கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்

Page 1
இருபதாம்
996

திறன் U
சிமெனகுர ாதித்திரல்ே DOS 3D

Page 2


Page 3

இருபதாம் நூற்றண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்
சி. மெளனகுரு மெள. சித்திரலேகா எம். ஏ. நுஃமான்
வாசகர் சங்க வெளியீடு- 9.

Page 4
இருபதாம் நூற்றண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்
(pob ußů: LDTň 3. 1979 உரிமை: ஆசிரியர்களுக்கு
வெளியீடு: வாசகர் சங்கம் 'நூறி மன்ஸில்', கல்முனை - 6
அச்சு: சித்திரா அச்சகம், 310, மணிக்குடிட்டு வீதி, யாழ்ப்பாணம்.
விலை ரூபா: 5-5O
TWENTIETH CENTURY
CEYLON TAMIL LITERATURE
ხყ:- . C. MAUNAGURU, M. A. Dip. in Ed. MAU. C'TRALEGA, B. A. (Hons) B. Phil.
M. A. NUH MAN, B. A. (Hons) B. Phil.
First Edition March 1979
Fublished by: Raiders' Association, Noori Manzil", Kalmunai-6
Trinited at: Chitra Ach chakam, 310, Clock Tower Road, Jaffna
Price Rs. 5-50

உள்ளடக்கம்
முன்னுரை ஈழத்து இலக்கிய வரலாறு ஒர் அறிமுகம் 1 கவிதை 18
நாவல் 37
சிறுகதை 55
நாடகம் 76
spirgi 3rd 97

Page 5
முன்னுரை
இருபதாம் நூற்றண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின், இன்று வரையுள்ள பொதுவான வளர்ச்சிப் போக்குகளைத் திரட்டிக் கூறுவதே இந்நூலின் நோக்கமாகும். பல்கலைக் கழகப் பரீட்சைகளுக்குத் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் ஈழத்து இலக்கியத்தில் அக்கறையுள்ள பொது வாசகர்களுக்கும், ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் பற்றி அறியும் ஆர்வம் உடைய ஈழத்தவர் அல்லாத தமிழ் வாசகர்களுக்கும் பயன்படத்தக்க முறையில் இந்நூல் அமைந் துள்ளது.
"ஈழத்தில் தமிழ் இலக்கியம் ஆரோக்கியமான திசையில் வளர்ச்சியடைந்துள்ளது என்ற ஒரு பொதுவான அபிப் பிராயம் இன்று நிலவுகின்றது. தமிழகத்தில் ஈழத்து இலக் கியம் பற்றி அறியும் ஆர்வம் பரவலாகக் காணப்படுகின் றது. ஆயினும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றையும் வளர்ச்சி நிலையையும் முழுமையாகக் கூறும் நூல் எதுவும் இதுவரை தோன்றவில்லை. எனினும் அத்தகைய முழுமை யான நூல் ஒன்று எழுதப்படுவதற்கான சான்றுகளையும், தகவல்களையும் திரட்டிக் கூறும் பல நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் இங்கே வெளிவந்துள்ளன. பொதுவாக இவற்றை நாம் மூன்று பிரிவுகளுக்குள் அடக்கலாம்.

1. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் எ மு தி ய நூல்கள் பற்றிய குறிப்புக்களையும் தருவன. 1856ல் வெளிவந்த சைமன் காசிச் செட்டியின் ‘தமிழ் புளூட்டாக் முதல் 1967ல் வெளிவந்த மு. கண பதிப்பிள்ளையின் ‘ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணி கள் வரை இப்பிரிவில் அடங்கும்.
2. ஈழத்தவரின் தமிழ்த்தொண்டு பற்றியன. தமிழ்
w உரைநடை வளர்ச்சியில் ஈழத்தவரின் பங்கு, பதிப் புப் பணியில் ஈழத்தவரின் இடம், முஸ்லீம்களின் தமிழ்த்தொண்டு போன்ற விசயங்களை மதிப்பிடும் முயற்சிகள் இவற்றுள் அடங்கும். பேராசிரியர்கள் க. கணபதிப்பிள்ளை, தி செல்வநாயகம், சு. வித்தி யானந்தன், கலாநிதி பொ. பூலோகசிங்கம், எம். எம். உவைஸ், எஸ். எம். கமால்தீன் முதலியோர் இத்துறையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளனர். பொ. பூலோகசிங்கத்தின் ‘தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞர் பெரு முயற்சிகள் இவ்வகையில் முக் கியத்துவம் உடைய நூலாகும்.
3. வரலாற்று நோக்கில் வெவ்வேறு கால கட்டங்க ளுக்குரிய ஈழத்து இலக்கிய முயற்சிகள் பற்றி இலக்கிய வடிவ ரீதியாகவும் பொதுவாகவும் தொகுத்துக் கூறுவன. பேராசிரியர், ஆ. சதாசி வம் தொகுத்த "ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ் சியம்’ (1966) முதல், பேராசிரியர் கா. சிவத் தம்பியின் ஈழத்தில் தமிழ் இலக்கியம் வரை இப் பிரிவில் அடங்கும். பேராசிரியர் க. கைலாசபதி யும் இவ்வகையில் அநேக கட்டுரைகள் எழுதி யுள்ளார். -- -
இவ்வாறு, ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி வெளி வந்த நூல்கள், முக்கியமான கட்டுரைகள் பல இடம்பெற்ற

Page 6
சிறப்பிதழ்கள் பற்றிய விபரங்களை இந்நூலின் இறுதியில் பின் இணைப்பாகச் சேர்த்துள்ளோம். மேற்குறிப்பிட்ட வகை யான ஆய்வு நூல்கள் இன்னும் பல வெளிவர வேண்டும். இவ்வாறு பல்வேறு ஆய்வுகளும் வெளிவந்து ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய ஐயப்பாடுகள் தெளிவான நிலையில்தான் ஈழத்து இலக்கியம் பற்றிய முழுமையான வரலாற்று நூல் எழுதப்படுதல் சாத்தியமாகும். இருபதாம் நூற்றண்டு ஈழத் துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி நெறிகளைத் தொகுத்துக் கூறும் இந்நூல் அத்தகைய ஒரு முழுமையான வரலாற்று நூல் உருவாகுவதற்குப் பயன்படக்கூடிய முக்கியமான நூல் களுள் ஒன்ருக அமையும் என நம்புகிருேம்.
இந்நூல் ஆறு அத்தியாயங்களாக அமைந்துள்ளது. முதல் அத்தியாயம் ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு ஓர் அறிமுக மாக அமைவதோடு, இருபதாம் நூற்ருண்டு ஈழத்து இலக் கியத்தின் விசேடமான சில பொதுப் பண்புகளையும் திரட் டிக் கூறுகிறது. அடுத்துவரும் அத்தியாயங்களில் கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சனம் ஆகிய துறைகளில் காணப்படும் வளர்ச்சிப் போக்குகள் தனித்தனியாக ஆரா யப்படுகின்றன. நாடகம் முற்றிலும் இலக்கிய வடிவம் அல்ல; அது ஒர் அரங்கக் கலையும் ஆகும். ஆகவே நாடக வளர்ச்சி பற்றிய கட்டுரையில் நாடக அரங்க அபிவிருத்தி களும் இணைத்து நோக்கப்பட்டுள்ளன.
இலக்கியம் சமுதாய நடைமுறையின் ஓர் வெளிப்பாடு ஆகும். சமுதாய வளர்ச்சிப் போக்குகளே இலக்கிய வளர்ச் சிப் போக்குகளை இறுதியாக நிர்ணயிக்கின்றன. அவ்வகை யில் இந்த நூற்ருண்டின் ஈழத்து சமூக, அரசியல் வளர்ச் சிப் போக்குகளின் பின்னணியிலேயே இந்நூலில் ஈழத்து இலக்கியம் நோக்கப்பட்டுள்ளது. இலக்கிய வளர்ச்சி தனித் தனி வடிவங்களின் அடிப்படையில் நோக்கப்பட்டதால், சமு தாயப் பின்னணி பற்றிய குறிப்புக்கள் திரும்பத் திரும்ப இடம் பெறுவது தவிர்க்க முடியாததே. ஒரு வகையில் இலக்கியத்தின் சமுதாய அடிப்படையை அது மேலும் வலி யுறுத்துவதாகவும் அமையும்.

சமகால ஈழத்து இலக்கியத்தில் ஏதோ ஒரு துறையிலே னும் ஈடுபாடு கொண்டுள்ள படைப்பாளிகள் அநேகர் உள் ளனர். குறிப்பாக கவிதை, சிறுகதைத் துறைகளில் இவர் களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உள்ளது. இவர்கள் எல்லோருடைய பெயர்களும் இந்நூலில் இடம் பெறுவது சாத்தியமல்ல; அது அவசியமுமல்ல. ஆயினும் பெயர்களை முடிந்த அளவு குறைத்து பொதுப்பண்புகளை மட்டும் சுட் டிச் செல்வதிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எழுத்தா ளர்கள் இல்லாமல் இலக்கியப் பண்புகழும் இல்லை. ஆகவே ஏதோ ஒரு வகையில் முக்கியமானவர்கள் என்று கருதக்கூடி யவர்களின் பெயர்கள் இந்நூலில் சற்றுக் கூடுதலாகவே இடம் பெற்றுள்ளன. இடம்பெருதவர்கள் இடம் பெறத்தகா தவர்கள் என்று பொருளாகாது. இந்நூலில் குறைபாடுகள் இருக்கலாம். அவை சுட்டப்படும்போது மகிழ்ச்சியுடன் ஏற் றுக்கொள்ளுவோம். ஆயினும் இந்நூல் எழுதப்பட்டதன் நோக்கத்தை இது நிறைவேற்றும் என்றே நம்புகின்ருேம்.
இந்நூலாக்கத்தை ஆரம்பத்தில் இருந்தே ஊக்கப்படுத்தி உதவிகள் புரிந்த நண்பர் மு. நித்தியானந்தன், ஏ. ஜே. கனகரத்தினு ஆகியோருக்கும் அட்டை அமைப்பை வழங்கிய உ. சேரனுக்கும் அழகிய முறையில் இந்நூலை அச்சிட்டு உதவிய சித்திரா அச்சக உரிமையாளருக்கும் ஊழியர்களுக் கும் எமது நன்றிகள்.
ஆசிரியர்கள்.

Page 7
இருபதாம் நூற்றண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு ஒர் அறிமுகம்
ஈழத்துத் தமிழிலக்கியப்பரப்பு ஐந்துநூற்றண்டு காலத் தெடர்ச்சியான பாரம்பரியத்தையுடையது. இவ்விலக் கியப் பாரம்பரியத்தினையும் அதனூடு காணப்படும் பல்வேறு போக்குகளையும் வரலாற்றுக் கண்ணுேட்டத்துடன் நோக்கு தல் அவைபற்றிய தெளிந்த விளக்கத்துக்கு உதவும். இக்கா லத்தில் இலங்கையில் குறிப்பாகத் தமிழ்ப் பகுதிகளில் நிலவிய சமூக சமய கலாசார நிலைமைகள், அவற்றை ஊக் குவித்த அரசியல் பொருளாதார காரணிகள் ஆகியவற்றின் விளக்கமும் இவ்விலக்கிய வரலாற்று விளக்கத்துக்கு உதவி புரிவதாகும். எனினும் 17ஆம் நூற்ருண்டிற்கு முன்னர் தமிழ்ப்பகுதிகளின் வரலாறனது தயக்க மயக்கங்கட்கு இடமளிப்பதாகவே உள்ளது. இக்காலப் பகுதியில் மன்னர் களின் வரன்முறைபற்றிய தகவல்கள் கிடைத்தபோதிலும் சமூக முழுமைக்குமான வரலாற்றைத் தொகுத்துக் காண் பதற்கு உதவும் சான்றுகளும் அரிதாகவே காணப்படுகின் றின. வரலாற்றியலில் காணப்படும் இக்குறைபாடு இலக் கிய வரலாற்று மாணவனையும் பாதிக்கவே செய்கிறது.
இத்தகைய பிரச்சினைகள் இருப்பினும் தற்போது கிடைக்கின்ற தகவல்களை அடிப்படையாக வைத்து ஈழத்து இலக்கியப் பரப்பினை இலக்கியப்பண்பு, இலக்கிய நெறி ஆகியவற்றின் அடிப்படையில் நோக்கி தொடர்ச்சியுான

Page 8
இலக்கியவரலாற்றை அமைத்துக் கொள்ளுதல்கூடும். இப் பணியைச் செய்யவே இக்கட்டுரை முயல்கிறது.
16 ஆம் நூற்றண்டின் முற்பகுதியிலிருந்தே ஈழத்தில் தமிழிலக்கிய முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றிருப் பதை அவதானிக்கலாம். இதற்கு முன்னர் எழுந்தனவாகச் சரசோதிமாலை என்னும் சோதிட நூலும், ஈழத்துப் பூதந் தேவனுர் என்பாரியற்றிய சில தனிப்பாடல்களும் காணப் படுகின்றன. ஈழத்துப் பூதந்தேவனுருடனேயே ஈழத்துத் தமிழிலக்கியப் பாரம்பரியம் தொடங்குகிறது எனக்கூறுவது இன்று மரபாகிவிட்டது. எனினும் ஈழத்துப்பூதந்தேவனர் ஈழத்தவர்தான என்பது பற்றிய சந்தேகம் இன்னும் தீர்த்துவைக்கப்படவில்லை. சங்கத்தொகை நூல்களான அக நானூறு, குறுந்தொகை, நற்றிணை என்பவற்றில் இப்புல வர் பெயரால் சில பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அக நானுரறு 68, 231, 307; குறுந்தொகை 34, 189, 360; நற்றிணை 366 ஆகிய பாடல்கள் ஈழத்துப் பூதந்தேவன ருடையவை. ஈழம் என்ற சொல்லே இப்புலவரை ஈழத் தவராகக் கொள்ள இடமளிக்கிறது. எனினும் ஈழம் என்ற சொல் இலங்கையை மட்டுமே குறித்ததா என்பதும் சிந் திக்க வேண்டியதாகும். ஈழத்துப் பூதந்தேவனுரை ஈழத்த வராக ஏற்றுக்கொண்டால், சங்ககால நூல்களின் பின் னெல்லையான கி. பி. 3 ம் நூற்ருண்டிற்கு முன்னர் எழுந் தனவாகவே இப்பாடல்கள் அமையும். இதற்குப் பின்னர் நீண்டகாலமாகத் 'தமிழிலக்கிய நூல்கள் ஈழத்தில் எழுந்த தற்கு இதுவரை சான்றுகள் எதுவுமில்லை. தம்பதேனியா மன்னன் 3ஆம் டராக்கிரமபாகுவின் அரசவையில் 1310 ஆம் ஆண்டு டோச ராச டண்டிதர் என்பவர் சரசோதிமாலே என்னும் சோதிட நூலொன்றை அரங்கேற்றினர். ஈழத் துப் பூதந்தேவனருக்குப்பின் சரசோதிமாலை இயற்றப்பட் டது வரை எமது இலக்கியவரலாறு இருண்டதாகவேயுள் ளது. இதற்குப் பின்னர் கிடைக்கின்ற இலக்கியங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டிலே வாழ்ந்த புலவர்களால் இயற் றப்பட்டவையே. இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தமிழர் வதியும்போதிலும் 17ஆம் நூற்றண்டுக்கு முற்பட்ட

இலக்கியங்கள் எதுவும் அப்பகுதிகளிலிருந்து எழுந்ததாகத் தெரியவில்லை. ஈழத்து இலக்கியவரலாற்றைக் கற்போர் இந்த அம்சத்தையும் மனங்கொள்ளுதல் வேண்டும்.
13ஆம் நூற்ருண்டிலிருந்து யாழ்ப்பாணப் பகுதி தனிராச் சியமாக விளங்கியதென்பதும் தமிழ் மன்னர்கள் அப்பகுதியை அரசுபுரிந்தனர் என்பதும் வரலாற்றுண்மை. இக்காலத்திலி ருந்துதான் தமிழிலக்கியங்கள் பலவும் தோன்றியுள்ளன. இக் காலத்திலே இயற்றப் பட்டவையாக கிடைக்கும் நூல்களை சிங்கைச் செகராசசேகரன் காலத்தவை (1380-1414) எனவும் நல்லூர்ப் பரராசசேகரன் காலத்தவை (1478-1519) எனவும் இவற்றுக்குப் பிந்தியவை எனவும் பேராசிரியர் ஆ. சதாசிவம் தான் தொகுத்த ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என் னும் நூலில் வகுத்துள்ளார். இந்நூல்களைப்பற்றி இங்கு குறிப் பிடுதல் இக்கால இலக்கியப் போக்கினை அறிந்துகொள்ள உதவும்.
செகராசசேகரம் (இதனை இயற்றியவர் பெயர் தெரிய வில்லை இயற்றுவித்தவர் செகராசசேகர மன்னன் என அறி யப்படுகிறது) சோமசன்மாவின் செகராசசேகரமாலை, பரராச சேகரம் (பரராச சேகர மன்னன் பன்னிரு வைத்தியர்களைக் கொண்டு இந்நூலை இயற்றுவித்தான் என்பர்), பண்டிதராசர் இயற்றிய தக்கிணகைலாச புரானம், சகவீரர் இயற்றிய கண் ணகி வழக்குரை, கரசைப்புலவர் இயற்றிய திருக்கரசைப் புரா ணம், கதிரைமலைப்பள்ளு (இத்தூலாசிரியரின் பெயர் தெரி யவில்லை), அரசகேசரியின் இரகுவம்சம், வையாபுரி ஐயர் இயற்றிய வையாபாடல், வைத்தியநாத முனிவர் இயற்றிய வியாக்கிரடாத பு ர | ண ம், முத்துராச கவிராயரின் க்ைலாய மாலை முதலியவை 13ஆம் நூற் ரு ண்டி லி ருந்து 17ஆம் நூற்ருண்டு வரையுள்ள காலப்பகுதியில் எழுந்த நூல்களாகும், இந்நூல்களை, சமய சம்பந்தமான நூல்கள், யாழ்பாணத்தரசர்களின் வரலாற்று வரன்முறை கூறும் இலக்கியங்கள், சோதிடம், வைத்தியம் ஆகிய துறைகள் சார்ந்த நூல்கள் என வகைப்படுத்தலாம். முதலாவது பிரி வில் தக்கிணகைலசபுராணம், திருகரசைப்புராணம், கதிரை
3

Page 9
மலைப்பள்ளு, வியாக்கிரபாதபுராணம், கண்ணகி வழக்குரை என்பன அடங்கும். இரண்டாம் பிரிவில் வையா பாடல், கைலாய மாலை என்பன அடங்கும். இவற்றுடன் பரராச சேகரன் உலா என்ற நூலையும் சேர்த்துக் கொள்ளலாம். 18ஆம் நூற்ருண்டில் இயற்றப்பட்ட யாழ்ப்பாண வைபவம் என்ற நூல் பரராசசேகரன் உலாவைத் தனது முதனூலாகக் குறிப்பிடுகிறது. இந்நூல் தற்போது கிடைக்கவில்லையாயினும் பரராசசேகரன் பேரில் எழுந்ததாகையால் அம்மன்னன் காலத்ததாய் இருக்கலாமெனக் கருதப்படுகிறது. மூன்றவது பிரிவில் செகராசசேகரமாலை, செகராசசேகரம், பரராசசேக ரம் ஆகியவை அடங்குகின்றன. இவற்றில் செகராசசேகர மாலை சோதிட நூல்; ஏனையன இரண்டும் வைத்திய சம் பந்தமான நூல்களாகும்.
மேற்கண்டவாறு பல நூல்கள் எழுந்திருப்பினும் சமய சம்பந்தமான இலக்கியங்களே அவற்றுள் பெரும்பான்மை யன. நிலவுடமைச் சமூகங்களிற் சமயம் பெறும் முக்கியத்து வத்தையே இது காட்டுகிறது. இந்நிலைமை இருபதாம் நூற் முண்டின் நடுப்பகுதிவரை எமது இலக்கியங்களில் தொடர்ந்து காணப்படுகிறது.
2
யாழ்ப்பாண வரலாற்றில் ஐரோப்பிய இனத்தவரின் தலையீடு ஏற்படத்தொடங்கியதுடன் தமிழிலக்கியத்திலும் புதிய பண்பு ஒன்று தலைதுாக்கியது. கிறித்த சமயப் பாதி ப்பு வெளித்தெரியும் இலக்கியங்கள் எழத்தொடங்கியமையே இப் புதிய பண்பாகும்.இதனுல் இத்தகைய பா தி ப் பு வெளித்தெரியும் 17ஆம் 18ஆம் நூற்ருண்டுகளைத் தனித்த ஒரு பிரிவாகக் கொண்டு அக்கால இலக்கியங்களை ஆராய்தல் பொருத்தமுடைத்து. இவ்விரு நூற்ருண்டுகளிலும் போத்துக் கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் ஆதிக்கம் இலங்கையின் மத்திய மலைநாட்டைத் தவிர்ந்த பகுதிகளில் ஸ்திரம் பெற்றிருந்தது. 16ஆம் நூற்றண்டின் முற்பகுதியில் போத்துக் கேயர் இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் தமது ஆட் சியை நிறுவினரெனினும் 1620ஆம் ஆண்டில்தான் யாழ்ப்பா
d

ணத்துத் தலைநகரான நல்லூரை அவர்கள் கைப்பற்றினர். அவர்கள் தமது ஆதிக்கத்தின் கீழ் வந்த பகுதிகளில் தமது நிலைமையைப் பலப்படுத்திக்கொள்ள மதமாற்றத்தையும் முக்கிய சாதனமாகக் கொண்டனர். கத்தோலிக்க மதகுரு மாரின் மதம்பரப்பும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வண் ணம் பல்வேறு நடவடிக்கைகளையும் போத்துக்கேயர் மேற் கொண்டனர். கத்தோலிக்க மதத்தைத் தழுவியோருக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. கத்தோலிக்கரான சுதேசி கள் சிற்சில வரிகள் இறுப்பதிலிருந்து விலக்கப்பட்டனர். கத் தோலிக்கரானேருக்கு நீதி வழங்கும் விடயத்தில் கூட சலு கைகள் அளிக்கப்பட்டன. இவற்றைவிட சைவர்கள் பொது இடங்களில் வணங்குவதும் தடைசெய்யப்பட்டது. இத்த கைய ஒரு சூழ்நிலையில் சலுகைகளுக்கிணங்கியும், நிர்ப்பந்தத் தினுலும் சைவர்கள் பலர் கிறித்தவராயினர். மன்னர் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நீண்டகாலம் வாழ்ந்த கத்தோலிக்க மதகுருவாகிய பிரான்சிஸ்சேவியர் இப்பகுதி களிலே கத்தோலிக்க மதம் நிலைபெற முயன்று உழைத்தார். போத்துக்கேயரின் பின்னர் 17ஆம் நூற்ருண்டின் பிற்பகுதி யில் ஆட்சியைக் கைப்பற்றிய ஒல்லாந்தரும் தமது மதப் பிரிவாகிய புரொட்டஸ்தாந்து கிறித்தவத்தைப் பரப்ப பல் வேறு முயற்சிகளையுமெடுத்தனர். எவ்வாருயினும் இவ்விரு இனத்தவரின் ஆட்சிக்காலத்திலும் தமிழ்ச் சமூகத்தில் ஏற் பட்ட மாற்றம் சமயம் சார்ந்ததாகவே யமைந்தது. 16ஆம் 17ஆம் 18ஆம் நூற்ருண்டுகள் இலங்கை அரசியல் வரலாற் றில் போத்துக்கேயர் காலம் (1505 - 1658) ஒல்லாந்தர் காலம் (1658 - 1798) என இரு பிரிவுகளாக அமையினும் தமிழி லக்கியத்தைப் பொறுத்தவரை இவை ஒரு காலகட்டமாகவே நோக்கு தற்குரியன. இரு வேறு இனங்களின் ஆட்சி என் பதைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இவர் களது ஆட்சிக்காலத்தில் ஏற்படவில்லை. இவ்விரு நூற்ருண் டுகளிலும் கிறித்தவ சமயப் பொருளடக்கம் கொண்ட நூல் கள் தோன்றத் தொடங்கியதைத் தவிர இலக்கியத்தில் குறிப் பிடத்தக்க புதிய போக்குகள் எவையும் காணப்படவில்லை. இக்காரணங்களினல் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் 17ஆம் 18ஆம் நூற்ருண்டுகள் ஒரு காலகட்டமாகவே அமையத்தக்கவை.

Page 10
இக்காலப் பிரிவில் கிறித்தவ சமயத்தாக்கத்தினல் எழுந்த நூல்களை முதலில் நோக்குவது பொருத்தமாகும். ஞானப்பள்ளு கத்தோலிக்க மதத்தின் பெருமையை விளக் கும் நூல். இதை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. இது இயேசுநாதரைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டது. இப் பள்ளு நூலில் இடம் பெறும் புனித தலங்கள் செரு சேலமும் உரோமாபுரியுமாகும். இக்காலக் கிறித்தவ இலக்கி யங்கள் பற்றி பேராசிரியர் ஆ. சதாசிவம் கூறுவது இந் நூலுக்கும் பொருந்துவதாகும்.
** அக்கால இலக்கியங்களெல்லாம் கத்தோலிக்க மத நூல்களாகையின் அவற்றிற் கூறப்படும் நாட்டு நகர வரு ணனைகளெல்லாம் உரோமாபுரி செருசேலம் முதலிய மேல் நாட்டுக் கத்தோலிக்க புனித தலங்களைப் பற்றியனவாய் அமைந்துள்ளன. தேசியக் கருத்துக்கள் அந் நூல்களிற் பொருந்தப்பெறவில்லை. ஞானப்பள்ளிலே நாட்டு வளம் கூறும் பள்ளியர் ஈழத்தைப் பற்றிச் சிந்திக்காது உரோமாபுரியைப் பற்றியும் செருசேலமைப் பற்றியும் சிந்திக்கின்றனர் ’’
ஞானப்பள்ளினைவிட வேறு சில நூல்களும் குறிப்பிடத் தக்கன. பேதுருப்புலவர்இயற்றிய அர்ச்யாகப்பர் அம்மானை, தொன்பிலிப்பு இயற்றிய ஞானனந்தபுராணம், பூலோக சிங்க முதலியாரியற்றிய திருச்செல்வர் காவியம் என்பன இவற்றுட் சில. இவற்றுடன் சந்தியோகுமையூர் அம்மானை, திருச்செல்வர் அம்மானை, மருதப்பக்குறவஞ்சி ஆகியவை யும் அடங்கும். இக் கிறித்தவ மத இலக்கியங்கள் பெரும் பாலன சமூகத்தின் கீழ்மட்ட மக்கள் தொடர்புடைய சிற் றிலக்கிய வடிவங்களிலேயே அமைந்துள்ளன என்பதும் சுவுை யான அவதானிப்பாகும். 19ஆம் நூற்ருண்டில் கிறித்தவ மதம் பரப்பியோர் பரவலான மக்களை எட்டக்கூடியதாக வசன நடயைப் பயன்படுத்தியதற்கும் 17ஆம் 18ஆம் நூற் முண்டில் அதே தேவைக்கு இச் சிற்றிலக்கியவடிவங்கள் பயன் படுத்தப்பட்டமைக்கும் உள்ளார்ந்த தொடர்பு உண்டு போலும்,

மேற்கண்டவாறு கிறித்தவ சமயப் பிரசாரநோக்குடன் இலக்கியங்களியற்றப் பெறுதல் புதிய பண்பாகக் காணப்ப டினும் தொடர்ந்து சைவசமயச்சார்பான நூல்களும் பெரு வாரியாக எழுந்துள்ளன. இந் நூ ல் கள் அனைத்தையும் இங்கு குறிப்பிடுதல் சாத்தியமன்று. இவற்றை அவதானிக் கும் போது தலபிரபந்தங்கள், விரதமகிமை, கிரியை விளக் கம் ஆகியவை பற்றியெழுந்த நூல்கள், சமயத் தொடர் பான வடமொழி இலக்கியங்களின் தழுவல்/மொழிபெயர்ப் புகள் என வகைப்படுத்தலாம். சின்னத்தம்பிப் புலவரின் கல்வளையமகவந்தாதி, மறைசையந்தாதி, பருளைவிநாயகர் பள்ளு, கூழங்கைத் தம்பிரானின் நல்லைக்கலிவெண்பா வீரக் கோன் முதலியாரின் வெருகல் சித்திரவேலாயுதர் காதல் முதலியன முதலாம் பிரிவுக்கு உதாரணங்களாயமையும். வரத பண்டிதரின் சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம் முதலியன இரண்டாம் பிரிவுக்கும் இராமலிங்க முனிவரின் சந்தானதீபிகை போன்றவை மூன்ரும் பிரிவுக்கும் எடுத்துக் காட்டுகளாகும். இவற்றை நோக்கும் போது தொடர்ந்து சைவசமய இலக்கியங்களே தமிழிலக்கிய மரபில் கோலோச்சி வந்தமை புலப்படுகின்றது.
3
ஈழத்துத் தமிழிலக்கியத்தில் பத்தொன்பதாம் நூற் ருண்டு தனித்து ஆராயப்பெறும் தகுதிகள் கொண்டது. வரலாற்றைப் பொறுத்தவரையிலும் பலமுக்கியமான நிகழ்ச் சிகள் இந்நூற்ருண்டில் நடைபெற்றன. 1802ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்றநாடா னமை, 1831ஆம் ஆண்டு இலங்கைக்கு முதலாவது அரசி யற் சீர்திருத்தம் வழங்கப்பட்டமை, சுதேசிகள் இலங்கை யரசியலிற் பங்குபற்றும் நிலையேற்பட்டமை, ஆங்கில க் கல்வி நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டமை பெருந்தோட் டப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டமை, நாட்டின் பல் வேறுபகுதிகளையும் இணைக்கும் வண்ணம் தபால் தந்திச் சேவை களும் பெருந் தெருக்களும் புகையிரதப் பாதைகளும் அமைக் கப்பட்டமை முதலியன இலங்கை வரலாற்றுக்குப் புதிய
7

Page 11
தோற்றத்தையளித்தன. சமூக வகுப்புகளிடையேயும் புதிய அம்சங்கள் தோன்றின. புதிதாக ஆங்கிலக் கல்வி கற்று அரசாங்க சேவையில் ஈடுபட்ட மத்தியதர வர்க்கமொன்று தோன்றியது. இவ்வர்க்கத்தினரிடையே கிறித்தவ மத மாற் றம்அதிக அளவில் நடைபெற்றது, இது மட்டுமன்றி இவ்வ குப் பினரிடையிலேயே மேனுட்டு மயப்படுத்தலும் (Wester nization) ispi55gi.
இத்தகைய புதிய நிலைமைகளின் தாக்கம் இலக்கியத் திலும் பிரதிபலிக்கவேசெய்தது. 17ஆம் 18ஆம் நூற்றண்டில் நடந்தது போலவே 19ம் நூற்ருண்டிலும் கிறித்தவ மிசனரி மாரின் மதமாற்றமுயற்சிகள் மிகத் தீவிரமாக நடந்தன. கத்தோலிக்க, புரொட்டஸ்தாந்து மிசனரிமாருடன் கூ ட அமெரிக்க, வெசிலியன் மிசனரிமாரும் ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்தில் மதப் பிரசாரப்பணியில் ஈடுபட்டனர். கிறிஸ்தவ மதம், ஆங்கிலக் கல்வி, உயர்பதவி வாய்ப்பு ஆகியன ஒன்றுடனென்று இணைந்திருந்தன. இதனல் ஆங் கிலக்கல்வியையோ உயர் உத்தியோகத்தையோ நாடுவோர் கிறித்தவர்களாவதும் இயல்பாயிற்று. பல்வேறுசலுகைகளைக் கருதிக் கிறித்தவரானேர் பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு அந்நியப்படும் நிலைமையும் ஏற்பட்டது. முத்துக்குமாரகவி ராசரின் (1780 - 1851) பாடலொன்று இந்நிலையை நன்கு பிரதிபலிக்கிறது.
** நல்வழி காட்டுவோம் உடு புடவை சம்பளம்
நாளு நாளுந் தருவோம் நாஞ் சொல்வதை கேளும் எனமருட்டிச் சேர்த்து
நானமுஞ் செய்துவிட்டார் மெல்லமெல்லப் பின்னை வேலையிங்கில்லைநீர்
வீட்டினிடை போமென்கிருர் : வேண்டியொரு கன்னியைக் கைக்கொண்டு கருவாக்கி
விட்டபின் கணவன் வேலை இல்லை நீ போவென்று தள்ளுவது போலுமே
இனி எம்மை எம் உறவினுேர் எட்டியும் பாரார்கள் கிட்டவும் வாரார்கள்
ஏர்ட்யூடி உழவுமறியோம்

அல்லலாம் இம்மைக்கு மறுமைக்கு (நரகினுக்)கு
ஆளாகி மிக அழிந்தோம் ஆ பரா பரனே! கிறிஸ்தவர்கள் எங்களை
அடுத்துக் கெடுத்தார்களே. இத்தகையதொரு நிலையில் பாரம்பரிய நிலவுடமைச் சமூக அமைப்பின் மதிப்பீடுகள் மாறத் தொடங்கிய சூழலே 19 ம் நூற்ருண்டு இலக்கியத்தின் சமூக அடித்தளமாக அமைந்தது எனில் மிகையாகாது.
19 ஆம் நூற்ருண்டில் எழுந்த பெருந்தொகையான இலக்கியங்கள் சமய உள்ளடக்கம் கொண்டனவாகவே அமைந்தன. தெய்வங்கள் மீதும் திருத்தலங்கள் மீதும் பாடப்பெற்ற இலக்கியங்களே இவற்றிற் பெரும்பான்மை யன. இவற்றைவிட கிறிஸ்தவ சமயப் பிரசார நோக்குடன் எழுதப்பட்டவையும், கிறிஸ்தவ சமயத்தை மறுத்து சைவ மதத்தை நிலைநிறுத்தும் நோக்குடன் எழுதப்பட்டவையும் 19 ஆம் நூற்ருண்டுத் தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதி யாய் அமைந்தன. கிறிஸ்தவ மதப்பிரசாரமும் அதற்கு எதிரான முயற்சிகளும் தீவிரமாகவும் பரவலாகவும் நடை பெற்றுக் கொண்டிருந்ததால் கல்வி கற்ருேரை மட்டுமன்றி மற்ருேரையும் எட்டும்படி அவை சம்பந்தமான ஆக்கங் கள் அமையவேண்டியதாயிற்று. இத்தகைய நிலை 19 ஆம் நூற்ருண்டு இலக்கியத்தில் வசனநடை பிரதானம் பெறவும் வளர்ச்சி யடையவும் வழியமைத்தது. உரைநடையைச் சமயப் பிரசாரத் தேவைக்ளுக்குப் பயன்படுத்தியோரில் கிறிஸ்தவரே முன்னின்றனர். மிசனரிமாரே முதலில் யாழ்ப்பாணத்தில் அச்சுக் கூடங்களே நிறுவினர். சமயத் தேவைக்காகப் பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள் முதலிய தகவற் தொடர்புச் சாதனங்களை அவர்கள் பயன்படுத் தினர். 1923 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் யாழ்ப் பாணத் துண்டுப் பிரசுர சங்கம் (Jaffna Tract Socity) நிறுவப்பட்டது, இதன்மூலம் கிறிஸ்தவ மத சம்பந்தமான பல்வேறு துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. சமய
F。2 9

Page 12
உண்மைகளின் விளக்கங்கள், சமய கண்டனங்கள் ஆகிய பலவும் இத்துண்டுப் பிரசுரங்களில் இடம்பெற்றன. கிறிஸ் தவரின் இதே வழியினைச் சைவரும் கைக்கொண்டனர். ஆறுமுகநாவலரும் அவரைத் தொடர்ந்து சங்கரபண்டிதர், செந்திநாதையர், தாமோதரம் பிள்ளை, கைலாயபிள்ளை போன்ற சைவப் பெரியார்களும் சிறு பிரசுரங்கள் பல வற்றை வெளியிட்டுள்ளனர்.
19 ஆம் நூற்ருண்டில் தமிழ்ப் பகுதிகளில் உருவாகிய பத்திரிகைச் சூழல் சமய அடித்தளம் கொண்டது. கிறிஸ் தவ மிசனரிமாரே மதம் பரப்புவதற்கெனப் பத்திரிகைகளை ஆரம்பித்தனர். இலங்கையின் முதல் தமிழ்ப் பத்திரிகை யான உதயதாரகை 1841 இல் அமெரிக்க மிசனரி சார்பில் வெளிவந்தது. கத்தோலிக்க பாதுகாவலன், இலங்காபி மானி ஆகியனவும் 19 ஆம் நூற்ருண்டின் பின்னரைப் பகுதியில் கிறிஸ்தவ சமயச் சார்புடன் வெளிவந்த பத்திரிகை களாகும். எனினும் இப்பத்திரிகைகள் சமய எல்லையுள் மட்டும் நின்றுவிடாது பல்வேறு விடயங்கள்பற்றியும் எழு தின. உதயதாரகை தனது முதலாம் இதழ் ஆசிரியத் தலையங்கத்தில் பின்வருமாறு கூறியிருந்தது.
'' . . . . . . . . . உதயதாரகைப் பத்திரத்தில் கற்கை, சரித் திரம், பொதுவான கல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சி மாற்றம் முதலானவை பற்றியும் பிரதான புதினச் செய்திகள்பற்றியும் அச்சடிக்கப்படும்'.
சமயசம்பந்தமாகத் தோன்றிய பத்திரிகைகளாயினும் இவை தமது கோட்பாட் டெல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டமை குறிப்பிடத் தக்கது. கிறிஸ்தவர் பத்திரிண்க களே ஆரம்பித்ததுபோன்று சைவர்களும் பத்திரிகைகளை ஆரம்பித்தனர். இலங்கைநேசன், சைவாபிமானி, சைவ உதயபானு, இந்துசாதனம், ஆகியவை சைவர்களால் வெளியிடப்பட்டவை. இவற்றுடன் இஸ்லாமிய மறுமலர்ச்சி நோக்கில் முஸ்லிம் நேசன், சைபுல் இஸ்லாம் ஆகிய பத்
10

திரிகைகளும் கொழும்பு கண்டி போன்ற பகுதிகளிலிருந்து வெளியிடப்பட்டன. பொதுத் தகவற் சாதனமாகிய பத்திரி கையின் பரவலான தோற்றம் தமிழ் வசன நடையின் துரித மான் பன்முகப்பட்ட வளர்ச்சிக்கு வழிகோலிற்று. இலக்கண இலக்கிய தத்துவ நூல்களின் உரை வடிவங்களிலே கட்டுண்டு கிடந்த தமிழ் வசனநடை தனது பயன்பாட்டெல்லைகளை விரிவுபடுத்தி, புதிய வனப்பும் வளர்ச்சியும் பெற்றமைக்குரிய பிரதான காரணிகளுள் பத்திரிகைத் துறையும் ஒன்ருய் அமைந்தது. அச்சுரூபத்தில் பலநூற்றுக் கணக்கான பிரதிகள் வெளியிடப்படும் போது இலக்கியம். தவிர்க்க முடியாதபடி பரந்து பட்ட மக்களை எட்டவேண்டி ஏற்படுகிறது. இது நவீன யுகத்தில் அச்சில் வெளிவரும் இலக்கியங்களின் நிலை பேற்றுக்குரிய விதியாகும். பத்திரிகைகளின் தோற்றத்துக் தமிழிலக்கியம் பொதுத்தகவற் தொடர்புச் சாதலுட்
محل قلمثلاً
பைப் பெற்றதை இவ்வகையிலேயே விளக்கலம்.
அச்சுவசதி, வசன நடை வள்ர்ச்சி, பத்திரிகையின் Ꮤ றம் என்பவற்றுடன் கூட இக்காலத்தில் பரவு ல ரீல்வித் துறையும் தமிழ் இலக்கிய வளர்ச்சியைர்* றுத்தவரை குறிப்பிடக் கூடியதாகும். குறிப்பாக ஆர்கில்க் கல்வியின் மூலம் மேல்நாட்டு இலக்கியத்துடன் தொடர்பு ஏற்பட்டது. 20 ஆம் நூற்ருண்டில் நாவல், சிறுகதை ஆகியவை தோன்றி வளர்வதற்குரிய சூழல் ஏற்பட்டது. ஆங்கில மொழிபெயர்ப் புகள் சிலவும் இதற்கு உதவின. 1856-ல் Parley the Portor என்ற ஆங்கில நூல் காவலப்பன் கதை என்ற பெயரில் தமிழாக்கப்பட்டது. O303 &nd Val&ntine என்ற போத்துக் கேய நூல் ஊசோன்பாலந்தை கதை என நெடுங்கதையாய் வெளிவந்தது. இவற்றைத் தொடர்ந்து 20 ஆம் நூற்ருண்டு நர்வலிலக்கியத்துக்கு முன்னுேடிகளாயமையக் கூடிய அஸன் பேயுடைய கதை, (1885) மோகனுங்கி (1895) முதலிய நெடுங்கதைகளும் வெளியிடப்பட்டன.
இதுவரை 19 ஆம் நூற்றண்டுக் குரியனவாக மேலே பார்த்த புதிய வளர்ச்சிகள் வசன இலக்கிய வழியமைந்த

Page 13
வையே. செய்யுள் மரபுரீதியான போக்கிலேயே சென் றது. தலபிரபந்தங்களையும், சமயக்கிரியை விளக்க நூல்க ளையும் வடமொழி இலக்கியங்களின் தழுவல்களையுமே செய் யுட்துறையில் தொடர்ந்து காணலாம். பொருளடக்கம் மட்டு மல்லாது இலக்கிய உத்தி, மொழி நடை ஆகியவை கூட மரபு நெறிப்பட்டதாகவே அமைந்தன. வசன நடையில் புதுமையைப் புகுத்திய ஆறுமுகநாவலர் கூடச் செய்யுளை மரபுவழிநின்று 'புனிதப் பொருளாகவே நோக்கினர், "நீண்ட பாரம்பரியத்தையுடைய செய்யுளில் புதுமைசெய்ய இலக்கிய ஆசிரியர் தயங்கினர். ஆனல் தமது கண்முன்னே வளர்ந்த வசன நடையுடன் அதிகம் சொந்தம் பாராட்டி மாற்றங்கள் செய்ய அவர்கள் தயங்கவில்லை". இந்நிலேமை ஈழத்துக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் பொதுப்பண்பாகும்.
19 ஆம் நூற்றண்டில் ஏற்பட்ட உரைநடை வளர்ச்சியும் பத்திரிகைகள் போன்ற பொதுத் தகவல் தொடர்புச் சாதனங் களின் வளர்ச்சியும் இலக்கியத்தைப் பரந்த மக்கள் கூட்டத் திற்கு அறிமுகப்படுத்தின. இதஞல் இலக்கியம் உயர்நிலை மக்களைப் பாத்திரங்களாகவும் வாசகராகவும் கொள்ளும் நிலேயிலிருந்து விடுபடத் தொடங்கியது. இன்ஞெரு வகை யில் கூறிஞல் இருபதாம் நூற்ருண்டு இலக்கியத்தில் காணப் படும் நவீன பண்புகள் பல பத்தொன்பதாம் நூற்ருண்டில் ஆரம்பமாகியது எனலாம். இத்தகைய காரணங்களால் இக் கால இலக்கியம் தனியொரு பிரிவாகவும் விரிவான ஆய்வுக்கு உட்பட வேண்டியதாகவும் அமைகிறது. ஈழத்து இலக்கிய வர லாற்றில் பத்தொன்பதாம் நூற்ருண்டை யடுத்து இருபதாம் நூற்ருண்டு தனிக் காலகட்டமாயமைகிறது. இதுவே இந் நூலின் அடுத்துவரும் அதிகாரங்களில் இலக்கிய வடிவங் களின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுகின்றது. ,
4
ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கெனத் தனிப்பட்ட வர லாறு உண்டென்பதும் அது தனியே ஆராயப்படவேண்டிய
2

தென்பதும் இந்நூற்றண்டின் பிற்பாதியிலேயே அழுத்தம் பெற்றது. தமிழ் இலக்கியம் தமிழ் நாட்டு இலக்கியமாகவே நோக்கப்பட்டு வந்த நிலை மாறி தமிழ் இலக்கிய வளர்ச்சி யில் ஈழத்தின் பங்கும் வற்புறுத்தப்பட்டது இதன்பின்னரே யாகும். எனினும் ஈழத்தவர், ஈழத்து இலக்கியம் என்ற பற் றுணர்வு பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டது எனலாம். ஈழத்துத் தமிழரின் சமய கலாசார தனித்துவத்தைப் பேணுவதில் முழுமூச்சாக ஈடு பட்ட ஆறுமுகநாவலர் ஈழத்து இலக்கியப் பற்றுக் கொண் டிருந்தவர். 1856 ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட நல்லறிவுச் சுடர் கொழுத்தல் என்ற பிரசுரத்தில் இதனை அவதானிக் கலாம். சி. வை. தமோதரம்பிள்ளைக் கெதிராகத் தமிழ்நாட் டைச்சேர்ந்த வீராசாமி முதலியார் வெளியிட்ட ஒரு பிர சுரத்தில் ஈழத்தவர் பற்றி இழித்துக் கூறப்பட்டதைக் கண் ணுற்றே நல்லறிவுச் சுடர் கொழுத்தலில் ஈழத்தவர் தமிழ் மொழிக்காற்றிய தொண்டினையும் அவற்றின் முக்கியத்துவத் தினையும் நாவலர் எடுத்துக் கூறியிருந்தார்.
இருப்பினும் 1950 ஆம் ஆண்டுகளின்
இலங்கைமுற்போக்கு எழுத்தாளர் சங்கம் ே லக்கியம் என்ற கோட்பாட்டைப் ''ಖನ್ತಿ। தான் எ தாளர், வாசகர், விமரிசகர் sg, மூன்று மட்
லும் இவ்வுணர்வு செறிந்து பிரபலம்பெற்றது கட்டத்தில் இலங்கையின் சமூக, அரசியல், தாரத் துறைகளில் எற்பட்ட மாற்றங்கள் இக்கோட்பாட் டின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் உதவின. தேசிய நலனை அபிவிருத்தி பண்ணும் வகையிலேயே சகலநடவடிக்கை களும் அமையவேண்டும் என்ற அரசின் கொள்கை கலாசா ரத் துறையில் தேசியக்கலை இலக்கியங்களின் வளர்ச்சிக்கு உதவிற்று, ஈழத்து இலக்கியத்தில் வெறும் பற்றுமட்டும் அன்றி இலக்கியம் தேசியப் பிரச்சினைகளை எடுத்தாளவேண் டும் என்றும்; குறிப்பாக அடிநிலைமக்களின் வாழ்க்கை இலக்கியப் பொருளாக வேண்டும் என்றும் இத்தேசிய இலக்
13

Page 14
கியக் கோட்பாடு வற்புறுத்திற்று. இக்கருத்தைப் பற்றிய பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. எனினும் தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு பெற்ற இம்முக்கியத் துவம் இருபதாம் நூற்றண்டின் பிற்பாதியில் ஈழத்துத் தமிழிலக்கியப்போக்கைக் குறிப்பிடத்தக்களவு வழிநடத்தி யுள்ளது.
另
இருபதாம் நூற்றண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் அதற்கு முற்பட்ட இலக்கியத்தில் இருந்து வேறுபட்ட சில பொதுப் பண்புகளைக் கொண்டுள்ளது. இக்காலத்தில் நிகழ்ந் தேறிய பாரிய சமூக மாற்றங்களே இதற்குக் காரணமாக அமைந்தன. பிரித்தானியரின் வருகையினலும் அவர்கள் இங்கு புகுத்திய வர்த்தகப் பொருளாதார முறையினுலும் பலநூற்ருண்டுகளாக நிலைபெற்றுவந்த நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பு சிதைவடைய, அதன் சிதைவில் இருந்து தோன்றி வளர்ச்சியடைந்த முதலாளித்துவ சமூக முறையும், அதன் விளைவான நவீன மயமாதலும், அதனுல் ஏற்பட்ட சமூக மாற்றங்களுமே இருபதாம் நூற்றண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் இயக்கு சக்தியாக அமைந்தன.
19 ஆம் நூற்ருண்டு வரை நிலப்பிரபுத்துவ சமூக கலா சாரத்தின் அடிப்படை அம்சமான சமயமே இலக்கியத்தின் உள்ளடக்கமாக அமைந்தது. சாதாரண மனிதனும் அவனது அன்ருட வாழ்க்கை நெருக்கடிகளும் இலக்கியத்துக்குப் புறம் பாகவே இருந்தன. முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் சாதாரண மனிதன் பொது வாழ்வில் முக்கியத்துவம் பெறத் தொடங்க 20 ஆம் நூற்றண்டு இலக்கியம் சதாரண மல்ரி தனின் அன்ருட வாழ்வைப் பொருளாகக் கொள்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதாவது தெய்வங்களும், திருத் தலங்களும், சமயானுஷ்டானங்களும் பெற்ற இடத்தை பொதுமனிதனும், நடைமுறைவாழ்வும் பெற்றன. சுருக்க மாகச் சொல்வதானுல் இலக்கியம் சமய நெறியில் இருந்து
1.

சமூகநெறிக்கு மாறியது. இது 20 ஆம் நூற்றண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கிய பண்பாகும்.
இலக்கியத்தின் உள்ளடக்கத்தில் மாற்றம் ஏற்படும் போது அதன் உருவத்தில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதனுலேயே 19ஆம் நூற்ருண்டுவரை வழக்கில் இருந்துவந்த உலா, பிள்ளைத்தமிழ், பள்ளு, குறவஞ்சி போன்ற பிரபந்த வடிவங்களும் புராணங்களும் வழக்கிறக்க நவீன ஆக்க இலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதை, நாடகம், (நவீன) கவிதை போன்றன தோன்றின. இவை ஈழத்தமிழ்ப் பண்பாட்டோடு இயைந்த வளர்ச்சி பெற்றன. ஆரம்பத்தில் இவற்றை இலக்கியங்களாக அங்கீகரிக்காத பண்டித மரபினர்கூட இன்று இவற்றின் இலக்கிய அந் தஸ்தை அங்கீகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்
ᎧiᎢᎶᏡᎢᎥᎢ .
ஈழத்து மொழிவழக்குகளும் ஈழத்துப் பண்பாட்டு அம் சங்களும் 20 ஆம் நூற்ருண்டிலேயே இலக்கியத்தில் இடம் பெறத் தொடங்கின. முந்திய நூற்ருண்டுகளில் தோன் றிய இலக்கியங்களில் மிக அரிதாகக் காணப்பட்ட இத் தனித்துவக்கூறுகள், இந்த நூற்றண்டு ஈழத்து இலக்கியத் தின் மிகப் பிரதான அம்சமாக மாறின. இவை தமிழக இலக்கியத்திலிருந்து ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை வேறு படுத்தி அதற்கு ஒரு தேசியத் தன்மையை வழங்கின.
இந்த நூற்ருண்டின் பின்பகுதியில் அதாவது 1950-க்குப் பிறகு இந்நாட்டில் ஏற்பட்ட சமூக, அரசியல், பொருளா தார மாற்றங்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு சமூக அரசியல் பிரக்ஞையை அளித்தன. இக்காலப்பகுதி யில், பொருளாதார விடுதலையும், சம உடைமைச் சமூக அமைப்பும் கோரிய அடிநிலை மக்களின் அரசியல் விளிப்பு ணர்வு, மார்க்ஸியக் கட்சிகளை மட்டுமன்றி எல்லா அரசியல் கட்சிகளையும் தவிர்க்கமுடியாதவாறு, சோசலிசக் கோட் பாட்டை கொள்கையளவிலேனும் ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்
15

Page 15
தித்தது. இலக்கியமும் சமூக அரசியல் பிரக்ஞையில் இருந்து பிரிந்து ஒதுங்கமுடியாது போயிற்று. இந்நாட்டின் முக்கிய மான எழுத்தாளர்களில் பெரும்பாலோர் ஒடுக்கப்பட்ட மக் களின் சார்பில் அவர்களின் பிரச்சினைகளையே தங்கள் படைப் புக்களின் பொருளாகக் கொண்டனர். ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தே சில எழுத்தாளர்களும் தோன்றினர். இவ் வகையில் முற்போக்கு இலக்கியம் இந்நாட்டின் பிரதான இலக்கிய நெறியாக மாறியது. முற்போக்கு இலக்கியக்கோட் பாடுகளை ஏற்றுக் கொள்ளாத எழுத்தாளர் பலர் இங்கு இருப்பினும் இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பிர தான போக்காக இருப்பது முற்போக்கு நெறியே என்பதை அழுத்திக் கூறலாம். இடதுசாரி இயக்கத்தில் அரசியல் பிளவு கள் ஏற்பட்ட போதிலும் கூட இது இலக்கியநெறியை அதி கம் பாதிக்கவில்லை. மறுவகையில் இலக்கியத்தின் சமூகப்பெறு மானத்துக்குக் கொடுக்கப்பட்ட அதிக முக்கியத்துவம் சில வேளை அதன் கலைப் பெறுமானத்தைப் பாதித்துள்ள நிலையை யும் இங்கு அவதானிக்க முடிகின்றது. சமீபகாலத்தில் இது பற்றிய சர்ச்சைகள் ஈழத்து இலக்கிய உலகில் அதிகம் நடை பெற்றுள்ளன. இலக்கியத்தின் சமூகப் பெறுமானமும் கலைப் பெறுமானமும் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதை இன்று, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் அதிகம் உணர்ந்து வருவதையும் அவதானிக்கமுடிகின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் முதன்மை பெற்றுள்ள இம் முற்போக்கு இலக்கிய நெறி தமிழக இலக்கியத்தைப் பொறுத் தவரை மிகப் பிற்பட்ட வளர்ச்சியே என்பதும் மனங் கொள்ளத்தக்கது.
20 ஆம் நூற்ருண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத் தக்க பிறிதொரு அம்சம் வர்த்தக மயமாகாஷ்ம எனலாம். தமிழ்நாட்டைவிட ஈழத்தில் எழுத்தறிவு விகி தம் மிக அதிகம் எனினும் இங்கு வர்த்தகரீதியான பெரும் சஞ்சிகைகள் வளர்ச்சியடையவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தென் இந்திய வர்த்தக சஞ்சிகைகளின் சந்தை யாக ஈழம் தொடர்ந்தும் இருந்து வருவதே இதன் காரணம்
16

எனலாம். மலிவான ரசனேக்குத் தீனிபோடும் பொழுது போக்கு ரகக் கதைகள் தமிழகத்தில் மலிவாக உற்பத்தி செய்யப்பட்டு இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. ால்வெளியீட்டு வசதியும், நூல் சந்தைப்படுத்தல் முறை பும் விருத்தி அடையாத நிலையில் அவற்றேடு போட்டி போடக்கூடிய அளவுக்கு இங்கு வர்த்தக இலக்கியம் வளர்ச்சி அடைய முடியவில்லை. சிங்கள மொழியில் வர்த்தக இலக் கியங்கள் பெருகியதைப் போன்று இலங்கைத் தமிழில் பெருகாமைக்கும் இதுவே காரணம் எனலாம். இவ்வாறு கூறுவதனுல் ஈழத்துத் தமிழில் வர்த்தக ரீதியான இலக்கி யேமா, சஞ்சிகைகளோ இல்லையென்று பொருள்படாது. 1970 க்குப் பின்னர் சுமார் ஏழு ஆண்டுகாலம் இந்தியப் புத்தகங்கள், சஞ்சிகைகள் இறக்குமதிக்கு இருந்த தடை யைப் பயன்படுத்தி, வீரகேசரி, ஜனமித்திரன் போன்ற வர்த்தக ரீதியான வெளியீட்டு நிறுவனங்கள் தோன்றி ஈழத்துத் தமிழ் இலக்கியம் வர்த்தக மயமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் காணப்படுவது போல் வர்த்தக இலக்கியத்துக்கும் உயர் இலக்கியத்துக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளி ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நூல்வெளியீட்டு வசதியும், நூல் சந்தைப்படுத்தும் முறையும் வளர்ச்சியடையாமையால் வர்த்தக இலக்கியத் தின் எழுச்சி தடைப்பட்டிருப்பது மட்டுமன்றி காத்திர மான இலக்கிய முயற்சிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என் பதும் மனம் கொள்ளத்தக்கது. ஈழத்து இலக்கிய வளர்ச் சியில் காணப்படும் பொதுவான மந்தநிலைக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். பிரபல எழுத்தாளர்கள், கவிஞர் களின் சிறந்த படைப்புக்கள் பல இன்னும் வெளியிடப் படாமலேயே உள்ளன. பிரசுர வசதிக் குறைவிஞல் எழுத் தார்வம் மறைமுகமாகத் தடை செய்யப்படுகின்றது. எனி னும் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், வாசகர் சங்கம், முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ். இலக்கிய வட்டம் போன்ற எழுத்தாளர் கூட்டுப் பதிப்பு முயற்சிகள் நம் பிக்கை தருவதாக உள்ளன.
F,3 17

Page 16
கவிதை
இருபதாம் நூற்ருண்டு இலங்கைத் தமிழ்க்கவிதை என்று பேசும்போது நவீன தமிழ்க் கவிதையையே நாம் பிரதானமாகக் கருதுகின்ருேம் "நவீன தமிழ்க்கவிதை' அல்லது "தற்காலத் தமிழ்க்கவிதை' என்ற ஒரு தொடரை இப்போதெல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகின்ருேம், பழைய, பண்டித மரபு வழிப்பட்ட நிலப்பிரபுத்துவ வாழ்க்கை அம்சங்களை உள்ளடக்கமாகக்கொண்ட பிரபந்த இலக்கிய வகைகளிலிருந்து மாறுபட்டு, நிகழ்கால வாழ்க்கை நிலைமை களையும், அதன் அடிப்பிறந்த வாழ்க்கை நோக்குகளையும் கருத்தோட்டங்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட கவிதை களையே நவீன கவி  ைத என்ற தொடர் குறிக்கின்றது, நவீன உள்ளடக்கத்துக்கு ஏற்ப அதன் வடிவ அமைப்பிலும்-- சொற்கள், சொற் சேர்க்கைகள், ஒசை ஒழுங்கு, வெளிப் பாட்டு முறை போன்றவற்றிலும் - இ க் கவிதை முறை பழைய செய்யுள் இலக்கியங்களிலிருந்து எவ்வளவோ மாறி யுள்ளது என்பதையும் நாம் காண்கின்ருேம்.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இப்புதிய கவிதை மரபு, சுமார் முக்கால் நூற்ருண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. இப்புதிய கவிதை மரபை அங்கு தோற்று வித்து வலுப்படுத்தியவன் பாரதியே என்பது இப்போது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படும் உண்மை.
18

"தற்காலத் தமிழ்க்கவிதை” என்று இனங் காணப்படு கின்ற இக்கவிதை மரபு தமிழ்நாட்டில் அங்குள்ள நிலைமைக்கு ஏற்ப தோன்றி வளர்ச்சி அடைந்ததைப் போன்றே, ஈழத் திலும் நமது நாட்டுக்கு உரிய சில தனிப் பண்புகளையும், பாதிப்புக்களையும் கொண்டதாக வளர்ச்சியடைந்துள்ளதை நாம்இப்போது தெளிவாக இனம் கண்டு கொள்கின்ருேம். ஈழத்தைப் பொறுத்தவரை இக்கவிதை மரபு சுமார் நாற் பது ஆண்டு கால வரலாற்றையே கொண்டுள்ளது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் "மறுமலர்ச்சிக் காலம்’ என்று சொல் லப்படுகின்ற 1940 ஆம் ஆண்டுகளிலேயே இங்கு இப்புதிய கவிதை மரபு தோன்றி வளர்ச்சியடையத் தொடங்கியது.
19ஆம் நூற்ருண்டின் மரபு வழிப்புலவர்கள் சிலர் இந்த நூற்றண்டின் ஆரம்ப தசாப்தங்களிலும் வாழ்ந்தனர். சுன்னுகம் குமாரசுவாமிப்புலவர், க. மயில்வாகனப் புலவர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, நவநீதகிருஷ்ண பாரதியார், அருள்வாக்கி அப்துல்காதிறுப் புலவர் முதலியோர் இவர்க ளுள் முக்கியமாகக் குறிப்பிடவேண்டியவர்கள். ஆயினும் இவர்கள் அனைவரையும் சென்ற யுகத்தின் பிரதிநிதிகளாகவே கருதவேண்டும். இந்த நூற்ருண்டின் கவிதை மரபுடன் இவர்களைத் தொடர்புறுத்த முடியாது.
இந்த நூற்ருண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த, பாரதி யின் சம காலத்தவரான பாவலர் துரையப்பாபிள்ளை, சோம் சுந்தரப்புலவர், விபுலானந்த அடிகள் ஆகியோரும் இந்த நூற் ருண்டின் ஆரம்ப தசாப்தங்களில் அநேக கவிதைகளைப் படைத்துள்ளனர். இருபதாம் நூற்ருண்டின் ஆரம்ப காலச் சிந்தனைப் போக்குகள் சில இவர்களது கவிதைகளில் காணப் படினும் இன்றைய அர்த்தத்தில் இவர்கள் ஈழத்து நவீன கவிதையின் முன்னுேடிகள் என்று கருதப்படுபவர்கள் அல் லர். பழைய மரபுக்கும் புதிய மரபுக்கும் இடைப்பட்ட வர்களாகவே காணப்படுகின்றனர்.
1940 ஆம் ஆண்டுக்குப்பின் குறிப்பாக 1942 ஆம் ஆண்டு யாழ்ப்பாண்த்தில் சில இலக்கிய ஆர்வம் உடைய் இளைஞர்கள்
19

Page 17
சேர்ந்து மறுமலர்ச்சிச் சங்கம்" என்ற ஒரு இலக்கிய ஸ்தா பனத்தை அமைத்ததைத் தொடர்ந்து பாரதிதாஸன், கலை வாணன் போன்ற அக்காலத்து தமிழ்நாட்டு முன்னணிக் கவிஞர்களின் செல்வாக்கினல் தூண்டப்பட்ட சில இளம் கவிஞர்களின் முயற்சியினலேயே இங்கு நவீன கவிதைப் பாணி உருவாகி வளர்ச்சி அடையத் தொடங்கியது. நாவற் குழியூர் நடராசன், சோ. நடராசன், அ.ந. கந்தசாமி, மஹா கவி, சாரதா, செ. கதிரேசபிள்ளை, யாழ்ப்பாணன் முதலி யோர், இக்காலப் பகுதியில் கவிதை எழுதத் தொடங்கினர். இவர்களுள் நாவற்குழியூர் நடராசன், அ. ந. கந்தசாமி. மஹாகவி ஆகிய மூ வரும் இக்காலப்பிரிவில் தோன்றிய முக்கியமான கவிஞர்களாவர்.
நாவற்குழியூர் நடராசன் மனேரதியப் பாங்கான கவி தைகளேயே அதிகம் எழுதினர். பொருளைவிட ஒசைநயத்துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார். அவரது கவிதைகள் சில சிலம்பொலி என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளன.
இலங்கைத் தமிழ்க் கவிதையில் இடதுசாரிச் சிந்தனைப் போக்கை முதலில் பிரதிபலித்தவர் அ. ந. கந்தசாமியே ஆவர். 'கவீந்திரன்’ என்ற புனைபெயரிலும் இவர் கவிதை கள் எழுதிவந்தார். ஏராளமாக எழுதாவிட்டாலும் வில் லூன்றி மயானம், துறவியும் குஸ்டரோகியும் போன்ற இவரது சில கவிதைகள் குறிப்பிடத்தக்கன.
இம்மூவருள்ளும் இலங்கைத் தமிழ்க் கவிதையில் அதிக பாதிப்பையும் பங்களிப்பையும் செய்தவர் மஹாகவியே ஆவர். 1971 ஆம் ஆண்டு அவர் மரணிக்கும்வரை சுமார் முப்பது ஆண்டு காலம் கவிதை எழுதி வந்தார். பல நூற் றுக் கணக்கான கவிதைகளும் சேஞபதி, பொய்மை, சிற்பி ஈன்ற முத்து, கோலம், திருவிழா, அடிக்கரும்பு முதலிய வானுெலிப் பா நாடகங்களும், கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று முதலிய மேடைப் பா நாடகங்களும், கல்லழகி, சடங்கு கந்தப்பசபதம், கண்மணியாள் காதை, ஒரு சாதா
20

ரண மனிதனது சரித்திரம் முதலிய காவியங்களும் மானிலத் துப் பெரு வாழ்வு எனும் தலைப்பில் அமைந்த இசைப்பாடல் களும் பொருள்நூறு என்னும் சிறு கவிதைகளும் பிஞ்சுப் பாடல்கள் என்னும் சிறுவர் கவிதைகளும் அவரது படைப் புக்களாக உள்ளன. வள்ளி, குறும்பா, கோடை, கண்மணி யாள்காதை, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், வீடும் வெளியும், இருகாவியங்கள் ஆகிய அவரது ஏழு நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. நூல்வடிவம் பெருதவை பல.
மஹாகவி, யாழ்ப்பாணத்துக் கிராம மக்களின் வாழ் வையே தனது கவிதைப் பொருளாகக் கொண்டார். யதார்த்த நெறியைக் கவிதையில் கையாண்டார். பழைய யாப்பு வடிவங்களைப் பேச்சோசைப் பாங்கில் எளிமைப்படுத் தினர். கிராமிய வழக்குச் சொற்களைக் கவிதையில் தாராளமா கப் பயன்படுத்தினுர், மனித வாழ்க்கையில் ஒரு ஆழமான நம்பிக்கையையும் மனிதாபிமானத்தையும் அவர்தன் கவிதை களில் பிரதிபலித்தார். தனக்குப்பின் வந்த பல கவிஞர்களில் அவர் கணிசமான பாதிப்பைச் செலுத்தினர். இக்காரணங் களால் ஈழத்து நவீன கவிதையில் ஒரு பெரிய ஆழுமையாக பல விமர்சகர்களால் மஹாகவி கருதப்படுகின்ருர்,
1950 ஆம் ஆண்டுகள் இலங்கை வரலாற்றில் முக்கியமான காலப் பிரிவாகும். கிடைத்த சுதந்திரத்தை அர்த்தமுள்ள தாக்குவதற்கான முயற்சிகளும் போராட்டங்களும் இக்காலப் பிரிவிலேயே தொடங்கின. தேசியம் பற்றிய பிரக்ஞை பொதுமக்கள் மயமாகத் தொடங்கிய காலப்பிரிவும் இதுவே. தேசிய இனப் பிரச்சினை பெரிய அரசியல் பிரச்சினையாக மாறிய காலமும் இதுவே. * இக்காலப் பகுதியில் இலங்கைத் தமிழ்க் கவிதையில் பல புதியவர்களையும் சில புதிய போக்குகளையும் நாம் காண்கின் முேம், உண்மையில் இக்காலப் பகுதியிலேயே இலங்கையின் நவீன தமிழ்க் கவிதை வீறுடன் எழுச்சி பெற்றது எனலாம். நாம் முன்னர் குறிப்பிட்ட கவிஞர்களும் இக்காலப் பகுதியி
2.

Page 18
லேயே முதிர்ச்சி பெற்றனர். முருகையன், நீலாவணன், சில்லையூர் செல்வராசன், ராஜபாரதி. புரட்சிக்கமால் அண் ணல் முதலியோர் இக்காலப் பகுதியில் அதிகம் எழுதிப் பிரப லம் பெற்றவர்கள். ஆயினும் தங்கள் நோக்கிலும் போக்கிலும் இவர்கள் தனித்தன்மைகளைக் கொண்டிருந்தனர்.
விஞ்ஞானப் பட்டதாரியான முருகையனின் கவிதைகளில் சிந்தனைக் கனதியே பிரதான அம்சமாகும். விஞ்ஞான அறி வின் செல்வாக்கைஇவரது பல கவிதைகளில் காணலாம். கவிதைகளாகவும் பா நாடகங்களாகவும் காவியங்களாகவும் இவரது படைப்புக்கள் அதிகம் உள்ளன. நெடும்பகல் இவரது காவியமும் கவிதைகளும் அடங்கிய தொகுப்பு நூலாகும். வந்து சேர்ந்தன. தரிசனம், கோபுரவாசல் ஆகியன பாநாடக நூல்களாகும். ஆதிபகவன் என்ற காவிய நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. கடுழியம் என்னும் குறியீட்டுப் பாங்கான இவரது பாநாடகம் சமீபகாலத்தில் இலங்கையில் மேடை யேற்றப்பட்ட முக்கியமான நாடகங்களுள் ஒன்ருகும். மஹா கவியுடன் இவர் சேர்ந்து எழுதிய தகனம்" குறிப்பிடத் தக்க ஒரு பரிசோதனைக் காவியமாகும். ஒருவரம் இவர் மொழி பெயர்த்து வெளியிட்ட ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு.
50 களில் எழுதத் தொடங்கிய நீலாவணன் 1975 ஜனவரியில் மரணித்தார், அதுவரை அவர் ஏராளமான கவிதைகளையும் சில பா நாடகங்களையும் வேளாண்மை என்ற முடிவுருத ஒரு காவியத்தையும் படைத்துள்ளார். ஆரம்பத்தில் அ ழ கி ய காதல் கவிதைகள் பல வற்றை எழுதிய நீலாவணன் 1960 களில் கிழக்கிலங்கைக் கிராமங் களின் வாழ்க்கை முரண்பாடுகளைத் தனது கவிதைகள் பலவற்றில் சித்திரமாக்கினர். ஆயினும் இவரது பிற்காலக் கவிதைகள் பலவற்றில் ஆன்மீக உணர்வே வெளிப்பாடு பெற்" றுள்ளது. "வழி" இவரது முக்கியமான கவிதைகள் சிலவற்றை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பாகும்.
சில்லையூர் செல்வராசன் ( தான்தோன்றிக் கவிராயர் ) அங்க்த்ப் பாண்யிலான் கவிதைக்ள் எழுதுவதில் வல்லவராக்
穹

விள்ங்கினுர். பிரதானமாக இவர் ஒரு மேடைக்கவிஞரே என லாம். கவியரங்குகளில் இவரது கவிதைகள் அதிகம் வரவேற் பைப் பெற்றன. பிற்காலத்திலே இவர் சிலேடை போன்ற மொழி வித்தைகளிலும் அக்கறை காட்டியுள்ளார். இவரது கவிதை நூல்கள் எதுவும் வெளிவரவில்லை.
இராஜ பாரதி, அண்ணல் ஆகியோர் பிரதான மாகக் காதல் கவிஞர்களே. ஒசைநயமும் உவமைச் சிறப்பும் மிக்க பல காதல் கவிதைகளை இவர்கள் எழுதியுள்ளனர். தீயுண்ட வீரமுனை என்ற இராஜ பாரதியின் சிறு கவிதை நூல் இனக் கலவரம் ஒன்றில் பாதிக்கப்பட்ட வீரமுனை என்ற கிராமத் தைப் பற்றியது. அண்ணலின் ‘அண்ணல் கவிதைகள் என்ற தொகுப்பும் வெளிவந்துள்ளது. ஐம்பதுகளில் வளர்ச்சிய டைந்த முக்கியமான கவிஞர்களில் ஒருவரான புரட்சிக்கமால் பிற்காலத்தில் முற்றிலும் இஸ்லாமிய மரபுணர்ச்சிக் கவிஞ ராக மாறினர். "புரட்சிக்கமால் கவிதைகள்’ தொகுப்பாக வந்துள்ளது.
1950 களில், பரமஹம்சதாசன், பார்வதிநாதசிவம், திமி லேத்துமிலன், அம்பி, சக்தி அ. பாலையா, எம்.சி.எம். சுபைர், யுவன், போன்ற இன்னும்பல குறிப்பிடத்தகுந்த கவிஞர் களும் வளர்ச்சி அடைந்துள்ளனர். ஆயினும் மஹாகவி, முருகையன், நீலாவணன் ஆகிய மூவருமே 50 களிலும் 60 களிலும் கூட ஈழத்தின் பிரதான மூத்த கவிஞர்களாக விளங்கினர்.
1950 ஆம் ஆண்டுகளின் பின்பகுதி அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழ்கவிதையில் பெரிதும் செல்வாக்குச் செலுத் தீய காலப்பிரிவாகும். இக்காலப் பகுதியே அரசியல் கவிதை யின் தொடக்க காலமும் ஆகும். தென் இலங்கையில் சிங் களம் மட்டும் என்ற அரசியல் கோசத்தின் எதி ரொலியாக தமிழ் மக்கள் மத்தியில் மொழி உணர்வும் இனரீதியான அரசியல் எழுச்சியும் தீவிரம் அடைந்தன. இயல்பாகவே மொழி உணர்வுடைய, ஆனல் அரசியல் ரீதி
23

Page 19
யாக வெறுமையாக இருந்த பெரும்பாலான தமிழ்க் கவி ஞர்கள் "தமிழ் அரசு இயக்கத்தால் எளிதில் ஈர்கப்பட்டார் கள். இன, மொழி உணர்வை உள்ளடக்கமாகக் கொண்ட நூற்றுக்கணக்கான கவிதைகள் இக்காலப் பகுதியில் எழுந் தன. தமிழரசுக்கட்சி சார்பான சுதந்திரன் பத்திரிகை இத் தகைய கவிதைகளின் பிரதான வெளியீட்டுக் களமாக அமைந்தது. செந்தமிழ்ச் செல்வம், உயிர்தமிழுக்கு, தமிழ் எங்கள் ஆயுதம் முதலிய தொகுப்பு நூல்களாகவும் தமிழ் இயக்கக் கவிதைகள் வெளிவந்தன. இந்த அரசியல் அலையில் இருந்து ஒதுங்கி நின்ற கவிஞர்கள் மிகச்சிலரே.
எனினும் 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரம் இக்கவி தைப் போக்கை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. இனரீதி யான அரசியல் எழுச்சியின் விளைவுகளை மனிதாபிமானம் மிக்க இக்கவிஞர்கள் நேரடியாகக் கண்டனர். பலர் அதில் இருந்து விடுபட்டனர். சிலர் புதியதொரு அரசியல் போக் குக்கான தேடலில் ஈடுபட்டனர். எனினும் தீர்த்து வைக் கப்படாத தேசிய இனப் பிரச்சினை, பெரும்பான்மை இன ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்க வேட்கை ஆகியவற்றின் விளைவாக இன்றுவரை இக்கவிதைப் போக்கு சிறுபான்மை யாக நீடித்து நிலவக் காணலாம். கவிஞர் காசி ஆனந்தன் இப் போக்கின் சிறந்த பிரதிநிதியாக இருந்து வருகின்ருர். அவரது உயிர் தமிழுக்கு, தமிழன் கனவு, தெருப்புலவர் சுவர்க்கவிகள் முதலியன இப்போக்கில் அமைந்த கவிதை நூல்களாகும்
1960 ஆம் ஆண்டுகள் இலங்கைத் தமிழ்க் கவிதையைப் பொறுத்தவரை பிறிதொரு வகையில் முக்கியமான காலப் பிரிவாகும், சமூகப் பிரக்ஞையும் முற்போக்குச் சிந்தனையும் தமிழ்க்கவிதையின் பிரதான போக்காக மாறிய காலப்பிரிவு இதுவே. 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக 1956 ஆம் ஆண் டின் அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து நாவல், சிறு கதை, விமர்சனத்துறைகளில் முற்போ க்கு ச் சிந்தனை பிரதான இடம் பெறத் தொடங்கியது. ஆனல் கவிதையைப்
24

பொறுத்தவரை 60 ஆம் ஆண்டுகள், அதிலும் குறிப்பாக 1965 ஆம் ஆண்டுக்குப் பின்னரே முற்போக்குச் சிந்தனை முதன்மைபெறத் தொடங்கியது. எல்லோரும் இல்லை எனி னும் ஒரு கணிசமான தொகைக் கவிஞர்கள் முற்போக்குச் சிந்தனையால் பாதிக்கப்பட்டனர். இவர்களுள் பலர் அரசி யல் இயக்கங்களிலும் நேரடியாக ஈடுபட்டனர்.
பசுபதி, சுபத்திரன், புதுவை இரத்தினதுரை, போன்ருேர் நேரடியான பிரச்சாரப் பாங்கான அரசியல் கவிதைகள் எழுதினர். எம். ஏ. நுஃமான், சண்முகம் சிவ லிங்கம் ஆகியோர் அன்ருட வாழ்க்கை நிலைமைகளைச் சித் திரிப்பதன் ஊடாக கலாபூர்வமாக அரசியல் உணர்வை வெளிப்படுத்த முனைந்தனர். மெளனகுரு, ஈழவாணன், இ. சிவானந்தன், மருதூர்க்கனி, பண்ணுமத்துக் கவிராயர், கலை வாதி கலீல் போன்ருேரும் தம் கவிதைகளில் முற்போக்குச் இந்தனைகளைப் பிரதிபலித்தனர். மேற்காட்டியவர்கள் எல் லாரும் ஏதோ ஒருவகையில் முற்போக்கு அரசியல் சித்தாந் தங்களுடன் உறவு உடையவர்களாவர்.
இக்காலப் பிரிவில் முற்போக்குச் சித்தாந்தங்களுடன் தம்மை இனம் காட்டிக்கொள்ளாத சீர்திருத்தவாதப் போக் குடைய அல்லது ஆன்மீக நோக்குடைய பல கவிஞர்களும் உள்ளனர். 60 ஆம் ஆண்டுகளின் கவிதை முயற்சியில் இவர் களின் பங்களிப்பும் கணிசமானதாகும். ஜீவா.ஜீவரத்தினம், வி. கந்தவனம், காரை சுந்தரம்பிள்ளை, பாண்டியூரன், மு. சடாட்சரன், பஸில் காரியப்பர், ஏ. இக்பால், அன்பு முகை யதீன், சா. வெ. பஞ்சாட்சரம், பா. சத்தியசீலன், மு. பொன்னம்பலம், வெ. குமாரசாமி போன்றேர் இப்போக்கு களின் குறிப்பிடத் தகுந்த பிரதிநிதிகளாவர். இவர்களுள் சிலரின் பிற்காலக் கவிதைகளிலே முற்போக்குச் சிந்தனையின் தாக்கத்தையும் காணலாம். இவர்களுள் சிலர் 60க்கு முன் னரே கவிதை உலகில் பிரவேசித்தவர்கள் எனினும் 60 ஆம் ஆண்டின் பின்னரே முதிர்ச்சியும் பிரபலமும் பெற்றவர் கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
序。4 25

Page 20
இக்காலப் பகுதியில் எழுதத் தொடங்கிய கவிஞர்கள் சிலரின் கவிதை நூல்கள் சில வெளிவந்துள்ளன. பசுபதியின் "பசுபதி கவிதைகள்’. சுபத்திரனின் ‘இரத்தக்கடன் இரத் தினதுரையின் "காலம் சிவக்கிறது", "ஒரு தோழனின் காதல் கடிதம்', எம். ஏ. நுஃமானின் "தாத்தாமாரும் பேரர்களும்", ஈழவாணனின் "அக்கினிப்பூக்கள்", இ. சிவானந்தனின் ‘கண் டறியாதது"; ஜீவா ஜீவரத்தினத்தின் "வாழும் கவிதை' வி. கந்தவனத்தின் ‘ஏணிந்தப் பெருமூச்சு" , "இலக்கிய உல கம்" "கவியரங்கில் கந்தவனம்", காரை சுந்தரம்பிள்ளையின், "தேனுறு', 'சங்கிலியம்’, சா. வே. பஞ்சாட்சரத்தின் "எழிலி. பா. சத்தியசீலனின் "பா", மு. பொன்னம்பலத்தின் அது". அன்புமுகையதினின் "நபிகள் வாழ்வில் நடந்த கதை’ ஆகியன 60, 70 களில் வெளிவந்தன.
1960 ஆம் ஆண்டுகளில் ஈழத்துக் கவிதையின் உருவ அமைப்பில் ஏற்பட்ட ஒரு முக்கியமான மாற்றம்பற்றியும் இங்கு குறிப்பிடவேண்டும்.
60 ஆம் ஆண்டுகள் வரை யாப்போசையும், சந்தலய மும் கவிதையின் பிரதான அம்சங்களாகக் கருதப்பட்டு வந் தன. "யாப்புக்குள் இருந்து யாழ்மீட்டுபவள்’ என மஹாகவி ஒரு கவிதை எழுதினர். ஒசைநயம் மிக்க பல்வேறு வகையான யாப்பு வடிவங்களிலும், சந்த விகற்பங்களிலும், ஈழத்துக் கவிஞர்கள் அக்கறை காட்டினர். ஆணுல் 60 ஆம் ஆண்டு களில் இறுக்கமான யாப்போசை விருப்பு தளர்ச்சியடைந் தது. பேச்சோசைப் பாங்கான கவிதைகள் பெரிதும் எழுதப் பட்டன. அதற்கேற்ப செய்யுளின் அமைப்பு முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அன்ருட வழக்குச் சொற்கள், இயல்பான சொற் சேர்க்கை, சிறு வாக்கிய அமைப்பு என் பன கையாளப்பட்டன. செய்யுளின் அடி அமைப்புக்கு ஏற்ப அன்றி, பொருள் அமைப்புக்கு ஏற்ப சீர்பிரித்து வரிகள் அமைக்கப்பட்டன. ஓசை நிறுத்தத்துக்காக நிறுத் தக் குறிகளும் இடைவெளி (Space) களும் பயன்படுத்தப் பட்டன. இவ்வாறு செய்யுளின் யாப்போசை குறைக்கப்
26

பட்டு பொருள் புலப்பாட்டுக்கு ஏற்ப பேச்சோசை நிலை நிறுத்தப்பட்டது. ஒரு செய்யுளுக்குரிய எதுகைமோனை, சீர் தளைக் கட்டுப்பாடுகளை இழக்காமலேயே பேச்சோசையின் சகல பண்புகளையும் ஈழத்துக் கவிதை பெற்றது.
மரபு ரீதியான எல்லாச் செய்யுள் உருவங்களிலும் குறிப்பாக வெண்பா, கட்டளைக்கலிப்பா, கட்டளைக் கலித்துறை போன்ற வரையறுப்புக்கள் மிகுந்த வடி வங்களிலும் கூட ஈழத்து நவீன கவிஞர்கள் இந்தப் பேச்சு ஒசைப் பண்பைச் செயற்படுத்தி இருக்கின்றர்கள். மஹா கவி, முருகையன், நீலாவணன், எம். ஏ. நுஃமான், சண் முகம் சிவலிங்கம் ஆகியோரே இதில் முக்கிய பங்களிப்புக் களைச் செய்துள்ளனர் எனலாம். முருகையனின் "பேச்சோ சையும். பாட்டோசையும் என்ற கட்டுரையும் எம். ஏ. நுஃமானின் "பேச்சுமொழியும் கவிதையும் "மஹாகவியும் வழக்குத் தமிழும்" என்ற கட்டுரைகளும் ஈழத்து நவீன கவி தையின் இப்பண்பை எடுத்துக் காட்டுவனவாய் அமைந்தன. புதிய உள்ளடக்கத்தைக்கொண்ட புதிய கவிதைத் தேவை களுக்கு ஏற்ப மரபுவழிச் செய்யுள் நவீனமயமாக்கப் பட் டதன் விளைவே இப்பேச்சோசைப் பண்பு எனலாம். இது தமிழகத்துக் கவிதையில் காணப்படாத ஒர் அம்சம் ஆகும்.
1930ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கைத் தமிழ்க் கவி தையில் ஒரு புதிய அலே தோன்றியது. இக்காலப் பகுதியில் ஏற்பட்ட அரசியல் இலக்கிய விழிப்புணர்வும், தென் இத் தியப் புதுக்கவிதைகளின் செல்வாக்கும் நூற்றுக்கணக்கான இளேஞர்களை கவிதை உலகுள் இழுத்துவிட்டன. புதிய சமு தீாய மாற்றத்துக்காகக் குரல் கொடுக்கும் புரட்சிகரச் சிந் தனை உடையோரே இவர்களுள் அதிகமாகக் காணப்பட் டனர். இவர்கள் யாவரும் தங்கள் எண்ணங்களையும் உணர் வுகளையும் வெளியிடுவதற்குப் புதுக்கவிதை ஒரு இலகுவான சாதனம் எனக் கண்டனர். 1970க்கு முன்பும் ஈழத்துக் கவிதை உலகில் புதுக்கவிதை அல்லது வசன கவிதைப் போக்கு இருந்தது. இன்று தென்னிந்திய இலக்கியத்துடன்
27

Page 21
தன்னை முற்றிலும் இணைத்துக்கொண்ட புதுக்கவிதையாளர் தருமு சிவராமு ஈழத்தவரே. 60 க்களில் மு. பொன்னம் பலம், கே. எஸ். சிவகுமாரன், தா. ராமலிங்கம் முதலியோ ரும் புதுக்கவிதைகள் எழுதினர். தா. ராமலிங்கம் முக்கிய கவனத்துக்குரிய தனித்துவமான புதுக்கவிதைக்காரராவர். இவரது புதுமெய்க்கவிதைகள், காணிக்கை ஆகிய இருநல்ல புதுக்கவிதைத் தொகுதிகள் வெளிவந்தன. எனினும்870 க்கு முன்னர் இலங்கையில் புதுக்கவிதை சிறுபான்மையினருக்கு உரியதாகவும் இலக்கிய அங்கீகாரம் பெருததாகவுமே இருந் தது. ஆனல் 70க்குப் பின்னர் ஈழத்துக்கவிதை பெரும்பா லும் புதுக்கவிதையாகவே மாறிவிட்டது. எல்லாச் சஞ்சிகை களும், பத்திரிகைகளும் புதுக்கவிதைக்கு இடம் கொடுக்கின் றன. ஏராளமான புதுக்கவிதைப் பிரசுரங்களும் வெளிவந் துள்ளன. முற்போக்கான கருத்துக்களே இன்றைய புதுக் கவிதையின் பலம் என்று சொல்லவேண்டும். கவித்துவமும் கலைப்பெறுமானமும் உடைய படைப்புக்கள் இவற்றுள்மிகச் சொற்பமாகவே காணப்படுகின்றன. பெரும்பாலான கவி தைகள் துணுக்குகளாகவும், சிறு சிறு கூற்றுக்களாகவுமே உள்ளன. சுருக்கமாகச் சொல்வதானல் பெரும்பாலான தமிழ்நாட்டுப் புதுக்கவிதைகளில் காணப்படுவது போன்ற ஒர் இலக்கிய முதிர்ச்சியின்மை பெரும்பாலான ஈழத்துப் புதுக்கவிதைகளின் பொதுப்பண்பாகவும் உள்ளது எனலாம். புதுக்கவிதை உலகில் சில தனி ஆளுமைகள் வளர்ச்சியடை யும் வரை நிலைமை இவ்வாறே இருக்கக்கூடும். இத்தகைய தனி ஆளுமையின் வளர்ச்சிக்கான அறிகுறிகளும் சமீபத்தில் தென்படத் தொடங்கியுள்ளன. இவ்வகையில் சொந்த அனுபவ வெளிப்பாட்டுக்கு முதன்மை கொடுக்கும் அ. யேசுராசா, சமூக அரசியல் உணர்வுகளுக்கு முதன்ம்ை கொடுக்கும் வ. ஐ. ச. ஜெயபாலன், சிவசேகரம் ஆகியோர் கலை உணர்வுடன் எழுதும் குறிப்பிடத் தகுந்த புதுக்கவிதை யாளர்கள் ஆவர்.
மு. கனகராசனின் "முட்கள்", அன்பு ஜவகர்ஷாவின் “காவிகளும் ஒட்டுண்ணிகளும் , திக்வல்லைக்கமாலின் "எலிக்
28

கூடு”, மேமன் கவியின் "யுகராகங்கள்", செளமினி சிவம் ஆகியோரின் "கனவுப்பூக்கள் *, பேணு மனேகரனின் "சுமை கள், மூதூர் முகையதினின் ‘முத்து, லோகேந்திரலிங்கத் தின் "போலிகள் , செந்தீரனின் "விடிவு?, பூநகர் மரியதா ஸின் "அறுவடை முதலிய புதுக்கவிதைத் தொகுப்புக்கள் 1970க்குப் பின்னர் வெளிவந்துள்ளன. தொகுப்புகள் எதுவும் வெளியிடாதபோதிலும் சபா-ஜெயராசா, சாருமதி, ஜவாத் மரைக்கார் முதலிய அனேகர் இங்கு புதுக்கவிதை எழுதி வருகின்றனர். அன்பு ஜாவகர்ஷா தொகுத்த பொறிகள், சரவணையூர் சுகந்தன் தொகுத்த "சுவடுகள் ஆகிய புதுக் கவிதைத் தொகுப்புகளில் ஐம்பதுக்கு அதிகமான கவிஞர் களின் படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப் பிடத்தக்கது.
சமீப காலமாக, உயர் இலக்கியமட்டத்தில் புதுக்கவிதை, மரபுக்கவிதை பற்றிய முரண்பாடு அருகி வருவதை அவ தானிக்க முடிகின்றது. இவ்விருநிலை முரண்பாட்டின் சமூக வரலாற்றுப் பின்னணி எவ்வாறு இருப்பினும், நடைமுறை யில் செய்யுள் அமைப்பில் எழுதுவது மரபுக்கவிதை, செய் யுள் அமைப்பை நிராகரிப்பது புதுக்கவிதை என்ற கருத்தே நிலவிவருகின்றது. புதுக்கவிதை என்பதற்கு நவீன கவிதை (Model poetry) என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டால் (அதுவே சரியானதும் ஆகும்) பாரதியே தமிழின் முதலா வது புதுக் கவிஞணுவான். ஆனல் பாரதிக்குப் பின்னர் தமி ழகத்தில், நவீன வாழ்க்கை உள்ளடக்கத்தை, நவீன கண் னேட்டத்தில் பிரதிபலிப்பதற்கு செய்யுள் நடையைக் கையா ளும் ஆற்றல் உள்ள கவிஞர்கள் தோன்ருததால், செய் யுளை நிராகரித்து பிச்சமூர்த்தி வழியில் புதுக்கவிதை மரபு உருவாகிற்று. நவீன சிந்தனை செய்யுள் நடையில் வெளிப் 1ாடு பெற முடியாது என்றும் கூறப்பட்டது. ஆனல், ஈழத் திலே நிலேமை வேறு வகையாக இருந்தது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று நவீன சிந்தனையுடன் இயைபுறும் வண்ணம் செய்யுள் நடையும் அதன் அச்சமைப்பும் இங்கு மாற்றியமைக்கப்பட்டது. எம். ஏ. நுஃமான், சண்முகம்
29,

Page 22
சிவலிங்கம் ஆகியோர் செய்யுளையே கவிதைக்குப் பயன்படுத் தியபோதிலும் அவர்களது படைப்புக்களை மரபுக் கவிதைக் குப் புறம்பான புதுக்கவிதை என்றே ஈழத்தின் பல புதுக் கவிஞர்களும் சில விமர்சகர்களும் கருதி வந்துள்ளனர் என் பது இதை நன்கு விளக்கும். தமிழகத்திலே பாரதிக்குப் பின்னர் இலக்கிய முதிர்ச்சியுள்ள கவிதைகள் எழுதியோர் செய்யுளை நிராகரிக்கும் பிச்சமூர்த்தி வழிவந்த புதுக்கவி ஞர்களாகவே இருப்பதுபோல் ஈழத்தில் இலக்கிய முதிர்ச்சி யுள்ள கவிதைகள் எழுதியோர் செய்யுளைப் பயன்படுத்திய, மஹாகவி வழிவந்த நவீன கவிஞர்களேயாவர் என்பது முக் கிய கவனத்திற்கு உரியது. இலக்கிய முதிர்ச்சியுள்ள சிறந்த கவிதைகள் படைப்பதற்குச் செய்யுளைப் பயன்படுத்துவதோ அல்லது செய்யுளை நிராகரிப்பதோ அடிப்படைக் காரணி யல்ல என்பதையே இது காட்டுகின்றது. நவீனத்துவம் பற் றிய பிரக்ஞையே அதன் அடிப்படையாகும். சமீப கால மாக கவிஞர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் இந்தத் தெளிவு ஏற்பட்டு வருவதணுலேயே புதுக்கவிதை மர புக் கவிதை பற்றிய இருநிலை முரண்பாட்டு மோதல் தளர்ச் சியடைந்து வருகின்றது எனலாம்.
இதுவரை இருபதாம் நூற்றண்டின் ஈழத்து நவீன கவிதையின் வளர்ச்சிப் போக்குகள் பற்றிக் , கவனித்தோம். இதே காலப் பகுதிகளில் பழைய தலைமுறையைச் சேர்ந்த சிலரும் தொடர்ந்து எழுதி வந்துள்ளனர். இவர்கள் சமய மரபை இறுக்கமாகப் பேணுபவர்கள்; கவிதையைச் சமயச் சார்பான சிந்தனைகளுடன் இணைப்பவர்கள். செந்நெறிப் பாங்கான செய்யுள் நடையை இவர்கள் கையாண்டனர். புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் "பகவத்கீதை வெண்டா? இவ்வகையில் விதந்து குறிப்பிடத்தக்கது. புலவர் ஆ. மு. ஷரிபுத்தீன் எழுதிய "நபிமொழி நாற்பது', இ. இரத்தினத் தின் "முருகு', சிவன் கருணுலப பாண்டியனரின் "அழகியது" ஆகிய நூல்களும் குறிப்பிடத்தக்கன.
கவிஞர் அப்துல்காதர் லெவ்வை, பேராசிரியர் கண பதிப்பிள்ளை ஆகியோர் முற்றிலும் இவர்கள் வரிசையைச்
30

சேர்ந்தவர்கள் அல்லர் எனினும் நவீன கவிஞர்களாகக் கருதப்படுபவர்களும் அல்லர். மொழிபெயர் ப்பாக வும் சொந்த ஆக்கமாகவும் அப்துல்காதர் லெவ்வையின் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவரது "செயினம்பு நாச்சியார் சதகம்’ ஒரு வகையில் தேசிகவிநாயகம்பிள்ளையின் மருமக் கள்வழி மான்மியத்துடன் ஒப்புநோக்கத்தக்கது. பேராசிரி யர் கணபதிப்பிள்ளையின் 'தூவுதூஉம் மலரே”, "காதலி ஆற்றுப்படை ஆகிய நூல்களும் இவ்வகையில் குறிப்பிடத் தக்கன. இவ்வரிசையில் வித்துவான் வேந்தனரின் ‘கவிதைப் பூம்பொழில்" பண்டிதர் வீரகத்தியின் "செழுங்கமலச் சிலம் பொலி ஆகியனவும் குறிப்பிடத்தக்கன.
2
இருபதாம் நூற்றண்டுத் தமிழ்க்கவிதை பற்றிப் பேசு கையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளைத் தனி யாகக் குறிப் பிடுவது பொருத்தமாகும். பல்வேறு மொழிகளில் இருந்து ஏராளமான கவிதைகள் இக்காலப் பகுதியில் இலங்கைக் கவிஞர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. கலைநோக்கில் இருந்து சமூகநோக்குவரை ஈழத்துத் தமிழ்க்கவிதை பரிண மித்ததை மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் நாம் காணலாம்.
1940 ஆம் 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பிட்ட சமூக நோக்குபற்றிய பிரக்ஞையின்றி இலக்கியச் சுவையின் அடிப்படையில் பிறமொழிக் கவிதைகள் மொழிபெயர்க்கப் பட்டன. 1960ஆம் ஆண்டுகளிலும் ஒரளவு இப்போக்கு நீடித்தது எனலாம். இத்தகைய முயற்சிகளில் சுவாமி விபு லானந்தர் ஒரு முன்னேடியாக அமைகின்றர். சேக்ஸ்பிய ரின் நாடகப் பகுதிகள் பலவற்றை கம்பீரமான, செந் நெறிப் பாங்கான மொழிநடையில் (Classical Style) அவர் பெயர்த்துள்ளார். காளிதாசனின் " மேகதூதம் ' என்ற நூலும், சிங்களப்பிரபந்தமான "செலஹினி சந்தேசய’ என்பது 'பூவைவிடுதூது’ என்ற பெயரிலும் திரு. சோ. நடராசாவினல் மொழி பெயர்க்கப்பட்டு நூல் உருப்பெற் றுள்ளன. கவிஞர் அப்துல்காதர் லெவ்வை இக்பாலின்
31

Page 23
கவிதைகள் சிலவற்றை மொழிபெயர்த்து "இக்பால் இத யம்" என்ற பெயரில் தொகுப்பாக வெளியிட்டார். அவரே பின்னர் உமர்கையாமின் 'ருபாய்யாத்’தையும் மொழி பெயர்த்தார். இதேநூல் சி. கதிரவேலுப்பிள்ளையாலும் இலங்கையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாரசீகக் கவிஞ ரான மெளலானு றுாமியின் சில கவிதைப் பகுதிகளை “மஸ் னவி மலர்கள்' என்ற தலைப்பில் எம். ஏ. நுஃமான் தமிழ்ப் படுத்தினுர், 'மெளலானு றுரமியின் சிந்தனைகள்’ என்ற பெயரில் ஏ. இக்பால் ஒரு கவிதை நூலை வெளியிட்டார். *வேட்ஸ்வேர்த், ஜோன்டன், கீற்ஸ் போன்ற ஆங்கில மனேரதியக் கவிஞர்களின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அடங்கிய நூல் ஒன்றை "ஒருவரம்’ என்ற பெயரில் முருகையன் வேளியிட்டார். ‘தேன்மொழி "ந்ோக்கு ஆகிய கவிதைப் பத்திரிகைகளிலும் இலக்கியச்சுவையின் அடிப் படையில் பல பிறமொழிக்கவிதைகள் மொழிபெயர்க்கப் பட்டன. நோக்கின் ஒர் இதழ் முழுவதும் சேக்ஸ்பியரின் மொழிபெயர்ப்புகளுக்காக ஒதுக்கப்பட்டது. ஆன்மீக நோக்கின் அடிப்படையில் பரமஹம்சதாசன், கவி தாகூரின் "கனிகொய்தல்" என்ற நூலை ‘தீங்கணிச்சோலை" என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
1965 ஆம் ஆண்டின் பின்னர் மொழிபெயர்ப்புக் கவி தைகளிலும் இலக்கியச் சுலைக்குப் பதிலாக அ ர சி ய ல் நோக்கு முதன்மை டொறத் தொடங்கியதைக் காணலாம். ஏகாதிபத்தி:த்துக்கு எதிரான, சமூக, தேசிய விடுதலைப் போராட்டக் கவிதைகள் பல இக் காலப்பகுதியில் மொழி பெயர்க்கப்பட்டன. நமது தேசிய அபிலாஷைகளுடன் அவை ஒத்தியங்குவதே இதற்குக் காரணம் எனலாம். இவ் வகையில், வியட்நாமிய, சீன, ரஷ்ஷிய, இந்திய, பாலஸ்தீன, ஆபீரிக்க, லத்தின் அமெரிக்கக் கவிதைகள் பல மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றுட் பெரும்பாலானவை பத் திரிகைகளிலேயே பிரசுரிக்கப்பட்டன. ஆயினும் கே. கணேஷ் மொழிபெயர்த்த ஹோஷிமின் கவிதைகளும், சிவசேகரம் மொழிபெயர்த்த மாஒவின் கவிதைகளும் நூல்
32

உருவில் வெளிவந்துள்ளன. பண்ணுமத்துக் கவிராயர் நஸ் ருல் இஸ்லாமின் கவிதைகள் சிலவற்றையும் பலஸ்தீனக் கவிதைகள் சிலவற்றையும் மொழிபெயர்த்துள்ளார். பலஸ் தீன, வியட்நாமிய, சீனக் கவிதைகள்சில எம். ஏ. நுஃமா ஞல் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ரஷ்ஷிய, சீன, அமெ ரிக்கக் கவிதைகள் சிலவற்றை சண்முகம் சிவலிங்கம் மொழி பெயர்த்துள்ளார். அக்னி சஞ்சிகையின் ஒரு இதழ் முழுவ தும் அமெரிக்க கறுப்புக் கவிதைகளுக்காக ஒதுக்கப்பட்டது. பாப்லோ நெருடாவின் கவிதைகள் சிலவும் சிங்கள மொழிக் கவிதைகள் பலவும் தமிழாகி உள்ளன.
சிறுவர்களுக்கான கவிதை முயற்சி பற்றியும் இங்கு சிறிது குறிப்பிட வேண்டும். சோமசுந்தரப் புலவரே இங்கு முதன்முதல் சிறுவர்க்கான பாடல்கள் பலவற்றை எழுதி யுள்ளார். அவரது பாடல்கள் பல சிறுவர் பாட நூல்களில் இடம்பெற்றுள்னன. இவருடன் மு. நல்லதம்பி, யாழ்ப்பா ணன் ஆகியோரும் இத்துறையிற் குறிப்பிடற்குரியர். ஆயி னும் 60 ஆம் ஆண்டுகள் வரை சிறுவர்க்கான கவிதை முயற் சிகள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியடையவில்லை.
60 ஆம் ஆண்டுகளில் இத்துறையில் பலர் முயன்ருர் கள். வித்துவான் வேந்தனரின் பல பாடல்கள் சிறுவர் பாடநூல்களில் இடம் பெற்றன. மஹாகவி பிஞ்சுப்பாடல் கள் என்ற பெயரில் சில சிறுவர் பாடல்களை எழுதினர். அம்பி, அம்பிப் பாடல்கள் என்ற பெயரில் ஒரு நூலை வெளி யிட்டுள்ளார். எம். சி. எம். சுபைரின் மலரும் உள்ளம், பா. சத்தியசீலனின் பாட்டு, மழலைத் தமிழ் அமுதம், புத்தியால் வென்ற நத்தையார் ஆகிய நூல்களும் வெளிவந்துள்ளன. சாரணுகையூம், சி. மெளனகுரு ஆகியோரும் இத்துறை யில் முயன்றுள்ளனர். ஆயினும் சிறுவர்களின் வயது, மனே வள்ளர்ச்சி, மொழியாற்றல் ஆகியவற்றுக்கேற்ப படிமுறை யாக சிறுவர் பாடல்கள் எழுதப்படுகின்றன என்று சொல்
F。5 33

Page 24
வதற்கில்லை. அம்பி, சத்தியசீலன் ஆகியோரிடம் இப் பிர்க்ஞை இருப்பதாகத் தெரிகின்றது. எமது சிறு வர் கவிதை இன்னும் அதிக தூரம் வளர்ச்சியடைய வேண்டி யுள்ளது. w
A.
கவிதை வளர்ச்சிப் போக்கின் ஓர் அம்சமாக கவிதைக் காக மட்டும் நடத்தப்பட்ட சிறு சஞ்சிகைகளும் இங்கு தோன்றின. அதுபற்றியும் இங்கு குறிப்பிடுவது பொருந் தும். 1955 ஆம் ஆண்டு "தேன்மொழி என்னும் ஈழத்தின் முதலாவது கவிதைச் சஞ்சிகையை மஹாகவியும் வரதரும் சேர்ந்து வெளியிட்டார்கள். தேன்மொழி பதினறு பக்கங் கள் கொண்ட சிறு சஞ்சிகையாக மாதம் தோறும் வெளி வந்தது. ஆறு இதழ்களே வெளிவந்தன எனினும் இருபது வருடங்களுக்கு முந்திய இலங்கைத் தமிழ்க் கவிதைப் போக்கு களே இனம் காட்டும் ஒரு சிறந்த பிரதிநிதியாக அது அமைந்தது.
தேன்மொழியை அடுத்து எட்டு ஆண்டுகளின் பின் 1464 முதல் ‘நோக்கு" என்ற சஞ்சிகையை முருகையன், இ. இரத்தினம் ஆகிய இருவரும் சேர்ந்து காலாண்டுக்கு ஒருமுறை வெளியிட்டனர். தாய்மொழிக் கவிதை, கவிதை மொழிபெயர்ப்பு, கவிதை விமர்சனம் ஆகிய மூன்றையும் வளர்ப்பது நோக்கின் நோக்கமாக இருந்தது. மொழி பெயர்ப்புக்கு நோக்கில் அதிக இடம் கொடுக்கப்பட்டது. புதுமைக்கும் பழமைக்கும் ஒரே காலத்தில் அது தளமாக அமைந்தது. நோக்கும் மொத்தம் ஆறு இதழ்களே வெளி வந்தன.
1969 முதல் எம். ஏ. நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகிய இருவரும் சேர்ந்து ‘கவிஞன்” என்னும் காலாண்டு இதழை வெளியிட்டனர். கவிதையின் சமூகப் பெறுமானம், கலைத்தரம் ஆகிய இரண்டு அம்சங்களைக் கவிஞன் முக்கிய
34

மாக வலியுறுத்தியது. முன்னைய இரு கவிதை இதழ்களையும் போலவே கவிதை மொழிபெயர்ப்பின் அவசியத்தை கவிஞ னும் உணர்ந்திருந்தது. கவிதை விமர்சனத்துக்கும் முக்கிய இடம் கொடுத்தது. கவிஞன் மொத்தம் நான்கு இதழ்களே வெளிவந்தன.
70 க்குப் பின்னர் தோன்றிய புதுக் கவிதைப் போக் கின் வெளியீட்டுக் களமாக இக்காலப் பகுதியில் சில புதுக் கவிதை இதழ்களும் தோன்றின. 1973 ஆம் ஆண்டில் நீள் கரைநம்பி, அப்துல் சத்தார் ஆகிய இருவரும் க-வி-தை என்ற புதுக் கவிதை ஏடு ஒன்றை வெளியிட்டனர். அது தொடர்ந்து வெளிவரவில்லை. 1975 இல் கவிஞர் ஈழவாணன் * அக் னி " என்ற புதுக் கவிதை ஏட்டை வெளியிட்டார். ஐந்து இதழ்களுடன் அதுவும் நின்றுவிட்டது. முன்னைய கவிதை இதழ்களைப் போல் சுய ஆக்கம், மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகியன அக்னியிலும் இடம் பெற்றன. இவை தவிர புதுக் கவிதைக்கு முதன்மை கொடுத்து பொன்மடல்" நவயுகம் ஆகிய இரு சஞ்சிகைகள் வெளிவந்தன. அவை யும் இரண்டொரு இதழ்களுடன் நின்றுவிட்டன. அச்சகச் செலவு அதிகரிப்பும் - வாசகர் குறைவும் கவிதை இதழ்களின் அற்ப ஆயுளுக்குக் காரணமாக அமைந்தன.
5
கவிதை ஏடுகளைப் போல் கவிதையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் சாதனமாக கவிதை அரங்குகள் அமைந் தன. 60 ஆம் ஆண்டுகள் கவிதை அரங்கின் எழுச்சிக் காலம் எனலாம். எல்லாக் கூட்டங்களிலும் விழாக்களிலும் கவிதை அரங்கும் ஒரு முக்கிய அம்சமாக அமைந்தது. முக் கிய விழாக்களின் போதெல்லாம் வானெலியிலும் கவிதை அரங்குகள் இடம்பெற்றன. கவியரங்குகள் மூலம் கவிஞர் கள் மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டார்கள். கவிதையை வாசிக்கும் பழக்கம் அற்றவர்களுக்கும் அதை அறிமுகப் படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது
35

Page 25
எனலாம். மஹாகவி, முருகையன், நீலாவணன், சில்லையூர் செல்வராசன். எம். ஏ. நுஃமான், பா. சத்தியசீலன், கந்தவனம், காரை சுந்தரம்பிள்ளை, சி. மெளனகுரு முதலி யோர் 60 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பல பகுதிகளி லும் கவிதை அரங்குகளில் அடிக்கடி பங்குபற்றினர். இவர் கள் அலாதியாகக் கவிதையைச் சொல்லும் முறை கவிதை மீது மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக அமைந்தது. மேடையில் கவிதையைச் சொல்வதற்குப் பதிலாக பாடும் முறையையும் சிலர் கையாண்டனர். மண்டூர் சோமசுந்த ரம்பிள்ளை, அரியாலையூர் ஜயாத்துரை ஆகியோர் தங்கள் குரல் வளத்தினுல் சபையினரைக் கவர்ந்தனர். முருகையன், செல்வராசன், பஸிஸ் காரியப்பர் முதலியோரும் சிலவேளை களில் இவ்வுத்தியைப் பயன்படுத்தினர். ஆயினும் கவிதை யை எடுத்துரைக்கும் முறையே கவியரங்குகளில் பாதிப்பு உடையதாக அமைந்தது.
கவியரங்குகளில் கவிதை நேரடியாகக் கேட்பதற்காகவே எழுதப்படுவதால் அது கவிதையின் அமைப்பையும் பாதித் தது. இவ்வகையில் கவியரங்கக் கவிதையில் மூன்று வகை யான போக்குகள் காணப்பட்டன. முதலாவது காத்திர மான, எளிதில் பொருள் விளங்கக்கூடிய அதேவேளை கலை யம்சம் ஊறுபடாத கவிதைகள். இரண்டாவது மேடைப் பிரசங்கம்போல் செய்யுட் சொற்பொழிவாக எழுதப்பட்ட கலையம்சம் அற்றவை. மூன்றுவது உடனடியான கைதட் டல்களையும் ஆரவாரங்களையும் பெறக்கூடிய மலிவான பகடி கள் நிறைந்தவை. இரண்டாம் மூன்ரும் போக்குடைய வையே கவியரங்குகளில் அதிகம் இடம்பெற்றதால் காலப் போக்கில் கவிதையரங்கு தனது முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கிற்று.

நாவல்
பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் இலங்கை யிலும் இந்தியாவிலும் நிலவுடமைச் சமூகஅமைப்பில் ஏற் பட்ட சீர்குலைவுகள், முதலாளித்துவ சமூக அமைப்பின் தோற்றம், பிரித்தானியர் அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வி, மேலைநாட்டு இலக்கியப் பரிச்சயம் முகலியவை தமிழ் இலக்கியப் போக்கில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் காரணிகளாயின. நாவல், சிறுகதை முதலிய நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் இவற்றுளொன்ருகும். பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் தோற்றம் பெற்ற நாவலிலக்கியம் இன்று பல்வேறு வளர்ச்சிப் போக் குகளையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்துக்கு சுமார் ஒரு நூற் முண்டு கால வரலாறுண்டு. சித்திலெப்பையினல் எழுதப் பட்டு 1885-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அஸன்பேயுடைய கதையே ஈழத்தின் முதல் நாவலாகக் கொள்ளப்படுகிறது. ஈழத்தவரால் எழுதப்பட்டதாயினும் இந்நூல் சென்னையி லேயே வெளியிடப்பட்டது. மிஸர் தேசத்து அரசகுமாரனுண அஸன்பேயின் வாழ்க்கை நிகழ்ச்சிகளினூடாக இஸ்லாமிய கலாசாரத்தின் பெருமையை நிலைநாட்ட ஆசிரியர் முனைந் திருக்கிருர் எனலாம். அஸன்பேயுடைய கதைவெளிவந்து பத்து ஆண்டுகளின் பின்னர் திருகோணமலையைச் சேர்ந்த
a.

Page 26
த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய மோகனங்கி என்ற நூல் வெளியாயிற்று. இந்நூல் தஞ்சை நாயக்கர் வரலாற்றில் இடம்பெறும் ஒரு சிறு சம்பவத்தைக் கருவாக வைத்து கற் பனை கலந்து எழுதப்ப்ட்டதாகும்.
இவ்வாறு 19 ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியில் இருந்து ஈழத்தவர் புதியதொரு இலக்கிய வடிவத்தைப் படைப்பதில் ஈடுபட்டனர். எனினும் வசனத்திலமைந்த நீண்ட கதைகளாய் இவை அமைந்தனவே தவிர நாவல் என்ற நவீன இலக்கிய வடிவத்தின்பண்புகளைப் பெற்றுக் கொள்ளவில்லை. சமகால வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கருவாகக் கொள்ளாமல் இதி காச அல்லது கற்பனைக் கதைகளையே வசனத்தில் இந்நூல்கள் கூற முனைந்தன. இந்நிலைமைக்கு இன்னேர் சிறந்த உதார ணமாக சி. வை. சின்னப்பபிள்ளையின் விஜய சீலத்தைக் (1916) குறிப்பிடலாம். விஜன் இலங்கைக்கு வந்தமை குவேனியை மணந்தமை ஆகிய இதிகாச நிகழ்ச்சிகளை மையமாக வைத்து இக்கதை எழுதப்பட்டது. சி. வை. சின் னப்ப பிள்ளையின் வேறும் இரு நூல்கள் 20 ஆம் நூற்ருண் டின் ஆரம்பத்தில் வெளிவந்துள்ளன. விரசிங்கன் கதை அல் லது சன்மார்க்க ஜெயம் (1905) உதிரபாசம் அல்லது இரத் தினபவானி ( 1915) ஆகிய அவரது நூல்கள் சமகாலப் பாத்திரங்களைக் கொண்டவைபோன்று அமைந்திருப்பினும் கற்பனையான கதைகளே. இக்கற்பனைக் கதைகளில் அக்காலத் தன்மைகள் சில இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது வன்னி, உதாரணமாக வீரசிங்கன்கதையில் அதன் கதைத் தலைவன் அனுரதபுரம், திருகோணமலை முதலிய பல இடங்களுக்குப் போவதாகக் கூறப்படுகிறது. ஆயினும் அவ்வவ்விடங்களுக் குரிய இயல்பு, அங்குள்ள வாழ்க்கை யதார்த்தம், அதற் கும் கதைத் தலைவனின் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு அக்குறிப்பிட்ட சூழலில் பிறக்கும் மனித குணும்சங்கள் ஆகி யவை நாவலில் இடம்பெறவில்லை. யாழ்ப்பாணத்திலிருப் போர் உத்தியோகத்துக்காகவும் பிற தொழில்களுக்காகவும் ஏனைய பிரதேசங்களுக்குச் செல்லுதல் 20 ஆம் நூற்றண்டில்
38

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட ஒரு புதிய நிலைமையாகும். இந் நிலைமையை வெறும் நிகழ்ச்சியாக இவ்வாசிரியர்கள் கண்டனரே தவிர அந் நிலைமைகள் தனிமனித, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்திய புதிய பரிமாணங்களைத் தமது எழுத்தில் சிறைப்பிடிக்க முனைந்தாரல்லர். இதனுலேயே இந் நாவல்கள் யதார்த்தத்தை இழந்த கற்பனைக் கதை களாகின. இந்நிலையில் கதை கொழும்பில் நிகழ்ந்தாலும் கோலாலம்பூரில் நிகழ்ந்தாலும் ஒன்ருகவே அமையும் வி! ரீதத்திற்குள்ளாகிறது. இந் நிலைமை இந் நூற்றண்டின் பிற் பாதி வரை தொடர்ந்து எமது நாவலுலகில் நிலவி வந் துள்ளது. கதைகளினூடு நல்வழி உபதேசம் செய்யும் பண்பே இருபதாம் நூற்ருண்டின் முன்னரைப் பகுதியில் அரசோச்சி வந்துள்ளது எனலாம், சமூகத்தில் ஏற்பட்ட மாறுதல்கள், ஒழுக்கப் பிறழ்வுகள் அனைத்தையும் அறக் கண் கொண்டே நாவலாசிரியர் நோக்கினர். ஏனையோரு டன் ஒப்பிடும்போது அதிகளவு சமூக நிலைமைகளைக் கருத் திற் கொண்டு நாவலெழுதியவர் என்று போற்றப்படும்
ம.வே. திருஞானசம்பந்தபிள்ளை பின்வருமாறு கூறியுள்ளார்.
**செந்தமிழ்ப் பயிற்சி குன்றி ஆங்கிலக் கல்வியே அதி கரித்து வரும் இக் காலத்தில் நமது தமிழ் மக்கள் பத் திய ரூபமாகவுள்ள புராணேதிகாசங்களையும் மற்றும் நீதி நூல்களையும் இலகுவிற் பயின்று அவைகளிற் சொல் லப்பட்ட நீதிகளையும் பிறவற்றையும் அறிந்து நல், வழியடைய முடியாதவர்களாயிருக்கிருர்கள். இக் கார ணம் பற்றியே இராமாயணம், பாரதம், முதலிய இதி காசங்களும், கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளை யாடற் புராணம் முதலிய புராணங்களும் அறிஞரால் வசன நடையில் எழுதி வெளியிடப்படலாயின. மேலைத் தேசக் கொள்கையைப் பின்பற்றிப் பல நவீன கதைகள் தமிழ்ப் பாஷையில் எழுதப்படுவதும் இக் காரணம் பற் றியேயாம்.'
39

Page 27
இப் பண்பு இந்நூற்றண்டின் பிற்பாதி வரை எழுந்த கதைகளில் காணப்படும் பொது நிலைமையாயினும் அவற் றுள் காணப்படும் சில சாயை வேறுபாடுகளையும் வேறு பண்புகளின் தோற்றத்தையும் கருதி அவற்றை மூன்று உட் பிரிவுகளாக நோக்குதல் இக் காலப் பகுதி நாவல் இலக்கிய வரலாற்றைத் தெளிவாக்க உதவும்.
1) 1915 ஆம் ஆண்டு வரை நீண்டதும் வசன ரூபத் தில் அமைந்தனவுமான கற்பனைக் கதைகளே முதன்மை பெறுகின்றன. அஸன்பேயுடைய கதை, மோகனங்கி, உதிர பாசம், விஜயசீலம், வீரசிங்கன்கதை ஆகிய மேலேபார்த்த நூல்கள் இக் காலத்தில் வெளிவந்தவையாகும். இவற்றின் பொதுப் பண்புகளை மேலே பார்த்தோம். இவற்றை நாவல் கள் என அழைப்பதை விட ரோமான்ஸ் எனக் கூறுவதே பொருத்தமானது.
2) 1915-ம் ஆண்டுக்குப் பின்னர் அதிகளவு சமூக நிலைமைகளைக் கவனத்திற் கெள்ளும் போக்கு நாவல் உலகில் அரும்பத் தொடங்குகிறது. பாத்திர உருவாக்கம், பாத் திர உரையாடல் ஆகியவற்றிலோ, கதைப் பின்னலிலோ ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்தாவிடினும் அக் காலத் துச் சமூக நிலைமைகள் சமூகத்தில் நிலவிய கருத்தோட்டங் கள் ஆகியவற்றைச் சிறிதளவாவது தமது நாவல்களில் பிரதிபலித்துள்ளனர். வெறும் கதை கூறும் போக்கிலி ருந்து விடுபட்டு சமூக உணர்வுடன் நாவல்கள் எழுதப்பட் டமைக்கும் அக்காலச் சமூக நிலைமைகட்கும் தொடர்பிருந் தது. ஆங்கிலேயர் இலங்கையில் ஏற்படுத்திய பெருந்தோட் டப் பயிர்ச் செய்கை, விருத்தி செய்த வர்த்தகம், அறிமுகப் படுத்திய ஆங்கிலக் கல்வி, அதுசார்ந்த பதவிகள் ஆகியவை நாட்டில் புதிய நிலைமையைத் தோற்றுவித்தன. பணம் சம்பாதிப்பதில் மக்கள் கவனம் செலுத்தத்தொடங்கினர். அத்துடன் கிறிஸ்தவ மிசனரிமாரின் தீவிரமான மதமாற்ற முயற்சிகளும் இடம்பெற்றன. சுருங்கக் கூறின் பாரம்பரிய சமூக அபைப்பினுள் ஏற்பட்ட சலனங்கள் மக்கள் நடை
40

முறைகளையும் கருத்துக்களையும் பாதித்தன எனலாம். இக் காலப் பகுதியில் மக்களின் மனுேபாவங்களிலும் நடைமுறை களிலும் ஏற்பட்ட மாறுதல்களைக் கூர்ந்து அவதானித்திருந்த பாவலர் துரையப்பாபிள்ளை Ceylon National Review என்ற பத்திரிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
**கவனத்தை ஈர்க்கும் மாறுதல் இப்போது நம் மக்களிடை ஏற்படத் தொடங்கியுள்ளது. மக்கள் நடை முறையில் அக்கறையுடையோராகவும் பணம் உழைப்ப தில் கவனம் செலுத்துவோராகவும் காணப்படுகின்ற னர். அவர்கள் சமூக விழாக்கள், விளையாட்டுகள், பொழுது போக்குகள் என்பவற்றைச் சிறுபிள்ளைத்தன மாகக் கணிக்கின்றனர்.'
இப் புதிய நிலைமைகளில் காணப்பட்ட மனித ஒழுக்க லாறுகள் இலக்கிய கர்த்தாக்களின் சிந்தையைக் கிளறும் விஷயங்களாயமைந்தன. மக்களிடையே காணப்பட்ட ஏற் றத் தாழ்வுகள், சீர்கேடுகள் ஆகியவற்றுக்கு பரிகாரம் கூறும் நோக்குடன் அறவியல் சமய அடிப்படையில் இவர்கள் எழு தினர். மங்களநாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இரு தயம் (1914) தேம்பாமலர் (1929) தம்பிமுத்துப்பிள்ளையின் சுந்தரன் செய்த தந்திரம் (1918) ம. வே. திருஞானசம்பந்த பிள்ளையின் காசிநாதன் நேசமலர் (1924) கோபாலநேசரத் தினம் (1927) துரைரத்தினம் நேசமணி (1927) இடைக்காட ரின் நீலகண்டன் அல்லது ஒரு சாதி வேளாளன் (1925) ஆகி யவை இப் பண்புக்கு உதாரண விளக்கங்களாகும்.
சுந்தரன் செய்த தந்திரம், காசிநாதன் நேசமலர், துரை ரத்தினம் நேசமணி, நீலகண்டன் ஆகிய நூல்களில் அக்கால யாழ்ப்பாணத்துச் சமூகத்தில் நிலவிய சீர்கேடுகள் சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகின்றன. சாதி காரணமாக மக்களி டையே நிலவும் ஏற்றத் தாழ்வுகள், உயர்சாதியினரிடை காணப்படும் ஊழல்கள், சீதன வழக்கத்தினுல் ஏற்படும் தீமை கள்,மதுபானப் பழக்கத்தால் ஏற்படும் கேடு ஆகியவை இவற் றுள் பிரதானம் பெற்றன. மக்கள் நல்லாசாரங்களைக் கைக்
匣,6 - 41

Page 28
கொள்வதன் மூலம் சமூகத்தில் இவற்றைக் களைந்துவிட லாம் என்பது இந் நாவல்களை எழுதியோரின் கருத்தாகவி ருந்தது. சமூகக் குறைபாடுகளைத் தனிமனிதக் குறைபாடுக ளாகக் கண்டதின் விளைவே இதுவெனலாம். இக் குறை பர்டுகளுக்குரிய சமூகவியல் காரணிகளை இந் நாவலாசிரியர் கள் கருத்தில் கொள்ளவில்லை. கடவுள் நம்பிக்கை, தர்ம விருப்பு, கல்விஅறிவினுல் உண்டாகும் மன விசாலிப்பு ஆகி யவை ஏற்பட முழுச் சமூகமுமே மேற்கூறிய குறைபாடு களிலிருந்து நீங்கும் என இவர்கள் எண்ணினர்.
மேற்கூறிய நாவல்கள் சிலவற்றில் இன்னுேர் பண்பும் முதன்மை பெற்றது. 19 ஆம் நூற்ருண்டிலிருந்தே இலங்கை யில் இடம்பெற்ற கிறிஸ்தவ மதமாக்கல் முயற்சியும் அதற்கு எதிராக சுதேசிகளிடம் தோன்றிய சுதேச மதப் பற்றும் 20 ஆம் நூற்ருண்டிலும் முக்கிய அம்சங்களாகக் காணப் பட்டன. இவற்றின் பிரதிபலிப்பும் மேற்கூறிய சில நாவல் களில் இடம் பெற்றன. மங்கள நாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம் கிறிஸ்தவ சமய நெறியில் சன் மார்க்க சீவியம் நடத்த மக்களுக்கு வழிகாட்டும் முயற்சி யாகவே எழுதப்பட்டதெனலாம். சைவசமய பரிபாலன சபையினர் வெளியிட்ட இந்துசாதனப் பத்திரிகையின் ஆசி ரியராகப் பணிபுரிந்த ம. வே. திருஞானசம்பந்தபிள்ளையின் கோபாலநேசரத்தி ைம் சுதேச மத விழிப்புணர்வைப் பிரதி பலிப்பதாகும். 'சைவசமயச் சிறுமியரை அந்நிய மதத்தி னர் வைத்து நடத்தும் வித்தியாசாலைகளில் கல்வி பயில விட வெ1 எண்ணுவென்பதை இந்நூல் எடுத்துக் காட்டும் இயல்பினது' என ஆசிரியரே அந் நூல் முகத்தில் கூறுகிருர்,
சமூக நிலேமைகளேயும், சமூகத்தில் நிலவிய கருத்தோட் டங்களையும் பிரதிபலிப்பனவாக மேலே பார்த்த, 1915 - 30க் கிடைப்பட்ட ந | வ ல் க ள் அமைகின்றன. அதே வேஃா அவை பண்டைய மரபு வழிப்பட்ட அறவியல் அடிப்படை யிலேயே பிரச்சினைகளை அணுகின என்பதும் வற்புறுத்தப் 11. வேண்டியதாகும்.
42

3) 1930 ஆம் ஆண்டையடுத்து மீண்டும் எண்ணிக்கையில் அதிகமாகக் கற்பனைக் கதைகள் நாவல் என்ற பெயரில் வெளிவரத் தொடங்கின. சமூக நிலைமைகள் எவற்றையும் கவனத்திற் கொள்ளாமல் வெறும் கற்பனரீதியில் அமைந்த இவை குறிப்பிடத்தக்க நீளமும் உடையனவாயிருந்தன. மக்களிடையே விருத்தியடைந்த வாசிப்புப் பழக்கமும், தின சரிப் பத்திரிகையின் தோற்றமும் இத்தகைய நூ ல் க ள் தோன்ற வழிவகுத்தன எனலாம். இக தொடர்பாக 1931 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வீரகேசரி பத்திரிகை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் அதன் ஆசிரியராகவிருந்த எச். நெல்லையா இப் பத்திரிகையில் தொடர்ந்து கதைகளை எழுதினர். இவரது நூல்களாக சந்திரவதணு அல்லது காத லின் வெற்றி (1934), இரத்தினவளி அல்லது காதலின் மாட்சி (1938), காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச் சாவு மணி (1938), பிரதாபன் அல்லது மகாராஷ்டிர நாட்டு மங்கை (1941), சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு (1940) ஆகியவை வெளிவந்துள்ளன. நெல்லையாவுக்குப் பின் னர் விரகேசரி ஆசிரியராகவிருந்த கே. வி. எஸ். வாஸ"ம் இவ்வகை நாவல்கள் பலவற்றை எழுதியுள்ளார். ர ஜ னி என்ற புனைபெயரில் குந்தளப் பிரேமா, நந்தினி, பத்மினி, தாரிணி, மலைக்கன்னி, உதய கன்னி ஆகியவற்றை இவர் வீரகேசரியில் எழுதினர். 1949-55 காலப் பகுதியில் இவை வீரகேசரியில் தொடராக வெளிவந்தன. இவற்றை விட வேறும் பல நூல்களும் வெளிவந்துள்ளன. இராசம்மாள் எழுதிய சரஸ்வதி அல்லது காணுமல் போன பெண்மணி (1929), ஏ. சி. இராசையாவின் அருணுேதயம் அல்லது சிம் மக் கொடி (1933), பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் (1932), சிவராமலிங்கம்பிள்ளையின் பூங்காவனம் (1930), சி. வே. தாமோதரம்பிள்ளையின் காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (1936), வே. க. நவரத்தினத்தின் செல்வரத்தினம் (1935), எம். செல்லப்பாவின் சந்திரவதன அல்லது இன்பக் காதலர் (1937) முதலியவை இவற்றுட் சில.
இந்நாவல்களில் பாத்திரங்களின் வீரசாகசச் செயல்க ளும், மர்ம நிகழ்ச்சிகளும் நிறைந்திருச்கும். கொலே, கொள்ஃ
43

Page 29
ஆகியவை தாராளமாக இடம்பெறும் எனினும் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற கருத்து வற்புறுத்தப்படும்.
"மக்கள் செய்யும் நல்வினைத் தீவினைப் பயன்கள் அவர்களைத் தொடர்ந்து சென்று இறுதியில் அதன் பலாபலனை அனுபவிக்கச் செய்கிறது என்ற உண்மையை இச் சரிதை தெளிவாயெடுத்து விளக்குகிறது. ஒவ்வொரு வரையும் மக்களின் ஈடேற்றத்திற்காகவும் தேச முன் னேற்றத்திற்காகவும் உழைத்து வரும்படி இது தூண்டி விடுகிறது. நல்லொழுக்கங்களிலிருந்து தவறி நடப் போரை இந்நாவல் இரக்கமின்றித் தண்டிக்கிறது.'
மேற்கண்டவாறு அருணுேதயம் அல்லது சிம்மக்கொடி என்ற நாவலின் ஆசிரியர் வரணியூர் ஏ. சி. இராசையா குறிப்பிடு வது மேற்கூறிய அறவியற் பண்புக்கு ஒரு உதாரணமாகும்.
இவ்வாறு அறவியல் நோக்கும், கதைச் சுவைக்காக திடுக்கிடும் சம்பவங்களும் கொண்ட நாவல்கள் தோன்று வது முக்கிய போக்காக இருந்த அதே சமயம் அதற்குச் சமாந்தரமாக இன்ஞேர் போக்கும் காணப்பட்டது. குடும்ப உறவுகளையும் அவற்றில் தோன்றும் உணர்ச்சிப் போராட் டங்களையும் முக்கிய பொருளாகக் கொண்டு நாவல்கள் எழு தும் இப் போக்கு நாற்பதாம் ஆண்டுகளில் காணப்பட்டது. க. தி. சம்பந்தனின் பாசம், 1947 ஆம் ஆண்டு ஈழகேசரிப் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. க. சச்சிதானந்த 6ரின் அன்னபூரணி ஈழகேசரியில் 1942 ல் தொடராக வெளி வந்தது. சு. வேலுப்பிள்ளையின் மன நிழல் என்ற நாவல் 1848-ம் ஆண்டு வெளிவந்தது. க. சிவகுருநாதனும் கசின் என்ற புனைபெயரில் ஈழகேசரியில் தொடராக நாவல்களை யும் குறுநாவல்களையும் எழுதிஞர். சகட யோகம் (1949), இதய ஊற்று (1851), குமாரி இரஞ்சிதம் (1952) முதலியவை இவற்றுட் சில. அ. செ. முருகானந்தம் பத் திரி  ைகத் தொடராக யாத்திரை என்ற நாவலையும் எழுதினர். கணக செந்திநாதனின் விதியின் கை (1953), வெறும் பானை (1956)
44

ஆகியவையும் ஈழகேசரியில் தொடராக வெளிவந்தன. இவற் றுள் விதியின்கை 1977-ல் வீரகேரிப் பிரசுரமாக, நூல் வடிவம் பெற்றது. வ. அ. இராசரத்தினத்தின் கொழு கொம்பு நாவலும் ஈழகேசரிப் பத்திரிகைத் தொடராக (55-56) வெளிவந்து பின்னர் 1959-ல் நூலுருவம் பெற்ற தாகும்.
மேற்கறிய நாவல்களின் பண்புகளை ஒன்று திரட்டி நோக்கும் போது அவை தனிமனித உறவுகளையும் உணர்ச் சிப் போராட்டங்களையும் கூறுவனவாக இருப்பதைக் காண லாம். காதல், நட்பு, பாசம் என்ற உறவு நிலைகளையும் அவற்ருல் ஏற்படும் பிரச்சினைகளையும் இவை எடுத்துக்காட் டுகின்றன. எனினும் இவ்வுறவுகளையும் உணர்ச்சிகளையும் காட்டும் பாத்திரங்கள் யதார்த்தமான சமூக நிலை யிற் காலூன்ருத 'மனவெளி மனிதர்களா? 'கவேயமைந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். விதியின் கை, கொழு கொம்பு போன்ற சிலவே இந் நிலைமைக்கு விதிவிலக்காய மைந்து சற்றேனும் ஈழநாட்டுப் பின்னணியைக் கொண்டி ருந்தன. விதியின் கை யாழ்ப்பாணக் கிராமமொன்றினையும், கொழுகொம்பு கிழக்கிலங்கையையும் மலைநாட்டையும் பின் னணியாகக் கொண்டவையாகும்.
மர்மப் பண்பு கொண்ட நாவல்களும் குடும்ப உறவு களைப் பொருளாகக் கொண்ட நாவல்களும் முப்பதுகளிலி ருந்து ஐம்பதுகளின் பிற்பகுதி வரை ஈழத்து நாவலுலகில் முதன்மை பெற்றன என்பது மேலே எடுத்துக்காடடப்பட் டது. இவை ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தின் பொரு ளிலோ வடிவிலோ பாரிய மாற்றம் எதையும் ஏற்படுத்த வில்லையாயினும் புனைகதை வாசகர் தொகை அதிகரிக்க உதவின. பத்திரிகைத் தொடராகவும், நூல்களாவுேம் பிர சுரம் செய்யப்பட்ட இந் நாவல்கள் எழுது இலக்கிய உலகில் நாவல் வடிவம் உறுதியாகக் காலூன்றியமைல்யக் குறிக் கின்றன - -

Page 30
2
1950 களின் பிற்பகுதியிலிருந்து ஈழத்து நாவல்களின் புதியதொரு சகாப்தம் அரும்புகிறது எனலாம். நா வல் இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட இம் மாற்றத்துக்கும், நாட்டு நிலைமையில் ஏற்பட்ட மாற்றம் முக்கிய காரணமா பமைந்தது. 1956-ம் ஆண்டு பண்டாரநாயக்காவின் தலை மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி யமை தேசிய முதலாளித்துவம் அதிகார முதன்மை பெற்ற தைக் குறிப்பதாகும். இக் காலத்திலேயே தேசியம் என்ற கோட்பாடும் வலுப்பெற்றது. தேசிய மரபுகளும் பண்பாட் டம்சங்களும் பேணப்பட்டன. ஈழத்துத் தமிழரைப் பொறுத் தும் இது ஒரு முக்கியமான காலகட்டமே. நாட்டின் பொது வான தேசிய எழுச்சியால் அவர்கள் பாதிக்கப்பட்டது மட்டு மன்றி இக் காலத்தில் தோன்றிய தமிழ்-சிங்கள இனப் பிரச் சினையாலும் பாதிக்கப்பட்டனர். தமிழர் ஈழத்தின் தேசிய இனம் என்ற கருத்தும், ஈழத்தவர் என்ற முறையில் அவர் களுக்கெனத் தனிப் பிரச்சினைகள் உண்டென்ற உணர்வும் ஏற்பட்டன. இவை மட்டுமன்றி இக்காலப் பகுதியை அடுத்து ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் முதன்மை பெற்ற ஸ்தா பனமாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயற் பட்டது. இடதுசாரி அரசியல் சித்தாந்தத்தைப் பொது வாகச் சார்ந்திருந்த இச் சங்கம் இலக்கியத்தில் தேசியப் பிரச்சினைகள் இடம்பெறவேண்டும் என்பதை வற்புறுத்தியது. அறுபதுகளில் எமது இலக்கிய உலகில் பிரதானம் பெறும் எழுத்தாளர்களிற் பெரும்பாலோர் இச் சங்கத்தைச் சார்ந் திருந்தோரே. இளங்கீரன், டானியல், நீர்வை பொன்னையன், காவலூர் இராசதுரை, செ. கணேசலிங்கன், க, கைலாச பதி, கா. சிவத்தம்பி, டொமினிக் ஜீவா முதலியோரை உதாரணங்களாகக் கூறலாம்.
மேலே பார்த்த தேசியம் என்ற கோட்பாட்டின் வளர்ச்சி இடதுசாரி அரசியல் சித்தாந்த செல்வாக்கு ஆகியவை ஐம். பதுகளின் பிற்பகுதியிலிருந்து ஈழத்து நாவல் உலகில் ஏற்
46

பட்ட பொருள்மாற்றத்துக்குரிய பிரதான காரணிகளாகின. சாதாரண மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளும் அன்ருட அனுபவங்களும் இலக்கியத்தில் தயக்கமின்றி இடம் பெற் றன. நாவலுக்கு மட்டுமன்றிச் சிறுகதை இலக்கியத்திற் கும் இது பொதுப் பண்பாயிற்று. ஆரம்பத்தில் அறவியல் நோக்குடன் சமூகப் பிரச்சினைகளை நோக்கிய நாவல்களைப் போலல்லாது அப் பிரச்சினைகளைச் சமூகவியல் நோக்கில் இக் கால நாவல்கள் அணுகின. இலக்கியத்தில் யதார்த்தம் பற் றிய உணர்வு இக்கால நாவல்களில் தலைகாட்டத் தொடங் கியது. யதார்த்த வாதத்தை எழுத்தாளர் சித்தாந்த ரீதி யாக ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி செயலிலும் பரிசீலிக் கத் தொடங்கியிருந்த இக்காலத்திலேயே நாவல் நவீன இலக் கிய வடிவம் என்பதன் அர்த்தம் தெளிவாகத் தொடங்கியது.
1959-ம் ஆண்டு நூலுருவில் வெளிவந்த இளங்கீரனின் நிதியே நீ கேள் என்ற நாவல் மேற்கூறிய புதிய பண்பின் தொடக்கத்தைக் குறிக்கின்றது. யாழ்ப்பாணத்து நகர மொன்றின் கடைச் சிப்பந்தியை பிரதான பாத்திரமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலில் சமூக வர்க்கங்களுக் கிடையேயுள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும், அவ் வேற்றத்தாழ்வுகளால் மனித உறவுகள் பாதிக்கப்படுதலும் காட்டப்படுகின்றன. இளங்கீரனது நாவல்கள் பலவும் பத்திரிகைத் தொடர்கதைகளாக வந்தவையே. தென்றலும் புயலும், சொர்க்கம் எங்கே, மண்ணில் விளைந்தவர்கள், இங் கிருந்து எங்கே, அவளுக்கு ஒரு வேலை வேண்டும் முதலியன இவரது குறிப்பிடத்தக்க படைப்புக் சள் எனலாம்.
ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களுள் மூத்தவராக மதிக்கப்படும் இளங்கீரன் சரளமாகக் கதை கூறும் வல் லமை கொண்டவர். சமூகப் பிரச்சினைகளுக்கு முதன்மை கொடுப்பவர். சம்பவப் பின்னல்களும் கருத்து வெளிப்பா டும் இவரது நாவல்களில் முதன்மை பெறுகின்றன. அவ் வகையில் தொடர் கதைகளுக்குரிய பல பலஹினங்களை இவ ரது நாவல்கள் பலவற்றில் காணலாம். ஆயினும் "அவ
47

Page 31
ளுக்கு ஒரு வேலை வேண்டும் தொடர்கதைக் குறைபாடு களை மீறிய இவரது சிறந்த படைப்பு எனலாம்.
மார்ச்ஸிய சமூகவியல் நோக்கில் சமூக நிலைமைகளே அவதானித்து அவற்றை நாவல்களின் பொருளாகக் கொண் டோரில் செ. கணேசலிங்கம் முக்கியம் பெறுகிருர் . அறுட தாம் ஆண்டின் பிற்பகுதியில் இவரது நாவல்கள் தொடர்ச் சியாக வெளிவந்தன. நீண்ட பயணம்(1965), சடங்கு(1966), செவ்வானம் (1967), தரையும் தாரகையும் (1968), போர்க் கோலம் (1969), மண்ணும் மக்களும் (1970) ஆகியவை இவ ரது நாவல்களாகும். நீண்ட பயணம் யாழ்ப்பாணத்துச் சாதியடக்குமுறைக்கு இலக்காகும் தாழ்த்தப்பட்ட மக்க ளின் போராட்டத்தைச் சித்திரிக்கிறது. போர்க்கோலமும் இதே கருவைக் கொண்டதாகும். சாதி வேறுபாடுகளை வர்க்க வேறுபாடுகளின் வெளிப்பாடாகவே காணும் ஆசிரியர் அவற்றில் யாழ்ப்பாணத்துச் சமூக வர்க்க அமைப்பில் ஏற் படும் மாறுதல்களும், அங்கு பரவிய அரசியற் கருத்துக ளும் ஏற்படுத்திய தாக்கத்தையும் காட்ட முனைகிருர், செவ்வானம் 63-64ம் ஆண்டு அரசியலைப் பின்னணியாகக் கொண்டதாகும். அக்காலப் பிரச்சினைகள் சமூக வர்க்கங்க ளேப் பாதிக்குமாற்றையும் அதில் மனிதர்களின் இயக்கப் பாட்டையும் இந்நாவலில் தெளிவுபடுத்த முயன்ருர் கணேச லிங்கன். தரையும் தாரகையும் மத்தியதர வர்க்க மாந்த ரின் திரிசங்கு நிலையைச் சித்திரிப்பதாகும். இந்நாவலின் மூலம் உயர் வர்க்கத்தினைப் பார்த்து ஏங்கும் மத்தியதர வர்ச்க மாந்தர் அவ்வர்க்கத்தினர் போல உயர முடியாதென் பதையும் தொழிலாள வர்க்கத்தினருடன் இணைந்து போரா டுவதே வழி என்பதையும் ஆசிரியர் காட்டுகிறர்.
தமிழ் நாட்டு நாவல்களே விட ஈழத்துத் தமிழ் நாவல் கள் கூடியளவு சமூகப் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு எழுதப்பட்டன என்று கூறுவோர் கணேசலிங்கனின் நாவல் களேத் தவருமல் உதாரணம் காட்டுவர். ஈழத்து முற் போக்கு எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க நாவல்களை
48

எழுதியவராகிய கணேசலிங்கன், தனது படைப்புக்கள் அனைத்தையும் தொடர்கதைகளாக அன்றி முழுநாவல்க ளாகவே எழுதினர். இளங்கீரன் போல் இவரும் கருத்துக் களுக்கே முதன்மை கொடுப்பவர். அதனல் இவரது கதா பாத்திரங்கள் பல அனுபவச் செழுமை குறைந்த, கருத் துக்களின் பிரதிநிதிகளாகவே காட்சியளிக்கின்றனர். தத் துவத் தெளிவு இருக்கும் அளவு அதனை வாழ்க்கை அனு பவமாக வெளிப்படுத்துவதற்குரிய அனுபவ வளம் இல்லா மலிருப்பது இதற்குக் காரணமாகலாம். இவரது கடைசிப் படைப்பான "மண்ணும் மக்களும் நாவலாக அன்றி கருத் துப் பிரசாரமாகவே அமைந்து விட்டதற்கும் இதுவே கார ணம் எனலாம். ஆயினும் அவரது சடங்கு, தரையும் தார கையும் ஆகியவை இக் குறைபாட்டுக்குள் அடங்காத நல்ல நாவல்கள் ஆகும்.
அடிநிலை மக்களின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் எழுத்தில் வடிக்கும் முயற்சியில், தமிழ் மக்களிடையே அடக்குமுறையின் வடிவமாக இருக்கும் சாதிப் பிரச்சினை யும் நாவல்களில் இடம் பெற்றன. குறிப்பாக அறுபதுக ளில் யாழ்ப்பாணப் பகுதியில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டம், ஆலயப் பிரவேச இயக்கங்கள் ஆகி யவை இலக்கியத்திற்கும் உந்துதலை அளித்தன. இத் தொடர்பில் செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம், போர்க் கோலம் ஆகியவை பற்றி மேலே கூறப்பட்டது. கே. டானி யலின் பஞ்சமர் நாவலும் (1972) இப் போராட்ட அனுப வங்களின் அடிப்படையில் எழுந்ததாகும்.
**இந்த நாவலுக்கான மூலக்கருவை வலிந்து தேட வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கேற்படவில்லை. இதில் நடமாடும் பாத்திரங்களும் நான் சிருட்டித்தவையல்ல. இதில் வரும் சம்பவங்களும் கற்பன லோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டவையல்ல. எல்லாம் யதார்த்த உலகில் அன்ருட வாழ்வில் எளிய மக்கள் எனக் கூறப் படும் பஞ்சப்பட்ட மக்கள் தம் மீது சுமத்தப்பட்டுள்ள நுகத்தடியைச் சுழற்றியெறிந்து, தம்மீது சுமத்தப்பட்
49

Page 32
டுள்ள கோணல் எாழ்வை நிமிர்த்த எடுத்த முயற்சி. கள், நடவடிக்கைகள், போராட்டங்களிலிருந்து பெற்ற அனுபவங்களே.'
மேற்கண்டவாறு தமது பஞ்சமர் நாவலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார் கே. டானியல், கதை சொல்லும் கல் நன்கு கைவரப்பெற்ற டானியல் தனது அனுபவங்களின் பின்னணியில் இந் நாவலை எழுதினர். டானியலின் இன் ஞேர் நாவலான போராளிகள் காத்திருக்கிருர்கள் பஞ்ச மர் அளவு முக்கியத்துவம் பெறவில்லை.
அடிநிலை மக்களைச் சார்ந்து இலக்கியம் படைத்தோரில் பெனடிக்ற் பாலனும் இடம் பெறுகிருர். அவரது சொந்தக் காரன் மலைநாட்டுத் தோட்டத் தொழிலாளரின் அவல மிக்க வாழ்க்கையையும், போராட்டத்தையும் சித்திரிப்பதா கும். இந் நாவலுக்குச் சில ஆண்டுகள் முன்னர் வெளிவந்த நந்தியின் மலைக்கொழுந்தும் (1964) இதே பிரச்சினையைத் தொட்டதெனினும் நந்தியின் அணுகுமுறை மனிதாபிமா னக் கண்ணுேட்டம் கொண்டதாகும். கோகிலம் சுப்பையா வின் தூரத்துப் பச்சை (1964) நாவலும் மலைநாட்டுத் தொழிலாளர் பற்றியது. இந்தியாவிலிருந்து தொழிலாளர் இலங்கைக்கு வரத் தொடங்கிய காலத்திலிருந்து அடுத்த மூன்று தலைமுறை காலத்தைப் பின்னணியாக்கி இயற்பண் புடன் தொழிலாளரின் அவலநிலையைச் சித்திரித்தது இது. இத தொடர்பில் தெளிவத்தை ஜோசப்பின் காலங்கள் சாவதில்லை என்ற நாவலேயும் சேர்த்துக் கொள்ளலாம்.
சி. சுதந்திரராஜா, செ. யோகநாதன், எஸ். அகஸ்தி யர் ஆகியோரும் இடதுசாரி அரசியல் சித்தாந்தத்தால் கவ ரப்பட்ட எழுத்த 1ளர்களாவர். இவ்வகையில் சுதந்திரராசா வின் 'மழைக்குறியும், யோகநாதனின் சில குறுநாவல் களும் குறிப்பிடத்தக்கன. -
ஐம்பதுகளின் பிற்பகுதியிலிருந்து ஈழத்துத் தமிழ் நாவ விலக்கியத்தில் ஏற்பட்ட மாறுதலும் புதிய போக்கும் இது
50

வரை சுட்டப்பட்டது. அடிநிலை மக்களைக் கதாபாத்திரங்க ளாகக் கொண்டது மட்டுமல்லாது அவர்களது வாழ்க்கையை யும் போராட்டத்தையும் மார்க்சீய அரசியல் கண்கொண்டு நோக்கிய இப் புதிய பண்பானது எழுபதின் முற்பாதியிலும் கூட நாவலிலக்கியத்தின் பிரதான போக்காகவேயிருந்தது.
இதே காலப்பகுதியில் இப் போக்குக்குப் புறம்பான சில நாவல்களும் வெளிவந்துள்ளன. எஸ். பொன்னுத்துரையின் தீ (1961) சடங்கு (1971) ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தக் கன. எழுத்தாற்றல் கைவரப்பெற்ற எஸ். பொ. வின் தீ பொருளிலும் வடிவிலும் ஏனைய ஈழத்து நாவல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனினும் பாலியலை துணிச்ச லுடன் வெளிப்படையாகக் கையாண்டது என்பதைத் தவிர இந்நாவல் எவ்வகையிலும் இலக்கிய முதிர்ச்சியை வெளிக் காட்டவில்லை. அவரது சடங்கு யாழ்ப்பாணத்துக் கீழ்மத்திய தர மாந்தரின் மனுே விகாரங்களை இயற் பண்புடன் அணுகிய தாகும். அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்துவிட்டது (1973) பலரது பாராட்டுதல்களையும் பெற்ற நாவல். எழுபதுக்குப்பின் நாவலிலக்கியத் துறையில் புகுந்த வரான அருள் சுப்பிரமணியம், சிங்களப் பெண்ணைக் கலப்பு ம ண ம் புரிந்த பாத்திரமொன்றைக் கதாநாயகனுகக் கொண்டு அதன் பின்னணியையும் பிரச்சினைகளையும் நேர்த்தி யாகச் சித்திரித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த அக்கரை கள் பச்சையில்லை அன்னிய நாட்டுக் கப்பல்களில் வேலைசெய் யும் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையைப் பொருளாகக் கொண்டது என்றவகையில் முற்றிலும் புதியதோர் பொருளை அறிமுகப்படுத்தினும் நடைமுறைக்கு ஒத்துவராத நிகழ்ச்சி கள் நாவலின் யதார்த்தத்திற்கு ஊறு விளைவிக்கின்றன. இவரது இன்ஒெரு நாவலான நான் கெடமாட்டேன் இவ ருக்குத் தோல்வியையே தந்தது. முதல் நாவல் சிறந்த படைப்பாயிருக்க அதற்குப் பிந்தியவை தரமிழந்து போவது சிவனிக்கத்தக்கது.
எழுபதில் பிரபலம் பெற்ற இன்னேர் நாவலாசிரியர் செங்கை ஆழியானவர். ஆக்சி பயணம் போகிருள், முற்
s

Page 33
றத்து ஒற்றைப் பனை, வாடைக்காற்று, நந்திக்கடல். பிரள யம், இரவின் முடிவு முதலானவற்றை அவர் எழுதியிருப் பினும் 1977-ல் வெளியான காட்டாறு என்ற நாவலே இலக்கிய உலகில் அவரைத் தகுதிபெற வைத்தது. வன்னிப் பிரதேசக் குடியேற்றப் பகுதிகளில் அரசாங்க அதிகாரிகள், முதலாளிகள் ஆகியோர் சாதாரண விவசாயிகளைச் சுரண்டு வதையும், குடியேற்றப் பகுதி வாழ்க்கையின் உள்முரண்பாடு களையும் அவற்றின் இயல்பு குன்ருத வகையில் தமது நாவ லில் காட்ட முனைந்துள்ளார் செங்கையாழியான். அ. பால மனேகரனும் வன்னிப் பகுதிக் கிராமப் பின்னணியில் நிலக் கிளி, குமாரபுரம் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். எஸ். ஜோன்ராஜன் மட்டக்களப்புப் பகுதிக் கிராமமொன்றினை பின்னணியாகக் கொண்டு போடியார் மாப்பிள்ளையை எழுதி யுள்ளார். வை. அகமதின் புதிய தலைமுறை, சாந்தனின் ஒட் டுமா ஆகியவையும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. இது வரை யாழ்ப்பாணம், கொழும்பு, மலைநாடு ஆகிய பகுதிகளைப் பகைப்புலங்களாகக் கொண்டு மட்டும் நாவல் எழுதப்பட்ட நிலையிலிருந்து மாறி வவனியா, மட்டக்களப்பு, திருகோண மலே ஆகிய பகுதிகளையும் பின்னணியாகக் கொள்ளும் நிலை எழுபதுகளில் வெளியான நாவல்களின் சிறப்பம்சம் எனலாம். மேலே காட்டிய சில நாவல்கள் இதற்கு உதாரணங்களாகும்.
3
நாவலின் பொருளைப் பொறுத்தும் அணுகு முறையைப் பொறுத்தும் மாறுதலும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதெனி இனும் உருவத்திலோ கதை கூறும் முறையிலோ அடிப்படை யில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லையெனலாம். சுருக்கமாகச் சொன்னல் நாவல் இலக்கியத்தில் இங்கு பரி சோதனை முயற்சிகள் இடம்பெறவில்லை. மார்க்ஸிய நஎவ லாசிரியர்களின் நாவல்களில் கலைச் செழுமை குறைவு என்ற குற்றச்சாட்டு உண்டு; அதில் உண்மையில்லாமலும் இல்லை. ஆனல் அதற்குப் புறம்பான நாவலாசிரியர்களின் படைப் யுக்களில் ஆழமான தேடலும் கலைச்செழுமையும் உடைய
52

சிறந்த நாவல்கள் ஒன்றுகூட இல்லை. தமிழக நாவல் வளர்ச் சியுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய வளர்ச்சியைக் கட்டுப் படுத்தும் பிரதான காரணிகளில் முதன்மையானது பிரசுர வசதிக் குறைவாகும். பிரசுர நிறுவனங்கள் வளர்ச்சி பெருத நிலையிலும், புத்தக வெளியீட்டுச் செலவு உயர்ந்திருக்கும் நிலையிலும் இலக்கிய ஆர்வம் கொண்ட எழுத்தாளர் சிலர் சொந்தப் பணத்திலேயே நாவல்களை வெளியிட்டுள்ளனர். தரமான நாவல்களை வெளியிட முன்வந்த நிறுவனங்கள் கூட நிதிப்பலம் அற்றவையாகவிருந்தன. இன்றுள்ள நிலை யில் வீரகேசரி நிறுவனம் ஒன்றே வெற்றிகரமாகப் பல நாவல்களை வெளியிட்டு விற்பனை செய்து வருகின்றது" 1971-ம் ஆண்டு தென்னிந்திய சஞ்சிகைகள், நூல்கள் ஆகி யவற்றின் இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டின் விளேவாக இந் நூல்வெளியீட்டு நிறுவனம் 72 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்றுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்களே வெளியிட்டுள்ளது. அண்மைக்காலத்தில் எழுத் துலகிற்கு அறிமுகமாகிய பாலமனேகரன், கே. விஜயன், ஞானசேகரன், ஞானரதன், கே. ஆர். டேவிட், வை. அஹ மத் முதலியோரது நாவல்களை இந் நிறுவனமே வெளியிட் டது. எனினும் வியாபாரத்தையே முதல் நோக்கமாகத் கொண்ட நிறுவனம் இலக்கியத் தரத்திலோ பொருளிலோ எத்தகைய அக்கறை செலுத்தும் என்பது ஐயப்பாட்டிற் குரியது. தாரத்துப்பச்சை, காட்டாறு, நான்சாகமாட்டேன், போராளிகள் காத்திருக்கின்றனர் முதலிய குறிப்பிடத்தக்க நூல்களை இந் நிறுவனம் வெளியிட்டிருப்பினும் அதன் சாய்வு சுவைமிகுந்த கதையம்சம் கொண்ட நாவல்கள் பக்கமே என் பது தெளிவு. இந் நிறுவனம் வெளியிட்ட நா. பாலேஸ்வரி, கமலா தம்பிராசா, அன்னலட்சுமி இராசதுரை, இந்துமகேஸ், உதயணன் முதலியோரது நாவல்கள் இதற்குச் சிறந்த எடுத் துக்காட்டுகளாகும். வாசக ரசனையை குறிப்பிட்ட ரீதியில் உருவாக்குவனவாகவும். எழுத்தாளரைக் கட்டுப்படுத்துவன வாகவும் இத்தகைய நிறுவனங்கள் அமைந்துவிடும் அபாயம்
S3

Page 34
எப்போதும் உண்டு. இதுமட்டுமன்றி நூல் வெளியீட்டுச் செலவுகள் மேன்மேலும் உயரும் நிலையிலும், இறக்குமதிக்கட் டுப்பாடு சமீபகாலத்தில் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து தென்னிந்திய சஞ்சிகைகள் நூல்கள் ஆகியவற்றின் போட் டியை எதிர்நோக்க வேண்டிய நிலையிலும் நாவலிலக்கிய வளர்ச்சி மட்டுமன்றி ஈழத்து தமிழிலக்கிய வளர்ச்சியே தேக்கமடையும் அபாயம் ஏற்படக்கூடும். எழுத்தளர் பரந்த கொள்கை அடிப்படையில் இணைந்து செயல்படுவதற்
கான அவசியத்தை இந்நிலமை வற்புறுத்துகிறது.

சிறுகதை
சிறுகதை, கைத்தொழில் நாகரீகத்தால் நவீனப்பட்டு வரும் சமூகத்துக்குரிய ஒரு புதிய இலக்கிய வடிவமாகும். 19ஆம் நூற்ருண்டின் ஆரம்ப தசாப்தங்களில் மேலைத் தேசங் களில் தோன்றி வளர்ந்த இவ்விலக்கிய வடிவம், ஆங்கிலே யர்களின் தொடர்பினுலும் அவர்களின் ஆதிக்கத்தினுலும் நவீன மாற்றங்களுக் குள்ளாகி வந்த தமிழர் சமூகத்தில் இந்த நூற்றண்டின் தொடக்கத்திலேயே தோ ன் றி யது. 1920ஆம் ஆண்டுகளில் பாரதியார் மொழிபெயர்த்த தாகூரின் சிறுகதைகளும், மாதவையா, வா. வே. சு. ஐயர் ஆகியோ ரின் சிறுகதைகளுமே தமிழில் இவ் இலக்கிய வடிவத்தை அறிமுகம் செய்தன. 1930ஆம் ஆண்டுகளில் புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், பிச்சமூர்த்தி, பி. எஸ். ராமையா, மெளனி முதலிய எழுத்தாளர்கள் தமிழில் சிறுகதைக்கு ஒரு பூரண வடிவத்தைக் கொடுத்தனர்.
இலங்கையைப் பொறுத்தவரை 1980 ஆம் ஆண்டுகளின் பின் அரைவாசியிலேயே சிறுகதை தோன்றி வளரத் தொடங் கியது. சுமார் ஒன்றரை நூற்முண்டுகால ஆங்கில ஆட்சி யின் பயணுக நமது சமூகத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்க ளின் விளைவே இது எனலாம்.
55

Page 35
"பத்தொன்பதாம் நூற்றுண்டின் பிற்பகுதியில் ஏற் பட்ட பண்பாட்டுத்துறை விழிப்பின் காரணமாக, மதத் துறை இலக்கியமே தமிழ், சிங்கள மொழிகளில் முக்கிய இடத்தைப் பெற்றுவந்தது. ஆணுல், குடியேற்ற நாட் டாட்சி இலங்கையின் அரசியல், பொருளியல் வாழ்க் கையை நன்கு பீடித்திருந்தமையால், ஆங்கில மொழி மூலம் மேனுட்டு நாகரீகம் பாளிக்கொண்டே வந்தது. விவசாயப் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்பட்டு, ஆங்கிலக் கல்வியே ஊதியமூலமாக அமைந்த யாழ்ப்பா இனத்தில் இம்மாற்றம் மற்றத் தமிழ்ப் பகுதியாம் மட்டக் களப்பிலும் பார்க்க வேகமாகப் பரவிற்று. ஆங்கிலக் கல்வியுடன் ஃனகதையும் பரவிற்று' என, கலாநிதி கா. சிவத்தம்பி இதுதொடர்பாக தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் நூலில் கூறுவது
இங்கு கவனிக்கத்தக்கது.
புதிய சமுதாய மாற்றமும் ஆங்கிலக் கல்வியும் பட்டு மன்றி, தமிழக பிஞ்சிகைகளினதும் சிறுகதை எழுத்த பார்களி னதும் செல்வாக்கும் இலங்கையில் சிறுகதை தோன்றுவதற் கான முக்கிய கார3ரியாக இருந்துள்ளது. ஈழத்துச் சிறு கதை முன்னுேடிகளுள் ஒருiர  ைசி.  ைரத்திய விங்கம் தனது கான இலங்கையர்கே ஃன நினேவுகூர்ந்து எழுதிய, "இலங் பகையர்கோனும் நாணும்' என்னும் கட்டுரையில் குறிப்பி டும் பின்வரும் சேப்திகள் இன்ண்ை 313:ய நன்கு தெளி: படுத்துகின்றன.
"உன்னதமான பட்சியங்களும் கனவுகளும் எங்கள் வாழ்க்கையில் நிரம்பி இருந்த நாட்கள் இவை இடம் கியத்தைப் படிப்பதிலும், நடகங்களப் பார்ப்பதிலும், சங்கீத ரசஃனயிலும் பங்கள் இருவருக்கும் எப்டெழுது.ே பெரிய ஆர்வம், எழுதவேண்டும் ஏதாவது சீருள்புக்க வேண்டும் என்று உணர்ச் சி என்றும் சிறகடித்துக்கே ஒன் டிருக்கும் சோ. சிவபாதசுந்தரம், சோ. நடராஜா, திரு. நீலகண்டன் , இலங்கையர்கே ன் நான் எல்லோ கு.ே

சேர்ந்து இலக்கியங்களே விமர்சனம் செய்வதிலும் அக் காலத்தில் எழுத்துலகில் பிரபலமாகி இருந்த சிறுகதை யாசிரியர்களின் சிருஷ்டிகஃனப் பற்றி ஆராய்வதி தும் கவனம் செலுத்தி வந்தோம். மணிக்கொடி பத்திரிகையின் புதிய பாணி இலங்கையர்கோனே முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டது. சினிமா வுக்கு வசனம் எழுதி இப்போது பிரபல்யம் அடைந்தி ருக்கும் இளங்கோவனின் எழுத்துக்களே அவர் எப்பொ ழுதும் புகழ்ந்து கொண்டே இருப்பார். அவருடைய வசனங்களேயும் வர்ணனேகளேயும் மனனம் செய்து எங் களுக்கு ஆவேசத்துடன் அடிக்கடி சொல்லி வருவார். அவ்வளவு தூரம் இளங்கோவனின் எழுத்து அவரைக் கவர்ந்திருந்தது. இந்த வெறியுடன் தான் இலங்கையர் கோன் எழுத்தில் மும்முரமாக ஈடுபட்டார் என்று நி3ணக்கின்றேன்." இலங்கையர்கோன் மட்டுமன்றி அவ ரது சமகாலத்தவர் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தமி ழகப் பத்திரிகைகளாலும் எழுத்தாளர்களாலும் தூண்டுதல் பெற்றவர்களே எனலாம்.
இத்தகைய பின்னணியிலே 1930களின் பிற்பாதியில், சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், க. தி. சம்பந்தர், ரோ. சிவபாதசுந்தரம் முதலியோர் இலங்கையில் பிரக்ஞை பூர்வமாக சிறுகதைத் துறையில் ஈடுபட்டார்கள். இவர்க ஞள் முதல் மூவரும் முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்தவர் கள். இவர்களே ஈழத்துச் சிறுகதையின் முன்னுேடிகள், ஆல் லது முதல்வர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர். "இலட்சி யக் கனவுகளும் என தயாவது எழுத வேண்டும் என்ற ஆர் வமும்" இவர்களது படைப்பு முயற்சிகருக்கு உட்துண்டுத iாக அமைந்தன. லேகள் கிர நாழியன் , சூருவனி, பணிக்கொடி, ஆனந்த விகடன் முதலீய தென் இந்தியச் சஞ் சிகைகளில் இவர்களது சிறுகதைகள் வெளிவந்தது. ஈழகேசரி யும் இவர்களது எழுத்து முயற்சிக்குக் கனமாக அமைந்தது.
வைத்தியளிங்கம், சம்பந்த ர், இலங்கை பர்கோன் ஆகி யோர் சமகாலத்தவர்கள் எனினும் முதல் இருவரும் 1940ம்
F. E. 57

Page 36
ஆண்டுக்ளுக்குப பின்னர் அதிகம் எழுதியதாகத் தெரிய வில்லை. இலங்கையர்கோன் சிலகாலம் சிறுகதைத்துறையை விட்டு விலகி இருந்தாலும் தனது மரணத்துக்கு முந்திய சில ஆண்டுகளில் குறிப்பாக 1960-1961ம் ஆண்டுகளில் சிறுகதைப் படைப்பில் முழுமூச்சாக் ஈடுபட்டவர். அந்த வகையில் சுமார் முப்பது ஆண்டு கால இலங்கைச் சிறுகதை வரலாற்றேடு அவருக்கு உறவு உண்டு என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டும்.
சி. வைத்தியலிங்கம் சுமார் இருபத்தைந்து கதைகள் வரை எழுதினர் என்று தெரிய வருகின்றது, அவரது தொகுப்பு நூல்கள் எவையும் இதுவரை வெளிவராதிருப் பது ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரை துர திஷ்ட வசமானதே. ஆயினும் மூன்ரும் பிறை, கங்கா கீதம், பாற் கஞ்சி ஆகிய கதைகள் சில தொகுப்பு நூல்களில் வெளிவந்துள்ளன. நெடுவழி, பிச்சைக்காரர், அழியாப் பொருள், உள்ளப் பெருக்கு, இப்படிப் பல நாள், விதவை யின் இருதயம், தியாகம், பைத்தியக்காரி, களனி கங்க்ைக் கரையில், மின்னி மறைந்த வாழ்வு, என் காதலி, நந்த குமாரன், டிங்கிரி மெனிக்கா, பூதத்தம்பி கோட்டை முத லியன அவர் எழுதிய வேறு சில கதைகள்.
க. தி. சம்பந்தரும் சுமார் இருபது கதைகள் வரை எழு தியுள்ளார் என்று தெரிய வருகின்றது. அவரது கதைகள் எதுவும் தொகுப்பு நூலாக இதுவரை வெளிவரவில்லை. எனினும் 1967ல் இவரது ஐந்து சிறுகதைகள் விவேகி சஞ் சிகையில் ஒன்ருக வெளியிடப் பட்டன. விதி, மனிதன், புத்தரின் கண்கள், தாராபாய், துறவு, கூண்டுக்கிளி, தூம கேது, மனித வாழ்க்கை, சபலம், சலனம், அவள், இரண்டு ஊர்வலங்கள், கலாஷேத்திரம், மகாலட்சுமி முதலியன இவர் எழுதிய சில கதைகள்.
இலங்கையர்கோனின் பதினைந்து சிறுகதைகள் அடங் கிய தொகுப்பு நூல் ஒன்று வெள்ளிப்பாதசரம் என்ற பெய
58

ரில் 1962ம் ஆண்டு அவரின் மனைவியின் முயற்சியால் வெளி யிடப்புட்டது. ஈழத்துச் சிறுகதை முன்னேடிகளுள் ஒருவ ரின் படைப்புக்களை மொத்தமாகத் திரட்டித்தரும் ஒரே நூல் இதுவே. இத் தொகுப்பில் இடம்பெருத இவரின் வேறு சில கதைகளும் உள்ளன. வஞ்சம். சமாதானம், கடற் கரைக் கிளிஞ்சல், தேவலோகக் காதல், கடலிலே ஒரு மீன், அந்தத் தந்தி, தேவியும் தவமிருந்து, செங்காந்தள் முத லியன அவற்றுள் சில.
ஈழத்துச் சிறுகதை முன்னுேடிகளான இம் மூவரின் கதை களிலே அவர்களுக்கே உரிய தனித் தன்மைகளும், வேறு பாடுகளும் காணப்படுகின்றன எனினும் சில பொதுப் பண் புகளும் உள்ளன.
வரலாற்று, இதிகாச நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு கதைகள் புனைதல் இக்காலப் பகுதிக்குரிய ஒரு பொதுப் போக்காகக் காணப்படுகின்றது. இலங்கையர் கோனே இத்தகைய ககைகளில் அதிக ஈடுபாடு காட்டினர் எனினும் ஏனையவர்களும் இதற்குப் புறம்பானவர்கள் அல் லர். இலங்கையர்கோனின் அனுலா, மரியா மதலேணு, மேனகை, தாய், யாழ்பாடி, சிகிரியா, தேவலோகக் காதல், மணப் பரிசு, கடற் கோட்டை முதலிய கதைகள் வரலாற்று, இதிகாச நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவையே. வைத்தியலிங்கத்தின் நந்தகுமாரன், தியாகம், பூதத்தம்பி கோட்டை, சம்பந்தரின் புத்தரின் கண்கள் முதலியனவும் இத்தகைய படைப்புகளே. சில வேளைகளில் இவர்களது வர லாற்றுக் கதைகள் சிறுகதை உருவத்துக்குள் பிடிபடாதி வரலாற்றுச் செய்திகளாகவே அமைந்து விடுகின்றன. இலங் கையர்கோனின் சிகிரியா, அனுலா, மரியா மதலேணு முத லியவை இவ்வாறு சிறுகதை வடிவ அமைப்புக்குப் புறம் LT6...f6031 (UTs a gir Grof.
தனி மனித இன்னல்களை அல்லது உணர்வு நிலைகளை சமுதாயப் பின்னணியில் வைத்து நோக்கும் யதார்த்தப்
59

Page 37
பண்பு பொதுவாக இவர்களது கதைகளில் காணப்படுவ தில்லை. இலங்கையர்கோன், வைத்தியலிங்கம் ஆகியோரின் சில கதைகளிலே நடப்பியல் வாழ்வுடன் ஒட்டிய யதார்த் தப் பண்பு ஓரளவு காணப்படுகின்றது எனினும் பொது வாக இவர்கள் ஒரு கற்ப்னையான கனவுச் சூழலிலேயே தங்கள் பாத்திரங்களை உலாவ விடுகின்றனர். சம்பந்தர் யதார்த்தப் பண்பை கொள்கை ரீதியாகவே நிராகரிப்பவ ராகவும் காணப்படுகின்ருர்,
*யதார்த்தச் சித்திரிப்பால் நமது மனம் தூய்மைய டைவதற்குப் பதிலாக மேலும் மோசம் அடைகின்றது. யதார்த்தம் என்பது பைத்தியக்காரத்தனம். இத்த கைய யதார்த்தப் பண்பில் எழும் தேசிய இலக்கியங் கள்-சர்வதேசிய இலக்கியங்களுக்கு ஒவ்வாதது-தேவை இல்லாதது.’ என்ற சம்பந்தரின் கூற்றுக்கு ஏற்பவே அவரது கதைகளும் யதார்த்தத்துக்குப் புறம்பான அழகிய கற்பனைச் சித்திரங்களாக உள்ளன. வைத்தியலிங்கத்தின் மூன்ரும் பிறை, உள்ளப் பெருக்கு, புல்லுமலையில் முதலிய கதைகளும் கற்பனையான உணர்வுப் பின்னல்களே. இலங் கையர்கோனின் வரலாற்று இதிகாசக் கதைகளும், நாடோடி, சக்கரவாகம், கடற்கரைக் கிளிஞ்சல் போன்றவையும் இத் தகையனவேயாகும். ஆயினும் மற்ற இவருடனும் ஒப்பு நேக்கு கையில் நடப்பியலோடு ஒட்டிய யதார்த்தப் பண்பு, இலங் கையர்கோனிடம் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது எனலாம். ஆரம்பகாலக் கதைகளான முதற்சம்பளம், வெள் ளிப்பாதரசம், தந்தைமணம் முதலியவையும் பிற்காலக் கதை களான மச்சாள், அனதை, தாழைநிழலிலே போன்றவையும் இத்தகையன. இவற்றுள் பிந்திய மூன்றும் 1960 ஆம் ஆண்டில் எழுதப்பட்டவை என்பதையும் மனம்கொள்ள வேண்டும்.
ஆண்பெண் உறவு அல்லது பால் உறவையே இவர்கள் பெரிதும் தங்கள் கதைப்பெருளாகக் கொண்டனர். சம்பவங் களை அல்லது பாத்திரங்களின் இயக்கங்களை விபரிப்பதை விட உணர்வுநிலைக்கே அதிக அழுத்தம் கொடுத்தனர். அந்த
60 ·

வகையில் உணர்ச்சி மிகைப்பு இக்காலக் கதைகளில் ஒரு பொதுப் பண்பாகவும் உள்ளது. உணர்ச்சி மிகைப்பை வெளிப்படுத்துவதற்கு காவியப்பாங்கான அலங்கார மொழி நடை அவசியமாகும். இக்காலக் கதைகள் பெரிதும் இத்த கைய மொழி நடையிலேயே அமைந்துள்ளன. வைத்தியலிங் கம், இலங்கையர்கோன் ஆகியோரின் சில கதைகளிலே வழக் குத்தமிழ் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது எனினும் அது அவர்களின் பிரக்ஞைபூர்வமான இலக்கியக் கொள்கையின் வெளிப்பாடு என்று, கருதுவதற்கில்லை. இக்காலத்தில் எழுந்த பெரும்பாலான கதைகளில் விபரணத்திலும் உரையாடலி லும் காவியப்பாங்கான மொழிநடையே பயன்படுத்தப்பட் டுள்ளது. வைத்தியலிங்கத்தின் புல்லுமலையில் என்ற கதை யில் வரும் பின்வரும் உரையாடலை இதற்கு ஒரு உதாரண மாகத் தரலாம்.
**குமு, அதோபார்! முழுநிலா, புல்லுமலையைத் தழுவி முத்தமிட வந்தது. எங்களைக் கண்டதும் நானத் தால் முகம் சிவந்து தயங்கிநிற்கிறது. 9
"என்ன, நீங்கள் என்னைப் பார்க்க வந்தீர்களா அல் லது புல்லுமலையையும் சந்திரனையும் பார்க்க வந்தீர்
Sffr ? * *
*குமு இந்த நிலாவும், புல்லுமலையும், இளந் தென் நறலும் இல்லாவிடில் நீ ஏது? நான் எப்படி இங்கு வந் திருப்பேன்? இந்தப் புல்லுமலையல்லவா உன்னைப் பெற்று வளர்த்த தாய்?" இந்த உரையாடல் பகுதியிலே உணர்ச்சி மிகைப்பும்.
அலங்கார நடையும் ஒன்றிணைந்து இருப்பதை நாம் காணலாம்
2
ஈழத்துச் சிறுகதையின் இரண்டாவது தலைமுறை 1940 ஆம் ஆண்டுகளில் உருவாகியது. இக்காலத்தில் இலக்கிய ஆர் ல்ம் உடைய ஓர் இளைஞர் குழு யாழ்ப்பாணப் பகுதியில்
6.

Page 38
தோன்றியது. ஈழகேசரி இவர்களின் பிரதான வெளியிட்டுக் கனமாகவும் அமைந்தது. இவர்களுள் சிலர் ஒன்றிஃணந்து, "மறு மலர்ச்' என்ற ஒரு சஞ்சிகையையும் வெளியிட்டனர். அதைச சுற்றி ஒர் இலக்கியக் குழுவாகவும் உருவாகினர், ஈழத்து முன்ஜேடி எழுத்த பினர்கள் இ 3ர்களுக்கு ஆதர்சமாக அமைத் தனர். தமிழகச் சஞ்சிகைகளும் அவற்றில் வெளிவந்த படைப்புக்களும் இவர்களின் எழுத்தார்வத்துக்கு தூண்டு கோலாக அமைந்தன.
இக்காலப்பகுதியில் சிறுகதை உலகில் புகுந்த எழுத்தா ளர்களுள், அ. செ. முருகானந்தம், தி. ச. வரதராசன், அ.ந. கந்தசாமி, கனக செந்திநாதன், தாழையடி சபாரத்தினம், சொக்கன், சு. வேலுப்பிள்ளே முதலியோர் குறிப்பிடத் தக்க வர்கள். இவர்களுள் பலர் 50, t களிலும் தொடர்ந்து எழு தினர். சிலர் இன்னும் எழுதுகின்றனர். சிலர் 30, 60 களில் தான் குறிப்பிடத்தக்க கதைகளேயும் எழுதினர். ஆயினும் இவர்கள் இலக்கி: உலகில் பிரவேசித்த காலத்தில் இவர்க ரிடம் உருவாகி அமைந்த பண்புகள் தொடர்ந்தும் நீடித்து வந்திருப்பதை நார் கனலாம். இதே காலப்பகுதியில் இலங் கையர் கேன் வைத்திய லிங்கம் சம்பந்தன் முதலியோரும் தொடர்ந்து எழுதி வந்தனர் என்பதையும் நாம் மனம்
கொள்ளவேண்டும் ,
இக்காலப்பகுதியில் தோன் றிய எழுத்தாளர்களுள் ஆ.செ. முருகானந்தம் படைப்புகளின் எண்ணிக்கைITஒ/ம் தரத்தினு லும் முதல் இடம் பெறுகின்றும். :ார் நூறு கதைகள் இை ந ல் எழுதப்பட்ட வீறு நரியவருகின்றது. இவரது பண்டிச் சாரி, புனிதமாடு, எ ச்சில் இஃ வாழ்க்கை முத விய கதைகள் ஈழத்து விமர்சகர்களால் கிலாசித்துப் பேசப் படுகின்றன. இவ்வளவு கதைகளே எழுதிய இவரது தொகுப்பு நூல் ஒன்று கூட வெளிவராதிருப்பது வருந்தத்தக்கதாகும்.
1940 இல் ஈழகேசரியில் வெளியான கல்யாணியின் காதல் என்ற கதையுடன் சிறுகதை உலகில் பிரவேசித்தவர் தி. சக
62
 
 

வரதராசன். வரதா என்ற புன்பெயரில் தொடர்ந்து கதைகள் எழுதி வந்துள்ளார். அவரது பன்னிரெண்டு கதை ன் கொண்ட கடமை பயக்கம் என்ற தொகுப்பு:துரல் ஒன் தும் வெளிவந்துள்ளது.
ஈழத்து இலக்கியத்தில் இடதுசாரிச் சித்தனேணய அறிமு முகப் படுத்திய அ. ந. கந்தசாமி 8 மார் அறுபது கதைகள் வரை எழுதி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஆரி ணும் இவரது கதைகளும் தொகுப்புநூலாக வெளிவரவில்ஃ. இரத்த உறவு, நாயிலும் கடையர் போன்ற இவரது சுண்தகளே ஈழத்து விமர்சகர்கள் புகழ்ந்து பேசுவர். இக்கா லப்பகுதியில் எழுதத் தொடங்கிய கனக செந்திநாதனின் வெண்சங்கு, சொக்களின் கடல் க. வேலுப்பிள்ஃனயின் மண்வாசஃன, தாழையடி சபாரத்தினத்தின் புதுவாழ்வு ஆகிய சிறுகதைத் தொகுதிகள் 1960, 70 களில் வெளி வந்துள்ளன. கனக செந்திநாதன், சொக்கன், க. வே. ஆகியேரின் தொகுப்புகளில் உள்ள கதைகள் பெரும்பாலும் 1950, 60ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டவை என்பதும் இங்கு க:ெfக்கத்
தசுகிது.
பண்பு அடிப்படையில் இக்காலப் பகுதியில் தோன்றிய எழுத்தாளர்கள் முந்திய தஃமுறை எழுத்தி Ga rra, safi: இருந்து அதிகம் வேறுபட்டர்கள் அல்வர். 1980 ஆம் !
ஆம் ஆண்டுகளின் ஈழத்துச் சமுதாய அரசியல் டோக்குக களில் அதிக மாற்று இன்மையே இவர்களில் கானப்படும் ஒற்றுமைக்கான அடிப்படை எனலாம். அவ்வகையில் 3-ஆம் 10ஆம் ஆண்டுச் சிறுகதைகளே ஒருசேர நோக்குவதும் டெ' குத் ஆம். ஆயினும் கிராமி பண்பாட்டுப் பிரக்குை முந்திய எஃ:முறை எழுத்தா ளர்களேக் காட்டிலும் இவர்களிடம் முஃனப்பாகக் காணப்படுவதை நாம் அவதானிக்க :படி பும், 1. சே. மு. கனக செந்திதாதன், சொக்கன் பி. .ே டோன்ருேசின் பலகதைகளிலே யாழ்ப்பாணக் கலாச்சாரக் கூறுகள் பலவற்றை நாம் கானலாம். இவர்கள் மூலமே யாழ்பாணக் கிராமியப் பண்பாடு பரவலாகச் சிறுகதை கீ

Page 39
ளில் இடம்பெறத் தொடங்கியது. எனினும் முந்திய தலை முறையைச் சேர்ந்த எழுத்தாளர்களைப் போலவே சமூக நடைமுறைகளை ஆழமாக நோக்கும் பார்வை விசாலம் இவர்களிடமும் காணப்படவில்லை. வழிவழி வந்த பண்பாட் டுனர்வும், மனிதாபிமானமும் இவர்களின் பொதுப்பண்பு எனலாம். அதற்கேற்றவகையில் சீர்திருத்த நாட்டமும் இவர் களின் கதைகளில் இழையோடக்காணலாம். புதிய மாற்றங் களே அங்கீகரிக்காது, பழமைக் கனவுகளில் ஆழும் மனுேபா வமும் இவர்களுட் சிலரின் கதைகளில் காணப்படுகின்றது. கனக செந்திநாதன், குறிப்பாக இப்போக்கின் சிறந்த பிரதி நிதி எனலாம். தனது வெண்சங்கு தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரையில்,
" அன்பு, முயற்சி, கலை, போலித்தன்மையில் வெறுப்பு, விதியின்பிடி, பணஆசை என்ற நிலைத்துநிற்கும் பொருள்களை வைத்து ஒரளவு 1.ழமையுடனும் சமயச் சூழலுடனும் சித்திரிக்க முயன்றிருக்கின்றேன். பழைய யாழ்ப்பாணக் கலாச்சாரம் இப்புதிய சிறுகதைகளுக்கு வலுவான பகைப்புலமாக அமைந்திருக்கின்றது . . யாழ்ப்பாணப் பழமை, சமயச் சூழல். է մեք6ծ)ւD Այfr6նr கதை சொல்லும் உத்தி என்ற என் தனித்துவத்தை நான் இழந்துவிடத் தயாராக இல்லை." என்று கூறுகின்ருர், அவரது தொகுப்பில் உள்ள பல கதைகள் இப்போக்கை நன்கு பிரதிபலிக்கின்றன.
மொழி நடையைப் போறுத்தவரை முந்திய தலைமுறை யினரைப் போல் கவித்துமான அலங்கார நடையைஇவர் கள் கையாளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பேச்சுவழக்கு மொழியை பிரக்ஞை பூர்வமாகக்கையாண்ட தாகத் தெரியவில்லை. இவர்களது கதாபத்திரங்கள் பல "இலக் கனசுத்தமான இலக்கிய நடையிலேயே உரையாடுகின் றன. உதாரணமாக வரதரின் கற்பு என்ற கதையில் வரும் பின் வரும் உரையாடலைக் காட்டலாம்.
6.

*மாஸ்டர், நீங்கள் கலைச்செல்வியைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?' என்று கேட்டார் ஐயர். "ஒமோம், ஆரம்பத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். ஆனல் எல்லா விஷயங்களையும் படித்திருக்கிறேன் என்று சொல்லமுடியாது. ஏன் என்ன விஷேசம்???
"கலைச்செல்வி பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறுகதை . . .
"யார் எழுதியது?"
"எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சம்பவம் தான் மனதை உறுத்திக்கொண்டே இருக்கின் றது. ’’
"சொல்லுங்கள். நினைவு வருகிறதா பார்க்கலாம்."
1958 ஆம் ஆண்டின் இனக்கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்திலே வரதர் எழுதிய இக் கதையில் கூட உரையாடலில் இலக்கிய வழக்கு நடையின் செல்வாக் கையே காண முடிகிறது. இது 40 ஆம் ஆண்டுகளில் உரு வான எழுத்தாளர்களிடம் பரவலாகக் காணப்படும் ஒரு பொதுப் பண்பாகும். அ. செ. மு. கனக செந்திநாதன், அ. ந. கந்தசாமி முதலியோரின் பல கதைகளில் இத்தகைய மொழி நடையைக் காணலாம். யதார்த்தப் பண்பு இவர் களது கதைகளிலும் பூரண வடிவம் பெறவில்லை என்பதையே இது காட்டுகின்றது.
3
1950 ஆம் ஆண்டுகள் ஈழத்துச் சமுதாய, அரசியல் வர லாற்றில் முக்கியமான காலகட்டமாகும். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதாயினும் தேசிய நலனே முன் வைத்த உண்மையான போராட்டம் 1950 ஆம் ஆண்டுகளில் தான் ஆரம்பித்தது. சமுதாய முரண்பாடுகளும், போராட் டடங்களும் கூர்மையடைந்து அ ர சி ய ல் வடிவம் பெறத்
F。9 65

Page 40
தொடங்கின. 1953 இல் நிகழ்ந்த ஹர்த்தால் கஷ்டப்பட்ட மக்களின் எழுச்சிக் குரலாக அமைந்தது. 1956 ஆம் ஆண் டின் அரசியல் மாற்றத்துக்கும் அது வழி கோலியது. தேசிய சக்திகள் அரசியல் அரங்கில் ஆதிக்கம் பெற்றன. தேசிய பண்பாட்டுணர்வு, சோஷலிச சிந்தனை என்பன பொதுமக் கள் மயமாகத் தொடங்கின. அதேவேளை சிங்கள தேசிய வாதிகளின் தீர்க்கதரிசனமற்ற, சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளால் சிங்களம் மட்டும் அரசகரும மொழி யாகியது. தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்க முடியாத பெரும் சிக்கலாக இது மாற்றியது. 1958 இல் நாடு பரந்த இனக்கலவரத்துக்கு இது வழியமைத்தது. ஒருபுறம் பொது வுடைமை, தேசிய ஐக்கியம் முதலிய கருத்துக்கள் வளர்ச்சி யடைய மறுபுறம் இன உணர்வு, இனவிடுதலைக் கொள்கை என்பன வலுப்பெறத் தொடங்கின.
இத்தகைய சமுதாய அரசியல் பின்னணியிலேயே ஈழத் துச் சிறுகதை இலக்கியத்தின் மூன்றுவது தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் உருவாகினர். வ. அ. இராசரத் தினம், செ. கணேசலிங்கன், டொமினிக் ஜீவா, கே. டானி யல், எஸ். பொன்னுத்துரை, காவலூர் ராசதுரை, நீர்வை பொன்னையன், என். கே. ரகுநாதன், பித்தன், அ. ஸ. அப் துஸ்ஸமது, என். எஸ். எம். ராமையா, நந்தி, மு. தளைய சிங்கம், கே. வி. நடராசன், அ. முத்துலிங்கம், இ. நாக ராஜன், அகஸ்தியர், தெளிவத்தை ஜோசப் முதலியோர் இக் காலப் பகுதியில் சிறுகதை உலகில் பிரவேசித்தவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்களாவர். 60, 70 களில் இவர்களது சிறு கதைகள், பல தொகுப்பு நூல்களாகவும் வெளிவந்துள்ளன.
1850 ஆம் ஆண்டுகளில் தான் அரசியல் சார்பான இலக் கியப் பிரிவுகள் இலங்கையில் தோன்றின. இக்கால எழுத் தாளர்களை அவர்களின் அரசியல், இலக்கியக் கோட்பாட் டின் அடிப்படையில் இரண்டு பிரிவுக்குள் அடக்கலாம். சமு தாய அரசியல் போராட்டங்களுடன் இலக்கியம் பிரிக்கமுடி யாத உறவுடையது என்று கருதுவோர் ஒரு சாரார் இலக்
66

கியத்துக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள உறிவின் மறுப்பவர்கள் அல்லது அது பற்றிய பிரக்ஞையுற்றேர்ம்லு črtgTitfi. -
செ. கணேசலிங்கன், டொமினிக் ஜீவிா,டாஞ்சியூஸ் நாதன், காவலூர் ராசதுரை, நீர்வூைஇப்ான்னிேன்*அகஸ்தி யர் முதலியோர் முதலாவது பிரிவுஃ) ஆட்டங்குஜீ இவர்கள் மார்க்ஸிய சித்தாந்தத்தை ஏற்றுக்கெண்ட்வ்ர்கள் என்ற வகையில் சமுதாய அரசியல் பிரக்ஞை*இவர்கள்ன் கதை களில் முனைப்பாகக் காணப்படுகின்றது. இதாய ஏற்றத் தாழ்வு, தொழிலாளர் போராட்டம், சாதி அடக்குமுறை , தீண்டாமை, வறுமை, சுரண்டல் ஆகியன இவர்களின் சிறு கதைகளில் காணப்படும் பொதுப் பொருள்களாகும். சுருக்க மாகச் சொல்வதானல் சமுதாய வர்க்கங்களுக்கிடையே நடக்கும் போராட்டமே இவர்களது கதைப் பொருளாக உளளது.
அடிநிலை மக்களின் துயர் நிறைந்த வாழ்வும் ஆளும் வர்க்கம் அவர்களைச் சுரண்டும் விதங்களும், புதுவாழ்வு ஒன்றினைப் போராடி வென்றெடுக்கும் வகையில் அவர்கள் விழிப்படைந்து வருவதும் இவர்கள் கதைகளில் சித்திரிக்கப் பட்டுள்ளன. இவர்களது கதைகளில் சமுதாய சீர்திருத்த நோக்குக்குப் பதிலாக சமுதாய அமைப்பை முற்ருக மாற்றி அமைக்கும் புரட்சிகர உணர்வே பொதுவாக வெளிப்பாடு பெற்றுள்ளது எனலாம். செ. கணேசலிங்கனின், சங்கமம், ஒரே இனம், நல்லவன்; டொமினிக் ஜீவாவின் பாதுகை, தண் னிரும் கண்ணிரும், சாலையின் திருப்பம்; கே. டானியலின் டானியல் கதைகள், உலகங்கள் வெல்லப்படுகின்றன; ரகுநா தனின் நிலவிலே பேசுவோம்; நீர்வை பொன்னையனின் மேடும் பள்ளமும், உதயம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளிலே உள்ள பெரும்பாலான கதைகள் இதற்கு உதாரணங்களா கும். ஆயினும் சில வேளைகளில் இவர்களது அரசியல் உணர்வு கலாபூர்வமான வடிவ அமைதி பெறத் தவறி விடுவதையும் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாகக் கணேசலிங்கனின்
67

Page 41
பிற்காலக் கதைகளிலே இதை வெளிப்படையாகக் காண லாம். அவரது கொடுமைகள் தாமே அழிவதில்லை என்ற தொகுப்பில் உள்ள கதைகள் உருவச் சிதைவு அடைந்த பிரச்சாரமாகவே அமைந்துள்ளன.
காவலூர் ராசதுரை முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந் தவர் எனினும் அவரது கதைகள் ஏனைய முற்போக்கு எழுத் தாளர்களின் கதைகளில் இருந்து ஒரு வகையில் வேறுபட் டவை எனலாம். இவரது பெரும்பாலான கதைகள் நகர்ப் புற மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கை அம்சங்களை உள்ள டக்கமாகக் கொண்டவை. அவர்களது மனப் போக்குகளை யும் நடத்தைகளையும் துல்லியமாகச் சித்திரிப்பவை. இரு கூறுபட்ட வர்க்க முரண்பாடுகள் இவரது கதைகளில் அதி கம் இடம் பெறுவதில்லை. அந்த வகையில் ஏனையோர் கதைகளில் காணப்படுவது போல் இவரது கதைகளில் அரசி யல் அம்சம் வெளிப்படையாகத் தெரிவதில்லை. இவருடைய குழந்தை ஒரு தெய்வம், ஒருவகை உறவு ஆகிய தொகுதி களில் குறிப்பிடத் தகுந்த பல கதைகள் உள்ளன.
இரண்டாவது பிரிவைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் பல் வேறு சிந்தனைப்போக்கு உடையவர்கள் உள்ளனர். வ. அ. இராசரத்தினம், நந்தி, முத்துலிங்கம், கே. வி. நடராசன் முது லியோர் திட்டவட்டமான அரசியல் சிந்தனைப் போக்குக களைத் தங்கள் சிறுகதைகளில் வெளிக்காட்டாத போதிலும் சமுதாயவாழ்வின் பல்வேறு உள் முரண்பாடுகளையும் கலா சார அம்சங்களையும் மனிதாபிமான உணர்வுடன் அவற்றில் பிரதிபலித்துள்ளனர். வ. அ.வின் தோணி, நந்தியின் ஊர்நம் புமா, முத்துலிங்கத்தின் அக்கா, கே. வி. நடராசனின் யாழ்ப்பாணக் கதைகள் முதலிய சிறுகதைத் தொகுதிகள் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
50ஆம் ஆண்டுகளில் எழுதத் தொடங்கிய எஸ். பொன் னுத்துரை, மு. தளையசிங்கம் ஆகியோர் 60, 70களில் முற் போக்கு இலக்கியத்தின் பிரதான எதிர் விமர்சகர்களா
68

கவும் வளர்ச்சியடைந்தனர். எஸ். பொ. ஈழத்துச் சிறந்த சிறுகதையாசிரியர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். உள்ள டக்கத்தைவிட உருவ பரிசோதனைக்கே இவர் முதல் இடம் கொடுப்பவர். பால் உணர்வின் வக்கரிப்பினையே (Sexual Pervertion) இவர் தன் கதைகளில் அதிகம் சித்திரித்துள்ளார். வீ என்ற பெயரில் வெளிவந்துள்ள இவரது சிறுகதைத் தொகுப்பில் புனைகதை எழுதுவதில் இவரது பல்வேறுவகை யான ஆற்றல்களை வெளிக்காட்டும் நோக்கில் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தளையசிங்கத்தின் கதைகளில் பால் உணர்வும் ஆன்மீகத் தேடலும் பிரதான இடம் பெறுகின் றன. உருவச் செழுமை மிகுந்த பல கதைகளை இவர் படைத் துள்ளார். கஃப்கா, ஹெமிங்வே போன்ற மேலைத்தேச எழுத் தாளர்களின் செல்வாக்கு இவரிடம் உண்டு என இவரே குறிப்பிட்டுள்ளார். இவரது புதுயுகம் பிறக்கிறது ஈழத்தில் வெளிவந்த நல்ல சிறுகதைத் தொகுதிகளுள் ஒன்ருகும். 1960 - 65 காலப்பகுதிகளில் இவர் எழுதிய கதைகளே இத் தொகுதியில் உள்ளன.
பித்தன், அ. ஸ. அப்துஸ்ஸமது ஆகியோர் கிழக்கிலங்கை முஸ்லீம்களின் வாழ்க்கைப் பின்னணியில் பல கதைகள் எழு தியுள்ளனர். பித்தன் குறைவாக எழுதி பிற்காலத்தில் எழுத்துலகில் இருந்து முற்முக ஒதுங்கியபோதிலும் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த ஒருவராகக் கரு தப்படுகின்ருர், மதவாதிகளின் ஆசாடபூதித்தனத்தைக் குத் திக்காட்டும் இவரது பாதிக்குழந்தை ஒரு நல்ல சிறுகதை யாகும். அப்துஸ்ஸமதின் எனக்கு வயது பதின்மூன்று என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. என். எஸ். எம். ராமையா, தெளிவத்தை ஜோசப் ஆகியோர் மலைநாட்டு மக்களின் வாழ்க்கையை உள்ளடக்கமாகக் கொண்டு பல நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளனர். 30 ஆம், 40 ஆம் ஆண் களில் யாழ்ப்பாணப் பிரதேசத்தவர்களால் மட்டும் எழுதப் பட்ட சிறு கதை 50 ஆம் ஆண்டுகளில் இவ்வாறு நாடுபரந்த ஒர் இலக்கிய வடிவமாக வளர்ச்சியடைந்தது.
69

Page 42
50 ஆம் ஆண்டுகளில், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்த இன உணர்சி கவிதைத் துறையில் செல் வாகுச் செலுத்தியதுபோல் சேன இலக்கியத்தில் செல்வாக் குச் செலுத்தியதாகக் கூறமுடியாது. இனக்கலவரகால நிகழ்ச் சிகளே அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகள் எழு தப்பட்டுள்ளன எனினும் அவை இன உணர்வைத் தூண் டும் விதத்தில் அன்றி மனிதாபிமான உணர்வைக் கிளறும் முறையிலேயே எழுதப்பட்டுள்ளன என்பது குடிப்பிடத்தர் கது. பொதுவாகக் கூறுவதானுல் தேசிய ரீதியிலான சமூதாய
அரசியல் இயக்கத்தின் இலக்கிய வெளிப்பாடாகவே இக்கா
லச் சிறுகதைகள் அமைந்தன எனலாம். தேசிய இலக்கி பம் என்ற கோட்பாடு இக்காலப்பகுதியிலேயே வளர்ச்சிய டைந்தது. வைத்தியலிங்கம், சம்பந்தன் முதலிய ஆரம்பகால
எழுத்தாளர்கள் கால இடப் பிரக்ஞை அற்றும் இந்தியச்
சூழலில் இந்தியக் கதாபாத்திரங்களேக் கொண்டும் கதைகள் எழுதியுள்ளார்கள். மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களும் பிரக்ஞைபூர்வமான தேசிய உணர்ச்சிகொண்டவர்கள் அல் லர். ஆணுல் 50 களிலேதான் நமது மக்கள், நமது பிரச்சினே கள், நமது கலாச்சாரம், தமது மொழி என்பன இலக்கியத் தில் இடம் பெறவேண்டும் என்ற எண்னம் கோட்பாட்டு ரீதியா வடிவம் பெற்றது. தேசிய இலக்கிபம், மண்வாசஃன இலக்கியம், முற்போக்கு இலக்கியம் என்ற கொள்கைகள் ஆதிக்கம் பெறத் தொடங்கின. இதுவே :) க்கு பிற்பட்ட ஈழத்து இலக்கியத்தின் பிரதான பொதுப் போக்காகவும் அமைந்தது. இவ்வாறு 1938 ஆம் ஆண்டுகளில் தோன்றிய எழுத்தாளர்களால் தான் ஈழத்துச் சிதுகதைகளில் பதார்த் தம் பூரண வடிவம் பெற்றது. பேச்சு மொழி பிரக்ஞைபூர் வமாகக் கையாளப்பட்டது. உருவநடத்திப் பரிசோதனைகள் இடம் பெற்றன. சிறுகதையின் உள்ளடக்கும் உருவமும் வளம்பெற்றன:
சி
1930 ஆம் ஆண்டுகளின் சிறுகதைப் போக்குகள் 60 ஆம் ஆண்டுகளிலும் தொடர்ந்து வளர்ச்சி அடைவதைக் கான
7D

லாம். உண்மையில் 50 களில் அரும்பிய போக்குகள் : சுனில் முதிர்ச்சி அடைந்தன என்று கொள்வதே பொருத் தும். 50 களில் தோன்றிய எழுத்தாளர்கள் பலர் 60 களி லேயே அதிக ஆற்றலுடன் எழுதத் தொடங்கினர். புதிய எழுத்தாளர்கள் .Rர் எழுத்துலகில் புகுந்தனர்.
1958 இல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து இடதுசாரிச் சிந்தனேப் போக்கின் செல்வாக்கு 60 ஆம் ஆண் டுகளில் ஆழமாகவும் பரவலாகவும் ஈழத்து எழுத்தரன்ர்கள் மத்தியில் இடம் பெறத் தொடங்கிற்று. இதேகாலப்பகுதி யில் சர்வதேச ரீதியில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஏற்பட்ட சித்தாந்தப் பிளவு இலங்கையையும் பாதித்தது. "சமாதானம் மூலம் சமூகமாற்றம்" என்ற திரிபுவாதக் கிருந்தை எதிர்த்து "புரட்சியின் மூலம் சமூகமாற்றம்' என்ற புரட்சிகரக் கருத்தை முன்வைத்தவர்கள் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பில் இருந்து தனியாகப் பிரிந்து சென்றனர். முற்போக்கு எழுத்தாளர்களில் பெரும்பாலானுேர் அவர்களுடன் சேர்ந் தனர். பல்கஃக் கழகங்களில் சோஷலிசப் படிப்பு வட்டங் கள் உருவாகின. 1958 க்குப் பின் நடைமுறைக்கு வந்த சுய ம்ொழிக் கல்வியினுல் உருவாகிய பட்டதாரி மானவர்கள் பலர் இவ்வியக்கங்களால் ஈர்க்கப்பட்டனர். அவர்களுள் சிலர் சிறுகதை ஆசிரியர்களாகவும் உருவாகினர். செ. யோக தாதன், யோ, பெனடிக்ற்பாலன், சே. கதிர்காமநாதன், முத்து சிவகு லாம் போன்ருேர் இவ்வாறு பல்கஃக் கழ சுத்தில் இருந்து புரட்சிார இடதுசாரிச் சிந்தஃனப்போக்கின் செல்வாக்குடன் வளர்ச்சியடைந்த சிறுகதையாசிரியர்களா வர். செம்பியன் செல்வன், செங்கையழியான் பயோனி ஆழ்வாப்பின்ளே முதலியோகும் பல் கலேக்கழகத்தில் இருந்து இக்காலப் பகுதி பில் உருவாகிய வர்களே, மருதூர்க் கொத் தன், மருதூர்க் கணி, சண்முகம் சிவலிங்கம், புலோலியூர் சதாசிவம் போன்ற வேறு சிலரும் 60 களில் சிறுகதைத் துறையை பிளப்படுத்தினர்.
ஆரம்பத்தில் சிறுகதைகளே எழுதிய யோகநாதன் பிற் காலத்தில் குறுநாவல்களில் அதிக அக்கறை காட்டியுள்

Page 43
ளார். இவரது யோகநாதன் கதைகள் என்ற நூல் குறிப் பிடத் தகுந்த சிறுகதைத் தொகுப்பு ஆகும். காவியத்தின் மறுபக்கம், ஒளி தமக்கு வேண்டும் ஆகிய குறுநாவல் தொகுப் புகளும் வெளியிட்டுள்ளார். உண்மையில் இவற்றுள் சில சிறுகதைகளாகவே கருதப்பட வேண்டியன. அண்மையில் சுண்ணிர் விட்டே வளர்த்தோம் என்ற இவரது சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. யோ. பெனடிக்ற் பாலனின் சிறுகதைகள் நூல் உருவம் பெறவில்லே. ஒரே லயக் காம்ப ராவில் என்ற இவரது கதை மஃயேகத் தோட்டத் தொழி லாளரின் வாழ்க்கை நெரிசஃத் தாக்கமான முறையில் சித் திரிக்கின்றது. இக் கதையே இவரது சொந்தக்காரன் தாவ வின் வித்து எனலாம். கருத்துக்களே அழுத்திச் சொல்வதற் குச் சிறுகதையை விட குட்டிக்கதை சிறந்த வடிவம் என்று கருதுவதால் போலும் இவர் பிற்காலத்தில் அதிகமாக குட் டிக் கதைகளே எழுதியுள்ளார். இவரது குட்டிக் கதைகள் தனிச்சொத்து என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளன.
செ. சுதிர்கா தாதன் சுபtாக எழுதியது மட்டுமன்றி பிரபல இந்திய முற்போக்கு எழுத்தாளர் கிஷன்-சந்தரின் சில சிறுகதைகளே பொழி பெயர்த்தும் உள்ளார். ஆற்றல் உள்ள சிறுகதைப் படைப்பாளியான இவர் இளம் வயதி லேயே இறந்து போனது இலங்கைச் சிறுகதைத் துறைக்கு ஒரு நஷ்டமேயாகும். இவரது கொட்டும் பணி சிறந்த விy கதைத் தொகுப்பு. கிஷன்-பந்தரின் மொழி பெயர்ப்புக் கதையை உள்ளடக்கிய நான் சாக மாட்டேன் என்பதும் குறிப்பிடத் தகுந்த ஒரு நூல் ஆகும்.
செம்பியன் செல்வன், செங்கையாழியான், புலோலியூர் சதாசிவம் ஆகியோர் யாழ்ப்பாணக் கிராமிய மக்களின் வாழ்க்கையை உள்ளடக்கமாகக் கொண்ட பல கதைகஃாப் படைத்துள்ளனர். செங்ரைபரழியான் பிற்காலத்தில் நாவல் கனிலேயே அதிக கவனம் செலுத்தியுள்ளார். இவரது கதை கள் செங்கையாழியான் கதைகள் என்ற பெயரில் நூல் உருப் பெற்றுள்ளன. செர்பியன் செல்வனின் அமைதியின்
 
 
 
 

இறகுகள், சதாசிவத்தின் புகப்பிரவேசம், பவானியின் கடவு ளருஆம் மனிதரும் ஆகிய நூல்களும் வெளிவந்துள்ளன. மருதூர்க் கொத்தன், மருதூர்க்கணி ஆகியோர் மருதமுனேக் கிராமத்து முஸ்லீம்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதை கள் படைத்துள்ளனர். மருதூர்க் கொத்தின் இக்காலப்பகு தியில் தோன்றிய சிறந்த சிறுகதை யாசிரியர்களுள் ஒரு ராவர். இவரது கதைகள் இன்னும் நூல் உருப் பெறவில்லே. சண்முகம் சிவிங்கம் மிகக் குறைவாக எழுதி அதிக கவனத் தைக் கவர்ந்த ஒரு படைப்பாளி. இவரது கதைகள் பெரும் பாலும் சுபதரிசன வெளிப்பாடாக உள்ளன. ஈழத்துச் சிறு கதையுலகில் இத்தகைய படைப்புக்கள் மிக அபூர்வமா கும். இவ்வகையில் இவரது மழை, நீக்கம் முதலிய கதை கள் குறிப்பிடத் தக்கன.
1970 ஆம் ஆண்டுகளில் மேலும் ஒரு புதிய இளம் தலே முறையினர் சிறுகதை உலகில் புகுந்தனர். அ. யேசுராசா, குப்ளான் சண்முகம், ஐ. சாந்தன், அ. விெ. முருகபூபதி, திக்வல்லே குமால், எம். எல். எம். மன்சூர், டானியல் அன் நரி, இந்தினி சேவியர், முத்து ராசாத்தினம், எஸ். எல். எம். ஹனிபா , மண்டூர் அசோக" சிறிதரன், சட்டநாதன் தெணியான், உமா வரதராசன் முதலியோர் குறிப்பிடக் தகுந்த சமகாலச் சிறுகதை பாசிரியர்களாவர். இபர்களிற் சிலரின் படைப்புக்கன் மூலம் இலங்கைத் தமிழ்ச் சிறுகள்: பின் உருவம், உள்ளடக்கம், மொழிநடை ஆகியவற்றில்
வில புதிய பேரக்குகள் வெளிப்படத் தோடங்கியுள்ளேன.
நகரமய மாதலின்-அல்லது முதலாவித்துவ சமுதய முதிர்ச்சியின் அடிப்படையில் ஏற்படும் தனி வித அக
உளேச்சல்களும், அன்னிய மாத ஆரம் (Etlic1922 til 31 ) giji, JY T JUL"
FF, 10

Page 44
பகுதியில் தோன்றிய சில சிறுகதைகளில் சிறப்பாக வெளிப் பாடு பெற்றுள்ளன. யேசுராசாவின் ஓர் இதயம் வறுமை ாேண்டிருக்கிறது. குப்ளாண் சண்முகானின் எல்லேகள், இலுப்பபரமும் இளம்சந்ததியும் மன்சூரின் முரண்பாடு கன், சிறித வின் நிர்வாணம் முதலிய கதைகள் இப்பண்புக் குச் சிறந்த உதாரணங்களாகும். இக்கதைகளில் சமூகத் தோடு அல்லது வீட்டோடு ஒட்டமுடியாது அன்னியப்பட் டுச் செல்லும் இாேஞர்களேக் காண்கிருேம். இது ஈழத்துச் சிறுகதையின் ஒரு புதிய பரிமாணம் எனலாம்.
மரபுரீதியான சிறுகதை வடிவத்தில் இருந்து வேறுபட்ட கதைகண்பும் இவர்களில் சிலர் புனேந்துள்ளனர். சாந்தன் யேசுராசா ஆகியோரின் பல கதைகள் இத்தகையன. அவை பெரும்பாலும் அளவில் சிறிய நினேவுச் சித்திரங்களாக அல் வது அனுபவ வெளிப்பாடாக அமைந்துவிடுகின்றன. தென் இலங்கை முஸ்லிம்களின் வாழ்வும் பேச்சு வழக்கும் இக்காலப் பகுதியிலேயே சிறுகதையில் இடம் பெறத் தொடங்கின. திக்வல்லக் கமால் போன்ருேகின் சிறுகதைகள் மூலம் ஒரு
புதியவாழ்க்கைப்புலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமாகியது.
இக்கால எழுத்தாளர்களின் படைப்புக்கள் சில தொகுப் புக்களாகவும் வெளிவந்துள்ளன. யேசுராசாவின் தொலைவும் இருப்பும் ஏனேய கதைகளும், சாந்தனின் ஒரே ஒரு ஊரிலே, சண்முகனின் கோடுகளும் கோலங்களும், முருகபூபதியின் பீர்மையின் பங்காளிகள், மண்டுர் அசோகாவின் கொன்றைப் பூக்கள் முத்துஇராசரத்தினத்தின் சிலந்தி வயல் என்பன அவற்றுட் சில
1930 ஆண்டுகளில் தோன்றிய ஈழத்து சிறுகதை சுமார் ஐம்பது ஆண்டுகளாக இங்கு பன்முகப்பட்ட வளர்ச்சி பெற்று
፳4
§
 
 
 

ந்ேதிருப்பதை இதுவரை பார்த்தோம். ஆரம்ப கால
ஈழத்து உணர்வு தேை . ۔ । -
| T3:S TI ft T CITY தேசியப் பண்ணி । । ।
இலக்கியம் வளர்த் துள்ளது. நாம் ணுக்கன ।
தொகுதிகள் । . । । ।
பது நல்ல தொகுதிகளேயெனும் 5' .ל, והבלר # giיש ריחד ע : , ਈ . [F T வியாபாரப் ந்திரிகைக இங்கு நோன் முததாலும், சமூகப்பிரக்ஞை இங்கு ஒர் இலக்கி இ க் மாசுனே வலுப்பெற்றதனுலும் மவினமான । । । களுக்குப் பதிலாக, காத்திரமான விஷய கனமுள்ள கதை கள் இங்கு அதிகம் எழுதப்பட்டன. இது ஈழத் ஒச் சிறுகதை பின் ஒரு சிறப்பம்சம் எனலாம்.
75

Page 45
நாடகம்
ஈழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக் கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங் களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகை பின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங் களும் அதையொட்டிப் பின்னர் எழுந்த நவீன பாணி நாட களும் நவீன நாடகங்களாகும்.
மரபுவழி நாடகங்களைக் கூத்துக்கள் எனவும் அழைப் பார். இக் கூத்துக்களின் ஆரம்பகாலம் எது எனத் திட்ட வட்டமாகக் கூறமுடியாதுவிடினும் ஈழத்தில் நாடக வடிவ இலக்கியங்களான பள்ளு குறவஞ்சி நூல்களின் தோற்றக் காலமான 15 ஆம், 16 ஆம் நூற்ருண்டையே இதன் ஆரம் பகாலமாகக் கொள்ளலாம். 18 ஆம் நூற்ருண்டிலிருந்துதான் ஈழத்தில் பல மரபுவழி நாடகப் பிரதிகள் தொடர்ச்சியாகத் தோன்றத் தொடங்கின என்று அறிகிருேம். கணபதி ஐயமே (1709-1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முதலாசிரியர் என்டர். இவர் வாளபீமன் நாடகத்தை எழுதினர். இது வரை கிடைத்த பலவேறு தகவல்களிலிருந்து ஈழத்தில் ஏறத் தாள 200 க்கு மேற்பட்ட மரபுவழி நாடக நூல்கள் இருந்த தாக அறிய முடிகிறது. ஆனல் ஏட்டுருவிலோ அன்றி அச் கருவிலோ கையிற் கிடைப்பவை அவற்றினும் பாதியே.
76

போத்துக்கேயர் வருகையின் பின் ஈழத்தில் வளர்ச்சி பெற்ற கத்தோலிக்க மதத் தாக்கத்தினுல் கத்தோலிக்க மதச் சார்பு பொருந்திய கூத்துக்களும் தேன்றின. என்றிக் எம்பரதோர் நாடகம், ஞானசவுந்தரி நாடகம் என்பன இதற்கு உதாரணங் களாகும். ஈழத்து மரபுவழி நாடகங்களில் கத்தோலிக்க ரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களான யாழ்ப்பா ணம், மட்டக்களப்பு, மன்னர், முல்லைத்தீவு, மலைநாடு ஆகிய இடங்களிலெல்லாம் இம் மரபு வழி நாடகங்கள் இன்றும் வழக்கிலுள்ளன. இவற்றிற்கிடையே பிரதேசத்திற்குப் பிர தேசம் சிற்சில வேறுபாடுகளிருப்பினும் இவை அனைத்தும் ஒரிடத்திலுருவாகி, பின்னர் ஈழத்தில் தமிழர் வாழும் பிர தேசங்களிற் சுவறின என்பதற்கு ஆதாரங்களுண்டு. இம் மரபுவழி நாடகங்களே ஈழத்து நாடக மரபின் ஆரம்பமாகும்
பார்ஸி வழி நாடகக் காரரது வரவினுல் 18 ஆம் நூற் ருண்டில் விலாசம் என்ருெரு நாடக வடிவம் ஈழத்தில் வந்து புகுந்தது. அரிச்சந்திர விலாசம் மதனவல்லி விலாசம் என்பன இதற்கு உதாரணம், கூத்திலிருந்த ஆட்ட முறைகள் நீக்கப்பட்டமையும் கர்னடக சங்கீத இசை இடம் பெற்ற மையும் விலாசத்தை கூத்தினின்றும் வேறுபடுத்திக் காட்டிய அம்சங்களாகும். கூத்து ஆட்டமுறைகளை விட்டு கர்நாடக இசையுடன் மேற்கத்திய, இந்துஸ்தானி (சைகளும் கலந்து சபா, டிருமா போன்ற நாடக வடிவங்களும் 19 ஆம் நூற் முண்டில் ஈழத்தில் எழுந்தன. நாட்டுக்கூத்திற் காணப்படாத காட்சியமைப்பும் விறுவிறுப்பான கதையோட்டமும் இந் நாடகங்களின் பிரதான அம்சங்களாகும்.
நவீன நாடக மரபு உருவாகியதைத் தொடர்ந்தும், தென்னிந்திய சினிமாக்களின் வருகையினுலும் இம் மரபுவழி நாடகங்கள் நகரப்புறங்களிற் செல்வாக்கு இழந்து, கிராமங் களைச் சென்றடைந்தன. இந் நாடக மரபு மீண்டும் ஈழத்து நாடக உலகில் 20 ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியிலேதான் பிரகாசம் பெறத்தொடங்குகிறது.
77

Page 46
ஆங்கிலேயர் வருகையுடன் இலங்கை வரலாற்றில் புது அத்தியாயம் ஒன்று ஆரம்பிக்கப்படுகின்றது. இன்று வரை எமது நாட்டின் பொருளாதாரத் தஃவிதியாக இருந்து வந்துள்ள காலணித்துவப் பெருந்தோட்டப் பொருளாதா ரத்தை ஏற்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே. இப்பொரு பிளாதார அமைப்புமுறை ஈழத்திற் பல அடிப்படையான மாறுதல்களே ஏற்படுத்தியது. ஆங்கிலேயர் தமது அர சிற் தளத்தை ஸ்திரப் படுத்துவதற்காகப் பலவகைக் கலாசார ஆக்கிரமிப்பிலும் ஈடுபட்டனர். ஆங்கில மொழி, கிறித்தவ மதம் ஆகியவற்றின் மூலம் சுதேசிகளே ஐரோப்பிய மயமாக்கும் முய மேற்கொள்ளப்பட்டது. ஆங்கில அறிவு முக்கியமானதாக மாத்திர மன்றி வருமானம் தருவதாக:ம் மாறியது. பிரிட்டிசாரின் நிர்வாக சேவையில் வேலே செய்ய ஆங்கிலம் கற்ற விகிதர்கள் கூட்டம் ஒன்றும், அவர்களுக் குத் தேவையாக இருந்தது. ஸ்தாபிக்கப்பட்ட புதிய பாட சீாலேகனில் இவர்களும், ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களும் உற்பத்தி செய்யப்பட்டார்கள். இவர்களே ஈ த்து அரசியல் அரங்கில் புதிதாகத் தோன்றிய மத்தியதர வர்க்கத்தின
TT.I.
இருபதாம் நூற்றுண்டு ஈழத்து இவக்கியத்தில் இன் வகுப் பினரிலிருந்து வந்தோரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவர் பிளே நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல் ஆகி ய3ற்றை ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகம் செய்து வைத்தனர். நாடகத்துறையிலும் இவர்களின் பங்கு குறிப் பிடத்தக்கது. ஈழத்துக் கூத்து மரபிலிருந்து விடுபட்டு நவீன தெறியில் நாடகம் செல்லக் காலாயிருந்தர் இவர்களே,
மேனுட்டு இலக்கியப் பயிற்சி காரணமாக இவர்கள் நாடகத்தைப் புதிய திசைக்கு எடுத்துச் சென்ருர்கள். தமிழ் நாட்டில் சந்தரம்பிள்னே போன்ற பேராசிரியர்களும், பம்மல் சம்பந்த முதலியார் போன்ற நியாயவாதிகளும் நாடாத் துறையுட் புகுந்தனர். ஈழத்திலும் இதுவே நடந்தது. நாட சுத்தினேத் தொழிலாகக் கொள்ளாமல் சபாக்கள் அமைத்
B
 
 
 

தும், மன்றங்கள் தொடங்கியும் இவர்கள் நாடகத் தினே வளர்த்தனர். 1913 ஜாவேயில் கொழும்பில் லங்கா கபோக சபை ஸ்தாபிக்கப்பட்டது. 1914 இல் பாழ்ப்பானத்தில் பிரஸ் வதி விலாச சபை அமைக்கப்பட்டது. 1920 இல் மட்டக் ாழில் : த விச சபை தோன்றியது. 1933 இல் SLLSS LSSSSS SSSSr L a a S GT T A S STZYTT பெயர் கொண்ட நாடக சவிட கொழும்பில் அமைந்தது.
இச் சபைகளில் ஆங்கிலம் கற்ற மத்தியதர வகுப்பினரே பெரும்பங்கு கொண்டனர். 1913 ஜ"ஃபில் கொழும்பில் ஸ்தாபிக்கப்பட்ட வங்கா கடோத சடைக்குத் தஃவராயி ருந்தவர் பிரபல அப்புக்காத்தும் சட்டச ை அங்கத்திருை மான சேர் அம்பலவாணர் கனகசபை ஆவர். உபதலைவர் கோபாலசிங்கமும் இத்தகைய தகுதிகள் வாய்ந்தவரே. காரி தரிசியான ஏ. தாமசிங்கம் அப்புக்காத்தாக இருந்தனர். தஞதிகாரி நேஷனல் வங்கிச் சிருப்பராவர். இத் தகவல்களி விருந்து நாடக உலகில் மத்தியதர வர்ச்சி த்தினரின் வருகை துல்லியமாகப் புலகுகின்றது.
இம் மத்திமதி: வகுப்பினரின் வருகையுடன் அவர் களின் இரசனேக்கும், ஒப்பி நேரத்திற்கும், கல்வித் தரத்திற்கும் ஏற்ப புதிய நாடக மரபு உருளாயிற்று. பாடல்கள் குறைந்து வசனம் பெருமிடத்தைப் பிடித்தது. நாடகம் இதுக்கமா ? ஒரு வடிவத்தைப் பேரணி" யிற்று. நாடக இலக்கியம் என்ற பேச்சும் எழற்று. ஆங்கில நாடகப் பண்டாளேக் தமி ழுக்கு அறிமுகம் செய்யும் மதிங்க சூளாமணி, விபுலானந்த அடிகளால் வாயூரப்பட்டு இக் காலகட்டத்தில் (1926 இல்) மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்டது.
இந் நவீன நாடக ரே பில் கலையரசு சோர்: விங்கம் முக்கிய இடம் பெறுகிருர், கலேயரசு அவர்கள் இலங்கை நில் அக் காலத்திற் பெருமதிப்புப் பெற் றிருந்த ஆங்கி வி நாடகக் கேட் ாடுகளுக்கியைய குறைந்தி நேரத்தில் பொருத்தமான அரங்க அமைப்பும் விே' புனேவும், நடிப் புத் துரிதமும் கொண்ட நாடகங்களே மேடையேற்றிஒர்.
雪9

Page 47
வளர்த்து வந்த நகர்ப்புற மக்களுக்கு இத்தகைய நாட கங்கள் சிறந்த பொழுதுபோக்காயின. ஃபரசின் நாட கங்கள் அதிகமாகக் கொழும்பு நகரிலேயே மேடையேறின என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நிலமானிய அமைப்பு முற்றுகச் சிதையாமல் இருந்தமைபினுல் கூத்துக்களின் செல் வாக்கினின்றும் நவீன நாடகம் தன்னை முற்ருக விடுவித்துக் கொள்ள முடியால் இருந்தது. உருவத்தைப் பொறுத்த வரை சிறிது மாறுபாடிருப்பினும் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை இந் நவீன நாடாங்கள் பழைய புராண இதி காரக் கதைகளேயே கொண்டனவாகவும், ஆங்கில - சமஸ் கிருத மொழிபெயர்ப்புகளாகவும் இருந்தன. சேக்ஸ்பியரின் செல்வாக்கினே இக்காலத்தெழுந்த பல நாடகங்களிற் கண்டு கொள்ள முடிகின்றது.
இக்காவத்தெழுந்த கதிர்கார் கனகசபையின் நற்குண னில் (1927) ஆங்கில நாடக முறையைத் தழுவி Blank Were இனே ஒத்த அகல் பாப்பில் நாடக பாத்திரங்களின் உரை பாடல் அமைந்துள்ளது. ஆங்கில நாடக ரேடைப் பின் பற்றி தமிழில் தான் செய்த முயற்சியே இர என நூலின் ஆசிரியர் குறிப்பீட்டுள்ளார். ஆத்தில் ச்ேபி வடிவில் வந்த முதற் கவிதை நாடகம் இது என்டர். பேராசிரியர் சுந்தரம் பின்ஃளயின் மனுேன் மணியம் போன்று இது நடிப்பதற்கன்றி படிப்பதற்கே புகந்தது. ஆங்கில சமஸ்கிருத நாடக முறைக ஃப் பின்பற்றி எழுத்த இப் புதிய மரபு நாடகங்களுக்கு உதாரன (ாகப் பிரான்ஸ் கிங்ஸ்பெசியின் சந்திரகாசம் (1940) ஜேன் பணியம் (1911) பென்,ெ புத்த ஆ. இராம விங்கத்தின் அசோகமாலா (1743) பேராசிரியர் கணபதிப் பின்னேயின் மாணிக்கமாஃ (1913) ஆகியவற்றைக் கூறலாம்.
கிறித்தவ மதத்திற்கு எதிராக எழுந்த இந்துசமய மது மலர்ச்சியின் பரபில் எந்த டிந்தனர் பின் நாடகத்தைத் தம் கொள்கை ரப்பும் நாடாகவும் கொண்டனர். கிறித் பும் சிதைப்பதாகக் கருதிய இவர்கள் அப் பாரம்பரியத்தை
8{)
 

மீண்டும் நிஃநாட்டக் கருதி நாடகத்தில் அறநெறிப் பண்பு கஃனப் போதித்தனர். க. சிதம்பரதாதனின் சாவித்திரிதேவி சரிதம் (1917), க. இராமலிங்கத்தின் நமசிவாயம் அல்லது நான் யார் (1929), சோமசுந்தரப் புலவரின் உயிரிளங்குமரன் (1986), சு. செல்வநாயகத்தின் சாமளா அல்லது இன்பத்தில் துன்பம் (1937) சாரா எழுதிய சத்தியேஸ்வரி (1938) என்ப வற்றை இந் நாடகங்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.
ஐரோப்பிய, வடமொழி நாடக மரபையொட்டி எழுதப் பட்ட மேற்குறிப்பிட்ட நாடகங்களில் பெரும்பாலானவை வடமொழி மரபைப் பின்பற்றித் தலைமைப் பாத்திரங்களும் உயர்வான பாத்திரங்களும் செந்தமிழ் நடையில் உரையாடு வதாகவும் வேலேக்காரன் போன்ற சமூக மதிப்பற்ற பாத்திரங் கள் பேச்சுத்தமிழைக் கையாள்வதாகவும் சிருஷ்டிக்கப்பட்டு ள்ளன. இக் காலகட்டத்தில் பேச்சுத் தமிழ் நகைச்சுவைக்கே பயன்படுத்தப்பட்டது. எனினும் பேச்சுமொழி நாடகத்தில் இடம்பெறத் தொடங்கியமை ஒரு சிறப்பு அம்சமே. படி முறை வளர்ச்சிப் போக்கில் பார்க்கையில், ஆரம்பத்தில் பாடல் வடிவில் அமைந்த கூத்து முறையில் இருந்து விலகி வசன அமைப்பில் உருவாகிய நவீன நாடக மரபு, பேச்சு மொழியினேத் தன்னுட் சேர்த்துக் கொள்ளும் பண்பினேக் காண்கின்ருேம். சமூக அரசியல் வளர்ச்சி காரணமாக சாதாரண மனிதர்கள் சமூகத்தில் முக்கியத்துவம் பெற அவர்கள் நாடகத்திலும் இடம் பெறத் தொடங்கினர். நாடகத்தில் இடம்பெறும் சகல பாத்திரங்களும் பேச்சு மொழியிலேயே பேசுவதஃன நவீன நாடக வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற் காணுகிறுேம்.
2
ஆங்கிலக் கல்வி சிருட்டித்துவிட்ட மத்தியதர வர்க்கத் தின் ஒரு பிரிவினர் மேனுட்டு மொழிபெயர்ப்பு நாடகங்களே யும் புரான இதிகாசக் கதைகளேயும் கையாண்டு நாடகத் தைப் பொழுதுபோக்குச் சாதனமாகக் கொள்ள இன்னுெரு
Flo. Il S1

Page 48
பிரிவினர் ஈழத்துத் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் எண் ணங்களையும் பிரதிபலிக்கும் மண்வளம் ததும்பிய சமூகநாட கங்களே நாடக உலகுக்கு அளித்தனர். இவர்களே ஈழத் தமிழ் நாடக உலகில் இயற் பண்பு வாய்ந்த நாடக நெறி ஒன்றினை உருவாக்கினர். இவர்கள் கையில் நாடகம் வெறும் பொழுதுபோக்குச் சாதனமாகவன்றி சமூகமாற்றச் சாதன மாயிற்று. இப் போக்கின் முன்னேடி பேராசிரியர் கணப திப்பிள்ளை ஆவார். அவருடைய நாடகங்கள் 1936 முதல் மேடையேற்றப்பட்டன. இலங்கைப் பல்கலைக்கழகம் பேரா சிரியர் நாடகங்களுக்குக் களமாக அமைந்தது. பல்கலைக்கழ கத்தில் பயின்ற மாணவரும் மாணவியரும் பேராசிரியர் நாடகங்களில் நடித்தமை குறிப்பிடத்தக்கது.
ப்ேராசிரியரின் நாடகங்கள் பெரும்பாலும் சமூகப்பண் புடையனவாகக் காணப்பட்டன. யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்துக் குடும்ப, சமூகப் பிரச்சினைகளை பேராசிரியர் கண பதிப்பிள்ளை தமது நாடகங்களிற் கொணர்ந்தார். சரிந்து கொண்டு வந்த நிலமானிய உறவுகளையும் நகர வாழ்க்கை மனித உறவுகளைப் பாதிக்கும் விதத்தினையும் இவரது நாட கங்கள் எடுத்துக்காட்டின. ஈழத்துத் தமிழ் நாடக உலகில் முதன் முதலாக ஈழத்துக் கதா பாத்திரங்கள் - சிறப்பாக யாழ்ப்பாணத்துக் கதா பாத்திரங்கள் உலவத் தொடங்கின. பேராசிரியர் கணபதிப்பிள்ளையவர்கள் மொழியியல் துறை யில் விற்பன்னராய் இருந்தமையினுல் போலும் முன்னைய நாடக ஆசிரியர் போலன்றி பிரக்ஞை பூர்வமாகப் பேச்சு மொழியினைக் கையாண்டார். இவர் நாடகங்களிற் தோன் றிய பாத்திரங்கள் அன்ருடம் தாம் பேசும் மொழியிலேயே பேசின. தமது நாடக முன்னுரையில் பேராசிரியர் இது பற் றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
" . . நாடகம் என்பது உலக இயல்பை உள்ளது உள்ளபடியே காட்டுவது. ஆகவே வீட்டிலும் வீதியிலும் பேகவது போலவே அரங்கிலும் ஆடுவோர் பேச வேண்
82

டும். இந் நான்கு நாடகத்திலும் வழங்கிய பாடை யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குப் பொதுவாகவும் பருத் தித்துறைப் பகுதிக்குச் சிறப்பாகவும் உள்ளது.'
உலக இயல்பை உள்ளது உள்ளபடி காட்டுவது என்ற அவர் கூற்றில் அவரது இயற்பண்பு வாத நெறிசார்ந்த போக்கும் புலப்படுகிறது. பிரச்சினைகளை இவை வெளிப் படுத்தினவே தவிர அதற்கான காரணங்களை ஆராய்ந்து வழிகாட்டவில்லை. எனவேதான் இவரை இயற்பண்பு நாடக நெறி ஆசிரியர் என்று விமர்சகர் கூறுவர்.
சுருங்கக் கூறின் கற்பன லோகத்தில் வாழ்ந்த நாடக உலகை நடப்பியல் உலகுக்கு இழுத்து வந்த பெருமை இவ ருக்கேயுண்டு. ஈழத்தில் மாத்திரமன்றி முழுமையாகத் தமிழ் நாடக உலகிலேயே இம்மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை யும் இவருக்கேயுண்டு, பேராசிரியரின் நாடகங்கள், நானட கம் (1930), இருநாடகம் (1952), மாணிக்கமாலை (1952), சங்கிலி (1953) என்ற பெயர்களில் நூலுருப் பெற்றன. இவற்றுள் மாணிக்கமாலை சமஸ்கிருத நாடகமான ரத்னவலி யின் தழுவல் நாடகமாகும். சங்கிலி சரித்திர நாடகமாகும்.
இவ்வண்ணம் நவீன நாடக மரபு கலையரசு வழியில் ஒரு மரபாகவும். பேராசிரியர் கணபதிப்பிள்ளை வழியில் இன்னெரு மரபாகவும் இரு கிளைப்பட்டு வளர்ந்தது.
1950களில், தமிழ் நாட்டில் அரசியல் ரீதியில் வளர்ச்சி யடைந்த திராவிடர் முன்னேற்றக் கழகம் இங்குள்ள இளை ஞர்களுக்கு ஆதர்சமாயிற்று. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் நூல்களும், ஏடுகளும் ஈழத்துக்கு இறக்குமதி யாயின. இவை ஈழத்து நாடக உலகிலும் தாக்கத்தை ஏற் படுத்தின.
திராவிட முன்னேற்றக் கழக நாடகங்கள் போலமைந்த ர்ேதிருத்தக் கருத்துகள் மலிந்த செயற்கைப் பாங்கான பல தமிழ் நாடகங்கள் இங்கு உருவாயின. நாட்டின் பல பாகங்
83

Page 49
களிலும் இத்தகைய நாடகங்கள் பெருவாரியாக மேடை யேறினும் நூலுருவம் பெற்றவை குறைவே. அப்பாஸ் எழு திய கள்ளத்தோணி (1960) அ. பொ. செல்லையா எழுதிய யார் கொலைகாரன் என்பன இதற்கு உதாரணங்களாகும். இத்தகைய நாடகங்களிற் தமிழ்ச் சினிமாவின் செல்வாக் கையே பெருமளவு காணமுடிகிறது. பெரும்பாலான தமிழ்ப் பிரதேசங்களில் இன்றும் இம்மரபு நின்று நிலைக்கிறது.
1956ஆம் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை யொட்டி தேசிய உணர்வும், தமது சொந்தப் பண்பாடு பற்றிய பிரக்ஞையும் ஈழத்தில் ஏற்பட்டது.
சுய பண்பாட்டுப் பிரக்ஞையின் வெளிப்பாடாகவே 1959 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த ஒரு தசாப்த காலம்வரை ஈழத்து நாடக உலகில் பாரம்பரியக் கூத்துக்களே பேணுகின்ற, அவற் றை நவீனப்படுத்துகின்ற தன்மைகளைக் காணுகின்ருேம்.
1957க்குப் பின்னர் அரசாங்க ஆதரவில் இயங்கிய கலைக் கழகத் தமிழ் நாடகக் குழு, பேராசிரியர் சு. வித்தியானந் தன், பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரின் வழிகாட் டலின் கீழ் செயற்படத் தொடங்கியது. கலைக் கழகத் தலை வராயிருந்த பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களின் முயற் சியினல் மரபு வழி நாடக வளர்ச்சியில் பாரிய பாதிப்பி னைக் கலைக் கழகத்தால் ஏற்படுத்த முடிந்தது. மரபு வழி நாடகங்கள் பலவற்றைக் கலைக் கழகத்தின் ஆதரவுடன் பேராசிரியர் வித்தியானந்தன் பதிப்பித்தார்.” மட்டக்களப்பு தென்மோடி நாடகமான அலங்கார ரூபன் (1962), என்றிக் எம்பரதோர் (1964), மூவிராசாக்கள் நாடகம் (1966), ஞான செளந்தரி (1967) ஆகியவை இவரால் பதிப்பிக்கப்பட்டன, பேராசிரியர் கா. சிவத்தம்பி பல்கலைக் கழக இந்து மாணவ மன்றத்தின் ஆதரவில் மார்க்கண்டேயன் (1961) வாளபீமன் (1963) ஆகிய நாடகங்களைப் பதிப்பித்தார்.
ஏட்டுருவில் இருந்த பழைய மரபு வழி நாடகங்கள் அச்சுருவில் வந்தமை ஈழத்து நாடக உலகில் குறிப்பிடத்
84

தக்க ஒரு அம்சமாகும். கலைக் கழகம் தானே நூல்களைப் பதிப்பித்ததுடன் பிரதேச கலாமன்றங்களையும் இப்பணியில் ஊக்குவித்தது. இதன் காரணமாக அனுருத்திர நாடகம் (1969) இராம நாடகம் (1969) எஸ்தாக்கியார் நாடகம் (1967) மரியதாசன் நாட்டுக் கூத்து (1972) தேவசகாயம் பிள்ளை நாட்டுக் கூத்து (1974) விஜய மனேகரன் (1968) போன்ற நாட்டுக் கூத்து நூல்கள் அச்சில் வந்தன. அச் சிடப்பட்டவற்றுள் பல, பழைமையானவை. சில, புதிதாக ஆசிரியர்களால் இயற்றப்பட்டவை. தவிர, கலைக் கழகம் அண்ணுவிமார் மகாநாடுகள் நடத்தியும், அண்ணுவிமாரைக் கெளரவித்தும், பாடசாலைகளுக்கிடையே நாட்டுக் கூத்துப் போட்டிகள் நடத்தியும் நாட்டுக் கூத்து உணர்வு மக்க ளிடம் வளரக் காலாயமைந்தது.
நாட்டுக் கூத்துக்களைப் பேணுகின்ற முயற்சி மாத்திர மன்றி அவற்றை நவீனப்படுத்தும் முயற்சியும் இதேகால கட் டத்தில் மேற்கொள்ளப்பட்டது. பேராதனைப் பல்கலைக் கழ கத்தில் சிங்களத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சரச்சந் திர போன்றேர் 1956 முதல் புகழ்பெற்ற மனமே, சிங்கபாகு போன்ற நவீனப்படுத்தப்பட்ட சிங்களக் கூத்துகளைத் தயா ரித்து மேடையேற்றினர். இதே பணியினை 1960 களிலே பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையைச் சார்ந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் செய்தார். 1962 தொடக்கம் 1968 வரை அவர் பல்கலைக் கழக மாணுக்க ரைக் கொண்டு மட்டக்களப்புக் கூத்துக்களை நவீனப்படுத்தி யளித்தார். யாழ்ப்பாண அண்ணுவி மரபு நாடகத்தைப் பிரபல்யப்படுத்தினர். கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன், வாலிவதை என்பன அவர் நவீனப்படுத்திய மட்டக்களப்புக் கூத்துக்களாகும். நவீன மேடை, ஒலி, ஒளி உத்திகளைக் கையாண்டு, கிராமங்களில் இரா முழுவதும் ஆடப்படும் கூத்துக்களின் கால அளவைச் சுருக்கி அவர் நகர்ப்புறப் பார்வையாளர்களும் இரசிக்கக்கூடியதாக்கினர். ஈழத் தமிழரின் மரபு வழி நாடக மரபு நகர்ப்புற மேடை, களில் நகர்ப்புற மாந்தரால் வரவேற்கப்பட்டது.
8s

Page 50
நாட்டுக் கூத்தினை வளர்த்த கலைக்கழகம் நவீன நாடக எழுத்துப் பிரதிகட்குச் சன்மானம் வழங்குவதன் மூலமும், அவற்றை அச்சிடுவதன் மூலமும் நவீன நாடகத் துறையை வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டது.
செரக்கனின் சிலம்பு பிறந்தது (1962), சிங்ககிரிக்காவ லன் (1963), முத்து சிவஞானத்தின் சேரன் சமாதி (1968) ஆகிய கலைக்கழகப் பரிசுபெற்ற நாடக நூல்களைக் கலை, கழகமே வெளியிட்டது. கலைக்கழகப் பரிசுபெற்ற ஏ. ரி. பொன்னுத்துரையின் நாடகம் என்னும் நாடகம் (1969), தேவனின் தென்னவன் பிரமராயன் (1963), முல்லைமணியின் பண்டாரவன்னியன் (1970), சண்முகசுந்தரத்தின் பூதத்தம்பி (1964) போன்ற நூல்கள் பின்னுளில் நூலுருவம் பெற்றன. கலைக்கழகப் பரிசுபெற்ற நாடகங்களில் பெரும்பாலானவை வரலாற்று நாடகங்களாகும். அத்தோடு சமய, இலக்கிய நாடகங்களும் இவற்றுட் காணப்பட்டன. இலக்கிய வர லாற்று நாடகங்கள் கலைக்கழகப் பரிசுபெற்று அச்சில் வந்த மையைத் தொடர்ந்து இதே தன்மை கொண்டதான பல நாடகங்கள் ஈழத் தமிழ் நாடக உலகில் எழ ஆரம்பித்தன. சண்முகசுந்தரத்தின் வாழ்வுபெற்ற வல்லி (1962), இறுதி மூச்சு (1965), சதா பூரீனிவாசனின் இலங்கை கொண்ட இராஜேந்திரன் (1960), சி. ந. தேவராஜனின் விஜயன் விஜயை திருமணம் (1965), கங்கேஸ்வரி கந்தையாவின் அரசன் ஆணையும் ஆடக சவுந்தரியும் (1965), செம்பியன் செல்வனின் மூன்று முழு நிலவுகள் (1965), கரவை கிழானின் தணியாத தாகம் (1968), மு. கனகராஜனின் கைமுனுவின் காதலி, எஸ், பொன்னுத்துரையின் வலை(1972) ஆகியவற்றை இப்போக்கிற்கு உதாரணங்களாகக் காட்டலாம்.
இவற்றுட் சில நாடகங்கள் இன உணர்வும் பழமைச் சிறப்பும் பேசின. சில நாடகங்கள் இன ஒற்றுமையை மறை முகமாகக் கூறின. சில இந்திய சரித்திர நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்டன.
86

இக்கால கட்டத்தில் முன்னணியில் நின்ற நாடக ஆசிரி யர்களாக தேவன். சொக்கன், ஏ. ரி, பொன்னுத்துரை ஆகியோரைக் குறிப்பிடலாம். -
1956 இன்பின் இலங்கைத் தமிழரிடையே தோன்றிய இன உணர்வும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடகத் துறைச் செல்வாக்கும் இத்தகைய நாடகங்கள் பெருவாரி யாக எழக் காரணங்களாயின. புனைகதைகளிலும் பார்க்? நாடகம்மூலம் மொழி அபிமானத்தை எடுத்துணர்த்துவது சுல பமாகும். எனவேதான் மொழி அபிமானமும், இன உணர் வும் தமிழர் மத்தியில் அரசியல் வடிவம் பெற்ற காலத் தில் இத்தகைய பல நாடகங்கள் தோன்றத் தொடங்கின.
தம்மை எதிர் நோக்கிய சமூக மாறுதல்களையும் பிரச் சினைகளையும் எதிர்கொண்டு போராடி வெல்ல முடியாத தமிழர் சமூகம் தன்னுடைய பழமைக்குள் நிம்மதி தேடியது. சென்ற காலம் இனி மீளாதா? என்று பழைய காலத்தை இந்நாடகங்களிற் சில மீண்டும் நினைவு கூர்ந்தன. பண் டைய மன்னர்களைத் தமிழ் உணர்வு பெற்றவர்களாகச் சித்திரித்துத் தமிழ் மக்களிடை தமிழ் உணர்வு ஊட்ட முயற்சித்தன. இத்தகைய நாடகங்கள் உருவ அமைப்பில் தமக்கு முன்னுேடியாக விளங்கிய கலையரசு சொர்ணலிங் கத்தின் நாடக மரபினையே பின்பற்றின. நவீன நாடக அரங்கு பற்றிய சிந்தனை இவற்றில் காணப்படவில்லை என் பது மனம் கொள்ளத் தக்கது.
இயற்பண்பு சார்ந்த நாடக நெறி பேராசிரியர் கண பதிப்பிள்ளைக்குப் பின் இரு கிளைப்பட்டு வளர்ந்தது. ஒரு பிரிவினர் பேராசிரியர் கையாண்ட யாழ்ப்பாணத் தமிழை வைத்து முழுக்க முழுக்க நகைச்சுவை, கிண்டல் நாடகங்க ளைத் தயாரித்தனர். நூலுருவம் பெற்ற அசட்டு மாப்பிளே இதற்கு உதாரணமாகும். இது தவிர புரோக்கர் கந்தையா? பார்வதி பரமசிவன், கலாட்டா காதல், ஆச்சிக்குச் சொல் லாதே, லண்டன் கந்தையா, புளுகர் பொன்னையா ஆகியவை யும் இத்தகைய நாடகங்களுக்கு எடுத்துக் காட்டுக்களாகும்.
87

Page 51
வரலாற்று, சமய, இதிகாச புராண நாடகங்களும் இத்தகைய நகைச்சுவை நாடகங்களுமே இன்று தமிழ் மக்க ளிடையே ஜனரஞ்சகப் படுத்தப்பட்டுள்ளன. வரலாற்றுப் புராண நாடகங்களை விட இந் நகைச்சுவை நாடகங்களில் கையாளப்படும் மொழி பார்ப்போரிடையேயும் ஒர் அன்னி யோன்ய உறவை ஏற்படுத்துகிறது. நடிகர்கள் சொல்ல ரசிகர்கள் சிரிப்பதே இதன் பயன்பாடாகும். பார்ப்போரை வாய்விட்டுச் சிரிக்கப்பண்ணுவதே இவற்றின் நோக்கமாகும்" ஒருவகையில் இவை நாடகங்களே அல்ல. நாடக எழுத்துப் பிரதி, மேடை ஒழுங்கு, பாத்திர வார்ப்பு என்பன எவையு மின்றி சம்பாஷணையை மாத்திரமே கொண்டுள்ள இத் தகைய நாடகங்களே இன்று பெரும்பாலான தமிழ் மக்க ளால் நாடகம் என்று ஏற்கவும்படுகின்றன.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை அறிமுகம் செய்த பேச்சுத் தமிழையும், இயற்பண்பு நாடக நெறியையும் நன்கு புரிந்து கொண்டு நாடக நிலை நோக்குடனும், பிரக்ஞையுடனும் ஈழத் தில் தமிழ் நாடகத்தை வளர்த்தவர்கள் பல்கலைக்கழகத்தின ரும் பல்கலைக்கழக வழிவந்தோருமே. அதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பும் வசதியும் அவர்களுக்கிருந்தன.
அ. முத்துலிங்கத்தின் சுவர்கள், பிரிவுப்பாதை, சொக்க னின் இரட்டை வேஷம், அ. ந. கந்தசாமியின் மதமாற்றம் என்பன பேராசிரியர் மரபில் பல்கலைக்கழகம் மேடையேற் றிய நாடகங்களாகும். இவற்றுள் அ. ந. கந்தசாமியின் மத மாற்றம் குறிப்பிடத்தக்கது.
இவ்வியற்பண்பு நாடகங்கள் பேராசிரியரின் நாடகங் கள் போன்று மத்தியதர வர்க்கத்து மக்களைக் கதாபாத்தி ரங்களாகக் கொண்டன. அவர்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளை யும் போராட்டங்களையும் அவர்கள் மொழிமில் உரையாடின.
ஆரம்பத்தில் மத்தியதர வர்க்கத்தினரையும் அவர்தம் பிரச்சினைகளையும் எடுத்துக் காட்டிய இவ்வியற்பண்பு நாடக நெறி சமூக வளர்ச்சிப் போக்கினுலும் அரசியல் பொருளா
88

தார மாற்றங்களினலும் தொழிலாளர்களையும் அடிமட்டத் தில் வாழ்ந்த மக்களையும் அவர்தம் பிரச்சினைகளையும் பிதிர பலிக்கும் வகையில் பரிணமித்தது. 1969, 70 களிலே சமகால அரசியல் சமூகப் பிரச்சினைகளைக் கூறும் பண்புடைய நாட கப் போக்கு உருவாகியது. ஈழத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும் இடதுசாரிச் சிந்தனை வளர்ச்சியுமே இப் போக்கினை உருவாக்கின. தொழிலாளர் தலைமை தாங்கும் சமூக மாற்றம் ஒன்றினலேயே சமகால வாழ்க்கைப் பிரச் சினைகள் தீர்க்கப்பட முடியும் என்பதை இந் நாடகங்கள் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் வற்புறுத்தின. 1960 ஆம் ஆண்டுகளில் புனைகதைத் துறையில் இடம்பெற்ற இப் பண்பு 1970 களிலே தான் நாடகத் துறையில் இடம்பெற லாயிற்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இ. சிவானந்தனின் விடிவை நோக்கி, காலம் சிவக்கிறது ஆகிய நாடகங்களும், நா. சுந்தரலிங்கத்தின் விழிப்பும் மாத்தளைக் கார்த்திகேசுவின் போராட்டங்களும் இதற்கு உதாரணங்களாகும். 1.
இ. சிவானந்தனின் விடிவை நோக்கி என்ற நாடகம் தொழிலாள வர்க்கப் பெண்ணுெருத்தி டொக்டராக வந்து தன் வர்க்க நிலையினின்று மாறுபட்டுச் செல்வதைச் சித்தி ரிக்கிறது. அவரது காலம் சிவக்கிறது என்ற நாடகம் தமிழ், சிங்களத் தொழிலாளர்கள் அனைவரும் தம்மைச் சுரண்டும் முதலாளிக்கு எதிராகத் திரள்வதைச் சித்தரிக்கிறது. நா. சுந்தரலிங்கத்தின் விழிப்பு வேலையில்லாப் பிரச்சினையால் தவிக்கின்ற இளைஞர், தொழிலாளர் நடத்தும் சமூக விடு தலைப் போரில் தம் விடுதலையும் இணைந்துள்ளது என்பதை உணர்வதைக் காட்டுகிறது. மாத்தளைக் கார்த்திகேசுவின் போராட்டங்கள் தமிழ் சிங்கள தொழிலாளர் தோட்ட முத லாளிக்கு எதிராகச் செங்கொடியின் கீழ் அணிதிரள்வதைச் சித்திரிக்கிறது.
இத்தகைய பண்பு கொண்ட சிறு நாடகங்களை இக் காலகட்டத்தில் மேடையேற்றிய மாவை நித்தியானந்தன், தில்லைக்கூத்தன் ஆகியோரும் இங்கு குறிப்பிடத்தக்கவர்கள்.
Fሾ• 2 89

Page 52
அரசியல் ரீதியில் தீர்வு காட்டாது விடினும் சமக்ாலப் பிரச்சினைகளைக் காட்டிய நாடகங்களாக இக் காலகட்டத்தில் மேடையேறிய கலைச் செல்வனின் சிறுக்கியும் பொறுக்கியும், பெளசுல் அமீரின் தோட்டத்து ராணி ஆகிய நாடகங்களைக் குறிப்பிடலாம்.
சமகால சமூக அரசியற் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் இப்பண்பு மரபு வழி நாடகங்களிலும் இக்கால கட்டத்தில் இடம்பெறுவதைக் காணுகின்றேம். இப் பண்பினை மரபு வழி நாடகத்தில் புகுத்தியவர் சி. மெளனகுரு ஆவர். இவ ரது சங்காரம் பழைய கூத்து வடிவத்திற் சமகாலப் பிரச் சினையைப் பிரதிபலிக்கின்றது. காலம் காலமாகச் சமூகப் பிரி வுகளினலும், ஏற்றத்தாழ்வுகளினலும் பிளவுபட்டுக்கிடந்த சமூகத்தை பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு விடுதலை செய்வதே சங்காரத்தின் உள்ளடக்கமாகும். மட்டகளப்புக் கூத்து மரபு சங்காரத்தினுல் புதிய பரிமாணம்பெற்றது என்பர். அண்மையில், எம். ஏ. நுஃமானின் நெடுங்கவிதை ஒன்றை அடிப்படையாகக் கொண்ட மெளனகுரு தயாரித்து மேடையேற்றிய அதிமானிடன் பலரது பாராட்டுதல்களை யும் பெற்றது. மரபுவழி ஆட்டமுறைகளையும், அபிநயங்களை யும் பயன்படுத்தி மனிதகுல வளர்ச்சிக் கட்டங்களையும் இன் றைய அதன் போராட்டத்தையும் இந் நாடகம் சித்திரித்தது"
தாழ்த்தப்பட்ட மக்களின் கோயிற் பிரவேசத்தை அடிப் படையாகக் கொண்டு காத்தான் கூத்து பாணியில் நெல்லி யடி அம்பலத்தடிகள் கந்தன் கருணையை மேடையேற்றினர். இவ்வண்ணம் சமகாலப் பிரச்சினைகள் 1970 களில் மரபுவழி நாடகங்களிலும் இடம்பெறலாயின.
c
ஈழத்துத் தமிழ் நாடகத்தில் சமகால அரசியற் பிரச்சினை கள் இடம்பெறத் தொடங்கிய இக்கால கட்டத்திலேதான் நாடகத்தின் உருவம் பற்றிய சிந்தனையும் நாடக எமுத்தா ளர்களிடமும், தயாரிப்பாளர்களிடம் உருவாவதைக் காணு
90

கின்ருேம். சிங்கள நாடக வளர்ச்சியினதும், உலக நாடகப் பரப்பினதும், மரபுவழி நாடக மரபினதும் தாக்கம் பெற்ற இவர்கள் புதுப்பாணி நாடக உரு ஒன்றினை ஈழத் தமிழ் நாடக உலகுக்கு அளிக்கின்ருர்கள். ஈழத்துத் தமிழ் நாடக R-6v6điv 56 GOT 15IITL-is 9 Tšig (Modern theatre) luib nuLi பிரக்ஞை வலுவாக வளர்ச்சியடையத் தொடங்கியது.
1970 களிலே தமிழ் நாடக உலகின் பிரதான பண்பாகக் காணப்பட்ட சமகால சமூக அரசியற் பிரச்சினைகளே இக் காலத்தெழுந்த பெரும்பாலான புதுப்பாணி நாடகங்களின் உள்ளடக்கமாகவும் அமைந்தன. இத்தகைய புதுப்பாணி நாடக நெறியின் முன்னேடியாக நா. சுந்தரலிங்கத்தைக் குறிப்பிடலாம். இவர் 1971 மார்ச்சில் முருகையனின் "கடு ழியம்’ என்ற நாடகத்தை மேடையேற்றினர். கடூழியம் உலகளாவிய தொழிலாளர் பிரச்சினையையும் அவர்களின் விடுதலேயையும் கருவாகக் கொண்டது. இவரது அபகரம் அநர்த்த (absurd) நாடகத்தின் பாற்பட்டது. நா. சுந்தர லிங்கத்தின் பங்கு ஈழத்து நாடக உலகிற் குறிப்பிடத்தக்கது.
இவரைத் தொடர்ந்து அ. தாசீசியஸ், புதியதொரு வீடு, கோடை, காலம் சிவக்கிறது, பிச்சை வேண்டாம், கந்தன் கருணை ஆகியவற்றை புதுப்பாணியில் தயாரித்தார். இதே காலப் பகுதியில் சுஹைர் ஹமீட் தயாரித்த ஏணிப் படிகள் , பிள்ளைப் பெத்த ராசா ஒரு நாயை வளர்த்தார், வேதாளம் சொன்ன கதை, ரவி, பொம்மலாட்டம், நகரத்துக் கோமாளி கள் முதலியவையும், க. பாலேந்திராவின் தயாரிப்பான நட் சத்திரவாசி, மழை, பசி, சண்ணுடி வார்ப்புகள், புதிய உல கம் பழைய இருவர் ஆகிய நாடகங்களும், மெளனகுரு வின் அதி மானிடன், தலைவர் ஆகியவையும் ஈழத்தில் நவீன நாடக அரங்க வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள் ளன. 1975, 1978 ஆம் ஆண்டுகளிலே கலாசாரப் பேரவை நடத்திய தமிழ் நாடகப் போட்டியில் பரிசு பெற்ற தமிழ் நாடகங்கள் புதுப்பாணியிலேயே அமைந்திருந்தன. இது
91

Page 53
நகர்ப்புற நாடக உலகில் இக்கால சட்டத்தில் இந்நாடக நெறி பெற்று வந்த செல்வாக்கினேக் காட்டுகின்றது.
1970 களிலே நாடக உருவ அமைப்பு பற்றிய பிரக்ஞை ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறந்த பல நாடகங்கள் அயல் மொழிகளினின்று மொழிபெயர்க்கப்பட்டு மேடையேற்றப் படும் ஒரு போக்கும் உருவாகின்றது.
ஈழத்தமிழ் நாடக உலகில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் முன்பும் நடைபெற்றுள்ளன. நவாலியூர் நடராஜன் வட மொழியிலிருந்து காளிதாசனின் சாகுந்தலத்தை (1982)யும், மிருச்ச கடிகத்தை பொம்மை வண்டி (1984) என்ற பெயரி லும் மொழிபெயர்த்தார். இ. இரத்தினம் சோபோக் கிளி சின் ஈடிப்பசை ஈடிப்பஸ் மன்னன் (1989) என்ற பெயரில் மொழி பெயர்த்தார். இவை மேடைக்காக அன்றி வாசிப் புக்காகவே செய்யப்பட்டன.
எனினும் உணர்வு பூர்வமாகவும், நாடக உருவ அமைப்பு பற்றிக் காத்திரமான சிந்தனேயுடனும் பிறமொழியின் சிறந்த நாடகங்களேத் தமிழில் தழுவியும் மொழி பெயர்த்தும் மேடை ஏற்றும் போக்கினே t களிலும் குறிப்பாக 1970 களிலும் காணுகிருேம். இப்iனின் Dat HouBப் பெண்பாவை என்ற பெயரிலும், மாக்னிம் கோர்க்கிபிள் LWe Depth3 நகரத்துக் கோமாளிகள் என்று பெயரிலும், அன்ரன் சோவின் The Pet கரடி என்ற பெயரிலும் , ஜே.எம். விஞ்ச் எழுதிய Rider; to the Sca LGir - g * Tcl, ri என்ற பெயரிலும், எல்மா றைசின் The Adding M:1ii பொம்மiாட்டம் என்றபெயரி ஒதும்தழுவலாக்கம் பெற்று மேடையேறின. அலெக்ளி lyril சோவின் 11 Happell In 17:15k என்றும் நாடகம் ஞானம் லம்பேட்டினுல் 1970 இல் பிச்சை வேண்டாம் என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டது. நிர்மலா நித்தியா னந்தன் இந்த நாடக ஆசிரியரின் 01i World என்ற நாடகத்தை புதிய உலகம் பழைய இருவர் என்ற பெயரி லும், ரென்னஸி வில்லியத்தின் Gla88 Menageri என்ற நாட

சத்தை கண்ணுடி வார்ப்புகள் என்ற பெயரிலும் மொழி பெயர்த்தார். இந்நாடகங்கள் மிக வெற்றிகரமாக மேடை யேற்றப்பட்டமை நவீன ஈழத்துத் தமிழ் நாடக மரபு உலக நாடக மரபுடன் சங்கமிப்பதையே காட்டுகின்றது.
A.
ஈழத்துக் கவிதை நாடகங்கள் பற்றியும் இங்கு குறிப் பிட வேண்டும். கவிதை நாடகம் என்ற பதப்பிரயோகம் பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. சிலர் கவிதை நாட கத்தைக் கவிதை வகைகளுள் ஒன்ருகக் கருதுவர். செய்யுள் நடையில் அமைந்துள்ளமையாலேயே இவ்வாறு கருதுகின் றனர் போலும். இதனுல் கவிதை, நாடகம் ஆகிய இலக் கிய வடிவங்கள் பற்றிக் கருத்துக் குழப்பம் ஏற்பட வழி புண்டு. செய்யுள் நடையில் அமைந்திருப்பினும் இவை நாடகங்களே. இவற்றைச் செய்யுள் நாடகம் அல்லது பா நாடகம் என்று அழைப்பதன் மூலம் இக்குழப்பத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
1950ஆம் ஆண்டுகளின் பின் அரைவாசியில் இருந்தே இங்கு பா நாடகங்கள் கணிசமான அளவில் தோன்றத் தொடங்கின. இலங்கையில் முதலாவது பா நாடகமாக அதிர்காமர் கனகசபையின் நற்குணனேச் சொல்வர். ஆரம்ப காலப் பா நாடகங்கள் பெரும்பாலும் நடிப்பதற்கள் நிப் படிப்பதற்கே எழுதப்பட்டன. மஹாகவி முருகையன் ஆகி யோரே இத்துறையில் அதிகம் உழைத்தவர்களாவர். மகா கவியின் அடிக்கரும்பு, சேறுபதி. திருவிழா ஆகியனவும், முருகையனின் தரிசனம் வந்து சேர்ந்தன போன்றவையும் வாணுெவியில் ஒலிபரப்பப்பட்டன.
0ேஆம் ஆண்டுகளில் மேடைப் பா நாடகங்கள் பல எழுந்தன. நீலாவணனின் மழைக்கை, மஹாகவியின் புதிய தொரு வீடு, கோடை முருகையனின் கடூழியம், கோபுர வாசல், அம்பியின் வேதாளம் சொன்ன கதை முதலியன
93

Page 54
இக்காலப் பகுதியில் மேடையேறின. இலங்கையில் தோன் றிய பா நாடகங்களைப் பொதுவாக மூன்று வகைக்குள் அடக்கலாம். ஒன்று பழந்தமிழ் இலக்கியச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டவை. இரண்டு நடைமுறைச் சமூக வாழ்வை அடிப்படையாகக் கொண்ட யதார்த்தப் போக்கானவை. மூன்று குறியீட்டுப் பாங்கானவை. வந்து சேர்ந்தன, கோபுரவாசல், மழைக்கை போன்றவை முதல் வகையின. கோடை, புதியதொரு வீடு, போன்றவை இரண் டாம் வகையின. கடூழியம் மூன்ரும் வகையைச் சேர்ந்தது. அண்மையில் பா. சத்தியசீலனின் பாட்டுக் கூத்து என்ற சிறுவர்க்கான பா நாடக நூல் ஒன்றும் வெளிவந்துள்ளது.
ஈழத்து வானெலி நாடகங்களையும் இங்கு குறிப்பிடுதல் அவசியம். வானெலி நாடகங்களிற் பெரும்பாலானவை நூலுருப் பெறவில்லை. இலங்கையர்கோனின் மிஸ்டர் குக தாசனும் (1957) மாதவிமடந்தையும் (1958) முருகையனின் தரிசனமும், எஸ். பி. கே. யின் பொற்கிழியும் நூலுருப் பெற்ற வானெலி நாடகங்களாகும். பொதுவான ஈழத்து நாடகப் போக்கிற்கு வானெலியும் விதிவிலக்கில்லை. வானெலி ஒரு வெகுஜனத் தொடர்புச் சாதனமானமையினலும் அரச கட்டுப்பாட்டுக்குட்பட்ட நிறுவனமான மையினுலும் சில எல்லைகளை மீறி நாடகம் போட அதனுல் முடியவில்லை. எனினும் இடையிடையே சில நல்ல நாடகங்களையும் வானெலி அளிக்காமலில்லை. சிவபாதசுந்தரம், சாஞ), வாசகர் போன் ருேர் வானெலி நாடகத் துறையில் உழைத்தவர்கள். வாச கர் வசனம் எழுதிய தணியாத தாகம் வானெலி விசிறிக ளின் பாராட்டுதலைப் பெற்றது. முன்னையவர்களை விட வானெலி நாடக வளர்ச்சிக்கு வாசகர் அளித்த பங்கு குறிப் பிடத்தக்கது. இயல்பான பேச்சு மொழியினை ஜனரஞ்சகப் படுத்தியமையை வானுெவி நாடகங்களின் முக்கிய பணியா கக் குறிப்பிடலாம்.
பத்திரிகைகளும் அவ்வப்போது சில நாடகங்களை வெளி யிட்டுள்ளன. குறிப்பாக 1967ஆம் ஆண்டிலே தினகரன்
94.

பத்திரிகை நாடக விழா ஒன்றினை அகில இலங்கை ரீதியிலே நடத்தியது. ஈழநாடு பத்திரிகை ஓரங்க நாடகப் போட்டி ஒன்றினை நடத்தி முதன்மை பெற்ற நாடகங்களை விடிய இன்னும் நேரமிருக்கு (1971) என்ற தொகுதியாக வெளி யிட்டது. ஈழகேசரி, வீரகேசரி முதலிய பத்திரிகைகளும், அஞ்சலி, கலைச்செல்வி முதலிய சஞ்சிகைகளும் ஒரங்க நாட கங்களை வெளியிட்டன. மல்லிகை நாடக விமர்சனங்களை வெளியிட்டது. இவ்வகையில் பத்திரிகை வானெலி ஆகிய வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் 20ம் நூற்றண்டின் பிற்பகுதியில் ஈழத்தமிழ் நாடக வளர்ச்சிக்குத் தொண் டாற்றின.
இவற்றைவிட ஈழத்து நாடக துறையில் ஈடுபட்டவர் கள் சிலர் தமது நாடக அனுபவங்களையும், விபரங்களையும் நூலாக வெளியிட்டுள்ளனர். கலையரசு சொர்ணலிங்கத்தின் ஈழத்தில் நாடகமும் நானும், ஏ. ரி. பொன்னுத்துரையின் வெள்ளிவிழா மலர் ஆகியன இதற்கு உதாரணங்களாகும். 1917 தொடக்கம் 1973 வரை ஈழத்தில் வெளிவந்த நாடக நூல்களை ஆராய்ந்து முதுகலைமாணிப்பட்டம் பெற்ற சொக் கனின் ஆய்வுக் கட்டுரை விரிவாக எழுதப்பட்டு 1977 இல் ஈழத்துத் தமிழ் நாடக இலக்கியவளர்ச்சி என்ற பெயரில் வெளிவந்துள்ளது. ஈழத் தமிழ் நாடக நூல் விபரங்களை அறிய விரும்புவோர்க்கு இது சிறந்த வழிகாட்டியாகும்.
நூல் முயற்சிகளை விட ஈழத்தமிழ் நாடக ஆராய்ச்சி,
நாடக விமர்சனம், நாடகக் கணக்கெடுப்பு ஆகியனவும் ஓரளவு வளர்ச்சிபெற்று வருகின்றன. பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் க. கைலாசபதி, சி. மெளனகுரு, கே. எஸ். சிவகுமாரன். சொக்கன், இ. சிவானந்தன் போன்றேர் இத்துறையிலீடு பட்டு உழைத்து வருகின்றனர்.
95

Page 55
இதுவரை நோக்கியதில் இருந்து, ஈழத்தில் மரபுவழி நாடகம் அல்லது நாட்டுக் கூத்து மரபும், பேசி நடிக்கும் நவீன நாடகமும் சமாந்தரமாக வளர்ச்சியடைந்து வந்திருப் பதைக் காணலாம். இவ்விரு நாடக நெறிகளும் 1960களின் பிற்பகுதியில் இருந்து சர்வதேச நவீன நாடக அரங்க நெறிகளுக்கு ஏற்ப தம்மை இயைபுபடுத்திக் கொண்டுள்ளன என்பதையும் காணலாம். ஆயினும் ஈழத்துத் தமிழ் நாடக இலக்கியம் இன்னும் எவ்வளவோ வேளர்ச்சியடைய வேண்டி உள்ளது. நவீன நாடக அரங்கு பற்றிய சிந்தனை வளர்ச்சி பெற்ற விகிதத்தில் நாடக எழுத்து இங்கு வளர்ச்சி பெற வில்லை. அதனலேயே சமீப காலத்தில் மொழிபெயர்ப்பு நாடகங்களும், இந்திரா பார்த்தசாரதி, தருமுசிவராமு போன்றவர்களின் அபத்த நாடகங்களும் இங்கு மேடை யேற்றப்பட்டன. இது எவ்வாறெனினும் சினிமாவினதும் சபாக்களினதும் இறுக்கமான பிடியில் இருந்து விடுபடத் தவிக்கும் தமிழக நாடக அரங்கைவிட ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு வெகுதூரம் முன்னேறி உள்ளது எனலாம். சிங்கள நாடக அரங்கச் செல்வாக்கு இதற்கு ஒரு முக்கிய காரணியாகும். தமிழ் நாட்டில் மிகச் சமீபத்தில் தான் பரீக்ஷா போன்ற பரிசோதனை நாடகக் குழுக்கள் தோன்றி யுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு திருத்தம் ( பக்கம் 91 ) 'பிள்ளைப் பெத்த ராசா ஒரு நாயை வளர்த்தார்" நாடகத்தை எழுதித் தயாரித்தவர் பெளசுல் அமீர்,
96

விமர்சனம்
இலக்கிய விமர்சனம் என்பது, இலக்கியப் படைப்புக் களை வகைப்படுத்துதல், வரையறை செய்தல், விளக்கியுரைத் தல், மதிப்பிடுதல் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட ஒரு அறிவுத்துறை என்று கூறுவர். பொதுவாக விமர்சனம் இரு வகையாகப் பாகுபடுத்தப்படுகின்றது. ஒன்று கோட்பாட்டு விமர்சனம் அல்லது விமர்சனக் கோட்பாடுகள். மற்றது செயல்முறை விமர்சனம்.
இலக்கியப் படைப்புக்களை விளக்குவதற்கும், அவை பற்றி அபிப்பிராயம் கூறுவதற்கும் அவற்றை வகைப்படுத்தி மதிப்பிடுவதற்கும் உரிய பொதுவான அடிப்படைகளையும் அளவுகோல்களையும் வகுப்பதைக் கோட்பாட்டு விமர்சனத் துள் அடக்குவர். ஒரு குறிப்பிட்ட இலக்கியப் படைப்பை அல்லது ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்குரிய இலக்கியப் படைப்பை நுணுக்கமாக ஆராய்வது, விளக்குவது, அல்லது மதிப்பிடுவதை செயல்முறை விமர்சனத்தின்பாற்படுத்துவர். எனினும் செயல்முறை விமர்சனம் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ விமர்சனக் கொள்கைகளாலேயே நிர்ண யிக்கப்படும் என்பது ஒரு பொதுவான உண்மையாகும். இப் பரந்த பொருளில், இலக்கிய விமர்சனம் 20 ஆம் நூற்ருண் டில் இருந்துதான் ஈழத்தில் வளர்ச்சியடையத் தொடங்கி
F。13 97

Page 56
யது. நவீன இலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் ஆகியவற்றின் வளர்ச்சியே இத்தகைய விமர்சன முறையின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
இருபதாம் நூற்ருண்டுக்கு முன்னர், இலக்கியம் பற்றிய சிந்தனை முனைப்பாக இல்லாவிடினும்; இலக்கிய, இலக்கண, தத்துவ சாத்திர நூல்களுக்கு உரை எழுதும் மரபு இங்கு இருந்து வந்துள்ளது. உரையின் போது பல்வேறு சான்று களைக் காட்டித் தம்மதம் நிறுவும் தர்க்க முறையும் கடைப் பிடிக்கப்பட்டது. 20 ஆம் நூற்ருண்டுக்கு முன்னர் உரையோ, விளக்கமோ செய்யுள்நூல்களுக்கே எழுதப்பட்டன. 19 ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த ஆறுமுக நாவலரை எமது இலக்கிய விமர்சன மரபின் முன்னுேடி எனக் கூறுதல் மரபு. சைவ மதம் சாராத இலக்கியங்களையும் அவர் பதிப்பிக்க எண்ணி இருந்தார் எனினும் சைவசித்தாந்த மரபில் வந்த இலக்கியங் களேயே அவர் போற்றினர்.
"வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண் டதே முதனூலாகும், அதை அடியொற்றியே வழிநூலும் சார்பு நூலும் தோன்றும்; அறம், பொருள், இன்பம், வீடு தருதலே நூற்பயன் என்பன போன்ற இலக்கியம் பற்றிய தீர்க்கமான கருத்துக்களை மரபு மரபாக ஏற்றுக்கொண்டி ருந்த அக்கால உரையாசிரி:ர்களோ, அறிஞர்களோ முனை வன் கண்ட முதல் நூல்களையோ, அதை ஒட்டிய சார்பு நூல், வழி நூல்களையோ உரைத்துப்பார்த்து மதிப்பீடு செய் திருப்பர் என நாம் எதிர்பார்க்க முடியாது. எனினும் தாய் சார்ந்த மத அளவுகோல் கொண்டு இலக்கியத்தினைப் பாகு படுத்தும் தன்மையினை 20 ஆம் நூற்ருண்டின் முன்னர் காண்கின்ருேம்.
அக்கால கட்டத்தில் சைவ சித்தாந்த கலாசாரத்தைப் பேணுவதிலும் வளர்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது. இலக்கியங்களுள் கந்தபுராணம், பெரியபுராணம் என்பவற் லுக்கே முதன்மை கொடுக்கப்பட்டது. சிலப்பதிகாரம் போன் றவை போற்றப்படவில்லை. பாடலுக்கு விளக்கம் தரும்
98

போது தத்தம் கல்வி அறிவுகளுக்கு ஏற்ப u ft Galii D. Gir 6Ir சொற்களுக்குப் புதுப்புது வியாக்கியானங்களேத் தந்தனர். சில இடங்களில் சொற்களுக்கு வலிந்து பொருள் காணும் முயற்சிகளாகவும் இவை மாறின.
இவ்வியாக்கியான முறையில் இலக்கிய இரசனையே முக் கியமானதாகக் கொள்ளப்பட்டது. இலக்கிய ஆய்வு இங்கு மேற்கொள்ளப்படவில்லை. இதஞேடு ஒட்டி எழுந்ததே புராணபடனமாகும். கோயில்களில் மக்கள் முன்னிலையில் புராணங்களுக்கு உரை கூறுவதில் இம் மரபின் தாக்கத்தைக் காணலாம்.
இவ்வண்ணம் தத்துவங்களையும் இலக்கணங்களையும் ஆதாரம் காட்டி கற்பனையும் இரசனையும் கலந்து உரை செய் தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் ச. பொன் னம்பல பிள்ளையாவர்(1837-1897). இவர்பற்றிப் பண்டிதமணி கணபதிப்பிள்ளை பின்வருமாறு கூறுவர்.
'பொன்னம்பலபிள்ளை அழகுகள், நவரசங்கள் சொட்டச் சொட்ட பாடல்களுக்கு உரை விரித்தற் கென்றே பிறந்தவர் என்று சொல்லுவார்கள். அவரை மாணவர்களாகிய மதுகரங்கள் எப்போதும் சூழ்ந்து கொண்டே இருப்பார்கள். உச்சியில் இருந்து உள்ளங் கால் பரியந்தம் பொன்னம்பலபிள்ளையினது உருவம் இலக்கிய இரசனையால் ஆனது. புதிது புதிதாகத் தனக் குத் தோன்றுகின்ற இலக்கிய இரசனையை பாருக்கா வது வெளிப்படுத்தாமல் இருக்கமாட்டாமை பொன் னம்பலபிள்ளையின் நித்திய கலியாண குணங்களில் ஒன்று.”*
பொன்னம்பலபிள்ளை பற்றிப் பண்டிதமணி கூறும் இக் கருத்து ஏனைய உரையாசிரியர்களுக்கும் பொருந்தக்கூடி யதே. பொன்னம்பலபிள்ளேயுடன் கந்தபுராண உரையாசி ரியர்களான உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர், வல்வை வைத்தி லிங்கம்பிள்ளை ஆகியோரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
99

Page 57
அண்மைக் காலம் வரை இம் மரபு ஆற்றல் வாய்ந்ததாக இருந்து வந்துள்ளது. தொல்காப்பிய உரையாசிரியர் கணே சையர் (1878-1958), திருவாசக உரையாசிரியர் நவநீதக் கிருஷ்ண பாரதியார்(1889-1954), பதிற்றுப்பத்து உரையா சிரியர் பண்டிதர் சு. அருளம்பலவனர், கந்தபுராண தக்ஷ காண்ட உரையாசிரியர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஆகி யோர் இம்மரபினரே. இவர்களுள் பண்டிதமணி கணபதிப் பிள்ளையும் அவரது பரம்பரையினரும் தனியாக நோக்கப் படத் தக்கவர்கள். இவர்கள் பழைய உரையாசிரியர்கள் வழி வந்தவர்களாயினும் பல விடயங்களில் இவர்கள் பழையவர்க ளில் இருந்தும் வேறுபடுகின்றனர்.
முன்னைய உரையாசிரியர்களைப்போல இவர்கள் சித்தாந் தக் கோட்பாட்டை அடியொற்றி எழுந்த இலக்கியங்களை மாத்திரம் போற்றவில்லை. இலக்கிய இன்பம் தரும் எந்த நூலையும் வரவேற்றனர். பண்டைய தமிழ்ப் புலவர்களை மட்டுமன்றி தமது சமகால ஈழத்துப் புலவர்களின் பாடல் களிலும் இலக்கிய நயம் கண்டனர். பாடல்களில் வரும் சொற்கள், அதன் அமைப்பு முறை, ஒசைநயம் ஆகியவற்றை இலக்கிய ரசனையின் மூலாதாரமாகக் கொண்டனர்.
பண்டிதமணி கணபதிப்பிள்ளை திருநெல்வேலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் தமிழ் ஆசானக இருந்தமையினலும் கலாசாலையை மையமாகக் கொண்டு அவர் காவிய பாட சாலை ஒன்றை நடத்தியமையினலும் தம்முடைய இலக்கிய ரசனை முறையினை மாணுக்கர் மத்தியில் அவரால் பரப்ப முடிந்தது. இக்கால கட்டத்தில் கோப்பாய் அரசினர் ஆசி ரிய கலாசாலையில் கடமையாற்றிய குருகவி மகாலிங்கசிவ மும் இத்தகைய இரசனை முறையினைத் தம் சொற்பொழிவு களின் மூலம் வளர்த்தார்.
இம்மரபில் வந்தவர்களாக கனக. செந்திநாதன், க. ச. அருள்நந்தி. பொ. கிருஷ்ணபிள்ளை, கா. பொ, இரத்தினம் க. வேந்தனுர் ஆகியோரைக் குறிப்பிடலாம். அக்காலத்தில்
100

வெளிவந்த பத்திரிகைகளில் இவர்கள் எழுதிய கட்டுரை களிலே இவர்களின் இலக்கிய நோக்கினைக் காண முடிகி றது. பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் இலக்கியவழி, கந் தப்புராண கலாசாரம், பாரத நவமணிகள்; பொ. கிருஷ்ண பிள்ளையின் இலக்கியச் சோலை, க. பொ. இரத்தினத்தின் இலக்கியம் கற்பித்தல் ஆகிய நூல்கள் இவர்களின் இலக் கிய ரசனை முறையை வெளிக் காட்டுவனவாய் உள்ளன.
பண்டிதமணி பரம்பரையில் கனக. செந்திநாதன் தனி யாகக் குறிப்பிடத்தக்கவர். தனிப் புலவர்களை விமர்சனம் செய்து நூலாக வெளியிடும் மரபினை முதல்முதல் ஈழத்து விமர்சன உலகில் தொடக்கி வைத்தவர் இவரே. பண்டித மணி பற்றிய இவரது மூன்ருவது கண், சோமசுந்தரப் புலவர் பற்றிய திறவாத படலை, கவிஞர் மு. செல்லையா பற்றிய கவிதைவானில் ஒர் இளம்பிறை ஆகிய நூல்கள் இதற்கு உதாரணங்களாகும். கனக. செந்திநாதன் பண்டிதி மணி கணபதிப்பிள்ளையின் இரசனை மரபில் வளர்ந்தவராய் உள்ள அதேவேளையில், பண்டிதர் பரம்பரையினர் சிலரால் 'இழிசனர் இலக்கியம்’ என அழைக்கப்பட்ட நவீன புனை கதைத் துறையினை இலக்கியம் என ஏற்று விமர்சனம் செய் தவராகவும் காணப்படுகின்ருர். எனினும் இவரது நவீன புனைகதை பற்றிய மதிப்பீடுகளிலும் இரசனை முறையின் பாதிப்பை ஓரளவு காணக்கூடியதாக உள்ளது.
பண்டிதமணி பரம்பரையினரால் வளர்க்கப்பட்ட இலக் கிய இரசனை முறை, இன்று வரை பாடசாலைகளிலும் ஆசி ரிய பயிற்சிக் கலாசாலைகளிலும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது. அன்று கல்வி அதிகாரிகளாக இருந்த க. ச. அருள்நந்தி, அ. வி. மயில்வாகனம், சதாசிவ ஐயர் போன் ருேர் இவ்விரசனை முறையினை ஏற்று அதற்கு அளித்த ஊக்கமும் இம்மரபில் வந்தோரே ஆசிரிய கலாசாலைகளி லும் பாடசாலைகளிலும் இலக்கியம் பயிற்றுவோராக இருந் தமையும் இவ்விரசனை முறை பாடசாலைகளில் செல்வாக் குப் பெறக் காரணமாயிற்று.
101

Page 58
இரசனை அடிப்படையில் அமைந்த இலக்கிய விளக்கமே இவர்களது இலக்கிய விமர்சன முறையாக அமைந்தது. எனினும் ஆரம்பத்தில் காணப்பட்ட சைவ சித்தாந்தம் என்ற சமய எல்லையை மீறி "இலக்கியம்’ என்ற பரந்த தடத்தினில் இலக்கிய ரசனை செல்வதனையும் அது ஈழத்து இலக்கியத்தைப் போற்றும் தன்மை கொண்டதாக அமை வதனையும் இவர்களிடம் காணலாம். இரசனை முறையாளர் கள் மரபுவழிச் செய்யுள்களில் அமைந்த பிரபந்தங்களையும், தனிப்பாடல்களையுமே ஆராய்ந்து சுவை கண்டனர். உரை நடையில் எழுந்த நவீன இலக்கியங்களான நாவல், சிறுகதை, நாடகம் ஆகியவற்றைஇவர்களிற் பெரும்பாலோர் இலக்கியங் களாக ஏற்கவில்லை.இலக்கியம் பற்றி இவர்கள் வைத்திருந்த கொள்கையே இதற்குக் காரணம் எனலாம்.
2
உரைநடையில் அமைந்த நவீன இலக்கியங்கள் செல் வாக்குப் பெறத் தொடங்கியதை அடுத்து 1940 களிலேயே ஈழத்தில் நவீன விமர்சனம் துளிர்விடத் தொடங்கியது எனலாம். இக்கால கட்டத்தில் புனைகதைத் துறையில் ஈடு பட்டோரே இவ்விமர்சனத் துறையிலும் ஈடுபட்டனர். நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் நவீன சிந்தனை முறையின் தோற்றமும் ஆகும். அதனல் பழைய சிந்தனை மரபுக்கும் புதிய சிந்தனை மரபுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்த முரண்பாட்டின் விளைவாகவே நவீன இலக்கிய விமர்சனம் தோன்றியது. தாம் படைத்த இலக் கியங்களின் புதுமையை நியாயப்படுத்தி எழுதவேண்டிய அவசியம் இக்கால எழுத்தாளர்களுக்கு இருந்தது.
இலக்கிய உலகிலே பழைய, வரட்டுத்தனமான பண் டித மனப்பான்மையின் செல்வாக்கை எதிர்த்த, உயிர் உணர்ச்சியுள்ள ஒரு கவிஞனை கதாபாத்திரமாகக் கொண்டு 1940 அளவில் இலங்கையர்கோன் எழுதிய “நாடோடி" என் னும் கதையில், இலக்கியத்தில் இப்பண்டித மனப்பான்
102

மைக்கு எதிரான கலகக் குரலையும், நவீன இலக்கிய "விமர்
சனக் கண்ணுேட்டத்தின் தொடக்கத்தையும் காணலாம்.
'காளிதாசனுடைய ஒப்புயர்வற்ற தெய்வக் காவியமா கிய இரகு வம்சத்தைச் சுவைநைந்த உயிரற்ற வெறும் சொற் குவியலாகத் தமிழில் மொழிபெயர்த்த அரச கேசரியின் சகாக்களிடம் இருந்து நான் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். பழமை பழமையென்று பிதற் றிக் கண்களை மூடிக்கொண்டு தம் அற்பத் திறமையில் இறுமாந்து உட்கார்ந்திருக்கும் இவர்களுக்குப் புதுமை யும் முற்போக்கும் எங்கே பிடிக்கப்போகின்றது? திருக் கோவையாரைப் படித்துவிட்டு அதில் வெட்டவெளிச்ச மாய் இருக்கும் அழகையும், ஜீவனையும், ஓசையையும் தேனையும் அமுதத்தையும் சுவைத்து உணர முடியாது அதற்குள் ஏதோ சித்தாந்தக் கருத்து மறைந்து கிடக் கிறது என்று பாசாங்கு செய்யும் இந்தப் பழமைப் புலிகள். O و
‘இனி வரப்போகும் தமிழின் மறுமலர்ச்சிக்கு வந்தனை
செய்கின்றேன்."
இலங்கையர்கோனின் கதையில் வரும் மேற்காட்டிய கூற்றுக்கள் ஈழத்தில் நவீன இலக்கிய சிந்தனையின் தோற் றத்தைக் காட்டுகின்றன என்பதில் ஐயம் இல்லை. அரச கேசரி காலத்தில் அவர் கதையை அமைத்திருந்தாலும், அது அவரது சமகால இலக்கியப் பிரச்சினையின் வெளிப் பாடேயாகும். இவ்வாறு புதுமைக்கு எக்காலத்து வாங்கிக் கொண்டு 1940 களில் இலக்கிய விமர்சனத் துறையில் ஈடு பட்ட எழுத்தாளர்கள் பற்றி பேராசிரியர் க. கைலாசபதி பின்வருமாறு கூறுகின்றர்.
"இவர்கள் பெரும்பாலும் சமகால இலக்கியங்க ளேப் படித்துச் சுவைத்து அவைபற்றித் தர்க்கித்துச் சொல்லாடி இலக்கியத்தில் ஆத்மார்த்த அனுபவத்தை யும், நிறைவையும் தேடியவர்கள். திறனய்வு அவர்க ளின் பிரதான அக்கறையாக இல்லாது விடினும்:தமது
103

Page 59
தொழிலின் நுட்பங்களைப் பற்றிய வாதப் பிரதிவாதங் களிலும் சர்ச்சைகளிலும் இவர்கள் தயங்காது பங்கு பற்றினர்."
மேல் நாட்டு இலக்கியங்களே ஆங்கில மொழி மூலமா கவே அறிந்துகொண்ட இவர்களின் விமர்சன அளவுகோ லும் ஆங்கில மொழி வழியாகப் பெறப்பட்டதேயாகும். "ஈழகேசரி" இவர்களுக்கு வெளியீட்டுத் தளமாயிற்று. சோ. சிவபாதசுந்தரம், சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் ஆகியோர் இவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள். நவீன இலக்கிய வடிவங்கள் பற்றிய இவர்களின் கட்டுரைகள் ஈழத்து இலக்கிய உலகில் சர்ச்சைகளே ஏற்படுத்தின. சி. வைத்தியலிங்கம் கல்கி, ஆர். சண்முகசுந்தரம் போன்ற எழுத்தாளர்கள் பற்றியும் வேறு சில நூல்கள் பற்றியும் நல்ல முறையில் மதிப்பீடு செய்தார். இவரைப் போன்றே, சிவ பாதசுந்தரம். இலங்கையர்கோன் ஆகியோரும் ஈழகேசரியில் சமகாலப் புனேகதை இலக்கியம் பற்றி விமர்சனக் கட்டுரை கள் எழுதினர். அத்தோடு நாடகம், பிறகவேகள் பற்றியும் அவர்களின் விமர்சனம் அமைந்தது. இவ்வகையில் அகில னரின் சிநேகிதி, க. நாராயணனின் லட்சியப்பானத, சு. வித்தியானந்தனின் தமிழர் சால்பு ஆகிய நூல்கள் பற்றி பரம் பேராசிரியர் கணபதிப்பிள்ஃாயின் தருைண எண்ணம் நாட்கம் பற்றியும், டி. கே. எஸ். சகோதரர்களின் நாடக விழா பற்றியும் இலங்கையர்கோனின் விமர்சனங்கள் குறிப்பி டத்தக்கன. அகிலனின் "சிநேகிதி" பற்றி இலங்கையர்கோன் ஈழகேசரியில் எழுதிய ஒரு விமர்சனக் குறிப்டை உதாரன மாகத் தரலாம்.
"..தமிழில் ஒரு துணிகரமான முயற்சி என்றே சொல்ல வேண்டும். ஐரோப்பிய நாவல்கள், நாடகங் கள் பலவற்றில் இப்பொருள் பல கோணங்களில் வைத்து ஆராயப்பட்பு ருக்கிறது. விரசமான விசயமாக இருந் தாலும் அதை அலசிப் பார்க்கும் முறை கொஞ்சமும் விரசம் இல்லாமலே கையாளப்பட்டிருக்கிறது.

கள்ளக் காதல் மனித வாழ்க்கைக்குப் புறம்பானதல்ல. ஆணுல் நாராயணசாமி என்ற பாத்திரம் புறம்பானவ ராகவே காணப்படுகிருர், ஒரு கணவன் தான் விரும்பி மணந்துகொண்ட மனேவியை, அவன் எவ்வளவுதான் நாடிஞ்சகனுக இருந்த போதிலும், இன்னுெருவனே வீட் டுக்கு அழைத்துத் தன் மனேவியுடன் பழகச் செய்து பிறகு அவளே அவனுடைய கையில் ஒப்படைப்பதென் முல் - அந்தக் கணவனே என்ன என்று சொல்வது? - நாவலின் போக்கும் தமிழ் நடையும் அகிலனுக்குரிய சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது." இவை எல்லாம் செயல்முறை விமர்சனத்தின் பாற்படும் கட்டு ரைகளேயாகும். இதே காலப்பகுதியில் இலக்கிய விமர்சனக் கொள்கைகளே முன்வைக்கும் கட்டுரைகளும் எழுதப்பட்டன. இலக்கியத்தின் உரும் உள்ளடக்கம், அதன் சமூகச் சார்பு முதலியவைபற்றி கொள்கைரீதியாக இக்கட்டுரைகள் அமைத் தன, இலங்கையர்கோன், அ. ந. கந்தசாமி, கே. கணேசூர், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, போன்ஜேர் இத்தலி ಗ್ವಿ' வில் இத்தகைய கட்டுரைகள் பலவற்றைஏழுஇன்இலத்தி பத்தின் நோக்கம், சமூகப்பணி ஆகியrதி பற்றி په ۹ پېل முருகானந்தம் 1942-ல் வெளிஇந்த்ரிே ክ&ት வருமாறு எழுதினூர், ""
"தமிழின் கதை இலக்கித்தில் காணப்பீடும் முக் கிய குறைபாடு இதுதான். அத்து-ஸ்க்ரியக் # joy கள், சீர்திருத்தக் கதைகள் மிககிபி குறைவு. அத்தியா வசியமாக வேண்டப்படுவதும் அதுதான். பொழுது போக்குக் கதைகள் போதுமென்றபடி ஏராளமாகச சேர்ந்துவிட்டன. இனி அவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி 03த்துவிட்டு தமிழ் நாட்டை அப்படியே தூக்கிக் காட்டும், தேசத்தின் வறுமை, துன்பம், அரசியல் நிலேமை முதலியவற்றை உணர்ச்சி ஊட்டக் கூடி: முறையில் சித்திரிக்கும் வசதியக் கதைகள் பெருகவேண் டும், எழுத்தாளர் என்று பேணு துரக்கியவர்கள் இனி இத்துறையில் முயற்சிப்பார்களா?"
H. It 15

Page 60
தேசத்தின் வறுமை , துன்பம், அரசியல் நிலேமை என் பனவே எமது இலக்கியத்தில் இடம்பெற வேண்டும் என்ற அ. செ. மு.வின் கூற்று புண்கதையின் உள்ளடக்கத்தை வலியுறுத்தியது. நமது தேசத்தின் அபிலாஷைகளே இலக்கி யம் பிரதிபலிக்க வேண்டும் என்ற தேசிய இலக்கிய நோக்கு விமர்சகர்களிடம் ஏற்படத் தொடங்கியது. இக்காலகட்டத் தில் மறுமலர்ச்சிப் பத்திரிகையில் இது சம்பந்தமான கட் டுரைகள் வெளிவந்தன. இப்பத்திரிகையில் இலங்கையர் கோன் எழுதிய 'தமிழின் மறுமலர்ச்சி" என்ற கட்டுரை முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியில் கே. கணேஷ் நடத்திய "பாரதி இதழிலும் இலக்கியத்தின் சமுதாயப் பணியை வற்புறுத்திக் கட்டுரைகள் வெளியாயின.
3.
இவ்வாறு 1940ஆம் ஆண்டுகளிலேயே நவீன இலக்கிய விமர்சன முயற்சிகள் தொடங்கிவிட்டன எனினும் 50 ஆம் 60ஆம் ஆண்டுகளில்தான் ஈழத்தில் அது சிறப்பாக வளர்ச்சி புற்றது. 50ஆம் ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக 1956க் குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஈழத்தில் ஏற்பட்ட தேசிய பண்பாட்டு உணர்ச்சியின் விளே வாக இலக்கியத்திலும் தேசிய தனித்துவச் சிந்தனை வளர்ச்சி புற்றது. இதன் பெறுபேருக தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு வடிவம் பெற்றது. 30ஆம் ஆண்டுகளின் பிற் பகுதியில் இருந்து 0ேஆம் ஆண்டுகளின் முற்பகுதி வரை, ஈழத்தின் இலக்கிய மேடைகளிலும், பத்திரிகை சஞ்சிகை போன்ற பொதுத் தொடர்புச் சாதனங்களிலும் தேசிய இலக்கியம் பற்றிய சர்ச்சைகள் நடைபெற்றன. ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்து கொண் டனர். ஆங்கில இலக்கியத்துக்கும் அமெரிக்க இலக்கியத்துக் கும் இடையே உள்ள வேற்றுமைகளே உதாரணமாகக் கொண்டு தமிழக இலக்கியத்துக்கும் ஈழத்து இலக்கியத் துக்கும் இடையே இருக்கின்ற, இருக்க வேண்டிய தனித்து வங்களே இவர்கள் அழுத்திக் கூறினர். தேசிய இலக்கியம் பற்றி எழுதிய அ. ந. சுந்தசாமி பின்வருமாறு குறிப்பிட்டார்.
1)

"ஒரு மொழிக்கு ஒரு இலக்கியம் என்பது மொழி கள் கடல் கடந்து பரவி நிஃபேற்ற இக்காலத்துக்கு ஒவ்வாது. கடந்த இருநூறு ஆண்டுகளாக வளர்ச்சி பெற்றுவரும் ஆங்கில மொழி பல தேசிய இலக்கியங்க ஃளத் தன்னகத்தே கொண்டிருக்கின்றது. இன்று நாம் வெறுமனே ஆங்கில இலக்கியம் என்று கூறினுல் அது அமெரிக்க இலக்கியத்தையோ ஆஸ்திரேலிய இலக்கி பத்தையோ கனேடிய இலக்கியத்தையோ குறிக்காது.
தேசிய இலக்கியம் என்ற நமது இயக்கம் சர்வதேசி பத்துக்கு முரண்பட்ட ஒன்றல்ல. உயிருள்ள இலக்கி யத்துக்கு தேசிய சமுதாயப் பின்னணி அவசியம். இவ்வித பின்னணியில் உருவாகும் தேசிய இலக்கியமே காலத்தையும் கடலேயும் தாண்டி சர்வ தேசங்களேயும் ஈர்க்கும் வல்லமை பெற்றதாகும்."
இக்காலப் பகுதியிலே நாவல், சிறுகதை போன்ற படைப்பிலக்கியத் துறையில் ஈழத்து வாழ்க்கை யதார்த்த பூர்வமான வடிவம் பெற்றது என்பதை முன் அத்தியாயங் களில் பார்த்தோம். அதைப் பலப்படுத்துகின்ற பிரக் :ை பூர்வமான இலக்கிய சித்தாந்த வெளிப்பாடாகவே இக் தேசிய இலக்கியக் கோட்பாடு அமைந்தது.
தேசிய இலக்கியம் என்பது எவ்வித வேறுபாடும் காட் டாது முழு மொத்தமான தேசியப் பண்பாட்டையும் உள் எாடக்கும் ஓர் இலக்கியக் கோட்பாடாகும், ஆனூல் அதற் குள்ளே வர்க்க முரண்பாடுகள் உள்ளன. வர்க்க முரண் பாடுகளுக்கு இலக்கியத்தில் முதன்மை கொடுக்கும் போது, தேசிய இலக்கியத்தின் அடியாக பிறிதொரு இலக்கியக் கோட்பாடு உதயமாகிறது. அதுவே முற்போக்கு வாதா கும். பரந்துபட்ட வெகுஜனங்களின் நலனேயும், அவர்களின் பிரச்சினேகளேயும், அவர்களது விமோசனத்துக்கான வேட் கையையும் இலக்கிபத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்ற கொள்கையே முற்போக்கு வாதத்தின் சாராம்சமாகும். கால்த்துக்குக் காலம் முற்போக்கு என்ற சொல்லுக்கு உரிய
O

Page 61
பொருள் வேறுபடலாம். நமது காலத்திலே முதலாளித்துவ சமூக முறையில் இருந்து, சோசலிச சமூக முறைக்கு மாறிச் செல்லும் போக்கினையே இது குறிக்கும். ஆகவே முற் போக்கு வாதம் தவிர்க்க முடியாமல் மார்க்ஸிய சித்தாந் தத்துடன் பிணைந்துள்ளது. அவ்வகையில் தேசிய இலக்கியக் கோட்பாட்டைவிட முற்போக்கு இலக்கியக் கோட்பாடு திட்டவட்டமான வரையறுக்கப்பட்ட அரசியல் சார்பு உடையதாகின்றது.
ஈழத்து இலக்கிய விமர்சனத் துறையில் தேசிய இலக்கி யக் கோட்பாட்டைப் பிரசாரப் படுத்துவதில் முன்னணி யில் நின்ற விமர்சகர்களே 1950, 60 களில் இலக்கிய விமர் சனத்தில் முற்போக்கு வாதத்தை, அல்லது மார்க்ஸிய அணுகு முறையைப் பிரயோகித்தனர். க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகிய இருவரும் இதில் முதன்மையாகக் குறிப்பிடத் தக்கவர்கள். அ. ந. கந்தசாமி, கே. கணேஷ் இளங்கீரன், ஏ. ஜே. கனகரத்தின, பிரேம்ஜி. சில்லையூர் செல்வராசன், எச். எம். பி. முகையதின் முதலியோரும் இலக்கிய விமர்சனத்தில் முற்போக்குக் கண்ணுேட்டத்தைப் பயன்படுத்தினர்.
முற்போக்கு விமர்சகர்கள் இயல்பாகவே இலக்கியG. தின் சமுதாய உள்ளடக்கத்தில் அதிக அக்கறை காட்டி னர். இலக்கியத்தை ஒரு கலை வடிவமாக மட்டுமன்றி அதை ஒரு சமூக சாதனமாகவும் இவர்கள் கண்டனர். ஒரு படைப்பு வெளிப்படுத்தும் தொனிப் பொருளைத் தங்கள் கண்ணுேட் டத்தில் மதிப்பிடுவது மட்டுமன்றி, இலக்கியத்தின் நோக் கம், பணி, பயன்பாடு ஆகியவற்றை வரையறுத்துக் கூறு வது மட்டுமன்றி, பரந்த அர்த்தத்தில் இலக்கிய வடிவங்க ளின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றை இயக்கும் சமுதா யக் காரணிகளை மார்க்ஸிய அடிப்படையில் விளக்குவதும் இவர்களின் நோக்கமாய் இருந்தது, 60-ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலேயே முற்போக்கு விமர்சனம் இதைச் சாதிக்கக் கூடிய முதிர்ச்சி பெற்றது. இதனுல் 60க்குப் பிறகு இலக்
108

கிய ஆய்வு, இலக்கியப் புலமை, இலக்கிய வரலாற்றுணர்வு ஆகியன ஈழத்தில் வளர்ச்சியுற்றன. கலாநிதி க. கைலாச பதியின் தமிழ் நாவல் இலக்கியம், அடியும் முடியும், ஒப்பி யல் இலக்கியம், பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் ஆகிய நூல்களும், கலாநிதி கா. சிவத்தம்பியின் தமிழ்ச் சிறு கதையின் தோற்றமும் வளர்ச்சியும், நாவலும் வாழ்க்கை யும். ஈழத்தில் தமிழ் இலக்கியம் ஆகிய நூல்களும் முல்லை சான்ற கற்பு, திணைக்கோட்பாட்டின் சமுதாய அடிப்படை முதலிய அவரது கட்டுரைகளும் இவ்வகையில் முக்கியமான ஆக்கங்களாகும். இவற்றிலே இலக்கிய ஆய்வுக்கு சமுதாய வரலாற்றை ஆதாரமாகக் கொள்ளும் போக்கினையும் சமு தாய பண்பாட்டு வரலாற்று ஆய்வுக்கு இலக்கியத்தைச் சான்ருகக் கொள்ளும் போக்கினையும் நாம் அவதானிக்கலாம்.
முற்போக்கு விமர்சகர்கள் பொதுவாக உள்ளடக்க ஆய் வுக்கே முதன்மை கொடுத்ததால், தனிப்பட்ட படைப்புக் களையும் படைப்பாளிகளையும் மதிப்பிடுவதில் சில தவறுகள் நிகழ்ந்துள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண் டும். சிலவேளை வெளிப்படையாக அரசியல் கோசங்களை யும் கருத்துக்களையும் வெளிப்படுத்தும் படைப்புக்களும் படைப்பாளிகளும் விதந்துரைக்கப்பட்டும், உயர்ந்த சில கலைஞர்கள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படாமல் ஒதுக்கப் பட்டும் உள்ளனர். இக்குறைபாடு 70 களில் முற்போக்கு விமர்சகர்களாலேயே பரவலாக உணரப்பட்டது.
உருவ உள்ளடக்கப் பிரச்சினை இலக்கிய விமர்சனத்தில் ஒரு சிக்கலான பிரச்சினையாகவே இருந்துவருகின்றது. இது பற்றிக் கொள்கையளவில் சரியான கருத்துக்கள் முன்வைக் கப் படினும், மதிப்பீட்டின் அகநிலைத் தன்மை காரணமாக செயல்முறையில் தவறுகள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. எவ்வாறெனினும் 70 களில் இலக்கியத்தில் உருவ உள்ள டக்க இயைபினையும் இலக்கியத்தின் கலைப் பெறுமானத்தை யும் அழுத்தும் விமர்சனக் குரல்கள் முற்போக்கு விமர்சன உலகில் ஒலிக்கத் தொடங்கின. எம். ஏ. நுஃமான், சண்மு
109

Page 62
கம் சிவலிங்கம், ஏ. ஜே. கனகரத்தின முதலியோர் இவ் வகையில் குறிப்பிடத் தக்கவர்கள். ஏ. ஜே. கனகரத்தின மாக்ஸிய அழகியல் பற்றிய சில கட்டுரைகளை பாடும்மீன் அலை, மல்லிகை முதலிய இதழ்களில் எழுதினர். சண்முகம் சிவலிங்கம், நுஃமான் ஆகியோரின் கருத்துக்கள் கவிஞன் இதழ்களிலும் ஏனைய சஞ்சிகைகளிலும் வெளிவந்தன. சண் முகம் சிவலிங்கம் இதுபற்றி எழுதுகையில்,
''. . . . . . எங்களுடைய இலக்கியம் எங்கள் வாழ் நிலையை எங்களின் அனுபவம் ஆக்கித்தர வேண்டும். எங்களின் உண்மையான வாழ்நிலை பிரதிபலிக்கப் பட் டால் அந்தப் படைப்பு நிச்சயமாக இயக்க இயல் ரீதி யான சமூக மாற்றத்துக்கு இட்டுச் செல்கிறது. இந்த உண்மையை முற்போக்கு அணியைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் சில விமர்சகர்கள் புரிந்து கொண்ட தாகத் தெரியவில்லை. அவர்கள் முற்போக்கு இலக்கியம் பற்றிய சில வாய்ப்பாட்டு உருக்களைச் செபித்துக் கொண்டு எ மது உழைப்பாளர் வர்க்கத்தின் கலை வளத்தை வறளச் செய்து விடுவார்களோ என்ற அச் சம் எம்மிற் பலருக்கு உண்டு?" என்று குறிப்பிட்டார். பிரசாரப் பாங்கான கருத்து நிலையில் இருந்து அனுபவ நிலைக்கு முற்போக்கு இ லக் கியம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே இவர்களின் பொதுக் கோட்பாடாக அமைந்தது.
4.
தேசிய இலக்கியக் கொள்கை இறுக்கமான அரசியல் சார்பை வெளிக் காட்டாததால் பொதுவாக எல்லோரா ஆலும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனல் முற்போக்கு இலக்கியக் கொள்கை திட்டவட்டமான அரசியல் சார்பை உள்ளடக்குவதனல் அதற்கு எதிரான இலக்கியக் கோட் பாடுகள் உருவாகுவதற்கு அது வழிகோலியது. அந்தவகை யில் 1960 களின் பிற்பகுதியில் ஈழத்து விமர்சன உலகில்
10

இரண்டு புதிய இலக்கியக் கொள்கைகள் முன்வைக்கப் பட் டன. ஒன்று நற்போக்கு இலக்கியம், மற்றது பிரபஞ்ச யதார்த்த வாதம்.
நற்போக்கு இலக்கியக் கொள்கையை முன்வைத்தவர் எஸ். பொன்னுத்துரையாவர். 1950 களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நின்று "மக்கள் இலக் கியத்தை ஆதரித்துப் புதுமை இலக்கியம் இதழில் கட் டுரை எழுதிய எஸ். பொ. 60களில் முற்போக்கு இலக்கி யத்தின் பிரதான எதிர் விமர்சகர்களுள் ஒருவராக மாறி ஞர். முற்போக்கு என்ற சொல்லுக்கு எதிராக நற்போக்கு என்பதைப் பயன்படுத்தியதைத் தவிர திட்டமான கருத் துக்கள் எதையும் அவர் முன்வைக்கவில்லை. ஆகவே ஈழத்தில் இவரால் மட்டுமே முன்வைக்கப்பட்ட ஒரு இலக்கியக் கோச மாக அது மறைந்தது. சிறந்த படைப்பாளியான எஸ். பொ. சில நல்ல விமர்சனக் கட்டுரைகளும் எழுதியவர். எனி னும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை விட கண்டனங்களி லேயே இவர் அதிக சக்தியைச் செலவிட்டுள்ளார். பந்தநூல் மூலமும் உரையும் என்ற இவரது நூல் இவரது விமர்சன ஆளுமை விரயமாக்கப் பட்டதற்குச் சிறந்த உதாரணமாகும்.
மு. தளையசிங்கம் பிரபஞ்ச யதார்த்த வாதம் என்ற கொள்கையை முன்வைத்தார். முற்போக்கு இலக்கியத்துக்கு எதிராக காத்திரமான விமர்சனக் கருத்துக்களை முன்வைத் தவர் இவரே. முற்போக்கு இலக்கிபத்தின் சித்தாந்த தள மான மார்க்ஸிய தத்துவத்தையே இவர் விமர்சனத்துக்கு உட்படுத்தினர். இந்தியாவில் மார்க்ஸியம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆத்திரமுற்று அவஸ்தைப்படும் வெங்கட் சாமி நாதன் போல் அன்றி, மு. தளையசிங்கம் மார்க்ஸியத்தை ஒரு தத்துவார்த்த சமயவழி நின்று விமர்சித்தார். மார்க் ஸியத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொண்டு அதற்கு அப் பால் செல்ல வேண்டும் என்பதே இவரது கருத்தாகும்.
"மார்க்ஸியத்தை மறுக்கும் தெளிவற்ற கலைஞர் களும் சிந்தனையாளர்களும் முதலில் அதை உணர்ந்து
11

Page 63
ஒப்புக் கொண்டால்தான் அவர்களின் மறுப்பு வெறும்
மறுப்பாகவே நின்றுவிடாமல் இன்று சரித்திரம் காட்டி
நிற்கும் புதிய தருணத்தை இனம் கண்டு பயன்படுத்தி
மார்க்ஸியத்தையும் மீறி வளரும் வெற்றியாக மாறுவ
தற்கு வழிபிறக்கும். அதாவது அந்த உண்மையை ஒப்
புக் கொண்டால்தான் அந்த உண்மையின் அடுத்த பக்
கத்தையும் உணரலாம்' என்று தளையசிங்கம் எழுதி யுள்ளார். மேலைத்தேய மார்க்ஸிய எதிர்ப்புச் சிந்தனையாளர் களின் கருத்துக்களையும் அரவிந்தர் போன்றவர்கள் பிரதி பலித்த இந்திய ஆன்மிக வாதத்தையும் ஒன்றிணைத்ததே இவரது கொள்கையாகும். அவர் தமது இலக்கியக் கோட்பாடு பற்றி எழுதுகையில் "இனி வரவேண்டிய கோட்பாட்டை "பிரபஞ்ச யதார்த்தம்’ என்று கூறலாம்; விஞ்ஞானமும் ஆன்மிக ஞானமும் கலந்த பேரறிவு செறிந்த பிரபஞ்ச யதார்த்தம்' என்று குறிப்பிட்டார். இனிமேல் கலை, இலக்கி யம், விஞ்ஞானம், வாழ்க்கை ஆகியவற்றுக் கிடையே பேதம் இருக்காது. வாழ்க்கையே கலையாகும். கலையை அழிக்கும் கலை, இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம் இவையே இனித் தோன்றப்போகின்றன. அதுவே மெய்யுள் என்பது இவரது கலை இலக்கியம் பற்றிய கருத்துக்களின் சாரமாகும், அந்த வகையில் இவர் தர்க்க முரண் நிறைந்த ஆன்மிகக் கற்பன வாதியேயாவார். மு. பொன்னம்பலம், என். கே. மகாலிங் கம், இமையவன் முதலியோர் இவரது கருத்துக்களின் செல் வாக்குக்கு உட்பட்டவர்களாவர், தளையசிங்கத்தின் போர்ப் பறை, மெய்யுள் ஆகியவை ஈழத்தின் ஒரு குறிப்பிட்ட இலக் கியச் சிந்தனையை வெளிக்காட்டும் மிக முக்கியமான நூல்க ளாகும். இவரது ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - அவசரக் குறிப்புக்கள் என்ற கட்டுரைத் தொடரும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை நாம் நோக்கியதில் இருந்து 1960ஆம் ஆண்டு களில் இலக்கிய விமர்சனக் கொள்கைகள் ஈழத்தில் சித் தாந்த ரீதியில் வளர்ச்சியுற்றன என்பதைக் காணலாம். முற்போக்கு இலக்கியம், தேசிய இலக்கியம் என்ற கோட் பாடுகள் காத்திரமாக வளர்ச்சியுற்றதால் அரசியல் ரீதியில்
112

அதை எதிர்த்தவர்களும் சரியாகவோ, பிழையாகவோ தவிர்க்க முடியாமல் புதிய கோட்பாடுகளையே முன்வைக்க வேண்டி இருந்தது. அதன் விளைவே நற்போக்கு வாதம், பிரபஞ்ச யதார்த்த வாதம் என்பனவாகும்.
4.
இலக்கியத்தின் சமுதாய உள்ளடக்கம் பற்றிய கோட் பாடுகளும் அணுகு முறைகளும் இங்கு வளர்ச்சியடைந்தது போல் இலக்கியத்தின் உருவம் பற்றிய விமர்சனக் கோட் பாடுகளும் ஈழத்தில் இக்காலப் பகுதியில் வளர்ச்சியடைந் தன. இலக்கிய வடிவங்கள், இலக்கியப் பாகுபாடு, இலக் கிய ரசனை என்பவை பற்றிய சிந்தனைகளை இவை உள் ளடக்கின. இவ்வகையில் கவிதைக் கோட்பாடுகளை வகுத்துக் கூறும் முருகையனின் ஒரு சில விதி செய்வோம், முருகைய னும், கைலாசபதியும் எழுதிய கவிதை நயம், ஆகிய நூல் கள் குறிப்பிடத் தக்கன. கைலாசபதியின் இலக்கியமும் திற ஞய்வும் என்னும் நூலும் இப்பிரிவில் அடங்கக்கூடியதே. புனை கதை வடிவம் பற்றிய சிவத்தம்பியின் புனைகதையும் கதைப் பின்னலும் என்னும் கட்டுரையும் கவிதை நாடகம் பற்றி எம். ஏ. நுஃமான், மு. பொன்னம்பலம் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும், புதுக் கவிதையின் அமைப்பு பற்றி சிறிப்தி, சபா ஜெயராசா ஆகியோர் எழுதிய சில கட்டுரைகளும்இலக் கிய வடிவங்கள் பற்றிய குறிப்பிடத்தக்க கட்டுரைகளாகும்
இலக்கிய விமர்சனம், இலக்கியக் கொள்கை, இலக்கிய வரலாறு ஆகியவை தனித்தனித் துறைகள் எனினும் அவை முற்றிலும் வேறுபட்டவை அல்ல. ஒன்றை ஒன்று சார்ந் தும் உள்ளடக்கியும் செல்வன. அவ்வகையில் விமர்சன பூர்வமான இலக்கிய வரலாற்று நூல்கள் சிலவும் இங்கு தோன்றின. இவ்வகையில் பேராசிரியர் வி. செல்வநாயகத் தின் தமிழ் இலக்கிய வரலாறு பலருக்கு ஆதர்சமாகவும் முன்னேடியாகவும் அமைந்தது. கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை யின் தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், கலாநிதி பொ, பூலோகசிங்கத்தின் தமிழ் இலக்கியத்தில் ஈழத் தறிஞர் பெரு முயற்சிகள், கனக செந்திநாதனின் ஈழத்து இலக்கிய வளர்ச்சி, சொக்கனின் ஈழத்து நாடக இலக்கிய வளர்ச்சி, சுப்பிரமணிய ஐயரின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக் கியம் முதலிய நூல்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.
F。亚5 113

Page 64
தனிப்பட்ட படைப்புக்கள் படைப்பாளிகள் பற்றி விமர்சன பூர்வமான மதிப்பீடுகள் இங்கு பெருமளவு செய் பப்படவில்லை எனினும் குறிப்பிடத்தக்க சில முயற்சிகள் நடைபெற்றுள்ளன. கைலாசபதியின் இரு மகாகவிகள், சிவத்தம்பியின் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சி யும், தில்லைநாதனின் வள்ளுவர் முதல் பாரதிதாசன் வரை செம்பியன் செல்வனின் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மணி கள் ஆகிய நூல்கள் இவ்வகையில் குறிப்பிடத் தக்கன. இவற்றுள் செம்பியன் செல்வனின் நூலே முற்றிலும் ஈழத் துப் படைப்பாளிகள் பற்றியது. இவ்வகையில் மஹாகவி பற்றி சண்முகம் சிவலிங்கம், எம். ஏ. நுஃமான் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் குறிப்பிடத் தக்கன. தனிப்படைப்பு என்ற வகையில் மஹாகவியின் சாதாரண மனிதனது சரித் திரம் பற்றி சண்முகம் சிவலிங்கம் எழுதிய விரிவான விமர் சனம் ஈழத்து விமர்சன முயற்சிகளுள் மிக முக்கியமான கவனத்துக்குரிய ஒன்ருகும். இவைதவிர ஈழத்தில், இலக்கிய விமர்சனத்துறையில் ஆ. சிவநேசச் செல்வன், கலா பரமேஸ் வரன், சித்திரலேகா, மனேன்மணி சண்முகதாஸ், மு. நித்தி யானந்தன், செ. யோகராசா, துரை மனேகரன், க. சண்( கலிங்கம், எஸ். எம். ஜே. பைஸ்தீன், கே. எஸ். சிவகுமாரன், எம். எச். எம். சம்ஸ், சி. மெளனகுரு முதலியோரும் குறிப்பி டத்தக்க முயற்சிகள் செய்துள்ளனர்.
சமீப காலமாக ஈழத்து இலக்கிய விமர்சன முயற்சி களில் மொழியியல் அறிவின் செல்வாக்கையும் காண முடி கின்றது, இலக்கியம் மொழியினல் ஆகும் ஒரு கலை என்ற வகையில மொழியியல் அறிவு இலக்கிய விமர்சனத்தில் நன்கு பயன்பட முடியும். மேலைத் தேயங்களில் இத்துறை நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் அண்மையில் வெளிவந்த முத்துச்சண்முகனின் இலக்கியக் கோட்பாடு என்ற நூலில் மொழியியல் அறிவு நன்கு பயன்பட்டுள்ள தைக் காணலாம். ஈழத்தில் கலாநிதி சண்முகதாஸ், எம். ஏ. நுஃமான் ஆகியோர் இத்துறையில் சிறு முயற்சிகள் செய்துள் ளனர். சண்முகதாஸின் ஆக்க இலக்கியமும் மொழியியலும், கவிஞரும் மொழியும், எம்.ஏ. நுஃமானின் ஆக்க இலக்கியமும் நடையியலும், ஈழத்து நாவல்களின் மொழி முதலிய கட்டு ரைகள் இத்துறையில் ஆரம்ப முயற்சிகளாகக் கருதத்தக்கன.
1 4

பின்னிணைப்பு
ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு உதவும்
நூல்களும் சிறப்பிதழ்களும்
நூல்கள்
கணபதிப்பிள்ளை, சி. இலக்கிய வழி, சுன்னகம், 1964. கணபதிப்பிள்ளை மு., ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள், சென்னை, 1967. கணேசையர், ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், யாழ்ப்பாணம், 1939 கந்தையா வி. சீ. மட்டக்களப்புத் தமிழகம், யாழ்ப்பான்னம், 1964 குமாரசாமிப்புலவர், தமிழ்ப்புலவர் சரித்திரம், யாழ்ப்பாணம் 1916 சதாசிவம் ஆ, ஈழத்துத் தமிழ்க்கவிதைக் களஞ்சியம், கொழும்பு, 1964. சதாசிவம்பிள்ளை ஆர்னேல்ட், பாவலர் சரித்திர தீபகம், யாழ்ப்பாணம், 1886. - சலீம் ஏ. ஆர். எம்., ஈழத்து முஸ்லீம் புலவர்கள், கொழும்பு, 1962 சிவத்தம்பி, கா., தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், சென்னை, 1968. . சிவத்தம்பி கா. ஈழத்தில் தமிழ் இலக்கியம், சென்னை, 1978. சுப்பிரமணியம் நா., ஈழத்துத் தமிழ் நாவல்கள், நூல்விபரப் பட்டியல் யாழ்ப்பாணம், 1977. சுப்பிரமணியம் நா., ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கியம், யாழ்ப்பாணம், 1978.
செந்திநாதன் கனக. ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, கொழும்பு, 1964. செல்வராசன் சில்லையூர், ஈழத்தில் தமிழ்நாவல் வளர்ச்சி, GoF 6ör&sor 1 067. செம்பியன் செல்வன், ஈழத்துச் சிறுகதை மணிகள், அயாழ்ப்பாணம், 1973,

Page 65
சொக்கலிங்கம் க., ஈழத்துத் தமிழ்நாடக இலக்கியம், யாழ்ப்பாணம், 1978, சொர்ணலிங்கம், ஈழத்தில் நாடகமும் நானும், யா ழ்ப்பாணம், 196 நடராசா எவ், எக்ஸ். சி. ஈழத்துத் தமிழ்நூல் வரலாறு, கொழும்பு, 1972. பூலோகசிங்கம். பொ., தமிழிலக்கியத்தில் ஈழத்தறிஞர் பெருமுயற்சிகள் கொழும்பு, 1971.
Sivakumaran K. S. Tamil writings in Sri Lanka. Colombo, 1974.
Cassiee Chetty Symon, Tamil Plutarch, 1859.
சிறப்பிதழ்கள்
இளந்தென்றல், தமிழ்ச்சங்கம், கொழும்பு வளாகம் 1971-7 தமிழ் சாகித்திய விழா மலர், இலங்கைக் கலாசாரப் பேரவை வெளியீடு கல்முனை1975. தமிழ் இலக்கிய விழா மலர், இலங்கைக் கலாசாரப் பேரவை யாழ்ப்பாணம், 1972.
தினகரன் நாடக விழா மலர், கொழும்பு, 1969. நாவலர் மாநாட்டு விழா மலர், ஆறுமுக நாவலர் சபை யாழ்ப்பாணம், 1969. பாவலர் துரையப்பாபிள்ளே நூற்றண்டு விழா மலர், நூற்முண்டு விழா சபை வெளியீடு, யாழ்ப்பாணம், 1972. புதுமை இலக்கியம், அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் மக1 நாட்டு மலர், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பு, 1962.
புதுமை இலக்கியம், தேசிய ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மாநாட்டு மலர், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பு, 1975மறுமலர்ச்சிக் காலம், இலக்கியச் சிறப்பிதழ். கலைப் பெருமன்றம் தெல்லிப்பளை, 1973,

Tr

Page 66


Page 67
இந்நூல் இருபதாம் நூற்ருண்டு ரீழத் பொதுவான வளர்ச்சிப் போ
ன்ேறது.
பரங்கழகப் பரீட்சைகளுக் பாகப் பயிலும் மானவர்களு தில் அக்கறையுள்ள பொது
நவீன தமிழ் இலக்கியம் பற் ஈழத்தவம் அவ்வாத தமிழ் தக்கமுறையில் இந்நூல் அை

துத் தமிழ் இங்கியத்தின் க்குகளேத் திரட்டிக் கூறு
குத் தமிழை ஒரு பாட கும், ஈழத்து இங்கியத் வாசகர்களுக்கும் ஈழத்து 1றி அறியும் ஆர்வமுடைய வாசகர்களுக்கும் பயன்படதி
மந்துள்ளது: