கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வருண நிலை

Page 1
சிங்கை ஜனனதுர
இ. ம. எ
Ali
குருகுலசேகர தைரிய
இயற்றப்பு
(R. M. T
Tobi:
a lines
JAFF
195,
===========

কেরছিল।
தன் பத்திராதிபர்
Po ரியர்
芷岛
முதலியாரவர்களினுல்
ட்டது.
y
John
TE
L
NA.
7.
=====స్ట్====== ہے۔

Page 2
அ5ாதி
Caste S
வருண
Me:O
|oთა
சிங்கை ஜனனதுாத
இ. ம. ை
Alia
குருகுலசேகர தைரியழு
இயற்றப்ப

திகம,
yStem.
து
தன் பத்திராதிபர்
2தரியர்
S தலியர்வர்களினூல்
ட்டது.
ఏడి Fಾb 50,

Page 3
அச்சுப் பதிவு :
பூரீ சண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம்.

அ5ாதிகம.
Caste System.
முகவு  ைர.
வருண நிலை.
இப்பூவுலகின் சண் னுற்பவித்து அட்டதிசைகளில் பரம்பியிருக்கும் மானிடர் எத்தனையோ கோடானுகோடி யென மதிக்கொணுது. காலத்திற்குக் காலம் அவதி மர ணத்தினுலும் யுத்த அக்கிரமத்தினுலும் மாண்டு பூமாதேவி யின் பாரத்தைச் சாந்தியாக்கினவர்களின் தொகையையுங் கணிப்பதரிது. மானிடருள் இரு வகுப்பினருளர். இவரை ஆண் பெண்ணென்ருர் சான்ருேர் ஆனது பற்றி மானி டருள் இரு சாதிகளன்றி மறுசாதிகளிலரென ஞானிகளுப தேசிக்கின்றனர். இட்டார் பெரியோ ரிடாதா ரிழிகுலத் தோரென வேறு சாஸ்திரிகள் சாதிக்கின்றனர். அதாவது, புண்ணிய வழிபாட்டி லொழுகுவோர் மேற்குலத்தவர், அதுர் மார்க்கத்தில் துடியாட்டஞ் செய்வோர் இழிகுலத்தவரென் றர்த்தமாகும். இன்னும் இந்திய இதிகாசங்களை விரித்துச் சீர்தூக்கி வியாக்கியான ஞ் செய்யுங்கால் ' சாதியேது காணும் ஆண்டே சைவமேதுகாணு ' மென்ற சூத்திரத்தி லடங்கி யிருக்கின்றது. 1 நாற்பாற் குலத்தில் மேற்பா லொருவன் கற்றிலனுகிற் கீழிருப்பவனே,' யெனத் திரு வள்ளுவநாயகா திருவாய் மலர்ந்தருளி யிருக்கின்றனர். இது கல்விமான்களே யுயர்குலத்தவர். கல்லாத மாந்த ரிழிகுலத்தவரெனுந் தாற்பரியத்தை நன்ருய் விளக்கிக் காட்டுகின்றது.
இந்தியாவிற் பல்லாண்டுகளாய் நாம் வசித்தோம். பல வகுப்பினருடன் சகவாசஞ் செய்தோம். வருண நூற்

Page 4
- 2 -
களைக் கற்றுணர்ந்தோம். பேழைதனைப் போல் வயிறு கொண்ட பார்ப்பார் பிழைப்பதற்குச் சாதிபேதத்தைக் கட்டி வைத்தாரென நம்மறிவிற் புலப்படுகின்றது. இச் சாதிபேத விஷயமே இந்திய இலங்கைச் சுதேசிகளைத் தலைகீழாய் விழுத்திவிட்டது. எக்காலமும் பதினுறு பிராய மார்க்கண்டேயர் போலிராமல், சாதிப் பேதத்தினுற் கேடுற் றுப் படாதபாடுற்றுச் சீதேவியாகிய சுதேச நாடிழந்து, மான் வேட்டையாடச் சென்றவன் புலி முகத்தில் தென் பட்ட விதமாய்ப் பரிதாப நிலையிலாகினர். ஐயையோ ! எம்பெருமானினி யென்செய்வன் !!
இப்பரிதாப மொருபாலிருக்கச் சாதிக் கோட்பாட்டின் நிலை அதிக அநுதாபத்திற் கிடமாயிருக்கின்றது. தற் காலத்தில், கீழ்த்தரமாய் மதிக்கப்படா நிற்கின்றவர்கள் இந்து இதிகாச விதிப்படி அந்நிரையைச் சார்ந்தவர்க ளல்லர். அன்றியும், சில வருணப் பெயர்கள் நசுங்கித் தேய்ந்து ஒடுங்கி முடங்கியு மிருக்கக் காண்கிருேம். இவ் விஷயத்தைச் சுருங்கச் சொல்லி விளக்குவதற்கே இந்நூலை யியற்றத் தலையிட்டோம்.
* பொருந்திய குறைகணுேக்கிற் புனைந்தமட் கலத்தைப்பரா
தருந்திய வமுதுநன்றே லருத்தியோ டருந்தல் செய்வார். "
இவ்வசன நடையில் யாது குறைகளைக் கற்றேர் கண் டால் ஏந்திய மட்பாத்திரத்தைப் பாராததிலடங்கிய அமிர் தம், உண்பதற் கின்பமாயிருப்பினதை யாசையோடருந்து வார்களாக,

மரபுங் கிளையும்.
மனுக்கோட்டின் பிரகாரம் நான்கு வருணங்களுள. அவை: பிரம, சத்திரிய, வைசிய, சூத்திரரேயாம், மனு வென்பவர் பிர்மாவின் புத்திரரென்றும், மாணவ நூலை யியற்றினவரென்றும் இந்துக்களின் கொள்கை. இந்நூல் அட்டாதச தரும நூல்களிலொன்று. மேற்கூறிய வருணங் களுள் நாணுவித பிரிவுகளுமுள.
«ჯrლოლscთgivვადმყო:
பிராமணர்.
பிரம வென்பது பிராமணர், பார்ப்பார், இரு பிறப் பாளர் (wice born), அந்தணரேயாம். இவர்கள் நான் முகக் கடவுளின் முகத்தினின் றுற்பத்தியானபடியால், ஏற்ற மேல்குல முய்ர்ந்தோரென மனுக்கோட்டிற் சொல்லப்பட் டிருக்கின்றது. இவ்வித யோக திசையில் ஜென்மித்த பிரா மணரின் தொழில் யாதெனப் பின்வரும் பா இன்பமாய்க் கூறுகின்றது :-
"ஒதலே பிறர்க்குத் தாமே யோதுவித்திடுதல் மிக்க
வேதவேள்விகளியற்றல் வேட்பித்தல் வேட்டபேர்க்கே ஈதலீந் திடுவோர் தம்பா லேற்றிட லேற்பதாக வாதிநான் மறையோர் செய்யுமறு தொழிலாகு மன்றே.'
செபதபதானஞ் செய்தல், மற்ருேரை யவ்வழிப்பாட்டி லமைத்தல், வேதத்தை விளக்கிக் காட்டல், தருமம் புரித லென்பனவேயாம். இத் தொழில்களைச் சாதிபேதமின்றி யும், வறியோர் சிறியோரென்றும் பாராது, மன்னுயிரைத் தன்னுயிர்போல் பாவித்து வருபவன் அந்தணன் அல்லது குருவென்ற வரிய நாமதேயத்திற்குரியவன். செல்வமின் றித் தொல்லைப்பட்டு வள்ளுவத் தொழிலிலும் பறைசாற்றும்

Page 5
- 4 -
வேலையிலும் அமைக்கப்பெற்ற இனபந்துகளாகிய பறை யரை, ஈனரென் றெண்ணியவர்களைக் கண்டவுடன், குண் டியைக் காட்டித் தடல்பிடல் செய்யும் பிராமணர், நான் முகக் கடவுளின் திவ்விய முகத்தினின் றுறித்தாரென்பது இந்தப் பொய் கந்தப்புராணத்த்ற் கிடையாதென்ற பேச் சுக் கிலக்காயிருக்கின்றது.
சத்திரியர்.
சத்திரியர் நான்கு வருணத்தவருள் இரண்டாம் மர பினர். இவர்கள் இராஜரீக ராணுவ குலத்தோர். இவ் விஷயத்தைக் குறித்து நிகண்டை விரித்துப் பரிசோதித் துப் பார்த்தால், இவர்கள் குருகுல வேந்தரென்றும், கெளரவர், பெளரவர், பரதரென்றும் அங்கு காணப்பட் டிருக்கின்றது. " பரவுபாரதரேமற்றப் பெளரவரென்னும் நாமங் குருகுல வேந்தர்க்காகுங் கெளரவரென்றுங் கூறும்” கெளரவர் குருராஜனின் வமிசத்தவர்கள். குருராத்தா அல் லது குருநாட்டில் (டெல்ஹி) நடந்த யுத்தத்திற் கெளரவர் தோல்வியடைந்து, மத்திய இந்தியாவிலடைக்கலம் புகுந் தனர் அதன் பின்னர் தென்னிந்தியாவை நோக்கிச் சென் றனர். இவர்கள் இராணுவ சாஸ்திர விற்பன்னரானபடி யால் இலங்காபுரியைப் பல்லாண்டுகளாய்ப் பரிபாலனஞ் செய்த பராக்கிரமபாகு வென்பவர் இவர்களை வரவழைத்து, இலங்கைப் பாதுகாப்புக்காகக் கரையடுத்த நாடுகட் கதி பதிகளா யிவர்களை நாட்டினர். இவ் விஷயத்தினுலிவர்கட் குக் கரையாளரென்னுங் காரணப் பெயர் சூட்டப்பட்டது. கரையாளரென்னுந் நாமத்தை ஆங்கிலேயத்தில் பாஷாந் தரஞ் செய்யுங்கால் (Navel forces) என்ற அருத்தத்தைத் தரும். மஹா வித்துவான் சைமன் காசிச்செட்டி (Simon Cassie Chetty) அவர்சளரங்கேற்றிய அரிய பிரபந்தத்தில்,

- 5 -
கரையாளர், சத்திரிய வருணத்தைச் சார்ந்தவர்கள்; நாடு நகர்களை யாண்டு பரிபாலனஞ் செய்தவர்களென அவர் கூறியிருக்கின்றனர். ஆனது பற்றி யிவர்கள் குருகுல வமிசத்தவர்கள், ' கண்ணுடையரென்பவர் கற்றேர் முகத் திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்,” தாஸ் பூஸ் தஞ்சா வூர் ஈஸ்பூ சென்று இதிகாசங்களைக் கற்றுணரா மாந்தரி னிரு விழிகளிரு புண்களாம். இப் புண்களையுடையோர், (5Tsii (5iGs is 56 it (5 (9 GL IITsir (5.19 (The monkey praises its own tail) யென்றவாருய் இதிகாசங்களை வேற்றுமைப் படுத்துவர். சம்பூரண கல்விக் கண்களையுடையோர், யாது மரபினராயினும் சத்தியந் தவருர். இவ்வகுப்பினருள், தெல்லிப்பளை வாசியும் ஞானுந்த புராண ஆசிரியருமாகிய மஹா வித்துவான் தொன் பிலிப்பு அவர்களொருவர். யாழ்ப்பாணக் கெளரவ அல்லது கரையாளர் மரபுதித்த தொன் தியோகு முதலியாரைக் குறித்து, அவ்வித்துவான் வசனித்த குறிப்பு யாதெனில்:-
" அல்லலுறு மஞ்ஞானத் திமிரந்தேய வருண்ஞான விசுவாச விளக்க முன்னூற், புல்லிய சொற் சிறிதெடுத்து விருத்தப் பாவாய் போர்ந்தவு ரோமாபுரியின் சங்கத்தேற, தொல்லுலகிலுயர்ந்தகுரு குலத்துமன்னன் தொன்தியோ கெனுமுதலி முயற்சியாலே, தெல்லிநகர் வேளாளன் தொம் பிலிப்புச் செந்தமிழிற் காப்பியமாய்ச் செய்தான் மன்னே.”
மேற்கூறிய உயர் குருகுலமன்னன் தொன்தியோகு முதலியா ரெவரெனப் பலருமறிந்த விஷயமே ருேமாபுரி மந்திரி சபையோர்க் (Senators) கிலக்காய்ப் பறங்கிக்கார, டச்சுக்கார, ஆங்கிலேய அரசினர் மத்தியில் இலங்காநின்ற கெளரவ திசவீரசிங்கமுதலியார், புவிராசசிங்கமுதலியார், புவிமன்னசிங்கமுதலியார், அரசுநிலையிட்டமுதலியார், எதிர் மன்னசிங்கமுதலியார் மற்றும் பாரிய பிரபுக்களின் பூர்வ கோத்திரத்தைக் தொன் தியோகுமுதலியார் சார்ந்தவர். சிங் களவர், பறங்கிக்காரர் ராஜரீக செங்கோல் செலுத்துங்

Page 6
سس- 6 سسسس
காலங்களிற் கரையாளரென்னுங் கெளரவ காவற்படை வகுப்பினர் திருகோணமலையில் அணிவகுக்கப்பட்டிருந் தனர். பறங்கிக்காரருக் கெதிராய் டச்சுக்காரர் படையெடுத் தார்கள். பறங்கிகளினு லெதிர்த்து யுத்தம் பொருதமுடி யாது, கோட்டையின் திறவுகோலைக் கரையாளுஞ் சேனை களிடம் வாங்கித் திரிகோணமலையை யொப்புக் கொள்ளலா மென்று ஜெயசில டச்சுக்காரரைக் கெஞ்சினர். கரையா ளுங் கெளரவ சேனைக ளிருந்தபடி யிருக்கட்டும். அவர் கள் சுத்த வீரமரபினர். நீங்க ளூரைவிட்டகல வேண்டி யது. அல்லாவிடில், உங்களையுங் கோட்டை கொத்தளங் களையும் சட்டிப் பீரங்கிகளினுல் சுட்டெரிப்போ மென்று டச்சுப் படைத் தலைவன் வற்புறுத்தவே, பறங்கிகள் காய்ச் சலும் பீச்சலுங் கொண்டு ஊரை விட்டுப் பறந்தனரென் றும் கெளரவ சைனியங்கள் முன்போலவே தங்கள் ராணுவ உத்தியோகத்தைப் பார்த்து வந்தார்களென்றும் 1639-ம் வடு டச்சுத் தளாதிபன் விடுத்த நிருபத்தில் வரையப்பட் டிருக்கின்றது.
யாழ்ப்பாணக் குருகுலத்தவர்களைப் பற்றி ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் வசித்த அன்னிய முதி யோர்க்குத் திண்ணமாய்த் தெரியும். எழுவாய் பயனிலை மற்றும் இலக்கிய இலக்கண நூல்களைச் செப்பறக் கல்லாது, ஐரோப்பியத் தொப்பியையுஞ் சல்லடத்தையும் மாட்டிச் செருமிப் பெருமை பாராட்டி ஞாயசாத்திரத்தைத் தப்பறக் சற்ருேமென்றுறுமி வற்புறுத்தும் தம்பிகளுக் கிக்கருமம் கிறீக்குப் போலிருக்கும்.
இது நிற்கக் காலப்பிசகினுற் கெளரவர் யுத்தநிரையை விட்டுப் படிப்படியே விலகி யுத்தியோகம், வர்த்தகம், கமம் முதலிய தொழில்களில் முயன்றனர். சென்னபட்டணம், புதுச்சேரி, காரைக்காலென்னு மிந்திய நகரங்களில் இவர் முதலிப் பட்டத்துடனே கருத்தரித்துப் பிறந்து மரணமடை கின்றனர். நாகபட்டணப் பகுதிகளி லிவர் மரபினருக்குப்

- 7 -
பட்டணச் செட்டிகளென்ற பட்டப் பெயர் பிறவியிலேயே சூட்டப்படா நிற்கின்றது.
மன்னராயிருந்தோர் வகை தப்பிப் போயின், சீவனத் திற்காக வேறுந் தொழில்களிலொழுகுவது வழமை. குரு குலத்தவரின் நிரை யவ்வாறிருப்பினும், சிறைத் தொழில் அடிமைத் தொண்டு வேலைகளி லிவர்கள் எக்காலத்திலு மமைந்ததாக யாம் கேள்விப்பட்டதில்லை. மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலுந் தான்மிக்க வெண்மை 占@ மென்ருர் சான்ருேரொருவர்.
பெளரவர் - பரதர்.
பெளரவர் கெளரவரின் வமிசத்தவர். இவர் குரு அல் லது புருவென்னும் ராஜனின் சந்தானப்பதிகள். (fOescendants of the Ruru or Puru dynasty), குருவென்பவர் அங்கி திரன் புதல்வரி லொருவர். (The name of one of the tline SO:4s of 91 E. fij Sir the first monarch of Jambu Dwipa) ஜம்பு துவிப்பாவென்னும் நாடு சிறிங்கமலைக்கப்பால் வட திசையிலிருக்கின்றது. இதைக் குருவரசன் பல்லாண்டு ó56 IriT uii Tiriĝi flui பரிபாலனஞ் செய்தவர். புருவென்பவர் சந்திரகுலத்தின் ஆருவது சந்ததி மன்னன். (The name of a Sig Fise sixth of the lunar race) 35 நிற்கப் L I Jg5 ரென்னும் மொழியை வேளாள குலத்துதித்த V. விசுவ நாதபிள்ளை யியற்றிய தமிழ் ஆங்கிலேய அகராதியிற் பார்வையிட்டால், துரியோதனன் குலத்தோர், நெய்த நில மாக்கள் Kiti habitants of Maritime districts) என்ற அருத் தங்களங்கு விரிவாய் வரையப்பட்டிருக்கின்றன. கெளர வரைப் போலிவர்களும் நாடுநகரிழந்து, அன்னிய அரச ரின் இராணுவங்களி லமைக்கப்பெற்று, நெய்த நிலமதாவது கடல் சார்பு நாடுகளின் காப்புச் சேனைகளாய் நியமிக் ஈப் பட்டனர். " மன்னராயிருந்த பேர்கள் வ ைக 5 9 in

Page 7
- 8 -
போவாராகில் பின்னையு மாரோவென்று பேசுவாரேசு வாரே. அப்பிரகாரமே இதிகாசங்களைச் சற்றுங் கற்றறியா முழுமூடர் திங்கள் குலத்துங்க சீலராகிய பெளரவரின் நாமத் தைக் கசக்கி யொடுக்கி நசுக்கிப் பரவரெனும் வன்மொழி கூறித் தூற்றிப் பழிப்பது திங்களைப் பார்த்து தாய் தொங்கிக் குரைப்பதற்குச் சமானமென்றறிக.
வைசியர்.
வைசியர் மூன்ருஞ் சாதி வகுப்பினர். பிர் மா வின் துடையினின்றிவர்க ளுதித்தவர்களாம் இவர்களுக்கு. இப் பர், எட்டியர், மன்னர், பின்னர், வணிகர், வாணிகரெனும் நாமதேயங்களுஞ் சூட்டப்பட்டிருக்கின்றன. இவர்க ளறு தொழிலோர். அதாவது :-
* மகந்தனைப் புரிதல்மிக்க மறைதனை யோதலீதல்
சகந்தனி லுளமருந்து சரக்கொடு மணிபொன்வெள்ளி உகந்த வாணியங்கள் செய்தலுழவொடு பசுக்கள் காத்தல் அகந்தனில் வணிகர் தங் களறுதொழி லாகுமன்றே.”
கோவைசியர், தனவைசியர், பூவைசிய ரென்றிவர்களுள் மூவகுப்பினருளர். கோமுட்டி, பொன் வாணியர், செக்கு வாணியர் மற்றுஞ் செட்டுத்தொழில் புரிவோர் வைசிய குலத்தைச் சார்ந்தவர்களல்லர்.
சூத்திரர்.
பிரம, சத்திரிய, வைசியரெனும் முக்குலத்தோர்க் கேவல்புரிவோர் சூத்திரராம். வேளாளர் சூத்திர வகுப் பினரெனப் பலருஞ் சாதிக்கின்றனர். இந்தியாவிலும் அவ்

سست 9 سس
வாறிவர்கள் வழங்கப்பட்டுப் பிள்ளையெனும் வர்ணிப்பை பையுஞ் சிங்கார லங்காரமா யணிந்திருக்கின்றனர். அவ் விதக் கொள்கை நமக்குப் பேதமாய்த் தோன்றுகின்றது. வேளாளர் பூவைசியரென்றே நம்மறிவிற் புலப்படுகின்றது. ஆணுல் வீரமாமுனிவரின் சதுரகராதியைத் தடவிப் பார்த் தால், வேளாளர் சூத்திர ரென்றங்கு விசித்திரமாய்க் காணப்பட்டிருக்கின்றது. சூத்திர ரெனும் மொழிக்கவர் அருளும் ஏகார்த்த பதங்கள் யாதெனில் :- அயன் பதத் துதித்தோர், உழவர், களமர், காராளர், வேளாள ரென் பதேயாம் அன்றியும் வேளாளரைப் பற்றி உலகநாத பண்டிதர் அருளிச் செய்த குறிப்பைக் கேண்மின் :-
* உழவொடு பசுக்கள் காத்தலுற்ற வாணிபங்கள் செய்தல்
மொழிதரு மறையோராதி மூவர்க்கு மனுகூலஞ்செய் தொழில்பல வியற்றநான் குஞ்சூத்திரர் தொழிலதாகும் வழிமுறை தவறினன்னுேர் வளங்கு சண்டாளராவார்."
சிவியார்.
இந்தியாவைச் சேர்ந்த காரைநகர்க் கருகாண்மையில் சிவிகையூரெனு மோர் கிராம மிருந்தது. இவ்வூரை நெறிநீதி தவருமல் மன்னுயிரைத் தன்னுயிர்போல் பாவித்து அரசாண்டுவந்த அதிபதி சிவிகையரசனென் றழைக்கப்பட்டார். இவரின் மந்திரி தந்திரி மற்றுந் தல மைக்காரர் சிவியாரென்றழைக்கப்பட்டார்கள். ஏனென்ருல் இவர்கள் பல்லக்கிலேறி இறைவன் கட்டளையை முறைமை யோடு நடாத்தி வந்தவர்கள். சிவிகை நாட்டைப் பறங்கிக் காரர் பிடிக்கவே, அரசன் சிறைச்சாலையிலடைபட்டு மாண்ட னன். அவரின் மந்திரி தந்திரிகளாகிய சிவியார், தங்கள் குடிபதிகளுடன் யாழ்ப்பாணத் திடல்நாட்டிற் குடியேற்றஞ் செய்தனர், இவர்களின் குணு திசயங்களை யாங் கTைடுணர்ந்

Page 8
- 10 -
தோம். " தலத்தளவே யாகுமாந் தான் பெற்ற செல்வம், குலத்தளவேயாகுங் குணம்.” இவர்கள் சிவிகை அல்லது பல்லக்குச் சுமக்குஞ் சாதியென்று நகைப்போர், பேர்சிவல் பாதிரியார் (Revd Percival) அரங்கேற்றிய, இந்திய குடி யேற்றப் பிரபந்தத்தைச் சற்றுக் கற்றுணர்வார்களாக.
கம்மாளர்.
கம்மாளரென்பவர், கருமகாரர், சிற்பகாரர், சித்திர விற்பன்ன நாகரீக வித்தைபுரிபவரேயாம். இவ்வித புனித வேலை புரிபவர், தட்டார், கொல்லர், கன்னுர், தச்சரென் றழைக்கப்படாநிற்கின்றனர். சென்னை மாநகரின் கண்ணே, ஆங்கிலேய தமிழ்ப் பாஷைகளைப் பழுதறக் கற்றுணர்ந்து தமிழ் ஆங்கிலேய அகராதியை யரங்கேற்றிப் பிரவல்ய கீர்த்திப் பிரதாபம் படைத்த C. விசுவநாதபிள்ளையவர்கள் கம்மாளரை விசுவப்பிராமண ரென்றும், விசுவகரும ரென் றும் தமது நூலிற் சாற்றியிருக்கின்றனர். ஆங்கிலேயத்தில் அவர் வரைந்திருப்பது யாதெனில் :- கம்மாளன் is the son of Brahma and architect of the Gods. (5th D.T6T Sir TDT 66ir புத்திரனும், தேவர்களின் சிற்பாசாரியு மென்பதேயாம். நான்முகக் கடவுளின் வதனத்தினின்று பிராமண னுற்பத்தி யானவன். நான்முகக் கடவுளென்பவர் பிரமா. கம்மாளன் பிரமாவின் புத்திரன். ஆனதுபற்றிப் பிராமணனுக்கும் கம்மாளனுக்குமுள்ள வித்தியாசமென்னே?
நழவர்.
நழவரெனும் நாமம் பெருந் தப்பறை இவர்கள் நழு விகளென்று காலஞ்சென்ற பிரவல்ய அத்துவக்காத்து

- 11 -
பிறிற்ருேத்துரையவர்கள் (Britto) தாமியற்றிய, யாழ்ப்பாண வைபோக மாலையில் தெளிவாய்க் காண்பித்திருக்கின்றனர். இவர்கள் தமிழ் இராணுவத்திற் சிப்பாய் வேலை (Sepoys) நடாத்தினவர்கள். உத்தியோகத்திற் கதித்தோர் தங்கள் தத்துவத்தை மிதமிஞ்சிக் காட்டினபடியால், இவர்கள் இராணுவத்தை விட்டு நழுவிச் சான்றரெனுஞ் சாதியை நம்பியவர்கள் மத்தியில் வாசஞ் செய்தனர். சான் ருர் மர மேறுஞ்சாதி, உலகநாத பண்டிதர் சான்ரு ரைப் பற்றிச் சாற்றுவதைக் கேண்மின் :-
* அதுலமாமரர் சாதி யரிவையைப் பெருவெள்ளாளன்
புதுமணம் புணரவந்த புத்திரர் சான்ருராகி முதுபனையிஞ் சிற்றுாக்கு முட்டியில் முட்டியூறு மதுவினைக் காய்ச்சி விற்றுவரும் பொருள் விரும்பிவாழ் 6t. ''
இப்பாவின் தாற்பரியம் யாதெனில்:- ராஜகுலத் துதித்த புத்திரியைப் பெரும்வேளாளன் மன்றல் செய்து பெருகின சந்தானத்தார் சான்ருரென் றழைக்கப்பட்டனர். ராஜகுலத்திலிவர்கள் கலந்ததாலே, நாடாரென்னும் நாம தேயத்தையு மிவர்கள் சூட்டப் பெற்றனர். யுத்தராணு வத்தை விட்டுவிலகின நழுவிகள், யுத்தவீரவகுப்பினரென் பதற்கு யாதோர் ஆட்சேபணையுங் கிடையாது. சான்றரை நம்பி அவர்களுடன் சம்மந்தஞ் செய்தபடியால் நழுவி களுக்கு நம்பிகளென்ற பெயரும் வழங்கி வருகின்றது. மரமேறுந் தொழில் நம்பிகளின் சாதித்தொழிலல்ல. இது நிற்க, மரமேறுந் தொழில் ஈனத்தொழிலோவென்று சற்று வியாக்கியானஞ் செய்வோமாக. யுத்தக்கப்பல்களை நடாத்து வோர் யார் ? பாய்மரத்தில் சற்றுப் பழுது நேரிட்டால் அதிலேறி யப்பழுதைச் சீராக்குவது யார்? யுத்த ராணுவ உத்தியோகத்தரே! பிரசண்ட மாருதப் புயலென்றும் கடும்மாரியென்றும், அந்தகாரமென்றும், வெய்யிலென்றுஞ் சிந்தியாமல் அஞ்சா நெஞ்சுடன் பாய்மரத்திலேறி யிறங்

Page 9
- 12 -
குந்தொழில் வீரசூரத்தனமாயிருக்கில், தென்னை பனை முத லி விருட்சங்களிலேறிப் பிழைக்குந் தொழில் எழிய வேலையா யிருப்ப தெங்ங்ணம் ?
பள்ளர்.
தமிழ்ப்பாஷையிலுற்பத்தியான அகராதிகளுள் வீரமா முனிவரியற்றிய சதுரகராதியே நிகண்டுடன் ஐக்கியப் பட்டுத் தமிழ்ப் பாஷையைத் தப்பறையின்றி யிப் புவிமாந் தர்க்குச் செப்புதற்கரிய அற்புதமொழிகளைச் செம்மையாய்க் காண்பிக்கின்றது. இவ் வகராதியில் பள்ள ரெனும் மொழியை யுள்ளம்மகிழ வுற்றுப் பார்த்தோம் பள்ளரென் பது உழவரென அங்கு வரையப்பட்டிருக்கின்றது. உழவ ரென்பது உழுதுண்டு வாழ்பவர். இவர்கள் ஏராளரென்றும் அழைக்கப்படுகின்றர்கள். ஏரென்பது கலப்பை. உழுபடை உழுகிறவன், மள்ளன் அல்லது பள்ளன், மேழியனென்று பேர்சிவல் (Red Percival) பாதிரியின் அகராதியில் காணப் பட்டிருக்கின்றது. இது நிற்கக் காராளரென்பவர் வேளாளர். பூர்வீக இந்திய சரித்திரங்களைப் பரிசோதித் துப் பார்த்தால், ஏராளருங் காராளருங் கிட்டின மரபின ரெனச் சொல்லத்தகும் இந்தியாவைச் சேர்ந்த காரை நகர்ச் சமீபத்திலுள்ள மேட்டில் காராளர் வசித்தார்கள். அதைச்சார்ந்த பள்ள நிலத்தில் ஏராளர் குடிபதியாயிருந் தார்கள், ஏழு வருடங்களாய் இடைவிடாது மாரிபொழி யவே, மேட்டு நிலத்தில் பயிர்செய்த காராளருக்குக் குருச் சந்திரயோக மடித்தது. பள்ள நிலத்தில் வேளாண்மை செய்த ஏராளரின் பயிர் நாசமாயிற்று. சனி.1:வானின் தயவை முன்னிட்டு காராளர் ஏராளரை (பள்ளரை)ப் புறக்கணித்து, கீழ்நிரையிற் தள்ளிவிட்டனர். அவ்வாறிருப் பினும் உண்மைக் கழிவில்லை. அண்ணன் பெருங்குலமா கில் தம்பி இழிகுலமாவதெங்ங்ணம் ?

- 13 -
அம்பட்டன்.
தமிழ் நூல்களையும் அகராதிகளையும் ஆராய்ச்சி செய் யுங்கால் அம்பட்டர், சிற்பத்தொழிலோர் மாதுக்குஞ் செக் கானுக்கும் பிறந்த சந்ததி மரபினர். (The Son of an oilpresser and a woman of the mechanic caste) 36iol(5600r 55 வர்கட்குப் பரிகாரி, பண்டிதன், மஞ்சிகன், மாசுதிர்ப்போ னெனும் நாமதேயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரி காரி, பண்டிதன், மாசுதீர்ப்போனெனும் மொழிகளை யாமிங்கு விபரிக்க வேண்டியதில்லை. சிறுகப் படித்த பெரி யோர் சிறியோர் அறிவிலிஃது இலகுவிற் புலப்படும். உலகநாத பண்டிதரியற்றிய சாதிபேத விளக்கத்திற் பின் வரும் விளக்க மிலங்குகின்றது :-
* அந்தணர் வசியர் மாதை யருமறை விதியிற்புல்க வந்தவன் பண்டிதஞ் செய் மறையவனுகி மிக்க தந்திர மருந்தினுேடு சாஸ்திரத் தொழிலும் பூண்டு முந்திய மறையோர்க்கென்று முறையினிற் பிணிகஉர்ப் Tř.**
பிணிதீர்ப்போர்க்குப் பற்பல தொழில்களுண்டு. மயிர் முளைக்குந் தானங்களில் அடி காயம் புண்ணேரிட்டால் வைத்தியர் புரியுங் கருமம் யாது? காயஸ்தானங்களிலுள்ள மயிரை வினையஞ்செய்து அங்கண் தைலம், சாந்து, பூச்சு உபநாகம் பிரயோகிப்பர். ஆனதுபற்றியே அம்பட்டரை மயிர்வினையரென்றும், மாசு தீர்ப்போ ரென்றும் தமிழ்நூல் கள் கூறுகின்றன. வெட்டுக் காயங்கள்மேல் படர்ந்திருக் கும் மயிர்களைச் சிரைத்து, வைத்தியம் செய்யும் டாக்டர் சிரோண்மணிகள் உயர்நிலையிலுள்ளவர்களாகில், அம் மாதிரி வேலைகளைச் செப்பணுய்ச் செய்யும் அம்பட்டர் கீழ் நிரையோராய் மதிக்கப்படுவது நீதியோவென்றேர் போத கர் வினவுகின்றனர்,

Page 10
60
s
பறையனெனுஞ் சொல் ட வருங்காரியஞ் சொல்வோன் தத்தைத் தருகின்றது. ப மகோற்சபங்களில் சமுகமளி பகிரங்கப்படுத்தல், அரசர் அரசர் சட்டதிட்டங்களைப் ப வெளிப்படுத்துதலென்பதேய காரியங்களை முன்னெடுத்தே இந்திரனென்ற அருத்தத்தை யுந் தருகின்றது. " மறைய மணந்திட்டானே ‘ யென்ருே திருவள்ளுவரும், ஒளவையும் சிரோண்மணிகள், "பார்ப்ப குலம், கேட்பாரில்லாமல் கீழ் சுலோகமின்னுமுலகில் வழ பறையனையுஞ் சீர்தூக்கிப் ட களும் ஒரு மரபினரென்று மாமன் மருமகன் நிரையிலிரு கல்விச் செல்வத்தில் சிறந்து வறுமைப் பெரும்பிணியால் தள்ளிவைத்தனன், இந்த குடும்பத்திலும் நடைபெற்று மாற்ற வாகடத்தில் மருந்து 3 மோர் மருந்தில் திருமாம்.
S.(

14 -
pu 6õt.
பறையறைவோன், வள்ளுவன், , புரோகித னெனும் அர்த் 1றையறைதலென்பது அரசர் த்தல், அரசர் வருகையைப்
பரிவாரங்களுமுன்னேறுதல், Iட்டாங்கிலுள்ளோர்க்குத் தட்டி 1ாம். வள்ளுதலென்பது வருங் நாதுதல். புரோகிதனென்பது யுங் குலகுருவென்ற கருத்தை வன் மங்கைதன்னை வள்ளுவன் ர் பண்டிதர் விள்ளுகின்றனர். இம்மணத்தாலுதித்த வித்துவ ார் குலத்தில் மேற்குலம் பறைக் }க்குலமாயிற்றந்தோ " வென்ற ங்குகின்றது பார்ப்பானையும் பார்க்குங்கால், இருதிறத்தவர்
சொல்லத்தகும். இவர்கள் நக்கின்றனர். ஆணுல் மாமன் து வளர்ந்தோங்கினபடியால், ) பீடிக்கப்பட்ட மருமகனைத் விபரீத மெக்குலத்திலும் எக் வருகின்றது. இப்பிணியை கிடையாது. தரித்திரமென்னு
O*