைகாத்து முடுகி முறுகி பெருத்துரதி மீண்டும் கோளங்கள் பொரித்தால். P குப்பைகள் மீண்டும் சேர்ந்தால்..?
உதிர்தலும் தளிர்தலும் உள்ளிழுத்தலும் உமிழ்தலும் ஒரே சுழல் வட்டத் தொடர் நிகழ்விலையாம். தொடர்நிகழ் லீலையில் எனது இருப்பு எங்கே?
சுழல்வட்ட நகர்வில் எனதும். ஓர் சிறுத்துளி நகர்வே.
எனின்
நகர்விலா எனது இருப்பு?
அன்றி துளி நகர்வெனும் துண் அணுப்புரைய விரியும் பேர் வெளியிலா? ஓயாது உழலும் பிரபஞ்சத்தின் உள் மெளனத் தொனியிலா?
ஸ்தல புராணம்
1. ஸ்தல வரலாறும் மகிமையும்
கோயில் கும்பிடுவதில் எங்கள் சைவத் தமிழரை குறை சொல்ல ஏலாது நீறிட்ட நெற்றியில் சந்தனப் பொட்டும், மிஞ்சின சந்தனம் மேனிமுழுவதும் பூசின கோலமும் சரிகைச் சால்வை யொடு நீளவே தொங்கும் தங்கச் சங்கிலியும் ஆடவரும் அழகோ அப்பப்பா இப்புவியில் தேவரும் கால் பதியார் திகைத்து. காசி கதிர்காமம் சேதிசிதம்பரமும் திருப்பதியும் சென்று திருப்பாற் கடல் கடைந்து வரு வரன்றே.
கோயில் கட்டுவதிலும் என்ன குறைவோ? ஆதித் தமிழ் மன்னர் மூட்டுதிருப் பணியின் மீதியை எம்முதலாளி மார்தான் தொடருகிருர் ஆளுக்கொரு கோயில் அரசின் கீழும் ஆலின் கீழும் இருந்த வயிரவர் சூலங்கள் கோயில் கொண்டது இவர் கொள்கையால் அன்ருே. அய்யனர் கோயில் வயிரவர் கோயில் அம்மன் கோயில் பிள்ளையார் கோயில் எத்தனை எத்தனை எண்ணில் அடங்கா கறையான் புற்றுகள் கட்டினுற்போல முழத்துக் கொருகோயில் முன்னின்று கட்டினர்.
Page 51
72
சுரண்டிய பணத்தில் பொதுப் பணிக்கென்று செப்புச் சல்லியும் செலவிட்டறியார் நானெரு கோயில் முதலாளி என்று நாலு பேர் மத்தியில் "நான" எழுப்பவும் பிஸினெஸில் விழுந்த கறுப்பை மறைக்கவும் பிராயச் சித்தம் தேடும் வகையிலும்
கோயில் கட்டினர் கோயில் கட்டினர் கட்டிய கோயிலில் என்னதான் கண்டார்? எண் சாண் உடம்பிற்கு ஓர் இருப்பிடம் தேடி பஞ்சாயத்தில் பதவி கொண்டமர்ந்ததும்,
கோயில் காசை ருேளில் விட்டதும் குருக்கள் மாரை பெருச்சாளியாக்கியதும் குறைகளை மறைக்கக் கோபுரம் எழுப்பி கோபுரத்திலே பாதியை விழுங்கும் கும்பிடுகள்ளரைக் கொண்டு திரிந்ததும் கூஜா காவிகளுக்குத் 'தம்பிடி" ஈந்ததும்இப்படியான சரியை கிரியைகள் சகலதும் கண்டார்.
திருவிழாக்களுக்கும் ஏதும் பஞ்சமா என்ன? முதலாளிமார் தம் சொந்தப் பெருமைத் தொந்திகள் நிமிர்த்த வந்து போகும் வருஷங்கள் தோறும்.
முதலாந் திருவிழா உபயகாரரோ மல்லாகத்துச் சிகரம் அமைத்தால் இரண்டாந் திருவிழா உபயகாரரோ அளவெட்டிச் சிகரம் அமையாது உறங்கார்.
சின்னமேள, நாட்டியக் கச்சேரி என்ன குறைவோ? ஒருநாள்
*கன்னிகா குழு வந்து கலக்கியெறிய
மறுநாள்
மல்லிகா குழுவோ புழுதி கிளப்பும்.
காவடி, கரகம், ஏறுபடி யோடு சீனடி சிலம்படி மோசடி எல்லாம் ஆலய முன்றலின் அரங்கெழுந்து ஆடும்.
கண்கொள்ளா இக் காட்சிகள் கண்டு இறைவனின் இஷ்ட சித்தி பெற்றுய்ய சாரிசாரியாய் சனம்வந்து கூடும்.
கூத்தாட்டு அவைக் குழாம் கலைந்தேகி தாமஸ குணத்தில் அழுந்திக் குறட்டை இழுக்கும்.
2. ஸ்தலக் குழப்பமும்
சத்தியாக்கிரகமும்
இப்படியாக நம் வேளாண் மரபுச் சைவத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் ஆலய வழிபாடு செய்து வருகையில் ஆலயச் சுவர்களின் அடைப்புக்கு வெளியில் ஊர்மனையெங்கும் ஒலித்தன குரல்கள் உரிமை கோரும் விழித்தோர் குரல்கள்!
"உள்ளே விடுங்கள் உரிமை கொடுங்கள்" உரிமை இழந்தோர் உரத்துக் கேட்டார் எழுந்த குரல்களில் ஏறிய ஞானம் ஆணவச் சுவர்களில் அறைந்து ஒலித்தன.
மாவிட்டபுரத்துக் கந்தன் கோயில் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் வல்லிபுரத்து ஆழ்வார் கோயில் எங்கும் உரிமைக் குரல்கள் கேட்டன 'உள்ளே விடுங்கள் உரிமை கொடுங்கள்' இழிசனர் என்று இவரால் நசுக்கப்பட்டோர் வழிபாட்டுரிமை கோரி எழுந்தார்.
Page 52
74
"எங்களையுந் தண்ணிர் அள்ளவிடுங்கள்" **பொதுக் கிணறுகளில் சமத்துவம் வேண்டும்?? சின்னஞ் சிறிய தீவுகளில் கூட உரிமைக் குரல்கள் உரத்தே கேட்டன.
உரிமைக்குரல்கள் கேட்கக் கேட்க உறங்கிக் கிடந்த சைவ மரபு சடுதியாய் விழித்தது சன்னதம் கொண்டது சன்னதம் கொண்டதும் "சைவாசாரம்" தன்னிலை மறந்து ஆடத் தொடங்கிற்று.
சின்னமேளக் 'கூத்தை மறந்தது உண்டியல் காசில் பிழைத்ததை மறந்தது வேஷம் விளம்பரம் யாவும் மறந்தது வேதாகமங்களைச் சான்றுக் கிழுத்து ஆசார விதிகளை அலசிக் காட்டிற்று.
பேசாமல் போனுல் சாமியும் பொறுக்கும் நாமும் பொறுப்போம் பிறகு மெல்ல காலம் செல்லப் பார்க்கலாம்'என்று பூசி மெழுகியும் பார்த்தது
ஆயினும் போராட்டமோ மேலும் தொடர்ந்தது.
ஒடுக்கப் பட்டோர், முற்போக் காளர் ஒன்று திரண்டார் கோயில்கள் முன்பும் கிணறுகள் முன்பும் உரிமை கோரி உட்கார்ந்தார்கள்
த்யாக்கிரகம்.
சத்யாக் கிரகம் என்றதும் உடனே சைவாசாரம் கொண்டதே கோபம் பஞ்சாயத்தும் பரிபாலன சபையும் ஒன்ருய்க்கூடி சமிக்ஞைகள் செய்தன.
75
முதலாளிமார்கள், முழுசாய் விழுங்கும் குருக்கள் மார்கள், கொண்டைக்காரர்
குறுகல் புத்தி ஆசார சீலர்கள் கொடுக்கை வரிந்து பணியில் இறங்கினர்
சன்னதம் கொண்ட அன்புச் சைவம் சண்டித் தனங்கள் செய்ய எழுந்தது.
கோயிற் செலவிலே "தீர்த்தம் வார்க்கவும் குடித்த வெறியரோ துள்ளி எழும்பினர் கொண்டைக்காரர் தடி கொண்டு ஆடினர் குருக்கள்மார் யாக அடுப்பை ஊதினர்.
விரதகாரப் பெண்டுகள் எல்லாம் சிரசுகள் ஆட்டிச் சிலுப்பத் தொடங்கினர்
ஆசார சீலரோ இவற்றுக் கெல்லாம் ஆதாரமாய் நின்று தேவாரம் பாடினர்
கோயிலை அடைத்தும் கிணறுகள் சுற்றி வேலிகள் போட்டும் காத்தனர் சிலபேர்
முதலாளிமாரோ மேலிடம் வரையும் முழுமூச்சோடு "காரியம்” பார்த்தனர் காக்கிச் சட்டைக்காரர் வந்தார் தாழ்த்தப்பட்டோர், முற்போக்காளர் தாக்கப்பட்டார் அமைதியோடிருந்து உரிமை கேட்டோர் உதைக்கப்பட்டார் சிறையினுள்ளும் தள்ளப் பட்டார்.
இறைவனின் பேரால் இத்தனை நடந்தும் சைவத்தின் பேரால் சண்டித்தனங்கள், சதிகள் நடந்தும் எங்கள் சித்தாந்தச் செம்மல்கள், மணிகள் எல்லாம்
அன்பே சிவம் என்று அமர்ந்தே இருந்தார்; நந்திகளாகவே குந்தியிருந்தார்.
Page 53
76
விழாக்களில் பேசிய களைப்பு மேலீட்டால் விழுந்து படுத்த நம் தமிழ்த் தலைவர்களோ வீட்டை இறுக்கிப் பூட்டியே படுத்தார் சத்தியம் கதவிலே தட்டிக் கேட்கவும் புரண்டும் படுத்திலார்! பிரச்சினையிலிருந்து தப்புதற்காகவோ "தமிழ் தமிழ்" என்று இவர் பிதற்றுவார் ஏதோ கனவிலுந் தமிழைக் காப்பவர் போல.
கனவுலகத்தில் எவர்தான் உறங்கினும் சத்தியம் மட்டும் உறங்குவதில்லை. விழித்தபடியே சலியாதியங்கும் விழிப்பு சத்தியம் இயக்கம் சத்தியம். சத்திய இயக்கச் சுழற்சியின் போக்கே சமூக வரலாறு. வரலாற்று வளர்ச்சியில் வந்ததோர் சட்டம் சட்டத்துக்கான திருத்தங்களும் வந்தன.
சட்டத்தையும் ஒருகை பார்க்கிறேன் என்று சைவாசாரத்தை கிறீஸ்தவர் முன்னே பிறிவிக் கவுன்சிலில் நிரூபிக்கப் போனவரின் *கயிறின் புரிகளும் அறுபடலானது. சாமியைத் தூக்கி உள்ளே அடைத்தும் சாதியைத் தூக்கித் தலையிலே வைத்தும் சன்னதம் ஆடியவர் விறைத்துப் போக சத்தியம் கதவை அடித்துத் திறந்தது. தேனீர்க் கடைகளும் சில திறந்து கொண்டன. சிற்றுார் ஒன்றில் தண்ணிர்க் கிணறும் சகலர்க்கும் திறந்தது. இவ்வாருக ஊருக்கொவ்வொரு உதாரணம் விளைந்தது.
ஆயினும் சாதி இன்னும் ஒழிந்த பாடில்லை நீதி முற்றப் நிமிரவே இல்லை.
77
சட்டத்தையும் மீறிச் சுழித்து சாதித் தடிப்பு வாழவே செய்யுது
சட்டத்தைக் காக்கும் அமைப்புக்களே முட்டுக்கட்டைப் பிற்போக்காயின. அமைப்பின் கட்டுகள் அறுபடாதவரை சட்டம் வெறும் சடலமே
அதனல்
அமைப்பை மாற்றி அமைத்தல் அவசியம்.
3. ஸ்தல மாற்றம்
அமைப்பில் மாற்றம் என்பது புறத்தை மட்டும் கருதுவதன்று சத்தியவிரோதமாய் சாதிகள் ஆயிரம் அகத்திலே உள்ளன.
அகத்தை ஆளும் அறியாமை அமைப்பு அமைப்பைக் காக்கும் முக்குணக் கூட்டு
கூட்டில் விளைந்த சாதிகள்.
அவற்றையும் தகர்த்தல் வேண்டும் அகத்தை நீக்கிய புறம் புறத்தை நீக்கிய அகம் இரண்டும் அறியாமையின் அடுத்தபக்கம்
அகமும் புறமும் ஒருங்கே மாற்றம் அதுவே ஞானம்.
அகத்தில் சாதி மனுேபாவம் வீங்கியவன் புறத்தில் மாற்றம் விளைப்பன் என்பது பொய்.
அதனல் இன்று அகப்பிரவேசம் அவசியமாகும்.
Page 54
78
சாதிகள் தேங்கிய காயங்களாக கோயில்கள் இருக்கையில் ஆலயங்களோடு ஆலயப் பிரவேசமும் அவசியமற்றே போவதுண்மையே.
காயங்கள் இனிமேல் காய்ந்து உதிரும் அகமும் உடலும் ஆலயம் ஆகும் வாழும் மனிதர் தெய்வங்கள் ஆவர் வாழ்க்கையே கலையும் வழிபாடுமாகும்.
வாழ்க்கையே கலையும் வழிபாடுமாகி வாழும் மனிதர் தெய்வங்களாக சாதி வர்க்கங்கள் இவை தாண்டப்படுமே சாதி வர்க்கங்கள் தாண்டுத லென்பது சத்தியத்தோடு ஒன்றுதல்தானே.
சமூகம் முழுமையும் சத்தியத்தோடு ஒன்றுதல் நிகழ சத்திய ஞானம் பொது உடைமை ஆகும்; பொருளாதாரப் பொதுவுடைமைப் போக்கின் பூரணத் தோற்றமும் அங்கே பிறக்கும்.
மீண்டும் உயிர்த்தல்
கல்லறைகள் ஒரு நீாட் பெயரும் அன்று புதைகுழி நீத்து எம் உணர்வுகள் உயிர்பெறும்.
சமாதி கட்டியாயிற்று என ஒருகணம் சந்தோஷத்தோடு சுகபானம் அருந்திக் களித்திருப்பீர் சிறு பொழுதே. அதற்குள் மீண்டும் உயிர் பெற்றெழுவோம்.
எதிர் பார்த்திருக்க மாட்டீர் எம் உயிர்த்தெழலை உம் திகைப்புகள் கல்லறையாய் மாற.
Page 55
80
முன்னுெருகால் சிலுவை தாங்கிய நாயகனின் சுவடுகள் இன்னும் அழிந்து படவில்லை இதோ மீண்டும் அவன் உயிர்ச் கவடுகளின் அரவம் காற்றில் உயிர்க்கும்
ஆடை அசைவின் தொனி.
சிலுவையின் கீழ் அவன் சிந்திய குருதித் துளிகள் என்றுமே காய்ந்திலது இதோ இன்னும் பச்சையாக இன்றைக்கும் சத்தியமாய்.
சிலுவையில் அறைந்தவர்களும்
எங்கேயுமல்ல
இங்கேதான் இன்னும் உயர் பீடங்களில் இருக்கை போட்டுள்ளார்.
முள் முடி சூட்டியவர் சவுக்கால் அடித்தவர்கள் ஆணி அறைந்தவர்கள் இன்னும் உள்ளார்: இன்னும் உள்ளார். ஆட்சி பீடங்களில் அதிகாரத்தோடு உள்ளார்.
அவர்களின் கொடுமையில் சிலுவை தாங்குவோர் சிந்தும் குருதித் துளிகள் இன்னும் இந்தப் பூமியை நனைக்கிறது.
8.
ஒடுக்கு முறைக்குள்ளானேரின் ஒவ்வொரு கல்லறையிலும் அவர்கள் நினைப்பது போல் உதிரம் உறைந்து விடுவதில்லை,
உட்கனன்று கொதிக்கும் அது புதிய உருவெடுக்கும்.
2 சிலுவை ஏற்றுவோர்க்கும் சிலுவை சுமப்பவர்க்கும் இடையிலுள்ள முரண்பாடு இன்று நேற்று எழுந்ததன்று.
மோதி மோதி முரண்பட்டுப் புதிது குதிர்வது உண்மையே. ஞானம் - அஞ்ஞானம் தர்மம் - அதர்மம் என ஒதிற்றே வேதம் அன்று, அதுவேதான்.
அந்த வரலாற்றின் ஒட்டம் ஓர்ன்றும் உறைந்து போவதில்லை சிந்தும் ஒவ்வொரு வியர்வைத் துளியிலும் குருதித் துளியிலும் உறைந்து படாமல் உந்தி எழும் உயிரோட்டம் அதன் இயல்பு. ஒவ்வொரு புதுத்தளமாய் அது களம் விரிக்கும்.
தளம் உயர்த்தும்.
இன்றைக்கும் அதன் இயல்பு உந்தல் நிகழ்வேதான் உண்மையைப் புதைகுழிக் குட்படுத்திப் புறம் வீற்றிருக்கும் பொய்மையின் பூச்சுகள் பொடி உதிர "இதோ உண்மை உயிர்த் தெழுகிறது.
Page 56
82
அஞ்ஞான இருட் பாறை அடைப்புக்குள் அதிர்வுறவரும் உண்மையின் வெளிப்பாடு சிலவேஃா அசிங்கமாய்ப் படலாம், அருவருப்பாய்த் தெரியலாம். அவையெலாம் பொய்மை சார்ந்த பூச்சுகள் போலி மதிப்பீடுகள்.
தூண் பிளந் தெழுந்த தரசிங்க அவதாரத்தின் பிருண்டல்களால் பிளவுற்று உதிரம் வழியும் அசுரனின் வீழ்ச்சி எழுதப்படுகிறது. அதன் இன்றைய சாட்சியாய் இங்கும் நிகழ்வன புத்தெழுச்சியின் கோலமே!
விடுதலை ஒன்றே உடைமையாய்.
விடுதலை ஆத்மார்த்தமானது.
என்னிடமிருந்து யாரும் அதைப் பறித்துவிட முடியாது, எனக்குள்ள ஒரே ஒரு உடைமை விடுதலையுடைமையே.
கைவிலங்கு, சிறைக்காவல், முள்வேலி சித்திரவதைகள், தூக்குக்கயிறு இவையெல்லாம் விடுதலயைச் சிறையில்டா, மாடுக சிறையுண்டிருந்த என் குறுகிய உணர்வு வட்டத்தி
னின்றும் என்னை விடுவித்து விடுதலையின் ஸ்பரிசித்தலை நோக்கி விரைவுபடுத்தும்; விடுதலை நாட்டத்தை வேகப்படுத்தும்.
என்னகவிடுதலையை விபரிக்க இயலாது இதுகாறும் தூங்கிக் கிடந்த மாயைத் தளங்கள்
தூங்கும் அப்பிரதேசங்களில்
அடக்குமுறை ஆணவக்காரரின் படைகளின் ஊடுருவலால் விடுதலை உணர்வுகள் விழிப்பெய்துகின்றன.
ஒடுக்குமுறையின் உக்கிரகத்தால் விழிப்பெய்தல் நிகழ விடுதலை வீர்யம் விகCத்து எழுகிறது ஆன்ம வீர்யம்,
அதன் எழுச்சியில்,
வேலி கட்டி நின்ற
சிறுவட்டம் தகர்வுற விடுதலை உணர்வுப் பெருந்தளம் விரிகிறது.
Page 57
84
இப்போது
நான் போருக்கு எழுகிறேன்; என் விடுதலைப் பிரதேசங்களின் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக,
ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் ஆணவத்திற்கு எதிரான போராட்டம் அதர்மத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பமாகி வளர வளர விடுதலையின் ஸ்பரிசம் சித்திக்கிறது.
விடுதலை ஒன்றே இலக்காயிருக்க சதா அகமும் புறமும் போராடுதல் ஒன்றே என் தொழில். ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் அதேதருணம் ஒருங்கே நிகழும் தியாகம், சுயநலமறுப்பு" என்பவற்றின் விளைவான அக்ச் சுத்திகரிப்பு.
சுத்திகரிக்கப்பட்ட இப் பெருந்தள உணர்வுநிலையில் பொருளார்ந்த சுமை இல்லை போலி மதிப்பீடுகள் இல்லை. சிறுவட்டச் சேமிப்புகள் இல்லை.
சாதி, சமயப் பேத வீக்கங்கள் இல்லை. எனக்கு நானே பூட்டிக் கொண்ட இவ்விலங்குகளை உதறி எழுந்து விடுதலைப் பிராந்தியத்துள் இதோ நான் காலடி வைக்கிறேன்.
சுமைகளில்லாதவன் வழிப்பயணம் மிக இலகுவானது. இனிமை நிறைந்தது. மன வீக்கங்கள் கழன்று போக விடுதலைத் தென்றலை நுகர்ந்து மனசு நிரம்பி வழிய விடுதலை ஒன்றே உடைமையாய்.
Page 58
Page 59