கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கண்மணியாள் காதை

Page 1

மஹாகவியின் J, Gol 1 DGOolu III Girl
கதை
蠱 ○。』。 ; ،يili را من
1968

Page 2
உரிமை யாவும் மஹாகவி யுடையன

மஹாகவியின் கண்மணியாள் காதை
என்ற
வில்லுப் பாட்டு
வில் குடம் உடுக்கு தெந்தினு மத்தளம் சல்லரி போன்ற ஊர் இசைக் கருவிக ளோடு பாடுதற் கேற்ற காவியம்
அன்னை வெளியீட் டகம்
யாழ்ப்பாணம்

Page 3
எழுதியது : நவம்பர், 1966 முதல் வானெலி பரப்பியது: மே, 1967 முதல் மேடையேற்றியது: டிசம்பர், 1967 முதல் அச் சேற்றியது: நவம்பர், 1968
வெளியீடு :
அன்னே வெளியீட் டகம், 89/1, கோவில் வீதி, யாழ்ப்பாணம், இலங்கை,
\siểöã :
ஆசீர்வாதம் அச்சகம், 32, கண்டி வீதி,
யாழ்ப்பாணம்.
விலை : ரூபா 1-50

வில்லுப் பாட்டு
புலவர் பெருந்தகை ஒருவர் புனைந்த கப்பல் ஒட்டிய தமிழனின் கதையை வீர மணி தன் வில்லடித் தோத
ஒரு காட் கேட்டேன்; உடல் சிலிர்ப் படைந்தேன்.
தமிழ்க் கவி இசைக்கப் படுங்கால், கவிதை சிதைக்கப் படும் ஒரு செய்தியே அறிந்த நான், அன்றே கவி - சக - இசையைச் சுவைத்தேன். ஊரவர் வில்லிலும் உடுக்கிலும் குடத்திலும், * ஊரவர் மெட்டிலும் உணர்வுகள் தெறித்ததைக் கேட்டு, நெஞ்சிற் கிளர்வுகள் கொண்டேன்.
வழுத்துவார் குறைந்து, வரி வரி யாக ع எழுத்திலே கிடக்கும் கவிதையை ஒசையாய்ப் பரிமா றிட ඉගෙණ பழம் முறை தெரிந்தது. கவிதையை மக்கள் பெரும்பாலர் காணவும், கண்டதைப் பாடிப் பாடிக் களிக்கவும்
வைக்க இம்முறை வாய்த்ததென் றுணர்ந்தேன்.

Page 4
ஆகவே, நானும் ஓர் வில்லுப் "பாட்டினை யாக்கும் நாட்டம் உடைய ணுகி கின்றேன்.
விா மணியும் வேண்டி நின்றர்.
ஆதலால், செல்லையன் என்ருேர் சிறுவனப் படைத்துக், கலட்டி' என்ற காவியம் புரிந்தேன். இன்பமாய் முடிந்த இனிய கவி அதி: கனவுப் பாங்கிலே கட்டப் பட்டது. திட்ட மிட்ட செயல் சில ஆற்றி
வெற்றி அடைந்தவன் வீரக் கதை அது.
ஆயினும், துன்ப மாகக் கதையைத் துணித்தும் வேருெரு பிரதி எழுத விரும்பினேன்; 'திடீர்த் திருப் பங்கள் தேவை? என்ற சிந்தனை ஒன்றும் வந்து சேர்ந்தது !

இங்ங்னம்பொது மக் களிடைப் போவதற் காக இயன் றள வெளிய தாகவும் இயன்று. கண்மணி யாளின் காதை எழுந்தது,
கண்மணி யாளின் காதை இன்றிவ் வீழ மெங்கும் எதிரொலிக்கிறது. கேட்டவர் யாரும் கிறுகிறுத் திட், அதை வழங்கிடும் வில்லவர் வாழ்க; வாழ்க கவிதை; வில்லிசை வாழ்கவே!
'மஹாகவி'
நீழல்? அளவெட்டி இலங்கை
5-11-68

Page 5
மஹாகவியின் கண்மணியாள் காதை என்ற இவ் வில்லுப் பாட்டை கொழும்பு-13, கன்னாத் தெரு-67, நடிகவேள், வில்வேந்தர் லடிஸ் வீரமணி அவர்களும் அவர் குழுவினரும் இப்பொழுது இசைத்து வருகிறர்கள்.

முன்னுரை
உழுதனம்; விதைத்த தாலே உயர்ந்தன பயிரின் கூட்டம். தொழிலினை வளர்த்த தாலே, தொடர்ந்தன பயனின் ஈட்டம். விழுதுகள் விடுத்த ஆல் போல் விண்ணுயர் கோயில் கட்டித் தொழுதனம் : கலைகள் என்று தொடக்கிளுய் தாயே, வாழி 1
மூத்தவர், சான்றேர், யாவும் முறைமையாய்ப் பயின்றேர், பாக்கள் யாத்தவர் அளித்தோர், "நாளும் யாகம் வேறில்லை!" என்று வேர்த்தவர், உழைப்போர் முன்னே விசரன் போல் எழுந்து பாடும் நாத்தடிப் புடையேன் என்னை நாடு மன்னிக்கு மாக!

Page 6
முதலாம் கூறு
வெண்ணிலவு

ஈழ நாடே - எழில் - சூழும் நாடே !
சங்குகள் மூ ழங்கமுத்து எறிந்திடும் கடற்கரையில் நங்கையர் நடந்தவை உதைந்திடும் சதங்கை ஒலி ! பொங்கும் உட லங்கள் தர - ளங்களில் நடம்பயிலச், செங்கை வளை யல்களோடு கிண் கிணி கு லுங்குவன :
ஈழ நாடே - எழில் - சூழும் நாடே !

Page 7
காடழித்து நாடெழுப்பி, மேடுமலை சாடி, நெடு வீடு, அடுக்கு மாடி, கடை வீதி, தொழிற் சாலை கட்டிப் பாடு படும் ஆடவர் தம் *டெடுப்பில் லா துலவி, ஆடும் இளம் பேடுகளை ஊடிய பின் கூடிடுவார்
ஈழ நாடே - எழில் - சூழும் நாடே !
தேயிலை செழிக்கும் மலை; தென்னைகள் விளைப்பதொடு, போயிலை தழைக்கும் நிலம்; போதிய கிடைக்கும் நகர்; வாயிலிற் கி டக்கிறது, வாழை; பல நூறு கலை தோய, வள ரும் தமிழை ஆய், விழா வாயிரமே !
ஈழ நாடே -எழல்-சூழும் நாடே!

'யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு யாசகன் மன்ன விடம் இருந்தோர் பாழைப் பரிசு பெற்றன்!" எனக் கூறிடும்
- பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு صبر பாழைப் பரிசு பெற்றலும், அப் பாலையைப் பச்சைப் படுத்திப், பயன் விளைத்து, வாழத் தொடர்ந்து முயன்றத ஞல், இன்று வையத் துயர்ந்தது - யாழ்ப்பாணம் !

Page 8
"ஆழக் கடலுள் அமிழ்ந்தன வே எங்கள் அன்றைப் பெரும்புகழ்; ஆதலினுல், வீழத் தொடங்கி முடிந்தன வாம் பல விந்தை" என்றேர் கதை வந்ததுண்டு. வீழத் தொடங்கிய விந்தை முழுவதும் மீட்டுக் கொடுத்த பெருமையிலே "ஈழத் தமிழகம்’ என்று நிலம் தனில் இன்று நிமிர்ந்தது யாழ்ப்பாணம் !
'ஆறு நடந்து திரிந்து வயல்கள் அடைந்து கதிர்கள் விளைந்திட, வான் ஏறி உயர்ந்த மலே எதும் இல்லையே!" என்ற ஒரு கதை சொல்வதுண்டு - *ஏறி உயர்ந்த மலை இல்லை ஆயினும் என்ன? இருந்தன தோள்கள்!" என்றே கூறி, உழைத்த பின் ஆறிக், கலைகளில் ஊறிச் சிறந்தது யூாழ்ப்பாணம் 1

as Tau avstrassiT TIL 56avid; கவிஞர்கள் பிறந்த புலம்; நாவலர் நடந்த தரை; நல்லவர் விளைந்த தறை: சேவலோ டெழுந்து வயல் சென்று ழைப்போர் வாழும் அயல்;
‘மாவை' என்ற ஊர்ப்புறம் ஓர்
மணவிழா எழுந்த தம்மா!

Page 9
கை வளையல் தாம் அனுங்க, கண்க ளில் ம யல் மினுங்க 'ஐய நுண்ணி டை வணங்க', அன்பனை ஓர் நங்கை கொண்டாள் - "தெய்வம்' என்று தான் மதித்தாள். ‘'தேவி!' என்ற வன் வரித்தான். செய்து வந்த ஓர் தவத்தால், சேயிழை உ டல் பருத்தாள்.
பெருத்த பிர மன் பிடித்துப், பேதை வயிற் றைப் பிதுக்கி நெரித்து, விழுத் திப் படுத்தி, நேர்ந்த உயிர் பிய்த் தெடுக்க, உரத்து முக்கி ஞள், உழன்றள்; உடம்பு துடித் துப் பிளந்தாள்; மருத்து வச்சி கை கொடுத்தாள்; வாழ்க, செல்லை யன் பிறந்தான் !

- தடுக்கினிலே செல்லையன் படுத்திருந்தான். தனிய விட்டோர் நாள் நல்ல தண்ணீர் அள்ள அடுத்திருக்கும் வளவுக்கே அன்னை சென்ருள். அவள் திரும்பி வருகின்ற அந்த வேளை பொடிப்பயல் ஒர் புறம் புரண்டு, கையை ஊன்றிப், "பொறுப்பதற்கோ பொழுதில்லை!" என்பான் போல, அடுப்படிக்குத் தவழ்ந்து சென்றன். நெருப்பைக் கையால் ஆள்ளுதற்கு முன் அவள் வந் தணத்துக் கொண்டாள்.

Page 10
நடப்பதற்குத் தொடங்குகிறன் சிறிது நாளில். நறுந் தமிழிற் சில சொற்கள் கூற லாஞன். "இடிப்பதற்கு வரும்!" என்ற பயமில் லாமல், எருது கட்டி இருக்கின்ற தொட்டில் செல்வான். பிடித்திழுப்பான் கொம்புகளே இரு கை யாலே. பிறகதற்கு வைக்கோலும் கொடுத்து நிற்பான். அடித்திருப்பான் தூணுக்குக் கம்பொன் ருலே, ou Tulio செய்ததெனக் குற்றம் Snúu.
படிப்பதற்குப் போகின்றன் பள்ளி நோக்கி. பனை வழியிற் திரும்புகையிற், சுண்டு வில்லால் அடிப்பதற்கு முயல்கின்றன் ஒணுன் ஒன்றை. அது பட்டு விழ, அருகே சென்று பார்த்தான். துடிப்பதைக் கண் டவன் தானும் துடித்துப் போஞன் ! "தொடத்தகுந்த தில்லை!" என அந்த வில்லை எடுத்தெறிய நினைக்கின்றன். 'மாங்காய் வீழ்த்த இருக்கட்டும்!" என இடுப்பிற் செருகிக் கொள்வான்.
0

தந்தை யோடு வயலில் உதவிஞன். தனய னே ஒரு தோழனும் ஆயிஞன்.
முந்தி ஒடித் துலாவினில் ஏறினுன் முத்தைப் போலும் வியர்த்துளி சிந்தின்ை. வெந்து போக எறிக்கும் வெயிலில், மண் வெட்டி கொண்டு தறையினைச் சாறிஞன். சிந்தை முற்றும் செயலினில் நாட்டுவான்.
செப்புதல் சிறிதாகவே செப்புவான்.

Page 11
கடகம் தன்னில் எருக்கொண்டு கொட்டுவான். காய்ந்த தம் நிலம் கொத்திப் புரட்டுவான். இடவன் கட்டி அடிக்கவும், பாத்திகள் இட்டு வாய்க்கால் கிழிக்கவும் ஏகிஞன். நடுகைக் காய் வரும் கண்மணி கையிலே நாற்றுக் கட்டை எடுத்துக் கொடுக்கையில், படுவ துண்டவள் கை சில வேளையில்; பட்ட போதொரு பற்றை உணர்கிறன்.
இங்கி லீசு படிப்பதற் காய் அவன் எட்டுக் கட்டை நடந்து திரும்புவான். "எங்கு சென்றும் அறிவை வளர்த்திடல் ஏற்றது" என்று தனக்குள் மொழிகுவான். 'தங்க மான பொடியன் இவன்!" எனத் தக்க வர்கள் பலரும் விளம்பவே, சிங்க மானது போல வளர்ந்து தன் சின்ன ஊரினில் ஆட்சி செலுத்தினுன்
12

அந்த ஊரிலே அழகி கண்மணி தென்றலைப் போலவே திரிந்தாள், கொன்றிடும் நோக்குக் குளிர்விழி யுடனே !
பெண் ணிருக்கும் அழகை யெல்லாம் பேணி வைத்த பொற் குடமாம். விண்ணவர்க்கும் எட்டாது விளைந்திருக்கும் நிலத் தமுதாம். கண் ணிமிர்த்தி அவள் பார்த்தால், கண்டவர்கள் மறப்பதில்லை. மண் மிதித்தம் மயில் நடந்தால், மண் கூடச் சிலிர்ப்பதுண்டு.

Page 12
திங்கள் அவள் முகமளவு. செழுங் கூந்தல் மழை யளவு. தங்கம் அவள் நிறமளவு. தயிர் அவளின் மொழியளவு, கொங்கை இரு செம்பளவு, கொடி இடையோர் பிடியளவு. பொங்கும் அவள் அங்கம் ஒரு பொல்லாத பாம்பளவு !
தாழ்ந்தவர்தம் குலக் கொழுந்தாம். தாகத்துக்கு அரு மருந்தாம். ஆழ்ந்து சுவை கண்டறிய ஆனதொரு பெரு விருந்தாம். போழ்ந்து விடும் அவ்வணங்கின் புன்னகை முன் ஆண்மை நெஞ்சு - வாழ்ந்திருக்கக் கிடைப்பாளேல், வானகத்துச் செங்கரும்பு !
அந்த ஊர்த்தெருச் சந்தியில் அமைந்த கடை முத லாளியோ அவளைத் தொந்தி தடவித் தொடர்ந்து நோக் குவரே !
14

செல்லயன் வயலில் நடுகை நடந்தது. செல்லையன் துலாவினில் நடந்தான். கண்மணி குனிந்து நாற்று நட் டாளே .
"நாற்றுப் பிடி எடுத்து நாற்று நட்டு நான் இருக்க, நாற்றுப் பிடி பிடியில் நழுவுவது தான் எதற்கு?'
‘'சேற்றில் சதிர் மிதித்துச் சின்ன இடை நீ வளைக்க, நேற்றுச் சிரித்தபடி நின்றவள் நி னைப்பெனக்கு " -

Page 13
'நேற்றுச் சிரித்துவிட்டு நின்றவள் நி னைப்பிருந்தால், காற்றிற் பறந்து விடும் கதை விடுதல் தான் எதற்கு ?"
“காற்றில் பறந்து வரும் காவியத்தோ டாவி செல்ல, ஏற்றத் துலா நடந்தே இளக்கும் உடல் இங்கெனக்கு!"
*ஏற்றத் துலாவினிலே ஏறி நிற்கும் மன்னவர்க்குச் சேற்றிற் கிடக்கும் ஒரு சிறிய மலர் ஏன்? எதற்கு ?"
சேற்றிற் கிடைக்கும் அத் திரு மலரோ இல்லை யென்றல், சோற்றைப் பிற கெதற்கு ? சொல்லடி இப் போதெனக்கு!"
கண்மணிப் பெண்ணின் காதலால் நெஞ்சிற் ... " புண்மிக அடைந்த அப்பொடியன் எண்ணிய எண்ணம் ஓர் எண்ணுயிரமே.
6

17 c
சித்தப்பன், த்ந்தை காதிற் செய்தியைக் கூறிப், பின்னர் சத்தங்கள் போட்டுப் பேசிச் சண்டைகள் பிடிக்க லாஞன். தத்தம் காணிகளை வேருய்ப் பிரித்திடல் தக்க தென்று வைத்ததோர் முடிவி ஞலே, வயல் குறு கிடலா யிற்றம்.

Page 14
பாட்டனின் பாட்டன் பாட்டன் வாங்கிய பங்கைப் பங்கு போட்டதால், போட்டுப் போட்டு வந்ததால், புதிய தாக ஈட்டிய நிலம் வே றில்லை என்பதால், இவருக் கின்று மாட்டுக்கோர் தொழுவம் போட மட்டும் ஒர் குழி எஞ் சிற்றம் !
'எஞ்சிய குழியைக் கிண்டி எப்படி நாளை நாங்கள் கஞ்சியிற் சோறி ருக்கக் காணல் ?' என் றெண்ணிப் பார்த்தான்.
துஞ்சிடும் வேளை கூடக் கனவிடைத் தொடர்ந்து வந்து கொஞ்சிய கொள்கை ஒன்றில் செல்லயன் விழித்துக் கொண்டான்.
8

மாவை என்ற ஊரி னுக்கு வட பு றத்தில் நெடிய தான தேவை வற்ற கல டி ருத்தல் தெரியும் அவ் வூ ரார் எ வர்க்கும். சாவை உற்ற பேர்கள் சென்று சரிவதற்கே நிலைய மான தீவை ஒத்த தனி நி லத்தைச் சென்று சென்று சுற்றி வந்தான்.
காரை சூரை நாக தாளி கள்ளி முள்ளி ஈச்சை மட்டும் வேர் வி டுத்து வளர லாகும் வெட்டை, அந்த வெளியில் எங்கு பாரை கொண்டு தொட்ட போதும், படுவ தொன்று - பாறை என்று ! யாரை அந்த நிலம் அ ழைக்கும் ? அன்பு கெட்ட மனம் நிகர்க்கும்.
9

Page 15
čho
உயனை எனும் அப் புலத்தில் மனதை ஊன்றி, உலவு கிருன் செல்லையன் அதிலே சென்று. வெயிலடிக்கும் நடுப்பகலில், விடியும் வேளை, மெல்லிய காற் றசைகின்ற மாலை வேளை, துயிலினிலே ஊர் முழுதும் அயர்ந்து போகத், துணிந் தெழுந்து பேய் அலையும் சாமம் எல்லாம், * பயனெதனைக் காண்கின்றன் பொடியன்?' என்று
பார்த்தவர்கள் கூற, அவன் திரிகின்றனே! 20 V

முகத்தார் என் பவருக்கே உயனைப் பூமி முழுதும் உரித் தென மாவை முழுதும் கூறும். தகப்பன் அன்று காணி எழுத் தெழுதி வந்த காலத்தில், பிறர் நிலத்தைத் தகுந்த வேளை அகப்படுத்தித் தம் பெயரில் எழுதிக் கொண்டார். ஆயினும் ஆறடி நிலத்தில் அடங்கிப் போனுர். மிகப் படித்த மகன் அதனை விற்று விட்டு, மேல் நாட்டிற் குடி ஏறும் விருப்பம் கொண்டான்.
மாவை நில இளைஞர்களை ஒரு நாள் மாலை வைரவர் கோயில் வீதி தனிலே கூட்டித், ‘'தேவையுண்டு நம்பணி நம் மூருக்கு" என்று செல்லையன் சிலசொற்கள் செப்பி நின்றன். ஆவலுடன் சங்கம் ஒன்றை ஆரம் பித்தார். அவர்வேண்ட, முகத்தார் தம் கலட்டை ஈந்து, 'சேவை பெரிது!" என்னும் ஒரு செய்தி தந்து, *சிலோன்’ விட்டே சில நாளிற் சென்று விட்டார் !
விளைவெதும் இன்றி வீணே கிடந்த கலட்டியை வழங்கிய முகத்தார்
புகைப் படம் பேப்பரிற் போடப் பட்டதே !

Page 16
th
காணி கிடைத்தத ஞல் அவ் விளைஞர் கழகம் மகிழ்ந்து குதித்ததையா. வீணிற் கிடந்த நிலத்தை விதைத்து விளைப்பது நோக்கமாய்க் கொண்டதையா, தூணிலும் உண்டு, துரும்பிலும் உண்டெனச் சொல்வர் கடவுளை; நல்விளைவு காணுதல் உண்டு கலட்டிலும் என்றெரு கங்கணம் கொண்டு துடித்ததையா.
ஊரிற் பெரியவர் ஒர் சிலர் வேண்டிய உற்சாகம் தந்தனர். 'வீடு வந்து சேருவதில்லை நும் வேளாண்மை !" என்று சிரிக்கக் கடை முத லாளி நின்றர். ஆரும் எதனை மொழிந்திடி னும், தங்கள் ஆண்மையில் நம்பிக்கை வைத்தவராய், ஏரினைக் கொண்டோர் புது வர லாற்றை
எழுத இளைஞர் எழுந்து வந்தார்.
22

9
ஆழ நீர் கொண்டு வாழ இளைஞர் அகழ்கின் ருர் தம் நிலத்தினைத் தானே !
*"பிக்கான், மண் வெட்டி, கொந் தாலி யொடு பிள்ளைகளுக் கென்ன சோலி ?' என நக்கார் சிலர். சிலர் கேலி செய்ய நாளும் உழைத்தனர் வேளை முழுவதும் - தக்கார் புகழவும், தாயர் மகிழவும், தந்தையர் கண்டு தம் நெஞ்சு நெகிழவும், மிக்க அறிவுடை யோர்கள் 'உது சரி ! வெல்லுக நும்பணி!" என்று புகழவும் .
ஆழ நீர் கொண்டு வாழ இளைஞர் அகழ்கின் ருர் தம் நிலத்தினைத் தானே ! 雳3

Page 17
பாறை எதிர்ப்பட வேட்டுப் பல பற்பல வைத்தது கேட்டு, மிகத் தூர் இருக்கும் தார் றேட்டுக் கடைத் தொந்தி முதலாளி ஏசத் தொடங்கினர் ! "கூரையி லே சில ஒடு வெடித்தது, "கொம்பிள யின்று கொடுப்பன் !" எனச் சொல்லி நேரே பொலிசுக்குச் செல்ல, அவர்கள் 'நெய் ! நெய்!" என்று காட்டித் திருப்பி அனுப்பினர் !
ஆழ நீர் கொண்டு வாழ இளைஞர் அகழ்கின் ருர் தம் நிலத்தினைத் தானே !
ஒன்றிரண் டோ மூன்று நாலோ அல்ல ; ஒடின மாதங்கள் ஏழே ! 'இனி என்றெம் வியர்வையைப் போலே வரும் எங்கள் வினைப்பயன் !" என்று நித நிதம் நின்று நெடுக முயன்றனர் ஆதலின், நேர்த்தியுடன் தொழில் பார்த்தனர் ஆதலின், கன்று வாய் வைக்கவும் கற்ற சுரக்கும் கணக்கிற் பாதாளத்தி லே நீர் சுரந்தது !
ஆழ நீர் கொண்டு வாழ இளைஞர் அகழ்கின்றர் தம் நிலத்தினைத் தானே !
24

செல்லை யனை அவன் தந்தை ஒரு நாள்
'நில்லையா " என்றிவை நிகழ்த்தச், சொல்லாடல் ஒன்று தொடர்ந்து நடந்ததே!
‘உளறித் திரிவதகுல் உண்டாகும் நன்மை என்ன ? ஊருக் குழைத்ததினிப் போதும் தம்பி; "கிளறிக்கல்" சோதனையாம் கிட்டிண
பிளிக்கேசன்’ போட்டிடுவாய்!” என்றன் தந்தை. "கிளறிக்கல் எடுப்பதே எண்ணம் எனக் கெனினும், கிட்டிண பிள்ளை சொன்ன வண்ணம் அல்ல! உளதைப் பயன்படுத்தா தோடி நகர்ப் புறத்தில் உட்காரல் தக்கதுவோ?’ என்றன் பிள்ளை.
25 d

Page 18
"மண்ணக் கிளறி அது மலரப் பணிபுரிதல் மட்டற்ற இன்பம் !" என்று சொன்ஞன் பிள்ளை. 'பண்ணத் தகுந்ததுவோ படித்தவர் அத்தொழிலைப்? பார்த்தார் சிரிப்பார் !" என்று சொன்ஞன் தந்தை. 'கண்ணைத் திறப்பதற்கே கல்வி கண் டோம்; இதனைக் கலட்டிற் செலுத்தலும் நன்று ' என்ருன் பிள்ளை. 'உண்ணக் கிடைத்திடலாம்; உலகிற் பெரியவராய் உலவக் கிடைத்திடுமோ ?" என்றன் தந்தை.
*உலகிற் பெரியவராய் ஊர்ந்து திரிபவர்கள் உண்மையி லே பெரியர் தாமோ ?" என்றும், “பலகற் றதன்படியே பண்பட்டு நிற்பவர்கள் பணமற்ற தாற் சிறியர் அன்றே !' என்றும், 'நிலையற்ற இந் நிலத்திற் பிறருக் குதவுவதே நிற்கத் தகுந்தது!" என்றும் சொன்னுன் பிள்ளை. 'கலகத்தை வீட்டினிலே கண்டேன் !" எனச் சிரித்துக் 'கதை மெத்தச் சரி ' என்று சென்றன் தந்தை.
26

கழகத் திளைஞரது கைவலிமையால் , கலடாய்க் கிடந்த அந்த உயன வெளி பழகத் தொடங்கியது. கிணறிருந்த பகுதிப் பல பரப்புப் பக்குவப்பட்டே இளகத் தொடங்கியது, வாழைகள் குலை ஈனத் தொடங்கியன. தென்னை இனங்கள் அழகுச் சிறை விரித்துத் தோகை மயில் போல்
ஆடத் தொடங்கியன அவ்விடத்திலே ! 7 S.

Page 19
கத்தரி காய்க்க நிலம் ஏற்றது கண்டார். கடகங்க ளாய் நிறைத்து விற்பனை செய்தார். வத்தகை தான் செழித்து வந்தது கண்டார். வந்து பிறர் விரும்பிக் கொண்டனர், சென்ருர், சத்து மிகுந்த முட்டைக் கோசு தழைக்கத் தக்கதம் மண்ணெனவும் சான்றுகள் கண்டார். "முத்தை விதைத்திடினும் முத்து விளதல் முடியும் இங்கே !' என ஊர் நம்ப, மகிழ்ந்தார்.
"முந்திரி கைக் கொடி வளர்கிறதற்கு முற்றும் தகுந்த நிலம் இந்நிலம் !" என்றும், "அந்தப் பயிர் தொடங்க வேண்டும் !" எனவும் அங்கத் தவர் ஒருவர் முன்மொழிகிறர் 1 'எந்திரம் கொண்டு இறைத்தல் ஏற்றது!’ எனவும் ஏகோபித் தோர் முடிவு கொண்ட படியால், சிந்தனை யுற்றதவர் செயலவை தான்; செய்யப் பொருள் வலிமை சேரவில்லையே!
28

செல்லயன் அப்போ தெழுந்தான்.
'அன்பு சேர்ந்த எனதரும் தோழர்க ளே, நாம் கல்லைக் களனி செய் திட்டோம் ! இனிக் காசில்லை என்று களைத்திருப் போமோ ?
நல்லலிங்கம் நல்ல லிங்கம்;
Joaí நம்போரு ளாளர் ; அவருக்கெப் போதும் இல்லை என்கின்றது பாடம் ! எனில் ஏற்ற வழிகள் பிற உளி ; தேடும் !
9 -

Page 20
*எண்ணம் எனக்குள தொன்றே !
நீவிர் ஏற்றுக் கொள் வீர்கள் எனில் மிக நன்றே ! உண்ணும் உணவினைப் போலே
நமக்கு உற்ற தமிழ் அதில் நாடகத் தாலே, திண்ணம், நிதி வந்து சேரும்;
ஒன்றைத் திட்டமிட் டுச் செய்வம் ; யாவரும் வாரும் ! *கண்ணிய மும் கட்டுப் பாடும்
நல்ல கடமையும் வெல்க !' என் ருவன நாடும் !"
“ஓம் !" என் றுரைத்தனர் யாரும்;
“9úb, ஓம் !" என்று கைதட்டி ஞர் முழுப் பேரும். "நாம் என்ன நாடகம் போட்டால்,
மிக நல்லது ?' என்றே சொர்ண லிங்கத்தான் கேட்டான். *。 "தீமை ஒழிந்திடத் தக்க
புதுச் செய்தி உடைய தொன் றய். அஃ திருக்க!' - சாமம் வரைக்கும் இருந்தே
அதைச் சர்ச்சை செய் தார்; பின்னர் சென்றர், துணிந்தே,
30

r
உயனைக் கலட்டிக் கழகத் தவர்கள் ஒவ்வொன்ற கப் பல தேடிஞர். மயனப் பழிக்க ஒரு மண் டபத்தைக் கட்ட மரம் தடிக்கு ஒடிஞர். உயரக் கழுகு தறித்து வண்டியில் ஏற்றி வந் தொவ்வொன்றம் நாட்டிருர், சயனித் தலையும் மறந்து பறந்து சாதித்த கெர்ட்டகை காட்டிஞர்
ܗܝ

Page 21
"இளைஞர் கழக விழவு, வருக!” - பறை அறைந்திது சாற்றினர். 'நுழைவு மிகவும் மலிவு, விரைக ! விரை " கென் றறிவை ஏற்றிஞர். அழகிய தொரு பெரிய எழுத்தில் அறிவித் தல்களை ஒட்டிஞர். ழேவர் மறந்து கிடந்த கூத்துக் கிளம்பிற்று 1" எனக் கை கொட்டினுர்.
பாடலும் பண்ணும் பரதமும் பயின்ற நாடகம் நடந்தது - நாடு, வீடு முழுவதும் வியந்து சுவைக்கவே!
"சோடித்த பந்தலிற் சுடர் வி ளக்குகள் ! சொர்க்கம் இதற்கிணை ஆகுமோ ! வாடிக்கை யாய் இதை வைத்து நடத்திடில்
AJ T(gŭo அன்றிக், கலை சாகுமோ ?" - நாடகம் பார்த்து நடந்தவர் இப்படி
நாவினைச் சூள் கொட்டிக் கூறிஞர். "கூடும் அச் சூத்திரம் கொள்ளல் 1’ எனப் பொருள் - ஆளர் கு தூகலம் ஏறிஞர்.
32

6
நாடகத்தைப் பார்த்த பல நல்ல பெண்கள் 'நடந்துவ தேன் வைரவர்க்காய் வேள்வி ?’ என்றர். "மூடருக்கே ஏற்பாம் இம் முறைகேடு!" என்று முழு நீளத் தாடி, உடை காவி யான வேடம் எடுத் தவர் சொன்ன துண்மை !' என்று வெண்டிக்காய் கறிக் கறுத்துக் கதைக்க லாஞர். 'ஆடு வெட்ட நீ போதல் கூடாது " என்றே அப்பனிடம் கண்மணியாள் ஆணை இட்டாள்.
SS e LLSS

Page 22
'அடுத்த சனிக் கிழமை எங்கள் வேள்வி அன்றே
அதை நினைத்துக் காடையர்கள் எங்க ளுக்கு முடித் தெடுத்துக் கொடுத்தார் இந் நாடகத்தை - முன்பிருந்து வருகின்ற வழக்கம் ஒன்றை எடுத்தெறியச் சொல்கிறதற்கு இவர் யார் ?" என்ருர், எரிந்து கடை முதலாளி. "இங்கி லீசு படித்ததனுல் வந்த பிச கிது காண் !" என்று பல சொல்லி நிரூபித்தார் பஞ்ச லிங்கர்.
'வாடகைக்குச் சந்தியில் ஒர் கடை எ டுத்து வைத் திறைச்சி விற்றிடலாம் என்றல், இந்தக் கேடகலும் !" என அங்கோர் கெட்டிக் காரி கிளப்பி விட்டாள் ஒரு திட்டம். பொதுவாய் மாவை ஆடவரே வேள்வியினை ஆத ரித்தார். அரிவையரோ அதை முற்றம் எதிர்த்ததாலே, சூடு கொண்ட தர்க்கங்கள் தணிந்து போய், ஓர் சுமுக நிலை பிறந்தது. மங் கையரே வென்றர் !
34

e
வேள்வியின் கீழ்மையை மிகவும் தெளிவாய் நாடகம் போட்டவர் நாட்ட, மாவை வேள்வி மறுத்துச் சிறந்ததே.
ஆண்டு தோறும் தலைமைக் கடாவை அறுக்கும் சந்திக் கடை முத லாளி தூண்ட லுற்று முளாசிக் கொதித்தார். துணைக்கு வேறு சிலரைப் பிடித்தார். 'வேண்டு மே பழி வாங்கிடல் !" என்றனர். வேகமான தோர் தாகம் அடைந்தார். ஆண்ட வன் திருச் சன்னிதி முன்னிலே
ஆணை ஒன்றை எடுத்து நின்றரே !

Page 23
மேள தாளங்கள் கூடி முழங்கிடும். வேறு நூறு வெடிகள் வெடிக்கும். சூழ ஊரவர் சென்று தொடருவர்.
**சொல்லப் பட்ட கடா இது !' என்பர். ஆளை ஆள் கண்ட வேளை, “குதிரை போல் அல்ல வா வளர்ந் துள்ளது!" என்பாரே! -
மாலை சூட்டி நடத்தி, இவற்றிடை மக்கள் முன்னர் அறுப்பதை அன்றே -
பட்ட ணத்துக் கசாப்புக் கடையினர் பார்த்துக் கேட்ட விலை தந்து பெற்றர் ! கெட்ட காலம் புகுந்தது கண்டவர், கெம்பி ஞர் அக் கடை முத லாளி ! 'நட்ட மேற்பட்டு விட்டது' என நிலை நாட்டி ஞர் பஞ்ச லிங்கர் t என்றலும், கொட்டி ஒர் மழை பெய்து குளிர்ந்தது, கோடை யிற் சனி நாளன்று தானே !
36

8b9o
சாத்திரம் புதியவை கண்டவர் எடுத்த - ノ சூத்திரம் பொருத்தினர் கிணற்றில், பார்த்தவர் மகிழ்ந்து பல புகழ்ந் திடவே !
மாடிரண் டே சுற்றிச் சுற்றி வர, மக்களின் முன் அவர் கண்ணெதிரே,
பாடு படாமல் இருக்கையிலே பாதாளம் சென்று நன் னிர் எடுத்தே, ஒடிச் சுழன்று திரும்பினவாம்; வாய்க்காலில் ஒவ்வொன்றய ஊற்றினவாம் - "வேடிக்கை தான் அந்த வாளி " என்றே மெச்சினர் கண்டவர் யாவருமே.
வேட்டி களைந் திடைக் கோவணமாய் மெல்ல நடந்தவன், வாளியின் நீர் ஊற்றப் படுகிற ஓடையிலே ஊறிச், செல் லையன் உடல் குளிர்ந்தான். ஏட்டில் எழுத ஓர் ஓவியமே என்ன இருக்கும் அக் கண்மணியாள் மீட்டும் இருவிழி வண்டை, அவன் மேனியைச் சுற்றிப் பறக்க விட்டாள்.
37

Page 24
o
செல்லை யனை அவன் தந்தை ஒரு நாள் * நில்லையா !” என்றிவை நிகழ்த்தச், சொல்லாடல் ஒன்று தொடர்ந்து நடந்ததே :
'இந்தப் படி நெடுக இருப்பது நல்ல தல்ல ; இங்கே பல இடத்திற் கேட்கிருர். சுந்தப்ப பிள்ளை மகள் கறுப்பி என் ருலும், அங்கே காசு கிடக்கு தென்று பார்க்கிறேன் ! சொந்தத்துள்ளே முடித்தால் தொந்தர வில்லை யன்றே? சொல்லு : முகூர்த்தம் இன்றே வைக்கலாம்.
அந்தப் பொடிச்சிக்கும் உன் மேல் ஆசை கொஞ்சமல்ல!” என்று செல் லேயன் தந்தை கூறினுன் !
38

*"அப்பு, கந் தப் பம்மானின் அவளோ அழகுடையாள்;
ஆயினும் என் மனம் அங் கில்லையே!" "சுப்பர் மகன் செல்லப்பர் பெட்டை சுகுணவதி
く சுந்தரி; ஒ மென்று சொல்; செய்யலாம் !"- ‘'இப்போ தவசரமோ ? இன்ஞெரு நாள் உண்ரப்பேன்". 'இல்லை, அதற்கென்ன சொல், என்னிடம் ! ஒப்புத் தருவை யென்றல் இந்த உலகினிலே உள்ள சிறந்தவள் உன் காலிலே 1'-
'குப்பையிலும் கிடைக்கும் குன்றி மணிகள், என்பார்". *கூறி விடு வெளியாய்க்; குற்றமா? தப்புத் தவறு செய்தி ருந்தால் சரிப்படுத்தித்,
தக்க இடத்தினிலே கட்டலாம் !'- "அப்போதே கண்மணிக்கென் ஆணை கொடுத்து விட்டேன்!?-
r "ஐயோ, இதென்ன தம்பி ?" - அப்பனின் ஒப்பை இரந்து நின்றன் பிள்ளை; தகப்பன் உணர்ந்து 'ஓம்' எனும் வேளை குரல் கம்மிஞன்.
39

Page 25
Dh
கலட்டி இளைஞர் கழகம் ஓர் இரவு பொதுச்சபை கூடிய போது,
செல்லையன் எழுந்தான்; செப்புகின் ருனே
“ “ Lun 26an Gu நிகர்த்த பசிய தண் ணிராற் பலப்பல அதிசயம் விளைத்தோம். சாலவும் சிறந்த கூட்டுழைப் பளித்த தருக்கிலும் செருக்கிலும் திளைத்தோம். மேலும், ஒர் சங்கக் கடையினை அமைத்தோம். மேம்பட லாயினுேம் நாங்கள்.
காலையும் பகலும் மாலையும் களைத்தோம். கலட்டியைத் திருத்தினம், களித்தோம்.
40

"இருபது பேர்கள் நாங்கள் ; எங்களுக் கேன் இத்தனை விசாலமாய்க் கிடக்கும் பெரு நிலம் ? இதில் ஒர் பகுதியைப் பிற பேர் - பெறுவது தகுமென ஒரு நாள் இரவிலே துயிலா திருக்கையில் நினைத்தேன்; எப்படி நும் கருத்து ? உரைப்பீர் ! அருகிலே வதியும் சில குடி களுக் கோர் அங்குல நில மில்லை, நினைப்பீர்!
'உருகும் ஓர் இதயம் கொண்டவர் மனிதர்; உங்களுக் கிதைச் சமர்ப் பித்தேன். தருக, நம் புலத்தில் ஒரு பகுதியினைத் தாழ்த்தப்பட் டுள்ளவர் தமக்கே ! பெருமை உண் டிதஞல் என்பதற்காகப்
பேசிட வில்லை நான் இதனை : அருகதை உடையார் அவர்கள் ! நாம் அளித்தால், அறமும் நம் பயிர் எனத் தழைக்கும் !"
- நிறைந்த பே ரவையில் நிமிர்ந்து நின்றிவை அறைந்தனன் செல்லையன், அமர்ந்தான். "சிறந்தது!" என் றேற்று அவை செயல் முடித்ததுவே !
41f

Page 26
தாழ்த்தப் பட்டோர் குடிசைகள் கலட்டியில் எழுந்தன; குடி புகுந் திருந்தார் - விடிவினை நோக்கி விரைந்து போ யினரே !
வெள்ளி நிலவு நெடுவான வழியில் மெல்ல நடை நடந்து வந்த தொரு நாள் - புள்ளி அனைய பல வெள்ளி மலர்கள் பூத்துச் சொரிந்தன அவ் வானில் ஒரு நாள் - மெள்ள அயலினிலே சென்று, இளைஞரை மேனி வருடியது தென்றல் ஒரு நாள் - நள்ளிர வானமையி ஞல், உலகமே நன்று துயில்கிறது ! நல்ல ஒரு நாள்:
42

"முல்லை விரிகிறது வேலியில்!" என முந்தி மொழியும் ஒரு வாசம் உளது. *வல்ல வெளியில் அன்று திருவிழவு ; மழலை மொழி குழலில் வருகிறது. கல்லில் அமர்ந் திணிய காட்சிகளிலும் காதில் விழுகிற அவ் வோசைகளிலும் செல்லும் மனதில் ஒரு சிலிர்ப் படைந்து செல்லையன் என்ற அவன் வீற் றிருக்கிறன்.
காட்டை அழித்த செயல் தன்னை நினைந்தான். கழனி கடை அமைத்த செய்கை நினைந்தான். ஆட்டை அறுக்கிறது நின்ற தெண்ணிஞன். அண்டிப் பிழைத்த சிலர் ஆறி இருக்க வீட்டை அவர்க் களித்த வெற்றி நினைந்தான். வேறும் பல நினைவு பாய இருந்தான். ‘நாட்டை உயர்த்துவது நல்ல செயலே ; நம்மால் எது முடியும் ?" என்று குனிந்தான்.
4 3

Page 27
9.
கண்மணி தனது கலட்டிக் குடிசையிற் படுத்திருக் கின்றனள், புரண்டு ; பாடல் ஒன்று பண்ணுேடு கேட்டதே :
மண்ணெண்ணெய் விளக் கருகில் மணி போலே சிறுத் தெரிய, விண் ண்ல்ல, புவியினில் ஓர் மின்னலே ! வீழ்ந்து துயில் புரிகிறதோ, தையலே ? பெண் ணல்ல, பெரும் அழகின் பிறப்பிடம் என்பது தெரிய, கண் ணல்ல, கயல் இரண் டேன் மூடினுய் ? காதலுக்கு வழி அடைத் தேன் வாடிஞய் ?
44

வெண்ணிலா வெறு வெளியில் வெறிக்கிற தன் மது சொரிய, புண்ணெலாம் உளத் திருக்கும் போதிலே புரளுகிற தோ சிறுபாய் மீதிலே ? 'உண்ணலாம் ! உடல் SAMT உறங்கிடலாம் !" என உனக்கோர் எண்ணமாம் எனில், இது நன் ருகுமோ ? ஏங்கும் 52C வின்ை அணந்தால், நோகுமோ ?
வெண்ணெய் போல் உடல் உனக்கு. வெளி உலகு துயில் டேக்கு. தண்ணியோ கிணற்றினிலே 1 தாகமோ, தனிமை யிடை போய்த் துயின்ருல், போகுமோ? எண்ணெயோ முடிகிறதே ! எரி விளக்கோ அணைகிறதே ! புண்ணியம் - பழி அறிவாய் ; போ, அம்மா ! புள் எழுப்பி நின்றனன் ; போய்த் தாவம்மா !
45

Page 28
9
சேலை ஒன்று சரசரப் புற்றது. திறப்பும் பூட்டும் கறகறப் புற்றன. வேலி யோ கறை யான் படர்ந் துள்ளது ; மெல்ல வே அந்த மண் உதிர் வுற்றது. வாழை நட்டுள பாத்தியில் ஈரமோ ?
வைத்த காலிற் சளசளப் புற்றது.
மூலை ஒன்றினில் ஒலைக் கிடுகின முன் வி ரிக்க, அது நெரி வுற்றது. 4, 6

பேசுகின்ற இரு குரல் கேட்டன.
பிறகு கொஞ்சும் சிரிப்பொலி கேட்டது. ‘யோசி யுங்கள்’ எனும் சொல் மிதந்தது. 'யோகம் இன்று !’ எனும் சொற்கள் தொடர்ந்தன. 'வாசி யுங்கள் !" என ஒரு யாழினை வைக்கத், தந்தி அதிர்ந்தது போலவும், ஆசை ஒன்று அலு வற்படல் போலவும், அங்கு சிற்சில ஒசை விளைந்தன.
மெய்யி லே சிலிர்ப் பொன்று நடுங்கவும், வேறுபட்ட நிலை சென் ருெடுங்கவும், 'தையி லே சடங்கு !' என்று புகன்றவன் தாகம் ஒன்று தணித்தல் தொடங்கினுன் : கையி லே வளையல்கள் அனுங்கவும், கண்ணி லே பெருங் காதல் மினுங்கவும், "ஐய நுண்ணிடை சென்று வணங்கவும்", அன்ய ஞே டொரு நங்கை இணங்கினுள்.
47

Page 29
இரண் டாம்கூறு
காரிருள்

வானத்து வெண்ணிலவை ஒடிப் பிடித்து வைத்துக் கடித்தது கறுத்த முகில் ஒன்று. கோணற் கொடுங் குரல் கொடுத்த தொரு கோட்டான். குருவிக் குலம் சிதற மூசியது காற்று. பானைக் கடைச் கெருமை புக்கது நிகர்க்கப்
. . . பாரே அதிர்ந்தது; பிதிர்ந்தது க லட்டி, தேனுெத் திணித்த இதழ் உண்டு புரள் கின்றேர் திடுக்கிட்டனர். மா தி றுக்கிப் பிடித்தாள்.
இருட்டுக்கும் எத்தனை இருந்தன க ரங்கள், இழுத்துச் சிவப்புப் பொடிச்சியை எடுக்க! முரட்டுக் கரங்கள் ஒரு கோடரி உயர்த்தி மோதத், தெறித்தது செல் லையனின் இரத்தம். "ஐயோ!' எனக் குளறி அச்சிறுமி கூவ, ஆகாய மே நடு நடுங்கியது. நீசக் கையால் அவள் சுவை உடல் மலர் சு மந்து கையாட்கள் ஓர் சிலர் பறந்தனர்; மறைந்தார் !
49 g

Page 30
@_乐m
கூந்தல் குலைந்து நின் ருளே
கண்மணி ஒரு குடிலிற் சிறை கிடந்தாளே !
தாழ்ந்தார் குலத்தவரே தன்னுடல் க வர்ந்த தெண்ணி
வீழ்ந்தாள். எழுந்தனள் விசும்பினள். வி திர் விதிர்த்துச் சோர்ந்தாள்: சுருண்டனள். சுன மிகுந்த மெய் சுருங்கித் தேய்ந்தாள் திணறினள். திருந்திழை உடை கலந்து -
கூந்தல் குலேந்து pŠlsôT (gGmr; கண்மணி ஒரு குடிலிற் சிறை கிடந்தாளே !
○ 0

வந்தாராம் சந்திக் கடையார்
தொந்தி சரிய வந்தாராம் சந்திக் கடையார் !
**இந்தா, பொடிச்சி ! உன்னை எத்தனை நாட் பார்த் திருந்தேன் ! சிந்தா குலம் எதற்கு? உன் சிற்றிடை கற் கண்டு 1 முத்தம் தந்தால், உயிர் பிழைக்கும்; தாடி!” என்று தாவி, அவள் பந்தாய் உருண்ட முலை பற்றினர், விலக்கினள் .
உருத்தாள், சிறுமி உயிர்த்தாள்; கடையவர் جیر இளித்தார் ; முகத்தில் உமிழ்ந்தாள்.
விழித்தார், வெறித்தனர், வெருட்டினர் ; பழித்தனள், அடித்தார் ; தடுத்தனள், பிடித்தனர் ; கடித்தனள். இடித்தார் : புடைத்தனள். இளைத்தனர் ; விழுத்தினள், உதைத்தாள், மிதித்தனள், துவைத்தனள், சிரித் திரண்டு -
கண்ணிர் வழிந்து நின் ருளே:
திறந்த வழி கண்டாள், பறந்து சென் ருளே ! 5

Page 31
ପ୍ଯାଗ
ஒடுகின்றள், ஓடுகின்ருள், ஓர் இரண்டு நாய் குரைக்கப், பேய் துரத்த, ஓடுகின்றள், ஓடுகின்றள். சேலேயின் முன்றன காற்றினிலே செல்ல, இடை மின் நுடங்க, ஒடுகின்றள், ஒடுகின்றள். பால் முகத்தின் மேல் வியர்வை பாய, விழி நீர் பெருக, ஒடுகின்றள், ஒடுகின்றள்.
மாரியம்மன் வாசல் வழி வந்தாளே கண்மணியாள். ஊரின் ஒரு புறத்தே உறங்கினையோ மாரியம்மா ? நல்லான் ஓர் நல்லவளை நாடுவது நாத்திகமோ ? எல்லாரும் ஒத்த குலம் என்று சொன்னுல் ஏற்காதோ ?
52

ஏழை இருக்க நிலம் ஈதலும் ஓர் ஏமாற்றே ? வேள்வி மறுப்பதுவும் வேண்டாத வெஞ் செயலோ ? பாழை விளைத்திடுதல் பாதகமோ, பேசடியே
கூடி உழைத்தல் கொடுமை என்றே கூறுகிறம் ?
ஏடி, முத்து ம்ாரியம்மா, எடுத்தொரு சொல் சொல்லடியோ ! வாழ
பெருமாட்டி ? சொல்லடியே என் தாயே, சுறுக்காகச் சொல்லடியோ ! புல் லிதழே பிய்ந்து புயற் காற்றிற் போனது போல்
ஒடுகின்மூள், ஓடுகின்றள், ஓரிரண்டு நாய் குரைக்கப், பேய் துரத்த,
ஒடுகின்றள், ஓடுகின்றள். 53

Page 32
உஅ
காதலனைக் கண்டு கொண்டாளே
(ypað மீ த றைந்தாள்; நிலம் மீது ருண்டாள். sgu மாது கண் செந் நீர் வழிந் தாளே !
k 5}{სნ சேதி கீழ்ப் புற வானில் ஞாயிறு
நீதி காண எழுந்ததே !
. இருள் சாதி போலே போய் ஒழிந்ததே !
“ęs வாழ்க!" என்றும், "இருள் வீழ்க!" என்றும், ar
மீது சேவல் கூவு கின்றதே ! 54

9 is
ஒத்துழைத்தால், ஒன்று பட்டால், உயர்வு பல காட்டி நின்றல், ஒத்தவர் தாம் யாரும் என்றே ஒருத்தியின் மேல் அன்பு வைத்தால், பித்தரின் கைக் கோடரி போய்ப் பிளந் தெறிய, நல்லவர்கள் செத்திடத் தான் வேண்டுவதோ ? செக முடையோர், செப்புவிரே!

Page 33
பின்னுரை
கற்பனை கொண்டு செய்த கதை இது ; இதிலே நூறு சொற் பிழை இருத்தல் கூடும். சுவை பல குறைதல் கூடும். "அற்புதம் !" என்று சொல்லும் அளவிலா திருக்கு மேனும், 'நற் பயன் விளைத்தல் கூடும் !" என்று நான் நம்பித் தந்தேன்;
செல்லையன் என்ற இந்தச் சிறு கவிக் குரியோன் நம் மூர் எல்லையுட் பிறந்து வாழும் எவனும் போல் ஒருவன் ஆவான். புல்லல்ல ; வளர விட்டாற்.
புது நெல்லாய்ப் பொலிவான் ; அல்ல, நெல்லல்ல - நெல்லினுள்ளே நிறைகின்ற உயிரே என்க.
O
56.

அன்னே வெளியீடு
“மஹாகவி அவர்கள் தமிழ்கூறும் நல்லுலகிற்கு மிகப் பழையவர். அவர்தம் கவிதைகளும் சிந்தனை களும் புதுமையானவை. அவரது படைப்புக்கள் காலக் தாற் சாகாதவை.
அரசாங்க உயர் அதிகாரியாகப் பணிபுரியும் மஹா கவி அவர்கள், மிகச் சிறு வயதிலேயே கவிதைகள் புனைவதில் ஈடுபட்டார். இவரது முதலாவது கவிதை நூல் வள்ளி 1955-ம் ஆண்டு வாதர் வெளியீடாக வெளிவந்தது. 1966-ம் ஆண்டு வரையிலான நீண்ட பதினுெரு வருடகால இடைவெளியில் மஹாகவி அவர்களது நூல்கள் எதுவும் வெளிவராதிருந்தது, தமிழிலக்கிய உலகம் செய்த துரதிர்ஷ்டமே. தமிழுக்கே முற்றும் புதுமையான மஹாகவியின் நூறு குறும்பாக் களை அரசு நிறுவனத்தார் 66-ம் வருடம் வெளியிட் டுத் தமிழிலும் இத்தகைய கவிதைகளை எழுதமுடியு மென்ற பெருமையினைப் பறைசாற்றினர். இரண்டாண் டுகள் கழித்து மஹாகவியின் கண்மணியாள் காதை என்ற வில்லுப்பாட்டுக் காவியத்தை வெளியிட்டு வாச கப் பெருமக்களுக்கு அளிக்கும் வாய்ப்பைப் பெற்ற மைக்காக அன்னை வெளியீட்டகம் பெருமை கொள் கின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் விவேகி" மாத சஞ்சிகையில் கலட்டி"யாக வெளியான காவியமே சில மாற்றங்களுடன் கண்மணியாள் காதை" ஆயிற்று. இலங்கை வானெலியிலும் இது அரங்கேற்றப்பட்டது. h 57

Page 34
ஈழத்திலே வில்லுப்பாட்டுக் கச்சேரி செய்வதில் சிறந்து விளங்குபவரான திரு. லடிஸ் வீரமணி அவர்கள் இக் காவியத்தை மேடைகள் தோறும் கச்சேரி செய்து வருகின் முர். யாழ்ப்பாணத்திலே முதன் முதலில் தெல் லிப்பழை மகாஜனக்கல்லூரி மண்டபத் சில் லடிஸ் அவர்கள் கண்மணியாள் காகை' யைக் கச்சேரி செய்த போது, மஹாகவியின் அழைப்பை ஏற்று நண்பர் பூரீ ரங்கனுடன் சென்று பார்த்தேன். அந்த வாரமே நண்பர், தேனீ என்ற பெயரில் அந்தக் கச்சேரியை விமர்சித்து காவியத்துக்கு ஒரு மஹாகவி; வில்லுப் பாட்டுக்கு ஒரு வீரமணி’ என்ற தலைப்புடன் ஈழநாடு’ வாரமலரில் கட்டுரை வெளியிட்டிருந்தார். அவர் குறிப் பிட்டிருந்ததாவது :-
மஹாகவியின் கண்மணியாள்காதை"யைக்கொழும்பு லடிஸ்வீரமணி குழுவினர் வில்லுப்பாட்டாயப் பாடிய தைப் பார்க்கவும் கேட்கவும் ஒரு வாய்ப்பு சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. வாய்ப்புக் கிடைத்தது என்ற சொல்வதைவிட, பெரும் பேறுபெற்றேன் என்றே
சொல்லவேண்டும். '
நண்பர் எழுதியது முற்றும் உண்மை. மஹாகவி யின் கவி நயத்திலும் லடிஸ் அவர்கள் கச்சேரி செய்கின்ற முறையிலும் அன்று என்னை முழுதாக இழந்திருந் தேன். கச்சேரி முடிவடைந்ததும், இத்தகைய காவியங் கள் நிச்சயம் நூலாக்கம் பெற வேண்டுமென மஹாகவி யிடம் நான் அபிப்பிராயம் தெரிவித்தபோது, கவிதை பாடுவது தான் கவிஞன் பணி. புத்தகம் போடுவது வெளியீட்டாளர்கள் பொறுப்பல்லவா? என மிக அலட் சியமாகச் சொன்னர். அவர் அப்போது கூறிய வார்த்தை களே அன்னை வெளியீட்டகத்தின் தோற்றத்திற்கு அத்திபாரமாக அமைந்தன.
58

மஹாகவியின் கண்மணியாள் காதையைப் புத்தக மாக்க வேண்டுமென்ற ஆசை வலுவுற்று விரிவடைந் தது. அவரது கவி ஆற்றலுக்கும் நுண்ணறிவுக்கும் அளவு கோலாகத் திகழும் அவரது பிற படைப்புக் களான ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்','சடங்கு”, கல்லழகி", "கந்தப்ப சபதம் முதலிய காவியங்களையும், 'திருவிழா', கோலம்', 'பொய்ம்மை", "கோடை", "முற் றிற்று முதலிய நாடகங்களையும், சிறு கவிதைகளையும், மற்றும் ஈழத்து எழுத்தாளர்களின் சிறந்த படைப்பு களையும் நூலாக்கி வெளியிட வேண்டுமென்று தீர்மான மெடுத்துக்கொண்டேன். അ
இத்தகையதொரு பாரிய பணி ஆற்றுவதற்கு நிறையப் பொருளாதாரபலம் தேவையென்பதால் வர்த் தக ஸ்தாபனங்களின் விளம்பர உதவியுடன் நூல்களை வெளியிடுவதென முடிவு செய்தேன். இந்த யோசனையை எனது நண்பர்களில் பலரும் ஒப்பவில்லையாயினும், தீர் மானத்தைச் சிறிதேனும் நான் மாற்றிக்கொள்ளவில்லை. எழுத்தாளன் வீட்டு மூலையிலே உற்ங்கும் அவனது படைப்புக்கள் விளம்பரங்களுடனுவது புத்தகமாகி மக்கள் மத்தியில் பரவுதல் சமுதாயத்திற்கும் எழுத் தாளனுக்கும் நன்மையே யாகும் என்பது என்கருத்து. இவ்வித முயற்சியால் வாசகர்கள் குறைந்த விலையில் நமது நாட்டு எழுத்தாளர்களின் நூல்களைப் பெற்றுக் கொள்ள முடியுமல்லவா?
எனது முதலாவது வெளியீடான “மஹாகவியின் கண்மணியாள் காதை"க்கு விளம்பரம் கொடுத்து உதவ வேண்டுமெனத் தொழிலதிபர்களையும் வர்த்தகர்களையும் கான் சக்தித்துக் கேட்டபோது, அவர்களெல்லாம் இல்லையென்னது கொடுத்து ஆசீர்வதித்தார்கள். அன்னை வெளியீட்டகத்தின் உரிமையாளன் என்ற முறையில் 59

Page 35
அவர்களுக்கெல்லாம் நான் மிக்க கடப்பாடுடையவ் என்றென்றும் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகு என் தொண்டுக்கு அவர்கள் இன்னுமின்னும் து நின்று உதவுவார்கள் என்பதில் எனக்கு அசைய நம்பிக்கையுண்டு.
எனது இலட்சியத்தின் வெற்றியெல்லாம் 6 அன்பான வாசகரிலேயே தங்கியுள்ளதென்பை சொல்லவும் வேண்டுமா?
62J Tóré写 அன்பர்கள் ஒவ்வொருவரும் எனது பணி
ஆதரவளித்து ஊக்கம் தருவார்களெனப் பரிபூரண பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன்.
சசிபாரதி
அன்னை வெளியீட்டகம், யாழ்ப்பாணம்.
24一11-1968
60

5ம்.
ாத
τοστ தச்
க்கு
நல்லிலக்கியங்கள் வளர்
бтupg|
தல்லாசிகள்!
யாழ். மெற்றல் இன்டஸ்ட்றீஸ் 250-252 காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி இல.7049. தந்தி-யாழ்மெற்றல்.

Page 36
மஹாகவியின் ベr கண்மணியாள் காதை என்ற வில்லுப்பாட்டு நூலை முதலாவதாக வெளியிடும் அன்னே வெளியீட்டகத்திற்கு
бтш05 வாழ்த்துக்கள்.
வி. வி. இராமசாமிப்பிள்ளை அன் சன்ஸ், ஆர். வி. ஜி.பீடி தயாரிப்பாளர்கள், 47, பீச் ருேட், யாழ்ப்பாணம்.
தொலைபேசி இல. 230,231, ...

எதிர்காலப் பிரஜைகளான எமது சிருர், உத்தியோக மோகத்தைத் துறந்து உணவுற்பத்தித் துறையில் நாட்டின் சுயதேவையை நிறைவாக்க வேண்டுமென்ற காரணத்தால் எல்லாப் பாடசாலைகளிலும் விவசாயம் போதிக்கப்பட வேண்டுமென்று கல்வித் திணைக்களம் பணித்துள்ளது. இதற்கு அமைவாக எமது சிறர் தமது சிறு வயதிலிருந்தே விவசாய அறிவை மிக இலகுவாகவும் ஆர்வத்துடனும் பெற்றுக் கொள்ளும் வகையில் நவீன விவசாயம் என்ற நூல் வரிசையை வெளியிட்டுள்ளோம், III, í IV, V, VI, VII gið வகுப்புகளுக்கான நூல்கள் வெளிவந்து விட்டன.
கலைவுாணி அச்சகம்-புத்தகசாலை, இல, 10, மெயின் வீதி,
யாழ்ப்பாணம்.

Page 37
நவீன முறையில் உடைகள் வெட்டுதல், தையல் யந்திரத்தில் சித்திர வேலைகள் செய்தல், பழைய றெக்கோட், கண்ணுடி ஆகியவற்றில் சித்திரம் வரைதல், நூலிற் பலவித பின்னல் வேலைகள், சேலையிற் சித்திரங்கள் வரைதல் முதலிய துறைகளில் பயிற்சியளிக்கும்
ஸ்தாபனம்
கணேஸ் தையற் கலைப் பயிற்சி நிலையம், காங்கேசன்துறை வீதி, ر
சுனனுகம. (பயிற்சி நேரம்: காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை)
மோட்டார் . வாகனச் சொந்தக்காரர்களே, தேய்ந்துபோன டயர்களை எம்மிடம் அனுப்பிவையுங்கள்! கவர்ச்சியான இழை.
நீடிய பாவிப்பு-சொகுசான ஒட்டம்வேலைகள் உத்தரவாதம்.
நோர்தேண் இன்டஸ்ட்றீஸ், டயர் நிரப்புபவர்கள், 8/1, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.

அகத்தூய்மையும்
புறத்தூய்மையும் மனிதனுக்கு இன்றியமையாதவை. உள்ளத்தைத் தூய்மையாக்குவது நல்ல இலக்கியம்.
மில்க் வைற் சோப் தொழிற்சாலை உற்பத்திசெய்யும் சவர்க்காரவதை
சரீரத்தையும் உடைகளையும் தூய்மையாக்குகின்றது. உடைகளின் அழுக்கை அகற்றவும் துாய வெண்மைக்கும் மில்க் வைற் நீல சவர்க்காரமும் மில்க் வைற் நீல “Ouropi பவுடரும்? நிகரற்றவை. 'չ சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்ட மில்க்வைற் வாசனையூட்டப்பெற்ற சவர்க்காரம் ஸ்நானத்திற்கு
LAasë சிறந்ததொன்ருகும். எங்கும் பெற்றுக்கொள்ளலாம்.
மில்க் வைற் சோப் தொழிற்சாஜல, உரிமையாளர் : க. கனகராசா, இல. 527, கே.கே எஸ். வீதி, யாழ்ப்பாணம்.

Page 38
டெக்கா சேலை பிளெயின் சேலை றேயோன் சேலை செக் சேலை பரமாஸ் வேட்டி குறி வேட்டி சரிகை வேட்டி சரிகைச் சால்வை பரமாஸ் சால்வை துவாய்
பெட்சிற் இத்தனையும் தயாரிக்கின்ருேம்.
கணேஸ் லூம்ஸ், காங்கேசன்துறை வீதி,
Y.
முரசு கரைதல், முரசு வீக்கம், பல்வலி, பற்பேத்தை, பற்கட்டு, பற்சொத்தை, பற்கறை, சீழ் கசிதல், வாய்நாற்றம், பயறியா ப்ோன்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும். பல் கட்டுதல், மிதந்த-அமர்ந்த பற்களை நேரர்க் குதல், தங்கப் பற்கள் பதித்தல் முதலியன நவீன முறையில் செய்யப்படும்.
சென். அன்ரனீஸ் மருத்துவ நிலையமும் , பல் கட்டுமிடமும், w டாக்டர் எஸ். சந்தியாப்பிள்ளை, 94, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.

gt 4mm (7de p: Guurt. இலங்கை எங்கும் பிரசித்தமானது. இலங்கை மோட்டார் சொந்தக்காரர் அனைவருக்கும் தெரிந்த பெயர்
60ft. யூ ஆஸா பாட்ட ரி நீடித்த பாவனையும் துரித சேவையும் அளிக்க வல்லது. இலங்கையில் தயாரிக்கப்படும்
Ա} ஆஸா பாட்டரிக்கும்
மற்றும்
ஜெர்மன் தயாரிப்பான சொனென்ஷின் பாட்டரிக்கும்
வடமாகாண ஏக விநியோகஸ்தர்கள் :
துரை அன் கோ, 23/3, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம். எல்லாவித மின்சார உபகரணங்களும் நிதான விலையில் விற்பவர்கள்.

Page 39
கவர்ச்சி மிக்க குழந்தை அன்பளிப்புக்கள் திருமணவைப்வத்திற்குத் தேவையான கூறைச் சேலைகள் பட்டுவேட்டி சால்வைகள் ஷேட்டுகள் பெனியன்கள் உள்ளூர்க் கைத்தறிச் ச்ேலைகள் வேட்டிகள் யாவும் நிதான விலையில் கிடைக்கும் இடம் :
எஸ். ரி. நாகலிங்கம் அன் கோ. எஸ். ரி. என். நாகரத்தினமும் சகோதரர்களும், . 101-102, டாக்டர் சுப்பிரமணியம் வீதி,
சுன்னுகம்.

sins an uyavtapath - ba jau aranau நோக்கமாய்க் Gawn adwG) ஆரம்பிக்கப்பட்ட Jeyarwr வெளியீட்டகத்திற்கும் எமது ஆசிகள்,
சி. சின்னத்துரை அன் பிறதர், கல்கி பீடி தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும்
பி. ஸி. ஸி. ஸ்தாபனத்தின் யாழ்ப்பாண விநியோகஸ்தர்களும். 39, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,

Page 40
கலப்பில்லாத-கல்லில்லாத சிறந்த அரிசிக்கு "யாழ். அரிசி" என்று கேளுங்கள். உங்கள் எல்லாவித அரிசித் தேவைகளுக்கும் யாழ் அரிசி ஆலையுடன்
தொடர்பு கொள்ளுங்கள். நம்பிக்கை, நேர்மை, நாணயம் இவைகளே "யாழ் அரிசி ஆலை"யின் மூலதனம்.
யாழ் அரிசி ஆலே இணுவில் வீதி, மானிப்பாய். தொலைபேசி : 553
X
நாகரிக அமைப்புக்கும் நீடிய பாவனைக்கும் "லைடன்' தயாரிப்புகள் ! பெனியன்-ஸ்போட் ஷேட்-ரெறிஷ்ேட் ரெறி பிளவுஸ்-பேபி வெஸ்ட்er mr GvGuo6äv (Nylon & Cotton)
ஜலடன் இன்டஸ்றிஸ், பெனியன்களும் கால்மேஸ்களும் தயாரிப்பவர்கள் 7, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். எல்லாவித நவநாகரிக உடைகளுக்கும் : அலடன் காமென்ஸ்,
74A, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி: 330.

AsL69yA9mva Ru aerdvortuhr பல்கிப் பெருகட்டும்
தனலக்குமி புத்தகசாலை,
சுன்னுகம்.
x+
அன்னை வெளியீட்டகத்தின்
இலக்கிய சேவை வளர்வதாக !
சண்முகநாத அச்சகம், சண்முகநாதன் புத்தகசாலை, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.

Page 41
நங்கையர் விரும்பும் நவநாகரிக நகைகளுக்கும் வைரங்களுக்கும் புகழ்பெற்று விளங்கும் ஸ்தாபனம் :
கே. என். எம். மீருன் சாஹிப், ‘தங்கப்பவுண் நகைமாளிகை’, கன்னுதிட்டி, யாழ்ப்பாணம்.
நோவுக்கும் வாதத்திற்கும் சிறந்த நிவாரணி "கபிரியேல் பெயின் ஒயில்'. சகல வேதனையையும் தணிக்கும் அற்புத தைலம் " கபிரியேல் ஸ்பெஷல் பாம்". சகல விரணங்களையும் ஆற்றவல்ல உன்னத தைலம் * கபிரியேல் ஒயின்மென்ற்’.
எங்கும் கிடைக்கும்.
தயாரிப்பாளர்கள்:
கபிரியேல்ஸ், சுன்னுகம். மருந்துவகைகளும் வாசனைப் பொருள்களும் தயாரிப்பவர்கள். w சிறந்த வைத்தியத்திற்கு: சுதேச வைத்தியசாலையும் கட்டு வைத்திய நிலையமும், 134, பாங்ஷால் வீதி, யாழ்ப்பாணம்.
கபிரியேல் டிஸ்பென்சறி, சுன்னகம்.

G)9vdAu (AubMaegde * & Rimbabydawały 1
என். வைத்திலிங்கம் அன் கம்பெனி Gólfu'. 138, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
y
இலக்கிய சேவை ஒரு பெருந் தர்மம். இவ்வித சேவையை மேற்கொண்டுள்ள
அன்னை வெளியீட்டகத்திற்கு எமது வாழ்த்துக்கள் !
எஸ். ரி. ஆர். பிலிம்ஸ், யாழ்ப்பாணம்.

Page 42
நல்ல முயற்சிகளுக்கு எமது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
க.கயிலைநாதன், சிருப்பர்,
யாழ்ப்பாண ஐக்கிய லாபநிதி கம்பெனி லிமிட், வண்ணுர்பண்ணை, யாழ்ப்பாணம்.
அரஸ்கோ அடையாளமுள்ள பொருட்களையே கேட்டு வாங்குங்கள். அவை சிறந்தவை. 'அரஸ்கோ ரொவ்வி, புறூட் ருெப்ஸ், கிளியர்மின்ற்ஸ்,கொவ்வி கிறஞ்ச், சொக்கலட் கிறஞ்ச், ‘ஓம்முருகா" கற்பூரம்-4, 4 இருத்தல் பெட்டிகளிலும் 960 வில்லைகள் கொண்ட 4 இரு. த கரப்பெட்டியிலும் உண்டு.
"மயில்'மார்க் மெழுகுவர்த்திகள்
அரஸ்கோ'மார்க் கற்கண்டு
தயாரிப்பாளர் :
அரஸ்கோ இன்டஸ்றிஸ்,
பருத்தித்துறை வீதி, நல்லூர்,
யாழபபாணம.
தொஜலபேசி: 7051 தந்தி: கந்தனருள்.

Our Best Wuhay for A Worthy Cause,
DEVIKA ART ENTERPRISE (D. A. E.) Manufacturers of silk screens & textile printing. Factory & Office:
6, Kailasa Pillayar Kovil Road, Nallur, Jaffna.
Branch :
24, Flower Road, Colombo-7.

Page 43
கண்மணியாள் காதையை
எழுதும்படி என்னைத் தூண்டி,
அதனை நான் படிக்கக் கேட்டு
மகிழ்ந்தாலும்,
வில்லோ டிசைக்கக் கேளாது
மறைந்த
அன்பனும் அறிஞனும் கவிஞனுமான
அ. ந. கந்தசாமிக்கு
இந்நூல் அஞ்சலி.
“Loganprrazaâ”


Page 44