கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாம்பு நரம்பு மனிதன்

Page 1


Page 2


Page 3

உயிர்லுெளி
- பெண்களின் காதல் கவிதைகள் -
பதிபபாசிரியை சீத்திரலேகா ரெவிரலகுரு
குரியா, பெண்கள் அபிவிருத்தி நிலையம்

Page 4
உயிர்வெளி -
பெண்களது காதல் கவிதைகள் (கவிதைத் தொகுதி) டிசம்பர், 1999
துரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்.
46/2, பழைய வாடி விட்டு விதி, மட்டகளப்பு, இலங்கை.
பதிப்பாசிரியை சித்திரலேகா மெளனகுரு
9/160L : 6Italia,
அச்சகம் : நியூ கார்த்திகேயன் அச்சகம்
30/2, ஹொட்டெல் சிலோன் இன்ஸ், காலி வீதி, வெள்ளவத்தை, 65/Tզքա5ւյ - 06
விலை 60/-

தன்னாற்றலினதும் உண்மையினதும் வெளிப்பாடாகக் காதல் கவிதைகள்
இலக்கியத்தினதும் கலைகளினதும் ஒரு பொதுப் பொருளாகக் காதல் பன்னெடுங்காலமாகவே தொடர்ந்து பயன்பட்டு வருகிறது. காதலைப் பாடாத கவிஞர்கள் இல்லை எனுமளவிற்கு காதல் சகல கவிஞர்களுடைய படைப்புகளிலும் இடம் பிடித்துள்ளது. உலகின் பேரிலக்கி யங்களும் காவியங்களும் காதலைப் பற்றிப் பேசுகின்றன. ரோமியோ ஜூலியற், லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி என்ற காவியப் பாத்திரங்கள் காதலின் மாண்பை எடுத்துக் காட்டுவதற்காகவே படைக்கப்பட்டவை.
காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும் காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம் கானமுண்டாம்; சிற்ப முதற் கலைகளுண்டாம் ஆதலினாற் காதல் செய்வீர் உலகத்திரே! அதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்; காதலினாற் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்."
எனக் காதலின் மகிமையைப் பாடினார் பாரதி
காதலின் மையமாகப் பெண்களைக் கொண்டு அவர்களது வடிவழகை வர்ணித்தும், அவர்களது காதலுக் காக ஏங்கியும் அவர்கள் அளிக்கும் இன்பத்தைப் புகழ்ந்தும் பாடுவதாகப் பெரும்பாலான காதல் கவிதைகள் உள்ளன. இவ்வகையில் ஆண்கள், பெண்கள் மீதான தமது காதலு ணர்வுகளைப் புலப்படுத்துவதாக இவை அமைகின்றன.
உயிலெனி i.

Page 5
இன்னோர் வகைக் கவிதைகள், பெண்கள் ஆண்க ளின் மீதான தமது காதலைப் புலப்படுத்துவனவாக, காதல் ஏக்கத்தையும் பிரிவுத் துயரையும் எடுத்துக் கூறுவனவாக உள்ளன. ஆண்கள், பெண்களாகத் தம்மைப் பாவித்து ஆக்கியவை இவை. குறிப்பாகத் தமிழ் இலக்கிய மரபில் இத்தகைய இரு போக்குகளையே பெரும்பாலும் காணலாம். இத்தகைய காதல் கவிதைகளில் குறிப்பிடக்கூடிய ஒரு அம்சம் என்னவென்றால் இவை பெரும்பாலும் ஆண்க ளாலேயே ஆக்கப்பட்டிருப்பதாகும். ஆணுக்கும் பெண் ணுக்கும் இடையிலான காதலை ஆண்கள் பாடியது மாத்திர மன்றி பெண்களின் உணர்வுகளுக்கும் அவர்களே வடிவம் கொடுத்தனர். ஆண்களே பெண்களின் உணர்வுகளையும் சித்திரித்தனர். இவ்வகையில் காதல் பற்றிய ஒரு பக்கப் பார்வையே எமக்குக் கிடைத்துள்ளது.
இதற்கு ஒரு காரணம் பெண்கள் தமது உணர்ச்சி களை வெளிப்படையாகப் புலப்படுத்துவது பெண்மையின் பாற்பட்டதல்ல; அது தகுதியற்றது என்ற கருத்துப் பலமாக நிலவி வந்தமையாகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு கொண்ட பேசா மடந்தையாகப் பெண்ணைக் கட்டமைத்த தமிழரது ஒழுக்கவியலும், பண்பாட்டு மரபுகளும் பெண்கள் தமது இயல்பான உணர்வுகளைத் தமது குரலிலேயே வெளிப்படுத்துவற்குக் கட்டுப்பாடு விதித்தன. இத்தகைய ஒர் ஒழுக்க, கலாசார மரபின் காரணமாகப் பெண்களது காதலுணர்வுகள் இலக்கிய வடிவம் பெறுவது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது.
எனினும் இதற்கு விதிவிலக்காக பழைய இலக்கி யங்களில் சில பெண் இலக்கிய கர்த்தாக்கள் காதலையும் பெண்களின் காதலுணர்வுகளையும் பாடியுள்ளனர். ஆனால் அவை பிரபல்யப்படுத்தப்படவில்லை; அங்கீக ரிக்கப்படவில்லை; மாறாக மறைக்கப்பட்டுள்ளன.
ii உயிரறனி

இவ்வகையில் இதுவரை காலம் எமக்குக் கிடை த்தவை எல்லாம் ஆண்கள் பெண்கள் மீதான காதலைப் பாடிய பாடல்களும் அவர்கள் தம்மைப் பெண்களாக உருவ கித்துப் பாடியவையுமேயாகும். இவை ஆண் நோக்கில் பெண்களின் உணர்வுகளை வெளியிடும் கவிதைகளே யன்றி உண்மையான பெண்களின் உணர்வுகளைத் தாங் கியவையல்ல.
நான் மேலே குறிப்பிட்டவாறு பெண்கள் இயற்றிய காதல் கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் மறைக்கப் பட்டமைக்குச்சிறந்த உதாரணங்களாக அமைவன ஒளவை யாரின் கவிதைகளாகும்
தமிழ் இலக்கிய மரபில் ஒளவையார் என்ற பெயரில் வெவ்வேறு பெண்புலவர்கள் இலக்கியங்களை இயற்றி யுள்ளனர். இவர்களது படைப்புகளுக்கிடையே தெளிவான வேறுபாடுள் காணப்படுகின்றன. ஆனால் இந்த வேறு பாடுகளை அலட்சியம் செய்து ஒளவையார் ஒருவரே என நிறுவவே பலரும் முயற்சித்துள்ளனர். பொதுசன மட்டத்தில் ஒளவைப்பாட்டி என்று அழைக்கப்படுகின்ற வயது முதிர்ந்த பெண் பாற் புலவரது பிம்பம் ஒன்றே கட்டமைக்கப்பட் டுள்ளது. சங்ககால மன்னர்களுக்கிடையேதுாது சென்றும், மன்னர்களது கொடைத்திறத்தை வாழ்த்தியும் ஆத்தி தடி கொன்றை வேந்தன் ஆகிய அறநூல்களை இயற்றியும் வாழ்ந்தவராகவே இந்த ஒளவையார் கருதப்படுகிறார்.
ஆனால் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் வெவ் வேறு ஒளவையார்கள் காணப்படுகின்றனர். இவர்கள் வெவ்வேறு காலப்பகுதியைச் சேர்ந்தவர்கள். இன்று எமக் குக்கிடைக்கும் சான்றுகளை நோக்கும்போது மூன்று ஒளவையார்களை அடையாளம் காணலாம். தமிழ் இலக்கி யங்களிலேயே பழமையானவையான சங்கத் தொகை
உயிலுெளி iii

Page 6
நூல்களில் இடம் பெறும் செய்யுட்கள் சிலவற்றை இயற் றியவர் ஒரு ஒளவையார். இன்னொருவர் இடைக்காலத் தைச் சேர்ந்த ஆத்திதடி, கொன்றைவேந்தன், போன்ற அற நூல்களை ஆக்கியவர். இவ்னொருவர் சமய நூல்களை இயற்றியவர்.
சங்ககால ஒளவை இயற்றிய கவிதைகளில் கணிச மானவை காதலைப் பொருளாகக் கொண்டவையாகும். ஆனால் இந்த ஒளவையார் பற்றிப் பேசுவோர், அவர் போர், கொடை ஆகியவை பற்றி இயற்றிய பாடல்களையே அதி கம் எடுத்துக் காட்டுவர். அகநானூறு, குறுந்தொகை ஆகிய சங்கத் தொகை நூல்களில் ஒளவையார் இயற்றிய இருபத் தியாறு காதற்பாடல்கள் உள்ளன. மிகுந்த உணர்ச்சியாழம் கொண்டவை அவை. பிரிவுத் துயரின் வெவ்வேறு சாயை களையும், விரகதாபத்தையும் வெளிப்படுத்தும் பாடல்கள். ஒளவையாரை வயது முதிர்ந்த, கூன் விழுந்த பெண்ணா கவும் அறம் போதிக்கும் புலவராகவும் பிரபலப்படுத்திய தமிழ்ச் சமூகத்தில் அவரது காதல் கவிதைகள் மறைந்து போனதில் வியப்பில்லை.
இவ்வாறு இலக்கிய உலகில் பெண்களின் இயற் கையான உணர்வுகள் மறைக்கப்படுவதற்கு இன்னோர் உதாரணத்தைத் தெலுங்கு இலக்கியத்திலும் காணலாம்.
ராதிகா சந்வனம் என்ற தெலுங்கு மொழி நெடும் பாடலை இயற்றியமுதுபழனியம்மா /8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆடலும் பாடலும் கைவரப் பெற்ற கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கலைத் திறமைக்காக அக்காலத் தெலுங்கு மன்னரால் பாராட்டப்பட்டவர். கண்ணனில் மையலுற்ற ராதாவின் உணர்வுகளைக் கூறுவதாக ராதிகா சந்வனத்தை இவர் இயற்றினார். இது மிகுந்த சிருங்கார ரஸ்ம் கொண்ட நீள் கவிதையாகும். /887 ஆம் ஆண்டு
iv உயிரலுளி

கண்டு குரி வெங்கடேசு என்பவர் இந்த நெடும்பாடலை அச்சில் பதிப்பித்தார். ஆனால் அப்பதிப்பில் கவிதையின் சில பகுதிகளை நீக்கியே பதிப்பித்தார். முதுபழனியம்மா தனது குடும்பத்தின் இலக்கியப் பாரம்பரியம் பற்றிக் குறிப்பிடும் முன்னுரையும் சிருங்காரஸம் கொண்ட பாடல் பகுதிகளுமே இவ்வாறு நீக்கப்பட்டவையாகும்.
பெங்களுர்நாகரட்ouமமாஎனும் இன்னோர்கலை ஞர் இந்நெடுங்கவிதையால் வசீகரிக்கப்பட்டு, அதன் விடு பட்ட பகுதிகளையும் சேர்த்து /9/0ஆம் ஆண்டில் ஒரு மீள் பதிப்பினை வெளியிட்டார். இப்பதிப்பு வெளிவந்த போது இலக்கிய வட்டாரத்தில் மிகுந்த எதிர்ப்புக் கிளம்பியது. பாலியல் உணர்வுகளை மிக அப்பட்டமாக வெளிப்படுத்தும் ஆபாச இலக்கியம் என்று பலரும் கண்டித்தனர். இத்தகைய கண்டனங்களை முன் வைத்தவர்கள் சமூகத்தின் வைதீக மரபைச்சார்ந்தவர்கள். அவர்கள் அரசாங்கத்தை வற்புறுத்தி யதன் பேரில் /9// ஆம் ஆண்டு இந்நூல் தடை செய்யப் பட்டது. இத்தடையினை எதிர்த்துப் பதிப்பாளர்கள் தொடுத்த வழக்கும் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் எழுந்த வாதங்களும் மிகவும் சுவையானவையாகும்.
எனினும் இந்த நூலுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பிருந்தது. இலக்கிய உலகில் ஒரு பகுதியினர்இதன் சிறப்பைப் புகழ்ந்தனர். அவர்களது தொடர்ச்சியான கோரிக் கையால் இந்நூலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை /947ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.
முதுபழனியம்மாவின் ராதிகாசந்வனம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் தெளிவுபடுத்தும் விடயம் ஒன்று உள் ளது. இலக்கியத்தில் நீண்ட காலமாகவே காதலும் சிருங் காரமும் காமமும் பாடு பொருள்களாக இடம் பெற்றே வந்துள்ளன. அவை பேசப்படுவதற்கு எத்தகைய தடையும்
உயிரிலுனி - . . . W

Page 7
இருக்கவில்லை, ஆனால் இவ்விடயங்களை ஒரு பெண் பேசும்போது அது மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகிறது. பெண் களது காதலுணர்வுகளை ஆண்கள் பாவனை செய்து எழுதும்போது அதற்கு எத்தகைய எதிர்ப்பும் எழுவதில்லை. ஆனால் பெண்கள் தாமாகத் தமது உள்ளத்துணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது அவை ஆபாசம் என்றும் வக்கிரம் என்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகின்றன. இந்த இரட்டை நியாயம் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.
பெண்கள் ஆண்களது காதலுக்கும் ஆசைக்கும் உரியவர்களாகக் கருதப்பட்டனர். அவர்கள் சொந்த உணர் வும், செயலும், சித்தமும் இல்லாதவர்கள்ாகவே நோக்கப் பட்டனர். ஆனால் அவர்கள் இன்னொருவரின் ஆசையின் இலக்காகக் கருதப்படுவதற்கு எத்தகைய கட்டுப்பாடும் இருக்கவில்லை. இவ்வாறு பெண்கள் சுயாதீனம் அற்றவர் களாகவும் உடமை கொள்ளப்படுபவராகவும் கருதப்பட் டதால் ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபட்ட ஒழுக்கத் தராதரங்கள் உருவாக்கப்பட்டன. மேலே எழுப்பப்பட்ட இரட்டை நியாயம் பற்றிய வினாவுக்கு விடை பெண்பற்றிய இந்தக் கருத்தியலிலேயே பொதிந்துள்ளது. கட்டுப்பாடுக ளை மீறிச் சுயாதீனம் வெளிப்படும்போது ஒளவையாரின் காதல் கவிதைகள் பற்றி அதிகம் பேசாமையோ முதுப ழனியம்மாவின் ராதிகாசந்வனம் பதிப்புக்குதடைவிதிப்பதோ நிகழ்ந்து விடுகிறது.
பெண்களது சுய இருப்பினதும், உண்மையான உணர்வுகளதும், சுயாதீனத்தினதும் ஒரு அடையாளமாக அவர்கள் ஆக்கிய காதல் கவிதைகளைக் கொள்வோ மானால் அவற்றினுடைய தனித்தன்மைகள் எவை? ஆண்க ளின் கவிதைகளிலிருந்து அவை எவ்வகையில் வேறுபட் டவை போன்ற வினாக்களையும் எழுப்ப வேண்டும்.
vi ' ' ' . உயிலுளி

உலக இலக்கியப் பாரம்பரியத்தில் இடம் பெறும் பெண்க ளின் கவிதைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர் கள், அவை காதலுக்குரியவர்களைத் தெய்வங்களாகவோ அதிபுகழ்ச்சிக்கு உட்படுத்தியோ நோக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். கணிசமான கவிதைகள் காதலர்களை யதார்த்தமான மனிதர்களாகவே நோக்குகின்றன. காதலு டன் கூட கோபம், இகழ்ச்சி போன்ற உணர்வுகளும் இவற் றில் வெளிப்படுகின்றன. அத்துடன் சுதந்திரத்தின் மகிழ்ச் சியையும் சமத்துவத்தின் அற்புதத்தையும் இவை பாடுகின் றன. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான காதலை மட்டு மல்லாது பெண்களுக்கிடையேயான அன்பையும் சகோத ரித்துவத்தையும் பேசுகின்றன.
இங்கு குறிப்பிட்ட அம்சங்களே ஆண்களின் கவிதை களிலிருந்து பெண்களின் கவிதைகளை வேறுபடுத்து பவை, பெண்களின் உணர்வுகளை ஆண்கள் பேசும் முறை யிலிருந்து வேறுப்படுத்துபவை.
மேலும் காதலுக்குரியவர்களைப் பாடுவது மாத்திர மல்லாது காதல் பற்றிய பெண்களின் சிந்தனையையும் இவை காட்டுகின்றன. காதல் அனுபவத்தின்முரண்பாடுகள், ஒவ்வாமைகள் பற்றிய ஆழ்ந்த கருத்துகள், காதல் பற்றிய விவாதம் போன்றவையும் பெண்களது காதற் பாடல்களின் பொருளாயுள்ளன. காதலுறவின் வெவ்வேறு சாயைகள், நெருக்கம், அன்பு, கோபம், மனத்தாங்கல், வேடிக்கை எனப்பலவாறாக அவை அமைகின்றன. காதலுறவு பற்றிய எச்சரிக்கை, பிரலாபம் ஆகியவற்றையும் இக்கவிதைகளிற் காணலாம். இவ்வகையில் இவை விரிந்த பொருட்பரப்பைக் கொண்டனவாக அமைந்துள்ளன.
உலக இலக்கியப் பாரம்பரியத்தில் வெவ்வேறு காலப்பகுதி களைச் சேர்ந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து
உயிரலுனி e vii

Page 8
ஆங்கில மொழியில் ஒரு பதிப்பு வெளிவந்துள்ளது. பெண் களின் காதல் கவிதைகள் காலங்காலமாக உலகம் பூராவு pairGT 66.560-656fair 65/763 (Love Poems by Women: An Anthology Around the World and Through the Ages) என்ற தலைப்பிலான நூலினை வென்டி மல்போட் என்பவர் (Wendy Mulford) Gaspaugö76, (Helen Kidd) gaSur (667) é86ối, Julia Mishkin (Sandi Russel) (SFGði qņ of Gmv6Ů ஆகியோருடன் இணைந்து பதிப்பித்துள்ளார். இந்தத் தொகு தியிலேயே மேற்கூறிய கருத்துகளை அவர் தெரிவிக்கின் றாா.
மேற்கூறியவற்றை விட இன்னொரு குறிப்பிட த்தக்க வேறுபாடும் ஆண்களதும் பெண்களதும் காதல் கவிதைகளுக்கிடையே உள்ளது. ஆண்களது கவிதைகள் பெண்களின் மீதான காதலைப் பாடும்போது அவர்களின் உடலை மையப்படுத்துகின்றன. உடலின் உறுப்புக்களை அதீதமாகப் புகழ்ந்தும் வர்ணித்தும் பேசுகின்றன. முலை, இடை, தொடை, இதழ்,கன்னம் என்று உடலுறுப்புகளை விஸ்தாரமாக விபரிக்கின்றன. பண்டைய இடைக்காலத் தமிழிலக்கியங்களில் இப்பண்பைப் பரவலாகக் காணலாம். பெண்ணுடலை ஆசையின்மையப் பொருளாகப் பார்ப்பதும் “பெண்ணுடலை உடமையாகக் கருதும் தந்தைமைக் கருத்து
நிலையும் இதற்குக் காரணமாகும்.
ஆனால் பெண்களின் காதல் பாடல்களில் இந்த அம்சம் மிக மிகக் குறைவே. பாலியல்பையும் காமத்தையும் அங்கீகரித்து ஆக்கப்பட்ட பாடல்களில் கூட உடல் உறுப்பு களைத் தனிமைப்படுத்திப்பாடுவது பெரும்பாலும் இல்லை யென்றே சொல்லலாம். காதலுறவே அவர்கள் கவிதை களில் முதன்மை பெறுகிறது. இந்த வேறுபாடு தொடர்பாக மேலும் ஆழமாகச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.
viii உமிடிலுனி

பெண் நிலை இலக்கியம் என்றாலே அவை மிகவும்~
கடுமையான போக்குக் கொண்டவை எனவே பலரும் கருது கின்றனர். மார்க்சீயர்களது இலக்கிய ஆக்கங்கள் யாவும் வர்க்கப்போராட்டம் பற்றிப் பேசுவதாகவும் சமத்துவம், சுதந்திரம் போன்ற சுலோகங்களால் நிறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்ப்பது போன்றதே இது. பெண் நிலை இலக்கியம் வரிக்கு வரி ஆணாதிக்கத்தை விமர்சிப்பது; மிக வலுவான சொற் பிரயோகங்களும் வன்மையான படிமங் களும் கொண்டது என்று கருதுவோர் பெண்நிலைவாதிகள் அழகியல் உணர்வும் ரசனையுமற்ற வரட்டுத்தனம் மிக்கவர் கள் என்றும் எண்ணுகின்றனர். பெண்நிலைவாதத்தின் அடிநாதத்தைப் புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச்சினையா லேயே இத்தகைய கொச்சையான கருத்துகள் ஏற்படுகின் றன.
பெண்களின் காதல் பற்றிய உணர்வுகள் எவ்வாறு மறைக்கப்பட்டனவோ அவ்வாறுதான் அவர்களது அழகியல் உணர்வும், ரசனையும், நகைச்சுவையும் வாழ்வின் மீதான ஆர்வமும் மறைக்கப்பட்டுள்ளன.
வாழ்தலுக்கான அவசியமான ஆதாரங்களில் அழ கும் சுவையும் இடம் பெறவேண்டும் என்பதைப் பெண்கள் எப்போதும் வற்புறுத்தியே வந்துள்ளனர். 'எமக்கு உண்ப தற்கு ரொட்டி மாத்திரமல்ல, ரசனைக்காக மலர்களும் வேண்டும்' என்ற கருத்துப்பட அமைந்த "We want Bread and Roses too" என்ற தொடர் பெண்களது வாழ்க்கை நோக்கினை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. இவ்வாறு கூறுவோர் வரட்டுத்தனமானவர்கள் அல்லர் உணர்வும், இரத்தமும், சதையும் ஜீவனும் நிறைந்த வாழ்வின் வளத்தை உணர்ந்தவர்கள். வாழ்வின் அழகிய, ஆழமான, பன்முகத் தன்மை கொண்ட உணர்வுகளை அங்கீகரிப்பவர்கள்.
உயிரலுனி 一、

Page 9
இவ்விடத்தில் திரைப்படங்களில் இடம் பெறும் காதல் பாடல்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். இன்று மனிதரது சிந்தனை, உணர்வு, கருத்துகள் என்பதை வடிவ மைப்பதில் திரைப்படம் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக இளம்வயதினரையும் பெண்களையும் இது வெகு வாகப் பாதிக்கிறது. அவர்களது உளவியல், கருத்துநிலை ஆகியவை முதல் ஆடை, அலங்காரம், நடை ஈறாக வாழ் வின் பல்வேறு அம்சங்களிலும் செல்வாக்குச் செலுத்து கிறது. இத்தகைய பலம் வாய்ந்த சாதனம் ஒன்றின் மூலம் வெளிப்படுகின்ற காதல் பற்றிய கருத்துகளும் காதல் என்கின்ற மனித உறவு பற்றிய போலித் தோற்றங்களையும் கனவுகளையும் உருவாக்குகின்றன. பெரும்பாலான இளம் வயதினரின் காதல் பற்றிய எண்ணக் கரு திரைப்படங்க ளூடாகவும் இலக்கியம் உளடாகவும் வளர்க்கப்படுகிறது. இளம் பராயத்தினர் பரிமாறிக் கொள்ளும் காதல் கடிதங்க ளில் திரைப்படப்பாடல் வரிகள் தாராளமாகப் பயன்ப டுகின்றன.தமது உணர்வுகளையும் உறவுகளையும் அடை யாளம் காண்பதற்கு அவர்களுக்குத் திரைப்படங்கள் வழி காட்டுகின்றன். இதன் விளைவு நடைமுறைக்கு ஒவ்வாத முடிவுகளும் பிறழ்வுகளுமாகும்.
இப்போக்கிற்கு மாறாக பெண்களது வாழ்க்கை நோக்கு, உறவுகள் பற்றிய பார்வை, அவர்களது நேசத்தின் பரிமாணங்கள் என்பவற்றையும் இக்காதல் கவிதைகள் உணர்த்த வல்லன.
பெண்களது சுயாதீனம், தனித்துவம்,சுய இயல்பு, அடையாளம் ஆகியவை பற்றிய சிந்தனைகள் இன்று மேலோங்கி வருகின்றன. இத்தகைய ஒரு பின்னணியி லேயே பெண்களது இலக்கியம் என்ற கருத்தாக்கமும் வளர்ந்தது. குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களிடையே பெண்கள் அமைப்புகளும் பெண்களது கலாசாரச் செயல்
Χ இமிடிலுளி

வாதம் பற்றிய கருத்துகளும் விவாதங்களும் தோன்றத் தொடங்கியிருக்கும் தழலிலேயே பெண்களது காதல் கவிதைகள் என்ற இத்தொகுப்பும் வெளிவருகின்றது. பெண்கள் தமது சுய உணர்வுகளுக்கும் அனுபவங்களு க்கும் சிந்தனைகளுக்கும் கலைவடிவமும் மொழிவடிவமும் தருவதும் அவை பொதுத்தளத்திற்கு வருவதென்பதும் முக்கியமானதாகும். அவர்களது தன்னாற்றலையும் சொந்த க் குரலையும் காட்டும் சாதனங்களாக இவை அமையலாம்
இத்தகைய ஒரு கருத்தோட்டத்தின் பின்னணியி லேயே தமிழில் பெண்களால் இயற்றப்பட்ட கவிதைகள் சிலவற்றை ஒரு தொகுதியாக வெளியிட எண்ணினோம். மேலும் சமகாலத்தில் மாத்திரமல்லாமல் இத்தகைய கவிதை கள் நீண்ட பாரம்பரியத்தை உடையன என்பதைக் காட் டவும் முனைந்தோம். அவ்வகையிலேயே சங்ககாலத் திலிருந்து சமகாலம் வரையுள்ள கவிதைகளில் சிலவற்றை இங்கு சேர்த்துக் கொண்டோம்.
இவ்வகையில் சங்கத் தொகை நூலான குறுந் தொகையிலிருந்து பாடல்கள் ஆறு இங்கு இடம் பெறுகின் றன. ஒளவையார் நன்னாகையார், வெள்ளி வீதியார் ஆகியோர் இயற்றியவை இவையாகும். இக் கவிதைகளின் மொழிஇன்றைய மொழிப்பாவனையிலிருந்து மிகவும் வேறு பட்டிருப்பதால் அவற்றின் அர்த்தம் சராசரி வாசகர்களுக்கு இலகுவில் புலப்படாது. எனவே கவிதையை விளங்கிக் கொள்ளவழிவகுக்குமுகமாக அக்கவிதைகளின் அர்த்தமும் தரப்பட்டுள்ளது.
சங்ககாலப் பெண்கவிஞர்களைப் போலத் தன் காதலுணர்வுகளைப் பாடிய இன்னொருவரான ஆண்டாள், நாச்சியார், கோதை, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என் றெல்லாம் அழைக்கப்படும் வைணவப் பக்தை ஆவர். இவர்
உயிரலுனி xi

Page 10
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது இலக்கிய வரலாற்றாய்வாளர்களின் ஊகமாகும்.
பக்தி மரபில் இறையை ஆணாகவும் / காதலனாக வும் பாவித்து அவனை அடைவதற்கு ஏங்குவதாகப் பாடும் மரபு ஒன்று உண்டு ஆண்பக்தர்கள் தம்மைக் காதலியாகப் பாவித்துப் பாடுவர். இது நாயக-நாயகி பாவம்' என்று கூறப்படும். இந்து மதத்தின் பக்திமரபுகள் யாவற்றிலும் இப் போக்கினைக் காணலாம்.
ஆண்டாள் வைணவ சமயத்தைச் சேர்ந்தவர். திருமாலில் காதல் கொண்டவர். திருமாலை ஒரு ஆனா கவும் தனது காதலனாகவும் கொண்டவர். இறைபக்திக்கும் ஆணின் மீதான காதலுக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஆண்டாளின் பாடல்களில் இல்லாமல் போகிறது. இதன் பலன் எத்தகைய பாவனைகளுமற்ற, உண்மையான காதல் கவிதைகள், சமய மரபில் இவை பக்திப்பாடல்கள் எனக் கூறப்பட்டாலும் அவற்றைக் காதல் கவிதைகள் என்று சொல்வதற்கான சகல இயல்புகளும் அவற்றில் பொருந் தியுள்ளன. ஆண்டாளின் ஆராக்காதலும் காதலனை அடை வதற்கான பரிதவிப்பும் பாடல்கள் முழுக்க விரவியுள்ளன. காதலும் காமமும் மாறி மாறி விளையாடும் மொழியாடல் களாகக் கவிதைகள் அமைந்துள்ளன. தனது பாலியல்பை ஒடுக்கிக் கொள்ளவோ மறைத்துக் கொள்ளவோ முயலாமல் அதனை இயற்கையாக அங்கீகரித்து வெளிப்ப டுத்துவது ஆண்டாளின் கவிதைகள் முழுக்கப்பரந்து கிடக் கிறது.
ஒளவை, வெள்ளிவிதியார், நன்னாகையார், ஆண் டாள் ஆகியோருடைய கவிதைகளுடன் சமகாலக் கவிதை கள் இருபத்தியைந்தும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. இலங்கைப் பெண்கவிஞர்களுடைய இக்கவிதைகள் எண்ப துகளிலும், தொண்ணுறுகளிலும் ஆக்கப்பட்டவை. இவற்
xii உயிரணுனி

றுள் சில இது வரையில் பிரசுரமாகாதவை. ஏனையவை பத்திரிகைகள், சஞ்சிகைகளில் ஏற்கனவே வெளிவந்தவை. குறிப்பாகச் சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் கணிசமானவை.
சமகாலக் காதல் கவிதைகள் காதலின் பல்வேறு சாயைகள் பற்றிப் பேசும் அதே சமயம் காதல் பற்றிய பெண்களின் நவீன சிந்தனையோட்டத்தையும் காட்டு கின்றன. காதல் பற்றிய விவாதத்தையும் எழுப்புகின்றன. மனிதருக்கிடையேயான உறவில் ஏற்படும் பல்வேறு சுழிப்பு ளும் ஏற்ற இறக்கங்களும் காதலர்களுக்கு இடையேயும் ஏற்படுவது இயல்பேயாகும். இத்தகைய சிக்கல்களையும் பன்முகத்தன்மைகளையும் கூட இவை எடுத்துக்காட்டு கின்றன. இவ்வகையில் காதலின் பல்பரிமாணத்தன்மையை இக்கவிதைகள் தொட்டுச் செல்கின்றன.
இத்தொகுதி முழுமையான ஒரு தொகுதி அன்று; சமகாலக் கவிதைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கைக்கு எட்டியவையே இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் பெண்கள் இலக்கியத்தின் பல்பரிமாணங்களில் ஒரு முகப்பைச் சுட்டிக்காட்ட இவை போதுமானவையாக அமையும் என எண்ணுகிறேன்.
இத்தொகுப்பு முயற்சியில் உதவிகள் புரிந்த கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் கிவானதி துரியா பெண்கள் நிலையத்தின் கலாசாரக் குழு உறுப்பினர் கவிதா, சரிநிகர் ஆசிரியர் சிவகுமார் ஆகியோ ருக்கு எனது நன்றிகள்,
சித்திரலேகா மெளனகுருமட்டக்களப்பு இலங்கை
/ኗ. /2/9992
உயிர்லெனி - xiii

Page 11

உன் 62/s. மழைநீர். கண்ணி
-- நஜிபா
நீபிரிந்து போன இந்த நிமிடங்கள்
எனக்கெந்த
மகிழ்ச்சியையும் தரவில்லை :
இருந்த சுதந்திரமும் அற்றுப்போன உணர்வுகளைத் தவிர
நீயும் நானும் இவ்வளவு கெதியில் பிரிவோம் என நான் துளியும் எண்ணவில்லை.
இனி ஒரு நிம்மதி வேண்டி இறையடி சேரலாம். எதுவும் உன்னிடம் பேச முடியாதபடி நான் ஒரு ஊமையாக இருத்தப்பட்டுள்ளேன். உன்னுடன் பேசிக் கொண்டிருந்த இந்தப் பொழுதுகளைப் பற்றி இப்போது மழையுடன் பேசுகிறேன். நினைவுகளுக்கென நான் மீட்டுப் பார்க்கிறேன். நமது இறந்து போன கடந்த காலங்களை
е 5урор

Page 12
இனியும் எவ்வளவோ உன்னிடம் பேச வேண்டும். நான் தான் உளமையாக்கப்பட்டிருக்கிறேன்.
இப்போது என்னுடன் இருந்தால் உன்னை இறுக்கிக் கொண்டு ஓவென்று அழுதிருப்பேன் அல்லது கதறியிருப்பேன்.
அழுது கண்ணிர் திரையாகிறது. ஒரு துளியேனும் உனக்காயன்றி விட்டதில்லை நான் பிரியேன் உன் நினைவுகளை விட்டும் உன்னை விட்டும்.
இப்போதெல்லாம் எனக்கு பெறுமதியான பொழுதுகளாய் இவை தெரியவில்லை நீயும் நானும் வாழ்ந்த அந்தக் கணங்களை விட
ஆத்மா பிரிந்த ஆவியாக நான் கிடக்கிறேன் எனக்குள் உனக்குத் தெரியாமல் நீ போய் விட்டாய் வெகு தூரம் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இறுதி நேரங்களில் என் விழிகள் நனைகின்றன. ஆத்மாவைப் பிரிந்த ஆவியாய் கிடக்கின்றேன்.

புத்துயிர்த்தல்
- பெண்ணியா -
எனது தகப்பனின் நம்பிக்கையற்ற பார்வைகளினூடும் தாயின் குமுறல்களினூடும்
உறவுகளின்
என் திருமணம் பற்றிய சகிக்க இயலாத பேச்சுக்களினூடும் சுதந்திரமாய் நான் வாழ்வதென்பது எவ்வாறு?
என் இனிமை, இதம் என்பனவெல்லாம் அவளுக்கானவை அவளற்ற என் உலகுபற்றி கனவுகளும் வேண்டாம் ஒருவருக்கும் போலியும் வஞ்சகப் பாசமும் நிறைந்த முகங்கள்தான் எனைச் சூழ எங்கும்
மென்மேலும் என்னால் தோல்வியுறுதல் இயலாது எனது அவள் தோழி மட்டுமல்ல.
உயிலெனி

Page 13
அது பற்றியும் சொல்வேன்
அது காதல் அவளது வேர்களைப் பிடுங்கி எறியவும் பிறருக்கிருக்கும் மனதின் பரப்பெங்கும் கள்ளிச் செடிகள் நட்டுப் பார்க்கவும் கணம் கணம் இங்கு போர் எவ்விதம் பிரிவேன் அன்பே எவ்விதம் வாழ்வேன் நான்? ஆயினும் ஆயினும் வாழ்வேன் ஆச்சரிய மேயாயினும் எனையழுத்தும் இவ் இறுகிய பாறைகளினூடிருந்து வீறு கொண்டதொரு புல்லாய் நிமிர்வேன்.
கூவத்தான் முடியாதாயினும் ஈனஸ்வரத்திலேனும் என் பாடல்களை முனகியபடி யார் முன்னும் பணிதலன்றி எனது உணர்வுகளோடும் அவர்களோடும் எவ்வகை வாழ்வெனப் புரியாத இது குழப்பமிகு வாழ்வேதானாயினும்
வாழ்வேன் வாழ்வேன் வாழ்வேன் நான்.

உதிரும் இலைக்கணவு/
- பெண்ணியா -
உன் பெயரை உச்சரிப்பதில் தான் என் உணர்ச்சிகள் மெய்ப்படுகின்றன. சிறிது உன்னைநிேனைக்கிறேன் பிறகு அழுகிறேன் என் ஆத்மார்த்தமான காதல் நீபுரியாதது
இப்போது நீஇல்லை ஆனபோதும் நான் நேசிக்கிறேன் அதைப் புரியாமலே நீ போய் விட்டாய்
என் ஆசைகளும் நினைவுகளும் வெடித்து கண்களிலிருந்து கண்ணிக்கோடுகள் துளிகளாய் வீழ்ந்தாலும் என் உணர்வுகளை நிறுத்த முடியவில்லை இப்போதும் நான் வாழ்கிறேன் மெளனம் நிறைந்தவளாய் இனி நான் பேசப் போவதில்லை உன் நினைவுகள் என்னை விட்டு நீங்கும் வரை
உ5%ஹனி

Page 14
அன்று என் நினைவுகளும் என்னோடேயே இருக்குமா என்ன? நான் உன்னைக் காதலித்தேன் என் உணர்வுகளைக் கடந்து உன்னைக் காணுகையில் அதிவேகமாகத் துடித்த என் இதயம் இன்று மிக மென்மையானதாக இதமும் உன் நினைவுகளும் நிறைந்ததாக
எவ்விதம் இனி நான் என் கணங்களைக் கழிப்பது எனைச் சூழ்ந்திருந்த நீயும் அகன்று போன பின் உன்னை
உன் பிரிவை
நான் உணர்கின்றபோது ஒருவரும் இல்லாத தனி வீதியில் ஒரு மஞ்சள் விளக்குக் கம்பத்தின் கீழ் மெல்லிய மழைத்துளியில் நனைய நான் என் கண்களில் நீ நினைவுகளாய் ஈரலிக்க
நான் மட்டும்
அழ வேண்டும் என் உணர்ச்சிகளைக் கொட்டி என் இதயம் கனக்கிறது ஏதோ ஒன்று மனதில் பாரம் போல் உணர்கிறேன் அது உன் நினைவின் துயரா அன்பே எனக்கு இது பிடித்திருக்கிறது உன் நினைவில் அமிழ்வது அழிவது.
உயிலுெனி

என் உயிர் உன்னது அதை நான் சுமக்க விட்டு எங்கு போய்ப் போனாய் போ உன்னுடைய என் பெயரையும் எடுத்துச் செல்க
செல்க
என் கைகளில் கண்ணி வீழ்ந்து உடைகிறது இனி எதிலும் ஈடுபாடு இருக்கப் போவதில்லை என்ற போதும்
ஓர் மெளனஜிவனாய். இன்னும் உனக்காகவே. நீஎனக்குள் உயிர்க்கிறாய் என் மனதில் துளிர்க்கும் நினைவின் குருத்துகளாயென.
உமிலனி

Page 15
நி.நான்.மழை.
- ரேவதி -
இந்நகரத்து மழையும் என் உடலில் வெந்து தணியும் தியும் ஒன்று தான் சிணுங்கி பின் சிணுங்கல்களாகி சலசலப்புடன் ஒய்ந்து விடுவதற்குள் எனை நனைத்து என் உயிரை உறைய வைத்து விடும்.
இப்பொழுதும் எனக்கு உள்ளும் புறமுமாய் கொட்டுகிறது மழை
ஒடும் பஸ்ஸிலும் அவளுடைய மார்பை திருட்டுத்தனமாய் வருட விழைகிற அவனது விரல்களும் குளிருக்குப் போர்வையாய் அவனை ஆக்கிக் கொள்ளத் துடிக்கும்
உயிலுெளி

அவளது அவஸ்தையுமாய் யார் யாருக்கோ பயந்து பஸ்ஸிற்குள் இழுபடும் அவர்கள்
கண்ணாடியால் தெறித்து என் உதட்டில் வழிந்த ஒரு துளி மழை எனை என்னமாய் சிலிர்ப்பிக்கிறது என் உடலை எனை மீறி குளிர்வித்து மோகத்துள் ஆழ்த்துகிறது
கடந்து போன அழகான மழை இரவில் எனை இறுகி அனைத்து "ஏன்டி பயப்படுகிறாய்’ என்று காதோரம் உரசி என் கூந்தலை நுகர்ந்து ..? போன அவன்.
மனம் நோவு கண்டு அழுகிறது அறுத்தெறிந்து ஓரமாய் ஒதுக்கவும் முடியாமல் நினைவுகளோடும் நில்லாமல் கனவுகளிலும் அவன் எனை வருட தோற்றுத்தான் போனேன் நான் உயிர்ப்பெடுக்க முடியாமல் இயலாமையில் கண்கள் கலங்க பற்கள் உதடுகள் கடித்து கண்ணிரை அடக்கிக் கொண்டது. வாழ்தலின் உயிர் மூச்சுக்காய் ஏங்கி கால்கள் தன் வழி தொடர்கிறது. அவன் இப்பொழுதும் ஆராய்ந்து கொண்டிருக்கக்கூடும் இந்தச் சமூகத்தின்
ஒழுக்கக் கட்டமைப்பு பற்றி
உயிலுெளி

Page 16
அதுதானே நான்
- யாழ் - ஆதிரை -
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
நான் ஒரு
தொட்டாற் சுருங்கி என்று மென்மையான இழைகள்
மட்டுமே
என் இதயத்தைச் சுற்றி என்று
στοότωπίσού ஆற்றிக் கொள்ள இயலாத தருணங்களில் உன் பார்வையில்
நான்.
மூர்க்கமானவள் "வினை'பிடித்தவள் அறிணைப் பிறப்பு. எப்படி யெனினும்
உன் வறட்டுப் பிடிவாதத்திற்கும் ஆழ் மனத் தாக்கங்களுக்கும் உன் காயங்களுக்கும் உத்தியோகத்திற்கும்

கெளரவத்துக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் என்னைத் தானே இரை கொள்கிறாய்! நிஜமாகக் கூடி என் கனவுகளைக் கூட ஒடித்து விட்டு அதிலும் கூட திருப்தியுறாது.
எது தான் உன்னைத் திருப்திப் படுத்துமோ?. உண்மை அன்புக்கு ஏங்குவதாக அன்று சொன்ன நீ
இன்று என்னிடமிருந்து அதைப் பெற்றும் எனக்குரிய தைத்தர ஏனோ மறுக்கிறாய் சற்றே திறந்த ஜன்னலுக்கு வெளியே ஒளியையும் மீறின சந்தோஷ முகங்கள். என் வாழ்க்கை ஏனோ இழப்புகளுடனும்
ஏக்கத்துடனும்
ஆயினும்
р-6ӑ7
கூர் மூக்கின் அழகில் சிறுபிள்ளைத் தனங்களில் உதாரண குணங்களில் உனக்குள்ளான மனிதனை சலித்துத் தேடி. உன்னில் லயித்து
நீதரும் சந்தோஷங்களில் கலந்து அதே புன்னகையுடன் உனக்காகவே என்றும் .
டி மிலனி

Page 17
ஈரமனதைத் துயரப் பறவை கொத்திவிட்டுப்போகும் என் மனக் குளத்தின் எந்த மீனிருப்பதால் இந்த விதி நேர்கிறதப்படி?
வெண்மை பரவும் வானில் தொலையும் நீலம் பின்னரது துடும் பொன் நிறைத்ததோர் கோலம்
காற்றிற் காலமும் காலத்திற் காற்றும்
கரையக் கணங் கணம் புதிது தோன்றலே காலத்தினழகின் இரகசியம்
மென் மனதினிரத்தினால் இன்னுமிங்கு பூ மலரும்
பூமலரக் காரணமாய் ஏதோவொன்று
மறைந்திருந்து மழையாகும்
1 2
உலிலுெளி

கொத்திய காயமும் கலங்கிய மனமும் ஏதோவொன்றால் ஆறுதலாகும்.
நானந்தக் கரமறியேன் தொடுதலும் அணைப்பும் மாத்திரமுணர்வேன் பூவைக் கொஞ்ச வருங்காற்று இலைகளை அசைக்காமல்
இடுவதில்லை முத்தம்
எந்தன் மனதில் அந்தத் தொடுகை அதிர்வுகளற்ற மெளனத்தில் நிகழும்
ஒரு தாயின் முத்தம்
மனதினாழுத்தினில் சில நேரம் முகந்தெரியும் சில நேரம்
வீரமாகாளி
மெளனத்தால் இந்தப் புவி வாழ்வில் புதையுண்டு போயினும் பாயுமொளியாய் உயிரினில் மேவி
வாழ்வின் விதையும் மழையுமாகுமுந்தன் பெயரெழுத மனதினிரம் தோய்த்தெடுத்த வாழ்வின் வார்த்தைகளால் மரணத்தை அழித்தெழுத ஒவ்வொரு நாளும் நானுயிர்ப்பேன்.
- துர்க்கா -
Ae 6% avff
1

Page 18
கலங்காதே கண்னேகாத்திரு
- சுல்பிகா -
β στοότGoή ώ அன்புக்காக மண்டியிட்டாய் கோரைப்புல்லிடம் மண்டியிடும் கும்பிடுதட்டான் போல்
ஆயிரம் தடவை இந்த ஆத்மாவில் அவை எழுதப்படட்டும்
அறிவால் முதிர்வு கொள் என்அன்பே/ உன் அன்பை ஏற்றுக் கொள்ள இப்போது முடியாதிருப்பதற்காக என்னை மன்னித்துவிடு
தேடல்கள், புரிதல்கள் வெறுத்தல்கள், மறுத்தல்கள் கோரல்கள், போரிடல்கள் எனப்பல வேலைகள் உள்ளன
உ54லுனி

எல்லாம் முடிவில் நான் உன்னிடம் வருவேன் உடன் இருக்கவும் உன் மீது அன்பு செலுத்தவும் உன் அன்பை ஏற்றுக் கொள்ளவும் நான் உன்னிடம் வருவேன் காலைக் கதிரும் வெளிப்புமாக இணைந்து கொள்ள.
அதுவரை உன் காதலைக் காத்து வைத்திரு கலங்காதே கன்னா பின்னா என கோபமும் கொள்ளாதே
போர்க்காலம் கொடியது என்னையும்,
உன்னையும் நம் காதலையும் சுட்டெரித்து விடும் போரின் முடிவில் நான் உன்னிடம் வருவேன்
காரிருளில் உன் கால்களிடை முகம் புதைக்க கவலை மறந்து დ_6õr (Oიrric9ჩის சாய்ந்து கொள்ள என் தலையைக் கோதி.விடும் உன்
டிஷெலனி , 1 5

Page 19
கைகளில் முத்தங்கள் காணிக்கை தர உன்னை நீயும் என்னை நானும் மறந்து போக யாரும் கண்டறியாத எம் உயிரை நாம் உயிர்த்தெடுக்க நான் உன்னிடம் வருவேன்.

இதய7கம்.
- சுல்பிகா -
நிலவானில் நிலா வைகறைப் பொழுதில் எழுந்திருக்கின்றது. மேகத்தின் மெல்லிய திரை அதனைச் சுற்றி மோகன வட்டமிட்டுள்ளது.
அதன் மருங்குகளில் வானவில்லின் வர்ணங்கள் ஒளிர்கின்றன. அமைதி எங்கும் ஆட்கொண்டுள்ளது மெல்லச் செவிமடுத்துக் கேள்,
எங்கிருந்தோ பாடும் அவளது இதய ராகம் காற்றோடு கலந்து வருகின்றது ஆக்காண்டிப் பறவை அவள் குரலை எங்கும் எடுத்துச் செல்கின்றது இளம் தென்றல் அவள் மென்மனத்தை எங்கும் தூவிச் செல்கின்றது அவளது வரவை உன்னால் உணரமுடிகின்றதா?
உ5%லனி f 7

Page 20
இதோ அழகிய நட்சத்திரங்கள் அவள் கண்களிலிருந்து ஒளிபெற்று மின்னுகின்றன. கடலும் தொடுவானமும் அவள் வண்ணம் கொண்டு மிளிர்கின்றன.
அதே ஒலி. அதே ராகம். மீண்டும் மீண்டும் தொடர்கின்றது
நன்றாகச் செவிமடுத்துக்கேள்அவள் இதயத்தின் ஒலிக்கூடாக உன் பெயர் உச்சரிக்கப்படுகின்றது. உதடுகளால் அவள் அதை உச்சரிப்பதில்லை.
காற்று அவள் உதடுகளை மூடச் செய்துள்ளது ஆயினும்,
உதடுகளுக்கு இல்லாத சக்தியை அவள் தன் இதயத்திற்குக் கொடுத்திருக்கிறாள்
அதனால் தானோ என்னவோ, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் அவளது ராகம் ஒலிக்கின்றது முடிந்தால் அதற்கப்பாலும் சென்று செவிமடுத்துக்கேள்
காற்று; அதனால் அவளது இதயத்தினுள் புகமுடியாது
அது அவளது ராகத்தைத் தடுக்க முடியாது தவிக்கட்டும் அவள் கண்களில் மினுங்கும்
உமிலெனி

சோகக் கதிர்களை உன் மனத்திரை பதிவு செய்யக்கூடும் நீ பெற்றுக் கொண்ட துலங்கலைக் கூட
அவள் கண்கள் மீளவும் பெறவும் கூடும்
எனினும், அவளது இதயராகம் உண்மைக் கவிஞனின் பேனா முனையினால் கூட இதுவரை எழுதப்படாதவை அவளைச் சுற்றி எத்தனை வேலிகள்
இவைகளைத் தாண்டி உன் மனத்திரையை அடையும்படி
உடன் பதிவு செய்து கொள், இந்தப் பொல்லாக் காற்று,
அதனைக் கூட அள்ளிச் செல்லக்கூடும்.
உமிலுளி

Page 21
இது ஓர்மென்உணர்வு.
- சுல்பிகா -
அது எனது சிருஷ்டி கண்ணாடி இழைகொண்டு பின்னப்பட்ட அழகிய 'Sponge'இலும் மென்மையானது
தாயின் கருவறையில் வளரும் சிசுவிலும் தூய்மையானது
இளங்காலைக் கதிர்பட்டு நகைக்கும் தளிரிலும் மகிழ்ச்சியானது
இயற்கையையே
இல்லை' என்று விடும்போல் அற்புதம் மிக்கது.
அது என் உடலின் உள்ளத்தின் உயிர்ப்போட்டம்

அதுவே எனது பிரபஞ்சம் முழுவதையும் ஆட்கொண்டுள்ளது எனினும் அது மிக மென்மையானது மென் இளந் தென்றல் கூட Gustai)Gu/irfoit இன்சொற்கள் ótaஅதனை அழித்து விடக் கூடும் அதன் அழகை
அற்புதத்தை
இனிமையை
ωάφάόσOαυ
gst/60)CO600V மென்மையைஇழக்கச் செய்து விடக்கூடும்
என்றும் நான்காப்பேன் கொடிய புயலிலும் நான் அதைக் காப்பேன்
என் முளைக் கலங்களிலும் பார்க்க பெறுமதிமிக்க அதை என் உணர்வுளை இவ்வுடல் இழக்கும் வரை காப்பேன்
அது எனது சிருஷ்டி
முடிந்தால்
அதற்கப்பாலும் مبنی அதனை என்னால் காக்கவும் முடியும்.

Page 22
ക്രഞ്ഞബ്
- செல்வி. -
பனிசிலிர்க்க நட்சத்திரங்கள் மட்டுமே ஒளிர்கின்ற நள்ளிரவு சில் வண்டின் இரைச்சலிடை சாமத்துக் கோழிகளும் நாய்களும் இடையிடை குரலெழுப்ப தூக்கம் பிடிக்காத யன்னலூடு இழையும் பனிக்காற்று மட்டுமே சொந்தமான தனி இரவு
ஆழ்மனதில் பதிந்திருந்து
கிளரும் நினைவுகளில்
ஏன் இந்த சோகம்? மொட்டுகள் முகிழ்ந்து நறுமணம் வீசிய இரவு உதிரா இளங்காலைப் பொழுதில் எனக்கும் உனக்குமிடையேயிருந்த இறுக்கமும்.
ஒளிர்ந்து கொண்டிருந்த நட்சத்திரங்கள் கூரையிடையே கண்களைச் சிமிட்டவும்
22.

ஓவென்றிருந்த குளத்துக்குளிர் காற்று பற்களைக் கிட்ட வீசிய இரவில் பலநூறு கோடி யுகங்கள் வாழ்ந்ததாய் இலயித்துக் களித்ததும்
நினைவுகளாய் வெறும் நிழல்களாக நெருடுவது எதற்காக?
மனித விருப்புகளற்று வேறெல்லாம்முடிவு செய்யும் வாழ்வினை வெறுத்து புரிந்து கொள்ளலில் புரிந்து கொண்ட இனிய வாழ்வில் நூலிடை தளர்வு எப்படி வந்தது?
எவ்வாறு சகிப்பது?
முடியாது
வா, பேசுவோம் வாழ்க்கையின் பரிமாணங்களை பரிணாமங்களை புரிந்து கொள்ளுவோம் உதயத்திற்கு சிறிது நேரந்தான் உண்டு அதிகாலை மிகமிக இரம்மியமானது.
 ിയി S. 2 as

Page 23
ஒரு கடிதம்
ஒளவை
9/Gó7Gu/
நீஅருகில் இல்லை தொலைதூரம் போய்விட்டாய் கடிதங்கள் நீள கற்பனைகள் தான் மிஞ்சும் சிறகடிக்க முடியாது.
நான்கு சுவர்கள்
கலைத்துவம் இன்றி
சிதறிக்கிடக்கும்
புத்தகங்களும் சில்லறைப் பொருட்களும் தத்துவெட்டியும் எறும்பும் குடியிருக்கும் வாடகையறை ஒர் மூலையில் புத்தகப் பூச்சியாய் நான்.
காற்று வருவதற்காய் ஒரு சிறு யன்னல்
"4م 2

சிலவேளை அதன்னால் வானம் தெரியும் கண்சிமிட்டும் நட்சத்திரங்களும் கேலி செய்வதாய்
காற்றசைந்து முகிலோட வெண்ணிலா நிலவெறிக்க கடலருகில் நாமிருந்து ஊடலுறும் காலமிது என் செய்வேன். என்னுயிரே தூங்காத விழிகளுடன் மூலை அறையில் வாழ்வு விரிகிறது.
ο όγου ή که و

Page 24
காத்திருப்பு
ஒளவை
கருவிழியில் ஒளிஏந்தி கண் நிறைந்த காதலுடன் காலமெல்லாம் வாசல் வர வேண்டுமெனக் காத்திருப்பேன்.
காலமெல்லாம் கரைந்துருகி கனவாகிப் போகாமல் மீள ஒரு பொழுது சுகம் தரவருமென உடல் தகிக்க உணர்வூறும் பொழுதுகளில் கண்மூடித்துயில் கொள்ள விழைகின்ற என் மனம் உன் வரவில் உயிர் கொள்ளும்.
கருத்தொன்றிக் காதலுடன் கனல் மீது நகர்கின்ற பொழுதுகளாய் காலம் நகர்கிறது
காத்திருப்பு தொடர்கிறது.
2 6

உன7வுகள்.
ஒளவை
ஆம்
அன்று நான் உன்னை ஒருமுறை
நோக்கினேன்
ஒரே முறை நோக்கினேன் நீல விழியின் அழகுதான் காரணமோ? இல்லை, இல்லை ராஜநடை போட்டு - நீவாசலில் நின்றபோது மனம் சிலிர்க்கும்
நோக்கினேன். என்றும் போல் அதே பார்வை.
அதே கணத்தில் பார்வைகள் ஆயிரம் சங்கமித்தன மனதின் உணர்வை அடக்கி நோக்கினேன் வாயில் அரும்பிய சொற்கள் உதிர விடை பெற்றுச் செல்வாய் நீ
உமிலனி 2 7

Page 25
ஆம்- அதிலுமோர் அழகுதான் வட்டப் புல் வெளியில் வானத்தை நோக்கி கைகளை ஆட்டி கால்களை உதைத்து நிற்கும் அழகில் உன்னில் தெறிக்கும் ஆயிரம் பார்வையில் அர்த்தமுள்ள - அர்த்தமாயுள்ள பார்வை ஒன்றே உன்னைத் துளைக்கும் இப்படி இப்படி எத்தனையோ ஆனாலும்சமூகத்தில் நடக்கும் அசிங்கங்களைப் போல் எங்கள் உறவுகள் ஆகிவிட வேண்டாம் கண்கள் நோக்கும் கால்கள் அசையும் ஆனாலும் நான் வருதல் கூடாது.

இன்னொருவனுக்கு.
- ஊர்வசி -
இப்பொழுதும் என்னை நினைத்துக் கொண்டுதான் இருக்கிறாயா?
மறந்து விடு' என்று
உனக்கு, நான் சொல்லமுடியாதுதான் இருந்தாலும் பொருந்தாத வேஷங்கள் வாழ்க்கையில் எதற்காக?
நீயும் நானுமாய் நடந்த வெளிகளில்
இன்று, கட்டிடங்கள் அரைகுறையாய். சூழவும் மணல்
தடங்களுடன்
உமிலுரி 29

Page 26
அவனதும் என்னதும் உனக்கு நினைவிருக்கிறதா? அந்த மஞ்சள் மலர்கள். இப்பொழுதும்,
மரம் நிறைய
தரை நிறைய
மஞ்சள் தான்
மற்றபடி, இங்கு எல்லாமே படுமோசம்/ இன்று,
இவனருகில் மணல் வெளியில் திரிதலில் ஏனோ உன்முகம் நினைவுக்கு வருகிறது, அடிக்கடி, ஒரு புரியாத புத்தகத்தைப் படிக்க விரும்புகிற குழந்தையின் முகம் போல.

துரியன் மறைந்த பிறகு.
- ஊர்வசி -
இரண்டு மாலைகள், முழுமையாக ஒரு பகல் பொழுது, உன்னையும் என்னையும் தவிர நாங்கள் பேசிக்
கொண்டதும், சேர்ந்து திரிந்தும் தவிர எல்லாமே அர்த்தமிழந்து போய்,
(ჩხბზ7Quბ, (ჩრზზ7(6Yბ என்னை உனக்குள் இழந்து உன்னை எனக்குள் ஈர்த்து ც9ჩ/fმითრucyმის மிக மிக இரகசியமாய் விரல் பற்றி அழுத்தி விடை தந்தபின்,
இன்று, மீண்டும் வீடு வருகிறேன் பூமரங்கள் மட்டும்
உ5%ஹனி 3 1

Page 27
எனைக் கண்டு தலையசைக்கும் மற்றப்படி எல்லோரும் வெறுமரங்களாக வார்த்தையிழந்து நிற்பார்
பிறகு
மெல்ல மெல்ல வேகம் கொண்டு வார்த்தைகள் என்னைச் சாடுகின்றன சுடுநீர் போல. எதிராளி இல்லாத போராளிகளாக தங்கள் கவசங்களை இழுத்துப் பூட்டுவர் ஆனாலும் எனது மெளனம் நீளும்
மீண்டும் நான் எனது அறையுள். அடைந்த தனிமையில் யன்னலுக்கப்பால் G5/fusci) 66/GrfacSat) வானும் முகிலும் அழகாய், உனது நினைவுகளுடனே.
32

காத்திருப்பு/எதற்கு
- ஊர்வசி -
எதற்காக இந்தக் காத்திருப்பு? வயல் தழுவிய பனியும் மலை மூடிய முகிலும் கரைவதற்காகவா இல்லையேல் காலைச் செம்பொன் பரிதி வான் முகட்டை அடைவதற்காகவா? அது வரையிலும் என்னால் காத்திருக்க முடியாது என்அன்பே எத்தனை பொழுதுகள் இவ்விதம் கழிந்தன?
காதல் பொங்கும் கண்களை மதியச் சூரியன் பொசுக்கிவிடுகிறான் கடலலைகள் அழகு பெறுவதும் தென்னோலையில் காற்று கீதம் இசைப்பதும்
உ5%லுனி 3 3

Page 28
காலையில், அல்லது மாலையில் மட்டுமே! ஆனால் எமது பூமி எமது பொழுதுகள் எதுவுமே எமக்கு இல்லையென்றான பின் இது போல் ஒரு பொழுது கிடைக்காமலும் போகலாம். தொடரும் இரவின் இருளில் எதுவும்
நடக்கலாம்.
ஆதலால் அன்பே இந்த அதிகாலையின் ஆழ்ந்த அமைதியில் நாம் இணைவோம்.

காத்திருத்தல்
- மைத்ரேயி -
நேற்றுப்போல இருக்கிறது எங்கள் திருமணம் நடந்தது
பந்தலைப் பிரிக்குமுன் வந்த உறவினர் போகுமுன் நிதான் போய் விட்டாய்
என் மன ஆழத்திற்கு இது தெரிந்து தானிருந்தது இருந்தும்
திருமணம் சிலவேளை உனை மாற்றலாமென. பல வந்தமாக ஆம், பலவந்தமாகத்தான் உன்னை மணந்தேன் எனக்கு அப்போது உன் லட்சியத்தின் களபரிமாணமோ உன்னைத் தடை செய்ய முடியா தென்பதோ விளங்கியிருக்கவே யில்லை.
உலிலுளி 35

Page 29
இப்போது துக்கப்படுகிறேன் அன்று உன்னைத் தடை செய்ய நினைத்ததற்கு உன் லட்சியத்தின் நியாயம் இப்போது தானே புரிகிறது. எனினும் ஒரு சந்தோசம்
மனைவியான படியால் தானே
உன் சாதனைகளில் மகிழ்தலும் உனை நினைத்து அழுதலும் சாத்தியமாயின. இரவுகள் தூங்குவதற்கென்பது என்வரையில் பொய்யாயிற்று நிசப்த ராத்திரிகளில் இடையிட்டு எழும் ஒலிகளில் காலடி ஓசைக்காகக் காத்திருந்து காத்திருந்து. கனத்த இருளினுள் கறுப்புப் பூனையைத் தேடித் தேடித் தோற்று.!
சிலவேளை காலடிகள் கனத்த பூட்ஸ்களாய் நெஞ்சில் கண்ணிவெடி விதைக்கும். ஆனால்
நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை
காத்திருந்த இரவுகள் கணக்கு வைக்க முடியாமற் பெருகிவிட்டன கல்யாணத்தன்று நட்ட முருக்கு
உமிலுெளி

6λοσώω1ώ βοορωταγωσιόν சிவப்பாய் பூத்திருக்கு பாலர் வகுப்புக்குச் செல்லும் மகன் கேட்கிறான்
σωπώωσ எங்கட வீட்டுப் பின் கதவை நீ பூட்டுறேல்ல?" “முன்கதவு திறந்திருந்தா மட்டும் கண்டவன் எல்லாம் நுழைவான் பூட்டு பூட்டு எண்டு வாய்' எனது காத்திருத்தல்கள் அவனுக்குப் புரிய இன்னும் சில காலமாகலாம் அதன் பின் அவன் கேள்வி கேட்க மாட்டான்.

Page 30
கண்கன் சொன்னகதை
- மசூறா ஏ. மஜிட் -
நான் இறக்கை பிடுங்கப்பட்ட குயிற்பேடு பறக்க முடியாமற்தான் இந்தக் கல்யாணக் கூண்டின் கைதியானேன் -
மனத்தோடு வளர்ந்த நம் நேசத்தை மதத்தோடு பறித்தார்கள் (909.6/. . . . நீயோ ஜித்தாவில் நான் இங்கு திறந்த இத்தாவில் என் கண்ணிருக்குக் கட்டுப்பாடு விதிக்கின்ற உன் கடிதங்களும்

தம் வருகையைக் கட்டுப்படுத்திக் கொண்டன என் கண்ணிரும் கட்டுப்பாட்டைத் தளர்த்திற்று
காத்திருந்த என்னை உதாசீனம் செய்துவிட்டு இப்போது வாழ்த்துப்பாட வந்திருக்கிறாய்
என்னிடமிருந்து
எப்படி நீ
தொலைந்து போனாய்? தொலைந்து போன என் இதயத்திற்கு எப்படி நீவாழ்த்துப்பாட முடியும்?

Page 31
எப்போது வருகிற727
- மசூறா ஏ. மஜிட் - எனது மெளனத்தை மொழி பெயர்த்து விட்டு நீமெளனமாயிருப்பதேன்?
உடைத்துப் பார்த்துவிட்டு உதாசீனம் செய்வதற்கு இது ஒன்றும் கல்லல்ல மனது
உன் நினைவுகளால்
என் கனவுகளெல்லாம் கவிதைகளாகவே கன்னிகட்டியிருக்கின்றன. உன் தரிசனத்தின் பின்தான் தாம் புஷ்பிக்கப்போவதாக அறிக்கை விட்டிருக்கின்றன நீ எப்போது வருகிறாய்? நிவந்து போனபின்தான்
என் கவிஅகலிகை விமோசனம் பெற இருக்கின்றாள்

நீபார்க்கிற பூக்களையெல்லாம் என் முகமாகவே நினைத்துக் கொள் அவற்றில் தெரிகிற பனித்துளிகளை எல்லாம் என் கண்ணித் துளிகளென்றே கருதிக் கொள்.
எப்போது வருகிறாய்
அல்லது உன் சேதிகளைச் சொல்லி ஒரு சோடி வண்ணத்துப் பூச்சிகளையாவது அனுப்பிவைக்கிறாயா?
உ5%லுரி
4 球

Page 32
placółf 622M6pfo
- சங்கரி -
நிசப்தம்;
பனிபடரும்; மலர்களின் நறுமணம் மிதக்கும்
gგ6h67fooი/
வானத்தைப் பார்த்தபடி புல்தரையில் படுத்துள்ளேன்
தூரத்தே
மத்தளமும் யாரோஒருவர் பாடுதலும் இடையிடையே துப்பாக்கி வெடியொலியும் ஏந்திவரும் காற்று
பாட்டின் தாளத்தில் விண்மீன் அசையும் மேகங்கள் நடனமிடும்
2۔ 4
உமிலுெனி

காற்று நெட்டுயிர்க்கும் ககனமெல்லாம்
இசை நிறையும்
தென்றல் தடவும் எனது தலைமயிரில் காதின் மடலில் காலின் பெருவிரலில் மார்பகத்தின் மேட்டில் இன்பம் கொப்பளிக்கும் எனதுயிரும்
எனதுடலும் இவ் விரவின் தேன் பருகும்
நான் விண்ணைவலம் வந்து விண்மீனை முத்தமிட்டு சந்திரனைப் பாடி மரத்தில் இளைப்பாறி மலர்களினைத் தழுவி
எல்லையில்லா அண்டப் பெருவெளியில் என்னை இழந்து
என் நாமம் கெட்டு
சதுராடிச்
சுழல்வேன்
துயர் மறுப்பேன்.
உ5%லுனி 4 3

Page 33
കരീബ്
- சங்கரி -
எனது கண்ணெதிரே இருண்டு கவிந்த வானமும் ஒரிரு நட்சத்திரங்களும் உனது பெரிய கண்களும் மாத்திரம், உலகின் மீதியெல்லாம் எனது ஆடைகளைப் போல் அப்புறமாய். எனது புலன்களுந்தான் உனது கண்களில் ஒடுங்கினவா? பார்வையும் ஸ்பரிசமும் மாத்திரம் உயிர்ப்புடன்
உனது கண்கள் என்னுடன் பேசுவது அதிகம் உனது தொடுதல் பேசுவதை விட
44
உ5ரலுனி

கண்களை விபரிக்க முயன்று எப்போதும் தோற்றுப்போகிறேன் நட்சத்திரங்கள் எனவோ கயல் எனவோ
கடல் எனவோ என்னால் கூற முடியாது,
உனது கண்கள் என்னைப் பார்க்கின்றன; தொடுகின்றன; அணைக்கின்றன முகர்கின்றன
சிலசமயம்
எனதும் உனதும் கண்கள் இடம் மாறுகின்றன கண்கள் இல்லாவிடின் எமது சேர்க்கை எப்படியிருக்கும்?
எனது கண்கள் இல்லாவிடின் உலகின் பாதியை அறிந்திரேன் உனது கண்கள் இல்லாவிடின் காதலையும் அறிந்திரேன்
இந்தக் கணத்தில்
எஞ்சியிருந்த வானமும் ஓரிரு நட்சத்திரமும் மறைய உனது கண்களும்
நானும்
எமது காதலும் மாத்திரம்
உ5%லுரி 5

Page 34
இடைவெளி.
- சங்கரி -
உனது கையினைப் பற்றி இறுக்கிக் குலுக்கியும் நெற்றியில் ஒரு சிறு முத்தம் இட்டும் எனது அன்பினை உணர்த்தவே விரும்பினேன்
நண்பனே
இராக்குயில் கூவும் சோளகக் காற்றின் உறுமல் கேட்கும் நடுநிசிப் போதிலும் கூர்உணர்திறனும் விழித்த கண்ணுமாய் கடமையாற்றுவாய்
என்றும் மனித வாழ்க்கை பற்றியும் எமது அரசியற்துழல் பற்றியும் உயிர்ப்பாய் இயங்கும்
உ54லுனி

உன்னை நோக்கி வியப்பும் உறுவேன் அவ் வியப்பும் நீண்ட கால நெருக்கமும் என்னிற் காதலை விளைக்கும்.
அக்காதலை முத்தமிட்டும் நெற்றியை வருடியும் உன்னிரு கைகளை இறுகப் பற்றியும் உணர்த்த விரும்பினேன்
எனது காதல் சுதந்திரமானது எந்தச் சிறு நிர்ப்பந்தமும் அற்றது; எனது நெஞ்சில் பெருகும் நேசத்தின் ஒரு பரிமாணம்
எனினும் நண்பனே
ஒரு பெண்ணிடம் சொல்வது போலவும் உணர்த்துவது போலவும் உன்னை அணுக அஞ்சினேன்.
பறவைகள் போலவும் பூக்கள் போலவும்
இயல்பாய்
மனிதர்
இருக்கும் நாளில் நானும் உனது அருகில் நெருங்குவேன்
உ5%லுனி * 7

Page 35
பெண்ணை என்றும் பேதையாகவும் ஆனை வீரபுருஷ நாயகனாகவும் நோக்கும் வரைக்கும் எனது நேசமும் பேதை ஒருத்தியின் நேசமாகவே உனக்கும் தெரியும்.
அதை நான் விரும்பேன் எனது நண்பனே இந்த இடைவெளி எமக்குள் இருப்பின் எனது காதலை உணரவே மாட்டாய்.
என்ன செய்வது?
நான் விடுதலை அடைந்தவள் உன்னால் அந்த உச்சிக்கு வரமுடியாதே

3.7624, 25/0f
- சங்கரி -
அமைதி எங்கும் கவிந்து நட்சத்திரங்களின் மினுங்கல் ஒளி தனியே தவழும் இன்றைய இரவில் நான் துயருற்றேன் அன்ப, சற்று முன்னர்தான் அச் செய்தி அறிந்தேன். திடீரென அதிர்ந்தேன் சிறிது சிறிதாய்ச் சோகம் நிறைந்து
கனக்கும் காலின் உள்ளே முறிந்த முள்ளாய் துயரம, இடைக்கிடை இதயம் வலிக்கும், எந்தத் தொடர்பும் இல்லாது எந்தச் சிறு சொல்லும் சொல்லாது போகின்றேன் எனறு எதுவும் புகலாது போனாய்
உ5%உரி ly 9

Page 36
ஏன்?
எதுவுமே நிச்சயமில்லா நாட்கள் எம்முடையவை கணத்தின் பாதித்துளியினுள் கூட கைநழுவிப் போய் விடும்
வாழ்வு
இந்த நிமிடம் எனது தலைக்கு மேலும் குண்டொன்று விழலாம் நட்சத்திரங்களின் மினுங்கல் ஒளி மறைந்து போக, அமைதி குலைய வெப்பம் உமிழலாம் மீண்டும் நீயும் நானும் சந்திக்காமலே போகலாம் இந்த நிச்சயமின்மையைத் தாண்டியும் ஒரு நம்பிக்கை தளிர்க்கும் இன்று போல்
அமைதியே கவிந்த நட்சத்திரங்களின் மினுங்கல் ஒளி தனியே அலையும் முன்னிராப் போதில்
ஒரு நாள்
(ჩöööTQuბ
நீவரலாம்
ஆயினும் எதற்கு போய் வருவேன் என்ற
சொற்கள் அற்ற
இப்போக்கு?
உனக்காக
அசையும்! சலிப்புறும் மனது.
5 O
உமிலெனி

കസമീബ് ബ്രിഗ്ഗ്രീ.
- விஜயலட்சுமி -
தோழனே. திங்கள் போன்று திகழ்பவனே காலங்கள் எத்தனையோ அத்தனையும் நம் காதலை காவியமாக்கட்டும்
என். கண்ணின் மணியாய் உடலில் உயிராய்
6,767 வாழ்வின் பொருளாய் வசந்தம் சேர்ப்பவனே
GIs... விண்ணிலே ஊஞ்சலிட்டு மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் அமைப்போம்.
உ5%லுனி 5 f

Page 37
70
எனக்கும் நல்லபசிதான்
நான் வானத்தைப் பிடித்து விழுங்கினேன். இன்று விடிய, அதன் வயிற்றுள் இருந்த சூரியன்
எனது தொண்டையில் சிக்கிக் குத்தியது. பாரதி விழுந்து விழுந்து சிரித்தான். நட்சத்திரங்களை மிட்டாய்போல் உணவியபடி
. Lu6) pitui.
பாரதியின் மீசையில் இருந்து இப்போதும் தேன்
வடிவதனை அந்த இரவு வேளையிலும் நான் கண்டேன். காற்று வழக்கம் போல் இப்போதும் அவனின் குதிகாலைத் தடவி பிடரியை முகர்ந்து வாசத்தையும் இeரிப்பையும் பெற்றுக்கொண்டுதான் காதலர்களைத் தாலாட்டப் போகிறது. நானும் பாரதியும் பூக்களைப்பற்றிப் பேசிக்கொண்டே
சாப்பிட்டோம்.
கண்ணம்மாவைப் பற்றிய கதையும் வந்தது.
வயது போனாலும் கண்ணம்மா இப்போதும்
அதே இளமை, குளுகுளுப்பு, என்றான்.
நம்மூர் பெண்களது நலத்தை அவன் அக்கறையாய்
என்னிடத்தில்
துருவி விசாரித்தான்.
ஆண்களைத் தோளில் சுமந்தபடி இருந்தாலும்
பாதகமில்லை
பார்த்துக்கொண்டிருக்கலாம்,
இங்கு நடப்பதோ
மிகக் கொடுமை

பெண்குடித்து அவள் வயிற்றுள் இருக்கின்ற நீரில்தான் ஆண் குளிக்கின்றான். பெண்ணின் வாய்க்குள்ளால் தன் குதிகாலை விட்டே கால் கழுவுகின்றான்.
என்றெல்லாம்,
நான் சொன்னேன்.
உண்ட இடத்திலேயே வெடித்தான் பாரதி எனது வீடு முழுக்க
அவனது கவிதைகள்
சிதறித் தெறித்தன. போத்தல் உடைந்து தேன் வழியும் விதம்போல அவனில் இருந்து
கவிதைகள் ஒழுகின. நான் கையைக் கொடுத்து நாக்கில் தொட்டு வைத்ததுகூட மறக்க முடியாத இனிப்பாய்
இருந்தது. தமிழின் ஒவ்வொரு எழுத்தும் உயிர்த்து, உயிர்த்து நாங்கள் சாப்பிட்ட இடமெல்லாம் பாரதியை வணங்க வந்தன. ஏதோ, ஓர் எழுத்து என்னை வந்து தொடையில் குத்தியது. பாரதியை நான் உடைத்த ஆத்திரத்தில், இரட்டைக் கொம்பை நீட்டியபடி.
71

Page 38
சமாதிகளில் சந்ததி உண்டாக்கலாம் முடிந்த உன் விதிக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் எழுதிய தீர்ப்பை
திருத்தி எழுதலாம்
எழுந்து வா.
உதிரிப் பூக்களை
ஒட்டவைக்கலாம்
எழுந்து வா.
54
உமிழிலுளி

ஆண்டான் பாடல்கள்
கருப்பூரம்நாறுமோ கமலப்பூ நாறுமோ? திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே.
肇 ● செங்கமலநாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல் செங்கட் கருமேனிவாசுதேவனுடைய அங்கைத் தலமேறிஅன்ன வசஞ் செய்யும் சங்கரையா உன் செல்வம் சால அழகியதே!
禦 藝 ஆரே உலகத்து ஆற்றுவார்?ஆயர்பாடி கவர்ந்துண்ணும் காரேறு உழக்க உழக்குண்டுதளர்ந்தும்முறிந்தும் கிடப்பேனை ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பைப் போக்கிரே!
藝 藝 (s
உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டாக்கால்
உ5ரலுனி వ వీ

Page 39
கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை தன்னைக்
கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என் அழலைத் தீர்வேனே!
擊 馨
கொம்மைமுலைகள் இடர்திரக் கோவி)தற்கோர்குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செயல்யும்
தவந்தசனென செம்மையுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று மெய்ம்மை சொல்லிமுகம் நோக்கிவிடைதான்தருமேல் மிக நன்றே.
馨。 攀 வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே!
காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டியரிசிஅவலமைத்து வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உனை வணங்குகிறேன் தேசம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் சாயுடை வயிறும் என் தடமுலையும் தரணியில் தலைப்புகழ் தாக்கிற்றியே.
S 6 − உமிலுெரி

ஒளவைய7ர் பாடல்கள்
உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது இருப்பினெம் அளவைத்து அன்றே வருத்தி வான்தோய் வற்றே காமம் சான்றே):ர் அல்லர்யாம் மரிஇ யோரே.
(குறுந்தொகை /02)
பொருள்
காதலரைப் பற்றி எண்ணும்போது எனது நெஞ்சம் வேகுகின்றது. அவரை எண்ணாமல் இருப்பதோ எமது சக்திக்கு உட்பட்டது அல்ல. எனது காமமோ வானத்தை முட்டுமளவு வளர்ந்துள்ளது. நாம் கூடிய காதலர் (இவ்வாறு என்னைத் தவிக்க விடுவதால்) நல்லவர் அல்லர்.
மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல் ஒரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு ஆ அஒல்லெனக் கூவு வேன்கொல் அலமரல் அசைவளி அலைப்ப என் உயுவுநோயறியாது துஞ்சும் ஊர்க்கே.
(குறுந்தொகை 28)
உமிலனி 5 7

Page 40
பொருள்
பிரிவினால் ஏற்பட்ட் எனது வேதனையை அறியாது அமைதியாகத் தூங்கும் இந்த ஊரை நான்ன என்ன செய்வேன்? இதனை எரிமூட்டுவேனா, தாக்குவேனா? ஆ ஓ எனக் கூவுவேனா?
藝 *
செல்வார் அல்லர் என்றுயான் இகழ்ந்தனனே ஒவ்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல் நல்அராக் கதுவியாங்குஎன் அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே.
(குறுந்தொகை 43)
பொருள்
எனது காதலர் என்னை விட்டுப் பிரிய மாட்டார் என நான் அலட்சியமாயிருந்தேன். தாம் பிரிந்து போக வேண்டி யுள்ளது என்று சொன்னால், நான் சம்மதிக்க மாட்டேன் என அவர் கூறாமல் இருந்தார். இவ்வாறு இருவரிடையேயும் இருந்த தயக்கத்தினால் இப்போது (அவர் பிரிந்தபின்) நல்லபாம்பு கடித்தது போன்ற வேதனையை எனது மனது அனுபவிக்கின்றது.
藝 藝 響
5 s உ54லுனி

வென்னிவிதிம7ர் பாடல்கள்
நிலந் தொட்டுப் புகார் வானம் ஏறார் விலங்கிரு முந்நீர் காலின் செல்லார் நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் குடிமுறை குடிமுறைதேரின் கெடுநரும் உளரோ நம் காதலோரே!
(குறுந்தொகை /30)
பொருள்
எமது காதலர் நிலத்தைத் தோண்டி அதற்குள் புகுந்திருக்க மாட்டார். வானத்தில் பறந்தும் போயிருக்க மாட்டார். கடல் கடந்தும் சென்றிருக்க மாட்டார். நாடுகள் தோறும், ஊர்கள் தோறும், அங்குள்ள குடிகள் தோறும் தேடினால் அகப்படாமல் போவாரோ.
இடிக்குங் கேளிர் நுங்குறை ஆகம் நிறுக்கல் ஆற்றினோ நன்றுமற்று இல்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையில் உளமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற் கரிதே
(குறுந்தொகை 58)
உ8%லுனி 9

Page 41
பொருள்
எனக்கு அறிவுரை கூறும் உறவினரே! அவ்வாறு அறிவுரை கூறுவதை விட்டு எனது உடலை உருக்கும் நோயைத் தணிக்க ஏதும் செய்ய முடியுமாயின் நல்லது. வெயில் சுடுகின்ற பாறையில் வைக்கப்பட்டிருக்கின்ற நெய்யை கையில்லாத ஊமை ஒருவன் அது உருகி ஓடாத வாறு பாதுகாக்க முனைவது எவ்வாறு அவனது சக்திக்கு அப்பாற்பட்டதே அதுபோல இந்தக் காதல் நோய் வளா வதையும் தடுக்கும் சக்தி எனக்கில்லை.
德 శీ 鬱

Zsadamanasa/7 CA76ö
சேறும் சேறும் என்றலின் பண்டைத்தன் மாயச் செலவாச் செத்து மருங்கற்று மன்னிக் கழிகளன் றேனே அன்னோ ஆசா குளந்தை யாண்டுளன் கொல்லோ கருங்கால் வெண்குருகு மேயும் பெருங்குளம் ஆயிற்று என் இடைமுலை நிறைந்தே
(குறுந்தொகை 325)
பொருள்
நான் போகப் போகிறேன் எனக் காதலர் கூறியபோது அவர் கூறுவது பொய் எனக் கருதி செல்வதாயின் செல்லு ங்கள் என்று கூறினேன். அவர் சென்று விட்டார். இப்போது அவர் எவ்விடத்தில் இருக்கிறாரோ! எனது கண்ணிர் நிறைந்து எனது முலைகளின் இடைப்பகுதி நாரைகள் மேய்கின்ற குளம் போல ஆனது.
உயிலுரி 6

Page 42
இக் கவிதைத் தொகுதியில் இடம் பெறும் சமகாலக் கவிதைகளில் ஏற்கனவே வேறு நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்டவற்றின்
விபரம்.
நஜிபா * உன் நினைவு.மழை நீர்.கண்நீர்
- சரிநிகர் - இதழ் 109 : 1996 பெண்ணியா * புத்துயிர்த்தல்
- சரிநிகர் - இதழ் 136; 1997 * உதிரும் இலைக்கணவு
- சரிநிகர் - இதழ் 153: 1998 ரேவதி * நீ.நான்.மழை
- சரிநிகர் - இதழ் 127; 1997 யாழ் ஆதிரை * அதுதானே நான்
- சரிநிகர் - இதழ் 138: 1998 துர்க்கா ri-JLD60T6055.....
- சரிநிகர் - இதழ் 74; 1995 சுல்பிகா * இதயராகம்
* இது ஓர் மென் உணர்வு
"விலங்கிடப்பட்டமானுடம்" 1993 ஒளவை * உணர்வுகள்
சொல்லாத சேதிகள் 1986 oarisuéì * காத்திருப்பு எதற்கு?
- புதுக - இதழ் 18: 1983 மைத்ரேயி * காத்திருத்தல்
மரணத்துள் வாழ்வோம்: 1985 மசூறா.ஏ.மஜிட் கண்கள் சொன்ன கதை
- தினகரன் - 03.10.1984 * எப்போது வருகிறாய்?
- தினகரன் - 17-03-1991 சங்கரி * இடைவெளி
சொல்லாத சேதிகள் 1986
62 உமிலெனி

6 3

Page 43


Page 44
母4
போ நண்ப;
என்னை விட்டும்
கொஞ்சம் கொஞ்சமாக குறைகின்றாய் நீ.
தூரம் போய்
உன் வாழ்க்கையை இருத்திக்கொண்டதால் ஒரு
நிகழ்வால்
நமக்குள்
இப்படியொரு பேய், நேரமாய்.
நீ நேற்று
வழிநெடுக துப்பிய துப்பல்களை நான்பொறுக்கி அவற்றின் பொருள் அறிந்தேன். உனக்கு; நீயும் நானும், அங்கு நீ செல்லுமுன்னர்பகல் ஊத்தை அப்பும் மாலைகளில் போனால் காற்று தன்னிடம் இல்லாத வேளையிலும் மரங்களிடம் வட்டிக்குக் கடன் வாங்கி வீசும் கடற்கரை நினைவுண்டா! அந்தத் தினங்களிலே நாம் பறந்த தெருவையும், அதில் ஒரு வேலிக்குள் நம்மை ஒருமித்தே ரசித்து தினம் படம்பிடித்த அந்தப் பொதுநிறத்துப் பூவையும்!
அந்தப் பூ
இப்போது கண்ணைக் கழற்றி பிடரியிலே பூட்டியது 巴(鳄J·
எடுத்த படங்களைக்
கிழித்தும் எறிந்து
நான் ஒற்றையாய் போக,

பொன் ஆற்றின் ஒரு கதை
குளித்து முடிந்ததா சூரியனே! மீன்கள் கடித்தனவா! தாமரைக்குள் நீ விழுந்து குளிக்கும். அழகே தனி.
மஞ்சல் அரைத்துக் கரைத்த ஆறு இது.
ஆம்,
பொன் அருவி! எருமைமாடுகளும் தங்கமுலாம் பூசிய அழகுப் பதுமைகள்போல் எந்த நேரத்திலும்
இந்த ஆற்றில்
குளிக்கும்.
ஒருநாள்
ஒரு தங்க எருமைமாட்டிற்கும் அழகிய ஒரு வெண் கொக்கிற்கும் காதல் மலர்ந்தது, இந்த ஆற்றில்தான்!
85s

Page 45
86
பிறகென்ன;
கொக்கு
மீன் தேடுவதே இல்லை. அந்த எருமைமாட்டில் மையல் கொண்டு தினம் தினம் இந்த ஆற்றைச் சுற்றிப் பறக்கத் தொடங்கியது.
தங்க எருமைமாடும் அப்பிடித்தான் கொக்குப் பறக்காத நேரத்தில் சோர்ந்திருக்கும்.
ஒருநாள்
தாமரைகள் அதிகம் பூத்திருந்த தினத்தில்
தவளைகள் கீதம் பாட தங்க எருமைமாட்டைத் தூக்கிப் பறந்தது அந்த வெண்கொக்கு.
எருமைமாடு அட்டையைப்போல அதன் காலில் ஒட்டியிருந்தது
காதலில்.

ஆடுகள் உலகமே
தொடர்ந்து, அந்த மரத்தை அந்த ஆடு கடித்துக்கொண்டே வந்தது. நாட்போக்கில் மரம்
குட்டையானது.
முந்தநாள் இரவு மழை கொஞ்சம் பெய்திருந்தது. விரல் உதிர்ந்து மொட்டையாய் நின்ற கையில் சில துளிர்களை
எழுப்பி, முனைந்தது மரம்,
உயிர்க்க.
அதற்கு சரியான ஏக்கமொன்று மனதிற்குள் இருந்தது. தன்னோடு ஒன்றாக முளைத்து, ஒன்றாக வளர்ந்த பக்கத்து வீட்டின் கன்று அந்த ஆடு புக முடியாதபடி
வளர்க்கப்பட்டதால்,
அழகு ததும்ப காற்றில் படம் கீறிக்கொண்டு நிற்பதை
பார்த்து அழுது, ஆட்டைக் கண்டதும் பல்லைக் கடித்தது.
87

Page 46
88
இருந்தாலும் ஆட்டைக் கடிக்க அது இதுவரை முடியவில்லை. என்றோ கடிப்பேன் என்ற சத்தத்துடன் ஒரு வேர்
நேற்றுத்தான் ஓடியது.
அந்த வேர்தான்
பூமியை உசுப்பி
சில மலைகளைச் சரித்தது.
பாவம், இவை ஒன்றுமே ஆட்டுக்குத் தெரியாது: வழக்கம்போலதான் கடிக்கவந்தது இன்றும், அந்த ஆடு
மரத்தை,

நத்தை பறந்த கண்ணிமை இலை மரம்
நத்தை இன்னொரு தடவை முட்டி உசுப்பியது அந்தச் சிறிய மரத்தை, பாடுவது அந்தச் சிறிய மரம்தானா என்ற சந்தேகம் அதற்கு.
ஆம், மரம்தான் பாடியது! வாயைப் பிளந்தபடி தன் சதையை ஒட்டிற்குள் இழுக்காமலே வெளியில் வைத்தபடி நின்றது,
நத்தை. அந்தச் சிறிய மரத்தின் பாடலில் தன்னை மறந்தது.
அந்த மரம் பாடிய பாடல் அனைத்தும் நத்தைக்கு மிக அழகாகக் கேட்டது. அந்த மரத்தின் பாடல் முழுக்க
இழந்த, ஒரு நிறைவேறாத காதலைப்பற்றியதாய் அமைந்ததால், நத்தைக்கும் மிகத் துக்கம்.
Lunt-6 &9>

Page 47
S 0.
உன் காதல் கடிதங்கள் துடிக்கின்றன கண்ணே நான் அடுக்கிவைத்துப் பூட்டி வைத்திருக்கும் பெட்டிக்குள்.
of IT இருவருமாகவே திறந்து விடுவோம். அவை பறந்து எங்காவது ஒரு வனத்தில் கூடுகட்டிப் புணரட்டும். உன் காதல் கடிதங்கள் இந்த உலகத்தில் ஒரு புது இனப் பறவைகளாக இனம் பெருக்கி வாழட்டும்.
என்று அந்த மரம் பாடிக்கொண்டே இருக்க, இருக்க, நத்தைக்குக் கண்ணிர் வந்தது. மீண்டும் ஒருதரம் உசுப்பியது மரத்தை. அந்த சிறிய மரத்தில் இருந்து ஒரு புதிய இலை அதன் அருகில் வந்து விழுந்தது. ஆம, அது ஒருவனது கண்ணிமை! நத்தை ஓடிக்கொண்டே கத்தியது; நிறைவேறாத காதலுடன் செத்த ஒருவன் முளைத்துள்ளான் மரமாய், முளைத்துள்ளான் மரமாய், என்று அந்த வட்டாரம் முழுக்க பலமாய், இப்போதுசிறகடித்துப் பறந்தபடி.

பிச்சைக்கார வானம்
-எலி கடித்து வானம் தொங்குகின்ற சங்கிலிகள் சாடையாய் அறுந்திருப்பதாக கதைகள் அடிபடுகின்றன.
இங்கிருந்து எப்படி எலி துள்ளியது
அந்த இடத்திற்கு! இரும்புச் சங்கிலியைக் கடிக்கும் பற்கள் உள்ள எலிகள் மிக முக்கியமான அந்த இடத்திற்கு போகும் வரைக்கும்,
அதுதான் போக;
கடிக்கும் வரையாச்சும், எவரும் காணாமல் இருந்தது மாபெரிய தவறு.
S.

Page 48
92
விரைவில்
வானம்
கூரை வந்து விழுவதைப்போல தரையில் விழும் என்பதை அதற்குள் இருந்து தினமும் வருகின்ற காரமுள்ள பிறவி
சூரியன் சொன்னதாய் நேற்று ஒரு குயில் கத்திக் கத்திப் பறந்தது ஊரெல்லாம்.
சா. எலிகள்;
கொடூரமுள்ள எலிகள், நட்சத்திரங்களைத் தானியங்கள் கொறிப்பதைப்போல் கொறித்துப் புசித்தே
நிலவு
காதல் கடிதங்கள் வைத்திருக்கும்
பெட்டிக்குள்
படுப்பதாக காற்று சொல்லியதாக நேற்று பூவும் பேசியது.
அதுதான் முன்போல வானத்தில் வெள்ளிகளைக் காணவே இல்லை. ஒன்று. இரண்டு. மூன்று. ஆமாம்; எல்லாமாகப் பத்து.
அதில் ஒன்று
என்னுடைய அவள்!
போனால் ஒன்பது, இன்றைய வானத்தில் பூத்த வெள்ளிகள்;
பிச்சைக்கார வானம்.

நான் சந்தோஷமாக இருந்த அன்று
என்னைச் சுமந்தபடி போயின வண்ணத்துப் பூச்சிகள்.
கொண்டுபோய்; ஒரு மரத்தின் பழுத்த இலையில் வைத்தன இருக்க,
தூங்குக என்று பூக்களைக் கொண்டுவந்து விசிறியாய் வீசின காற்று மணக்க மணக்க
பூச்சிகள். உண்ணத் தேன் கொடுத்தன வாய்க்குள். நான் அங்கிருந்து பாடிய கவிதையை சிறகிற்குள் பத்திரமாய் கொண்டு சென்று பூமரத்தின் கன்னிக்குள் ஊற்றின,
நாளைய மலர்கள் இனிக்க.
93

Page 49
94
கால் ஊன்றியது ஒரு பூச்சி. ஒவ்வொரு உரோமம் உரோமமாக மினுக்கி மினுக்கி
as Tssi) அடுக்கி வைத்தது இன்னொன்று.
ஒரு பூச்சி
என்னை இழுத்து
முகர்ந்தது.
சந்தோஷமாக இருக்கின்றான் இவன் 'மனிதன்தான்' என்றது. எல்லாப் பூச்சிகளும் கையடித்து மகிழ்ந்தன.
நான் இருந்த
பழுத்த இலை முனகியது. ஆனாலும் விழவில்லை. பாரமே இல்லை, நான் இன்று பாரமே இல்லை.
ஒரு பூச்சி சொல்லியது,
உன்னை நான் சிறு விரலால் தூக்கிக் காட்டுகிறேன் என்று; தூக்கியபடி,
ஆம், வண்ணத்துப் பூச்சிகள் இராட்சதப் பறவைகள். பலம் மிக்கவை.

அந்தக் காட்டுப் பூமரம்
இன்றிரவு; ஒரு காட்டுப் பூமரத்தை நான் பிரசவித்தேன். பூக்கள் நிறைந்திருந்தன நான் பிரசவித்த பூமரத்தில். பறவைகளும் கத்தின.
கோடான கோடி வண்ணத்துப் பூச்சிகள் நான் பிரசவித்த பூமரத்தைச் சுற்றிச் சுற்றிப் பறந்தன.
நிலவு
வானத்தின் முக்கால் தூரம் வந்துவிட்ட நேரம் நான் பிரசவித்துக்
களைத்திருந்தேன்.
95.

Page 50
96
நான் ஆண். எங்கிருந்து, எப்படிக், கருக்கட்டியது இந்தப் பூமரம்! ஒ. அன்று நான், அந்தப் பயணத்தில் கண்ட காட்டுப் பூமரத்தின் முகம்
இந்த மரத்திற்கும்!
அந்த ஆற்றின் ஓரத்தில் அந்த மரம் நிற்கிறது. தலையில் பல வர்ணத்தில்
மை பூசியதுமாதிரி
பூக்கள். அந்த மரத்தில் அன்று என் மனதைக் கொளுவி வைத்துவிட்டு வந்தேன்.
ஆம், அந்த மரத்தின் முகமே இந்த மரத்தின் முகம்! தூக்கிக் கொஞ்சி பெயர்சூட்டித் தாலாட்ட விடியட்டும்.

காணாமல் போன அவனின் பாடல்
அவன் கட்டடங்களில் குந்தியிருக்கிறான்,
கிளியாய்.
குயிலாய், யார்சொன்னது அவன் காணாமல் போய்விட்டானென்று வீதியின் ஓரத்தில் நிற்கின்ற புற்களிலும்
அவன்
பனி விழும் காலையில்,
சில இரவுகளிலும், வீற்றிருந்ததை நான் கண்டிருக்கிறேன்.
அன்று நான் மிக அவசரமாக யோசனையுடன் சென்று கொண்டிருந்தேன். அவன் ஒரு புறாவின் வடிவில் பெரிய நிழல் மரம் ஒன்றில் கால்நீட்டிப் படுத்திருந்து அவன் விருப்பத்துடன் படிக்கும் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தான். நான் கை அசைத்துவிட்டுப் போனேன்.
97

Page 51
98
அன்று அவன் என்னைக்கண்டு சிரித்தான், எங்கென்று ஞாபகமில்லை. அன்றைக்கு முதல்நாளும், நான் அவனைச் சந்தித்தேன். சந்தையில் பழம் வாங்கியபடி நின்றதாய் நினைவுண்டு. யார் சொன்னது; அவனை யாரோ கடத்திப்போய்
கொன்றதாய்!
அவன் பாடிய பாடலை நேற்றும் கேட்டேனே மிகவும் இனிமையாய்,
ஒரு மழையின் ஒசையாய்! へ அவன் இப்போதும் மிக அற்புதமாகப் பாடுகிறான். நாளை வரும் மழையில்
காதுகொடு
அவன் பாடுவான்
கேட்கலாம்! மாம்பழத்துள் இருக்கும் புழுத்தெறித்து நிலத்தில் ஆடும் அளவுக்கு,
அவன் பாடல் இனிக்கிறது.

பல்லிகள் கத்தும் துயர்
ஒருவன் அவனுடைய அவளை விட்டுப் பிரியலாம். மண்டை புழுத்து அவளது கூந்தல் கொட்டி மொட்டையாய் இருப்பதைக் கண்டும் நெஞ்சை நெஞ்சாய்வைத்துக் கொள்ளலாம். அவள் தொப்புள் ஊதி
பலூனாய் பருத்து
நின்ற போதும்
தாங்கலாம்.
அவள் மூக்கு நெடுத்து நிலத்தில் விழுந்தால் அதுவும் அழகென
மனதை ஆற்றலாம்.
காது நீண்டு
தோளைத் தடவி,
ஒரு கண் மூடி
மறுகண் அவிந்தும், அழகி நீயே அழகி என்று தேற்றி மனதை வாழலாம்.
99

Page 52
நிலவில்
சவம் அடக்குதல்
பெரிய துயரல்ல. மையவாடிகள் பூமியில் குறைந்தால் வேறென்ன செய்வது என்று சொல்லலாம்.
தும்பியை வண்டை
பிடித்து நசுக்கலாம். உலகில் உள்ள மரங்கள் அனைத்தையும் எரித்துக் கருக்கலாம். கைகோர்த்துப் போகும் அழகிய சோடியை வாகனம் மோதிச் சிதைக்கலாம். துயரில்லை ஒன்றும் கட்டிலில் இருந்த ஒருவனின் மனைவியின்
முப்பது பல்லும்
00
இருபது நகமும் அவன் கண்ணின் முன்னே உதிரலாம். மார்பு வற்றலாம்.
துயரிலும் துயர்
அதுவும் இல்லை.
துயர்
வாழ்ந்த அறையை விட்டுப் பிரிவது,
பல்லிகள் கத்த, பூச்சிகள் இரைய.

நான் போகமுடியாத அயலூர்
அந்த ஊரை நாலு மூலையிலும் நாலு குயில் தூக்கி கொண்டுவந்து என் நெஞ்சுக்குள் வைத்தன இன்று காலையிலே.
அந்தக் கிராமத்தின் பெரு வாவி இப்போது எனக்குள்ளே ஓடியது. அதில் பூத்திருக்கும் தாமரைகள் வண்டு குந்தப் பூத்தபடி.
துப்பாக்கி வேலிகளால் அடைபட்டுக் கிடந்த அந்த சர்க்கரை மணக்கும் மணல் கிராமம் எனக்குள்ளேயே இன்று விடிந்தது. சந்தைக்குப் போகின்றார் சில மனிதர்கள் சில மனிதர்கள்! வயலில் உழைத்தபடி நிற்கின்றனர்!
10

Page 53
102
நான் முன்பு பார்க்கும் அந்தப் பாடசாலை வண்ணாத்தி இப்போது சற்றுப் பருத்தபடி பறக்கிறது. நான் அங்கு போய்த்திரிந்த காலத்தில் புன்னகைத்த விதம் போன்றே எனக்குள் இருக்கின்ற கிராகத்தில் என்னைப் பார்த்துப்
புன்னைக்கிறது.
சரி; இளம் அதிகாலைக் குயில்களே மீண்டும் தூக்குங்கள் கிராமத்தை. கொண்டுபோய், இது இருந்த இடத்தில் வையுங்கள். நாடு நலமுற்று ஒரே கொடியில் வெள்ளை பச்சை நீலமாய் சிவப்பும் மஞ்சலுமெனப் பூக்கள் விரிகின்ற காலம் வரைக்கும் நான் போக முடியாது இந்த ஊருக்கு இப்படித்தான் இடைக்கிடை தூக்கிவந்து எனக்குள் வையுங்கள், ரசித்துவிட்டு தருகிறேன்; எனதுபொன்னூரை, அழகுக் கண்ணுாரை, பாடசாலை வண்ணாத்தி பறக்கின்ற அயலூரை

மலங்கழிக்கும் பேய்க்காற்று
இன்றும், மனதுக்குள் மலங்கழித்து விட்டது காற்று.
இருபத்தி ஐந்துபேர்! அதில் ஏழுபேர் ஆண்கள். பதின்மூன்று பெண்கள்.
நாலு குழந்தை. ஒரு பிள்ளைத்தாய்ச்சியும் என, அது கழித்த மலம் வயிற்றைக் குமட்டியது.
ஐயோ! வாகனத்தை மறித்தனர்.
இறக்கினர்.
இழுத்தனர்.
இனம் இனமாகப் பிரித்தனர். ஓர் இனம்போக ஒர் இனத்தை வெட்டினர். குத்தினர். சுட்டனர். பிள்ளைத்தாய்ச்சியைச் வெட்டிச் சிசுவை எடுத்துத் தெருவில் நசித்தனர்.
103

Page 54
என்றெல்லாம் இன்றையக் காற்று என் மனதுக்குள் கழித்த மலத்தில் மனிதத்தின் நாற்றம் தாங்காமல், சூரியன் ஒருதரம் ஆடி நின்றது. அதன் கதிர்கள் சில முறிந்து தொங்கின, குடையின் கம்பிபோல்.
அனைவருமே பயணிகள்!
104
ஒன்றும் விளங்காத மாடுகள். புத்தி இருந்தால் யோசித்து நடந்திருக்கும். கட்டை போட்டு வாகனத்தை மறித்துத்தான் அக்கிரமம் நடந்திருக்கு,
சிலருக்குப் படுகாயம். தப்பிப் பிழைத்த ஒருவன் இன்னும் நினைவின்றிக் கிடக்கின்றான். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மொத்தமாய்! கிழவி உட்பட. என்றெல்லாம் இன்றையப் பேய்க்காற்று, நாய்க்காற்று, தெருவெல்லாம் நடந்தபடி, ஊரெல்லாம் மேய்ந்தபடி, கழிக்கிறது மலம் . மூக்கைப் பொத்தியும் நாற்றம் அடங்கவில்லை என் மனதுக்குள் மலம்.

நானான உருண்டை
என்னை உருட்டி உருட்டித் திரட்டியது சாணமுருட்டும் கருவண்டு. 'நாற்றம்' என்று முகத்தைச் சுழித்தது. இடுப்புக்குள் இருந்த
கைக்குட்டையால்
முகத்தைத் துடைத்தது. திரும்பவும் உருட்டி குப்பையில் தள்ளிவிட்டு தள்ளி நின்றது.
குப்பையில் கிடந்த ஒரு தவளைப் பிணம் வண்டு
உருட்டித் திரட்டி தள்ளிய ‘நானான’ உருண்டையைப் பார்த்து, சற்று விலகிப்போய்
குப்பையின் ஓரத்தில் குந்தி இருந்து எடுத்தது வாந்தி தலையில் கைவைத்து.
unr-7 105

Page 55
106
வெறுப்போடு காளானின் அடியிலே இளைப்பாறிக் கொண்டிருந்த வண்டு அழுதது. நான் இந்த நாற்ற மனிதனை உருட்டி வந்ததே தவறு. பல விதத்தில் கொடிய நெடி இவர்களுக்குண்டு. எப்போதும் நான் சாணமே உருட்டுவேன். என்னசெய்ய; ஓர் ஆசையில் உருட்டினேன். தாங்கமுடியாத நாற்றம்.
சொல்லிக்கொண்டே வண்டு திரும்பவும் கைக்குட்டையை எடுத்து துடைத்தது முகத்தை, மூக்கையும் சீறி.

கடல் அழுத தலைவெட்டிய பிணம்
கடல், குமுறிக் குமுறி அழுதது. தன்னில் மிதந்த தலை வெட்டிய பிணத்தை
நினைத்து நினைத்து.
அதைச் செய்தவன் யார், என்று மிக ஆத்திரமாய் ஒரு மீன் துள்ளி எழுந்தபடி கேட்டது.
வெட்கம், மிக வெட்கம், ஆனால்; எனக்குத் தெரியாது. என் அடியில் பிணம் ஒதுங்கிய பிறகு
கரையில்
நிற்க மனமில்லை எனக்கு.
என்றபடி
நான் எப்போதும் சாய்ந்திருக்கும் நெடிய முடத்
தென்னை
கடலுக்குள் ஓடியது ஓலைகள் உதிர.
107

Page 56
108
எனக்கும் "மனம்' உண்டு என்றது கடல்,
சீறிச் சிறிது ஆத்திரமாய்
என்னைப் பார்த்து.
மீன் வளர்ப்பதற்கும்
அவை சினைவைத்துப் பொரிப்பதற்கும்
மட்டும் நானில்லை.
என் கரையில் இருக்கின்ற காதலனின், காதலியின்,
கதைகளிலும் பங்குண்டு;
எனக்கு என்றபடி
சுறாமீன்களே இனிக் காவலுக்குப் போங்கள்
இரவுகளில் என்கரையில்
என்று கத்தியது.
இனி யாராலும் முடியாது இரவுகளில், கடலில் தலை வெட்டிய பிணம் மிதக்கவிட,
அது விடாது!

உலகின் முள்ளந்தண்டில் ஒரு பாடல்
என்னைப் பற்றி ஒரு பாடல் எழுதிக் கொடுத்திருந்தேன், இந்த உலகின்
முள்ளந் தண்டில் ஒட்ட.
ஒட்டியது காலம். அதை வாசித்துப் பார்த்த நாட்கள் ஏங்கினவே நின்று.
நான் அந்தப் பாடலில்; மனித இரத்தத்தை குருவிக்குள் பாய்ச்சுவோம், குருவியின் உதிரத்தை
மனிதருக்குள் ஊற்றுவோம். என்றெல்லாம் எழுதிய வரிகளை ரசித்து ரசித்து விடிந்த இராக்களும், மகிழ்ந்து வியந்து தூங்கிய பகல்களும், அதிகம்; ஆனால்
மனிதன் உணரவில்லை.
109

Page 57
11)
மனித இரத்தம் குருவியுள் போவதா? குருவியின் உதிரமா நமக்குள் வருவது? என்று மனிதன் நகைத்தானே தவிர, அந்தப் பாடலைப் பிரிக்கவில்லை; பொருள் தேடி.
குருவியோ குருவி, ஊரெல்லாம் பறக்கும் உயிர், மனிதா,
நீயும் பற! என்றெல்லாம் அந்தப் பாடலில் பின் வரும், அதைப் படிக்க பொறுமையே இல்லை இந்த மனிதனுக்கு.
நுனிப்புல் மேய்ந்தபடி என் பாடலைப் பழித்தபடி குருவிக்குள் மனிதனின் இரத்தத்தை ஊற்றுவது ஏனென்றும் எனது
பாடலில் பின் வரும்.

எனக்குள் விழுந்த எனக்குள் இருப்பவர்
எனக்குள் இருந்தவர் ஓடிப்போனார். கையில் ஒரு விளக்கை எடுத்துக்கொண்டு வாசல் முழுக்கத் தேடினார், பின், ஓர் இடத்தில் நின்றார். தோண்டினார்.
எடுத்துப்போட்டார்; என் செத்துப்போன இதயம் ! அதற்குள் இருந்த மயில் 1 நான் பறந்த சிறகு 1
குடியிருந்த பூ !
இரவு; மிகவும் நேரமாய் பனிபெய்யவில்லை, மிகவும் உஷ்ணமாய் இருந்தது.
111

Page 58
112
தோண்டி எடுத்த பிணங்களை சிறிது நேரம் தூக்கிப்பார்த்தார் மூக்கில் வைத்து முகர்ந்தார் கண்ணில் எடுத்து சிலதை ஒற்றினார் அருகில் இருந்த வெண் பூக்களைப் பறித்து. அவைகளின் மேலே தூவினார்.
இரவு; துயரம் தாங்காமல் மழையே பெய்தது அவசர அவசரமாய் எனக்குள் இருந்த அவர் அந்த இடத்திலேயே அவைகளைப் புதைத்தார். மண்ணை இழுத்து மூட விரும்பாமல் பூக்களைக் கொண்டே மடுவை மூடினார் மிகவும் சோகம் அவரது முகத்தில். ஓடி வந்து எனக்குள் விழுந்தார்; முகம் அடிபட,
குப்பற.

என் காகங்களுக்காக
நான் காறித் துப்பினேன். அதற்குள் இருந்து மனிதனின் மானம் நாறியது.
தெருவெல்லாம் காகங்கள் கரைந்தன, எனது காறித் துப்பலுக்குள் நாறிய மனிதனின் மானத்தைத் தூக்கிப்
பறந்து அழக்குண்ண அவைகளுக்கு முடியாமல் விக்கி விக்கி அழுதன,
தன் மானம் மேலிட்டு,
113

Page 59
114
ஆம், என்னுடைய காகங்களே தவறுதான் செய்துவிட்டேன் உங்கள் தன்மானத்தை மதிக்காமல் மனிதனின் மானத்தை, உங்களைப் பார்த்துக் காறித் துப்பினேனே 'புசிக்கும்படி'
பெரிய தவறுதான்.
நான் துப்பிய துப்பலை மண்ணுக்குள் புதைக்கின்றேன், நீங்கள் பறவுங்கள்
தன்மானத்தோடு. எலிப்பிணத்தை அல்லது மாட்டின் சாணத்தை உண்ணுங்கள், மனிதனின்
மானம் இழிவு.
ஒருவனை ஒருவன் தின்னுபவன் !
6) விதமாகப் பிரிந்தவன் !
மண்ணுக்குள் அவனது மானத்தை நான் புதைப்பேன், அவ்விடத்தில்
மரம் முளைக்காது ;
என் காகங்களுக்காக.

துள்ளி விளையாடும் மரணம்
எனது மரணம் இருக்க இருக்கப் பெருக்கிறது. சொற்ப காலத்திற்கு முன்னர்தான் என் கண்முன்னே தெரியத்தொடங்கிய அது, இப்போது
என் வாசலில் வால் முறுக்கிய ஒரு கன்றுக்குட்டியைப்போல் தினம் விளையாடிக் களிக்கிறது.
முதன் முதலாக என் கண்ணுக்குத் தெரியும்போது அது சிறு
எறும்பைப்போன்றுதான்
இருந்தது.
அதன் வளர்ச்சி
மிகவும்
வேகமான ஒன்று!
இந்தக் குறுகிய காலத்திற்குள் அது வளர்ந்திருக்கும் விதம்,
பயங்கரம்
11 sh

Page 60
மண்ணின் ராசி அப்படி, கேட்டீரோ! கடலும் சுருங்கி ஒரு போத்தலுக்குள் ஊற்றி மேசையிலே வைக்கும் அளவுக்கு, அச்சம் நிறைந்த என் தரையில்
மரணம் ;
மாடுமாதிரி என்ன, யானையைப்போன்றும் கொழுக்கும்.
என் மரணம் இப்போது மிகவும் மகிழ்ச்சியுடன்
துள்ளி ஓடி வந்து
சற்று
16
விலகிக்கொண்டு போகிறது; நான் - இன்று - பாவமென்று நினைத்திருக்கும்!

அப்பாவிச் சனங்களின் சந்தை
அந்தச் சந்தை ベ பேயாகி அலைவதாக சொல்லப்படுகிறது, நான் நம்பவில்லை.
ஊரின் மூலையிலே நிற்கின்ற பெரிய ஆலமரத்தில் அன்றிரவு அந்தச் சந்தை அலறிக்கொண்டு தூங்கியதாக, நேற்றும் ஒருவர் ஒரு பொது இடத்தில் கதைத்தார், நான் ஏற்கவில்லை.
1

Page 61
118
போன வெள்ளிக்கிழமை தான் படம்பார்த்து வரும்போது, முச் சந்தியில் நின்று
அந்தச் சந்தை மிகவும் உஷாராக இயங்கியதாகவும், அதை வளைத்து மாடுகளும் ஆடுகளும் மேய்ந்ததைப்போலவும், தான் கண்டதாய் அந்தப் பையன் சொன்ன கதையைக்கூட 6 T6Sr LD60 TLD ஒரு பொருட்டாகத் தூக்கவில்லை.
மீன்பெட்டி எமனாகி வெடித்துப் பறந்த சந்தையது. எத்தனையோ உயிர்கள் போன இடம்.
இருந்தாலும், அது பேயாய் அலைவதுவை என்னால் இயலாது ஏற்க, என்றிருந்தேன்; அந்தப் பெண்மணி சொன்ன கூவிக்கொண்டு சந்தை இரண்டு வண்டிகள் சாமான் இறக்க அதற்குள் போன புதன்கிழமை நள்ளிரவுக்குப் பின் கடற்கரை ஓரத்தில் குந்தி இருந்த படலத்தைக் கேட்டபின்பும்.

நிலவிற்குள் பாலூற்றுபவன்
முன்னர் வரும்போது
சுட்டதுதான் சூரியன்
பிறகு,
போதுமான அளவுக்குக் குளிர் நான் நட்ட வெங்காயமும் இப்போது முளைக்கிறது,
உருளைக்கிழங்கு விளைகின்ற தரையாக நான் சூரியனை மாற்றிவிட்டேன், இடைக்கிடை வல்லாரை செய்வேன்.
நான் சூரியனில் வீடுகட்டி, பசுமாடு வளர்ப்பதற்கு இடமும் அமைத்து, இதன் வாசியாய் ஆவேன் என்று யார் நினைத்தது !

Page 62
20
அண்மையில்தான், ஒரு கிணறு தோண்டினேன். மனிதன் வசிப்பதற்கு வசதியான சூழல் இந்தச் சூரியனில் உண்டு.
ஒருநாள்
என் வெள்ளைப் பசு மேய்ந்து போனபடியே சூரியனின் விளிம்பிற்கு வந்தது அப்போது அது உங்கள் நிலத்தை பழைய ஞாபகத்தில் எட்டிப் பார்த்திருக்கவேண்டும்; உஷ்ணமடித்து முகம் கருகிக் கறுத்தது மாட்டிற்கு.
நேற்று, நான் நட்டிருக்கும் கொய்யாவில் ஓர் அணில் தாவுவதைக் கண்டேன் ! வண்ணத்துப் பூச்சிகளும் வரட்டும், கொதிக்கும் நிலத்தில் கிடக்காமல்.
பசுப்பால் குடிப்பதற்கு
ஆளில்லை !
நாங்கள் சூரியனில் நிரந்தரமாய் குடியேறிக்கொண்ட
பின்பு
என் பசுக்கள் பால் கறப்பது அதிகம். அன்றையப் பூரணையில் நான் நிலவிற்குள் அள்ளி அள்ளி ஊற்றினேன், பால் ! நான் பூமியில் இருக்கையில் என் கண்முன்னால்
சரசமிடும்; அந்தக் காதலனும் காதலியும் குளித்திருப்பர்.

ஏழாவது உலகம் போனவன்
போனவன் போனவன் போனவன் போனவன் வரவில்லை,
ஏழாவது உலகத்திற்கு 1
இந்த முதலாவது உலகத்தில் என்னை நடுத் தெரு ஒன்றில்
கொஞ்சம் நில்லென்றான், தான் வருவதாய்.
நின்றேன் நின்றேன் நின்றேன் நின்றேன் இன்னும் நிற்கின்றேன், தன் அலுவல் முடிக்க ஏழாவது உலகம் போனவன் திரும்பவில்லை வெயிலின், தோள்பிடித்து இறங்கி,
frt-8 12.

Page 63
J22
அவன் போன நான் கண்டறியாத அந்த உலகத்தில் மடு குட்டை, உண்டா ! அல்லது முதலைகளா? வெள்ளைப் பெண்கள் நீலநிறக் கண்ணில் பவனிவரும் பூந்தோட்டம், அவர்கள் அலுத்து
தம் வியர்வையினைத் துடைக்கும் காகிதமாய் அவன் நெஞ்சு,
முறையே: உண்டா? போச்சா? எனக்கொன்றும் விளங்கவில்லை. வெயில் நிற்கப் போகிறது.
ロ

புனரமைக்கப்பட்ட கடலருகு ஊர்
அழிந்தவர் போக; மிஞ்சி இருந்த மனிதர்களைத் தேடி கொண்டுவந்து
பொய்ச் சிறகு கட்டிப் பறக்கவிட்டிருந்தனர் மீண்டும் புனரமைக்கப்பட்ட அந்தக் கிராமத்தில்,
காக்கைகளை
குருவிகளை
குயில்களை
அனைத்தையுமே;
வண்டையும்கூட, புதியதும், தப்பிய பழையதுமாய், எங்கிருந்தோ ஏற்றிவந்து கொட்டி அந்தக் கிராமத்தின் முகத்தைக் கீறி இருந்தனர் படமாய், வர்ணமில்லை!
அந்தக் கிராமத்தின் கடலை முழுமையாய் இறைத்து இரத்தம் கலந்திருந்த நீரை நீக்கி நீல நீராய்
பார்வைக்குப் பழையபடி வைத்ததுதான் திறமை.
123

Page 64
124
ஆனால் கடல்
சொல்லியே விட்டது :
இவர்கள்
என் அருகில் குடியிருந்த பழைய மக்களே அல்ல.
அவர்கள் - உரோமத்தால் பறந்தவர்கள் ! பெரிய பரந்த இங்குள்ள மரங்களிலும் சிறிய புற்களிலும் குந்தி மகிழ்ந்த பாரமற்ற ஆத்மாக்கள் !
அவர்கள், வளர்த்த நாய்கூட அப்போது பக்கத்து ஊருக்கு தன் சகாவைத்தேடி வால் முறுக்கி
எழுந்து பறந்தே போகும். அந்த ஊரின் மரக் கிளையொன்றில் குந்தி இருந்து குரைத்தே
பேசும்.
ஆனாலும் ஓர் உதவி :
முகம் செத்து விலா எலும்புள் நோவிருந்தும் நிலவு உடைந்து வானம் பொரிப்பறந்த இந்த
அச்சம் நிறை ஊருக்கு வாழ வந்தோர்க்காய், என் கரையில் நிற்கின்ற தென்னைகளைக்கேட்டுள்ளேன் கூடுதலாய்
ஒலை வீச !
இவர்கள் குடிலமைக்க.

அறையில் படுக்கும் மரங்கள்
என் மரங்களெல்லாம் அறைக்குள் வருகின்றன வாசலில் நிற்கப் பயம் !
நெருப்பு உதிரும்.
கட்டிலின் அடியிலும்
கதிரையின் கீழுமாய் ஒன்றின் மேலே ஒன்று கிடந்து இரவைப் போக்க, தங்கள் வேர்களைத் தாங்களே தூக்கி மரங்கள் வருகின்றன,
கிளைகளைக்கூட மடித்து.
வாருங்கள் மரங்களே ! அமருங்கள் ! உறங்குங்கள் ! உங்களில் அடைந்த பறவைகளைக்கூட கூட்டி வந்திருந்தால் சிறப்பு. மெய்தான்; உங்கள் இலைகளில் இருந்த புழுக்கள்
6r6as? கடல் எரிந்து மீன்கள் பொசுங்கும் எமது இரவுகளில் புழுக்களை நீங்கள் வெளியில் விடுதல் என்ன நியாயம் ?
125

Page 65
126
இந்த இருளிலும் காகங்கள் பறக்கும்
அருமை மரங்களே!
எரியும் கடலுள் பொசுங்கும் மீனின்
சினைகளைத் கொத்த.
அதுசரி; என்று அறைக்குள் இடம் போதாது
என அறிந்தா,
பூமரங்களே நீங்கள் சொல்லுங்கள், உங்கள்
வண்டுகளை
இதய வண்ணத்துப் பூச்சிகளை
கூட்டி வராமல் கன்னிகளைப் பூட்டி
திறப்பை
வண்டுகளிடமே கொடுத்துவிட்டு
படுக்கைக்கு வந்தீர்கள் !
பாவம் வண்டுகளும் வண்ணத்துப் பூச்சிகளும் மரங்கள் போய் அறையில் படுக்க நெருப்பு உதிரும் தரையில் இரவைக் கழிக்குமோ !

சீறி ஓடாத வருங்கால மனித நதி
அந்த எழுதத் தெரியாத பையன் இன்று என்னைச் சந்தித்தான். பெரிய பரிதாபத்தின் முழு மொத்த வடிவமாய் என் முன்னே நின்றான்.
மீசைக்கு விதைதூவி இளமை மழை பெய்ய பயிர் முளைத்த பருவம். ஏதோ, அலுவலுக்கு வந்திருந்தான் கையொப்பம் இடு என்றேன்; இடது கையின் பெரு விரலை ஊன்றி வெட்கிச் சிரித்தான்
அது ஒரு
செத்த சிரிப்பு.
127

Page 66
என் இதயம் கழன்று
அவன் இட்ட
ஒப்பத்தின் மேல் விழுந்து
கத்தியது, பின் கருகிப்
பற்றியது.
அவன் காதல் உணர்வுகளை என்னென்று ஒருத்திக்கு எழுதுவான் வருங்காலம் !
அழகு முகம்.
கீழுதடு,
இரத்தச் சிவப்பு
பெண் விழுவாள் இவற்றில் மயங்கி, காகம்போல் அவன் விழுந்தவளின் வேலி ஒரமெல்லாம். கரைந்து திரிவானோ, எழுத வருகின்ற உணர்ச்சிகளை
ஒலியாக்கி !
வந்திருக்கக் கூடாது அவன் இன்று அலுவலுக்கு எனக்கு
நிறைய வேலைகள் இருக்கின்ற தினம் இன்று இனியென்ன ?
நானில்லை !
அந்த எழுதத் தெரியாத வருங்கால மனித நதி போனாலும், நான்
இருந்தபடி கதிரையிலே
உலகப் பாடசாலை அனைத்தையுமே நினைத்துவிட்டு எண்ணுகிறேன் ;
அந்த நதி வரும் நாளில்
சீறி ஒலியெழுப்பி பாய்ந்து ஓடாது, உறையும் சிறு துளியாய்.
O
128


Page 67
சமகால சூழலிலே கவித்துவ வீச்சை விரிவு ப அண்மைக்காலக் கவிதைகை புரிந்துகொள்ளலாம்.
கவிஞர். "சோை தரமான கவிஞராக அறியப்
கவிதையுலகுக்குப் புதிய பரி நாம் நம்பலாம்.
தேசிய கலை இ சவுத் ஏசி

முஸ்லீம் கவிஞர்கள் தமது இத்துவ க் கறிப்பாக ಛೀ?
லக்கிளி தமிழ் இலக்கியப்பரப்பில் பட்டவர். அவரது கவிதைகள் தமிழ் மாணத்தை ஏற்படுத்துவன என்று
இலக்கிய பேரவை