கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்

Page 1


Page 2


Page 3

ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
நா. சுப்பிரமணியம் எம். ஏ.
துணை விரிவுரையாளர், தமிழ்த்துறை இலங்கைப் பல்கலைக் கழகம் யாழ்ப்பாண வளாகம்
வெளியீடு :
முத்தமிழ் வெளியீட்டுக் கழகம்
யாழ்ப்பாணம்

Page 4
முதற் பதிப்பு : யூன் 1978
உரிமை : திருமதி கெளசல்யா சுப்பிரமணியம்
கலைமகள் நிலையம் முள்ளியவளை
TAM NOVES IN CEYLON
by NAGARAJAH YER SUB RAMANIAM, M. A. (Ceylon)
Asst. Lecturer in Tami. University of Sri. Laika
Jaffna Cat. pus, Thiru , elively
சாதாரண பதிப்பு :
விலை ரூபா 8-5o
நூலகப் பதிப்பு :
விலை ரூபா 12-OO
ublishers :
MUTHTHAMIZH VELIYEEDOU KAZHAGAM, JAFFONA
ria tra :
As NVATHAMPRESS, 50 KANDY ROAD. AFFNA

காணிக்கை
1977ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனக்கொலையில் உயிரும் உடைமையும் இழந்த
தமிழர்களுக்கு

Page 5

முன்னுரை
பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைவர்
இலங்கைப் பல்கலைக் கழக யாழ்ப்பாணி வளாகம்.
ஈழத்திலே தமிழ் நாவலிலக்கியம் பயிலத் தொடங்கி ஏறத்தாழ நூருண்டுகளாகின்றன. இக்காலப் பகுதியில் நானூற்றுக்கு மேற்பட்ட நாவல்கள் ஈழத்தில் எழுதப் பட்டுள்ளன. இவை தொடர்பான சிறு பிரசுரங்களும் கட்டுரைகளும் தகவல் தேட்ட முயற்சிகளாகவும் பட்டியல் தயாரிப்பு முயற்சிகளாகவும் மதிப்புரை, திறஞய்வு முயற்சிகளாகவும் அவ்வப்போது வெளிவந்துள்ளன. எனினும் முழுமையான நூல் எதுவும் இற்றைவரை எழுதப் படவில்லை. அவ்வகையில் திரு. நா. சுப்பிரமணியம் அவர் க்ளின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் என்ற இந் நூல் கடந்த ஒரு நூற்றண்டுக்கால ஈழத்துத் தமிழ் நாவல்களை வரலாற்று நோக்கில் ஆராய்ந்து விளக்கும் முதல் நூலாக அமைகின்றது.
இந் நூலாசிரியர் இலங்கைப் பல்கலைக் கழகப் பேராதனை வளாகத் தமிழ்த்துறையிலே முதுகலைமாணிப் பட்டத்திற்கு ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பாக எமது வழிகாட்ட லில் ஈராண்டுகள் (1970 - 1972) ஆய்வு நிகழ்த்தியுள்ளார். அதன் பெறுபேருகச் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையே இந்நூலுக்கான ஆதாரமாக அமைகின்றது. அக்காலப் பகுதியிலிருந்து அண்மைக் காலம்வரை வெளிவந்த பல புதிய தகவல்களையும், எழுதப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட,

Page 6
νι
நாவல்களையும் கவனத்திற்கொண்டு, குறிப்பிடத்தக்க அமைப்பு மாற்றங்களுடன் அவ்வாய்வுக் கட்டுரை இந்நூலாக வெளிவருகின்றது.
ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய வரலாற்றை ஐந்து முக்கிய கட்டங்களாக வகைப்படுத்தி நோக்கும் பண்பு இந் நூலில் அமைந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதிப் பகுதியில் ஈழத்திலே தமிழ் நாவல்கள் எழுதப்படு வதற்குக் காரணமாக இருந்த சூழ்நிலையினை விளக்கி ஆரம்ப முயற்சிகளை மதிப்பிடுவதாக ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் என்ற முதலாம் இயல் அமைகின்றது. இருபதாம் நூற்ருண்டின் முதல் நாற்பதாண்டுக் காலப்பகுதியில் எழுதப் பட்ட நாவல்கள் சமுதாய சீர்திருத்தக் காலம் என்ற தலைப்பில் இரண்டாவது இயலில் ஆராயப்படுகின்றன. அக்காலப் பகுதியை அடுத்து ஏறத்தாழக் கால்நூற்ருண்டுகாலப் பகுதி எழுத்தார்வக் காலம் என்ற தலைப்பிலும், அடுத்துள்ள பதினைந்தாண்டுக் காலப்பகுதி சமுதாய விமர்சனக் காலம் என்னும் தலைப்பிலும் வகைப்படுத்தப்பட்டு, நாவல்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. கடந்த ஐந்தாண்டுகளாக ஈழத்துத் தமிழ் நாவலில் ஏற்பட்டுள்ள புதிய போக்கு, பிரதேசங்களை நோக்கி . என்னும் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. அடுத்து ஈழத்துத் தமிழ் நாவல்களின் விபரங்களும் அவை தொடர் பாக மேற்கொள்னப்பட்ட குறிப்பிடத்தக்க ஆய்வுகளின் விபரங்களும் சான்ருதாரங்களும் அட்டவணையும் பின்னிணைப் புக்களாக அமைந்துள்ளன.
ஒவ்வோர் இயலிலும் முதலிற் சூழ்நிலையை விளக்கி, அதன்பின் அக்கால நாவல்களை வகைப்படுத்தி நோக்கி, இறுதியில் மதிப்பீடு செய்யும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வகையிலே இந்நூல் வரலாற்று நூலாகவும் அதே வேளையில் திறனய்வு நூலாகவும் அமைந்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக அவர் திரட்டிய தகவல்களும் தொடர்ந்து மேற்கொண்டுவந்த வாசிப்பு முயற்சியும் இவ்வாறு வகுத்தும் தொகுத்தும் நோக்குவதற்குரிய ஆற்றலை அவருக்கு வழங்கியுள்ளன என்று கொள்ளலாம். சான் ரூதாரங்களைத் தக்கவகையிற் பயன்படுத்துவதிலும், தமது கருத்துக்களை நிறுவுவதிலும் தன்னம்பிக்கையுள்ள ஓர் ஆய்

vii
வாளனைத் திரு. நா. சுப்பிரமணியம் அவர்களிடம் நாம் காண்கின்ருேம். முதுகலைப்பட்டத்திற்கு ஆய்வு நிகழ்த்தத் தொடங்கிய காலம் தொடக்கம் தொடர்ந்து ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பாக "உலகத் தமிழாராய்ச்சி மாநாடு" "தமிழியற் கழகக் கருத்தரங்கு’, ‘தென்னுசியவியற் கருத் தரங்கு’, ‘தமிழ்நாவல் நூற்ருண்டுவிழா ஆய்வரங்கு” ஆகியவற்றில் அவர் தயாரித்துப் படித்த ஆய்வுக்கட்டுரை களும் அவ்வப்போது மேற்கொண்ட பிரசுர முயற்சிகளும் ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பாக இத்தகையதொரு நூலை எழுதுவதற்கேற்ற நிலைக்கு அவரை வளர்த்துள்ளன. ஈழத்து நவீன தமிழிலக்கியத்தின் பல்வேறு துறைகள் பற்றிப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டங்களுக்கு ஆய்வு நிகழ்த்தும் மரபு கடந்த எட்டு ஆண்டுக் காலமாக வளர்ந்து வருகின்றது. அவ்வகையில் நவீன இலக்கியங்கள் தொடர் பாக மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியாக திரு. நா. சுப்பிரமணியம் அவர்களின் ஆய்வு அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சிறுகதை, கவிதை, நாடகம் ஆகிய துறைகளும் ஆராயப்பட்டுள்ளன. அவ்வகையிலே சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளிலொன்ருன திரு. க. சொக்க லிங்கம் அவர்களின் ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி என்ற ஆய்வுக் கட்டுரை இவ்வாண்டின் தொடக்கத்திலே நூலுருவம் பெற்றது. அதனைத் தொடர்ந்து திரு. நா. சுப்பிரமணியம் அவர்களின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் என்ற இந் நூல் வெளிவருகின்றது.
க. சொக்கலிங்கம் அவர்களுடைய நூலை வெளியிட்ட முத்தமிழ் வெளியீட்டுக் கழகமே இந்நூலையும் வெளியிட் டுள்ளது. இவ்வகையில் ஈழத்துத் தமிழிலக்கிய ஆய்வு முயற்சிகளுக்கு முத்தமிழ் வெளியீட்டுக்கழகம் அளித்து வரும் பேராதரவும் அதன் முயற்சித்திறனும் பாராட்டுக் குரியன. தொடர்ந்தும் ஒவ்வோராண்டும் நான்கு ஆய்வு நூல்களை இக்கழகம் வெளியிட்டு வருமென எதிர் பார்க்கின்ருேம். -
சு. வித்தியனந்தன் திருநெல்வ்ேலி
1978-06-04

Page 7
அணிந்துரை கலாநிதி அ. சண்முகதாஸ்
தமிழ்த்துறைப் பொறுப்பு விரிவுரையாளர் இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம்
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் என்னும் இந்நூல் முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தினரின் இரண்டாவது வெளியீடாக வெளிவருகின்றது. திரு. நா. சுப்பிரமணியம் இலங்கைப் பல்கலைக் கழகப் பேராதனை வளாகத்திற் பேரா சிரியர் சு. வித்தியானந்தனின் மேற்பார்வையில் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றி ஆராய்ச்சி செய்து எம். ஏ. பட்டத்துக்காகச் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையின் திருத்தம் பெற்ற வடிவமே இந்நூலாக அமைகின்றது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய தம் ஆய்வுக் கட்டுரையிலே ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய தற்காலம் வரையிலான செய்திகளையெல்லாம் ஆசிரியர் சேர்த்துள்ளார். இவ்வகையிலே நோக்குமிடத்து, ஆசிரியர் இப்பொருள்பற்றி ஒரு புதிய நூலையே எழுதியுள்ளார் என்று கூறினும் ஒரளவு பொருந்தும்.
ஐந்து இயல்களையும் ஒரு நிறைவுரையையும், நாலு பின்னிணைப்புக்களையும் கொண்டதாக இந்நூல் அமைகின்றது ஒவ்வோரியலும் குறிப்பிட்ட ஒர் அமைப்பினையுடையதா யுள்ளது. அவ்வவ்வியலிலே ஆய்வுக்கெடுத்துக் கொள்ளப் பட்ட நாவல்கள் பற்றிய எல்லாத் தரவுகளும் முதலிலே கொடுக்கப்பட்டு, இறுதியில் அவை ஆசிரியரின் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுகின்றன. முதலாவது இயல் ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் பற்றி ஆய்வு செய்கின்றது.

ix
ஈழத்திலே தமிழ் நாவல் தோற்றம் பெற்ற பின்னணியை ஆசிரியர் சுருங்கிய சொற்களிலே பின்வருமாறு குறிப்பிடு 6)(yri.
"கல்வி கற்ற நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த சமூகச் சிந்தனையாளர்கள் தாம் அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் மக்களுக்குப் பயன்படும் வகையிற் கதை வடிவிலே தருவதற்கு முயன்றனர். உரைநடை பெற்றிருந்த வளர்ச்சி இவ்வகையிலே துணைபுரிந்தது. மேஞட்டிலக்கியப் பயிற்சி, மேனடுகளினதும் மத்திய கிழக்கு நாடுகளினதும் சமய கலாசாரத் தொடர்பு, தமிழ் நாட்டுத் தமிழ் நாவல்களைப் படித்ததின லுண்டான ஊக்கம் என்பன இம்முயற்சிகளை நெறிப் படுத்தின. "" (பக். 7).
இரண்டாவது இயல் சமுதாய சீர்திருத்தக் கால நாவல்கள் பற்றி விளக்குகின்றது. "பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்ருண்டின் முதல் நாற்பது ஆண்டுகள் வரை சைவம், கிறிஸ்தவம் ஆகிய இரு சமயங்களினடிப்படையிலான சமுதாய சீர்திருத்த உணர்வே ஈழத்துத் தமிழிலக்கியத்தை நெறிப்படுத்தும் உந்து சக்தி யாய்த் திகழ்ந்தது" (பக். 20) என்று அக்காலப் பகுதிப் பொதுப் பண்பினை எடுத்துக்காட்டும் ஆசிரியர், அப் பண்பு எவ்வாறு அக்கால நாவல்களிலே பிரதிபலித்தது என்பதை இயல் முழுவதிலும் விளக்குகின்ருர், நடப்பியல்பு நாவல்கள், மர்மப் பண்பும் சம்பவச் சுவையுமுள்ள நாவல்கள், மொழிபெயர்ப்பாகவும் தழுவலாகவும் அமைந்த நாவல்கள் ஆகியன இவ்வியல் ஆய்விலே இடம் பெற்றுள்ளன.
முப்பதுகளின் முடிவு தொடக்கம் அறுபதுகளின் ஆரம்ப காலம் வரையிலான காலப்பகுதியிலெழுந்த நாவல்களை எழுத்தார்வக் காலம்" என்னும் மூன்ருவது இயலிலே ஆசிரியர் விவரிக்கின்ருர், மேலைத் தேசத்திலும் தமிழ்நாட்டிலும் பெருவாரியாக எழுதப்பட்ட நாவல் களின் அருட்டுணர்வாலும் எழுத்தாளர் எனத் தம்மை உலகம் மதிக்க வேண்டுமென்ற ஆர்வத்தாலும் ஒரு புதிய

Page 8
X
எழுத்தாளர் பரம்பரை இக்கால கட்டத்திலே உருவாயிற்று என ஆசிரியர் கருதுகின்ருர், இக் கருத்து குறிப்பாக இக் கால கட்ட எழுத்தாளர்களுக்கு மட்டுமே பொருத்த மானது என்று கூறுவது எவ்வளவு தூரம் சரியானது என்பது ஆராயற்பாலதாகும். அக்கால கட்டத்தில் உரு வாகிய தமிழ் நாளிதழ்களும் வார வெளியீடுகளும் எழுத் தார்வத்தைப் புலப்படுத்தப் போதிய வசதியளித்தன. அவ்வாறமைந்த படைப்புக்கள் பற்றி ஆசிரியர் மதிப்பீடு செய்யுமிடத்து :
"இக்கால நாவலாசிரியர்கள் பலர் சமகாலத் தமிழ் நாட்டு நவீன இலக்கியப் போக்குடன் இணைந்து எழுதியவர்கள். இதனுல் நாவல்களின் பொருள், வடிவம், உத்திமுறை என்பவற்றிலே தனித்துவம் பேண முடியாதவர்களாயிருந்தனர் எனலாம். காதல், தியாகம், பாசம் முதலிய தனிமனித உணர்வுகளை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட சமகாலத் தமிழ் நாட்டுக் குடும்ப நாவல்களாலும் மர்மப் பண்பு கொண்ட துப்பறியும் நாவல்களாலும் கவரப்பட்ட இக்காலப் பகுதி ஈழத்து நாவலாசிரியர்களின் படைப்புக்களிற் பல "ஆசை பற்றி அறையலுற்ற" ஆரம்ப முயற்சிகளாகவே அமைந்ததில் வியப்பில்லை". (பக். 72) என்று கூறுவது ஒருவகையிற் பொருத்தமாகவே அமை கின்றது.
நான்காவது இயல் "சமுதாய விமர்சனக் காலம்" என்ற தலைப்பிலும், ஐந்தாவது இயல் "பிரதேசங்களை நோக்கி" என்ற தலைப்பிலும் அமைகின்றன. ஆசிரியர் நூலி னுள்ளே தமது திறமையைக் காட்டிய போதிலும், அத் நூலின் இறுதியிலே இணைக்கப்பட்டுள்ள நான்கு பின்னி ணைப்புக்களாலும் அவர் ஆராய்ச்சியாளர், அறிஞர், இலக்கிய வரலாற்று மாணவர்கள் ஆகியோருக்கு மிகப் பயனுள்ள தரவுகளை வழங்குகின்ருர்.

Χί
ஆசிரியருடைய நிறைவுரையில் ஈழத்துத் தமிழ் நாவலி லக்கியத்தின் எதிர்காலப் போக்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பது சுட்டப்படுகின்றது. வரலாறு எழுதப் புகும் ஆசிரியன் ஒருவன், அவன் முடிபுகளும் மதிப்பீடு களும் எவ்வாறமையினும், அவ்வரலாற்றுக்குத் தேவையான தரவுகளையும் சான்ருதாரங்களையும் அறிந்தவனுக இருக்க வேண்டும். அவற்றை வாசகர்களுக்கு வழங்கவும் வேண்டும். இந்த வகையிலே, ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் எழுதிய திரு. நா. சுப்பிரமணியம் தன் கடமையினைச் செவ்வனே செய்துள்ளார் என்றே கூறவேண்டும். பல்கலைக் கழகப் பட்டத்துக்காக எழுதப்பட்ட காரணத்தினலே, வழக்க மாக அத்தகைய எழுத்துக்களிலே எதிர்பார்க்கப்படும் இறுக்கமான கட்டுக்கோப்பு, கூறியது கூறல் என்னுங் குற்றத்துக்காளாகாமை, பொருத்தமான சான்ருதாரங்களை வழங்குதல், ஒழுங்கான நடை ஆகிய பண்புகள் இந் நூலிலே அமைந்திருக்கின்றன.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் இருவடிவங்களின் விரிவான வரலாற்றினைக் கொண்ட இரு நூல்களைத் தமிழிலக்கிய உலகுக்கு வழங்கிய முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தினர் தமிழ் மக்களின் பாராட்டுக் குரியவர்கள். இவ் வாண்டிலே, ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி, ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் என்னும் அவ்விரு நூல் களையும் அவர்கள் வெளியிட்டமை போற்றுவதற்குரியது. தொடர்ந்து அவர்கள் பணி நீடிக்க வேண்டும்; நல்ல தமிழ் நூல்கள் ஈழத்திலே வெளிவர வேண்டும்.
அ. சண்முகதாஸ் திருநெல்வேலி 1978-06-04

Page 9
முகவுரை
ஈழத்திலே தமிழ் நாவலிலக்கியம் தோன்றி வளர்ந்த வகையினை வரலாற்று நோக்கிலே தொகுத்து நேரக்கி மதிப் பீடு செய்வதாக இந்நூல் அமைகின்றது. 1885ஆம் ஆண்டில் வெளிவந்த அறிஞர் சித்திலெவ்வையின் அசன்பேயுடையகதை தொடக்கம் 1977ஆம் ஆண்டு இறுதியில் வெளிவந்த "ஞானரதனின் புதிய பூமி வரை ஏறத்தாழ நானூற்றைம்பது நாவல்கள் ஈழத்தில் எழுதப்பட்டுள்ளன. இவை எழுதப் பட்ட நோக்கம், சூழ்நிலை, கதைப்பண்பு முதலியவற்றைக் கருத்திற் கொண்டு காலகட்டங்களாக வகைப்படுத்தி நோக்கும் முயற்சி இந் நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1970-72 காலப் பகுதியில் இலங்கைப் பல்கலைக் கழகப் பேராதனை வளாகத் தமிழ்த்துறையிலே பேராசிரியர் சு. வித்தியானந்தன், சிரேட்ட விரிவுரையாளர் சி. தில்லை நாதன் ஆகியோரது வழிகாட்டலின் கீழ் தமிழ் முதுகலை மாணிப் பட்டத்துக்காக ஈழத்துத் தமிழ் நாவல் தொடர் பான ஆய்வு முயற்சியை மேற்கொண்டேன். அதன் பெறு பேருகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரையே இந்நூலின் ஆதாரமாகும். தொடர்ந்து அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டிலும் தமிழியற் கழகக் கருத்தரங்கு, தென்னசிய வியற் கருத்தரங்கு ஆகியவற்றிலும் ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தேன். 1977ஆம் ஆண்டில். இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகத் இலே நடைபெற்ற தமிழ் நாவல் நூற்ருண்டு விழாவிலே நூலக வெளியீடாக ஈழத்துத் தமிழ் நாவல் நூல்விபரப் பட்டியலொன்றைத் தயாரித்து வெளியிட்டேன். இத்தகைய

xiii
தொடர் முயற்சிகளின் விளைவாக உருவான கருத்துக்களையும் துணைக்கொண்டு முதுகலைமாணிப் பட்ட ஆய்வுக் கட்டுரையிற் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் செய்து இந்நூலை அமைத் துள்ளேன்.
இந்நூல் ஐந்து இயல்களையும் நிறைவுரையையும் ஈழத்துத் தமிழ் நாவல் விபரங்களையும் அவை தொடர்பான ஆய்வு விபரங்களையும் துணை நூற் பட்டியல், அட்டவணை ஆகியவற்றையும், கொண்டுள்ளது. ஒவ்வோர் இயலிலும் அவ்வவ்வியலுக்குரிய காலச் சூழ்நிலைகளை விளக்கி அச்சூழ் நிலையில் வெளிவந்த முக்கிய நாவல்களைப்பற்றிய விபரங் களைத் தந்து அவற்றின் கதைப்பண்பை விளக்கி மதிப்பீடு செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.
இந் நூல்ை உருவாக்குவதற்கான ஆராய்ச்சித்திறனை என்னிடம் வளர்த்து வழிகாட்டியவர்கள் என்ற வகையிலே பேராசிரியர் சு. வித்தியானந்தன் சிரேட்ட விரிவுரையாளர் சி. தில்லைநாதன் ஆகியோருக்கு எனது நன்றி என்றும் உரியது.
எனது ஆய்வு நூலை வெளியீட்டுக்குத் தெரிவுசெய்த தோடமையாமல் நூலாக்கத்திலே அல்லும் பகலும் துணை நின்று என்னை இயக்கிய முத்தமிழ் வெளியீட்டுக்கழகத்தினர், சிறப்பாக க. சொக்கலிங்கம் பி. நடராஜன் இருவரும் ஆற்றிய பணி நன்றி என்ற சம்பிரதாயத்துக்கு அப் பாற்பட்டது. தனிப்பட்ட முறையிலே ஆய்வு நூற் பிரசுரம் என்பதைக் கற்பனை செய்துபார்க்கவேண்டிய இன்றைய காலப்பகுதியிலே முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் துணிந்து மேற்கொண்டுவரும் இம்முயற்சி தமிழாராய்ச்சி ஆர்வலர்களது நன்றிக்கு என்றும் உரியது,
இந்நூலுக்கான தகவல்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டவேளைகளில் துணைபுரிந்த வீரகேசரி, இந்துசாதனம் ஆகிய பத்திரிகை நிருவாகிகளுக்கும் ஈழகேசரி இதழ்களைப் பார்வையிட உதவிய குரும்பசிட்டி சன்மார்க்க சபையினர்க் கும் என்றும் நன்றியுடையேன்.
22

Page 10
| Χίν
நூலை உருவாக்கும் முயற்சியிலே திருவாளர்கள் க. உமாமகேஸ்வரன், ஏ. ஜே. கனகரட்ணு, ம. சற்குணம், ஆ. சிவநேசச்செல்வன், கலா பரமேஸ்வரன் முதலிய நண்பர் களின்ஆலோசனைகளை அவ்வப்போது பெற்றுக்கொண்டேன், எனது ஆசிரியர்களான கலாநிதி அ. சண்முகதாஸ், அப்பச்சி மகாலிங்கம் ஆகியோரும் நாவலாசிரியர்களான செங்கை ஆழியான், தி. ஞானசேகரன் முதலியவர்களும் இந்நூலாக்க முயற்சியினை ஆதரித்து என்னைத் தூண்டி நின்றனர். நூலின் அட்டவணையைத் தயாரிக்கும் முயற்சியில் இலங்கைப் பல் கலைக்கழக யாழ்ப்பானவளாக மாணவ நண்பர்களான மு. திருநாவுக்கரசு, மு. குணசிங்கம் எஸ். சண்முகநாதன் நா. தர்மராஜா ஆகியோர் ஆற்றிய உதவி நெஞ்சம் நிறை விப்பது. இவர்களனைவரும் எனது இதயங்கனிந்த நன்றிக்கு உரியவர்கள்.
அச்சேற்றும் வகையில் அரும்பணிபுரிந்த ஆசீர்வாதம் அச்சகத்தினர்க்கும் சிறப்பாக அச்சமைப்பு முகவர் திரு. ருேக் யோசவ்,அச்சுக்கோப்பாளர்களான திரு.ஆ.கோவிந்தராஜா, திரு. சூ. கிறிஸ்ரியன், அச்சுப்படிவங்களைத் திருத்துவதில் துணைபுரிந்த திரு. எஸ். சிவலிங்கம் ஆகியோர்க்கும் என்றும் நன்றியுடையேன்.
நா. சுப்பிரமணியம்
பூநாறி ஒழுங்கை,
கொக்குவில்
1978-29-5

பதிப்புரை
(UPத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் இரண்டாவது வெளியீடாய் "ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ என்ற ஆய்வுநூல் இன்று வெளியாகின்றது. கழகத்துப் பொதுச் செயாலளன் என்ற வகையில் இந்த வெளியீடு எனக்குப் பெருமிதம் கலந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்துகின்றது.
முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், 1977-10-07 அன்று நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்திலே தொடங்கப் பெற்றது. ஈழத்துத் தமிழ் மக்களின் கலை, இலக்கியம், மொழியியல். அறிவியல் சார்ந்த தரமான ஆய்வு நூல்களை முத்திங்க ளுக்கு ஒன்ருக வெளியிடுவதே இக்கழகத்தின் அடிப்படை நோக்கமாய் முன்வைக்கப்பட்டுக் கூட்டத்திற்கு வருகை புரிந்த இருபதின்மராலும் முழுமனத்தோடு ஏற்றுக்
காளளபபடடது.
கழகத்தின் முதல் வெளியீடாய் யான் எழுதிய "ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி" என்ற நூல் வேளியிடுவதைக் கழகத்து நிறுவக உறுப்பினர் யாவரும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டனர். வெளியீட்டு முற்பண நிதிச் சேர்ப்பும் அன்றே தொடங்கியது. திருவாளர்கள் சி. தியாகராசா (எஸ். ரி. ஆர். பிலிம்ஸ் அதிபர்) இ. சரவணமுத்து, த. சோமசுந்தரம் (தலைவர், அகில இலங்கைச் சேக்கிழார் மன்றம்) அமரர் மு. வி. ஆசீர்வாதம் ஆகியோர் ஒவ்வொருவரும் வெளியீட்டு முற்பணமாய் ரூபா ஐந்நூறு வழங்க இசைந்தனர். விரைவில் இம்முற்பணமும் சேர்ந்தது.
ஆசீர்வாத அச்சகத்தினரின் முழுமையான ஒத்துழைப்புக் காரணமாக, "ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி’ 1977-12-24 அன்று வெளியிடப் பெற்றது. நூல் வெளி யீட்டு விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மிகவும் விமரிசையாய் நடந்தேறியது. வெளியீட்டு விழா விற்கு முன்பே நூலின் விற்பனையை உறுதி செய்யும்

Page 11
Xν
வகையில் அன்பளிப்பட்டைகள் வாயிலாகக் கழகம் நிதி சேர்த்திருந்தமையால் எமது முதல் வெளியீடு எவ்வித விக்கினமுமின்றி எதிர்பாராத அளவு வெற்றியை அளித்தது. வெளியீட்டு விழா நடைபெற்ற சில நாள்களுக்குப் பின்பு கழகத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற பொழுது, முற்பணம் வழங்கியிருந்த எமது கழகப் பெரியார்கள் தமது முற்பணத்தினைக் கழக நிதியாய் வழங்கினர். இந்நிதி அளித்த நம்பிக்கையின் அடிப்படையே இன்று "ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்" நூல் வடிவம் பெறக் காரணமாய் அமைந்தது. எனவே இப்பெரியார் களுக்கு முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் தனது உளங் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.
கடந்த சில ஆண்டுகளாய் ஈழத்திலே பல தமிழ் நூல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற் பெரும்பாலானவை கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய ஆக்க இலக்கியத் துறைகளையே சார்ந்தவையாகும். காத்திரம் வாய்ந்தனவும் எக்காலத்துக்கும் பயன் தருவனவு மான ஆய்வு நூல்கள் இங்கு வெளியாவது குறைவாகவே யுள்ளது. இத்தகைய நூல்கள் பல்வேறு தரங்களையும், இரசனைகளையும் உடைய வாசகர்களைக் கவரத்தக்கன அல்ல என்பது ஒரு காரணம். அவற்றை வெளியிட முன்வரும் வெளி யீட்டு நிறுவனங்கள் எவையும் எம் நாட்டில் இல்லை , என்பது இன்னுெரு காரணம். இந்நூல்களை எழுதும் அறிஞர்கள் தாமாகவே முன்வந்து இவற்றை வெளியிட அவர்களின் பொருளாதார நிலை இடம் கொடுப்பதில்லை என்பது பிறிதொரு காரணம். இக்காரணங்களால் எமது நாட்டறிஞரின் அறிவாற்றல் பற்றியும், ஆய்வுத்திறன் பற்றியும் பிறர் அறியவும் பயன் செய்யவும் வய்ப்புக் கிட்டாது போவது பெருங் கவலைக்குரிய ஒன்றே. இது காலவரை ஈழத்துக்கு அப்பாலும் கணிப்பும் அறிமுகமும் பெற்ற அறிஞர் சிலரின் நூல்களே தமிழகத்தில் வெளி யிடப் பெற்றுள்ளன. அவையும் இந்நாட்டு வாசகருக்கு எளிதிற் கிடைப்பதில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவது பொருத்தமே.
இவற்றையெல்லாம் தீர ஆராய்ந்து தடைகளை நீக்கி எவ்வாறேனும் சில நல்ல, தரமான ஆய்வு நூல்களையாவது வெளியிடும் முயற்சியை மேற்கொள்ள நாம் சிந்தித்ததன்

χνι
பயனே முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் தோற்றமாகும். எமது நோக்கத்தினை விளங்கிக் கொண்டு எம்மோடு சேர்ந்து ஒத்துழைத்து எதிர்காலத்தில் அறிவாராய்ச்சி இந்நாட்டிற் செழித்தோங்க உதவ வேண்டுமென அறிஞர்கள், ஆதரவாளர்கள், வாசகர்கள் ஆகியோரைப் பணிவன்புடன் வேண்டுகின்ருேம்.
இன்று வெளியாகும் "ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ என்னும் ஆய்வு நூல் எமது நாட்டிலே இதுவரை வெளியாகியுள்ள தமிழ் நாவல்கள் பற்றிய தரமான ஒரு மதிப்பீடாகும். தமிழகத்திலும் ஈழத்திலும் ஏறக்குறையச் சமகாலத்திலே தொடங்கப்பெற்ற நாவல் முயற்சிகள் படிப்படியாகப் பரப்பாலும், சமூக நோக்காலும் விரிவும் வளர்ச்சியும் பெற்று ஈழத்தில் நிலைபெற்றுள்ள வகையினை ஆய்வாளர் ஒருவர்க்கே உரிய "காய்தல் உவத்தல்" அற்ற மனுேபாவத்துடன் நூலாசிரியர் இந்நூலில் விளக்கி யுள்ளார். இதற்கு முன்னரும் ஈழத்திலே, தமிழ் நாவல் பற்றிய விமர்சனக் கண்ணுேட்டத்தோடு கூடிய நூல்கள் சில வெளிவந்தன என்பது உண்மையே. ஆனல் அவை யாவும் அவ்வப்போது கட்டுரை வடிவிற் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியானவற்றின் தொகுப்புக்களே. இதனுல் அவற்றில் வரலாற்றுத் தொடர்போ முழுமையோ காணப்படவில்லை.
இவற்றேடு ஒப்பு நோக்கும்போது "ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம்’ என்ற இந்த ஆய்வு நூல் முழுமை வாய்ந்த தொன்று என்பதும் மிக அண்மைக் காலத்தில் வெளியான நாவல்கள் பற்றிய மதிப்பீட்டினையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன. சுருங்கக் கூறின் திருவாளர்கள் சோ. சிவபாதசுந்தரம், பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி) ஆகியோரின் கூட்டு முயற்சி யால் உருவான 'தமிழ் நாவல் நூற்றண்டு வரலாறும் வளர்ச்சியும்" என்னும் நூலோடு ஒப்பிட்டு ஆராயத்தக்க ஒரு சூழ்நிலையிலே, காலத்தின் தேவையாக இந்த ஆய்வு நூல் மலர்ந்துள்ளது எனக் கொள்ளலாம்.
அன்றியும் இந்நூல் ஆய்வுக்கட்டுரை வடிவில் இலங்கைப் பல்கலைக் கழகப் பேராதனை வளாகத்து முதுகலைமாணித் தேர்வுக்குச் சமர்ப்பிக்கப்பட்டதாகும். பேராசிரியர் சு. வித்தி

Page 12
Xνίίί
யானந்தன், திரு. சி. தில்லைநாதன் எம். ஏ. எம். விற். ஆகியோரின் மேற்பார்வையில் அவர்களின் வழிகாட்டலில் இந்த ஆய்வு நிகழ்ந்துள்ளது. பின்னர் இது நூல்வடிவம் பெறுகையில் அறிஞர்கள் பலரின் ஆலோசனைகளையும் திருத்தங்களையும் பெற்றுள்ளது. ஆக எல்லாவகையிலும் திட்பமும், ஒட்பமும் வாய்ந்தாய் இந்நூல் வெளியாகின்றது என்று நாம் தயங்காது கூறலாம்.
இந்நூலின் ஆசிரியரான திரு. நா. சுப்பிரமணியம் இலங்கைப் பல்கலைக் கழகத்து யாழ்ப்பாண வளாகத் தமிழ்த்துறையிலே துணைவிரிவுரையாளராய்ப் பணியாற்று பவர்; முறையான தமிழ்க் கல்வியும் ஆய்வுக் கண் ணுேட்டமும் அயரா முயற்சியும் கொண்டவர். எதனையும் காரண காரியரீதியில் நோக்கும் ஆழத்தன்மையை இவரின் ஆய்வு நூல் முழுவதிலும் நாம் பரவலாகக் காணலாம். இத்தகைய அறிஞர் ஒருவரின் பல ஆண்டு ஆய்வின் திரள்பயனை நூலாக வெளியிடும் வாய்ப்பு முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்திற்குக் கிடைத்தமை பெரும் பேறு என்றே கருதுகின்ருேம். இதற்காக அன்ஞ ருக்கு நன்றி கூறுவது கழகத்தின் கடனகும். இவர் மேலும் தொடர்ந்து பல ஆய்வு நூல்களை வெளியிட "ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ தூண்டு கோலாய் அமையும் என்பது எம் நம்பிக்கை.
இந்நூல் வெளியாகிக் கொண்டிருக்கையிற் பலவாறு ஒத்துழைத்த அனைவர்க்கும் எமது நன்றி உரியது.
முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் தோற்றத்திற்குக் காலாயிருந்தோருள் ஒருவரான மு. வி. ஆசீர்வாதம் அவர்கள் இன்று நம்மிடை இல்லை. எனினும் அவரின் மனைவி திருவாட்டி ருே. ஆசீர்வாதம் அவர்களும், அச்சக ஊழியர்களான திருவாளர்கள் ருேக் யோசவ், ஆ. கோவிந்த ராஜா, கு. கிறிஸ்ரியன் ஆகியோரும் எமக்குப் பல வகையில் உறுதுணைபுரிந்தனர். அவர்களின் ஒத்துழைப்புக் கிடையாதிருந்திருக்குமாயின் இவ்வளவு குறுகிய காலத்தில் இந்நூல் சிறப்பாய் வெளிவந்திருக்காது. எனவே அவர் களுக்கு முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் இதய நன்றி என்றும் உரியதாகும். ““ aufrsof'' க சொக்கலிங்கம் நாயன்மார்கட்டு, (சொக்கன்) யாழ்ப்பாணம். 1978 - 06 - 04.

பொருளடக்கம்
V
முன்னுரை viii அணிந்துரை xii
முகவுரை xv பதிப்புரை
ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் 1- 19 தோற்றுவாய் ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பான ஆய்வுகள் 3 ஈழத்திலே தமிழ்நாவல் தோன்றிய சூழ்நிலை 4. ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய முதன் முயற்சிகள் 9
அடிக்குறிப்புகள் 17
சமுதாய சீர்திருத்தக் காலம் 20-46 சூழ் நிலையும் நோக்கமும் 20 நடப்பியல்பு நாவல்கள் 24 மர்மப் பண்பும் சம்பவச் சுவையும் 38 மொழி பெயர்ப்பும் தழுவலும் - 41 மதிப்பீடு 43 அடிக்குறிப்புகள் 45
எழுத்தார்வக் காலம்- 47-74. புதிய திருப்பமும் சூழ்நிலையும் 47 நாவல் வகைகள் 56
மொழிபெயர்ப்பும் தழுவலும் காதல் நாவல்கள் மர்ம நாவல்கள்

Page 13
XX
சமூக உணர்வும் தேசிய உணர்வுச்சாயலும் 61
இளங்கீரனின் நாவல்கள் பரிசோதனை முயற்சிகள்
மதிப்பீடு 7
அடிக்குறிப்புகள் 73 4. சமுதாய விமர்சனக் காலம் 75 - 135
சாதிப்பிரச்சினை நாவல்கள் 77
அரசியல் பொருளாதாரப் பிரச்சினை நாவல்கள் 91 தோட்டத் தொழிலாளர் பிரச்சினை நாவல்கள் 105 பாலியற் பிரச்சினை நாவல்கள் 114 பல்வகைப் படைப்புகள் 117
அவர்களுக்கு வயது வந்துவிட்டது நகைச்சுவை நாவல்கள் வரலாற்று நாவல்கள் மொழிபெயர்ப்பு நாவல்கள் குடும்ப நாவல்களும் மர்மநாவல்களும்
மதிப்பீடு 126 அடிக்குறிப்புகள் 134 5. பிரதேசங்களை நோக்கி 138-166 பிரதேச இலக்கியம் 136 ஈழத்து நாவல்களிற் பிரதேச உணர்வு 138 பிரசுரக் களம் 143 வன்னிப் பிரதேச நாவல்கள் l46 கிழக்கிலங்கைப் பிரதேச நாவல்கள் 154 வாழ்ப்பாணப் பிரதேச நாவல்கள் 158 அண்மையில் வெளிவந்த இரு நாவல்கள் 62 மதிப்பீடு 164 அடிக்குறிப்புகள் 165 நிறைவுரை i67-174
பின்னிணைப்பு 1 ஈழத்துத் தமிழ் நாவல்கள்
டிெ 2. டிெ தொடர்பான ஆய்வுகள்
நூற்பட்டியல்
அட்டவனை
பிழைதிருத்தம்

ஈழத்துத் 1. தமிழ் நாவலின்
தோற்றம்
தோற்றுவாய்
'நாவல் (Novet) என்ற ஆங்கிலச் சொல் புதுமை யெனப் பொருள்தரும் நோவா (Nova) என்னும் இந்துஐரோப்பியமூல மொழிச் சொல்லடியிலிருந்து உருவாகியது1. ஸ்பானியாவிலும் இத்தாலியிலும் மத்திய காலத்தில் வழக்கிலிருந்த கதைகள் பதினன்காம் பதினைந்தாம் நூற் ருண்டுகளில் இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் படிக்கப்பட்டபோது அவற்றை ஆங்கிலேயர் "நாவல்" என்னும் பெயரால் வழங்கினர். அக் கதைகளைப் போலவே தாமும் சுயமாக எழுதமுயன்ற வேளையில் அவற்றுக்கும் அப்பெயரையே வழங்கலாயினர்?. இவ்வாறு எழுதப்பட்ட கதைகள் ஆரம்பத்திலே இயற்கையிகந்த நிகழ்ச்சிகளையும் காதலுணர்வுகளையும் சித்திரிக்கும் பண்புடையனவாய் அமைந்திருந்தன.
பதினேழாம் பதினெட்டாம் நூற்ருண்டுகளில் ஐரோப் பிய சமூக அமைப்பிற் பெருமாற்றங்கள் நிகழ்ந்தன. கைத்தொழில் வளர்ச்சி, வாணிகப்பெருக்கம் ஆகியவற்றின் விளைவாகப் பாரம்பரிய சமூக அமைப்பு நிலைகுலைந்து புதிய "சமூக பொருளாதார உறவுகள் தோன்றின. இவற்றைப் புலப்படுத்தத்தக்க வகையில் "நாவல் பரிணுமம்

Page 14
2 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
பெறவேண்டியதாயிற்று. உண்மைச் சம்பவங்களுடன் கூடிய நடைமுறை வாழ்க்கையைச் சித்திரிக்கும் நீண்ட புனை கதை வடிவமே நாவல் என வழங்கும் மரபு பதினெட்டாம் நூற்ருண்டில் உருவாகியது.
"வசனவடிவிலே குறிப்பிடத்தக்க அளவு நீள முடையதாகவும் புனைந்துரைக்கப் படுவதாகவும் பாத்திரங்களின் பண்புகளையும் செயல்களையும் வாழ்க்கையில் உள்ளபடியே இயல்பான கதைப் பொருளில் அமைத்து அவற்றின் உணர்ச்சி மோதல்களைச் சித்திரிப்பதாகவும் அமைவது நாவல்'3. இது அகராதியியலார் தரும் வரைவிலக்கணம்.
தமிழில் நாவலிலக்கிய வடிவம் பயிலத் தொடங்கி நூருண்டுகளாகின்றன. பத்தொன்பதாம் நூற்ருண்டில் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கீழ் மேனுட்டுப் பண்பாட்டுத் தாக்கத்தினுல் இந்தியாவிலும் ஈழத்திலும் தேசிய பாரம் பரிய சமூக அமைப்பு நிலைதளர்ந்துகொண்டிருந்தது. ஆங்கிலப் பயிற்சியும் மேனட்டுக் கல்வி முறையும் சமூகத்திற் புதிய மதிப்பீடுகளை உருவாக்கத் தொடங்கியிருந்தன. ஆங்கில ஆட்சியின் விளைவுகளிலொன்ருன நடுத்தர வர்க்கம் வலிமிக்கதொரு சமூக சக்தியாக உருப்பெறத் தொடங் கியது. மேனட்டுக் கல்வி முறையிஞலும் வெளியீட்டுச் சாதனங்களின் வளர்ச்சியினலும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டு வந்த அறிவு வளர்ச்சியும் வாசிப்புப் பழக்கமும் இலக்கியத் துறையிலே பெருமளவு தாக்கத்தை விளைவித்தன. அக் காலம்வரை கற்றேர் கற்றுச் சுவைக்கும் வண்ணம் எழுதப்பட்டுவந்த மரபுவழி வசனமும் செய்யுளும் புதிய பரிணுமத்தை அவாவின. இத்தகைய சூழ்நிலையில் நாவ லிலக்கிய வடிவம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அறிமுக மாகியது. 1879ஆம் ஆண்டு வெளிவந்த மாயூரம் ச. வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் தமிழின் முதல் நாவலாகும். 1976ஆம் ஆண்டுவரை தமிழ் நாட்டில் ஏறத்தாழ மூவாயிரம் நாவல்கள் வெளி வந்துள்ளன என்று ஆய்வாளர் கணித்துள்ளனர்".

ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் 3
ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பான ஆய்வுகள்
1977ஆம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பான தகவல் தேட்ட முயற்சிகள், பண்பியற் பகுப்பாய்வுகள் ஆகியவற்றில் வரலாற்றமைப் புக்குத் துணைபுரியக் கூடிய வகையில் அமைந்த முக்கிய ஆய்வுகள் வருமாறு :
(அ) ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
- சில்லையூர் செல்வராசன், 19675 1891ஆம் ஆண்டு வெளிவந்த இன்னுசித்தம்பியின் ஊசோன் பாலந்தை கதை தொடக்கம் 1962ஆம் ஆண்டு வெளிவந்த தெல்லியூர் செ. நடராஜனின் காலேஜ் காதல் வரையிலான ஏறத்தாழ நூற்றைம்பது நாவல்கள் தொடர்பான தகவல்கள் இந்நூலிலே தரப்பட்டுள்ளன.
(ஆ) நொறுங்குண்ட இருதயம் - கதையும் கதைப்பண்பும்
- ஆ. சிவநேசச்செல்வன், 19728 1914ஆம் ஆண்டு வெளிவந்த மங்களநாயகம் தம்பையா வின் நொறுங்குண்ட இருதயம் நாவல் தொடர்பான ஆய்வுரை
(இ) தமிழில் வெளிவந்த முதலாவது சரித்திர நாவல்
- சோ. சிவபாதசுந்தரம், 19727 1895ஆம் ஆண்டில் (தமிழ் நாட்டில்) வெளிவந்த தி. த. சரவணமுத்துப்பிள்ளையின் மோகனுங்கி நாவல் தொடர் பான ஆய்வுரை
(ஈ) அஸன்பே கதைக்கோர் அறிமுகம்" - எஸ். எம். கமாலுத்தீன், 1974 1885ஆம் ஆண்டு வெளிவந்த சித்திலெவ்வை மரைக்காரின் (1838 - 1898) அசன்பேயுடைய கதை நாவலின் அறிமுகவுரை
(உ) ஈழத்து மண்ணின் முதல் நாவல்
சி. வை. சின்னப்பபிள்ளையின் "வீரசிங்கன் கதை" - நாகராஜ ஐயர் சுப்பிரமணியம், 19779 1905ஆம் ஆண்டு வெளிவந்த வீரசிங்கன் கதை தொடர் பான ஆய்வுரை.

Page 15
4 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
(ஊ) ஈழத்துத் தமிழ் நாவல்கள்
நூல்விபரப் பட்டியல் 1885-1976 - நா. சுப்பிரமணியம், 1977
1976ஆம் ஆண்டு முடிவுவரை ஈழத்தில் வெளிவந்த நானுாற்றேழு நாவல்கள் தொடர்பான விபரங்கள் இப் பட்டியலிலே தொகுக்கப்பட்டுள்ளன. நூல் வடிவில் வெளி வந்த நாவல்களிற் பெரும்பாலானவற்றுக்குக் கதைச் சுருக்கம், கதைப்பொருள், சமூக சமய அரசியற்பின்னணி, மொழிநடை, விசேட உத்தி முதலிய விபரக்குறிப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
பண்பியற் பகுப்பாய்வுகளாக அமைந்த ஆய்வுக் கட்டுரைகளிற் குறிப்பிடத்தக்கவை இரண்டு. அவற்றுள் ஒன்றே ஈழத்துத் தமிழ் நாவல்கள் என்ற தலைப்புடன் இந் நூலாசிரியரால் 1972இல் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதுகலைமாணிப் பட்டத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுக் குறிப் பிடத்தக்க சில மாற்றங்களுடன் ஈழத்துத் தமிழ் நாவ லிலக்கியம் என்ற இந்த நூலாக உருப்பெற்றுள்ளது.
மற்றையது சுதந்திரத்துக்கு முற்பட்ட இலங்கைத் தமிழ் நாவல்கள் என்ற தலைப்பில் 1973இல் க. சித்திரலேகர் இலங்கைப் பல்கலைக் கழகத் தத்துவமாணிப் பட்டத்திற்குச் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை11. இது சுதந்திரத்துக்கு முற்பட்ட ஈழத்துத் தமிழ்நாவல்களின் கதைப் பண்புகளைப் பகுப்பாய்வு செய்கிறது. இவை தவிர ஆய்வரங்குக் கட்டுரை களாகவும் சிறு பிரசுரங்களாகவும் பலவுள்ளன?. இவ்வகை முயற்சிகளின் பெறுபேருக ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பான ஆய்வின் எல்லைகள் விரிவடைந்தன. ஈழத்துத் தமிழ் நாவலின் வரலாறு பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்குகின்றது
ஈழத்திலே தமிழ் நாவல் தோன்றிய சூழ்நிலை
ஈழத்தின் இரண்டாவது தேசிய இனமான தமிழினம் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பாரம்பரியப் பிரதேசங்க ளாகக் கொண்டு டினேய மாகாணங்களிலும் பரவி வாழ்ந்து வருகின்றது. 1802ஆம் ஆண்டில் ஈழம் ஆங்கிலேயரது

ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் 5
குடியேற்ற நாடானது. ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்திற் கிறித்தவ மதம் பரப்பும் நோக்கில் ஈழத்துக்கு வருகை தந்த மிசனரி இயக்கங்கள் தமது மதமாற்ற முயற்சிகளோடு ஆங்கிலக் கல்வி வளர்ச்சிக்கும் பெருந்தொண்டாற்றின. யாழ்ப்பாணப் பிரதேசம் ஆங்கிலக் கல்வியிற் சிறந்து விளங்கியது கல்விகற்ற நடுத்தரவர்க்கம் ஒன்று உருவாகியது. ஆங்கிலக் கல்வி சிறப்புற்று வளர்ந்த அக்காலப்பகுதியில் மரபுவழிக் குருகுலக் கல்வி முறையிலே தமிழ்க் கல்வியும் வளர்ந்தது. ஆங்கிலமும் தமிழுங் கற்ற கல்வியாளர்கள் பலர் பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணப் பகுதியிற் செயலூக்கத்தோடு பணியாற்றினர். இவர்களுட் பலர் தமிழ் நாட்டுக்குச் சென்று பலதுறை களிலும் சிறந்து விளங்கியதோடு கல்விப் பணியும் புரிந்து பெருமைபெற்றனர்.
சைவத்தைப் பிரதான சமயமாகக் கொண்டிருந்த தமிழர் மத்தியிற் குறிப்பிடத்தக்க தொகையினரை மிசனரி இயக்கங்கள் கிறித்தவர்களாக்கியிருந்தன. இத்தகைய மதமாற்ற முயற்சிகளை எதிர்த்து பூரீலபூரீ ஆறுமுக நாவலரும் (1822 - 1879) அவரைப் பின்பற்றியோரும் உறுதியான இயக்கத்தை உருவாக்கினர். மிசனரிமாரின் கல்விக் கூடங்களுக்குப் போட்டியாகக் கல்விக்கூடங்களை நிறுவிய தோடு அவர்களைப் போலவே மேடைப்பிரசங்கம், அச்சுப் பிரசுரங்கள் ஆகியவற்றையும் இவர்கள் நன்கு பயன் படுத்தினர்.
பரம்பரையடிப்படையிலமைந்த சமூக பொருளாதார உறவுகளைக் கொண்ட ஈழத்தமிழரின் பண்பாட்டில் ஆங்கிலக் கல்வியும் ஐரோப்பிய பழக்கவழக்கங்களும் மாற்றங்களைத் தோற்றுவித்தன. பழைமையில் நம்பிக்கையிழந்தவர்களும் புதியராய்க் கிறித்தவ மதத்தைத் தழுவியவர்களும் அக் காலப்பகுதியில் ஐரோப்பிய நடையுடைபாவனைகளையும் வாழ்க்கைமுறைகளையும் பின்பற்றத் தொடங்கினர். இவற் றின் விளைவாகத் தேசியப் பண்பாடு சீர்குலையும் என அஞ்சிய ஈழத்தறிஞர் சிலர் தேசியப் பண்பாட்டுப் பாதுகாப்பு நோக்கில் இயக்கங்களைத் தொடங்கினர். கலாயோகி

Page 16
6 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
ஆனந்த கெ குமாரசுவாம் (1877-1947) 1905ஆம் ஆண்டில் நிறுவிய இலங்கை சமூக சீர்திருத்தக் கழகம் (Ceylon Social Reforms League) இத்தகைய நோக்கில் எழுந்ததொன்றே Lunt Gh.
ஈழத்துத் தமிழ் பேசும் மக்களுள் ஒரு பிரிவினரான முஸ்லிங்களிடையிலும் சமயம், அரசியல், கல்வி ஆகிய துறைகளில் மறுமலர்ச்சி இயக்கம் பத்தொன்பதாம் நூற் ருண்டின் பிற்பகுதியிலே ஆரம்பமாகியது. அறிஞர் சித்தி லெவ்வை இம்மறுமலர்ச்சிக்குத் தலைமைதாங்கி இஸ்லாமிய எழுத்துலக முன்னேடியாகப் பணியாற்றினர்.
சமூகத்திற் புதிதாக உருவான நடுத்தர வர்க்கத்தினரின் தொகை பெருகியபோது அவர்களது கருத்துப்பரிமாற்றத் திற்குரிய வெளியீட்டுச் சாதனமாகப் பத்திரிகைகள் தோன்றின. சமயக்கருத்துக்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் பரப்பும் நோக்கில் வெளிவரத் தொடங்கிய பத்திரிகைகள் தமிழ் மக்களிலே குறிப்பிடத்தக்க தொகையினரிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தன.
*" குறிப்பாகத் தமிழிலே 1841ஆம் ஆண்டு முதலாகத் தோன்றிய பத்திரிகைகளிலே எழுச்சிபெற்ற மத்தியவர்க்கத்தின் அபிலாசைகளை உணர்த்துவனவான விடயதானங்கள் காணப்படுகின்றன. உதயதாரகையின் முதலாவது இதழில் இருந்தே வாசனைப் பயிற்சியில் ஆர்வம் ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. துறைபோகக் கற்ருேர் மட்டுமன்றிச் சாதாரண கல்வி யறிவு பெற்ற மற்றேர்களுக்கும் புரியும் வகையில் பத்திரிகைகள் எழுத முயன்றன. பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதியில் ஏறத்தாழ 25க்கு மேற்பட்ட தமிழ்ப் புதினப்பத்திரிகைகள் நாடெங்கும் காலம் தோறும் தோன்றின. குறிப்பாக இலங்கைகாவலன், இலங்காபிமானி, புதினதிபதி, புதினுலங்காரி, முஸ்லிம் நேசன் போன்ற பத்திரிகைகள் பொதுமக்களின் வாசனை ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இயங்கின. ’13

ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் 7
என ஆ. சிவநேசச்செல்வன் இச் சூழ்நிலையை எடுத்துக் காட்டுகிருர், பித்திரிகைப் பின்னணியில் உறுதிபெற்ற வாசிப்புப் பழக்கத்தை மேலும் தூண்டி வளர்க்கும் வகையில் ஈழத்தின் பல்வேறு நகரங்களிலும் நூலகங்கள் உருவாகின. இந் நூலகங்களில் ஐரோப்பிய நாவல்களை வாசிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.
தமிழிலக்கியத்துறையிலே செய்யுள் மரபு வகித்துவந்த முதன்மை படிப்படியாக உரைநடை மரபுக்கு மாற்றம் பெறும் காலமாகப் பத்தொன்பதாம் நூற்ருண்டு அமைந்தது. ‘வசன நடை கைவந்த வல்லாள்ர்" ஆகிய ஆறுமுகநாவலர் தமிழ் உரைநடையினைப் பல்வேறு வகைகளிற் கையாண் டிருந்தார். அவர் எழுதியவற்றுள் திருவிளையாடற்புராண வசனம், சைவ விஞ விடை போன்றன பொதுமக்கள் விளங்கிக்கொள்ளக்கூடிய இலகுவான நடையிலமைந்தன. இவ்வகை நடையைப் பத்திரிகைத்துறை சார்ந்தோர் மேலும் வளர்த்தனர்.
இத்தகைய சூழ்நிலையில் ஈழத்திலே தமிழ் நாவலுக்கான முதன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கல்வி கற்ற நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்த சமூகச் சிந்தனையாளர்கள் தாம் அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் மக்களுக்குப் பயன்படும் வகையிற் கதை வடிவிலே தருவதற்கு முயன்றனர் உரைநடை பெற்றிருந்த வளர்ச்சி இவ்வகையிலே துணை புரிந்தது. மேனுட்டிலக்கியப் பயிற்சி, மேனடுகளினதும் மத்திய கிழக்கு நாடுகளதும் சமய கலாசாரத் தொடர்பு, தமிழ் நாட்டுத் தமிழ் நாவல்களைப் படித்தததினுலுண்டான ஊக்கம் என்பன இம் முயற்சிகளை நெறிப்படுத்தின. ஈழத்தின் தொடக்ககால நாவலாசிரியர்களுள் ` ஒருவரான சித்தி லெவ்வை மரைக்கார் அராபிய இரவுக் கதைகளில் (Arabian Nights) ஈடுபாடுகொண்ட தமிழறிஞர். இவரது அஸன்பே சரித்திர அறிமுகவுரையில் எஸ். எம். கமாலுத்தீன் அந்நூல் எழுதப்பெற்ற சூழ்நிலையைப் பின்வருமாறு விளக்குகிறர்.
'அறிஞர் சித்திலெவ்வையின் காலம் இலங்கை முஸ்லிம்களிடையே விழிப்புணர்ச்சி அரும்பிய கால மாகும். அக்காலத்தே இலங்கை முஸ்லிம்களின்

Page 17
8 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
சமய கலாசார இயக்கங்களுக்கு மிஸர் (எகிப்து), துருக்கி, அரேபியா போன்ற நாடுகளே வழிகோலின. இந்நாடுகள் இலங்கை முஸ்லிம்களின் சிந்தனைகளில் பெரும் அளவில் இடம்பெற்றதில் வியப்பில்லை. இதனை யொட்டியே இக்கால இலக்கிய ஆக்கங்களில் மத்திய கிழக்கு நாடுகள் நிழலாடலாயின. '14
கிறிஸ்தவ மதப்பிரசார முயற்சிகட்குப் பயன்படுத்தப் பட்டு வந்த நாட்டுக் கூத்து, நாடகம் ஆகியன அச்சக வசதி வந்த காலப்பகுதியில் நூல்வடிவு பெறத் தொடங்கின என்றும் அதன் தொடர்ச்சியாகவே நாவலிலக்கியம் தோன்றியது என்றும் இன்னசித்தம்பியின் ஊசோன் பாலாந்தை கதை எழுதப்பட்ட வரலாற்றைக் கூறுமிடத்துச் சில்லையூர் செல்வராசன் குறிப்பிடுகிறர்.19
தமிழ் நாட்டுத் தொடர்புடைய ஈழத்து ஆரம்பகால நாவலாசிரியர்கள் திரு. த. சரவணமுத்துப் பிள்ளையும் சி. வை. சின்னப்பபிள்ளையுமாவர். இவர்களுள் முதல்வர் தமிழ்நாட்டிலே வாழ்ந்து தமிழ் நாட்டு வரலாற்றுப் பின்னணியில் நாவல் எழுதியவர். சி. வை. சின்னப்பபிள்ளை ஈழத்தைக் களமாகக் கொண்டு எழுதிய வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் (1905) நாவலின் ஆங்கில முன்னுரையிலே தமது நோக்கத்தைப் பின்வருமாறு கூறுகிருர் :
"வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் என்ற எனது கன்னிப் படைப்பான இந்த நாவலைப் பொதுமக்களுக்குச் சமர்ப்பிக்கும் வேளையிற் சில குறிப் புக்களைக் கூறவேண்டியுள்ளது. இது எனது கன்னி முயற்சியாதலினல் பல இடர்பாடுகளை நான் எதிர் நோக்க வேண்டியிருந்தது. வாசகர்களின் உள்ளங்களிலே சன்மார்க்கத்தின் மகத்துவத்தையும் அதனலடையக் கூடிய நன்மைகளையும் பதியவைப்பதும் இந்திய வாசகர் களுக்கு ஈழத்து மக்களின் சாதாரண கிராமவாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் தெளிவாக விளக்குவதுமே இப்படைப்பின் நோக்கமாகும். தற்பொழுது தமிழ் நாவல்கள் பெரும்பாலும் இந்திய வாழ்க்கையையும்

ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் 9
குறிப்பாகப் பிராமணரது வாழ்க்கையையுமே விபரிக் கின்றன. இக் கதை ஒர் இளைஞனுக்கு உண்மையில் ஏற்பட்ட அநுபவங்களை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் காதல், வீரம் போன்ற சுவைகளையும் தமிழ்ச் சான்றேரிலக்கியங்களின் பொருத்தமான மேற் கோள்களையும் இணைத்து இதனைப் படைத்துள்ளேன். இத்தகைய கன்னிப்படைப்பில் குறைபாடுகள் காணப் படுவது தவிர்க்கமுடியாததே. அவ்வகைக் குறைபாடுகளை மன்னிக்குமாறு எனது வாசகர்களைக் கேட்டுக்கொள் கிறேன்."
ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றத்திலே தமிழ் நாட்டு நாவல்கள் வகித்த பங்கினை இம் முன்னுரை உணர்த்
கின்றது.
ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய முதன் முயற்சிகள்
பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதியிலே ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய முதன் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுவிட்டன. 1856ஆம் ஆண்டில் வெளிவந்த காவலப்பன் கதையே தமிழில் வெளிவந்த முதலாவது நாவல் என்று மு. கணபதிப்பிள்ளை கருதுகிரு?ர். 16 Parley the Porter என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் ஆக அமைந்த இது யாழ்ப் பாணம் "ரிலிஜஸ் சொசைட்டி"யின் வெளியீடாகும், ஹன்ன elpi (Hanna More) என்பார் இதன் ஆசிரியர், 17 இந்நூல் பார்லே என்ற சுமைதூக்கி (1869), பார்லே என்னும் சுமையாளியின் கதை (1876) ஆகிய தலைப்புக்களுடன் தமிழ் நாட்டில் வெளிவந்துள்ளது.18. இந் நூற் பிரதிகள் கிடைக்க வில்லை. இதனை "நாவல்" என்று கொள்ளலாமா என்பது ஆய்வுக்குரியது. பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற் பகுதியில் தமிழில் ஐஞ்ஞாற்றுக்கும் மேற்பட்ட கதை நூல்கள் வெளிவந்துள்ளன.19 இதிகாச புராணக் கதைகள், நாாேடடிக் கதைகள், பிறமொழிக் கதைகள், மேலை நாட்டுச் சமயக் கதைகள் முதலிய பல்வேறு வகைகளிலும் அமைந்த இக் கதைகளை நாவல் எனக் கொள்வதில்லை. காவலப்பன் கதை மேலை நாட்டுச் சமயக் கதைகளிலொன்ருகவிருக்கலாம்.

Page 18
10 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
"இலங்கை சும்பிறீம் கோட்டுப் பிறக்றரும் முஸ்லிம் நேசன் பத்திரிகைப் பத்திராதிபரும் ஆகிய சித்திலெவ்வை மரைக்கார் இயற்றிய அசன்பேயுடைய கதை 1885-2th ஆண்டு முஸ்லிம் நேசன் அழுத்தகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்தது20. இதன் இரண்டாவது பதிப்பு 1890இல் சென்னை அர்ச். சூசையப்பர் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்ததாகத் தெரிகிறது?1. இந் நூலின் புதிய பதிப் பொன்று அசன்பேயுடைய சரித்திரம் என்ற தலைப்புடன் 1974இல் திருச்சிராப்பள்ளி இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக வெளியீடாக வந்துள்ளது. இதன் கதை மத்திய கிழக்கு நாடுகள் இந்தியா ஆகியவற்றை நிலைக்களஞகக் கொண்டது.
'மிசுறுதேச (எகிப்து) காயீர் பட்டணத்து யூசுபு பாக்ஷா என்னும் இராஜவம்சத்தவருக்குப் பிறந்த மகன் குழந்தைப் பருவத்திலேயே கடத்தப்பட்டு பொம் பாயில் (பம்பாய்) ஜகுபர் என்பவரிடம் வளருகிருன். இக்குழந்தைக்கு அஸன் (சுந்தரம்) என்ற பெயரிட்டனர் பதினன்கு வயதில் ஜகுபரை விட்டுப் பிரிந்து வஞ்சகரின் சூழ்ச்சிக்காளான இவன் அவற்றினின்று தப்பிக் கல்கத்தா நகருக்குச் சென்று அங்கிருந்த ஆங்கில தேசாதிபதி நாயகத்தின் ஆதரவில் கற்று மேம்படுகின்ருன். லார்டு டெலிங்டனின் மகள் பாளினவின் காதலனகிருன். மிசுறு தேசத்திலிருக்கும் தனது பெற்ருேரைக் காணச் செல்கிருன். அங்கும் பல சூழ்ச்சிகட்கு ஆட்பட்டுத் தப்பித் தீயோரைப் பிடித்துக்கொடுக்கிருன். இவ் வீரச் செயல்களுக்காக பே (Bey) என்னும் கெளரவ விருதை பெறுகிருன்."
இக் கதையம்சம் மர்மச் சம்பவங்களுடனும் வீரசாகசச் செயல்களுடனும் இஸ்லாமிய பண்பாட்டு அம்சங்களுடனும் சித்திரிக்கப்பட்டுள்ளது. நடப்பியல்புச் சாயல் கொடுக்கும் வகையிற் கதை நிகழ்ச்சிகளுக்கு உண்மைத் திகதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்தியாயப் பகுப்புக்கள் இன்றி ஒரே தொடராகக் கதை கூறப்பட்டுள்ளது. கதை கூறும் முறையில் காவியமரபின் செல்வாக்குப் புலணுகின்றது.

ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் 11
நன்மை தீமை இரண்டின் பிரதிநிதிகளான அமைந்த பாத்திரங்கள் நாடகப்பாங்கான உரையாடல்களுடன் இயங்குகின்றன.
"இக் கதை எழுதப்பட்ட காலத்திலும் அதற்கு முன்னரும் பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதை நோக்கும்போது அவை இத்ததைய உரையாடல்கள் எழுதப்படத் தூண்டுதல்களாய் உதவியிருக்கலாம் என்றே தோன்றுகின்றது".22 என்பர் சி. தில்லைநாதன். க. கைலாசபதி இந்நாவல் தொடர் பாகக் கருத்துத் தெரிவிக்கையில்
"சித்திலெவ்வையின் நூலைப்படிக்குமொருவர் இதற்கு "அஸன்பேயின் திகைப்பூட்டும் நூதன சாகசங்கள்’’ என்று பெயரிட்டிருக்கலாமென்று எண்ணக் கூடியதாயுள்ளது. கதையின் கருவும் போக்கும் அவ்விதம் எண்ணத்தக்கதாகவே அமைந்துள்ளன".23
எனக் கூறுவது அவதானிக்கத்தக்கது.
வீரசாகசச் சம்பவங்களுடன் கூடிய அற்புதக் கதைப் பண்புவாய்ந்த அசன்பேயுடையகதை ஈழத்தின் முதலாவது தமிழ் நாவல் என்ற சிறப்பையும் தமிழ் நாவலிலக்கிய வரலாற்றில் இரண்டாவது நாவல் என்னும் சிறப்பையும் பெறுகின்றது. தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் ( 1879) போலவே இந் நாவலும் காவியமரபின் செல்வாக்கிலிருந்து விடுபடாத ஒரு நிலைமாறுகாலப் பிரசவம் ஆக அமைந்தது.
Orson and Valantine 6T6irp பேர்ர்த்துக்கேய நெடுங் கதையை ஆதாரமாகக் கொண்டெழுதப்பட்டதாக அறியப் படும் ஊசோன் பாலந்தை கதை 1891ஆம் ஆண்டு வெளி வந்தது. திருகோணமலை எஸ். இன்னசித்தம்பியால் எழுதப் பட்ட இந்நூல் அச்சுவேலி எஸ். தம்பிமுத்துப்பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. "அலுமான்ய தேசத்தின் அலக் ஸாந்தர் ஏம்பரதோருக்கும் தொன்வெலிச்சாந்தென்னும் அரசகுமாரிக்கும் பிறந்த ஊசோன், பாலந்தை என்னுமிரு விரவாலிபர்களது சாகசங்களைக் கூறுவதாக அமையும்

Page 19
12 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
இந்நாவலின் பிரதிகள் கிடைக்கவில்லையாதலால் இதன் நாவலிலக்கியத்தரம் பற்றியும் தழுவலா தமிழாக்கமா என்பதுபற்றியும் அறிய முடியவில்லை. சில்லையூர் செல்வு ராசன் தந்துள்ள குறிப்பின்படி?* அரச குடும்பத்தைச் சார்ந்த வீரசாகசக் கதையாகவிருக்கலாம் என்று கருத முடிகிறது. இதன் இரண்டாம் பதிப்பு 1924ஆம் ஆண்டில் வெளிவந்தது.
தமிழ் நாட்டிலே சென்னை, பச்சையப்பன் கல்லூரி யிலும் மாநிலக் கல்லூரியிலும் தமிழ்ப் பேராசிரியராய்ப் பணிபுரிந்த ஈழத்தவரான திருகோணமலை த. கனகசுந்தரம் பிள்ளை (1863-1922) யின் இளைய சகோதரரான தி. த. சரவணமுத்துப்பிள்ளை சென்னை, மாநிலக், கல்லூரியிற் கீழைத்தேயச் சுவடி நிலையத்தின் பொறுப்பாளராகக் கடமை யாற்றியவர். அப்பணிபுரிந்த வேளையில் தாம் மேற் கொண்டிருந்த வரலாற்ருராய்ச்சியின் பயணுகக் கிடைத்த ஊக்கத்தால் மோகனுங்கி நாவலை எழுதிஞர். இது 1895ஆம் ஆண்டு சென்னை இந்து யூனியன் அச்சுக்கூடத்தில் பதிப் பிக்கப்பட்டது. இந்நாவலின் கதை தமிழ் நாட்டின் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளிப் பிரதேசங்களில் நாயக்க மன்னர்கள் ஆட்சி புரிந்த பதினேழாம் நூற்ருண்டைச் சார்ந்தது. இரு நகரங்களிலும் ஆட்சி புரிந்தவர் களிடையில் நிகழ்ந்த அரசியற் போட்டியின் பகைப்புலத்திற் காதல், வீரம், சூழ்ச்சி முதலிய சம்பவங்களைப் பொருத்தி வரலாற்று நாவலைப் புனைந்துள்ள சரவணமுத்துப்பிள்ளை தமிழின் வரலாற்று நாவலிலக்கியத்துறையின் முன்னேடியாக அமைகிழுர், இந்நாவல் ஈழத்தவரால் எழுதப்பட்ட தென்றலும் தமிழ் நாட்டையே களமாகக் கொண்டுள்ளதால் இதனை ஈழத்துத் தமிழ் நாவல் என வரையறை செய்ய முடியாது என்பர் சோ. சிவபாதசுந்தரம்.25 ஆயினும், தமிழ் நாவலின் முக்கிய பிரிவொன்றுக்கு முன்னுேடியாக விளங்கியவர் ஈழத்தவர். என்ற நியாயமான பெருமை ஈழத்துத் தமிழ் நாவலாராய்ச்சியில் ஈடுபடுபவர்களால் நினைவுகூரத்தக்க தொன்றென்பதை மறுப்பதற்கில்லை. இந்நாவல் 1919ஆம் ஆண்டு சொக்கநாதநாயக்கர் என்ற தலைப்பிற் சுருக்கிப் பிரசுரிக்கப்பட்டது.

ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் 13
மோகனுங்கி தமிழ் நாட்டின் வரலாற்றுக்காலமொன்றை நிலைக்களஞகக் கொண்டு எழுதப்பட்ட போதும் நாவலின் மொழிநடையில் ஈழத்துப் பேச்சுவழக்குகள் இடம் பெற் றுள்ளமையை சோ. சிவபாதசுந்தரம் எடுத்துக்காட்டி யுள்ளார். குறிப்பிடத்தக்க ஈழப் பேச்சு வழக்குகள் வருமாறு :
விலை சரசமாயிருக்கு, வீட்டுக்குக் கிட்ட, கன நாளாச்சுது, மெத்த நேரஞ்சென்று, இதாலே, அதாலே, மெய்தான, வலோற்காரம், செவ்வையாக, சொன்ன ணுன், போனனன், வரக்காட்டிறன், தெண்டிக்க வேண்டும், சுறுக்கு, தேள்வையில்லை, பின்னை, சீ, வடிவானபெண், விசர், பகலைக்கு 26
ஈழத்துத் தமிழ் நாவலின் வரலாறு பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் தொடங்குகின்றதென்று பொது வாகக் கருதப்பட்டாலும் ஈழத்து மண்ணையும் ஈழத்து மக்களது வாழ்க்கைமுறைகளையும் நிலைக்களஞகக் கொண்ட படைப்புக்களாக அக்காலத்தன எவையும் அமையவில்லை யென்பது குறிப்பிடத்தக்கது. எழுதியவர்கள் ஈழத்தவர்கள் என்பதும் ஒரு நாவலைத் தவிர ஏனையவை ஈழத்திலே பதிப்பிக்கப்பட்டன என்பதுமே ஈழத்தோடு அவற்றுக்குள்ள தொடர்பெனலாம். இவ்வகையிலேயே இவை ஈழத்துத் தமிழ் நாவலின் முதன் முயற்சிகள் என்று கொள்ளப்படு கின்றன.
ஈழத்துமண்ணைக் களமாகக் கொண்டு தமிழ் நாவல் எழுதும் மரபு இருபதாம் நூற்றண்டின் ஆரம்பப் பகுதியி லிருந்தே தோற்றம் பெறுகின்றது.
இவ்வகையில் ஈழத்து மண்ணைக் களமாகக் கொண்டு நாவல் எழுதிய முதல்வர் என்ற சிறப்பு சி. வை. சின்னப்ப பிள்ளைக்கு உரியது. பதிப்புப் பேராசிரியர் சி. வை. தாமோதரம்பிள்ளை (1832-1901) யின் இளைய சகோதரரான சி. வை. சின்னப்பபிள்ளை தமிழ் நாட்டில் உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்றபின் ஈழத்துக்கு மீண்டு கல்வி

Page 20
14 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
விருத்திக்கான பணிகள் புரிந்தவர்.27 இவர் வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் (1905) உதிரபாசம் அல்லது இரத்தின பவானி (1915), விஜயசீலம் (1916) ஆகிய நாவல் களையும் தனலக்குமி தாலாட்டு (1909) என்னும் செய்யுள் நூலையும் இயற்றினர். வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் சென்னை மினர்வா அச்சுக் கூடத்திற் பதிப்பித்து வெளியிடப்பட்டது. ஏனையவை ஈழத்திற் பதிப்பிக்கப் பட்டன.
ஈழத்தில் எழும் இலக்கியம் ஈழத்து மக்களது வாழ்க் கையைப் பொருளாகக் கொண்டு அமையவேண்டுமென்ற தேசிய உணர்ச்சிக் குரலின் சாயலை இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் வெளிவந்த வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் நாவலின் முகவுரையிலே தெளிவாகக் காணமுடிகின்றது28.
யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த மல்லாகம் என்ற கிராமத்திற் பிறந்த வீரசிங்கன் என்ற வீர வாலிபன் தனது அண்ணன் மனைவியின் சூழ்ச்சியால் ஊரை விட்டு வெளி யேறிக் கால் நடையாக அநுராதபுரம் வரை செல்கிருன் யாழ்ப்பாணம் வன்னி ஆகிய பிரதேசங்களைக் கடந்து அவன் மேற்கொள்ளும் பயணத்தில் எருமை, யானை ஆகிய வற்றையும் கூட்டாக எதிர்க்கும் முரடர்களையும் வெல்கிருன். அநுராதபுரத்தில் மெனிக் பண்டா என்ற சிங்கள வீரனுடன் போரிட்டு வென்று அவனை நட்பாக்கிக் கொள்கிருன். அங்கு குடியேறியிருந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த இலட்சுமி என்ற அழகு நங்கையின் காதலுக்குரியவனகிருன். அவளை அடைய முயன்ற தீயோர் கூட்டத்தை வென்று அகப் படுத்திச் சட்டத்தின் கையிற் கொடுக்கிருன். பின்னர் இலட்சுமியை மணந்து வாழ்க்கையில் முன்னேறி இன்பமாக வாழ்கிருன்.
வீரம், அறிவு, அன்பு, ஒழுக்கம் முதலிய நற்பண்புகள் பொருந்தப்பெற்ற கதைத் தலைவன், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய பண்புகளுக்கு இலக்கியமான கதைத்தலைவி

ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் 15
என்ற வகையிற் காவியப்பண்புடையனவாய்ப் பாத்திரங்கள் அமைந்துள்ளன. வீரசிங்கன் ஒரு சந்தர்ப்பத்திலே தனது ஆற்றலைப் புலப்படுத்தும் வகையிலே,
**சென்னை வித்தியாசங்கப் பிரவேசப் பரீட்சையில் தேறியிருக்கிறேன். தமிழிலே நிகண்டு, நாலடியார், திருக்குறள், நைடதம், பர்ரதம், கந்தபுராணம், திரு விளையாடற் புராணம், பெரிய புராணம், கம்பராமா யணம் முதலிய செய்யுட்களும் நன்னூலும் இலக்கண விளக்கமும் படித்திருக்கிறேன். '29
என்று கூறுகிரு?ன். அன்றைய காலப் பகுதியிலே அறிஞன் என மதிக்கப்படுவதற்கு வேண்டப்பட்ட தகைமைகளை இக்கூற்று உணர்த்துகின்ற தெனலாம். ஆசிரியர் தமது கல்வியறிவைப் பர்த்திரத்தில் ஏற்றியுள்ளமை தெரிகிறது. கதைப் போக்கிற்குப் புறம்பாகத் தமது அறிவாற்றலைப் பாத்திரங்களிற் சுமத்தும் இப் பண்பினைத் தற்கால நாவ லாசிரியர்களிலே தி. சா. ராஜாவிடம் அவதானிக்கலாம்.
யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த படித்த நடுத்தர வர்க்கத்தினரிற் பலர் அரசபணி நோக்கிலும் வர்த்தகத் தேவைகளின் பொருட்டும் குடா நாட்டை நீங்கி ஈழத்தின் பல பாகங்களிலும் பரவி வாழ்ந்த சூழ்நிலையை நாவலிற் காணலாம். யாழ்ப்பாணம் தொடக்கம் அநுராதபுரம் வரையிலுள்ள நீண்ட வீதி, வன்னிப் பிரதேசக் காட்டுப் பகுதி, அநுராதபுரம், மேன்றலை (மிகுந்தலையாகலாம்) திருச்கோணமலை, திரியாய், தம்பலகாமப்பற்று, கொட்டியா புரப்பற்று, கட்டுக்குளம்பற்று ஆகிய பிரதேசங்கள் கதைக்குள் வருகின்றன. ஈற்றில் கொழும்பு நகரும் கதையுடன் இணைகின்றது.
g). 6oru Inti-gyb ஆசிரியர் கூற்றுமாக அமையும் கதையிலே மாடசாமி என்ற துணைப் பாத்திரமொன்றின் உரையாடல்களைத் தவிர ஏனைய பகுதிகள் இலக்கணச் செறிவுடைய செந்தமிழிலேயே அமைந்துள்ளன.

Page 21
Ι6 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
**உங்களைப் பார்க்கலாமெண்ணு ஒருநாள் இங்கை வந்தேனையா ; நீங்க திருக்கிணமலைக்குப் பூட்டீங் கெண்ணு சொன்னங்க : அப்புறம் அந்தம்மிணியைப் போய்ப் பார்த்தேன். அது அழுதுகிண்ணு எவனே உங்கமேலை இல்லாத கோளுங்க சொல்லி அத்தை யெல்லாம் அந்தையா நம்பிக்கிண்ணு உங்களை அனுப்பி விட்டாங்க எண்ணு சொல்லிச்சு".30 வடகரை (இந்திய) நாயக்கன் என அறிமுகப் படுத்தப்படும் மாடசாமி என்ற பாத்திரத்தின் இத்தகைய உரையாடல்கள் நகைச்சுவை யூட்டுவதற்காகச் செயற்கையாக அமைக்கப் பட்டுள்ளன எனக் கருதமுடிகின்றது.
"பாலைமரத்தின் பராரை சற்றேறக்குறைய இரண்டு பாகஞ் சுற்றளவுள்ளதாய் இருந்தபடியால் வந்த நால்வாய் மரத்துக்கிப்பால் நின்று தன் ருேல்வாயை ஒரு பக்கமாய் அவனைப் பிடிக்கக் கருதிப்போலும்
$ı "L... .. ** என ஆசிரியர் கூற்ருக வரும் பகுதியில் பராரை (பகுத்த அடிப்பகுதி), நால்வாய் (யானை), தோல்வாய் (துதிக்கை), முதலிய வழக்கிழந்த பழந்தமிழ்ச் சொற்கள் பயிலக்
காணலாம்.
ஈழத்து மக்களின் சாதாரண கிராமப்புற வாழ்க்கை யையும் பழக்க வழக்கங்களையும் விளக்கும் நோக்கில் நாவல் எழுதமுயன்ற சி.வை.சின்னப்பபிள்ளை சமூக நடப்பியல்போடு பொருந்தாத வீரசாகசப் பண்பு வாய்ந்ததாகவே வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் நாவலைப் படைத்துள்ளார்.
உதிரபாசம் அல்லது இரத்தினபவானி நாவல் தமிழ் நாட்டுப் பகைப்புலத்தில் எழுதப்பட்டது. இரத்தினம் என்ற வீரவாலிபன் பல சாகசங்கள் புரிந்து பவானி என்ற அழகியைக் கரம்பற்றுகிருன்.
விஜயசீலம் ஈழத்து வரலாற்றிலே முதல் மன்னனெனப் படும் விஜயனின் கதை. வரலாற்றுச் செய்தியை விரிவு செய்து கற்பனைச் சம்பவங்களைப் புகுத்தி வீரகாவியப்

ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் 7
பண்புடன் எழுதப்பட்டது. ஈழத்து வரலாற்றடிப்படையி லெழுந்த முதலாவது வரலாற்று நாவல் என இதனைக் குறிப்பிடலாம்.
சி. வை. சின்னப்பபிள்ளையின் நாவல்கள் வீரசாகசப் பண்பு வாய்ந்த வசன காவியங்களாக அமைந்தமைக்குத் தன்னிகரில்லாத் தலைவனையுடையதாய் மிளிரும் காவிய மரபு வழிவந்த தமிழறிவு ஒரு காரணமாகலாம்.
வீரசாகசங்களையும் காதலையும் புனைந்து நற்போதனைகளை உள்ளடக்கிக் கூறும் கதையே நாவல் என்று சி. வை. சின்னப் பிள்ளை கருதியுள்ளார்.32 இதனல் ஈழத்து மண்ணின் முதல் நாவல் என்ற சிறப்புக்குரிய வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் நாவலிற் கதை நிகழும் இடம் ஈழம் என்பதைத் தவிரக் கதைப்பொருளில் ஈழத்துச் சமூகக் களம் முக்கியத்துவம் பெறவில்லையென்பது குறிப்பிடத் தக்கது.
ஈழத்துத் தமிழ் மக்களது சமுதாயப் பிரச்சினைகளைப் பொருளாகக் கொண்டு எழுத்ப்பட்ட முதல் நாவல் என்ற சிறப்பு திருமதி மங்களநாயகம் தம்பையாவின் நொறுங் குண்ட இருதயம் (1914) நாவலையே சாரும். இருபதாம் நூற்ருண்டின் முற்பகுதியில் ஈழத்தில் நிலவிய சமயசார்பான சமுதாய சீர்திருத்த உணர்வூக்கத்தினடியாக எழுந்த இந் நாவலைச் சமுதாய சீர்திருத்தக் காலம் என்ற தலைப்பின் கீழ் நோக்கலாம். -
அடிக்குறிப்புகள்
1. Origins, A Short Etymological Dictionary of Modern English,
1963, pp. 441-442 2. The Columbia Encylopaedia, 1947, p. 1284
Chambers's Encylopaedia, New ed. Vol. X, 1950, pp. 104 - 106 The Encyclopedia Americana, 1958, p. 503 3. Webster's New International Dictionary of the English
Language, 1926, p. 1474 Ohambers's Twentieth Century Dictionary, 1960, p. 733

Page 22
8
0.
1.
2.
3.
14.
I5,
f7.
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
. பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி), சோ. சிவபாதசுந்தரம்
தமிழ் நாவல் நூற்ருண்டு வரலாறும் வளர்ச்சியும், 1977, பக். 278
. புதுமை இலக்கியம், அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டு
மலர், 1962, பக், 9 - 12, 97-104, 109-111 ஆகிய பக்கங்களிற் பிரசுரமான கட்டுரையின் நூல்வடிவம்.
. பாவலர் துரையப்பாபிள்ளை நூற்ருண்டு விழாமலர் 1972,
பக். 73 - 80 மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை, மல்லிகை கொடி 7 மலர் 49, 50 (1972 மே-ஜுன்) பக். 14-18, 38 - 41 ஆகிய பக்கங்களிற் பிரசுரமான கட்டுரையின் விரிவு.
தினகரன் வாரமஞ்சரி, 1972-11-12, 19, தமிழில் வெளிவந்த முதலாவது சரித்திர நூல்" என்ற தலைப்பே காணப்பட்டாலும் "தமிழில் வெளிவந்த முதலாவது சரித்திர நாவல் என்பதே சரியான தலைப்பு என சோ. ச. சிவபாதசுந்தரம் எழுதிய 1977-3-13 திகதிக் கடிதமூலம் அறியமுடிகின்றது. தினகரன் 1974-5-26, அசன்பேயுடைய கதையின் புதிய பதிப்பான அஸன்பே சரித்திரத்தின் (1974) அறிமுகவுரையாகவும் இது அமைந் துள்ளது. தினகரன் வாரமஞ்சரி 1972-10-22 ஆந் திகதி இதழில் *அறிஞர் சித்திலெவ்வை இலங்கையின் முதல் தமிழ் நாவலா சிரியர்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையிலே தமிழ் நாட்டில் 1890 ஆம் ஆண்டு பிரசுரம் செய்யப்பட்ட அசன்பேயுடைய சரித்திரம் பற்றிய தகவலேத் தந்த இவர் தொடர்ந்து ஆய்வு நிகழ்த்தி 1885 ஆம் ஆண்டில் ஈழத்தில் பிரசுரிக்கப்பட்ட தகவலை வெளிக்கொணர்ந்துள்ளார். չ மல்லிகை-105, 1977 ஜனவரி பக். 32 - 37 இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாக நூலக வெளியீடு
இல, 2, 1977 (தட்டச்சுப் பிரசுரம்) அச்சில் வெளிவரவில்லை. பின்னிணைப்பு 2, பார்க்க. "ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம்" தமிழ் நாவல் நூற்ருண்டு விழா ஆய்வரங்குக் கட்டுரை 1977, (தட்டச்சுப் பிரதி) பக். 3 மறுபிரசுரம் 1974, பக். V சில்லையூர் செல்வராசனின் Community-5 இதழ்க் கட்டுரையினின்று இக் கருத்தை, ஆ. சிவநேசச்செல்வன் 'ஈழத்துத் தமிழ் நாவலிலக் கியம் - சில குறிப்புகள் - 1973, பக். 4 இல் எடுத்தாண்டுள்ளார். சில்லையூர் செல்வராசன், ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி, 1967
முன்னுரை பக். 11-12 م Barnett, L. D. and Pope, G.U., A. Catalogue of the Tamil Books in the Library of British Museum, London, 1909
... 117

ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் 9
8.
19.
20.
2.
22.
33.
24.
25.
26.
27.
88.
29.
30.
3.
32.
அ. ச. ஞானசம்பந்தன், பொதுப்பதிப்பாசிரியர், தமிழ்நூல் விவர அட்
டவணை 1965, தொ. 1 பகுதி 5 அநுபந்தம். பக். 729 மேற்படி தமிழ் நூல் விவர அட்டவணையில் இவற்றின் விபரத்தைக்
காணலாம். தினகரன் வாரமஞ்சரி, 1974-4-4, பக். 7 இல் பிரசுரிக்கப்பட்ட அசன்பேயுடைய கதை முதலாம் பதிப்பின் முகப்புப் புகைப்படப் பிரதி. எஸ். எம். கமாலுத்தீன், தினகரன் வாரமஞ்சரி, 1974-5-26, பக். 8 இல் சென்னை, தமிழ்நூற்பட்டியலை (1857-1900) ஆதாரம் காட்டி இத்தகவலைக் தந்துள்ளார். "ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் -ஒரு பொது மதிப்பீடு.”* தமிழ் நாவல் நூற்ருண்டு விழா ஆய்வரங்குக் கட்டுரை, 1977, (தட்டச்சுப்பிரதி) பக். 2 1974-2-25 வானெலிமஞ்சரியில் இடம்பெற்ற க. கைலாசபதியின் இக் குறிப்பை எஸ். எம். கமாலுத்தீன் 1974-5-26 தினகரன் வார W மஞ்சரிக் கட்டுரையில் எடுத்தாண்டுள்ளார். ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி, பக். 15 அடிக்குறிப்பு 7 இல் குறிப்பிடப்பட்ட கட்டுரை பக் 3 மேற்படி பக். 9 (tp. கணபதிப்பிள்ளை, ஈழநாட்டின் தமிழ்ச்சுடர் மணிகள், 1967, பக். 123 இந்நூலில் 8 ஆம் பக். பார்க்க வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜயம், பக். 78
Lid. 222
பக், 11
曾今
vy
, முன்னுரை

Page 23
2 சமுதாய சீர்திருத்தக் காலம்
சூழ்நிலையும் நோக்கமும்
பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றண்டின் முதல் நாற்பது ஆண்டுகள்வரை சைவம், கிறித்தவம் ஆகிய இரு சமயங்களினடிப்படையி லான சமுதாய சீர்திருத்த உணர்வே ஈழத்துத் தமிழிலக்கி யத்தை நெறிப்படுத்தும் உந்து சக்தியாய்த் திகழ்ந்தது. கிறித்தவ மிசனரியினர்க்கும் நாவலர் மரபைப் பேணிய சைவர்களுக்குமிடையில் நிலவிய "போட்டி நிலை சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சமயம் சார்ந்த அறம், ஒழுக்கம் ஆகியவற்றினடிப்படையிலே தீர்வுகூறும் இயல்பைத் தூண்டியது. இதன் விளைவாக ஈழத்தின் ஏனைய இலக்கியத் துறைகளிற்போல நாவலிலும் சமய அடிப்படையிலான சமுதாய சீர்திருத்தம் ஒரு பொதுப் பண்பாயமைந்தது.
இவ்வகையில் இருபதாம் நூற்ருண்டின் முதல் நாற்ப தாண்டுக் காலப் பகுதியை ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத் திற் சமுதாய சீர்திருத்தக் காலம் எனலாம். ஆசிரியர்களும் கல்விகற்ற குடும்பத்துப் பெண்களும் சமயத்தொடர்பான பிரசுரமுயற்சிகளிலீடுபட்டிருந்தோருமான இக்காலப்பகுதி நாவலாசிரியர்கள் பலர் சமுதாய சீர்திருத்தத்திற்குரிய வசன இலக்கிய வடிவம் என்ற வகையிலேயே "நாவலைக் கருதினர்.

சமுதாய சீர்திருத்தக் காலம் 2.
w இக்காலப்பகுதி நாவலாசிரியர்கள் தமது நாவல்களுக்கு எழுதியுள்ள முன்னுரைகளிலும் சக நாவலாசிரியர்களுக்கு வழங்கிய அணிந்துரைகளிலும் தெரிவித்துள்ளவை அவர்க ளது நோக்கத்தையும் நாவல் தொடர்பாக இக்காலப் பகுதி யில் நிலவிய கருத்துணர்வையும் தெளிவாக்குகின்றன.
'சன்மார்க்க சீவியத்தின் மாட்சியை உபதேசத் தால் விளக்குவதிலும் உதாரணங்களால் உணர்த்துவது மிகவும் நன்மை பயத்தற்கு ஏதுவாகும் என்றெண்ணி இக் கதையை எழுதத்துணிந்தேன். ஒருவிஷயத்தை உவமை களாலும் ஒப்பனைகளாலும் மனதிற் பதியப் பண்ணுதல் இலகுவென்றது யாவருங் கண்ட நல்வழி. ஆகையினல் சில காரியங்களைப் போதனையாகவும் புத்திமதியரகவும் இப் புத்தகத்தில் அடக்க மனமேவப்பட்டேன்."2 என நொறுங்குண்ட இருதயம் நாவலின் ஆசிரியை திருமதி மங்களநாயகம் தம்பையா தமது நோக்கத்தை வெளிப்படுத்தி யுள்ளார். கிறித்தவ சமய அடிப்படையிலான சமூக வாழ்க் கையே அவர்களது குறியீட்டில் சன்மார்க்க சீவியம் எனப்பட்டது. இராசதுரை (1924) நாவலில், அதன் ஆசிரியை திருமதி செம்பொற் சோதீஸ்வரர் செல்லம்மாள் தமது முன்னுரையாக அமையும் "குறிப்பு" என்றபகுதியில்,
"வாசிப்பவர்களின் இருதய கமலத்தை நல்வழிப் படுத்தும் அதிருசிகரமான இராசதுரையென்னும் இக் கதை தூர்த்தர், துஷ்டஸ்திரி, முதலியோரின் கொடிய சிந்தனையையும் அவர்களின் மர்மமான செய்கைகளையும் நன்கு வெளிப்படுத்தி அப்படிப்பட்ட பாவிகளோடு கூட்டுறவு செய்து வார்த்தையாடாமலும் அவர்களைத் திருஷ்டி கோசாரம் செய்யாமலும் புத்திசாதுரியத்தால் விலக்கி, சற்சங்கத்தால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களையும் செவ்வனே யடைந்து வாழும்படி என் சிற்றறிவிலுFத்த அனுப வத்தைக் கொண்டு நவமாக எழுதப்பட்டது.' என்கிருர். இக் காலப் பகுதி நாவலாசிரியர்களின் இலக்கிய நோக்கிற்கு இவற்றை "வகை மாதிரி யாகக் கொள்ளலாம். நொறுங்குண்ட இருதயம் நாவலுக்கு "நூற்பிரயோகம் வழங்

Page 24
22 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
கிய ஜே.ரி. அப்பாப்பிள்ளை, இராஜதுரை நாவலுக்கு நூன்முக மளித்தவரும் இக் காலப்பகுதி நாவலாசிரியரிலொருவருமான ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை முதலிய பலரும் நாவல் சமுதாய சீர்திருத்தத்திற்குரிய நீதிகளைப் போதிக்கும் இலக் கிய வடிவம் என்று கருதியே மதிப்பீடு செய்துள்ளனர். இக்கருத்திற்கமையச் சில நாவல்களின் தலைப்புக்கள் வீர சிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம், நீலாகF அல்லது துன்மார்க்க முடிவு, சாம்பசிவ ஞானமிர்தம் அல்லது நன் னெறிக் களஞ்சியம் காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி, காந்தாமணி அல்லது தீண்டாமைக்கு சாவுமனி முதலியனவாக அமைந்துள்ளமை மனங்கொள்ளத் தக்கது.
ஆங்கில ஆட்சியின் விளைவுகளிலொன்ரு:ன ஐரோப்பிய பண்பாட்டுத் தாக்கத்தாலே தேசியபண்பாடு நிலை தளரத் தொடங்கியிருந்த சூழ்நிலையும் பாரம்பரிய சமுதயாய அமைப்பிற் புதிய கல்வி முறை ஏற்படுத்திய மதிப்பீடுகளும் இக்காலப்பகுதி சீர்திருத்தம் வேண்டி நின்றமையை உணர்த்தும். சுதேச நாட்டியம் பத்திரிகையின் ஆசிரியரான வசாவிளான் க. வேலுப்பிள்ளை (1860 - 1944) தமது யாழ்ப்பாண வைபவ கௌமுதி (1918) நூலிலே தெரிவித்துள்ள
கருத்து இத்தொடர்பில் குறிப்பிடத்தக்கது.
"சீர்திருத்தம் அதிகப்பட்டுவரும் இக்காலத்தில் நல்ல மரத்திற் புல்லுருவிகளைப் போலச் சில மோசங் களும் சிறிது சிறிதாய்ப் பெருகுவதைக் காண்பது துக்கமான சம்பவம். மதுபானம் பாவித்தல், அலங்கார மாளிகை, விலைபெற்ற வர்ணப் பட்டாடை முதலியவை களில் அதிக பணத்தைச் செலவிடுதல், வாணவேடிக்கை, கூத்து முதலியவைகளுக்கு வீண் செலவு செய்தல், ஐரோப்பிய நாகரிக பழக்கவழக்கங்கள் ஆதியன யாழ்ப் பாணத்தின் ஏற்றத்தையும் தோற்றத்தையும் அழிக்கும் குருவிச்சைகளாம்.' இத்தகைய கருத்தோட்டம் நிலவிய காலப் பகுதியிலே தேசியப் பண்பாட்டுப் பாதுகாப்பு நோக்கில் ஏற்பட்டு வந்த விழிப்புணர்ச்சியைப் பாவலர் தெ. அ. துரையப்பா பிள்ளையின் (1872-1929) கவிதைகளிலும் சமகால ஈழத்து

சமுதாய சீர்திருத்தக் காலம் 23
நாட்காசிரியர்களின் நாடகங்களிலும் அவதானிக்க முடி கின்றது. சமூகத்தில் நிலவிய ஊழல்களான சூது, சீதன முறை, சாதிப் பாகுபாடு, கைக்கூலி முதலியவற்றைக் கடிந்து தெ. அ. துரையப்பாபிள்ளை கவிதைகள் புனைந்தார்.* நாடகத் துறையிற் சமய தத்துவ அறப்போதனைக் காலமான இக்காலப் பகுதியிலே சீர்திருத்தக் கருத்துக்களை முன் வைத்துப் புரணக் கதைகளும் தத்துவக் கருத்துக்களும் சமகால சம்பவங்களும் நாடகங்களாக எழுதப்பட்டன.
இக்காலப் பகுதியிலே தமிழ் நாட்டிலிருந்து வந்த பெருந்தொகையான நாவல்கள் ஈழத்தில் வாசிக்கப்பட்டன. இப்படி வந்தவற்றுட் பெரும்பாலானவை ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே. ஆர். ரங்க ராஜ" முதலியோரின் பரபரப்பும் மர்மமும் நிறைந்த நாவல்களாகும். ஆங்கிலத்தில் "ரெயினல்ட்ஸ்" (G. W. M. Reynolds) எழுதிய இவ்வகை நாவல்களைத் தழுவியும், தமிழாக்கியும் எழுதப்பட்ட இவை பொழுது போக்கு வாசகர்கள் பலரின் கவனத்தைக் கவர்ந்திருந்தன. இவற்றுட் குப்புசாமி முதலியாரின் மொழிபெயர்ப்பு நாவல்கள் மனித னுடைய கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் இயல்பின என்பர். இவ்வகை நாவல்களுக்கெதிரான கருத்தொன்று இக் காலப் பகுதியில் உருவானதை உணர்த் தும் வகையில் 1924ஆம் ஆண்டில் இந்துசாதனம் பத்திரி கையில் "குமரன்” என்பார் "நாவல் வெள்ளம்" என்னும் தலைப்பில் எழுதிய குறிப்பு அமைகின்றது.
'அன்பர்களே ! உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிஷமும் மிகவும் அருமையானது. ஆகவே. புண்ணிய நூலல்லாத தீய நாவல்களைத் தீக்கிரை யாக்குங்கள். இந் நாவல் வெள்ளத்தைத் தடுத்தற்கு நாம் எத்தகைய அணை கோலுதல் வேண்டும் ? முள்ளை முள்ளாற் களைந்தெறிவதுபோல், இத்தீய நாவல் வெள்ளத்தை நல்ல நாவல்களை வெளியிட்டே தடுத்தல் வேண்டும். ஆங்கிலமும் தமிழும் பாங்குடன் கற்ற தமிழாசிரியர்கள் நல்ல நாவல்களை எழுதி வெளியிடல் வேண்டும். ஆகவே நாவல்களெழுதுதல் பாமரர் கரத்தி

Page 25
罗套 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
லிருந்து பண்டிதர் கரத்திற்கு மாறுதல் வேண்டும். தீய நாவல்களை வாசித்தல் கூடாது என்று பிள்ளைகளைப் பெற்ருேரும் மனைவியை நாயகனும் மாணவனை ஆசிரியரும் அழுத்தமாகக் கண்டிக்க வேண்டும்."
தரமற்ற நாவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலே தரமான - சமூகப் பயன்பாடுள்ள - நாவல்களைப் படைக்கவேண்டு மென்று நடுத்தரவர்க்க அறிஞரை நோக்கிச் சமூகம் வேண்டுகோள் விடுத்த சூழ்நிலையை உணரமுடிகின்றது. இவ்வேண்டுகோளிலும் சமுதாய சீர்திருத்த உணர்வே அடிப்படையாகவுள்ளமை தெளிவு.
இத்தகைய பகைப்புலத்தில் சி.வை. சின்னப்பபிள்ளையின் நாவல்களை அடுத்து முப்பதுகளின் முடிவுவரை ஏறத்தாழ ஐம்பது நாவல்கள் எழுதப்பட்டன. தொடக்கத்தில் சமகால சமூகப் பிரச்சினைகளைப் பொருளாகக்கொண்டு நடப்பியல்பு நாவல்கள் எழுந்தன. அவற்றை அடுத்து மர்மப் பண்பும் சம்பவச் சுவையும் பொருந்திய நாவல்கள் வெளிவந்தன. இந்துசாதனம், சன்மார்க்க போதினி, சத்திய வேத பாதுகாவலன் முதலிய பத்திரிகைகளிலே தொடர்க ளாக வெளிவந்த சிலவற்றைத் தவிரப் பெரும்பாலானவை நூல்வடிவிலேயே வெளிவந்தன. 1930ஆம் ஆண்டை அடுத்து வெளிவரத்தொடகிகிய செய்திப் பத்திரிகைகளான ஈழகேசரி, வீரகேசரி முதலியன ஆரம்பகாலத்தில் வாசகரசனை நோக்கில் தொடர் கதைகளை வெளியிட்டன. முப்பதுகளின் முடிவுவரை இவற்றிற் பிரசுரமானவற்றுட் பெரும்பாலன மர்மப்பண்பும் சம்பவச் சுவையும் வாய்ந்தவையேயெனலாம்.
நடப்பியல்பு நாவல்கள்
சமகால சமுதாயப் பிரச்சினைகளைக் கதைப் பொருளாகத் தேர்ந்து நடப்பியல்புக்குப் பொருத்தும் வண்ணம் கதையை அமைத்து வளர்த்துச் சென்று நிறைவு செய்த நாவலா சிரியர்கள் என்ற வகையிலே திருமதி மங்களநாயகம் தம்பையா, எஸ். தம்பிமுத்துப்பிள்ளை, ம. வே. திருஞான ச்ம்பந்தபிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கிறித்தவ

சமுதாய சீர்திருத்தக் காலம் 25
மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடைய கல்விக் குடும்பத்திற் பிறந்த மங்களநாயகம் தம்பையா மதப் பிரசாரநோக்கில் அநுபவக் களஞ்சியம் என்ற நூலை எழுதியவர். 8 இவர் நொறுங்குண்ட இருதயம் (1914) அரியமலர் (1926) ஆகிய இரு நாவல்களை எழுதியவர். அரியமலர் முழுவடிவிற் கிடைக்கவில்லை
நொறுங்குண்ட இருதயம் நாவல் கணவனது கொடுமைகளுக் காளாகி இதயம் நொறுங்குண்ட கண்மணியென்ற நடுத்தர வர்க்கக் குடும்பப் பெண்ணின் அவல வாழ்க்கையைப் பொருளாகக் கொண்டது. பொருளாசை, அந்தஸ்துணர்வு என்பன இன்ப வாழ்க்கைக்கு எவ்வாறு தடையாகவுள்ளன என்பதையும் அன்பில்லாத வாழ்க்கை சுமையாக அமை வகையும் எடுத்துக் காட்டும் வகையில் எழுதப்பட்டது. அன்பில்லாத கணவனுற் கொடுமைப்படுத்தப்பட்ட கண்மணி உளம் நைந்த நிலையில் கிறிஸ்தவ பாதிரியாரொருவரின் இதமான போதனைகளால் அமைதியடைகிருள்; வாழ்க்கை யின் இறுதிவரை கிறிஸ்தவ மதத்தைக் கடைப்பிடிக்கிருள். அவளது உயிர் பிரியும் வேளையிற் கணவனன அருளப்பா அவளின் நற்பண்புகளை உணர்ந்து திருந்தி வாழ்கிருன். கண்மணியின் தோழி பொன்மணியும் அவளுடைய காதலன் பொன்னுத்துரையும் சமூகத்தின் பொருளாசை, அந்தஸ் துணர்வு ஆகியவற்ருல் பல இடர்களை அனுபவித்து ஈற்றில் இணைகின்றனர்.
சமகால சமூகத்திற் காணப்பட்ட குறைபாடுகளை எதிர்த்துக் கண்டனக் குரல் கொடுப்பதாக அமையும் இந்த நாவலிலேதான் முதன் முதலில் ஈழத்து நடுத்தர வர்க்கத்தின் உயிரோட்டமுள்ள கதைமாந்தரைக் காண்கிறேம். "வகை மாதிரி' யாகப் படைக்கப்பட்ட வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் நாவலின் கதை மாந்தர் போலல்லாமற் பண்பு வளர்ச்சியுடைய கதைமாந்தராக இவர்கள் அமை கின்றனர். நடப் பியல்பு நாவலுக்கான இன்றியமையாத பண்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பமுதல் இறுதி வரை உணர்ச்சிகளிற்சிக்கி நிறைவுதேடும் பாத்திரமாக அமைகிருள் கண்மணி. அருளப்பாவும் அப்பாத்துரையும் எதிர்நிலைப் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டனர். அருளப்பாவின் பாத்திரப் பண்பில் வளர்ச்சிகாணப்
படுகின்றது.

Page 26
126 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு விரவிய தராதர ஈழத்துத் தமிழ் நடை நடப்பியல்புக்கு வலுவூட்டுகின்றது.
'.வயோதிகரின் மாடுகள் வெருண்டோடி முன் சென்ற வாலிபனுடைய ஒற்றைக் கரத்தையில் மோத, அக் கரத்தை குடைக்கடித்து பக்கத்திலுள்ள கானுக்குள் விழுந்தது. . கரத்தைக் காரன் தங்களுக்கு அபாயம் நேரிடாது தப்பிக்கொள்ளும் பொருட்டு மணற்றரை யான ஓரிடத்தைக் கண்டு மாடுகள் அங்கிருக்குமாறு நாணயத்தை அப்பக்கமாகச் சுண்டப்பிடிக்க அவைகள் மணலில் ஒடிக்கொள்ளச் சக்தியற்று நின்றுவிட்டன. மாடுகள் வெருண்டு புகைவானமாய் ஓடுவதைக் கண்ட கண்மணியும் அவள் தாயாரும் தெய்வமே தெய்வமே என்று பதறிக் கத்தினர்கள். '? மண்வாசனையுடன் கூடிய சொல்லாட்சிக்கு எடுத்துக் காட்டாக இவ் வருணனைப் பகுதி அமைகிறது.
சமகால நடுத்தர வர்க்கத்துப் பெற்றேரின் மனவியல் பைப் புலப்படுத்தும் வகையில் ஆசிரியை,
"ஓர் கமக்காரனின் மகளாகிய கண்மணிக்குக் கிடைத்த மாப்பிள்ளை போலும், தம் மகளுக்கு விசேஷமான மாப்பிள்ளை எடுக்கவேணுமென்பதே பெற்றேரின் முழுவாஞ்சையுமாயிருந்தது. "10 என்கிறர். பொன்மணியின் பெற்றேர் அவளது காதலன் பொன்னுத்துரையை, "சடங்குசெய்வதானுல் தாலி, கூறை முதலிய செலவுகட்குக்கூட வழியற்றவன்' என உதாசீனம் செய்கின்றனர்.
சன்மார்க் க சீவியத்தின் மாட்சியை உதாரணங்களால் உணர்த்தும் நோக்கில் எழுதப்பட்ட இந்நாவலிற் சன் மார்க்கம் என்றதன் பொருள் கிறித்தவ சமயம் தழுவிய வாழ்க்கைநெறி என்பது தெளிவாகின்றது.
"கிறிஸ்துமார்க்க வளர்ச்சிக்குரிய காரியங்களில் மற்ருேருக்கு உபயோகமாகவிருக்க முன்னேறிவரத் தெண்டிக்கவேண்டுமென்பதே நம் வாஞ்சை. '12

சமுதாய சீர்திருத்தக் காலம் 27
என ஆசிரியை அநுபவக்களஞ்சியம் நூலின் முகவுரையிற் குறிப் பிட்டுள்ளமை இத் தொடர்பில் நோக்கத்தக்கது. இவரது சமயப் பிரசார நோக்கிற்குக் கண்மணியென்ற பாத்திரத்தின் மனவியல்பு நன்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கிறித்தவ மிசனரியினர் யாழ்ப்பாணக் கிராமங்களிற் சமயப்பிரசாரம் செய்துவந்த சூழ்நிலை கதைக்குட் புலனுகின்றது. கணவனது கொடுமைகளால் மனம் நைந்திருந்த கண்மணியை நோக்கிப் பாதிரியார்.
"கர்த்தருக்குப் பிரியமான இருதயம் இங்கே யிருக்கிறது. அவரை ஏற்றுக் கொள்ளுங்காலம் சீக்கிரம் வரும். மகளே ; கர்த்தராகிய இயேசு இரட்சகரை இன்று தொட்டு உன் அன்பான பிதாவாக ஏற்று அவரின் வழி நடக்கமாட்டாயா ?"13
எனப் போதிக்கிருர். கண்மணி தனது துயரங்களுக்குக் கிறித்தவ மதத்தில் அமைதிகாண முயன்று இறுதிவரை கிறித்தவப் பெண்ணுக வாழ்கிருள். அவளின் மரண வேளையில் வேதப் புத்தகத்தின் 46ஆம் சங்கீதம் வாசிக்கப் படுகிறது.14 அவளின் குடும்பத்தினர் அவளிறந்தபின்னர் கிறித்தவ சமயம் சார்கின்றனர்.
ஆசிரியை சமகாலசமூகப் பிரச்சினைக்குச் சமய உணர்வில் அமைதிகாண முயல்வதன் மூலம் நடப்பியல்போடு பிரசா ரத்தை இணைத்துள்ளார். பிரச்சினைகளிலிருந்து விலகி யோடும் இயல்பு புலனுகின்றது. தமிழ் நாட்டின் ஆரம்ப கால நாவலான கமலாம்பாள் சரித்திரமும் இக் குறைபா டுடையதே. 15 சமூகப் பிரச்சினைகளுக்குத் தர்க்கரீதியான தீர்வு நாடும் வகையில் இன்று வளர்ந்துள்ள சமூகவிய லறிவைக் கொண்டு ஆரம்பகால நாவல்களை நோக்கும் போது அவற்றில் இவ்வகைக் குறைபாடுகள் காணப்படுவது இயற்கையே. ஆயின் அன்றைய அறிவுச் சூழலையும் சமூகப் பகைப் புலத்தையும் கருத்திற்கொண்டு நோக்கினல் இவ்வகைக் குறைபாடுகள் தவிர்க்க முடியாதவை என்பது புலணுகும்.

Page 27
28 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
ஈழத்தின் ஆரம்பகால நாவல்களிலொன்றன ஊசோன் பாலந்தைகதையின் பதிப்பாசிரியரும் நாவல், நாடகம்,கவிதை முதலிய துறைகளிற் பல நூல்களைப் பதிப்பித்தவருமான அச்சுவேலி எஸ். தம்பிமுத்துப்பிள்ளை ( 1857-1921) சுந்தரன்செய்த தந்திரம் (1918) அழகவல்லி (1926) ஆகிய இரு நாவல்களை எழுதியுள்ளார். அழகவல்லி சன்மார்க்கபோதினிப் பத்திரிகையிலே தொடராக வெளிவந்து நூலுருப்பெற்றதென அறியப்படுகின்றது. கிறித்தவ சமயப்பிரசுரங்களை வெளி யிடுவதில் ஈடுபாடுகொண்டிருந்த இவர் சமகால யாழ்ப்பாணப் பிரதேச சமூகத்திற் காணப்பட்ட ஊழல்களை நகைச்சுவை யுடன் கண்டிக்க முயன்றுள்ளார். என்பதைச் சுந்தரன் செய்த தந்திரம் நாவல் உணர்த்துகின்றது.
தொல்புரத்தைச் சேர்ந்த போலித்துறவியான சுந்தரன் சமூகத்தை ஏமாற்றி வாழ்கிருன். பல்வேறு கிராமங்களுக்கும் சென்று ஏமாற்றித் திரியும் இவன் ஈற்றில் "யமுனரி ஏரியிலே வீழ்ந்து இறக்கிருன், ஏமாற்றும் தந்திரமும் நீண்ட நாட் களுக்குப் பலிக்காது என்ற பொருளில் அமைந்த இச் சிறு நாவலிற் பழமொழிகள் விரவியுள்ளன.
"இடங்கண்டால் விடுவானே யாழ்ப்பாணத்தான்’18 "வேசியரும் நாயும் விதிநூல் வைத்தியரும்
பூசுரரும் ஒருவர்க்கொருவர் பொருந்தார் "17 'தான் தேடாப் பொன்னுக்கு மாற்றுமில்லை
- உரையுமில்லை. "18
போன்ற பழமொழிகள் நகைச்சுவை நோக்கில் இடம் பெறுகின்றன.
அழகவல்லி நாவல் யாழ்ப்பாணப் பிரதேச மழவர் குடும்பத்தினருக்கிடையில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டது. சண்பகமழவனின் மனைவியான அழகவல்லி தான் உயர் குடும்பத்தவள் என்ற மமதையில் கணவனையும் மாமியையும் உதாசீனம் செய்கிருள். குடும்ப மகிழ்ச்சி சீர்குலைகின்றது. பொருமையாற் பிறர்க்குத் தீமை செய்ய முயன்று ஈற்றிலே தானே அதற்குப் பலியாகிருள்.

சமுதாய சீர்திருத்தக் காலம் 29
"பிறர்க்கிடு பள்ளம் தான் விழுபள்ளம்" என்ற பழமொழிப் போதனையைப் புலப்படுத்தும்வகையில் எழுதப்பட்ட இந் நாவல் அக்காலப் பகுதியில் ஒருகுறிப்பிட்ட சாதியினரே தமக்குட் சாதி ஏற்றத்தாழ்வு பார்க்கும் உளநிலை கொண்டிருந்தமையைப் புலப்படுத்துகின்றது.
சுந்தரன் செய்த தந்திரம் நாவல் போலவே பழமொழிகளை மிகுதியாகக் கையாண்டு எழுதப்பட்ட இந் நாவலில் யாழ்ப் பாணப் பிரதேசப் பேச்சு வழக்கு பயின்றுள்ளது. சமூகத் தின் பழக்கவழக்கங்களையும் நடைமுறைகளையும் ஆசிரியர் நன்கு அவதானித்துள்ளார். கல்யாண வீட்டிற்கு வர மறுத்த உறவினரைச் சமாதானப்படுத்தி அழைத்து வரும் முயற்சியிற் 'சாராயம் வகித்த முக்கியத்துவத்தை வாசிக்கும்போது அன்றைய கால கட்ட சமூக உணர் வோட்டங்களை உய்த்துணர முடிகின்றது. உரும்பராய்ச் சாராயம் "வைரவர்” என்ற குழுஉக்குறி மூலம் சுட்டப்படும் முறை நகைச்சுவை பயப்பது.
ஆசிரியருடைய சித்திரிப்புத் திறனைப் புலப்படுத்தும் வகையிலும் அக் காலகட்ட சமூக மதிப்பீடுகளையுணர்த்தும் வகையிலும் பின்வரும் ஊர்வலக் காட்சி வருணனை அமைந் துள்ளது
"பெண் வீட்டிலும் இதற்குத் தோல்வி போகாமல் சிறப்பான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மணமகன் வீட்டிற்குத் தஞ்சாவூரினின்று முதல் நாள் வந்த பேர் பெற்ற தங்க நாகசின்னக்காரன் அழைக்கப்பட்டான். மணமகள் வீட்டிற்குத் தொல்புரத்திலிருந்து வந்த வெள்ளி நாகசின்னக்காரன் அழைக்கப்பட்டான். அத் தருணம் புஷ்பத் தண்டிகையில் மணமகனை ஏற்றி பாவாடை விரித்து பன்னீர் தெளித்துச் சிலர் முன்செல்ல, பலவகை ஆகாய வாணங்கள் ஆகாயத்தை ஊடுருவிச் செல்ல, தோட்டாகாசம் சுழன்று சுழன்று முகில்களைப் பிளந்து செல்ல, சக்கரம், எலிவாணம், நிலவிறிசு, பகல் வெற்றி ஆகியவைகள் கண்களின் ஒளிகளை மழுங்கச் செய்ய, தீவட்டி சூலவிளக்கு, வெளவால் விளக்கு,

Page 28
30 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
பந்த விளக்குகளாதியன பகல் போலொளி செய்ய, நட்டுவர்தம் சமர்த்தியத்தைக் காட்ட, அவருள் தவிற் காரனே கட்டையாய் வெட்டப்பட்ட தன் மயிர் நட்டுக் கொண்டும் மட்டுப்பட்டும் சரிந்தும் விரிந்தும் குவிந்தும் தாளத்துக்குத் தக்கபடி ஆடியலையத் தவிலை முழக்க இவ்வேடிக்கைகளை "எட்டியெட்டிப் பார்ப் பாரும் ஏணிவைத்துப் பார்ப்பாரும் குட்டிச்சுவராலை குனிந்து நின்று பார்ப்பாரு'மாய்க் காட்சி பார்ப்பதில் சனங்கள் நிற்க அன்று நடந்த காட்சி முன்னேர்போது மிலா மாட்சியாயிருந்தது’*. 19 ஏறத்தாழ அரை நூற்ருண்டுகட்கு முற்பட்ட இவ் வருணனை இன்றைய காலச் சராசரி நாவல்களின் வருணனைகளை விடத் தரமானதாயுள்ளதெனின் மிகையாகாது.
கிறித்தவ சமயப் பிரசார நோக்கில் ஞானச் சகோதரர் யோண் மேரி என்பவர் அருந்தவக் கனிகள் என்னும் தலைப்பில் சத்திய வேத பாதுகாவலன் பத்திரிகையில் தொட ராக எழுதிவந்த கதையின் முதற்பாகம் புனிதசீலி என்ற தலைப்புடன் நூலாக 1927இல் வெளிவந்தது. கர்த்தரைப் பணியும் கிறித்தவ சமய பக்தையான புனித சீலியும் அவளின் கணவன் ஞானேந்திரனும் இன்ப வாழ்க்கை வாழ்வதைக் காணப் பொறுக்காமல் ஞானேந்திரனின் அன்னை கொடுமை புரிகிறர். கர்த்தரருளால் யாவும் இன்பமாக நிறைவடை கின்றன. இந்நாவலில் விவிலிய வேதத்திலுள்ள பல செய்திகளும் இயேசுபிரானின் திருப்பாடுகள் தொடர்பான வருணனைகளும் இடம் பெற்றுள்ளன. இந் நாவலின் இரண்டாம் பாகம் அருமைநாதன் என்னும் தலைப்புடன் 1930இல் வெளிவந்தது. மூன்ரும் பாகம் இதயரத்தினம் என்னும் தலைப்புடன் கையெழுத்துப் பிரதியாக 1935இல் எழுதி முடிக்கப்பட்டது என அறியப்படுகிறது.20
இந்துசாதனம் பத்திரிகையின் ஆசிரியராகவும் யாழ்ப் பாணம் இந்துக்கல்லூரியாசிரியராகவும் திகழ்ந்த மரபுவழிச் சைவத் தமிழறிஞரான ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை இந்துசாதனத்தில் உலகம் பலவிதம் என்ற தலைப்பில் கதை களும் கட்டுரைகளும் எழுதிவந்தார். சமகாலச் சமூகப்

சமுதாய சீர்திருத்தக் காலம் 3.
பிரச்சினைகளையும் சீர்கேடுகளையும் பொருளாகக்கொண்டு எழுதப்பட்டுவந்த இவற்றுள் மூன்று கதைத்தொடர்கள் நாவலாக நூலுருப்பெற்றுள்ளன. காசிநாதன் நேசமலர் (1924) கோபால நேசரத்தினம் (1926 - 27) துரைரத்தினம் நேசமணி (1927 - 28) ஆகிய இம் மூன்று நாவல்களில் முதலிரண்டும் சமய நோக்கும் மூன்ருவது பொதுவான சமூகசீர்திருத்த நோக்கும் உடையவை.
கண்டி பூரீ S. செல்வநாயகமவர்கள் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட "நேசமலர்" என்னுங் கதையை ஆதாரமாகக் கொண்டு தமிழில் எழுதப் பெற்றது".? எனப்படும் காசிநாதன் நேசமலர் தொடர்கதை நூலுருப் பெறும்பொழுது புதிதாக ஆரும் ஏழாம் அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டன.
மானிப்பாயைச் சேர்ந்த நேசமலரின் கணவனன காசி நாதன் கண்டியிற் கிறிஸ்தவ மத போதகர் நல்லதம்பியின் மகள் எதெல் ஜோதிமதியிடம் காதல் கொண்டு தனது மனைவியைப் புறக்கணித்து அவளுடன் வாழத் தொடங்கு கிருன். நேசமலர் கணவனைத் தேடிச்சென்று கதிர்காமக் கந்தனருளால் அவனை அடைகிருள். கிறிஸ்தவ சமயப் பிரசார முயற்சிகள் சைவக்குடும்பங்சுளில் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்த்தும்வகையில் எழுதப்பட்ட இக்கதையில் ஆசிரியரது முருகபத்தியே விஞ்சிநிற்கிறது.
கோபால நேசரத்தினம் நாவல் 1926-27இல் தொடராக வெளிவந்து 1927இல் நூலுருப்பெற்றது. இதன் இரண் டாம் பதிப்பு 1948ல் வெளிவந்தது. இரண்டாம் பதிப்பின் நூன் முகத்திலே இந் நாவல் 1921 இலிருந்து பாகம்பாகமாக இந்து சாதசனத்தில் வெளிவந்ததென்ற குறிப்புள்ளது.23
சிறு வயதில் தந்தையை இழந்த கோபாலன் என்ற சைவக் குடும்பத்துச் சிறுவன் கிறித்தவ பாடசாலை யொன்றிற் கல்வி பயின்று வருகிருன். அவனது திறனைக் கண்ணுற்ற பாதிரியாரும் போதகரும் மதமாற்றம் செய்விக்கும் முயற்சியி லீடுபடுகின்றனர். இந்நோக்கில் குட்டித்தம்பிப் போதகர் இளம் விதவையான தமது மகள் நேசரத்தினத்துடன்

Page 29
32 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
கோபாலனைப் பழக விடுகிருர். காலப் போக்கில் இப் பழக்கம் காதலாக மாறுகின்றது. கோபாலனின் தாயாகிய வள்ளியம்மை மிகுந்த சைவப்பற்றுள்ளவர். இவரது கட்டுப்பாட்டுக்கமையக் கோபாலன் மதம் மாற மறுக்கிருன். எனவே முடிவில் நேசரத்தினம் மதம் மாறிக் கோபாலனை மணம் முடிக்க வேண்டியவளாகிருள். பாதிரியாரின் முயற்சி தோல்வியடைகிறது. நேசரத்தினம் சைவப் பெண்ணுக மாறிக் கோபாலனைக் கரம் பற்றுகிருள்; குட்டித் தம்பிப் போதகரைப் பாதிரியார் பதவியை விட்டு விலக்குகிருர்,
பிற கல்வி வசதிகளற்ற நிலையிலே தம்முடைய கல்விக் கூடங்களுக்கு வரும் ஏழைப்பிள்ளைகளை மதம் மாற்றும் முயற்சியிலீடுபட்டிருந்த கிறிஸ்த மிசனரியினரின் சமயப் பிரசாரநோக்கைக் கண்டிக்கும் வகையில் எழுந்த இந்நாவல் அக்காலப்பகுதியில் நிலவிய சமயப் போட்டிச் சூழ்நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. ஆங்கிலேயர் ஈழத்தை ஆளத்தொடங்கியபோது கிறித்தவ சமயம் பரப்புவதிற் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாகப் பல்வேறு மிசனரி இயக்கங்கள் ஈழத்திற்கு வந்தன. இவை ஈழத்தின் பல பாகங்களிலும் கல்விக்கூடங்களை நிறுவிச் சமயக் கல்வியும் பொதுக்கல்வியும் போதித்தன. கல்வியிலும் உயர்பதவி களிலும் ஆசைகொண்ட பிள்ளைகளை மதமாற்றம் செய்தன.
"பத்தொன்பதாம் நூற்ருண்டிலும் இருபதாம் நூற்ருண்டின் தொடக்கத்திலும் ஈழத்தவர் சிலர் "நவீன மானது "உயர்தரமானது" என்று கிறித்தவத்தின்பால் ஈர்க்கப்பட்டனர் என்பதிற் சந்தேகமில்லை. பாட சாலைகள் அநேகமாக மிசனரி நிறுவனங்களால் நடத்தப் பட்டதும் அரசாங்க சேவைகளுக்கு மேலைத்தேசக் கல்வி ஒரு "கடவுச்சீட்டு’ ஆக இருந்ததும் மிக முக்கியமானவை யாகும். "24
என விருசின்ஸ் (Wriggins, W. H.) இச்சூழ்நிலையை விளக்கு வர். இவ்வாருன, கிறித்தவ சமயப் பிரசாரமுயற்சிகளுக் கெதிராகப் பெளத்தரும் இந்துக்களும் நடத்திய இயக்கங்களை

சமுதாய சீர்திருத்தக் காலம் 33
அநகாரிகதர்மபால, பூரீலபூரீ ஆறுமுகநாவலர் ஆகியோர் வழிநடத்தினர். விவிலிய வேதம் போதிக்கும் பாடசாலை களுக்கு மட்டும் அரசாங்கம் நிதியுதவி வழங்கியதுபற்றிப் பெளத்த கமிட்டியினரின் அறிக்கை (1867) குறைகூறி யுள்ளமை25 இங்கு நோக்கத்தக்கது. ஆறுமுகநாவலர் யாழ்ப்பாணச் சமய நிலை நூலிற் கூறியுள்ளவற்றையும் இத் தொடரில் நோக்குவது பொருத்தமானது.
... இத்தேசத்திலுள்ள வறியவர்கள் அநேகர் சைவ சமயமே மெய்ச் சமயமென்று அறிந்தும், அன்னம், வஸ்திரம் முதலியவற்றைப் பெற்றுப் படிக்கும் பொருட்டும், உபாத்தியாயருத்தியோகம், பிரசங்கி உத்தியோகம் முதலிய உத்தியோகங்களைச் செய்து பணம் வாங்குதற் பொருட்டும், கவர்மெண்டு உத்தி யோகங்களினிமித்தம் துரைமார்களிடத்தே சிபாரிசு செய்விக்கும் பொருட்டும், கிறிஸ்து சமயப் பெண்க ளுள்ளே சீதனமுடையவர்களையும் அழகுடையவர் களையும் விவாகம் செய்யும் பொருட்டும் கிறிஸ்து சமயத்திலே பிரவேசிப்பாராயினர்கள்."26
கோபாலனை மதம் மாற்ற முயன்ற குட்டித்தம்பிப் போதகர் பிரசங்கியுத்தியோகத்தின் பொருட்டு மதம் மாறியவர். இவர் தம் மகள் நேசரத் தினத்தைக் கோபாலனுடன் பழக விடுவது அழகுள்ள பெண்ணை மணம் புரியும் ஆவலைத் தூண்டி மதமாற்றம் செய்விக்கும் நோக் கிலேயாம். காசிநாதன் நேசமலர் நாவலிற் காசிநாதன் எதெல் ஜோதிமதியின் அழகில் ஈடுபடுவதும் இத்தொடர்பில் நோக்குதற்குரியது. ஆறுமுக நாவலர் குறிப்பிட்ட சூழ்நிலை அவருக்குப் பின்னரும் அரை நூற்றண்டுக் காலம்வரை மாற்றமடையவில்லை என்பதைத் திருஞானசம்பந்த பிள்ளையின் நாவல்கள் உணர்த்துகின்றன.
கோபாலனை மதம் மாறவிடாமல் நேசரத்தினத்தை மதம் மாறச் செய்தமை ஆசிரியரது இலட்சியத்தை உணர்த்துகின்றது. ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் சம காலத்திற் கிறித்தவர்களது மதமாற்ற முயற்சி ஒரு
5

Page 30
34 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
பொதுப் பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. இச் சமூகப் பிரச்சினையைப் உணர்வு பூர்வமாக அணுகி இலக்கிய வடிவம் தந்தவர்கள் சிங்கள எழுத்தாளர்களே என்பது குறிப்பிடத்தக்கது. பியதாச சிரிசேனவின் ஜயதிஸ்ஸ ரோஸ லிண்ட் ஹேவத் வாஸனுவந்த விவாஹய (1906) நாவலை இதற்கெடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.27 தமிழில் இதனைக் கதைப்பொருளாகத் தேர்ந்தெடுத்த முதல்வர் என்ற சிறப்பு ம. வே. திருஞானசம்பந்தபிள்ளையையே சாரும் எனலாம். தமிழ் நாட்டு எழுத்தாளரிற் புதுமைப்பித்தன் ஒருவர் மட்டுமே ஏறத்தாழப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் இப்பிரச்சினையைப் புதிய கூண்டு என்ற தலைப்பிற் சிறுகதை வடிவில் அணுகினர்.28
"பிரச்சினை நாவல்" என்ற உணர்வுடன் ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை எழுதியிருக்க முடியாதெனினும் தாம் வாழ்ந்த காலத்தின் முக்கிய சமூகப் பிரச்சினையைப் பொருளாகக் கொண்டு எழுத முயன்ருர் என்ற வகையிலும் தம்மளவிலே அப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முயன்றுள்ளார் என்ற வகையிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. ஆசிரியன் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டுமா வேண்டிய தில்லையா?என்ற முரண்பாட்டிலே, தீர்வுகாண வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பவராகவே ம. வே. திருஞான சம்பந்தபிள்ளை தம்மைக் காட்டிக்கொள்கிருர், மணம் முடிப்பதற்காகக் கிறிஸ்தவர்கள் மதம் மாறுவதென்பது அன்றைய கால கட்ட நடப்பியல்புக்குப் பொருந்துவதல்ல என்ற பொழுதும் நேசரத்தினம் என்ற பாத்திரத்தின்மீது தமக்குகந்த தீர்ப்பை இவர் சுமத்தியுள்ளார்.
மகனை மதம் மாருது தடுக்கும் சைவப்பற்றுள்ள தாயாகிய வள்ளியம்மைமூலம் ம. வே. திருஞானசம்பந்த பிள்ளை மற்றுமொரு மெளனப் புரட்சியையும் செய்து விடுகிருர், விதவை மறுமணம் என்ற சமூகசீர்திருத்தக் கருத்தைச் சீரணித்துக் கொள்ளமுடியாத வள்ளியம்மை யென்ற சமயப்பற்றுள்ள தாயையும் இளம் விதவையான நேசரத்தினத்தை மருமகளாக ஏற்கவைத்துள்ளார். தமிழ். நாட்டில் ஏறத்தாழ இதேகாலப்பகுதியிலேதான் விதவை

சமுதாய சீர்திருத்தக் காலம் 35
மறுமணக் கருத்தோட்டம் நவீன தமிழிலக்கியத்தில் இடம் பெறத் தொடங்கியதென்பதும் வ. ரா. (வ. ராமசாமி ஐயங்கார்) மஹாகவி சுப்பிரமணியபாரதியார் ஆகியோர் தத்தம் எழுத்துக்களில் இக்கருத்தைப் புலப்படுத்தின ரென்பதும் குறிப்பிடத்தக்கன.?
துரைரத்தினம் நேசமணி நாவலின் நூன்முகத்திலே,
**இதன்கண் சீதனத்தால் வரக்கூடிய பிணக்கு, மதுபானத்தால் வருங்கேடு, தீயவர் சகவாசத்தால் நேரும் அநர்த்தம், பரத்தையர் சேர்தலால் வரும் பழி முதலியன உதாரணமுகத்தான் விளக்கப்பட்டுள்ளன. இதனை வாசிக்கும் பெண்பாலார்க்கும் பயன்படும் வண்ணம் பதிவிரதாதர்மம் நாயகபக்தி முதலியன நன்கு விளக்கப்பட்டுள்ளன' என நோக்கம் முன்வைக்கப்பட்டுள்ளது. நடுத்தரவர்க்கத்தின ரான துரைரத்தினம் திருமணப்பேச்சின் போது கூறியபடி தம் மாமனுர் சீதனம் தரவில்லையென்ற காரணத்தை முன்வைத்து மனைவி நேசமணியைப் பிறந்த வீட்டுக்கு அனுப்புகிருர், கணவனைப் பிரிந்திருத்தல் அழகன்றென வுணர்ந்து நேசமணி கணவன் வீட்டுக்கு மீள்கிருள். அவள் வந்து சேருமுன்பே துரைரத்தினம் தாம் தொழில் செய்யும் நகருக்குப் போய்விடுகிருர், அங்குத் தீயவர் சகவாசத்தால் மதுப்பழக்கமும் பிறபெண் தொடர்பும் ஏற் படுத்திக்கொள்கிருர். முடிவில் மனைவியின் நற்பண்புகள் கணவனைத் தவருண பாதையினின்று மீட்கின்றன. முன்கோபக்காரரான துரைரத்தினம் இயல்பிலே நற்பண்பின ரென்றும் சந்தர்ப்பச் சூழ்நிலைகளே அவரைத் தவருன வழியில் இட்டுச் சென்றன என்றும் கருதத்தக்கவகையிற் பாத்திரப்படைப்பு அமைந்துள்ளது. கற்புள்ள தமிழ்ப் பெண்ணுக்கு நேசமணி ஒரு வகைமாதிரி எனலாம்.
ஆசிரியர் கூற்ருக அமையும் இந்நாவலில் இடையே "பழையனூர் நீலி கதை" நேசமணிவாயிலாகக் கூறப் படுகின்றது.39 கதைக்குட் கதை கூறும் இம்மரபு பஞ்ச தந்திரம், இதோபதேசம் முதலிய கதைமரபுகளின் தாக்கத் தால் அமைந்ததெனலாம். தமிழின் முதல் நாவலான பிரதாப

Page 31
36 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
முதலியார் சரித்திரத்திலும் இப் பண்பு காணப்படுகின்றது என்பது நோக்கற்பாலது. சைவ சித்தாந்தக் கருத்தை இயற்கைக் காட்சியிற் பொருத்திக் காணும் உவமைநயம் பொருந்திய பின்வரும் வருணனை இவர் கையாண்ட உரை நடைக்கு எடுத்துக்காட்டாகவும் அமைகின்றது.
**பெருக்கு நேரமாகவிருந்தபடியினுற் சமுத்திரத்தின் அலைகள் அரைப்பனையுயரம் வரையில் எழுந்து சுருண்டு நுரையைச் சிந்திக்கொண்டு இரைந்தபடி கரையிற் பெருகி மேன்மேலும் சென்று மீண்டு கடலிற்போய்க் கொண்டிருந்தன. இங்ங்ணம் அலைகள் மீண்டு செல்லும் போது தாம் முந்தி அள்ளிக் கொண்டு வந்த நண்டு களைக் கரையில் விட்டுப்போக, அந் நண்டுகள் எங்ங்னஞ் செல்வதென்றறியாது தியங்குவது, தம்மை நம்பி வந்தவர்களை அந்தரவழியில் விட்டுச் செல்லும் கீழ் மக்களின் செயலுக்குத் திருஷ்டாந்தமாகவிருந்தது. இவ் வாறு நின்று தியங்கிய நண்டுகளைப் பின்னர் ஒரு பெருந்திரை வந்து கரையில் மோதி மீண்டு போகும் போது அள்ளிக்கொண்டு கடலுட் செல்லுதல், வினைகளை யனுபவிக்கும்படி ஆன்மாவைப் பிறந்திறந்துழலவிட்ட இறைவன், இருவினையொப்பு மலபரிபாகமென்னு மிவைகளை அவ்வான்மா அடையுங்காலத்து அந்த இறைவனே அவ்வான்மாக்களை மார்ச்சார சம்பந்தமாய் (பூனை குட்டிகளைக் கெளவிச் செல்வதுபோல) வந்து அடிமை கொள்வதை ஞாபகப்படுத்தியது."31
சமூகத்திற் காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்குப் பெண்குலத்தின் நற்பண்புகளைத் துணைக்கொள்ள முயல்வதை மூன்று நாவல்களிலும் காணலாம். இதனற் போலும் மூன்று நாவல்களின் கதைத் தலைவியரும் ஏறத்தாழ ஒத்த பண்பினராகத் சித்திரிக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலக் கல்விகற்ற நடுத்தர வர்க்க வாலிபர்கள் பலர் தமது புதிய பழக்கவழக்கங் களாற் குடும்ப நலனைப் பேணுது திரிந்தமையையும் தொழில்முறைத் தேவைகளின் பொருட்டு நகரவாழ்க்கையை மேற்கொண்டோர் சமூகத்தின் பழமையான பண்பாடுகளைக்

சமுதாய சீர்திருத்தக் காலம் 37
கைவிட்டு ஒழுக்கக் குறைவாக நடந்து கொள்வதையும் ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை அவதானித்துள்ளார். இதனுற் பெண்களை முன்வைத்துச் சீர்திருத்தம் பேச முன்வந்துள்ளார். V
"ஒரு சாதியாரின் பழைய சீர்திருத்தத்தையும் புராதன பழக்கவழக்கங்களையும் மகத்துவத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வளர்ப்பவர்கள் பிரதானமாகப் பெண்பாலினரேயாவரென அறிவுடை யோர் கூறுகின்றனர். ஆண்பாலினராயுள்ளார் நவீன கல்வி காரணமாகவும் அந்நிய தேச சஞ்சாரம் காரண மாகவும் சிற்சில சமயங்களிற் றங்கள் சாதிக்குரிய ஆசாரங்களை மறந்து அந்நிய சாதியினருக்குரிய ஆசாரங்களைக் கைக்கொள்ள நேர்ந்த சமயத்தும், அவர்கள் தங்கள் ஜநநதேயத்திற்கு மீண்டுவரும்போது பெண்பாலாரே தஞ்சாதிக்குரிய புராதன கொள்கைகளை அந்த ஆண்பாலாருக்கு ஞாபகப்படுத்திப் பழையபடி அவர்களை யொழுகச் செய்வர்.”*32
இந்துசாதனம் பத்திராதிபர் குறிப்பாக இவர் எழுதியுள்ள இப்பகுதி இதனைத் தெளிவாக உணர்த்தி நிற்கிறது.
அன்றைய சூழ்நிலையிற் கிறித்தவ சமயம் சார்ந்த பெண்கள் ஆடையலங்காரங்களாற் தமது அழகை வெளிப் படுத்திக்கொள்வதையும் ஆண்களுடன் சரிசமமாகப் பழகு வதையும் கவனித்திருக்கிருர், ஒழுக்கக்கேடுகளுக்கு இவையும் காரணம் எனக் கருதிக் கண்டிக்க முனைந்துள்ளார். கிறித்தவ சமயம் தழுவிய பெண்களின் ஆடம்பரப் போக்கு அன்றைய காலப்பகுதி யாழ்ப்பாணக் கிராமப்புற முதியோரால் எவ்வாறு நோக்கப்பட்டுள்ளதென்பதை வள்ளியம்மையின் கூற்ருக அமையும் பின்வரும் உரைப்பகுதி உணர்த்துகின்றது.
** உன்னை விற்ருலும் அவளுடைய உடுப்புச் செலவுக்குக் காணுதே; சட்டையென்ன, பாவாடை யென்ன, பவுடர் மாவென்ன, சவர்க்காரமென்ன, கட்டப் பூட்ட நகையென்ன, மூக்குக் கண்ணுடியென்ன, கைமேசு கால்மேசு சப்பாத்தென்ன, இவைகளுக்கு pë

Page 32
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
என்ன செய்வது ? இவ்வளவோடு நின்றுவிடப்
போகிறதா ? இல்லையில்லை. அடுக்களைப் பக்கம் அவர்
கள் போவதே கிடையாது ; சமையலுக்கு வேலைக்காரி
வேணும் ; சமைத்து வைப்பதை உண்ணும்படி
கொண்டுவந்து கொடுக்க ஒரு பையன் வேணும் **** ஆடம்பரப் போக்குள்ள பெண்களை வாழ்க்கைத் துணை யாகத் தேர்ந்தெடுக்கக் கூடாதென்பதையும் அடக்கமுடைய பெண்களே நன்மனைவியராதற் குரியரென்பதையும் இந் நாவல்களில் ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை உணர்த்து கிருர் எனலாம்.
மர்மப்பண்பும் சம்பவச் சுவையும்
சமகாலசமுதாயப் பிரச்சினைகளைப் பொருளாகக் கொண்டு நாவல் எழுதமுயன்றேரிற் பலர் அவற்றுக்கு நடப் பியல்போடு பொருந்த வடிவம் தருவதிற் கவனம் செலுத்த வில்லையென்பது புலனுகின்றது. கதையைச் சுவையாகக் கூறிமுடிக்கவேண்டுமென்று கருதி அதற்கேற்பச் சம்பவங்களை யும் மறைப்புக் கவர்ச்சியாகிய மர்மப்பண்பையும் பொருத்தி எழுதியுள்ளனர் எனலாம். சமகாலத்திலே தமிழ்நாட்டி லிருந்து ஈழத்திற்கு வெள்ளம்போல் வந்த பரபரப்பும் மர்மப் பண்பும் சம்பவச் சுவையும் பொருந்திய நாவல்கள் விளை வித்த தாக்கம் இதற்கு ஒரு காரணமாகலாம்.
**இதுவரை ஆரணி குப்புசாமி முதலியார் புணு வாசுதேவராவ் கேய்க்வார்34 முதலிய தமிழ்ப் பூஷணங் களால் எழுதப்பெற்று வெளிவந்துள்ள அரிய பெரிய நாவல்களைக் கண்ணுற்றே யானும் நாவல்களைப் பகுத் தறியும் தன்மைபெற்றேனேயன்றி உண்மையில் தமிழ் மிகப்படித்தவனல்லன். **35 என இக்காலப் பகுதி ஈழத்து நாவலாசிரியரொருவர் தமது நாவல் முகவுரையிற் குறிப்பிட்டுள்ளமை இத் தொடர்பில் நோக்கத்தக்கது.
கொலை, கொள்ளை பெண்கடத்தல் முதலிய சம்பவங்கள் இடம் பெறுவதால் இவ்வகை நாவல்கள் பலவற்றில் நீதி மன்றக் காட்சிகளையும் நீண்டவாதப் பிரதிவாதங்களையும்

சமுதாய சீர்திருத்தக் காலம் 39
காணமுடியும். சட்டத்துறைப் பயிற்சியும் சொத்துரிமை வழக்குகளும் "யேர்க்கியக் கள்ளர்களும் செல்வாக்குப் பெற்றிருந்த ஒரு காலச் சமுதாய நிலையை இவை புலப்படுத்து கின்றன.
எஸ். கே. சுப்பிரமணியம் எழுதிய நீலாசுழி (1918), திருமதி செம்பொற்சோதீஸ்வரர் செல்லம்மாளின் இராசதுரை (1924), இடைக்காட்டாரின் நீலகண்டன் ஒரு சாதி வேளாளன் (1925), அ. நாகலிங்கம்பிள்ளையின் சாம்பசிவ ஞானுமிர்தம் அல்லது நன்னெறிக்களஞ்சியம் (1927), வண்ணை மா. சிவராம லிங்கம்பிள்ளையின் பூங்காவனம் (1930), வ. மு. சின்னத் தம்பியின் வீராம்பாள் அல்லது விபரீதமங்கை (1930), சார்ள்ஸ் ஸ்ரிக்னியின் தேம்பாமலர் (1929), ஞானபூரணி (1933), சி. வே. தாமோதரம்பிள்ளையின் காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (1936) மூத்ததம்பி செல்லப்பாவின் சுந்தர வதணு அல்லது இன்பக் காதலர் (1938), வரணியூர் ஏ. சி. இராசையாவின் பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் (1932), அருணுேதயம் அல்லது சிம்மக்கொடி (1933) ஆகியன வும் வீரகேசரிப்பத்திரிகையில் அதனுசிரியர் எச். நெல்லையா எழுதிய ஏறத்தாழப் பத்துத் தொடர் நாவல்களும் இவ் வகையிற் குறிப்பிடத்தக்கன.
சாதிப்பிரச்சினையுடன் தொடர்புடையது என்ற வகை யில் நீலகண்டன் ஓர் சாதிவேளாளன் நோக்கத்தக்கது. வேளாள குலத்துப் புவிமன்னனுக்கும் பண்டாரப் பெண் கமலாவதிக்கும் பிறந்த நீலகண்டன் தந்தையின் சொத் துரிமையைப் பெறுவதற்குத் தடையேற்படுகிறது. தடை செய்த தீயோரைத் தனது வீர சாகசங்களால் வெற்றி பெற்று நீலகண்டன் முதலிப் பட்டம் பெற்று உயர் வாழ்வு வாழ்கிருன். இடைக்காடர், சாதிப்பாகுபாடு இயற்சையில் இல்லாதிருந்து காலப்போக்கில் வளர்ந்தது என்ற கருத் துடையவர். நாவலிற் சுப்பிரமணிய தேசிகர் என்ற பாத்திர வாயிலாகச் சாதிப்பாகுபாட்டின் வரலாறு பற்றி ஒரு பிரசங்கம் செய்கிருர்.38 இந்நாவலிற் சாதி ஏற்றத் தாழ்வுகளால் எழும் பிரச்சினைகள் பற்றிய ஆழமான கருத்தோட்டம் எதையும் காணமுடியாது. எனவே பிரச்

Page 33
40 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
சினைக்குத் திட்டவட்டமான முடிவையும் காண்பதற்கில்லை. மூத்ததம்பி செல்லப்பாவின் சுந்தரவதணு அல்லது இன்பக் காதலர் நாவலிற் கதைத் தலைவி சிங்கார வதணு சாதியின் அடிப்படைபற்றி விரிவுரை செய்கிருர், இந்நாவலிலும் சாதிப் பிரச்சினைபற்றிய ஆழமான கருத்தோட்டம் இல்லை. இக்காலப்பகுதியில் வெளிவந்தனவாக அறியப்படும் எச். நெல்லையாவின் காந்தமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமனி (1937), எம். ஏ. செல்வநாயகத்தின் செல்வி சரோஜா அல்லது தீண்டாமைக்குச் சவுக்கடி (1938) ஆகியன தீண்டாமை பற்றிய தீவிர கண்ணுேட்டத்துடன் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருத முடிகின்றது. சமகாலப் பகுதியில் இந்தியாவின் காந்திய சீர்திருத்தக் கருத்துக்களின் தாக்கம் இவ்வகையில் எழுதத் தூண்டியிருக்கலாம்.
முப்பதுகளில் வெளிவந்த நாவல்களிற் சமூகப்பார்வை யுடையன என்ற வகையில் சாள்ஸ் ஸ்ரிக்னியின் நாவல்கள் குறிப்பிடத்தக்கன. ஈழத்தின் முதலாவது நடப்பியல் நாவலை எழுதிய திருமதி மங்களநாயகம் தம்பையாவின் நெருங்கிய உறவினரான இவர் "அனுபவசித்தமான விடயங்களைக் கதா ரூபமாக வெளியிடுதல் அநேகருக்குப் பயன்படும்’37 என்று கருதியவர். சமூக ஏற்றத்தாழ்வுகளும் பொருளாசை முதலியனவும் பெண்கள் தாம் விரும்பிய நாயகரை அடையத் தடையாய் இருந்த சமூகநிலையை இவரது நாவல்கள் காட்டு கின்றன. இவரது இருநாவல்களின் கதைப் போக்கும் ஒத்த பண்புடையன. தீயோர் சூழ்ச்சி, பெண்கடத்தல், நல்லவர்கள் பழிசுமப்பது, கொலை, துப்புத்துலக்குதல் முதலியன இந் நாவல்களில் இடம் பெறுகின்றன. மர்மப் பண்புடன் வளர்த்துச் செல்லப்படும் கதை ஈற்றில் மங்கல பn7க நிறைவு பெறும். சாள்ஸ் ஸ்ரிக்னி சமகால சமூகப் பார்வையுடன் எழுதியதாலும் பிரதேசப் பேச்சு வழக்கைச் சிறப்பாகக் கையாண்டுள்ளதாலும் முப்பதுகளின் சிறந்த நாவலாசிரியர் எனப் பாராட்டப்படுகிருர்,38
சமகாலச் சமூகப்பார்வையுடன் எழுதிய நாவல் என்ற வகையில் எச். நெல்லையா எழுதிய சோமாவதி அல்லது இலங்கை இந்தியர் நட்பு (1940) நாவலும் குறிப்பிடத்தக்கது. முப்பதுகளில் ஈழத்திற் சிங்கள தேசியவாதிகளுக்கும்

சமுதாய சீர்திருத்தக் காலம் 41
இலங்கையிலிருந்த இந்தியருக்குமிடையில் நிலவிய முரண் பாட்டின் பகைப்புலத்திற் படைக்கப்பட்ட காதல் கதை யான இந்நாவல் இரு இனத்தினருக்குமிடையில் நட்புறவை வற்புறுத்தும் நோக்கில் எழுதப்பட்டது. கதைப் பொருளி லும் கதையை வளர்த்துச் செல்லும் முறையிலும் கவனம் செலுத்தப்படவில்லை.
மொழிபெயர்ப்பும் தழுவலும்
கல்விநோக்கிலும் சமயநோக்கிலும் கற்கப்பட்ட ஆங்கில நாவல்கள் சில இக்காலப்பகுதியில் மொழிபெயர்க்கப் பட்டும் தழுவப்பட்டும் தமிழில் எழுதப்படுவதைக் காண முடிகின்றது. சமகாலத் தமிழகத்திலும் இது முக்கிய பண்பாக இருத்தது. தாம் பிற மொழியிற் கற்றவற்றை அம் மொழிதெரியாதார்க்கு உணர்த்த வேண்டு மென்ற நோக்கமும் தாம் அவற்றிற் கொண்ட ஈடுபாட்டைப் புலப் படுத்தும் நோக்கமும் இத்தகைய முயற்சிகளைத் தூண்டி நின்றன எனலாம்.
1903ஆம் ஆண்டிலே அடாத சோதனை என்னும் மதிகெட்ட மாரன் கதை என்ற ஒரு நாவல் வெளிவந்ததாக அறியப் படுகின்றது.39 கதாநந்தன்' என்பவர் இதனை எழுதியதாகத் தெரிகிறது. இவர் ஈழத்தவரா அல்லரா என்பதும் எங்கே வெளியிடப்பட்டது என்பதும் அறியப்படவில்லை. இது பற்றிய விளம்பரத்திலே, بربر
'இது ஆங்கில பாஷையிலேயுள்ள (Don Quixote) டொன் குவிஷொட் என்னும் ஓர் சிறந்த கதைப் புத்தகத்திலிருந்து இத் தேசத்துப் பழக்கவழக்கங்களுக் கிசையக் கதைப்போக்கை மாற்றித் தமிழிலே மொழி பெயர்த்தெழுதப்பட்ட ஓர் அதியற்புதக் கதை"
என்ற குறிப்பு மட்டுமே உளது. ஸ்பானிய வீரசாகசக் கதையான இந்நாவல் ஆங்கில மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டுத் தேவைக்கேற்பக் கதைப் போக்கை அமைத்து எழுதப்பட்டது போலும்.

Page 34
42 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
ஆரம்பகால ஆங்கில நாவலாசிரியரான டானியல் டிபோவின் Robinson Crusoe மல்லாகம் வீ. விஸ்வநாத பிள்ளையால் மொழிபெயர்க்கப்பட்டுப் புதிய பதிப்பாக 1906ஆம் ஆண்டு சென்னையில் வெளிவந்தது. ருபின்ஸன் குறுசோ சரித்திரம் என்ற தலைப்புடன் வெளிவந்த இந் நாவலின் முதற்பதிப்பு வெளிவந்த ஆண்டு அறியப்பட வில்லை. வரலாற்ருய்வறிஞரான மல்லாகம் வி. கனகசபைப் பிள்ளையின் தந்தையரான வீ. விஸ்வநாதபிள்ளை "18251884 இல் வாழ்ந்தவரென்றும் சென்னையில் தமிழ் மொழி Guutil'il intonignts' (Translator in the Department of Public Instruction) பணிபுரிந்தார் எனவும் அறியப் படுகிருர்.40 இந்நாவலின் முதலாவது பதிப்பு வெளிவந்த ஆண்டு அறியப்பட்டால் ஈழத்தின் முதலாவது தமிழ் நாவல் எது என்பது தொடர்பாகப் புதிய கருத்து உருவாகலாம்.
பதிப்பாசிரியரும் நாவலாசிரியருமான ஜே. எஸ். தம்பி முத்துப்பிள்ளை சம்சோன் கதை என்ற நாவலைக் கவிதை நடையில் மொழிபெயர்த்துள்ளார். இதன் இரண்டாம் பதிப்பு 1911இல் வெளிவந்தது.
மட்டக்களப்பு, தாமரைக்கேணியைச் சேர்ந்த வே. ஏரம்ப முதலி ஆங்கிலத்தில் சேர் வால்டர் ஸ்கொட் எழுதிய கெனில் வேர்த் (Kenilworth) நாவலைத் தழுவி எழுதி அரங்கநாயகி என்ற தலைப்புடன் (1934) வெளியிட்டுள்ளார்.
"...1914ஆம் ஆண்டு கேம்பிரிஜ் சீனியர் பரீட் சைக்கு ஓர் இலக்கிய பாடமாக என்னல் வாசிக்கப் பட்டது. அப்போ அக்கதையின் சுவையும் ஆசிரியர் அவர்களின் பாஷா வன்மையும் கதையிலே காணப் பட்ட அரிய படிப்பனைகளும் என் மனத்தைக் கவர்ந்தன.”* - என்று தமது ஈடுபாட்டைக் கூறி 1919ஆம் ஆண்டிலிருந்து தம்மனைவியின் கேள்விக்கிணங்க மொழிபெயர்க்கத் தொடங்கி யதாகத் தெரிவிக்கிருர். இந்நாவலிற் கதைமாந்தரும் கதை நிகழிடங்களும் தமிழ் நாட்டுச் சூழலுக்கேற்ப அமைந் துள்ளள. நேரடி மொழிபெயர்ப்பாக அமையாமல் இவ்

சமுதாய சீர்திருத்தக் காலம் 玺3
வண்ணம் சூழலுக்கேற்பப் பெயர்களையும் ஊர்களையும் மாற்றியமைப்பது அக்காலப்பகுதியிலே தமிழ் நாட்டு மொழிபெயர்ப்பு நாவலாசிரியர்களிடம் காணப்பட்டதொரு பொதுப்பண்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.42
கிறித்தவ சமய குருவானவர் ஒருவர் பாவசங்கீர்த்தன இரகசியத்தைப் பாதுகாப்பதற்காக அநுபவித்த துன்பங்களைக் கூறும் பாவசங்கீர்த்தன இரகசியப் பலி (1923) நாவல் 1888 ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாக அறியப்படுகின்றது. இதன் ஆசிரியர்பெயர் அறியப்பட வில்லை.
சைவசித்தாந்த தத்துவத்தை உருவகப்படுத்தி இக்காலப் பகுதியில் நமசிவாயம் அல்லது நான் யார்? (1929) உயிரிளங் குமரன் (1936) ஆகிய நாடகங்கள் வெளிவந்ததைப் போல சித்தகுமாரன் (1925) என்ற நாவலொன்றும் வெளிவந்தது. நீலகண்டன் ஓர் சாதிவேளாளன் நாவலை எழுதிய இடைக் காடரே இந்நாவலையும் எழுதியுள்ளார். தத்துவ உருவகம் என்ற வகையிற் குறிப்பிடத்தக்க நாவல் இது. தமிழ் நாட்டில் தி. ம. பொன்னுசாமிப்பிள்ளை சைவசித்தாந்தக் கருத்து விளக்கங்களாக நாவல்களை எழுதினர் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.*
மதிப்பீடு
சீர்திருத்த உணர்வு மேலோங்கி நின்ற இக் காலப் பகுதியில் வெளிவந்த நாவல்களை வரலாற்று நோக்கிலே நோக்கும்போது தொடக்கத்தில் நடப்பியல்புக்கு முக்கியத் துவம் அளித்தும் அடுத்து மர்மப் பண்புக்கும் சம்பவச் சுவைக்கும் முதன்மை தந்தும் எழுதப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
நடப்பியல்போடு பொருந்தியன என்ற வகையில் நொறுங்குண்ட இருதயம், கோபால நேசரத்தினம், துரை ரத்தினம் நேசமணி என்பன தாம் கதைக்குப் பொருளாக எடுத்த பிரச்சினைகளின் முக்கியத்துவத்தாற் குறிப்பிடத் தக்க சிறப்புடையன. சமகாலத்திலே தமிழ் நாட்டின்

Page 35
44 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
தமிழ் நாவலிலக்கியம் பெற்றிருந்த வளர்ச்சியோடு ஒப் பிட்டுக் கூறக்கூடிய சிறப்பு இவற்றுக்கு இல்லை. கதை மாந்தரைப் பொறுத்தவரை நொறுங்குண்ட இருதயத்தின் கண்மணியும், கோபால நேசரத்தினம் நாவலின் நேசரத் தினம், குட்டித்தம்பிப் போதகர் ஆகியோரும் நினைவில் நிற்கின்றனர்.
புனைகதை யிலக்கியத்தின் இன்றியமையாத பண்புகளி லொன்று உணர்ச்சிபூர்வமான அதன் உரைநடை, உள்ளத்தில் எழும் உணர்ச்சி பேதங்களையும் கற்பனைகளையும் உள்ளவாறே வாசகருள்ளத்திற் பதியவைப்பதற்குப் பயன் படும் வகையில் ஊடகமாக அமைவதே புனைகதைக்குரிய உரை நடையின் பண்பும் பயனுமாகும். தமிழ் நாட்டில் இப் பண்புடன் இருபதாம் நூற்றண்டின் முதலிரண்டு பத்தாண்டுகளில் உருவாகி வளரத் தொடங்கிய மறுமலர்ச்சி நடை சமகால ஈழத்து நாவலாசிரியர்களது கவனத்தைக் கவரவில்லை. சமயம் பண்பாடு ஆகிய சிந்தனைகளில் ஊறித் திளைத்தவர்களும் கருத்தை முதன்மைப்படுத்தி ‘வசன இலக்கியம்’ படைக்க முனைந்தவர்களுமான ஈழத்து ஆரம்ப கால நாவலாசிரியர்கள் கதை சொல்லும் முறை பற்றியோ மொழியைக் கையாளும் முறை பற்றியோ சிந்தித் திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. காவியமரபின் செல்வாக்கிலிருந்து விடுபடாத இவர்களிற் பலர் தமது நாவல்களைக் "காப்பு'ச் செய்யுளோடு தொடங்குவதையும் முடிவில் வாழ்த்து வணக்கத்துடன் முடிப்பதையும் காணலாம். சில நாவல்களில் இடையிடையே திருமுறைகள் அறநூல்கள் ஆகியவற்றின் பாடல்களும் செவிவழி வந்த பழமொழிகளும் இடம்பெற்றுள்ளன.
இலக்கணம் இகவாத நடையில் ஆசிரியர் கூற்ருகவே கதை கூறப்படும் இக்கால நாவல்கள் பலவற்றிலே பாத் திரங்களின் உரையாடல்களில் ஆங்காங்கே பேச்சு வழக்கு மொழி பிரயோகிக்கப்பட்டிருப்பது நாவல்களுக்கு நடப்பியல் புச்சாயல் தருவதற்காயிருக்கலாம். கதை மாந்தர் உரை யாடும் கட்டங்களில் நாடக எழுத்துப் பிரதியினமைப்பிலே எழுதும் போக்கும் இக்கால நாவல்கள் பலவற்றிற்குப் பொதுப் பண்பாயுள்ளது. சமகாலத் தமிழ்நாட்டு நாவல்கள் பலவற்றிலும் இது பொதுப் பண்பாகஇருந்தது என்பர்.4

சமுதாய சீர்திருத்தக் காலம் 45
அடிக்குறிப்புகள்
1. ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வரலாற்றில் ஏறத்தாழ இதேகாலம்
10,
.
12,
13.
14.
15.
16.
7.
8.
9.
\20
2.
&&。
23
சமய தத்துவ அறப் போதனைக் காலமாக அமைந்துள்ளது. க. சொக்கலிங்கம், ஈழத்துத் தமிழ் தீாடக இலக்கிய வளர்ச்சி, (1977) நூலில் இவ்வகைக் காலப்பாகுபாடு செய்துள்ளார்.
. நொறுங்குண்ட இருதயம், 1914, பக். 3.
யாழ்ப்பாண வைபவ கெளமுதி, பக். 329 சிந்தனைச் சோலை 1960, பக்கங்கள் 102, 135, 123, 67
. க. சொக்கலிங்கம், மு. கு. பக். 32
கி. வா. ஜகந்நாதன் தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும், 1966,
u_uáš 29 - 30
இந்து சாதனம், தொகுதி 35 இல. 62, 1924-2-14, பக். 3
. ஆ. சிவநேசச்செல்வன், நொறுங்குண்ட இருதயம் கதையும் கதைப்
பண்பும் 1972 பக். 2-3 நொறுங்குண்ட இருதயம், பக். 7
9 V 9 Lă. 55
tudi. 72 ஆ. சிவநேசச்செல்வன், மு. கு. பக். 4 நொறுங்குண்ட இருதயம், பக். 124
பக். 260 எஸ். தோதாத்திரி “கமலாம்பாள் சரித்திரம்" - ஆராய்ச்சி
தொகுதி 3 இல, 1, 1972, பக். 30-38 சுந்தரன் செய்த தந்திரம், பக். 9 gy பக், 5 L፡é, 72 கனக செந்திநாதன் ‘அழகவல்லி அல்லது பிறர்க்கிடுபள்ளம் தான் விழுபள்ளம்" - மல்லிகை 108, 1977 பெப்ரவரி, பக். 33 இல் இவ் வருணனைப் பகுதி எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அருமைநாதன், இதயரத்தினம் ஆகியவை பற்றிய தகவல்களை
F. X. .ே நடராசா, எம். சற்குணம் இருவரும் தந்தனர். 1922 இலிருந்து 1940 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து உலகம் பலவிதம் தலைப்பில் கதைகளும் கட்டுரைகளும் அவ்வப்போது எழுதப்பட் டுள்ளன. இந்துசாதனம், தொ. 35 இல. 70, 1924-3-13, பக். 4 ஆசிரியர் தந்த இத்தகவலின்படி 1921 ஆம் ஆண்டின் இந்துசாதனம் இதழ்களில் கோபால நேசரத்தினம் நாவலின் தோற்றம் கண் டறியப்படவில்லை. இந்துசாதனம் 23-9-1926 இதழிலிருந்தே கதை தொடர்கின்றது.

Page 36
46
24.
25
86.
27.
28.
29
03.
8፲.
32.
33
34.
35.
36.
37.
38.
39,
40
4.
42
43
44.
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
Ceylon: Delemmas of a New Nation, 1960 p. 27 K. H. M. Sumathipala, Education in Ceylon 1796-1965, 1968 p. 15 ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு பாகம் 1, 1922, பக். 29-30 E. R. Sarathchandra, The Sinha lese Novel, 1950, p. p. 92-104 காஞ்சனை சிறுகதைத் தொகுதியில் இரண்டாவது கதை. வ. ரா. வின் சுந்தரி அல்லது அந்தரப்பிழைப்பு (1917) பாரதியாரின் சந்திரிகையின் கதை (1921) ஆகியன இவ்வகையிற் குறிப்பிடத் தக்கன. துரைரத்தினம் நேசமணி, 1931, பக். 24-27
L፡ë. 36-87 இந்துசாதனம், 1926-9-23, பக். 2 கோபால நேசரத்தினம், 2 ம் பதி; 1948 பக் 30 மராட்டிய எழுத்தாளரான இவரைத் தமிழரெனத் தவருகக் கருதி
யுள்ளார். வ, மு. சின்னத்தம்பி, வீராம்பாள் அல்லது விபரீதமங்கை, 1930,
முகவுரை. நீலகண்டன் ஒர் சாதி வேளாளன், 1925, பக். 178-185 தேம்பாமலர் முகவுரை கலாபரமேஸ்வரன், சாள்ஸ் ஸ்ரிக்னி முப்பதுகளின் சிறந்த நாவலா
சிரியர்" மல்லிகை, 104, 1976 டிசம்பர், பக். 33 இந்துசாதனம், தொ. 15 இல, 2 1903-7-15, பக். 1 பொ. பூலோகசிங்கம், தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெரு
முயற்சிகள், 1970, பக். 236-237 அரங்கநாயகி, 1934. முகவுரை, பக். V ஆரணி குப்புசாமி முதலியாரின் மொழிபெயர்ப்பு நாவல்களில் இப்
பண்பைக் காணலாம். தி ம. பொன்னுசாமிப்பிள்ளை தமது ஞானப்பிரகாசம் (1920) நாவல்
முன்னுரையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அசோகமித்திரன், "அமெரிக்க ஆங்கிலமும் இலங்கைத் தமிழும்"
தீபம், 1977 நவம்பர், பக். 18

GB எழுத்தார்வக்
காலம்
புதியதிருப்பமும் சூழ்நிலையும்
*பண்டிதத் தமிழும் பழைமையும் நிறைந்திருந்த யாழ்ப்பாணத்தில் புதுமைக் கிளர்ச்சி ஏற்பட்டுச் சொற்ப காலம். ஆனல் அக்குறுகிய கால எல்லைக்குள் தன்ன லான புதுமைத் தொண்டு ஆற்றுவதற்கு யாழ்ப்பாணம் கொஞ்சமும் பின் நிற்கவில்லை. வங்க நாவல்களைப் பின்பற்றிப் புதுமையிலிறங்கிய அன்னபூரணியும் இதற் குப் பிரத்யக்ஷம்." முப்பதுகளின் முடிவில் ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய வரலாற்றிலே உருவாகத்தொடங்கிய புதிய திருப்பத்தை இனங்காட்டும் வகையிலமைந்த இக்குறிப்பிலே புதுமைக் கிளர்ச்சி, புதுமைத்தொண்டு ஆகிய சொற்ருெடர்கள் சிந்தனைக் குரியன. மரபுவழி இலக்கியச்சிந்தனைகளிலிருந்து விலகிப் புதுமையை நாடும் புதிய தலைமுறையின் கருத்தோட்டத் தையே இவை உணர்த்திநிற்கின்றன எனலாம். இப் புதிய கருத்தோட்டம் நவீன இலக்கியப் போக்கைக் கலாபூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டுமென்றதாகத்தையும் அவ்விலக் கியப் போக்குடன் தம்மையும் இணைத்துக்கொள்ளவேண்டு மென்ற ஆர்வத்தையும் அடிப்படையாகக் கொண்டது. கருத்துக்களைக் கூறுவதற்கான "வசன இலக்கிய வடிவ"மே நாவல் என்ற ஆரம்பகால நாவலாசிரியர்களின் இலக்கிய நோக்கிலிருந்து வேறுபட்டதாகவே இக்கருத்தோட்டம் அமைந்துள்ளதென்பது தெளிவு.

Page 37
48 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
"தமிழிலே நாவல் ஒரு திட்டமிட்ட இலக்கிய ரூபமாக அமையவேண்டுமென்ற நோக்கமும் கொள்கை யும் நாவல் எழுதுவோரிடையே கடந்த முப்பது முப்பத் தைந்து ஆண்டுகளுக்குச் சற்று முன் பின்னகத்தான் தோன்ற ஆரம்பித்தது. அதற்கு முன்பெல்லாம் நாவல் என்பது ஒரு சுவையான, நீண்ட கதையாக, சரளமான நடையில் இருந்தால் போதும்; நடப்பியலில் நாம் காணும் மனிதர்களைப்போன்ற கதை மாந்தர்கள் நட மாடுவது மட்டும் நாவலின் கதைப் பொருளுக்கு ஊட்டம் கொடுத்துவிடும் என்ற மனப்பான்மைதான் நாவலாசிரியர்களிடையே நிலவி வந்தது . 1930க்குப் பின் ஆரம்பித்த காலகட்டத்தில் மேற்கே ஆங்கில இலக்கியத்தில் தோன்றிய மாறுதல்களும், புதிதாக ஏற்பட்ட இயக்கங்களும் இலக்கியக் கொள்கைகளும் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கிய முயற்சிகளுக்கு ஒரு புதிய விழிப்பையும் உந்துதலையும் கொடுத்தன."2
தமிழ் நாட்டு நாவலிலக்கியப் பரப்பைத் தொகுத்து நோக்கித் தெரிவிக்கப்பட்ட இக் கருத்து ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றுக்கும் பொருந்துவதாகவேயுள்ளது.
மேனட்டு நாவல்களையும் தமிழ் நாட்டு நாவல்களையும் வாசித்ததன் காரணமாக ஏற்பட்ட அருட்டுணர்வுடனும் எழுத்தாளனக மதிக்கப்படவேண்டுமென்ற ஆர்வத்துடனும் ஒரு புதிய எழுத்தாளர் பரம்பரையொன்று இக்காலப் பகுதியில் ஈழத்துத் தமிழ் நாவலுலகில் அடியெடுத்து வைத்தது. இவர்களது முயற்சிகட்கு அடிப்படையாக அமைந்தது எழுதவேண்டும் என்ற ஆர்வமேயாம். இந்த ஆர்வம் தொடக்கத்திலே மொழிபெயர்ப்பு, தழுவல் முயற்சிகளாகவும் பின்னர் சுயமாகப் படைக்கும் ஆற்ற லாகவும் வெளியிடப்பட்டது. தொடக்கத்தில் ஏறத்தாழப் பதினைந்தாண்டுக் காலம் இவ்வகையில் வெளியிடப்பட்ட எழுத்தார்வம் அடுத்து ஏறத்தாழப் பத்தாண்டுக் காலத்திற் சமூக, தேசிய உணர்வுகளுடன் இணைந்து புதிய பரிணுமம் பெறலாயிற்று. இவ்வகையில் முப்பதுகளின் முடிவில் ஈழகேசரி தனது நவீன இலக்கியக் களத்தினை விசாலித்த

எழுததார்வக் காலம் 49
காலம் தொடக்கம் அறுபதுகளின் ஆரம்ப ஆண்டுகள் வரை ஏறத்தாழக் கால் நூற்ருண்டுக் காலத்தை எழுத்தார்வக் காலம் எனலாம்.
இவ்வெழுத்தார்வம் உருவாகி வளர்வதற்குச் சாதகமாக அமைந்த சூழ்நிலை தொடர்பாக நோக்கும்போது முதலிற் குறிப்பிடத்தக்கது செய்திப்பத்திரிகைகளின் தோற்றமாகும். 1930ஆம் ஆண்டை அடுத்து ஈழகேசரி, வீரகேசரி, தினகரன் ஆகியனவும் 1947இலிருந்து சுதந்திரனும் செய்திப்பத்திரிகை களாக வெளிவரலாயின. இவை அரசியல் சமூக விடயங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதோடு அமையா மற் புனைகதைத் துறைக்கும் குறிப்பிடத்தக்க அளவு பணி யாற்றின. வீரகேசரியில் எச். நெல்லையா தமிழ்நாட்டுப் பரபரப்பு நாவல்களை வாசித்த பரந்த வாசகர் கூட்டத்தைத் திருப்திப்படுத்தும் வகையிற் பல தொடர் நாவல்களை எழுதி வந்தார். இவருக்குப்பின் நாற்பதுகளின் முடிவிலிருந்து ரஜனி (கே. வி. எஸ். வாஸ்) இப்பணியைத் தொடரலானர்.
ஈழகேசரி ஆரம்ப ஆண்டுகளிலிருந்தே சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் வெளியிட்டு வந்ததெனினும் 1938ஆம் ஆண்டிற் சோ. சிவபாதசுந்தரம் ஆசிரியராக அமர்ந்தபோது தான் நவீன இலக்கியத் தேவைகட்கேற்பத் தனது இலக்கியக் களத்தை விசாலித்தது. 1939ஆம் ஆண்டில் ஒரே வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்கதைகள் ஈழகேசரியில் வெளி வந்தன. சோ. சிவபாதசுந்தரம் தொடக்கி வைத்த ‘ஈழகேசரி கல்வி அநுபந்தம் இளம் எழுத்தாளர் பலர் எழுதி வளர்வதற்குக் களமாயிற்று. இப்படி எழுதி வளர்ந்தவர்களே 1942ஆம் ஆண்டை அடுத்து எழுத்தார்வத்தாலே தூண்டப் பெற்று மறுமலர்ச்சிச் சங்கம் என்ற பெயரில் இணைந்து செயற்பட்டு மறுமலர்ச்சி என்ற பெயரில் இலக்கிய சஞ்சிகை யொன்றையும் சிறிதுகாலம் நடத்தினர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. ஈழகேசரியிற் சமகாலத் தமிழகத்து இலக்கியச் செய்திகளாக இலக்கிய மதிப்புரைகளும் கட்டுரை களும் வெளிவந்தன. சோ. சிவபாதசுந்தரம் ஆசிரியப் பதவியிலிருந்து விலகிய பின்னர் இராஜ அரியரத்தினம் ஆசிரிய ராக அமர்ந்து இப்பணியைச் செவ்வனே தொடர்ந்தார்.

Page 38
50 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
பீஷ்மன் என்ற புனைபெயரில் அ. செ. முருகானந்தன் எழுதிய யாத்திரை என்ற நாவலை நிறைவு செய்யாமலே 1958இல் ஈழகேசரி தனது வாழ்வை நிறைவுசெய்து கொள்ளும் வரை அதன் நவீன இலக்கியப்பணி தொடர்ந்தது.
ஐம்பதுகளிலே தினகரனும் சுதந்திரனும் நவீன இலக்கிய ஆர்வலர்கள் இணைந்து செயற்படுவதற்சுான களங்களாக அமைந்தன. சமூக உணர்வும் தேசிய உணர்வுச் சாயலும் எழுத்தார்வத்திற் படிவதற்கான சூழ்நிலையை உருவாக் கியதில் ஈழகேசரியுடன் இவற்றுக்கும் முக்கிய பங்குண்டு.
எழுத்தார்வம் உருவாகி வளர்வதற்குக் காரணமா யிருந்த முக்கியமான மற்ருெரு அம்சம் தமிழ் நாட்டு இலக்கியத் தொடர்பாகும். ஈழத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிற் காலங்காலமாக நிலவிவரும் பண்பாட்டுத் தொடர்பின் ஒரு கூறுதான் இது எனினும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியின் ஈழத்து இலக்கிய வரலாற்றுப் போக்கில் முக்கிய தாக்கத்தை விளைவித்ததென்றவகையில் இது சிறப்பாக நோக்கத்தக்கது.
தமிழ் நாட்டில் முப்பதுகளில் ஏற்பட்ட நவீன இலக்கிய விழிப்புணர்ச்சியிற் சஞ்சிகைகள் முக்கிய பங்கை வகித்தன. மணிக்கொடி சஞ்சிகைக் சிறுகதைத் துறையில் விளைவித்த சாதனையைத் தொடர்ந்து சூறவளி, கிராம ஊழியன், கலாமோகினி போன்ற இலக்கிய சஞ்சிகைகளும் ஆனந்த விகடன், கலைமகள், கல்கி முதலிய ஏடுகளும் நாவல் சிறுகதை இருதுறைகளுக்கும் வளர்ச்சிக் களங்களாக அமைந்தன. ஆனந்தவிகடனும் கலைமகளும் இக்காலப் பகுதியில் வங்காளம், மகாராட்டிரம், இந்துஸ்தானி முதலிய இந்தியாவின் பிற மொழிகளின் நாவல்களையும் இந்திய ஆங்கிய எழுத்தாளர்களின் நாவல்களையும் தமிழாக்கித் தொடராக வெளியிட்டன. பங்கிம் சந்திரர், ரவீந்திரநாத் தாகூர், வி. ஸ். காண்டேகர், பிரேம்சந்த், ஆர். கே. நாராயணன் முதலிய நாவலாசிரியர்கள் தமிழ் வாசகருக்கு அறிமுக மாயினர். நாற்பதுகளிலே சமகாலத் தமிழ் நாட்டு அரசியல் சமூகச் சூழ்நிலைகளையும் வரலாற்றுக் கால கட்டங்களையும்

எழுத்தார்வக் காலம் 5.
பகைப்புல்ங்களாகக் கொண்டு தொடர் நாவல்கள் எழுதும் மரபு புதிய வேகத்துடன் தொடங்கியது. "கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, அகிலன் ஆகியோர் இவ்வெழுச்சிக்கு முன்னேடிகளாயினர்.
ஈழத்து வாசகர்களின் மத்தியில் ஆனந்த விகடனும் கலைமகளும் பின்னர் கல்கியும் விரும்பி வாசிக்கப்பட்டன. இலக்கிய ஆர்வலர் மத்தியில் இவற்றுடன் கலாமோகினி, கிராம ஊழியன் முதலியனவும் விரும்பி வாசிக்கப்பட்டன. வாசிப்பது மட்டுமன்றி அவை தொடர்பான ரசனையில் ஈடுபடுவதும் தம்மாற் படைக்கப் பட்டவற்றை இவற்றிற் பிரசுரிப்பதும் ஈழத்து இலக்கிய ஆர்வலர் மத்தியிற் காணப்பட்ட பொதுப் பண்பாகும். ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை முதல்வர்களான இலங்கையர்கோன், சி. வைத்திய லிங்கம், க. தி. சம்பந்தன் ஆகியோரது படைப்புக்கள் தமிழ் நாட்டுச் சஞ்சிகைகளில் வெளிவந்தமையும் பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளை ஆனந்த விகடன் நடத்திய நாவல் விமர்சனப் போட்யிற் கலந்து கொண்டு பரிசில் பெற்றமை யும் (1935) இதனைத் தெளிவாக்குகின்றன.
முப்பதுகளிலே ஈழத்துக்கும் தமிழகத்துக்குமிடையில் அரும்பிய நவீன இலக்கிய நட்புறவு ஈழத்துத்தமிழ் நாவல் வளர்ச்சிக்குத் துணைபுரியும் வகையிலே தொடர்ந்து நிலவி வருகின்றது. நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் ஈழத்தில் நாவல் எழுதிய பலர் சமகாலத் தமிழ்நாட்டு நாவல்களை வர்சித்த அருட்டுணர்வால் உந்தப்பட்டவர்கள். நாற்பது களில் ஜே. எஸ். ரவீந்திரா என்பவர் எழுதிய காதல் உள்ளம் நாவல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஈழத்து விமர்சகரொருவர்,
**இந்தநாவல், "அகிலன்', 'விந்தன்', 'மாயாவி' ஆகிய மூவரையும் ஒட்டுப்போட்டு உருவாக்கிய ஒருவர் எழுதிய நாவல்போலத் தோற்றமளிக்கிறது"*
எனக் குறிப்பிட்டுள்ளமை இத்தொடர்பில் நோக்கத்தக்கது.

Page 39
52 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
ஈழத்து எழுத்தாளர்கள் தமிழ்நாட்டுப் பிரபல நாவ லாசிரியர்களை ஆதர்சமாகக் கருதினர் என்பதற்கு யாழ்ப் பாணம் "தேவன்", ஆனந்தவிகடன் "தேவன் இருவருக்கு மிடையில் நிலவிய 'ஏகலைவன்- துரோணர் தொடர்பு? எடுத்துக்காட்டாகும். ஈழத்தின் பிரபல நாவலாசிரியரான இளங்கீரன் தமிழ்நாட்டிலே சிலகாலம் வாழ்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பகுத்தறிவுப் பாசறையைச் சார்ந்து நாவல்கள் படைத்தவர் என்பதும் மர்ம நாவல்களைப் படைத்த "ரஜனி", எம். ஏ. அப்பாஸ் இருவரும் தமிழ் நாட்டினர் என்பதும் "தமிழக - ஈழ நாவலிலக்கியத் தொடர்பின் இயல்பை விளக்கப் பொருத்தமான சான்றுக ளாகும். ஐம்பதுகளின் முடிவிலே ஈழத்துத் தமிழிலக்கியம் தனக்கெனத் தனிப்பண்புடையதாக அமைய வேண்டுமென்ற தேசிய உணர்வடிப்படையிலான கருத்து வளர்ச்சியடைந்த பின்னருங்கூட ஈழத்துத் தமிழ் நாவலாசியர்களும் திறனய் வாளரும் தமிழ் நாட்டு நாவலாசிரியர்களுடன் நெருங்கிய இலக்கிய, உறவுகொண்டிருந்தனர். 1960இல் 'தினகரன் தமிழ் விழா'வுக்குக் க. கைலாசபதியும் செ. கணேசலிங்கனும் அகிலனை வரவழைத்துச் சிறப்பித்தனர். 8 1965இல் செ. கணேசலிங்கன் தனது நீண்ட பயணம் நாவலை அகிலனின் முன்னுரையுடனேயே வெளியிட்டார். அறுபதுகளில் வெளி வந்த ஈழத்தின் சிறந்த நாவல்களிற் பெரும்பாலானவை தமிழ் நாட்டுப் பிரசுரக்களங்களின் மூலம் வெளியானவையே என்பதும் ஈண்டு அவதானிக்கத்தக்கது.
எழுத்தார்வத்தைத்தூண்டிய முக்கிய அம்சங்களில் ஆங்கிலக் கல்விமூலம் பெற்ற மேனுட்டு இலக்கியப் பயிற்சியும் ஒன்ருகும்.
'நான் கேம்பிரிஜ் சீனியர் வகுப்பில் படித்து வந்த பொழுது செல்வ மாணிக்கம் ஆங்கிலபாட ஆசிரியராக இருந்தார். திரு. செல்வமாணிக்கம் எங்களுக்கு அடிக்கடி சொல்வார் "லார்ட் ரெனிஸன் எழுதிய ஈனெக் ஆர்டனை நான் பத்தொன்பது தரம் படித்து விட்டேன். நான் இறப்பதற்குமுன் இருபதாவது

எழுத்தார்வக் காலம் 53
தரமும் படித்துவிட வேண்டுமென்பது எனது அவா' என்று அவர் என்மனதில் ஊன்றிய அவ்வித்தே இம் மொழிபெயர்ப்புக்குக் காரணம். நானும் ஈனெக் ஆர்டனை எத்தனையோ தரம் படித்திருக்கிறேன் படிக்குந் தோறும் படிக்குந்தோறும் நான் அனுபவித்த இன்பம் சொல்லமுடியாது; அவ்வின்பத்தில் ஒருபகுதியை யாயினும் ஆங்கிலந் தெரியாத என் சகோதரர்கள் அனுபவிக்க வேண்டுமென்ற அவா எனக்கு ஊக்கத்தைக் கொடுக்கின்றது.”*
என இலங்கையர்கோன் தமது மொழிபெயர்ப்புக்கான எழுத்தார்வத்தை உணர்த்துகிருர்,
முப்பதுகளின் முடிவிலிருந்து வளர்ந்து வந்த எழுத் தார்வத்தில் ஐம்பதுகளிலே தேசிய உணர்வுச்சாயல் படிவதைக் காணலாம். ஐம்பதுகள் வரை நாடு தழுவிய தேசிய உணர்வு வளர்வதற்கேற்ற வகையில் அரசியற் சூழ்நிலை ஈழத்துத் தமிழ் மக்கள் மத்தியில் அமைந்திருக்க வில்லை. தனித்தனியாக இருந்த ஈழத்தின் பிரதேசங்களை ஆட்சி வசதி கருதி ஆங்கிலேயர் இணைத்து ஆண்டபோது வலிந்து புகுத்தப்பட்ட அரசியல், பொருளாதார அடிப் படையிலான தேசிய ஒருமைப்பாடு மக்கள் தழுவிய சிந்தனையாக மலரவில்லை. அந்நியருக்கெதிரான விடுதலைப் போராட்டமும் ஈழத்தில் - இந்தியாவில் நடைபெற்றதைப் போல - மக்கள் இயக்கமாக உருவாகவில்லை. இதன் காரணமாக ஈழத்தில் அவ்வப்போது நடைபெற்றுவந்த அரசியல் சீர்திருத்தங்களும் மாற்றங்களும் தமிழிலக்கியத்திற் குறிப்பிடத்தக்க எந்த அடிப்படைத் தாக்கத்தையும் விளைவிக்கவில்லை. 1931இல் டொனமூர் அரசியற்றிட்டப்படி கிடைத்த சர்வசன வாக்குரிமையும் 1947ஆம் ஆண்டின் சுதந்திரமும் நவீன தமிழிலக்கியத் துறையிலே எவ்வித உடனடி மாற்றத்தையும் விளைவிக்கவில்லை.
1905 ஆம் ஆண்டில் சி. விை. சின்னப்பபிள்ளை இந்திய வாசகருக்கு ஈழத்துச் சாதாரண கிராம வாழ்க்கையைக் காட்ட விரும்பியதும் 1943இல் சுவாமி விபுலானந்தர் மறு மலர்ச்சிச் சங்கத்தார்முன்,

Page 40
54 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
"தமிழில் வெளிவரும் கதைகளில் அநேகம் இந்திய ராலேயே எழுதப்படுகின்றன. அவை அந்நாட்டு வாழ் வினை நமக்குத் தெரிவிக்கின்றன. நம்மைப்போலவே இந்தியர்களும், ஈழத்து மக்களின் வாழ்வையும் வளங்களை யும் அறிய விரும்புவர். எனவே நமது வாழ்வை உள்ளபடி சித்திரிக்கும் உயர்ந்த கதைகளை மறுமலர்ச்சித் தொண்டர்கள் வெளிக்கொணரவேண்டும்.9"
என்று தெரிவித்த கருத்தும் தமிழ் நாட்டுத் தமிழரிலிருந்து ஈழத்தவர் தம்மை வேறுபடுத்தியுணர்வதைக் காட்டுவனவே யன்றி நாம் ஈழத்தவர் என்ற நாடுதழுவிய தேசிய உணர் வினைக் காட்டுவன என்று கொள்ள முடியாது. சிறுகதை முதல்வருளொருவரான ந. சிவஞானசுந்தரம் "இலங்கையர் கோன்’ என்ற புனைபெயர் பூண்டதும் தமிழ் நாட்டிலிருந்து புவியியல் ரீதியாக வேறுபட்டவன் என்ற உணர்வின் வெளிப் பாடேயெனலாம். இவ் வேறுபாட்டுணர்வு தத்தம் பிரதேச, கிராமிய வாழ்க்கைமுறைகளையும் பண்பாட்டம்சங்களையும் இலக்கியங்களில் இடம்பெறச் செய்யவேண்டுமென்ற ஊக்கத்தினடிப்படையில் தேசிய உணர்வுச் afrrugi) பெறலாயிற்று.
"யாழ்ப்பாணத்துக் கிராமப்புறமொன்றிற் பிறந்த எனக்கு, அந்தச் செம்மண்ணின் விசேஷமோ என்னவோ சில பிடிவாதமான குணங்கள் இருக்கின்றன. கிராமங் களில் அருகிவரும் - படிப்படியாக மறைந்துவரும் - சில முக்கியமான விஷயங்களை எமது இளம் சந்ததிக்கு ஞாபகமூட்டவேண்டும். அவற்றைச் சிறுகதைகளாக, நாவல்களாக, நாடகங்களாகப் படைக்கவேண்டும். கிராமத்தின் உயிர்மூச்சைச் செயற்கைத்தன்மை படாமல் அப்படியே காட்டவேண்டும் என்பது எனது எண்ணம், "10
என்றும்
". அந்த வெறி - மாவலிகங்கை என் கதைகளிலே
வளைந்து நெளிந்து ஓடவேண்டும், அந்தப் பிரதேசத்தில் வாழும் எனது கிராமப்புற மக்களின் வாழ்க்கை

எழுத்தார்வக் காலம் 55
இலக்கிய_வடிவம் பெறவேண்டும் என்ற தணியாத வெறி-தான் நான் ஏன் எழுதுகிறேன் என்பதற்கு அன்றும் இன்றும் விடையாக இருக்கிறது.'
என்றும் முறையே கனக செந்திநாதன், வ. அ. இராசரத் தினம் இருவரும் கூறியுள்ளவை இதனை அரண் செய்கின்றன.
பிரதேசப் பண்பாட்டம்சங்களின் மீது கொண்ட ஈடுபாட்டினடிப்படையிலான இத் தேசிய உணர்வுச்சாயல் இடதுசாரி அரசியற் சிந்தனைகளால் நாடு தழுவிய தேசிய உணர்வாக வளரும் குழ்நிலை ஐம்பதுகளின் முடிவில் காணப்பட்டது. ஈழத்துத் தமிழ் எழுத்தாளருள் ஒரு பகுதியினர் தாம் சார்ந்திருந்த இடதுசாரி அரசிய லியக்கங்களின் தேசிய உணர்வுக்குட்பட்டு ஈழம் ஒரே நாடு என்ற அடிப்படையினை வரைந்து கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பிரச்சினைகளை அணுகினர். 1956ஆம் ஆண்டில் அரசியல்ரீதியாக இடதுசாரிகள் இணைந்து பெற்ற வெற்றி இவர்களது குரலை வலுப்படுத்தியது. தமிழ் மொழி, தமிழ் இனம் ஆகியவற்றுக்கெதிராகப் பெரும் பான்மையினர் மேற்கொண்ட புறக்கணிப்பும் அடக்கு முறையும் தமிழரை இன உணர்ச்சி கொள்ளத் தூண்டி நின்ற வேளையிலே இவர்கள் தாம் வரித்துக்கொண்ட தேசிய உணர்வுக்குப் புறம்போகாத வகையிலே தமிழ் மக்களின் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளைத் தமது இலக்கியங் களிற் பிரதிபலித்தனர்.
ஐம்பதுகளின் முடிவில் ஈழத்துத் தமிழிலக்கியம் தனக் கெனத் தனித்தன்மை பெற்றதாக அமையவேண்டும் என்ற கருத்தோட்டத்தினடியாகத் தேசிய உணர்வு முகிழ்த்தது. ஈழத்து இலக்கிய ஆய்வாளரொருவர் தெரிவித் துள்ளன கருத்து இத்தொடர்பிற் குறிப்பிடத்தக்கது.
"ஈழத்திலே தமிழர் சிறுபான்மையினர் என்ற நிலைமை ஏற்பட்ட இக் கால கட்டத்திலே, ஈழத்துத் தமிழர் முதன்முதலாகத் தாம் இலங்கையர் என்று எண்ணத் தொடங்கினர். இவ் வெண்ணத்தினலே தமிழகத்தோடு பூண்டிருந்த ஆத்மார்த்தத் தொடர்பு

Page 41
56 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
பலவீனமடையத் தொடங்கியது. தேசியப் பண்பு பொருந்திய இலக்கியம் படைக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஈழத்துப் பண்டைய இலக்கியங்களைப் பேணவேண்டும் என்ற உணர்வும் பிறந்தன. ’12
நாவல் வகைகள்
இக்காலப்பகுதியிலே எழுத்தார்வங் கொண்ட ஆசிரியர் களும், பத்திரிகைத்துறைசார்ந்தோரும் நிர்வாகப் பணிபுரிந் தவர்களும் பல்வேறு சமூக இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்தோருமான் எழுபதுக்கு மேற்பட்ட எழுத் தாளர்கள் தூற்றுக்கு மேற்பட்ட நாவல்களை எழுதி யுள்ளனர். இவற்றுட் சமகால சமூக, உணர்வும் தேசிய உணர்வுச்சாயலும் உடைய சில நாவல்களைத்தவிர ஏனைய வற்றை மொழிபெயர்ப்பும் தழுவலும், காதல் நாவல்கள், மர்மப்பண்பு நாவல்கள் என மூவகைப்படுத்தலாம்.
மொழி பெயர்ப்பும் தழுவலும்
இவ்வகைகளில் ஏறத்தாழ இருபது நாவல்கள் எழுதப் பட்டுள்ளன. இவற்றுட்பல ஈழகேசரி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளிலே தொடராக வெளிவந்தவை , வங்க நாவ லாசிரியரான ரவீந்திரநாத் தாகூரின் நாவல் ஒன்றை அறுந்த தளைகள் (1937) என்ற தலைப்பில் ரவீந்திரன் என்பவர் மொழிபெயர்த்தார். வங்க நாடோடிக் கதைகளிரண்டை *வில்லன்" என்பார் மல்லிகை (1940) கொள்ளக்கார நிசாம் (1940) ஆகிய தலைப்புக்களில் மொழிபெயர்த்தார். ஆங்கிலக் கவிஞர் அல்பிரட் ரெனிஸன், நாவலாசிரியர் தோமாஸ் ஹார்டி, ருஷ்ய நாவலாசிரியர் ஐவன் துர்கனேவ் ஆகியோரின் படைப்புக்களிற் சிலவற்றை "இலங்கையர் கோன்' மொழி பெயர்த்தார். துர்கனேவின் நாவல் மொழி பெயர்ப்புக்களிலொன் முன முதற் காதல் (1940) தமிழ் நாட்டிற் கலைமகள் பிரசுரமாக வெளிவந்தது. ஏனையவை ஈழடுகசரியிலே தொடராக வெளிவந்தன. இவற்றுள் அல்பிரட் ரெனிஸனின் படைப்பின் மொழிபெயர்ப்பான ஈணுெக் ஆர்டன் (1939) கதைப்பொருளுக்கும் 'மஹாகவி'யின் புதியதொரு வீடு கவிதை நாடகத்தின் கதையம்சத்திற்கு

எழுத்தார்வக் காலம் . 57
மிடையில் ஒற்றுமையுண்டு. தொழில் நிமித்தமாக மனைவி யைப் பிரிந்த கணவன் பல்வேறு இடையூறுகளாலே தடைப் பட்டு நீண்டநாட்களின் பின்னர் மனைவியை நோக்கி ஆவ லுடன் திரும்பிவரும்போது மனைவி இன்னுெருவருடன் வாழ்வதைக் சண்டு ஏற்படும் ஏமாற்றமும் மனத் துயருமே இரண்டிலும் கதைக்கு அடிப்படை. ஈழகேசரியில் ஈணுெக் ஆர்டன் வெளிவந்து ஏறத்தாழ முப்பதாண்டுகளின் பின்னரே “மஹாகவி'யின் புதியதொருவீடு எழுதப்பட்டது என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனிய நாவலாசிரியர்களான வில்ஹெல்ம் ஸ்மித், தோமஸ்மான் ஆகியோரது இரு படைப்புக்கள் அ. செ. முருகானந்தம், சோணுசலம் ஆகியோரால் முறையே போட்டி (1941) மனவிகாரம் (1945) ஆகிய தலைப்புக்களில் மொழி பெயர்க்கப்பட்டு ஈழகேசரியில் வெளிவந்தன.
ஐவன் துர்க்கனேவின் நாவலொன்றினை மாலே வேளையில் என்ற தலைப்பில் சி. வைத்திலிங்கம் தமிழாக்கினர். மிஸ் டொரத்தி. எஸ். செயர்ஸ் என்ற ஆங்கில நாவலாசிரியையின் துப்பறியும் நாவலொன்றை அலிபாபாவின் குகை (1943) என்ற தலைப்பில் முருகு என்பார் மொழிபெயர்த்தார். ஈழகேசரி ஆசிரியா இராஜ அரியரத்தினம், ஜே. ஸி. எதிர்வீர சிங்கம் எழுதிய ஆங்கில நாவலொன்றைத் தங்கப்பூச்சி (1948) என்ற பெயரிலே தமிழாக்கினர். இவை மூன்றும் ஈழகேசரி யிலே தொடராக வெளிவந்தன.
யாழ்ப்பாணம் "தேவன்", ரொபேட் லூயி ஸ்டீவன் ஸனின் Treasure Island நாவலைக் மணிபல்லவம் (1949) என்ற தலைப்பிலே தமிழாக்கினர். இது முதலில் கேரளத்திலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் நூலாகப் பிரசுரமாகியது. இந்தியாவின் பாஞ்சாலத்தைச் சேர்ந்த நாவலாசிரியர் முல்க் ராஜ் ஆனந்தின் Untouchable நாவலை கே. கணேஷ் தீண்டாதான் (1947) என்ற தலைப்பிலே தமிழாக்கினர். இந்நாவல் தமிழ் நாட்டிற் காரைக்குடிப் புதுமைப் பதிப் பகத்தாற் பதிப்பிக்கப்பட்டது.

Page 42
58 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
எமிலி ஜோலாவின் பிரெஞ்சு நாவலான நாணு அ. ந. கந்தசாமியால் மொழிபெயர்க்கப்பட்டு 1951இல் சுதந்திரனில் வெளிவந்தது. பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை ஜெர்மனிய மொழியில் தியோடர் சுதாம் எழுதிய இம் மென் சே நாவலைத் தழுவிப் பூஞ்சோலை (1953) நாவலையும் பிரெஞ்சு நாவலாசிரியர் சபூ எழுதிய இரட்டையர் நாவலைக் கற்ற கற்பனையில் வாழ்க்கையின் வினுேதங்கள் (1954) நாவலையும் எழுதினர். இவை இரண்டும் நூல்வடிவில் வெளிவந்தன.
மொழிபெயர்ப்பு முயற்சிகள் பெருமளவு நாற்பது களிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈழகேசரி தனது நவீன இலக்கியக் களத்தை விசாலித்த சூழ்நிலையில் உடனடித் தேவையாக இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு. ஆங்கிலங் கற்ற எழுத்தாளர்கள் அவ்வப்போது தாம் படித்துச் சுவைத்தவற்றை வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த களத்தை நன்கு பயன்படுத்தியுள்ளனர் என்பது புலணு கின்றது. பொதுவாக இக்காலப் பகுதி, தமிழ் நாவல் வரலாற்றிலே மொழிபெயர்ப்பு நாவல்கள் விரும்பி வாசிக்கப் பட்ட காலப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதன் முதலில் நாவல் வளம்பெற்ற வங்கமொழியின் நாவல் களும் மகாராஷ்டிர மொழி நாவல்களும் தமிழ் வாசகரதும் எழுத்தாளர்களதும் ஆர்வத்தைத் தூண்டி நின்ற இக்காலப் பகுதியில் ஈழத்து நாவலாசிரியர்களும் தாம் பிறமொழிகளிற் கற்றவற்றைத் தமிழிலே தரும் ஊக்கத்துடன் செயற் பட்டனர் எனலாம்.
காதல் நாவல்கள்
இக்காலப் பகுதியின் பெரும்பாலான நாவல்கள் இவ்வ கையைச் சார்ந்தனவே. காதலை மையமாக வைத்து அதனடிப் படையிலே தனி மனிதனுக்கும் குடும்ப உறவுமுறைகளுக்கும் சமூகத்திற்குமிடையிலே நிகழும் பிரச்சினைகளை உணர்ச்சி கரமாகச் சித்திரிக்கும் ஆர்வமே இக்கால நாவலாசிரியர்கள் பலரிடமும் பரவலாகக் காணப்பட்டது. இவ்வகைக் கதைகளை எழுதுவதற்கு அக்காலப்பகுதியிலே தமிழில்

எழுத்தார்வக் காலம் V. 59
வெளிவந்திருந்த தாகூர், காண்டேகர் முதலியோரது நாவல்கள் உந்து சக்தியாயின என்று கூறலாம். 1955இல் சுதந்திரனில் வந்த நாவலொன்று
"காதல் பற்றிய காண்டேகரின் இலக்கியக் கொள்கைக்குச் சவால்விடும் கதை" ܀
என்று கட்டியம் கூறிக்கொண்டு வந்தது என்பர்.19 தமிழ் நாட்டில் ஆரம்ப எழுத்தாளர்கள் பலர் இக்காலப்பகுதியிற் காதலுக்குக் கலைவடிவம் தரும் முயற்சியில் பெருந் தொகையான நாவல்களை எழுதியிருந்தனர். ஈழத்தில் இவ்வகை நாவல்களை எழுதியோரிற் சிலர் சமகாலச் சமூக உணர்வுடன் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி எழுதினர். பெரும்பாலோர் காலதேசவர்த்தமானங்களைக் கடந்த வகையில் உணர்ச்சிகளை மட்டும் முதன்மைப்படுத்தி எழுதினர். உணர்ச்சிகளை முதன்மைப்படுத்தி எழுதிய பலருட் குறிப்பிடத்தக்கவர் க. தி. சம்பந்தன்
ஈழகேசரியிலே தொடராக வெளிவந்த இவரது பாசம் (1947) நாவல், கல்லூரிமாணவியர் இருவருக்கும் ஆசிரிய ணுெருவனுக்குமிடையில் நிலவிய உணர்ச்சிப் போராட் டத்தைச் சித்திரிப்பது. நாராயணன் சாருகாசினி இருவரது காதலுக்கும் துணைநின்று இணைத்துவைக்கிருள் சாரதா. பின்னர் அவர்களின் வீட்டிலே அவள் வாழநேர்கின்ற வேளையில் நாராயணனுக்கும் அவளுக்குமிடையில் காதல் முகிழ்க்கிறது. இதனுற் "சாருகாசினி - நாராயணன்" உறவில் பிரச்சினைகள் தோன்றுவதை உணர்ந்த சாரதா தன் னுயிரைத் தியாகம் செய்கிருள்.
'நியாயத்துடனே அன்றி அது இல்லாமலோ எல்லாரிடத்திலும் பாசம் வைக்கவே கூடாது. வேண்டு மானல் எந்த விதத்திலேயும் ஒட்டாமலிருந்து இயன்ற வரை உதவி செய்வதுதான் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய கடமை தவிர இப்படி விழுந்து அவலத்தைத் தேடிக் கொள்வது அல்ல."14

Page 43
60 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
என்று டாக்டர் என்ற பாத்திரத்தின் கூற்று மூலம் ஆசிரியர் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளர்ர். காதலுணர்வை யும் தத்துவங்களையும் கலந்து அமைக்கப்பட்ட இந்நாவலின் கதையம்சமும் உத்தி முறையும் தாகூர், காண்டேகர் ஆகியோரது நாவல்களை நினைவுக்குக் கொண்டு வருகின்றன. தமிழ்ச் சிறுகதை முதல்வர்களுள் ஒருவரான சம்பந்தன் பாசம் நாவலின் மூலம் ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற் றிலும் இடம் பெறத்தக்க சிறப்பைப் பெறுகிருர்,
குடும்ப உறவுகளையும் காதலையும் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட இக்கால ஏனைய நாவல்களிற் பொன். குமார வேற்பிள்ளையின் உத்தம மனைவி (1935), க. சச்சிதானந்தனின் அன்னபூரணி (1942), "சு. வே. "யின் மன நிழல் (1948), யாழ்ப்பாணம் 'தேவ'னின் கேட்டதும் நடங்ததும்’ (1954-55) முதலியன இக்காலப் பகுதி ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியப் போக்கை இனங்காட்டவல்லன.
மர்மநாவல்கள்
இக்காலப்பகுதியில் ஏறத்தாழ இருபது மர்ம நாவல்கள் வெளிவந்தன. இவற்றுட் பெரும்பாலானவற்றை எழுதியவர் ரஜனி (கே. வி. எஸ். வாஸ்). வீரகேசரிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்த காலப்பகுதியில் இவர் எழுதிய குந்தளப்பிரேமா (1949-50) நந்தினி (1950) பத்மினி (1953 தாரிணி (1954) மலேக்கன்னி (1955) உதயகன்னி (1955) முதவியன இவ்வகையிற் குறிப்பிடத் தக்கன. வாசகரது ரசனையையே முக்கிய நோக்கமாகக் கொண்டு அற்புதச் சுவையும் அரசியற் செய்திகளும் கொண்டமைந்த இவ்வகை நாவல்கள் ஐம்பதுகளில் ஈழத்து நாவல் வாசகர் தொகை யைப் பெருக்கின.
ஈழத்திற்கு வந்து சொற்பகாலமிருந்து பிறகு இந்தி யாவுக்குக் குடிபெயர்ந்து சென்ற எம். ஏ. அப்பாஸ் இவளைப்பார் (1953) சி. ஐ. டி. சிற்றம்பலம் (1953) சிங்களத் தீவின் மர்மம் (1956) யக்கடையாவின் வர்மம் (?) முதலிய நாவல்களை எழுதியுள்ளார்.

எழுத்தார்வக் காலம் 61
சமுதாய சீர்திருத்தக் காலத்திலே எழுதப்பட்ட மர்மப் பண்பு நாவல்கட்கும் எழுத்தார்வக்கால மர்மப்பண்பு நாவல் கட்குமிடையில் வேறுபாடுண்டு. முதல் வகையின சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைக் கூற எடுத்துக் கொண்ட கதைக்குச் சுவை நோக்கி மர்மப்பண்பு புகுத்தப்பட்டவை. எழுத்தார்வக் காலப்பகுதியிலே மர்மச் சுவையுடன் நாவல்கள் எழுத வேண்டுமென்ற ஆர்வமே தூண்டிநின்றது. பிறமொழிகளிற் படித்த புதுவகை மர்மக் கதைகளைப் போலத் தமிழில் எழுத முயன்ற பல தமிழ் நாட்டு எழுத் தாளர்கள் வாசகர்களின் உள்ளங்களைக் கவர்ந்திருந்தனர். அவ்வகை வாகர் கூட்டத்தைத் திருப்தி செய்யும் நோக்கில் எழுதவேண்டிய சூழ்நிலை இருந்தது. இவ்வண்ணம் எழுதிய வர்கள் தமது நாவல்களின் சமகாலக்குடும்ப உறவுமுறைகள் காதல் ஆசாபாசங்கள் முதலியவற்றையும் சித்திரிக்கத் தவறவில்லை.
சமூக உணர்வும் தேசிய உணர்வுச் சாயலும்
கால தேசவர்த்தமானங்களைக் கடந்த காதல் நாவல் களும் குடும்ப நாவல்களும் எழுந்த இக் காலப் பகுதியில் குறிப்பிடத்தக்க சிலர் தாம் வாழும் சமூகத்தையும் பிரதேசங்களையும் கருத்திற் கொண்டு நாவல்கள் எழுத முயன்றனர். இவ்வாறு எழுதப்பட்ட நாவல்கள் "ஆசை பற்றி அறையலுற்ற ஆரம்ப முயற்சிகளாகவே அமைந்தன வெனினும் வரலாற்று நோக்கிற் குறிப்பிடத்தக்கன. சமூக உணர்வும் தேசிய உணர்வுச் சாயலும் கொண்டவை என்ற வகையில் இளங்கீரனின் நாவல்களையும் பரிசோதனை முயற்சிகளையும் தனித்தனியாகவும் நோக்கலாம்.
* மறுமலர்ச்சி எழுத்தாளரான அ. செ. முருகானந்தம் யாழ்ப்பாண்க் கிராமப்புற மண் வாசனையை எழுத்தில் வடிக்க முயன்றவர். இவரது குறுநாவல்களான வண்டிச் சவாரி (1944) புகையில் தெரிந்தமுகம் (1950) இரண்டும் யாழ்ப்பாணப் பிரதேசப் பழக்கவழக்கங்கள் சமூக மதிப் பீடுகள் ஆகியவற்றைச் சித்திரிப்பவை ; சமூகக் குறைபாடு , களையும் தொட்டுக் காட்டுவன. இவர் யாத்திரை என்ற தொடர் நாவலையும் (1958) எழுதியுள்ளார். "

Page 44
62 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
உபகுப்தன் என்ற புனைபெயரில் கனக. செந்திநாதன் எழுதிய விதியின் கை (1953) நாவல் காதல், கிராமப்புறப் பண்பாட்டம்சங்கள், சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை இணைத்து எழுதப்பட்டது. இந் நாவலின் கதைக்களமான மாஞ்சேரி” யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த கிராம மொன்றின் கற்பனைவடிவம். இங்குள்ள உயர்சாதிப் பணக்காரக் குடும்பங்களுக்கிடையில் நிகழும் போட்டி மனப்பான்மையும் உட்பூசலும் ஒரு காதலுக்கும் சமூக நலனுக்கும் தடையாகிறது. சமூகக் குறைபாடுகளுக் கெதிரான கருத்துக்கள் கொண்ட மாசிலாமணி என்ற ஆசிரியன் அன்றைய கால கட்டத்தில் மாறிவரும் தலைமுறை யின் பிரதிநிதி; அவ்வகையில் ஒரு முற்போக்குவாதி. ஆயின் செயற்றிறன் வாய்த்தவனல்ல. சமூக மாற்றத்திற்கான கருத்துக்களை முன்னெடுத்துச் செல்பவனுக அவன் அமைய வில்லை. விதிப்படி கதை சுபமாக நிறைவுறுகிறது. கிரா மத்துப்பாடசாலை, கிராமச் சங்கத் தேர்தல், காவடி ஆட்டம் ஆகியவற்றை நாவலின் கதை வளர்ச்சிக்கு ஏற்றவகையிற் புகுத்திக் கிராமத்தின் "உயிர்மூச்சைக் காட்டவேண்டு மென்ற தன் எண்ணத்துக்கு வடிவம் தரமுயன்றுள்ளார். கிராமச் சங்கத்தேர்தல் விவரணத்தில் ஆசிரியர்,
'உள்ளூர்க்கவிராயர்கள் பாடிய "கணபதிப்பிள்ளைச் சிந்தும்" உணர்ச்சிவசப்பட்டோர் எழுதிய ‘சுவர்ப் பழமொழிகளும் எங்கும் காட்சியளித்தன. பூசினிக் காய்கூடச் சரியாக வரையத் தெரியாத எத்தனையோ மாணவர்கள் யானையும் பைசிக்கிளும் அழகாகக் கீறிப் பெரிய ஓவிய விற்பன்னர்களாகிவிட்டார்கள் . ஒளிவு மறைவிலே ஒரு போத்தல் உட்செலுத்தியவர்கள் பகிரங்கமாகக் கூட்டத்தோடு கூட்டமாய்க் குடித்து விட்டுக் கும்மாளமடித்தனர். அரைநிர்வாணப் பக்கிர் களாய் அலைந்த ஐந்தாறு வாலிபர்கள் அருமையான வேட்டி சால்வைகளோடு அரசியலும் பேசியது அற்புதத்திலும் அற்புதமாக இருத்தது."
எனத் தமது நகைச்சுவையுணர்வைப் புலப்படுத்தியுள்ளார். கதையம்சத்திற் புதுமையற்ற இந்நாவல் ஒரு காலச் சமூகச்

எழுத்தார்வக் காலம் 63
சித்திரம் என்றவகையிற் கவனத்திற்குரியதாகிறது. பரதன் என்ற புனைபெயரில் வெறும்பான (1956-57) என்ற தொடர் நாவலையும் இவர் எழுதியுள்ளார்
"கசின்" என்ற புனைபெயரையுடைய க. சிவகுருநாதன் ஐம்பதுகளில் ஈழகேசரியிற் பதினெரு தொடர் நாவல்க ளெழுதியுள்ளார். இவற்றுட் பல குறுநாவல்கள். இந் நாவல்களிலே சமகால சமூக குடும்ப ஊழல்கள் நகைச்சுவை யுடன் தொட்டுக் காட்டப்படுகின்றன. ஆசிரியரான இவர் தனது நாவல்களிலே ஆசிரியப்பணியோடு தொடர்புடைய வர்களையே பாத்திரங்களாகக் கொண்டுள்ளார்.
"சுவர்ணலிங்கம் கனகாம்பரத்திற்கு உத்தியோகம் எடுத்துக்கொடுத்தமாதிரி இன்னும்பல ஆண் ஆசிரியர் களுக்கும் பெண் ஆசிரியர்களுக்கும் உத்தியோகம் எடுத்துக் கொடுத்திருந்தான் . சுவர்ணலிங்கத்துக்குச் சம்பளத்தை விட வெட்டுக் கொத்துக்கள் அதிகம் என்று எங்கும் கதை பரம்பின'18
இவரின் குமாரி இரஞ்சிதம் (1952) நாவலில் வரும் ஒரு பாத்திர விவரணம் இது. இவருடைய நாவல்கள் தொடர் பாகக் குறிப்பிடுகையிற் கனக. செந்திநாதன்,
*அவருடைய கதைகள் முறைதவறிய காதலையோ, காமத்தையோ சித்திரிப்பனவாகவும், எங்கேயோ நடந்த உண்மைக் கதைகளை வாசிப்பனவாகவும் அமைந் திருக்கின்றன. ’17
என்பர்
வ. அ. இராசரத்தினம் எழுதிய கொழுகொம்பு (1955-56 நாவல் காதல், தியாகம் முதலிய தனி மனித உணர்வு களுடனமைந்ததொரு குடும்பக் கதையாக அமைந்தாலும் கதை நிகழும் களம், கதாசிரியர் வழங்கும் செய்தி ஆகியவற்றினடிப்படையில் அதனையும் சமகாலச் சமூக உணர்வுடைய நாவலாகவே கொள்ள வேண்டும்.

Page 45
64 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
கிழக்கிலங்கையைக் களமாகக் கொண்டெழுதப்பட்ட நாவல் என்ற வகையிற் குறிப்பிடத்தக்க சிறப்பு இந்நாவலுக்கு உண்டு.
மூதூரைச் சேர்ந்த நடராஜன் தனது மாமன் மகளான கனகத்தைக் காதலிக்கிருன். இருவரின் குடும்பங்களுக்கு மிடையில் நிலவும் பகைமையுணர்ச்சி காதலுக்குத் தடை யாகிறது. நடராஜன் கனகத்தைத் தன்னுடன் வந்து விடுமாறு அழைக்கிருன். அவள் அவனது படிப்பைக் காரணங் காட்டிச் சிலகாலம் பொறுத்திருக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கிருள். அவளது காதலில் நம்பிக்கையிழந்த நடராஜன் விட்டு விலகி, தொழில் பார்க்குமிடத்தில் பிலோமின என்ற பெண்ணை மணம் புரிகிறன். கனகத்தின் காதலை அறிய நேர்ந்த பிலோமின அவளுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்கிருள்.
சமூகத்திற் பெண்கள் ஆண்களை நம்பி ஏமாற்ற மடைந்து துன்புருது தமது காலிலே தனித்து நின்று இயங்கவல்ல சமுதாய நிலையை உருவாக்கவேண்டும் என்றும் அதுவரை ஆண்களே பெண்களுக்கு கொழுகொம்பு ஆக அமையவேண்டும் என்றும் பிலோமின மூலம் ஆசிரியர் போதிக்கிருர். இந் நாவலில் மூதூர்ப் பிரதேச இபற்கைச் சூழல், மக்கட்பண்பு என்பன புலப்படுத்தப் படுகின்றன. வ. அ. இராசரத்தினம் துறைக் காறன் (1959) என்ற இன்னெரு தொடர் நாவலையும் எழுதியுள்ளார்.
இக்காலப் பகுதியில் ஈழத்தின் மலையகப் பிரதேசமும் தமிழ் நாவலுக்குப் பகைப்புலமாக அமையத் தொடங்கு கின்றது. மலையக மக்களின் அவல வாழ்க்கையைப் பொருளாகக் கொண்டு சி. வி. வேலுப்பிள்ளை வீடற்றவன்' வாழ்வற்ற வாழ்வு ஆகிய நாவல்களை எழுதினர். டி. எம். பீர் முகமது என்பார் ஹமீதாபானு என்ற புனைபெயரில் கங்காணி மகள் என்ற குறுநாவலை எழுதினர். இதில் மலையகத்தின் பேச்சு வழக்கு வெற்றிகரமாகக் கையாளப் பட்டுள்ளது என்பர்.18 மலையகத் தொழிலாளர் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பொருளாகக் கொண்டு செ. சிவஞான

எழுத்தார்வக் காலம் 65
சுந்தரம் (நந்தி) எழுதிய மலைக்கொழுந்து (1962) நாவலை அடுத்த இயலிலே தோட்டத் தொழிலாளர் பிரச்சினை நாவல்கள் என்ற பகுதியில் நோக்கலாம்.
க. சொக்கலிங்கம் (சொக்கன்) மலர்ப்பலி (1949),செல்லும் வழி இருட்டு (1961) ஆகிய இரு நாவல்களை இக்காலப் பகுதியில் எழுதினர். இவற்றுட் செல்லும் வழி இருட்டு (1961ஆம் ஆண்டுக்குமுன்) பாடசாலைகளைச் சமய நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் நிர்வகித்துவந்த காலப் பகைப்புலத்தில் எழுதப்பட்டது; முகாமையாளரின் அடக்குமுறைகளால் ஆசிரியர்களதுபவித்த இன்னல்களையுணர்த்துவது. குறிப் பிட்ட ஒரு கால கட்ட சமூகப் பிரச்சினையைப் பொருளாகக் கொண்டதென்றவகையில் இந்நாவல் குறிப்பிடத்தக்கது.
இளங்கீரனின் நாவல்கள்
ஐம்பதுகளில் ஈழத்துத் தமிழ் நாவலுக்குப் புதிய பரிணுமத்தைக் கொடுத்தவர் என்ற வகையில் இளங்கீரன் வரலாற்று முக்கியத்துவமுடையவராகிருர், ஏறத்தாழ இருபது நாவல்களை எழுதிச் சாதனை புரிந்தவர் என்ற வகையில் மட்டுமல்லாமல் சமூகப் பிரச்சினைகளுக்கான அடிப்படைகளை அணுகித் தீர்வுகூற விழைந்த முதல் நாவலாசிரியர் என்ற வகையிலும் ஈழத்துத் தமிழ் நாவலுக்குத் தேசியச் சாயல் தரமுயன்ற முதல்வர் என்ற வகையிலும் இவருக்குச் சிறப்பானதோர் இடமுண்டு.
இவரால் ஈழத்தைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட பத்துத் தொடர் நாவல்களில் நூல்வடிவம் பெற்றவை தென்றலும் புயலும் (1955) நீதியே நீ கேள்! (1959) இரண்டு மாகும். புயல் அடங்குமா? (1954) சொர்க்கம் எங்கே (1955) மனிதர்கள் (1956) இங்கிருந்து,எங்கே? (1961) காலம் மாறுகிறது. (1964) ஆகியன தினகரன் பத்திரிகையிலே தொடராக வெளிவந்தன. மண்ணில் விளைந்தவர்கள் (1960) நாவல் தமிழன் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அவளுக்கு ஒரு வேலை வேண்டும் (1972) நாவல் வீரகேசரியில் தொடராக வெளிவந்தது. சிரித்திரன் சஞ்சிகையில் இப்பொழுது (1977-78 இல்) அன்னே அழைத்தாள் என்ற தொடர்நாவலை எழுதிவருகிருர்,

Page 46
66 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
தென்றலும் புயலும், நீதியே நீ கேள்! இரண்டும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் பகைப்புலத்திற் காதலைப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்டவை. முதலா வது நாவலிற் சாதியை மீறிய காதலும் இரண்டாவது நாவலில் இனத்தை மீறிய காதலும் வெற்றி பெறுகின்றன. இரண்டிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்குட்பட்ட காதல்கள் தோல்வியடைகின்றன.
யாழ்ப்பாணத்தில் உயர் சாதியைச் சேர்ந்த பாலுவின் குடும்பம் வீட்டை ஏலத்தில் இழந்து அல்லலுறுகின்றது. வேலை தேடிக் கொழும்புக்குச் சென்ற பாலு அங்கு பணக்காரப் பெண்ணுன மனேன்மணியைக் காதலித்து உடலுறவும் கொள்கிருன். அந்தஸ்து வேறுபாட்ட7ல் மனேன்மணி வேருெருவனுக்கு மனைவியாகிருள். பாலு காதல் தோல்வியால் மனமுடைந்து வருந்துகிருன். பாலுவின் தங்கை தங்கம் தாழ்த்தப்பட்ட சாதியினனெனப் படும் பூபதியைக் காதலித்துப் பலத்த எதிர்ப்புக்கிடையில் மணம் புரிந்து கொள்கிருள். பாலுவும் தந்தையும் மனத்துயர் தாழாமல் மரணமடைகின்றனர். தென்றலும் புயலும் நாவலின் இக் கதைப் போக்கில் ஆசிரியரின் குரலாக நடராசன் என்ற பாத்திரம் அமைகின்றது. யதார்த்த சமூக நிலையை உணர்த்தும் சிந்தனையாளனுக இப் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டோர் எனப்படுவோர்மீது உயர் சாதியின ரென்றுகூறப்படுவோர் கைக்கொள்ளும் அடக்குமுறை, வெறுப்பு மனப்பான்மை என்பனவும் பொருளாதார நிலையிலே தாழ்ந்த வேளையிலும் சாதிப்பிடிப்பை விட்டு நீங்கா மன வியல்பும் இந் நாவலிற் காட்டப்படுகின்றன. தங்கம் தனது சாதியை மீறிப் பூபதியைக் கரம்பற்றுவதாகக் காட்டுவதன் மூலம் இளங்கீரன் தனது சமூக மாற்ற விருப்பத்தின் படியான தீர்ப்பை அவள்மீது சுமத்தியுள்ளார் எனலாம்.
தென்றலும் புயலும் நாவல் தொட்டுக் காட்டிய வர்க்க வேறுபாட்டை விரித்து வளர்த்துக் காட்டுவது நீதியே நீ கேள் ! நாவல். முதலாளி பரமசிவத்தின் மகன் கணேஷ்

எழுத்தார்வக் காலம் 67
தொழிலாளி வல்லிபுரத்தின் மகள் பத்மினியைக் காதலிக் கிருன். பொருளாதார ஏற்றத் தாழ்வு தடையாகிறது. அதை மீறிக் காதலர் ஒன்றிணைய முயலும் வேளையிற் பத்மினி திட்டமிட்டுக் கொலைசெய்யப்படுகிருள். கணேஷின் தங்கை தவமணி தன்னுடன் பல்கலைக் கழகத்தில் படித்த பிரேமதாஸ் என்ற சிங்களவரைத் தன் தந்தையின் எதிர்ப்பையும் மீறி மணம்புரிகிருள். இக் கதையம்சம் பல்வேறு விவரணங்களுடனும் உரையாடல்களுடனும் நானுரறு பக்கங்களுக்கு மேல் நீண்டுள்ளது. இந் நாவலில் வரும் அன்சாரி என்ற பாத்திரம் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் பொருளாதார உறவு முறைகட்கிடையிற் போராடிக்கொண்டே ஒன்றுபட்ட வர்க்கப் போராட்டத் திற்குத் தூண்டுகோலாக அமைகின்றது. தென்றலும் புயலும் நாவலில் நடராசன் என்ற பாத்திரத்தின் தர்க்கரீதியான வளர்ச்சியாக அன்சாரி என்ற பர்த்திரம் அமைந்துள்ள தெனலாம். 治
இரண்டு நாவல்களிலும் சில பொதுப்பண்புகள் உண்டு. சமூக ஏற்றத்தாழ்வுகளையும் முரண்பாடுகளையும் பொது வுடைமைத் தத்துவத்தினூடாக அணுகித் தீர்வுகாண விழைகின்ருர் இளங்கீரன். தென்றலும் புயலும் நாவலில் அரும்பிய இக்கண்ணுேட்டம் நீதியே நீ கேள்! நாவலில் விரிவடைந்து அடுத்துவந்த நாவல்களில் மேலும் தெளிவாக வற்புறுத்தப்படுவதைக் காணலாம். சிங்கப்பூர், மலேசியா முதலிய பிரதேசங்களிலும் தமிழ் நாட்டிலும் வாழ்ந்து எழுதிய பின்னர் ஈழத்துக்கு வந்தபொழுது இவரை முதலில் தூண்டி நின்றது ஈழத்தைக் களமாகக்கொண்டு எழுதவேண்டும் என்ற ஆர்வமேயாம். இதனை அவர்,
"...இலங்கைக்கு வந்தபிறகு, இந்நாட்டுச் சூழ்நிலை யைப் பின்னணியாகக்கொண்டு கதைகளும் நாவல்களும் எழுதவேண்டுமென்ற எண்ணம் பிறந்தது. ஆர்வம் என்னைத் தூண்டியது. உடனே தென்றலும், புயலும் என்ற இந்த நாவல் உருவாகி ஆனந்தன் இதழில் தொடர்ந்து வெளிவந்தது. வாசகர்கள் விரும்பி வரவேற்று ஆர்வத்துடன் படித்தார்கள். இந்த வரவேற்பு மேலும் எழுதத் தூண்டியது.19

Page 47
68 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
எனத் தெளிவாக்குகிருர், தமிழ் நாட்டிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் "பகுத்தறிவுப் பாசறையினைச் சார்ந்திருந்த போது பெற்ற சமூகப் பார்வை சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் வர்க்க முரண்பாடுகளையும் அணுகும் சிந்தனையாற்றலைத் தூண்டி நின்ற தெனலாம். ஈழத்திற்கு மீண்டுவந்து இடதுசாரி அரசியல் சார்ந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடனிணைந்து எழுதமுயன்ற வேளையில் இச் சிந்தனையாற்றலும் எழுத்தார்வமும் வளர்ச்சியடைந்தன எனலாம். நீதியே நீ கேள்! நாவலில் அன்சாரி என்ற பாத்திரவாயிலாக,
**கோடிக்கணக்கான மக்களைக்கொண்ட தொழி லாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினரான நாம் நமது உரிமைகளை இதுவரை விட்டுக்கொண்டிருந்தது போதும். முதலாளிகளின் அக்கிரமங்களுக்கும் அநீதியான போக்கு களுக்கும் அடங்கியிருந்தது போதும். நாம் சங்கங் களில் ஒன்றுதிரள விரும்புகிருேம். ஒரு மாபெரும் தொழிலாளர் இயக்கத்தில் தொழிலாளர் கட்சியில் உழைப்பாளர் அனைவரையும் ஒன்றுபடுத்த விரும்பு கிருேம்."20
என்று தொழிலாளரை ஒன்றிணைக்கும் பொதுவுடைமைக் கோட்பாட்டை முன்வைக்கிருர். இங்குத் தொழிலாளர் கட்சி என்பது பொதுவுமைக் கட்சியே யாகலாம். 1956ஆம் ஆண்டு அரசியலில் இடதுசாரியினர் பெற்ற வெற்றியினைத் தொடர்ந்து - பொதுவுடைமைக் கட்சி யாழ்ப்பாணப் பிரதே சத்தில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த குழ்நிலையில்2 - நவீன தமிழிலக்கியத்திலே இக்கோட்பாடு தீவிரமாக ஒலிக்கத் தொடங்கியது. இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தினர் 1954ஆம் ஆண்டிலே தமது கைந்நூலில்22 வெளியிட்ட 'சோஷலிஸ்ட் யதார்த்தவாதம்' என்ற இலக் கியத் தத்துவத்தைத் தமது நாவலில் ஆங்காங்கே பிரச்சினை களைச் சித்திரிப்பதன் மூலமும் பாத்திரப் பண்புகளைப் புலப் படுத்துவதன் மூலமும் வெளிக்காட்டியுள்ள இளங்கீரன் அதற் தியையும் வண்ணமே நடராசன் அன்சாரி ஆகிய பாத் திரங்களைப் படைத்துள்ளார் எனலாம்.

எழுத்தார்வக் காலம் 69
நீதியே நீ கேள் நாவலில், முதலாளிகள் தொழிலாளரைச் சுரண்டும் நிலையை மாற்றியமைக்க வேண்டுமென்று கூறும் தொழிற்சங்கவாதியான அன்சாரி, தொழிற்சங்கத்திற் சேரவந்த சோமசுந்தரம் என்ற தொழிலாளியை வேலை நீக்கம் செய்யும் முதலாளி பரமசிவத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கிருன்.
தொழிலாளரது வறுமை, துன்பம் என்பவற்றை உணர் கின்றவனுகவும் அன்சாரியுடன் பழகுபவனுகவும் படைக்கப் பட்ட பரமசிவத்தின் மகன் கணேஷ், காலமாற்றத்துடன் இணைந்து தொழிலாளர்பால் அநுதாபம் கொள்ளத் தொடங்கும் முதலாளி வர்க்கத்தின் வாரிசாக அமைகிருன். முதலாளி வர்க்கத்தின் வகைமாதிரியான பாத்திரங்களாகப் பரமசிவம், மகாதேவா ஆகியோர் படைக்கப்பட்டுள்ளனர்.
சிங்களவரான டாக்டர் பிரேமதாஸ் தமிழ்ப் பெண் தவமணியை மணம்புரிவதும் அன்சாரி என்ற இஸ்லாமிய பாத்திரம் படைக்கப்பட்டுள்ளமையும் ஆசிரியரின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வின் வெளிப்பாடுகள் எனலாம். இப் பாத்திரங்கள் தத்தம் சமூகத்தின் பிரதிநிதிகளாக * வகைமாதிரி"யாய் அமையாமல் தனிமனித பாத்திரங்க ளாகவே அமைந்துள்ளன.
தென்றலும் புயலும், நீதியே நீ கேள்! ஆகிய இரு நாவல் களிலும் முக்கியபாத்திரங்கள் மரணமடைகின்றன. வர்க்க வேறுபாடு தொடர்பான தமது கோட்பாட்டை வலியுறுத்து வதற்கும் நாவல்களின் உணர்ச்சிகரமான நிறைவுக்குமாக ஆசிரியர் பாத்திரங்களின் தலைவிதியை நிர்ணயித்துள்ளார் என்றே கருதவேண்டியுள்ளது.
நீதியே நீ கேள்! நாவலின் கதையம்சம் நெகிழ்ச்சியடைந் துள்ளது. தொடர்கதைத் தேவையையொட்டி விரித்தெழு தப்பட்டமையால் இவ்வாறு அமைந்துள்ளது போலும். பத்மினி கொல்லப்பட்ட பின் கணேஷ் பத்மினியின் தம்பி தங்கையர்க்காகத் தன்னைப் பரித்தியாகம் செய்துகொண்டு

Page 48
70 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
வாழ்வதாக அமையும் நாவலின் முடிவு சமகால, காதல், தியாகம் முதலிய தனிமனித உணர்வு நாவல்களின் முடி வாகவே யுள்ளது.
பரிசோதனை முயற்சிகள்
ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலே முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முயற்சிகள் என்ற வகையில் மத்தாப்பு (1961), தீ (1961) ஆகிய இரண்டையும் குறிப்பிடலாம். மத்தாப்பு ஐவர் இணைந்தெழுதிய குறு நாவலாகும். தமிழ் நாட்டிற் சுதேசமித்திரன், உமா ஆகிய பத்திரிகைகளில் மேற்கொள்ளப்பட்ட இவ்வகைக் கூட்டு முயற்சிகளை வாசித்தவர்களால் அவற்றை மாதிரியாகக் கொண்டு இது எழுதப்பட்டது.23 பொருமை காரணமாகக் கொலைக்குற்றஞ் சாட்டப்பட்ட மாரிமுத்துவின் துயரக் கதையான இதைச் "சு வே" (சு. வேலுப்பிள்ளை), கனக செந்திநாதன், இ. நாகராஜன், குறமகள் (இ. வள்ளிநாயகி), எஸ். பொன்னுத்துரை ஆகியோர் எழுதியுள்ளனர். யாழ்ப் பாணப் பிரதேசப் பேச்சுத்தமிழும் மலையக, சிங்கள கிராமப் புறப் பிரதேச மொழி வழக்குகளும் விரவ எழுதப்பட்டுள்ள இக் குறுநாவலில் 1958ஆம் ஆண்டு இனக் கலவரப் பகைப்புலமும் தொட்டுக்காட்டப்பட்டுள்ளது. வீரகேசரியில் தொடர் நாவலாக வெளிவந்த இது நூல்வடிவம் பெற் றுள்ளது. வண்ணமலர், மணிமகுடம், கோட்டைமுனைப் பாலத்திலே முதலிய இவ்வகைக் கூட்டு முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எஸ். பொன்னுத்துரை எழுதிய "தீ" கதையம்சத்திலும் உத்திமுறையிலும் தமிழ் நாவலின் வரலாற்றிற் குறிப்பிடத் தக்க சிறப்புடையது. ஆடவனுெருவன் பல்வேறு பெண் களுடன் பாலியலுறவுகொண்டு அவ்வதுபவங்களைச் சுய சரிதைப் போக்கில் விபரிக்கிருன், கதை கூறும் முறையிலே அநுபவங்களை மீளப்பார்க்கும் நனவேடை உத்தி கையாப் பட்டுள்ளது.

எழுத்தார்வக் காலம் 71
கதாநாயகனன "நான் பாக்கியம், சாந்தி, லில்லி, புனிதம், திலகா, சரசு ஆகியவர்களை ஒவ்வொருவராக அநுபவிக்கிருன். புனிதம் விருப்பத்திற்கெதிராக மணம் செய்துவைக்கப்பட்ட மனைவி. லில்லி அந்தஸ்தில் உயர்ந்தவள் அவள்மேலேதான் அவனுக்கு காதல் பிறக்கிறது. தனது அந்தஸ்துக்குக் குறைந்த பெண்களிடம் அவனுக்குப் பாலிய லுணர்ச்சி மட்டுமே உண்டாகின்றது.
"பாலுணர்ச்சியின் அடிப்படைத் தன்மையை அறிமுகப்படுத்துவதற்காக அதை மையமாக வைத்துஅதை நாராக வைத்து - மலர்களைக் கோக்கிருர் ஆசிரி யர். ஒவ்வென்முய் அவை வந்துபோகின்றன. வாடி நார் மட்டும் மிஞ்சி நிற்கிறது. நார்! வாழ்க்கையின் உந்தல், வீரியம்! அதுதான் மையம். பாக்கியம், சாந்தி, லில்லி, புனிதம், திலகம், சரசு - அவர்களல்ல முக்கியம். முக்கியமான நார், பாலுணர்ச்சி -"24
என இந்நாவலை விமர்சனம் செய்த மு. தளையசிங்கம் இது காட்டும் பாலுணர்ச்சி முக்கியத்துவத்தைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டச் செயல்கள் கால வளர்ச்சிக்குப் பொருந்தாத பிற்போக்குத் தனம் என்பர்.23
மதிப்பீடு
எழுத்தார்வக் காலப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட நாவல்கள் எழுதப்பட்டன. இவற்றுட் பெரும்பாலன
பத்திரிகைத் தொடர்கதைகளாக வெளிவந்த நிலையிலேயே உள்ளன. பல்வேறு வகையிலும் தரத்திலும் அமைந்த இவற்றிலே வரலாற்று நோக்கிற் குறிப்பிடத்தக்கவற்றைத் தொகுத்தும் வகுத்தும் நோக்கும் முயற்சியே இவ்வியலில் மேற்கொள்ளப்பட்டது.
பிறமொழி நாவல்களையும் தமிழ்நாட்டு நாவல்களையும் வாசித்த அருட்டுணர்வால் எழுத்தார்வம் பெற்ற இக்கால ஈழத்து நாவலாசிரியர்கள் எழுத்தை ஒரு கலை என்றும் எழுத்தர்ளராக மதிக்கப்படுவது ஒரு சமூக அந்தஸ்து என்றும்

Page 49
72 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
கருதியவர்கள். இவர்களிற் பலர் சிறுகதைகள் எழுதிப் பெற்ற அநுபவத்துடன் நாவல் எழுத முயன்றவர்கள். இவ் வகையிலே சமுதாய சீர்திருத்தக் காலப் போதனை நோக் கினரிலிருந்து இவர்கள் வேறுபடுகின்றனர். இவ்வேறுபாடு இவர்களது படைப்புக்களிலும் பிரதிபலித்தது.
இக்கால நாவலாசிரியர்கள் பலர் சமகால தமிழ்நாட்டு நவீன இலக்கியப் போக்குடன் இணைந்து எழுதியவர்கள், இதனுல் நாவல்களின் பொருள், வடிவம், உத்திமுறை என்பவற்றிலே தனித்துவம் பேணமுடியாதவர்களாயினர் எனலாம். காதல், தியாகம், பாசம் முதலிய தனிமனித உணர்வுகளை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட சமகாலத் தமிழ்நாட்டுக் குடும்ப நாவல்களாலும் மர்மப் பண்பு கொண்ட துப்பறியும் நாவல்களாலும் கவரப்பட்ட இக் காலப்பகுதி ஈழத்து நாவலாசிரியர்களின் படைப்புக்களிற் பல "ஆசைபற்றி அறையலுற்ற" ஆரம்ப முயற்சிகளாகவே அமைந்ததில் வியப்பில்லை. இவற்றுட் க. தி. சம்பந்தனின் பாசம் குறிப்பிடத் தக்கது. காலதேச வர்த்தமானங்களைக் கடந்த இவ்வகை நாவல்கள் எழுத்தார்வத்தை மட்டுமே வெளிப்படுத்துவனவாக அமைந்தன.
ஐம்பதுகளிலே சமகால சமூக உணர்வும் தேசிய உணர்வுச் சாயலும் பொருந்த எழுத முயன்றுள்ளவர் களுள்ளும் பெரும்பாலோர் கதையம்சத்திலும் பாத்திரப் படைப்பு முதலியவற்றிலும் தனித்தன்மையைப் புலப்படுத்த வில்லை. அ. செ. முருகானந்தன், கனக. செந்திநாதன், கசின், வ. அ. இராசரத்தினம். சொக்கன், சி. வி. வேலுப்பிள்ளை முதலியோர் சமகால ஈழத்து மக்கள் வாழ்க்கையைக் கதைக்குக் களமாகக்கொண்டோர் என்ற அளவிலேயே குறிப்பிடத்தக்கவர்கள். V
இக்காலப்பகுதி நாவலாசிரியருள் இளங்கீரன் எஸ். பொன்னுத்துரை இருவருமே தரமான படைப்புக்களைத் தந்த்னர். எஸ். பொன்னுத்துரையின் தீ தமிழில் அதுவரை பிறர் கையாளாத கதையம்சத்தைக் கொண்டது. ஈழத்தில் நனவோடை உத்தியில் எழுதப்பட்ட முதலாவது நாவல் என்ற சிறப்பும் இதற்குரியது.

எழுத்தார்வக் காலம் 73
இளங்கீரன் சமகாலச் சமூகப்பிரச்சினைகளை மார்க்சியக் கோட்பாட்டில் அணுகித் தீர்வுகூற முயன்றவரான பொழுதி லும் தமது இக்கால நாவல்களின் கதையம்சத்திற் காதல், தியாகம் முதலிய உணர்வுகளையே முன்வைத்ததன்மூலம் வழக்கமான தமிழ்நாட்டு நாவல்களைப் போலவே எழுதி யுள்ளார். தென்றலும் புயலும், நீதியே நீ கேள்! நாவல்களில் இதனைத் தெளிவாகக் காணலாம். சாதி ஏற்றத்தாழ்வும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் காதலுக்குத்தடையாகின்றன என்னும் கருத்தை விளக்கும் வகையிலேயே இரண்டின் கதைப்போக்கும் அமைந்துள்ளமையைக் காணலாம். எனி னும் சமகால ஈழத்துமக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை விரிவான முறையிலே தமது நாவல்களிற் பிரதிபலித்தவர் என்ற சிறப்பு இவருக்குரியது.
\
"பத்துவருடங்களுக்கு மேலாக அமைதியாக இருந்து தேசியப் பண்பு பொருந்தப் பெற்ற யதார்த்த இலக்கி யங்களைப் படைத்துவந்திருக்கும் அவரை எவ்வளவு பாராட்டினலும் தகும்."??
என இவரது நாவலிலக்கியப் பணியைக் க. கைலாசபதி பாராட்டுவர். இளங்கீரனின் நாவல்களை யதார்த்த நாவல்கள் என்று கொள்ளமுடியாது. சமகாலத்திலே தமிழ் நாட்டில் அகிலன் முதலியோர் பத்திரிகைகளைக் களமாகக் கொண்டு செய்த பணியையே இளங்கீரனும் ஈழத்திற் செய்துள்ளார் என்பதையும் அவ்வகையிலே அவை ஈழத்தில் அதற்கு முன் வந்த தமிழ் நாவல்களைவிடத் தரமானவையாக அமைந் தன வென்பதையும் மறுப்பதற்கில்லை.
அடிக்குறிப்புகள்
1. க. சச்சிதானந்தனின் அன்னபூரணி தொடர்நாவலின் முடிவிலமைந்த
பத்திராதிபர் குறிப்பு. ஈழகேசரி, 1942-12-27, பக். 7.
2. பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி), சோ. சிவபாதசுந்தரம், தமிழ்
நாவல். நூருண்டு வரலாறும் வளர்ச்சியும், 1977, பக். 165. 3. சில்லேயூர் செல்வராசன், ஈழத்தில் தமிழ்நாவல் வளர்ச்சி, 1987, பக். 34
O

Page 50
74
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
யாழ்ப்பாணம் 'தேவன்" தமது ‘கேட்டதும் நடந்ததும்." (1956) நாவலின் 'வாசகர்களுக்கு" என்ற முடிவுரைப் பகுதியிலே (பக். 302) இவ்வுறவுமுறையைக் குறிப்பிட்ள்ளார். கனக, செந்திநாதன் ஈழத்து இலக்கிய வளர்ச்சி, 1964, பக். 104 . க. கைலாசபதி, "முதன் முதலில் சந்தித்தேன்" மல்லிகை, 1973 நவம்பர், பக். 8, இவ்விருவரும் தந்த தகவல்களிலிருந்து இக் கருத்துப் பெறப்பட்டது.
. அகிலன், ‘எழுத்தும் வாழ்க்கையும் தீபம், 1978 பிப்ரவரி, பக். 7 . செ. கணேசலிங்கனின் நீண்டபயணம் (1965) சடங்கு, (1966), செங்
வானம் (1967) தரையும் தாரகையும் (1968) போர்க்கோலம் (1969), மண்ணும் மக்களும் (1970) ஆகியனவும் யோ. பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன் ? (1968) நாவலும் வேறுசில நாவல் களும் தமிழ்நாட்டின் பாரிநிலைய வெளியீடுகளாகும்.
8. ஈனுெக் ஆர்டன், ஒருசிறு முன்னுரை' , ஈழகேசரி, 1939-6-18, பக் 4
9. அ. ந. கந்தசாமி “புதிய தமிழ் இலக்கியம்", ஈழகேசரி, 1943-10-17
10.
1 Ι.
2,
3.
14.
15
6.
17.
18.
19.
20, 21.
2爱。
23.
24。
25。
26.
"ஆசிரியர் உரை" , விதியின் கை, வீரகேசரி பிரசுரம், 1977 "நான் ஏன் எழுதுகின்றேன்" , வானுெலி மஞ்சரி, 1972-8-28, பக்,3 பொ. பூலோகசிங்கம், தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெரு
முயற்சிகள், 1970 முன்னுரை, பக். V சில்லையூர் செல்வராசன், மு. கு. பக். 41 பாசம் தொடர்நாவல், அத்தியாயம் 30, ஈழகேசரி, 1974-9-14, பக். 7 விதியின் கை, வீரகேசரி பிரசுரம், 1977, பக். 43 குமாரி இரஞ்சிதம், தொடர்நாவல், ஈழகேசரி, 1952-12-7, பக். 6 ஈழத்து இலக்கிய வளர்ச்சி, பக். 105 சில்லையூர் செல்வராசன், மு. கு. பக். 41 'நாவலும் நானும் , தென்றலும் புயலும், 1956 பக். W தடித்த
எழுத்துக்கள் எம்மாலிடப்பட்டன. நீதியே நீ கேள் 1, 1962, பக். 121-122 பருத்தித்துறைத் தொகுதியில் 1956 இல் பொதுவுடைமைக் கட்சி யைச் சார்ந்த பொன். கந்தையா பராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கா. சிவத்தம்பி, "இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் ஈழத்தின் தமிழிலக்கிய வளர்ச்சியும் , புதுமை இலக்கியம், 1975, பக், 25-26 இல் இக் கைந்நூல் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளார். மத்தாப்பு முகவுரையிற் கணக. செந்திநாதன் இதனைக் குறிப்பிட்டுள்
6ttfit எழுத்து, 1963 ஜனவரி, பக். 20 பக், 21 நீதியே நீ கேள் ! , அணிந்துரை, பக் XIX

4. சமுதாய
விமர்சனக் காலம்
مح,
தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் தேசிய விடுதலையை அடுத்து ஏறத்தாழப் பத்தாண்டுக் காலத்தில் வளர்ந்த சுதந்திரச் சிந்தனைகளும் உலகளாவிய பரந்த நோக்கும் அறுபதுகளிலே தமிழ் நாவலிலக்கியத் துறையிலே செல் வாக்குச் செலுத்தத் தொடங்கின. சமுதாய அமைப்பு நிலையானதொன்றெனக் கருதி, அதிலே அவ்வப்போது தோன்றும் முரண்பாடுகள் தற்காலிகமானவை என முடிவு செய்து, அவற்றைத் தவிர்க்கும் பொருட்டுச் சீர்திருத்தம் பேச முன்வந்தோரும் எழுத்தார்வத்தால் உந்தப்பட்டுக் காதல், தியாகம், பாசம் முதலிய தனிமனித உணர்வு களுக்கு முதன்மை தந்து எழுதியோருமான படைப்பாளரி லிருந்து வேறுபட்ட புதுயுகச் சிந்தனையாளர்கள் தமிழ் நாவலுலகில் முன்னணிக்கு வந்தனர். சமுதாயத்தின் இயக்கவியலை உணர்ந்து அதற்கும் தனிமனிதனுக்குமுள்ள தொடர்புகளை விமர்சனம் செய்ய முயன்ற இவர்கள் மனிதனை, அவனது இயல்பான உணர்ச்சிகள், அவனது சூழல், அவனைப் பாதிக்கும் புறக்காரணிகள் என்பவற்றின் மத்தியில் "இனங் காணத் தலைப்பட்டனர்.
மனிதனைப் பாதிக்கும் புறக்காரணிகள் என்ற வகையில் அரசியல், பொருளியல் அம்சங்களின் முக்கியத்துவம் இக்காலப் பகுதியில் உணரப்படலாயிற்று. "மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையிற் சமூகப் பிரச்சனைகளை

Page 51
76 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
அணுகித் தீர்வு கூறும் நோக்கு வளரலாயிற்று. தமிழ் நாட்டிலே தொ. மு. சிதம்பர ரகுநாதன் எழுதிய பஞ்சும் பசியும் நாவல் (1953) இவ்வகையிலே முதன் முயற்சியாக அமைந்தது.
ஈழத்து எழுத்தாளரில் ஒரு சாராரின் மத்தியில் ஐம்பது களிலே முனைப்புடன் வளர்ந்த இடதுசாரி அரசியற் சார்பான சமூகக் கண்ணுேட்டம் இலக்கியத்தின் சமூகப் பணியை வற்புறுத்தியது. சமூகக் குறைபாடுகளையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் அகற்றுவதற்கு எழுத்தைப் பயன்படுத்த வேண்டுமென்ற கருத்து வலுப் பெற்று வந்தது. சோவியத் ரூசிய, செஞ்சீன இலக்கியங் களும் உலகளாவிய பொதுவுடைமைக் கண்ணுேட்டமும் இத்தகைய கருத்துக்களுக்கு உந்து சக்தியாயின. 1956ஆம் ஆண்டிலே நிகழ்ந்த அரசியல் மாற்றம் இதற்குப் பெருந்துணை புரிந்தது.
இவ்வகையில் ஈழத்திலே ஐம்பதுகளிலே சமூக பொரு ளாதார ஏற்றததாழ்வுகளுக்கெதிராக முன்வைக்கப்பட்ட சமுதாய விமர்சனக் கண்ணுேட்டம் சமகாலச் சிறுகதைகளிற் பிரதிபலித்தது. செ. கணேசலிங்கன், டொமினிக் ஜீவா முதலியோர் இக் கண்ணுேட்டத்திற் பல சிறுகதைகளை எழுதினர். ஈழத்துச் சூழ்நிலையில் நாவல்கள் எழுத விழைந்த இளங்கீரன் தமது நாவல்களிலும் இப்பிரச்சினைகளை அணுகினர். எனினும் எழுத்தார்வத்தால் உந்தப்பட்ட அவரது நாவல்களில் இச் சமுதாய விமர்சனக் கண்ணுேட்டம் கதையம்சத்திற்குத் துணைபுரியும் வகையிலேயே பயன் படுத்தப்பட்டது. பிரச்சினைகளையே கதையம்சமாகக் கொண்டு அவற்றின் வரலாற்று முறையிலான வளர்ச்சியையே கதை வளர்ச்சியாகக் கொண்டு நாவல்களை எழுதும் போக்கு அறுபதுகளின் நடுப்பகுதியிலிருந்தே ஈழத்தில் உருவாகியது. அறுபதுகளின் ஆரம்பத்தில் நிகழ்ந்த "மரபுப் போராட்டமும் பின்னர் நிலவிய "முற்போக்கு - நற்போக்கு’க் கருத்து முரண்பாடுகளும் நாவலின் பொரு ளிலும் வடிவத்திலும் விளைவித்த தாக்கம் இவ்வாறன புதிய போக்கிற்கு உந்து சக்தியாகத் திகழ்ந்தது. பத்திரி கைகளையே வெளியீட்டுச் சாதனங்களாகக் கொண்டு வாரந்

சமுதாய விமர்சனக் காலம் 77
தோறும் வாசகரது இரசனையை அளவுகோலாக வைத்து எழுதவேண்டிய நிலை ஓரளவு மாறியது. சில எழுத்தாளர் களுக்குத் தமிழ் நாட்டின் பிரபல பிரசுரக் களங்களின் ஆதரவுடன் நாவல்களை நூல் வடிவில் வெளியிடும் வாய்ப்புக் கிடைத்தமை இப் புதிய போக்கிற்கு உறுதுணைபுரிந்தது.
இவ்வகையிற் சமுதாயப் பிரச்சினைகளையே கதைப் பொருளாகக் கொண்டு அவற்றின் வரலாற்று முறையிலான வளர்ச்சியை உற்று நோக்கி, அவற்றை விமர்சனம் செய்யும் வகையிலே நாவல்கள் எழுதப்பட்ட கால்ப்பகுதியான அறுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து அண்மைக்காலம்வரை ஏறத்தாழப் பதினைந்தாண்டுகாலப் பகுதியைச் சமுதாய விமர்சகனக் காலம் எனலாம். இக்காலப் பகுதியிற் பல்வேறு தரத்திலுமாக வெளிவந்த நூற்றுக்கு மேற்பட்ட நாவல்களிற் சமகாலச் சமூக உணர்வுடன் எழுதப்பட்ட சமுதாய விமர்சனநோக்கு நாவல்களை அவை பொருளாகக் கொண்ட பிரச்சினைகளின் அடிப்படையில்,
(அ) சாதிப்பிரச்சினை நாவல்கள் (ஆ) அரசியல் பொருளாதாரப் பிரச்சினை நாவல்கள் (இ) தோட்டத் தொழிலாளர் பிரச்சினை நாவல்கள்
(ஈ) பாலியற் பிரச்சினை நாவல்கள் என நான்கு முக்கிய பிரிவுகளில் நோக்கலாம்.
சாதிப்பிரச்சினை நாவல்கள்
'பிறப்பினடிப்படையிற் றேன்றிய உறுப்பினர் களையும் ஒரு பொதுவான பெயரையுங்கொண்ட ஒரு அகமணக் குழுவோ அல்லது அகமணக்குழுக்களின் தொகுதியோ சாதி எனப்படும்"2 என "எட்வேட் ப்ளன்ற் சாதிமுறைக்கு வரைவிலக்கணம் தருகிருர், ஈழத்துத் தமிழரின் சமூக அமைப்பு சாதிப் பாகுபாட்டினை அடிப்படையாகக் கொண்டது.
"தென்னிந்தியாவிலிருந்து வந்து குடியேறிய மக்க ளால் உருவாக்கப்பட்ட சில தனிப்பட்ட அம்சங்களோடு திராவிடசாதி முறையம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டமைந்தது ஈழத்துத் தமிழரது சாதிமுறை."

Page 52
78 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
என வரலரற்ருய்வாளர் கருதுவர். இச்சாதியமைப்புமுறை சிறப்பாக யாழ்ப்பர்ணப் பிரதேச பண்பாட்டு மரபுக ளுடன் தொடர்புடையது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் ஆட்சியிலும் மாற்றமுடியாத வொரு அமைப்பாக இருந்து வந்தது மட்டுமன்றிச் சமுதாய மாற்ற முயற்சிகளுக்கெல்லாம் ஒரு தடையாக இருந்து வருவதும் எமது சமூகத்தில் இவ்வமைப்புமுறை எவ்வளவிற்கு உறுதிபெற்றிருக்கின்ற தென்பதைக் காட்டும்.
சமூக நிலையில் உயர்வு தாழ்வு காட்டும் இச் சாதி யமைப்பு ழுறை திருமண உறவு, தெய்வ வழிபாட்டிடங்கள், பொது இடங்களிற் கலந்து பழகுதல் முதலியவற்றிற் பிரச்சினைகள் உருவாகக் காரணமாகின்றது.
இருபதாம் நூற்றண்டின் முற்பகுதியிற் சாதிப்பாகு பாட்டினைத் தமது நாவல்களிற் கையாண்ட எவரும் அதனைச் சமுதாய விமர்சனநோக்கில் அணுகவில்லை. சாதி ஏற்றத் தாழ்வினற் பாதிக்கப்பட்டிருந்தோரின் மத்தியிலிருந்து எதிர்ப்புக்குரல் எழாதிருந்த சூழ்நிலையில் உயர்சாதியின ரெனப்படுவோர் சிலரின் மேலெழுந்தவாரியான சமூக சமரச உணர்வின் வெளிப்பாடாகவே நீலகண்டன் ஓர் சாதி வேளாளன் (1925), சுந்தரவதணு அல்லது இன்பக்காதலர் (1938), காந்தாமணி அல்லது தீண்டாமைக்குக் சாவுமணி (1937), செல்வி சரோசா அல்லது தீண்டாமைக்குச் சவுக்கடி (1938) ஆகிய நாவல்கள் அமைந்தன எனலாம். ஐம்பதுகளிற் சாதிப்பிரச்சினை ஒரு 'எரியும்பிரச்சினை'யாகக் குமுறியெழுந்த சூழ்நிலையில் இதனைப் பொருளாகக் கொண்டு பல சிறு கதைகள் படைக்கப்பட்டன. இச் சூழ்நிலையில் இளங்கீரன் தனது நேரடி அநுபவத்திற்கப்பாற்பட்ட இப்பிரச்சினையை இயன்றவரையில் தனது நாவலிற் புகுத்தித் தனது தீர்வையும் வழங்கினர்.
1956ஆம் ஆண்டின் அரசியல் மாற்றத்தினை அடுத்து யாழ்ப்பாணப் பிரதேசத்திலே தாழ்த்தப்பட்டோர் எனப் படுவோரின் உரிமைக்குரல் வலுப்பெற்றது. பொதுவுடைமை அரசியற் கோட்பாடு இவர்களிடையே வர்க்க உணர்வை

சமுதாய விமர்சனக் காலம் 79
ஊட்டத் தொடங்கியது. கிராமங்கள்தோறும் உரிமைப் போராட்ட உணர்வு கிளர்ந்தது. இத்தகைய சூழ்நிலையில் நாவல் எழுதப் புகுந்த செ. கணேசலிங்கன் தாம் சார்ந் திருந்த முற்போக்கு இலக்கியக் கோட்பாடுகளுக்கேற்பச் சமகாலச் சமூகவரலாறு எனத் தக்கவகையிற் சாதிப்பிரச்சினை தொடர்பாக நீண்டபயணம் (1965), சடங்கு (1966), போர்க் கோலம் (1969) ஆகிய நாவல்களை எழுதினர்.
நீண்டபயணம் நாவல் 1956 ஆம் ஆண்டை ஒட்டிய காலப் பகுதியில் யாழ்ப்பாணப் பகுதிக் கிராமமொன்றில் நிகழும் மாற்றத்தைச் சித்திரிப்பது. நல்லான் என்ற பள்ளர்குலப் பையன் திருவிழாப் பார்க்கச் செல்கிருன். கோயிலிலே பஞ்சமர் (தாழ்த்தப்பட்ட சாதியினர் எனப்படுவோர்) களுக் காகக் கயிறு கட்டி இடப்பிரிவினை செய்யப்பட்டிருந்தது. திருவிழா பார்க்கச் சென்ற நல்லான் தூக்கக் கலக்கத்தினற் கயிற்றுத் தடைக்கப்பாற் புரண்டுவிடுகிருன். இதனைக் கண்டு பொருத உயர்சாதி வாலிபர்கள் அவனை அடித்துத் துன் புறுத்துகின்றனர். நல்லானைப் பாதுகாக்க முயன்ற செல்லத் துரையன் உள்ளம் குமுறுகிருன். பஞ்சமருக்காகக் கட்டப் பட்ட கயிற்றை அறுத்தெறிவதாகச் சபதம் செய்கிறன். அடித்துத் துன்புறுத்தப்பட்ட நல்லான் தகுந்த வைத்திய உதவி பெறுவதற்கு வேளாளரின் அடக்குமுறை தடையா கின்றது. நல்லான் இறக்க நேரிடுகிறது. அடக்கியொடுக் கப்படும் தனது சமூகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சியிற் செல்லத்துரை கொண்ட உணர்ச்சியைப் பறையர் குலத்தைச் சேர்ந்தநண்பனுணமாதவன் நெறிப்படுத்துகிருன். சட்டத்தின்மூலம் உயர்சாதியினரெனப்படுவோரின் அடக்கு முறையை நீக்கமுடியாதெனக் கண்ட பறையரும் பள்ளரும் ஒன்றிணைந்து உள்ளூர் அரசியலில் ஈடுபட்டுத் தமது உரிமைப் போராட்ட நீண்ட பயணத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தைக் கடக்கின்றனர்.
இந்நாவலில் வேளாளரின் அடக்குமுறைக் கொடுமைகள் விபரிக்கப்படுகின்றன. பொதுக் கிணற்றிலே தண்ணீர் அள்ள விடாது தடுத்தல், சட்டை முதலிய மேலாடைகளை அணிய விடாது தடுத்தல், பெயர்ப் பதிவின்போது கந்த

Page 53
80 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
சாமியைக் கந்தன் என்றும் வேலுப்பிள்ளையை வேலன் என்றும் பதிதல், சாராயம், காசு என்பவற்றைக் கொடுத்து அவர்களைத் தம்பக்கம் சேர்த்தல் முதலியன தொடர்பான விவரணங்கள் இவ்வகையிற் குறிப்பிடத் தக்கன. தாழ்த்தப் பட்டோரெனப் படுவோரின் சமூக பொருளாதார நிலை, சமூக மதிப்பீடுகள் முதலியனவும் நாவலிற் சித்திரிக்கப்படு கின்றன. தாழ்த்தப்பட்டோர் எனப்படுவோரின் உரிமைப் பிரச்சினைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக உயர்சாதியின ரெனப் படுவோரின் சமூக உறவிலுள்ள ஊழல்கள், முரண் பாடுகள் என்பனவற்றைப் பெரிதுபடுத்தி எள்ளி நகையாடும் பண்பும் நாவலிற் காணப்படுகின்றது. சிங்கப்பூர்ப் பென்ச னியர் சீனிவாசகத்தாரின் மகள் சரஸ்வதியுடன் செல்லத் துரையன் கொண்டுள்ள தொடர்பும், கள்ளச் சாராயம் காய்ச்சும் வெள்ளாடிச்சி பற்றிய செய்தியும் கட்டிய தாலியைக் கழற்றிக் கொடுத்துக் கணவனை வீட்டை விட்டுத் துரத்தும் உயர்சாதிப் பெண்ணுெருத்தி பற்றிய கதையும் இத்தகைய நோக்கிலேயே நாவலிற் சித்திரிக்கப்படுகின்றன எனலாம். வேளாளருக்குள்ளேயே பிரதேச, குறிச்சி, பரம்பரை வேறுபாடுகள் பார்க்கும் குறுகிய மனநிலையும் நாவலில் எடுத்துக்காட்டப்படுகின்றது.
போர்க்கோலம் நாவல் நீண்ட பயணம் நாவலின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாகவே அமைந்துள்ளது. 1966-769 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஆலயப் பிரவேச முயற்சிகளின் தொடர்பான போராட்டங் களும் துப்பாக்கிச் சூட்டு நிகழ்ச்சிகளும் இந்நாவலின் பகைப் புலமாக அமைந்துள்ளன. ஆனந்தன் என்ற வேளாளர் குல வாலிபன் பள்ளர் குலத்தவனன மாணிக்கனை வஞ்சகமாகக் கொலை புரிகிறன். மாணிக்கனது காதலி அன்னம் ஆனந் தனைக் கொன்று பழிதீர்த்துக்கொள்கிருள். உரிமைப் போராட்டத்தில் நீண்ட பயணத்தைத் தொடங்கியவர்கள் ஆலயப் பிரவேச முயற்சியிலீடுபட்டவேளையிலே துப்பாக்கிச் சூட்டு நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. அடக்குமுறைக் கெதிராகத் தாழ்த்தப்பட்டோரெனப்படுவோர் போர்க் கோலங் கொண்டிருக்க வேண்டியதனவசியத்தை இந்நாவல் வற்புறுத்துகின்றது.

சமுதாய விமர்சனக் காலம் 8.
கதைப் போக்கிலே மாறிவரும் சமூக நிலையையும் ஆசிரியர் தொட்டுக்காட்டுகிறர். V
"ஒரு காலத்திலே ஒவ்வொரு பேச்சிலேயும் நாச்சி யார், கமக்காறிச்சி என்று கூப்பிடுபவள் அவ்வார்த்தை களைக் குறைத்துக் கொள்வதைத் தங்கம்மா உணராம @ဂ်)ါ0%a) * * *
எனவும்
"ஒரு காலத்தில் தண்ணீர் வேண்டுமாயின் ஏதாவது ஒரு தோட்டக் கிணற்றடிக்குச் சென்று எவராவது கிணற்றில் தண்ணீர் அள்ளத் தகுதிபெற்ற கமக்காரன் வரும்வர்ை காத்து நிற்க வேண்டும். அவர்கள் குடத் தோடு காத்து நிற்க அவர் தன் வேலைகளைக் கவனிப்பார். பின்னர் ஒய்வாக வந்து பெரிய தர்மம் செய்வதுபோலத் தண்ணிர் அள்ளி ஊற்றுவார். இப்போது பல கிணறு களைத் தம் பகுதியில் அவர்களே தோண்டி விட்டனர்”* எனவும் நீண்ட பயணத்தின்பின் ஏற்பட்ட முன்னேற்றங் களைக் குறிப்பிட்டுள்ளார்.
இந் நாவலிற் சாதிப் போராட்டத்துடன் முதலாளித் துவத்திற்கெதிரான பொருளாதார, அரசியற் போராட்டக் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
"தற்போதைய அரசியலமைப்பையும் அதன் கீழ் ஆட்சி செலுத்தும் வர்க்கத்தையும் வைத்துக்கொண்டு எவற்றையும் சாதிக்க முடியாது. ஆயுதப் புரட்சி இல்லாமல் தற்போது ஆளும் வர்க்கத்தை ஒழித்து விடலாம் என்று நினைப்பது பகற்கனவு’** என்று ஆசிரியர் தமது கருத்தைப் பாத்திரமொன்றின் மூலம் புலப்படுத்துகிருர். பாத்திர உரையாடல்களிலே சர்வதேச அரசியற் பிரச்சினைகளான வியட்நாம் பிரச்சினை, சி. ஐ. ஏ. க் கொடுமைகள் ஆகியன தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன. நீண்டபயணம் நாவலில் மாதவன் என்ற பாத்திரம் ஆசிரியரின் குரலாக அமைந்ததைப்போலப் போர்க்கோலம் நாவலிலே இலட்சுமணன் என்ற பாத்திரம் அமைகின்றது.

Page 54
82. ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
இவ்விரு நாவல்களுக்கும் அடிப்படையான உரிமைப் போராட்டக் கதைக் கரு ஆசிரியரின் நல்லவன் (1956) என்ற சிறுகதைத் தொகுதியிலிடம் பெற்ற "வள்ளி புறப்பட்டாள்" என்ற சிறுகதையில் அமைந்துள்ளது. சம காலப் பிரச்சினைகளின் வளர்ச்சிக்கு இயையக் கதைக் கருவையும் விரிவு செய்து இரு நாவல்களையும் படைத்துள் ளார் எனலாம். நீண்டபயணம் நாவலிற் காணப்படும் கதை வளர்ச்சியைப் போர்க்கோலத்திற் காண்பதற்கில்லை. ஆசிரி யர் தமது கருத்துக்களைக் கூறுவதற்கேற்றவகையில் உரை யாடல்களையும் சம்பவங்களையும் அமைத்துச் செல்கிருர் என்பது புலனுகின்றது.
கே. டானியல் எழுதிய பஞ்சமர் (1972) நாவல் "பஞ்சப் பட்ட மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் பேரோவியம்." என்ற பாராட்டைப் பெற்றது. வேளாளரின் குடிமக்களான கோவியர், வண்ணுர் முதலிய பஞ்சப்பட்ட மக்கள் தம் உட்பிரிவினைகளை மறந்து இணைந்து போராட முயல்கிருர்கள். வேளாளரான ஐயாண்ணன் இவ்விடுதலைப் போரை முன் நின்று வழி நடத்துகிருரர். இப்போராட்ட உணர்வுக்கு அழுத்தம் கொடுக்கும்வகையில் வேளாளரின் அக்கிரமங்கள் பற்றிய செய்திகளும் அவர்களின் குடும்ப உறவுமுறைகளில் உள்ள ஊழல்கள் பற்றிய வருணனைகளும் நாவலில் இடம் பெறுகின்றன.
இந்நாவலைத் "தற்கால ஈழத்துத் தமிழிலக்கியத்தில் ஒரு கட்டம்" என்றும்
"அறிவையும் அநுபவத்தையும் அரசியலையும்பற்றி நிறையக் கதைத்துக்கொண்டு உயர்சாதியினருக்குத் துதிபாடிக் கிடக்கும் கற்ற கும்பலை நோக்கி டானியல் விட்ட சவால்போலத் தோன்றுகின்றது. '9
என்றும் திறனுய்வாளர் கருதுவர்.
"வாழ்க்கை - கலை இவற்றின் எல்லைக்கோடுகள் அழிந்து இரண்டும் இரண்டறக் கலந்து மெய்மையாக நூலை நிறைத்துள்ளன."10

சமுதாய விமர்சனக் காலம் 83
என்றும் இந்நாவலைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நாவலில் அடிப்படை அமைப்பான பொருளாதாரக் கண்ணுேட்டத்திற்கு முதன்மை தரப்பட வில்லை யென்றும் உயர்சாதியினரின் பாலுறவு ஒழுக்கக் கேடுகளை அம்பலப்படுத்துவதே அசிரியரின் குறிக்கோள் என்றும் சட்டரீதியான தேநீர்க்கடைப் பிரவேச அனுமதியில் நம்பிக்கை வைப்பதுபோலத் தோன்றுவது பஞ்சமரின் புரட்சிகர உணர்வை மட்டுப்படுத்துகின்ற தென்றும் மார்க்சியக் கோட்பாட்டினடிப்படையிற் குற்றங்கள் கூறப் படுகின்றன. 11
*பஞ்சமர் நாவல் காட்டும் சமூக அமைப்பு ஏறக் குறைய "1920-30 காலப்பகுதியிற் சாதிக் கெடுபிடிகள் சற்றும் தளராத யாழ்ப்பாணச் சமூகத்தைக் காட்டு கின்றது. ஆனல் நிகழ்ச்சிகளோ 1966-67 காலப் பகுதியில் நடைபெறுகின்றன. பாத்திரங்களும் 1966 காலப்பகுதியின் அரசியல் சமூக உணர்வுகளையும் போக்குகளையுமே காட்டுகின்றன. முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்துடன் ஒன்றிணைக்கப்பட்ட தானதும் மிளகாய், வெண்காயம், புகையிலை முதலிய பயிர்களைச் சந்தைக்காகப் பயிரிடும் சிறு நில விவசாயி களை உடையதுமான பொருளாதார சமூக அமைப்பைப் இந்நாவல் காட்டவில்லை. சந்தை சக்திகள் உட்புகாத 1920-30 கால சமூக அமைப்பையே காட்டுகிறது. இம் முரண்பாடு நாவலின் தோல்விக்கும் பாத்திரப் படைப் பின் தோல்விக்கும் அடிப்படையான காரணம்”*12
எனப் பொருளாதார நோக்கில் இந்நாவலின் சமூகப் பகைப் புலம் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்நாவலிற் சாதித்திமிர் பிடித்த வேளாளரின் பிரதி நிதிகளான வேலுப்பிள்ளை, சிருப்பர், சண்முகம் சட்டம்பி யார் போன்ருேரை ஒரு பக்கத்திலும் போராட்ட வீரர்களான ஐயாண்ணன் முதற் குமாரவேலன் ஈருக உள்ளோரை மறு பக்கத்திலும் காணும் நாம் இரண்டு பக்கத்திலும் இல்லாத மூன்ருவது பகுதியினரைத் தேடுகிருேம். பகுத்தறிவு வளர்ச்சி யாற் சாதி ஏற்றத்தாழ்வில் நம்பிக்கையற்றவர்களும் ஆணுற்

Page 55
84 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
சாதி ஒழிப்புப் போரில் அதிக ஈடுபாடுகாட்டாதோருமான அந்த மூன்ருவது பகுதியினர் - கற்ற நடுத்தரவர்க்கத்துப் பெரும்பான்மையினர் - எங்கே நிற்கின்ருர்கள் என்ற வின வுக்கு விடை நாவலில் இல்லை.
தெணியான் எழுதிய விடிவை நோக்கி (1973) நாவல், யாழ்ப்பாணப் பகுதிக் கிராமமொன்றிலே தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகளுடைய கல்வித் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்குத் தடையாக விளங்கும் சூழ்நிலைகளையும் அதில் அவர்களது சமூகத்தவனுன ஆசிரியனுெருவன் எதிர் கொள்ளும் பிரச்சினைகளையும் அடையும் முன்னேற்றங்களையும் சித்திரிப்பது. சொந்த ஊருக்கு இடமாற்றம் பெற்றுவந்த கோவிந்தன் தலைமையாசிரியர் துணையாசிரியர் முதலியோரா லும் தன்னினத்தவர் சிலராலும் எதிர்க்கப்படுகிருன். எனி னும் சட்டம் அவனுக்குத் துணைபுரிகிறது. எதிர்த்த தலைமை யாசிரியர் மனமாற்றமடைந்து அவனுக்குத் துணைபுரிகிறர்.
'உரிமைகளைப் பெறும் போராட்டங்களில் இரு தரப்பினரிடத்தும் மனிதாபிமானமும் நிதானமும் வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில்'13
இந்நாவலை எழுதியதாகக் கூறும் ஆசிரியர் அந்த மனிதாபி மான நிதான அம்சங்களைப் புலப்படுத்தவில்லை. உயர் சாதியினரான தலைமையாசிரியர் வியத்தகு நிலையில் மன மாற்றமடைவதற்கான பின்னணி நாவலிற் தெளிவாக்கப் படவில்லை. கதையின் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் அமைந்துள்ள காதல் அம்சமும் நாவலைப் பாதித் துள்ளது. சாதிப் பிரச்சினையைக் கோட்பாட்டு முறையாக ஆழமாக அணுகாமற் சில சம்பவங்களை இணைத்துக் கதை கூறமுயன்றுள்ளமை புலணுகின்றது.
சொக்கன் எழுதிய சீதா (1963) நாவல், சாதிப்பிரச் ஒனையை மேலெழுந்தவாரியான சமரச உணர்வினலோ அல்லது உணர்ச்சி வசப்பட்ட எழுத்தினலோ தீர்க்க முடியாது என்றும் அது உண்மையான, பகிரங்கமான, சுயநலமற்ற தியாகத்தின் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்றும் போதிக்கின்றது.

சமுதாய விமர்சனக் காலம் 85
எழுத்தாளனும் பிராமண சாதியினனுமான ஆத்ம நாதன் சாதியை மீறிக் காதலித்தாலும் செயல்வடிவிற் சாதி ஏற்றத்தாழ்வை எதிர்க்கமுடியாத கோழையாகிருன். சமரச மனப்பான்மையுடன் சமூகத்தை எதிர்த்துக் காதல் திருமணம் செய்த செல்வரத்தினம் தமது மனைவியை மகிழ்ச்சியுடன் வாழ வைக்கவில்லை. வீரமும் பொதுநலத் தொண்டுள்ளமுங் கொண்ட சீதா தன்னைக் காதலித்த ஆத்ம நாதனின் கோழைத்தனத்திற்குத் தன்னைப் பலியிட மறுத்து விலகுகிருள். முற்போக்காகச் சிந்திக்கும் ஜம்புநாதன் என்னும் "கொம்யூனிஸ்ட் ஐயர் ஒருவரும் கதையிற் கலந்து கொள்கிருர்,
சாதி ஏற்றத்தாழ்வை உயர்சாதியினரின் கண்ணுேட் டத்தில் அணுகித் தீர்வுகாண விழையும் சொக்கன் தாழ்த்தப் பட்டோரெனப்படுவோரின் பிரச்சினைகளிற் கவனம் செலுத் தாது உயர் சாதியினரின் சமூகத்தில் அது எழுப்பும் அலைகளையே காட்டுகிருர் சாதி ஏற்றத்தாழ்வை ஒழிப்பதில் உயர் சாதியினரான சமரச மனப்பான்மை கொண்டோ ராலோ அல்லது எழுத்தாளர்களாலோ காத்திரமான எதையும் செய்ய முடிவதில்லை என்பதே நாவலிற் புலணு கின்றது. சுயநலமற்ற பகிரங்கமான உண்மையான தியாகம் எதுவும் நாவலில் எவராலும் செய்யப்பட்டதாகத் தெரிய வில்லை. இதனுற் சீதா சாதிப் பிரச்சினை பற்றிய கருத்துக்களைக் கூறும் ஒரு நாவலாகவே காணப்படுகிறது. கே. டானியல் வெளிப்படையாகக் காட்டாத அந்த மூன்ருவது பகுதியின ரைத்தான் சொக்கன் காட்டுகிருர் என்று கொள்ளலாம். சாதிப் பிரச்சினையின் பகைப்புலத்தில் எழுதப்பட்ட சீதா கோழையான எழுத்தாளனுெருவனின் காதற் கதையாகவும் சக்களத்தி பெற்ற பிள்ளைக்குத் தன் பாலையூட்டி வளர்க்கும் தாயின் கதையாகவுமே அமைந்துள்ளது. 1963இல் விவேகி சஞ்சிகையில் தொடர்கதையாக வெளிவந்த இந் நாவல் 1974இல் நூல்வடிவம் பெற்றது.
ஒரு சமூகத்தின் விழிப்பையும் மாற்றத்தையும் பேசு கின்றது என்ற குறிப்புடன் நூல்வடிவில் வெளிவந்த செங்கைஆழியானின் பிரளயம் (1975) நாவல் சிரித்திரன் சஞ்சிகையில் மயானபூமி (1971) என்ற தலைப்பில் தொடர்

Page 56
86 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
கதையாக வெளிவந்தது; சிற்சில மாறுதல்களுடன் நூல் வடிவம் பெற்றது. இந்நாவலின் களம் வண்ணுர்பண்ணை. அங்குள்ள சலவைத்தொழிலாளர் குடும்பமொன்றில் நிகழும் மாற்றத்தை இந்நாவல் சித்திரிக்கிறது. கல்வியின்மூலமும் பிற தொழில் முயற்சிகளின்மூலமும் பரம்பரைத் தொழில் முறையிலிருந்து விடுபட்டு முன்னேற்றம் காண விழையும் இளைய பரம்பரையொன்றை இந் நாவலிற் காண்கிருேம். இம் முன்னேற்ற முயற்சிகட்குத் தடையாக விளங்கும் உயர்சாதியினரின் கொடுமைகளைச் சித்திரிக்கும் ஆசிரியர் அவற்றினின்று தப்பி அக்குடும்பம் முன்னேறுவதற்கு உயர்சாதியினனெருவனே கைகொடுக்க முன்வருவதாகக் காட்டியுள்ளார்.
ராணி என்ற பெண் கற்று முன்னேற முயற்சிக்கிருள். அவள் தங்கை சுபத்திராவை உயர்சாதியினனன வாமதேவன் காதலிப்பதுபோல் நடித்து இறுதியில் ஏமாற்றிக் கைவிடு கிருன். அவனது தம்பியும் சமூகநல நோக்கினனுமான மகாலிங்கம் தமையன் செய்த துரோகத்திற்குப் பிராயச் சித்தமாகத் தானே சுபத்திராவை ஏற்க முன்வருகிருன். கதைமுடிவில் மகாலிங்கம் நெஞ்சைவிட்டகலாத பாத்திர மாகிருன். தனிமனித தியாகங்கள் மூலம் சமுதாய மாற்றத்தை எதிர்பார்க்க முடியுமா என்ற வின எழுந் தாலும் மாறிவரும் சமுதாய உணர்வுகளையும் மதிப்பீடுகளை யும் பாராட்டாமலிருக்கமுடியாது. பிரளயம் நாவலில் பூசல் இல்லாமல் அமைதியான பிரளயம் நடைபெற்று
முடிகிறது.
ஒரு பிரதேசச் சித்திரமாகவும் சமுதாய விமர்சன நாவ லாகவும் அமையும் பிரளயம் நாவலிற் கதை கூறும் முறை யிலும் பாத்திரங்களின் உணர்ச்சிகளைப் புலப்படுத்தும் முறையிலும் செங்கைஆழியானின் கைவண்ணம் புலப்படு கின்றது. வளர்ந்துவரும் எழுத்தாற்றலை உணரமுடிகின்றது. இந்நாவலில் வரும் சலவைத் தொழிலாழியின் குடும்பம் அதற்குரிய இயல்பான தன்மைகளுடன் சித்திரிக்கப்பட வில்லையென்பதும் ஒரு தூரத்துப்பார்வையாகவே தெரிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமுதாய விமர்சனக் காலம் 87
செ. யோகநாதனின் காவியத்தின் மறுபக்கம் (1976) என்ற குறுநாவல் சாதி ஏற்றத்தாழ்வை மீறிய காதலிற் சமூக அந்தஸ்துணர்வும் வாழ்க்கை வசதிகளும் ஏற்படுத்து கின்ற பாதிப்புக்களைத் தொட்டுக்காட்டுகின்றது. இவரது ஜானகி என்ற குறுநாவல் பிராமணர் சமூகத்தின் பாரம்பரியப் பண்பாடு பொருளியற்றேவைகளாற் சீர்குலைவதையும் மாறி வரும் சமூக மதிப்பீடுகளையும் எடுத்துக்காட்ட முயல்கிறது. இவ்விரு குறுநாவல்களும் சாதிப்பிரச்சினை பற்றிய ஆசிரியரின் கருத்துக்குத் தரப்பட்ட கதைவடிவங்கள் என்ற அளவிலேயே அமைகின்றன.
தி. ஞானசேகரன் எழுதிய புதிய சுவடுகள் (1977) நாவல் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் கிராமப்புறமொன்றின் வெளித் தோற்றத்தைச் சித்திரிப்பது. பிரதேசப்பண்புவாய்ந்த இந்த நாவலிற் பிரதேசப் பிரச்சினை என்ற வகையிற் சாதிப் பிரச்சினை முக்கிய இடத்தைப் பெறுகின்றது. வேளாளப் பெண்ணுன பார்வதி தாழ்த்தப்பட்டசாதியினனெனப்படும் மாணிக்கனைக் காதலித்து அவனேடு கிராமத்தை விட்டு வெளியேறுகிருள். இதனைப் பொருத கிராமத்துப் பிரமுகர்கள் மாணிக்கனைத் துன்புறுத்தி அவனைப் பிரித்து வருகின்றனர். கருவுற்றிருந்த அவளை மாணிக்கன் இறந்து விட்டான் என்று பொய்யுரைத்து நடேசு என்பவனுக்கு மணமுடித்து வைக்கின்றனர். மாணிக்கன் இறக்கவில்லை யென்பதை அறிய நேர்ந்த போதுதான் அவனுடைய நம்பிக்கைக்குத் தான் துரோகம் செய்து விட்டதாகக் கருதிப் பார்வதி மனம் குமுறுகிருள். அந்த மனத்துயருடன் குழந்தையைப் பிரசவித்துவிட்டு மரணமடைகிருள். மாணிக்க னும் பார்வதியும் இணைந்து வாழ்வதைப் பொறுக்காத அந்தச் சமுதாயம் அவள் இறந்த வேளையில் அவ்விருவரையும் வாழவிட்டிருக்கலாம் என்று கழிவிரக்கப்படுகின்றது. மாணிக்கனுக்குப் பிறந்த அக்குழந்தையைச் சமுதாயம் ஏற்றுக்கொள்கிறது. சமுதாயத்தின் ஊழல்களையும் போலித் தனங்களையும் மாறிவரும் கருத்தோட்டங்களையும் இந் நாவல் தொட்டுக் காட்டுகின்றதெனலாம்.

Page 57
88 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
சொக்கன், செங்கை ஆழியான், தி. ஞானசேகரன் ஆகியோர் சாதி ஏற்றத்தாழ்வு ஒரு சமுதாயக் குறைபாடு என்று கருதி மனிதாபிமானக் கண்ணுேட்டத்திலே தீர்வை நாடுகின்றனர். இதன் காரணமாகப் பிரச்சினைகளின் வெளிப் பரிமாணத்தை மட்டுமே இவர்களது நாவல்களிற் காணமுடிகின்றது. மாறிவரும் சமூகசிந்தனைகள் காலப் போக்கில் இவ்வேற்றத்தாழ்வை அகற்றிவிடும் என்பதே தீர்வு எனக்கொள்ள வேண்டியுள்ளது. சொக்கனின் கதாபாத்திரங் களான சீதாவும், ஜம்புநாதனும் செங்கை ஆழியானின் மகாலிங்கமும், ராணியும் மாறிவரும் சமூகத்தின் பிரதி நிதிகள். இவர்களிடம் தமது இலட்சியத் தீர்ப்பை ஆசிரி யர்கள் வழங்கிவிடுகின்றனர். தி. ஞானசேகரன் தனது தீர்வைத் தனிப்பட்ட பாத்திரங்கள் மூலம் வழங்காமற் பொதுமக்களது சிந்தனைக்கே விட்டுவிட்டார்.
செ. கணேசலிங்கனும் கே. டானியலும் சாதி ஏற்றத் தாழ்வைப் பல்வேறு வகைப்பட்ட சுரண்டல்களுக்கும் கொடுமைகளுக்கும் காரணமானதும் வர்க்கச் சார்புடையது மான ஒரு பிரச்சினை என்றே கருதினர். இதன் காரணமாக இவர்களின் அணுகு முறையிலே மார்க்சிய அடிப்படையி லான வர்க்கக் கண்ணுேட்டமும் சமூகத்தின் உள் முரண் பாடுகளையும் ஊழல்களையும் விரிவாகச் சித்திரிக்கும் ஆர்வமும் இயக்கரீதியான போராட்ட மூலம் தீர்வுகாணும் உறுதியும் அமைந்தன, தமது 'பல சிறுகதைகளில் இவற்றைப் புலப் படுத்திய இவர்கள் நாவல்களிலே முழுமையான வடிவம்தர முயன்றனர். இவ்வணுகு முறையிலும் சிறப்பாகச் சமூக ஊழல்களையும் உள் முரண்பாடுகளையும் விரிவாகச் சித்தி ரிக்கும் நோக்கே மேலோங்கி நின்றது. அடக்கப்பட்டவர் களின் உரிமைக் குரலை வலுப்படுத்துவதற்குப் பதிலாக அடக்கியாள்பவர்களின் குறைபாடுகளை எள்ளி நகையாடும் பண்பு இவர்களது நாவல்களில் மிகுந்துள்ளமைக்கு இது ஒரு காரணம் எனலாம்.
சாதி வேறுபாட்டைப் பிரபுத்துவ சமுதாய அமைப்பின் சின்னமாகக் கருதும் செ. கணேசலிங்கன் அதனை மாற்றி அமைப்பதற்காக போராட்டத்தின் முதற்கட்ட எழுச்சியை

சமுதாய விமர்சனக் காலம் 89
நீண்ட பயணமாகவும் அடுத்த கட்ட வளர்ச்சியைப் போர்க் கோலமாகவும் உருவகித்தார். இதனை வர்க்க உணர்வுடன் வழிநடத்தும் வகையில் மாதவன், இலட்சுமணன் முதலிய பாத்திரங்களைப் படைத்து இயக்க முறையிலான வளர்ச் சியைச் சித்திரித்தார்.
சாதிப்பிரச்சினை "எரியும் பிரச்சினை'யாக விளங்கிய அறுபதுகளில் எழுதப்பட்ட நீண்டபயணமும் போர்க் கோலமும் அப்பிரச்சினைக்குக் கொடுத்த அழுத்தத்தை எழுபதுக்குப் பின் - அப்பிரச்சினை நீறுபூத்த நெருப்பாகி விட்ட சூழ்நிலையில் - எழுதப்பட்ட பஞ்சமர் முதலியன கொடுக்கத் தவறிவிட்டன.
சாதிக் கொடுமைக் கெதிரான போராட்ட உணர்வை முதன்மைப் படுத்தி இரு நாவல்களை எழுதிய செ. கணேச லிங்கன் உயர்சாதியினரின் உள் முரண்பாடுகளை எடுத்துக் காட்டும் வகையிலே சடங்கு (1966) நாவலை எழுதினர். புனிதப் பிணைப்பான திருமணம் யாழ்ப்பாணத்து உயர் சாதியினரிடையிலே தனது புனிதத்துவத்தை இழந்து சடங்கு, சம்பிரதாயம் ஆகியவற்றுக்குட்பட்டுச் சீரழிகின்றது என்ற கருத்தை ஆசிரியர் இந்நாவலின் ஊடாக வெளியிடு முகிர்.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் உயர்சாதியினரான வேளாளருக்குள்ளேயே நிலவும் "சாதிக்குள் சாதி’பார்க்கும் வழக்கம் "பத்மா - இராசரத்தினம்’ இருவரின் காதல் நிறைவேறத் தடையாகிறது. இதனல் வயது முப்பதைக் கடந்தபின்னும் "கிழட்டுக்குமராக வாழும் பத்மாவுக்குத் தகுந்த மாப்பிள்ளை கிடைப்பதற்காக அவளது தம்பியான பரமநாதனை முன்வைத்து "மாற்றுச் சம்பந்த" முயற்சி மேற் கொள்ளப்படுகிறது. பத்மாவைச் சிவஞானமும் பரமநாத னைச் சிவஞானத்தின் தங்கை ஈஸ்வரியும் மணம்புரிகின்றனர். சடங்கு சம்பிரதாய'த் தேவைகளை முன்வைத்து நடைபெற்ற இத்திருமணத்தில் இரு குடும்பத்திற்கும் திருப்தியில்லை. பத்மாவுக்கும் இராசரத்தினத்துக்கும் இடையில் நிலவிய காதலை அறிந்த சிவஞானம் பத்மாவைச் சந்தேகிக்கிருன். சந்தேகங்கொண்ட கணவனுற் கொடுமைப்படுத்தப்பட்ட பத்மா தீமூட்டித் தற்கொலை செய்து கொள்கிருள்.

Page 58
90 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
இந்தக் கதையம்சம் யாழ்ப்பாணப் பிரதேசத்திற்கே சிறப்பாகவுரிய திருமண ஆடம்பரங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றுடனும் பாத்திரங்களின் உணர்ச்சி மோதல்களுட னும் வளர்க்கப்பட்டுள்ளது. கதைப் போக்கின் நடுவிலும் முடிவிலும் வேளாளரின் குடிமக்களான வண்ணுர், பறையர் முதலிய சாதியினர் மூலம் வேளாளரின் குடும்ப ஊழல் களும் போலித்தனங்களும் வெளிப்படுத்தப் படுகின்றன.
பரமநாதனின் தம்பியான கந்தசாமியைத் தவிர ஏனைய பாத்திரங்கள் சமூக அமைப்பின் சம்பிரதாயங்களுக்கும் சந்தர்ப்பச் சூழ்நிலைகளினடியாக எழும் உணர்ச்சிகளுக்கும் , பணிந்து கொடுப்பனவாகவே படைக்கப்பட்டுள்ளன. கல்விகற்று அரசபணி புரியும் பரமநாதன், சிவஞானம் ஆகியோரும் சமூக மதிப்பீடுகளுக்குப் பணிந்து கொடுத்து வாழ்க்கையைப் பொருளற்றதாக்கிக் கொள்பவர்களாகவே நாவலிற் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சீமெந்துத் தொழிற் சாலையிற் பணிபுரியும் கந்தசாமி தொழிற்சங்க ஈடுபாடு களால் இடதுசாரிச் சிந்தனையாளனுகவும் உணர்ச்சிகளுக்குப் பணிந்து கொடுக்கர்மற் பிரச்சினைகளை அணுகுபவனுகவும் ஆசிரியரால் அறிமுகப்படுத்தப்படுகிறன்.
இந்நாவலின் நிகழ்ச்சிகள் "1958 - 760 காலப்பகுதியின் பகைப்புலத்தில் நடைபெறுகின்றன. அவற்றின் சமகாலத் தன்மையை மெய்மைப் படுத்தும் நோக்கிற் பிரதமராக இருந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயகாவின் கொலை பற்றிய தகவல்களும் 1960ஆம் ஆண்டுத் தேர்தல்களின் சூழ்நிலை விபரங்களும் நாவலில் இடம் பெறுகின்றன. இரரச ரத்தினம் தமிழரசு ஆதரவாளராகக் காட்டப்படுகிருர், இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமையினல் மட்டுமே நாட் டுக்கும் தமிழருக்கும் விமோசனம் கிடைக்கும் என்று நம்பு கின்றவணுகக் கந்தசாமி அமைகிருன். பரமநாதனுக்குத் தேர்தலில் அதிக ஈடுபாடு கிடையாது. இத்தகைய விப ரங்கள் கதைப்போக்குடன் ஒட்டாமல் விட்டிசைக்கின்றன.
இந்நாவலுக்கு முன்னுரை வழங்கிய கா. சிவத்தம்பி சமூகத்துக்கும் சடங்குகளுக்குமுள்ள தொடர்பை யாழ்ப் பாணப் பிரதேசத்துடன் தொடர்புபடுத்தி விளக்கியுள்ளார்.

சமுதாய விமர்சனக் காலம் 91
அரசியல் பொருளாதாரப் பிரச்சினை நாவல்கள்
1948ஆம் ஆண்டில் ஈழம் ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் விடுதலைபெற்றது. 1956ஆம் ஆண்டுவரை மேலைத்தேய சனநாயக முறைகளில் ஈடுபாடுகொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்தது. 1951ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, பூஜீலங்கா சுதந்திரக் கட்சியை அமைத்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டார நாயக்கா 1956ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் மார்க்சிய வாதிகளில் ஒருபகுதியினரின் துணையுடனும் தனிச்சிங்கள தேசியவாத "கோஷத்துடனும் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈழத்தில் ஆங்கிலேயருக்கிருந்த துறைமுக வசதியை அகற்றிய தோடு பல்வேறு தேசியமயத் திட்டங்களை முன்வைத்தார்; தொழிலாளர் நலன் பேணும் முயற்சிகளையும் மேற்கொண்’ டார். 1959இல் அவர் அகாலமரணமடைந்தபின் 1960இல் பூணூரீலங்கா சுதந்திரக்கட்சிக்குத் தலைமைதாங்கி ஆட்சிக்கு வந்த அவரது மனைவி திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்கா மார்க்சியக் கட்சிகளுடன் நல்லுறவை நாடினர். 1964ஆம் ஆண்டில் அவற்றுடன் இணைந்து கூட்டரசாங்கமொன்றை அமைத்தார். 1965ஆம் ஆண்டில் இக்கூட்டாட்சி தோல்வி யடைய ஐக்கியதேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது. பின்னர் 1970இல் பூரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்து இடதுசாரி ஐக்கிய முன்னணி பெருவெற்றி பெற்று ஆட்சியைக் கைப் பற்றின.
1922ஆம் ஆண்டின் இலங்கைத் தொழிற்சங்க முயற்சிகளின் பரிணுமமாக 1935ஆம் ஆண்டு உதயமான லங்கா சமசமாஜக்கட்சி அதன் தலைவர்கட்கிடையில் கொள்கை ரீதியாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரண மாகக் காலப்போக்கில் பல தனிக் கட்சிகளாகப் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்நிய ஆதிக்கத்தை அகற்றுவது, நிலப்பிரபுத்துவத்தின் சுரண்டலை முடிவிற்குக் கொணர்ந்து தொழிலாளரினதும் விவசாயிகளதும் ஆட்சியை நிறுவுவது ஆகிய, முக்கிய கோட்பாடுகளை கொண்டிருந்த இக்கட்சிகளிற் சில, மேலைத்தேய சார்புடையதாகவும் வலதுசாரிக் கொள்கை

Page 59
92 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
களையுடையதாகவும் விளங்கிய ஐக்கியதேசியக் கட்சியின் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கிலே தேசியமயக்கொள்கை களை முன்வைத்த பூரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் அவ்வப் போது ஒத்துழைக்கவேண்டிய வரலாற்றுத் தேவை ஏற்பட்டது. 1956ஆம் ஆண்டு தொடக்கம் நடந்த பொதுத் தேர்தல்களில் இவ்வொத்துழைப்பு தொடர்ந்தது. புரட்சிக்ர சமுதாய மாற்றத்திற்குத் தேர்தல் மூலம் மக்கள் அங்கீகாரம் வழங்கமாட்டார்கள் என்ற உண்மையினைப் பல தேர்தல்களில் அநுவபரீதியாய் உணர்ந்தபின் முக்கிய இடதுசாரிக் கட்சி களான லங்கா சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் தமது தீவிரக் கொள்கைகளை விட்டுக் கொடுத்து பூரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படமுயன்றன. இதன் காரணமாக அறுபதுகளில் இவ்விடதுசாரிக் கட்சிகளின் தீவிர வாதிகள் கட்சிகளைவிட்டு வெளியேறினர். சர்வதேசரீதியாக ரூசிய சார்பாகவிருந்த இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியி னின்றும் வெளியேறிய தீவிரவாதிகள் அன்றைய சூழ்நிலையில் ரூசியாவை விடத் தீவிர புரட்சிக்கருத்துக்களைக் கொண்டி ருந்த சீனவுக்குச் சார்பானவர்களாக இயங்கத் தொடங் கினர். பாராளுமன்றப்பாதையில் நம்பிக்கையற்றவர்களில் ஒருபிரிவினர் 1971ஆம் ஆண்டில் இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசுக்குஎதிராகப் "பயங்கரவாத முயற்சிகளை மேற்கொண்டு தோல்விகண்டனர்.
இந்த அரசியல் வரலாற்றின் பகைப்புலத்தில் 1956ஆம் ஆண்டை அடுத்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவந்த சமூக பொருளாதார சிந்தனை மாற்றங்களைச் சித்திரிக்க முயன்ற நாவலாசிரியர் செ. கணேசலிங்கன் தமிழரின் முக்கிய சமூகக் குறைபாடான சாதிப் பிரச் திஐஐயூப் பொருளாகக் கொண்டு நீண்டபயணம், சடங்கு, வஃஃ ஆகிய நாவல்களை எழுதியதைப்போல அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பொருளாகக் கொண்டு செவ்வானம் (1967), தரையும் தாரகையும் (1968), மண்ணும் மக்களும் (1970) ஆகிய நாவல்களை எழுதினர்.
செவ்வானம் " 1964 - 65 கூட்டரசாங்க ஆட்சிப் பகைப் புலத்திற் கொழும்பு நகரைக் களமாகக் கொண்டு எழுதப் பட்டது. ஈழத்தில் நடுத்தரவர்க்கம் முதலாளி வர்க்கத்

சமுதாய விமர்சனக் காலம் 93
தினுல் ஈர்க்கப்படுவதையும் ஈற்றில் அது தொழிலாளி வர்க்கத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதையும் விளக்கும் வகையில் முறையே வர்க்கப் பிரதிநிதிகளான மாலினி, நாகரத்தினம், பொன்னையா ஆகிய பாத்திரங்களை இயங்க வைத்து எழுதப்பட்ட இந் நாவலின் கதை கூட்டரசாங் கத்தை விமர்சிக்கும் நோக்கில் அமைகின்றது.
தொழிலாளி வர்க்கத்தின் ஆதரவுடன் ஆட்சிபீட. மேறிய இடதுசாரி அரசியல் வாதிகள் அத்தொழிலாளரையே கைவிட முயல்கின்ற சூழ்நிலையிலே தீவிர இடதுசாரிப் போக்குடைய தொழிலாளி வர்க்கத்தினரின் மனேநிலையைப் பிரதிபலிப்பவனகப் பொன்னையா அமைகிருன். பட்டதாரி யான இவன் நல்ல உழைப்பு வசதி கிடைத்தபோதும் அதனை உதறித்தள்ளி முழுமையான கட்சித் தொண்டனுக மாறுகிருன். மார்க்சியத் தத்துவத்தில் அசையாத நம்பிக்கை கொண்ட இவன் பூரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் லங்கா சமசமாசக் கட்சி கூட்டுச் சேர்வதால் தொழிலாளி வர்க்கத் திற்கு நலன் ஏற்படும் என்பதில் நம்பிக்கையற்றவன். ஆயின் அக்கூட்டரசு மேற்கொள்ளவிருந்த பத்திரிகைச் சுதந்திரப் பறிமுதல் முயற்சியை வரவேற்றவன். காதலை ரசனைப் பொருளாகக் கருதினுலும் அதனை நிலையற்ற செவ்வானமாகக் கருதியதால் அதில் மயங்காதவன்.
ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபாடு கொண்ட மாலினி பொன்னையாவைக் காதலிக்கிருள். நாகரத்தினத்தின் இன்பப் பொருளாக அவருடன் காரில் உலாவும் அவள் பொன்னையாவின் போதனையால் ஈற்றில் தொழிலாளி வர்க்கத்தை புரிந்துகொள்ள முற்படுகிருள்.
எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா அயல் நாட்டு முதலாளித்துவத்தை ஒழித்தபோது தலையெடுத்த உள்நாட்டு முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியான நாகரத்தினம் கூட் டாட்சியைத் தோற்கடிக்கும் முயற்சியில் ஐக்கியதேசியக் கட்சியை ஆதரிக்கிருர். தனிப்பட்ட குடும்பவாழ்க்கையில் நிம்மதியற்ற இவர் மாலினியைக் காதலிக்கிருர். அது நிறைவேறதபோது கவலைகொண்டு ஏங்குகிருர்,

Page 60
- 94 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
இந்நாவலில், கொழும்பு நகர முதலாளி வர்க்கத்தினரின் ஆடம்பரம், மேஞடுகளைப் பின்பற்றும் படாடோப மனப் பாங்கு, குடும்ப உறவுமுறைகளிலுள்ள ஒழுக்கக் கேடுகள் வர்க்க மனுேபாவம் என்பன விரிவாகச் சித்திரிக்கப்படுகின் றன. தொழிலாளிவர்க்கத்தின் துயரங்களும் வர்க்க உணர்வும் எடுத்துக்காட்டப்படுகின்றன. காதலிலே தோல்வியுற்ற மாலினி ஆடம்பரவாழ்வைச் சிறிதுகாலம் விரும்புவதும் பின்னர் தூயகாதலை நாடுவதும் அது புறக்கணிக்கப்பட்ட சூழ்நிலையில் ஏற்பட்ட தோல்வியுணர்வைத் தொழிலாளரின் அவலவாழ்வு பற்றிய உணர்விற் கரைத்துக்கொள்வதுமாக அமையும் கதைப்போக்கில் நடுத்தர வர்க்கத்தினருடைய சிந்தனையோட்டத்தையும் ஆசிரியர் உணர்த்திவிடுகின்றர்.
காதலையும் அரசியலையும் இணைத்து எழுதப்பட்ட ந் நாவலின் தலைப்பான செவ்வானம் என்ற சொல்லாட்சி இரண்டையும் உருவகப்படுத்துவதாக அமைகிறது. காதல் ஒரு செவ்வானம் என்றும் அதன் அழகுத் தோற்றம் நிலையற்றதென்றும் மாலினிக்குப் பொன்னையா உணர்த்து கின்றன். தேசிய முதலாளிகளுடன் இடதுசாரிகள் இணைந்து அமைந்த கூட்டாட்சியும் தற்காலிக அழகுகாட்டும் ஒரு செவ்வானமே என்பது கதையில் உணர்த்தப்படுகிறது. அச் செவ்வானத்தைவிடத் தொழிலாளர் புரட்சியென்ற மழைக் காரிருள் பயன்பாடுடையது என்பதைப் பொன்னையாவின் கருத்துக்கள் உணர்த்துகின்றன.
கூட்டரசாங்கத் தலைவியான பூணிமாவோபண்டார நர்யக்கா முதலாளிவர்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கு மிடையில் வகித்த பாத்திரத்தை மாலினி, நாகரத்தினத் துக்கும் பொன்னையாவுக்குமிடையில் வகிக்கிருள். அது அரசியல்; இது காதல். பூரிமாவோ பத்திரிகைச் சுதந்திரப் பறிமுதல் நோக்கிலே முதலாளிகளது எதிர்ப்பைப் பெறு திருர். மாலினி பொன்னையாமீதுள்ள காதலால் நாகரத் தினத்தின் ஆடம்பர உறவைப் புறக்கணிக்கிருள். அரசியல், காதல் இரண்டையும் சித்திரிக்கும் முயற்சியில் அமைந்துள்ள ஒற்றுமை வேறுபாடுகள் இவை.

சமுதாய விமர்சனக் காலம் 95
கூட்டரசாங்கம் அமையப்போகின்றதென்ற செய்தி யாற் பங்கு மார்க்கட்டில் (நாகரத்தினம் போன்ற) முதலாளிகள் பெருமளவு லாபம் பெற்றமை, கூட்டாட்சி யிலே தொழிலர்ளர் ஏமாற்றப்பட்டமை, பத்திரிகைச் சுதந்திரப்பறிமுதல் முயற்சிக்கெதிராக ஐக்கியதேசியக்கட்சி தேசிய முதலாளி வர்க்கத்தினரைத் தன்பாலீர்த்துக் கூட் டாட்சியைத் தோற்கடித்தமை ஆகியன சமகால அரசியற் செய்திகளாக அந்நாவலில் அமைகின்றன. பிரித்தானியர் விட்டுச்சென்ற பாராளுமன்ற சனநாயகநெறி நாவலிற் கண்டிக்கப்படுகிறது.
தொழிலாளருடைய வர்க்க உணர்ச்சியில் மட்டும் நம்பிக்கைகொண்ட பாத்திரமான பொன்னையா மாலினியின் காதலைப் புறக்கணிப்பதான முடிவு பாத்திரப் பண்பில் வலிந்து புகுத்தப்பட்டதொன்ருகவே காணப்படுகின்றது.
'பெண்ணின் மீதான ஆணின் அன்பிற்கும் வர்க்க முலாம் பூசி காதலன்பினைச் செவ்வானத்தின் நிலைப் பற்ற தன்மைக்கு ஒப்புவமையாக்கி, மனித உறவின் மேம்பாட்டைச் சமுதாய உறவுகளுக்கும், அதற்கு அடிப்படையாக அமையும் பொருளாதார உறவு களுக்கும் பலாத்காரமாக முடிச்சுப்போட்டுக் கீழாக்கி விடும் பொன்னையாவைப் போன்றவர்கள் கொள்கைக் களுக்காக வாழ்கின்றவர்கள்; அவர்கள் மக்களுக்காக வாழ்கின்றவர்கள் அல்லர் என்பதே அந்தப் பாத்திரத் தின் மீதான எனது இறுதியானதும் உறுதியானது மாண தீர்ப்பாகும்"12
எனத் தமிழ்நாட்டுத் திறனய்வாளரொருவர் தெரிவித்துள்ள கருத்து:இத்தொடர்பிற் குறிப்பிடத் தக்கது. இந்நாவலுக்கு, க. கைலாசபதி நீண்டதோர் முன்னுரையை வழங்கி யுள்ளார்.
தரையும் தாரகையும் நாவல் நடுத்தரவர்க்கச் சிந்தனை யோட்டத்தைச் சித்திரிப்பது. அந்தரத்தில் நின்று முதலாளி வர்க்க ஆடம்பரங்களான தாரகைகளைப் பிடித்து விளையாட

Page 61
96 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
முனையும் இறக்கையற்ற நடுத்தரவர்க்கத்தினரைத் தரையில் உழலும் தொழிலாள வர்க்கத்தினருடன் இணைந்து போராட அழைக்கும் வகையில் இதன் கதையம்சம் அமைந்துள்ளது.
முதற் காதலிலே தோல்வியுற்ற கந்தசாமி இரண்டாவது காதல் முயற்சியிலே சமூக பொருளாதார சூழ்நிலைகளாற் பின்வாங்கியவன். பின்னர் திருமணபந்தத்தில் ஈடுபட்டு வாழ்க்கையைப் பொதிமாடு போலச் சுமக்கிருன். திருமணம் என்பது தனிக் குடும்ப சொத்துடைமையை நிலைநாட்டும் முறையிலேயே அமைந்துள்ளதென்றும் கட்டுப்பாடுகள், ஒழுக்க வரம்புகள், ஒருதாரமணமுறை ஆகியன அதற் கேற்பவே வகுக்கப்பட்டுள்ளன என்பதும் இந்நாவலிற் புலப்படுத்தப்படுகின்றன.
நடுத்தரவர்க்கத்தின் பல்வேறு பலவீனங்களுக்கும் எடுத்துக்காட்டாக அமையும் பாத்திரமாக அமைபவன் கந்தசாமி. இவனை வர்க்க உணர்வின்பால் ஈர்ப்பவனகப் பாலசிங்கம் என்ற பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. காதலுக்குப் பாலியல் தொடர்பான விளக்கம் தரும் பாத்திரமான தியாகராசாவும் உயர்வர்க்க ஆசைகொண்ட ஒழுக்கமற்ற பெண்ணுகத் திலகவதியும் நடுத்தரவர்க்கத்தின் வெவ்வேறு வகை மாதிரிகள் எனலாம்.
"1956 - 60 காலப்பகுதிக் கொழும்பு நகர நடுத்தர வர்க்கக் குடும்பப் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் இந்நாவலிற் சமகால அரசியற் போக்குத் தொடர்பான சிந்தனையோட் டங்களும் இடம்பெறுகின்றன. 1958ஆம் ஆண்டின் இனக் கலவரம் கதைக்கு ஒரு திருப்புமுனையாக அமைகின்றது. யாழ்ப்பாணச் சமூகக் களமும் கதையில் சித்திரிக்கப்படுகிறது. சடங்கு நாவலிலே கண்ட சமுதாயச் சூழ்நிலையே இதிலும் காணப்படுகிறது. இரண்டும் ஒரே காலப்பகுதியைச் சித்திரிப்பன என்பதாற் புதுமையில்லை. இந்நாவலிற் கதையம்சத்திற்கு மேலாக வர்க்க உணர்வுப் பிரசாரமும் சமுதாய விமர்சனக் கருத்துக்களும் துருத்திக் கொண்டு நிற்கின்றன.

சமுதாய விமர்சனக் காலம் 97
மண்ணும் மக்களும் நாவல் நிலவுடைமையாளருக் கெதிரான விவசாயிகளது போராட்டத்தைச் சித்திரிக்கும் கதையம்சத்தைக் கொண்டது. விவசாயிகள் தொடர்பான கதையாதலால் விவசாயப் பிரதேசங்களான கிளிநொச்சி, வவுனியா இரண்டிண்டிற்குமிடைப்பட்ட பகுதியைச் சார்ந்த வையாக அரசங்குடி, பழங்குடியிருப்பு என்னுமிரு கற்பனை யூர்களைப் படைத்துக் கதைகூறும் ஆசிரியர் அப்பிரதேசங்களை அவற்றுக்குரிய இயற்கைச் சூழலும் மண்வாசனையும் பொருந்தச் சித்திரிக்கவில்லை. கதையில் நடைபெறுவதாகக் காட்டும் விவசாயிகளின் போராட்டம் ஒரு கற்பனைப் போராட்டமாகும். வர்க்க உணர்வுகள் கூர்மையடைந்த நிலையில் இனிமேல் என்றே ஒருநாள் நடைபெறக் கூடிய அப்போராட்டத்தை இன்றே நடைபெறுவதாகக் காட்டி யுள்ளமை சமகால சமூக வரலாற்றுடன் முரண்படுகின்றது. பிரசார நோக்கின் ஆதிக்கமும் தத்துவச் செறிவான உரை யாடல்களும் கதையோட்டத்தைப் பாதிக்கின்றன. வர்க்க போதமளிப்பவனக வரும் மாதவன் என்ற பாத்திரம் வழக்கம் போல ம ஒ சேதுங்கின் கருத்துக்களைக் கூறுவது மட்டு மல்லாமற் சி. என். அண்ணுதுரையின் கருத்துக்களையும் எடுத்துக் காட்டுகிருன். இது ஒரு மாற்றம் எனலாம். தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழக வாசகர்களைக் கவருவதற்காக இவ்வாறு அண்ணுதுரைக்கும் முக்கியத்துவம்
கொடுத்தாரோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
N
ஏனைய நாவல்களிலே தமது குரலாக அமையும் பாத்திரங்கள் முலம் பாராளுமன்ற ஜனநாயக முறையினைக் கண்டித்துத் தொழிலாளர் போராட்டத்தைத் தூண்டி நின்ற இவர் இந்நாவலிலும் அதனையே வற்புறுத்துகிருர். 1970ஆம் ஆண்டுத் தேர்தல் காலத்தில் நிகழும் இந்நாவலின் கதையில் இடதுசாரி ஐக்கிய முன்னணியைத் தேசிய முதலாளித்துவம் எனக் கண்டிக்கும் போக்கைக் காணலாம்.
1971ஆம் ஆண்டுப் பயங்கரவாத இயக்கம் அதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்த தகவல்கள் நாவலிலே தாடிக்காரத் தீவிரவாதிகள் பற்றிய செய்திகளாகக் கூறப் பட்டு அவர்களது போக்கும் தமது போக்கும் வேறு என்பதும் தெரிவிக்கப்படுகின்றது.

Page 62
98 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
நிலவுடைமையாளராக அமையும் நடராசபிள்ளை உடையார் கொலைகாரணுகவும் பெண்ணுசையுடையவ ஞகவும் கூறப்படுகிறர். அவருக்கெதிரான போராட்ட உணர்வை விவசாயிகளிடையே வளர்க்கிருன் மாதவன். இவனது உரையாடல்களில் சர்வதேச உரிமைப்போராட் டங்களும் புரட்சிச் செய்திகளும் இடம்பெறுகின்றன.
உடையாருக்கெதிரான போராட்ட முயற்சி விவசாயிகள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகி யோரை இணைத்து மேற்கொள்ளப்படுகிறது. சட்டத்தை நிலைநாட்ட வந்த பொலிஸார் உடையாரின் விருந்தின ராகின்றனர். இதனைக் கூறுவதன் மூலம் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் ஆட்சியும் நிலவுடைமையாளருக்குச் சார்பான தாகவேயுள்ளதென்பது புலப்படுத்தப்படுகிறது. போராட்ட உணர்வுடன் அரிவாள். கத்தி, பொல்லு, கிறிஸ், கோடரி, மண்வெட்டி, அலவாங்கு, குத்தூசி, முள்முருக்கந்தடி, கல்லு, மிளகாய்பொடி, ஆகியவற்றுடன் மக்கள் கொதித் தெழுவதான காட்சியுடன் நாவலின் கதை நிறை வெய்துகிறது.
சி. சுந்தரராஜாவின் மழைக்குறி (1975) நாவல் முதலாளி வர்க்கத்திற்கெதிராகத் தொழிலாளர் திரண்டெழவேண்டு மென்ற கருத்தை உணர்த்தும் வகையிலே தொழிலாளர் பிரச்சினைகளை முன்வைத்து எழுதப்பட்டது. கம்பளையி லுள்ள கடையொன்றிற் சிப்பந்திகளாகப் பணிபுரியும் சின்னத்தம்பி, இக்பால், தேவராசா, ஜெயசிங்கா முதலிய வர்கள் வர்க்க உணர்வுடன் முதலாளிகளுக்கெதிராக ஒன்று படுகின்றனர். அரசியல் பொருளாதாரக் கருத்துக்கள் நிறைந்த உரையாடல்கள் மூலமும் சமூகநிலை விவரண மூலமும் கதை வளர்த்துச் செல்லப்படுகிறது. சின்னத்தம்பி பொலிசாரின் தாக்குதலுக்கு ஆளாகி இறக்கும் வேளையில் அருகில் நின்ற இக்பாலின் உள்ளத்திற் புதிய போராட்ட உணர்வு தலையெடுக்கிறது. 1970ஆம் ஆண்டைப் பின்னெல்லை யாகக் கொண்ட இந்நாவலின் கதையிலே தொழிலாளர் வாழ்வின் துயரங்கள் விபரிக்கப்படுகின்றன. யாழ்ப்பாணப்

சமுதாய விமர்சனக் காலம் 99
பிரதேச சீதனப்பிரச்சினைகளும் தொட்டுக்காட்டப்படு படுகின்றன; புகையிலைப் பயிர்ச் செய்கையாளர் துயரும் புலப்படுத்தப்படுகின்றது.
சமகால அரசியல் நிலை இந்நாவலில் விமர்சிக்கப்படு கிறது. சர்வதேசப் பிரச்சினைகளும் உரையாடல்கள்மூலம் நாவலில் இடம் பெறுகின்றன. உள்நாட்டில் பூரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசியமய முயற்சிகள் வெறும் கண் துடைப்பு எனப்படுகிறது. தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ் மனுேபாவங்களும் உரையாடல்களில் இடம் பெறுகின்றன.
இந்நாவலிற் கதையம்சத்தினை விடக் கருத்துக்களே துருத்திக் கொண்டு நிற்கின்றன. அக்கருத்துக்களை வலி யுறுத்தும் தேவைக்கேற்பச் சம்பவங்கள் அமைக்கப்பட்டன போலத் தெரிகிறது. தத்துவார்த்த நாவலான இதன் கதை யம்சம் நிறைவுறவில்லை.
இக்காலப் பகுதியில் சமுதாய விமர்சன நோக்கில் இளங்கீரன் வீரகேசரியில் எழுதிய அவளுக்கு ஒரு வேலை வேண்டும் (1972) என்ற தொடர் நாவல் நூல்வடிவம் பெறவில்லை. Y
கொழும்பில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டுப் பிரச்சினையைப் பொரு ளாகக் கொண்டு காவலூர் ராசதுரையால் எழுதப்பட்டுத் தினகரனில் தொடராகவந்து பின் நூல்வடிவம் பெற்ற வீடுயாருக்கு? (1968) என்ற குறுநாவலில் முதலாளி வர்க்கம் தனது வர்க்கநலனையே பேணும் என்ற செய்தி அமைந் துள்ளது. அப்புஹாமி முதலாளியின் வீட்டிற் குடியிருக்கும்
இந்தியரான சந்தனநாடார், யாழ்ப்பாணத்தவரான தம்பையர், லலிதா, சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு வீட்டை வாடகைக்குக் கொடுக்கிருர், டி. ஆர். பி. காலாவதி
யானதும் சந்தனநாடார் குடும்பம் தலைமறைவாகியது. வீட்டுப் பிரச்சினையாலே துன்புற்ற தம்பையர் குடும்பம் அந்த வீட்டை பெற்றுக்கொள்ள முயல்கிறது. அவ்வேளையில் அப்புஹாமி முதலாளி வேலையாட்களைக் கொண்டு வீட்டை இடித்து விடுகிருன்.

Page 63
100 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் -
சுதந்திரம் பெற்று இருபதாண்டுகளாகியும் (1968வரை) அடிப்படைத் தேவைகளைப் பெற வசதியற்ற நிலையில் வாழ்பவர்களைப் பாத்திரங்களாகக் கொண்டு எழுதப்பட்ட குறுநாவலான செ. யோகநாதனின் இருபது வருஷங்களும் முன்று ஆசைகளும், மண்ணிலிருந்து வானத்தை எட்டித் தொட'முயலும் கீழ் நடுத்தர வர்க்கம் அம்முயற்சியிலே தோல்விகண்டு மனமுடைவதைச் சித்திரிப்பது. பல்கலைக் கழக மாணவனன சுமணதாசவின் தற்கொலையில் முடியும் வாழ்க்கை இதற்கு எடுத்துக்காட்டாகின்றது. யதார்த்த நிலையை உணர்ந்து, வசதியற்றவர்களுக்காகப் போராடும் இயக்கங்களுடன் தன்னை இணைத்துக்கொண்டு உழைப்பதே செயற்பாலது என்பது இது குறுநாவல் தரும் செய்தியாகும். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த காலப் பகுதியிற் பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் நிலவிய மனநிலையை இக்குறுநாவல் பிரதிபலிக்கிறது.
செ. யோகநாதனின் குறிப்பிடத்தக்க மற்ருெரு குறு நாவலான தோழமை என்ருெரு சொல் யாழ்ப்பாணப் பிரதேச மீனவக் களத்தினைப் பகைப்புலமாகக் கொண்டது. முதலாளியொருவர் தொழிலாளர்கட்கு விளைவிக்கும் இன்னல்களை விபரித்து, அம்முதலாளிக்குச் சார்பாக நின்ற தொழிலாளியொருவன் ஈற்றில் வர்க்க உணர்வு கைவரப் பெற்றவனுகத் தொழிலாளி வர்க்கத்தின் சார்பிற் போராடத் துணிவதாக இக் குறுநாவலின் கதைப்போக்கு அமைகின்றது. "1963-72 இடைப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட இவ்விரு குறுநாவல்களும் ஒளி நமக்கு வேண்டும் (1963) என்ற குறுநாவல் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
இக்காலப் பகுதியிலே வர்க்க உணர்வை முதன்மைப் படுத்தி எஸ். அகஸ்தியர், கே. டானியல், தெணியான் (கே. நடேசன்) முதலியோர் பல குறுநாவல்களை எழுதினர். அகஸ்தியரின் மூன்று குறுநாவல்கள் இருளினுள்ளே. (1968) என்னும் தொகுதியாக வெளிவந்துள்ளன. சஞ்சிகைகளில் வெளிவந்த கே. டானியலின் மனங்கள் தானுக மாறுவதில்லை (1975) தெணியானின் பிஞ்சுப்பழம்

சமுதாய விமர்சனக் காலம் 101
(1971) ஆகிய குறுநாவல்கள் நூல் வடிவம் பெறவில்லை. காவலூர் எஸ். ஜெகநாதனின் கலட்டுத் தரை (1977) சிறு கதைகள் சிலவற்றுடனிணைந்து நூல் வடிவம் பெற்றுள்ளது.
சமகால சமூகத்திற் காணப்படும் பொருளாதார ஏற்றத் தாழ்வுப் பிரச்சினைகளை நாவலுக்குப் பொருளாகக் கொண்ட எழுத்தாளர்களிற் சிலர் அப்பிரச்சினைகள் தனிமனித உறவு முறைகளில் விளைவிக்கும் தாக்கத்தை மனிதாபிமானக் கண் கொண்டு நோக்கினர். பிரச்சினைகளுக்குக் காரணமான சமூக அமைப்பை ஆராயும் முயற்சியில் ஈடுபடாமல் அவற்றின் வெளிப்பரிமாணங்களை மட்டும் சித்திரிக்க முயன்ற இவர்கள் மாறிவரும் புதிய தலைமுறைச் சிந்தனையோட்டங் களுக்கு முதன்மை தந்தனர். இவ்வகையில் எழுதியவர் களுட் செங்கை ஆழியான், எ. ரி. நித்தியகீர்த்தி, ஞான ரதன் (வை. சச்சிதானந்தசிவம்) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
செங்கை ஆழியான் ஈழநாடு நாவல் போட்டிக்கு எழுதிய போராடப் பிறந்தவர்கள் நாவல் 1971 - 72 இல் ஈழநாடு பத்திரிகையிலே தொடர் கதையாக வெளிவந்து 1976 இல் சிற்சில மாற்றங்களுடன் இரவின் முடிவு என்ற தலைப்புடன் வீரகேசரி பிரசுரமாக நூல் வடிவு பெற்றது. சுருட்டுத் தொழிலாளியான ஐயாத்துரை வறுமையிலும் செம்மையாக வாழமுயல்கிருர், கிடைக்காத ஆடம்பரங்கட்காக ஏங்கும் அவரது மனைவி பாக்கியலட்சுமி குடும்பப் பொறுப்பை அலட்சியம் செய்கிருள். குடும்பப் பொறுப்பை விட்டு விலகிச் சென்ற மூத்தமகன் துரைராசா வாழ்க்கையில் ஏமாற்றப் பட்டுத் தோல்வி காண்கிருன். மகள் மகேஸ்வரியின் திரு மணப் பேச்சுத் தடைப் படுவதுடன் அவளைப்பற்றிய அவ தூறும் ஊரில் பரவுகிறது. இத்துயரங்களைத் தாங்க முடியாமல் ஐயாத்துரை உயிர்துறக்கிருர், இளைய மகன் சண்முகநாதனும் மகேஸ்வரியும் குடும்பப்பொறுப்பை ஏற்றுக் கண்ணியத்துடன் வாழமுயல்கின்றனர். இக்கதையம்சம் உணர்ச்சிப் போராட்டங்களுடனும் தொழிலாளர் வாழ்வின் துன்பியல் விவரணங்களுடனும் வளர்த்துச் செல்லப் பட்டுள்ளது.

Page 64
102 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
எ. ரி. நித்தியகீர்த்தின் மீட்டாத வீனை (1974) நாவல் யாழ்ப்பாணப் பகுதிக் கிராமமொன்றின் சமூக மாந்தரை அவர்களது இயல்பான குணும்சங்களோடு முன் நிறுத்த முயல்கிறது. பணத்திமிர், சண்டித்தனம் என்பவற்ருல் மனிதப் பண்புகளைச் சீரழிக்க முயல்பவர்களுக்கும் வறுமை யாலும் பாலியல் உறவு முறையின் பிறழ்வுகளாலும் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்கின்ற சமுதாயத்திலே ஓசைப் படாமலே ஒரு சமூக மாற்றம் நிகழத் தொடங்குகிறது. ஆதரவற்ற இளம் பெண்ணுண தேவி தன்னைவிட இளைய வஞன மகாதேவனைக் காதலிக்கிருள். பணக்காரரான கணபதிப்பிள்ளை அவளை மணம்புரிய விரும்புகிருர், திருமண மாகாமலே தாய்மையெய்தியவள் தங்கம், அவளுடைய மகன் இளங்கோவை மகாதேவனின் தங்கை செல்வம் காதலிக்கி ருள். வறுமையும் சமூக இழிப்புரைகளும் முறையே தேவியை யும் இளங்கோவையும் பாதிக்கின்றன. இவற்றை மீறி மகா தேவனும் தேவியும், இளங்கோவும் செல்வமும் இணையும் வேளையிற் கணபதிப்பிள்ளையின் சூழ்ச்சியால் தேவி மீட்டாத வீணையாகவே உயிர் துறக்கிருள். உணர்ச்சி முனைப்புக்க ளுடனும் சமுதாய மாற்றச் சிந்தனைகளுடனும் நடப்பியல் புக்குப் பொருந்த வளர்த்துச் செல்லப்பட்ட இந்த நாவலின் இறுதியில் அமைந்த தேவியின் மரணம் நாவ லுக்குச் செயற்கையான முடிவாகவேயுள்ளது. மீட்டாத வீணை என்ற தலைப்புக்குப் பொருத்தமான வகையில் கதையம்சம் நிறைவு பெறவேண்டும் என்ற கருத்து இதற்குக் காரணமாகலாம்.
ஞானரதனின் ஊமை உள்ளங்கள் (1976) நாவல் பொரு ளாதார ஏற்றத் தாழ்வுகளாற் காதலுணர்வுகளை உள் ளடக்கிக் கொண்ட ஊமை உள்ளங்களின் கதை, சந்திர சேகரனும் உறவுமுறைப் பெண்ணுன அகிலாவும் ஒருவரை யொருவர் உள்ளத்தால் விரும்புகின்றனர். குடும்பத் தேவைகள் காரணமாகச் சந்திரசேகரன் தன்னைவிட அந்தஸ்தில் உயர்ந்த ஜெயராணியை மணம்புரிய நேர் இன்றது. அந்தஸ்து வேறுபாடு "சந்திரசேகரன்-ஜெயராணி குடும்ப உறவில் முரண்பாடுகளைத் தோற்துவிக்கின்றது. பல இன்னல்களுக்கு மத்தியில் அகிலா உழைத்து வாழ்கிருள்.

சமுதாய விமர்சனக் காலம் 103
தன்னை மதிக்காத மனைவியைப் புறக்கணித்து அகிலாவுடன் இணைய முயலும் சந்திரசேகரன மனைவி தன் அந்தஸ் துணர்வினின்று இறங்கி வந்து மீட்டுக் கொள்கிருள். யாழ்ப்பாணப் பகுதிக் கிராமங்களில் இன்றும் நடைபெறும் கதையாக இதைக் கொள்ளலாம்.
சமகால சமூக பொருளாதாரப் பகைப்புலத்திலே தனிமனித உணர்வுகளை முதன்மைப் படுத்திப் பல நாவல் களும் குறுநாவல்களும் எழுதப்பட்டுள்ளன. 1958ஆம் ஆண்டின் இனக் கலவரத்தாற் பாதிக்கப்பட்டுத் தருமபுரம் கிராமத்திற் குடியேறிய சமூகத்தினரைச் சார்ந்த குடும்பக் கதையான மணிவnணனின் யுகசந்தி (1969) தினகரனிலே " தொடராக வெளிவந்து 1972இல் வீரகேசரி பிரசுரமாக நூலுருப் பெற்றது. எஸ். அகத்தியர் எழுதிய திருமணத் திற்காக ஒரு பெண் காத்திருக்கிருள் (1976) நாவல் காதலில் தோல்வி கண்ட பெண்ணுெருத்தி புதிய சமுதாய மாற்றத்திற் கான போராட்டத்திலே தன்னை இணைத்துக் கொள்வதைக் கதைப் பொருளாகக் கொண்டது. இதிற் சமூக உணர்வை விடத் தனிமனித உணர்வுகளே முக்கிய இடம் பெறுகின்றன. 'நந்தி எழுதிய தங்கச்சியம்மா (1975) யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மருத்துவ மாதாகப் பணி புரியும் ஒரு மலையகப் பெண்ணின் கதையாரும்.
யாழ்ப்பாணப் பிரதேசச் சீதனப் பிரச்சினையின் பகைப் புலத்திலே தனிமனித உறவுகளை முதன்மைப் படுத்தி எழுதப் பட்ட துரை மனேகரனின் பாவையின் பரிசு (1966) நடுத்தர வர்க்கக் குடும்பக் கதையாக அமைகின்றது. இஸ்லாமிய சமூகப் பின்னணியில் என். எம். ஹனிபா ஏமாற்றம் (1962), மர்மக் கடிதம் (1963), இலட்சியப் பெண் (1974) ஆகிய தனி மனித உணர்வு நாவல்களை எழுதினர். யாழ்ப்பாணப் பிரதேச சமூகப் பகைப்புலத்தில் மனிதாபிமான உணர்வு
கட்கு முதன்மை தந்தெழுதப்பட்ட குறுநாவல்களில் யாழ்
நங்கை (திருமதி அன்னலட்சுமி ராசதுரை)யின் விழிச்சுடர், வேப்பமரம் ஆகியன குறிப்பிடத்தக்கன. இவை விழிச்சுடர் (1970) என்ற தலைப்பில் நூலுருப் பெற்றுள்ளன.

Page 65
104. ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
செ. கணேசலிங்கனும் சி. சுதந்திரராஜாவும் பிரச் சினைகளுக்குத் தீர்வு கூறத் தாம் சார்ந்த மார்க்சியக் கோட் பாட்டைத் துணை கொள்கின்றனர். செவ்வானம் நாவலிலே பாராளுமன்ற ஜனநாயகத்தில் அவநம்பிக்கை தெரிவிக்கப் பட்டது. மண்ணும் மக்களும் நாவலிலும் இது புலப்படுத்தப் படுவதுடன் கற்பனையான விவசாயிகள் போராட்ட மொன்றும் நடைபெறுகின்றது. நடுத்தரவர்க்கத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கூறும் வகையில்,
"பணக்காரரை நினைத்து ஏங்கி அவர்களைப் போல வாழப் பழகிவிடாதே. அது எல்லையில்லாக பெரு நெருப்புக்குள் இறக்கிவிடும். தொழிலாளர்களை நினைத்து அவர்களைப் போல வாழப் பழகினுல்தான் இன்றைய நிலையில் கடனில்லாது ஒரளவு சுரண்டலைக் குறைத்து வாழமுடியும். கீழே இறங்கி எமது வர்க்கத்தாரோடு பழகு. வர்க்க உணர்வை என்றும் மறத்துவிடாதே அதுதான் எதிர்கால வாழ்வுக்கு நம்பிக்கையும் பலமும் தரக்கூடியது. ’18
எனக் கணேசலிங்கன் பாலசிங்கம் என்ற பாத்திர மூலம் போதிக்கிருர். செ. யோகநாதனின் குறுநாவல்களிலும் இப்போதனையே புலப்படுத்தப் பட்டுள்ளது.
செங்கை ஆழியான், யாழ்நங்கை, ஏ. ரி. நித்தியகீர்த்தி முதலியோர் மாறிவரும் சமூக மதிப்பீடுகளிலும் புதிய தலை முறைகளின் "ஆண்மை"யிலும் தமது தீர்வுகளைச் சுமத்து கின்றனர்.
தோட்டத் தொழிலாளர் பிரச்சினை நாவல்கள்
ஈழத்துத் தமிழரிற் கணிசமான தொகையினர் மலை யகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள். இவர்களது வாழ்க்கை நிலையும் அதனேடொட்டிய பிரச்சினைகளும் ஏனைய பிரதேசங்களின் தமிழருடையவற்றிலிருந்து வேறு பட்டவை. எனவே இவர்களது பிரச்சினைகளைப் பொரு ளாகக் கொண்ட நாவல்கள் தனிப்பிரிவாக நோக்கப்பட வேண்டியவையாகின்றன.

சமுதாய விமர்சனக் காலம் 105
மலையகத்தில் இன்று பத்து இலட்சத்திற்குமதிகமாக வாழும் தோட்டத் தொழிலாளர்கள் பத்தொன்பதாம் நூற்றண்டின் நடுப்பகுதிக்குச் சற்று முன்பாகத் தென் னிந்தியாவினின்று ஈழத்துக் கோப்பித் தோட்டங்களுக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கும் கூலிகளாகக் கொண்டுவரப் பட்டவர்களின் பரம்பரையினராவர். ஈழத்தின் ஏற்றுமதி வர்த்தகத்தின் மிகப் பெரும்பகுதிக்கான உடலுழைப்பை வழங்கும் இத் தொழிலாளர்களின் குடியுரிமை 1948ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தாற் பறிக்கப்பட்டுவிட்டது. இதனல் நாடற்றவர்கள் என்ற அவலநிலையை எய்திய இவர்களிற் பெரும்பாலோரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகள் 1964ஆம் ஆண்டின் "சிறிமாசாஸ்திரி ஒப்பந்தத்திலிருந்து தொடர்கின்றன.
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயேயுள்ளது. சொந்த நிலமற்ற இவர்கள் தோட்டக் காணிகளிலே தரப்படும் "காம்பரா" எனப்படும் சிறு அறைகளிலே வாழவேண்டிய நிலையில் உள்ளனர். வறுமையும் தோட்டத்துரைமாரது அடக்கு முறையும் கணக்கப்பிள்ளை, கங்காணி முதலிய இடைநிலை அலுவலர்களின் அச்சுறுத்தல்களும் இத்தொழிலாளர்களின் அன்ருடப் பிரச்சினைகளாகும்.
இவ்வகை அடக்கு முறைகளிலிருந்தும் அச்சுறுத்தல் களிலிருந்தும் தொழிலாளர்களது நலன்களைப் பேணும் பொருட்டு உருவான தொழிற்சங்கங்கள் பல. இவை இவர்களது உரிமைக்குரலை ஒலிக்கின்றனவெனினும் இவர்களை ஒன்றிணைய விடாமற் பிரித்து வைத்திருக்கின்றன என்பதும் கருத்திற் கொள்ள வேண்டியதொன்ருகும். அவ்வகையிலே தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு இவையும் காரண மாகின்றன.
தோட்டத் தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினை களையும் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட இக்காலப் பகுதி நாவல்களாகத் திருமதி கோகிலம் சுப்பையாவின் தூரத்துப்பச்சை (1964), யோ. பெனடிக்ற் பாலனின் சொந்தக்

Page 66
06 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
காரன் ? (1968), தொ. சிக்கன ராஜுவின் தாயகம் (1969), தெளிவத்தை ஜோசேப்பின் காலங்கள் சாவதில்லை (1974), கே. ஆர். டேவிட்டின் வரலாறு அவளைத் தோற்றுவிட்டது (1976) ஆகியன எமக்குக் கிடைக்கின்றன. தோட்டத் தொழிலாளரின் பிரச்சினைகளின் பகைப்புலத்திற் காதலைப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட 'நந்தி’யின் மலைக் கொழுந்து (1962) நாவலையும் இவற்றுடன் இனத்து நோக்கலாம்.
பத்தொன்பதாம் நூற்ருண்டின் நடுப்பகுதியிலே தென் இந்தியாவின் கிராமப்புறமொன்றிலிருந்து ஈழத்தின் தேயிலைத் தோட்டங்களை நாடிப் புலம் பெயர்ந்து வந்த ஒரு குடும்பத் தின் பரம்பரை வரலாருக அமைந்துள்ளது தூரத்துப் பச்சை நாவல். அவ்வண்ணம் புலம் பெயர்ந்து வந்தபோது அத் தொழிலாளர்களின் மனநிலை எவ்வாறிருந்ததென்பதனைத் திருமதி கோகிலம் சுப்பையா,
"அவன் கற்பனையெல்லாம் இலங்கைக்குப் போய்ப் பணத்தைக் குவித்துக் கொண்டு வந்து இங்கே பெரிய வீடு வாசல் கட்டிக்கொண்டு நிம்மதியாக வயது சென்ற காலத்தில் வாழவேண்டும் என்பதுதான். அன்றியும் அங்குபோய் நிம்மதியாகப் பசி, பட்டினியின்றி இன்ப மாக வாழ்ந்து அடிக்கடி திரும்பி ஊருக்கு வந்து போவதாகவும் அவன் உள்ளத்தில் கற்பனைகள் சுற்றி வட்டமிட்டன. எத்தனை எத்தனையோ இன்பக்கனவுகள். அதாவது தேயிலை காப்பிச் செடிகளின் துரர்களில் பொற்காசுகளில் குவிந்து கிடப்பதாகவும் அதை அள்ளி அள்ளி ஊருக்குக் கொண்டு வருகிறது போலும் சேந்தூர்க் கிராமத்தில் எல்லோரும் இவனை அதிசயத் தோடு பார்ப்பதாகவும் இவனுக்குத் தனியே மரியாதை அளிப்பதாகவும் வள்ளியை நல்ல இடத்தில் மணம் முடித்து நல்ல நிலையில் கண்டு களிப்பதாகவும் அவன் எத்தனை எத்தனையோ கற்பனைக் கனவுகள் கண்டு வந்தான். ’18

சமுதாய விமர்சனக் காலம் 107
என வேலன் என்ற தொழிலாளியை முன்வைத்துப் புலப் படுத்துகிருர். இத்தகைய மனநிலையுடன்தான் பெரும் பாலான தொழிலாளர்கள் வந்து ஏமாற்றமடைந்து நிரந்தர அடிமைகளாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து மடிகின் றனர் என்பது கோகிலம் சுப்பையா காட்டும் வரலாழுகும். இவ்வாறு வாழ்ந்து மடியும் பரம்பரையினர் மீது தோட்டத் துரைமார்களும் கங்காணி, கணக்கப்பிள்ளை ஆகியோரும் செலுத்தும் அதிகார அடக்குமுறைக் கொடுமைகளை இவர் விபரிக்கிருர்.
சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலையிற் சம்பளக் கணக்கைப் பற்றிக் கேட்பதற்காக "ஆபீஸுக்குச் செல்லும் மூக்கன் என்ற தொழிலாளியைக் கங்காணி ஏசுகிருன்; துரை சவுக்கால் அடிக்கிருன். அப்படி அடித்து வருத்திய பின்பு குழப்பக்காரன் என்று குற்றஞ்சாட்டிப் பொலிஸ் நிலையத்திற்கு அனுப்புகிருன். அங்கு அவனுக்கு ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை கிடைக்கிறது. தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காக இணைந்து போராடு வதைத் தோட்டத் துரைமார் விரும்புவதில்லை. தொழிற் சங்க முயற்சிகளிலீடுபட்ட லட்சுமணன் என்ற தொழிலா ளியைத் தோட்டத் துரை வேலையினின்று நீக்கிவிடுகிருர், இவ்வகை முயற்சிகளிற் சட்டமும் பொலிஸ் படையும் தொழிலாளருக்குப் பாதகமாகவே அமைகின்றன என்பதைக் கோகிலம் சுப்பையா புலப்படுத்துகிருரர். உரிமை கோரிப் போராடுகிறவர்களைப் பொலிஸ் படை சுட்டுக் கொல்லும் கொடுமை நாவலின் இறுதியிற் சித்திரிக்கப்படுகிறது.
துரைமார் கங்காணிமார் கணக்குப்பிள்ளைமார் என்போ ரின் அடக்குமுறைக் கொடுஞ்செயல்களிலொன்ருகப் பெண்களது கற்பொழுக்கத்துக்கு ஏற்படும் இடையூறும் இந்நாவலில் எடுத்துக் காட்டப்படுகின்றது. சிவகாமி என்ற பெண் ஒழுக்கந் தவறியவளாக வாழ்கிருள். அவளோடு கண்காணியும் கணக்கப்பிள்ளையும் தொடர்பு கொள்ள
முயல்வதைக்காட்டுமிடத்து,

Page 67
08 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
'கங்காணியின் கனல்பாயும் கண்கள் அவளை அடிக்கடி ஊடுருவுவது அவனுக்குத் தெரியும். கணக்கப் பிள்ளை கை நடுங்கத் தொடையைச் சொரிந்துகொண்டே புடைக்கும் நரம்புகளைத் தளர்த்த முயன்று விம்மிப் பொருமிப் பெருமூச்சுவிட்டு, பசிதீர உணவருந்த விரும் பும் மனிதனைப்போல அவளைக் கண்கொட்டாது பார்த் துக் கொண்டு நிற்பதும்.'17.
எனவருணிக்கும் கோகிலம் சுப்பையா, கங்காணிமாரும் கணக்கப்பிள்ளைமாரும் கொடுக்கும் சிறுதொகைப் பணத்திற் காகவும் சலுகைகளுக்காகவும் விட்டுக்கொடுக்கும் சில பெண் களையும் அவற்றை மறுத்துத் தன்மானத்துடன் வாழ விரும்புவோர் பலரையும் காட்டுகிறர்.
தூரத்துப் பச்சை நாவலின் கதை நான்கு தலைமுறை களின் வரலாழுகும். ஈழத்தின் தேயிலைத் தோட்டத்திற் கூலிவேலை செய்தற் பொருட்டுப் புலம் பெயர்ந்து வந்த வேலனுடன் வரும் அவனது சிறுபெண்ணுன வள்ளிதான் நான்கு தலைமுறைகளையும் தொடுத்துவைக்கும் பாத்திரமாக அமைகிருள். அவள் பெற்ற அனுபவங்களின் ஊடாகவே கதை வளர்ந்து செல்கின்றது. தொழிலாளர் குடும்பங்களின் பன்முகப்பட்ட வாழ்க்கையம்சங்களையும் தொகுத்துக்காட்ட முயல்கிருர் ஆசிரியர். ஈழம் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை யடைவதற்கு முற்பட்ட காலப்பகுதியோடு கதை நிறைவு பெற்றுவிடுகின்றது. இதனுல் பிற்காலத் தொழிற்சங்கப் போராட்டச் செய்திகளை அந்நாவலிற் காணமுடியாது. வள்ளியின் மூன்ருவது தலைமுறையினரான மாரி, லட்சுமணன் ஆகியோர் தொழிற்சங்கமொன்றிற் சேர்ந்து துரைமாரின் அடக்குமுறைக்கு ஆளாகும் செய்தி மட்டும் காணப்படு கின்றது.
ஒரு சமுதாய வரலாறு என்று கூறத்தக்கவகையில் அமைந்த இந்நாவலின் கதையம்சத்தில் அவலச்சுவை விஞ்சியுள்ளது. புதுமைப்பித்தன் எழுதிய "துன்பக்கேணி 18 என்ற சிறுகதை ஒரு சில மாற்றங்களுடன் நாவலாக விரிந் துள்ளது என்று கருதும் வகையில் இந்நாவலின் கதைப்

சமுதாய விமர்சனக் காலம் 109
போக்கு அமைந்துள்ளது. மலையகத் தொழிலாளரின் வாழ்க்கை முறைகளை அவர்களுடன் தொடர்புகொண்டு வாழ்ந்து அறிந்தவரான கோகிலம் சுப்பையா அம்மக்களின் பழக்கவழக்கங்களையும் குணம்சங்களையும் பிரதேச இயற்கை யுடன் பொருந்தச் சித்தரித்துள்ளார்.
தூரத்துப்பச்சை காட்டும் காலப்பகுதியை அடுத்து ஏறத் தாழக் கால் நூற்ருண்டுக் காலத்திற்குப் பிற்பட்ட தோட்டத் தொழிலாளர் வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சித்திரிப்பன வாக ‘நந்தி’யின் மலக்கொழுத்து, யோ. பெனடிக்ற்பாலனின் சொந்தக்காரன்? தெளிவத்தை ஜோசப்பின் காலங்கள் சாவதில்லை ஆகியன அமைகின்றன. 1962இல் தினகரனில் தொடராக வந்த மலைக்கொழுந்து 1964இல் நூல்வடிவு பெற்றது. தொழிலாளர்கள் மத்தியிலே தொழிற்சங்கப் பிரிவினைகள் வளர்ந்திருந்த சூழ்நிலையினைப் பகைப்புலமாகக் கொண்டெழுதப்பட்ட இந்நாவல்களில், மலைக்கொழுந்து தொழிலாளர் பிரச்சினைகளின் பின்னணியில் அமைந்த காதற் கதையாகும்.
தொழிலாளியான மலையப்பன் முத்துவீராயியைக் காதலிக்கிருன். தோட்டத்தின் தொழிற்சங்கங்களுக் கிடையிலிருந்த போட்டி இருவரும் இணைவதற்குத் தடை யாகிறது. தோட்ட டிஸ்பென்ஸர் "பதி தீவினை சூழ்வோ னகி முத்துவீராயின் தந்தைக்கும் மலையப்பனுக்குமிடையிற் பகைமை மூட்டுகிருன். சின்னத்துரையான மகராஜன் முத்து வீராயியை மணம்புரியத் திட்டமிடுகிருன். மலையப்பனை வீழ்த்துவதற்காகத் திட்டமிடப்பட்டகலகம் அவனது தங்கை போன்ற வள்ளியை உயிர்ப்பலி கொள்கிறது. மகாராஜனை மணமுடிக்க மறுத்து முத்துவீராயி மலையிலிருந்து வீழ்ந்து உயிர்துறக்கிருள். இக்கதையம்சத்திற்குத் துணையாக மலையக மக்களின் வாழ்க்கைமுறை பற்றிய விவரணங்கள் அமை கின்றன. மருத்துவ நிபுணரான ஆசிரியர் தமது தொழின் முறையதுபவங்களையும் நாவலிற் புலப்படுத்தியுள்ளார். மலையகத் தொழிலாளரது வாழ்க்கையை அநுதாபத்துடன் நோக்கும் யாழ்ப்பாணத்து நடுத்தரவர்க்கத்தர் ஒருவரின் கண்ணேட்டத்தில் எழுதப்பட்ட இந் நாவல் அத் தொழி

Page 68
110 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
லாளர்க்கும் அவர்களைச் சுரண்டிவாழும் துரைமார் கங்காணி மார் முதலியோருக்குமிடையிலான முரண்பாடுகளைச் சித்தி ரிக்க முயலவில்லை. ஆயின் தொழிற் சங்கங்களுக்கிடையில் நிலவிய போட்டியை விளக்க முயல்கிறது. இப்போட்டியும் ஒரு காதலுக்குத் தடையாக அமைகிறதென்ற வகையிலேயே கதையில் முக்கியத்துவம் பெறுகிறது.
தோட்டத் தொழிலாளர் தமது வாழ்க்கைத் தேவை களுக்காகத் துரைமாரிடம் உரிமைக்குரல் எழுப்புவதையும் தொழிற்சங்க முயற்சிகள் மூலம் போராட்டம் நடத்துவதை யும் விவரிக்கும் யோ. பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன்? நாவலில் அவ்வுரிமைப் போராட்டமே கதையம்சமாகவும் உள்ளது. தோட்ட-த் துரைமாராற் கட்டிக் கொடுக்கப்படும் காம்பரா" என்ற சிறு அறைக்குள்ளேயே தங்களது இல்வாழ்க்கையதுபவங்களை நிறைவு செய்துகொள்ளவேண்டிய அவலநிலையே இக்கதையின் அடிப்படை- தாய், தந்தை வயது வந்த பெண்கள், திருமணம் செய்த இளம்தம்பதிகள் குழந்தைகள் ஆகிய பலருடனும் காம்பரா ஒன்றிலேயே வாழவேண்டிய நிலையிலுள்ள தொழிலாளர்பலருள் ஒருவ ஞன சின்னக்கலப்பன் தனது மகன் வீரமுத்துவுக்கு திரு னம் செய்துவைக்க முனையும்போது இடவசதிப்பிரச்சினை தலைதூக்கிறது.
"தானே தன் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள முனையும் நாட்களில் தனக்கேற்படும் கஸ்டத் தையும், மற்ற லயங்களில் உள்ளவர்களின் அநுபவங் களையும், அவை ஏற்படுத்தும் மன நிஸ்டுரங்களையும் அவன் அறிவான். அந்தக் காம்பராவில் வீரமுத்துவும் கல்யாணம் முடித்துவந்தால் ?. பருவமடைந்த பொட்டு, நட்சத்திரம், வயதுவந்த பயலுகள். ஏற் படுத்தும் அவஸ்தைகளையும் சங்கடங்களையும் அவளுல் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை."19
இவ்வகையில் தயங்கிய அவன் துரையிடம் புதிய "காம்பரா கேட்க வீரமுத்துவை அனுப்புகிருன், துரை,

சமுதாய விமர்சனக் காலம் .- 111.
"காம்பரா எங்கேயிருக்குது ? இந்தா உள்ளதைக் கொண்டு நல்லா இருக்கப் பார்க்கணும். அதுதான் கூலிக்காரங்க படிச்சுக்கணும் தெரியுதா ?"29
எனப் போதனை செய்து வீரமுத்துவைத் திருப்பியனுப்பு கிருர், தன் முயற்சி பலிக்காததைக் கண்ட சின்னக்கலப்பன் தானே முனைந்து புதுக் "காம்பரா கட்டுகிருன். துரையின் ஆட்கள் அதைச் சிதைக்கின்றனர். காம்பரா கட்டும் உரிமை மறுக்கப்பட்ட நிலையிற் கலங்கும் சின்னக்கலப்பனும் ஏனைய தொழிலாளரும் உரிமைக்காகப் போராட முனை கிருர்கள். ஆயுதந் தாங்கிய பொலிஸ்படை இவர்களது போராட்டத்தை அடக்க வருகிறது.
தொழிலாளரின் இணைந்த போராட்டம் சிவப்புக்கொடிச் சங்கம் என்ற தொழிற்சங்கமூலம் நடத்தப்படுகின்றது. இச்சங்கம் புரட்சிகரப் பாதைகாட்டும் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சார்ந்தது எனப்படுகின்றது.21 காங்கிரஸ் என்ற வொரு சங்கத்தைக் குறிப்பிட்டு அது துரைமாரை ஆதரிப்ப தென்றும் தொழிலாளர் நலனுக்கு எதிரானது என்றும் ஆசிரியர் பாத்திரங்கள் வாயிலாகப் புலப்படுத்துகிறர்.
தொழிலாளர் வாழ்க்கையின் அவல நிலையை விபரிக்கும் வகையில்,
"இலங்கையில் இன்று மிகக் குறைந்த சம்பளத் திற்கு அவலநிலையில் மோசமான வாழ்க்கை நடத்து பவன் தோட்டத் தொழிலாளி. இருக்கும் இடமோ இருள் குடியிருக்கும் காம்பரா ! அதுவும் துரை தயவில் : சாப்பாடோ சத்தற்றது. பிள்ளைகளுக்கோ ஒழுங்காகப் படிக்க வசதியில்லை. வயது சென்றவர்களுக்கோ பென்சன் இல்லை. மனித உரிமைகளே இல்லை."22
என்ற பிரசார அறிக்கை நாவலில் இடம்பெறுகிறது.
தோட்ட நிர்வாகத்தின் பல்வேறு ஊழல்களும் தொழிற்
சங்கங்களுக்கிடையிலான போட்டியும் துரைமாராலும் கணக்கப்பிள்ளைமாராலும் தோட்டப்பெண்களின் கற்புக்கு

Page 69
11 ஈழத்துத் தீமிழ் நீாவ்ல் இலக்கியம்
விளையும் பங்கமும் நாவ்லில் விபரிக்கப்படுகின்றன. பாராளுமன்ற ஜனநாயக முறைக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப் படுகின்றது. போராட்ட மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் எனப்படுகிறது.
இந்நாவலுக்கு முன்னுரையளித்த நாவலாசிரியர் செ. கணேசலிங்கன்
"எங்கோ எவரோ சொகுசாக வாழ்வதற்காக, பிறந்த நாட்டை விட்டு வந்து உழைத்து, பரம்பரை பரம்பரையாகத் தேயிலைச் செடிக்கு உரமாவதற்கு மட்டுமாகவே வாழ்ந்த மக்களின் இன்றைய வாழ்வை இந்நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது. இது ஒரு கற்பனை நாவலல்ல. யதார்த்த நாவல். தேயிலை ரப்பர்த் தோட்டங்களில் உருவாகி வரும் புயலைப் பலர் அறியார். அவற்றை அப்பகுதியிலேயே வாழ்ந்து, தற்போதைய தொழிலாளர் இயக்கங்களைப் பற்றி நன்கு அறிந்தவருமான பாலன் இந்நாவல் மூலம் காட்டுகிருர், "23 Y
என்பர்.
தோட்டத் தொழிலாளரது வாழ்க்கைப் பிரச்சினைகளை ஒரு சம்பளப் போராட்டத்தை மையமாக வைத்துக் சித்திரிப்பது தெளிவத்தை ஜோசப்பின் காலங்கள் சாவதில்லை நாவல். தொழிலாளரது சம்பளம் 'கிளாக்கர் முதலியோராற் சுரண்டப்படுகின்றது. அதற்கெதிராகத் தொழிலாளரைத் திரட்டி எதிர்ப்புத் தெரிவிக்க முயல்கிருன் ஆறுமுகம். கண்ணுசாமி, வீரமுத்து, கண்ணம்மா முதலியோர் இவ் வெதிர்ப்பில் இணைகின்றனர். தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறையையும் பொலிஸ் அட்டூழியங்களையும் மீறி, போலித் தொழிற்சங்கவாதிகளின் முகத்திரையைக் கிழித் தெறிந்து கிளார்க்கரின் சுரண்டலை அம்பலப்படுத்துகிருர்கள்.
இந்நாவலிற் பிரச்சினைக்கு அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக வீரம், காதல், சோகம் முதலிய உண்ர்ச்சி முனைப்புக்களுக்கு முதன்மைதரப்பட்டுள்ளது. அவ்வகையில்

சமுதாய விமர்சனக் காலம் 113
முதற்பாதி பிரச்சினைகளைச் சித்திரிப்பதாகவும் பிற்பாதி சம்பவச்சுவை பொருந்திய வீரசாகசக் கதையாகவும் அமைந்துவிட்டது. இந்நாவலில் எடுத்தாளப்பட்ட சம்பளச் சுரண்டல் காலாவதியானதொரு பிரச்சினையென்றும் தோட்டத் தொழிலாளரின் பிரதான எதிரியாகக் கிளார்க்கரைக் காட்டி, பெரிய துரையான ஆங்கிலேயனை நல்லவனுகக் காட்டுவது உண்மைக்குப் புறம்பானதென்றும் வகுப்புவாத உணர்வைத் தூண்டுவதாக அமைந்துள்ள தென்றும் இந்நாவல் பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளது.23 தொழிலாளரின் அண்மைக்கால "எரியும் பிரச்சினை'களான குடியுரிமை, வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள வசதியற்றநிலை முதலாளி வர்க்கத்தின் அடக்குமுறை என்பவற்றுக்கு இந்நாவலில் முக்கியத்துவ மளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாள ரது பிரச்சினைகளுக்கான திட்டவட்டமான தீர்வு இந்நாவலிற் புலப்படுத்தப்படவில்லை.
தோட்டத்துரையின் கொடுமைகளை எதிர்த்துப் பழிவாங்கமுயலும் ஒரு பெண்ணின் மனவுறுதியைக் காட்டும் வகையில் எழுதப்பட்டது கே. ஆர். டேவிட்டின் வரலாறு அவளைத் தோற்றுவிட்டது (1976) நாவல்.
தொ. சிக்கராஜுவின் தாயகம் (1969) என்ற குறு நாவலிற் குடியுரிமைப் பிரச்சினை தொடர்பான கருத்துக்கள் இடம்பெறுகின்றன. "சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கைப்படி தொழிலாளர் எந்தநாட்டின் குடியுரிமையைப் பெறுவது என்பது அவர்கள் முன்னுள்ள முக்கிய பிரச்சினைகளி லொன்று. இதனை இந்நாவல் தொட்டுக்காட்டுகிறது.
தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல்கள் பொதுவாக அவர்களது பல்வகை அவலங்களைக் கண்முன் நிறுத்தியுள்ளன. யோ. பெனடிக்ற் பாலன் அத் துயரங்களே வெல்வதற்குத் தொழிற்சங்க முறையிலான புரட்சிப் போராட்டத்தை முன்வைக்கிருர்.

Page 70
14 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
பாலியற் பிரச்சினை நாவல்கள்
சமுதாய விமர்சன நோக்கில் மனிதனை அவனது இயல்பான உணர்ச்சிகளுடன் இனங்காண முயன்ற எழுத் தாளர்களுட் சிலர் பண்பாடு, இலட்சியம் ஆகிய திரை களுக்குட் குமைந்துகொண்டிருக்கும் அவனது உணர்ச்சி களையும் ஆசாபாசங்களையும் திரைநீக்கிக் காட்ட விழைந் தனர். "ஆண்-பெண் உறவுத் தொடர்பான பாலியற் பிரச்சினைகள் இவ்வகையில் இவர்களது கவனத்தைக் கவர்ந்தன. பாலியல் அநுபவங்களின் வெளியீடாக அமைந்த தீ நாவலைத் தொடர்ந்து எஸ். பொன்னுத்துரை நடுத்தர வர்க்கக் குடும்ப வாழ்க்கையிற் பாலுணர்ச்சி இயக்கவிசையாக அமையுமாற்றைச் சித்திரிக்கும் வகையிற் சடங்கு (1966) நாவலை எழுதினர். இளமையில் நிகழும் பாலியல் தவறு களாற் குடும்ப வாழ்க்கையிலே எழும் பல்வேறு பிரச்சினை களையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் சித்திரிக்கும் வகையில் யோ. பெனடிக்ற்பாலனின் குட்டி (1963), க. அருள் சுப்பிரமணியத்தின் நான் கெடமாட்டேன் (1976) ஆகியன அமைந்தன. சந்தர்ப்பவசத்தாற் தவறு செய்தவர்களை மனிதாபிமானக் கண்கொண்டு நோக்கி அவர்கள் மீது அநுதாபம் கொள்ளும் வகையில் கே. எஸ். ஆனந்தன், இந்துமகேஷ் (எஸ். மகேஸ்வரன்) ஆகியோர் சில நாவல்களை எழுதினர்.
எஸ். பொன்னுத்துரையின் சடங்கு நாவல் கொழும்பில் எழுதுவினைஞராகப் பணிபுரியும் யாழ்ப்பாணத்தவரொருவ ரின் சமுதாய பொருளாதாரப் பகைப்புலத்திற் பாலுணர்ச்சி வகிக்கும் முக்கியத்துவத்தையும் அது அவரை இயக்கு மாற்றையும் ஆறு தினங்களின் தொடர் நிகழ்ச்சிகள் மூலமும் மன உணர்வுகள் மூலமும் புலப்படுத்துவதாக அமைகிறது. யாழ்ப்பாணத்திலிருக்கும் குடும்பத்தைப் பிரிந்து கொழும்பில் பணிபுரியும் பலநூறு எழுதுவினைஞர்களின் பிரதிநிதியாக அமையும் செந்தில்நாதன் நீண்டநாட் பிரிவுக்குப் பின்னர் தமது மனைவியை நாடி யாழ்ப்பாணம் செல்கிருர், அவரது உள்ளத்தில் மனைவி அன்னலட்சுமியிடம் பெறப்போகும் இன்பம் பற்றிய உணர்வே விஞ்சி நிற்கிறது. அங்கு சென்று நான்கு நாட்கள் தங்கியவர் பல்வேறு தடைகளால்

சமுதாய விமர்சனக் காலம் Ι 15
ஆசாபங்கமடைந்து கொழும்புக்கு மீள்கிறர். இத்தடைகள் குடும்ப நிர்வாக அநுபவமுள்ள மாமியான செல்லப்பாக்கிய ஆச்சியின் உருவிலும் உடல் நலம் பேணல், மது, இயற்கை ஆகியவற்ருலும் ஏற்படுகின்றன. செந்தில்நாதன் தான் நாடிவந்த உணர்ச்சி சம்பந்தப்பட்ட 'சடங்கில் நிறைவு காணமுடியாத ஏமாற்றத்துடன் சம்பிரதாயபூர்வமான "ருது சோபன சடங்கொன்றில் கலந்து கொண்டு தமது சமுதாயக் கடமையை நிறைவேற்றி விட்டுக் கொழும்புக்குத் திரும்புகிருர்,
யாழ்ப்பாணக் கிராமப்புறத்திற்கேயுரிய இயல்பான குனம்சங்களும் பொருளாதார, குடும்ப நிர்வாக அறிவு நுட்பமும் வாய்ந்தவராகப் படைக்கப்பட்டுள்ள செல்லப் பாக்கிய ஆச்சி செந்தில்நாதனின் உணர்ச்சி முனைப்புக்களை நுட்பமாகக் கட்டுப்படுத்தும் எதிர் விசையாக அமைகிழுர், கணவனுக்கும் தாய்க்குமிடையிற் சடங்கின் ‘காரணி” ஆக அமைகிருள் அன்னலட்சுமி. இம்மூன்று பாத்திரங்களையும் அவற்றின் சூழலுக்குரிய இயல்பான குளும்சங்களுடன் இயங்கவைப்பதில் ஆசிரியரின் கைவந்த கலைவண்ணம் புலனுகிறது.
பாலுணர்ச்சியை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட இந் நாவலிற் கொழும்பு, யாழ்ப்பாணக் கிராமப்புறம் இரண்டை யும் இணைக்கும் புகைவண்டி ஆகியவற்றிலே கதையை நடத்திச் செல்லும் ஆசிரியர் அவற்றின் களத்திற் சமகால அரசியல் சமூக பொருளாதாரச் சூழ்நிலைகளைச் சுவைப்படச் சித்திரித்துள்ளார். சமூகத்தின் பல்வேறு வகைப்பட்ட மாந்தர்க்கும் வகைமாதிரியான பாத்திரங்கள் நாவலின் கதையோட்டத்திற் சங்கமிக்கின்றன.
"..மனிதனை ஆட்டிப்படைக்கும் இருபெரும் சக்தி ளாகிய பசியையும் காமத்தையும் ஊடுபாவாகக் கொண்டு யாழ்ப்பாண வாழ்க்கையைச் சடங்கில் நெய் திரிக்கிருர் ஆசிரியர்! யதார்த்தம் பேசுபவர்கட்கு நான் நிச்சயமாக ஒன்று செர்ல்வேன். நமது அரசியல் நிலை களின் காரணமாக இன்னும் நூருண்டுகாலத்தில்

Page 71
16 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
நமது வாழ்க்கை நிலைகள் மாற்றமடையலாம். அப் பொழுது நூருண்டுகட்கு முன்னல் ஒரு யாழ்ப் பாணத்துக் கிளறிக்கல் சேவண்ற எப்படி வாழ்ந்தான் என்று அறிய விரும்பும் சரித்திர மாணவன் ஒருவன் நிச்சயமாக எஸ். பொ. வின் கடங்கைப் படித்தே ஆகவேண்டும். "24
என இந்நாவலின் சமகால வரலாற்று முக்கியத்துவத்தைச் ஈழத்து நாவலாசிரியரொருவர் மதிப்பிட்டுள்ளார்.
சந்தர்ப்பவசத்தாற் செய்த தவறின் விளைவாகப் பிறந்த குழந்தையைத் தம்பி என்று அழைக்க வேண்டிய நிலையி லுள்ள ஒரு தாயுள்ளத்தின் கண்ணிர்க் கதையாக, யோ. பெனடிக்ற்பாலனின் குட்டி (1963) குறுநாவல் அமைந்துள்ளது. மனைவியின் கன்னிமைத்தவறின் சின்னத்தை வெறுக்கும் கணவன் பொன்னுத்துரையும், அவன் இரக்கமின்றித் திட்டும் பொழுது புழுவாய்த் துடித்து ஈற்றில் சீறி எழும் புவனமும், தாய் தந்தை ஆரென அறியத் துடிப்பதுடன் பழிப்புரை பொறுக்காது வீட்டை விட்டு வெளியேறும் "குட்டி"யும் இக் குறுநாவலின் முக்கோணப் பாத்திரங்கள்.
இளமையிற் பாலுணர்ச்சியுந்தலினுற் செய்த தவறைத் தனது கணவனிடம் கூறி அமைதிகாண விழைந்த பெண்ணின் கதையாக அருள் சுப்பிரமணியம் நான் கெடமாட்டேன் (1976) நாவல எழுதியுள்ளார். மனைவி தவறிழைத்தவள் என அறிந்தபோது எரிமலையெனக் குமுறிய கணவன் பின்னர் அவளது தூய உள்ளத்தை உணர்ந்து மனப்பூர்வமாக மன்னித்து ஏற்றுக்கொள்வதாக அமைந்த இந்நாவலின் கதையிற் சமூக பொருளாதாரப் பகைப்புலம் நன்கு எடுத்துக் காட்டப்படுகிறது. இதனுற் பிரதேசப் பண்புடைய நாவலாகவும் அமைகின்றது. இவ்விரு நாவல்களும் சமகால சமூகத்தின் வகைமாதிரியான பாத்திரங்களைக் கொண் டமைவதால் சமுதாய விமர்சனச் சாயலை இவற்றிற் காணலாம். பாலியல் தவறுகளை மனிதாபிமானக் கண் கொண்டு நோக்கும் கே. எஸ். ஆனந்தன், இந்து மகேஷ் முதலிய சமகால எழுத்தாளர்களிற் பலர் அவற்றைக்

சமுதாய விமர்சனக் காலம் 17
கதையில் வெளிப்படுத்தும் முறையிற் சம்பவச் சுவைக்கே முக்கியத்துவமளிப்பதாலும் தனிமனித உணர்ச்சி முனைப்புக் களையே சித்திரிக்க முயல்வதாலும், சமுதாய விமர்சனப் பண்பை இவர்களின் நாவல்களிற் காண்பதற்கில்லை. இந்து மகேஷின் நாவல்களில் ஒரு விலைமகளைக் காதலித்தேன் (1974) , நன்றிக்கடன் (1975) என்பன குறிப்பிடத்தக்கன.
பல்வகைப் படைப்புக்கள்
சமுதாய விமர்சனக் காலப்பகுதியிலே வெளிவந்த நாவல் களிலே மேற்குறிப்பிட்ட பிரிவுகளிலே அமைவனவற்றைத் தவிரக் குறிப்பிடத்தக்க தரமான தனித்தன்மைவாய்ந்த படைப்புக்களும் உள. இனப்பிரச்சினையின் பகைப்புலத்தில் ஒரு பிரதேசத்தின் தலைமுறை வேறுபாடுகளைச் சித்திரிக்கும் வகையில் அமைந்த க. அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்துவிட்டது (1973) நாவலையும் நகைச்சுவை நோக்கிலும் வரலாற்றுப் பின்னணியிலும் எழுதப்பட்ட நாவல்களையும் மொழிபெயர்ப்பு நாவல்களையும் குடும்ப நாவல்களையும் மர்ம நாவல்களையும் இவ்வகையில் நோக்கலாம். இவையன்றி இக்காலப்பகுதியில் ஒரு தனிப்பிரிவாக எழுந்த பிரதேசப் பண்பு நாவல்களை பிரதேசங்களை நோக்கு . என்ற தலைப்பில் அடுத்த இயலில் நோக்கலாம். ノ
அவர்களுக்கு வயது வந்துவிட்டது
கொழும்பில் அரசபணிபுரியும் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் இளைஞனன அரியம் சிலநிமிட நேர சபலத் திற்கு ஆட்பட்டுச் சிங்களப்பெண்ணுெருத்தியுடன் உடலுறவு கொள்கிருன். அதற்குப் பரிகாரமாக அவளை மணம்புரிந்து கொள்ளும்படி அப்பெண்ணின் தாய் கேட்டுக்கொண்டதை மனிதாபிமான நோக்கில் மறுக்கமுடியாமல் மணம்புரிந்து கொள்கிருன், திருக்கோணமலையில் இருக்கும் தாய் தந்தை யர்க்கு இந்நிகழ்ச்சியை அறிவிக்காத அவன் ஒருதினம் தன் மனைவியுடன் அவர்களிடம் செல்கிருன். அங்கு உண்மை வெளிப்பட்டதும் ஒரு எரிமலை குமுறுகின்றது. முன் கோபங் கொண்ட தந்தை முத்தரின், 'தன்மானமும் இன உணர்ச்சியும் ஏமாற்றமும் கலந்த இந்த எரிமலைக் குமுறலைத் துணிவுடன்

Page 72
18 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
ஏற்றுக்கொண்டு பிரச்சினைகளை எதிர்நோக்கத் தனக்கு வயது வந்துவிட்டது என்பதைப் பண்போடு உணரவைக்கிருன். உணர்ச்சிவசப்பட்ட முத்தர் புதிய தலைமுறையின் தேவை களுக்கேற்பத் தன் உணர்வுகளை மாற்றிக்கொண்டு பாசத் தந்தையாகி அவர்களை ஆசிகூறி வழியனுப்புகிருர்,
இக் கதையம்சத்தைவிட இதனைப் புலப்படுத்துவதற்கு ஆசிரியர் கையாண்ட உத்தியும் பாத்திரங்களை இயங்க வைத்த முறையும் சமூக பொருளாதாரப் பகைப்புலத்தைச் சித்திரித்துள்ள முறையுமே இதனைத் தரமானதொரு படைப் பாக்கியுள்ளன. இரண்டு நாள் நிகழ்ச்சிகளின் சம்பவங்களும் நினைவோட்டமுமாகக் கதை கூறப்படுகிறது. கதையின் முதற்பாகம் புகைவண்டிப் பிரயாணத்தில் அரியத்தின் நினை வோட்டத்தில் விபரிக்கப்பட்டு அடுத்தபாகம் திருக்கோண மலையிற் பாத்திரங்களின் இயக்கத்தின்மூலம் வெளிப்படுத்தப் படுகின்றது.
வகுப்புவாத உணர்வு தலைதூக்கி நிற்கும் எல்லைப்புறப் பிரதேசமான திருக்கோணமலையைச் சேர்ந்தவனக அரியம் அமைவதும் கெளரவமும் தன்மானமும் முன்கோபமும் கொண்டவரான ஒருவர் அவனுக்குத் தந்தையாக அமைந்தமையும் ஊரில் அவனது தங்கை காதற் பிரச்சினை களில் ஈடுபட்டிருந்ததும் நாவலின் கதைப்போக்கிற்கு அழுத்தம் கொடுக்கின்றன. சர்வ சாதாரணமான ஒருவனுக சகல பலவீனங்களும் உடைய ஒருவனுகப் படைக்கப்பட்ட அரியத்தின் குளும்சங்களே நாவலின் கதையைப் பலமுடைய தாக்குகின்றன. சாதாரண உடல் எழுச்சியால் நிகழ்ந்த ஒரு தவறும் அதற்கு வழங்கப்பட்ட பரிகாரமும் ஒரு சமூகத் தின் உணர்ச்சி முனைப்புக்களை எந்த அளவுக்கு தூண்டி நிற்கின்றன என்பதைக் காட்டி அதன் தருக்க ரீதியான முடிவைத் தீர்வாக வழங்குவதே இந்நாவலின் சிறப்புக்கு அடிப்படை. பழைய தலைமுறையினரான முத்தர் உணர்ச் சிக் கொந்தளிப்புக்களின் முடிவிற் புதிய தலைமுறையை வரவேற்கும் மனப்பக்குவம் பெறுவதையும் மிகச் சாதாரண தமிழ் இளைஞனது சிந்தனைப் போக்கிலிருந்து வேறு படாத அரியம் துணிவுடைய, பொறுப்புணர்ந்த செயல்

சமுதாய விமர்சனக் காலம் 119
வீரணுக - வயது வந்தவஞக - அமைவதையும் காட்டிய அருள் சுப்பிரமணியம் நடுத்தரவர்க்கத்தின் சராசரி மனப் போக்கைப் பிரதிபலிக்கிருர்,
இந்நாவலுக்கு முன்னுரை வழங்கிய கா. சிவத்தம்பி,
"நாவல் இலக்கியத்துக்கு வேண்டிய பொருட் சிறப்பும் ஆக்கச் செம்மையும் கொண்டது இந்நாவல். ஈழத் தமிழிலக்கியத்தின் பதச்சோருக விளங்கக் கூடிய தகைமை இதற்கு எல்லா வகையிலும் உண்டு.”*
என்கிறர் தமிழ் நாவலின் நூற்றண்டு வரலாற்றையும் வளர்ச்சியையும் ஆராய்ந்தவர்களான பெ. கோ. சுந்தர ராஜனும் சோ. சிவபாதசுந்தரமும்,
"...அவர்களுக்கு வயது வந்து விட்டது என்ற நாவல் ஈழத்து நாவல் இலக்கியத்துக்குப் பெருமை தருவதோடு, ஈழத் தமிழ் நாவலுக்கும் "வயது வந்து விட்டது" என் பதற்குச் சான்ருக விளங்குகிறது. கதைப் பொருளைக் கையாள்வதிலும் கதை சொல்லும் உத்தியிலும், பாத்திரப் படைப்பிலும், சம்பவக் கோவையின் நடப் பியல் நேர்மையிலும் அருள் சுப்பிரமணியம் எழுதிய இந்தப் படைப்பு மிகவும் சிறந்து விளங்குகிறது."2"
என இந்நாவலின் இலக்கியத் தகுதியை மதிப்பிட்டுள்ளனர்.
நகைச்சுவை நாவல்கள்
சமுதாயப் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் விமர்சிக்கும் பண்பு ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத் துறையிலே ஒரு தனிப்பிரிவாக வளர்ச்சியடையவில்லை, இவ்வகையில் குறிப் பிடத்தக்க ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்ட பெருமை செங்கை ஆழியானையே சாரும். விவேகி மாத இதழில் தொடர்கதையாக வந்து 1969இல் நூலுருவம் பெற்ற இவரது ஆச்சி பயணம் போகிறள் நாவல்தான் இவ்வகையில் முதல் முயற்சியாகும்.

Page 73
120 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
யாழ்ப்பாணப் பிரதேசத்தின் முதிய தலைமுறையின் பிரதிநிதியான "ஆச்சி இளைய தலைமுறையினைச் சார்ந்த "கடைக்குட்டி மகன் சிவராசாவுடனும் அவனுடைய காதலி செல்வியுடனும் கதிர்காம யாத்திரை போகிருள். இப்பிரயாணம் கோண்டாவில் புகைவண்டி நிலையத்திலே தொடங்கிப் பொல்காவலை, கண்டி ஊடாக நடைபெறுகிறது. பிரயாண நிகழ்ச்சிகளின் பகைப்புலத்தில் ஆச்சியினுடைய முதிய தலைமுறை மனப்போக்குடன் நிகழ்கால நிலை அணுகப்படும்போது அந்த முரண்பாட்டில் நகைச்சுவை பிறக்கிறது. பல்கலைக் கழக மாணவர்களான "சிவராசா - செல்வி இருவரதும் காதற் குறும்புகள் இந்த நகைச் சுவைக்கு மெருகூட்டுகின்றன. யாழ்ப்பாணப் பிரதேசப் பேச்சு வழக்கின் பிரயோகமே இந் நகைச்சுவைக்கு உயி ரோட்டமாயமைந்துள்ளது. புவியியற் சிறப்புப் பட்டதாரி யான செங்கை ஆழியானின் இந்நூல் அடிப்படையில் ஒரு புவியியல் விவரணமாகவும் வெளிப்பாட்டுப் பண்பில் நகைச்சுவையாகவும் அமைந்துள்ளது. நாவலின் நகைச் சுவைக்கு வடிவம் தரும் வகையில் **செள (எஸ். கே. செளந்தரராஜா) தீட்டியுள்ள சித்திரங்கள் இந்நாவலின் தனிச்சிறப்பம்சமாகும்.
இந்நாவலைத் தொடர்ந்து செங்கை ஆழியான் மேலும் இரு நகைச்சுவை நாவல்களை எழுதியுள்ளார். வண்ணர் பண்ணைக் கிராமத்தைக் களமாகக் கொண்டு அங்கு பாரம்பரியமாக நிலவிவரும் "காற்ருடிக் கலை"யின் பெருமை யைப் புலப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட முற்றத்து ஒற்றைப்பனை (1972) ஒரு நகைச்சுவைக் கிராமியச் சித்திரம். யாழ்ப்பாணப் பிரதேசக் கிராமப்புறமொன்று அதன் வகை மாதிரியான பாத்திரங்களுடனும் பிரச்சினைகளுடனும் பேச்சுவழக்கில் நகைச்சுவை ததும்பக் கண்முன் நிறுத்தப் பட்டுள்ளது. W
சிரித்திரன் மாத இதழிலே தொடர்கதையாக வெளிவந்து நூலுருப் பெற்ற கொத்தியின் காதல் (1975) நாவல் பேய்களைப் பாத்திரமாகக் கொண்ட ஒரு கற்பனைப் படைப்பு கொத்தி என்ற பேய்ப் பெண் சுடலை மாடன் என்ற பேய் வாலிபனைக் காதலிக்கிருள். எறிமாடன் என்ற முரட்டுப் பேய் இதற்குத்

சமுதாய விமர்சனக் காலம் 2.
தடையாக வந்து கொத்தியைத் தானே மணம்புரிய விழைகின்றன். குழப்பங்களின் முடிவிற் சுடலைமாடனும் எறிமாடனும் சண்டையிட்டிறக்கின்றனர். கொத்தி தற் கொலை செய்து கொள்கிருள். யாழ்ப்பாணக் கிராமப் புறத்தில் நேரடியாக நாம் காணும் கதை மாந்தரை இங்கே பேய்களின் வடிவில் தரிசிக்கிருேம். நேரிற்காணும் அரசியல் ஊழல்கள், சமூகக் குறைபாடுகள் என்பனவற்றைப் பேய்களின் சமூகத்தில் உருவகப் படுத்திக் காட்டியுள்ளார் எனலாம்.
வரலாற்று நாவல்கள்
மோகனுங்கி (1895), விஜயசீலம் (1916) ஆகியவற்றை அடுத்து ஈழத்தில் வரலாற்று நாவல் என்ற தனிப்பிரிவு வளர்ச்சியடையவில்லை. சமூகசீர்திருத்தக்கால எழுத்தாளர் களும் எழுத்தார்வம் கொண்டு எழுதியவர்களும் வரலாற்றுக் கற்பனைகளிலே தமது கவனத்தைத் திருப்பவில்லை. 1953ஆம் ஆண்டிற் சுதந்திரன் பத்திரிகையில் வெள்ளிவீதியார் என்பார் சிங்கை ஆரியன் என்ருெரு நாவல் எழுதினர். யாழ்ப்பாண மன்னர்களின் ஆட்சிக்காலப் பகைப்புலத்தில் எழுதப்பட்ட இந்நாவலுக்குப்பின் அப் பகைப்புலத்திலே செங்கை ஆழியான் நந்திக் கடல் (1969) என்ருெரு நாவலை எழுதினர். இவரது சித்திரா பெளர்ணமி என்ற குறுநாவல் தமிழ் நாட்டிற்கும் ஈழத்திற்குமிடையில் நிலவிய பண்டைத் தொடர்பு பற்றிய கற்பனையில் எழுதப்பட்ட காதற்கதை. அருள் செல்வநாயகம் சோழப்பெருமன்னர் ஈழத்தில் வெற்றி பெற்று ஆட்சி செலுத்திய பதினேராம் நூற்ருண்டுப் பகைப் புலத்தில் அரசியற்ருெடர்புகளையும் காதலையும் புனைந்து மர்மக் கதைப் பாணியிற் பாசக்குரல் (1963) நாவலை எழுதிஞர். வாள்முனே வாழ்வு என்ற தொடர் நாவலையும் 1968இல் வீரகேசரியில் எழுதியுள்ளார். க. தா. செல்வராசகோபால் யாரிந்த வேடர் (1965) என்ற தலைப்பில் ஈழத்து வேடர் பரம்பரைப் பகைப்புலத்தில் ஒரு நாவலை எழுதினர். வேறு சிலரும் அவ்வப்போது முயற்சித்திருக்கின்றனரெனினும் 1975இல் வ. அ. இர்ாசரத்தினம் கிரெளஞ்சப் பறவைகள் நாவலை எழுதும் வரை வரலாற்று நாவல்துறை உரிய வளர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தின் தமிழர்

Page 74
122 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
வரலாறு உரிய முறையில் ஆராய்ந்து வெளிக்கொணரப்
படாத சூழ்நிலையிலே தமிழ் நாட்டு வரலாற்று நாவல்களைக் கற்ற அருட்டுணர்வில் மேலெழுந்தவாரியான வரலாற்றுப் போக்கை மட்டும் துணைக்கொண்டு எழுதுகின்ற அளவிலேயே நாவலாசிரியர்கள் திருப்தியுற நேர்ந்தது. ஏறத்தாழக் கடந்த இருதசாப்தங்களாக ஈழத்துத் தமிழரது வரலாறு பல்கலைக் கழக அறிஞர்களது முயற்சியால் முனைப்புடன் ஆராய்ந்து வெளிக்கொணரப் படத்தக்க சூழ்நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் வ. அ. இராசரத்தினம் கி. மு. 237ஆம் ஆண்டின் சூரத்தீசன் ஆட்சிக்காலப் பகைப்புலத்திற் கிரெளஞ்சப் பறவைகள் நாவலைப் படைத்தார். காதல், அரசுரிமைச் சூழ்ச்சிகள், ஆகியவற்றை இணைத்து எழுதப் பட்ட இந்நாவலில் கி. மு. மூன்ரும் நூற்ருண்டுக்குரிய பண்பாட்டுப் பகைப்புலத்தை வரலாற்றுக்கு முரண்படாத வகையிற் சித்திரிப்பதில் ஆசிரியர் கவனம் செலுத்தியுள்ளார். மானிடவியற் கண்ணுேட்டத்தின் சாயலும் நாவலிற் புலனுகின்றது.
மொழிபெயர்ப்பு நாவல்கள்
இக்காலப் பகுதியிலேதான் முதன் முதலில் நமது அயல்மொழியான சிங்கள மொழியிலிருந்து நாவல்களைத் தமிழாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவ்வகையில் முதல் நாவல் என்ற சிறப்பு பூரீ லங்கா சாகித்திய மண்டல வெளியீடாக அமைந்த கிராமப் பிறழ்வு (1964) நாவலையே சாரும். இது முதுபெரும் சிங்கள நாவலாசிரியர் மார்டின் விக்கிரமசிங்கவின் கம்பெரலியவின் தமிழாக்கமாகும். ம. மு. உவைஸ் இலக்கணம் இகவாத தமிழ் நடையில் இதனைத் தமிழாக்கினர். தென்னிலங்கைச் சிங்களக் கிராமப்புற மொன்றின் சமூக மாற்றத்தை இந்நாவல் சித்திரிக்கிறது.
முன்னுள் அமைச்சர் டி. பி. இலங்கரத்னவின் அம்பய. ஹலுவ நாவலை, திருமதி சரோஜினிதேவி அருணுசலம் இணைபிரியாத தோழர் (1973) என்ற தலைப்பிலே தமிழாக்கினர். இரு நண்பர்களைப் பற்றிய கதை இது. கருணுசேன ஜயலத்

சமுதாய விமர்சனக் காலம் 123
எழுதிய கொலு ஹதவத நாவலை, தம்பிஐயா தேவதாஸ் நெஞ்சில் ஓர் இரகசியம் (1976) என்ற தலைப்பிலே தமிழாக் கினர். இது ஒரு காதற் கதை.
இக்காலப்பகுதியில், உருது நாவலாசிரியரான கிருஷன் சந்தரின் குறுநாவலொன்றை, காலஞ்சென்ற செ. கதிர்காம நாதன் நான் சாகமாட்டேன் என்ற தலைப்பில் தமிழாக்கிஞர். வீரகேசரி இதழிலே தொடராக வெளிவந்த இந்தக் குறு நாவல் அவரின் மரணத்தையொட்டி வீரகேசரி வெளியீடாக நூலுருப் பெற்றது.
'Glorfusir Garaiti' at 63rust fast Letter From an Unknown Woman என்ற குறுநாவலை செ. கணேசலிங்கம் அபலையின் கடிதம் (1965) என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். 9|Gladian Tait Li GSLDirgi) GrupSuu The Count of Monte Cristo நாவலை வி. பி. மரியாம்பிள்ளை பழிக்குப்பழி (1976) என்ற தலைப்பிலே தமிழாக்கினர்.
குடும்ப நாவல்களும் மர்ம நாவல்களும்
இக்காலப் பகுதியிலே குடும்ப உறவுகளின் பகைப் புலத்திற் காதல், தியாகம், பாசம் ஆகிய உணர்ச்சிகளை மோதவிட்டும் மர்மப் பண்புடன் கதைத் தேவைக்கான திருப்பங்களை அமைத்தும் பல நாவல்கள் எழுதப்பட்டன. எழுத்தார்வத்தின் தொடர்ச்சியாகவும் எழுபதுக்குப்பின் வீரகேசரி, ஜனமித்திரன், மாணிக்கம் ஆகிய பிரசுரங்களுடைய வெளியீட்டுத் தொடர்த் தேவைகளின் விளைவாகவும் அமைந்த இந் நாவல்களைக் குடும்ப நாவல்கள், மர்ம நாவல்கள் என இருவகைப் படுத்தலாம்.
சிற்பி (சி. சரவணபவன்) உனக்காகக் கண்ணே. (1959) திருமதி ந. பாலேஸ்வரியின் சுடர்விளக்கு (1965), பூஜைக்கு வந்தமலர் (1972), உறவுக்கப்பால் (1975), கே. எஸ். ஆனந்த னின் உறவும் பிரிவும் (1964), தீக்குள் விரலைவைத்தால் (1972), கர்ப்பக்கிருகம் (1974), காகித ஒடம் (1974), நயீமா ஏ. பஷீர் எழுதிய வாழ்க்கைப் பயணம் (1974) செல்வி சிவம்

Page 75
124 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
பொன்னையாவின் நீலமாளிகை (1974), உதயணன் (எஸ். ரி. ஆர். சிவலிங்கம்) எழுதிய பொன்னுனமலரல்லவோ (1975), அந்தரங்ககிதம் (1976), கவிதா (இந்திராதேவி சுப்பிரமணியம்) எழுதிய கனவுகள் வாழ்கின்றன (1976), மொழிவாணன் (வி. ஆர். நீதிராஜா) எழுதிய யாருக்காக (1975), யாழ் நங்கையின் உள்ளத்தின் கதவுகள் (1975), வித்யா (கமலா தம்பிராஜா)வின் உனக்காகவே வாழ்கிறேன் (1977), பொ. பத்மநாதனின் புயலுக்குப்பின் (1973), யாத்திரை (1976), புரட்சிபாலன் (கே. சண்முகபாலன்) எழுதிய உமையாள் புரத்து உமா (1976), மணிவாணன் (வி. க. இரத்தினசபாபதி) எதிழுய காற்றில் மிதக்கும் சருகுகள் (1975), குடமியனூர் அ. நடராஜனின் யார் அணுதை? (1974), கே. எஸ். சிவகுமார னின் ஒரே ஒரு தெய்வம் (1973), மதுபாலன் (த. மதுபால சிங்கம்) எழுதிய விதவையின் வாழ்வு (1975), கே. விஜயனின் விடிவுகால நட்சத்திரம் (1977), அ. பாலமனேகரனின் கனவுகள் கலந்தபோது (1977) முதலியவற்றைக் குடும்ப நாவல்கள் என்றவகையிற் குறிப்பிடலாம்.
சமூகத்துக்கும் தனிமனிதனுக்குமிடையிலே தோன்றும் முரண்பாடுகளின் காரணத்தைச் சமூகவியல்நோக்கில் அணுகாமல் தனிமனித உணர்ச்சிக் கண்ணுேட்டத்தில் அணுகுவது இவ்வகை நாவல்களின் பொதுப்பண்பாகும், இவ்வணுகுமுறையானது நாவல்களை உணர்ச்சிகரமான வகையிற் சம்பவங்களை அமைத்து வளர்த்துச்சென்று நிறைவு செய்யத் தூண்டி நின்றது எனலாம்.
மர்ம நாவல்கள் என்ற வகையிற் பழம்பெரும் எழுத் தாளரான ரஜனி எழுதிய நாவல்கள் பல நூல்வடிவம் பெற்றன. புதிதாக இவ்வகை நாவல்கள் எழுதப் புகுந் தோரிற் ஜி. நேசன் (ஜி. நேசமணி) குறிப்பிடத் தக்கவர். வட இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா, இங்கி லாந்து ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற சம்பவங்கள் என்று கூறப்படும் சிலவற்றை மர்மப்பண்பும் பாலுணர்ச்சி யைத் தூண்டக்கூடிய விவரணங்களும் சம்பவச் சுவையும் கலந்து இவர் எழுதினர். ஜிஞ (1973), பட்லி (1974), ஒமேலா (1975), கறுப்பு ராஜா (1975), அலிமாராணி (1975),

சமுதாய விமர்சனக் காலம் I25
குஜராத் மோகினி (1976), மர்ம மங்கை நார்தேவி (1977), பாலவனத்து ரோஜா (1977), சாத்தானின் ஊழியர்கள் (1977) ஆகியன இவர் எழுதிய இவ்வகை நாவல்களாகும்.
வரலாற்று நாவல்கள் எழுதிய அருள் செல்வநாயகம் மர்ம மாளிகை (1973) என்ருெரு மர்மநாவலையும் எழுதினர். யாழ்ப்பாணம் தேவன் எழுதிய அவன் சுற்றவாளி (1968) என்ற மர்மநாவல், குற்றவாளியே ஜ"சரியாக அமர்ந்து விசாரணை செய்து பின் ஜ"ரருக்குத் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு நிரபராதியையும் தன்னையும் விடுவித்த புதுவகைக் கதையம்சத் ைக் கொண்டது.
இவ்விருவகையிலும் வெளிவந்த இக்காலப் பகுதி நாவல்கள் இத்தகைய படைப்புக்களுக்குத் தமிழ் நாட்டை நாடிநின்ற ஈழத்து வாசகர்களைத் திருப்தி செய்யும் வகையில் அமைந்தன. இவ்விருவகை நாவல்கள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்த ஈழத்துத் திறனய்வாளரொருவர், குடும்ப நாவல்களை,
"இந்நாள் வரையிலான தென் இந்தியச் சஞ்சிகை கள், 'கல்கி", மு. வ , மணியன், நா. பார்த்தசாரதி முதலியோரது நாவல்கள் வாசிப்பினதும், தென் இந்தியத் திரைப்படங்கள் பார்க்கும் பழக்கத்தினதும் ஒன்று சேர்ந்த அறுவடையே இந்நாவல்களாகும்**27
என்றும் மர்மநாவல்களை,
**சிரஞ்சீவி, மேதாவி, தமிழ்வாணன் முதலியோரது நாவல்கட்கு எவ்விதத்திலும் சோடைபோகா வண்ணம்
இவை அமைந்துள்ளன’** என்றும் மதிப்பிட்டுள்ளார்.
இக்காலப் பகுதியிற் சிறுவர் நாவல் என்ற வகையில் க. நவசோதியின் ஒடிப்போனவன் (1968) இரண்டு பதிப்புக் களாக வெளிவந்தது. ஈழத்தின் முதலாவது சிறுவர் நாவல் இது எனலாம். விஞ்ஞான நவீனம் என்ற வகையில்

Page 76
126 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
க. ச. மகேசன் எழுதிய அந்தரத்தீவு (1968) வெளிவந்தது. இவை இவ்வகைகளில் ஆரம்ப முயற்சிகள் என்ற வகையிற் குறிப்பிடத்தக்கவையாகும்.
மதிப்பீடு
சமுதாய விமர்சன நோக்கில் எழுதப்பட்ட நாவல்களை, ‘மார்க்சியக் கண்ணுேட்ட நாவல்கள், மனிதாபிமான நோக்கு நாவல்கள் என இருவகைப்படுத்தலாம். "மார்க்சிய நோக்கு நாவலாசிரியாக்குள் முதன்மையான படைப்பாளியாகத் திகழ்பவர் செ. கணேசலிங்கன். எழுத்தார்வக் காலத்தின் முடிவில் இளங்கீரன் தமது நாவல்களிற் புலப்படுத்திவந்த சமூகப் பார்வையைத் தக்கவகையில் வளர்த்துச் சமுதாய விமர்சனப் பாங்கான முதலாவது தரமான நாவலைப் படைத்தவர் என்பது மட்டுமன்றித் தொடர்ந்து அவ்வகையில் வருடத்திற்கொன்ருக எல்லாமாக ஆறுநாவல்களை "1965-1707 காலப் பகுதியில் எழுதியவர் என்ற சிறப்பு இவருக்குரியது. தமிழ் நாட்டில் இவ்வகையில் 1953ஆம் ஆண்டில் வெளிவந்த தொ.மு. சிதம்பரரகுநாதனின் பஞ்சும் பசியும் நாவலுக்குப்பின் டி. செல்வராஜின் மலரும் சருகும் (1966), தேநீர் (1973) கு. சின்னப்பாாதியின் தாகம் (1975), ஐசக் அருமைராஜ னின் கீறல்கள் (1975) பொன்னீலனின் கரிசல் (1976) முதலிய சில படைப்புக்களே கடந்த பன்னிரண்டாண்டுகளில் வெளி வந்துள்ளன இதனை நோக்க ஆருண்டுக்காலப் பகுதியில் செ. கணேசலிங்கனின் "தனிமனித சாதனை ஈழத்து எழுத் தாளர்கள் பெருமைபடுவதற்குரியதொன்றென்பதை மறுப்ப தற்கில்லை
தமிழ் நாட்டிலே திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியில் வாழும் நில உடைமையற்ற ஹரிஜன கிறிஸ்தவ விவசாயத் தொழிலாளர் சமூகத்தில் உருவாகிவந்த மாற் றத்தைச் சித்திரிப்பது மலரும் சருகும் நாவல். தேநீர் நாவலில் நீலமலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் உருவாகிவரும் வர்க்க உணர்வு சித்திரிக்கப்படுகிறது. தமிழ் நாட்டு விவசாயப் பிரதேசங்களின் நிலப்பிரபுத்துவத்தின் கீழ்க் கொத்தடிமைகளாக வாழ்ந்து வந்தவர்களும் சிறுநில

சமுதாய விமர்சனக் காலம் 127
உடைமை விவசாயிகளும் வர்க்க உணர்வு பெற்று எழுச்சி பெறும் வரலாற்றைக் கொங்குநாடு, திருநெல்வேலி மாவட்டக் கரிசல் காடு ஆகியவற்றைக் களங்களாகக் கொண்டு சித்திரிப்பன தாகம், கரிசல் ஆகிய நாவல்கள். வறுமையின் கொடுமையும் அறியாமையும் நிறைந்திருந்த இம்மக்கட் சமூகத்தினரின் மத்தியில் வர்க்க உணர்வு மிகவும் மந்தகதியிலேயே உருவாகி வளர்ந்து இயக்கமாக உருப் பெறுகிறது. நீண்டகாலப் பகுதியில் நிகழும் இவ்வளர்ச்சியை அவ்வப்பிரதேச சமுதாய வரலாற்றுப் போக்குடன் முரண் படாதவகையில் - செயற்கை அல்லது மிகைப்படுத்தல் இன்றி. இவை சித்திரிக்கின்றன. அச்சித்திரிப்புக்குத் துணைபுரியும் வகையிற் பிரதேசச் சூழலும் அதன் பண்பாட்டு மரபும் சமூக மாந்தரின் சூழலோடு ஒட்டிய பல அம்சங்களும் இணைந்து இவற்றின் கதையம்சத்தை நிறைவு செய்கின்றன. இந்நாவல் களுடன் ஒப்பிட்டு நோக்கும் பொழுது கால முதன்மையாற் கணேசலிங்கனின் பணி பாராட்டுக்குரியதொன்றெனினும் கலைத்தன்மையில் ஒரளவு குறையுடையனவாகவே அமைந்து விடுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. சமூக வரலாற்றுப் போக்கை அதன் இயல்பான தடத்தில் நின்று அணுகாமற் குறிப்பிட்ட கண்ணுேட்டத்தை வலிந்து புகுத்திச் சித்திரிக்க முயலும்போது இத்தகைய குறைபாடுகள் நிகழ்வது தவிர்க்கமுடியாது.
நீண்டபயணம் நாவலில், உரிமைக்காகப் போராடுகின்ற மக்கட் சமூகத்தின் உளவியற் போக்கினைச் சூழலுக்கும் பண்பாட்டு மரபுகளுக்கும் இயைய அழுத்தமாகச் சித்திரித் திருக்க வேண்டிய ஆசிரியர், தாம் அறிந்த சிலரது அக வாழ்க்கைக் குறைகளை வெளிப்படுத்த விரும்பி உயர் சாதியினரெனப்படுவோரின் சமூக ஊழல்களை எள்ளி நகை uur (b வகையிற் பல தகவல்களைத் திரட்டித் தர முயல் கிருர், செவ்வானம் நாவலிற் பொன்னையா மாலினியின் காதலை மறுதலிப்பதான பாத்திரப் பண்புச் சித்திரிப்பும் சடங்கு, தரையும் தாரகையும் நாவல்களில் ஆசிரியர் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காகவே பாத்திரங்களை உரையாட வைப்பதும் கருத்தை முதன்மைப் படுத்தியதால்

Page 77
128 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
விளைந்த மிகைப்படுத்தல்களாகும். மண்ணும் மக்களும் நாவலில் இம் மிகைப்படுத்தற் பண்பு உச்சநிலையடைவதால் அது "போலி யதார்த்த’ நாவலாகி விடுகின்றது.
செவ்வானம், தரையும் தாரகையும் நாவல்களிற் சமூக வர்க்கங்களின் வகைமாதிரியான பாத்திரங்களைக் காணலாம். இந்நாவல்களின் சிறப்புக்கு இவற்றின் கதை மாந்தரின் வர்க்கப் பிரதிநிதித்துவம் அடிப்படையாக அமைகிறது. சாதிப் பிரச்சினை நாவல்களில் அவ்வச் சாதியைப் பிரதி நிதித்துவப் படுத்துவனவாய் அமையும் பாத்திரங்களின் உளவியற் போக்கு இயல்பான முறையில் அமையாமல் ஆசிரியரின் கருத்துக்கியைய அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற அநுதாபம் சமூகக் கண்ணுேட்டத்தையும் பாத்திரப் படைப்பையும் பாதித்துள்ளது என்பதை மறுப்பதற் கில்லை.
இத்தகைய சிறு குறைபாடுகளை இவரது நாவல்களிலே கூறமுடியுமாயினும் இன்றுவரையும் ஈழத்தில் வெளிவந்த நாவல்களிலே தரமான பத்து நாவல்களைத் தெரிவு செய்வ தாஞல் மண்ணும் மக்களும் தவிர்ந்த இவரது ஐந்து நாவல்களும் அத்தெரிவில் இடம் பெறும் என்பதற் கையமில்லை. நீண்ட பயணமும் செவ்வானமும் இவற்றிலே தலையாயபடைப்புக்கள். கணேசலிங்கனுக்குப்பின் ஈழத்து எழுத்தாளர் எவரும் இத்தகைய படைப்புக்களைத்தர முயலவில்லையென்பது அவதானிக்கத் தக்கது.
'கணேசலிங்கனின் நாவல்கள் கடந்தபத்தாண்டுக் கால ஈழத்து வரலாற்றைச் சித்திரிக்கின்றன; அதே நேரத்தில் அவ்வரலாற்றின் விளைபொருளாகவும் அமைந்து காணப்படுகின்றன. திட்டத் தெளிவான வரலாற்று வளர்ச்சிக்கிரமத்தைக் காட்டாதுவிடினும் நீண்ட பயணம், சடங்கு, செவ்வாணம் ஆகிய மூன்றும் நிலமானிய அமைப்பிலிருந்து முதலாளித்துவ அமைப் பிற்கு மாறும் சமுதாயத்தைச் சித்திரிக்கின்றன. கிராமப்புற உழைப்பாளிகளிலே துவங்கி, நகர்ப்புற

சமுதாய விமர்சனக் காலம் 129
கைத்தொழிலாளரின் விழிப்புடன் முடிவடைகின்றன. அந்தவகையில் இவற்றை மூன்று நாவல்களின் தொகுதிTrilogy-எனலாம். குறிப்பிட்ட காலப்பகுதியொன்றினைச் சித்திரித்த பிறமொழி நாவலாசிரியர் பலர் நாவல் வரிசை படைத்தனர். அதனலும் சரித்திர நாவல் என்ற பெயர் இவற்றிற்குப் பொருந்தும்."29
என க. கைலாசபதி முதல் மூன்று நாவல்களின் சமகால வரலாற்றுச் சித்திரிப்புச் சிறப்பை மதிப்பிடுகின்ருர்,
செ. கணேசலிங்கனின் நாவல்களை அடுத்து சாதிப் பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்ட கே. டானியலின் பஞ்சமர் நாவல், உரிமைப்போரிற் பல சாதியினரும் ஒன்றிணைந் தனர் என்பதைத் தவிரப் புதிய சமூக வரலாற்றுப்போக்கு எதையும் காட்ட முயலவில்லை. அன்றியும் பஞ்சமரின் போராட்ட உணர்வை வலுப்படுத்துவதற்குப் பதிலாக வேளாளரின் ஊழல்களை அம்பலப்படுத்தும் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தவே முயன்றுள்ளது என்பது அவதானிக்கத் தக்கது. செ. கணேசலிங்கன் புறத்தே நின்று காட்டிய சமூகப் பிரச்சினையை டானியல் அநுபவபூர்வமாகக் காட்டி யுள்ளமை குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும். எனினும் கதையம்சத்திலே பஞ்சமர் நிறைவு பெருததொரு முயற்சியே யாகும.
சாதிப்பிரச்சினை நாவல்களில் செ. கணேசலிங்கன், கே. டானியல் இருவரும் சாதியையும் வர்க்கத்தையும் ஒன்ருக இனங்காண முயல்கிருர்கள். இக் குறைபாடே. சாதிப் பிரச்சினை நாவல்களிற் பாத்திரப் படைப்பு யதார்த்த
பூர்வமானதாக அமைவதற்குத் தடையாகி விடுகின்றது எனலாம்.
*யாழ்ப்பாணச் சமூகத்தில் இன்று சாதியும் வர்க்கமும் ஒன்ருக இல்லை. சாதியையும் வர்க்கத் தையும் ஒன்ருகக் குழப்பக் கூடாது.”*30
என க. சண்முகலிங்கம் கூறியுள்ள கருத்து இத்தொடர்பிற் கவனத்திற் கொள்ள வேண்டிய தொன்ருகும்.

Page 78
30 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட சி. சுந்தரராஜாவின் மழைக்குறியிற் கருத்து முதன்மைப் படுத்தப்பட்டதால் கதையம்சம் சிறக்க வில்லை. தோட்டத் தொழிலாளர் பிரச்சினைப் படைப்புக் களில் யோ, பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன் ? நாவ லுக்குச் சிறப்பானதோர் இடமுண்டு. போராட்ட உணர்வை முதன்மைப்படுத்தி யுள்ளமையாற் சில இடங்களிற் பிரசாரத் தொனி மிகுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘பெனடிக்ற்பாலன் வர்க்க உணர்விற்கு முக்கியத்து வம் தந்தும் தீர்வு மாற்றம் காட்டும் வகையிலும் எழுதினுலும் எதார்த்தபூர்வமற்ற கருத்துருவங்களாகப் பாத்திரங்களை இயக்குமளவுக்கு அரசியலுணர்வு மேலோங்கப்பெற்று நிற்கிருர், "31
என சி. தில்லைநாதன் கூறியுள்ளமை இத் தொடர்பிற் குறிப்பிடத்தக்கது.
செ. யோகநாதன், காவலூர் ராசதுரை ஆகியோர் குறுநாவல்களை மட்டுமே எழுதியுள்ளனர். எஸ். அகஸ்தியர், தெணியான் ஆகியோரையும் இவ்வகையினராகவே கொள்ள 6vnrub. மார்க்கியக் கண்ணுேட்ட நாவலாசிரியர்களிற் கணேசலிங்கனின் சாதனை அடுத்துவந்த எவராலும் தொட ரப்படவில்லையென்ற குறிப்பை மட்டும் இங்கு கூறலாம். அதற்கான சமூக அரசியற் காரணிகள் விரிவான ஆய்வுக் குரியன. (1965-70) ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் எழுத்தாளரிடையே காணப்பட்ட தீவிரமான போக்கு எழுபதுக்குப்பின் இடதுசாரி ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்திற் காணப்படவில்லையென்பது வரலாறு காட்டும் உண்மையாகும். எழுபதுக்குப்பின்னர் செ. கணேச லிங்கன் நாவலிலக்கியம் படைக்கவில்லை; எழுதிய சிலர் சமூகப் பிரச்சினைகளை ஆழமாக நோக்கவில்லை. இதனுற் சமுதாய விமர்சனக்கால மார்க்சியக் கண்ணுேட்ட நாவ விலக்கியப் போக்கில் எழுபதுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் ஒரு தேக்கம் காணப்படுகின்றது.

சமுதாய விமர்சனக் காலம் 3.
மனிதாபிமான நோக்கிற் சமுதாயப் பிரச்சினைகளை அணுகியவர்களுள் அநுபவம் வாய்ந்த எழுத்தாளரான சொக்கன் பிரச்சினைகளுக்கான அம்சங்களை ஆழமாக நோக்க வில்லை யென்பதும் தனிமனித இலட்சிய நோக்கு நாவலாகவே சீதாவைப் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிக் கைவந்த ஆற்ற லுடன் நாவல்கள் எழுதமுயன்ற செங்கை ஆழியான் நகைச் சுவை, பிரதேச விவரணம் ஆகிய அம்சங்களுக்குத் தமது நாவல்களில் இடமளித்ததன்மூலம் ஈழத்தின் தமிழ் நாவ லிக்கியப் போக்கிற் சில புதிய மரபுகள் உருவாகிவளர்வதற்குத் துணைபுரிந்துள்ளார் எனலாம். தொடக்கத்தில் தனிமனித உணர்ச்சிகளை முதன்மைப்படுத்தி எழுதிய இவர் பின்னர் சமூகத்தின் களத்தை விபரிப்பதிலும் அதன் பின் சமூக மாந்தரின் இயல்புகளைச் சூழலுடன் பொருந்தச் சித்திரிப்ப திலும் கவனம் செலுத்தியுள்ளார். பிரளயம், இரவின்முடிவு ஆகியவற்றில் இப்போக்குத் தெளிவாகப்புலனுகின்றது. சமூகத்தில் நேரடியாகக் காணும் மாந்தரை முன் நிறுத்தும் இவரது சித்திரிப்புத் திறன் பாராட்டிற்குரியது. பிரளயம் நாவலிற் காணப்படும் சமுதாய விமர்சனப்பார்வை அவரது இலக்கிய நோக்கின் ஒரு திருப்புமுனை எனலாம். இயல்பான சமுதாயவரலாற்றுப் போக்குடன் முரண்படாமல் பிரச்சினை களுக்குத் தீர்வுகாணும் ஆர்வம் இதிலே புலப்படுகிறது. பிரளயம் நாவலை அடுத்து அவர் படைத்த காட்டாறு (1977) ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றில் ஒருமுக்கிய கட்ட மாகும். அதனை அடுத்த இயலில் நோக்கலாம்.
கோகிலம் சுப்பையாவும் தெளிவத்தை ஜோசப்பும் ஒவ் வொரு படைப்புக்களையே தந்துள்ளனர். கோகிலம் சுப்பையா ஒரு சமுதாய வரலாற்றை எடுத்துக்காட்டியவர் என்ற வகையில் தனிச்சிறப்புக்குரியவராகிருர். தெளிவத்தை ஜோசப்பின் காலங்கள் சாவதில்லை நாவலில் முதற்பகுதிச் சித்திரிப்பிற் காணப்படும் சிறப்புப் பிற்பகுதியில் இல்லை. துப்பறியும் மர்மநாவற் சாயல் பெறுவதே இதற்குக் காரணம். அநுபவம் வாய்ந்த எழுத்தாளரான எஸ். பொன்னுத்துரை பரிசோதனை முயற்சியாளராகவே விதந்துரைக்கத்தக்கவர். புதிய விடயத்தைப் புதிய உத்திமுறையில் அணுகும் இவரது

Page 79
I32 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
போக்கின் சிறந்த உதாரணமாக அமையும் சடங்கு தமிழ் நாவற் பரப்பிலேயே தனித்தன்மை வாய்ந்தவொருபடைப் பாகும். சமூக மாந்தரை அவர்களது இயல்பான குணபேதங் க்ளுடன் சித்திரிப்பதில் ஈழத்து நாவலாசிரியர்களுள் இவரது ஆற்றல் தலையாயது. அகவுணர்வுகளையும் புற விவரணங் களையும் விரசம் கலந்த நகைச்சுவையுடன் சித்திரிப்பது இவரது தனித்தன்மையான ஆற்றலாகும்.
அநுபவம் வாய்ந்த மற்ருெரு படைப்பாளியான வ. அ. இராசரத்தினம் வரலாற்றுப் பகைப்புலத்தில் எழுதி ஞலும் அவரது ஆற்றல் தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது. எழுபதுக்குப் பின் புதிதாக நாவலிலக்கியத் துறையிற் புகுந்தோரில் க. அருள் சுப்பிரமணியம் முன்னணி யில் திகழ்கிறர். இவரது அவர்களுக்கு வயது வந்து விட்டது நாவல் பற்றிக் குறிப்பிடும் பொழுது ஈழத்துத் திறனுய்வாளர் ஒருவா,
".."அவர்களுக்கு வயது வந்து விட்டது இரு விதங்களில் முக்கியம் பெறுகிறது. ஒன்று ; சிங்கள தமிழர் உறவு நாவலின் சிறப்பம்சமாக அமைவது. ஈழத்துத் தமிழ் நாவல்களுள், இதுவரையும் சிங்களப் பாத்திரங்கள் மிகச்சில நாவல்களுள், அதுவும் சாதாரண பாத்திரங்களுள் ஒன்ருக இடம்பெற்றுள்ளன. இந் நிலையில் சிங்களப் பெண்ணுன மொனிக்கா நாவலின் கதாநாயகியாக இடம் பெறுவது மட்டுமன்றி, நாவலின் உள்ளடக்கமே சிங்கள தமிழருறவை விதந்துரைப்பதாக உள்ளது. . இந் நாவலைப் போலவே சிங்கள தமிழ Bip6?&GOT 635 jög GDJTájg5b The Barrior Givesway (S, Bevilapitiya) என்ற (ஆங்கிலத்தில் எழுதப்பட்ட) நாடகமொன்றும் இங்கே குறிப்பிடத்தக்கது. இவ்விரு படைப்புக்களும் ஒப்பிட்டு ஆய்வதற்குரியன. "?
என்பர். அருள் சுப்பிரமணியத்தின் எழுத்தாற்றலைக் குறிப் பிடுமிடத்து இன்னெரு ஈழத்துத் திறனய்வாளர் தமிழ் நாட்டின் பிரபல எழுத்தாளர் தி. ஜானகிராமனுடன் ஒப்பிடு

சமுதாய விமர்சனக் காலம் 33
கிருர்.33 முதல் நாவலிற் காணப்பட்ட அருள் சுப்பிர மணியத்தின் படைப்பாற்றல் அடுத்து வந்த படைப்புக்களிற் காணப்படவில்லை யென்பது குறிப்பிடத்தக்கது.
ஏ. ரி. நித்தியகீர்த்தி, ஞானரதன், தி. ஞானசேகரன் ஆகியோரிடம் காணப்படும் சமூகப் பார்வையும் எழுத் தாற்றலும் குறிப்பிட்டுப்பாராட்டத்தக்கவை. நித்தியகீர்த்தி தமது மீட்டாத வீணையின் முடிவிற் புகுத்தியுள்ள செயற்கைத்தன்மையைத் தவிர ஏனைய பகுதிகளில் அவரது படைப்பாற்றல் நன்கு புலனுகின்றது.
சமுதாய விமர்சனக் காலப் படைப்புக்களிற் குறிப் பிட்டுப் பாராட்டக் கூடிய அம்சம் அவற்றின் மொழி நடை. கதை மாந்தரை அவர்களது இயல்பான உயி ரோட்டமான குணும்சங்களுடன் சித்திரிப்பதற்கு அவர்களின் மொழி நடை உரையாடல்களிற் பயன்படுத்த வேண்டு மென்ற தவிர்க்க முடியாத தேவை இக்காலப் பகுதியில் உணரப்பட்டது. அறுபதுகளின் ஆரம்பத்தில் நடந்த மரபுப் போராட்டங்களின் முடிவில் படைப்பாளரிடையே பேச்சுவழக்கைக் கையாள்வதில் ஒரு புதிய உத்வேகம் காணப்பட்டது. இதனுல் இக்காலப் பகுதிப் படைப்புக்கள் எல்லாவற்றிலும் இது ஒரு தனிச்சிறப்புப் பண்பாக அமைந்தது. சிறப்பாக, செ. கணேசலிங்கன், கே. டானியல், எஸ். பொன்னுத்துரை, செங்கைஆழியான். யோ. பெனடிக்ற் பாலன் முதலியோரின் படைப்புக்களில் வெவ்வேறு தரங் களில் இப்பேச்சுவழக்குக் காணப்படுகிறது. பேச்சு வழக்கை கையாள்வதில் ஈழத்து ஆக்க:இலக்கியகாரர் எல்லோரிடமும் காணப்படக்கூடிய குறைபாடுகளைச் சில நாவல்களை உதாரண மாகக் காட்டி அ. சண்முகதாஸ் விளக்கியுள்ளார்.34 செ. கணேசலிங்கனின் போர்க்கோலம் நாவலில் எம். ஏ. நுஃமான் இவ்வகைக் குறைபாடுகளை எடுத்துக்காட்டி யுள்ளார்.35 இவ்வகையில் மேலும் விரிவான ஆய்வுக்கு இடமுண்டு.

Page 80
14
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
அடிக்குறிப்புகள்
1. தமிழ் நாவல், நூருண்டு வரலாறும் வளர்ச்சியும் என்ற நூலில்
5.
6.
9, 6
பெ. கோ. சுந்தரராஜனும் சோ. சிவபாதசுந்தரமும் '1900-1945 காலப்பகுதியைச் "சமுதாய விமர்சனம்" என்ற தலைப்பில் இனம் காண முயன்றுள்ளனர். பொதுவாகச் சமுதாயத்தின் நில் பற்றிய சிந்தனைகளே இக்காலப்பகுதி நாவல்களில் அதிகம் இடம் பெற்றன என்பது அவர்கள் காட்டியுள்ள காரணமாகும். தனி மனிதனின் பண்புகள் குடும்பத்தையும் சமுதாயத்தையும் பாதித்த விதம், சமுதாய முன்னேற்றத்திற் பெண்களின்பங்கு, மற்றும் பல துறைகளில் எழுந்த பிரச்சினைகள், குடும்ப அமைப்பில் ஏற்பட்ட மாறுதல்கள் என்பனவே இக்காலப்பகுதியின் தமிழ் நாட்டு நாவல் களில் ஆராயப்பட்டன என அவர்கள் விளக்கியுள்ளனர். சமுதாய விமர்சனம் என்ற சொல்லைப் பொதுவான சமுதாய சீர்திருத்தம் என்ற பொருளிலேயே அவர்கள் கையாண்டுள்ளனர் எனக் கருத முடிகிறது. ஆயின், எனது இந்த நூலிலே சமுதாய விமர்சனம் என்னும் சொல் சமுதாயத்தின் அமைப்பை இயக்கவியலோடு பொருத்தி ஆராய்வது என்னும் பொருளிலேயே கையாளப்பட் டுள்ளது. அவ்வகையிற் சமுதாயப் பிரச்சினைகளின் வரலாற்று ரீதியான வளர்ச்சியைக் கதைப் பொருளாகக் கொள்ளும் நாவல் கள் எழுந்த காலப்பகுதியான அறுபதுகளின் நடுப்பகுதியிலிருந்து அண்மைக்காலம் வரையுள்ள காலப்பகுதி சமுதாய விமர்சனக் காலம் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
Liteiaisi SaiBuril 67 (p5u Fundamentals of Sociology Grairip
நூலின் தமிழாக்கமான சமூகவியலின் அடிப்படைக் கோட்பாடு கள் (1964) நூலில் அமைந்துள்ள மேற்கோள், பக், 455 தமி ழாக்கம்: ஜெ. நாராயணன்.
Arasaratnam, S. Ceylon, 1964, p. 109
போர்க்கோலம், பக். 23
A V P P 37
, 175
க. கைலாசபதி தினகரன் வாரமஞ்சரி, 1972-10-22, பக். 10
p
தில்லைநாதன், பஞ்சமர் நாவலின் முன்னுரை, பக். 4 . க. கைலாசபதி, மு. கு.
பெருமாள், 'பஞ்சமர் புதியநாவல்", குமரன்-18, 1978-12-15, Luá, g . க. சண்முகலிங்கம், "தமிழ் நாவல்களில் பாத்திரவார்ப்பு" , தமிழ்
நாவல் நூற்ருண்டு விழா ஆய்வரங்குக் கட்டுரை, 1977 (தட்டச் asů 5TsS) Luak. 7

சமுதாய விமர்சனக் காலம் 35
13. விடிவை நோக்கி நாவலின் முன்னுரை.
14. சு. அரங்கராசன், "செ. கணேசலிங்கனின் செவ்வாணம்" , தாமரை,
1969 டிசம்பர், பக், 48
15. தரையும் தாரகையும், பக். 298
18. தூரத்துப் பச்சை, பக். 25
7. у у p Luš. 68
18. "புதுமைப்பித்தன் கதைகள்" தொகுதியில் முகலாவது கதை.
19. சொந்தக்காரன், பக். 18
盛0。 9 Ludii. 39
பக். 142
3. Lik 23
23。 uš. vI
23அ. யுவன், "காலங்கள் சாவதில்லை", தாயகம், 1974 கார்த்திகை,
u uži. 27-31
சுகுமார், இறந்த காலக் கதையுமல்ல, குமரன்-41, 1974-11-15,
udž. 31-32
24. வ. அ. இராசரத்தினம், சடங்கு, நுழைவாயில், பக். 14 25. அவர்களுக்கு வயது வந்துவிட்டது, முன்னுரை, பக். 71 26. தமிழ் நாவல் நூருண்டு வரலாறும் வளர்ச்சியும், பக். 268-89
27. செ. யோகராசா, "எழுபதுகட்குப் பின் ஈழத்துத் தமிழ் நாவல்கள்",
அலை 1975 கார்த்திகை, பக். 3-4
28. , Ljáš. 4
29. செவ்வானம், முன்னுரை, பக். 47
30. "தமிழ் நாவல்களில் பாத்திரவார்ப்பு" , தமிழ் நாவல் நூற்ருண்டு
விழா ஆய்வரங்குக் கட்டுரை (தட்டச்சுப் பிரதி), பக். 6-7
31. "ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் - ஒரு பொது மதிப்பீடு, தமிழ் நாவல் நூற்ருண்டு விழா ஆய்வரங்குக் கட்டுரை (தட்டச்சுப் பிரதி), பக். 6
32. செ. யோகராசா, மு. கு. "பக். 6
33. கா. சிவத்தம்பி, மு. கு. பக், V1-VII
34, "ஆக்க இலக்கியமும் மொழியியலும் , ஆக்க இலக்கியமும் அறிவிய
லும், 1977 பக். 60-63
35. ஈழத்துத் தமிழ் நாவல்களில் மொழி, தமிழ் நாவல் நூற்ருண்டு விழா
ஆய்வரங்குக் கட்டுரை, (தட்டச்சுப் பிரதி) பக், 8-9

Page 81
5 பிரதேசங்களை
நோக்கி.
பிரதேச இலக்கியம்
"என்னுடைய பிறந்த மண்ணையும் அங்கு வாழ் மக்களையும் மிகவும் அதிகமாகக் காதலிப்பவன் நான். அந்தக் காதலின் விளைவுகளில் இந்தக் கதையும் ஒன்று."
ஈழத்து நாவலாசிரியரொருவர் 1973இல் அவரது நாவ லொன்றுக்கு எழுதிய முன்னுரையிலுள்ள இக் குறிப்பு, கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் ஈழத்துத் தமிழ் நாவலிலக் கியத்தில் நிகழத் தொடங்கிய புதிய திருப்பத்திற்குக் "கட்டியம் கூறும் வகையில் அமைந்துள்ளது. பிறந்த மண்ணையும் அங்கு வாழ் மக்களையும் காதலிப்பது என்பது பிறந்து வாழ்ந்து பழகிய சூழலிலும் அதன் பண்பாட்டு மரபுகளிலும் ஒருவன் இயல்பாகக் கொண்டிருக்கக்கூடிய பற்றையும் பாசத்தையுமே சுட்டி நிற்கின்றது. எழுத்தாள ஞெருவனை இப்பாசமும் பற்றும் தூண்டி நின்ருல் அதன் விளைவு அச் சூழலும் பண்பாட்டு மரபுகளும் இலக்கிய அந்தஸ்துப் பெறுவதாக அமையும். அச் சூழலுக்கே பிரத்தி யேகமாகவுரிய குளும்சங்களினடியாக உருவாகும் அவ்வகை இலக்கியம் பிரதேச இலக்கியம், மண்வாசனை இலக்கியம் ஆகிய பெயர்களால் வழங்கப்படும்.

பிரதேசங்களை நோக்கி. 37
"நாவல் துறையைப் பொறுத்தவரை, மண் வாசனையை அடிப்படையாகக் கொண்டு எழுதப் படுபவை பிரதேச நாவல்கள் (Regional Novel) எனப்படும். பிராந்திய் நாவல்கள், வட்டார நாவல்கள், மண்வாசனை நாவல்கள் என்ற பெயர்களாலும் இவ்வகை நாவல்கள் அழைக்கப்படுகின்றன. இலக்கியத்துக்கு முதன்மையான களமும் அதனேடு பின்னிப்பிணைந்து இறுகி முறுகிப் பிரிக்கவியலாது இரண்டறக் கலந்து காணப்படும் பிற விடயங்களும் ஒரு நாவலில் முழுை பெற்றிருந்தால் அதனைப் பிரதேச நாவல் என்ற அ கொடுத்து அழைத்துக் கொள்ளலாம்." 2
என்பர் துரை மனேகரன்.
மானிடவியல், சமூகவியல் முதலிய அறிவியல்களின் வளர்ச்சியும் பண்பாட்டம்சங்களை நுணுக்கமாக ஆராய்ந்து வெளிக்கொணரும் ஆர்வமும் தனி மனிதனை அவனது சூழலுடன் பொருத்தி நோக்கிச் சூழலுக்குரிய பிரத்தியேக குளும்சங்களுடன் இலக்கியத்திற் படைக்கும் முயற்சியைத் தூண்டி நின்றன எனலாம். இவ்வகை நாவல்களிற் கதை யம்சமானது சூழலை நிறைவாகச் சித்திரிப்பதற்குத் துணை புரியும் வகையிலே அமையும்.
**வெறும் கதைப் பிரியர்களுக்கு நான் சொல்வ தெல்லாம், கதையின் கருவை எப்படியாவது வருந்திக் கக்கி விட்டுத் தப்பினுேம் பிழைத்தோம் என்று தப்பித்துக் கொள்ள வேண்டுமென்ற குறைந்தபட்சக் குறிக்கோளோடு எழுதப்பட்ட நாவல் அல்ல இது, நான் பிறந்து வளர்ந்து இன்றைய என் வயது அத்தனைக்கு எனக்குப் பழக்கமான ஒரு சமூகத்தின் நாடித் துடிப்புக்கள், பூர்வீக வரலாற்று விளக்கங்கள், ஆசார அனுஷ்டானங்கள், - சடங்கு சம்பிரதாயங்கள், விழாக்கள், விளையாட்டுக்கள், வாழையடி வாழையாய் வந்தடைந்த கதைகள், பாடல்கள், பழமொழிகள், பிராந்தியக் கொச்சை வார்த்தைகள், பேச்சு வழக்குகள், தொனி விசேஷங்கள், வாக்கிய அமைப்புக்கள் - இத்யாதி

Page 82
138 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
யானவைகளை எல்லாம் கூடிய மட்டும் சிந்தாமல் சிதருமல் கலாபூர்வமாய் வெளிப்பிரகடனம் பண்ண இங்கே கதை வித்தானது பக்கபலமாய்ப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது என்பதுதான் !"3
என்று நீல. பத்மநாபன் பிரதேச நாவலாசிரியஞெருவனின் நோக்கையும் அதற்கேற்பக் கதையம்சத்தைக் கையாள்வதன் நுட்பத்தையும் புலப்படுத்துகிறர்.
தமிழ் நாட்டில் கா. சி. வேங்கடரமணியின் முருகன் ஓர் உழவன் (1928), தேசபக்தன் கந்தன் (1932) சங்கரராமின் மண்ணுசை (1940), ஆர். சண்முகசுந்தரத்தின் நாகம்மாள் (1942) முதலிய நாவல்கள் இத்துறையின் முன்னேடி முயற்சிகளாகும். அறுபதுகளில் வெளிவந்தவற்றுள் ஆர். ஷண்முகசுந்தரத்தின் அறுவடை (1960), சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை (1966), நீல. பத்மநாபனின் தலைமுறைகள் (1968), ராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன் (1963), ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு (1965) ஆகிய படைப்புக்கள் இவ்வகையிற் சிறப்புடையன. அண்மைக் காலத்தில் வெளிவந்தவற்றுள் ஆ. மாதவனின் புனலும் மணலும் (1974), கி. ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் (1976) ஆகியன தலையாய படைப்புக்கள். மார்க்சிய நோக்கு நாவல்களான மலரும் சருகும், தேநீர், தாகம், கரிசல் முதலியனவும் அவை கதைக்குக் களமாகக் கொண்ட பிரதேசங்களைச் சித்திரிக்கும் பண்பிலே முழுமையான பிரதேச நாவல்களாகவே அமைந்துள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.
ஈழத்து நாவல்களிற் பிரதேச உணர்வு
ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத்திற் பிரதேசச்சித்திரிப்பு நோக்கு நாற்பதுகளிலிருந்தே அரும்புகின்றது. அ. செ. முருகானந்தன், கனக செந்திதாதன், வ. அ. இராசரத்தினம் ஆகியோரது படைப்புக்களில் இதனைக்காணலாம்.* இவ் வுணர்வு பிரதேசங்களிற் கொண்டபற்று என்ற அளவிலே பகைப்புல வர்ணனையாக வெளியிடப்பட்டதேயன்றிப் பிர

பிரதேசங்களை நேர்க்கி. 199
தேசப் பண்பாட்டம்சங்கள் பற்றிய ஆழமான நோக்காக அமையவில்லை. ஐம்பதுகளிற் சமூக உணர்வும் தேசிய உணர்வுச் சாயலும் கொண்ட நாவல்களைப் படைத்த இளங்கீரன் யாழ்ப்பாணம், பேராதனை முதலிய பிரதேசங் களைக் களமாகக் கொண்டபோதும் பிரதேச உணர்வுடன் அவற்றைச் சித்திரிக்கவில்லை.
இவ்வகையில் - குறிப்பிட்ட பிரதேசத்திற்கேயுரிய இயல் பான கதையம்சத்துடன் வெளிவந்த பிரதேசப் பண்புடைய ஆரம்ப நாவல்களாக 1962இல் எழுதப்பட்ட மலைக்கொழுந்து நாவலும் 1964இல் வெளிவந்த தூரத்துப் பச்சை நாவலுமே கிடைக்கின்றன. இவை குறிப்பிட்ட ஒரு பிரதேசத்திற்கேயுரிய சமுதாய வரலாறு என்றவகையில் மலையகத் தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கையைச் சித்திரிப்பன. யோ. பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன்? நாவலும் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணப் பிரதேசத்தின் சமூகக் குறைபாடுகளைப் பொருளாகக் கையாண்டு செ. கணேச லிங்கன் எழுதிய நாவல்களிலும் (1965 - 70) இப்பண்பு அமைந்துள்ளது. தொடர்ந்து வெளிவந்த எஸ். பொன்னுத் துரையின் சடங்கு (1966) கே. டானியலின் பஞ்சமர் (1972) ஆகியவற்றிலும் பிரதேச நாவல் பண்பு காணப்படுகிறது.
மேலெழுந்தவாரியாக நோக்கும்பொழுது இவற்றைப் பிரதேசநாவல்கள் என்று கூறமுடியுமாயினும் ஆழ்ந்து நோக்கிஞல் அவ்வாறு கொள்ளமுடியாது. ஒரு பிரதேசத்தைச் சார்ந்து எழுதப்படுவது என்பதால் மட்டும் அது பிரதேச இலக்கியமாகாது. அப்பிரதேசப் பண்பாட்டம்சங்களையும் சூழலையும் சிந்தாமற் சிதருமல் சித்தரிக்கவேண்டுமென்ற நோக்குடன் எழுதப்படுவதும் அவசியம். அவ்வகையில் நோக்கினல் மேற்குறிப்பிட்ட நாவல்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக எழுதப்பட்டுக் கதை நிகழும் களம் என்ற வகையிற் பிரதேசப் பண்பு பெற்றவை என்பது புலஞகும்.
மலையகத் தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கையின்
பகைப்புலத்தில் மலைக்கொழுந்து என்ற காதல் நாவலை எழுதியவரான 'நந்தி'யோ அல்லது அவலச்சுவை

Page 83
140 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
ததும்ப அவர்களது வரலாற்றைப் படைத்த கோகிலம் சுப்பையாவோ பிரதேசப்பண்பாட்டம்சங்களை வெளிக் கொணர வேண்டு மென்ற நோக்கில் எழுதியவர்களல்லர். யோ. பெனடிக்ற்பாலன் பொதுவாக அப்பகுதியில் உருவாகி வரும் தொழிலாளர் போராட்ட உணர்வை வெளிப்படுத்தும் வகையிலேயே எழுதினர். இதனல் இவர்களது கதைகளின் களங்கள் பரந்துபட்ட மலையகப் பிரதேசத்திலே எந்தப் பகுதிக்கும் சிறப்புரிமை பூண்டனவாக அமையவில்லை.
யாழ்ப்பாணப் பிரதேசக் கிராமப்புறங்களைக் களமாகக் கொண்ட செ. கணேசலிங்கனும் கே. டானியலும் அக்கிராமப் புறங்களை அப்படியே இலக்கியத்தில் இடம்பெறச்செய்ய வேண்டுமென்ற நோக்கில் எழுதியவர்களல்லர். இருவரதும் முக்கியநோக்கு சாதி அடக்குமுறையின் கொடுமையைச் சித்திரித்து அதற்கெதிரான போராட்ட உணர்வினைத் தூண்டுவது. அவ்வகையில் யாழ்ப்பாணத்தில் அப்பிரச்சினை குடிகொண்டிருக்கும் பல்வேறு கிராமங்களுக்கும் பொருந்தக் கூடிய வகையிலேயே கதைக்கான களங்களை அமைத்தனர்.
நீண்ட பயணம் நாவலின் களமாகக் கற்பனையூரான குரும்பையூர் அமைகிறது. இது ஆசிரியரின் சொந்தக் கிராமமான உரும்பிராயைக் குறிப்பதென்பர். அவ்வாறு கொள்ளலாமாயினும் செ. கணேசலிங்கனுக்கு ஊரின் புவி யியல் வரையறை முக்கியமானதல்ல. அவர்,
**1956ஆம் ஆண்டை ஒட்டிய மூன்று நான்கு ஆண்டுகள் இலங்கை வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டமாகும். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தி லுள்ள சிறு கிராமமொன்றில் ஏற்படும் மாற்றத்தை எழுத முனைந்தேன்"
என்று குறிப்பிட்டுள்ளார். அவரைப் பொறுத்தவரை யாழ்ப்பாணப் பிரதேசத்தின் இப்பிரச்சினைக்குக் களங்களான பல்வேறு கிராமப்புறங்களில் ஒன்ருகவே கற்பனையூரான குரும்பையூர் அமைகின்றது என்பது புலணுகின்றது. இவரது ஏனைய நாவல்களின் களங்களும் இவ்வகையில் அமைந்

பிரதேசங்களை நோக்கி. 4.
தவையே எனலாம். கே. டானியலின் பஞ்சமர் நாவலின் களமும் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பல்வேறு கிராமங் களையும் பரந்த அளவிற் சுட்டக் கூடிய வகையிலேயே அமைந்தது. எஸ். பொன்னுத்துரையின் சடங்கில் காட்டப் படும் யாழ்ப்பாணப் பிரதேசமும் இவ்வகையினதே என்று கொள்ளலாம்.
இவர்கள் தங்களின் நோக்கத்தை வலியுறுத்தும்' வகையிலே - கதைப் பொருளுக்குச் சமூகப் பகைப்புல அழுத்தம் கொடுப்பதற்கு ஏற்ற வகையிலேயே - தமது நாவலின் களங்களின் குளும்சங்களைச் சடங்கு சம்பிரதாயங் களின் மூலமும் பேச்சு வழக்கின் மூலமும் புலப்படுத்தினர். அவ்வகையில் நீண்ட பயணம், சடங்கு (எஸ். பொ.), சடங்கு (செ. க.) பஞ்சமர் முதலியன யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதற்குமே பொதுவகையால் உரிமையுடைய பிரதேச நாவல்கள் என்றே கொள்ளற்பாலன.
சமுதாய விமர்சனக் காலத்தின் தொடக்கத்திலே, சமுதாயப் பிரச்சினைகளைப் பரந்துபட்ட பொதுநோக்கில் அணுகிய நாவலிலக்கியம் கடந்த ஐந்தாண்டுக் காலமாகக் களத்தைக் கிராமம், வட்டாரம் ஆகியவைகளாக எல்லைப் படுத்தி அவ்வப் பகுதிகளுக்குச் சிறப்பாகவுரிய பண்புகளை ஆழமாக நோக்கி அவற்றின் மத்தியிலே உருவாகிவரும் பிரச்சினைகளின் அடிப்படையை இனங்காண முயன்று வருகின்றது. இத்தகைய புதிய பிரதேச நோக்கின் முதல் வெளிப்படையாகவே தொடக்கத்திற் கூறிய முன்னுரைக் குறிப்பு அமைகின்றது. இந்நாவலைத் தொடர்ந்து வந்த ஈழத்து நாவல்கள் பலவும் பிரதேசச் சூழலை எல்லைப்படுத்தி நோக்கத் தொடங்கியுள்ளமையை அவதானிக்க முடிகிறது. இதன் காரணமாகப் பொதுவகையில் யாழ்ப்பாணக் குடா நாடு, கொழும்பு, மலையகம் ஆகிய பிரதேசங்கள் மட்டும் களங்களாக அமையும் போக்கு மாற்றமடைந்து இதுவரை இலக்கிய வெளிச்சம் பரவாதிருந்த கிராமப்புறங்களும் மாவட்டங்களும் வட்டாரங்களும் நாவலிலக்கியத்திற்குக் களங்களாகத் தொடங்கின.

Page 84
142 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
இப்புதிய போக்கிற்கான காரணங்களில் ஒன்று பல்வேறு பிரதேசங்களிலிருந்து எழுத்தாளர்கள் தோன்றி நாவலுலகில் அடியெடுத்துவைத்தமை. இன்னெரு காரணம் அநுபவம் வாய்ந்த எழுத்தாளர்கள் தாம் தாம் சென்று வாழ்ந்து அநுபவித்த புதிய பிரதேசங்களை எழுத்தில் வடிக்க விழைந்தமை. இவ்விரண்டையும் அடுத்து முக்கிய காரணம் தமிழ் நாவல் பிரசுரத்துறையில் எழுபதுக்குப்பின்னர் ஏற்பட்ட திருப்பமாகும்.
ஈழம் அரசியல் விடுதலைபெற்ற பின்னர் கடந்த முப்பது ஆண்டுக்காலப் பகுதியில் நிகழ்ந்த சமூக பொருளாதார மாற்றங்கள் ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களின் பண் பாட்டுப் பாரம்பரியங்களிலும் இயற்கைச் சூழலிலும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை விளைவித்துள்ளன. தலைமுறை களின் சமூக மதிப்பீடுகளில் மாற்றம் ஏற்பட்டுவருகின்றது. கல்வி வளர்ச்சியாற் சமூகப் பார்வை விரிவடைந்த புதிய தலைமுறையைச் சார்ந்து இலக்கிய உலகில் அடியெடுத்து வைக்கும் எழுத்தாளர்கள் தாம் பிறந்த மண்ணின் பண்பாட்டுப் பெருமைகளையும் தலைமுறைச் சிந்தனைகளில் உள்ள வேறுபாடுகளையும் இலக்கியத்தில் இடம்பெறச் செய்ய ஆர்வங்கொண்டனர்.
தாம் பிறந்த மண்ணைவிட்டுப் பல்வேறு பிரதேசங் களுக்கும் தொழின்முறைத் தேவைகளின் நிமித்தம் சென்று பணிபுரியும் எழுத்தாளர்கள் அவ்வப் பிரதேசங்களின் சூழலையும் சமூக இயக்கப்போக்கையும் தாம்பெற்ற புதிய அநுபவங்களையும் பார்வையாளர் என்ற நிலையில் நின்று தரிசித்து எழுத்தில் வடிக்கமுனைந்தனர். புதிதாக உருவாகி வந்த குடியேற்றத்திட்டக் கிராமப்புறங்களும் இலக்கிய வெளிச்சம் பெருதிருந்த மீனவக் களங்களும் இவ்வகையில் ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத்துறைக்கு அறிமுகமாகி வருகின்றன. பிரசுரத்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றத் தைத் தனியே நோக்கலாம்.

பிரதேசங்களை நோக்கி. 145
பிரசுரக் களம்
கலைப் படைப்பை ரசிகனிடம் இட்டுச் செல்வது வெளி யீட்டுச் சாதனம். எழுத்தாளனின் கற்பனையில் உருவாகிக் கையெழுத்துப் பிரதியாக மாறும் படைப்பு அச்சுவாகன மேறி நூல் வடிவு பெற்று வரும் பொழுதே வாசகருக்கு இலக்கியம் கிடைக்கின்றது. எழுதுவது எழுத்தாளனின் கலை; வெளியிடுவது வெளியீட்டாளனின் தொழில். ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலேயே கடந்த ஆருண்டுகளுக்கு முன்வரை எழுத்தாளனுகிய கலைஞனே பிரசுரிப்பவஞகவும் தொழில் புரிய வேண்டிய சூழ்நிலையே நிலவியது. சில "வசதி படைத்த எழுத்தாளர்கள் தமிழ் நாட்டின் பிரபல பிரசுரக் களங்களின் துணையோடு தமது எழுத்தாற்றலை வெளிப்படுத்த முடிந்தது. ஆனல் ஈழத்தின் பெரும்பாலான எழுத்தாளர்கட்கு இந்த வாய்ப்பு நினைத்துப் பார்க்க முடியாததொன்ருகவே இருந்தது. எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், அரசு வெளியீடு, சிரித்திரன் பிரசுரம் முதலிய சில ஈழத்துப் பிரசுர நிறுவனங்கள் ஈழத்துப் படைப்பாளி களின் படைப்புக்களை ஊக்கத்துடன் வெளியிட்டன வெனினும் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் படைப்புக் களையே அவை கவனத்திற் கொண்டன. அவற்றின் விற்பனைக் களமும் விசாலமானதாக அமையவில்லை. W
எழுத்தார்வத்தின் காரணமாகத் தமது சொந்தப் பணத்தைச் செலவு செய்து நூல்களைம் பிரசுரித்தவர்கள் அவற்றை விற்பனை செய்வதில் வெற்றி பெறவில்லை. அன்றியும் அக்காலப் பகுதியில் தமிழ் நாட்டிலிருந்து பெருந்தொகையாக இறக்குமதியான இலக்கியங்களுடன் வர்த்தகரீதியிற் போட்டியிட முடியாத சூழ்நிலையும் நில வியது. இவ்வாருன சூழ்நிலையில் முக்கிய பிரசுரச் சாதனங் களாக அமைந்த பத்திரிகைகள் பிரபல எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கே முன்னுரிமை தந்தன. அத்தகைய பிரபல படைப்பாளிகளும் ஈழத்தின் பரந்துபட்ட பொதுவான ரசனையுள்ள வாசகனை நோக்கியே தமது எழுத்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை நிலவியது. இதனல் பரந்துபட்ட சமுதாயம் முழுவதற்குமான

Page 85
l44 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
பொதுவான பிரச்சினைகளைப் பொருளாகக் கொண்டு ஓரளவு உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் எழுதவேண்டிய நிலையி லிருந்த எழுத்தாளர்கள் ஆழ்ந்த அநுபவ ரீதியான வெளிப் பாடுகளாகவும் உயர்ந்தரசனைப் பாங்குள்ள வாசகரைக் கவருவதுமான பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட முயல வில்லை. ஆற்றலுள்ள புதிய எழுத்தாளர்களின் ஊக்கம் இச்சூழ்நிலையால் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது"
இத்தகைய சூழ்நிலையில், எழுபதாம் ஆண்டின் அரசியல் மாற்றத்தை அடுத்து புதிய திருப்பம் ஏற்பட்டது. தமிழ் நாட்டிலிருந்து கட்டுப்பாடற்ற முறையில் இறக்குமதி செய்யப்பட்ட இலக்கியங்களுக்கு ஒரளவு தடைவிதிக்கும் முயற்சி அரசினரால் மேற்கொள்ளப்பட்டபோது ஈழத்துத் தமிழிலக்கியத்திற் 'சுயதேவைப் பூர்த்தி ஒரு முக்கிய பிரச்சினையாயிற்று. தனிப்பட்ட எழுத்தாளர்களின் முயற்சி 56 Tf Tg5 ஆண்டொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று நாவல்களே வெளிவரக்கூடிய நிலை காணப்பட்டது. குறிப்பிட்ட சில பிரசுர நிறுவனங்களும் இந்த அளவுக்கே பணி புரியமுடிந்தது.
நாடறிந்த நாவலாசிரியர்களும் புதிய பிரதேசங்களி லிருந்து நாவலிலக்கியத்துறையில் அடியெடுத்து வைத்தவர் களும் சிறு கதைகள் எழுதி அநுபவம் பெற்று நாவல் எழுதமுயன்று கொண்டிருந்த புதிய நாவலாசிரியர்களும் நூற்பிரசுரத்துறையிற் சிந்தனை செலுத்த முடியாத அளவுக்கு அச்சுக்கூலியும் தாள்விலையேற்றமும் அச்சுறுத்தின.
இத்தகைய சூழ்நிலையில் காலத்தின் தேவையை நிறைவு செய்வதாக வீரகேசரி நிறுவனத்தின் நூற்பிரசுமுயற்சி 1972இல் தொடங்கப்பட்டது. எழுத்தாளன் எழுத்து முயற்சியோடு மட்டும் நிறுத்திக் கொள்ள அதனை நூலாக்கி வாசகர் மத்தியிற் கொண்டு செல்வதற்கான தொழின் முறைகளை வர்த்தக ரீதியிலே திட்டமிட்டுச் செய்வதற்கு இந் நிறுவனத்துக்கு வாய்ப்பும் வசதியும் இருந்தது. பல ஆயிரம் பிரதிகள் அச்சிடவும் நகர வாசகர் மட்டத்திலன்றிக் கிராமப்புறங்களின் சாதாரண பொதுமக்கள் மத்தியிலும்

பிரதேசங்களை நோக்கி. 卫45
அவற்றை வியாபாரம் செய்து வெளியீட்டு முயற்சியை முட்டின்றி நடத்தவும் அது திட்டமிட்டுச் செயற்பட்டது. அந்நிறுவனம் நூற்பிரசுர முயற்சியை மேற்கொண்ட வேளையில் முன்வைத்த இலக்குகள் வருமாறு:
1. ஈழத்து வாசகர்களிடையே ஈழத்து எழுத்தாளர்
களைப் பிரபல்யம் அடையச் செய்வது.
2. ஈழத்து வாசகர்கள் மத்தியில் புத்தகங்களை வாங்கும் பழக்கத்தையும் புத்தக வாசிப்பையும் அதிகரிப்பது.
3. இலை மறை காயாக இருந்த தமிழ் எழுத்தாளர்களை வெளிக்கொண்டு வருவதுடன் புதிய பல எழுத் தாளர்களுக்கு ஊக்கம் அளித்து அவர்களை எழுத் துலகில் அறிமுகம் செய்வது.
4. எழுத்தாளர்களின் ஆக்கமுயற்சிக்கு *புத்தகப் பிரசுரம்" என்பது பயங்கரமான ஒரு தடையாக இருக்காமல் எந்தவொரு சாதாரண எழுத்தாளனும் துணிந்து தமது படைப்பை நூல் உருவில் கொண்டுவர வாய்ப்பளிப்பது.
5. நாட்டில் எந்த மூலையில் இருக்கும் வாசகனுக்கும் கையடக்கமான விலையில் ஈழத்து எழுத்தாளர் களின் நூல்களை விநியோகிப்பது.8
இத்தகைய விரிவான திட்டங்களுடன் மேற்கொள்ளப் பட்ட பிரசுரமுயற்சி முதலிற் சிறுகதை, நாவல், நாடகம் ஆகிய பலதுறைகளிலும் கவனம் செலுத்திய போதும் சில பிரசுரங்களின் பின்னர் நாவல்களை மட்டுமே வெளியிடுவ தாகத் தன்னை வரையறை செய்துகொண்டது. 1972ஆம் ஆண்டு தொடங்கிய வீரகேசரி பிரசுர முயற்சி ஆரம்பத்தில் ஆண்டொன்றுக்கு ஏறத்தாள ஆறு பிரசுரங்களாகத் தொடங்கி, அதிகரித்து வந்து 1975, 176, '77இல் ஆண்டொன் றுக்குப் பத்து என்ற அளவில் விரிவடைந்தது. ஒவ்வொரு நாவலும் நாலாயிரம் பிரதிகள் முதல் ஐயாயிரம் பிரதிகள் வரை விற்கப்பட்டுள்ளதான வியாபார சாதனைபற்றி

Page 86
146 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
அறியும்போது" ஏறத்தாழக் கடந்த நூருண்டுகாலப் பகுதியின் ஈழத்துத் தமிழ் நாவல் வெளியீட்டு வரலாற்றில் முன்ன ரெப்பொழுதும் இல்லாத பெரும் சாதனையை வீரகேசரி புத்தக வெளியீட்டுத்துறை ஏற்படுத்தியுள்ளமை புலணு கின்றது.
வீரகோரிப் புத்தகப் பிரசுரத் துறையின் இத்தகைய வெளியீட்டுச் சாதனை புதிதாக உருவாகி வந்த பல்வேறு பிரதேச எழுத்தாளர்களுக்கும் அநுபவம் வாய்ந்த எழுத் தாளர்களுக்கும் நாவல்கள் எழுதுவதற்கான புதிய உத்வேகத்தை அளித்தது. ஆரம்பத்தில் வர்த்தக நோக்கிலே நாவல்களை வெளியிட்டாலும் காலப்போக்கிலே ஒவ்வொரு புதிய பிரதேசத்தின் எழுத்தாளனுக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கமும் புதிய பிரதேசங்களை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்ற ஆர்வமும் வெளியீட்டாளரிடையே காணப்பட்டது. இத்தகைய சூழ் நிலையிலேயே ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம் பிரதேசங்களை நோக்கித் திரும்பத் தொடங்கியது. இவ்வகையில் எழுந்த நாவல்களை அவ்வப் பிரதேசங்களின் பின்னணியில் நோக் 35 Santb.
வன்னிப்பிரதேச நாவல்கள்
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குத் தெற்கிலும் அநுராத புரப் பிரதேசத்திற்கு வடக்கிலும் அமைந்துள்ளதும் பொதுவாக வவுனியா, மன்னர் மாவட்டங்களை உள் ளடக்கியதுமான நிலப்பரப்பு வன்னிப் பிரதேசம் என்று வழங்கப்படுகிறது. இப்பிரதேசத்தின் பரப்பும் மக்கள் குடியேற்றம் பற்றிய வரலாறும் இன்னமும் விரிவான ஆய்வுக்குட்படவில்லை. இலக்கியத் துறையிலே நாட்டுப் பாடல்கள், நாட்டுக் கூத்துகள், நாடகங்கள் சில சிறு கதைகள் என்பவற்றைத் தவிர நவீன இலக்கிய மணம் விரிவாக வீசாத பிரதேசமாகவே அண்மைக் காலம்வரை இப்பிரதேசம் விளங்கியது. இத்தகைய சூழ்நிலையிலேயே வன்னி மண்ணின் முதல் நாவல் என்ற சிறப்புக்குரிய அ. பாலமனேகரனின் நிலக்கிளி (1973) வீரகேசரி பிரசுரமாக

பிரதேசங்களை நோக்கி. 147
வெளிவந்தது. அதற்குமுன் வெளிவந்த மணிவாணனின் யுகசந்தி (1969) பிரதேசச் சூழலுடன் ஒட்டாத ஒரு குடும்பக் கதையாக அமைந்ததால் நிலக்கிளியே பிரதேச நாவல் என்ற வகையில் முதன்மை பெறுகிறது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள தண்ணீர் முறிப்பு என்ற கிராமப்புறத்தைச் சார்ந்த விவசாயிகளின் வாழ்க்கை முறையைச் சித்திரிக்கும் நாவலான நிலக்கிளி தொடக் கத்திற் கூறப்பட்டதுபோல எழுத்தாளன் பிறந்த மண்ணின் மீது கொண்ட காதலின் பிரசவம். நாகரிகத்தின் சாயலோ அன்றேற் புறவுலகின் கள்ளங் கபடங்களின் சாயலோ பரவாத கிராமியச் சூழலும் அச்சூழலுடன் அமைந்த மாந்தரின் மனப்பாங்குகளுமே இந்நாவலின் அடிப்படை. தான் வாழும் பொந்தும் அதைச் சுற்றியுள்ள சிறு பிரதே சமுமே பிரபஞ்சம் என வாழ்வதும், உயரத்தில் எழுந்து பறக்கமுடியாத இயல்பால் எளிதிற் பிறரால் அகப்படுத்திக் கொள்ளக் கூடியதுமான ‘நிலக்கிளி" என்ற பறவைபோல ஒரு பெண் பதஞ்சலி. வெளி உலக அநுபவத்தின் சாயலோ அன்றேற் கள்ளங் கபடங்களோ படியாத அந்த இளம் பெண்ணுள்ளத்திற்குத் தன் கணவனைத் தவிர்ந்த பிற ஆடவனைத் தொட்டுப் பழகுவது தவறு என்று உணரக்கூடத் தெரியாது. கணவனுன கதிராமன் அருகிலில்லாத சமயம் ஆசிரியர் சுந்தரலிங்கத்தால் தழுவப்படுகிருள். புயல் ஒன்றின் தாக்கத்தால் ஏற்பட்ட சோதனை அது. அந்த நிகழ்ச்சியை எண்ணித் துடித்துக் குமுறி அழுதபின் பல விடயங்களைப் பற்றிப் புரிந்து கொள்ளத் தலைப்படுகிருள். சமூகத்தின் பொய்யும் வழுவும் புகாத அந்தக் குழந்தை யுள்ளம் பெறும் அநுபவ உணர்வின் பரிணுமமே கதையாக விரிகின்றது.
இந்நாவல், தண்ணிர்முறிப்புக்குளம் சார்ந்த வயற் பிரதேசத்தின் இயற்கை வருணனையுடன் தொடங்கி, பதஞ்சலி, கதிராமன், கோணுமலையார், பாலியார் முதலிய பாத்திரங்களை அவற்றுக்குரிய சிறப்பியல்புகள் புலப்படச் சித்திரிக்கிறது.

Page 87
148 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
மேற்படி பாத்திரங்களுட் பதஞ்சலியை மையமாக வைத்து கதை வளருகிறது. கோணுமலையாரின் கோபம், கதிராமனின் ஆற்றல், பதஞ்சலியின் கதியற்றநிலை, சுந்தரலிங்கம் ஆசிரியரின் இலட்சிய உணர்வு, 1964ஆம் ஆண்டில் வீசிய கொடும்புயல் என்பன கதையை வளர்த்துச் செல்கின்றன.
சமதரையில் அமைதியாக ஒடும் நீரோட்டம் போலக் கதை செல்கிறது. பிரதேசத்தின் இயற்கைச் சூழல் மிகத் தெளிவாகவும் பொருத்தமாகவும் சித்திரிக்கப்படுகிறது. பாத்திரங்களை வருணிக்கும்போது அப்பிரதேசத்தின் கருப் பொருட்களை உவமையாக எடுத்தாளும் திறன் பாராட்டத் தக்கதாக அமைகின்றது. கதிராமனைக் காட்டின் செல்வன் என்றே ஆசிரியர் பல இடங்களிற் கூறுகிருர். கதைத் தலைவனன கதிராமனை,
'தண்ணி முறிப்புக் காடுகளில் காணப்படும் மரைகள் நீலங்கலந்த கருநிறம் படைத்தவை. அழகிய கொம்புகளைத் தலையில் ஏந்தி அவை கம்பீரமாக நடக்கையில் காண்பவர் நெஞ்சு ஒருதடவை நின்றுதான் அடித்துக் கொள்ளும். அவ்வளவு கம்பீரம். கதிராம னுடைய நடையிலும் அதே கம்பீரம் காணப்பட்டது. சிறுவயதுமுதல் பாலுந்தேனும், காட்டு இறைச்சிகளும் ஊட்டி வளர்க்கப்பட்ட உடல், கடுமையான உழைப்பி ஞல் உறுதிகொண்ட தசைகள், தகப்பன் வழிவந்த உயர்ந்த, நெடிய தோற்றம், கரியமேனி, சுருண்ட கேசம்,- இவையத்தனையும் ஒன்ருகத்திரண்டு கதிராமன் என்ற உருவில் நடமாடின ! காடு அவனுக்குச்சொந்தம் அவன் காட்டுக்கே சொந்தம். காட்டோடு அவன் கொண்ட உறவு அவனின் தோற்றத்தில் நன்கு தெரிந்தது." என் வன்னி மண்ணின் கருப்பொருளோடு இணைத்து முன் நிறுத்துகிருர்,
தண்ணீர் முறிப்புப் பிரதேசத்தின் வேட்டையாடும் முறை, காடு வெட்டிப் பயிர் செய்யும் முறை, பிரேதச் சடங்கு முதலியவை பற்றிய விபரங்கள் அநுபவபூர்வமான

பிரதேசங்களை நோக்கி. 149
நேர்மு வருணனைகளாக அமைகின்றன. உரையாடல்களில் வன்னி மண்ணின் மணம் தனித்தன்மையுடன் புலப்படுகிறது. இந் நாவலைக் கற்கும் ஒரு வாசகனுக்கு ஒரு புதிய சூழலைக் கற்கின்ருேம் என்ற எண்ணம் எழுவது தவிர்க்க முடியாதது, ஒதியமலையில் இருக்கும் விஷக்கடி வைத்தியர், தண்ணிரூற்று மம்மது காக்கா போன்ற நடமாடும் பாத் திரங்கள் நாவலின் அயற்புலச் சூழலின் தொடர்பை நிறைவு செய்கின்றன. கிராமசபைத் தேர்தல், பாராளு மன்ற உறுப்பினரின் ஆதரவில் பாடசாலைகள் தொடங்கும் இளைஞர்களது முயற்சி என்பன கதையில் ஒரிரு இடங்களிலே மட்டும் வந்தாலும் கதை நிகழ்ச்சிக்குத் தெளிவான பின்னணியினை அமைக்கின்றன. இந்நாவலுக்கு ஆய்வுரை வழங்கிய யாழ்ப்பாணம் தேவன்,
"மண்வாசனை மண்வாசனை என்று ஏதேர் கூறு வார்கள். அவர்கள் அப்படிக் கூறுவதை விட இந்த நிலக்கிளி நாவலைக் காட்டியிருந்தால் அந்த மண்வாசன்ை என்பது என்ன எனப் புரிந்திருக்கும். முன் பின் பழகி யறியாத வன்னி மண்ணைத் தெளிவாக மனக்கண்ணிற் கொணர்ந்து நிறுத்தியுள்ள இந்நாவலாசிரியர் பேச்சு மொழியையும் கனதியான இலக்கியச் சொற்களையும் கலந்து காத்திரமான வகையில் நாவலை வடித் துள்ளார். "9
எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்நாவலிற் கதையம்சம் அதன் சூழலுக்கேற்ற பாத் திரப் பண்புகளுடன் உருவாகி நிறைவு பெறுகிறது. ஒரு விவசாயக் கிராம வாழ்க்கைமுறையை ஒரு சில குடும்பப் பாத்திரங்களையும் அயற் சமூக மாந்தரையும் கொண்டு புனைந்துகாட்டும் இந் நாவல் இயற்பண்புடன் அமைந்துள்ளது.
நிலக்கிளி யாசிரியரின் மற்ருெரு படைப்பான குமரபுரம் பிரதேசப்பகைப்புல வருணனைகளுடன் கூடிய ஒரு குடும்பக் கதையாகவே அமைகின்றது. குலப்பெருமையைக் காப்பாற் றும் முயற்சியில் ஒரு பெண் வகிக்கும் முக்கிய பாத்திரத்தை யும் அவளது மனப்போராட்டங்களையும் இந்நாவலிற்

Page 88
150 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
காணலாம். பிரதேச மரபுக் கதையொன்று நாவலின் கதையம்சத்திற்கு உதவியாகக் கையாளப்பட்டுள்ளது. தண்ணீரூற்றுக்கு அருகிலுள்ள குமாரபுரம் என்ற கிராமப் பகுதியும் தண்ணிரூற்று, வற்ருப்பளை முதலிய அயற் பிரதேசங் களும் கதை நிகழிடங்களாகவுள்ளன. இந் நாவலிற் சமூக இயக்கப் போக்கைக் காண்பதற்கில்லை.
வீரகேசரி நாவ்ல் போட்டியிற் பரிசு பெற்ற செங்கை ஆழியானின் காட்டாறு (1977) நாவல் "கடலாஞ்சி' என்னும் கற்பனைக் கிராமத்தைக் களமாகக் கொண்டது. இக் கிராமத்தின் பகைப்புல விளக்கம் வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் கிராமச் சூழலைப் புலப்படுத்துகிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டையும் அதனைச் சார்ந்த தீவுப் பகுதியையும் சார்ந்தவர்கள் பலர் "நிலமகளைத் தேடி' வந்து கடலாஞ்சியில் குடியேறி வாழ்கின்றனர். மலையகத் தோட்டங்களிலிருந்து வந்தவர்களும் அங்கு தொழில் செய் கின்றனர். அக்கிராமத்தில் உருவாகிவரும் புதுப் பணக்காரர் களும் கிராமத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களும், பாடசாலை ஆசிரியர்கள், மருத்துவ அலுவலர்கள், நீர்ப்பாசன அலுவலர்கள் முதலியோரும் பொதுமக்களைப் பலவகையிலும் சுரண்டி வாழ்வதோடு அரசாங்கத்தையும் ஏமாற்றிச் சமூக விரோதச் செயல்களைப் புரிகின்றனர். இவர்களின் இச் செயல்களை எதிர்த்துக் கிராமத்தின் இளைய தலைமுறை எழுச்சி பெறுகிறது : வன்முறைகள் மூலம் தனது எதிர்ப் பைத் தெரிவிக்கின்றது. இக் கதையம்சம் கிராமப்புற விவசாயிகளின் வாழ்க்கைமுறை, தொழின்முறை முதலிய விவரணங்களுடனும் காதல், நட்பு முதலிய உணர்வு களுடனும் கலந்து வளர்கின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து வந்து குடியேறிய வர்களின் பிரதிநிதியான சந்தனம் என்ற பாத்திரத்தை முன்வைத்தே கதை வளர்த்துச் செல்லப்படுகிறது. தீவுப்பகுதி யிலிருந்து குடியேறியவனன கணபதியும் மலையகத்திலிருந்து வந்து குடியேறியவர்களின் பிரதிநிதியாக அமையும் தாமரைக் கண்டுவும் துணைப் பாத்திரங்கள். கிராமத்

பிரதேசங்களை நோக்கி.
தலைமைப் பொறுப்பினர் என்ற வகையிற் சியாமன் (Chairman) மாரசிங்கம், விதானையார் பூரீவரத சுந்தரர் ஆகியோரும் புதுப் பணக்காரர் கந்தசாமியும் பாடசாலை ஆசிரியர் தினசகாயமும் சுரண்டும் வர்க்கத்தின் பிரதிநிதிகள்.
விளைந்துவரும் பயிருக்குத் தண்ணீர் பெறமுடியாமல் ஏழை விவசாயிகள் வாடி வருந்தும் வேளையில் இவர்களும் ஏனைய அரசபணிபுரியும் அலுவலர்களும் சகல வசதிகளையும் வாய்ப்புக்களையும் தமக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஏழைகளைப் பல வகையிலும் சுரண்டுகின்றனர். சுரண்டலுக்கு எதிராக உருவாகும் இளந்தலைமுறையினரதும் ஏழைகளின தும் உணர்வைத் தக்க வகையில் வர்க்கபேதமளித்து வளர்க்கிருன் சந்தனம்.அபலையான செவ்வந்திக்கும் இவனுக்கு மிடையில் உருவாகும் காதல் கதைக்குக் காதற் சுவையை யூட்டுகின்றது. சியாமன் மாரசிங்கத்தாற் கற்பழிக்கப்பட் டிறந்த செவ்வந்தியைக் கண்டு துடித்து, அதற்குப் பழிவாங்கு வதற்காகக் காட்டுக் கத்தியுடன் சந்தனம் மாரசிங்கத்தின் வீட்டை நோக்கி ஓடுவதுடன் நாவலின் கதை நிற்கிறது.
இந்நாவலின் முன்னுரையிலே ஆசிரியர்,
"விவசாய, தொழிலாள மக்கள் கூட்டம் காடுகளை வெட்டிக் கொழுத்திக் கழனிகளாக்கி இயற்கைக்கும் மிருகங்களுக்குமிடையில் நிரந்தரப் போராட்ட வாழ்வு வாழ்கின்ற வேளையில், இடையில் இன்னெரு வர்க்கம் சுரண்டிப் பிழைப்பதைக் கண்டேன். நிலந்தேடியபின் இறுதியில் அதையும் இழந்து சீரழிவதைக் காண, முடிந்தது. அழகிய விவசாயக் கிராமங்களைப் பெரிய மனிதர் என்ற போர்வையிலே உலாவும் முதலாளித்துவக் கூட்டமும் உத்தியோக வர்க்கமும் எவ்வாறு சீரழித்துச் சுரண்டுகின்றன என்பதை நான் என் கண்களால் காண நேர்ந்தது, மண்ணையும் பொன்னையும் மட்டுமா அவர்கள் சுரண்டினர்கள்? பெண்ணை விட்டார்களா?. கிராமப்புறங்களில் அபிவிருத்திக்காக நல்ல மனத்துடன் ஒதுக்கப்படுகின்ற கிராம மக்களுக்கான செல்வம், ஐஸ் கட்டி கைமாறுவதைப்போலக் கைமாறி ஒருதுளியாக

Page 89
i52 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
நிலைப்பதையும் கண்டேன். இக் கிராமங்களில் ஒரு சிலரால் கல்விச் சுரண்டல் எவ்வாறு திட்டமிடப்பட்டு நடாத்தப்படுகின்றதென்பதையும் கண்டேன் .தேசியத் துரோகிகளை - மக்கள் விரோதிகளை மக்கள்முன் காட்டிக் கொடுக்கவேண்டுமென்ற சத்திய ஆவேசத்தின் விளை வாக உருவானதுதான் காட்டாறு'
எனத் தான் காரியாதிகாரியாகப் பணிபுரிந்த பிரதேசத்திற் கண்டவற்றையும் அவற்றை வெளிப்படுத்துவதால் ஏற்பட்ட ஊக்கத்தையும் தெரிவிக்கிருர்,
கதை நிகழும் களம் வாசகருக்குப் புதியது. ஆகையால் அதன் பிரதேசப் புவியியல் விபரங்கள் கதைப்போக்கினுாடே புலப்படுத்தப்படுகின்றன; அப்பிரதேச பழக்கவழக்கங்களையும் பேச்சு வழக்கையும் கதைக்குள் இணைத்து நாவலுக்கு மண் வாசனை யூட்டுவதற்கும் முயற்சித்துள்ளார். கதைப் பொருள் சமூகவிரோதச் செயல்கள் தொடர்பானதாகவே யிருப்பதால் அவை பற்றிய விபரங்கள் சம்பவங்களாகவும் உரையாடல்களாகவும் தகவல்களாகவும் பரந்த அளவில் நாவலில் இடம் பெறுகின்றன.
செங்கை ஆழியானின் நாவல் வரலாற்றிலே இந்நாவல் ஒரு முக்கிய கட்டமாகும். பிரளயம் நாவலிலே தமது சமூகப் பார்வையைப் புலப்படுத்திப் பிரச்சினைகளுக்கான தீர்வைத் தனிமனித தியாகமூலம் வழங்கிய இவர் காட்டாறு நாவலிலே சமூக இயக்க முறையிலே சித்திரித்து வர்க்க அடிப்படையிலே தீர்வு காட்டுபவராகப் புதிய வளர்ச்சி யடைந்துள்ளார்.
நிலக்கிளி மண்ணுேடியைந்த வாழ்க்கையின் இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்தியது. கன்னிமை நீங்காத கிராமிய மணம் அதில் வீசுகின்றது. காட்டாறு கற்பழிக்கப் படும் கிராமியத்தின் சோகச் சித்திரம். அ. பாலமனேகரன் தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, காதலித்த மண்ணை அதன் பவித்திரமான பண்புகளோடு வுெளிப்படுத்துகிருர். செங்கை ஆழியான் தமக்கு அந்நியமான ஒரு மண்ணை அறிவு பூர்வமாக அணுகி, உணர்ச்சி பூர்வமாக வெளிப்

பிரதேசங்களை நோக்கி. 】53
படுத்துகிருர். தனிமனித உணர்வுக் கதையான நிலக்கிளி
நிறைவு பெறுகிறது. சமுதாய வரலாழுன காட்டாறு நிறைவை நோக்கிய ஒரு கட்டத்தில் நின்று விடுகிறது.
செங்கைஆழியான் முன்னர் எழுதிய ஒரு குறுநாவலும் சில
சிறு கதைகளும் இனைந்து உருவான தொகுப்பாகவே காட்டாறு
அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.19
செங்கை ஆழியானின் இன்னெரு கதையான யானை (1977) வீரசாகசத் தன்மைவாய்ந்த ஒரு புவியியல் விவாணச் சித்திரம். காதலியைத் தன் கண்ணெதிரே கொன்ற யானை யொன்றை அது சென்ற நீண்ட நெடுவழியிலே தொடர்ந்து அதனைச் சுட்டுக் கொல்லும் செங்காரன் என்ற வீரனின் கதை இது. தம்பலகாமப் பகுதியிலே தொடங்கிச் செட்டி குளம் வரையும் யானைகள் செல்லும் பாதையிற் கதை நிகழ்கிறது. காதலுணர்வுகளுடனும் இயற்கைப் பகைப்புல வருணனைகளுடனும் இந்நாவலின் கதை அமைகின்றது.
பரந்தன் பிரதேசத்தைச் சார்ந்த குடியேற்றக் கிராம மான குமரபுரத்தைக் களமாகக் கொண்டு வெளிவந்த தாமரைச் செல்வி (திருமதி ரதிதேவி கந்தசாமி)யின் சுமைகள் (1977) நாவல் அப்பிரதேசத்தின் முதலாவது நாவல் எனலாம். பொறுப்பில்லாமல் வளர்ந்து பல்வேறு ஆசைகளின் வசப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறிய இளைஞன் அநுபவங்களின் பின் பொறுப்புணர்ந்தவனுக மீண்டு வந்து குடும்பச்சுமைகளை ஏற்றுக் கொள்கிருன் இந்தக் கதையம்சத்தைக் கிராமத்தின் பன்முகப்பட்ட கதைமாந்தர்க ளுடனும் விவசாயப் பிரதேசத்திற்கேயுரிய பிரச்சனைகளுட னும் எவ்வித மிகைப்படுத்தல்களுமின்றிச் சித்திரிக்கிருர், ஆசிரியரின் ஆரம்ப நாவலாக இருந்தாலும் தரமானதொரு படைப்பாக அமைகின்றது. தனிமனித உணர்வுகளை முதன்மைப்படுத்திய போதிலும் ஒரு முழுமையான சமூகப் Un fi60) 6 இந்நாவலிற் புலனுகின்றது. LÉletpásunreat போதனையெதுமின்றி இயல்பாகவே உருவாகிவரும் புதிய தலைமுறையின் பொறுப்புணர்ந்த சிந்தனையைக் காட்டியிருப்பதே இந்நாவலின் தனிச்சிறப்பு அம்சமாகும்.

Page 90
154 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
நிலக்கிளி, காட்டாறு, சுமைகள் மூன்றும் வன்னி மண்ணின் மூன்று வேறு கிராமப்புறங்களைக் காட்டின. அவ்வக் கிராமியங்களுக்கேற்பக் கதைப்பொருளைத் தாங்கின. வெவ் வேறு வகையில் அவற்றை வளர்த்து நிறைவு செய்தன. இவற்றை இணைத்துநிற்பது வன்னிப்பிரதேச விவசாயப் பகைப்புலம் என்ற அடிப்படை அம்சமாகும். இவை மூன்றும் வீரகேசரிப் பிரசுரங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1970ஆம் ஆண்டில் செ. கணேசலிங்கன் எழுதிய மண்ணும் மக்களும் நாவலின் களமும் வன்னிப்பிரதேச விவசாயக் களம்தான் என்றபொழுதும் அநுபவபூர்வமற்ற அணுகல் முறையால் அது மண்ணுேடு இணையவில்லை. இம் மூன்றும் மண்ணின் பிரசவங்கள் என்ற வகையில் இயற்பண்பு வாய்ந்துள்ளன.
கிழக்கிலங்கைப் பிரதேச நாவல்கள்
திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்கள், அம்பாறை மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகியவற்றைக் கொண்ட தமிழ் மக்கள் வாழும் பெருநிலப் பகுதியே கிழக்கிலங்கை என இங்கு சுட்டப்படுகிறது. ஈழத்தின் தமிழ் நாவல் முதன் முயற்சிகளான ஊசோன் பாலந்தை கதை (1891), மோகனுங்கி (1895) ஆகியவற்றை எழுதியவர்கள் திருகோணமலையைச் சார்ந்தவர்கள் என முன்னரே கூறப் பட்டது. மட்டக்களப்பின் தமிழறிஞராக விளங்கிய சுவாமி சரவணமுத்து கலாமதி என்ற நாவலை எழுதினர் என்ருெரு தகவல் உண்டு. 11 1934இல் அரங்கநாயகி என்ற தழுவல் நாவலை எழுதியவர் மட்டக்களப்புத் தாமரைக் கேணியைச் சார்ந்த வே. ஏரம்பமுதலி எனக் கண்டோம்.
இவ்வாறு ஆரம்பகாலந் தொட்டே ஈழத்துத் தமிழ் நாவலுக்குக் கிழக்கிலங்கை தன் பணியைச் செய்து வந்துள்ள பொழுதும் அப்பிரதேசத்தைக் களமாகக் கொண்ட நாவல் கள் 1955வரை எழுந்ததாகத் தெரியவில்லை. மூதூரைச் சார்ந்த வ. அ. இராசரத்தினம் 1955இல் ஈழகேசரியில் எழுதிய கொழுகொம்பு நாவலே இவ்வகையில் முதல் நாவலாகக் கிடைக்கிறது. இதனை அடுத்து நூல்வடிவில்

பிரதேசங்களை நோக்கி. . 55
எமக்குக் கிடைக்கும் கிழக்கிழங்கை நாவல் திருகோண மலையைச் சார்ந்தவரான க. அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்ரு வயது வந்து விட்டது (1973) ஆகும். சமுதாய விமர்சனக்கால நாவல்களிலே எடுத்துக் காட்டப்பட்டுள்ள இந்நாவல் பிரதேச நாவல் என்று கூறுதற்குரிய கூறு களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இன உணர்வுப்பகைப் புலத்தில் எழுதப்பட்ட இந்நாவல் அவ்வுணர்வு தலைதூக்கி நிற்பதற்குரிய புவியியலமைதியுள்ள திருகோணமலைப் பிரதேசத்தில் எழுந்ததென்ற வகையிற் பிரதேச உரிமை பூண்டது. அன்றியும் அப்பிரதேசத்திற்கே யுரிய வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் மதிப்பீடுகள் என்பனவற்றையும் தலைமுறை வேறுபாடுகளையும் துல்லிய மாகச் சித்திரிப்பதில் வெற்றி கண்டுள்ளது.
பாலியற் பிரச்சினை நாவல் என்ற வகையில் முன்குறிப் பிடப்பட்ட இவரின் மற்ருெரு படைப்பான நான் கெட மாட்டேன் (1976) நாவலும் திருகோணமலைப் பிரதேசத்தைப் பகைப்புலமாகக் கொண்டதே. S.
அண்மையில் வெளிவந்த இவரது அக்கரைகள் பச்சையில்லை (1977) நாவல் திருகோணமலைத் துறைமுகத்தைக் களமாகக் கொண்டது. வேலையில்லாத் திண்டாட்டத்தால் வெளி நாட்டுக்கு ஒடுபவர்களில் ஒரு பகுதியினர் அந்நியதேசக் கப்பல்களில் வேலைக்குச் சேர்கின்றனர். அவ்வண்ணம் சேர்ந்தோர் சிலர் பயங்கர இன்னல்களை அநுபவிக்கநேர்கிறது. அவர்கள் மீண்டுவரவிரும்பினுலும் கப்பல் அதிகாரிகளிட மிருந்து விடுதலை கிடைக்காது. இதனுல் பாதிப்புற்ற இளைஞர் சிலரின் அவலக் கதையைத் திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்ட கப்பலொன்றின் தளத்தில் சித்திரிக்கிருர் அருள் சுப்பிரமணியம். உலகளாவிய அநுபவங்களுடன் கூடிய கதை என்ருலும் கதைக்கான முக்கிய நிகழ்ச்சிகள் திருகோணமலைத் துறைமுகக் கப்பலிலேயே நடைபெறுகின்றன. இளைஞர்களை மீட்கும் பணியில் திருகோணமலையைச் சார்ந்த துறைமுகத் தொழிலாளர் துணிவுடன் செயற்படுகின்றனர். ஒரு மர்மக் க்தைப்பாணியில் நிகழ்ச்சிகள் எதிர்பார்ப்புக்கள் என்பன சித்திரிக்கப்பட்டு நிறைவுபெறுகிறது.

Page 91
156 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
கிழக்கிலங்கைப் பிரதேச உணர்வுடன் எழுதப்பட்ட இரு நாவல்கள் வை. அஹ்மத்தின் புதிய தலைமுறைகள் (1976) எஸ். பூரீ. ஜோன்ராஜனின் போடியார்மாப்பிள்ளை (1976) ஆகிய இரண்டுமாகும். முதலாவது நாவல் மட்டக்களப்புப் பிரதேச வாழைச்சேனைக் கிராமத்தைக் களமாகக்கொண் டது. இரண்டாவது அதே பிரதேசக் கன்னன் குடாக் கிராமத்தைக் களமாகக் கொண்டது.
வாழைச்சேனைக் கிராமத்தைச் சேர்ந்த முதிய தலை முறையினர்க்கும் இளைய தலைமுறையினர்க்கும் இடையில் உள்ளூர் அரசியல் தொடர்பாக ஏற்படும் போட்டியே புதிய தலைமுறைகள் கதையின் அடித்தளம். கிராம சபைத் தேர்தலிற் பள்ளிவாசல் நிர்வாக சபையினரை எதிர்த்து இளைஞனன கமர்ல் வெற்றி பெறுகிருன். கமாலின் மீது பொருமை கொண்டவர்கள் அவனையும் அவனுடைய காதலி சல்மாவையும் இணைத்து விபசாரக் குற்றம் சுமத்திப் பள்ளிவாசலில் மார்க்கத் தீர்ப்புக்கு முன் நிறுத்துகின்றனர். இருவரும் நிரபராதிகள் எனத் தீர்ப்பாகிறது, இறுதியில் இருவரும் முறைப்படி இணைகின்றனர்.
தலைமுறை வேறுபாட்டுணர்வினடியாகத் தொடங்கிய நாவல் அப் பிரதேசப் பழக்கவழக்கங்கள், பகைப்புலத்தோ டொட்டிய வாழ்க்கை முறை விபரங்கள் ஆகியவற்றை ஆங்காங்கே குறிப்பிட்டுச் சென்று ஒரு காதற் கதையாக நிறைவு பெறுகிறது. முதிய தலைமுறை முதலாளி வர்க்கத் தையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்ற வகையிற் கதைப்போக்கு அமைகிறது. முதலாளி வர்க்கத்தினரான வெள்ளைத்தம்பியும் பள்ளிவாசல் நிர்வாகசபையினரும் சதி செய்பவர்கள் என இளைய தலைமுறை கருதுகிறது. இதற்கான விளக்கம் தரப்படவில்லை.
கிழக்கிலங்கைப் பிரதேச நிலவுடைமையாளர்களான போடியார்களது சமூகக் கதையான போடியார் மாப்பிள்ளை காதலையும் குடும்ப உறவு முறைகளையும் பொருளாகக் கொண்டது. பாலிப் போடியாரின் மகள் பரிமளம் குடும்பப் பகைவனன சிவலிங்கத்தைக் கள்ளமாகக் காதலிக்கிருள்.

பிரதேசங்களை நோக்கி. 互57
இக் கள்ளக் காதலை அறிந்த போடியார் பரிமளத்தைத் தன்கீழ் வயல்வேலை செய்யும் முல்லைக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த செல்லத்துரைக்குத் திருமணம் செய்து கொடுக்க முயற்சிக்கிருர், சிவலிங்கமும் செல்லத்துரையும் சேர்ந்து திட்டத்தை முறியடிக்கின்றனர். சிவலிங்கம் பரிமளத்தைக் கரம் பற்றுகிருன்.
புதிய தலைமுறைகள் நாவலின் கதை வாழைச்சேனைக் கிராமப்புறத்தில் நடைபெற்ற பொழுதும் அதன் கதை யம்சமாகிய தலைமுறை முரண்பாடும் கதையினை வளர்த்துச் செல்லும் காதல், சூழ்ச்சி முதலியனவும் எல்லாப் பிரதேசங் கட்கும் பொதுவானவையேயாம் அவற்றை வை. அஹமத் ஒரு கிராமத்தின் பின்னணியில் நேரடி அநுபவசம்பவங்களாகத் தொகுத்துக் கதைவடிவம் தந்தார் என்றே கூறலாம். எனவே புதியதலைமுறைகளின் கதையம்சத்திற் புதுமையில்லை.
போடியார் மாப்பிள்ளை கன்னன்குடாபோன்ற மட்டக் களப்புப் பிரதேசக் கிராமங்கள் சிலவற்றுக்கே சிறப்பாக வுள்ள சூழலுக்கமைந்த பொருளாதார, பண்பாட்டம்சங்க ளுடன் கூடிய கதையைக் கொண்டது. இந் நாவலிற் போடியார், முல்லைக்காரன் என்ற இருவேறு சமூக மாந்தரின் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் போடிமாருக்குள் ளேயே பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக அமைந்த உள் முரண்பாடுகளும் அவை இளைய தலைமுறையினரின் உணர்வுகளில் விளைவிக்கும் தாக்கமும் எடுத்துக்காட்டப் படுகிறது. பாலிப் போடியாரின் கமத்தைக் குத்தகைக்குச் செய்துவந்தவர் சிவலிங்கத்தின் தந்தையான காராளி. நெற் காணிச் சட்டத்தின் பின் அவர் போடியாருக்கு "ஆயம்" (குத்தகை) கொடுப்பதைத் தன் விருப்பப்படி குறைத்தார். இதனுற் பாதிக்கப்பட்ட போடியார் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமற் 'சூனியம்’ செய்து காராளியைப் படுக்கையிலே நிரந்தரமாகக் கிடத்திவிடுகிறர். இதனுல் காராளியின் மகனன சிவலிங்கத்துக்கும் பாலிப்போடியாருக்கும் உண்டான குடும்பப் பகையே கதையின் அடிப்படை. இக்கதையினை வளர்த்துச் செல்ல அக்கிராமப்புறத்தின் பழக்கவழக்கங்களும் பிரதேசமணம் வீசும் காதல் உறவுகளும் துணைபுரிகின்றன.

Page 92
158 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
சிவலிங்கமும் பாலிப் போடியாரின் மகள் பரிமளமும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகளில் இயல்பான கிராமிய உணர்வு வெளிப்பாடுகளைக் காணமுடிகிறது. இந்நாவலின் பாத்திரங்கள் கிராமப்புறத்திற்கேயுரிய குணும்சங்களுடன் அமைந்துள்ளமை நாவலின் பிரதேசப் பண்புக்கு அழுத்தம் கொடுப்பதாக அமைகிறது.
இரண்டு நாவல்களிலும் கிராமசபைத் தேர்தல் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. முதலாவதில் அது கதையம்சத்தில் முக்கியம் பெறுகின்றது. இரண்டாவது நாவலில் அது ஒரு செய்தி என்ற வகையிலேயே அமைகிறது. இரு நாவலாசிரி யர்களும் பிரதேசப் பேச்சு வழக்கைக் கையாள்வதிலும் பிர தேசப் பகைப்புலவர்ணனையிலும் கவனம் செலுத்தியுள்ளனர்
யாழ்ப்பாணப் பிரதேச நாவல்கள்
யாழ்ப்பாணக் குடாநாடும் அதனைச் சார்ந்த தீவுப் பகுதிகளும் இணைந்த புவியெல்லையே யாழ்ப்பாணப் பிரதேசம் என்று இங்கு சுட்டப்படுகின்றது. ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய வரலாறு பெருமளவு யாழ்ப்பாணப் பிரதேசத்தை மையமாகக் கொண்டே அண்மைக் காலம் வரை அமைந்துள்ளது. ஈழத்து மண்ணின் முதல் நாவலான வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் (1905) கதை யாழ்ப்பாணத்தின் மல்லாகம் கிராமப்புறத்திலிருந்தே தொடங்கியது. ஈழத்து மண்ணில் மக்களது வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பொருளாகக் கொண்ட முதல் நாவலான நொறுங்குண்ட இருதயம் (1914) யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள தெல்லிப்பழைக் கிராமத்தைக் களமாகக் கொண்டு எழுதப் பட்டது. எழுத்தார்வக் காலத்தில் கனக செந்திநாதன் அவரது கிராமமாகிய குரும்பசிட்டியையும் அ. செ. முரு கானந்தன் அவரது கிராமமாகிய அளவெட்டியையும் தங்கள் நாவல்களிற் கொணர முயன்றனர். சமுதாய விமர்சனக் கால எழுத்தாளர்கள் யாழ்ப்பாணப் பகுதியின் பல்வேறு கிராமங் களின் பொதுப் பிரச்சினைகளைக் காட்டுவதற்காகப் பல்வேறு கிராமப் புறங்களையும் களங்களாகக் கொண்டனர். இவ் வகையில் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குறிப்பிட்ட சில

பிரதேசங்களை நேர்க்கி. 159
கிராமங்களை மட்டும் மையப்படுத்தி அவற்றின் சிறப்பான மண்ணின் மாந்தரையும் சமூகப் பிரச்சினைகளையும் சித்திரிக்கும் நோக்கு எழுபதுக்குப்பின்னர் சிறப்பாகக் கடந்த ஐந்தாண்டுக் காலப் பகுதியில் வளர்ந்து வந்துள்ளது, சமுதாய விமர்சன நோக்கில் அண்மைக்காலத்தில் எழுதிய நாவலாசிரியர்கள் பலர் தங்கள் நாவல்களிற் சமுதாயப் பிரச்சினைகளுக்குக் கள மாகவுள்ளமண்ணின் புவியியல் எல்லையையும் அதன் மண் வாசனையையும் சிறப்பாகப் புலப்படுத்த முயன்றுள்ளனர். குறிப்பாக செங்கைஆழியான், ஏ. ரி. நித்தியகீர்த்தி, தெணியான், ஞானரதன், தி. ஞானசேகரன் முதலியோரிடம் இப்பண்பைக் காணலாம்.
செங்கை ஆழியான் தமது பல நாவல்களில் வண்ணுர் பண்ணைக் கிராமத்தைச் சித்திரிக்க முயன்றுள்ளார். முற்றத்து ஒற்றைப் பனை, பிரளயம் ஆகிய நாவல்கள் இக் கிராமத்தின் கதைகளே. இங்குள்ள சில மரபுகள், சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என்பன இவற்றிற் சித்திரிக்கப்படுகின்றன. இரவின் முடிவு நாவலும் இக் கிராமப்புறம் சார்ந்ததாகவே புலப்படுகிறது.
ஏ. ரி. நித்தியகீர்த்தியின் மீட்டாத வினை நாவல் யாழ்ப் பாணப் பகுதிக் கிராமமொன்றில் நடைபெறும் கதை என்று பொதுவாகக் கொள்ளப்பட்டாலும் சிறப்பாக வடமராட்சிக் கிராமப்புறக் களத்தையே சித்திரிக்கிறது. பருத்தித்துறைப் பகுதியைச் சார்ந்த ஆசிரியர் தமது சூழலை வைத்து எழுதியுள்ளார் எனலாம்.
"ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாணத்து, குறிப்பாக வடமராட்சிப் பகுதி மக்களில் ஒரு சாராரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதனைப் பிற்காலத்தில் அறிய விரும்புமொருவர் நிச்சயம் இந்நாவலையும் படிக்க நேரும்.??12
என்று இந்நாவலின் வடமராட்சிக் கிராமப்புற பிரதேசப் பண்புரிமை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தெணியானின் விடிவைநோக்கி . நாவலும் வடமராட்சிப் பகுதிக்குரிய நாவலாகவே அமைந்துள்ளது. ஞானரதன் எழுதிய

Page 93
160 ஈழத்துத் தமிழ் நால் இலக் சியம்
ஊமை உள்ளங்கள் அளவெட்டி,மல்லாகம் ஆகிய கிராமப்புறங் களைப் பகைப்புலமாகக் கொண்ட கதை எனத்தெரிகிறது. தி. ஞானசேகரனின் புதிய சுவடுகள் ஆசிரியரின் சொந்தக் கிராமமாகிய புன்னுலைக்கட்டுவனைக் களமாகக் கொண்டுள்ள
தென்று கருதமுடிகிறது.
யாழ்ப்பாணப் பிரதேச நாவல்கள் என்ற வகையில் மீனவக் களங்களைச் சார்ந்து எழுதப்பட்ட மூன்று நாவல்கள் குறிப்பிடத்தக்கன. காலஞ்சென்ற அ. கைலாசநாதனின் கடற்காற்று (1972), செங்கைஆழியானின் வாடைக்காற்று (1974) கே. டானியலின் போராளிகள் காத்திருக்கின்றனர் (1975) ஆகியவை முறையே மண்டைதீவு, நெடுந்தீவு, யாழ்நகரைச் சார்ந்த கடற்கரைப்பிரதேசம் ஆகியவற்றைக் களங்களாகக் கொண்டவை.
1962ஆம் ஆண்டு குறுநாவலாக எழுதப்பட்டு பின் தொடர்கதையாக விரிவடைந்து 1972இல் நூலுருப்பெற்ற கடற்காற்று மண்டைதீவின் மீனவக் குடும்பத்தின் அவல நிலையை எடுத்துக்காட்டுவது. கடற்ருெழில் புரியும் மீனவனுன தோமஸும் அவன் மனைவி அன்னவும் வறுயைபில் உழன்று பல துன்பங்களை அநுபவிக்கின்றனர். மகள் அலிஸ் காதலனுடன் ஓடிவிட்டாள். முத்துமாணிக்கன் என்பவன் அன்னுவைப் பலாத்காரம் செய்ய முயல்கிருன். கடற்றெழில் புரிகைபிலே தோமஸ் மரணமடைகிருன். அன்ன தன்மகன். ஜேக்கப்புடன் பைத்தியமாக அலைகிருள்.
கடற்றொழிலாளரின் துயரம் நிறைந்த வாழ்க்கைப் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்த முதல் நாவல் என்ற சிறப்பு இந்நாவலுக்குரியது.
நெடுந்தீவில் மீன்பிடிக்கவரும் வெளியூர்ச் "சம்மாட்டி’ களுக்கும் உள்ளூர் மக்களுக்குமிடையிலான உறவுகளையும் முரண்பாடுகளையும் சித்திரிப்பது செங்கைஆழியானின் வாட்ைக்காற்று. இயற்கைப் பகைப்புலத்தில் அமைந்தவொரு காதற் கதை என்று இதனைக்குறிப்பிடலாம். மீன்பிடிப்பதிற்

பிரதேசங்களை நோக்கி. I
சம்மாட்டிகளிடையே நிலவும் போட்டியும் அவர்கள் உள்ளூர்ப் பெண்களுடன் கொள்ளும் காதல் தொடர்பு களுமே இந்நாவலின் கதையம்சம்.
சம்மாட்டிகளான செமியோனும் மரியதாஸும் முறையே உள்ளூர்ப்பெண்களான பிலோமினவையும் நாகம்மாவையும் காதலிக்கின்றனர். முறைப்பெண்ணுன நாகம்மாவை விரும்பிய உள்ளூர்க்காரனன விருத்தாசலம் தன் காதலைக் கைவிட்டு அவளை மரியதாஸுடன் இணைத்து வைக்கிருன். பிலோமின சுடலைச் சண்முகத்தால் கற்பழிக்கப்பட்டு இறக்கிருள். இதையறிந்த விருத்தாசலம் சண்முகத்தைக் கொலை செய்கிருன்.
இயற்கைவருணனை, கருப்பொருள் வர்ணனை என்பவற் றுடன் காதற் சுவை கலந்து எழுதப்பட்ட இந்நாவலின் சம்பவங்கள் இயற்கைப் பகைப்புலத்திற் பொருந்தவில்லை என்றும் பிரதேச மாந்தரது வாழ்க்கையுடன் இணையாமல் ஒரு வெளிப்புறக் காட்சிப் படப்பிடிப்பாகவே காணப்படு கின்றதென்றும் திறனுய்வாளரொருவராற் கருத்துத் தெரி விக்கப்பட்டுள்ளது.13 வாசகர் மத்தியிற் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்நாவலைத் தழுவி அண்மையில் வாடைக்காற்று என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது.
மண்வாசனையும் கடல்வாசனையும் புலப்பட எழுதப்பட்ட கே. டானியலின் போராளிகள் காத்திருக்கின்றனர் (1975) நாவலின் கதை 1958ஆம் ஆண்டைப் பின்னெல்லையாகக்
கொண்ட இருபதாண்டுக்கால நிகழ்ச்சிகளைக் கொண்டது.
சந்தியாக்கிழவன் என்ற வயோதிப மீனவனின் கடலதுபவங் களைக் கூறும் வீரக்கதையாகத் தொடங்கி அவனது மகள் வருேணிக்காவுக்கும் அவள் கணவன் முத்துராசனுக்கு மிடையில் நிகழும் குடும்பக் கதையாக வளர்ந்து பின்னர் அடுத்தபரம்பரையான சொர்ணம், அலஸ் இருவருக்குமிடை யிலான ஊமைக் காதற் கதையாகத் திருப்பம் பெற்று இறுதியில் ஊமை அலசைக் கொடுமைப்படுத்தவரும் முதலாளிவர்க்கத்திற் கெதிராகத் திரண்டெழும் போராளி களின் கதையாக நிறைவு பெறுகிறது.

Page 94
162, ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
ஒரு பிரதேச நாவல் என்றவகையில் மீனவர் சமூகத்தின் வாழ்க்கைமுறைகளையும் பண்பாட்டம்சங்களையும் பிரதேசப் பகைப்புலத்தையும் சித்திரிப்பதில் ஆசிரியர் கவனம் செலுத்தியுள்ளார். V
அப்பச்சி மகாலிங்கம் எழுதிய கமலினி (1977) நாவல் யாழ்ப்பாணத்தின் நவாலி என்ற கிராமப்புறத்தின் கதை. அக்கிராமத்தின் வாழ்க்கைமுறைகளையும் தொழில்முறை விவரணங்களையும் உள்ளடக்கிய இக்கதை தனிமனித, குடும்ப உணர்வுகளுக்கு முதன்மை தந்து எழுதப் பட்டதெனினும் பிரதேசத்தின் சமூகப், பொருளாதார பிரச்சினைகளைத் தொட்டுக்காட்டுகிறது. கிராமத்தின் தொழின்முறைத் தேவைகளால் இளைய தலைமுறை தனது கல்வியைத் தொடரமுடியாத சூழ்நிலையை எடுத்துக்காட்டிய வகையிற் குறிப்பிடத்தக்க நாவல் இது.
தோட்டத் தொழிலாளர் பிரச்சினை நாவல்கள் என்ற
வகையில் நோக்கப்பட்ட நாவல்களில் கே. ஆர். டேவிட்டின் வரலாறு அவளைத் தோற்றுவிட்டது (1976) மலையகத்தின் வட்டக் கொடை என்ற கிராமத்தைக் களமாகக் கொண்டது. கே. விஜயன் எழுதிய விடிவு கால நட்சத்திரம் (1976) நாவல் 1971ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற பயங்கரவாத நிகழ்ச்சிகளின் பகைப்புலத்தில் எழுதப்பட்டது. உயர்வர்க்கத் தினரின் அடக்குமுறைக் கொடுமைகளையும் சமூக ஊழல் களையும் சித்திரிக்கும் இந்நாவலின் கதை மண்ணுேடு இணைய வில்லை; சில தனிமனித குணதோஷங்களைச் சித்திரிப்பதோடு அமைந்துவிடுகிறது.
அண்மையில் வெளிவந்த இரு நாவல்கள்
இந்து மகேஷ் எழுதிய இங்கேயும் மனிதர்கள் (1977), ஞான ரதன் எழுதிய புதிய பூமி (1977) ஆகிய இருநாவல்கள் அண்மையில் வெளிவந்துள்ளன. இங்கேயும் மனிதர்கள் நாவல் கொழும்பு நகரச் சேரிப்புற மக்களின் துன்பியல் வாழ்க்கையையும் அதன் மத்தியில் நிகழும் பாலியல் ஒழுக்கக் குறைபாடுகளையும் அவலச் சுவை பொருந்தச் சித்திரிப்பது.

பிரதேசங்களை நோக்கி. 63
ஞானரதன் புதிய பூமி மூலம் ஈழத்துத் தமிழ் நாவலுக்கு ஒரு புதிய பிரதேசத்தை அறிமுகம் செய்துள்ளார். பொல நறுவையைச் சார்ந்த காட்டுப்பகுதியில் நிலஅளவைத் தொழில் புரியும் சிங்கள தமிழ்த் தொழிலாளரின் தொழின் முறை அநுபவங்களையும் அங்கு நிகழும் நிர்வாக ஊழல் களையும் இந்நாவல் எடுத்துக் காட்டுகிறது. யாழ்ப்பாணத் தின் மல்லாகம் கிராமத்தில் வேலையில்லாக் கொடுமையாலே ரவீந்திரன் நில அளவையாளரொருவரின் பணியாளனுகத் தொழில் புரிவதற்குத் தயாராகிருன், தமையன் நாகலிங்கம் இதனை வெறுக்கிருன். நில அளவையாளருக்குச் சமையற் காரணுகப் பணிபுரிந்து இடையில் வீடுநோக்கித் திரும்பிவரும் அவனை நாகலிங்கம் அவமதித்து வீட்டைவிட்டு வெளியேற்று கிருன். திரும்பிச் சென்ற ரவீந்திரன் தன்ணுேடு தொழில் புரியும் நிலஅளவைத் தொழிலாளர்களுடனேயே தன் வாழ்க்கையை இணைத்துத்கொள்கிருன்; தொடக்கத்தில் இன உணர்வால் தன்னை வெறுத்த சிங்களத் தொழிலாளர் களான முதியான்சே, வீரக்கோன் முதலியவர்களைத் தன் பண்பால் வென்று தொழிற்சங்கவாதியாகிப் பரந்த தொழி லாளர் குடும்பத்திலே ஒருவனுகிவிடுகிருன்.
நில அளவைத்துறையில் நிகழும் சில சீர்கேடுகளையும் ஊழல்களையும் தொட்டுக்காட்டும் இந்நாவலில் இரண்டு முக்கிய செய்திகளை ஆசிரியர் முன்வைக்கிருர். அவற்றுள் ஒன்று யாழ்ப்பாணப் பிரதேச மக்களிடையே உறவுக்குள்ளும் தொழின்முறை காரணமாக நிலவும் உதாசீன மனப்பான்மை. மற்றையது இனத்தால் வேறுபட்டாலும் தொழிலாளர் ஒரு குடும்பமே என்ற வர்க்க உணர்வு.
நில அளவையாளர்களின் சுயநலம், தொழிலாளரைத் தங்கள் வர்க்க நலனுக்காகப் பயன்படுத்தும் தந்திரோபாயம் அந்தஸ்து வேறுபாடுகாட்டி அடக்கியாளும் பண்பு ஆகியனவும் இந்நாவலில் ஆங்காங்கு சுட்டிக்காட்டப்படு கின்றன.

Page 95
164 ஈழத்துத் தமிழ் நாவல் இலக் சியம்
மதிப்பீடு
பிரதேச நாவல்கள் என்ற வகையில் மேலே குறிப்பிட்ட பல்வேறு வகைப் படைப்புக்களையும் தொகுத்து நோக்கும் போது இத்துறையில் இவற்றுட் சிலவற்றைத் தவிர ஏனையவை ஆரம்பமுயற்சிகள் என்றே கொள்ளவேண்டி யுள்ளது. தத்தம் பிரதேசங்களை நாவலிலக்கியத்தில் இடம் பெறச் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் ஒன்றே இக்காலப் பிரதேச நாவலாசிரியர்கள் பலரையும் வழிநடத்தியுள்ளது. தத்தம் பிரதேசத்தில் தாம் பெற்ற அநுபவங்களையும் தாம் தொழில்புரியுமிடங்களில் அறிந்த தகவல்களையும் கண் டறிந்த நிகழ்ச்சிகளையும் மாந்தரின் மனப்பாங்குகளையும் அவ்வப்பிரதேசப் புவியியற் பின்னணியுடனும் பேச்சுவழக் குடனும் கூறுவதுடன் மட்டும் இவர்கள் திருப்தியடைவ தாகத் தெரிகிறது. இவ்வகை நாவல்கள் ஆழமான சமூகப் பார்வையும், குறிப்பிட்ட மண்ணுக்கே சிறப்பாகவுரிய பிரச்சினைகளையும் அவற்றுக்கான காரணிகளையும் அறிவு பூர்வமாக அணுகிப் பெற்ற தரவுகளினூடான உணர்வு பூர்வமான திட்டவட்டமான கதையம்சமும் கொண்டமைய வேண்டுமென்பதைக் கவனத்திற் கொள்வது அவசியம்.
"ஆழ்ந்த நேரடிஅநுபவமின்றி அவசரப் போக்கிற் போதிய பரிச்சிய மற்ற விஷயங்களைப் பலர் நாவலுக்குப் பொருளாகக் கொள்கின்றனர். அவர்கள் பிரச்சினை களைச் சரியான சமூக பொருளாதாரப் பகைப்புலத்தில் நோக்குதல் சாத்தியமில்லை. சித்திரிக்கப்புகும் வாழ் வில் ஆழ்ந்த அநுபவ ஈடுபாடு கொண்டு உள்ளத்தில் உண்மை ஒளி பெற்ருலன்றி எழுத்தில் ஒளிபிறக்க வழியில்லை. 14
என சி.தில்லைநாதன் கூறியுள்ள கருத்து அவதானிக்கத்தக்கது
குமாரபுரம் நாவலிலே அப்பிரதேச மரபுக் கதையொன்றை யும் புவியியற் பின்னணியையும் மட்டும் காணமுடிகிறதே பன்றிப் பிரதேசநாவலுக்கு வேண்டிய சமூகப்பார்வையையோ கதையம்சத்தையோ காண்பதற்கில்லை. புதிய தலைமுறைகள்,

பிரதேசங்களை நோக்கி. 165
போராளிகள் காத்திருக்கின்றனர் ஆகியவற்றில் Joint பிரதேசங்களின் சமயசம்பந்தமான சடங்கு சம்பிரதாயங் களும் வாழ்க்கைமுறை பற்றிய விபரங்களும் மொழி நடையும் மண்வாசனையைத் தந்தாலும் கதையம்சத்தில் அவை நிறைவு பெறவில்லை. வாடைக்காற்று, யானை ஆகிய நாவல்களும் கதையம்சத்தில் நிறைவுபெருத புவியியல் விவரணங்களா கவே அமைந்துவிடுகின்றன.
இவ்வகையில் ஈழத்தின் பிரதேச நாவல்கள் என்ற சிறப்புக்குரியவகையிற் கதைப்பண்பு கொண்டமைந்தவை அ. பாலமனேகரனின் நிலக்கிளி செங்கைஆழியானின் காட்டாறு ஆகிய இரண்டும் எனலாம். இவற்றுக்கு அடுத்த தரத்தில் அ. கயிலாசநாதனின் கடற்காற்று தாமரைச்செல்வி யின் சுமைகள், எஸ்.பூரீ ஜோன்ராஜனின் போடியார் மாப்பிள்ளை ஞானரதனின் புதியயூமி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
கணையாழி (1977 அக். - நவ.) இதழில் வெளிவந்த சு. பூரீதரனின் நிர்வாணம் என்ற குறுநாவல் "இருப்புவாத" நோக்கில் எழுதப்பட்டது. தமிழ் நாவலிலக்கியத்துறையி லேயே தரமானதொரு புதுமுயற்சியாக இது அமைந்துள்ளது.
அடிக்குறிப்புகள்
1. அ. பாலமனேகரன், நிலக்கிளி, ஆசிரியர் முன்னுரை
"பிரதேசநாவல்கள்-யாழ்ப்பாணப் பிரதேச நாவல்கள்; தென்னுசியவியல்
ஆய்வரங்குக் கட்டுரை, 1976, (தட்டச்சுப்பிரதி) பக், 1. தலைமுறைகள், 'நானும் என் தலைமுறைகளும்', பக். 12-13. இந்நூலில் 61-65ஆம் பக்கங்கள் பார்க்க.
2.
துரை. மனேகரன், மு. கு. பக், 2.
நீண்டபயணம், “சில உண்மைகள்' பக், TII
(அ) சி. பாலச்சந்திரன், நிர்வாகி, வீரகேசரி புத்தக வெளியீட்டு இலாகா, 1977-3-31இல் இந்தூலாசிரியருக்கு எழுதிய கடிதத் தகவல், பக் 1.
7 Ludi. .

Page 96
166 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
8, நிலக்கிளி, பக். 3. 9. 1973-8-4இல் யாழ் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற - நிலக்கிளி அறிமுகவிழாவில் ஆற்றிய உரையிலிருந்து,
ஆதாரம் ஈழநாடு 1973-8-8 10. (அ) 'நிலமகளைத் தேடி ..., (குறுநாவல், சிரித்திரன்,
1973 SlékGLmurf) (ஆ) வல்லூறு, (சிறுகதை, மல்லிகை-71, 1974 மார்ச்.)
(இ) ஒரு கிராமத்துப் பாடசாலை, (சிறுகதை, மல்லிகை 100,
1976 ஆகஸ்ட்)
(ஈ) பேரம் (சிறுகதை, மல்லிகை 106, 1977 பெப்ரவரி)
ஆகியவற்றிற் குறிப்பிட்ட சம்பவங்களும் பாத்திர்ங்களும் கருத்துக்களும் இந்நாவலில் இணைந்துள்ளன. 11. சில்லையூர் செல்வராசன், ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி, பக். 19. 12. செ. யோகராசா "எழுபதுகட்குப்பின் ஈழத்துத் தமிழ் நாவல்கள்."
அலை 1, 1975. கார்த்திகை, பக். 7. 13. சி. தில்லைநாதன், 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் ஒரு பொது மதிப்பீடு", தமிழ் நாவல் நூற்ருண்டுவிழா ஆய்வரங்குக் கட்டுரை (தட்டச்சுப் பிரதி) பக். 7. all 4. டிெ

நிறைவுரை
1885ஆம் ஆண்டு வெளிவந்த அசன்பேயுடைய கதை தொடக்கம் 1977ஆம் ஆண்டு வெளிவந்த புதியபூமி வரையிலான ஏறத்தாழ நானுாற்றைம்பது நாவல்கள் அவை எழுந்த நோக்கத்துக்கும் அவற்றின் பண்புக்குமேற்பக் கால கட்டங்களாக வகுத்து நோக்கி அவற்றின் கதைப்பண்பை யொட்டிய விளக்கம் தந்து தரமானவற்றை மதிப்பீடு செய்யும் முயற்சியும் இந்நூலில் மேற்கொள்ளப்பட்டது. இவற்றின் பாத்திரப் படைப்பு, மொழிநடை ஆகியவைபற்றி விரிவான ஆய்வுக்கு இடமுண்டு. இவ்வகை முயற்சிகள் முதுகலைப் பட்ட ஆய்வுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ் நாட்டுத் தமிழ் நாவலிக்கியப் பரப்புடன் தொடர்புபடுத்தி நோக்கும்போது ஏறத்தாழக் கடந்த ஒரு நூற்ருண்டுக்கால ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலே கடந்த பதினைந்தாண்டுகளில் வெளிவந்த நாவல்களிற் சில குறிப்பிடத்தக்க தரமுடையனவாகத் திகழ்கின்றன என்று நாம் பெருமைப்பட இடமுண்டு. தமிழின் தரமான ஐம்பது நாவல்களைத் தெரிவுசெய்தால் ஈழத்து நாவல்களான செ. கணேசலிங்கனின் நீண்டபயணம், செவ்வானம், சடங்கு, தரையும் தாரகையும், போர்க்கோலம், எஸ். பொன்னுத்துரை யின் சடங்கு, யோ. பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன்?, அ. பாலமனேகரனின் நிலக்கிளி, க. அருள்சுப்பிரமணியத்தின் அவர்களுக்குவயதுவந்துவிட்டது, செங்கைஆழியானின் காட்டாறு. ஆகியன அவ்வரிசையில் இடம்பெறத்தக்க தரமான

Page 97
I68 メー ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
படைப்புக்கள் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ் நாவ லிலக்கியப் பரப்பைத் தொகுத்து நோக்கியவர்கள் ஈழத்துத் தமிழ் நாவல்களின் தரத்தை மதிப்பிடும் வகையில்,
".ஈழத்துத் தமிழ் நாவல்துறைச் சாதனைகளைப்
பார்க்கும் போது நமக்கு அதிக நம்பிக்கை ஏற்படு
கிறது. அருள் சுப்பிரமணியம், அ. பாலமனேகரன்
மற்றும் இவர்களுக்கு முன்னேடிகளாயிருந்த இளங் கீரன், தேவன், செங்கை ஆழியான், செ. கணேசலிங்கன், எஸ். பொன்னுத்துரை போன்றவர்கள் நாவல் துறைக்கு ஆற்றியுள்ள பணியை அளவிட்டுப் பார்க்கும் போது தமிழ் நாவலின் எதிர்கால வளர்ச்சிக்கு ஈழத்திலிருந்து கணிசமான பங்கு கிடைக்குமென்று தெரிகிறது."2
எனத் தெரிவித்த கருத்து ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத் துறையினர் பெருமைப் படுவதற்குரிய தொன்றெனலாம். எனினும் தமிழின் தரமான நாவல்கள் எனத்தக்க டி. செல்வராஜின் தேநீர் நீல. பத்மநாபனின் தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம், கு. சின்னப்பபாரதியின் தாகம், பொன் னிலனின் கரிசல், கி. ராஜநாராயணனின் கோபல்லகிராமம், தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள். இந்திரா பார்த்த சாரதியின் சுதந்திரபூமி, ஜெயகாந்தனின் சில நேரங்களில் ஒல மனிதர்கள் போன்ற நாவல்கள் ஈழத்திற் படைக்கப் படவில்லை என்பதையும் நாம் மனதிற்கொள்ள வேண்டும். ஆழ்ந்த சமூகப்பார்வையும் தொடர்ந்து எழுத்துத்துறையில் மேற்கொள்ளும் முயற்சியும் உடையவர்களாக இருந்தால் ஈழத்து எழுத்தாளர்கள் இத்தகைய படைப்புக்களைத் தருவது இயலாத காரியமல்ல.
ஈழத்து நாவலாசிரியர்கள் சிலர் ஒருசில ஆரம்ப சூரத் தனங்களோடு நின்றுவிடுகிருர்கள். ஒரு சிலரைத் தவிர ஏனையோர் தொடர்ந்து நாவல் எழுதுவதில்லை. எஸ். பொன்னுத்துரை, யோ. பெனடிக்ற் பாலன் ஆகியோரின் நாவல்கள் எதுவும் கடந்த பத்தாண்டுக்காலத்தில் வெளிவரவில்லை. க. அருள்சுப்பிரமணியம், <9. LfTen) மரூேகரன் ஆகியோர் தங்கள் முதற்படைப்புகளிற் காட்டி

நிறைவுரை 169
யுள்ள ஆற்றலை அடுத்துவந்ந படைப்புக்களிற் புலப்படுத்த வில்லை. காட்டாறுவரை வளர்ந்துவந்த செங்கை ஆழியானின் எழுத்தாற்றல் யானையிற் காணப்படவில்லை. புதியவர்களில் எஸ். பூரீ. ஜோன்ராஜன், ஞானரதன், தி. ஞானசேகரன், தாமரைச் செல்வி, சு. பூரீதரன் முதலிய வர்களிடம் காணப்படும் எழுத்தாற்றல் தொடர்ந்து வளர்ந்தால் தரமான பல நாவல்களை எதிர்பார்க்கலாம்.
சிறுகதைகள் எழுதிப்பெற்ற ஆற்றலுடன் தொடர் கதைகள் எழுத முன்வந்துள்ள நந்தினி சேவியர் (மேகங்கள்) திக்குவல்லை கமால் பொய்மைகள் நிலப்பதில்?ல சாந்தன் (ஒட்டுமா) ஆகியோரது சமூகப் பார்வையும் பணியும் ஈழத்துத் தமிழ் நாவலுக்கு வளமான எதிர்காலத்தை நல்கும்என எதிர்பார்க்கலாம்.
ஈழத்துத் தமிழ் நாவல் துறையிலே பெண்களின் பங்கு என்ற வகையிலே, செம்பொற்சோதீஸ்வரர் செல்லம் மாள், சு. இராசம்மாள் ஆகியோருக்குப் பின்னர் ஈழகேசரி யிற் காந்திமதி முதலியோரதும் அண்மைக் காலத்தில் யாழ்நங்கை, திருமதி ந. பாலேஸ்வரி, நயிமா ஏ. பஷீர் தாமரைச் செல்வி, செல்வி சிவம் பொன்னையா முதலியவர்க ளினதும் முயற்சிகளைக் குறிப்பிடலாம். இவர்களுள்ளே தாமரைச் செல்வியின் சமூகப்பார்வையும் பணியும் பாராட்டத்தக்கன. ஈழத்துப் பெண் நாவலாசிரியர்கள் தமிழ் நாவலுக்கு ஆற்றக் கூடிய பணி தொடர்பாகத் திருமதி மனேன்மணி சண்முகதாஸ் தெரிவித்துள்ள கருத் தொன்றினை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.
"இன்றைய ஈழத்துப் பெண் நாவலாசிரியைகள், தொகையில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாக இருந்தாலும் அவர்களது பங்களிப்பு ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு முக்கிய இடத்தினைப் பெறவேண்டியது மிகவும் அவசியமானது. இலங்கை போன்ற பொரு ளாதார முன்னேற்றத்திற்காகச் சமூக அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்ற சிறிய நாடுகளில் அத்தகைய மாற்றங்களின் தன்மைகளையும் பண்புகளையும் அக் காலத்தில் எழுகின்ற நாவல் சித்திரித்துக் காட்டுவதும்

Page 98
170 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
இலகுவானதாகும். எனினும் யதார்த்தப் பண்புகளைக் கொண்ட நாவல்களை உருவாக்கும் ஆசிரியைகளே இப்பணியைச் சிறப்பாகச் செய்யமுடியும். இந்த ரீதியில் ஈழத்தில் இன்றைய எழுத்தாளர்களாக விளங்கும் பெண்களில் படித்தவர்கள் முன் நின்று உழைக்க வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளைப்பேசுகின்ற சமூகத்தினர் வாழுகின்ற சிறிய நாடாகிய இலங்கையின் சமூக அமைப்புக்களிலே குறிப்பாகப் பெண்களின் சமூக நிலையையும் மதிப்பினையும் தமிழ் நாவல்கள் பிரதிபலித்துக்காட்டமுனையலாம்".3
ஈழத்துத் தமிழ் நாவல்களிற் கையாளப்பட்டு வந்த சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகச் சில விடயங்களை அவதானிப்பது அவசியம். சமூகக் குறைபாடான சாதி ஏற்றத்தாழ்வு தொடர்பாகவும் பொருளாதர ஏற்றத்தாழ்வு தொடர்பாக வும் குறிப்பிடத்தக்க நார்வல்கள் வெளிவந்துள்ளன. யாழ்ப்பாணப் பிரதேசத் தமிழ் மக்களின் திருமண உறவில் "சடங்குசம்பிரதாயங்கள் வசிக்கும் முக்கியத்துவமும் செ. கணேசலிங்கனின் சடங்கு நாவலில் எடுத்துக்காட்டப் பட்டது. ஆயின் இத்துறையிற் 'சீதனம் வகிக்கும் முக்கி யத்துவமும் அதனுல் இளம் உள்ளங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களும் அண்மைக்கால ஈழத்துத் தமிழ் நாவல் களுக்குப் பொருளாகவில்லை.
அன்றியும், ஈழத்துத் தமிழ் மக்களின் அடிப்படைப்
பிரச்சினையான இனப் பிரச்சினை - சிங்கள பெளத்த பெருந் தேசியவாதத்தால் தமிழ் மக்களின் அரசியல், குடியுரிமை, மொழி, பிரதேசம் ஆகியவற்றுக்கு நிகழ்ந்து வரும்பாதிப் புக்கள் தொடர்பான பிரச்சினைகள் - ஈழத்துத் தமிழ் நாவலுக்குப் பொருளாகவில்லை. கடந்த நான்காண்டுகட்கு மேலாக இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுவந்துள்ளது.4 நாவலில் மட்டுமன்றிக் கவிதை சிறுகதை ஆகியவற்றிலும் கூட இப் பிரச்சினை முக்கிய இடத்தைப் பெறவில்லை. இது தொடர்பாக அலை சஞ்சிகையினர் எழுப்பிய விஞரவொன் றுக்கு ஈழத்துத் திறனுய்வாளரிருவர் அளித்த விளக்கங்களை இங்கு சுட்டிக்காட்டுவது பொருந்தும்.

நிறைவுரை 71
"தமிழர்களின் நியாயமான உரிமைகளைப் பற்றிப் பேசினலோ, எழுதினலோ தம்மைப் பிற்பேக்குவாதிகள் என்று சிங்கள மக்கள் கருதிவிடுவார்கள் என்றும் அவர்களின் நல்லபிப்பிராயத்தைத் தாங்கள் இழந்து விடுவார்கள் என்றும், நமது "முற்போக்கு" வாதிகள் நினைக்கின்றனர். இந்தக் கோழைத்தனத்திலிருந்தும் மனச் சிக்கலிருந்தும் என்று, விடுதலைபெறுகிருர்களோ அன்றுதான் இவர்களுக்கு விமோசனம் உண்டு.”*3
என்றும்
"தமிழர் பிரச்சினையின் சமுதாய அடிப்படையை நமது எழுத்தாளர்களும் கவிஞர்களும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்பது இதற்கான காரணமாக இருக்க லாம். பிழையான அரசியல் தலைமையும் பிறிதொரு காரணமாக இருக்கலாம். தமிழர் பிரச்சினையின் காரணங்கள் புரிந்து கொள்ளப்படாவிட்டாலுங்கூட ஸ்தாபன மயமாக்கப்பட்டுள்ள சிங்கள இனவாதம், தமிழ் பேசும் மக்களின் அன்ருடப் பொதுவாழ்வில் எவ்வாறு செயற்படுகிறது என்பது பற்றிய உண்மை பூர்வமான சித்திரங்கள் கூட நமது இலக்கியத்தில் பொதுவாக இல்லை என்பது சிந்தனைக் குரியது."
என்றும் தமிழ்மக்களின் இனப்பிரச்சினையின் நியாபூர்வமான அடிப்படை இவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. காரணங் காட்டுவதிற் கருத்து மாறுபாடு இருந்தாலும் இப் பிரச்சினையும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்குப் பொருளாக
வேண்டும் என்பதில் இருவேறுபட்ட கருத்திற்கு இடமில்லை.
ஈழத்துத் தமிழ் நாவல் வெளியீட்டுக்கான பிரசுரக் களம் தொடர்பாகவும் சில கருத்துக்களை கூறவேண்டியது அவசியமாகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக வீரகேசரி புத்தக வெளியீட்டுத்துறை ஒன்றே வலிமிக்கதொரு பிரசுரக் களமாக இயங்கிவருகிறது. இதன் பிரசுரப் பணி பற்றியும் அதில் வர்த்தக நோக்கு வகிக்கும் முக்கியத்துவம் பற்றியும் இலக்கியக்காரரிடையிற் கருத்துவேறுபாடு உண்டு. வீரகேசரிப் பிரசுரமாகத் தங்கள் படைப்புக்களைப் வெளியிடுபவர்கள் அதன் இலக்கியப் பணியைப் பாராட்டுகிருர்கள்.

Page 99
172 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
"இந்த நாவல், இன்று உங்கள் கரங்களில் இருக் கின்றதென்றல், இதன் முழுப் பெருமையும் வீரகேசரிப் பிரசுராலயத்துக்கும், அதன் நிருவாகி. திரு. எஸ். பாலச்சந்திரன் அவர்களுக்குந்தான் உரியதாகும். இவர் களுக்கு என்றும் நான் மிகுந்த நன்றியுடையவனுவேன்"
ாணவும்
"ஈழத்தின் நாவலிலக்கிய வரலாற்றில் வீரகேசரி புத்தக வெளியீடு சாதித்து வருபவை மறைக்கமுடியாத சாதனைகளாகும்."
எனவும் இப்பாராட்டுக்கள் அமைகின்றன. இலக்கியத் திறனுய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கும் பொழுது,
**எழுத்தாளன் தானே ‘ வெளியிட்ட நூல்களில், தான் எதைச் சொல்ல விரும்பினனே அதை அவஞற் சொல்ல முடிந்தது. ஆனல் இன்ருே வீரகேசரிஸ்தாபனம் விரும்பியதையே எழுதிக்கொடுக்க நேர்வதோடு அதைத் தான் விரும்பியவாறு மாற்றவும், வெட்டிக் கொத்தித் திருத்திக் கொள்ளவும் வீரகேசரி ஸ்தாபனம் உரிமை யுடையதாக இருக்கிறது. இங்கேதான் எழுத்தாளர்கள் கவனமாக இருக்கவேண்டும். எழுத்தாளன் தான் விரும்பியதைச் சொல்ல இயலாமல், ஒரு ஸ்தாபனம் தான் விரும்பியதைச் சொல்ல எழுத்தாளனைக் கருவி யாகப் பயன்படுத்துகிறது. புதிய எழுத்தாளர்களதும் பழைய எழுத்தாளர்களதும் சுயத்துவத்தை இவை பழுதாக்குகின்றன. "9
எனச்சுட்டிக் காட்டுகிருர்கள்.
ஈழத்து நாவவாசிரியர்கள் தத்தமது படைப்புக்கண் வெளியிடுவதற்குப் பிரசுரக் களத்தை நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலையினையும் அதேவேளை தமது படைப்பாற்றலை வர்த்தக நோக்கிற்குப் பலியாக்கக் கூடாது என்ற தற்காப்புணர்வையும் இக்கூற்றுக்கள் உணர்த்துகின்றன.

நிறைவுரை 17 K
பிரசுரக் களத்தின்பணி என்ற வகையிற் கடந்த ஆருண்டுக் காலத்திலே தெளிவத்தை ஜோசப், அ. பாலமனேகரன், எஸ். பூரீ. ஜோன்ராஜன், வை. அஹ்மத், ஞானரதன், தி. ஞானசேகரன், தாமரைச் செல்வி கே. ஆர். டேவிட் தெணியான் முதலிய பல்வேறு பிரதேச எழுத்தாளர் களையும் நாவலுலகுக்கு அறிமுகம் செய்துவைத்தது ang G8sarili பிரசுரக்களம் என்பதனையும் தரமான நாவல்களிலொன்முன காட்டாறு நாவல் வீரகேசரி நாவல் போட்டிக்காக எழுதப் பட்ட, தென்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் அண்மையில் அந்நிறுவனம் அறிவித்துள்ள "பிரதேச நாவல் போட்டி"10 பல புதிய நாவலாசிரியர்களை அறிமுகம் செய்வதாக அமையும் என்றும் எழுத்துலகிலிருந்து தற்காலிகமாக விடைபெற்ற பலரை மீண்டும் எழுதச்செய்யும் எனவும் எதிர்
fTIT 5956) T O
இவ்வகையில் தனியொரு நிறுவனமான வீரகேசரிப் பிரசுரக்களம் மட்டுமின்றி விற்பனைவசதியுள்ள பிறபத்திரிகை நிறுவனங்களான தினகரன், சுதந்திரன், தினபதி ஆகியனவும் நூற்பிரசுரத்துறையில் ஈடுபட்டு நாவலிலக்கியப் பணிபுரிய முன்வந்தால் ஈழத்துத் தமிழ் நாவலுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு எனத் திடமாகக் கூறலாம்.
அடிக்குறிப்புக்கள்
1. இலங்கைப் பல்கலைக் கழக யாழ்ப்பாண வளாகத் தமிழ்த் துறையிலே "ஈழத்துத் தமிழ் நாவல்களிற் கதைத் தலைவன் பாத்திரப்படைப்பு" என்னும் தலைப்பிலே துரை மனேகரனும் "ஈழத்துத் தமிழ்ப் புனைகதைகளில் மொழி, என்ற தலைப்பில் சி. வன்னியகுலமும் முது கலைப் பட்டத்திற்காக ஆய்வு நிகழ்த்தி வருகின்றனர்.
2. பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி) சோ. சிவபாதசுந்தரம், தமிழ்
நாவல், நூருண்டு வரலாறும் வளர்ச்சியும். பக். 272
3. "பெண்களும் தமிழ்நாவலும்", சிந்தன. தொகுதி 1. இதழ் 3 & 4
1978 புரட்டாதி, மார்கழி, பக். 32

Page 100
I74 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
4. 1974 - 08 - 04 இல் கண்டியில் 'நந்தி’ தலைமையில் நடைபெற்ற தமிழியற் கழகக் கருத்தரங்கில் இந்நூலாசிரியரால் இக்கருத்து எடுத்துக்காட்டப்பட்டது. 1974சித்திரை - ஆனி "பூரணி சஞ்சிகை யின் 23-ம் பக்கத்தில் 'ஏன்?" என்றதலைப்பில் இடம் பெற்ற
குறிப்பில் இக்கருத்துச் சுட்டிக் காட்டப்பட்டது.
5. மு. பொன்னம்பலம், "முப்பரிமாணம்', 'அலை. 7, 1977 தை, மாசி
us. 81
,ே எம். ஏ. நுஃமான் டிெ
7. தெணியான், விடிவைநோக்கி , ஆசிரியர் முன்னுரை
8. செங்கைஆழியான், காட்டாறு, ஆசிரியர் முன்னுரை
9. விரகேசரி 50-வது பிரசுர விழாவில் கா சிவத்தம்பி தெரிவித்த இக் கருத்தை "இமையவன்' 'அலை. 8. 1977 பங்குனி-சித்திரை இதழின் 210 - 11 ஆம் பக்கங்களிற் பிரசுரித்துள்ளார்
10. வீரகேசரி, 1977 - 4 - 16, 17-ம் திகதி இதழ்களில் உள்ள விளம்பரம்

பின்னிணைப்பு - 1
ஈழத்துத் தமிழ் நாவல்கள்
*1885 - 1978 காலப் பகுதியில் ஏறத்தாழ 450 நாவல்கள் ஈழத்தில் வெளிவந்துள்ளன. இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாக நூலக வெளியீடாக இந் நூலாசிரியர் வெளியிட்ட ஈழத்துத் தமிழ் நாவல் - நூல் விபரப்பட்டியல் 1885-1976என்ற நூலில் அக்காலப் பகுதியின் 407 நாவல்கள் தொடர்பான விபரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த ஆய்வு நூலிற் கையாளப்பட்ட நாவல்களின் விபரங்கள் மட்டுமே இப் பின்னிணைப்பில் இடம்பெறுகின்றன. முழுமையான விபரம் அறிவதற்கு மேற்குறிப்பிட்ட நூல் விபரப் பட்டியலைத் துணைக் கொள்ளவும்.
அகஸ்தியர், எஸ். இருளினுன்ளே, யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, 1968 124 ப. (மூன்று குறு நாவல்கள்) திருமணத்துக்காக ஒரு பெண் காத் திருக்கிருள், கொழும்பு. மாணிக்கப் பிரசுரம், 1976. 162 ப. செய்தி பத்திரிகைத் தொடர் 1972)
அப்பாஸ், எம். ஏ. இவளைப்பார் கொழும்பு சுதந்திரன்
அச்சகம் 1953 82 பக்.
கள்ளத்தோணி. டிெ : நாஷனல் நியூஸ் ஏஜென்ஸிஸ், 1953; 161 ப. சிங்களத்தீவின் மர்மம் ைெடி 1956, 136 ப ஒரே இரத்தம் p சி. ஐ. டி. சிற்றம்பலம் ? மூன்று பிரதேசங்கள் ?
யக்கடையாவின் வர்மம் ?

Page 101
776 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
அரியரத்தினம், இராஜ, (தமிழாக்கியவர்)
தங்கப் பூச்சி, ஆங்கில மூலம்: ஜே. ஸி. எதிர்வீரசிங்கம், ஈழகேசரி பத்திரிகைத் தொடர் 1948-02-01 - 08-29
அருள்சுப்பிரமணியம்,க. அவர்களுக்கு வயது வந்துவிட்டது,
மட்டக்களப்பு: மலர் வெளியீடு, 1973 13, 206 Lu.
நான் கெடமாட்டேன், கொழும்பு : வீரகேசரி வெளியீடு 1976, 167 ப. அக்கரைகள் பச்சையில்லை, டிெ. 1977 303 Lu.
அருள் செல்வநாயகம் பாசக்குரல். சென்னை : கலைமகள்
காரியாலயம், 1963, 124 ப.
மர்மமாளிகை, கொழும்பு: வீரகேசரி வெளியீடு, 1973, 243 ப.
வாழ்முனை வாழ்வு வீரகேசரி பத்திரிகைத் தொடர் 1962-10-20.?
அன்னலட்சுமி இராசதுரை (புனைபெயர் : யாழ் நங்கை)
விழிச்சுடர், சுன்னகம்: தமிழருவிப்பதிப் பகம், 1970. 122 ப. (இரண்டு குறு நாவல்கள்) ۔ உள்ளத்தின் கதவுகள், கொழும்பு : வீரகேசரி வெளியீடு, 1975, 161 ப. (மித்திரன் பத்திரிகைத் தொடர்)
அஹ்மத், வை. புதிய தலைமுறைகள், கொழும்பு :
வீரகேசரி வெளியீடு, 1976, 129 ப.
ஆசீர்வாதம், எஸ் (பதிப்பாசிரியர்)
பாவசங்கீர்த்தன இரகசியப்பலி, 2-ம் பதிப்பு யாழ்ப்பாணம் : சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம் 1928, 242 ப.

பின்னிணைப்பு - 1 177
ஆனந்தன், கே. எஸ். உறவும் பிரிவும், இணுவில் : தமிழ்
மன்ற வெளியீடு, 1964, 60 ப. தீக்குள் விரலே வைத்தால், கொழும்பு: வீரகேசரி வெளியீடு, 1972, 187 ப, மர்மப்பெண், கொழும்பு: ஜன மித்திரன் வெளியீடு, 1974, 126 ப. காப்பக் கிருகம், கொழும்பு: மாணிக்கப் ۔۔۔۔ பிரசுரம், 1974, 172 ப. காகித ஒடம், கொழும்பு : வீரகேசரி, வெளியீடு, 1974, 138 ப. சொர்க்கமும் நரகமும், மாணிக்கம் தொடர் 1973 ஆடி 1975 மாசி கனலும் புனலும் டிை 1975 சித்திரை.? சாத்தான் வேதம் ஒதுகின்றது, சுடர் 1976 ஆடி ..? v
இடைக்காடர் சித்தகுமாரன் 2 பாகங்கள் யாழ்.
நாவலர் அச்சுக்கூடம், 1925 209 ப. நீலகண்டன் ஓர் சாதி வேளாளன், டிெ . נL 192 - 1925
இந்து மகேஷ் (புனைபெயர்) (எஸ். மகேஸ்வரன்)
r ஒரு விலைமகளைக் காதலித்தேன்
கொழும்பு வீரகேசரி வெளியீடு, 1974. l34 1. நன்றிக்கடன், டிெ. 1975, 158 ப. இங்கேயும் மனிதர்கள், டிெ 1977.164ப. 7 மெளனராகங்கள், மாணிக்கம் தொடர் 1976.
இராசம்மாள், சு. சரஸ்வதி அல்லது காணுமற்போன
பெண்மணி, கொழும்பு : திருமதி எஸ்.
செல்லம்மாள். 1929, 182 ப.
23

Page 102
178 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
இராசரத்தினம், க. தேவி திலகவதி அல்லது குப்பையிற் குண்டுமணி, ஈழகேசரிப் பத்திரிகைத் தொடர் 1936-07-05 - 1937-05-02
இராசரத்தினம், வ. அ. கொழுகொம்பு, சுன்னகம்: 61 - இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம் 1959, vi, 336 ப. (ஈழகேசரிப், பத்திரி கைத் தொடர் 1955-07-17 - 1956-06-24) கிரெளஞ்சப் பறவைகள், கொழும்பு : வீரகேசரிப் வெளியீடு, 1975, 167 ப.
இராசையா, வரணியூர், எ. சி.
பவளகாந்தன்அல்லதுகேசரிவிஜயம்(1,2) சுன்னுகம் : தனலக்குமி புத்தகசாலை, 1932, 1940 (ஈழகேசரிப் பத்திரிகைத் G5nt Li 1932) அருணுேதயம் அல்லது சிம்மக்கொடி, டிெ. 1936. (டிெ தொடர். 1933)
லங்கையர்கோன், (புனைபெயர்) ந. சிவஞானசுந்தரம்,
(தமிழாக்கியவர்.) முதற்காதல், ருஷ்யமூலம் : ஐவன் துர்கனேவ், சென்னை : கலைமகள் காரியாலயம் 1942, 82 ப. 2-ம் பதி. டிெ. 1955 ஈணுெக் ஆர்டன், ஆங்கில மூலம்: Garnom rif '- அல்பிரட் ரெனிஸன், ஈழகேசரிப் பத்திரிகைத் தொடர் 1939 - 06 - 18-09 - 07., வெறும் கனவுதான், ஆங்கிலமூலம் : தாமஸ்ஹார்டி. ைெடி தொடர்
1939 - 07 - 23 - 08 - 20. கிளாருமிலிச், ருஷ்யமூலம் : ஐவன் துர்கனேவ், ഒ് 1940 - 12 - 22 --- 1941 - 03 - 23

பின்னிணைப்பு - 1
79
இளங்கீரன், (புனைபெயர்) சுபைர்.
இன்னுசித்தம்பி எஸ்.
தென்றலும் ւկա5ylմo, சென்னை : நவபாரத் பிரசுராலயம்; , 1956 : 183 ப. (ஆனந்தன் பத்திரிகைத் தொடர் 1955)
நீதியே நீ கேள் !, சென்னை : பாரி நிலையம், 1962. 472 ப. தினகரன் தொடர்-1959
சொர்க்கம் எங்கே?, தினகரன் தொடர்,
1955.
புயல் அடங்குமா ? ைெடி 1956
மனிதர்கள், டிெ. 1956 மண்ணில் விளைந்தவர்கள், தமிழன் பத்திரிகைத் தொடர், 1960. இங்கிருந்து எங்கே ?, தினகரன் பத்திரி கைத் தொடர், 1961. காலம் மாறுகிறது, டிெ. 19 4.
அவளுக்கு (5 வேலை வேண்டும், வீரகேசரி பத்திரிகைத் தொடர் 1972.
அன்னை அழைத்தாள், சிரித்திரன், சஞ்சிகைத் தொடர், 1976
(தழுவல் அல்லது தமிழாக்க ஆசிரியர்) ஊசோன் பாலந்தை கதை யாழ்ப்
பர்ணம் : எஸ். தம்பிமுத்துப்பிள்ளை.,
1891, 96 Lu. 2-ilib u g6. 1924.
உதயணன் (புனைபெயர்) எஸ். ரி. சிவலிங்கம்.
பொன்னுன மலரல்லவோ?, கொழும்பு வீரகேசரி வெளியீடு., 1975, 220 ப.
அந்தரங்க கீதம், ஷெ. 1976. 119 ப.

Page 103
180 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
உவைஸ், ம. மு. (தமிழாக்கியவர்.)
கிராமப் பிறழ்வு,சிங்களமூலம்: மார்டின் விக்கிரமசிங்க. கொழும்பு : பூரீலங்கா சாகித்திய மண்டலம், 1964. X1, 238 ւս.
ஏரம்பமுதலி, வே. (தழுவலாக்க ஆசிரியர்.)
அரங்க நாயகி, ஆங்கிலமூலம் : சேர் வால்டர் ஸ்கொட், மட்டக்களப்பு : லங்கா வர்த்தமானி அச்சியந்திர
Fnt&v, 1934. XV, 346 L u.
கசின் (புனைபெயர்) க. சிவகுருநாதன்
சகடயோகம், ஈழகேசரி பத்திரிகைத் தொடர் 1949-08-21-12-04. மணியோசை டிெ. 1950-01-01-01-29 இதய ஊற்று, ஷெ. 1951-01-21
-06-24.
நூலும் நூற்கயிறும், டிெ. 1952-02-12 -03-09
குமாரி இரஞ்சிதம், டிெ. 1952-09-21
5 I953- 02- I سس--
இராசாமணியும் சகோதரிகளும், டிெ.
1953-07-15-08-02
ஒரு சொட்டுக் கண்ணீர், ബ .
1953-10-25-11-08.
காதல் வலை, 6ðg . 1954-07-04
ཨམ་མ་-098-29
பச்சைக்கிளி, டிெ 1957-08-04-09-22. கற்பகம், டிெ, ? சொந்தக் கால், േ ?

பின்னிணைப்பு - 1
கணபதிப்பிள்ளை, க.
கணேசலிங்கன், செ.
8.
(தழுவலாக்க ஆசிரியர்.) பூஞ்சோலை, ஜெர்மனிய மூலம் : தியோடர்சுதாம். கொழும்பு : க. கணபதிப்பிள்ளை. 1953. 80 ப. வாழ்க்கையின் வினுேதங்கள் கொழும்பு : க. கணபதிப்பிள்ளை 1954, llau.
அபலேயின் கடிதம் (தமிழாக்கம்) ஆங்கிலமூலம் : ஸ்ரீபன் செவாக். சென்னை : பாரிநிலையம், 1965, 76ப. நீண்டபயணம் சென்னை: பாரிநிலையம், 1965. 227 L.
சடங்கு Goòng. 1966, 256 Lu. செவ்வானம் Gðq. 1967, 259 Lu. தரையும் தாரகையும் ைெடி . 1968,298ப. போர்க்கோலம் Goòng. 1969, 244. Lu.
மண்ணும் மக்களும் டிெ 1970,175.ப.
கணேஷ், கே. தமிழாக்கியவர்.
கதிர்காமநாதன், செ.
கந்தசாமி, அ. ந.
கமால், திக்குவல்லை
தீண்டாதான், பஞ்சாபிமூலம் முல்க் ராஜ் ஆனந்த், காரைக்குடி புதுமைப் பதிப்பகம். 1947. 208 ப.
நான் சாகமாட்டேன், உருதுமூலம் : தமிழாக்கியவர் கிருஷன் சந்தர், கொழும்பு : வீரகேசரி வெளியீடு 1972. 113 ப. (வீரகேசரி பத்திரி கைத் தெடர் 1970)
தமிழாக்கியவர்
நாநா, பிரெஞ்சுமூலம், எமிலிஜோலா. சுதந்திரன் பத்திரிகைத் தொடர்,
1951-10-21...? பொய்மைகள் நிலைப்பதில்லை, தினகரன் பத்திரிகைத் தொடர் 1977.

Page 104
182 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
கயிலாசநாதன், வை. அ.
கடற்காற்று, கொழும்பு : உதயம் புத்தகநிலையம் 1972, 82 ப. (ஈழநாடு பத்திகைத் தொடர் .?)
கவிதா (புனைபெயர்) செல்வி இந்திராதேவி சுப்பிரமணியம்,
கனவுகள் வாழ்கின்றன, கொழும்பு : வீரகேசரி வெளியீடு, 1976 147 ப. சாந்திமதி சாந்தா, ஈழகேசரி பத்திரிகைத் தொடர்
1948-12-05 - 19.
குமாரவேற்பிள்ளை பொன்.
உத்தம மனைவி, டிெ 1935-07-0709-08
கோகிலம் சுப்பையா (திருமதி)
தூரத்துப் பச்சை, சென்னை தமிழ்ப் புத்தகாலயம் 1964. 328 ப. மறுபிரசுரம் வீரகேசரி வெளியீடு. 1973, 296 பக். خ
சச்சிதானந்தன், சு. அன்னபூரணி, டிெ 1942-07-12-12-20 சம்பந்தன், க. தி. பாசம், ஷெ 1947-01-26 - 09-14 சரவணமுத்து. சுவாமி கமலாவதி, 1904 ..?
சரவணமுத்துப்பிள்ளை, தி. 应·
மோகனுங்கி சென்னை ; பி. ராமசாமி முதலி, இந்துபூனியன் அச்சுக்கூடம்,
1895, 384 U. சொக்கநாத நாயக்கர் (மோகனுங்கி சுருக்கம்) சென்னை ஆதி அண்ட் கம்பெனி, 1919
சரோஜினிதேவி, அருணசலம் (திருமதி) (தமிழாக்கியவர் :)
இணைபிரியாத தோழர், சிங்களமூலம் : டி. பி. இலங்கரத்ன, கொழும்பு லேக் ஹவுஸ் இன்வெஸ்ட்மெண்ட் லிமிட் டெட், 1978

பின்னிணைப்பு - 1 183
சாந்தன் "ஒட்டுமா", தினகரன் பத்திரிகைத்
தொடர் 1976-01-25 - 06-20
சிக்கன ராஜ", தொ. தாயகம் (குறுநாவல்), நூரளை : குறிஞ்
சிப் பண்ணை, 1969, 71 ப.
சித்திலெவ்வை, முகம்மது காசிம்.
அசன்பேயுடைய கதை, கொழும்பு : முஸ்லிம் நேசன் அச்சகம், 1885. புதிய பதிப்பு திருச்சிராப்பள்ளி : இஸ்லா மியத் தமிழ் இலக்கியக் கழகம் 1974, 1 29 լյ,
சிவகுமாரன்,கே. எஸ். ஒரே ஒரு தெய்வம், குரும்பசிட்டி சன் மார்க்கசபை, சன்மார்க்க இளைஞர்
சங்கம், 1973, 33 ப.
சிவம் பொன்னையா. (செல்வி)
நீலமாளிகை, கொழும்பு மாணிக்கப் பிரசுரம் 1974, 68 ப.
சிவராமலிங்கபிள்ளை, வண்ணை மா.
ங்காவனம் 1. யாழ்ப்பாணம் சோதிட விலாச புத்தகசாலை, 1930. 421 பக். தொடர் . ?
சிற்பி (புனைபெயர்) சி. சரவணபவன்
உனக்காகக் கண்ணே! யாழ்ப்பாணம் முத்துச்சுடர் வெளியீடு. 1973. 161ப. (கலைச்செல்வி சஞ்சிகைத் தொடர் 1959)
சின்னத்தம்பி, வ. மு. வீராம்பாள் அல்லது விபரீத மங்கை, யாழ்ப்பாணம் : பூரீ கணேச அச்சகம், 1930 126 L.
சின்னப்பிள்ளை,சி.வை. வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம், சென்னை : மினர்வா அச்சகம் 1905, 391 u.

Page 105
184
சுதந்திரராஜா, சி.
சுப்பிரமணியம், எஸ்.
சு. வே. (புனைபெயர்)
ஈழத்துத் தமிழ் நாவல் இலக் சியம்
உதிரபாசம் அல்லது இரத்தினபவானி, வண்ணுர்பண்ணை : பூரீ சண்முகநாத அச்சியந்திரசாலை, 1915, 168 ப. விஜயசீலம் டிெ. 1916, 240 ப.
மழைக்குறி யாழ்ப்பாணம் ஆர். எஸ். அச்சகம். 1975, 142 ப.
கே. - நீலாகழி அல்லது துன்மார்க்க முடிவு, மதுரை : அஷ்டலக்ஷமி பிரஸ். 1923, I42 Lu. சு. வேலுப்பிள்ளை
மன நிழல், ஈழகேசரி பத்திரிகைத் தொடர்) 1948-11-28 - 12-12.
செங்கைஆழியான் (புனைபெயர்) க. குணராஜா
நந்திக் கடல் யாழ்ப்பாணம் : யாழ். இலக்கிய வட்டம் 1969, X, 123 ப. ஆச்சி பயணம் போகிறள், ஷெ 1969 96 Ly. - சித்திரா பெளர்ணமி, யாழ்ப்பாணம். சிரித்திரன் பத்திரிகைப் பிரசுரம் 1972, 39 Luáš. முற்றத்து ஒற்றைப்பனை,ஷெ1972, 39 ப. வாடைக்காற்று, கொழும்பு : வீரகேசரி வெளியீடு 1973, பிரளயம், டிெ 1975, 109 பக். (மயான பூமி என்ற தலைப்பில் சிரித்திரன் சஞ்சிகைத் தொடர் 1971) கொத்தியின் காதல், கொழும்பு : மாணிக்கப்பிரசுரம், 1975, 104 பக். இரவின் முடிவு, கொழும்பு : வீரகேசரி GosnusfluffG), 1976, 158 Lu.

பின்னிணைப்பு - 1 185
(போராடப்பிறந்தவர்கள் என்றதலைப் பில் ஈழநாடு பத்திரிகைத் தொடர், 1971 - '72)
காட்டாறு, கொழும்பு: வீரகேசரி வெளியீடு, 1977, 243 ப. யானை, யாழ்ப்பாணம் : வரதர் வெளி uG). 1978 83u.
செந்திநாதன், கனக. (பதிப்பாசிரியர்)
மத்தாப்பு, குரும்பசிட்டி சன்மார்க்க சபை. 1962. 80 ப. (ஐவர் இணைத் தெழுதிய குறுநாவல், வீரகேசரி பத்திரிகைத் தொடர்)
விதியின்கை, கொழும்பு : வீரகேசரி வெளியீடு.1977 102, பக். (உபகுப்தன் என்ற\ புனைபெயரில் ஈழகேசரி பத்திரிகைத் தொடர் 1953-07-05
- 11-01)
வெறும்பான, (பரதன் என்ற புனை பெயரில் ஈழகேசரி பத்திரிகைத் தொடர்1956-07-24 - 1957-01-13)
செல்லப்பா, மூத்ததம்பி.
சுந்தரவதணு அல்லது இன்பக் காதலர், (1,2.) சங்கானை: சச்சிதானந்தா | ?rav, 1938 - 182 L.
செல்லம்மாள், செம்பொற்சோதீஸ்வரர்.
இராசதுரை, யாழ்ப்பாணம் : நாவலர் a9yář69řáš &#h L - Lib. 1924. 92 L J .
செல்வநாயகம்,எம்.ஏ. செல்வி சரோஜா அல்லது தீண்டா
மைக்குச் சவுக்கடி
செல்வராசகோபால், யாரிந்த வேடர் ? களுவாஞ்சிக்குடி :
க. தா. ஜீவா பதிப்பகம், 1965. XXIV ,
88 gu.

Page 106
186 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
சொக்கன் (புனைபெயர்), க. சொக்கலிங்கம்.
மலர்ப்பலி (ஈழகேசரி பத்திரிகைத் தொடர் 19Ꮞ9-01-09 -- 03-27) செல்லும் வழி இருட்டு, கொழும்பு : வீரகேசரி வெளியீடு, 1973, 167 ப. (தினகரன் பத்திரிகைத் தொடர் 1961.) சீதா,கொழும்பு : வீரகேசரி வெளியீடு. 1974. (விவேகி தொடர். 1963).
சோளுசலம், (தமிழாக்கியவர்.)
மனவிகாரம், ஜெர்மனிய மூலம் : தோமஸ்மான். 1945-08-05-12-09.
ஞானசேகரன், தி. புதிய சுவடுகள், கொழும்பு வீரகேசரி
வெளியீடு, 1977, 219 ப. ஞானரதன் (புனைபெயர்), வை. சச்சிதானந்தசிவம்.
ஊமை உள்ளங்கள், q, 1976, 189 L. புதியபூமி, டிெ, 1977 167 ப. டானியல், கே. பஞ்சமர், யாழ்ப்பாணம் : தாரகை
வெளியீடு 1972 175 ப. போராளிகள் காத்திருக்கின்றனர், கொழும்பு: வீரகேசரி வெளியீடு 1975. 20 Li . டேவிட், கே. ஆர். வரலாறு அவளைத் தோற்றுவிட்டது,
Ghą, 1976, 148u. தம்பிமுத்துப்பிள்ளை, எஸ்.
சம்சோன் கதை, 2ஆம் பதி. அச்சுவேலி: ஞானப்பிரகாச யந்திரசாலை, 1911, சுந்தரன் செய்த தந்திரம், ஷெ 1918,
72 L . அழகவல்லி, ஹெ, 1926. தாமரைச் செல்வி, (புனைபெயர்) (திருமதி ரதிதேவிகந்தசாமி) சுமைகள், கொழும்பு : வீரகேசரி வெளியீடு, 1977, 244 ப.

பின்னிணைப்பு - 1 87
தாமோதரம்பிள்ளை, சி. வே.
காந்தமலர் அல்லது கற்பின்மாட்சி, யாழ்ப்பாணம் : சோதிடப்பிரகாச யந்திரசாலே. 1936, 262 ப.
திருஞானசம்பந்தபிள்ளை, ம. வே.
காசிநாதன் நேசமலர் யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலை. 1929. (இந்துசாதனம் பத்திரிகைத் தொடர் 1924.) கோபால நேசரத்தினம் டிெ, 1927. 128 U. 29,id L15. 1948, 128 1.
(இந்துசாதனம் தொடர். 1926-27)
துரைரத்தினம் நேசமணி டிெ, 1931. 80 ப. (இந்து சாதனம் பத்திரிகைத் தொடர் 1927-28)
த்ெணியான் (புனைபெயர்), கே. நடேசன்.
விடிவை நோக்கி. கொழும்பு : வீரகேசரி வெளியீடு, 1973, 116 ப"
தேவன் (புனைபெயர்) இ. மகாதேவா, தழுவலாக்க ஆசிரியர், மணிபல்லவம், ஆங்கில மூலம்: ரொபேட் லூயிஸ் டீவன்சன், திரு வனந்தபுரம் : சுதர்சன் வெளியீடு, 1949. 2ஆம் பதிப்பு யாழ்ப்பாணம் : பூரீலங்காபுத்தகசாலை, 1957, 159 ப.
வாடிய மலர்கள், யாழ்ப்பாணம் : சண்முகநாதன் புத்தகசாலை. 1949 கேட்டதும் நடந்ததும், டிெ, 1956.
302 ப. (ஈழகேசரி பத்திரிகைத்தொடர் 1954-09-12 - 1955-06-26)

Page 107
188 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
அவன் சுற்றவாளி, யாழ்ப்பாணம் : ச. கிருஷ்ணசாமி. 1968, 63 ப.
தேவதாஸ்,தம்பிஐயர், நெஞ்சில் ஒர் இரகசியம், சிங்களமூலம்: தமிழாக்கியவர். கருணுசேன ஐயலத், கொழும்பு :
வீரகேசரி வெளியீடு, 1976, 289 ப.
நடராசன், குடமியனுார். அ.
யார் அணுதை ? சாவகச்சேரி : ஜெயா அச்சகம், 1974, 47 ப.
நடராசா, செ. தெல்லியூர், (புனைபெயர் சுடலையாடி)
காலேஜ் காதல், யாழ்ப்பாணம் : இளைஞன் பதிப்பகம்; 1951.
நந்தி (புனைபெயர்), செ. சிவஞானசுந்தரம்.
மலேக்கொழுந்து, யாழ்ப்பாணம் : ஆசீர்வாதம் அச்சகம், 1964. 246 ப. (தினகரன் பத்திரிகைத் தொடர் I962・) t
தங்கச்சியம்மா, கொழும்பு : வீரகேசரி
வெளியீடு, 1977 160. ப. (தினகரன்
பத்திரிகைத் தொடர் 1975.)
நந்தினி சேவியர். மேகங்கள், (ஈழநாடு பத்திரிகைத்
தொடர் 1973-11-04. 2)
நயிமா, ஏ. பஷீர், (நயிமாசித்தீக்).
வாழ்க்கைப் பயணம், கொழும்பு :
வீரகேசரி வெளியீடு. 1974. 129 ப.
l
வசோதி க. ஒடிப்போனவன், ? 1968. 2gb Lig
. 2ஆ 니 கொழும்பு : குங்குமம் பிரசுரம்.
1972, 68

பின்னிணைப்பு - 1
நாகலிங்கம், அ.
நித்தியகீர்த்தி, எ. ரி.
நெல்லையா எச்.
18.9
சாம்பசிவஞானுமிர்தம் அல்லது நன்
னெறிக் களஞ்சியம், கோலாலம்பூர் : எம். லாசர் அன்ட் சன்ஸ், 1927, 343. , i.
மீட்டாத வீணை , பருத்தித்துறை : கமலா வெளியீடு, 1974, 166 ப.
காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமனி .? 1937 சோமாவதி அல்லது இலங்கை இந்தியர் நட்பு கொழும்பு : வீரகேசரி வெளியீடு. 1940.
நேசன், ஜி. (T. நேசமணி), புனைபெயர் : ஷர்மிளா.
பத்மநாதன், பொ.
ஜினு, கொழும்பு : ஜனமித்திரன் வெளியீடு, 1973, 132 ப.
அன்பே என் ஆருயிரே, ஷெ 1973, 215 tu.
பட்லி, டிெ, 1974, 249 ப. (மித்திரன் பத்திரிகைத் தொடர்)
ஜமேலா, டிெ, 1975, 223 ப.
கறுப்புராஜா, டிெ 1975, 247 ப. (டிெ) அலிமாராணி, டிெ, 1975, 193 ப. W குஜராத்மோகினி, டிெ, 1976, 254 ப. மர்மமங்கை நார்தேவி ஷெ 1977, 280 ப. பாலைவனத்து ரோஜா ஷெ 1977, 228.
சாத்தானின் ஊழியர்கள், டிெ, 1977,
2.8 L. *
புயலுக்குப்பின், கொழும்பு வீரகேசரி வெளியீடு 1973, 147, ப. யாத்திரை, டிெ, 1976, 136 ப.

Page 108
90 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
பாலமளுேகரன், அ. நிலக்கிளி, டிெ, 1973, 150 L u .
* குமாரபுரம் டிெ, 1975, 131 ப.
கனவுகள் கலைந்தபோது, കൈറ്റ് 1977.
141 1.
பாலன். யேர். பெனடிக்ற்
குட்டி, கொழும்பு : எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் 1963, 88 ப. சொந்தக்காரன், சென்னை : பாரிநிலே ud, 1968, 207 L. 总
பாலேஸ்வரி, (திருமதி பா. நல்லரெத்தினசிங்கன்)
சுடர் விளக்கு, திருகோணமலை : தமிழ் எழுத்தாளர் சங்கம் 1966, 154 ப. (வீரகேசரி பத்திரிகைத் தொடர்,1965) பூஜைக்குவந்த மலர், கொழும்பு : விர கேசரி வெளியீடு 1972, 159 ப. உறவுக்கப்பால், لا 195 و 1975 و وهم •
புரட்சிப்பாலன் (புனைபெயர்), கே. சண்முகபாலன்
உமையாள் புரத்து உமா, ஷெ, 1976 209 L.
பொன்னுத்துரை, எஸ். த, சென்னை : சரஸ்வ வெளியீடு, 1961, 150 L. சடங்கு, கொழும்பு : அரசு வெளியீடு
1971, 176 Lu. (சுதந்திரன் தொடர் 1966)
மகாலிங்கம், அப்பச்சி, கமலினி, கொழும்பு : வீரகேசரி
ഖങിu് 1977, 178 - மகேசன், க. ச. அந்தரத்தீவு கொடிகாமம் : க. ச.
toGsFesör, 1963, 144 illu.
மங்களநாயகம் தம்பையா
நொறுங்குண்ட இருதயம், தெல்லிப் பழை : 1914, 267 ப.

பின்னிணைப்பு - 1
191
மணிவாணன் (புனைபெயர்), வி. க. இரத்தினசபாபதி
யுகசந்தி, கொழும்பு : வீரகேசரி வெளி யீடு 1072, 176 பக். (தினகரன் பத்திரி கைத் தொடர் 1969) காற்றில் மிதக்கும் சருகுகள்,கொழும்பு: மாணிக்கம் பிரசுரம், 1975, 58 ப.
மதுபாலன் (த. மதுபாலசிங்கம்)
விதவையின் வாழ்வு, முள்ளியவளை வன்னி வெளியீடு : 1975, 84 ப.
மரியாம்பிள்ளை, வி. பி. தமிழாக்கியவர்
மனேகரன், துரை.
பழிக்குப்பழி, ஆங்கிலமூலம் : அலெக் சாண்டர் டுமாஸ். யாழ்ப்பாணம் : ஆசீர்வாதம் வெளியீடு, 1976, 102 ப.
பாவையின் பரிசு, யாழ்ப்பாணம் : சண்முகநாதன் அச்சியந்திரசாலை 1966. X, 154. l u.
முருகானந்தம்,அ.செ.(புனைபெயர்: பீஷ்மன்(தமிழாக்கியவர்)
அலிபாபாவின் குகை, ஆங்கிலமூலம் மிஸ். டொரதி எல். செயர்ஸ். (ஈழகேசரி பத்திரிகைத் தொடர் I944-I0-03ー I2-26・リ வண்டிச் சவாரி, (ஈழகேசரி பத்திரிகைத் (0.5ITL if l944-01-09-01-23.) புகையில் தெரிந்த முகம், திருகோண மலை : எரிமலைப் பதிப்பகம், 1950.
யாத்திரை, (ஈழகேசரி+ஈழநாடு பத்திரி கைத் தொடர் 1957 - 58.)
முருகு, (தமிழாக்கியவர்) போட்டி, ஜெர்மனியமூலம் வில்
ஹெல்ம்ஸ்மித் (ஈழகேசரி பத்திரிகைத் தொடர், 1941-04-12 - 05-03.)
மொழிவாணன் (புனைபெயர்), சி. ஆர். நீதிராஜா.
யாருக்காக ? கொழும்பு : வீரகேசரி G6u6ifu SGS 1975, 208 Lu.

Page 109
192 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
யோகநாதன், செ. ஒளி நமக்கு வேண்டும், (ஐந்து குறு நாவல்கள்) மட்டக்களப்பு : மலர் வெளியீடு. 1973, 76 ப. காவியத்தின் மறுபக்கம், (மூன்று குறு நாவல்கள்) கொழும்பு : எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம். 1977,124ப.
ரவீந்திரன், (தமிழாக்கியவர்)
அறுந்த தனகள், வங்கமூலம்: இரவீந் திரநாதாகூர் (ஈழகேசரி பத்திரிகைத் தொடர் 1939-07-02.)
ரவீந்திரா, ஜே. எஸ். காதல் உள்ளம் ..?
ரஜனி (புனைபெயர்); கே. வி. எஸ். வாஸ்.
குந்தளப் பிரேமா,கொழும்பு: வீரகேசரி வெளியீடு. 1951, 230 பக். (வீரகேசரி பத்திரிகைத் தொடர் 1949 - 50.)
நந்தினி, டிெ, 1949 - 50, பத்மினி, கொழும்பு : வீரகேசரி வெளி uf. 1956, XVI, 340 Lu.
தாரிணி, டிெ, 1974, 380 ப. வீரகேசரி வெளியீடு (டிெ. தொடர் 1954)
மலைக்கன்னி, டிெ, தொடர் 1955. உதய கன்னி, டிெ, தொடர் 1955.
வித்யா (புனைபெயர்), கமலா தம்பிராஜா
உனக்காகவோ வாழ்கிறேன்,கொழும்பு: வீரகேசரி வெளியீடு, 1977, 210 ப. வில்லன் (புனைபெயர்), (தமிழாக்கியவர்.)
மல்லிகை, வங்க நாடோடிக்கதை. (ஈழகேசரி பத்திரிகைத் தொடர், 1940-05-26 - 07-28)

பின்னிணைப்பு - 1 193
விஜயன், கே. விடிவுகால நட்சத்திரம், கொழும்பு :
வீரகேசரி வெளியீடு 1977, 269 ப.
வேலுப்பிள்ளை, வி. வி. வாழ்வற்றவாழ்வு, தினகரன் பத்திரி
கைத் தொடர் ?
வீடற்றவன், டிெ,
வைத்திலிங்கம்,சி (தமிழாக்கியவர்.) மாலை வேலையில், ரூஷ்யமூலம்: ஐவன் துர்கனேவ், ஈழகேசரி பத்திரிகைத் தொடர் 1941-10-26 - 1942-03-22
ஜெகநாதன், காவலூர் எஸ்.
W கலட்டுத்தரை, கொழும்பு: அருள் ஒளி
அச்சகம் 1977, 32 பக்.
ஜோசப், தெளிவத்தை காலங்கள் சாவதில்லை, கொழும்பு :
வீரகேசரி வெளியீடு. 1974, 245 ப.
ஜோன் மேரி, ஞானச்சகோதரர்
புனித சிலி, யாழ்ப்பாணம். சென். ஜோசப் கத்தோலிக்க அச்சகம் 1927.
அருமைநாதன் ? 1930
ஜோன்ராஜன், எஸ். பூரீ.
போடியார் மாப்பிள்ளை, கொழும்பு : வீரகேசரி வெளியீடு. 1976, 143 ப.
ஸ். ரிக்னி, சார்ள்ஸ், தேம்பா மலர், தெல்லிப்பழை : அமெ ரிக்க இலங்கை மிஷன். 1929, 290 L. ஞரனபூரணி, டிெ, 1933, 224 ப.
பூரீதரன், சு. நிர்வாணம் கணையாழி, 1977 அக்
டோபர். - நவம்பர்.

Page 110
194 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
ஹமீதா பானு (புனைபெயர்) டி. எம். பீர்முகம்மது.
கங்காணி மகள் .?
ஹனிபா, என். எம். புனைபெயர் : மாமா
பகற் கொள்ளை, (கண்டி) கல்ஹின்னை: சலா நிலையம், 1960, 275 ப. ஏமாற்றம், hெe , 1962, 124 ப. மர்மக் கடிதம், rெ , 1963, 56 ப. இலட்சியப் பெண், ஷெ, 1974. 184 ப.
தமிழ் நாட்டு நாவல்கள் (இவ்வாய்வு நூலிற் பயன்படுத்தப்பட்டவைமட்டும்)
அருமைராஜன், ஐசக் கீறல்கள்,சென்னை: கிறிஸ்தவ இலக்கிய சங்கம், 1977
இந்திராபார்த்தசாரதி சுதந்திர பூமி, சென்னை தமிழ்ப்
புத்தகாலயம், 1973, 242 ப.
சங்கரராம் மண்ணுசை, சென்னை : கலைமகள்
காரியாலயம், 1940 சின்னப்ப பாரதி கு. தாகம், நாமக்கல் : முற்போக்குச் சிந்தனையாளர் மன்றம், 1975, 474 ப. சுத்தரராமசாமி ஒரு புளியமரத்தின் கதை, சென்னை :
தமிழ்ப் புத்தகாலயம், 1966. செல்வராஜ், டி. மலரும் சருகும், சென்னை :
மல்லிகைப் பதிப்பகம், 1967. 2-ம் பதிப்பு சென்னை : கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1977, 191 ப. தேநீர் சென்னை : கவிதா பதிப்பகம், 1973, viii, 356 u. பத்மநாபன், நீல. தலைமுறைகள், நாகர்கோவில்; ஜெய்
குமாரி ஸ்டோர்ஸ், 1967, 426 ப. 2-ம் பதிப்பு டிெ 1971, 426 ப. பள்ளி கொண்டபுரம், சென்னை : வாசகர் வட்டம், 1970, 325 ப.

பின்னிணைப்பு - 1
பொன்னீலன்
LDIT g56) lair, s2, .
ரகுநாதன் (தொ. மு.
195
கரிசல் சென்னை நியு செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிட்டெட் 1976, xiii, 431 Lu. 够 புனலும் மணலும், சென்னை : வாசகர் வட்டம், 1974. 199 ப. சிதம்பரரகுநாதன்) பஞ்சும் பசியும், சென்னை ஸ்டார் பிரசுரம், 296 ப.
ர்ாஜநாராயணன், சி. கோபல்லகிராமம், சென்னை : வாசகர்
ராஜம் ஐயர், பி. ஆர்.
ராஜம் கிருஷ்ணன்,
வேங்கடரமணி.கா .g.
வட்டம், 1976, 226 ப. ஆபத்துக்கிடமான அயவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம், சென்னை : ஸி.வி. ஸ்வாமிநாதையர். கமர்ஷியல் பிரஸ். 1896, 7-ம் பதிப்பு சென்னை விவேக சிந்தாமணி, 1947 குறிஞ்சித்தேன், சென்னை : கலைமகள் காரியாலயம் 1963 முருகன் ஒர் உழவன், (ஆங்கிலத்தி லிருந்து தமிழாக்கியவர் கிருஷ்ண குமாரி) டிெ. 1928. தேசபக்தன் கந்தன் டிெ, 1932
வேதநாயகம்பிள்ளை, மாயூரம் ச.
ஜானகிராமன், தி.
ஜெயகாந்தன், த.
பிரதாப முதலியார் சரித்திரம்,சென்னை: கிரேவ்ஸ் குக்சன் அன்ட் கம்பெனி ஸ்காட்டிஷ் பிரஸ், 1879, 348 ப.
அம்மாவந்தாள் 2-ம் பதிப்பு மதுரை : மீனுட்சிபுத்தகநிலையம், 1972, 208 ப. சிலநேரங்களில் சிலமனிதர்கள் மதுரை:
' 6bq . 1970. 426 L1.
ஷண்முகசுந்தரம்,ஆர்.
நாகம்மாள், ? 1942. அறுவடை, ? 1960.
ஹெப்ஸிபா ஜேசுதாசன்
புத்தம்வீடு, சென்னை : தமிழ்ப்புத்த காலயம், 1964 158 ப.

Page 111
பின்னிணைப்பு - 2
ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பான ஆய்வுகள்
இவற்றின் முழுவிபரம் முற்குறிப்பிட்ட நூல் விபரப் பட்டியலில் உண்டு. இங்கு இவ்வாய்வு நூலுக்குப் பயன் படுத்தப்பட்டவையும் முதலாம் இயல் 12 ஆம் அடிக் குறிப்பிற் கூறப்பட்டவையுமான முக்கியமான நூல்கள் கட்டுரைகள் ஆகியவற்றின் விபரங்களே இடம் பெறு
கின்றன.
நூல்கள்
கமாலுத்தீன், எஸ் எம்., & கைலாசபதி, க.
ஈழத்துத் தற்காலத் தமிழ் நூற்காட்சி (1947 - 1970 தேர்ந்த நூற்பட்டியல் கொழும்பு: அனைத்துலகத் தமிழா ராய்ச்சிக் கழகம் கொழும்புக் கிளை , 1971. ( 41 - 45 பக்கங்களில் தமிழ்
நாவல்கள் விபரம்.
கைலாசபதி, க. தமிழ் நாவல் இலக்கியம், சென்னை : பாரிநிலையம், 1968, 284 ப. (இளங் கீரனின் நீதியே நீ கேள்! செ. கணேச லிங்கனின் செவ்வானம் ஆகிய வற்றுக்கு எழுதப்பட்ட முன்னுரைகள் இணைந்து இயற்பண்பும் யாதார்த்த வாதமும் என்ற தலைப்பில் நூலின்
இறுதிக் கட்டுரையாகவுள்ளன)

பின்னிணைப்பு - 2
197
சுந்தரராஜன், பெ. கோ. (சிட்டி), சிவபாதசுந்தரம், சோ.
சுப்பிரமணியம், நா.
செந்திநாதன் கனக,
தமிழ் நாவல் நூருண்டு வரலாறும் வளர்ச்சியும், சென்னை : கிறிஸ்தவ இலக்கியச் சங்கம். 1977, 286 ப. (இந்நூலில் ஈழத்து நாவல்வரலாறும் எடுத்துக் காட்டப் பட்டுள்ளது)
ஈழத்துத் தமிழ் நாவல்கள், நூல் விபரப் பட்டியல் 1885-1976, திருநெல் வேலி : இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாணவளாக நூலக வெளியீடு,
1977, 127 i.
வீரகேசரி பிரசுர நாவல்கள், கொழும்பு:
வீரகேசரி வெளியீடு, 1977, 21 ப.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி, கொழும்பு: அரசு வெளியீடு, 1964, 208 Lu . (1891 - 1964 காலப்பகுதி ஈழத்து நாவல்கள் தொடர்பான குறிப்புக்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன)
ஈழத்துத் தமிழ் நூல் வழிகாட்டி, யாழ்ப் பாணம் வரதர் வெளியீடு. 1971. 98-116 பக்கங்களில் 1955க்குப் பிற் பட்ட தமிழ் நாவல்களின் விபரம்.
செல்வராசன் "சில்லையூர் ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி,
சென்னை: அருள்நிலையம், 1967, 74 ப.
Sivakumaran, K. S. Tamil writing in Sri aka,
அரங்கராசன், சு.
Colombo: Vijeya luckshmi Book Depot, 1974. 64 p. I pages 18-36)
கட்டுரைகள்
*செ. கணேசலிங்கனின் செவ்வாணம்’ தாமரை தொ. 11. இல. 6, 1969 டிசம்பர், 27-57 ப.

Page 112
l98
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
கமாலுத்தீன், எஸ்.எம். ‘அசன்பே கதைக்கோர் அறிமுகம்"
குணசிங்கம், செ. /
கைலாசபதி, க.
சண்முகதாஸ், அ.
சித்திரலேகா, க.
தினகரன் 1974-5-26
*வ. அ. இராசரத்தினம் எழுதிய கிரெளஞ்சப் பறவைகள்", வீரகேசரி 1976-04-11
"பஞ்சப்பட்ட மக்களின் வாழ்வைச் சித்தரிக்கும் பேரோவியம்", தினகரன் 1972-10-22. (கே. டானியலின் பஞ்சமர் நாவல் மதிப்புரை)
"தமிழ் நாவல் வரலாறு" வெள்ளி விழா மலர் தில்லித் தமிழ்ச் சங்கம், 1971, 137 - 140 ப. (ஈழத்து
நாவல்கள் பற்றிய கருத்துக்களும்
இக்கட்டுரையில் இடம் பெற் றுள்ளன.)
*போராளிகள் காத்திருக்கின்றனர்", வீரகேசரி 1976-01-18. (கே. டானி யலின் நாவல் மதிப்புரை)
(திருமதி மெளனகுரு) "சுதந்திரத் துக்கு முற்பட்ட இலங்கைத் தமிழ் நாவல்கள் தத்துவமாணிப் பட்ட ஆய்வுக் கட்டுரை, கொழும்பு: இலங்கைப் பல்கலைக்கழகம் கொழும்பு வளாகம், 1973, 57 ப. (நூல்வடிவில் வெளிவரவில்லை) "ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சமூக உணர்வின் தோற்றம்" சிந்தனை தொ. 1. இல. 1. 1976 ஜனவரி, 20- 24 Lu.

பின்னிணைப்பு - 2
199
"ஈழத்துத் தமிழ் நாவல்களின் வளர்ச்சிக் கட்டங்கள்" தமிழ் நாவல் நூற்ருண்டு விழா ஆய்வரங்குக் கட்டுரை, (தட்டச்சுப் பிரதி) திரு நெல்வேலி : இலங்கைப் பல்கலைக் கழக யாழ்ப்பாண வளாகம், 1977.
சிவநேசச் செல்வன்.ஆ. "நொறுங்குண்ட இருதயம் கதையும்
சிவபாதசுந்தரம்,சோ.
*சுகுமார்’
கதைப்பண்பும்", பாவலர் துரையப்பா பிள்ளை நூற்றண்டுவிழா மலர்,தெல்லிப் பழை : மகாஜனக்கல்லூரி, 1972, 73-80 ப. மறுபிரசுரம் : தெல்லிப் பழை: 1972, 8 ப. (திருமதி மங்களநாயகம் தம்பையாவின் நாவல் திறனுய்வு)
“ஈழத்துத் தமிழ் நாவலின்”,தோற்றம் தமிழ் நாவல் நூற்ருண்டு விழா ஆய் வரங்குக் கட்டுரை (தட்டச்சுப் பிரதி) திருநெல்வேலி : இலங்கைப் பல்கலைக் கழக யாழ்ப்பாண வளாகம் 1977, பெப்ரவரி.
"தமிழில் வெளிவந்த முதலாவது சரித்திர நாவல்'', தினகரன்,
1972-11-12, 19.
(தி. ச. சரவணமுத்துப்பிள்ளையின் *மோகனங்கி" நாவல்ப்பற்றிய மதிப்புரை.)
*காலங்கள் சாவதில்லை" குமரன் 41. 1974 நவம்பர். 15, 32 - 34. Ա. (தெளிவத்தை ஜோசப்பின் நாவல் மதிப்புரை)

Page 113
200
சுப்பிரமணியம், நா.
செந்திநாதன், கனக
தில்லைநாதன், சி.
நுஃமான், எம். ஏ.
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
"ஈழத்துத் தமிழ் நாவல்கள்', நான் காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நிகழ்ச்சிகள், பதிப்பாசிரியர்: பேராசிரியர் , சு. வித்தியானந்தன்." கொழும்பு : அனைத்துலகத் தமிழா ராய்ச்சி மன்ற இலங்கைக் திளை, 1977, 169-181ப. (1974 ஜனவர் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
1070க்குப்பின் ஈழத்துத் தமிழ் நாவல்கள்' தென்னசியவியற் கருத் தரங்குக் கட்டுரை 1976-02-10. சுருக்கப்பிரசுரம் : விந்தனை தொ. 1. இல, 2, 1976 சித்திரை. 60-64 LI ... ' "ஈழத்து மண்ணின் முதல் நாவல் சி.வை.சின்னப்பபிள்ளையின் வீரசிங்கன் கதை" மல்லிகை 105 1977 ஜனவரி 32-37 L.
"அழகவல்லி", மல்லிகை 106, 1977 பெப்ரவரி (எஸ். தம்பிமுத்துப்பிள்ளை யின் நாவல் அறிமுகவுரை.)
"ஈழத்து நாவல்கள், ஒரு பொது மதிப்பீடு", தமிழ் நாவல் நூற்ருண்டு spr ஆய்வரங்குக் கட்டுரை (தட்டச்சுப் பிரதி) திருநெல்வேலி : இலங்கைப் பல்கலைக் கழக யாழ்ப்
w
பாண வளாகம், 1977
"ஈழத்துத் தமிழ் நாவல்களில் மொழி
டிெ கட்டுரை

பின்னிணைப்பு - 2
பரமேஸ்வரன், கலா,
பெருமாள்
மனேகரன், துரை.
201
"ஆரம்பகால நாவல்களிற் சமுதாய நோக்கம் தினகரன் 1976-11-22. * முப்பதுகளிற் சிறந்த நாவலாசிரியர்" மல்லிகை 104, 1976 டிசம்பர் 33-39ப. (தேம்பாமலர், ஞானபூரணி ஆகிய நாவல்களின் ஆசிரியர் சார்ள்ஸ் ஸ்ரிக்னியைப்பற்றிய மதிப்புரை.) "பஞ்சமர்" புதியநாவல் குமரன் 18, 1972 டிசம்பர் 15, 89 ப. (கே. டானியலின் நாவல் பதிப்புரை) பிரதேச நாவல்கள் - யாழ்ப்பாணப் பிரதேச நாவல்கள் : தென்னுசியவியற் கருத்தரங்குக் கட்டுரை, (தட்டச்சுப் பிரதி) 1976-03-10. சுருக்கப்பிரசுரம் : சிந்தனை தொ. 1. இல. 2. 1976 சித்திரை. 42-47 ப.
மனேன்மணி, சண்முகதாஸ்,
யுவன்
யோகராசா, செ.
*அ. நாகலிங்கம்பிள்ளை, ஈழத்து நாவ லாசிரியர் மல்லிகை 95. 1976 மார்ச்
42-47 U. W (சாம்பசிவ ஞானுமிர்தம் அல்லது நன் னெறிக் களஞ்சியம் நாவலின் ஆசிரிய ரைப்பற்றிய மதிப்புரை) 'பெண் களும் தமிழ் நாவலும்" சிந்தனை தொ.1 இதழ் 3 & 4, 1976 புரட்டாதி - மார்கழி. (ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பான கருத் துக்களும் இடம்பெற்றுள்ளன.) *காலங்கள் சாவதில்லை" தாயகம் தொ. 1 இல. 5, 1974 கார்த்திகை. 27-31 ப. (தெளிவத்தை ஜோசப்பின் நாவல் மதிப்புரை) "எழுபதுகட்குப்பின் ஈழத்துத் தமிழ்
நாவல்கள்’ அலே 1. 1975 கார்த் திகை 3-8 ப.

Page 114
நூற் பட்டியல் (உசாத் துணை நூல்கள்) தமிழ்
நூல்கள் h− ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு
திரட்டியவர் த. கைலாசபிள்ளை,
யாழ்ப்பாணம் : வித்தியாதுபாலன யந்திரசாலை, 1922.
கணபதிப்பிள்ளை, மு. ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்,
பாரிந்லையம் : 1967, 242 ப.
கணேசலிங்கன், செ. நல்லவன், (சிறுகதைத் தொகுதி), சென்னை: பாரிநிலையம், 1956, 108 ப.
கில்பேர்ட், பாஸ்கல், சமூகவியலின் அடிப்படைக் கோட்
பாடுகள், தமிழாக்கம் : ஜெ. நாரா
யணன், சென்னை : தமிழ் நூல் வெளியீட்டுக்கழகம் 1964.
சண்முகதாஸ். அ. (பதிப்பாசிரியர்)
ஆக்க இலக்கியமும் அறிவியலும், யாழ்ப் பாணம் : இலங்கைப் பல்கலைக் கழக யாழ்ப்பாண வளாகம், 1977, 195, XXI u.

நூற் பட்டியல்
சொக்கலிங்கம், க.
ஞானசம்பந்தன், அ.
புதுமைப்பித்தன்.
பூலோகசிங்கம், பொ.
203
ஈழத்துத் தமிழ்நாடக இலக்கிய வளர்ச்சி யாழ்ப்பாணம் : முத்தமிழ் வெளி யீட்டுக்கழகம், 1978, 297 ப.
ச. (பொதுப் பதிப்பாசிரியர்) தமிழ் நூல் விவர அட்டவணை, தமிழ் நாடு : தமி ம் நாடு அரசின் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்ற வெளியீடு, 1964, 627 Lu. (472-1099)
புதுமைப்பித்தன் கதைகள் 7-ம் பதி. சென்னை : ஸ்டார் பிரசுரம், 1966,
காஞ்சனை சென்னை 3-ம் பதி. கலை மகள் காரியாலயம் 1967, 165 ப.
தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள், யாழ்ப்பாணம் : கலே வாணி புத்தக நிலையம், 1970,276ப.
ஜெகந்நாதன்,சி.வா. தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்
மலர்கள்
சியும்,சென்னை தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம், 1966, 159 ப.
பாவலர் துரையப்பாபிள்னை நூற்ருண்டுவிழா மலர்
புதுமை இலக்கியம்
மலர் ஆசிரியர் ஆ. சிவநேசச் செல் வன், தெல்லிப்பழை : மகாஜனக்
s6ivTif, i 1972. 96 , 88 Lu.
அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் DansmrpBrry G) 06Ivrit. கொழும்பு : இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், 1962. 120 ப.

Page 115
204 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்யகிம்
ஷெ தேசிய ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மாநாட்டு மலர், கொழும்பு: இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,
1975, 126 lu.
சஞ்சிகைகள் - அலே (இருமாத இதழ்) நிர்வாக ஆசிரியர் அ. யேசுராசா, ,u( ” இலக்கிய வட்டம்%/9ے “ யாழ்ப்பாணம்
ஆராய்ச்சி (மும்மாத இதழ்) ஆசிரியர் நா. வானமாமலை
பாஜளயம் கோட்டை. தமிழ்நாடு
எழுத்து ஆசிரியர் : இ. சு. செல்லப்பா,
சென்னை
குமரன் (மாதி இதழ்) ஆசிரியர் : மீ. கணேசலிங்கன், கொழும்பு
இந்தனே (மும்மாத இதழ்) ஆசிரியர் அ. சண்முகதாஸ், இலங் கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாக மனிதப் பண்பியற்றீட வெளியீடு. திருநெல்வேலி
தாமரை (மாத இதழ்) ஆசிரியர் எம். கல்யாணசுந்தரம்,
சென்னை
5 TuusúD கலை இலக்கியப் பேரவை வெளியீடு யாழ்ப்பாணம்
தீபம் (மாத இதழ்) ஆசிரியர் நா. பார்த்தசாரதி, சென்னை
பூரணி (மும்மாத இதழ்) பூரணி இலக்கியக் குழுவினர், கொழும்பு. w
பத்திரிகைகள் இந்துசாதனம் (1889ー) FypGas.3 (1930 - 1958 வரை) சுதந்திரன் (1947ー)
தினகரன் (1932ー) வீரகேசரி (1930 ܟ݂ܝ-(

நூற் பட்டியல் 2).5
கட்டுரைகள்
தமிழ் நாவல் நூற்றண்டுவிழா ஆய்வரங்குக் கட்டுரைகள்
இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம். 1977, பெப்ரவரி 19, 20
தென்னுசியவியற் கருத்தரங்குக் கட்டுரைகள்
இலங்கைப்பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம்
ஆங்கிலம் நூல்கள் Arasaratnam, S. Ceylon New, Jersey: Prentice Hall, Inc.
Englewood Cliffs, 964
Barnett L. D. and Pope, G. U.
A Catalogue of the Tamil Books in the Library of the British Museum, London: 1909.
Chambers's Encyclopaedia. New ed VOL. X. London:
George Newnes Ltd, 1950.
Chambers's Twentieth Century Dictionary Revised Edinburgh, London: W & R Chambers Ltd. 1960
Forster, E. M. Asbects of the Novel, 2-nd ed, London:
Edward Arnold & Co, 1940
Origins. A Short Etymological Dictionary of Modern English, London: Routeedge & Kegan Paul, 1963
Sa rath Chandra E. R.
The Sinhalese Novel (Rev. ed of Moden Sinha lese Fiction) Colombo: Colombo: M. D. Gunasena, 1950

Page 116
206 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
Sumathipala, K. H. M.
Education io Ceylon 1976 - 1965 Colombo Tissara Prakasayo Publishers, 1968
The Columbia Encyclopedia. (20th printing) New York:
Columbia University Press, 1947
The Encyclopedia Americana New York: D. C. 1958 Webster's New International Dictionary of the English
Language, London 1926
Wriggins, W Howard.
Ceylon : Delemmas of a New Nation, New Jersey: Princeton University Press, 1960

அட்டவணை
அக்கரைகள் பச்சையில்லை - 155
அகஸ்தியர், எஸ் . 100, 103
அகிலன் - 51, 52, 74
அசன்பேயுடையகதை - 3, 10, 167
அடாதசோதனை என்னும் மதிகெட்ட மாரன் கதை - 41
அந்தரங்க கீதம் - 124
அந்தரத் தீவு - 126
அப்பாப்பிள்ளை, ஜே. ரி. - 22
அப்பாஸ், எம். ஏ - 52, 60
அம்பயஹலுவ - 122
அம்மா வந்தாள் - 168
அரங்கநாயகி - 42, 46
அரங்கராசன், சு. - 135
அரியமலர் - 25 2»
அரியரத்தினம், இராஜ - 49, 57
அருணுேதயம் அல்லது சிம்மக்கொடி - 39
அருமைநாதன் - 30, 45
அருமைராஜன், ஐசக் - 126
அருள் சுப்பிரமணியம், க. - 114, 117, 132, 155, 167, 168
அருள் செல்வநாயகம் - 125
அலக்சாண்டர் டூமாஸ் - 123
அலிபாபாவின் குகை -57
அலிமாராணி - 124
அ2ல - 135, 166, 170, 174
அவர்களுக்கு வயது வந்துவிட்டது - 117, 132, 135,
155 167

Page 117
208 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
அவளுக்கு ஒரு வேலை வேண்டும் - 61 ,99 அவன் சுற்றவாளி - 125
அழகவல்லி - 28
அறுந்த தளைகள் - 56
அறுவடை - 138
அன்னபூரணி - 47, 60, 73 அன்னை அழைத்தாள் - 65
அஹ்மத், வை. " 156, 170
ஆக்க இலக்கியமும் அறிவியலும் - 185 ஆச்சி பயணம் போகிருள் - 119 ஆனந்தன், கே. எஸ். " 123
இங்கிருந்து எங்கே - 65
இங்கேயும் மனிதர்கள் - 162 இடைக்காடர் - 39 இ2ணபிரியாத தோழர் - 122 இதயரத்தினம் - 30, 45
இந்திராபார்த்தசாரதி 168 இந்து சாதனம் - 23, 24, 30, 37, 45, 46 இந்து மகேஷ் - 162
இம்மென்சே - 58
இமையவன் - 174
இரவின் முடிவு - 10 , 13 , 159 இராசதுரை - 2 ‘ 22,39 இராசம்மாள் - 69
இராசையா, வரணியூர் ஏ. 3. - 39. இராசரத்தினம், வ. அ.-55, 63, 64, 74, 121, 122, 132, 135 138, 154
இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும் - 100 இருளினுள்ளே. -- ” 100 இலங்கரத்தின. டி.
இலங்கையர்கோன் - 54
இலட்சியப் பெண் - 103
இவளைப்பார் - 60
இளங்கீரன் . 63, 68, 73, 99, 168 இன்னசித்தம்பி. எஸ். - 3, 8

அட்டவணை 209
ஈழகேசரி - 24, 49, 50, 56, 57, 58, 63, 73, 74, 154 ஈழத்து இலக்கிய வளர்ச்சி - 74 ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி - 45 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், சில குறிப்புகள் - 18 ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி - 3, 73, 166 ஈழநாடு - 10
ஈனெக் ஆர்டன் - 74, 86
உத்தம மனைவி - 60
உதய கன்னி - 60
உதயணன் - 124 உதிரபாசம் அல்லது இரத்தின பவானி சு 14, 16
p_Drr - 70
உயிரிளங்குமரன் - 43
உலகம் பலவிதம் - 30 உள்ளத்தின் கதவுகள் - 124 உறவுக்கு அப்பால் - 123
உறவும் பிரிவும் - 123 உனக்காகக் கண்ணே 1 - 123 உனக்காகவே வாழ்கிறேன் . 124 ஊசோன் பாலந்தை கதை - 3, 8, 11, 28, 154 ஊமை உள்ளங்கள் - 102, 160 எதிர்வீரசிங்கம், ஜே. வி. . 57
ஏமாற்றம் - 03
ஏரம்ப முதலி - 42, 154
ஒட்டுமா - 69 ஒரு புளியமரத்தின் கதை - 138 ஒரே ஒரு தெய்வம் - 24
ஒடிப்போனவன் 25
கங்காணி மகள் - 64
கசின் - 63, 72
கடற்காற்று - 160
கணபதிப்பிள்ளை, க. - 58
கணேசலிங்கன், செ. - 52, 74, 76, 88, 104, 126, 129,
a33, 159, 140, 154, 167

Page 118
90 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
கணேஷ், கே. - 57
கதிர்காமநாதன் செ. - 123 கந்தசாமி. அ. ந. - 74
கம்பெரலிய - 121 கமலாம்பாள் சரித்திரம் - 27
கமலினி - 162
கமால், திக்குவல்லை - 169 கமாலுத்தீன், எஸ். எம். - 7, 19 கயிலாசநாதன், வை. அ. - 160, 165 கர்ப்பக்கிருகம் - 123
கரிசல் - 126, 138, 168
க்லட்டுத்தரை - 101
கலா பரமேஸ்வரன் - 46
கலாமதி - 154
கவிதா - 124
கறுப்பு ராஜா - 124 க்னவுகள் வாழ்கின்றன - 124 காகித ஒடம் - 123 காசிநாதன் நேசமலர் - 31, 33 காட்டாறு - 131, 152, 153, 154, 167, 169, 173, 174 காதல் உள்ளம் - 5 காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி - 22, 39 காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமனி - 22, 40, 78 காலங்கள் சாவதில்லை - 106, 109, 112, 131 காலம் மாறுகிறது - 65
காலேஜ் காதல் - 3
காவலப்பன் கதை - 9 காவலூர் ராசதுரை - 99, 130 காவியத்தின் மறுபக்கம் - 87 காற்றில் மிதக்கும் சருகுகள் . 124 கிராமப்பிறழ்வு . 122 கிருஷ்ணபிள்ளை, பொன். - 51 கிருஷன் சந்தர் - 123 கிரெளஞ்சப் பறவைகள் - 121, 122 கீறல்கள் - 126
குட்டி - 114, 116

அட்டவணை 3, 1
குந்தளப் பிரேமா - 60 குப்புசாமி முதலியார், ஆரணி - 23, 38, 46 குமாரபுரம் - 149, 164 குமாரவேற்பிள்ளை, பொன். - 60 குமாரி இரஞ்சிதம் - 63, 74
குறமகள் - 70
குஜாரத் மோகினி - 125 கேட்டதும் நடந்ததும் - 60 கைலாசபதி, க. - 11, 19, 52, 73, 95, 129, 134 கொத்தியின் காதல் - 120 கொலு ஹதவத - 123 கொழுகொம்பு - 63, 154 கொள்ளைக்கார நிசாம் - 56
கோகிலம் சுப்பையா - 105, 140 கோட்டைமுனைப் பாலத்திலே - 70 கோபல்ல கிராமம் - 138, 168 கோபால நேசரத்தினம் - 31, 43, 44, 46
சங்கரராம் - 138
சச்சிதானந்தன், க. - 60, சடங்கு (ள்ஸ். பொ.) - 114, 135, 139, 141, 167 சடங்கு(கணேசலிங்கன்) - 74, 79, 89, 92, 127, 128, 167, 170 சண்முகலிங்கம், க. - 129, 134 சண்முகதாஸ், அ. - 133
சபூ - 58
சம்சோன் கதை - 42
சம்பந்தன், க. தி. - 51, 59, 73 சரவணமுத்து, சுவாமி - 154 சரவணமுத்துப்பிள்ளை, தி. த. - 3, 8, 12 சரோஜினிதேவி அருணுசலம் - 122
சற்குணம், எம். - 45 சாத்தானின் ஊழியர்கள் - 125
சாந்தன் - 169 சாம்பசிவஞானமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம்-22, 39 சதானந்தன் - 41

Page 119
2互2 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
ஒ. ஜ. டி. சிற்றம்பலம் - 66 ஒக்கன்ராஜூ, தொ, - 106, 113 ஒங்களத்தீவின் மர்மம் - 60
சித்தகுமாரன் - 43
ஒத்திராபெளர்ணமி - 121
சித்திரலேகா, க, - 4
ஒத்திலெவ்வை - 6, 7, 11, 18
9庞5&T- 173
சிந்தனைச்சோலை - 45
கிரஞ்சீவி - 125
சிரித்திரன் - 65, 85,120, 166 சில நேரங்களில் சில மனிதர்கள் - 168 சிவகுமாரன், கே. எஸ். - 124
சிவத்தம்பி, sirr. - 74, 90, 119, 135, 174 சிவநேசச்செல்வன், ஆ. - 3, 7, 18, 45 சிவபாதசுந்தரம், சோ. . 3, 12, 13, 18, 49, 73, 134, 173 ஒவம் பொன்னையா - 124, 169 சிவராமலிங்கபிள்ளை, மா, - 39
சிற்பி - 123
சின்னத்தம்பி, வ, மு. - 39, 48 ஒன்னப்பபாரதி - 126, 168 ப்ெபிள்ளை, சி.வை. - 3,8, 3; 16, 17, 24, 58 சீதா - 84, 85
சுகுமார் - 135
சுடர் விளக்கு - 123
தந்திரத்திற்கு முற்பட்ட இலங்கைத் தமிழ் நாவல்கள் - 4 சுதந்திர பூமி - 168
சுதந்திரராஜா, g. - 98, 104, 130
சுதந்திரன் - 49, 5012 ,56 و I , 173
சுந்தரராமசாமி - 138
சுந்தராாஜன், பெ. கோ. (சிட்டி) - 18, 73, 134, 173 சுந்தரவதகு அல்லது இன்பக் காதலர் - 39, 40, 78 கந்தரன் செய்த தந்திரம் -28, 29, 45 சுந்தரி அல்லது அந்தரப் பிழைப்பு - 46 சுப்பிரமணிய பாரதி, LDsrsal - 46

அட்டவணை 23
சுப்பிரமணியம், எஸ். கே. - 39 சுப்பிரமணியம், நாகராஜ ஐயர் - 3, 4 சுமைகள் . 153, 154, 165 சு. வே. (சு. வேலுப்பிள்ளை) - 60, 70 செங்கை ஆழியான் - 88, 101, 104, 120, 121, 133, 150, 152, 153, 159, 160, 165, 167, 169 செந்திநாதன், கனக - 45, 55, 70, 72, 74, 158 செல்லப்பா, மூத்த தம்பி - 39 செல்லம்மாள், செம்பொற்சோதீஸ்வரர் - 24, 39, 169 செல்வநாயகம், எம். ஏ. - 40 செல்வநாயகம், எஸ். - 31 செல்வராசகோபால், க. தா. - 121 செல்வராசன், சில்லையூர் - 3, 12, 18, 73, 74, 166 செல்வராஜ், டி. - 126, 168 செல்வி சரோஜா அல்லது தீண்டாமைக்குச் சவுக்கடி - 40, 78 செல்லும் வழி இருட்டு - 65 செவ்வானம் - 74, 92, 104, 127, 128, 135, 767 செயர்ஸ், மிஸ் டொரத்தி எஸ். - 57 செவாக், ஸ்ரீபன் - 123 சொக்கநாத நாயக்கர் - 12 சொக்கலிங்கம், க. (சொக்கன்) - 65, 72, 88 சொந்தக்காரன் - 74, 105, 106, 110, 430, 135, 139, 167 சொர்க்கம் எங்கே? - 65 சோணுசலம் - 57, 167 சோமாவதி அல்லது இலங்கை இந்தியர் நட்பு - 40 செளந்தரராஜா, எஸ். கே. (செள) - 120 ஞானசேகரன், தி. - 87, 88, 133, 159, 169, 173 ஞானபூரணி - 39 w V ஞானரதன் - 101, 133, 159, 162, 165, 199, 173 டானியல், கே. - 88, 100, 129, 133, 139, 141 டிபோ, டானியல் - 42 டேவிட், கே. ஆர். - 113, 162, 173
டொமினிக் ஜீவா - 76 டொன் குவிகூெடிாட் - 41
27 а

Page 120
214 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
தங்கச்சியம்மா - 57, 103
தம்பிமுத்துப்பிள்ளை, எஸ். - 11, 24,28, 42
தமிழ் நாவல் நூருண்டு வரலாறும் வளர்ச்சியும் - 18, 73, 135, 173
தலைமுறைக்ள் - 138, 165, 168
தளையசிங்கம், மு. - 71
தரையும் தாரகையும் - 74, 92, 95, 128, 135, 167
தாகம் - 126, 138, 168
தாமரைச் செல்வி திருமதி ரதிதேவி கந்தசாமி - 153, 169,173
தாமோதரம் பிள்ளை, சி. வே. - 39,
தாயகம் - 113, 135
தாரணி - 60
திருஞானசம்பந்தபிள்ளை, ம.வே. 22, 24, 30, 33, 34, 37, 38
திருமணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கிருள் - 103
தில்லைநாதன், சி. - 11, 130, 166
தினகரன் - 18, 19, 49, 50, 65, 99, 103, 109, 175
g.-70,72,114
தீக்குள் விரலை வைத்தால் - 123
தீண்டாதான் - 57
துர்கனேவ், ஐவன் - 56, 57
துரைசாமி ஐயங்கார், வடுவூர் - 23
துரைரத்தினம் நேசமணி - 31, 35, 43, 46
துறைக்காறன் - 64 ኳ
துன்பக்கேணி - 108
தூரத்துப்பச்சை - 105, 106, 108, 109, 189
தெணியான் - 100, 159, 174
தென்றலும் புயலும் - 65, 66, 67 69
தேசபக்தன் கந்தன் - 188
தேநீர் - 126, 138, 168
தேம்பாமலர் - 39, 46
தேவன் (யாழ்ப்பாணம்) - 52, 57, 60, 125, 149, 168
தோதாத்திரி, எஸ். - 45
தோழமை என்ருெரு சொல் - 100
நடராசா, தெல்லியூர் செ. - 3
s_rn Fr, F- X. C. - 45

அட்டவணை 15
நந்தி - 103, 106, 174
நந்தினி சேவியர் - 169
நந்திக்கடல் - 12
நயிமா ஏ. பவுர் - 123, 169
நல்லவன் -82
நவசோதி - 125
நாகம்மாள் - 138
நாகராஜன், இ. - 70
நாகலிங்கம்பிள்ளை, அ. -39
நானு - 58
நான் கெடமாட்டேன் - 50, 114, I55
நான் சாகமாட்டேன் - 128
நித்தியகீர்த்தி, ஏ. ரி. - 101, 104, 133, 159
நிர்வாணம் - 165
நிலக்கிளி - 147, 149, 152, 153, 154, 165, 166, 167
நீதியே நீ கேள்! - 65, 66, 67, 68, 69, 73, 74
நீண்டபயணம் - 52, 74, 79,80, 81, 82, 89, 92, 127, 128, 140, 141, 167
நீல கண்டன் ஓர் சாதி வேளாளன் - 39, 肇3,46,78
நீல மாளிகை - 124
நீலாகF அல்லது துன்மார்க்க முடிவு - 22, ĝiĝo
நுஃமான், எம். ஏ. - 174, 233 m
நெஞ்சில் ஓர் இரகசியம் - 123
நெல்லையா, எச் - 39, 40, 49
நேசன், ஜி. - 124
நொறுங்குண்ட இருதயம் - 3, 17, 21, 25, 43, 44, 45, 158
பஞ்சமர் - 82, 83 89, 129, 134, 139, 141
பஞ்சும் பசியும் - 76, 126
பட்லி - 124
பத்மநாதன், பொ - 124
பத்மநாபன், நீல. - 138, 168
பத்மினி - 60
பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் - 39
பள்ளிகொண்டபுரம் - 168
பrசக்குரல் - 121
turrari - 59, 72, 74

Page 121
216 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
பார்லே என்ற சுமைதாங்கி - 9 பார்லே என்னும் சுமையாளியின் கதை - 9. பாலச்சந்திரன், சி. - 165, 172 பாலமளுேகரன் - 124, 146, 152, 165, 168, 173 பாலன், பெனடிக்ற் யோ.-74, 105, 114, 116, 130, 133, 139, 140,167
பாலேஸ்வரி, ந. - 123, 169 பாலைவனத்து ரோஜா - 125 பாவசங்கீர்த்தன இரகசியப் பவி - 43
பிஞ்சுப் பழம் - 100 பிரதாப முதலியார் சரித்திரம் - 2, 11, 35, 36, பிரளயம் - 85, 86, 131, 152, 159 பீர் முகம்மது,டி. எம். - 64 புகையில் தெரிந்தமுகம் - 61 புத்தம் வீடு - 138 புதிய சுவடுகள் - 87 புதிய தலைமுறைகள் - 158 157, 164 புதியயூமி - 162, 165, 167 புதுமை இலக்கியம் - 18, 74 புதுமைபித்தன் கதைகள் - 135 புயல் அடங்குமா? - 65 புயலுக்குப்பின் - 124 புனலும் மணலும் - 128 புனித சீலி - 30 பூங்காவனம் - 39 பூஞ்சோலை - 58 பூரணி - 174 பூலோகசிங்கம் - 46, 74 பூஜைக்கு வந்த o Gabrif - 123 பொன்ஞன மலரல்லவோ, - 124 பொன்னீலன் - 126, 168 பொன்னுத்துரை (எஸ். பொ.) - 70, 174, 131, 139, 141,
167, 168, 174.

அட்டவணை 27
போடியார் மாப்பிள்ளை - 156, 157, 65 போர்க்கோலம் - 74, 79, 80, 81, 82, 89, 133, 134 போராடப்பிறந்தவர்கள் - 101, போராளிகள் காத்திருக்கின்றர்கள் - 160, 161, 165 மகாலிங்கம், அப்பச்சி -162 மகேசன், க. ச. - 126 மங்களநாயகம் தம்பையா 17, 21, 24, 40 மண்ணுசை - 138 மண்ணில் விளைந்தவர்கள் - 65
மண்ணும் மக்களும் - 74, 92, 97, 104, 128, 154 மணிபல்லவம் - 57 மணியன் - 125 மணிவாணன் - 103; 124, 147 மத்தாப்பு - 70, 74 மதுபாலன் - 124
மர்மக் கடிதம் - 103
மயானபூமி - 85
மர்மமாளிகை - 125
மரியாம்பிள்ளை - 123 மல்லிகை (சஞ்சிகை) -18,45, 46, 14, 166 மல்லிகை - (நாவல்) - 56 மலரும் சருகும் -126, 138
மலைக் கன்னி - 100 மலைக்கொழுந்து - 65, 106, 109, 139 மழைக்குறி - 98, 130 மனங்கள் தாமாக மாறுவதில்லை - 100
மனநிழல் - 60 மன விகாரம் - 57
மனிதர்கள் - 65 மனேகரன், துரை - 103 137, 165, 173 மனேன்மணி சண்முகதாஸ் -169 மாலைவேளையில் - 57 மான், தோமஸ் - 57 மீட்டாத வீணை - 102, 133, 159
முதற் காதல் -56

Page 122
28 そ ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
முருகன் ஓர் உழவன் - 138 முருகானந்தன், அ. செ. - 50, 57, 62, 72, 138, 158 முல்க் ராஜ் ஆனந்த் - 59 முற்றத்து ஒற்றைப்பனை - 120, 159 மொழிவாணன் - 124 மோகனங்கி - 3, 12, 13, 121, 154 யக்கடையாவின் வர்மம் - 60 யாத்திரை - 50, 61, 124 யாரித்த வேடர்? - 121 யாருக்காக - 124 யாழ் நங்கை - 103, 104, 124, 169 யாழ்ப்பாணச் சமய நிலை - 33 யாழ்ப்பாண வைபவ கெளமுதி - 26, 45
ikuntzar - 153, 165
யுகசந்தி - 103, 147
யுவன் . 135 யோகநாதன், செ. - 87, 100, 104, 130 யோகராசா செ. - 135, 166 ரகுநாதன் - 75, 126 ரங்கராஜு, ஜே. ஆர். - 23, ரவீந்திரநாத் தாகூர் - 50, 56 ரவீந்திரா - 51 ரஜனி - 49, 52, 60, 124 ராஜ் தாராயணன், இ . 138 ராஜம் கிருஷ்ணன் - 138, 168 ராஜூ, தி. ச. - 15 ரெனிஸன், அல்பிரட் - 56
வண்டிச்சவாரி - 62
வண்ணமலர் - 70 வரலாறு அவளைத் தோற்றுவிட்டது - 113, 106, 162 வள்ளி புறப்பட்டாள் - 82
வன்னியகுலம், சி. - 173 வாசுதேவராவ் கேய்க்வார் - 38 வாடைக்காற்று 160, 165

அட்டவணை
வாழ்க்கையின் வினேதங்கள் - 58
வாழ்க்கைப் பயணம் - 123
வாழ்வற்ற வாழ்வு - 64
விக்கிரமசிங்க, மார்ட்டின் . 122
விடிவை நோக்கி - 84, 134, 162
விடிவுகால நட்சத்திரம் - 124, 152
விதவையின் வாழ்வு - 124
வித்திபா - 124
விதியின் கை - 62
விந்தன் - 59
விழிச்சுடர் - 113
விஜய சீலம் - 14, 16, 121
விஜயன், கே. - 162
வீடற்றவன் - 64
வீடு யாருக்கு - 99
வீரகேசரி - 24, 39, 49, 60, 65, 70, 74, 101, 121, 113 144,
145, 150, 165, 173, 174
வீரசிங்கன் கதை. அல்லது சன்மார்க்கஜயம் - 3, 8, 14 18,
17, 19, 2, 3, J
வெறும் பானை - 63
வேங்கடரமணி, கா. சி. - 138
வேதநாயகம்பிள்ளை, மாயூரம் - 2
வேலுப்பிள்ளை, க. - 22
வேலுப்பிள்ளை, ஸி. வி. - 64
வைத்திலிங்கம், சி. - 51, - 57
ழுெபின்சன் குறுரசோ சரித்திரம் - 42
ஜமேலா - 124
ஜயலத், கருணுசேன - 1222
ஜானகி - 87
ஜானகி ராமன், தி. . 132, 168
ஜிளு - 124
ஜகந்நாதன், சி. வா - 45

Page 123
220 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
ஜெகநாதன் , காவலூர் - 101 ஜெயகாந்தன் - 168 ஜோசப், தெளிவத்தை - 106, 112, 131, 173 ஜோன்ராஜன், எஸ். பூரீ. - 156, 165, 169, 173 ஜோலா, எமிலி - 57 ஷண்முகசுந்தரம், ஆர். - 138 ஸ்கொட், சேர் வால்ரர் - 42 ஸ்மித், வில்ஹெல்ம் - 17 ஸ்ரிக்னி, சார்ள்ஸ் - 39, 40, 46 ஸ்டீவன்ஸன், ருெபேட் லூயி - 57, பூணிதரன், சு. - 165, 119
ஹன்னமூர் - 9
ஹனிபா, என். எம். - 103 ஹெப்ஸிபா ஜேசுதாசன் - 138
Kenilworth - 43
Letter From an Unknown Woman - 123
Reynolds, G. W. M. - 23 Robinson Crusoe - 42
Sarath Chandra, E. R. - 46 The Sinhalese Novel - 46 Treasure Island - 57
The Count of Mont Cristo - 123
Untouchable - 57

பக்.
56
5 I
63
97
13
13
19
J.26
138
I45
52
167
67
69
182
193
200
வரி
15
20
17
22
18
2.
21
19
10
20
10
பிழை திருத்தம்
பிழை திருத்தம் நடராஜனின் நடராசாவின் திரு. த. சரவணமுத்துப் தி. த. சரவணமுத்துப் பிள்ளை 6ižī அறுந்ததளைகள் (1937) அறுந்ததளைகள் (1939) போட்யிற் போட்டியிற் வாசிப்பனவாகவும் வாசிப்பதான
எண்ணத்தை ஊட்டுவனவாகவும் மஓசேதுங் மாஒசேதுங் 23 23 அ. தொ. சிக்கராஜா தொ. சிக்கனராஜா நகைச்சுவை நகைச்சுவைநாவல்கள்
நாவல்கள்
@5・ சின்னப்பாரதி ஆர். சண்முகசுந்தரம்
6. வெளிப்படு த்துவதால் நாவல்கள் முயற்சியும் பொய்மைகள்
நிலைப்பதில்லை சாந்திமதி ஸ். ரிக்னி, சார்ள்ஸ் 1070க்குப் பின்
@· சின்னப்பபாரதி ஆர். ஷண்முகசுந்தரம்
6 அ. வெளிப்படுத்துவதில் நாவல்களை முயற்சி (பெர்ய்மைகள்
நிலைப்பதில்லை) காந்திமதி
ஸ்ரிக்னி, சார்ள்ஸ் 1970க்குப் பின்

Page 124


Page 125