கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  தமிழில் இலக்கிய வரலாறு  
 

கார்த்திகேசு சிவத்தம்பி

 

தமிழில் இலக்கிய வரலாறு

கார்த்திகேசு சிவத்தம்பி

நூற்பகுதி 1

++++++++++++++++++++++++++

தமிழில் இலக்கிய வரலாறு



கார்த்திகேசு சிவத்தம்பி
M. A. (இலங்கை), Ph.D (பமிங்காம்)
தமிழ்ப் பேராசிரியர்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை.



நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை-600 098.

++++++++++++++++++++++++++

THAMILIL ILAKKIYA VARALAARU
by
Karthikesu Sivathamby

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு

முதல் பதிப்பு : மார்ச், 1988
இரண்டாம் அச்சு : மார்ச் 1988
மூன்றாம் அச்சு : ஜூன், 2000

(c) நூலாசிரியருக்கு

Code No : A371
ISBN : 81-234-0522-7

விலை : ரூ.73.00

ஒளி அச்சு: NCBH Computers

அச்சிட்டோர் :Aiyanar Offset
10, Subbarao Nagar,
Choolaimedu, Chennai-94
4757931, 3790743

++++++++++++++++++++++++++


பதிப்புரை

தமிழ் பற்றிய ஆய்வுகள் தமிழில் வெளிவரும் பொழுது பல்வேறு கருத்துநிலை நிர்ப்பந்தங்கள் காரணமாக போதிய அளவு விஞ்ஞான பூர்வமாக அமையாது போய்விடுவது தமிழ்ப் புலமை மரபின் ஓரமிசமோ என்று ஐயுறத் தக்க அளவுக்கு அதிகமாகவே வளர்ந்து விட்டது.

விஞ்ஞான பூர்வமான நோக்கு இல்லாதவிடத்து அந்த ஆய்வின் வழியாக வரும் முடிபுகள் எமக்கு உண்மை நிலையைச் சுட்டிக்காட்டமாட்டா. உண்மையை வெளிக் கொணராத ஆய்வுகளாற் பயனேற்படுவதில்லை.

'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசும்' இந்நிலையை தமிழ் ஆய்வுத் துறையில் வலுவிழக்கச் செய்யும் புதிய ஆய்வுச் சக்திகள் வரலாற்றுப் பொருள் முதல்வாத வழியாக வந்தன.

அத்தகைய ஆய்வாளர்களுள் ஒருவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி. அவருடைய இந்த ஆய்வு, தமிழாராய்ச்சி வளர்ச்சியின் சில முக்கிய பண்புகளை வெளிக் கொணருகின்றது.

தமிழில் இலக்கிய வரலாறு எழுதப்பட்ட முறைமைகள் பற்றி ஆய்வதன் மூலம், எத்தகைய வரலாறு வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது.

தமிழாராய்ச்சியின் வரலாறே பல்கலைக் கழகத் தமிழ்த்துறைகளின் நெறிகளுள் ஒன்றாக அமைந்துள்ள இந் நாட்களில், இந்நூல் தமிழாராய்ச்சியை மேலும் விஞ்ஞான பூர்வமானதாக்க நிச்சயம் பயன்படும் என்று கருதுகிறோம்.

அந்தத் துணிவு காரணமாகவே இது என்.சி.பி.எச். இலச்சினையுடன் வெளிவருகிறது.

பதிப்பகத்தார்.

++++++++++++++++++++++++++

இலங்கையின் இனக் கலவரம் சோகம் பீறிடும் மனித அழிப்புக்களின் வரலாறாகிற்று....

இந்த மனித அழிப்புக்களையும் இயன்ற அளவுக்குக் குறைப்போம் என்று, மனித நேசத்தையே தனது ஆயுதமாகவும் கேடயமாகவும் கொண்டு போராடினான் ஒருவன்....

ஐந்து பெண் குழந்தைகளைக் கொண்ட தனது குடும்பத்துக்கான வருவாயுழைப்பையே மறந்து, கைதிகளுக்காகவும், அகதிகளுக்காகவும், பாடுபட்டான் அவன். இந்த இன்னல்களை அறிந்தவர்கள், காண வந்தவர்கள், தீர்க்க முனைந்ததவர்கள் எல்லோருமே அவனையும் அறிந்திருந்தனர்.

1984 முதல் நான் இப்பணி காரணமாக ஏற்றுக் கொண்ட சகல பதவிப் பொறுப்புக்களிலும் என்னுடன் என் மனச்சாட்சி போல நின்றவன். என் வெற்றி தோல்விகளைத் தன் வெற்றி தோல்வியாகக் கொண்டவன். 'அண்ணா, உங்கள் செக்கிறற்றறி நான்' என்று வாய் நிறைய சொல்லி, நான் சொல்லும் இடங்களுக்குகெல்லாம் வந்தவன். நான் செல்ல முடியாத வேளைகளில்ல தான் சென்றவன்.

அவன்....

இறுதியில் ஒரு நாள், ஒப்பந்த நிறைவேற்றத்துக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, பாதையோரத்திற் கிடந்த சடலமொன்றை எடுக்கச் சென்று, தனது சடலத்தின் அடையாளமே இல்லாத வகையில் மறைந்து போனான்.

அவன் பெயர்
வருணகுலசிங்கம் அரசரத்தினம்
(1942-1987)

அந்த
மகாமனிதனின் நினைவுக்கு

++++++++++++++++++++++++++


பொருளடக்கம்
பக்கம்

முன்னுரை 5

I. 'இலக்கிய வரலாறு' எனும் பயில்துறை,
அதன் புலமைப்பரப்பமைவு பற்றிய சுருக்க
அறிமுகம் 18

II. தமிழில் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சி 55

III. தமிழிலக்கிய வரலாற்றில் பிரச்சினை
மையங்கள் 159

IV. தமிழிலக்கிய வளர்ச்சியைப் பார்க்கும்
முறை: கால வகுப்புப் பிரச்சினைகள் 188


பின் இணைப்புகள் I- VIII 229

நூல்கள் சஞ்சிகைகள் கட்டுரைகள்
ஆசிரியர், விடய அகர நிரல் 256

++++++++++++++++++++++++++

இரண்டாம் பதிப்புக்கான முன்னுரை


ஒன்பது வருடங்கனின் பின்னர் இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவருகின்றது.

இதற்கான மாணவ நிலைக்கேள்வி (demand) கடந்த சில வருடங்களாகவே இருந்து வந்துள்ளது.

இந்நூல் முதலில் ஆங்கிலத்தில் 1982இல் எழுதப்பட்டு 1986இல் வெளிவந்தது. தமிழ்ப்பதிப்பு (மொழிப்பெயர்ப்பு அன்று) 1988இல் வெளிவந்தது. தமிழ் வடிவத்திலேயே இதன் புலமைத்தாக்கம் முக்கியமாக இருந்தது. 1988இன் பின், குறிப்பாக 1990இன் பின்னர், தமிழகத்தில் இலக்கிய விமர்சனச் சித்திப்பிற் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களைச் சுட்டும் எழுத்துக்களில் இந்நூல் பற்றிப் பேசப்பட்டது.

சர்வதேசிய மட்டத்தில், இந்தக் காலகட்டம் மிகப்பயனுள்ள புலமை விவாதங்களைக் கண்டுள்ளது. அறுபதுகளிலே தொடக்கி, எழுபது எண்பதுகளில் விரிந்து, பரந்து, தொண்ணூறுகளில் ஒட்டத் தெளிவையுணர்த்தும் போக்கினைப் புலப்படுத்தி நிற்கும் இச்சிந்தனைப் போராட்டங்கள், ஒரு நிலை நின்று பார்க்கும் பொழுது தவிர்க்க முடியாதவை என்பது புலனாகும்.

இந்தக் காலகட்டத்திலே (எண்பதுகள் தொண்ணூறுகளில்) உலக வரலாற்றில் மிக முக்கியமான இரு விடயங்கள் நடந்தேறியுள்ளன.

1. உலக முதலாளித்துவத்தின் போக்கு, பரிணாமத்தில் மாற்றம் தேசிய ஏகாதிபத்திய முறைமையிலிருந்து தேசங்கடந்துறை முறைமைக்கு (transnational) அது வருகின்றது.

2. சோவியத் ஒன்றியத்தினதும் கிழக்கு ஐரோப்பிய பொதுவுடைமை கட்சிகளினதும் வீழ்ச்சி (1989)

உலக வரலாற்றின் ஒரு முக்கிய காலக்கோடாக இலங்கும் இவ்விரண்டும் ஒரு நாணயத்தின் இரு புறங்களே. உலகப் பெரு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சிகளுக்கும் முன்னும் பின்னும் ஒரு சித்தனைப் புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருப்பதும் இயல்பே. உண்மையில் சிந்தனைப் புரட்சி இல்லாது இந்த மாற்றங்கள் சாத்தியமாகி இராது. மார்க்ஸீயத்தைப் பொறுத்தவரை இந்த மாற்றங்களின் வருகையை அல்தூஸர் முன் மொழிந்துள்ளார் என்று கூறலாம். அல்தூஸரின் சமூக உருவாக்கம் (Social formation) (இது உண்மையில் socio economic formation சமூக பொருளாதாரக் கூட்டமைவே 'Social` (சமூக) என்பது அல்தூஸருக்கு முழுச் சமூகக் கூட்டமைப்பையும் குறித்தது எனலாம். தமிழில் நாம் இப்பொழுது ஒரு சமூக உருவாக்கம் என்னும் பொழுது ஒரு கட்டமைப்பின் தோற்றம் வளர்ச்சியைக் குறிக்கின்றோம்) பற்றிய கோட்பாடு இலக்கிய வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கும், இலக்கிய வரலாற்றை மீட்டெழுதுவதற்குமான ஒரு தளமாகக் கொள்ளப்பட்டுள்ளது.

அறுபதுகள் முதல் நடத்து வரும் சிந்தனை விவாதங்களினூடாக இப்பொழுது பிரதான கருதுகோள்களாக மூன்று மேற்கிளம்புகின்றன.

பண்பாடு (Culture)

அதிகாரம் (Power)

வரலாறு (History)

இக்காலகட்டத்தின் பிரதான விவாதவிடயங்களுள் இரண்டாக விளக்கிய பின் காலனித்துவம் (Post colonialism) பால்நிலை (gender) (இதனைப் பால்மை என மையீற்றுப் பண்புப் பெயராகக் குறிப்பிடுவதே பொருத்தம் போலத் தோன்றுகின்றது) இந்த மூன்றுள்ளும் செறிந்து நிற்கின்றது. ஃபூக்கா முதல் லக்கான் வரை, றேமன்ட் வில்லியம்ஸ் முதல் ஸருவாற் ஹோல் வரை, சகலரையும், அர்த்தம் (meaning) பற்றிய பிரச்சினையைத் தமது கட்டவிழப்பு வாதம் மூலமாகக் கிளப்பியுள்ள டெறிடாவையும் இந்தமூன்று பெருந்துறைகளுக்குள் வைத்து நோக்கிவிடலாம்.

இந்த நூலைப் பொறுத்தவரையில் இதனை ஒரு வினா மூலம் தெளிவுபடுத்தலாம். தமிழில் இது வந்த (இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும்) காலம் முதல் எழுதப்பட்ட இலக்கிய வரலாறுகளின் ஆக்கத்திலும் எடுத்துரைப்பிலும் 'பண்பாடு', 'அதிகாரம்', 'வரலாறு' எனும் கருதுகோள்கள் எத்தகைய இடத்தைப் பெற்றுள்ளன? இந்த வினாவினை மனதிற்கொண்டு இரண்டாவது அத்தியாயத்தினை நாம் மீள நோக்கலாம். பண்பாடு பற்றிய உணர்வும் அதிகாரம் பற்றிய துலச்சல்களும் (response) வரலாறு பற்றிய பிரக்ஞையும் புலமையோட்டத்தைத் தீர்மானிக்கின்றன. அந்த அளவில் தமிழில் வரும் இலக்கிய வரலாற்று எழுத்துக்களும் இந்தப் பொது உண்மையை நிரூபிப்பவையே.

இவ்வாறு நோக்கும் பொழுது காலனித்துவம், பின் காலனித்துவம் ஆகியவை எமது சிந்தனை மரபில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப் பெரியதாகும்.

எமது வரலாறுகள் எல்லாமே ஒவ்வொரு கருத்து நிலைப்பட்ட கட்டமைப்பு ஆக்கங்களே (Constructs) இவற்றினூடே தொழிற்படும் கருத்து நிலைகளையும் (ideologies) இந்தக்கருத்து நிலைகளின் பின்புலத்தில் உள்ள சமூக- பொருளாதார உந்துதல்களையும் புரிந்து கொள்ளல் வேண்டும்.

இலக்கியமும், இலக்கிய வரலாறும் இவற்றுக்கான முக்கிய தளங்களாகும்.

நமது மாணவர்களிடத்தே, இந்தப் பிரக்ஞை ஏற்படுத்தப்படுவது அவசியம். எனவே தான் பகுப்பாய்வு ஆக்கங்கள் (Analytical works) அவசியமாகின்றன.

எமது அடுத்த தேவை இந்த நோக்குக்களை வெளிக் கொணரக்கூடிய இலக்கிய வரலாற்று எழுத்துக்களே.

தமிழிலக்கியத்தைக் குறியீட்டியலின் அடிப்படையிலோ, பால்நிலை அடிப்படையிலோ, கட்டவிழ்ப்புவாத அடிப்படையிலோ பார்க்கும் கண்ணோட்டங்களை உற்சாகப்படுத்துவது அவசியமாகின்றது.

அடுத்த நூற்றாண்டுக்கு நாமும் தமிழும் செல்வதற்கு இத்தகைய சிந்தனைகள் தேவை.

வரலாறு பற்றிய பிரஞ்ஞையே இன்று தம்மிடையே அடுத்த நூற்றாண்டு பற்றிய (மிதமிஞ்சிய) உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்நூற்பொருள் பற்றி ஆர்வங்காட்டிவந்துள்ள புலமையாளர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப்பதிப்பின் அவசியத்தை உணர்த்திய நண்பர்களுக்கும், இப்பதிப்பினை வெளியிடும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்திற்கும் எனது நன்றியுரித்து.

கார்த்திகேசு சிவத்தம்பி

7.11.1997

2/7, றாம்ஸ்கேற்
58, 37வது ஒழுங்கை
வெள்ளவத்தை
கொழும்பு-06
இலங்கை.

++++++++++++++++++++++++++

முன்னுரை

I

1983 நடுக் கூற்றில் வருவதற்கெனச் செய்து முடிக்கப்பெற்ற இந்நூல், 1988இலேதான் வெளி வருகின்றது.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தினால் இதன் ஆங்கிலப் படிவம் 1986இலேயே வெளியிடப் பெற்றது. தமிழ் நூல் வெளிவருவது மேலும் தாமதப்படுத்தப்படக் கூடாது என்பதனை வற்புறுத்திய நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினருக்கு என் மனங் கனிந்தத நன்றிகள். அவர்களின் வற்புறுத்தல் காரணமாகவே இப்பொழுது இந்நூல் வெளிவருகின்றது.

இது, ஆங்கிலத்தில் வெளிவந்த, எனது "Literary History in Tamil-A Historiographical Analysis" என்பதன் தமிழ் வடிவமாகும். இத்தமிழ்ப் படிவத்திற் பலவிடயங்கள் விரித்து எழுதப் பட்டுள்ளன. ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகவல்லாது, ஆங்கிலநூலின் தமிழ் நிலைப்பட்ட ஒரு தனி 'ஆக்கமா'கவே இது எழுதப்பட்டுள்ளது.

இன்று தமிழ் நாட்டிற், குறிப்பாக மேற்பட்ட நிலையில் வற்புறுத்தப்படும் இரு முக்கிய ஆய்வு ஈடுபாடுகளோடு இந்நூல் தொடர்பு படுகின்றது. முதலாவது இலக்கிய வரலாறும் இலக்கிய ஆராய்ச்சி வரலாறும் இணைந்த துறையாகும். இரண்டாவது சமூகவியல் நோக்கில் தமிழிலக்கிய வளர்ச்சிகளை மதிப்பீடு செய்தல் ஆகும். 'இலக்கிய வரலாற்றினை'த் தனியே 'இலக்கியத்தின் வரலாறு' ஆகக் கொள்ளாது, 'இலக்கிய வழி வரலாறு' ஆகக் கொள்ள வேண்டும் என வற்புறுத்துவதன், மூலம், இந்நூல் இலக்கியமும் வரலாறும் இணையும் முறைமை பற்றிய சில முக்கிய பிரச்சினைகளைத் தமிழில் முதன் முறையாக ஆராய முற்படுகின்றது.

II

இம்முன்னுரையில், இவ்விடயம் பற்றிய ஆய்வுக்கான தேவையையும் அவசியத்தையும் குறித்துக் கொள்ளல் நன்று.

பல்கலைக் கழக ஆசிரியன் எனும் வகையில், பட்ட வகுப்பு மாணவர்க்குக் கற்பிக்கும் பொழுதும், உயர் பட்ட வேட்பாளர்க்கு அவர்தம் ஆய்வினை மேற்பார்வை செய்யும் பொழுதும், தமிழிலக்கிய வரலாற்று நூல்களின் ஆதார சுருதியாகவமைந்துள்ள வரலாறெழுது முறையியலின் அடிப்படைகளைத் தெளிவுபடுத்த வேண்டுவதன் அவசியத்தை வன்மையாக உணர்ந்துள்ளேன்.

'வரலாறு' என்னும் ஆய்வுத் துறையில், அவ்வரலாற்றினை எழுதுவதற்கு அடித்தளமாக அமையும் நோக்குகள், மனப்பாங்குகள், ஆய்வுமுறைகள் அணுகு முறைகள் என்பனவற்றை, அதாவது வரலாறு எழுதப்படும் முறையை, ஆராய்வதே தனியொரு பயில்துறையாக வளர்ந்துள்ளது. ஆங்கிலத்தில் அதனை 'ஹிஸ்ற்றோறியோகிறஃபி' (Historiography) என்பர். தமிழ்மொழி மூலம் உயர்கல்வி பெற்ற கலைத்துறை மாணவர்க்கு இத்துறை இன்னும் சரிவர அறிமுகப் படுத்தப்படவேயில்லை. இந்திய வரலாற்றின் வரலாறெழுது நெறியை ஆராய்ந்து மிகச் சிறப்பான கட்டுரையொன்றினை றொமிலா தாப்பர் எழுதியுள்ளார். வரலாற்றுப் பாடநூல்கள் எழுதப்படும் முறைமை பற்றிய விவாதமொன்று காரணமாக, இந்திய மத்திய அரசு மட்டத்தில் தோன்றிய ஒரு சர்ச்சை காரணமாக, இந்திய வரலாற்றின் வரலாறெழுது நெறி பற்றிய விவாதம் ஒன்று நடைபெற்றது. அக்கால கட்டத்தில், றொமிலா தாப்பரினால் எழுதப்பட்ட ஒரு நீண்ட கட்டுரை (Past and Prejudice) தமிழில், காலஞ் சென்ற நா. வானமாமலையால் 'வரலாற்றும் வக்கிரங்களும்' என்ற தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. நா.வானமாமலைக்கும் திராவிட இயக்கத்தினைச் சார்ந்த பத்திரிகையாளர், அறிஞர் சிலருக்கும், தமிழ் வரலாறு பற்றி நடந்த விவாதம் தமிழ்நாட்டின் வரலாறெழுது நெறி பற்றிய விவாதமாகவே அமைந்ததெனினும் அந்த விவாதத்தில் வாதிடப்பட்ட பொருள் 'வரலாறெழுது நெறி' (Historiography) எனும் ஆய்வுத் துறை பற்றியது எனும் புலமைப் பிரக்ஞை முன்னிலை பெறவில்லை.

தமிழாய்வில் தமிழிலக்கிய வரலாறு எனும் துறை, மேற்கூறிய 'வரலாறெழுது முறை' எனும் ஆய்வு நெறியால் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்பதை அப்பாடத்தினைக் கற்பிக்கும் பொழுதும், ஆராய்ச்சிகளை வழி நடத்தும் பொழுதும் பெரிதும் உணாந்து வந்துள்ளேன். பண்டைய காலத்தினைப் புகழ்ந்து கூறுதல், அரசபரம்பரையின் ஆட்சிக்கும் இலக்கியத்தின் தரத்துக்கும் இயைபு காண முற்படுதல் போன்ற சில கருத்துநிலைகள் இலக்கிய வரலாற்றுப் பாடப்புத்தகங்களினால் வளர்க்கப்பட்டு விட்டமையால், தமிழின் சமூக-இலக்கிய வளர்ச்சியை முற்று முழுதாக, ஒருங்கிணைந்தத நோக்கிற் பார்க்கும் பழக்கமே மாணவர்களிடத்து இல்லாதுது போயுள்ளமையைப் பல தடவைகளில் உணர்ந்துள்ளேன். ஒரு சமுதாயத்தின் இலக்கியத்தை, அச்சமுதாயத்தினை ஆண்ட அரச பரம்பரைகளைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாமென்ற ஒரு கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இலக்கியங்களின் வரலாறுகள், இலக்கியத்தின் தோற்றம், சமூக இயைபு பற்றி ஆய்ந்தறியப்பட்ட உண்மைகளுக்கு முரணான கருத்துக்களைத் தெரிந்தும் தெரியாமலும், (பெரும்பாலும் தெரியாமலே) மாணவர்கள் மனதிலே தூவி விடுகின்றன.

தமிழ் மக்களின் இலக்கிய வளர்ச்சி பற்றிச் செய்யப்படும் கால வகுப்பு, அவர்களின் சமூக-அரசியல் வளர்ச்சி பற்றிச் செய்யப்படும் கால வகுப்பிலிருந்து வேறுபடுகின்ற நிலையை. தமிழர் சமூக வரலாற்றில் ஈடுபாடு கொண்டவன் எனும் வகையில், என்னால், ஏற்றுக் கொள்வது சிரமமாகவேயுள்ளது.

அரசியல் இயக்கங்கள் சில தமிழ் மக்களின் பெருமையை எடுத்துக் கூற முறையும் பொழுது, தமிழ் மக்களின் 'இலக்கியப் பண்பாட்டை'யே அழுத்துவதையும், அதன் தொன்மையை, வடமொழியோடு ஒப்பு நோக்கும் பொழுது தெரியப்படும் தமிழின் தனிச்சிறப்புக்களைப் பாராட்டுவதையும் காண்கின்றோம். இந்தப் பண்புகளுக்கான சமூக-பண்பாட்டுக் காரணங்களை நிச்சயம் செய்து கொள்வது மிக முக்கியமான ஓர் ஆய்வுப் பணியாகும். தனித்தமிழியக்கக் காலம் முதல் இப்பண்பை நாம் அவதானிக்கலாம். அக்காலம் முதல் தமிழராய்ச்சியாளர்களின் முக்கியமான ஆய்வுப் பொருளாக அமைந்துள்ளது இலக்கிய இலக்கணங்களிற் காணப்படும் 'தமிழின் தனிச்சிறப்பு' என்னும் விடயமேயாகும். இதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ளாது, இலக்கியத்தின் வரலாறு சமூகத்தின் தேவைகளுடன் இயைவது பற்றிய கொள்கை விளக்கங்களில் இறங்குவது பயன்தராது.

இதைவிடத் தமிழ்ச் சமூகத்தின் நடைமுறைகளுள் ஒன்று என்ற வகையில் தமிழிலக்கியத்தின் வளர்ச்சியை நோக்குவது முக்கியமான அறிவு நிலைப்பட்ட தேவையாயுள்ளது. இந்நிலைநின்று ஆராயப்படும் பொழுதுதான், இலக்கியத்திடம் வேண்டப்படும், சமூக-அழகியல் அமிசங்கள், இலக்கியப் பயில்வாளரின் சமூக நிலைமை, சமூகத்தின் பொதுவான உற்பத்தி முறைமைகளுக்கும் இந்த இலக்கிய உற்பத்தியாளருக்குமுள்ள உறவுகள், இலக்கியத்தின் கருத்து நிலைப்பங்கு ஆகியன தெளிவாகும். இவ்வாறு நோக்கத் தொடங்குவதன் மூலம் தமிழ் மக்களின், வரலாற்றை அவர் தம் இலக்கியம் மூலம், அவ்விலக்கியங்களின் நிலை நின்று விளங்கிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டேன். தமிழரின் சமூக-உளப்பாங்கினை அறிவதற்கு இது ஒரு நல்ல வழி என்பதைத் தெரிந்துது கொண்டேன். ஆய்வின் இக்கட்டத்திலேயே, இலக்கியத்தின் வரலாற்றுக்கும் (அதாவது, உள்ள இலக்கிய நூல்கள், வகைகள், மதிப்பீடுகள் ஆகியனவற்றின் கால வரன் முறையான வளர்ச்சிக்கும்) இலக்கிய வழி வரலாற்றுக்கும் (அதாவது, இலக்கியத்தை சாதனமாகக் கொண்டு வரலாற்றோட்டத்தைப் புரிந்து கொள்ளுவதற்கும்) வேறுபாடு உணர்த்தப்படல் வேண்டுமென்பதை உணர்ந்து கொண்டேன். ஆங்கிலத்தில் இவை முறையே "History of Literature", "Literary History", எனும் தொடர்களால் எடுத்துக் கூறப்படுகின்றன. இவ்வாறு நோக்கும் பொழுது 'இலக்கிய வரலாறு' எனநாம் கற்பிக்கும் பாடத்தின் போதாமைகள் படிப்படியாக மேற்கிளம்பத் தொடங்குகின்றன.

'இலக்கியத்தின் வரலாறு', 'இலக்கிய வழி வரலாறு' ஆகாது. இலக்கியத்தின் வரலாறு என்பது, சமூகத்தில் இலக்கியம், அதற்குரிய பண்புகளோடு வளர்ந்த முறையை எடுத்துக் கூறுவது, ஆனால் உண்மையான 'இலக்கிய வரலாறு' என்பது, ஒரு சமுதாயத்தின் வரலாற்றை அதன் இலக்கியங்களைக் கொண்டு, அதன் இலக்கியங்களின் அடிநாதங்கள், வெளிப்பாடுகள், தாக்கங்கள் ஆகியன கொண்டு எடுத்துக் கூறுவதாகும். 'இலக்கிய வரலாறு' என்னும் தொடரை நாம் 'இன்' எனும் நான்காம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டு விட்டோம். அதனை ஓர் உம்மைத் தொகையாகக் கொண்டு இலக்கியமும் வரலாறும் இன்றியமையா வகையிற் பின்னிப் பிணைந்து கிடப்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

'இலக்கியத்தின் வரலாறு', இலக்கிய நிலை நின்ற வரலாறு' என்ற இந்த எண்ணக்கரு, முதலாவது அத்தியாயத்தில் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளன.


III

தமிழிலக்கியத்தினை ஆதாரமாகக் கொண்டு தமிழ் மக்களின் வரலாற்றை எடுத்துக் கூற எத்தனிக்கும் முயற்சியினை ஆறு மாதங்களில் நிறைவு செய்வது முடியாத காரியமாகும். தமிழிலக்கியத்தைக் கொண்டு தமிழ் மக்களின் வரலாற்றினை எடுத்துக் கூறும் பணிக்கு அறிவியல் பூர்வமாக வழி வகுக்கும் வகையில் இதுவரை எழுதப்பட்ட இலக்கிய(த்தின்) வரலாறுகளின் 'வரலாறெழுது முறை' அமிசங்களை ஆராவும் பணியினைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருக்கும் காலத்தில் மேற்கொள்வது பொருத்தமாகவிருக்குமெனக் கருதினேன்.

இந்த ஆய்வு பற்றி, இத்துறையிலும், இத்துறை சார்ந்த துறைகளிலும் ஆராய்ச்சிப் பணி புரிந்த அறிஞர்களின் பதிற்குறிப்பினை அறிந்து கொள்வது பயனுள்ளதாகவிருக்கும் என்ற கருத்தினைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அன்றைய துணை வேந்தரிடத்துக் கூறியதும் 'கருத்தரங்கு ஒன்றினைக்கூட்டி, உங்கள் கருத்தை எடுத்துக் கூறி, அவர்கள் கருத்தை அறிந்து, அந்தக் கருத்துப் பரிமாற்றம் மூலம் இத்துறை ஆய்வினை விரிவாக்கலாம்' என அவர் உற்சாகமூட்டினார். கருத்ததரங்கின் அமைப்பாளர்களாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அன்றைய தமிழியல் விரிவாக்கத்துறை இயக்குநரையும், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரையும் ஒழுங்கமைப்பு வேலைகளைப் பொறுப்பேற்குமாற வேண்டிக் கொண்டார்.

தமிழகத்தின் வரலாறு, தமிழிலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் ஆய்வு நற்பெயருடைய அறிஞர்கள் முத்து சண்முகப்பிள்ளை, என். சுப்பிரமணியம், கே.டி.திருநாவுக்கரசு, கு.அருணாசலக் கவுண்டர், பொ.திருஞான சம்பந்தம், ப.அருணாசலம், மு.அருணாசலம், எ.சுப்பராயலு, கோ.கேசவன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். இப்பத்து அறிஞர்களுடன் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற் கடமையாற்றிய அறிஞர்கள், கு.நம்பியாரூரன், க.வெள்ளைவாரணார், சுந்தர சண்முகனார், மு.சண்முகம் பிள்ளை, தி.முருகரத்தினம், இராம.சுந்தரம் ஆகியோரும் கருத்தரங்கிற் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கு இரு அமிசங்களிற் புதுவழி வகுப்பதாக வமைந்தது. ஆய்வாளர் ஒருவர் தனது கருத்துக்களை அத்துறை போகிய அறிஞர் முன்வைத்துத் தனது கருத்துக்களைப் புடமிட்டுப் கொள்ளல் நமக்குப் புதியதொன்றாகும். இரண்டாவதாக, தமிழ்நாட்டின் பல்கலைக்கழக ஆய்வரங்கொன்றில் தமிழிலக்கிய வரலாற்று ஆய்வில், வரலாற்றுப் பொருள் முதல்வாதத அணுகுமுறையைப் பிரயோகிப்பதனையே தனிப்பொருளாகக் கொண்ட காத்திரமான விவாதமென்பது மேற்கொள்ளப்பட்டதுது இதுவே முதல் தடவையாகும்.


IV

இந்நூலில் இடம் பெறும் நான்கு அத்தியாங்களும், தமிழில் இலக்கிய வரலாற்றாய்வுக்கான நுழைவாயிலாக அமைந்துள்ளன. முதலாவது ஆய்வு, 'இலக்கிய வரலாறு' பற்றிய ஒரு வரைவிலக்கணத்தை எடுத்துக் கூறி, சமூக வரலாற்றோடு இணைந்த ஆய்வொழுங்குடைய பயில்துறையான இலக்கிய வரலாற்றின் கற்கைப் பயன்பாடுகள் பற்றி ஆராய்கின்றது. சமூக உருவாக்கத்தில் இலக்கியத்தின் பங்கு எடுத்து விளக்கப்பட்டுள்ளது. இதனால், சமூக உருவாக்கத்தை விளங்கிக் கொள்வதற்கு இலக்கியத்தின் இன்றியமையாமை வற்புறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது ஆய்வு, தமிழில் இலக்கிய வரலாறு ஆய்வின் வளர்ச்சியை எடுத்துக் கூறுவதாகும். இலக்கிய வரலாற்றாய்வு வளர்ச்சிக் கட்டங்கள், இலக்கியத் தொடர்பு முறைமையின் பண்புகளையே அடிப்படையாகக் கொண்டு (அச்சுக் காலம், அச்சுக்குப் பிற்பட்ட காலங்கள்; இலக்கிய உருவாக்கத்தில் இவற்றின் முக்கியத்துவம்) வகுக்கப்பட்டுள்ளன. இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞை காணப்பட்ட வரலாற்று வேளைகள் யாவை என்பது சுட்டப்பட்டுள்ளது. அதனால் சங்கச் செய்யுட்கள் தொகுக்கப்பட்டமையும், பக்திப் பாடல்கள் திருமுறைகளாக வகுக்கப்பட்டமையும் ஆராயப்பட்டுள்ளன. மூன்றாவது ஆய்வு, இலக்கிய வரலாற்றாய்விற் பிரச்சினை மையங்களாகவுள்ள விடயங்கள் பற்றி, அதாவது பல்வேறு இலக்கிய வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் விடப்பட்டனவும், நியமமான இலக்கிய வரலாற்றுக்க வேண்டப்படுவனவும் யாவை என்பது பற்றி, ஆராயப்பட்டுள்ளது. நான்காவது ஆய்வு, கருத்து மோதல்களுக்க இடமளிக்கம் கால வகுப்புப் பற்றி ஆராய்கின்றது. இங்கு தரப்பட்டுள்ள கால வகுப்பு, சமூக உருவாக்க எண்ணக்கருவின் அடிப்படையிலே செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நிலவிய சமூக உருவாக்கங்கள் பற்றிய ஒரு தெளிவான விளக்கத்துக்க வேண்டிய ஆய்வுகள் இன்னும் வரன் முறையான வகையில் மேற்கொள்ளப்படவில்லையென்பது தமிழ்நாட்டு வரலாற்றாய்வுகளிற் பரிச்சயமுடையோருக்குத் தெரியும். இதனால், மேலாண்மையுடையதாக விளங்கம் சமூக உருவாக்கத்தினடிப்படையில், இலக்கிய வரலாற்றை எடுத்துக் கூற விரும்பும் எந்த முயற்சியும் சரிதிட்டமான சமூக வரலாறு எழுதப்படும் வரை காத்திருத்தல் அவசியமே. இத்துறையில், நம்பிக்கை ஒளிகள் பல தென்படுகின்றன. கறாஷ’மா, சுப்பராயலு, நாராயணன் ஆகியோரின் ஆராய்ச்சிகளில்லையேல், இந்தக் காத்திருப்பு, மேலும் நீண்டதாகவே இருந்திருக்கும். கல்வெட்டுத் துறையில் முக்கியமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் இவ்வேளையில், இலக்கியச் சான்றுகளின் அடிமையிற் சமூக வரலாற்றைக் கண்டு கொள்வதற்கான ஒரு வரன் முறையான ஆய்வு பெரும் பயன் தருவதாகவே அமையும். நான்காவது ஆய்வுக் கட்டுரை வரலாறெழுது நெறியில் மிகவும் அடிப்படையா‘ள ஒரு விடயம் பற்றியும் குறிப்பிடுகின்றது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ கி.பி.600 முதல் 1400 வரை நிலவிய, மேலாதிக்கம் பெற்றிருந்த உற்பத்தி முறைமையின் சரிதிட்டமான பண்பு பற்றிய கருத்து மாறுபாடுகள் தரபட்டுள்ளன. கி.பி. 600-க்கு முற்பட்ட காலத்தைப் பிரச்சினைகளை முதல் முதலாக ஆராயும் இவ்வாய்வில் சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளையும் போதுமான வகையில் எடுத்துக் கூறிவிட முடியாது. அறிவியல் பூர்வமான தமிழிலக்கிய வரலாற்றை எழுத முனையும்பொழுது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை இது. இங்க இதுவரை இலக்கிய வரலாறுகள் எழுதப்பட்ட முறைமையும் அந்த முறைமையின் ஆதார சுருதியாகவமைந்த கருத்துநிலை எடுகோ‘ள்களுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவரை எவ்வெக் கருத்துக்களினடிப்படையில் இலக்கிய வரலாற எழுதப்பட்டுள்ளது என்பதை அறியும் பொழுது தான், எவ்வெக் கருத்து நிலைகள் பயன்படுத்தப்படவில்லை என்பதும், இனிமேல், எவ்வெக் கருத்து நிலைகளின் அடிப்படையில் இலக்கிய வரலாறு எழுதப்படின் புலமைத் திருப்தி ஏற்படும் என்பதும் புலனாகும். இன்னுமொரு விடயமுண்டு, கால வகுப்புப் பற்றிய கொள்கைப் பிரச்சினைகளை வேண்டிய அளவு எடுத்தாராயாது விட்டால், சமூக வரலாற்றினை எழுதுவதும் சிரமமாகவே இருக்கும்.


v

இந்நூலில் தரப்பட்டுள்ளவை. முன்னர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தினால் வெளியிடப் பெற்றுள்ள தமிழ் வடிவமேயாகும்; தமிழ் வடிவமேயன்றித் தமிழ் மொழி பெயர்ப்பு அன்று. ஆங்கில மூலத்தில் இல்லாத பல விளக்கங்கள் இந்நூலிற் சேர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் இத்தகைய ஆய்வு மரபு நன்கு வேரூன்றி விட்டமையால், தமிழில் விரித்துக் கூறப்பட வேண்டிய பல விடயங்களை அம்மொழியிற் சுருக்கமாகவே கூறிவிடலாம். தமிழ்மொழி மூலக்கல்வியின் பயில்வுவட்டம் விரிவடைகின்ற இந்நாட்களில், ஆங்கில ஆய்வுகளில் இடம் பெறும் எண்ணக்கருக்களை அறிமுகஞ் செய்து வைப்பது அத்தியாவசியவாகும். மேனாட்டு ஆய்வு முறைகளின் வாதமுறைகளை அவ்வாத முறைகளுக்கேற்ற நடையமைதியுடன் எடுத்துக் காட்டுவதும் முக்கியமானதே, வாக்கிய அமைதியும், நடையும், வெறுமனே சொற்கள், சொற்களின் அடுக்குப் பற்றிய விடயம் மாத்திரமன்று. அவை சிந்தனையின் தன்மையை, சிந்திப்பின் நெளிவு சுளிவுகளை, ஏற்ற இறக்கங்களை, அழுத்தங்களின் மென்மை வன்மைகளைக் காட்டுபவை. விவரிக்கப்படும் பிரச்சினையை அதன் பன்முகப்பாட்டில் விளங்க முனையும் பொழுது, வெண் தொடர்கள் முக்கியத்துவம் பெறா. தமிழ் உரை நடையின் விவாதப் பாரம்பரியத்தை நினைவுறுத்திக் கொண்டால், இவ்விடயம் நமக்குப் புதியதன்று என்று தெரியும்.

அடுத்தது, கடப்பாட்டினைத் தெரிவிக்கும் முக்கியமான பணியாகும். இந்நூலாக்கம் நிறைவேற்றுகை பற்றிய நன்றிக் கடப்பாட்டினைத் தெரிவிக்கும் பொழுது அதனை மூன்று நிலைப்படுத்திக் கூறவேண்டியுள்ளது. முதலாவது ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையிற் செலுத்தப்பட்ட வேண்டிய நன்றிக் கடனாகும். இது 1982-இல் செய்யப்பட வேண்டியது. அடுத்து தமிழ்ப் பிரதியாக்கம் செய்யப்பட்ட நிலையிற் செய்யப்பட வேண்டியவை. அது நிகழ்ந்தது 1982 இறுதியில், மூன்றாவது, இந்நூலில் இப்பொழுது தமிழில் வெளிவரும் பொழுது தெரிவிக்கப்பட வேண்டியவையாகும்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதலிரண்டு சிறப்பாய் வாளர்களுள் என்னையும் ஒருவனாக வரவழைத்த அப்பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தர் பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம் அவர்களுக்க என் மனமார்ந்த நன்றியுரிந்து. இவ்வாய்வின் பல்வேறு பிரச்சினை மையங்கள் குறித்து அவருடன் விரிவாகக் கலந்துரையாடும் வாய்ப்புக்கிட்டிற்று. காட்டிய அன்புக்கும் சுட்டிய தெளிவுக்கும் அவருக்கு என் நன்றி.

வித்துவான் மு. சண்முகம் பிள்ளையும், டாக்டர், வெங்கடேச ஆத்ரேயாவும் இவ்வாய்வு பற்றிக் கலந்துரையாடியுதவினார். பேராசிரியர் றொமிலா தரப்பர் நான்காவது கட்டுரை பற்றிய விளக்கத் தெளிவுக்குப் பெரிதும் உதவினார். ஆசிற உற்பத்தி முறைமை பற்றிய விவாதத்தின் பின்னணி பற்றி அவர் விவரித்தார். இவர்களுக்கு என் நன்றி. பேராசிரியர் றொமிலா தாப்பருடன் உரையாடிய விடயங்கள் முழுவதும் இக்கட்டுரையில் இடம் பெறவில்லை. தமிழ் நாட்டு வரலாற்றில் சமூக உருவாக்கங்கள் பற்றிய ஆய்வின் பொழுது அவை மேலும் பயன்படுத்தப்படும் மிக விரிவான கலந்துரையாடல் மூலம் உதவிய மற்றவர், டாக்டர் எ.சுப்பராயலு அவர்கள், அதுவரை அச்சேறாத தமது கட்டுரையொன்றினைத் தத்துதவிய அவரது ஆராய்ச்சி நேயத்துக்கு என் மதிப்பார்ந்த வணக்கங்கள்.

இவ்வாய்வுக்கு வேண்டிய உசாத்துணை நூல்களை ஓரிடத்திற் பெற முடியவில்லை. பல நூலகங்களிற் பெற வேண்டியிருந்தது. தமிழ்ப் பல்கலைக் கழகம், அண்ணாமல பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களின் நூல் நிலையங்களிலும், சென்னை மறைமலையடிகள் நினைவு நூல் நிலையம், கரந்தைத் தமிழ்ப்புலவர் கல்லூரி நூல் நிலையம் ஆகிய நூல் நிலையங்களிலும், பாண்டிச்சேரிப் பிரெஞ்சுக் கழகத்தின் பிரசித்தி பெற்ற நூலகத்திலும், இவ்வாய்வுக்கு வேண்டிய நூலகர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி உரித்து. பாண்டிச்சேரிப் பிரெஞ்சுக் கழக இயக்குநர், கழகத்தின் தங்கு நிலையத்தில் இடம் தந்து உபசரித்தார்‘. அந்த அன்புக்கு நன்றி நூல்கள் தந்துதவியர்களுள் முக்கியமான ஒருவர் சேக்கிழார் அடிப்பொடி எனத் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் தஞ்சை சட்டவறிஞர், தமிழறிஞர் திரு.ரி.என். இராமச்சந்திரன் ஆவர், அவருக்கு என் நன்றி.

டாக்டர்கள் தி. முருகரத்தினம், இராம சுந்தரத்துக்கு என் நன்றிகள்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னை நாட் பதிவாளரும், முதலாவது பிரசுரப் பொறுப்பாளருமான திரு.சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்கள் இப்பிரசுரம் பற்றிப் பேரார்வம் காட்டினார்கள். அவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நான் கடமையாற்றிய காலத்து அங்குப் பணியாற்றிய எழுத்தர்கள். அடிப்படை அலுவலாளர் பலர் என் நண்பர்களாயினர். என்னைத் தம்மில் ஒருவனாகவே கருதினர். கருதி உதவினர், ஆறு வருடங்கள் கழிந்த பின்னரும் அந்த நினைவுகள் பசுமையாகவேயுள்ளன.

தமிழ்ப் பல்கலைக் கலுகத்தில் நான் ஆய்வுப் பணி மேற்கொண்டிருந்த பொழுது எனக்குப் பேருதவி புரிந்த எனது தஞ்சை நண்பர்கள் பற்றிக் குறிப்பிடல் வேண்டும். அறிவுத் தொடர்பாகத் தொடங்கியது இன்று அன்பிணைப்பாக வளர்ந்துள்ளது. அ. மார்க்ஸ், அவர்களின் உதவியில்லையேல் இப்பணியினை நான் நிறைவு செய்திருக்கவே முடியாது. பின்னிணைப்புக்கள் தயாரிப்பில் அவர் பெரிதும் உதவினார். மார்க்ஸ் தன்னலமற்ற நண்பன்; அவரது நண்பராய் வந்து, இன்று எனது நட்பைத் தமதுரிமைப் பொருளாக்கிக் கொண்ட திரு. பொ.வேலுசாமி, எமது பல்வேறு உரையாடல்களின் பொழுதுகேட்ட கேள்விகள் காரணமாகப் பல்விடயங்கள் பற்றிச் சிந்திக்கும் வாய்ப்புக் கிட்டிற்று. வழக்கறிஞர் வே.சிதம்பரம் அவர்கள் காட்டிய அன்பு பெரிது. சி.அறிவுறுவோன், ரமணி, மதிவாணன் முதலியோர் பெரிதும் உதவினர். இவர்களுக்கு என் நன்றி.

தஞ்சைப் பணி முடிந்துது இலங்கை திரும்பிய பின்னரே தமிழில் இந்நூலை எழுதும் வேலையில் ஈடுபட்டேன். எனது மனைவியும் பிள்ளைகளும் பெரிதும் உதவினர். அவர்களுக்கு என் நன்றி.

எனது கையெழுத்துப் பிரதியினைப் படியெடுத்துதவிய எனது மாணவியர் காமினி இளைய தம்பி, விக்னேஸ்வரி செல்வ நாயகம், சத்திய தேவி துரை சிங்கம் ஆகியோருக்க நன்றி.

பிரதியொப்பீடு செய்து பிழைகளைத் தவிர்க்க உதவிய ஆராய்ச்சி மாணவி ஆசிரியை திருமதி அம்மன்கிளி முருகதாசுக்கு என் நன்றியுரித்து. அவர் இவ்விடயத்திற் பெருஞ்சிரத்தை காட்டினார்.

தமிழ் நூலை எழுதிக் கொண்டிருந்த நாட்களிலே தான் (டிசம்பர், 82இல்) கைலாசபதி காலமானான். முப்பது வருட காலத்து நட்பு நினைவுகளின் சுமையை விட்டுச் சென்று விட்டான். நானும் அவனும் அடிக்கடி பேசிக் கொண்ட ஒரு விடயம் இப்பொழுது நூல் வடிவில் விரிவாக ஆராயப் பெறுகிறது.

அடுத்து, இந்தப் பதிப்பின் பொழுது நான் பெற்ற உதவிகளையும், நான் செலுத்த வேண்டிய நன்றிக் கடன்களையும் பொறித்தல் அவசியமாகின்றது.

என்.சி.பி.எச். நிறுவனத்தினரின் தூண்டுதல் இல்லாது போயிருப்பின் இந்நூல் இன்னும் வெளியிடப்படாமலேயிருந்ததிருக்கும். இந்நூலினை மேலும் தாமதப்படுத்தாது வெளியிட வேண்டியதன் அவசியத்தை எனக்கு வற்புறுத்திய தோழர் ஆர்.பார்த்தசாரதிக்கு எனது நன்றிகள்.

தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் ஐந்து வருடங்களின் முன்னர் தொடங்கியது. இப்பொழுது சென்னைப் பல்கலைக் கழகத்தில் விருந்துப் பேராசிரியனாயிருக்கும் பொழுது தான் அச்சு 'வாகனம்' ஏறுகின்றது. நான் சென்னையில் தங்கியிருக்கும் இவ்வேளையில் இது வெளியிடப்பட வேண்டுமென்பதனை வற்புறுத்தி, அதற்க வேண்டிய தொழிபாடுகளைத் துரிதப்படுத்திய நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தாருக்கு நன்றி. பாவை பிரிண்டர்சைச் சேர்ந்த தோழர்கள் முதற்பதிப்பு அச்சேற்றுகையின் பொழுது காட்டிய ஆர்வத்தையும் பொறுமை யுணர்வையும் நான் என்னும் மறவேன்.

இந்த நூலுக்கு விரிவான பொருளடைவு தேவை என்பதை டாக்டர் வீ.அரசு மிக வற்புறுத்திக் கூறினர். அவரே அந்தப் பணியையும் ஏற்றுக் கொண்டார். அவரும் அவர் துணைவியர் திருமதி பத்மாவும், அவர்களுக்குதவிய எமது மாணவர்கள், குறிப்பாக கிருஷ்ணமூர்த்தி, ஜார்ஜ் சீனிவாசன் இப்பொருளடைவை மிகக் குறுகிய காலத்திற்குள் செய்து முடித்தனர். அவர்களுக்கு என் நன்றி.

இந்த நூலாக்கத்தின் பொழுது எனக்கு உதவிய எனது மகள்மார் கிருத்திகா, தாரிணிக்கு என் நன்றி.

சொந்த இல்லத்திருக்க முடியாத நிலைமை காரணமாக எனது மனைவியாரும் மகள்மாரும் சென்னைக்க வரவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. அவர்களுக்கரிய வேளைகளிற் பல இந்நூலின் வேலைகளிற் சென்றது. அத்தகைய வேளைகள் ஒன்றில்தான் இந்நூல் யார் நினைவாக வெளியிடப்பட வேண்டும் என்பதை கடைசி வர்த்தனி நினைவுறுத்தினான்.

நிகழ்வுகள் நினைவுகளாகி, அந்த நினைவுகளின் நினைப்பிலே வாழ்வது மனிதனின் 'மானுட'த் தன்மைக்கு வலுவும், ஆழமும் வழங்குகின்றது.

கார்த்திகேசு சிவத்தம்பி

பல்கலைக் கழக விருந்தினர் விடுதி
சென்னைப் பல்கலைக் கழகம்
சென்னை.
19.2.1988

...............


'இலக்கிய வரலாறு' எனும் பயில்துறை
அதன் புலமைப் பரப்பமைவு பற்றிய
சுருகக அறிமுகம்

ஆங்கில மொழி வாயிலாக நம்மை வந்தடைந்த மேனாட்டுச் சிந்தனை, கல்வி மரபுகள் பல நாம் தமிழ் மொழியைக் கற்கும் முறையில்-அதாவது நமது மொழியை நாம் நோக்கும். அணுகும், அறியும் முறையில்-புதிய நெறி முறைகளை அறிமுகஞ் செய்து வைத்துள்ளன. இலக்கிய வரலாறு எனும் பயில்துறை அத்தகைய புதிய பயில்துறைகளுள் ஒன்றாகும். 1930இல், கா.சுப்பிரமணியப் பிள்ளை தமிழ் இலக்கிய வரலாறு எனும் பெயரில் நூல் எழுதிய காலம் முதல் இத்தொடர் தமிழிலக்கிய ஆய்வாளரிடையே பெரு வழக்கிலிருந்து வருகின்றது. எனினும் 1960இல் தொடங்கிய பத்தாண்டுக் காலத்திலே தான் இது ஒரு பயில்துறை என்னும் வகையில் தமிழ் நாட்டிற் பட்டடிப்படிப்புக்கான ஒரு பாடமாக்கப் பெற்றது. அதற்கு முன்னரே அது இலங்கைப் பல்கலைக் கழகத்திற் பாடமாக்கப்பட்டிருந்த தெனினும், தமிழ்நாட்டிற் பாடமாக்கப்பட்ட பொழுதுதான் அதன் சனரஞ்சகப்பாடு சிதறிப்ப பரவியது எனலாம்.

இலக்கிய வரலாறு என்னும் இத்தலைப்பின் கீழ் (பாடத்தில்) தமிழ் இலக்கியங்களின் வரலாறு (சரித்திரம்) படிப்பிக்கப் பெற்றது. தமிழிலுள்ள இலக்கியங்களின் காலமும், தமிழ்ப் புலவர்களின் காலமும் இலக்கியங்களின் அமைப்புப் பற்றிய விளக்கமுமே முதலில், இப்பாடத்தில் முக்கிய இடம் பெற்றன. புலவர்கள், நூல்களின் கால அடைவு, எவர் முந்தியவர் எவர் பிந்தியவர், எது முந்தியது எது பிந்தியது என்பனவே இப்பாடத்தின் பிரதான சிரத்தைகளாகவிருந்தன. இந்தக் கால விசாரணைகளில் நவீன இலக்கியங்கள் பற்றி அதிக கவனம் செலுத்தப்படவில்லை. இலக்கியகளின் வரலாற்றை எடுத்துக் கூறும் இம்முயற்சிகள், பிரதானமாக, இலக்கியத்தின் பின்னணியிலேயே செய்யப்பட்டன. பின்னர் தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியிலேல எடுத்துக் கூறம் ஒரு செல்நெறி காணப்பட்டதெனினும், இப்புலமை முயற்சி அக்காலகட்டத்திலும் முற்றிலும் இலக்கியத்தின் வரலாறாகவே இருந்தது. இலக்கண நிலை நின்று கூறவதானால், இலக்கிய வரலாறு எனும் தொகை நிலைத் தொடர், ஒரு வேற்றுமைத் தொடராக, ஐந்தாம் வேற்றுமையுருபுகளிலொன்றான 'இன் உருபுதொக்கு நின்றதாகவே கொள்ளப்பட்டது. அதாவது இலக்கியத்தின் வரலாறு, இந்திய வரலாறு எனப்பட்டது போல, தமிழின் வரலாறு தமிழ் வரலாற எனப்பட்டது போல இதுவும் நின்றது எனலாம்.

இப்பாடத்தின் முக்கிய பிரச்சினையெனக் கருதப்பட்ட 'நூல்கள், புலவர்கள் காலம்' பற்றிப் பருமட்டான ஓர் எற்புநிலை தோன்றி பின்னர், இப்பாடப் பயில்விற் 'பண்புகள்'-அதாவது ஒரு காலப் பிரிவிலே தோன்றிய நூல்களிலே பொதுவாகக் காணப்பெறும் இயல்புப் பொதுமைகள்- விதந்தோதப்படும் ஒரு நிலை ஏற்பட்டது. (இக்கால கட்டத்திலேதான் இப்பயில்துறை பாடமாக 'வைக்கப்பட்டது) அந்நிலையிலும் இத்தொடர், அதே வேற்றமைத் தொடராகவே அதாவது இலக்கியத்தின் வரலாறாகவே தொழிற்பட்டது.

முதலில் மேனாட்டுக் கல்விப் பாரம்பரியம் போற்றப் பெறும் கல்விச் சூழல்களிலேயே- கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலுமே பயிற்றுவிக்கப்பட்ட இப்பயில் துறை கால அடைவிலே பாரம்பரிய வழி வந்த தேர்வுகளுக்கும் (பண்டிதர், புலவர், வித்துவான் தேர்வுகளக்கும்) பாடமாக்கப் பெற்றது. இந்நிலையில் அது ஐயந்திரிபற இலக்கியத்தின் வரலாறாகவே கொள்ளப்பட்டுப் பயிலப்பட்டது.

ஆங்கிலச் சூழலின் தேவைகட்கென இப்பாடம் ஆங்கிலத்தில் எடுத்துக் கூறப்பட்ட பொழுது, 'ஹ’ஸ்ற்றறி ஓஃப் தமிழ் லிற்றறேச்ச(ர்)' (History of Tamil Literature) என்றே கூறப்பட்டும் கொள்ளப்பட்டும் வந்தது. 'ஹ’ஸ்ற்றறி ஓஃப் லிற்றறேச்சர்' என்பதன் மொழிபெயர்ப்பு 'இலக்கியத்தின் வரலாறு' என்பதேயாகும்.

ஆங்கிலத்தில் 'லிற்றறி ஹ’ஸ்ற்றறி (Literary History) எனும் ஒரு தொடரும் உண்டு. 'ஹ’ஸ்ற்றறி ஓஃப் லிற்றறேச்சர்' எனும் தொடரின் பொருளின் ஒரோ வேளைகளிற் சிலரால், 'லிற்றறி ஹ’ஸ்ற்றறி' எனும் இத்தொடர் பயன்படுத்தப்பட்டுள்ளதெனினும், இவை இரண்டும் இருவேற கோட்பாடுகளை உணர்த்தும் இரு வேறுபட்ட தொடர்கள் என இப்பொழுது கொள்ளப்படுகின்றன. 'லிற்றறி ஹ’ஸ்ற்றறி' (Literary History) என ஆங்கிலத்திற் குறிப்பிடப் பெறும் பொருள் பற்றியே இந்நூல் ஆராயவுள்ளது.

இத்தொடரைத் தமிழில் எவ்வாறு எடுத்துக் கூறுவது என்பது முதற் பிரச்சினையாகிறது. தமிழ்ழத் தொடர் பற்றிச் சிந்திப்பதற்கு முன்னர், இத்தொடர் நுதலும் பொருள் யாது என்பதனை முதலில் நோக்குவோம்.

ஒரு நாட்டினது அன்றேல் ஒரு மொழிக் கூட்டத்தினரின் வரலாற்றை அவர்களது இலக்கியத்தின் வழியாகப் பார்க்கும் பயில்துறையை இத்தொடர் (Literary History) கொண்டு குறிப்பர். ஒரு வழியாக (உற்பத்தி, விநியோகம், நுகர்வு ஆகியனவற்றின் வழியாகவும் அவற்றின் பின்னணி ஆகியனவற்றின் வழியாகவும்) அவர்தம் வரலாற்றை எடுத்துக் கூறுவது எவ்வாறு பொருளாதார வரலாறு எனக் குறிப்பிடப் பெறுகின்றதோ அதே போல இலக்கியத்தைக் கொண்டு நாட்டினது, அல்லது மொழிக் கூட்டத்தினது வரலாற்றைக் கண்டறியும் முறைமையை 'லிற்றறி ஹ’ஸ்ற்றறி' என்பர். வேறொரு வகையாகக் கூறினால், ஒரு நாட்டின் வரலாற்றை அதன் இலக்கியம் மூலம் கண்டறிந்து கொள்வதே இப்பயில் துறையின் முக்கிய அமிசமாகும்.

இவ்வாறு நோக்கும்பொழுது 'லிற்றறி ஹ’ஸ்ற்றறி' என்பதனைத் தமிழில் இலக்கிய வரலாறு என்று குறிப்பிடுவதே பொருந்தும் என்பது புலனாகிறது. இலக்கியம் வழியாக வரலாற்றை அறிந்து கொள்ளும் முயற்சியை இலக்கிய வரலாறு என்றே கூறல் வேண்டும்.

இவ்வாறு நோக்கும் பொழுது இலக்கியத்தின் வரலாற என்பதும், இலக்கிய வழி வரலாறு (அல்லது இலக்கிய நிலைப்பட்ட வரலாற) என்பதும் ஒன்றிலிருந்துது மற்றது வேறானது எனும் உண்மை தெளிவாகும். ஒரு சமூகத்தின் மதம் பற்றியோ அல்லது விளையாட்டுக்கள் பற்றியோ படிப்பது போன்று அந்தச் சமூகத்தின் இலக்கியத்தின் பற்றிப் படித்துக் கொள்ளலாம். அதாவது குறிப்பிட்ட அந்த இலக்கியம் எவ்வாறு தோன்றியதுது. எவ்வாறு வளர்ச்சியடைந்தது. அவ்விலக்கிய வளர்ச்சியிலிடம் பெறும் இலக்கிய வடிவங்களின் தோற்றம், வளர்ச்சி தேய்வு எவ்வாற அமைந்தன என்பன பற்றி இலக்கியத்தின் வரலாற்றிலே அறிந்துது கொள்ளலாம். ஆனால் இத்தகைய ஒரு வரலாறு, ஒரு நாட்டின் வரலாற்றை அதன் இலக்கியங் கொண்டு அறியும் வரலாறு முறைமையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.

எனவே இந்நூலில் 'இலக்கிய வரலாறு' என்னும் தொடர் இலக்கியத்தின் வரலாற்றையல்லாது இலக்கிய வழி வரலாற்றையே குறித்து நிற்கம் 'இலக்கிய வரலாறு' என்னும் தொடர் மூலம் இலக்கியத்தின் வரலாற பற்றிக் குறிப்பிடும் ஒரு நடை முறை நூல்கள் பலவற்றிற் காணப்படுகின்றமையால், அவை பற்றிக் குறிப்பிடும் பொழுது நூற்பெயர்கள் தவிர்ந்த இடங்களில், இலக்கியத்தின் வரலாறு என்றோ அன்றேல் இலக்கியங்களின் வரலாறு என்றோ விரித்துக் கூறிவிட்டு, ஆங்கிலத்தில் 'லிற்றறறி ஹ’ஸ்ற்றறி' (Literary History) எனப்படும் தொடருக்கு இலக்கிய வழி வரலாற எனும் தொடரையே பயன்படுத்தலாமெனவுள்ளேன்.

'இலக்கிய வழி வரலாறு', 'இலக்கியங் கொண்டு வரலாற்றையறிதல்' ஆகிய இரு கருதுகோள்களையும் தன்னுள்ளடக்கி நிற்கம் 'இலக்கிய வரலாறு' என்னும் இப்பயில் துறையின் புலமைப்பரப்பையும், இப்பயில் துறைக்கான நியாயப் பாட்டையும் சிறிது விரிவாக நோக்குதல் இக்கட்டத்தில் அவசியமாகின்றது.

'அமெரிக்காவின் இலக்கிய வரலாறு' என்னும் பெரு நூலொன்றின் பிரதான ஆசிரியப் பொறுப்பினை வகித்த றொபெட் ஸ்பில்லர் கூறுவதுது உற்று நோக்கத் தக்கது.

'இலக்கிய வரலாற்றாசிரியன் மற்றைய வரலாற்றாசிரியர்களிடையே -அரசியல் வரலாற்றாசிரியன், பொருளாதார வரலாற்றாசிரியர்கள், புலமை வரலாற்றாசிரியன், பண்பா‘ட்டு வரலாற்றாசிரியன் ஆகிய பல்வேறு வரலாற்றாசிரியர்களிடையே-ஒரு வரலாற்றாசிரியனாகவுள்ளான். மற்றைய வரலாற்றாசிரியர்கள் எவ்வாறு, அரசாங்கத்தின் மூலமாகவும், வர்த்தகம் மூலமாகவும் கருத்துக்கள் மூலமாகவும், ஓவியம், சிற்பம், அன்றேல் அது போன்ற வடிவங்கள், நடைமுறைகள் வழியாகவும் வரும் மனித வெளிப்பாடுகளைக் கொண்டு மனிதனுடைய வரலாற்றினை எழுதுவதைத் தங்கள் பணியாகக் கொள்கிறார்களோ, அதே போன்று இலக்கிய வரலாற்றாசிரியனான இவனது பணி இலக்கியம் வழிய வெளிப்படுத்தப்படும் மனித வரலாற்றினை எழுதுவதாகம்.1

ஒரு நாட்டினது, அல்லது கூட்டத்தினரது வரலாற்றை, அந்நாட்டினது அன்றேல் அம் மக்கட் கூட்டத்தினரதுது இலக்கிய உற்பத்தி, விநியோகம், நுகர்வு கொண்டு அறிந்து கொள்ளும் முயற்சி 'இலக்கிய வரலாறு' ஆகும். இலக்கியம் வரலாற்றின் இயங்க கருவியாக அமைகின்ற தென்பது இப்பயில்துறையின் முக்கிய எடுகோளாகும்.

இவ்வாறு நோக்கும் பொழுது 'இலக்கிய வழி வரலாறு' ஆனதுது இலக்கியத்தின் வரலாற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதென்பது நிச்சயமாகின்றதுது. ஆயினும் இக்கட்டத்திலே முக்கியமான ஓர் உண்மையினை வலியுறுத்தல் வேண்டும். நாம் இங்க எடுத்துக் கூறும் இலக்கிய வரலாற்றினை அறிவதற்கு அத்திவாரமாக இலக்கியத்தின் வரலாறு எழுதப்பட்டிருத்தல் வேண்டும். இலக்கியத்தின் வரலாற்றினை ஐயந்திரிபற அறிந்து கொள்ளாமல் இலக்கிய வழி வரலாற்றை, அறிந்து கொள்ள முடியாது. இலக்கியத்தின் வரலாற்றையே இலக்கிய வழி வரலாறாக மயங்கிக் கொள்ளும் நிலையே. இலக்கியத்தின் வரலாறு பூரணமாக எழுதப்படாமை காரணமாக ஏற்படும் ஒரு நிலைமையாகும்.

'இலக்கிய வரலாறு' பற்றி இதுவரை தரப்பட்ட பத விளக்கத்தினை நோக்கும் பொழுது, இலக்கிய வரலாற்றில், இலக்கியத்தின் வளர்ச்சி எனும் விடயத்திற்க அப்பாலுள்ள விடயங்கள் பற்றிய ஒரு புலமைச் சிரத்தை உணடென்பது தெளிவாகின்றது. 'இலக்கிய வரலாறு' இலக்கியத்துக்கு 'அப்பாலானவை' என்று கருதப்படுவனவற்றுக்குட் செல்லலாமா என்ற வினா உடன் கிளம்பலாம். அத்தகைய ஒரு வினா இலக்கிய வரலாற்றின் தேவை பற்றியும், இலக்கிய வரலாற்றின் வரையறைகள் பற்றியும் சிந்தனைகளைக் கிளப்பி விடும். இதே விடயத்தை இன்னொரு வகையாகவும் வினவலாம். 'நமக்கு எதற்கா‘க இலக்கியத்தின் வரலாறு ஒன்று தேவைப்படுகின்றது? உள்ள இலக்கியங்கள் யாவற்றையும் ஒரே சமகால அமைப்பாகக் கொண்டு அம்முறையிலேயே அவற்றை ஆராய்ந்தால் என்ன?

இக்கட்டத்தில் தான் நமக்கு நமது புலமைத் தளத்தின் அடிப்படைகள் பற்றிய தெளிவு இருத்தல் வேண்டும். இத்தெளிவு இருந்தால், அதன் பின்னர் வரும் விவாதங்களை மேற்கொள்வது சுலபமாகவேயிருக்கும். ஏனெனில் அதற்கு மேல் வெளிக் கிளம்பும் கருத்து வேற்றுமைகள், புலமைத் தளங்களின் நியாயம் அநியாயம் பற்யிதாகவல்லாமல் அந்தப் புலமைத் தளத்தை விட்டு, ஏன் இந்தப் புலமைத் தளத்தைக் கொள்ள வேண்டும் என்பன காரணமாகவே தோன்றலாம்.

இவ்வாறாக நோக்கும் பொழுது, இவ்விவாதம் முழுவதற்கும் அடிப்படையானதாக, சீவாதாரமானதாக அமைவது இலக்கியம் என்றால் என்ன, அல்லது இந்த ஆய்வினைப் பொறுத்த வரையில், எதனை இலக்கியம் என்று கொள்வது, என்ற வினாவே யாகும். இலக்கியம் பற்றியும், வரலாறு பற்றியும், இவை இரண்டுக்குமுள்ள ஊடாட்டங்கள் பற்றியும், அகல்விரிவான விளக்கத்தினையுடையதாகவிருக்க வேண்டிய இவ் ஆய்வில் பொன் மொழிகள் போலவுள்ள குறுங்கூற்றுக்களை எடுத்துக் கொண்டு அவற்றுக்க வியாக்கியானங்கள் கூறிக் கொண்டிருத்தல் முடியாது. நிலைமையைத் தெட்டத் தெளிவாக முன்வைத்தல் வேண்டும். உண்மையில் இது ஒரு வாதமேயாகும். எனவே அதனை நாம் வாதத்திற்குரிய முறையிலேயே எடுத்துக் கூறவும் வேண்டும்.

இலக்கியத்தின் வரலாறாயினும் சரி, பொது வரலாறாயினும் சரி வரலாற்றின் தேவைகட்காக, நாம் இலக்கியத்துக்க வரைவிலக்கணம் வகுக்க முனையும் பொழுது, முதலில் நாம் இலக்கியத்தினை, அதன் பயன்பாடு கொண்டும், ஒரு நடைமுறை என்ற வகையில் அதன் செயற்பாடு கொண்டும் விவரித்தல் அத்தியாவசியமாகின்றது. இலக்கியத்தின் நடைமுறை பற்றி டேவிட் அத்தியாவசியமாகின்றது. இலக்கியத்தின் நடைமுறை பற்றி டேவிட் கிறெய்க் தரும் விவரணம் பொருத்தமான ஆரம்பமாகும்.

வரலாற்றில் தொழிற்படும் ஆழ வேரூன்றிய சக்திகள் - வாழ்க்கை முறை பற்றிச் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிடையே நடக்கும் போராட்டங்கள்-வாழ்கை முறையை மாற்றியமைக்கின்றன. அதாவது வாழ்வதற்கென மக்கள் ஒழுங்கபட்டு உழைக்கும் பொழுது தோன்றும் மக்கள் உறவுகள் மாற்றியமைக்கப்படுகின்றன. (இந்த உறவுகள் உறவியற் சுகவாழ்வு, உறையுள் ஆகியனவும் இடம் பெறும்). இந்த மாற்றமைப்பு புதிய தொடர்பு முறையமைப்புக்கள் தோன்றுவதற்கு இடமளிக்கும் (இது ஒரே சார்பினரான மக்களுக்கான வாய்மொழிப் பாடலாகவோ, கலப்புச் சார்பினரான மக்களுக்காக, வணிக விநியோக நிலைப்பட்ட அச்சு முறை ஆக்கங்களாகவோ அல்லது வேறெதுவாகவோ இருக்கலாம்.) இவற்றினடியாக, சொல்லால் வெளியிடப் பெறுவதான (பெரும்பாலும் இசையுடனும் வரைகலையுடனும் தொடர்பான) இலக்கியம் தோன்றும். அது, ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களின் புதி வாழ்க்கைப் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதாக அமையும். இவ்வாறு எடுத்துக் கூறப்படுவது, தனிப்பட்ட கலைஞனது, அன்றேல் கலைஞர்களது, உள்ளார்ந்த, சூழலால் தாக்கப் பெற்ற நிலை முறைகளுக்கியைந்த பாணிகளிலே அமையும், அத்துடன், இவை, அச்சமுதாயத்திலே, அக்காலத்திலே நிலவும் தொடர்புச் சாதனங்களக்கேற்றதாக, அவற்றின் வழியாக வருவனவாக அமையும்.2

இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, பண்புகளை நன்கு அமைத்துக் கூறும் இக்கூற்றினிலே, கிறேய்க், இலக்கியத்தின் தொடர்பு முறைமை அமிசத்தினை, வாழ்க்கைச் செயற்பாட்டின் பொழுது தோன்றும் மனித நிலைகள் பற்றிய (இது உண்மையில் அக்காலத்தில் உள்ள சமூக உறவுகளினடியாகத் தோன்றுவதாகும்) ஆழ வேரூன்றிய சிரத்தையினை, அதன் உற்பத்தி முறைமை வழி நின்று நோக்கும் பொழுது தெரிய வரும். அதன் தனித்துவத்தை, சிறப்பாக, அதனை உண்டாக்கும் ஆசிரியனது தனித்துவத்தை நன்கு விதந்தோதுவதனை நாம் அவதானிக்கலாம்.

மனிதப் புத்தாக்கங்களில், மானுடத்துக்க வரைவிலக்கணம் வகுப்பதற்கான கவர்ச்சி நிறை பரப்பெல்லையைப் பொறுத்த வரையில் இலக்கியத்தை வேறெதனாலும் விஞ்ச முடியாதுது எனும் உண்மையை முனைப்புறுத்திக் கூறல் வேண்டும். எனவே இலக்கியத்தின் பெறுமானத்தை, மனிதனின் மானுடத் தன்மை பற்றி அது வழங்கும் அறிவிலேயே கண்டு கொள்ளல் வேண்டும். எல்.சி..நைற்ஸ் அதனைப் பின்வருமாறு கூறுவர்.

'கவிதைக்கும் 'புஷ்-பின்'* ஆட்டம் எனும் குழந்தை விளையாட்டுக்கும் உண்மையாகவே வித்தியாசம் காண முடியாத ஒரு பொறியியல் விஞ்ஞானி (ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய விருப்பங்கள்) ஒருவருக்கு, இலக்கியத்தின் செல்பயன் பற்றிய ஒரு சுருக்கமான பொழிப்புரை யொன்றினைக் கூறுமாறு நான் நிர்ப்பந்திக்கப் பட்டால்,
____________
* புஷ் பின் (Push-Pin) எனும் குழந்தை விளையாட்டில் ஆணிகள் போன்ற சில காய்கள் ஒன்று மாறி ஒன்றாக நகர்த்தப்படும்.

இலக்கியம் என்பது, நாம் மனிதர்களாகத் தொடாந்திருப்பதற்கு அன்றேல், போதுமான அளவு மனிதர்களாக விருப்பதற்கு வேண்டிய மிக மிக முக்கியமான உண்மைகளை அறிந்து கொள்வதற்கான, பிறிதொன்றினைவிட்டு நிரப்பி விட முடியாத, ஓர் அறிவு முறை என்று கூறுவேன். ஏன் 'பிறிதொன்றினை இட்டு நிரப்பி விட முடியாத' எனக் கூறுதல் வேண்டும்? அதற்கு இரண்டு விடைகள் உள்ளன. ஒன்று, சம்பந்தப்பட்ட உண்மைகளை அறிந்து கொள்வது மிகக் கஷ்டமான ஒன்றாகும். இதற்குக் காரணம் நமக்கும் நமது உலகின் உண்மையான தன்மைக்கும் இடையே உள்ள 'நெருங்கிய பழக்க தோழத் திரை, மாத்திரமன்று, நாம் மிக நுண்ணிய அரண்களை ஊடுருவிச் சென்றே அவ்வுண்மைகளை அறிய வேண்டியுள்ளது. தோஸ்த் தோவொஸ்க்கியைப் பற்றிக் கமூ கூறியது போன்று 'அவர் நமக்கத் தெரிந்தவற்றை மாத்திரம் வைத்துக் கொண்டு நாம் கண்டு, கொள்ள மறுப்பனவற்றையும் கற்பிக்கின்றார்', 'ஷேக்ஸ்பியரைப் பற்றி மெல்வில் கூறியது போன்று 'நான் தேடுவனவாயும் காண விரும்பாது வெறுத்தொதுக்குவன யாவும் அங்கேயுள்ளன.' மற்றது, இச் சூழலில் எடுத்துக் கூறப்படும் உண்மையானது, தர்க்க ரீதியான செயல் விளக்கத்தினாற் பெறுகின்ற அன்றேல் முயன்றடைகின்ற ஒன்றன்று. ஒரு குறிப்பிட்ட வகைப்பட்ட, விதிமுறையான அமைப்புக்களைக் கொண்ட ஒன்றிலே ஈடுபடுகின்ற பொழுது அதன் சிக்கலான வேறுபடும் நடவடிக்கையினுள்ளே வாழ்ந்து கொள்ளும் முறைமை யாகும்.'3

இலக்கியம் என்பது நாம் போதுமான அளவு மனிதத் தன்மையுடையவர்களாக விருப்பதை உறுதிப்படுவதற்கு வேண்டிய உண்மைகளை அறிந்து கொள்வதற்கான, மற்றொன்றினால் இட்டு நிரப்ப முடியாத அறிவு முறைமையெனில், அதன், காலக்கிரம நிலைப்பட்ட ஒரு மீளாய்வு, அந்த மனிதத்தன்மைக்காக வாதிட்ட, அதனை நிலை நிறுத்த காலங் காலமாக வாதிட்ட, முயற்சிகளை இனங் கண்டு கொள்ள உதவும்.

எனவே, அதிக கண்டனங்களுக்குட் படுத்தப்பட்ட பிரதி பலிப்புக் கோட்பாடு (இலக்கியம் என்பது வாழ்க்கையைப் பிரதிபலிப்பது எனும் கோட்பாடு) வழியாக வாழ்க்கையிலிருந்து இலக்கியத்துக்க வராமல், விரி மைய முறைப்படி இலக்கியத்தின் தளத்திலிருந்து பரந்த மன்பதையைச் சென்றடையலாம்.

'சமூக நிலைப் பொருளில், மானிடவியற் பொருளில்ல அல்ல, தனிப்பட்ட மனிதன் என்பவன், தன் சமூகஞ் சார்ந்த, உயிர் சார்ந்த வாழ்க்கை முழுவதனாலும் தோற்றுவிக்கப் படுபவனே. இதுதான், இலக்கியத்தின் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் சரிசமனாக உருவாக்கும் கருவுள் ஆகும். இதனாலே தான் இலக்கியம் சமூகவியலாய்வுப் பரப்புக்குரியதாகின்றது.'

'இலக்கியப் படைப்புப்க்கள், சமூக மனிதனை, அவனது உயிர்கள் வாழ்க்கையின் பல்வேற கோலத்துடன், அவனது உணர்வுக்கும் சிந்தனைக்குமுள்ள முரண்பாடுகளுடன், சமூகத்துடனான அவனது உறவுகளுடன், அவனது அக வாழ்க்கையையும் புற நடத்தைகளையும் சித்திரிக்கின்றது. இவற்றிலிருந்து நாம் தனிமனிதனுக்கம் அவனது வாழ்கையில்ல வரலாற்று நிலைமைக்குமுள்ள இணைப்புக்களை, அவனது சமூகச் சூழ்நிலையின் பண்பைக் காட்டும் வரலாற்றுப் புலவெளித் தோற்றத்தை கருத்துக்களின் போராட்டங்களை, சமூக மோதுதல்களை, உய்த்தறிந்து கொள்கின்றோம். மேற் குறிப்பிட்டவற்றின் அவன் கொள்ளும் இணை வீடுபாடு தான் அவனது தனிமனிதத் துவத்தின் பூரணத்துவத்தை நிரணயிக்கின்றது. இந்த இணை வீடுபாட்டைக் கொள்கை நிலையில், அதற்குரிய கலை அறிதிறன் முறைமையிலிருந்து பிரித்துவிட முடியாது.'4

மேலே குறிப்பிட்ட இணைப்புக்களை உய்த்தறிந்து கொள்ளும் முயற்சி தான் இலக்கிய வரலாற்றின் பணியாகும்.

ஆனால் இலக்கிய வரலாற்றின் இப்பணி ஆற்றப்படும் முறைமையினை அறிந்துது கொள்வதற்கு முன்னர், இலக்கியங்கற்பதற்கான இவ்வணுகுமுறை இலக்கியத்தின் சிறப்பியல்புகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டைத் தவிர்த்துக் கொள்வதற்காக இலக்கியத்தின் தன்னாதிக்க வட்டத்தை நிறுவி அதன் பண்புகளை விவரிப்பது அத்தியாவசியமாகும்.

பிரதிபலிப்புக் கொள்கையினடிப்படையில் மிக்க கொச்சைத் தனமான முறையில் இலக்கியத்திலிருந்து உய்த்தறியப்படும் சமூகம் பற்றிய சில கருத்துக்கள் பற்றியே இங்கக் குறிப்பிடப் பெறுகின்றது. அத்தகைய மிகைப்படுத்தப்பட்ட வரலாற்று எளிமைப்பாடுகள் தமிழிலக்கிய வரலாற்றில் மலிந்து காணப்படுகின்றன.5 இலக்கியத்தை மேற்கட்டுமானத்தின் அமிசமாகக் கொள்ளும் பொழுது, அந்த மேற்கட்டுமானாமானது, (பொருளாதார) அடித்தளத்தின் மாற்றங்கள் ஒவ்வொன்றையும் நிச்சயமாகப் பிரதிபலிக்குமென்னும் எண்ணத்தின் விஸ்தரிப்பதாகவே இந்த உளிமைப்பாடான முடிவுகள் காணப்படுகின்றன. இலக்கியம் பண்பாட்டுவயப்பட்டது என்பது உண்மையே, ஆனால் அது பண்பாட்டை உருவாக்குவது என்பதையும் மறந்துவிடக் கூடாது. மேற்குறிப்பிட்ட முறையிலே எளிமைப்பாடான முடிவுகள் விதிவருமுறையாகக் கொள்ளப்படும் பொழுது இலக்கியத்தின் 'பிரசவத்திற்' சம்பந்தப்படும் ஆக்கவியல், புலமை நெறி நடை முறைகளும், அந்தத இலக்கியம் தோன்றிய, குறிப்பிட்ட காலப்பகதியிற் பரந்து ஊடுருவி நின்ற 'கருத்துத் தெளிவு முறைமைகளும், இத்தெரிவு முறைமையின் சமூகப் பண்புகளும் மறக்கப்பட்டு விடுகின்றன. அதாவது சமூகத்தின் எவ்வெவ் நடைமுறைகள் இலக்கியப் பொருளாகக் கொள்ளப்படுகின்றன. ஏன் அவ்வாற கொள்ளப்படுகின்றன. மற்றவை ஏன் கொள்ளப்படுவதில்லை எனும் விடயங்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இலக்கியத்தை மிக பெரிதான ஒரு கண்ணாடியாகக் கொண்டு, பொருளாதார அமைப்பில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் அக்கண்ணாடிக்குட் கண்டுபிடிக்கும் முயற்சி திறமைத் தகவுடைய ஆசிரியர்களிடையே சாதாரணமாகக் காணப்படும் பண்பாகி விட்டது.6 அடித்தளம்-மேற்கட்டுமானம் எனும் கோட்பாட்டின் மிகையா‘ன எளிமைப்பாடு காரணமாகவே இப்பண்பு காணப்படுகின்றதெனலாம்.

அடித்தளம்-மேற்கட்டுமானக் கோட்பாட்டினைப் பிரயோகிக்கும் பொழுது, நாம் குறிப்பிடும் அல்லது கருதும் 'அடித்தளம்' என்பதும் இயக்கவியலுக்குட்பட்ட ஒரு நடைமுறையே அன்றி 'மாறாத நிலைமை' யன்று என்பது கருத்திற் கொள்ளப்படுவதில்லை. அடித்தளமாகிய அந்த 'நடைமுறை' சில நிலையான இயல்புகளைக் கொண்டதென்று கூறிவிட்டுப் பின்னர் அந்த நடைமுறையிலிருந்து மாறும் இயல்பினதாகிய மேற்கட்டுமானத்திற்கு சில பண்புகளை விதிவருமுறையிற் கொள்ள முடியாது7 அடித்தளம், மேற்கட்டுமானக் கோட்பாட்டினை மலினப்படுத்திப் புரிந்து கொண்டு இலக்கிய மாற்றங்களுடன் ஒன்றுக்கொன்றா‘க இணைத்து நோக்கும் எளிமைப்படத்தப்பட விளக்கங்களுக்கப் பதிலாக, சமூக முழுமையையும் (ஜோர்ணி லூக்கார்க்ஸ்) அதனுள் வரும் அமைப்பு மட்டங்களையும் (ஹ’ண்-ஸ், ஹேர்ஸ்ற்) நோக்கும் மார்க்ஸ“ய சிந்தனை வளர்ச்சிகள் பகப்பாய்வுக்கு வேண்டிய சில சிந்தனாக் கருவிகளைத் தந்துள்ளன. இத்தகைய சிந்தனை வளர்ச்சிகளை மனதிற்கொண்டு நோக்கும் பொழுது, வால்ற்றர் பெஞ்சமின் மிக்க வன்மையுடன் எடுத்துக் கூறிய ஒரு கருத்தினை கணக்கிற் கொள்வது அத்தியாவசியமாகின்றது.

'இன்று செய்யப்பட வேண்டியது, எழுதப்பட்ட நூல்களை அவற்றின் காலப்பின்னணியிற் காட்டுவதன்று. மாறாக, அந்த நூல்களைத் தெரிந்து கொண்டுள்ள காலத்தை, அதாவது நாம் வாழும் இந்தக் காலத்தை, அந்நூல்கள் தோன்றிய காலத்தினுள் வைத்துப் பார்ப்பதே செய்யப்பட வேண்டியதாகம். இவ்வாறாகப் பார்க்கும் பொழுதுதான், இலக்கியம் சமூகத்தின் சிந்தனைக்கான கருவியாகின்றது. இலக்கியத்தை இவ்வாறு (சமூகத்தின் சிந்தனைக்கு வேண்டிய கருவியாக) காட்டுவது தான் இலக்கிய வழி வரலாற்றின் கடமைப் பொறுப்பு ஆகும், இலக்கியத்தை வெறுமனே வரலாற்றுக்கான ஒரு சான்றாக ஆக்குவதன்று.'8

இலக்கியத்தைச் சமூக சிந்தனை வேண்டிய ஒரு கருவியாகப் பார்க்க வேண்டுமென 1931-ம் ஆண்டிலேயே எடுத்துக் கூறப்பட்டு விட்ட இக்கருத்து இன்று பூரணமாக ஆராயப்பட்டுள்ளது. இலக்கியத்தினதும் இலக்கிய வரலாற்றினதும் கடமைப் பொறுப்புகள் பற்றி ஆராயும் காத்திரமான ஆய்வு எதுவும் இதனைக் கவனிக்காது விட்டு விடவில்லை. இந்த வாதத்தினை றேய்மண்ட் வில்லியம்ஸ் பின்வருமாறு முன்வைத்துள்ளார்.

'இலக்கியம் என்பது ஆரம்பத்திலிருந்தே சமூகத்திலே ஒரு பயில்வழக்காக விருந்து வருகின்றது. உண்மையில், இப்பயில்வழக்கும் மற்றைய எல்லாப் பயில் வழக்குகளும் இல்லாத வரையில், அந்தச் சமூகம் பூரணமாக உருவாக்கப்பட்டதாகக் கொள்ள முடியாது'9

இலக்கிய உருவாக்கம் இல்லாது எந்த ஒரு சமூகமும் உருவாக்கம் பெற்றுவிட்டதாகக் கொள்ள முடியாதென்பது தெட்டத் தெளிவாகின்றது. சமூக உருவாக்கத்துக்க இலக்கிய உருவாக்கம் ஓர் அங்கமாகம். வேறொரு முறையில் சொல்வதானால், தனக்கென ஒர் இலக்கியம் இல்லாத சமூகம் உண்மையான கருத்தில், ஒழுங்கமைப்புப் பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. இலக்கியம் என்பதுது எழுதப்பட வேண்டியல்லை. அது அடிப்படையில் வாய்மொழி நிலைப்பட்டதே எனும் உண்மையை இக்கட்டத்திலேல நினைவுறுத்திக் கொள்ளுதல் அவசியமாகும்.

இலக்கியத்தைச் சமூக உருவாக்கத்தின் ஓர் இன்றியமையா அமிசமாகக் கொள்ளும், இலக்கியம் பற்றிய, இந்நோக்கு, இலக்கிய வரலாறு சம்பந்தமான உள்ளீட்டு குறிப்புக்கள் பலவற்றை உடையதாகவுள்ளது; அக்காலத்தின் கண்ணாடியாகும். அதன் ஆக்கியோனும் அதன் முதலாம் சுவைஞரும் எந்தச் சமூகத்துக்குரியோராகவிருந்தனரோ அந்தச் சமூகத்தின் வரலாற்றுப் பிரதிபலிப்பாகும். மறுபுறத்தில், அதனைக் காலத்தின் உற்பத்திப் பொருளாக மாத்திரம் கொள்ளாது அந்தக் காலத்தையே உற்பவிப்பதாக, கடந்த காலத்தின் கண்ணாடியாக மாத்திரமல்லாது வருங்காலத்துக்கான விளக்காகக் கொள்வதென்பது வெறும் இலட்சியவாதமாகி விடாது.'10 இலக்கியப் படைப்பு ஒன்றிலேயே அது தோன்றிய காலத்தின் பிரச்சினைகளை மனிதத நிலைப்பட எடுத்துக் கூறும் தன்மை காணப்படுகின்றது எனும் உண்மையின் அடிப்படையிலேயே, இலக்கியம் ஒரு காலத்தையோ, ஒரு காலகட்டத்தையோ தோற்றுவிக்கின்றது எனும் கருத்துக் கூறப்படுகின்றது. விவரிக்கப்படும் பாத்திரங்கள் மானிடப்பிறப்புக்களாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் அவை மானுடத்தன்மையுடையனவாகவே சித்திரிக்கப்படும். இவ்வகையாக இலக்கியம், மானுட நிலைப்பட்ட ஒரு அகண்ட பரப்புருவப் பார்வையினை வழங்குகின்றது. அதனால் அகண்ட பரப்புருவப்ப பார்வையினை வழங்குகின்றது. அதனால் அந்த இலக்கியத்தின் வாசகன், அவ்வாசகத்திலே காணப்படும் மனித நிலை அழுத்தப் பண்பினைக் கொண்டு அக்கால கட்டத்தையே இனங் கண்டு கொள்கிறான். இலக்கியம் காலத்தை உற்பவிக்கின்றது என்பது உண்மையாகி விடுகின்றது. இதில் குறிப்பிட்ட அந்த மனித நிலை அழுத்திக் கூறப்படுவதற்குக் காரணமாக அமையும் மேலாண்மையுடைய கருத்து நிலையில் பங்கு மிக முக்கியமானதாகும்; அது ஆழமாக நோக்கப்படல் வேண்டும்.

ஹன்ஸ், றொபற் ஜோஸ் (Hans Robert Jauss) அவர்களால் 'சமூகத்தை உருவாக்குவதான இலக்கியத்தின் செய்பணி' எனக் குறிப்பிடப் பெறும்11 இந் நோக்கு இலக்கிய வரலாற்றிலே தர்க்க முக்கியத்துவமுடைய ஒரு கருத்து ஆகும். இலக்கியத்தின் உயிர்க்கூறுகள் என அதன் 'வேளை, இனம், சூழல், ஆகியனவற்றையே கொள்ளும் ரெயினின் கொள்கையிலிருந்து12 மேற் சென்று, ஹரிலெவின் குறிப்பிடுவது போன்று, 'இலக்கியம் என்பது சமூகக் காரணிகளின் விளைவு மாத்திரமன்று, அது சமூக விளைவுகளக்கான காரணமாகவும் அமைந்துது விடுகின்றது.'13 எனும் நிலைக்கு வந்து விடுகின்றோம்.

இலக்கியம் என்பது காலத்தின் உற்பத்தி, அது காலத்தையும் உற்பவிக்கின்றது எனும் இக்கருதுகோளை, 'சமூக வாழ்க்கையின் முழுமையும் நோக்குதல்' எனும் கருத்தின் பின்புலத்தில் வைத்து நோக்கும் பொழுது, சமூக உறவுகளில் இலக்கியம் வகிக்கும் பங்குத் தெளிவாக எடுத்துக் காட்டப்படுகின்றது. சமூகவுறவு என்பது 'சமூக இணைப்புக்களால் தோற்றுவிக்கப் பெறும், சமூக இணைப்புக்களைத் தோற்றுவிக்கும் சமூக ஊட்டாட்டங்களாகும். இச் சமூக உறவுகள் சமூக நிலைப்பட்ட அறிமுறைக்காக, பருநிலைச் சமூக உறவுகள், கருத்து நிலைச் சமூக உறவுகள் என வேறுபடுத்தப்படும். பருநிலைச் சமூக உறவுகளின் எதிர் நிலையாகவுள்ள கருத்து நிலைச் சமூக உறவுகள் பிரக்ஞையிலிருந்து விடுபட்டனவாகவிருப்பதில்லை. பிரக்ஞையினூடாகவும் சித்தத்தினூடாகவும் செல்லும் இவை, சமூக மேற்கட்டுமானப் பரப்பில் செய்முறை நடவடிக்கைகளின் சமூக வடிவமாக அமைந்து விடுகின்றன.


இவ்வாறு அமைவதனால், இவை பிரக்கஞைக்குப் புறத்தே ஒர் இருப்பு நிலையினைப் பெற்று விடுகின்றன.'14 இலக்கியத்திற் பருநிலைச் சமூக உறவுகள் சித்திரிக்கப்படும் முறையில், கருத்து நிலைச் சமூக உறவுகள் முனைப்புடன் முன் கொண்டு வரப்படுகின்றன. சமூகப் பிரக்ஞையினூடாகக் கருத்து நிலைச் சமூக உறவுகளை வளர்த்தெடுக்க இலக்கியம் உதவுகின்றது. அவ்வாறு வளர்த்தெடுக்க ஓர் ஆக்கம் என்ற வகையில் விநியோகிக்கப் பெற்று, வாசிக்கப் பெற்று, விவாதிக்கப் பெறுகின்ற பொழுதுது, அந்த இலக்கியத்திற் சுட்டப் பெறும் கருத்து நிலைகளை, உறவுகளை பிண்டப் பிரமாணமான கருதுகோள்களாகச் சித்திரிக்கும் பொழுதுதான், இலக்கியம் ஒரு காலத்தை உற்பவிக்கின்றது. கருதுகோள்களைக் கருத்துப் பொருள்களாக்கி அவற்றுக்கு ஒரு பிண்டப் பிரமாணமான பரிமாணம் வழங்கும் பொழுதுதான்15 அந்தக் காலத்தைப் பற்றி, அதன் பண்புகள் பற்றி, தெளிவான ஒரு கருத்து நமக்கு ஏற்படும். இந்தக் கருத்துத் தான் சமூக விளைவுகளை ஏற்படுத்துவதாக அமையும்.

இத்தகைய ஓர் உணர் முறைமை காரணமாகத்தான் இலக்கியம், சில பிரக்ஞை முறைமைகளையே தோற்றுவித்து விடுகின்றது. இப்பிரக்ஞை முறைமையை நாம் வரலாற்றுப் பின்னணியில் வைத்து நோக்கும் பொழுது அப்பிரக்ஞை தேசியப் பிரக்ஞை எவ்வாறிருந்த தென்பதையும் காட்டுவதாக அமைந்து விடும்.

இவ்வாறு சற்று விரிவாக நோக்கும் பொழுது தான் இலக்கியம் சமூக உருவாக்கத்தின் பெரும் முக்கியத்துவம் புலனா‘கத் தொடங்கும் 'சமூக உருவாக்கம் என்னும் விவரணக் கருதுகோள், உண்மையாக நடைமுறையிலுள்ள ஒரு சமூகக் குழுமத்தை, அது பற்றிய நுனுக்க விவரங்கள், அது கடந்த காலத்திலே தோற்றுவித்தவை, அதன் அமைவு இயல்புகள்; மீளமைவு இயல்புகள், தற்செயலாகவும் திட்டமிட்டும் நடந்த நிகழ்வுகளின் பலா பலன்கள், கடந்த காலத்து மரபுரிமைச் செல்வங்கள் எதிர் காலத்துக்கான அதன் உள்ளார்ந்த ஆற்றல் வளம் ஆகியனவற்றுடன் விவரிப்பதாகும். எனவே இக்கருதுகோள், குறிப்பிட்ட புவியியல் எல்லைகளுக்குட்பட்ட, குறிப்பிட்ட வரலாற்றையுடைய, குறிப்பிட்ட மூல வளங்கள் உள்ள, குறிப்பிட்ட பொருளாதார, அரசியல் ஒபங்கமைவும், பண்பாட்டமிசங்களுமுள்ள ஓர் உருப்படியினைக் கருதும்.'16

சமூக உருவாக்கம் எனும் இக்கருதுகோள் பற்றியும், கால வகுப்புக்கு இதனை உரை கல்லாகக் கொள்வது பற்றியும் பின்னர் ஆராயப்படவுள்ளது. எனவே இக்கட்டத்தில் இக்கருதுகோளை விளக்கவும், இலக்கியத்துடன் இணைக்கவும் முயலப்படவில்லை. இக்கட்டத்தில் வலியுறத்தப்படவேண்டியது, இலக்கியம் என்பது சமூக உருவாக்கத்தின் ஓர் அங்கம் என்பதும், அதனால் இலக்கியத்தைச் சமூகத்தை உருவாக்கும் ஒரு சக்தியாகக் கொள்ள வேண்டும் என்பதுமேயாகும்.

இலக்கியத்தினை இவ்வாறு நோக்குவது காத்திரமான ஆய்வுக்குரியது என்பது ஏற்றுக் கொள்ளப்படின், ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, இலக்கிய வரலாறு, தனிக்கவனத்துக்குரிய ஓரு புலமை முயற்சி ஆகி விடுகின்றது. எனவே 'இலக்கிய வரலாறு' என்பது எதனைக் குறிக்கின்றது என்பதனையும் அதன் ஆய்விற் சம்பந்தப்பட்டவை யாவை என்பதையும் தெளிவுபடுத்துவது நமது கடமையாகின்றது.

இக்கட்டத்திலே, இலக்கியம் பற்றிய ஓர் அடிப்படைவிடயத்தை, அதன் 'இலக்கியத் தன்மை' பற்றிய ஒரு விடயத்தைத் தெளிவு படுத்துதல் அவசியமாகின்றது. இலக்கியம் சமூகத்தை உருவாக்கும் பண்பு கொண்டது எனும் கருத்தினை முக்கியமான, செல்லுபடியுள்ள கருத்தாக ஏற்றுக் கொள்ளும் பொழுது, அச்சமூகம் உருவாக்கப்பட்டதற்கும், அந்த உருவாக்க முழுமைக்கு இலக்கியம் இன்றியமையாததாகவிருந்தததற்கும் சான்றாகக் கடந்த கால இலக்கியத்தைப் பயன்படுத்தலாம். இலக்கியத்தை அவ்வாறு பயன்படுத்துவது, அதன் ஆக்கவியல் அமிசங்களின் தனித்துவமான சிறப்புக்களை முனைப்புற எடுத்துக் காட்டாது. மேற்குறிப்பிட்ட தேவைக்குக் கடந்த கால இலக்கியத்தைப் பயன்படுத்தும் பொழுது, அந்த வேளையில், அந்த இலக்கியம் பமற்றெந்த வரலாற்றுச் சான்றையும் புதைபொருட் கலைப்பண்டமோ, வரலாற்றுச் சின்னமோ-போன்றாகவே இருக்கும். அதாவது அந்தப் படைப்பினுள் வரும் செய்திகளை அன்றேல், தரவுகளைக் கொண்டு வரலாற்றுக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இலக்கியத்தின் சர்வ முக்கியத்துவமுடைய பண்பு, அது கடந்த காலத்தின் உற்பத்திப் பொருள் என்பதுது மாத்திரமன்று; அதற்கு ஒரு நிகழ் கால இயைபும் உண்டு என்பதுமே. இளங்கோவோ, மில்ற்றனோ, கம்பனோ, ஷேக்ஸ்பியரோ கடந்த காலத்தின் விளைபொருள்களாகவிருக்கும் அதே வேளையில் சமகா‘ல இயைபுமுடையவர்கள்.

இலக்கியத்தின் இவ்வமிசம் தான் இலக்கியம் வரலாற்றைத் தனிக் கவனத்துக்குரிய துறையாக, அது பற்றிய பிரச்சினைகளைச் சுவாரசியமானவையாக ஆக்கி விடுகின்றது. 'இலக்கியத்தின் கடந்த கால முக்கியத்துவமும் நிகழ்கால அர்த்தங்களும்' பற்றி மீண்டும் பேசவுள்ளோம். இக்கட்டத்தில் அது அறிமுக வகையாக இங்குக் குறிப்பிடப் பட்டதற்குக் காரணம், ஒரு பயில்துறை எனும் வகையில் இலக்கிய வரலாற்றின் திட்ட வட்டமான தனித்துவத்தைச் சுட்டுவதற்கேயாம்.

'இலக்கிய வரலாறு' என்பது, றால்ஃப் கொஹென் (Rolph Cohen) என்பாரது கூற்றுப்படி, 'கால வரன் முறையில் வரிசைப்படுத்தப்பட்ட ஆக்கங்களை, வரலாற்று நடைமுறையின் முழுமைக்கு அத்தியாவசியமான அம்சங்களாகக் கொள்ளும் பயில்துறை' ஆகும்.17 அவ்வாக்கியத்தின் இறுதிப்பாக்கம்-'வரலாற்று நடைமுறைமையின் முழுமைக்கு அத்தியாவசியமான அமிசங்களாகக் கொள்வது' என்பது - நாம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ள வகையில், இலக்கியம் எவ்வாறு பண்பாட்டினுள் அடங்கியது என்பதையும், பண்பாட்டைத் தோற்றுவிக்கின்றது என்பதையும், எவ்வாறு சமூகத்தை உருவாக்குகின்றது என்பதையும், சமூகத்தைப் பிரதிபலிக்கின்றது என்பதையும் குறிப்பிடுவதாகும்.

இதனால், இலக்கிய வரலாற்றின் தொடக்கத்தில் அந்த இலக்கியங்களுக்கு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் கால அடைவு ஒன்று இருத்தல் அத்தியாவசியமாகும். தமிழைப் பொறுத்த மட்டில், ஆய்வாளர்களுக்கு உள்ள அடிப்படைத் தகராறு நூல்களின் கால அடைவு பற்றியதேயாகும், இச்சிக்கலுக்கான தீர்வினை அறிந்து கொள்வதற்க தமிழிலக்கிய வரலாற்றின் சமூகவியலை ஆராய்தல் வேண்டும்.18 இலக்கிய ஆக்கங்களைக் கால அடைவு முறைப்படி ஒழுங்குற வைத்து, அவற்றினூடே ஓர் அமைதியினையோ தோரணையினையோ (பலவற்றை உள்ளடக்கும் சில பண்புகளைக் காண முனையும் பொழுது அத் தொழிற்பாடு; இலக்கிய வரலாறு சம்பந்தப்பட்டதாக இருக்குமளவுக்கு இலக்கிய விமரிசனம் சம்பந்தப்பட்டதாகவும் அமைவதைக் காணலாம்.

இலக்கிய வரலாற்றின் தனி முறைச் சிறப்பு இதிலே தான் காணப்படுகின்றது. ஒரு புறத்தில் அது பிரயோக வரலாற்றியல் ஆய்வு ஆகும். மறுபுறத்தில் பிரயோக விமர்சனம் ஆகும்.

முதலில், பிரயோக வரலாற்றியல் ஆய்வு எனும் தன்மையை விளக்குவோம். பிரயோக வரலாற்றியல் ஆய்வு என்பதுது சமூக அறிவியல் விசாரணைகளை மேற்கொண்டு செல்லும் திட்ட வட்டமான நோக்குடன் மேற்கொள்ளப்படும். கடந்த காலம் பற்றிய ஆய்வுப் பயணமாகும். மனித நடத்தைப்பற்றிய பொது விதிகளைக் கண்டுபிடித்தல் அவற்றை அபிவிருத்தி செய்தலாகிய, சகல துறைகளையுமுள்ளடக்கிய புலமை முயற்சியிற் பங்க கொளல், சமூக அறிவியலாளர்களது மாதிரியங்களைத் தாலப் பரப்பில் வைத்துப் பரீட்சித்தால், சமூக அறிவியலின் முன்மொழிவுகளைச் சரி பார்ப்பதற்குதவும் வகையில் ஆய்வுகளைச் செய்தல் ஆகியன பிரயோக வரலாற்றாசிரியனது செய்பணிகளாகும்.19

கடந்த காலத்தின் சமூக உறவுகளை மற்றெந்த வரலாற்றுச் சான்றினாலுங் காட்ட முடியாத முறையிலே இலக்கிய வரலாறு வெளிப்படுத்துவதனால், இலக்கிய வரலாறு பிரயோக வரலாற்று ஆய்வு ஆகின்றது. இதனால் இலக்கிய வழி வரலாறு, மனித அறிவின் இரு துறைகள் மனதவியல், சமூக அறிவியல் ஆகியன சந்திக்கும் தளமாகிறது.

தமிழிலக்கிய வரலாறு இப் பணியைக் கடமையுணர்ச்சியுடன் மிக நன்றாகவே செய்துள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றேயாகும். '1800 வருடங்கட்கு முற்பட்ட தமிழர்' (Tamil 1800 years Ago), `திராவிட இந்தியா' (dravidian India), 'தமிழ் ஆய்வு' (Tamil Studies), `கி.பி.600 வரை தமிழர் வரலாறு' (History of the Tamils upto 600 AD) போன்ற நூல்கள் உண்மையில் பிரயோக வரலாற்றாய்வு நூல்களே. இவற்றிலே பண்டைத் தமிழ் மக்களின் சமூக வாழ்க்கையை மீள அறிவதற்குச் சங்க இலக்கியங்களிலும் அதன் பின்னர் வந்த இலக்கியங்களிலுமுள்ள சான்றுகள் நிதானத்துடன் (அது இல்லாமலும்) பயன்படுத்தப்பட்டுள்ளன.20

தமிழில், இலக்கிய விமரிசனத்தை இலக்கிய வரலாற்றின் நடை முறையாகக் கொள்ளும் வழக்கம் நவீன கால இலக்கிய வரலாற்றிலேயே முனைப்புடன் தெரிகின்றது. பண்டைய, இடைக்கால இலக்கியங்களின கால அடைவு செய்யப்பெற்ற பொழுது, அம்முயற்சிகளில் இலக்கிய விமரிசனம் பிரக்ஞை பூர்வமாகத் தொழிற்படவில்லை. உரைப்பாரம்பரியத்தைத் தளமாகக் கொண்ட ஒரு இலக்கிய விமரிசனப் பாரம்பரியம் உண்டு என்பதை மறுத்தல் முடியாது. ஆனால் அது ஒரு மேலோட்டமான கருத்து நிலையாக-இலக்கியக் கருத்துத நிலையாகவே இருந்தது. அது அமைவுச்சீர்மையுடைய ஒரு விமரிசன முறைமையாக எடுத்துக் கூறப்படவில்லை. அத்துடன், அதனுள் தொழிற்பட்ட கருத்து நிலை/கள். சமயத் தொனியுடையதாக / உடையனவாக காணப்பட்டன / அது மாத்திரமல்லாது, இக்கருத்து நிலை இலக்கியம், இலக்கணம் இரண்டையும் தழுவியதாகவிருந்தது. இங்கு இலக்கணமென்பது இலக்கியம் செய்யப்படுவதற்க அதன் உன் நிலையாக அமையும் மொழி நிலை, நடை நிலை, இலக்கிய நியமங்களேயாகும். மேலும், தமிழில், இலக்கிய விமரிசனம் தனிப்பட்ட ஓர் இலக்கிய ஆய்வுத் துறையாக மேற்கிளம்பியது தற்காலத் தமிழிலக்கியம் வளர்ந்த பின்னரே என்பதை மனத்திருத்துதல் முக்கியமாகும். முதலில் இத்துறை இலக்கிய விமரிசனம் என்றே குறிப்பிடப் பெற்றது. ஆனால், பின்னர், தனித் தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டுமெனும் இயக்கம் வலுப்பெறத் தொடங்க இலக்கியத் திறனாய்வு எனும் தொடர் பயன்படுத்தப்பட்டது.* தமிழில் தோன்றிய முதல் இலக்கிய விமரிசன, நூல்கள் நவீன இலக்கியங்கள் பற்றியேயிருந்தன.21

தமிழ் இலக்கியப் புலமையின் முக்கியமான குறைபாடு, தமிழிலக்கியப் பாரம்பரியம் முழுவதையும், கபிலர் முதல் முருகையன் வரை வள்ளுவர் முதல் செல்வராஜ் வரை தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் யாவரையும் ஒன்றிணைந்த முழுமையாகக் காணத் தவறியமையாகும். பண்டைய இலக்கியங்களையும் நவீன இலக்கியங்களையும் தனித்தனியான, பிறிதான இலக்கிய தொகுதிகளாகக் கொள்ளும் பண்பு நிலவியது, தொடர்ந்தும் நிலவுகின்றது.22

_______________

* விமர்சனம்: விமரிசனம் எனும் சொற்கள் 'வி-மர்ச' எனும் வடசொல்லினடியாகப் பிறந்தவை. பரீட்சியத்தல் எனும் கருத்துடையவை. திறனாய்வு என்னும் தொடரில் வரும் திறன் என்னும் சொல்லுக்க செயல் நலம் என ஒரு கருத்து உண்டெனினும் அது 'திறமை'யுடன் தொடர்புடையதாகவே கொள்ளப்படுகிறது. எந்த ஒரு ஆக்கத்திலும் 'திறமை'யுள்ள பகுதிகள் உள்ளன என்ற ஆரம்ப எடுகோளுடன் விமரிசனத்தைத் தொடங்குவது பொருத்தமாகாது. சொல்லிலும் பார்க்க பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல் முக்கியம்.


இவ்வாறாகத் தானே, இது வரை செய்யப்பட்ட தமிழிலக்கிய வரலாற்று முயற்சிகளில் விமரிசன அமிசம் சிறிதேனும் முனைப்புப் பெறவில்லை. அத்துடன், தமிழிலக்கியம் முழுவதையும் உள்ளடக்கக் கூடிய ஒரு விமரிசன அடிப்படையை நாம் இதுவரை வகுத்துக் கொள்ளவுமில்லை.

எனினும், எந்த ஒரு இலக்கிய வரலாற்றுச் சிந்தனையையும் உருவாக்குவதற்கு, ஆதார சுருதியாக அமையும் ஒரு விமரிசன உணர்வு உண்டு. அந்த ஆதாரத் தளமானதுது நன்கமைக்கப்பட்ட ஒரு விமரிசன முறைமையாக வல்லாமல் கருத்துநிலைச் சாயையுடையதாகவேயுள்ளதென்பதுது தெரிய வரும்.

பிரயோக வரலாற்றாய்வுடனும், இலக்கிய விமரிசனத்துடனும் இலக்கிய வரலாற்றுக்குள்ள பிறப்பு நிலைத் தொடர்புகளைத் கண்ட நாம் அடுத்து, இலக்கிய வரலாற்றின் சீவாதாரமான அமிசமான, 'கடந்த கால முக்கியத்துவமும் நிகழ்கால அர்த்தங்களும்' பற்றி ஆராய்தல் அவசியமாகின்றது.

அது பற்றி ஆராய முனையும் இக்கட்டத்தில், இலக்கிய வரலாறு எனும் பயில்துறையின் வர்த்தமான நிலையினையும் அத்துடன் அது, ஆங்கிலத்தில் புது விமரிசனம் (New Criticism) எனக் குறிப்பிடப் பெறும் விமரிசன மரபின்23 அநுபவ வாத நோக்குக்கு, முரண்பட்டதாக விருப்பதனாலும், மார்க்ஸ“ய, கம்யூனிச விரோத இயக்கங்களின் சமூக-அரசியம் நிர்ப்பந்தங்களினாலும் எத்தகைய அறிவு நிலை அமுக்கங்களுக்கு ஆளாக வேண்டியிருந்தது என்பதைப் பற்றியும் ஒரு சிறிது அறிந்து கொள்வது பயன் தருருவதாகும்.

இலக்கிய வரலாறானது, ஆசிரியர்களின் வாழ்க்கை வரலாறுகள், அவர்களியற்றிய நூற்பட்டியல் விவரங்கள் என்ற நிலையிலிருந்து, தனிப்பட்ட ஒரு பயில்துறையாக, யொகாண் கொள்ஃபிறீட் ஹோர்டர் (Johann Gottfried Herder; 1744-1803), ஃபிறீடெறிக் ஷ்லெகெல் (freiderich Schhlegal; 1772-1829), ஹெகல் (Hegel; 1770-1831), ஸ்ரெய்ல் சீமாட்டி (Madame de Stael; 1766-1817) ஆகியோரால் வளர்த்தெடுக்கப் பெற்றது. ஸ்ரெய்ல் சீமாட்டி தான் எழுதிய 'இலக்கியம்' (de La Litterature; 1880) என்னும் நூலில், சமூகத்தால் நிர்ணயம் செய்யப்படும் இலக்கியத்தின் வரலாறு பற்றிய, துல்லியமற்ற ஒரு வகை முறையினை வகுத்திருந்தார். இலக்கியத்தின் சமூகவியலமிசங்கள் கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னரே இலக்கிய வரலாறு ஆய்வொழுங்குடைய ஒரு தனித்துறையா‘க வளரத் தொடங்கிற்று. அந்த வளர்ச்சியினள் இலக்கியத்தின் சமூகவியல் நிறுவகர் எனப் போற்றப்படும் ஹ’ப்பொலிற்றே ரெயின் (Hppolyte Taine; 1828-1893)'இனம், சூழல், வேளை' எனும் கருதுகோளை அறிமுகஞ்செய்து, 'இச்சக்திகளை அளவிட்டு அவற்றின் கருத்து அடையாளம் கண்டுபிடிக்கப்படின், அவற்றிலிருந்து, வாய்ப்பாடுகளிலிருந்து கண்டு பிடிக்கப்படுவது போல, எதிர்கால நாகரிகத்தின் பண்புகளை விதவரு முறையாக அறிந்து கொள்ளலாம்' என்று கூறினார்.24

இலக்கியத்தின் தனித்திறன் வழியாக வரலாற்றை எடுத்துக் கூறும் இலக்கிய வரலாறு ஆய்வொழுங்குத் தனித்துவமுடைய ஒரு பயில்துறையாக வளரத் தொடங்கிற்று. சமூக வரலாற்றின் ஒரு பகுதியாகி, அடுத்து பொது வரலாற்றின் இணைத்துறையா‘க வளரத் தொடங்கிற்று.

இவ்வளர்ச்சி நெறியின் பாற் பலர் கவரப்பட்ட அதே வேளையில், வேறு சில கொள்கையாளர்கள் இலக்கியத்துக்கு வரலாறு இருக்க முடியாதென மறுதலித்தனர். உதாரணமாக டபிள்யு பி.கேர். என்பார், இலக்கிய வரலாறு அற்றவை என வாதிட்டார். ரி.எஸ். எலியற்றும் எந்த ஒரு கலைப் பொருளினதும் கடந்த காலத்தை மறுதலித்தார். 'ஹோமர் முதல் ஐரோப்பிய இலக்கியம் முழுவதற்கும் சமநேர வாழ்வு உண்டு; அவை யாவுமே ஒரு சமகால அமைப்பையுடையன' என்றார்.25

சமூக வரலாற்றின் ஒரு பகுதியாக இலக்கிய வரலாறு வளர்ந்த முறையினை றெனே வெலெக் (Rene` Wellek) விவரித்துள்ளார்.

'இலக்கிய வரலாற்றினைப் பொது வரலாற்றினுள்ளே ஈர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள், குறிப்பாக அதனைச் சமூக மாற்ற தின் கண்ணாடியாகக் கொள்ளும் முயற்சி, அதிகம் பரந்து பட்டனவாகவும் வெற்றியார்ந்தனவாகவுமுள்ளன. இவ்வகைப்பாட்டின் மிகப் பழைய திட்ட நெறி சார்ந்த வகை முறை பற்றிச் சுட்டுவதே போதுமானது.

ஹ’ப்பொலிற்றே ரெயினின் முத்தளக் கோட்பாட்டை, சூழல்-இனம், வேளை, நேர்க்காட்சிவாத நியதி வாதத்தின் வேறுபடு வடிவங்களுள் ஒன்றா‘கக் கொள்வதென்பது அதனைத் தவறாக விளங்கிக் கொள்வதாகவே முடியும், ரெயின் ஒரு வகையான ஹெகலிய நிலைபாடுடையவர் என நான் காட்ட முயன்றுள்ளேன். ஹரி லெவின், (Harry Levin) பிரதானமாகத் தமது கேட்ஸ் ஓஃப் ஹோண் (Gates of Horn) எனும் நூலில் இலக்கியம் ஒரு நிறுவனம் ஆகும் எனும் கருத்தினைப் பயன்தரு முறையில் வளர்த்தெடுத்துள்ளார். றொனற்றா பொகியோலி (Renata Poggioli), இலக்கிய வரலாறெழுது கோளியலிற் பறெற்றோ‘ (Pareto) வின், சமூகவியலைப் பயன்படுத்த வேண்டுமென்றும், இலக்கியத்தின் புதுக்கால வகுப்புக்கு 'மீதம்' (residere) 'வருவிப்பு' (derivation) முதலிய பதங்களைப் பயன்படுத்த வேண்டுமென்றும் கூறியுள்ளார். பொகியோலியின் முன்னிலைக் கொள்கை (Theory of the Avantgarde) தலைநிலை பெற்ற ஒரு செல் நெறியினைச் சமூகவியற் கண்ணோட்டத்திற் பகுப்பாய்வு செய்கின்றது. அவர் காலத்தின் ஏவலில் நம்பிக்கை கொண்டுள்ளார். இதனால் கலைஞன் சமூக சக்திகளுக்குப் பலியாகும் பரிமாணத்துக்கு இழிந்து போகின்றான்.

இலக்கிய வரலாற்றைச் சமூக, பொருளாதாரச் சக்திகளின் பிரதிபலிப்பாக 'வியாக்கியானஞ் செய்வதில் மார்க்ஸ“யமே மிகப் பெரிய செல்வாக்கினையுடையதாக விருந்தது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இலக்கியம் 'கருத்து நிலை' யாகின்றது, வர்க்க நிலைமை பற்றிய பிரக்ஞை பற்றிய உள்ளீடான கூற்று ஆகின்றது.26

1941-இல் 'ஆங்கில இலக்கிய வரலாற்றின் தோற்றுவாய்' (The rise of English literary history) எனும் நூலினை எழுதிய வெலெக், 1979இல் எழுதிய 'இலக்கிய வரலாற்றின் வீழ்ச்சி' (The fall of literary history) என எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது. ஆரம்பத்தில் தான் பெரிதும் வளர்க்க விரும்பிய ஒரு துறை பற்றிய தனது இறுதித் தீர்ப்பைப் பின்வருமாறு (அககட்டுரையில் தொடர்ந்து) கூறியுள்ளார். 'முன்னேற்றம் எதுவும் இல்லை. வளர்ச்சியெதுவுமில்லை. ஆசிரியர்கள், நிறுவனங்கள் உத்திகளின் வரலாற்றைத் தவிர வேறு கலை வரலாறு கிடையாது. இதுவே, குறைந்தது என்னைப் பொறுத்த வரையில், ஒரு மாயத்தின் முடிவு, இலக்கிய வழி வரலாற்றின் வீழ்ச்சி,'27

1941க்கும் 1979க்கும் இடைப்பட்ட, 'தோற்றுவாய்'க்கும் 'வீழ்ச்சி'க்குமிடைப்பட்ட, வரலாறு ஓரளவு சுவாரசியமானதாகும். அது அரசியலும் அழகியலும் இணைந்த ஒரு வரலாறாகும்.

ஒருபுறத்தில் 'சூழலுக்கப் பொருளியல் அடிப்படையில் ஒரு மீள் வரைலிக்கணஞ் செய்ததன் மூலம், மார்க்ஸ“யம், வரலாற்றுக் காரண காரியங்களுக்க, ரெயினுடைய கொள்கையிலும் பார்க்க வன்மையான விதிமுறை அழுத்தமுடைய ஒரு கொள்கையினையும், அரசியற்பற்றுறுதிப் பாட்டில், பிருன்செசினுடைய (Brandes) கொள்கையிலும் பார்க்க கருணையற்ற ஒழுங்குப்பிடிப்பினையும் முன் வைத்தது. 28

மறுபுறத்தில், புதுவிமரிசனத்தின் அழகியல், வாசகனுக்குத் தரப்பட்ட பாடத்துக்கும் அதனை அவன் வாசிக்கும் பொழுது அவனிடத்து ஏற்படும் உணர்வுக் குறிப்புக்கப்பாற் செல்வதை விரும்பவில்லை.

இந்த இரு எதிர்நிலைகளுக்கிடையே கிடந்து இழுபறிப்பட்ட நிலையிலும், இலக்கிய வடிவங்களினதும் வகை மாதிரிகளினதும் தோற்ற, வளர்ச்சி, விகசிப்புக்களை, கலை பற்றிய கருதுகோள்களுக்கு அழுத்தங் கொடுக்கும் முறையில் வரலாற்று வரன் முறையில் எழுதும் ஒரு முறைமை தோன்றியது. அத்துடன், சமூக-வரலாற்று அமிசங்களை முனைப்புறுத்தி எழுதப்பட்ட இலக்கிய வரலாறுகளைக் கண்டிக்கும் புலமைப்பான்மையும் காணப்பட்டது. இதற்கு உதாரணமாக, ஸ்பில்லர் முதலியோரால் கொண்டு வரப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் இலக்கிய வழி வரலாறு (Literary History of the United States: 1949) எனும் நூலுக்கே றெனே வெலெக் எழுதிய விமரிசனத்தை எடுத்துக் கூறலாம்.29 வரலாற்றுப் பொருள் முதல்வாதிகள் இலக்கியத்துள் அரசியலைக் கொண்டு வருகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு புறத்திலிருக்குமதே வேளையில், அரசியலில் மார்க்ஸ“யத்தை எதிர்ப்பவர்கள், இலக்கியத்தின் சமூக அடிப்படையையே மறுதலிப்பதையும் காணலாம்.30

அண்மைக் காலத்து மேனாட்டு இலக்கிய விமரிசனத்தில் அதிகாரப்பட்டு நிற்கும் பண்பு, வரலாற்றமிசம் இன்மையாகும். 'ரைம்ஸ் லிற்றறறி சப்ளிமென்ற்' ("Times, Literary supplemetd") எனும் விமரிசனச் சஞ்சிகை, 'விமரிசகர்கள் தங்கட்குத் தரப்பட்ட செய்பணியை அணுகும் முறையிலே, வரலாற்று அமிசமில்லாமை வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது'31 என 1970இல் குறிப்பிட்டிருந்தது. கிறெய்க் குறிப்பிட்டது போன்று 'எமது காலத்தில், விமரிசன முயற்சியின் பழு சிறிதேனும் விளக்க அமிசத்தின் பால், அதாவது வரலாற்றின்பால் மிக மிகச் சிறிதே சாய்ந்துள்ளது.'32 இந்த வரலாற்று நோக்கை ஒதுக்கும் இப்பண்புக்கான கருத்துநிலைத் தேவையை அறிவது சிரமமான தொன்றன்று. அது நிச்சயமாக, மார்க்ஸ“ய விரோத அணுகு முறையினுள்ளேயுள்ளது.

இவற்றால்ல இலக்கிய வரலாறு பாதிக்கப்பட்டமை ஆச்சரியத்தைத் தருவதன்று. மேற்குறிப்பிட்ட நேர்க்காட்சி வாத (Positivist)த் தேவைகளுக்கியைய இலக்கிய வரலாற்றின் வரலாறெழுது முறையியல் அமைத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்தப் போக்குக்கெதிராகக் புலமையாளர், சிலரிடத்தே கூர்மையான எதிர்நடப்புக்களும் காணப்பட்டன. ஓக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்து இலக்கிய வரலாற்றுத் தொடரில் இயன் ஜாக்ஸ் எழுதிய 1815-1832இன் ஆங்கில இலக்கியம் என்னும் நூலுக்கு விமரிசனமெழுதிய பேராசிரியர் ஸ்ரீவன் மார்க்ஸ் (Steven Marcus) கூறியுள்ளவை. இந்த வரலாற்று விரோதச் செல் நெறியின் நோய்க் குறிகளை நன்கு எடுத்துக் காட்டுகின்றது.

'.................................... இலக்கிய வழி வரலாறு எழுதுவதிற் செய்யப்பட்ட வேண்டிய தீர்மானங்கள் சூழமைவுகள் பற்றியன்வே; ஒரு இலக்கியத்தினை நோக்குவதற்கெனத் தேர்ந்தெடுக்கும் சூழமைவு எத்துணை பரந்தது அல்லது குறுகியது; அதன் மீது, ஒரே நேரத்திலே தொழிற்படும் எத்தனை சொலவாக்குகளைக்காண விரும்புகின்றீர்கள்; இதனுடன் இயைபுபட்ட, இலக்கியத்துக்கு அப்பாலான உலகுடன், எத்தனை தொடர்புகளைத் கற்பிக்க முடியும் அல்லது தொட்டுக்காட்ட முடியும்?....................................................

இறுதியில், இவருடைய விளக்கத்துக்குப் பெருஞ்சேதம் செய்துள்ளது, இலக்கிய வரலாறு பற்றிய இவரது கருத்தின் குறுகிய தன்மையே. இது தொடர்பாக, ஒரு வினாவைக் கேட்பது நியாய பூர்வமானதாகவே படுகிறது. இன்றைய நிலையில் அதிகம் பிரச்சினைக்கரியதாகவிருப்பது ஓர் ஆய்முறைமை அல்லது ஆய்வொழுங்கு முறைமையென்ற வகையில் இலக்கிய வழி வரலாறா அன்றேல் பொதுவாக வரலாற்று ஆய்வொழுங்குகளுக்கு இன்று எமது பாண்பாட்டிலுள்ள நடப்பு நிலையா என்பதே அவ்வினவாகும். இலக்கிய வரலாறு உட்பட இலக்கிய ஆய்வினை, மனிதன்; சமூகம், நாகரிகம் பற்றிய ஆய்விலிருந்து பிரிக்க முடியாததென்ற விளக்கத்தினையுடைய நமக்கு, திரு.ஜாக்கினுடைய நூல் ஒரு ஏமாற்றமாகும். ஆசிரியரின் அறிவு, புலமை, புத்தித்திறன், அவர்தம் விமர்சன ஆற்றல், பண்புசால் நெறி, சொல் நயம் ஆகியன காரணமாக நாம் அவரிடம் எதிர்பார்த்தவை குறைக்கப்பட்டுள்ள அளவுக்கு நாம் ஏமாந்துள்ளோம்.'33

இலக்கிய வரலாறு எனும் இவ்வாய்வொழுங்கு நெறியின் நிலைமை அக்கறையை ஏற்படுத்திற்று. புதிய திசைகளில் அதனை வளர்ப்பதற்கான முயற்சிகளை இனங் காண்பதற்கும் அவ்வாறு வளர்ப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்தகைய முயற்சிகளில் நியூ லிற்றறறி ஹ’ஸ்ற்றறி (New Literary History) எனும் சஞ்சிகையும் ஒன்றாகும். அதில் இலக்கியவழி வரலாற்றின் அடிப்படைக் கூறுகள் மீள் பரிசோதனை செய்யப்பட்டன.

இலக்கிய வரலாறு எவ்வெற்றை உள்ளடக்கியது என்பது பற்றிக் கொஹென் கூறியுள்ளது, தமிழில் இலக்கிய வரலாறு பற்றி ஆராய்வதற்கு பொருத்தமானதாகும்.

'இந்த விமர்சகர்களை ஈர்த்துள்ள இலக்கிய வரலாறு என்பதுதான் என்ன? முதலாவதாக அது, நூல்களிடத்து வாசகர்களுக்குள்ள உறவின் வரலாறு ஆகும். வினா-விடை முறையிலமைந்த இந்த உறவுகள், ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வரன் முறைத் தொடர்புக்கு இடமளிப்பவையாகவுள்ளன. இந்த உறவு இலக்கிய நிலைப்பட்டதாகும். ஏனெனில், இது மாற்றங்கள், மொழிக் குறியீடுகளின் பொருள் மாற்றங்கள் பற்றியதே. ஆனால் 'மாற்றம்' என்பது வரலாறு சம்பந்தப்பட்ட ஒரு பண்பு நிலையாகும். இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட உறவுகளுக்கும்' அவற்றுக்கு ஆதாரமாக அமையும் கொள்கைத் தரவுகளுக்கும் அவற்றின் பிறப்பு, மீளமைப்புப் பற்றிய வரலாற்று விளக்கம் தேவைப்படுகின்றது. இதனால் இலக்கிய வரலாறானது, வியாக்கியானங்களின் புறப்பரப்பிலுள்ள ஒன்றாகவே சில விமர்சகர்களாற் கொள்ளப்பட்டாலும், எந்த ஒரு விமரிசன நடிவடிக்கைக்கும் வேண்டிய முற்கோளாக அமைந்து விடுகின்றது. இலக்கியக் கொள்கை, இலக்கிய விமரிசனம், இலக்கிய வரலாறு என்ற முந்நிலைப்பாடு உண்மையில், விமர்சகனுக்கும் பாடத்துக்குமுள்ள உறவின் வெவ்வேறான பயன்பாடுகளாகிவிடுகின்றது. கொள்கை, விமரிசனம், வரலாற என்பன இன்றியமையாத வகையில் வரலாற்றுத் தன்மையுடைய ஒழுங்கமைப்புக் கருதுகோள்களை முன்னூடகமாகக் கொண்டனவே. இந்த நடவடிக்கையின் நோக்கம் இலக்கிய ஆய்வை ஒழுங்குபடுத்துவது மாத்திரமன்று, விமரிசகன், குறித்த பாடத்துக்கான மற்றவர்களுடைய உணர்வுக் குறிப்புக்களைக் கணக்கெடுத்துக் கொண்டு, அப்பாடம் பற்றிய உணர்வு குறிப்பினைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கும் இந்நடவடிக்கை தேவைப்படுகின்றது.'34

இலக்கிய விமரிசனத்துக்கு இலக்கிய வரலாற்றின் இன்றியமையாமை இதனாற் கூறப்பட்டது. இதற்கு மேல், விமரிசனம் வரலாற்றை ஒதுக்கும் முயற்சியாக இருந்து விட முடியாது. இலக்கியப் பண்புகளிற் கா‘ணப்படும் மாற்றங்கள் வரலாற்று விளக்கங்களை யுடையனவாதல் அத்தியவசியமாகின்றது.

இக் கட்டத்திலே தான், முன்னர் 'கடந்த கால முக்கியத்துவமும், நிகழ்கால அர்த்தங்களும்' பற்றிக் குறிப்பிடப் பெற்றவை ஆராயப்பட வேண்டும். இத்துறையில், றொ‘பேற் வைமானின் (Robert Weimann) புகழ்பெற்ற 'இலக்கிய வரலாற்றிற் கடந்தகால முக்கியத்துவங்களும் நிகழ்கால அர்த்தங்களும்' எனும் பங்களிப்பு இப்பிரச்சினை பற்றிய விளக்கம் நிறைந்த ஓர் ஆய்வாகும்.35

இலக்கிய வரலாற்றுக்கான அவரது அடிப்படை அணுகுமுறை இயக்கவியலைச் சார்ந்ததாகும்.' 'இலக்கியம் வரலாறாகவும், வரலாறு இலக்கிய அமைப்பினதும் அழகியல் அனுபவத்தினதும் ஓர் அங்கமாகவுமிருக்கம் ஓர் கோணத்திலிருந்தே 'இலக்கிய வரலாற்றுப் பிரச்சினை அணுகப்படல் வேண்டும் என அவர் கூறுவர். இவ்வாறு கூறும் பொழுது, நாம் இதுவரை ஆராய்ந்த, 'இலக்கியத்தின் சமூகவுருவாக்கற் பண்பு' துல்லியமாகின்றது. அத்துடன், 'பிரதிபலிப்புக்கொள்கை'யை (இலக்கியம் சமூக வரலாற்று மாற்றங்களைப் பிரதிபலிக்கும் என்ற கொள்கையை)யும், இலக்கியத்துக்க அப்புறம் நிலையான ஓர் உற்பவிப்பாகக் கொள்ளாமல், நாம் 'நல்லதும் அழகானதும்' என்று கருதுவனவற்றுடன் இந்தப் பிரதிபலிப்புப் பண்பும் பின்னிப் பிணைந்து கிடப்பதே என்ற தெளிவும் ஏற்படுகின்றது.

இலக்கிய ஆக்கங்களின் நிகழ்கால அர்த்தங்களே நமது இலக்கியப் பாரம்பரியத்தை ஜ“வ மூச்சுடையதாக்குகின்றன. இலக்கிய வரலாற்றின் தேவை, 'பண்டைய' இலக்கியப் பாடங்கள் இருப்பதனால் மாத்திரம் ஏற்படுவதன்று. ஓர் இலக்கியம் நடந்துது முடிந்தத ஒரு காலத்திலே தோன்றினாலும் சமகாலக் கவர்ச்சியும் இயைபுமுடையதாகவிருக்கும். நடைமுறையை விளங்கிக் கொள்வதற்கும் அது தேவைப்படுகிறது. ஒரு கலையாக்கமானது கடந்த காலத்தின் உற்பத்தி என்ற வகையிலும், நிகழ்காலத்தின் அநுபவம் என்ற வகையிலும் அதன் பிறப்பு, பெறுமானம் பற்றியும், அதன் வளர்ச்சி, அமைப்புப் பற்றியும் அறிவதற்கு இலக்கிய வரலாறு தேவைப்படுகின்றது.

இலக்கியத்தை, 'கடந்த காலத்தின் உற்பத்தியாகவும்', 'நிகழ்காலத்தின் அநுபவமாகவும்' விளங்கிக் கொள்ளும் நடைமுறை ஒன்றுக்கொன்று புறம்பான வேறுபட்ட, பிறிதொதுக்கிய விடயங்களன்று; அவ்வாறு கொள்ள வேண்டியதுமில்லை; அவ்வாறு கொள்வோமேயானால், இலக்கியத்தை அதன் பழமைக்காகவும் (முற்றிலும் அப்பழமைக்காக மாத்திரமும்) இலக்கியத்தை அது தரும் ரசனையுணர்வுக்காகவும் மாத்திரமே கொண்டாடும் பண்பு மேலோங்கத் தொடங்கி விடும்.

இத்தகைய வரலாற்றுக் கொள்வாச் செல்நெறிகளுக்கான தமிழ் உதாரணங்களைக் காண்பது சிரமமன்று. இலக்கியங்களை அவற்றின் கல்தோன்றி மண் தோன்றாக் காலப் பழமைக்காகவும், எளிதிற் புரியா விளக்கமின்மைக்காகவும், கொண்டாடும் பண்பும், வயிற்றுக்கு நன்கீயப்பட்ட விருந்துகளின் பின்னர் புலவர்களின் சொற்றிறன்களில் திளைத்து விளையாடுகின்ற பண்பும், தமிழ் தெரிந்ததவர்களெனத் தன்மைத்தரம் கொண்டாடியவர்களிடத்தே காணப்பட்டமைக்கான சான்றுகள் உள்ளன. முதலிற் கூறியதன் காரணமாக இளைய தலைமுறையினர் பலர் பழைய இலக்கியங்களைப் புறக்கணிக்குமொரு தன்மையும், அடுத்துக் கூறப்பட்டதன் காரணமாக செந்நெறி இலக்கியங்களின் மூல பாடங்களை மனம் போனபடி திருத்தும் ஒரு பண்பும் வளர்ந்தன.36 தனித் தமிழியக்கப் போராளியான மறை மலையடிகளைப் பொறுத்த வரையில், தற்கால இலக்கியம் என்பது. 14ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர், உமாபதி சிவத்தின் பின்னர் வரும் 'பிற்கால இலக்கிய'மேயாகும். அக் கட்டத்தின் பின்னர் தோன்றிய தமிழிலலக்கியங்களால் எவ்வித பயனுமில்லை என்பதும், அவை தமிழின் பேரிலக்கிய மரபுக்கு ஐயந்திரிபறக் சேதம் விளைப்பன என்பதும் அவரது கருத்து.37

இலக்கியத்தையும், அதனைத் தோற்றுவித்த குழுமத்தையும் நிறைவுற விளங்கிக் கொள்வதற்கு இத்தகைய நோக்குகள் உதவப் போவதில்லை. இவ்விலக்கியப் பாரம்பரியத்தின் சிறப்பு, அதன் தொடர்ச்சியிலேயே தங்கியுள்ளது. அதன் பழைமையிலன்று. அத்தொடர்ச்சி வருங்கா‘லத்திலுமிருத்தல் வேண்டுமென்பதில் அக்கறை இருத்தல் வேண்டும். அத் தொடர்ச்சியானது, கடந்த காலத்திலிருந்து போன்றல்லாது, வருங்காலத்திலும், அது மக்களின் சீவாதாரமான, சீவத்துடிப்புள்ள வெளிப்பாட்டு மூலமாகத் தொடர்ந்திருக்கும் வகையில்ல இம்மொழிபேசுங் கூட்டத்தினரின் தேவைகளுக்குயைந்ததாகவிருத்தல் வேண்டும். இலக்கிய ஆக்கத்தின் வரலாற்றுப் பிறப்பை அறிவதற்குக் காரணம் அதன் தற்கால இயைபினை விளங்கிக் கொள்வதே. அந்தத் தற்கால இயைபினை, அலுவலக நேரங்களின் பின்னரும், தொழிலோய்வு பெற்ற பின்னரும், மாலைகளில் அவ்விலக்கியங்களின் 'நுண்பொருளாய்வு' செய்யும் 'செமியாப் பபாட்டு.* முயற்சிகளிற் கண்டு கொள்ளக் கூடாது.38 குறிப்பிட்ட இலக்கியமானது. எத்துனை வன்மையுள்ள, எதிர்காலத்துக்கான விளக்காகவிருக்கப் போகின்றது என்பதிலேயே அதன் தற்கால இயைபினை அறிந்து கொள்ளல் வேண்டும்.

அவ்வாறாயின், இலக்கிய வரலாறு என்பது, குறிப்பிட்ட இலக்கியத்தை அதன் வரலாற்றுச் சூழமைவில் வைத்து நோக்கிய பின்னர், அது கொண்டுள்ள 'உலகப் பொதுவவான பண்புகள்' பற்றிய தேடல் ஆகுமா? மனித வாழ்க்கையிற் சில உலகப் பொதுவான உண்மைகள் உள்ளன என்பது உண்மையே. இவ்வுலகப் பொதுவான உண்மைகளின் தனி முக்கியத்துவம் அவை குறிப்பிட்ட காலங்களிற் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் ஒரு சமூகப் பணியை நிறைவேற்றுவதேயாகும். எனவே இந்த உலகப் பொதுவான உண்மைகளை மாறுபா‘டுகளற்றவையாகக் காண்பதிலும் பார்க்க, ஒவ்வொரு குறிப்பிட்ட சமூக-வரலாற்று நிலைமையிலும் அவை எப்படி ஒரு சீவாதாரமான பங்கினை வகித்தன என நோக்குவது அத்தியாவசியமாகின்றது. எனவே, சம்பந்தப்பட்ட காலங்கள் பற்றி பூரணமான விளக்கத்தின் பின்னரே இந்த இலக்கிய உலகப் பொதுமைகள் கருத்துடையனவாக முனைப்புறும், அத்துடன், இந்த உலகப் பொதுமைக்குப் பல்வேறு காலங்களிற் கொடுக்கப்பட்ட சமூக அழுத்தத்தின் தன்மையை அறிந்து கொள்வதும் முக்கியமாகும். இப்படிச் செய்வது, வைமான் மிகுந்த அழுத்தத்துடன் கூறுவது போன்று, நாம் கடந்த கால இலக்கியங்களை நிகழ்காலத்துடன் எவ்வாறு இணைக்கின்றோம் என்பதைப் பொறுத்ததாகும். இதனைச் செய்ய உதவுவதே இலக்கிய வரலாற்றின் கடமை, பொறுப்பு ஆகும். இதற்கு
___________________

* உட்கொண்ட உணவு சீரணிக்காத நிலையில், அந்த உணவு சீரணமாக வேண்டுமே (அப்பொழுது தானே அடுத்த வேளைச் சாப்பாட்டை ருசித்துச் சாப்பிடலாம்) எனும் உணர்வுடன் செய்யப்படும் 'வெட்டி' வேலைகளை யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிற் 'செமியாப்பாட்டு முயற்சி' என்பா. செமியா, என்பது சீரணிக்காத என்பர்.
______

இலக்கியத்தின் பழமையோ, ரசக்கப்படுவதற்கான அதன் கவித்துவவளமோ மாத்திரம் முக்கியமாகா; அது எவ்வாறு கடந்த காலத்தினுள்ளிருந்து நிகழ் காலத்துடன் உரையாட முடிகிறது என்பதிலும், கடந்த காலத்தில் அது எவ்வாறு தோன்றியதென்பதைத் தெளிவுபடுத்தி, அதன் தற்கால இயைபினை எடுத்துக் கூறுவதற்கேற்ற வகையில் அதனை நாம் எவ்வாற அணுகுகின்றோமென்பதிலும்தான் இலக்கிய வரலாற்றின் சிறப்புத் தங்கியுள்ளது.

இவ்வாறு நோக்கும் பொழுது, இலக்கிய வரலாறு என்பது இத்துறை ஆய்வாளனுக்கு மாத்திரமே ஆர்வமுடைய ஒன்றாகி விடாது. அது, இவர்களுக்குரிய அளவு அதற்கு மேலுங் கூட-இலக்கியப் படைப்பாளிக்கும் அத்தியாவசியமானதாகும். ஏனெனில், விமர்சனமும் வரலாறும் சேர்ந்த இவ்விலக்கிய வரலாறு, அவன் சமூக வரலாற்றுப் பின்னணியில், தன் பங்கினை அறிந்து கொள்வதற்கும், தன் எழுத்துக்களை மதிப்பிட்டுக் கொள்வதற்கும் வேண்டிய பார்வையினை அளிக்கின்றது.

நாம் பண்டைய தமிழிலக்கியத்தை எவ்வாறு 'கண்டு கொண்டோம்' என்பது பற்றிய, எவ்வாறு பார்க்கின்றோம் என்பது பற்றிய ஒரு வரலாறெழுதுமுறையியல் மீள்நோக்கு, நாம், அந்த இலக்கிய பழமைக்கு எத்துணை மிகைமதிப்பு வைத்திருந்தேமென்பதையும், அந்தப் 'பழைமை' எம்மை எத்துணை ஆண்டு கொண்டிருந்த தென்பதையும் அறிய உதவும். அந்த மீள்நோக்க, எமது இலக்கிய வரலாற்றை மீட்டெழுதுவதிலுள்ள சிரமங்களையும், அந்த வரலாற்றை விளங்கிக் கொள்வதிலும், அதன் பயன்பாடு பற்றியும் நம்மிடையேயுள்ள அபிப்பிராய வேறுபாடுகளையும் அறிய உதவும்.


குறிப்புகளும் சான்றுகளும்

1. Robert E. Spiller, The third Dimension, Macmillan, U.S.A. 1965, P.223/

2. David Craig, Marxists on Literature, Penguin 1975, P.11. இம்மொழிபெயர்ப்பு இந்நூலாசிரியரது 'இலக்கியத்தில் முற்போக்குவாதம்' என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது, சென்னை, 1978.

3. L.C. Knights, "Literature and the Teaching of literature in I.A. Richards-Essays in his honour (ed) Rueben Brown et al. Oxford, New York, 1973, p. 278.

4. Maria Kuringyan, "Sociological analysis of works of Art in western researches today' in Aesthetics and the development of Literature (Problems of Contemporary World, No.65) Moscow, 1980, P.115.

5. தமிழ் இலக்கியத்தின் வரலாற்றினை எழுதியுள்ள பல்வேறு பாடநூல்களில், தமிழ் நாட்டின் 15ஆம், 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகளிற் காணப்பட்ட அரசியற் குழப்பங் காரணமாக, அக்கால இலக்கியங்களை இருள் சூழ்ந்த, வறண்ட இலக்கியங்களாக எடுத்துக் கூறும் பண்பினை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

6. சங்க காலத்தின் இலக்கிய வரலாறு பற்றி ஜன-சுந்தரம் (சிகரம், சென்னை, 1975-6) எழுதிய கட்டுரைகளில் இப்பண்பினைக் காணலாம். இலக்கிய வரலாற்றாய்வுத்திறன்மிக்குடைய கோ.கேசவன் போன்ற ஓர் ஆசிரியராலேயே (அவர் தம் பள்ளு இலக்கியத்தில்) இந்தக் 'கண்ணாடிப் பிரதிபலிப்பு'க் கோட்பாட்டின் மிகைப் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. அறுபதுகளின் ஆரம்ப கட்டங்களில் இலக்கியத்தின் சமூக இணைப்புகளுக்கு முக்கிய அழுத்தம் கொடுத்த (இந்த நூலாசிரியர் உட்பட்ட) சில விமரிசகர்கள் வரலாற்றா‘சிரியர்களினது போக்கே இதற்கான காரணமாக அமைந்தது என்று கொள்ளலாம் போலத் தெரிகின்றது. அறுபதுகளுக்குப் பின்வந்த விமரிசனத்தில் ஆக்கபூ‘வமான முன்னேற்றமில்லாது போனமையால், இது (சமூக இணைப்பு: கண்ணாடிப் பிரதிபலிப்பு) ஒரு வாய்ப்பாடாக்கப்பட்டு விட்டது. இப்பொழுது, இந்த அமிசத்தைக் கொண்டு மாக்சிஸ்டுகள் அல்லாதவர்களு மார்க்சிய விரோதிகளும் இந்த விமரிசகர்களையும் மார்க்சியத்தையும் குத்திப் பேசி வசை கூறும் ஒரு நிலை காணப்படுகின்றது.

7. Raymond williams, Base and Superstructure, in New left Review, No.82, Nov-Dec, 1973, London.

8. Water Benjamin (Angelus Novus-Frankfurt, 1966, p.456), Ralph Cohen (ed) New Directions in Literary History, London 1874, p.13 இல் அடிக்குறிப்பா‘கத் தரப்பட்டுள்ளது. சிந்தனைக்கருவி என்பதற்குப் பெஞ்சமின் பயன்படுத்தும் "organon" எனும் சொல் முக்கியமானதாகும். அரிஸ்டோட்டிலின் தருக்க எழுத்துக்களின் தொகுதியின் பெயர் அது.

9. குறிப்பு 7 இனைப் பார்க்க.

10. Robert Weimann, Significance and Present meaning in Ralph Cohen (ed) New Directions in Literary History, London, 1974, p.56.
(அழுத்தம் இந்நூலிசிரியருடையது)

11. Juss மேற்படி நூல், பக்.36.

12. ஹ’ப்பொலிற்றே ரெயின் எனும் பிரெஞ்சுக்காரர் தாம் எழுதிய 'ஆங்கில இலக்கியத்தின் வரலாறு' பற்றிய நூலில், இலக்கியத்துக்கும் சூழலுக்கும், அதன் காரணமாக வரலாற்றுக்குமுள்ள தொடர்பை 'வேளை, இனம், சூழல்' என்பனவற்றிற்கண்டு கொள்ளலாமென்று கூறியுள்ளார். ஆங்கிலத்தில் இவை "moment, race, milieu," எனக் குறிப்பிடப்பெறும்.

13. Harry Levin, Literature as an Institution in E & T. Burnsced Sociology of Literature and Drama, Penguin, 1973, p.62.

14. Yu. K. Pletnikov, Social Relations in Philosophy in USSR, Problems of historical materialiam Moscow, 1981.

15. இதனை ஆங்கிலத்தில் Reification எனக் குறிப்பிடுவர்.

16. Hamza Alavi, The structure of Colonial Formation, Paper witten for the conference on Underdevelopment, University of Bielifield, 1979.

17. Ralph Cohen, Introduction, op. cit., p.2

18. இப்பிரச்சினை பற்றிய முழு விவரத்தினை மூன்றாவது அத்தியாயத்திற் காண்க.

19. Michael Drake(ed), Applied Historical Studies, Methuen, London 1973, Introduction.

20. V.Kanakasabhaipillai, The Tamil 1800 years Ago, Madras, 1904, T.R. Sesha Iyengar, Dravidian India, Madras 1925.

M. Srinivasa Iyengar, Tamil Studies, Madras, 1914, P.T. Srinivasa Iyengar, Historyy of the Tamils, Madras, 1926.

21. தொ.மு, சிதம்பர ரகுநாதன், இலக்கிய விமர்சனம், சென்னை, 1948. க.நா. சுப்பிரமணியம், விமர்சனக்கலை, சென்னை, 1959.

22. கா.சிவத்தம்பி, இலக்கியமும் கருத்துநிலையும், சென்னை, 1982, பக். 8-10.

23. 'நியூ கிறிற்றிஸ’ஸம்'( New Criticism) என இலக்கிய விமரிசன வரலாற்றிற் குறிப்பிடப்படுவது 1930களில் பெரும் புகழெய்தியிருந்த ஆங்கில இலக்கிய விமரிசன முறைமையாகும். இங்கிலாந்தில் எஃப் ஆர்.லீவிஸ் (F.R. Levis) வில்லியம் எம்ப்ஸன் (William Empson) ஐ.ஏ, ரிச்சாட்ஸ் (I.A. Richards) என்போ‘ரும் அமெரிக்காவில், கிளென்த் பூறூக்ஸ் (Cleanth Brooks), அலன் ரேற் (Allan Tate), ஜோன் குறோ றான்சம் (John Crowe Ransom) ஆகியோரும் இவ்வியக்கத்தின் முதல்வர்களாகக்க கருதப்பட்டனர்.

இலக்கியம் பற்றிய மதிப்பீடு, இலக்கியத்திற்கு இயல்பாகவுரிய, அதனுள்ளிருந்து வருகின்ற இயல்புகள் கொண்டே செய்யப்பட வேண்டுமென்பதும், விமரிசனத்தின் சிரத்தை, தரப்பட்டுள்ள பாடத்தை, 'பக்கத்திலுள்ள சொற்களை' (words on the page) விளங்குவதாக இருக்க வேண்டுமே தவிர விமரிசகரின் சொந்த ரசனை உணர்வையோ, அதனை எழுதிய ஆசிரியரது வாழ்க்கை வரலாற்றுப் பின்னணியையோ, அவ்வாக்கம் தோன்றிய சமூக, வரலாற்றைப் பின்னணியையோ ஆராய்வதாக இருத்தல் கூடாது என்பது இவ்விமரிசன முறைமையின் வாதமாகும். கவிதைகளைக் கொடுத்து 'செய்முறை விமரிசனம்' (Practical Criticism) செய்யும் முறைமையை இவ்விமரிசன முறை ஊக்குவித்தது.

மெய்யியற்றுறையில் வளர்ந்த நேர்க்காட்சி வாதத்துக்கும் (Positivism) இதற்கும் நெருங்கிய கருத்து நிலைத் தொடர்புண்டு.

ஜோன் குறோ றான்சம் (John Crowe Ransom) என்பார் தாம் 1941இல் எழுதிய நூலுக்கு (New Criticism) எனப் பெயரிட்டிருந்தார். இத்தலைப்பைக் கொண்டே இவ்விமரிசன முறைமை குறிப்பிடப்பெற்றது.

இவ்விமரிசன முறைமையின் அடிப்படையான கொள்கையோடு ஆசிரியருக்கு ஆசிரியர் உள்ள அழுத்த வேறுபாட்டுடன், இக்கருத்துக்கள் எடுத்துக் கூறப்பட்டன.

24. மேனாட்டு இலக்கியப் புலமை மரபில் இலக்கிய வரலாறு பெற்ற இடம் பற்றிய தெளிவான விளக்கத்துக்க, றெனே வெலெக்கின் பின்வரும் நூல்களைப் பார்க்க, Rane Wellek, A History of Modern Crriticism, Vol. I (1955), Jonathan Cape, London.

25. மேற்படி நுல் Vol. IV. p. 29.

26. Rane Wellek and Austin Warren, Theory of Literature, Penguin, 1980, p.254.

27. Rane Wellek, The Fall of Literary History in Richard Amacher and Victor Lange (ed), New Perspectives in Criticism, Princeton, 1979.

28. மேற்படி கட்டுரை.

29. Harry Levin in Sociology of Literature and Drama (ed). E & T Burns, Penguin, p. 63.

30. George, C. Grabowicz, Towards a History of Ukranian Literature, Harvard Universiity Press, 1981.

31. David Craig Marxists on Literature, பக், 134இல் மேற்கோள் காட்டப்பெற்றுள்ளது.

32. மேற்படி கட்டுரை.

33. Steven Marcus in E & T. Burns (ed). loc. cit, p. 132-135.

34. Ralph Cohen, முற்குறிப்பிட்ட நூல், பக். 9, அழுத்தம் இந்நூலாசிரியருடையது.

35. மேற்படி நூல், பக். 43-61.

36. காலஞ்சென்ற டி.கே. சிதம்பரர முதலியார் கம்பராமாயணப் பாடற் பாடங்களிற் செய்ய முயன்ற திருத்தங்கள் பற்றியே இங்கு குறிப்பிடப் பெறுகின்றது. எஸ்.வையாபுரிப் பிள்ளையின் கம்பன் காவியத்தில் வரும் இப்பிரச்சினை பற்றிய கட்டுரையினைப் பார்க்க.

37. மறைமலை அடிகள், முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவர், கழகம், 1957, பக். 136.

38. இன்று உலலகிற் காணப்படும் அந்நியமயப்பாட்டு நிலையிற் குறித்த ஒரு சமூக மட்டத்தினரிடையேயும், வயது மட்டத்தினரிடையேயும் இலக்கியம் இத்தகைய 'ஒளித்துப் தப்ப' விரும்பும் முயற்சிகளுக்கும் ஆட்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததே. வெகுசன இலக்கியம் எனும் பெருங் கைத்தொழிலின் போக்கே இதுதான். இவ் இலக்கிய வரலாற்றாய்வில் இப்பொழுது நாம், சமூக-லாபமுடைய, ஆக்க பூர்வமான போக்குடைய இலக்கியங்கள் பற்றியே ஆராய்கின்றோம். வெகு சன வாசிப்புக்காக எழுதப்படும் இலக்கியங்கள் பற்றிய தனி ஆய்வு அவசியம்.

பார்க்க. கா.சிவத்தம்பி, நாவலும் வாழ்க்கையும், சென்னை, 1987.

......

++++++++++++++++++++++++++

தமிழில் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சி

I

தமிழிலக்கியத்தின் வரலாறு பற்றியும் தமிழ் மக்களின் இலக்கிய வரலாறு பற்றியும் எழுதப்பட்டுள்ளனவற்றின் தோற்றல், ஆரம்ப கால வளர்ச்சி, இன்றைய வளர்ச்சி நிலைபற்றி அறிவதற்கா‘ன முயற்சி இவ் அத்தியாயத்தில் இடம் பெறுகின்றது.

தமிழிலக்கியத்தின் வரலாறு, தமிழரின் இலக்கிய வரலாறு பற்றிய எழுத்துக்களை இவ்வாறு நோக்குவது இதுவே முதற்றடவையானமையால், அவ்வபிவிருத்திகளைக் கால வரிசைக்கிரமமான தொடர்நிலையாக எடுத்துக் கூறும் எண்ணமே முதலில் இருந்தது. ஆனால் இவ்வாய்வின் தேவைகள் அத்தகைய 'முற்று முழுதான ஒரு தொடர் நிலைக்கால வரிசைக்கிரமக் கூற்றினால்' பயனடையப் போவதில்லை. மேலும் அத்தகைய, 'முற்று முழுதான சம்பவத் தொடருரை' என ஒன்று இல்லை. எந்த ஒரு தொடருரையிலும் ஆதார எடுகோளாக ஒரு கருத்து இருக்கவே செய்யும். அந்தக் கருத்து, அத்தொடருரை கூறுவோனது. உலக நோக்கினைக் காட்டுவதாக அமையும், குறிப்பிட்ட ஒரு நடைமுறையின் ஆதாரசுருதியான கருத்து இல்லாது அந்நடைமுறையினை எடுத்துக் கூறிவிட முடியாது.

தமிழில் இலக்கிய வரலாற்று வளர்ச்சியினைக் கோடிட்டுக் காட்ட முனையும் பொழுது, இதுவரை அவ்விடயம் சம்பந்தமாக எழுதப் பெற்ற நூல்கள் பற்றிய ஒரு விரிவான விவரத்தினைத் தருவதற்கு முயலுதல் வேண்டும். தமிழ் மொழியில் வெளிவந்துள்ள நூல்கள் யாவற்றையும் உள்ளடக்கிய விரிவான நூற்பட்டியல் எதுவும் தமிழில் இல்லை. "English books in print" (அச்சிலுள்ள ஆங்கில நூல்கள்) என்பது போன்ற ஒரு நூல் தமிழுக்கு இல்லை. ஆயினும் இந்தியாவின் 1958ஆம் வருடத்திய 'நூல், புதினப் பத்திரிகைகள் சேர்ப்பித்தற் சட்ட'மும், இலங்கையின் 1948ஆம் வருடத்துப் 'புத்தகங்கள், பருவ இதழ்கள் பதிவுச் சட்டமும்', அவ்வந்நாட்டின் மொழிகளின் வெளிவந்த நூல்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரிப்பதனைக் கட்டாயமாக்கியுள்ளன. தமிழிலுள்ள நூல்கள் யாவற்றினையும் கொண்ட ஒரு நூற் பட்டியலை வெளியிடுவதற்குத் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. சீகன்பால்கு ஐயரின் பிபிலோதிக்கா மலபாறிக்கா (Bibilotheca Malabarica, 1708) என்னும் தொகுதி பற்றிக் குறிப்புரை கூறும்பொழுது காமில் ஸ்வெலபில் கூறியுள்ளவை இன்னும் உண்மையாகவேயுள்ளன. 'அதன் மூன்றாம் பாகத்தின் சீகன்பால்க, 119 தமிழ் நூல்களின் பொருளமைதி இலக்கிய வடிவம் பற்றிய குறிப்புக்களை உள்ளடக்கியதும், மற்றவற்றுடன் ஒப்பு நோக்கும் பொழுது பூரண விவரங்களை அடக்கியுள்ளதுமான தமிழ் இலக்கியம் பற்றிய விவரத்திரட்டு ஒன்றினைத் தந்துள்ளார். சீகன்பால்குவிற்குப் பின் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேற் சென்றுவிட்ட பின்னரும் தமிழிலக்கியம் முழுவதும் பற்றிய, அதன் தொடக்கம் முதல் இன்றைய நிலை வரையுள்ள, ஓர் ஆய்வு இதுவரை இல்லை.'1

இவ்வாய்வின் பொருள் பற்றி விவரிக்கும் நூல்களைப் பெறுவது மிகச்சிரமமான பொறுப்பு ஆகின்றது. சில விடயங்கள் பற்றிய அறிவினைச் சமூகத்தில் மற்றவர்க்குத் தெரியாமல் வைத்திருத்தலை ஊக்குவித்து வந்துள்ள ஒரு பண்பாட்டில், அந்த அறிவின் மூலங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான தடையிலா விருப்பநிலை கிடையாது. 'ஏஷியன் எடுயூகேஷனல் சேவிஸ்' (Asian Educational Service) நிறுவனத்தாரினா‘ல் சில நூல் மீளச்சுப் பதிவு செய்யப்படாதிருந்திருப்பின் அவற்றின் முந்திய அச்சுப் பிரதிகளைப் பெறுவது பெருஞ்சிரமமாகவே இருந்திருக்கும். மேலும் எல்லா நூல் நிலையங்களும் எல்லா நூல்களையும் உடையனவாகவும் இல்லை. எனவே, இவ்வத்தியாயத்தில் இவ்விடயம் பற்றிய சகல நூல்களையும் வாசித்துது ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்ற தகைமைக்கோரிக்கை முன் வைக்கப்படவில்லை. எனினும், கரந்தைப் புலவர் கல்லூரி, மறைமலையடிகள் நினைவு நிலையம், இந்தியவியலாய்வுக்கான ஃபிரெஞ்சு நிறுவனம் ஆகிய நிறுவனங்களிலுள்ள நூல் நிலையங்களிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், ஆகியவற்றின் நூல்நிலையங்களிலும், புத்தக வேட்கை கொண்டோருக்குத் திறந்த மனத்துடன் உசாத்துணைப் புகலிடமளிக்கும் தஞ்சை வழக்கறிஞர், சேக்கிழாரடிப்பொடி திரு.ரி.என், இராமச்சந்திரன் போன்றோரிடத்தும், இவ்விடயம் சம்பந்தமாகவிருந்த முக்கியமான நூல்களை வாசித்தறிவற்கான முயற்சி மேற் கொள்ளப்பட்டது. இவ்வகையிற் சேர்க்கப்பட்ட தரவுகளைக் கால ஒழுங்கில் வைத்து நோக்கும்பொழுது, தமிழில் இலக்கிய வரலாற்று வளர்ச்சியின் தன்மையினைக் காணக் கூடியதாகவுள்ளது.

தமிழிலக்கியத்தின் வரலாறு பற்றிய எழுத்துக்கள் வளர்ந்துள்ள முறையினை அறிவதற்கு முன்னர், முதலில்,

(அ) இலக்கியத்தின் வரலாற்றை எழுதுவற்கான தேவை பற்றிய பிரக்ஞை ஏற்பட்ட

(ஆ) அந்த வரலாறுகள் எழுதப்பட்ட

கல்வி நிலைப் பின்னணி பற்றி அறிந்து கொள்வது அத்தியாவசியமாகின்றது.

இலக்கிய வரலாறெழுது நெறி ஆய்வியலின் முன்னோடி அறிஞர்களுள் றெனே வெலெக், இலக்கிய வரலாற்று ஆய்வு தோன்றிய முறையினைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்.

'இலக்கிய வரலாற்றின் எழுச்சி, வேகமற்ற, ஆறுதலான ஒரு நடைமுறையாகவே இருந்தது. அதனை, நவீன விமரிசனம், வாழ்க்கை வரலாற்றியல், வரலாறெழுது முறையியல் ஆகியவற்றுடன் மிக்க நெருக்கமாகத் தொடர்புபடுத்திப் பார்க்காவிடின், விளங்கிக்கொள்ளவே முடியாது. இது மனித இனத்தின் ஆய்வறிவு வரலாற்றின் மிகப் பெரிய புரட்சிகளிலொன்றினதும் வரலாற்றுணர்வினதும், நவீன சுயபிரக்ஞையின் விழிப்புணர்வினதும் ஓர் அம்சமாகும். இலக்கிய வரலாறு என்பது, அதன் பயில் துறைக்குரிய குறுவட்டப் பொருளில்ல, வாழ்க்கை வரலாறு போன்ற, ஏற்கெனவே நிலை வேறுடையனவான துறைகளிலிருந்து வேறுபட்டதாய் தனித்துவமான வனர்ச்சி முறைமை மூலம் தோன்றிய ஒன்றாகும். மேலே குறிப்பிட்ட வாழ்க்கை வரலாறு போன்ற பயில்துறைகள் இலக்கியத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டனவாகவிருக்கவில்லை. தனிப்பட்ட ஆக்கங்களினது அன்றேல் தனியொரு இலக்கிய வகையின் கீழ்வரும் செய்யுட்களின் விமரிசனங்களிலிருந்து இத்துறை மெதுவா‘க வளரத் தொடங்கிப் பின்னர் கடந்த காலம் பற்றிய வரலாற்ற நிலைப்பட்ட பொது மதிப்பாய்வா‘க வளர்ந்தது. இலக்கிய வரலாறு என்னும் பயில்துறை, வாழ்க்கை வரலாற்றியலும் விமரிசனமும் ஒன்றாக இணைந்தத பொழுதும், அரசியல் வரலாறெழுது நெறியியலின் செல்வாக்குக் காரணமாக சம்பவத்தொடர் முறை வடிவம் பயன்படுத்தப்பட்ட பொழுதுமே தனிப்பட்ட ஒரு விதிமுறை சேர் ஆய்வுத் துறையாகக் கிளம்பிற்று. ஆனால் இந்நடைமுறையானது, ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுக் காலமாக நடந்தது. பதினெட்டாம் நூற்றாண்டிலே, பூத்த இதன் விதைகளும் வடிவங்களும் முதலில் எவ்வாறிருந்தன என்பதைக் கண்டுகொள்வதற்கு ஆரம்ப காலத்தை மிக உன்னிப்பாக நோக்குதல் வேண்டும்.'2

பிற்காலத்தில் ஏற்பட்ட பல்வேறு கருத்துநிலை இணங்காமைகளுக்கு வெலெக் ஆட்படாதிருந்த காலத்தில் (1947) எழுதப்பட்ட இக்கூற்று, இலக்கிய வரலாறானது தனிப்பட்ட, விதிநெறி ஆய்வொழுங்காக வளர்ந்த முறைமையை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது.

'வரலாற்றுணர்வினதும், நவீன சுயபிரக்ஞையினதும் விழிப்புணர்வே' இலக்கிய வரலாற்றின; தோற்றத்துக்கான முக்கிய மூலமாகும் எனும் வெலக்கின் கூற்று உண்மையானது. தமிழில் இதன் வளர்ச்சி நடைமுறை அவ்வுண்மையை நிலை நாட்டுவதாக அமைகின்றது. ஆனால் இலக்கிய வரலாறு என்ற படத்தின் குறுகிய வரையறையெல்லைக்குள் அதன் மேலெழுச்சிக்குள் அதன் மேலெழுச்சிக்குக் காரணமாக விருந்தவை என அவர் கூறுபவை, அதாவது 'வாழ்க்கை வரலாறுகள்'. தனிப்பட்ட ஆக்கங்கள் பற்றிய விமரிசனங்கள்', 'தனி இலக்கிய வகைகளின் செய்யுளியலமிசங்கள்' ஆகியவை, எல்லா இலக்கியங்களுக்கும் பொருத்தமானவையாக அமையும் என்று கூறிவிடல் முடியாது. ஏனெனில், வெலெக் இவ்வாறு கூறும் பொழுது, மேனாட்டு இலக்கியப் பாரம்பரியப் பயிற்சியுடையோருக்கு புளூற்றா‘க் (Plutarch) அரிஸ்றோற்றில் (Aristotle) ஆகியோரின் நினைவே வரும்.3 ஆனால் புளூற்றாக்கின் வாழ்க்கை வரலாறு போன்ற ஒரு நூலும் அறிஸ்ற்றோற்றினின் கவிதையியல் (Poetics) போன்ற ஒரு நூலும் எல்லாப் பண்பாடுகளிலும் தோன்றுவதில்லை. உதாரணமாக, தமிழை எடுத்துக் கொண்டோமானால், 'புளூற்றாக்' போன்ற ஓர் ஆக்கம், 1859 வரை, அதாவது சைமன் காசிசெட்டி என்பார் தமிழிலக்கியப் புலவர்கள் பற்றி அத்தகைய ஒரு நூல் வேண்டுமெனக் கருதி எழுதும் வரையில், தோன்றவில்லை. எனினும் தமிழ்ப் புலவர்கள் சிலரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறமுனையும் தமிழ் நாவலர் சரிதை எனும் நூல், 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோன்றுகின்றது. தமிழ்ச் சங்கம்பற்றிய ஐதிகக் கதையில் தமிழ்ப் புலவர்களின் பெயர்கள் மேற்கூறியவற்றுக்கு முற்றிலும் வேறுபட்ட முறையில் கோவைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழிலுள்ள 'உரைமரபினை'யும் தனிப்பட்ட ஆக்கங்கள் பற்றிய விமரிசன'த்தையும், இவை இரண்டுக்குமிடையே வேறுபாடுகளிருப்பினும், ஓரளவு இணைத்து நோக்கலாம். தனி இலக்கிய வடிவங்களின் கவிதையியல்புகள் பற்றிப் பேசும் நூல்களுக்கான தமிழ் உதாரணங்களைக் காட்டுதல் முடியாது. தொல்காப்பியம் செய்யுளியலை, அறிஸ்ற்றோற்றினின் கவிதையியலுக்குச் சமமானதாகக் கூற முடியாது. தொல்காப்பியத்தில் நூற்பா வடிவிலமைந்து விதிமுறையாகக் கிடக்கும் முறைமை, அறிஸ்றோற்றினின் வாத நெறிப்பட்ட விளக்கப் பண்புக்கு முற்றிலும் வேறுபட்டதாகும்.

எனினும், பிற்காலத்தே, கொலோனியலிசத்தினால் நிர்ணயிக்கப் பெற்ற மேனாட்டுமயவர்க்கம் காரணமாகவும், மொழியைத் தளமாகக் கொண்ட தேசிய இனத் தனித்துவப் பிரக்ஞை காரணமாகவும், தமிழிரிடையே, 'வரலாற்றுணர்வும், நவீன சுயபிரக்ஞையும் ஏற்பட்ட பொழுது', இலக்கியம் பற்றிய பிரக்ஞையும் இவர்களிடையே தோன்றிவிட்டது என்பதற்கு சாட்சியுண்டு. உண்மையில், இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞை தமிழ்த் தேசிய இனப் பிரக்ஞையின் காரணமாகவும் அதன் அளவீடாகவும் அமைந்திருந்தது.

ஆனால், இந்தப் பிரக்ஞை ஏற்பட்ட கால கட்டத்தினை (அதாவது, 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியினை) எடுத்துக்கொண்டு, தமிழில் இலக்கிய வரலாற்றாய்வின் தொடக்கமாக அக்கால கட்டத்தையே கொள்வதென்பது. தமிழ் இலக்கிய வரலாற்றைப் பெரிதும் ஐரோப்பியமய நோக்குடையதாக்குவதாகும்.

வரலாறெழுதுமுறையியலுக்கும் ஒரு வரலாறு உண்டு. இலக்கிய வரலாற்றின் வளர்ச்சியை வரலாற்று நிலையில் வைத்து, அதாவது கால வரிசைப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள், ஆக்கங்கள், நோக்குகள், கருத்து நிலைகளின் வைப்பு முறைத் தொடரினை ஆதாரமாகக் கொண்டு, எழுதுதல் வேண்டும். மேலே எடுத்துக் கூறியனவற்றை நோக்கும் பொழுது, நாம் இன்று கருதுகின்ற முறைமையிலமையும் இலக்கிய வரலாறு மேனாட்டுச் செல்வாக்குக் காலத்திலேயே தோன்றுவதனைக் காணலாம். ஆனால் இப்படிக் கூறுவதனால், தமிழில், மேனாட்டுத் தாக்கத்துக்கு முந்திய காலத்தில், இலக்கிய வரலாறு எனும் கருதுகோள் இருக்கவில்லை என கூறிவிட முடியாது. இன்று நாம் இலக்கிய வரலாறு எனக் கொள்ளும் ஆய்வொழுங்கானது, ஒரு குறிப்பிட்ட முறைமையிலமைந்த இலக்கியப் பிரக்ஞை காரணமாகவும் வரலாற்றுப் பிரக்ஞை காரணமாகவும் தோன்றியதாகும். இத்தேசிய அல்லது தேசிய இனப்பிரக்ஞை முறைமையின் தனித்துவமான, அதற்கேயுரிய பண்புகள் பற்றிய ஆய்வில் இறங்காது, இந்தப் பிரக்ஞை முறைமையானது, தமிழர்கள் தங்கள் மொழியினையே தமது தனித்துவத்தின் சின்னமாகக் கொள்ளும் ஒரு நிலைமை தோன்றுவதற்கு அவர்கள் அந்நியப்பட்ட ஓர் ஆட்சி முறைக்குக் கீழே, தமிழரல்லாதோருடன் இணைந்து வாழ்ந்தமையே காரணம் எனக் குறிப்பிடலாம். அதாவது, பிறிதொரு வகையாற் கூறுவதெனின், இன்றுள்ள தமிழரின் இன்றைய இலக்கியப் பிரக்ஞை முறைமை தோன்றுவதற்குத் தமிழர், பிறமொழிக் குழுவினரிடையே வாழ்ந்தமையே காரணமாகும். தமிழர்கள் தமிழிலக்கியங்களை நோக்கம் முறைமையினை இந்நிலை பெரிதும் நிர்ணயித்துள்ளது. தமிழுக்கு அரசியல் மேலாண்மை கிடையாத பன்மொழி நிலையில் தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதற்கு அதன் பழைமையை வற்புறுத்தவும், பிறமொழிகள மீதான அதன் செல்வாக்கைப் பற்றி வாதித்து நிறுவவும் வேண்டியமைக்கான தேவை இதன் காரணமாகவே ஏற்பட்டது.

இவ்வாறு கூறும்பொழுது, மேனாட்டுத் தாக்கத்துக்கு முற்பட்ட காலத்தில், தமிழர்கள், தமிழரல்லதோரின் ஆட்சிகளின் கீழ் வாழ வேண்டிய வரலாற்று நிலைமை ஏற்படவில்லை எனக் கூறுவதாகாது. அவ்வாறான காலகட்டங்கள் இருந்தன. தெலுங்கு மொழிக்காரரான நாயக்கப் பிரதானிகளின் ஆட்சிக் காலம், மராட்டிய மொழிக்காரனின் ஆட்சிக் காலம், மலபார்ச் சுல்தானின் ஆட்சிக் காலம் என உதாரணங்களைக் காட்டலாம். எனினும் இவை தமிழ்நாடு முழுவதையும் தம்முள் அடக்கியவையாகவிருக்கவில்லை. இவ்வாட்சியாளர்களின் தாக்கம் குறிப்பிட்ட பிரதசத்துக்குள்ளேயே வரையறுக்கப் பட்டுக் கிடந்தது. மேலும், சுல்தானின் ஆட்சி தவிர்ந்த மற்றைய ஆட்சிகள், அத்துணை பண்பாட்டு அந்நியப்பாடு கொண்டவையல்ல. சுல்தானுடைய ஆட்சியின் கீழுங் கூட, பண்பாட்டுக் கலப்பு வேகம் ஓரளவு அதிகமாகவே இருந்தது.

இலக்கியப் பாரம்பரியம் பற்றிய, மரபுணர்வு பற்றிய பிரக்ஞை முறைமை இத்தகைய சூழலில் வேறுபடுவது இயல்பே.

அ. இப்பகுதியில் முதலில், தமிழ் இலக்கியத்தின் வரலாறு பற்றிய எழுத்துக்களின் வளர்ச்சியிற் கா‘ணப்படும் (கால) கட்டங்களைச் சுட்டுவதும்.

ஆ. அக்கால கட்டங்களை ஓரளவு விரிவாக ஆய்வதுவும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த 'இலக்கியத்தின் வரலாறு' பற்றிய எழுத்துக்களின் வளர்ச்சியிலுள்ள பல்வேறு கால கட்டங்களை நிர்ணயிப்பதிலுள்ள பிரதான பண்பு, குறிப்பிட்ட இந்தக் கால கட்டங்களில், அவ்வக் காலத்தில் வாழ்ந்த, பண்பாடு பற்றித் தெளிவான கருத்துக்களையுடைய மக்கள் மட்டத்தில், இலக்கியப் பாரம்பரியம் பற்றிய நிலவிய பிரக்ஞையின் தன்மையை அறிந்து கொள்வதேயாகும். ஒவ்வொரு கட்டத்திலும் மேலாண்மையுடன் விளங்கிய பிரக்ஞை முறையைக் குறிப்பிட்டு, அப்பிரக்ஞை எத்தகைய பிண்டப் பிரமாணமான முறையில் வெளிப்படுத்தப்பட்டது என்பதை அறிவதற்கா‘ன ஒரு முயற்சி இங்கு மேற்கொள்ளப்படுகின்றது. சமூக இருக்கைநிலை சமூகப்பிரக்ஞையை நிர்ணயிக்கின்றது. இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞை, சில சமூக-பண்பாட்டுத் தேவைகளின் பிரதிபலிப்பேயாகும்.

இலக்கிய வரலாற்றின் தோற்றம் வளர்ச்சியிலுதவிய பெரும் காரணிகளுள் ஒன்றாகத் தேசாபிமானத்தினை, றெனே வெலெக், குறிப்பிட்டுள்ளார்.5 தேசாபிமானம் என்பது குறிப்பிட்ட தேசக் குழுமத்தின் கடந்த காலச் சாதனைகளினால் ஏற்படும் பெருமித உணர்வினால் தோன்றுவது. அத்துடன் வென்றெடுக்கப்பட்டவற்றை நிலைபேறுடையனவாக்கும் முயற்சியும் முக்கியத்துவமுடைய வொன்றாகும்.

தம் தேவைகளினைத் தெளிவாக எடுத்துரைக்கக் கூடியவரிடையே நிலவிய பிரக்ஞை முறைமையினை உரை கல்லாக் கொண்டும், அப்பிரக்ஞை முறைமையினைக் கொண்டும் நோக்கும்பொழுது, தமிழிலக்கிய வரலாறு எழுதுநெறி பற்றிய வரலாற்றைப் பின்வரும் கட்டங்களாக வகுத்துக் கொள்ளலாம் எனும் கருத்து முன் வைக்கப்படலாம்.

I - 1700

II - 1700-1835

III - 1835-1929

IV - 1930-க்குப் பின்வரும் காலம்
(அ) 1930-1950
(ஆ) 1950------

இக்கட்டங்களாக வகுப்பதற்கான அடிப்படையினைத் தெளிவுபடுத்துதல் வேண்டும்.

தமிழ்நாட்டுப் புலமை வாழ்வின் பாரம்பரிய அமைப்பில், பதினெட்டாம் நூற்றாண்டு முதல் மாற்றம் தொடங்குவதைக் காண்கின்றோம், பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர், இஸ்லாத்தின் வருகையைத் தவிர, தமிழின் இந்தியத் தன்மையை மறுதலிக்கத் தக்க எந்த ஒரு சக்தியும் தொழிற்பட்டதெனக் கூறிவிட முடியாது. இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலுங்கூட அது தனது மதத் தேவைகளுக்குத் தமிழ் லிபியைப் பயன்படுத்துவதைக் குறைத்தது, மார்க்க தேவைகளுக்கான தமிழ் எழுத்துக்களையும் அறபியிலே எழுதி, அறபுத் தமிழ் எனும் எழுத்து முறையாகப் போற்றி வந்தது. இதனால் தமிழ் நாட்டு முஸ்லிங்களைப் பொறுத்த வரையில் அவர்களது மாக்கத் தேவைகளுக்கா‘ன எழுத்துக்களை அவர்கள் இஸ்லாமியப் பாரம்பரியத்துக்கிணைய அறபு வடிவிலேயே பேணக் கூடியதாகவிருந்தது. இதனைத் தவிர, தமிழிலக்கியத்தின் இந்தியப் பண்பாட்டுக் கோலத்தைப் பாரதூரமான வகையில் இடையீடு செய்யக் கூடிய சக்திகள் எதுவும் தொழிற்படவில்லை. அது காலவரைப்பட்ட தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தினை, இந்தியப் பண்பாட்டின் முழுமையை நிறைவு செய்யும் அங்கங்களாக விளங்கும் இந்துக்களும், சமணர்களும், பௌத்தர்களும் பரஸ்பரச் செல்வாக்குகள் மூலம் உருவாக்கியிருந்தனர். 1700-க்கு முன்னர் றோமன் கத்தோலிக்கம் தமிழ்நாட்டிற்கு வந்து விட்டதென்பதும், டி.நொபிலி (தத்துவ போதக சுவாமிகள்) போன்ற பெரும் `மிசனறி'மார்கள் தமிழ் நாட்டிற் பணியாற்றத் தொடங்கி விட்டனர் என்பதும் உண்மையே. ஆனால் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, புரட்டஸ்தாந்திகள் தமிழ்நாட்டில் தமது நடவடிக்கைகளைத் தொடங்குகிறார்கள். சீகன்பால்குவும் புளூட்சோவும் 1709 இலேயே தமிழ்நாட்டை வந்தடைகின்றனர்.6 மிகப் பெருந்தொகையான தமிழாக்கங்களை எழுதிய பெஸ்கிச் சுவாமியராகிய வீரமா முனிவர் 1710இலேயே வந்து சேர்கிறார். வீரமா முனிவருடனேயே தமிழ்க் கத்தோலிக்க இலக்கிய நடவடிக்கைகள் தமிழ் இலக்கியப் பாரம்பரிய முழுமையுடன் இணையத் தொடங்குகின்றன.

18ஆம் நூற்றாண்டிற் புரட்டஸ்தாந்திகள் தமிழ் நாட்டிற்கு வந்து சேர்வது, இரு நிலைப்பட்ட முக்கியத்துவத்தையுடையதாகின்றது. முதலாவதாக, இவர்கள் மூலமே, மறுமலர்ச்சிக் காலத்தின் பின்னர் தோன்றிய (சமூகத்தினைப் புதிய முறையிலே நோக்குகின்ற) ஐரோப்பிய மனோபாவங்கள் தமிழுக்குள் வந்து சேர்கின்றன. இரண்டாவதாக, புரட்டஸ்தாந்தம், முற்றிலும் எழுத்தறிவை அடிப்படையா‘கக் கொண்ட ஒரு மதம் என்ற வகையில், தமிழ்நாட்டில், 'அச்சுப் பண்பாட்டை' பெருமளவில் ஆரம்பித்து வைப்பதற்கு இவர்கள் காரணர் ஆகின்றார்கள். புரட்டஸ்தாந்திகள் மதமாற்றத்தைக் கல்வியுடன் இணைத்தனர். அவர்கள் கல்விமுறை, அச்சடித்த பாடபுத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு முன்னரே அச்சுமுறைமை தமிழுக்கு வந்து விட்டதென்பதும், 'மர அச்செழுத்தினை' முதன் முதலிற் பயன்படுத்திய இந்தியமொழி தமிழ் என்பதும் உண்மையே. ஆனால் அந்த அச்சு முறைமை, பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளிற் கிறிஸ்தவர்களால் நடத்தப்பெற்று, 'எழுத்தறிவுடைய' பல்லோரின் போஷனைக்கு உதவிய அச்சுமுறைமையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.

இவ்வாறாக நோக்கும்பொழுது, பதினெட்டாம் நூற்றாண்டானது, பண்பாட்டொருமைப்பாடு உடையதாகவிருந்தது என்று கூறப்பட முடியாது, ஆனால் ஒரே வகையான இலக்கியத் தொடர்பு முறைமையையுடையதாக விருந்த ஒரு கால கட்டத்திலிருந்து, அதனிலும் வேறுபட்ட ஒரு காலகட்டத்தைப் பிரித்துக் காட்டும் கால எல்லைக் கோடாகவிருக்கின்றது என்பது புலனாகின்றது. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் இலக்கிய உற்பத்திப் பண்பிற் காணப்படும் 'போஷகர்-சார்ந்தருக்கும் வாடிக்கையாளர்' (Patron-client) முறைமை பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் மாறுகின்றது.

தமிழிலக்கியப் பாரம்பரியப் பிரக்ஞையின் அடுத்த கட்டமாக அமைவது, அச்சுச் சாதனம், மத வேறுபாடின்றி எல்லோருக்கும் திறந்து விடப்பட்டமையுடன் நெருங்கிய தொடர்புடையது. இது 1835இல், சேர்சான்ஸ் மெற்காஃப் (Sir Charles Metcalfe) அது காலவரை அச்சுப் பயன்பாட்டிலிருந்து கட்டுப்பாடுகளை நீக்கிய பொழுது தொடங்கிற்று. 1835லேயே, அச்சுயந்திர சாலைகளை வைத்திருக்கம் உடைமையுரிமை 'சுதேசி'களுக்கு ஏடுகளாகக் கிடந்த பழைய தமிழிலக்கியங்கள் அச்சிடப்பட்டன என மயிலை சீனி, வேங்கடசாமி கூறுவர்.7 ஜோன் மேடொக் (John Murdoch) அவர்கள் கூறுவது, வேங்கடசாமியின் உறுதிநிலைப்பட்ட மேற்காணும் கூற்றுக்குச் சவாலாக அமைந்தாலும் அடிப்படையில் வேங்கடசாமியின் வாதத்தை நிலை நிறுத்துவதாகவேயுள்ளது. டபிள்யூ ரெயிலர் (Rev.W.Taylor) எனும் பாதிரியார், 1835 வரையில் திருக்குறளும், ஓளவையாரின் சில பாடல்களுமே அச்சிடப் பெற்றன என்பதைக் கூறியுள்ளார்.8 அச்சு முறைமையில் நிலவிய கட்டுப்பாடுகளை சேர் சாள்ஸ் மெற்காஃப் நீக்கியதன் பின்னர், சுதேச அச்சியந்திர சாலைகள் நிறுவப்படத் தொடங்கின.

ஆகவே, தமிழிலக்கிய பாரம்பரியத்தின் மீளுற்பத்தியில் 1835 நிச்சயமான ஒரு காலக்கோடாக அமைந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும் அடுத்த நூற்றாண்டின் ஆரம்பக் காலத்திலும் அதி முக்கியத்துவமுடையனவாக முகிழ்க்கத் தொடங்கிய சமூகக் காரணிகள், தமிழரிடையே புதிய விழிப்பு நிலையை ஏற்படுத்தின.

பிரித்தானிய ஆட்சியினால் தோற்றுவிக்கப் பெற்ற சென்னை மாநிலத்தின் புவியியல் அமைப்பும், சனத்தொகை உள்ளீடும் தமிழர்களுக்குத் தமது பாரம்பரியத் தாயகத்திலேயே, இனத்தனித்துவம் பற்றிய பிரச்சினையை ஏற்படுத்திற்று. சென்னை மாநிலத்தின் சனத்தொகை அமைப்பே இதற்குக் காரணமாகவமைந்தது. பிராமணர் பிராமணர்ல்லாதரின் முரண்பாடுகள், இப்பிரச்சினையின் மேற்கட்டுமானச் சின்னமான அமைந்தது. ஒரே நிருவாகப் பிரிவின கீழ் தெலுங்கர்கள் மலையாளிகள் பிரதேச மொழிப் பிரக்ஞையின் பங்கு, முனைப்புற எடுத்துக் கூறவதற்கான தேவை, ஆகிய யாவையும் இணைந்து தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியம் பற்றிய ஒரு புதிய விழிப்பு நிலையை ஏற்படுத்தின. பண்டைய இலக்கியச் சாதனை பற்றிய பிரக்ஞை இவ்விழிப்பு நிலையின் ஓர் அமிசமாகிற்று.

தமிழிலக்கியப் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞையின் அடுத்த திருப்புமுனை பற்றிய, அதாவது, மேலே குறிப்பிட்ட செல்நெறிகளிலிருந்து மாறுபடும் நிகழ்வுத் தொடக்கம் பற்றிய தேடல், நம்மை இந்நூற்றாண்டின் முப்பதுகளுக்கு இட்டுச்செல்லும். இதில் 1935ஆம் வருடத்து இந்திய அரசாங்கச் சட்டம் மிக முக்கியமான ஒரு பிரிகோடாக அமைகின்றது.9 தமிழில் எழுதப்பட்ட, முழுமையுள்ள முதல் தமிழ் இலக்கியத்தின் வரலாறு-கா.சுப்பிரமணிய பிள்ளையின். 'இலக்கிய வரலாறு' 1930இலேயே வெளிவந்துள்ளமை உன்னிப்பான அவதானிப்புக்குரிய ஒரு நிகழ்வாகும்.


முப்பதுத் தசாப்தம், இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு சமூக-அரசியல் நடைமுறையின் தொடக்க காலமாகும். 1947இல் வந்த சுதந்திரம் ஒரு முக்கிய காலக்கோடு என்பதிற் சந்தேகமில்லை. இந்தியாவின் தேசிய இன உருவாக்கம் பற்றிய பிரச்சினையை நோக்கும் பொழுதும், மாநில அரசு-மத்திய அரசுகளின் உறவினை நோக்கும் பொழுதும், 1947-க்குப் பின்வரும் காலத்தில் மொழிப் பிரக்ஞை முக்கிய இடம் வகிப்பதைக் காணலாம். சுதந்திரத்துக்கு இரண்டு வருடங்களுக்குப் பின்னர், 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டதும், தமிழர்களிடையேயுள்ள பல்வேறு மத, சமூகக் குழுக்கள் யாவும் தமிழர்களாக ஒருங்கிணைவதற்குத் தமிழிலக்கியப் பாரம்பரியத்தின அவ்வியக்கம் பயன்படுத்தியதும், இலக்கிய வரலாற்றுச் சிரத்தையை அரசாங்கத்தினை அரசியல் நிலையிற் பேணுவதற்கான ஒரு காரணியாக்கிற்று. இதனாலேயேதான், முப்பதுகளுக்குப் பின்வரும் வளர்ச்சியினை ஒரு அலகுகளாக, 1950 வரையில் ஒன்றாகவும், 1950-க்கு மேற்பட்ட காலப் பகுதியை அடுத்ததாகவும் கொள்வது பொருத்தமுடைத்தெனக் கொள்ளப்படுகின்றது.

முன்வைக்கப்பட்ட கால கட்ட வகுப்புக்களை நியாயப்பாடுகள் இவையேயாம்.

III

இனி, பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முன்னர் நிலவிய இலக்கியப்பாரம்பரியப்பிரக்ஞை முறைமை பற்றி நோக்குவோம்.

இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞையானது இன்றியமையாத வகையில், அவ்விலக்கியத்தைத் தோற்றுவித்த குழுமத்தின் கடந்த கால நடவடிக்கைபற்றிய பிரக்ஞையேயாகும். அந்த இலக்கியப் பழைமைபற்றிய சிரத்தை, அக்குழுமத்தின் வரலாறோடு சம்பந்தப்பட்ட ஒரு முயற்சியாகவே கொள்ளப்படல் வேண்டும். இக்கட்டத்திலே, நாம் இலக்கியப்பாரம்பரியம் பற்றிய பிரக்ஞையின் சிறப்புப் பண்புகளை நினைவுறுத்திக் கொள்ளுதல் வேண்டும். கடந்த கால இலக்கியம், அதன் கடந்த கால முக்கியத்துவத்துக்காகவும், நிகழ்கால அர்த்தத்துக்காகவும் பயிலப்படல் வேண்டும். எனவே, இலக்கியத்தினைத் தொகுக்கும் அன்றேல் கோபைப்படுத்தும் ஒரு முயற்சியைக் காண நேரிடின், அதனை, இலக்கியம் பற்றிய-கடந்தகால, சமகால இலக்கியம் பற்றிய-பிரக்ஞையின் வெளிப்பாடகவே கொள்ளல் வேண்டும். அந்த நடவடிக்கையை இலக்கியத்தின் வரலாறு பற்றிய ஒரு நடவடிக்கையாகவே கொள்ளுதல் வேண்டும். இலக்கிய வரலாறு என்னும் தொடர் இவ் வாய்விற் கொள்ளப்படும் பொருளில், அதாவது இலக்கிய நிலை நின்று ஒரு குழுமத்தின் வரலாற்றைக் காணும் புலமை முயற்சி என்னும் வகையில், மேற்குறிப்பிட்ட ஒரு நடவடிக்கையினை குறித்த குழுமம் தனது வரலாறு பற்றிக் கொள்ளும் சுய பிரக்ஞையின் வெளிப்பாடு என்றே கொள்ளல் வேண்டும். எனவே அத்தகைய வரலாற்றுப் பிரக்ஞை பற்றிய எந்த ஒரு சந்தர்ப்பத்தினையும், இலக்கியத்தின் வரலாறு பற்றிய, இலக்கிய வரலாறு பற்றிய பிரக்ஞையின் வடிவமாகவே கொள்ளுதல் வேண்டும்.

இத்தகைய ஓர் இலக்கியப் பாரம்பரியப் பிரக்ஞையினைத் தமிழர்களின் வரலாற்றில், ஓரளவு தொடக்கத்திலேயே காணக் கூடியதாகவுள்ளது.

தமிழிலக்கிய வரலாற்றில், கடந்த கால இலக்கியத் தேட்டத்தைத் திண்ணமாக நிலைபேறுடையதாக்குவதற்கு எடுக்கப்பட்ட முதல் முயற்சி சங்க இலக்கியத் தொகுப்பு ஆகும்.10

சங்க இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என இரண்டு தொகுதிகளாக (தொகைகளாக)வுள்ளன. பத்துப்பாட்டு தனித்தனிப் பாடல்களின் 'தொகை'யாகும். எட்டுத் தொகையிலுள்ள ஒவ்வொரு நூலுமே வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டனவாகக் கொள்ளப்படும். எட்டு வேறு வேறான 'தொகை' நூல்களின் 'தொகை' (தொகுதி)யாகும். பத்துப்பாட்டுத் 'தொகுதியினைச் சங்க இலக்கியங்களுள் ஒன்றாகக் கொள்வதனை மார் (Marr) எதிர்த்துள்ளார்.11

இங்கு நாம் இந்த இரு தொகை நூல்களும் பற்றியே நோக்கல் வேண்டும். 'பத்துப்பாட்டு', 'எட்டுத்தொகை' எனும் பெயர்கள் பிற்காலத்தில் வழக்கில் வந்தவையே. 'பத்துப்பாட்டு' என்னும் தொடர், 11ஆம் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கொள்ளப்படும் பன்னிருரு பாட்டியலிலேயே முதலில் வருகின்றது. சங்க இலக்கியப் பாடற்றொகைகளைக் குறிக்கும் வகையில், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் தொடர்கள் பயன்படுத்தப்படுவதை முதன் முதலில், தொல், பொருள் 362, 392ஆம் சூத்திரங்களுக்கா‘ன பேராசிரியர் உரையிலும், நன்னூல் 387 ஆம் சூத்திரத்துக்கான மயிலை நாதருரையிலுமே காண்கிறோம். இவர்கள் இருவருமே கி.பி. 13-14ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவர்கள்.12

இங்கு முக்கிய கவனத்துக்குரியது பெருந்தொகுதிகளின் பெயர்கள் அன்று, எட்டுத் தொகை நூல்கள் ஒவ்வொன்றினதும் 'தொகை நிலை'த் தன்மையேயாம். அத் தொகைகள் பின்வருமாறு.

நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல்.

இவை ஒவ்வொன்றும் தொகுக்கப்பட்டதற்கான தெளிவான மரபுவழிச் செய்தியுண்டு.13 அகப் பாடல்களின் தொகை முறைமைக்கு அவற்றின் அடியளவு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது.

ஐங்குறுநூறு 3 - 6 அடிகள்
குறுந்தொகை 4 - 8 அடிகள்
நற்றினை 9 -12 அடிகள்
அகநானூறு 12-31 அடிகள்

புறச்செய்யுள்ளுகளுக்கு இத்தகைய ஒரு தொகை முறை பேசப்படவில்லை. பதிற்றுப்பத்து, சேர மன்னர்கள் பற்றியது; புறநானூற்றிலோ எல்லா மன்னர்களையும் பற்றிய செய்யுள்கள் உள்ளன.

இலக்கிய வரலாற்றாசிரியனைப் பொறுத்த வரையில், பெருங் கவனத்துக்குரிய முக்கியமான தகவல், இத் தொகைகளிற் சிலவற்றை செய்வித்த மன்னர்களினது பெயர்களும், அத்தொகைகளைச் செய்த புலவர்கள் பெயரும் கிடைக்கின்றமையேயாகும்.


அகநானூறு - -தொகுப்பித்தோன் - பாண்டியன்
உக்கிரப்
பெருவழி
-தொகுத்தோன் - மதுரை உப்பூரி
குடிக்கிழான்
மகன் உருத்திரசன்மன்,

குறுந்தொகை - தொகுப்பித்தோன் - யானைக் கட்சேய்
மாந்தரஞ் சேரல்
இரும்பொறை

- தொகுத்தோன் - புலத்துறை முற்றிய கூடலூர்
கிழார்.

கலித்தொகை - தொகுப்பித்தோன் - தெரியாது

- தொகுத்தோன் - நல்லந்துவனார்14

ஐங்குறுநூறு - தொகுப்பித்தோன் - தெரியாது

- தொகுத்தோன் - பூரிக்கோ15

நற்றினை - தொகுப்பித்தோன் - பன்னாடு தந்த மாறன் வழுதி

- தொகுத்தோன் - தெரியாது.

பதிற்றுப்பத்து பரிபாடல் புறநானூறு ] இவற்றின் தொகுத்தோர், தொகுப்பித்தோர் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாது. பதிற்றுப் பத்து முற்ற முழுதாகச் சேரர் பற்றியதாகையால், சேர மன்னர்களின் அனுசரனையுடனேயே செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.


காமில் ஸ்வெலபில் இதுபற்றி எழுதியுள்ளது, தொகைப் படுத்தப்பட்ட காலங்கள் பற்றிய ஒரு தெளிவினை ஏற்படுத்துகின்றது.16 அவர் கூறவது போன்ற 'சிலவற்றைப் பொறுத்த வரையில், பாடல்கள் தொகுக்கப்பட்டது. பாடல்கள் இயற்றப்பட்ட காலத்துக்க அதிகம் பிந்தியிருத்தல் முடியாது; பாடலும் தொகுப்பும் சமகாலத்திலேயே செய்யப்பட்டிருத்தலுங் கூடும்', தொகுப்பித்தோர் எனக் குறிப்பிடப்பெறும் மன்னர்கள் சிலரின் காலம் முக்கியமானதாகும். யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரிலிரும்பொறை, உத்தேசம், கி.பி.210-230-க் காலப்பிரிவுக்கும் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி உத்தேசம் கி.பி. 215-க்கும் உரியவர்களெனக் கொள்ளப்படுகின்றது. பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி நற்.97, 301ஆம் பாடல்களையும், குறுந்தொகை 270ஆம் பாடலையும் எழுதியுள்ளான் என்று கொள்ளப்படுகின்றது. கலித்தொகை, சங்கத்திற்குப் பிந்திய, சிலப்பதிகாரத்துக்கு முந்திய இலக்கியமாகவே கொள்ளப்படுகின்றது.

நம்மை எதிர் நோக்கும் பெருவினா, இவ்வாறான தொகைப்பாட்டினை அத்தியாவசியப் படுத்திய காரணிகள் யாவை என்பதே, இத்தொகுப்பு நடவடிக்கையில் மன்னர்கள் காட்டியுள்ள ஆர்வமானது. இதற்கு ஒரு சமூக-அரசியல் இயைபு. அன்றேல் தேவை இருந்தது என்பதைக் காட்டுகின்றது. எழுத்தறிவு பரவாத, அரசு நிறுவனம் முளைவிடும் கால கட்டங்களில் (வீரயுகம் என்பது இத்தகைய ஒரு கால கட்டமேயாகும்) பாடுநர் (பாணர்) பாடல்கள் அரசவமிசாவழியை நிலை நிறுத்துவதற்கும் மன்னனின் ஆட்சியை சட்ட அதிகார வன்மையுடையதாக்குவதற்கும் மன்னனின் ஆட்சியை சட்ட அதிகார வன்மையுடையதாக்குவதற்கும் பயன்படுத்தப்படும் முறைமை பற்றி வான்சீனா (Vansina) எடுத்துக் கூறியுள்ளார்.17 இத்தொகுப்பு முயற்சி, சங்க காலத்தின் இறுதிக் கூற்றிலேயே நடைபெற்றிருத்தல் வேண்டும். நீலகண்ட சாஸ்திரி உத்தேசம் கி.பி. 250-ஐ சங்க காலத்தின் இறுதியாகக் கொள்வர்.18

சங்க காலத்தின் சிதைவுக்கான பிரதான காரணம், குலக்குழு அமைப்பிலிருந்து நிலத்தை அடிப்படையாக கொண்ட ஆட்சி முறைமைக்கான ஆறுதலான மாற்றமே என நான் பிறிதோரிடத்திற் கூறியுள்ளேன்.19 பாடுநர் காலத்துக்குரிய இப்பாடல்களைத் தொகுத்தது, அதற்கு முன்னிருந்த காலத்து இலக்கியத் தேட்டத்தை நிலைபேறுடையதாக்கி, அதன் மூலம் மன்னர் பரம்பரைகளின் தொடர்ச்சியை நிச்சயப் படுத்துவதற்காகவிருக்கலாம். குலக்குழு அமைப்பிலிருந்து நிலத்தை அடிப்படையாகக் கொண்ட இறைமை மாற்றத்தின்பொழுது இதுவும் நடைபெற்றிருக்கலாம். புறத்திணைக் குரியவற்றுள் மூவேந்தருக்குரிய பாடல்களே முதனிலைப்பட தொகுக்கப்பட்டிருப்பதனைப் புறநானூற்றின் அமைப்பிலிருந்தும், பதிற்றுப்பத்திலிருந்தும் கண்டு கொள்ளலாம்.

அத்துடன், இத்தொகுப்புக்கும் வளர்ந்து வரும் எழுத்து வழக்குக்கும் தொடர்பிருத்தல் கூடும். இது தொடர்பாகப் பின்வரும் முக்கிய வினாக்களைக் கிளப்புதல் அவசியமாகும்.

அ. எந்த மூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொகுப்பினைச் செய்தனர்?

ஆ. இத் தொகுப்பு எவ்வகையில் எம்முறையிற் செய்யப்பட்டது?

இவ்வினாக்களுக்கான விடை தமிழ்நாட்டில் வாய்மொழிப்பாடல் நிலையிலிருந்து, எழுத்து நிலைக்கான மாற்றம் எவ்வாறு நடந்தது என்பதற்கான விடைக்க நம்மை இட்டுச் செல்லும்.

அகம், புறம் ஆகிய இரு திணைப் பாடல்களினதும் அரசியல் முக்கியத்துவம் நன்கு தெரிந்ததே. அதனை இங்கு மீட்டும் கூற வேண்டியதில்லை.20 இங்கு தெளிவுபடுத்தப்பட வேண்டியது. இப்பாடல்கள் பாடப்பெற்றதன் பின்னர் தொகுக்கப் பெற்றதுக்கான தேவையே. கடந்த கால இலக்கியத்துக்க (அது எத்துணை கடந்த காலத்தது என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை), ஒரு நிகழ்கால அர்த்தம், இயைபு இருந்ததன் காரணமாகவே அந்த இலக்கியம் தொகுக்கப்பட்டிருக்குமென்பது தெளிவாகின்றது. இலக்கிய வரலாறு என்பது, கடந்த கால இலக்கியங்களுக்கான நிகழ்காலப் பதிற்குறிப்புக்கள் பற்றியதே என்பதை ஏற்கனவே பார்த்துள்ளோம்.

எனவே, சங்கப்பாடல்களின் தொகுப்பு, அடிப்படையில் இலக்கிய வரலாற்று நிலைப்பட்ட ஒரு நிகழ்வேயாகும்.

III (அ)

அடுத்து, இறையனார் அகப்பொருளுரையிலே தரப்பட்டிருக்கும் முச்சங்கம் பற்றிய ஐதீகக் கதையிலேயே, கடந்தகால இலக்கியத்துக்கான நிகழ்கால அர்த்தத்தை மதிப்பிடும் முயற்சியினை எதிர்நோக்குகின்றோம். இவ்வுரையின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியே என்பதை இராம.சுந்தரம் முடிவாக நிறுவியுள்ளார்.21 அதனைப் பொதுவில், கி.பி.7 ஆம் 8ஆம் நூற்றாண்டுக்குரிய ஒரு படைப்பாகவே கொள்வது வழக்கு.

இவ்வுரையிலேயே மூன்று சங்கங்கள் பற்றிய ஐதீக நிலைப்பட்ட முழு விவரங்கள் அடங்கிய, நன்கமைந்த விவரமான 'அறிக்கை' காணப்படுகின்றது. முச்சங்கம் பற்றிய அவ்விவரங்கள் எல்லோர்க்கும் நன்கு தெரிந்தனவே.22 அவற்றினை இங்கு மீட்டும் கூற வேண்டிய தேவையில்லை. ஆனால் அக்கதையிலே கூறப்பட்டுள்ள சில தகவல்கள் பற்றி இங்குக் குறிப்பிடுவது அவசியமாகின்றது.

____________________________________________________________________
சங்கத்தின் நீட்சிக் மன்னர்கள் புலவர்
தொடர் இயக்கம் காலம் தொகை தொகை
____________________________________________________________________

1 4440 89 4449

2 3700 59 3700

3 1852 49 449
____________________________________________________________________

மேலும் இரு விவரங்களை நினைவூட்டிக் கொள்ளல் வேண்டும்.

அ. இந்த மூன்று சங்கங்களும் மதுரையிலேயே நடத்தப் பெற்றன23 மதுரை, பின்னர் இந்துக்களின் புனிதத் தலங்களுள் ஒன்று ஆகின்றது என்பதனை மனத்திருத்தல் வேண்டும்.

ஆ. முதற் சங்கத்திற் பங்கு கொண்டோரென அக்கதையிலே குறிப்பிடப்பட்டிருக்கும் புலவர்களின் பெயர்கள், இந்துத் தெய்வங்கள் சிலவற்றின் பெயர்களாகும்.


இந்து ஐதீகக் கதைகளில் அடிக்கடி வரும் அகத்தியர், முதலிரு சங்கங்களினதும் அங்கத்தினராகவிருந்தாரென்று குறிப்பிடப்படுகின்றது.

இவ் ஐதீகம், தமிழிலக்கியத்திற் சமணத்தின் நடவடிக்கைகள் மிகச் சிறப்பாகத் தொழிற்பட்ட காலத்தின் பின்னரே, சமண நோக்குச் சார்புடைய அற இலக்கியங்கள் எழுதப்பட்டதன் பின்னரே எடுத்துக் கூறப்படுகின்றது.

சமண மத நிறுவனங்கள் இயங்கிய முறைமை, அந் நிறுவனம் இலக்கியத்தைப் பயன்படுத்திய முறைமை, அவர்களால் (சமணர்களால்) எழுதப்பெற்ற இலக்கியங்கள் அதற்கு முந்தித் தோன்றிய இலக்கியச் செல்நெறிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்த முறைமை ஆகியன இப்பொழுது நிலையான இலக்கிய வரலாற்றின் அங்கங்களாகிவிட்டன.24 சமணர்களின் 'மிசனறி' (தேவ ஊழிய) நடவடிக்கையில் வச்சிர நத்தியின் திராவிட சங்கத்துக்குரிய இடம் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.25

பாண்டிய, பல்லவ அரசுகள், ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொண்டிருந்தனவெனினும், பக்தி இயக்கத்துக்கு அரசு ஆதரவு வழங்கின.26 பக்தி இயக்கத்தின் முன்னணியில் நின்ற, சைவர்கள், வைஷ்ணவர்கள் ஆகிய இரு பகுதியினருமே தமிழ் என்பது சைவத்துக்கு அல்லது வைஷ்ணவத்துக்குத்தான் உரியது எனக் கொண்டிருந்தனர் என்பதனையும், திருஞான சம்பந்தர், திருமங்கை ஆழ்வா‘ர் போன்றவர்கள் சமணத்தினைக் குரோதத்துடன் எதிர்த்தனர் என்பதனையும் நாம் இவ்வேளை மனத்திருத்திக் கொள்ளல் வேண்டும்.27

இப் பின்னணியிலேயே இறையனார் அகப்பொருளுரையாசிரியரின் தெளிநிலையான இந்துச் சார்பினைக் கண்டு கொள்ளல் வேண்டும்.

ஐதீகவாக்கம் என்பது வரலாற்றினைத் 'தயாரிக்கும்' ஒரு வகைமுறையாகும். இறையனார் களவியலுரையிலே தரப்பட்டுள்ள சங்கம் பற்றிய கட்டுக்கதை, தமிழை இந்துசமயப்படுத்துவதற்கான, முக்கியமாக அதனைச் சைவ மரபின் ஓரங்கமாக ஆக்குவதற்கான ஒரு முயற்சியேயாகும். இவ்வாறு நோக்கும்பொழுது, தமிழிலக்கிய வரலாற்றில் இவ் ஐதீகத்துக்குரிய இடம் பெருமுக்கியமுடைய ஒன்றாகும். வெளிப்படையாகச் சமண, பௌத்தச் சார்புள்ள ஒரு நிறுவனத்தினை ('சங்க'த்தினை) எடுத்துக்கொண்டு அதற்கு ஓர் இந்து உருவும் பொருளும் கொடுக்கும் முயற்சியினை இக்கதையிலே காணலாம். இதனிலும் பார்க்கச் சுவாரசியமானது. அக்கதைக்குள் அரசர்கள் கொண்டு வரப்படும் முறைமையாகும். கதையின் அமைப்பை நோக்கும்பொழுது, அவ்வச் சங்கங்களின் காலத்திலே ஆண்ட அரசர்களின் தொகையும் இலக்கிய நடவடிக்கைகளில் (பாட்டுக் கட்டுவதில்) ஈடுபட்ட அரசர்களின் தொகையும் கதையோட்டத்துக்கு அத்துணை முக்கியமானவையல்ல. ஆனால் அதுவே கதையின் சீவாதாரன பகுதியாக்கப்பட்டுள்ளது. உண்மையில்ல, சங்கம் பற்றிய கதை தொடங்கும் பகுதி பின்வருமாறு தொடங்குகின்றது.

'தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்
என மூன்று சங்கம் இரீஇயனார் பாண்டியர்'

கடவுளர்களே பங்கு கொள்ளும் ஒரு சங்கத்திற்கு ஓர் அரச தளத்தை கற்பிப்பதன் மூலம், அப்பொழுது மேற்கிளம்பும் பாண்டிய ஆட்சியை, சந்தேகத்துக்கு அப்பாலான ஒரு முறைமையில் முறைவழிப்பட்ட தாக்குவதற்கான முயற்சி இக்கதையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முச்சங்கம் பற்றிய கதை, தமிழிலக்கிய வரலாற்றை சைவத்தின் வரலாற்றுடன் இணைப்பதற்கான முதல் முயற்சியாகும்.

நாயன்மார்கள் தமிழுக்கு முற்றிலும் சைவச் சார்பான தோற்றம்பற்றிக் குறிப்பிடுவதும், தமிழை வடமொழிக்கு இணையாகக் கொள்வதும், இம்முயற்சியின் அடுத்தபடிகளாகும். இவற்றினைப்பற்றிப் பேசும் இவ்வேளையில், தமிழைச் சிவனுடன் தொடர்புபடுத்தும் இம்முயற்சிக்கான பௌத்த பதிற் குறிப்பினைப்பற்றி இங்கு குறிப்பிடலாம்.

'ஆயுங் குணத்து அவலோகி தன் பக்கல் அகத்தியன் கேட்டு
ஏயும் புவனிக்கு இயம்பிய தண் தமிழ் ஈங்க உரைக்க
நீயும் உளையோ எனில் கருடன் சென்ற நீள் விசும்பின்
ஈயும் பறக்கும் இதற்கு என் கொலோ சொல்லும் ஏந்திழையே'

- வீரசோழியம்-பாயிரம் (11)


வீரசோழிய ஆசிரியர் மகாயான பௌத்தத்தைச் சார்ந்தவராகவிருத்தல் வேண்டும். அவர் தமிழை அவலோகி தேஸ்வரரே அகத்தியருக்கு உபதேசித்தார் என்கின்றார் (இது சொல்லப்பட்ட காலம் சைவத் தமிழ் மரபைக் காக்க இராஜராஜன் முதல் சேக்கிழார் வரையுள்ள சோழப் பேரரச ஆட்சியுறுப்பினரே முன்னின்று உழைத்த காலமாகும்). இதே போன்று ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றிய மரபும் தமிழ் இலக்கியத்தின் பௌத்த சமணக் கூறுகளை முதன்மைப்படுத்துவதற்கான முயற்சிகளேயாகும். தமிழ்நாட்டில் அவர்களது பண்பாட்டுச் செல்வாக்கு ஒங்காதிருந்த காலத்தில் (9-ம் நூற்றாண்டு முதல் 11-அம் நூற்றாண்டு வரை) தாங்கள் எழுதிய இலக்கியக் கூற்றுக்குத் தனியான ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்க முனைந்தது ஆச்சரியத்தைத் தருவதன்று.

குறித்த அப்பண்பாட்டுச் சூழல்களில் வரலாறெழுது முறையியல் தொழிற்பட்ட முறையினை நோக்கும்பொழுது, இந்த ஐதீகங்களை உண்மையில் வரலாழெழுதுவதற்கான முயற்சிகளாகவே கொள்ளல் வேண்டும். எந்த ஒரு மதமும், தனது இலக்கியப் படைப்புக்கள் வெளிவரும் மொழி மீது தனக்குள்ள உரிமையினை முன்வைப்பது அத்தியாவசியமே. அதன் காரணமாக அம்மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தையே அது தனதாக்கிக் கொள்ள முயல்வது இயல்பே. நமது பண்பாட்டுச் சூழலில் இலக்கிய வரலாறு தொழிற்பட்ட ஒரு சிறப்பான அமிசமாக இதனைக் கொள்ளுதல் வேண்டும்.

பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தில், கடந்த கால இலக்கியத்தைச் சமகால சமூக-பண்பாட்டு, மத-அரசியல் தேவைகளுக்கு இயைபு படுத்தும் அடுத்த பெரும் நிகழ்ச்சியாக அமைந்தது பக்தி இலக்கியங்கள் கோவைப்படுத்தப்பட்டமையேயாகும்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டிலும், அதன் பின்னரும் தோன்றிய இராச்சியங்களினது உருவாக்கத்திலும் ஸ்திரப்பாட்டிலும் பக்தி இயக்கத்தின் இடம் முக்கியமானதாகும். பல்லவ, பாண்டிய இராச்சியங்கள் இரண்டுக்குமே இவ்வுண்மை பொருந்துவதாகும். சிம்ம விஷ்ணு (560-580) வழி வரும் பல்லவரும் கடுங்கோன் (590-620) வழிவரும் பாண்டியரும், தமிழ்நாட்டின் வரலாற்றில் முன்னர் காணப்படாத முறையில், தத்தம் ஆள் நிலத்தில் அதிகாரத்தை நிலை நிறுத்தி, நாட்டு மக்களினது வாழ்க்கையையும் சமூக-பொருளாதார நிறுவனங்களையும் கட்டுப்படுத்த முயன்றனர்.28 தமக்கேயுரித்தான பொருளாதார ஒழுங்கமைப்பு கொண்டிருந்த பௌத்த, சமண பள்ளிகள், இவ்வாறு அரச அதிகாரம் வன்மையாக நிலையூன்றப் படுவதனை எதிர்த்திருத்தல் வேண்டும்.29 தமிழ் நாட்டில் அக்காலத்தில் நிலவிய எல்லாச் சாதிகளையும் உள்ளடக்கியும், சைவத்துக்கும் சமண நிறுவனங்களின் அதிகார வலிமைக்கு சவாலாக வமைந்தும், தொழிற்பட்ட பக்தி இயக்கம், பல்லவரும், பாண்டியரும் தத்தம் இராச்சியங்களில் தமது முழு இறைமையையும் நிலைநிறுத்தும் கொள்கைக்கு அரசியல் வழியாகப் பயன்பாடு உடையதாகவே இருந்திருத்தல் வேண்டும். கூன் பாண்டியனதும், மகேந்திரவர்மனதும் (580-630), குறிப்பாக மகேந்திரவர்மனது, மத மாற்றங்களை அரசியல் முக்கியத்துவமற்ற, முற்றிலும் மத நிலைப்பட்ட செயல்களாக மாத்திரமே கொண்டுவிட முடியாது. காசு மாற்றும்பொழுது கொடுக்கப் பெறும் நாணயவட்டமில்லாது பணத்தை மாற்றித்தர உதவுதல் வேண்டும் என்ற பொருள்பட வரும் 'வாசி தீரவே காசு நல்குவீர்' (தேவாரம், 572) போன்ற குறிப்புக்கள் தனி முக்கியத்துவமுடையனவாகும். பக்தி இயக்கம், சனரஞ்சகமான ஓர் இலக்கிய இயக்கமாகவமைகின்ற அளவில் மாத்திரம் நின்று விடவில்லை. அது வழிபாட்டிடங்களைக் கல்லினாற் கட்டுவதற்கும் முயன்றது.

சமணர்களும் பௌத்தர்களும் தம் மதத்துறவிகளின் 'தபசு'க்குக் குகைப் பாறைகளை படுக்கை வசதியுடையனவாக்கித் தானமாகக் கொடுப்பது வழக்கம். பல்லவர்களாட்சிக் காலத்திலும் பின்னர் சோழர் காலத்திலும், கோவில்கள், தெய்வங்களின் உறையுள்கள் எனும் முறையிற் சிந்திக்கப் பெற்ற நிர்மாணிக்கப்பட்டன. ஆரம்பத்தில், பிரதானமாக குகைக் குடைவுகளாகவே தொடங்கிய இவ்வழிபாட்டிடங்கள், நுணுக்க நோத்யுடைய மண்டபங்களும், தூண்களும் கொண்ட அமைப்புக்களாக வளரத் தொடங்கின. இந்த வளர்ச்சியின் தருக்க ரீதியான நிறைவாகத் தஞ்சையிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் மகோன்னதமான அமைப்புக்கள் நிறுவப்பட்டன. இக்கோவில்கள், அவை சுட்டும் ஆத்ம ஈடேற்றத்துக்காக மாத்திரம் முக்கியத்துவம் பெறுவனவன்று. அவ் அளவு, உண்மையில் அதனிலும் பார்க்க, அவற்றுகிருந்த அச்சாணியான இடத்திலுமே அவை முக்கியத்துவத்தைப் பெற்றன எனலாம். சோழர்களின் சமூக-பொருளாதார அமைப்பின் தொழிற்பாட்டிர் கோவில்கள் முக்கிய இடத்தை வகித்தன.30

இந்த, சமூக-பொருளாதார நிர்பந்தங்கள், மதபண்பாட்டுத் தேவைகள் ஆகியவற்றின் பின்னணியிலேயே, நாயன்மார்களினதும், ஆழ்வார்களினதும் பாடல்களைக் கோவைப்படுத்துவதற்கான தேவையை அறிந்து கொள்ள வேண்டும்.

பக்தி இயக்கம், தனித்தனியாக சைவ, வைஷ்ணவத் தன்மைகளினையுடைத்தாயிருந்ததெனினும், ஆரம்ப காலத்தில், சைவ-வைணவ மோதல் எதனையும் காட்டுவதாகத் தெரியவில்லை. சைவ வைஷ்ணவ மோதல் பிற்காலத்து நிகழ்வாகவே தோன்றுகின்றது. சிதம்பரத்தில் நடராஜருக்கு முன் கோவிந்தராஜன் நீண்ட சயனமாகப் படுத்திருப்பது பற்றி மாணிக்கவாசகரது திருக்கோவையாரில் வரும் 'புரங் கடந்தானடி காண்பான்' எனும் திருக்கோவைப் பாடலே, விஷ்ணுவைச் சிவனிலும் பார்க்கக் குறைத்துக் காட்டும் முதல் இலக்கியச் சான்று என்பர்.31 காலஞ் செல்லச் செல்ல இவ்விரு மரபினரும் தத்தமக்கெனத் தனிப் பாரம்பரியங்களை வளர்த்தெடுத்துக் கொண்டனர்.

பத்தாம் நூற்றாண்டளவில், மத நிறுவன அமைப்பு வளர்ந்திருந்த முறையில் கோயில் முகாமைத்துவம் விரிவான நிருவாக அமைப்பு முறையினைக் கொண்டதாக அமைந்திருந்தது. கோயில் நிர்வாகத்தைத் தட்டுத் தடங்கலின்றிச் சீரொழுங்குடன் நடத்துவதற்கு வேண்டிய முயற்சிகள் யாவும் மேற்கொள்ளப்பட்டன. கோவில்களில், தேவார முதலிகளின் தேவாரங்களை ஓதுவது கோவில்களின் இன்றியமையாத, பல்வேறு நித்திய கிரியைகளுள் ஒன்றாக இருந்தது. இத் தேவாரங்களின் முக்கியத்துவம், அவை குறிப்பிட்ட கோயில்கள் மீது பாடப்பட்டிருந்தமையும் (இதனால் அக்கோயில்கள் தலப்புனித முடையவையாயின) நித்திய பூசைகளின் பல்வேறு கட்டங்களிற் பாடப்படத் தக்கனவாயிருந்தமையுமேயாகும். யாவற்றுக்கும் மேலாக, தமிழிலருந்த பாடல்களே, கோயிலின் நித்திய நிகழ்ச்சியுடன் ஈடுபடுத்தக் கூடியனவாகவிருந்தன. மொழி நிலையில் இப்படல்களே வணங்குபவர்களின் உணர்வைப் பிணிப்பனவாகவிருந்தன. ஏனெனில் மீதி நடவடிக்கைகள் சமஸ்கிருதத்திலேயே இருந்தன. எனவே, கோயில்களை செயற்றிறனுடன் நடத்துவதற்கும், மதத் தொடர்புத் தேவைகட்கும் இப்பாடல்களைத் தொகுப்பதும் அவை பாடப்படும் முறையை நிலைப்படுத்துவதும், அத்தியாவசியமாகின. கோயில்களிலே திருப்பதிகம் பாடும் முறை இராஜராஜன் காலத்துக்கு முன்னரே நடைமுறைக்கு வந்துவிட்டது.32. இதனால் அவை 'தெய்வீக இலக்கியம்' என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தன. ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் கூறுவதுபோல, தேவாரப் பாசுரப் பாடல்களிற் பெரும்பாலானவை அக்காலத்து மக்களுக்குத் தெரியாமலிருக்கலாம். அதன் காரணமாகவும் தொகுத்தல் அவசியமாயிற்றென்க. ஆகவே, அவற்றைத் தொகுப்பது மதக்கடனாயிற்று. அத்துடன், கோயில்கள் இயங்கிய சமூக-அரசியல் அமைப்பைப் பேணுவதற்கம் அவை உதவின.

ஏழாம் நூற்றாண்டிற் பல்லவர்களின் ஆட்சியுடன் தொடங்கி, சோழரால் சீரமைக்கப்பட்டு நன்கு நிறுவப்பட்ட ஒரு புதிய சமூக-பொருளாதார உருவாக்கத்தின் வளர்ச்சிக்குதவிய இலக்கியம், திருமுறை எனும் தொகையாக தொகுக்கப்பட்ட வேண்டியதாயிற்று. தேவார முதலிகள், ஆழ்வார்களினால் பல்வேறு காலங்களில், பல்வேறு இடங்களில், பல்வேறு இசை வடிவங்களிற் பாடப்பெற்ற இப்பாடல்களை திருமுறைகள், படிகளாக வகுக்கும். இம்முறைமை அவற்றின்மீதுது திட்டவட்டமான ஓர் அமைவுமுறைமை கோப்புற வைக்கும் ஒரு நடைமுறையாகவே அமைந்தது.

'திருமுறையென்ற தொடரிலுள்ள முறையென்பது மேற்காட்டிய பல பொருள்களுள் நூலையும் அதன் உட்பிரிவுகளையுங் குறித்து வழங்குவதாகும். முறைப்பட இயற்றப் பெற்றமையின் முறை என்பது நூற்குப் பெயராயிற்று.33

இது சைவப் பாடல்கள் பற்றிய குறிப்பாகும். இதே போன்று வைணவப் பாசுரங்களும் தொகுக்கப் பெற்றன. சைவத் திருமுறைகளை வகுத்தவர் நம்பியாண்டார் நம்பி என்பவர். வைணவப் பாசுரங்களைத் தொகுத்தவர் நாதமுனி என்பார்.

'ஆழ்வார் விஷ்ணுவைப் பரவிப் பாடிய பாடல்கள், தத்துவப் பொருளை வெளிப்பொருளாக கொண்டனவாக விருக்கவில்லை. பராவிக் கொண்டாடும் பக்தி நிலை வாய்ப்பாடுகளே அதிகம் காணப்பட்டன. நாதமுனி முதல் இராமானுசர் வரையுள்ள ஆசாரியர்களின் பங்களிப்பு, இப்பாடல்களைச் சேகரித்து அவற்றுக்கு தத்துவப் பொருள் வழங்கி, அந்த அடிப்படையில் ஸ்ரீவைஷ்ணவ பாரம்பரியத்தைக் கட்டியெழுப்பியத்தைக் கட்டியெழுப்பியமையேயாகும். நாலாயிரம் பக்திப் பாடல்களையும் ஒருங்குபடச் சேகரித்து, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமெனத் தொகுத்து, அவற்றுக்கான இசை முறையை வகுத்த பெருமை, முற்றிலும் நாதமுனி எனப்படும் அரங்க நாத முனியையே (கி.பி.10 நூற்றாண்டு) சாரும். அவர் இந்தப் பிரபந்தங்களை வேதங்களின் முறைமையில் நாக்கு புத்தகங்களாகத் தொகுத்து (ஒவ்வொரு ஆயிரப் படிகளாகத் தொகுத்து) அவற்றை வேதத்துக்கச் சமானமானவையாகக் கொள்ளும் வழக்கத்தினை ஏற்படுத்தினார்.34

எப்பாடல்கள் முதலிலே தொகுக்கப்பட்டனவென்ற சிக்கலான ஒரு பிரச்சினையுண்டு. எம்.ஸ்ரீநிவாச ஐயங்காரின் கருத்துப்படி, சைவர்கள் பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுத்ததைப் பின்பற்றியே வைணவ ஆசாரியர் கூறும் தங்கள் ஆழ்வார்களது அருளிப் பாடல்களைச் சேகரித்து ஒரு திருநூலாக அமைத்துக் கொண்டனர். சைவத்தைச் சார்ந்த நம்பியாண்டார் நம்பி செய்த பாரியபணியின் பின்னரே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென அவர் கூறும்.35 அவர் கருத்துப்படி, நாதமுனி பத்தாம் நூற்றாண்டின் பிற்கூற்றிலும், பதினோராம் நூற்றாண்டின் முற்கூற்றிலும் வாழ்ந்தவராவர்.36 மு.அருணாசலம் இதற்கு முரண்பட்ட கருத்தினைக் கூறுவர். அவர் கருத்துப்படி 1000-1040க்கிடையிலே சைவத் திருமுறைகளை வகுத்த நம்பியாண்டார் நம்பிக்க முன்னரே நாதமுனி வாழ்ந்தார். நாதமுனியால் வைஷ்ணவத்துக்குச் செய்யப்பட்டதனையே நம்பியாண்டார் நம்பி சைவத்துக்குச் செய்தார் என்பது அருணாசலத்தின் கருத்து.37

நாதமுனியின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டிறுதி பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமாகவிருக்கலாமென்பதும், நம்பியாண்டார் நம்பி முதலாம் இராசராசன் (985-1014 முதலாம் இராசேந்திரனுக்கு (1021-1044)ச் சமகாலத்தவராகவிருந்திருக்கலாமென்பதும் வரலாற்றாசிரியர்களிடையே நிலவும் பொதுப்படையான எண்ணமாகம்.38

இந்த ஆய்வினைப் பொறுத்தவரையில், இத் தொகுப்புக்கள் பற்றிய இரு உண்மைகள் மிக முக்கியமானவையாகும்.

முதலாவது, தொகைப்படுத்தியோர் இருவரும் பாடல்களின் பாடங்களைச் சேகரித்த அதே வேளையில் அவை பாடப்பட்ட முறைமையினையும் அறிந்து கொள்வதிற் கவனம் செலுத்தினர்.39 தேவாரங்கள் மீட்டெடுக்கப்பட்டமை பற்றி எடுத்துக் கூறப்படும் கர்ண பரம்பரைக்கதையில், தேவாரப் பாடல் முறைமையைச் சரிவர அறிவதற்கச் சோழமன்னனும் நம்பியாண்டார் நம்பியும், திருநீலகண்டப் பெரும்பாணர் பரம்பரையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடத்தே அசரீரியால் ஆற்றுப்படுத்தப்பட்டமை குறிப்பிடப்பட்டுள்ளது.40 தேவாரப் பண்ணிசையின் மீள் கண்டுபிடிப்புப் பற்றிய கதை மூலம், உயர் சமூக வட்டத் தினரிடையே அற்றுப் போயிருந்த இசைமரபு சமூகத்தின் அடிநிலையிற் பேணப்பட்ட உண்மை நன்கு புலனாகின்றது. இன்று தேவாரப் பண்களுக்க உயரிசை மரபு நெறியினை வகுக்க முனையும் இசை ஆராய்ச்சிகள் இவ்வுண்மையை மனங்கொளல் நன்று.

வைணவப் பாசுரங்களை ஓதும் மரபின் மீள் கண்டுபிடிப்பு இதனினும் பார்க்கச் சிரமமுள்ளதாகவே இருந்துள்ளதுபோலத் தெரிகின்றது. 'ஆழ்வார்கள் காலத்தில் இப்பிரபந்தங்களைப் பாடக்கையாளப்பட்ட இசை மரபினைப் பின் வந்தோர் முற்றிலும் இழந்துவிட்டனர் 'போலவே தோன்றுகின்றது' என ஜகதீசன் கூறியுள்ளார்.41 இப்பொழுது வழக்கிலிருக்கும் இசை மரபு நாதமுனிதன் மருகர்களின் உதவியுடன் தோற்றுவித்தது என்று கொள்ளப்படுகின்றது.

பாடல்களில் இசைக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தொகைகளின் பயன்பாட்டை வெளிக்காட்டுவனவாக அமைந்துள்ளன. இப்பாடல்கள் கோயில்களிற் கிரியை முறையாகப் பாடப் படுவதற்காகவே இப்பாடல் தொகுப்புக்கள் செய்யப்பட்டன. இப்பாடல்கள் சங்க இலக்கியங்கள் இலக்கியமாகக் கருதப்பட்ட முறையில் அல்லாது, தெய்வ அருளினாற் பாடப்பெற்ற அருட்பா இலக்கியங்களாகவே கருதப்பட்டன. இது இப்படியிருப்பினும், பக்தி இயக்கத்தின் இலக்கிய அமிசம் பற்றிய ஒருரு பிரக்ஞை இருக்கவே செய்தது. ஈஸ்கிலஸ், ஷேக்ஸ்பியர் போன்ற உலகப் பிரசித்தி பெற்ற நாடகாசிரியர்களது நாடகப் பாடல்களின் கையளிப்புப்பற்றி ஓரளவு பரிச்சயமுள்ளவர்களுக்குக் கூட, அந்நாடகப் பாடல்கள் முதலில் நாடக மேடைத் தேவைக்காக பேனப்பட்டனவேயன்றி இலக்கியத் தேவைகளுக்காகப் பேணப்படவில்லையென்ற உண்மை தெரியும். பிந்திய ஒரு கால கட்டத்திலேயே இலக்கிய முக்கியத்துவம் மேலோங்குகின்றது. அத்தகைய ஒருநிலை, -இசை அமிசத்திலும் பார்க்க இலக்கிய அமிசம் முக்கியத்துவம் பெறும் நிலை-இப்பாடல்களின் மூலபாடக் கையளிப்பிலும் ஏற்படுகின்றது. உமாபதி சிவாசாரியரின் (13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி 14ஆம் நூற்-முற்பகுதி) திருமுறை கண்ட புராணம், திருமுறைகளின் மத-இலக்கிய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. இவ்வருட்பாக்களும், இவற்றின் தொகுப்பும் மதப் பாரம்பரியத்திற் பெற்ற 'நின்று நிலைக்கும் பிடிப்பு'க் காரணமாக தொகுப்பும், தொகுப்பின் வரலாறும் மாத்திரமல்லாது. இப்பக்திப் பாடலை அருளியோர்களும், அவர்களின் இதிகாசத்தை எழுதியவருமே போற்றப்படும் ஒரு நிலைமை தோன்றிற்று. சைப்பக்தி இயக்கத்தைப் பாடிய சேக்கிழார்மீது உமாபதி சிவாசாரியற் பாடப்பெற்ற சேக்கிழார் புராணம் பற்றியுமே இங்கு கூறப்படுகின்றது.

சைவ, வைணவ அருட்பாக்கள் தொகுக்கப்பட்ட முறைமையிலுள்ள இரண்டாவதுது முக்கியத்துவம், இத்தொகுப்பு வேலையானது, இரண்டு மதங்களைப் பொறுத்தவரையிலும், உண்மையில் வைஷ்ணவத்திலும் பார்க்க சைவத்தில், அரச உதவியுடனே செய்யப்பெற்றமையாகும். தேவாரங்கள் சிதம்பரத்தில் மீளக் கண்டுபிடிக்கப்பட்டமை பற்றிய ஐதீகங்களை நோக்கும்பொழுது, அரச உதவியும் தலையீடும் இல்லாதிருந்திருப்பின் இப்பாடல்களின் பாடல்கள் மீட்கமுடியாத வகையில் அழிந்திருக்குமென்பது திண்ணம். நாதமுனியைப் பொறுத்த வரையிலுங் கூட, அரச உதவி கணிசமான அளவு இருந்திருக்கின்றது என்பது தெரிய வருகின்றது.

தமிழ் இலக்கியத்தின் வரலாற்றின் இடம்பெறும் அடுத்த முக்கிய நிகழ்ச்சி, சைவ சித்தாந்த நூல்கள் தொகுக்கப் பெற்றமையாகும். இவை, சங்க இலக்கியங்களைப் போன்றோ பக்தி இலக்கியங்களைப் போன்றோ படைப்பிலக்கியங்களைப் போன்றோ பக்தி இலக்கியங்களைப் போன்றோ பாடைப்பிலக்கியங்கள் அல்ல. இவை கொள்கை விளக்கச் சாத்திரங்களாகும்.43 இந்து சிந்தனையில் வரும் இம் மெய்யியல் முறைமையின் சமூகவியல் அமிசங்கள் பற்றிய ஆழமான ஆய்வு அத்தியாவசியமாகம்.44 மிக விரிவான ஒழுங்கமைப்புடையதாக விருந்த சோழ நிருவாக அமைப்புக்கும் இம்மெய்யியல் முறைமைக்குமுள்ள 'சமூகவியல் நிலைப்பட்ட தொடர்பு' மிக முக்கியமானதாகும். இதுபற்றிய மிக மிக முக்கியமான சில உண்மைகள் உள்ளன.

அ. இச்சிந்தனை முறைமையின் முதலாவது கோட்பாடு நூலான, மெய்கண்டாரின் சிவஞான போதம் 'பதின்மூன்றாம் நூற்றாண்டின் முதற்பாதியில்' அதாவது சோழல் காலத்தின் சிதைவுக்கூற்றில் எழுதப்பட்டதாகம்.

ஆ. சித்தாந்த சாத்திரங்களுள் எட்டினை (சிவப்பிரகாசரம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக் கவி, நெஞ்சு விடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகியனவற்றை) எழுதிய சிவப்பிரகாசர் 13ம் நூற்றாண்டு இறுதிப்பகதி 14ம் நூற்றாண்டு முற்பகுதியில்-அதாவது அரசியற் சீர்குலைவு காணப்பட்டக் காலத்தில் -வாழ்ந்தவராவர்.

இ. இச்சித்தாந்த சாத்திரங்கள், பிராமணரல்லாத சைவ மடங்களின் தத்துவ அடித்தளம் ஆகின்றன.

ஈ. சைவ சித்தாந்தத்தின் கொள்கையடிப்படைகள் சித்தாந்திகளை வேதாந்திகளிலிருந்து வேறுபடுத்துகின்றன.

மேலே குறிப்பிட்ட உண்மைகளின் பின்னணியில் நோக்கும்பொழுது, சைவ சித்தாந்த சாத்திரங்கள் தொகுக்கப் பட்டமையும், இச்சாத்திரங்களுக்கு மடங்களை சாந்த சந்நியாசிகளும் ஆதீன அறிஞர்களும் எழுதிய உரைகளும், இவ்விலக்கியப் பாரம்பரியம் பற்றிய 'பிரக்ஞையை'த் தமிழர் சிந்தனை முழுவதிலுமே முக்கியமான ஒன்றாக ஆக்கி விடுகின்றது.45

இந்த இலக்கியப் பாரம்பரியத்தைப் பேணுவதிலும், விரித்துரைப்பதிலும் பிராமணரல்லாதார் மடங்களுக்கு இருந்த ஈடுபாடு, தமிழிலக்கியத்தின் முக்கியமான ஒரு பாரம்பரியத்தை உயிர்ப்புள்ளதாகப் போற்றுவதற்கான முயற்சியாகும். இச் சைவ சித்தாந்த சாத்திர நூல்களின் விளக்கங்களாகப் பல்வேறு மடங்கனினது அறிஞர்களினாலும் எழுதப்பெற்ற பண்டார சாத்திரங்கள் உண்மையில் மேற்குறிப்பிட்ட இலக்கிய முயற்சியின் தொடச்சியேயாகும்.

சோழ ஆட்சி வளர்த்தெடுத்துச் சட்ட முறையாக நடை முறைப்படுத்திய ஆட்சியதிகார வரன் முறையினடியாகக் கருத்துப் பொருளாகப் பிழிந்தெடுக்கப்பட்ட அதிகார வரன் முறை, பிராமணரல்லாதார் மடங்களில் அவற்றின் அதிகார வைப்பு முறையினைப் பேணுவதற்கு, முக்கியமாக அடிநிலையிலிருந்தோரிலிருந்து உயர்ந்தோர் தம்மைப் பிரித்து வைத்துக் கொள்வதற்கு உதவிற்று என்று இங்கு கூறுவது தவறாகாது. மடங்களின் சாதியொதுக்க நிலை, ஆசாரத்தில் அவை காட்டும் கெடுபிடி (இதனைப்பற்றி மடாதிபதியொருவர் இந்நூலாசிரியரிடம் விவரித்துக் கூறினார்) தங்களின் கீழ் வருவோர்மீது அவர்கள் விதிக்கும் பொருளியற் சார்பு நிலை, தம்மைக் காணச் செல்வோரிடம் அவர்கள் எதிர்பார்க்கும் வணக்க முமன்கன் ஆகியனயாவுமே, சைவ சித்தாந்த சிந்தனைகளும் நடைமுறைகளும், இச்சிந்தனைகளும் இதன் பண்பாடும் போற்றிப் பேணப்படுமிடங்களிலே தொழிற்படும் முறைமையின் சமூக அடித்தளம் பற்றி அறிவதற்கு அத்தியாவசியமானவையாகும்.

வைஷ்ணவத்தின் சோழர் காலத்துக்குப் பிற்பட்ட வளர்ச்சியை விளக்குவதற்கு இராமானுஜரின் நிலைபாடு. வடகலை, தென்கலையின் தோற்றம் பிணக்குகள். வடமொழி மேலோங்கி நிற்கும் மணிப்பிரவாள எழுத்து முறைமையின் வளர்ச்சி ஆகியனவற்றுக்கான இறுக்கமான சமூகவியல் விளக்கங்கள் தேவையாகும்.46 உண்மையில், இராமனுசர்பாற் சோழர்கள் கொண்டிருந்த பகைமை எதிர்ப்புக்கான காரணத்தினை மெய்யியல் வேறுபாடுகளின் மாத்திமல்லாது, இராமானுசரின் தாராண்மை வாதப் போதனைகள், சோழ ஆட்சியமைப்பிற்கு ஏற்படுத்தியிருக்கக் கூடிய அசௌகரியங்களின் அடிப்படையிலும் காண முனைதல் வேண்டும். உண்மைக் காரணம் எதுவாயினும், வைணவர்கள் தமிழ்ப் பண்பாட்டுச் சிந்தனையின் பிரதான ஆற்றோ‘ட்டத்திலிருந்து மேலும் மேலும் விடுபட்டுப் பின்னடைகின்றனர். அவர்கள் பின்னடைந்த அளவுக்குச் சைவ சித்தாந்தமும் மடங்களும் மேலோங்குகின்றன. வைஷ்ணவர்களிடையே உட்பூசல்களும் காணப்பட்டன. இவை எவ்வாறாயினும், அவதாரக் கோட்பாட்டினதும் (கடவுள் மனித உருவில் வரலாம்) 'சரணாகதி'க் கோட்பாட்டினதும் சமூக நிலை உள்ளீடுகளை மிக கவனமாகத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல் அவசியமாகின்றது. ஏனெனில், சைவ சித்தாந்தத்திற் குறிப்பிடப் பெறும், கடவுளின் தனிநிலை, மாற்ற முடியாத ஆன்ம வளர்ச்சிப் படிநிலைகள் ஆகியனவற்றிலிருந்து இவை வேறுபட்டனவாக அவை காரணமாக வைணவ உலக நோக்கிலிருந்து சித்தாந்த உலக நோக்கு மாறுபட்டதாகவிருப்பனை நாம் காணலாம்.

பதினெட்டாம் நூற்றாண்டு முற்பட்ட காலப் பிரிவில், தமிழிலக்கிய மரபுணர்வு இலக்கியச் சிந்தனை சம்பந்தப்பட்ட தமிழ் மக்களின் பிரக்ஞை வரலாற்றில் இவற்றினையே பெருங் கட்டங்களாகக் கொள்ளல் வேண்டும். இவற்றைவிடச் சிறு நடவடிக்கைகள் சிலவும் நடைபெற்றுள்ளன. புறத்திரட்டுப் போன்ற தொகை நூல்களின் தோற்றத்தில் இதற்கான உதாரணத்தினைக் காணலாம். 47 14ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இத் தொகை நூல், சொற்பொழிவாற்றுவோரின் தேவைக்காக, பல்வேறு இலக்கிய முக்கியத்துவமுடைய சிறப்புப் பகுதிகள் ஒருங்கு சேர்க்கப் பட்டவொரு தொகுப்பாகும். இதனைப் பிரசங்காபரணம் எனவும் குறிப்பிடும் ஒரு மரபு இருந்ததென்பர். திருக்குறள் அதிகார அடைவினையொத்தே இதன் அதிகா‘ர அடைவு இருந்ததென்பர்.

தமிழ் மக்களின் இலக்கிய மரபுணர்வுப் பிரக்ஞையில், 10-ம், 11-ம் நூற்றாண்டுகளில் இளம்பூரணருடன் தொடங்கி, 12-14ம் நூற்றாண்டுகளில் உச்சக்கட்டத்தை எய்தி. சேனாவரையர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் எனவரும் பெரும் பெயர்களை உள்ளடக்கிய உரைப்பாரம்பரியரும் முக்கியமான ஒன்றாகும்.46

அ. சம காலத்தவரினாலே விளங்கிக் கொள்ள முடியாது போய்க் கொண்டிருந்த நூல்களை, நூற்பாடங்களை விளக்கியமையும்.

ஆ. சம்பந்தப்பட்ட நூலில் அல்லது நூலின் ஆசிரியராற் கூறப்பட்டிருப்பவற்றுக்கு ஒரு 'நிகர் கால' அர்த்தம்- இயைபு-உண்டு எனக் காட்டித் தம் காலத்தின் கருத்து நிலைத் தேவைகளுடன் அவற்றினை இணைத்தமையும்.

இவ்வுரையாசிரியர்களின் முக்கியத்துக்குக் காரணமாக அமைகின்றனவெனலாம்.

இவ்வுரையாசிரியர்கள் இப்பணியினைச் செய்த முறையினிற் குறிப்பிட்ட ஒரு வியாக்கியான 'நடை'யினை வளர்த்துக் கொண்டனர். உதாரணமாக நூலாசிரியர் இதனை ஏன் இவ்வாறு கூறினார். ஏன் பிறிதொரு வழியாற் கூறவில்லை என்னும் நடைமுறையினை எடுத்துக் கூறலாம். பாஷ்ய மரபிலும் இத்தகைய ஒரு முறைமை உண்டு. இலக்கியம் பாரம்பரியமாக நோக்கப்பட்ட, கையளிக்கப்பட்ட அர்த்தங்கள் கொடுக்கப்பட்ட முறைமைகளையும் இவ் உரையாசிரியப் பாரம்பரியம் நமக்குணர்த்துகின்றது.

ஆயினும் இலக்கிய ஓட்டம் பற்றிய இப்பிரக்ஞை எதுவும், தமிழ்ச் செய்யுளை இயற்றியோரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதிப் பேணல் வேண்டும் என்ற ஒரு கருத்தினை ஏற்படுத்தவில்லை. குறிப்பிட்ட ஒரு நூல் பற்றி எடுத்துக் கூறப்பட்ட கருத்துக்களைத் தொகுத்துப் பேணும் முறைமையும் (திருவள்ளவ மாலை), ஒரு நூலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கத்தினை எழுதும் மரபும் (தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம்) காணப்படுகின்றன. ஆனால் வாழ்க்கை வரலாற்றினைத் தரும் தொகுதி எதுவும் காணப்படவில்லை. நூற்றொகைகள் இருப்பதனை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம் (எட்டுத் தொகை, பத்துப்பாட்டு)

தமிழில், முதல் தடவையாக, பல்வேற தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கை வரலாற்றினை எடுத்துக் கூறும் நூல் தமிழ் நாவலர் சரிதையேயாகும். இது 18-ம் நூற்றண்டக்குரியதெனத் தி.த.கனக சுந்தரம்பிள்ளை கூறுவர்.49

III (ஆ)

அடுத்த கட்டம் உண்மையில், மாறுங் காலப்பிரிவேயாகும். அது, பாரம்பரியத் தமிழிலக்கிய நியமங்கள் மேலோங்கி நின்ற தமிழ் நாட்டையும், இந்தியா முழுவதிலுள்ளும், சென்னை மாநிலத்தினுள்ளும் தனது நிலை பற்றி அதிக பிரக்ஞையுடையதான தமிழ்நாட்டையும் இடை நின்றிணைக்கும் ஒரு காலகட்டமாகும்.

இலக்கியத் தொடர்பு முறைமையின் அடிப்படையில் இக்கால கட்டத்தை பதினெட்டாம் நூற்றாண்டு 1835 வரையுள்ள கால கட்டமென வகுத்துக் காட்டியுள்ளோம்.

தமிழிற் கிறித்தவ இலக்கியத்தின் எழுச்சி சம்பந்தமாக இராணரீகம் கூறியுள்ளது. இக்காலப் பிரிவைத் தனிக்கால கட்டமாகக் கொள்ள வேண்டியதன் அத்தியாவசியத்தை மேலும் வற்புறுத்துகின்றது.

'புரட்டஸ்காந்தா மிசனறிமார், ஐரோப்பாவில் அச்சியந்தித்தின் அகண்டவலு எவ்வாறு மதச் சீர்திருத்தத்துக்கு உதவியது என்பதை நினைவு கூர்ந்தவர்களாவர். அந்த வலுவினை, தமது பணியின் ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்தினர். 1712ஆம் ஆண்டிலேயே தரங்கம்பாடியில் ஓர் அச்சுயந்திரம் நிறுவப்பட்டது. அதன் பின்னர், இந்தியாவில் நீண்ட காலம் அச்சியந்திரம் முற்று முழுதாக அரசாங்கத்தினதும் மிசனறிகளினதும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்து வந்தது. 1835இல், அப்பொழுது மகோதேசாதிபதியாகவிருந்த ஸேர் சார்ள்ஸ் மெற்காஃபினால் அச்சுக் சுதந்திரம் கொடுக்கப்பட்டதன் பின்னர், இந்தியா எங்கணும் சுதேச முகாமையின் கீழ் அச்சியந்திரங்கள் நிறுவப்பட்டன.50

இதற்கு அடிக்குறிப்பாக இராஜரீகம் பின்வருமாறு கூறுகின்றார்.

'இது இந்திய இலக்கியத்தின் வரலாற்றில் ஒரு
யுகாரம்ப நிகழ்ச்சி ஆகும்.51

இக்கூற்று, இக்கால கட்டத்திற்கு நாம் கொண்ட கடையெல்லையை நியாயப்படுத்துவதாக மாத்திரம் அமையாது. 1835-ஐ தேசியச் சார்புடைய புத்தக உற்பத்தியின் துவக்க முனையாகக் கொள்வதன் பிழையின்மையையும் நிறுவுகின்றது.

இக்காலத்திலே, ஏற்கனவே விளக்கியபடி, தமிழ்நாடு, கிறித்தவத்தினது நேர்முகத் தொடர்புக்குச் செயலூக்கமான வகையில் ஆளாக்கப்படுகின்றன. புரட்டஸ்தாந்திகளும் கத்தோலிக்கர்களுமான சில மேனாட்டவர்கள் தமிழ் மொழியிலும் இலக்கியத்திலும் ஆர்வம் நிறைந்த ஈடுபாட்டின் மேற்கொண்டு, மேனாட்டவர்களுக்காகச் சில தமிழ் நூல்களை மொழிபெயர்க்கும் பணியினைத் தொடங்குகின்றனர். இவர்களுட் பெரும்பாலானோர் மிசனறிமார், சிலர் நிருவாகிகள்.

மிசனறிமாருள், தமிழரின் இலக்கியப் பாரம்பரியத்தை மேனாட்டுக்கு அறிமுகஞ் செய்து வைக்கும் பணியில், இக்கால கட்டத்தில் மிக முக்கியமானவராக எடுத்துக் கூறப்படத் தக்கவர், இந்தியாவில் 1700 முதல் தம்மிறுதிக் காலமாம் 1719 வரை வாழ்ந்த பாதலோமியூஸ் ஸ“கன் பால்கு ஆவர். அவருடைய 'பிபிலோதிக்கா பலபாறிக்கா' (Bibilotheca Malabarica: மலபார் மொழி நூல்கள்; தமிழ் இப்பாதிரிமார்களால் 'மலபார் (Malabar) என்றே குறிப்பிடப்பெற்றது) (1708), அவரிடத்திருந்த தமிழ் நூல்கள் பற்றிய விவரங்களைக் காணலாம். அதன் மூன்றாம் பாகத்தில் அவர் அக்காலத்தில் கூறப்படத்தக்க அளவுக்குத் தமிழிலக்கியம் பற்றிய முழுமையான தகவலைத் தருகின்றார். அத்துடன் 119 தமிழ் நூல்களின் உருவும் பொருளும் பற்றிய குறிப்புரைகளும் அதில் உள்ளன.52 'தமிழ்ப் பண்பாட்டைத் தனது ஐரோப்பிய நண்பர்களுக்கு விளக்கும் வகையிலும் எழுதினார். இந்தியர்களிடையேயும் தமிழர்களிடையேயும் தமது பாரம்பரியம் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுதல், மற்ற மிசனறிமாரையும் இந்திய வாழ்க்கையினுள் உட்புகுவிப்பதற்கு ஊக்குவித்தல் ஆகிய இரட்டை இலட்சியத்தினால் அவர் வழி நடத்தப்பட்டார்.'53 'ஒளவையாரின் கொன்றை வேந்தனை மொழி பெயர்த்து, தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், திருவள்ளுவர், நாலடியார். தொல்காப்பியம் பற்றி குறிப்பிடும் நீண்டதொரு தமிழ் நூற்பட்டியலைத் தந்த.54 ஒல்லாந்துக்காரர் வலென்ற்றின் போன்றோரும் பலர் இருந்தனர்.

நிர்வாகிகளுள் இருவர் முக்கியமானவர்களாவர் - என்.இ.கிண்டர்ஸலி (N.E.Kindersley), எஃப் டபிள்யு எல்லிஸ் (F.W. Ellis). ஆங்கிலக் கிழக்கிந்யிக் கம்பெனியின் சேவையாளராகவிருந்த கிண்டர்ஸ்லியே திருக்குறளை ஆங்கிலத்தில் முதன்முதலில் மொழி பெயர்த்தவராவார் (1794). பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் மொழியும் இலக்கியமும் இருந்த நிலைபற்றி அவர் கூறியிருப்பன மிக்க பெறமானமுடைய தகவல்களாகும்.55 ஆங்கிலத்திற் குறள் பற்றிய முதன்மையான ஒரு விளக்கவுரையை எழுதியுள்ள ஃபிறான்சிஸ் வைற் எல்லிஸ் (Fraancis Whyte Ellis) அக்காலத்துப் பிரித்தானிய அலுவலரிடையே தமிழ் பற்றிய ஆர்வத்தைத் தோற்றுவிப்பதற்குக் காரணமாகவிருந்தவராவர். 'சென்.ஜோர்ஜ் கோட்டையிலிருந்த கல்லூரி அவரது அயரா உழைப்பின் பயனாக அமைந்ததாகும்.56

தமிழ் ஆய்வினில் ஐரோப்பிய ஆர்வத்தை விழிப்புறச் செய்தத ஜே.பி.ஃபபிறிக்கஸ் (J.P.Fabricus) பிறய்ற்ஹெப்ற் (Ch.Breithaupt) போன்ற மிசனறிமாருடைய செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிடுதல் அவசியமாகும்.57

ஏற்கனவே கூறப்பட்டபடி, இக்கால கட்டம், மிக முக்கியமான அடுத்த கட்டத்துக்கான ஒரு வாயிற் கடவையாகும். எனவே அடுத்து வரும் கால கட்டத்திற் பூத்துக் குலுங்கவிருக்கும் அவ்வமிசங்கள் பற்றியே இக்கட்டத்தில் நோக்குதல் வேண்டும்.

இக்கால கட்டத்தின் மிக முக்கியமான நிகழ்ச்சி என்று கூறப்படத்தக்கது. தமிழ் நாவலர் சரிதை எழுதப்பட்டமையாகும். இந்நூலின் காலமும், இந்நூலினை எழுதியவர் யாரென்பதும் தெரியாது. இந்நூலுக்கு இரு பதிப்புக்கள் உள்ளன- தி.த. கனகசுந்தரம் பிள்ளை பதிப்பு (1921), ஒளவை துரைசாமிப் பிள்ளை பதிப்பு (1949).

கனகசுந்தரம்பிள்ளையவர்கள் குறிப்பிட்டதற்கொப்ப இது முக்கியமான தமிழ்ப்புலவர்களின் பூரணமான வாழ்க்கை வரலாறு அன்று, இரு சில வாழ்க்கை வரலாறுகளையும், சில பாடல்கள் எழுந்த சந்தர்ப்பங்களையும் தருகின்ற ஒரு கலவைத் தொகுதியாகும். இதில் இளங்கோ, சாத்தனார், திருத்தக்க தேவர், சேக்கிழார் பற்றிய குறிப்புக்கள் இல்லை.

இந்நூலினைப் பதிப்பித்த ஒளவை துரைசாமிப் பிள்ளை, தாம் இதைப் பதிப்பித்த நாட்களில் இலக்கியத்தின் வரலாறு இருந்த நிலைமை பற்றியும், இலக்கிய(த்தின்) வரலாற எப்படி எழுதப்படல் வேண்டமென்றும் சிந்தனையூக்கம் தரும் ஒரு முன்னுரையை எழுதியுள்ளார். அத்தகைய புலமை சான்ற ஒரு முன்னுரையை யெழுதியவர். அந்நூலின் குறைபாடுகளை எடுத்துக்காட்டாது விட்டுள்ளமை விளங்க முடியாதிருக்கின்றது. அடிக்குறிப்புக்களைத் தவிர, அவர் எழுயுள்ள குறிப்புக்களை நூலின் மூல பாடத்திலிருந்து பிரித்தறிய முடியாதிருக்கின்றன.58

'தமிழ் நாவலர் சரிதை'யின் பெறுமதி. அது தமிழிலக்கியத்தின் வரலாறு எழுதப்படுவதற்கான முதல் முயற்சி என்பதிலேயே தங்கியுள்ளது. பல்வேறு அகச் சான்றுகள் காரணமாக அது பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவிருத்தல் வேண்டமென்று கூறப்படுகின்றது. இது தோன்றிய காலத்தில் நிலவக்கூடிய வரலாற்றுணர்வுப் பின்னணியில் நோக்கும்பொழுது. இதன் பண்புகள் ஆச்சரியத்தைத் தருவனவன்று. இந்நூல், வாழ்க்கைச் சரிதப் பாங்குடையதாகவும், பாடல்களின் தோற்றச் சூழ்நிலைகளைக் கூறுவதாகவும் நூல் விவரத்தைத் தராததாகவும் காணப்படுகின்றது. இலக்கியத்தினதும் கவிஞர்களினதும் வரலாறு எனும் வகையில்ல இது பல குறைபாடுகளை உடையதாயினம், தமிழ்ச் சமூகமானது, எத்துணைப் போதாமையுடனுஞ் சரி, தனது இலக்கியக்காரரையும் இலக்கியத்தையும் புறவய நோக்காக நோக்கத் தொடங்கி விட்டதென்பதனை இந்நூல் எடுத்துக் காட்டுகின்றது. அக்காலத்தின் சமுக-பண்பாட்டமிசங்களை நோக்கும் பொழுது. மடங்களினது ஆதவையோ, குறுநில ஆளுநர் ஒருவரின் ஆதரவையோ பெறாது எழுதப்பெற்றதெனக் கொள்ளப்படத்தக்க இந்நூல் போன்ற ஒரு படைப்பு, இருப்பதை விடத் திட்டவட்டமானதாகவிருந்திருக்க முடியாதென்பது ஓர் உண்மையாகும். இப்பொழுது அதிகாரப்பட்டு நிற்கும் விடயத்துடன் நேரடித் தொடர்பற்றதாயினும், இக்கட்டத்தில் 14-ம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய தமிழிலக்கியங்களிலேயுள்ள. அதற்கு முந்திய காலங்களிலே காணப்படாத ஒரு பண்பு பற்றிக் குறிப்பிடல் வேண்டும். அதிகார மையங்களுக்கு விரோதமானவையாக. அவற்றுடன் சாராதவையாகக் காணப்படும் இலக்கியங்கள் தோன்றும் தன்மை காணப்படுகின்றது. அதிகார நிறுவனங்களைச் சார்ந்த இலக்கியங்கள் மாத்திரமே பேணப்பட்ட முந்திய காலத்தைப் போன்றல்லாது, இந்தக் காலத்திலும், இதற்குப் பின்னரும், இலக்கிய எதிர்க்குரல்கள் - அவை சித்தர் பாடல்களாகவோ இருக்கலாம்- இலக்கியக்கணிப்புப் பெறுவதை அவதானிக்கலாம். பண்பாட்டு நிலைமையிலுங் கூட, தமிழ்நாடு, சைவத்தினதோ அல்லது வைஷ்ணத்தினதோ பொதுவாக இந்து மதத்தின் தனிக் கொத்தளமாக இருக்கும் நிலை அற்றுப் போய் விட்டது. இந்தியச் சார்பற்ற இரு மதங்கள்- இஸ்லாமும் கிறிஸ்தவமும்-வந்து விட்டன. அவை தமக்கெனத் தனிப்பட்ட குழுக்களை. தம் மத உணர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய இலக்கிய ஆக்கங்களையுடையனவான குழுக்களை உருவாக்கத் தொடங்கியிருந்தன.

இத்தகைய ஓட்டங்களும் எதிரோட்டங்களும்தான், அவை எத்தணை குறைபாடுடையனவாயிருப்பினும், சரி, ஏதோ ஒரு வகையில் தொழிற்படுகின்ற இலக்கியத்தின் வரலாற்றுப் படைப்பினை தேவையாக்கினவெனக் கொள்ளல் வேண்டும். 'தமிழ் நாவலர் சரிதை' தோன்றுவதற்கான தேவை இத்தகையதாகவே இருந்திருத்தல் வேண்டும்.

IV

தமிழில் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சியில், 1835-1929க் கால கட்டமே சிக்கல் மையப்பட்ட கால கட்டமென்று கொள்ளப்படத்தக்கதாகும். தமிழிலக்கியத்தின் வரலாற்றை விளக்கிக் கொள்வதற்கும் அதனைத் தமிழர்களுக்கே எடுத்துக் கூறுகூதற்கும், மேனாட்டு அணுகுமுறைகளையும் மரபுவழி அணுகுமுறைகளையும் கைக்கொண்டு தொழிற்பட்ட 'உருவாக்க காலம்' என்ற வகையில், இக்கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரலாறெழுது நெறிகள், தமிழிலே இப்பாடத்தின் அணுகுமுறையில் நிரந்தரமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. இத்துறைப் புலமையாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் புதிய வினாக்களைக் கிளப்புமாறம் மரபு சாரா விடைகளைப் பெற ஊக்குவிக்கத் தானும் முடியாத அளவுக்கு இத்தாக்கம் உள்ளது.

முற்று முழுதான, பிறிதொன்றும் சாராத வகையில் தனி இலக்கிய நோக்கில் இப்பிரச்சினை நோக்கி, இலக்கியத்தின் வரலாற்றினை எழுதுவதிலேற்பட்ட வளர்ச்சிகளையும், அத்துடன் இலக்கிய வரலாறு பற்றிய பிரச்சினையையும், தனியே புலவர்கள் அவர்கள் காலம், அவர்களது படைப்புக்கள் பற்றிய பிரச்சினைகளாக மாத்திரமே கொண்டு, அந்த அமைப்பினுள் தன்னுள் தான் மடிவுறும் ஒரு வரலாற்றினை, அக்காலத்திலே தமிழ் நாட்டினை உலுக்கிய பிரச்சினைகளைப் பற்றிய சாயலைத் தானும் வெளிப்படுத்தாத வகையில், வரைந்துது கொள்வது, வாத விவாதங்களுக்கு அதிகம் இடமளிக்காததாகவும், இலக்கிய நிகழ்வுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்துக் கூறுவதற்கு வாய்ப்பானதாகவும் அமையும். ஆனால் ஏற்கெனவே, இலக்கிய உருவாக்கத்தைச் சமூக உருவாக்கத்தின் ஒரு பகுதியாகக் கொள்ள வேண்டுமென்ற புலமைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அது, இப்பிரச்சினையை நாம் அகண்ட பின்னணியொன்றில் வைத்து நோக்குவதனைக் கட்டாயப்படுத்துகின்றது. எனினும் இக்கட்டத்தில் நிதானமான ஒரு போக்கும் அத்தியாவசியமாகின்றது. அதாவது இம் முயற்சி இலக்கிய வரலாறு பற்றிய ஆய்வுகளினை விளக்கிக் கொள்வதற்கான முயற்சியே தவிர, பொதுவான இலக்கிய வரலாற்றினை எழுதுவதற்கான முயற்சியன்று என்ற தெளிவிருத்தல் வேண்டும்.

இக்கால கட்டத்திலேதான், முன்னர், பிரித்தானிய ஆட்சியின் ஆரம்ப காலத்தில் 'நிர்வாகத்திலும் பண்பாட்டிலும் தேங்குநீர்ப் பிரதேசமெனக் கருதப்பட்ட'59 சென்னை மாநிலம், அங்கு வளர்ந்து கிளம்பிய காங்கிரஸ் விரோத, காங்கிரஸ் சாராத செல்நெறிகள் காரணமாகத் தேசியவாதிகள் யாவரினதும், கவனத்தை ஈர்த்த காலமாகும். அதிகாரப்பட்டு நிற்கும் இக்கால கட்டத்திலே தான் (1835-1929) பிராமணர்-பிராமணரல்லாதார் சமூக எதிர்ப்புணர்வு அரசியலாக்கப்பட்டது. திராவிடக் கருத்துநிலை எழுந்தது. ஐஸ்டிஸ் கட்சி (1916), மறை மலையடிகளின் தனித்தமிழியக்கம், ஈ.வெ. இராமசாமி நாயக்கரின் சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம் ஆகியன தோற்றுவிக்கப் பெற்றன.

ஒரு பண்பாட்டுக் குழுமம் என்ற வகையில் தமிழர்களின் தனித்துவத்துக்கான போராட்டம் நடந்த காலம் இதுவேயாகும். இக்கால கட்டத்தில் நடந்த போராட்டமானது. ஐம்பதுகளில் தி.மு.க.வினால் நடத்தப்பெற்ற போராட்டத்திலிருந்து வேறுபட்டதாகும். பிந்திய போராட்டம், சுதந்திர இந்தியாவில் தமிழர்களை ஒரு தேசிய இனமாகவும், தமிழ் நாட்டை அத்தேசிய இனத்தின் மாநிலமாகவும் வரையறுத்துக் கொள்வதற்கான போராட்டமாகும். 18355-1929இல் நடந்த போராட்டம், பேரிந்திய அமைப்பிற்குள் திராவிடர்கள் என்ற வகையில் தமிழர்களின் பண்பாட்டுத் தனித்துவத்தை நிலை நிறுத்துவதற்காக நடந்த போராட்டமாகும்.

தென்னிந்தியாவில், ஆரிய-திராவிடக் கிளைப்பாடு தவிர்க்க முடியாததாகக் காணப்படுகிறது. ரி.ஆர்.வெங்கட் ராம சாஸ்திரி கூறுவது போன்று, 'பெருந் தொகையான தென்னிந்தியப் பிராமணர்கள் தங்களை 'ஆரிய' இனத்தினர் எனறே நம்பிக் கொள்கின்றனர். அவர்கள் சமஸ்கிருதத்திடத்தும் 'ஆரிய'ப் பண்பாட்டிடத்தும், இவற்றின் மதக்கருவூலமான, 'இந்து மதம்' என அழைக்கப்படும் மதத்திடத்தும் பற்றுதலுடையவர்கள். அவற்றை விட்டொழிக்க வேண்டிய தேவை தமக்கு இல்லையென்று கருதுபவர்கள். பிராமணரல்லாதாரில் ஒரு சிறு பிரிவினர் இது காரணமாக மனக்குறைபா‘டு கொண்டுள்ளார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அப்படியானோர் தமிழ்ப் பண்பாடு பற்றியும், திராவிடப் பண்பாடு சமஸ்கிருதப் பாட்டிலிருந்து வேறுபட்டது என்பது பற்றியும் பேசிக் கொள்கின்றனர்.60 பிராமணர்களாற் சமூக மட்டத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டும், தொழிற்றுறைகளில் மேலழுத்தி அமுக்கப்பட்டும் நின்ற, மேற்கிளம்பி வந்த பிராமணரல்லாதார், ஆரியர்களுக்க முற்பட்ட திராவிடப் புகழ் பேசி தம்மை இந்தப் பண்பாட்டு தனித்துவத்தைக் காட்டுவதற்கான அவர்களின் முயற்சி, அரசியல் முதல் மொழி வரை சகல துறைகளிலும் பரிணமித்தது.61

இந்தியாவிற் சென்னை மாநிலத்திலே நிலைமை இதுவாக, இலங்கையில் தமிழ் விழிப்புணர்ச்சி வேறு வடிவத்தைப் பெற்றது. கிறித்துவ மதமாற்றத்துக்கும் மேனாட்டு மயவாக்கத்துக்கும் எதிராக, குறிப்பாக, தமிழ் மக்களின் சைவத் தனித்துவத்தைப் பாதுகாக்க முனையும் ஒரு மது-இலக்கிய இயக்கம் தொடங்கிற்று.62 கிறித்துவப் பாதிரிமாராலே சனரஞ்சகப்படுத்தப் பெற்ற நடவடிக்கைகளையும் முறைமைகளையும் தானே கையேற்றுக் கொண்ட கந்தப்பிள்ளை ஆறுமுகம் ஆகிய ஆறுமுக நாவலர் (1822-1879) சைவத் தமிழிணைப்பை வற்புறுத்திய கல்வி நடவடிக்கைத் திட்டமொன்றினை மேற்கொண்டார்.63

இக்கால கட்டத்தின் வரலாற்றுச் செல்நெறியை எடுத்துக்காட்டும் இவற்றினை இங்கு விரிவாக ஆராய முடியாது. ஆனால் குறிப்பிடாமலும் விட்டு விட முடியாது. ஏனெனில், ஒரு மொழிப்பண்பாட்டுக்குழுவெனும் வகையில் தமிழ் மக்களின் வரலாற்றுப் பழைமையையும் பண்பாட்டுத் தனித்துவத்தையும் அங்கீகரிப்பதற்கான முழுப் போராட்டத்திலும், தமிழ் மக்களின் பழைமையும் அவர்தம் சாதனைகளையும் எடுத்து நிறுவுவதற்கு, (மற்றைய) யாவற்றையும் விட, தமிழ் இலக்கியமே பயன்படுத்தப்பட்டது.

சில உதாரணங்களை எடுத்துக் கூறுவது பயன் தருவதாக அமையும்.

ரி.ஆர்.சேஷ ஐயங்கார் எழுதிய 'ஏன்ஷன்ற் டிறவிடியன்ஸ்' எனும் நூலுக்க சி.இராமலிங்க ரெட்டி தாம் எழுதிய முன்னுரையிற் பின்வருமாறு குறிப்பிட்டார்.

'திராவிட நாகரிகம் என்னும் முழுப் புலத்தின் ஒவ்வொரு அங்கம் அங்கமாக விரிவாக ஆராயப்பட்டு எடுத்துரைக்கப்படும் வெளியீட்டுத் தொடரில் இந்நூல் ஒன்றாகவிருக்குமென்று நம்புகிறேன். ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்குமிடையே ஒரு புறத்தில் கடன் கொடுத்தலும் நடைபெற்றிருக்கின்றதென்பதனை அறிய, ஒரு புறத்தில் நாம் பெற்றிருந்தால் மறுபுறத்தில் நாம் கொடுத்துமிருந்தோமென்பதனை அறிய, நடத்த உள்வாங்கல்கள் ஒரு புடை நிகழ்ச்சிகளல்லாமல் பரஸ்பரம் நடந்தவையே என்பதனை அறிய, இன்றைய இந்து நாகரிகம் என்பது இரண்டினதும் பொது மரபுரிமையே என்பதை அறிய, திராவிடர்கள் என்ற வகையில் நாம் பெருமைப்படுகிறோம்.64

தமது நூலுக்கத் தாம் எழுதிய முகவுரையில், தாமே பிராமணரான, ரி.ஆர்.சேஷ ஐயங்கார், பின்வருமாறு கூறினார்.65

'இவ்வாசிரியன் பணிவான இப்பங்களிப்பைச் சமர்ப்பிப்பதன் நோக்கம், தென்னிந்திய வரலாற்றில், திராவிடர்களுக்குரிய இடம் பற்றிய, அவர்களது தனித்துவம் பொருந்திய பண்பாடு பற்றிய, இந்திய சிந்தனையினதும் வாழ்க்கையினதும் வளர்ச்சிக்கு அவர்கள் செய்த நிலைச்செறிவான நிரந்தரமான பங்களிப்புப் பற்றிய பண்டைய காலத்து இனங்கள் மீது அவர்கள் செலுத்திய நீள தாக்கமான செல்வாக்குப் பற்றிய, மிக உண்மையான ஒரு கருத்தினை வாசகர்முன் வைப்பதேயாகும்.

இந்நூலாசிரியன், தான் இங்கு எடுத்துக் கூறும் கருத்துக்கள் அறிஞர்களால் பல காலம் போற்றப்பட்ட கொள்கைகளுக்கும் நேர் எதிரானவையென்பதையும் அறிவான். எனினும் அவன், தன் நோக்கினை, அவற்றுக்கு எத்துணை செல்மானம் இருப்பினும் அதற்காக, முன் வைக்க விரும்புகின்றான். அவ்வாறு செய்வதற்கான நோக்கம், ஆரிய வெறியையும் இறுமார்பையும் கவிழ்ப்பதிலும், ஆரியப் பண்பாட்டை வளப்படுத்துவதற்குத் திராவிட மூதாதையர்களாற் கொண்டு வரப்பட்ட வளமிக்க மரபு நிதியத்தைக் கணிப்பதிலும் குறைந்தது முல் அடியேனும் எடுத்து வைக்கப்படும் என்ற நம்பிக்கையோகும்.'66

இதனை கூறியதன் பின்னர், அதன் கீழ், அவர் கூறுவது, இலக்கிய வரலாறு எவ்வாறு அரசியல் வரலாற்றுக்கான சிந்தனைக் கருவியாகவிருந்துள்ளதென்பதை எடுத்துக் காட்டுவதாயுள்ளது.

'தமிழர்களின் இலக்கியம் கீழைத் தேசத்தில் தன்னேரில்லாத தனித்துவமுடையது. அது அம்மக்களுடைய மேதா விலாசத்தின் வழி வெளிவந்தது. அது பண்டைய திராவிடர்களின் நாகரிகத்தையும் நிறுவனங்களையும் பிரதிபலிக்கும் கண்ணாடி.....

பூர்வ திராவிட, சிறப்பாகத் தமிழ் இலக்கியப் பெருந் தொகுதிபற்றிக் கணிசமான புறக்கணிப்பு இருந்ததென்பது மன வருத்தத்துக்குரிய ஒரு விடயமாகும். ஆரியக் கட்டுக்கதைகளால் அமுக்கப்பட்டும், இந்தியாவில் ஆரிய வந்தேறு குடிகளின் மொழியாம் சமஸ்கிருதத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கிய இந்தியப் புலமையாளர்களால் கவனிக்கப்படாது ஒதுக்கித் தள்ளப்பெற்றும், ஐரோப்பியப் புலமையாளரின் சமஸ்கிருத விருப்புக் காரணமாக அதன் விசேடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுமிருந்ததன் காரணமாக, அது தனக்குரிய சீர்மிக்க கவனத்தினை இத்துனை காலமும் பெற முடியாதிருந்தது'76

இது வெட்டவெளிச்சமான ஓர் அரசியற்கூற்றாகவே எடுக்கப்படலாம். தனியே இலக்கியத்தின் வரலாறுகளாகவே எழுதப்பட்ட நூல்களின் முன்னுரைகளும், முகவுரைகளும், இலக்கியத்தை தமிழரின் பூர்வ வரலாற்றுக்கச் சான்றாகக் கொள்வதிலுள்ள ஆர்வத் துடிப்பினை வெளிக்காட்டுகின்றன.


ஆர்ணல்ட் சதாசிவம் பிள்ளை, பாவலர் சரித்திர தீபகத்துக்கான (1886) ஆங்கில பின்வருமாறு கூறுகிறார்.

தமிழர்களாகிய நாம், எமது கவிதைக் கலை பற்றியும், கவிதை இலக்கிய பற்றியும் பெருமிதத்துடன் எடுத்துக் கூறவும், தமிழிலுள்ளது போன்று அத்தனை கவிஞர்களுடையோம் என்று பெருமிதத்துடன் எடுத்துக் கூறத்தக்க இனத்தினர் மிகச் சிலரே என்பதை அறுதியிட்டுக் கூறவும் முடியுமெனினும், தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த கணக்கற்ற, ஆண், பெண் புலவர்களினது வாழ்க்கை வரலாற்றினைச் சேகரிப்பதற்கு பண்டைய காலத்திலும் சரி, நவீன காலத்திலும் சரி ஒரு நடவடிக்கை தானும் எடுக்கப்படவில்லையென்பது விநோதமாகவும் தலைக்குனிவைத் தருவதாகவும் உள்ளது.... இத்தேவையை பூர்த்தி செய்வதே இம் முயற்சியின் நோக்கமாகும்.68

'தமிழிலக்கியத்தின் வரலாற்றின் சில மைல் கற்கள்' (Some Milestones in the history of Tamil Literature) என்ற தமது (ஆங்கில) நூலின் மீளச்சுப்பதிவுக்கான (1895) முகவுரையில், சுந்தரம் பிள்ளை, தமிழ் அறிஞர்கள் தமது சொந்த மொழி, வரலாறு பற்றிய ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமெனக் கூறுகின்றார். மேலும், அவர், 'அத்தகைய ஆராய்ச்சியில் இளந்தலைமுறையினரும் ஈடுபட வேண்டும்' என்ற நம்பிக்கையையும் தெரிவிக்கின்றார்.69

தமிழ் இலக்கியத்தின் வரலாற்றுக்கான தேவையையும் தமிழிலக்கியம் பற்றி எழுதப்பட்டனவற்றுக்குச் சில பிராமணர்களிடத்திருந்து கிடைத்த ஏளனப்பதிற்குறிப்புகளையும், செல்வக் கேசவராய முதலியாரின் கூற்று நன்கு வெளிக் கொணருகின்றது.

'இனி இப்பாலேய் தமிழின் தொன்மையை உணராதவர்களில் வடமொழிவலவர் சிலர் 'என்ன ஐயா, தமிழ், தமிழ் எனப் பெரு மலைவு செய்யா நின்றீர்? உங்கட்கு வடமொழியைத் தழுவாத இலக்கியங்கள் உண்டா? பார காவியங்கள் உண்டா? தர்க்கம், வேதாந்தம் முதலான சாஸ்திரங்கள் உண்டா? உங்கள் தமிழைக் கட்டிவையுங்கள். எல்லாம் நாங்கள் சப்பி உமிழ்ந்தசக்கை தானே' எனக் கூறிப் பெருமிதமெய்துகின்றனர்.70

'தமிழருடைய புராதனமான நிலையை ஆராய்ந்தறிவதற்குச் சரித முதலான சாதனங்கள் இல்லை. இல்லாவிடினும் பழைய இலக்கண இலக்கியங்கள் இதற்கு ஒருவாறு சாதனமாகும்.'71

பூரணலிங்கம் பிள்ளை தாம் எழுதிய 'தமிழ் இலக்கிய அரிச்சுவடி' எனும் கருத்துடை (Printer of Tamil Literature) எனும் நூலுக்கான (1904) முகவுரையில்

'இந்த அரிச்சுவடி, கால வரன் முறையைப் பொறுத்த வரையில் எத்துணை ஊனமுடையதாயினும், பற நாட்டவர்க்கும், கல்லூரி வகுப்புகளிலுள்ள நமது இளைஞர்களுக்கும், காலத்தினதும் கறையானினதும் வெள்ளம், நெருப்பினதும், அந்நிய வெறுப்பினதும் சுதேசப் சோம்பலினதும் அழபாடுகளைத் தப்பி மிஞ்சிக் கிடக்கும் தமிழ் நூல்கள் பற்றிய ஓர் எண்ணப் பதிவினை வழங்குமாயின் அதுவே இதற்கான நியாயப்பாடாகும்.'72

இதனைப் போன்றே, தமிழிலக்கியத்தின் சங்க காலம் பற்றி திருநெல்வேலிக் கிறிஸ்துவ இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.துரைசாமிப் பிள்ளை எழுதிய தமிழ் நூலுக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள பதிப்பாசிரிய முன்னுரையும், சமூக அரசியல் உண்மைகளை வெளிக் கொணருகின்றது.

'படித்த தமிழ் மக்களின் பிடிப்பெல்லைக்குள் அவர்களின் பண்பாட்டு, மத மரபு நிதியத்தைக் கொண்டு வருவதே இத்தொடரின் நோக்கமாகும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இரண்டு கோடிக்கு மேலுள்ளனர்.'73 சமூக-அரசியல் தேவைகளுக்கு இலக்கியத்தையும் இலக்கிய வரலாற்றையும் வேண்டி வசப்படுத்துவதற்கு மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்ளத் தக்கது. சுந்தரம்பிள்ளையின் ஒரு கூற்றாகும்.

'பண்டைய திராவிட நாகரிகம் சம்பந்தமாக எது உண்டோ இல்லையோ, இன்று வழக்கற்றுப் போன செந்நெறிப் பேச்சு மொழி உட்படப் பல்வேறு பேச்சு வழக்குகளையும் அச்செந்நெறி மொழியில் எழுதப்பட்டுள்ள விரிவான இலக்கியங்களையுங் கொண்ட தமிழ் மொழி இருகின்றது. இச்செந்நெறி வழக்குப் பற்றியும், அதன் இலக்கியம் பற்றியும் செய்யப்படும் விமரிசன ஆய்வுகள் சாதாரண சூழ்நிலையில், பண்டைய தென்னிந்திய ஆராய்ச்சிகளைச் செய்வதற்கான முன் தேவைகளாகும்.'74

தமிழ் இலக்கிய வரலாற்றின், மேற்குறிப்பிட்ட இலக்கியத்துக்கப்பாலான பயன்பாடு காரணமாக, இத்தகைய வரலாறெழுது முறை எவ்வாறு வளர்ந்தது என்பதை எத்துணை தெளிவாக எடுத்துக் கூறுகின்றோமோ அத்துணை நல்லதாகும்.

புலமை வரலாறு நிலை நின்று நோக்கும் பொழுது, இது தமிழ் நாட்டின் ஒரு மிக முக்கிய கால கட்டங்களில் ஒன்றாகும். முதலாவதாக, இக்காலத்திலேயே பண்டை இலக்கியச் செல்வம் மீளக்கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாவதாக, மத வரலாற்றில் பேரார்வம் காட்டப் பெற்றது. மூன்றாவதாக, யாவற்றிலும் முக்கியமாக, கால்டுவெல்லின் பெரு நூலான 'திராவிட மொழிகளுக்கான ஓர் 1856). புதிய கல்வி ஆய்வூக்கத்திற்கு மாத்திரமல்லாது ஒரு சமூக-பண்பாட்டு மனநிறைவுக்கும் உதவிற்று. இவை யாவும் ஒன்றையொன்ற தாக்கி, முன்னெக் காலத்தும் காணாத ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தின (இக்கால கட்டத்தில் வெளியான பிரதானமான இலக்கிய வரலாற்று நூல்களின் பட்டியலை முதலாம் பின்னிணைப்பிற் காண்க)

இக்கால கட்டத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சியாக, முன்னிருந்த தேக்க நிலையை உடைத்த ஊடுவழியாகக் கொள்ளத் தக்கது, சங்க இலக்கியப் பதிப்பாகும். இவ்விலக்கியங்களின் மீள் கண்டுபிடிப்புத் தமிழர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையுணர்வினை வழங்கிற்று. ஆனால் இந்த இலக்கிய மரபு நிதிய மீள் கண்டுபிடிப்பு, வரலாற்றாய்வுத் துறையில், நடைபெற்றுக் கொண்டிருந்தனவற்றின் பின்னணியில் வைத்தே நோக்கப்படல் வேண்டும். ஏனெனில், இந்த இலக்கிய மீள்கண்டுபிடிப்பு நடைபெற்ற வேளை மிக முக்கியமானதாகும். இரண்டாம் பின்னிணைப்பில் பண்டைய, இடைக்கால இலக்கியங்களின் வெளியீடு பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.

சி.வை. தாமோதரம் பிள்ளையின் தொல்காப்பிய (1885) கலித்தொகை (1887)ப் பதிப்புகளுடன் தொடங்கிய இப்பதிப்பு முயற்சியில், பண்டைய இலக்கியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விரைவில் வெளிக்கொணரப் பெற்றன. 1926இல் ஐங்குறு நூறு பதிப்பிக்கப் பெற்றதுடன், சங்க இலக்கியங்கள் முழுமையாக அச்சு நிதியத்தின் அங்கங்களாகின; அழிக்கப்பட முடியாதனவாயின. இப்பெரும் பணியிற் பெரும் பங்கு வகித்தவர், தனியொருவராக ஐந்து சங்க இலக்கியங்களை வெளிக் கொணர்ந்த உ.வே.சாமிநாதையர் ஆவார்.

சங்க இலக்கியங்களின் அச்சுப் பதிவு, தமிழர்களின் வரலாறெழுது முறையில் மீது உடனடித் தாக்கத்தை உண்டாக்கிற்று. உலகுக்குத் தென்னிந்தியாவின் வரலாற்றுச் செல்வத்தை எடுத்துக் காட்டிய '1800 வருடங்கட்கு முற்பட்ட தமிழர்' (Tamils 1800 years Ago) எனும் நூலின் ஆசிரியரானகனகசபாபதிப்பிள்ளை அதனைப் பின்வருமாறு கூறுவர்.

'பண்டையத் தமிழிலக்கியப் பெரும்புலமானது, எந்த ஒரு பயணியும் அடியெடுத்து வைக்காத அறியா நிலமாகவேயுள்ளது. தமிழின் பண்டைய செந்நெறி இலக்கியங்கள் அண்மையிலேதான் வெளிக் கொணரப்பட்டுள்ளன.... ....... ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழிலக்கியம் இல்லை என்பது மேனாட்டு அறிஞர்களின் பொதுவான எண்ணக் கருத்தாகும். ஆனால், உண்மையை நோக்கும் பொழுது, தமிழிலக்கியத்தில் ஆக்கத்தற்சார்புத்திறனும் மேன்மையுமுடையயாவும் ஒன்பதாம் நூற்றாண்டின் முன்னர் எழுதப்பட்டனவே என்பதும், அதன் பின்னர் வந்தவை சமஸ்கிருத நூல்களின் கடை நிலைப்பட்ட மாதிரிப் படிவங்கள் அன்றேல் மொழிப்பெயர்ப்புக்கள் என்பதும் தெரிய உன்னிப்பாக படித்தது கொண்டு, சில பூர்வ இலக்கியங்கள் எவ்வித ஐயப்பாட்டுக்கும் இடமில்லா வகையில், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே இயற்றப் பெற்றன என எண்ணும் நிலைக்கு நான் வழி நடத்தப்பட்டுள்ளேன். தமிழின் மகோன்னதகாலம் கிறித்து அப்தத்தின் முதலாவது நூற்றாண்டு என்றே நான் கூறுவேன்.'75

சிறிது பிற்காலத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான கே.ஜி.சேஷ ஐயர், சங்க இலக்கியத்தின் பெறுமதியைப் பின்வருமாறு மதிப்பிடுவர்.

'சங்க காலத்துத் தமிழிலக்கியமானது, பண்டைய தென்னிந்திய வரலாற்றுக்கத் தேவையான விடயங்களைத் தரும் மிகப் பழைமையான சுதேசச் சான்று ஆகும். ஏனெனில் அது, தென்னிந்திய மன்னர்கள் பற்றிய கால வரைவுள்ள கல்வெட்டுக்களின் காலத்துக்கு முற்பட்டது. புராதனத் தென்னிந்தியாவின் இழந்த வரலாற்றின் பருவரைவுகளை மீட்டுக் கொள்வதற்கும், கிறித்து அப்தத்தின் பூர்வ நூற்றாண்டுகளில் தமிழ் மக்களின் நாகரிக மட்டத்தை, அவர்தம் சமூக, இலக்கிய அரசியல் வாழ்க்கையை, அவர்தம் மதக் கருத்துக்களைப் பற்றிய அறிவினைப் பெற்றுக் கொள்வதற்கும் தம் பெரும் பணியினால் வழி வகுத்த மதிப்புக்குரிய, கற்றறிந்த மகாமகோ பாத்யாய (உ.வே.சாமிநாதையர்) அவர்களுக்குத் தமிழ் இந்தியா பற்றிப் பயிலும் மாணவன் தனது கடனை இறுத்துவிட முடியாததென்பது வெறும் மியையுரையாகாது.76

இந்த இலக்கியத் தரவுகளை வரலாற்றுச் சான்றாகக் கொள்வதிற் பல பிரச்சினைகளும், வாத விவாதங்களும் கூட எழுந்தன.77 நீலகண்ட சாஸ்திரியார் கூறியது போன்று, 'கொளுக்களின் குறைபாடு, நாம் இதுவரை ஆராய்ந்த இந்த இலக்கியப் பாரம்பரியத்தை வரலாற்றின் தேவைக்கான அதிகார பூர்வமான பிழையற்ற சான்றாகக் கொள்ளும் பிரச்சினையைச் சிறிதும் தொடாது.'78

தென்னிந்தியாவின் பண்பாட்டு வளங்களான இவற்றின் மீள் கண்டுபிடிப்பு வேண்டிய விளைவினை ஏற்படுத்தத் தொடங்கின. இந்தோ-ஆரிய மேன்மை என்னும் ஐதீகத்தினைத் தோற்றுவிப்பதற்குக் காரண கர்த்தாவாகவிருந்தவராகிய மாக்ஸ்முல்லர், தமது இறுதிப்படைப்பான இந்திய தத்துவத்தின் ஆறு தரிசனங்கள் (The Six Systems of Indian Philosophy) என்ற நூலுக்கு எழுதிய முகவுரையிற் பின்வருமாறு கூறினார்.

'நமக்கு வேண்டுவன, இந்திய தத்துவ ஞானத்தின் கால வரன்முறை பற்றிய தெளிவினை ஏற்படுத்தக் கூடிய நூல்களும் மொழிப்பெயர்ப்புக்களும் ஏதும் பிற தகவல்களுமே, இவற்றைப் பெறுவதற்கான முயற்சியானது சமஸ்கிருத நூல்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருத்தல் கூடாது. தென்னிந்தியாவில் தத்துவ இலக்கியமொன்று உள்ளது. அது, சமஸ்கிருதச் செல்வாக்குக்கான தெளிவான சாயல்களைக் காட்டுவதாகவிருப்பினும், பேரழகு வாய்ந்த தன்னாக்கக் கூறுகளையும் சுதேச அமிசங்களையும் கொண்டது. அது வரலாற்றுத் தேவைகளுக்கு அதிமுக்கியமானது. இதுவரை திராவிடமொழி இலக்கியங்களை ஆய்வுக்காக மேற்கொண்டிருப்போர், துரதிஷ்டவசமாக, மிகக் குறைவே. சமஸ்கிருத இலக்கியத்தில் இதற்கு மேற்செய்வதற்கொன்றுமில்லையென முறைப்படும் இளம் மாணவர்கள் அத்துறையில் ஈடுபடின், தங்கள் முயற்சி கைநிறையப் பயன் அடைவதைக் காண்பார்கள் என நான் நம்புகின்றேன்`79.

தமிழிலுள்ள தத்துவ இலக்கியங்களை முனைப்புப்படுத்தி சித்தாந்த தீபிகா (Siddhanta Dipika), தமிழின் அன்றிக்கவேறி' (Tamilian Antiquary) முதலாம் சஞ்சிகைகளில், ஜே.எம்.நல்ல சாமிப்பிள்ளை போன்றோர் செய்த நற்பணியின் தாக்கம் காரணமாகவே மாக்ஸ்முல்லர் இவ்வாறு கூறினர் என்று கொள்ளலாம்.

புராதன இலக்கிய அச்சிட்டதன் மூலம் ஏற்பட்ட புதிய விழிப்புணர்வினை இத்தகைய கூற்றுக்கள் எமக்குப் புலப்படுத்துகின்றன.

இத்தகைய புதுவிழிப்புடன், இலக்கியத்தின் வரலாறு மேற்கிளம்பத் தொடங்கியது ஆச்சரியமன்று.

அத்தகைய வரலாற்றை நோக்கிய முயற்சிகளுள் முதலிற் குறிப்பிடப்பட வேண்டியவை முக்கியமான வாழ்க்கை வரலாற்று நூல்களே, வெலெக் தமது ஆங்கில இலக்கியத்தின் எழுச்சியிற் (The Rise of English Literary History) குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, கவிஞர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறே, இலக்கியத்தின் வரலாறு எழுதப்படும் முதல் படிநிலையாகும். இலங்கை, புத்தளத்தைச் சேர்ந்த சைமன் காசிச் செட்டி எழுதிய 'தமிழ்ப் புளுற்றாக்'(The Tamil Plutarch) மேற்கத்திய நுகர்வுக்கென எழுதப்பட்டதாகும்.80 சைமன் காசிச் செட்டி தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கை வரலாறுகளை மேனாட்டுக் குறியீடுகள் கொண்டு விளக்குகின்றார். உதாரணமாக சங்கத்தை அவர் உரோம நிறுவனமான செனெற்றஸ் அக்கடமிக்கஸ் (Senatus Academicus) என எடுத்துக் கூறவர். இந்நூல், பல குறைபாடுகளை உடையதாக விருப்பினும், ஆங்கிலத்தில் எழுதப் பெற்ற, தமிழ்ப் புலவர்கள் பற்றிய முதல் வாழ்க்கை வரலாறு நூல் என்னும் பெருமையையுடையது.81

இக்கால கட்டத்திலே, தோன்றிய பிறிதொரு முக்கிய வாழ்க்கை வரலாற்று நூல் ஆர்ணல்ட் சதாசிவம் பிள்ளையினால் எழுதப்பெற்ற 'பாவலர் சரித்திர தீபகம்' என்பதாம்.82 இதுவும் தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதே. புலவர்களின் பெயர்கள் அகர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் பதிப்பில் இந்நூலின் குறைபாடுகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. ஆனால் இந்நூலின் தனிச்சிறப்பு அது ஒரு கிறிஸ்துவத் தமிழாசிரியரால் எழுதப்பட்டது என்பதாகும். அவர் பிரசித்தி பெற்ற 'உதய தாரகை'யின் ஆசிரியராகவுமிருந்தவர். ஆர்ண்ல்ட் சதாசிவம் பிள்ளை போன்றவர்கள் பெருந் தமிழறிஞர்கள். கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில், யாழ்ப்பாணத்தில், சைவமும் தமிழும் சைவமும் ஒன்றெனக் கருதப்பட்ட சூழலிலே தமிழ்ப் பண்டிதர்களாகக் கடமையாற்றிய இவர் போன்றோர், தமிழின் பண்பாட்டு மரபுச் செல்வத்தின் வாரிசுகளாகத் தாங்கள் இருப்பதற்குத் தமது மதம் ஒரு தடையாகாது என்பதனை நிறுவினார்கள். இத்தகைய சுதேச சமயப் பண்பாட்டிற் காட்டப் பெற்ற அழுத்தப்பிடியே கிறிஸ்துதவத்தை இந்த மண்ணோடு இணையச் செய்தது. அவ்வாறு இணைந்ததன் இந்த மண்ணோடு இணையச் செய்தது. அவ்வாறு இணைந்ததன் வெளிப்பாடாகத்தான் முன்னர் குறிப்பிட்ட, ஜி.எஸ். துரைசாமிப்பிள்ளை எழுதிய நூல் போன்ற நூல்கள், அதனிற் காணப்பட்ட பதிப்புரை போன்றவற்றுடன் வெளிவந்தன.83

பிறிதொரு முக்கியமான வாழ்க்கை வரலாறு- இதுவும் தமிழில், அதுவும் இன்னொரு இலங்கையரால் எழுதப்பட்டது-குமார சுவாமிப் புலவரால் எழுதப் பெற்றதாகும். இவ்வாழ்க்கை வரலாற்று நூல், பல்வேறு குறைபாடுகளையுடையதெனினும், மரபு வழி அறிஞர் ஒருவரால் எழுதப்பட்டதெனும் முக்கியத்துவத்தினையுடையதாகும்.84 பாண்டித் துரை தேவரின் ஆசியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்நூல் புலவர்களின் ஆக்கங்களை எழுதும் முறையிற் பாரம்பரிய வாழ்க்கை வரலாறு பற்றிய மேனாட்டு நியமங்கள் பற்றிய பிரக்ஞையை யுடையதாகவிருந்தது. தமிழிற் 'புலவர்' என்னும் சொல்லுக்கான வரைவிலக்கணம் கவிஞர் முதல் உரையாசிரியர் வரை பேச்சாளர் முதல் உபதேசி வரை சகலரையும் உள்ளடக்கும். இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞை ஆங்கிலம் படித்தவர்களிடையே மாத்திரம் காணப்பட்ட ஒன்றன்று என்பதனை 'தமிழ்ப்புலவர் சரித்திரம்' (1916) நன்கு எடுத்துக் காட்டுகின்றது. இது பற்றிப் பின்னரும் நாம் குறிப்பிடுவோம்.

இலக்கியத்தின் வரலாற்றை எழுதுவதற்கான இந்த விதிமுறையான தொடக்கங்களை விட, இலக்கியத்தின் வரலாற்றை, கால வரன் முறைப்பட்ட தொடருரையாக கருக்கொள்ளும் தொடக்கத்தினையும் நாம் காணலாம்.

இத்தகையனவற்றுள் காலத்தால் முந்தியதும், மிகுந்த முக்கியத்துவமுடையதாக உள்ளதும், ஜோன் மேர்டொக் (John Murdoch)காம் வெளியிட்ட தமிழ் நூற்பட்டியலுக்கு (Classified Catalogue of Tamil Book-1865) எழுதிய முன்னுரையாகும்.85 அக்காலத்திலே தெரியப்பட்டிருந்த தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய விரிவான தகவல்களை அது தருகின்றது. மேர்டொக் தொகுத்துள்ள பட்டியலும், அவர் தந்துள்ள குறிப்புகளும் தமிழ் பற்றியவருக்கிருந்த விரிந்த அறிவினையும் தமிழ்பால் அவருக்கிருந்த அர்ப்பணிப் புணர்வினையும் காட்டுகின்றன. வி.எஸ். செங்கல்வராய பிள்ளை அவர்களால், முதலில், முதுமாணி (M.A.) பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரையாக எழுதப் பெற்றுப் பின்னர் 1904இல் நூலாக வெளியிடப் பெற்ற 'தமிழ் உரை நடையின் வரலாறு' (History of Tamil prose) என்னும் ஆங்கில நூல், தமிழ் உரை உடையின் வரலாறு முழுவதையும், மிகச் சுருக்கமாக எடுத்துக் கூறவதாகும். தமிழ் உரை நடை பற்றித் தொல்காப்பியத்தில் வரும் குறிப்புக்கள் முதல், ஆறுமுக நாவலர், சபாபதி நாவலர், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, சூரிய நாராயண சாஸ்திரியார் ஆகியோரது எழுத்துக்கள் வரையுள்ள தமிழ் உரைநடை வளர்ச்சியைச் சுருக்கமாக, னால், காய்தல் உவத்தவற்ற வகையில் இந்நூல் எடுத்துக் கூறியுள்ளது. தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை தமிழ்க்கவிதை இலக்கியத்தின் வரலாறாகவே நோக்கும் தன்மையிலிருந்து விடுபடுவதற்கு இவ் ஆய்வு பயன்பட்டதெனலாம்.

இன்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் கருத்தில் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றினை முதன் முதலில் எழுதிய பெருமை இன்றைய பரீட்சை வழிகாட்டி நூல்களை எழுதுவோரின் தமிழ்நாட்டு வழிகாட்டி என்று கொள்ளப்படத் தக்கவரும், நிறைய எழுதியவருமான முன்னீர்ப்பள்ளம் எஸ். பூரணலிங்கம் பிள்ளை அவர்களையே சாரும். அவர் எழுதிய அம் முதற் பாடநூல் "A Primier of Tamil Literature" (தமிழ் இலக்கிய அரிச்சுவடி; 1904) என்பதாகும். செறிவானதாக வமைந்த அந்நூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ள இலக்கியக் காலவகுப்பு சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. பின்னர் இந்நூலை விரித்தெழுதி 'தமிழ் இலக்கிய' மென (Tamil Literature) 1929 இல் வெளியிட்டார். பரீட்சைத் தேவைகளை மனங் கொண்டு எழுதப் பெற்ற முதலாவது தமிழ் இலக்கிய வரலாறு நூல் இதுவே எனலாம். நூலின் பின்னிணைப்பா‘க இவர் தொகுத்து வழங்கியுள்ள தேர்வு வினாக்கள். பின்னர் வந்த, இவரிலும் பார்க்கச் சிறந்த வணிக நோக்குடன் தொழிற்பட்ட பேராசிரியர்கள் பலருக்கு இத்துறை நூலாக்கத்துக்கு வழிகாட்டியாக அமைந்தன. இலக்கிய வரலாறு என்று கொள்ளப் படுவதிலும் பார்க்கச் சமூக வரலாறு எனக் கொள்ளப்படுவதே பொருத்தமானது என்று சொல்லலத்தக்க முறையில் அதாவது, தமிழ்ச் சமூகத்தை அதன் இலக்கியத்தைக் கொண்டு விளங்க முனையும் முறையில், முதற் பகுதி அமைந்திருக்க, இறுதி எட்டு அத்தியாயங்களும் இலக்கியத்தின் வரலாறாக மாத்திரமே, இலக்கியத்தின் வரலாறுத் தகவல் தொகுப்பாகவே அமைந்துள்ளன.86 கே.எஸ். ஸ்ரீநிவாச பிள்ளையின் 'தமிழ் வரலாறு' (1922) மிக முக்கியமான ஒரு நூலாகும். அக்காலத்து முக்கிய இலக்கிய வரலாற்றுப் பிரச்சினைகளாகவிருந்தவை பற்றி வரலாற்றுத் தெளிவுடனும், வாதச் சிறப்புடனும், உரை வசீகரத்துடனும் இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. இந்நூலின் இரண்டாம் பாகம் கிடைக்காது போனமை தமிழாய்வுக்கு ஏற்பட்ட நட்டமென்றே கொள்ளவேண்டும்.

இலக்கிய வரலாறு தொடர்பான மற்ற முக்கிய எழுத்துத் தொகுதி, தமிழ் மொழி, தமிழ் நாடு பற்றிய வரலாற்று ஆய்வுகளாகும். எஸ். கிருஸ்ணசாமி ஐயங்கார், பி.ரி. ஸ்ரீநிவாஸ் ஐயங்கா‘ர் போன்ற அறிஞர்களின் ஆக்கங்கள் இத்தொகுதிக்குள் அடங்கும். இவ்விரு அறிஞர்களும், இலக்கியச் சான்றுகளைக் கொண்டு தமிழ் நாட்டின் வரலாறு பற்றிய தரமான, இந்தியா முழுவதிலும் ஏற்புடைமைக்கவர்ச்சி பெற்று விளங்கிய, நூல்களை எழுதினர். இந்தியப் பண்பாட்டினை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கத் தென்னிந்தியாவில் ஏற்பட்ட வளர்ச்சிகளை உன்னிப்பாக ஆராய்தல் வேண்டுமென்பதனை இந்திய வரலாற்றாசிரியர்களிடையே வற்புறுத்தித் தென்னிந்திய வரலாற்றினைத் தாம் எழுதிய வகையாலும் எழுதிய தென்னிந்திய வரலாற்றினைத் தாம் எழுதிய வகையாலும் எழுதியவற்றாலும் வன்மையா‘ன தளநிலைப் படுத்திய நீலகண்ட சாஸ்திரியின் வருகையுடனேயே, சங்க இலக்கியத்தை, வரலாற்றுச் சான்றாகப் பயன்படுத்துவதிலுள்ள பிரச்சினைகள் தெளிவுற விளங்கப்படுகின்றன.

அவர் தாம் கொண்டிருந்த கருத்துதக்குள்ளப் பின்னர், அறிவியல் நிலை நின்று நோக்கும் பொழுது தாக்குப்பிடிக்க முடியாத வகையில், மாற்றிக் கொண்டு விட்டாரெனினும் (1966இல் கல்கத்தாவிலிருந்து வெளிவந்த அவரது Culture and History of Tamils 'தமிழர்களின் பண்பாடும் வரலாறும்' எனும் நூலைப் பார்க்க), ஆரம்பத்தில், சங்க இலக்கியத்தை, தமிழ் மக்களின் வரலாற்றுக்கான உண்மையான சான்றாகக் கொள்வதற்கான பயன்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். 1932இல் எழுதும்பொழுது, அவர் பின்வருமாற குறிப்பிட்டிருந்தார்.

'கால வரன் முறை பற்றிய அறிவு இல்லாது மொழியின் வளர்ச்சியைப் பற்றிய ஆய்வு சாத்தியமற்றதென்பதனால், இந்த இலக்கியத் தொகுதியின் காலவரிசையை வரலாற்றாய்வாளர் முடிவு செய்வதை மொழியியலாளர் எதிர் நோக்கி நிற்கின்றார். மறுபுறத்தில் வரலாற்றாய்வாளரோ, இப்பிரச்சினைபற்றிய சான்றுகள் வழிவருவன தீர்க்கமான முடிவு எதற்கும் இடம் தராதவையாகவுள்ளன வென்பதைக் கண்டு, மொழி வளர்ச்சி ஆய்வின் வழியாகச் சில தீர்க்கமான முடிவுகள் வரும் என நம்பி நிற்கின்றார். எனவே பல்வேற அணுகுமுறைகளிடையே ஓர் இணைப்பு நிலை ஏற்படுத்தப்படுவதற்கும், இந்த இலக்கியத் தொகுதியின் கால வைப்பு முறை தெளிவாகத் தெரிந்து கொள்ளப்படுவதற்கும் நாம் காத்திருக்க வேண்டியுள்ளது.'87

இது, சங்க இலக்கியத்தை வரலாறாகக் கொள்வதிலுள்ள பிரச்சினைகளின் மிகத் தெளிவான விளக்கமாகும். இந்தப் பணியே, அடுத்து வரும் கால காட்டத்தில், எஸ்.வையாபுரிப் பிள்ளை போன்ற அறிஞர்களால் மேற் கொள்ளப்பட்டதாகும்.

இந்த இலக்கியப் பாரம்பரிய நிதியம் பற்றிய பிரக்ஞையும், அதனை அதற்குரிய பின்னணியில் வைத்து நோக்குவதற்கான ஆசையும் ஆங்கிலம் தெரிந்த அறிஞர்களிடத்தே மாத்திரம், நாம் முன்னர் எடுத்துக் கூறியது போன்று, காணப்படவில்லை. தமிழ்-சைவ சித்தாந்த அறிவினை இணைத்து நோக்கும் புலவரும் இந் நோக்கினைக் கொண்டிருந்தனர் என்பது சபாபதி நாவலரால் 1899இல், எழுதப்பெற்ற திராவிடப் பிரகாசிகை மூலம் தெரிய வருகின்றது. தமிழிலக்கியத்தைச் சைவஞ் சாராத நோக்கிலேல, விளக்குவதற்குத் தன் எதிர்ப்புக் குறிப்பினைத் தெரிவிக்கும் வகையில், சபாபதி நாவலர், தமிழின் இலக்கண, இலக்கிய, மெய்யியற் பாரம்பரியங்களைச் சைவ சித்தாந்தியாக நின்று எடுத்து விளக்கினார்.

முருகதாச சுவாமிகள் என்பவரால் எழுதப் பெற்ற புலவர் புராணம், தமிழ் இலக்கியம் சமைத்தோரின் வரலாற்றைப் பௌராணிக மரபிற் கூற முற்படுவதாகும். இந்நூலின் முற்பதிப்பு, 1901இல், திவான் பகதூர் வி.கிருஷ்ணமாச்சாரியின் உதவியுடன் வெளி வந்தது.

பாரம்பரியத் தமிழ் கல்விமான்களிடத்திலிருந்து வெளி வந்த இத்துறை முயற்சிகள் மிக முக்கியமானவை, பாண்டித்துரைத் தேவரால், 1901இல் நிறுவப்பெற்ற தமிழ்ச் சங்கத்திலிருந்து கிளம்பியவையே, இச்சங்கத்தின் இதழான' 1903இல் தொடக்கப் பெற்றது. இதில், தமிழ் இலக்கியத்தையும் வரலாற்றையும் விளக்கும் முக்கியமான பங்களிப்புக்கள் வெளியாகின ரா.ராகவ ஐயங்கார், மு.இராகவையங்கார் போன்ற அறிஞர்கள் இச்சங்கத்துடனும் அதன் சஞ்சிகையுடனும் தொடர்பு கொண்டிருந்தனர்.

இதுவரை கூறியவற்றால், இக்காலமானது, தமிழில் இலக்கிய வரலாறு உருவாகிக் கொண்டிருந்த காலமென்பது தெளிவாகின்றது. கிடைத்த நூல்களை அச்சிடுவதற்கான முயற்சிகளுடன், அவற்றின் காலத்தை நிர்ணயிப்பதற்கான முயற்சிகளும், மேற்கொள்ளப்பட்டன. சற்று முன்னர் கண்டபடி, காலநிர்ணயம் பற்றிய பிரச்சினை சம்பந்தமாக அறிவியல் பூர்வமான ஒர் அணுகுமுறையை, அவ்விலக்கியங்கள் பற்றிய சகல தரவுக€ளையும் பெற்ற பின்னரே மேற்கொள்ள முடியும், அத்தகைய தரவுகளை அடுத்து வரும் காலகட்டத்திலேயே பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருந்தது. ஆனால், இக்காலகட்டத்தில் நடைபெற்ற இரு விவாதங்கள், இவ்விலக்கியங்களின் கால அடைவு பற்றிய கருத்துத் தெளிவின் அத்தியாவசியத்தை வற்புறுத்துவனதாக அமைந்தன.

இவ்விரண்டு விவாதங்களும், தமிழ்ப் பிரக்ஞையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புச் செய்த இரு பாதிரியார்களாலேயே தொடக்கப் பெற்றமை முரணணியாகவே காணக் கிடைக்கின்றது.

கால்டுவெல் பாதிரியார் தமது 'திராவிட மொழிகளின் ஓர் ஒப்பிலக்கணம் (A Comparative Grammer of Dravidian Languages) எனும் நூலில் வரும்88 திராவிட இலக்கியங்களின் பழைமை பற்றிய அதிகாரத்தில் ("Antiquity of Dravidian Literature") தமிழ் இலக்கியத்தின் வரலாறு எனச் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு எழுதும் பொழுது, 'அவற்றுள் (தமிழ் இலக்கியங்களுள்) கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை எவைதானும் இல்லை'89 என்றும், திருஞான சம்பந்தர் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் கூறியிருந்தார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலினை எழுதிய, புலமையதிகாரமுடைய ஒருவரால் கூறப்படவே, அதனையே மேனாட்டு அறிஞர்கள் மேற்கொண்டனர். 'கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரை தமிழ் மக்கள் இலக்கியமுடையோரால் இருக்கவில்லை. தமிழ் இலக்கியம் சமஸ்கிருத நூல்களின் திட்டவட்டமான பிரதியாகவே இருந்தது' என்ற, கலாநிதி பேணெலின் (dr. Burnell) கருத்து, பிரித்தானியக் கலைக் களஞ்சியத்தின் பெருமை மிகு கட்டுரகளுக்குள்ளும் சென்றது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை இப்பிரச்சினையைக் கைமேற் கொண்டு இக் கருத்துப் பற்றிய தனது எதிர்ப்பினை மிக வன்மையாக எடுத்துக் கூறினார்.

'சம்பந்தர் காலம் சம்பந்தமாக நிலவும் குழப்பத்தைவிட அதிகமான ஒரு குழறுபடி நிலையைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாதென்பது நிச்சயம். திரு ரெயிலர் (Taylor) கூன் பாண்டியனையும், அவன் கூனை மாற்றிய சம்பந்தரையும் ஏறத்தாழ கி.மு. 1320க்குரியவேல்லோ அவன் கி.பி.1292-ல் ஆட்சி புரிந்தவன் என்கின்றார். இவ்வாறாகச் சம்பந்தரை கிறித்துவுக்கு முன்னும் பின்னும் வரும் 1300-வது வருடத்துக்குரியவர் என மிகுந்த அலட்சியத்துடன் கூறக் கூடுவது சாத்தியமாகிறது. இது நிச்சயமாக ஒரு நூதனமாகும்; வரலாறு முழுவதிலுமே இதைப் போன்ற ஒன்றைக் காண முடியுமோ என என்னால் நிச்சயமாகக் கூற முடியவில்லை. உண்மையில் தென்னிந்திய வரலாற்று கால வரிசை அறிவு இனித்தான் தொடங்க வேண்டியுள்ளது போலும்.'90

தமிழ் இலக்கியத்தின் வரலாற்றிலே, தமிழ் இலக்கியங்களின் காலத்தை நிர்ணயிப்பது சம்பந்தமாக ஆங்கிலத்தில் நடை பெற்ற முதலாவது விவாதப் போரெனக் கொள்ளப்படத் தக்க நீண்ட வாதவுரையிற் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை இப்பிரச்சினை பற்றி விரிவாக ஆராய்ந்து, இறுதியில் கீழ்க்கண்டவாறு கூறினார்.

இறுதியாக, இக்கட்டுரையினாற் பெற்றப்பட்ட முக்கிய நோக்கு எனப் பின்வருவனவறறைக் கூறலாம்.

1. இது சைவ மக்களின் புனித இலக்கியங்கள் பற்றிய மேலோட்டமான ஒரு நோக்கினை வழங்குகின்றது.

2. சைவ நாயன்மாருள் ஒருவர் எனும் வகையிலும், தன்னுணர்ச்சிக் கவிஞர் என்ற வகையிலும், இவற்றுடன் தென்னிந்தியாவில் சமணத்தின் முதற் பெரும் எதிரி என்ற வகையிலும் சம்பந்தருக்குரிய நிலைமையைக் காட்டுகின்றது.

3. தமிழிலக்கியத்தின் பழைமை பற்றியும் பெறுமதி பற்றியும் கலாநிதி பேணலின் அபிப்பிராயங்களை எதிர்த்து மறுதலிக்கின்றது.

4. சம்பந்தர் காலம் பற்றிக் கலாநிதி கால்டு வெல்லும் திரு.நெல்சனும் முன்வைக்கம் எடுகோட் கருத்தின் முற்று முழுதான தாறுமாறான தன்மையை எடுத்துக் காட்டுகின்றது.

5. சம்பந்தர், சங்கரர், இராமனுசர் ஆகியோரின் காலங்களை நிர்ணயிக்கும் நோக்கத்துடன் தென்னிந்தியாவின் மதவராற்றுக்கான ஒரு பருவரை வினைக் கோடிட்டுக் காட்டுவதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

6. சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களுக்குப் பிற்பட்ட ஒரு காலத்தில் வாழ்ந்திருக்க முடியாதென்பதையும், அதற்கான மேலெல்லையைக கோச்செங்கணான் காலம் பற்றிய ஓர் ஆய்வின் பின்னரே நிச்சயிக்க வேண்டுமென்பதையும், மிக அண்மையில் நடத்தப் பெற்ற அகழ்வா ய்வுகளினுதவியுடன், சில உண்மைகள், விதிவருமுறையில், தரப்பட்டுள்ளன.'

பேராசிரியர் சுந்தரம் பிள்ளையினுடைய இப்பங்களிப்பு, தமிழ் இலக்கியத்தின் வரலாற்று எழுத்துக்கள் முழுவதிலும், ஒரு மைல் கல்லாக அமைந்தமை ஆச்சரியத்தைத் தருவதன்று.

மற்றைய விவாதம் மாணிக்க வாசகர் காலம் பற்றியதாகும். போப்பையர், தமது திருவாசக மொழிபெயர்ப்பின் முன்னரையில், 'மாணிக்க வாசகர் ஒன்பதாம் நூற்றாண்டுக்கப் பிற்பட வாழ்ந்திருத்தல் முடியாது' என்று கூறினார்.91

அதே முன்னுரையிற் பிறிதோரிடத்தில் (பக்.XXV) மாணிக்கவாசகரை 'கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கோ அதற்கு முன்னருள்ள காலப் பகுதிக்கோ‘ உரியவரென நியாய பூர்வமாகக் கூறலாம்' என்றும் போப் கூறியிருந்தார்.

இக் கூற்றினைப் பலர் எதிர்த்தனர். எதிர்த்து, மாணிக்க வாசகர் தேவார முதலிகள் மூவருக்கும் முந்தியவர் என வாதித்தனர்.

முதலாவது விவாதத்தில் உள்ளூர் அறிஞர்களின் எதிருரை உண்மையென நிரூபிக்கப்பட்டமையும் இரண்டாவது வாதத்தில் போப்பையரின் கூற்றே உண்மையென்பதையும் நாம் அறிவோம். இது பின்னோக்காக, நாம் இன்று கூறக்கூடிய ஒன்றே, ஆயினும் அந்நாட்களில் இரண்டாவது வாதத்தில் போப்பையரின் கூற்றே உண்மையென்பதையும் நாம் அறிவோம். இது பின்னோக்காக, நாம் இன்று கூறக்கூடிய ஒன்றே, ஆயினும் அந்நாட்களில் இரண்டாவது வாதம் பெருத்த ஆர்வத்தினைப் பலரிடையே ஏற்படுத்தியிருந்தது. எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், சேஷஐயர் போன்ற அறிஞர் பெருமக்கள் இந்த விவாதத்தில் ஈடுபட்டனர். இன்னிஸ் (Innes) என்பார் 'ஏஷ’யாற்றிக் குவாட்டர்ளி' (Asiatic Quarterly) என்னும் சஞ்சிகையில், 1900 ஆண்டளவில் எழுதியிருந்த ஒரு கட்டுரைக்கு கிருஷ்ணசாமி ஐயங்கார் பதிலளித்திருந்தார்.92

பழைய இலக்கியங்களின் பால நிர்ணயம் தொடர்பாகத் தொழிற்பட்ட உளவியற் பாங்குகள் பற்றிக் சேஷையர் கூறியுள்ளதை இங்கு தருதல் பயனுள்ளதாகும்.

`அறிஞர்கள் தாங்கள் தங்கள் கற்பனையினால் எதனைக் கூறலாமென உந்தப்படுகிறார்களோ அதனை எடுத்துக் கூறுவதற்குத் தமக்குச் சுதந்திரம் உண்டென்று இன்னும் கருதிக் கொண்டிருப்பதுது தென்னிந்திய இலக்கிய வரலாற்றின் ஒரு விநோதமான அமிசமாகும். இத்தகைய ஒரு நிலையினாலேதான், ஒரு அறிஞரால் கிறித்துவுக்குப் பின் முதலாம் நூற்றாண்டுக்கு உரியவர் என நிர்ணயிக்கப்பட்ட ஒரு தமிழ்க் கவிஞரை, இன்னொருவர் எவ்வித தட்டுத் தடங்கலுமின்றிக் கிறித்துவுக்குப் பின் 14-ம் நூற்றாண்டுக்குரியவர் எனக் கூறக்கூடிய நிலைமை ஏற்படுகின்றது. இந்த அபூர்வமான நிகழ்வினை வரலாற்றாய்வுப் பெரும் புலத்தில் தென்னிந்தியா‘வைத் தவிர வேறெங்கும் காண்பது முடியாது. இவ்வாறு கூறப்படுவது மிகைப்பட்ட கூற்றன்று என்பதனை மாணிக்கவாசகர் பற்றித் தரப்படும் பல்வேறு வருடக் காலங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். இந்திய அறிஞரைப் பொறுத்த வரையில், அவரது இலக்கியத்தை வளம்படுத்தியோருக்கு, எத்துணை முந்திய ஒரு காலத்தை வழங்க முடியுமோ அதனை வழங்கும் தன்மை அல்லது பண்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட விதியா‘க, சட்டமாக ஆகிவிட்டது எனலாம். புராதனமான ஒரு நாகரிகத்தின் புகழும் கவர்ச்சியும் இயல்பாகவே ஏற்படுத்திவிட்ட ஒரு தூண்டுதல் காரணமாக எற்பட்ட, பெறுமதியும் தொன்மையும் இணைந்தே செல்வன என்ற ஒரு பொதுவான நம்பிக்கையே இதற்கு ஒருவேளை காரணமாகவிருக்கலாம். மறுபுறத்தில், ஐரோப்பிய அறிஞரிடையே நிலவும் தன்மையோநேர் மாறானதாகும். தமிழ் இலக்கியத்திற்குரியதென விதந்தோதப்பெறும் பழைமையானது ஒரு பக்தி பூர்வமான கட்டுக்கரையே என்பது அவர் மதத்தின் மூல வாசகர்களில் ஒன்றாம். அவர்களைப் பொறுத்த வரையில், தமிழிலக்கியம் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே வளர்ந்து செழித்தது என்பது முடிந்த முடிபாகும். ஏனெனில் கலாநிதி பேணெல் அவர்களே-அவருக்குத் தெரியாத ஒன்றா மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டது!- தமிழிலுள்ள இலக்கியங்களுள் புராதணமானது கிறித்துவுக்கப் பின் எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னதாக இருக்க முடியா‘தென்ற கட்டளைச் சட்டத்தினைப் பிரகடனப்படுத்த வில்லையா? அதனை, கலாநிதி றொஸ்ற் (Dr.Rost), பேராசிரியர் வின்சன் போன்றோர் தட்டுக் தடங்கலின்றி, பணிவுடன் ஏற்றுக்க் கொள்ளவில்லையா? ஒன்றுக்கொன்று முரண்படும் இத்தன்மைகைள் காரணமாக, இந்தியர்கள் எடுத்துக்கூறும் கால நிர்ணயமானது ஐரோப்பியர் கண்களில், இந்தியர்கள் வரலாற்றுணர்வெண்பதிற் குறைபாடுடையவர்கள் எனும் உண்மையைச் சுட்டுவதாகவும், இந்தியர் கண்களில், தங்கள் புராதன நாகரிகத்தின்பால் ஐரோப்பியருக்குக் கூடப் பிறந்தததான வெறுப்பையும் பொறுமையின்மையையும் எடுத்துக் காட்டுவனவாகவும் அமைந்துது விட்டன. ஒவ்வொரு பகுதியினரும் தாம் உண்மையான வரலாற்று முறைமையையே பின்பற்றுவதாகச் சத்தியமிட்டுக் கூறிக் கொண்டாலும், ஒருவர் முடிவில் மற்றவருக்க நம்பிக்கை கிடையாது. இவ்வாறு, எவ்வித நம்பிக்கைக்கமிடந்தராத வகையில் ஒன்றுடன் ஒன்று இணைக்கவே முடியாத முடிவுகளுக்கு வருவதற்கான சாத்தியப்பாடு இருக்கும் வகையில் இந்த வரலாற்று ஆய்வுகள் அமைவதற்கு அவற்றின் அடிப்படையிற் சீவதாரமான வேறுபாடு நிச்சயமாக இருக்கத்தானே வேண்டும். தென்னிந்திய வரலாற்று மாணவனின் முகத்திலடித்தாற்போல் குத்திட்டு நிற்கும், ஒன்றுக்கொன்ற முரணான முடிபுகள் பெறப்படுவதற்கு, தவறான ஆய்வுமுறைகளும், தவிர்க்க முடியாத சொந்த விருப்பு வெறுப்புகளும் தனித்தனி எந்த அளவுக்குப் பொறுப்பாகின்றன என்பதற்கு என்னால் விடைகூற முடியுமென நான் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் இந்த வேறுபாடு எக்காரணத்தினாலே ஏற்பட்டிருப்பினும், ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலைமையானது மிகப் பெரிய புதிராகவே உள்ளது.93

சேஷையராற் குறிப்பிடப்பட்டுள்ள இரு துருவ நிலைப்பாடுதான்- அதாவது ஒரு புறத்தில் தொன்மையை நம்பிக்கை வாசகமாகக் கொள்ளும் தன்மையும் மறுபுறத்தில் பிரயோசனமான சாதனை எது பற்றியும் சந்தேகப்படும் தன்மையும் இந்த நூல்களின் கால நிர்ணயம் பற்றிய கருத்து மோதல்களை விளங்கிக் கொள்வதற்கான திறவுகோலாகும்.

கால நிர்ணயம் பற்றி ஆராயும் இவ்வேளையில், இக்கால கட்டத்திலே தோன்றிய சஞ்சிகைகள் இத்துறையிலாற்றிய பெருஞ்சேவையினைப் பாராட்டுதல் வேண்டும். 'மெட்றாஸ் றிவியூ' (Madras Review),'இண்டியன் அன்ற்றிக்குவேறி'(Indian Antiquary) 'ஏஷ’யாற்றிக் குவாட்டர்ளி' (Asiatic Quarterly), 'தமிழியன் அன்ற்றிக்குவேறி'(Tamilian Antiquary), 'மெட்றாஸ் கிறிஸ்ற்றியன் கொலிஜ் றிவியூ' (Madras Christian College Review) 'இந்தியன் ரிவியூ' (Indian Review), `சித்தாந்த தீபிகா‘' (Siddhanta Deepika), என்பன அச்சஞ்சிகைகளிற் சிலவாம்.

மேலே குறிப்பிட்ட அபிப்பிராய இருதுருவப்பாடு மிக முக்கியமான ஒன்றாகும். இக்கால கட்டம், ஒரு புறத்தில் தமிழிலக்கியத்தின் தொன்மையையும் அது காரணமாகவும் வளர்ந்த மொழி வழித் தேசியத்தையும் காட்டி நிற்குமதே வேளையில். மறுபுறத்தில், இப்புதிய விழிப்புணர்வுகளை அதிகம் வரவேற்காத சில புலமைக் குறிப்புக்களையும் காட்டி நிற்கின்றது. அவற்றுட் சில. எம்.ஸ்ரீநிவாஸ ஐயங்கார் எடுத்துக் கூறியது போன்றவை. இக்கண்டு பிடிப்புகளின் முக்கியத்துவத்தை நயந்தனவெனினும், இவ்விலக்கியங்கள் சமஸ்கிருதச் செல்வாக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டவை எனும் நிலைப்பாட்டை அங்கீகரிக்கவில்லை. 'தமிழில். ஒழுக்கவியல் அன்றேல் மதம் சாராத இலக்கியங்கள் இல்லை. ஆரியச் செல்வாக்கில்லாத ஒழுக்கவியலோ மதமோ இந்தியாவில் இல்லை.'94 உண்மையில் இது சாதுரியமான ஒரு கூற்றே. ஆனால் வேறு சில நூல்களோ, மிக்க பாண்டியத்துடன் எழுதப்பட்டனவாய், ஆனால், இந்த உணர்வுகளுக்கான ஊற்றைச் சுனைவாயிலில் வைத்தே வெட்டி எறிவனவாய் அமைந்தன. இது சம்பந்தமாக, ஆர்.சுவாமிநாத ஐயரின் நூல்-கால்டு வெல்லின் கொள்கைகளை மறுதலித்து எழுததப்பட்ட நூல்- முக்கியமானதாகும்.95 கால்டு வெல்லின் திராவிட மொழிக் கொள்கையானது சம்பந்தப்பட்ட உண்மையான விடயங்களைத் தப்பர்த்தம் செய்து கொண்டுள்ளது, தவறானவை என மிகச் சுலபமாக நிரூபிக்கப்பட்டத்தக்க எடுகோள்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது என்ற அடிப்படையில் அந்நூலைச் சுவாமிநாத ஐயர் எதிர்த்தார்.'96

இந்த விவாதத்தில் முக்கிய பங்களிப்புச் செய்தவர், தமிழிலக்கிய வரலாறெழுதுநெறியின் வரலாற்றேடுகளில் இன்று ஏறத்தாழ முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளவராகிய எம். சேஷகிரி சாஸ்திரி ஆவர். அவர் எழுதிய 'தமிழ் இலக்கியம் பற்றிய ஒரு கட்டுரை' (An Essay on Tamil Literature, 1894) சங்கம் பற்றிய ஐதீகத்தினைக் குறித்து ஆய்ந்துள்ளது. அதில் ஓரிடத்தில் அவர் 'அத்தகைய (வடமொழிக்) கல்லூரிகளைப் பின்பற்றியே தமிழ்ப் புலவர்கள் தங்கள் சங்கங்களைத் தோற்றுவித்து, மதுரையிலும் பிற இடங்களிலும் அவற்றைத் தாபித்திருக்கலாம்.'97 எனக் குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரக் கால நிர்ணயத்துக்கு இலங்கை மன்னன் கயவாகுவின் காலவொருமையினை நோக்குதல் வேண்டுமெனக் கூறி, அதனைக் கண்டு கூறியவர் இவரே (பக்.30-33). அத்துடன் சமண நூலாம் 'திகம்பர தரிசனத்தில்' வரும் 'திராமிட சங்கம்' பற்றிய குறிப்பின்பால் அறிஞர் கவனத்தை ஈர்த்தவரும் இவரே. இவர், தாம் வாழ்ந்த காலத்தில், பிராமணர் அல்லாத தமிழறிஞர்கள் வள்ளுவரைச் சாதி குறைந்தவர் எனக் கூறி அவர் நூலைப் புறக்கணிக்க முனைவதை வெளிப்படுத்திச் சாடியுள்ளமையும் (பக்.17) குறிப்பிடத்தக்கது.

இந்த இரு துருவப் பாட்டினை ஊடறுத்துச் சமநிலையான கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்கான ஒரு சாத்தியப்பாடு அப்பொழுது இருக்கவில்லை. மீள்கண்டுபிடிப்பு எனும் அப்பாரிய நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த அவ்வேளையில், சாதக பாதகங்களைச் சீர்தூக்கிப் பார்க்கக் கூடிய நியாய பூர்வமான ஒரு விவாதத்துக்கு இடம் இருக்க முடியாது என்பதும் உண்மையே. முழு இலக்கியமும் முற்றாக மீளக் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும், இந்தக் குழுமத்தினரின் வரலாற்று வளர்ச்சிச பற்றிய அறிவியல் பூர்வமான சில தரவுகள் கிடைக்கப் பெற்ற பின்னருமே அத்தகைய ஒரு விவா‘தத்தினை மேற்கொள்ள முடியும். அடுத்து வரும் காலப்பகுதி அந்த இரு பணிகளையும் செய்ய முனைந்தது.

மேலே விவரிக்கப்பட்ட காலத்தினைப் 'பேற்றுக்' காலமெனக் கொண்டால், முப்பதுகளையும் முப்பதுகளுக்குப் பின்வரும் தசாப்தங்களையும் 'வளர்ச்சி'க் காலம் எனலாம். இக்காலகட்டம் கா.சுப்பிரமணிய பிள்ளையின் 'இலக்கிய வரலாறு' நூல் வெளியீட்டுடன் தொடங்குகின்றது. இக்கட்டத்தில் இலக்கிய வரலாறு என்னும் தொடர், இலக்கிய வளர்ச்சியின் வரலாற்றையும், இலக்கியத்தின் வழியாகக் காணப்படும் மக்களின் வரலாற்றையும் கருதுவதாகவே உள்ளது. கா.சுப்பிரமணிய பிள்ளையின் முகவுரை அதனைத் திட்டவட்டமாக எடுத்துணர்த்துகின்றது.

'ஒரு மொழியின் இலக்கிய வரலாறானது அம்மொழியிலுள்ள செவ்விய நூல்களின் தோற்றத்தையும் தன்மையையும் கால முறைக்கேற்ப வகுத்துக் காட்டி அம்மொழி பேசும் மக்களை கருத்துக்கள், இலக்கிய கூறுகள் எம்முறையிலமைந்துள்ளனவென்றும் அவர்களது மணவாழ்க்கையில் வரலாற்றினை அவர்கள் இலக்கியங்கள் எவ்வாறு விளக்கிக் காட்டுகின்றன என்றும் தெரிந்து, இலக்கியம் என்பது மக்கள் வாழ்க்கைப் படம் என்றும் தெளிவுற அறிவுறுத்தும் கருவி நூலாகும்.'98

- இத்துடன் தமிழில் இலக்கிய வரலாற்றுக்கு வயது வந்து விட்டது. ஆயினும்,தீர்க்கப்படுவதிற் சிக்கல்களையுண்டாக்கும் பிரச்சினைகள் சில இருந்தன. முதற்பெரும் பிரச்சினை இவ்விலக்கியங்கள் அவற்றின் வரலாற்றுப் பின்னணியில் வைத்து நோக்குவதாகும். அதற்கு இப்பிரதேசத்தின் வரலாற்று நிகழ்ச்சித் தொடரைத் தெளிவுபடுத்திக் கொள்வது முக்கியமாகும்.

இலக்கிய அறிவினை வரலாற்று அறிவுடன் இணைப்பது பற்றியதான பிரச்சினையை ஆராய்வதற்கு முன்னர், இக்கால கட்டத்திற் சமூக-அரசியற் துறையில் ஏற்பட்ட பெரும் வளர்ச்சிகள் பற்றியும், அவை காரணமாக இலக்கியத்தில் நிகழ்ந்த நடவடிக்கைகள் பற்றியும் அறிந்து கொள்வது, மேற்குறிப்பிட்ட ஆய்வு அளவு சம முக்கியத்துவம் கொண்டதாகும்.

ஒரு நிலை நின்று நோக்கும் பொழுது முப்பதுகள் சயாட்சி நடைமுறையையும் அதனைக் கோருவதற்கும் பெற்றுக் கொள்வதற்குமான நடவடிக்கைகளையும் தொடக்கி வைத்ததென்றும், அன்று தொடங்கிய இவை இப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றும் கூறலாம். இந்த நடைமுறையில் 1947இல் இந்தியா பெற்ற அரசியல் சுதந்திரம் ஒரு படிநிலையேயாகும். அது ஒருரு பெரும் படிநிலையேயாகும்; பூரண சுதந்திரத்துக்கானப் பெரும் அணிவகுப்பு பவனியில் முக்கியமான, படிநிலை வேறுபாட்டை உணர்த்துவதான ஒன்றாகும். அந்நடைமுறையின் தொடர்ச்சி பற்றிய, இதன் சிறப்புத் தனித்துவம் பற்றிய பிரக்ஞையிலேயே இதன் முக்கியத்துவம் தெரிகின்றது எனலாம். இது தேசிய மட்டத்திலேல நிகழ்ந்ததவொன்றாகும்.

மாநில மட்டத்தில், தமிழினம் (அல்லது தமிழ்க் குழுமம்) பற்றிய பிரக்ஞையில், அதன் தனித்துவத்திலும், இந்தியப் பாரம்பரியத்தில் தமிழ்க் குழுமத்தின் அங்கத்துவம் பற்றிய பிரக்ஞையிலும் தனி முக்கியத்துவமுடைய பல அபிவிருத்திகள் ஏற்பட்டன. அரசியலைப் பொறுத்த வரையில், முப்பதுகளின் நடுக்கூற்றில் ஜஸ்டிஸ் கட்சி கவிழுகின்றது. அதனைத் தொடர்ந்துது ஆந்திராவிலும் கேரளத்திலும் பொதுவுடைமைக் கட்சியின் நடவடிக்கைகளில் ஊக்கமிக்க வளர்ச்சி காணப்பட்டது. ஆனால் தமிழ்ப் பிரதேசத்திலோ ஈ.வெ.இராமசாமி நாயக்கரின் (1879-1973) சுயமரியாதை இயக்கமும் பகுத்தறிவு இயக்கமுமே பலத்துடன் வளரத் தொடங்கின. பகுத்தறிவு இயக்கமானது நாத்திக வாதத்தைப் பேசுவதாக மாத்திரம் அமையவில்லை, தமிழினதும், தொல்காப்பியத்தினதும் வரலாற்றுப் புகழ்ச்சிகளை விடுத்து விடுத்துப் பேசுவோரையும் கண்டித்து நோக்குவதாகவும் அமைந்திருந்தது.99 பெரியார் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் ஜஸ்டிஸ் கட்சியினைத் தன்பாற்படுத்தி, அந்த இயக்கத்தினதும், முழுத்தமிழ் நாட்டினதும் தன்மையையே பின்னர் மாற்றவிருந்தத சி.என். அண்ணாத்துரை (1909-1969) என்பாரின் உதவியுடன் 1944இல் திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தார், பெரியாரின் இணங்கிப் போகாப் பண்பும், அண்ணாத்துரையின் திறமையான நிலைமை மதிப்பீடும், சுதந்திரம் கிட்டிய இரண்டே இரண்டு வருடங்களுக்குப் பின்னர்‘, 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றுவதற்குக் காரணமாயின. இது, தமிழ் மக்களது சமூக அரசியற் பிரக்ஞையில், சிறப்பா‘க பண்பாட்டு மரபு நிதியம் பற்றிய விடயங்களில், ஒரு முக்கிய திருப்பு முனையாக, முந்திய காலகட்டத்திலிருந்துவிடுபட்டுப் பிறவழிப்படுவதாக, அமைவதைக் காணலாம்.

இவ்வபிவிருத்திகள் காரணமாக முப்பதுகளுக்குப் பின்வரும் இலக்கிய வரலாற்றை இருமடிப்படுத்தி, முதலில் 1930 முதல் 1950 வரையுள்ள வளர்ச்சியையும், அடுத்து 1950 முதல் எழுபதுகள் வரையுள்ள வளர்ச்சியையும் தனித்தனியே எடுத்தாராய்வது பொருத்தமானதாகும்.

எழுபதுதுகளைக் கீழெல்லையாகக் கொள்வதற்குக் காரணம். தமிழ் நாட்டின் புலமை முற்றங்களில் வீசும், புதிய மாற்ற மாருதத்தின் தன்மையைச் சுட்டிக் காட்டுவதே. ஆயினும், வரலாற்று ஆய்வுநியமப் பாரம்பரியங்களுக்கு மதிப்பளித்துக் கூறும்பொழுது, ஐம்பதுகளக்குப் பின்வரும் அபிவிருத்திகளின் செல்நெறிகளை, பாங்குகளை மாத்திரமே கூறலாம். அவை பற்றி விரிவாக இங்க ஆராய முடியாதுள்ளது. ஐம்பதுகளுக்குப் பின் வந்த பிரசுரங்களின் தொகுப்புக் கூட இங்கு பூரணமாகச் செய்யப்படவில்லை.

1930-1950 காலப்பகுதியினை ஒரு தனி அலகாகக் கொள்வதற்கா‘ன நியாயப்பாட்டினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்திய சுதந்திரத்துக்கான போராட்டத்தையும், அதனுடன் காரண-காரியத் தொடர்பு கொண்டிருந்த அனைத்திந்தியத் தேசியப் பிரக்ஞையின் எழுச்சியையும் கொண்டு நோக்கும்பொழுது, முப்பதுகள் மிக முக்கியமான ஒரு கட்டமாகும். அனைத்திந்திய ஒருமைப்பாட்டுணர்வினை ஏற்படுத்துவதிலும் கொலோனியலிச ஆட்சிக்கு முன்னர் இந்தியாவிலும், பிரித்தானிய சா‘ம்ராச்சியமளவு அன்றேல் அதனிலும் பெருமை மிக்க சாம்ராச்சியங்கள் இருந்திருக்கின்றன என்ற உணர்வை ஏற்படுத்துவதிலும், வரலாற்றாசிரியர்களுக்குரிய பங்கு பற்றிய றொமிலா தாப்பார் போன்ற அறிஞர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.100 அத்தகைய ஒரு வரலாறெழுதுநெறி தென்னிந்தியாவில் முப்பதுகளிலேயே காணப்பட்டது. இராமச் சந்திர தீட்சிதர், கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார், நீலகண்ட சாஸ்திரி, மீனாட்சி மகாலிங்கம், சத்தியநாதைய்யர் போன்றோரது நூல்களில்ல இப்பண்பினைக் காணலாம். அத்தகைய நூல்கள் சிலவற்றின் பட்டியலை மூன்றாவது பின்னிணைப்பிற் காணலாம். இவ் ஆய்வுகள், சிறப்பாக நீலகண்ட சாஸ்திரியினுடையவை. ஒரு புறம் தென்னிந்தியாவை இந்திய வரலாற்றுப் பெரு வட்டத்தினுள் இணைப்பனவாகவமைந்த அதே வேளையில், மறுபுறத்தில் பிரதேசத்தின் வரலாற்றைக் கால கட்ட அடிப்படையிலும் அரச பரம்பரைகளின் அடிப்படையிலும் தெளிவுபடுத்துவனவாகவும் அமைந்தன. பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள், முஸ்லிம்கள், விசய நகரர மன்னர் ஆகியோர் பற்றிய ஆய்வுகள் மூலம் பல்வேறு ஆட்சிக் காலங்களிலும் தமிழ்ப்பிரதேசத்தில் நிகழ்ந்தவை பற்றியும் நிலவிய வாழ்க்கை பற்றியும் பூரணமாக அறியக் கூடியதாகவிருந்தது. இது காரணமாக பல்வேறு இலக்கிய ஆக்கங்களை, அரச பரம்பரைகளுடனும் கால கட்டங்களுடனம் இணைத்து நோக்குவது சுலபமாகிற்று. உண்மையில் மன்னர்களின் சாதனைகள் பற்றியும் அறிவதற்கு இவ்வெழுத்துக்கள் பெரிதும் உதவின. தமிழர் வரலாறு பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளிவந்த ஆய்வுகளை அடுத்துத் தமிழிலும் நியமமான வரலாற்றாய்வுகள் வெளிவரத் தொடங்கின. அத்தகையோருள் மூதறிஞராகக் கருதப்படத் தக்கவர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் ஆவர். ஆயினும், இச்செல் நெறியுயினைத் தொடக்கி வைத்தவர். ஆக்க இலக்கிய கர்த்தராகவும் விளங்கிய தி.நா.சுப்பிரமணியம் ஆவார்.

இவ்வாறாக வரலாற்றாய்வு நடவடிக்கைகளில் குவிமுனைப்புடன் ஈடுபடுவதற்கு நிறுவன நிலைப்பட்ட தொழிற்பாடுகள் உதவியாகவிருந்தன. இத் தொடர்பாக முப்பதுகளிற் சென்னைப் பல்கலைக் கழகம் ஆற்றிய பணி முக்கியமானதாகும். இக்கால கட்டத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் இருவர் முக்கிய மானவர்கள்--வரலாற்றுத் துறையில் நீலகண்ட சாஸ்திரி, இலக்கியத் துறையில் வையாபுரிப்பிள்ளை.

இலக்கிய ஆய்வுப் புலமையாளரென்ற வகையில் வையாபுரிப்பிள்ளை அவர்கள் தமது பணியினைச் செய்து கொண்ட முறைமை பற்றி இங்கு குறிப்பிடுதல் வேண்டும். வையாபுரிப்பிள்ளை பல்வேறு அவதூறுகளுக்குப்படுத்தப் பட்டவர். சிறப்பாக, அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அவர் தமிழின் நன்மை கருதாத துரோகி என்று பட்டவர்த்தனமாகத் தாக்கப்பட்டவர். தமிழிலக்கிய நூல்கள் பல சமஸ்கிருதச் செல்வாக்குட்பட்டவையெனக் கூறியதும், தமிழ் நூல்களின் காலங்களைப் பின்தள்ளியதுமே, அவர் இழைத்த குற்றங்களாகும்.101 இலக்கிய வரலாற்றாசிரியர் என்ற வகையில் வையாபுரிப்பிள்ளையின் பங்கினை நாம் மதிப்பிடல் வேண்டும். ஆனால், முதலில் அவர் தமிழிலக்கிய வரலாற்று ஆய்வினை எவ்வாறு அணுகினார் என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும். அனைத்திந்தியக் கீழைத்தேய ஆய்வியலாளரின் நாகபுரி மகாநாட்டில் (1946), திராவிடவியற் பிரிவுக்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரையில், அவர், இலக்கிய வரலாற்றாசிரியனது செய்பணியினை பின்வருமாறு எடுத்துக் கூறியுள்ளார்.

'இனி இலக்கிய வரலாற்றில் பல நூல்களுக்கும் பல ஆசிரியர்களுக்கும் காலம் துணியப்படல் அவசியம், இதனைத் தனிப்பட்ட ஒரு பகுதியா‘கக் கொள்ளலாம். இலக்கிய ஆசிரியர்களின் தனி வரலாறுகளும் ஆசிரியர் வரலாற்று அகராதிகளும் இங்கே கருதத் தகும். பின்னர் பொதுப்பட்ட இலக்கிய வரலாறுகள் இயற்றப்படல் வேண்டும். இதன் கண்ணே நூல் வகைகள் பண்டை நாடு தற்காலம் இவற்றிற்குத் தனிப்பட உரிய இலக்கிய வரலாறுகள் முதலியவற்றைக் கொள்ளலாம். நூல் வகைகள் என்ற பகுப்பில் கவிதை, நாடகம், காவியம், கதை முதலியவற்றை அடக்குதல் வேண்டும். இலக்கிய அகராதியும் (Dictionaryy of Literature) பெரிதும் பயன்படுவதாகும். நமது மொழிகளில், முக்கியமாகத் தமிழில், சரித்திரத்துக்குதவும் பொருட் கூறுபாடுகள் பல இருக்கின்றன. சிலா சாஸனங்கள், தாமிர சாஸனங்கள், தினசரிதைகள் முதலியவற்றை இங்கே குறிப்பிடலாம். இவற்றை நாம் கூடிய விரைவில் ஆராய்ச்சி செய்தல் வேண்டும். சரித்திர காலத்துக்கு முற்பட்ட வரலாறுகளைத் தெரிந்து கொள்ளப் புராண இதிகாசங்கள், நாடோடிப் பாடல்கள் முதலியன பயன்படும். பழமொழிகள், உலக வசனங்கள் பற்றிய ஆராய்ச்சியும் தனிப்பட்ட ஓர் துறையாகும். வைத்தியம், ஜோதிடம் முதலியன பற்றிய ஆராய்ச்சியும் தனிப்பட்ட ஓர் துறையாகும். பொருள் வரலாற்று ஆராய்ச்சிகளும் இங்கே கருதற்குரியன. சமுதாய வரலாறு, நாகரிக வரலாறு, சமய வரலாறு, மாந்திரீக வரலாறு முதலியனவெல்லாம் வெவ்வேறு தனித்துறையாகக் கொள்ளத்தக்கன.102

வையாபுரிப்பிள்ளையால் இவை யாவற்றையும் சாதிக்க முடிந்ததா என்பது பிறிதொரு விடயமாகும். ஆனால் இந்த மேற்கோள் இத்துறையை அவர் எவ்வாறு நோக்கினார் என்பதையும், அதனை எவ்வாறு வளர்க்க எண்ணினார் என்பதனையும் எடுத்துக் காட்டுகின்றது. 'தமிழ் லெக்சிகன்' அகராதியின் ஆசிரியராக 1926 முதல் 1938 வரையும், சென்னைப் பல்கலைக் கழகத்துத் தமிழ்த் துறைத் தலைவராக 1938 முதல் 1946 வரையும் கடமையாற்றினார். இக்கால கட்டத்திலே தோன்றிய இலக்கிய வரலாற்று நூல்களில் பட்டியலை மேலோட்டமாக நோக்கும் பொழுதுகூட, அவரது கண்கணிப்பின் கீழும், ஆலோசனையுடனும் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் பல என்பது தெரிய வரும்.

1930-1949-க் கால கட்டத்தில் வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரியை எதிர்த்த அறிஞர்களின் ஆக்கங்கள் அவ்விருவரின் எழுத்துக்கள் அளவு தொகையிலும் சரி, தரத்திலும் சரி சமமானவையாகவிருக்கவில்லையென்பதனைக் குறிப்பிடல் வேண்டும். அத்தகையோரின் எழுத்துக்கள் ஐம்பதுகளில் நிறையக் காணப்பட்டன. வையாபுரிப்பிள்ளையை விட, ஆராய்ச்சியாளர் வேறிருவரைப் பற்றிக் குறிப்பிடல் வேண்டும். அவர்கள் இருவருமே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு தொடர்புடையவர்கள். ஓருவர், 'தமிழ் வரலாறு' எழுதிய ரா.ராகவ ஐயங்கார் ஆவர். மற்றவர் நாவலர் சோம சுந்தர பாரதியார் ஆவர். 103 மறைமலையடிகள் இக்கால கட்டத்திலும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார். ஆனால், இப் பயில்துறையை மேலே வளர்த்தெடுப்பது தொடர்பாகவும், பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த புலவர்கள் தோன்றிய நூல்கள் ஆகியன பற்றி அறிவாழமான ஆராய்ச்சிகள் செய்தமை தொடர்பாகவும், வையாபுரிப்பிள்ளையினால் ஊக்குவிக்கப் பெற்ற பணியினை நுணுகி ஆராய்தல் அவசியமாகும்.

இக்கால கட்டத்திலே, தமிழுணர்ச்சி வாதிகளின் கருத்துக்களை எடுத்துக் கூறும் நூல்கள் குறைவாக வந்தமை, மிக முக்கியமான ஒரு விடயம் பற்றிய வினாக்களைக் கிளப்புகின்றது. முப்பதுகளிற், காணப்பட்ட தேசிய சுதந்திரப் போராட்டத்தில், தமிழ் அறிஞர்களின் பங்கு யாது என்பதே அவ்வினாவாகும்.104 முப்பதுகள் அரசியற் கொந்தளிப்பு காலம் என்பதுது எமக்குத் தெரிந்ததே. ராவ்-காசிப் விருதினைப் பெற்றிருந்த வையாபுரிப்பிள்ளை (இது, அவர் லெக்சிக்கன் ஆசிரியராகவிருந்து செய்த பணியைக் கௌரவிக்குமுகமாகக் கொடுக்கப் பெற்றது) அரசியற் செயல்நிலை ஆர்வங்காட்டியவரல்லர். ஆனால் அவரிடத்தே தேசியப் பிரக்ஞை காணப்பட்டது.105 மற்றப் பேரறிஞர் திரு.வி.கலியாண சுந்தர முதலியாராவர். வையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பு. திரு.வி.க.வுடன் தொடர்பு கொண்டிருந்த சைவ சித்தாந்த மஹாசமாஜப் பதிப்பாக வெளிவந்தது (1904) ஆச்சரியத்தைத் தருவதன்று. ஆயினும் திரு.வி.க. தமிழ் இலக்கிய வரலாற்றுத் துறை அறிஞரல்லர். திருவாங்கூரில் வாழ்ந்து வந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு தொல்பொருளிலிலும் வரலாற்றிலும் ஆர்வமிருந்தது.106 இவர் வையாபுரிப் பிள்ளையின் நண்பர்.

தனித் தமிழியக்கத்தைச் சேர்ந்த அறிஞர்களுக்கு, குறிப்பாக மறைமலையடிகளுக்கு, பிரித்தானியச் சார்பான கருத்துநிலை நோக்கு இருந்தது. சுயமரியாதை இயக்கமானது. அதன் நாத்திக வாதம் காரணமாக ஆரம்பத்தற்பாரம்பரியத் தமிழரிஞர்களைக் கவரவில்லை. தமிழரின் தொன்மை பற்றிய எண்ணத்தின்மை கொண்டவர்களாய் விளங்கிய தமிழறிஞர்கள் பலர் தனித்தமிழியக்க நோக்கிலும, சைவம்-தமிழ் இயைபு நோக்கிலும் திளைத்திருந்தனர். ஆயினும் தமிழ் இலக்கிய வரலாற்றின் கருத்துநிலைப் பரிமாணத்தில் இத்தகையோர் முதலில் அதி முக்கிய இடம் பெறவில்லை. தமிழறிஞர்கள் கருத்துநிலை முக்கியத்துவம் பெறத் தொடங்குவது, சுயமரியாதை இயக்கத்தின் உச்ச நடவடிக்கைக் கட்டத்திலன்று, தி.மு.க. (திராவிட முன்னேற்றக் கழகம்)வின் தோற்றத்துடனேயே (1949). தமிழறிஞர்களின் இந்த ஈடுபாடு ஐம்பதுகளில் தெரியத் தொடங்குகின்றது. வையாபுரிப் பிள்ளையின் தாக்கம் புலனாகப் புலனாக இவர்களின் எதிர்ப்புக் கிளம்பத் தொடங்கிற்று. வையாபுரிப் பிள்ளையின், எழுத்துக்களை நோக்கும் பொழுது, ஐம்பதுகளின் முற்கூற்றில் நூலுருவில் வெளியிடப்பெற்றவை. முன்னர், 1936-1946க் காலப் பிரிவில் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக எழுதப்பட்டனவே என்ற உண்மை தெரிய வரும். தி.மு.க.வின் தோற்றத்துடனேயே, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் வெகுசனத்தின் அரசியற் செயற்பாட்டுக்கான முனைப்பு மையமாக அமையத் தொடங்குகின்றது. இவ்வாறு சொல்வதனால், 19300-500க் கால கட்டத்தில் மற்றக் கருத்துக்கள் இடம் பெறவில்லை எனக் கூறவதாகாது. இது தொடர்பாக நாவலர் சோம சுந்தர பாரதியாரின் ஆய்வுக்கட்டுரைகளைக் குறிப்பிடல் வேண்டும். நாவலர் சோம சுந்தர பாரதியாரின் கருத்துக்கள் வையாபுரிப் பிள்ளையின் கருத்துக்கு முரண்பட்டவையே. தொல்காப்பியம் பொருளதிகாரத்துக்கு அவர் எழுதியுள்ள உரை அவருக்கிருந்த ஆழ்ந்த இலக்கியத் தாடனத்தையும் சட்ட வாதத் திறனையும் எடுத்துக்காட்டுவதாகவுள்ளது. ஆங்கிலத்தில் அவர் எழுதிய "Tamil Classics and Tamilakam' (தமிழ்ச் செந்நெறி இலக்கியங்களும் தமிழகமும்), "Age of Tolkapiyam'(தொல்காப்பியத்தின் காலம்) என்பவை முக்கியமானவையாகும்.

இக்கால கட்டத்தில் தொழிற்பட்ட புலமைச் சக்திகளை இதுவரை பார்த்த நாம் அடுத்து, இக்காலத்தில் எழுந்த இலக்கிய வரலாற்று எழுத்துக்களின் பண்புகளையும் அப்பண்புகள் எவ்வாறு தோன்றின என்பதனையும் பார்த்தல் வேண்டும். ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று. இக்கால இலக்கிய வரலாற்றெழுத்தில் முக்கிய பண்பு, தமிழ் நாட்டு வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களிலும் நிலவிய சமூக-அரசியல், பொருளாதார நிலைமைகள் தெளிவுபடுத்தப் பட்டமையாகும். நீலகண்ட சாஸ்திரியின் "Studies in Colas history and Administration', (சோழ வரலாறு, நிர்வாகம் பற்றிய ஆய்வுகள்), "Colas" (சோழர்), பல்லவர் காலம் பற்றிய மீனாட்சியின் அதி உன்னதமான ஆய்வு, விஜய நகர காலம் பற்றி ரி.வி. மகாலிங்கம் செய்த ஆய்வு, நாயக்கர்கள் பற்றிச் சத்திய நாதையர், விருத்த கிரீசன் செய்த ஆய்வுகள்போன்றவை தமிழ்நாட்டின் வரலாற்றுக் காலவரிசை பற்றிக் காணப்பட்ட பிரச்சினைகளைப் பெரிதும் நீக்கின எனலாம். இலக்கிய வரலாற்றின் இணைத்துறைகளான வரலாறு. தொல் பொருளியல் கல்வெட்டியல் போன்றவையும் ஆய்வுக் கவனத்தைப் பெற்றன. இத்துறைகளில், கே.ஆர். ஸ்ரீநிவாசன், தி.நா. சுப்பிரமணியன், மு.இராகவையங்கார் போன்றோரின் எழுத்துக்கள் முக்கியமானவையாகும். இராகவையங்காரின் 'சாஸனத் தமிழ்க் கவி சரிதம்' எனும் நூல் இலக்கிய வரலாற்றாய்வுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

இக்கால கட்டத்தினால் தோற்றுவிக்கப்பட்ட புலமை ஊக்குவிப்பும், மேற்கொள்ளப்பட்ட ஆழச்செறிவான ஆராய்ச்சிகளும் இலக்கிய வரலாறுகள் வெளியிடப்படுவதற்குக் காரணமாயின. அவற்றுட் சில குறிப்பிட்ட காலப் பிரிவுகள் பற்றிய ஆய்வுகளாகும். (உ-ம்.ரி. என்.தானு அம்மாள்- பிற்காலச் சோழர் கால இலக்கியம் - சென்னைப் பல்கலைக் கழகம் - 1934) சில, தனிப்பட்ட புலவர்கள் பற்றியனவாகும் (உ-ம்.வே. வேங்கடராஜுலு ரெட்டியார், கபிலர், பரணர் பற்றிச் செய்த ஆய்வுகள்) சில நூற்றாண்டு வாரியாக எழுதப்பட்டனவாகும். (16-17ஆம் நூற்றாண்டுகள் பற்றிச் சோம சுந்தர தேசிகர் எபதிய ஆய்வுகள், 16ஆம் நூற்றாண்டு பற்றி எழுதப்பெற்ற நூலில், ஆய்வுகள், 16ஆம் நூற்றாண்டு பற்றி எழுதப்பெற்ற நூலில், அந்நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றை மிகச் சுருக்கமாக எடுத்துக் கூறும் முன்னுரையொன்றினை மிகச் சுருக்கமாக எடுத்துக் கூறும் முன்னுரையொன்றினை வையாபுரிப் பிள்ளை ஒருவரது பணிவே இவ்வுண்மையை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.107

நவீன கல்வி மரபில் வந்தவர்களோடு ஒப்பு நோக்கும் பொழுது, பாரம்பரியத் தமிழரிஞர்கள், இத்துரையில் இக்கால கட்டத்தில், புலமை ஆய்வுகளுக்கு வேண்டிய ஆராய்ச்சி முறைமையிறுக்கத்துடன் செய்த ஆய்வுகள் குறைவே. ஆனால் அதனை ஈடு செய்யும் வகையில் அவர்கள் தமிழர்களின் இலக்கியப் பாரம்பரியச் சனரஞ்சகப்படுத்தும் பணியிலே செயற்பட்டனர். இதற்கான வெளியீடுகளை,திருநெல்வேலி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் மேற்கொண்டிருந்தது இலக்கியங்கள் பற்றிச் சொற்பொறிவுகளை ஒழுங்கு செய்து. அச்சொற்பொழிவுகளைப் பின்னர் நூலாகக் கழகம் வெளியிட்டது. இம்முறைமை, சங்க இலக்கியங்களுடன் தொடங்கிப் பின்னர் இடைக் காலத்துச் சிற்றிலக்கியங்கள் வரை செய்யப்பட்டது.108 இத்தொடரின் அச்சுப் பதிவு வரலாறு (நான்காம் பின்னிணைப்பைப் பார்க்க). தமிழ் வாசகர்களிடையே இந்த பிரசுகர்களுக்கிருந்த ரஞ்சகத்தைக் காட்டுகின்றது.

இத்தகவல் மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் இதன் பின்னரும், இதைப் போன்ற பிற தமிழிலக்கிய ரஞ்சக முயற்சிகளுடனேயே, திராவிட முன்னேற்றக் கழம், தனது பிரசாரத்தை மேற்கொள்ளக் கூடியதாகவிருந்தது. அப்பிரசாரத்தில், தமிழரின் புகழ்மிக்க தொன்மைக்கான சான்றாகப் பழைய இலக்கியங்களே பயன்படுத்தப்பட்டன. அந்தப் புகழ் சான்ற தொன்மையை எடுத்துக்காட்டி விட்டு சமகாலத்து (ஐம்பதுகளில்) தமிழ் நாட்டு வறுமை நிலை அதனோடு ஒப்பிட்டு வற்புறுத்தப்பட்டது.

எனவே, இத்துறையில் ஒரு மட்டத்தில் ஆழச் செறிவான புலமை முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதேவேளையில், இன்னொரு மட்டத்தில், அகலமான சனரஞ்சகப் பாட்டுக்கான முயற்சியும் காணப்பட்டது.

இக்கால கட்டத்து இலக்கிய வரலாற்று நடவடிக்கைகளை,பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியாரின் பணி பற்றிக் குறிப்பிட்டு நிறைவு செய்து கொள்வது பொருத்தமாகும். இவரது வரலாற்றுத் தமிழ் வாசகம்' (Historical Tamil Reader, 1945) அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டதாகும். தமிழின் வளர்ச்சியை அதன் ஒலியனியல், உருபனியல், தொடரியல், சொற்பொருளியல் அமிசங்களின் அடிப்படையிற் படிமுறையாக எடுத்துக் காட்டத்தக்க, ஐயத்துக்கு அப்பாற்பட்ட மூலபாடச் சான்றுகள் இருக்கின்றதென்பதை இந்நூல் காட்டிற்று. இந்நூலின் குறைபாடுகள் எத்தகையனவாக விருப்பினும், இந்நூல் வெளிவந்தமை, தமிழிடத்து அதன்மொழி, இலக்கிய வரலாற்றை வரன் முறைப் படிநிலை வளர்ச்சியினைச் செம்மையாக எடுத்துக் காட்டத்தக்க, போதுமான சான்று உள்ளது என்பதைக் காட்டுவதாக அமைந்தது.

முப்பதுகளுக்குப் பின்னரும் அடுத்த கால அலகு ஐம்பதுகளும் அதனை உள்ளிட்ட அடுத்த இருபது, இருபத்தைந்து வருடங்களுமாகும், ஏற்கனவே குறிப்பிட்டபடி, இக்கால கட்டம் நேர் சீரான வரலாற்றாய்வு செய்வதற்கு முடியாத அளவுக்கு மிக அன்மித்ததாய். ஆனால் அதே வேளையிற் குறிப்பிடப்படாது விடப்பட முடியாத அளவுக்கு முக்கியத்துவம் கொண்டதாய், விளங்குகின்றது. எனவே இக்கால கட்டத்துக்குரிய ஆய்வாளர்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளாது விடுவது நல்லதெனக் கொள்ளப்பட்டுள்ளது.

ஐம்பதுகளும், ஐம்பதுகளுக்குப் பின்வரும் வருடங்களும், தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வு வளர்ச்சியில் முதிர்ச்சியான ஓர் அபிவிருத்தியைக் காட்டுவனவாகவுள்ளன. இவ்வளர்ச்சிக்கான பிரதான காரணம், பண்பாட்டு வரலாற்றில் ஈடுபட்டுள்ள இந்தியர்களல்லாத அறிஞர்கள் திராவிடவியல் பற்றிக் காட்டத் தொடங்கிய சிரத்தையேயாகும். 'இந்தியப் பண்பாடு' என இன்று குறிப்பிடப் பெறும் பண்பாட்டுக் கோலத்தின் உருவாக்கத்தின், ஆரியத்துக்கு முற்பட்டதும் ஆரியமல்லாததுமான அமிசங்கள் பெறும் இடத்தில் முக்கியத்துவத்தினைன நன்கறிந்திருந்த இவ்வறிஞர்கள். அந்த அமிசங்களைத் தேடிக் கண்டறியும் முயற்சியிலே இறங்கினர். அவ்வேளையில், 'திராவிடப் பண்புகள்' எனக் குறிப்பிடப் பெறுபவை அவர்களது கவனத்தைப் பெரிதும் ஈர்த்தன. இது பற்றிய ஆர்வத்தை உண்டாக்குவதற்குத் தொல்பொருளியல் பெரிதும் உதவியது.

இக்காலத்திலே கிளர்ந்து வளர்ந்து கொண்டிருந்த மொழியியல் என்னும் அறிவியற்றுறையும், திராவிட மொழிகள் பற்றி ஆர்வம் செலுத்தத் தொடங்கிற்று, இத்துறையிலும், திராவிட மொழிகள் பற்றிய நுண்ணிய செறிவான பகுப்பாய்வு, இந்திய மொழிகளை விளங்கிக் கொள்வதற்கு மாத்திரம் அல்லாது. முழுத் தெற்கு, தென்கிழக்கு ஆசியப்பிரதேச ஆய்வுக்கே அத்தியாவசியமானதாகக் காணப்பட்டது.

இவை யாவற்றுக்கும் மேலாக, இந்திய வரலாற்றில் மிக நீண்டகால வரலாற்றுத் தொடர்ச்சியுடைய மொழி தமிழே என்னும் வரலாற்று யதார்த்தம் இந்த ஆய்வுப் பெருக்கத்துக்கு உதவியது. இந்தியச் சிந்தனை, பண்பாடு பற்றி அறிய முனையும் மாணவன் எவனுக்கும் தமிழினைப் (பற்றிப்) படிப்பது கட்டாயமாகிற்று.

இது வரை எடுத்துக் கூறப்பட்ட புலமை நிலைப்பட்ட இந்த வாதங்கள் யாவற்றுக்கும் மேலாக, வளர்ந்து வரும் அரசியல் தேவையொன்றுமிருந்தது. உலகின் வல்லரசு நாடுகள், சுதந்திர இந்தியாவில், சுதந்திரப் போராட்ட காலத்துத் தெரியப்படாதிருந்த சில அமிசங்களின் வளர்ச்சியை, அதாவது, அக்கால வரலாற்றை காந்தி, நேரு தலைமையில் நடந்த இந்திய சுதந்திரத்துக்கான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது, வெளியே முனைப்புடன் தெரிய வராத சில அமிசங்களின் வளர்ச்சியைக் கண்டு கொண்டன. ஒன்று, சுதந்திரத்தின் பின்னர், அரசியலில், காஞ்சிபுரம் நடராஜ முதலியார் அண்ணாதுரை என்றொரு மனிதர் தமிழ்ப் பண்பாட்டின் முற்றிலும் அரசியல் மயப்படுத்தும் வாக்குத்திறன் கொண்டவராய், தனது ஆரம்பகால வழிகாட்டியாகவிருந்த ஈரோடு இராமசாமி நாயக்கருடன் தனக்கிருந்த,இறுகப் பிணிபட்டுக் கிடந்த உறவுகளை அறுத்துக் கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனினும் பார்க்க ஆச்சரியமான சம்பவம் இதற்கு மேலேதான் வரவிருந்தது. இந்தத் திராடத் தாக்குதலை' அரசியல் ரீதியாக எதிர்க்கக் கிளம்பியவர் தமிழ்ச் சமூகத்தின் மிக உயர்ந்த சமூக மட்டத்திலிருந்து வந்தவரல்லர். இப்பொழுது விருதுநகர் என அழைக்கப்பெறும் பழைய விருதுபட்டியைச் சேர்ந்த மகன் காமராஜ நாடார் அனைத்திந்தியத் தலைவராக மேலெழும்பினார். ஆனால் தி.மு.க. மாணவர் தலைவனிடத்துத் தோல்வியடைய வேண்டியிருந்தது. அமெரிக்க, பிரித்தானிய அறிஞர்கள், தாம் இந்த 'மற்ற' இந்தியாவை அறிந்து கொள்வதற்கான தடயங்களின்வழி அதுவரை செல்லவில்லை என்பதை உணர்ந்து கொண்டனர். முறையே வைற்ஹோலிலும் (Whitehall), வாஷ’ங்டனிலுள்ள பிரித்தானிய, அமெரிக்க வெளிநாட்டலுவலகங்களின் அரசியற் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு நேருவின் இந்தியா பற்றிய, அதன் தொல்லைகளுக்கான தளங்களின் தகவல்கள் உள்ளிட்ட விவரங்கள் தேவைப்பட்டன.

இவை யாவும் ஒன்றிணைந்து, தமிழ்நாடு பற்றி, அதன் சமூகம், அரசியல், மொழி, மானிடவியல் ஆகியன பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தன. இந்திய, தென்னாசிய வரலாற்றின் சில பிரச்சினைகளைத் தீர்ப்பதையே தமது புலமைத் தேடலாகக் கொண்ட அறிஞர்கள் பலருக்கு ஆய்வுதவிகளும் ஆராய்ச்சி நன்கொடைகளும் கிடைக்கத் தொடங்கின.

தமிழ், தமிழ்நாடு, திராவிட நாகரிகம் ஆகியனபற்றி மேலும் விடயங்களைப் பெற்றுக் கொள்வதற்கானன ஆர்வங்க கொண்ட ஒரு சர்வதேசப் புலமை ஆர்வம் வளர்ந்து வந்த அதே வேளையில், தமிழரிடையேயும், அரசியற் சுதந்திரம் ஏற்படுத்திய சூழலில் தங்களது இனத்தனிநிலைப்பாட்டையும் பண்பாட்டுத் தனித்துவத்தையும், ஆய்வறிவு நிலைப்பட நிறுவிக் கொள்வதற்கான ஓர் ஆர்வம் வளர்ந்து கொண்டு வந்தது. தமிழர்கள் தனியே இந்தியாவிலும், இலங்கையிலும் மாத்திரம் வாழவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் முதல் மலேசியா வரை பல்வேறு நாடுகளில் வசித்து வந்தனர். இந்த, மிக்க அவசரமான, சமூக பண்பாட்டுத் தேவையின் அறிவு நிலைப்பட்ட நிறைவேற்றமாக அனைத்துலகத் தமிழாய்ச்சி நிறுவனத்தின் தோற்றம் அமைந்தது. இதன் தோற்றத்தில், வரலாற்றுண்மைகளுக்கான ஒரு சர்வதேசியத் தேடலும், பிறரின் கணிப்பை வேண்டி நின்ற ஒரு இனக்குழுவின் தாகமும் புலமை நிலையில் ஒன்றிணையக் கூடியதாகவிருந்தது. இவ்வாறாகத் தானே தமிழ் ஆய்வுகள் பற்றிய புதிய அனைத்துலக ஆர்வம் ஏற்பட்டது.

மேனாட்டறிஞர்கள் தமிழியலாய்வுகளின்பாற் கவரப்பட்டமை காரணமாக ஒரு பிரச்சினையும் ஏற்பட்டது. அவ்வறிஞர்கள் இவ்வாய்வுகளை மேற்கொண்ட பொழுது, தாம் ஆராய விரும்பும் இயக்கமும், தாம் புரிந்து கொள்ள விரும்பிய பண்பாடும், ஏற்படைமையுள்ள மேனாட்டு ஆய்வுமுறைகளின் அடிப்படையிற் செய்யப்பட்ட ஆய்வுகளை அதிகம் கொண்டிருக்கவில்லை என்பது புலனாகிற்று. உள்ள ஆய்வுகளிற் பெரும்பாலானவை 'ஆரியச்சார்புடையன'வாக அன்றேல், 'திராவிடச் சார்புடையன' வாகவே இருந்தன.

இக்கட்டத்திலேதான் வையாபுரிப்பிள்ளை பற்றி மதிப்பிடல் வேண்டும். ஏயனனில் அவர்தான் தமிழ் இலக்கியத்தையும் அதன் நூல்களையும் ஆராய்வதற்கான, இறுக்கமுள்ள, கட்டுத் தளர்வற்ற ஓர் ஆய்வுமுறையை வளர்த்தெடுத்தவராவர், ஐயந்திரிபற ஒரு கூற்றைக் கூறுவதற்கு உதவும் சான்றையே ஆதாரமாகக் கொள்ளும், பட்டறிவு அளவை கொண்ட ஆராய்ச்சி முறைமை வழி நின்று அவராற் கூறப்பட்டவை. இன உணர்வுடன் தொழிற்பட்ட புலமையாளரின் மனங்களைப் புண்படுத்துவனவாக, அதிருப்தியளிப்பனவாக, அமைந்தன. ஆனால் அவர் கையாண்ட ஆய்வு முறைமைக்குத் தக்க பதில் இவர்களிடத்திருக்கவில்லை. அத்தகைய உண்மைகளை அவர் கூறியதனால், வெகு விரைவில், அவர் தமிழ் துரோகி எனத் தாக்கப்பட்டார். ஆனால், மேற்கூறப்பட்ட அனைத்துலக நிலைப்பட்ட தமிழியல் ஆர்வம் காரணமாக வையாபுரிப்பிள்ளையின் ஆய்வு முறையினை விளங்கிக் கொள்வது ஒரு புலமைத் தேவையாகின்றது.

எனவே, ஒன்பதுகளிலும் ஐம்பதுகளுக்குப் பின்னரும் காணப்படும் செய்திகளைத் தெளிவுபடுத்த முவைதற்கு முன்னர், வையாபுரிப்பிள்ளையின் தனிநிலை முக்கியத்துவத்தினை மதிப்பிடுவது பற்றிய பிரச்சினையை நோக்குதல் அவசியமாகும் 'காவிய காலம் போன்ற அவரது பிந்திய ஆக்கங்களில், வையாபுரிப்பிள்ளையின் நிலைபாடுகள் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

'எமது நாட்டபிமானத்தை அதன் புகழ்ச்சிகள் பொலிய, பகட்டாரவாரத்துடன் வெளிக்காட்டும் எமது ஆர்வ விருப்புக் விருப்புக் காரணமாக, நாம் உண்மைக்குப் பெரிதும் அப்பாலான விடயங்களை எழுதுகின்றோம், கூறுகின்றோம். உண்மைகள் கவனிக்கப்படவில்லை. சான்றுகள், செஸ் ஆட்டப் பலகையிலுள்ள வெறும் காய்களாகி விட்டன (அங்கும் இங்கும் தள்ளப்படுகின்றன) நமது நாட்டை, மக்களை, மொழியை, இலக்கியத்தை மேற்மைப்படுத்திக் கூறுவது பற்றி மாத்திரமே சிரத்தை காட்டப்பெறுகின்றது. இந்த மயக்கும் கவர்ச்சியை, நமக்குள்ள முழுப் பலத்துடனும் எதிர்த்தல் வேண்டும் இச்செல்நெறி, இம்முயற்சியின் பிரதான நோக்கினைத் தோற்கடித்து விடுகின்றது. நாம் சிரிப்புக்கிடமானவர்களாகி விடுகிறோம். வாய்மை ஒன்றே எமது ஒரே இலக்காக இருத்தல் வேண்டும். உண்மைகளே எமது நடவடிக்கைகளை வழி நடத்துவனவாக, எமது முடிவுகளை ஆளுவன வாகவிருத்தல் வேண்டும்.'109

ஆய்வு முயற்சிகள் இக்கூற்றுக்கு அமையவே இருத்தல் வேண்டும் ஆனால். உண்மையை அறிந்து கொள்ள முயலும் பொழுது, நாம் அதற்கு பிரயோகிக்கும் முறைமைகளும் முக்கியமானவையாகின்றன. வையாபுரிப்பிள்ளையின் மறைவு குறித்து வந்த இரங்கலுரைக€ளை நோக்கும் பொழுது, குறிப்பாக தெ.பொ.மீனாட்சி சந்தரனார் எழுதியுள்ளதைப் பார்க்கும்பொழுது, மற்றவர்களால் தன் கருத்துக்களுக்காகத் தாக்கப்பட்டத் தாக்கப்பட, அவர் பொது விடயங்களிற் கலந்து கொள்ளாது மேலும் மேலும் ஒதுங்கிக்க கொண்டாரென்பதுது தெரிய வருகின்றது.110 அத்தகைய ஒரு நிலையில், அவர் சில விதிகளை எவ்வித நெகிழ்ச்சியுமற்ற முறையிலும், ஒரு வகையிற் பார்க்கும் பொழுது, பழிவாங்குவதுது போன்றும் பிரயோகிக்கத் தொடங்கினார். அவரது இறுதிக் காலத்தில் அவருடன் பணியாற்றிய வி.ஐ.சுப்பிரமணியம் எடுத்துக்காட்டுவது போன்று, இந்தத் தட்டுத்தளர்வற்ற பிரயோக முறைமை, ஓர் அறிவியல் வழுவினைத் தன்னகத்தே கொண்டதாகவே இருந்தது.

'அவர், கால நிர்ணயத்துக்காக, வடமொழி, தமிழ் நூல்களிற் காணப்படும் ஒப்புமைக் குறிப்புக்களையும் பரந்த அளவிற் பயன்படுத்தினார். தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய நூல்களின் காலத்தை அவர் நிர்ணயஞ் செய்துள்ள முறைமையினை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். மூலபாடத்திறனாய்வாளர் ஏற்றுக் கொள்ளத்தக்க நிரூபணமுறைமைகளைக் கொண்டிராத அத்தொல்காப்பியப் பாடப்பகுதிகள் பிற்காலத்து இடைச் செருகல்கள் என ஏற்றுக்கொள்ள அவரால் முடியவில்லை. திட்டவட்டமான ஒரு கருத்துக்களின் வரலாறு இல்லாத ஒரு நிலையில் வடமொழி நூல்களிற் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் தமிழ் நாட்டிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் எனும் சாத்தியப்பாட்டினையும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை. சில வேளைகளில், அவர் கூறுவன, தெரிந்த உண்மைகளை வலிந்து கூறுவது போன்றும் இருக்கும். ஆனால் உண்மைக்கு அவர் கொடுத்த மதிப்பு, வசவுகளுக்கு அப்பாற்பட்டது. இச்சான்றுகள் யாவும் இரண்டாம் பட்ச நிலைப்பட்டனவே, எற்புடைமையுள்ள வேறு நியாயங்கள் இருப்பின், இவற்றை நாம் பின்தள்ள வேண்டுமென்பதை அவர் உணர்ந்திருப்பாரேல் அத்தகைய ஒரு உணர்வு, அந்த நூல்களின் காலத்தை அவ்வவற்றுக்கேற்ப நிர்ணயிப்பதற்கு உதவியிருக்கும்.111

இந்நூலாசிரியர் சையாபுரிப்பிள்ளை சிலப்பதிகாரத்தின் காலத்தை நிர்ணயித்த முறைமை பற்றி ஆராய்ந்துள்ளார்.112 அவ்வாய்வில், சிலப்பதிகாரமானது பழமொழி, பஞ்சதந்திரம் போன்ற நூல்களுக்குப் பின்னரே தோன்றியிருக்க முடியுமென வையாபுரிப்பிள்ளை விடாப்பிடியாக கூறுவது, ஏற்புடைத்தான ஒன்று அன்று என்பது காட்டப்பட்டுள்ளது. அத்துடன், சொற்களின் பயன்பாடு பற்றி, எவ்வெந்நூற்றாண்டுகளில் அவை பயன்படுத்தப்பட்டன என்பது பற்றிக் கவனஞ் செலுத்தும் அவர், அக்காலங்களின் சமூக வரலாற்று நிலைமைகளுக்க அவ்வளவு கவனஞ் செலுத்தவில்லை என்பதும் கண்டு கொள்ளப்பட்டது. அவருடைய தட்டுத்தளர்வற்ற ஆய்வுமுறையை, அவர் வரலாற்றுப் பொருள் முதல் வாத உணர்வுடன் பிரயோகித்திருப்பின், அதிக பயனைப் பெற்றிருக்கலாம். ஆனால் இவ்வாறு கூறப்படுவன எவையும், அவரது அணுகுமுறையின் வன்மையினை மறுப்பனவாக அமையா, வையாபுரிப்பிள்ளையின் கால நிர்ணய முயற்சி பற்றி இதுவரையில் செய்யப்பட்ட மதிப்பீடுகளில், மிகப்பொருத்தமானதாகக் கொள்ளப்படத்தக்கது. பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியத்தின் கூற்றாகும்.

'அவர் தனித்தனி நூல்களுக்குக் கொடுத்த காலத்தை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. ஆனால் அவர் நூல்களைக் கால வரிசைப்பட அமைத்துள்ள முறைமைக்கு (எது முந்தியது யுது பிந்தியது என்பதற்கு) வேண்டிய நிரூபணச் சான்றுகள் நிறைய உள்ளன.'113

தமிழ் மக்களின் இலக்கிய வரலாறு பற்றிய எந்த ஆய்விலும் வையாபுரிப்பிள்ளை பெரியதோர் இடத்தினைப் பெறுவர். அவர் இல்லையேல், இன்னும்நாம் இலக்கிய ஆக்கங்களை அவற்றின் வரலாறு வளர்ச்சி வரன் முறை அடிப்படையில் வைத்திருக்க முடியாது போயிருக்கும்.

வையாபுரிப்பிள்ளை மிகுந்த காழ்ப்புணர்வுடன் தாக்கப்பட்டார். ஆனால் அறிவியல் பூர்வமான வகையிலோ, போதுமான வகையிலோ அவர் கூறியவற்றுக்குப் பதிலளிக்கப்படவில்லை. எந்த ஆராய்ச்சியாளனும், அறிவியல் பூர்வமான வரலாற்றுத் தகவல்களை கனக்கெடுக்கத் தவறும் ஒரு நிலைமையை இல்லாததாக்கினார். அவரைப் பொறுத்த வரையில் ஆதாரமில்லாத எடுகோள்களுக்கும் உணர்ச்சி வசப்பட்ட முடிவுகளுக்கும் இடமிருக்கவில்லை. முற்று முழுதாகச் சான்றுகளின் அடிப்படையிலேயே அவர் தனது முடிவுகளை எடுத்துக் கூறினார்.

வையாபுரிப் பிள்ளையின் முக்கியத்துவத்தைக் குறித்துக் கொண்ட நாம், அடுத்து, ஐம்பதுகளின், பின்வரும் இலக்கிய வரலாற்று ஆய்விற் காணப்பட்ட முக்கிய பெரு நடவடிக்கைகளை நோர்க்குவோம்.

அவற்றுள் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது. இக்கால கட்டத்தில் தென்னிந்தியப் பல்கலைக் கழகங்களில் கலைமாணி (B.A)ப் பட்டத்துக்கான தமிழ்ப் பாட நெறியில் இலக்கிய வரலாறும் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டதாகும். காலஞ் சென்ற பேராசிரியர் க.கணபதிப் பிள்ளையின் தீட்சண்ணிய நோக்குக் காரணமாக, நாற்பதுகளிலேயே இப்பாடம், இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ், பொது, சிறப்புத் தமிழ்த் தேர்வுகளில் இடம் பெற்றது. அங்க இப்பாடத்தினை முதன் முதலிற் படிப்பித்த வி.செல்வநாயகம், இதற்கான ஒரு பாடப்புத்தகத்தின் தேவையை அறிந்தவராய், படிப்பித்தல் காரணமாக அத்தகைய ஒன்றினை எழுதுவதற்குத் தகுதியுடையவராக விருந்தார். அவர் எழுதிய 'தமிழ் இலக்கிய வரலாறு' எனும் நூல், தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்ச்சிகளின் பின்னணியில் வைத்துக் காட்டிற்று. முன்னர் சமண காலம், தேவார காலம், காப்பிய காலம், இடைக்காலம் எனக் குறிப்பிடப் பெற்றவை. இவை நூலில் சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம், சோழப் பெருமன்னர் காலம், விஜய நகர நாயக்க மன்னர் காலம் எனக் குறிப்பிடப்பட்டன. செல்வ நாயகத்தின் நூலின் திறனை வையாபுரிப் பிள்ளை முதல் ஜேசுதாசன், அருணாசலம் வரை பல அறிஞர்கள் போற்றியுள்ளனர். இந்நூல், இதன் பின்னர் வந்த பாடப் புத்தகங்கள் பலவற்றுக்கு மாதிரியாக அமைந்தது; பின்வந்த பாடப் புத்தக ஆசிரியர்களுக்குரிய பண்பு தவறாது, இவருடைய கால வகுப்பு முறைமையினை, தமதாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

இலக்கிய வரலாற்றினைத் தமிழ்ப்பாட நெறியின் ஒரு பகுதியாகக் கொண்டமை, பின்னர் அந்தப் பயில்துறையின் அடிப்படைக் கருதுகோள்களையே மலினப்படுத்துவனவாக அமைந்த பாடப் புத்தகங்கள் பலவற்றுக்கு மாதிரியாக அமைந்தது; பின்வந்த பாடப் புத்தக ஆசிரியர்கள், பலர் எடுத்த இடத்தைக் கூறாது. பாடப் புத்தக ஆசிரியர்களுக்குரிய பண்பு தவறாது, இவருடைய கால வகுப்பு முறைமையினை, தமதாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

இலக்கிய வரலாற்றினைத் தமிழ்ப்பாட நெறியின் ஒரு பகுதியாகக் கொண்டமை, பின்னர் அந்தப் பயில்துறையின் அடிப்படைக் கருதுகோள்களையே மலினப்படுத்துவனவா‘க அமைந்த பாடப் புத்தகங்களும் 'வழிகாட்டி'களும் எழுதப்படும் ஒரு நிலைமையைத் தோற்றுவித்ததெனினும், மாணவர் மட்டத்தில் இப்பயில் துறைபற்றி ஒரு பிரக்ஞையை ஏற்படுத்திற்று. தமிழ்நாட்டின் அக்கால அரசியற் பிரக்ஞையுடன் இணைத்து நோக்கும் பொழுது இது முக்கியமான ஓர் வளர்ச்சியாகவே கொள்ளக் கிடக்கின்றது.

முதற்பட்டப் படிப்பு மட்டத்தில் இத்துறை பற்றிய ஆர்வம் வளர்ந்த காலத்திலே தான் மேனாட்டு அறிஞர்களிடையே தமிழிலக்கிய வரலாறு பற்றிய ஒரு ஆர்வச் சிரத்தை வளரத் தொடங்கிற்று. இந்த ஆர்வம் காரணமாக மேனாட்டு மொழிகளில், தமிழ்ப் பண்பாடு, வரலாறு பற்றிய முக்கியமான ஆய்வுகள் சில வெளிவந்தன.

மேனாட்டவரின் ஆர்வம், தமிழியல் ஆய்வுக்குப் புதிய புலமைப் பரிமாணங்களை ஏற்படுத்திற்று, பஷாம், ஃபிலியோசா போன்ற அறிஞர்கள் தமிழை ஒரு பரந்த பின்னணியில் வைத்து நோக்கினர். இந்தியாவின் வியத்தகு பாரம் பரியத்தில் தமிழ்ப் பண்பாடும் அதன் பங்களிப்பும் பெரும் பங்க வகிப்பதனைப் பஷாம் எடுத்துக் காட்டினர்.114 ஃபிலியோசாவோ 'தமிழை என்றும் ஒதுக்குத் தனி நிலையில் வைத்து நோக்கியவரல்லர். அவர் தமிழ்ப் பண்பாட்டை அதன் அனைத்திந்தியப் பரிமாணத்தில் மாத்திரமல்லாது, அனைத்தது ஆசியப் பரிமாணத்திற் கண்டவர்.... அவரது திருமுருகாற்றுப்படை திருப்பாவை செல்வாக்கினைக் காட்டுகின்றன எனச் சில தமிழிறிஞர்கள் கருதுவரேல் அவர்கள் இந்துப் பண்பாடு உண்மையில் ஒன்றே என்பதையும், மறுபுலத்தில், இந்தியத் தத்துவத்துக்கான தமிழ்ப் பங்களிப்புகளை மிக அண்மைக் காலம் வரைப் புறக்கணிப்பதை ஓர் இயப்பூக்கமாகக் கொண்டிருந்த வடமொழியாளரின் கண்களை இத தொடர்பாகத் திறந்து இனங் கண்டு கொள்ளக் கூடிய மிகச் சிறிய தொகையினரான அறிஞர்களுள் அவரும் ஒருவர் என்பதையும் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.115 ஜோர்ஜ்.எல்.ஹார்ற் தமிழிலக்கியத்தை, வடமொழி இலக்கிய அழகியலுடன் இணைத்துச் செய்த ஆய்வும் முக்கியமான ஒன்றாகும்.116

இக்கட்டத்தில், தமிழிலக்கிய வரலாற்று ஆய்வுக்கு காமில் ஸ்வெலபில் ஆற்றியுள்ள பங்களிப்பினைக் குறிப்பிடுதல் அவசியமாகின்றது. தமிழ் பற்றிய ஆழமானதும் அகலமானதுமான அறிவைக் கொண்டுள்ள ஸ்வெலபில், இத்துறையில்ல மூன்று முக்கிய நூல்களை எழுதியுள்ளார், முதலாவது 'தென்னிந்தியத் தமிழிலக்கியத்தின் மீது முருகனின் புன்னகை' என்ற கருத்துதுடைய நூல் (The smile of Murugan in the Tamil Literature of South India, லெய்டன், 1973) தமிழிலக்கியம் பற்றிய மேலோட்டமான அறிமுக ஆய்வாகும். இரண்டாவது (Handbuch der Orientalisk) கீழைத் தேயவியற் கைந்நூல்கள் என்ற தொடரின் Tamil Literatuure- தமிழ் இலக்கியம், (லெய்டன்,1975) தமிழிலக்கியத்தின் வளர்ச்சி பற்றியும், அது பற்றிய ஆராய்ச்சிகள் பற்றியும் மிக விரிவாக எடுத்துக் கூறுவதாகும். மூன்றாவது இந்திய இலக்கியங்களின் வரலாறு என்ற தொடரில் தமிழிலக்கியம் பற்றியது- Tamil Literature, (லீஸ்பாடன் 1974) இது தமிழிலக்கியத்தைக் கால அடிப்படையில் வகுத்து நோக்காது, இலக்கிய வடிவங்களின் அடிப்படையில் வகுத்து நோக்குவதாகும். இதில் தமிழ் இலக்கியம் முழுவதும் 'சமகாலச் சீவித அமைப்பு' உடையனவாக நோக்கப்பட்டு, வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. சித்தர்கள் பாடல் பற்றிய அவரது நூலுடன் (Poets of Power-London) சேர்ந்து, இந்நூல்கள் யாவும் தமிழிலக்கியம் பற்றிய அறிய முனையும் மேனாட்டு மாணவருக்கும் செம்மையான முற்றுமுழுதான அறிமுகத்தை வழங்குவனவாகவுள்ளன.

பிரெஞ்சு அறிஞர்களின் முயற்சிகளும், ருசிய அறிஞர்களாகிய ரூதின், அந்திரனோவ் ஆகியோரின் ஆராய்ச்சிகளும், தமிழை நன்கு விளங்க உதவியதுடன், தமிழ்மொழி, இலக்கியத்துக்கு அகண்ட ரசிகர் குழு ஒன்றினை ஏற்படுத்தியுள்ளன.

தமிழிலக்கிய வரலாற்றில், தமிழரல்லாத அறிஞர்கள் காட்டிய ஆர்வம்; தமிழர்களாகிய தமிழறிஞர்கள் ஆங்கிலத்தில் தமிழிலக்கியத்தை வரலாறு நோக்கில் விளக்கும் நூல்கள் தோன்றுவதற்குக் காரணமாயின.

1956, எஸ். வையாபுரிப்பிள்ளை, History of Tamil Language and Literature, N.C.B.H. சென்னை.

1961, சி.ஜேசுதாசன், ஹெப்சிபா ஜேசுதாசன், A History of Tamil Literature, கல்கத்தா,

1965, தெ.பொ. மீனாட்சிசுந்தரம், A History of Tamil Literature, அண்ணாமலைநகர்.

1966, என்.சுப்பிரமணியன், Sangam Policy, ஓக்ஸ் ஃபோர்ட்.

1967, ஏ.கே. ராமானுஜன், The Interior Landscape, இந்தியானா, அமெரிக்கா.

1968, க.கைலாசபதி, Tamil Heroic Poetry, ஓக்ஸ்ஃபோர்ட்.

1974, மு.அருணாசலலம், An Introduction to the Study of Tamil Literature, திருச்சிற்றம்பலம்.

1981, என். சுப்பிரமணியன், An Introduction of Tamil Literature, C.L.S. சென்னை.

1981, கா. சிவத்தம்பி, Drama in Ancient Tamil Society, N.C.B.H., சென்னை.

இவற்றுள், கைலாசபதியின் ஆய்வு சங்க இலக்கியத்தை, கிரீசின் வீரயுகப் பாடுநர் (பாணர்கள்) இலக்கியத்துடன் ஒப்பு நோக்கி ஆராய்ந்து தமிழ் இலக்கியத்தின் ஆய்வெல்லையை அகலப்படுத்திற்று. புராதன தமிழ்க் கவிதையை ஹோமருடன் ஒப்பு நோக்கியதனால் அத்தமிழ்ழக் கவிதை மரபு பற்றிய புதிய தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. தமிழ் நாடகத்தைக் கிரேக்க நாடக வரலாற்றின் பின்னணியில் ஒப்பு நோக்கிய் பொழுது, தமிழரிடையே நாடக அரங்கு ஒரு பெரும் பண்பாட்டு நிறுவனமாக ஏன் வளரவில்லை என்பதையும், எவ்வாறு வளராது கிடந்தது என்பதை 'பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்' (Drama in Ancient Tamil Society) காட்டிற்று.

இவ்வாறு முயற்சிகள் தமிழரல்லாத புலமையாளரின் கவனத்தை ஈர்த்த அதே வேளையில், தமிழிற் செய்யப்பட்ட ஆய்வு முயற்சிகளுக்குள்ளும் முக்கியமானவையாகும்.

தமிழிலே செய்யப்பட்ட ஆய்வுகளுள் மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டுவன பல்கலைக் கழகங்களிற் செய்யப்பட்ட இலக்கிய வரலாற்று ஆய்வுகளாகும்.

கால வரன் முறையிற் பார்க்கும் பொழுது, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டம் குறிப்பிடப்பட வேண்டியதாகும். தமிழிலக்கியத்தின் அகல் விரிவா‘ன ஒரு வரலாற்றி€னை எழுத வேண்டுமென, கே.வி.ரெட்டி அவர்கள் துணை வேந்தராகவிருந்த காலத்திலே தொடக்கப் பெற்ற இச்செயல் திட்டம், இயைபற்ற, முன்பின் தொடர்பற்ற, ஐந்து வெளியீடுகளுடன் முடிவுற்றது. புலமை வளமுடையோராய் விளங்கிய தி.வை.சதாசிவ பண்டாரத்தார் இரண்டு நூல்கள் எழுதினார். ஒன்று 13, 14,15 ஆம் நூற்றாண்டுகள் பற்றியது; மற்றது கி.பி. 250-க் காலப்பகுதி பற்றியது. இரு நூல்களும் 1955 இல் வெளிவந்தன. வெள்ளை வாரணணார் தொல்காப்பியம் பற்றி ஒரு நூலை எழுதினார். (1957). இ.எஸ்.வரதராண ஐயர் கி.பி.1 முதல் 1100 வரையுள்ள இலக்கிய வரலாற்றை சமண, பௌத்த, வைணவத் தமிழிலக்கியத் தொண்டுகளாக வகுத்து எழுதினார். (1957). 7-ம் நூற்றாண்டு முதல் 10 ஆம் நூற்றாண்டு வரையுள்ள சைவ இலக்கிய வரலாறு ஐந்தாவது நூலாக 1958இல் வெளி வந்தது. இதனை எழுதியவர் அவ்வை துரைசாமிப்பிள்ளை ஆவர்.

இத்தகைய வெளியீட்டுத் தொடருக்கு வேண்டிய மேலாளுமையுடன் நிலைநிறுத்தப்படவேண்டிய, சகலவற்றையும் உள்ளிட்ட, ஒரு பதிப்பாசிரியக் கொள்கையும் கண்காணிப்பும் இத்திட்டத்தில் இருக்கவில்லை என்பதை இவ்வைந்து நூல்களும் எடுத்துக் காட்டுகின்றன. ஆழமான ஆய்வுக்காக ஆய்வுக் களங்கள் பிரித்துக் கொள்ளப்பட்ட முறைமையும் பல முறைப்பாடுகளுக்கு இடம் கொடுப்பதாகவேயுள்ளது. உதாரணமாக, கி.பி.7 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரையுள்ள சைவ இலக்கியம் தனியொரு தொகுதியில் ஆராய எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள போது, தமிழ்ப்பண்பாட்டு வெளிப்பாட்டின் பூரணத்துவத்துக்கு இன்றியமையாததகவமையும் வைணவ இலக்கியத்தை, பௌத்தம், சமணத்துக்கு மாத்திரம் சமானமான ஒன்றாக ஒரு நூலின் மூன்றிலொரு பகுதியில் மாத்திரம் ஆராய்ந்துள்ளார்.

அண்ணாமலைச் செயல் திட்டத்திற் காணப்படாதிருந்த மேலாளுமையுடைய கண்காணிப்பு நெறிப்பாடு, கேரளப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் துறை, அறுபதுகளில் மேற்கண்ட, -ருந்தமிழிலக்கியங்களை அட்டவனைப்படுத்தல் முயற்சியிலேல காணப்பட்டதுது.117 இம்முயற்சி இலக்கியத்தின வரலாறோ, இலக்கிய வரலாறோ அன்று. ஆனால், வையாபுரிப்பிள்ளை அழுத்திக் கூறுவது போன்று, முழுமையான இலக்கிய வரலாறு ஒன்றினை, மொழியின் வளர்ச்சி நிலை நின்று எழுதுவதற்க இது அடித்தளமான தேவையாகும்.

கேரளப் பல்கலைக் கழகம் தனது உன்னிப்பான ஆய்வு முயற்சியைச் சற்று அகன்ற திராவிட மொழியலுக்கு மாற்றிக் கொள்ளத் தொடங்கிய கால கட்டத்தில், இலக்கிய வரலாறு பற்றிய ஆழமான ஆய்வுகள், பின்னர் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் எனப் பெயர் சூட்டப் பெற்ற, மதுரைப் பல்கலைக் கழகத்தில், நடைபெறத் தொடங்கின, பேராசிரியர் மு.சண்முகம்பிள்ளையின் தலைமையின் கீழ் மதுரைப் பல்கலைக் கழகத் தமிழியல் துறையில், நவீன, இடைக்கால, புராதன இலக்கியங்கள் பற்றிய வரலாற்றாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாட்டில் இன்று காணப்படும் 'டாக்டர்ப் பட்டப் பெருவேள்வி' பற்றிக் குறிப்பிடுவதற்கு இது பொருத்தமான ஒரு கட்டமாகும். தமிழகப் பல்கலைக் கழகங்களில், மேற்பட்டப் படிப்புக்கு வழங்கப் பெற்றுள்ள நிதி உதவியையும், அப்பட்டிப்புக்கான நிறுவன ஏற்பாடுகளையும் பார்க்கும் பொழுது, ஆராய்ச்சிக்கான துறைகள் பற்றிய முந்துரிமை பற்றிய ஒரு தெளிவான நோக்கும், ஆராய்ச்சியை வழி நடத்துவதற்கான புலமை ஆளணி பற்றிய சரியான சுற்று நோட்டமுமிருக்குமேல், மிக்க பயனுள்ள முறையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படலாம். ஆனால் இன்றுள்ள நிலையில், செய்யப்பட்டனவற்றை மீளமீளச் செய்யும் நிலைமையும், மனிதவலு வளத்தின் விரயமும் தவிர்க்கப்பட முடியாதனவாகவுள்ளன.

தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வு வளர்ச்சியில், இலங்கை, மலாயாப் பல்கலைக் கழகங்களின் பங்கு மிக முக்கியமானதாகும்.

இப்பயில்துறையை ஒரு பாடமாக உருவாக்கியதில் இவ்வகைப் பலகலைக் கழகத்துக்கம் க.கணபதிப்பிள்ளை, வி.செல்வ நாயகத்துக்குமுள்ள இடம் பற்றி ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது. கணபதிப்பிள்ளை, தமிழ்மொழியின் வரலாற்றுக்கு அத்தியாவசியமான தமிழ்க் கல்வெட்டு ஆய்விலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர், கி.பி. 7-8ஆம் நூற்றாண்டுகளின் கல்வெட்டுக்கள் பற்றி அவர் இலண்டன் பல்கலைக் கழகத்திற் செய்த ஆய்வே (1935) இத்துறையின் முன்னோடி ஆய்வாகும். செல்வநாயகம் தமிழ் உரைநடை வரலாறு ஒன்றினையும் எழுதியுள்ளார் (1957). இந்நூல், அவரது தமிழிலக்கிய வரலாற்ற நூலளவு முக்கிய முடையதாகும். வித்தியானந்தனின் தமிழர்சால்பு, சங்ககாலச் சமூகம் அதன் இலக்கியம் பற்றிய மிக முக்கியமான ஒரு பங்களிப்பு ஆகும். இஸ்லாமியத் தமிழிலக்கியம் பற்றிய உவைசின் ஆய்வு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்டதாகும்.


இலங்கைப் பல்கலைக் கழகம், ஐம்பதுகளில், பல்வேறு துறைகளிற் சிறப்பாய்வு மேற்கொண்ட புலமையாளர் குழுவொன்றினைத் தோற்றுவித்தது. வேலுப்பிள்ளை (தமிழ்க் கல்வெட்டு ஆய்வு), கைலாசபதி, தில்லை நாதன், சிவத்தம்பி (இலக்கிய விமரிசனம், இலக்கிய வரலாறு) ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர். சங்க இலக்கிய முதல், நவீன இலக்கியம் வரை வரும் தமிழிலக்கியப் பாரம்பரியத்தின் சமூக-இலக்கியப் பின்னணியைத் தெளிவுபடுத்திய ஆய்வுத்துறையில்ல, கைலாசபதியின் பணி மிகச் சிறந்ததாகம். 'பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்', 'இரு மகாகவிகள்', 'அடியும் முடியும்', 'இலக்கியமும் சமூகவியலும்' Tamil Heroic Poetry (தமிழ் வீரயுகப் பாடல்) ஆகிய அவரது நூல்கள், இலக்கிய வரலாற்றை இலக்கிய விமரிசன நிலைப்படுத்திக் கூறும் நூல்களாகும். தமிழ்ழ ஆய்வுத் துறையில், வையாபுரிப்பிள்ளையின் பின்னர், மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியவர் கைலாசபதி (1933-1982) ஆவர்.

இலங்கைப் புலமையாளர்களுட் பலர் இலங்கைத் தமிழ்ச் கல்வெட்டுக்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர். இலங்கைத் தமிழிலக்கிய வரலாற்றினை எழுதியோருள் பொ.பூலோக சிங்கம், காலஞ்சென்ற செ.தனஞ்செயராச சிங்கம் ஆகியோர் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். இலங்கைத் தமிழிலக்கியத் தனித்துவ ஊற்றுக்களைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலங்கைத் தமிழிலக்கிய வரலாற்றினைக் கண்டு கொள்ளும் முயற்சியிற் கைலாசபதி ஈடுபட்டிருந்தார். இந்நூலாசிரியர் ஈழத்தில் தமிழ் இலக்கியம் எனும் நூல் ஒன்றினை வெளியிட்டார். இவர்களை விட, ஆ.வேலுப்பிள்ளை, அ.சண்முகதாஸ், எம்.ஏ.நுஃமான், சித்ரலேகா மௌனகுரு, அ.அருணாசலம், சா.சுப்பிரமணியம், இ.பாலசுந்தரம் முக்கியமானவர்களாவர், இலங்கைத் தமிழிலக்கிய வரலாற்றினைப் பொறுத்த வரையில், பல்கலைக் கழகத்தைச் சேராத குல.சபாநாதன், வி.சி.கந்தையா, எஃப் எக்ஸ், சி.நடராஜா, மு.கணபதிப்பிள்ளை, க.சொக்கலிங்கம் ஆகியோரும், யாவருக்கும் மேலாக பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையும் முக்கியமானவர்களாவர்.118

மலாயாப் பல்கலைக் கழகம், தனிநாயக அடிகளார் காலம் முதல் தமிழிலக்கியம் பற்றிய சமூக-பண்பாடு ஆய்வுப் பாரம்பரியமொன்றினை வளர்ந்து வந்துள்ளது. தனிநாயக அடிகளின் நூல்கள் (Landscape and Poetry, Humanism of Tamil Literature), சிங்கார வேலுவின் சங்க இலக்கியம் பற்றிய ஆய்வு, தேவபூபதி நடராஜா, லோகநாயகி நன்னித்தம்பி ஆகியோரின் ஆய்வுகள் இலக்கிய வரலாறு சம்பந்தப்பட்டவையாகும். மலாயாப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுகள் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய முதலாவது நூலை மலாயாப் பல்கலைக் கழகதைச் சாராதவர் ஒருவரே எழுதியுள்ளாரெனினும் (எம்.இராமையா), மலாயாப் பல்கலைக் கழகத்தை சார்ந்த சிலர், குறிப்பாக இரா.தண்டாயுதம், மலேசிய இலக்கிய வரலாறு பற்றிய கட்டுரைகள் பலவற்றினை எழுதினார்.

ஐம்பதுகளுக்குப் பின்வந்தத காலப்பகுதியில் இலக்கிய வரலாற்று ஆய்வில் முக்கியமான வளர்நெறிகள் எனக் குறிப்பிடத் தக்கனவற்றுள் மூன்று முக்கியமானவை.

அ. பிரதேச இலக்கிய வரலாறுகளின் வளர்ச்சி, செட்டிநாடு, கெடிலக்கரை, கொங்கு நாடு முதலியவற்றின் இலக்கிய வரலாறு பற்றிய நூல்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

ஆ. பல்வேறு இலக்கிய வடிவங்களின் வரலாறு, நாவல், சிறுகதை, புதுக்கவிதை, நாடகம், ஸ்தல புராணம், பள்ளு, குறவஞ்சி, காவியம் ஆகியனவற்றின் தோற்றம், வளர்ச்சி பற்றிய நூல்கள்.

இ. நூற்றாண்டுக் கணக்கில் இலக்கிய வரலாறு, இத்துறையில் மு.அருணாசலம் ஒருவரே தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளா‘ர். மயிலை சீனி. வேங்கடசாமியின் ஒரு ஆய்வு நூலே நூற்றாண்டுக் கணக்கில் இலக்கிய வரலாற்றை எடுத்துக் கூறிற்று.

குறிப்பாக, இரண்டாவது செல்நெறியின் பெருக்கம் காரணமாக, தற்கால இலக்கியத்தின் வளர்ச்சிப் பண்புகள் தெளிவாக்கப்பட்டுள்ளன. தற்கால இலக்கியத்தைப் பொறுத்தவரையில், விமரிசனம் உடனடியானதாகவும், காரசாரமாகவும் அமைந்துள்ளது. படைப்பிலக்கிய கர்த்தாக்களே விமரிசனத்திலும் ஈடுபடுவதால் இப்பண்பு காணப்படுகின்றனதெனலாம்.

இலக்கிய வரலாற்றாய்வு வளர்ச்சியின் இன்னொருரு முக்கிய அமிசம் நாட்டார் வழக்கியல் ஆய்வுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமாகும், சனநாயகப்பாடு, மதநெறிச் சார்பின்மை ஆகிய இரு நடை முறைகளினதும் வளர்ச்சி காரணமாக, நாட்டார் வழக்கியலைச் செந்நெறி இலக்கியத்தின் ஊற்றுக்கண்களில் ஒன்றாகக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. இத்துறையிற் பல்கலைக் கழகங்களின் பணி கணிசமானதாகும்.119

ஐம்பதுகளிலும், அதற்குப் பின்னரும், வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையிற் செய்யப்படும் இலக்கிய ஆய்வுகள் வளரத் தொடங்கின. இலக்கியத்தைச் சமூக அபிவிருத்திகளுடன் இணைத்து நோக்கும் இவ்வாய்வு முறை, சங்கம் முதல் தற்காலம் வரையுள்ள காலப்பகுதிகளை விளக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. காலஞ்சென்ற க.கைலாசபதியும், நா.வானமாமலையும் இவ்வணுகுமுறையின் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாகினர். தமிழில் மார்க்ஸ“ய இலக்கி ஆய்வு செய்வோர் என தொ.மு.சி.ரகுநாதன், கோ.கேசவன், அ.மார்ச்சு எஸ்.தோதாத்திரி, கா.சிவத்தம்பி ஆகியோர் குறிப்பிடப்படுவர்.

ஐம்பதுகளின் முக்கிய பண்புகளின் மற்றொன்று, இலங்கை. மலேசியாவின் தமிழிலக்கிய வரலாறு எழுதப்பட்டு அவை தமிழின் முழுமையான வளர்ச்சியுடன் இணைத்து நோக்கப்பட்டமையாகும்.


குறிப்புகளும் சான்றுகளும்

1. Kamil Zvelabil, Tamil Literature (in the series-A history of Indian Interature, Vol X) Wiesbaden, 1974, p.2.

2. Rene Wellek, The Rise of English Literary History, University of North Carolina Press, U.S.A. 1941, p.1

அழுத்தம் இந்நூலாசிரியராற் சேர்க்கப்பட்டது.

3. Plutarch's Lives and Aristotle's Poetics.

4. தமிழ் நாட்டில் நடந்தேறியுள்ள இந்து-இஸ்லாமியப் பண்பாட்டிணைவு பற்றிய அறிமுக ஆய்வு தானும் செய்யப்படாதுள்ளமை வருத்தத்துக்குரியதாகும். மதுரை போன்ற இடங்களிற் காணப்படும் துலுக்க நாய்ச்சியார் வணக்க முறைமை உன்னிப்புடன் ஆராயப்படல் வேண்டும். இது தொடர்பாக, மதுரையில் நடைபெறும் விழாவொன்றினைக் குறிப்பிடல் வேண்டும். இவ்விழாவின் பொழுது, கூடலழகர், துலுக்க நாய்ச்சியார் என்ற 'வைப்பாடிச்சி' வீட்டுக்குச் சென்று திரும்பியதால் பிராய்ச்சித்தத் தண்டனையாக வழக்கமாக வைத்திருக்கப்படுமிடத்தில் வைத்து வணங்கப்படாது, சில காலத்துக்கப் பிறிதோரிடத்தில் வைத்து வழிபடும் வழக்கு உண்டு என்று கூறப்படுகின்றது.

5. R.Wellek, op.cit., p.2.

6. தமிழிலக்கியப் பாரம்பரியத்திற் கிறிஸ்துவத்தின் தனியிடம் பற்றி அறிவதற்கு D. Rajarigam, The History of Tamil Christian Literature, Madras, 1958 கா.சிவத்தம்பி, 'தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்' (1983) என்ற நூலில் கிறித்துவத் தமிழ் இலக்கியப் பாரம்பரியம் என்னும் கட்டுரைப் பார்க்க.

7. மயிலை, சீனி, வேங்கடசாமி, 'பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்', சென்னை-1962, பக்.91-92.

8. John Murdoch A classified Catalogue of Tamil Printed Books, with introductory notes, 1865 (Reprinted 1969).

9. Perceival Spear. A History of India, vol. II, Penguin.

10. சங்க நூல்களின் தொகை முழுமை பற்றிய ஒரு விரிவான ஆய்வுக்கு, பார்க்க J.R.Marr. The Eight Anthologies with special reference of Purananuru and Patirrruppattu, Madras, 1985.

11. K.Zvelabil, Tamil Literature, Leiden, 1975 Chapter VI.

S. Vaiyapuripillai, History of Tamil Language and Literature, N.C.B.H., Chennai, 1956.

Jesudasan C & H, A History of Tamil Literature YMCA, Calcutta, 1961, Chapter I.

Sivathamby, K. Drama in Ancient Tamil Society, N C B H, Chennai, 1981, Chapter III.

12. K.Zvelabil, Tamil Literature, p.83.

13. சங்க இலக்கியம், - சைவ சித்தாந்த மகாசமாஜம், சென்னை; 1940-வையாபுரிப்பிள்ளை பதிப்பு, பக்க, 1370-1373.

14. அகநாநூற்றுக்கு, அதன் கட்டமைவு, தொனிப் பொருள் அடிப்படையிற் செய்ததாகக் கூறப்படும் 'களிற்று யானை நிரை, மணிமிடைபவளம், நித்திலக் கோவை' என்ற ஒருரு வகைபாடு உண்டு.

15. 'இத்தொகை முடித்தான் பூர்க்கோ' என்பதே பாரம்பரியக் குறிப்பாகும். பாடியவருள் ஒருவராகவோ, பாடப்பட்டவருள் ஒருவராகவோ பூர்க்கோ பெயர் வரவில்லை.

16. Kamil Zvelabil, Tamil Literature.

17. Jan Vansina, The Oral Poetry, London, 1966.

18. K.A. Nilakanta Sastri, History of South India, Oxford, 1966, p.117.

19. K. Sivathamby, Drama in Ancient Tamil Society, p.175.

20. K.Kailasapathy, Tamil Heroic Poetry, Oxford, 1968.

21. இராம.சுந்தரம், 'சொல் புதிது சுவை புதிது', சென்னை, 1978, பக்.93-128.

அத்துடன் Kamil Zvelabil, The Smile of Murugan, Leiden, 1973. pp.46-77 பார்க்க.

22. 'இறையனார் அகப்பொருள்', கழகம், 1964.

23. முதலில் மதுரையும் அதன் சுற்றுப்புறங்களுமே சமண நடவடிக்கைகளின் களமாக விளங்கின. இவ்வாய்வு பற்றிய உரையாடலின் பொழுது, பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம் அவர்கள், சங்கம் பற்றிய மரபு வழிப்பட்ட கதையில் மதுரை இடம் பெறுவது, அதன் சமணத் தொடர்பு காரணமாகத் தவிர்க்க முடியாதவொன்றாகவே அமைந்தது எனக் கூறினார். பிற்காலத்தில் மதுரையை இந்துக்களின் புனிதத் தலங்களுள் ஒன்றாக ஆக்குவதற்குத் திட்டபூர்வமான முயற்சிகள் எடுக்கப் படுகின்றமையையும் நோக்குதல் வேண்டும். சைவர்கள் சமண நிலையங்களைத் தமதாக்கி அவ்விடங்களிற் கோயில்கள் நிறுவுவதை நோக்கும் வேண்டும். அத்தகைய ஒரு முயற்சியினை, முன்னர் இராப்பள்ளி என அழைக்கப்பட்டுச் சமணக் குகைகளைக் கொண்டிருந்த திருச்சிராப்பள்ளியில் இன்றும் காணலாம். திருச்சி மலைக்கோயில்ல ஒரு சமணக் குகையாகவே இருந்தது என்பர். அச்சமண நினைவுகள் இன்றும் தொடர்வதை, தெப்பக் குளத்துக்கு மேற்கேயுள்ள நந்தி கோயில் தெரு எனும் தெருப் பெயரிற் காணலாம். நந்தி எனும் பெயரே பின்னர் சைவத்தினுள் இணைக்கப்பட்டு விட்டது.

24. See A. Chakravarti, Jaina Literature in Tamil, Arrah (Bihar), 1941.

தெ.பொ. மீனாட்சி சுந்தரன்-சமணத் தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை, K.Zvelabil, Tamil in 550 AD. Dissertationes Orientales, Vol.3, Prague, 1964.

25. இதனை முதன் முதலில் எடுத்துக் கூறியவர். எம்.சேஷகிரி சாஸ்திரியார் ஆவர். அவரது Essay in Tamil Literature, சென்னை, 1984, பக்.93 பார்க்க, சிலப்பதிகாரம் கி.பி. 2-ம் நூற்றாண்டுக்குரியதென்பதற்கு எடுத்துக் கூறப்படும் கஜபாகு மன்னன் கால ஒருமைப்பாடு பற்றியும் மதன் முதலில் எடுத்துக் கூறியவர் சேஷகிரி சாஸ்திரியாரே, மேற்படி, பக்.30-33.

26. மா.இராசமாணிக்கனார், 'சைவ சமய வளர்ச்சி', சென்னை-1958.

28. See K.A.N. Sastri, Culture History of the Tamils, Calcutta, 1963.

29. C.Minakshi, Administration and Social life under the Pallavas, Madras 1977.

30. கோயில்லகளின் பெருகும், சமூக-பொருளாதார முக்கியத்துவத்தினை அறிவதற்கு, Minakshi, Administration and social life under the Pallavas, Nilaknta Sastri, Colas,

Burton Stein, Peasant State and Society in Medieval South India, Oxford (1981) பார்க்க.

31. 'திருக்கோவையார்', நாவலர் பதிப்பு, மீளச்சு, 1932, பக். 96.

32. க.வெள்ளைவாரணனார், பன்னிருரு திருமுறை வரலாறு, முதலாம் பாகம், அண்ணாமலை நகர், 1962, பக்.3.

34. N.Jegadeesan, History of Sri Vaishnavaism in the Tamil Country (Post-Ramanuja), Madurai, 1977, p.10.

35. M. Srinivasa Aiyangar, Tamil Studies, Madras, 1914, p.332

36. Ibid. p.336.

37. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு, மாயூரம், 1972, பக். 470-72.

38. Nilakanta Sastri, Colas, p.638

39. ஏ.வி.சுப்பிரமணிய ஐயர் நாதமுனியை, முதலாம் இராசேந்திரனின் (1014-1044) சமகாலத்தவராகக் கொள்வர். தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி, சென்னை-1971.

40. வெள்ளைவாரணர், முற்குறிப்பிட்ட நூல், பக்.12.3

அவ்வம்மையார் திருஎருக்கத்தம் புலியூர்க் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டுக் கோயில் வாசலடியிலேயே நிறுத்தி வைக்கப் பட்டிருந்தாரென்பது கவனிக்கத்தக்கது. பாணர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படாமை இதற்குக் காரணமாகலாம். அசரீரியின் ஆணையின் பேரிலேயே அவ்வம்மையார் சிதம்பரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

41. ஜகதீசன், முன் குறிப்பிட்ட நூல், பக்.398.

42. மேற்படி.

43. இவை பற்றிய விரிவான விளக்கத்துக்கு, மா.இராசமாணிக்கனார், 'சைவ சமய வளர்ச்சி' V. Paranjothi, Saiva Siddhanta, Luzac, 1954. K.M. Balasubramaniam, Lectures on Saiva Siddanta. Annamalai Nagar, 1959.

Collected Lecturers on Saiva Siddhanta, 1963?1973, Annamalai Nagar, 1978.

44. கைலாசபதி இது பற்றிய ஒரு தொடக்க ஆய்வினைத் தமது 'பேரரசும் பெருந் தத்துவமும்' என்ற கட்டுரையிற் செய்துள்ளார். பார்க்க, அவர் 'பழந்தமிழர் வாழ்வும் வழிபா‘டும்.'

45. இவ்விடயம் பற்றித் திருவாளர்கள் அ.மார்க்சுடனும், பொ.வேலுசாமியுடனும் மிகவும் பயனுள்ள உரையாடல்கள் நடத்தியுள்ளேன். அவர்கள் இருவருக்கும் எனது நன்றிகள், இப்பிரச்சினைகளை உள்வாங்கி மதுரைப் பழநியப்ப பிள்ளையின் பவள விழா மலருக்கு 'சைவ சித்தாந்தம் ஒரு சமூக வரலாற்று நோக்கு' என்ற தலைப்பின் கீழ் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். 'தமிழிலக்கியத்தில் மதமும் மானிடமும், என்ற நூலில் அது வெளியாகியுள்ளது.

46. ஜகதீசனின் ஆய்வு இத்துறைக்குத் தனிச்சிறப்புடைய அறிமுகமாக அமைந்துள்ளது.

47. இந்நூலின் பிரதியைப் பெற முடியாத நிலையில், இந்நூல் பற்றி, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முன்னர் கையெழுத்தேட்டாய்வுப் பேராசிரியராகவிருந்த, காலஞ்சென்ற பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் உதவியாளராகவிருந்த, வித்துவான் மு.சண்முகம்பிள்ளையுடன் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. அவருக்கு என் நன்றி.

48. உரையாசிரியர்கள் பற்றிய விரிவான அறிமுகத்துக்கு மு.வை.அரவிந்தன், உரையாசிரியர்கள், சிதம்பரம், 1977, பார்க்க.

49. 'தமிழ் நாவலர் சரிதை', தி.த. கனக சுந்தரம் பிள்ளை பதிப்பு, சென்னை-1921.

50. Rajarigam, The History of Tamil Christian Literature, C.L.S., Madras, 1958.

51. Ibid, footnote 26, p.64, see also K. Meenakshi Sundaram, The Contribution of European Scholars of Tamil, Madras, 1974, p.23

When, he quotes Sathianantha Iyer "in the 18th century the attitude of the English men towards the Indians changed from indiifference in the beginning to close contact."

52. Kamil Zvelabil, Tamil Literature, p.2

53. Rajarigam, மேற் குறிப்பிட்ட நூல், ,22.

54. See F.B.J. Kupier, Dutch Studies in Tamil in Thoninayagam (ed), Tamil Studies Abroad, Kala Lampure, 1966, also, Zvelabil, Tamil Literature, 1975, p.4.

55. K. Nambiarooran, "Kural and Kindersely, A New Light - in Professor, T.K. Venkataraman's 81st birthday commemoration Volume, Madurai, 1981.

56. K. Meenakshisundaram, The Contribution of European Scholars to Tamil, Madras, 1974, p.40.

57. மேலதிக தகவல்களுக்கு மேலே குறிப்பிட்ட நூலைப் பார்க்கவும். அத்துடன், மயிலை, சீனி வேங்கடசாமியின் 'கிறித்தவமும் தமிழும்' பார்க்க.

58. ஒளவை துரைசாமிப் பிள்ளை (பதிப்பு), தமிழ் நாவலர் சரிதை, கழகம், 1949.

59. Eugene F.Irshick, Politics and Social conflict in South India, University of California Press, 1969, p.11.

60. T.R. Venkatarama Sastri, Historic Roots of Some Modern Conflicts, Madras, 1949.

61. கா.சிவத்தம்பி, தனித்தமிழிலக்கியத்தின் அரசியற் பின்னணி.

62. K.Sivathamby, Hinduu Tamil Response to Christian Proselytization and Westernization in late 19th Century, a study of the socio educational activities of Arumuka navalar (1822?1879) Social Sciences Review, Vol I, Colombo, 1980.

63. ஆறுமுக நாவலர் கூட 'பிராமண எதிர்ப்பாளர்' என்று கருதப்படத்தக்கவர் என்பது ஒரு சுவாரசியமான ஓர் உண்மையாகும். அவர் கருத்துப்படி, எந்த ஒருரு பிராமணரும், போதிய கல்விப்பயிற்சித் தகைமை இல்லாது, பிறப்புத் தகைமை ஒன்று காரணமாகவே பூசகராகி விடக் கூடாது. சைவக் கருக்கள்மார்பால் நாவலருக்கு ஒரு விருப்பு இருந்தது.

பார்க்க, கா.சிவத்தம்பி, சமூக இயல் நோக்கில் நாவலர், நாவலர் நூற்றாண்டு நினைவு மலர், (பதிப்பு) க.கைலாசபதி, யாழ்ப்பாணம், 1979.

64. T.R. Sesha Iyengar, The Ancient Dravidian, Madras, 1975.

65. சேஷ ஐயங்கார் வைணவப் பிராமணர். வைணவப் பிராமணர்கள் சைவப் பிராமணர்களைப போல வல்லாது, தமிழ் பற்றிய கோரிக்கைகளைத் தாராண்மையுடனும் அநுதாபத்துடனும் நோக்குவது அவதானிக்கத் தக்கதாகவுள்ளது. மு.இராகவையங்கார், ரா.ராகவ ஐயங்கார், பி.ரி.ஸ்ரீநிவாஸ் ஐயங்கா‘ர், ரி.ஆர்.சேஷ ஐயங்கார் போன்றவர்களின் எழுத்துக்களின் இப்பண்பைக் காணலாம். மேற்குறிப்பிட்ட அறிஞர்கள் தென்கலை வைணவர்களா என்பதை அறிதல் வேண்டும். தென்கலை வைணவர்களா என்பதை அறிதல் வேண்டும். தென்கலை வைணவர்கள் ஆழ்வார்களின் அருளிச்செயல்களைத் தமது மத ந€முறையின் பிரதானமான மூலமாகக் கொள்வர்.

66. T.R. Sesha Iyengar, op.cit.p.30-1.

67. மேலுள்ள நூல், P.45-6.

68. ஆணல்ட் சதாசிவம் பிள்ளை, 'பாவலர் சரித்திர தீபகம்,' மானிப்பாய், 1886.

69. P.Sundaram Pillai, Some Milestones.... Second Edition, 1895, Preface written on 24.3.1893.

70. தி. செல்வகேசவராய முதலியார் (தமிழ்), சென்னை, 1904, முகவுரை.

71. மேற்படி, பக்.46.

72. M.S.Purnalingam, A Primerr of Tamil Literatture Madras, 1904, p.29.

73. ஜி.எஸ்.துரைசாமிப் பிள்ளை, 'தமிழ் இலக்கியம்,' YMCA அச்சகம், கல்கத்தா, 1923.

74. P. Sundaram Pillai, The Age of Tirugnanasambandha, The Indian Antiquary, May, 1896.

75. V. Kangasabai Pillai, The Tamils, Eighteen Hundred Years Ago, Madras, 1904, pp.2-3.

76. K.G. Sesha Aiyar, Cera Kings of the Sangam Period Luzac, London, 1937.

77. See K.A. Sastri, Studies in Cola History and Administration, Madras, 1932.

78. Ibid., p.18.

79. Max Muller, The Six Systems of Indian Philosophy, Longman Green & Co., Madras, 1919, நூலின் முகவுரை 1899இல் எழுதப்பட்டுள்ளது. அழுத்தம் இந்நூலாசிரியராற் சேர்க்கப்பட்டது.

80. சைமன் காசிச் செட்டி பற்றி அறிவதற்குப் பார்க்க, பொ.பூலோக சிங்கம், தமிழிலக்கியத்தில் ஈழத்தறிஞர்களின் முயற்சிகள், கொழும்பு, 1970. அத்துடன் F.X.C. Nadarajah, "The Scholarship of Simon Casie Chetty" Tamil Culture, September, 1952.

81. இப்பொழுது கிடைக்கும் பதிப்பு, சைமன் காசிச்செட்டி எழுதிய மூலபாடத்துக்கு தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் எழுதிய குறிப்புக்களைக் கொண்டதாகும். இப்பதிப்புக்கச் சுவாமி விபுலாநந்தரின் முன்னரையொன்றுண்டு. The Tamil Plutarch, Colombo, 1946.

82. இந்நூல் பூலோக சிங்கத்தினால் இருபாகங்களாக மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது. (1977, 1980) பொ.பூலோக சிங்கம் மிக விரிவான குறிப்புக்களை வழங்கியுள்ளார்.

83. அடிக்குறிப்பு 773 பார்க்க.

84. குமாரசுவாமிப் புலவர், பற்றிய வரலாற்றுக்கு அம்பலவாணர் எழுதிய 'குமாரசுவாமிப் புலவர்' எனும் வாழ்க்கை வரலாற்றினைப் பார்க்க. 'கமாரசுவாமிப் புலவர்', தமிழ்ப் புலவர் சரித்திரம். கொக்குவில் யாழ்ப்பாணம், 1912.

85. இப்புத்தகத்தின் மறுபதிப்பு ஒன்று தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சிக் கழகத்தினால் (Tamil Development and Research Council) வெளியிடப்பட்டுள்ளது, பதிப்பு, எம்.சண்முகம், 1968.

86. M. Srinivasa Iyengar, Tamil Studies, pp.193, 24.

87. Nilakanta Sastri, Studies in Cola History and Administration, Madras, 1932, p.4.

88. R.Caldwell, A comparative Grammar of Dravidian Languages, Reprint, 1982.

89. இதனை அவர் நூலின் முதலாவது பதிப்பில் கூறியுள்ளார். இதற்குச் சில எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்படவே, அவர் அக்கருத்தினை இரண்டாம் பதிப்பில் (1875) மீள வலியுறுத்தினா‘ர், பக்.143.

90. Sundarampillai, The Age of Thirugnana Sambandha, The Indian Antiquary, May 1896. அக் கட்டுரையின் 28-வது அடிக் குறிப்பில்இ கால்டுவெல்லின் மறைவுபற்றிக் குறிப்பிடும் சுந்தரம்பிள்ளை பின்வருமாறு கூறுகின்றார். "The loss to this Tamil Language and literature by the death of this Tamil Scholar is really great and it may be long before that the language finds so devoted a student and patient inquired as the Right Rev. Bishop Caldwell.'

91. Pope (Tr) Tiruvacakam, P.XXII.

92. 1924 இல், 'செந்தமிழ்ப் பிரசுரமாக வெளி வந்த 'கடை வள்ளலார் காலம்' என்பது அவர் இன்னிக்கு எழுதிய பதிலின் விரிந்தத வடிவமேயாகும்.

93. K.G. Sesha Aiyar, Manickavasaggar and His Date Tamilian Antiquary, Vol.I, No.4

94. M.Swaminatha Aiyar, Dravidan Theories, Madras, 1974.

96. இந்நூல் இக்கால கட்டத்தில் எழுதப்பட்டதெனினும் 1974இலேயே வெளியிடப் பெற்றது. ஆயினும் இந்நூலாசிரியர், தான் வாழ்ந்த காலத்தில், கால்டுவெல்லின் கொள்கைகளை மறுதலிக்கம் கட்டுரைகள் பலவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். டி.ஆர்.சேஷ ஐயங்காரின் Dravidian India (பக்.65...) இரண்டாம் பதிப்பினைப் பார்க்க. இப்பதிப்பே 1982இல் மீளச்சக் செய்யப்பட்டுள்ளது. Asian Educational Service, New Delhi, 1982.

97. M.Seshagari Sastri, Essay on Tamil Literature, 1894. p.39.

98. இது 1953இல் வெளியா‘ன பதிப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள முகவுரைக்கு 6.6.1930 எனத் திகதி இடப் பெற்றுள்ளது.

99. ஆத்திகவாதிகளான தனித்தமிழ்வாதிகளுக்கும், நாத்திகவாதிகளான பகுத்தறிவு வாதிகளுக்குமிடையே முரண்பாடு தோன்றிய விதத்தினை அறிவதற்கு - பார்க்க, கா.சிவத்தம்பி, தனித் தமிழியக்கத்தின் அரசியற் பின்னணி, சென்னை, 1978.

தமிழினவாதிகள் பலராற் புகழ்ந்து மேன்மைப்படுத்தப்பட்டுள்ள தொல் காப்பியம், திருக்குறள் பற்றிப் பெரியாரின் பாரம்பரியம் எவ்வாறு நோக்குகின்றனது என்பதனை அறிய, பார்க்க.

வி.ஆனைமுத்து, தமிழர் பண்பாட்டில் புரட்சி, திருச்சி, 1980. இந்நூலினைத் தந்துதவிய டாக்டர் து.மூர்த்திக்க நன்றி.

100. Romila Thapar, Interpretations of Ancient Indian History - History ard Theory, Vol. VII, No.2, 1968 (USA).

101. தமிழிலக்கிய வரலாறெழுதத் தக்கார் யார் என்பது பற்றி எழுதும் பொழுது, ஞா.தேவநேயப் பாவாணர் பின்வருமாறு கூறுவர்.

'.......தமிழ் வேர்ச் சொல்லாராய்ச்சியும் பிராம­யத்தையும் இந்திக் திணிப்பையும் எதிர்க்கும் தமிழைக் காட்டிக் கொடுக்கும் வையாபுரிகள், எத்துணை இலக்கியங் கற்றும், பண்டாரகர்ப் பட்டம் பெற்றும் பல்கலைக் கழகத் துணைவேந்தராகியும் தமிழ் வரலாறும், தமிழிலக்கிய வரலாறும் எழுத எட்டுணையும் தகுதியுள்ளவராகார் என்பது திண்ணம்.'

தமிழ் இலக்கிய வரலாறு, காட்டுப்பாடி, 1979, இப்பகுதி 'முன்னுரை' எனும் முதல் அத்தியாயத்துக்கு முன்னர் வருகிறது. அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.

102. எஸ்.வையாபுரிப்பிள்ளை, 'திராவிட மொழிகளில் ஆராய்ச்சி,' சென்னை, 1946, பக். 11.

103. அண்ணாமலைப் பல்கலைக் கழக ஏட்டில் வெளியான அவரது கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பு ஒன்று நூல் வடிவில் வெளிவந்துள்ளது.

The papers of Dr.Navalar Somasundara Bharathiyar, Selected by S.Sambasivam, Madurai, 1967.

104. பாரதிக்குப் பின்வரும் கால கட்டம் பற்றிய எமது பல்வேறு உரையாடல்களின் பொழுது, திரு.அ.மார்க்ஸ் அவர்கள் இப்பிரச்சினையைக் குறிப்பிட்டார். அவருக்கு என் நன்றி.

105. 'தமிழ்ச் சுடர்மணிகள்' பார்க்க.

106. அவரது 'கந்தளூர்ச் சாலை' என்னும் சிறு நூலைப் பார்க்க.

107. 1929-39க் கட்டத்தில் வையாபுரிப்பிள்ளை 21 நூல்களை பதிப்பித்தார். அவற்றுட் குறைந்தது ஒன்பது நூல்கள் முதன் முதலில் வெளியிடப் பெற்றவையாகும். வி.சரோஜினி, 'வையாபுரிப் பிள்ளை வாழ்க்கைக் குறிப்புகள், 'சென்னை, 1957, பக்.41.

108. இவ்வெளியீட்டு விவரங்களைத் தந்த மறைமலை அடிகள் நூல் நிலைய முதல்வர், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பொது முகாமையர் திரு.இரா.முத்துக் குமாரசுவாமிக்கு என் நன்றியுரித்து.

109. S.Vaiyapurai pillai, "Recent Progress in Research Studies" in Tamil Culture, Vol.I, No.1, 1952, இது அவர், 1951இல் லக்னௌவில் நடைபெற்ற அனைத்திந்திய கீழைத்தேயவியல் மாநாட்டின் திராவிட மொழி, பண்பாட்டுப் பிரிவுக்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரையின் சீர்ப்படுத்திய வடிவமாகும்.

110. வி.சரோஜினி, முற்குறிப்பிட்ட நூல், பக். 123

111. V.I.Subramaniam, Landmarks in the History of Tamil Literature IATR, 1968.

112. K. Sivathamby (a) Drama in ancient Tamil Society, p.74. (b) "Vaiyapuripillai's dating of Cilappatikaram' in Vidyodays Journal of arts, Letters and Science, Vol.3,1977.

113. V.I. Subramaniam, முன் குறிப்பிட்ட இடம்.

114. A.L. Basham,

(a) The History and Doctrine of the Ajivikas, London, 1951.

(b) The Wonder that was India, London, 1954.

(c) Aspects of Indian Culture, Bombay, 1964.

115. F.Gros, A French Approach to Tamil Studies, Pondicherry, 1981.

116. George, L.Hart III

(a) The Poems of Ancient Tamil, California, 1975.

(b) The Poets of the Tamil Anthologies, Princeton, 1979.

117. V.I. Subramanian, முன் குறிப்பிட்ட கட்டுரை,

118. நா. சுப்பிரமணிய ஐயர், 'ஈழத்தில் தமிழ் நாவல்' (1977), க.சொக்கலிங்கம், 'ஈழத்தில் நாடக இலக்கியம்' (1978) கா.சிவத்தம்பி, 'ஈழத்தில் தமிழ் இலக்கியம்' (1987).

119. இத்துரையில், மதுரைப் பல்கலைக் கழகம், அனைத்துதுலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் சேவை கணிசமானதாகும்.

++++++++++++++++++++++++++

தமிழிலக்கிய வரலாற்றின் பிரச்சினை மையங்கள்

1

தொடக்கத்திலேயே 'பிரச்சினைகளுக்கும்' 'பிரச்சினை மையங்களுக்கும்' உள்ள பொருள் வேறுபாட்டினைத் தெளிவுபடுத்திக் கொள்ளல் அவசியமாகும். ஒரு விடயம் பற்றிய பிரச்சினைகள் எனும்பொழுது, அவ்விடயம் பற்றிய தீர்த்துக் கொள்ள வேண்டிய சிக்கல்கள் ஒவ்வொன்றையும் கருதுகின்றோம் (அவை தம்முள் தாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாகவிருக்கலாம்). தனித்தனிப் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளும் அதே வேளையில், அவ்விடயத்தின் பிரச்சினைகள், எவ்வெவ்வமிசங்கள் காரணமாக, அன்றேல் எவ்வெவ்வமிசங்களிலிருந்து வருகின்றன என்பதை அறிந்து கொள்வதும் மிக முக்கியமாகும். அவ்விடயத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான மையங்காகவுள்ளவற்றை அறிந்து கொண்டால், பிரச்சினைகளின் தன்மையையே நன்கு விளங்கிக் கொள்வது சுலபமாகி விடுகின்றது. எனவேதான், இவ்வாய்வில் தமிழிலக்கிய வரலாறு எழுதப்பட்டுள்ள முறைமையியிலே காணப்படும் பிரச்சினைகள் ஒவ்வொன்றையும் எடுத்து ஆராயாமல், அப்பிரச்சினைகள் யாவற்றையும் ஒருங்கு சேர எடுத்துக் கொண்டு அவற்றின் 'பிரச்சினை மையங்களை' (Problematics) இனங்கண்டு, அப்பிரச்சினை மையங்களையே, குறிப்புரைக்காக எடுத்துக்கொண்டுள்ளோம். 'பிரச்சினை'களுக்கும் 'பிரச்சினை மையங்களுக்குமுள்ள பொருள் வேறுபாட்டினை, கருத்து வேறுபாட்டினை, நன்கு உள்வாங்கிக் கொண்ட பின்னரே இவ்வாய்வினை மேற்கொள்ளல் வேண்டும்.

இலக்கிய வரலாறு பற்றிய, அத்தகைய வரலாற்றுக்கு அடித்தளமாக அமையும் இலக்கியத்தின் வரலாறு பற்றிய, எழுத்துக்கள் வளர்ந்துள்ள முறைமை பற்றி எடுத்துக் கூற முயலும் மேற்சென்ற ஆய்வின் மூலம், இலக்கிய வரலாறு பற்றியும், இலக்கியம் பற்றியும், இலக்கிய விமரிசனம் பற்றியும் மாறி வந்துள்ள எண்ணக் கருக்கள் பற்றி அறிந்து கொண்டோம். இது மாத்திரமல்லாது, முன்னர் 'தமிழ் லெக்சிக்கன்' எழுதப்பட்ட காலத்திற் செய்யப்பட்டது போன்றோ, அன்றேல், 'கலைக் களஞ்சியம்' தயாரிக்கப்பட்ட காலத்திற் செய்யப்பட்டது போன்றோ, அன்றேல், 'கலைக் களஞ்சியம்' தயாரிக்கப்பட்ட காலத்திற் செய்யப்பட்டது போன்றோ, தமிழுக்கு ஒரு முற்றுமுழுதான இலக்கிய வரலாறு எழுதப்படுவதற்கு வேண்டிய ஆட்களையும் பொருட்களையும் ஒரு மையமான இடத்திற்கு கொண்டு வந்து, அதற்கெனத் தொழிற்படுவதான ஒரு பெரு முயற்சி மேற்கொள்ளப்படவில்லையென்பதும் தெரிய வருகின்றது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி நன்கு திட்டமிடப்படாது. குறைபாடுகளுடன் நடைமுறைப்படுத்தப் பட்டால், அதன் வழியாக வந்த படைப்புகள், பத்தொடு பதினொன்றாக,இருப்பவற்றுடன் மேலதிகமானவையாக அமைந்து விட்டனவேயன்றி, இருப்பவற்றிலும் பார்க்கச் சிறந்தனவாக, அச்சிறப்புக் காரணமாக இருப்பனவற்றின் பயன்பாட்டைக் குறைப்பனவாக அயைவில்லை.1 இத்தவறு ஏற்பட்டமைக்கான பிரதான காரணம், இது சம்பந்தமான சகலவற்றையும் உள்ளிட்ட ஒரு பதிப்பாசிரியக் கொள்கையும் கண்காணிப்பும் இல்லாதிருந்தமையேயாகும்.

அத்தகைய அளவும் பரிமாணமும் கொண்ட ஒரு முயற்சி தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் செயல்நோக்குக்குள் வரக்கூடியதேயாகும். எந்த ஒரு வரலாறும், பிறிதொன்று வேண்டா, முழுமையுள்ள, தனி வரலாறாக அமைந்துவிடாது என்பது உண்மையே, ஆனால் எடுக்கப்படும் முயற்சி 'மேலுமொன்று' என்ற முறையிலும் தன்மையிலும் அமைந்துவிடக் கூடாது. அத்தகைய நோக்குடன் செய்யப்படவும் கூடாது.

இலக்கிய வரலாற்று ஆய்வு பற்றித் தமிழில் இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகள் பெரும்பாலும் தனியாள் முயற்சிகளாகவும் சிறுபான்மை கூட்டு முயற்சிகளாகவும் மேற்கொள்ளப்பட்டன. அப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இலக்கியத்தின் வரலாறு எழுதப்படும் பொழுதுதான் இலக்கியத்தின் வரலாற்றினை எழுதுவதிலுள்ள பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.2 மேற்குறிப்பிட்ட ஆய்வுகளை நோக்கும் பொழுது, இலக்கியத்தின் வரலாற்றை நிறைவேற்றம் பணியில் அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்நோக்க வேண்டியிருந்த பிரச்சினைகளை நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.

இங்கு தனிப்பட்ட ஆய்வுகளையோ, ஆய்வாளர்களையோ விமரிசிக்கும் நோக்கு இல்லை, எனினும், ஆய்வுகளையும் ஆய்வாளர்கள் பணிகளையும் நோக்கும் பொழுது, தமிழில் இலக்கியத்தின் வரலாற்றினை எழுதுவதிலுள்ள பிரச்சினை மையங்களைக் கண்டறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. அவற்றை அறிய முனைவதே இங்கு நமது முக்கிய பணியாகும்.

அத்துடன், இலக்கிய வளர்ச்சி பற்றிய இப்பல்வேறு ஆய்வுகளிலும் இல்லாத, ஆனால், நேர் சீரான இலக்கியத்தின் வரலாற்றுக்கும், பின்னர் இலக்கிய வரலாற்றுக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற பண்புகள் பற்றியும் நோக்குவது முக்கியமாகும்.

தமிழின் இலக்கிய வரலாற்றை எழுதுவதிலுள்ள மிக முக்கியமான பிரச்சினை, கி.பி. 1300க்கு முந்தியனவாக நம்மிடத்தே இன்றுள்ள தமிழிலக்கியங்கள் எந்த அளவுக்குப் பூரணமானவை. எந்த அளவுக்கு உண்மையில் இருந்த இலக்கியங்களின் முற்று முழுதான தொகுதியாகக் கொள்ளப்படத்தக்கன என்பதாகும். அதாவது உள்ள இந்த இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு நாம் முற்று முழுதான, ஐயந்திரிபற்ற இலக்கிய வரலாற்று ஆய்வினில் இறங்கலாமா என்பதே பிரச்சினையாகும்.

இதற்குள், இன்னொரு அடிப்படையான வினாவும் உள்ளது. தமிழில் எழுதப்பட்ட 'இயற்ற'ப்பட்ட எல்லா இலக்கியங்களும் இன்று நம்மிடம் உள்ளனவா என்பதே அவ்வினாவாகும்.3 மறைந்துபோன தமிழ் நூல்கள் பற்றிய தமது நூலில் மயிலை, சீனி, வேங்கடசாமி, இழக்கப்பட்ட நூல்கள் பற்றியும் அவை எவ்வாறு இழக்கப்பட்டன என்பன பற்றியும் பெருமளவு முழுமையான தகவல்களைத் தந்துள்ளார்.4 ஆனால் இங்கு கிளப்பப்படும் வினா, நாம் முழுமையாக மீட்டுக் கொண்டு விட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் இலக்கியத் தொகுதி, பிரதி நிதித்துவமுள்ளதாகக் கருதப்படத் தக்கதா என்பதேயாகும். மறைந்து போனவையாகக் கூறப்படுகின்ற நூல்களின் பெயர்களை நோக்கும் பொழுது, அவற்றுள் மிகச் சில நூல்களைத் தவிர, மீதி நூல்களின் இழப்பு, தமிழிலக்கிய வளர்ச்சி பற்றிய கணிசமான ஒரு வரலாற்றினை எடுத்துக் கூறுவதற்குத் தடையாக இருக்க முடியாது என்பது தெளிவாகும். எனவே நாம் ஆராய வேண்டுவது, நாம் முழுதாக மீட்டுக்கொண்டு விட்டதாக எண்ணிக் கொள்ளும், இன்று நம்மிடத்துள்ள இலக்கியங்கள் பற்றியே ஆகும். இத்துணை முக்கியமுள்ள இன்னுமொரு வினாவுமுள்ளது. தமிழ் இலக்கியத்தின் வரலாற்றையும், இலக்கிய வரலாற்றையும் எழுத முயலும் பொழுது, தமிழிற் கிடைக்கக்கூடிய எழுத்துக்கள் எல்லாவற்றையும் ஒருங்கு திரட்டிக் கொண்டு விட்டோமா என்பதேயாகும்.

எல்லாச் சங்க நூல்களுமே, அதிகாரத்திலிருந்தவர்கள் திட்டமிட்டு மேற்கொண்ட முயற்சி, மூலம், பிரக்ஞை பூர்வமாகப் பேணிக் கொள்ளப்பட்டவையே என்பதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். தொகுப்பித்தவர்கள் பெயரும் தொகுத்தோர் பெயரும் ஓரளவு நமக்குத் தெரியும், இப்பொழுது கேட்கப்பட வேண்டிய கேள்விகள், இத் தொகுப்புகளிற் காணப்படும் பாடல்கள் மாத்திரம் தான் தொகுப்பதற்குக் கிடைத்தனவா? நமக்கு இன்று தெரியாததாகவுள்ள, அல்லது நம்மால் இன்று தெரிந்து கொள்ள முடியாததாகவுள்ள ஆனால், தொகுப்பிக்குமாறு ஆணை பிறப்பித்தவரின் கொள்கை நிலைப்பட்ட தீர்மானங்கள் காரணமாகச் சில பாடல்கள் தொகுக்கப்படாமல் வேண்டுமென்றே விடப்பட்டிருக்கலாமா? என்பனவே.

இந்த ஐயத்தினை நியாய பூர்வமாகக் கிளப்புவதற்கான, போதுமான தடயங்களைத் தொல்காப்பியம் தந்துள்ளது, தொல்காப்பியம் செய்யுளியலிலே, அடிவுரையுடைய அடிவரையற்ற ஆக்கங்கள் பற்றிய குறிப்பு உண்டு. (செய்யுளியல் 163). அவை நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு, பண்ணத்தி என்பனவாகும். இன்று பேணப்பட்ட இலக்கியத் தொகுதிகளுள் இவற்றுள் அநேகமானவற்றுக்கு உதாரணங்கள் இல்லை. பேணப்பட்டுள்ளவை பெரும்பாலும், அகம்-புறம் வகைப்பாட்டைச் சேர்ந்தவையே, அவற்றுள்ளும், பேணப்பட்டுள்ள மிகப் பெரும்பாலான அகப்பாடல்கள், தொல்காப்பியத்தில் அகத்திணைக்குரியதாகச் சொல்லப்படாத யாப்பாம் அகவலிலேயே உள்ளன. தொல்காப்பியம் கலியையும் பரிபாட்டையுமே அக்த்திணைக்குரிய யாப்புக்களாகச் சொல்லும் (அகத்திணை இயல் 53). மேலும் அகப் பாடல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளவற்றுள்ளும் வன்மையான அரசியற் சார்பு காணப்படுகின்றது.5 இப்பிரச்சினைகள் யாவும், அக்கால கட்டத்தின் இலக்கியப் படைப்புக்கள் முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தாத, மிகமிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல்களைக் கொண்ட தொகுதிகளையே ஆதாரமாகவுடையன என்ற நிலைமை ஏற்படுத்தி விடுகின்றன. நுண்ணிய வகை துறைப்பாடு உள்ள இந்தத் தொகுதிகளைப் பார்க்கும் பொழுது இவை, உள்ளவற்றின் திரட்டு அல்ல, தெரிந்தெடுக்கப்பட்டனவற்றின் தொகுப்பு என்றே கூறத் தக்கனவாகவுள்ளன.

தொகுக்கப்பட்டுள்ள பாடல்கள் கால முழுமைப்பிரதிநிதித்துவம் உடையனவா என்பது பற்றி வேறு எதையும் கூறாது, குறைந்தது ஒன்றினை மட்டும் எடுத்துக் கூறலாம். இப்பொழுதுள்ள தொகை நூல்கள், அக்காலத்தில் மன்னர்களுக்கும்... பாடுநர்களுக்குமிருந்த புரப்போர் சார்ந்திருப்போர் உறவு மிக அந்நியோந்நியமாகவிருந்தது என்ற ஒரு மனப்பதிவினை நம்மிடையே எற்படுத்துவனவாகவுள்ளன. ஆனால், புறநானூற்றில் வரும் ஒரு செய்யுளில் (208), 'காணாது ஈத்த இப்பரிசிற்கு யான ஓர் வாணிகப் பரிசிலன் அல்லேன்' என்று தன் பாட்டைக் கேளாது பரிசிலைக் கொடுக்க முனைந்த மன்னர்கள் முயற்சி பற்றிக் கூறப்பட்டுள்ள தகவல், மேற்குறிப்பிட்ட உறவிற்சில உலைவுகளுமிருந்தன என்பதைக் காட்டுகின்றது.

தொகுத்தேன்... தொகுப்பித்தோன் பற்றிய மரபுவழித் தகவல்களினடியாகக் கிளம்பும் சிவாதாரமான கேள்வி, இத்தொகுப்பின்பொழுது தணிக்கை நடவடிக்கை ஏதாவது இருந்ததா என்பதே. இது தமிழிலக்கிய வரலாறு பற்றிய, சிக்கல்மையமான ஒரு வினாவாகும். தேவாரங்கள் மீட்பதற்கு அரச ஆதரவும் தலையீடும் உதவியுள்ளன முறைமையினை நோக்கும் பொழுது, இவ் வினாவை இக்கட்டத்தில் நாம் கிளப்புவது நியாயமாகவே உள்ளது. அந்த ஆதவும் தலையீடுமில்லையே அவ்விலக்கியத்திற் பெரும் பகுதி நிச்சயமாக அழிந்திருக்கும். கி.பி.1300க்கு முற்பட்ட இலக்கியத்தின் அதிகார நிறுவனச் சார்புத்தன்மை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். கி.பி.1300க்குப் பின்னர் வரும் இலக்கியம் பன் முகப்பட்டதாகவே காணப்படுகின்றது. சித்தர்களின் பாடல்கள், சமூகத்தின் அடிநிலையிலுள்ள பள்ளர், குறவர் போன்றோரின் நாட்டார் இலக்கிய வடிவங்கள் ஆகியன கோயில் முறைமையைப் பேணுவதற்குப் பயன்படுத்தப்பட்ட முறைமை, சிற்றரசுகளின் ஆதரவினைப் பெற்றிருந்த புலவர்களுக்கெதிராக ஒளிவு மறைவின்றித் தமது எதிர்ப்பினைத் தெரிவித்த, (காளமேகம் போன்ற) சில புலவர்களின் பாடல்கள், பண்டைய இலக்கியங்களுக்கு நிகழ்கால அர்த்தங்கற்பிப்பதற்கு வலிந்து கட்டி ஆவேசத்துடன் போராடும் உரைகள், மடஞ்சார் இலக்கியங்கள் ஆகியனவற்றை நோக்கும் பொழுது இப்பன்முகப்பாடு புலனாகின்றது. ஆனால், கி.பி. 600-1300க் கால இலக்கியம் இத்தகைய பன்முகப்பாடு, பல்வேறு சார்பு கொண்டதாகத் தெரியவில்லை, 600-1300க் கால இலக்கிய தொகையாற் பெரியது. ஆனால் ஒரே சார்புடையது. கி.பி.1300க்குப் பிந்திய இலக்கியம் அத்துணை பெரியதோ உன்னதமானதோ அல்லவெனினும், பன்முகப்பட்டது.

II

தமிழிலக்கிய வரலாற்றைக் கருத்து நிலை அடிப்படையில் எழுத வேண்டியதன் அவசியத்தை மேலே நாம விவரித்த உண்மைகள் வற்புறுத்துகின்றன. ந.சுப்பிரமணியன் அவர்கள் கூறுவது போன்று வழமையான அமைப்பு மாதிரியிலிருந்து விடுபடுவது எப்பொழுதோ செய்யப்பட்டிருக்க வேண்டியது.6 ஆனால் புதிதாகச் செய்யப்பட்டுள்ள முயற்சிகள், நாம் வேண்டும் மாற்றத்தைத் தருவனவாகவில்லை, தமிழின் இலக்கிய வரலாறு, தமிழ் நாட்டின் வெவ்வேறு காலப்பகுதிகளின் மேலாண்மையுடன் விளங்கிய கருத்து நிலைகளை இனங்கண்டு தெளிவுபடுத்துவதாகவும், அந்தக் கருத்துநிலையை ஒரு கட்டத்தில் தகர்ப்பதற்கும், அல்லது இன்னொன்றை வளர்த்தெடுப்பதற்கும் இலக்கியம் பயன்படுத்தப்பட்டதென்பதைக் காட்டுவதாகவும், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்ட கருத்துநிலைகள் எவ்வெவ் நிலைகளிலிருந்தனவென்பதைக் காட்டுவதாகவும் அமைதல் வேண்டும்.

III

அடுத்து வரும் வினாவும் முக்கியமானதாகும். நாம் எவ்வகையான இலக்கியத்தை இலக்கிய வரலாற்றுக்கான அடிப்படையாகக் கொண்டுள்ளோம்? இக்கட்டத்தில், 'இலக்கியம்'என்பதற்குச் சரியான ஒரு வரைவிலக்கணம் முக்கியமாகின்றது. தமிழ் லெக்சிக்கன் இரண்டு முக்கியமான கருத்துக்களைத் தருகின்றது:

(அ) இலக்கணமுடையது.

(ஆ) ஆன்றோர் நூல்

இக்கருத்துக்களை நோக்கும் பொழுது, இன்றைய விமரிசனச் சொற்பிரயோகத்தில், 'படைப்பிலக்கியம்'அல்லது 'ஆக்க இலக்கியம்' என்று கூறப்படுவனவற்றையே இலக்கிய வரலாற்றின் தளமாகக் கொண்டுள்ளோம் என்பது புலனாகின்றது. தொல்காப்பியச் செய்யுளியலில், நாம் ஏற்கெனவே சுட்டிய சூத்திரத்தில் மந்திரங்கள் கூட இலக்கியங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. நமது இலக்கிய(த்தின்) வரலாற்று நூல்கள், பிரதானமாக, அன்றேல் பெரும்பான்மையும் படைப்பிலக்கியங்களையே இலக்கியத்தின் வரலாற்றுக்குப் பொருளாகக் கொண்டுள்ளன. சைவ சித்தாந்த சாத்திரங்களும் அவற்றினைத் தொடர்ந்து வந்த பண்டார சாஸ்திரங்களுமே இந்த விதிக்கு விலக்காக அமைந்துள்ளன எனலாம். இவ்வாறு இச்சாத்திர நூல்கள் படைப்பிலக்கியங்களுக்கு சேர்க்கப்பட்டமைக்குச் சைவ மேலாண்மை காரணமாகும். நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் பற்றியுள்ள வியாக்கியானங்கள் மணிப்பிரவான நடையிலமைந்திருப்பதால், அவற்றை தமிழிலக்கியத்தின் இன்றியமையா அங்கமாகக் கொள்ளும் மரபு இல்லையென்றே கூறல் வேண்ம், வைணவத் தமிழ்ப் பாரம்பரியத்திற்கு அவை பெரும் முக்கியத்துவமுடையனவெனினும் அவற்றைத் தமிழிலக்கியமாகக் கொள்ளும் மரபு இல்லையென்றே கூறல் வேண்டும்.

இலக்கிய வரலாறானது, அச்சமுதாயத்தின் அன்றேல் குழுமத்தின் சிந்தனை வரலாறாகவும் அமைய வேண்டுமெனில், இலக்கியமல்லா எழுத்துக்களும் பெரு முக்கிய முடையனவாக அமையும்.

'இலக்கியமானது சமூகத்தில், வீடுகள், ஆயுதங்கள், அரசியற் கட்சிகள் போன்று தோற்றம் வளர்ச்சியுடையதே. எனவே கற்பனை சாரா எழுத்துக்களுடன் இலக்கியத்துக்கு நெருங்கிய உறவுண்டு, அந்த உறவுகளை விளங்கிக் கொள்வதன் மூலம், சிறப்பாக அவை உண்மையான இலக்கியத்தினுட் புகுந்து இலக்கியமாவதை நோக்குவதன் மூலம் நாம் இலக்கியத்தை உள்ளத்திலும் பார்க்க முழுமையாக விளங்கிக் கொள்ளலாம். மனிதக் குரங்குகளைப் பற்றியும் குரங்கு மனிதர்களை பற்றியும் அறிவதன் மூலம் நாம் எவ்வாறு மனிதனை நன்கு விளங்கிக் கொள்ள முடியுமோ அதே போன்று இந்த எழுத்துக்களை அறிவதன் மூலம் உண்மையான இலக்கியத்தை விளங்கிக் கொள்ளலாம்.7

டேவிட் கிறேய்க் இங்கு, இலக்கியத்தினை விளங்குவதற்கு இலக்கியஞ்சாரா எழுத்துக்களின் முக்கியத்துவத்தை வற்புறுத்துகின்றார். தமிழைப் பொறுத்த வரையில் நாம் தொடங்க வேண்டிய வேலைகள் ஆரம்ப நிலைப்பட்டனவாக உள்ளன. வைத்தியம், வானவியல், சோதிடம், சிற்பம், நடனம், வெள்ளாண்மை ஆகிய துறைகள் பற்றித் தமிழிலே எழுதப்பட்டுள்ளவை இன்னும் சரிவரத் தொகுக்கப்படவே இல்லை. இந்த நூல்களைத் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றுக்குள், மு.அருணாசலத்தைத்தவிர-- அவர் கூட இவற்றினை இலக்கிய வரலாற்றினுள் இணைக்க வேண்டுவதன் அவசியத்தைத் தயக்கத்துடனேயே கூறுகின்றார்-- மற்ற இலக்கியத்தின் வரலாற்றாசிரியர்கள் இன்னும் சேர்த்துக்கொள்ளவில்லை.8 ஆனால் இது சம்பந்தமாக, ஒக்ஸ்ஃபோர்ட், கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகங்களால் வெளியிடப்பட்டுள்ள இலக்கிய வரலாற்றுத் தொகுதிகளிற் காணப்படும் சில அதிகாரத் தலைப்புக்கள் இவ்வமிசத்தின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுவனவாகவுள்ளன.

அ. ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்கில இலக்கிய வரலாறு (பதிப்பாசிரியர்கள் ஜோன் பக்ஸ்ற்றன்--நோர்மன் டேவிஸ்) பதிணேழாம் நூற்றாண்டின் முற்கூற்றில் ஆங்கில இலக்கியம் (1600-1660)-- டக்ளஸ்புஷ் எழுதியது.

அத்தியாயம் I - சனரஞ்சக இலக்கியமும் மொழி பெயர்ப்பும்

" VII- வரலாற்றும் வாழ்க்கை வரலாறுகளும்

" VII- அரசியற் சிந்தனை

" IX - அறிவியற் சிந்தனை

ஆ. கேம்பிரிட்ஜ் ஆங்கில இலக்கிய வரலாறு

தொகுதி VIII- அத்தியாம் XV விஞ்ஞானத்தின் முன்னேற்றம்

தொகுதி XII --அத்தியாயம் VI 10ம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் விமரிசனங்களும் சஞ்சிகைகளும்

தொகுதி XIV- அத்தியாயம் VIII அறிவியல் எழுத்துக்கள்

அ. பௌதிகமும் கணிதமும்

ஆ. இரசாயனவியல்

இ. உயிரியல்

தொகுதி XI- அத்தியாயம் XIV
புத்தக உற்பத்தியும் விநியோகமும் (1625-1800)

" - அத்தியாம் XVI
குழந்தைகள் நூல்கள்.9

தமிழிலக்கியத்தின் சமூகவியற் பின்னணியை நோக்கும்பொழுது, கலைகள் கைப்பணிகளில் சாதி அடிப்படை காரணமாகச் சில எழுத்துக்கள் இலக்கியத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளன என்பது தெரியவரும். அத்துடன் குறிப்பிட்ட சில கலைகள், கைப்பணிகள் அவை பற்றிய எழுத்துக்கள் ஆகியன வரையறுக்கப்பட்ட ஒரு வட்டத்துக்கு அப்பாலே செல்வதும் தடுக்கப்பட்டது. சங்க காலம் முதலே இலக்கியத்தை 'உயர்கலை' யாகக் கொள்ளும் ஒரு பான்மை காணப்படுகின்றது. 'கல்லாவாய்ப்பாணன்' கண்டிக்கப்பட்டுச் 'செந்நாப் புலவர்' புகழ்ந்தேத்தப்படுவதில் இப்பண்பினைக் காணலாம். அக்காலம் முதலே, கவிதைக் கலைப் பயில்வில் ஒருவிதமான அறிவுக்கண்டிப்பு நிலையினைக் காணலாம். மேலும், வைத்தியப் பயில்வு பற்றிய பாரம்பரியங்கள், அத்துறை எழுத்துக்களுக்கு ஒரு அகண்ட வாசிப்பு வட்டத்தைக் கொடுக்க விடவில்லை. உண்மையில் அந்நூல்களின் மொழியே ஒருவகைக் குறியீட்டு மொழியாகவே இருந்தது. அதன் காரணமாக, அந்த அறிவியல் துறையினைத் தெரியாதவருக்கு எழுதப்பட்டுள்ளனவற்றை விளங்கிக் கொள்வதே சிரமமாகவிருக்கும். நவீன காலத்தை நோக்கி வரும் பொழுது, இன்றுதானும், இன்றைய தமிழ் வெளிப்பாட்டின் இன்றியமையாத அங்கமாகவுள்ள தொழில் நுட்பச் சொற்கள் பற்றிய ஒரு வரலாற்றினை எழுத முடியாதுள்ளமையை நாம் அறிவோம். தமிழில் அறிவியல் நூல்களின் வளர்ச்சி பற்றி இலக்கியத்தின் வரலாற்று நூல் ஒன்றிலாவது எதுவும் இல்லை. அதை நாம் செய்யாத வரையில், தமிழிலக்கிய வரலாறு தமிழர்களின் சிந்தனை வரலாற்றைச் சுட்டுவதாகவே அமைய முடியாது.


IV

தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களின் பல்வேறு மத இலக்கியங்களின் ஆய்வு முறைமை பற்றி உன்னிப்பாக நோக்க வேண்டியுள்ளது. தமிழிலக்கிய வரலாற்றில் நிலவும் சைவ மேலாண்மை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டோம். தமிழ்நாட்டின் வரலாற்றிற் சைவத்துக்குக் கிடைத்த சமூக-அரசியல் ஆதரவினை நோக்கும் பொழுது இம்மேலாண்மை தவிர்க்க முடியாததே.

சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறித்தவம் பற்றித் தமிழிழுள்ள எழுத்துக்களை, அவ்வக்குழுவினர் தமிழுக்கு ஆற்றிய தொண்டாகவே கொள்ளும் ஒரு பொதுவாக தன்மை நிலவி வந்துள்ளது. சமணர்களையும் பௌத்தர்களையும் பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் சமணர் மி அருகியும், பௌத்தர் எவருமே இல்லையென்று சொல்லும் நிலையும் இருப்பதால், அவர்களைப் பற்றி இன்று அவ்வாறு சொல்லித் தப்பி விடலாம். ஆனால் முஸ்லீம்களையும் கிறித்தவர்களையும் பொறுத்த வரையில் (உண்மையில் இவர்களே உண்மையான சர்வதேசியப் பரப்பகற்சி கொண்ட தமிழ்நாட்டு மதக்குழுவினராவர்) அவர்கள் மதங்கள் பற்றிய எழுத்துக்களை இவ்வாறு கூறுவது தவறான விளக்கத்துக்க இடமளிக்கலாம். இலக்கிய உருவாக்கம் என்பது சமூக உருவாக்கத்தின் ஒரு பகுதியென்பதையும், இலக்கியம் சமூகப் பயிற்சிகளின ஒன்று என்பதையும் நாம் ஏற்றுக் கொள்வோமேயானால், தமிழ்க் கிறித்தவர்களுக்குத் தமிழே அவசியமானது; அதை விட வேறெந்த மொழி வழியாகவும் அவர்கள் தம் மத ஈடுபாட்டை (ஆத்ம அநுபவத்தை)ப் புலப்படுத்த முடியாது. அவர்களுடைய மதத்தின் பயில்வுக்கும் அவர்களிடையே அதவிசுவாசத்தை நிலைபெற நிறுத்துதற்கும் பயன்படும் எழுத்துத் தொகுதியினை, தமிழுக்கு அவர்கள் ஆற்றும் தொண்டு எனக்கொள்வது அறிவு நிலைப்பட்ட நோக்கு ஆகாது. 'ஆற்றிய தொண்டு' என்று கூறும் பொழுது, அதனோடு ஒன்றிணைந்து நிற்காத, சற்றுத் தூரத்திலேயுள்ள ஒரு நிலை ஒழிவு மறைவாக உணர்த்தப்படுகின்றது. இந்த மனோநிலை உண்மையென்பதனை, சைவத் தமிழிலக்கியங்களைச் சைவம் தமிழுக்காற்றிய தொண்டு என்று கூறாத மரபு நிலையிலிருந்து தெற்றெனப் புரிந்து கொள்ளலாம். உண்மையில், தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், தமிழ் என்பது சைவத்தின் பாரியாய நிலை என்ற கருத்தே (சைவமும் தமிழும்) மேலாண்மையுடன் இருந்து வந்துள்ளது. இந்தச் 'சைவமும் தமிழும்' உணர்வு காரணமாக, தமிழ் மரபுடன் பெரிதும் இணைந்துள்ள வைணவத்தையே புறத்தே வைத்து நோக்கும் பண்பு காணப்படுகின்றது. ஐம்பதுகளின் முற்பகுதியில் இக்கருத்துது (தமிழுக்கு ஆற்றிய தொண்டு) பரவலாகக் காணப்பட்டது. முஸ்லீம் ஒருவர் தமிழிலுள்ள இஸ்லாமிய நூல் பற்றி ஆராயும் பொழுது, அவர தமது ஆய்வினைத் 'தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிங்கள் பங்களிப்பு' (உவைஸ்-1954) என்றே தலைப்பிட்டார். தமிழ் முஸ்லிங்கன் தமக்குத் தேவையான இலக்கியத்தை ஆக்கிக் கொண்டனர் என்ற கண்ணோட்டத்திலே பார்க்கப் படவில்லை.

தமிழ்ப் பண்பாடு என நாம் குறிப்பிடும் தொகுதியின் உறுப்பலகுகளாக இம் மதங்களைக் கொண்டு, தமிழ்ப் பண்பாட்டின் உறுப்பமைவுக்கும் ஒருமைக்கும் செய்யப்படும் 'பங்களிப்பில்', இவை ஒவ்வொன்றும் எத்தகை இடத்தினை

** elakiya6.mtf ன் தொடர்ச்சி***

அடுத்த கால அலகு விஜயநகர-நாயக்க ஆட்சி முதல், பிரித்தானியரால் அரசியல், நிர்வாகக் கட்டுப்பாட்டதிகாரம் மேற்கொள்ளப்பட்டது வரையுள்ள காலமாகும். 'படிப்படியா‘ன மாற்றங்களுக்குக் குறிப்பான திகதிகளை வழங்கி விடுதல் சிரமமானதாகும். ஆயினும், மங்களூர் உடன்படிக்கை (1792) மூலம், திண்டுக்கல்லும் அதனைச் சுற்றிய பிரதேசமும், பரமஹல் பிரதேசமும் பிரித்தானிய ஆட்சிக்கு மாற்றப்பட்டதும், புதிய அமைப்பு முறை இங்கு இயங்கத் தொடங்கிற்று எனலாம். இந்த நாள் முதல், நிருவாகவே கும்பினி ஊழியர்களின் பிரதான கடமையாகிற்று.18 பிரிட்டிஷார், பின்னர் சென்னை மாகாணம் என்ற பெயரிலே தமது ஆட்சியின் கீழ் தாம் ஆட்சி செய்த பகுதியிற் பெரும் பாலானவற்றை, 1800 அளவிற் பெற்றுக் கொண்டு விட்டனர்.19 1800இல் நாம் தமிழ்நாட்டின் நவீனகால கட்டத்துக்கு வருகின்றோம். இக்காலம் முதல், தேசிய, பிரதேச அபிலாசைகளின் உறவு ஊடாட்டங்கள் தமிழ் நாட்டின் வளர்ச்சிப் போக்கைத் தீர்மானிக்கின்றன. பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்கம் காரணமாக, 'சட்டத்தின் ஆட்சி' போன்ற பல புதிய சமூக-அரசியல் அமிசங்கள் வரத் தொடங்கின. அதிகாரப் படிமுறை வழி நின்ற தமிழ்ச் சமூகத்தில், இத்தகைய அமிசங்கள் முன்னர் இருக்கவே இல்லை. சமூக சமத்துவம் என்னும் கோட்டாடு பிரித்தானிய ஆட்சி வந்ததன் பின்னரே அரசியற் கொள்கையாக வளரத் தொடங்ககின்றது.

இவ்வத்தியாயத்தில், மேற்குறிப்பிட்ட நவீன காலத்தை ஆராய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, 19ஆம் நூற்றாண்டு முந்திய தமிழகம் பற்றி இதுவரை ஆய்ந்தவற்றைக் கொண்டு நோக்கும் பொழுது, தனித்தனி சமூக-பொருளாதார உருவாக்கங்கள் என்று கொள்ளப்படத் தக்கனவான இரு காலப்பிரிவுகளும், நாம் இதுவரை எவ்வித குறிப்பும் கூறாது விட்டுள்ள மேலும் ஒரு காலப்பிரிவும் உள்ளன என்பது தெளிவாகின்றது எனலாம்.

தெளிவான கால வரையறையுடைய காலப் பகுதிகள் இரண்டும் பின்வருனவாகும்.

(அ) ஏறத்தாழ கி.பி. 600-1371.1400

(ஆ) ஏறத்தாழ - 1400-1800


கி.பி. 600-க்கு முற்பட்ட காலமே, இதுவரை நாம் இங்கு எடுத்து விவரிக்காத காலப் பகுதியாகும் 'பல்லவர்க்கு முந்திய காலம்' என்றும் குறிப்பிடப் பெறும் இக்காலம், இப்பொழுது, சில வேளைகளில் 'செந்நெறிக் காலம்' (Classical period) எனவும் குறிப்பிடப்படுகின்றது. பேற்றன் ஸ்ரைனும், நம்பியாரூரனும் அவ்வாறு குறிப்பிடுவர்.20

முதலில், தெளிவான வரையறைப்பாடுடைய இருக்காலப் பிரிவுகளையும் (7 முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை 15 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை) எடுத்து, அவை ஒவ்வொன்றினதும் சமூக உருவாக்கம் பற்றி நம்மிடத்துள்ள தகவல்களை ஒருங்கு சேர்த்து நோக்கி, இந்த உருவாக்கங்கள் ஒவ்வொன்றுடனும் இலக்கியம் எவ்வாறு முழுமையுற இணைக்கப்பட்டிருந்தது என்பது பற்றி ஒரு சிறிது நோக்குவோம்.

சமூக-பொருளாதார உருவாக்கங்களின் சரி திட்டமான இயல்புகளைப் பகுப்பாய்வு செய்வதன் முன்னர், ஒரு முக்கிய விடயம் பற்றி நினைவுறத்திக் கொள்வது நலம். இலக்கிய வரலாற்றில், குறிப்பாக, பாட புத்தக மட்டத்தில், ஒவ்வொரு பிரிவுகளினது பண்புகளையும் நிலையானவையாக, அதாவது அக்காலத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை மாற்றமடையாதன என்ற எண்ணத்தைத் தரும் வகையிற் கொள்ளும் ஒருபான்மை காணப்படுவதை அவதானிக்கலாம். ஒவ்வொரு காலப்பிரிவுக்கும், அதாவது நமது ஆய்வு முறைமையின்படி, ஒவ்வொரு சமூக உருவாக்கத்துக்கும், ஒரு படிமுறையான வளர்ச்சியுண்டு என்பது அதிகம் உணரப்படுவதில்லை. ஒவ்வொன்றுக்கும் தோற்றம், வளர்முறை, நிறைநிலை, சிதைவு அன்றேல் இன்னொரு உருவாக்கத்தினால் இடையீடு செய்யப்படுதல், என்பன உண்டு. எனவே சமூக உருவாக்கத்தினையும் அதன் 'வரலாற்றுப் பின்னணியில் நோக்கலாம். ஒவ்வொரு சமூக உருவாக்கத்திலும் ஒவ்வொரு குறிப்பிட்ட கருத்துநிலை மேலாதிக்கத்துடன் விளங்குமென்பது உண்மையெனினும், அந்த உருவாக்கத்துக் காலப்பிரிவின் பல்வேறு கட்டங்களில், அக்கருத்து நிலை தன்னத்தானே வெளியிட்டுக் கொள்ளும் முறையில் வேறுபாடுகள் இருக்க முடியும். தமிழ்நாட்டில் பக்தி இலக்கியம் எழாம், எட்டாம் நூற்றாண்டுகளிற் பயன்பட்ட முறைமையும் பின்னர் பதின் மூன்றாம்.. பதினான்காம் நூற்றாண்டுகளிற் பயன்பட்ட முறைமையும் மேற்குறிப்பிட்ட தன்மைக்கு விளக்கம் தரும் உதாரணமாகவுள்ளன. முதலில் சனரஞ்சகமான ஓர் எழுச்சியினதும், சமூக எதிர்ப்புக் குரலினதும் வெளிப்பாடாக அமைந்த இலக்கியங்கள், பதின்மூன்றாம் பதினான்காம் நூற்றாணடுகளில், உள்ளூர் வாழ்க்கையைக கட்டுப்படுத்தியும் இணைத்தும் நின்ற கோயில் முறைமையைச் சீர்காப்புச் செய்வதற்கான கருவியாக அமைகின்றமையைக் காணலாம். எனவே, வளர்ச்சியின் வரலாற்று இயங்கியல் அமிசங்களை ஒவ்வொரு கட்டத்திலும் அறிந்து கொள்வது அத்தியாவசியமாகின்றது. எளிமையான வகைப்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளுதல் நல்லது. பிரச்சினைகளை அவற்றின் பன்முகப்பாடான நிலையில் விளங்கிக் கொள்ளல் வேண்டும். பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதற்காக அவற்றைக் கூறுபடுத்தும் பொழுது அவற்றை எளிமைப்படுத்தவும் கூடாது. திரிபு படுத்தவும் கூடாது. ஆய்வு அணுகுமுறை பற்றிய இந்த உண்மையை மனங்கொண்ட நாம், அடுத்து, மேலே குறிப்பிட்ட காலப் பிரிவுகளில் தொழிற்பட்ட சமூக-பொருளாதார உருவாக்கங்களின் சரிதிட்டமான இயல்புகளை நோக்குவோம்.

உற்பத்தி உறவுகளின் சரிதிட்டமான இயல்புகள் பற்றிய நுண்ணிய, காத்திரமான ஆய்வுகளைச் செய்யாதிருந்துங் கூட, சோழர் கால, விஜய நகர காலப் பொருளாதார அமைப்புக்களை நிலமானியப் பொருளாதாரங்கள் என, திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்ட உண்மை போன்று, எடுத்துக் கூறி வந்துள்ளோம்.21 இப்பொழுது இதற்கு மாறுபாடான ஒரு கருத்துக் கூறப்பட்டுள்ளது. கி.பி 850 அளவிலிருந்து சோழப் பேரரசிற் காணப்பட்ட உற்பத்தி முறையைப் பகுப்பாய்வு செய்த கத்லீன் கௌ, பின்வருமாறு கூறகின்றார்.

'விவசாயிகள், சம்மியர் சிலரிடையே ஒரு வகையான ஊழியக் குடிமை முறைமை (Serfdom) நிலவிய துண்மையெனினும், நிலமானிய அமைப்பு இருந்ததாகக் கொள்ள முடியாதென்றே கருதுகின்றேன். இந்தச் சார்பு நிலையானது தனிப்பட்ட ஆள் நிலைப்பட்டதாகவே, குடும்பத்துக்குக் குடும்பம் ஊழியம் செய்வதாகவோ கொள்ளப்படுவதிலும் பார்க்க, குழும நிலைப்பட்ட ஊழியச் சார்புநிலையாகவேதான் கொள்ளப்படல் வேண்டும். தனிச் சொத்தும் அதனைத் தனிப்பட நிர்வகிப்பதும் மிகமிகக் குறைவாகவே இருந்தன. பிரபுக்களினதும் கோயில்களினதும் ஆதனங்கள் அரசினால் கணக்குப் பரிசோதனை செய்யப்பட்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுமிருந்தன. கிராமங்களிற் பெரும்பாலானவை வதிவிடாப் பிரபுக்கள் இல்லாதவனவாக, விவசாயக் குழுமங்களால் ஆளப்படுவனவாகவேயிருந்தன. கொள்கையிலும் சரி, நடை முறையிலும் சரி, பெருநிலச் சொந்தக்காரர் இல்லாது காணி இல்லை என்ற ஒரு நிலைமை ஏற்படுவதற்கான குறிப்பெதுவு மிருக்கவில்லை.22

கேரளத்திலோ, முகலாயர் காலத்திலோ நிலவியவை போன்ற பண்புகளைக் கொண்ட நிலமானியமுறைமை (feudal system) சோழர் ஆட்சியமைப்பிற் காணப்படவில்லை என வாதிடும் கத்லீன் கௌ, இந்தப் பொருளாதார அமைப்பு முறையானது, மார்க்சினால் எடுத்துக் கூறப்பட்ட 'ஆசிய முறைமைக்'க்குக் கிட்டத்தட்ட ஒத்திருப்பதாகக் கொள்ளலாமென்பதற்கப் பதினொருரு காரணங்களைக் கூறுகின்றார்.23 இது பற்றி அவர் ஏற்கெனவே எழுதிய ஆய்வுக் கட்டுறையில் (1980 பிப்ரவரி) இதனைச் சிறிது விரிவாகவே விளக்கிவிட்டு இறுதியில் (ஏறத்தாழ 850-1260 க்கு இடைப்பட்ட) சோ‘ழ சமூகமானது, மார்க்ஸ் எடுத்துக் கூறும் ஆசிய உற்பத்தி முறைமைக்கான அமைப்புடனும், றிபேய்ரோ (Ribeiro)வின் தெய்வ ஆட்சி நீர்ப்பாசன அரசுடனும், இறைபுறுவதாகவும் உள்ளது, எனக் கூறியுள்ளார்.24

இக்கட்டத்தில், மார்க்சினால் எடுத்து மொழியப்பட்ட இந்த ஆசிய உற்பத்தி முறைமை பற்றி ஒரு சிறிது அறிந்து கொள்வது அவசியமாகின்றது. அம்முறைமைக்கான வரை விலக்கணத்தைக் கூறும் பொழுது மார்க்ஸ் கூறியதாவது:

'தனிமனிதன், குழுமத்திலிருந்து விடுபட்டவனாக அதனைச் சாராதவனாகவிருப்பதில்லை. குழுமத்தின் உற்பத்தி வட்டம் தன்னைத்தான் போஷ’ப்பதாகவிருக்கும். விவசாயமும் கைவினைகளும் ஒருமைப்பட்டனவாகக் கருதப்படும். எந்த ஒரு தனிமனிதனும் குழுமத்துடன் தனக்குள்ள உறவினை மாற்றிக் கொண்டால், அந்தக் குழுமத்தையும், அதன் பொருளாதாரத் தளத்தையும் அந்த அளவுக்கு மாற்றியமைப்பவனவாக, அதனைக் கீழிருந்தே சிதைப்பவனவாக ஆகிவிடுகின்றான். எதிரிடையாக, அப்பொருளாதாரத்தளம் மாறுகின்ற பொழுது, இயக்கவியல் தொழிற்பாட்டினால், வறுமைப்பாடு முதலாம் நிலைகள் தோன்றும்.'25

சோழ அமைப்பானது அத்துனை எளிமையானதெனக் கத்லீன் கௌ கூறவில்லை. சோழ அமைப்பு, நிலமானிய அமைப்புடன் இயைவதிலும் பார்க்க, இந்த ஆசிய உற்பத்தி முறைமையைப் பெரிதும் ஒத்திருந்தது என்று அவர் கூறுகின்றார்.

குணா, கத்லீன் கௌவினுடைய இக்கருத்தினை எதிர்த்து, குறிப்பிட்ட ஆசிய உற்பத்தி முறைமை தமிழ்ச் சமூகத்திற் காணப்பட்தென்பது பொருந்தாக்கூற்று என்கிறார். தமிழ்நாட்டில் நிலமானிய அமைப்பே நிலவியதென மீள வலியுறுத்தும் அவர், 'விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுமேல், தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் நிலலவிய நிலமானிய அமைப்பில், கத்லீன் கௌ கொள்வது போன்ற தரவேற்றுமை இருக்கவில்லையென்பது தெரியவருமென்றும், சங்க காலத்தில் வாழ்ந்த பத்துச் சேர மன்னர்களின் வரலாற்றைக் கூறுகின்ற பதிற்றுப் பத்தில் உள்ள, நிலமானிய அமிசங்கள் நிலவியமைக்கான சான்றுகள் இவ்வுண்மையை உறுதிப்படுத்தும்' என்றும் கூறியுள்ளார்.26 கத்லீன் கௌ கூறுவதை மறுதலிக்கும் குணாவின் கருத்து முக்கியமானதெனினும் இது சம்பந்தமாகக் கொள்ளப்படத் தக்கதாகவுள்ள கல்வெட்டு, இலக்கிய, பிற தரவுகளின் ஒன்றிணைந்த முழுமையான பகுப்பாய்வாக அமையவில்லை என்றே கூறல் வேண்டும்.

இப்பிரச்சினையை விளங்கிக் கொள்வதற்கு இன்னொரு முக்கியமான பங்களிப்பு ஒன்று உள்ளது. தென்னிந்திய வரலாற்று ஆய்வுகள் பலவற்றினைச் செய்துள்ள27 பேற்றன் ஸ்ரைன், சோழர் காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய அதிகாரக் கட்டமைப்பினை விளங்கிக் கொள்வதற்கு, இந்திய வரலாறெழுது நெறியிற் பயன்படுத்தப்படும் கோட்பாடுகள் பொருத்தமானவையல்லவெனக் கண்டு, முழுமையான விளக்கத்துக்கு, கிழக்கு ஆப்பிரிக்கச் சமூகம் பற்றிய ஆய்வின் பொழுது பெறப்பட்ட ஒரு வகைமாதிரி (Type)யைப் பயன்படுத்தியுள்ளார்.

அரசியல் அதிகாரமும் கட்டுப்பாடும் பல சீவாதாரமான வழிகளில் வட்டார நிலைப்பட்டதாகவே காணப்பட்ட, இடைக்கால இந்திய அரசானது இங்கு ஒரு 'கூறாக்கநிலை' அரசு (Segmentary State) ஆகக் கொள்ளப்படுகின்றது. இந்த அரசினது ஆக்க அலகுகளின் செயல்வீச்சு, நன்கு வரையறுக்கப்பட்ட, நிலையான இனக் குழுமங்கள் வாழும் பிரதேசங்களுள் வரையறை செய்யப்பட்டதாகவே இருந்தது. அப்பிரசேங்களின் பிரதானிகளாகவிருந்தோர் பெரும்பான்மையும் அந்த உள்ளூர் வட்டாரத்தில் வாழ்ந்த மேலாதிக்கமுடைய இனக்குழுமங்களின் தலைவர்களாகவோ, தலைமைப் பேச்சாளர்களாகவோதான் இருந்தனர் அத்துடன், தென்னிந்தியாவுக்கே தனிச்சிறப்புத் தருவனவாக அமைகின்ற பல்வேறு உள்ளூர்க் குழுக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வனவாகவிருந்த கூட்டு நிறுவனங்கள், அவ்வட்டாரத்தின் பொழுது அலவல்களிற் பங்கு கொண்டன,'28

கூறாக்க நிலை அரசின் தன்மைகளை ஸ்ரைன் பின் வருமாறு விளக்குவர்.

'இது 'பிறமிட்' எனப்படும் கூர் கோபுர முறையில், கூறுகளாக ஆக்கப்பட்டு முழுமை பெறும் அரசு வகையாகும். இந்த அரசு வகை இப்பெயர் பெறுவதற்கு காரணம் அதன் கட்டமைப்பேயாகும். இவ்வரசின் அரசியலொழுங்கமைப்பின் மிகச் சிறிய அலகு, உதாரணமாக விவசாயக்கிராமத்தின் ஒரு கூறு, ஏறு முகமாகச் செல்கிற, கீழேயுள்ளனவற்றிலும் பார்க்க நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட பெரிய அலகுகளுடன் பல்வேறு தேவைகளுக்காகப் பிணைக்கப்பட்டிருந்தது. (உ-ம், ஊர், நாடு வளநாடு, அரசு). ஆனால் வேறு சில தேவைகளுக்கு இவ்வலகுகள் (கூறுகள்) தம்மிலும் பார்க்கச் சிறிய அலகுகளுக்கு எதிர்நிலையானவையாக (உ-ம், ஊரின் ஒரு பகுதிகூறு) அமையும்.'29

கூறாக்க நிலை அரசு பின்வரும் பண்புகளைக் கொண்டதாகவமையும்.

1. ஆட்சியிறைமை இரட்டை நிலைப்பட்டதாகவிருக்கும். ஒன்று உண்மையான அரசியல் இறைமை, மற்றது சடங்காசார இறைமை.

2. இவ்வாட்சியில், பல அதிகார மையங்கள் உண்டு. அவற்றுள் ஒன்றே சடங்காசார இறைமையின் ஊற்று ஆகும். ஆனால் எல்லா அதிகார மையங்களும் தத்தம் கூறுகளின் மீது உண்மையான அரசியற் கட்டுப் பாட்டினை உடையனவாகவிருக்கும்.

3. சிறப்புப் பயிற்சியுடைய நிருவாகப் பணியாளரைக் கொண்டிருத்தல், பிரதான அதிகார மையத்தின் தனித்துவமான பண்பு ஆகும். ஒவ்வொரு கூற்றிலும் அவ்வக் கூற்றுக்கான சிறப்புப் பயிற்சியுடைய நிருவாகப் பணியாளர் இருப்பர்.

4. இந்தக் கூறாக்க நிலையை அரசின் கீழ்நிலை மட்டங்களிற் பிரித்தறிந்து கொள்ளலாம். இந்தக் கூறுகள் கூர்கோபுர வடிவில் அமைந்திருக்கும்.30

இவ்விளக்கம், சோழப்பெருமன்னர் காலத்து நிலவிய நிருவாகக் கட்டமைப்புடன் இயைவதாகவேயுள்ளது. ஊர், நாடு, வளநாடு, மண்டலங்கள் இறுதியில் சக்கரவர்த்தி என ஏறுநிலைப்பட்ட கூர் கோபுரமாகவே அதிகாரம் அங்க அமைக்கப்பட்டிருந்தது.

நிருவாகத்தின் கட்டமைப்பை, முக்கியமாக, அதிகார உடைமையையும் கையாள்கையையும் விவரிக்கின்ற ஒரு மாதிரியம் எனும் வகையில் இந்தக் கூர் கோபுரக் கூறாக்க நிலைச் சித்திரிப்பானது பொருத்தமானதாகவேயுள்ளது. ஆட்சி இறைமையானது சிலவிடங்களிற் சடங்கா‘சாரமாகப் போற்றப்படுவதாகவும் அமையும். கீழ்நிலைகளுக்கு வரவர இச்சடங்கா‘சாரத் தன்மை தெரியும். அக்கீழ்மட்டங்களில் வட்டார, (பிரதேச)ப் பிரதானிகளே உண்மையான அதிகாரத்தை யுடையேராய் (ஆனால் நேரடியா‘னதாகவும் சிலவிடங்களிற் சடங்காசாரமாகவுமுள்ள சக்கரவர்த்தியின் இறைமையைப் போற்றுபவர்களாக) இருப்பர். அதாவது ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு 'கூறு' ஆக அமையும் ஒவ்வொரு அலகும், சக்கரவர்த்தியின் இறைமையைத் தவிர, அதிகார வைப்பு முறையை அந்த அந்தப் பிரதேசத்துக்கேற்ற வகையிற் பிரதி செய்வதாக அமையும்.

இந்தக் கூறுகள் ஒவ்வொன்றினதும் பொருளாதார முகாமை பற்றிய விவரங்களையும் ஸ்ரைன் தந்துள்ளார். இதிலுள்ள முக்கியமான, சிக்கல் மையமான வினாக்கள்-அரசு முழுவதினுள்ளும் நிலவிய உற்பத்தி உறவுகள் யாவை? அரசுக்கும் 'கூறு'க்குமுள்ள உற்பத்தி உறவுகள் யாவை? என்பனவே.31 அதாவது, சோழப் பேரரசின் பொருளாதார ஒழுங்கமைப்பில், உற்பத்தி சக்திகள் (பண்டங்களை உற்பத்தி செய்வதற்கான சாதனங்கள், அந்தச் சாதனங்களைப் பயன்படுத்தும் மக்கள்) மேற்குறிப்பிட்ட கூறுகள் ஒவ்வொன்றிலும் எவ்வாறு தொழிற்பட்டன(ர்) என்பதை அறிந்து கொள்ளல் வேண்டும்.

பல்வேறு கூறுகளிடையே நிலவிய உற்பத்தி உறவு பற்றியறிய முனையும் பொழுது, ஆசிய உற்பத்தி முறைமையை விமரிசன பூர்வமாக ஆராயாமல் விடுவது முடியாது. சாதியமைப்பின் மூடுநிலைத் தன்மையும், ஒவ்வொறு கூறுகளுக்குள்ளும் உற்பத்தி முறைமை பற்றி நினைவுட்டுவது இயல்பே. சமூக உருவாக்கத்தில் திணையின் முக்கியத்துவத்தினை இந்நூலாசிரியர் ஆராய்ந்த பொழுது, 'திணையமைப்பின் உள்ளீடாக அமைந்துள்ள பொருளாதார அமைப்பு, ஆசிய உற்பத்தி முறைமை அதன் மூலநிலையில் தொழில்படும் முறைமையினை நினைவூட்டுவதாக உள்ளது' என எடுத்துக் காட்டியுள்ளார்.32 தமிழ் நாட்டின் சாதியமைப்புக்கும் விவசாய உற்பத்தி முறைமைக்கும் நிலவிய உறவினையும், தமிழ்நாட்டில் நிலவிய நிலம் சார்ந்த முறையில் 'உபரி' எவ்வாறு உழைப்பாளிகளிடமிருந்து உறிஞ்சியெடுக்கப்பெற்றதனையும் நன்கு அறிந்து கொள்ளாது இவ்விடயத்துக்கு நாம் விடை கூறிவிடல் முடியாது.

தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார உருவாக்கங்களின் தன்மையை நிர்ணயஞ் செய்கின்ற பொழுது, இரண்டு விடயங்கள் பற்றி ஒரே சமயத்தில் நோக்க வேண்டியுள்ளது.

அ. தமிழ்நாட்டின் பல்வேறு பிரதேசங்களின் சமனற்ற வளர்ச்சித் தன்மை.

ஆ. சமூக அதிகாரப் படிமுறையும், உற்பத்தியுடன் அதற்குள்ள உறவும். அதாவது சுரண்டல் எவ்வாறு நிகழ்கின்றது என்பது பற்றிய தெளிவு.

இவை பற்றி ஆழமாக ஆராய வேண்டுவதனை வற்புறுத்தும் அதே வேளையில், சோழ அமைப்பானது, நாம் சாதாரணமாகக் கொள்ளும் கருத்தில் நிலமானிய அமைப்பைச் சார்ந்தது அன்று என்பதையும் மனத்திருத்திக் கொள்ளல் வேண்டும். இக்கட்டத்தில் ஆசிய உற்பத்தி முறைமை பற்றிய ஆய்வுச் சிரத்தையின் வரலாற்றினை அறிந்து கொள்வது அவசியமாகும்.

`பெரும்படியாக நோக்கும் பொழுது 1920 களின் பிற்கூற்றுக்கும் 1930களின் பிற்கூற்றுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே' ஆசிய முறைமை'யைத் தனிப்பட்ட ஓர் உற்பத்தி முறையாகக் கொள்ளாது தவிர்த்துக் கொள்ளும் முறை ஏற்பட்டது. வரலாற்று வளர்ச்சியின் சிக்கற்பாடு தரும் இவ்வமிசம் அகற்றப்பட்டதும் உலகப் பொதுவான, நேர்கோடான வளர்ச்சியை எடுத்துக் கூறுவது சுலபமாயிற்று.'33

இத்தகைய ஒரு வரலாறும் இருப்பதன் காரணமாக இவ்விடயம் இன்னும் ஆழமாக ஆராயப்பட வேண்டியதாகவேயுள்ளது.

ஆசிய உற்பத்தி முறைமையினை, வரலாற்றுப் பிரயோக நிலை மட்டத்தில் வைத்துப் பார்ப்பதுடன் மாத்திரம் நின்று விடமுடியாது. இது சம்பந்தமாக வேறு சில அடிப்படையான பிரச்சினைகளும் உள்ளன. முதன்முதலில், இவ்வெண்ணக்கரு, நியமமான மார்க்சீயக் கண்ணோட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படத் தக்கதா என்பதை நோக்குதல் வேண்டும். மற்றைய உற்பத்தி முறைமைகள், உற்பத்தியின் அடிப்படைக் கூற்றைக் கொண்டு குறிக்கப்படுகின்றன. ஆனால், இதுவோ, அவ்வாறில்லாமல், விரண நிலைப்பட்டதாக, ஒரு குறிப்பிட்ட நடைமுறையினைக் குறிப்பிடுவதாகவுள்ளது. மேலும், இம்முறைமை நீண்ட காலத் தொடர்ச்சியினையுடையதாயிருப்பதற்குக் காரணமாக எடுத்துக் கூறப்படும் பண்பு பற்றி, அதாவது மாற்றமின்மை எனும் பண்பு பற்றிச் சிறிது ஆழமாகக் சிந்தித்தல் வேண்டும். அவ்வாறு கொள்வதானால் மார்க்சீய அடிப்படைகளில் ஒன்றான இயங்கியல் வாதத்தை மறுதலிப்பதாகவே அமையும். மேலும், இந்த முறைமையை ஏற்றுக்கொள்வதனால், 'கீழைத்யே ஏதேச்சதிகார ஆட்சி' (Oriental despotism) என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்வது பலத்த அரசியல் உள்ளீடுகளைக் கொண்டதாகவமையும்.34

இத்துணை கருத்து மயக்கங்கள் நிலவுவதன் காரணமாக, இவ்விடயத்தினை மிக விரிவாக ஆராய்தல் வரலாற்றாசிரியர் கடமையாகும். ஒருமுகப்படுத்தப்பட்ட அமைப்பையும், நீர்ப்பாசனத்தைத் தளமாகவும் கொண்ட அரசு முறைமை தோன்றுவதன் முன்னர் நிலவிய சமனற்ற வளர்ச்சியின் தன்மை, புதிதாக வளர்ந்து வரும் விவசாயத்துக்கு, முன்னர் அபிவிருத்தி செய்யப்படாத விரதேசங்களும், அப்பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் குழுக்களும் பயன்பட்ட முறைமை, தீட்டு முறைமையினைத் தளமாகக் கொண்ட சாதியமைப்பு மூலமாக இந்தப் புதிய பொருளாதார முறைமைக்கு வேண்டிய சமூக அமைப்பு பேணப்பட்ட முறை, (முக்கியமாக கீழ்நிலைப்பட்ட குடியினர் தமது உழைப்புக்குப் பெற்ற ஊதிய முறைமை) ஆகியன மிக விரிவாக ஆராயப்பட்ட பின்னரே, இந்தச் சமூக உருவாக்கத்தின் தன்மை பற்றிய முடிவினை எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

கி.பி. 600-1400க் காலப்பிரிவின் சமூக பொருளாதார உருவாக்கத்தின் சரிதிட்டமான இயல்பினை நிர்ணயிப்பதிலுள்ள பிரதான பிரச்சினை, அக்காலத்து அரசு வர்க்கத்தினைச் சார்ந்த 'பிரபுத்துவ'த்தின் பண்பினை அறிந்து கொள்வதேயாகும், அதாவது அது மானியப் பொறுப்புக்களைப் (fiefs) பெற்றிருந்ததா இல்லையா என்பதையும், மத்திய, உள்ளூராட்சி மட்டங்களில் அது வகித்த பங்கு யாது என்பதையும், 'உபரிப் பிழிவு' எவ்வாறு நடை பெற்றது என்பதையும் நாம் நன்கு ஆராய்ந்து கொள்ளல் வேண்டும்.

இவ்விடயம் பற்றிய இன்றைய அறிவு நிலையில், தமிழ் நாட்டின் நிலத்தில் தனிச் சொத்துரிமையின் (காணியுரிமையின்) வளர்ச்சி பற்றி நொபொறு கறாஷ’மா கண்டுகொண்டுள்ளவை, சமூக உருவாக்கம் பற்றிய இப்பிரச்சினையினை விளங்கிக் கொள்வதற்குப் பெறுமதி வாய்ந்த தடயமாகவுள்ளன.

'...சோழ ஆட்சியின் இறுதிக் கூற்றில், நிலத்தைத் தனிப்பட்ட சொத்தாகக் கொள்ளும் பண்பு, காணியுரிமை காணப்படத் தொடங்குகின்றது. தனி நபர்களுக்கிடையேயும், தனி நபர்களுக்கும் கோயில்களுக்கிடையேயும், அத்தகைய நிலச்சொத்துக் கொடுக்கல் வாங்கல்கள் பல நடந்தன. இதன் பலனாகச் சிலர், பெருந்தொகையான அளவு நிலங்களைச் சேகரித்துக் கொண்டவராய், உள்ளுர்ச் செல்வாக்குள்ள பெரு நிலச் சுவாந்தர்களாக வளர்ந்திருந்தனர். இதன் எதிர் நிலைச் சமன்பாடாகச் சிலர், தங்கள் காணி நிலங்களை இழந்தனர். அவர்கள் தம் நிலையினின்றும் இழிந்து, குத்தகைச் செய்கைக்காரராக அன்றேல் காணியில்லாச் செய்கைக்காரராக ஆகியிருத்தல் வேண்டும். இது, 13ஆம் நூற்றாண்டில் கீழைக் காவேரிப்படுகையில் புதிய ஒரு கமச்செய்கை முறைமையின் மேற்கிளம்புகையைச் சுட்டுவதாகவுள்ளது. இது, நிலமானிய அமைப்பொன்றின் தோற்றத்தைச் சுட்டுகிறதா அல்லவா என்பது பற்றி இந்நிலையில் எதனையும் கூறமுடியாதிருப்பினும், இப்புதிய கமச்செய்கை அமைப்பு, அந்த வட்டாரத்துக்குரிய பல குழுமங்களினது உறவுகளிலே மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாகவேயுள்ளது.'35

'வலங்கை இடங்கைக் காணியாளரும் இராசகாரியத்தாரும், 15ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிற் காணப்பட்ட சமூக முரண்பாடுகள்' என்னும் கட்டுரையில், கறா‘ஷ’மாவும் சுப்பராயலுவும் பின்வருமாற கூறுகின்றனர்.

'பெரும்படியாக நோக்கிக் கூறும் பொழுது, சோழ மத்திய அரசன் சிதையின் பின்னர் வரும் மூன்று நூற்றாண்டு களையும், அதாவது 13-வது முதல் 15-வது நூற்றாண்டு வரையுள்ள காலத்தை, மாறுங் காலமாகக் கொள்ளலாம் போலத் தெரிகின்றது. இக்காலத்தில், இப்பிரதேசங்களில் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்களுடன் ஒரு புதிய சமூக உருவாக்கம் பிறப்பிக்கப் பட்டது. அத்துடன், அதே வேளையில், சமூகத்தின் பல்வேறு பிரிவுளிடையே முரண்பாடுகளும், மோதல்களும் இம்மாற்ற காலத்திற் காணப்பட்டன. தமிழ் நாட்டிற் பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க ஆட்சி நிறுவப்பட்டமை, இந்தப் புதிய சமூக உருவாக்கத்தின் ஸ்திரமான நிறுவுகையையும் மாற்ற காலத்தின் முடிவையும் குறிப்பதாகவுள்ளது.'

இந்த உருவாக்கத்துக்கு இலக்கியம் எவ்வாறு உதவியது என்பது பற்றியும், இந்த உருவாக்கத்தைச் சட்ட ரீதியாக நியாயப்படுத்துவதற்கு இலக்கியம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது பற்றியும் உசாவும் நமக்கு, இக்காலப்பிரிவின் இலக்கிய வளர்ச்சியின் அமைப்பையும் அவ்விலக்கிய வளர்ச்சி பெற்ற, வழங்கிய கருத்துநிலைப்பாட்டினையும் அறிந்து கொள்வதே முக்கியமாகும்.

நுண்ணிய விவரங்களை இந்நேரத்தில் ஒரு சிறிது தவிர்த்து நோக்குவோமானால், இரண்டு வளர்ச்சி நெறிகளை அவதானிக்கலாம். ஒன்று, அரசர்களைப் புகழ்ந்து பாடும் பண்பு. இது இறுதியில் அவர்களை வீர வணக்கம் செய்வதாக அமைவதைக் காணலாம் (ஒரு புறத்தில் மெய்க் கீர்த்திகளிலும் மறுபுறத்தில் உலா, பரணியிலும் இதைக் காணலாம்): மற்றது, பக்தி இயக்கம் சம்பந்தப்பட்டது ஆகும். இந்த இயக்கம் பல்லவர்களுக்கு மிக அத்தியாவசியமான ஒன்று ஆகிற்று. அதன் காரணமாக அவர்கள் இதற்கு அரச ஆதரவு வழங்கத் தொடங்கினர். இப்பல்லவர்களுள் ஓர் அரசன், சமண பௌத்தக் கருத்து நிலைகளைக் கிண்டல் செய்வதற்கு நாடக அரங்கத்தைப் பயன்படுத்தினான். சோழர் காலத்திலும் இவ்வியக்கத்துக்கு அதிக அரச ஆதரவு வழங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் வழிவந்த பாடல்களைத் தொகை வகைப்படுத்துவதற்கு அரச முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த இயக்கத்தோடு சம்பந்தப்பட்டவர்களின் வரலாற்றினை எழுதும் பணியினை அமைச்சர் ஒருவரே ஏற்றுக் கொள்கின்றார்.

இந்த இலக்கியச் செல்நெறிகளின் அரசியல் முக்கியத்துவத்தைப் பேற்றன் ஸ்ரைன் காண்கின்றார். பிராமணர்களையும், செல்வந்தர்களான கமச்செய்கைக்காரரையும் ஒருங்கு சேர்த்த இந்தப் புதிய மத இயக்கத்துக்குப் பல்வேறு வரலாற்றாசிரியர்களும் தந்துள்ள வெவ்வேறு காரணங்களை மீள நோக்கி மதிப்பீடு செய்த ஸ்ரைன். 'பல்லவர் காலத்தில் தோன்றிய பிராமண-விவசாய நேச நல்லிணக்கமானது தம்மை நம்பி வாழ்ந்தோருடன் சேர்ந்து கமச் செய்கையில் ஈடுபட்டிருந்த நிலச்செய்கையாளரினதும், தமது மதப்பணிகள் காரணமாக வன்மையான கருத்துநிலைப்பலத்தினைக் கொண்டிருந்தோரினதும் முக்கிய நலங்களின் ஒருங்கிணைவினைத் தளமாகக் கொண்டிருந்தது; கிடைத்த நன்மைகள் இரு பகுதியாருக்கும் உதவுவனவாகவும், நல்லிணக்கம் நீடித்துநிற்பதாகவும் அமைந்தது' எனக் கூறுகின்றார்.36 கமச் செய்கைக் குழுக்களுக்கும் மதகாரியங்களுக்குமிருந்த இந்த நல்லுறவு நிலை தான், 'தென்னிந்தியாவில் எட்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை நிலவிய உள்ளூர் நிலைப்பட்ட சுயாட்சிப் பிரசேங்களின் நல்லியக்கத்துக்கா‘ன அச்சாணியாக விளங்கியது.'37

பக்திப்பாடல்களைத் தொகுப்பதற்கும், கோயில்களிற் படிப்பதற்கும் சோழர் கால ஆட்சியின் உச்சக் கட்டத்தின் பொழுது மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் மூலம் பக்தி இயக்கத்தினால் வந்த பேறுகளைத் திடப்படுத்திக் கொள்வதற்குச் செய்யப்பட்ட இலக்கிய முயற்சிகள் பற்றிக் குறிப்பிடும் பொழுது, ஸ்ரைன், பின்வருமாறு கூறுவர்.

'பல்லவர் ஆட்சிக் காலத்தில், பிராமணர்களும் விவசாயிகளும் பரஸ்பர நன்மையை அடிப்படையாகக் கொண்ட, இறுக்கமான சார்புறவுகளை உண்டாக்கிக் கொண்டனர். சோழர் ஆட்சிக் காலத்தில் இந்த நல்லுறவு அதன் வளர்ச்சிக்கான சாத்தியப்பாடு பூரணத்துவம் பெறுமளவுக்குப் பூத்துப் பொலிந்தது........... இந்த உள்ளூர் விவசாயத் தலைவர்கள் சமூக மேன்மையையும் முதன்மையையும் அநுபவித்தனர். அத்துடன் பிராமணியக் கல்வியுடனும் சடங்குகளுடனும் இத்தலைவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஊடாட்டமிருந்தது. அந்த ஊடாட்டம் காரணமாக அந்தப் பிராமணியப் பண்பாட்டின் பெரும் பகுதியினை இவர்கள் தமது பொது வாழ்க்கை நடத்தைகளிலும், வீட்டு நடத்தைகளிலும் ஏற்றுத் தழுவிக் கொண்டனர். இந்த நடத்தை நடைமுறைகள், இவர்களை, அந்த உள்ளூர்ச் சமூகத்தின் குறைந்த அந்தஸ்துள்ள குழுக்கலிருந்து பிரித்து வைத்தது. பிராமணர்களைப் போன்று மேலாதிக்கமுடையதாகவிருந்த இந்த விவசாயக் குழுக்கள், தமிழ்க் கல்விப் பாரம்பரியம் ஒன்றினைப் பேணிக் கொண்டன. பெரிய புராண ஆசிரியரான சேக்கிழா‘ இக்காலத்திற் பெரும் புலவர்களாகவிருந்த வெள்ளாளருக்கான நல்லுதாரணமாகத் திகழ்கின்றார். இந்த உள்ளூர் விவசாயக் குழுக்களுட் சிலர், பிராமணர்களைப் போன்றே, வடமொழியறிவிலும் மிக உயர்ந்த பாண்டித்தியம் பெற்றிருந்தனர். இது, பதின்மூன்றாம் நூற்றாண்டின் சைவ சித்தாந்த இயக்கம் மூலம் தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது.'38

இந்த இலக்கிய உருவாக்கம், இந்திய வரலாற்றில் தமிழ்பெறும் இடம் சம்பந்தமாகப் பெரு முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது. இது தொடர்பாக, றொமிலாதாப்பரின் இரு கூற்றுக்கள் முக்கியமானவையாகும்.

(அ) 'இந்திய நாகரிகத்தின் வளர்ச்சிக்குக் கணிசமான பங்களிப்புச் செய்த, 'தமிழ் ஆளுமை' யெனப் பொதுப்படையாக எடுத்துக் கூறப்படத்தக்க பண்பின் மேற்கிளம்புகையைப் பல்லவர் காலம் கண்டது.'39

(ஆ) 'தெற்கின் ஆதிக்க உச்சம் சோழர்களின் வலுவினால் மாத்திரம் ஏற்பட்ட ஒன்றன்று, தமிழ்ப் பண்பாட்டின் பூரணமான உருப்பெறும் இக்காலத்திலேயே நிகழ்ந்ததும் அதற்குக் காரணமாகும்.'40


ஏழு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியின் முக்கியத்துவம் இப்பொழுது பூரணமாகப் புலனாகியுள்ளது எனக் கொள்ளலாம். இந்தியப் பாரம்பரியத்தினுள் 'தமிழ்ப்பண்பாடு' என நாம் இன்று கொள்வதன் உருப்பேற்றில், இலக்கியம் பெறும் தனிமுக்கியத்துவமும் இதனால் ஒரு சிறிது விளங்கிற்று எனலாம்.

இப்பண்பு உருப்பெற்ற தன்மை பற்றி ஆராயும் இக்கட்டத்திலே, ஒரு விடயம் பற்றிக் குறிப்பிடல் வேண்டும். தமிழர் பண்பாடு பற்றிய மேற்குறிப்பிட்ட எண்ணக் கருவுக்கு எதிரான நிலையொன்று நவீன காலத்தில் தோன்றியது. தனித் தமிழியக்கம், திராவிடர் கழகம், சிறப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய பிரதேச நிலைப்பட்ட இயக்கங்கள், தமிழைப் புகழும் வேளைகளில் தவிர, மற்றைய நிலைகளில், அனைத்திந்திய நோக்கினைத் தவிர்த்து, பண்பாட்டு நோக்கில் அகச் சார்பு நிலைப்பட்ட ஒரு கண்ணோட்டத்தினை ஊக்குவித்துள்ளன என்பதை இங்க குறிப்பிடல் வேண்டும்.

1400 முதல் 1800 வரையுள்ள அடுத்த கால கட்டத்தை 'விஜயநகர காலம்' எனக் குறிப்பிடுதல் மரபு, இதன் சமூக பொருளாதார இயல்பு பற்றி அதிக ஐயம் கிடையாது. கத்லீன் கௌ பின்வருமாறு கூறுவர்.

'விஜயநகர, மராட்டிய அரசுகள், தாம் எதிராக நின்ற வட இந்திய முஸ்லிம் பேரரசுகளின் செல்வாக்கினாற் போலும், 'திறையுறை நிலமானிய அமைப்புக் காலம்', என்று குறிப்பிடப் பெறும் அமைப்புக்குரிய அரசியல், படை உறவுகள் சிலவற்றைப் புகுத்தின.'41

இக்கால கட்டத்தை நிலமானியக் காலம் எனக் கொள்வதில் ஏ.கிருஷ்ணசுவாமிக்கு எவ்வித தயக்கமும் இல்லை. தனது 'கூறாக்க அமைப்பு' அரசு முறைமையின் தொடாச்சியைத் தொடர்ந்து வற்புறுத்த பேற்றன் ஸ்ரைன் விரும்புகின்றார். ஆனால், கறஷ’மா, சுப்பராயலுவின் மேற்காட்டிய முடிபு, ஸ்ரைன் கொள்வதற்கு எதிரான நிலையையே சுட்டுகின்றது. ஆயினும், இக்காலப்பிரிவில் ஏற்படும் மாற்றங்களின் முக்கியத்துவத்தை ஸ்ரைன் விளங்கிக் கொள்ள முனைகின்றார். இக்காலப் பகுதியின் முக்கிய அமிசமாக அமைவது நில முறைமையில் ஏற்பட்ட மாற்றமாகும். கால ஓட்டத்தில் தமிழ்நாட்டில் அதிகாரத்திலிருந்த தெலுங்குப் படைவீரரின் நுழைவின் முக்கியத்துவத்தை உணர ஸ்ரைன் தவறவில்லை. 'இப்புதிய தலைமையுடன் புதிய கமச் செய்கைக்காரர் குழுக்கள் தொழிலாளர் குழுக்கள் வணிகக் குழுக்கள் வந்து சேரந்தன.'42 தமிழ்நாட்டின் சனத் தொகையமைப்பிற் புதிதாகச் சேர்க்கப்பட்ட இந்த அமிசமும், மாறிய பொருளாதார உறவு அமைப்பும், யாவற்றுக்கும் மேலாக, கோட்டைத் தானாபதிகளாகவும் மற்றும் படை, நிருவாகப் பதவிகளிலும் பிராமணர்கள் நியமிக்கப்படத் தொடங்கியதால் அவர்கள் வகிக்கத் தொடங்கிய புதிய நிலைமையும், கருத்துநிலைக் கட்டமைப்பு முழுவதையுமே மாற்றியமைத்தன.

புதிதாக அமைக்கப் பெற்ற அரசியல் அதிகார முறைமையினைச் சட்ட ரீதியாக நியாயப்படுத்தவும், சனரஞ்சகப்படுத்தவும் மதத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவை பெரிதாகவிருந்தது. இதனால், இந்து மதத்தின் நடை நியமங்கள் சமஸ்கிருத வேட்டையுடன் நிலைநிறுத்தப்பட்டன. தமிழ் நாட்டினுள் வந்து சேர்ந்த புதிய சந்திகளைத் தமிழ் நாட்டுடன் இணைத்துக் கொள்வதற்கு இந்து மதமும் சமஸ்கிருதமும் பயன்பட்டனவெனலாம். இக்காலத்தில் முக்கியத்துவம் பெறும் பிராமணரல்லாதார் மடங்களின் மேற்கிளம்புகையை மதிப்பிடுவதற்கு இப்பின்னணி பற்றிய அறிவுத் தெளிவு அவசியமாகும்.

இந்திய மரபினைச் சாராத இரு மதங்களான இஸ்லாம் கிறித்தவத்தின் வருகை, தமிழிலக்கியம் பற்றிய எண்ணக்கருவிலேயே பெருத்த கருத்துநிலை மாற்றங்களை ஏற்படுத்திற்று.

இக்காலப் பகுதியின் சமூகப்பிரக்ஞையை ஆராயும் பொழுது, மேற்கூறிய, ஒன்றுக்கொன்று முரன்பட்டு மோதிய கருத்துநிலைகளின் தொழிற்பாட்டினைக் கண்டு கொள்ளலாம். இதுவே இக்காலத்தினை வளமும் வேறுபாடும் பொலிந்த ஒன்று ஆக்ககின்றது.

இதுவரை எடுத்துப் பேசப்படாத கால கட்டம், கி.பி.600க்கு முற்பட்ட காலமாகும். சங்க காலம், சங்கம் மருவிய காலம் எனக் கொள்ளப்படும் காலப் பிரிவுகள் இதற்குள் அடங்கும். இன்றைய நிலையில் கி.பி 600க்கு முற்பட்ட காலத்தின் வரலாறானது. முன்னரிருந்ததிலும் பார்க்கத் தெளிவுடையதாகவுள்ளதென்பதை ஒத்துக் கொள்ளவே வேண்டும்.

600-1400க் காலப் பிரிவில் நடந்தேறிய வளர்ச்சிகளின் பின்னணியில் வைத்து நோக்கும் பொழுது, 600க்கு முற்பட்ட காலம், சமூக, பொருளாதார, அரசியல் ஒழுங்கமைப்பில், அதற்குப் பின்வரும் காலப்பிரிவில் பெரிதும் வேறுபட்டதாய், எதிர்நிலைப் பண்புகளுடையதாகவிருப்பதைக் காணலாம். 600க்கு முற்பட்ட காலம் பற்றிய பகுப்பாய்வு பின்வரும் பிரச்சினைகளை நன்கு பரிசோதிப்பதாக அமைதல் வேண்டும்.

1. திணைக் கோட்பாட்டின் சமூக-பொருளாதார முக்கியத்துவம். ஒவ்வொரு திணையிலும் நிலவிய உற்பத்தி முறைமையின் தனி முக்கியத்துவமம், அத்திணையிற் காணப்பட்ட சமூக உறவுகளும்.

2. தமிழ்நாட்டில் வர்க்க உருவாக்கம், அதிக விவசாய வளர்ச்சியும், நீர்ப் பாசனமும் பெறும் இடம்; வணிகக் குழுக்களின் வரலாறு; பிரபுத்துவத்தின் மேற்கிளம்புகை.

3. தமிழ்நாட்டில் அரச உருவாக்கம்-இதனுள் மருதத்தில் ஏற்படும் வளர்ச்சிகள், வேந்தர்-மன்னர் வேறுபாடுகள், குழுக்களுக்கான சொந்த ஆளுமைத் தலைமையிலிருந்துது நிலத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியதிகாரம் தோன்றும் முறைமை, அரசின் வர்க்க இயல்பு, அதன் அதிகாரத்துக்கான கருவிகள் ஆதியனபற்றிய ஆய்வுகள் இடம் பெறும்.

4. அரசியல் அதிகாரத்தையும், சமூக அதிகாரப்படி முறையையும் சட்டபூர்வமாக நியாயப்படுத்துவதற்குச் சமஸ்கிருத நியமங்களை இணைத்துச் சொல்லப்பட்ட, அதிகரித்துச் செல்லும் (மத) பண்பாட்டு நடைமுறைகள்.


சங்ககாலச் சமூக உருவாக்கத்தில் இலக்கியத்தின் இடத்தினை நிர்ணயம் செய்யும் ஆய்வுகள் பலவுள்ளன.43

(i) ஏறத்தாழ கி.மு.100 கி.பி. 250 சங்க காலம்

(ii) ஏறத்தாழ கி.பி. 250-கி.பி. 436/450 மூவேந்தராட்சிச் சிதைவு

(iii) ஏறத்தாழ கி.பி. 436/450 கி.பி. 560/590 களப்பிர இடையீடு.44

இவற்றை முறையே வீர யுகக் காலம், நிலமானியக்காலம், வணிக மேலாண்மைக் காலம் எனக் குறிப்பிட இவ்வாசிரியர் முன்னர் முயன்றுள்ளாரெனினும் அவ்வாறு கூறுவது இக்கட்டங்களின் சமூக-பொருளாதாரப் பண்பினைச் சரிவர எடுத்துக்காட்டுவதாக அமையாது. ஆழமான ஆய்வு நிலைமையைச் சீர்படுத்தும்.

மேலே எடுத்துக் கூறப்பட்டனவ காரணமாக, தமிழிலக்கிய வளர்ச்சியை நான்கு பெரும் காலப்பிரிவுகளாக வகுத்துக் கொள்ளலாம்.

1. ஆரம்பம் முதல் கி.பி.600 வரை

2. கி.பி 600 முதல் கி.பி. 1400 வரை

3. கிபி. 1400 முதல் 1800 வரை

4. கி.பி 1800 முதல் இற்றை வரை.

ஆயினும், முதலாவது காலப்பிரிவின் கட்டங்களை நிர்ணயித்துக் கொள்வதும், அக்கட்டங்களைத் தனிப்பிரிவுகளாக (தனிச் சமூக உருவாக்கங்களாக)க் கொள்ளலாமா எனத் தீர்மானித்துக் கொள்வதும், உடனடியாகச் செய்யப்பட வேண்டியவையாகும்.


குறிப்பும் சான்றுகளும்

1. Barry Hindess and Paul Q.Hirst, Pre-Capitalist Modes of Production, London, 1975, p.309.

2. Nilakanta Sastri, The Culture and History of the Tamils, Calcutta, 1963.

3. Hindess and Hirst. op.cit., p.13.

4. Philosophy in the USSr, Problems of Historical Materialism, Moscow, 1981, p.51.

5. உற்பத்திக்கும் சொந்த நுகர்ச்சிக்கும் வேண்டிய பருப்பொருட் பண்டங்களைப் பெற்றுக் கொள்வதற்கான, வரலாற்று வழி வரும், முறைமையே உற்பத்தி முறைமையாகும். அது, ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவும், ஒன்றில் மற்றொன்று தங்கி நிற்பனவுமாகிய உற்பத்திச் சக்திகளினதும், உற்பத்தி உறவுகளினதும் கூட்டுநிலையாகும்.

6. Maurice Godlier, Perspectives in Marxist Anthropology, Cambridge, 1979, p. 63.

7. Senaka Bondaranayake, The Periodization of Sri Lankan history

8. சங்க காலத்துக்குப் பின், பல்லவர் காலத்துக்கு முன்வரும் காலப்பகுதியை இருண்ட காலம் எனக்கருதும் கொள்கை எதிர்க்கப்பட்டுள்ளது. இருண்ட காலம் எனும் தொடருக்கு அதிகம் தெரியப்படாத காலம் என்பதே கருத்தெனில், அக்கருத்துப் பொருந்தாது என்பதை எடுத்துக் காட்டும் வகையிற் பல தரவுகள் இன்று உள்ளன. பண்பாட்டுச் சாதனைகளைப் பொறுத்த வரையிலுங் கூட இதனை இருண்ட காலம் எனல் முடியாது. சிலப்பதிகாரமும் திருக்குறளும் இக்காலத்தைச் சேர்ந்தவையே. பின்வருவனவற்றைப் பார்க்க.

K. Sivathamby, Drama in Ancient Tamil Society, Chapter IV, M. Arunachalam, The Kalbharas in the Pandya Country, Madras 1979.

K.R. Venkataramann, Transactions of the Archailogical Society of south India, 1956-7, pp.10 மயிலை, சீனி, வெங்கடசாமி, 'களப்பிரர் காலம்,' சென்னை.

9. N.Subramanian, Sources of the History of Tamil nadu Ancient period) in N.E. Roy (ed) Sources of the History of India, Calcutta, 1980, p.306.

10. N.R. Ray (ed), loc, cit, Subbrayalu, Inscriptional sources for the History of the Colas of the Early Medieval South Indian History in the same volume (ed.) N.R. Roy, p.371-9.

11. See Dr.D. Ramachandraiyer's Presidential Address of the South History Congress, Third Session, Erode, 1982, pp. 7 & 8.

12. 1984 வரையில் மூன்று வெளியீடுகள் வந்துள்ளன. முதலாவது வெளியீடாக வந்த Studies in Socio, Cultural Change in Rural Villages in Tiruchirapalli district, Tamilnadu, India (1980) என்பது பொருளாதார வரலாற்றுத் தெளிவுக்குப் பெருத்த பங்களிப்புச் செய்யும் கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

13. Kh. Momjan, Landmarks in History, Moscow, 1980, p.46.

14. Nilakanta Sastri, The Culture and History of Tamils, p. 87.

15. Ibid., p.62

16. Burton Stein, Peasant State and Society in Medieval South India, OUP. New Delhi, 1980, p. 67.

17. See D. Rama;chandra Iyer, Ioc., cit., K. Nambi Arooran, The Origin of the Saiva Mathas in Thanjavur district (Paper).

18. Nilakanta Sastri, op., cit., p. 69.

பறமஹல் என்னும் சொல், தமிழ்நாட்டினுள்ளே, சிறிது வடமேற்குத் திசையிலுள்ள பீடபூமி நிலப்பகுதியைக் குறிப்பதாகும்.

N. Guha, Baramahal records, Ioc, cit., N. Ray(ed)

19. D.A. Washbroke, The Emergence of Provincial Politics in the Madras Presidency, 1870-1920, Cambridge, 1976, p.11.

20. Burton, Stein, op. cit., p.75.

21. See N. Vanamamalai's paper on The Anti-feudal Struggles during Cola period, IATR, 1968.

22. Kathleen Gough, Modes of Production in Southern India in Economic and Politial Weekly, Special Supplement, Feb, 1980.

23. Kathleen Gough Rural Society in Southh East India, Cambridge, 1981, p.110.

24. Ibid.

25. Karl Marx, Pre-Capitalist Economic Formations E.J. Hobswahm (ed) London, 1964, P.83.

26. Guna, Asiatic Mode: A Socio Cultural perspective` Delhi, 1984.

27. B. Stein, Essay on South India, Hawaii, 1975.

28. b. Stein, Peasant State and society .... p.8,

29. Ibid., p. 264.

30. Ibid., p. 274.

31. பொட்செல்வத்தின் சமூக உற்பத்தி, பரிவர்த்தனை, விநியோகத்தின் பொழுது மக்களிடையே தோன்றும் உறவுகளை உற்பத்தி உறவு என்பர்.

32. K. Sivathamby, Early South Indian, Societyy and economy, The Tinai concept in Social Scientist, Tivandrum, No.29.

33. Hobswahm, op. Cit., p. 61-62.

34. ஆசிய உற்பத்தி முறைமையினை விளங்கிக் கொள்வதில் தொக்கி நிற்கும் கருத்துநிலைப் பிரச்சினைகள் பற்றிய ஒரு தெளிவான நோக்கினைத் தமது கலந்துரையாடல் மூலம் ஏற்படுத்திய பேராசிரியர் றொமிலா தாப்பருக்கு என் நன்றி உரித்து. See Hindess and Hirst, Chapter 4.

35. Karashima, The Prevalence of Private landownsing in Lower Canveri Valley in the Late Chola period and its historical implications in Studies in Socio-Cultural Change in Rural Villages in Tiruchirapalli District, Tamilnadu India-Japan, 1980.

36. Burton Stein, op. cit. p.83

37. Ibid. p.87

38. Ibid. pp. 340-1.

39. Romila Thapar, A History of India, Vol. I-Penguin, 1976, p. 197.

40. Ibid. p.194.

41. Kathleen Gough, op.cit. p.418.

42. B. Stein, p.418.

43. K. Kailasapathy. Tamil Heroic Poetry

K. Sivathamby i. Early South Indian Society Economy Ioc, cit.

ii.Development of Aristocracy in Ancient Tamilnadu
Vidyodaya Jornal of Arts, Science & Letters, Vol.4, No. 182, 1971.

iii.Drama in Ancient Tamil Scoeity.

கேசவன், மண்ணும் மனித உறவுகளும், சென்னை, 1980.

M.G.S. Narayanan, Studies in South Indian History, Calicut.

44. K. Sivathamby Drama in Ancient Tamil Society, Chap. IV


பின் இணைப்பு - I

இலக்கிய வரலாறு பற்றி, 1835-1929க் காலப்பிரிவில் வெளிவந்த
சில முக்கியமான நுல்களின் பட்டியல்

1856 Robert Caldwell, A Comparative Grammar of the Dravidian language.

1859 Simon Casie Chity, The Tamil Plutarch, Ceylon (ed) T.P. Meenakshisundaran, Colombo, 1946.

1860 விநோதரச மஞ்சரி (பதிப்பு), எம்.வீ.வேணுகோபால பிள்ளை (1953).

1865 John Murdoch, Classified Catalogue of Tamil Printed books with Introductory Notices, Madras, 1865, Reprint, 1968.

1881 Robert Caldwell, A History of Tinnevely (Reprint, 1981)

1886 ஜே.ஆர். ஆர்ணல்ட் பாவலர் சரித்திர தீபகம் (The Galaxy of Tamil Poets). மானிப்பாய், 1886.

1890 T. Chelvakesavaraya Mudaliyar, A Series of articles.

1895 தமிழ் சுதேசமித்தரனின் கட்டுரைத் தொடராக வந்தவை 1901 இலும், 1931 இலும் நூலுருவில் வெளியிடப்பெற்றன.

1891 P. Sundarampillai, Some Milestones in the History of Tamil Literature (first written on the issue of the Age of Tirugnana Sambondhar, first Published as Monograph in 1891, Second Edition, 1895).


1894 M.Seshagiri Sastri, Essay on Tamil Literature, SPCK Press, Madras.

1895 V. Kanakasabhai Pillai's Tamils Eighteen Hundred Years Ago. appeared as a serial in the Madras Review. First published as a book in (1904) Higgonbothom & Co., Madras, 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

1899 சபாபதி நாவலர் திராவிட பிரகாசிகை, மறு பதிப்பு, 1960.

1900 G.U. Pope (Trans. and ed., The Tiruvacakam, Oxford, Calarendon Press.

1901 முருகதாச சுவாமிகள் எனும் தண்டபாணி சுவாமிகள் (1840-1899), புலவர் புராணம், 1908.

1903 செந்தமிழ் ஏடு தொடக்கம், பாண்டித்துரைத் தேவரின் உதவியுடன்.

1904 Chengalvaraya Pillai, History of the Tamil Prose Literature, Reprint 1928, Town Press, Conjeevaram.

1905 M.S. Purnalinkampillai, A Primer of Tamil Literature, Madras, 1904.

1909 S.K. Aiyangar, Augustan Age of Tamil Literature (The first part was published as Vol.I No.4 and the other one as Vol. I. No.5 of Tamilian Antiquary)

1912 Somasundara Bharathy, Tamil Classics.

1913 மு. ராகவ ஐயங்கார், வேளிர் வரலாறு, செந்தமிழ் பிரசுரம்.

1914 M. Srinivasa Aiyengar, Tamil Studies, Madras.

1916 அ. குமாரசாமிப் புலவர், தமிழ்ப் புலவர் சரித்திரம்

1917 S. Krishnaswamy Aiyangar, The Chronology of the Sangam works, so called of Tamil Literature. Lecture delivered at Pachaiyappa's College on 7.3.1917. Published in Ancient Indian and South Indian History and Culture-Poona, 1941.

1917 K.v. Subramania Iyer, Historical Sketches of Ancient Dekhan, Madras.

1918 பன்னிரு புலவர் சரித்திரம், Vol. II, Oxford, Madras.

1919 S.K. Deivasikhamani, Tamils and their language.

1919 M.S. Ramaswami Aiyangar and B. Seshagiri Rao, Studies in South India, Jainism, Madras.

1922 கே.எஸ்.ஸ்ரீனிவாச பிள்ளை, தமிழ் வரலாறு தஞ்சாவூர்

1922-1923 Publication of R. Swaminatha Aiyar's Views Caldwell's on CGDL in Tamilar Nesan, the Journal of the Tamilian Educational Society, Madras (fonded in 1917). The writing of the late Swaminatha Aiyarr have now been well edited and brought out as "Dravidian theories", Madras Law Journal Office, Madras, 1975.

1923 ஜி.எஸ். துரைசாமி பிள்ளை, தமிழ் இலக்கியம், சங்க காலம்.

1924 கிருஷ்ணசாமி ஐயங்கார், கடைச் சங்ககாலம், செந்தமிழ் பிரசுரம்.

1924 g. Slater, Dravidian Elements in Indian Culture, London.

1927 M.S. Puranalingam Pillai, Tamil India Reprint 1963

1928 P.T. Srinivas Iyangar, Pre-Aryan Tamil Culture (serialised in Journal of Indian History).

1929 M.S. Purnalingam Pillai, Tamil Literature (Revised and enlarged), This is an extended version of his Primer of Tamil Literature.

1929 உ.வே. சாமிநாத ஐய்யர், சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் (Lectures given to the University of Madras in 1927), Seventh edition, 1978.

1929 K.A. Nilakanta Sastri, The Pandyan Kingdom, London.


பின் இணைப்பு II

பண்டைய, இடைக்கால இலக்கியங்கள்
சிலவற்றின் அச்சுப்பதிவு

1846 தொல்காப்பியம் எழுத்ததிகாரமும் நச்சினார்க்கினியருரையும்

1850 நச்சினார்க்கினியர் (பதிப்பு) மழவை மகாலிங்கையர்.

1860 திருக்கோவையாரும் ஆறுமுக நாவலருரையும்

1868 தொல்காப்பியம் சொல்லதிகாரம், சேனா வரையம் (பதி), சி.வை.தாமோதரம் பிள்ளை.

1869 தொல்காப்பியம் எழுத்ததிகாரம். இளம் பூரணம் சுப்பராயச செட்டியார் பதிப்பு.

1881 வீர சோழியம், சி.வை.தாமோதரம் பிள்ளை பதிப்பு.

1883 இறையனார் களவியலுரை, சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்பு

1885 தொல்காப்பிய பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் பேராசிரியம் சி.வை.தா.பதிப்பு.

1887 கலித்தொகை சி.வை.தா.பதிப்பு

1887 சீவகசிந்தாமணி நச்சினார்க்கினியர் உரை உ.வே.சா.பதிப்பு

1889 பத்துப்பாட்டு நச்சினார்க்கினியர் உரை. உ.வே.சா.பதிப்பு

1892 சிலப்பதிகாரம் உ.வே.சா.பதிப்பு.

1894 புறநானூறு பழைய உரை உ.வே.சா பதிப்பு.

1898 மணிமேகலை உ.வே.சா.பதிப்பு.

1903 ஐங்குறுநூறு உ.வே.சா.பதிப்பு.

1904 பதிற்றுப் பத்து உ.வே.சா.பதிப்புஉ.வே.சா.பதிப்பு.

1914 நற்றினை பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பதிப்பு.

1915 குறுந்தொகை, டி.எஸ். அரங்கசாமி ஐயங்கார் பதிப்பு.

1918 பரிபாடல் உ.வே.சா.பதிப்பு.

1920 அகநானூறு ரா.ராகவையங்கார்.


பின் இணைப்பு III

இலக்கிய வரலாறு பற்றி 1930-1948க் காலப் பகுதியில்
வெளிவந்த முக்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியல்

1930 கா. சுப்பிரமணிய பிள்ளை, தமிழ் இலக்கிய வரலாறு சென்னை.

1930 மறைமலை அடிகள், மாணிக்க வாசகர் காலமும் வரலாறும், கழகம்.

1930 V. Ramachandra Dikshither, Studies in Tamil Literature and History, London.

1931 K.A. Nilakanta Sastri, Foreign Notices of South India, Madras.

1931 வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி, தமிழ் மொழியின் வரலாறு, சென்னை.

1932 K.A.N. Sastri, Studies in Cola History & Administration, Madras.

1933 வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி, தமிழ்ப்புலவர் சரித்திரம், சென்னை.

இந்நூலில், இலக்கிய வரலாற்றின் தேவை பற்றி ஆனந்த போதினியில் வெளியான கட்டுரை இடம் பெற்றுள்ளது.

1934 ரி.என்.தாணு அம்மாள், பிற்காலச் சோழரும் இலக்கிய வளர்ச்சியும், சென்னை.

1934 சுப்பிரமணிய முதலியார், சங்க நூற்புலவர் பெயர் அகராதி, சென்னை.

1935 K.A. Nilakta Sastri, Colas, Madras.

1936 சோமசந்தர தேசிகர், தமிழ்ப் புலவர்கள் வரலாறு, சென்னை.

1936 C.V.Narayana Aiyar, Origin and Early History of Saivaism in South India, Madras.

1936 ந.கனகராஜ ஐயர், தமிர் புலவர்கள் வரலாறு முதற்பகுதி.

1937 மு.ராகவ ஐயங்கார், சாசனத் தமிழ்க்கவி சரிதம், சென்னை.

1937 K.G. Sesha Aiyar, Cera Kings of the Sangam Period, London.

1937 சோமசுந்தர தேசிகர், தமிழ்ப் புலவர்கள் -பதினெட்டாம் நூற்றாண்டு, சென்னை.

1938 மயிலை சீனி வேங்கடசாமி, கிறிஸ்தவமும் தமிபம், சென்னை.

1938 C.Minakshi, Administration and Social Life under the Pallavas, Madras.

1938 சி.கணேசையர், ஈழ நாட்டுத் தமிழ்ப் புலவர் சரித்திரம், சுன்னாகம்.

1939 Ancient and Modern Tamil Poets, Kazhakam.

1940 T.V. Mahalingam, Administration and Social life under the Vijayangar, Madras.

1940 சதாசிவ பண்டாரத்தார், பாண்டியர் வரலாறு, சென்னை.

1940 மயிலை, சீனி, வேங்கடசாமி, பௌத்தமும் தமிபம், சென்னை.

1941 ரா.ராகவ ஐயங்கார், தமிழ் வரலாறு, அண்ணாமலை.

1941 A. Chakravarti, Jaina Literature in Tamil, Arrah (Bihar)

1945 P.S. Subramanya Sastri, Historical Tamil Readerr, Annamalai.

1946 தமிழ்ப் புலவர் வரிசை, முதலாம், இரண்டாம் புத்தகங்கள், கழகம்.

1947 வையாபுரிப்பிள்ளை, இலக்கியச் சிந்தனை, சென்னை.

1948 தமிழ்ப்புலவர் வரிசை, கழகம்.

1948 எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழின் மறுமலர்ச்சி.

1948 எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழ்ச்சுடர்மணிகள்.

1949 வையாபுரிப்பிள்ளை, தமிழர் பண்பாடு.

1949 மா.இராசமாணிக்கம்பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை.

1949 டி.வி.சதாசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் வரலாறு.



பின் இணைப்பு IV

புதிதாக வளர்ந்து வந்த தமிழ் வாசகரிடத்தே பண்டைய, மத்திய காலத் தமிழ் இலக்கியங்களைச் சனரஞ்சகப் படுத்திய இலக்கியச் சொற் பொழிவுகளின் பதிப்பு வரலாறு. இவை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் வெளியிடப் பெற்றவை.

அகநானூற்றுச் சொற்பொழிவுகள் - 1940, 1946, 1947

புறநானூற்றுச் சொற்பொழிவுகள் - 1944, 1948, 1956, 1966

பரிபாடற் சொற்பொழிவுகள் - 1955, 1961

கலித்தொகைச் சொற்பொழிவுகள் - 1940, 1943, 1950, 1959, 1970

குறுந்தொகைச் சொற்பொழிவுகள் - 1940, 1948, 1957, 1972

நற்றிணைச் சொற்பொழிவுகள் - 1942, 1950, 1957, 1972

ஐங்குறுநூற்றுச் சொற்பொழிவுகள் - 1955, 1965

பதிற்றுப்பத்துச் சொற்பொழிவுகள் - 1955, 1966,

பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள் - 1952, 1957, 1969

பதினெண் கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகள் - 1956, 1965

சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள் - 1. 1959, 1968, 1971
2. 1959
3. 1960, 1962
4. 1961
5. 1964
6. 1964

இத்தகவலினைத் தந்த, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மேலாளர் திரு.இ.முத்துக்குமாரசாமி அவர்களுக்கு நன்றியுரித்து.


பின் இணைப்பு V

பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களது
நூல்களின் காலவரன் முறை

1946 - திராவிட மொழிகளின் ஆராய்ச்சி
1947 - இலக்கியச் சிந்தனை
1948 - தமிழின் மறுமலர்ச்சி
1948 - தமிழ்ச் சுடர் மணிகள்
1949 - தமிழர் பண்பாடு
1950 - இலக்கிய உதயம் I
1952 - இலக்கிய உதயம் II
1954 - இலக்கிய தீபம்
1954 - இலக்கிய மணிமாலை
1956 - History of Tamil Language and Literature
1956 - இலக்கிய சிந்தனைகள்
1956 - கம்பன் காவியம்
1956 - சொற்கலை விருந்து
1957 - சொற்களின் சரிதம்
1957 - காவிய காலம்

பின் இணைப்பு VI

1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிவந்த
இலக்கிய வரலாற்று நூல்களுட் சில.

1950 - சென்னைத் தமிழ்ப் புலவர்கள் முதற்பகுதி

1951 - சென்னைத் தமிழ்ப் புலவர்கள் இரண்டாம் பகுதி

1951 வி.செல்வநாயகம் - தமிழ் இலக்கிய வரலாறு

1952 முதற் பாகம் துல் - சங்கத் தமிழ்ப் புலவர்

1956 நான்காம் பாகம் வரை - வரிசை

1953 எஸ்.ஏ. இராமசாமிப்புலவர் - தமிழ்ப் புலவர் சரித்திரம் நான்காம் புத்தகம்

1953 M.M.Uwise - Muslim Contribution to Tamil Literature

1953 L.Renou (ed) - L'nde

1954 எஸ்.இராமசாமி நாயுடு - தமிழ் இலக்கியம்

1954 மயிலை சீனி வெங்கடசாமி - சமணமும் தமிழும்

1955 சு.வித்தியானந்தன் - தமிழர் சால்பு

1955 T.V.சதாசிவ பண்டாரத்தார் - தமிழ் இலக்கிய வரலாறு (250-600 AD)

1955 எஸ்.ஏ.இராமசாமிப் புலவர் - தமிழ்ப் புலவர் வரிசை

1955 சதாசிவ பண்டாரத்தார் - தமிழ் இலக்கிய வரலாறு

1955 சோமலெ - வளரும் தமிழ்

1956 வி.செல்வ நாயகம் - தமிழ் உரைநடை வரலாறு

1958 மு. இராசமாணிக்கம் - கால ஆராய்ச்சி

1958 துரைசாமிப்பிள்ளை - சைவ இலக்கிய வரலாறு

1959 எ.வி.சுப்பிரமணிய ஐயர் - தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி

1959 மயிலை சீனி வேங்கடசாமி - தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

1959 மயிலை.சீனி வேங்கடசாமி - மறைந்துபோன தமிழ் நூல்கள்

1960 கோபால கிருஷ்ணன் - குழந்தை இலக்கிய வரலாறு

1961 C.Jesudasan and - A History of Tamil Literature
Hepzibah Jesudasan

1962 வெள்ளை வாரணனார் - திருமுறை ஆராய்ச்சி

1962 எஸ்.இராமகிருஷ்ணன் - தமிழ் இலக்கிய வரலாறு ஒர் அறிமுகம்

1965 எஸ். இராமகிருஷ்ணன் - Makers of Madern Tamil

1965 T.P.Meenakshisundaram - History of Tamil Literature

1965 சுந்தர சண்முகம் - அகராதிக் கலை

1966 அ.மு. பரமசிவானந்தம் - பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை

1966 சாலை இளந்திரையன் - தமிழில் சிறுகதை

1966 சாலை இளந்திரையன் - சிறுகதைச் செல்வம்

1966 க.கைலாசபதி - பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்

1966 கா.சிவத்தம்பி - தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்

1967 க.கைலாசபதி - தமிழ் நாவல் இலக்கியம்

1968 Kailasapathy - Tamil Heroic Poetry

1969 சுந்தரசண்முகம் - A Short History of Lexiography

1969 A.V. Subramania Aiyar - Tamil Studies I

1969 மு.அருணாசலம் - 14-ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாறு

1969 மு.அருணாசலம் - 15-ம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாறு

1970 A.V.Subramania Aiyar - Tamil Studies II

1971 மு. அருணாசலம் - தமிழ் இலக்கிய வரலாறு 11-ம் நூற்றாண்டு

1972 மு.வரதராசன் - தமிழ் இலக்கிய வரலாறு

1972 டேவிட் பாக்கியமுத்து - தற்காலத் தமிழ் இலக்கியத்தில் மனிதர்

1973 Kamil Zvelabil - Smile of Muruga on Tamil Literature of South India.

1973 மு. அருணாசலம் - 12-ம் நூற்றாண்டுத் தமிழிலக்கிய வரலாறு

1973 நா.வானமாமலை - தமிழ் நாவல்கள் ஒரு மதிப்பீடு

1973 இரா.தண்டாயுதம் - தற்காலத் தமிழ் இலக்கியம்

1974 சி.சு.செல்லப்பா - தமிழ் சிறுகதை பிறக்கிறது

1975 சாலினி இளந்திரையன் - வாழ்க்கை வரலாறு இலக்கியம்

1974 கே.கிருஷ்ணசாமி - தமிழில் தல புராணங்கள்

1974 டேவிட் பாக்கிய முத்து - விடுதலைக்குப்பின் தமிழ் நாவல்கள்

1974 க.திரவியம் - தேசியம் வளர்த்த தமிழ்

1975 இரா.தண்டாயுதம் - மு.வ.வின் இலக்கியங்கள்

1975 மு.அருணாசலம் - 9-ம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு

1976 எஸ்.தோதாத்ரி - ஜெயகாந்தன் ஒரு விமர்சனம்

1976 தி.முருகரத்தினம் - புதுமைப்பித்தன் சிறுகதைக்கலை

1977 பெ.கோ.சுந்தரராஜன் - தமிழ் நாவல்-நூற்றாண்டு
சோ.சிவபாதசுந்தரம் - வரலாறும் வளர்ச்சியும்

1978 கா.சிவத்தம்பி - ஈழத்தில் தமிழ் இலக்கியம்

1978 கா.சிவத்தம்பி - நாவலும் வாழ்க்கையும்

1978 நா.வானமாமலை - புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்

1978 ஏ.ஜெகநாதன் - புதுக்கவிதை - ஒரு திறனாய்வு

1978 வீராசாமி - மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு

1979 கோ.கேசவன் - மண்ணும் மனித உறவுகளும்

1979 எம்.தேவசகாய குமார் - தமிழ்ச் சிறுகதை வரலாறு

1980 பி.எஸ் ராமையா - மணிக்கொடிக் காலம்

1980 ஜெயக்குமார் - பள்ளு இலக்கியம்

1980 எஸ்.தோதாத்ரி - தமிழ் நாவல் அடிப்படைகள்

1981 மு.சண்முகம் பிள்ளை - சிற்றிலக்கிய வளர்ச்சி

1981 தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்- சங்க காலம்

1981 K. Sivathamby - Drama in Ancient Tamil Society

1981 கோ. கேசவன் - பள்ளு இலக்கியம் ஒரு சமூகவியல் பார்வை

1983 எண்பத்திரண்டில் தமிழ் - (I.I.T.S)

1983 ச.அரங்கராசன் - பாட்டியல் நூல்கள்

1984 Noboru Karashima - South Indian History of Society

1984 கா.சிவத்தம்பி, அ.மார்க்ஸ் - பாரதி-மறைவு முதல் மகாகவி வரை

1984 கி.இராசா - இலக்கிய வகைமை ஒப்பாய்வு

1985 நிர்மலாமோகன் - குறவஞ்சி இலக்கியம்

1985 ரகுநாதன் - இளங்கோவடிகள் யார்

1985 அ.மார்க்ஸ் - சிற்றிலக்கியம்-சில குறிப்புக்கள்

1985 J.R. Marr - The Eight Anthologies

1986 - புதுக் கவிதையும் புதுப் புரக்ஞையும் (காவ்யா)

1986 Kamil Zvelabil - Love conventions in Tamil Poetry

1986 Robert Frykenberg
Pauline Kolenda - Studies of South India

1976 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஒன்பது தொகுதி வெளியீடான
1986 'இலக்கியக் கொள்கை'

1986 K. Kailasapathy - On Art and Literature


பின் இணைப்பு VII

தமிழ் இலக்கிய வரலாற்றுக் கால வகுப்பு


1. றொபேட் கால்டுவேல்

A comparative Grammar of the Dravidian Languages, 1856.

1. THE JAINA CYCLE (of the Madura Sagam)
Ca.8th c.A.D to Ca 13th C.A.D.

2. `THE TAMIL RAMAYANA CYCLE 13th c.A.D

3. THE SAIVA REVIVAL CYCLE 13th c.A.D. 14th c.A.D.

4. THE VAISHHNAVA CYCLE the same time.

5. THE LITERARY REVIVAL 15th c.A.D. 16th c.A.D

7. THE MODERN SCHOOL 18th c.A.D. - 19th c.A.D.

சி.வை.தாமோதரம் பிள்ளை

வீர சோழியப் பதிப்பின் முன்னுரையில், மதுரை, 1881.

1. அபோத காலம், சரித்திரத்துக்கு முந்திய காலம் அட்சரத்துக்கு முந்திய காலம் அகத்தியருக்கு முந்தியது.

2. அட்சர காலம்.
அட்சரம் தொடங்கிய காலம் அகத்தியர் தமது இலக்கண நூலை எழுதி முடித்த காலம் வரை.

3. இலக்கண காலம்
அகத்தியரின் பன்னிரு சீடர்கள் இலக்கண நூல்கள் எழுதிய காலம்.

4. சமுதாயகாலம்.
கி.மு. 10 கி.மு. 150 முச்சங்க காலம்.

5. அனாதர காலம்.
கி.மு. 150, கி.பி. 50

6. சமண காலம்
கி.பி.60 to கி.பி. 350

7. இதிகாச காலம்
கி.பி. 350, கி.பி. 1150.

8. ஆதிர காலம்
கி.பி.1150 to கி.பி.1850.

3. வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி (1870-1903).
(q.v.)K. ZVELABIL, TAMIL LITERATURE, LEIDEN, 1975.

a. ஆதிகாலம் கி.மு. 8000 கி.பி 100

b. மத்திய காலம் முன்னரைப் பகுதி கி.பி.100 கி.பி.600
பின்னரைப் பகுதி, கி.பி. 600-கி.பி.1400

c. நவீன காலம் 1400க்குப் பின்.

4. ஜே.வின்ஸன், 1903 (?)
(q.v) KAMIL ZVELEBIL, TAMIL LITERATURE, LEIDEN 1975.

1. THE PERIOD OF EASSAYS, PAMPHLETS AND SHORT POEMS 6th c.A.D.

2. THE PERIOD OF JAINA PREDOMINANCE, 8th c.A.D.

3. THE PERIOD OF STRUGGLE BETWEEN SAIVAITES AND JAINAS 9th c.A.D.

4. THE PERIOD SAIVA PREDOMINANCE AND 10th c.A.D.

5. THE VAISNAVA PERIOD 15th - 16th, c.A.D.


5. எம்.எஸ் பூரணலிங்கம் பிள்ளை,

APRIMER OF TAMIL LITERATURE, MADRAS, 1904.

1. THE AGE OF SANGAMS, upto 100 A.D.

2. THE AGE OF BUDDHISTS and JAINS, A.D., 100-A.D. 600

3. THE AGE OF RELEGIOUS REVIVAL, A.D. 600-A.D. 1100.

4. THE AGE OF LITERARY REVIVAL A.D. 1100-A.D. 1400.

5. THE AGE OF MUTTS AND RELIGIOUS INSTITUTIONS, A.D. 1400-A.D. 1700.

6. THE AGE OF EUROPEAN CULTURE, A.D. 1700.


6. எம். சிறினிவாச ஐயங்கார்.
TAMIL STUDIES, MADRAS, 1914.

I. ACADEMIC (Cankam Period)
(a) Animstic, B.C. 600 B.C. 200
(b) Buddhist, B.C. 200 B.C. 150

II. CLASSIC (Cilapathikaram, Manimekalai-Pattupattu etc). Jaina, A.D. 150 to A.D. 500

III. HYMNAL (Bhakti Literature) Brahmanic, A.D. 500. A.D. 950.

IV. TRANSLATIONS (Kamba Ramayanam, Kachiappa Skantham etc. Sectains, A.D. 950 A.D. 1200,

V. EXEGETICAL (Commentaries of Naccinakiniar Adiyarkunallar etc.)

Reformatory, A.D. 1200-A.D. 1850.

VI. MISCELLANEOUS
modern, A.D. 1450-AD. 1850.

7. கே.எஸ். ஸ்ரீநிவாஸ பிள்ளை,
தமிழ் வரலாறு 1922.

1. புராதன நிலையிலிருந்து சங்க கால முடிவு வரை கி.பி.300 முடிவு வரை.

எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, சிலம்பு, மேகலை, குறள், உட்பட

2. சங்க கால முடிவிலிருந்து கி.பி.10 ஆம் நூற்றாண்டு முடிவுரை.

3. 11 ஆம் நூ. முதல் 14ஆம் நூற்றாண்டு வரை.

4. 15-ம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை.


8. மறைலை அடிகள்.
மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1930

1. தனித் தமிழ்க்காலம், மகா பாரதப் போரில் உதவிய முரஞ்சியூர் முடிநாகராயர் முதல் கி.பி. முதலாம் நூற். வரை.

2. புத்த காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி. 4ம் நூற். வரை.

3. சமண காலம் 4ம் நூற். முதல் 7ம் நூற்.வரை

4. சைவ வைணவ காலம் 7ம் நுற்.முதல் 14ம் நூற். வரை.

5. பார்ப்பண காலம் 14ம் நூற் முதல் 18ம் நூற். வரை.

6. ஆங்கில காலம் 18ம் நூற். முதல் இன்று வரை.


இலக்கிய வரலாறு,
சென்னை 1953, நான்காம் பதிப்பு

1. தலைச் சங்கமும் இடைச் சங்கமும்

2. கடைச் சங்க காலம், கி.மு. 13-15 நூற். முதல் கி.மு. 3ம் நூற். வரை

3. மாணிக்க வாசகர் காலம், கி.பி. 3ம் நூற்.

4. சமணர் ஆட்சிக் காலம்.

5. தேவார காலம். கி.பி.570-655வரை

6. ஆழ்வார் காலம், கி.பி. 850 வரை

7. திருவிசைப்பா‘க் காலம் கி.பி. 1011.

8. சித்தர் காலம்.

9. சமணர்தம் நூல்கள் ஆராய்ச்சி, சீவக சிந்தாமணி வளையாபதி வீரசோழியம் கி.பி.10ம் நூற். முதல் 13ம் நூற். வரை.

10. சைவ காப்பிய காலம். கி.பி. 11-12ம் நூற். கலிங்கத்துப் பரணி, பெரிய புராணம், கந்தபுராணம் ஒட்டக்கூத்தர், புகழேந்தி, கம்பர்.


தமிழ் இலக்கிய வரலாறு, 1951

1. சங்க காலம் கி.பி. முதலாம் நூற். முதல் கி.பி 3ம் நூற்.வரை.

2. சங்க மருவிய காலம், கி.பி.3ம் நூற். இறுதி முதல் 6ம் நூற்.முதல் ஐம்பது வருடங்கள் வரை.

3. பல்லவர் காலம், கி.பி. 6ம் நூற். பிற்பகுதி முதல் 9ம் நூற். முதற்பாதி வரை.

4. சோழர் காலம் கி.பி. 9ம் நூற் பின்னரைப் பகுதி முதல் 14ம் நூற் வரை.

5. நாயக்கர் காலம் 14ம் நூற். இறுதி முதல் 18ம் நூற். முதல் வரை.

6. ஐரோப்பியர் காலம், நாயக்கர் காலம் முதல் 18-19ம் நூற்.வரை.


11. காமில் ஸ்வெபில்

TENTATIVE PERIODIZATION OF THE DEVELOPMENT OF TAMIL, TAMIL CULTURE VOL. IV.

NO.1, 1957.

A. OLD TAMIL Cca 6/7th c.AD

1. EARLY OLD TAMIL. கி,பி. 3/4 நூற்.எட்டுத் தொகை.
பத்துப்பாட்டிற் பெரும்பாலானவை

2. MIDDLE OLD TAMIL. Cca கி.பி. 3/4-5/6 நூற்.
கலித்தொகை, பரிபாடல், குறள், களவழி

3. LATER OLD TAMIL கி.பி. 4/5-6/7 நூற்.
நாலடியார், பழமொழி, சிலம்பு.

B. MIDDLE TAMIL

1. OLD MIDDLE TAMIL, கி.பி.7/6 கி.பி.850
நாயன்மார், ஆழ்வார்கள் பெருந்தேவனார் பாரதம்.

2. MIDDLE MIDDLE TAMIL, கி.பி.1200
சீவக சிந்தாமணி, கம்பராமாணம், பெரிய புராணம் உரைகள்

3. OLD MIDDLE TAMIL, கி.பி.1200 கி.பி.1750/1800
சீவஞானபோதம், வில்லிபாரதம் முதலியன.

C. NEW TAMIL.

கி.பி. 1750/1800 முதல் இன்று வரை வீரமாமுனிவர், சிவஞான முனிவர்.

12. எஸ்.வையாபுரிப் பிள்ளை.

காவிய காலம், மதுரை, 1957.

1. முற் சங்க காலம், எட்டுத் தொகை பத்துப்பாட்டு நூல்கள் பெரும்பாலானவை. கி.பி.100.கி.பி.350.

2. தொகை செயல் காலம், நன்றிணை கறுந்தொகை ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகம், புறம் தொகுக்கப்பெற்ற காலம். கி.பி. 400, கி.பி.500.

3. பிற் சங்க காலம், கலி, பரிபாடல் கி.பி.600, கி.பி.750.

4. பக்தி நூற்காலம்,
தேவாரம், பிரபந்தம்,
திருமுருகாற்றப்படை கி.பி. 600 கி.பி.900.

5. நீதி நூற்காலம்,
(திருக்குறள், பிற நீதி நூற்காலம்)
கி.பி.600-கி.பி.850)

6. முற்காவிய காலம்
ஐம்பெருங்காப்பியம்
கி.பி 750.கி.பி.100

7. பிற்காவிய காலம்
பாரதம், இராமாயணம்,
கி.பி. 1100-கி.பி 1300.

8. தத்துவ நூற் காலம்.
கி.பி.1000-கி.பி.1350.

9. வியாக்கியான காலம்
இளம் பூரணர், பேராசிரியர், பரிமேலழழகர் கி.பி.1200-கி.பி.1500

10. புராண பிரபந்த காலம்.
குமரகுருபரர், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், சிவப்பிரகாசர், கந்தபுராணம்,
கி.பி.1500-கி.பி.1850.

11. தற்காலம் (Modern).
இராமலிங்கர், நாவலர், சுந்தரம்பிள்ளை,
சுவாமிநாத ஐயர், பாரதி,
கி.பி.1850 முதல்

13. அ.சிதம்பபரநாதன் செட்டியார்
INTRODUCTION TO TAMIL POETRY
Tamil Culture, Vol. III, No.1, 1958

1. SANGAM LITERATURE
கி,மு,200/ கி.பி. 200.

2. POST SANGAM LITERATUURE
கி.பி. 200-கி.பி.600

3. EARLY MEDIEVAL LITERATURE
கி.பி.600-கி.பி.1200

4. LATER MEDIEVAL LITERRATTURE
கி.பி.1200-கி.பி.1800

5. PRE-MODERN LITERATURE
கி.பி.1800-கி.பி.1900

6. MODERN LITERATURE
1900 முதல் இன்று வரை.

14. திரு.திருமதி.ஜேசுதாசன்.

A HISTORY OF TAMIL LITERATURE
Calcutta, 1961.

1. THE BEGINNINGS (தொல்காப்பியம்)

2. THE SANGAM PERIOD
(கி.பி.150-250)

3. THE POST SANGAM PERIOD
குறள், சிலம்பு, மணி, கலி
கி.பி. 250-கி.பி.600

4. THE BHAKTI MOVEMENT
தேவாரம், திருவாசகம், திருமந்திரம்
திவ்வியப் பிரபந்தம்
கி.பி.600-கி.பி.900

5. THE AGE OF EPICS
சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரிய புராணம்,
யாப்பருங்கலம், நன்னூல் உரைகள்
கி.பி. 900 கி.பி.1200

6. THE DECADENT PERIOD
நளவெண்பா, வில்லிபாரதம்,
சித்தர் பாடல்கள் கி.பி. 1200-கி.பி.1650

7. THE PERIOD OF TRANSITION
கிறித்துவ, முஸ்லிம் பங்களிப்புக்கள்
தாயுமானவர்
கி.பி.1650 - கி.பி. 1800

8. THE MODERN PERIOD
இராமலிங்கள், பாரதி, கல்கி,
புதுமைப்பித்தன்.


15. எஸ். ராமகிருஷ்ணன்

தமிழ் இலக்கிய வரலாறு ஒரு அறிமுகம்
சென்னை, 1962.

1. சங்க காலம், கி.மு. 50 - கி.பி.300

2. சங்க மருவிய காலம்
தொல், குறள், சிலம்பு, மணிமேகலை
கி.பி.300-கி.பி.600

3. பக்தி நூல்களின் காலம்
கி.பி.500 - கி.பி.850.

4. பொற்காலம்
கி.பி.850-கி.பி.1200

5.பிற்காலம்
கி.பி.1200 - கி.பி. 1800

6. தற்காலம்
கி.பி.1800 முதல் தற்காலம் வரை
(20 நூற்றண்டினை மறுமலர்ச்சிக் காலம்
எனத் தனியே தந்துள்ளார்).

16. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
A HISTORY OF TAMIL LITERATURE
Annamalai, 1965

1. THE GOLDEN AGE OF THE CANKAM POETS AND ITS CONTINUATION.

2. THE PALLAVA PERIOD

3. THE CHOLA AGE AND ITS CONTINUATION.

4. THE AE OF FOREIGN CONTACTS AND MODERN AGE.


17. ஜெ.எம். சோமசுந்தரம் பிள்ளை.

A HISTORY OF TAMIL LITERATURE
Annamalai Nagar, 1968.

1. THE CLASSIC AGE
அகத்தியம், தொல்காப்பியம், குறள், எட்டுத் தொகை,
பத்துப்பாட்டு 400-கி.பி.300.

2. THE AGE OF BUDDHISM AND JAINISM
சிலமபு, மணி, ஒழுக்க இலக்கியங்கள் கி.பி.250-கி.பி.600

18. மு.வரதராசன்
தமிழ் இலக்கிய வரலாறு, 1972.

I.பழங்காலம்.

a. சங்க இலக்கியம்
கி.மு.500-கி.பி.200

b. நீதி இலக்கியம்
கி.பி.100-கி.பி.500

c. பழைய காப்பியங்கள்
சிலம்பு, மணி, முத்தொள்ளாயிரம்.

II. இடைக்காலம்

a. பக்தி இலக்கியம்
கி.பி.600-கி.பி. 900

b. காப்பிய இலக்கியம்
கி.பி.900-கி.பி.1200

c. உரை நூல்கள்
கி.பி.1200-கி.பி.1500

III. இலக்கிய (Modern Period)

a. 19ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவ இலக்கியம், இராமலிங்கர் நூல்கள்....

b. இருபதாம் நூற்றாண்டு பாரதி, சுலிகி, புதுமைப்பித்தன் சிறுகதைகள், கட்டுரைகள்...)

19. மு. அருணாசலம்
தமிழ் இலக்கிய வரலாற, 12-ம் நூற். முதற்பாகம்,
மாயுரம் 1973.

1. கடைச் சங்கத்துக்கு முந்திய காலம்.
கி.பி. 300 வரை.

2. கடைச் சங்க காலம்
தொல்காப்பியம், சங்க இலக்கியம்
திருக்குறள், கி.மு.300-கி.பி.250

3. கடைச் சங்கத்தை அடுத்த காலம்
கீழ்க் கணக்கு நூல்கள், காரைக்கால் அம்மையார், திருமூலர்,
முதலாழ்வார்கள், மணிமேகலை.
கி.பி.250-கி.பி.600.

4. பாசுர காலம்
தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் சில கீழ்க் கணக்கு
நூல்கள் பெருங்கதை, களவியல் கி.பி.600-கி.பி. 900

5. சோழர் ஆதிக்க காலம்.
சிந்தாமணி, கம்பராமாயணம், பெரிய புராணம், திருவிசைப்பா, இலக்கண நூல்கள், உரைகள், கி.பி.850-கி.பி.1300.

6. சமய எழுச்சிக் காலம்
குருபரம்பரை, சைவசாத்திரங்கள், அருணகிரிநாதர், வைணவ உரைகள்,
கி.பி.1150-கி.பி.1600.

7. புராண எழுச்சிக் காலம்
சைவ வைணவப் புராணங்கள், சைவ சாத்திரங்கள், உரைகள்,
கி.பி.1450-கி.பி. 1700

8. பிற நாட்டார் தொடர்பு
கி.பி.1700 கி.பி-1900.

9. தற்காலம்
1900க்கப் பின்

a. கி.பி.1900-கி.பி.1950
புத்துணர்ச்சிக் காலம்.

b. 1950-க்குப்பின்
அமெரிக்க, இரசியாவுக்கு அடிமைப்பட்ட காலம்.


20. காமில் ஸ்வெலபில்
TAMIL LITERATURE
(In the Series Handbush Der Orientalistic)

A PRE-DEVOTIONAL LITERATURE

1. THE BARDIC CORPUS:

கி.மு. 150-250 கி.பி
(சங்க இலக்கியம்)

2. POST-CLASSICAL PERIOD:
கி.பி.250-கி.பி.600
சிலம்பு, மணி, கீழ்க்கணக்கு
தொள்ளாயிரம்

B. DEVOTIONAL AND POST DEVOTIONAL LITERATURE

3.DEVOTIONAL TESTS கி.பி. 600- கி.பி.900
(பக்தி இலக்கியம்)

POST DEVOTIONAL LITERATURE MEDIEVAL PERIOD

4. EARLY MEDIEVAL PERIOD
கி.பி. 900-கி.பி. 1200

பாண்டிக்கோவை, நந்திக்கலம்பகம், சீவகசிந்தாமணி, நீலகேசி, சூளாமணி, பெருங்கதை, கம்பன், தண்டி, உரைகள்.

5. LATE MEDIEVAL PERIOD
கி.பி. 1200- கிபி. 1750

சைவ சித்தாந்த நூல்கள், வீரசைவ நூல்கள், வேதாந்த தேசிகர், பொய்யாமொழிப் புலவர், இரட்டையர் புறத்திரட்டு, தனிப்பாடல், சித்தர் பாடல்கள், பாகவத புராணம், குறவஞ்சி, பற்று, உமறுப் புலவர்.

6. PRE MODERN LITERATURE
கி.பி.-1750-கி.பி.1900

7. MODERN AND CONTEMPORARY LITERATURE
கி.பி. 1900 முதல் இற்றை வரை


21. ஞா. தேவநேயப் பாவணர்.

தமிழ் இலக்கிய வரலாறு. வட ஆற்காடு 1979.

1. தலைக் காலம்
ஏறத்தாழ கி.மு.50,000 கி.பி. 1500
(குமரிக் கண்டம், முச் சங்கம்...)

2. இடைக் காலம்.
கி.மு. 1500 கி.பி.18ஆம் நூற்றாண்டு
(ஆசிரியர் வருகை, திருமுருகாற்றுப்படை கம்பராமாயணம், சிவப்பிரகாசர்).

3. இக் காலம்
20-ம் நூற்றாண்டு
உரையிலக்கியம், பிராமணரல்லாதாரியக்கம்.
தனித் தமிழியக்கம்.


22. ந. சுப்பிரமணியம்

AN INTRODUCTION TO TAMIL LITERATURE
Madras. 1981.

1. SANGAM AGE கி.மு. 2ம் நூற். முதல் கி.பி.3ம் நூற். வரை

2. AGE OF DEVOTION கி.பி. 6ம் நூற். 10ம் நூற்.

3. THE EPIC AGE கம்பன் முதல் சிவப்பிரகாசர் வரை, அதிவீரராமபாண்டியன் கி.பி.14-16ம் நூற்.

4. AGE OF CONSOLIDATION AND INVESTIGAGIOIN கி.பி. 17ம் நூற் - 19ம் நூற்.

5. AGE OF EXPERIMENTATION. 19ம் நூற்.
வீரமாமுனிவர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்கர்,
ராஜம் அய்யர், சுப்பிரமணிய பாரதி.


பின் இணைப்பு VIII

வரலாறுப் பொருள் இயங்கியற் பொருள்
முதல் நிலை முதல் நிலை


சமூக உருவாக்கம்

உற்பத்தி முறைமை உற்பத்தி உறவுகள்

உற்பத்திக்கும், தனி நிலை பருப் பொருட் செல்
நுகர்வுக்குமான பருப் வத்தின் சமூக உற்பத்தி
பொருட்களைப் பெற்றுக் பரிவர்த்தனை, விநியோகம்
கொள்வதற்கான, வரலாற்றுக் நடை முறைகளின்
சூழமைவினால் நிர்ணயிக்கப் பொழுது மக்களிடையே
பெறுவதான முறைமை எற்படும் உறவுகள்.

சமூக உறவுகள்

மக்கள் தமது இணை நிலை நடவடிக்கைகளின் பொழுது
எற்படுத்திக் கொள்ளும் உறவுகள்


(I) பருப் பொருள் நிலைப் பட்டவை (II) கருத்து நிலைப் பட்டவை

சமூக இருக்கை நிலை

சமூகத்தின் பொருள் நிலை வாழ்க்கை
பருப்பொருள் உறபத்தியும் அதனால்
வரும் உறவுகளும்


சமூகப் பிரக்ஞை

உற்பத்தியிலுள்ள பொழுதும் சமூக இருக்கைகளின்
பொழுதும் ஏற்படும் பிரக்ஞை நிலை

சமூகப் பிரக்ஞை வடிவங்கள்


தனித்துவமானவையாக அது அரசியற் கருத்து நிலை
அதற்கேற்ற சுய இயக்கப் சட்டக் கருதுகோள்கள்
பண்பினவாகத் தொழிற்படும் அறக் கோட்பாடுகள் மதம்
விஞ்ஞானம் மெய்யியல்,
கலை + இலக்கியம்

மனிதனை, அவனது சமூக
உறவு நிலையில் வைத்து
சித்தரிப்பது; சொல்லால்
ஆனது.



நூல்கள், சஞ்சிகைகள், கட்டுரைகள் அகநிரல்


அகநானூறு 69, 70, 148
அடியும் முடியும் 143
அருட்பா 83
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர், 36, 52, 102, 154
இரு மகாகவிகள் 143
இலக்கிய அகராதி 124
இலக்கியமும் கருத்துநிலையும் 52
இலக்கியமும் சமூகவியலும் 143
இலக்கிய விமர்சனம் 143
இறையனார் அகப்பொருள் 75, 73, 149
ஈழநாட்டுப் புலவர் சரித்திரம் 128
உண்மை நெறி விளக்கம் 84
உதயதாரகை 106
எட்டுத் தொகை 68, 88
ஐங்குறுநூறு 69, 70, 102
ஐஞ்சிறுகாப்பியங்கள் 76
ஐம்பெருங்காப்பியங்கள் 76
ஆக்ஸ்ட்போர்ட் ஆங்கில இலக்கிய வரலாறு 167, 186
கம்பன் காவியம் 54
கம்பராமாயம் 54, 174
கலித்தொகை 69, 70, 102
கிறித்தவமும் தமிழும் 152
குமுதம் 182
குறவஞ்சி 145, 175
குறுந்தொகை 69, 70
கேம்பரிட்ஜ் ஆங்கில இலக்கிய வரலாறுத் தொகுதி 181
கேம்பிரிட்ஜி ஆங்கில இலக்கிய வரலாறு 167, 186
கொன்றைவேந்தன் 90
சசானத்தமிழ்க் கவி சரிதம் 128
சித்தாந்த தீபிகா 105
சிலப்பிரகாசம் 84
சிலப்பதிகாரம் 71, 88, 225
சிவஞான போதம் 84
சொல் புதிது சவை புதிது 148
தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம் 133
தமிழ் நாவலர் சரிதை 59, 88, 91, 151
தமிழ் லெக்சிகன் 125, 160, 193
தமிழ்ப் புலவர் சரித்திரம் 107, 154
தமிழ்ப் பண்பாட்டில் புரட்சி 155
தமிழ் வரலாறு 108
தமிழ்ச் சுடர் மணிகள் 157
தமிழிலக்கியத்தில் மதமும் மானுடமும் 147, 151
தமிழர்களின் பண்பாடும் வரலாறும் 109, 149, 225, 226
(Culture and History of the Tamils)

தமிழ்இலக்கிய அரிச்சுவடி 100, 108, 153
(A Primer of Tamil Literature)

தமிழ் உரைநடையின் வரலாறு 107
(History of Tamil Prose)

தமிழ் நூற்பட்டியல் 107, 147
(Classified Catalogue Books of Tamil)

தமிழர் சால்பு 143
தமிழ் இந்தியா 104
தனித் தமிழ் இலக்கியத்தின் அரசியற் பின்னணி 152, 156
திராவிடப் பிரகாசிகை 110
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் 101, 111,155
திருக்குறள் 65, 87, 88, 90, 135, 171, 225
திருக்கோவையார் 79
திருப்பதிகம் 79
திருப்பாவை 138
திருமுருகாற்றுப்படை 138
திருமுறைகள் 80, 81
திருமுறை கண்ட புராணம் 83
திருவாசம் 90, 114
திருவருட்பயன் 84
திருவள்ளுவமாலை 88
தேவாரம் 78, 79, 82, 83, 90, 102, 135, 141, 156, 163, 165
நற்றினை 69, 70
நன்னூல் 69
நாலடியார் 90
நாலாயிரத் திவ்விய பிரபந்தம் 81, 166
நாவலர் நூற்றாண்டு நினைவு மலர் 153
நாவலும் வாழ்க்கையும் 54, 187
பஞ்சதந்திரம் 135
பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் 140, 148, 157, 185, 226, 228
(Drama in Ancient Tamil Scoeity)

பத்துப்பாட்டு 68, 88
பதிற்றுப்பத்து 69, 72, 210
பரிபாடல் 69, 163
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் 143, 149, 151
பன்னிரு திருமுறை வரலாறு 150
பன்னிரு பாட்டியல் 68
பாவலர் சரித்திர தீபகம் 98, 106, 153
புலவர் புராணம் 110
புறநானூறு 69, 72, 163
பெரிய புராணம் 90
போற்றிப்பஃறொடை, 84
மண்ணும் மனித உறவுகளும் 228
மறைந்து போன தமிழ் நூல்கள் 185
மாணிக்கவாசகர் காலமும் வரலாறும் 191
முதுமொழி 162
முற்காலப் பிற்காலத் தமிழ்ழப்புலவர் 54
வடமொழி இலக்கிய வரலாறு 173, 187
வினாவெண்பா‘ 84
வீரசோழியம் 76
An Introduction of Tamil Literature 140, 185
An Introduction to Study of Tamil literature 140
A History of Tamil Language and literature 140. 148
A History of Modern Criticism 53
A History of Italian Literature 187
Asiatic Quarterrly 114. 117
Bibilotheca Malabarica 90
Cera kings of Sangam Period 154
Colas 127
Development of Aristocracyy of Ancient Tamilnadu, 228
Dutch Studies in Tamil 152
Economic and Political Weekly 227
Encyclopaedia Britanica 112
Essay on South India 227
Essays on Tamil Literature 155
History of Tamils 52
Historical Tamil Reader 129
Historical roots of Some Dern Conficts in South India 152
History of Tamil Literature 140
History of Sri Vaishnavanism in Tamil Country, 150
Indian Antiquary 117
Indian Review 117
Intepretation of Ancient Indian History 156
Jaina Literature in Tamil 149
Journal of Arts, 157
Landscape and Poetry 140, 144
Land Marks in History 226
Landmarks in the History of Tamil Literature 157
Lecturers on Saiva Siddanta 151
Madras Christian College Review 117
Marxists on Literature 50, 53
Modes of Production in South India 227
New Directions in Literary History 551
New Perspectives in Criticism 53
Peasant State and Society in Medieval South India 149, 226, 227
Politics and Social Conflict in South India 152
Problems of Historical Materialism 225
Rise of English Literary History 147
Rural Society in South East India 227
Sangam Polity 140
Studies in Cola History and Administration 127, 154
Tamilian Antiquary 105, 117, 155
Tamil Culture 154, 157
Tamil Heroic poetry 140, 143, 148, 228
Tamil Studies 52, 150 152, 154, 155
The Contribution of European Scholars to Tamil 151
The Eight Tamil Anthologies with Special Reference to Purananuru and patirruppathu 148
The History and Doctorine of Ajivikas. 157
The History of Tamil Christian Literature 147
The Indian Antiquary 153, 155
The Smile of Murugan 148
The Tamil Plutarch 105, 154
The Wonder That Was India 157
.....

ஆசிரியர் அகநிரல்

அகத்தியர் 74, 76
அடியார்க்கு நல்லார் 87
அண்ணாதுரை சி.என். 121, 131, 171
ஆண்டாள் 174
அந்த்ரே பெற்றேய்(ல்) 203
(Andre Betteile)
அந்திரனோவ் 139
அப்பர் 198
அம்பலவாணர் 154
அரங்கநாதமுனி 81
அரவிந்தன் மு.வை.151
அரிஸ்டோட்டில் 51, 59
(Aristotle)
அருணாசலம் அ.144
அருணாசலம் மு.81, 137, 140, 150, 167, 226
அலன்ரேற் (Alian Tate) 52
அவலோகி தேஸ்வரர் 76
ஆர்னல்ட் சதாசிவம் பிள்ளை 98, 106, 153
ஆறுமுக நாவலர் 96, 152
ஆழ்வார்கள் 78, 80, 82
ஆனை முத்து, வெ 156
இராகவையங்கார் மு 111, 128, 153
இராகவையங்கா‘ர்.ரா 111, 125
இராசமாணிக்கனார்.மா 149, 151
இராமன்.கே.வி 199
இராமசந்திர அய்யர் 226
இராமசந்திரன் டி.என். 57
இராமசந்திர தீட்சிதர் 122
இராமசாமி நாயக்கர். ஈ.வெ.94, 121, 131
இராமாநுஜம் ஏ.கே. 130
இராமநுசர் 81, 85, 113, 173, 174
இராமலிங்க ரெட்டி.சி 96
இராமய்யா 144
இளங்கோ 34, 83, 91
இளம்பூரணர் 87
உமாபதி சிவம் 47, 83
உரையாசிரியர்கள் 151
எம்சிபா ஜேசுதாஸ் 130
எலியற் ரி.எஸ் 39
எல்லிஸ். எஃப் டபிள்யு 90
ஏனஸ்ற் ஹாச்வேல்கின்ஸ் 172
ஒளவையார் 65, 90
கணபதிப்பிள்ளை.க. 137, 143, 142
கணபதிப்பிள்ளை சி. 144
கணபதிப்பிள்ளை.சி.144
கத்ரே.எஸ்.எம். 144
கம்பன் 34
கமூ 26
கலியாணசுந்தர முதலியார் திரு.வி.126
கனகசபாபதிப்பிள்ளை வி 52, 102, 154
கனக சுந்தரம் பிள்ளை, தி.த. 88, 91, 150
காமராஜ நாடார் 131
காமில் ஸ்வெலபில் 56, 71, 139, 148, 152
கால்டுவெல் 101, 111, 155, 190
காளமேகம் 164
கிண்டர்ஸ்லி என். இ. 90
(Kindersley. N.E)
கிருஷ்ணசாமி ஐயங்கார் எஸ். 109, 114, 122
கிருஷ்ணமாச்சாரி வி.110
கிளென்த் பூறூக்ஸ் 52
(Cleanth Brookes)
கிறெய்க் டேவிட் 24, 25, 42, 50, 53, 166, 186
குஞ்சுண்ணிராஜா 174, 187
குணா 210, 227
குமாரசுவாமி புலவர் 154
கேசவன், கோ. 146, 228
கேர். டபிள்யு,பி. 39
கைலாசபதி 140, 143, 144, 146, 148, 149, 153, 228
கொஹென் 34
கோர்க்கி 198
சங்கரர் 113
சக்ரவர்த்தி 106
சண்முகம். எஸ்.வி. 199, 203
சண்முகம்.எம் 154
சண்முகதாஸ். அ.132
சண்முகநாதன் (பாரதி பித்தன்) 187
சத்யம்.ரி.எஸ். 186
சத்தியநாதையர் 122, 127
சதாசிவ பண்டாரத்தார்.தி.வை 123, 141
சபாபதி நாவலர் 107, 110
சம்பந்தர் 112, 113, 194
சரோஜினி வி.157
சாம்பசிவன்.எஸ்.156
சாமிநாதையர் உ.வே.102
சாமிநாதையர்.ஆர். 155
சிங்காரவேலுலு 144
சித்தர்கள் 164
சிதம்பரநாத செட்டியார் அ.179, 187
சிதம்பர நாத முதலியார் 54
சிதம்பர ரகுநாதன், தொ.மு.52, 146
சித்ரலேகா மௌன குரு 144
சிவத்தம்பி கா.52, 54, 146, 148, 152, 156, 158, 185, 187, 226, 227, 228
சிவப்பிரகாசர் 84
சீகன் பால்கு ஐயர் 56, 64, 89
சீனிவாசன் கே.ஆர்.127
சீனிவாச ஐயங்கார்.எம் 52, 81, 150, 154, 155
சுந்தரம்.இராம 73, 148
சுந்தரம் .ஜன 50
சுந்தரம் பிள்ளை 99, 101, 107, 112, 153, 155
சுப்பராயலு எ. 199, 202, 203, 217, 221, 226
சுப்பிரமணியன் என. 140, 164, 187, 226,
சுப்பிரமணியன் தி. நா. 144, 158
சுப்பிரமணிய ஐயர். எ.வி. 80, 150
சுப்பிரமணியம் வி.ஐ. 134, 136, 149, 157, 199, 202
சுப்பிரமணியம். க.நா. 52
சுப்பிரமணிய சாஸ்திரி பி.எஸ். 129, 173, 187
சுப்பிரமணிய பிள்ளை.கா 18, 66, 119
சுவாமி விபுலானந்தர் 154
சூரியநாராயண சாஸ்திரி 107
செங்கல்வராய பிள்ளை வி.எஸ்.49
செல்வநாயகம் வி. 137, 143, 190, 193, 194
செல்வ கேசவராய முதலியார். தி. 99, 153
சேக்கிழார் 76, 83, 91, 124
சேர் சார்ல்ஸ் மெற்காஃப் 65
(Sir Chales Metcalfe)
சேனக பண்டார நாயக்க 200, 201, 225
சேனாவரையர் 87
சேஷகிரி சாஸ்திரி எம் 118, 149, 155
சேஷையங்கார், ரி.ஆர்.52, 96,153
கே.ஜி.சேஷ ஐயர் 103, 114, 117, 154, 155
சைமன் காசிச்செட்டி 59, 105, 154
சொக்கலிங்கம்.க. 144, 158
சோமசுந்தர தேசிகர் 128
சோமசுந்தர பாரதியா‘ர் 125, 127,156
டக்ளஸ் புஷ்ஷ 167, 186
டிறெய்ற்றன் 181
தண்டாயுதம்.இரா 145
தனஞ்சய ராசசிங்கம் 144
தனிநாயக அடிகளார் 140, 144, 152
தாணு அம்மாள், றி.என் 128
தாமோதரன் பிள்ளை சி.வை.102
தியாகராஜர் 174, 187
திருஞானசம்பந்தர் 74, 112, 194
திருத்தக்க தேவர் 91
திருமங்கையாழ்வார் 74
திருநீலகண்டப் பெரும்பா‘ணர் 82
திருவள்ளுவர் 90
தில்லைநாதன்.சி.143
துரைசாமிப் பிள்ளை, ஒளவை 91, 152
துரைசாமிப் பிள்ளை ஜி.எஸ். 100, 103, 156
தேசிக விநாயகம் பிள்ளை, கவிமணி 126
தேவநேயப் பாவாணர். ஞா 156
தேவபூபதி நடராஜா 144
தோத்தாத்திரி எஸ் 146
தோஸ்தோவெஸ்க்கி 26
நச்சினார்க்கினியர் 87
நடராஜா எஃப் எக்ஸ்.சி.144
நம்பியாண்டார் நம்பி 71-73 80-82;
நம்பியாரூரன் 152, 206, 226
நம்மாழ்வா‘ர் 174
நல்லசாமிப்பிள்ளை ஜே.எம்.105
நல்லத்துவனார் 70
நாகசாமி.ஆர்.199
நாதமுனி 81, 84, 150
நாயன்மார்கள் 76, 78
நீலகண்ட சாஸ்திரியார், ப 71, 104, 109, 102, 122, 125, 127, 148, 149, 150, 154, 194, 199, 204
நுஃமான் எம்.ஏ. 144
நெல்சன் 113
நேரு 132
நைற்ஸ். எல்.ஈ.25
நோபிலி டி. (த்துவபோதக சுவாமிகள்) 64
நொபொறு கராஷ’மா 199, 203, 217, 221, 227
நோர்க் 181
நோர்மன் டேவிஸ் 167, 186
பறெற்றோ (Pareto) 40
பன்னாடு தந்த மாறன் வழுதி 70, 71
பாண்டியன் உக்கிரப் பெருவழுதி 70
பாலசுந்தரம், இ.144
பாலசுப்பிரமணியன். கே.எம்.151
பாஷம்.ஏ.எல். 138, 157
பிறான்டென் (Branden) 41
பிலியோசா 138
பிள்ளை.கே.கே. 199
பிறய்ற் ஹெளப்ற் 91, 207
(Briethaupt)
பிறாற்சிஸ் வைற் எல்லிஸ் (Francis Whyte Ellis) 90
பிறடெறிக் ஷ்லெகல் (Friederich Sehlegal) 29
பேணெலின் 112, 113, 115
பேற்றன் ஸ்ரைன் 150, 199, 203, 205, 210, 213, 218, 219, 226, 227, 228
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் 70
புளூற்றாக் (Plutarch) 59, 64
பூர்ணலிங்கம் பிள்ளை, 100, 108, 153, 190
பூரிக்கோ70, 148
பூலோக சிங்கம்.பொ 144, 154
போப் 114, 155
மகாலிங்கம் 122
மதுரை பழநியப்ப பிள்ளை 151
மறைமலையடிகள் 477, 54, 125, 190
மாக்ஸ் முல்வர் 104, 105, 154
மாணிக்க வாசகர் 79, 114
மார்க்ஸ், காரல் 209, 227
மார்க்ஸ். அ 146,151,156
மில்ற்றன் 34
மில்ற்றன் சிங்கர் (Miltor Singer) 176
மீனாட்சி 122, 127,151
மீனாட்சிசுந்தரனார், தெ.பொ.134,140,149,154
முத்துக்குமாரசுவாமி 157
முருகதாச சுவாமிகள் 110
மெல்வில் 26
மோறிஸ் கொட்லியே 196,198,203,225
ரிச்சாட்ஸ், ஐ.ஏ 50, 52
ரூதின் 139
ரெட்டி.கே.வி 141
ரெயின் 41
ரெய்லர்.ட்பிள்யு 65,112
வச்சிரநந்தி 74
வரதராஜ ஜயர், இ.எஸ் 141
வால்ற்றர் பெஞ்சமின் 29
வலென்ற்றின் 90
வான்சீனா (Vansina) 71
லானமாமலை. நா 146,227
வித்தியானந்தன். சு.143
வில்லியம் எம்ப்ஸன் (William Empson) 52
வில்சன் 116
விரமாமுனிவர் 172
வெலெக். றெனே 39,42,53,57,59,62,105,147
வெள்ளைவாரணர். க.141,150
வேங்கடராஜ“லு ரெட்டியார் 128
வேங்கடசாமி,மயிலை சீனி 65,128,145,147,152,162,185,226
வேங்கடராமன். ரி.கே 152
வேங்கடராமன் கே.ஆர் 226
வேலுப்பிள்ளை. ஆ.143,144
வையாபுரிப் பிள்ளை 54,110,123,124,125,128,133,136,137,140,142,144,148,151,156,157,185,191
லீவிஸ். எஃப். ஆர் 52
லோகநாயகி நன்னித்தம்பி 144
றால்ஃப் கொஹென் 34,51 (Ralph Cohen)
றிபெய்ரோ 209
றேய்மண்ட் வில்லியம்ஸ் 30
றொபெற் றெட்ஃபீல்ட் 176 (Robert Sedbield)
றொமிலா தாப்பர் 121,156,122,227,228
றொஸற் (Rost) 116
றொபேற் வைமான் (Robort Weirmann) 45,51
றோமன் கத்தோலிக்கம் 64
ஸேர் சார்ல்ஸ் மெற்காபின் 89
ஸ்பில்லர் 42
ஸ்ரீவன் மார்க்ஸ் (Stevan Marcus) 43,53
ஸ்ரெய்ல் சீமாட்டி (Madame de Stael) 39
ஜகதீசன் 82,150,151
ஜேசுதாசன் 137,148
ஜேசுதாசன் சி. 140
ஜான்குறோ றான்சம் 52
ஜோன் பக்ஸ்ற்றன் 167
ஜோன் மேடொக் 65 (John Mardoch)
ஜோர்ஜ் எல்.ஹார்ற் 138
ஷேக்ஸ்பியர் 26,34,83
ஹன்ஸ் றெபெற் ஜோஸ் (Hans Robert Jauss)31
ஹ’ப்பொலிற்றே ரெயின் 39,40,51
ஹ’ண்டெஸ். ஹேர்ஸ்ற் 29
Austien Warren 53
Bror Tiliander 186
Eugene F.Irshick 152
Gros.F. 158
Hobswahm-E.J.227
Hoggart.Richard 187
Innes.114
John Buxton.186
Knights.50
Kniper.F.B.J.152
Maria Kuringyan.50
Momjan K.h.226
Natarajah. F.X.C. 154
Peresival Spear 148
Paranjothi. Violet 151
Rajarigam D. 147,152,151
Ray. N.R.226
Raymond Williams 51
Walter Benjamin 51
Welkins E.H,-187
Washbrooke-D.A.227

++++++++++++++++++++++++++++++

விடய அகரநிரல்


அகப்பாடல் 163
அகத்திணை 163
அகவல் 163
அங்கதப் பாடல் 92
அச்சுப் பண்பாடு 64
அச்சு சுதந்திரம் 89
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 57,1235,156,160
அநுபவ வாத நோக்கு 38
அரச உருவாக்கம் 223
அரசு தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக் கழகம் 154
அவதாரக் கோட்பாடு 86
அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 132,158
ஆக்கத் தற்சார்புத் திறன் 103
ஆகமச் சடங்குகள் 177
ஆங்கிலச் கிழக்கிந்திய கம்பெனி 90
ஆசிய உற்பத்தி முறை 209,213,215,227
ஆன்ம வளர்ச்சிப் படி நிலைகள் 86
இடங்கைக் காணியாளர் 217
இந்து மதம் 95
இந்திய மெய்யியல் 174
இந்திய வியலாய்வுக்கான ஃபிரெஞ்சு நிறுவனம் 56
இந்தியத் தத்துவத்தின் ஆறு தரிசனங்கள் 104
இந்து சமயப்படுத்தல் 75
இத்தாலிய இலக்கியம் 172
இப்பிறஷனிசம் (Impressionism) 178
இடைச்சங்கம் 75
இரண்டாம் பாண்டியப் பேரரசு 205
இருண்ட காலம் 202,225
இலக்கிய இயக்கம் 78
" உருவாக்கம் 30,192
" உற்பத்தி 22,180
" எரிர்க்குரல்கள் 92
" கருத்துநிலை 36
" பிரக்ஞை முறைமை 61
" நியமங்கள் 37
" பாரம்பரியம் பற்றிய பிரக்ஞை 62, 67
" வரலாறு 21,22,23,161,180
" வழி வரலாறு 21,22,29
" வரலாறு பற்றிய பிரக்ஞை 68
" வரலாற்றின் வரலாறெழுது முறையியல் 42
" விமரிசனம் 23,30,35,36,37,38,39,45,160
" விமரிசனப் பாரம்பரியம் 36
இலக்கியத்தில் முற்போக்கு வாதம் 50,160
இலக்கியத்தின் வரலாறு 8,9,62,91,105
" சமூக உருவாக்கப் பண்பு 46
" செல் பயன் 25
" தொடர்பு முறைமை 25,180
" நடைமுறை 24
இலங்கை 95,99,106,118,143,170,175,184
இஸ்லாம் 63,93,169,222
ஈழத்தில் த்மிழிலக்கியம் 158,187
ஈழத்தில் தமிழ் நாவல் 158
" நாடக இலக்கியம் 158
உரைப் பாரம்பரியம் 36
ஊழியக் குடிமை முறைமை 208
எலிசபெத் காலம் 190
எஷ’யன் எடுகேஷனல் சேவிஸ் 56 (Asian Educational Service)
ஐரோப்பியர் காலம் 195
ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் 167
கங்கை 78
கங்கை கொண்ட சோழபுரம் 78
கடைச் சங்கம் 75
கத்தோலிக்கர்கள் 89
கயவாகுவின் காலம் 118
கரந்தைப் புலவர்கல்லூரி 56
கருத்துநிலைச் சமூக உறவுகள் 32
கல்வெட்டியல் 127,199,210
கலை அறிதிறன் முறைமை 27
கவிதையியல் 59
கவிதைக் கலை 99
கவிதைக் கலைப் பயில்வு 168
களப்பிரர் காலம் 226
கற்றுச் சொல்லிகள் 181
கஜபாகு மன்னன் 149
காந்தளூர்ச் சாலை 157
காப்பிய காலம் 137
கிரேக்க நாடகம் 140
கிழக்கு ஆப்பிரிக்கச் சமூகம் 211
கிறித்தவம் 89,93,169,222
கிறித்தவ இலக்கியம் 70
" பாதிரிகளின் இலக்கியங்கள் 172
குத்தகைச் செய்கைக்காரர் 216
கூறாக்க அமைப்பு 221
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 167
கேரளம் 209,210
கேரளப் பல்கலைக்கழகம் 142
கொங்கு நாடு 145
கொதிக் (Gothic) 178
கொலோனியலிசம் 60,122
சங்கம் 71,75,146
சங்க இலக்கியம்மம 83,102,103,109,110
" காலம் 168,191,210
" மருவிய காலம் 137,191,193,222
சமணம் 74,149,169
" காலம் 137,222
" குகைகள் 149
" மத நிறுவனங்கள் 74
சமனற்ற வளர்ச்சித்தன்மை 177,214,215
சமஸ்கிருதம் 79,95,98,104,123,138,222
" சாராத பண்பாடு 176
" தாக்கத்துக்கு முற்பட்ட பண்பாடு 176
" நியமங்கள் 223
" நெறிப்படாத பண்பாடு 176
" நெறிப்பட்ட பண்பாடு 176
சமஸ்கிருதம் நெறிப்படுகை 176
" நூல் 103
சமூக அதிகாரப் படிமுறை 214
" இணைப்புகள் 32
" இருக்கை நிலை 62
" உருவாக்கம் 33,195,200,201,204,216,217
" ஊடாட்டங்கள் 32
" மொழியியல் 176
" வரலாற்று நோக்கு 151
சராணாகதிக் கோட்பாடு 86
கனரஞ்சகப் படுத்தல் 95,221
" இலக்கியம் 167
சாதி அமைப்பு 215
சாதி அமைப்பு மூடுநிலை 213
சாதியொதுக்க நிலை 85
சிங்களம் 175
சித்தர்கள் பாடல் 92,139
சிதம்பரம் 79,150
சிலா சாஸனங்கள் 124
சிறு பாரம்பரியம் 176 (Little tradition)
செந்நெறி இலக்கியம் 145
" நாடக மரபு 177
" காலம் 206
செய்முறை விமரிசனம் 53
செவிப் புலக் கற்பனை 180
சுயமரியாதை இயக்கம் 120,126
சுவைச் சமன்பாடற்ற ஆக்கம் 178
சென்னைப் பல்கலைக் கழகம் 57,123
சைவம் 79,83,149
சைவர்கள் 74
சைவ இலக்கிய வரலாறு 141
" சித்தாந்தம் 86,151,165,174
" சிந்தாந்த சாத்திர நூல்கள் 84,85
" சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் 129,157
" சிந்தாந்த மகா சமாஜம் 148
" வைணவ மோதல் 79
சைவ மடங்கள் 84
சோழர்கள் 78,80,82,85,122,137,174,191,194,204,208,210,212,213
தஞ்சாவூர் 173,175
தமிழின் இந்தியத்தன்மை 175
" சர்வதேசியத் தன்மை 175
தமிழ் இலக்கியமும் முஸ்லிம்களும் 170
தமிழ்த் தேசிய இனப்பிரக்ஞை 60
தமிழ்ப் பல்கலைக் கழகம் 57,160
தலைச்சங்கம் 75
தனித்தமிழியக்கம் 94,126,156,190,220
தாமிர சாஸனங்கள் 124
திணைக் கோட்பாடு 222
திணை நிர்ணயம் 228
திராவிடக் கருத்து நிலை 94
திராவிட சங்கம் 74,118
திராவிட நாகரீகம் 96,132
திராவிடப் பண்பாடு 95
திராவிடர் கழகம் 121,220
திராவிட முன்னேற்றக் கழகம் 67,121,126,129,131,171,220
திராவிட மொழி 104,130,157
திராவிட மொழியியல் 142
திராவிட மொழிகளில் ஆராய்ச்சி 156
திராவிடச் சார்பு 133
திராவிடப் பண்புகள் 130
திராவிடவியல் 123,130
திருவாங்கூர் 126
திருவையாறு 187
திருநெல்வேலி கிறித்தவ இளைஞர் சங்கம்
தெலுங்கு 174
தென்கலை வைணவர்கள் 86,153
தென்னிந்திய இந்துக் கிரியைகள் 173
தேசியப்பிரக்ஞை 32
தேசிய இன உருவாக்கம் 76
தேசிய இனப் பிரக்ஞை 60
தேசிய இனத் தனித்துவப் பிரக்ஞை 60
தேசிய வாதிகள் 94
தேவார காலம் 137
தேவார முதலிகள் 79,80
தொடர்பியல் ஆய்வு 180
தொடர்புச் சாதனங்கள் 25
தொகை நூல் 86
நவீன சுயபிரக்ஞை 60
நவீன விமரிசனம் 57
நவீனசனரஞ்சக வாசிப்பு முறை 183
நாட்டார் வழக்காற்றியல் 145,175
" இலக்கிய வகை 183
" இலக்கிய வடிவங்கள் 164
" கலைகள் 179
" கூத்து 177
நாடோடிப் பாடல்கள் 124
நாவல் 145,175
நாயக்கப் பிரதானிகள் 61
" காலம் 191
" காலச்சிற்பம் 178
" காலப்பாடல் 178
நியூ கிறிற்றிஸ“சம்-52 (New Criticism)
நிலமானிய அமைப்பு 208,210,214
" அம்சங்கள் 210
காலம் 221,223
நேர்க்காட்சி வாதம் 40,42
" வாத வரலாற்று அணுகு முறை 188
பக்தி இயக்கம் 74,79,83,218,219
" இலக்கியம் 77,83,207
பகுத்தறிவு இயக்கம் 94,120
பண்டைய திராவிட நாகரிகம் 101
பண்ணத்தி 163
பருநிலைச் சமூக உறவுகள் 32
பல்லவர்கள் 77,78,80,122,206,218
" ஆட்சி 205
" காலம் 137,178,191,194,219
" காலச்சிற்பம் 178
பல அமைப்பு மட்டச் சமூகம் 177
பள்ளர் 164
பள்ளு 145
படிமக்கலை 177
படைப்பிலக்கியம் 165
பறோக் (Baroque) 178
பாண்டியர் 77,122,204,
பாண்டித் துரைத் தேவர் 106,110
பாணர் 71,150
பாஷ்ய மரபு 87
பிரதிபலிப்புக் கொள்கை (கோட்பாடு) 27,28,46
பிரயோக பிமரிசனம் 35
பிராம­யம் 156
பிராமணர் அல்லாதார் 85,94
பிராம­யக் கல்வி 219
பிரித்தானியச் சார்பான கருத்து நிலை 126
பிரெஞ்சுப் புரட்சிக் காலம் 181
புது விமரிசனத்தின் அஷகியல் 41
புதுக் கவிதை 145,175
புரட்டஸ்தாந்தம் 64,88,89
புஷ்பின் ஆட்டம் 25
பெரும் பாரம்பரியம் 176 ( Creat Tradition)
பொதுபுடைமைக் கட்சி 120
பௌத்தம் 64,75,142,169
பௌத்த, சமணப் பள்ளி 77
மடங்கள் 86
மணிப் பிரவாள எழுத்து முறை 86,166
மந்திரங்கள் 163,165
மத நிறுவன அமைப்பு 79
மத நெறிச் சார்பின்மை 145
மதுரை 73,118,147,149,173
மதுரைச் காமராசர் பல்கலைக் கழகம் 142,156
மரபுவழி அணுகு முறை 93
மராட்டியர் 175,61
மருதம் 223
மலபால் 61,90
மலாயப் பல்கலைக் கழகம் 144,143
மலேசியா 184
மலேசியத் தமிழிலக்கிய வரலாறு 145
மலையாளம் 174,175
மலையாளிகள் 66
மறைமலையடிகள் நினைவு நூல் நிலையம் 56,157
மாயூரம் 150
மார்க்சிய அடிப்படைகள் 215
மானிடவியல் 199,201
முச் சங்கம் 73,75
முதலாம் இராசராசன் 82
" இராசேந்திரன் 82,150
முன்னிலைக் கொள்கை 40 (Theory of the Avantgarde)
முஸ்லீம் 122,169,170
மூல பாடம் 154
மூல பாடத் திறனாய்வு 135, 181
மூவேந்தர் ஆட்சி 223
மெய்க் கீர்த்திகள் 218
மெய்கண்டார் 84
மேற்கட்டுமானம் 28
மேனாட்டு அணுகுமுறை 93
" இலக்கிய வரலாறு 190
" இலக்கிய விமரிசன மரபு, 17
" மயவாக்கம் 60,95
மொழியியல் 130, 201
யாழ்ப்பாணம் 153
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் 158
வடகலை 85
வடமொழி 76,86,99,135,173,174,175,219
வணக்க முறைமை 85,147
வணிக மேலாண்மைக் காலம் 223
வணிக விநியோக நிலைப்பட்ட அச்சு முறை 24
வரலாற்று அசைவியக்கம் 200
" இலக்கியம் 212
" பிரயோக நிலை 215
" நடைமுறை 34
" எழுது நெறி 93,122
வரலாறுறெழுது முறையியல் 57,60,76
வல்லரசு நாடுகள் 131
வலங்கைக் காணியாளர் 217
வளநாடு 212
வளர் முறை, நிறை நிலை, சிதைவு 207
வாய் மொழிப் பாடல் 24,72
வாழ்க்கை வரலாற்றியல் 57
வானவியல் 166
விமரிசன முறைமை 38
விஜய நகர ஆட்சி 205
விஜய நகரக் காலம் 121, 136, 191, 194, 221
வீரயுகம் 71, 139, 223
வீர வணக்கம் 217
வெகுசன இலக்கியம் 54, 183
" பண்பாடு 183
" வாசிப்பு 183
வெள்ளாளர் 219
வேதச் சடங்குகள் 177
வேதாந்திகள் 84
வைணவ ஆசாரியார் 81
வைணவத் தமிழ் 141,166
ஜஸ்டிஸ் கட்சி 94,120
ஹெகலிய நிலைப்பாடு 40

* * * * முற்றும்* * * *