கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கனகி புராணம்

Page 1

- 下 *ԱՅ
| 闊

Page 2

க்கை புராணம்
இய்ற்றியவர். ஈழத்துப் புலவர்,
கட்டுவச் சுப்பையனுர்
இலங்கைக்கு வித்தியாதிகாரியாயிருந்து இளைப்பாறிய,
திரு. க. ச. அருள்நந்தி அவர்களின் முன்னுரையுடனும், புலவர், சிவங். கருணுலய பாண்டியனுர் அவர்களின் விரிவுரையுடனும், கூடியது.
பதிப்பாசிரியர், வட்டுக்கோட்டை, மு. இராமலிங்கம்
(Polonis)
புலவர் சிவங் கருலையா ண்டியஞர்
சுதந்திரன் அச்சகம் கொழும்பு - 12
Copyright 1961 (விலை சதம் 50,

Page 3
Available of
V. Naranthiran Esq,
15, Hamer's Avenue,
Colombo - 6.

முன்னுரை
செந்தமிழ்ச் செல்வியானவள் பல்லாயிரம் ஆண்டு களாக இனிது நடம் புரிந்து வருகின்ற யாழ்ப்பாணப் பழம் பதியின் கண்ணே, இன்னிசைக் கவிவாணர் பலர் தோன்றிக் காலப் பெரும் பரப்பில் தம்மடிச்சுவட்டைப் பதித்துப் போய் மறைந்தனர். அன்னருட் புலவர் (நட்டுவச்) சுப்பையனுர் ஒருவரென்பதைப் பலரறியார். இப் புலவர் யாத்ததாக நாம் அறியக் கிடக்கின்ற நூல் ஒன்றேயாகும். ஏறக்குறைய நானூறு விருத்தப் பாக்களா லானது இப்பனுவலெனக் கூறுவர். அதனில் அதிபெரும் பாகம் எமக்கெட்டி லது; மறைந்தொழிந்து போயிற். றெனலாம். தமிழ்ப் பற்றுடையார் தம் நினைவினில் முன் பின் மூன்று தலைமுறையாக தவழ்ந்து வந்த ஒரு சில செய் யுட்கள் மாத்திரம் நவாலியூர் ந. சி. கந்தையா பிள்ளை அவர்களின் அரிய தமிழ்த் தொண்டுகளுள் ஒன்முக அச் சேறிச் சென்ற இருபது ஆண்டுகளாக நடமாடி வருகின்
இந் நூலின் பெயர் கனகி புராணம், கனகி சயமரம் (சுயம் வரம்) என்னும் பெயரும் அதற்குண்டு. கனகி என்பாள் கவிஞர் வண்ணுர்பண்ணைச் சிற்றுாரில், இப் புலவர் காலத் தில், வாழ்ந்த கட்டழகியாம் ஒரு கணிகை மாது. இப் பொது மகளோடு புலவரவர்கள், பிரசித்தி பெற்ற அக் காலத்தவர் பலரைப் போன்று, தொடர்பு பூண்டு சில காலங் கழித்தனர் என்பர். இத் தொடர்பின் விளைவாகப் பெற்ற அவலத் தீயினுற் புடமிடப்பட்டுப் புது வாழ் வெய்தி, தாம் பட்ட பெரும்பாட்டை மற்றையோர் தவிர்த்தல் வேண்டி உலகுக்கு நல்லறிவுறுத்தும் வேட்கை யுந்த இக் காப்பியத்தை யாத்தனர் போலும்.
பாட்டுடைத் தலைவியோ ஒரு பரத்தை; நூற் பொருளோ அன்னுளின் கண்கவர் கட்டழகும் உளப் பான்மையும், அவற்ருேடு, விளக்கை நாடிப் போய் நாச

Page 4
முறும் விட்டிலைப் போல், விரும்பி அவளை அடைந்தார் தன் குளுகுணங்களும் அவளோடவர்கள் துய்த்த சிற்றின்ப வாழ்வின் வெம்பேறும். எனினும், இந் நூலினுக்குக் கவி யலங்காரப் பண்பு உண்டென்பதை மறுக்க முடியாது. இன்னிசை, சொற்சுவை, நகைச்சுவை, அழுகைச் சுவை உவப்பான உவமைகளாம். இவையெல்லாம் ஆங்கு நன் கமைந்திருக்கக் காணலாம். ஆதலின், அதனை எம் முன் னேர் எமக்கு அளித்துப் போந்த இன்காவியங்களோடு சேர்த்துப் போற்றிப் பேணுதல் தக்கதென உளத்திற் கொண்டு, அதற்காக உழைத்தனர் இரு தமிழன்பர்கள். ஒருவர் மேற் கூறிய கந்தையா பிள்ளை அவர்கள். மற்ற வர், வட்டுக்கோட்டை வாசரும், கொழும்பு வருமான வரிக் கந்தோரிற் கடமையாற்றி வருகின்றவருமான, மு. இராமலிங்கம் அவர்களாவர்.
இவர், நாட்டுப் பாடலென்னும் நயந்திகழ் துறையி னுட் புகுந்து பல்லாண்டுகளாக எமதிலங்கை வள நாட் டில் தமிழ் வழங்கும் ஊரெல்லாந் தேடித் தேடிப் பெற் றுத் துருவித் துருவியாய்ந்து சேகரிக்கும் நலம் படைத்த நாட்டுப் பழம் பாடல்களை வானெலி வாயிலாகவும், பிற ருடைய பொருளுதவி யாதுமின்றி அச்சேற்றியும், ஆர்வத் தோடு நாட்டிற் பரவச் செய்து வருகின்றனர். அஃதன்றி, இப் பாடல்களின் உட் பொருளையும், அவை தோன்றி வழங்குதற்கு வாய்ப்பான நாட்டு வழக்கங்களையும், நாட் டவர் தம் உளப்பான்மைகளையும், நன்காராய்ந்து தஞ் சிந்தையில் தெளிவுற்ற கருத்துக்களை வெளியிட்டும் வரு கின்றனர். இவ்வாறு இடையருது தமிழ்த் தொண் டாற்றி வருமிவர், கனகி புராணப் பிரதியொன்று கிடைத்ததும் அதனைப் பற்றி என்னேடு கலந்துரையாடி, இரண்டாம் பதிப்பொன்று அவசியமெனக் கூற, யானும் அவர்களது கருத்தைப் போற்றி முன்னுரையொன்றை எழுதியுதவுதற்கு இசைந்தேன்.
புதிய பதிப்பொன்று வேண்டுமென்பதற்கு நியாயங் கள் இரண்டுள. ஒன்று முதற் பதிப்பிலுள்ள சுயம்வரம்

iii
படலத்தில் இல்லாத ஒன்பது செய்யுட்கள் வெளிப்பட் டிருத்தல். மற்றது முதற் பதிப்பிலுள்ள நாட்டுப் படலச் செய்யுட்கள் பதினறும் சுப்பையனர் அவர்களு உடையனவன்றென்பது ஐயப்பாட்டுக்கு இடனின்றித் தெளிவானமை. இராமலிங்கம் அவர்களுக்குப் பிறிதொரு பிரதியுங் கிடைத்தது. அதனிலும் இந்த நாட்டுப் படலப் பாக்களுள் ஒன்றேனுமில்லை. இதனை எனக்கவர்கள் எடுத் துக் காட்டியவுடன் பழையவொரு சம்பவம் என் நினை வுக்கு வந்தது. இற்றைக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கந்தையா பிள்ளை அவர்களின் பதிப்புப் பிரதி யொன்று எனக்குக் கிடைத்தது. அதைப் படித்துச் சுவைத்த யான் நாட்டுப் படலத்திலுள்ள
‘புல்லைமேய்ந்தங்குநின்று திமிர்புரி யிடபக் கன்று முல்லைசார் வழியதாக முடிமிசை குடைகைக் கொண்டு செல்லுவார் தம்மைக் கண்டு சினந்துவா லெடுத்து மூசிக் கல்லேயுங் கயிற்றி னுேடு காட்டிடை யிழுத்துச் செல்லும்’
என்னும் நான்காஞ் செய்யுளை, 1946ஆம் ஆண்டில் வானெலியிற் பேசும்போதொருமுறை, எடுத்து அதன் அழகை விரித்து விளக்கினேன். விளக்கி நாட் பலவாகு முன் யானெதிர் நோக்காத ஒரு கடிதம் வந்தது. அதனை யெழுதியவர் நீர்வேலி வாசரும், அக் காலத்தில் விவாகம் பிறப்பிறப்பாம் இவற்றைப் பதியும் பணியாற்றி இப் போது இளைப்பாறியிருக்கும் சித்சபேசன் அவர்களாவர். அவர் எழுதிய கடிதத்திற் பின்வருமாறு கூறி பிருந்தனர்:
"1914 வரையில் கனகி புராணத்துச் சில செய்யுட் எகளை அதிக சிரமப்பட்டு ஊரூராய்த் திரிந்து சம்பா தித்தேன். அப்பாடலில் எனக்கு அதிவிருப்பு, அப் போதிருந்தது. 1935 வரையில் ந. சி. கந்தையா அவர்களின் சினே கம் கிடைத்தது . அவருடன் கனகி புராணம் பற்றிய சம்பாஷணை நடைபெற்றது. பூரீ. ந. சி. க. அவர்கள் அப் பிரதிகளை அச்சிட விரும் டிபியமையிசூறல் அவற்றையெழுதிக் கொடுத்தேன்

Page 5
v
துருவாச் முனிவர்.தேவரில் யார் யாரைக் கருதி நீ வரவழைத்தனை யவரவர் கணத்து நின் கரஞ் சேர்ப் வர். தம்மை யொப்பதோர் மகவையுந் தருகுவர்." என்று கூறி உபதேசித்த மந்திரத்தை, குந்தி தேவி சோதனை பார்க்கும் பொருட்டு உச்சரித்த மை போல் நானும் என்னலியற்றப்பட்ட சில பாடல்களை கனகில் புராணத்துடன் சேர்த்தனுப்பினேன். அப்படிச் செய் தமை களவன்று. என் புன் பாடலுக்கும் ஏதும் நிறை. யுண்டோ என்பதை அறியவே அப்படிச் செய்தேன். குந்தி கன்னனைப் பேழையுளடைத்து கங்கையில் விட, பேழை அத்தினபுரி அரண்மனையை அடைந்தது. "புல்லை மேய்ந்து" என்னும் முதலையுடைய பாட்டைப் பற்றித் தாங்கள் றேடியோவில் பேசியதை யான் அறிந்துள்ளேன். இப் பாடல் நீர்வேலித் தலைமை யாசிரியரும் நானும் ஒரு முறை அயலூருக்குச் சென்ற போது செம்பாட்டு வெளியில் எங்களைக் கண்டு சீறிச் சினந்து ஓடிய ஒரு நாம்பன் மாட்டைப் பற்றியதாகும்.
என்பாட்டிற் பாடிய என் பாட்டின் நிறையை அறியும்பொருட்டு அறிஞராகிய தங்களை ஏமாற்றிய ஒரு குற்றத்துக்கு ஆளானேன்."
இதை வாசித்ததும், கனகி புராணக் கவிகளுள் ஒன்" றென அச்சேறிய இக் கவியானது புலவர் சுப்பையனர் அவர்கள் இயற்றியதென எண்ணி யான் ஏமாந்திருந் தேனே என்னுஞ் சிந்தனை ஒரு புறம் உளத்தை வாட்ட, மறுபுறம் அதனை உள்ளபடி இயற்றியவரும் ஒரு புலவ" ரன்ருே என்னும் வியப்போடு கூடிய இன் பவுள்ளுணர்வு: எழுந்து என்னைத் தேற்றியது. சில நண்பருக்கு இதை யான் க்கூறியதை விட வேறு யாதும் இதுவரையுஞ் செய் திலேன். இந்த இரண்டாம் பதிப்புக்கு யான் முன்னுரை எழுதத் தொட்ங்கு முன்னர், சித்சபேசன் அவர்களுக்கு என் கருத்தைக் கடித மூலநீ'தெரிவித்தேன்: 'நாட்டுப்

w
படலச் செய்யுட்கள் பதினறுந் தங்களுடையனவே என வும், தாம் தேடிப் பெற்ற கனகி புராணச் செய்யுட்கள் பன்னிரண்டோடு அவற்றையுஞ் சேர்த்து, கந்தையா பிள்ளை அவர்களுக்குக்குக் கொடுத்தனர் எனவும் அறி வித்து உடனே பதில் தந்தனர். அழகான கவிகளைப் பாட வல்ல இயற் புலவர் இவரென்பதை முன்னரே அறிந் துள்ள யான் வியப்புறவேயில்லை. மற்றையோரும் வியப் புருவண்ணம், 1946ஆம் ஆண்டில் அவர்கள் எனக்கு அன் போடனுப்பிய பொன் போன்ற செய்யுட்களுள் ஒன்றை "ஈண்டுத் தருகின்றேன்: ・ ーツ ・ 。
'கள்ளித் தடியை முறித்தடுக்கி மூட்டிக் கனலைப் பிடுங்கிமர வள்ளிக்கிழங்கை வைத்துமிசை வாட்டியுரித்துக் கடித்துண்டு துள்ளித் திரிந்து விளையாடித் தோழருடனு னிரைமேய்க்கும்
பள்ளிச் சிறுவர் பயிலிடங்கள் பலவும் பாங்க ருளகாணம்"
"புல்லை மேய்ந் தங்கு நின்று . *" என்னுஞ் செய்யு ளுக்கும் இதற்குமுள்ள ஒற்றுமையைச் சொற் சுவை பொருட் சுவை இரண்டையும் ஒப்பு நோக்கிக் கண்டு, முதலாம் பதிப்பினுட் புகுந்து விளங்கும் நாட்டுப் படலச் செய்யுட்களெல்லாம் சித் சபேசன் அவர்களுடையனவோ என்னும் ஐயப்பாட்டை இன்னமுமுடையோர் அதனைத் தீர்த்துக்கொள்ளுவார்களாக .
சில ஆண்டுகளுக்கு முன்னர் வயோதிபரான தமிழன் பர் ஒருவரோடு யான் கலந்துரையாடிய போது, வெளி வந்த பிரதிகள் ஒன்றிலேனும் இல்லாத ஒரு செய்யுளை அவரெனக்குச் சொன்னர். அதாவது:
‘நன்னிய ருறியறுந்தார் நடுவிலார் பூண்டுகொண்டார் சின்னியோடொன்றிவிட்டான் செங்கையொன்றிலாதசொத்தி முன்னுளோர்பாட்டைக் கண்டு(கேட்டு)முத்தருங்கைசலித்தார் *நன்னிய கனகிபாடு நடுராசி யாயிற்றன்றே."
(*"நன்னிய" ೯dru 5.- "நன்னுதல்" அல்லது "நன்னியல்" என் பதன் பேதமாக இருக்கலாமோ என்று எண்ண இடமுண்டு. கனகி

Page 6
யின் இயலுக்குப் leavif is என்ற அடை *ாடுத்திருப்பாடி என்று கொள்ளுதல் C”وه، «ه معرغه ق siggs assir 'డ్ergy త్ఈ* GAlp கொள்ளல போலும்.)

முகவுரை
கனகி புராணம் பழைய பதினெண் புராணங்களுள் ஒன்றன்று. வடநூல் மொழிபெயர்ப்புமன்று. ஈழநாடு என்னும் இலங்கையினது வடபாற் செந்தமிழ்ப் பட்டின மாகிய யாழ்ப்பாணத்திலே கி. பி. 19-ம் நூற்ருண்டிலே பிறந்து புலமையால் புகழெய்திச் சென்ற புலவர் நட்டுவச் சுப்பையனுர் தாமே புதிதாய் இயற்றிய புராணமாகும். புராணம் என்னும் சொல்லுக்கு வரலாறு என்பது பொருள்.
பாட்டுடைத் தலைவியோ நாட்டியக் கலையால் நாட்ட மெய்திய கனகி என்னுங் கணிகை ஆவள். இவள் யாழ்ப் பாணத்திலேயே வாழ்ந்து தன் இலாவணியத்தாலும் கலை வன்மையாலும் இலங்கை இந்திய ஆடவர் பலரைத் தன் ஆணைக்குள்ளாக்கினள் என்றும், பிறவாறும், இப் புரா னங் கூறும்.
இந் நூல் முழுதும் ஒருங்கு கிடையாமையால், காலத் துக்குக் காலம் கிடைக்கும் பாக்களை வெளியிடும் பேற் றையே பெற்றுள்ளோம். முதலில், பெரியார் ஜே. ஆர். ஆணல்ட் சதாசிவம்பிள்ளை அவர்கள், 1886ம் ஆண்டில், தமக்குக் கிடைத்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தை யும், எடுத்துக்காட்டுக்கு ஒரு பாடலையும் வெளியிட்டனர். அதன் பின்னர், பல நூலாசிரியர், நவாலியூர், திரு. ந. சி. கந்தையாபிள்ளை அவர்கள் தமக்குத் தெரியவந்த கவிகளை 1937ம் ஆண்டு வெளியிட்டனர். நாமும் நமக்குத் திருவா ளர் பி. தர்மலிங்கம் அவர்கள் அளிப்பால் வந்த பாக்களை இது காலை வெளியிடுகின்ருேம். முழு விவரத்தையும் நூல கத்தே காண்க.
இதுவரை வெளிவாராத கனகி புராணச் செய்யுட்கள், புலவர வர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்கள்,முதலியனவற்றை

Page 7
viii
இதுகாறும் தெரிய வந்தவர்களும் இனித் தெரிய வருபவர்களும் எமக்கு எழுதியுதவினுல், யாவையுந் தொகுத்துப் பெரிய முழு நூலாக வெளியிடுவோம். சான்றேர் சொல்லாயினும், பிறர் சொல்லாயினும், அவற்றில் புலமை காணின், அவற்றைக் காத் துக் கலைச் செல்வமாக்குவது எல்லோர் கடனுமாம்.
வவனியா நகர சங்கத் தலைவர், திரு. பி. தர்மலிங்கம் அவர்கள் நம் நாட்டுப் புலவர் நட்டுவச் சுப்பையனுர் பாடலைக் கண்டெடுத்து அதனைப் பொன்னேபோற் போற் நியது பெரிதே. அங்ங்ணம் போற்றிய அவர் கையெழுத் துப் பிரதியை நாம் விழைந்த போது அதனையே எமக்கு? மனமுவந்து ஈந்தது அதனினும் பெரிதே, அத் தண்ணளி யுடையார்க்கு ஒருவேம் செலுத்தும் நன்றி எத்துணையாம். அவர் இப் பாடலைப் பெற்றுப் போற்றிய செயலும், அதனை உபயோகிக்குமாறு எமக்கு அளித்த செயலும், நம் நாட்டு வரலாறு உள்ள வரையும் பெருமக்கள் யாவரா லும் பாராட்டப்படும்.
இப் பாடல்களிலுள்ள வழுக்களைந்து பொழிப்புரை குறிப்புரைகளும் சொல்லியுதவிய புலவர் சிவங். கருணுலய பாண்டியனுர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி உரி யது. எம்மை இப் பணியில் பெரிதும் ஊக்கிய அன்பர் , அரசாங்க கணக்குப் பரிசோதகர், தலையாளி, திரு. வ. கந்தையா அவர்களுக்கும் எமது நன்றி உரியது.
மு. இராமலிங்கம்
*ʻAYODHYAʼ
No. 15, Hamer's Avenue
COLOMBO - 6
1-8-49
2.

ஈழத்துப் புலவர் நட்டுவச் சுப்பையனுர் இயற்றிய கனகி புராணம்
amoosooo
1. நூலாசிரியர் வரலாறு
?-தயதாரகைப் பத்திராதிபர், திரு. J. R. ஆணல்ட் சதா 'சிவம் பிள்ளை அவர்கள் தாம் 1886 ம் ஆண்டு மானிப்பாய் மிஷன் அச்சுக் கூடத்தில் பதிப்பித்த பாவலர் சரித்திர தீபகம் என்னும் நூலில் கனகி புராண ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றின் பகுதியை இங்ங்ணம் தந்துள்ளார்.
*யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணை மேளகாரப் :பகுதியைச் சேர்ந்த இவர் தம் சுய சாதித் தொழிலிற் பயின்றிராதபோதும் வழக்கமாய் “நட்டுவச் சுப்பை யன்” எனப் பட்டார். சிறுவயதிலே பதிதஞகி இவர் தெல்லிப்பழையிலே வாழ்ந்த அமெரிக்க மிஷனரி மாரைச் சேர்ந்து கிறீஸ் து மதானுசாரியானர். மறுகால் அம்மதம் விட்டு மல்லாகக் கோயிற்பற்றைச் சார்த்த ஏழாலைக் குறிச்சியிலே கல்யாணஞ்செய்து, அவ்வூரைத் தம் உறைபதியாக்கினர்.
'இவரை நாம் கண்டிருந்தும் இவருடைய கல்வி சாமார்த்தியங்களைக் குறித்து யாதும் உணர்ந்தேம் அல்லேம், இலக்கண இலக்கியங்களிற் பயின்றவரோ, அன்றி வாணி வாக்கில் உறையப்பெற்றவரோ யாதும் அறியோமாயினும், வண்ணுர்பண்ணைச் சிவன் கோயில் தாசிகளுள் ஒருத்தியும், இற்றைக்குச் சில

Page 8
காலத்தின் முன் இறந்தவளுமாகிய கனகி என்பவள் பேரிற் 'கனகி சயமரம்’ எனப் பாடிய ஒர் பாடலால் நல்ல சரள நடைப் புலவராய் இருந்தார் இவர் என அறிகிருேம்.
"கனகி சயமரம் எனும் பாடலில் முன்பின் நானூறு விருத்தங்கள் உண்டென்று கேள்விப் பட் டோம். விருத்தங்கள் ஒவ்வொன்றும் பாரத காவியத். துத் திரெளபதி மாலையிட்ட சருக்க விருத்தங்கள் போல்வன. பாடல் மாதிரிக்கு எமது ஞாபகத்திலிருக் கும் விருத்தங்களுள் ஒன்றை இங்கு தருகின்ருேம்.
**காட்டுக் குயிலைக் கடிதோட்டிக் கனத்த நாவி னெய் தடவி, மாட்டு மினிய சொல்லாளே
மானே தேனே கனகமின்னே! ஒட்டைக்காதினுடனிருந்தங்
குவந்தே புடவை விற்கின்ற நாட்டுக் கோட்டைச் செட்டிகளுள் நல்லாண்டப்பணிவன்கானே.” “கிறிஸ்தாப்தம் 1816 ம் ஆண்டே அமெரிக்க மிஷனரி மார் யாழ்ப்பாணம் வந்த காலமாதலாலும், இவர் மகஞெருவன் வேலணையில் விவாகஞ் செய்தி ருந்து சில காலத்துள் இறந்தனணுத லாலும், இவர் காலம் தற்காலந்தான். “கனகி சயமரம்' எனும் பாடலை விடப் பின்னும் ஏதும் பாடியிருந்தனரோ என்பதும் தெரியவரவில்லை."
2. முன் வெளிவந்த பிரதியிற் கண்டவை
நீர்வேலி வாசரும், தமிழறிஞரும், திருவாளரும், ஆகிய C. சிற்சபேசன் அவர்கள் தமது ஞாபகத்திலிருந்து

3.
எழுதியளித்த இருபத்தொன்பது பாடல்களை நவாலியூர், திரு. ந. சி. கந்தையாபிள்ளையவர்கள் 1937 ம் ஆண்டு "கனகி புராணம்’ என்னும் பெயருடன் வெளியிட்டார்கள்.
அப்பொழுது அச்சேறிய பாடல் களின் விவரம் வருமாறு:
பிள்ளையார் காப்பு, t_J1 (1-6ח
நாட்டுப் படலம், g 9 மகளிர் புனலாடச் செல்லல், , 7 சுயம்வரப் படலம், , lil வெட்டைகாண் படலம், 9
முற்றும். , 29
3. பின் வந்த பிரதியிற் கண்டவை
வவனியா நகர சங்கத் தலைவர், திரு. P. தர்மலிங்கம்
அவர்கள் எமக்களித்த கனகி புராணக் கையெழுத்துப் பிரதியொன்றன்கணுள்ள பாடல்களின் விவரம் வருமாறு:
பிள்ளையார் காப்பு, t_JfT L-dì) 1 நாட்டுப் படலம், 2 சுயம்வர ப் படலம், ,, 19 வெட்டைகாண் படலம், 3.
முற்றும், ... 25.
இக் கையெழுத்துப் பிரதி காகிதத்தில் உண்டு.

Page 9
பிள்ளையார் காப்பு
1. சித்திர மறையோர் வீதி சிறந்திடும் வண்ணையூர்க்குக்
கத்தனும் வைத்தீசர்க்குக் கனத்ததோர் நடனஞ்செய்யும், குத்திர மனத்தளாகுங், கொடியிடை, கனகி நூற்குப் பித்தணுயுலா மராலிப் பிள்ளையான் காப்பதாமே
அழகான பார்ப்பனர் தெருவானது மேம்பட்டு விளங் கும் வண்ணுர்பண்ணை ஊருக்குத் தலைவனுயிருக்கும் வைத்தீஸ்வரன் என்னும் திருப்பெயர் கொண்டு வீற்றி ருக்கும் சிவபெருமானுக்குப் பெருமைவாய்ந்ததொரு நடனஞ் செய்கின்ற, வஞ்சனை பொதிந்த மனமுடைய வளாகிய, கொடிபோலத் துவஞம் இடையுடைய கனகி என்னும் பொதுமகளைப் பற்றி எடுத்துக்கொண்ட இந் நூலுக்கு வண்ணையூரிலே பித்துடையவனுய்த் திரிகின்ற அராலிப் பிள்ளையான் (இடையூறின்றி நிறைவேற்றும்) *பாதுகாவலாகும்.
“சித்திரம்' என்றது குறிப்பால் மெய் போலச் சொல்லும் பொய்யையுடைய எனப் பார்ப்பனரை விசே டித்தவாரும். “கனத்த நடனம்" என்றது கனகியின் உடம்பின் தோற்றங் குறித்துப்போலும், "நடனஞ் செய் யும் குத்திர மனத்தள்’’ என்றது கோயிலுக்குள்ள பொது மகளிருள்ளும் இழிந்த மனமுடையவள் என்ற வாரும். *அராலிப்பிள்ளை யான்' என்றது மூத்த பிள்ளையார் என்னும் ஒசைபட, அராலியிலிருந்து வந்து வண்ணுர் - பண்ணையிலே திரிந்துகொண்டிருந்த பிள்ளை என்னும் பெயருடைய வண்ணுரப் பித்தன் என்று சொல்லுவர். இதனலும் இந் நூல் நகைச்சுவைப் பொருட்டு எடுத்துக் கொண்டதென்பது வெளியாகின்றது. கன கியைச் சிறப் பித்துக்கூறியவாற்ருல் இந் நூலைக் கற்றலின் பயனும் பெறப்பட்டது. அஃதாவது பொது மகளிரது வஞ்சமன முடைமையும், தம்மைக் கூடிஞர்க்கு வறுமையும் நோயும் கொடுத்துக் கெடுத்தலுடைமையும், அறிந்து அவர்களைக் காளையர் கடிந்து ஒழுகுதல்.

நாட்டுப் படலம்
சிக்யெழுத்துப் பிரதியிலுள்ள நாட்டுப் படலப் பாடல்கள் இரண்டும் அச்சுப் பிரதியில் நாட்டுப்படலத் தின் கீழ் இல்லாமல், பதிப்பாசிரியரின் முகவுரையில் காணப்படுகின்றன. -
2. தடித்தடி பரந்திட்டெழுந்து, பூரித்துத்,
தளதளத் தொன்றே டொன்றமையாது)
அடர்த்திமையாத கறுத்த கணதணுல்
“அருந்தவத் தவருயிர் குடித்து,
வடத்தினு ளடங்கா திணைத்த கச் சறுத்து,
மதகரிக் கோட்டினுங்கதித்துப்,
படத்தினும் பிறங்குஞ் சுணங்கணி பரந்து,
பருமித்த துணைக் கன தனத்தாள்
பருத்து அடிவிரிந்து மேலோங்கி விம்மிச்செழித்து இரண்டும் தம்முள் ஒன்ருே டொன்று மே ன் மேலும் நெருக்கி முனைந்து நிற்பது போல ஒத்திருந்து தம்முடைய கண்களாலே செய்தற்கரிய தவஞ்செய்த முனிவருடைய உயிரைப் பருகியதுபோலத் தோன்றி முத்துமாலை முதலிய வடங்களுக்குள் அடங்காமல், இரட்டித்துப் போட்ட இறவுக்கையையும் கிழித்து, மதம் பொழியும் யானைக், கொம்பைக் காட்டிலும் குத்துவதுபோல நிமிர்ந்து, மேலாடைக்கு மேலும் புலப்படுகின்ற, தேமல் வரிச்ைகள் பரந்து புடைத்த இரண்டு பாரமான கொங்கைகளை யுடை பவள் (கனகி).
இமையாத கறுத்த கண்களென முலைக்கண்களை முகக் கண்களுக்கு வேறுபட்ட கண்களென விதந்தோதினர். சுணங்கு என்பதற்கு வெளிப்படைப் பொருள் அழகுத் தேமல், குறிப்புப் பொருள் நோய்த் தேமல். இவ்வாறு. இவள் கொங்கைகளையும் பிறவற்றையும் விரித்தோதுவது இவள் அத்தினி யென்னும் நாலாஞ் சாதிப் பெண்களி லும் இழிந்து, ஒரு சாதியினும் படாத பெண் என்னும், கருத்துப் பற்றி.

Page 10
3. நடந்தா ளொரு கன்னி மாராச
கேசரி, நாட்டிற் கொங்கைக்
குடந்தா உணசைய, வொயிலா யது கண்டு கொற்றவருந்
தொடர்ந்தார்; சந்யாசிகள் யோகம் விட்டார்; சுத்தசைவரெல்லாம்
மடந்தானடைத்துச் சிவ
பூசையுங் கட்டிவைத்தனரே.
மாராசகேசரி * என்னும் மன்னவன் ஆளும் யாழ்ப் பாண நாட்டிலே ஒரு மங்கை (கனகி) தன்னுடைய கொங்கைகளாகிய குடங்கள் அசையும் படியாக (தெகு வழியே) நடந்து போனள். (அப்பொழுது அவளுடைய) உல்லாச ஒயில் நடையைக் கண்டு அரசர்களும் (அவளுக் குப் பின்னே) தொடர்ந்து போஞர்கள். முற்றத் துறந்த முனிவர்களும் யோக சமாதியை விட்டு அவளைப் பற்றிய ஆதியான ஞ் செய்தார்கள். சுத்த சைவ மடாதிபதிகளெல் லாம் தங்களுடைய மடத்தைக் கதவடைத்துவிட்டு, சிவ பூசையையும் தம் பெட்டகத்துள் கட்டிவைத்துவிட்டார் -ySSGT
* இவன் பரராசசேகரனுடைய மருகனும் இரகு வம்சம் பாடியவனும் ஆகிய அரசகேசரி தாஞ என்பது ஆராயத்தக்கது. பிற் செய்யுள் தனிப்பாடிற்றிரட்டிலுங் க்ாணப்படுகின்றது.

சுயம்வரப் படலம்
அச்சேறிய சுயம்வரப் படலச் செய்யுட்கள் 11 என முன்னர்க் கூறினுேம் . அவற்றுள் ஒன்று பாதிச் செய்யுள். மற்றைப் பத்துக்கும் பாடபேதங்களுடன் நேர் பத்துச் செய்யுட்கள் கையெழுத்துப் பிரதியிலுள்ளன. அந்தப் பத்துச் செய்யுட்களையும் இங்கு தருகின்ருேம். பாடவேற் றுமை தெளிவுற அச்சுப்பிரதியின் பத்துச் செய்யுட்களை யும் அநுபந்தத்தில் தருகின்ருேம்.
4. ஈட்டுந் தனத்தையே விரும்பி,
யிரண்டு தனமுந் தான் கொடுத்து, மூட்டுங் காமக் கனலெழுப்பும், .
முகில்போலளகக் கனக மின்னே! நாட்டுப் புறத்திலிருப்போரில்,
நல்லவுடையும், பொய்ம் மொழியும், காட்டும் மானிப்பாயாரைக்
கண்ணுற் பாரும், பெண்ணுரே. (இது தோழி கூற்று)
(காமுகரிடம்) தான் சம்பாதிக்கின்ற தனத்தை மட் டுமே ஆசைப் பட்டு (அத் தனத்தைக் கொடுக்கும் அவர் களுக்கு) தான் (தன்னுடைய) இரண்டு கன தனங்களையும் கொடுத்து (அக் காமுகர் தன்னிடம்) மூட்டுகின்ற காமத் தீயை (அவர்களுக்குத்) தான் எழுப்புகின்ற, மேகம் போலக் கறுத்த கூந்தலையுடைய, கனகமாகிய மின்னே! பட்டிக் காடுகளில் வாழ்கின்ற மக்களுள்ளே (உடம்பிலே) நல்ல உடையையும் (வாயிலே) பொய்ச் சொல்லையும் காட்டித் தன் சிறு குறும்பைக் காட்டுகின்ற மாணிப் பாயிலிருந்து வந்த பெரியாரை, பெண்ணுரே, உங்கள் (திருக்) கண்களால் பார்த்தருளுங்கள்.

Page 11
இங்ஙனம் இருபாலாரையும் கனகியின் தோழி உயர்த் திச் சொன்னது இழிவுபற்றிய இகழ்ச்சிக் குறிப்பு: இரண்டு தனங்களில் வாங்கும் தனமாவது கைப் பொருள். கொடுக்குந் தனமாவன கொங்கைகள். தனங் கொடுத்துத் தனம் வாங்குதல் வட்டி வியாபாரம்; பண்ட மாற்றுமாம்.
5. காட்டுக் குயிலைக் குடியோட்டிக், கனத்த நாவி னெய் தடவி, மாட்டு மினிய சொல்லுடைய மானே, கனக மரகதமே! ஒட்டைக் காதினுடனிருப்போன்
ஒளி சேர் புடவை விற்கின்ற, நாட்டுக் கோட்டையார் தமக்குள், நல்லாண்டப்ப னல்லாளே. குயிலைக் காட்டுக்குக் குடியோடும்படி செய்து, தடித்த நாக்கிலே தேன் தடவினற்போல ஆட்களைத் தன் கைக் குள் அகப்படுத்துகின்ற சுவையான சொற்களையுடைய மானே! கனகியாகிய மரகத ரத்தினமே! பெண்களுட் சிறந்த பெண்ணே! (இவ்விடத்திலே) தொள்ளைக் காது களுடனே இருக்கின்றவன் ஒளிநிறம் பொருந்திய ஆடை கள் விற்கின்ற நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்குள் தல்லாண்டப்பன் என்று புகழப் படுபவன்.
குயிலைக் காட்டுக்குக் குடியோ ட் டி யது என்றது தற்குறிப்பேற்றம் என்னும் அணி. மானே, மரகதமே, நல்லாளே, என இந்நூலில் அடுக்கி வருவது ஆர்வ மொழிச் சுவை என்பதோர் அணி. “ஓட்டைக் காது’ என்ருற் போல்வரும் அடைகள் எல்லாம் தன்மை நவிற்சி அணியும் நகைச்சுவை அணியுமாம்.
6. சொல்லால் மயக்கி, யாடவர் தஞ்
சூழ்ச்சி யறிந்து, காம நில எல்லார் தமக்கு மூட்டுவிக்கும் .
இருள் போலளகக் கனக மின்னே!

பொல்லாதவர்க்குப் பொல்லாப்புப் பூட்டுந் திறலினுடனிருப்போர்
மல்லாகத்தில் வீரரிவர்;
மற்ருேர் நவாலி யூராரே.
(ஆடவர்களைத் தம்) சொற்களாலே (தம்மை நம்பியும் காமவசப்பட்டும்) மயங்கும்படி செய்து, அவ்வாடவர் களுடைய தந்திரங்களைத் தெரிந்துகொண்டு, அவர் எல் லாருக்கும் காம நிலைமையை மூளச் செய்கின்ற, இருள் போலக் கண்ணுக்கு இருண்டு தோன்றுகின்ற கூந்தல் யுடைய, கனக மின்னே! கேடு செய்கின்றவர்களுக்கு கேடுகளைப் பூணச்செய்கின்ற வெற்றியுடனிருப்பவர்களில் இவர் மல்லாகத்தில் வாழும் வீரர். மற்றவர் நவாலி யூரிலிருந்து வந்தவர்.
ஆடவர்கள் இவளுக்குச் செய்யுந் தந்திரமாவது தங்களைக் காம அதுபவத்தில் ஏமாற்றித் தப்பவிடாதபடி தழுவு பொருட்டுச் செயல்.
7. நத்தே பெற்ற முத்தனையாய்,
நவிலுந் திருப்பாற் கடல் கடைந்த
மத்தேயனேய தனக் கனகே!
மாரன் கணையை வளர்ப்பவளே!
பத்தோடொன்றிங் கவரென்னப்
பரிதி குலத்துச் சிகாமணிபோல்
புத்துர் மணியம் (சின்னேயன்) (சண்முகங் காண்)
புறத்தோன் தம்பியுடையானே.
சங்கு ஈன்ற முத் துப் போ லச் சிறந்த குலத்தில் பிறந்த சிறந்த பெண்ணே புகழப் படுகின்ற திருப் பாத் கடலைக் கடைந்த மத்தாகிய மந்தரமலையே போன்ற கொங்கைகளையுடைய கனகே! மன்மதனுடைய பூ அம்பு களை வளர்க்கின்றவளே! பத்துப்பேரோடு பதினென்ரும் பேராக இங்கு சுயம்வரக் கூட்டத்தில் வந் திருக்கும்

Page 12
芷0
அவர் சூரியகுலத்துக்கே முடிமணிபோலச் சிறந்த புத்தூர் மணியகாரன் சின்னையன் என்பான். அவனுக்குப்பின் இருக்கின்றவன் தம்பி உடையான் என்று சொல்லப் படுபவன்.
மாரன் கணேயை வளர்ப்பவள் என்றது. விலங்குகள் போலப் போகத்துக்கல்லது இல் வாழ்க்கைக்குரியள் அல் லள் என்பது கருத்து.
8. தாமரை முகையுங், கோங்கின தரும்பும்
தந்தியின் கொம்புடன் சிமிழுங்,
காமரு சூதின் கருவியுங், குடமும், காமஞர் மகுடமுங் கடிந்தே,
சேமமாய் வென்று, கூவிளம்பழத்தைச்
சேர்ந்திடு தனமுடைக் கனகே
நாம மிங்கிவர்க்குக் களஞ்சியக்
குருக்கள், நங்கை,நீ காணுதியென்றள்
இதுவும் தோழி கூற்று)
தாமரையினது அரும்பையும், கோங்க மரத்தின் மொட்டுக்களையும் யானையின் கொம்புகளையும், செப்புச் சிமிழையும், விருப்பம் உண்டாகின்ற சூதாடு கருவியை யும், மன்மதனுருடைய பொன்முடியையும், சினந்து வெறுத்து, நன்ருக வென்று, வில்வப்பழத்தை நட்புக் கூடுகின்ற கொங்கைகளையுடைய கனகே இவ்விடத்திலே யிருக்கும் இவருக்குப் பெயர் களஞ்சியக் குருக்கள் என்பது. பெண்களிற் சிறந்தவளே! நீ இவரை ஏறிட்டுப்பார். என்று தோழி காட்டிச் சொன்னுள்,
9. அரிபாற் கடலைக் கடைந்த தினத்
ததிலே யெழுந்த மலர்த்திருவும்
உருவுக் கிலை நிகரென்றுரைக்கும்
ஒளி சேரழகே, கனக மின்னே!

தெருவிற் சனி போலிருந்து நினைத்
தேடித் தேடித் தியங்கு சிவப்
பிரகாசப் பேர் படைத்தவன் காண்;
பின்னுேன் தம்பி இவனுமே
(தோழி கூற்று)
திருமால் திருப்பாற்கடலை அமுதெழக் கடைந்த நாளிலே அக்கடலிற் பிறந்த செந்தாமரைப் பூத் திரு. மகளும் நின் வடிவுக்கு ஒப்பில்லை என்று சொல்லப்படும் ஒளிதிரண்ட அழகே, கனக மின்னே! தெருவிலே சனி யன் போல இருந்துகொண்டு உன்னைத் தேடித்தேடி மயங்: குகின்ற சிவப்பிரகாசன் என்னும் பெயர் படைத்தவன். இவன், இவனுக்குப் பின் இருப்பவன் இவன் தம்பி.
தமயனும் தம்பியும் கனகியிடம் போக்குவரவுடை யவர் என்பது காட்டி வரன்முறையில்லாதவளென்னும் அருவருப்புத் தோற்றுவித்தவாறு.
10. தாலக் கனி யொன்றினுக்காகத்
தரைமேல் மாந்தர் பலர் திரண்டு, வேல் கத்திகள் கொண்டெறிந்து, மிக விசயம் பொருதும் வள நாடன், மால் பற்றிய நெஞ்சினணுகி,
வந்தான், கனகே, மன்றலுக்கு, நீலக் கருங் கார்மேக நிற
நியூற்றணிவன் காண், நேரிழையே!
(தோழி கூற்று)
உனக்குத் தகுந்த நகை பூண்டபெண்ணே! ஒரு பனம் பழம் பெற்றுத்தின்பதற்காக, பனையடி நிலத்திலே மக்கள் பலர் கூடி, வேலுங் கத்திகளுமெடுத்துப் பனம்பழத்தைப் பார்த்து வீசி மிகவும் வெற்றியாகப் போர் செய்கின்ற வள நாடுடைய இவன், மையல் மூண்ட மனமுடையவ ஞகி, நின் திருமணத்துக்கு வந்தான். கனகே! நீல, கருமையான, கார்கால, மேகத்தின் நிறமுடைய நியூற் றன் என்பவன் இவன் தான், ...... Y

Page 13
12
11. ஊரார் சுணங்கு தோற்றமல்
உயர் சாந்தணிந்து, வடம் பூட்டி, வாரான் மறைக்குந்தனக் கனகே வரி வண்டுத முகை யவிழும் நீராற் பொலிந்த சரவை வளர்
நெய்த நிலத்தான், வங்க நிறை ஊராத்துறைக்கு மணிய மிவன்,
உடையா ரருளுசலத்தின் மகன்.
ஊரிலுள்ளார்க்கு நோய்த் தேமல் தெரியாதபடிக்கு, உயர்ந்த சந்தனம் பூசி, முத்தாரமணிந்து, இறவுக்கை களால்ே மறைக்கப்படுகின்ற கொங்கைகளையுடைய கனகே! வண்டுகள் வரிப்பாட்டை ஊத, அரும்பு மலர் கின்ற, நீர் வளத்தால் பொலிவு பெற்ற சரவணையென் னும் ஊரில் வளர்ந்த நெய்த நிலத் தலைமகன். கப்பல்கள் நிறைந்து நிற்கும் ஊராத்துறை ஊருக்கு மணியகாரன். இவன் அருளுசல உடையார் மகன்.
இங்கே கனகி இறவுக்கை முதலியன அணிவது மற்றை மகளிர் அணியுங் கருத்துக்கு வேறுபட்ட கருத்துடைய தாதல் கண்டு நகைக்கத்தக்கது.
12. தொட்டுப் பிடிக்கத் தனமேனும்
தோளே யெனினுந் தான் கொடுக்கும் மட்டுப் புரண்ட குழலாளே!
மாரன் வில்லைக் குனிப்பவளே! எட்டுத் திக்கு முழு தாளு
மிதயத்துடனே யிங்கிருப்போன் வட்டுக்கோட்டை நெற் கணக்கில்
வாழுஞ் சுப்பு காணு மென்ருள்.
தொட்டுப் பற்றுவதற்குக் கொங்கைகளையாவது தோள்களையாவது கொடுக்கின்ற தேனேடு புரண்டு விழுந்த கூந்தலையுடையவளே! மன்மதனுடைய கரும்பு வில்லை வளைக்கின்றவளே! எட்டுத் திசையின் நிலம் முழு

13
தினையும் ஆழுகின்ற எண்ணத்தோடு இங்கு இருக்கின்ற வன் வட்டுக்கோட்டையிலே வருகின்ற அரசிறையாகிய நெற்கணக்குத் தொழிலிலே பிழைத்து வருகின்ற சுப்பு வென்பவன் காணும் என்று தோழி கனகிக்குச் சுட்டிக் காட்டினள்.
எட்டுத் திக்கு முழுதாளும் இதயம் என்றது பொய்க் கணக்கெழுதிப் பொருள் சேர்க்கும் எண்ணத்தைக் குறிப் பிடுகின்றது. நெற்கணக்கில் வாழுஞ் சுப்பு என்றது அப் பொருளெல்லாம் நமக்குக் கிடைக்கும் என்ற குறிப்புடை யது. காணும் = தெளிவுப் பொருளில் வந்த முன்னிலை Jy 6039F .
13. பூப் பாயலின்மே லாடவரைப்
பொலிவோ டிருத்திப் பொருள் கவரக்
காப்பாங் கச்சுத்தனை நீக்கும்
கனகே! நடக்கு மனப் பெடையே
பாப்பார் மிகவுந்தனைச் சூழப்
பங்கே ருகம்போல் வைகு மிவன்
கோப்பாய் முத்துக்குமாருவென்று
சொல்லுங் குமரர் போரேறே.
மலர்கள் அடுக்கிய பஞ்சணை மேலே ஆடவர்களை அழ காக இருக்க வைத்து, அவர்தம் கைப் பொருளைக் கவர்வ தற்கு, கொங்கைகளுக்குப் பாதுகாப்பாயிருக்கின்ற இற வுக்கைகளைப் பாதி திறந்து காட்டுகின்ற கனகே! அழகாக நடக்கின்ற பெட்டை அன்னமே! தன்னை மிகவும் பார்ப்ப னர்கள் சூழ்ந்திருக்க தாமரைப் பூப்போல முகம் மலர்ந்து, இங்கு தங்கியிருக்கின்ற இவன், கோப்பாயில் வாழும் முத்துக்குமாரு என்று சொல்லப்படுகின்றவனும், வாலிபர் களுக்குள் போர்க் காளே போலச் சிறந்தவனும் ஆவன்.
இனி, சுயம்வரப் படலத்தில் இதுவரை வெளிவாராத ஒன் பது செய்யுட்கள் கையெழுத்துப் பிரதியிலுள்ளன. அவற்றை
யும் இங்குத் தருகின்றேம்.

Page 14
4
14. மறுவற்றிலங்கு மதிமுகத்தில்
வாள்சேர்ந்தனைய வுண்கண்ணுய்
நிறையச் சொருகும் பூங்குழற்கு
நிகர்வே றில்லாக் கனகமின்னே!
அறிவுக் கினியான் அவனிதனில்
யார்க்கு முதவி செயவிரும்புங்
கறுவற்றம்பி யெனும் பெயரோன்
கண்ணன் றனக்குச் சரிவந்தோன்.
கறையின்றி விளங்குகின்ற சந்திரளுகிய முகத்திலே, இரண்டு வாள்கள் சேர்ந்திருந்தாற்போன்ற, மையூட்ட உண்ட, கண்களும், நிரம்பச் சொருகுகின்ற பூக்களையு டைய கூந்தலுக்கு, அக் கூந்தலே ஒப்பாவதல்லது. வேறு ஒப்பாவதில்லாத கனக மின்னே! அறிவுக்கு இணி மையாயிருப்பவன் உலகத்தில் எல்லாருக்கும் உதவிசெய்ய விரும்புகின்ற கறுவற்றம்பி என வழங்கும் பெயருடைய வன். அக் கருநிறத்தாலே துவாரகைக் கண்ணபிரானுக்கு ஒப்பாகப் பிறந்தவன்.
இன்ஞேரன்னவையெல்லாம் புகழ்வது போல இகழ் தல் என்னும் அணியாம். மற்றைப் பாட்டுக்களிலும் கன கிக்கும் பிறருக்கும் இவ்வாறு கூறிச் செல்லுமாற்றைக் கண்டுகொள்க.
15. பொன்னேப் பொருவு மருமத்திற்
புடைகொண் டெழுந்த வனமுலையாய், மின்னச் சிரிக்கு நுண்ணிடையாய்,
வேய்த்தோட் கனகே யிவணிருப்போன் தன்னைப் போல வேருெருவர்
தரணி தலத்திலுள்ளாரோ? வென்னப் பேசும் நன்னியிவன் இடறுப் பூச்சு மெய்யானே.
நிறத்தினுலே பொன்னப் போன்ற மார்பிலே புடைப் புக் கொண்டெழுந்த அழகான முலையுடையவளே! மின்சை

5
இகழ்ந்து சிரிப்பது போல மின்னினும் நுண்ணிய இடை யழகு வாய்ந்தவளே! மூங்கில் போலத் திரண்டு உருண்ட தோள்களையுடைய கனகே! இவ்விடத்திலேயிருக்கின்ற வன் உலகத்தில் தன்னைப் போலப் பிறரொருவர் இருக் கின்ருர்களோ என்று பேசத் தகுந்த நன்னி என்பவன்இவன் இடறுப் பூச்சினையுடைய உடம்புடையவனுயிருக் கின்ருன்,
இடறுப் பூச்சு - சந்தனத்தைக் குறுக்கும் நெடுக்கு மாக கீழிருந்து மேல் நோக்கிப் பூசுதல். தன்னைப் போல வேருெருவர் தரணி தலத்திலுள்ளாரோ என்பதன் குறிப் பாவது கழுதைக்குக் கழுதையல்லது ஒப்பில்லை என்றற் போல்வது.
16. மானினைக் கயலே வனத்தினிற் றுரத்தி,
மறலிக்குக் கொலேத் தொழில் காட்டிப்
பானலை யோட்டி வடுவின வாட்டிப்
பருத்த செவ்வேலேயும் பழித்துக்
கூனல்வான் நஞ்சி னமுதினுேடுறவு கொண்டிடும் விழியுடைக் கனகே
தேனின நீங்கா மலரணி புயத்துச் செல்வநாயக பிவன் தேவே.
பெண் தெய்வமே! புள்ளி மானையும் கயல் மீனையும் வனத்திலேயோட்டி, கூற்றுவனுக்குக் கொலைத் தொழி லேக் கற்பித்துக் காட்டி கருங்குவளைப் பூவைப் புறங் கொடுத்தோடச்செய்து, மாம்பிஞ்சினைத் தோற்று வாடும் படி செய்து தடித்த சிவந்த வேற்படைக் கலத்தையும் இகழ்ந்து, வளைவினையுடைய கொடுவாளோடும் நஞ்சினுே டும் அமுதிைேடும் உறவு முறை கொள்ளுகின்ற கண்களே யுடைய கனகே! தேன்.வண்டுக் கூட்டம் பிரியாது மொய்த் திருக்கின்ற மலர் மாலை ய னிந்த தோள்களையுடைய செல்வநாயகம் என்பவன் இவன், தேவன் போல்பவன்,

Page 15
இரட்டுற மொழிதல், இக்கு தீரரவும் பொருள் அவற்றை வனத்திடு O விேப்பேற்ற
நலஞ்சே ஆனக்கோ
6T6 *றமுகன்
ஆறுமுகன் 676ձrւյրի 76ਗ ਫ ഥrg 407ற்றுக கிரண் உ முன்னி2 அதை. .
: சித்தரன் unit, Pஞ்சட் புரண் నీతిran!
“°"ቻ°ቫ &qÜubጭ,

7
முத்தமிட்டுக் கடிப்பதற்கு தன் தனத்தை ஆடவர்க், குக் கொடுத்து, அவர் கொடுத்த தனத்தைத் தான் வாங்குகின்ற, அரைத்த மஞ்சளிலே புரண்டாற் போல மஞ்சள் ஒட்டிய முகமுடையவளே! மன்மதனுடைய கரும்பு வில்லை வளைக்கின்றவளே! உலோபத்தன்மையும் வஞ்சனையும் வேறு கெட்ட எண்ணங்களும் நிரம்பிய மன முடையவன் வஞ்சகஞ் செய்கின்ற இரக்கமற்ற பாவி பெரியதம்பி என்பவன். இவன் தன் பெற்றேர்க்கு வரத் திஞல் பிறந்த வைத்தியத் தொழிலாளி.
“கொடுத்த தனத்தைத் தான் வாங்கும்" என்பதற்கு ஆடவர்க்குத் தான் கொடுத்த தனத்தைத் தான் மீளவும் வாங்கிக்கொள்ளுகின்ற எனவும் பொருள் கொள்ளலாம்: இவ் வைத்தியன் பொது மகளிருடைய நட்பினுல் நோய் வாய்ப்பட்டவர்களுக்கு மருந்து கொடுப்பவன் போலும்
19. வண்டார் மாலேக் குழலாளே!
மதிசேர்ந்தனைய முகத்தாளே!
கண்டார் வணங்குங் கண்ணுளே!
கெைகன்றுரைக்குங் காரிகையே!
p6ñLI Guerras flausurúGur
லுளரோ விந்த வூர்தனிலே,
தண்டார் புனையும் பண்டார
மென்ற ரந்தத் தாதியரே.
வண்டுகள் ஒலிக்கின்ற மாலைசூடின கூந்தலுடைய. வளே! சந்திரன் வந்தாற் போன்ற முகமுடையவளே!" தன்னைக் கண்டார் தன்னை அடிபணிந்து குற்றேவல் செய் தற்குக் காரணமான கண்ணுடையவளே! கனகென்று அன்போடு சொல்லப் படுகின்ற பெண்ணே! இங்கிருக் கின்றவனைப் போல இந்த ஊரில் போம் அனுபவித்த வர்கள் இருக்கின்ருர்களோ (இல்லை) குளிர்ந்த иота) - கட்டுகின்ற பண்டாரம் என்று கனகிக்குச் சொன்னுர்கள்: அந்தத் தோழியர்கள்.
& 5,5 cl u6ïst-Tprib 3)GAs வேலயாயிருந்திருப்பான் போலும்.

Page 16
20 செப்பைப் பழித்துக் கலசத்தைச்
சிரித்துத் தெங்கி விளநீரை யொப்பப் படைத்த தனக் கனகே
புன்னப் புணரு மவாவுடையோன் எப்போதெனினு முனதேவ
லெங்கே யென்று திரிபு மிவன் சுப்பிரமணியன் பெற்றெடுத்த
சூன விவன்காண் க்ரிகுழலே.
துனிசுருண்ட கூந்தலையுடையவளே! செப்புச் சிமிழை அழகில்ே இகழ்ந்து செப்புக்குடத்தை இகழ்ந்து சிரித்து தென்னேயின் இளநீரைப் போல அழகு படைத்த கொங் கைகளையுடைய கனகே இவன் உன்னைச் சேரவேண்டும் என்னும் ஆசையுடையவனுய் எப்பொழுதானுலும் உன் லுடைய கட்டளே எவ்விடத்துக் கிடைக்கும் என்று திரிந் த&லகின்றன். இவன் காண் சுப்பிரமணியன் பெற்று வளர்த்த நொண் டிக்கையன்,
சூனன் இயற்பெயருமாம். திரியுமிவன் என்னுமிடத்து திரியும் என்பதை முற்ருக்கி இவன் என்பதை எழுவா i'r ffT3; F.
21; மானினப் பழித்த கண்ணும்
வடிவினுக் குவமை யில்லாத் தேனினு மினிய செஞ்சொற் றெரி
வையே கனகே கேண்மோ ஊனுணும் பரிதி வேல் வாளொளி
பெற விங்கிருப்போன் தானே சூழுடுவில் வாழும் தன் கை
யொன்றில்லா வேந்தே
மானேப் பழித்தாற் போன்ற அழகிய சுண்களேயும் தேனேக்காட்டிலும் இனிமை மிகுந்த நேர்மையான சொற். களேயும், உடைய, வடிவுக்கு ஒப்பு  ைம யில் லா الأمم பெண்ணே கண்கே கேள். பகைவருடைய உடம்பிறைச்
சியை உண்ணுகின்ற சூரியன் போல ஒளி விடுகின்ற,

丑母
வேலோடும் வாளோடும் ஒளியுண்டாக இவ்விடத்திலே இருக்கின்றவன், படைகள் புடை சூழப் பெற்ற, உடுவி வில் வாழுகின்ற தனக்கு ஒரு கையில்லாத, அரசனுவான்.
கையில்லாதவனுக்கு வேலும் வாளும் கூறிய குறிப் புக் கண்டுகொள்க. கனகிக்கு 'செஞ்சொல்" உடைமை கூறுதல் கற்சோற்றை நற்சோறு என்றது போல்வது:
22. கனத்துப் புடைத்துப் பருத்து விம்முங்
கதிர்ப் பூண் முலேயாய், கனக மின்னே!
பனத்துக் கிசைந்த மணவாள
னிவன்மு(ன்) இந்த மகிதலத்தில்
தனத்துக் கிவனே சரச மொழி
தனக்குமிவனே; தான் கொள்ளுஞ்
வினத்துக் சிவனே; திருமல்ச்சின் " னேயளிவன் காண் சேயிழையே.
பாரமாகி வீங்கி தடித்து விம்முகின்ற, ஒளியுடைய ந கைகள் னிந்த கொங்கைகளேயுடையவளே! கனக மின்னே! உன் மனத்துக்குப் பொருந்தின மாப்பிள்ளே இங்கிருக்கின்ற இவன்தான். இந்த உலகத்தில் பனத்துக்கு இவனே முதன்மையானவன், சரச சல்லாப மொழி பேசு வதற்கும் இவனே சிறந்தவன். தான் கொள்ளுகின்ற கோபத்துக்கு இவனே தஃலயானவன். செம்பொன் நகை புடையவளே! திருமலேச் சி ன் னே ய ன் எ ன் பவன் இவன் காண்.
பொருட் பெண்டாகிய கனகி தன் சுயம்வரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் இவன் போதும். சரசமொழி -காமச் சுவை துரு மொழி , --
Šይmይ፧

Page 17
வெட்டை காண் I IL6)d
சிக்யெழுத்துப் பிரதியிலுள்ள வெட்டை காண்" பட்லச் செய்யுட்கள் மூன்றும் வருமாறு.
23. வெட்டை யென்னும் வியாதி தலைப்பட்டுத் தட்டுக் கெட்டுத் தனித்தனி யாடவர் பொட்டுக் கட்டிய பூவையினு லென்று முட்டுப்பட்டனர் (மூத்திரம்) பெய்யவே.
கனகியைக் காதலித்த ஒவ்வோர் ஆடவர்களும் "வெட்டை யென வழங்கு நோய் கிடைக்கப் பெற்று. தம் நிலைதடுமாறி, அழிந்து, தம் வாழ்நாள் வரையும் அந்தக் கோயிலில் தாலிகட்டி, பூவைபோலப் பேசு மொழியினளாகிய கனகியினலே, சிறு நீர் பெய்தற்குக் கூட முடியாதவாறு வலிநோவுற்று, துன்பப்பட்டார்கள்:
24. செட்டித் தேர்த்தெருத் தேவடியார்களுள்
மெட்டுக்காரி கனகியை மேவியோர் தட்டுப் பட்டுத் தலைவிரிகோலமாய் முட்டுப் பட்டனர் (மூத்திரம்) பெய்யவே
செட்டித் தெருவாகிய தேர்த் தெருவிலே வாழுகின்ற பொதுமகளிருள், பகட்டுத் தொழிலுடையவளாகிய க ைகியை சேர்ந்தவர்கள், துன்பப் படுகுழியிலே தடுமாறி விழுத்து, தலைவிசித்த கோலமாய் சிறு நீர் பெய்தற்குங் சுட முடியாதவாறு வலிநோவுற்று, துன்பப்பட்டார்கள்.
தலவிரிகோலம்-செத்தார்க்கு அழுகின்றவர் கோலம்;

3
25. மேகங்கள் யாவு முயர் விண்ணிங்கி வேசையர்தந் தேகங்களில் வாசஞ் செய்கையான் - மாகமிசை யாசைக்குங் கார்காணுே மவ்வேசையார் கொடுப்பர் காசைக் கொடுப்பார்க்குக் காண்.
மேகங்களெல்லாம் உயர்ந்த வானத்தை விட்டு நீங்கி, பொருட் பெண்டிருடைய உடம்புகளிலே குடியிருப்புச் செய்தலாலே, மேல் ஆகாய்த்தில் பார்க்கவேண்டும் என் னும் ஆசைக்குக் கூட மேகத்தையாம் பார்க்கின்றிலோம். ஆயினும் காணவேண்டுமென்றிருந்தால், அவ்வேசையர்க் குக் காசைக் கொடுப்பவர்களுக்கு அவ்வேசையர் தாமே அம்மேகங்களைக் கொடுப்பார்கள்.
மேகம் - சிலேடை. நோய் மேகமும், வான் மேகமும் இவற்ருலே காமுகர்களுக்கு இடித்துரைத்து, அறிவு கொளுத்தியவாருயிற்று.
இவற்றுள் முதலாவது செய்யுள் அச்சு நூலில் வெட் டைகாண் படலத்தின் கீழ் தனிச் செய்யுளாகத் திகழ் கின்றது. இரண்டாவது செய்யுள் இதுவரை வெளிவரா தது. மூன்ருவது வெண்பாவாதலுமல்லாமல் முதலிரண் டுடன் தொடர்புடையதாகவுங் காணப்படவில்லை. அச்சு நூலில் இது முகவுரையிலுள்ளது. திரு. கா. சுப்பிரமணியச் பிள்ளையவர்கள் பதிப்பித்த தனிப் பாடற்றிரட்டிலே இது வேதநாயகம் பிள்ளை பாடல்களுள் ஒன்முய் வந் துள்ளது.
象 率 率 冰
இற்றைக்கு ஒரு நூறு ஆண்டுகளின் முன்னர், வண்ன வைத்தீஸ்வரன் கோயில் எனப்படும் யாழ்ப்பாணத்து வண்ணுர்பண்ணைச் சிவன் கோயிலில், கோயில் முன்றைப்படி தேவதாசிகளும் நட்டுவர்களும் கோயிலடியாராய் வைகி ஞர். அவருள் கனகம்மா என்று சொல்லப்பட்டவளும் ஒருத்தி. அவள் தன் முறையினின்றும் வழுவி ஒழுகத்

Page 18
芝多
தொடங்கினள். அக்காலத்தில் கோயிலில் நாதசுரம் வாசித்துக்கொண்டிருந்த நட்டுவச் சுப்பையா தாம் அவள் மீது இப்பாடலைப் பாடினர். பாடுமுகத்தால் பொது மகளிர் வாழ்க்கையின் இழிவும், அவரை விழைவோரது கயமையும், நன்கு விளக்கமுறச் செய்தார். பொது மகளிர்க்கும் இள்ைளுர்க்கும் அறிவு கொளுத்தினல் அன் ஞர் திருந்தி நடப்பர் என எண்ணினுர்போலும்.
இவற்றைப் பாடும்போது நட்டுவனுர் வெட்டை என்னும் கொடிய நோய்க்கு ஆளாகி அந்நாளில் அந் நோய் தீர்ப்பதில் பேர்பெற்ற ஓர் வைத்தியரைச் சரண் புகுந்து 'உப்பும் சோறும்’ ஆகிய பத்தியத்துடன் மருந்) துண்டு வந்தனர் என்பர். இக் கூற்று நம்பத்தக்கதன்று. கனகம்மாவின் இலக்கணங்களையும், ஊர் ஊராய் வந்து அவளுடன் நட்புப் பூண்டிருந்தவர்களின் பெயர் களையும், பாடல்களில் ஆங்காங்கு அமைத்துள்ளார் தம் புலவர் சுப்பையனுர். பத்தியத்துடன் மருந்துண்ட நாற்பது நாட்களிலும் நாளுக்கு ஒரு பாடலாக நாற்பது பாடல்கள் பாடினர் என்ப. இக் கூற்றும் எம்மால் நம்பித் தக்கதன்று,
இப்பாடல்கள் முழுவதையும் எடுத்துக் கொடுப்பவர் களுக்கு 500 ரூபாப் பரிசு கொடுப்பதாக மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் இற்றைக்கு இருபத்தைந்து வருடங் களின் முன், யாழ்ப்பாணத்து ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கத்தோடு தொடர்புடைய சிலருக்குத் தெரி வித்தபோது, இக் கையெழுத்துப் பிரதியிலுள்ள பாடல் கள் திரட்டப்பட்டனவெனத் தெரியவருகின்றது. இப் பாடல்கள் அனைத்தும் அகப்படாமையை நினைதொறும் நினைதொறும் எமக்கு வருத்த மிகுகின்றது.
学(警

அநுபந்தம்
aboCoo-us
ஈட்டுந் தனத்தைத் தான் விரும்பி இரண்டு தனமுந் தானிந்து,
மூட்டுங் காமக் கன லெழுப்பு
மொழிசே ரழகே கனக மின்னே நாட்டுப் புறத்தி லிருப்போரில்
நல்லுடையும் பொய் மொழியுங் காட்டு மானிப்பாயாரைக்
கண்ணுற் பாருங் கோதையரே.
காட்டுக் குயிலேக் கடி தோட்டிக் கனத்த நாவி னெய் தடவி மாட்டு மினிய சொல்லாளே!
மானே தேனே கனக மின்னே! ஒட்டைக் காதி னுடனிருந்
தங்குவந்தே புடவை விற்கின்ற நாட்டுக் கோட்டைச் செட்டிகளுள்
நல்லாண்டப்ப னிவன் காணே,
சொல்லால் மயக்கி ஆடவர்தஞ் சூழ்ச்சி யறிந்து காம நிலை யில்லாதவர்க்கு மெழுப்புவிக்கு(ம்)
இருள்சே ரளகக் கனக மின்னே! பொல்லா மனமும் அழுக்காறும் Ծսոմպմ, புரட்டுமே மலிந்த மல்லாகத்து வீரரிவர்
மற்றேர் நவாலி யூராரே

Page 19
* நத்தே யின்ற (!p552.2rurtlı
நவிலுந் திருப் பாற் கடல் கடைந்த
மத்தே யனைய ஸ்தனக் கனகே
மாரன் கணையை வளர்ப்பவளே
"பத்தோ டொன்றிங் கிவரெனப்
பரிதி குலத்துச் சிகாமணிபோல்
புத்தூர் மணியம் சின்னேயன்
புறத்தோன் தம்பி யுடையானே,
5. தாமரை முகையுங் கோங்கின தரும்பும்
தந்தியின் கோடொடு சிமிளுங்
காமர் சூதாடு கருவியு மெழில் ே
காமஞர் மகுடமுந் தடிந்தே
ஏமமாகிய கூவிளங் நிகராய்
எழில் சேர் அழகே assors firGs
நாமமிங்கிவர்க்கே களஞ்சியக்
குருக்கள் நங்கை நீ காணுதியென்ருள்
6. அரி பாற்கடலைக் கடைந்த தினத்திலே
யெழுந்த மலர்த் திருவும் உருவுக் கிலை நிகரென்ன வுரைக்கு மொழிசே ரழகே கண்க மின்னே தெருவிற் சனி போலிருந்து நினைத்
தேடித் தேடித் தியங்கு சிவப் பிரகாசப் பேர் படைத்தவன் கான் பின்னுேன் தம்பி இவளுமே, 7. தாலக் கனி யொன்றினுக் காகத்
தரைமேல் மாந்தர் பலர் திரண்டு, வேல் கத்திகள் கொண்டெறிந்து tfહ
விசயம் பொருதும் வள நாடன் மால்பற்றிய நெஞ்சினனுகி வந்தான்
கனகே, நின் மன்றலுக்கு நீலக் கருங் கார் மேக நிற
நியூற்ற விவன் காண் நேரிழையே.

25
8. ஊராற் சுணங்கு தொடராம லுயர்
சாந்தணிந்து வடம் பூட்டி
வாரால் மறைக்கும் ஸ்தனக் கனகே வரிவண் குமுத முகை யவிழும்
நீராற் பொலிந்த சரவைவளர்
நெய்த நிலத்துக் கிறையாகும்
ஊராத்துறையின் மணியம் மற்றிவன்
காணென்ற ஞெண்ணுதலே.
9. தொட்டுப் பிடிக்கத் தனத்தோடு
தோளை யீசூந் திறமுடைய
மட்டுக் கடங்காத் திறம் படைத்த
மானே தேனே கனக மின்னே!
பட்டுப் புடவை தனிற் கொணர்ந்து பரிவாகப் பணத்தை யீகின்ற
வட்டுக்கோட்டை நெற் கணக்கன் வாழுஞ் சுப்ப ரிவர்காணே.
10. பூப் பாயலி லாடவரைப் பொலிவோ
டிருத்திப் பொருள் கவரக்
காப்பாய கச்சுதனை நீக்குக்
கன்றே கனக மின்னே!
பாப்பார் மிகவுந் தமைச் சூழப்
பங்கேருகம் போல் வீற்றிருக்கும்
கோப்பாய் மணிய மிவர் தம்மைக்
கண்ணுற் பாருங் கோதையரே.
இவை திரு. ந. சி. கந்தையாபிள்ளையவர்களால் அச்சேற்றிய நூலிற் கண்டனவாம்.
SAS

Page 20

பக்கம்
I 1.
13
6
2.
பிழையும் திருத்தமும்
=~mpwrews
பிழை
திருத்தம்
(இது தோழி கூற்று) (இப் படலத்தில்
தன் சிறு
(சின்னையன்)
தமயனும்
ஆழுகின்ற
விழிக்கின்ருள்
வெளிவராதது
வரும் கவிகள் அனைத்தும் தோழி கூற்று
தம் சிறு
சின்னையன்
தமையனும்
ஆளுகின்ற
விளிக்கின்ருள்
வெளிவாராதது

Page 21

இந் நூலாசிரியர் இத் துறையில் நீண்ட காலம் சேவை செய்து வருகிருர், கிராமிய இலக்கியங்கள் சிதைந்து போகாதபடி அவற்றைத் தேடி எடுத்து இன்றைய மக் கள் மத்தியில் மலரச் செய்த பெருமை நூலாசிரியர்க் குரியது எனின் அது மிகையாகாது. இத் துறையில் சேவை செய்யும் இந் நூலாசிரியர்க் குச் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலே விழா வின் போது தமிழ் மக்கள் பொன்னுடை போர்த்திக் கெளரவித்தனர் என்ருல், இவரது சேவையை ஒருவாறு மதிப்பிட்டுக்கொள்ளலாம்.
அழகிய நவமணிகளாலான ஆரம் போன்று இந் நூல் ஒன்பது தொகுதியான பாக்களால் கோக்கப்பட்டு அழகுற மிளிர்கிறது. தமிழ் கற்ருேர்க்கு விருந்தாய் அமைந்துள் னது. அனேவரும் படிக்கவேண்டிய நூல்.
வீரகேசரி, கொழும்பு, 11-12-1960.
இத் நூல் வெளியீட்டினுல், "இழவில் அழுதிடும் பெண்
கூட இசையோடழுவது தண் கூடு" என்ற நாமக்கல் இராமலிங்களுர் கூற்றை, வெள் இராம்லிங்கனுட விளக்கியிருக்கிருர்,
இதுரிேதும் ஃழிய'
品 பாதுளிகள்ே: கி ஸ்கிரிக்
க் கர்ண பரம்பரை ஒப்பாரி ராகிய, திரு. இராமலிங்கம் அவர்கள் அன்பர்கள் புஷர் மூலம் அரிதில் முயன்று பெற்று, நூாதிப், பூாட்ல் களுக்தி நல்ல இலக்கியத்தரமான விளக்கமும் தந்து"
இருக்கிருர்கள். அரச்சட்டஃா நிஃபியம்
சமூகத்தொண்டன், யாழ் ப்பாணம்.வி14:18, Available of "-
W. Na ranthiran Esqr
15, Hanner’s Avenue
COLOMBO - 6
Re. 11

Page 22
ہے
■
பதிப்பரசிரி கிராமக் கவிக் குயில் g = என்னும் நூல் மதிப்புரை
ஒப்ப்ே பாட்டு மாதரு *** அருமை பெரும் போயிற்று. '
கூர்ந்து நோக்கும் இயல்பி ஒப்பாரி உயர்ந்த கலேயாகவே நிலபாமைமை உணர்த்தி, தில் வேண்டுவார்க்கு அவர் கள் இவை என அறிவுறுத்தும் தமிழகத்திற் GLITsus ILIT
துள்ளன. "
ஆனும் அன்வ் தொகுப்ப றன. அரிய கலயொன்று ம?
பதை உணர்ந்த அறிஞர் ! முயன்று அவற்றைத் தொஜ் ஈடுபட்டுள்ளார். இது ஊதி ஆஜல் இது ங்கில மேதை Sir Arthur Quiller-Couch) urg பெருமக்கள்' வகிசையில் ஒருவராக்கும் பணியாகும்.
இந் நூலுக்கு ஆழ்மிக் ஆங்கில முகவுரை எழுதியுள் நன்கு விளக்கியுள்ள்ாா அ5 உண்மை என்பதை ஒப்புக்ே
இத்தகைய நலமிக்க பல தொகுக்கப்பட்டுள்ளன
ஒப்பாரிகளுக்கு அறிஞர் விளக்கம் மிக இன்றியமைய இவ் விளக்கழ்இல்லாவிடில் புலப்பூகமாட்டா R
"தொகுப்பாசிரியரின் இது தமிழுலகம் நன்றி செலுத்து
தமிழ் முரசு, சிங்கப் பூர், 18
下 ===
།
 

} களின் ஒப்பாரிகள்
பற்றிய இ
gisisi T.
.................... { இயல்பாகவே வருதசி"
லோர்க்குப் புல் ஆகாது"
" " .
芷
ாபடைத்த சுவைஞர் கட்கு
| '''' மன்னு இலகத்தில் மன்னு கொள்ள ஆக்க ஒழுக்காபூ"
"பீக்க ஒப்பாரிகள், ழ்ப்பாணத்திலும் நிறைத்
*(
晶。 |յի
ாரற்று மறைந்து வருகின் நவிது பேரிழப்பாகும் என் இராமலிங்கம், தனியராய்' த்து வெளியிடும் ப3ரியில் பம் தரும் தொழிலன்று: சர் ஆர்தர் கில்லர் கோச்சிளுல் ாட்டப்பெற்ற வழிவகுத்து அறிஞர் இராமலிங்கத்தையும்
நடை நயங் சுெழுமிய, ா திரு.வ. கந்திேய ஆதன் ர் (சொல்வது முழலும் கொள்கின்ருேம்.. நில ஒப்பாரிகள் இத் நூலில் இராமலிங்கம் எழுதியுள்ள ாததாக அமைந்திருக்கிறது:- பல நுணுக்கங்கள் நடிக்குப்
து போன்ற முயற்சிக
மென்பது தேற்றம்' 12.1960 (மெ.சிதம்பரம்)
(உள் அட்டை பார்க்க)
.17:11
5 ܕ11