கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

Page 1
நூலாசிரியர்
தான் தோன்றிக் கவிராயர்" என்னும் பெயரில் ஈழத்தின் தலே சிறந்த தமிழ்க் கவிஞராகத் திகழும் சில்லேயூர் செல்வராசன் தொட்டதெல்லாம் பொன்னுக் கும் கை வண்ணம் படைத்த எழுத்து விற்பன் னர்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் 'மதுரகவி எனப் பட்டம் சூட்டப் பெற்ற சுபவாக்கியம் பிள்ளே சூசைப்பிள்ளே ப் புலவரின் சீடனு யமர்ந்து யாப்பும் நிகண்டும் கற்றுப் பன்னிரு வயதில் செய்யுள் யாக்கத் தொடங்கிய செல்வராசன், 1950-ம் ஆண்டில் தன் பதினுரும் வயதில் முதலாவது இலங்கைத் தமிழ்ச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றுப் பின்னர் எழுத்துத் தொழிலில் நுழைந்தார். சுதந்திரன், தினகரன், வீரகேசரிப் பத்திரிகைகளில் துனே பாசிரியராகவும் ஞாயிறு வீரகேசரிப் பதில் ஆசிரியராகவும் பத்திரிகைத் துறையில் பங் லாண்டுகள் பணிபுரிந்தவர்.
தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் புலமையுடன்
எழுத வல்லார பன இவர், பம்பாயில் நிகழ்ந்த தமிழ் எழுத் ஆாளர் மகாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாகக் கலந்து
ார ஜி" ஆயர்
எல்லோரும் கைவிட்டால் சில்லா லே வைத்தியம் i இலங்கையில் பழமொழி சொல்வார்கள் ஈழத்துத் தமிழ்
இலக்கியத் துறையில் இப் பழமொழிக்கு இலக்கனமாகக் திகழ்ந்து வருபவர் சில்லேயூர் செல்வராசன்
- SS - - R 500
 


Page 2

ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
சில்லையூர் செல்வராசன்
e6 (5 6i 2a) u sh
12, உஸ்மான் ரோடு, சென்னை-17,

Page 3
முதற்பதிப்பு: 1967.
விலை ரூபாய் இரண்டு
செளந்தரா பிரிண்டர்ஸ், சென்னை-17.

முன்னுரை
ஈழநாட்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சிபற்றிய நூலொன் றினை எழுதுதல்வேண்டும் என்ற எண்ணம் ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளின் முன் எனக்கு உண்டாயிற்று. தென்னிந்தியாவில் எழுகின்ற-எழுந் க-நூல்களுள்ளே பெரும் பாலானவை ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் தமிழ் மெTமிக்கு ஆற்றிய தொண்டுகளுக்கும் உரிய இடமளிக்காமை நெடுங்காலமாக என் மனத்தே உறுத்திக் கொண்டிருந்தது. ஈழத்து அறிஞர் களும் ஆராய்ச்சியாளர்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சியி%ன ஈழத்துப் பூதந்தேவர்ை காலத்திலிருந்து தொடங்கி எடுத் துப் பேசியும் எழுதியுங் கொண்டுவர, எனது மனமோ அவர் கள் குறிக்குங் காலத்துக்கு முற்பட்டகொரு கால எல்லைக் குச் சென்று உலா விக்கொண்டிருந்தது. எனது கருத்தின்படி ஈழநாடு பண்டைத் தமிழகத்தின் புறத்தே கிடந்ததொரு நாடு அன்று: தமிழ் மரபுரைகள் குறிக்கும் முதற் சங்க காலத் துக்கும் முற்பட்ட பழம்பெரு நாடு அது என்பதே யான் கண்டுகொண்ட உண்மையாகும். முதற் சங்க காலத்துக்கு முன்னும் ஈழநாடு இருந்த சுவடு தெரிகின்றது. பழந்தமிழ் நூல்களும் சாசனங்களும் அந்தச் சுவட்டினத் தெளிவாகக் காட்டுகின்றன. “உண்மையில் தமிழரின் மூலத் தாயகப் பகுதி என்ற பெயருக்குத் துணைக்கண்டப் பகுதியைவிட மிகப் பழமை வாய்ந்த உரிமையுடையது இலங்கையேயாகும்.' எனப் பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரைப்பிள்ளை அவர்கள் எனது கருத்துக்கு ஆதரவு தருகின்ருர்கள்.

Page 4
4
இங்ங்னமாகப் பழமைவாய்ந்த ஈழநாட்டின் இலக்கிய வளர்ச்சியினை ஈழத்துப் பூதந்தேவனர் காலத்திலிருந்து தொடங்கி மடக்கிவிட எனது மனம் இயையவில்லை. எனவே, அக் காலத்துக்கு முந்தியவையான நிகழ்ச்சிகளையும் வரலாற். றுக் குறிப்புக்களையும் தமிழிலக்கியப் பரப்பிலும், கல்வெட்டு கள் பட்டயங்களிலும், பிறமொழி நூல்களிலும் துருவித் துருவி ஆராய்ந்து பார்த்தேன். அவ் வாராய்ச்சியின் பயனுக பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரைப் பிள்ளை அவர்கள் கூறுவதுபோல், “தமிழ், தமிழன், தமிழகம் பற்றிய பல புத்தம் புதிய, முன் எங்கும் எவரும் கண்டறியாத, கேட்டறியாத-ஆனல், முன் விளங்காத பலவற்றை விளங்க வைக்க வைக்கிற-கருத்துக்களை’க் கண்டறிந்தேன்.
இலக்கிய வளர்ச்சி பற்றி எழுத எண்ணிய யான் என்னை யறியாமலே பழந்தமிழர் வரலாற்ருராய்ச்சியிலே புகுந்து விட்டேன். அந்த நிலையில், எனது முதல் எண்ணம் உடனடி யாக உருப்பெற்று வளரவில்லை. எனினும் காலத்துக்குக் காலம் கண்டுகொண்டவற்றை அவ்வவ் வேளைகளிலே குறித்துவைத்துக் கொண்டேன். அப்படியாக யான் குறித்து வைத்தவற்றைப் பின்னதாகப் பார்த்தபோது காவியம், நூற்பதிப்பு, இலக்கணம், உரைவகுப்பு, மொழிபெயர்ப்பு, அகராதிக் கலை, நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் ஆகிய துறைகளிலும் ஈழ நாடு சிறந்த பணி ஆற்றியிருப்பதைக் கண்டேன். எனவே, அவ்வத்துறைகளில் நிகழ்ந்த பணிகளே யெல்லாம் ஆராய்ந்து தொகுத்து வந்தேன். அத் தொகுப் புப் பணி ஒரளவுக்கு நிறைவுபெறும் வேளையில், பிற நூலா சிரியர்கள் மேற்காட்டிய துறைகளைப்பற்றி எழுதியவற்றில் அத் துறைகளைப்பற்றி யாது குறிப்பிட்டுள்ளனர் என நோக்கலாம் எனக் கருதினேன். அறிஞர் பலர் எழுதிய நூல்களைப் பெற்றுப் படித்தும் பார்த்தேன். ஏமாற்றமே உண்டாயிற்று. இதுவரை இலக்கிய வளர்ச்சிபற்றி இடை யிடை எழுத முற்பட்டோர் கூட முன் காட்டிய துறைகளில் ஒன்றினையேனும் எடுத்து வரன்முறையாக முழு துறழ் வகை யில் எழுத முயலவில்லை என்பது புலனயிற்று. ஈழத்து இலக் திய வரலாறு இங்ங்னமாகத் கேய்த்தொடுங்கிக் கிடக்கும் நிலையிலிருக்கும் என யான் நம்பவில்லை. ஈழத்திலிருந்து நூல் கள் எழுத முற்பட்டோரெல்லோரும் ஈழத்தின் இலக்கிய வரலாற்றைப் பார்க்கிலும்-ஈழமே தலைகாட்டாத-தென் னிந்தியத் தமிழ் வரலாற்றினையே நன்க அறிந்தவர்களாகக் காணப்பட்டார்கள். அறிஞர் பலர் தென்னிந்தியத் தமிழ்

5
வளர்ச்சிபற்றிக் காலத்துக்குக் காலம் வெளியிட்ட நூல்களே அதற்குக் காரணம் என்பதை உணர்ந்தேன். ஈழநாட்டில் யாராவது தெளிவுபெற ஆராய்ந்து எழுதியிருந்தால் அவற் "றைப் பார்த்துப் படி செய்திருப்பார்கள். காரியம் இலகு
வாய் முடிந்திருக்கும்.
ஈழ நாட்டில் முற்காலத்தில் வாழ்ந்த புலவர்களின் வர -லாறுகளே செம்மையான முறையில் இற்றைவரை எழுதப் படவில்லை என்பது யாம் அறிந்தது. இத் துறையில் முதன் முதலாக ஈழத்தில் அடிகோலியவர் சைமன் காசிச் செட்டி அவர்களாவர். 'Tamil Plutarch’ (1859) என்னும் புலவர் வரலாற்று நூலினை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர் அவர். தென்னிந்தியாவில் வாழ்ந்த புலவர்களையே அவரும் கருத்துட் கொண்டிருந்தார். ஆணல் சதாசிவம் பிள்ளை அவர்கள் 1886ம் ஆண்டில் “பாவலர் சரித்திர தீபகம்’ என் னும் நூலின எழுதினர். ஈழநாட்டில் வாழ்ந்த புலவர்கள் பலரது வரலாற்றினைத் தெரிவிக்கும் நூல் அது. அதன்பின் *ஈழ மண்டலப் புலவர் சரித்திரம்’ என்னும் நூலினை ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை அவர்கள் 1914ம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். மகாவித்துவான் சி. கணேசையர் அவர்கள் எழுதிய ‘ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரித்திரம்’ 1939ம் ஆண்டில் வெளிவந்தது. இங்குக் காட்டப்பட்ட வரலாற்று நூல்களைத் துணையாகக்கொண்டும் முழு நிறைவான இலக் கிய வளர்ச்சியினைத் துலக்கமாக அறிந்துகொள்ள முடி
பாது.
*தமிழ் இலக்கிய வரலாறு-சுருக்கம்’ எனத் திரு. வி. செல்வநாயகம் (தமிழ் விரிவுரையாளர், இலங்கைப் பல் கலைக் கழகம், பேராதனை) அவர்கள் 1951ம் ஆண்டில் ஒரு நூலினை வெளியிட்டார்கள். அந்த நூலிலும் புலவர் வர லாறுகள் உரிய வகையிற் கூறப்பட்டிருக்கவில்லை. பல்கலைக் கழகத்து நிலையே இப்படியிருக்கும்போது பிறரிடமிருந்து யாம் எதையாவது எதிர்பார்ப்பது தகாது எனக் கருதி னேன். எனவே, காவியம், நூற்பதிப்பு, இலக்கணம், உரை வகுப்பு, மொழிபெயர்ப்பு, அகராதிக் கலை, நாவல், சிறு கதை, கவிதை, நாடகம் என வரும் துறைகளில் யானகவே முயன்று செய்திகளையும் வரலாற்றுக் குறிப்புக்களையும் திரட்டத் தொடங்கினேன். அக் காலத்திலேதான் நாவல், சிறுகதை ஆகிய துறைகளில் ஈழ நாட்டினர் எவ்வெப் பணி களைச் செய்துள்ளனர் என அறிந்துகொள்ள ஆவல் கொண்

Page 5
6
டேன். அவ் வேளையிலே, அத் துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி பற்றிய நிறைவான வரலாற்றினை எனக்குக் காட் டித் துணைபுரிந்தவர் சில்லையூர், திரு. செல்வராசன் அவர் களாவர்.
ஈழ நாட்டில் 1961ம் ஆண்டில் வெளிவந்துலவிய *மரகதம்’ என்னும் திங்கள் இதழில், “ஒட்டிப் பிறவாத இரட்டையர்’ என்ற தலையங்கத்துடன் ஓர் அறிமுகம் *ராம்-ரகீம்’ என்பரால் எழுதப்பட்டிருந்தது. அந்த அறி முகத்தில், 'சில்லாலை ஒரு சின்னஞ்சிறு கிராமம். இதைவிடப் பெரிய கிராமங்களும், ஏன் சிறு நகரங்களுங்கூடப் பெருத விளம்பரத்தைப் பெற்ற அக் கிராம மக்கள் தம் கிராமத்தை ஈழமெங்கும் மட்டுமல்ல தமிழ் வழங்கும் இடமெல்லாம் அறிமுகப்படுத்திய செல்வராசனைக் கெளரவிக்க வேண்டும். பெn ன்னுடை போர்த்தியும் மகிழ்விக்கலாம்.’’ என்று கூறி, *செல்வராசன் சுதந்திரன், வீரகேசரி, தினகரன் பத்திரிகை களில் கடமையாற்றியுள்ளார். இவர் செய்யும் கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள், காற்றிலே பறக்கும் வானெலி நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும்விட அவருடைய கவிதைகளே அவருக்குச் சிறப்பைத் தேடித் தந்தன. “தான் தோன்றிக் கவிராய’ரான இவர் எழுதிய ‘தலைவர்கள் வாழ்க மாதோ!’ என்ற கவிதைத் தொடர் (தொடரில்வந்த எல்லாம் அல்ல) என்றும் நின்று வாழக் கூடியது. இலக்கிய வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் எழுத்தாளரான இவர் இலக்கியத்தின் எல்லாப் பகுதிகளையும் விமர்சிக்கத் தயங்கா தவர். இதனுல் இவருக்குப் பூமாலைகளும், பாமாலைகளும் மட்டுமல்ல “பொல்லடி'களும் கூடக் கிடைப்பதுண்டு’ என நகைச்சுவை சார எழுதப்பட்டிருந்தவை என் மனத்தைக் கவர்ந்தன.
அக் கவர்ச்சி ஏற்பட்ட சில நாள்களின் பின், இலங்கை முற்போச்கு எழுத்தாளர் சங்க வெளியீடான “புதுமை இலக்கியம்’ படைத்தளித்த மகாநாட்டு மலரில், “நாவல்’ என்ற தலையங்கத்துடன் சில்லையூர், திரு. செல்வராசன் அவர் கள் எழுதிய கட்டுரையினைக் கணடேன். அந்தக் கட்டுரையே இன்று ‘அருள் நிலையம்’ போற்றி வெளியிடுவதாகும். இலங்கையில் எழுந்த நாவல்களை எடுத்தோதுவதுடன் நில் லாது, தென்னிந்திய நாவல் வளர்ச்சியுடன் அவற்றை ஒப்பு நோக்கிக் காணும் இவ்வரிய கட்டுரை நூல் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதுவோருக்கெல்லாம் மிகவும் பயன் படுதல் கூடும். எனக்கே பெரிதும் பயன்பட்டிருக்கிறது.

7
எனவே, ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதுவோர் நாவல்பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை என இனிக் கவலை கொள்ள வேண்டுவதில்லை; பார்த்தே எழுதிவிடலாம்.
பதினரும் நூற்ருண்டின் தொடக்க காலத்துக்கு முன்ன தாக, ஈழ நாட்டிலே தமிழ் மொழியும் சைவ சமயமும் நாட் டின் பல பகுதிகளிலும் மலர்ந்து மணம் பரப்பிக்கொண் டிருந்தன. நாட்டிலுள்ள திருக்கோயில்களிளெல்லாம் கந்த புராணம் படித்துப் பயன் சொல்லப்பட்டு வந்தது. கந்த புராணப் பண்பாடே மக்கள் குருதியில் ஒடிக்கொண்டிருந் தது. யாழ்ப்பாணமே அக் காலத்தில் மொழி வளர்ச்சிக்கும் சமயவொழுக்கங்களுக்கும் ஊற்று நிலையமாய் விளங்கிக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணப் பண்பாடே கந்தபுராணப் பண்பாடாகவும், கந்தபுராணப் பண்பாடே யாழ்ப்பாணப் பண்பாடாகவும் நிலவிய காலம் அது. அக் காலப் பகுதி யிலே யாழ்ப்பாணத்துத் திண்ணைப் பள்ளிகளிலேயே கல்வி பயின்றவர்கள் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று கல்வி யும் பண்பாடும் பயிற்றி வந்தார்கள். சிங்கை யாரிய மன்ன னின் முயற்சியால் யாழ்ப்பாணத்து நல்லூரில் பதினைந்தாம் நூற்ருண்டின் தொடக்க காலம் வரையில் ஒருதடமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டிருந்ததென யாழ்ப்பான வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. அத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் யாத் த ைமத்த நூல்கள் அம் மன்னனல் நிறுவப்பட்ட “சரசுவதி மகாலயம்’ என்னும் நூல் நிலையத்தில் வைத்துப் பேணிக் காக்கப் பட்டனவாம். இம் மன்னனுக்குப் பின் பரராச சேகரன், செகராசசேகரன், அரசகேசரி ஆகியோர் புலவர் களாய் விளங்கித் தமிழ் வளர்த்தார்கள் என்பதையும் காண்கின்ருேம்.
ஈழ நாட்டின் பண்பாடும் கல்வி நிலையும் இவ்வா றிருந்தபோதுதான் போர்த்துக்கேயர் ஈழநாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். எனவே, போர்த்துக்கேயர் வந்த காலத்தில் ஈழத்துத் தமிழ் மக்கள் கல்வி மணமின்றி அதாகரிகராயும் அஞ்ஞானிகளாயும் இருந்தார்கள் என்று கூறிவிடமுடியாது. போர்த்துக்கேயர் இங்கு வந்த காலத்தில் அவர்கள் தமது போர்களிற் கண்ணுங் கருத்துமாய் இருந்ததனுற் கல்வித் துறையில் அதிகமான பணிகளைப் புரிவதற்கு இயலாமற் போயிற்று. எனினும், தமது சமயத்தை நாட்டில் நிலை பெறச் செய்வதற்குக் கல்வித் துறையில் ஒரளவு சிந்தை செலுத்துதல் வேண்டுமென்பதை அவர்களும் உணர்திருந் தார்கள்.

Page 6
8
1581ம் ஆண்டு தொடக்கம் 1564ம் ஆண்டுவரை மன்னு ரிலே தங்கியிருந்து சமயபோதனை செய்துகொண்டிருந்த ஒருவர் எண்டிரிக்குப் பாதிரியார் (Henry Heriquez) என் பார் தமிழ் மொழியினை நன்கு பயின்று சமயபோதனை நடாத்திவந்ததுடன், போர்த்துக்கேய மொழியில் பிளாக் கூசோர்கே என்பார் போர்த்துக்கேய மொழியில் எழுதிய “Gortšíf fóGB) Gólaiv5th” (Doctrina Christam) ST6örgyb நூலினையும் தமிழில் “தம்பிரான் வணக்கம்’ என மொழி பெயர்த்து அச்சேற்றியிருப்பக் காண்கின்ருேம். மன்னுரிலே தங்கியிருந்த காலத்தில் ஒரு பல்கலைக் கழகத்தை அங்கு நிறுவிக்கொள்ளவேண்டும் எனக் கருதி உழைத்துவந்த எண்டிரிக்குப் பாதிரியார், தமிழ் அகராதி ஒன்றினையும், அர்ச்சியேஷ்டர்களின் வாழ்க்கை வரலாறு ஒன்றினையும் இயற்றி வெளியிடுவதற்கு முயன்றுகொண்டிருந்தார் என் றும் அறியக் கிடக்கின்றது. மன்னரில் வாழ்ந்துகொண் டிருந்த காலத்தில் இவர் மொழிபெயர்த்த 'தம்பிரான் வணக்கம்’ 1578ம் ஆண்டிலே கொச்சியில் அச்சேற்றப்பட்ட தாகக் கூறப்படுகின்றது. கொச்சியில் அம்பலக் காடு என் ம் ஊரில் அமைக்கப்பட்டிருந்த ஏசு சபை அச்சகத்தி லேயே மரத்திற் செதுக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டு முதன் முதலாகத் தமிழ் நூல் ஒன்று வெளியிடப்பட்டது. 1577ம் ஆண்டில் "கிறிஸ்தவ வேதோபதேசம்’ (Flos Sanctorum) என்னும் தமிழ் உரைநடை நூல் வெளியிடப் பட்டதாம் அம்பலக் காட்டில் அச்சிடப்பட்ட நூல்கள் 36ër@99, gjia TLD Goin (Ignatius Aichamani) 6Tair utfi 2-Gj வாக்கிய அச்செழுத்துக் கொண்டு அச்சிடப்பட்டனவாகும். புன்னைக்காயல் என்னும் ஊரில் ஜோ-த-வாரியா (John-deFaria) என்பார் தாமாகவே வேறு அச்செழுத்துக்களை உரு வாக்கினர். இங்ஙனமே கோவையிலும், கொல்லத்திலும், யாழ்ப்பாணத்திலும் தனித்தனியான எழுத்துக்கள் அச்சீட் டுக்காக உருவாக்கப்பட்டன,
“அச்சுக் கலை” என்னும் நூலினை இயற்றிய திரு. மா. சு. சம்பந்தன் அவர்கள், "19-ம் நூற்ருண்டின் முற்பகுதி வரை கபில் தரங்கம்பாடியிலும் வேப்பேரியிலும் இருந்த மேற் சொன்ன அச்சகங்கள் முதலில் ஹாலியில் (1710) உண்டாக் கப்பட்ட சதுர நிலைக்குத்தான அச்செழுத்துக்களையே (The Square upright type-face) LuLu 6ör Lu@9jgS) Gujö35607. g) 5 fib(5Ü பின் யாழ்ப்பாணத்தில் அமலில் இருந்ததை அடியொற்றி வட்டமானதும் சிறிது சரிந்த வடிவமுள்ளதுமான அச்சுக்

9
sakti (A more rounded and slightly sloping type-face) பயன்படுத்தினர். இவ்வகையான அச்சுக்களே 1868-ல் வின்ஸ்லோ தமிழ்-ஆங்கில அகராதி (Winslow's Tamilnேglish Dictionary) பதிப்பிக்கப்படும்வரை நிலைத்துநின்றன. இந்தப் பெருநூலுக்கு அமெரிக்க அச்சடிப்பாளரான 露 பி. ஆர். ஹண்டு (P. R Hunt) என்பவர் புதிய தமிழ் எழுத்துக்களைப் °பைக்கா’ (Pica), "லாங் பிரைமர்' (Long Primer), “பிரிவியர்’ (Brevier) எனப் பல்வேறு அளவுகளில் (விதங்களில்) உருவாக்கித் தந்தார். மேற்சொன்ன பல்வேறு அளவுக்குரிய எழுத்துக்களில் துளைபண்ணும் கருவிகள் (Punches) இந்தியத் தொழிற் கலைஞர்களாலேயே செய்யப் பட்டன” எனக் கூறுகின்றர்கள். எனவே, தென்னிந்தியா வில் தமிழ் அச்சீட்டு முறை உருவாகிய காலத்திலே ஈழ நாட்டிலும் தனிப்பட்டதான அச்சீட்டு முறையொன்று வழக்கிலிருந்தது என்பது புலனுகின்றது. அந்த அச்சீட்டு முறையே “வின்ஸ்லோ’ தமிழ் ஆங்கில அகராதியை வெளி யிடுவதற்கும் ஏற்றதென அக் காலத்திற் கருதப்பட்டதென் பதும் தெளிவாகின்றது. அதுவுமன்றி பெஸ்கி எனப்படும் வீரமாமுனிவர் 1732ம் ஆண்டில் இயற்றிய “சதுர் அக ராதி’ நான்கு தொகுதிகளுங் கொண்டதாய். இறிச்சேட்டு கிளாக்கு என்னும் மேலைநாட்டவரின் ஆணைப்படி 1842-ம் ஆண்டிலேயே - யாழ்ப்பாணத் தமிழ் அகராதி வெளியிடப் பட்டபின்-வெளியிடப்படவேண்டிவந்த தும் யாழ்ப்பானத்து அச்சீட்டு முறை சிறப்புடையதாய் இருந்தமையாலேயே என்பதையும் யாம் உணர்ந்து கொள்ளலாம்.
எப்படிப் பார்ப்பினும், மே%லநாட்டவர் வருகையினல் தென்னிந்தியாவிலும் ஈழ நாட்டிலும் ஏறக்குறைய ஒரே காலப் பகுதியில் துரிதமான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன என்பது தெளிவாகின்றது. இந்த முன்னேற்றங் களுள் ஒன்றுதான் இதுவரை எடுத்துக் கூறப்பட்ட அச்சுப் பொறியின் வருகையாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் போர்த்துக்கேயர் முதலில் வந்தார்கள். வாணிகத்தின் பொருட்டு வந்தார்கள். வந்தவர்கள் தங்களுடன் தாங்கள் பற்றியொழுகும் கிறித்து சமயத்தினபும் பரவச் செய்வதற் காகப் பாதிரிமாரையும் அழைத்து வந்தார்கள். அவர்கள் எல்லோருமே கிறித்து சமயத்தைப் பரப்புவதிலும் மக்களைச் சமயம் மாறச் செய்வதிலும் தனி ஊக்கங்கொண்டு உழைத் தார்கள். அவர்கள் அங்ஙனம் மத மாற்றம் செய்வதற்கு இந்தியாவிலும் இலங்கையிலும் வழங்கிய மொழிகளைப்

Page 7
O
பயிலவேண்டியவர் ஆளுனர்கள். மதம் மாறிய மக்களுக்" கெனப் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. அம் மக்கள் படித்தறிவதற்காக நாட்டு மொழிகளில் உரை நடையில் நூல்கள் பலவற்றை எழுதினுர்கள்; அச்சேற்றியும் வெளி யிட்டார்கள். 19ம் நூற்ருண்டுக்கு முன்னதாக நிறுவப்பட்ட அச்சகங்கள் கிறிததவப் பாதிரிமாராலும் ஆங்கிலேய வணிகக் குழுவினராலுமே நிறுவப்பட்டிருந்தன. அக்காலத்தி லெல்லாம் அவர்கள் பெரும்பாலும் கிறித்தவ நூல்களை மட்டும் அச்சிட்டுப் பரப்பினர்கள். அவர்களைப் போலவே இசுலாமிய சமயத்தவரும் தமது சமய நூல்களை வெளி யிட்டுப் பரப்பத் தொடங்கினர்கள். அவர்கள் செய்வதைக் கண்ட பின்புதான் சைவ சமயத்தவர்களும் தங்கள் தங்கள் சமய சம்பந்தமான நூல் சளைச் சிறப்பாகத் தமிழ் மொழி யில்-உரைநடையில்-வெளியிடத் தொடங்கினர்கள். அதன் பின் இலக்கிய நூல்கள் பல தமிழில் அச்சேற்றப்பட்டன. இந்தப் படிமுறை வளர்ச்சியின் பயனுகவே தமிழ்மொழியிற் சிறுகதையும் நாவலும் உருவாயின என்பது சிலர் கொள்கை அவர்கள் கருத்திர படி 19ர் நூற்ருண்டுக்கு முன் உரை நடை இருந்ததேயில்1ே; சிறுகதை இல்லை; நாவலுமே இல்லை. இந்தக் கருத்து முற்றிலும் பொருந்தாது.
டாக்டர் மா. இராசமாணிக்கனுர், *ஓர் உண்மையை வற்புறுத்துவதாய், மூன்று நான்கு பாத்திரங்களைக்கொண்ட தாய், ஒன்று அல்லது இரண்டு நிகழிடங்களை யுடையதாய், குறுகிய கால அளவு நிகழ்ச்சியுடையதாய் எழுதப்பெறும் கதையே சிறுகதை என்று மேனுட்டு அறிஞர் கூறுகின்றனர்’ எனக் கூறி, ‘ஒரு சிறுகதை நம் மனத்தில் தங்கவேண்டு மாயின் அதனில் இரண்டு சிறப்புக்களில் ஒன்றேனும் இடம் பெற்றிருத்தல் வேண்டும்; சிறு கதையில் ஒப்பற்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறல் வேண்டும்; அல்லது அதில் வரும் பாத் திரம் நாம் மதித்து வரும் ஒப்பற்ற பண்பு ஒன்றைப் பெற் றிருத்தல் வேண்டும்.’’ என விளக்கி, “இத்தகைய சிறு கதை கள் பல பண்டைத் தமிழில் பாங்குற அமைந்துள்ளன. கி. பி. 7 அல்லது 8ஆம் நூற்றண்டில் கொங்குவேள் என் பவர் உதயணன் வரலாற்றைப் பெருங்கதை என்னும் பெய ரில் பாடியுள்ளார். பெருங்கதை’ என்னும் இப் பெயராலே தமிழில் 'சிறு கதை’ நூல்கள் பல இருந்திருத்தல் வேண்டும் என்பது பெறப்படுகின்றதன்ருே? சங்க நூல்களை நன்கு ஆராயின், ‘சங்க கால இலக்கியத்தில் சிறு கதைகள்’ என்.

னும் அரிய நூல் ஒன்றை எழுதி முடிக்கலாம் என்பது" திண்ணம்.” என நிறுவுகின்ருர்கள்.
*அகிலன்’ அவர்களோ, “முதல் தமிழ் நாவல்’ என் னும் தலையங்கத்துடன் தாம் எழுதிய கட்டுரையில் “சிலப் பதிகாரமே முதல் தமிழ் நாவல்’ என நாவல் இலக்கணத் தையும், கதைக் கருவினையும், குறிக்கோளினையும் எடுத்துச் சிறப்பாக ஆராய்ந்து நிறுவுகின்ருர்கள். “உரைநடையிட்ட செய்யுள் காப்பியத்திற்கும், இன்று செய்யுள் படிப்பவர் களால் ‘இலக்கியம்’ என்று ஒப்புக்கொள்ளப்படாத உரை தடைச் சித்திரத்திற்கும் இப்படி ஒரு முடிச்சுப் போடலாமா? காரணம் இருக்கிறது. ஒப்பு நோக்கக்கூடிய பொதுத் தன்மை கள் இரண்டிலும் நிறைந்திருக்கின்றனவே! இணைப்புக் கருவியாகிய தங்கச் சங்கிலியின் அமைப்பில் மட்டிலும் வேறுபாடு தெரிகிறது. அன்றைக்குச் செய்யுள் தமிழில் ஆட்சி செய்தது. இன்றைக்கு உரைநடையின் ஆட்சி. காலம் மாறியதால் கருவிதான் மாறியதே தவிர, கற்பனே யில், மூலப் பொருளில், கட்டுக்கோப்பில், இலக்கண வரம் பில் என்னல் மாற்றம் காண முடியவில்லை.’ என்பது அவர் கள் அளிக்கும் விளக்கம். யானும் இக் கருத்துக்களைக் கொண்ட வகுப்பினரையே சார்ந்தவன். எனவே, தமிழ் மொழியில் முன்னதாகக் காணக் கிடைக்காத துறைகள் இவை என ஒதுக்கி வைக்க என் மனம் ஒருபோதும் இ1ை1 uiusTgl.
இனி, திரு. செல்வராசன் அவர்கள் 1879ம் ஆண்டு வெளியான வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’தான் தமிழ் மொழியில் முதலாவதாக வெளி வந்த நாவல் எனப் பொதுவாகக் குறிப்பிடுகின்ருர்கள். ஈழத்தின் முதலாவது தமிழ் நாவல் 1890ம் ஆண்டில் வெளி யிடப்பட்டதும், திரு. எஸ். இன்னுசித்தம்பி அவர்களால் எழுதப்பட்டதுமான “ஊசோன பாலந்தை கதை’ என் பதையும் எடுத்துக் காட்டுகின்றர்கள். “Orson and Valentine’ என்னும் போர்த்துககேய நெடுங்கதையே இதற்கு ஆதாரமாக அமைந்திருக்கலாம் எனவும் கருதுகின் ருர்கள். யான் அறிந்த வரையில் “ஊசோன் பாலந்தை கதை’க்கு முன்னதாக “காவலப்பன் கதை’ என்ற மொழி பெயர்ப்பு நாவல் யாழ்ப்பாணத்தில் 1856ம் ஆண்டில் வெளியிடப்பட்டிருக்கின்றது. அதனை “மூர்’ என்பார் இயற்றியுள்ளார். ‘Parley the Porter என்னும் நாவலின்"

Page 8
12
மொழிபெயர்ப்பு என டாக்டர் போப்பெர்னட் (1909)தாம் தொகுத்த “அச்சிட்ட நூல்கள்’ என்னும் நூலிற் காட்டி யுள்ளார். அறிஞர் ந. சி. கந்தையா பிள்ளை அவர்களும் தாம் தொகுத்த 'தமிழ் இலக்கிய அகராதி’ (1952) யிலும், *தமிழ்ப் புலவர் அகராதி’ (1960)-யிலும் இதனைக்குறிப்பிட் டிருக்கிரு?ர்கள். எனவே, தமிழில் முதலாவது றாவல் *தோன்றியது எனச் சுட்டிக் குறிப்போர், “காவலப்பன் கதை’யினை எவ்வகையாலும் தள்ளிவிட முடியாது. “காவலப்பன் கதை’யே தமிழகத்தில்-ஈழத்தில்-முதன் முத லாகத் தோன்றிய நாவல் எனக் கொள்ளுதல் வேண்டும். திரு. செல்வராசன் அவர்கள் இதனை ஆராய்ந்து அடுத்து வரும் பதிப்பில் தமது கருத்துக்களைத் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
சில்லையூர் செல்வராசன் அவர்கள் “சொந்தத் தொல்லை கள்’ எனக் கூறி எளிதாகத் தப்பிக்கொள்ளும் கருத்தை மாற்றிக் கொண்டு, இனி எழுதுகோலை எடுத்து எங்களுக் கெல்லாம் பயன்படத்தக்க நூல்களை ஆக்க்த் தருவார்கள் என நம்புகின்ருேம். இந் நூலில், திரு செல்வராசன் அவர் களின் முயற்சியை மட்டுமன்று, மதித்திறத்தினையும் காண் கின்ருேம். அவை கூடிக்கூடி வரும் நூல்களை விரைவிற் காண்போமாக.
மு. கணபதிப்பிள்ளை

பிள்ளையார் சுழி
தமிழ் எழுத்துலகில் 'பிள்ளையார் சுழி’ போட்டு இரு பத்திரண்டு ஆண்டுகளாகிவிட்டன.
பன்னிரண்டு வயதில் கவிதை முகிழ்த்தது. 1950-ம் ஆண்டு முடிய, நமக்குத் தொழில் எழுத்தா
பதினேழு ஆண்டுகள் இமைப் பொழுதும் சோராமல்? எழுதியாயிற்று. எழுத்தின் உருவக் கோலங்கள் எத்தனையோ அத்தனையிலும் வடித்த சிந்தனைகளும், உணர்வுகளும், மறு நாள் பாட்டி புளி சுற்றும் பத்திரிகையில், ஒரு நாள் அர சாங்கம்’ செலுத்திக் கழிந்து போயின.
நித்திய ஆட்சித் தகுதி பெற்றவை அவற்றுட் பல என் பது நம் நம்பிக்கை, மழைக்கால இருட்டிலும் கொப்பிழக்கப் பாயாத நிதான நுட்பம் வாய்ந்த தென்புலோலியூர், மு. கணபதிப்பிள்ளை ஐயாவுக்கும் அதே நம்பிக்கை, அவரு டைய "அருவினைக்கு ஆற்ருமல்’ நமது முதலாம் நூலாக உருப்பெற்று வருகிறது 'ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி’.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1962-ல் நடத்திய முதலாவது அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை யொட்டிப் பதிப்பித்த மலரில் வெளியானது இந் நெடும் கட்டுரை. மூன்ருண்டுகளுக்கு மேலாக முயன் றுழைத்து, அதுவரை யாரும் முழுமையாக முயலாதிருந்த ஒரு துறையில் கால் வைத்து, 'இருளில் கை வைத்துத் தேடிய பொருள் இது. கையிருப்புக் கணக்கெடுப்பே தவிர, திற ஞய்வன்று.
ஆயினும், கணிசமான கணக்கெடுப்பு. அதனல் மதிப்புப் பெற்றது. பின்ளிைல் பல திறனுய்வறிஞர்க்கும் கைம்முத லாயிற்று. இலங்கைப் பல்கலைக் சழகத்திலும் தமிழ்த் துறைப் பயில்வுக்குத் துணைப் பாடப் பொருளாயிற்று. ‘எழுத் து என்னும் தென்னகச் சஞ்சிகை இதனை மறுபிரசுரஞ் செய்தது. இதனை விரிவு செய்தும் தெளிவு செய்தும். (Community) “கம்யூனிட்டி’ என்னும் ஆய்வுக் கழக ஆங்கிலச் சஞ்சிகையில் எழுத நேர்ந்த போதும், பின்னர் அவ்வாங்கிலப் படைட்பு *சம்ஸ்க்ருதிய” என்னும் தலையான சிங்களக் கலா மஞ்சரியில் சிங்கள மொழிபெயர்ப்பாக இடம் பெற்ற போதும், ஈழத் தில் வாழும் பிற இனத்தார் மத்தியிலும் இலங்கைத் தமிழ்

Page 9
4
இலக்கியப் பாரம்பரியம் பற்றிய மதிப்பான மனப் பதிவு ஏற்பட்டது.
அந்தஅளவில் மனத் திருப்தி. நூலாக இது வெளி வருவ தால் தென்னகத்தும் இந்த மனப் பதிவு ஏற்படுமாயின் நம் மனத் திருப்தி மேலோங்கும்.
1962-ல் இது எழுதப்பட்ட பின்னர், தமிழ் நாவல் என்னும் ஏணியில் மேலும் பல தென்புகளில் ஏறிவிட்டார் கள் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள். அ. ந. கந்தசாமி செ. கணேசலிங்கன், நந்தி போன்ற எழுத்து வல்லுநர் களும் பென்டிக்ற் பாலன் போன்ற வளர் சுடர்களும் ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சியின் புதுப் பொலிவுக்குக் கொடி காட்டியிருக்கிருர்கள். இந்த ஐந்தாண்டு வளர்ச்சியையும் கவனத்திற்கு எடுக்காமல், 1962-ம் ஆண் டி ன் கணக் கெடுப்பை அட்சரம்கூட மாற்ருமல் அப்படியே இந் நூலாக வெளியிடுவதற்குச் சொந்தத் தொல்லைகள் சிலவே காரணம். புதிய வளர்ச்சியின் பின்னணியில் வைத்துப் பார்க்கை யில், இந் நூலில் இடம் பெறும் சில கருத்துக்கள் பற்றி இப் போது நமக்கே உடன்பாடில்லை, ஆயினும், எழுதிய காலம் காட்டிப் பதிப்பிக்கும் இந் நூல், எழுதுங்கால் இருந்த மன முடிவு, மாற்றங் காணக் கூடாதென்ற நேர்மை நியதி படி, மூலச் சிதைவின்றி முதற் கட்டுரையே இங்கு நூலா கிறது. அபிப்பிராயங்களைப்பொறுத்தளவில் இல்லாவிடினும் தகவல்களைப் பொறுத்தளவிலேனும், 1962-ம் ஆண்டுவரைக் கும், இந்நூல் நூறு சதவீதமும் சரி என்று கூடச் சொல்ல Glf.
நம்பால் மதிப்பும் நட்பும் உரிமையும் பா ரா ட் டி, புகழ்ந்தும் உறவாடியும் கண் டி க் தும் நம் தறி கெட்ட குணப் போக்கை ஒழுங்காகப் பாவோடச் செய்ய முயன்று வரும் ‘திரு. மு. க. அவர்களே இந் நூல் வெளிவர முழு முதற் காரணர். அவர்களே இந்நூலுக்கு முன்னுரையும் வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கும், இதனை வெளியிடுவதில் சளைப்பின்றி ஊக்கங் காட்டிய “அருள் நிலைய உரிமை யாளர்க்கும், “மெச்சிடுமா றச்சழகு மிளிர்வித்த வினைஞர்க் கும் மனம் கனிந்த நன்றி.
செல்வ மாளிகை,
g லை, h பண்ட்ஃபு சில்லையூர் செல்வராசன்
くーIIー67

பதிப்புரை
சில்2லயூர் செல்வராசன் அவர்கள் ஞான சம்பந்தரைப்போலச் சிறிய வயதிலேயே கவி பாடும் ஆற்றல் பெற்ற காளே!
கவிபாடும் ஆற்றலோடு கட்டுரை, கதை முதலியவற்றை எழுதும் பேராற்றலும் இவருக்கு உண்டு என்பதனை விளக்கும் பெருநூலாக இங் நூல் அமைந்துள்ளது.
இதனை வெளியிடும் கல்வாய்ப்பினை எங்க ளுக்கு நல்கிய செல்வக் கவிஞருக்கு எங்கள் நன்றி என்றும் உரியது.
நல்லவற்றைப் போற்றி வரவேற்கும் நற்றமிழ் மக்கள் இந்நூலையும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இதனை வெளியிடுகின்றேம்.
இங்ங்ணம்
அருள் நிலையத்தார்.

Page 10
காணிக்கை
*அட்டையின் காலும் அளவிட்ட அப்பன்’எனச் செட்டாகவே தன் சிறப்பைக் கணித் தோதிக் கட்டுமட்டாய் நான்சகல காரியமும் கையாண்டு
வெட்டொன்று துண்டிரண்டாய் வினைகள் இயற்றுதற்குப்
பாதை சமைத்தளித்த பாசக் கடலாம் என் தாதைக்கும் கண்டிப்புத் தனத்தின் பிற காலே பேதை மனத்துப் பிறக்கும் பெருங் கருணை யாதரவும் சேர்ந்துறைதல் ஆவசியம் என்றுணர்த்தி
என்னை மனத்தால் இளகியனு மாக்கிய என் அன்னைக்கும், கைமாறளிக்க வழியறியா ச் சின்னவன் என் செய்வேன்? என் திைையப் பனையாய்க்கொள் அன்னர்க் கிந்நூலே என் அன் பின் உளக் காணிக்கை
- சில்லையூர் செல்வராசன்.

ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
தோற்றுவாய்
ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றத்தையும், காளதுவரையுள்ள அதன் வளர்ச்சியையும், முழுமை யாக ஆராயும் தீவிரமான மு: ற்சி எதுவும், இது கால வரை கடைபெற்றதில்லை. இப்படிச் சொன்னுல் எவரா வது இலக்கிய சர்ச்சை' பண்ணுவதற்குப் பேணுவைத் தூக்கிக்கொண்டு வந்து விடுகிருர்களோ தெரிய வில்லை. ஆனலும் நானறிர் த வரையில் இப்படிக சொல் வது சரியென்றே நினைக்கிறேன்.
இலங்கைத் தமிழ் ஈாவல் களே கமது விமரிசகர்கள் ஒரேயடியாகப் புறக் கணித்து விட்டர்களா 51 ல் ாை? இல்லேயில்லை; நான் அப்படிச் சொல்லவரவில் ஆல.
கமது நாட்டில் பிரசுரமான பழைய நூல்களை மிகுந்த சிரமமெடுத்துத் தேடிச் சேகரித்து வருகிறவர் வித் துவான் எப். எக்ஸ் சீ. நடராசா அவர்கள். அந்த

Page 11
6
நூல்கள் பற்றிய குறிப்புகளை, தமக்கு வாய்க்கும் ஒரோர் சந்தர்ப்பங்களில் எழுதியும் வருகிறர். சில வருடங்களுக்கு முன் "ஈழமும் தமிழும்’ என்னும் கைநூலே அவர் வெளியிட்டார் இலங்கைத் தமிழ் நூல் களின் சிறிய காமாவலி அது. ஆரம்பகால ஈழத்துத் தமிழ் நாவல்கள் சிலவற்றின் பெயர் விபரங்களே அதில் கொடுத்திருக்கிறர்.
$ცხ. கனக - செந்திநாதன், சில வருடங் களின் முன், 'ஈழத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சி" என்னும் கட்டுரைத் தொடரை, தினகரனில் எழுதினர். காலேந்து இலங்கைத் தமிழ் நாவல்கள் பற்றி, அத் தொடர் கட்டுரையில் அங்குமிங்குமாகச் சில பங்தி களிற் குறிப்பிட்டிருக்கிறர். தவிரவும், "வீரசிங்கன் கதை", "விஜய சீலம்” ஆகிய இரண்டு காவல்கள் பற்றி, வீரகேசரியில் தனித் தனியாக இரண்டு அறி மூகக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறர். கடைசியாக வெளிவந்த சமீபத்திய “ ஈழகேசரி” மலரில் தான் எழுதிய ஒரு கட்டுரையில் 'உலகம் பலவிதக் கதைகள்? உட்பட நான்கு காவல்கள் பற்றிக் குறிப்பிட்டிருக் கிறர். "ஈழகேசரி'யில் தான் எழுதி வந்த "ஈழத்துப் பேணு மன்னர்கள்” என்னும் அறிமுகக் கட்டுரை வரிசை யில் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய சிற்சில ாகாவல்களின் பெயர்களைக் கொடுத் திருக்கிருர்,
பண்டிதர் கா. பொ. இரத்தினம் “இலங்கையில் இன்பத் தமிழ்” என்னும் நூலே எழுதினர். அதில் ஈழத் துத் தமிழ் நாவல் பற்றி ஒரு பந்த காணப்படுகிறது. *மோகனங்கி" என்ற ஒரே ஒரு நாவலைக் குறிப்பிடு கிறர். அந்த நாவலின் ஆசிரியரோ திரிகோணம8ல யைச் சேர்ந்த சரவணமுத்துப் பிள்ளை. பண்டிதரோ,

7
*யாழ்ப்பாணத்தறிஞா சரவண பிள்ளை' என்று அவர் பெயரைக் குறித்ததோடு, விஷயத்தை முடித்து
விட்டார். சமீபத்தில் தாம் வெளியிட்ட "நூற்றண்டு களில் தமிழ்" என்னும் நூலில், இந்தப் பெயர்த்த வறைத் திருத்தியதற்குமேல், வேறு காவல் நூல்களைக் குறிப்பிடவுமில்லை அவர்.
"தமிழ் இலக்கிய வரலாறு' என்பது இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் வி. செல்வ காயகம் அவர்கள் எழுதிய நூல். "ராஜமையர் எழுதிய கமலாம்பாள் சரித்திர மும், திரிகோணமலைச் சரவணப் பிள்ளை எழுதிய மோகனங்கி என்பதும் ஆங்கிலத்தி லுள்ள உலகியற் கதைகளாகிய ஈாவல்களைத் தழுவித் தமிழிலெழுதப்பட்ட நூல்களாகும்” என்று, இக்த நூலில் ஒரு வசனம் எழுதியிருக்கிறர். இவ்வளவோடு &s.
சில வருடங்களின் முன், வீரகேசரி’யில் "தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் கட்டுரைத் தொடரை எழுதிய க. கைலாசபதி, இடைக் காடரின் காவல்களை மாத்திரம் பிரஸ்தாபித்திருக் 4მცუფff.
பழம் பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களின் ாகாவல் முயற்சிகள் பற்றி, கலாநிதி சு. வித்தியானக் தன், ‘தமிழ்த்தென்றல்' என்னும் தமது நூலில் குறிப் பிட்டிருப்பதை இங்கு நினைவூட்டிக் கொள்ளலாம்.
'ஈழகேசரி’யில் "இளவரசு" என்பவர்(சி. செல்லத் துரை) வெளியிட்ட 'தமிழ் வளர்க்கும் செல்வர்கள்" என்னும் எழுத்தாளர் அறிமுகக் கட்டுரை வரிசையில், இரண்டொரு காவல்களின் பெயர்கள் வருவது ஞாப கத்துக்குரியது.

Page 12
8
'வளருங் தமிழ்" என்னும் தமது நூலில் "மோகனங்கி” என்னும் ஈழத்து நாவல்பற்றியும் குறிப் பிட்ட சோம. லெ, செட்டியார் அவர்கள், "வீரசிங்கன்” என்னும் காவலையும் பிரஸ்தாபித்திருப்பதை நன்றி யுடன் குறிப்பிடுவது பொருந்தும்.
கொழும்பில் இயங்கி வந்த ஒரு எழுத்தாளர் சங்கம் கடத்திய கருத்தரங்கம் ஒன்றில், ஈழத்துத் தமிழ் காவல்கள் பற்றிய ஒரு தொகுப்புரையை, இக் கட்டுரையாசிரியர் நிகழ்த்தியிருக்கிறர். தினகரனில் தான் எழுதி வந்த "காரசாரம்' என்ற பத்தியில், இலங் கைத் தமிழ் நாவல்களைப்பற்றி ஒரு தடவை எழுதி யிருக்கிறர்.
ஈழத்துத் தமிழ் நாவல் பற்றிய பிரஸ்தாபம், இது காலவரை, இவ்வளவே!
மேற்குறித்த எவர் மீதும் குறைகாணும் கோக்கம் எனக்கில்லை. உண்மையில் இந்த அளவிலாவது இத் துறையில் அவர்கள் செய்திருக்கும் சேவை, பாராட்ட வேண்டிய கல்ல சேவையே. ஆனலும் என்னுடைய இந்த நூலின் தன்மை பற்றி எவராவது குறை கண்டால், இவ்வாறு நூல் அமைவதற்குக் காரணம் யாது என்பதைத் தற்பாது காப்பாகச் சொல்லிக் கொள் ளவே முன் சொன்ன தகவல்களைக் குறிப்பிடுகிறேன்.
மேற்குறிப்பிட்டவற்றிலிருந்து சில உண்மைகள் பெறப்படுகின்றன. ஈழத்துத் தமிழ் நாவலின் தோற் றத்தையும் வளர்ச்சியையும் தனித்துறையாக எடுத்துக் கொண்டு, அதை முழுமையாக ஆராயும் தீவிரமான முயற்சியை இற்றைவரை எவரும் மேற்கொள்ளவில்2ல என்பது சரி. இப்பொழுது அந்த முயற்சியை மேற் கொள்ள விரும்புகிற ஒருவருக்குக்கூட, இத்துறையில்

9
கைமுதலாக இருப்பது, முன் குறித்தோரின் மேலாழ்ந்த வாரியான குறிப்புகள் மாத்திரமே.
‘ஈழத்துத் தமிழ் காவல்’ போன்ற ஒரு துறை பற்றி முழுமையாக ஆராய்வதானல், விரிவான் பல வேறு துறைகளையும் அதனேடு ஒப்புகோக்கி ஆராயவேண்டி யிருக்கும். அடிப்படையில் சில வினுக்களைப்போட்டுக் கொண்டு அவற்றுக்கு விடை கண்டு ஆராய வேண்டி யிருக்கும். ஈழத்தில் தமிழ் காவல் பிறந்த போதிருந்த சமுக, கலாசார, அரசியல், பொருனாதார சூழல்களை முதலில் ஆராய்ந்து, காவலின் தோற்றத்துக்கு அடி கோலிய அம்சங்கள் யாவையென்று நிதானிக்கவேண்டி யிருக்கும். இந்த அம்சங்கள், இலங்கையின் சிங்கள இலக்கிய வட்டாரத்துக்கும் பொதுவாக அமையுமான தால், இவை சம காலத்துச் சிங்கள இலக்கியத்தை எவ்வாறு பாதித்தன என ஆராய்க் து, சிங்கள காவல் களின் தன்மையோடும் ஈழத்துத் தமிழ் காவல்களை ஒப்பு கோக்கிப் பார்க்க வேண்டியிருக்கும். தென்னிந்தி யாவில் தமிழ் நாவல்கள் இதே காலத்தில் தோன்றி வளர்ந்த தோரணையைக் கவனத்திற்கெடுத்துக்கொண்டு அவற்றுக்கும் இலங்கைத் தமிழ் நாவல்களுக்கும் உள்ள ஒப்புமை வேற்றுமைகளையும் பகுத்துப் பார்க்க வேண்டியிருக்கும். ஈழத்துத் தமிழ் காவல் தோன்றிய நாள் தொட்டு, இற்றை வரை அது அடைந்துள்ள மாற்றம், வளர்ச்சி முதலியவற்றை, அரசியல், சமுக, கலாசார, பொருளாதார காரண காரியத் தொடர்பம் சங்களை முன் வைத்து, விமரிசிக்க வேண்டியிருக்கும்.
இத் துணை விரிவான காரியத்தை ஒரு சிறு நூலிற் செய்தல் சாலாது என்பது ஒரு புறமிருக்க * மற்றெரு பிரச்சினை முதலிற் குறுக்கிடுகிறது.

Page 13
O
ஒரு நூறு வருடங்களுக்கு, அல்லது குறைந்த பட்சம் ஐம்பது வருஷங்களுக்காவது, கவிகை, கதை, காடகம், நாவல் போன்ற இலக்கியத் துறைகளில் ஈழத்தில் சிருஷ்டிக்கப்பட்ட அத்தனை படைப்புகளி னதும் சரியான, பூரணமான, தொடர்பான, காலக்கிரம மான கணக்கெடுப்பு ஈம் வசமில்லையே! கையிருப்புக் கணக்கே தெரியாமல், இலக்கியத் துறைகளின் பாரம் பரியத்தையும், மாற்றத்தையும், வளர்ச்சியையும், அவற்றின் மீது புற அம்சங்கள் பிரயோகித்த தாக்கத் தையும் செல்வாக்கையும், ஆராய முனைவது, காற்றிலே கை வீசுகிற கதையாகவே முடியும். கமது விமரிசகர் களின் பார்வையில், ஆய்வு இல்லாமல் வெறும் அலசலே காணப்படுவதற்குக் காரணம், இதுதான். தற்போதைக்கு, ஈழத்து இலக்கியத் துறைகளின் பாரம் பரியம் பற்றி ஆழமாக ஆராய முடியாமல் அல்லற் பட்டும், செய்கிற அலசற் பார்வையைக் கூட, இடை விட்டு, கெந்தற் பாய்ச்சலாகச் செய்தும், "கம் விமரிச கர்கள் வெறுங்கை முழம்போட்டுக்கொண்டிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், கம்முடைய கையிருப்புக் கணக்கே கமக்குத் தெரியாமலிருப்பதுதான்.
இந்த நிலையில், ஈழத்துத் தமிழ் காவல்பற்றி முழு மையாக ஆராய்வதற்கு முன், காவல்களைப் பொறுத்த வரையில் நம்முடைய கையிருப்புக் கணக்கென்ன என்று தெரிந்து கொள்வது, அத்தியாவசியமாகிறது. இந்த நூல், விஸ்தாரமான விமரிசன ச் சார்பில்லா மல், ஒரு பட்டியற் றெகுப்பைப் போலத் தோன்றக் கூடுமானுல், அதற்குக் காரணமும் இதுவே.
ஏறத்தாழ இந்த எழுபத்தைந்து வருடங்களில் இலங்கையில் வெளிவந்த காவல்கள் அனந்தம்.

நூலுருவில் வெளிவந்தவை அகே கமல்ல. பெரும் பாலானவை பத்திரிகைகளில் தொடராகப் பிரசுர மானவுை. முதனூல்களாக வெளிவந்தவை டோக, தழுவல் காவல்களாகவும், மொழி பெயர்ப்பு நாவல் களாகவும், சில வெளியாகியுள்ளன.
மூன்று வருடங்களுக்கு மேலாக முழுமூச்சாகச் செய்த முயற்சியில், அகே கமாக இவைய?னத்தின் விபரங்களையும், பெரும்பாலான வற்றின் பிரதிகளையும் தேடிச் சேகரிக்க முடிந்திருக்கிறதென்று கம்புகிறேன். விடுபட்டுப் போனவை சொற்பமாகவேயிருக்குமென்று நினைக்கிறேன். இந்த முயற்சியில் எனக்கு உறுது2ண யாக இருக்த பலரில் பிரதானமானவர்கள் இருவர். தாம் அரிதின் முயன்று தேடிப் பெற்ற பழைய காவல் கள் சிலவற்றைத் தந்து தவியும், ஆரம்ப கால காவல் கள் பலவற்றையும், அவை பற்றிய தகவல்களையும், கானே சேகரித்துக் கொள்ளத் தகுந்த ஆலோசனைகள் கூறியும், பெருந்துணை புரிக் தார், வித்துவான் எப். எக்ஸ். சீ. நடராசா, பிற்கால காவல்கள் பலவற் றைத் தானே சேகரித்துத் தந்ததோடு, இத் துறையிற் சலியாது கான் ஈடுபடுமாறு தூண்டுகோலாகவும் ஊன்றுகோலாகவும் துணை நின்றர் கண்பர் பெ. ராம காதன். இவர்களுக்கு என் கன்றி என்றும் உரியது.
ஈழத்துத் தமிழ் காவல்பற்றி விரிவாகவும் முழுமை யாகவும் ஆராய்வதற்கு முன்னுேடியான ஒரு “கையி ருப்பு நூலாகவே இதை எழுதுகிறேன். நூலுருவி லும் பத்திரிகைகளிலும் வெளியான ஈழத்துத் தமிழ் ாகாவல்களையும் அவற்றின் ஆசிரியர்களையும் பற்றிய தகவல்களும் என் அபிப்பிராயக் குறிப்புகளும் இதில் உள்ளன. ஒரு தொகுப்புரை போலமையும் இந்தக்

Page 14
2
குறிப்புகள், இந்தத் துறை பற்றிப் பின்னர் விஸ்தார மாக ஆராய முனையும் விமரிசன முறையான ஒரு தனி நூலுக்கோ, அல்லது கட்டுரைத் தொடருக்கோ, தாபர மாக அமையத்தக்கவாறிருந்தால், தற்போதைக்குப் போதுமானதென்று கருதுகிறேன்.
நாவலின் தோற்றத்தில் ஈழத்தின் இடம்
ஈழத்துத் தமிழ் ஈரவலின் தோற்றமும் நாள து வரையுள்ள அதன் வளர்ச்சியும், ஏறத்தாழ எழுபத் தைக்து வருட காலத்தைத தழுவி நிற்பன. 1879-ம் ஆண்டு வெளியான வேதகாயகம் பிள்ளேயின் “பிரதாப முதலியார் சரித்திரம்'தான், தமிழ்மொழியில் முதலாவ தாக வெளிவந்த நாவல் என்று பொதுவாகச் சொல்லிக் கொள்ளப்பட்ட போதிலும், அதன் பிறகு 1893ம் வரு ஷத்தில் எழுதப்பட்ட ராஜமையரின் “கலாம்பாள் சரித்திரம்"தான் முதலாவது தமிழ் நாவலென் று சொல் வாரும் இருக்கிறர்கள். 'பிரதாப முதலியார் சரித்தி ரத்தை” ஒரு காவல் என்று சொல்ல முடியாதென்பதும், ாகாவல் என்னும் பிரக்ஞையோடு, காவலுக்கரிய இலட்ச ணங்களோடு, அது எழுதப்படவில்லை என்பதும், இவர் களின் வாதம். இந்தப் பிரச் சினேக்குள் சிக்கிக் கொள் ளாமல், “பிரதாப முதலியார் சரித்திரம்” முதலாவது தமிழ் காவல் என்று காம் கருதினல், அது வெளிவந்த பன்னிரண்டு வருஷங்களில் ஈழத்தின் முதலாவது தமிழ் நாவல் வெளி வந்து, தமிழ் மொழியில் வெளியான இரண்டாவது காவல் என்ற அந்தஸ்தைப் பெற்று விட்டது என்று கொள்ளலாம். “கமலாம்பாள் சரித் திரம்' தான் முதலாவது தமிழ் காவல் என்று நாம் நினைத்தால், அதற்கும் முன்பே வெளிவந்த ஈழத்தின்

13
முதல் நாவலே, தமிழிலேயே முதலாவதாக வெளியான காவல் என்று சொற்ப கர்வத்தோடு சொல்லி, காம் பெருமைப்பட்டும் கொள்ளலாம்.
முதல் நாவல் எது?
நாம் பெருமை கொள்ளும்படியான முதலாவது ஈழத்துத் தமிழ் காவல், 1891-ம் ஆண்டு ஜூலை மாதத் தில் பிரசுரமான "ஊசோன் பாலங்தை கதை” என்னும் காவலாகும். இந்த நாவ8ல எழுதியவர் திருகோண மலையைச் சேர்ந்த எஸ். இன்னுசித்தம்பி என்பவர்.
இந்த நாவலே முதலில் பதிப்பித்தவர் எஸ். தம்பி முத்துப்பிள்ளை என்பவர். (இம கவர்னன்', 'தாமோ தரன்", "இரத்தின சிங்கம்" "சந்திரகாசன் கதை" என்னும் பிற்கால காவல் க?ளப் பதிப்பித்த வரும் இவரே ) முதற்பதிப்பில் 'ஊசோன் பாலங்தை கதை’ என்னும் காவலின் ஆயிரத்து ஐந்நூறு பிரதிகள் பிரசுரமாயின. 1X8கிறவுண் அளவில், சிறிய எழுத்தில் தொண்ணுாற் றறு பக்கங்கள் வரும் வண்ணம் அச்சிடப்பட்ட இக் நூல் ஐம்பது சத வி2லக்கு வெளியாயிற்று. பிற்பாடு 1924-ம் ஆண்டில் இந்த நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. இப்பதிப்பு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அச்சுவேலி ஞானப் பிரகாச அச்சியந்திர சாலே யில் அச்சாயிற்று. வண. சா. ஞானப்பிரகாச சுவாமி இந்த இரண்டாம் பதிப்பைப் பரிசோதித்து வெளி யிட்டார்.
'தமிழகத்திலும் சரி, ஈழ காட்டிலுஞ் சரி, நாவல் எனப்படும் பெருங்கதையினே முதலில் எழுதியவர்கள் கிறிஸ்து சமயத்தைச் சார்ந்த தமிழர்களே” என்று சுவாமி ஞானப்பிரகாசர் ஒரு சமயம் கூறியமையும்

Page 15
4.
இங்கு நினைவுக்கு வருகிறது. முதலாவது தமிழ் நாவலெனப் பொது கோக்கில் கொள்ளப்படும் 'பிர தாப முதலியார் சரித்திரத்தை" எழுதிய வேதாகாயகம் பிள்ளையைப் போலவே, ஈழத்தின் முதலாவது தமிழ் rrп so 2%) எழுதிய இன்னு சித் தம்பியும் கிறிஸ்து சமயத்தைச் சேர்ந்தவர். அக்காளில் பிரசித்தி பெற்றி ருந்த அந்தோனிக்குட்டி அண்ணுவியாரின் 'கிறிஸ்து சமய கீர்த்தனைகள்’ என்ற நூ2ல, தமது காவல் வெளி யான அதே 1891-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் பதிப் பித்து வெளியிட்ட இன்னு சித் தம்பி, தமது சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவரென்பதை, "ஊசோன் பாலங்தை கதை’யும் புலப்படுத்துகிறது.
* ஊசோன் பாலந்தை கதை” கிறிஸ்தவ பின்னணி கொண்ட கதை. கதை நிகழ் களமும் இலங்கையல்ல.
*உலகின் கண்னே உயர்வுற விளங்கும் அலுமான்ய வென்னும் பொலிவுறு தேசத்தில் அரசர் குலத்தில் அதிக சங்கை போர்ந்த பெற் றேரால் அலெக்சாந்தர் என்பவர் பிறந்து, சிறு வயதில் அவருடைய அன்னை தந்தை மரண மடைந்த பின் பல சிற்றரசர்களைத் தமக்குக் கீழாகக் கொண்ட பெரிய அரசர் என்ற கருத் துள்ள எம்பரதோர் என்னும் உத்தியோகம் பெற்று அவ்வூரை அரசாட்சி செய்து வந்தார்.' கதை இவ்வாறு ஆரம்பமாகிறது. அலெக்சாந்தர் எம்பரதோருக்கும் தொன் வெலிச் சார்ந்தென்னும் ராஜ குமாரிக்கும் பிறந்த ஊசோன், பாலக்தை ஆகிய சகோதரர்களைப் பற்றியது கதை. கதையை விபரிக்க இது சமயமல்ல. ஆனலும், “சக்தர்ப்ப பேதங்களால்

15
வனத்தில் பிறந்து பெற்றேரைப் பிரிந்து தனித்துப் போன இச் சகோதரர்களில் ஊசோன் ஒரு கரடியால் வளர்க்கப்பட்டு பயங்கரக் காட்டுமனிதனுகி, மக்க2ளத் தொல்2லப்படுத்துவதும்; பாலங்தை வேற்று அரச மாளிகையில் வளர்ந்து தளகர்த்தணுகி, தன் சகோதர ஃனயே மடக்கி வெல்வதும்; பின்னர் பல சம்பவh கள் நிகழ்வதைத் தொடர்ந்து இவர்கள் மணஞ் செய்வதும்; இறுதியில் உள சோன் அறியாமல் தன் தந்தையையே போரில் கொல்வதும்; உண்மையறிந்த பின் அதற்காக வருந்தித் தவமிருந்து மரித்தலும்; இக் கதையில் அடங்கும்” என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
சற்றே அன்னியமான கதை போலிருக்கிறதே என்னும் உணர்வு ஏற்படுகிறதல்லவா? இன்னசித் தம்பி, தமது கதை மொழி பெயர்ப்பென்றே தழுவ லென்றே நூலில் எங்கேனும் குறிப்பிடவில்லை யென்ற போதிலும், இக்கதை பிற மொழி நூலொன்றை ஆதார மாகக் கொண்டே எழுந்திருக்க வேண்டுமென் பதில் ஐயமில்லை. ஆராய்ந்தளவில் "ஓர்சன் அ ன் ட் os av 6ởT GOD Gð7 ” (Orson and Valentine) 57 Gð7 gÖJD G3 J Tất gö துக்கேய கெடுங்கதையை ஆதாரமாக வைத்து இந்த காவல் எழுதப்பட்டிருக்கலாமென்று தோன்றுகிறது. இருந்த போதிலும், கதாபாத்திரங்களின் நடவடிக்கை களிலும் கதையின் நிகழ்ச்சியோட்டங்களிலும், செறி வான முறையில் தமிழ்த் தன்மை'யைப் பெய்து, பெரும்பாலும் தமிழ் நாவலென்று தோற்றும் படியாக இந்நூலை ஆக்கியிருக்கிறர் இன்னு சித்தம் பி. காவ லென்ற வகையில், "ஒர் அற்புதமான காவல் என்னும் கற்பணு கதை' என்ற அட்டைக் குறிப்டைத் தாங்கி வெளியாகியுள்ள இந்நூலின் தாரதம்மியங்களைக் காத்திரமான முறையில் ஆராய்வதென்றல், அது:

Page 16
6
தனியான ஒரு கட்டுரையில் செய்ய வேண்டிய காரிய மாயிருக்கும். தற்போதைக்கு, பொது நோக்கில், இது ஈழத்து முதலாவது தமிழ் நாவல் என்று குறித்துக்கொண்டு, பலரும் முதலாவது இலங்கைத் தமிழ் காவல் என்று குறிப்பிடும் மோகனங்கி’ என் னும் நூலுககு வருவோம்.
யாழ்ப்பாணம் பின்தங்கியதேன்?
1875-ம் ஆண்டில் வெளியானது "மோகனங்கி" என்னும் காவல். இந்த காவ8ல எழுதியவரும் திரு கோணமலை பைச் சேர்ந்தவரே. த. சரவணமுத்தப் பிள்ளை என்பவரே இவர். ‘தத்தை விடுதூது", “முத்துக்குமாரசாமி இரட்டை மணி மா?ல" போன்ற வேறு பல நூல்களையும் இவர் எழுதியிருக்கிறர்.
இந் நிuாவில் அச் சி ட் டு ப் பிரசுரிக்கப்பட்ட "மோகனுங்கி” என்ற இந்த இரண்டாவது ஈழத்துத் தமிழ் நாவல், ஒரளவுக்குச் சரித்திர சம்பந்தமுடைய கதை. செ" க்க காதன், மோகனங்கி ஆகிய இரு காதலர்களுமே கதையின் நாயகனும் நாயகியும், இவர்களின் காதல் வாழ்வையும் குடும்ப வாழ்க்கையை யும் சுற்றி வரும் இந்தக் கதையில் பாதிக் குப் பாதி இடம் பெற்றிருக்கும் அழகிய கவிதைகள், காவல் என்ற உருவ இலட்சணத்தைக் குறைத் த போதிலும், சரவணமுத்துப்பிள்ளையின் கவித்திறனே அவை கன்கு வெளிப்படுத்துகின்றன. நூலாசிரியர் தன் காவலில் எத்தகைய சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி யிருக்கிற ரென்பதற்கு இந்நூலில் வரும் கவிதைகளில் ஒனறை ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம். விஜய

17
ராகவ நாயக்கர் தோத்திரமாக அமைகிறது இக் கவிதை:-
நீதி தவறத் தருமம் நிலை குலையச் சாதி, குலம், பிறப்பென் றெண்ணித் தடுமாறும் பேதையேம் எம்பால் இரங்குதியாற் பேரறிவின் சோதியே! நின்னைத் தொழுதேங் தொழுதேமால்
“மோகனுங்கி” சில வருட காலத்தில் கணிசமான செல்வாக்கைப் பெற்றது. இதன் காரணமாக, இந்த காவலின் சுருக்கம், பள்ளிக் கூடங்களில் U fi ... நூலாகப் படிப்பதற்காக, 1919-ம் ஆண்டில் நூலாக வெளியிடப்பட்டது. இந்தச் சுருக்கப் பதிப்பை, சென்னை எம். ஆதி அன்ட் கம்பனியார் பிரசுரித்தனர். ஆணுல், "மோகனங்கி” என்றிருக்த நாவலின பெயர் இந்தச் சுருக்கப் பதிப்பில் 'சொக்ககாத நாயக்கர்99 என்று மாற்றப்பட்டது.
இந்தப் பெயர் மாற்றத்துக்குக் காரணராக இருக்த வர், சரவணமுத்துப்பிள்ளையின் ச கோ தர ரா ன திருகோணமலை த. கனகசுந்தரம்பிள்ளை என்று தெரிகிறது. கனகசுந்தரம் பிள்ளை பிறமொழிப் புலமையும் தமிழறிவும் மிகுந்தவர். பி. ஏ. பட்டதாரி. தமிழ் நாடு சென்று சென்னை பச்சையப்பன் கல்லூரி யில் தமிழ்ப் பேராசிரியராகவும், சென்னைப் பல்கஜலக் கழகத்தில் தலைவராகவும், Lதுரைத் தமிழ்ச் சங்கத் தில் சோதன சிரியராகவும் திகழ்ந்தவர். கம்பராமா யணம் பாலகாண்டத்துக்கு அரும்பதவுரை செய்த தோடு, குமாரசாமிப் புலவருடன் கூடி கம்பியகப் பொருளுக்கு உரை எழுதி வெளியிட்டவர். இலக்கியத் தில் நிரம்பிய ஈடுபாடு கொண்ட கனகசுந்தரம் பிள் 2ள தமது சகோதரரின் இலக்கிய முயற்சிகளில் மிகுந்த

Page 17
مi'
செல்வாக்கைப் பிரயோகித்திருக்கிற ரென்பது 'மோக னங்கி" நூலிலும் வெளிப்படை. இந்நூலை ஆராய்ந்து படித்துவிட்டு, கனகசுக்தரம் பிள்ளை தெரிவித்த அபிப் பிராயத்திற் கிணங்கவே, சுருக்கப் பதிப்பில் நூலின் பெயர் “சொக்ககாத நாயக்கர்” என்று மாற்றப்பட்ட தாகத் தெரிகிறது.
ஆறுமுக காவலரை ஆதீன புருஷராகக் கொண்டு அக்காலத்து இலக்கிய விழிப்புணர்ச்சிக்குக் கேந்திர ஸ்தானமாக விளங்கிய யாழ்ப்பாணத்தில், ஈழத்தின் முதலாவது தமிழ் காவல் பிறப்பதற்குரிய சூழல் உருவாகாமற் போனதற்குக் காரணம் என்ன என் பதும், முதலிரண்டு இலங்கைத் தமிழ் காவல்களும் திருகோணமலையில் தோற்றியதற்கான & Try SOOTid என்ன என்பதும், சமூக, சரித்திர, இலக்கிய ரீதியாக ஆராயப்படத்தக்க விஷயங்கள். தற் போதைக்கு அங் த விசாரத்தை ஒத்திவைத்து விட்டு, அடுத்த ஈகாவல்கள் பற்றிய விபரங்களுக்கு வரு வோம். مر
கால நிர்ணயப் பிரச்சினைகள்
“மோகனுங்கி'க்குப் பிறகு, பத்தொன்பதாம் நூற்றண்டின் முடிவு வரையில் வேறு தமிழ் காவ லெதுவும் இலங்கையில் வெளி வந்ததாகத் தெரிய வில்லை. இருபதாம் நூற்றண்டின் முதற் பத்து வருடங்களில் வெளியான சில தமிழ் காவல்களை வைத்துக்கொண்டு. அவற்றிற் காலத்தால் முந்தியவை எவை, பிந்தியவை எவை என்று நிர்ணயம் செய்து கொள்வதில் சங்கடமிருக்கிறது.

9
உதாரணமாக, ஈழத்தின் இரண்டாவது தமிழ் காவலும் முதலாவது சரித்திர காவலும் என்று திரு. கனக-செந்திகா தன் அபிப்பிராயப்படுகிற “வீர சிங்கன்" கதையை எடுத்துக் கொள்ளலாம். திரு. சி. வை. சின்னப்பபிள்ளை எழுதிய ‘வீரசிங்கன் அல்லது சன்மார்க்க ஜயம்' என்னும் காவல், 1905-ம் வருடம் பிரசுரமானது. ஆனல், அதற்கு முந்திய ஐந்து வருட காலத்தில் குறைந்தபட்சம் இரண்டு மூன்று காவல்களாவது வெளியாகியிருக்கலாமென்று கம்பத தூண்டும் தகவல்கள் கிடைக்கின்றன. இந்தத் தகவல்கள் சரியா தப்பா என்று நிச்சயித்துக் கொள்ளும் வரை, 'வீரசிங்கன்" கதையை உறுதியாகக் கால நிர்ணயம் செய்துகொள்வது இலேசாக இருக் காது.
மட்டக்களப்பின் புகழ்போங் த தமிழறிஞராகத் திகழ்ந்து பல நூல்களியற்றிய சுவாமி சரவணமுத்து, *கலாமதி” என்னுமொரு காவலையும் எழுதியதாகக் கருதப்படுகிறது. மட்டக்களப்பின் முதல் காவலான இக் காவல், 1904-ம் ஆண்டில் வெளியானதாக, சில இலக்கியாபிமானிகள் கருதுகிறர்கள். கம்பகமான, ஆதாரபூர்வமான தகவலை இது விஷயமாகத் திரட்டி யாக வேண்டும். 'ஊசோன் பாலங்தை கதை"யைப் பதிப்பித்த தம்பிமுத்துப்பிள்ளை பின்னர் பதிப்பித்த "இரத்தினசிங்கம்" 'சக்திரகாசன் கதை” ஆகிய காவல்களும் இருபதாம் நூற்றண்டின் முதற் பத்து வருடம் என்ற காலப் பிரிவிற்கே உரியவை. ஆனல் அச்சொட்டாகப் t fJør J வருடங்களை அ டி த் து ச் சொல்ல மு டி ய வி ல் அல. தம்பி முத்துப்பிள்ளை, சொந்தத்தில் தானும் இரண்டு காவல் கள் எழுதியிருக்கிறர். இவற்றில் முக்தியது ‘அழக

Page 18
20
வல்லி”. பிந்தியது "சுந்தரன் செய்த தந்திரம்". முந்தியது 1904-ம் ஆண்டிலும் பிந்தியது அதற்கடுத்த ஆண்டிலும் பிரசுரமாகியிருக்க வேண்டுமென்று நம்ப ஏதுக்கள் உள்ளன. இவை தவிர, “பரிமளாராகவன்' என்னும் ஒரு காவலும் இதே பத்து வருட காலப்பிரிவில் வெளிப்போர்கததாகத் தெரிகிறது. எனவே கைவசமுள்ள இந்தத் தகவல்களையும், தேடிப் பெறும் ஆதாரங்களையும் வைத்து விரிவாக ஆராய்ந்த பிறகே, "வீரசிங்கன்" கதையின் கால நிர்ணயத்தை, உறுதியானதென்று ஒப்புக்கொள்ளலாம்.
நாவலின் வளர்ச்சியை நாடிய முதல்வர்
ஈழத்துத் தமிழ் காவலின் ஆரம்பகாலச் சரித்திரத் தில் தம்பிமுத்துப்பிள்ளை முக்கியமான இடத்தைப் பெறுகிறரென்பதில் ஐயமில்லை. ஈழத்தின் முதலா வது காவலையும், மற்றும் கான்கு காவல்களையும் பதிப் பித்திருக்கிறர். தானும் இரண்டு காவல்களை எழுதி யிருக்கிறர் காவல் துறையில் விசேஷ கவனத்தை அந்தச் சமயத்தில் செலுத்திய முதல்வர் இவரென்பது வெளிப்படை. இவரெழுதிய நாவல்கள் பெரும்பாலும் நாடக பாணியிலமைந்தவை என்று கருதப்படுகிறது. ாகாடகவியல்புகளும் அம்சங்களும் இவரின் காவல் களில் அமைந்தமைக்கு, இவர் ஒரு காடக ஆசிரிய ரென்ற வகையில் அதிக திறமைபெற்றிருந்தது காரண மாக இருக்கலாம். பிரக் கியாதி பெற்ற பழைய சங்கிலி நாடகமும், எஸ் தாக்கியார் நாடகம் போன்ற வேறு சில ாகாடகங்களும் இவரால் யாக்கப்பட்டவையே.
ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றின் அடுத்த அத் தியாயம் 1916-ம் வருடத்தில் வருகிறது."வீரசிங்கன்”*

2f
கதையை எழுதிய சி. வை. சின்னப்பபிள்ளை, அந்த வருடத்தில்"விஜயசீலம்" என்னும் காவலை எழுதி வெளி யிட்டார். முதன் முதலாக அதிக காவல்களை எழுதி, ாகாவல்களை அந்தக் காலத்தில் விரும்பிப் படிக்கும் ஒரு இலக்கிய உருவமாக ஆக்கித் தந்தவர் இவர் என்று சொல்வது தவறன்று. "உதிரபாசம்", "இரத்தின பவானி’ ஆகிய மற்றிரண்டு காவல்களையும் இவர் எழுதினர். அந்தக் காலத்தில் புகழ்பெற்ற தமிழறிஞ ராகவும் பதிப்பாசிரியராகவும் திகழ்ந்த சி.வை. தாமோ தரம்பிள்ளை, இவரின் தமையனுரென்பதைத் தெரிக் து கொண்டால், இவரது காவல்களில், கதா பாத்திரங் களின் குஞகுண விசாரத்தைவிட, செந்தமிழ் கடை அதிக வலிவு பெற்று விளங்குவதற்கான ஒரு காரண மும், புலப்படலாம். 1910-ம் ஆண்டுக்கும் 1929-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்து வருட காலத்தில் ஈழத்து நாவல் துறையில் தனிக்காட்டு ராஜாவாக இவர் திகழ்ந்தாரென்றும் குறிப்பிடலாம்.
நாவல் எழுதிய முதலாவது பெண்மணி
1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்தில் குறைந்த பட்சம் ஒரு டசின் காவல்கள் வெளிவக் திருக்கின்றன. தம்பிமுத்துப்பிள்ளை பதிப் பித்த மற்ருெரு காவலான “மேகவர்ணன்" வாசகர்க் குக் கிடைத்தது இந்தக் காலப் பிரிவில்தான். 1922-ம் ஆண்டில் பிரசுரமான இந்த நாவலின் ஆசிரியர் திரு. வே. வ. சிவப்பிரகாசம்.
இலங்கையின் முதலாவது தமிழ் காவலாசிரியை தோன்றியதும் 1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட இந்தக் காலப் பிரிவில்தான். செ. செல்லம்மாள்
FF一2

Page 19
22
என்னும் அம்மையார் எழுதிய "இராசதுரை” என்னும் காவல் 1924-ம் வருடத்தில் பிரசுரமாயிற்று. துணிக் தெழுதிய முதல் நாவல சிரியை என்ற வகையிலும் தொகையில் இல்லாவிட்டாலும் கதைத தன்மையில் பொதுமை காண முடியுமென்பதாலும், தமிழ் காட்டுக் கோதைகாயகி அம்மாளுடன் இந்த அம்மையாரை ஒப் பிடுவதைத் தவிர, ‘இராசதுரை”யைப் பற்றி அதிக மாக எதுவும் சொல்வதற்கில்லை.
அந்தக் காலத்து வரதராசனுர்
1925-ம் ஆண்டில் வெளிவந்த இடைக்காடரின் காவல்களோடு, ஈழத் துகாவல் களில் அதுவரை இருந்து வந்த 'முன்னுெரு காலத்திலே, நாற்புறமும் கடலாற் தழப்பட்டு, வளைந்தோடும் நதிகளும், வற்ற த ஏரி களும், சோலைகளும் சாலைகளும் மலிந்து, குபேர புரி யாய் விளங்கிய அலங்காரபுரி என்னும் தேசத்தில்” என்று கதாரம்பம் செய்கின்ற உபகதைப் பாணிவிடை பெற்று, கதாவஸ் த க்களுடன் கருத்தாழத்தையும் பின்னி காவல் எழுதுகிற உத்தி உதயமாகிறது.
*நீலகண்டன? (ஒர் சாதி வேளாளன்) என்னும் காவ8லயும், இரண்டு பாகங்களை க் கொண்ட “சித்த குமாரன்"என்னும் நாவலையும் 1925-ம் ஆண்டில் எழுதி வெளியிட்டார் இடைக் காடர்.
இடைக்காடர் உயர்தர பட்டதாரி. தன் காலத்தில், மே8லத் தேசத் துக் கல்வி ஞானங்களிலும், தத்துவங் களிலும் ஊறித் திளைத்த சிலரில் ஒருவராக விளங்கிய இடைக்காடர்,யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ஆசிரி யராகப் பணி புரிக்கார். தன் மாணவர்களுக்கு கல் லொழுக்கங்களைப் போதிக்க வேண்டுமென்னும் இவரு

23
டைய கடமையுணர்ச்சி, இவர் நாவல் எழுதிய சந்தர்ப்பங்களிலும் இவரை விட்டுப் போகவில்லை. தர்க் கம், நியாயம், அர்த்தம்,சித்தம்,கணிதம், சீவம்,தர்மம், சமயம், வியாகரணம் போன்ற பல்வேறு சாஸ்திரங் களையும் அலசியும் ஆராய்ந்தும் சம்பாஷிக்கிற பாத்தி ரங்கள் இவரது நாவல்களில் சுற்றிவரும். மேனுட்டுத் தத்துவ வாதங்களிலும் பண்பாடுகளிலும் பரிச்சயம் கொண்டிருந்தும், அவற்றேடு மல்லுக்கட்டி, அவற்றை விடத் தமது தேசிய சிந்தனைகளும் பண்புகளும் சிறந்தவை என்று தருக்கமிட்டு, அவற்றைக் கட்டிக் காக்க விரும்புகிற இவரது முனைப்பை, இவர் எழுதிய ாகாவல்களில் பரக்கக் காணலாம். குத்துமதிப்பாகச் சொன்னல், இவர் அக்தக் காலத்து "வரதராசனுராக” விளங்கியிருக்கிறரென்று சொல்லலாம். ஆனல், வரதராசனரின் நாவல் துறைச் சாதனையை, இடைக் காடர், பல வருடங்களுக்கு முன்பே, சில மடங்கு செப் நிறைவேற்றி விட்டாரென்று சொல்ல נג8536חפLju. வேண்டும்.
இடைக்காடரின் இலக்கிய முயற்சிகள் நடை பெற்ற இந்தக் காலப் பிரிவின் பிற் பகுதியிலேயே, கிறிஸ்தவ தர்மங்களைத் தாங்கி விவாதிக்கும் காவல் ஒன்று வெளியிடப்பட்டதை, காரியார்த்தமான ஒரு சம்பவமாகக் கருத வேண்டும். சுதேச தத்துவச் சாயல் படர்ந்த இடைக்காடரின் காவல்களுக்கு மாற்ற மான தன்மைகளுடன், விதேச கிறிஸ்தவ மதத் தத்து வங்களைப் பிற் களத்தில் வைத்து, அவையே சிறக் தவை என வலியுறுத்தும் முகமாக எழுதப்பட்டது 'புனித சீலி” என்னும் நாவல். இந்த காவல் ஞானச் சகோதரர் (ரெவரென்ட் பிற தர்) யோன் மேரி என்பவ ரால் எழுதப்பட்டது. காவல் என்பது கெடுங்கதை

Page 20
24
ள்ன்னும் ஒரு அர்த்தத்தை விசுவரூபமாகக் கண்டு, கான்கு பாகங்களாக எழுதி வெளியிடப்பட்டு, நீளத் தால் கல்கியின் மிக நீண்ட காவல்களையும் விட அதிக பெருமை தேடிக் கொள்ளும் இந்த நாவலில், இலக்கண சுத்தமான யாழ்ப்பாணத் தமிழுடன், ஆங்காங்கே யாழ்ப்பாணத்துப் பேக்சு வழக்கும் இடம் பெற்றிருக் கிறது. ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்னும் முத்திரை கணிசமாகப் படியுமாறு, யாழ்ப்பாணத்துப் பிரதேச மொழி வழக்கை முதன் முதலாக காவலில் ஒரளவு புகுத்திய புதுமையை இந்த காவலின் ஒரு சிறப்பியல் பாகக் கொள்ளலாம்.
உயிர் வாழும் பழைய நாவலாசிரியர்கள்
சரளமான தமிழ் கடை, "புனித சீலி” வெளிவந்த அதே வருடமான 1927-இல் பிரசுரிக்கப்பட்ட மற்றெரு காவலில் மேலோங்கி நிற்கிறது. “சாம்பசிவம்-ஞாஞ மிர்தம், அல்லது கன்னெறிக் களஞ்சியம்” என்பது இந்த காவலின் பெயர். அ. காகலிங்கம் என்பவர் இந்த நாவலை எழுதினர். மலாயாவில் வேலை பார்த்து, ஒய்வு பெற்று வந்து, சொந்த ஊரான காரைத் தீவில் இ2ளப்பாறும் காகலிங்கம், உயிருடனிருக்கும் பழைய காவலாசிரியர்களில் ஒருவர். காவலர் ரா. பி. சேதுப் பிள்ளையின் முகவுரையுடன் வெளியான இந்த காவல், காரைத் தீவில் ஒரு கோயிற் கேணியைப் புதுப்பிப்ப தற்கு நிதி சேர்ப்பதற்கென்றே எழுதப்பட்டதென்பது ஒரு ரசமான செய்தி. இந்த நூலின் பெயரே, இதன் சற்போதக குணும்சங்களைத் தெளிவாக விளக்கி விடு கிறது. ஆனல் இந் நூலின் மூன்று நான்கு அணிக் துரைகளில், இலங்கைத் தமிழறிஞர்கள் சிலர், இக்கால

25
இலக்கிய சர்ச்சைகளுக்குங்கூடப் பொருந்தக்கூடிய சில தரமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறர்கள். வரைதற் சித்திரங்களுடன் வெளிவந்த முதலாவது இலங்கைத் தமிழ் காவலும் இதுவே.
நாகலிங்கம் போலவே இன்றும் உயிருடனிருக்கும் ஒருவரால் எழுதப்ப்ட்டது, 1929-ம் ஆண்டில் வெளி யான "சரஸ்வதி அல்லது காணுமற்போன பெண் மணி” என்னும் காவல். இதை எழுதிய சு.இராசம்மாள் என்னும் அம்மையார் இலங்கையின் இரண்டாவது தமிழ் நாவலாசிரியை என்று சொல்லலாம். முடிவு என்ன என்னும் ஆவலைச் சிறிது தூண்டும் வகையில் அமைந்த ஒரு வித மர்ம காவலாக இந்த நூல் விளங்கு கிறது. (ஒரு நாவலோடு ஓய்வு பெற்று, தற்போது ஹெர்ந்த8லப் பக்கத்தில் வாசம் செய்யும் இவர், மீண்டும் உற்சாகம் பெற்று தனது இரண்டாவது ாகாவலை எழுதி மூடித்து, பிரசுரிக்க முயன்று வருகிரு ரென்று தெரிகிறது).
1930ல் எழுதப்பட்டது மா. சிவராமலிங்கம் பிள் ளேயின் “பூங்காவனம்’ என்னும் காவல். ஆசிரியர் இந்த நாவலைத் தொடர்ந்து விஸ்தரித்து வேறு பாகங் களோ பாகமோ வெளியிட உத்தேசித்தாரென்பது, இக் நூலில் முதலாம் பாகம் என்று போட்டிருக்கும் குறிப் பிலிருந்து தெரிகிறது. ஆனல் பிரசுரமானது என்னவோ சுமார் முந்நூறு பக்கங்களைக் கொண்ட முதலாவது பாகம் தான். இலக்கியம் மக்களுக்குப் பயன்படு பொருளாக வேண்டுமென்று வலியுறுத்தும் முன்னுரையோடு வெளியாகியுள்ள இந்த நாவல் கொக் குவில் சோதிடப் பிரகாச அச்சியந்திரசாலையிலிருந்து பிரசுரமாயிற்று.

Page 21
26
“உலகம் பலவிதக்" கதைகள்
இடைக்காடரின் நாவல்கள் ஒரு புதிய திருப் *பத்தை ஏற்படுத்திய இதே பத்தாண்டுக் காலப் பிரிவில் காவல் இலக்கியத்திற்கு வாசகர்களிடமும், ரசிகர்களி டமும், எழுத்தாளர்களிடமும் ரஞ்சகத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்னும் பிரக்ஞையோடு, ஒரளவு முனைப்பான சில முயற்சிகள் நிகழ்ந்திருக் கின்றன இந்த முனைப்பில் விளைந்த கல் முத்துக்கள்' உலகம் பல விதம்’ என்ற வரிசையில் வெளியான இரண்டுகாவல் கள். முறையே 1921-ம் ஆண்டிலும், 1924-ம் ஆண் டிலும் யாழ்ப்பாணத்து:"இந்து சாதனம்’பத்திரிகையில் தொடர் கதைகளாகப் பிரசுரமாகி வந்த 'உலகம் பல விதம்” வரிசை காவல்களின் ஆசிரியர், அந்தப் பத்திரி கைக்கும் ஆசிரியராக இருந்து வந்த ம. வே. திருஞான சம்பந்தபிள்ளை. முக்திய தலைமுறையில் புகழ்பெற்று மிளிர்ந்த உரையாசிரியர் ம. வேற்பிள்ளை என்னும் மட் டுவில் வேலுப்பிள்ளையின் மைந்தன் இவர், சமகாலத் தில் தமிழறிஞணுகத் திகழ்ந்த மகாலிங்க சிவத்தின் சகோதரர். தந்தை வேற்பிள்ளையிடமிருந்து பெற்ற தமிழறிவை மகாலிங்க சிவம் ஒரு விதத்திலும், திரு ஞானசம்பந்தபிள்ளை மற்றெரு விதத்திலும் பிரயோ கித்து, பிரகாசித்தார்கள். நாடகாசிரியராகவும், உரை காரராகவும் மிளிர்ந்து பல நூல்களே எழுதிய திருஞான சம்பந்த பிள் 2ள, “கோபால-கேசரத்தினம்’, ‘காசி நர் தன்-நேசம்லர்” என்னும் இரண்டு காவல்களிலும் தனக்கு முக்திய காவாலாசிரியர்கள் கையாளாத உத்தி களைப் புகுத்தி, பிந்திய "காவலாசிரியர்களுக்கு அழுத்த மும் அர்த்தமும் பதிந்த ஒரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாரென்று சொல்வது தவறன்று. தன்னுடைய

27
இரு காதல் காவல்களிலும் நகைச் சுவை ரசத்தை லாவகமாகப் பின்னியிருககிறர். இந்த நகைச் சுவை, இடமறிந்து, கேலியும், கின ட லும், குத்தலுமாகப் பல விவரணங்களைப் பெற்று காவலுக்கு ஒரு அர்த்த புஷ்டி யையும் அளிக்கிறது. கலை உருவம் கெடாதவாறு, ாாவலை ஒரு சீர் திருத்த கோக்கத் துக்குப் பயன் படுத் தலாமென்று காவலாசிரியர் உற்றறிந்த உள்ளுணர்வு, இந்த காவல்களில் உறுதி யோடு தொனிககிறது இந்த ாாவல்கள் 1920-ம் ஆண்டுத் தொடரின் பிற் பகுதி பில் நூல்களாகப் பிரசுரமாயின.
1920-ம் ஆண்டுத் தொடரின் ஆரம்ப வருடங்களில் "கமலாவதி” என்னும் ஒரு நாவல் வெளியாகியிருப்ப தாகவும் தெரிகிTது. இந் நூல் ஆசிரியர் யாவரென்று நிச்சயித்துச் சொல்ல முடியவில்லை. அந்தக் காலத் தில் மானிப்பாய் தபால் நிலைய அதிபராக இருந்த சபாபதி என்னும் பெயர் கொண்ட ஒருவரே இக்த நாவல் ஆசிரியரென்று ஊகமான ஒரு தகவல் மாத் திரமே கிடைக்கக் கூடியதாயிருக்கிறது. 1930-ம் ஆண்டில் பிரசுரமான “தாமோ கரன” என்னும் நாவலை யும் இந்தக் காலப் பிரிவில் சேர்க்க வேண்டும் வ.றெ. பாவிலுப்பிள்ளை என்பவர், இந்தச் சிறிய நாவலை எழுதினர்.
சமூக சீர்திருத்தம் கதா வஸ்துவானது
1930க்கும் 1940க்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்தில், ஈழத்துத் தமிழ் hாவலில் , சமூகப் பொது வான பிரச்சினைகள் இடம பெற ஆரம்பித் தமையும், இதனல் காவல் இலக்கியம் புதிய வலிவைப் பெறத் தொடங்கியமையும்,குறிப்பிடத் தக்கவை.

Page 22
28
ஈழத்தின் முதலாவது முழுதான துப்பறியும் காவல்கள் வெளியானதும் இந்தக் காலப் பிரிவில் தான். வரணியூர். ஏ. சி. இராசையா 1932-ம் வருடத் தில் “பவளகார்ந்தன் அல்லது கேசரி விஜயம்” என்னும் நாவலையும் 1938-ம் வருடத்தில் “அருணுேதயம் அல்லது சிம்மக் கொடி" என்னும் காவலையும் எழுதி வெளியிட்டார். "ஈழகேசரி”யில் தொடர்கதைகளே எழுதி வந்த இராசையாவின் இந்தத் துப்பறியும் காவல்கள், ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் ஆகியோரின் காவல்களையும்கூட அக்தக் குறிப்பிட்ட வகையான இலக்கியப் பிரிவில், தூக்கியடிக்கக்கூடிய சிறப்பு வாய்ந்தவை என்று சொல்லலாம்.
('கலாம தி” என்னும் காவல் பற்றி கம்பகமான தகவல் கிடையாதவரை) மட்டக்களப்பில் காவல் இலக்கியம் உருப்பெறத் தொடங்கியது 1934-ம் வரு டத்தில் என்று தற்காலிகமாகக் கொள்ளலாம். அந்த வருஷத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்தவரும், சைவ சமய ஈடுபாடு மிகுதியும் உள்ளவருமான வே. ஏரம்ப மூர்த்தி 'அரங்காகாயகி” என்னும் காவலை வெளியிட் டார். நிச்சயபூர்வமாகத் தெரிந்த வரையில், மட்டக் களப்பிலிருந்து பிரசுரமான முதலாவது தமிழ் நாவலென்ற பெருமையைப் பெறும் "அரங்காநாயகி", 1919-20-இல்கையெழுத்துப்பிரதியாகத்தயாராகிவிட்ட போதிலும் பிரசுரமானது 1934 இல்தான். பத்தொன்ப தாம் நூற்றண்டின் இறுதியில், ஆங்கிலத்தில் வீரதீரக் கதைகளை எழுதிப் புகழ்பெற்ற சர் வால்டர் ஸ்காட்டின் “கெனில்வேர்த்” என்னும் காவலைத் தழுவி இந்த காவல் தமிழில் எழுதப்பட்டது. தழுவல் உருவிலும்கூட, "அரங்காாயகி”, அதற்கு முன்பு

29
வெளிவந்த பெரும்பாலான ஈழத்துத் தமிழ் நாவல்கள் போல, "நல்லொழுக்க உபதேச' நாவலாகவே பரிண மித்தது.
இந்தத் தழுவல் நாவல் பற்றிக் குறிப்பிடுகையில், ஈழகேசரியில் இதே காலப் பிரிவில் வெளியான "மாஅல வே2ளயில்"என்னும் மொழிபெயர்ப்புகாவல் நிஜனவுக்கு வருகிறது. ஜவான் துர்கனிவ் எழுதிய நாவலின் மொழிபெயர்ப்பான இதை எழுதியவர், இலங்கையின் சிறு கதை முதல்வர் என்று புகழப்படும் சி. வைத்தி லிங்கம் அவர்கள். ஈழகேசரியில் “தேவி திலகவதி” என்னும் ஒரு காவலும் இதே காலப் பிரிவில் தொடர் கதையாகப் பிரசுரமானதாகத் தெரிகிறது.
தீண்டாமைக்குச் சவுக்கடியும் சாவுமனியும்
1935-ம் ஆண்டில் ஈகல்லூரைச் சேர்ந்த வே. க. கவ ரத்தினம் எழுதிய “செல்வரத்தினம்” என்னும் காவல் வெளியானதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டில் "காந்த மலர் அல்லது கற்பின் மாட்சி” என்னும் காவல் பிரசுர மானது. இந்த நாவலின் ஆசிரியர் சி.வே. தாமோதரம் பிள்ளை. பல நூல்களை எழுதியும் பதித்தும் தன் பெயர் பரப்பிய இவரின் *கதிர்காமப்புராணம்" வெகு ஜனப்புழக்கத்துக்கு வந்த நூல்களில் ஒன்று.
எம்.ஏ. செல்வாகாயகம் என்பவர் 1938-ம் ஆண்டில் எழுதி வெளியிட்ட ஒரு நாவலுடன் ஈழத்துத் தமிழ் காவல் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பிக்கிறது. அதுகாலவரை தனிமனித சீர்திருத் தத்தைக் குறிக்கோளாகக் கொண்ட கல்லொழுக்க உபதேசக் கருவிகளாகப் பயன்பட்டு வந்த காவல் களின் போக்கை, சமூகத்தின் பொதுப்படையான

Page 23
3O
சீர்கேடுகளைக் கிளறிப் பார்க்கும் வாருகோல்களாகத் திருப்பி விட வழி காட்டியாக அமைக்தது செல்வ ாநாயகத்தின் “செல்வி சரோசா அல்லது தீண்டாமைக் குச் சவுக் கடி” என்னும் நாவலாகும். தன் சீர் திருத்தக் கருத்துகளைப் பரப்புவதற்கு இலக்கிய உருவங்களைப் பிரசாரக் கருவிகளாகப் பயன்படுத்தினர் செல்வ காயகம். நாவல் எழுதியதுடன், பல சீர் திருத்த நாடங்களையும் படைத்தார். இன்றும் உயிர்வாழும் செல்வாகாயகத்தின் மிகப்பிக் திய நாடகம் *கமல குண்டலம்’ என்பது.
ஓரினத்திலே காணப்பட்ட சாதிபேத வர்க்கப் பிளவுகளைத் தன் நாவலில் செல்வநாயகம் கிளறிப் பார்த்து மருந்து சொன்ன இதே காலப்பிரிவில், வெவ் வேறு இனங்களிடையில் காணப்பட்ட வகுப்புவாதப் பிளவுகளைக் களைந்தெறிய மு?னர் து நாவல் எழுதினர் எச். நெல்லையா. அக்சால க்தில் ‘வீரகேசரி’ பத்திரி கையில் ஆசிரியராக இருந்த கெல்லேயா, தான் வே2ல பார்த்து வந்த பத்திரிகையில் தொடர்கதைகளாக "இரத்தினவரி அல்லது காதலின் மாட்சி” முதலாம் ாகாவல்களை எழுதி வந்ததுடன், 1940-ம் ஆண்டுக்கு முன்னக ‘சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு’ என்னும் நாவலை நூல் வடிவில் வெளியிட்டார். இலங்கையில் வாழ்ந்த இக் தியரான கெல்லேயா, இங்கு வாழ்ந்த இந்தியர்களுக்கும் இலங்கைத் தமிழர் களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையில் நல்லுறவுகளை ஏற்படுத்தும் குறிக்கோளுடன், இன ஒற்றுமையைத் தூண்டும் அம்சங்கள் பொதிக் த இந்த காவலைப் பிரசுரித்தார். 'காந்தாமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமனி” என்றும் இவர் ஒரு நாவலை எழுதியிருப்ப தாக எண்ணம்.

31
பல கிளைகளாகப் பரந்து விரிந்த காலம்
செல்வநாயகம், கெல்லேயா ஆகியோரின் நாவல் களின் தோற்றத்தோடு, ஈழத்துத் தமிழ் நாவல்களின் வரலாற்றில், அழகுணர்ச்சி, கற் பஞ லங்காரம், தனி மனித கல்லொழுககம், வீரதீர பிரதாபம் இ ைறையே பெரும்பாலும் சுற்றிச் சுழன்ற ஒரே ரக மாலி: கலா வினே த மனேரஞ்சக நாவல களன் காலக் கட்டம் முற் றுப்பெற்று, ஒரு புதிய காலக கட்டம் உதயமாகிறது. 1940ஆம் ஆண்டு வரை, ஒரு ஒழுங்குப் பிரமா3ை மாக ஒற்றைச் சுவடு கட்டிச்சென்ற ஈழத் துத் தமிழ் காவல் இலக்கியப் பாதை, அந்த ஆண்டிலிருந்து பல கிளை களாகப் பிரிந்து, பரந்து செல்கிறது. அந்த ஆண்டிலிருந்து 1962-ம் ஆண்டுவரையுள்ள இருபத் திரண்டு வருட காலத்தின் ஈழத்துத் தமிழ் நாவல்களே வருஷ வாரியாகவோ, தரவாரியாகவோ, ரக 52 Tffi யாகவோ, நாவலாசிரியர்களின் கோஷ்டி வாரியாகவோ பிரித்து வகைப்படுத்தி ஆராய்வது சுலபமன் று. ஆயினும் இந்தக் குறிப்பிட்ட இருபத் திரண்டு வருட காலத்தில் இலங்கையில் பிரசுரமான நாவல்களைத் தேடிச் சேகரித்துக் கொள்வதும், இந்தக் காலத்து காவலாசிரியர்களை இனங்கண்டு கொள்வதும், சிரம மான காரியமன்று.
தமிழ் காட்டில் முனைப்போடு தத்தம் முத் திரை பதித்து எழுதியவர்களின் காவல்களை யும், மேல் காடு களிலிருந்து இலங்கைப் புத்தகச் சர் தைகளில் வந்து குவிக் த ஏராளமான பிற மொழ நாவல் களையும், வாசித் துப் பரிச்சயம் செய்து கொண்டு, அவர் றின் செல்வாக்குகளால் பாதிக் கப்பட்டும், அவற்றின் தனித்தன்மைகளை உணர்ந்து ஈழத்துத் தமிழிலக்கியத்

Page 24
32
துக்கு பிரத்தியேக தனித்தன்மையை ஊட்டியும், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள், தாக்குப்பிடித்து ாகிற்கக்கூடிய தரமான காவல்களை எழுத முயன்றது இந்த இருபத்திரண்டு வருட காலத்தில்தான் என்று சொல்ல வேண்டும். இந்த முயற்சி, "திருவினையை ஆக்கியிருக்கிறதா என்பதை, இந்த மேல்வாரியான அஸ்திவாரச் சிறுநூலில் ஆராய்வது உசிதமில்லை யாகையால், இந்தக் காலக்கட்டத்தில் ஈழத்துத் தமிழ் ாாவல்கள் உருவ அழுத்தமும், கருத்தாழமும், இலட்சி யார்த்தமும் பெற்றுச் செழிப்புற்றன என்பதை ஒட்டு மொத்தமாகக் கவனித்துக் கொண்டு, இந்த இருபத் திரண்டு வருஷ கால நாவல்கள் பற்றிய குறிப்பு களுக்கு வருவோம்.
கன நாவல்கள் எழுதிய கசின்
ஈழத்தின் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் "மறு மலர்ச்சிக்காலம்" என்றும் கடந்த முப்பது முப்பத் தைர்ந்து வருட ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் "பொற்காலம்" என்றும் குறித்த அந்தக் கால விமர் சகர்கள் சிலர் ஆடம்பரமாகக் குறிப்பிட்டு அகமகிழ்ச்சி யடைகிற 1940-ம் ஆண்டுத் தொடர் வருடங்களில், *கசின்" என்கிற க.சிவகுருகாதன், கனக-செந்திநாதன், வரதர், சம்பந்தன், சுயா, ஜே. எஸ். ரவீந்திரா ஆகியோரின் பெயர்கள் காவலாசிரியர்கள் என்ற வகையில் பளிச்சிடுகின்றன.
*க சின்" என்கிற சிவகுருகாதன், “சகடயோகம்", "இராசமணியும் சகோதரிகளும்” போன்ற சில காவல் களை இந்தக் காலப் பிரிவிலும், “கற்பகம்’, 'சொந்தக் கால்” போன்ற சில காவல்களைச் சமீப காலத்திலும்

33
எழுதியிருக்கிறர். "ஈழகேசரியில்” தொடர் கதை, களாக வெளியிட்ட காவல்கள் பெரும்பாலானவை. சாதாரணமான ஒரு சிறு கதைக் கருவை வைத்துக் கொண்டு, 'காக்கை உட்காரப் பணம் பழம் விழுகிற” சம்பவங்களை இடைச் செருகலாக்கி, நடுத்தரக் குடும் பங்களையும், கிராமத்துப் பாத்திரங்களையும் பிற் களத்துக்கு உபயோகித்து, ஒசைப்படாமல் வாசித்து முடிக்கக் கூடிய நாவல்களை, பரபரப்பில்லாமல் எழுதி முடித்துவிடுவதில் இவர் சமர்த்தர். இவருடைய ாகாவல்களில் சுளிப்பான அசமந்த ககைச் சுவை பின்ன ணியில் இழையோடிச் செல்லும்.
மறுமலர்ச்சிக் குழுவினர் எழுதியவை
ஈழம் பெருமைப்படக்கூடிய சிறந்த எழுத்தாளர் களில் ஒருவரான கனக-செந்திாகாதன், "விதியின்கை” வெறும்பானை" ஆகிய இரண்டு கெடுங் கதைகளை எழுதியிருக்கிறர். கம்முடைய பிரதேசத்து மக்களின் வாழ்க்கையைப் பகைப்புலத்தில் வைத்து காம் எழுத வேண்டுமென்று, அறிவறிந்து இலக்கியம் சமைக்கும் செந்திாகாதன், கஷ்டப்படும் மக்களின் அன்றட வாழ்க் கைப் பிரச்சினைகளைக்கூட, கலை அழகு குன்றமல் சமத் காரமாகக் கதையாக எழுதக் கூடியவர் என்பதற்கு. இந்த கெடுங்கதைகள் உதாரணம். “உபகுப்தன்’ என்னும் புனைபெயரில் ஈழகேசரியில் தொடர்கதையாக வெளிவந்த 'விதியின் கை"யளவுக்கு, "வெறும் பானை"யை காவலியல்புச் சிறப்புடையதென்று தூக் கிச் சொல்ல முடியவில்லையென்பதையும் இங்கு குறிப் பிட வேண்டும்.
வரதர், 'மறுமலர்ச்சி"யில் "வென்று விட்டாயடி ரத்ன" என்னும் நாவலை எழுதினர். அவர் பிற்காலத்

Page 25
34
தில் 'எழுதிய “வாழ்க நீ சங்கிலி மன்ன” என்னும் நூலும் ஒரு நாவலே என்று சிலரால் கருதப்படுகிற போதிலும் விமரிசன கோக்கில் பார்த்தால் அப்படிக் கருத முடியாதென்றே தோன்றுகிறது.
இலங்கைச் “சிறுகதைத் திரு முலர்களில் ஒருவ ரெனக் கருதப்படும் சம்பர் தன் இதே காலப் பிரி வில் ஈழகேசரி பில் 'பாசம்’ என்னும் தொடர் கதையை எழுதினர். சாருகாசினி, சாரதா என்னுமிரு பள்ளி மாணவிகளையும் அவர்களின் ஆசிரியர் காராயணனே யும் சுற்றிப் பின்னப் பட்டிருக்கும் சுவையான கதை * لفت إكس
தினகரனில் ‘சுயா தொடர் கதையாக எழுதிய *ரவிந்திரன்’ என்னும் காவலும் இதே காலப் பிரிவில் வெளியானதே. இதே காலப் பகுதியில்தான் "ராமப் பிரேமன் எழுதிய ‘ஆப்பக்காரி’யும் தினகரனில் தொடர் கதையாகப் பிரசுரமாயிற்று.
நடேசையர், பண்டிதமணி நாவல்கள்
1940-ம் ஆண்டுத் தொடரின் இறுதிப் பாகத்தில். வெளிவந்த" காதல் உள்ளம்’ என்னும் காவல் ஜே.எஸ் ரவீந்திர" என்பவரால் எழுதப்பட்டது. வாசகரை வசப படுத்தக் கூடிய லளிதமான நடையும், மென்மை யான உணர்ச்சிகளின் சலனமும், உள்ளத்தை உருக் கக்கூடிய காதலுறவுப் பிரச்சினைச் சம்பவங்களும் மின்னுகிற இந்த காவல், "அகிலன்', 'விந்தன், ‘மாயாவி’ ஆகிய மூவரையும் ஒட்டுப் போட்டு உரு வாக்கிய ஒருவர் எழுதிய காவல் போலத் தோற்ற மளிக்கிறது.

35
1940-ம் ஆண்டுத் தொடரில் வரும் இந்தத் தச வருடங்களில் வேறு சில நாவல்களும் வெளியாகின. ம8லநாட்டுத் தலைவர்களில் ஒருவராய்த் திகழ்ந்த நடே சையர், தாம் ஆசிரியராகப் பணி புரிந்த ‘சுதந்திரன்’ பத்திரிகையில் ஒன்றிரண்டு காவல்களை எழுதினர் பண்டித மணி சி. கணபதிப் பிள்ளையின் முடிவு பெறத ாாவலான " இரு சகோதரர்’ எழுதப் பட்டதும் இதே காலப் பிரிவில்தான். துர்கனிவின் நாவலொன்றை "முதற்காதல்’ என்னும் பெயரில் 'இலங்கையர் கோன் மொழி பெயர்க்க, 1942இல் அது நூலாகப் பிரசுர மாயிற்று ஆர். எல். ஸ்டீவன் சனின் * ட்றெஷர் ஐலன்ட்”, “மணி பல்லவம்’ என்னும் பெயரில் யாழ்ப் பாணத்துத் தேவனல் தமிழாக்கம் செய்யப்பட்டு 1949இல் நூல் வடிவம் பெற்றது. தேவனின் '' வாடிய மலர்கள் ” எழுதப்பட்டதும் ஏறத்தாழ இதே காலப் பிரிவில்தான்.
சிறந்த நாவல்களும் சில்லறைக் கதைகளும்
1950-ம் ஆண்டு தொடக்கம் 1962-ம் ஆண்டு வரையுமுள்ள பன்னிரண்டு வருஷங்களில் ஈழத்துப் பத்தரிகைகளில் தொடர் கதைகளாகவும் நூல் வடி விலும் வெளி வந்த நாவல்கள் பல தரப்பட்ட இலக் கிய வட்டாரங்களோடு தொடர்பு கொண்டவை. தர மான எழுத்தாளர்கள் மாத்திரமன்றி, ஒழுங்காக வச னம் எழுதத் தெரியாத பலரும் கூட நாவல்கள் எழுதி யிருக்கிறர்கள்.
காவல்கள் எழுதுவதற்கென்று தமக்குத் தாமே ஒரு கட்டுப்பாடு விதித் துக்கொள்ளாதவர்களும் கூட, நாவல் இலக்கியத்தின் நெளிவு சுளிவுகளை அறிந்த

Page 26
36
பொறுப்புணர்ச்சியுள்ள எழுத்தாளர்களோடு போட்டி போட்டுக் கொண்டு புற்றிசல்களாக நூல்களைப் பெருக்கிய இந்தக் காலத்தில், வெளியான கெடுங் கதைகளோ அனங்தம். இவற்றில் எவற்றையும் தரா தரம் பார்த்து ஒதுக்காமல், அனைத்தையும் தட்டிப் பார்த்துத் தகவலறிந்து கொள்வது, கையிருப்பை முழு மையாகத் தெரிந்து கொள்வதற்கு அவசியமாயிருக் கலாம். ஆயினும் ஒரு சாதாரண வாசகன் கூட காவல் என்று கருதாமல் தள்ளிவிடக்கூடிய “சில்லறைக் கதை களை, இந்த அஸ்திவாரச் சிறுநூலில் முதலாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டியதில்லையென்றே தோன்று கிறது. ஆகவே, இந்தப் பன்னிரண்டு வருடங்களில் வெளியான “சில்லறைக் கதைகளை ஆராய்வதை நீக்கி, புறம்புபடுத்தி வைத்துக்கொண்டு, ஏனைய நாவல் கள&னத்தையும் இங்கு கவனத்திற்கெடுத்துக்கொள்ள
G). -
தொடர்கதை வாசகர் தொகையைப் பெருக்கியவர்
இந்தப் பன்னிரண்டு வருஷங்களின் முதற்பாதி யில், நாவலாசிரியர்கள் என்னும் வகையில் ஓரளவு பிர காசித்தவர்கள் யாழ்ப்பாணத்துத் தேவன், கே.வி. எஸ். வாஸ், அ. செ. முருகானந்தன், வே. தில்லைநாதன், கலாநிதி க. கணபதிப் பிள்ளை, வி. லோகாகாதன், க. சச்சிதானந்தன், க. காகப்பு, த. சண்முகசுந்தரம், சுலோசணு, ஈழத்து மாயாவி, நவம், எம். ஏ. அப்பாஸ், டி. எம். பிர்முகம்மது, சிதம்பராாத பாவலர், இராஜ அரியரத்தினம் ஆகியோர் என்று சொல்லலாம்.
* தே வன்-யாழ்ப்பாணம்", ஈழகேசரியில், தான் தொடர்கதையாக எழுதி வந்த “கேட்டதும் ஈகடந்த

37
தும்” என்னும் நாவலை, பின்னர் நூல் வடிவில் வெளி யிட்டார். கண், காது என்று இரண்டு பிரிவுகளோடு, மனுேதத்துவ ரீதியில் எழுதப்பட்டது என்ற பாவனை யில் ஒரளவு கவனத்தைப் பெற்றது இந்த காவல்.
இலங்கையோடு தன் வாழ்க்கையைப் பின்னிக் கொண்டுவிட்ட கே. வி. எஸ். வாஸ், சுமார் பத்து காவல் களை எழுதியிருக்கிறர். 'அறுபது டன் ரஷ்ய டாங்கி" என்று கல்கியாற் புகழப்பட்ட இந்த அசுரவேக எழுத் தாளரின் நாவல்களும் தீவிரகதியில் செல்லுகிற மர்ம காவல் வகையைச் சேர்ந்தவை. "ஆரணியையும் *வடுவூராரையும் அடியொற்றியும், சரித்திரக் கதை ரூபத்திலும் 'குந்தளப் பிரேமா” (கந்தினி (2 பாகங் கள்), 'தாரிணி” "பத்மினி” (2 பாகங்கள்) "புஷ்ப மாலா", "ஜம்புலிங்கம்" "சார்ந்தினி” போன்ற நாவல் க2ள முதலிலும், 'சிவந்திமலைச் சாரலிலே', 'ஈழத்தின் கதை" போன்ற இரண்டொரு காவல்களைச் சமீபத்தி லும் இவர் எழுதியிருந்தாலும், இவருடைய “மலைக் கன்னி", "உதய கன்னி’ இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றகப் பிறந்த, வலிமையான காவல்கள். ரைடர் ஹக்கார்ட் எழுதிய "வி” "த ஹிட் டர்ன் ஒவ் வி” ஆகிய காவல்களைப் படித்தவர்களுக்கும் கூட, அந்த மூலக் கதைகளையும் விடச் சுவைப்படக் கூடிய விதத்தில், இந்திய சரித்திரம் பற்றித் தான் கற்று வைத்திருந்த கைச் சரக்குகளையும் சேர்த்து, முறையே இந்த இரண்டு காவல்களையும் ஜனரஞ்சகமாக எழுதினர். 'வீர கேசரி’யின் தற்போதைய ஆசிரியரான இவர் அந்தப் பத்திரிகையில் தன் நாவல்களில் ஒன்றிரண்டு கவிர ஏனைய அனைத்தையும் தொடர்கதைகளாக எழுதினர். தொடர்கதைகளாக வெளிவரும் காவல் களுக்கத் தொகையான வாசகர்களைத் தன் காலத்தில் பெருக்கிக் கொடுத்த பெருமையும் ஓரளவு இவரைச் சாரும்.
FF-3

Page 27
38
1950ம் ஆண்டுத் தொடரின் ஆரம்பக் கட்டத்தில் பிரசுரமான 'புகையில் தெரிந்த முகம்’, ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தின் பொற்சுடர் என்று பெரு மைப் படக் கூடிய அ. செ. முருகானந்தனின் கைவண் ணத்தைக் குறித்துக் காட்டும் குறுநாவல். யாழ்ப்பா ணத்து வண்டிற் சவாரியை மையமாகக் கொண்ட ஒரு சிறுகதைக் கருவே இக் தக் குறுநாவலாக மறு பிறப் பெடுத்திருக்கிறதென்றலும், ஈழத்து மண்ணில் ஆழ மாக வேர் விட்டு நிற்கும் கதை அது. 'யாத்திரை" என்ற மற்றெரு நல்ல குறுநாவலேயும் ‘ஈழகேசரி”யில் தொடர்கதையாக எழுதியிருக்கிறர். 1957ல், "பீஷ்மன்” என்ற புனைபெயருடன் இதை எழுதினுள்.
காரை தீவைச் சேர்ந்த பொன்னுடையார் வேலுப் பிள் 2ள என்ற புகழ் .ெ ற்ற தமிழாசானின் புதல்வரான அத்துவக் காத்து வே. தில் லேகா தன் “அனிச்ச மலரின் காதல்' என்ற குறுநாவலை 1953ல் வெளியிட்டார். மானிப்பாய் இக்துக் கல்லூரி ஆசிரியராக முன்பு கடமையாற்றிய வ: சனே தென்படக் கூடியவாறு ஒரு கல்லொழுக்கப் போதனே காவலாக இதை அமைத்து விட்ட இவர், முற்போக்கான சில கொள்கைகளையும் தன்னுடைய காவலிற் புகுத்திக் காட்டுகிறர். கலாநிதி கணபதிப்பிள்ளையின் முன்னுரையுடன் வெளியானது இக் குறுகாவல்.
கலாநிதி கணபதிப்பிள்ளையின் கதைகள்
யாழ்ப்பான ப் பேச்சு வழக்கு நாடகங்கள் பல எழுதிப் புகழ் பெற்ற தமிழறிஞரும், வியாகரண விண் னருமான கலாநிதி கணபதிப்பிள்ளை, 1953ம், 1954ம் ஆண்டுகளில் முறையே "பூஞ்சோலை", "வாழ்க்கையின்

39
வினுேதங்கள்" ஆகிய நாவல்களை வெளியிட்டார். ஜெர்மானிய எழுத்தாளர் தியடோர்ஸ்தம் எழுதிய 'இமென்ஸே’ என்னும் கதையின் தழுவல் 'பூஞ் சோ8ல”, “வாழ்க்கையின் வினே தங்கள்" என்ற ாகாவலும், பிறமொழிக் கதையைப் படித்த மன அருட் சியில் விளைந்ததுதான். ஆயினும், யாழ்ப்பாண மக்க ளின் பழக்க வழக்கங்களைப் பற்றிய ஒரு கணிப்பை வெளியிடும் சுவையான கதைகளாக இவை அமைந் திருக்கின்றன.
கலைமுதிர்ச்சி கொண்ட 'லோகு"வின் நாவல்கள்
14விரகேசரி’யின் வாரப் பதிப்பு ஆசிரியர் வி. லோகாநாதனின் "பிரேமாஞ்சலி” என்ற காவல்,சரித் திரப் பின்னணியில், ஆத்மானுபவ ரீதியான காதல்கடமை-தர்மம்-தத்துவம் யாவற்றையும், மனே சலன ரீதியில் உணர்ச்சிப் பின்னலாக்கிச் செல்கிறது. உள்ளத்தைச் சிறைப்படுத்தும் கலே முதிர்ச்சி கொண்ட வசன நடையழகும், கமக்கே கடந்தது போன்ற ஒரு மயக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பாத்திரங்களின் உணர்ச்சிகளே வெளிப்படுத்திச் செல்லும் உத்தியும் 1956ல் வெளியான இந்த நாவலின் தனிச்சிறப்புகள். "அம்பிகாபதி" என்ற புனைபெயருடன் தற்போது *வீரகேரி'யில் இவர் எழுதி வரும் 'பாரிஸ்டர் சிற்றம் பலம்” என்ற காவல் செல்லும் கதியில், இந்தச் சிறப் புக்கள் மேலும் வலிவு பெற்றிருப்பதைக் காணலாம்.
"பாட்டில் ஒரு வரியைத் தின்று களிப்பேன்’ என்று உணர்ச்சி வெறியோடு கவிதை பாடும் க. சச்சிதானந்த ஆணின் "அன்னபூரணி’ என்ற நாவலும், க. நாகப்புவின்

Page 28
40
ஒன்றரை ரூபாய்” என்ற நாவலும் "ஏழையின் காதல்’ என்ற பெயரில் வெளியான காவலும், இப் பொழுது எழுத்துத் துறையிலிருந்து ஒதுங்கியிருக்கும் நல்ல நாவலாசிரியர் த. சண்முகசுந்தரம் 1954ல் சுதந்தி ரனில் தொடர்கதையாக எழுதி வந்த 'ஆசை ஏணி” என்ற நாவலும், அதே பத்திரிகையில் 19536წ.) ...д. Сапа, со”. 61 (црju i “6). Пш ти оi“, 1952si, “uoпштGiji” யால் எழுதப்பட்டுப் பிரசுரமான *ரஞ்சிதம்”, “ாகவம்” எழுதிய "மிஸ். மனேகரி,” ஆகிய காவல்களும்,குறித்த இந்தக் காலப் பிரிவில் வெளிவந்தவை.
மலைநாட்டுப் பேச்சுத் தமிழ் நாவல்
ஈழத்திற்கு வந்து சொற்ப காலமிருந்து, துரோகி”, "கள்ளத்தோணி’ முதலிய நாடக நூல் க2ள வெளியிட்டுப் பரபரப்பூட்டி, பிறகு இந்தியா வுக்குக் குடி பெயர்ந்து சென்ற எம். ஏ. அப்பாஸின் இேவ2ளப் பார்” “மூன்று பிரேதங்கள்”, “ஒரே ரத்தம்” சி. ஜ. டி. சிற்றம்பலம்”, “சிங்களத் தீவின் மர்மம்” யேக்கடையாவின் மர்மம்” போன்ற மர்ம காவல்களும் இந்தக் காலகட்டத்தில் நூல்களாகவும் தொடர்கதை களாகவும் வெளிவந்து கவனத்தைப் பெற்றன.
இந்தக் காலப் பிரிவில் பிரசுரமாகி வந்த "ாகவ ஜீவன்? பத்திரிகையில், சிதம்பரநாத பாவலர் தொடர் கதையாக எழுதிய காவலையும், டி. எம். பீர் முகம்மது, ஹமீதா பானு என்ற புனைபெயருடன் நூல்களாக எழுதிய *சதியில் சிக்கிய சலீமா’, ‘கங்காணி மகள்", என்ற நாவல்களையும் இங்கு நினைவூட்டிக் கொள்ள வேண்டும். 'கங்காணி மகள்” குறுகாவல் என்ற வகை யிற்கூட குறைப் பிரசவமென்றலும், மலைநாட்டுத்


Page 29
42
கையில் சுமார் எட்டு மாதங்களாகத் தொடர்கதை யாகப் பிரசுரமாயிற்று.
* காற்றில் பறந்த கருங்காலிக் குதிரை" என்ற சரித்திர நாவ8ல * இஸ்லாமிய தாரகை” என்ற பத்திரி கையில் எம். செயினுல் ஆப்தீன் என்பவர் தொடர் கதையாக எழுதிஞர்.
*சுரபி? பத்திரிகையில் 'வீரமைக் தன்’ என்ற மற்றெரு வரலாற்று காவலும் சி. ச8ண்முகத்தால் எழுதப்பட்டுத் தொடர் கதையாகப் பிரசுரமாகி வந்தது.
*தினகரனில்” வெள்ளிவீதியார் எழுதிய “சிங்கை ஆரியன்’ 1933ல் வெளி:ர்து கொண்டிருந்தது.
வே. க. ப. காதன் தினகரனில் எழுதிய நாடகம்” இதே காலப பிரிவைச் சேர்ந்தது.
5 -
இவையே குறிப்பிடக் கூடிய நாவல்கள்.
இளங்கீரன் சகாப்தம்
இர் தப் பன்னிரண்டு வருடங்களின் முற்பாதி ப்ோனல், எஞ்சியிருப்பது 1956 முதல் 1962 வரையுள்ள இந்த ஆறு வருட காலம். இக் தக் காலப் பிரிவில், ஈழத்துத் தமிழ் ஈாவல் இலக்கியம் பூரண உருவமும், தாக்கமும், ஈழத்து காவல் என்ற அழுத்தமான முத்திரையும் பெற்றுப் பொலிகிறது என்று சொல்வது தவறல்ல. உலகின் இன்றைய பிற மொழி காவல் களுடனும், தமிழ் 7ாட்டின் இன்றைய பிற மொழி ாகாவல்களுடனும், தமிழ் ஈாட்டின் இன்றைய தரமான ாகாவல்களுடனும் சமமாகத் தராசுத் தட்டில் நிற்கக் கூடிய இரண்டொரு காவல்களாவது இந்த ஆறு

43
வருடி காலத்திற் பிறந்திருக்கின்றன என்று துணிந்து சொல்லலாம்.
இத்தனை துணிவோடு ஈழத்துத் தமிழ் நாவல் களைப் பற்றிச் சொல்ல வைக்கக் கூடிய சாதனை.ை நிறைவேற்றிய பெருமையின் பெரும் பங்க, இலங்கை யின் நாவல் இலக்கிய வானத்து விடிவெள்ளியாக இன்று ஜொலித்துக் கொண்டிருக்கும் இளங்கீரனைச் சாரும். 1950 முதல் இற்றை வரையுள்ள இந்தப் பன்னிரண்டு வருட காலத்திய ஈழத்துத் தமிழ் காவல் களின் வளர்ச்சி என்பதும் அநேகமாக இளங்கீர னுடைய வளர்ச்சிதான் என்று சொல்லவேண்டும். 1950ம் ஆண்டு தொடக்கம், தொடர்ந்து வருகிற ஒவ் வொரு வருஷத்திலும் நாவல் எழுதும் சாதனையில் தன்னுடைய முத் திரையைப் பதித்துக்கொண்டு வளர்ந்து வந்திருக்கிறர் இளங்கீரன். வருஷத்துக்கு வருஷம் அவர் நாவல்களை எழுதிய காகிதங்களில் அவருடைய பேணு மென்மேலும் அழுத்தமாகப் பதிந்துகொண்டு ககர்க் திருக்கிறது.
1951ல் அவர் காவல்கள் எழுத ஆரம்பித்தார். பன்னிரண்டு வருஷங் கழித்து இப்பொழுது திரும்பிப் பார்க்கிறபோது, வருஷத்துக்கு சுமார் இரண்டு காவல் கள் தேறும்படியாக அவர் இருபதுக்கு மேற்பட்ட காவல்களை எழுதிவிட்டாரென்பது தெரிகிறது. ஆரம் பத்தில் இவர் காவல்களில் காணப்படாத உருவச் சிறப்பு, பொருட் சிறப்பு, கடைச் சிறப்பு யாவும், 1956ம் ஆண்டுக்குப் பிற்பட்ட அவரது காவல்களில் தலை காட்டி, இக் த மூன்று ஈகான்கு வருஷங்களில் பூரண முதிர்ச்சி பெற்றிருக்கின்றன.

Page 30
4
யதார்த்த இலக்கியத்துக்குத் தகுந்த உதாரணம்
1951ம் ஆண்டு தொடக்கம் அவரது காவல்களை முறையே நிரைப்படுத்தினல், "ஒரே அ2ணப்பு", "மீண்டும் வந்தாள்', 'பைத்தியக் காரி", "பொற் கூண்டு', 'கலாராணி", "teரனக் குழி”, “காதலன்", *அழகு ரோஜா', 'வண்ணக் குமரி’, ‘காதல் உலகிலே’, *பட்டினித் தோட்டம்’, ‘ரீதிபதி”, "எதிர்பார்த்த இரவு’, ‘மனிதனைப் பார்”, “புயல் அடங்குமா?’, 'சொர்க்கம் எங்கே?', 'தென்றலும் புயலும்”, “மனிதர்கள்’, ‘மண்ணில் விளைந்தவர்கள்", "நீதியே நீ கேள்’, ‘இங்கிருந்து எங்கே?’ என்று இருபத்தொரு காவல்கள் தேறுகின்றன.
ாகாவல்களின் தொகையாலும், காலத் தாலும் இளங் கீரனே இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் உரித் தாக்கினலும், தரத்தால் அவர் இந்த ஆறு ஆண்டு களில்தான் காவல் துறையில் தன் ஆழமான முத்திரை யைப் பதித்திருக்கிறரென்று சொல்லவேண்டும். அவ ருடைய "நீதியே நீ கேள்', 'இங்கிருந்து எங்கே?" ஆகிய நாவல் களிரண்டும் த2ல சிறந்த பிறமொழி ாகாவல்களுடனும் சமமாகத் த2ல நிமிர்க் து கிற்கும் தகுதி வாய்ந்தவை. காவல் எழுதும் திறமையால் மாத் திரமே, தனக்கென்று இலங்கை பில் மிகப் பெரும் வாசகர் கூட்டத்தைச் சம்பாதித்து வைத்துக் கொண் டிருக்கிறவர் இவர்.
ஈழத்திலும், பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலும் வாழுகின்ற கிராம மக்களினதும், ஏழை எளியவர்களி னதும் வாழ்க்கைப் பிரச்சினைக2ளக் கூர்ந்து கோக்கி, அனுபவ உணர்வோடு, அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்ப தற்கு மார்க்கங் காணும் முயற்சிகள் என்று, இளங்

45
கீரனுடைய மிகப் பிந்திய காவல்களை வர்ணிக்கலாம். யதார்த்த இலக கியம், சோஷலிஸ் யதார்த்த இலக் கியம் என்று நாளும் பொழுதும் மக்திரோச்சாடனம் கடைபெறுகிற இனறைய ஈழத்து இலக்கிய உலகில், யதார்த்த இலக்கியங்களை எங்கே படைத்திருக்கிறீர் களென்று எவராவது கேட்டால், தைரியமாகத் தூக்கிக் காட்டுவதற்கு, காவல்களைப் பொறுத்த வரையிலா வது, இளங்கீரனின் கதைகள் மாத்திரமே கதி.
கதாசிரியர்களின் கவனம் திரும்பியது
இலங்கையின் இன்றைய முன்னணிக் கதாசிரியர் கள் பலரும் காவல் துரையில் தமது கவனத்தை அதிகம் திருப்பி, இந்த ஆறு வருடங்களில் சில கல்ல காவல்களைப் படைத் தளித்திருக்கிறர்கள். சொக்கன், வ. அ. இராசரத்தினம், டானியல், சி. வீ. வேலுப் பிள்ளை, சிற்பி, உதயணன், எஸ். பொன்னுத்துரை ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.
சில வருஷங்களின் முன்னரே 'மலர்ப்பலி" என் னும் காவலை எழுதிப் பெற்ற அனுபவத்தின் சீர்மை தென்படுமாறு, 1961ல், தினகரனில், **செல்லும் வழி இருட்டு' என்ற தனது "காவலைத் தொடர் கதையாக எழுதினர் சொக் கன்.
வ. அ. இராசரத் தினத்தின் “கொழு கொம்பு", ஈழகேசரி"யிலும், 'துறைக் காரன்’ ‘ஈழ நாட்டிலும் தொடர் கதைகளாக வெளிவந்தன. "கொழு கொம்பு” பின்னர் நூலுருவில் வெளிவந்து சுமாரான வரவேற் பைப் பெற்றது.
சிறுகதைத் துறையில் சுமாரான வெற்றியைப் பெற்றிருக்கும் டானியல், ‘வீரகேசரி"யில் 1961ம்

Page 31
45
ஆண்டு எழுதிய 'கெடுந் தூரம்" என்ற நாவல், அவருடைய சிறுகதை எழுதும் ஆற்றலைத்தான் மேலும் வலியுறுத்திக் காட்டியது.
சீ. வீ. வேலுப்பிள்ளை தினசரனில் மூன்று வருஷங் களின் முன்னும் ‘வீரகேசரி’யில் சில மாதங்களின் முன்னும் முறையே வெளி:ட்ட ‘வாழ்வற்ற வாழ்வு’, *வீடற்றவன்” ஆகிய காவல்கள், மலே காட்டு மக்க ளின் வாழ்க்கைபை ஒரளவு சித்திரித்துக் காட்டின.
*க2லச் செல் வி”யில்
ஆசிரியர் சிற்பி "உனக்காக கண்னே’ எ கேர ற நெடுங்கதையையும் 'உதயணன்”, “மனப்பாறை" என்ற நாவ8லயும் எழுதி னர். உதயணனின் “இதய வானிலே’ என்ற காவல் ஒன்றும் ‘ஈழ தேவி சஞ்சிகையில் வெளிவந்தது.
பொன்னுத்துரையின் ‘தீ’
“பணியாரமில்லாத சலசலப்பிலும் சமயா சமயங் களில் ஈடுபடுவதன் விளேவாக, "பிரச்னேயாளர்" என்று ஒரு "பழிகரப்பான ஸ்து தி’க்கு இலக் காகிவிட்ட போதி லும், இலக்கியத் துறையிற் 'கை வைத்து முன்னேறக் கூடிய தரத்தனத்தின் சுடுகளேத் தன் எழுத்துக் களிற் காட்டி வரும் எஸ். பொன்னுத்துரை எழுதி: "தீ" என்னும் காவல், இந்த வருஷத்தில் வந்து சேர்க் திருக் கிறது. நூலுருவில் வெளியான ஈழத்து காவல்களில் மிகச் சமீபத்திய நவீன நூல் இதுவே. பொன்னுத் துரையின் பல்வேறன திறமைகளையும் புலப்படுத்திக் காட்டுகிற இந்த காவல், காவலுக்குரிய உருவ அமைதி கள் நன்கமையப் பெற த போதிலும், கதா வஸ்து வைப் பொறுத்தவரையில், தமிழுக்கு, ஒரு துணிச்சலான முயற்சியென்பதை மறுக்க முடியாது. உடலுறவுப்
 

47
பிரச்னைகளைக் கருப் பொருளாகக் கொண்டெழுந்திருக் கும் இந்த நாவலில், பாலுணர்ச்சி விவகாரங்களைப் பச்சை பச்சையாக வர்ணிக்கும் அதே சமயத்தில், அவற்றுக்குப் பக்குவமானவை போலப் போக்குக் காட்டக்கூடிய அந்தஸ்தையும் கொடுத்து எழுதியிருக் கும் ஆசிரியரின் கெட்டித்தனத்தை ஒரு வகையில் மெச்சலாம், கதாசம்பவங்களின் ருசிப்பிசகான அம் சங்களில் புறப்பற்றக மனம் புதையக் கூடுமானுலும் தி. கதையின் அடி காதமாக இழையோடும் தனி மனித சோகத் தவிப்பிலும் உள்ளம் பற்றுமாறு, ‘தீ’ அமைக் திருக்கிறதென்று சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
ஆளுக்கொரு அத்தியாய நாவல்கள்
பெயர் பெற்ற எட்டுச் சிறுகதையாசிரியர்கள் சேர்ந்து ஆளுக்கொரு அத்தியாயமாக, தினகரனில் “வண்ணமலர்” என்ற நாவலைத் தொடராக எழுதியமை யும், இதேபோல ஐக் து சிறு கதையாசிரியர்கள் சேர்ந்து "வீரகேசரி 'யில் “மத்தாப்பு’ என்ற நாவலேத் தொடராக எழுதியமையும், இந்தக் காலப் பிரிவின் குறிப்பிடத் தக்க நிகழ்ச்சிகள். “மத்தாப்பு” பின்னர் நூலாக வெளி வந்திருக்கிறது.
இவை தவிர, கச்சாயில் இரத்தினம் தினகரனில் எழுதிய “அலைகள்’ என்ற நாவலும், 'விவேகி'யில் எழுதிய 'வன்னியின் செல்வி’ என்ற நாவலும், ‘அன்பு
எங்கே? என்னும் ஒரு தொடர்கதை நாவலும், அருள் செல்வநாயகம் தினகரனில் எழுதிய “மாலதியின் மனே ரதம்” என்ற காவலும், 1953ம் வருஷ ஹர்த்தாலைப் பின்னணியாக வைத்து “காண்டீபன்' என்பவர் “தேசாபிமானி”யில் எழுதிய தொடர் நவின மும் இங்கு

Page 32
43
குறிப்பிட வேண்டியவை. (கச்சாயில் இரத்தினத்தின் **விடிவு நோக்கி" என்ற காவல் இப்போது தொடர் கதையாக வந்துகொண்டிருக்கிறது.)
இவை தவிர, இந்தப் பன்னிரண்டு வருட காலத் தில் வேறு கெடுங் கதைகளும் வெளியாகின. காவல்க ளென்று கருதி வெளியிடப்பட்ட போதிலும், குறைப் பிரசவங்களாகவும் சி ல் ல  ைற க் கதைகளாகவும் அமைந்துவிட்ட இவற்றைப் பின்வருமாறு பட்டியல் போட்டு, விட்டு விடலாம்.
காயல் தாஹிர் எழுதிய “சிந்தித்துப் பார்”. மு. வே. பெ. சாமி எழுதிய 'யார் கொலைகாரன்?”. புதுமைலோலன் எழுதிய “காணிவல் காதலி”, *தாலி’.
தா. சண்முகநாதன் எழுதிய 'கோமதியின் கண uចំ*.
செ. சி. பரமேஸ்வரன் எழுதிய 'கொந்தளிப்பு", * காதல் பைத்தியம்'.
எம். பி. எம். முகம் மதுக்காசீம் எழுதிய “கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு'.
வியா சக விதரணன் எஸ். முத்தையா எழுதிய *காகரிக நிர்மலா அல்லது மலைக் குறத்தி மகள்". வி. ஆ. புரட்சி மணி எழுதிய 'ஈரக் கொலை”. பாத்திமா மொஹிதீன் எழுதிய “கீறு பூத்த கெருப்பு”.
ஹ"செய்ன் எழுதிய “பயங்கரக் கனவு’.
தெல்லியூர் செ. கடராசா எழுதிய “காலேஜ் காதல்”

49
இறுவாய்
1891ல் தோன்றிய 'ஊசோன் பாலந்தை கதை* முதல், இந்த வருஷம் வந்து சேர்ந்த “தீ’ வரை, ஈழத்துத் தமிழ் நாவல்களில் ஏறத்தாழ அனைத்தையும் பற்றிப் புறனடையாகவே இந்தக் கட்டுரையை எழுதி யிருக்கிறேன். இதன் தோற்றுவாயில், “ஈழத்துத் தமிழ் நாவல் பற்றிய பிரஸ்தாபம், இது காலவரை, இவ்வளவே” என்று நான் குறிப்பிட்டவற்றை, முடிந்த முடிபாகக் கொள்ள வேண்டியதில்லை.
சுதந்திரனில் வெளிவந்த “அறிமுகப் படுத்து கிருேம்" என்ற பத்தி போன்ற சிறு முயற்சிகள் சில வற்றிலும், ஆங்காங்கே இரண்டொரு இலங்கைத் தமிழ் காவல்களின் பெயர்கள் வரத்தான் செய்திருக் கின்றன. இத்தகைய சில்லறைக் குறிப்புகளைத் தவிர, ாகமது காட்டுத் தமிழ் காவல்கள் பற்றிச் சற்று முனைப் போடு ஆராய முற்படும் குறிப்புகள் கமக்கு வழி காட்டிகளாகக் கிடைப்பதாயில்லை யென்பதைத் தெரிந்துகொண்டால் சரி.
ஆக, முன் குறித்தபடி, இந்தக் கட்டுரை, ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிப் பின்னர் விரிவாக எவராயி னும் ஆராய்வதற்குத் தூண்டுகோலாகவும், ஒரளவு ஊன்றுகோலாகவும் அமைந்திருந்தால், தற்போதைக்கு அது போதும்.

Page 33
அனுபந்தம் 1
(ஈழத்துத் தமிழ் காவல்களின் கடை எவ்வாறு காலப் போக்கில் மாற்றம் பெற்று வந்ததென்பதை, இங்கு ஆங்காங்கே தேர்ந்தெடுத்துக் காட்டியிருக்கும் பல்வேறு காவல்களில் வரும் வசனங்களின் செல் கதி" யிலிருந்து கண்டு கொள்ளலாம்.)
எஸ். இன்னுசித்தம்பி எழுதிய *ஊசோன் பாலங்தை கதையிலிருந்து: (1891)
உலகின் கண்ணே உயர்வுற விளங்கும் அலு மான்ய வென்னும் பொலிவுறு தேசத்தில் அரசர் குலத் தில் அதிக சங்கைபோங் த பெற்றேரால் அலெக்சாந்தர் என்பவர் பிறந்து, சிறுவயதில் அவருடைய அன்னை தந்தை மரணமடைந்த பின் பல சிற்றரசர்களைத் தமக் குத் கீழாகக் கொண்ட பெரிய அரசர் என்ற கருத்துள்ள எம்பரதோர் என்னும் உத்தியோகம் பெற்று அவ்
· ଦ୍ଵy, ୩] அரசாட்சி செய்து வந்தார். மற்ருெருபந்தி: (1891)
காம் மன்றல் செய்ய உங்களுக்கு விருப்பமானுல் . உங்கள் விருப்பத்தின்படி புத்தி விமரிசையுடையவ

5
:ளான ஒரணங்கைத்தேடி வாருங்களென்று பிரதிவாதித் தார். இந்த வாக்கையவர்கள் கேட்டவுடன் ஆதித்த னைக் கண்டலர்ந்த சரோருகம் போல் இருதயம் மலர்ந்து, மனேகரமாய்த் தங்களுக்குள் வினவிச் சருவேசுவரனைத் துதித்துச் சக்கரவர்த்திக்குச் செய்ய வேண்டிய ஆசார நமஸ்காரங்களையும் செய்து தங்கள் தங்க ளகத்துக் கே கிஞர்கள். அப்படியே அவர்கள் கூடி வீரர்களில் அதிக சங்கை போர்ந்தவர்களும் மிகச் சாமர்த்திய கெம்பீரமுள்ளவர்களுமான பன்னிரு தானதிபதிகளைத் தெரிந்து அரசனுக்கிணங்கிய வாலிபப் பெண்களிருக்குமிடங்களிற்போய் விசாரித்து வாருங்களென ச் சொல்லி யனுப்பிஞர்கள். ۔
த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய *மோகளுங்கி'யில் வரும் ஒரு பாடல் (1895)
நீதி தவறத் தருமம் நிலைகுலையச் சாதிகுலம் பிறப்பென் றெண்ணித் தடுமாறும் பேதையேம் எம்பால் இரங்குதியாற் பேரறிவின் சோதியே நின்னைத் தொழுதேம் தொழுதேமால்.
அமா. சிவராமலிங்கம் பிள்ளை எழுதிய
*பூங்காவனம்” நூலிலிருந்து (1980)
1584-ம் இடு) ஆடி மீ 24வ புதன்கிழமை இரவு ஏழரை மணியளவில் வண்ணை மாநகரில் 1-ம் குறுக் குத் தெருவில் 82-ம் இலக்க வீட்டுக்குச் சுமார் கால் மைல் தூரத்தில் சுமார் பதினு று வயசுடையவளும் ஆபூரண சந்திரன் போன்ற முகத்தையும் சைவலத்தை யொத்த கூந்தலையும் மூன்றம் பிறையையொத்த நுதலையும் கயல்மீன் போன்ற கண்களையும் வள்ளியிஇல

Page 34
52
போன்ற காதுகளையும் பவளத் துண்டம் போன்ற அதரங்களையும் எட்பூவை நிகர்த்த காசியையும் கண்ணுடி போன்ற கபோலங்களையும் வலம் புரிச் சங்கனைய கழுத்தையும் மூங்கில் போன்ற தோள்களை யும் கரும்பையொத்த முன் கைகளையும் தாமரை மலரை யொத்த அங்கைகளையும் செவ்விளநீர் போன்ற தனங் களையும் ஆவிலை போன்ற வயிற்றையும் உடுக்கை நிகர்த்த இடையையும் அலவனை நிகர்த்த காற்சிப்பி களையும் இளவரால் போன்ற கணுக்கால்களையும் படம் போன்ற பாதங்களையும், வட்ட மதி போன்ற ாககங்களையும் உடையவளுமான ஒரு பெண்மணி இட்டடி கோவ எடுத்தடி கொப்பளிக்க நடந்துவரும் போது, எதிர்முகமாகச் சிறிது தூரத்திற் சம்பாஷித்துக் கொண்டு வந்த இரு துஷ்ட வாலிபர்கள் அப்பெண் மணியைக் கண்டு மதுவருந்திய மயக்கத்தினுல் அறிவு: மயங்கித் தள்ளாடி அவ்விடம் வந்து அவளைத் தூக்கிக் கொண்டோடுதற்கு எத்தனித்தார்கள்.
நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர் எழுதிய *சாவித்திரி'யிலிருந்து (1914)
“இன்னடி சில் ւյé 52s" այլb தாமரைக் கைப் பூநாறும் செய்ய வாய் மக்களை"யில்லாத மனை என்ன ம2ன? மக்கட் செல்வம் இல்லாதார் செல்வம் என்ன செல்வம்? மக்கள் மெய் தீண்டி இன்பம் அடையாத யாக்கை என்ன யாக்கை? குறுகுறு நடக்கும் கோமக் கள் பால் வாய்ச் சிறு குதலை கேளாச் செவி என்ன செவி? இம்மையிலே இன்பத்தைத் தரு வதும் மறுமையிலே சுவர்க்கத்தைத் தருவதும் மக்கட் பேறேயாகும். ஒருவன் சத்திய விரதம் உடையவ னயினுமென்? தானம் தவம் முதலிய கல்லொழுக்க

53
முடையவனுயினுமென்? அவற்றல் அவன் பயன் அடைவதில்லை. மக்கட் பேற்றினுலன்றே அவன் பெரும் பயனடைகிறன். கற்றவர்கள் சபைக்கு அலங் காரத்தைக் கொடுக்கின்றர்கள். சூரியன் ஆகாயத்தை அலங்கரிக்கின்றன். தாமரை வாவிக்கு அழகைக் கொடுக்கின்றது. அதுபோல மக்கட் செல்வமே இல் வாழ்க்கைக்கு அலங்காரமாயிருக்கின்றது.
இடைக்காடர் எழுதிய *சித்தகுமாரன்” நூலிலிருந்து (1925)
சித்தகுமாரன் தான் கற்ற சாத்திரங்களில், சாங்கி பர்களாற் செய்யப்பட்ட தர்க்க சாஸ்திரத்துக்கும் தத்துவ சாஸ்திரத்துக்கும் நிகரான சாஸ்திரங்கள் எத்தேசத்தாராலும் எச்சாதியினராலும் ஆக்கப்பட வில்லையென்றும் வேதாந்திகளால் இயற்றப்பட்ட தத்துவ சாத்திரத்துக்கு இணையான சாத்திரமுமங்ங் னமே யென்றும், சைவ சித்தார்க்திகளாற் செய்யப் பட்ட ஒழுக்க நூலுக்குச் சமமான ஒழுக்க நூல் எச் சமயத்தாராலும் செய்யப்பட வில்லையென்றும், சோதிட சாத்திரங்களில் இந்தியரே நிபுணரென்றும் ஐரோப்பிய அமெரிக்க பண்டிதர்கள் வைத்திய சாத்தி ரத்தில் இன்னும் பூரண ஸ்திதிக்கு வரவில்லையென் றும், ஐரோப்பா, அமெரிக்கா தேசங்களில் காடி சாத் திரம், கர சாத்திரம் முதலியன காணப்படவில்லை யென்றும் அவைகளைப் பற்றிய எண்ணமே அத்தேசத் வர்களுக்கு இன்னும் உதிக்கவில்லையென்றும் கண் டார். இன்னும் மனுஷருக்கு லெளகீகத்தில் தேவை யான அநேக சாத்திரங்கள் பூர்வ இந்தியர்களுக்குள் இருந்தன என்றும் அவைகள் ஐரோப்பா அமெரிக்கா
FFー4

Page 35
54
தேசங்களிலுள்ளவர்களுக்கு இன்னும் மனதிற் புலப் படவில்லை யென்றும் தெளிந்தார்.
இலங்கையர்கோன் எழுதிய முதற் காதல்? என்னும் மொழிபெயர்ப்பு நூலிலிருந்து (1942)
இளமை! ஒ இளமையே! உனக்கு அச்சம் என்பது இல்லையா? நீ ஒன்றையும் பொருட்படுத்த மாட்டாயப் உலகத்திலுள்ள சகல செல்வங்களுக்கும் அதிபதி நீ துயரமும் ஏக்கமும் உன்னே வருத்துவதில்லை. அவை உனக்கு மகிழ்ச்சியையே கொடுக்கின்றன. நீ கொண் டிருக்கும் கர்வத்துக்கும் ஓர் அளவில்லை. அதனல் உன் நாட்கள் ஒவ்வொன்றகத் தேய்ந்து மறைந்து போவது கூட உனக்குத் தெரிவதில்லை. உன் சம்பத்து எல்லாம் உருகி அற்றுப் போகின்றது. தீயிற்பட்ட மெழுகு போலவும் உருகுகின்றது. ஒருவேளை வருங் காலத்தைப் பற்றி யோசிக்காமல், நிகழ் காலத்தையே கிலேயுள்ளதாக மதித்து, எல்லாம் உன் வல்லமைக் குள் அடங்கியதுதான் என்று கர்வம் கொண்டு உன் செல்வம் அனைத்தையும் காற்றிலே அள்ளித் தூற்றும் உன் கவலையற்ற மனப்பான்மை ஒன்றில் தான் உன் பெருமை தங்கியிருக்கிறது போலும் 1
அ. செ. முருகானந்தன் எழுதிய 'புகையில் தெரிந்த முகம்’ எனும் காவலிலிருந்து (1950)
அமாவாசை வர்ந்த பதின் மூன்றம் காளிரவு. செக சோதியான நிலவு காயும் காலம். யாழ்ப்பாணத்தின் வடகோடியிலே பரந்து கிடக்கும் அந்த நீண்ட மணற் பிரதேசத்தை பகல் வேளையில் தகிக்கும் வெய்யின்

55
அக்கினிக் குண்டமாகவே மாற்றிவிடும். வளர்பிறை காலத்து இரவுகளிலோ நிலைமை எதிர்மாறகவிருக்கும். வெண்மணற் பிரதேசம் முழுவதிலும் சந்திரன் தனது அமிர்த கிரணங்களே வாரி இறைத்து அதை ஒரே குளிர்ச்சி மயமாக்கிவிடும். கண்ணுக்கெட்டிய தூரம் பாற்கடலேப் போலப் பரந்து கிடக்கும் ஒரே மணல் வெளி. அந்த வெளியை இரண்டாகப் பிளக் துசெல்லும் தெரு வீதி வழியே நிலாக் காலத்தில் மாட்டு வண்டி பிர யாணம் செய்வதில் ஒரு தனி இன்பம் உண்டு. அந்த இரண்டுக்குமே ஒரு தனிப் பெருத்தம் என்று சொல்ல வேண்டும், வருஷம் முந்நூற்றி அறுபத்தைந்து காளும், மண் கிண்டி, தண்ணிர் இறைச் சூ, களே பிடுங்கி அலுத்துப் டோகும் தோட்டக்காரனுக்கு மனச் சந்தோஷத்துக்கும் ஆறுதலுக்கும் ஏற்ற ஒர் அருமை யான பிரயாணம் இது. வழி கெடுகிலும் பூமியைத் தோய்க்கும் பால் போன்ற வெண்ணிலவு. வானமும் பூமியும் ஒன்றகும் ஒரே வெளி. இவைகளைக் கடந்து போய்க் கோயிலே அடைந்தால் அங்கேயும் கோடிஐலத் சுற்றிலும் வெண்மணல் திட்டியும் பால் நிலவும் தென்றற் காற்றும் தான். கூட, கோயிலிலிருந்து காத சுரம் இன்னிசையைப் பிழிந்து மிதந்துவரும் தென்ற ஒல அனுப்பிக் கொண்டிருக்கும். மனித உள்ளத் தின் குதூகலத்துக்கு இன்னும் என்ன வேண்டும் ஒ
அ. மரியதாசன் எழுதிய *பனை நாடு அல்லது பிளந்த உலகம்’ என்னும் நூலிலிருந்து (1953)
காலை ஆகிறது. வானிடை முகில் ஒன்றும் இல்லை. செஞ்ஞாயிறு குண கடலினின்று பரிதியாய்க் கிளம்பு

Page 36
56
கின்றது. பெளவத்தில் அங்கொன்று இங்கொன்ரூய்: மிதந்து செல்வன யாவை?
அ."தோர் ஆவின் பிணம் இ.தோர் ஆட்டின் உடல் முகம் வானம் பார்த்தாற்போல் செல்வது ஒர் அரிவையின் பிரேதம் குப்புற மிதந்து துவள்வது ஒர் ஆடவனின் உயிர் நீங்கிய யாக்கை
மிதக்கின்ற பனை, தென்னேகளுக்கு ஒரு கணக்கே இல்லை. ஆனற் சில பனைகளின் முடிகளே தென்படு கின்றன. இவை மிக உயர்ந்தனவும் இன்னும் நிலம் பெயராதனவுமாய் இருத்தல் கூடும்.
வே. தில்லைநாதன் எழுதிய அனிச்சமலரின் காதல்’ எனும் நாவலிலிருந்து (1953)
அனிச்சம்.அன்றையத் தினமிருந்த அழகை. எளிதில் விவரிக்க முடியாததாயிருந்தது. நீண்ட வடம் போல் பின்னித் தொடை வரைக்குங் தூங்கிய கூக் தலும் சிறந்த கெற்றியும் அகண்ட வாள் போல் கண் களும் மெத்தென்னும் மார்ந்தளிர் மேனியும் முத்துப் போல் பற்களும் அன்ன கடையும் காதில் கண்ணைக் கூசும்படி ஜொலிக்கும் வைரத் தோடும் மார்பில் முத்து வடமும் உடையவளாய் வந்து சபையின் கண் இருக்தனள். அத் தருணம் வந்த மகான்களில் அயல் கிராமத்தில் நீதவானுயிருக்கும் ஒரு வாலிபரும் வங் தார். அவர் ஆடவர்களில் மன்மதன் போல் பார்க்கிற வர்கட்கெல்லாம் கண்ணைத் தைக்கும்படியாய் இருந் தார். பொன்னிற மேனியும் கருமையான தலைமயிரும் அகண்ட கெற்றியும் பார்க்கிறவர்களை ஊடுருவிச் செல்லத்தக்க கண்களும் சிறந்த அலங்காரமான முக

57
முடையவராய் அனிச்சமலருக்கு அருகாமையில் அமர்ந்
திருந்தார்.
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை எழுதிய * வாழ்க்கையின் வினுேதங்கள் என்னும் நாவலிலிருந்து (1954)
ஒரு நாள் கொம்பனித் தெருவிலுள்ள வறிய வீடொன்றிற்கு கான் போனேன். அத் தெருவுக்கு அன்றுதான் முதன் முறை போனுேம். அங்கு போன தும் அத் தெரு இருந்த நிலையைக் கண்டு விறைத்துப் போனேன். அத் தெருவைப் பற்றிக் குற்றமாய்க் கூற எனக்கு விருப்பமில்லை. அங்குள்ள வீடுகள் மிகப் பழுதான நிலையில் இருந்தன. சில மாதங்களில் அவற்றை நகரசபையார் இடித்துவிடத் தீர்மானித் திருந்தனர். அங்கு காற்றேட்டமில்லை. சூரிய வெளிச் சத்தைத் கனவிலும் காணமுடியாது. அத் தெரு இருந்த பகுதி கொழும்புக் கோட்டைக்கு அணித்தா யிருந்த போதிலும் கொழும்பு ககரவாசிகள் அதைச் சிறிதேனும் அறியார். அத் தெருவுக்குத் தார் போட் டிருந்ததோ என்னவோ எனக்கு நினைப்பில்லை. ஆனல் அங்கு வைக்கோற் துண்டுகளும் பலவகையான அழுக் (கப் பொருள்களும் நிறைந்து நிலத்தை மறைத்தன. தெருவே வாழிடமாகக் கொண்ட வறிய சிறு குழந்தை கள் அங்குள்ள சேற்றிலே உருண்டு விளையாடித் திரிந்தனர். வலது பக்கமும் இடது பக்கமும் வீடுகள் நிறைந்திருந்தன. அவை யாவும் உயர்ந்து அழுக்குப் படிந்து கிடந்தன. அவ் வீடுகளின் சாளரங்கள் திரைச் சீலைகளை ஒருபோதும் கண்டறியா. திரைச் சீலைகளுக் குப் பதிலாக அவை ஒவ்வொன்றிலும் கிழிந்த கந்

Page 37
58
தைகள் தொங்கின. அக் கக்தைகள் யாவும் எப்போது அங்கு காற்று ஒரு சிறிதாவது வந்து தம்மைக் காய வைக்குமோ என்று பொறுமையோடு காத்துக்கொண் டுருந்தன.
கே. வி. எஸ். வாஸ் எழுதிய *குந்தளப் பிரேமா"விலிருந்து (1951)
இந்த விளம்பர யுகத்தில் கம்பனும் காளிதாசனும் மறு ஜென்மமெடுத்து வந்தால் கூட ஒரளவு விளம்பர மில்லாவிட்டால் உலகம் அவர்களே மகாக விக ளென்று :ங்கீகரிக்காதென்று ரமணி அடிக்கடி சொல்லுவான். “தமிழ்நாட்டையே எடுத்தக் கொள்ளுங் களேன்! இன்றும் கம்மிடையில் எவ்வளவு மகாகவிகள்" இருக்கிருர்கள். எவ்வளவு அற்புதமான கவிதா மாலை க2ளப் ட2னர் ஆ தமிழ் பொழியை வளம்பெறச் செய் கிறர்கள்! அவர் ச2ள நீங்களும் கானும் பெரிய கவி ஞர்களென்று சொல்லிவிட்டால் உலகம் ஒப்புக் கொண்டு விடுமா? அவர்கள் செத்துச் சாம்பலான பிறகு ஏதோ ஓரிரண்டு பத்திரிகைகள் அவர்களது பழைய கவிதைகளை ரசித்துவிட்டுப் புளுகுகின்றன. உடனே ஒரேயடியாக மற்றப் பத்திரிகைகளும் இக் திரன் சந்திரன் என்று வானளாவிப் புகழ்கின்றன. பிறகு மாண்ட கவிகளுக்கு ஞாபகச் சின்னமாக மண்டபம் கட்டுவோமா, ஸ்தூபி நிறுத்துவோமா என்று கூட்டம் போட்டுக் கூடி யோசிக்கிறர்கள். இந்த அளவு அந்தக் கவிஞன் உயிருடன் இருக்கும் பொழுதே ஏற்படுவது தானே? வறுமையில் வயிற்றைச் சுருக்கிக் குடிக்கக் கூழுமில்லாமல் செத்து மடிகிறன் தற்காலக் கவிஞன. அவனைப் போற்றி ஆதரிக்க

59
ஆளில்லை. இதை எதற்குச் சொல்லுகிறேனென்றல் இன்று கன்ன பின்னு என்று ஏதோ எழுதித் தள்ளும் அரை குறைப் பேர் வழிகளைக் கூட விளம்பரம் என்ற மகா சக்தி மகா மேதை யாக்கி விடுகிறது. விளம்பரம் தான் இன்றைய வர்த்தகத்தின் உயிர் நாடி.." என்று ரமணி ஒரு குட்டிப் பிரசங்கம் செய்வான்.
எம் ஏ. அப்பாஸ் எழுதிய 'இவளைப் பார்’ நாவலிலிருந்து (1953)
ாகாளை திருபணம்1-அப்படி நினைத்துக் கொண்டு தான் வந்தார் சலீம். பூட்டிக் கிடந்த கதவைத் தட்டினர். ஆம், வை:ராக்கிய மென்னும் பூட்டால் பூட்டப்பட்டிரும்க ாேன் இதயக் கதவிலும் தான் அந்தத் தட்டு மோதியது! குதித்தோடிப் போய்க் கதவைத் திறக்கத் துடித்தன காதலும் கையும்! சிறிது ாேகரம் சிரமப் பட்டு, உணர்ச்சிகளை யெல்லாம் அடக்கிக் கொண்டு மெதுவாகச் சென்று கதவைத் திறந்து விட்டு விர்ரென்று ஓடி வந்து கட்டிலில் விழுந்து விம்மி விம்மி அழுதேன். விஷயம் விளங்காமல் விழித்தார். ான்னை அள்ளியெடுத்தார். அன்பொழுகப் பேசிஞர். அரும்பாடுபட்டு 666 கரும்பு மனத்தை இரும்பாக கான் மாற்றிக் கொண்டதை அவர் எப்படி அறிவார்? புழுவாகத் தடித்தார். கேள்விகளை அடுக்கினர்முடுக்கினர். அவருடைய நிலை பார்ப்பதற்கே பரிதமாக இருந்தது. அப்படியே கட்டித் தழுவி எல்லாவற்றை யும் சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டு மென்று மனம் துடித்தது. கண்களைத் திறந்தேன். ஆ1 அந்தத் துர்ப்பாக்கியத் தாயின் சோகச் சித்திரம் தோன்றி என்னே எச்சரித்தது. அன்பும் தியாகமும் காதலும்

Page 38
60
கடமையும் குமுறிக் கொந்தளிக்கும் உள்ளத்தோடு போராடிக் கொண்டே, போட்டு உடைத்தேன் அந்த அணுகுண்டை
“தேவன்-யாழ்ப்பாணம்’ எழுதிய *கேட்டதும் நடந்ததும்' நாவலிலிருந்து (1956)
இப்படி எத்தனையோ நினைவுகள். அழியாத கேல் இன்பமூட்டும் நினைவுகள். சோலையாய் வாழ்வை ஆக்கியவை அவை தாம். நிறைவை உண்டு பண்ணிய தும் அவை தாம். ஆனல் துன்பங் தந்து துடிக்கச் செய்வதும் அவை தான். ஏதோ குறைகிறதே என்று ஏங்கச் செய்வதும் அவை தான். கொல்லுவதும் அதே நினைவுகள். செழிக்கச் செய்வதும் அதே நினைவுகள். இத்தனையும் என்னைப் புது மனிதனுக்கி விட்டன. வகுப்பில் மட்டுமென்ன, பார்த்த இடமெல்லாம் அழகைக் கண்டேன். இ ன் பத்  ைத க் கண்டேன். ஒரு கவிஞன், அழகு எங்கெல்லாமிருக்கிறதோ அங் கெல்லாம் தேடித் திரிக் து கண்டு பிடித்து ஆராதிக்கி றேன், அனுபவிக்கிறேன் என்று பாடியிருக்கிறன். ஆஞல் எனக்குத் தேடித் திரிய வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. பார்க்குமிடங்களெல்லாம் ‘கந்தலாலா, உன்றன் பச்சை நிறக்தோன்றுதையே கந்தலாலா" தான்.
ஹமீதா பானு எழுதிய *சதியில் சிக்கிய சலீமா’விலிருந்து (1954)
*சரி அம்மா! நான் படுத்துக் கொள்ளுகிறேன். நீ போய்த் தூங்கு' என்று தாயாரை அனுப்பி விட்டுச் சலிமா படுத்துக் கொண்டாள். தான் கண்ட கனவு

6.
கனவாகுமா என்பதிலேயே கவலை கொண்டு கருத்தைச் செலுத்திக் கொண்டு புரண்டு புரண்டு கிடந்தாள்.
காகம் கரைந்தது, கருமை வெளுத்தது. கண் விழித்துக் கனவேகத்தில் காலைக் கடன்களை முடித்து விட்டாள் சலீமா, வயிற்றிலே வளர்ந்து வரும் சிசுவின் வரப்பிரசாதமான குமட்டல், வாந்தி, மயக்கம் இவை களும் கூடவே கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தன. அவைகளையெல்லாம் அவ்வப்பொழுது சர்க் தர்ப்பத்திற் கேற்ப மழுப்பி மறைத்து மந்திர ஜாலம் செய்து *கொண்டாள். அவளது வெள்ளையுள்ளத்தைப் போன்ற வெண்ணிற ஒளி பரப்பி சூரியனும் வெளிக்கிளம்பி வந்து கொண்டிருந்தான்.
காயல் தாஹிர் எழுதிய *சிந்தித்துப் பார்’ நூலிலிருந்து (1954)
சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் ‘டாங். டங்" *கென்று ஆறுமுறை அடித்தது. கதிரவனின் பொற் கதிர்கள் கீழ் வானத்திலே தெரிந்து, பின் சற்று கேரத் திலே அக் கதிர்கள் பச்சைக் கம்பளம்போல் படர்ந் திருந்த பசும் புல்லின் மேல்பட்டு, அதில் ஒட்டிக் கொண்டிருந்த பனித்துளிகளே வெண் முத்துக்களாக் கின. ஆதவன் வரவைக் கண்டு 'தன் பகைவன் வந்து விட்டான். இனி நமக்கு மதிப்பில்2ல" என்றெண்ணிய இருள் மெள்ள மறைந்தோடியது. காதலனைக் கண்ட் அல்லிமலர் ஆனந்தத்தால் தன்னிதழ்களை விரித்தது. மற்ற மலர்களும் தங்கள் இதழ்களை விரித்தது, வண்டு களை வா வா என்றழைப்பது போலிருந்தது. பறவை இனங்கள் இனிமையாகப் பாடிக்கொண்டு இறைவனைத் தொழுதன.

Page 39
62
வியாசக விதரணன் எஸ்.முத்தையா எழுதிய? *காகரிக நிர்மலா அல்லது மலைக்குறத்தி மகள்’ நூலிலிருந்து (1955
அவள் மனபேதி பரவசமடைந்து “என்ன ஆனங் தம் 1 என்ன அழகு ! காதல் என்பதும் இதுதான ? காதல் லீலை என்பதும் இதுதான ?’ என்ற சொற்கள் அவளை அறியாமலே வெளியாகியது. பக்கத்தில் படுத்திருத்த நூர்ஜா திடுக் கிட்டெழுந்து உட்கார்ர் தாள். நிர்மலா, கிர்மலா என்று கூப்பிட்டும் பார்த் தாள். சத்தமில்லை, அதே சமயம் நிர்மலாவின் வாயி லிருந்து சந்தனக்குமார் சொன்ன :
* யாமினி அரா மின்னுக் கலவி, கற்றவர் ஞைஞை
மனன மாறி தராக் கிரகி, மறுதலைப் பாவை
வாழ் பாழ்'
என்றது வெளியானது. லைலாவும் அதை இரண்டு மூன்று தரம் பாடமாக கிக்கொண்டாள்.
மு. வே. பெ. சாமி எழுதிய
*யார் கொலைகாரன்?’ நாவலிலிருந்து (1954)
ஏழை என்றல் இன்பமாளிகைக்குப் பணக்காரன் ஏறிச் செல்லும் ஏணி என்று தானே பொருள். அந்த ஏழைக்குப் பசி என்ா?ல் அவர்களுக்குப் பன்னீர் இறைத்ததைப்போல, அவன் பட்டினி என்றல் பரவச மடைவார்கள். மரணம் என்றல் மனிதனுக்கு நியமிக் கப்பட்ட நித்திய ஜீவயாத்திரை என நீட்டோலே வாசிப் பார்கள். சிந்தும் கண்ணிர் அவர்களின் தேள் கொட்டிய கண்களுக்கு விருந்தாகக் காட்சியளிக்கும். பாட்டாளி

63
என்றல் காலடியில் வீழ்ந்துறங்கும் நாய்கள் என வரட்டு வேதாந்தம் பேசுவார்கள்.
எம். பீ. எம். முகம்மதுக் காசிம் எழுதிய "கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு நூலிலிருந்து (1955)
குனிர்த முதுகு நிமிராமல் முட்டை சுமக்கும்
பாரத இந்தியா ஈன ) பாக்கியங்களைப் பார் பார் ! அவர்களல்லவா இலங்கை மாதாவாகிய என் 2னப் பல வகையாலும் சிறப்பித்துச் சீர்ப்படுத்திச் சிலோன் என்று ஒரு hாமத்துடன் உலக மெல்லாம் புகழடையச்
w
செய்தார்கள். கிழ்த் திசையின் முத்தென்று பேர்வர்ந்தது
எனக்கு, இக் திய 1 க்கள் செய்த அழியாத அலங்காரச் சேவையர்லென் ருல் அது மிகையாகாது மகனே ! எனக்கு எத்தனை பெயர் கவனி. பவளத்தீவு, காகதீபம்,
இலங்காபுரி, சேரர் தீவு, சிலோன் இப்படிப் பல பவிசுப்
பெயர்கள் வரக் காரணம் இந்தியன் இயற்றிய சிங்கா ரச் சேவையின் சிறப்பு. அவர்களே இங் காட்டைவிட்டு நீங்களகற்றினுல் நாலே மாதத்தில் நானும் என்னுடைய ாகாதக்கான அழகும் கலிந்து போய்விடும்; சந்தேக மில்லை.
வி. லோகநாதன் எழுதிய “பிரேமாஞ்சலியிலிருந்து (1954)
என் 2னப் பொறுத்த வரையில் காதலே வாழ்வுக்கு -
அடுத்தபடியாகவே வைக்க விரும்புகிறேன். யோசித்
துப் பார்த்தால் காதல் வாழ்க்கையாகாது. வாழ்க்கை:
இல்லாவிட்டால் காதல் ஏது ? ஆனல், காதலுக்கோ
வாழ்வு முழுவதையும் தின்னும் சக்தி உண்டு என்பதை, ஒப்புக்கொள்கிறேன். அதனுல்தான் காதலைப் பிரதான'

Page 40
64
ஈமாக்கிக் கொள்ளக் கூடாதென்று கூறுகிறேன். வாழ்க்கையைப் பரிமளிக்க வைக்கக் காதல் அவசியம் என்பதை கான் மறுக்கவில்லை. காதல் மிகமிக அவசி யம்தான். ஆணுல், அது வாழ்வில்லை, ஒர் அம்ச மாகவே இருக்க வேண்டும். வாழ்வோ பரந்தது. காதலுக்காக இந்த வாழ்வையே பலியிடுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம் மாத்திரமன்று; அப்படிப் பலி -யிடுவது அந்தக் கடவுளுக்குக் கூட அடுக்காதென்றே நினைக்கிறேன். காதலுக்காக வாழ்க்கையை - மகா சிரேஷ்டமான உயிரையே - பலியிடும் காதலர்க2ளக் காவியங்கள் புகழ்ந்துகொண்டேயிருக்கட்டும். அந்தக் காவியக் கற்பனைகளைப் படித்துவிட்டு காமும் காதலுக் காக வாழ்க்கையைப் பலியிட வேண்டாம்.
வரதர் எழுதிய *வாழ்க நீ சங்கிலி மன்ன!” நூலிலிருந்து (1957)
போர் ! தின வெடுத்த தோள்களைத் தட்டித் திரண் டெழுந்தனர் தமிழ் வீரர். போர்ப் பறை ஒலித்தது. வீரர்கள் ஆரவாரம் அதைவிடப் பெரிதாய் முழங் கிற்று. வில்லும், வேலும், வாளும், ஈட்டியும் தாங்கிய வீரர் படை அணியணியாகச் சென்று பறங்கியர் பாச றையை கெருங்கிற்று, பறங்கியர் படையும் தயாராக எதிர் வந்தது. அவர்கள் கையிலே துப்பாக்கிகள். ஒருவன் இலக்கு வைக்க இன்னுெருவன் கெருப்பு வைத்து வெடிக்கச் செய்யும் துப்பாக்கிகள், தமிழர் படையிலிருந்து அம்புகளும் கஞ்சூட்டிய ஈட்டிகளும் கவண் கற்களும் சக்கரங்களும் பறந்து பறந்து பறங்கி :யரைத் தாக்கி வீழ்த்தின. பறங்கியர் துப்பாக்கிச் ஆடுகளும் தமிழ் வீரர்களைத் துளைத்தன.

65
வ. அ. இராசரத்தினம் எழுதிய *கொழு கொம்பு காவலிலிருந்து (1959)
நீண்ட இரவின் மெளனம் அவனுக்கு இன்ப* மாகவே இருந்தது. மலைகாட்டிலே கொட்டும் மழையும் பனியையும் அவனுல் அனுபவிக்க முடிந்தது. வெள் ளிக்கம்பிகளாய் ஒழுகும் மலையருவிகளின் இன்பத்தை அவனுல் நுகர முடிந்தது. மாலை மதியத்தின் குளுமை யையும் வேனிற் காலத்து வனப்பையும் அவனுல் உணர முடிந்தது.
தனிமையின் கொடுமையையும் அதன் பயங்கரத் தையும் மறக்கச் செய்து தன்னை நிலத்திலே கன்ற க. வேரூன்றி நிலைக்கச் செய்துவிட்ட புருஷன் என்ற கொம்பிலே அந்தக் கொடியும் செழிப்பாக படர்ந்தது. காளுக்கொரு முகையும் தளிரும் விட்டு ஆனந்தமாகப் படர்க் து அக்கொடி தென்றலில் ஆடிற்று. வேனிலில் விகசித்தது. நிலவிலே குளிர்ந்து ஒளிர்ந்தது. காலம் வரும்போது அது பூக்கும், காய்க்கும். தன் இனத் தைப் பெருக்கியே தீர்க்கும்.
தா. சண்முகநாதன் எழுதிய கோமதியின் கணவன்’ என்ற நாவலிலிருந்து (1959)
இரவில் தாயின் ஒருபக்கத்தில் சோமுவும் மறுபக் கத்தில் சோமுவின் அக்காவும் படுத்துக்கொள்வார்கள். தன் பக்கம் திரும்பிப் படுத்துக்கொள்ளும் படி சோமு
வின் அக்கா சொல்லுவார். என் பக்கம் திரும்பிப்
படுத்துக்கொள் என்று சோமு கூறுவான். சோமுவின் தாயார் இருதலைக் கொள்ளி எறும்பு போலாவார். மகளைச் சமாதானம் செய்துவிட்டு இவன் பக்கம்

Page 41
66
திரும்பிப் படுத்துக்கொள்வார். மகளும் அட்ம் பிடித் தால் இருவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முறையில் மேலே பார்த்தபடி படுத்துக்கொள்வார்.
ரஸ், பொன்னுத்துரை எழுதிய
தி யிலிருந்து (1961)
இனியவையாகத் தோன்றியவையெல்லாம் துன்பச் பதில் கருகுகின்றன. மங்கையின் மிருதுவான பட்டுக் கன்னங்களை நினைவுபடுத்திய அக்தி வானம், ரிய வாளினல் பிளந்தெறியப்பட்ட முளிமுண்டங் களிலிருந்து பாயும் இரத்தத்தை ஞாபகப்படுத்து கின்றது. வேல் விழி மாதரின் சிங்காரப் போதையூட்டும் கயன சிந்துக்களே மனத்தில் நிறுத்திய விண்மீன்கள், பிணத்தை முழு சாக ஜீரணித்த சிதையிலிருந்து வெடித் துக் கிளம்பும் தீப்பொறிகளே ஞாபகப்படுத்துகின்றது. புன்னகை புரள, லளித, அலே 5ெளிய, தேனூரும் குமரி இதழ்களே நி?னவுறுத்தும் குங்குமச் சிமிழ், போர்க்களம் விட்டோடிய கோழை பின் முதுகில் ஏற் பட்ட ரண காயத்தின் காயலேக் காட்டுகிறது. வளைந்த செப்பு நாணயத்தைப் போன்ற இமைகளின் உட்பக் கம் குடைந்திருக்கும் சின்னஞ் சிறு குகைக்குள் பயப் பிராந்தியுடன் விழிகள் குடியிருக்க மறுக்கின்றன. சொகுஸான பஞ்சு மெத்தை கான் படுத்துக்கொண்ட தும் தீப்பற்றி எரிகிறது. உணர்ச்சிகள் மரத்துப் போகின்றன. சித்தம் குலைந்த பித்த நிலையில்-லில்லி (என் லில்லி 1}; அது என் அழைப்பல்ல. என்னுள்ளி ருந்து, என் னில் வேருக, ஒரு சக்தி அழைப்பது உன் காதில் விழுகிறதா? உன் செவிகள் வானெலிப் பெட்டி களா ? என் தொண்டைக்குள் அஞ்சல் நிலையம் இருக் கிறதா ?

67
இளங்கீரன் எழுதிய 'நீதியே நீ கேள்’ நாவலிலிருந்து (1959)
வயிற்றுக்காக - கூலிக்காக - ஏழைகள் பணக் காரர்களிடம் வேலே செய்கிறர்கள். ஆணுல், அவர்கள் உயிரை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்வதற்கு எவ் வளவு தேவையோ அவ்வளவுதான் அவர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்படுகிறது. மற்றப் பயனெல் லாம் பணக்காரர்களுக்கு - சொத்துக்குரியவர்களுக்குச் சேர்கிறது: அதை அவர்கள் “லாபம்' வருமானம் என்ற பெயரில் தங்கள் கணக்கில் வரவு 50வத்துக் கொள்கிறர்கள். இந்தச் சுரண்டல் முறையிலேயே முழுக்க முழுக்க உளறிப்போன முதலாளி பரமசிவம் பிள்ளையும் தன் கடைச் சிப் பந்திகளின் விஷயத்தில் இப்படித்தான் கடந்துகொண்டாரென்றல் su Gibb) புரத்தை மட்டும் விட்டு வைப் பாரா ? வல்லிபுரமும் அவர் குடும்ப மம் உயிரை மட்டும் சுமந்துகொண்டு திரிவதற்குத் தேவையான தொண்ணுாறு ரூ பாவைச் சம்பளமாகக் கொடுத் துவிட்டு, வல்லி புரத்தி ன் ஒரே சொத்தான உழைப்புச் சக்தியை கல்ல முறையில் தனக் குப் பயன்படுத்திக்கொண்டார். அதனுல், வல்லிபுரத் துக்குப் பிள்ள குட்டிகள் பெருகிய துபோல வருமா னம் பெருக வில்லை. யுத்த காலத்திலே பரமசிவம் பிள்ளைக்கு அடித்த யோகத்தின் நிழல் கூட வல்லி புரத்தின் மேல் விழ வில்2ல.பரமசிவம் பிள்ளே செல்வச் சீமானென்ற அக்தஸ்தை கோக்கி மிக வேகமாக ஓடி ஞர். வல்லிபுரமோ ஒரு அடி கூடப் பெயர்த்து வைக்க வில்லை. நின்ற இடத்திலேயே நின்றன்.

Page 42
அனுபந்தம், 2
1891 முதல் 1962 வரை ஈழத்தில் உருவான தமிழ் நாவல்கள்
வருடம் நூற் பெயர் ஆசிரியர் பெயர்
1891 ஊசோன் பாலந்தை கதை எஸ். இன்ஞசித்தம்பி 1895 மோகனங்கி த. சரவணமுத்துப்பிள்ளே 1904(?) கலாமதி (?) சுவாமி சரவணமுத்து (?) 1905 வீரசிங்கன் அல்லது
சன்மார்க்க ஜயம் சி. வை. சின்னப்பபிள்ளே
இரத்தினசிங்கம்
சந்திரகாசன் கதை 1904(?) அழகவல்லி எஸ். தம்பிமுத்துப்பிள்ளை
1905 (?) சுந்தரன் செய்த தந்திரம்
பரிமளா-ராகவன் 1916 விஜயசீலம் சி. வை. சின்னப்பபிள்ளை
உதிரபாசம் இரத்தினபவானி 9. 1921 கோபால-நேசரத்தினம் ம. வே.திருஞானசம்பந்தப்
s s
29 s

69
1922 மேகவர்ணன் வே.வ. சிவப்பிரகாரம் 1924 காசிநாதன்-நேசமலர் ம. வே. திருஞானசம்பந்த
sia
1924 இராசதுரை செ. செல்லம்மாள் 1924(?) கமலாவதி(?) சபாபதி(?) 1925 நீலகண்டன்
(ஒர் சாதி வேளாளன்) இடைக்காடர் 1925 சித்தகுமாரன் و و s 1927 புனித சீலி Rev. Bro. Guy firsår Gud
1927 சாம்பசிவம் ஞானமிர்தம்
அல்லது தன்னெறிக்
களஞ்சியம் அ. நாகலிங்கம் 1929 சரஸ்வதி அல்லது
காணுமற் போன
பெண்மணி சு. இராசம்மாள் 1930 பூங்கா வனம் DnT. Granu DJ nr tc Giớrši 55 i laiv &isir 1930 தாமோதரம் வ. நெ. பாவிலுப்பிள்ளை 1932 பவளகாந்தன் அல்லது
கேசரி விஜயம் வரணியூர்.ஏ.சி.இராசையா 1934 அரங்கநாயகி வே. ஏரம்பமூர்த்தி 1935 செல்வரத்தினம் வே. க. நவரத்தினம் 1936 அருளுேதபம் அல்லது
சிம்மக்கொடி 1936(?) மாலை வேளை யில்
(மொழிபெயர்ப்பு) 1938 (?) தேவி திலகவதி 1936 காந்த மலர் அல்லது
கற்பின் மாட்சி 可ー5
வரணியூர்.ஏ.சி இராசையா
சி. வைத்திலிங்கம்
சி.வே. தாமோதரம்பிள்ளை

Page 43
70
1988 செல்வி சரோசா அல்லது
நீண்டாமைக்குச் சவுக்கடி எம். ஏ. செல்வநாயகம் 1938(?) இரத்தினவளி அல்லது
காதலின் மாட்சி எச். நெல்லையா 1939(?) சோமாவதி அல்லது
இலங்கை இந்திய நட்பு ss sp 1940(?) காந்தாமணி அல்லது
தீண்டாமைக்குச் சாவுமனி(?) es yo (1940-50) சகடயோகம் கசின்’
s இராசமணியும்
சகோதரிகளும் s
( 1950-60) கற்பகம் s
s சொந்தக் கால் و و (1940-50) விதியின் கை உபகுப்தன்
s வெறும் பான கனக செந்திநாதன் 9. வென்று விட்டாயடி
ரத்ன வரதர் 99 வாழ்க நீ சங்கிலி மன்ன ,
| utafib சம்பந்தன் 9. ரவீந்திரன் *gו לuחr*
s ஆப்பக்காரி ogrupu u 903grupeiro s காதல் உள்ளம் ஜே. எஸ். ரவீந்திரா
s arm-a-war நடேசையர்
இரு சகோதரர் (முடிவு பெருதது) பண்டிதமணி, சி.கணபதிப் பிள்ளை
s

7.
1942 முதற் காதல்
(மொழிபெயர்ப்பு) இலங்கையர்கோன் 罩949 மணிபல்லவம் • தேவன். யாழ்ப்பாணம் (1940-50) வாடிய மலர்கள் s (1950-60) கேட்டதும் 5L西西到中 ss (1940-50) குந்தளப் 9GT forr கே. வி. எஸ். வாஸ் , நந்தினி 9
s தாரிணி by 9 பத்மினி s s புஷ்பமாலா s s ஜம்புலிங்கம் s சாந்திணி s s சிவந்திமலைச் சாரலிலே s (1950-55) மலைக்கன்னி s
s உதயகன்னி s 1951 புகையில் தெரிந்த முகம் அ. செ. முருகானந்தம் 1957 யாத்திரை s 罩9岛3 அனிச்சமலரின் காதல் வே. தில்லைநாதன்
s பூஞ்சோலை கலாநிதி, க. கணபதிப்
[ിങ്ങ്
五954 வாழ்க்கையின் வினேதங்கள் , 1957 பிரேமாஞ்சலி வி. லோகநாதன் 1962 பாரிஸ்டர் சிற்றம்பலம் (1950-55) அன்னபூரணி க. சச்சிதானந்தன்
s ஒன்றரை ரூபாய் க. நாகப்பு 99 ஏழையின் காதல் s 夏954 ്യഞ• ഒ്ഞി தி சண்முக சுந்தரம்
互 953 வாடாமலர் Gson Fep

Page 44
952
1950-5
50-55
9.
9.
s
99
譚 950-55
1955
1950. 60
1 g) 50-55
1953
I 950ー55
950-60
s
s
s
sy
93
ரஞ்சிதம் uortura மிஸ் மஞேகரி நவம் இவளைப் பார் எம். ஏ. அப்பாஸ் மூன்று பிரதேசங்கன் 象多 ஒரே ரத்தம் சி. ஐ. டி. சிற்றம்பலம் sy
சிங்களத்தீவின் மர்மம் s யக் கடையாவின் மர்மம் sy
a-- அ. சிதம்பரநாதபாவலர் சதியில் சிக்கிய சலீமா டி. எம். பீர்முகம்மது
கங்காணி மகள்
தங்கப்பூச்சி இராஜ அரியரத்தினம் தீண்டாதான்
(மொழிபெயர்ப்பு) கே. கணேஷ் பண்டிருளே கே. பீ. முத்தையா காதற் பலி சுதர்ஸன் மரணத்தின் வாயிலில் சாந்தி காற்றிற் பறந்த கருங்காலிக் குதிரை எம். செயினுல் ஆப்தீன்
வீர மைந்தன் சி. சண்முகம் சிங்கை ஆரியன் வெள்ளிவீதியார் கபட நாடகம் வே. க. ட. நாதன் ஒரே அணைப்பு இளங்கீரன் மீண்டும் வந்தாள் 22 பைத்தியக்காரி ss பொற்கூண்டு s கலா ராணி
மரணக் குழி

73
1950-60 காதலன் இளங்கீரன் s ՔեP(Ց ரோஜா s 参多 வண்ணக் குமரி s s காதல் உலகிலே s
s
பட்டினித் தோட்டம் s
** நீதிபதி s எதிர்பார்த்த இரவு 88 } மனிதனைப் பார் 3த gs புயல் அடங்குமா? .9. ל s சொர்க்கம் எங்கே? is is ** தென்றலும் புயலும் s
之 愛 மனிதர்கள்
மண்ணில் விளைந்தவர்கள் ” s நீதியே நீ கேள்! 。罗壶 த9 இங்கிருந்து எங்கே? s s மலர்ப் பலி சொக்கன்
翼96】 செல்லும் வழி இருட்டு 1955-60 கொழுகொம்பு வ. அ. இராசரத்தினம்
s துறைக்காரன் s 96. நெடுந்துாரம் கே. டானியல் 1959 வாழ்வற்ற வாழ்வு சி. வி. வேலுப்பிள்ளை 丑962 வீடற்றவன் s
1955-60 உனக்காக கண்ணே சிற்பி
s
இதயவானிலே உதயண்ன்
s
மனப்பாறை s தீ எஸ். பொன்னுத்துரை 1955-62 வண்ண மலர் எட்டுப் பேர்

Page 45
74
1959-62 மத்தாப்பு ஐந்து பேர்
9. அலைகள் கச்சாயில் இரத்தினம்
፵ዎ s
மாலதியின் மஞேரதம் அருள் செல்வநாயகம்
sy
காண்டீபன் சிந்தித்துப் பார் காயல் தாஹிர் 99 யார் கொலைகாரன்? மு. வே. பெ. சாமி
காணிவல் காதலி புதுமைலோலன் s தாலி 99
多列 கோமதியின் கணவன் த. சண்முகநாதன்
கொந்தளிப்பு செ. சி. பரமேஸ்வரன்
و.9
காதல் பைத்தியம் $yy கள்ளத் தோணிக்குத் எம். பி. எம். முகம்மதுக்
தீர்ப்பு காசிம் நாகரிக நிர்மலா அல்லது
s
மலைக்குறத்தி மகள் வியாசக விதரணன்
எஸ். முத்தையா
ஈரக் கொலை வீ. ஆ. புரட்சிமணி
நிறுபூத்த நெருப்பு பாத்திமா மொகிதீன்
sy பயங்கரக் கனவு ஹ ரசேன்
காலேஜ் காதல் தெல்லியூர் செ. நடராஜா