கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அழியா நிழல்கள்

Page 1


Page 2


Page 3

அகங்களும் முகங்களும்
சு. வில்வரத்தினம்
5%) GalGiful
48. சுய உதவி வீடமைப்புத் திட்டம், குருநகர், யாழ்ப்பாணம்

Page 4
அலை வெளியீடு - 7
ஆவணி 1985
Ahankalum muhankalum (a collection of poems in tami) by su. vivara hthinam. published by alai velliyeedu. cover by a. marku, printed at punitha valan achhakam jaffna, sri lanka.
first edition: august 1985.

சமர்ப்பணம்
எல்லாமும் ஆகி எனதுள்ளும் சொல்லாமல் ஊடுருவி சுருதிப் பொருளாகி பொல்லா வினைகளைந்த ஞானப் புயலே
சொல்லிலே உந்தன் சுவடெழுதும் போதெல்லாம் தோற்றுப்போம் வீழுகிறேன் என்னைத் - தூக்கிவிடு
குருதேவா
நின் தொடுகழலில்
இது சரனே,

Page 5
2.
28.
30.
3.
3.
உள்ளடக்கம்
பதிப்புரை
முன்னுரை
என்னுரை
தியானம்
விடுகலைப் பொழுது
கோடை. மழையின் பொழிவில் நனையும் பொழுதுகள் அகங்களும் முகங்களும்-1 அகங்களும் முகங்களும்-2 வெறும் இறக்கை
வீழ்ச்சி
垩空度虚_*泛
கலப்பு
உராய்வு வெறுங் காற்றில் கலந்திடுமோ. இந்தியாவே நீ எங்கு செல்கிருப்? விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும் விமர்சக விகடங்கள் காற்றுள்ளபோதே.
மின்னியக்கம் எங்கள் வீதியை எமக்கென மீட்போம்
துது சிறகடிப்புகள் என்றும் சிறைப்படா புத்தரின் மெளனம் எடுத்த பேச்சுக்குரல் புது யுகச் சங்கொலி நிலவும் நெகிழ்வும் நிலவுக்கு எழுதல்
பொழிவு
எதிர்ப்பு இடிபாடுகளின்மேல் ஒரு படைவீடு தூரக் கடல் தாண்டி. சுழலின் மையம் தேடி. ஸ்தல புராணம் மீண்டும் உயிர்த்தல் விடுதலை ஒன்றே உடைமையாய்.

பதிப்புரை
நாட்டுப் பாடல், சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம், அரசியல் வர லாறு எனப் பல்வேறு துறைகள் சார்ந்த வெளியீடுகளைத் தொடர்ந்துவரும் இக் கவிதைத் தொகுப்பு, எமது ஏழாவது வெளியீடாகும்.
சமகாலக் கவிஞர்களில் சு. வில்வரத் தினம் முக்கியமான ஒருவர். அகவய மாணவன், புறவயமானவன் எனப் படைப் பாளனைப் ‘பெட்டிகட்டிப் பார்க்க முந் தும் நம் வரட்டு விமர்சகர்கள், இவரிடம் தோல்வியே காணுவர். அரசியல், சமூக, சமய, தன்னுணர்வுத் தளங்க ளிற் காலூன்றி இவரது அனுபவங்கள் கவிதா வெளிப்பாடு கொள்கின்றன. மரபுகளைச் சார்ந்து நவீன உலகினுள் பிரவேசிக் கின்றபோதும் "முகந்திருப்பாது எதையும் எதிர்கொள்கிருர்; மனஞ் சலிக்காது எதிர்ப்பில் முளைகொள்கிருர்". சொல் லாட்சி, புதிய சொற்புனைவு இவரிடம் காணும் தனித்திறன்கள்.
பல்வேறு அம்சங்களால் முக்கியங் கொண்டமையும் இந் நூலினை வெளிக் கொண்டு வருவதில், மகிழ்ச்சியடைகி ருேம்; அதற்கு இசைவுதந்த கவிஞருக்கு எமது நன்றிகள்.
முன்னுரை அளித்த மு. பொ., ஒவி யங்களை வரைந்த திரு. அ. மாற்கு, புனித வளன் அச்சகத்தினர் ஆகியோருக்கும் எமது அன்பு கலந்த நன்றிகள்.
©(ሀ)[ወሐዙ 7... -- N

Page 6
முன்னுரை
" ...... என்னேடு கூடவே இளைய பரம்பரையின் கலைஞனன
சு. வில்வரத்தினமும் இருந்தான்."
(p. 25.
("கலைஞனின் தாகம்’-மெய்யுள்
கலைஞன் சு. வில்வரத்தினத்தின் கவிதைத் தொகு தியைப் படித்தபோது எனக்குள் நேர்ந்த அனுபவம்
சந்தோஷம், ஆச்சரியம், நிறைவு.
நான் எழுதுபவை, எழுத நினைப்பவை என்கின்ற பகைப்புல கணிப்பீடுகளை உள்வாங்காத நிலையில், இன் றைய சமகாலத் தமிழ்க் கவிதைப் பரப்பில் நின்று படித்தபோது எனக்குள் நேர்ந்த அனுபவம் இது. எந்த விதமான எதிர்மன முற்சாய்வுகளுமின்றிப் படிக்கும் எவர்க்கும் வாய்க்கக்கூடிய அனுபவம் இது. புகழ்ச்சி யல்ல.
அதனுல் ஒன்று நிச்சயமாகிறது:
இன்றைய புதிய தலைமுறைக் கவிஞர்களுள் சு. வில் வரத்தினம் தனித்துவம் பெறுகிருர், இத் தனித்துவம் பற்றிய விளக்கம் இவரையொத்த இளந் தலைமுறைக் கவிஞர்களான யேசுராசா, சேரன், ஜெயபாலன், புஷ்ப ராஜன் போன்றவர்களை இவரோடு ஒப்பு நோக்குதலைக் கோருகிறது.
ஆளுல் இச் சிறு முன்னுரையில் அது சாத்தியப் படாததால் இக் கவிதைத் தொகுப்பின் முக்கியத்துவத் துக்குக் காரணமாய் இயங்கு ம் சூக்கும நிலைகளைப் பொதுவாகத் தொட்டுப் பார்ப்பது, இக் கவிதைத் தொகுப்பு எனக்களித்த அனுபவங்களைப் பரீட்சிக்கும் உரைகல்லாக அமையும்.

iii
இவரது சிருஷ்டிகளை ஆத்மார்த்த தளத்துக்கு உரி யவையாகவே நான் காண்கிறேன்.
ஆத்மார்த்த விஷயங்களை வெளிக் கொணரும் ஊடகங்களாகவே ஆதியில் கலை இலக்கியங்கள் தோன் றின. அதாவது மனித இருப்பின் அனுபவங்கள் சில சாதாரண வார்த்தைகளால் சொல்லக்கூடியவையாக வும், சில அப்படிச் சொல்ல முடியாதவையாகவும் நிற் கின்றன. அப்படிச் சொல்லமுடியாத உணர்வுகள் எண் ணங்களைச் சொல்லில் வடித்துக் காட்டும் ஊடகங்களா கவே ஆதியில் கலை இலக்கியங்கள் தோன்றின. ஆத் மீக, தத்துவச் சிந்தனைகளில் பரிச்சயமுள்ளவர்கள் இவற் றை வியவகாரிக, பரமார்த்திக என்ற பிரிவுகளுக்குள் அடக்கிப் பார்க்கக்கூடும். அதாவது வார்த்தைகளில் சொல்லக்கூடிய நடைமுறை விஷயங்களை வியவகாரிக என்றும்; அப்படி முடியாத இறைவன், மனித இருப்பு போன்ற நடைமுறைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை பரமார்த்திக என்றும் கூறலாம். ஆனல் எனது ஆத் மார்த்தத் தளம் இந்தப் பிரிவுக்குட்பட்டதல்ல. வியவ காரிக தளத்திலும் சரி பரமார்த்திக தளத்திலும் சரி நாம் பிறர்க்கு வார்த்தைகளாற் சொல்ல முடியாமல் எம்முள் பதிவுறும் அனுபவங்களின் தளத்தையே, நான் ஆத்மார்த்த தளம் எனக் கருதுகிறேன்,
இறைவன் பற்றி அல்லது நம் இருப்புப்பற்றி எழும் ஆத்மீக விஷயங்கள் வேண்டாம். வெகு சாதாரணமான, மண்ணில் தெறிக்கும் உண்மைகளையே சொல்ல முடியாத அவஸ்தை நமக்கு.
பள்ளிக்கூடத்துக்கு முன்னுல், விபத்தொன்று நேர்ந் ததின் பின்னர் அங்கே தனித்துக் கிடக்கும் ஒரு கால் சப்பாத்து.
வெட்ட வெளியில் தூரத்தில் நின்று சோழகத்தில் ஆடும் ஒற்றைப்பன.

Page 7
இப்படிப் பல. இத்த நிகழ்வுகள் எம்முள் கிளறி விடும் உணர்வு ரூபங்களை வெளிக்கொணர முடியாமல் தவிக்கும்போது எமக்குக் கைகொடுத்து நிற்கும் ஊடகங் களே கலை இலச்கியங்கள்! இந்த உணர்வுநிலைகளை வெற்றிகரமாக வெளிக்கொணரும் படைப்புகளே சிறந்த கலைச் சிருஷ்டிகளாகக் கொள்ளப்படுகின்றன; கருத்துக் களைக் கோஷித்தும் கொள்கைகளைப் போதித்தும் நிற்கும் படைப்புகள் அல்ல. ஆயினும் கோஷிப்பும் போதிப்பும் கூட இவ்வுணர்வுகளில் கலவையிடப்படும்போதே உத் வேகமும் நிமிர்வும் பெறுகின்றன. இத்தகைய அனுபவ வெளிப்பாடுகளையே நான் ஆத்மார்த்த தளத்தவை என் கிறேன். இந்த ஆத்மார்த்த அனுபவங்களின் உந்துதலே க3ல இலக்கியங்களின் தோற்றத்தின் ஆரம்பமாக இருந் திருக்கின்றன, இருக்கின்றன.
இந்த ஆத்மார்த்த உணர்வுகளின் மற்றுமொரு நிலை இன்னும் முக்கியமானதும் சுவையானதுமாகும். அதா வது பல்வேறு பன்முகப்பட்ட தளங்களிலிருந்து இந்த ஆத்மார்த்த உணர்வுகள் கிளறப்படுகின்றன. அப்படிக் கிளறப்படும் உணர்வுகள் அவ்வத் துறைக்கேற்ற கனதி களைப், பரிமாணங்களை ஏற்று வெளிக்கிளம்பி வரும் போதும் அவையெல்லாம் ஒன்றையொன்று தழுவி, ஒன்று விட்ட இடத்திலிருந்து மற்முென்று தொடர்ந்தும் நாணு பக்கமிருந்து வரும் ஆற்றின் கிளைகளைப்போல், ஒரே உணர்வுக் கடலை நோக்கிப் பாய்கின்றன.
ஒரே உணர்வுக் கடல். அதுதான் முக்கியம்.
பல்வேறு தளங்கள். அவற்றின் கனதிகள், தன்மை களுக்கேற்ப உணர்வுகளின் மேற்பூச்சுக்கள் வேறுபடுவன போல் தெரிந்தாலும், ஆழ நோக்கில் எல்லாம் ஒன்றை நோக்குவன போல்; ஒன்றைத் தேடுவன போல்.
ஒர் இனிமையான இசை,
தூரத்து மலைகளில் கவியும் முகில் திரள்.

v
ஓர் அடர்ந்த காட்டுள் ரகசியத்தைப் பொத்திக் கொண்டு ஓடுவதுபோல் கிளுகிளுத்துத் தலைமறையும் ஒர் அருவிக் கிளை. ペ
'வெள்ளி நாடாவாய்’ விரியும் நிலாக்கால ஒற்றை படிப் பாதை.
இந்தப் படிமங்கள் எம் இருப்பில் படியும்போது எமக்குள் வழியும் ஓர் இன்துயர்.
இன்பமும் துன்பமும்.
இந்த நிகழ்வுப் படிவுகளின்போது கிளறப்படும் எமது ஆழ உணர்வுகளிலிருந்து சந்தோஷமும் பின்னர் அதன் முடிவில் இருந்து வெளிக் கசியும் துயரமும் என் கின்ற இரு முரண்பட்ட உணர்வுகள் எம்முள். ஏன் இது ஏற்படுகிறது?
இந்த நிகழ்வுப் படிவுகளின் தூண்டுதலால் எமது ஆழமான பேரியல்பு கிளறப்படுவதால் சந்தோஷம் ஏற் படுகிறது. பின்னர் அப் பேரியல்போடு சதா ஒன்றி நிற்க முடியாத எமது இயலாமை வெளிக்கும்போது துயரம் மேலெழுகிறது. ஒரு பிரிவுத் துயர். எமது இயல்பை, இருப்பைப் பிரிந்த பிரிவுத் துயர்.
இதை இப்படி நோக்கலாம்
தனது காதலியோடு ஒருவன் கூடியிருந்த காலத்தில் அவன் கேட்ட பாடல்கள், இப்போ அவன் தனித்திருக் கும்போது எங்காவது இசைக்கப்படும்போது அவன் காதலி யின் நினைவை அது அவனில் தடவிச் செல்கின்ற ஒரு சந்தோஷத்தையும் பின்னர் அதன் முடிவில் அப்போது அவள் அங்கில்லையே என்கின்ற உண்மையில் ஏற்படும் பிரிவுத் துயரையும் போலவே இதுவும்.
எமது இருப்பாக உள்ளியங்கும் இப் பேரியல்பே எல்லா உயிர்களது இருப்பாகவும் இருப்பதால்தான் நாம் எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொள்ளவும் அவைபால்

Page 8
vi
ஈர்க்கப்படவும் செய்கிருேம். அதேநேரத்தில் அவ்வியல்பு பற்றிய சீரான புரிதல் இன்மையே பிறரில் கோபமும் குரோதமுமாய் வெடிக்கிறது. அதனுல்தான் எமக்குப் படுவிரோதியாக இயங்கும் ஒருவன் திடீரெனத் தன் பலவீனமான நிலையில் எம்மிடம் அகப்பட்டுப் பழிவாங் கப்படும்போது எங்காவது அவன் முகபாவத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு சுழிப்பு, திடீரென எங்கோ எமக் கும் அவனுக்கும் பொதுவாக உள்ளியங்கும் எம் s2.ip இயல்பின் நரம்பை நெருடிவிட, இதுகாலவரை நாம் அவனுக்கெதிராக வைத்திருந்த முஸ்தீபுகளெல்லாம் அடி பட்டுப்போக, அவ னு க் கா க ம்ே நெஞ்சு கரைந்து கரைந்து நாம் பெறும் புது அனுபவம்.
என் எதிரியின் முகபாவத்தில் தெறித்த ஒரு சுழிப்பு எப்படி என் ஆழ இயல்பை அருட்டி விட்டதோ அவ் வாறே, நம் ஆழ இயல்புகளை அருட்டிச் செல்லும் கலை இலக்கியங்களும் சாகாத கலைச் சிருஷ்டிகளாகப் பரிண மிக்கின்றன. ஒரு சிறந்த கலைஞன் இந்த ஆழ இயல்போடு தொடர்புகொள்ளச் செய்யும் மின்னிணைப்பைத்தான் தன் படைப்பின் மூலம் செய்துவிட்டுப் போகிருன், அவனது படைப்புத் திறன் எவ்வளவு காலஞ்சென்றும் மின்னுற்றல் இறங்காத பற்றறிப் (Battery) பெட்டியாக அதை நுகர்பவன் எவனுக்கும் அந்தப் பேரியல்போடு தொடர்பு கொள்ளும் வல்லமையைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
இவ்வடிப்படையில் பார்க்கும்போது காலத்துக்குக் காலம் தோன்றும் கலை,இலக்கியக் கோட்பாடுகள் எல்லாம் ஒவ்வொரு கலைஞனின் கல்வி, அனுபவம், சிந்தனை ஆழம் என்பவற்றுக்கேற்ப அறிந்தோ அறியாமலோ மனிதனின் இவ் ஆழ இயல்பைத் தொடும் முயற்சிகளாகவே அமைந் துள்ளன. எக்ஸ்பிறஷனிசம், இம்பிறஷனிசம், நச்சுறலி சம், றியலிசம், சேர்றியலிசம் என்று கலைஇலக்கிய உலகில் அடிபடும் இக் கோட்பாடுகளெல்லாம் இதன் வெளிப்பாடு

vii
களே. ஆணுல் அப்படி நாம் கூறின் அக் கோட்பாடுகளை உருவாக்கியவர்களோ அதில் ஈடுபட்டவர்களோ அதை ஒத்துக்கொள்ளப்போவதில்லை. அவர்கள் தத்தம் காலத்து சமூக, தத்துவ, புறச் சூழல்களால் தம் இருப்பு யந்திர மயமாக்கப்படும்போது என்னென்ன நோக்குகள் தமக்கு விடுதலை அளிப்பனவாக இருக்கின்றனவோ அவற்றின் வெளிக்காட்டல்களே இவையெனக் கூறுவர். மனிதனின் ஆழ இயல்புகள் பற்றி அக்கறைப்படாதவர்களாகவோ அல்லது அறியாதவர்களாகவோகூட அவர்கள் இருக்க லாம், ஆணுல் நமக்கு ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்முல் அவர்கள் விடுதலைபற்றிப் பேசுவது.
விடுதலை: அது முக்கியமானது.
ஒவ்வொரு கலைஞனும் இந்த விடுதலைக்குத் தான் கொடுக்கும் அர்த்தம், ஆழம் என்கின்ற வரையறைகள் மூலம் நான் குறிப்பிட்ட மனிதனின் பேசியல்புக்கு அரு கிலா தூரத்திலா நிற்கின்றன் என்பதை, அறியலாம். காரணம் மனிதனின் பேரியல்புதான் அவனது பூரணமான விடுதலையாகவும் இருக்கிறது; அதுவே அவனது நிலையான இருப்பாகவும் ஆனந்தமேற்றுகிறது.
ஒரு சிறந்த கலைஞன் எந்தக் கோட்பாட்டுக்குள் தன்னைப் புகுத்திக்கொண்டாலும் ஒரு தேர்ச்சிபெற்ற சுழியோடிபோல் நேரடியாகவே இந்த மனித ஆழ இயல் புக்குள் இறங்கி, அந்த விடுதலையில் குளிப்பதோடு மற்ற வரையும் அங்கழைத்துக் குளிப்பாட்ட முயல்கிருன். அவன் ஆத்மார்த்தத் தளத்தின் சிறந்த பிரதிநிதியா வான்.
2
இந்தப் பின்னணியின் அடிப்படையில் சு. வி. யின் கவிதைகளை நோக்குவது, அவர் சிருஷ்டி ஆற்றலை நாம் புரிந்துகொள்வதற்கு எதிராக நிற்கும், சில தடைகளை அகற்றுவதற்கு உதவிபுரிவதாக அமையும்.

Page 9
viii
சு. வி. யின் கவிதைகளின் தனித்துவத்திற்கும் வெற் றிக்கும் காரணம் என்ன?
அவரது கவிதைகளில் காட்டப்படும் எல்லா உயிர் களுக்கும் பொதுவாக உள்ளியங்கும் பேரியல்பின் பரி மாணங்களும்; அப்படிக் காட்டுதலுக்குக் கருவியாகப் பெய்யப்படும் ஆத்மார்த்த உச்சங்களும்; அவற்றின் வெளிப்பாட்டு முறைகளுமாகும்.
ஏற்கனவே சமகாலத் தமிழ் இலக்கியத்தில் பல ஆத் மார்த்த வாதிகள் தேறியுள்ளனர். 'மெளனி'யின் கதை கள் இந்த ஆத்மார்த்தப் பண்பின் உயர் நிலைகளை எட்டி யிருக்கின்றன. ஆயினும் அவை "அவன்-அவள்’ என்னும் எல்லைக்குள் சிக்கி, ஒரே தன்மையொத்த உண்ர்வு நிலை களையே திரும்பத் திரும்ப எழுப்ப முயல்வனவாதலால் ஆத்மார்த்தப் பண்பின் பூரண சுற்ருேட்டத்தைத் தராத வையாகவே போய்விடுகின்றன.
ஆனல் கவிஞர் சு. வி.யின் கவிதைகள் அவற்றிற்கு மாருக, பன்முகப்பட்ட துறைகள் இவர் இருப்போடு நிகழ்த்தும் "உராய்வின் சிலிர்ப்பாகவே வெளிக் கிளம்பு கின்றன.
ஆனல் இப்படி வெளிக்கிளம்பும் உணர்வுகள் எல் லாம் பன்முகப்பட்ட தளங்களின் குணங்களை ஏற்றிருந்த போதும், நான் ஆரம்பத்தில் கூறியதுபோல, அவை யெல்லாம் ஒரே உணர்வுக் கடலை நோக்குவனபோல், ஒன்றையே தேடுவனபோல், ஒன்றையொன்று பின்னியும் தொடர்ந்தும் ஆத்மார்த்த உலகுக்குரியவையாகவே வெளிக் கிளம்புகின்றன.
இதோ விடுதலைப்பொழுது என்னும் கவிதையில் காலைப் பொழுதின் ரம்மியத்தைக் கூறும்
*நெஞ்சப்புலம் நெகிழ்ந்து அங்கு
புலரவிடு காலைப் பொழுதை"என்னும் வரிகள், அடுத்து வரும் "கோடை"யில் எழும் வெறுமையை அசை போடும்,
'கானல் அரவுகள் நெளிதரும்வயல் வெளி
மேய்தலிலாது வெறுமையை இரைமீட்டபடி காய்தலுறும் மாடுகள்' என்னும் வரிகள்,

ix
பின்னர் "ஊடாக" என்னும் கவிதையில் பிணக் குற்ற தாம்பத்திய உறவில் விழுந்த இரவு பற்றிப் பேசும் போது,
"உறைந்துபோய் நிற்கும் ஊமை இருளில் புதைந்து போய்விட்ட கால ஊர்தி” என்று வரும் படிமக் கலப்புகள், "பொழிவு' கவிதையில் வரும்,
"இலையுதிர்ந்த நெடுமரமாய்
ஏகப் பெரு வெளியின் சங்கீதம் குளித்திலையா?" என்று கேட்கும் வரிகள், * நிலவும் நெகிழ்வும்" என்னும் கவிதையில்
**எல்லாம் முடிந்து
நெற்பொதிகளுடன் வைக்கோற் போருஞ் சுமந்தபடி மெல்ல அசைநடைபோடும் மாட்டு வண்டிகள்: வண்டிகளின் பின்னே நாங்கள். திரும்பிப் பார்த்தால் பின்னிலவில், வளமெல்லாம் அள்ளித் தந்துவிட்ட வயல்வெளி வறிதே கிடக்கின்ற சோகம் நெஞ்சைப் பிழியும் துயர்-இன் இசையாய். " என்று கூறும் வரி களெல்லாம் நமக்கு என்ன கூறுகின்றன?
ஒவ்வொரு வரிகளும் வெவ்வேறு நிலைகளின் தளங் களின் பிரசவங்களாக வெளிக் கிளம்பிய போதும் அவை யெல்லாம அடிப்படையில் ஒன்ருேடொன்று பின்னிப் பிணைந்தும், தொடர்ந்தும் ஒரே உணர்வுக் கடலை நோக் குவனவாய், ஒன்றையே தேடுவனவாய் நிற்கின்றன. அப்படி நிற்கும்போதும் ஆனந்தமும், இனந்தெரியாப் பிரிவுத் துயருக்குமான ஆத்மார்த்தப் படிவுகளாகவுமே நிற்கின் பன.
ஆனல் இந்த ஆனந்தமும் துயரும் ஏனைய சிறந்த கலைஞர்கள் புலரிடம் காணப்படுவதுபோல, அடிக்கடி

Page 10
Χ
மனதை வந்துறுத்தும் வெறும் அருட்டல்களாக சு. வி. யிடம் நின்றுவிடவில்லை. இந்த இனங்காண முடியாத அருட்டல்களை வைத்தே வெவ்வேறு கோணங்களில் காலங்காலமாகக் கலைகள் யாத்தவர் உள்ளார். இடைக் கிடை மின்னும் தரிசன வீச்சால் சில வெளிச்சங் காட்டி ணு,லும் அனேகமானவை விளக்கமின்மையால் மூடுமந் திரங்களாகவே வீழ்ந்துள்ளன.
ஆணுல் சு. வி. ஏனையோர் போலல்லாது தம்மை அடிக்கடி அருட்டும் "இன் துயருக்குரிய காரணத்தைத் தெளிகிருர், நம் விடுதலை இருப்புப் பற்றிய தூண்டுதல் கள் ஆனந்தத்தையும் அதில் சதா நிலைகொள்ளாமை துன்பத்தையும் தருகின்றன என்ற தெளிவே, அவரது ‘விடுதலைப் பொழுது என்னும் கவிதையும்; "விடுதலை ஒன்றே உடைமையாய்' என்னும் கடைசிக் கவிதையு மாம். எல்லாப் புற விடுதலைகளோடும் நீ, நீயாக உன் "வீட்டில்’ இருப்பதுபோல் வேறு சுகம் வருமா? "வீட் டைப் பிரிந்தால் துயரந்தான். அதனுல்தான் அவர், விடுதலைப் பொழுதுக்காய்
*"திறந்து விடு கதவை முற்ருய்
உனதகம் ஒளி பெறட்டும்’ என்கிருர் வீரியம் தொனிக்க.
இனி கவிஞர் சு. வி. தனது ஆத்மார்த்த அனுபவப் படிவுகளை வெளிக்கொணரக் கையாளும் முறைகளைப் பார்ப்போம். இவர் ஏனைய ஆத்மார்த்தக் கவிஞர்கள் போலல்லாது பன்முகப்பட்ட அனுபவங்களைத் தரும் பல் வேறு தளங்களில் சஞ்சரிப்பவர். அப்படிச் சஞ்சரிக்கும் போது தான் பெறும் அனுபவங்களை அந்தந்தத் தளத் துக்குரிய ஆத்மார்த்தச் சொற்களின் தெரிவின் மூலம் பதிவு செய்கிறர். அதனுல் அவர் அனுபவங்கள் ஏனைய அனேக ஆத்மார்த்த கவிஞர்களின் படைப்புகள் போல் வெறும் மூடுமந்திரங்களாக வீழாமல் எல்லோர் நெஞ் சங்களிலும் உரையாடிச் செல்கின்றன. சிறந்த ஆக்கங் களாக வருவதற்குரிய கீற்றுக்கள் தெரிந்தும் அனேக

xi
படைப்புகள் வெறும் மூடுமந்திரங்களாக வீழ்வதற். குரிய காரணம், அந்தந்தத் தளங்கள் பற்றிய அறிவும்
அவற்றிற்குரிய சொற்களின் தேர்வும் இல்லாமையே.
தாமு சிவராமுவின் பலவீனத்துக்கு இது ஒரு முக்கிய
காரணமாகும். பல்வகைப்பட்ட தள அனுபவங்களை ஒரே
தளத்துக்குரிய வார்த்தைகளால், படிமங்களால் பேச
முயலும் போக்கு அவருடையது. இதனல் தளப் பிறழ் வும் சொற்திரிபும் மாருட்டமும் நிகழ்கின்றன. ஆனல்
தளமாருட்டமும் சொற்திரிபும் நிகழக்கூடாதென்றில்லை.
ஆனல் அப்படி நிகழும்போது அது வேருேர் புதுத்தள,
புதுக் கலை இலக்கிய உருவாக்கத்தின் தேவையில் நிகழ வேண்டும்.
கவிஞர் சு. வி. தான் தொடும் தளங்களுக்கேற்பச் சொற்களைத் தெரிவுசெய்து மிகக் கச்சிதமாக வாய்பேச முடியாத உணர்வுகளை எம்மோடு தன் கவிதை மூலம் பேசவைக்கிறர். இதோ விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும்" என்ற கவிதையில் பாரதியை நினைவூட்டி விடுதலைக் குருவியோடு அழகாகப் பேசுகிருர்,
பாரதி, விடுதலை அவாவிய நின் சிட்டுக் குருவி
எங்கள் வீட்டு முற்றத்திலும் மேய்தல் கண்டேன்.
விடுதலைத் தாகத்தின் துடிப்புன் குலென்ஞ் அதன் இதழ்களிலும்
விடு விடு' என்ற அதே துடிப்புத்தின்
முற்றத்தில் மேயும்- போதும் திண்ணையில் திரியும் போதும் வீட்டு வளையின் மேலும் விண்ணை அளக்கும் போதும் "விடு விடு" என்ற ஒரே ஜபம்தான்.

Page 11
xii
தலையை உருட்டுதலில், சிறகைக் கோதுதலில் காற்று வெளியில் "ஜிவ் வென்ற சிறகுதைப்பில் அதே துடிப்பு சதா துடிப்பு!” என்று பாரதியை நினைவுகூர்ந்து சிட் டு க் குருவியை அழைக்கும்போது விடுதலையின் துடிப்பும் தேவையும் புதுப் பரிமாணங்களுள் ஆழ்கின்றன. ஈற்றில்
'விடுதலைக் குருவீ!
வீடுதேடி வந்தாய் நீ வாழி! நின் அலகிதழ் முனையில் எம் இருள் துயரெல்லாம் கிழிபடுகிறது." என்று கூறிச் செல்லும்போது உண்மையாகவே கருத் துக்கள் காட்சிப் படிமமுறும் ரசவாதம் ஒன்று எம்முன் நடத்தேறுகின்றது போலவே உணர்கிருேம்.
வீழ்ச்சி" என்னும் இன்னேர் கவிதையில் தான் சோரம் போனதையும், அது எப்படித் தன் மனைவியின் முகத்தில் பிரதிபலிக்கிறது என்பதையும், அதேநேரத்தில் மனைவியின் குணவொழுக்கம் தனக்கு நேர்மாறனது என்பதையும் காட்ட அவர் தேர்ந்தெடுக்கும் அந்தத் தளத்துக்குரிய வார்த்தைகள்:
அவள் முகத்தில் வெடித்துச் சிதறின முன்னைநாள் ஒருத்தி உடைத்த சிலம்பின் உக்கிர மணிகள்" *அகங்களும் முகங்களும்-2 என்ற கவிதையில் இன்றைய நம் போலி அரசியல்காரர்களுக்கே உரிய, அவர்களை வைவதற்கே உரிய பாஷையில்
வெட்கம் கெட்டவர்கள்! வேற்ருர் இட்ட நெருப்பின் வெக்கை தணிந்து இன்னும் சாம்பல் அள்ளவில்லை. தூர்ந்து போன தேசத்தைத்
அதற்குள் தேர்தல் வெற்றி ஊர்வலம் வருகிருர்,

xiii
A is a to o இன்றைய இடிபாடுகளை நாளைய தேர்தலுக்கு படிக் கற்களாக்கும் பயன் தெரிந்தவர்கள்
அவர்கள். என்று நம் தமிழ்த் தலைவர்களைச் சாடும் அவர், இடி பாடுகளின்மேல் ஒரு படைவீடு' என்ற கவிதையில் இந்த இடிபாடுகளை வேறேர் தத்துவத் தளத்துக்கு இட்டுச் செல்கிருர்,
கோபுரங்கள் எழுப்பிய கோயில்களை விடவும் இடிபாடுற்றவைகளில் எனக்கு அதிகம் ஈடுபாடு.
எல்லாமே ஒருநாள் இடிவிழுந்த குண்டாகாதோ? எழும்பிய கோயில் வேறு. இடிவிழுந்தகுண்டு வேரு? இடிவிழுந்த குண்டினுள்ளும் நீரூற்று முகங்காட்டும்.’’ என்னும்போது கட்டடங் களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்ை விட இடிபாடுகளின் குவியலும் குழிகளும் இன்னும் ஆழத்துக்கு எம்மை இழுக்கின்றன.
அடுத்து 'புத்தரின் மெளனம் எடுத்த பேச்சுக் குரல்" என்ற கவிதையில், பேரினவாதச் குருவளியால் மனித இனத்தின் கலை, கலாசாரம், ஏன் மனித நாக ரிகமே இடியுண்டு வீழ்ந்த நிலையை புத்தர் மூலமே கூற வைப்பது மிக நேர்த்தியாக அமைகிறது.
**நெடுஞ் சாலைகள்தோறும் நிறுவிய எனது
சிலைகளின் முன்னே மனிதரின் நிணமும் குருதியும் எலும்பும் படையல் செய்தோரே
இதோ ஏற்றுக் கொள்ளுங்கள் எனது வெளிநடப்புக்கான பிரகடனம்.
பெளத்தத்தின் பேரால் தோரணம் கட்டிய வீதிகள் தோறும் நீங்கள் நிகழ்த்திய இன சங்காரப் பெரஹராக்களின் பின்னரும் இங்கே எனக்கு அலங்கார இருக்கையோ??

Page 12
xiv
என்று இனவாத வெடில் சூழலை விளக்கிக் கொண்டு வரும் கவிஞர் இடையில்
**விலகிச் செல்கையில்
கால்விரல்களில் ஏதோ தட்டுப்படுகிறது.
பேரினவாதப் பசிக்கு மனிதக் குருதியை ஏந்திப்
பருகி எறிந்த பிக்ஷா பாத்திரம்.
ஒருகணம்
அமுத சுரபி என் நெஞ்சில்
மிதந்து பின் அமிழ்கிறது." என்று விவரிக்கும் போது இவ்வரிகள் எத்தனையோ நினைவுத் தொடர்களை அவிழ்த்துச் செல்கின்றன. இக் கவிதை அரசியலாகவும், தத்துவமாகவும், சமயமாகவும் மாறி மாறி வளர்ந்து செல்கிறது.
"வெறுங் காற்றில் கலந்திடுமோ." என்ற கவிதை யில் பீகாரில், கீழ் வெண்மணியில் ஹரிஜனங்களை நெருப் பாக்கிய சாதிவெறித்தனங்களைச் சாடிய கவிஞர், இறு தியாக அதை முடிக்கும்போது ஆகுதி வளர்க்கும் புதிய வேதியன்போல் நெருப்பைப் பார்த்துக் கூறுகிறர்:
** அக்கினியே! இடம்மாறு.
அஞ்சி ஒடுங்கி அடங்கி வாழும் இந்த ஏழை எளியவரிடம் வந்து குடியேறு. அவர்கள் கண்களில் ஜுவாலி. நெஞ்சங்களில் ஞான நெருப்பாய் எரி. சொற்களில் கடுசரமாகு. செயல்களில் ஆலைக் கணல்பெருக்கு. மெய்ந் நெருப்பாக மேதினி எங்கும் திரிக.?? என்று கூறும்போது பாரதிபோல் வேதத்தின் புது வலு ஏற்றுமவர், 'தூது’ என்ற கவிதையில் இனவாதிகளால் கைதுசெய்யப்பட்ட ஒரு மார்க்சீய நண்பனுக்கு வேத உண்மையையே தூது விடுகிறர்:

'நடுங்கா நாட்டத்து நண்ப,
இது கேள்
நினக்கும் துயர் வதையுறும்
விடுதலை நேசர் எவர்க்கும் இது பொருந்தும்.
குளிரால் நடுங்குதலும் தீயால் சூடுறுதலும்
இலாதது
ஆத்மா!
இருமைகள் அதற்கில்லை
என்பது வேதம்.' என்று கூறும்போது வேத உண்மை வலுவுறும் சூழ லும்; அதன் வழிவந்த புரட்சிக்காரராகவும் சு. வி. நிற்கிருர்,
இப்படி அவர் கவிதைக்குக் கவிதை தன் அனுபவப் பதிவுகளை, நம் சூக்கும புரிதலைத் தூண்டிவிடும் சொற் கலவையால் புரியவைத்துச் செல்கிருர். இங்கு நான் மேலெழுந்தவாரியாக மேற்கோள் காட்டியவற்றை விட, மேற்கோள் காட்டல் என்னும் முறைக்குள் அடங்காது முழுமையான தரிசனத்துக்கே உரியவை என நிற்கும் படைப்புகளே அனேகம்,
3
இந்த ரீதியில் பார்க்கும்போது கவிஞர் சு. வி. யின் கவிதைத் தொகுப்பு ஒரு வெற்றிகரமான சாதனையே. அதற்குரிய காரணம் அவர் பல்வேறு பன்முகப்பட்ட தளங்களையும் தொடுகிருர் என்பது மட்டுமல்ல, அவர் பிரவேசிக்கும் தளங்களில் அவ்வப் பிரதேசங்களுக்குரிய முற்போக்குச் சக்திகளான ஆத்மார்த்த நிகழ்வுகள், அவற்றின் படிமங்கள், வார்த்தைகள் என்பவற்றேடும் அணிசேர்ந்துகொள்கிறர் என்பதுமே. இந்த நிலையில் அவர் தனது தலைமுறைக் கவிஞர்களான யேசுராசா, சேரன், ஜெயபாலன், புஷ்பராஜன் போன்ருேரையும் மிஞ் சியே நிற்கிருர் என்றே சொல்லவேண்டும். இதனுல்தான் இவர் கவிதைகள் சிலவற்றில் தனக்கு முற்பட்ட கவிஞர்

Page 13
xvi."
களின் செல்வாக்கின் பாதிப்பு நிகழ்ந்தபோதும் தன் தனித்தன்மையை இழக்காது நிற்கிருர், உதாரணமாக நீலாவணனின் கவிதை ஒன்றின் உவமைப் படிமத்தை (பரிதிக் குஞ்சு) இவரது "தியானம்’ கவிதையில் காண லாம். இவரது "சுழலின் மையம் தேடி. ', ‘நிலவுக் கெழுதல்" போன்றவற்றில் மு. பொ.வின் "பிரபஞ்சக் கும்மி", "பிறையொருகாலம் முழுநிலவாகும் போன்ற கவிதைகளின் அருட்டலைக் காணலாம். ஆயினும் இவ ரது படைப்புகள் தமக்கே உரிய தனித்துவத்தோடு நிமிர் கின்றனவென்றல் அதற்குரிய காரணம் இவரது வெளிப் பாட்டு முறையும், அதற்குரிய சொற் தேர்வுமே.
இவரது சாதனை தளங்களில் உடைவு நிகழாமல் சொற்களில் திரிபு ஏருமல் அந்தந்தத் தளங்களின் ஆத் மார்த்தத்தைக் கறந்தெடுத்தது என்ருல், தளங்களில் உடைவு நிகழ்த்தியும் சொற்களில் திரிபு விழுத்தியும் நிகழும் புதுத்தள இலக்கிய உருவங்களும் அதன் ஆத் மார்த்தமும் இதில் இல்லாது போனது, ஒரு குறையே எனலாம். மு. த*வின் ஆளுமையில் பயின்ற இவரின் இவ் வாக்கங்கள், ஏற்கனவே இசைவுற்றிருந்த புதுக்கவிதைப் பரப்பின் அகலத்தையும் ஆழத்தையும் விரிக்கின்ற அதே நேரத்தில், புதுத்தள ஊடறுப்புகளைக் காட்டவில்லைத் தான். என்ருலும் இவரது "ஸ்தல புராணம்" சிருஷ்டி அந்தத் திசையின் சமிக்ஞைகளை விழுத்துவதாகவே நிற் கிறது. சாதி அமைப்புக் கெதிராகப் போராடிய மு. த. வோடு தோளோடு தோள்போட்டு நின்று அவரோடு அடிபட்டுச் சிறைக்குச்சென்ற இவரின் அப் போராட் டத்தின் அனுபவ வடிப்பாக நிற்கும் இந்தப் படைப்பு, கூத்து நாடகம் கவிதை போன்ற பல்வகை உருவாக் கத்தின் கலப்பாக நிற்பது, இங்கு குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் இத் தொகுப்பு புதுக்கவிதை உலகில் ஒரு பெரும் பாய்ச்சலைக் காட்டுகிறது. ஆயினும் அதற் கெதிராகச் சிறு சிறு தடைகள் நிற்கின்றன, இவையே

xvii
சிலவேளை பின்னர் பெரும் தடைகளாகவும் மாறக்கூடும். அதாவது தத்துவ விஷயங்களைக் கவிதையில் சொல்ல வரும்போது இன்னும் எளிய, கூரான சொற்கள் பயன் படுத்தப்படவேண்டும். கவிதை என்பது கற்பனையில் இழு படும் றப்பர் போன்ற ஒரு குணத்தை உள்ளிருப்பாகக் கொண்டிருப்பதால், சிறந்த ஆய்வு நோக்கு இல்லாவிடில் செழுமையான தத்துவ பலத்தையும் தன் "இழுவல்" குணத்தால் பாழடித்து விடக்கூடும். உதாரணமாக, "சுழலின் மையம் தேடி. என்ற கவிதையில் வரும்
*மனதின் ஒரவிழி நோக்கில்
ஆழப் புதைகுழி நீத்துக் கிளர்வுறும் உணர்வுகளின் முளை மீறல்கள், கிளைத்துப் படர்ந்து பூச்சொரியும் இன் கனவுகள்.
y
என்ற வரிகளைக் காட்டலாம்.
அதோடு அகவயப்பட்ட சிந்தனைகளைக் கூறும்போது, * ஆணவம், மாயை, கன்மம் என்று சமயவாதிகள் சதா போட்டடிப்பதுபோல் திரும்பத் திரும்ப, இலை கொட்டி நிற்கும் மரம்போல் கருத்துவலுப் போய்விட்ட சொற் களையும், விவரணைகளையும் பாவிப்பது களையப்பட வேண் டும். இல்லாவிடில் நல்ல சிருஷ்டிக்குப் பதில், இச் சொற் கள் புகுந்து வெற்றுப்பானைக் கட கடப்பையே தரலாம். சு. வி. யின் இத் தொகுப்பில் இத்தகைய கடகடப்புகள் இல்லையென்ருலும் அவற்றுக்குரிய தாக்குதல்கள், கவனிப் புக் குன்றினல் நிகழலாம். இவைபோக, அகங்களும் முகங்களும் ஒரு வெற்றிகரமான சாதனையே.
- மு. பொ.
பிழை திருத்தம்
பக்கம் வரி பிழை Fif
55 நின்ற நிலா, நிறை நிலா
58 budi ellis :

Page 14
என்னுரை
எனது கவிதைகளின் தொகுப்பு இங்கே அலை வெளியீடாக முகங்கொள்கிறது. 6ניו ז%0 ז6% ז பாதித்தவற்றை உள்ளுறை அனுபவ ஒளிகொண்டு பின்னி இழைத்தெடுத்து வேய்ந்ததோர் சிறு கவிக்குடில் இது. சிறு குடி லேனும் அதன் இருப்போ ஒரு பரந்த பெருவெளியில் இது ஒன்றே எனக்குப் பரவசம் தருவது. 1970இல் ஆரம்பித்த நான் பதினைந்து வருடங்களின் பின் ஞல் ஒரு சிறுகுடில் போடல் சாத்தியமாகியுள்ள இவ்வேளையில், என் சிந்தனை சார்ந்துநின்ற பரந்த பெருவெளியில் நேர்ந்த தேடலின் காலவெளி யைத் திரும்பிப் பார்க்கிறேன். அப்படியான ஒரு திரும்பிப் பார்த்தலில், நான் போட்ட இச் சிறு குடில் இன்னுஞ் சிறுத்தே தெரிவதுபோல் தோற் றங்கொள்ளுகிறதேனும், சார்ந்து நின்ற பரந்த பெருவெளிதான் எனக்குப் பர நிம்மதி தருகிறது.
அந்தப் பரந்த பெருந்தள, விடுதலைவெளிக்கு என்னைக் கூவியழைத்த குரலை இத்தருணம் பெரு மிதத்துடன் நினைவுகூருகிறேன். இதோ காற்று வெளியிடை, பிரபஞ்சவெளியிடையிருந்து கூவும் அக் குரல்ஒலி எனக்குள்ளும் கேட்கிறது. அக் குரலுக்குரியவரை அ டை யா ளம் காண்கி றேன். திரு. மு. தளையசிங்கம். எனது வளர்பருவ காலத்தின் பள்ளி ஆசிரியராக வந்து என் வாழ் வின் அத்திவாரத்தையே ஒர் உலுப்பு உலுப்பிய வர். ஊன்றி நோக்கி உள்ளன்போடு என்னை அறிவால் தூண்டி நடாத்திய ஒரு தனிக்குரல் அவரது. சகல துறைகளிலும் ஒரு வழிகாட்டி யாய் இருந்து ஆத்மீக குருவிடம் என்னை ஆற்றுப் படுத்தியவர். கலைபற்றிய அவரது நோக்கின் பூரண பரிமாணத்தை எய்திய கலைஞளுய் வாழ்ந்து காட்டி எம்மையும் அவ்வழி இட்டுச் சென்றவர். "விடுதலை என்ற இலட்சியத்துக்குரிய வழிகளும் விடுதலை பயப்பனவாய் இருக்கவேண்டும்' என்று ஒலித்த பரந்த விடுதலைப் பெருவெளிக்குரிய அவ

ரின் குரல், இதோ இச் சிறுகுடிலினுள்ளும் ஒலித் துக்கொண்டேயுள்ளது!
சிறுகுடில் என்றேன? இச் சிறுகுடிலை நிமிர்த்
துவதில்தான் எத்தனை சிரமங்கள். இந்தச் சிர மங்களில் ஒன்றையேனும் என் முதுகு சுமந்த தில்லை! ஏழைமை நிரம்பிய இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கிய-கலாசாரக் குடிலை பல்துறை அடுக் குப் பரிமாணங்கொண்ட மாளிகையாய் நிமிர்த்த மனங்கொண்டவர், ஆத்மார்த்தமான உழைப் பைப் பிழிந்து தமிழியல் வளமூக்கியாய் நின்று செயல்படும் நண்பர் திரு. இ. பத்மநாப ஐயர். இதன் நிமிர்வுக்கும் முதுகு கொடுத்தவர் அவரே. இன்றைய ஈழத் தமிழ் இலக்கிய - பல்துறை வெளியீடுகளின் பின்னணியில் இவரின் ஆத்ம பர்த் தமான உழைப்பின் திறன் நின்றதை, அறிந் தோர் அறிவர். தன்னை முன்னிறுத்தாத அவரின் பங்களிப்பை ஒருநாள் தமிழுலகம் முற்ருய் அறிய வரும்போது, அதிசயப்படும் என்பது உண்மை.
மு. பொன்னம்பலம் நீண்டதொரு முன்னு ரையை இச் சிறுகுடிலின் முன்றலில் கோலமிட் டுள்ளார். அவர் எனது கவிதைகளைக் கையெழுத் துப் பிரதியிலேயே படித்த முதல் வாசகஞ கவும் விமர்சகனுகவும் இருந்து என்னை $நறிப் படுத்தியவர்தன் படைப்பாற்றலால் என்ஜ் நிரம் பவும் பாதித்தவர்; "அகங்களும் முங்களும்" என்பதையே கவிதைத் தொகுதியின் ஆலைப்பாகி வைக்கலாம் என்று அக் கவிதை இவளியான்ல போதே ஆலோசனை கூறியவர். ് னுரை எனது கவிதைகளின் போக்க கண்டு கொள்ளும் பின்னணியாய் க்கிறது பதற்கும் மேலாக, நானே என்னைSவிமர்ச யாகக் கண்டுகொள்ளும் வை ம் இம்ர் துள்ளது.
கனமான படைப்புகளை இங்கண்டு தேர்ந்து தெ ள் வி எ டுக் கும் கூரிய நோக்குடையவர், அ. யேசுராசா. தமது அலை இதழில் எனது கவிதை

Page 15
களைத் தேர்ந்து பிரசுரித்ததோடு, எனது தொகு தியையும் அலை வெளியீடு" நிறுவனத்தினூடாக வெளிக் கொணர்வதில் மிக முனைப்போடு செயல் புரிந்தவர். அவ்வப்போது விமர்சனங்களால் என்னை நெறிப்படுத்தியதில் அவருக்கும் பங்குண்டு. தக்க இடங்களில் மனமுவந்து பாராட்டும் பண் பைவிடவும், அவரின் சமநிலை நோக்கே, என்னை மிகக் கவர்ந்தது எனலாம். மற்றும் இ. ஜீவகா ருண்யன், மு. புஷ்பராஜன் ஆகியோரும் என்னை இவ்வகையான ஒத்துழைப்பால் கவர்ந்தவர்களே.
இவர்கள் எல்லோருக்கும் இதனுல் நன்றி கூறல் என்பது, வெறும் சம்பிரதாயமாகக் கீழிறங் கிவிடும் செயல் என்பதனல் அதைத் தவிர்த்து விடுகிறேன். அவர்கள் மேற்கொள்ளும் அரிய தமிழ் இலக்கியப்பணிகளில் எம்முடையவுமான ஆத்மார்த்த ஒத்துழைப்பை வழங்குதல் ஒன்றே, அதற்கான கைமாருகும்.
இத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் பல ஏற்கனவே பூரணி, அலை, மல்லிகை, புதுசு, வானம்பாடி இதழ்களில் பிரசுரமானவை. அவ் வேடுகளின் ஆசிரியர்களுக்கும் இதனுல் என் நன்றி உரியது.
இது என் முதல் வெளிப்பாடு: முதற் சுழல் வட்டத்தின் சிந்தனையை உள்ளடக்கியது. இதைத் தளமாய்க்கொண்டு இனிவரும் படைப்புகள் வேருெரு பரிமாணத்தைக் கொண்டதாய் அமை தலே என் விருப்பு அதை முனைப்போடு செயல் படுத்துதல் காலத்தின் கையில்தான் உள்ளது. ஒன்றுமட்டும் உண்மை என் அகப் புற வாழ்வின் ஒவ்வோர் அம்சங்களிலும்கூட ஒளிகூர்ந்த உக்கி ரம் தெறிக்க வாழ்தல் ஒன்றேதான்-வாழ்வை யே கலை வடிவமாக்கி நிற்றல் ஒன்றேதான், பூரண கலைஞன் என்ற பெருமைக்கு என்னை உரித்தாக் கும். மற்று இவை ஒன்றும் எனக்குப் பெருமை sprint.
சு. வில்வரத்தினம் 1980 --7 سے 31

தியானம்
உலகமே
இருளினுள் மூழ்கித் துயிலும் ஒரு கரிய பெரிய முட்டையா'
உறங்காது நானே உள்விழித்திருப்பேன்.
உள்திரளும் பரிதிக் குஞ்சின் உதயம் தியானித்து.

Page 16
விடுதலைப் பொழுது
எழுந்திரு பிள்ளாய் இது விடுதலைப் பொழுது
இருளின் துயில் கலைகிறது חf%Gu இழுத்துப் போர்த்தபடி இன்னம் உறங்குதியோ? எழுந்திரு.
இதோ விடியலில் கீழ் வானம் ஒளிமுடி தசிக்கும் உன்னதம் உனக்குத் தரிசனமாகவில்லை.
குருகினங்களின் உதயத்து இசை உனக்குத் தேனிப்பதில்லை.
மெல்லிதழ் மலர்த்தி வரும் தென்றல் உன் மேனி வருடச் சிலிர்ப்பதில்ஃ.
ஓ! நீ என்ன மனிதன் இன்னந் துயில் புணர்வாய்
புலர் பொழுதை ஸ்பரிசிக்காத நின் புலன்கள் பழுதுடைய,

இனியும், காலம் கடத்தாதே புலன்கள் தறையுண்ணும் பொழுதை மழிக்காதே.
ஒளியேத்தவிசியும் விழிகொன் விடியலின் குரலுக்குச் செவிகொடு. நெஞ்சப்புலம் நெகிழ்ந்து அங்கு புலரவிடு காஃலப் பொழுதை,
எழுத்திரு
சோம்பலே ஆதரிக்
சுருட்டிய பாயொடு ஆரவித,
வைகறை நீரT3 பொய்க8ை இருள் கழுவிப் புலரும் பொழுதை வர வேற்று மனதில் ஒரு 'கும்:ம் வை.
سي
நிஃ:களே ஒருங்குவி
தி: ളണ്
Fil:Ifj. Suurir Gf.
கதவிடுக்கில் ஒ:டாக உட் செல்லத் துடிக்கிறது திறந்து விடு கதவை முற்குப்
உதைகம் ஒளி பெறட்டும்.

Page 17
கோடை
ஒரு கோடை நடுப்பகல். நடுப் பகலின் வெக்கையின் தாக்கம் விளைவிக்கும் வெறுமை.
எங்கோ இருந்தொரு காக்கை வெறுமைக்குக் குரல் கொடுக்கும். கோடை உமிழும் குரல்.
எரிச்சல் பற்றி வர எழுந்து போய் காக்கையைக் கலைத்தால் கலைகிறதா வெறுமை ?
சுருதியறுந்த தந்தியின் அதிர்வாய் அதே வெறுமையின் மீட்டல்.
வலம்வந்தொருகால் மீண்டும் கொல்லை அமர்ந்ததுகாக்கை. மீட்டும் குரல் மாறிலது அதே வெறுமை எடுத்த குரல்.
வெளியில்
காற்றின் விழுக்காடு சோர்ந்து வழிகின்ற தென்னைகள், வெறிச் சோடிப் போன தெரு. கானல் அரவுகள் தெளிதரும்வயல் வெளி

மேய்தலிலாது வெறுமையை இரை மீட்டபடி
காய்தலுறும் மாடுகள்.
இவற்றுக் கெல்லாம் ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்ததாய் ஓர் குரலில் கோடை வறுக்கிறது காக்கை.
கானல் திரைவெளியில் வெறுமை நிழல் விழுத்தி உலர கண்கள் வெயில்கிறது. மூடி விழித்தால் காணலின் ஒவியம் கூடவே காக்கையின் குரலின் பின்னணி ராகம்,
கல்லெறிந்து மீண்டும் அதைக் கலைப் போமெனின் சாய்மனையோடு மல்லுக்கட்டி மாழுகிறது மனம்,
சொல்லெறிந்து மீண்டும் காக்கை சுற்றிச் சுற்றி எதையோ குத்திக் காட்டுவதாய் முற்றும் இலையுதிர்ந்த வொரு முள் முருக்கில் உலர் குரலில்.
சி சனியன், நரகம்.
நிச்சயமாக நான் வெறுக்கிறேன். இந்தக் கோடையை S. வெறுமை தின்னும் கோடை நடுப்பகலை.
குரல் கறுத்த காக்கையை.
நிச்சயமாக என்னையும் நான் சாய்ந்து கிடக்கும் சாய்வு நாற்காலியையுங்கூட.வே.

Page 18
மழையின் பொழிவில் நனையும் பொழுதுகள்
வான் முலை சுரந்தது வையம் அருந்திற்று ஓ! வான் மழையே! வையத் திருவே! வந்தனை நீ வாழி!
நீண்டெரிந்த கோடையில் தீக்குளித்த நிலமகஜ மழை முழுக்காட்ட வந்தனே! மாரி நீ ឯអាហ្វ្រី
வரண்டு வெடித்த வாய் பிளந்து பூமி வருந்தி அழைத்த குரல் உனக் கெட் டிற்ருே? இரங்கினே! அதனுல் எம்மிதயங் குளிக்கிறது.
நின் வரவால் நிகழும் அற்புதங்கள்தான் எத்தனை! எத்தனை
மலை எழில் போர்க்கும் துயிலும் நதியில் துரித விழிப்புப் பெருகும்
செடிகொடிகள் குளிக்கும் தென்றலின் அசைப்பில் மேனிகுலுங்கி நீர்த் திவலைகள் சிலும்பும்.
மண்ணில் நின் சங்கமத்தால் எழும் மண் வாசனை எங்கும் பரவும்! அது உழைப்பைக் கோருவது. உறங்கும் மனிதரின் நாசியின் உட்புகுந்து *எழுங்கள் ஏர் எடுங்கள்’ என உழுதுழுது பூமித்தாயை தொழுகை செய தூண்டி நடாத்தும் புனிதவாசனை! உழைப்பின் வாசனை! வான் மழையே மண்ணில் உயிர் வாசனை கிளர்த்தினுய் வாழி.

மழைத்தேவா வர்ஷித்தாய் இந்த மண்ணில் உயிர் பெய்தாய்
ஒங்கிய பெரும் ஒச்ையுடன் தாள பேத பாவங்களுடன் துமிதுமி துமி என நின் பாத துளிகள் இம் மண்ணில் பாவின,
பேதமிலாத நின் பெய்கையால் வான் மழையே நினக்கு மறுபெயர் ஞான மழை என்போம்.
ஞான மழையே நனி பொழிக இம்மண்ணின் பாவங்கள் கழுவுண்டோட பொருமை பொச்சரிப்பு வெப்பு நோய்கள் தணிய வரம்புகள் கடந்த வாழ் வொன்று செய்ய.
4விடியலில் மதியத்தில் அந்தியில் நள்ளிருளில் நாளெலாம் பொழிக பொழுதுகள் நனைக.
விண்ணின் றிழியும் அமிர்த தாரைகள் வீட்டுமுன்றலில் மீட்டும் சங்கீதம் உள்வாங்கி உள்வாங்கி உயிர் வீங்கி.
'பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்து தம் சங்கஞ் சிலம்ப சிலம்பு கலந்தார்ப்ப. s
நானே எனக்குள் மழையாய்ப் பொழிந்து நனைந்து நனைந்துருகி-ஏலோரெம்பாவாய்.

Page 19
அகங்களும் முகங்களும்-1
இடிந்து கிடந்த நினைவுத் தூண்களை எழுப்பி வைத்தீர் இடித்தவரை நினைவூட்ட
எழுபத்தியேழு ஓகஸ்டில் தெற்கில் இழந்த உயிர்களுக்கு நினைவுத் தூண்கள் நிறுவுவீரா? உங்கள்
இழிமைகளை நினைவூட்ட?
மலர் வளையங்கள், மாலைகள் சாத்தல் : இவை உதவப் போவதில்லை, எங்கள் நினைவுகளில் உங்களைச்செதுக்க, மலர்வளையங்களும் மாலைகளும் உதிர்ந்து விழும் உங்கள் சொல்லலங்காரங்கள் போல.

மாலைசாத்திய கைகள் மறுநாளே வாளெடுக்கும் நிகழ்ச்சிகள் பல s'. நடப்பிலே கண்டோம்.
மலர் தூவிய கைகளாலேயே துட்டகெமுனுவின் அஸ்தியும் தூவுவீர் வகுப்புவாத மேகங்கள் இருண்டு குருதி மழை பொழிய,
இரத்தச் சுவடுகள் பதிய ஒழிந்தோடி ஒர்மூலையில் பதுங்கி உடைமாற்றிவந்து ஒப்புக்கழுவீர்.
உடை மாற்றலேன்? உங்களை மாற்றுங்கள்.
இனவாதமணம் அருதவாயால் இன்னமுத மொழிகள்; "இதயத்தை உங்களிடமே விட்டுவிட்டுச் செல்கிறேன்' இப்படிப் பலப்பல.
எடுத்துச் செல்லுங்கள் உங்களிதயத்தை உங்களுடனேயே. எங்கள் நினைவுகளில் உங்களைச் செதுக்கமுன் உங்கள் இதயத்தைச் செதுக்குங்கள்.
காலங் காலமாய் இரத்தக் கறைபடிந்து துருப்பிடித்த இதயத்தை துருவி ஆராயுங்கள். போலித் தார்மீகப் போர்வை களைந்து உண்மை நிர்வாணம் பற்றுங்கள்.

Page 20
10
மஞ்சள் அங்கிகளுக்கும் மழித்த தலைகளுக்கும் புலப்படாது புதைக்கப்பட்டுவிட்ட புத்தரின் அன்பு துலங்கும்வரை செதுக்குங்கள்! உங்கள் இதயத்தைச் செதுக்குங்கள்
எடுத்துச் செல்லுங்கள் எங்கள் உபதேசமிதே.
1974 இல் யாழ்ப்பாணத்தில் நடத்த தமிழாராய்ச்சி மாநாட்டின்
போது இழக்கப்பட்ட ஒன்பது உயிர்களுக்கான நினைவுச்சின்னம். அவற்றை முந்திய ஆட்சியினர் காலத்தில் பொலிசார் உடைத்து விட்டனர். யூ. என். பி. பதவிக்கு வந்தபின் யாழ். விஜயம் மேற்கொண்ட பூனிலங்காப் பிரதமர் அத் தூண்களே எழுப்பி மலர்
வளையம் சாத்தியது செய்தி.
யாழ். விஜயம்செய்து ரீலங்கா திரும்புகையில் பிரதமர் சொன்

அகங்களும் முகங்களும்-2
வெடிகள் சிதறும் ஒலிகள் வேடிக்கை தெருவெல்லாம் என்ன வெளியே? எட்டிப் பார்த்தேன்.
தேர்தல் வெற்றித் திருவிழா இஊர்வலம்.
நம்மவர்,
மேளங்கொட்டுருர், குதிக்கிருர், விழுகிருர் . கோஷம் போடுவார்
நடுவே VMகோடியுடுத்த மாப்பிள்ளையர்க மா. அ. சபைத் தலைவர் வருகிருர் மாலை மரியாதையுடன்.

Page 21
12
வெட்கம் கெட்டவர்கள்! வேற்ருர் இட்ட நெருப்பின் வெக்கை தணிந்து இன்னும் சாம்பல் அள்ளவில்லை. தூர்ந்து போன தேசத்தை தூக்கி நிறுத்தத் தோள் கொடுப்பாரில்ஜல. அதற்குள்
தேர்தல் வெற்றி ஊர்வலம் வருகிருர்,
58இல் தொடங்கி அடுத்தடுத்து அடிவிழுந்த பின்னலும் என்ன செய்தார் இவர்கள் ? அடித்தாரைச் சொல்வி அழுதழுது வாக்குப் பெற்ருர்: கூட்டுச் சேர்ந்தும் கொள்கை முழக்கி வெற்றிகள் குவித்தார்.
தேர்தல் எனும் வேசி விடுதலைக் குழந்தை ஈவான் எனச்சொல்லி பாராளுமன்றத்தில் ‘கூடல்' செய்தார். மாவட்டந் தோறும் தங்கு மடங்கட்ட முண்டு கொடுப்போம் GroširОri. தேர்தல் பந்தல் சோடனைகள் ஒருபுறம் நடக்க மறுபுறம் தீண்டிற்றே நெருப்பு.
77இன் எரிதழற் காயங்கள் ஆமுேன்னம் மீண்டும் எரிநெருப்பில் தமிழ்-ஈழம்
காக்கி உடைகளும் காடையர் கூட்டமும் கூட்டுச் சேர்ந்து கொள்ளி வைத்தார் எரிமலைப் பிரதேசம் போல் எல்லாமே நாசம்

13
தற்காத்துக் கொள்ளத் தகுதியிலாத் தமிழரெல்லாம் ஒப்பாரி வைக்கிறர்: விடுதலை பெற வியலாத மலட்டுத் தலைவரெல்லாம் இன்னும் பாராளுமன்ற ஒட்டுண்ணிகளாய் பதவிகளை உதருமல் பகிஷ்கரிப்பு "ஊடல் செய்வார்.
பதவிகளை உதறி எறிந்திருந்தால் உலகின் மனச்சாட்சியையே உலுப்பியிருக்காதா? எமைச் சுற்றி நாமிட்ட வேலிகள் தகர்ந்து விடுதலைக்கு ஒரு வழி திறந்திருக்காதா?
ஆணுல், எதை உதறினுலும் பதவிகளை உதருேமென தோலரிலிட்ட துண்டுகளே எடுத்து உதறியவாறு இதோ வருகிருர் தலைவர்கள் ஊர்வலமாய்,
சவக்காட்டில் வெற்றிச் சங்கதி.
அதிலென்ன? இன்றைய இடிபாடுகளே நாளேய தேர்தலுக்கு படிக் கற்களாக்கும் பயன் தெரிந்தவர்கள் அவர்கள் பயணம் தொடரட்டும்!

Page 22
வெறும் இறக்கை
ரோட்டில் பலர் போவார் வருவார் ஆயினு ம் ஒரம் கிடக்தி mதே அக் காகத்தை பார் பார்ப்பார்?
மணலுள் தலை புதைத்து கழுத்தைச் சவுட்டியக் காகம் கிடக்கிறது. கருநீல வண்ணனுக்கு ஒப்பிட்ட கரிய நிறக் காக்கை; யார் பார்ப்பார்? போவோர் வருவோர் யாரேனும்?
விண்ணளந்த வீரருக்கு விழாக் கோலம். விண்ணளந்ததோடு இது மண்ணின் அழுக்குக&#யும் தன்னுள் விழுங்கிவந்த ஆகாயத் தோட்டியன்ருே. போவோர் வருவோர் யாரேனும்?
விமான இறக்கை விரிநிழலில் க்குண்டுத் ៥.ចំពោះ :தர இருப்பார்க்கு ரோட்டில் கிடக்கும் காக்கை நினைப்பெதற்கு? வெட்டுண்டு வீழ்ந்த நீ t سمصری مسدوم யார் நிஜனவார்?
t
نام
ற்கையதை
வெளியுலக மேடையிலே காகத்தைப் போற்றுவே: பெருஞ்சுவர் ரகசியக்த: வெள்ளை அன்னங்களோடு விருந்து உலா வருவோம்
Gai 'Nai வீழ்ந்த இயற்கை நினேவெ தற்கு? அதைவிடுத்து கட்டுப்பாடு, கண்ணியம், கடமை எனக் கோவிப்போம் காகம் கிடந்து நாறிப் புழுக்கட்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

வீழ்ச்சி
என்னுள் 3ழுந்து பிளிறிற்று யானை
19தம் வ: முகம் பிய்த்து தும்பிக்கையாய் விகாரமாய்
aff), grup.
மூச்சிறைக்க மதநீர் நுரைத்திழிய மோப்பம் பிடித்தஃந்தேன்
தும்பிக்கை நீட்டி,
வேலி மீறினேன் றிேய முட்கள்
நடித்த காமத் தோலில்
தேக்குமா என்ன?
வேகதடை.

Page 23
6
வேலியினுள் விதைத்திருந்த பண்பாட்டுப் பயிர்கள் காலடியில் துவம்சமாச்சு.
குலைபோட்டிருந்த தெங்கின் இளநீர்மை வளைத் தெடுத்துத் தழுவ வழிந்த மதநீர் வடிகால் தேடிக் கலந்தது.
தின வடங்கிற்ற?
தும்பிக்கை உட்சுருள பூசி மெழுகிப் பண்பாடு காத்த உருத்திராட்சப் பூனையாய் மெல்லப் பதுங்கிப் பதுங்கி வேலி ஒரமாய் ஒசைகாத்து வீடு சேர்ந்து படுக்கையில் வீழவும் கீறியது மீண்டும் முட்களா ?
மனையாளின் கூரிய விழிகள்
குத்திக் குதறின. மனச் சாட்சியை ஊடுருவி.
அவள் முகத்தில் வெடித்துச் சிதறின முன்னைநாள் ஒருத்தி உடைத்த சிலம்பின் உக்கிர மணிகள்.
படைவீடிருந்த சிம்மாசனம் G530i diri
குப்புற வீழ்ந்தேன் கூடவே குரல் ஒன்று
அதிர்கிறது. 'யாணுே அரசன்? யானே கள்வன்.'

96.86
எனக்கும் உனக்கும் ஊடாக கட்புலனுகாக் கயிருென்றின் பிணைப்புளது.
எங்கெங்கோ அலைந்தாலும் சுண்டியிழுக்கும் அக் கயிற்றின் அதிர்வு என்னுள்.
எனினும் அப் பிணைகயிறு
சில வேளைகளில்
இதோ அறுகிறேன் என
நுண் புரியில் பயமுறுத்தும்
கணங்களை நினைந்தால்.
2

Page 24
l3
ஊடல் முற்றி மன மூட்டம் கெளவிய இருட்டறை மெளனத் துள்தான் எத்துணை கணம் உறைந்துபோய்நிற்கும் ஊமை இருளில் புதைந்து போய்விட்ட கால ஊர்தி வெறுமையின் கனம் தாளாமல்,
இருள் ஊர்ந்த மனமும் முகடூர்ந்த விழிகளும்சோர்ந்து போய் துயிலில் மூழ்கியதும் தெரியாது போன பின்னிரவில்
நெஞ்சில் வீழ்ந்த மென் கரத்தால் துயில் கலையும்; இருளில் மனுங்குகிற பொன்வளைகள் செவியருகில் மெல்லச் சிணுங்குகையில் சேர்த்தணைத்தேன்.
சிறுகச் சிறுக இறுகப் பிணைந்த கணங்களின் உருளலில்
உறைந்து போயிருந்த ஊமைஇருள் நெகிழ்ந்து மூச்சுவிடும்.
மீண்டும் உறவென்னும் ஒளிக்கயிற்றின் அதிர்வு தொடங்கிற்றே!

கலப்பு
அன்பே எனயுடையாய் காதல் இன்பமும் கனிவும் கலத்தொன்ருய் வந்தவளே நிச்சயமாய் நம்முறவு முந்தைத் தொடர்பின் புது முகிழ்ப்பு என்னல் பிழையன்று.
வெண்ணெய் எனத் திரண்டிருந்த பெண் மெய்யாய் நீ இருக்க ஓட்டைப் பாத்திரம் ஏந்தி ஊரெல்லாம் நெய்க் கலைத்தேன்.
நெய்க்கலைந்து நாயேன் நீண்ட வழி நடந்து மீளுகையில் தீண்ட வழி நெடுகிலும் அன்பு நிழல் தழைய நின்றிருந்தாய் நின்னிரு விழிகளிலும் தேக்கியிருந்தாய் காதற் தேன் வதைகள்.

Page 25
20
உட்குவிந்திருந்த காதல் இதழவிழ்ந்ததோர் விடியல் ஓ! இன்னமும் ஞாபகம் இருக்கிறது. பளிச் செனப் புலர்ந்த வெண்முறுவலில் என் இரவினை விழுங்கினை அன்று.
இன்றே எனது சுமைகள், அயர்வுகள், சோர்வுகள்
எல்லாம் உன்னிடம் கைமாறின.
நான் காலாற ஓர் நிழல் கனிந்த தருவாய், கை நிறைய அள்ளிப் பருக காலடியில் தெளிந்தோடும்
அன்பு ஒடையாய் நீ.
என் துயர் நின்துயராய் எனக்குற்ற அவமானம் நினக்குற்றதாய் நெகிழ்ந்துருகி நீ விட்ட கண்ணிராலேயே என் மாசுகள் கழுவுண்ண நான் மனிதனய் நிமிர்ந்தனன்.
என்னை மனிதனய் நிமிர்த்த உன்னுள் எல்லையற்ற துயர் சுமந்து நின்று புன்னகைக்கும் பேடே நினக்கு என்ன செய்தால் தகும்?
எதை வேண்டி நின்ருய் நீ ஏந்திழையாய் எனினும் என்ன செய்தல் தகும் நினக்கே? உன்னுட் பெருகும் உண்மை அன்புப் பெருக்குள் என்ஜனயே மூழ்கி இறும்பூது எய்தலன்றி.

உராய்வு
கோளங்கள் நகரும் போது ஒன்ருே டொன்றுராய்ந்து
கீதம் ஒன்றெழுப்புகுதாம்.
மானுடரின் காதுகளை எட்டாத கோளகிதம் கடவுளர்க்கே கேட்கும் என்ருர் கிரேக்கர்.
ஞாலமே தூங்கும் ஓர் நள் யாமம் தூங்காத நகஷத்திரங்கள். நான் முற்றத்தில் நிற்கிறேன் மனமோ முகையவிழ்ந்து பால் வழி முற்றத்தில் பவனிக்க.
திடீரென அதிர்ந்தன என் உட் செவி நரம்புகள் பேரண்ட ரீங்காரம் உள்ளுராய்ந்ததே கோளகிதம்.
மனங்கிழிந்து போனேன்; அக் கவனங்களிலே நான் மானுடன் அல்லன் மானுடனே அல்லன்.
நீங்களும் நின்று பாருங்களேன் ஒர் நக்ஷத்ர ராவில் மனங்கிழிந்து போக உள்ளுருவிச் செல்லும் கோள முட்டிகளின் கள்ளிரைச்சல்,

Page 26
வெறுங் காற்றில் கலந்திடுமோ. 怡 帕莎
முன்பு தமிழ்நாட்டில் ஒரு கீழ் வெண்மணி இன்று பீகாரில் இன்னுென்று.
சாதி வெறிக்கேது திக்கு ? தெற்கிலே பற்றியது வடக்கிலும் தீ நாக்குவளைத்தது.
பீகாரில் ஒரு கிராமத்தில் சாதி வெறியர் எளியவர்களுக்கு எரி கொள்ளிகளால் பதில் சொல்லியுள்ளார்.
கோயிலில் தீவட்டி ஏந்திய கைகள் தாழ்த்தப் பட்டவரின் குடிசைகள் கொளுத்த தீவட்டியோடு ஊர்வலம்போயின.
கொள்ளிவாய்ப் பேய்கள் சுற்றிவர குழுமி நின்று உமிழ்ந்த தீ பற்றிப் பிடிக்க குடிசைகளுள் துயின்ற பதிஞன்கு உயிர் வெண் மணிகள்பிஞ்சுப் பாலகர், நேற்றுத் தான் மஞ்சம் நுகர்ந்த மணமக்கள், முதியவர். பச்சை உடம்போடு பஸ்மீகரமாயின.
ஹரிஜனங்களை அவிர்ப் பொருளாக்கி சாதி வெறியர் வேள்விகள் செய்ய சந்நிதானங்கள், கோயில்கள், பீடங்கள் குத்துக் கல்லாய் குந்தியிருந்து ஸ்லோகம் சொரிந்தன.

23
ஆட்சி பீடங்களில் மாறி மாறிஆள்வோர் அமர்ந்தனர் போயினர் "கீழ் வெண்மணிகள் போயாவிட்டன? சாதிவெறியரின் ஏவலால் மன்னுயிர் தின்ற தீயே நீயும் விண்ணெழுந்து வெறுமனே போகுதியோ?
தீயே! ஆதிவேடன் பண்டொருநாள் கல்லோடு கல்லுரசக் கனன்றதீயே, உன்னை இங்கழைக்கிருேம்
மீள்க.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சாதி வெறியை ஊதிவளர்த்த தீயவர் கையில் நீ சேரற்க.
அக்கினியே! இடம்மாறு. அஞ்சி ஒடுங்கி அடங்கி வாழும் இந்த ஏழை எளியவரிடம் வந்து குடியேறு. அவர்கள் கண்களில் ஜ"வாலி. நெஞ்சங்களில் ஞான நெருப்பாய் எரி. சொற்களில் சுடு சரமாகு. செயல்களில் ஆலைக் கனல்பெருக்கு. மெய்ந் நெருப்பாக மேதினி எங்கும் திரிக.
ஆதிஜோதியே! அனற் கொழுந்தே நின்னை வேண்டினுேம் இந்த எளியவர் வாழ்வு வெளிச்சமுறும் பொருட்டாக,
தீயே உன்னை அழைத்தனம் தீயவரைச் சென்றுதீண்டுதற்காக,
சாதி இன, மத நிற வெறி எந்தெந்த மூலை முடக்கிலே காணினும் அவற்றை நீக்கமற எரித்து நீருக்கும் பொருட்டாக

Page 27
இந்தியாவே நீ எங்கு செல்கிறய
மீண்டும் மனிதன் இருண்ட குகையுட் புகுந்தான் வில்லும் அம்புமாய் வேட்டை விழையும் குணத்தினணுய். ஒரு வித்தியாசம் இப்போது அவன்குறி சக மனிதனேதான்.
அஸ்ஸாமில் பாய்ந்த அம்புகள் அதற்குச் சாட்சி. ஆயிரம் ஆயிரம் உயிர்களின் அவலக்குரல் விண்ணை நிறைக்க மீண்டும் மீண்டும் தொண்டைக் குழியைத் துளைத்துப் போன அம்புகள். துப்பாக்கிக் குண்டுகள்
பிஞ்சுகள், முதிர்ந்தவைபேதமின்றி எல்லாமே உதிர்ந்தன.
பிணக் காடு, இரத்த வெள்ளப் பெருக்கு இவற்றின் நடுவே கழுகுகள் வேறு.
பிணம் பொறுக்கிகளாய், பிணக்குவியலினிடையே உயிராடும் ஏதும் தலைநீட்டாவோ என வாக்குப் பொறுக்க நத்தி வட்டமிடும் கழுகுகள் என்றவை இருரகம்,
என்னே இவர் சிறுமை பிணக் குவியலின் நடுவே சிம்மாசனமிட விழையும் வேட்கை, வேட்டையாடும் மனிதனின் உச்சம்.
இருபுறமும் ஈட்டியும் வாளும் ஏந்தியவர் இடையே சமாதானம் வேண்டி நடந்த காந்தியின் யாத்திரை எங்கே? பிணக்காட்டில் தேர்தல் யாத்திரை செய்யும் இவர்கள் எங்கே?

25
இந்தியாவே, நீ எங்கு செல்கிருய்? இமயமலை உச்சி எங்கே? இன்றைய உன் வீழ்ச்சி எங்கே? இமயத்தினின்றும் வழிந்தோடும் உன் புண்ணியநதிகள்
(இன்று புலைமை குளிக்கிறதே அவற்றில் ஏனிந்த இரத்தவெடில்?
குடில்கள் தோறும் வளர்த்த அக்னியில் வாழ்வு சுடர்த்திய உன் பண்டையரிஷிகள், அண்மைக் காலம் வரை இருந்த ரமணர், அரவிந்தர் போய் மறைய
போலிகளும் பொய்மைகளும் அன்னக் காவடிகளும் பொய்க்கால் குதிரையாட்டப் புது மன்னர்களும் வாழ்வு தருவார் என்று வறுமை கொண்டாயே
"மன்னும் இமயமலை எங்கள் மலையே?’ என்று செருக்கோடு பாடிய நின் கவிகள் கருதியது வெறும் மலையைப்பற்றி மட்டுந்தானு? இல்லை யெனின், மாநிலமீதில் உன்னிலை இழிவதேன் இன்று?
உதறு! உன்சிறுமைகளை உதறிஎழு. உன்னில் நீ உறுதி கொள்.
பண்டைய ஞானத்தை இன்றைய காலத்தியல்புகளுட் பாய்ச்சும் வித்தை பயில் இருண்ட நின் வீட்டுள் சுடரேற்று.
விடிகாலைக்கதிர் ஒளியெழுதச் சுடரும் இமயத்தின் நெற்றியென வாழ்வு சுடர்த்தும் வழியறிக இந்தியமே.

Page 28
விடுதலைக் குருவியும் வீட்டு முன்றிலும்
பாரதி, விடுதலை அவாவிய நின் சிட்டுக் குருவி எங்கள் வீட்டு முற்றத்திலும் மேய்தல் கண்டேன்.
விடுதலைத் தாகத்தின் துடிப்புன் குரலென்ருல் அதன் இதழ்களிலும் ‘விடு விடு" என்ற அதே துடிப்புத்தான்.
முற்றத்தில் மேயும் போதும் திண்னேயில் திரியும் போதும் வீட்டு வளையின் மேலும் விண்ணை அளக்கும் போதும் *விடு விடு" என்ற ஒரே ஜபம்தான்.
துயிலும் கட்டிலில் தொற்றியும் தூங்கும் குழந்தையின் தொட்டில் கயிற்றினைப் பற்றியும் ‘விடு விடு" என்றே ஜபிக்கிறது.

27
தானியம் பொறுக்கும் போதும், கூடுகட்டக் குச்சுப் பொறுக்கும் போதும், ‘விடு விடு" என்ற ஜபத்தை அது விடவில்லை. அதன் சிற்றுடலே விடுதலைத்துடிப்பின் வேக இயக்கமாயிருக்கிறது.
தலையை உருட்டுதலில்,
சிறகைக் கோதுதலில், காற்று வெளியில் "ஜிவ்'வென்ற சிறகுதைப்பில் அதே துடிப்பு: சதா துடிப்பு:
நீ தேசித்த தேசத்திலும் அதன் ஒவ்வோர் அங்கங்களிலும் பெண்மையில், ஆண்மையில், பிணைக்கின்ற காதலில் மொழியில், இசையில், கவிதையில், உரைநடையில் அரசியலில், தொழிலில், ஆன்மீகத்தில்இதே துடிப்பை நீ உடுக்கொலித்தாய்.
குடு குடு குடு நல்லகாலம் வருகுது’’ என்று நாட்டுக்கு நல்ல குறி சொல்ல தூக்கிய நின் உடுக்கின் ஒவ்வொரு முழக்கிலும் விடுதலைக் குருவியின் வீச்சு நிகழ்ந்தது. "கொட்டு முரசு"வின் அதிர்விலும் அதே விட்டு விடுதலையாகும் வீச்சேதான்.
தூக்கம் எங்கெங்கு கெளவிற்ருே அங்கெல்லாம் துயிலெழுப்ப இந்தத் துடிப்புக் குருவியை நீ தூதுவிட்டாய். உயிர்த்துடிப்பின் உன்னதபடிமம், நின் விடுதலைக்குருவி.
அந்த விடுதலைக்குருவி எங்கள் வீட்டுமுற்றத்திலும் மேய்தல் கண்டேன்.

Page 29
28
சோம்பித் துயின்ற என்குழந்தைகளை எழுப்பி 'துரு துரு வென்ற குருவியைக் காட்டினேன். சோம்பலை உதறிய அவர்களில் தொற்றிய துடிப்பின் உயிரொளி கண்டேன். குருவியின் பின்னல் ஓர் கூட்டமே இயங்கிற்று.
விடுதலைக் குருவியோடு "சடுகுடு’ ஆடும் சிறுவரின் கூத்து. *விட்டேன் விடுதலை விட்டேன் விடுதலை’ என்றந் நாளில் "சடுகுடு ஆடிய இளமையின் வேகம் என்னுள்
புதுநடை பயிலும்,
விடுதலைக் குருவீ! வீடுதேடி வந்தாய் நீ வாழி! நின் அலகிதழ் முனையில் எம் இருள் துயரெல்லாம் கிழிபடுகிறது. மூலை முடக்குகள், நாடி நரம்புகள் தோறும் விடுதலை வீச்சோட்டம் நிகழ்கிறது.
சிட்டுக்குருவி! எட்டுத்திக்கும் பறந்தொரு சேதிசொல் விட்டு விடுதலையானுேம் நம் கட்டுகள் யாவும் அறுந்தன வாமென்று. குறி சொன்னனே அந்தக் குடுகுடுப்பைக் காரன்!
அவன் காதிலும் மெல்ல இச் சேதியைப் போடு!

விமர்சக விகடங்கள்
நூல் வெளியீடு ஒன்று நிகழ்ந்தது. நால் வகைக் கிரியைகளும் நடந்தேறியபின் "நூலை இவர் விமர்சிப்பார்" என்னவும் எழுந்தார் ஒருவர் எழுத்தாளர்.
வந்தார் அரங்கில் சபையை வடிவாக நோட்டம் விட்டே எங்கோ ஒரு மூலையில் இருப்போனை இலக்கியத்தில் எளியோனுகச் சிந்தையில் 'பாவம் கொண்டு சின்னச் செருமலோடு ஆரம்பித்தார்.
'.எளிமையாய் விளக்கப் போனல் இதற்கொரு கதை சொல்வேன்' என்று கதை சொல்லத் தொடங்கி மனுஷன் ஓர் கழுதையின் மேலே தொற்றி கழுதையை விட்டிறங்கிப் பின்னுெரு குதிரையின் பிடரி மயிர் பிடித்தேறிப் பெருவெளிச் சவாரி செய்து பின் குதிரை விட்டிறங்கி உடனே குரங் கொன்றின் வாலைப் பற்றி.

Page 30
30
இப்படியே கதை கதையாம் காரணமாம் காரணத்துக்கோர் கதையாம் என்று பலகுட்டி ஈன்றபன்றியைப் போல குட்டிக்கதைகளை ஈன்ற களைப்பில் குலைதள்ளி நின்றவேளை
குட்டிக் கதைகளின் கும்பலின் இடைநழுவி விமர்சனம் மெல்ல எங்கோ விடை யூர்ந்தேகிற்று.
விடை பெறுகிறேன் என்று இவரும் விமர்சனம் அன்று தமது
விகடனம் முடித்துக் கொண் டே, கதிரையில் அமர்ந் தார் அல்லர்
தமது கைவாகனம் இவர்ந்தாரன்றே

காற்றுள்ளபோதே.
தூற்றிக்கொள் நண்பு காற்ருேட்டம் சாதகமாய் உள்ள தருணமிது.
எத்தனை நாள்தான் சுப்பற்ற கொல்லைக்குள்ளேயே புரட்சிச் சுலோகங்கள் விதைத்தபடி..?
போக்கையும் மாற்றி புதுச் சுலோகங்களும் விதைக்கக் கற்போம் இல்லேயெனில் தாளே நமக்கெல்லாம் நாற்காலி யார்தருவார்?
வர்க்கக் கடலில் தூண்டி லிட்டு இதுகாறும் வயிற்றைக் கழுவிவந்தோம். பிச்சைப் பிழைப்புத்தான்
அண்மையில் பேரினவாதப் புயல்களினுல் காலநிஜ ஓரற்றுப் போயிற்றே என் செயலாம்?

Page 31
32
*செவ்வானம்" கருக்கலிலே செத்திருள பொய்மானுய்ப் போயிற்றே நம் "வர்க்கப் புரட்சி" இனியும்,
"முற்போக்கில்" வீணுய்
முதலை முடக்கிவைத்து
என்னபயன்?
சிந்தித்தாய்; "நீண்டபயணம் இடைநிறுத்தி வைத்துவிட்டு முகமூடி வேறணிந்து முகாமினை மாற்றிக்கொண்டாய். "இரவல் தாய்நாடு'தான் இன்று, எவர்க்கும் கை கொடுக்கிறதே!
காற்றுத் திசைமாறக் கடலோரம் நீரோட்டம் பார்த்து பாயிழுத்து விட்டீர் பக்குவமாய்; உங்கள் போலித்தனங்கள், ‘புனைகதைகள் சகிதம்,
இக்கணம் கலம் சேர்ந்திருக்கும் அக்கரையில். திரைகட லோடியுந் திரவியம் தேடுகென்ற பழந்தமிழர் வரிசையில் நீவிரெலாம் இன்றைய வாரிசென நானறிவேன். நிச்சயமாய் ஒருகால் வங்கக் கடல் முழுதும் கப்பல் விடுவீர் காண்!
எப்படி வியாபாரம்? எழுத்து விலை போகிறதா?
இங்குதான் எம்மவர் கொட்டிய செங்குருதியெலாம் குடம்குடமாய்ச் சேமித்திருப்பாயே நனவோடையிலே. உத்திகளில் வல்லவர் நீர் இனியென்ன? உங்கள்
செம்பொருள்' நன்ருய்ச் செலவாகும். ஊற்றுப் பேனை பின் உட்பெய் தெழுத காலம் முழுதும்தான் காணுமே எங்கள் கட்டிபடாப் பச்சைரத்தம்.

33
ஏதோ எங்கள் அயற்புலத்தில் குடியேறி ஏர்பிடித்தீர் ஏலேலோ எங்கள் பிரச்சினையை விதைத்துப் பயிராக்கிப் போரடித்து, பொலிஎடுத்துப் போஷாக்கோடு இருங்கள்.
மற்றுங்கள், ஏர்உழவர் பாட்டாளி இவரெல்லாம் பேரினவாதக் குருதிச் சகதியில்தான் நிதமும் புரள்கின்ருர், வாய்ஒயாமல் நீங்கள் எல்லாம் பேசிய தேசீயம் வர்க்கப்போராட்டம் இவையெல்லாம் திகைத்துப்போய் நிற்கிறது.
வேறென்ன? முன் கழற்றிவைத்துப்போன முகமூடிகள் வீட்டுக் கோடியுள் பக்குவமாய்க் கொழுவிக் கிடக்கிறது. பின்ணுெருகால்
திரும்பியும் அணிந்துகொள்ளத் தேவைப்படுமென்ற உங்கள்
தீர்க்கதரிசனம் வாழ்க.வாழ்க..!

Page 32
மின்னியக்கம்
நான் சந்தித்த ஒரு மானுட நேயன்மாற்றத்தை விரும்பும் என் மனதுட் சுழியோடி போர்த்திய பொய்ம் மேலோடுகள் பொடியுதிர "ஊற்றுக் கண் உனக்குள்ளே? உற்றுப் பார் என்றவன் இன்றென் புலனெதிர் இல்லையெனும் போது.
மூச்சடங்கிச் சாகிலும் முக்குளித் து ஆழ்கடலில் முத்துக்களை முயல்வோம் எனக் கத்தும் அலை கடலில் எனக்கோர் கட்டுமரம் தாங்கியவன் இன்றென் புலனெதிர் இல்லையெனும் போது.
தொடுவானைத் தொடமுன்னம் படகின் துடுப்புகளை இழந்ததென நான் கொண்ட துயரின் நடுக்கடல். நீத்த முடியா நெடுந் தொலைவு.

35
நிரப்ப முடியா ஓர் இடைவெளி நெஞ்சிலோர் பள்ளமாய்க் குழிய ஏக்கம் ஒன்றெழுந்து என்னுள் வெறுமை சுடும் காற்ருய் திரிந்தலைய.
வான் கொண்ட நகஷத்ரங்களொடும் வயல் கொண்ட வெளியோடும்
கண் சோர நின்று
விண்ணிழியும் தாரை வீழ்துகளில் வேதனையின் ஊசலிட்டு.
விழுதுகளின் மேலுயரப் பழுத்திருந்த அம் மானுடப் பழத்தை நினைந்து நினைந்து நெஞ்சம் பிழிந்தது சோகரசம்,
சோகம் பிழியவா அம்மானுடம் பழுத்தது? நெஞ்சக் குழியில் வந்துதைத்தது ஒரு மந்திரக் குரல் அதிர்வு.
*அல்ல" என்றடுத்த கணம் ஞானந் தெறிக்க மனரேகைகள் பளிச்சிட மேனிமுழுவதுமே ஓர் மின்னுேட்டம் நிகழ்ந்ததென.
"மின்னுயிர்ப்பை" என்னுள் முடுக்கியதார்? வெளிச்சமொன்று வெள்ளி வீதி கிழிக்க பின் திரும்பினேன் உலுக்கிற்று என்னை ஓர் உருவம்.
மீசை வருடியவாறு மின்னுயிர்க்கும் தூய ஒளிவிகCப்புக் கண்டேன் கணவன்று;
நிதர்சனந்தான்.
(மு. தளையசிங்கம் நினெவாக.)

Page 33
எங்கள் வீதியை எமக்கென மீட்போம்
வீதியில் போகும்போது விபத்து நேராதிருக்க விதிமுறை உள்ளன; விதிமுறை உள்ளன.
விதிமுறை இருந்தும் விதிமுறை இருந்தும் ஒதுங்கியே செல்லும் பாதசாரிகளின் உயிர்களுக்கு ஏதும் உத்தரவாதமே இல்லை.
உறுமியே செல்லும் ராணுவ உந்துகளின் உள்ளிருந்து இயங்கும் துவக்குகளாலே எந்தநேரமும் இவர்தலை சிதறலாம் எந்தச் சமயமும் எம்தலை உருளும்.
ஒதுங்கியே செல்லினும் ஒதுங்கியே செல்லினும் எம்முயிர்க்கு இங்கு உத்தரவாதமே இல்லை.
சேதிகள் வருவன நாள் தோறும் வீதியின் நடப்புகள் விபத்துகள் அல்லவே.

37
2 இப்போதெல்லாம் எமது நகரத்து வீதிகள் காவற் கருவிப் பேய்களுக்கென்றே எழுதப் பட்டதாய்ப் போனதே போலும்.
"எவரையும். சுடலாம் விசாரணையின்றியே எரிக்கலாம் அன்றிப் புதைக்கலாம்" என்று இயற்றப்பட்ட புதிய விதிகளால் குருதியில் தோயும் நிகழ்வுகள் இங்கே.
இருளுக்கும் இருட்புலையர்க்கும் என்றே
டப்பட்டுப் போன எங்கள் வீதிகளில் வெளிப்படுவோரெல்லாம் சுடப்படலாம் தெருநாய்களைப்போல. எக்கணமேனும் எக்கணமேனும் எமக்கிது நிகழலாம்.
குருதியை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தே கொழுத்துப் போகும் இரவுகள் நீளலாம்; கட்டித்த ரத்தமாய் இரவுகள் தடிக்கலாம்.
வீதிகளை இருளரக்கனே ஆள மின்விளக்கு அணைத்தே வீட்டினுள் கூடியிருந்து பீதி வளர்ப்பவர் மத்தியில் எத்தனை இரவுகள் இப்படிக் கழியலாம்?
குருதியை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தே கொழுத்துக் கிடக்கும் இருளரக்கனத் தறிக்க கோடரி ஏந்தி யார் வெளிவருவார்?
வீட்டினுள் பதுங்கி இருந்தே பீதியில் ஓரிரா ஈரிராக் கழியலாம்; எத்தனை இரவுகள் இப்படிக் கழியலாம்?
எத்தனைக் காலம் எங்கள் பூமியை இருளரக்கனிடமே ஒப்படைத்திருக்கலாம்?

Page 34
38
அதோ தூரத்தே வீழும் எரி நட்சத்திரமல்ல, உன் அயலவன் வீட்டு முகட்டிலே அரக்கர் வீசி எறியும் தீப்பந்தம்.
தூரத்து இடியல்ல அதோ அடுத்த வீதி வளைவில் அவன் தீர்க்கும் வேட்டொலி.
வீங்கிருள் நிகழ்வுகள் இவையே ஆக வீட்டினுள் உயிரோடு எத்தனை நாட்கள்? வீடு நிறைந்த பீதி விடுத்தே கோடரி ஏந்தி அனைவரும் வருக.
எங்கள் இரவை எமக்கென மீட்போம் எங்கள் வீதியை எமதே ஆக்குவோம்.
இன்றைய இரவை அவனிடம் இழந்தோம், இனிவரும் பகலும் எமதென்பதில்லை; எங்கள் வீதியை அவனிடம் இழந்தபின் எங்கள் முன்றிலும் எமதென்றில்லை.
எங்கள் முன்றிலும் எறித்த நிலவுமாய் இன்புறு நாட்கள் எங்கோ ெதாலைந்தன இருட்டுள் சீவியம் எத்தனை நாட்கள்?
வீடு நிறைந்த பீதி விடுத்தே கோடரி ஏந்தியே யாவரும் வருக விழுதுகள் ஊன்றிய இருளரக்கனைத் தறிப்போம்.
எங்கள் வீதியை எமக்கென மீட்போம்; எங்கள் முன்றிலை நிச்சயம் செய்வோம்.

தூது
நண்ப, நினக்காக நெகிழும் என் நெஞ்சு நின்னினிய துணைக்காகவுந்தான்.
துன்பமேசூழ முகாமிட்ட துயர்வதைக் கூடத் துள் நெடுந்துயருறும் விடுதலைநேசரின் நிலையெண்ணி நெகிழும்என் நெஞ்சே
யாரொடு நோகலாம்? யார்க் கெடுத்துரைக்கலாம்?
வீதியில் கண்ணுறும் நண்பரொடு உம் துயர் பேசவும் வாயெழாது குசுகுசுக்கும் எமக்குள் உணர்வின் நசிவே உறுத்தும் பெரிதாய்,

Page 35
40
நீட்டிய துவக்குகளின் நெருக்குறலில் மூட்டுகள் தேடி முடங்கும் பூச்சிகளாய் மானிடவர் நாமிங்கு மரணத்துடன் சம்பாஷிக்கிருேம்.
கூனிப் போன கொள்கையர் சொல்கிறர் "மழை காலத்தில் நுளம்புகளோடு பழக்கப்படுகிறது போல
படையினரோடும் பழக்கப்படுவோம்?? என்று, ஏதோ பெரிய பகிடி ஒன்றை உதிர்த்தவர் போல உரக்கச் சிரித்5ւմւգ.
தெரியாமல் கேட்கிறேன் நண்ப, நுளம்பின் கடியின் வலியா நுமக்கெலாம்? கொன்று போடும் கொடுமைகள் இங்கெலாம் கொசுக்கடி போல்வெதான்ரு? புகையிட்டு விரட்டினல் கலையுமோ கொசுக்களைப்போல் இக்கொடுமைகள்?
தலைவரும் அவர்கள் சிறுமையும் சிறுமதியும் இன்னும் இருந்தவாறே.
சிறையுளே வதைபடும் விடுதலை நேசர் நிஜல கண்டு நெகிழாதார் இவர் செய்கை, நெஞ்சுள் முள்ளாய் நெருடுமே.
p567t,
நினக்காக நெகிழும் என் நெஞ்சு
ன்னினிய ணைக்காகவுந்தான்.
ģ வுதத
நின் துயர் நிகழ்வு என் செவியுறு கணத்தில், நான்
துணுக்குற்றேன்
தொடர்ந்து நடுக்குறலாயிற்றென் நெஞ்சம்,

4 li
பேரினவாத ஒடுக்குமுறை அரசின் இராட்சதக் கரம் இளைஞரில் தொடங்கி மதகுருமார், கலைஞர்,புத்திஜீவிகள் மேலும் வீழ்ந்தாயிற்று. இனி என்ன? "பத்துத் தலைகளும் இருபது கரங்களும் திக்கெல்லாம் தேடிவரும்."
என் செய்தோம்? வெறும் வாய்ச் சொல்லில் வீரராய் வன்துயர்களையும் வலிமை இல்லோமாய் என்புதோல் போர்த்திருந்து என் செய்தோம்?
கையில் வெறுமனே எழுதுகோல் தரித்தோம்.
நண்பர் நினக்காக நெகிழும் என் நெஞ்சு நின்னினிய துணைக்காகவுந்தான்.
அந்தநள்ளிரவில், நட்சத்திரங்களும் நடுங்கித் துயருறும் அந்த நள்ளிரவில்
இருளின் புலையர்கள் வந்து கதவைத் தட்டினர்.
கதவைத் திறந்த கணத்தினில் நீட்டிய துவக்குகளின் கத்திமுனை உமது நெஞ்சில் அழுத்தவும், அவர்கள் நையப் புடைக்கையில் எலும்புகள் நறுக்கென்ற போதிலும் நடுக்குற்றிருப்பாயோ நண்ப அந்த நள்ளிரவின் திரட்சியில் நீயும் நின் துணையும்? - நானறிவேன் நீவிர் யார்க்கும் அஞ்சா நெஞ்சுரம் உடையீர்; எதையும் எதிர்கொள்ளும் ஆளுமை பெற்றீர்.

Page 36
42
எனினும்
நடுங்கா நாட்டத்து நண்ப,
இது கேள்
நினக்கும் துயர் வதையுறும் விடுதலை நேசர் எவர்க்கும் இது பொருந்தும். குளிரால் நடுங்குதலும் தீயால் குடுறுதலும் இலாதது ஆத்மா!
இருமைகள் அதற்கில்லை
என்பது வேதம்.
ஆதலின் நடுங்குதல் தவிர்க ஆத்ம நண்பனே,
வேதம் அபினி என்று நீ வியாக்கியானிப்பாய்
எனினும் இங்கு ஒதும் உண்மை உயிர்த் துணையாமே.
நடுங்குதல் வேண்டா.
நினது
சுயேச்சா வலுவின் கெட்டியால் உடல்-மனத் தள வலி கடந்தவன் ஆகுக'.
விலங்குகள் உமது கரங்களைப் பிணிக்கலாம் விடுதலை மூச்சை விலங்குகள் என் செயும்?
வீறு கொள்! வார்கடல் தாண்டிய ராமதுரதனின் ஓர்மமும் மூச்சும் உமக்குளும் எழுக!
விடுதலைப் பறவையின் தொலை நோக்கும் வீச்சும் உள்வாங்குக விறலோய்.

சிறகடிப்புகள்
என்றும் சிறைப்படா
இருள் அதிர்ந்தது வெலிக் கடைச் சிறையினுள் கைவிலங்குகளும் கதறிவிழ இருளதிர்ந்தது சிறையினுள்.
இங்கோ எங்கள் ஹிருதயம் அதிர்ந்தன.
கை வேறு கால் வேருக சிறகரிந்து கிடந்தவோ பறவைகள் துடித்திருப்பீரே தோழரே. நீங்கள் எழுப்பிய
இனக்குரலொலி, கேளாச் செவிடரின் மத்தியில் மெல்ல மெல்லத் தேய்ந்து போக மரணித்துக் கிடந்த மயான அமைதியில் மூலையிருட்டில் முக்காடிட்டு நீதி தேவதை தூக்கிலே தொங்கினள்.

Page 37
44
2
சொன்னர்கள் வெலிக்கடைச் சிறையினுள்ளிருந்து "ஐயோ அம்மா' என்று தமிழில் அலறும் குரல்கள் செவியைக் கிழித்ததாய் ஊசி இழைகளாய் உயிர் நரம்பையே ஊடுருவிய அக்குரல்கள் கேட்டது சில நிமிடங்களேதான்.
அதற்குள் சிறைக்கூடத்தின் மேலாய்ப் பறந்த *ஹெலிகொப்டரின்? இரைச்சலில் அவலக் குரல்கள் அமுக்கப்பட்டன.
காலந் தோறும் இப்படியேதான் எங்கள் குரல்கள் நசுக்கப்பட்டன இன்றே எமது குரல்வளைகளும்.
அரக்கன் விரித்த ஆயிரம் கரங்கள் திக்குகள் தோறும் முளைக்கத் தொடங்கின எங்கும் ஒடுக்கும் கரங்களின் இயக்கம் எங்கள் முதுகின் மேலாய் அதன் நிழல் இறக்கம்.
எங்கே திடீரென்று அவன் கரம் முளைக்கும், எப்போது எங்கள் குரல்வளை நெரியும் என்பதை அறியோம்.
சந்தியில் சாலையில் ஒழுங்கையில், முன்றலில் எங்கும் முளைக்கலாம் எங்கள் வீட்டினுள்ளும் முளைக்கலாம்.
துவக்கின் விசைகள் அழுத்தப் படுகையில் வீடுகள் தோறும் பிணங்கள் விழலாம் வீதிகள் சுடுகாடாய் மாறலாம்.

45
எங்கள் நாடே எமக்கு சிறைக் கூடமாயிற்று நாங்கள் கைதிகள் விடுதலை கெட்டோம்.
கைகளில் மட்டும் விலங்குகள் இல்லை ஆயினும் எம்மைச் சுற்றிலும் லிலங்குகள், விலங்குகள். விலங்குகள் என்பதும் தவறே:
• விலங்குகளும் கண் புதைக்கும்" நிகழ்வுகள் எமக்கிங்கு நேர்ந்த பின்னலும் ஆட்சிபீடங்களை அலங்கரித்திருக்கும் அலகைகள் ஆட்சியில் இனியும் அடிமைச் சிறைப்படு வாழ்வா? இனியும் நரகில் இடர்ப்படல் நன்ரு?
இல்லை இல்லை இல்லை என்றெழுவோம் இனிமேல் அடிமைகள் இல்லை என்ெறழுவோம் வீழ்ந்து கெட்டாலும் விடுதலை மண்ணின் புழுதியில் அனைவரும் ஒன்ருய் வீழ்வோம் இஃது உறுதி என்றெழுவோம்.
விடுதலைவானம் காணுது மடிந்த சிறைப் பறவைகளே உறுதிக் குன்றேறி நின்றிவை உரைத்தோம் எம் குரல் கேளிரே,
விடுதலை நோக்கி உந்தி எழுந்த உம் சிறகடிப்புகள் எமது உணர்வுகளில் இன்னும் இன்னும் துடிப்பை ஏற்றும், விடுதலை வீச்சை உடுக்கொலித்தே நடக்கும்.
(1983 ஜுலைக் கலவரத்தின்போது சிறையுள் கொலையுண்ட போராளிகளின் நினைவாக.)

Page 38
புத்தரின் மெளனம் எடுத்த பேச்சுக்குரல்
இதோ
எனது வெளிநடப்புக்கான பிரகடனம்
நெடுஞ் சாலைகள்தோறும் நிறுவிய எனது சிலைகளின் முன்னே மனிதரின் நிணமும் குருதியும் எலும்பும் படையல் செய்தோரே
இதோ ஏற்றுக்கொள்ளுங்கள் எனது வெளிநடப்புக்கான பிரகடனம்,
பெளத்தத்தின் பேரால் தோரணம் கட்டிய வீதிகள் தோறும் நீங்கள் நிகழ்த்திய இனசங்காரப் பெரஹராக்களின் பின்னரும் இங்கே எனக்கு அலங்கார இருக்கையோ?
சூழவும் நெருப்பின் வெக்கை தாக்கவும் போதிமரத்து நிழலும் என ஆற்றுமோ? வெக்கை தாழவில்லை; வெளிநடக்கிறேன்.

47
புழுதி பறந்த வீதிகள் எங்கும் குருதி தோய்ந்து புலைமையின் சுவடுகள்.
விலகிச் செல்கையில் கால்விரல்களில் ஏதோ தட்டுப்படுகிறது. பேரினவாதப் பசிக்கு மனிதக் குருதியை ஏந்திப் பருகி எறிந்த பிக்ஷா பாத்திரம்.
ஒருகணம் அமுத சுரபி என் நெஞ்சில் மிதந்து பின் அமிழ்கிறது.
எங்கும் வீதிகளில் இனசங்காரத்தின் மங்காத அடையாளங்கள் ஒ என்மனதை நெருடுகிறது.
இன்னும் காற்றிலேறிய அந்தப் படபடப்பும் பதகளிப்பும் அடங்கவேயில்லை.
எழும்பிய அவலக்குரல்களின் எதிரொலி காற்றிலேறிக் கலந்தெங்கும் ஏன்? ஏன்? இக்கொடுமை என்றறைகிறதே
இவை கெட்டதில்லையா உமக்கெலாம்?
எனக்குள் கேட்டதே! இதயம் முழுதையும் சாருய்ப் பிழிந்ததே!
. . . . . .
இதயமே இல்லா உங்களை இந்த எதிரொலி எங்கே உரசிச் செல்லும்? சந்திகள் தோறும் என்னைக் கல்லில் வடித்து வைத்துக் கல்லாய் இருக்கக் கற்றவர்மீது கருணையின் காற்று எப்படி உயிர்க்கும்?

Page 39
48
மனச்சாட்சி உயிரோடிருந்தால் வீதியெலாம் மனித இறைச்சிக் கடைகள் விரித்து மானுடத்தை விலை கூறியிருப்பீரா? குருதியால் என்னை அபிஷேகித் திருப்பீரா?
வெலிக்கடை அழுக்குகள் உங்கள் வீரத்தின் பெயரா? ஓ! எத்தனை குரூரம்.
இத்தனை குரூரங்களும் கொடுமைகளும் எனதுபேரில்தான் அர்ச்சிக்கப்பட்டன; அரங்கேறி ஆடின.
எனது பெயரால்தான் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை. எனது பெயரால்தான் இனப் படுகொலை குருதி அபிஷேகம் இவை எல்லாமும்,
உங்கள் ஆக்கிரமிப்பின் சின்னமாக நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இழிநிலை.
நான் போதித்த அன்பு, கருணை எல்லாம் கல்லறைக்குள் போக்கிய புதைகுழி மேட்டில் நின்று என்சிலைகளைப் பூசிக்கிறீர் உங்கள் நெஞ்சில் உயிர்க்காத என்னை கல்லில் உயிர்த்திருப்பதாய்க் காணும் உங்கள் கற்பனையை என்னென்பேன்?
நானுே கல்லல்ல; கல்லில் வடித்த சிலையுமல்ல.
கண்டதுண்டமாய் அவர்களை நீங்கள் வெட்டியெறிந்த போதெல்லாம் உதிரமாய் நானே பெருகிவழிந்தேன் நீங்கள் அதனைக் காணவேயில்லை.

49
கைவேறு கால்வேருய்க் காட்டிலே கிடந்து
தாகமாயிருக்கிறேன்" என்று கதறியதும் நானே அக் கதறல் உம் செவிகளில் விழவேயில்லை.
கல்லாய் இருந்தீர் அப்போதெல்லாம்.
ஆணவத் தடித்த உங்கள் பேரினவாதக் கூட்டுமனம் எனக்குள் மறைந்து கொண்ட எத்தனிப்பே என்னை வெறுங் கல்லில்மட்டும் கண்டதன் விளைவன்ருே?
நானே கல்லல்ல; கல்லில்வடித்த சிலையுமல்ல மாறுதல் இயற்கை நியதி என்ற உயிர்நிலை ஒட்டத்தின் உந்து சக்திநான். கல்லல்ல; கல்லே அல்ல.
எனது ராஜாங்கத்தையே உதறிநடந்த என்னைக் கல்லாக்கிவிட்டு உங்கள் சிங்கள பெளத்த ராஜாங்கத்துள் சிம்மாசனம் தந்து சிறைவைக்கப் பார்க்கிறீர்.
யாருக்கு வேண்டும் உங்கள் ஆக்கிரமிப்புக் குடைவிரிப்பின்கீழ் சிம்மாசனம்?
நான் விடுதலைக்குரியவன். நிர்வாணம் என் பிறப்புடன் கலந்தது.
சிங்கள பெளத்தத்துள் சிறையுண்ட உமக்கெலாம் எனது நிர்வாண விடுதலை ராஜாங்கத்தின் விஸ்தீரணம் புரியாது அன்பரே பிரபஞ்சம் மேவி இருந்த என்ராஜ்யம் பேரன்பின் கொலுவிருப்பு என்பதறியீர்: வழிவிடுங்கள் வெளிநடக்க.
4.

Page 40
50
நெஞ்சில் கருணையூக்காத நீங்கள் தூவிய பூக்களிலும் குருதிக்கறை: குழவும் காற்றிலே ஒரே குருதிநெடில்.
ஓ! என்னை விடுங்கள்
நான் வெளிநடக்கிறேன்
என்னைப் பின்தொடராதீர் இரத்தம்தோய்ந்த
சுவடுகளோடு.
நான் போகிறேன், காலொடிந்த ஆட்டுக்குட்டியும் தானுமாய் கையொடிந்த மக்களின் தாழ்வாரம் நோக்கி, அதுதான் இனி என்இருப்பிடம்,.
வருந்தி அழைத்த பெரும் பிரபுக்களை விடுத்து ஓர் ஏழைத்தாசியின் குடிலின் தாழ்வாரத்தில் விருந்துண்டவன் நான்.
அத் தாழ்வாரத்தில் உள்ளவர்களிடந்தான் எனக்கினி வேலையுண்டு.
நீங்கள் அறிவீர் வரலாற்றில் என்மெளனம் பிரசித்திபெற்றது. ஆனல், நான் மெளனித்திருந்த சந்தர்ப்பங்களோ வேறு.
இப்போதோ
என்மெளனத்துட் புயலின் கனம்.
ஒருநாட் தெரியும்
அடக்கப் பட்டவர் கிளர்ந்தே எழுவர் அப்போதென் மெளனம் உடைந்து சிதறும்; அவர்களின் எழுச்சியில் வெடித்தெழும் என்பேச்சு

புது யுகச் சங்கொலி
ஊதடா சங்கு! ஊதடா சங்கு
கலைஞான யுகமின்று விடிகின்ற காலம் கலிஎன்பான் அரசாட்சி மடிகின்ற காலம் கலிசெய்த பேதங்கள் கலிசெய்த பாவம் இனியில்லை எமக் கென்று ஊதடா சங்கு
ஊதடா சங்கு ஊதடா சங்கு
எழுத்தோடு நடைமுறை வேறு வேருக தொழுகையும் வாழ்க்கையும் வேறு வேருக நடிக்கிருர் அவர்போடும் வேஷங்களெல்லாம் பொடிப் பொடியாகுதென் றுதடா சங்கு
ஊதடா சங்கு ஊதடா சங்கு
வேதங்களைக் கூட சாட்சிக் கிழுத்து சாதி இனமத பேதம் விளைக்கும் சண்டாளரைத் தர்மம் சும்மா விடாதெனச் சத்தியமூச்செடுத் தூதடா சங்கு
ஊதடா சங்கு ஊதடா சங்கு.
தர்ம அதர்மப் போர் வந்து மூள்கையில் தர்மமே வெல்லும் எனப்பறை சாற்றியே வலம்புரி தூக்கினன் குருக்ஷேத்திரத்திலே வந்தனன் மீண்டு மென் றுதடா சங்கு வந்ததே புதுயுகம் ஊதடா சங்கு.
ஊதடா சங்கு! ஊதடா சங்கு

Page 41
நிலவும் நெகிழ்வும்
நிலாக் காலத்து வழிப்பயணங்கள் எனக்கு மிகவும் இனிமையுடையன.
மணல் போர்த்த வீதிகள் தோறும் நிழல் வீழ்த்தும் நெடு மரங்களூடே வழியும் நிலவில் நனைந்தவாறு நண்பர்களுடன் நடத்தல் எனக்குப் பிடிக்கும்.
பஞ்சுபோல ஒற்றி ஒற்றித் துன்பம் துடைக்கும் நிலவின் தூய்மை நெஞ்சு கழுவ நெகிழ்ந்தே நடந்த தனிவழிப் பயணங்கள்
இன்-துயர் geogutti இன்னும் நெஞ்சில் எதையோ கிளர்த்தும்.

53
நிலவே
இன்பம் தருகிருய் துயரும் சொரிகிருய்
இதனல்தான் நீ இனிமையுடையாயோ?
என்றே ஒருநாள் சித்திக்கும் நீள்வழிப் பயணங்களில் நினது கூட்டு ஓ! எவ்வளவு இனிது.
பாலத்தினூடே பேருந்தில் செல்லுகையில் கடலில் இருமருங்கும் வழிந்தூரும் வெள்ளி வார்ப்பில்தான் மனசு என்னமாய் உருகிப் போகிறது.
நெகிழ்ந்து நெகிழ்ந்து நெக்கு நெக்குருக துயரில் மொக்கு விடுமே இன்பத் துளிர் நிலா.
2 அந்நாளில் கிராமியம் உயிர்த்துக் கிடந்த அந்நாளில் இந்த நிலவுக்கும் எமக்குள்ளும் தான் எவ்வளவு சொந்தம் கொண்டாடல்; நிலாவொழுகும் முன்றல்களில்தான் எத்தனை நிகழ்வுகள்.
நிலாச்சோறு உண்ணல் நிலா ஊஞ்சல் ஆடல் பாயிழைத்தல், கிடுகு பின்னல் தோட்டத்துக் கிணற்றில் துலாமிதித்து நிலா இறைப்பு எல்லாமே நிலவின் குடை விரிப்பின்கீழ் நிகழ்ந்தவை. உழைப்பிலும் என்னவோர் உல்லாசம் இருந்தது.

Page 42
54
அறுவடை முடிந்த நெல்வயல்களில் நெற்போரடித்தல்
நிலவொளியின் கீழ்த்தான் எவ்வளவு ரம்மியமானது, வைக்கோற் போரின் மேலேறி நின்று பார்த்தால் வயல்வெளி எங்கும் பால்வார்த்துக் கிடக்கும் நிலவு தாய்முலையின் நினைவு தரும்.
எல்லாம் முடிந்து நெற்பொதிகளுடன் வைக்கோற் போருஞ் சுமந்தபடி மெல்ல அசைநடை போடும் மாட்டு வண்டிகள்; வண்டிகளின் பின்னே நாங்கள். வயற்காற்று வந்து முதுகை வருடும் பிரிவாற்றக் காதலியின் தொடுமென் கரமாய். திரும்பிப் பார்த்தால் பின்னிலவில், வளமெல்லாம் அள்ளித் தந்துவிட்ட வயல்வெளி வறிதே கிடக்கின்ற சோகம் நெஞ்சைப் பிழியும் துயர்-இன் இசையாய் எதையோ கிளர்த்தும்.
3
நிலவுக்கும் இசைக்கும் ஏதும் அத்யந்த உறவு உண்டா என்ன? நிலவிலே பாடலாம்; நிலவும் பாடுமே! எம்முள்ளே அது எதனையோ மீட்ட அதன் வெளிப்பாடு இசையாய்க் கிளருமே; உள்ளார்ந்த கீதத்தின் உருவெளிப்பாடு.

55
நின்றநிலா ஒர் இசைப் பந்தாய்த் தெரிவதில்லையா? எனக்கு அப்படித்தான் தோற்றும் ஓர் இசைத்தேறல் நிலவொழுக்கும் இசையொழுக்கே. வேண்டுமென்ருல் கேட்டுப் பாருங்களேன் நிலவொழுக்குண்ணும் சாதகப் பறவையை, நிறையச் சொல்லும்,
நிலவொழுக்குண்டு
இசைபயின்ற கதையை நானும் சொல்கிறேன் கேளுங்கள். ஒருநாள் இரவு நண்பர் மு.பொ.வும் நானும் ஒன்ருக ரயிலில் பயணித்தோம். நதியோரமாக ரயில் சென்று கொண்டிருந்தது. நதியோரம் காய்ந்த மென்மணற் பரப்பென நெளிதரு மேகத் திரைநீக்கி நிலாக்கீற்று எட்டிப் பார்த்தது.
யன்னல் ஊடாக, துயர்தோய்ந்த ஒரு தோற்றம்.
மு.பொ.*வுக்கு இது
நீலாவணனின் கவிதைக்** கீற்ருென்றை நினைவு படுத்திற்று.
"பிணியில் தேயும் நிலவின் நிழல்நம்
பின்னல் தொடரும் முன்னே ஒஓ வண்டிக் காரா
ஒட்டு வண்டியை ஒட்டு. ’’

Page 43
56
நான்கேட்டேன் : *இதற்கு இசை உருக்கொடுத்துப் பாடினல்..?" ʻʻ t urrLGUrrub.ʼʼ
பாடினுேம்.
இசைபிறந்து எமைமறந்து பாடினுேம். நிலவும் இசையும் ரயிலின் கதியும் ஒன்றை யொன்று W துயரில் தாலாட்ட : ரயிலும் "கோட்டை? சேர்ந்தபின்னலும் இசையின் நிழல்எம் பின்னல் தொடர்ந்தது.
நிலவின் கீற்றுக் கிளர்த்திய அந்த இசை நிலாக் காலங்களில் எல்லாம் என்னுள் எழுவதும் நெகிழ்வதும் இயல்பாயிற்று.
4 இப்போ தெல்லாம் நிலவுக்கும் எமக்குள்ளும் இருந்த உறவில் விரிசல்; ஒர் நெகிழ்வு. இசைகுலைந்த வாழ்வு எமது.
நிலவு பொழிந்து கொண்டுதான் உள்ளது கூடவே துப்பாக்கி வேட்டுகளும் பீரங்கிக் குண்டுகளும் பொழிகின்றனவே. முன்றலில் நின்றபடி நாங்கள் நிலவில் குளித்தே பலநாட்கள்.
நிலாக் காலப் பயணங்களும் நின்று போயிற்று, வீதிகளில் எல்லாம்-ஒழுங்கைகளில் கூட இருளின் புலையர்கள்.
திடீரென்று குண்டுகள் துப்பாக்கி வேட்டுகள் கொட்டும் ஓசைகளில் இரவின் சுருதி கலைகிறது.

57
இருந்தாற் போலெழும் தீயின் சுவாலைகள் விண்ணெழுந்து
நிலவைச் சுடுகிறது. எங்கள் நெஞ்சையும்தான்.
ஒளிபோயிற்று இருள்சூழ்ந்து வாழ்வு குடிபோயிற்று. வீதிக்கு வரவும் விடுதலை கெட்டபின் நிலவெங்கே பொழிந்தென்ன?
விடுதலைப் பூமியில் நின்றவாே மீண்டும் ሎ நிலாவொழுக் குண்ணும் நாளே எங்கள் திருநாளாகும். அதுவரையில் போய்த் துயிலாமல் அந்தநாள் நோக்கி நாம் நகர்வோம்,
ஒளிநிறை பூமி ஒன்றே குறியாக.
* கவிஞர் மு. பொன்னம்பலம்,
霉掌 ஈழத்து முன்னணிக் கவிஞர்களுள் ஒருவர்.

Page 44
நிலவுக்கு எழுதல்
யாரிட்டார் சாபம் இந்த நிலவுக்கு?
கறையோடு உடல் பிறந்தும் கண்ணே உறுத்தாது காலமெலாம் பொழிந்த நிலவுக்கு நேர்ந்த தென்ன?
காவிய காலக் கனவே சிதைந்ததென
இன்று வெறுங் குறுமதியாய். urrflu · L - smuGuorr?
காலங் காலமாய் கன்னியர்க்கு உதாரணித்தும் * நிலவின் துகிலேக் கலே** யென்று உடுத்தியும் உரிந்தும் வேசையாடித் தீர்த்த கவிஞரின் வெறித்தனம் ஒய *காவிய நிலா"வின் காலம் தேய்ந்தது.
கால வளர்ச்சியில்
காத்திருந்து,
இதோ பாரென்று கற்றை விரித்தது விஞ்ஞான நிலா மனிதக் காலடிச் சுவடுகள் ஏந்தி.

59
"சுவடு பற்றி எழுக!" என்ருர்த்தார்; எழுந்தவர் என்ன கண்டோம்?
விண்ணிலும் வேலி போடத் தொடங்கினர் விஞ்ஞானத்தார்.
நிலவின் குண்டு குழிகள் எங்கள் நெஞ்சிலும் கொண்டேகி நிலவுலாவிய நிகழ்வு என் செயும்?
அன்று ஆதி சிவன் சூடினுன் இன்று நாம் சூடுவோம் என்று வல்லரசுகள் எழுந்து வல்லூருய்ப் பறக்க வாழுகின்ற பூமியிலே
விஞ்ஞான யுத்த காண்டம் விளைவித்த மனுச் சாம்பல் புழுதி கண் மறைக்க நிலவெங்கே தோற்றும்?
நிலவின் கிரகணமே நித்திய தரிசனமாச்சு.
நிலவுக்கு எழுதலே இவரின் நீசத்தனங்களை மறைக்க எழுப்பும் மாயையாச்சு.
மாயை முகில் திரைகிழித்து கறையிலா நிலவினிக் காரிக்குமோ? நாமெல்லாம் தூவெண் மதி சூடும் நாளென்ன வெகு தொலைவோ?

Page 45
பொழிவு
புலன்கள் அதிர மின்னி முழங்கிப் பொழிந்தாற்ருன் பொழிவா?
பொழிந்த பெருமழைக்குப் பின்னல் காத்திருந்து மெல்ல எழுமே ஓர் பேர் மெளனப் பெருக்கு.
அடை மழைக்குப் பின் முளைக்கும் கதிர் விரி காலையில்
வழியுமே ஓர் எல்லையற்ற பேரமைதி.
கழுவித் துடைத்த வானின் நகஷத்ர விழிகள் சொரியுமே ஓர் ஸ்ருதி சுத்தம்,
புலன்கள் உறைந்து போக
இவற்றின் பொழிவில் நனைந்திலையா?
இலையுதிர்த்த நெடுமரமாய் ஏகப் பெரு வெளியின் சங்கீதம் குளித்திலையா?

எதிர்ப்பு
எதையும் எதிர்கொள் முகந் திருப்பாதே; மணஞ் சலிக்காதே.
தடைகள் புறத் தடைகள் மடைத்தனம், வாமன ரூபம் மூவுலகளந்ததே!
ஆகாயம் மேவிய பாய்ச்சலில், தடைகள் வெறுந் தோற்றம்.
மெல்லெனப் பாயும் தண்ணீர் கல்லையும் உருவிப் பாயும்,'-வெறும் பாறைப் பழம் மொழி தாமதத் தத்துவம்.
ஓடிவரும் கிளை நதிகள் உட் தேக்கி வேகமாய்ப் பாய் வீச்சோடு.
மனஞ் சலிக்காதே, முகந் திருப் பாதே, எதிர் கொள் எதையும்; எதிர்ப்பில் முளைகொள்.

Page 46
இடிபாடுகளின்மேல் ஒரு படைவீடு
கோபுரங்கள் எழும்பிய கோயில்களை விடவும் இடிபாடுற்றவைகளில் எனக்கு அதிகம் ஈடுபாடு.
இடிபாடு களிடையேயும் *இதோ நான் எழுந்தருளி என்று சிதிலங்களின் மேலாய்க் கூவும்குரலை நான் கேட்பதிங்கேதான் ஆதலினல்,
இடிபாடுகளிடையேயும் இறை காணுர் எழுப்புவார் கோபுரம்.
எல்லாமே இடிந்த வெளியில் திரு நடம் காண வேண்டும். பரந்தில்லை வெளியில் அந்த நடம் காணுப் பேர்வழிகள் இடிபாடுகள் நீக்க எழுகிருர் தூண்களாக. தூக்கி நிறுத்தும் ஒவ்வொரு தூணிலும் நாமம் பொறிக்கும் காமிகள் எழுகிறர்.

63
இடிந்து விழப் போகும் இந்த நடமாடுந் தூண்கள் , எழுப்பிய தூண்கள் நிற்கவா போகுது? கோபுரத்தை பொம்மைகளா தாங்கி நிற்குது? இளிச்சவாய்ப் பொம்மைகள்,
எல்லாமே ஒருநாள் இடிவிழுந்த குண்டாகாதோ? எழும்பிய கோயில் வேறு இடிவிழுந்தகுண்டு வேரு? இடிவிழுந்த குண்டினுள்ளும்
நீரூற்று முகங்காட்டும்.
அழிவிலும் ஆக்கமுண்டு தன்னின் அழிவு தரிசனம் காட்டும்
தன்னை எழுப்பினுல் சூரனின் தலைமாற்றம்.
2 குரன் போர் நடந்தது கோயில் ஒன்றில். கோபுரம் எழும்பிய கோயில்.
சூரன் வந்தான் வீதியெல்லாம் சுற்றித்திரிந்து தலைகாட்டின்ை. தலைகழற்றி தலைமாற்றி "கலை"யாடித் திரிந்தான். *உருவேறிய சூரனின் உடல் அற சேவலும் மயிலும் வரும்’ என்ருர் ஒருவர்.
(சேவலுக்கும் மயிலுக்குமா சூரன் உடல் கிழித்தான் முருகன்?)
"சூரன் யார்? யார் சூரன்?
"சூரனைச் செய்தவன் சூரன?" ‘சூரனைக் காவியவன் சூரன?

Page 47
64
சூரவிமர்சனங்களில் சுற்றி நின்றேர் ஈடுபட சூரனைக் காவினேரும் முருகனைக் காவினேரும் சுறுசுறுப்பாய் முன்பின்னய்ச் சுழன்று வர திடீரென்று
மோதுண்டு வீழ்ந்தார் கோயில் முதலாளி, குருக்கள், நாரத வேடர் பலரும் வீசுண்டு வீழ்ந்து முழங்காலில் நோவுண்டு எழுந்து மெல்ல நொண்டிநடக்க.
வானிலே என்ன அது? சூறைக் காற்றுச் சுழன்றடிக்க சூரணுய்ப் பருத்த மேகங்கள் கர்ஜிக்க பீறிவரும் வேலாயுதங்களென மின்னல் பெருக்குதிர பொழியும் மழைக்குருதி.
சூரன் போர் இப்போது வானில் இடமாற்றம் சுற்றிநின்றேர் அஞ்சி கோயிலின் உட்பதுங்க கோபுரமே தகர்ந்து கொட்டுவதாய் இடிமுழக்கம்.
கோபுரத்தில் இடிவிழக் கூடுமோ? என்று அஞ்சுந் தொனிகள்: ஏக்கம் கெளவிய முகங்கள் கற்சிலைகளாய் விறைத்துநிற்க
இடிவிழுந்தால் தான் என்ன? இடியும் இடி விழுந்த பள்ளமும். கடலும் கரைகடந்த வெள்ளமும். . தீயும் தீக்கடைந்த ஊழியும். ஊழிக்காற்றின் "ஹோ"வென்ற இரைச்சலும்.?
*உலகழிந்து போகுமே!’
உலகழிந்து போனல் தான் என்ன? சூரணுய்ப் பருத்துக் கிடக்கும் உலகு. சூரனின் அழிவில் சுகம் இல்லையா?

65
சூரனின் கோட்டை சுக்கு நூருய்ச் சிதற இடிபாடுகளையே படைவீடாக்கி இறை கொலுவிருக்காதா?
முப்புரங்கள் எரிந்த சாம்பரிடை மூன்ருவது கண் ஜுவாலித்ததே.
சருகுகள் “குபீரென்று பற்றி எரிகையிலும் ஓர் இசை எழல் உண்டன்றே.
எல்லாமே இடிந்த வெளியில் திருநடம் இந்த இசையின் பின்னணி லயத்திலே அன்ருே
இதனுல்தான் கோபுரங்கள் எழும்பிய கோயில்களைவிடவும் இடிபாடுகளில் எனக்குப் பிரியம் அதிகம்.
இடிபாடுகளிடையே எழும் புழுதியிடைத் தோயாச் சுவடுகளின் தூரத்துச் சிலம்பொலி காதில் விழுவது இங்கேதான்.
காது கொடுங்கள் அக்கழலொலிக்கு. எல்லாமே இடிந்த பரவெளியில் திருநடம் காண வாரும்.

Page 48
தூரக் கடல் தாண்டி . .
ஒடத்தில் ஏறிச் செல்வோமே தொடுவானம் குறியாக நீல நெடுங் கனவாய் விரிகடலில் ஒலமிடும் அலைகள் நடுவே.
பிரிந்து செல்லும் துறைமுகத்தில்-துயர் சொரிந்தெரியும் விளக்குகளில் எங்கள் நெஞ்சங்கள் ஏங்குவதோ? எங்குமே துன்பங்கள்தான் சொந்தமோ?
விடிவை நோக்கிய பயணமிது விடிவதெப்போ? பயணம் முடிவதெப்போ? ஒளியின் கீற்றுகள் வெளிப்படுமோ? இருளின் பாறைதான் தொடர் இருப்போ?
விடியும் விடியும் என்றெவரோ சொன்னர் இருளின் பாழில் எழுந்த குரல்களோ? மயங்கும் மனங்களின் மாயங்கள் தாண்டி துயிலும் நம்பிக்கைச் சுடர் தூண்டிப் போவோம்.
ஒளியும் இருளும் உலகின் விதி என்ற இருளின் வலையில் விழுந்து படாமல் துயிலும் நம்பிக்கைச் சுடர் தூண்டிப் போவோம் தோணி எடுத்தோம் துடுப்பை வலிப்போம்.
ஒளிக்கும் ஒளியாக உற்ற துயருக்கு விடிவாக வெளிக்கும் வெளியாக வெளிச்சமே வாழ்வாக உன்னதம் ஒன்றின் இருப்புளது துன்பக் கடல் தாண்டிப் போவோமே துன்பக் கடல் தாண்டிப் போவோமே.

சுழலின் மையம் தேடி.
அம்மா ஒவ்வொரு நாளும் முற்றம் பெருக்குவாள் குப்பைகள் சேரும் கொளுத்தி எரிப்பாள்.
கொளுத்தக் கொளுத்தக் குப்பைகள் சேரும் குப்பைகள் சேரச்சேர கொளுத்தலும் தொடரும் கொளுத்திய பின் எஞ்சிய சாம்பலை காற்றெடுத்துத் தூவ விழுந்த தூசிகள் விழிகளை உறுத்தும்.
பக்கத்து வீட்டில் குப்பைகள் சேர்ந்தால் வெட்டித் தாழ்ப்பார் பசளையாய் மாறும் பசளையின் மேலே பச்சை கொடி விடும் கொடிவிட்டுத் தளிர்த்தவை நாட்செல நாட்செல சருகுகள் உதிர்க்கும். தளிர்ப்பதும் உதிர்ப்பதும் உதிர்ப்பதும் தளிர்ப்பதும் ஒரே சுழல் வட்டம்.

Page 49
68
2
எப்போதிருந்து இவ்வுலகம் குப்பை கொட்ட ஆரம்பித்திருக்கும்? உலகங்கள் தானென்ன ஒன்ரு இரண்டா? அவையும் கொட்டிக் கிடக்குதே குப்பைக் கணக்கில்
வான மண்டலத்தில் தூசிகள் திரண்டு திணிந்து பெருத்து ஊதி வெடித்த ஒரு கணந் தொட்டு பருத்திக் கொட்டைப் பஞ்சுகளாய் இருட்டில் விழிக்கும் உலகங்கள்தான் எத்தனை எத்தனே!
பால் வழிப் பயணிகள், உடுக் கொத்து :ஊர்வல மத்தாப்பூச் சிதறல்கள், எண்ணுதற்கு எட்டாப் பெருவெளியில் பின்னிப் பின்னிக் கண்ணைச் சிமிட்டும் அரைவிழிப்பு, கால்விழிப்பு தூக்கக் கலக்கங்கள், ஒளிவருடத் திரைமறைப்புள் குருவிக் கிடக்கும் ரஹஸ்யங்கள் இன்னும் எம்மையே ஆளும் இயல்பினராய உன்னத நாகரீகத்து ஒளி விளக்குகள்.
இப்படி இப்படி எத்தனை உலகம் சித்துகள் போல.
எல்லையறு விண்வெளியின் ஏகாந்தத் தாலாட்டில் கண்ணயர்வன போல் காணும் அண்டமெலாம் அள்ளுண்ட வானப் பேராருய் எங்கோ எங்கோ எங்கோவாய் முடிவிலி என்னும் பரவையுட் பாய்ந்தபடி. ஒரே பிரபஞ்ச ஒட்டம்.

69
3 இங்கேயும் எமதகத்துள் எத்தனை நகர்வுகள்.
மனவெளியில் குரவையிடும் எண்ணத் துணுக்குகள் சிறுச் சிறு கணங்களின் சேர்க்கை வலங்கள்லய மெல்லொழுக்குகளாய் உடைப் பெடுத் தோடல்களாய்.
மனதின் ஒரவிழி நோக்கில் ஆழப் புதைகுழி நீத்துக் கிளர்வுறும் உணர்வுகளின் முளை மீறல்கள், கிளைத்துப் படர்ந்து பூச்சொரியும் இன் கனவுகள், துயர் சுமந்து கசியும் மென்பணித் தூறல்கள், சடைத்த இருட் தோப்புள் ஆழ்துயிலும் மர்மங்கள், இருட்தோப்பை ஊடுருவி நின்ற நிசப்தத்தின்
பேரிரைச்சல் மூச்சின் நரம்பதிரும் மின்வெட்டுகள்.
இருளிடை மின்மினி வலங்களாய், இப்படி ஒன்றையொன்று விழுங்கியும் உமிழ்ந்தும் துரத்திக் கொண்டோடும் எண்ணத் துணுக்குகளின் ஒட்டம் இடையரு ஓட்டம்.
ஜீவன் அறுந்தபின்னும் காற்று வெளியில் தூவிய கருத்தின் துகள்களாய் மனேகுக்குமத்தின் மாயப் பந்தயம்.
له அகவெளி முற்றந் தொட்டு அண்டவெளி முற்றம் வரையும் எத்தனை நிகழ்வுகள் எத்தனை நகர்வுகள்!

Page 50
70
அத்தனை நிகழ்வுப் புயல்களும் வாரிக் குப்பை கொட்ட தொங்கும் தொட்டிகளா இவ்வுலகங்கள்? பிரபஞ்சமே குப்பைமயம் தூசிமயமா? எனின் இந்தத் தூசிகள் அகல்வதெப்போ? குப்பைகள் ஒழிவதெப்போ?
அத்தனை உலகும் தீப்பட்டழிந்த ஊழியின் முடிவில் ஒழியுமா
நெஞ்சின் விழியுறு தூசி? பிரச்சனையின் முடிவு பிரபஞ்சத்தின் பிடிசாம்பரில் கிடைக்குமா?
பிடிசாம்பரிடையும் பிரபஞ்ச அணுவிலிருந்து அடைகாத்து முடுகி முறுகி பெருத்துரதி மீண்டும் கோளங்கள் பொரித்தால். P குப்பைகள் மீண்டும் சேர்ந்தால்..?
உதிர்தலும் தளிர்தலும் உள்ளிழுத்தலும் உமிழ்தலும் ஒரே சுழல் வட்டத் தொடர் நிகழ்விலையாம். தொடர்நிகழ் லீலையில் எனது இருப்பு எங்கே?
சுழல்வட்ட நகர்வில் எனதும். ஓர் சிறுத்துளி நகர்வே.
எனின்
நகர்விலா எனது இருப்பு?
அன்றி துளி நகர்வெனும் துண் அணுப்புரைய விரியும் பேர் வெளியிலா? ஓயாது உழலும் பிரபஞ்சத்தின் உள் மெளனத் தொனியிலா?

ஸ்தல புராணம்
1. ஸ்தல வரலாறும் மகிமையும்
கோயில் கும்பிடுவதில் எங்கள் சைவத் தமிழரை குறை சொல்ல ஏலாது நீறிட்ட நெற்றியில் சந்தனப் பொட்டும், மிஞ்சின சந்தனம் மேனிமுழுவதும் பூசின கோலமும் சரிகைச் சால்வை யொடு நீளவே தொங்கும் தங்கச் சங்கிலியும் ஆடவரும் அழகோ அப்பப்பா இப்புவியில் தேவரும் கால் பதியார் திகைத்து. காசி கதிர்காமம் சேதிசிதம்பரமும் திருப்பதியும் சென்று திருப்பாற் கடல் கடைந்து வரு வரன்றே.
கோயில் கட்டுவதிலும் என்ன குறைவோ? ஆதித் தமிழ் மன்னர் மூட்டுதிருப் பணியின் மீதியை எம்முதலாளி மார்தான் தொடருகிருர் ஆளுக்கொரு கோயில் அரசின் கீழும் ஆலின் கீழும் இருந்த வயிரவர் சூலங்கள் கோயில் கொண்டது இவர் கொள்கையால் அன்ருே. அய்யனர் கோயில் வயிரவர் கோயில் அம்மன் கோயில் பிள்ளையார் கோயில் எத்தனை எத்தனை எண்ணில் அடங்கா கறையான் புற்றுகள் கட்டினுற்போல முழத்துக் கொருகோயில் முன்னின்று கட்டினர்.

Page 51
72
சுரண்டிய பணத்தில் பொதுப் பணிக்கென்று செப்புச் சல்லியும் செலவிட்டறியார் நானெரு கோயில் முதலாளி என்று நாலு பேர் மத்தியில் "நான" எழுப்பவும் பிஸினெஸில் விழுந்த கறுப்பை மறைக்கவும் பிராயச் சித்தம் தேடும் வகையிலும்
கோயில் கட்டினர் கோயில் கட்டினர் கட்டிய கோயிலில் என்னதான் கண்டார்? எண் சாண் உடம்பிற்கு ஓர் இருப்பிடம் தேடி பஞ்சாயத்தில் பதவி கொண்டமர்ந்ததும்,
கோயில் காசை ருேளில் விட்டதும் குருக்கள் மாரை பெருச்சாளியாக்கியதும் குறைகளை மறைக்கக் கோபுரம் எழுப்பி கோபுரத்திலே பாதியை விழுங்கும் கும்பிடுகள்ளரைக் கொண்டு திரிந்ததும் கூஜா காவிகளுக்குத் 'தம்பிடி" ஈந்ததும்இப்படியான சரியை கிரியைகள் சகலதும் கண்டார்.
திருவிழாக்களுக்கும் ஏதும் பஞ்சமா என்ன? முதலாளிமார் தம் சொந்தப் பெருமைத் தொந்திகள் நிமிர்த்த வந்து போகும் வருஷங்கள் தோறும்.
முதலாந் திருவிழா உபயகாரரோ மல்லாகத்துச் சிகரம் அமைத்தால் இரண்டாந் திருவிழா உபயகாரரோ அளவெட்டிச் சிகரம் அமையாது உறங்கார்.
சின்னமேள, நாட்டியக் கச்சேரி என்ன குறைவோ? ஒருநாள்
*கன்னிகா குழு வந்து கலக்கியெறிய
மறுநாள்
மல்லிகா குழுவோ புழுதி கிளப்பும்.

காவடி, கரகம், ஏறுபடி யோடு சீனடி சிலம்படி மோசடி எல்லாம் ஆலய முன்றலின் அரங்கெழுந்து ஆடும்.
கண்கொள்ளா இக் காட்சிகள் கண்டு இறைவனின் இஷ்ட சித்தி பெற்றுய்ய சாரிசாரியாய் சனம்வந்து கூடும்.
கூத்தாட்டு அவைக் குழாம் கலைந்தேகி தாமஸ குணத்தில் அழுந்திக் குறட்டை இழுக்கும்.
2. ஸ்தலக் குழப்பமும்
சத்தியாக்கிரகமும்
இப்படியாக நம் வேளாண் மரபுச் சைவத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் ஆலய வழிபாடு செய்து வருகையில் ஆலயச் சுவர்களின் அடைப்புக்கு வெளியில் ஊர்மனையெங்கும் ஒலித்தன குரல்கள் உரிமை கோரும் விழித்தோர் குரல்கள்!
"உள்ளே விடுங்கள் உரிமை கொடுங்கள்" உரிமை இழந்தோர் உரத்துக் கேட்டார் எழுந்த குரல்களில் ஏறிய ஞானம் ஆணவச் சுவர்களில் அறைந்து ஒலித்தன.
மாவிட்டபுரத்துக் கந்தன் கோயில் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் வல்லிபுரத்து ஆழ்வார் கோயில் எங்கும் உரிமைக் குரல்கள் கேட்டன 'உள்ளே விடுங்கள் உரிமை கொடுங்கள்' இழிசனர் என்று இவரால் நசுக்கப்பட்டோர் வழிபாட்டுரிமை கோரி எழுந்தார்.

Page 52
74
"எங்களையுந் தண்ணிர் அள்ளவிடுங்கள்" **பொதுக் கிணறுகளில் சமத்துவம் வேண்டும்?? சின்னஞ் சிறிய தீவுகளில் கூட உரிமைக் குரல்கள் உரத்தே கேட்டன.
உரிமைக்குரல்கள் கேட்கக் கேட்க உறங்கிக் கிடந்த சைவ மரபு சடுதியாய் விழித்தது சன்னதம் கொண்டது சன்னதம் கொண்டதும் "சைவாசாரம்" தன்னிலை மறந்து ஆடத் தொடங்கிற்று.
சின்னமேளக் 'கூத்தை மறந்தது உண்டியல் காசில் பிழைத்ததை மறந்தது வேஷம் விளம்பரம் யாவும் மறந்தது வேதாகமங்களைச் சான்றுக் கிழுத்து ஆசார விதிகளை அலசிக் காட்டிற்று.
பேசாமல் போனுல் சாமியும் பொறுக்கும் நாமும் பொறுப்போம் பிறகு மெல்ல காலம் செல்லப் பார்க்கலாம்'என்று பூசி மெழுகியும் பார்த்தது
ஆயினும் போராட்டமோ மேலும் தொடர்ந்தது.
ஒடுக்கப் பட்டோர், முற்போக் காளர் ஒன்று திரண்டார் கோயில்கள் முன்பும் கிணறுகள் முன்பும் உரிமை கோரி உட்கார்ந்தார்கள்
த்யாக்கிரகம்.
சத்யாக் கிரகம் என்றதும் உடனே சைவாசாரம் கொண்டதே கோபம் பஞ்சாயத்தும் பரிபாலன சபையும் ஒன்ருய்க்கூடி சமிக்ஞைகள் செய்தன.

75
முதலாளிமார்கள், முழுசாய் விழுங்கும் குருக்கள் மார்கள், கொண்டைக்காரர்
குறுகல் புத்தி ஆசார சீலர்கள் கொடுக்கை வரிந்து பணியில் இறங்கினர்
சன்னதம் கொண்ட அன்புச் சைவம் சண்டித் தனங்கள் செய்ய எழுந்தது.
கோயிற் செலவிலே "தீர்த்தம் வார்க்கவும் குடித்த வெறியரோ துள்ளி எழும்பினர் கொண்டைக்காரர் தடி கொண்டு ஆடினர் குருக்கள்மார் யாக அடுப்பை ஊதினர்.
விரதகாரப் பெண்டுகள் எல்லாம் சிரசுகள் ஆட்டிச் சிலுப்பத் தொடங்கினர்
ஆசார சீலரோ இவற்றுக் கெல்லாம் ஆதாரமாய் நின்று தேவாரம் பாடினர்
கோயிலை அடைத்தும் கிணறுகள் சுற்றி வேலிகள் போட்டும் காத்தனர் சிலபேர்
முதலாளிமாரோ மேலிடம் வரையும் முழுமூச்சோடு "காரியம்” பார்த்தனர் காக்கிச் சட்டைக்காரர் வந்தார் தாழ்த்தப்பட்டோர், முற்போக்காளர் தாக்கப்பட்டார் அமைதியோடிருந்து உரிமை கேட்டோர் உதைக்கப்பட்டார் சிறையினுள்ளும் தள்ளப் பட்டார்.
இறைவனின் பேரால் இத்தனை நடந்தும் சைவத்தின் பேரால் சண்டித்தனங்கள், சதிகள் நடந்தும் எங்கள் சித்தாந்தச் செம்மல்கள், மணிகள் எல்லாம்
அன்பே சிவம் என்று அமர்ந்தே இருந்தார்; நந்திகளாகவே குந்தியிருந்தார்.

Page 53
76
விழாக்களில் பேசிய களைப்பு மேலீட்டால் விழுந்து படுத்த நம் தமிழ்த் தலைவர்களோ வீட்டை இறுக்கிப் பூட்டியே படுத்தார் சத்தியம் கதவிலே தட்டிக் கேட்கவும் புரண்டும் படுத்திலார்! பிரச்சினையிலிருந்து தப்புதற்காகவோ "தமிழ் தமிழ்" என்று இவர் பிதற்றுவார் ஏதோ கனவிலுந் தமிழைக் காப்பவர் போல.
கனவுலகத்தில் எவர்தான் உறங்கினும் சத்தியம் மட்டும் உறங்குவதில்லை. விழித்தபடியே சலியாதியங்கும் விழிப்பு சத்தியம் இயக்கம் சத்தியம். சத்திய இயக்கச் சுழற்சியின் போக்கே சமூக வரலாறு. வரலாற்று வளர்ச்சியில் வந்ததோர் சட்டம் சட்டத்துக்கான திருத்தங்களும் வந்தன.
சட்டத்தையும் ஒருகை பார்க்கிறேன் என்று சைவாசாரத்தை கிறீஸ்தவர் முன்னே பிறிவிக் கவுன்சிலில் நிரூபிக்கப் போனவரின் *கயிறின் புரிகளும் அறுபடலானது. சாமியைத் தூக்கி உள்ளே அடைத்தும் சாதியைத் தூக்கித் தலையிலே வைத்தும் சன்னதம் ஆடியவர் விறைத்துப் போக சத்தியம் கதவை அடித்துத் திறந்தது. தேனீர்க் கடைகளும் சில திறந்து கொண்டன. சிற்றுார் ஒன்றில் தண்ணிர்க் கிணறும் சகலர்க்கும் திறந்தது. இவ்வாருக ஊருக்கொவ்வொரு உதாரணம் விளைந்தது.
ஆயினும் சாதி இன்னும் ஒழிந்த பாடில்லை நீதி முற்றப் நிமிரவே இல்லை.

77
சட்டத்தையும் மீறிச் சுழித்து சாதித் தடிப்பு வாழவே செய்யுது
சட்டத்தைக் காக்கும் அமைப்புக்களே முட்டுக்கட்டைப் பிற்போக்காயின. அமைப்பின் கட்டுகள் அறுபடாதவரை சட்டம் வெறும் சடலமே
அதனல்
அமைப்பை மாற்றி அமைத்தல் அவசியம்.
3. ஸ்தல மாற்றம்
அமைப்பில் மாற்றம் என்பது புறத்தை மட்டும் கருதுவதன்று சத்தியவிரோதமாய் சாதிகள் ஆயிரம் அகத்திலே உள்ளன.
அகத்தை ஆளும் அறியாமை அமைப்பு அமைப்பைக் காக்கும் முக்குணக் கூட்டு
கூட்டில் விளைந்த சாதிகள்.
அவற்றையும் தகர்த்தல் வேண்டும் அகத்தை நீக்கிய புறம் புறத்தை நீக்கிய அகம் இரண்டும் அறியாமையின் அடுத்தபக்கம்
அகமும் புறமும் ஒருங்கே மாற்றம் அதுவே ஞானம்.
அகத்தில் சாதி மனுேபாவம் வீங்கியவன் புறத்தில் மாற்றம் விளைப்பன் என்பது பொய்.
அதனல் இன்று அகப்பிரவேசம் அவசியமாகும்.

Page 54
78
சாதிகள் தேங்கிய காயங்களாக கோயில்கள் இருக்கையில் ஆலயங்களோடு ஆலயப் பிரவேசமும் அவசியமற்றே போவதுண்மையே.
காயங்கள் இனிமேல் காய்ந்து உதிரும் அகமும் உடலும் ஆலயம் ஆகும் வாழும் மனிதர் தெய்வங்கள் ஆவர் வாழ்க்கையே கலையும் வழிபாடுமாகும்.
வாழ்க்கையே கலையும் வழிபாடுமாகி வாழும் மனிதர் தெய்வங்களாக சாதி வர்க்கங்கள் இவை தாண்டப்படுமே சாதி வர்க்கங்கள் தாண்டுத லென்பது சத்தியத்தோடு ஒன்றுதல்தானே.
சமூகம் முழுமையும் சத்தியத்தோடு ஒன்றுதல் நிகழ சத்திய ஞானம் பொது உடைமை ஆகும்; பொருளாதாரப் பொதுவுடைமைப் போக்கின் பூரணத் தோற்றமும் அங்கே பிறக்கும்.

மீண்டும் உயிர்த்தல்
கல்லறைகள் ஒரு நீாட் பெயரும் அன்று புதைகுழி நீத்து எம் உணர்வுகள் உயிர்பெறும்.
சமாதி கட்டியாயிற்று என ஒருகணம் சந்தோஷத்தோடு சுகபானம் அருந்திக் களித்திருப்பீர் சிறு பொழுதே. அதற்குள் மீண்டும் உயிர் பெற்றெழுவோம்.
எதிர் பார்த்திருக்க மாட்டீர் எம் உயிர்த்தெழலை உம் திகைப்புகள் கல்லறையாய் மாற.

Page 55
80
முன்னுெருகால் சிலுவை தாங்கிய நாயகனின் சுவடுகள் இன்னும் அழிந்து படவில்லை இதோ மீண்டும் அவன் உயிர்ச் கவடுகளின் அரவம் காற்றில் உயிர்க்கும்
ஆடை அசைவின் தொனி.
சிலுவையின் கீழ் அவன் சிந்திய குருதித் துளிகள் என்றுமே காய்ந்திலது இதோ இன்னும் பச்சையாக இன்றைக்கும் சத்தியமாய்.
சிலுவையில் அறைந்தவர்களும்
எங்கேயுமல்ல
இங்கேதான் இன்னும் உயர் பீடங்களில் இருக்கை போட்டுள்ளார்.
முள் முடி சூட்டியவர் சவுக்கால் அடித்தவர்கள் ஆணி அறைந்தவர்கள் இன்னும் உள்ளார்: இன்னும் உள்ளார். ஆட்சி பீடங்களில் அதிகாரத்தோடு உள்ளார்.
அவர்களின் கொடுமையில் சிலுவை தாங்குவோர் சிந்தும் குருதித் துளிகள் இன்னும் இந்தப் பூமியை நனைக்கிறது.

8.
ஒடுக்கு முறைக்குள்ளானேரின் ஒவ்வொரு கல்லறையிலும் அவர்கள் நினைப்பது போல் உதிரம் உறைந்து விடுவதில்லை,
உட்கனன்று கொதிக்கும் அது புதிய உருவெடுக்கும்.
2 சிலுவை ஏற்றுவோர்க்கும் சிலுவை சுமப்பவர்க்கும் இடையிலுள்ள முரண்பாடு இன்று நேற்று எழுந்ததன்று.
மோதி மோதி முரண்பட்டுப் புதிது குதிர்வது உண்மையே. ஞானம் - அஞ்ஞானம் தர்மம் - அதர்மம் என ஒதிற்றே வேதம் அன்று, அதுவேதான்.
அந்த வரலாற்றின் ஒட்டம் ஓர்ன்றும் உறைந்து போவதில்லை சிந்தும் ஒவ்வொரு வியர்வைத் துளியிலும் குருதித் துளியிலும் உறைந்து படாமல் உந்தி எழும் உயிரோட்டம் அதன் இயல்பு. ஒவ்வொரு புதுத்தளமாய் அது களம் விரிக்கும்.
தளம் உயர்த்தும்.
இன்றைக்கும் அதன் இயல்பு உந்தல் நிகழ்வேதான் உண்மையைப் புதைகுழிக் குட்படுத்திப் புறம் வீற்றிருக்கும் பொய்மையின் பூச்சுகள் பொடி உதிர "இதோ உண்மை உயிர்த் தெழுகிறது.

Page 56
82
அஞ்ஞான இருட் பாறை அடைப்புக்குள் அதிர்வுறவரும் உண்மையின் வெளிப்பாடு சிலவேஃா அசிங்கமாய்ப் படலாம், அருவருப்பாய்த் தெரியலாம். அவையெலாம் பொய்மை சார்ந்த பூச்சுகள் போலி மதிப்பீடுகள்.
தூண் பிளந் தெழுந்த தரசிங்க அவதாரத்தின் பிருண்டல்களால் பிளவுற்று உதிரம் வழியும் அசுரனின் வீழ்ச்சி எழுதப்படுகிறது. அதன் இன்றைய சாட்சியாய் இங்கும் நிகழ்வன புத்தெழுச்சியின் கோலமே!

விடுதலை ஒன்றே உடைமையாய்.
விடுதலை ஆத்மார்த்தமானது.
என்னிடமிருந்து யாரும் அதைப் பறித்துவிட முடியாது, எனக்குள்ள ஒரே ஒரு உடைமை விடுதலையுடைமையே.
கைவிலங்கு, சிறைக்காவல், முள்வேலி சித்திரவதைகள், தூக்குக்கயிறு இவையெல்லாம் விடுதலயைச் சிறையில்டா, மாடுக சிறையுண்டிருந்த என் குறுகிய உணர்வு வட்டத்தி
னின்றும் என்னை விடுவித்து விடுதலையின் ஸ்பரிசித்தலை நோக்கி விரைவுபடுத்தும்; விடுதலை நாட்டத்தை வேகப்படுத்தும்.
என்னகவிடுதலையை விபரிக்க இயலாது இதுகாறும் தூங்கிக் கிடந்த மாயைத் தளங்கள்
தூங்கும் அப்பிரதேசங்களில்
அடக்குமுறை ஆணவக்காரரின் படைகளின் ஊடுருவலால் விடுதலை உணர்வுகள் விழிப்பெய்துகின்றன.
ஒடுக்குமுறையின் உக்கிரகத்தால் விழிப்பெய்தல் நிகழ விடுதலை வீர்யம் விகCத்து எழுகிறது ஆன்ம வீர்யம்,
அதன் எழுச்சியில்,
வேலி கட்டி நின்ற
சிறுவட்டம் தகர்வுற விடுதலை உணர்வுப் பெருந்தளம் விரிகிறது.

Page 57
84
இப்போது
நான் போருக்கு எழுகிறேன்; என் விடுதலைப் பிரதேசங்களின் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக,
ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் ஆணவத்திற்கு எதிரான போராட்டம் அதர்மத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பமாகி வளர வளர விடுதலையின் ஸ்பரிசம் சித்திக்கிறது.
விடுதலை ஒன்றே இலக்காயிருக்க சதா அகமும் புறமும் போராடுதல் ஒன்றே என் தொழில். ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் அதேதருணம் ஒருங்கே நிகழும் தியாகம், சுயநலமறுப்பு" என்பவற்றின் விளைவான அக்ச் சுத்திகரிப்பு.
சுத்திகரிக்கப்பட்ட இப் பெருந்தள உணர்வுநிலையில் பொருளார்ந்த சுமை இல்லை போலி மதிப்பீடுகள் இல்லை. சிறுவட்டச் சேமிப்புகள் இல்லை.
சாதி, சமயப் பேத வீக்கங்கள் இல்லை. எனக்கு நானே பூட்டிக் கொண்ட இவ்விலங்குகளை உதறி எழுந்து விடுதலைப் பிராந்தியத்துள் இதோ நான் காலடி வைக்கிறேன்.
சுமைகளில்லாதவன் வழிப்பயணம் மிக இலகுவானது. இனிமை நிறைந்தது. மன வீக்கங்கள் கழன்று போக விடுதலைத் தென்றலை நுகர்ந்து மனசு நிரம்பி வழிய விடுதலை ஒன்றே உடைமையாய்.


Page 58


Page 59


Page 60
116 மு. தளையசிங்கம்
வதற்கு அவர் கொடுக்கும் லஞ்சம்தான் அது. பின்பு அதுவே blackmail ஆகிவிடுகிறது. தன்னைச் சுற்றி, தனக்குக் கடமைப்பட்ட, தன்னை வழிபடக்கூடிய ஒரு பரிவாரத்தை வைத்திருக்க, பொன்னுத்துரை கொடுக்கும் ஒரு இலக் கிய லஞ்சம் அது. புதிய பரம்பரையைப் பழுதாக்கக் கூடிய வித்தின் பல வேர்களில் அதுவும் ஒன்று. ஆனல் புதியவர் களாக வரக்கூடியவர்கள் மட்டுமல்ல பழைய பேர்வழி களுங்கூட அதனல் பழுதாக்கப்பட்டுவிடுகிருர்களே!
அடுத்த கட்டம் கிழக்கிலங்கை எழுத்தாளர் சங்கப் படலம். இதன் விவகாரங்களின் மூலமும் பொன்னுத் துரை அதே அதிகார ஆசைக்குத்தான் வழிதேடினர். கிழக்கிலங்கை மட்டுமல்ல, வேறு எந்தப் பகுதியாகத் தான் இருப்பினும் அங்கே பொன்னுத்துரை இருந்தால் அந்தப் பகுதியின் எழுத்தாளர் சங்கத்தில் அவர் முக்கிய பங்கெடுப்பது நியாயமானதே. அதற்கேற்ற இலக்கியத் திறமையும் நிர்வாக சாதனையும் அவரிடம் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனல் இலக்கிய விவ காரங்கள் அவரால் திருகப்படுகின்றபோதுதான் அவரின் அதிகார பிரபல்ய ஆசை பிழையாக வெளிக்காட்டப் படுவதாக மாறிவிடுகிறது. கிழக்கிலங்கை எழுத்தாளர் சங்கத்தைப் பொருத்தவரையில் பொன்னுத்துரை நம் இலக்கிய வளர்ச்சிக்கு உதவத்தான் செய்திருக்கிருர். அந்த வகையில் பார்க்கும்போது "முற்போக்கு’க்குப் போட்டியாக ஒரு சங்கத்தை அவர் நிர்வகிக்கத் தொடங் கியது, அவருடைய தனிமையையும் 'பிரச்சினைக்குரிய நிலை"யையும் போக்கின என்பவை இரண்டாந்தர விசயங் களே. இங்கு அவை தேவையற்றவையுங்கூட. என்ரு லும், வேறு ஒரு காரணத்தால் அவற்றையும் சேர்க்க வேண்டி இருக்கிறது. இந்தக் கட்டத்தில்தான் பொன் னுத்துரை தன் எழுத்துத் திறமையின் பூரண வலுவை உணரத் தொடங்கினர் என்பதுதான் அந்தக் காரணம். இலக்கிய ரீதியில் தான் ஓர் aristocrat என்ற எண்ணம்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 17
ஏற்கனவே அவரிடம் இருந்தாலும், அது, சமூக நிலையின் காரணமாய் இருந்துவ்ந்த தாழ்வுணர்வுக்குப் பதிலாக இந்தக் கட்டத்தில் வைத்துத்தான் அவரிடம் முற்ருக இடம் மாறிக்கொண்டது. மற்ற "முற்போக்கு' எழுத் தாளர்களுக்கு இருப்பதுபோல் அரசியல் கட்சி முதலா வது, இலக்கியம் இரண்டாவது என்ற நிலை அவருக்கு அதற்குப் பின் இருக்கவில்லை. அரசியல் சார்பற்ற ஒரு எழுத்தாளர் சங்கத்தின் மூலமே தன்னை உணரக்கூடிய வலுவை அதற்குப் பின் அவர் பூரணமாக உணர்ந்து கொண்டார் என்பதுதான் என் அபிப்பிராயம். கிழக் கிலங்கையில் அதுவரை அவருக்கிருந்த கட்சி அக்கறை யும் அதற்குப் பின் தேவையற்று மறையத் தொடங்கி விட்டது என்பதையும் இங்கு கவனிப்பது நல்லது. இந்தக் கட்டத்தில் பொன்னுத்துரை வெறும் நினைவில் மட்டும் அல்ல செயலிலுங்கூட ஒரு ஒரு aristocrat ஆக மாறிக் காட்சி தருகிறர். பண்டிதங்களுக்கும் ஒரு பண்டி தர். ஆனல் பண்டிதம் என்பது அதிகாரத்தை விட்டுக் கொடுக்காத dogmatic பார்வை கலந்த ஒரு போக்கையும் குறிக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். அந்த நிலையில் புதிய மாற்றம் பழைய அதிகார ஆசையோடு ஒத்துப்போவதாகவே இருந்தது. தாழ்த்தப்பட்ட நிலை யில் உள்ளவர்களும் அதிகாரத்தைத் தாங்கள் பெற்றுக் கொண்ட பின் அப்படி ஒரு விட்டுக்கொடுக்காத பண் டிதப் போக்கைத்தான் கடைப்பிடிக்க விரும்புகின்றனர். இங்கே பண்டிதம் என்பதன்மூலம் dogmatism என் பதைக் கருதுகிறேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனல் அரசியல் கட்சியை முதலில் நம்பும் "முற்போக்கு'வாதிகள் அரசியல் கொள்கைகளில் அந்தப் பண்டிதத்தைக் கடைப்பிடிக்க, இலக்கியத்தை முதலில் நம்பத் தொடங்கிவிட்ட பொன்னுத்துரை இந்தக் கட்டத்துக்குப் பின் இலக்கியத்தில் அதே வகைப் பண் டிதத்தை விரும்பத் தொடங்கியதில் ஆச்சரியப்பட ஒன்று மில்லை. எனவே, அதற்குப் பின் பழைய பண்டித்ர்களே

Page 61
I 18 (y. gàirIuáiligiú
அவரை விரும்பும் வகையில், அவரும் அவர்களையே நாடும் வகையில் பொன்னுத்துரை ஒரு புதுப் பண்டிதராகவே மாறிவிட்டார்.
இந்த மாற்றம் முக்கியமானது. காரணம், பொன்னுத்துரை இந்தக் கட்டத்தை அடுத்து வந்த "எதிர் - முற்போக்கு வேகத்தையும் புதிய பார்வை விரிவையும், தன் சொந்த மாற்றத்தின் காரணமாய் பழைய பண்டிதர்களுக்குச் சார் பான ஒரு பண்டைய போக்காக மாற்றிவிட்டார். கைலாசபதியும், சிவத்தம்பியும் சேர்ந்த மும்மூர்த்திக் கூட்டில் தலைமை தாங்க வேண்டிய, தலைமை தாங்க விரும்பிய பொன்னுத்துரை கடைசியில் கலாநிதி சதா சிவமும், எவ், எக்ஸ். சி. நடராசாவும் சேர்ந்த ஒரு புதிய மும்மூர்த்திக் கூட்டுக்குத் தலைமை தாங்கத் தொடங்கியது முழுத் தலைகீழான மாற்றம் மட்டுமல்ல, துருவக் கதை களுங்கூட. ஆனல் பண்டிதம் என்பது அதிகாரத்தைப் பங்கிட விரும்பாமல் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ள விரும்பும் தனிக் கட்சி. dogmatismஐ பிரதிபலிக் கும்போது "முற்போக்கு"க்கும், பண்டிதங் கலந்த 'நற் போக்கு'க்குமிடையில் வித்தியாசம் அவ்வளவு இல்லை தான். "முற்போக்கு சர்வாதிகாரம் "நற்போக்கு" சர் வாதிகாரமாக மாறிவிட்டிருக்கிறது. -
வெறும் பெயர் மாற்றம். அவ்வளவுதான். "நற்போக்குக் கூட்டில் "முற்போக்கு’க் கூட்டை விட சில விசயங்களைப் பொருத்தவரையில் பார்வை விரிவு இல்லாமலில்லை. ஆனல் அதே சமயம் சில விசயங்களைப் பொருத்தவரை யில் அதற்கு எதிர்மாறன குறுக்கமும் இருக்கவே செய் கிறது. அதோடு அதிகாரத்தைப் பொருத்தவரையில் இரண்டுக்குமிடையே வெறும் பெயர் மாற்றந்தான் வித்தி யாசமாக இருக்கிறது. எனவே, அந்த நிலையில் இலக்கி யம்? இலக்கியத்தின் கதி? Dogmatism. அதிகாரத்தைத் தனக்குள்ளேயே, தனக்குள் மட்டுமே, திணிக்க முயலும் எந்தக் கூட்டுக்குள்ளும் அகப்படும் இலக்கியத்தின் கதி

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 19
அதோ கதிதான். எனவே, இந்தக் கட்டத்தில்தான் மூன் ரும் ப்க்கம்' என்ற ஒன்று தேவைப்படுகிறது. மூன்றம் பக்கம் முதலிரண்டு பக்கங்களையும் நசுக்குவதாக இல்லா மல் (நசுக்க நினைக்கும் போக்கு, அதிகாரத்தை நாடும் போக்காக மாறிவிடும். எனவே அது கூடாது.) அவை இரண்டிலுமுள்ள தரமானவற்றை எல்லாம் தன்னேடு சேர்த்துக்கொண்டு அவற்றுக்கப்பாலும் விரிய வேண்டும். 'நற்போக்கு அதைத்தான் செய்யத் தவறிவிட்டது. "முற் போக்குக் கூட்டை விட அது பார்வையில் ஓரளவுக்கு விரி வானதாக இருப்பினும் "முற்போக்கு’க் கூட்டைப் போலவே அது அதிகாரத்தைத் தனக்குள்ளேயே திணித் துக்கொள்ள விரும்புவதால், அடுத்த பக்கம் பார்க்க மறுப்பதால், "முற்போக்கு'வைப் போலவே அதுவும் தன் எல்லையையும் பார்வையையும் குறுக்கிவிடுகிறது. எதிர் "முற்போக்கு வேகத்தோடு பிறந்த புதிய தேவைக்கு ஏற்ற வகையில் அது தன்னை விரித்துக்கொள்ளத் தவறி விடுகிறது. தவறிவிட்டது. அதன் பார்வையையும் கொள் கையையும் பொருத்தவரையில் அது இன்று மூன்ரும் பக்கமாக இல்லை. மூன்று பக்கங்களுமாக விரியவுமில்லை. பழைய "முற்போக்கு' என்ற வகையிலும் இல்லை. புதி தாகத் தலைகாட்டிய பண்டிதமாகவும் இல்லை. எனவே, கா. சிவத்தம்பி அண்மையில் குறிப்பிட்டதுபோல் அந்தக் கொள்கைப் பலவீனத்தைப் போக்குவதற்காக பயனற்ற நடைச்சித்திரங்களில் தன்னை நிறுத்திக்கொண்டு ("முற் போக்கு விமர்சனம் கடைசியில் தொழிற்சங்க விவகார மாக மாறியதுபோல்) செயலளவில் சில பண்டிதர்களின் உதவியோடு பொன்னுத்துரை செய்யும் சர்வாதிகாரமாக "நற்போக்கு இப்போ மாறிவிட்டிருக்கிறது. புதிய பரம் பரையைப் பழுதாக்கும் வித்தின் அடுத்த வேர் அது. பல கிளைகள் விட்டு பல பக்கங்களைப் பழுதாக்கக்கூடிய வேர்.
ஆனல் அதைப்பற்றி மேலும் தொடராமல் இவற்ருேடு இங்கே அதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதன் விளைவு

Page 62
120 மு. தளையசிங்கம்
களை இத்தொடரின் கடைசிப் பகுதியில் மூன்ரும் பக்கத் தின் தேவையைக் குறிப்பிடும்போது, தேவைப்பட்டால் விளக்கலாம். அடுத்து, பொன்னுத்துரையின் எழுத்து களில் காணப்படும் சில பொதுப் பண்புகளை ஆராய வேண்டும். இதுவரை எஸ். பொன்னுத்துரைக்குரிய எழுத்தாளப் போக்கையும் அவர் நடத்தும் இயக்கத்தை யும் மட்டுமே சமூகவியல் ரீதியாகவும் மனேவியல் ரீதி யாகவும் விளக்க முயன்றுள்ளேன். அவை இரண்டும் இலக்கியத் திருகல்களைத் தோற்றுவிப்பதற்குக் காரணமாக இருந்திருப்பதால் இத்தகைய ஆராய்ச்சி தேவைப்பட்டது. அதோடு, 59க்குப் பின் வந்த புதிய வேகம் பொதுப் பின் னணியோடு ஒட்டிவந்தது. அதன் விழிப்பைப் பயன்படுத்தி வந்தது. எனவே, நம் இலக்கிய விவகாரங்களில் பொதுப் பின்னணியின் சாயல் ஏற்படுத்திய மாற்றங்களை ஆராய் வது மிகத் தேவையான ஒன்றே. சமூக நிலைகளைக் காரணங் களாகக் காட்டியது இங்கு யாரையும் புண்படுத்தும் நோக்கத்தினுலல்ல. அப்படி நினைப்பவர்கள் என் நோக் கத்தை மட்டுமல்ல, தரமான கலை ஆராய்ச்சிகளையும் புரியாதவர்களாகவே இருக்க வேண்டும். அதோடு பொன் னுத்துரையைப்பற்றிய ஆராய்ச்சி தனிப்பட்ட முறையில் personal ஆகச் செய்யப்படும் கண்டனமும் அல்ல. இன்னும் சிலருக்கு இந்த வித்தியாசம் புரியாமல் இருப்பதாகவே தெரிகிறது. இங்கு எஸ். பொன்னுத்துரை என்ற ஓர் எழுத்தாளரின் முழு எழுத்தாளப் போக்கையும் அவர் நடத்தும் இலக்கிய இயக்கத்தையுமே ஆராய்ந்தேன். அதனுல் இத்தகைய பார்வை நியாயமானது மட்டுமல்ல, கட்டாயம் தவிர்க்க முடியாத ஒரு தேவையுங்கூட. தனிப் பட்ட ஒரு சிருஷ்டியை ஆராய்ந்தால் அங்கே இந்தப் பார்வை ஒருவேளை தேவையற்றதாக இருந்திருக்கும். "எழுத்து'வில் நான் எழுதிய "தீ"யைப் பார்த்தால் வேற்றுமை தெரியவரும். தனிப்பட்ட முறையில் personal ஆக எழுதுவது என்பதற்கு உதாரணம் வேண்டுமானல்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 121
தேசாபிமானி'யில் வரும் சில உளறல்களைப் பார்க்கலாம். பொன்னுத்துரையின் நடைச் சித்திரங்களைப் பார்க்கலாம்.
பொன்னுத்துரையின் எழுத்துகளின் பண்புகளை ஆராயும் போது முதலில் அவர் ஒரு புரட்சிவாதியாகவே தெரிவார். ஒரு rebel. ஆனல் அது ஆரம்பத் தோற்றந்தான். வெறும் மேற்தோற்றம்தான். உண்மையில் பொன்னுத் துரை அந்தளவுக்கு ஒரு புரட்சிவாதியல்ல. அவரும் ஒரு dogmatist, ஒரு புதுப் பண்டிதர். ஆரம்ப காலத்தில் அவர்மீது எனக்கிருந்த கவர்ச்சி அப்படிப்பட்டது. ஆனல் போகப் போக அவர் என்னை ஏமாற்றுபவராகவே மாறு கிருர், அதாவது, முக்கியமாகத் தத்துவங்கள் போடுவதி லும் கொள்கை வகுப்பதிலும் என்னைப் பொருத்தவரை யில் "முற்போக்கு'வாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் புரட்சிவாதிகளல்ல. பழைய மரபு முழுவதையும் கண் மூடித்தனமாக ஏற்றுக்கொள்பவர்களை விட இந்த 'முற் போக்கு'வாதிகள்தான் பெரிய dogmatists. பெரிய வைதீகங்கள். பழைய மரபை விட இவர்கள் திணிக்கும் புதிய மரபு அதிக யந்திரமானது. இறுக்கமானது. தனி மனிதனைச் சாகடிக்கக் கூடியது. எனவே, பழைய பண்டி தர்களையும், புதிய "முற்போக்கு'வாதிகளையும் எதிர்க்கும் ஒரு புரட்சிவாதிபோலத்தான் பொன்னுத்துரை ஆரம் பத்தில் தெரிந்தார். ஆனல் பின்னர் அவரும் ஒரு புதிய வைதீகமாக, ஒரு புதிய dogmatist ஆக, ஒரு புதிய பண்டிதராக மாறிவிட்டார். மாறிவிட்டார் என்றுகூட சொல்லிவிட முடியாது. ஆரம்பத்திலிருந்தே அவர் அப் படித்தான் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போ அந்தப் பண்பு முன்பை விடக் கூடுதலாகத் தெரிகிறது. வித்தியாசம் அவ்வளவுதான். சட்ட திட்டங்கள், கொள் கைகள், சுலோகங்கள் என்று திட்டவட்டமாகப் போட்டுக் கொண்டு முழு உண்மையும் அவற்றுக்குள்தான் இருக் கிறது என்று சாதிக்க முயலும்போது அங்கே dogmatism, வைதீகம், பண்டிதம் எல்லாம் பிறந்துவிடுகின்றன.

Page 63
122 மு. தன்யசிங்கம்
உண்மையைப் பற்றிய விசாரணைக்குப் பதிலாக அதி காரத் தேடல்தான் அவற்றுக்கு அடிப்படையாக நிற் கிறது என்றும் சொல்லலாம். பொன்னுத்துரையின் எழுத்துகள் பெரும்பாலும் - பெரும்பாலும் என்பது கவனிக்கத்தக்கது - அந்த ரகத்தைச் சேர்ந்தவை.
பால் விவகாரங்களைப் பிரதிபலிக்கும் பொன்னுத்துரை யின் எழுத்துகள் ஆரம்பத்தில் தெரிந்தளவுக்கு இப்போ புரட்சிகரமாகத் தெரியவில்லை. நம் சமூக அமைப்பில் பால் விவகாரங்களைப்பற்றி எழுதுவதே புரட்சிகர மானதுதான். ஆனல் வெறும் யதார்த்தப் படைப்பு பாதிப் புரட்சிதான். என்னைப் பொருத்தவரையில், புரட்சி என்பது செய்யப்பட வேண்டும் என்ற ஒன்றுக் காகச் செய்யப்படுவதல்ல. அதாவது யதார்த்தமாக எழுதப்பட வேண்டும் என்பதற்காக (பால் விவகாரங் களைப் பொருத்தவரையில் மட்டும்) எழுதுவதல்ல. சமூக அமைப்பு, ஸ்தாபனங்கள், பழக்க வழக்கங்கள், சமயக் கொள்கைகள் எல்லாம் யந்திரமயமாகி வாழ்க்கையின் அர்த்தமும் சுதந்திரமும் கெட்டுப்போகிறபோது வாழ்க் கையில் ஒரு அர்த்தத்தையும் விடுதலையையும் உண்மை யையும் காண்பதற்கு எடுக்கும் முயற்சிதான் என்னைப் பொருத்தவரையில் புரட்சியாகிறது. அந்த நிலையில் ஒருவன் பால் விவகாரங்களில் வாழ்க்கையின் மற்ற துறை களில் காண முடியாத விடுதலையையும் சுதந்திரத்தையும் உண்மையையும் காண முயலலாம். ஆனல் அந்தப் பார் வையில் பொன்னுத்துரை பால் விவகாரங்களைப் பாவிப் பதாகத் தெரியவில்லை. வெறும் யதார்த்தம் என்ற பார்வை மட்டுந்தான் அவருக்குரியது. வெறும் யதார்த்தத்தில் டால் விவகாரங்கள் கூட யந்திர விசயங்களாக மாற்றப்பட்டு விடுகின்றன. அந்த வித்தியாசத்தைப் பொன்னுத்துரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதனுல் பொன்னுத்துரை யின் கதைகள் நம் மரபின் தணிக்கையை மீறி யதார்த்த மாக எழுதப்படுமளவுக்குத்தான் புரட்சிகரமாக இருக்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 123
கின்றன. யந்திரமயமாகிவிட்ட வாழ்க்கையின் மற்ற துறைகளை விட பால் விவகாரங்கள் கொடுக்கும் வித்தியா சத்தையும் விடுதலையையும் உணர்த்துமளவுக்கு அவை புரட்சிகரமானவை அல்ல. எனவே, பாதிப்புரட்சி மட்டுந் தான். ஆணுல் மற்ற விசயங்களில் எல்லாம் ஒரு பண்டித ராகவும் ஒரு வைதீகமாகவும் ஒரு dogmatist ஆகவும் மாறி விட்ட பொன்னுத்துரை இன்னும் ஓரளவுக்கு ஒரு புரட்சி வாதியாகவும் முரளியாகவும் (rebel) தெரிகிருர் என்ருல் இந்தப் பாதிப்புரட்சி காட்டும் அவருடைய பால் விவகா ரக் கதைகளினல்தான் என்பதையும் மறந்துவிடக் கூடாது. அதோடு அந்தப் பண்பு பாதிப் புரட்சியாக மட்டும் தெரிவது நம் அளவுகோல் பெரிதாகிவிட்டதனலேயே என் பதையும் மறந்துவிடக் கூடாது. யதார்த்தமாகப் பால் விவகாரங்களைப்பற்றி எழுதுவது பாதிப் புரட்சியாய் இருப்பினும் நம் இப்போதைய சமூக நிலையில் அதன் விளை வுகள் பெரிய விடுதலையையும் சுதந்திரத்தையும் ஏற்படுத் தக் கூடியவை என்பதை ஞாபகத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். பொன்னுத்துரையின் ‘தீ"யின் முக்கியத்துவம் அந்த வகையானது. ஒரு மரபு உடைப்பு. அதனல் மரபு வளர்ச்சி. Tropic of Cancer போன்ற ஆங்கில நாவல்கள் எப்படியோ அப்படி. என்னென்ன வகையான பிழைகள் அதில் இருப்பினும் "தீ" நம் எழுத்தாளர்களின் முயற்சிகளை நசுக்கி அமுக்கிக்கொண்டு, நம் இலக்கிய உலகில் நிற்கும் அந்தப் பிற்போக்கு "மரியாதை’ப் பார்வையை உடைத் திருக்கிறது. அதனில் ஏற்பட்டுள்ள விடுதலையும், சுதந்தி ரமும், புதிய மரபும் ஒரு புதிய சகாப்தத்துக்கு, அவற்றைச் சரியாகப் பயன்படுத்த நம் எழுத்தாளர்கள் முயன்றல் வழி வகுத்திருக்கின்றன. எனவே, பொன்னுத்துரைக்குரிய புரட்சி அம்சம் - அது பாதிப் புரட்சியாய் இருப்பினும் - இந்தத் துறையில்தான் தெரிகிறது.
பொன்னுத்துரையின் எழுத்துகளில் தெரியும் இன்னேர் பண்பு அவருடைய தர்க்கத் திறன்தான். இல்லை, அதைத்

Page 64
124 மு. தளையசிங்கம்
தர்க்கமென்று சொல்ல முடியாது. அதைக் குதர்க்கம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் குதர்க்கத்தில் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் இருக்குமே ஒழிய விசயங் களுக்கும் உண்மைகளுக்கும் முக்கியத்துவம் இருக்காது. அதல்ை விசயத்தை நழுவ விட்டுவிட்டு வெறும் வார்த்தை களில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பரிதாப நிலையில் பொன்னுத்துரையை அடிக்கடி பார்க்க நேரிடுகிறது. முக்கியமாக அவருடைய கட்டுரைகளில் காணக் கிடைக் கும் பண்பு இந்த வகையானது. ஆனல் இந்த வார்த்தை வித்தை ஈழத்து இன்றைய இலக்கியச் சூழலில் செல்லு படியாகிறதாகவே தெரிகிறது. காரணம், இங்கே எல் லோரும் அதைத்தான் இலக்கியத் திறமையாகக் கணிக் கிருர்கள். இலக்கியப் போராட்டங்கள் பெரும்பாலும் இத்தகைய விசயத்தை நழுவவிட்ட வார்த்தைப் போராட் டங்களாகவே இருக்கின்றன. பொதுவாக 'முற்போக்கு" எழுத்தாளர்களுக்குப் புரியக் கூடியவை அவையாகத்தான் தெரிகின்றன. ஆனல் அந்த வித்தை உண்மையில் பொன்னுத்துரையின் கட்டுரைகளைப் பயனற்றவையாகத் தான் ஆக்கிவிடுகிறது. தர்மு சிவராமுவுக்குப் பதிலாக "எழுத்து'வில் அந்தளவுக்கு அழகாக எழுதப்பட்ட கட்டுரை யில் கூட விசயம் விடுபட்டுப்போய் வார்த்தைகள்தான் மிஞ்சி நிற்கின்றன. உண்மையில் பொன்னுத்துரை தர்மு சிவராமுவின் கட்டுரைக்குப் பதிலளிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எப்படி தர்மு சிவராமுவின் "தீ"பற்றிய கட்டுரையில் அவசரத்தாலும், ஆத்திரத்தாலும், யதார்த் தத்தைப்பற்றிய அறிவின்மையாலும் விசயங்கள் விடு பட்டுப்போய் விடுகின்றனவோ அப்படியே பொன்னுத் துரையின் கட்டுரையில் குதர்க்கத்தால் விசயங்கள் விடு பட்டுப்போய் விடுகின்றன. தர்மு சிவராமுவின் அவசர மும் ஆத்திரமும் கலந்த கட்டுரையை அங்கம் அங்கமாகக் கிழித்திருக்கலாம். ஆனல், அந்தக் கட்டுரையில் எழுப்பப் பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் பொன்னுத்துரை வேறு விசயங்களைப்பற்றித்தான் பெரும்பாலும் பேசு

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 125
கிருர். ஐன்ஸ்டீன் Atman - Energy எனச் சமப்படுத் திரைா என்று பொன்னுத்துரை எழுப்பிய கேள்வி மிகக் குழந்தைத்தனமானது. ஐன்ஸ்டீனுக்கேன் ஆத்மனைப் பற்றிய அக்கறை இருக்க வேண்டும்? எனவே, அது வெறும் அர்த்தமற்ற குதர்க்கம். ஆனல் அதன் வார்த்தை வித்தை ஏற்படுத்திய மருட்சியில், மற்ற துறைகளுக்கு ஏற்ப விஞ்ஞானிகள் equations போடுவதில்லை, மாருக மற்ற துறையிலுள்ளவர்கள் விஞ்ஞான உண்மைகளைத் தாங்களே பயன்படுத்திக்கொள்வர் என்ற உண்மைகள் எல்லாம் மறைந்துவிடுகின்றன.
'நற்போக்கு' இலக்கியம் பற்றிய கட்டுரையில், கலாநிதி சரத்சந்திரா மேற்குநாட்டு இலக்கியங்களை நாம் படிக்க வேண்டும் என்று கூறியதற்கு எதிராக, அப்படியென்ருல் மேற்கு நாட்டவர்கள் தாங்கள் எழுதுவதற்காக கிழக்கி லுள்ளவற்றைப் படிக்க வேண்டும் என்று சொல்கிருர்களா மகன்) அர்த்தத்தில் பொன்னுத்துரை கேட்டிருப்பது அவருடைய குதர்க்கத்துக்கு அடுத்த உதாரணம். நாவல், விறுகதை, நா. கம், சினிமா போன்ற புதிய கலை முயற் விகள் கிழக்கிலிருப்பதை விட மேற்கில் அதிகம் வளர்ந் இருப்பதால் அவர்களுடைய விருஷ்டிகளைப் பற்றிய பரிச் சயம் நமக்கு உதவும் என்பதைத்தான் கலாநிதி சரத் சந்திரா கருதுகிருர். ஒரு உலகப் பார்வையை, வெளியே தலைநீட்டி மற்றவர்களையும் பார்க்க வேண்டிய ஒரு தேவையைத்தான் சரத்சந்திரா வலியுறுத்துகிருர், அதைப் பொன்னுத்துரை தவறவிட்டுவிடுகிருர், அதோடு பிழை யான எதிர்க் கேள்வி ஒன்றையும் எழுப்புகிருர், மேற்கே பார்க்க வேண்டுமென்ருல் கிழக்கே ஒன்றுமில்லை என்ப தல்ல அர்த்தம். கிழக்கே எவ்வளவோ இருக்கிறது. அதிக மாகவும் இருக்கிறது. கலாநிதி சரத்சந்திரா கிழக்கால்தான் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிருர், ஜப்பானிய கலாச் சாரத்தை வைத்து அவர் ஓர் நாவலே எழுதியிருக்கிருர், அதோடு நம் நாட்டு நாடக முறையை மேற்கின் உதவி

Page 65
126 மு. தளையசிங்கம்
யோடு, அவர் மெருகூட்டி புதுப்பித்துமிருக்கிருர், அவரைப் பின்பற்றித் தயாரிக்கப்பட்ட நரிபான" என்ற நாடகத் துக்கு பொன்னுத்துரையே மட்டக்களப்பு விழாவில் இடங் கொடுக்கவில்லையா? (இந்த முறையைப் பயன்படுத்தும் கலாநிதி வித்தியானந்தனைப் பின்னர் "நற்போக்கு இலக் கியம்' கட்டுரையில் பொன்னுத்துரை குறை கூறுவதும் அதேவகையான குதர்க்கந்தான்.) எனவே, இவை வேறு, மேற்கே பார்க்க வேண்டும் என்பது வேறு. மேற்கே பார்த்தால்தான், அதனுல் வரும் ஒப்புப் பார்வை இருந் தால்தான், நம்முடைய செல்வங்களையும் நாம் அறி கிருேம். நம்முடைய குறைகளையும் தேவைகளையும் உணர்கிருேம். அதைத்தான் கலாநிதி சரத்சந்திரா கூறு கிருர், அதோடு மேற்கிலுள்ளவர்கள் கிழக்கைப் பார்க்க வேண்டும் என்று சொல்லாமலுமில்லை. எஸ்ரா பவுண் டின் புது முயற்சிகள் கிழக்கே பார்த்ததின் காரணமாகத் தானே பிறந்தன? ஜங் (Jung) கிழக்கின் ஆழத்தைக் கூறவில்லையா? ஹக்ஸ்லி வேதாந்தத்தை நம்மை விட அதிகமாக அழுத்தவில்லையா? இப்படிப் பல உதாரணங் களை மற்ற துறைகளிலும் காட்டலாம். நம் மொழி வரலாற்றின் மகிமையையே மேற்கத்தையவர்கள்தான் நமக்குக் காட்டிக்கொடுத்தார்கள். எனவே, சரத்சந்திரா வின் பார்வை ஒரு உலகப் பார்வை. நம்முடைய பார்வை குறுகிய பார்வை. அதனல் நம்மைப்பற்றியே நாம் அறிய முடியாமல் இருக்கிருேம். வெறும் மரபுக் கூச்சல். ஆனந்த குமாரசாமியின் பார்வை உலகப் பார்வை. வெறும் மரபுக் கூச்சல் அல்ல. ஆனல் பொன் னுத்துரையின் குதர்க்கத்தில் இத்தகைய உண்மைகளுக்கு இடமில்லை. குதர்க்கம் என்பதே உண்மையைப்பற்றிய சர்ச்சை அல்ல. அது, தாங்களே சரியானவர்கள் என்று எப்படியாவது நிரூபித்துவிட வேண்டும் என்பதற்காக செய்யப்படும், உண்மையைக் கூறுவது போன்ற ஒரு பாவனை மட்டுந்தான். வெறும் வார்த்தை வித்தைகளுக் குரிய dogmatismஇன் ஒரு தனி ஆயுதம் இந்தக் குதர்க்கந்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 127
தான். அதிகாரத்தைப் பங்கிட விரும்பாத காரணத் தால் இது கையாளப்படுகிறது. இன்றைய சர்வதேச அரசியல் கூடாரங்களில், முக்கியமாக சீன-ரஷ்ஷிய தக ராறில், இதே குதர்க்கந்தான் கையாளப்படுகிறது. எனவே, அது பொன்னுத்துரையின் ஆயுதமாகவும் முற் போக்குக் கூட்டினர் விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு முக்கிய சாதனமாகவும் இங்கு மாறிவிட்டிருப்பதற்குரிய காரணத்தை விளங்கிக்கொள்வது கஷ்டமானதல்ல.
பொன்னுத்துரையின் எழுத்துகள் இன்னேர் பண்பை வெளிக்காட்டுகின்றன. பொன்னுத்துரைக்குப் பார்வை ஆழம் அவ்வளவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான ‘முற்போக்கு எழுத்தாளர்களை விட அவருக்குப் பார்வை ஆழம் அதிகந்தான். ஆனல் நம் நாட்டு 'முற்போக்கு' எழுத்தாளர்களின் தரம் ஒரு சர்வ தேச அளவுகோலாகும் என்று யார் சொன்னர்கள்? (பெரும்பாலான 'முற்போக்கு’ எழுத்தாளர்களுக்கு முற் போக்கு இலக்கியம் என்பதே தெரியாத விசயமாக இருக்கியது என்பது இப்போது எனக்குத் தெரியவந்திருக் கிறது. எனவே, அவர்களேக் கொண்டு அளப்பதைப் பொன்றுத்துரை பெரிதாகக் கருதக்கூடாது. மற்ற நாடுகளில் உள்ள சராசரி எழுத்தாளனுக்கு இருக்கும் !ர்வை ஆழம்கூட நம் நாட்டு எழுத்தாளர்களுக்கு இன்னும் ஏற்படவில்லை. அந்த அடிப்படையில் பார்க் கும்போது பொன்னுத்துரையின் நிலை திருப்திகரமாக இல்லை. எழுதும் திறமையும் சக்தியும் இருந்தால் மட்டும் போதாது. பார்வை ஆழமும் அதே அளவுக்கு G36 u GooT(i) tid. Romanticism, extrovert, introvert øT Gð7 பவை எல்லாவற்றையும் வேண்டாத மேற்கத்தைய விசயங்கள் என்று அவர் முற்ருக ஒதுக்கிவிடுவதைக் கொண்டே பொன்னுத்துரையின் பார்வை ஆழம் எப் படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம். Extrovert introvert என்பவை தாங்களாகவே எழுப்பும் பார்வை விரிவோடு ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம்

Page 66
128 மு. தளையசிங்கம்
போன்ற நம் நாட்டு விசயங்களையும் இன்னும் அதிக மாக விளக்குவதற்கும் உதவுகின்றன என்பன போன்ற வற்றைப் பொன்னுத்துரை தவறவிட்டுவிடுகிறர். அவ ருடைய பார்வையின் தரத்துக்கு அது ஓர் உதாரணம்: இன்னுமோர் உதாரணமாக 9Jau(560)Lllu * [5]Tն) மலர்கள் மலரட்டும்" என்ற மாசே துங்கிய கொள்கை யைக் காட்டலாம். சீனவில் "நூறு மலர்கள்' நடை முறைக்கு வராத வெறும் சுலோகமாகத்தான் மாறிவிட் டிருக்கிறது என்பதைப் பொன்னுத்துரை உணரத் தவறிவிடுகிருர், அதோடு "நூறு மலர்கள்' என்பது உள்ளடக்க வித்தியாசங்களையும் கருத்து வித்தியாசங் களையும் சேர்த்துக் குறிக்காமல் வெறும் உருவ வித்தி யாசங்களை மட்டும் குறிப்பதாய் இருந்தால் அதன்மூலம் இலக்கிய வளர்ச்சி பிறக்காது என்பதையும் அவர் தவறவிட்டுவிடுகிருர், அது வெறும் ஏமாற்றுவித்தை வார்த்தை வித்தை. ஆமாம். பொன்னுத்துரைக்குப் பார்வை ஆழம் போதாது என்றுதான் சொல்ல வேண்டும். ஒப்பிட்டுப் பார்க்கும் ஒர் உலகப் பார்வை அவரிடம் இன்னும் திருப்திகரமாக வளரவில்லை. அவரிடம் இருக் கும் எழுத்துத் திறமைக்கும் சக்திக்கும் ஏற்ப அவருடைய பார்வை ஆழம் வளரவில்லை. அதனுல்தான் பெரும் பாலும் அவர் செய்யும் சோதனைகள் எல்லாம் "வண்ண மலர்'களாகவும் "மத்தாப்புகளாகவும் செயற்கையாக மாறிவிடுகின்றன. அதனுல்தான் அவருடைய கதைகளில் பல, எல்லாமல்ல, அது முக்கியம் - கீறல் விழுந்த கிராம போன் நடை போன்ருகிவிட்ட ஒரு செயற்கையான எழுத்து நடையையே தங்கள் முழு பலமாகவும் ஆயுத மாகவும் ஆக்கிக்கொள்கின்றன. ஆனல் நடையைப் பற்றிய இந்தக் கடைசிப் பண்பு பொன்னுத்துரைக்கு மட்டும் உரிய ஒன்ருக இருக்காமல் இன்று நம் ஈழத்து இலக்கிய உலகுக்கே உரிய ஒரு பொதுப் பண்பாக மாறி யிருப்பதால் அதை இன்னும் விரிவாக விளக்குவது நலலது.

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 129
பொன்னுத்துரை தன் எழுத்து நடையைச் சந்தர்ப்பத் துக்கு ஏற்றவிதத்தில், கதைகளுக்கு ஏற்ற முறையில், மாற்றக் கூடியவர். மற்ற எந்த ஈழத்து எழுத்தாளனுக்கும் இல்லாத அந்தத் திறமை அவருக்குண்டு. ஆனல் வர வர அவருடைய நடை என்று முத்திரை பதிப்பிக்கும் நோக்கத் தில், அதில்தான் தன் முழுத் திறமையும் இருக்கிற தென்ற நம்பிக்கையில் பொன்னுத்துரை ஒரு செயற்கை யான எழுத்து நடையைத்தான் வளர்த்து வருகிருர் என்று தெரிகிறது. என்னைப் பொருத்தவரையில் அது அவருடைய பார்வை ஆழமின்மையினதும் புதிய பண் டிதத்தினதும் முத்திரையாகவே படுகிறது. பொன்னுத் துரையின் உண்மையான முத்திரையைக் காட்டும் நடை, அவருடைய சிறுகதைகளான 'ஒளி', 'நிழல்', 'பங்கம்", "மேய்ச்சல்" போன்றவற்றில் கையாளப்பட்டுள்ளதுதான். அவருடைய பழைய கட்டுரைகளில் வரும் அவருக்கே உரிய நடைவன்மையைப் போல் (கட்டுரைகளில் குதர்க் கம் வேறு, நடை வேறு) சிருஷ்டி இலக்கியத்துக்குரிய அவருக்கே சொந்தமான இயற்கையான கலையும் கட்டுக் கோப்பும் நிறைந்த நடை இந்தக் கதைகளில் இருக்கி கிறது. "பங்கம் பொன்னுத்துரையின் உச்சங்களில் ஒன்று. இதற்கு மாருக "தீ", "வீடு' போன்றவற்றில் வரும் எழுத்து நடை செயற்கையாகவே நிற்கிறது. ஆனல் இந்தச் செயற்கையான நடையில்தான் பொன்னுத் துரைக்கு அதிக விருப்பமும், தன் முழு பலமும் தங்கியிருக் கிறது என்ற எண்ணமும். அதனுல் அதன் சாயல் இல் லாத எந்தக் கதையுமே அவர் எழுதவில்லை என்றுகூடச் சொல்லலாம். ஆனல் அது அதிகமாகப் போய் அதுவே முழுக் கலையாகவும் கெட்டித்தனமாகவும் கருதப்படும் கதைகளைத்தான் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இப்போ அவரது கட்டுரைகளில்கூட இந்த நடிடை தொற்றிவிட்டிருப்பதாகத் தெரிகிறது. "மரபுபற்றி ஒரு நோக்கு" அந்த வகையானது. பொன்னுத்துரையின் பலமும் பலவீனமும் அவருடைய நடையில்தான் இருக்

Page 67
130 மு. தளையசிங்கம்
கின்றன என்று சிவகுமாரன் எழுதியபோது இந்த நடை யைத்தான் கருதுகிருர் என்று நினைக்கிறேன். ஆனல் இந்த நடையில் அவருடைய முழுப் பலவீனந்தான் தொக்கி நிற்கிறது. பொன்னுத்துரையின் பலம் அவருடைய நடையில் இருக்கிறதென்றல், அது "பங்கம்' போன்ற சிறுகதைகளில் கையாளப்பட்டுள்ள நடையிலாகத்தான் இருக்க வேண்டும். மற்றதில் அல்ல. "வீடு' என்ற குறு நாவலில் வரும் நடை அவருடைய முழுப் பலவீனத்தின் முத்திரை.
கதைகளில் வரும் பொருளுக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற வகையில் நடையை மாற்றலாந்தான். "பங்கம்" கதைக்குரிய மிக இயற்கையான கலை சேர்ந்த நடையை மற்ற பொருள் களை விளக்கும் கதைகளுக்கு, அவற்றுக்கேற்ற வகை யில் மாற்றலாம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனல் பொருளுக்கேற்ற வகையில் மாற்றப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படும் இடங்களில் எல்லாம் பெரும்பாலும் இதே வகையான செயற்கையான நடைதான் வருகிறது என் பதைக் கவனிக்க வேண்டும். பால் விவகாரங்களை விளக் கும் "தீ", பெளத்த தத்துவங்களைக் கூற முயலும் ‘வீடு", மற்ற கருத்துகளைக் காட்ட முயலும் உருவகக் கதைகள் எல்லாவற்றிலுமே அதே நடைதான். கடைசியில் "மரபு பற்றி ஒரு நோக்கு’ என்ற கட்டுரையிலும் அதே நடை தான். எனவே, இத்தகைய நடை வரும் கதைகளில் கதைக் கேற்ற வகையில் பொன்னுத்துரை தன் நடையை மாற்று கிருர் என்பதை விட இந்த வகையான நடையைத்தான் தன் சிறந்த நடையாகக் கருதுகிருர் என்பதுதான் நிச்சய மாகிறது. இது ஒரு செயற்கையான கற்பனவாத நடை. சிவகுமாரன் குறிப்பிட்டதுபோல் குறியீடுகளையும், மனே வியல் ரீதியில் வரும் அடிமன வெளியீடுகளையும் காட்டு வதற்காகக் கையாளப்படாமல், வெறும் வார்த்தை ஜோடனையாகவே கையாளப்படுகிறது. பொன்னுத்துரை யின் கட்டுரைகளில் வரும் குதர்க்கத்துக்கும் இந்த நடைக்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 131
கும் ஒரு பொதுவான பண்புண்டு. அவை இரண்டும் அவருடைய புதுப் பண்டிதத்துக்குரிய முத்திரைகள். விசயங்களை நழுவவிட்டு வார்த்தைகளில், வார்த்தை வித்தையில் தொங்கும் ஒரு பண்பு. சிந்தனையின் ஆழத் தால், பார்வையின் புதிய கோணத்தால், தன் பாட்டிலேயே நடை கலையை எடுக்காமல், சிந்தனையின் ஆழமின்மையும், பார்வையின்மையும், புதுமையின்மையும் தங்களை மறைக்கு முகமாக இந்த வார்த்தை ஜோடனை நடையைக் கையாள் கின்றன. "தீ"யில் வரும் இந்த வார்த்தை ஜோடனையை ஒரு வாறு பொறுத்துக்கொள்ளலாம். முதல் முதலாகப் பால் விவகாரங்களை அந்தளவுக்குப் பயன்படுத்தி ஒரு நாவல் எழுதிப் புரட்சி செய்யும் முயற்சி, தணிக்கையின் பிடி யிலிருந்து தப்புவதற்காக, அப்படி ஒரு கலை மருட்சியைக் கையாண்டதில் காரணம் இருக்கிறது. ஆனல் இப்போ பொன்னுத்துரையின் "பங்கம்' என்ற கதையைப் படிக்கும் போது "தீ"யின் நடை தணிக்கையிலிருந்து தப்புவதற்குக் கூடத் தேவையற்றதாகவே தெரிகிறது. 'டங்கத்தின் நடையில் "தீ" எழுதப்பட்டிருப்பின் அதன் தரம் இன்னும் உயர்ந்திருக்கும். என்ருலும் "தீ" உள்ளடக்கத் தன்மை யால் ஒரு மரபு உடைப்பு. அதோடு அதன் எழுத்து நடையும் அதோடேயே நின்றுவிட்டிருந்தால் அதன் குறை பெரிதாகத் தெரிந்திருக்காது. ஆனல் பொன்னுத் துரை அந்த நடையையே தன் முழு முத்திரை பொதிந்த நடையாகக் கருதி வேறு கதைகளை எழுதும்போதுதான் விவகாரம் முகத்தில் அறைவதுபோல் முன்னுக்குத் தெரிய வருகிறது. "வீடு" ஒர் உதாரணம். "வீடு" பொன்னுத் துரையின் பல்வேறு அக்கறைகளின் பரப்பு வித்தியாசத் தைக் காட்டும் ஓர் கதை. பால் விவகாரங்கள் தொட்டு பெளத்த தத்துவங்கள் வரை எல்லை தாண்டும் ஒரு பரப்பு. அந்த வகையில் அது முக்கியமானது. ஆனல் பழைய கதைப் பொருளைப் பழைய மாதிரியே தரும்போது உள் ளடக்கத்தில் புதுமைக்குப் பதிலாகப் புளிப்புதான் மிஞ்சு கிறது. ஓர் உள்ளடக்க வரட்சி. ஆளுல்ை அந்த வரட்சி

Page 68
132 மு. தளையசிங்கம்
வேறு பலவற்றை வெளிப்படுத்த உதவுகிறது. "தீ"யில் வரும் உள்ளடக்கப் புரட்சி நடையின் குறையை மேவி நின்று மறைத்துவிடுகிறதென்ருல் "வீடு'வில் வரும் உள் ளடக்க வரட்சி எழுத்து நடையின் குறையையும் விளம் பரப்படுத்துவதோடு அத்தகைய செயற்கையான வார்த்தை ஜோடனையில் பொன்னுத்துரை தன் கதைகளை நிறுவ முயல்வதற்குரிய காரணத்தையும் காட்டிவிடுகிறது.
வீடு"பற்றி விமர்சனம் செய்த கனக செந்திநாதன் கூறும் ஓர் கருத்து பொன்னுத்துரையின் இந்த வார்த்தை ஜோட னைக்குரிய காரணத்தை விளக்க உதவும். பழைய கதை களைப் பழைய மாதிரியே கொடுக்க வேண்டும், அப்படிக் கொடுப்பதுதான் பொன்னுத்துரையின் நோக்கமாகும் என்று கூறும் கனக செந்திநாதன் பழைய கதைகளைப் புதிய பார்வையில் அல்லது புதிய வியாக்கியானத்தில் எழுத வேண்டும் என்று கூறும் விமர்சகர்களைச் சாடவும் செய் கிருர். இது முழுப் பிழையான வாதம். ஆனல் பொன்னுத் துரையின் நோக்கத்தைக் கூறும் வகையில் அது சரியான தாகவே இருக்கிறது. பொன்னுத்துரையின் தவறும் பல வீனமும் அவையேதான். பொன்னுத்துரையின் பார்வை ஆழம் போதாது என்று முன்பு குறிப்பிட்டேன். அந்தப் பண்புதான் இந்தக் குறைகளுக்குரிய காரணம். பார்வை ஆழமோ மனேவியல் உண்மைகளைப்பற்றிய பரிச்சயமோ போதாதபடியால் புது வியாக்கியானத்தில், புதுக்கோணங் களில் பொன்னுத்துரையால் எழுத முடிவதில்லை. அதனல் அவர் அவற்றை மறைப்பதற்கு இத்தகைய வார்த்தை ஜோடனையைக் கையாள்கிருர். பழைய கதைகளைப் பழைய மாதிரியே தந்து இந்த வார்த்தை ஜோடனையால் அவற்றுக் குப் புதுமை கொடுக்க முயல்கிருரர். இது டெக்னிக் கலரில் பிரமாண்டமான காட்சிகளோடு படம் எடுப்பதால் மட்டும் படத்தில்கலையைப் புகுத்திவிடலாம் என்று நினைப் பதை ஒக்கும். ஆனல் உண்மையில் இந்த முறை சாதாரண மக்களைப் பிரமிக்க வைக்குமே ஒழிய கதைகளின் கலையை

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 133
Duff j5; 3). Fü*3). Ten Commandments, Ben Hur எப்படியோ அப்படி, அதே வகையான வெறும் ஜாலம். வித்தை. பொன்னுத்துரையின் கதைகளில் வார்த்தை ஜாலம் - இந்தப் படங்களில் கலர் ஜாலம், காட்சி ஜாலம் அவ்வளவுதான். ஆணுல் சாதாரண மக்களை அவைதான் பிரமிக்கவைக்கின்றன! Breathless, Savage Eye, La Dalce Vita, Judgement at Nuremburg, Apparajito போன்றவற்றிலுள்ள கலைத்தேக்கமும் உருவ அமைப்பும் புரட்சிகளும் உள்ளடக்கச் செறிவும் Tem Commandments, Ben Hur போன்றவற்றில் இல்லை என்பது சாதாரண மக்களுக்குத் தெரிவதில்லை. பொன்னுத்துரை இந்த இரண்டு வகையான கதைகளையும் எழுதுகிருர், ஆனல் உண்மையான கலை எங்கே இருக்கிறதென்று அவருக்கே தெரிவதில்லை. அவருக்கு டெக்னிக் கலரில் மோகம், ‘சிங்கமுகக் காலதரில் கொங்கை சார்த்தி நின்ருள்' என்ற தொடரைப் பெn ன்னுத்துரையின் எழுத்து நடைக்கு உதாரணம் என்று ரசிச்கிருர் கனக செந்தி. எவ்வளவு பக்குவப்படாத ரசனை! வளரிளம் பருவத்தில் நான் எழுதி எனக்குள்ளேயே மகிழ்ந்த காதல்,கவிதைகளைத்தான் அந்த அடி எனக்கு நினைவூட்டுகிறது. அதே வளரிளம் பருவத்து ரசனை! இந்தச் செயற்கையான நடைக்கு அடிப்படைக் காரணம் பொன்னுத்துரையின் பார்வை ஆழம் போதாது என்பதே. அதனுல்தான் சாதாரண அன்ருட வாழ்க்கை விசயங்களைப்பற்றி அவர் எழுதும் கதைகள் ("ஒளி, நிழல்," "பங்கம், மேய்ச்சல்") பொன்னுத்துரைக்கே உரிய முத்திரை பெற்று கலைச் செறிவு மிகுந்த நடையோடு மிளிர, பார்வை ஆழத்தையும் புதிய வியாக்கியானங்களையும் கோரும் மனேவியல், தத்துவக் கதைகள் வார்த்தை ஜோடனையை மட்டுமே நம்பி வெறும் செயற்கையானவையாய் வீழ்ந்து விடுகின்றன.
பொன்னுத்துரையின் பிழையான நடை யை இந்தளவுக்கு ஆராய்ந்ததற்கு இங்கு காரணம் இருக்கிறது. பொன்னுத்

Page 69
134 மு. தளையசிங்கம்
துரையின் இதே பிழையான எழுத்து நடையேதான் இன்றைய ஈழத்து எழுத்தாளர்களின் பொதுவான நடை யாக மாறிவிட்டிருக்கிறது என்பதுதான் அது. முக்கியமாக "முற்போக்கு' இளம் எழுத்தாளர்கள் அத்தனை பேரும் அபிநயிக்கும் நடை இந்த நடையேதான். இலக்கிய விமர் சனம் என்பது இங்கே நல்லதோர் வளர்ச்சியடைந்த நிலை யிலிருந்தால் இந்த எழுத்து நடையைப் பற்றி மட்டுமே பல நூல்கள் எழுதப்பட்டிருக்கலாம். ஆனல் அப்படி ஒரு வளர்ச்சியடைந்த நிலையை இருபது இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்தான் இங்கு எதிர்பார்க்கலாம் போலி ருக்கிறது. எனவே, திசை காட்டும் முகமாக, மாதிரிக்காகச் சில உதாரணங்களை இங்கு தர விரும்புகிறேன். ஆனல் இங்கு இவ்வளவு போதும். இவையெல்லாம் ஒரே மாதிரி யாக இருப்பினும் இவற்றை எழுதியவர்கள் பலர். வேண்டு மென்றே பந்திகளோடு சேர்த்து அவற்றை எழுதியவர் களின் பெயர்களைப் போடாமல் விட்டுவிடுகிறேன். அவற் றுக்குரிய ஒற்றுமையை அப்படிக் காட்டலாம் என்பது என் எண்ணம். இவற்றை எழுதியவர்கள் பொன்னுத்துரை ("தீ, "மரபுபற்றிய ஒரு நோக்கு'), நீர்வைப் பொன்னை யன் (நிறைவு), யோ. பெனடிக்ற் பாலன் (“குட்டி'), மருதூர் கொத்தன் ("ஒளி"), எம். ஏ. ரகுமான் ('பலம்"), கா. மகேந்திரன் (வடிகால்"), செ. யோகநாதன் ("கலைஞன்"), அகஸ்தியர் (ஞானேதயம்'). பொன்னுத் துரையின பந்திகள் மூன்று இடைக்கிடை செருகப்பட் டுள்ளன. அவற்றுள் இரண்டு ஒரு கதையில் வருபவை. ஒன்று ஒரு கட்டுரையில் வருவது. இந்த வகையான எழுத்து நடையின் ‘சூட்சுமத்தை விளக்கக் கடைசியாகக் காட்டப்பட்டுள்ள பந்தியில் வரும் ஒரு வார்த்தை மட்டும் போதுமானது - "ஊற்றை."
'அகஸ்தியர்'. ஒ! இந்தப் பந்தியின் ஆசிரியர் அவரேதான். (தமிழ் வளர்க்கும் புதிய குறுமுனி) "ஊத்தை' என்பதற்குப் பதிலாக 'ஊற்றை என்று ஒரு தரமல்ல மூன்று தரம்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 35
அதே பந்தியில் பாவிக்கிருர், ஏன்? இந்த எழுத்து நடையின் மவுசு அதுதான். இல்லை, "சூட்சுமம்’. விச யத்தை விட்டு வெறும் வார்த்தைகளை அடுக்கி அதுவும் 'பிராண்டி' 'கிராண்டி' என்று ஒர் அசாதாரண ஒசையை எழுப்பும் வார்த்தைகளே அடுக்கி, கலையைச் சேர்ப்பதாக ஒரு மருட்சியை ஏற்படுத்தும் மூன்ருந்தர கற்பனுவாதந் தான் இது. வெறும் செயற்கைத்தனம்.
'என் விழிகளில் வாள்வீச்சுக் காட்டி அவனைப் பார்க் கத் தொடங்குகிறேன். என் இதழ்களில் லா கிரிப் புகை களின் கருமை படியாது, கன்னிமைப் பசுமையுடன் விளங்கும் இதழ்களில், வாய்ப்புற்றில் வாசம் செய்யும் நாகத்தின் தலையைக் கிடத்தி. ஏதோ பரிபாஷைப் பரிமாற்றம் நடைபெறுகிறது. கவனிக்கவில்லையா? குருடியல்ல. பேசாத கண்கள். அவருடைய இதழ்கள் இழுக்கப்பட்ட நேர் வரைக்கோட்டினைப்போல் நெளி யாமல், புரளாமல், அலையாமல் சிலையில் பதித்த பளபள இதழ்களைப் போல, ஒவியத்தில் சிறைப்பட்ட
நெருப்புத் துண்டுகளைப் போல. உதட்டுச் சாயம் அப்பிய வெள்ளைக்கா ரிச்சியின் இதழ்களைப் போல." (l)
"அநித்திய உலகில் நித்திய அழகினை வடிவெடுத்து விடும் வேட்கையில் மனதைப் புதைத்து, ஸ்வப்பன லோகத்தில் மிதக்கும் உணர்ச்சியில் அவஸ்தைப் பட்டு, வண்ணக் குழம்புகளில் தோய்ந்து, காய்ந்து, ஒட்டிய மயிர்களைக் கொண்ட துரிகையுடன் சிலை யாக நின்ற அவனை அழைப்பது யார்..? மாயை மறைந்து, அக்கினியில் உருகிய மெழுகாகத் தசைப் பிரதேசங்கள் பசை உலர்ந்து - வெறும் எலும்புக் கூடு...! இவ்வளவு காலமும் அழகு என்று தன் கற்பனைப் பசளைகளையெல்லாம் வரட்டி வளர்த்த அறு வடை எலும்புக்கூடு.
சூனியத்தின் சூனிய விளிம்பாய் சூனியமுற்ற மனக் கிறக்கம் சற்றே விழிப்புக்கொள்ள.
(2)

Page 70
136 மு. தளையசிங்கம்
“தாமிரம் கலந்த தங்க விக்கிரகம் போன்ற மேனி. தளிர் கொடிவாக்கில் ஒசிந்து ஒசிந்து நடக்கும் அந்தச் செக்கச் சிவந்த மேனியில் இறுகக் கட்டப்பட்ட குறுக்கை, குறுக்கைக்கு மேலாகத் தெரிந்த சதைப் பிராந்தியம், மொழுமொழுவென்று. 影列
w (3)
"மேலெழுந்து குமுறும் ஆத்திரப் பிளம்புகள், நரும் பலில் சுவாலையிட கால்கள் தரையை உராய்ந்து அழுத்துகின்றன. அந்தராத்மாவுள் ஒரு பாவ காரி யத்தை நேரே நின்று பார்க்கும் குற்ற உணர்வு விஸ்வரூபமெடுக்கிறது."
(4)
'மனம் மேடை, அங்கு கேள்விகள் நித்திரை முறிந்து எழுந்து ஆணி அறைந்த பாதரட்சைகளில் ஏறி நின்று கூத்திடுகின்றன. அவை கேள்விகளல்ல, கேட்டவர்களுக்கு அவை கேள்விகள்தான், ஆனல் அவருக்கு கோர்வையாய் நெளியும் புழுக்கள். அடுத்த வர் வாயில் யோசனையற்று, திடீர் திடீர் எனப் புறப் பட்ட வார்த்தைக் குவைகளுக்கு தனக்குள் தானே மத்தாப்பு வர்ண அர்த்தங்களை ஜனத்து, அவற்றின் கூட்டில் உயிர் கொடுத்திருக்கிருர், அவை அப்ப அப்ப வெறிகொள்ளும் கூத்தாடிகள். p
"அசிங்கமாய் முகம் மாற வாயை அருவருப்பில் இழித்து தலையைச் சரித்து வெட்டி வார்த்தைகளைப் பற்களில் நறுக்கினர்.
'மனக்கொதிப்பில் திரண்டு புரண்டு நாக்கின் தெறிப்பில் உருப்பட்டு உதடுகளில் போரிட்ட வார்த்தை. o
(5)
"நித்திய நிம்மதிக்கு ஆசைப்பட்டு, அலை காற்றுச் சருகாய் அலேகிறேன். வேதனை என்ற - ஏமாற்றம் (இழந்த இன்பத்திற்கு நான் சூட்டும் பெயர்) என்ற

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 37
சுடு மணலில், உள்ளத்தின் விளிம்பின் ஜடத்தின் சூட்சுமத் தன்மைகளிலெல்லாம், போலியாக, நிச மென்ற மயக்க நிழற் காட்சியை, அலைபாய்ச்சும் கானல் நீரை இன்னும் நம்பிக்கொண்டே நடக் கிறேன். பசுந்தரைகளும் நீரூற்றுகளும் என்று நான் கற்பித்தவையெல்லாம், சுடுமணலின் சூன்ய வெளி. கரையே தெரியாத சுடுமணலின் சுன்யவெளி. ஏதோ நினைவுகளில் - இரைதேடும் தோழியின் பாவத்துடன் நாட்களை உருட்டிக்கொண்டு, வாழ்க்கை வழியில் ஒண்டிப் பிரயாணத்தில் ஈடுபட்டிருக்கின்றேன்."
)6( ܖ 'ஊசிமல்லிகைப் பூவின் வாசியில் நெருப்புக்குச்சியின் நுனியில் தீயின் நாக்கு பரதம் பயில்கிறது. ஆடல் அணங்கை ஆலிங்கனிக்கத் துடிக்கும் நாயகனே போல வெடியின் முகையிற் திரி.' "தந்தையையும் தனையனையும் இரு அந்தங்களில் சுமந்துகொண்டு, பன்னிரண்டு ஆண்டுகளை அனயாச மாக உதறிவிட்ட முதுமை இலச்சினைகள் கரீமின் சிட்சையில் மறைவு கொண்டிருக்கும் பெருமிதத்தில் மார்க்கண்டேய வரம் பெற்ற மங்கையின் தருக்குடன் தோணி வழுக்கிச் செல்கிறது."
(7)
"மண்ணின் செழிப்புச் சினைப்பில், அனுபவ வேர் இறக்கி, ஆனலும் அவாந்தர வெளியிலே எண்ண இலைகளைப் பரப்பி, கற்பனைச் சுகத்திலே திளைத்து - தளிர் தவிப்பில் விண்ணுேக்கிப் புதிய கற்பனைகள் காலச் சுழற்சியிலே பழுத்து, பூட்டறுந்து புழுதியிலே Dou...... மீண்டும் புதிய துளிர்களும் புதிய கற்பனை களும், கற்பனை இலைகளும், இலைக் கற்பனைகளும். ஒன்றின் ஒன்றிற்கு மற்றதின் இணைப்புக் கூடக் கற்பனைதான்.
(8)
'மெழுகுவர்த்தி சமைத்துள்ள வேள்விக் குண்டலத் திலே ஜனித்து, இருட்பாளத்தைப் பிளந்து, சென்னி யிலே ஈஸ்பர நாமத்தைத் தாங்கி, தியானப் பொலி வுடன், சுடர் பிரகாசித்துக்கொண்டிருந்தது.
(9)

Page 71
138 மு. தளையசிங்கம்
'பட்சியும் வெடித்து, அதன் மையமான இதயமும் வெடித்தது. இரத்தம் வெள்ளக் காடாகி, உலகத்தை அதற்குள் அமிழ்த்துகின்றது. அமுங்கி பிராணு வஸ்தைப்படுகின்றது உலகம். இரத்த வெள்ளம் உறைந்து பாளம் பாளமாய் வெடிக்கிறது. ஒவ்வொரு இரத்தப் பாளமும் ஒவ்வொரு மனிதத் தலையாக மாறு கிறது. சருகின் பட்சியில், பட்சியின் இதயத்தில், இதயத்தின் இரத்தத்தில், இரத்தத்தின் பரளத்தில் மனிதத் தலைகள் வளர்கின்றன. எண்ண இயலாத தலைகள். எறும்பு வெள்ளத்தையும் விஞ்சும் தலைகள். பிண்டமற்ற வெறும் தலைகளின் ஆரவாரம். அந்தத் தலைகளுக்குத் தலைவனக ஓர் எலும்புக் கூடு சாயலில் ஒவியத்தைப் பிளந்து, அழகின் அழகியாய் திகழ்ந்த தங்கநிறத் தனக்கட்டுக்காரியின் எலும்புக் கூடா? எலும்புக் கூடு அவன் முன்னுல் நிண நெடில் நாறும் ವ್ಹಿ-। நிற்கிறது.” (பொன்னுத்துரையின்'குமிழ்"
96)G).
(10)
'குலைந்தவிழ்ந்து வழியும் அவளின் நீளக் கருங் கூந்தலை உணுவிப் பார்க்கிருர். அது அவள் முதுகுப் புறமாக வழிந்து கிழிந்த ஊற்றைப் பாவாடை விளிம்பு வரை தொட்டு நிற்கிறது. எண்ணைச் சிக்க லால் காகக் கூடாகத் திரண்டிருக்கும் ஊற்றைச் சரடு கள், கழுத்தின் வட்ட வரிகளை மறைத்துக் கீலம் விட்டுத் தெரிகின்றன. பசிக்களையின் மிகுதியால் நையித்து அவள் முகத்திலிருந்து சளியும் வியர்வைத் துளிகள் அந்த ஊற்றைச் சல்லடைகளைத் துரட்டிக் கீழே தள்ளி நெஞ்சுச் சட்டைக்குள்ளே சரணுகதியடையச் செய் கின்றன."
(11)
இவற்றை விட நல்ல உதாரணங்களை இதில் அக்கறைப் பட்டவர்கள் தேடி எடுக்கலாம். இன்று வெளிவரும் பெரும்பாலான கதைகளில் தட்டுப்படுபவையெல்லாம் அவையாகத்தான் இருக்கும்.

"முற்போக்கு எழுத்தாளர்களின் அருவருக்கத்தக்க காட்சிகள்
இதே ஒசையின் தேவைக்காகத்தான் இவர்களுடைய பெரும்பாலான கதைகளில் அருவருக்கத்தக்க காட்சிகள் அதிகமாக இடம் பெறுகின்றன. 'பிராண்டி', 'விராண்டி’ என்ற சொற்களைப் போல் "சீழ்', 'பீழை' என்ற சொற் களும் அவை சம்பந்தப்பட்ட காட்சிகளும் வர்ணனைகளும் இவர்களுடைய கதைகளில் அதிகமாக வருகின்றன. முக் கியமாக, "முற்போக்கு எழுத்தாளர்கள் என்று சொல்லப் படுபவர்களின் கதைகளில் இவை அதிகம். உதாரணத் துக்குச் சில.
'நெஞ்சுப் பற்கள் நரும்புகின்றன. வீட்டு வாசல் களிலே இலையான் மொய்க்கும் மலத் துணுக்குகளும், ஜல வடிசல்களின் வடுக்களும், அழுகிய பதார்த்த அழு கல்களும் நித்திய வாசமாகிவிட்டன. சிக்குப் பிடித்த தலைமயிரோடு பீழை சாறும் கண்களைத் துடைத்துக் கொண்டு அவர் முன்பாக ஒரு பிள்ளைத்தாச்சி குள்ள வாத்துப்போல் அசைந்து நடந்து வருகின்ருள். அங்கங்களை மூட முடியாமல் மேலும் கீழும் கிழி யுண்டும் நைந்தும் அழுக்கில் தேய்ந்து கிடக்கின்றது அவளுடைய ஆடை. கடவாய் அவிந்து, வீணிர் படிந்து காய்ந்துவிட்ட அயறுப் பொருக்குகள் வாய் அசைவில் உதிர்கின்றன."
(செ. யோகநாதன் - "கலைஞன்")
'கண் எதிரே ஒரு மரம். சாவில் சங்கமித்து, மொட்டை
பற்றி அம்மணமான சுள்ளிக் கிளைகளைத் தாங்கி நிற் கிறது. சுள்ளிக்கிளை நகத்தில் தன்னந் தனியனக ஒரு

Page 72
140 மு. தளையசிங்கம்
சருகு துடித்து நடுங்கிச் சுழல்கிறது. அநித்திய அழகின் அலைக்கழிவு.
பீழை சேர் கண்களுள் பீறிட்டெழும் அதிசயம். எலும்புக்கூட்டின் ஓங்காரச் சிரிப்பு. எலும்புக் கூடு, தசைப்பிடிப்பற்ற வெறும் எலும்புக்கூடு வாயைத் திறக்கிறது. தசை உக்கி உத்திரம் வற்ற, வரண்டு எஞ்சும் எலும்புக்கூடா கலை?”
(நீர்வைப் பொன்னையன் - "நிறைவு")
"ஸ்திரமான வெறுப்பின் வலது பாரிசத்தில் ஒட்டி மனத்தில் இலை அரிக்கும் எண்ணப் புழு. அது மயிர் முளைத்த புழு. வார்த்தைகளில் வழிந்து கழிநீர் உட்புகுந்து சீழாகி மஞ்சளாய்க் கட்டிபட்டு, நெஞ்சு கள் சிக்கிக் கொதிக்கின்றது.
e o es e a D e காலம் காலமாய் வார்த்தைகளும், செய்கை களும், நினைப்புகளும் மன உள் முதுகில் மொழி மொழியாய், கணுக் கணுவாய் நோண்டி, தோல் காய்ந்து, உள் மனந்து முரடுப்படும் காயங்களை நினை வின் விரல்களால் மீண்டும் நசிப்பதன் விளைவாய் முகம் வினடிக்கு வினடி வரம்பு கட்டி அல்லலுறுவது கண்ணிர்."
(பெனடிக்ற் பாலன் - 'குட்டி')
இவை சிலருக்கு பச்சை யதார்த்தமாகப் படலாம். ஆனல் அப்படிப் பட்டால் அந்த யதார்த்தம் பட்டினத்தடி களுக்கும் பெளத்த எழுத்தாளர்களுக்கும் சில புதிய existentialists எழுத்தாளர்களுக்குமுரிய யதார்த்தம். வாழ்க்கையையும் மனிதனையும் அவனது உடல் வலிமையை யும் ஆமோதிப்பதாகச் சொல்லப்படும் "முற்போக்கு" யதார்த்தத்துக்கு இவை முரணுனவை. அதாவது அவர்க ளுடைய சுலோகப்படி இவை decadent ஆன விசயங்கள், வர்ணனைகள். நம்முடைய முற்போக்குக் குஞ்சுகளுக்கு இந்த வித்தியாசங்கள் தெரியுமா? சரி, இவை வேறு திசை யில் வளர்க்கப்பட வேண்டியவை. அவற்றைப் பற்றிய

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 141
விசாரணையை இதோடு நிறுத்திவிட்டு திரும்பவும் இந்த வகையான நடையின் 'சூட்சுமத்துக்கு வரலாம்.
'சூட்சுமம்" முழுதும் அகஸ்தியரின் 'ஊற்றை'யில் தொக்கி
நிற்கிறது. இல்லை வெளிப்படையாகவே நிற்கிறது.
ஊத்தை என்பது ஊற்றையாக ஏன் எப்படி மாறுகிறதோ
அப்படியே, அதே காரணத்துக்காக மற்றவையும் தங்கள் ஒசையையும் உருவத்தையும் மாற்றிக்கொள்கின்றன. அதன்
காரணமாய் இரண்டு வார்த்தைகளில் சொல்லப்படும்
விசயங்கள் கூட அணுவசியமாக ஐம்பது வார்த்தைகளாக
இழுக்கப்படுகின்றன. ஆனல் மிஞ்சுவது அர்த்தமல்ல. வெறும் ஒலிக் கூட்டங்களைக் கேட்கும் ஒரு பரிதாப நிலை தான். ஆனல் அதுதான் இவர்களுக்குக் கலையாக மாறி ஒரு மருட்சியைக் கொடுக்கிறது. “அவன் யோசித்தான்' என்ற சாதாரண உண்மை சென்னிக்குள் ஜனித்து, கபாலத் தின் நரம்புகளை உதைத்து, இதய வெளியில் குளம்போசை எழுப்பும் எண்ணக் குதிரைகளின் இழுப்பில் அவன் தன்னை மறந்து..." என்று முடிவில்லாத வார்த்தைச் சிலம்பமாக மாறிவிடுகிறது. நான் caricature பண்ணு கிறேன் என்று நினைக்கத் தேவையில்லை. இந்த நடையைப் பெரியதோர் சாதனையாக மதிப்பிடுவதுபோல், அதற்கோர் உதாரணமாகக் 'குட்டி’ என்ற கதையின் அட்டையில் அச் சிடப்பட்டிருக்கும் ஓர் வசனத்தைப் பார்த்தால் போதும்.
"அவன் கேள்வியின் உள் வர்ணம் நீளிய சுடரில் அவள் மன ஓடு வெடித்து, நகம் முளைத்த கோள உயிர் பிதுங்கி, அதுவும் அச்சுடரில் அவிந்த துடிப்பில் உருண்டு, வாழ்க்கையின் காய் முனைகளை நக முனை களால் கிளறி, கிளறி அளவில் தனக்குள் தானே அழிந்து, காற்றின் சடமாய்க் கணதிப் பட்டு, பட்டம் ஆடி நெஞ்சு வெளியில் திசையின்றி அந்தரமாய்க் கனக்கின்றது."
அரைவாசி படிக்கும் முன்பே காதைப் பொத்தத் தூண் டும் ஒரு வசனம். இது கலையா? மலிவான கற்பனவாதத்

Page 73
142 மு. தளையசிங்கம்
துக்குரிய வார்த்தைகள் இவை. இவற்ருல் அர்த்தம் எது வும் எழுவதில்லை. மாருக, ஓர் இசைக் கூட்டந்தான் கேட் கிறது. அதற்காக எழுதப்படுபவை எல்லாம் வெறும் "யதார்த்தமாகத்தான் எழுதப்பட வேண்டும் என்று நான் கூறவில்லை. சொல்லப்படும் விதமும், பாவிக்கப்படும் வார்த்தைகளும், சந்தர்ப்பங்களும், கலையையும் கருத்தை யும் கொடுக்க வேண்டுமென்பதே என் கருத்து. முதல் தோற்றத்தில் நம்ப முடியாமல் யதார்த்தத்துக்குப் புறம் பாகத் தெரியும் வசனங்கள் கலையையும் ஆழ்ந்த கருத்தை யும் கொண்டுள்ளவையாக இருக்கலாம். உதாரணத்துக்கு தகழி சிவசங்கரம் பிள்ளையின் "செம்மீனி"லிருந்து ஓர் பந்தி.
"கடற்பாம்புகள் அவனுடைய தோணிக்குள் நுழைந் தன. கருநீலப் பின்னணியில் எல்லையின்றி விரிந்து கிடக்கும் வெள்ளித் தகடுகளின் மீதெல்லாம் அவை இழைந்தோடிக்கொண்டிருந்தன. தோணி விளிம்பில் வாலை மட்டும் ஊன்றிக்கொண்டு எழுந்து நின்றன சில. மீண்டும் நீரில் அவை விழுந்து மறைந்தன. தோணிக்குள் இரண்டு அரவுகள் ஒன்ருேடு ஒன்று பின்னிப் பிணைந்தபடி கிடந்தன."
இவை குறியீடுகளாய் வந்து கதையின் கருத்தை ஆழமாக்க உதவுகின்றன. மனேவியல் உண்மைகளை வெளிப்படுத்தக் கையாளப்பட்டிருக்கின்றன. இந்தப் பந்தியை மேலே குறிப்பிட்ட "குட்டி"யின் பந்தியோடு ஒப்பிட்டால் வித்தி யாசம் விளங்கும். முந்தைய பந்தியில், எப்படி ஒசைக்காக வேண்டி ஊத்தை என்பது ஊற்றையாக்கப்பட்டதோ அதேபோல் வெறும் அர்த்தமற்ற ஓசையை எழுப்புவதற் காகவே எழுதப்பட்டது. அதில் அர்த்தமும் இல்லை, கலை யும் இல்லை. பிந்தைய பந்தி சாதாரண வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு கருத்தை வெளியிடக் கையாளப் பட்டிருக்கிறது. அதோடு கனவுக் காட்சிகள் எப்படி ஆச்சரியப்படும் முறையில் கலை நிறைந்த உருவ அமைப்பு

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 143
களைக் கொண்டுள்ளனவோ அதேபோல் அத்தகைய அமைப்பையும் அது பெற முயல்கிறது. ஆனல் நம் நாட்டு எழுத்தாளர்களுக்கு இவை தெரியவில்லை. வெறும் அடிமை மனப்பான்மையோடு அறியாமையின் காரணமாய்ச் செய்யப்படும் அபிநயந்தான் அவர்களுக்குப் பழக்கமாக இருக்கிறது. அர்த்தமற்ற வெறும் வார்த்தைக் குவியல்கள். 56க்குப் பின் வந்த யதார்த்தப் பார்வை இந்த வகையான நடையை எப்படி ஈன்றது என்று யோசிக்கும்போதுதான் பொன்னுத்துரையின் பங்கும் பொறுப்பும் தெரியவரும். இதுதான் பொன்னுத்துரையின் புதிய பண்டிதம் ஏற்படுத் திய முக்கிய விளைவு. நம் நாட்டு இளம் எழுத்தாளர்களின் பக்குவமின்மைக்கும் பார்வை ஆழக் குறைவுக்குமுரிய ஒரு முத்திரையாக அது இப்போ மாறிவிட்டிருக்கிறது. ஒரு சர்வாதிகார அமைப்பில் ஏற்படக்கூடிய வார்த்தை விளைச் சல், வார்த்தை வித்தை, பாஸ்டர் நாக் கூறும் "Power of glittering phrases" என்பது இதை விளக்குவதற்கு உதவும். இந்த நடை மலிந்துவிட்ட இத்தகைய நம் இலக்கியச் சூழல் இன்னும் சில வருடங்கள் நீடிக்குமானல் இதற்கு எதிராக மிகச் சாதாரணமான வார்த்தைகளில் எழுதுவது கூட ஒரு பெரும் கலைப் புரட்சியாக மாறிவிடும். அது மட்டுமல்ல, விசயங்களுக்கும் பொருட்களுக்குமுரிய மிகச் சாதாரணமான சொற்களையும் கூட நம் எழுத்தாளர் களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய நிலையும் வந்து விடும். ஹிட்லரின் சர்வாதிகாரம் ஏற்படுத்திய வார்த்தைத் திருகல்களிலிருந்து திமிறித் தப்புவதற்காக ஒர் கவிஞன் திரும்பவும் அரிச்சுவடி படிப்பதுபோல் பழைய பெயர் களையும், பழைய சொற்களையும் ஒப்புவிக்க முயலும் ஓர் புரட்சிக் கவிதையை இங்கே நினைவுபடுத்திக்கொள்வது சுவையாக இருக்கும், Gunter Eich கவிதை ஒன்று.
இது எனது குல்லா. இது எனது கோட். இதோ லினன் பைக்குள்

Page 74
144 மு. தளையசிங்கம்
இருப்பது எனது சவரப் பெட்டி. இது எனது குறிப்புக் கொப்பி. இது எனது நில விரிப்பு, இது எனது துவாய். இது எனது நூல் கயிறு.
m (Encounter - September, 1963).
பொன்னுத்துரையின் இந்த எழுத்து நடைக்குரிய இன்றைய சர்வாதிகாரத்துக்கு எதிராக, நம் எழுத்தாளர் களை எதிர்காலத்தில் மேற்கூறிய கவிஞருக்குரிய பாணியில் எழுதத் தாண்டுமானல் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அந்தளவுக்கு இன்று நம் இளம் எழுத்தாளர்கள் பொன் னுத்துரையை அடிமைத்தனமாக அபிநயிக்கிருரர்கள்! அந்தளவுக்கு அடிமைத்தன ஒருடை0ப்பாடு!
ஆனல், அது எப்படி ஏற்பட்டது? பொன்னுத்துரையோடு அது நிற்காமல் எப்படி அவரை ஒரு முழு விரோதியாக நினைக்கும், பொன்னுத்துரையையே சாடும், இந்த முற் போக்குக் குஞ்சுகளையும் அது பற்றிக்கொண்டது?
அந்தக் கேள்வி முற்போக்கு’க் கூட்டை விளக்கக் கூடியது. சுருக்கமாக அதை இப்படி வகைப்படுத்திக் கூறலாம்:
(1) முற்போக்கு’க் கூட்டுக்கு முற்போக்கு இலக்கியம், "சோஷலிஸ் யதார்த்தம்’ ‘தேசிய இலக்கியம்’ என்பவை எப்படிப்பட்டவை என்பது செவ்வையாகத் தெரியாது. (2) முற்போக்கு சிருஷ்டி எழுத்தாளர்களுக்குப் பார்வை ஆழம் போதாது. (3) அதை நிவர்த்தி செய்ய அவர்களது விமர்சகர்களும் முயல்வதில்லை. கட்சியிலுள்ள எல்லோரை யும் எப்படியாவது போற்ற வேண்டும் என்ற எண்ணம் உண்மையான விமர்சனத்துக்கு இடம் வைப்பதில்லை. அதோடு இந்த விமர்சகர்களுக்கும் பார்வை அந்தளவு இல்லை. (4) "முற்போக்கு’க் கூட்டிலிருக்கும் பழைய எழுத்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 145
தாளர்களின் சிருஷ்டிகள் அவர்களது இளம் எழுத்தாளர் களையே கவர முடியாதவை. முடிந்திருந்தால் இளம் எழுத்தாளர்கள் பொன்னுத்துரையைப் பின்பற்றியிருக்க மாட்டார்கள். (5) முற்போக்கு" சர்வாதிகாரம் பொன் னுத்துரையை வெளியே ஒதுக்கிவிட்டாலும் அவரைத் தான் இலக்கிய ரீதியில் பின்பற்றியிருக்கிறது. "முற்போக்கு" சர்வாதிகாரத்துக்குரிய சிருஷ்டி வெறுமையை மறைப் பதற்குப் பொன்னுத்துரையின் இலக்கியச் சாயல்தான் கையாளப்பட்டிருக்கிறது. (6) முற்போக்கு இளம் எழுத் தாளர்களிடம் (ஏன் எல்லோரிடமும்தான்) இருப்பதெல் லாம் பெரும்பாலும் வளரிளம் பருவப் பக்குவமின்மையும் தங்கள் கட்சிதான் சிறந்ததென்ற ஒரு famaticismமும்தான்.
ஆருவது பண்பை விரிவாக விளக்குவது நல்லது. அதற்கு உதவியாக யோ, பெனடிக்ற் பாலனின் "குட்டி'யை எடுத் துக்கொள்ளலாம். பெனடிக்ற் பாலன் பொன்னுத்துரை யின் நடையை மட்டும் பின்பற்றுவதோடு நின்றுவிடவில்லை. பொன்னுத்துரை "தீ"யில் கையாண்ட பந்தி அமைப்புமுறை யைக் கூடக் காரணந் தெரியாது கையாண்டிருக்கிரு?ர். பொன்னுத்துரை "தீ"யில் மூன்று வகையான அம்சங்களைக் காட்டுவதற்காக மூன்று அளவான பந்திகளைக் கையாண் டுள்ளார். ஒன்று, நடந்த கதையைப்பற்றிய விவரணம். இரண்டு, அப்போது கதாநாயகனுக்கு ஏற்பட்ட நினைவு கள். மூன்று, நடந்த கதையைத் திரும்ப நினைக்கும்போது, எழுதும்போது ஏற்படும் நினைவுகள். ஆனல் பெனடிக்ற் பாலன் அவையொன்றையும் புரிந்துகொள்ளாமல் பந்தி அளவை மாற்ற வேண்டும் என்பதற்காக, சும்மா மாற்றுவ தினலேயே கலை ஏற்பட்டுவிடுகிறது என்ற அறியாமையின் காரணமாய் மாற்றுகிருர், நாலைந்து வகையான பந்திகள் "குட்டி'யில் இடம் பெறுகின்றன. ஆனல் என்ன அடிப் படையில்? பதில், திரும்பவும் 'ஊத்தை' என்பது "ஊற்றை" யாகிய கதைதான். நிற்க, அடுத்தது "குட்டி' என்ற நாவல் பொன்னுத்துரையின் கதை நடையை நக்கல் செய்ய

Page 75
46 மு. தளையசிங்கம்
எழுதப்பட்டதாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு parody தான். அப்படி அது பாவிக்கப்பட்டிருந்தால் அதன் முக்கியத்துவம் நிச்சயமாக நின்றுபிடிக்கக் கூடியதாக மாறிவிட்டிருக்கும். ஆனல் தெரியாத்தனமாக ஒரு parodyஐ எழுதிவிட்டு அதைத் தனித்தன்மை கலந்த ஒரு புதிய சிருஷ்டியாகக் கருதும்போது அது வேடிக்கையையும் தாண்டிய விசித்திரத்தின் உச்சியைத் தொட்டுவிடுகிறது. அதோடு ஜேம்ஸ் ஜொய்ஸின் பெயரையும் இழுக்கும்போது திரும்பவும் காதைத்தான் பொத்திக்கொள்ள வேண்டும். பொன்னுத்துரை அப்படி என்ன புரட்சியைச் செய்து விட்டார் என்று எதிர்க்கும் முற்போக்கு எழுத்தாளர்கள் பொன்னுத்துரை செய்த புரட்சியின் உண்மையான தர மான பகுதியை விட்டுவிட்டுப் பிழையான பகுதியைப் பின்பற்றுவதுதான் விசித்திரமாக இருக்கிறது.
இதோடு பொன்னுத்துரையைப்பற்றிய குறிப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும். இதுவரை சொன்னவற்றி லிருந்து அறிந்தவற்றைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டு மானல் இப்படித்தான் சொல்ல வேண்டும். நம் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியை விளங்கிக்கொள்வதற்கு எப்படி "முற்போக்கு'க் கூட்டினரைத் தெரிந்துகொள்ள வேண்டி யிருந்ததோ, அப்படி, பொன்னுத்துரை என்ற ஒரு தனிப் பட்ட பேர்வழியையும் தெரிந்துகொள்ள வேண்டியிருக் கிறது. ஆனல், பொன்னுத்துரையை விளங்கிக்கொள்ளும் போது ஏழாண்டு இலக்கிய விவகாரங்களை மட்டுமல்ல, "முற்போக்கு’க் கூட்டினரையும் விளக்கிக்கொள்ளலாம். அதனல்தான் பொன்னுத்துரையை இந்தளவுக்கு நான் ஆராய முயன்றேன். ஆனல் பொன்னுத்துரையைப் பற்றிய பார்வையை முடிக்கும்போது அவருக்குச் சாதக மாகவே முடிவெடுக்க வேண்டும். அப்படி முடிவெடுக்க வேண்டும் என்ற "மரியாதை"க்காக அல்ல, நான் அப்படிக் கூறுவது. அப்படி முடிக்காமல் இருக்க முடியாது. பொன்னுத்துரையின் குறைகளை அந்தளவுக்கு ஆராய்ந்த

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 147
தும் அதனல்தான். பொன்னுத்துரை புதிய பரம்பரைக் குரிய ஏழாண்டு எல்லைக்குரிய ஒரு major எழுத்தாளர், major எழுத்தாளர் என்று குறிப்பிடக்கூடிய வகையில் புதிய இலக்கியத்துறைகளில் நம் நாட்டில் இதுவரை யாராவது தோன்றியிருந்தால் பொன்னுத்துரையின் குறைகளைக் காட்டுவது, அவருடைய நிறைவுகளை அழுத்துவதற்காகவேதான். அவற்றைப்பற்றிய உணர்வை அவரிடமே எழுப்புவதற்காகத்தான். வளர்ச்சிக்குத் தேவை யாக முதலில் குறைகளைத் தெரிந்துகொள்ளும் திறமை இருக்க வேண்டும். (இந்த இடத்தில் வேறு ஒன்றை யும் கூறுவது பொருத்தம். "ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி" என்று கூறிவிட்டு இக்கட்டுரைத் தொடரில் இந்த எல்லைக் குரிய குறைகளைத்தான் அதிகமாகக் காட்டியிருக்கிறேன். அப்படியென்றல், அது எப்படி வளர்ச்சியாகும்? என்ற கேள்வி எழக்கூடும். ஆனல் வளர்ச்சி என்பது அந்தப் பண்பிலேயே, குறைகளைக் கண்டுபிடிப்பதிலேயே இருக் கிறது என்பதுதான் என் எண்ணம். எப்படி ஆத்மத் தேடலுக்கு சுய விசாரணை அவசியமோ அப்படி, இது வரை இல்லாத வகையில் இப்போது இத்தகைய இலக்கிய விசாரணைகள் இங்கு ஆரம்பித்திருக்கின்றன. அது ஒன்று மட்டும் போதும் நாம் வளர ஆரம்பித்திருக்கிருேம் என்பதைக் காட்டுதற்கு.) பொன்னுத்துரை பல வகை களில் தன் திறமையைச் செலுத்தக்கூடிய ஓர் பேர்வழி, நாடகம், உருவகக் கதை, நாவல், கட்டுரை, சிறுகதை போன்ற எல்லாத் துறைகளிலுமே தன் கைவரிசையைக் காட்டக் கூடியவர். சாதாரண வாழ்க்கை விசயங்களையும் அவற்றிலுள்ள உண்மைகளையும் பற்றிய அவருடைய அவதானம் மிகப் பிரமாதமானது. அப்படிப்பட்ட கதை களை அவர் எழுதும்போதுதான் உண்மையாக அவர் தன் உச்சங்களைக் காட்டுகிருர், சாதாரண மக்களின் பேச்சு வழக்கைக் கையாள்வதிலும் அவருக்கு நிகர் அவராகவே இருக்கிருர். "பங்கம்" போன்ற கதைகள் பிரதேசப் பேச்சுவழக்கைக் கையாள்வதிலும் சமகால சமூக ஒட்டங்

Page 76
148 மு. தளையசிங்கம்
களைக் கலையோடு படம் பிடித்து நிரந்தரமாக்கிவிடுவ திலும் நம் ஈழத்து இலக்கிய உலகில் நிகரற்றவையாக நிற்கின்றன. பொன்னுத்துரை உலக இலக்கியத் தரத் தைத் தொடுவதற்கு ஒடிக்கொண்டிருக்கும் ஓர் எழுத் தாளன். அதை அடைவதற்கு அவர் செய்ய வேண்டியது, அவருடைய திறமை எப்படிப்பட்டது, எங்கு கிடக்கிறது என்பவற்றை அவர் கண்டுபிடிப்பதுதான். அதற்கேற்ற வகையில் அவர் தன் பார்வையை விரித்து ஆழமாக்கிக் கொள்வதுதான். அந்தக் குறைகள்தான் அவரை அடிக்கடி தாக்கிவிடுகின்றன. அவைதான் அவருடைய தேவைகள். காரணம், பெரும்பாலும் ஓர் 'misguided talent ஆகவே தான் அவர் இப்போ நிற்கிருர். ஆனல் குறை நீக்கப்படக் கூடியது. நீக்கப்பட்ட பின் எதிர்காலம் அவருடைய உண்மையான வளர்ச்சியையும் உச்சத்தையும் காட்டி
நிற்கும்.

சர்வாதிகாரத்தைக் கண்டு தப்பி ஓடியவர்
56க்குப் பின் வந்த புதிய பரம்பரையின் பார்வையில் இன்னுமோர் படி வளர்ச்சியைக் காட்டுபவர் தருமு சிவ ராமு. 56க்குப் பின் நம் இலக்கியச் சூழலில் புதிய வேகமும் அக்கறையும் பிறந்தன . நம் பழைய இலக்கியங்களைப் பற்றிய அறிவோடு வெளியே பார்க்கும் ஓர் ஒப்பிலக்கியப் பார்வை அழுத்தப்பட்டது. ஆனல் அத்தகைய பார்வை யைத் தேடுபவர்களாக அறிகுறி காட்டுபவர்கள் மிகச் சிலரே வந்திருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் மிகப் பிந்தியே வந்திருக்கின்றனர். அவர்களுக்கு உதாரண மாகச் சொல்ல வேண்டுமானல் முருகையன், கனக ரத்தினு, தருமு சிவராமு, மு. தளையசிங்கம் போன்றவர்களைச் சொல்லலாம். கைலாசபதி போன்ருேர் வெளிப் பார்வை யின் தேவையைக் காட்டினர்கள் தான். ஆனல் அதற்கு அவர்கள் முழு உதாரணமாக நிற்கவில்லை. உலக இலக்கி யங்களைப் பற்றி மட்டுமல்ல, பொதுவாக இன்று ஒர் சரா சரி உலக எழுத்தாளன் அக்கறை காட்டும் அத்தனை பல் வேறு துறைகளிலும் மேலழுந்தவாரியாகவாவது ஈடுபடு மளவுக்கு அவர்கள் தங்களைக் காட்டிக்கொள்ளவில்லை. அது வருவதற்கு முன்னரே தங்களை ‘முற்போக்கு' இலக்கி யம் என்ற ஒன்றுக்குள் சிறைப்படுத்திக்கொண்டனர். எனவே, அந்தப் பரந்த, விரிந்த, ஆழமான பார்வை தர்மு சிவராமு, மு. தளையசிங்கம், எஸ். சிவகுமாரன் போன் ருேர்களுடன்தான் பரவலாக ஆரம்பிப்பதற்குரிய அறி குறியைக் காட்டுகிறது. சுருங்கச் சொல்லின் சுய உணர் வுடன் சர்வதேசத் தரத்தைத் தொடுவதற்கும் அதற்கேற்ற ஒரு பார்வையைப் பெறுவதற்குமுரிய முயற்சிக்கு இவர்கள்

Page 77
150 மு. தளையசிங்கம்
தான் உதாரணமாக நிற்கிருர்கள் என்று சொல்ல வேண் டும். எஸ். சிவகுமாரனைப்பற்றி இங்கு ஒன்று குறிப் பிடப்பட வேண்டும். என் "விமர்சக விக்கிரகங்கள்' வந்த போது இருந்த சிவகுமாரனுக்கும் இப்போதுள்ள சிவ குமாரனுக்குமிடையே பெரிய வித்தியாசமிருக்கிறது. இவரைப்பற்றி விழாவின் வெட்டு முகத்தில்" நான் குறிப்பிட்டவை ஏனே அமுக்கப்பட்டுவிட்டன. பென டிக்ற் பாலன், செம்பியன் போன்றவர்களின் பரம் பரையில் இப்போ மிக ஆழமான பார்வையுள்ளவர் இவர் ஒருவரேதான். சிருஷ்டி இலக்கியத்தில் அவ்வளவு ஈடுபடுவதாகத் தெரியாவிட்டாலும் பழைய சிருஷ்டி எழுத்தாளர்களைவிட இவரிடம் கூடுதலான பார்வை ஆழம் இருக்கிறது. இவரிடம் இல்லாதவற்றுள் துணிச்ச லும், தன்னம்பிக்கையும் மிக முக்கியமானவை. இருந் தாலும், கடைசி விமர்சனத் துறையிலாவது இவர் எதிர் காலத்தில் நம் இலக்கிய வளர்ச்சிக்கு உதவுவார் என்பதே என் எண்ணம்.
நிற்க, தருமு சிவராமுவிடம் திரும்பவும் வரலாம். "முற் போக்கு' இலக்கிய சர்வாதிகாரத்தில் கனக செந்திநாதன் ஒத்துழைப்பவராக இருந்தார் என்ருல், எஸ். பொன்னுத் துரை ஒதுக்கப்பட்டவராக இருந்தார் என்ருல், தருமு சிவராமு தானகவே வெளியே, வெளிநாட்டுக்கே ஒடியவ ராக நிற்கிருர். Emigre, புரட்சியையும் அது கொண்டு வரும் சர்வாதிகாரத்தையும் கண்டு அதிருப்திப்பட்டு வெளிநாட்டுக்கு ஒடுபவர்கள் ஒரு நாளும் தங்கள் உள் நாட்டுத் தேவைகளுக்கு உதவுபவர்களாய் இருப்பதில்லை. அவர்கள் ஆத்திரத்தாலும் வெறுப்பாலும் பீடிக்கப்பட்டு, புரட்சியால் உள்நாட்டில் ஏற்பட்ட நல்ல பண்புகளைக் கூட ஒப்புக்கொள்ளாதவர்களாக மாறிவிடுகின்றனர். பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து தப்பி ஓடியவர்களும் சரி, ரஷ்யப் புரட்சியிலிருந்து தப்பி ஓடியவர்களும் சரி, அப்படி ஒரு மனநிலையைத்தான் காட்டுகின்றனர். உள்நாட்டுச்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 15
சர்வாதிகாரங்கள் ஆபத்தை விளைவித்திருக்கலாம். ஆனல் அவர்கள் நினைப்பதுபோல் நம்மை எதையும் செய்யா மல் விட்டுவிடுவதுமில்லை. தருமு சிவராமுவின் நிலை அப்படித்தான். தருமு சிவராமு, ஈழத்து இலக்கிய விவ காரங்களிடமிருந்து தப்பி ஓடிப்போய் இந்திய எழுத் தாளர்களிடம் அடைக்கலம் புகுந்திருக்கிருர், (மு. தளைய சிங்கத்தைப் போல் இங்குள்ள நிலையை இங்கிருந்தே எதிர்த்துத் திருத்தும் துணிவும் பொறுமையும் அவரிட மில்லை.) அதனல் 56க்குப் பின் ஈழத்தில் வந்த வளர்ச்சி யைப்பற்றிக் கொஞ்சமும் ஒப்புக்கொள்ளாதவராகவே அவர் மாறிவிட்டிருக்கிருர், இந்திய இலக்கியத் தரத்தா லும் மற்ற வெளிநாட்டுத் தரத்தாலும் இழுக்கப்படும் இவர் உள்நாட்டு நிலையை உணராதவராகத் தெரிகிருர்;
உணர அவர் முயல்வதில்லை. அப்படி ஒரு மனேநிலை! அவரைப் பொருத்தவரையில் தமிழ்நாடு, ஈழம் என்ற வித்தியாசமே இல்லையாம்! "தீ"பற்றி அவர் ‘எழுத்து' வில் எழுதிய மறுப்புக் கட்டுரையில் "தீ" என்ற நாவலின் பெயரையோ அதை எழுதிய பொன்னுத்துரையின் பெயரையோ அதைப்பற்றி எழுதிய மு. தளையசிங்கத்தின் பெயரையோ ஒரு தடவைகூட அவர் பாவிக்கவில்லை (அவற்றுக்குப் பதிலாக பிரஸ்தாப நாவல் போன்ற நீண்ட சொற்ருெடர்கள்தான் கையாளப்பட்டுள்ளன.) பாவிப்பதற்கு அவருக்கு மனம் வரவில்லை. அத்தனை மறுப்பு, அத்தனை ஆத்திரம், அத்தனை வெறுப்பு. இத் தகைய மறுப்பின் காரணமாய் அவரிடம் பார்வை
ஆழம் இருப்பினும் அதன் பயனை ஈழத்துத் தமிழ் இலக்கியம் பெற முடியாமலே இருக்கிறது. சர்வதேசத் தரத்தைத் தொட முயலும் முயற்சி சொந்தப் பிரதேசத் தைப்பற்றிய அறியாமையாக மாறிவிட்டால் ஆபத்தாக மாறிவிடும். அது ஒருவகை schizophrenia. தருமு சிவ ராமுவின் எண்ணங்களும் அபிப்பிராயங்களும் அப்படி ஒரு Schizophreniaவையே காட்டுகின்றன. அதனுல்தான் எந் தப் பின்னணியில் வைத்து "தீ"யின் முக்கியத்துவத்தை

Page 78
152 மு. தளையசிங்கம்
ஒரு மரபு உடைப்பாக நான் ஆராய்தேனே அதை அவரால் உணர முடியவில்லை. வேதாந்தத்தின் அடிப் படையில் "தீ"யை மறுக்க முயலும் அவர் வேதாந்தத்தின் அடிப்படையில் வெளியான முல்க்ராஜ் ஆனந்தின் “காம கலா'வுக்குக் கூட இங்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறதென் பதை உணரத் தவறிவிடுகிருர், கஜுராஹோ, கொனே ராக் கோயிற் சிலைகளை மட்டுமல்ல, அவற்றைப்பற்றிய நூல்களைக்கூடப் பார்க்க முடியாத நிலை ஈழத்துத் தமிழர் களுக்கு இருக்கிறது என்பது அவருக்குத் தெரிவதில்லை. அவர் யதார்த்தத்திலிருந்து விடுபட்டவராக நிற்கிருர், அதோடு பால் என்ற ஒரு துறையை மட்டுமே அடிப்படை யாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது என்று "தீ"யின் முன்னுரையில் எழுதப்பட்டிருந்தும் அதை மறந்து, ஆத்மீகத்தின் அடிப்படையில் பொன்னுத்துரையைப் பொதுப்படையாக எதிர்க்கும் தருமு சிவராமு ஆத் மீகத்தின் அடிப்படையில் பொன்னுத்துரை எழுதிய மற்ற கதைகளை மறந்துவிடுகிருர், அதே Schizophrenia. (தருமு சிவராமுவின் கட்டுரைக்குப் பதிலாக நான் எழுதிய கட்டுரை நம் இலக்கிய சர்ச்சைகளில் மிகச் சுவையான ஒரு பகுதியைக் காட்டியிருக்கும். ஆனல் எழுத்து' அதைப் பிரசுரிக்கவில்லை. மேல்நாட்டு இலக்கிய முறை களைக் கையாள்வதாகக் கூறும் ‘எழுத்து' அங்கு முக்கிய மாகக் கருதப்படும் ஒரு சிறந்த முறையைப் புறக் கணித்தது ஆச்சரியந்தான். சர்ச்சையை ஆரம்பித்த கட்டுரை ஆசிரியன்தான் கடைசியாக எழுதிச் சர்ச் சையை முடிக்க வேண்டும். ‘எழுத்து அதற்கு இடம் கொடுக்கவில்லை. கட்சிச் சாய்வு என்பது "எழுத்து'வுக்கும் இல்லாமலில்லை.) இருந்தாலும் தருமு சிவராமுவிடம் ஓர் ஆழ்ந்த கலையுள்ளம் இருக்கவே செய்கிறது என்பதை மறுக்க முடியாது. எப்படி ஒரு schizophrenia கீற்றுகள் அவரது எழுத்துகளில் (முக்கியமாக ஈழம் சம்பந்தப்பட்ட வையாய் வரும்போது) இருக்கின்றனவோ அப்படியே mysticismற்குரிய முத்திரைகளும் இல்லாமலில்லை. அத

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 153
ரூல்தான் தருமு சிவராமுவை எனக்கு அப்படிப் பிடிக் கிறது. ஆனல் அவர் சில சமயங்களில் அதிசய simplificationஇல் ஈடுபட்டுவிடுகிருரர். இதோடு அவரது எழுத் துகள் விளங்காமல் இருக்கின்றன என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். ஆனல் அதே சமயம், படிப்பவர்களின் பார்வை ஆழத்தையும் பொருத்திருக்கிறது என்று சொல் வதும் உண்மைதான். அதோடு அவருடைய எழுத்து களில் நம் நாட்டு சிருஷ்டி எழுத்தாளர்கள் பலருடைய கதைகளில் வராத கலையைக் காண முடியும் என்பதையும் கூறித்தான் ஆக வேண்டும்.
ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் தருமு சிவராமுவுக்கு உரிய இடம் ஓர் emigre என்ற காரணத்தால்தான். அது ஒரு தனி ஒட்டம். அதனுல்தான் இங்கு அவரைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.

Page 79
சர்வாதிகாரத்தை தனித்து நின்று எதிர்த்தவர்
தர்மு சிவராமு வெளியே ஒடியவர் என்ருல் மு. தளைய சிங்கம் அடியோடிப் (underground) பதுங்கியவர். பதுங் கிச் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்துவிட்டுப் பின்பு தாக்கியவர். ‘முற்போக்கு' இலக்கியச் சர்வாதிகாரத்தை எதிர்த்த உண்மையான முரளி, புரட்சிவாதி (rebel) இவரே தான.
இவர் விமர்சகரா?
நிச்சயமாக இல்லை. விமர்சனத் தரத்தைத் தொடும் போதெல்லாம் ஹிட்லரின் கோயபெல்ஸ், குவாய் நதிப் பாலம் என்றெல்லாம் மிக்க உயர்வு நவிற்சியாக எழுதி வேண்டுமென்றே அதைக் குலைப்பவர். வேண்டு மென்றே - அது கவனிக்கப்பட வேண்டும். காரணம், விமர்சகராக இருப்பதல்ல இவரது நோக்கம். கட்டுரைகள் எல்லாம் ஒரு எழுத்தாளனின் சுய விளம்பரங்களே’.
இவற்றைப் படித்தவுடன் சிலர் துள்ளிக் குதிக்கலாம். அப்பாடா ஒர் ஆபத்தைத் தட்டிக் கழிப்பதற்கு ஒரு சாட்டு கிடைத்துவிட்டதே என்ற சந்தோசத்தில். “அவசரக் குறிப்புகள்" என்ற அடைமொழி ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றின் மூலம் ஆசிரியர் சொன்ன வற்றைப்பற்றி ஒன்றும் கவலைப்படாது எதிர்க்கும் சில ருக்கு இது இன்னும் உதவக்கூடும். இருந்தும், அவர்களைப் பற்றி இங்கு கவலைப்படத் தேவையில்லை. என்ன வகை

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 155
யான வார்த்தைகளைக் கொண்டும் அவர்களைத் திருப்திப் படுத்த முடியாது.
மு. தளையசிங்கம் 56ஐ ஒட்டி எழுத ஆரம்பித்தார். "முற் போக்குக் கூட்டின் உண்மையான சர்வாதிகாரத்துக்கு முந்தியவர். இவரது முந்தைய கதைகள் பெரும்பாலும் தர மற்றவை. ஆனல் "அருளி மொட்டு’, ‘பெப்ரவரி-4" போன்றவை தரமானவை மட்டுமல்ல, 56க்குப் பின்னர் வந்த பரம்பரைக்குரிய சிறந்த கதைகளில் சில என்று எடுக் கப்பட வேண்டியவையுங்கூட. ‘புதுயுகம் பிறக்கிறது" என்பதோடு இவருடைய "புதுயுகம் ஆரம்பமாகிறது. ஆனல் புதுயுகத்துக்கும் பழைய யுகத்துக்குமிடையில் இவர் சில காலம் - ஏறக்குறைய இரண்டு மூன்று வருடங்க ளாக - வேண்டுமென்றே பதுங்கிக் கிடந்தார். அந்த இடைக்காலத்தில் இரண்டுக்கு மேற்பட்ட நாவல்களையும் பல சிறுகதைகளையும் எழுதிக்கொண்டே இருந்தாலும் எதையும் பத்திரிகைக்கு அனுப்பியதில்லை. அந்த மெளன மும் "முற்போக்கு சர்வாதிகாரத்தின் உச்ச வளர்ச்சியும் ஒத்த காலத்தவை. கதைகள் பிரசுரிப்பதற்காக வேண்டி சிலருக்கு வால் பிடிப்பதையும், பிரபல்யத்துக்காக வேண்டி தனக்குப் பிடிக்காத ஒரு கட்சிக்குள் தன்னைத் திணித்துக் கொள்வதையும் அவர் விரும்பவில்லை. அதனல் மெளனம். ஆனல் அந்த மெளன இடைவெளியில் அவரது பார்வை வளர வளர மற்றவர்கள், மற்ற பத்திரிகைகள், விமர்சகர் கள் எல்லோரும் ஒரே இடத்தில் நிற்பதையே அவர் உணர்ந் தார். அதே வகையில் இன்றைய நிலையில் ஒரு தரமான எழுத்தாளனின் சிருஷ்டிகளுக்கு அரங்கமைக்க நம் நாட்டுப் பத்திரிகைகளுக்குத் தரம் போதாது என்றும் முடிவு கட்டிக்கொண்டார். அது மட்டுமல்லாமல் 56க்குப் பின் வந்த இலக்கிய வேகமும் மெல்ல மெல்ல ஒரு கட்சியின் இலக்கியமாக இறுகி ஒரே ரகமான மந்த நிலையில் வீழ்ந்து உண்மைகளையும் அந்த ஒருமைப்பாட்டுக்குள் திணித்துத் திருக முயல்வதையும் அவர் உணரத் தொடங்

Page 80
156 மு. தளையசிங்கம்
கினர். அதே நிலையில் மெளனமாக இருந்து தன் சிருஷ்டி களைப் பத்திரிகை எதிலும் வெளியிடாமல் நூல் வடிவங் களாக வெளியிட்டு புரட்சி செய்யக் காத்திருந்தார். அவற்றுக்காக முதலில் கட்டுரைகள் எழுதி வழிவகுக்க வேண்டியவராக சூழலால் நிர்ப்பந்திக்கப்பட்டார். அந்த வகையில் "முற்போக்கு' சர்வாதிகாரம் முழு உண்மையை யும் நீதியையும் நியாயத்தையும் தன் கட்சிக்குள்ளேயே அமுக்க முயன்றபோது அவை திமிறிக்கொண்டு மு. தளையசிங்கம் மூலம் வெளிக்கிளம்பின என்றும் சொல்ல லாம். "முற்போக்கு' சர்வாதிகாரம் ஆரம்பத்தில் நம் இலக்கிய வேகத்துக்கு உதவினலும் பின்னர் படிப் படியாக அதைச் சிதைக்கக்கூடிய வகையில் ஒருமைப்பாட்டையும் யந்திர இறுக்கத்தையும் புகுத்தியபோது விடுதலை சேர்ந்த ஒரு இளகலைக் (thaw) கொண்டு வருவதற்கு இவர்தான் உதவியிருக்கிருர் எனலாம். இறுக்கமாக மாறியதோடு எல்லாராலும் அதுவே நியதி என்று ஏற்றுக்கொள்ளப் பட்டும் இருந்த ஒரு நிலையிலிருந்து மாற்றம் தேடும் கலைஞன் தன்னை வெளிக்காட்டுவதற்கும் தன்னை ரசிக்கச் செய்வதற்கும் ஏற்றவகையில் புதிய சூழலையும் வழிகளை யும் ஏற்படுத்த வேண்டியவனகிவிடுகிருன், இலக்கிய விவகாரங்கள் என்று நடத்தப்படும் கூட்டு வழிபாடுகளும் விமர்சனம் என்று செய்யப்படும் முதுகு சொறிதலும் சாதனையாகப் போற்றப்படும் மலிந்த சரக்குகளும் ஏற் படுத்திய ஒரு மந்த நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே இவர் கட்டுரைகள் எழுதத் தொடங்கினர். அந்த வகையில் இவருடைய கட்டுரைகள் ஒரு புதிய போக் குக்குரிய விளம்பரங்களே. ஆனல் அந்த விளம்பரங்கள் உண்மையின் பக்கம், தரத்தின் பக்கம். அவர் உண் மையை விரும்புவதனல்தான் "முற்போக்கு’க் கூட்டி லுள்ள தனிபபட்ட பலரின் திறமையையும் அதே சமயம் அவர் ஒப்புக்கொள்ள மறுப்பதில்லை.
மு. தளையசிங்கத்தின் உண்மையான நோக்கத்தையும் போக்கையும் விளங்குவதற்கு இவரை இக்கட்டுரைத்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 157
தொடரில் குறிப்பிட்ட மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். உண்மையையோ தரத்தையோ மனசாட்சியின் குறுகுறுப்பையோ நீதியையோ நியாயத் தையோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெறும் பிர பல்யத்தையும் பிரசுர வசதிகளையுந்தான் இவர் தேடியிருந் தால் அப்போதைக்கப்போது அதிகாரத்தை அனுபவிப் பவர்களோடு இவர் ஒத்திழைத்திருக்கலாம். கடைசி கனக செந்தியைப் போலாவது இடைக்கிடை விட்டுக் கொடுத்திருக்கலாம். இவர் அப்படிச் செய்யவில்லை. அதி காரம் தேவையென்றல் மற்றவர்களின் தரத்தையும் கெட்டித்தனத்தையும் முற்ருக மறுத்திருக்கலாம். கொள் கைகளைப் பொருத்தவரையில் அடுத்தவர்கள் முரண்பாடு டையவர்களாக இருப்பினும் அவர்களிடம் திறமை இருக் கலாம் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் குதர்க்கம் செய் திருக்கலாம். அப்படியும் இவர் செய்யவில்லை, செய்ய விரும்பவில்லை. அல்லது நம் சூழலின் போக்கில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக முற்ருக அதைப் பார்க்கவே மறுத்திருக்கலாம். அடுத்த நாட்டு இலக்கியங்களிடம் அடைக்கலம் புகுந்திருக்கலாம். ஆனல் அப்டபடி ஒன்றும் செய்ய இவர் விரும்பவில்லை. மாருக, தானகத் தனியாகவே நின்று திசை திருப்ப முயல்கிருர். அதுதான் முக்கியம், இவரிடமுள்ள தன்னம்பிக்கையும் தன் திறமையைப் பற்றிய உணர்வுந்தான் இவரை வேறுபடுத்துகிறது. ஆனல் அதே காரணத்தால்தான் 56க்குப் பின் வந்த வளர்ச்சியைச் சில சமயம் அதிகப்படுத்தியும் இவர் கூறிவிடுகிருர். இவர் தன்னிடம் காணும் நம்பிக்கை யையும் வளர்ச்சியையும் சில சமயம் சூழலிலும் ஏற்றி அதனல் அதன் முக்கியத்துவத்தை அதிகப்படுத்து கிருர் என்று சொல்லவும் இடமுண்டு. தர்மு சிவராமு ஒரளவுக்கு உண்மையைத்தான் கூறுகிருர். உலகத் தரத்தை வைத்து ஒப்பிடும்போது நம் முயற்சிகள் மிக மிகச் சின்ன வையாகவே படக்கூடும். ஆனல் மு. தளையசிங்கம் தன் சொந்தத் தன்னம்பிக்கையின் காரணமாய் தன் சூழலிலும்

Page 81
158 மு. தளையசிங்கம்
அதிலுள்ள மற்ற எழுத்தாளர்களிடமும் அதை ஏற்றிக் காண முயல்கிருர், "முற்போக்கு’க் கூட்டைப்பற்றியும் கைலாசபதி, சிவத்தம்பி, காவலூர் ராசதுரை, செல்வ ராசன் போன்ருேரைப்பற்றியும் பொன்னுத்துரையைப் பற்றியும் இவர் தேவைக்கு மிஞ்சி அதிகமாகவே கூறு கிருர், புகழ முயல்கிருர் என்று கூறவும் இடமுண்டு. 56க்குப் பின் வந்த பரம்பரைக்கும் இலக்கிய வேகத்துக் கும் இவர் கொடுக்கும் முக்கியத்துவம் அதே வகையில் அதே காரணத்தால் அதிகமாக்கிக் காட்டப்படுகிறது என்று சொல்லவும் இடமுண்டு.
இவருடைய தனிப் போக்கிலும் ஒரு குறையுண்டு. மற்ற வர்களுடைய சாணக்கியத்தையும் கயிறிழுப்புகளையும் கட்சி வெறியையும், இதை மட்டும் கொண்டு சமாளிக்க முடியும் என்று சொல்லிவிட முடியாது. முக்கியமாக "முற் போக்கு'வாதிகளை எதிர்க்க, அவர்களுக்குத் தெரிந்த அதே சாணக்கியத்திலும் விளம்பரத்திலும் கட்சி அமைப்பிலும் அவர்களையும் வெல்லக்கூடிய ஒரு பொன்னுத்துரை போன்றவர்தான் தேவை. அதை மு. தளையசிங்கம் அடிக்கடி உணராமலில்லை. அதோடு இவருடைய போக்கு தனிப் போக்கு. ஒவ்வொருவனையும் ஏதோ ஒரு கட்சிக் குள் போட்டுப் பார்க்க முயலும் சாதாரண மக்களுக்கு இது புரியாத ஒன்ருகும். அதனல் இவர் எல்லோராலும் ஒதுக்கப்பட்டு எவருடைய ஆதரவையும் பெருமல் போய் விடும் ஆபத்தும் ஏற்படலாம். அவற்றை எல்லாம் இவர் உணராமலில்லை. இருந்தும் அவற்றுக்காக வேண்டி இவர் தன்னை இழக்கவும், நேர்மைக்கும் உண்மைக்கும் மாருனவற்றேடு சமரசம் செய்துகொள்ளவும் இவர் விரும்புவதில்லை. இந்தப் போக்குக்கு அடிப்படையாக ஒரு முக்கிய காரணம் இல்லாமலில்லை.
இவர் ஒருவகையான existentialist. அதனல் திட்ட வட்டமான எந்தக் கொள்கைகளும் தத்துவங்களும்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 159,
இவருக்குப் பிடிப்பதில்லை. உண்மை என்பதை எந்தத் தனித் திட்டத்துக்குள்ளும் அமுக்கிவிட முடியாது என்பதே இவருடைய எண்ணம். அதே சமயம் அது எல்லாவற்றிற் குள்ளும் ஓரளவுக்காவது இல்லாமலில்லை என்பதையும் மறுக்க முயல்வதில்லை. உண்மையைப்பற்றிய தேடல் கடைசியில் ஆத்ம விசாரணையாக முடியும் என்பதே இவருடைய எண்ணம். அந்த வகையில் சமயத்தின் தேவையை இவர் ஏற்றுக்கொள்கிருர். ஆனல் சமயக் கொள்கைகளும் தத்துவங்களும் ஸ்தாபனங்களும் அந்த உண்மைக்கும் பரம்பொருளுக்கும் பதிலாக அவையே இவையாக மாற்றப்படுவதுதான் உண்மையான ஆபத்து என்பதையும் உணர்ந்தவர். இன்று மக்கள் கடவுளைக் காண முயலாமல் சமயங்களையும் தத்துவங்களையும்தான் வழிபட முயல்கிருர்கள் என்பதுதான் இவரது அபிப் பிராயம். அதனுல்தான் சமயச் சண்டைகளும் ‘என் மதந்தான் எல்லாம்’, ‘என் மதந்தான் பெரியது' என்ற அறியாமையும் பிறக்கின்றன என்பது இவரது அபிப் பிராயம். ஆனல் எந்த ஒரு தனி மதத்துக்குள்ளும் தன்னை நிறுவிக்கொள்ள இவர் விரும்புவதில்லை. எல்லா மதங்களையும் படித்து எல்லாவற்றுக்கும் அப்பால் செல்ல வேண்டும் என்பதே இவருடைய அபிப்பிராயம். அத் தகைய தேவையையும் பார்வையையும் மற்ற தத்துவங் களைவிட வேதாந்தம் அதிகமாக வலியுறுத்துகிறது என் பதையும் இவர் மறுப்பதில்லை. அதனுல்தான் காளியையும் அல்லாவையும் யேசுவையும் வணங்கி அவர்களுக்கு அப் பாலும் செல்ல முயன்ற ராமகிருஷ்ணர் இவருக்கு மிகவும் பிடித்தமானவர். ரமணரும் அப்படியே. இலக்கியத்தில் இவ ருடைய நேர்மையையும் தனித்தன்மைக் கொள்கையையும் இந்த ஆத்ம விசாரணையின் அடிப்படையிலேயே பார்க்க வேண்டும். அதே ஆத்ம விசாரணையின் அடிப்படையில் பார்த்தால் இந்த இலக்கியக் கட்டுரைகளும் சுய விளம் பரங்களும், சுய விசாரணையாகவும் சூழல் விசாரணையாக வும் இருப்பதுபோல் எல்லைதாண்டிவிட்டால் அணுவசிய

Page 82
160 மு. தன்யசிங்கம்
மானவையாகவும், ஆணவத்தை, egoவை பலவீனப் படுத்துவதற்குப் பதிலாக பலப்படுத்துபவையாகவும் மாறிவிடக் கூடியவை என்பதையும் இவர் உணராம லில்லை. அதைப்பற்றி அடிக்கடி கவலைப்படாமலுமில்லை. ஒருவேளை இந்த கட்டுரைத் தொடரே இக்காலத்து ஈழத்து இலக்கியம்பற்றிய இவருடைய கடைசிக் கட்டுரை யாகவும் இருக்கலாம்.
இருந்தாலும் மொத்தத்தில் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி யில் மு. தளையசிங்கத்தின் பங்கானது, நேர்மை, நீதி, தரம், தனித்தன்மை, சுதந்திரம், உண்மை என்பவற்றைத் தேடும் ஓர் விரிந்த பார்வையை புகுத்த ஏற்பட்ட முயற்சி யாகும். அதனல் இவருடைய சுய விளம்பரங்கள் அவற் றுக்குரிய விளம்பரங்களாகவும் மாறிவிடுகின்றன.

பொதுப் பின்னணி கண்டுபிடித்த இலக்கியப் போக்கு:
நம் ஏழாண்டு இலக்கிய வரலாற்றில் கலாநிதி சதாசிவத் தின் வருகை மிகச் சடுதியான வருகை. அடிமனத்தில் அமுக்கப்பட்டவை அறிவுக்குத் தெரியாமல் திமிறிக் கெம்பி மேலெழுந்து "கலை"யாட்டம் போட்டுவிட்டுப் போவது போன்ற ஒரு வகை. ஆனல் கலாநிதி சதாசிவத் தின் வருகை "கலை"யாட்டம் மாதிரி வந்த வேகத்திலேயே போய்விட்டது என்று சொல்லிவிட முடியாது. ஒரு தெளிவும் நிதானமான பார்வையும் போக்கும் நம் இலக்கியச் சூழலில் சேராதவரைக்கும் கலாநிதி சதாசிவம் பிரதிபலிக்கும் போக்கும் போய்விடாது என்றுதான் சொல்ல வேண்டும். 56உடன் ஒட்டிவந்த இலக்கிய வேகம் ‘முற்போக்கு இலக்கிய வேகமாக மாறத் தொடங்கியபோதே, ஒரு கலாநிதி சதாசிவத்துக்கு இடம் வந்துவிட்டது என்று சொல்லலாம். 56ஐ ஒட்டி இலங் கையில் பண்டாரநாயக்கா கொண்டுவந்த சமூக அரசியல் புரட்சி, சிங்களச் சமூகத்தைப் பொருத்தவரையில், 16ஆம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் மேற்கத்தையர் வருகை யால் நின்றுவிட்ட அவர்களின் மரபு வளர்ச்சியும், அமுக்கப்பட்டுவிட்ட அவர்களுடைய கலாச்சார ஓட்ட மும், திரும்பவும் மேலே வருவதற்கு இடம்கொடுத்தது என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன். சில சமயங் களில் அந்த 'மறுமலர்ச்சி" நியாயமான எல்லைகளையும் தாண்டிய ஒரு Collective psychosis ஆகக் காட்சியளித் தாலும் அதனல் அவர்களுடைய சமூகத்தைப் பொருத்த வரையிலாவது ஓரளவுக்கு வளர்ச்சியும் விடுதலையும்

Page 83
162 மு. தளையசிங்கம்
ஏற்படவே செய்தன என்பதை மறுக்க முடியாது. அவர் களுடைய இனத்துக்கும் கலாச்சாரத்துக்கும் அழுத்தம் கொடுத்த அத்தகைய 'மறுமலர்ச்சி" தமிழ்ச் சமூகத்திலும் அதே வகையான ஒரு மறுமலர்ச்சியைத்தான் எதிரொலி யாக எழுப்பிற்று. அரசியலில் சமஷ்டிக் கட்சியின் பிர பல்யத்தை அந்த எதிரொலிக்கு ஒர் உதாரணமாகக் காட்டலாம். கலாச்சார, சமூகத் துறைகளில் அதே வகை உதாரணங்களாக தனித்தமிழ் இயக்கம், வேட்டி, சால்வை, தோரணம், கும்பம், சத்தியாக்கிரகம் போன்ற வற்றைக் காட்டலாம். தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட விறுவிறுப்பும் வேகமும் அப்படிப்பட்டவைதான். ஆனல் உடனடித் தேவைகளும் அப்படிப்பட்டவைதான். அதன் அதே விழிப்பையும் விறுவிறுப்பையும் வேகத்தையும் பயன்படுத்திய இலக்கியப் போக்கும் வளர்ச்சியும் அந்தப் பொதுப் பின்னணிக்கு முரணுக, தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மைத் துடிப்புக்கும் அதன் உடனடித் தேவை களுக்கும் எதிராக, "முற்போக்காக வளரத் தொடங்கிய போது முரண்பாடு ஏற்படத் தொடங்கியது. உண்மை யில் கைலாசபதி தூக்கிவிட்ட "முற்போக்குக் கூட்டு பொதுப் பின்னணியின் விழிப்பையும், விறுவிறுப்பையும் இலக்கியரீதியில் பயன்படுத்திக்கொண்டாலும் அவற்றை இலக்கிய ரீதியில் பிரதிபலிக்க முயலவில்லை. மாருக, அவற்றுக்கு முரணுகத்தான் இலக்கியம் படைக்கப் பட்டது. எனவே, என்னென்ன உணர்ச்சிகளாலும் என்னென்ன தேவைகளாலும் முழுத் தமிழ்ச் சமூகமே உந்தப்பட்டுக்கொண்டிருந்ததோ அதே உணர்ச்சிகளும் தேவைகளும் பொதுவுடமைக் கட்சியைப் பக்க பலமாகக் கொண்ட "முற்போக்கு இலக்கியப் போக்கால் வலுக் கட்டாயமாக அமுக்கி மறைக்கப்பட்டபோது அல்லது *பிற்போக்கு" ஆனவை என்று பிழையாக ஒதுக்கப்பட்ட போது திமிறலும் வெடிப்பும் எங்கிருந்தாவது வரத்தான் செய்யும். ʼx.,

(p. 38 ruá rà is 63
மு. தளையசிங்கத்தின் எதிர்ப்பும் போக்கும் அந்தப் பொதுப் பின்னணியின் உடனடித் தேவையை ஒரம் சமாகப் பிரதிபலிக்காமலில்லை. ஆனல் ஒரம்சம்தான். மு. தளையசிங்கம் அதற்கும் அதற்கு முரணுக வந்த "முற் போக்கு"க்கும் அப்பால் போக முயல்கிருர், அதோடு அதே பொதுப் பின்னணியின் விழிப்பில் தவிர்க்க முடி யாமல் கலந்து நிற்கும் ஒருவகைப் பிற்போக்குச் சாயலை அவர் எதிர்க்கவும் செய்கிருர். அதனுல் அவரைப் பொதுப் பின்னணி புரிய மறுத்து விடுகிறது என்றேதான் சொல்ல வேண்டும். அதற்குரிய அவசரமும் துடிப்பும் உணர்ச்சி வசமும் மு.த.வை விளங்குவதற்குத் தேவையான நிதானத் துக்கு இடமில்லாமல் ஆக்கிவிடுகின்றன. நிதானம் இருந் தால்கூட விளங்கக்கூடிய பார்வை இருக்காது. அது எதிர் காலத்தில்தான் ஏற்பட வேண்டும். எனவே, அந்த நிலையில் தமிழ்ச் சமூகத்தின் இலக்கியத் துறையில் இப்போதைக்கு அகப்பட்டவர் கலாநிதி சதாசிவந்தான்.
கலாநிதி சதாசிவம் அதோடு, அதாவது "முற்போக்கு வாதத்துக்கு எதிராகத் திமிறி எழும் பொதுப் பின்னணி யோடு, சரியாகப் பொருந்துகிருரா?
இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொதுப் பின்னணி அவரை விட வளர்ந்துவிட்டிருக்கிறது. ஆனல் அந்த வளர்ச்சியையும் நிலையையும் பிரதிபலிக்கும்வகையில், அர சியலில் சமஷ்டிக் கட்சியைக் கண்டுபிடித்த அளவுக்கு அது இலக்கியத்தில் வெல்லவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். கலாநிதி சதாசிவத்தால் "ஐம்பதுக்கு - ஐம்பது' காலத்தை - அந்தத் தூக்கத்தையும் தேக்கத்தையும் பண்டிதப் போக்கையும் தலைவர் வழிபாட்டையும் - பிரதி பலிக்கலாமே ஒழிய 56க்குப் பின் வந்த சமஷ்டிக் கட்சிக் குரிய காலத்தைப் பிரதிபலிக்க முடியாது. சிங்களச் சமூகத்தில் 56க்குப் பின் வந்த புரட்சியையும் மறுமலர்ச்சி

Page 84
164 மு. தளையசிங்கம்
யையும் பிரதிபலிப்பதுபோல் அவர்களுடைய இலக்கிய உலகில் ஒரு "கொழும்பு வட்டம்' என்ற ஒன்று இருக்கிறதே அதைப்போல் ஈழத் தமிழ் இலக்கிய உலகில் இல்லை. (அவர்களுடைய "பேராதனை வட்டம்' 56க்குப் பின் வந்த புரட்சிக்கும் அப்பாற்பட்டது. அதற்குச் சமமாக நம் முற்போக்கு’க் கட்சியைக் காட்ட முடியாது. அது வட்டம். இது கட்சி. அதோடு அவர்களுடைய பார்வை ஆழமும் "முற்போக்கு"க்கு இல்லை. ஆமாம், சிங்கள இலக்கிய உலகில் 56க்குப் பின் வந்த பொதுப் பின்னணியின் விழிப் புக்கும் அப்பால் செல்லுமளவுக்கு ஒரு இலக்கிய வட்டம் வளர்ந்துவிட்டிருக்க, நம்மிடம் பொதுப் பின்னணியைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு வட்டங்கூட இன்னும் செவ்வை யாக வளரவில்லை. 1963க்கும் பிறகுதான் அவை இரண்டுக் கும் உரிய அறிகுறிகள் தெரிகின்றன. 'நற்போக்கு ஒரு வகைக் கொழும்பு வட்டமாகவும் மு. தளையசிங்கம், சிவ குமாரன், முருகையன், தர்மு சிவராமு போன்ருேர் ஒரு வகைப் பேராதனை வட்டமாக'வும் இப்போ தெரிகிருர் கள் என்று சொல்லாம். எனவே, "கொழும்பு வட்டம்" போல் நம்மிடையே இருக்கவில்லை. பழைய ஈழகேசரிப் பரம்பரைக்கு அந்தளவுக்கு வேகம் இல்லை. எனவே, கலாநிதி சதாசிவம் நம் இலக்கிய உலகுக்குள் இறங்கிய வுடன் வேறு வழியின்றி அதிருப்திப்பட்டுக் காத்திருந்த பொதுப் பின்னணி அவரைச் சுற்றி ஓடத் தொடங்கி விட்டது, மு. தளையசிங்கம் ஏற்படுத்திய வழியையும் எதிர்ப்பையும் அவரே பயன்படுத்திக்கொண்டார். அதன் பின்னர் பொதுப் பின்னணியின் அதிருப்தியும், தேவை யும் அவருக்குத் தாக்குக் கொடுக்க, அதுவரை ஒதுக்கப் பட்டுக் காத்திருந்த பண்டிதர்கள் எல்லோரும் ஓடோடி வந்து அவருக்குக் குடைபிடிக்கத் தொடங்கிவிட்டனர். உண்மையில் இந்தப் பண்டிதர்களின் பிரதிநிதி தான் கலாநிதி சதாசிவம். ஆனல் வேறு வழியில்லாத காரணத்தாலும் தன் தேவைகளைப் பிரதிபலிக்காத முற் போக்கு’க் கூட்டின் மீதுள்ள வெறுப்பாலும் பொதுப்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 165
பின்னணி அவருக்குத் தாக்குப் பிடித்தது. அதனுல்தான் "முற்போக்கு’க்கு எதிரான பெரும்பாலான யாழ்ப்பாணத் துச் சிருஷ்டி எழுத்தாளர்கள் சாதசிவம் பக்கம் சார்ந்தவர் களாய் இருக்கின்றனர்.
இவ்வளவும் கலாநிதி சதாசிவத்தின் வரலாற்றின் முதற் கட்டம் என்று சொல்ல வேண்டும். ஆனல் அடுத்த கட்டத் துக்கு வருமுன் அவருடைய இந்த முதற்கட்டத்துக்கு உரிய குறைகளை-அவரது மரபுவாதத்தின் குறைகளை -குறித்துக் கொள்வது நல்லது. கலாநிதி சதாசிவம் நம் இலக்கிய உலகில் புகுந்ததற்குரிய முக்கிய காரணம் இலங்கைப் பல் கலைக் கழகத்துத் தமிழ்த்துறை விவகாரங்களே. அதனல் இன்றைய இலக்கியத்தின் தேவைகளை உணர்ந்து கொண்டோ அல்லது அதில் உண்மையான அக்கறை ஏற் பட்டதினலோ அவர் நம் இலக்கிய உலகில் புகவில்லை. அதனல், பரிச்சயம் இல்லாத ஓரிடத்துக்குள் புகுந்ததினல் "சிறுகதை, இலக்கியமா?’, ‘கதைகளில் அதைப் புகுத்த லாமா?, இதைச் சேர்க்கலாமா?’ என்பன போன்ற பல தடங்கல்களில் தட்டுப்பட்டு, முட்டுப்பட்டு, தலைகுப்புற விழுந்து தள்ளாடிக்கொண்டு பலவிதமாக ஆரம்பத்தில் அவதிப்பட்டார். கடைசியில் ஒருவாறு தெளிவு ஏற்பட்ட போது எழுத்துப் பிழை பிடிப்பதைத் தவிர அவரிடம் சொல்வதற்கு வேறு ஏதும் இருக்கவில்லை. ஆனல் "பக்தி என்பது 'பத்தி"யாக எழுதப்பட வேண்டும் என்று அவர் தன் இலக்கண மரபைத் திணக்க முயன்றபோது (சிறு கதை, இலக்கியமா? என்று கேட்டபோது காட்டிக் கொண்டதுபோல்) திரும்பவும், இருபதாம் நூற்ருண்டின் இந்த அறுபதுகளுக்கு உரியவரல்லாதவராகவே தன்னை நிச்சயமாகக் காட்டிக்கொண்டார். கலாநிதி சதா சிவத்தின் மரபு வாதம் வெறும் இலக்கண மரபு பற்றிய வாதமே. ஆனல் அதற்காக அது இலக்கண எல்லையைத் தாண்டி சமூக கலாச்சாரப் பொது மரபை அழுத்துவதாய் இருந்தால் சரியாகிவிடும் என்பதல்ல. பொது மரபிலிருந்து

Page 85
166 மு. தளையசிங்கம்
விடுபட்டு எந்த எழுத்தாளனும் இயங்குவதில்லை. அந்தப் பொது மரபை மீறுவதும் ஆமோதிப்பதும் அதே பொது மரபால் நிர்ணயிக்கப்பட்டே நடைபெறுகிறது. வெளிச் செல்வாக்குகளை ஏற்காமல் தனித்து எங்கள் மரபு எப் போதும் இருந்ததில்லை. பொதுவாக எல்லா மரபுகளும் இப்படியே. வெளிச் செல்வாக்குகளை ஏற்று தங்கள் தங்களுக்கேற்ற வகையில் அவற்றை ஜீரணித்துக்கொள் ளவே செய்கின்றன. (ஜீரணம் சரியாகவிட்டால் நோய் ஏற்படத்தான் செய்யும். பத்தொன்பதாம் நூற்ருண்டின் பாதிக்குப் பின் சீன நாகரிகத்துக்கு ஏற்பட்ட விளைவையும் இப்போ பொலிவேஸிய மக்களுக்கு ஏற்பட்ட நிலையையும் அதற்கு உதாரணமாகக் காட்டலாம். ஆளுல்ை நம் வரலாறு அப்படியல்ல.) நம் மரபு வெளிச் செல்வாக்குகளை ஜீரணிக்கக் கூடியது. நம் இலக்கிய வரலாறு அதற்கு உதாரணமாக நிற்கிறது. எனவே, ‘முற்போக்கு' இலக் கியம் நம் மரபுக்குப் புறம்பானது என்று சொல்ல முடியாது. "முற்போக்கு" கொள்கைகளைப் பயன்படுத்தி தமிழில் ஒர் எழுத்தாளன் தரமான கதைகளைச் சிருஷ் டித்துவிட்டால் காலப் போக்கில் அவை நம் மரபு வளர்ச் சிக்கு உதவியவையாகவே நிற்கும். கம்பராமாயணத் தையும் மணிமேகலையையும் பேரிலக்கியங்கள் என்று எப்படி நாம் கருதுகிருேம்? கட்சிப் பற்று, ஓர் எழுத் தாளனின் சுதந்தரத்தையும் பார்வை ஆழத்தையும் குறைத்து, தனித்தன்மையைக் கெடுத்து, அவனது திறமை களைச் சிதைத்துவிடுகிறது; பெரும்பாலான ஒருமைப் பாடுடைய இரண்டாந்தரக் கதைகளையே சிருஷ்டிக்க உதவுகிறது என்ற வாதம் வேறு. கட்சிக் கொள்கைகளைப் பயன்படுத்தி ஒர் எழுத்தாளன் தரமான கதைகளை ஒரு நாளும் எழுதவே முடியாது; எழுதினலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது; அது மரபுக்குப் புறம்பானது என்ற வாதம் வேறு. இரண்டையும் மாருட்டம் செய்துவிடக் கூடாது. கலாநிதி சதாசிவம் நம் பொது மரபைப் பிழை யாக அழுத்தி (சில சமயம் இலக்கண மரபை விட்டு அவர்

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 167
மற்றவற்றைக் கூறும்போது) மரபு வாதம் செய்யும் போது அந்த மாருட்டந்தான் செய்கிருர், அதோடு, ஓர் எழுத்தாளன் தன் மரபை அறிந்திருப்பது அவசியந்தான். பழைய இலக்கியங்கள், பழைய புராணங்கள், பழைய தத்துவங்கள், பழைய பழக்க வழக்கங்கள் எல்லாம் ஓர் எழுத்தாளன் ஆராய்ந்து அறிய வேண்டிய துறைகள். ஆனல் கலாநிதி சதாசிவம் கருதுவதுபோல் அவற்றை எழுத்து எழுத்தாக முற்ருக ஆமோதிப்பதற்கல்ல. மாருக, அவனுக்குச் சரியானவை என்று படுபவற்றைச் சேர்த்துக் கொள்வதற்கும், இப்போ பிழையாகப் பாவனையில் இருப் பவையாகப் படுபவற்றை ஒதுக்குவதற்கும், மறைந்து போய்விட்டனவற்றைப் புதுப்பிப்பதற்கும், இல்லையென்று படுபவற்றை வெளியே இருந்து இழுத்துச் சேர்ப்பதற்குமே தான் அவன் அதிகமாக மரபைப்பற்றி ஆராய வேண்டிய வஞக இருக்கிருன், மரபுபற்றிய அறிவு, என்னைப் பொருத்தவரையில், அந்த வகையில்தான் அவசியமாகப் படுகிறது. அதோடு இந்து மரபு எல்லாவற்றையும் உள்ளடக்கக் கூடியது. தமிழ் மரபு இந்து மரபாக விரியக் கூடியது. எனவே, சர்வதேசப் பார்வைக்கும் தேவைக்கும் உரிய வித்துகள் நம்மிடம் தாராளமாகவே இருக்கின்றன. கலாநிதி சதாசிவம், இவை ஒன்றும் புரியாத பழைய பண்டிதர்களின் பிரதிநிதியாகவே அவரு டைய முதற் கட்டத்தில் காட்சி அளிக்கிருரர். அந்தப் பொதுப் பின்னணி, "முற்போக்கு' சர்வாதிகாரத்தின்மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாய், வேறு வழியின்றி அவருக்குத் தாக்குப் பிடித்தாலும் அதுவரை ஒதுக்கப் பட்டிருந்த பழைய பண்டிதர்களின் குடையின் கீழ்தான் அவர் நின்றுகொண்டிருந்தார். அது முதலாவது கட்டம்.
இனி அடுத்த கட்டம். கலாநிதி சதாசிவத்தால் முதல் கட்டத்துக்குரிய பண்டிதராய் நின்று அதிக நாள் பொதுப் பின்னணியின் இலக்கியத் தேவையையும் தாகத்தையும் தீர்த்திருக்க முடியாது. பழைய ஈழகேசரிப் பரம்பரை

Page 86
168 மு. தளையசிங்கம்
யின் பிரதிநிதியான கனக செந்திநாதன் போதாமல் போய்விட்ட ஒரு புதிய நிலையில் பழைய பண்டிதர் ஒருவர் அதிக காலம் சமாளித்திருக்க முடியாது.
அதோடு முற்போக்கு’க் கூட்டை எதிர்க்கும் பொதுப் பின்னணி, "முற்போக்கு' இலக்கியத்தால் ஏற்பட்ட முந்தியதை விட ஓரளவு அதிகமான, ஆழத்தையும் வேகத்தையும் அனுபவித்துவிட்டு நிற்கிறது. அதனல் அதன் தேவையும் ரசனையும் இப்போ அதிகம். எனவே, சதாசிவத்தால் அதிக நாள் சமாளித்திருக்க முடியாது. ஆனல் அந்த ஆபத்தான நிலையிலிருந்து சந்தர்ப்பவசத் தால் அவர் காப்பாற்றப்பட்டுவிட்டார். கலாநிதியைக் காப்பாற்றியவர் அதோடு ஒட்டிக்கொண்ட எஸ். பொன் னுத்துரையேதான். அல்லது பொன்னுத்துரையோடு கலாநிதி ஒட்டிக்கொண்ட காரணந்தான். சதாசிவத்தின் பண்டிதப் போக்கை இந்தக் கூட்டு ஒரளவுக்குப் புதிய நிலைக்கேற்ற வகையில் உயர்த்திற்று. அதன் பின் பழைய பண்டிதத்தைப் பிரதிபலிக்கும் கலாநிதி சதாசிவம், எப். எக்ஸ். சி. நடராசா போன்றவர்களும் ஈழகேசரிப் பரம்பரையைப் பிரதிபலிக்கும் கனக செந்திநாதன் போன்ருேரும் புதிய வேகத்தையும் அதே சமயம் புதிய பண்டிதத்தையும் காட்டும் பொன்னுத்துரை போன் ருேரும் சேர்ந்த 'நற்போக்கு உருவாகியது. நற்போக்கு" உருவாகிய பின்னர்தான் சிங்கள இலக்கிய உலகில் இருக்கும் "கொழும்பு வட்டத்தை ஒத்த ஒரு வட்டம் இங்கு வளர ஆரம்பித்திருக்கிறது. 'நற்போக்கு', அரசியல் துறையில் சமஷ்டிக் கட்சியைப்போல் இரண்டுங் கலந்து நிற்கிறது. மத்தியதர வகுப்புப் பிற்போக்குத்தனம், பழமை என்பவற்றேடு இருபதாம் நூற்றண்டுக்குரிய (அரசியலில் சமஷ்டிக் கோரிக்கையை ஒத்த) தரமும் சேர்ந்து நிற்கின்றன. பின்னதைப் பொன்னுத்துரையின் தரமான கதைகளும் நல்ல நடையும் (பிழையான நடை யல்ல) கொடுக்கிறது. அதே காரணத்தால் இது சிங்கள

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 169
இலக்கியத்தின் கொழும்பு வட்டத்தை விட இடைக்கிடை உயர்ந்தும் நிற்கிறது. எனவே, கடைசியில் "முற்போக்கு" சர்வாதிகாரத்திலிருந்து திமிறித் தப்பிய பொதுப் பின்னணி யின், பொதுப் பின்னணியினுடைய பெரும்பான்மையின ராய் இருப்பவரின், இலக்கிய அக்கறைகளும் தேவை களும் தங்களுக்கேற்ற ஒரு போக்கையும் வட்டத்தையும் கண்டுபிடித்துவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். "நற்போக்கு அரசியலில் சமஷ்டிக் கட்சி எப்படியோ அப் படி இலக்கியத் துறையில் இன்று ஒரு 'நற்போக்கு'. அதா வது தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மைத் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில், நம் இலக்கிய வளர்ச்சியில் ஏழாண்டு எல்லை, நற்போக்கின் ஆரம்பத்தோடு முடி வடைகிறது என்று சொல்ல வேண்டும்.
*நற்போக்கு' எனற பெயர் மிகக் குழந்தைப்பிள்ளைத் தனமானது. ஓர் இலக்கியப் போக்கு அப்படி ஒரு பெயரை வேறு எந்த நாட்டிலும் சூட்டியிருக்க மாட்டாது என்றே நான் நினைக்கிறேன். முற்போக்கு’ என்றதோர் இலக்கியக் கட்சி இருப்பதால் அதற்கு எதிராக வேறு ஓர் இலக்கியக் கட்சியை அமைக்க வேண்டுமென்பதே அன
வசியமானது. "முற்போக்கு எழுத்தாளர்கள்தான் ஓர்
இலட்சியத்தோடு ஒர் இலட்சியத்துக்காக எழுதுகிருர்கள்
மற்றவர்களுக்கு அப்படி எந்த ஒரு இலட்சியமும் இல்லை யென்று சில முற்போக்கு அனுதாபிகள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். ஆனல் உண்மையில் அப்படிக் கூறுபவர்கள் கட்சியயையும் இலட்சியம் என்ற ஒன்றையும் ஒரே பொருளாக்கி மாருட்டந்தான் செய்கிறர்கள். கட்சியில் இருப்பவனுக்குத்தான் இலட்சியம் இருக்கும் என்ற கட்டாயம் இல்லை. கட்சி ஒன்றில் சேராமலேயே இலட்சியத்தோடு வாழலாம், எழுதலாம். அதோடு உண் மையான இலட்சியத்துக்கு கட்சி என்பது தடையாகவே இருக்கும். உண்மை என்பது உலகளவும், உலகத்துக்கு அப்பாலும் விரிந்து நிற்கிறது; அதனை எந்த ஒரு திட்ட

Page 87
170 மு. தளையசிங்கம்
வட்டமான கொள்கையாலும் சிறைப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த ஒருவனுக்கு கட்சி எப்படி இலட்சிய மாக முடியும்? கட்சி சாதாரண மக்களின் பார்வையையும் உயர்த்திவிடுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சில எழுத்தாளர்களுக்கு அது அதே வகையில் உதவக் கூடும். ஆனல் அதே சமயம் முதிர்ச்சியடைந்த ஒருவனுக்கு அதுவே தடையாகவும் பார்வைக் குறுக்க மாகவும் பைத்தியக்காரத்தனமாகவும் இருக்கும் என்ப தையும் மறந்துவிடக் கூடாது. பொன்னுத்துரைக்கு இந்த விசாரணைகள் கிடையாது. எனவே, செளகரியமாக "நற்போக்கு' என்று நாமம் சூட்டிய அவர் ஓர் தரமான பெயரையாவது சூட்டினரா என்றல் அதுவுமில்லை. உண்மையில் "நற்போக்கு" திரும்பவும் அவருடைய பார்வை ஆழமின்மையின் முத்திரையான அவருக்கே உரித்தா ைவார்த்தை வித்தையேதான். முற்போக்கு என்பதற்குப் போட்டியாக இவர் "நற்போக்கு' என்கிருர், அப்படிச் சொல்வதால் வரும் ஓசை மயக்கத்தைத் தவிர அதில் அர்த்தமெதுவுமில்லை. ஆனல் ஒசைக்காகவேதான் அதை அவர் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தெரிகிறது. உண்மையில் "நற்போக்கு' என்பது நல்லவை, கூடாதவை என்ற டாகுபாட்டைக் குறிக்கிறது. அப்படி என்ருல் என்ன அடிப்படையில் ஒன்றை நல்லது, கூடாதது என்று நிர்ணயிப்பது? நல்லவை, கூடாதவை என்பவை சரி ust 6,760a, LS60tput a Taogu (right and wrong) 67 GOTU வற்றைக் கருதினல் அந்த அர்த்தங்கள் தற்காலிகமானவை ஆகிவிடும். காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் மாறுபடுபவையாகிவிடும். இன்று சரி என்று படுபவை நாளையும் சரியாகத் தெரிவதில்லை. முன்பு ஒர் ஆடவன் பல பெண்களை மணந்துகொள்ளலாம். இப்போ நம் சமூகத்தில் அது பிழையாகக் கருதப்படுகிறது. அப்படிப் பல உதாரணங்களைக் காட்டலாம். எனவே சரியானவை, பிழையானவை என்ற அடிப்படையில் 'நற்போக்"கை நிறுவ முடியாது. அவற்றுக்கு மாறக நல்லவை, கூடா

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 17
தவை என்பவை தர்மம், அதர்மம் என்ற அர்த்தத்தில் எடுக்கப்படலாம் (good and bad). அப்படியென்ருல் அது ஆத்மீக அடிப்படையில் எழும் வித்தியாசம். ஆனல் அதே அடிப்படையில் பார்க்கும்போது "முற்போக்கும் ஓரளவுக்கு 'நற்போக்காகவே படும். பொன்னுத்துரை செய்ததுபோல் அதை முற்ருக ஒதுக்கிவிட முடியாது. 'நற்போக்கு"க்கு "முற்போக்கு முழு எதிரான ஒன்று என்று காட்ட முடியாது. அதே போல் 'நற்போக்கு" என்பதை சரி, பிழை என்ற அடிப்படையில் பார்க்கும் போது "முற்போக்கு' என்பது ஆளுக்கு ஆள், இடத்துக் கிடம் சரியாகவும் பிழையாகவும் படும். அது முதலாவது. இரண்டாவது, இலக்கியத்தை ‘நல்லது', 'கூடாதது" என்ற அடிப்படையில் அளக்கத் தொடங்கினல், அது "பாடங்கள்" (lessons) அல்லது உபதேசங்கள் கூறும் பழைய சமயக் கதைகளுக்கும் ஈசாப் கதைகளுக்குந்தான் வழிவகுக்கும். அப்படிப் பார்த்தால் யதார்த்தப் படைப்பு என்பதும் கூடாததாகிவிடும். 'நற்போக்கு' என்ற அடிப்படையில் அளந்தால் முதலாவதாக ஒதுக்கப்படும் கதைகள் "தீ", "பங்கம்" போன்ற பொன்னுத்துரையின் கதைகளாகத் தான் இருக்கும். பொன்னுத்துரைக்கு இந்த விசாரணைகள் எதுவும் தெரிவதில்லை. அவர், ஓசை ஒன்றுக்காக மட்டும் பெயர் சூட்டியிருக்கிருர்,
திரும்பவும் முன்பு விட்ட இடத்துக்கு வரலாம். இன்று "முற்போக்கு', 'நற்போக்கு' என்று இரண்டு கூட்டுகளாக நம் இலக்கியச் சூழல் பிளவுபட்டுக் கிடக்கிறது. கடைசி யில் நம் இலக்கிய விவகாரங்களின் நிலை நம் அரசியல் நிலையைத்தான் ஒத்திருக்கிறது. இக்கட்டுரைத் தொடரில் ஆ1ம்பத்தில் பொதுப் பின்னணியைப்பற்றிக் கூறும் போது குறிப்பிட்டவற்றைத் திரும்பவும் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. பிளவுபட்ட மனேநிலையை உடைய ஒருவனைப்போல் ஈழத்துத் தமிழ் இனம் அரசியல் சமூகத் துறைகளில் இடதுசாரிகளுக்கிடையேயும் சமஷ்டிவாதி

Page 88
172 மு. தளையசிங்கம்
களுக்கிடையேயும் பிளவுபட்டுக் கிடக்கிறது என்று கூறினேன். இப்போ இலக்கியத் துறையிலும் அதே நிலை தான். "முற்போக்கு', 'நற்போக்கு'. அதனுல் இரண்டும் தனித்தனியே நம் ஈழத் தமிழினத்தின் உண்மையான தேவைகளையும் நிலையையும் பிரதிபலிக்க முடியாதவை யாக நிற்கின்றன. உண்மையான தேவையும் வளர்ச்சி யும் இரண்டிலுமுள்ள தரமானவற்றை இணைத்துக் கொண்டு இரண்டுக்கும் அப்பால் போவதுதான். எப்படி பண்டா, செல்வா ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படும் ஒரு சமஷ்டி ஆட்சியாலும், இடது சாரிகள் காட்டும் பொருளாதார வளர்ச்சியாலும் சமத்துவத்தாலும்தான் நம் அரசியல் பொருளாதாரத் தேவைகளைத் தீர்க்க முடியுமோ அப்படியேதான் முற்போக்கு, "நற்போக்கு" என்பவற்றிலுள்ள தரமானவற்றை எடுத்துக்கொண்டு, இணைத்துக்கொண்டு அவற்றுக்கு அப்பாலும் போகும் ஓர் இலக்கியப் போக்கு ஒன்ருல்தான் நம் இலக்கியத் தேவை களைத் தீர்க்க முடியும், அந்தப் போக்கை நான் தற்காலிக மாக "மூன்ரும் பக்கம்" என்று குறிப்பிட்டிருந்தேன். 'மூன்ரும் பக்கம்' என்பது முதல் இரண்டையும் ஒதுக்கிய மூன்ரும் பக்கம் என்றில்லாமல் முதல் இரண்டையும் இணைத்து அவற்றுக்கு அப்பாலும் போகும் மூன்று பக்கங் களும் என்பதையே குறிக்கும்.
இலக்கிய உலகில் வட்டங்களும் கூட்டுகளும் ஏற்படுவது இயற்கையே. ஒரளவுக்கு அவசியமுங்கூட. அவற்றுக் கிடையே ஏற்படும் மோதல்கள் ஒரு வேகத்தையே பிறப்பிக் கின்றன. ஆனல் மற்ற நாடுகளில் அப்படி இருக்கும்போது அதற்கேற்ற வகையில் அங்கெல்லாம் ஏற்கனவே இருந்து தொடர்ந்து வளர்ந்து வரும் ஒரு நீண்ட கால வரலாறும் மரபும், இலக்கியத் தேர்ச்சியும், ஆழமான பார்வையும் பக்கபலமாக நிற்கின்றன; பின்னணியாக இருக்கின்றன. ஈழத்தில் அப்படி இல்லை. அதோடு நாம் இன்று ஈடுபடும் புதுத் துறைகளைப்பற்றி நம்மிடையே ஆழமான பார்வை

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 173
யும் இல்லை; பயிற்சியும் இல்லை. இந்த நிலையில் கட்சிகள் வெறும் famaticism ஐத்தான் வளர்க்கின்றன. அதன் காரணமாய் அடுத்தவனின் திறமையும் சாதனையும் ஒன்றில் முற்ருக மறுக்கப்படுகிறது அல்லது குறைகளைக் காட்டா மல் முற்ருக அடிமைத்தனமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. போற்றப்படுகிறது, அபிநயிக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் 56க்குப் பின் ஏற்பட்ட வேகமும் அக்கறை யும் அவைக்கேற்ற சாதனைகளைப் பிறப்பிக்காமலே ஒரு மைப்பாட்டுக்குள் முற்ருக ஓடி விழுந்து மந்தமடைந்து செத்துவிடும், சிதைந்துவிடும். அதோடு இனி வரும் எதிர்காலப் பரம்பரைக்கு ஆங்கிலமும் வேறு மேற் கத்தைய மொழிகளும் அத்தனை அன்னியோன்னியமான வையாக இல்லாமல் போய்விடக்கூடும் என்ற ஆபத்தும் ஏற்படுவதாகத் தெரிகிறது. அப்படியானல் பார்வை இன்னும் குறைந்துவிடும். அந்த நிலையில் இப்போதுள்ள பரம்பரை செய்பவைதான் எல்லாவற்றையும் திசை திருப்புவதாக நிற்கும். எனவே, நாம் அதற்கேற்ற வகை யில் நடந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில் நடந்துகொள்ள வேண்டுமானுல் நாம் அடுத்தவர் களின் திறமையையும் சாதனையையும் ஒப்புக்கொள்ள வேண்டும். நம் கொள்கையும் கட்சிப் பற்றும் நம் கண்களை மறைத்துவிடக் கூடாது. கட்சிகளை மீறிய ஒரு கலப்புத் தேவை. கட்சிப் பற்றும் அவரவர் தேவைக் கேற்ற வகையில் இருக்கலாம். ஆனல் அடுத்தவனின் திறமையையும் சாதனையையும் மறுக்கக்கூடிய வகையில் வளர்க்கப்படக் கூடாது. மாருக, கட்சிப் பற்று இருக்கிற அதே சமயத்தில் இலக்கிய ரீதியில் ஒரு கலப்பு ஏற்படு வதற்கு இடமும் கொடுக்க வேண்டும். அதற்கு வழி வகுக்கப்பட வேண்டும்.
பத்திரிகையில் வந்த என் பழைய கட்டுரை ஒன்றில் துர திர்ஷ்டவசமாகப் பிரசுரமாகாமல் விடுபட்டுப் போய் விட்ட ஒர் பந்தியை இங்கு திரும்பவும் சேர்க்க விரும்பு

Page 89
174 மு. தளையசிங்கம்
கிறேன். 1963இல் "முற்போக்கு எழுத்தாளர்களுக்கு எதிராக ஏற்பட்ட எதிர் வேகத்தின் உச்ச காலத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் பகுதி இது:
"நேற்று வரையும் நம் இலக்கிய உலகின் சதுக்கங்களி லெல்லாம் உயர்த்திவைக்கப்பட்டிருந்த ஸ்டாலின் உருவங் களும் தொழுது பாடப்பட்ட சடனேவ் விக்கிரகங்களும் இன்று உடைக்கப்பட்டு இலக்கியத் தெருக்களிலெல்லாம் கொர கொர என்று இழுக்கப்படுகின்றனவென்றல் நேர்மையையும் திறமையையும் நியாயத்தையும் தனித் தன்மையையும் சுதந்திரத்தையும் விரும்பும் எல்லா எழுத்தாளர்களுக்கும்சந்தேகமாகத்தான் இருக்கும். அது ஒரு புரட்சி, பெரும் புரட்சி. ஆனல் அங்குதான் ஆபத் தும் முளைக்கிறது. p
புரட்சி, வளர்ச்சியை மறந்துவிடும்போது புதிய ஒரு கூடாரத்தைத்தான் அமைக்கும். புரட்சி புதிய ஒரு கூடாரம் போடும்போது பல ரகப் பேர்வழிகள் உள்ளே நுழைந்து பதுங்கிவிடுவர். அது ஒரு மறைவிடம். அதற்குப் பின் அவர்கள் எல்லோரையும் பாதுகாக்கத்தான் வேண்டும். பின்னர் தனித்துவம் இருக்காது. நேருக்கு நேர் நிறைகுறைகளைப் பேசும் நேரிய நோக்கம் இருக்காது. காரணம், நோக்கம் எல்லாம் எதிர் கூடாரத்தைத் தாக்குவதாகத்தான் இருக்கும். அதனல் நம் கூடாரத்துக் குள்ளே நுழையும் விழல்களை எல்லாம் விழுங்கித்தான் ஆகவேண்டும். நியாயமாக்கித்தான் தீரவேண்டும். பண் டிதர் பரசுராமர்களையும் சிங்கப்பூரானே கிங்கப்பூரானே என்று திட்டுபவர்களையும் நாம் விமர்சகர்களாக்கி மகிழத் தான் வேண்டும். கடைசியில் மிஞ்சுவது தேக்கந்தான், வளர்ச்சியல்ல. அதை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இலக்கியத்தில் புகுத்தப்படும் கட்சி முறையையும் கொள்கைக் கட்டுப்பாட்டையும் எதிர்க்கலாமே ஒழிய தனிப்பட்ட ரீதியில் "முற்போக்குவாதிகளை முற்ருக

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 175
மறுத்துவிட முடியாது. தனித்தன்மையையும் சுதந்திரத் தையும் கோரும் நாம் அடுத்தவர்களுக்கிடையே இருக்கும் கட்சி முறையை எதிர்க்கலாமே ஒழிய அங்குள்ள தனிப்பட்டவர்களின் திறமையையும் அதற்காக மறுத்து விட முடியாது. நம் புரட்சி இன்னும் ஒரு படி மேலே செல்லும் வளர்ச்சியே ஒழிய அதே பழைய படியில் இன்னேர் கூடாரமல்ல. அப்படி இருக்கக் கூடாது. கைலாசபதிக்கு அவரின் செயலாலும் திறமையாலும் நியாயமாக்க முடியாத வழிபாட்டையும், மரியாதையையும் முதுகு சொறிதலையுந்தான் நாம் செய்யக்கூடாது. ஆனல் அதற்காக அவர் ஒரு காலத்தில் தனக்குத் தெரிந்த ஏதோ ஒரு விதத்தில் நம் இலக்கிய வளர்ச்சிக்குச் செய்த சிறு உதவியையுங்கூட முற்ருக மறந்துவிட வேண்டுமென்ப தல்ல அர்த்தம். "முற்போக்கு’க் கட்சி என்பதற்காக முருகையனை நாம் முற்ருக ஒதுக்கிவிட முடியுமா? தனிப் பட்ட முறையில்கூடப் பிடித்துக்கொள்ளாவிட்டாலும் தான்தோன்றியின் ஒரு சில கவிதைகளைக் கூடவாவது நாம் விரித்துச் சுவைக்கக் கூடாதா? கட்சி முறையை நாம் விரும்பாவிட்டால் நந்தியையும் சொக்கனையும் நல்ல முறையிலாவது ஆராயக் கூடாதா? நான்தான்' என்ற பெயரில் மறைந்திருந்து விசர் பிடித்த ரீதியில் சித்திர சாதயா செய்ய வேண்டும்? எழுத்தாளனின் தனித் த0 மையையும் திறமையையும் சுதந்திரத்தையும் கட்சி (புறை நசுக்கிவிடுகிறது என்ற வாதம், அடுத்த எழுத் நான் தன் கட்சிக் கொள்கைகளை இலக்கியத் தரத் 18 ம யர்த்திவிடும்போதுகூட அதைப் பார்க்காமல் வேண்டும் என்று மாறிவிடக் கூடாது. அபபடி டிற்பட்டால் அது வளர்ச்சி அல்ல. அது புதிய கட்சி மனப்பான்மை. எனவே, திரும்பவும் தேக்கம். அவர்கள் குருடர்களென்ருல், ஏட்டிக்குப் போட்டியாக நாமும் இறுக மூடிக்கொள்ளவா வேண்டும்? அதுதான் நான் கூறும் தனித் தன்மை, நம்மவர்க்கு இருக்கவேண்டிய போக்கு.

Page 90
176 மு. தளையசிங்கம்
இதே கேள்விகளை "முற்போக்கு எழுத்தாளர்களிடமும் கேட்கலாம். சாதாரண இளம் 'வெறி'களுக்கு இது விளங்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனல் கா. சிவத் தம்பி, கைலாசபதி, கந்தசாமி, போன்றவர்களுக்கு விளங்கும் என்றே எதிர்பார்க்கிறேன். அவர்களிடம் அன்பாகக் கேட்கிறேன். ஏன் மெல்ல மெல்ல ஒரு கலப்புக்கு, ஒரு மேல் வட்டத்துக்கு வழிவகுக்கக் கூடாது? பொன்னுத்துரையிடம் நான் கேட்கும் அன்பான கேள்வி யும் அதுவேதான். இப்போதுள்ள மனக் குறைகளை ஒதுக்கிவிட்டு எதிர்காலத்தையாவது மனத்தில் வைத்து ஒரு கலப்புக்கு இடம் வகுத்தால் என்ன? இன்றைய குரோதங்களும் விரோதங்களும் எதிர்காலத்தில் சாதனை களாக நிற்குமா? ஏற்கனவே எழுதத் தொடங்கியுள்ள இளம் எழுத்தாளர்களான செம்பியன் செல்வன், செங்கை யாழியான், அகஸ்தியர், பெனடிக்ற் பாலன், யோக நாதன் போன்றவர்களையே நம் விரோதங்களும் கண் மூடித்தனமும் திருகி, நசுக்கி, திசை மாற்றிப் பழுதாக்கி விட்டதென்ருல் எதிர்காலத்தில் வருபவர்கள் எப்படி இருப்பார்கள்? இப்போதே நம் சாதனைகள் எல்லாம் "தத்துவங்களாகவும், "சமத்துவங்களாகவும் "குட்டி" களாகவும் "உணர்வூற்றுச் சித்திரங்களாகவும் பழுதாகத் தொடங்கிவிட்டனவென்றல் எதிர்காலத்தை நம்பிக்கை யோடு எதிர்பார்க்கலாமா?
இக்கேள்வியோடேயே என் கட்டுரையை முடித்துக்கொள் வது நல்லது. இந்த முழுக் கட்டுரைத் தொடரே ஒரு கேள்வி தான். ஒரு தேடல். சுய விசாரணையையும் சூழல் விசாரணை யையும் தேடலையும் காட்டுபவை. அதே காரணத்தால் தான் இக்கட்டுரைத் தொடரை ஒரு "சுய விளம்பரம்" என்று கூறினேன். விளம்பரமும் ஏதோ ஒன்றைத் தேடித் தான் செய்யப்படுகிறது. (ஆனல் இந்த விளம்பரம் "கடில்" கலந்த சோப், கோல்வ் - எக்ஸ்' கலந்த மை என்பவற்றின் ரகத்துக்கு அப்பாற்பட்டது) இக் கட்டுரைத் தொடரை

ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி 177
எழுதுவதற்குரிய காரணங்களாய் நிற்கும் தேடல் விசாரணையுந்தான் இது "செய்தி'யில் பிரசுரமாவதற்குரிய காரணங்களாகவும் நின்றன. என் அனுபவத்தைப் பொருத்தவரையில் இன்று ஈழத்திலுள்ள எந்தத் தினப் பத்திரிகைகளிலும் எந்த வாரப் பத்திரிகைகளிலும் ஓர் தர மான எழுத்தாளன் தன் கருத்துகளைக் குறுக்கீடு இன்றி எழுத முடியாமல் இருக்கிருன். கட்சிப் பற்றும் கட்சிக் கருவிகளும் குறுக்கிட்டு கட்டுரைகளைப் பந்தி பந்தி பாய் அமுக்கிவிடுகின்றன. நம் இலக்கிய நிலை அப்படிப் பட்டது. எனவே, அந்த நிலையிலிருந்து தப்பி சுதந்திரத் தோடும் சுய கெளரவத்தோடும் எழுத இடந்தேடியே "செய்தி'யில் இதைப் பிரசுரிக்க விரும்பினேன். ஆமாம் இதுவும் ஒரு தேடலேதான். தேடல், பிரசுரத்தைப் பொருத்தவரையிலாவது வெற்றிகரமாக முடிவதற்கு தவிய செய்தி’க்கும் அதன் ஆசிரியருக்கும் என் நன்றி யைத் தெரிவித்துக்கொண்டு இதை முடித்துக்கொள் கிறேன். கடைசியாக ஒன்று, நம் கட்சிப் பற்றும் விளக்கங்களும் குறுக்கீடுகளும் எதிர்காலத்தில் நின்று பிடிக்க மாட்டா. நின்று பிடிப்பவை தரமான இலக் "யெங்கள்தான். அவற்றை நாம் சிருஷ்டிக்கிருேமா?
அதுதான் முக்கிய கேள்வியாக இருக்க வேண்டும்.

Page 91
1958 முதல் 1 ஏழாண்டு கால இ யைக் கணிப்படி கொண்டு, இலங்கை ளாதார, அரசிய மீது மு. தண்யசி பார்வை இப்புத்த தன்மை. நபர்களின் யிலிருந்து போக்கு களின் மீதான
பேர்களையும் அணு நிலைகள் ஒன்ருேடெ பிரிங்தும் ஆக்கபூர் விமர்சனமாகவும், சமூகத்தின் மனுே அதன் காரணமாக மாறி மாறித் ே கின்றன. கம் விமர் விரிவாக்கக் கூடிய பு

963 வரையான இலக்கிய வளர்ச்சி இலக்காகக் 5யின் சமூக, பொரு "Gü, 6m/Taluy/Talibறின் ங்கம் செலுத்தும் நகத்தின் தனித் * மீதான பார்வை களேயும், போக்கு பார்வையிலிருந்து கும் இவருடைய ான்று பின்னியும், வமான இலக்கிய வரலாருகவும், ஒரு அலசலாகவும்,
இலக்கியமாகவும் தாற்றம் கொள் F607 L U Tifaonvas2T த்தகம்.
க்ரியா