கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பனியும் பனையும்

Page 1


Page 2

‘மித்ர' வின்
முதல் வெளியீடு

Page 3

எஸ். பொன்னுத்துரை
மித்ர வெளியீடு
375-10 ஆற்காடு சாலை சென்னை - 600024 இந்கியர.

Page 4
முதற் பதிப்பு: நவம்பர் 1992 மித்ர 1 V. உரிமைப் பதிவு விலை ரூ. 32-00
Vee A Collection of Short-Stories
im Tamil Language By S. Ponnut hura i
First Edition st November 1992
Publisher: СмітнRA Publications 375-10, Arcot Road Madras - 600 024 H in dia
Printer : Kokila Sree Printers Madras - 600 094
lllustrators: “Sou”, “Sachi”, “Nathan”, “Sana” & “Veeke” Front Cover : G. Sekar
Price: Thirty two rupees
Pages: 20-228 - 248
Published by: Dr. Pon. Anura
அமைப்பு : இளம்பிறை எம். ஏ. ரஹ்மான்

சமர்ப்பணம்
நான்
நானே யான
கானாக வாழ்
உயிரும்,
உணர்வும்,
தன்னம்பிக்கையும்
per Litau
என் அம்மா
அம்மாக்குட்டி
அவர்களுக்கு

Page 5

பதிப்புரை
தமிழர், திரைகடலோடியும், திரவியம் தேடியது ஒரு காலம்.
தொழிலுக்காக, வசதி-வாய்ப்புகளுக்காகத் தமிழர் புலம் பெயர்ந்து சென்றமை பிறிதொரு கட்டம்.
இன்று, கிர்ப்பந்தங்கள் காரணமாகவும், காலத் தின் கோலங்களாகவும், உலகின் பல்வேறு நாடு களிலும் வாழ்கிறார்கள். காரணங்களை விடுங்கள். தமிழ் பேசும் எல்லைகள் அகலித்துள்ளன என்பது உண்மை. புதிய சூழலிலும் தமிழ் நேசிப்பு உறைய வில்லை. புதிய ஆக்க முனைப்புகளும் அரும்பு வைக்கின்றன. இந்த அரும்புகளின் ஆக்கங்களும் தமிழுக்கு வளமும் வனப்பும் சேர்க்கும்.
தமிழுக்கு எல்லையில்லை. கலைகளுக்கு எல் லையில்லை. தமிழின் புதுப் புனைவுகளுக்கு எல்லை யில்லை. இவை அனைத்தும் செழித்தல் வேண்டும். புது நாடுகளிலே வாழும் தமிழர்களுடைய கலை-இலக் கிய நேசிப்புகளும், உணர்வுகளும், ஆக்க முனைப்புக ளும் கெளரவிக்கப்படுதல் வேண்டும். இத்தகைய சிரத்தைகளுடனும் நிறுவப்பட்டதுதான் மித்ர பப்பி 6f(3asessireio (MITHRA PUBLICATONS).
இந்தப் பதிப்பகம் இளம் எழுத்தாளர்களுடைய படைப்புகளை ஊக்குவிக்கும். பழம் பெரும் எழுத்தா ளர்களுடைய படைப்புகளைக் கெளரவிக்கும். கால ஓட்டத்திலே, சர்வதேச ரீதியாக, அர்த்தப் பொலிவு டன் செயற்படும் ஒரு பதிப்பகத்தின் முன்னோடி யாக இதனைக் கொள்ளினும் பொருந்தும். தேமது ரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்பது பாரதி வாழ்ந்த காலத் திலே ஓர் இலட்சியக் கனவு. ஆனால், இன்று தமிழ் உயர்ச்சியின் அவசிய இலக்கு.

Page 6
VI
வசதியையும் தேவையையும் கருதி என் அப்பா எஸ். பொ.வின் நூல்கள் சில வற்றைத் துவக்க நூல்களாக வெளியிடுவ தில் மகிழ்கின்றேன்.
இந்த "வீ" நூலிலே இடம் பெற்றுள்ள கதைகள் 1966-ம் ஆண்டு தொகுக்கப் பெற்றவை. அதற்கும் முன்னர் இருபது ஆண்டுகள் எழுதியவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்டவை. ஒரு கால் நூற்றாண்டுக்கு முன் நிலவிய ஈழத்துத் தமிழ் மக்களின் வாழ்வையும் வளத்தையும் தரிசிக்கும் முக மாகவும், இன்றைய சந்ததியினர்-ஏன் எழுத்தாளர்களுங்கூட-தரிசன பயன் பெற ஏதுவாகவும் இது வெளியிடப்படுகின்றது.
அங்கிய நாடுகளைத் தாயகமாக்கி வாழும் எழுத்தாளர்கள், இலக்கியச் சுவை ஞர்கள். தமிழ் உபாசகர்கள் ஆகியோரு டைய ஒத்துழைப்பையும் ஆசியையும் நாடு கின்றேன்.
அன்புடன்
டாக்டர் பொன். அதுர
சிட்னி - அவுஸ்ரேலியா 1.11 - 1992

நன்றி
'மித்ர"வின் முதல் நூலாக "வி" வெளிவருகின்றது.
இதனை வெளியிட முன் வந்துள்ள என் மகன் பொன். அநுரவுக்கும்
நூலினைத் தயாரித்தளித்த நண்பனும் சகாவுமான "இளம்பிறை" எம். ஏ. ரஹ்மானுக்கும்
இதற்கு ‘அணிந்துரை' எழுதிய இரசிகமணி கனக-செந்திநாதன்
அவர்களுக்கும்
இது பற்றிய ‘ஒரு மதிப்பீடு" வழங்கிய சாலினி இளந்தி ரையன் அவர்களுக்கும்
இந்நூலுக்குச்சித்திரப் பொலிவு சேர்க்க உதவிய எஸ். கே. செளந்தரராஜா (செள), என். சச்சிதானந்தசிவம் (சச்சி), எஸ். சண்முகநாதன் (Sm 60 fr), எம். செல்வகுருநாதன் (நாதன்), வி. கனகலிங்கம் (வீ. கே) ஆகியோருக்கும்அட்டைப்படம் அமைத்த ஜி. சேகர் அவர்களுக்கும்
என் நன்றி.
தமிழ்ச் சுவைஞரின் அன்புக்கும் நன்றி.
-எஸ். பொ. சிட்னி-அவுஸ்ரேலியா

Page 7
V
கதைகள்
தேர்
அணி வேலி
Frm நெறி
6tatDoo
Ldi
o
s
ed
11. சிதை f0ܘ .12 13. முள்
13
33
45
57
76
83.
88
1O1
22
3.
133
43
89

அணிந்துரை
திடீரெனத் தபாற்காரன் ஒரு புத்தகப் பார்ச" லைத் திணித்து மீண்டான். பிரித்துப் பார்க்கின்றேன். அதன் பெயர் வீ! "எஸ். பொ. ”வின் சிறுகதைத் தொகுதி. இவ்வளவு காலத்திற்குப் பிறகாவது ஒரு சிறு கதைத் தொகுதியை வெளியிட்டாரே' என்ற நிறை வுடன் திறந்து பார்க்கின்றேன், "இதற்கான அணிந் துரையை உங்களிடம் பெறவே நிச்சயித்தேன். உடன னுப்பி உதவுங்கள்" என்ற அன்புக் கட்டளையை அதனுட் கண்டு திகைக்கின்றேன்.
ஈழத்துச் சிறுகதைகள் பற்றிய கணக்கெடுப்பில் இரு வரும் இருவேறு துருவங்களில் நின்றவர்கள். அவரு டைய எழுத்துக்கள் என் மனத் திரையிலே கோடுகிழித்து மின்னுகின்றன. அவர் மேனாட்டிலக்கியத்திற் பயிலப் படும் கரு-உரு-உத்தி ஆகியவற்றை நன்கு ஜீரணித்து, அவற்றைத் தமிழிற் புகுத்தியவர், ஆபாசம், பாலு ணர்ச்சி, தசைப் பிடுங்கல் என்பவற்றைக் கண்டு பயந் தோடாத "இந்திரிய எழுத்தாளர்' பாலுணர்ச்சிச் சிக்கல்களை மையமாக வைத்து, தீ என்ற நாவலை எழுதிப் பரபரப்பு ஏற்படுத்தியவர். ஈழத்து எழுத்துலகின் "சிம்மசொப்பனமாகவும், "பிரச்சினைக்குரிய எழுத் தாளராகவும் விளங்குபவர். அத்தகைய அவர் ‘கடந்த பரம்பரையின் மரபுச் சுமையுடனும், பண்புடனும் எழுதி வரும் என்னிடம் அணிந்துரை கேட்கின்றாரே!

Page 8
X
எத்தகைய கதைகள் இருக்கின்றனவோ?’ என்ற பயத்துடன் நூலைப் படிக்கத் தொடங்கினேன். நூலின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, பயம் சுவடே தெரியா மல் மறைய, நான் நூலிலே திளைத்தேன். இந்நூலை ஆற அமர ஒரு முறையல்ல, பலமுறை வாசித்து முடித் தேன்.
1947 ஆம் ஆண்டிலேயே கவிதை மூலம் எழுத்துத் துறைக்குள் வந்த "எஸ். பொ. இதுவரையிற் சுமார் இருநூறு கதைகள் எழுதியுள்ளார். கதைகளின் எண்ணிக்கையையும், கால இடைவெளியையும் பார்த் தால், வீ அவருடைய ஐந்தாவது சிறுகதைத் தொகுதி யாக வந்திருக்க வேண்டும். இருப்பினும், ஒரு தொகுதி யாவது கிடைத்துவிட்டதே என்பதிலே திருப்தி. நிலவு, ஒளி, நிழல், மேடை, கடவுள் அடிமையானார் போன்ற அவருடைய நல்ல சிறுகதைகளை இத்தொகுதியிலே காணாதது முதலில் ஏமாற்றத்தைத் தந்தது. ஆனாலும் கதைக்கேற்ற விதமாக அவர் எவ்வாறு நடையைக் கையாளுகின்றார்; அவருக்கு முன்னால் தமிழ்ச் சொற் கள் எவ்வாறு கைகட்டிச் சேவகஞ் செய்கின்றன என்ற ஒருமைப்பாடு கதைக்குக் கதை படர்ந்து காட்டும் முழுத்துவம் என் ஏமாற்றத்தைப் போக்கியது. தொடக் கம்- உச்சக் கட்டம்- முடிவு என்ற வாய்ப்பாட்டில் அமையும் பத்திரிகைக் கதைகளுக்கும், இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளுக்கும் எவ்வளவோ வித்தியாசம். எனவேதான், இந்தக் கதைகள் என் மனத்திலே ஏற்படுத்திய உணர்ச்சிகளையும், எழுப்பிய பலிதத்தையும் விரிவாக எழுதுதல் வேண்டும் என்ற நியாய பூர்வமான அக்கறையும் பிறந்தது. கதை களுக்குச் சிறிய தலைப்பிடும் மோகத்தை ஈழத்தில் எஸ். பொ. வே ஏற்படுத்தியவர். இத்தொகுதியி லுள்ள தலைப்புக்கள் "வீ தவிர, இரண்டெழுத்துக் களில் அமைந்துள்ளன. பல தலைப்புக்களைப் பெயரா

X.
கவும் வினையாகவும் பொருள் கொள்ளலாம். இந்த உபாயத்தினால் கதையின் பூடகமான தொனிப் பொருளையும், வெளிப்படையான சம்பவத் தொகுப் பையும் ஒரு சேர "எஸ். பொ. ' காட்டுகின்றார். தமிழ் இலக்கியத்தில் இது புதிய முறை: புரட்சி முறை. இதனைச் சற்றே விளக்கும் முகமாக தொகுதியின் முதலாவது கதையாக இடம்பெறும் தேர் என்னுங் கதையை எடுத்துக் கொள்ளலாம். "குடும்பமே ஒரு தேர்" என நடைபெறும் நிகழ்ச்சித் தொகுப்பிலே, இஷ்ட குமாரனைத் தேர்ந்தெடுப்பதையும் பூடகமாகதொனிப் பொருளாக- ஆசிரியர் காட்டுகிறார். பென் னம்பெரிய படுதாவிலே வர்ணக்கலவைகளை அனாயாச மாக அள்ளி எறிந்து ஓவியந் தீட்டும் வல்லாளனைப் போல இக்கதையை "எஸ். பொ. சித்திரித்துள்ளார். எத்தனை பாத்திரங்கள்! அவற்றை எவ்வாறு நடமாட விடுகின்றார்!! இக்கதையில் ஒரு நாவலுக்குப் போது மான பாத்திரங்கள் நடமாடினாலும், சிறுகதையின் இறுக்கம் சற்றேனும் குறையாமல் எழுதியுள்ளதின் மூலம் ஆசிரியர் நம்மைப் பிரமிக்க வைக்கின்றார். * லா.ச ராவின் பாற் கடல், ஜெயகாந்தனின் யுகசந்தி ரி. செல்வராசனின் யுகசங்கமம் ஆகியனவும் தேர் கொண்டுள்ள கருவைச் சுற்றியுள்ளன, அவற்றிலே காணமுடியாத கலை முழுத்துவத்தைத் தேர்" கொண் டுள்ளது. இந்த நல்லதோர் சிறுகதையைத் தமிழன் னைக்குச் சமர்ப்பித்ததற்காக எஸ். பொ. வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’’ என்று பிரபல கவிஞரும், விமர்சகருமான பேராசிரியர் சாலை இளந்திரையன் ஒரு கடிதத்திற் குறிப்பிட்டுள்ளார்.
இத்தொகுதியின் இரண்டாவது கதை கணை. இத் தொகுதியிலே கதைக்கேற்றவாறு பல வகை நடை களையும் "எஸ், பொ. கையாண்டிருந்த போதிலும், இந்தக் கதையில் அவருக்கே உரித்தான முத்திரை

Page 9
நடை வீறுகொண்டு நிற்கின்றது. "மலர் தூவிய மஞ்சத்திலே. அசைவிற் பார்க்கின்றார்" என்ற வசனம்" எஸ்.பொ. 'வின் வசன நடைக்கு உதாரணம். சாதாரணமாகத் தன் சுய எழுத்து நடையைக் காட்டு வது போலக் கதையை அமைத்து விட்டு, ‘கற்பு தத்துவமுமன்று. அது வாழும் முறை. வீர மிருக்கும் இடத்தில் அதைப் பயிலலாம்’ என்று சோமாதேவியைப் பேச வைத்து தீடீரென நமது சிந்தனையை தூண்டு கின்றார்.
தொழிலாளர் அணியைப் பற்றிய கதை என்ற வெளிப்படைப் பொருளிலும், அலங்கார வார்த்தை (அணி) என்ற பூடகப் பொருளிலும் மூன்றாவது கதை, அமைந்துள்ளது. இதில் "எஸ். பொ. கையாண்டுள்ள கதை சொல்லும் உபாயமுறை தமிழுக்குப் புதியது. முன்னே ஒருவனை நிறுத்திஅவனுடன் பேசுவதுபோன்று: இது அமைந்துள்ளது. ஒரு பாத்திரத்தின் பேச்சுத் தவிர வேறு சொற்கள் வராமல் எழுதும் இம்முறை சிரம மானது. இச்சிரமப் பணியிலேகூட, எதிரில் உள்ள வனுடன் பேசும் தமிழுக்கும். சுயமாகவே அப்பாத்திரம் பேசும் தமிழுக்கும் வேறுபாடு உண்டு என்பதையும் "எஸ். பொ. கோடு கிழித்துக் காட்டுகின்றார். * சே, இந்த நானா வரவர வலு மோசம்." என்பது அத்தகைய கோடுகளுள் ஒன்று ஜாதி" ஒழிப்பு-தொழிலாளர் அணி-செங்கொடி’ என்றெல்லாம் வெகு முற்போக்கு’க் கதையைப் போல சித்திரித்து வந்து, அங்கை படிப்பித்துக் கொண்டிருந்த டீச்சர் பொடிச்சியைக் கிளப்பிக் கொண்டு போனவன் எந்தப் பகுதி." என்ற இடத்திலே வைத்து, கதை சொல்லும் பாத்திரத்தின் இயல்பு, வாடிக்கைக்காரனின் மனப் போக்கை அறிந்து இதமாகப் பேசுவதுதான் என்று பூடகமாகக் காட்டிக் கதைக்குத் திடீர்த் திருப்பங்

XIII
கொடுக்கும் இடத்திலே நாங்கள் மலைத்து நிற்கின் றோம் !
இந்த மூன்று கதைகளையும் ஒரு சேரக் காட்டி விட்டு, வாசகரை இன்னொரு பகுதிக்கு அழைத்துச்.
செல்கின்றார் "எஸ். பொ." s
வேலி, ஈரா, விலை, மறு ஆகிய நான்கு கதை களையும் ஒரு சேர வைத்துப் பார்ப்பதே சாலச் சிறந்தது. இந்த நான்கு கதைகளும் ஈழத்தின் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு தட்டிலுள்ள மக்கள் கையாளும் பழகு தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஒரு பிராந்திய மக்கள் தமிழை உச்சரிக்கும் முறையும், பிரத் தியேகமாகக் கையாளும் சொற்களும் ஒரு கலாசாரப் பண்பினதும், வாழ்க்கை முறையினதும் நேர்மையான அறுவடை என்பதை "எஸ். பொ. இக்கதைகளில் நயம்படக் காட்டியுள்ளார். பிராந்தியத்தின் ஆன்மா அங்கு பயிலப்படுஞ் சொற்களிலே எவ்வாறு பிரதி பலிக்கப்படுகின்றது என்பதை அப்பகுதி மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்தாலன்றிச் சித்திரிக்க இயலாது. நான்கு பகுதியிலுமுள்ள பழகு தமிழ் வளத் தையும் ஒரே எழுத்தாளனினால் காட்ட முடியு மென்றால், அது "எஸ், பொ. வினால் மட்டுமே முடி யும் என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். அவர் கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்து, அக் களத்தில் வாழ் மக்களுடன் இரண்டறக் கலந்து பழகி, கதையைக் கலாமுழுமையுடன் தரிசிக்கும் இயல்பினர். இத்திற மையை நன்கு பெறுவதற்கு எழுத்துத் திறமைக்கு அப்பாற்பட்ட துணிச்சலும் தேவை. அந்தத் துணிவு என் போன்றோருக்கு வர மாட்டாது. * சித்திரிக்கப் படும் பாத்திரம் அதுவாகவே வாழ வேண்டும், அதற் குள் எழுத்தாளன் தெரிந்தோ தெரியாமலோ, தான் வாழ்ந்து கொண்டிருக்கும் தளத்தின் பண்புகளை

Page 10
XV
நுழைக்கக் கூடாது" என்று " எஸ். பொ. நம்புபவர். அது சரியானதா என்பது சிந்தனைக் குரியது. ஆனால், அவருடைய இந்த அழுங்குப் பிடி நம்பிக் கையை ஒரு சந்தர்ப்பத்தில் நான் அறிந்தேன். விலை என்று இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள கதை ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு பத்திரிகையிற் பிரசுர மாகியிருந்தது. பின்னர், அவரைச் சந்தித்துப் பேசும் பொழுது மேற்படிக்கதையைப் பற்றிய பிரஸ்தாபமும் வந்தது. ‘இடஞ்சல் வந்து மூண்டு நாலுநாள்" எனத் தொடங்கி, "ஒரே துவால" என்று வரும் பகுதி வரை ஆபாசமாக இருப்பதாகக் குறிப்பிட்டேன். "நீங்களோ, நானோ வாழும் தளத்திலிருந்து பார்ப்பதினாலேதான் ஆபாசமாகத் தெரிகின்றது. என் பாத்திரம் வாழும் தளத்திற்கும் களத்திற்கும் வாருங்கள். அப்பொழுது அவர்களுடைய நினைவுகள் இதிலும் பார்க்கக் கொச் சையாக இருப்பதைக் காணலாம். எஸ். பொ. என்ற sub பாத்திரங்களின் சிந்தனைகளை நிர்ணயிக்க வேண்டுமென்றால் கதைகள் எழுதுவதை விடுத்துக் கட்டுரைகள் எழுதுவது தான் சேமமான காரியம்’ என்று அவர் விளக்கினார். அவருடைய விளக்கம் சரியேயா யினும், இப்பொழுதும் என் தளத்திலிருந்து அதை வாசிக்கக் கூச்சமாகத்தான் இருக்கின்றது. இருப் பினும், வெளியுலக நடப்பு என்ற நாரிலே, கதா பாத்திரத்தின் மன ஓட்டங்களை நேர்த்தியாகப் பின்னி யிருக்கின்றார். புதிய விமர்சகர் கூறும் 'நனவோடை உத்தி’ என்னும் கதை சொல்லும் உபாய முறை கலைமுழுத்துவத்துடன் " விலையிற் கையாளப் பட்டிருக்கின்றது. இக்கதை மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்களுடைய பழகு தமிழில் எழுதப்பட்டுள்ளதைப் போல, ஈரா மட்டக்களப்பு வாழ்முஸ்லிம்மக்கள் மத்தியிற். பயிலப்படும் தமிழிலே எழுதப்பட்டுள்ளது. அரபுச் சொற்களைக் கலந்து பேசும் முறையையுங் காட்டி யுள்ளார். விலையும், ஈராவும் ஒரே உத்தியில் எழுதப்

XV
பட்டுள்ளன, இதன் மூலம் பிராந்திய உச்சரிப்பு இயல் பினை வெளிக் கொண்டு வருதல் கலைத்துவமானதென எஸ். பொ. கருதுவதாகத் தெரிகிறது, மறு யாழ்ப் பாணத்துப் பழகு தமிழில் எழுதப்பட்டுள்ளது. மறு என்பது புனிதத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைக் குறிக்கின்றதா? சமுதாய அமைப்பை மறுத்து "நான்' மலடியல்லள்’ என்று வீரம் பேசுவதைக் குறிக்கின்றதா? அதுவே கதையின் தரிசன பயன். சாதி சமயம் வர்க்கம் என்றுஎழுந்தகதைகள் எல்லாவற்றிற்கும் எதிர்முகமாக, தளர்ந்து வரும் சாதி ஆசார அமைப்பை மிக எதார்த் தமாகச் சித்திரித்துக்காட்டுகின்றார். இந்த நான்குகதை களிலும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மருதநில வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் வேலி என்னுங் கதையே என்னை மிகவும் கவர்ந்தது. தாலி பெண் ணுக்கு வேலி' என்ற சாதாரணக் கருவைக் கொண்டி ருந்தாலும், கலைமெருகில்-வர்ணனைச் சிறப்பில் உச்ச மானது. வயலோடு தொடர்புடைய சொற்களாலேயே ஆசிரியர் கதையின் வர்ணனை முழுவதையும் எழுதி யுள்ளார். சூட்டிலே ஏறத் தயாராகக் காய்த்துவிட்ட பயிரின் தங்கத்திருமேனி மறைந்து விடத்தேடுந் தன பாரங்கள்" என அவர் கனகி என்னும் பாத்திரத்தை அறிமுகப்படுத்தும் விதமே தனியானது. கமக்காரனு டைய மனோ நிலையை, சித்திரக்காரனொருவன் அனா யாசமாகக் கீறும் இரண்டொரு கோடு போல ஆசிரியர் காட்டுகின்றார். வயலிலிருந்து வீடுவரை நாமே சித்திர வேலுவுடன் நடக்கும் உணர்ச்சி ஏற்படுகின்றது. யாரோ மீன்பிடிக்க வைத்த பறி அவனுடைய கால் களிலேயே தட்டுப்படுகின்றது. எடுத்துப் பார்க்கிறான். அதற்குள் ஒரு பனையான் மீன் துள்ளிக் கொண்டிருக் கின்றது. "எந்த ஏழையின்ரை பிழைப்போ' என்று மீண்டும் பறியை நீருக்குள் வைக்கின்றான். அவசரத் தில் ஈர வரம்பை மிதித்து விட்டான். உலாவிடப்பட் டிருந்த வயலுக்குள் நீர் கசிகின்றது. அந்த வயல்

Page 11
XV.
அவனுடையதல்ல. இருந்தும், அந்த வரம்பைக் சரி செய்து விட்டே நடக்கின்றான். 'வேலி' என்ற நீண்ட கதையில் இவை இரண்டு காட்சிகள்; சிறு கோடுகள். வாசிப்போர் அவதானிக்க முடியாத சிறு கோடுகளுந்தான். ஆனால் கமக்காரனின் பெருந் தன்மை இக்கோடுகளால் உயர்கின்றது. ஆயிரம் வார்த்தைகள் கொண்டு வர்ணித்தாலும் இக் குணசித் திரத்தை இக்கோடுகள் போலக்காட்ட முடியாது. ஆம், அந்தச் சித்திரவேலுவால் தான் கனகியை மன்னிக்க முடியும். நீலவளம் என்ற நோபல் பரிசுபெற்ற நாவலை வாசித்த இன்பம்-அதேகாட்சி-இக்கதையில் எனக்குத் தோன்றியது. இந்த நான்கு கதைகளையும் வாசித்து முடித்த பின்னர், அவற்றிடையே ஒருமைப்பாடான சரடு ஒன்று ஓடியிருப்பதை வாசகர் நன்குணர்வர். நெறி தவறிய பாலுணர்ச்சிதான் அது. அதை நான்கு கோணத்திலும் நாலு மண்வளத்திலும் நின்று ஆசிரியர் அணுகியிருக்கிறார்.
பழகு தமிழில் எழுதப்பட்ட நான்கு கதைகளின் நடு விலே நெறி என்ற கதையைச் சாமர்த்தியமாக நுழைத் திருக்கின்றார். நெறி தனித் தமிழில், உரையாசிரியர் நடையில் அமைந்துள்ளது. ‘நெறி தமிழ் மரபைக் குறிக்கின்றதா?அல்லது தற்காலக்கதைக் கரு ஒன்றைத் தனித் தமிழில் எழுதும்போது ஏற்படும் நெறி(சுளுக்கு), யைக் குறிக்கின்றதா?’ என்று ஆசிரியரைக் கேட்கத் தோன்றுகின்றது. ஆசிரியர் தன் நகைச் சுவையை இக் கதையிலே ஏற்றவாறு புலப்படுதியிருக்கிறார்.
தலைப்புக் கதையான வீயுடன் மூன்றாவது பகுதிக் குள் நுழைகின்றோம். நான் என்ற ஆணவக் குறிப்புடன் தொடங்கி, வழி என்ற சுய அனுபவ விஸ்தாரத்துடன் வீ என்ற கதைக்குள் அழைத்துச் செல்லுகின்றார். மலர் கர்ப்பந் தரித்த நிலை வீ; பிஞ்சாவதற்கு முதற்

XV
படி. சில மேனாட்டு மனவியல் நிபுணர்களும், எழுத் தாளரும் உண்மையான சமரச சமத்துவம் கலவியில்ே கிடைக்கிறது என்று கருதுகிறார்கள். இக் கருத்தைக் கலை மெருகுடனும், வித்துவச் செருக்குடனும் எழுதி யுள்ளார். கதையை வாசித்து முடிந்ததும்,
'ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்
காதலினால் சாகாமலிருத்தல் கூடும்
கவலைபோம். அதனால் மரணம் பொய்யாம்"
என்ற பாரதியாரின் பாடலுக்கான முமுவிளக்கமும் "வி" தன்னகத்தே கொண்டுள்ளது என உணர்கின்றோம். சாவே நித்தியத்தையுஞ் சமத்துவத்தையும் உடையது என்று வலியுறுத்தும் சிதை, சித்த பரிசுத்தமே நித்தியம் என்பதை வலியுறுத்தும் வீடு, சர்வேசுவர ராஜ்ஜியமே நித்தியம் என்று கூறும் முள் ஆகிய மூன்று பிரதான மதங்களின் ஆழ்ந்த தத்துவக் கருத்துக்களை வைத்து அம்மானை ஆடுவதற்கு, "வீ’ என்ற கதையை நுழை வாயிலாக வைத்திருப்பது ஒன்றே போதும் "எஸ். பொ. வின் சிந்தனா ஆழத்தை அறிவதற்கு.
வீ"யின் தத்துவச் சிக்கலிலிருந்து "வீடு" என்னுங் கதையில் பெளத்த சமயத்தின் சிக்கலான தத்துவத்திற் குள் இறங்குவதற்குமிடையில் மூச்சு விடுவதற்காகச் சுவை என்னுங் கதை சேர்க்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகின்றது. "வழி" என்ற சுய அனுபவக் குறிப் பில், "வீங்கு சேர் ஏமாப்பின். எனத் தொடங்கி, "மகாநாடு நடத்தப்படுகின்றது' என்று ஒரே வசனம் 45 வரிகளில் முடிவடைகின்றது. முற்றுப் புள்ளி வந்ததும் பெருமூச்சு விடுகின்றோம். எவ்வளவு நீண்ட வசனம்! அதற்கு எதிர்த் துருவம் சுவை. எந்த ஒரு வசனமும் மூன்று நான்கு சொற்களுக்குமேற்படாதவை.

Page 12
XVI
நபிபெருமானாருடைய எளிமை வாழ்க்கை, ஏழைகளி டத்தில் அவர் கொண்ட பேரிரக்கம், இஸ்லாம் வலி யுறுத்தும் சகோதரத்துவம் ஆகிய பண்புகளை எளிமை யான தமிழ் நடையில் 'சுவை சித்திரிக்கின்றது.
* சுவை" (இஸ்லாம்) , " சிதை” (சைவம்), "வீடு' (பெளத்தம்), “முள்' (கிறிஸ்தவம்)ஆகிய நான்கு கதை களுஞ் சமயச் சார்பிலும், தொனிப் பொருளிலும் ஒத்திருக்கின்றன. இவற்றை அம்மதங்களைச் சார்ந்த வர்களிலும் பார்க்க அழகிய முறையிலும், ஆழமான பார்வையுடனும் "எஸ். பொ. சித்திரித்துள்ளார். * சிதை" கலைமகளில் வந்த போதே, அதைப் பலரும் பாராட்டினார்கள், வீடு என்னும் நெடுங் கதை பற்றி, தனியே ஒரு விமர்சனம் நான் தினகரனில் எழுதியுள் ளேன். *.பென்னம் பெரும் தங்கப் பாளங்களினால் என்று தொடங்கி, "...வெகு உள்ளே-நடந்து செல் கின்றேன். 'என்று நந்தபிக்கு சீவர ஆடைக்குள்ளிருந்து கனவு காணும் காட்சியையும், இந்திரலோக வர்ணனை யையும் "எஸ்.பொ. எழுதியுள்ள முறை எவ்வளவு பாராட்டினாலுந் தகும். ஆறுமுக நாவலரின் திருக் கைலாய வர்ணனை பெரிய புராண முகப்பில், “அநாதி மலமுத்தராய்." எனத் தொடங்கி, "வீற்றிருந்தருளி னார்." என முப்பத்தாறு வரிகளில் ஒரே வசனத்தில் முடிகின்றது. வர்ணனைக்கு எடுத்துக் காட்டு அது. *எஸ். பொ.வின் இந்திரலோகக் காட்சி அதற்குச் சம தையாக நிற்க முயல்கிறது. "போதி’ என்ற கடைசிப் பகுதி ஒரே வசன கவிதை மயம். ஆம், எனக்கு அப்படித் தான் சொல்ல முடிகிறது. இந்த வசனத் தொடர்களைப் பாருங்கள். 'மழைகள் அவை வைரத் தகதகப்பில் ஒளிரும் பனிப் படிகங்களிற் கிரீடங்கள் புனைந்து கோலோச்சுகின்றன. பனிக் கற்களின் ஏகம். நீர் உறைந்து திடமான ஒரு நிலை. ஒரு ஸ்திதி, ஒரு பிறப்பு.புஷ்பாஞ்சலியிற் சிதறிய அலரி மலர்களாகப்

XX
பனிக்கட்டிகள். அவை உருகி வெள்ளி நூல்கள் பல இழுத்து பலவும் ஒன்றாகி குமரிலாவண்யம் பெற்று சிங்கமுகக் காலதரிலும் பென்னம் பெரும் பாறையிலி ருந்து கீழே துள்ளிக் குதித்து-அருவியின் இசையும். கூத்தும் தண்மையின் திரிசங்கு சுகத்திற் சுகிக்கும் அதன் நிலையும்; ஸ்திதியும். முள் என்ற கடைசிக் கதையில் இயேசு நாதர் பேசுவதாக வரும் ஒவ்வொரு வசனமும் புதிய ஏற்பாட்டிலுள்ள வசனங்களே. அந்த வசனங்களை வைத்து கிறிஸ்துவின் DT600T தரிசனத்தை "எஸ்.பொ. "எழுதியுள்ள விதம் பாராட்டத் தக்கது. கிறிஸ்தவர்கள் உபயோகிக்குஞ் சொற் களையே ஆங்காங்கு கையாளுகிறார். ஈழம், தமிழ் நாடு ஆகிய இடங்களிலுள்ள எழுத்தாளர்களுள் மார்க்கத் தத்துவங்களை வைத்துக் கதைகள் படைக்கும் இந்தச் சாதனையை இவர் போல எவரும் செய்ய வில்லை என்று துணிந்து கூறலாம்.
*எஸ். பொ. வின் கற்பனை வளத்திலும் பார்க்க, நடை வளமே இந்தத் தொகுதிலே மேலோங்கி நிற்கின்றது. அவருடைய நடையிலே தனிக்கவர்ச்சி உண்டு. அவருடைய இலக்கிய விரோதிகள் கூடத் தங்களை அறியாமலே அவர் நடையையும், உத்தி முறைகளையும் பின்பற்றுகிறார்கள். ஈழத்து இலக்கிய உலகில் "எஸ். பொ, வின் நடையைப் போன்று வேறெந்த எழுத்தாளருடைய நடையும் ஆதிக்கமும்செல்வாக்கும் செலுத்தியதில்லை. "எஸ். பொ. வின் கதைத் தொகுதியில் சதைப் பிடுங்கலும், முறை தவறிய காதலும், ஆபாச வர்ணனையுந்தான் இருக்குமென்று நம்பி, பேசி,முடிவு செய்திருப்பவர்களை அவர் ஏமாற்றி விட்டார். அப்படியான கதைகள் இல்லையா என்றால், ஒரிரண்டு கதைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், அந்தக் கதைகள் கூட இந்தக் கதைத் தொகுதியை முழுமைப் படுத்தவே உதவுகின்றன.

Page 13
XX
இத்தொகுதியிலே "எஸ். பொ." வின் முழு ஆற்ற லையும் நம்மாற் காண முடியவில்லை. காணவும் முடி யாது.
நாடகாசிரியர் - நாவலாசிரியர் - விமர்சகர் - நெருப் புக் கக்குங் கண்டனகாரர் - கட்டுரையாளர் என அவரு டைய எழுத்தாற்றல் பரந்து பட்டது. அவை முழு வதையும் ஒரு சிறு கதைத் தொகுதியிலே புலப்படுத்த முடியாது என்பது உண்மை. ஆனால், அவருடைய ஆற்றலின் ஒரு பகுதித் திறமையை இத்தொகுதி பட்டை தீட்டிய வைரமாகப் பிரதிபலிக்கின்றது. ஈழத்தில் நடைபெறும் இலக்கிய முயற்சிகளின் வண்ணத்தையும் வகையையும் அறிய விரும்புந் தென்னகத்தாருக்கு, "வி"யைக் கலாசாரத் தூதுவனாக அனுப்பிவைக்கலாம்.
இரசிகமணி கனக. செந்திநாதன்
குரும்பசிட்டி தெல்லிப்பழை, யாழ்ப்பாணம். இலங்கை.
இந்த அணிந்துரை 1966-ல் எழுதப்பட்டது.

முகத்தார் என்றழைக்கப்படும் ஆறுமுகம் துயி லெழுவது ஒரு திருக்காட்சி தலையணையையும் போர் வையையும் உட்திணித்துப்பாயைப் பக்குவமாகச்சுருட்டி வைப்பது ஒரு கலை. கொட்டாவியை மறைபொருளெது வுமின்றி ஊளையிட்டு, கைகளை நீட்டி மடக்கி, உட்லை உலுப்பிச் சோம்பலை முறித்தால், துயிலெழு படலத்தின் ஒரம்சம் நிறைவுறும். தலைமாட்டில் நெருப்புப் பெட்டியும், தாவடிப் புகையிலைச் * சுத்தும் எப்பொழுதும் தயாராக இருக்கும். "சுத்தை' நேர்த் தியாகப் பற்றவைத்தால், கால்கள் தம் இச்சையாகவே கொல்லைப் பக்கம் நடக்கத் தொடங்கும். எப்பொழுது தொடக்கம் வைகறை துயிலெழும் வழக்கத்தை வி-1

Page 14
2 எஸ். பொ.
வாலாயப்படுத்திக் கொண்டார் என்பது அவருக்கே ஞாபகமில்லாத சங்கதி.
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவிட்டார் . கடிகாரத்தைப் பார்க்காது, கடிகாரத்தின் விநாடி முள்ளைப் பார்க்கிலும் நுணுக்கமான நேரக் கணக்கில் இயங்குவது அவருடைய இரத்தத்திலேயே ஊறியிருக் கின்றது. கொல்லையிலே கழிவுக் கருமத்தை முடித்து, அடிக் கழுவி, கிணற்றடிக் கமுக மரத்திலே தொங்கும் குரும்பைப் பாதியிற் கிடக்கும் உமிக்கரியினாற் பற் களைச் சுத்தஞ் செய்து, திண்ணைக்கு மீளுவார். "இறப் பில் தொங்கும் வெண் சங்கிலே கதிர்காமத்து விபூதி இருக்கும். வலக்கை விரல்களுக்குள் எடுத்து, **சிவ. . சிவா. . * என்று உச்சரிக்கும் பொழுது, நல்லூர்க் கந்தனின் உதயகாலப் பூசை மணி கேட்கும்"
இன்றும் **சிவ. சிவா...”* என்று விபூதி பூசும் பொழுது, உதய காலப் பூசை மணி கேட்கின்றது. கால
ஒட்டத்திலே தரிக்காது நடைபெறும் நித்தியகருமங்கள் .
‘இன்று வருடப் பிறப்பு.’- முதன் முதலில் இந்த எண்ணந்தான் முகத்தாருக்கு ஏற்படுகின்றது. எத்தனையோ வருடப் பிறப்புகள் வந்து போய்விட்டன. அவற்றுடன் எத்தனையோ வருடங்களும் ஓடி மறைந்து விட்டன. பார்வதிப்பிள்ளையைக் கல்யாணஞ் செய்த முதல் வருடம் வந்த வருடப்பிறப்பு: இராமேசுவர நேர்த்திக் கடனுக்குப்பிறகு சுப்பிரமணியனைப் பெற்று, முருகண்டியிலே மயிர்நீக்கக் கடன் செய்த மறுநாள் வந்த வருடப் பிறப்பு: செளந்தரம் கல்யாணமாகி, மரு மகனுடன் வந்த வருடப் பிறப்பு; தகப்பனுக்குத் தலைக் கொள்ளி வைத்து, கோடி கட்டாதே கழிந்த வருடப் பிறப்பு: பார்வதிப்பிள்ளை போய், நாளே காடாகிக் கிடந்த வருடப் பிறப்பு:- இப்படிப் பல. கால ஓட்டம்

தேர் 3 O
அவர்தம் உழைப்பை விழுங்கி, உடலைச் சருகாக்கி விட்டது. முன்னர்போல சுறுசுறுப்பில்லை. நல்லெண் ணெய்யில் வெதுப்பிய கத்தரிக்காயுடன் மூன்று நீற்றுப் பெட்டி பிட்டுச் சாப்பிட்டும், நாலு மரவள்ளிக்கிழங்கைச் சுட்டுப் பச்சைமிளகாய் சகிதம் போட்டுக் கொண்டாற் றான் காலைப் பசி அடங்கும் என்பன இளைஞப் பருவ நினைவுகள். பிள்ளைகளைப் படிக்க வைத்து உத்தி யோகக்காரராக்கியதினால் இரண்டு பாண் துண்டு களைக் *கொறி'க்கும் பழக்கம் முகத்தார் வீட்டிலும் பரவி விட்டது. படுத்த படுக்கையாக வைக்கும்படியாக உடம்பிற்கு அப்படியொன்றுமில்லை. முதுமை உணர்வு வலுக்கின்றது. சிறிது வாதக்குணம் போன்ற எண்ணமும் மேலிடுகின்றது. திடீரெனக் குந்தி எழும்பச் சிரமப்படு கின்றார். இதனைப் பிள்ளைகள் அறிந்து கொள்ளாத வகையில் நடந்து கொள்ளுகின்றார். கடைக்குட்டி மகளைப் பற்றித்தான் கொஞ்சம் கவலை.
திண்ணையிற் குந்தி, கப்புடன் சாய்ந்து கொள் கின்றார்.
*அவள் பொடிச்சிதான் பாவம். தாயத்தின்னியாப் போயிட்டுது. படிப்பை முடிச்சுப் போட்டு, மூலையிலே கிடந்து பெருமூச்சு விடுகுது. அவளை மேலை படிக்க வைக்கலா மெண்டு மூத்ததுகள் விரும்பினதுதான். வேணுமெண்டால், உதுகளின் ரை பொம்பிளைப் பிள்ளையஸ் படிச்சு உத்தியோகம் பாக்கட்டும். இளைய வனின்ரை பாடு பிழையில்லை. ஒரு மாதிரி ஒரு வேலை யிலை கொழுவீட்டான். ஏதோ கொம்பனியிலைதான் வேலையாம். ஆனா, சம்பளம் புழையில்லை. மேலுக்கு நல்லா வரலாமெண்டு மூத்தவனும் மச்சான்மாரும் சொன்னாங்கள். அவன் கடைக்குட்டி எண்டு வீட்டோடை இருந்து சாப்பிட்டுப் பழகியவன். மூண்டு நாலு மாசம் அதுவுமில்லை. கயிற்றப்பட்டு வாழ்ந்தால் தானே, பேந்து பின்னடிக்குத் தங்கடை பாடுகளைத்

Page 15
4 எஸ். பொ. ()
தாங்களே பாக்குங்கள். நல்லூரான் ரை புண்ணியத் திலை எல்லாம் தங்கடை சீவியப் பாடுகளைப் பாக்கக் கூடிய நிலைக்கு வந்துட்டுதுகள், என்ரை கெட்டித் தனம் என்னஇருக்கு?ஆண்டவன்அளந்தபடி நடக்குது. விடியப்புறக் கோச்சியிலே மூத்தவன் வருவான். அவன் மறந்தாலும் அலுத்தாலும் அவன் ரை மனுவி கமலா இஞ்சை வராமலிருக்காள். என்னெட்டைக் கைவியளம் வாங்கிறதிலை அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை.ஓம். அதுகளின்ரை மூத்ததுக்கும்- உந்தப் புது நாணயப் பேர் சட்டெண்டு மனசிலை வாறேல்லை. அவள்தான் அம்சதொனிக்குப் பத்து வயசுக்கு மேலை இருக்க வேணும். என்ன பத்து? பதினொண்டுக்கு மேலை. கடுக்கண்ணுற பருவம் . ஒ , இவ போயே நேற்றெண் டாப் போலை இருக்குது. ஆனா, வருசம் அஞ்சாகுது. அவள் புண்ணியஞ் செய்தவள். எல்லாப் பாரத்தையும் என்ரை தலையிலை சுமத்திப்போட்டுப் போயிட்டாள்.'
இடைவெட்டில், மனோகரன் நேற்று எழுதியிருந்த கடிதம் முகத்தாருடைய ஞாபகத்துக்கு வருகின்றது. வருடப்பிறப்பன்றே கொழும்புக்குத் திரும்பிவிட வேண்டு மென்று எழுதியிருந்தான்.
*அதுவும் சரிதான். எங்கடை வாகடங்கள் நெடுகச் சரிவருமே? இப்ப தான் போய் வேலையிலை சேந்திருக் கிறான். லீவு கீவு எடுத்துப் பழுதாக்கப்படாது."
**அப்பனே முருகா"
வீட்டின் சின்ன அறைக்கதவு திறக்கப்படுகின்றது. 'கடைக்குட்டி' பத்மாதான் வருகிறாள்.
‘என்னதான் பேரளவிலை பெரிய பிள்ளை எண்டா லும், வீட்டிலே சின்னப்பிள்ளை தானே? சரியா, இவ பார்வதிப்பிள்ளையை உரிச்சு வைச்ச மாதிரி இருக் கிறாள். இவளை ஒப்பேத்திப் போட்டனெண்டால்,

D தேர் 5 །
பேந்தென்ன? சிவனே எண்டு கண்ணை மூடலாம். இவன் மனோகரனை இவவின்ரை அண்ணரின்ரை பொடிச்சிக்குத்தான். பெடியங்களின்ரை காரியத்தை நிதானமாச் சொல்லேலா."
முதற் காரியமாகப் பத்மா வீட்டு முற்றத்தைக் கூட்டி, சாணகத் தண்ணிர் தெளித்து முடிக்கின்றாள். வருடப் பிறப்பன்று விடியும் முன்னரே, அன்றைய வழமையான கடமைகளைச் செய்து முடிக்கும் வேட்கை. வருடப் பிறப்பன்று எல்லாக் காரியங்களையும் விக்கன மின்றி உரிய முறைப்படி நிறைவேற்றிவிட்டால், வருடம் முழுவதும் அவ்வாறே அமையுமென்னும் நம்பிக்கையில் ஊறித் திளைத்த மனம். வருடப் பிறப்பன்று பழங்கறி களுக்கு மதிப்பில்லை. கறிச் சட்டிகளை அடுக்களைக்கு வெளியே, இடப்பக்கமாகவுள்ள செவ்விளநீர்க் கன்றடி யிற் பரப்பி வைத்து, சாம்பல் தோய்த்தெடுக்கப்படும் "பொச்சு மட்டையாற் தேய்த்துக் கழுவத் தொடங்கு கின்றாள். திண்ணையிலே குந்தியிருந்து, சிந்தனை யிலாழ்ந்திருக்கும் தந்தையை அவள் கண்கள் கவனிக் கின்றன , மரவள்ளிக்கிழங்கு காய்ச்சிய சட்டியில் அடிப் பிடித்திருந்த பாகத்தைப் பொச்சு மட்டையால் நன்றாகச் சுரண்டிக் கொண்டே பேச்சுக் கொடுக் கின்றாள்.
** என்ன அப்பு. இண்டைக்கு காலமைக் கோச்சி யிலை மூத்தண்ணர் வருவாரல்லே?"
* “ஓம் புள்ளை, சுப்பிரமணியம் வராமல் வருஷம் பிறக்குமே? என்னதான் இருந்தாலும் அவன் வருஷத் துக்கு வராமல் இருப்பானே?"
* எப்பிடியும் அவன் வருவான். காதுப் பிடியிலை கமலா கூட்டியந்திடுவாள். கோச்சி இன்னும் நாவற் குழியைத் தாண்டியிருக்காது. இப்ப நடக்கத் துவங்

Page 16
, . srsio. Glur 6 ום
கினாலும், நேரத்தோடை ஸ்ரேஷனுக்குப் போயிட லாம். ஆனா, அவனுக்கு உதொண்டும் ւյգծ கிறேல்லை. "நான் எங்கடை வீட்டுக்கு வாறதுக்கு ஆரும் வந்து வழிகாட்டத் தேவையில்லை' எண்டு எத்தினை கோசு கோவிச்சது எனக்கல்லோ தெரியும்?.
** புள்ளை, தேத்தண்ணிக்கு உலை வைக் கல்லையே?’’
**வைச்சிட்டன்"
**கொக்கா பரிமளம் இன்னும் எழும்பல்லையே?. உங்கடை அத்தாரும் வலு நேரஞ்செண்டுதான் வந்தவர். சரியாச் சாப்பிட்டிருக்கவும் மாட்டார்."
முகத்தாரின் இன்னொரு மகளான பரிமளத்தின் கணவனும் கொழும்பிலேதான் வேலை பார்க்கின்றான். பரிமளம் தைப்பொங்கலுக்குத் தந்தையின் வீட்டிற்கு வந்தவள், திரும்பிப் போகவில்லை. கணவன் சதாசிவம் நேற்றிரவு யாழ்தேவியிலேதான் திரும்பியிருக்கிறான்.
* பாவம். அதுகளுக்கு ஆண்டவன் ஒண்டும் குறை
வைக்கேல்லை. இதுக்கிடையிலை முப்பதினாயிரம் கொட்டி புது மோடியிலை ஒரு வீடும் கட்டிப் போட்டுதுகள். கதைச் சாங்கத்திலை வைகாசி
நாளுக்குத்தான் குடியேறுவினம் போலை கிடக்குது. பேந்தென்ன நெடுகிலும் குடியிருக்கப் போகினமோ? வாடகைக்குத்தான் விடுவினம். காரும் ஒண்டு வாங்கி யிருக்கினமாம். அதை இன்னும் ஒருநாளும் யாழ்ப் பாணத்துக்குக் கொண்டுவரல்லை. அதுகளின் ரை அன்புக்கும் அந்நியோன்யத்துக்கும் ஒரு குழந்தையைத் தான் ஆண்டவன் குடுக்கேல்லை. சாதகத்திலை பின்னடிச் சந்ததி விருத்தி எண்டுதான் இருக்கு. ஏழு வருஷத்துக்குப் புறகுதான் சதாசிவமும் தலைச் சனாப் பிறந்தவனாம். கொழும்பிலை பேர்போன

1) தேர் 7
டாக்குத்தரிட்டை எல்லாம் காட்டினவை. அதுகளுக்கு ஒரு குறையுமில்லை எண்டுதான் சொன்னவையாம். ,
*கோப்பியை ஆர்றதுக்கிடையிலை குடியுங்கோ
அப்பு’’ என்று பத்மா கோப்பி கிளாஸை நீட்டுகிறாள்.
** என்ன புள்ளை, முட்டைக்கோப்பி அடிச்சிருக் கிறாய். அத்தாரும் நிக்கிறார். இப்ப சுப்பிரமணியமும் வந்திடுவான். அவன்ரை அசோகன் முட்டைக் கள்ள னல்லே?"
*"இஞ்சை தாராளமா முட்டையள் இருக்குது. புட்டுக்கும் பொரிச்சும் வைக்கலாம். "'
முகத்தார் கோப்பியைக் குடிக்கின்றார்.
** மெய்ய புள்ளை. கொக்கா செளந்தரம் இஞ்சை நேத்து வந்திட்டுப் போனவளல்லே? என்ன சொல்லிப் போட்டுப் போனவள்? மத்தியானச் சாப்பாட்டிற்கு வருவாளாமோ?*
**அத்தான் நேத்துத்தான் வந்தவராம். அவரின்ரை சகோதரி- அவைதான் பறங்கித் தெருவார்மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டை வருவினமாம். பின்னேரம் போலைதான் வரவசதிப்படும் எண்டுசொன் -னவ. எதுக்கும் கைவியளத்துக்கு முகுந்தனை அனுப்பி
வைக்கிறாவாம்.'"
செளந்தரம் பெரிய குடும்பக்காரிதான். இருந் தாலும் சீமாட்டி ஒரு சீதேவி. ஆறு பஞ்சானும் குஞ்சு களையும் ஒரு குறையுமில்லாமல் படிப்பிக்கிறாள். ஏதோ ஆனைசேனையையே சீதனமாகக் குடுத்தனான்? புருஷன் தங்கராசா உண்மையிலை ஒரு தருமராசா தான். புள்ளையளின் ரை படிப்புக்காக குடும்பத்தை,

Page 17
8 எஸ். பொ. L
ஊரோடை விட்டிட்டுப் போயிட்டான். அங்கை கடைச் சாப்பாட்டோடை வயித்தை வாயைக் கட்டிச் சீவிக் கிறான். அங்கையும் இங்கையுமாக ரெண்டு சிலவு களைச் சமாளிக்கிறதுக்கு கந்தோர் விட்டாப்புறகு வேற வேலயளையும் பாக்கிறதாம். அந்தந்த வயசிலை ஓடி யாடிப் பிரயாசைப் பட்டு உழைச்சு சம்பாரிக்கத்தான் வேணும். அதுக்கு ஏத்த சாப்பாடு வேண்டாமே? நல்ல வேளை. பெட்டையள் கீழ்க்கண்டுகள்தான். அந்த அளவிலை ஒரு ஆறுதல். வந்தவனுக்கு ரெண்டு வேளை தன்ரை கையாலை சமைச்சுக் குடுக்காமல் இஞ்சை ஒடியாறாளோ? பொம்பிளைப் புள்ளையள் கரை சேருமட்டுந்தான் எங்கடை."
* * என்ரை மடிசஞ்சையும் சால்வையையும் எடுத்துத்தா புள்ளை.'
**இவ்வளவு வெள்ளணத்தோடை கடைக்குப்
போகப் போறியளே?’’
**இல்லை, உந்த முச்சந்திமட்டும் போயிட்டு வாறன். தச்சேலா ஏதேன் அரியது நரியது கிடைச் Ꮺ- IᎱ6Ꮝ . . . "
சாறணை உதறிக் கட்டிக்கொண்டு, "மடிசஞ்சை' இடுப்பிலே சொருகி, ஏகாவடமிடச் சால்வையை எறிந்து படலையைக் கடக்கிறார்.
ரோஜா இதழ்ப் படுக்கையான மென்மைசேர் நினைவுகளில், ஏதோ ஒரு முள்ளின் உறுத்தல், கால் களின் இயக்கத்திலேயே படரும் நடை. சந்திக்கடைப் பசுபதியின் குரல் அவரைக் கடைப்பக்கம் ஆகர்ஷிக் கின்றது.
‘எப்பிடி அண்ணர்? வருஷம் எத்தினை மணிக்குப் பிறக்குதாம்? கைவியளம், நாள்வேலைக்கு நேரம்

0 தேர் O 9
எப்பிடிப் போட்டிருக்கு?’’ பத்துப் பேரிடம் கேட்டும் பசுபதிக்குப் பொச்சந் தீரவில்லை.
* பத்து இருபத்தெட்டுக்குத் தான் வருஷம் பிறக்குது. கைவியளத்துக்கு இண்டைக்கு நாள் போடேல்லை. ஆனா, பொதுநாள். உடனையே குடுத் தாலும் பாதகமில்லை, '
முகத்தார் பஞ்சாங்கம் பார்த்து வைப்பதில் வெகு ஒழுங்கு, கடிகாரம் பார்க்கும் பழக்கமில்லாத அவர், எந்தச் சுபவேளையையும் விநாடி தப்பாமற் சொல்லு வார். w
'நான் ஒரு நாளும் இந்த நேரம் காலம் பாத்துக் கொண்டிருக்கிறேல்ல. வருஷப் பிறப்பண்டைக்கே துவங்கீட்டால் சரிதானே? இல்லாட்டில் இழுவல். ரெண்டு மூண்டு நாளைக்கும் நாள் போடமாட்டாங்கள். அதுக்காகக் கடையைப் பூட்டி வைக்கிறதே?’’
* "ஒமோம்.எல்லாம் நம்பிக்கையைப் பொறுத்தது தான் பசுபதி' என்ற முகத்தார், ** கோச்சி இன்னும் வரேல்லைப்போலை' என வேறு திசையிற் கதையைத் திருப்புகின்றார்.
** நேரமாயிட்டுது.வருஷத்துக்கு இஞ்சினை வாற சனக்கூட்டத்தோடை வாற ரயில் கொஞ்சம் முந்திப் பிந் தித்தான் வந்து சேரும். உங்கடை மற்ற மேன் குமார சாமியும் இண்டைக்கு வாறார்போலை இருக்குது. தம்பி պւն இஞ்சாலைப் பக்கம் வந்து வெகுகாலமாப் போச்சுது. ’’
நெஞ்சிற் குத்திக்கொண்டிருந்த முள், ரோஜா இதழ்ப் படுக்கைக்குள் இனிதாக மறைகின்றது.

Page 18
ם 10.
எஸ். பொ. 0
முகத்தார்
என்று
அழைக்கப்படும்
ஆறுமுகம்
சந்திக்கடைப் பசுபதி
 
 

10 தேர் 11
குமாரசாமி வருவான் என்பது முகத்தாருக்குத் தெரியாது. அவனை எந்த விசேடத்திற்கும் வீட்டில் யாருமே எதிர் பார்ப்பதில்லை. அவனுடைய போக்கு அப்படி. இருப்பினும், குமாரசாமி வருவது தனக்குப் புதினம் என்பதை முகத்தார் வெளியே காட்டிக்கொள்ள வில்லை.
** இஞ்சை பாத்தியளே நோட்டீசை. முத்தமிழ் மன்றம் வருஷக் கொண்டாட்டம் நடத்துதாம். நாட கங்களும் நடத்துறாங்களாம். அதுகளுக்குத் தலைமை தாங்க குமாரசாமி வருகுதாம்.'
பசுபதி நோட்டீசைக் கொடுக்கின்றான். இப்பொழுது முகத்தாருக்குக் கண் கொஞ்சம் வெள் ளெழுத்து. ஆனாலும் கொட்டை எழுத்தில் அச்சடிக்கப் பட்டுள்ள மகனுடைய பெயரைக் கண்டு பிடிக்கின்றார். மனம் மலர்கின்றது. முகபாவம் மாறாமல் நோட்டீ சைத் திருப்பிக் கொடுக்கின்றார்.
**கண்ணும் புகைச்சலாய்க் கிடக்குது.' ''நான் வாசிச்சுக் காட்டட்டே?’’ ** வேண்டாம் பசுபதி. நான் வாறன். மூத்தவன் போறான்போலை இருக்குது காரிலை."
மூத்தவனைச் சொல்லி விடை பெற்றுக் கொண்டா லும் முகத்தாருக்குக் குமாரசாமியைப் பற்றிய எண்ணமே மேலோங்கியிருக்கின்றது. குமாரசாமி முகத்தாரின் இரண்டாவது புத்திரன், சிறுவயதிலேயே படித்து முன் னுக்கு வந்து கொண்டிருந்தான்.
*அவன்ரை மூளைக்கு அவன் உப்புடியே இருக்க வேணும்? சீமைப்படிப்பெல்லாம் முடிச்சு, ரெண்டு மூண்டு காரும் நாலைஞ்சு பங்களாவும் வைச்சல்லோ வாழவேணும்? அந்தக் காலத்திலை கண்ணுாறுபட்டுப்

Page 19
30 D umflüh unsernzüd
சம்பளத்துடன் கொழும்பில் வேலை பார்த்தார். விதியோ, அன்றேல் தரகர் கணபதிப்பிள்ளையின் திருவிளையாடலோ? கொழுத்த சீதனத்துடன் “டமிள்" பேசும் பணக்காரியை மணம் முடித்து, அவரையும் *கொழும்பானா’க மாறிவிட்டார். 1983 ஆம் ஆண்டின் இனப் படுகொலையின் போதுகூட, அதிட்ட தேவதை அவர் பக்கலிலே நின்றாள்.இழப்புகள் எதுவும் இல்லை. "கொழும்பான்’ என்று கொக்கரிக்க முடியாத அவதி மட்டுமே! மனைவியின் அண்ணன் அவுஸ்ரேலியாவில் குடியேறி வாழ்ந்தார். அவருடைய தூண்டுதலினாலும் * Sponsorship இனாலும், குடும்பத்துடனும் ‘மூட்டை முடிச்சுகளுடனும் குடியேறி, மெல்பனில் வாழத் தலைப் பட்டார். வசதி வழிந்தது. பெரியப்பாவுக்கு உடம். பெல்லாம் மச்சம் என்று சொல்வார்கள்!
அவனுடைய அப்பா பல்கலைக் கழக புகுமுக வகுப்பு மாணாக்கனாய் இருந்த காலத்திலேயே, செங்கொடி தூக்கி சமத்துவ-சமதர்மக் கொள்கைகள் பேசத் துவங்கியவர். கொள்கைகளை வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வெறியுடன் கலப்புத் திருமணஞ் செய்து, புரட்சி கண்டவர்! சொந்த உறவுகள் அறுந்த தனிவழி மிடிமை கண்டு சிரித்தார். வீரம் மிகுந்த மேடைப் பேச்சுகள் தொடர்ந்தன. தமிழ் ஈழ அரசி யலில் மேடைப் பேச்சுகள் குறைந்து, "துப்பாக்கிகள் பேசத் துவங்கின. காந்தனின் அண்ணன்மார் இருவர் ஒருநாள் "காணாமற் போய் விட்டார்கள். அப்பாவின் வழியில், அவருடைய புரட்சியை முன்னெடுத்துச் செல்வ தற்காகவும், தமிழ் இனத்தின் விடுதலையைக் காண்ப தற்காகவும் போராளிகளாகி விட்டோம்' என்று கடிதம் வந்தது. அம்மா அழுது பிரலாபித்தாள். அப்பா அழவும் இல்லை; சிரிக்கவும் இல்லை. "அவங்கள் என்ரை பிள்ளைகள்' என்று மட்டும் சொன்னார். ஒரு நாள் அப்பா ராணுவ 'ஜீப்"பில் ஏற்றப்பட்டார். அவர்

ஒரே இனம் L 31
அதுவாக, உடல் வீடு வந்து சேர்ந்தது. "உண்மையை சொல்ல மறுத்துத் தற்கொலை செய்து கொண்டார்" என்று விளக்கம் தரப்பட்டது. சிங்கள ஆதிக்க வெறியின் சூக்குமங்களை அறியாத காந்தனின் தாய், கைம் பெண் -ணாக, அவனையும் அவன்தங்கையையும் கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்க்கத் தலைப்பட்டாள். அவர்கள் படும் கஷ்டங்களினால், மழுவராயர் பரம்பரையின் மானம் கப்பலேறுவதாக அவதிப்பட்ட உறவினர் ஒருவர் அவர் களுக்குப் பெரியப்பாவின் உறவை புதுப்பித்துக் கொடுத் தார். பெரியப்பாவின் சகாயத்தினால், காந்தனின் குடும்பம் அவுஸ்ரேலியாவில் அகதிகளாகக் குடியேறி, நிரந்தர வசிப்பிட அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது.
*டமிள்' பேசும் பெரியம்மாவுக்கும், "புறோக்கின் இங்கிலிசு" பேசும் அம்மாவுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒத்துப் போகவில்லை. காந்தன் குடும்பத்தின் ‘தமிழ்" .பழக்க வழக்கங்களினால், தன் பிள்ளைகளின் கூussi
வளர்ப்புச் சோரம் போவதாகப்பெரியம்மா நச்சரிப்பாள். பெரியப்பாவுக்கு உயர் ஜாதி வேளாள 'அரிப்பு’ எப்ப -வும் உண்டு. குடும்ப முரண்பாடுகளுக்குத் தீர்வு கஷ்ட மானதல்ல. காந்தன் குடும்பம் சிட்னியில் குடியேறியது. "டோல் பணத்துடனும், "இரண்டு பேரும் உழைக்கும்" தமிழ்க் குடும்பங்களின் ‘ஈழத்துணவு'ப் பரிமாறல் களுக்கு உதவி செய்வதால் கிடைக்கும் மேலதிக வரு மானத்துடனும் காந்தனின் குடும்ப காலட்சேபம் நடக் கின்றது. பெரியப்பாவும் யோக்கியன்! மாதத்திற்கு ஒரு முறையாவது தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, இவர்களுடைய சேம லாபங்களை விசாரித் துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய ஆறுதல்? "என்ரை ராசா, நீ ஊக்கமாக படிச்சாத்தான் எங்கடை குடும்பமும் விளங்கும்!--இதுதான் அம்மாவின் அழுகை - கெஞ்சல் - பிரார்த்தனை சகலமுமாக இருந்தது.

Page 20
ロ 14 எஸ். பொ.
ஊருக்குள்ளை
குமாரசாமிக்குத்
தானே பேரும்
கடப்பும் ?
முட்டைக்கள்ளன்
அசோகன்
 
 

() தேர் 15 DJ
வான். அங்கை கூட்டம் இஞ்சை கூட்டம் எண்டு சொல்லுவான். உடனையே போயிடுவான், பேந்து விசாரிச்சுப் பாத்தால் அண்டைய கோச்சியிலையே ஊருக்குத் திரும்பீட்டான் எண்டு தெரியவரும்... மெய்தான். அவன் ரை போக்கு இஞ்சை ஒருத்தருக்கும் விளங்கேல்லை. அதோடை அந்தப் போக்கிலை ஒருத் தருக்கும் விருப்பமுமில்லை. ஒரு மாதிரியான கோபத். தனல் இவையளின் ரை மனங்களிலை இருக்குது. என்ன இருந்தாலும் சகோதர பாசம் எண்ட சாம்பல் அதுகளை மூடி வைச்சிருக்குது. வீட்டிலை எல்லாரும் அவனைக் குறையாத்தான் பேசுவினம். நான் மட்டுந்தான் அவன்ரை பக்கத்திலை பேசுறது, என்ன இருந்தாலும் அவனும் என்ரை மேன்தானே? இதுகள் இது களின் ரை போக்கு. அவன் அவன்ரை போக்கு. கையிலே இரு க் கிற அஞ்சு விரலும் சமமே? ஒண்டுக் கொண்டு வித்தியாசமில்லையே? வீட்டுக் குள்ளையும் உப்புடித்தான். ஊருக்குள்ளைஅவனுக்குத் தானே பேரும் நடப்பும்? அவன் இவ்வளவு உதவரங் கெட்டவனெண்டால் ஊரிலைஉப்புடிப் பேர் இருக்குமே? இதுகளுக்குப் படிச்சும் புத்தியில்லை, இவங்களைக் குடும்பத்துக்காகப் பெத்தன். குடும்பம் தேர் போலை நடக்குது. அவனை ஊருக்காகப் பெத்தன். அவன் றோட்டளக்கிறான் எண்டு வைச்சுக்கொள்ளுவம். அதுக் காக அவனை நான் மெச்சிக் கதைக்கிறதும் இது
களுக்குச் சில நேரம் புடிக்கிறேல்லை. ஒரவஞ்சக மனுஷன் எண்டு கூட நினைக்குதுகள். ‘நீங்கள் என் னத்தைத்தான் சொன்னாலும், அவனும் என்ரை
9
புள்ளைதான் எண்டு சொல்லுவன். இதுகளும் பேக் கூத்துத்தான் ஆடுகிறது. ஏதோ நான் அவன்தான் என் ரை புள்ளை எண்டுசொல்லிப்போட்டதைப்போலை, தாய் மனம் பித்துத்தான், இவவும் இப்ப இல்லை. என்ரை மனமும் பித்துத்தான். இது ஒண்டை மட்டும். நான் குமாரசாமியைப் பற்றி மறக்க மாட்டன்.

Page 21
ஆற்றையேன் சாட்டிற்
‘பாவிக்கும் ஐயம்பிள்ளை
பரிமளத்துக்கு ஒரு பிள்ளைப்
பாக்கியத்தைக் குடு
 
 

; L Sg5f 17
இவையள் ஆயிரத்தைச் சொல்லட்டும். சுப்பிரமணியமா இருக்கட்டும்; சவுந்தரம் பரிமளமாக இருக்கட்டும்: மனோகரன்- பத்மாவாக இருக்கட்டும்;- முகத்தார் ஆறுமுகத்தின் ரை புள்ளையளெண்டுதான் ஊர்தேசத் திலை தெரியும். ஏன், சதாசிவம் தங்கராசா எண்டாப் போலை என்ன? என்ரை மருமக்கள் எண்டாத்தான் நல்ல விளப்பமாத் தெரியும். ஆனா, கடைத் தெருவிலை எத்தினை பேருக்கு என்னைக் குமாரசாமியின்ரை அப்ப னெண்டுதான் தெரியுமெண்டு இவையஞக்குத் தெரி யுமே? அண்டைக்கு பஸ்ஸிலை நான் தெல்லிப் பழைக்குப் போகேக்கிள்ளை ஒரு பொடியன் **நீங்கள் குமாரசாமியின்ரை தகப்பனல்லோ?' எண்டு கேட்டுப் போட்டு, தான் குந்தியிருந்த இடத்தை எனக்குத் தாறான். அந்தப் பொடியனும் பெரிய படிப்புத் தானாக்கும். '
** என்ன முகத்தார்? என்ன பொடியள் எல்லாம் வந்திட்டினமோ?' ஐயம்பிள்ளை தன்னுடைய படலை யில் நின்றபடி குரல் கொடுக்கிறார்.
** கோச்சி அப்பவே வந்திருக்கவேணும்.'
**சுப்பிரமணியம் வராமல் நிற்க மாட்டான். மனோ கரனும் வாறானாமோ?’’
**ஓம். கடுதாசிபோட்டிருந்தான்.'"
* படலையிலை நிண்டுகதைக்கிறியள்? கடைக்குப் போறதுக்கு முந்திக் கொஞ்சம் பாவிச்சிட்டுப் போகலா மெண்டால்.என்ரை மனுவியைத் தெரியாதே?ஆற்றை யேன் சாட்டிலைதான். உள்ளுக்கை வாருங்கோவன்'
"இப்ப வாதக்குணமாவும் இருக்குது. ஒத்துக் கொள்ளுதுமில்லை."
2-س-66

Page 22
18 6rsv. GLr. D
**இது நித்தமே முகத்தார்? ஒரு வருஷம் பெரு, நாளுக்குத் தானே? உங்களைத் தூரத்திலை கண்டோ டனையே, உங்களோடைதான் வருஷத்தைத் துவங்க வேணுமெண்டு ஆசை வந்திட்டுது. ’’
*" ஏன்தான் உன்ரை ஆசையையும் கெடுப்பான்?"
முகத்தார் ஐயம்பிள்ளையுடன் கொஞ்சம் ‘முஸ்பாத்தி’பண்ணி விட்டு, அவருடனேயே கடைக்குச் சென்று, மக்கள்- பேரப்பிள்ளைகள் ஆகிய சகலருக்கும் இதமாகக் கறி-காய்கறி-பழவகைகள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் பொழுது பத்துமணியாகிவிட்டது.
வீடு கலகலப்பு நிறைந்து காணப்படுகின்றது. சுப்பிரமணியமும் குடும்பமும் வந்தால் சத்தத்திற்குக் குறைவில்லை. பிள்ளைகள் புத்தாடை புனைந்து காணப்படுகின்றார்கள்.
*ஐயம்பிள்ளையோடை மினக்கட்டு நான்தான் நேரம் பிந்தீட்டன் போலை கிடக்குது. சுப்பிரமணியம் எல்லாப் புள்ளைகளுக்கும் ஒரு நிறத்திலைதான் உடுப்பு கள் வாங்கியிருக்கிறான்.இஞ்சை பாருங்கோவன் இவன் கடைக்குட்டி தன்ரை சட்டைதான் திறமெண்டு சண்டை பிடிக்கிறதை.ஓ, பரிமளமும் சதாசிவமும கூட முழுகீட்டினம். உந்த உடுப்புகள் சரியான விலையாம். வருஷப்பிறப்புக்கு நெடுகிலும் உவை உப்புடித்தான் எடுக்கிறவை. கோயிலுக்குப் போகப் புறப்பட்டு நிற்கினை போலை. நல்லூரானே இதுகளுக்கு ஒரு புள்ளைப்பாக்கியத்தைக் குடு..சே, கண்ணுாறு பட்டிடப் பிடாது.பத்மாவுக்கு உந்தச் சீலை வடிவாத்தான் கிடக்

0 தேர் v 19
குது. சாமத்திய வீட்டுக்குள்ளை சீலையோடு பாத்ததுக்கு இப்பதான் சந்தனக்கலர் நிறத்திலை தனக் கொரு சீலை வாங்கியரவேண்டும்எண்டுமனோகரனுக்கு எழுதினவள். அவன்தான் வாங்கியந்திருக்க வேணும். இன்னும் சுப்பிரமணியமும் கமலாவும் முழுகி முடிக்கேல் லைப் போலை . . . உங்கை கிணத்தடியிலை நிக்கினம்."
* புள்ளை பத்மா! இத்தக் கறி சாமான்களைக் கொண்டுபோய் குசுனிக்கை வை.'
அப்பு காலைச்சாப்பாடும் இல்லாமலே கடைக்குப் போனவர்? நீங்கள் வருவியளெண்டு முட்டையும் பொரிச் சுக் காத்திருந்ததுதான் மிச்சம். '"
* “அவன் ஐயம்பிள்ளை விடேல்லை. அவனோடை அப்படியே கடைக்குப் போனதும் நல்லதாப் போச்சுது. சவ்வு கிவ்வு இல்லாத நல்ல இறைச்சி கிடைச்சுது சின்னதுகள் உறைப்புத் தின்னாயினம். பால்கறி வைக்க ஈரல் கிடைச்சுது. கொத்தார் இறைச்சி வகை தின்னா தவர். நல்லொரு பாரை கிடைச்சுது. மிச்சம் பொரி யலுக்கும் உதவும். கைவியளத்தை முடிச்சிட்டுப் போயி ருந்தால் கடையிலை ஒரு மண்ணும் வாங்கியிருக் கேலாது.”*
** அப்புவுக்கு இந்த வருஷப்பிறப்பு நல்ல முழுவியளத் தோடை துவங்கியிருக்குது’’ என்று சொல்லிக் கொண்டே, பெரிய உமலைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அடுக்களைப் பக்கம் பத்மா போகின்றாள்.
* 'இந்த வேட்டிதான் பெத்தப்பாவுக்கு' என்று கூறிக்கொண்டே பீஸ் வேட்டி ஒன்றை "ரீப்போ’வில் அசோகன் வைக்கின்றான். ‘சித்தப்பாவும் அப்பாவுக் குக் கரை போட்ட வேட்டி ஒண்டு வாங்கியந்தவர்' என்பதையும் அறிவிக்கின்றான். எவ்வளவோ தடுத்தும்

Page 23
20 எஸ். பொ. ()
பத்மாவுக்கு உந்தச்
சீலை வடிவாத்தான்
கிடக்குது
மூலையில் கிற்கும் ஹம்ஸதொனி
 
 

0 தேர் 21. O.
பரிமளம் கேட்கவில்லை. அவள் நேற்றே "பரமாஸ்" சோடி ஒன்று எடுத்துக் கொடுத்துவிட்டாள். தான் முன்னர் கொண்டுவந்த வேட்டியுடன் பெத்தப்பாவின் ம்ற்றைய உடுப்புகளையுங் கொண்டு வந்து அடுக்கி 'டோய், பெத்தப்பாவுக்கு இந்த முறை நாலு புது
வேட்டி' என்று உரக்கக் கத்தினான்.
** மூன்று வேட்டிதானே? ஒன்று சால்வையல்லோ?" என்று மூலையில் நின்று மூத்தவள் ஹம்ஸதொணி திருத்துகின்றாள்.
" "வீண் சிலவு, எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டுதுகள். அதுகளுக்கு ஏதோ செய்யவேணுமெண்ட ஆசை. வீட்டோடை நிக்கேக்கிள்ளை உதெல்லாத்தை யும் மனோகரன்தான் உடுத்துக் கிழிப்பான். இப்ப அவருமல்லோ எடுத்துத் தரத் துவங்கியிருக்கிறார். இதுகளை இனி உடுத்துக் கிழிக்கிறதற்கு செளந் தரத்தின் ரை மூத்தவன் முகுந்தன்தான் இருக்கிறான். அவனும் இந்த மார்கழியிலை சீனியர் சோதினை எடுக்கப் போறானாக்கும்.'
ஈரச் சீலையுடன் கமலா பெரிய அறைக்குள் ஒடுகிறாள். முற்றத்தில் கம்பிக்கொடிக்குப் பக்கத்தில் நின்று தலையைத் துவட்டிக் கொண்டிருந்த சுப்பிர மணியம், 'மருத்துநீர் அந்தா கிணத்துக்கட்டிலை இருக்குது. போய்க் குளிச்சிட்டு வாருங்கோ அப்பு'
என்கிறான்.
** என்ன அவசரம்? மனோகரனும் முழுகீட்டு விடட்டன், எங்கை அவனைக் காணேல்லை?"
**உதுகள் ஏதோ ஐஸ்கிறீம் வேணும் சீனிச் சித்தப்பா எண்டதுகள், அவன் வாங்கப் போயிட்டான்

Page 24
கம்பிக் கொடியடிக்குப்
பக்கத்திலே
சுப்பிரமணியம்
அவனைக்
காதுப் பிடியிலை
கூட்டிவரும் கமலா
 
 

0 தேர் 23
போலை கிடக்குது. அவன் ஆறுதலாகக் குளிக்கட்டும்."; நீங்கள் முதலிலை குளியுங்கோ வருஷம் பிறக்கப் போகுது, கும்பம் வைக்கவல்லோ வேணும்?"
" "ஒமோம்.' முகத்தார் கிணற்றடிக்குப் போகின் றார். கட்டியிருக்குஞ் சாறத்துடன் குளிப்பது அவரு டைய வழக்கம். 'சனிநீராடு" என்று வாரத்திற்கு ஒரு முறை; மூன்று பெருநாள் நீராட்டம் பிரத்தியேகமாக வந்து சேரும். தலையிலே மருத்துநீரை வைத்து நன்றாகத் தப்புகின்றார்.
**சித்தப்பா, சித்தப்பா' என்று அசோகன் ஆர்ப்பரிக்கிறான்.
*குமாரசாமி வந்திட்டானோ?"
ஆசையுடன் எட்டிப்பார்க்கிறார். தொட்டாச் சுருங்கி இலைகள் கூம்புகின்றன.
'இல்லை, அவன் மனோகரன்தான். மூண்டு நாலு மாசத்திலை கொஞ்சம் வளந்திருக்கிறான். சொந் தமாச் சம்பாரிக்கத் துவங்கீட்டால் கொஞ்சம் பூரிப்புத் தானே? நல்ல தாராளமாச் சிலவழிக்கிறார். ஓம், போய்க் கொஞ்சமாசந்தானே? இன்னும் கொழும்புப் பழக்கங்கள் நல்லாப் புடிபடேல்லைப் போலை.குமார சாமியை இன்னும் காணேல்லை. சிலவேளை, நல்ல நாளும் பெருநாளுமா எல்லாரும் கொண்டாட்டத்திலை நிக்கேக்கிள்ளை நான் ஏன் குழப்புவான் எண்டுபோட்டு
நிண்டிடுவானோ?"
இந்த எண்ணம் ஏற்பட, காலையில் இலேசாக உறுத்திய நெஞ்சில் முள் ஆழமாக இறங்குகின்றது. வலி தாங்க மாட்டாது அவஸ்தைப்படுகின்றார். அவஸ்தைப் பரிகார எத்தனத்தில் பெருமூச்சொன்று நீள்கின்றது. இயந்திர வேகத்தில் கைகள் துலாக் கயிற்றை மேலும்

Page 25
1( .எஸ். பொ 24 נם
கீழுமாக இழுக்க வாளி வாளியாகத் தண்ணீர் தலையி லேயே கொட்டப்படுகின்றது. , − −
“ ‘நானும் நல்ல வேளைக்குத்தான் வந்திருக். கிறன். எல்லாரும் மருத்து நீராட்டம் முடித்தாயிற்றுப் போலை.பத்மா இதைப் புள்ளையஞக்குப் பிரிச்சுக் குடு. ’’
"இது நிச்சயமாக் குமாரசாமியின்ரை குரல் தான். உந்த வெண்கலக் கடை யானையின்ரை குரல் அவன்ரைதான். '
தண்ணிர் காதுக்குள் புகுந்து, தன் மனக்குகை நினைவுகளுக்குஉருவங்கொடுத்தது. மாரீச ஜாலம் நடை பெறுகின்றதோ என்று கூட ஒரு கணம் நினைக் கின்றார். இருந்தாலும் ஆசை இழுக்கின்றது.
** அப்பு எங்கை ?’’ 'அவர் குளிக்கிறார்.அப்பு ! சின்னண்ணர் வந்திருக் கிறார்.’’ என்று பத்மா குரல் வைக்கின்றாள்.
துளிர்க்கும் நம்பிக்கை, பச்சையின் பசுமையை உறிஞ்ச, மறைப்புத் தட்டிக்கு மேலால் எட்டிப் பார்க் கின்றார்.
முற்றத்தில் குமாரசாமி சிரித்தபடி நிற்கிறான். அவன் பக்கத்தில் பத்மா நின்று, அவன் கொடுத்த * சரை' யிலிருந்த இஞ்சு விசுக்கோத்துகளைப் பங்கிடு கின்றாள். சுப்பிரமணியத்தின் கடைக்குட்டி, வேற்று முகத்தைக் கண்டு பயந்தமாதிரி, கதிரையின் பின்னால் மறைவதை அவன் கவனிக்கத் தவறவில்லை. அவனுடைய பயத்தைக் கவனித்த குமாரசாமி, ‘நானுஞ் சித்தப்பாதான். ஒருத்தருஞ் சொல்லித்

() தேர் 25 O.
தரேல்லையா?” என்று சொல்லி மீண்டுஞ் சிரிக் கின்றான்.
"அதே சிரிப்பு. இவன்ரை சிரிப்பு ஒரு நாளும் மாறாது.என்னைப் போலை அந்தச் சுருட்டை மயிர் முன் குடும்பி வைச்சது போலை நிக்கிறதும் மாறாது. என்னதான் மனக் கோவங்கள் இருந்தாலும், அவன்ரை அந்தச் சிரிப்பைக் கண்டோடனை ஒருத்தருக் கும் அவனை ஏசப் பேசமனம் வராது. ஆரையும் மருட்டும்."
*" என்ன வாறனெண்டு அறிவிக்க ஒருபோஸ்டு கார்டு கிடைக்காமல் போச்சுது உனக்கு’’ என்று முகத்தார் கடிந்து கொள்ளுகிறார்.
**எல்லாம் அவசரந்தான், அப்பு. போஸ்ட் காட் என்னத்துக்கு? நான் தான் நேரிலை வந்திட்டனே. அது கிடக்க, பத்மா வருஷத்துக்குச் சீலை கட்டியிருக் கிறாள்.’’ குமாரசாமி பத்மாவை அந்தக் கோலத்தில் அப்பொழுதுதான் முதன் முறையாகப் பார்க்கின்றான்.
" ஓம். இவன் மனோகரன் தன்ரை முதல் சம்பளத்திலை எடுத்துக் கொண்டந்து குடுத்திருக் கிறான்’’- வாளிக் கயிற்றைப் பிடித்துக் கொண்டே முகத்தார் சம்பாஷணையில் ஈடுபடுகின்றார்.
* அத்தான் எ ங்  ைக பத்மா காரிலையே வந்தவர்?’’
**இல்லை. ராத்திரி உத்தரதேவியிலை வந்து சேந்தவர். இப்ப அக்காவோடை கோயிலுக்குப் போயிட்டார்” என்று கூறிக்கொண்டே பத்மா அடுக் களைப் பக்கம் போகின்றாள்.

Page 26
26 எஸ். பொ. 0
*புதுக் கோரொண்டு எடுத்ததெண்டு கேள்விப் பட்டன், என்ன சாதிக் காராம்?"
** எனக்கென்னடா தெரியும்?"
**காரின் ரை விலையளும் இப்ப என்ன மாதிரி ஏறிக் கிடக்குத் தெரியுமே? உங்காலை வீட்டுப் பொடியன்அவன்தான் ரத்தினகோபால்- காரை வித்துப் போட்டு "ஸ்கூட்டர்' வாங்கியிருக்கிறானாம்.'
* காரை விக்கேல்லையாம்.இசுக்கூட்டரும் வாங்கி -னவனாம். ’’
** இப்ப ஏதும் சாமான் கீமான் வாங்க முடியுமே ? அதுதான் வித்துப் போட்டான். அவன்ரை காரை ராசாத்தோட்ட சங்கரப்பிள்ளை தான் வாங்கினதாம். அவன்ரை கல்யாணப் பேச்சுக்கால் எப்பிடியாம்?"
** அது குழப்பிப்போய்க் கிடக்குதாம்."
'நீங்கள் மானிப்பாய்ப் பகுதியிலை இருந்து வந்த சம்பந்தத்தையல்லோ சொல்லுறியள்? இது இங்காலை கோப்பாய்ப் பகுதியிலையாம்.'
** அதைப் பற்றி நான் கேள்விப்படேல்லை. "'
தூணுடன் சாய்ந்து கொண்டு நிற்கும் மனோ கரனைப் பார்த்து, தம்பி, உங்கடை கொம்பனியை அரசாங்கம் கெதியா எடுக்கப் போகுது போலை, தென் யூ வில் ஒல்சோ பிக்கம் ஏ கவுண்மென்ட் சேவண்ட்." என்கிறான்.
"" அப்பிடி நடக்காது.'
** நீ இருந்து பாரன் தம்பி. அப்பு! தங்கராசா அத்தானுக்கு அடுத்தமாசம் உத்தியோக உயர்வு கிடைக்
கப் போகுதாம். தெரியுமோ?"

0 தேர் 27 O
**உதுகள் எனக்குத் தெரியுமே?”
** முந்தநாள் அவரை ஸ்டேசனிலை கொண்டாந்து விடேக்கிள்ளை தான் அப்பிடி ஒரு புரமோஷன் கிடைச் சாலும் கிடைக்கும் எண்டு அத்தான் சொன்னவர்.' மனோகரன் தனக்குத்தெரிந்த சமாசாரத்தைச் சொல்லு கிறான்.
‘இவன் ஊருக்கு வாறதோ அத்திபூத்தாப்போலை. ஆனா, ஊரிலை நடக்கிற ஒண்டையும் விடாமல் அறிஞ்சு
வைச்சிருக்கிறான்."
முகத்தார் அவசர அவசரமாக மூன்று நான்கு
*பட்டைகளை ஊற்றி, "முழுக்கைச் சுபத்துடன் முடிக்கிறார்.
வந்து கொண்டே, **ஆனைக்கோட்டை வைத்தி
யரின்ரை பொடிச்சியைப் பற்றிக் கேள்விப்பட்ட னியே." என்கிறார்.
" "ஒமோம். நான் கேள்விப்பட்டன். சாதி ஒரு மாதிரி எண்டுதான் இவை கூத்தாடினவை, அவன் நல்ல பொடியன். கெலகதரையிலை படிப்பிக்கிறான்.""
**ஓ.என்னவோ உப்பிடித்தான் ஒரு பேர் சோல்லுகினம்..”*
தலையைத் துவட்டும்பொழுது, எந்தப் புத்தா டையை அணிவது என்னும் யோசனை அவரை ஆக்கிர மித்துக் கொள்கின்றது. சிறுபிள்ளைத் தனமன்று. பெரிய பிள்ளைகளுக்குள் தன்னுடைய செயலால் மனத் தாங்கல் ஏற்படக்கூடாது என்பதில் அக்கறை.
அதற்கிடையில், "நீங்கள் ஏன் ஈரத்தோடை நிக்கிறியள்? இதைக் கட்டுங்கோ. நீங்கள் விரும்பிக் )

Page 27
O 28 எஸ். பொ. 0
கட்டுவியளே, நீலக்கட்ட்ம் போட்ட சாறன்" என்றபடி கையில் வைத்திருந்த ஒரு பார்சலை நீட்டுகின்றான்.
குசேலனின் அவல் முடிச்சை அவிழ்த்து உண்ட கண்ணனின் உள்ளத்திலேகூட இவ்வளவு மகிழ்ச்சி தோன்றியிருக்க முடியாது.
விரித்து உடுக்கின்றார். சலனமெதுவுமின்றி மற்றவர்களைப் பார்க்கிறார்.
மெளனம்.
**அப்புவுக்கு நல்லாத்தான் இருக்குது.' வெளியே வந்த பத்மா மெளனத்தைக் கலைக்கின்றாள்,
**நீ நிண்ட ஊராலை வந்தனியே? இரன்; கும்பம் வைக்கப்போகிறன். பொது நாளா இருக்கிறதாலை உடனையே கைவியளம் குடுக்கலாமெண்டிருக்கிறன்.""
* 'இல்லை அப்பு. எனக்கு உதுகளிலை அவ்வளவு நம்பிக்கை இல்லை எண்டது தெரியுந்தானே?அதோடை விடியக் காலமையே கார்க்காரனிட்டைக் கைவியளம் வாங்கீட்டன்."
முகத்தாரின் முகத்தில் மூட்டம்.
** இவன்தான் புது நாணயமாப் புறந்தவன். ஒண்டிலும் நம்பிக்கை இல்லாதவன் டேய் புத்தகப் படிப்பும், நீ எழுதுற கதையஞம் நாடகங்களும் படிப்பில்லை. ஆவது அறிவது அறிவல்ல; வீட்டிலை வேவது அறிவதுதான் அறிவு. ஊரோடை ஒத்து வாழுறதுதான் படிப்பு. ’’-இவ்வளவு நேரமும் அமைதி யாக இருந்த சுப்பிரமணியம் சொல்லுகிறான்.
** அதுக்கில்லை அண்ணை. நான் அஞ்சாறு பேரோடை வந்திருக்கிறன். ஊராங்கடை காசிலை

{) தேர் 29 д
அவங்களை இவ்வளவு தூரம் கூட்டியந்தனான். இந்த ஊருக்கு அவங்கள் புதிசு. அவங்களை ஹோட்டலிலை விட்டிட்டு நான் இஞ்சை மினக்கடுறது அவ்வளவு வடி வில்லை எண்டுதான் சொல்ல வந்தனான்.அப்ப நான் வாறன்' பதிலுக்குக் காத்திருக்காமல் திரும்பு கின்றான்.
‘என்ன இருந்தாலும் மரியாதை தப்பாது, ஆர்
சொன்னாலும் தலையைக் கவண்டு கொண்டுதான் கேப்
பான். மரியாதைக்காகத்தான். ஆனா, தான் நினைச் சதைத்தான் செய்வான்."
* "சின்னண்ணை.இஞ்ச கோப்பி கொண்டந் துட்டன். குடியுங்கோவன். ’’ என்று பத்மா கோப்பி கிளாஸை நீட்டுகிறாள். பதிலொன்றும் பேசாமல் அதை வாங்கிக் குடித்து விட்டு, கிளாஸைத் திருப்பிக் கொடுக் கின்றான்.
முற்றத்து மாங்கன்றில், கும்பத்துக்கு மாவிலைகள் ஒடித்துக் கொண்டே, ‘அப்ப மத்தியானச் சாப்பாட்டுக் கெண்டாலும் வாறியோ ?" என்று முகத்தார் கேட் கின்றார். நப்பாசையின் உள்முடிச்சு அவ்வினாவிற் காளத்திரியாட்டமிடுகின்றது.
"அவன்தானே அப்பு சொல்லிப் போட்டான்.
கூட்டாளியளை விட்டுப் போட்டு வரேலாது எண்டு'
என்று சுப்பிரமணியம் சொல்லுகின்றான். வழக்கத்தில் மூத்தவன் அதிகம் பேசுவதில்லை.
"அப்ப வாறன்.எல்லாருக்கும் வாறன்’ என்று கூறி அவசரமாகப் படலையைத் திறக்கும் குமாரசாமி, ஒரு கணந் தரித்து, ‘‘அப்பு, இண்டைக்கு எங்கடை நாடகம் பின்னேரம் முத்தவெளியிலை நடக்கும்.

Page 28
30 sreiu). Glur. [...]
தல்லா இருக்கும்.நேரம் இருந்தா வாருங்கோவன்" என்று குரல் கொடுத்துச் செல்லுகிறான்.
O
கும்பம் வைத்து கைவிசேடம் பரிமாறப்பட்டாகி
விட்டது. விறாந்தையிலுள்ள "செற்றிக் கதிரைகளில் அமர்ந்து சுப்பிரமணியமும், சதாசிவமும் பேசிக்கொண்டி ருக்கின்றார்கள். அவர்களுடைய பேச்சு சதாசிவம் புதிதாக வாங்கியுள்ள காரைச் சுற்றிச் சுழல்கின்றது. அவர்களுக்குச் சற்றுத் தூரத்தில், தூணிலே சாய்ந்த வாறு செளந்தரத்தின் சார்பாக கைவிசேடவைபவத்திற் கலந்து கொண்ட முகுந்தன் நிற்கிறான்.
"அவன் மூத்த மாமனுக்கு நல்ல மரியாதை."
கமலா, பரிமளம், பத்மா ஆகிய மூவரும் சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள். ஹம்ஸதொனியும் பெரிய மனுவிமாதிரிக் கூடமாட வேலை செய்கின்றாள். "குத்திப் பலகையில் இருந்து கொண்டு, அவர்களுக்கு மனோகரன் தன்னுடைய கொழும்பு அநுபவங்களைச் சொல்லிக்கொண்டிருக் கிறான்.
கறித் தேங்காய்களை யெல்லாம் ‘போர்த் தேங்காய்களாக்கி முற்றத்திலே, போர்த் தேங் காயடி நடை பெறுகின்றது. யாருடன் என்ன விளையாட்டில் ஈடுபட்டிருந்தாலும், அசோகன் "குழப்" பாமல் இருக்க மாட்டான். கல்லிலே பட்டுத்தான் தன்னுடைய 'கையான் உடைந்ததாக அவன் சண்டை பிடிக்கிறான்.
புதுவருடத்துக்கு ஏனைய மக்களின் அன்பளிப்பாகக்
கிடைத்த புத்தாடைகள் "ரீப்போ’யில் இருக்கின்றன. அவற்றை முகத்தாரின் கண்கள் மேய்கின்றன.

0 தேர் 31 口。
* புள்ளை பத்மா !”*
அவள் கைவேலைகளை விட்டுவிட்டு வருகின்றாள்.
' ' ) is 5 உடுப்புகளை எடுத்து வை புள்ளை. பின்னேரம் ஒருக்கா முத்த வெளிக்குப் போகவேணும் நாடகம் பார்க்க. போகேக்கை மூத்தண்ணர் வாங்கித் தந்த வேட்டியையும், கொத்தார் வாங்கித் தந்த சால் வையையுந்தான் போட்டுக்கொண்டு போகவேணும்"
* "ஐயோ, இளையண்ணர்தான் பாவம்'
**ஓம் தங்கச்சி. எளியவனாப் பிறந்தாலும், இளையவனாப் பிறக்கக் குடாது' என்று மனோகரன் அடுக்களையிலிருந்தபடியே சொல்லுகின்றான்.
இதிலே என்ன நகைச் சுவையைக் கண்டார் களோ? அண்ணரும் அத்தானும் விழுந்து விழுந்து சிரிக்கின்றார்கள். மனோகரன் கையில் ஒரு நெருப்புக் கொள்ளியைத் தூக்கிக்கொண்டு, அடுக்களையின் மறைவான மூலையைப் பார்த்து நகருகின்றான்.
'இப்ப தம்பியும் பெரியாக்களைப் போலை' என்று: பரிமளம் குரல் எழுப்புகின்றாள்.
**சும்மா சத்தம் போடாதை பரிமளம். இளையவன் எண்டாப்போலை நெடுகிலும் சின்னப்பொடியன் எண்ட
நினைப்பே? அவனும் உழைக்கிறான்; சம்பாரிக். கிறான்" என்று மச்சர்ன் சார்பில் கமலர் பேசுகின் றாள்.
*மனோகரன் சிகரெட் குடிக்கத் துவங்கீட்டான் போலை, ஓ, உங்கை கிறாதியாலை புகை வருகுது. வளந்தாப் பிறகு, அதுஅது, அதுகளின் ரை விருப்பம்."

Page 29
32 எஸ். பொ. ()
** என்ன மருமகன்? சயன்ஸ் பாடங்கள்தானே? பேத்தனமா இங்கிலிஸை நெக்லட் பண்ணாதை. ""
'ஹி இஸ் குட் இன் இங்லிஸ். கிறடிற் எடுப் பான்' என்று சதாசிவம் முகுந்தனின் சார்பாக உத்தர வாதமளிக்கின்றான்.
இ தூண் விழுந்திடப் போகுது. அந்தக் கதிரையிலை
ரன். "'
* அத்தான், உந்தத் தூணடியிலை நிண்டு பாத் தால் ஹம்ஸதொனி அடுப்படியிலை இருந்து வேலை செய்யிறது தெரியுதாக்கும். '
* ' சதாசிவம். . . வானதிக்குக் கூடப் பிந்தீட்டியள். அசோகனுக் கெண்டாலும் முந்தலாம், ’’
சதாசிவத்தின் கண்கள் பரிமளத்தைத் தேடுகின்றன,
வாயைப் பொத்தும்படி சுப்பிரமணியத்திற்குக் கமலா சைகை காட்டுகின்றாள்,
O
விறாந்தை ஓரத்தில் விழுந்து கிடந்த ஓர் இஞ்சி விசுக்கோத்தை எட்டியெடுத்த முகத்தார், குழந்தையின் சுபாவத்துடன் ஒருவருக்குந் தெரியாமல் தன்னுடைய தளர்ந்து போன பற்களுக்கிடையில் நசுக்குகின்றார்.

But the king's younger brother named Vattagamini killed the villainous commander and took on himself the government. The little son of his brother, king Khalatanaga, whose name was Mahaculika, he took as his son; and the (child's) mother, Anuladevi, he made his queen...There-upon the Damilas made war upon the king; in a battle near Kolambalaka tha king was vanquished. . . He took Anuladevi with him... But, to lighten the car the king gave to Somadevi(his second wife) his splendid diademjewel and let her, with her own consent, descend from the car...Of the Seven Damitas one, fired with passion for the lovely Somadevi, made her his own and forthwith returned again to the further coast.
-The Mahavamsa Dr. Wilhelm Geiger's Edition.
(மகாவம்சத்தை வரலாற்று நூலெனக் கருதுபர்கள் "கணையை வரலாற்றுச் சிறுகதையெனக்கொள்ள லாம். கதையின் நிகழ்ச்சிக் காலம் கி.மு. 44-ஆகும்.)
8- ܚܘܐܘ

Page 30
அஸால்ஹ பட்சம் பிரசவித்த பூரணை.
வென்ற ஏழு தமிழ் வீரர்களுள்
வட்டகாமினியை
மாடத்தில்
ஒருவனான குறு நிலவேளின் மாளிகை. அமைந்துள்ள சயன மண்டபம். நிலா, பரதம் பயிலும் பாற்கதிர்க் கற்றையைப் பீச்சுகின்றது. பாலாவி:
 

(; கணை 35 口
நிகர்த்த திரைச் சேலைகளைத் தழுவி, அவற்றை நாணத்திலாழ்த்திக் களியிற் கெம்பும் மாருதி. வாலிப உடலங்களிற் சடைத்து வளருஞ் தசைப் பிடுங்கல் விரகம் வியாபிக்கும் நிலைக் களனிலும், சோமாதேவியின் சேத நை சுழல் காற்று வாய்ச் சருகாக எற்றுண்டு, அலைக் கழிந்து.
"கணிகைக் காற்று. ஈழம் வாழ் பெளத்தர்களின் சிங்களக் கொடி இறக்கப்பட்டிருக்கும். மகிந்த தேரர் வாழ்ந்து, போதி மாதவரின் புனித நெறி பரப்பிய குன்றிலிருந்து எழுத்து, கடம்பநதிப் பிராந்தியத்திற் சீதள மது பருகும் மந்தமாருதம், சைவத் தமிழர் பறக்க விட்டிருக்கக்கூடிய ஆதிக்கக் கொடியை, இதே அம்மணச் சரசத்துடன் தழுவிச் சுகமனுபவித்துக் கொண்டிருக்கலாம். போரிலேற்படுந் தோல்வி, உடலிலே நித்தியம் ஊறும் புலால் உணர்ச்சிகளைத் தீய்த்துப் பொசுக்கி விடுகின்றதா ? இந்நேரத்தில். கடம்ப மலர்க் காட்டில், அனுலாதேவியின் மருங்கில், மன்னர் வட்டகாமினி சித்த பரிசுத்த நோன்பிலா ஆழ்ந்திருப்பார்? அனுலாதேவி கொடுத்து வைத்தவள்; அனுபவிக்கப் பிறந்தவள். அண்ணனின் மஞ்சத்தைப் பங்கிட்டு, அந்தக் கலவிக் களியிற் குழந்தை பெற்ற வளை, "மாடும் கன்று மாகப் பொறுப்பேற்று, இராணி யாக்கி, ‘அண்ணனுக்குத் தெரிந்த அதே அந்தப்புரக் கலையில் நானுந் தேர்ந்தவன்’ என்பதை வட்டகாமினி மன்னர் நிரூபிக்கவில்லையா ? பின்னர், ஏன் என்னைத் தன் இளையாளாய் நாடினார் ? அந்த மலரிலே தேன் இற்றுவிட்டது; வண்டு புது மலரை நாடுகின்றது என்று நான் நினைத்தது தவறா ? சென்ற மஹா பட்சத்தை மறப்பதா ? முதன் முதலில், என் கன்னிகை அழிந்து, பூ நோக, இடை நொந்து, மன்னருடைய தழுவலில், அரண்மனை மஞ்சத்திற் சயனித்த அந்த நாள் மஹா

Page 31
36 எஸ். பொ. )
பட்சத்திற் புலர்ந்ததுதான். இரண்டு திங்கள் களுக்கிடையில் நான் தேன் இற்ற மலரானேனா ? என் வாலை வனப்பும் வசீகரமும் அழிந்தனவா ? மதுபாயுந் திரேகிகளான இரண்டு மன்னர்களின் சிற்றின்பத் திருப்திக்குத் தன் உடல் பிழிந்து, கருத்தரித்து, சுமை தூக்கிய அந்தக் கிழவி மட்டும் இன்றும் இனிக் கின்றாளா ? இல்லையேல்...? போர்க்களம் விட்டுத் தப்பியோடுந் தேரிலிருந்து ஏன் நான் மட்டும் இறக்கப் பட்டேன்? தேர் விரைவாகச் செல்ல வேண்டு மென்றால் ஒருவர் இறங்கவேண்டும்’ என்று சொல்லி என்னையே பார்த்தால் என்ன அர்த்தம் ? இதில் என் விருப்பம் எங்கே இருக்கின்றது ? பூவின் சம்மதங் கேட்டா, அஞ்சலிப் பீடம் அனுப்புகின்றார்கள் ? நான் மன்னருக்கு ஊட்டிய கலவிக் களியின் பெறுமானம், இறுதி நேரத்தில் அவர் பரிசாகத் தந்த கிரீடத்து ஆபரணந்தானா ?. . . முத்தும் முத்தமிழும், செந் நெல்லுஞ் செங்கரும்பும் விளையும் இந்நாட்டிலிருந்து வந்த மாவீரனே எல்லாளன். ஐம்பத்தாறு ஆண்டு களுக்கு முன்னர், அந்தச் சைவனைத் தோற்கடித்து பெளத்தத்தின் மேன்மையைச் சிங்களத்தில் நிலை நாட் டினார் மாமன்னர் காமினி.ஆண்டுகள் பலவாகி விட்டன. எல்லாளன் மரணத்தைத் தமிழர் மறந்துவிட்டனர்என்று தான் எல்லோரும் நம்பினர். யானையின் ஞாபக சக்தி தமிழருக்கு இருக்கின்றதாம். ஏழு தமிழ் வீரர்கள் சூறா வளியென வந்தார்கள். அவர்களை மகாகமைப் பிரா மணன் வெற்றிவாகை சூட்டுவான் என நினைத்த மன்னர் வட்டகாமினியின் பேதமை என்னே! செருக்கள வீரம் ஒருவன் பிறப்பில் அமைகின்றது. ஏழு தமிழர் களுடன் போராட வக்கின்றி தேர் ஊர்ந்து காண்க மேகிய பொழுது, அனுலா தேவியை மட்டும் "மாடும் கன்றுகளுமாக அழைத்துச் சென்றது ஏன்? என் வாலை வனப்பும் வசீகரமும் அழிந்தனவா? மன்னராயி

56) 37
ருந்த தன் அண்ணன் ஹாலதநாகாவைக் கொன்ற
சேனாதிபதி மகாரட்டகனை வென்று, மணிமகுடத்தை
மட்டுமன்றி, மகா ராணியையும் "மாடும் கன்று மாகப்
பரிசுபெற்ற, மாமன்னர் சதாதீஸனின் கனிஷ்ட குமாரர் வட்டகாமினி கோழையா? போர்க்களம்
விட்டோடும் பேடியே வீரனா? அந்த "வீரன்" சுவைத்த
இந்த உடலை, வேறொருவன் தீண்டா வண்ணம் நான்
தன்னந்தனியாகப் போராட வேண்டுமா? எதற்காக? சூரியோதயத்திற் குளித்து மகிழக்காத்திருக்கும்போது,
வைகறைக் குறையொளியில் வீயாகக் காய வேண்டுமா? ஏன்? அண்ணன் மனையாளை "மாடும் கன்று மாகத்
தன் நெஞ்சிற் குடியேற்றியிருக்கும் வட்டகாமினிக்கு இரண்டு திங்கள்கள் இளையாளாக- காமக் கிழத்தி யாக- வாழ்ந்தேன் என்பதற்காகவா?"
அனுலாதேவியும்
மகனுமாக."

Page 32
38 எஸ். பொ. 0
சிந்தனை ஊஞ்சலின் அலைக் கழிப்பிலிருந்து விடு படும் வேட்கையுடன், தென் திசையிலே தன் பார் வையை வீசுகிறாள். பாட்டும் - கூத்தும் - யாழின் இசை யும்- சதங்கை ஒலியும் அது கணிகையர் வீதி. பொற் காசுகள் வீசப்படுகின்றன. காமக் குளிப்பு நடைபெறு கின்றது.
"கணிகையரும் பெண்கள். மன்மத கிருகம், கற்பின் மருநிலமா? இன்பத்தின் விளைநிலமா? பூஜைஅறையா? அங்காடித் துறையா?"
பாலாவி திகர்த்த திரைச் சேலைகளைத் தழுவி, அவற்றை நாணத்திலாழ்த்திக் களியிற் கெம்பும் மாருதி. சோமாதேவியின் உள்ளத்தில் இடு காட்டு மோனம்.
சிலம்பொலிச் சிதறல், சோமா தேவியின் சென்னி அத்திக்கிலே திரும்புகின்றது. பணிப் பெண் களும் வண்ணமகளும்! மலர்த்தட்டு, பழத்தட்டு, அகிற் றட்டு, மதுத்தட்டு. பரிமள கந்தங்களில் அளையும் மாருதி, ஒரு தட்டில் வழியும் மலர்கள் அவள் கவனத்தை ஈர்க்கின்றன.
* மலர்கள். அற்ப ஆயுசு. ஒரு நாள் வாழ்க்கை.
அதற்கிடையில் எத்தனை வண்டுகளுடன் கூடிக் களித்தனவோ?’
அவளுடைய கண்கள் தென்திசையில் மேய்ந்து மீளு கின்றன. கணிகையர் தெரு, உடலின் பத்தில் அங்காடி வணிகம் நடைபெறுகின்றது. வெள்ளப் பெருக்கில் மாயுந் தீயோ? மதநெய் உறிஞ்சி வளருந் தீயோ? "கற்பு? அது மலருக்குங் கிடையாது; கணிகைக்குங் கிடையாது. அண்ணனுக்குந் தம்பிக்கும் ஒரே உடலில் தசைத் திரள்களைப் படுக்கையாக்கிய அனுலாதேவிக்கு இருக்கின்றதா? ஏன் எனக்கு மட்டும் தேவை?"

கணை * 39
'அம்மா!'-பணிப்பெண்களுடன் வந்து, திரும்பிச் செல்லாத வண்ணமகள் வசந்தமாலையின் அழைப்பு: குறுகிய காலத் தொடர்பு; ஆழமான ஈடுபாடு. விழி யெறிந்து பார்க்கின்றாள். .
"இந்த வண்ணமகளின் வன்ன முகத்திற் கார் மேகத்தை அள்ளி அப்பியது யார்?"
'ஏன்டி, உனக்கிந்தக் கலக்கம்? எனக்கிக்லாக் கவலை?”*
'நீங்கள் சுந்தரச் சிங்களத்தியாகவும், நான் தமிழச்சியாகவுமிருக்கலாம். ஆனால், இருவரும் பெண்கள் கற்பே பெண்மையின் பெருமை. அதனை நீங்கள் இழந்தாலும் நான் இழந்தாலும், ஒரு பெண் தன்னுடைய கற்பை இழந்தாள் என்னுங் கறையே எஞ்சும். . . கற்பைப் பாதுகாக்கும் போராட்டத்திலே உயி ரைப் பலியிடுபவளுக்குச் சுவர்க்க பதவி கிட்டுகின்றது என்று என் குலத்தவர்கள் நம்புகிறார்கள்.’’-அர்த்தச் செறிவைத் தேக்கித் தன் மோதிரத்தைக் காட்டுகிறாள். அந்த மோதிர முகப்பின் கள்ள அறையில் நஞ்சு இருப் பதை ஊகிக்க முடிகின்றது.
"நஞ்சு தரும் சாவு வீரத்தின் பரிசா?”
சோமாதேவி, தொண்டைக்குட் சலங்கை கிலுக்கிச் சிரிக்கிறாள்.
* கவலையை மறப்பதற்கு வழி இன்ப மது மாந்து வதுதான், பைத்தியக்காரி புண்ணைச் சொறிந்து கூட இன்பம் அனுபவிக்கலாம். வண்ணமகளே! உன் கலை வண்ணங்காட்டு. என் வாலை வனப்பும் வசீகர மும் எவரையுங் கிறுங்கச் செய்யும் விதத்தில் ஒப்பனை செய். . . ஏன் தயக்கம்?...இந்நாட்டில் எப்படியடி, முதலிரவுக்குப் பெண்களைத் தயார் செய்வார்கள்?**

Page 33
in 40 எஸ். பெr. LT
மண்ணாசை துறந்து, போர்க்களத்திலே விழுப் புண் பெற்று விருது புனையும் வீறு போக்கி, சிங்களப் பைங்கிளி சோமாதேவியின் தசையணைப்பே போது மென்று ஊர் திரும்பிய வீரக்காளை வரும் அரவங் கேட் கின்றது.
"இவனுடைய காதலும்; தமிழர் தம் போக்கும்! பாண்டுகாபய நிருமாணித்த தித்தராமாவின் அயலிற் சிறைப்பட்டேன். இங்கு வருவதற்கிடையில், அவன் என் அருகில் எத்தனை இரவுகளை-மாந்தைத்துறை யிலும், நாவாயிலும், மருவூர்ப்பாக்கத்திலும்-கழித் திருக்கின்றான்? என் வாலை வனப்பையும் வசீகரத்தை, யும் விழியாற் பருகினானேயன்றி என்னைத் தீண்டிய தில்லை. காவலில்லாத கரும்புத் தோட்டத்தை மதம் பிடித்த யானையால் அழிக்கமுடியாதா? இவன் மலரைச் செடியில் வைத்தே இரசிக்குங் கவிஞனா,கலைஞனா?. இவன் எங்கே? அண்ணனின் உதிரஞ் சேனாதிபதியின் வாளிற் காய்வதற்கு முன்னரே, அண்ணியைத் தன் படுக்கையில் அனுபவித்த வட்ட காமினி எங்கே? "மணி முடி வேண்டாம்; சண்டாளப் பெண் அசோகமாலாவின் காதலே வேண்டும்" எனக் காதலை ஓம்பினான் சாலி ராஜகுமாரன். அவன் தம்பி முறையினனான வட்ட காமினி தன் மணிமுடியின் உரிமையைக் காக்க மாடும் கன்றுமாகக் கிடைத்த அந்தக் கிழவியைப் பெரிதாக மதிக்கின்றான். என் வாலை வனப்பும் வசீகரமும், எங்கே?..."
வந்தவன் சிலையாக நிற்கின்றான். தலைவிரி
கோலமாக, கையிற் கட்டாரியுடன், "என் கற்பைத் தீண்டுவாயோ?" என மயிர் நீப்பின் வாழாக் கவரிமான்

se)6 41
அன்னாளை எதிர்பார்த்தே வந்தான். இரும்பை வளைப்பதற்கு முழுப்பலத்தையுந் திரட்டி வந்தவனிடம் குசப்புல் அகப்பட்டால்?
சோமாதேவி தட்டிலிருந்த மலர்களை மஞ்சத்தில் ஒய்யாரமாகத் தூவி, "" நிற்கின்றீர்களே?.உங்கள் தேசத்து மது சுவையாக இருக்கின்றது. ’’ மது நிரம்பிய கிண்ணத்தை நடன அபிநயத்துடன் நீட்டுகின்றாள். அவளுடைய விரல்கள், அவனுடைய கரத்தில் கண் ணிமைக்கும் நேரத்தில் யாழ்மீட்டித் திரும்புகின்றன.
** சோமா! சிங்களத்திகளின் பண்பு என்னை மிகவுங் கவர்ந்துள்ளது. தமிழச்சிகள் கற்பு என்று வறட்டுத் தத்துவம் பேசி, உணர்ச்சித் தீயைத் தேக்கி, உலர்ந்த விறகுகளாக உக்கிப் போகிறார்கள்.'"
** சிங்களத்திகள் தென்திசை வாழ் கணிகையரு மன்று; கற்பு தத்துவமுமன்று. அது வாழும் முறை. வீர மிருக்கும் இடத்தில் அதைப் பயிலலாம்.'
**நீயும் சாத்திரம் பேசுகின்றாயா?"
* 'இல்லை. நிதர்சனம் பேசுகின்றேன். கற்பைக் காப்பாற்ற வேண்டிய வட்டகாமினி வீரத்தைச் செருக்களம் போக்கி, கானகம் ஏகி விட்டபின்னர்?...”*
பஞ்சணைக்கு வந்து, படுப்பதாக அபிநயித்து.
D6Dif தூவிய மஞ்சத்திலே குப்புறப்படுத்து, வாலை வாழிப்பில் வீங்குங் கொங்கைகளை முட்டாக, வைத்து, அவை பிரியும் மையப்பகுதியின் பிளவைக் கவர்ச்சிக் கோணத்திற் காட்டி, குறுந் தசைக் குவடு களின் அடிவாரத்திலே உடலை நிமிர்த்தி, கண்களைச் சற்றே மேலிமைக்குள்ளேற்றிய அசைவிற் பார்க் கின்றாள்.

Page 34
42 எஸ். பொ. ()
மது அருந்தித் தலை நிமிர்த்திய அவனை அவளுடைய சுந்தர சாகஸ நிலை தன் வசத்தை இழக்கத் தூபமிடுகின்றது.
சோமாதேவி
மலர்தூவிய
மஞ்சத்திலே
குப்புறப்படுத்து.
"இந்த மஞ்சமே என் போர்க்களம். என் அம்மன உடலை அப்பிய அவயவங்களே என் ஆயுதங்கள்?"
மதுவிலும் பார்க்க அதிகம் போதையூட்டும் விழி களில் அம்பு தொடுத்து, மஞ்சத்திலே தூவப்பட்டிருக்கும் மென் மலர்களையும் விஞ்சும் வாக்கில், மது வழியும் கிண்ணத்தின் விளிம்பிலுஞ் சுவை தரும் இதழ்களை விரித்துப் புன்னகை சிந்துகின்றாள். -
மன்மதகிருகம், குப்புறக்கிடக்குமிடத்தைச் Fßš கிறான். வட்டகாமினியின் சிற்றின்ப தூவழியிடத்தை
 

கணை 43
யும், துரங்கமக் குதியாட்டமிடுங் கொங்கைகளையும் வான் பார்க்கும் நிலையிற் புரட்டுகிறான்.
', ''நான் வீரன். வீரத்தின் பரிசாக உன்னை அனுப விக்கும் உரிமையைப் பெறுகின்றேன்.""
**ஆம். வட்டகாமினியைப் போன்ற வீரன். அவர் தன் அண்ணன் மனைவியிடம் தன் வீரியத்தைச் சிந்திக் காட்டுகின்றார். நீங்கள் மாற்றான் மனைவியிடம் உங்கள் வீரியத்தை விதைக்க வந்திருக்கிறீர்கள்."
‘என் உள்ளத்திற் கொழுந்து விட்டெரியும் காதலை நீ அறிவாய்."
‘'சிறைப்பட்ட ஒருத்தியிடங் காதல் செய்ய வந்துள்ள உங்கள் வீரத்திற்கும், தனக்கு வாழ்க்கைப்பட்டவளின் கற்பைக் காப்பாற்ற வக்கற்ற என் கணவரின் வீரத் திற்கும் என்ன வித்தியாசம் ?’’-ஒரு கணப் பின்னத் தின் முனிவு சிந்திய காங்கைத் துகள்கள்.
96).jg),60Lu கண்கள் தீக்கங்குகளை உமிழ் கின்றன.
* 'நாத்தடித்தவளே ! "விழுப்புண் பெறா நாள் தோன்றா நாளே என்று விழுப்புண்ணை ஓம்பி வாழும் இத் தமிழனையா கோழையென்றாய் ?' YA
இன்னொரு,கிண்ணம் மது அருந்தி நிமிர்கின்றான்.
*இந்த மஞ்சமே என் போர்க்களம். என் அம்மண
உடலை அப்பிய அவயங்களே என் ஆயுதங்கள்."
O

Page 35
** கோபத்தின் முறுக்கு ஏறும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கின்றீர்கள் ? . . . மது தரவா?’’ v
அவளுடைய மேனிக்குத் தசை ஒத்தணங் கொடுக் கும் நெருக்கத்தில், மஞ்சத்திலே அமருகின்றான்.
மதுக்கிண்ண விளிம்பிற்கும், சோமாதேவியின் கள்ளுறும் இதழ்களுக்கும் வித்தியாசம் மறைகின்றது.
O
சிங்களத்தீவில் கடம்ப மலர்க் காட்டில், அனுலா தேவியுடன் வட்ட காமினி கலவிக் களியின் மயக்கத்தில் துயில் கொள்ளும் வேளை ! 女

ஏன் வாசலிலேயே நின்று விட்டீர்கள்? உள்ளுக்கு வாருங்கோ ஐயா. இன்றைக்கு நான் மட்டுந் தான் வேலை செய்யிறன். தம்பிக்கு "சேவ் , கையோடு முடிந்துவிடும். இளமட்டங்கள் சில, எங்களுடைய "ஸ்டை” யிலைப் பார்த்துத்தான் உள்ளே வருவாங்கள். *ஜங்கி ஸ்டைலில் என்று சொல்லி, நாக்கு வழிப்பதைப் போல அந்தரப்பட்டு, ஒரு படத்தையும் அதில் நடிக்கும் நடிகனின் பெயரையும் சொல்லி, அப்படியே வெட்டி விடும்படி சில விறுதாக்கள் கேட்கும். அதைஏன் ஐயா கேட்கிறீர்கள்? மயிரைக் கவனமாகச் சீவி விடவில்லை என்பதைக் காட்டிக்கொள்ள, ஒரு மணி தேரம் அவர்கள்

Page 36
O 46 எஸ். பொ. )
கண்ணாடிக்கு முன்னால் சீப்புடன் படும் பாட்டைச் சொல்ல முடியாது. பார்த்தீர்களா? மரியாதை தெரியா மல் நிற்க வைத்தே பேசிக் கொண்டிருக்கிறன். குடையை அந்த மூலையிலை வையுங்கோ. ஒமோம். அந்தப் "புட்டு வத்திலை வசதியாக இருக்கலாம். அது நேற்றையப் பேப்பர். இன்றைக்குப் பேப்பர்காரப் பொடியன் இன்னும் வரவில்லை. புழுக்கமாகத்தான் இருக்கிறது. விசிறியைப் போட்டு விடுகின்றன். நீங்கள் இந்த ஊருக்குப் புதிதாக்கும். நான் ஆக்களைப் பாத்துச் சொல்லுறதிலை கெட்டிக்காரன். பார்த்தீர் களா, சரியாகச் சொல்லி விட்டேன். வேலை மாற்ற மாகி வந்திருக்கிறீர்களாக்கும். இல்லையா? மட்டக் களப்பிலிருந்து நல்லூர்க் கந்தசுவாமிக்கோயில் பார்க்க வந்திருக்கிறீர்களா? இன்றைக்குக் கார்த்திகைத் திருவிழாவாக்கும். ஓம், தம்பி மறந்து போனன். தம்பிக்கு சேவ் மட்டுந்தானே? இருபத்தைந்து சதம். சரி, போயிட்டு வாரும். ஐயா, இந்தப் புட்டுவத்திலை வந்து இருங்கோ. இது நாலுபேர் வேலை செய்யிற பெரிய கடை தான். எலெக்ஷனுக்கு நாலு நாட்கள் தான் இருக்கின்றன். அது வரைக்கும் நான்தான் கடையைத் தனியாப் பார்க்கவேணும். நான் ஒரு வாய் வெற்றிலை போடுகிறன் ஐயா. அப்பொழுதுதான் கை சுறுசுறுப்பாக வேலைசெய்யும்.
ஏன் சுவர்களை அப்படிப் பார்க்கிறீர்கள்? இவை சலூனில் மாட்டத்தக்க படங்களல்ல என்று நினைத்துத் தானே? சினிமா நடிகைகளின் படங்களையும், சீனாக் காரிகளின் கொங்கொங் படங்களையுந்தான் சுவர் களிலை மாட்டலாமென்று பெரும்பாலான சலூன்காரர் கள் நினைக்கிறார்கள். ஒரு காலத்திலை அப்படிப்பட்ட படங்கள்தான் இங்கும் இருந்தன. இவையெல்லாம் விக்டர் செய்த மாற்றங்கள். லிங்கன், காந்தி, பாரதி,

D அணி 47
லெனின், மாஸேதுங், ஜீவானந்தம், . .அந்தப் பெயர் தான் மனதிலை நிற்கமாட்டுது. லீயூ-சாவூ-ஸி என்று சொன்னிர்களா? ஓம். அதைப்போல தான் ஒரு பெயர். இந்த வரிசையிலை நடுவிலை இருக்கும் படந்தான் விக்டருடையது. மீசையோடு இருக்கிற படம். அதற் குப் பக்கத்திலிருக்கும் படம் முருகேசு வாத்தியாருடை யது. சே, இந்த நானா வரவர வலு மோசம். வெற்றி லைக்கு நொங்குப்பாக்கு வைக்கல்லை.
நான் "வீட் எடுக்க உள்ளை சென்ற பொழுது ஏதோ கேட்டீர்களே? நன்றாகப் பின்னுக்கு நகர்ந்து உட்காருங்கோ . ஏன் இந்தப்படங்களைச் சிவப்பு * லைட்'டுகள் அலங்கரிக்கின்றன என்றா? அதுவும் விக்டரின் ஏற்பாடுதான். இந்தப் படங்களுக்கு நீல * பல்பு அழகாக இருக்குமென்று பலர் சொல்லியிருக் கிறார்கள். விக்டர் அடிக்கடி சொல்லுவான். தொழி லாளர் அணியைச் சேர்ந்தவர்களுடைய இரத்தம் சிவப் பாம். ஏன் சிரிக்கிறீர்கள்? விக்டரின் கதையைக் கேட்டீர் களென்றால் சிரிக்க மாட்டீர்கள் கொஞ்சம் இந்தப் பக்கமாகத் தலையைக் குனியுங்கோ. . . கதையைச் சொல்லிக் கொண்டே இருக்கும் பொழுது வேலையும் முடிந்துவிடும்; நேரம் போறதும் தெரியாது. ‘இவனி டம் தலையைக் கொடுத்து விட்டோம்; சொல்லுவதை எல்லாம் சொல்லட்டும்’ என்று சிலர் நினைப்பினம், நீங்கள் அப்படி இல்லையா? சந்தோஷம்.
என்னுடைய அண்ணன் டொமினிக் தான் இந்த சலூனைத் திறந்தவர். முப்பது வருஷம் இருக்கும். அப்பொழுது இது தார்றோட்டுமில்லை : கஸ்தூரியார் வீதியுமில்லை. மக்கிபோட்ட றோட்; செம்மாதெரு என்று சொல்லுவார்கள். வின்ஸர் தியேட்டருக்குத் தக ரக் கொட்டகை என்றுதான் பெயர், வண்ணாங்குளத் தடி பாபர் சலூன் என்றால் எல்லாருக்கும் தெரியும்.

Page 37
48 6 Taiv. GALAT. EJ
நல்ல உழைப்பு. அந்த அண்ணனுடைய மகன்தான் விக்டர். அவனை நன்றாகப் படிப்பித்து உத்தியோக காரனாக்கவேண்டும் என்று அண்ணனுக்கு நல்ல ஆசை. மட்டக்களப்புப் பகுதியிலை சாதி வித்தியாசங்கள் எப்படி என்று தெரியாது. அங்கு அவ்வளவாகச் சாதி பார்ப்பதில்லை என்று சொன்னீர்களா? ஆனால், இங்கு இப்பொழுதுகூடச் சாதி வித்தியாசம் பாராட்டுகிறார் கள். முந்திய காலத்திலை சொல்லத் தேவையில்லை. தேத்தண்ணிக்கடைகளிலை எங்களுக்கெல்லாம் கறல் பேணி அல்லது சோடாப் போத்தில் தனியாக இருக்கும். நீங்களும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? விக்டரைச் சம்பத்திரிசியார் கல்லூரியிலை அண்ணர் சேர்த்தார். ‘ஏன் உனக்குப் படிப்பு? சவரக்கத்தியை எடுத்துக்கொண்டு சிரைக்கப்போவன்' என்று தன்னை, பொடியன்கள் பகிடி பண்ணுகிறாங்கள் என்று எத்த னையோ நாட்கள் விக்டர் அழுதிருக்கிறான். யாழ்ப் யாணத்திலை சாதி வித்தியாசம் வலுபொல்லாது. தலையைக் கொஞ்சம் இந்தப் பக்கமாக..இன்னும் கொஞ்சம்...சரி. நான் எல்லாரிடமும் இப்படிக் கதைப் பதில்லை. விக்டருக்குப் படிப்பு நல்லா வந்தது. ஆனாலும் . ஏழாம் வகுப்புடன் அவனுடைய படிப்புத் தடைப்பட்டுப் போச்சுது. என் தம்பிக்காரனொருவன் அகப்பட்ட பணம் முழுவதையும் சுருட்டிக் கொன்டு, யாரோ ஒரு கரையூர் வேசையையும். ‘தூக்கிக்கொண்டு நீர்கொழும்புக்கு ஓடிவிட்டான். அத்துடன் கடையும் சீரழிந்தது. இந்த நேரத்திலை விக்டரும் எங்களுடைய தொழிலுக்கு வந்துவிட்டான். நான் சிகரெட் புகைப்ப தில்லை. வெற்றிலைதான் போடுவன். நெருப்புப் பெட்டி தேவையோ? நீங்கள் புகையுங்கோ. எல்லாம் பழக்கந்தானே? ஓமோம். எனக்கும் இப்படித்தான். நெடுநேரம் இல்லாவிட்டால் வாய் புளித்துவிடும். நெருப் புக் குச்சைக் கீழை போடுங்கோ. நான் கூட்டித் தள்ளு

D அணி 49 ם
வன். தலையை இன்னும் கொஞ்சம் குனியுங்கோ. எங்கை விட்டனான்? ஆ. . . விக்டர் சலூனுக்கே வந்து விட்டான். இங்கை பேப்பர் ஒழுங்காக எடுப்பது வழக் கம். வாடிக்கைக்காரருக்குத் தேவை. சும்மா எவ்வ ளவு நேரந்தான் படத்தைப் பார்த்துக்கொண்டு இருக் கிறது? பின்பு, அவை கடுதாசித் துண்டுகளாகவும் உத வும், விக்டர் பேப்பர்களை ஒழுங்காக வாசிப்பான். ஆனாலும், முருகேசு வாத்தியாருடைய சிநேகிதந்தான் அவனுக்கு அரசியல் விஷயங்களிலை ஆசையைக் கொடுத்தது.
t ஐயா, இந்தச் சுருள் மயிருக்குக் கொஞ்சம் 'சோட்" டாக வெட்டினால் நல்லது. அப்படியே செய்யட்டுமா?. ஓம். விக்டரின் படத்திற்குப் பக்கத்திலை இருப்பது தான் முருகேசு வாத்தியாரின் படம். அவர் பெரும் படிப்புப் படித்த மனுஷன். ஒருநாள் அந்தப் புட்டுவத்தி லிருந்து சொன்னார். அவர் எப்பொழுதும் அந்தப் புட்டுவத்திலைதான் உட்காருவார். "விக்டர்! மனிதன் தானும்-மனைவியும்-தட்டானும் என்று வாழக்கூடாது. மனிதன் உலக சமுதாயத்தின் ஓர் அங்கம். உலகத்தி லுள்ள தொழிலாளர்கள் எல்லாரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள். அந்த அணியின் பெருமையை நிலை நாட்டும் வர்க்கப் போராட்டத்தில் அவன் ஓர் அங்கமாக மாறவேண்டும். அவர் வடிவாகப் பேசுவார், எனக்கு அதிகம் விளங்காது. விக்டருக்கு எல்லாம் விளங்கும்.
இப்பதான் பேப்பர்காரன் வருகிறான். ஏன் தம்பி ? இன்றைக்கு றெயின் பிந்திட்டுதோ? கையிலை வேலை. அந்த மேசையிலை வையுங்கோ...விக்டர் நிறையப் புத்தகங்களும் வாசிப்பான். முருகேசுவாத்தியார் பெரிய பெரிய புத்தகங்களை வாசிக்கக் கொடுப்பார். *வேலையை ஒழுங்காகக் கவனிப்பதில்லை' என்று ബി-4

Page 38
50 எஸ். பொ.
நானே எத்தனையோ தடவை அவனை ஏசியிருக் கிறன். “முருகேசுவாத்தியார் கொம்யூனிஸ்டு. அவருடன் சேர்ந்து கொம்யூனிஸ்டாகக் கூடாது' என்று ஒகஸ்டின் சுவாமியார் கூடப் புத்திமதி சொல்லியிருக் கிறார். ஓ, நீங்கள் சொல்லுறது சரிதான் , நாங்கள் பழங்காலத்து ஆக்கள். இப்பொழுது லெனின் படமிருக் கிற இடத்திலை முந்தி தாடிக்கார ஜோர்ஜ் மன்னரின் பெரிய படமொன்று இருந்தது. நல்ல வடிவான படம். ஒரு நாள் அந்தப் படத்தைக் கழற்றிப் போட்டு இந்தப் படத்தை மாட்டினான். அன்றைக்கு இங்கை பெரிய போரல்லே நடந்தது. தகப்பனுக்கு விசர் வந்தது போலைதான். விக்டருக்கும் தகப்பனுக்குமிடையிலை நல்ல வாக்குவாதம். ஒரு மாதமாக விக்டர் கடைப் பக்கமும் வரவில்லை. அப்புறம் அவனை அவனுடைய போக்கிலையே விட்டிட்டம். தலையைக் கொஞ்சம் இந்தப் பக்கமாகச் சரியுங்கோ; இன்னும் கொஞ்சம். . . s2. -
இன்னொரு நாள் நடந்த சம்பவத்தையும் கேளுங்கோ. அன்று குறப் வெட்ட முருகேசு வாத்தி யார் வந்திருந்தார். அதே சமயம் நாகையாவும் வந்தார். நாகையாவை நீங்கள் கேள்விப்பட்ட தில்லையா ? சாதி வேறுபாடுகள் நல்லாப் பாக்கிற மனுஷன். கோயில்கள் சிறுபான்மைத் தமிழருக்குத் திறந்து விடப்பட்ட அக்கிரமத்தைப் பார்க்காது சிவபத மடைந்து விட்டார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை. அவர் முருகேசு வாத்தியாரைக் கண்டதும், நாகத்தை மிதித்தவரைப்போல பதறி, "இந்த நளம்பள்ளுகளுக்கு முடிவெட்டும் இவங்களிடம் நான் ஒரு நாளும் வெட்டமாட்டன்’ என்று முழு நீளத்திலை *பானா சானா' வரிகளிலை "தேவாரம்" பாடினார். ஒம். 'றிங் கத்திரிக்கை தான். அடர்த்தியான மயிரைக்

அணி 51. O
கோதி எடுத்தால் வடிவாக இருக்கும். பார்த்தீர்களா, ஐயா, நாங்கள் வெட்டுவதோ அழுக்கு மயிர். பேன்
புழுக்கும் இந்த மயிரிலைகூட சாதி வேறுபாடு இருக்கிற தாம்.
தாகையா 'சண்டித்தனம் செய்கையிலை சலூனில் முருகேசு வாத்தியார் மட்டுந்தானிருந்தார். அவர்நாகை யாவிலும் மாத்து’க்கூடிய வெள்ளாளன். அவர் வட்டுக் கோட்டைப் பகுதி. நாங்கள் விஷயத்தை அறியாது விழித்தம். வாத்தியாரின் கண்கள் கோவத்திலை சிவந்தன. மலைத்து நின்ற விக்டரைப் பார்த்து அவர் சொன்னார். "நான் ஒரு சீவல் தொழிலாளியின் கல்யாண வீட்டில் பந்தியிலிருந்து சாப்பிட்டதற்குத்தான் இந்தக் குதிப்பு. பூனை பூனைதான்; நாய் நாய்தான்; மனிதன் மனிதன்தான் வர்க்க ஒற்றுமையைச் சாதியின் பெயராலே சிதைத்து விடலாம் என்று இந்தப் பிற் போக்குவாதிகள் மனப்பால் குடிக்கிறார்கள். உலகெங் கும் தொழிலாளி வர்க்கம், செங்கொடியின்கீழ் அணி திரண்டு வருவதை அறியாது இந்தக் கிணற்றுத் தவளைகள் சத்தம் போடுகின்றன. இரத்தம் சிவப்பு. அது பச்சையோ, நீலமோ மூவர்ணமோ அல்ல. இரத்தம் செங்கொடியின் நிறமேதான். உலகில் இரண்டே இரண்டு சாதிகள்தான் இருக்கின்றன. மனித இரத்தத்தைக் குடித்துக் கொழிக்கும் சுரண்டல் வர்க்கம் ஒரு சாதி-ஒரு அணி. உழைத்துத் தொழிலின் கெளரவத்தை நிலைநாட்டும் பாட்டாளி விவசாயிகள் மற்றைய சாதி-மற்றைய அணி. விக்டர்! நீ-நான்- அந்தச் சீவல் தொழிலாளி எல்லோரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள். மார்க்ஸ்-ஏங்கல்ஸ் லெனின்ஸ்டாலின் - மாஸேதுங் வழிவழி வந்த செங்கொடி நம்மை வழிநடத்தும்.' கோபம் வந்தால், அவர் மேடையிலை பேசுவதைப் போலைதான் பேசுவார். கன்னத்திலை அதிகம் மயிர் குடைந்தெடுக்க வேண்டா

Page 39
52, எஸ். பொ. )
மென்று சொன்னிர்களா? கதை கதையாக இருந்தாலும்
வேலையும் வேலைதான். சிலிம்பிக் கிடக்கும் மயிர்
களைத்தான் லேசாக வெட்டி விடுகிறன். ஐயா கன்னத் திலை மெஷின்" போடவிடுவதில்லை என்பது பார்த்த
வுடனையே தெரிகின்றது,வாருங்கோதம்பி,வாருங்கோ.
ஐயாவுக்கு ‘குறப்" மட்டுந்தான். முடியப்போகிறது.
அந்தப் புட்டுவத்திலை இருங்கோ. இன்றைய பேப்பர்
தான். பார்த்துக் கொண்டிருங்கோ.
ஐயா, கேட்கிறீர்களா? பல ஆண்டுகளுக்கு முன்னர் அதே புட்டுவத்திலை- இப்ப தம்பி உட்கார்ந்திருக்கிற அதே புட்டுவத்திலை-அமர்ந்து சொன்னார். அப் பொழுதுதான் யாழ்ப்பாணத்துக்கு இந்தமுனிசிப்பல்சபை கிடைத்தது. புதிய வட்டாரங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. அவர்-அவர்தான் முருகேசு வாத்தியார்-சொன்னார். * விக்டர் தன்னலமற்றவர்கள், தியாகம் என்ற அக்கி னிக் குண்டத்தில் புடம் போட்டெடுக்கப்பட்ட நாணயஸ் தர்கள். மக்கள் தலைவர்களாக வேண்டும். படிப்பை முன் வைத்துத் தலைவர்களை உருவாக்கி ஏமாந்தது போதும். உன்னதமான உத்தமத் தலைவர்கள் தொழி லாளர் மத்தியிலேதான் தோன்றுகிறார்கள். அப்படி யொரு தலைவன் நீ. இந்த எலக்ஷனில் நீ பதினாலாம் வட்டாரத்திற்கு போட்டியிட வேண்டும். வெற்றிதோல்வியல்ல முக்கியம். இலட்சியம் என்பது நீண்ட பிரயாணம். தனி ஒருவன் அந்த வெற்றித் துவஜத்தை அடைவதில்லை. ஒருவன் முன்னேறுவான்; மரிப்பான். அவன் விட்ட இடத்தில் இன்னொருவனோ, சிலரோ அணி முன்னேறி வெற்றித் துவஜத்தை அடையும். நீ போட்டியிடுவது ஒரு சலூன் தொழிலாளியும் தேர் தலுக்குநிற்கலாம் என்ற சகஜநிலையை உருவாக்கும். நான் நன்றாகப் பேசுகிறன் என்று சொல்லுகிறீர் களா ? ஒரு முறை கேட்டால் எனக்குப் பாடம் வந்து விடும். அந்தக் காலத்திலை கிடாய் விழுந்தானிலை

O 'Sy Grafi 53 O
கூத்துகளும் ஆடி இருக்கிறன். நீங்கள் விக்டர் பேசு வதைக் கேட்டிருக்க வேணும். புயலடிப்பது போலை தான் இருக்கும். அவன் கொழும்பு, காலி எல்லா இடத்திலும் பேசியிருக்கிறான். சுருட்டை மயிர் படி யிறது குறைவு. தலைக்குக் கொஞ்சம் தண்ணீர் போடட்டுமே?
விக்டர், நாங்கள் யார் சொன்னதையும் கேட்காமல் எலெக்ஷனுக்கு நின்றான். இந்த ஊரே தடம் புரண்டது. * காலம் கலிகாலம். அம்பட்டனும் தேர்தலுக்கு நிற்கிறான். எல்லாம் இரண்டு காசு துள்ளுவதினாலை வந்த வினை" என்று சாதித்தடிப்புக் கொண்ட வாடிக்கைக்காரர் இந்தச் சலூனுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்கள். இதை உலகம் ஏற்குமா ? அவர்களைப் பகைத்து நாம் தொழில் நடத்த முடியுமா?’ என்று எதிர்த்துப் போட்டியிட்ட அபேட்சகர் கொடுத்த சாராயம் வேலை செய்ய, எங்கட சாதிக் காரரே விக்டரை எதிர்த்தனர். அதற்கு விக்டர் என்ன சொன்னான் தெரியுமே ? நாம் முடி வெட்டுவது அவர் களுக்கு விருப்பமில்லை என்றால், அவர்களும் நமது தொழிலைக் கற்றுக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அளிக் கின்றேன்" என்றான். அவன் பகிடியும் விடுவான்.
ஒமோம். பிடரிக்கு மட்டுந்தான் மெஷின் போடு றன். தலையை நன்றாகக் குனியுங்கோ. நெடுகிலும் நல்லெண்ணெய் வைத்து வந்தால் சொடுகு பிடிக்கும். ஏன்? ஆமணக்கெண்ணெய் தலைக்கு நல்ல குளிராக இருக்குமே. கதையைக் கேட்கிறீர்களா?அந்தத் தடவை விக்டருக்குக் கட்டுக்காசு கூடக் கிடைக்கவில்லை. "அம்பட்டனுக்கு நல்ல பாடம்’ என்று எல்லோருக்கும் நல்ல சந்தோஷம். முருகேசு வாத்தியார் மட்டும் *செடியை நாட்டிவிட்டோம்; இனி, அதனை வளர்ப் போம்" என்று விக்டரை மேலும் ஊக்கப்படுத்தினார்.

Page 40
5. 6T6ňuj. (Lu (T. J)
அடுத்த தடவை தேர்தல் வந்தது. விக்டர் மசியல் கள்ளன்; சரியான பிடிவாதக்காரன், அவன் மீண்டும் போட்டியிட்டான். முதல் தேர்தலிலை இருந்த சல சலப்பு இல்லை. தேர்தலைப் பற்றி வாடிக்கைக்காரர் சலூனிலேகூடப் பேசுவார்கள். அம்முறை கட்டுக்காசு கிடைத்தது. அப்பொழுது முருகேசு வாத்தியார் பூரிப் புடன் சொன்னார். "நமது அணியின் ஆதரவு நன்றாக வளருகின்றது. மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் மூன்றாம் எலெக்ஷன் நடந்தது, சரியான போட்டி. ஒருவரும் நம்பவில்லை. விக்டர் இரண்டு வாக்குகளால் வெற்றி பெற்றான்.
மன்னிக்கவேண்டும் ஐயா. இது கண்ணிர். அது நினைத்துப் பார்க்க முடியாத சங்கதி. இப்பவும் 'நெஞ்சு வெடிக்கிறது போலை இருக்குது. ஊர்வலம் புறப்படும் பொழுது, யாரோ வில்லூண்டித் துப்பாக்கிச் சூட்டைப் பற்றியும் சொன்னான். அவன் சரியான கரிநாக்குக் காரன்தான். வெற்றி ஊர்வலத்திலை வந்து கொண் டிருந்த விக்டர் துப்பாக்கிக் குண்டிற்குப் பலியான செய் தியை நீங்கள் பேப்பரிலை பார்த்திருக்கலாம். பார்த் திருக்கிறீர்களா? ஓமோம். அதே விக்டரின் கதையைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறன் . நாலு பேர் எதிரி கள் . இரண்டு பேர் எங்களுடைய சாதிக்காரர்தான். உடன் பிறந்து கொல்லும் வியாதி. ஓம், ஐயா. விக் டருக்குப் பெண்சாதி இருக்கிறாள். கிளிக்குஞ்சு மாதிரி. பாவம், சின்ன வயது. இரண்டு பிள்ளைகள். கொஞ்சம் கஷ்டப்படத்தான் போகுதுகள். நாங்கள் அதுகளை அலைய விட்டிடுவமே?
சாவதற்கு முன்னர்கூட விக்டரின் ஒர்மம் தளர வில்லை. அவன் பேசிய ஒவ்வொரு சொல்லும் எனக்கு ஞாபகம் இருக்கிறது ‘வெற்றித் துவஜத்தை அடைவ தற்கு முன்னர் பலர் பலியாகலாம். என் சாதியில்

அணி 55 in நான் முதலில் பலியாவதைவிடச் சிறந்த பேறில்லை. இதோ இரத்தம். அது செங்கொடியின் நிறமேதான். இந்த இரத்தத்தின் மீதுஆணையாகச் சொல்லுகிறேன். நமது அணியிலே ஒரு விக்டர் மறையலாம், ஆனால் அந்த இடத்திற்கு ஆயிரம் விக்டர்கள் தோன்று
வார்கள்."
மன்னிக்க வேண்டும் ஐயா, மன்னிக்க வேண்டும். கன்னத்து மயிரை ஒதுக்கும் பொழுது, விக்டரின் நினை வில் கை நடுங்கி விட்டது. "பரவாயில்லை' என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், மன்னிக்க வேண்டும். மயிரை நன்றாகத் துடைத்து விட்டிருக்கிறன். குளிக்கத் தானே போகிறீர்கள்?. நல்லது,
* குறப் மட்டுந்தானே?எழுபத்தைந்து சதம். தம்பி, இந்தப் புட்டுவத்தில் வந்து இருங்கோ.இரண்டு ரூபாய்த் தாளா? சில்லறை இருக்கிறது. இந்தாருங்கோ ஒரு ரூபா இருபத்தைந்து சதம். ஓமோம். வெளியே, எதிர்ப் பக்கச் சுவரைப் பாருங்கோ. விக்டரின் பணி யைத் தொடர டேவிட்டைத் தேர்ந்தெடுங்கள்" என்ற நோட்டீஸை, டேவிட் விக்டரின் மருமகன்.சரி வாருங் கள் ஐயா.
தம்பி சுதுமலையல்லே? அங்க படிப்பித்துக் கொண் டிருந்த டீச்சர் பொடிச்சியைக் கிளப்பிக்கொண்டு போன வன் எந்தப் பகுதியாம் ?. மானிப்பாயோ? இவள் கந்தர்மடமல்லோ?. என்ன வேண்டும் ஐயா? குடையை

Page 41
56 ersiv. Glur. L}
மறந்து போய் விட்டீர்களா ? அந்த மூலையிலைதான் வைத்தீர்கள். ஓம் அதோ இருக்கிறது. சரி, போயிட்டு: வாருங்கோ ஐயா. 女
А
)
தியாகி குருகாதர் விக்டர் முருகேசு
 

u வெ:
அறுவடைக்குப் பின் விதைப்பு. பகலின் அறு வடையும், இரவின் விதைப்பும் .
பூரணையை அண்டிய இரவு, மேகம் கலக்கிய குளம். நிலவுக்குத் துகிலுடுத்தி, மழைத் துளிகளை அடைகாக்கின்றது.
* மழை வந்தால் அரைக் கரைவாசி நாசம். எல் லாம் சித்திரவேலாயுதசாமி சித்தப்படி தான் நடக்கும்."
களத்து மேட்டிற் சூடுகள் எழுந்து நிற்கின்றன.
"ஒண்டு, ரெண்டு, மூண்டு. . . பதினைஞ்சு. காப் பதின அளவு மிச்சம். "

Page 42
58 6rsiv. Glum. [_]
நல்ல களைப்பு. பசி வயிற்றை உழுகிறது. உப் பட்டி கட்டிய வெள்ளாமை வெட்டுக்காரர் போய் எவ்வளவோ நேரம். காவலுக்காக வயலே தஞ்சமாகக் கிடக்கிறான் சித்திரவேலு.
பசியின் கிள்ளல். அவன் களத்து மேட்டில் ஏறு கிறான். சூட்டடி ஒன்றிலே போடப்பட்டிருந்த உப்பட்டி கட்ட உதவும் வெல்லநார்க் கட்டில் குந்துகிறான். கடுத்த கால்கள் ஓய்வெடுக்கின்றன.
"ஒரு வாய்க்கு வெத்திலை போட்டால் பசி புடிக் கும்."
மடிக்குள் பத்திரப்படுத்தியிருந்த வெத்திலைக் கடுதாசி'யை வெளியே எடுத்து விரிக்கிறான். பாக்குச் சீவலில் ஒரு சிறங்கையை வாய்க்குள் போட்டு, கொடுப்புப் பற்களால் பொடியாக்கி.
* ஏன் இண்டைக்குக் கனகி இவ்வளவு சுணக்கம்?"
வெற்றிலையில் நரம்பைக் கிள்ளி, சுண்ணாம்பைத் தடவி சுருளாக்குகின்றன விரல்கள், அச்சுருள் பாக் குடன் குதப்பிக் குழைக்கப்படுகிறது. ஒரு துண்டு யாழ்ப் பாணத்துப் புகையிலையைக் கிள்ளியெடுத்து, வெற்றி லைக் காகிதத்தை மடித்து மறுபடியும் மடிக்குள் வைக் கிறான். முன்னிரண்டு பற்களிலும் படிந்திருந்த காவியைப் புகையிலையினால் துடைத்து, அதுவும் அவசியமான அனுமானமாகக் குதப்பப்படுகிறது.
உதடுகளில், கைவிரல்களிரண்டைக் கெவராகப் பிடித்துக்கொண்டு, அதன் நடுவெளியில், வெற்றிலைத் துப்பலைப் புளிச் சென்று பீச்சுகிறான். அது சீறி யடித்துச் சுழன்று, மழைத் தூவானமாக அவன் முகத் திலும் பெய்கிறது.

0 வேலி 59
"காத்து எழும்பீட்டுது. இனி மழை வராது. அதுக் கிடையில என்ர வெள்ளாமை எல்லாம் சூட்டில
ஏறிடும்."
நம்பிக்கைப் பயிர், சிந்தனை வாய்க்காலிற் புரண்டு வரும் நீருண்டு, கிசுகிசுத்து வளருகிறது. தினவு ஊரும் மனத்துடன் அவன் வயலைப் பார்க்கிறான்.
ஜீவசிருஷ்டியில்- அதன் விளைவுப் பூரிப்பில்உப்பிப் பெருத்த வயிற்றை, பிரசவ சமயம் சுமையிறக்கி விட்ட பிள்ளைத்தாய்ச்சியின் சாயலில், அறுவடையாகி விட்ட பத்து ஏக்கர் வயல், அந்த விளைச்சல், இப் பொழுது, பதினைந்து சூடுகளாக மமதையுடன் எழுந்து நிற்கின்றன. பக்கத்தில், நாலு ஏக்கரில் கதிர்க்கட்டுகள். அதற்கு இடப் பக்கத்துத் துண்டு நாலு ஏக்கர். வெளாண்மை வெட்டப்பட்டுக் காய்கிறது. நாளை இரவுக்குள் சர்வமும் சூடேறிவிடும்.
வாய்க்காலை மருவியிருக்கும் அரசடித் துண்டுதான் கஷ்டம் தந்துவிட்டது. என்றுமில்லாச் செழிப்பில், இம்முறை நல்ல விளைச்சல், நிறைமாதக் கர்ப்பிணி யாகக் கதிர்க்கொத்துக்கள் சரிந்து, வெயிலின் தங்கப் பொலிவு காட்டி மயக்குகின்றன. அறுவடையாகியிருக்க வேண்டும். மூன்றாம் நாள் வாய்க்கால் தண்ணிர் அடித்துவிட்டது. மூன்றாம் கொலனியிற் குடியேறியுள்ள சிங்களவரால் வந்த வினை. அவர்கள் குடியேறி யுள்ளது மேட்டு நிலம். மாரி வேளாண்மை மட்டுத் தான் வாசி. அவர்களுக்குப் பாயும் தண்ணிர், இங்கு பொசிகிறது.
*நாளைக்கு உப்பட்டி எல்லாம் நல்லாக் காய்ஞ் சிடும். அப்பிடியெண்டால் புதன் கிழமை ராவைக்கா வது அது சூட்டிலேறும். வியாழன் சூட்டு வேலியும்

Page 43
60 எஸ். பொ.
கட்டி முடிச்சிட்டால், பிறகு என்ன? வெருகலுக்கு போற ஒழுங்குகளப் பாக்கலாம்."
நினைவுகள், குடலை தள்ளி அசைந்தாடும் பயிரின்
லாவண்யம் காட்டுகின்றன.
சொக்கலிங்கன் சோற்று முடிச்சுடன் களத்து மேட் டில் ஏறி வருகிறான். சோற்றைக் கண்டதும், "சாப் பிட்டுத்தான் மத்த வேலயளப்பாக்கவேணும்' என்ற எண்ணம் வெகு இயல்பாக முளைவிடுகிறது.
*" என்ன தம்பி, இண்டைக்கு நேரம் போயிட்டு. சரி போய் குடிக்கிற தண்ணி ஒரு வாளி எடுத்தா.'
** இப்பதான் அக்கா சமைச்சுமுடிச்சது' என்று பதில் கொடுத்துக் கொண்டே, வாளியுடன் வாய்க்கா லோரம் குடிதண்ணீர் எடுப்பதற்கு வெட்டப்பட்டிருக் கும் மடுவுக்குச் சொக்கன் செல்கிறான்.
சொக்கன் அவன் நிழலில் வாழ்பவன். சித்திரவேலு வுக்கு இவன் மீது இனந்தெரியாத பாசமும் இரக்க மும், பாம்பு வயிறு. மூச்சுப் பிடித்து மூன்று கோப்பை சோற்றை ஒரு கை பார்க்கக் கூடியவன். வீட்டில், கூட மாட ஏதாவது வேலை செய்வான். கமக்காரனாக வேண்டுமென்பதில் கரிசனம் கிடையாது. ஊர்க்கதை. யும் ஊர்வேலையும் தினசரிப் பகலை விழுங்கிவிடும். இரவு நேரங்களிலும் வீட்டிலே தங்குவது ஒறுப்பு. வீட்டில் அவனைப் பொடியன்’ என்றழைத்தாலும் வயது அற்ப சொற்பமா? தை பிறந்தால், இருபது வயதுகளை முற்றாக விழுங்கிவிட்டான். குடலை பருவக் காலத்தில், பரணிலிருந்து தகரமடித்து சில்லித் தாராக்களை விரட்டவேண்டும். கிளிப்பருவத்தில் பயிரில் விழும் பச்சைக் கிளிகளை விரட்டவேண்டும். இவற் றிற்குக்கூட வரமாட்டான். உறவு முறை இல்லை.

p வேலி 61 г.
தோட்டத்துக் குடிசையிற் பிறந்தவன். வேளாவேளை
ல் தந்தையையும் தாயையும் விழுங்கிவிட்டு, அனாதையாக சித்திரவேலு குடும்பத்துடன் ஒட்டிக் கொண்டான். அவனைத் திருத்துவதற்காகச் சித்திர வேலு கண்டிக்கத் தவறுவதில்லை. ஆனால், அன்னப் பிள்ளை உயிரோடு இருக்கும் மட்டும் அவளும், இப் பொழுது கனகியும் "செல்லம்'கொடுக்கத் தவறவில்லை.
அவனைப் பற்றிய நினைவு வழிப்பாட்டில் ஊர, அவனே வாளியில் தண்ணீருடன் வந்துவிடுகிறான். வெற்றிலை வாயை அலம்பி, கை கால்களைக் கழுவிக் கொண்டு, குடிப்பதற்கு ஓர் ஏனத்தில் தண்ணிர் எடுத்து வைத்து, முடிச்சை அவிழ்க்கிறான். கொட்டி யாரக் கடலிற் கிடைக்கும் பாரை மீன் குழம்பும், 6J ir 56o முருங்கைக் காய் வெள்ளைக் கறியும். மரவள்ளிக்கிழங்கு ஆணழும் சுவையாக இருக்கின்றன. வஞ்சகமில்லாமல் பசிக்குச் சாப்பிடுகிறான். சாப்பிடும் பொழுது, சொக்கன் கலகலப்பாக ஊர்ப் பேச்சுக் கொடுப்பது வழக்கம். இன்று அதற்கு மாறாக மெளன நிஷ்டையிலிருக்கிறான்.
சாப்பிட்டு, கைகளைக் கழுவித் துண்டில் துடைக்கும்பொழுது, வயிற்றின் நிறைவை எதிரொ லித்து ஓர் ஏவறை, வாயிற் சிங்கம் பீடியொன்று ஏற் றப்படுகின்றது. கதைப்பதை மனம் நள்ளுகிறது.
**ஏது கொட்டியார மீன்? மத்தியானமும் இல்லை’’
* "நான் பின்னேரமா மூதூருக்குப் போயிருந்தன்."" * அக்கா என்னைப் பத்திக் கேக்கலியா?" *" களம் களம், காவல் காவல் எண்டு இந்தாள் உசிரை விடுகுது. இப்பிடி வயலிலேயே படுத்துட்டா

Page 44
O 62 எஸ். பொ.
உடம்பு என்னத்துக்கு ஆகும் ? வீட்டில நானிருக்கிற எண்டு கூட இந்தாளுக்கு நினப்பில்லப்போல’ எண்டு புறுபுறுத்தா. வீட்ட எப்பவாரெண்டு கேட்டரச் Gas Tsirgorir. ''
உதட்டிலிருந்த பீடியைக் கையிலெடுத்து உள்ளே இருந்த புகையை மூக்கினாலும் வாயினாலும் வெளிப்ப டுத்திக்கொண்டே, ‘நான் என்னடா செய்யிற? என்ர வாரக்காரன்கள் பாடும் பெரும் கஷ்டம். அந்தக் கங்கு வேலிக் கணபதியனைக் கண்ணாலும் காணல்ல. என்ன கோதாரி வந்துதோ ? பள்ளிக்குடியிருப்புக் கதிர் காமன் சோக்கள்ன ஆள்தான். ஆனா, அவன்ர பெண்சாதி இந்த நேரம் பாத்துத்தானா புள்ளப் பெறவேணும் ? மூதூர் ஆஸ்பத்திரியில இருந்து அவளை வீட்டுக்குக் கொண்டந்ததும் வயலுக்கு வந்துடறதாகச் சொல்லி அனுப்பினான். நாளைக்கு வந்தாலும் வருவான். அப்பிடி வந்தா ஒருதரம் வீட்டுப் பக்கம் வருவனெண்டு சொல்லன். இந்த முருக்கட்டி வெளியில, முன் விதைப் புக்காரங்களின் வேலி இல்லாத மாட்டுத் தொந்தரவு மட்டுந்தானா? கள்ளப் படையள். காளி மனுவழி கூட்டத் திலிருந்து தப்ப வேணுமே" என்கிறான்.
** அப்ப நாளைக்குத்தான் வாரண்டு அக்காட்டச் சொல்லுறன்' என்று சொல்லியவண்ணம், அரிக்கன் லாம்பிற்கு அணித்தாக இருந்த சாப்பிட்ட மிச்சமான சோற்று முடிச்சுக்குக் கிட்டச் சொக்கன் செல்கிறான்.
"" தம்பி, கொஞ்சம் மிச்சமிருக்கு. சாப்பிடன்."" 'எனக்குப் பசிக்கல்ல."
வாழை இலைத் துண்டிலிருந்த மிச்சத்தை, களத்து
மேட்டின் மேற்குப் புறத்திற் சடைத்திருந்த இலுப்பை மரத்தின் கீழ் வீசுகிறான்.

') வேலி 63 O
**இந்த ஊர்க்காரங்களுக்கு பனங்கழி அரிசி திண்டதில அரிசிவிலை தெரியாது. வாய்க்கு வாய் கல்லுக் கடிபடும் கூப்பன் அரிசிகூட வேளைக்குக் கிடைக்கல்லை யெண்டு எத்தின சனங்கள் கஷ்டப்படு
9 9
குதுகள்’’ என்று முணுமுணுத்தவாறே கடைசித் ‘தம் மை உறிஞ்சி, பீடிக்குறளை எறிகிறான்.
சோற்று முடிச்சின் சீலைத்துண்டை மடித்தெடுத்துக் கொண்டு, ‘‘அப்ப நான் போயிட்டு வாறன்’ என்று. சொக்கன் புறப்படுகிறான்.
**ஓம். அக்கா பாவம். தனிய இருக்கும். கதவை நல்லாப் பூட்டீட்டுப் படுக்கச் சொல். நீயும் காவலுக்குப் படுக்கிறாய்தானே ?'
சொக்கன், சித்திரவேலுவின் பேச்சுக் காதில் விழாதவனைப் போல கிழக்குப் பக்கத்து அரச மரத்தடி யில் நித்திய தவத்தில் உறங்கும் பிள்ளையார் விக்கிர கத்தையுந் தாண்டி, வரம்பில் நடந்துசெல்வது முகிலுக்கு ஊடாக வெளிச்சம் போடும் நில வொளியிலே தெரி கிறது. அவன் செல்லுந் திக்கைப் பார்த்தபடியே சித்திரவேலு நார்க்கட்டிலில் உட்காருகிறான்.
தூரத்தில், பெரியவெளிக் கிராமம் நிமைகளில் உறக்கப் போர்வை விரிக்கும் சோபிதத்திற் காட்சி தரு கிறது. அதைத் தாண்டினால் மணற்சேனை. அவனு டைய வீட்டில் கனகி இந்நேரம் நித்திரையை வாலாயப் படுத்திக் கொண்டிருப்பாள்.
பயிரில் பால்பிடிக்கிற சமயம், அதனைக் குடிக்கக் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் சில்லித்தாரா வாக்கில்
அவனுடைய நினைவுக் குதிர் விரிகின்றது.
O

Page 45
64 எஸ். பொ. ()
பத்தர் தற்குறி யென்றாலும், தன் மகன் சித்திர வேலுவைப் படித்தவனாக்கப் பிரயாசைப்பட்டார். பஸ்ஸாகள் ஏறி, துறைகள் தாண்டி, புளியந்தீவு "முத்த வெளிப் பள்ளி"யில் "போர்டிங்"கிற் சேர்த்துப் படிப்பித் தார். பெரியவெளிச் சாத்திரியார் சித்திரவேலுவுக்கு கல்வி மத்திமம் என்று கணித்தது உண்மை. தன் மக னைப் பற்றிய ஆசைகள் நெஞ்சில் வெறும் நாற்றுப் பயிராக இருக்கும் பொழுதே, பத்தர் நிலத்தில் மண் டையைப் போட்டுவிட்டார். அன்னப்பிள்ளை வீடென்ற கிணற்றுக்குள் வாழ்ந்த தவளை. தன் கணவனின் வயல் நிலங்கள் எந்தத் திக்கில் இருக்கின்றன என்ப தைக்கூட அறியாதவள். மகனைப் படிப்பித்துக் கொண்டு, நிலத்தை ஆயத்திற்கு விட்டுச் சுகங்காண முடியவில்லை. நிலத்தை விற்க வேண்டுமென்ற நிலையே வந்தது. அப்பொழுது, சித்திரவேலு புளியந்தீவுப் படிப்பிற்கு ஒரு ‘கும்பிடு’ போட்டு விட்டு, எட்டுப் ‘புணயல் எருமையுடன் நிலத்தை மிதிப்பிக்க வயலுக்குச் சென்றான்.
ஏழு வருடச் சம்பாத்தியம் பிழையில்லை. பழைய வீட்டை விற்று விட்டு, மணற்சேனையில், கிராமத்து அந்தஸ்திற்குப் பங்களாவாகக்காட்சிதரும்புதுமனையை அமைத்தான். அத்துடன் முருக்கட்டிவெளியில் தன் வயலுக்குப் பக்கத்திலிருந்த ஈச்சிலம்பற்றை வீரக்குட்டி யின் நான்கு ஏக்கர் நிலத்தையும் கிரயத்திற்கு வாங்கிக் கொண்டான்.
வாழ்க்கைச் சக்கரம், விக்கனமின்றி, வசதியுடன் நேர்த்தியாகச் சுழன்று கொண்டிருக்கையில், பருவத் திற்கே வந்த மழையாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், கனகி என்றழைக்கப்படும் கனகம்மாவை வெருகல் சித்திரவேலாயுத சுவாமி சந்நிதியிற் கண்டான். தீர்த்தத்தின் போது, வெருகல் கங்கையில்

வேலி М 65
நீர்க் காகமாகத் தலையை மூழ்கி இரண்டு முரடு தண் -ணிர் வயிற்றுக்குள் புகுந்துவிட்ட அவதியுடன் தலையை நீருக்கு மேல் நிமிர்த்தியபொழுது தனக்குச் சற்றுத் தூரத்தில், கரையில் குளித்துக் கொண்டிருந்த கனகி தன்னுடைய திணறலைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டான் .
சூட்டிலே ஏறத் தயாராகக் காய்ந்து விட்ட பயிரின் தங்கத் திருமேனி. கமுகஞ் சம்பா அரிசியை வரிசையாக அடுக்கி வைத்திருப்பதைப் போன்ற பற்கள். இரத்த வெறியன் நெல்லின் நிறத்தில், நெளிந்து புரளும் இதழ் கள். விளைச்சற் காலத்தில் கதிர் கொய்ய வரும் பச்சைக் கிளிகள் சொண்டினைப் போல சற்றே நிமிர்ந்து வளைந்த மூக்கு, நெற்கதிரின் சுணையாக, நுட்பமாக வளர்ந்திருக்கும் புருவங்கள். வரிக்கனில் மீன் வேட் டைக்கு வரும் கிக்கிலுப்பையின் நீலம் படிந்த விழிகள். அதே சமயம் வரால் மீன்களின் துள்ளல் காட்டுஞ் சாயல். களத்து மேட்டிலிருக்கும் சந்திரகாந்தி மரத்தில் தொங்கும் குரும்பைகளாக உடுத்தாடை முடிச்சிலே திமிறிக்கொண்டு மறைவிடந் தேடுந் தனபாரங்கள்.
தோட்டத்து வெருளியாக நிலைத்தான்!
அவள் குறும்புக் குஞ்சிரிப்பிற்குப் போர்வையிட்டு, தலையைக் கவிழ்த்து நாணினாள்.
கிளிவெட்டி நெல்லு ஸ்ரோர்மனேஜரும், "லோயர்' என்ற பட்டப் பெயரின் உரிமையாளருமான வைரமுத்து வும் வெருகலுக்கு வந்திருந்தார், எல்லா விவகாரங் களிலும் ஆள் வெகு சுழியன். பன்னிச்சங்கேணித் துறை யடியிலிருந்து, கிண்ணியா வரையுமுள்ள சகலரைப் பற்றியும், சகலவற்றையும் பற்றியும் அறிந்திருக்கும் நடமாடும் கலைக் களஞ்சியம். பிள்ளையார் சிலை வீ-5

Page 46
E 66 sroid. Glur. D'
'யிருக்கும்' அரசமரத்தடியிற் கும்பிட்டுக் கொண்டிருந்த அவளை வைரமுத்துவுக்குக் காட்டி விசாரித்தான்.
**அறளி நிறச்சீலை கட்டியிருக்கிறதே? ஓம், அவள் கொட்டியாரத்துப் பெட்டை. நல்லா இருந்து கஷ்டப் படுகிற குடும்பம். அந்தோனியார் பள்ளிக்குடத்தில இங்கிலீசும் படிச்சிருக்கு. தாய் தந்தை கிடையாது. தாய்மாமன் தான் தஞ்சம். மாமிக்காரி கொடிசூரி. நல்ல குணம்.”*
**வைரமுத்தம்மான் புண்ணிய இடத்தில-அது வும் சித்திரவேலாயுத சாமியின் கோயிலடியில-இப்பிடி நேர்ந்தால் அது விதிதான். கடவுள் புண்ணியத்தில எனக்குச் சொத்திருக்கு. சீதேவியப் போல இவ என்ர வீட்டுக்கு வந்தா...'
சித்திரவேலு ஒற்றைக்காலில் நின்றான். வைர முத்துவும் பூரண ஒத்துழைப்புக் கொடுத்தார். பெண் வீட்டாருடன் எதையும் பேசி முடிக்கக் கூடிய லீயோ மாஸ்டரின் உதவியும் கிடைத்தது. அவர்களிருவரும் * குழை யடித்து, அரை மனதில் பிரசவமான தாயின் சம்மதம் பெற்று, பொங்கல் கழித்த தைத்திருநாளுக்கே, வெருகல் சந்நிதியிலேயே கனகியைச் சித்திரவேலுவின் மனைவியாக்கி விட்டனர்.
விவாகச் செலவுகளில் அவன் கஞ்சத்தனங் காட்ட வில்லை. இரு போகமும் விளையும் இருபது ஏக்கர் நிலத்தின் கமக்காரன். ஐந்து "தனிக்கார்’ பிடித்து டாம்பீகமாக நடத்தப்பட்டது கல்யாணம் . அவளுக்கு மனக்குறை இருக்கக் கூடாது என்பதற்காகத் தன் பணத்தில் அவளை ஒரு நகைக்கடையாக்கினான். கையில் ரொக்கமிருந்ததில்லை. கொட்டியாரத்து வியா

p வேலி 67 o
பாரி கலந்தரிடமும், வைரமுத்துவிடமும் கடன்பட்டுத் தான் இவ்வளவு விமரிசைகளையுஞ் செய்தான் ‘இது ஒரு கடனே? ரெண்டு வருஷம் வெள்ளாமை நல்லா விளைஞ்சா கண்மூடித் திறக்கிறதுக்கிடையில கடனைக் குடுத்திடலாம்.
கனகி வந்த வேளையோ என்னவோ முருக்கட்டி வெளிப் பகுதியிற் கோடை வெள்ளாமை நல்ல விளைச் சல். அப்படி எந்தக் காலமும் விளைந்ததில்லை; பொலிந்ததில்லை. பயிரைச் சூட்டில் அடுக்கி வைத்து விட்டுச்சூடடிக்க அவசரப்படாமல், மாரி வெள்ளாமைக்கு மாடு மிதிப்பித்தான். கையோடு விதைப்பும் நடந்தது. கடனைச் சீக்கிரம் அடைத்துவிட வேண்டுமென்ற
தன்மான உணர்வு உந்திய வேகம். வயலில், 'ஈஷா’ப் பருவத்துப் பயிர்கள், பச்சைப் பசேலென்று வானைப் பார்த்தன. அவற்றையும், கோபுரம்
கோபுரமாக எழுந்து நின்ற சூட்டையும் பார்த்து நெஞ்சங் குளிர்ந்தான்.
* பொங்கலும் அதுவுமாகச் சூடடித்தால், கடனில ஒரு பகுதியைக் குடுத்திட்டுப் பொங்கலையும் சோக்காக் கொண்டாடலாம்."- இவ்வெண்ணத்திலே சூடடிப் பதற்கு ஏற்பாடு செய்தான் . பொங்கலுக்கு மூன்று வாரங்கள் இருந்தன. அதற்கிடையில் மழை தூறிக் கொண்டேயிருந்தது. "தூற்றல் நிற்கட்டுமே" எனக் காத்திருந்தான். அவன் நினைத்தது போல அது நிற்காது, நாளாக நாளாக மழை கனத்து, சரியாக வேதக்காரரின் நத்தார்ப் பண்டிகையன்று பெரு வெள்ளம் போட்டது. "நூறு வருஷத்துக்குள்ள இப்பிடி ஒரு வெள்ளத்தை நாங்க பாத்ததில்லை" என்று தொடு கிழங் கட்டைகள்" அபிப்பிராயப்பட்டனர். சித்திர வேலுவின் ஒரு பயிரையாவது விட்டு வைக்காமல். ஒரு சூட்டையாவது மிச்சம் விடாமல் வெள்ளம்

Page 47
O 68 எஸ். பொ. )
கொண்டு போயிற்று. வெள்ளம் வடிந்தது. வெள்ளத் தால் வயல் பாழ்பட்டிருந்தது. வயலிலும் பார்க்க அவனு டைய உள்ளம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
ஆறுதல் செத்தது. வீட்டில் அமைதியில்லை. மாமியார்-மருமகள் சண்டை வலுத்தது. "இந்த அரிசிப் பல்லுக்காரி கால் வெச்ச முதல் வருஷமே இப்பிடி யெண் டால், இனி என்ன இடி விழக் காத்திருக்கோ?’ என்று மாமியார் சீறுவாள். “ என்ர தலைவிதி இப்படியாப் போச்சு. தொட்டதெல்லாம் கரியாகுது' என்று கனகி விசும்பிப் பொருமுவாள்.
*இந்த மூதேவியைக் கொண்டு வந்த கையோட என்ர குடும்பச் செழிப்பு நாசமாய்ப் போச்சு' என்று முணுமுணுத்துக் கொண்டே, அதே ‘மூதேவி”யின் கையால் கடைசித் தடவையாகத் தெளிவு பருகி, இக ஆயுளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் அன்னப்பிள்ளை.
அடுத்து வந்த இரண்டு ஆண்டுகளும்வெள்ளாண்மை வாய்க்கவில்லை. சித்திரவேலு நாணயமானவன். கனகியின் நகைகளை-தாலியைத் தவிர-ஈடுவைத்துப் பணம் பிரித்துக் கல்யாணக் கடன்களை அவன் அடைத்திருந்தான்.
*அவளுக்குப் பூட்டி வடிவு பாக்கிறவயசு, கல்யாணத் துக்குப் புறகு, வெருகலுக்குப் போகேல்ல. நகை நட்டொண்டும் இல்லாமல்.இந்தத் தடவை சித்திர வேலாயுதசாமி கண்களைத் திறந்து அள்ளித் தந்திருக் கிறார். இதைப் பாத்த அண்டைக்கே கலந்தர் ஆயிரம் தர ஒம் எண்டான். வெள்ளிக்கிழமை காலம காசு கைக்கு வரும். அண்டைக்கே ஈட்டில இருக்கிற நகை எல்லாத்தையும் மீட்டு, அவளுக்குப் போட்டுப் பாத்து. ஊரில அவளை மலடி எண்டும் பேசுதுகள். வெருக

( ) வேலி 69 O
லானே! நீதான் கண் திறக்க வேணும். ஒரு பூச்சியோ புழுவோ ஏற்பட்டு.”
குடலைப் பருவத்திற் கதிர் தள்ளும் பயிரின் வாக் கிற்கு திரும் நினைவுத் தொடரை, 'தம்பி! தம்பி!' என ஒலித்த குரல் தடுத்து நிறுத்துகின்றது. எதிரில் பள்ளிக் குடியிருப்புக் கதிர்காமன்.
** மதியத்துக்குப் பிறகுதான் என்ர பெண்சாதியை வீட்டுக்குக் கொண்டு போக டாக்குத்தர் சொன்னார். வீட்டை வந்த பிறகு வஸ் கிடைக்கல்ல. சாப்பிட்டிட்டு நடந்துதான் வாறன். தம்பியும் மூண்டு நாள் காவல். நீ தம்பி வீட்டுக்குப் போயிட்டு நாளைக்கு வாருங்க. '
**ஓம் அண்ணை. ஒருக்காப் போயிட்டு வருவம். எப்பிடியும் விடியக்காலமைக்குள்ள வந்துடறன். பாவம், கனகி தனிய, அவளைப் பாத்துட்டு வாறதுதான் நல்லது. ’’
**கணபதி வரல்லயே?’’
* "அவன் பச்சைக் கள்ளன். மாரி வெள்ளாமைக்கு அவனை வாரக்காரனாகச் சேத்துக் கொள்ளவும் மாட் டன். புள்ளையும் தாயும் சுகமே?"
**வெருகலான்ர புண்ணியத்தில எல்லாம் சுகம். இந்தத் தடவை தம்பிக்கு பயிர் விளைஞ்சிருக்கிற மாதிரி, ஒரு குழந்தையும் பிறக்கப்போகுது.”*
கருகிக் கிடக்கும் வானம் பார்க்கும் பயிருக்குக் கிடைத்த வான் மழையைப் போன்றிருக்கிறது கதிர்

Page 48
70 எஸ். பொ. 0
காமனின் பேச்சு. வெற்றிலைக் காகிதத்தை எடுத்து உற்சாகத்துடன் ஒரு 'கொடுப்பு’க்கு வெற்றிலை போடுகிறான். சாறன் உதறிக் கட்டப்படுகிறது. தூக்கணாம் குருவிகள் கூடு கட்டியிருக்கும் விளாத்தி மரத்திலே போட்டிருந்த ‘பெனியனை உதறிப் போட்டுக்கொண்டு, 'அப்ப பாத்துக்க அண்ணை" என்று சொல்லி, நாய் விரட்டுந் தடியுடன் வீட்டுக்குப் புறப்படுகிறான்.
அரசமரத்தடித் துண்டால் இறங்குகிறான். வாய்க் காலில் இன்னும் நீர் வடியவில்லை. அந்த நீரில் நடப் பதில் சிறு பிள்ளைத்தனமான குதூகலம் இருக்கிறது. நடக்கிறவன், ஏதோ கால்களிலே தட்டுப்பட நிற் கிறான். குளத்து மீன் பிடிக்க யாரோ வைத்த பறி. எடுத்துப் பார்க்கிறான். ஒரு பனையான் மீன் துள்ளிக் கொண்டிருக்கிறது. ‘எந்த ஏழையின்ர பிழைப்போ' என்று பறியை மீண்டும் நீருக்குள் அமுக்கிவிடுகிறான்.
மீன் பறிகளிற் கால் தடக்குப் படலா மென்ற நினைப்பில் வரம்பில் நடக்கிறான். "சளக் வலக்கால் புதைகிறது. குனிந்து பார்க்கிறான். வக்கடையை மறித்து, நீர் வராமல் எழுப்பப்பட்டிருக்கும் ஈரவரம்பை மிதித்துவிட்டான். வாய்க்கால் நீர் உணர விடப்பட்டி ருந்த வயலுக்குள் கசிந்து கொண்டிருக்கிறது. ‘பாழாப் போன நிதானம்’ என்று முணு முணுத்துக் கொண்டே, கையினால் சேற்றை அள்ளிவரம்பைச் சரி செய்கிறான்." சேறுபட்ட கையை வாய்க்கால் நீரில் அலம்பிக்கொண்டு மறுபடியும் வாய்க்காலில் இறங்கி நடக்கிறான். வாய்க் காலின் இந்தப் பக்கம் நீரில்லை. சேற்று மயம். மேட்டு நிலத்திற்கு வந்து சேற்றை உதறும் பொழுது, பெரு விரற்கெவருக்குள் ஏதோ கடிப்பதை உணர்கிறான். ஓர் அட்டை இரத்தம் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. காற்றிலே சுழன்றடிக்கும் நுனிக் கொம்பராக

J) Gesuső 71
கால்களை அப்படியும் இப்பிடியும் உதறுகிறான்? நல்ல வேளை, அட்டை கழன்று விடுகிறது. வெற் றிலைக் கக்கலைக் கடித்த இடத்தில் இடுகிறான். நடை திடலிலே தொடர்கின்றது. கம்பிவேலியைத் தாண்டி ஒழுங்கைக்கு வந்து விடுகிறான். , , ,
‘இனி நேர்வழி. ரெண்டு கட்டை தூரந்தான். நான் கதவைத் தட்டிக் குரல் குடுத்ததும் கனகி ஆச்சரி யத்துடன்..."
மல்லிகைத் தீவுக்கும், தேத்தா அடிச்சேனைக்கும் ஒழுங்கைகளைக் கெவர் விடும் பெரியவெளிச் சந்திக்கு வந்துவிடுகிறான். வீச்சு நடையில், தூரம் கால் எட்டிற் குள் நிற்கிறது. வாசிகசாலை உறங்கவில்லை. ஜனசமூக நிலைய மான்யத்தின் ஆசியுடன் எழும்பிய இரு இரும்புக் கம்பிகளின் மத்தியில் எழுந்து நிற்குஞ் சிறிய கட்டடம் அது. அதன் முகப்பிலே தபாற்பொட்டி யொன்று தூங்கி வழிகின்றது.
வாசிகசாலையின் விறாந்தையில் அமர்ந்து மணி யம், இளையதம்பி, கோணாமலை, காசுபதி ஆகியோர் அரசியற் 'சமா’ நடத்துகிறார்கள். இலங்கை அரசிய லின் மிகச் சிக்கலான மொழிப் பிரச்சினையைக் கந்தப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவங்களுக்கு என்ன? முன் விதைப்பு. சூடுகூட அடிச்சாச்சு!"
சித்திரவேலுவை அடையாளங் கண்டு, ‘என்
னண்ணை, இந்த நேரத்திலே?" என்று மணியம் குரல் கொடுக்கிறான்.
"ஒம், தம்பி களத்திலிருந்து இப்பதான் வீட்டை போறன். வரட்டுமா?" என்று சொல்லிக்கொண்டு,

Page 49
72 எஸ். பொ. LT
பேச்சுச் சள்ளைக்குள் மாட்டிக் கொள்வதிலிருந்து, நழுவி, நடையைத் துரிதப் படுத்துகிறான்.
"இதுகளோட நிண்டு பேசினா பியதாசா கடையும் பூட்டீடும். ஜேமீஸ் கடை இந்த நேரத்தில் திறந்திருக்கு மெண்டு நம்பத் தேவையில்லை. மூண்டு நாளாப் போகல்ல. ஆசையாப் போற. நேரம் ஏதாவது வாங்கிப் போகலாம்!" W
பியதாசா கடை வந்துவிடுகிறது. வெற்றிலைக் கடுதாசிக்குள் வைத்திருந்த சில்லறைகளை எடுத்துக் கொடுத்து, இரண்டு மூன்று தொதல் கட்டிகளும், நாலைந்து வாழைப்பழங்களுங் கட்டித்தரச் சொல்லு' கிறான். 'மல்லி, பக்குவமாக மடிச்சுத் தா. '
பொட்டளம் கைக்கு வருகிறது. அதனைக் கக்கத் திற்குள் வைத்துக் கொண்டு நடக்கிற வேகம். பிரிவில் மதாளித்து வளரும் விரகதாபத்திற்கு எப்பொழுதுமே* ஒரு வேக முண்டு. . .
வீடு நெருங்கி விடுகிறது.
* வோக்குக்குக் கீழே வரிக்கன் ஓடாமல், மண் புழுக்கள் நெளியும் வாக்கில் சிற்றலைகளை சுழித்து நகர்கின்றது.
முகிற் கூட்டங்கள் கலைந்து, சந்திரிகை அம்மணப் பொலிவு சிந்துகிறாள். வீட்டின் முகப்பிலுள்ள நசிவித் தேங்கின்பசும் ஒலைகளினூடாக நிலவொளி முற்றத்தில் ஒழுகுகின்றது. சீதளச் சூலுற்ற காற்று. சில்வண்டின் சங்கீதம். மணற்சேனை, இரவு நாயகனின் மார்பிலே தன்னை மறந்து சயனிக்கிறாள்.

Genus 73
* கனகியும் தூங்கிக் கொண்டிருப்பாள். என்ர குரலைக் கேட்டதும்.?"
கடப்பைத் தாண்டுகிறான். அவனைக் கண்டதும் சொக்கன் கொல்லைப்பக்கமாக ஒடுகிறான். "என்னைக் கண்டு ஏன் ஓடவேணும்? காவலுக்குப் படுக்கச் GynteirsoTrr...'
கதவு இலேசாகத் திறந்து கிடக்கிறது. கனகியின் குரல் கேட்கிறது. சித்திரவேலுவின் உள்ளம் வெள்ளத் திற் கழுவப்படும் பயிராக அலைகின்றது.
**அவர்தான் என்ர புருஷன். ஒரு நாளும் துரோ கம் செய்யமாட்டன்.""
**இப்ப பத்தினி வேஷம் போடுறியா? மூதூரிலை படிக்கும்பொழுது நீ என்னுடன் வைத்திருந்த தொடர்பு கள் எல்லாவற்றையும் சொல்லி உன்னை அவமானப் படுத்துவன். இணங்கு."
** அந்தக் காலத்தில் நீ என்னைக் கட்டுவாயென்று நினைச்சு நடந்தன், நீ மாஸ்டர். என்னை விட்டிட்டு பெரிய சீதனத்தோடை ஒரு ரீச்சரை முடிச்சாய். ரெண்டு கையையும் எடுத்துக் கும்பிட்டன்.கலியாணங்கட்டி திருகோணமலைக்குத் துலைஞ்சு போன நீ, இஞ்ச இண்டைக்கு எப்பிடி வந்தாய்?"
* கனகி... நான் மல்லிகைத் தீவுப் பாடசாலைக்கு மாறி வந்ததிலிருந்து இந்த நாளுக்காகத்தான் காத் திருந்தேன்...”*
“ “ I ti ” ”

Page 50

Gaisa 75 o
“ஏன் சத்தம் போடுகிறாய்? உன்ர புருஷன் இன்றிரவு வரமாட்டான். சொக்கன் சொன்னான். நானும் வந்த காரியத்தை முடிக்காமல் போகவும்
மாட்டன், ""
**அவனுக்குப் போட்ட சோத்தை ஒரு நாய்க்குப் போட்டு வளத்திருந்தாலும் உன்னை இப்ப கடிச்சுத் துரத்தியிருக்கும். சித்திரவேலாயுதச் சாமியறியச் சொல்லுறன். கையைத் தொடாதை விடு. "'
**இணங்கா விட்டால், நீ எனக்கு எழுதியிருக்கிற கடிதத்தை எல்லாம் உன்ர புருஷனுக்குக் காட்டி, உன்னை விலக்கி வைக்கச் செய்வேன். . .”*
* செய். உன்னோட கூடீட்டுச் சின்னத்தனம் படமாட்டன்.""
*ஈப்பூச்சி பயிரில் விழுந்து பாலைக் குடிச்சால் அது
பதராகும். சூடடித்து, தூற்றும் பொழுதுதான் அது அகற்றப்படும். . . ஆனால் கனகி?"
சிந்தனையில் நின்ற சித்திரவேலு சுய உணர்வு பெறுகின்றான். தொண்டையைக் கனைத்து, 'கனகி!" என்று குரல் கொடுக்கிறான். 女

Page 51
எஸ். பொ.
இத்தா
'உங்களில் எவரேனும் மனைவிகளை விட்டு இறந்தால், மனைவிகள் 4 மாதம் 10 நாட் கள் எதிர்பார்த்திருக்கவும். (இதற்கு மரண இத்தா” என்று பெயர்.) ஆதலால் அவர்கள் தங் களுடைய (இத்தா"வின்) தவ ணையை முடித்து விட்டால்
(அவர்களில் மறு விவாகஞ்.
செய்ய விருப்பமுள்ளவர்கள்) தங் களை ஒழுங்கான முறையில் (அலங்காரம்) ஏதும் செய்து கொள்வதைப் பற்றிக் குற்ற மில்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்."
(குர்ஆன் 2:234)
"இத்தா” என்ற சொல் "ஈரா" என மருவி.
கிழக்கிலங்கையில் வழங்கப்படுகின்றது.
என்னுங் கதை மட்டக்களப்புத்
தென் பகுதிவாழ் முஸ்லிம் மக்களுடைய பேச்சுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது.

"இண்ட ஒரு பொழுதும் இரிக்கி. நாளக்கி பஜறு வெளிச்ச ஒடன செற கழியுது 9
அவுத்துக் கனி மாமட மகள். அலிமா நாச்சி ஒலகம் தெரிஞ்சவ. அவவும் என்னப்போல ஈரா இரிந்தவ. நான் வாண்ட வரிசந்தான் அவட புரிசனார் மகுத்தானார். நேத்தெண்டாப் போல இரிக்கி. மூணு வரிசம் எவ்வளவு சுறுக்கா ஒடிப்பறிஞ்சி போச்சி. ஈரா இரிக்க எண்டா லேசுப்பட்ட காரியமா? தலக்கி எண்ண பூசாம, சர்வாங்கத்தில பூணாரம் போடாம, வெள்ளப் பொடவ உடுத்தி, ஆம்புளர மொகம் பாக்காம இரிக்க வேணும். ஈரா எண்டா அலிமாநாச்சி சொல்லுக மாதிரி செற வாசந்தான். நாலு மாசம் பத்தரப் பொழுதுக்கு ஊர் ஒலகம் தெரியாம இரிக்க தெண்டால்எவ்வளவு கரச்சல்? அலிமாநாச்சி ஈரா இரிக்க நான் மணவற போகப்போற புதுப்பெண். அவக்கு ஈரா வேலி கட்ட நான் பச்சக்

Page 52
D. 78 6Tsh). Quir. C}
கிடுக எளச்சு சுறுக்கக் கண்டு கூடி இரிந்த எல்லாளும் எரிச்சல் பட்டுக் கதச்சி, கண்ணும் வெச்சுப் போட்டாளு கள். அதுக்குப் பொறகு எனக்குக் கை சுறுக்கில்ல. வாழுகத்துக்கு முந்திக்கூட இரிந்து பாயெளக்கும் தொழில். மத்தப் பொண்டுகள் ஒரு பாயெளக்கிறதுக் கெடயில, நான் ஒரு பாயத் தலக்கட்டிப் போட்டு, அடுத்த பாய அடிப்போட்டு, ரெண்டு குத்துக் குத்திப் போட்டிறுவன். மூணு குத்துக் குத்தினா ஒரு பாய்.
** என்ர சீதேவிக் காக்காக்கு நாளயோட சொவர்க் கத்து வாசல் தொற பட்டுறும். ஹார்லீன் பெண்டுகள் கனிவர்க்க மெல்லாம் கொடுப்பாங்க. ’’
ஈன கதக்கவ என்ர மூத்த மதினிக்காரி. அவர்றய ஒடப்பொறப்பு. கள்ள அல்லாக்கு மத்திக்கமா நடக்கி றவள். . . நான் ஈராவில இரிந்து வெளியான ஒடன அவருக்கு பிர்தவுசு கெடச்சிரும், பெண்டாட்டிமார் சரா இரிந்தா புரிசன்மார்றபாவ தோஷம் கொறயுமாம். சொவர்க்கம் கெடக்காட்டியும் அதாபு குறையுமாம்.
** அப்பிடி இல்லகா புள்ள. ஈரா இரிக்கத்தால ஆம்புளயஞக்கு அங்கித்து வழியில ஒரு நன்மையுமில்ல. புரிசன் மகுத்தான ஒடனயே வேற புரிசனுக்கு வாழ்க் கைப் படலாம். முந்தின புரிசன் மகுத்தான அண்டைக்கோ, அதுக்கு முந்தியோ ஊடு கூடி புள்ளத் தரிச்சிரிந்தா அந்தப்புள்ள அவர்றய, இவர்றய எண்டு அறிய ஏலாது. நாலு மாசத்தாலதான் ஒருத்தி புள்ளத் தாச்சி எண்டத மத்தவங்க பாத்து அறிஞ்சிக்கலாம். பொண்டாளக் கூடிய ஆம்புளயளக் காணாம வெலகி இரிக்கத்தான் ஈரா வெக்கிறாங்க,''
என்ர சுபகானல்லா இப்பிடிய சங்கதி! ஆசியத்து மூத்தம்மா ஈமானிஸ்லாம் தெரிஞ்சவ. ஒரு ஒகுத்து

, RF Tir 79 O.
தொழுகயம் விடமாட்டா. மிரிவடிக்கால்லதான் நடப்பா. பள்ளிக்கொடம் வெச்சி புள்ளயஞக்கு குர்ஆன் ஓதிக் கொடுக்கிறா. அவ சொன்னாச் செரிதான். நான் எண்ணிக் கிருந்ததெல்லாம் அவருக்கு ஆகிற சமானிலே நல்ல வாழ்ச்சியம் கெடக்கும் எண்டுதான். சாச்சா, காக்கா, தம்பி எல்லாம் என்ன வந்து வந்து பார்ப் பாங்க. வேற ஆம்புளயள்தான் ஒருவரும் வாறதில்ல. புள்ளத்தாச்சிமாரும் வரப்படா.
*அங்குத்து நாளயில நீதான் ஒம்புரிசனுக்குப் பெண்டாட்டி, அவர் தான் ஒனக்குச் சோடு. அந்தத் தட்டுவாணியள் மூணுபேரும் அவன வேணா எண்டு சொல்லி தலாக்குச் சொல்ல வெச்சிற்றாளுகள். அடங்காமாரியள்.'"
நான்தான் அவருக்கு ஆகிறத்தில சோடியாம். பாவம் மூத்தம்மாவுக்கு எ 31 ன தெரியும் ? என்ர கல்பு சொல்லுது நான் அவருக்குச் சோடியில்ல எண்டு. எனக்கு முந்தி, ஒருதி பின்னால் ஒருத்தியாக மூணு பேர? முடிச்சார். அவளுகளும் ரெண்டொரு வரிசம் பாத்துப் போட்டு வேணாம் வேணாம் எண்டிட்டாளுகள். பாவம் அவளுகள்தான் என்ன செய்வாளுகள் ? அவருக் குத்தான் என்ன கொற ? காணி பூமிக்கிக் கொறச்சலா? மாடு கண்டுக்குக் கொறச்சலா? நகநட்டு இல்லயா? றிஸிக்கு கொடுக்கல்லயா?. . . இதுகளுக்காக மட்டுந் தானா வாழுக? நானும் பொறுத்துப் பொறுத்து மனப் பூங்காரம் தாங்க ஏலாமத்தானே மையதீன் மச்சா னோட தொடுப்பு வெச்சன்.
என்னோட வெளயாடினவளுகளெல்லாம் கையில் ஒண்டும் கக்கத்தில ஒண்டுமாகத் தூக்கிக்கிட்டுத் திரியிறதப் பாத்து வெப்புசாரம் தாங்க ஏலாம, ஒருதரும் இல்லாத நேரத்தில எத்தினதரம்

Page 53
80
இயற்றும் "ஈரா"
 
 

O Pagtir 81 ם
அழுது இரிக்கிறன்? உம்மாதான் என்ன செய்வா? அவவும் தாலியறுத்த கைம்பெண்டாட்டி. எனக்கு மாப்புள எடுக்க அவவால தெளலத்து காணும? இப்பிடி இரிக்கத்தான் மையதீன் மச்சான் பாய் வாங்க வந்தார். நல்ல எளந்தாரி. மொட்டத்தல இல்லாம, சோக்கும் கீக்குமா இரிந்தார். என்ன ஒரு சாதியாப் பாக்க. நானும் அவர ஆனக்கிடுகால பாக்க . . .
ஆனா, இந்த நேரத்திலதான் என்ர அவர் மூணாம் பொண்டாட்டிய திலாக்கு சொல்லிப் போட்டு என்ன வந்து முடிச்சார். அவருக்கு எங்கட சாச்சாட வயசிரிக் கும். ஒரு நாளக்காவது புரிசன் பொண்டாட்டியா இரிக் காட்டி வாண்டதில என்ன புறசனம்?
*முந்தின தொளுப்புறிகள் செய்யாத பாக்கிசத்த நீ செஞ்சிரிக்காய். அவளுகலிட வகுத்தில ஆண்டவன் ஒரு காயக் குடுக்கல்ல. ஒண்ட வகுத்திலதான் காச் சிரிக்கி. ஆறு மாச மெண்டாத் துடிக்கும்.'
இப்ப நாலஞ்சி நாளாத் துடிப்புத்தான். புள்ளக்கி உசிர் வந்தாத்தான் துடிக்குமாக்கும். எனக்கு இதுக தெரியாது. இதுதான் தலப்புள்ள , ** சோட்டைக்கா வது எங்காக்காக்கு ஒரு புள்ளக் கிணாட்ட இல்ல எண்டு எவ்வளவு கக்கிசப்பட்டம். அந்த நாயகன் ஒரு புள்ளயக் குடுத்திற்று, காக்காவ அழச்சிக்கிட்டான். நாகூர் மீராசாய்பு ஆண்டவர்களே, ஆலிசமில்லாம அந்தப் புள்ளக் குஞ்சயாவது குடுத்திரிங்க, காக்கா சொத்துக் கெல்லாம் அதுதானே உரித்தாளி. '' வல்ல பெரிய நாயகனே, பூப்போல என்ற வகுத்துச் சொமயக் கழத்தி, நோய் நொடியில்லாம என்ர உசுப் பிராணிய வளத்துத் தந்திர வேணும். அவரிக்கு வாண்ட சங்கைக்காக என்ர புள்ளக்கித்தானே அவர்ற ஆதனமெல்லாம் சேர
வி-6

Page 54
82 6T6ño). GuIT. O
வேணும். எனக்கு அவரோட எரக்கந்தான். என்ர உசிரக் குடுத்துத்தானே அவரிக்கு அணிவிட பணிவிட எல்லாம் செய்தன். அவர வாப்பாவப் போலவே கவனிச்சி வந்தன். இப்புடி எல்லாம் கஷ்டப்பட்ட என்ர கல்புக்கு மையதீன் மச்சானக் கண்டாத்தான் குளுமை. மகுத்தாகுரத்துக்கு ரெண்டு மாசத்து முந்தி அவருக்கு இரிமல் வரித்தம் ஒரத்திற்று. புளியந்தீவு ஆஸாவத்திரிக்கிக் கொண்டு போனதுக்குப் பொறகு ஊட்டில நான் தனிய, நல்ல முன்னிருட்டுக் காலமும், ஒருவர்ற கண்ணிலயும் படாம மையதீன் மச்சான் வந்து போவார். புரிசன் இல்லாதவங்களோட ஊடு கூடுகது சனா. சனா செய்யுறது ஹறாம்தான்.
**நான் போய் நாளக்கி செவகு தொழுதாப்போல வாறன் மச்சாள்.'"
ஆசியத்து மூத்தம்மா போறா, ஈராவில இரிந்து வெட்டக்கு எறங்க அவதான் பாத்தியா ஓதுவா. வாழப் பழம், பிசுக்கோத்து, சாம்புறாணி எல்லாம் வாங்கி வெக்கவேணும். அதுக்கு உம்மா வந்திடுவாக,

நீர் வளமும் நிலவளனுங் கொண்டு நாலரணுமணி செய்யும் மாஞ்சோலைச் சிற்றுாரிலிரு மரபுஞ் சிறப் புறவமைந்த தமிழ்ப் பெருங்குடியிற் பிறந்து, ஓங்கு புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்குஞ் சான்றாண்மை மிக்கக் குணக்குன்றென முருகவேளனார் வாழும் பெற்றியரெனப் போற்றுதல் மிகைப்படு கூற்றின்வாய்ப் படுவதாக அமையமாட்டாது என்னையெனில், அவர் அறம் மரீ இய ஒழுக்கத்தையும் அருள் தழிஇய நெஞ்சத் தையும் பெற்றதினாலென்க. அன்றியும், இல்லறமும் நல்லற மாண்புடன் அமைந்தது. கற்புநெறி பிறழாத அவர்தம் இல்லக்கிழத்தி இருள் அழிக்கும் குத்துவிளக் கன்ன மனையறமோம்பும் தகைமையள். நிறைவிற் சிறப் புற்ற அவர்தம் செம்மை சேருள்ளத்தைக் கயவர கத்தி னழுக்காறு போன்ற குறையொன்று மண்டி ஊறுசெய்து வருதலை அவரறிவார். அஃதென்னை யெனில், தென்னவன் மொழியாம் செந்தமிழின் தீஞ்சுவை தனிற்றிளைத்துப் பாவியற்றுந் திறமைமிகு ஆற்றல்

Page 55
84 6Tarňu. Golur.
பெற்று உயர்கம்பனையும் விஞ்சுஞ் செந்நாப்பாவலனாக இலக்கியப் பணியியற்றுதலை வாழ்க்கையின் குறிக் கோளாக மேற்கொண்டு கற்றோரும் மற்றோரும் போற்றும் பீடுடைய விழுமிய வாழ்க்கையை நெறிப் படுத்திப் பயிலுதல் வேண்டுமென்னும் பெருவிருப்பிற் கொவ்வாது அவர்தம் ஊழ் அமைத்ததனாலென்க. பண்டிதர்ப்பட்டம் பெறுவான் வேண்டிக் கற்றாரா யினுந் தேர்விற்குத் தோற்றினாரல்லர். ஏனோ வெனின், அதற்கிடையிற் பொருளிட்டற் றேவைகள் பிடர்பிடித்துந்தினதாலென்க. கலம்வழி வந்து நம் நாடு கொண்டு ஆட்சி செய்த ஆங்கிலேயர்தம் மொழி கற்றோர் பெரும் பொருளிட்டிப் பெருவாழ்வு வாழ் தலைக் கண்ணுற்றும் அழுக்காறு கொள்ளாது, மாவடிப் பள்ளியிற்றமிழ் கற்பிக்குந் தொழிலை மேற் கொள்வா ராயினர். பசிநோக்காது கண்துஞ்சாது கடமையையே கண்ணாக இயற்றும் பெற்றியர். கற்பிக்கு மோரை யொழிய மற்றையப் போழ்துகளிற் பாவின் பத்திற் றுய்த் தலைத் தலைக்கொள்ளலானார். இல்லக்கிழத்தியின் இல்லப் பணிகளிலுங் கைகொடுத்துதவு மியல்பினராயி னும், அவற்றிற்குத் தக்க நெறிகளைக் கற்பியா நின்றார். வைகறையிற் றுயிலெழுந்து முன்றிலின் கண் சேர்ந்த கூழங்களை அகற்றுதல் அவர் தம் உடற்பயிற்சியா யமைந்தது. இறை மாட்சியாரின் மிகு கொடையிற் காலூன்றி நின்ற கூட்டுறவுப்பண்ட கூடத்திற்கு இல்லாளின் இனிய வேண்டுதலை நிறை வேற்றுவான் வேண்டிச் செல்வதுமுண்டு. திங்களிறுதி யிலுழைப்பீட்டத்தை இல்லக்கிழத்தியிடம் முழுமையாக ஒப்படைத்தலைக் கடமைகளிற்றலையானதாகக் கொண் டொழுகுபவர். இல்லத்தேரை இல்லாளின் துணை கொண்டு செவ்வனே செலுத்தினாரென்க. அவரை நாம் கையில் நூலுடன் வீட்டுத் திண்ணையிற் காண் போமாயின் அவர் இலக்கியச் சுவையிற்றிளைத்தின் புறுகின்றாரெனக் கொள்ளுதல் தகும். அவர் கற்பான்

D நெறி 85 Π
புகுவனயாவும் இலக்கிய நூல்களேயாம். பறம்பு மலையையுங் கொடையாக வழங்கிப் பாரி மாண்டுவிட அங்கவை சங்கவை பட்ட இடரை நேரிற் கண்டவர் களின் முன்னோர்களே மாஞ்சோலைச் சிற்றுரரிற் குடி யேறினார்களென்னும் வரலாற்றுண்மையை ஆலடி மூருகன் கோயிற்செப்பேடு உறுதிப்படுத்துகின்றது. பொருட் பெறுதியறிந்து செலவு செய்யும் மாஞ்சோலைப் பண்பிற்கு முருகவேளனார் பிறழாதவர். இல் லாள்வழி நிற் றல் வேண்டிக் கூட்டுறவுப் பண்ட கூடத் திற்குச் செல்லும் வழியிற் பாணர் நின்று ஆற்றுப் படுத்தாது விடினுந் தென்னவன் நூற்பண்ணை யெனு மேடு கொள் கடையில் ஒரு நாழிகை போழ்து தங்கிச் செல்லுதல் அவர்தம் பெரு வழக்கா யமையும், நூற் பண்ணையில் முருகவேளனார் தணிகை செய்யுங் காலை யாதேனுமொரு நூலில் அவர் தம் விழிகள் நிலைத்துவிட்ட தெனின் வினைகொளற் றொடங்கி விட்டதெனப் பொருள்கொளல் பொருந்துவதாயமை யும். பிற்றை, பண்டகூடத்திற்கொள்ளும் பொருள் களின் இனமும் எடையுங் குறைவுறும். கையிலுள்ள நூலைக் கொண்ட இவ்வினையினை இல்லக்கிழத்தியும் அறிவாள். அப்போழ்து அவளிடந்தோலோதோலெனப் பொருதும் மறம் பிறக்கும் நாவின் கோடையிடி ஒலித்து மடிந்து இணக்கந் தோன்ற பணி அரும்பிப் பைதல் கொள் மாலையாகிவிடும். இவ்வெகுளலை அவர் புன் றொழிலென எண்ணினும், மாஞ்சோலைக் குடிகள் இதனை அகத்திணை மருவிய இன்ப நிகழ்ச்சியாகக் களிப்பர். களிப்பேனோ வெனில், ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின் பங் கூடிமுயங்கப்பெறின் என்னும் வள்ளுவர் வாய்மொழி பயின்றதினாலென்க. இஃதிவ் வாது நிற்க, முருகவேளனார் இயற்றிய பாக்கள் சில திங்களேடுகளில் வெளிவருதலு முண்டு. அற்றை ஞான்று அவர் வாழ்வது இஞ்ஞாலத் திலில்லை. தைத் திங்கட் கடைநாளில் வந்துள்ள இற்றை ஞான்று

Page 56
86. raňu. (ur. - J
அடிசிற்கினியவளின் இன்மொழியை நிறை வேற்று வான் வேண்டி அவர் கூட்டுறவுப் பண்டகூடத்திற்குப் புறப்படலாயினர். பொங்கல் விழாவிற் பொருள் பெரிதுஞ் செல்வாயிற்றென்றும், தலையாய பண்டங்கள் கொள்ளவே பொருளுண்டென்றும், தென்னவன் நூற் பண்ணைப் பக்கல் மறந்துஞ் செல்லல் வேண்டா மென்றும் பலவாறு ஆற்றுப்படுத்திக் கையிருப்புக் கொடுத்துக் கொழுநனை அவரில்லக்கிழத்தி போக்கி வைத்தனள். இல்லா விரியம்பிய இன்சொற்களைத் தலைமேற் கொண்டியற்றும் உறுதியுடன் வந்தாரா யினும் பழக்கப்பண்பினாற் றென்னவன் நூற்பண்ணை மருங்கிற்றங்கலானார். நூல்விற்போன் முறுவலித்து நல்லுரை கூறி வரவேற்று அவர்தம் பாவென்று பொறிக்கப்பட்டிருக்குந் திங்களேட்டினைக் காட்டு வானாயினன். கருப்பஞ்சாற்றிடத்திற் பனஞ்சாறும் நன்றெனத் தெளிந்து எண்ணித் துணிந்து அவ்வேட் டினை வாங்கித் தமது பாவிற் றிலைத்தின்புறத் தொடங்கினார். அவ்வோரை பிறிதொரு பாவாணரும் ஆண்டு வந்துற்றனர். உரையாடலின்போது தாம் பெரிதுவந்து சுவைக்கும் பாக்களை யாத்த பாவாணரே அவரென யறிந்த முருகவேளனார் மகிழ்ச்சிக் கடலை மாந்தலானார். முழுமுதலிறையை நேரிற் கண்டவனாக மருளும் முருகவேளனாரைத் தமது புதிய பாக்கோவை ஏடொன்றைப் பெற்றுச் சுவையெய்துமாறு பாவாணர் ஆற்றுப்படுத்த விழைந்தனர். கழகப் பருவப் புரவலர்த் தகைமையர் அருகிவரும் இற்றை ஞான்று முருகவேள னார் போன்றோரின் இலக்கியப் பற்றின் கண்பற்றியே புதிய இலக்கியங்கள் வளம்பெறு கின்றதெனவும் பாவாணர் நயம்படவுரைத்தார். நெஞ்சமிளகச் செஞ் சொற் பாவாணரின் பாக்கோவைப் படியொன்றினை வாங்கிய முருகவேளனார் தாம் பாவலராகவும் புரவல ராகவும் உயர்ந்து நிற்பதை நினைந்தின் புற்றனர். பிற்றை, கூட்டுறவுப் பண்டகூடத்திற்குச் செல்லாமலே

1) நெறி 87
இல்லம் மீண்டமை பொருளின் மையாலென்க. அற்றை ஞான்று வீட்டின் அடுக்களையிற் இற்புலி படுத் துறங்குங் காட்சியை நெஞ்சுருகப் பாடத் தாம் சத்தி முற்றத்துப் பாவலராக யில்லையேயென்ற குறை எழ ஆறில்லையென்பதை யறிக. ஏனோ வெனில், முருக வேளனார் திளைத்தின் புற்றுக்கொண்டிருக்கும் ஞாலம் இல்லக்கிழத்தியின் கோடையிடிக் குரல்களுங் கேட்காத பாவாணர் மட்டு முய்த்துணரும் வேறொரு ஞாலமென் பதினாலென்க. 枣

Page 57
"கிலைட்டி 65 turbs of சோமநாதர், ". வழக் காளியச் சத்தம் போட்டுக் கூப்பிடுகிறாங்க. வ குள்ள நுழயாட்டிலும் வடிவானபேர். என்ர பேர். பாக்கியம். சிவபாக்கியம், தவபாக்கியம் எண்டு வடிவாக் கூப்பிட்டா நல்லா இரிக்கிம் எண்டு சிலவேள யோசிப் பன். மாங்காட்டுப் பள்ளிக்குடத்தில் ரெண்டு எழுத்துப் படிக்க அப்பன் அனுப்பேக்கிள்ள, வெத்திலத் தோட்டத் துக்கிள்ள கள்ளமொளிச்ச எனக்கு இந்தப் பேரு காணாதா?
**வயது ?"'. பேர்போன அப்புக்காத்தரய்யா கூட்டுக்க நிக்கிற, எடுப்பாச் சோடிச்சி வந்திருக்கிற
 

cssoa 89
அம்மாவைக் கேக்கிறார். இம்பிட்டுப் பெரிய திருகணிக் கொண்டக்காரி,
*" வருகிற மாசியில் முப்பத்தொரு வயது முடியும்." -நேற்றுத்தான் சமஞ்ச பொடிச்சியாட்டம் இருக்கி.
அதுக்கு இத்தின வயசா ?
அப்புக்காத்தர்களும் பொரக்கிலாசிகளும் கேக்கிற கேள்வியளுக்கு ஆருக்கு பதில் தெரியும்? யப்பான்காசன் இந்தப் பக்கத்தில குண்டு போட்ட வருசந்தான் நான் புறந்தனானாம். என்ர அம்மைக்கு இது ஒண்டும் தெரியா. அது வெறும் கிணாந்தி. அப்பனுக்கு ஒண்டும் நினைப்பில்ல. அவரு படிச்சவரு இளயாம்பி கடைக்குப் பேப்பர் படிக்கிற கேக்கப் போவார். அந்தத் தரும ராசா கதயெல்லாத்தயும் நெஞ்சில வைச்சி ருக்கிற மனுஷனுக்கு இதுகள் தெரியா. ஆனா, விதான யார் மெய்யாக் கணக்கப்படிச்ச ஆள்தான். ஊரில உள்ள எல்லார்ற புறப்பு வளப்பெல்லாம் அப்பிடியே சொல்லுவார். தோம்பர் அறளபுடிச்ச கிழவன்.
*" காதல் திருமணந்தானே?’’-இப்பிடிக் குறுக்கால கேப்பாங்க எண்டு அன்னம்மா மச்சாள் சொன்னாள். காசி வாங்கிப் பேசிற அப்புக்காத்தரல்லுவா? சும்மா se (6) rur?
" ஓம். '-கூச்சப்படாமல், வெக்கப் படாமல் ஒத்துக் கொள்ளுறாள். போனகிழம அந்தத் தேத்தாதீவுப் பள்ளியில படிக்கிற ஆரோக்கியம்-சமஞ்சு இப்பமூண்டு மாசம் தானாம்-ஆரோடயோ ஒடீட்டாளாம். இதுகும் எந்த பள்ளியில படிக்கேக்கிள்ள ஒடிப் போச்சுதோ? விதானயார்ட மோதாவிலதான் என்னப் புளியந்தீவு மாப்புளை கணபதிக்குக் கட்டிக்குடுத்த. முன்னும் பின் னும் இவரத் தெரியவும் மாட்டுது. ஒரு நாள் எங்கட ஊருக்கு விதானயார்தான் கூட்டிக்கு வந்தார். அப்ப

Page 58
90 sT6ňu. Golur. )
அப்பன் உசிரோட இரிக்கி. இவர் ஆள் நல்ல சிவல யும்; களிக்குத்தி மாதிரி. சோக்கான உடுப்புத்தான். அப்பன் ஒருநாளும் சேட்டுப் போடமாட்டுது.
* ‘என்னைப் பார்த்துச் சொல்லும்' - அப்புக்காத்தர் உறுக்கிறார்.
அண்டைக்கு இவர் வெச்ச கண்வாங்காமல் என்னப் பார்க்கிறார். என்ன எல்லாச் சனங்களும் கொத்துக்க இரிக்கிற மாம்பழமெண்டுதான் சொல்லுவாங்க. புளியந்தீவில ஓடாவி வேல செய்து நல்லாச் சம்பாரிக் கிறாரெண்டும் விதானயார் சொன்னார். எல்லாருக்கும் புடிச்சிப் போச்சு. எனக்கும் புடிச்சிட்டு. .
முத்தவெளிப் பக்கமாக இருக்கிற வாக மரத்தடியில வந்து குந்துறன். என்ர மகள் என்ர அம்மையோட சண்டைக்கு நிக்கி. அது என்னத்தக் கொட்டித் தள்ளுது. கடலக் கொட்டை கேட்டு அது புடிக்கிற சண்டயப் பாக்க ஒண்ணா. ஒரு காசிக்கு வேண்டிக் குடுக்கிறன், அம்மையும் நானும் ஒரு வாய்க்கி வெத்தில போடுறம். வெத்தில போட்டால் என்ர வாய் எப்பவும் சிவக்கும். வாய்சிவத்தால் புருஷன் சீவன வச்சுப் பிரியமா இருக்கு
எங்கட ஊடு, வெட்டுக்காட்டுத் துண்டில, புதிசாக் கட்டின பெரிய ஊட்டுகளுக்குக்கிட்டத்தான் இரிக்கி. ஆனா, அயலட்டையில கூப்பிட்ட குரலுக்குஉதவியில்ல. என்ர இவருக்கு ஓடாவி வேல வசுக் கொம்பனியில தான். இண்டைக்கு வெள்ளிக்கிழம. தாவரிப்பு வழக்குகள வெள்ளிக்கிழமயளில ஆன் கூப்பிடுறாங்க. இவர் நாயித்துக் கிழமயிலதான் வீட்டில நிப்பார். கொஞ்சம் பூசீட்டா அடுப்படிய விட்டு உசும்ப மாட்டுது மனுஷன். சனியில ஒரு தியால வேலை தான். அண்டைக்குத் தவறணப் பக்கம் போச்சுது எண்டால்

விலை 91 O
கருக்கலுக்க ஆன் வரும். எழுவான் பக்கம் இந்தாள் போனாலே எனக்கி நெஞ்சுக்க இடிஆன், அவர் வேலக் கிப் போணா, மகளத் தூக்கிக் கொண்டு காணிக்கை மாதா கொயிலடிக்கு வந்து கறியப் புளிய வாங்கிற னான். ஒடியாடிச் சமச்சுட்டா பொடிச்சிர முஸ்பாத்தி யில இரிக்கிலாம். மாங்காட்டில இரிக்கேக்கில பக்கத்து ஊட்டிலயெல்லாம் போய்க்கதப்பன். இஞ்ச அயலட்ட யில பேச்சுத்துணை இல்லாம வாய் புளிச்சுப்போகும். அம்மை இஞ்ச ஆசை அருமயா வந்தா உண்டு. ஆனா, அதுவும் வந்து ரெண்டு மூண்டு நாள் தங்கினா இவர்ற முகம் கறுத்துப் போகும். நான் என்னத்தக் கண்டன். களுதாவளயான்ர புண்ணியத்திலதான் அந்த நோனாக்கா வந்து சேந்தாளெண்டு முதலில நினச்சன்.
இவர் சாட்சி ஊட்டியில நிண்டு விதான யாரோட
பேசுறார். பாவியப்போல நிக்கி. உடம்பும் இளச்சுப் போச்சு. ஆனா, இந்த மனுஷன் எனக்குச் செய்த வேலய நினைச்சுப் பாத்தா.வில்லியம் வாஸ் கொஞ்சம் கிழவன்தான். வஸ் கொம்பனியிலஆன் அவருக்கும் ஓடாவி வேல. தல பஞ்சுப் பொட்டிதான். ஏதோ பேச்சில தன்ர பொஞ்சாதிய இஞ்ச கூட்டிக்கு வந்து இருக்கிற துக்கு வீடில்ல எண்டு சொன்னதாம். மனுஷியும் நல்லது, தனக்குத் தெரியுமெண்டு இவர் சொன்னார். எனக்குப் பாவம் போல இருந்துது. இவரே நாங்க இருக்கிற வெட்டயில ஒரு குடில் போட்டுக் குடுத்திட் டார். சண்டாளி, அவள் இப்பிடிப் புருஷன் கொள்ளி எண்டு நான் எப்பிடிக் கண்டன்? மாங்காட்டில இருக்கே கிள்ள களுவாஞ்சிக்குடி வக்கர்ற பொஞ்சாதிய எனக்குத் தெரியும். வதுளைச் சிங்களத்தி. தமிழ் பேசிற கிளி போலதான். ஆனா, இந்தத் தட்டுவாணி கூட என்ன வடிவாத் தமிழில கொட்டுது.

Page 59
93 எஸ். பொ. U
'டியே, புள்ள! வழக்குக் கூப்பிட்டாலும், நீ இஞ்ச நிக்கிறாய்?" என்ர அம்மை சும்மா இருக்கா. எப்பவும்: அவசரந்தான் .
பொம்பிள வழக்காளியள் நிக்கிற பக்கம் போறன். அப்புக்காத்தரய்யா நல்லாத்தான் கழத்துறார்.
'உம் புருஷன் வேலைக்காரியுடன் தொடர்பு கோண்டதைநீர்நேரில் கண்ணால் பார்த்திருக்கிறீரா?"
* 'இல்லை. தானும் என் கணவரும் தொடுப் பென்று வேலைக்காரியே என்னிடம் சொன்னாள்.'"
எதிரே எதிரியா நிக்கிற துரை பாவம். பெரிய உத்தியோகமாக்கும். மிரிச்ச இடத்துப் புல்லுக் கூடச் சாகாது.
'ஏன் உன் வேலைக்காரி உன்னிடம் ஒரு பொய் ய்ைச் சொல்லியிருக்கக்கூடாது?’’
என்ர மச்சாள் அன்னம்மா சொன்னது மெய்தான். அவளுக்குக் கோடு- கச்சேரி எல்லாம் ஏறிப் பழக்கம். ரேண்டு தரமல்ல தாவரிப்பு வழக்குப் பேசியிரிக் காள். உடுப்பில பாத்தாப் படிச்ச மனுவழியப் போல இருக்கி. மெய்யாப் பேய் மனுவிதான். தன்ர புருஷன் வேலக் காரியோட தொடுப்பெண்டால், அவள ஊட்டவுட்டு விரசிப் போட்டுப் புருஷனோட இருக்கிறத விட்டு. இதுக்கெல்லாம் கோடேறிச் சங்கை குறயிறதா?
இந்தக் கண்மாணிக்கத்தான நான் ஒருநாளும் நினைக்கல்ல, வாஸின்ர பொஞ்சாதியோட இவர் தோடுப்பெண்டு. ரெண்டு பேரும் FTSFLIDT சளசண்டியாப் பேசுங்கள். அந்த மனுவியுமோ இவருக்கு மூப்பு. நீண்டன் பல்லும், குரங்காட்டம்.

D விலை 93
இவரத் தம்பி எண்டு கூப்பிடும். கன்னத்து மசிர்கூட ஐஞ்சாறு நரச்சுப்போச்சு . போயும் போயும் அவ ளோட.நான் கறிபுளி வேண்ட காணிக்க மாதா கொயி லடிக்குப் போனா, வேரூண்டி நின்றிடுவன். அவன் தான் தாண்டவன் வெளியாள் கனகம்மா வந்தாளெண் டால் கேக்குவா வேணும்? நல்லவள். ஊர்க்கதயெல் லாம் வரும். நான் காணிக்கமாதா கொயிலடிக்குப் போகேக்கிள்ள இவர் வஸ் கொம்பனிக்கு முன்னால இரிக்கிற தெயிலக்கடயில ஆன் நிப்பார். இந்தாளுக் குத் தெயிலைப் பைத்தியமும்.
அண்டைக்கு வரக்கிள்ள மகளும் பிரளி எடுத்துட் டாள். பொட்டிக்காரனிட்ட மலிவாச் சள்ளமின் கோருவ கிடைச்சுது. சந்தியடிக்குப் போகாம சட்டுப் பிட்டென்று திரும்பீட்டன்.
பக்கூசுக்கதவு ஒள்ளம் கெழுஞ் சிரிந்துது. கோழிகிழி வீட்டுக்குள்ள போய் எடுத்துவெச்ச கூப்பன் அரிசியக் குடிக்கெண்டுஆன் நினச்சன், ‘கு’ எண்டு விரசிக் கொண்டு உள்ளுக்க பாஞ்சு போனா எனக்கி நெஞ்சுக்க உலக்கயால இடிச்சபோலான் இருந்து. நான் இவரோட படுத்துத்தான் இந்தப் பொடிச்சியம் பெத்தனான். புருஷனோட படுக்க என்ன வெட்கம் ? ஆனா, இந்தக் கிழட்டுக் கூதி பட்டப் பகலில உரிஞ்சி போட்டு என்ற புருஷனோட. அவளுக்குத்தான் அமர் எண்டால், இந் தக் கண் அவிஞ்சு போவானுக்கி என்ன மதி ? எனக்குச் சரியாத்தான் பத்தி வந்திச்சு. எனக்கிக் கோவம் வந்து தெண்டால் அடக்கேலா. அப்பன் சாகிறவரைக்கிம் என்னக் கோவக்காரி எண்டுதான் கூப்பிடும். வந்த விசரில பொடிச்சிய மூலையிலபோட்டுட்டு,வாருவக்கட்டு எடுத்து நோனாக்கு நல்லாக் குடுத்தன். இது ஒரு ரோஷம் கெட்ட மனுஷன். " " டியே, மாங்காட்டில குளத்துச் செல்வன் மீனக் கண்ட உன்னக் கூட்டிக்கு

Page 60
O 94 ersio. Gur. [ ]
வந்து,நேரந்தியாலம் தப்பாமல்தீனிபோட்டகொழுப்பா?
பறவேசை இண்டைக்கி இப்பவே கொம்மையிட்டப்
போயிடு' எண்டு ஊரெடுக்கக் கத்தினான் பாவி. இவர் வாயத் துறந்தால் புடயன் பாம்பு வாயத் துறந்தாம் போலான் . W
இழவெடுத்த கோட்டடிக்கு வந்தால் தூங்க வேணும். அன்னம்மா நாலும் அறிஞ்சவள். விளக்கத் துக்கு எடுத்த அந்த வழக்குத்தான் நடக்குது. என்ன கணகாட்டில நான் பட்டிட்டன்டாப்பா.
ஒரு சுதியில பேசீட்டுப் போறார், மறுகாச் சரியாப் போயிடு மெண்டு ஆன் நான் சமச்சுக் கிமச்சு வெச்சன். பொழுதுபட்டு ராவாப் போச்சுது. ராக்கண் முழிப்புத் தானாக்கும். பொடிச்சியோட ராக்கண் முழிச்சது போக, இப்ப இந்த மனுஷனின்ர மதத்துக்கு. ராவுபோல நல்லாக் குடிச்சிட்டு வந்தார். மனுஷன் குடிக்கிற ஆன்; வெறிக்கிற ஆன். குடிச்சால் இப்பிடியா தலைகால் தெரியாம நிதானம் போயிடும் ? இந்தச் சோக்கில அந்தச் சிங்கள நோனாவயும் கூட்டிக்கு வந்தார். அவளும் குடிச்சிருக்கவேணும். இல்லாட்டி சட்டைக்கு மேலால காட்டிக்கொண்டு வருவாளா ? மொங்கு மொங் கெண்டு கட்டயில போறகையால அடிச்சான் பாவி. ராத்திரி இவர் அவளக் கட்டிப் புடிச்சுக் கொண்டு படுக்க, நானும் பொடிச்சியும் அடுப்படியில் படுத்துக் கொடுகீட்டுக் கிடந்தம். இந்த மனுஷன் என்ன மாடா ? ராவெல்லாம் பொடிச்சி ஊரெடுக்கக் கத்தினது காதில் உழேல்லையர? அந்த ஆள் கொள்ளி வந்தாப் புறகு எனக்கென்ன வேலை ? நான் மாங்காட்டுக்குப் போயிட் டன். அப்பன் செத்துப் போனாலும், அம்மை உடவா போறா ?
மாணிக்கனுக்கு நெடுகயும் என்னில ஒருகண்தான். போகக்கிள்ள வரக்கிள்ள குறுக்கறுத்துப் பாப்பான்.

t) விலை 95
இப்பிடித்தான். பூமணி- அவளான் புதுக்குடியிருப் பானுக்கி வாழ்க்கப்பட்ட பூமணி- புருஷனோட கோவிச்சுக் கொண்டு வந்து மாங்காட்டில இரிந்தாள். மறுகா என்ன புதினமெண்டா வைரனுக்கி வாழ்க்கப் பட்டு, அவனுக்கும் ஒரு புள்ள பெத்தாள். ஊர்தேச மடிச்சி சொந்தப் புருஷன் திரும்பிவந்து கூப்பிடக்கிள்ள அவன்ர புதுக்காசில மயங்கி, இவனவிட்டு அவனோட ஒடீட்டாள். இதென்ன சீர்கெட்ட வாழ்க்கை?ஒவ்வொரு புருஷனுக்கி ஒவ்வொரு புள்ளயப் பெத்தா சீவிக்கிற?
** உன் கணவன் யோக்யமானவன். அன்புத் தந்தையாகவும் ஆசைக் கணவனாகவும் வாழ்ந்திருக் கிறார். மீண்டும் ஒரு தடவை ஏன் அவருடன் வாழ்ந்து பார்க்கக் கூடாது?' -நீதவான் நல்ல மனுஷன். அப்பனப்போல புத்தி சொல்லுறார்.
'நான் மாட்டேன். எனக்கு அவர் இனி வேண்
டாம்.’’ மனுவழி ஒத்தக் காலில நிக்கி.
** அப்படியானால் தாபரிப்புத் தொகையை அடுத்த தவணையில் நிர்ணயிக்கிறேன். அடுத்த தவணை..'"
**மகேஸ்வரி காசுபதி. மகேஸ்வரி காசுபதி."
என்ர வழக்கை எப்ப எடுக்கப் போறாங்களோ? நான் , அம்மையும் பொடிச்சியும் குந்தியிரிக்கிற இடத் துக்கு வாறன், சோனகர்ற பள்ளி வாசலுக்குக்கிட்ட கூட்டமாயிரிக்கி. கந்தூரிக்கி வந்த கூட்டமாக்கும். இது வும் ஒரு கூட்டமா? மாமாங்கத் தான்ட தீத்தக்கரைக்கி * சே சே' எண்டுதான் சனம். அண்டைக்கி என்னக் கும்பிடவும் உடல்ல. ஆளுக்கி நல்ல தண்ணி. குடிச்சா இப்பிடித்தான். வீண் கணகாட்டு ஏன் எண்டு யோசிச்சி திரும்பினன். வாக்கிள்ள என்ன நடுறோட்டில நிப் பாட்டீட்டுப் போய்த் தவறணயிலும் குடிச்சிட்டு வந்துது.

Page 61
) .எஸ். பொ 96 ם
இடஞ்சல் வந்து மூண்டு நாலு நாள். கொயிலுக்கிப் போறதுக்காக முழுகினனான். பொடிச்சியப் பெத்தயுறகு வந்த முதல் இடஞ்சல். கலங்கலாப் பட்டுக் கொண்டே இருந்துது. சொன்னாக் கேக்கிதா மனுஷன்? ஒரு கட்டு மட்டு இல்லயா? நெடுக நெடுக எண்டால் நான் ஒண்டுக் கிம் ஒள்ளப்பமும் மறுக்கிறல்ல. அண்டைக்கி இடுப்பே அடிச்சிப்போட்ட போல ஆன். பாவாடையெல்லாம் ஒரே துவால. வெத்திலத் துப்பல மிரிச்சுட்டன். புல்லில மிரிச்சுத் துடைக்கிறன் .
கைகால் இரிக்கி புழச்சுத் தின்னலாம் எண்டு நினச்சன். என்ர சின்னம்மைக்காரி கோட்டமுனையில இரிக்கிற மில்லிலா ஆன் வேல. அண்டைக்கு மத்தி யானம் வயித்துக்க எக்கச்சக்கம். காட்டுக்குப் போய் இரிந்திட்டு, தோட்டப் புட்டிக்கிப் பக்கத்தில் இரிக்கிற மடுவுக்கிள்ள அடிக்கழுவலா மெண்டு எட்டிப்பாத்தா, அங்க என்ர சின்னம்மையும் பொம்புளக் கந்தன் சிவலைப் போடியும். தூ , கோழி மிதிற போல.. மறுகா சின்னம்மையோட கதபேச்சில்ல. ஒரு மாசம் மில்லில வேல பாத்திட்டு ஓடியந்த கிட்டிணன் ர தங்கைக்காரி சொன்னது சரிதான். மில்லில வேலசெய்யிறவள் ஆர் ஆன் யோக்கியம்? பொழுது கிறிகீட்டால் காசிக்கிக் கடப்புத் தூக்கிறவளுகள்தான். நான் இனி எப்பிடிப் போனாலும், இந்தப் பொடிச்சியத் தாவரிக்கிற ஆர்? ஒரு பொழுதுக்கு- ஒரு தியாலத்துக்குத் தேவை யெண்டா ஒம்ப புருஷனும் பிடிக்கலாம். ஆனா, சாகு மட்டும் பொடிச்சியயும் வெச்சுத் தாவரிக்கிறதுக்கு. மனிஷன்ர சீவியம் சொல்லிக்கிடக்கா? விதானயார் லேசான ஆளில்ல. அவர் ஆனே தாவரிப்பு வழக்கு வைக்கப் புத்தி சொன்னவர். இவங்களைச் சும்மா விடப்படா. ஒரு பொடிச்சியக் கடசி மட்டும் காப்பாத் துறன் எண்டு சொல்லிக் கட்டுறது. அவளுக்கு ஒரு புள்ளயக் குடுத்திட்டு இன்னொருத்தியோட ஒடுற.

1) விலை '. 97
உனக்கில்லாட்டியும், அந்தப் பொடிச்சியின்ர தாவரிப் புக்கு அப்பன் ஏதாச்சும் குடுக்கவலுவா வேணும்? பேசாம நான் சொல்லுற கணக்காத் தாவரிப்பு வழக்கு வை. அப்பான் அந்தச் சிங்களப் பலகாரத்தின்ர இனிப்பில போனவன் திருந்துவான் எண்டு விதான யார் விடாப்புடியாச் சொன்னார். இண்டைக்குத்தான் வழக்க விசாரணைக்கு எடுப்பாங்களாம். நசமத்துப் போனவங்கள் எப்ப எடுப்பாங்களோ?
இப்பவும் நான் குமரப் போலான் இரிக்கன். செட்டிபாளயத்து மாணிக்கனப் பாத்துச் சிரிச்சாப் போதும், அவன் என்ன ஓடாவி வேலயா? சொந்தப் பூமி வைச்சி வெள்ளாம செய்யிறவன். ராசாத்தியப் போலதான் என்ன வைச்சிருப்பான். அவண்ட மனத ஆர் கண்ட ? செல்லன் ர அக்கை தாலியறுத்து மூண்டு வரிஷம். இப்ப புள்ள பெத்து இரிக்கிறாள். இந்த ஆம்புளயள்ற குணம் இதுதான், ஒண்டோட அடங்கி றல்ல. நான் எப்பவும் அலுப்புச் சலுப்புச் சொல்லிற தில்ல. எந்த வெறியில வந்து உடம்ப முறிச்சாலும் உடுவன். இவர் சொல்லுறபடி எல்லாம் ஆடுவன். இதுக்குத்தானே ஒரு பொம்புளய ஒரு ஆம்புள இச்சம் பட்டு எடுக்கிற எண்டு நினப்பன். ஆனா, கடசியில அந்தச் சிங்களத்திதான் இனிச்சாள்.
"பாக்கியம்!' எண்டு விதானயார் என்ர பொரக் கிலாசிக்கிக் கிட்ட வந்து நிண்டு கூப்பிடுறார். அவருக் குப் புறகுக்கு இவரும் நிக்கார். பொரக்கிலாசி ஐயா வுக்கு அம்மை தன் ர தோட்ட ஈடுவெச்சுத்தான் காசி குடுத்தவ நாயம் தெரிஞ்ச மனுஷனாம்.
**கணபதி உன்னைத் திருப்பி ஏத்துக் கொள்ளு றானாம். இனிக் கைவிட மாட்டானாம்."
வி-7

Page 62
liflulf, g,
தங்கம்
Ggorifl-úu--
பித்தனை
 
 

D விலை 99
'அந்தச் சிங்களத்தியோட என்னயும் ரெண்டு மாடா வெச்சுச் சாய்க்கப் போறாரா ?”
இப்பன் வாய் துறக்கிறார். நான் வெட்டுக்காட்டில இரிந்து போய் ஒரு வருஷம் இரிக்கிம், இரண்டு தவணைக்கி வந்து முகத்த நிமிந்து பாக்கல்ல. இண்டைக்கி ஆன் தூரத்தில நிக்கேக்கிள்ள பாத்தன். இப்ப பாக்க இரக்கமாக் கிடக்கி.
** என்ர கிளியான்ர அரிமை தெரியாம நஞ்சு நினச் சுட்டன். அந்தத் தட்டுவாணியின்ர மயக்கம் தெளிஞ் சிட்டு. இனி அவள் ஒண்ணா. அவளோட நான் பெரிய கணகாட்டுப் பட்டுட்டன். அவளுக்கு சவுக்காரத்திக்கும் பவுடரிக்கும் என்னால உழைக்கேலா, உன்ர இந்த தாவரிப்பு வழக்கு நோட்டீஸ் வந்த அடுத்த நாளே அவள் ஏறாவூர் தங்கவேலனோட ஓடீட்டாள். இப்ப அந்தப் புருஷனக்கொள்ளி காளவாச்சேனயில இரிக்
sirst Irb.' '
அம்மையும் பொடிச்சியெத் தூக்கிக் கொண்டு நாங்க பேசிற இடத்திக்கி வறாவு.
வழக்குப் பேசின இம்புட்டுப் பெரிய திருகணிக் கொண்டக்காரி தன்ர பொரக்கிலாசியோட பேசிக் கொண்டிரிக்காள்.
‘‘கசாது அழிக்கக்கூடாது. அவர்ற சம்பளத்திற்கு இருநூறு ரூபாவாவது தாபரிப்புக் கிடைக்கும். அதை வைச்சுக்கொண்டு நான் சோக்குப் பண்ணுவன்.'"
"அது உங்கள் இஷ்டம். வாங்கின பணத்துக்கு நான் வழக்குப் பேசுகிறேன்"
அதுக்கிடையில என்ர பொடிச்சி அப்பனில இறாஞ்சித் தாவுது.

Page 63
100 எஸ். பொ.
"அவரும் கண்ண மூடீட்டார். இனி ஒரிக்காலும் என்ர மகளக் கைவிட மாட்டனெண்டு களுதாவளயான்ர் கொயிலில கப்பூரம் அடிச்சுச் சத்தியம் பண்ணித் தந்தாத், தான் என்ர மகள மருமகனோட அனுப்புவன். என்ர தோட்டயும் ஈடெடுத்துத் தரவேணும்' எண்டு அம்மை விதானயாரிட்டச் சொல்லுது. ** என்ன கணபதி?’’ இவர் தலயாட்டுறார்.
* "சத்தியமா ?’’ *"சத்தியமா களுதாவளப் புள்ளயாரறியச் சத்தியம். என்ற புள்ளயறியச் சத்தியம் , '
**இவ்வளவு காலமும் இல்லாத இரக்கம் இப்பான் மகளில புறந்திரிக்கி’ எண்டு நான் முகத்தச் சுழிக், கிறன்.
"அப்ப வழக்கு ?" * சமாதானமாகப் போறனெண்டு பாக்கியம் கோட்டில சொன்னாப் போதும்."
பொடிச்சி-கள்ளப் பொட்ட அவர் வாங்கிக்குடுத்த, கடலக் கொட்டயக் கொறிக்கிறாள். அம்மை பாவம். வெத்திலயச் சப்புது.
s * அக்கினேஸ் செபஸ்தியான் பிள்ளை.'-அடுத்த வழக்கை விசாரணைக்கு எடுக்குறாங்க.
மச்சாள் சொன்னது சரி ஆன். என்ர வழக்க எப்பான் எடுக்கப் போறாங்களோ ? வெட்டுக் காட்டுக்கு
ஆனே ? நடந்தும் போயிடலாம். 女

திருவாளர் சிவக்கொழுந்து கட்டிலிற்படுத்திருந்தார். அதே அறையில், திருமதி புனிதம் சிவக்கொழுந்து தரையில் விரிக்கப்பட்டிருந்த பனையோலைப் பாயிலே சயனித்தாள்.
அவர் உத்தரதேவியில் ஊர் திரும்பியவர். இரவு பதினொரு மணிக்குத்தான் உத்தரதேவி யாழ்ப்பாணம் வந்தது. மூக்கு முட்டிய "கலை. வீட்டில் விரதம். சாப்பாடுங் கிட்டவில்லை. பிரயாண அசதியுடன் வெறும் வயிறாக, கால்களைக் கட்டிலின் சட்டங்களில் எறிந்து எறிந்து "அலட்டிக் கொண்டு படுத்திருந்த சிவக்கொழுந்து கண்களை விழித்தார். தாவணிப் போர்வைக்குள் சரக்கட்டையாகச் சுருண்டு கிடக்கும்
மனைவியைப் பார்த்தார்.

Page 64
102 எஸ். பொ. L
st(sorti ''
**.ம்..." மறுபக்கம் புரண்டாள்.
** என்னணை புதுநாணமா நித்திரை கொள்ளுறாய். விடிஞ்சல்லே போச்சு.'
திருமதி சிவக்கொழுந்துவின் செவிகளில் அந்த வார்த் தைகள் ஒவ்வொன்றும் விழுந்தன. கோடிப்புறமிருக்கும் நாவல் மரத்தில் 'அடை'யும் கோழிகள் கூவியதும் அவளுக்குக் கேட்டது. அந்நேரத்திலேயே துயிலெ ழுந்து, தன் வீட்டு அலுவல்களைச் சுறுசுறுப்பாகக் கவனிப்பது அவளுடைய வழக்கம். இன்று அவளால் எழுந்திருக்க இயலவில்லை. தேகமெல்லாம் பச்சைப் புண்ணாக நோகும் அலுப்பு. அவருடைய குரல் காதில் விழுந்த பின்னர், "சீ, மூதேவி வாலாயம் கூடாது" என்ற எண்ணம் உதித்தது.
"ஒமப்பா நித்திரை சரியா அமத்திப் போட்டுது என்று சமாதானங் கூறியவாறு எழுத்து, சேலையைச் சரி செய்தாள். அவர் தலைமாட்டிற் கிடந்த *லோட்டா தண்ணிரை முரடு முறிக்குந் தாளத்துடன் குடித்துவிட்டு, மறுபக்கம் புரண்டு கண்களை மூடிக் கொண்டார். w8.
புனிதத்திற்குத் தலையைச் சுற்றியது. சுமை யேற்றப்பட்ட வாக்கிலே தலைப்பாரம். செமியாக் குணக்கோலத்தில் வயிற்றைக் குமட்டிக்கொண்டும் வரும் உணர்வு. இத்தனைக்கும் வெள்ளியும் சனியும் விரதம்; ஒரு நேரச் சாப்பாடு. கிணற்றடிப் பக்கம் விரைந்தாள். வெகு பிரயாசையுடன் சத்தத்தை அடக்கி, எலுமிச்சை மரத்தின் கீழ் வாந்தியெடுத்தாள். கால்களாற் புழுதியை "எத்தி' மூடினாள், எலுமிச்சைப் பழமொன்றைப் பறித்து மோந்தாள். நிலை சற்றே
p.

Dj 108 ם
சீரடைந்தது. பற்களில் உமிக்கரி போட்டு மினுக்கி, முகம் கால்கழுவி, கிழக்கு நோக்கி விபூதி பூசி, வீட்டுப் பணியில் ஈடுபட்டாள்.
பானையில் அடைத்திருந்த புளியம் பழமொன்றை உப்பிலே தோய்த்து வாயிலே திணித்துக் கொண்டு, குசினிக் கதவடியில் நின்று வீட்டறைப் பக்கம் பார்த் தாள். திருவாளர் எழுந்து வரும் "சிலமனை'க் காண வில்லை, உலையில் நீர் மலமலத்துக் கொதித்தது.
தேங்காய்ப் பாதியைத் துருவி எடுத்து, பிட்டுக்கும் மாக்குழைத்து முடிந்த பொழுதுதான், கிணற்றடி யில் வலு அவதியுடன் ஓங்காளிக்கும் சத்தங் கேட்டது. விரல் நுனிகளிலே தன் உடற் பாரத்தை ஏற்றி, குறுக்கு வேலியால் எட்டிப் பார்த்தாள். சிவக்கொழுந்து விரல் களைத் தொண்டைக்குள் திணித்து, பித்தத்தை இறக்கி முகம் கழுவிக்கொண்டிருப்பதைக் கண்டாள். கெதியாக முட்டைக் கோப்பியைக் கலந்தெடுத்தாள்.
*" என்னணை, முட்டைக் கோப்பியே ? இண்டைக் கும் ஏதேன் விரதம் கிரதமாக்குமெண்டு நினைச்சன்.""
"'உங்களுக்கு வருஷத்திலை முந்நூற்றறுபத்தைஞ்சு நாளும் பச்சை மீன் வேணும். நேத்துத்தான் புரட்டா சிச் சனி விரதம் , '
**விரதத்தோடை ரயில் பயணக்காரனையும் பட்டினி போட்டிட்டாய்.""
**உன்னாணை, மத்தவங்களிலை குத்தம் கண்டு பிடிக்கிறதுக்கு உங்களைப் போலை ஆளில்லை. இன்ன நாளைக்கு வாறதெண்டு ஒரு விசளம் எழுத மூண்டுசேம் கிடைக்கேல்லை. பேந்தென்ன? வந்தாக் கண்டு கொள்ளுவம்.”*

Page 65
104 எஸ். பொ. ()
கோப்பையை உதட்டோரம் வைத்துக் கோப்பியில் ஒரு முரடு உறிஞ்சிக் குடித்தவாறே, ** எங்கை, கொம் மாவைக் காணம் ?' என்றார்.
** எப்பவும் நெக்கு ஊழியம் செய்யுறதெண்டு அவவுக்குத் தலையெழுத்தே ? தனிய இருக்கிறதெண்டு துணைக்கு இருந்தவ. வீரபத்திரரைக் கண்டதும், ராத்திரியே அவதம்பியோடை அண்ணன் வீட்டுக்குப் போயிட்டா."
**அதுக்கு, நடுச் சாமத்திலையே போறது? அந்தக் கிழடிக்கு என்ர நிழலும் புடிக்காது’’ என்று சொல்லிக் கோப்பியைக் குடிக்கிறார்.
**மருமேனிலை மாமியாருக்கு அவ்வளவு மரியாதை யாக்கும் "-வார்த்தைகளை அரையுங் குறையுமாக விழுங்கிக் கொண்டே குசினிக்குள் நுழைந்தாள்.
நேற்றுத்தான் இளங் கன்றுச் சாணகத்தால் நேர்த்தியாக மெழுகப்பட்டிருந்த தரையை, விளக்கு மாற்றினாலே கூட்டி, அடுக்களையை ஒதுக்கினாள். ‘துருவலை’க் குற்றியை எடுத்துப் போட்டு அதன் முன்னால் பெரிய பருத்தித்துறைப் பெட்டியொன்றைக் கவிழ்த்து வைத்தாள். அதன் மேல் தலைவாழை இலைத்துண்டு ஒன்றைப் போட்டு, தண்ணிர் தெளித் துக்கொண்டே, "பேப்பர் படிச்சது போதும். வாருங் கோவன்' என்று அழைத்தாள்.
கைகளைக் கழுவிக்கொண்டு வந்த சிவக்கொழுந்து குற்றியில் அமர்ந்தார். மூன்று பிட்டுகளை இலையில் வைத்து உதிர்த்துவிட்டு, முட்டைப் பொரியலையும் எடுத்து வைத்தாள். அவர் சாப்பிடத் தொடங்கினார்.

) Ldgpy 105 O
திருவாளருக்கும் திருவாட்டியாருக்கு மிடையில்,
மெளனச் சுவர் எழுந்து நின்றது.
** சோக்கா இருக்கப்பா. இப்பதான் வீட்டுச் சாப்
பாடு. சிங்கள சாப்பாட்டிலை நாக்கு மரத்துப் போச்சு .'"
அவர் நிமிர்ந்து பார்த்தார். அவள் மாட்டுக் கொட்டிற் பக்கம் பார்த்து, ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்திருப்பது அவருக்குத் தெரிந்தது.
** என்னெணை நீட்டுக் கயித்திலையோசிக்கிறாய்?"
நெஞ்சைக் கூறாக்கிக் கக்கப்பட்ட வெப்பமான நெடுமூச்சு.
* 'இல்லை. ஐந்து மாசமா மாத்தறையில் இருந்து
யாழ்ப்பாணப் பக்கம் கோச்சி வரேல்லையாம் , '
** கோச்சி வந்ததுதான். எனக்குத்தான் லீவு கிடைக்கேல்லை. ’’
"நான் காத்தைக் குடிச்சுக் கிடப்பன் எண்டு நினைச்சியளாக்கும்.'
** எனக்கிருக்கிற கடன்தான் உனக்குத் தெரியுமே?" 'ஆருக்காகப் பட்டனியள். அந்த மாத்தறைச் சிங் களத்திக்காகத்தானே?"
"பேக்கதையள் கதைச்சுக் கோவத்தைக் கிளப் பாதை. "" ۔
** கோழ்வம் கோழ்வமெண்டு நெடுகப் பேக் காட்டுறதே ? உங்களிட்டை வந்த g5tb6ошшт அண்ணேட்டை என்ன சொன்னனியள் ?"
'அவன் ஒரு கோள்மூட்டி. ’’

Page 66
106 எஸ். பொ.
'பத்து வருஷமா அவள் என்னத்தைப்பெத்தாள்? அந்த மலடியோடை நான் வாழமாட்டன். காசும் அனுப் பமாட்டன், எண்டு அவரிட்டைச் சொன்னனியளோ, இல்லையோ ?’’
*சும்மா ஒரு கோவத்திலை சொன்னதை இவ பெரிய இது எண்டு சொல்லுறாள். தம்பையா அண்ணை வரக்கே என்னை வேலையிலை இருந்து நிப்பாட்டி வெச்சாங்களெண்டு தெரியுமல்லே ?’’
கங்காணியெண்டால், ஆஸ்பத்திரியிலைகங்காணி வேலையைப் பாக்க வேணும். சிங்களக் கங்காணியளை மேய்ச்சால் விடுவாங்களே ? ஒரு சிங்களத் தோறையைக் கிளப்பி வெச்சிருந்தியாம். எப்படிப் பாடு ?"
**அவளாலை-அவள் சொன்ன சாட்சியாலை தான்- என்ர உத்தியோகம் திரும்பிக் கிடைச்சுது. உனக்கு ஒண்டுந் தெரியாது,''
** அது கிடக்க, அவளுக்கு-என்ர சக்களத்திக்கு எண்டாலும்-புள்ளைப் பூச்சி வெச்சுருக்கோ?"
அவளுடைய ஒவ்வொரு வார்த்தையுந் திருவாளர் சிவக்கொழுந்துவைக் குடைந்தெடுத்தது. நிதானம் தடம் புரண்டது.
** மலட்டுப். மலட்டுக் கதையள்தானே வரும்.”*
** இஞ்ச ! உந்தக் கோழ்வத்தைக் கொண்டுபோய் நீர் மேய்க்கிற சிங்களத்தியளிட்டைக் காட்டும். ஆர் மலடி ? நான் வேறையொருவனைக் கட்டியிருந்தால் இதுக்கிடையிலை ஐஞ்சாறு பெத்திருப்பன்.""

0 மறு 107 ם
தேகத்தை உலுப்பி ஆட்கொண்ட கோபாவேசத் துடன், குற்றியை இடறி எழுந்தார். பெட்டி உதை யில் நசிந்தோடி, அடுக்களை வாசலில் கிடந்தது. வெளியால், சருவக் குடத்திற்குப் பக்கத்தில், பிட்டு மணிகள் சிதறிக் கிடந்தன. காகங்கள் விழுந்தடித்துக் கொண்டு இரைச்சலுடன் கொறித்தன.
**அதுதானே, உந்த வேசையின்ரை முகத்திலை முழிக்காமல் அங்க நிக்கிறனான்.'
ஈச்சேரில் வந்து படுத்தார். புகையிலையைக் கிழித்து, ஒரு சுருட்டுச் சுற்றி எடுத்தார். அதைப் பற்ற வைத்தார். புயலின் புத்திரப் பாக்கியமான நிசப்தம் ஆட்சி செலுத்தியது.
அந்தச் சுருட்டைப் புகைத்து முடிப்பதற்கிடையில், பதினைந்து இருபது நெருப்புக் குச்சிகளைச் செல. வழித்தார். சுருட்டுக் குறளை எறிந்தார். வெற்றிலைத் தட்டைச் தேடிப் பிடித்தார். வெற்றிலை வாடிக் கிடந்தது. கறட்டிச் சுண்ணாம்பு. ஒருவகையாகச் சமாளித்து, ஒரு வாய்க்குத் தாம்பூலம் தரித்தார். "சேட்டை எடுத்து மாட்டி, சால்வையைத் தோள்களில் எறிந்தார். வெளியே புறப்படும் ஆயத்தம்.
அவரை வழிமறிப்பதைப் போல எதிரில் வந்து நின்றாள் புனிதம். ஆத்திரம் - சினம் ஆகியவற்றின் சுவடுகள் தூர்ந்திருந்தன. முகமும் முகமும் நேராகச் சந்தித்தன. புதிதாகக் காணப்படும் 96 (6.560 Lu கவர்ச்சியில் அவருடைய விழிகள் ஒரு கணம் நிலைத் தன. இப்பவும் கல்யாணச் சந்தையில் * செல்லும் குமரி. அவளுடைய கழுத்தில் சிவக்கொழுந்து தாலி கட்டிப் பத்து ஆண்டுகளாயினும், சென்ற வைகாசியிலேதான் இருபத்தியெட்டு வயது பூர்த்தியாயிற்று. தனக்கட்டுகள் சதை கூட்டிக் கொழுத்த வாக்கில் நிமிர்ந்து,

Page 67
108 எஸ். பொ. 10
செளந்தர்யப் பொலிவு காட்டின. குலை தள்ளிய வாழையின் நிறைவுடன், இரத்தம் ஊறிய பாங்கில், முகத்தில் மலர்ச்சி. கன்ன உச்சிக்காரி இப்பொழுது நேர் வகிடுவிட்டு வாரத் தொடங்கியிருந்தாள். இந்த "உத்தி’ முகத்தை உருண்டையாக்கிக் காட்டியது. சிரிக்கும் பாசாங்கில், நாக்கு நுனி உதட்டை நனைத்து மீண்டது.
*"நீங்கள் ஆள் சுறுக்கர்தான். துலைக்கே புறப்பட்டு tፃ.uሠ6ኽ?” ”
பதிலில்லை.
**இஞ்சாருங்கப்பா, ஒருக்காச் சின்னக்கடைப்பக்கம் போயிட்டு வாருங்கோவன்.""
**சின்னக் கடைக்கே? என்னத்துக்கு?’’
* 'இண்டைக்கு நாயித்துக்கிழமையல்லே? கட்டைக் காலன்தானே உங்களுக்குப் பிடிக்கும்?' சற்று முன்னர் நடந்த சண்டையின் சாயல் எள்ளளவும் இழையாத இதங் குழைத்துப் பேசி, ஓர் ஐந்து ரூபாய்த் தாளை அவருடைய கைக்குள் வைத்தாள். அவருடைய நாக் கில் கடல் ஆமை இறைச்சியின் சுவை ஊர்ந்தது. கோபமெல்லாம் அடங்கிற்று.
சால்வையை ஈச்சேரின் சட்டத்தில் எறிந்து, மறுபடி யும் குந்தினார். " "கொஞ்சம் பச்சைத் தண்ணி கொண் டானை, ’’
செம்பிலே தண்ணிர் வந்தது. வாயிற் குதப்பப் பட்ட வாடல் வெற்றிலை ஒரு மாதிரியாகக் கசந்தது. வாயை நன்றாக அலம்பிக் கொப்பளித்துத் துப்பி விட்டு, *அண்ணாக்காகத் தண்ணிர் குடித்தார். செம்பிற்குள் பார்வை நிலைத்தது.

L Log.) 109
**இங்க செம்புக்கை வெத்திலை கிடக்கு." **ஓம். வாடாமல் போட்டு வைச்சனான்.""
* அப்ப வெத்திலைத் தட்டையுந்தா, சுண்ணாம்புக்
கறண்டிக்கை கொஞ்சம் தண்ணிவிட்டுஇழகப்பண்ணு.'
புனிதம் மடித்துக் கொடுக்க, பத்தியமாகத் தாம்
பூலம் தரித்தார். நாக்கும் நன்றாகச் சிவந்தது.
** இஞ்சேருங்கோ, கெதியாப் போனாத்தான் நல்ல ஞசேரு 点点 ந தாய்க் கிடைக்கும் "'
** எனக்குத் தெரியாத சின்னக் கடையே? கொஞ்சம் பொறுத்துப் போவம்.'
**நீங்கள் மாத்தறைக்குப் போன ரெண்டுவருஷத் துக்குள்ளை யாழ்ப்பாணம் தலைகீழா மாறிட்டுது. "'
புனிதமும் வெற்றிலை போட்டுக் கொண்டாள். **உனக்கு நல்லா வடிவாச் சிவந்திருக்கணை. "'
** இதிலை தெரியும் நான் எப்பிடி பட்டவளெண்டு. எப்ப வேலைக்குத் திரும்பிப் போறியள் ?"
'நான் ஒரு கிழமை லீவிலை வந்தனான்." ** மழைதான் பெய்யப் போகுது. ’’
தன்னுடைய உத்தேசத்தைத் தெரிவிக்க இதுதான் சமயமெனச் சிவக்கொழுந்து நினைத்தார்.
** எல்லாத்தையும் மறந்திடுவம். உன்னை என்னோடை கூட்டிட்டுப் போகத்தான் லீவுபோட்டு: வந்தனான்."

Page 68
110 6T6řv. Golur.
**இவ்வளவு காலமும் இல்லாத கரிசனை இப்பதான் புதிசாய் முளைச்சிருக்கு. ஏன் இப்ப அந்தச் சிங்களத்தி கைவிட்டிட்டாளே ?"
**உந்த விண்ணானம் கொட்டுற பொம்புளைய ளோடை கதைச்சுத் தப்பேலாது. நான் ஒரு சிங்கள வைப்பாட்டி வெச்சிருக்கிறன் எண்டு ஆரோ தட்டு வாணியள் கதை கட்டியிருக்க வேணும்.'"
**பேந்து கதைப்பம். கெதியாய் கடைக்குப் போயிட்டு வாருங்கோவன்.""
அந்தச் சமயம், “ சங்கடத்தால் சைக்கிளை ஏற்றி, படலையைத் திறந்து கொண்டு, ஒரு வாலிபன் வந்தான். சாக்கினால் உறை போடப்பட்டிருந்த ஒரு பெரிய போத்தல் ‘கரியரிற் கட்டப்பட்டிருந்தது. பக்குவமாகச் சைக்கிளை ஸ்டாண்டில் நிறுத்தினான். சைக்கிள் " கான்டிலிலே தொங்கிய பையைக் கையில் எடுத்தான் .
** அது மரஞ்சீவுறவன்."
** இப்ப இவங்களுக்குக் காசுமெத்தி, ஊர் பிடிபட்டு, கெப்பர் மிஞ்சிப் போச்சு, அவன் சின்னவன் கத்திக் கூடு கட்டி, முட்டியள், தீட்டுத்தடி எல்லாத்துடனும் உடுப்புப் போட்ட மாதிரித்தான் வருவான். உவன்ரை சோக்கைப் பாருங்கோவன்' என்று வாய்க்குள் புறு புறுத்தார்.
சேட்டைக் கழற்றி, கொடுக்குக் கட்டி, கத்திக் கூடு மாட்டி, தளைநாரையும் முட்டியையும் கையில் எடுக் கும்வரை, அவனையே அவதானித்தார்சிவக்கொழுந்து. ஈச்சேரில் படுத்துத் தன்னைக் கவனிக்கும் அவரை அவனும் உற்றுப் பார்த்தான்.

** என்ன அப்பிடிப் பாக்கிறாய் செல்லத்தம்பி? இவர்தான் எங்கட இவர்.'
**ஐயாவே ? அப்படித்தான் நினைச்சன். எப்பிடி ஐயா மாத்தறைப் பக்கம் மழைதண்ணி?’’ என்று சம்பிர தாயமாகச் சுகபலன் விசாரித்தான். அவர், அவனு டைய நெஞ்சிற் சடைத்திருந்த ரோமத்தையும் உருண்டு திரண்டு கருங்காலிக் குத்தியின் மெருகு பெற்றிருக்குந் தேகக் கட்டையும் "விடுப்புப் பார்த்தார். அப்புறத் தான், ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே என்கிற மரியாதைப் பண்பு ஞாபகத்திற்கு வந்தது.
* நீ சின்னவனுக்குச் சொந்தமே.”*
இ*ச்சா. நாங்கள் கொட்டடிப் பகுதி’’ உரை யாடலை நீட்டாமல், " "அப்ப வாறன் ஐயா, இண்டைக் குப் பாளை தட்டுமுறை' என்று கிணற்றடிப் பக்கம் போக அவசரங் காட்டினான்.
**இந்த வளவிலை எத்தினை மரம் கட்டியிருக் கிறாய்?"
**அஞ்சு,
எதெது?"
**கிணத்தடிக் கறுப்பிக் கன்றுகள் ரெண்டு, கக்கூசடி உசரியும், வளுக்கலும், கோடிச் சிவப்பி.’’ சிரத்தை யின்றிப் பாடம் ஒப்புவிக்கும் பாவனையிற் சொன்னான்.
நாவலடிச் சிவப்பியும் நல்லா ஊறுமெண்டு சின்ன வன் சொல்லுவான்." Ys
அது பாளை மாறிப் போச்சுது, ஐயாவுக்கு எங்கடை தொழில் முறையும் நல்லாத் தெரியுதே ?' என்று * பொடி வைத்துப் பேச்சை முறித்துக் கொண்டு கிணற் றடிக் கறுப்பியை நோக்கி நடந்தான்.

Page 69
Lu 112 ܗܝ எஸ். பொ. ( .
'இந்தக் கோசு ஏன் மரங்களைச் சின்னவனுக்குக் குடுக்கல்லை?" என்று மனைவியை விசாரித்தார்.
** சீவிய உருத்து எண்டு சொல்லி அம்மாதான் இவனுக்குக் குடுக்க ஒத்தக்காலிலை நிண்டவ. மரத் துக்கு எழுவது ரூவா மேனி மூன்னூற்றம்பது ரூவா தந்தவன். அந்தக் காசிலை வாங்கிவிட்ட பசுவாலும் கோழியளாலும்தான் பிச்சை எடுக்காமல் மானத்தைக் காப்பாத்தி சீவிக்கிறன்.'"
‘இவன் ஐயம்புள்ளை ஆக்களின்ரை பகுதியாக்கும். அவங்கள் காசுக்காரர். "'
**ஆனாலுமப்பா, சனியனுக் கெறு. அகராதி பேசு றவன். அண்டைக்கு முத்தத்து மரத்திலை பழுத்திருக் கிற தேங்காய்க் குலையைப் புடுங்கிவிடு எண்டு சொல்ல, "தேங்காய் ஆயிறவனைப் பாருங்கோ. அவனும் புழைக்க வேணும்' எண்டு சொல்லீற்றுப் போனான்.""
* 'இப்ப இந்த கீழ்சாதியளுக்குத்தானே நடப்பு?என் னோடை அவன் அருளானந்தம்-அவன் தான் கொய் யாத் தோட்டத்து நளவன்-மாத்தறைக்கு வேலை மாறி வந்தான். பேந்து ஒரு மாசத்திலை இஞ்சை திரும்பி வந்துட்டான். நானும் மூண்டு மாசமாப் பிடிக்கா எம்பியளை எல்லாம் பிடிச்சு ஒரு மாறுதலுக் குப் புழுத்திப் பார்த்தனே!"
** என்னப்பா, கதையிலை குந்தீட்டியள். எப்ப இறைச்சி வாறது. எப்ப காய்ச்சிறது, எப்ப சாப் பிடுறது?’’
**ஓமப்பா, வெய்யிலும் ஏறிட்டுது. நான், அவன் ராசான் ரை கடையிலை ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துட்டு ஓடியாறன். நீ உலையை வெய்யன் .'

* ] աց: W 113
சிவக்கொழுந்து புறப்படும் பொழுது, கிணற்றடி மரத்திற் பாளை தட்டுஞ் சத்தம் கேட்டது.
சின்னக்கடையிலிருந்துசிவக்கொழுந்து திரும்புவதற் கிடையில் அவரைத் தேடி சரவணமுத்துவும் திருநாவுக் கரசும் வந்திருந்தார்கள். அவர் கடைக்குச் சென்ற சமாசாரத்தைப் புனிதம் தெரிவித்தாள். அவர்களிரு வரும் படலைக்கு முன்னால், வீதி திருத்தக் குவித்திருந் தக் கல்லுக்கும்பலுக்கு பக்கத்திற் குந்தியிருந்தார்கள். அப்பொழுதுதான் செல்லத்தம்பியும் * சீவலை" முடித்துக் கொண்டு புறப்பட்டான்.
அவர்களுக்கும் அவனுக்குமிடையில் ஏதோ வாக்கு வாதம் நடந்தது.
திருமதி சிவக்கொழுந்து உற்றுக் கேட்டாள்.
"இஞ்ச பார் சரவணமுத்து, உன்ரை பெருமா கோயில் சண்டித்தனத்தை எள்ளெண்ணைச் சட்டி எரிக்க வாறதுகளிட்டைக் காட்டு. நான் கொட்டடி யான். இனிமேல் என்னட்டைச் சேட்டைவிட்டால், பாளைக் கத்தியாலை உன்ர குடலை எடுத்துப்போட்டுத் தான் வழக்குப் பேசுவன்." செல்லத்தம்பியின் குரல் உரத்துக் கேட்டது.
புனிதம் வேலியால் எட்டிப் பார்த்தாள். அதற் கிடையில் அவன் சைக்கிளில் ஏறிப் போய்விட்டான்.
அந்நேரம் சிவக்கொழுந்துஅங்கு வந்து சேர்ந்தார். இருவரும் அவருடைய காதைக் கடித்து ஏதோ
சொன்னார்கள்.
" அப்பிடியே சங்கதி?நான் கறியைக் குடுத்திட்டு வாறன்’ என்று படலையைத் திறந்து உள்ளுக்கு வி-8

Page 70
O 114 எஸ். பொ. D
வந்தார். புனிதம் ஒரு தேங்காயைக் கொடுவாக் கத்தியின் பிறத்தியால் அதனைப் பாதியாக்குவதற்காக அடித்துக் கொண்டிருந்தாள்.
சிவக்கொழுந்துவின் முகம் கறுத்து வியர்வைக் காட்டில் மிதந்தது. கறி உமலை, அவளுடைய கால் களில் பட்டும் படாமலும் விழ வீசியெறிந்தார். பேசாமல் திரும்பினார்.
* துலைக்கே ?"
** கறியைக் காச்சு, வாறென்'
*"வெய்யிலுக்கை போட்டு வந்து என்ன அவசரம்? கால் ஆறிப் போகலாமே ?’’
**கண்கெட்டுப் போவாளே, படலைக்கை சரவண முத்தனும் திருநாவுக்கரசனும் நிற்கிறது தெரியல் லையே? அவங்களோடை ஒரு அலுவல்.’’
**அப்ப இண்டைக்குச் சாப்பாட்டுக்கும் ஆளில்லை யாக்கும். அந்தக் குடிகாரங்களோடை சேந்து குடிகுடி யெண்டு குடிச்சுப் போட்டு ராவைக்குத்தான் வாற தாக்கும். இஞ்சையல்லே உங்களுக்கு முட்டியிலை கள்ளு வாங்கி வெச்சிருக்கிறன் .'"
*ஒவ்வொரு கதைக்கும் நீ மாத்துக் கதை கதைக் காதை, நீ கெதியாக் கறியைக் காச்சு. நான் சுறுக்கா வந்திடுவன்.'"
படலையை அடித்துச் சாத்திவிட்டு, சிவக்கொழுந்து வெளியேறினார்.
புனிதம் எப்பொழுதும் சமையலிற் சுறுசுறுப்பு. இன்றைக்கு இனந்தெரியாத பதற்றம். கத்தியில்

og 115
இறைச்சியை அறுத்தாள். ‘வார்"களைக் குறுணி யாக்க முடியவில்லை. வெடுக்கு மணத்திலே அரு வருப்பு. பெரிய துண்டுகளாகப் போட்டாள்.
ஆமைக் கொழுப்பையே உருக்கி, கடுகு - சீரகம்" கறிவேப்பிலை - அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய் எல்லாவற்றையும் போட்டுத் தாழித்து, இறைச்சி யைப் போட்டு வேகவைத்தாள். உப்பும் மிளகாய்த் தூளும் போட்ட பின்னர், தேங்காயின் முதற்பாலை யும் விட்டுக் கொதிக்க வைத்தபோது, பெரிய வேலை யொன்றைச் செய்து முடித்த திருப்தி ஏற்பட்டது. இதற் கிடையிலேயே இறாலில் சொதியும் கூட்டி வைத்தாள். குழம்பை இறக்கிவிட்டு சொதியை அடுப்பில் ஏற்ற வேண்டியதுதான். மரக்கறியில்லை.
குழம்பை இறக்கித் திருகாணியில் வைத்து, தேசிக் காய்ப் புளியை ஊற்றிப் பிரட்டிச் சட்டியால் ept விட்டு, சொதிச் சட்டியை அடுப்பில் ஏற்றினாள்.
அப்பொழுது, சிவக்கொழுந்து அடுக்களைக்குள் நுழைந்தார். சாமான் பெட்டிகள், சட்டிகள், விறகுமட்டை முதலியன விரித்தபடியே கிடந்தன. இன்ன மும் அவற்றை அடுக்கி ஒதுக்கவில்லை. துருவு பலகைக்குப் பக்கத்திற் கிடந்த சிரட்டை யொன்றை எடுத்துக்கொண்டு, பனை மட்டைக் கிராதித் தட்டி எழுந்து நின்ற அரைக் குந்திலே குந்தினார். 'ஆளுக்கு நல்ல ஏத்தம்."
** இதிலை கொஞ்சம் இறைச்சி போடடி” என்று சிரட்டையை நீட்டினார்.
** நெக்குத் தெரியுமே அந்தப் பாழ்பட்டு போவாங் களோடை போனால், இப்பிடித்தான் ஆட்டத்திலை திரும்புவியளெண்டு. ’’அகப்பையாற்கோலி இறைச்சித் துண்டுகளைச் சிரட்டைக்குள் போட்டாள்.

Page 71
116 எஸ். பொ.
* உயே வாராத் தெரிஞ்சு போடு. ’’
'af பிடியுங்கோ' என்று சிரட்டையைத் திருப்பிக் கொடுத்தாள்.
தோலை முன்பற்களால் உரித்துத் துப்பிவிட்டு, வாரைச் சப்பினார். பெரிய துண்டு; பல்லுக்குக் கொஞ் சம் கஷ்டம்.
'நான் தானே சொன்னனான் இஞ்சை கள்ளு வேண்டி வெச்சிருக் கெண்டு. ’’
இறைச்சித் துண்டு ஒன்றை கொடுப்புப் பற்களுக் கிடையிற் சப்பிக் கொண்டே, "நான் அந்த நளவன் சீவிற கள்ளைக் குடிப்பனெண்டு நினைச்சியே’ என்றார்.
ஆணிக்குடல் துண்டு ஒன்று, அவருடைய வாயில் ரப்பராக இழுபட்டது.
* 'இவளுக்கிப்ப சோகை புடிச்சுப் போச்சு. உப்புப் புளிக் கணக்கொண்டும் சரியாத் தெரியுதில்லை. ’’
மடிக்குள் மறைத்திருந்த போத்திலை உருவி வெளியே எடுத்தார். அரைப் போத்தலில், அரை வாசிக்குச் சாராயம் இருந்தது. "கிளாஸ்’ கூடத் தேடாமல், போத்தல் கழுத்தை வாயில் வைத்து ஒரே மடக்காகக் குடித்தார். அஷ்டகோணமாகிப் பிளந்த இதழ்களினால் குழம்புடன் கூடிய இறைச்சியைச் சூப்பி, அதனைச் "சப்பாமலே விழுங்கி, ஒருமுறை இருமி, அவஸ்தையைத் தணித்தார்.
* அதுதானே பாத்தனான். கறுப்பன் கையோடை இருக்கேக்கிள்ளை ஏன் கள்ளை?’’

D மறு 117
* ‘நானும் பாக்கிறன். வேசைக்கு நாக்கு நீண்டு போச்சு. இப்பவே ரெண்டிலை ஒண்டு தெரிய வேணும்.'"
*" என்னத்தைப் பத்தி?’’
"நீ என்னோடை மாத்தறைக்கு வாறியோ, இல் Goa)GSunt?' '
**உன்னாணை அப்பா, புண்ணியம் கிடைக்கும். போய் முழுகீட்டு வந்து சாப்பிடு. எல்லாத்தையும் ராவைக்குக் கதைக்கலாம்.'
குந்திலிருந்து எழுந்தார். அவளுடைய முகத்திற்கு எதிராகத் தன் முகத்தை வைத்துக் கொண்டு, **ாாவிலை கள்ளப் புருஷனோடை தான் படுக்கிறது. எனக்கு இப்ப பதில் வேணும்.'"
சாராய நெடியும், கடல் ஆமை இறைச்சி வெடுக் கும் "பக்கென்று புனிதத்தின் மூக்குத் துவாரங்களில் ஏறின. அருவருப்பு உணர்வு, வயிற்றைக் குமட்
- L 335 .
அடுப்பில், சொதி கொதித்துத் திரைந்தது, அவ ளுக்குத் தலையைச் சுற்றியது.
குசினியிலிருந்து முற்றத்திற்கு ஓடி வந்து, பொன் லுருக்கிலன்று நாட்டப்பட்டுத் தழைத்து வளர்ந்திருந்த முள்முருக்கம் மரத்திற் கைகளைத் தாக்குக் கொடுத்துக் குனிந்தாள்.
*"வூஒக்.ஆஓக்."-வாந்தியெடுத்தாள், அவதியின் se aurífen.

Page 72
O. 118 எஸ். பொ. ()
** என்னடி மாய்மாலம் கொட்டுறாய்.என்னடி உனக்குச் சத்தியும் வருத்தமும்? சொல்லண்டீ! நீ என் னோடை வாறியா, இல்லையா?"
களைப்புடன், வீட்டுத் திண்ணையில் அமர்ந்தாள்.
** என்னடி நான் கேக்கிறன். நீ உன்ர பாட்டுக்கு இருக்கிறாய்?"
** நீ கேக்கிறகேள்விக்குமறுமொழியுந்தேள்வையே? இந்த வீடு வாசலை, மாடு கண்டை விட்டுட்டு, இரவல் புடவையிலை பெரிய கொய்யகம் வெச்சுக்கொண்டு, கூப்பிட்ட இடத்துக்கு இவருக்குப் பின்னாலை திரிய வேணும். நான் செத்தாலும் இந்தப் படலையைத் தாண்டி உன்னோடை வரமாட்டன்."
"சரவணமுத்துவும் திருநாவுக்கரசும் எழுதினதும்,
சொன்னதும் எல்லாம் சரிதான்.""
**அந்தக் கோள்காவி நாரதங்கள் என்ன சொன்ன வங்கள்? இனிமேல் அவங்கள் இந்த வீட்டுப் படலைக்கு வரட்டும்.”*
* 'இப்ப சண்டித்தனமும் அல்லோகாட்டுறாள்’’வலு ஆவேசத்துடன் கையில் வைத்திருந்த இறைச்சிச் சிரட் டையை அவள் மீது எறிந்தார். குறி தவறாது அது சரியாக அவள் நெற்றியிற்பட்டது. இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது.
**ஐயோ, இந்தப் பாழ்பட்டுப் போவான்-குறுக் காலை தெறிப்பான்-என்னைக் கொல்லுறானே,' என்று கூவித் தணிந்தாள்.
அமைதி.

O 119 עgמו גם
கடைசியா நான் செர்ல்லுறன். கேட்டுக் கொள் ளும். இந்த ரெண்டு வருஷமா நீர் உழைச்சுத் தந்த திலை சீவிக்கேல்லை. இது என்ர வீடு வளவு. நீர் உன்ர ஆக்களோடை போகலாம்.'
‘என்னடி சொல்லுறாய்' என்று கேட்டவண்ணம் * துருவலைப் பலகையை ஓங்கிக்கொண்டு வந்தார்.
**ஏன் நிக்கிறீர்? அடியுமன். மலடன்களின்ரை சண்டித்தனம் பெண்டுகளிலைதானே?"
**நான் மலடன் எண்டால், நீயும் மலடிதானேடி?"
* நீ தான் மலடன்.நான் மலடியில்லை."
இந்நேரம் படலையைப் பிடுங்குவது போலத் திறந்து கொண்டு, அவசரமாகத் திருநாவுக்கரசு ஓடி வந்தான்.
** சரவணமுத்துவை முச்சந்தியிலை வெச்சுநளவன் செல்லத்தம்பி அடிச்சுப் போட்டான்' என்றுமுற்றத்தில் நின்று கத்தினான். *
* 'இண்டைக்கு ரெண்டிலை ஒண்டு. முதலிலை அவனை முடிச்சுப் போட்டுத்தான் இவளின் ரை கணக்கைத் தீர்க்க வேணும்' என்றுகொடுவாக்கத்தியை எடுக்கக் குசினிப் பக்கம் பாய்ந்தார். நிதானமற்ற கால்களுடன், குசினிப்படியில் தடக்குப்பட்டு, தடா லென்று கீழே விழுந்தார். துருவு பலகையின் பற்கள் கிழித்துக் கன்னத்திலிருந்து இரத்தம் கோரமாக வடிந்து கொண்டிருந்தது.

Page 73
120 எஸ். பொ. 0
"வடுவா நீங்கள் பிரிச்சு வைச்ச மாதிரி உங்கடை கூட்டாளியைத் தூக்கிக் கொண்டாச்சும் போயிடு. ஆனால் ஒண்டு. இண்டையிலையிருந்து, நீயோ சரவண முத்துவோ என்ரை வீட்டுப் படலையைத் துறந்தால் விளக்கு மாத்தாலைதான் அடிப்பன்' என்று ரெளத்திர காளிபோல புனிதம் கூச்சலிட்டாள். x

மறு 191
tanoleir சிவக்கொழுந்து
புனிதம் சிவக்கொழுந்து
tdolpudoár

Page 74
122 எஸ். பொ.
5T6: .
*நான் குரு என்ற ஆணவத்திற் பிரச வமான அவா தனி! என் வழி தனி. எனக்கு மட்டும் புரிந்த வழி அதனை வார்த்தைகளிலே பரிவர்த்தனை செய்கின் றேன். மற்றவர்கள் புரிந்த வரையிற் புரிந்து கொள்ளட்டும். புரியாத வரையில், ஏதோ விளங்கிக் கொண்டதாக நடிக்கட்டும். ‘புரி யவில்லை" என்று முகங் கோணுபவர்களைப் பார்த்து, "அஞ்ஞானிகள். மூடர்கள்." என்று எள்ளி நகையாடுவேன். அது என்
வழி..."
W6bufTے سحس۔
வழி வீங்குசேர் ஏமாப்பின் குதிப்பில் நடை பெறும் கூட்டத்திலே, வாளிலும் பேனாவே வலிமையுடையது' என்று வாய் கிழியக் கத் தும் எழுத்தாளர் திருக்கூட்டத்தினர் சபை யோராகத் தூவப்பட்டிருக்க, ஈழத்து எழுத் துலகின் ‘இரட்சகர்" எனச் சுயவிருது வரித் தோர் கூட்டத்தை நடத்துஞ் சூத்திரதாரி களாகச் சுழன்று, கலையென்று சொல்லி, நடுவில் அரசியலிலே தொற்றி, அதையும் மறந்து, இதையுங் குழப்பி, செங்கொடி மர நீழலிற் “கலங்கிய குளத்திலே மீன் மெத்தப் பிடிக்கலாம்" என்ற ஞான ஒளி பெற்று, சுய நாம விளம்பரத்தையே இலட்சியமாகக் கொண்டு, அந்த அடி மன ஆசா ஏக்கத்தை மறைக்க தத்துவச் சொற்குவியலில் அரண் கட்டி, தங்கள் கலைத் தொண்டால் செஞ் சூரியன் உதிக்கத் தயாராகி விட்டான்

128
என்று தமது அரசியற் பீடாதிபதிகளையும் நம்பச் செய்து, தந்திரோபாயப் பலிதத்திற் சுய உச்சி மோந்து, தமது செயல்களுக்குக் கரகோஷமிட்டு ஆர்ப்பரிக்கச் சீடராம் இராம படையுந் திரட்டி வைத்து, எதிர்க் கருத்துக் கொண்டோர் மீது கதிரைகள்= முட்டைகள் ஆகியவற்றை ஆயுதங்களாக உபயோகிக்கும் மறத் தொழிலும் இயற்றி, * முற்போக்கு" என்ற வெற்றுச் சொல்லை வேள்விக் குண்டத்தில் ஒதப்படும் யாகமந்தி ரத்தின் அந்தஸ்திற்கு உயர்த்தி, கோஷக் குழப்பம் என்ற வேள்விக் குண்டத்தில் நெய் யூற்றும் பூசாரிகளாகத் தங்களை கற்பித்துக் கொள்ளும் பலருக்கு கலை, வேதம் ஓதியோ னாம் வேதமறிந்த அவனுக்கு இந்தப் போலி யாகம் வேதனையை அளிப்பதை போன்றே, வேறு பலருக்கும் வேதனை அளிக்கவே, அதனைத் தாங்காது வெளிப்படுத்த, அத் துணிவுக்கு அவனே காரணன் என்ற முனி வின் ஏகத்தில், வேதமறிந்த அவனிடங் தாம் கலை வேதம் கற்கவில்லை யென்ற “கற்பை நிலைநாட்டி விட்டால், தாம் தாமாகத் தோன்றித் தவத்தாற் கொடியு யர்த்தியவர்களென்பதை நிறுவி விடலா மென்ற மனத்தவிப்பில், அவன் மீது வசை மாரி பொழிந்தே முற்போக்கு எழுத்தாளர் மகாநாடு நடத்தப்படுகின்றது. அவனுடைய மனத்திலே முனிவுக்குப் பதில், அனுபவ முதுமை மதர்க்கின்றது. "மடியில் கட்டாரி யும், மனத்திலே நயவஞ்சகமும், உதட்டிலே "தோழா" என்ற நயப்பும் புனைந்து நண்பர்க ளென வேடமிட்டவர்களைப் பிரிந்து செல்

Page 75
O 124
எஸ். பெர.
லும் நன்னாள் இன்னாளே' என்ற கணிப்பு வலுப் பெறுகின்றது. பித்தம் தெளிந்த அற் புத நிலை. தனி வழி பிறந்தது. S6of Luu ணத்தை மேற்கொள்ளுகின்றான். *படுபிற் போக்குவாதி’, ‘பூர்ஷஜூவாக்களின் கைக் கூலி", "இந்திரிய எழுத்தாளன்", *விளங்கு தில்லை எழுத்தாளன்', 'தனி நபர் வாதி, 'இயக்கத்தைக் காட்டிக்கொடுத்த துரோகி? என்ற வகையிற் கல்லெறிகளும், பொல்லடி களும்! "இயக்கம் அவனைத் துலைத்தே தீரும் என்று சூளுரைத்தார்கள். "அவன் உதிர்ந்த மலருக்குச் சமம்" என்று ஏளனஞ் செய்தார்கள். இருப்பினும், கலையையேதன் வாழ்க்கையாகவும் இலட்சியமாகவும் வரித் துக் கொண்ட அவன் தீரா வேதனையுட னும்,களி பேருவகையுடனும், அவநம்பிக்கை யுடனும், அதே சமயம் அதுவே பிரசவித்த நம்பிக்கையுடனும், சிலுவைப் பயணத்தைஅல்ல, இரட்சண்ணிய யாத்திரையைட அவன் மேற்கொண்டான். அவன் 9|丐Tu〕 தேயனல்லன். அவனை, அவனும் பிறரும் எஸ். பொன்னுத்துரை யென அறிவர் அவ லுடைய பயணத்திலே ஒரு தரிப்பு. தத்துவ ஜாலக் கனவென்பது படர்கின்றது.

வீச்சு நடைபயின்று அளைந்து வருந்தென்றலின் உதைப்பு, இலைப் பரப்பிலே சயனித்த மரகதப் பசுமை முழுவதையுமிழந்து, முதுமையின் பழுப்பை அங்கத்திலே அப்பி, ஒசங் குன்றிய வெப்பியாரத்திற் கயர் உறுஞ்சிய சோபிதத்திலே துயருற, இலைக் காம்புஞ் சரிய, இலை யடி பூட்டினை நெகிழ்த்தி மரத்திலே ஒட்டிக் கிடப்பதா, உதிர்ந்த புழுதியிற் புரளுவதா என அவதியுறும் இலை யாக, இல்லற ஈரலிப்பு இற்று, பந்த பாசக் காம்பு அடியிலே சரிய, துறவற ஈர்ப்பு அவர் மன்த்தினை அலைக்கழிக்கின்றது. கணுவில், இலையடியின் பிணைப் புச் சமைத்த கக்கத்திற் புதிய பிறவியின் சிரசுதயத்தை இனங்கண்ட அமைதியில் இலை சருகாக உதிரு கின்றது ! துறவற நோன்பியற்றும் வெறி மீதூர, இல்லந் துறந்து தூரந் தூரமாக நடக்கின்றார்.

Page 76
126 எஸ். பொ. )
*வினிலே மண்ணையும், பொன்னையும், பெண்ணையுஞ் சதமென நம்பினேன். மண்ணாசை சவக் குழியின் இருப்பிடத்தில் முடிவடைகின்றது. பொன்னாசை இதயத்தைக் குழப்பிக் கொண்டே அதன் இறுதித் துடிப்பிலே மரிக்கின்றது.பெண்ணாசை தசை யின் தளச்சியுடன், வாலிபப் பருவத்து எழுச்சியிலே கலவி இன்பமே இன்பங்களின் ஆணிவேர் என்ற மயக் கத்தின் விகசிதத்திலே துயருற்றேன். கலவியிற் கழிந்த நாள்கள் விருதாவில் உதிர்ந்த நாள்களே."-மனத் திலே சுடர் விட்டுக் குதிக்கும் ஞானக் கருத்துக்களென நூங்கு விளைகின்றது. ஆசைக்கு அழிவேயில்லை; பழைய ஆசைகளின் அழிவிலே புதிய ஆசைகள் பிறக் கின்றன; இல்லற ஆசைகளின் சிதையிலே வீட்டின்பப் பேறடைய வேண்டுமென்ற ஆசை மிக மிக ஆழமாழமாக வேர் பாய்ச்சியுள்ளது; அந்த ஆசையே ஏகமாக நிறைந்து தன்னை எதிரேறுடன் அழைத்துச் செல் வதை அவர் உணரவில்லை. இலக்கும், இலட்சிய மார்க்கமும் வீட்டின்பமே இலக்கு; அதனை அடை யும் இலட்சிய மார்க்கம் துறவற நேதியே என்ற நம்பிக் கையில் அலையலானார்.
வீடல் நாடி நீண்ட பயணம். முதுமையின் தளர்ச்சி பெற்ற உடலிலே அலைச்சலின் விளைவாஞ்சோர்வு வசதியாகக் கொழுகின்றது. பிரயாணத்தின் தரிப்பு. ஒளி குடித்து , நிழல் கவித்துள்ள மரத்தடியில் உடலை நீட்டிப் படுக்கின்றார். அம்மரத்தின் பசிய இலைகள் சமைத்த கூரையிலே பல பொத்தல்கள். பொத்தல்களி னுரடே நீலவானின் துணுக்குச் சிதர்கள் தெரிகின்றன. அகண்டகாரமான வானத்தை இவ்வாறு துணுக்கு களாகக் காட்டும் இலைக் கூரையின் இயற்கை அமைப்பிலே மேய்ந்த அவருடைய கண்கள், தந்தத்தின் எழில் ஏந்தி, முறுவல் சிந்தி, ஒயில் காட்டும்

127
மலர்க் கொத்திலே தரிக்கின்றன. மென்பஞ்சுப் படுக்கை களாக, அல்லி வட்டங்களை அலர்த்தி மேடைகள் சமைத்துக் கொடுக்கும் மலர்மொய் அமுதம் இருக்கும் இடத்தைக் காட்டும் வழிகாட்டிக் கோடுகளை நிர்வான மாக உரிந்து, சுகந்தச் சினைப்பில். . . இராக்கதக் காம வெறிகொண்டதேனி ஒன்று மலர்க்குறிகளை இடித்தும், மகரந்தக் கூடுகளைக் குழைத்தும், இனிப்புப் பிசின் மண்டியதேனை, உறிஞ்சியும். பட்டப் பகலிலே வெட்ட வெளியிலே, மலர்கள் கற்பழிக்கப்படுகின்றன! தேனி யின் காமக் கோட்டத்திலே அல்லிகள் உதிருகின்றன; மரகந்த மணிகள் சிந்தப்படுகின்றன; பூக்கள் சில அறுந்து விழுகின்றன. கலவி இன்பமே சகலவுமெனத் தன்னையே அழித்துக் கொள்ளும் மலர்மொய்யின் புன் செயலிலே அவருக்கு வெறுப்புப் பிறக்கின்றது. வெறுப்பு முனிவாக முற்றி வெடிக்கின்றது.
'வினிற் கலவியை மாந்தும் மலர்மொய்யே! அந்தத் தேனீயின் காமக் களியாட்டத்திலே நீ அழிந்து சோரம் போவது உனக்குத் தெரியவில்லையா? உன் பட்டுத் திருமேனியை அந்தத் தேனியைத் தொட்டும் பார்க்க விடாதே. இறை தியானத்தில் ஈடுபடு. பரமபதம் அடைதல் மூலமே நமக்கு அமரத்துவங் கிட்டுகின்றது."
'வீண் கத்தையே தத்துவம் என்று எண்ணுகிறாய். பேதலித்த புத்தியின் புலம்பல். அஞ்சலி என்ற பெயரில் மலர்களைக் கருங்கல்லிலே வீசியெறிகின்றான் பக்தன். கோயிலைத் துலக்கமாக வைக்கும் ஊழியக்காரன் நம்மைக் குப்பை மேட்டிலே வீசியெறிகிறான். பரமபதம் யாருக்குக் கிடைக்கிறது? பக்தனுக்கா? ஊழியக்கார னுக்கா ? அஞ்சலிப் பொருளுக்கா? உன் மூளை சுற்று கிறதா?. சரி, இந்த ஆழமான தத்துவ விசாரத்திற்குள் நாம் இறங்க வேண்டாம். உன்னையே நீ சுய விசா ரணை செய்துபார். நீ மனைவி-மக்களை விட்டு எங்கே

Page 77
O 128 6T6ňu. GUTT. O
ஒடுகின்றாய்? நீ துறந்தது எதை? துறக்க முடியாத தெனத் தேடி ஓடுவது எதை? மோட்சத்தில் அமரத்துவ இன்பம் கிடைக்குமென்று நிச்சயமாகத் தெரியுமா? நீ அலைந்து திரியும் மோட்சத்தின் முகவரியாவது தெரியுமா? இருளிற் கைவிளக்குடன் நடப்பவன் புத்தி சாலி. வானத்து விண்மீன் கைவிளக்குக் கிட்டும் என்று காத்திருப்பவன் பைத்தியக்காரன்.’’ என்று மலர் மொய் கெக்கலியிட்டது.
* வீம்பில் எழுந்த ஏமாப்பு. நான் இவ்வளவு காலமும் அனுபவித்தது சிற்றின்பம்; அது புன்மை யானது; போலியானது. அனுபவத்தில் நான் உண்மை யின் தரிசனம் பெற்றவன். சமய குரவரும் ஞானிகளும் ஒரு முகமாக விதந்தேத்தும் நிரந்தர இன்பத்தை நாடிச் செல்கின்றேன்.""
"வீறு அழிந்ததும், விந்து ஒழிந்ததும் சலிப்புத் தட்டுகின்றதா? ஏமாற்றங்களை மறைப்பதற்காகப் பட்டுத்திரை கட்டி, படாடோப வார்த்தைகளிலே தத்து வம் பேசுகின்றான் மனிதன். பொருளுக்கே வட்டிக் கணக்கு வைக்கும் மனிதன், கலவியின் விளைவும் அதன் பயனும் என்று கணக்குப் பார்க்கின்றான். இலாப நட்டக் கணக்கிலே இன்பமில்லை. கலவியே இன்பம். அதுவே நிலைகளனும், அதுவே இலட்சியமும், அதுவே முயற்சியும், அதுவே பயனும் கலவியிலே அன்பும், சமத்துவமும், அமுத இன்பமும் பிறப்பதினால், சுயத்தை இழந்த பேரின்பப் பேறு கிடைக்கின்றது. நான் அரும்பாகி, முகையாகி, போதாகி, போகத் திற்குகந்த மலராகும் வரை இன்றைய தினத்திற்காக வும், கலவிக்காகவுந் தவமியற்றினேன். பேரின்பப்பேறு மின்னலைப் போன்றே கிடைக்கின்றது. கணநேரக் கலவியேயாயினும், அதிலே என்னையே முற்றாக

O of 129 O
இழந்து, நானே இல்லையான, ஆனாலும் நானே நானான புது ஜன்மம் எடுத்து விட்டேன். அந்த அழிவுத் தத்துவத்திலேதான் பிறவித் தத்துவமும் இருக் கின்றது. பூவின் அழிவிலே வீயின் தோற்றம். அழிவு போலுந் தோற்றம் . புதியதின் பிறப்பு. இனி, என் சூலகம் முற்ற முற்றப் பிஞ்சாகிக் காயாகிக் கனியாகி அமரத்துவமடைவேன். கனி அழிந்து விடுமென் கிறாயா?. கனியின் விதையிலே மீண்டும் பிறப்புச் சக்கரந் தோன்றுகிறது. தன்னில் தன்னையே அழித்து, தன்னிலேயே தன்னை உருவாக்கிக்கொள்ளும் அற்புதக் கலையே கலவி. கலவியே நான். நானே கலவித் திட்டாந்தம் புரிகிறதா? எனக்கு அழிவேயில்லை. . . " குதுரகல சரஸம் சொட்ட மலர்- அல்ல வீ- பேசிற்று.
வீளையும் ஒடுங்கிய நிசப்தம் விரிகின்றது. அவருள் எழுந்த தெளிவின் குழப்ப நிலை. குழப்பத்தின் தெளிவு நிலை. மரத்தடியிலிருந்து எழுகின்றார். குழம்பிய நிலையிலே தெளிவில்லை. இருப்பினும், தெளிவு ஏற்பட்டதான பிரமை.
வீரத்தை மண்டிய மனத்துடன் மலர்மொய் தொடர்ந்தது, 'நானே மலர்; நானே வீ; நானே காய்; நானே கனி; நானே அதன் கொட்டையும்! நானே நானேயான, நானே சகலதுமான ஏமாப்பினை எனக்குக் கலவியே அளித்தது. புரிகின்றதா? இப் பொழுது சொல்; எது இன்பம்? எது நித்தியம்?’’ எனக் கேட்டது.
வீமம் வளைத்துக்கொள்ள அவன் தலை குனிந் தான்.
9-س-6

Page 78
O 130 எஸ். பொ. 3
*" வீட்டின்பம் எங்கே கிடைக்கிறது?"- ஏளனத் துடன் வீ அவன் நாணத்தைக் கலைக்கும் நோக்கத் துடன் கேட்கிறது.
*" வீட்டிலே...”*- ஒரே சொல்லிற் பதிலை
முறித்துக் கொண்டு, தன் அமரத்துவத்தை நிலை நாட்டும் தன்னுடைய படைப்புச் சாயல்களைப்
பார்க்கும் எழுச்சியுடன் தன்னுடைய குடிசையை நோக்கி நடக்கலானார்.

நபிபெருமானார் (ஸல்) வீற்றிருந்தார். தோழர்கள் அருகிலிருந்தார்கள், கிழவி ஒருத்தி வந்தாள். அவளிடம் ஒருகூடை. கூடையிலே பேரீச்சம் பழங்கள். அவற்றைப் பெருமானாருக்கு அர்ப்பணித்தாள். உண்ணும்படி வேண்டினாள். ஏந்தல் இரங்கினார். வேண்டுதலை இயற்ற விழைந்தனர். ஒரு பழத்தைப் புசித்தார். பின்னொன்று. தொடர்ந்து ஒன்று. மீண்டும் ஒன்று. கூடை வெறுமையாகியது. கிழவி மகிழ்ந்தாள். நிறைவுடன் திரும்பினாள்.
தோழர்களுக்கு வியப்பு, பெருமானாரின் செயல் புரியவில்லை. பெருமானாரின் வழக்கமே வேறு. எதை யும் பங்கிட்டே உண்பார். தோழர்களுக்குக் கொடுக் காது புசிக்கார். இன்றோ? பழங்களைப் பங்கிட வில்லை முழுவதையுந் தாமே புசித்தார். " காரணம் என்ன?’ தோழர்களுக்கு எழுந்த ஐயம். விளக்கங் கேட்டார்கள்.

Page 79
132 எஸ். பொ. (T
அல்லாஹ்வின் தூதர் முறுவலித்தார். வருமாறு சாரப்பட மொழிந்தார் :
தோழர்களே! அப்பழங்கள் புளிப்பானவை. உங்களுக்குத் தந்திருப்பேன். சுவைத்துப் பார்த்திருப் பீர்கள். புளிப்பிலே முகங்கள் கோணும். மாற்றத். தைக் காண்பாள். மனம் புழுங்குவாள். என் முகம் கோணியதா? இல்லை. முழுவதையும் புசித்தேன். எனவே, அவள் மகிழ்ந்தாள். கிழவியின் மனம் நிறைந்தது.
சாந்தி ஒளிர்ந்தது. தோழர்களின் மனங்கள் சிலிர்த்தன.
女

பக்தரது பஞ்சாட்சர உச்சாரணந் தெளிவருகவும், தொடர்ச்சியாகவுந் தோடுடைய செவிகளிலே விழுகின் றது. ஓங்காரநாதம் அணுவும் புக முடியாத இடங் களையும் நிறைந்து வழிகின்றது.
அகம் முகையவிழ, நிஷ்டை கலைகிறது, இமைக் கபாடங்கள் பூட்டவிழ, நயனங்கள் மலர்கின்றன.

Page 80
134 எஸ். பொ.
"பக்தர்களின் அஞ்சலி ஆர்ப்பரிப்பு; பக்தி மூச்சி னாலே என்னுடன் இரண்டறக் கலக்கும் ஏக்கம்."
நஞ்சுண்ட அதரங்களிலே குமிண்சிரிப்பு அரும்ப, நெஞ்சிலே அருள் சுரக்க, சக்தியைத் திரும்பிப் பார்க்
கின்றான்.
சக்தியின் கோலத்தில், பரமேசுவரனின் மனச்சரிவு. ஈசுவரின் ஒசங்குன்றிட, சினமென்னும் இராகு நிழற் குடை விரித்திருக்கின்றது. குழல் துன்பத்தின் இழை களாகச் சோர்ந்து புரள, விழிப்புழையிலே சோகச் சாந்தின் கருமை மொய்க்கிறது. இதழ்கள் சுட்டன.
"பக்தியாம் பக்தர்களாம்! கூத்தாடியின் அபி நயம்!'-ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வோர் எழுத் தொலியாக உருவாகின்றது. ஒவ்வோர் உச்சரிப்பும் ஏளன உலையிற் புடம் போட்டு வெளிவருகின்றது.
"!ڑ-غ-چ،،
கைலாசம் ஒரு துகட் பொழுதிலே கோடானு கோடி
முறை தடுமாறிச் சுழன்று, மறுகணம் இமயமேயாக நிலைக்கின்றது.
* "நெற்றிக் கண்ணைத் திறப்பதற்கு நான் என்ன பஞ்சபாணனா? அன்றேல், சங்கப் புலவன் நக்கீரனா? ஊமத்தம் பூக்களை மோந்து உன் மத்தந் தலைக்கேறி, பேய்களும் பூதகணங்களும் ஆர்ப்பரிக்கும் நடுநிசியில், சங்கார லீலா விநோதம் புரிவதான எண்ணத்தில், ஊன் பொடிபூசிச் சுடலையாடுவதும். அந்தப் பித்தனுக்கு ஒரு மனைவியாம் ; அவளுக்கு ஒரு வாழ்க்கையாம் !' ஆளுடைய பிள்ளைக்குப் பாலமுது ஊட்டியஅந்தநித்திய யவ்வனக் கொங்கைகள் குலுங்க ஈசுவரியின் விழிப்புலத்

1) சிதை 135 口、
திலே இரு குருத்துக் கங்கைகள், பிரசவ நோக்காட் டிலே சிரசுதயங் காட்டுகின்றன.
**பிரம்மா! உன் படைப்புத் தொழிலுக்கும் போட்டியா? (இந்த விழி நதிகள் பூலோகத்திற்கும் பாயுமானால், பிரளயந்தான்'
**வாணி பீடுடன் மொழிந்தாளே, அத்தனையும் உண்மை. பூலோகத்தில் வாழும் பக்தரெல்லோரும் நம்மை மறக்கத் தொடங்கி விட்டார்கள். படைப்பிற்கு நான்முகன். அவனுடைய அழகிய கற்பனைகளைத் தானும் பகிர்ந்து வாழ்வதனால் தனக்கு இயல்பாகவே ஆய கலைகள் அறுபத்து நான்கும் அமைந்து விட்ட தாக வாணி பெருமை பேசுகிறாள். வெள்ளைக் கலை யுடுத்திய அவளையே மக்கள், கலையின் தெய்வமாக வணங்குகிறார்கள். என்னை யார் மதிக்கிறார்கள்: வணங்குகிறார்கள் ? நான் எல்லாவற்றையும் அழித்துத் துவம்ஸம் செய்யும் பித்தனின் மனைவி-பிச்சி! இரத்த வெறி மிகக் கொண்டு, மனிதப் புலாலைப் பிழிந்து பச்சை உதிரத்தை குடிப்பவளாக தோன்றுகிறேன். போதும் வாழ்ந்த வாழ்வு!"-சலிப்பின் இளரேகை புரையோட அகிலாண்டேஸ்வரி சொன்னாள்.
* ஒகோ! இது பெண்கள் சண்டையா?** ஈசனின்
முகத்திலே விஷமத்தனம் குதித்துத் தவழ்ந்தது.
* பெண்களென்றால் ஏளனமா? கிருபையிடமும், அநுசூயாவிடமும் . . .' என்று தேவி சொல்ல; உருத்திர தாண்டவ முத்திரையிடும் விரல்களைக் குவித்துச் செவி களைப் பொத்துகிறான்.
ஈசனின் துன்ப அபிநயம், தேவிக்கு மாரீசக் assifi
பினை அளிக்கிறது. விழிகளிலே சுரக்கும் கங்கைகள் தூர்ந்து விடுகின்றன.

Page 81
O 136 6rsňu. Gourr. D)
*சக்தி நீயே சர்வலோகங்களினதும் ஆதியந்த மற்ற, எல்லையற்ற ஜீவ நதியாகப் பரம்பியிருக்கும் பொழுது, வாணி உகுத்த பகட்டுச் சொற்களிலே மதியிழந்து அழுக்காறு கொள்ளலாமா ?’’
முகத்திலே சிந்தனை மின்னல்கள் பளிச்சிட்டு மறைய, சக்தி பரமேசுவரனை நோக்குகிறாள்.
e "நீயே நான். நானே நீ. நாமே நாம். இதுவே ğ5ğ5ğ5J6) LD
'உன்மத்தப் பிதற்றல். ஆலகாலம் கண்டத்திலே கட்டுண்டது என நினைத்தேன். இல்லை, அது சிரசு வரை ஏறியிருக்கின்றது. இல்லாவிடின் மேன்மையான படைத்தல், காத்தல் ஆகிய தொழில்கள் இருக்க அழித் தலாம் தொழிலினையே மேற் கொண்டிருப்பீர்களா ?’’
பரமேசுவரனின் இதழ்களிற் பக்தரின் அறியாமை யைக் காணும்போது மலரும் சிரிப்பொன்று புரளுகிறது.
**அழித்தலே படைத்தல்; அழித்தலே காத்தல் படைத்தல் அழித்தலே; காத்தலும் அழித்தலே! படைத்தல் - காத்தல் - அழித்தல்-மறைத்தல் - அருளல் என்னும் ஐந்தொழிலையும் இயற்றாதியற்றியும், அழித் தலையே உரித்தாக வரித்தோம். அழித்தலே நித்தியம். உயர்ந்த சமத்துவ சமரசத் தத்துவத்துடன் நித்தியத் துவத்தை விளக்குந் தொழிலின் மேன்மைக்கு எஃது ஈடாகும்?"
ஏளனத்தின் நறுக்கொன்று அவளுடைய முகத்திலே பளிச்சிட, 'என் அண்ணன் கண்ணனைப் போல நீங்க ளுந் தத்துவம் பேச விழைந்தீர்களா?' எனக் கேட் கிறாள்.

0 சிதை 137
தேவியின் வார்த்தைகள் ஈசனின் நெஞ்சத்திற்கு நேரே சர மழை பொழிகின்றன. அவற்றை வில்வ இலைகளாக ஏற்றுக் கொள்கின்றார்.
** கோகுலவாசியா மகாதத்துவம் பேசுபவன் ? வார்த்தைகளிலே உள்முடிச்சுக்கள் பல வைத்து அவன் எதையாவது சொல்வான். பக்தர் அதிலே ஏதோ ஆழ்ந்த நித்திலக் கருத்து இருப்பதான பிரமையில் அந்த முடிச்சுக்களை அவிழ்க்கும் ஓயாத பிரயத்தனத் திலே ஈடுபட்டிருக்கும் பொழுது, அவன் கோபியருடன் லீலா விநோதங்கள் புரியச் சென்று விடுவான். இது தத்துவமோ ? தந்திரமோ?’’
பழுத்த இலையொன்று பூட்டவிழ்ந்து நிலத்தாயை முத்தமிட எடுக்கும் நேரக் கணிப்பிற்குக் கைலாசத்தில் மெளனம் நிலவுகின்றது.
மெளனத்தைக் குடைந்து வாணி எழுப்பும் வீணா கானம் கேட்கிறது. இசையலையிலே தேவியின் மனம் அலைக்கழிக்கப்படுகின்றது.
* வீணையும் அதன் நாதமும் போல அவர்கள் வாழ் கின்றார்கள். பிரமன் இப்பொழுது எதையாவது புதி தாகப் படைத்திருப்பான். அப் புதிய ஆற்றிலில் மதர்க் குங் கற்பனையிலே களிப்புக் கொள்கிறாள் வாணி, அவளுக்குத்தான் என்ன குறை ? அவளைக் கணவன் நாக்கிலே வைத்துச் சேவிக்கிறான்.'
"தேவி, தர்மம் அழிந்ததா? சுயம் ஒழிந்ததா? நீ உமை. நான் உமையொரு பாகன். எனவே, நீயே நான். நானே நீ. நாமே நாம். ஏன் வீண் சஞ்சலம் ? பூலோ கத்திற்குச் சென்று வெகு காலமாகி விட்டது. நாமே நேரிற் சென்று உண்மைகளை அறிந்து மீளுவோம்.' -அன்புப் பசையிலே பிணைக்கப்பட்ட வார்த்தைகள்.

Page 82
138 6r6v. GLT. C
*"நமது பூலோக விஜயத்தின் போது நம்முடைய தொழிலின் மேன்மை நிறுவப்பட்டால்..?’’ ஈசனின் கேள்வி.
*ஈசனின் இஷ்டம் இயற்றப்படும்.’’
** மண்டலங்கள் கீதம் பாட, மாதவர்கள் தாளம் போட, மாங்குயில்கள் வேதம்பாட, காலாட, துடையாட இடையாட, கழலாட, தோடாட, குழல் சோர, உடைய, விழ கொங்கைகள் இரண்டும் பொங்கிக் குலுங்கி ஆட தத்தீம்-தித்தீம்-தகதீம் என்று கூத்தாடி என் தேவி மகிழ்விப்பாள்’’
"சம்மதம்'
O
மண்ணுலகின் பொன் பூக்குங் காட்சிகள். சக்தி மெய் மறக்கின்றாள். புள்ளி மானினந் துள்ளும் காடு களும், கோல மயிலாடு வனங்களும், தேன் சுவைப் பழஞ்சொரி சோலைகளும், நறுமலர் குமுக்கு காக்களும், மரகதப் பாய் விரிக்கும் கழனிகளும், குதிக்கும் அருவி களும், அசையும் நதிகளும், பங்கயத் தடாகங்களும், ஒதையுடன் அலை வீசிக் கரை அளையும் நீலத்திசைக் கடலும், புள்ளின இசையும், பூவினச் சுகந்தமும், தென்றலின் பஞ்சுத் தழுவலும் கள்ளின் மயக்கத்தை ses"L-...
** அற்புதமான படைப்பு.’’
** மாயத் தோற்றங்களின் அநித்திய ஜாலங்கள். சக்தி வா, மனித நாகரிகம் கொழுத்து வளரும் நகர மொன்றிற்குச் செல்வோம்.'

" சிதை 139 O.
முகில் தொட்டுக் கர்வஞ் சிந்திப் பல அடுக்கு மாளிகைசள் எழுந்து நிற்கின்றன. கடுகதியில் இயந் திர விசை இசைத்து ஒடும் வாகனங்கள். கண்களைப் பறிக்கும் நியோன் விளக்குகள், விஞ்ஞான அசுரனின் இரைச்சல், அற்ப எறும்புகளாக அலையும் மனிதர்கள்.
சக்தி திகைக்கின்றாள்.
‘கடவுளின் படைப்புக்குக் கடவுளின் படைப் பேயான மானிடன் விடுக்குஞ் சவால். அந்த இமயம் நிகர்த்த கட்டடங்கள் மனிதன் கட்டியவை. ஒடும் நதியைப் பிளந்தெடுத்தது அந்த மின்னொளி. பணமும் விஞ்ஞானமும் சர்வ வல்லமை பெற்றுச் சகலவற்றையும் ஆட்டிப் படைக்கின்றன. ’’-ஈசனின் விமர்சனம், தேவியின் மெளனம்.
* 'வா, படைப்பின் விசித்திரங்களைப் பார்ப் Gumtib. ” ’
பேச்சுக்கள் இற்று விடுகின்றன. சூக்கும இயக்கம்.
**இது மருத்துவமனை. பேச முடியாதவர்கள் : பார்க்க முடியாதவர்கள்; நடக்க முடியாதவர்கள்; வாழ முடியாதவர்கள்.அதோ, பெரு வியாதிக்காரர்கள்! குணப்படுத்தப்பட இயலா நோய்களின் ஆக்கினைக்குள் அழுந்தி அணு அணுவாகச் சாகிறவர்கள்.’’
மருத்துவமனை வாசிகளின் அவலக் குரல்களுக்குச் செவி சாய்க்கிறார்கள். w
"ஐயோ தயாநிதி 1 சித்திரவதை செய்யாமல் என் உயிரை எடுத்துக் கொள்.'
*கண்களும் கால்களும் அற்றுப் பிறந்த இது செத்தே பிறந்நிருக்கக் கூடாதா?’

Page 83
; 140 resi. Gr.
* சனியன் செத்துத் தொலைக்காமல் கட்டிலில் இழு பட்டுக் கிடக்குது."
* பிள்ளை, அப்பாவுக்குக் கிட்டப் போகாதே. அது தொற்று வியாதி."
"அம்மாவுக்கு ஆபத்து. உடன் இரத்தந் தேவை"
தேவி திருச்செவிகளைப் பொத்துகின்றாள். ''நரக வேதனை. வாருங்கள், போய்விடுவோம். 9
'படைப்புத் தொழிலின் மேன்மைகளை யதார்த்த மாகப் பார்த்தாயா ?’’
ஈசனின் கேள்விக்குத் தேவி பதில் உத்தரஞ் சொல்ல வேயில்லை.
பட்டினத்தின் வேறு பகுதியில் நடக்கத் தொடங் கினார்கள்.
ஒரு பெரிய கட்டடம். தனி அறை. ஒருவன் பல வேலையாள்களுக்கு இரகசியம் பேசுங் குரலிற் கட்டளை பிறப்பித்துக் கொண்டிருக்கின்றான்.
* இவன் கள்ளக் கடத்தல் வியாபாரி. தான் உயிர் வாழ்வதற்காகத்தான் இத்தகைய அரசாங்க விரோதச் செயலில் ஈடுபட்டுள்ளதாக இவன் நம்புகின்றான்.'"
பெரிய ஆலையொன்றிலே, தோலைப் பொசுக்கும் வெப்பத்தைக் கக்கும் உலைக்கு முன்னால், தன் உடலைக் கயிறாக முறுக்கி ஒருவன் வேலை செய் கின்றான்.

D சிதை 141 ロ
"இவன் ஒரு தொழிலாளி. தான் உயிர் வாழ்வதற் காகத் தன் உடலை இப்படிக் கசக்கிப் பிழிகின்றான்.""
மாமிச மலையான ஒருவன் வயிறு புடைக்கச் சாப் பிட்டுக் கொண்டிருக்கின்றான்.
* 'இவன் சாப்பிடுவதும் உயிர் வாழ்வதற்கே !'
சாலையின் ஓரத்திலே, பிட்சாபாத்திரம் ஏந்தி, வருவோர் போவோரிடம் பற்களைக் காட்டி ஒருவன் பிட்சை கேட்கின்றான்.
* 'இவன் பிட்சை எடுப்பது தன்னுடைய உயிரைக் காப்பாற்றவே!"
ஒருத்தி தன்னுடைய கற்பைப் பேரம் பேசுகின் றாள். விலை சம்மதம். ஓர் அறைக்குட் சென்று, கூச்சமின்றி அந்த அந்நிய ஆடவனுடன்.
இவ்வளவு நேரமும் நகரத்தின் காட்சிகளையும், ஈசனின் விமர்சனங்களையுங் கேட்டுக் கொண்டு வந்த சக்தி திகைக்கின்றாள்.
* "ஐயோ, கற்பு.’’ என்று சக்தி கதறுகின்றாள்.
**அவளுடைய செயல், தசை இன்பங்களின் பாற் பட்டதன்று. உயிர் வாழ்வதற்காக தன்னுடைய உடலை வாடகைக்கு விடுகின்றாள். அவளைப் படைத் தவன் பிரம்மா. அவளைக் காப்பவன் திருமால்!"
தோல்வி மனத்தை அலைக்கழிக்க, நாணம் மீதுரத் தேவியின் தலை கவிழ்கின்றது.
*" போதும் ஈஸ்வரா. கைலாசத்திற்கு மீளு Gen Tib. " ”

Page 84
O 142 6T 6ňud. (ou Ar. )
** தேவி, என்னுடன் வா." மறுப்பு எதுவுமில்லை.
பின் தொடர்கின்றாள்.
சுடலை. ஆனந்த மிகுதியால் ஈசன் ஆர்ப்பரிக் கின்றான்.
**இங்கே இந்நாட்டின் சர்வாதிகாரிக்குச் சிதை . இது வணிகனுக்கு. இது தொழிலாளிக்கு. இஃது ஒரு கற்புக்கரசிக்கு. இஃது ஒரு விபசாரிக்கு. இது பணக்காரனுக்கு. இஃது ஏழைக்கு. படைப்பிலும் வாழ் விலும் எவ்வாறிருப்பினும், ஈற்றில் இச்சுடலைக்கு வந்து சமமாகிச் சங்கமிக்கின்றார்கள். சாவு நித்தியம். என் தொழிலேந்தும் சமத்துவ சமரசத் தத்துவம் நித்தியம். எல்லாமே அழிந்து, எல்லாமே ஒன்றாகி, எல்லாமே நானாகி, என்னிற் கலந்து நீயாவது நிச்சயம். நீ சக்தி!'"
ஈசன் வெற்றிக் களிப்புடன் உடலெல்லாம் சுடலைப் பொடி பூசி ஆடுகின்றான்.
கைலாசத்திலே காலாட, துடையாட, இடை
யாட, கழலாட தேவி இயற்றும் ஆடலின் நாதம் தோடுடைய செவிகளிலே விழுகின்றது. 女

ീ
வீடு' எழுதப்படுவதற்குக் கழைக் கூத்தாடியின் நிதானந் தேவை. மூலத்தை நீட்டவோ மழிக்கவோ கூடாது. புத்த போதனைகளுங் கோட் LurrG895es5tibo அசலாகவே இருத்தல் வேண்டும். கதையென்றாலுங் கதை யேதான்.
ஒறுப்பாகவேனுஞ் சில பாளிச் சொற்கள் இக்கதையிலே வருகின்றன பெளத்த மதக் கோட்பாடுகளை விளக்க அவை அவசியமே என்று காண ப்படும் இடங்களிலே மட்டுங் கையாளப்பட்டுள் ளன. அவற்றிற்குச் சமஸ்கிருத அர்த் தங்கள் ஏற்ற வேண்டாம்.
143 O.

Page 85
வினை
புத்தர் மெளனத்தின் மோனத்திலே எழுந்தார். இதழ்கள் பூட்டே அவிழாது ஒன்றின் மேல் ஒன்றாகச் சயனித்தன. முகம் சிலையாக, பாவம் சித்திரமாக அமைந்தது. அமைதியான அமைதி: நிறைவான நிறைவு. எதிரிலே பாத்திரத்துடன் நின்ற இளவரசன் நந்தகுமாரனின் கண்களைக் கருணா மூர்த்தியின் விழிகள் ஒரே கணத்
 

to 6í?G 145
தின் சிதறலிலே துழாவின. நடக்கத் தொடங்கினார். அவனோ தானத்தைப் பெற்றுக் கொள்ளாது செல்லும் புத்தரைப் பின் தொடர்ந்தான். சாக்கிய வேந்தர் சுத்தோ தணன் திகைத்து நின்றார். ஸப்த ஸ்வரங் களை இனிதாகக் குழைத்துப் பொழிந்த வீணையின் தந்திகள் தெறித்து எழுந்த அபஸ்வரத்தைத் தொடர்ந்து குடிபுகும் நிச்சுவாசப் பேரமைதி. பிரேத வீட்டின் சோகம் முளைவிடுகிறது.
கபிலவஸ்துவிலே புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த அரண்மனையில், அன்று மூன்று வைபவங்கள். அரண் மனைக் கிரஹப் பிரவேசம்: நந்தகுமாரனின் முடிசூட்டு விழா; அவனுக்கும் ஜனபதகல்யாணிக்குங் கல்யாணம். சித்தாத்தர் தனது லெளகீகக் கனவுகளை நொருக்கிக் கடற்கரைக் குருத்து மணலாக்கிய பின்னர், மன்னர் சுத்தோதணன் , தன் இளைய மனைவி பிரஜாபதி கெளதமி மூலம் பெற்ற நந்தகுமாரன் சாக்கிய மன்ன னாக வீற்றிருப்பான் என்ற நம்பிக்கை வேர்களை ஆழம் ஆழமாக ஊன்றி, வாழ்க்கைக் கிளைகளைத் தாங்கிக் கொண்டிருந்தார். இன்றைய-இந்தப் போழ்திற்காகசாம்பரிற் குளித்த தணலாக எத்தனை காலந் தவித் திருக்கின்றார்? எல்லாமே மங்கலமாக நடக்கின்றது என்ற நினைவுப் போது மலர, தானத்தைப் பெற்றுக் கொள்ளாது புத்தர் நடக்கிறார். காந்தத்தினால் ஈர்க் கப்படுங் கருந்தாதுத் துணுக்காக நந்தகுமாரன் பின் தொடருகின்றான்.
மகனைத் தடுத்து நிறுத்த இயலாததை உணர்ந்து, மின்னலை விழுங்கிய கருமுகிற் குன்றென முகம் வாடி நின்றார். அவர் தம்முடைய நம்பிக்கை வேர்கள் ஒவ்வொன்றாக அறும் அவ்வேளையிலும், வாய் திறந்து எதுவுமே சொல்லவில்லை.
வீ-10

Page 86
;] [ ... sresmo. Ghuir 146 ום
கீழே இறங்குவதற்கு முன்னர், புத்தர் திரும்பிப் பார்த்தார். அந்த இடத்தில் வைத்தாவது தானத்தை ஏற்றுக் கொள்வார் என்ற அவாத் தாரகை எரிநட்சத் திரமாக, இருட்காடே மனவிசும்பில் விரிகிறது. சரியாக உச்சிக்கு வந்து கதிர்ச் சரங்கள் விழ இரு நாழிகை நேரமிருக்கும். அதற்கிடையிற் சேர்க்காது போனால், தானம் வீண்; விழா பாழ்.
ஒவ்வொரு படிக்கட்டிலும் மிக நிதானமாகவும், அமைதியாகவும் புத்தர் இறங்கினார். தானப் பாத்தி ரத்துடன் நந்தகுமாரன் பின்தொடர்ந்தான். ஒவ்வொரு கணமும் மெதுவாகக் கழன்று கழன்று உதிருகின்றது. கீழ் மண்டபத்தை அடைந்ததும் புத்தரின் சென்னி திரும்பிற்று. அப்பொழுதும் நம்பிக்கையின் மெல்லிய நூலில் அவன் வலிக்கப்பட்டான். பிரிகள் சிலிம்பி நூல் அறுந்தது.
புத்தர் விஹாரத்தை நோக்கி நடந்தார். மெளனப் போர்வை. உள்ளத்திலே பல சிந்தனைகள் குறுக்கும் நெடுக்குமாகக் குதித்துக் கூத்தாட, நியாயப்பிரமாணங் களுக்குங் காரண ஏதுகளுக்குங் குதிராத நிர்ச்சிந்தைச் சூன்யத்தில் நத்தகுமாரன் பின் தொடர்ந்தான்.
இருள் வானிலே சட்டென்று பூத்துக் கண்களைக் கூசச் செய்யும் நட்சத்திர மொன்று அக்காலதரிலே தோன்றிற்று. சாக்கியப் பெண்களின் எழில்ராணி ஜனபதகல்யாணி மணப் பெண் கோலத்தின் எழில் ஏந்தி தன் காதலனை நோக்கினாள்.
சிங்கத்தின் வாயொன்று கர்ஜிக்கும் பொழுது சிக்காராகத் திறந்தது போன்ற அமைப்பிலிருந்தது அந்தக் காலதர், காங்கையின் வேகம் அதிகரித்துக் கொண்டிருக்குஞ் சூரியக் கதிர் முற்றிச் சரிந்த நெற்

6) வீடு 147 ם
கதிர் வண்ண வித்தை எழுப்பி முகத்தின் விமலத்தைத் துல்லியமாகக் காட்டிற்று.
கூன் நுதல்; கூர் மூக்கு கட்டித் தயிரிற் சிக்கிய இரு நாவற்பழக் கண்கள்; எலும்புகள் எதுவும் தெரி யாது குங்குமச் சதை நிறைந்த முகம். கருமேகத்தின் சமுத்திர அலைகளை நிகர்த்த அளகபாரத்தில் ஜொலித்த நகைகளெல்லாம் விண் மீன்களை நாணச் செய்தன. பருவத்தின் திரட்சி மேடாய் முன் தள்ளும் மார்புகளின் பாரத்தைக் காலதரின் கீழ் விளிம்பிலே சாத்திய பாவத்தின் ஒயிலே செளந்தர்யத் திலகமாகத் திகழ்ந்தது.
நந்தகுமாரன் நின்றான்.
அவளுடைய அந்த அகலிய நயனங்கள் இமைத் திரைக்குப் பின்னால் கண்ணாமூஞ்சியாடின. பின்னர்
கூச்சந் தெளிய, வெளிவந்து, இமை வாய் விரித்துச் சிரிப்பில் அலர்ந்தன.
விழிகளைப் பருகும் விழிகள். நொடிப்பொழுது நேரத்தில், யுக யுகாந்திரத்து இரகசியங்கள் பின்னிப் பிணைந்து சங்கமித்துக் கலந்தன.
*விஹாரத்திற்குச் சென்று திரும்புவேன்!"
* 'சீவர ஆடைக்குள்ளே சிற்றின்ப நினைவுகளைப் புதைத்து விட்டவர்களுடைய இருப்பிடத்திற்கா? என் மனம் சுடரைச் சுற்றும் விட்டிலாக நடுங்குகின்றது.”*
'உன் எழிலோவியம் தீட்டப் பெற்ற மனத்திற்குள் துறவறத் தத்துவம் நுழைய மாட்டாது."
"முகூர்த்த வேளை சமீபிக்கின்றது."

Page 87
148 எஸ். பொ. )
"கடிதில் நான் திரும்புவேன்.'"
**நான் என் விழிகளை நீங்கள் வரும் வழியிற் புதைத்துக் காத்திருப்பேன். '
இக் காட்சியினைக் கண்டுங் காணாதவராக, சலன மற்ற மனத்துடன், புத்தர் விஹாரத்தைநோக்கி நடந்து கொண்டிருந்தார்.
வழி
புத்தர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். நியாய வரையறைக்குள் அடங்காது பிதுங்கும் பக்தியுடன் நந்தகுமாரன் நின்றான். அவ்விடத்தில் ஏதேனொரு பூந்தடியை நாட்டியிருந்தால், அடி வேரூன்றி நுனி தளிர் தள்ளியிருக்கும்.
நண்பகல் கால் நாழிகை ஓட்டத்திலே தொங்கிக் கொண்டிருந்தது. அந்த விரற்கட்டை நேரந் தவறி னால், தானம் கொடுப்பதுமில்லை; கொள்வதுமில்லை.
கண்களைத் திறக்காமலே, *நந்த, நான் தானத்தை ஏற்றுக் கொள்ளுகின்றேன்' என இரு கைகளையும் புத்தர் நீட்டினார்.
அஞ்சலியில் உடலைப் பாதியாகச் சுருக்கிக் கொண்டு, தானத்தை அளித்தான். வயிற்றுச் சுமையை இறக்கியவளின் நெற்றியிலே துளிர்க்கும் நித்திலத் துளிகளை நினைவூட்டும் வியர்வை மணிகள்.
புத்தம் புதிய குவளை மலர்களாகப் புத்தரின் கண்கள் மலர்ந்தன. தானத்தை ஏற்றார்.
நந்தகுமாரனின் முகத்திற் கேள்வியொன்று கொக்கு நிஷ்டையிட்டிருப்பதை அவதானித்தார்.

Γ' εθ (E 149
'நந்த, என்ன யோசனை? எனக்கு அவகாச முண்டு. ’’
'திரிகால முணர்ந்த திரிலோகமூர்த்தி நீங்கள். மதக்கோட்பாடுகளின் முடிச்சுகளைப் பிரித்துப் பார்க்கும் அவகாசத்துடனா நான் வந்திருக்கிறேன்? மூத்தவர், முதல்வர், புனிதர், புண்ணியர்! உங்களுடைய ஆசி பெற விழைந்தேன். சண்டாளர்களிடங்கூடத் தானம் ஏற்கும் நீங்கள், ஏன் என் தானத்தை அரண்மனையில் ஏற்க மறுத்துவிட்டீர்களென்பதை அறியாதே என் மனம் குழம்புகின்றது. ’’
சுபாவத்திற்கு எதிராக உணர்ச்சியில் வெந்த நந்த குமாரனின் வார்த்தைகளிலேகாங்கை கொழுத்துக் கிடந் ததை உணர்ந்தார். விழிப்புலன் அவனுடைய முகத்தை மேய்ந்தது.
உலகின் துன்பங்கள் தாக்காத பால்முகம். இருப் பினும், பாலுணர்ச்சி அலைமோதல்களிற் குதிர்ந்து இச்சாபங்க முற்றிருந்த ஒரு மனக்குறையின் சுவடு அவ னுடைய முகத்தில் முத்திரையிட்டிருந்ததை அனுமானித் தார்.
அவருடைய பார்வையிலிருந்து நழுவுந் தப்புவகை எண்ணம் குருத்துத் தள்ளுகின்றது.
* விடை தாருங்கள். '-குரலில் அவசரங் கொப் பளித்தது.
**அவசரமா? எதற்கு இவ்வவசரம்? நாம் மூப்பினை யும், சாவினையும் நோக்கி வேகமாக இயங்கிக் கொண் டிருக்கின்றோம் என்பதை உணராது, அற்பங்களுக் காக-மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து விளையாடும் மிக மிக அற்பங்களுக்காக-நாம் அவசரப்படுகின்றோம்.""

Page 88
150 Tesuo. Guar. O
* "முகூர்த்த வேளைக்கு முன்னர் நான் திரும்பி விடவேண்டும். நானேகும் வழியைப் பார்த்தே ஜனபத கல்யாணி கால் கடுக்க நிற்பாள்.'"
** வேளை-முகூர்த்தம்-நேரம் நந்த, இந்தக் கல் யாண முகூர்த்தந் தவறினால், இந்தப் பூவுலகில் எதிர் காலத்தில், கல்யாணங்களே நடைபெறாதிருக்கப் போகின்றனவா? எத்தனையோ முகூர்த்தங்கள் மரித்த பின்னர், இம்முகூர்த்தம் வந்திருக்கின்றது. இந்த முகூர்த்தம் இறந்த பின்னரும், எத்தனையோ முகூர்த் தங்கள் விளையக் காத்திருக்கின்றன. இம்முகூர்த்தத்தி லிருந்து இன்னொரு முகூர்த்தம் வரும்வரை காத்திருப் பதற்கிடையில், நீ மண வாழ்விற்குத் தேவையான இளமையை இழந்து விடுவாயா? வேளையைப் பற்றி யும், முகூர்த்தத்தைப் பற்றியுங் கவலைப்படும் நீ, இவற்றின் ஓட்டத்தினாலேற்படும் மூப்பினைப் பற்றிச் சிந்தியாதிருப்பது ஏனோ? வேளைக்கும் சித்தத்திற்கும் சம்பந்த முண்டு என்ற உண்மையை மறக்காதே. அனந்தமென்ற இறந்தகாலத்திலிருந்து அனந்தமென்ற எதிர்காலத்தை நோக்கி இவை இயங்கிக் கொண்டிருக் கின்றன. இறந்தகாலம்-எதிர்காலம் என்ற இரண்டு போழ்துகளைப் பிரிக்கும் இமைப்பொழுதுதான் இந்த நிகழ்காலம். அதனை நீ வேளையென்றோ முகூர்த்த மென்றோ அழைக்கலாம். உலகில் எல்லோரையும் துன்பத்திற்குள்ளாக்கும் பிணி-மூப்பு-சாக்காடு ஆகிய உண்மைகளைப் பற்றி உன்னுடன் நான் பேசும் முகூர்த்தம் இதுதானென்று வைத்துக் கொள்.'"
அர்த்தங்களின் அடி முடி எதுவுமே அறிவுக்கரங் களுக்குட் சிக்காது-ஆனாலும், அதற்குள் அனந்தகோடி அர்த்தங்கள் விரிவதான ஒரு மயக்கத்தை அந்த வார்த் தைகள் பாய்ச்சுகின்றன. இருள் முகிலின் கரும்

வீடு 151 O
வயிற்றைப் பிளந்து திடீரெனப் பிரசவமாகும் மின்னலைப் போன்று ஏதோ ஒரு பிரகாசந் தோன்றி. . . மறுகணமே இருட் சாந்து வியாபித்து விரிகின்றது.
யாரிடமுங் காண இயலாத ஓர் அமானுஷ்ய காந்த சக்தி புத்தரிடந் துலங்குகின்றது. அதன் ஈர்ப்பிற்குக் கட்டுப்பட்டு அமருகின்றான்.
**தானத்தை விஹாரத்தில் வைத்து ஏற்றுக் கொண்டதற்குச் சிறப்புக் காரணம் ஏதாவது உண்டா?’’
'உன் மொழியில், அதற்கான முகூர்த்தம் இப் பொழுதுதான் வந்ததுஎனவும் வைத்துக் கொள்ளலாம். '
"தூய நெறிகளைக் கடைப் பிடித்துத் துல்லியர் களாக வாழும் புத்தருக்கும், பிக்குகளுக்குந் தானம் வழங்கவே தகுதியற்ற பாவியென்று அரண்மனையிலுள் ளோர் இகழ மாட்டார்களா? நீங்கள் துறவறம் நாடிய தால் வெறுமையாக இருக்கும் மன்னர் வார்சுதார் பதவியை நான் நிரப்பல் வேண்டுமென்பது எந்தையின் விருப்பம்.""
அஞ்ஞான மருள் சூழ எழும் ஐயத்திற் பிறந்த கேள்வியல்ல என்ற உண்மையிற் காலப் புழுதி படிய வில்லை.
** மன்னன்-செல்வாக்கு-அந்தஸ்து இவை எதனால் உண்டாகின்றன? பிறப்பிலிருந்து இறப்பு வரையிலும், இல்லை, அதற்குப் பின்னரும்- சம்சாரச் சக்கரம் ஓயாமல், தரிக்காமற் சுழல்கின்றது. நமது ஊழ் இதனைச் சுழற்றுகின்றது. நீ சென்ற வாழ்க்கையில் என்னவாக இருந்தாய்? அடுத்த வாழ்க்கையில் என்ன வாகப் பிறப்பாய்? இன்றிருக்கும் நிலை, நாளையுஞ் சாசுவதமானதா? இதனை அறியும் மார்க்கத்தினைப்

Page 89
152 எஸ். பொ. (?
புரிந்து கொள்ள உன் சித்தத்தினைப் பழக்கியெடுக்க முனைந்ததுண்டா? சீலமே தானமளிக்கும் ஸ்திதியினை நிச்சயிக்கின்றது.' -
**சீலமா? நீங்கள் மனிதரை வாட்டும் பிணியென்ற துன்பத்தைத் துடைக்கவும், எங்களால் இன்பமென்று கொள்ளப்படும் சகலவற்றையுந் துறந்தீர்கள். பிணி பரப்புந் தொழிலில் ஈடுபட்டு, பல ஆடவருக்குத் தன் உடலைச் சிற்றின்பப் பொருளாக விருந்து படைத்து, அவர்களது சீலநெறியைச் சோரப்படுத்தி, அவர்களது பணத்தைக் கவர்ந்து வாழும் நகர சோபினியிடம் என்ன சீலத்தைக் கண்டீர்கள்? கர்ம வினையாற் சண்டாளனாகவே பிறந்தவனிடம் என்ன சீலத்தைக் கண்டீர்கள்?' பிறப்பிலேற்பட்ட லெளகீக வசதிகளில் முளை கொண்ட செருக்கே உபரியாக வார்த்தைகளில் வெடித்துச் சிதறின.
** தொழிலினைக் கொண்டே மக்களின் உயர்வு தாழ்வுகளை மதிக்கும் ஜாதி முறை , பிராமணியச் சனாதனக் கோட்பாடுகளின் அறுவ.ை நீ உன் முன்னைய பிறவிகளெல்லாவற்றிலும் மனிதனாகவும் மன்னனாகவும் பிறந்தாயா?.ஜாதிக் கோட்பாடுகளை வேருடன் கல்லியெறிய விரும்புபவன் நான் . நகர சோபினி பரத்தைத் தொழிலை மேற்கொண்டமைக்குக் காரணம் என்ன? ஊழா? இம்மைப் பிறப்பா? அல்லது, அவளுடைய அழகில் பித்தராகிய சீமான்களெல்லாருஞ் சேர்ந்து அவளை நகர சோபினியாக்கிய ஏற்பாட்டி னாலா? அவளுடைய உடல் அழுக்குப் படிந்ததாக இருக்கலாம். இருப்பினும், சித்தம் அன்னபுள்ளன்னத் தூய்மையாக இருக்கின்றதே.நந்த, ஒருவன் பிராமண னாகப் பிறப்பதுமில்லை; சண்டாளனாகப் பிறப்பது மில்லை. ஒருவனுடைய செய்கைகள்தாம் அவனைப் பிராமணனாகவுஞ் சண்டாளனாகவும் ஆக்குகின்றன."

158 (b)?6 ם
கல் வீசப்பட்ட குளத்தில் எழும்பும் அலைகளன்ன ஹேது வட்டம் விரிந்து கரைதட்டி, மோதி, மடிந்து.
**இந்தப் பிரபஞ்சத்தில் நமது வாழ்க்கை இல்லாத தொன்று; அது கானல் நீர்-கனவு. இறந்த காலத்தை மறந்து விட்டோம்; அஃது ஒரு மறைந்த கனவு. எதிர் காலம் ஒரு சூதாட்டம்; அது நிச்சயமற்ற கனவாக விரைவாகவுந் தொடர்பாகவும் ஓடிக்கொண்டிருக் கின்றது. மற்றவர்களைப் பற்றி ஏன் பேச்சு? நீ சுயமாக அதிகமாகவே நேசிக்கும் உன்னையே நினைத்துப் பார். சற்று நேரம் சிந்தையை ஒருங்கு குவித்து யோசித்துப்
பார் .
புத்தர் மீண்டுந் தியானத்திலே ஆழ்ந்தார்.
நந்த குமாரனின் பார்வை, விஹாரத்தின் சூழலில் அலைக்கழிகின்றது.
வெள்ளரசமரங் குடை விரித்து நிற்கின்றது. உச்சி வெயிலின் காங்கையிலே காற்றுச் சாக, அதன் வெளிர் இலைகள் தியான மோனத்தில், சிருஷ்டியின் ஆதார, விக்கிரகங்களை விளக்குகின்றன. தூரத்தில், செழுங் கிளை பரப்பிக் கொழுத்திருக்கும் ஆலமரம். அதன் கிளைகளிற் புறவுக் கூட்டம் குறுகுறுப்பதை மறந்து அமர்ந்திருக்கின்றன. விஹாரத்திற்கு வேலியிட்டது. போல வரிசையாக நிற்கும் அலரி மரங்கள். முகை களையும் மலர்களையும் கொத்துக் கொத்தாகத் தூக்கி நிற்கின்றன. இப்பால் கனி தரும் மாதுனை மரம். கோணல் மாணலான சுள்ளிக் கிளைகளைப் பரப்பிச் சடைத்திருக்கின்றது. செம்புகளைக் கட்டித் தொங்க. விட்டதைப் போன்ற பழங்கள். அப்பழங்கள், சிங்க முகக் காலதரிற் செழுங் கொங்கை சாத்தி நிற்கும் ஜன பத கல்யாணியைப் பற்றிய ஆயிரம் எண்ணங்களை

Page 90
O 154 6T6ňu). (ur.
மனத்தில் எழுப்பிச் சிலந்தி வலை பின்னுகின்றன. சுயத்தைப் பற்றி நினைக்க அளிக்கப்பட்ட அவகாசம், மாம்ஸத்தில் ஊறும் உணர்ச்சிகளின் கரங்களில் அம்மானை ஆடப்படுகின்றது. -
புத்தரின் விழிகள் நிஷ்டையிலிருந்து விழித் தலர்ந் தன. நந்தகுமாரனின் புலன்கள் அலைக் கழிவதை உணர்ந்தார்.
**நந்த, உன் மனம் ஆற்று நீராக அலைக்கழிந்தே ஓடுகிறது. இன்னிசை மீட்டுவதாக அது பறைசாற்றி ஓடினாலும், ஈற்றிலே கடலிற் சங்கமிக்கின்றது. ஆறாக ஒடும் மனித வாழ்க்கை-சிற்றின்பம் என்கிற இசைதுன்பமென்ற கடல். அவ்வரச மரத்திலிருந்து இப் பொழுது ஓரிலை பழுத்து விழுந்தது. இதே சமயம் புதுத் தளிரும் முளைத்துக் கொண்டிருக்கின்றது. அதன் வேர் கள் உணவும் ஈரலிப்பும் நாடி நிலத்திற்குள் ஆழமாகச் செல்கின்றன. இவ்விதத்தில் அந்த மரம் ஒரே நிலை யிலிருந்து கொண்டே இயங்குகின்றது. நம்மைப் பற்றி அறியச் சித்தத்தின் இயக்கந் தேவை. அதன் இயக்கத் தினை நிறம்-சுவை - மணம் - ஒலி - தழுவல் என்ற புலனறிந்த வழிகளினால் அறிய முடியாது, நீ உன்னையே காப்பாற்றவும், உண்மையை அறியவும் உன் சித்தமே தேவை. அஃதே உன் இரட்சகர். '
** நீங்கள் போதிக்கின்றீர்கள். போதனை கூட அகம்பாவத்தின் ஒரு வழிபாடுதான் என நான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், நான் இயற்கையையும் அதனழகையும் அனுபவிப்பதில் இன்பம் நுகரப் பிறந் தவன். அதோ, அதிலே காய்த்துத் தொங்கும் அந்த மாதுளம் பழங்கள் சிங்கவாய்க் காலதரில் என் வருகைக் காகக் கால் கடுக்கக் காத்து நிற்கும் ஜனபத கல் யாணியைத்தான் எனக்கு ஞாபகப் படுத்துகின்றன. '

D வீடு М 155
**அதனைப் பிளந்ததும் தெரியும் பரல்கள் எதனை உனக்கு ஞாபகப்படுத்தும்?"
** மாணிக்கப் பரல்களை. மாணிக்க நிறம் ஜனபத கல்யாணியின் யெளவன இதழ்களை எனக்கு ஞாபகப் படுத்தும்.'"
"'என் சிந்தையில் அது மனிதரை வாட்டிடும் புண்களின் சே படர்ந்த முகங்களை ஞாபகப்படுத்த லாம். அழகும் விகாரமும் மனோ கற்பிதங்கள். சித்தப் படியல்லாது, புலன்களினால் வழி நடாத்தப்படும் பலஹினனே அழகைப் பற்றிச் சிந்திக்கின்றான். குரு டனுக்கு நிறமும், செவிடனுக்கு இசையும் என்ன சுகத்தை அளிக்கும்? மதி குலைந்த பித்தனுக்கு? நந்த எது அழகு? அதனை யாரால் விளக்க முடியும்?'
'ஜனபதகல்யாணி எழில்மிகுராணி எனச் சாக்கிய குலத்தவர் சகலராலும் ஒப்புக் கொள்ளப்பட்டவள். பத்துப்பேர் ஒரு பொருளைப் பார்த்துப் பத்துவித அபிப்பிராயங்கள் சொல்லுவார்கள். ஒருவனே ஒரு பொருளைப் பத்துத் தடவைகள் பார்த்தும் பத்துவித மான அபிப்பிராயங்களைச் சொல்லக் கூடும். ஆனால் ஜனபதகல்யாணியின் அழகு மட்டும் விதிவிலக்கு: சகலருடைய நிரந்தர முடிவே அவள் அபூர்வ அழகி
என்பது தான். '
‘*நந்த, கவிஞனுக்கும் காதல் வசப்பட்டவனுக்கும் நிறைந்த கற்பனாசக்தியுண்டு. கற்பனையை விரித்துப் பார், முகமெல்லாம் சுருக்கங்கள் மொய்க்க, யெளவன தசைக் கோளங்களெல்லாம் முதுமையினாற் சுருங்கியும் தொங்கியும், பிணியினாலும், மூப்பினாலும் அவதிப் படும் எழுபது வயதுக் கிழவியான ஜனபத கல்யாணி யைக் கற்பனை செய்து பார்.'"

Page 91
)( .எஸ். பொ 156 ם
மின்னற் பாய்ச்சலில் அவ்வாறு எழுந்த கற்ப னையை, சிங்கவாய்க் காலதரிற் காத்து நிற்கும் லாவண்ய உருவத்தி 1 திவ்வியம் விழுங்கித் தென்பினை ஊட்டிற்று.
**உங்களிடம் வருபவர்கள் மலர்களைக் காணிக்கை யாகக் கொண்டு வருகிறார்கள். மலர்களின் அழகில் உங்களுக்குப் பிரீதி உண்டல்லவா?’’
* 'நந்த, இந்தப் பழக்கம் என்னாலே போதிக்கப் பட்டதல்ல. மூத்தோரையும் இனியவர்களையுந்தரிசிக்கச் செல்லுகையில் ஏதாவது கையுறை கொண்டு செல்லு தல் பண்டு தொட்டு வழக்கிலுண்டு. காணிக்கை, மலராக இருப்பது விரும்பத்தக்கது. எவ்வித மனக் குறையுமின்றி, எந்த அந்தஸ்திலுள்ளவர்களாலும் மென் மலர்களைக் கொண்டு வருதல் முடியும். மலர்கள் தூய்மை-மென்மை-நேர்மை ஆகியவற்றின் உருவங் களாகத் திகழ்கின்றன. அதே சமயம், அவை அநித் திய வாழ்க்கையின் அடி முடிச்சுகளை மிகச் செப்பமாக விளக்குகின்றன. அதோ, அந்த அலரி மலர்களைப் பார். பாலாடையை அதியற்புதச் சிற்பியொருவன் செதுக்கியெடுத்து, அதன் மையத்திலே தங்கத் திலகம் இட்டிருக்குஞ் செளந்தர்யம். ஓரிரு தினங்களில் அதே மலர்கள் கயர்த்தழும்பு ஏறி, கறுத்துக் கருகி உதிர்ந்து விடுகின்றன. மலர்களின் அழகு ஓரிரு தினங்களுக்கு. கல்யாணியின் அழகு பல தினங்களுக்கு.அழகின் வயது என்ன ? அழகினை ஏன் மூப்பு வந்தடைதல் வேண்டும் ?"
அலரி மலர்கள் தத்துவத் திரிகையில் அரைந்து பொடியாக, மரத்திலே தொங்கும் இரு மாதுளங்கனி களின் அமைப்பே நந்தகுமாரனின் மனம் எல்லாம் விரிகின்றது. தன் பக்கமே தன்னை முற்றாக இழுக்கும்

O 6G 157 O
நினைவுத் தளைகளை அறுக்க அவன் புத்தரின் பக்கம் திரும்பினான்.
“ ‘புனிதரே! என் உள்ளத்தில் ஊறுஞ் சில எண்ணங் களைச் சொல்லலாமா ?”
* தாராளமாகக் கூறலாம். ’’
'நட்சத்திரத் தோடாக வனப்புக் காட்டும் மாதுளம் மலர்கள் இயற்கைசால் அன்பு வாழ்க்கையின் பெறு பேறாகப் பரற்சினைகளைச் சுமந்து, முற்றிக் கனிகளா கின்றன.நீங்கள் ஆயிரம் வார்த்தைகளில் அன்பைப் பற்றி விளக்கந் தருகின்றீர்கள். விளக்கி விட்டதாக நீங்கள் திருப்தி கொள்ளும் போது கூட, என் போன்ற சாமான்யனுக்கு அதில் ஒரு பின்னந்தானும் விளங்கா திருக்கலாம். ஆணும்-பெண்ணும் மனங்கலந்து, இல்லற இன்பங்களிலே தோய்ந்து, ஒரு குழந்தையைச் சிருஷ்டித்தால், அக்குழந்தை உன்னத அன்பின் உயர்ந்த சின்னமாகத் திகழ்கின்றது. அத்தகைய அன்பினை விளக்க வார்த்தைகளே தேவையில்லை.”
** அழகாகப் பேசுகிறாய். சாக்கிய மன்னர் தர்க்க சாஸ்திரிகளை அமர்த்தி, இல்லறத்திலே துய்க்க வைப் பதற்கான நியாயப் பிரமாணங்களைக் கற்பித்திருக் கிறார். சித்தத்தின் மூலம் நாம் அறிவதுதான் பேருண் மை. இருப்பினும், உன் பேச்சு மிகவுஞ் சுவாரஸ்ய மாக இருக்கின்றது.'
* உணர்ச்சி அலைகளிலே சுரக்கும் இச்சை உடலிலே படருகின்றது. எனவே, இச்சையில் நிச்சயம் மனிதப் பலஹினங்களும் படிந்திருக்கும். இருப்பினும், இவற்றின் இச்சா பூர்த்தியில் மலர்வது அன்பு: பங்கத் திற் குதிர்வது விரோதம். நீங்கள் போதிக்கும் துறவற

Page 92
158 எஸ். பொ. 0
நிலையிற் சித்தத்தை ஒரு நிலைப்படுத்துதல் என்பது, மாம்ஸ் இச்சைகளை மறுத்து, வறுத்துத் துவள்வு செய்யும் இராக்கத முயற்சி. அறிவின் செருக்கிற்கு முதலிடங் கொடுத்து, சித்தத்தின் செம்மை என்ற தீ ஜ்வாலைகளில் உணர்ச்சிகளைப் பொசுக்கிய பின்னர், மனிதனின் ஆசாபாசங்களுக்கும், பிரேமைகளுக்கும் புதிய விளக்கங் கொடுப்பது மிகமிகச் செயற்கையானது. இயற்கையிலே குறைபாடுகளிருக்கின்றன என்றால், அந்தக் குறைபாடுகளே நமது வாழ்க்கையின் பயனும் பலமுமாம். செயற்கை அறிவின் ஆணவ வழி; நாம் இயற்கையின் செல்வங்கள். நாங்கள் சந்ததி பெருக்கி வாழப் பிறந்தவர்கள்.'
*நந்த!சித்தத்தை உணர்வது ஆணவமென்றால்
உண்மையைச் சொல்வது செருக்கு என்றால், நீ மெய் யென வரித்திருக்கும் பிரமேயங்களில் ஏதோ தவறு இருக்கவே செய்கிறது. சித்தத்தைச் செயற்படுத்தா தவன் லோப - துவேச - மோக (இச்சை - அழுக்காறு - அஞ்ஞானம்) ஆகிய பலஹினங்களுக்குத் தன்னைத் தானே ஒப்புக் கொடுக்கின்றான். அலோப - அதுவேசஅமோக (அருள்-காருண்யம்-ஞானம்) ஆகிய நற் குணங்கள் சித்தத்தைச் சுத்தப்படுத்தியவனுக்கே ஏற். படுகின்றன. அஞ்ஞானத்தில் உலைபவனிடஞ் செருக் கும் ஆணவமுமே வந்தடைகின்றன.'
**நான் மனிதர்களைப் பற்றிப் பேசுகின்றேன். நீங்கள் புத்த நிலை அடைந்தவர்களைப் பற்றிப் பேசு கின்றீர்கள்.”
'உன் இச்சைகள் உன் சித்தத்தினைத் திரையிட்டு மறைத்துள்ளன. காலப்போக்கில் உனக்கு உண்மை தெரியத்தான் போகின்றது. தர்க்கக் கலையின் மூலம் நீ பெற்ற கல்வியால் யாது பயன்? கல்வியின் பயன்

() வீடு 159 ם
நல்லதையும் கெட்டதையும் இனங்கண்டு கொள்வது மட்டுமல்ல. அவை எக் காரணங்களினால் நல்லவை கெட்டவை என்பதைக் கல்வி உணர்த்துதல் வேண்டும். **
நந்தகுமாரனின் முகத்திலே சிந்தனை மேகங்கள் படிவதைப் புத்தர் அவதானித்தார்.
**நந்த, சந்ததி பெருக்குவதுதான் இயற்கையா, அல்லது வாழ்க்கையா ? சந்தான விருத்திதான் வாழ்வின் இலட்சியமா ? ஆண் சிலந்தி சந்தான விருத். திக் கலையிலே தன்னையே அழித்துக் கொள்ளுகிறது. எந்தப் பெண் சிலந்தி மீது மோகித்துச் சேருகின்றதோ, அதற்கே ஆண் சிலந்தி இரையாவது உனக்குத் தெரியாதா? இச்சைகளைப் பூர்த்தியாக்குவதுதான் இயற்கை வாழ்க்கையா? மதுவினை அருந்த அருந்த, கட்குடியன் அதிகம் அதிகமாகவே, மேன் மேலும் மது வினை நாடுவான். மனிதருடைய புலாலிச்சைகளும் மதுச்சுவையைப் போன்றவை."
புத்தர் சேதந பூர்வமாகப் பேச்சை இடையில் முறித்து நிறுத்தினார். இடைவேளை மெளனத்திற்குப் பின்னர் மீண்டுந் தொடர்ந்தார்.
** அந்த ஆலமரத்தைப் பார்த்தாயா? அதிலே எத்தனை ஆலம் பழங்கள் தொங்குகின்றன? அந்தப் பழங்கள் எத்தனை கோடி விதைகளை வைத்திருக் கின்றன, இந்த உலகத்திலுள்ள அத்தனை ஆலமரங் களிலுந் தோன்றும் அனந்த கோடி விதைகளனைத் தும் சந்ததி பெருக்குதலையே இயற்கையாகக் கொண்டு முளைக்கத் தொடங்கினால். . . கண்களை மூடிக் கற்பனை செய்து பார். சந்ததி பரப்பும் உன் விவாதஞ் சரி வருமா?’’

Page 93
D 160 எஸ். பொ D
பரிதியுருண்டை படுவானிற் சரிந்து கொண்டிருந் தது. கதிர்த் தெறிப்புக்கள் வெள்ளரசம் இலைகளைத் தக தகக்கச் செய்தன. பிரக்ஞை தெளிந்த தென்றல் சுகமாக வீசத் தொடங்கிற்று. ஆலங்கிளைகளிலிருந்த புறவுக் கூட்டம் கீழே இறங்கிக் குறு குறுத்தது.
ஒன்றுமே புரியவில்லை; என்றாலும், ஏதோவெல் லாம் புரிகிறதாகவும் படுகின்றது. தெளிவான சூனியம்.
**நந்த, என்ன யோசனை ?"
*" என் உணர்ச்சிகள் உங்களுடைய தத்துவத்தை மறுக்கின்றன. ஆனால், எதிர் நியாயமொன்றுங் கற்பிக்க இயலாது தத்தளிக்கின்றேன். எல்லாமே குழப்பம். முகூர்த்தந் தவறியதினால், மூன்று விழாக் களுந் தவறிவிட்டன . அரண்மனையில் மகாமசானச் சூனியம் வியாபித்திருக்கும். அந்நச் சூனியத்தைப் பற்றிய நினைவுகள் என் மனத்திலே பய உணர்ச்சி களைப் பாய்ச்சுகின்றன.'
* “பயத்தை வெல்வது அன்பு. அன்பு என்பது தண்ணிரென்று வைத்துக் கொள். நமது விழிப்புலத் திற்குத் தென்படும் ஆற்று நீரும் குளத்து நீரும் எவ்வளவுதான் சுத்தமானதாகத் தோற்றினாலும், அவற்றில் எவ்வளவோ அசுத்தங்கள் படிந்திருக் கின்றன. நமக்கு மேலே மேலே பறந்து செல்லும் முகிற் கூட்டங்களிற் கண்களுக்குப் புலப்படாத துல்லிய நீர் இருக்கின்றது. அமோக மனத்தில், அத்தகைய நீர்தான் நிறைந்து நிற்கும். அடுத்த முகூர்த்தம் வரும் வரைக் கும் இங்கு தங்கி பிக்குகளின் சீல வாழ்க்கை நெறியை அனுஷ்டித்துப்பார். இது வெறும் பரீட்சணமாகத்தான். அடுத்த முகூர்த்தம் வரும் பொழுதும் ஜனபதகல்யாணி யின் மீதுள்ள காதல் இச்சைதான் ஏகமாக இருந்தால், நீ அரண்மனைக்கே மீளலாம்.'

0 வீடு 101
பகவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும், ஒவ்வொரு சமயமும் ஒவ்வோர் அர்த்தம் தோன்று கின்றது. இருப்பினும், புத்தரின் சித்தத்திற்கு மறுப்புச் சொல்ல இயலவில்லை. அருவியின் பிரவாகத் துளி நீரும் உருட்டப்படுகின்றது,
* சம்மதந்தானே?"
**ஆம்'-எப்படி அந்த வார்த்தை நாக்கிலிருந்து நழுவியது என்பது அவனுக்கே தெரியாது.
விதிகளின்படி சடங்கு நடத்தப்பட்டு அவனுக்குச் சீவர ஆடை புனையப்படுகின்றது.
இளவரசன் நந்தகுமாரனின் "அவன் மறைந்து, நந்ததேரரின் "அவர் தோன்றலானார்.
ロ
O66)
புலரிக் காலத்துத் தெளிவு, வானத்து இருளைச் சுருட்டி விழுங்குகின்றது. நிலமடந்தை சீதளச் சுகத்தி லிருந்து துயிலெழுந்தும், பாயின் கதகதப்பிற் படுத் திருக்கும் ஒரு கோலம். புத்தரும் அரஹத் பிக்குகளும், சித்தத்தின் தூய்மையில், துன்பமே தீண்டாத புனித நிலையில், தியானத்திற் சங்கமித்தனர்.
சீவர ஆடைக்குட் புகுந்தும், உடலில் மதர்க்கும் 10ாம்ஸ் ஆக்கினைகளிலிருந்து விடுபடாது, துயிலெழுந் துந் துயிலெழா நிலையில், பிரதக் ஜன பிக்குகள் தவிக் கின்றனர். நந்த பிக்குவின் செவிகளில், துயிலெழுந்த புள்ளினத்தின் இன்னிசை விழத்தான் செய்தது. ஆனால், இரவிலே தோன்றிய அந்தக் கனவின் பிடி யிலிருந்து மனம் விடுபடவேயில்லை. கற்பனையோ of-11

Page 94
O 162 stsi). Gur.
அல்லது நினைவு ஜரிகை இழையோ எதுவுமின்றி, இல்லாத- ஆனால், இருக்கின்ற என்ற தோற்றத் தைத் தருஞ் சோபிதத்தில்- சில இழைகள் குறுக்கும் நெடுக்குமாக, கனவுச் சிலந்தியின் வாயிலிருந்து கக்கப் பட்டு வலை பின்னுகின்றன. ஒரு சமயம் அவ்வலையிற் சிக்குப்பட்டதைப் போலவும், அடுத்த கணம் ஒரேயொரு இழையில் அந்தரத்தில் தொங்குவது போலவும் அவஸ்தை.
பென்னம் பெரிய தங்கப்பாளங்களினால் நிரு மாணிக்கப்பட்ட அரண்மனை . அடித்தள ஆதாரம் எதுவுமின்றி, இறக்கை முளைத்த பாயாக மிதக்கும் முகிற்கூட்டத்தின் மீது அவ்வரண்மனை மிதக்கின்றது. அந்த அரண்மனை பூராகவும்: ஆயிரம் சிங்கமுகக் காலதர்கள் ஒட்டையிட்டிருக் கின்றன. ஒவ்வொரு சிங்க முகக் காலதரும் இராட் சதமானது. ஒரு பெரிய சதுரங்க சேனையே ஒன்றினூடாக உட்புகுந்து வெளிவரலாம். அதற்குள்ளே புகுந்த என்னைப் பார்க்கும் பொழுது, சின்னொரு சுண்டெலி நுழைந்ததைப் போல! அதன் உள்ளே மேலும் வியப்பிலாழ்த்துஞ் த்திர விசித்திர நுணுக்கம். ஒரு பூம்பொழில் அடர்ந்து வளர்ந்த செடிகளுங் கொடிகளும். பச்சை யின், பிரகாசம் பிராந்திய மெல்லாம் விரிந்து சிந்து கின்றது. சகல இலைகளுந் தகதகக்கும் மரகதக் கற்களாலானவை. கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் ஆகியவற்றாலான அதி விநோதப் பூக்கள். அந்தப் பூக்கள் வாடுவதுமில்லை; இலைகள் பழுத்து விழுவதுமில்லை. ஊமை ஒளி ஜாலக் கலவையின் கவர்ச்சியைத் தவிர, நறுமணமே யில்லை; மணமேயற்ற பிராந்தியம். ஏதாவது மோப்பத்தைப் பிடிப்பதில் என் மூக்குத் துவாரங்

வீடு 163
கள், துருத்தியாக உப்பிக் கொள்கின்றன. நிலம் அசலாகத் தங்கந்தான். ஆனால், வைக்கோல் பரப்பியிருப்பதைப் போல, கால்கள் புதைகின்றன. உள்ளே-வெகுவெகு உள்ளே-நடந்து செல்கின் றேன். நறுமணநாற்றம் குப்பென்று மூக்கினை நிறைத்து உடலெல்லாம் பரவுகின்றது. அகிற் புகையும், பன்னீரும் இந்த மணத்திற்கு இலட்சத் தில் ஒன்று என்ற பின்ன வாக்கிலும் ஈடு செய்ய மாட்டாது. என்னை அந்த மணம் வசீகரித்து, கால்களின் இயக்கமின்றியே தன் பாலிமுக்கின்றது. ஒரு கட்டிலில், மதுபோதையிலே சுயமிழந்த வளாகப் பிறப்பின் கோலத்திற் கூச்சமின்றி, ஆடைகள் அவிழ்ந்தும், விலகியும் உடற்கவர்ச்சி ஸ்தானங்களை மறைக்காமலே மறைக்கும் பாங்கில் ஒருத்தி படுத்துக் கிடக்கின்றாள். அந்தக் கந்தம் அவளுடைய மேனியிலிருந்து வீசியதுதான். ஒரு கணத்தின் கீற்றில் அவள் ஜனபத கல்யாணி யின் உருவ அச்சில் வார்க்கப்பட்டவள் போல! என் கண்களிற் படிந்திருந்த வியப்பு ஒட்டடைகளைத் துடைத்துப் பார்க்கின்றேன். சந் தேகமில்லை; ஜனபதகல்யாணியேதான்! ஊரும் சந்தேகம், மீண்டும் உன்னிப்பாகப் பார்க்கின் றேன். அவள் ஜனபதகல்யாணி அல்லள் என் பதிலே துளியுஞ் சந்தேகமில்லை. அவளைப் பார்த் ததும் என்னுடைய தோற்றத்தைப் பற்றிய உட் பிரக்ஞை விழித்துக் கொள்கின்றது. மழித்த தலை; மஞ்சளிலே தோய்ந்த சீவர ஆடை, கையிலே பிட்சைப் பாத்திரம். இவற்றைத் தவிர வேறெதுவு மற்ற பிக்ஷாண்டி. என் மனம் சமிழ்ப்பிற் சவுங்க, சென்னி கழுத்துப் பூட்டில் முறித்து தொங்கிக் கொள்ளுகின்றது. "உங்களை நான் சாதுக்க ளென்று அழைப்பதா; அல்லது, என் இனிய வரே என்று அழைப்பதா?’- வீணையின் தந்தியை

Page 95
捻
எஸ். பொ.
64
(DTIGurir
சிலந்திக் கூட்டினுள்ளே!
 
 

165
மீட்டும் இசை; ஈட்டியின் பாய்ச்சலில் ஏளனம் நாக்கரவம் வாய்ப்புற்றுக்குள் அடங்கியொடுங்கி விட்டது. பரிவும் பாசமும் சுரக்கும் சுனையில். அவளாக வந்து, எனது சீவர ஆடையைக் களைந் தெறிந்து, நிலவின் பாலைத் துகிலாகச் சாத்துகி றாள், பிட்சைப்பாத்திரம் கீழே வீசப்படுகின்றது. ஆனால், அதுவோ இறக்கை முளைத்ததுவாக மேலேமேலே செல்லுகின்றது. கண்ணுக்கு எட்டாத விண்துரத்தில், ஒரு கரும் புள்ளி காட்டி மறை கின்றது.அவள் என்னைத் தழுவி, என்னுடலில் வெறியேற்றி, தன் கட்டிலுக்கு அழைத்துச் செல் கின்றாள்.அரண்மனையா? சிங்கமுகக் காலதரா? அழகியா? கட்டிலா?.ஒன்றுமேயில்லை. கானல் நீர் மாதிரி, இல்லாத ஒன்று இருக்கும் ஒன்றாக மயக்கியிருக்கிறது. தோற்றமுமல்ல, மனப்பிராந்தி வாக்கில், சூனியத்திலே திகைக்கின்றேன். நான் ஒரு சிலந்திக் கூட்டிற்குள் அகப்பட்டுத் தத்தளிப் பதை உணர முடிகின்றது. ஒரு பெண்ணின் உருவப் பிரமாணத்தில் தோன்றும் ஓர் இராட்சதச் சிலந்தி. நானும் ஓர் ஆண் சிலந்தி. இந்தச் சிலந்திக்கூட்டிற் குள் நான் எப்படிச் சிக்கினேன்? பெண் சிலந்தி, அதனைக் கூடிக்கலவிய குற்றத்திற்காக, என்னைக்
குற்றுயிராகவே புசித்துக் கொண்டிருக்கிறது. ஆகாய அரண்மனையா? அல்லது, சிலந்திக் கூடா?.மூட்டமிட்ட வானில் தோற்றிய வான வில்லா?. சுத்தமாக விளங்குகின்றது. நான் நானேதான்; சாக்கிய இளவரசன் நந்தகுமாரன்.
அவள் ஜனபதகல்யாணியேதான். அவள் சிங்க முகக் காலதரிற் கொங்கை சாத்தி நிற்கின்றாள். * இத்தனை காலமாக-அந்தக் காலந்தான்
எத்தனை யுகங்கள்-இந்தக் காலதரடியில், வழி மேல் விழிகள் புதைத்துக் கால் கடுக்க நான் நிற்கின்றேன். வாருங்கள், உள்ளே. அவளுடைய

Page 96
166 srsio. Ghuir. D'
இந்த அழைப்பு என் நரம்புகளையே தோலுக்கு வெளியாலும் இழுத்து வீணாகானம் பொழி கின்றது. நான் , "கல்யாணி, கல்யாணி" என உச்சஸ்தாயியில் ஜபித்துக் கொண்டே அவளைத் தழுவி அனுபவிக்க ஓடுகின்றேன்.
கனவினை, நினைவில் அசைபோடும் உன்மத்தத் தில், சுயத்தை மறந்து ** கல்யாணி. கல்யாணி'' என்று நந்தரின் உதடுகள் பிதற்றிக் கொண்டிருக்கின்றன.
புத்தர் போதித்த தத்துவங்களின் உட்தாற்பரியங் களை உணராது, சீவர ஆடைக்குட் புகுந்த நந்த பிக்கு வைப் போன்றே வாழும் பிரதக்ஜன பிக்குக்களிருவர், அவர் சயனிக்குமிடத்திற்கு வந்தார்கள்.
அந்த அரவத்தில் அவருடைய கண்கள் திறந்து கொண்டன.
** பிக்குவே பகற்கனவு காண்கின்றீர்களா? மனத் தினை ஒரு நிலைப்படுத்த வந்துள்ள விஹாரத்திலும், உங்களுடைய சகல புலன்களும் ஜனபதகல்யாணியைச் சுற்றியே சுழல்கின்றன. துறவற வாழ்க்கையில் மனம் ஒன்றாத தங்களுக்குச் சீவர ஆடைகளைத் தத்ததனால் புத்தருக்கு யாது இலாபம்? உங்களுடைய இன்பங்கள் உங்களுடையவையே. புதிதாம் அரண்மனை-அரச பதவி-சாக்கிய எழிலரசி, இத்தனை பேறுகளையும் நீங்கள் புத்தர் ஒருவருக்காகத் தானே இழக்கத் துணிந் தீர்கள். ’’-இந்த வகையில் ஒருவர் பேச்சினை விநய மாகத் தொடங்கினார்.
** எங்களது சிந்தைக்குப் புலப்படாதவையாகவோ, அன்றேல் இல்லாதனவாகவோ தோன்றும் உண்மை களைப் புத்தர் அறிந்தவராக இருக்கலாம். நமக்குத் தெரிய ஒரேயொரு புத்தர் தான்-சாக்கியமுனிவர்தான்

ם 167 (6H(b ם
வாழ்கிறார். அவர் ஒருவராக இருப்பதினாலேதான் அவருடைய மதிப்பும் உயர்ந்துள்ளது. அவர் புத்தரா வதற்காகவேசுட்டப் பிறந்திருக்கலாம். அவருடைய ஊழும், தங்களுடைய ஊழும் ஒன்றா? ஒரு வேளை, நீங்கள் நமது மன்னராகவும், ஜனபதகல்யாணியின் அன்புக் கணவராகவும், வாழ்வதற்காகவே பிறந்திருக் கலாம். கோழைகளே மற்றவர்களுடைய எண்ணங் களுக்குத் தலை சாய்த்து வாழ்வார்கள்" என்று மற்றவர் அவருடைய இகலோக இச்சை யென்ற தீயில் நெய்யூற்றிப் பேசினார்.
இருள் விரிந்ததும், இரைதேட விழித்துக் கொள் ளும் வெளவாலாக, அஞ்ஞானப் பேச்சுக்களின் அது சரணையிலே சிற்றின்ப இச்சைகள் புது வேகத்துடன் சிறகடித்தன. தான் சீவர ஆடையைத் துறந்து, ஜனபதகல்யாணியின் காதலை ஏற்று, இல்லறத்தில் ஈடுபடல் வேண்டுமென்ற நிதர்சனத்தைச் சொல்லி விடல் வேண்டு மென்ற எல்லை மட்டும் அது பறக் கின்றது.
**இதனை உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டோம். நாளை மறுதினம் நல்லதொரு கல்யாண முகூர்த்த முண்டு. எதையும் பருவத்திற் பயிர் செய்தல் வேண் டும். உங்களுடைய வயதில், புத்தர் சித்தார்த்த கெளதமராக, யசோதரையின் கணவராக, கபிலவஸ்து அரண்மனையில் வாழ்ந்து கொண்டிருந்தவரென்பதை மறந்து விட்டீர்களா ?”
'நீங்கள் சென்று வாருங்கள். இப்பொழுதே புத்தரைக் கண்டு உண்மையைச் சொல்வேன். இன்றே நான் அரண்மனைக்கு மீள்வேன்' என நந்த குளு
ரைத்தார்.

Page 97
168 எஸ். பொ.
நெறி தவறி, மனத்தினை அலைமோதவிட்ட, அந்தப் பிக்குகளிருவரும் அகமகிழ்ந்தார்கள்.
906)35
புத்தர் புன்னகை பூத்தார். " "வா நந்த, வா! நீ என்னைப் பார்க்கவும் வரலாமென்று இப்பொழுதுதான் நினைத்தேன். நாளை மறுதினம் கல்யாண முகூர்த்த மொன்று உண்டு என்ற செய்தியைச் சாடையாக நினைவுபடுத்தத்தானே வந்தாய்?"
எதிர்பார்க்காத அவ்வினா பிக்குவைச் சவலையாக்
கிற்று. சங்கோசத்துடன், "ஆம்" என்பதற்கு அறிகுறி யாகத் தலையை ஆட்டினார்.
*" ஏதோ சொப்பனம் கண்டு விழித்தவனைப்
போன்று வாட்டமுற்றிருக்கின்றது உன்முகம். துரா சைகள் துர்க்கனவுகளை விளைவிக்கும்.’’
** கனவொன்று கண்டது உண்மை முகம் வைத்த புண் சீழ் உடைத்து, என்றோ ஏறிய சிராயைக் கக்குவ தைப் போன்று, ஜனபதகல்யாணியைக் கனவிற் கன்டேன்.""
'கல்யாணியின் மீது நீ கொண்டுள்ள இச்சை களைப் பற்றியும், சந்ததி பரப்பி வாழும் உன் ஏடை பற்றியும் உன் மனத்தினைக் கடலலைகளாக்கி உலைய விடுகின்றாய். ஆண்மையும் பெண்மையும் ஒரே சரீரத் திலுண்டு. ஒன்றின் வளர்ச்சியை மற்றையது விழுங்கி, பின்னதே கொழுத்து ஏகம்ாக வியாபிக்கின்றது. பாலு ணர்ச்சியென்பது, புலால் வேட்கையின் உபரியே. அக்நியின் தீ நாக்குகளை, இரு பால்களின் கூட்டுற

( வீடு 169 с
வாலே தணித்து விடலாமென்பது ஊமத்தஞ்சாறு குடித் தவனின் உன்மத்தக் கற்பனை. அதற்கு மாறாக, அவ்வுடற் புணர்ச்சி மேற்படி தகிப்பினை நெய்யூற்றி வளர்க்கவே மிகவும் உதவுகின்றது என்பது தான் உண்மை. சந்ததி பெருக்கும் விவகார மென்பது பிரக்ஞை பூர்வமாக அல்லாது, தற்செயலாகவே நடை பெறுகின்றது. அப்பொழுதுங்கூட, பெற்றோர் ஒரு குழந்தைக்கு அதன் சரீர உருவத்தை மட்டுமே அளிக்கின்றனர். தாயோ, தந்தையோ, அல்லது இருவருங் கூட்டாகச் சேர்ந்தோ அப்புதிய ஜீவனின் வளர்ச்சிக்கு இன்றியமையாத சித்தத்தை அளிக்க முடி யாது. எதற்கு ஆரம்ப முண்டோ, அதற்கு அழிவு முண்டு. சித்தத்தினை எவராலும் உற்பத்தி செய்ய முடியாது. எனவே, அதற்கு அழிவுமில்லை.'
**நான் எவ்வளவுதான் முயன்றும், நீங்கள் சித்தத் தைப் பற்றிச் சொல்லும் எதனையுங் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. ’’
**உடலிச்சை ஈர்ப்பிலே உன் புலன்கள் அலையும் பொழுது, சித்த பரிசுத்தத்தை எவ்வாறு எய்த முடியும் ? உன்னையே நீ உணர். நீ, நீ யென்று நினைக்கும் உன் யாக்கைதான் என்ன ? கேசம்-உரோமம்-நகம்-தந்தம்தோல்-இரத்தம்- மாமிசம்- என்பு- நரம்பு-குழலட்டைஎச்சில்-பித்தம்-சிலேற்பனம்-சலம்- மலம் என வரும் முப்பத்திரண்டு அழுக்குப் பொருள்களினாலானதே அது! இந்தப் புழுதி படிந்த புல்லிய இச்சைகளினாலே தான் சம்சார சக்கரமென்ற பிறவிப் பெருங்கடலின் அலைகளில் எற்றுண்டு, அலைக்கழிந்து, துன்பத்தின் இருப்பிடமாக வாழ வேண்டியிருக்கின்றது. ’’
**நீங்கள் கட்டி வளர்க்குஞ் சங்கம் மிகப் பெரியது ; அதன் நோக்கமும் வெகு வெகு புனிதமானது. அரண்

Page 98
170 எஸ். பொ.
மனைச் சுகத்திற் சுகித்த காலத்திலேயே தாமரை யிலைத் தண்ணிராக வாழ்ந்து விட்டீர்கள். அவ்வுந்நத நிலைக்கு என்னை-சேற்றுடன் இரண்டறக் கலந்து விட்ட நீரையும்-உயர்த்தப் பார்க்கின்றீர்கள், மன்னித் தருளல் வேண்டும். நான் புல்லியன். நீங்கள் இவ்வளவு போதனை செய்தும் என் மனம் ஜனபதகல்யாணியையே நாடுகின்றது. ’’ 's .
ஒரு நிமைப் பொழுது நேரம் புத்தர் யோசனையி லாழ்ந்தார்.
* உன் விருப்பம் அதுவே யானால், நான் தடை சொல்லவில்லை. உனக்கு இஷ்டமிருப்பின், நாளைக்கே நீ அரண்மனை திரும்பலாம்.’’-இந்த வார்த்தைகள் பனித்துளிகள் மீது படும் சூரியக் கதிர்களாக, அவனு டைய உள்ளத்தில் மண்டிக் கிடந்த துன்பச் சாயல் களைக் காய்ச்சி எடுத்தன.
திரிலோக திலகம் தியானத்திலாழ்ந்தார்.
ஆலமரத்தில் வாழும் புறவுக்கூட்டம் கீழே இறங்கி, குருத்துக் குறு மணலிற் செம்பவளப் பாதங்களால்இல்லை, புறப்பாதங்களின் நிறமேதனி; அதுஅதுவே.- கோலமிட்டுக் கொண்டிருந்தன. அந்தக் காட்சியில் மேய்ந்த கண்கள், புத்தரின் பக்கம் திரும்பின. தியான வேளையில், புத்தருடைய முகத்தில் ஏற்படும் ஜோதிப் பிழம்பான எழிலிலே தரித்தன.
நெடுநேரத் தியானத்தின் பின்னர் விழிகளைத் திறந்த புத்தர், தன் எதிரே அதிசயத்துடன் அமர்ந் திருக்கும் நந்த பிக்குவைக் கண்டார்.
**அரண்மனைக்குச் செல்லத் தீர்மானித்து விட் டாய். அதற்கிடையில் ஒரு தடவை இந்திர சபையைப்

if 6G, 171 ם
பார்க்க உனக்கு ஆசையாக இல்லையா? நான் இன்று இந்திர சபைக்குச் செல்வதாக இருக்கின்றேன். நீயும் என்னுடன் வருகின்றாயா?’’
* "நானா? இந்திரசபைக்கா? நீங்கள் மிக உயர்ந்த புத்த நிலையை அடைந்தவர்கள், நான் அரஹத்பிக்கு நிலைக்குத்தானும் உயராதவன். ஆகாய மார்க்கத்திற் பறக்குஞ் சக்தியற்றவன்.'
**அந்தக் கவலையே உனக்கு வேண்டாம் . ஆகாய மார்க்கத்தில் நான் அழைத்துச் செல்கின்றேன். வருகிறாயா’’
**யாருக்குத்தான் இந்திர சபையைப்பார்த்தின்புற அசையிருக்காது? நான் வருகின்றேன்'
கனவு காணும் குழந்தையின் வதனத்திலே படரும் நகையொன்று புத்தருடைய முகத்தில் விரிந்தது.
96(6)6
புரந்தரன் அரண்மனை நோக்கி, ஆகாயப் பயணம். அகண்டாகாரமான ஆகாய வெளி, உடற் கொட்டின் சுமை அருகி, இற்று, பஞ்சுத் துரும்பாக மிதக்கின்றது. கண்களுக்குப் புலப்படாத எழிலித் திரள்கள் மேனியை மொத்தி ஒத்தடத் தழுவல் கொடுக் கின்றன. தண்மையின் இதம் சர்வமும் வியாபித் திருக்கின்றது. அந்தரத்திலே தொங்கும் காட்சிகள் வியப்பின் மூலவிக்கிரகத்திற்கு முன்னால் நிறுத்து கின்றன. கபிலவஸ்து அரண்மனையில், இல்லற இன்பங்களின் தத்துவங்களைத் தர்க்கரீதியாகப்

Page 99
172 . srsso. Glum“. D
போதித்த ஆசிரியர்களுடைய தர்க்க பிரமேயங்கள் இந்தக் காற்றிலும் பார்க்க மிக இலேசாக, ஏமந்தருது வின் பணிச் சிதறல்கள் மறையும் விந்தையில், நழுவுவ தான ஒர் எண்ணம். வாலிபம் கால ஓட்டத்தில், எதிர் நீச்சலடித்து முன்னேற, பிஞ்சாகிப் பிஞ்சாகிக் குழந்தை யாகின்றார். பல பொம்மைகளுக்கு நடுவில் விடப்பட்ட குழந்தை எந்தப் பொம்மையைத் தேர்ந்தெடுப்பது என்று தயங்கித் தவிப்பதைப் போல, நந்த பிக்குவின் மனத்தில் ஒரே குழப்பம். குழப்பத்தில் ஓர் இன்பக் கதகதப்பும் சாயந் தீட்டுகின்றது. மின்வெட்டிலே குழப்பமில்லாத ஒரு தெளிவுந் தோன்றுகின்றது.
ஆகாய வெளியிற் பிரயாணஞ் சுகமாகத் தொடர் கின்றது.
**நந்த, பிரயாணம் செளகரியமாக இருக் கின்றதா?’’
** எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. இது மனித சக்தியின்பாற் பட்டதுதானா? நம்பிக்கையான ஓர் அவநம்பிக்கை என் மனத்தின் அடிவானில் மூட்டம் போடுகின்றது.'
'சித்தத்தைச் சுத்தப் படுத்தி மோட்ச வாழ்வினை எய்த விழைபவனுக்கு முடியாத காரியம் எதுவுமே யில்லை. அதோ, அவ்விடத்திற் புகையும் புலவும் எழுந்து வருகின்றதே என்னவென்று பார்."
* புனிதரே, எத்திசையில்?’’
**உன் வலப்பக்கத்தில் . ’’
இலேசான புகைப்படலம்; பாழ் மண்டபங்களில் தொங்கும் சிலந்திக்கூடுகள் மாதிரி சிதையா? அல்ல,

அதனை மருவிய பொட்டல் நிலமும் கருகி வெந்து கிடந் தது. அக்கினியின் தணியாப் பசி, பசுமை முழுவதையும் உறிஞ்சிவிட்டது. பற்றைகள் பூராவாக எரிந்து, வேர் கள் கருகி, ஆயிரக்கணக்கான காகக் கால்களை நாட்டி வைத்திருக்கின்றன. நிலத்தை அசுத்தப்படுத்துங் கறுப்புத் திட்டிகள் சிந்திக்கிடக்கின்றன. மரங்களின் பெரும் பகுதி எரிந்து அநித்தியத்தின் வித்தார விளக்க மாகச் சாம்பர் கொட்டி நிற்க, நீறு பூத்த தணல், எஞ். சிய பச்சைப் பகுதிகளைத் தாக்குகின்றது. அப்பிராந்தி யத்தை எரித்து நிர்த்தூளியாக்கிய பெருநெருப்பிலிருந்து வெளியேற முடியாது, அதில் அகப்பட்டு, கருகிச் செத்துப் புழுத்துக் கொண்டிருக்கும் மிருகச் சவங்களி லிருந்து குப்பெனக் குவிந்து வருந் துர்நாற்றம். தீயின் கோரம் சாம்பல் பெருக்கி ஊளையிட்டது. அருவருப்பின் ஏகத்துவம். அத்துர்நாற்றம் உடலை வெட்டிப் பிளக் கின்றது . சுவையின் சுளுக்கு. பீபத்ஸத்தின் சதுர். குடர் குரல் வளைக்குள் ஏறிக் குமட்டுவதான அசுகி. பாண்டலின் கோரம் . ஒரு மரம் ஒண்டியாகத் தெரி கிறது. அடிமரம் எரியாமல், இலைகளெல்லாம்பொசுங்கி, கருகிய கவர்கள் ஒறுப்பாகக் கரம் நீட்ட, நெடிதுயர்ந்து நிற்கின்றது, அதன் கிளையொன்றில், ஒரு மந்தி மயிர் பொசுங்கித் தொங்கிக் கொண்டிருக்கின்றது. சில இடங்களில் அசினமும் எரிந்து, சப்பாத்திப் பூவன் னச்சே நிணம் பிதுங்கித் தொங்குகின்றது. கருகிய உரோமமும்-வெளியே தெரியும் மாமிசமும் குற்றுயி ரான அந்த அருவருப்புக் கோலத்தின் சிரசாகவே அது காட்சியளித்தது. மனம் அருவருப்பின் ஆழி அலை களிற் பயப் பிராந்தியுடன் அலைக்கழிக்கின்றது. பட்டிலும் பஞ்சிலும்- அழகிலும் இன்பத்திலும் வளர்க் கப்பட்ட நந்த பிக்கு கண்களை மூடிக்கொண்டார்.
*நந்த, ஆகாய மார்க்கப் பயணத்தில் எவ்வளவோ பார்க்க இருக்கும் பொழுது, ஏன் கண்களை மூடிக் கொண்டாய்?’’

Page 100
174 எஸ். பெr 0
"பாதி கருகி, அருவருப்பின் உருவாகத் தொங்கிக் கொண்டிருக்கும் அந்தக் குரங்கைப் பார்த்தீர்களா?"
* பார்த்தேன்.""
* 'இப்படியொரு அவலட்சணத்தை நான் என் வாழ் நாளிற் கண்டதில்லை. ’’
*மனிதன் பிணியாலும், மூப்பாலுந் தாக்கப்பட்டு அந்தக் குரங்கைப் பார்க்கிலும் விகாரமாகக் காட்சி யளிக்கலாம். **
பிக்கு சிந்தனைக் கல்லைகளில் எற்றப்பட்டார்.
புத்தரின் முகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லை. பதுமையின் முகம்போல, கூம்பாமல் LD6) print மலிருந்தது.
"நாம் இந்திரலோகத்திற்கு வந்து விட்டோம்,'
அந்த அந்தரலோகத்தைக் கண்டு நந்த பிக்கு பிரமித்தார்.
O
356T
புலன்களுக்குச் சாமான்யமாகக் சிக்காத இந்திர லோகக் காட்சி விரிகின்றது. இந்திரலோகமென்ற அந்தச் சுந்தரலோகம். சர்வமும் செளந்தர்யஞ் சொட்டச் சொட்ட நயமொழுகி வழிகின்றது.முற்றாதவெகு வெகு பிஞ்சான-உள்ளங்களுடன் சுரர்கள் வாழும் இந்திரலோகத்தில்,இன்பக்களிப்பேகோலோச்சு கின்றது. அழகும்-களிப்பும், வறிக் கள்ளும்-கூத்தும் பிரிகளாக இணைந்த அவர்களுடைய வாழ்க்கையில்

.175 fG9ܘ
காலத்தைப் பற்றிய கவலையேயில்லை. நரவருடங்கள் பல புணர்ந்தே அந்த உலகத்தின் ஒரு நாள் அசை யிட்டுச் சுழலுகின்றது.
நந்த பிக்குவின் விழிகள், இமைகளை அகட்டிப் பிதுங்குகின்றன. இன்பச் சகதியின் நடுவே பூத்த பங்க யமாக-இருப்பினும், சுவர்ண நிறத்தின் ஒளி ஜாலஞ் சிந்தி-குன்றின் மமதையுடன் தலைநிமிர்ந்து நிற் கின்றது புருகூதன் மாளிகை. துர்நாற்றம் அங்கு இல் லாததொன்று. கனவில் விரிந்த அந்தச் சுகந்த கந்தம் மட்டுமே, அள்ளு கொள்ளையாக வீசப்பட்டிருக்கும் பாரி ஜாத மலர்களிலிருந்து அட்ட திக்குகளிலுங் கலக் கின்றது. அந்தரத்திலே, பொன் ஜரிகை நாடாக்கள் மின்னி மறைந்து மீண்டும் பிரகாசிக்கின்றன. மாளி கைக்குள் நடக்கும் போழ்து நீரின் மேற்பரப்பில் நடக் கும் பிரமையே ஏற்படுகின்றது. நிலத்தின் வழுவழுப்பு மெருகு சகலவற்றின் சுந்தரத்தையும் பிம்பங் காட்டிச் சுப்பிர ஜாலம் இயற்றுகின்றது.
சுரபானம் சுவைத்து, அப்சரஸ0கள் வீசும் வெண் சாமரங்களிலிருந்து பிறக்கும் சீதளக் காற்றிற் குளித்து, பாட்டும் - கூத்தும் - பரவசமும் அளைய.
புத்தரைக் கண்டதும், இந்திரன் தனது பண்டு கம்பள ஸைலாசனத்திலிருந்து எழுந்து வந்து, அஞ்சலி செய்து, எதிர் கொண்டழைத்தான். புத்தருக்குப் பக் கத்திலே வியப்பின் வியூகத்திற்குள் விழுந்து விழிக்கும் நந்தபிக்குவைக் குறித்து ஊமை வினாவை விழியிலே தொடுத்து இந்திரன் விடுக்கின்றான்.
**இந்திரா! இவர் நந்த பிக்கு. உன்னுடைய லோகத்தின் அற்புதங்களை ஒரு தடவை பார்த்து மீன வந்திருக்கிறார்.""

Page 101
O 176 எஸ். பொ. {)
** அப்படியா? அவருக்கு இங்கு தகுந்த உப சரணைகள் நடக்கும். நீங்கள் இந்திர இருக்கையில் அமருதல் வேண்டும். ’’
'உனக்கு தர்மோபதேசங் கேட்க ஆவலா ?"
**ஆம். தங்களுடைய வருகைக்காக வெகு காலங் காத்திருந்தேன்.’’
'உன் இஷ்டம்.’’
புத்தர் அமைதியாக நடந்து, இந்திரனுடைய சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். இன்பங்களின் அதிபதி, உண்மையின் நிர்மலத்தில் மனம் புதைத்து, தர்மோப தேசங் கேட்கத் தொடங்கினான் ,
கிளை பிரிந்து, வழி தப்பிய மானாக நின்ற நந்த பிக்குவை அப்ஸரஸ் ஒருத்தி ஓர் ஆசனத்தில் அமரச் செய்தாள். அவ்விருக்கை, மயிற்பீலிகள் உள்ளே வைக் கப்பட்டு, அணில் வால்போல மிருதுவாக இருந்தது. அதிலமர்ந்ததும் இடுப்பளவிற்குப் புதைந்து போனார். * என்ன சுகமான இருக்கை" - மனத்தினைக் கொட்டும் இன்பத் தினவுகள். இன்னொருத்தி வந்து, வெண்சா மரம் வீசிக் குளிர் காற்றை இறைத்தாள்.
எதிரில் நடன அரங்கம் விரிகின்றது.
தங்கத்தின் நயங்காட்டும் அத்தரையில், பனிப் படிகத்திலே துரிதமாகச்சறுக்குஞ் சாகசம் புரிந்தவாறே, திவ்விய கன்னியர் அறுவர் தோன்றினர். தரையிற் பட்டும் படாமலும், ஓரிடத்தில் நிமைப் பொழுது ந் தரிக்காது, அசைந்தாடும் பாதங்கள். அப்பாதங்களின் திவ்விய சுந்தர எழிலிற் பிக்குவின் நயனங்கள் நிலைத் தன.

O 6G 177
வியப்புப் போதையிற் சுழன்ற கற்பனை, கவிஞ
-னாக இயங்குகின்றது.
குருத்துக் குறுமணற் பரப்பில், புறாக் கூட்டம்
கோலந் தீட்டய அந்தக் காட்சி. புறாப் பாதங்களின் நிறத்திற் பெண்களா? இந்த அழகின் ஒரு துளி தானும் பூலோகத்திற் கிடையாது என எழுந்த எண்ணப் பிந்தின் தடத்தில், கண்கள் தரித்து, பாதங்களை மட்டுமே பருகின. பின்னர் மெல்ல மெல்ல அவர் களுடைய மேனியழகினைப் பருகிடும் அவாவை மாந்தி, மேலே மேலே எழுந்தன.
தென்றல் வீசுகின்றது.
மயில் ஆடுகின்றது.
சீதளக் காற்றிலே சுடர் நடுங்குகின்றது.
அலைகள் ஒன்றின் பின் ஒன்றாக, இசை எழுப்பி நீந்துகின்றன.
புள்ளிமான் மருளுகின்றது. அரவம் படம் விரிக்கின்றது. அன்னப்புள் நடக்கின்றது. இவையனைத்தும் திவ்விய கன்னியரேயாகி, அவர் களே சகலமுமாக, பிக்குவின் என்பின் குழலட்டையைக் கூட உலுப்பி ஆடுகின்றார்கள். இன்பப் புஷ்பாஞ்சலி வர்ஷிக்கப் படுகின்றது.
அவர்களுடையநர்த்தனம் ஏற்படுத்திய சுழற்சியில், அரங்கமே ஆட, அந்தர லோகமே ஆட, பிக்குவின் மனமும் துரும்பாக ஆட, வி-12

Page 102
ロ 1.78 6r6i). Gr.
புளகாங்கிதப் புனல் கொட்டுகின்றது!
புறாப்பாத எழில் நிறங் காட்டும் மேனியை மறைக் காதே அணியப் பட்டிருந்த பாலாவி உடைகள் கூட அவிழ்ந்து விழ, பிறப்புக் கோலத்தின் சுயகோலஞ் சிந்தும் விழிநிறைந்த வனப்பைச் சுவைத்து, தேன் குடத்தில் விழுந்த ஈயாகத் தத்தளிக்கிறார். திவ்விய கன்னியரின் பாந்தத்திற் பிணிக்கப்படுகிறார்.
இந்திரனுக்குத் தர்மோபதேசஞ் செய்து திரும்பிப் பார்த்த புத்தர், பிக்கு அரம்பையரின் சுந்தரச் சதுரிற் சுயமிழந்து சொக்கியிருப்பதை அவதானிக்கவுந் தவற வில்லை.
மறுகணம்
கன்னியர் அறுவரும் காற்றுடன் காற்றாகக். கலந்து மறைந்தனர்.
சுந்தரக் கனவிலிருந்து சட்டென்று விழித்த ஓர் ஏமாற்ற உணர்வு நந்த பிக்குவின் மனத்தினைப் பிறாண்டியது.
நினைக்க நினைக்கப் பிரளயமாகப் பெருகும். அழகுச் சுவை நெஞ்சில் அலைமோத, ஒன்றுமே பேசாது புத்தரைப் பின்தொடர்ந்தார்.
நெறி
புத்தர் மெளனத்தைக் கலைத்தார். பூலோகம் சமீபித்துக் கொண்டிருந்தது. 'நந்த, இந்திரலோகத்.

வீடு 179,
தில் பார்த்த திவ்விய கன்னியரைப் பற்றி என்ன நினைக் கின்றாய் ?’’
சிந்தனையின் ஒவ்வோர் அரவத் தலையின் நெளிவி லும், அவர்களது உருவங்களே துலங்க, ஊமை உல கின் இன்பத்திலே துய்த்த பிக்கு, கனவிற்பிதற்றும் பித்தனாக " " ஒரு திவ்விய கன்னியின் அழகிற்கு இந்தப் பூலோகம் முழுவதும் ஈடாக மாட்டாது. ஒருத்தியுடன் ஒருகணம் சேர்ந்து வாழுஞ் சுகத்திற்காக எனது இராச் சியத்தையே அவள் காலடியிற் காணிக்கையாகச் சேர்க் கவுந் தயங்க மாட்டேன்' என்றார்.
'ஜனபதகல்யாணி வாழும் இந்தப் பூலோகத்தை விட ஒரு திவ்விய கன்னி அவ்வளவு உயர்ந்தவளா?"
** என் அறியாமை என்னுடையதே. திவ்விய கன்னி ஒருத்தியினுடைய காற் தூசியின் அழகுக்குத் தானும் ஈடாக மாட்டாள் ஜனபத கல்யாணி. ஆகாய மார்க்கத்திற் பாதி எரிந்து, புலவு வீசத் தொங்கிய மந்தியைப் பார்த்தோமே, அதனைப் பார்க்கிலும் விகாரமானவள் ஜனபதகல்யாணி. ''-சுயத்தை இச்சை விழுங்கிய பித்த நிலையிற் பேசினார்.
* அப்படியா?" என்று புத்தர் கேட்பதற்கும், இருவரும் பூலோகத்திற் பாதம் மிதிப்பதற்குஞ் சரியாக இருந்தது.
குஞ்சிரிப்பே முகமாக புத்தர் வெள்ளரசமிரத்தை நோக்கி நடந்தார். திவ்விய கன்னியரின் நினைவே மனமெல்லாம் நிறைந்து நிற்க, நந்த பிக்கு பின் தொடர்ந்தார். - . . .
**நந்த! உன் மணம் உண்மையிலேயே திவ்விய கன்னியாற் படிந்திருக்குமேயானால், ஏன் அவர்களுள்

Page 103
180 எஸ். பொ. )
நிச்சயமான
மூப்பு-பிணி-சாக்காடு
அகித்தியமான
தசை இச்சைகள்
 
 

0 வீடு 181 o
ஒருத்தியை மணந்து இல்லற வாழ்க்கையில் ஈடு படலாகாது?’’
** மனித ஆசைகளுக்கு ஒர் எல்லையுண்டு. நான் திவ்வியகன்னி ஒருத்தியை மணக்க விரும்புவது, அம்பு லியைப் பிடித்து விளையாட ஆசை கொள்ளும் சவலையின் கற்பனை நிகர்த்ததாகத் தானிருக்கும். இந்திர லோகத் திற்குப் பறந்து செல்லவோ, திவ்விய கன்னியை என் பால் ஆகர்ஷித்து இழுக்கவோ சக்தியற்றவன் நான்.”*
** சாக்கிய சிம்மாசனமும், ஜனபத கல்யாணியும் திவ்விய கன்னியின் அழகிற்கு முன்னால் மிகமிக அற்ப மாகப்படுகின்றதல்லவா? மனத்தினை ஒரு நிலைப் படுத்தி, நீ சித்தத்தைச் சுத்தப் படுத்துவாயே யாகில், உன் இறுதி மனோரதம் ஈடேறும் சித்தம் ஆதியந்த மற்றது. அதனாற் சாதிக்க இயலாதது ஒன்றுமில்லை. சித்தத் தூய்மையில், நான் ஆகாய மார்க்கத்திற் பயணஞ் செய்ய முடியுமேயானால், ஏன் உன்னால் மட்டும் இயலாது?’’
சிந்தனையே அவராக, மெளனத்திலாழ்ந்தார் நந்த பிக்கு. திடீரென ஒளி பெற்றவர் போல," "நீங்கள் துறவற நெறியைப் போதிப்பவர்கள். சிற்றின்ப விவ காரம் என்ற உடலிச்சையை வென்றவர்கள். என்னு டைய ஆசைகளை வெறும் மாம்ஸ இச்சை யென்று இகழ்வீர்கள். அத்தகைய தாங்கள், நான் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதை எவ்வாறு ஆசீர்வதிப்பீர் கள்?" எனக் கேட்டார்.
*" வெவ்வேறு தளத்தின் சீவராசிகளின் அவாக்கள் வெவ்வேறானவை. ஒழுங்கற்ற சீவன்களின் ஆசைகள் ஒழுங்கற்றவை. பக்குவமடைந்த சீவன்களின் ஆசைகள் பக்குவமடைந்தவை. பக்குவமடைந்த மனிதர்களின்

Page 104
182 எஸ். பொ 0
ஆசைகள், பக்குவமடையாத மனிதரின் ஆசைகளைப் பார்க்கிலுஞ் செம்மையானவை. நிற்க, உன்னுடைய பக்குவ நிலையில், திவ்விய கன்னியுடன் நடத்தும் அதியற்புத மாய வாழ்க்கையை நாடி நிற்கின்றாய். உன் இச்சா பூர்த்திக்கு நான் தடையாக நில்லாமல், உன் வெற்றிக்கு வேறொரு வழியில் உதவுவதுதான் பொருந்தும். உன் இஷ்டம் நிறைவேற உன் சித்தமே உனக்குத் துணை செய்தல் வேண்டும். சித்த மார்க்கத் தின் அற்புத உண்மையை உணர்ந்து, அதன்படி சித்தத் தினை நெறிப்படுத்தல் வேண்டும்.'"
“ ‘புனிதரே! இதற்கிடையில் நான் தங்களுடைய போதனைகளை மறந்து விட வில்லை. துக்க-சமுதயம் நிரோத-மார்க்க ஆகிய சதுராதிய சத்தியங்கள்.'"
** கிளிப்பிள்ளையாகச் சில அடிப்படை உண்மை களை, வெளிப்படையாக உதடுகளில் உச்சரிப்பதால் யாது பயன்? உண்மைகளின் உண்மையினை உணரல் வேண்டும். இவ்வுலகிலே துன்பங்கள் நிறைந்திருக் கின்றன. அதனால் ஏற்படும் துக்க நிலை. சமுதய என் பது துன்பங்களை ஏற்படுத்தும் ஹேதுக்கள் எவை என் பதை உணர்தல். துன்பத்தைத் தரும் ஹேது இச்சையே தான்.ஒரிச்சையைத் திருப்தி செய்ய முயல, புதிய இச்சை களும் ஊறுகின்றன. ஈற்றில், இவ்விச்சைகள் முடிவடை யாது, இச்சைகளே எஞ்சுகின்றன. இச்சைகளை அழித்தோ, அல்லது அவற்றை விரோதித்தோ விலகு தலே நிரோத, இச்சைகளை அழிப்பதற்கான வழியை உணர்தல்மார்க்க. நான் போதித்த ஆரிய அஷ்டாங்க மார்க்கம் நினைவிலிருக்கிற தல்லவா ?’’
**ஆம், நற்காட்சி - நல்லூற்றம் - நல்வாய்மை - நற்செய்கை - நல்வாழ்க்கை - நல்லூக்கம் - நற்கடைப் பிடி - நல்லமைதி ஆகிய எட்டுமே ஆரிய அஷ்டாங்க
மார்க்கமாம்.'

O of G 183
*நன்று. தியானத்தில் நல்லமைதி பெற்று, சித் தத்தை உணர். வழி தானாகவே பிறக்கும்."
நந்த பிக்கு வணங்கினார்.
புத்தர் பிரகாசமாகப் புன்னகை பூத்தார்.
O
ஒளி
புத்தர் வாழ் விஹாரத்திலே ஏனையோருக்குப் புலப்படாத ஒரு மாற்றம். தன்னந்தனியாக நந்தபிக்கு வினுள் ஏற்பட்டு வரும் மாற்றம். சங்கத்திற் சேர்ந்தவர் களுக்கு விதிக்கப் பட்டிருந்த அத்தனை சீல விதி களையும் ஊக்கமாகவும் கெட்டியாகவும் கடைப்பிடித் தார். சித்தத்தைப் பரிசுத்தப்படுத்தும் நோக்கத்தில் மிகுந்த பிரயாசையுடன் தியானத்தில் மூழ்கத் தொடங் கினார். அவரிலே காணப்படும் புற மாற்றங்கள் பிரதக் ஜன பிக்குகள் சிலரைப் பேராச்சரியத்திலே திக்கித் திணறச் செய்தன. நந்த பிக்குவுக்குத் திவ்விய கன்னி யொருத்தியை விவாகஞ் செய்து வைக்கப் புத்தர் சம்மதந் தெரிவித்த அந்தச் செய்தி, அவர்களை வியப்பு ஆழியின் அலைகளில் அலைக் கழித்தது. அழுக்காற்றில் நுகும்பு விட்ட அஞ்ஞானம் வெடித்து இதழவிழ்க்கத் தொடங்கிற்று. அவர்கள் அடிக்கடி வந்து சிற்றின்ப விவகாரங்களைப் பற்றியும், திவ்விய கன்னியரின் திவ்விய அழகினைப் பற்றியும், பிக்குவிடம் "பிரஸ்தா பித்தார்கள். ஆரம்பத்தில், அவர்களுடைய அத்த கைய பேச்சுக்கள், அவருடைய செவிகளிலே தேன் மழையை வருவித்தன. அந்நேரங்களிற் புறாப்பாத நிறமுள்ள எழில் மிகு திவ்வியகன்னி ஒருத்தி, பாலாவி உடை போர்த்தி, மின்னும் அளகபாரத்திலே பாரிஜாத மலர் சூட்டி, கரத்தில் வெண் சாமரமேந்தி, ஆகாய

Page 105
in 184 எஸ். பொ. L}
மார்க்கத்திற் கீழே இறங்கிக் கொண்டிருப்பதான மாயா ஜாலக் காட்சிகள் விரியும். இந்தக் காட்சிகளை, சித்தத்தை ஒரு நிலைப்படுத்தித் தன் காரியத்தைச் சாதித்தல் வேண்டு மென்ற வெறி விழுங்கி விடும். வெறியின் அணங்காடல். அவரே சீலத்தினதும், சித்தத்தைச் சுத்தப் படுத்துவதினதும் உருவாக மாறத் தொடங்கினார். ஜனபத கல்யாணி ஏதோ பல பிறவி களுக்கு முன்னர் நடைபெற்ற ஒருநிகழ்ச்சியின் சாயலாக மறக்கப் பட்டே போனாள். பிக்குவின் உள்ளத்திற் பழையன கழிந்து, புதியன புகத் தொடங்கின. ஒவ்வோர் அணுவும் சாகாமலே செத்து, புதிய அணுக்கள் பிறக்காமலே பிறந்து, புதுக் கோலங் கொள்ளு கின்றது. சித்தத்தினை ஒரு நிலைப்படுத்தித் தியானத் தில் ஆழ ஆழ, அதிலேயே ஏற்படும் சுகத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் விநோத இன்பங் குதிருகின்றது. அந்நிலையில், வேறு எந்த நினைவுகளும், இச்சை களும் இல்லையேயான ஒரு வெறுமை. வெறுமை யென்றாலும், நிறைவின் நிறைவான வெறுமை. எந்த இலட்சியத்திற்காகக் கடின நோன்புகளை மேற் கொண்டோ மென்ற நினைவுகளே இதழ் இதழாக ஒடிந்து கழர, உடலின் இச்சைகள் துளி துளியாக மரிக்க, உடலிச்சை எழுச்சிகள் தழுவ முடியவே முடியாத புதிய வீரமொன்று அதன் சிதையிலே துளிர்த்து வளர, சீலமும்- தியானமும்- சித்தமுமே இலட்சியமாக, அதற்கு அப்பாலும் அப்பாலும் வேறெதுவுமே இல்லை யாக, ஊழின் பல பிறவிகளென்ற எல்லைகளின் அந்த ரங்க முடிச்சுகளைச் சிக்கவிழ்த்த திவ்விய நிலை வெகு வாக வெகுவாக வளர்ந்து வரும் நாளில்
நந்தபிக்கு அரஹத் நிலை எய்தினார்.

O 6G, 185
போதி
புத்திபூர்வமாக இழையும் சில நினைவுகள். பின்னியும்-பின்னாமலும், சேர்ந்தும்-தனித்தும், எல்லை யிட்ட வேலியைத் தகர்த்து வழி தேடுகின்றன. பாதங் களின் இயக்கமும் அலைவுமின்றி, இந்தப் பூமியைஅல்லது, அதன் வாழ்க்கைச் சக்கரத்தை-வலம் வருவ திற் சேரும் அனுபவம். ஆகாய மார்க்கத்தில், இந்திர சபைக்கு அன்று சென்றதிலும் பார்க்க மிக மிக எளிதாக இயங்க முடிகின்றது.
கபிலவஸ்து அரண்மனையிலும் பார்க்க நெடிது நெடிதாக, எழிலிக் கூரையைக் கிழித்து வளர்ந்திருக்கும் மலைகள். மலைகள்.அவை , வைரத்தகதகப்பில் ஒளிரும் பனிப் படிகங்களிற் கிரீடங்கள் புனைந்து கோலோச்சு கின்றன. ஆண்டான் யார்? அவன் அடிமைகள் untir? பனிக் கற்களின் ஏகம். நீர், உறைந்து திடமான ஒரு நிலை; ஒரு ஸ்திதி; ஒருபிறப்பு.புஷ்பாஞ்சலியிற் சிதறிய அலரி மலர்களாகப் பனிக் கட்டிகள். அவை உருகி, வெள்ளி நூல்கள் பல இழுத்து, பலவும் ஒன்றாகி, குமரி லாவண்யம் பெற்று, சிங்கமுகக் காலதரிலும் பென்னம் பெரும் பாறையிலிருந்து கீழே துள்ளிக் குதித்து.அருவி யின் இசையும்-கூத்தும்! தண்மையின் திரிசங்கு சுகத் திற் சுகிக்கும் அதன் நிலையும் அதன் ஸ்திதியும்.
விஹாரத்திலுள்ள, புறவுக் கூட்டத்தின் வசிப்பிட மாம் ஆலமரம், தளிரிலை தூக்கும் வெள்ளரச மரம்இத்தகைய பல நூறு இலட்சம் மரங்கள் செறிந்த காட்டின் வழியாக, மூப்பிலேமுற்றாமலும், இளமையிலே துள்ளாமலும், ஆறு ஓடுகின்றது. அதனையே தனது வண்ணமாக்கிக் கொண்ட ஒரு கோலம். பழுத்துக் கழன்ற இலைகள் உதிர்ந்து விழுந்த பூக்கள் ஒடிந்து விழுந்த

Page 106
古 186 6rsiv. Glum. [J
கிளைகள். வழியெல்லாம் தன்னை வந்தடையும் எதனையும் கழிக்காது, தன்னுடன் இழுத்துச் செல்லும் மண்மிசை வாழ்க்கை. முல்லைப் பயணம் மேற்கொண் டுள்ள ஆறு, எங்கே ஒடுகின்றது? கழனி நிலத்திற்கா? அல்லது, அப்பாலும் அப்பாலுமாகக் கடலுக்கா?
மரகதப் போர்வையிட்ட மருத நில வெளி. புழுதி வாழ்க்கையில் மண்ணைக் கிளறி, பாடு பட்டே வாழ்க்கை நடத்தும் மனிதப் பிரயாசையின் குடலை விளைச்சல்.அதன், நடுவில் நீல விதானத்தைப் பிம்பங் காட்டியவாறே, நிஷ்டையிலே தோன்றுங் குளம். தடாகத்தடியிலே உறைந்து கிடக்குஞ் சேற்றினை, அமைதியான தன் நீருடையால் மறைத்து வைத்திருக் கின்றது. கூந்தலுக்கு அழகு செய்யும் வண்ணம் அங் கொன்றும் இங்கொன்றுமாக இதழ் சிரிக்குந் தாமரைப் பூக்கள். முட்காம்புகளிற் குடை விரித்திருக்கும் தாமரை இலைகளில் ஒறுப்பாகச் சிந்திக் கிடக்கும் நீர்த்திவலை கள். தினகரன் கதிரில் நித்தில ஜாலம் காட்டும் அவை குளத்து நீரே!. அவற்றின் நிலை ; ஸ்திதி.
நரன் வழி தோன்றும் இச்சைகளிலும் பார்க்க எத்தனையோ கோடானு கோடி அலைகளைச் சுழித்து உருட்டும் சமுத்திரம். இராட்சத ஒதையெழுப்பி, அலை களைக் கரைகளுக்கு உதைத்து, பால் நுரைகள் கக்கும் ஆழியின் எல்லைகள் எவை? விழிப் புலத்திற்குச் சற்றுஞ் சிக்குப் படாது, அடிவானத்திற்கு அப்பாலும் அப்பாலும் விரிந்து பரந்து கிடக்கின்றது. விழிப் புலத்திற்கும் எட்டாத இடத்தில் உருவாகும் இவ்வலைகள் கரை தட்டியதும் மரிக்கின்றனவா? அழிவு உண்டானால் பிறப்புமுண்டு.இத்தனை அனந்தகோடி அலைகள் ஏன் பிறக்க வேண்டும்?.கடல் நீரின் நிலை; ஸ்திதி. ய்ாலை வனத்தை வஞ்சித்த நீர் இங்கே உபரியாகவும்

O sífG 187
எல்லையற்றதாகவுங் கிடந்தும்; குடிப்பதற்கு உதவாது, உப்புக் கரித்து.
பனிக் கட்டிகள்;
அருவி ,
குளம்;
கடல்;
எல்லாம் நீரே.
ஒன்றென்றாலும் ஒன்றல்ல, பலவென்றாலும் tué666)...
நீரின் வாழ்க்கைச் சக்கரம் புத்தி பூர்வமாகப் பிடிமானத்திற்குள்ளே சிக்குப்படுகின்றது,
திவ்வியகன்னியராக விண்வெளியில் உலவும் முகிற் கூட்டங்கள். கண்ணுக்குப் புலப்படாமல், காற்றிலும் இலேசாக, வாயுவாக உலையும் நீர். நிர்மலமான நீர்.
முகில், நீரே! ஆனால் வாயு, அருவி நீரே! ஆனால் திரவம்.
பனிக்கட்டி நீரே! ஆனால் திடம். எல்லாமே ஒன்று. ஆனாலும், ஒன்றல்ல.
இருப்பினும் எல்லாமே நீர்; நீருடைய வாழ்க்கைச் சக்கரத்தின் சில ஸ்திதிகள்.
ஒரு நீர்த்துளி இப்பொழுதிருக்கும் நிலை சாசுவத மானதா? இல்லையென்றால்.அதன் முந்திய ஸ்திதி என்ன ? அடுத்த ஸ்திதி என்ன? எது பழைய நிலை; எது புதிய நிலை? மழைத் திவலைகளாக மண்ணிற்குத் திரும்பும் நீரா? அல்லது, நீராவியாக விண்ணேகும் நீரா? எது கழிகின்றது? எது புகுகின்றது? எது மரபு? எது வேலி? எது வழி? போயாதினத் தத்துவமா.

Page 107
188 எஸ். பொ. (
சித்தத்தை உணராது சுழலும் வாழ்க்கைச் சக்கரத்தின் அனந்தகோடி பற்களுள் ஒன்று.
புரியாதன யாவுமே புரிகின்றன. சித்த பரிசுத்தம் பெற்று, சீல வாழ்க்கை தழுவி, சங்கத்தின் பூரண அங்கத்துவமே நிறைத்து, அரஹத் நிலையடைந்த நந்தபிக்கு நிறைவின் நிறைவுடன் நடந்து கொண்டிருக்கின்றார். புரிந்தும்-புரியாமலும், சத்தும்- அசத்துமாக, ஒயாமலும் தரிக்காமலுஞ் சுழலுஞ் சம்சாரச் சக்கரத்திலிருந்து விடுதலை பெற்றவராக, அதன் நிறைவே வியாபிக்க, துன்பமே அற்ற தூய நிலையில் நடக்கின்றார். அவருக் கென்றிருக்கும் இச்சா பந்தமும், லெளகீகச் சொத்தும் சீவர ஆடையும், ஒரு பிக்ஷா பாத்திரமுமே. , .
நந்த பிக்ஷா, தானமேற்றுக் கொள்வதற்காகப் பிக்ஷாபாத்திரத்துடன் நடந்து கொண்டேயிருக் கின்றார் . . . 女
 

சுவிசேஷம்
சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை யும் போதனைகளையும் உள்ளடக்கியுள்ளது. மத் தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நால் வரும் தனித்தனியே எழுதின நான்கு சுவிசேஷங் கள் புதிய ஏற்பாட்டிற் காணப்படுகின்றன. அவை ஒன்றுடன் ஒன்று பல இடங்களில் ஒத்தும், சில இடங்களில் மாறுபட்டுங் காணப்படுகின்றன. நான் கினையும் ஒப்பு நோக்கிப் படித்து, “முள் கதைக்கு இறுக்கந் தரக்கூடிய பகுதிகளை நான்கு சுவிசேஷங் களிலுமிருந்து எடுத்து இணைத்துள்ளேன். தடித்த எழுத்துக்களிலும், பெரிய எழுத்துக்களிலும் இடம் பெறும் பகுதிகள் சுவிசேஷங்களிலிருந்து நேரடியாக எடுத்தவை. வேறு இடங்களிலும் அவசியங் கருதி சுவிசேஷ வசனங்கள் சில கையாளப்பட்டுள்ளன.

Page 108
நள்ளிரவை எகத்தாளித்தும், நத்தையாக இழு பட்டு ஊரும் நீளிரவு. பிரதான ஆசாரியரும். வேதபார
 

(p6ir 191 O.
கரும்-மூப்பரும் அமிழ்ந்து கிடக்கும் அஞ்ஞானத்தையே உறையிடுங் காரிருள். திக்குத் திசையெல்லாஞ் சங்கம மாகிய அந்த நிசியின் இருள் வனத்தில், சீமோன் பேதுரு பசை உலராத ஒரு நம்பிக்கையில் ஒட்டுண்டு நடக்கின்றான். "மெய்யாகவே, மேய்ப்போன் நம்மை விட்டுப் பிரியும் காலம் வந்து விட்டதா?’ என்ற கடாவிற் கருத் தரித்து, நிமை அசைப்பு நேரத்தில் விளைந்து, பிரசவமான அமானுஷ்ய சக்தி அவனை இயக்குகின்றது. பாதங்களை விறைக்கச் செய்யுங் குளிரும், விரல்களைப் பொசுக்கிடும் சுடுமணற் காடும் அவனுக்கு அந்நிய மல்ல. ஆயனின் விசுவாசக் கதகதப்பும், உபதேசத் திரு நீழலும் அளிக்கும் அரணைக் கெட்டியாகவே நம்பிய தினால், வெட்ப தட்ப உபாதித்தல்களென்ற மாம்ஸ் ஆக்கினைகள் அவனைத் தாக்கியதில்லை. விந்தை யிலும் விந்தையாக, இன்று மட்டுமே மனப் புழுதியில், உலைவுகள் சல்லிவேர் தள்ளி முளைக்க ஏதுவென்ன? அநிசமாக நீண்டு மதர்த்து, பஸ்காவைப் புசித்த இரவு இடறல்களின் செங்குத்து மலையாக உயர்கின்றதா? பேதுருவின் மனச் சரிவுகளில் அலை விளிம்பு சுழற்றும் எண்ணச் சுழிகள்.இருப்பினும், உலகினை இரட்சிக்கத் தோன்றிய அருள் ஜோதி வழி நடத்துகின்றது என்ற பின்னமற்ற நம்பிக்கை உந்தி இயக்க, பேதுருவின் கால்கள், உடற் பாரத்தின் சுமையை இழுத்துச் செல்கின்றன.
நயனத்தின் கதவுகளாம் இமைகளை அகல விரித்து, கருவிழிகளை அதன் நிலையத்திற் பொறித்துப் பார்க் கும் பொழுதுதான் இரட்சகர் இயேசு கைதாகிச் செல் வது மங்கலாகத் தெரிகின்றது. கொள்ளைக் கூட்டம் ஒன்றின் நடமாட்டச் சாயலை நியாயமாகக் கற்பிக்குந் தீவர்த்திகளிலிருந்து சிதறும் ஒளிச் சிதர்கள். பிரதான ஆசாரியர்-பரிசேயர் என்பவரால் அனுப்பப்பட்ட ஊழி யக்காரரும் போர்ச் சேவகரும் வெற்றி மமதையின்

Page 109
192 6T.6 Gunt.
உபரியிலே எழுப்பும் அகங்காரக் கூக்குரல் பேதுருவின் செவிப் பறைகளை மோதிக் குடைகின்றது.
கர்த்தரின் கருணையை அறியாத அந்தக் கர்விகள் மொய் பிரதான ஆசாரியரின் வீட்டிற்குள் நுழைகின்றது.
அலைச் சென்னிகளால் அள்ளி எற்றப்படும் மீன் படகாக, சீமோனின் உள்ளம் கடந்த கால நினைவுக் கல்லைகளில் அலைக்கழிக்கப்படுகின்றது.
முதலாம் நினைவு முறி
கலிலேயாக் கடல், மீன்பிடித்தலே அவன் ஜீவனம். அன்றும், என்றும் போலவே தன் சகோதர னான அந்திரேயாவுடன் கடலில் வலைபோட்டு, அதிலே மீன் படும்வரை அவன் காத்திருந்தான். அப்பொழுது சர்வேசுவர சுதனின் அழைப்புக் கிட்டியது.
"என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்கு
வேன்.
குரல் வந்த திக்கிற் சென்னி திருப்பிப் பார்த்தான். தசை ஒறுப்பில் மெலிந்த உருவம்; கடற் காற்றில் அசைந்து தோள்களிற் புரளும் கேசம் எளிமையின் சமாசமான குறுந்தாடி அருளை உமிழும் அக்கண் களில், மனித மனங்களைத் தன் வயப்படுத்துங் காந்தப் பொறிகள்; தேவ வாக்குகளை உச்சரித்துக் கவர்ச்சி பெற்ற உதடுகள். அக்கணமே, அவரால் அவன் வசீகரிக்கப்பட்டான். அன்று அங்கேயே அவரின் சீடராகப் பின் தொடர்ந்த பேதுரு இன்று வரை.

O முள் 193 C இரண்டாம் நினைவு முறி
பேதுரு. அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பார்த்தலமேயு, மத்தேயு, தோமாசு, சின்ன யாக்கோபு, செலோத்தே சீமோன் தயேயு, இஸ்காரி யோத் யூதாஸ் ஆகிய பன்னிரு சீடர்களுடன் அமர்ந்து, இயேசு தான் ஏற்கனவே தேர்ந்தெடுத்த இல்லத்தில், புளிப் பில்லா அப்பப் பண்டிகையான பஸ்காவைக் கொண்டாடினார். தேவ குமாரன் தீர்க்கதரிசனத்தி னாலே தன் ஊழினை அறிந்தார். தேவனுடைய இராஜ்ஜியம் வருமளவும் புசிக்கவோ, பானம் பண்ண வோ, மாட்டே னென்று மெய்யுரைத்து, அப்பத்தைப் பிட்டுத் தனது சரீரமாகவும், பாத்திரத்திலிருந்த பானத்தைத் தனது உதிரமாகவும் சீஷரிடம் பங்கிட்டார். அவ்வேளையில், இயேசுவின் கண்கள் தீப காந்தியுடன் ஒளிர்ந்தன. அவர் தெளிவாகவும் - மெய்யாகவும்உறுதியாகவும் அறுதியிட்டார்:
‘என்னைக் காட்டிக் கொடுக்கிறவனு டைய கை என்னுடனே கூடப் பத்தி யிலிருக்கிறது." யூதாஸ் அப்பொழுது நயமாகக் கேட்டான்:
y Breornr?'
அப்பொழுதுகூட இயேசு கிறிஸ்துவுக்கே தெரிந் திருந்த உண்மை.
மூன்றாம் நினைவு முறி
ஒலிவமலையும், கெதரோன் ஆறும் இயேசு
பெருமான் அமைதியுடன் சஞ்சரிக்கும் இடங்கள், 18-ܩܽܘ.

Page 110
O 94 எஸ். பொ. L,
கெதரோன் மருங்கிலுள்ள ஒரு தோட்டத்தை அடைந்
தார். அதனை அடைந்ததும் தன் கூட வந்திருந்த
சீஷரை நோக்கிச் சொன்னார்:
*நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள்."
அவர்களை அங்கு விடுத்து, கல்லெறி தூரம் அப்புறம் போய், முழங்கால் படியிட்டு ஜெபம் பண் 6oofsor IT if:
"பிதாவே! உமக்குச் சித்தமானால் இந் தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கும் படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல; உம்முடைய சித் தத்தின்படியே ஆகக் கடவது."
அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந் துளிகளாய்த் தரையில் விழுந்தது.
ஜெபம் முடிந்ததும் சீஷரிடத்தில் வந்தார். அவர் கள் துக்கத்தினால் நித்திரை பண்ணுகிறதைக் கண்டு கேட்டார்:
"நீங்கள் நித்திரை பண்ணுகிறதென்னை? எழுந்து ஜெபம் பண்ணுங்கள்?
அவ்வாறு தேவ குமாரன் பேசுகையில், ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிரு. சீஷருள் ஒருவனான யூதாஸ் என்பவன் முன்னே வந்து, இயேசுவை முத்தஞ் செய்யும்படி அவரிடத்திற் சேர்ந் தான். இயேசு அவனை நோக்கிக் கேட்டார்:

(p6ir 195
யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷ குமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய்?
பின்பு இயேசு தனக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும், தேவாலயத்துச் சேனைத் தலைவர் களையும், மூப்பர்களையும் நோக்கி உசாவினார்:
‘ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறது போல, நீங்கள் பட்டயங் களையும் தடிகளையும் எடுத்துப் புறப் பட்டு வந்தீர்களே?"
அக்கேள்வியிலே கூட தேவனினால் அளிக்கப்பட்ட அதிகாரந் தொனித்தது.
சிந்தனைக் கல்லைகளில் அலைத்துலைக்கப் பட்டே நடந்த பேதுரு பிரதான ஆசாரியருடைய வீட்டு வாசலை அடைந்து விட்டதை உணர்கின்றான்.
"நான் உம்மோடே மரிக்க வேண்டியிருந்தாலும் உம்மை மறுதலிக்க மாட்டேன்’ என்று கொடுத்த பிரதி யுத்தரத்தை நிறைவேற்றும் ஆவேசம் பொங்க, ஆபத்தின் பயப் பிராந்தியை அரவச் செட்டையாகக் களைந்து, கெட்டியான உறுதியில் விளைந்த வைராக் கியத்துடன் அவன் வாசலைத் தாண்டுகின்றான். தலைப்பாகையின் விளிம்பு முக்காடன்ன முகத்தின் ஓரங்களை மறைத்திருந்தாலும், வாசல் காத்து நின்ற வேலைக்காரி பேதுருவை அடையாளங் கண்டவளாக, "நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா?" என்று கேட்கிறாள். ஏனையோரின் அவதானம் தன் மீது

Page 111
196 6T6ňu. Golur.
திரும்புவதற்கு முன்னர், "நான் அல்ல’ என்ற வார்த்தை
களை உதிர விட்டு, மக்களுக்காகப் பாடுபட்டு, ஆக்கினைக்குள்ளாயிருக்கிற இயேசு நாதரின் திவ்விய தரிசனம் பெறுவதைத் தவிர, வேறெவ்வித சிந்தையு மற்றவனாக அவளைக் கடந்து செல்கின்றான்.
அது. குளிர்காலத்தின் கடை ஜாம அந்தலை. என்புக் குள்ளிருக்குங் குழலட்டையையுந் திடமாக உறைக்குஞ் சீதளம். களிப்பின் எக்காளம் கலகலக்க, ஊழியக்காரரும், சேவகரும் கரி நெருப்பு உண்டாக்கிக் குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அக்கூட்டத்தினரு டன் ஒருவனாக, தன்னை இனங்காட்டிக் கொள்ளாது, பேதுரு கலந்து கொள்ளுகின்றான். இங்கிருந்து இயேசுவைப் பார்க்க அவனால் ஏலும். என்றுமில்லாத பொலிவுடனும், தேஜஸ"டதும் இரட்சகரின் முகம் பிரகா சிக்கின்றது. பேதுருவின் மனத்தில் நிறைவு.
"ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப் பட்டவர்."
அகம்பாவத்தினதும், அஞ்ஞானத்தினதும் உறைவிட மான பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவ ருடைய சீஷரைக் குறித்தும், போதகத்தைக் குறித்துங் கடூரங் கொப்பளிக்குங் குரலில் உசுப்புகிறான். அந்த மூர்க்கனுடைய கேள்விக்கு மொழியும் பிரதியுத்தரத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் பேதுரு உன்னிப்பாகவே, சீஷ விசுவாசத்துடன் கேட்டுக் கொள்ளுகிறான்.
*நான் வெளியரங்கமாய் உலகத்துடன் பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும், யூதர்களெல்லாருங் கூடிவருகிற தேவா லயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித் தேன்; அந்தரங்கத்தில் நான் ஒன்றும் பேசியதில்லை. நீர் என்னிடத்தில் விசா ரிக்க வேண்டியதென்னை? நான் சொன்ன

(p6ir 197
வைகளைக் கேட்டவர்களிடத்தில் விசா ரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே!" அவ்வார்த்தைகளில் ஆணவம் கவியவில்லை; தெளிவு துலங்கிற்று. பரிகாசம் அணுவுமில்லை; பரிசுத்தம் நிறைந்திருந்தது. இவற்றிற்கும் மேலாக, தன்னைச் சருவேசுவரனின் பிரியங்களுக்கு ஒப்புக் கொடுத்த கெட்டியான உறுதியைக் குழைத்துத் தொனிக்கிறது. அவருடைய மகிமையை உணராது, அண்மையில் நின்ற மொழுக்கனான சேவகனொருவன், அஞ்ஞானத் தடத்தில் மூர்க்கம் மிக்கவனாய், "இப்படியா உத்திரவு சொல்லுகிறது?’ என்று இயேசுவின் கன்னத்தில் ஓர் அறை அறைகிறான்.
'உமது கொடி உடல் எவ்வளவு வைராக்கியத்துடன் அதனைத் தாங்கிக் கொண்டது 1"
அக்கொடியவனை நோக்கி இயேசு சொன்னார் : "நான் தகாத விதமாய்ப் பேசினதுண்டா னால், தகாததை ஒப்புவி; நான் தகுதி யாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய்? இந்தப் பதிலின் ஒவ்வொரு வார்த்தையையும் நழுவ விடாது கிரகிக்கும் பேதுருவின் மனம் மலைவு கொள்ளு கிறது. சிக்கலின் அந்தலையைக் காண இயலாத சிக்கலின் சிக்கல்கள்! ஒன்றின் தொடராக இன் னொன்று. ஒவ்வொன்றும் நிகழ்ந்ததா, மனப் பிராந் தியா என்று தெளிவடையும் அவகாசந் தராத துகட் பொழுது நேரத்திற்குள் மின்னற் புழுக்களன்ன மறை கின்றன.சித்திர விசித்திர நிகழ்ச்சிகள்.சிக்கலான உவமைகளைப் புரிந்து கொண்ட சீமோனால்.மலைப் பிரசங்கத்தின்போது இயேசு கிறிஸ்துநாதர் செய்த போதனைகளுள் ஒன்று, குகைக்குள் அகப்பட்ட ஒலியாக எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது.

Page 112
198 எஸ். பொ. [)
*நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத் தையும் திருப்பிக் கொடு." *இந்த அரிய நற்போதனையை நல்கியவர், ஏன் சேவகனுக்கு-அந்த அஞ்ஞான மூர்க்கனுக்கு-நியாயங் கற்பிக்கிறார் ? அவன் தீமையல்ல, தீமையின் கருவி என்பதினாலா ?”
பஸ்கா இரவினைப் போலவே, பேதுருவின் ஐயங் களும் நீண்டு.
அப்பொழுது அவனுக்குச் சமீபமாகச் குளிர் காய்ந்து கொண்டிருந்த சிலர், பேதுருவின் மெளனத்தையுஞ் சிந்தனையையும் அவதானித்து, "நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா?’ எனக் கேட்கிறார்கள்.
சிந்தனைச் சங்கிலி அற, "நான் அல்ல" என்று பேதுரு மறுதலிக்கிறான். இயேசு என்ற நித்திய ஆண் டவர் மனித யாக்கையுடன் அல்லற்படும் போராட்டத் தில் நிலை குத்திய ஏக சிந்தையனாய், தன்னையே மறக்கிறான்.
இன்னொருவன் பேதுருவை மிகவும் உன்னிப்பாகப் பார்க்கிறான். இவன் பேதுருவாற் காதறுக்கப்பட்ட மல்குஸ் என்பானின் இனத்தவனாவன். அவனுடைய விழிகளிலே கொலை ஆவேசம் துளிர்க்கின்றது. "நீயும் அவர்களுள் ஒருவன்’ என்கிறான்.
இயேசு கிறிஸ்துவைக் கட்டிப் பிணைத்து, பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அனுப்புவது தெரிகிறது.யோசிக்கும் அவகாசமில்லை. "மனுஷனே,
சொல்லுகிறதை அறியேன்” என்கிறான் பேதுரு.

சேவல் கூவுகிறது! அப்போது, கர்த்தர் பேதுருவைத் திரும்பிப் பார்க்கிறார்.
பேதுருவுக்கு ஞான விழிப்பு ஏற்படுகின்றது.
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் ஆறுதலடைவார்கள்." -இவ்வாறு போதித்த நசரேயன் கேவலமாக இழுத்துச் செல்லப்படுங் காட்சி பேதுருவின் நெஞ்சைப் பிளக்கின்றது.
★
இன்னொரு நினைவு முறி
இதே பஸ்கா இரவு. பன்னிரு சீஷரும் ஒலிவ மலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அப் பொழுது இயேசு அவர்களை நோக்கிச் சொன்னார்:
“மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிற படி, இந்த இராத்திரியிலே நீங்களெல் லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்
கள்." Yს.
பேதுரு அவருக்குப் பிரத்தியுத்தரமாக, “உமது கிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடை யேன்" என்றான்.
இயேசு அவனை நோக்கிச் சொன்னார்:

Page 113
200 Gr6ño. Guar. Ing
"பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிற தற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிற தை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
O
இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்று தரம் மறுதலிப் Ljsti. . . . .
இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்று தரம் மறுதலிப்பாய்.
இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்று தரம் மறுதலிப்பாய்.
அட்ட திக்குகளிலுமிருந்து இந்த வாக்கியத்தின் பூதாகாரமான எதிரொலிகள் பேதுருவின் கழுத்தினை நெருக்குகின்றன. வெறும் ஒலியலைகள் உயிரின் மூச்சினையே திருகும் பிரணாவஸ்தை.
மனம் மெழுகாக உருகி நெகிழ அழுகின்றான்.
கறை கழுவப்படும்வரை சீமோன் பேதுரு விசும்பி விசும்பி அழுகின்றான்.
குளிரிற் சீதளித்த அவ்வைகறையை நடுங்க வைக்கும்.
அழு குரல்.
*ஆண்டவரே! நான் பாவி.பாவி! என்னை மன்னித் தருளும் கர்த்தரே! மாயமாகிய பரிசேயருடைய

O Gypsir 201
புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி சொன்னீர்களே! உங்களுடைய உவமையை நான் புரிந்து கொள்ளவில்லையா? மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கின்றவன், தேவதூதர் முன்பாக மறுதலிக்கப் படுவான் என்று சொன்னீர்களே! மனுஷரின் முன்பாக மட்டுமல்ல, தங்களின் முன்பாகவும் நான் ஆண்டவரை மறுதலித்த பாவி..!" என்று மனந் திறந்து அழுது பிரலாபிக்கலானான்.
விழியூற்றுகளிலிருந்து பிரளயகாலத்து வெள்ளம். தன் மாம்ஸப் பலவீனத்தின் மீது எழுந்த வெறுப்பு, தன்மீதே அகண்டிதமான வெறுப்பினை வளர்க்கின்றது. மறைவாகக் கிடந்த பட்டயத்தை உருவுகிறான் பேதுரு.
அதன் விளிம்பிலுள்ள இலேசான இரத்தக் கறை மனத்தைத் தாக்குகிறது.
இந்த இரத்தக் கறைமீது மோதிச் சிதறும் நினைவு
முறி ஒன்று, கடைசிச் சொட்டு நெய்யை உறிஞ்சும். வேகத்துடன்.
அந்த நினைவு முறி
பிரதான ஆசாரியர்களுடனும், வேதபாரகருட னும், தேவாலயச் சேனைத் தலைவர்களுடனும் வந்த ஜனங்களைக் கண்டதும், பேதுரு பட்டயத்தை உருவி, ஒருவனுடைய காதினை அறுத்த பொழுது இயேசு சொன்னார்:
*அதனை உறையிலே போடு பட்ட யத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்

Page 114
"வேத வாக்கியங் கள் எப்படி நிறை வேறும்?"
*வேத வாக்கி யங்கள் எப்படி நிறைவேறும்?
‘வேத வாக் கியங்கள் எப் படி நிறைவே AJDJ dio?”
 

முள் m 203
தால் மடிந்து போவார்கள். நான் இப் பொழுது என் பிதாவை வேண்டிக் கொண்டால், அவர் பன்னிரண்டு லேகி யோனுக்கு அதிகமான தரதரை என்னி டம் அனுப்ப மாட்டாரென்று நினைக் கிறாயா? அப்படிச் செய்வேனானால் இவ்விதமாகச் சம்பவிக்க வேண்டும் என் கிற தேவ வாக்கியங்கள் எப்படி நிறை வேறும்?"
女
*வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும்?
*வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும்?"
*வேத வாக்கியங்கள் எப்படி நிறை வேறும்?"
ஒவ்வொரு தடவையும் பேதுருவின் மனத்தை உறுத்திக் கொண்டிருந்த முட்களைப் பிடுங்கி, இயேசு கிறிஸ்து தம்முடைய முள் முடியிலே சூட்டிக் கொண்டதைப் போன்ற சுமைக் குறை.

Page 115
D 204 எஸ். பொ. LT
* சேவல் கூவுவதற்கு முன்பு, மூன்று தரம் பேதுருவாகிய நான், இயேசுவை மறுதலிக்க வேண்டும் என்பது கர்த்தர் வாக்கு. நான் மறுதலித்தேனா? அவரு டைய வாக்கு நிறைவேறிற்று கர்த்தரின் வாக்கு நிறைவேறிற்று."
புலரிக் காலத்துக் கீழ்வானில் ஊமை ஒளி படரு கிறது.
சீமோன் பேதுருவின் உள்ளத்திலே தெளிவும் அமைதியும் விரிகின்றன. x

ஒரு மதிப்பீடு
-முனைவர் फा6bl6f இளந்திரையன்
தமிழ் மொழியின் எழுத்திலக்கியம் சுமார் 3000 ஆண்டு வரலாறு உடையது. தமிழ்ச் சிறுகதை இலக் கியத்தின் வரலாறோ ஒரு நூறு ஆண்டுக்கும் குறைவு. ஆனாலும் தமிழ்ச் சிறுகதை மிகுந்த வளமும் தரமும் பெற்று விளங்குகிறது. தமிழில் வெளிவந்துள்ள பல நூறு சிறுகதைத் தொகுதிகளுள் ஒவ்வொரு தொகுதி யிலும் குறைந்தது ஒரு கதையாவது, ஏதாவது ஒரு வகையில் சிறப்புடையதாகவே இருக்கிறது. இத்தகைய சிறப்பைப் பெற்றுள்ள தமிழ்ச் சிறுகதையின் வரலாற் றிலே, இந்திய நாட்டின் புதுமைப்பித்தனும் ஈழ நாட்டின் எஸ். பொன்னுத்துரையும் தனித்து ஓங்கி நிற்கிறார்கள். முன்பு இல்லாத ஓர் ஆழத்தையும் புதுமையையும் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்குத் தந்தவர் புதுமைப்பித்தன் என்றால், அந்த இலக் கியத்துக்கு ஒரு கனிவான செறிவையும் மெருகையும் தந்தவர் "எஸ். பொ' என்று சொல்லவேண்டும்.
வீழாத வீ சிறு கதை, நாவல், திறனாய்வு, நாடகம், உரை வீச்சு முதலான பல துறைகளில் திறம்பட எழுதியுள்ள பொன்னுத்துரை, இருநூற்றுக்கு மேற்பட்ட சிறுகதை

Page 116
206 Frtssof
களை எழுதியிருப்பினும் அவருடைய கதைகளின் தொகுதி (**வீ' என்னும்) ஒன்றே ஒன்றுதான் இது வரை வெளிவந்துள்ளது. இந்தத் தொகுப்பில் தேர், கணை, அணி, வேலி, ஈரா, நெறி, விலை, மறு, வீ, சுவை, சிதை, வீடு, முள் என்னும் பதின்மூன்று கதைகள் இடம் பெற்றுள்ளன-இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் தமிழ்மொழியின் இலக்கிய ஆற்றலை வெவ்வேறு கோணத்தில் புலப்படுத்துகின்றன. அதன் மூலம், இந்தத் தொகுதிக்குத் தமிழ்ச் சிறுகதைப் புத்தகங்களுக்குள்ளேயே ஒரு தலைமையான இடம் கிடைத்துள்ளது.
இந்தச் சிறுகதைத் தொகுதியை மதிப்பீடு செய்த திறனாய்வாளர், இரசிகமணி கனகசெந்திநாதன், **ஈழத்தில் நடைபெறும்சிறுகதைஇலக்கியமுயற்சிகளின் வண்ணத்தையும் வகையையும் அறிய விரும்பும் தென்ன கத்தாருக்கு 'வீ' யைக் கலாசாரத் தூதுவனாக அனுப்பி வைக்கலாம்' என்கிறார். இதிலுள்ள பல கதைகளை நயந்து பாராட்டும் முனைவர் சாலை இளந்திரையன், பொன்னுத்துரையின் "தேர்' என்னும் கதைக்கு இணையான ஒரு சிறுகதை இதுவரை தமிழில் எழுதப்படவில்லை என்று விதந்து ஒதுகிறார்.
பல முறை படித்துப் படித்து மகிழத்தக்க சிறு கதை கள் தமிழிலே இல்லாமல் இல்லை. ஆனால், பதின் மூன்றே கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் அப்படிப் பட்ட கதைகள் பெரும்பான்மையாக இருக் கின்றன என்பதே பொன்னுத்துரையின் பெரிய இலக்கிய வெற்றி, குறிப்பாக, தேர், மறு, வேலி, விலை என்னும் கதைகள், படிக்கும் தோறும், புதுப் புதிய பொருட் குருத்துக்களை விரிக்கின்றன.
புத்தகம் என்பது புத்தம் புதியகம்
போதுதொறும் புதிதாகும்-அதை

L) ஒரு மதிப்பீடு 207 o
எத்தனையோ தரம் பேடித் திட்டபின்
இத்தரமும் புதிதாகும்
என்னும் புத்தக இலக்கணத்துக்கு, இதில் உள்ள ஒவ்வொரு கதையும் சீரிய இலக்கியமாக விளங்குகிறது.
பின்புலச் சித்திரம்
எந்த இலக்கியமும் மனித வாழ்க்கையைத் தான் சித்திரிக்கிறது; சிறு கதை இலக்கியம், தனக்கே உரிய கலை வரம்புகளுக்கு உட்பட்டு நின்று அதைச் சித்திரிக் கிறது. "வீ யில் உள்ள எந்த ஒரு கதையைப் படிக்கும் போதும், **இவ்வளவு துல்லியமாக, வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் ஒரு சிறு கதைக்குள் இவரால் எப்படிக் கொண்டுவர முடிந்தது?" என்கிற வியப்பே நமக்கு உண்டாகிறது. அவ்வளவு சீராக அளந்து கதைப் பொருளையும் சுற்றுச் சூழலையும் கையாள்கிறார் பொன்னுத்துரை.
கல்வியே யாழ்ப்பாணத் தமிழர்களின் முதன்மை யான தொழில். படித்துப் பட்டம் பெற்றுக் கொழும்பு சென்று அரசு அலுவல் பார்ப்பதுதான் அவர்களுடைய வாழ்வின் முக்கியமான நிகழ்ச்சி. இந்தச் சமுதாய உண்மையைப் பின்னணியாக்கியே தேர் என்னும் கதை படைக்கப்படுகிறது. எனவே, யாழ்ப்பாணம், கொழும்பு என்னும் இடங்களும் இவைகளை இணைக்கும் யாழ் தேவி, உத்தரதேவி என்னும் இரண்டுரெயில்வண்டிகளும் கதையில் மீண்டும் மீண்டும் வருகின்றன. இவைகளின் ஊடே யாழ்ப்பாணத்துத் தமிழர் வீட்டுப் பழக்கவழக் கங்கள் சித்திரிக்கப்படுகின்றன. திருமணத்துக்குத் தயா ராக இருக்கும் பத்மா, காலையில் முதற்காரியமாக வீட்டு முற்றத்தைக் கூட்டி, சாணகத் தண்ணிர் தெளித்து முடிக்கின்றாள். . . கறிச் சட்டிகளை அடுக் களைக்கு வெளியே, இடப் பக்கமாக உள்ள செவ்விள

Page 117
208 FFTsSéof
நீர்க் கன்றடியிற் பரப்பி வைத்து, பொச்சு மட்டையால் அவள் அவைகளைக் கழுவுவது கூட ஆசிரியரின் பேனாவுக்குத் தப்பவில்லை. ..!
வருடப் பிறப்பன்று காலையில் கடைக்குப் புறப் :பட்ட ஆறுமுகம், வழியிலே ஒரு டிக் கடைக்காரனை யும் அய்யம்பிள்ளை என்பவரையும் சந்திக்கிறார். இவர்கள் இருவரும் கதைப்பண்புக்குத் துணை செய்வ தோடு, கதை நடைபெறும் களமாகிய யாழ்ப்பாணத்து வாழ்க்கையையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்து கிறார்கள்.
* வேலி' என்னும் கதை ஒரு விவசாயியைப் பற்றிய தாகையால், வயல்வெளி, பயிரேற்றம், அறுவடை, வெள்ளச்சேதம் முதலிய செய்திகளால் இக்கதை நிரப்பப்பட்டுள்ளது. துணைப் பாத்திரங்கள் கூட, அந்த வாழ்வோடு தொடர்புடைய இயல்புகளோடு படைக்கப்படுகிறார்கள். இதிலே வரும் நன்றி கெட்டவனான சொக்கனின் பாத்திரம், ஒரளவு வசதியும் நல்லுள்ளமும் கொண்ட விவசாயிகளின் வீட்டில் ஒண்டிக் கொள்ளும் அநாதைகளின் வரலாற்றைச் சொல்லுகிறது. ‘‘அற்றாரைத் தேறுதல் ஒம்புக; மற்றவர் பற்றிலர்,- நாணார் பழி' என்னும் குறளையும் நினைவூட்டுகிறது. இவனைக் கதையில் இணைத்ததன் மூலம், விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வு முழுமையாகச் சித்திரிக்கப்பட்ட ஒரு பொலிவு இந்தக் கதைக்குக் கிடைக்கிறது. s
“முள்’ என்னும் கதை இயேசுகிறிஸ்துவின் வாழ் வில் நடந்த, ஒரு நிகழ்ச்சியைச் சித்திரம் செய்கிறது. ஒரே இரவில் தன் போதகராகிய இயேசுவுக்கும் தனக்கும் தொடர்பே இல்லை என்று மூன்று முறை மறுதலிக்கிறான் சீடருள் ஒருவனான பேதுரு. மும்

0 ஒரு மதிப்பீடு 209 O
முறை மறுதலித்த பின்பே, ** சேவல் கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்' என்று இயேசு சொன்னது அவன் நெஞ்சில் படுகிறது. உடனேயே அவனுடைய உள்ளம் அவனைக் குற்றம் சாட்டி வதைக்கத் தொடங்கி விடுகிறது.
இயேசுவுக்கு மிக உண்மையான சீடன் அவன்,
அவனுடைய உள்ளத்தில் தைத்த இந்த வேதனை முள்
எவ்வாறு மெல்ல மெல்ல. அசைத்து வெளியே எடுக்கப்
படுகிறது என்பதை விவரிப்பதே “முள்' .
இந்தக் கதை முழுவதும், ஆசிரியரின் குரலையும் மிஞ்சிக் கொண்டு பைபிளில் உள்ள வசனங்களே இடம் பெறுகின்றன. அவைகள், பேதுருவின் உள்ளத் தில் எழுந்து எழுந்து விரிவதைக் காட்டுவது போல, ஒவ்வொன்றும், ஒன்றை விட ஒன்று பெரிதான மூன்று வேறு வேறு அளவுகளிலான எழுத்துக்களில் அச்சிடப் பட்டுள்ளன. இவைகளைப் படிக்கப் படிக்க, பார்க்கப் பார்க்க, இந்தக் கதையே பைபிளின் பக்கங்களில் நுழைந்து நுழைந்து வருவது போன்ற ஓர் உணர்ச்சி நமக்கு ஏற்படுகிறது.
இவைகளைப்போலவே,-சிவனையும் பார்வதியை -யும் பற்றிப் படரும் ** சிதை" ஏற்கனவே நமக்குக் கற் பித்துச் சொல்லப்பட்டுள்ள கயிலையங்கிரியைத் தத்ரூப மாக எழுத்துக்களிலே நிர்மாணித்துக் காட்டுகிறது. இதயத் தூய்மையே மெய்ம்மையான விடுதலை என்னும் கருத்தைத் துலக்கும் வீடு என்னும் கதை, புத்தபிரானின் புனிதத் தோற்றத்தையும் பவுத்த ஏடுகளில் படர்ந்து கிடக்கும் சிந்தனை விரிவுகளையும் பின்புலமாக்கி நடை போடுகிறது.
வி-14

Page 118
210 சாலினி (
ஓர் இலக்கியம் எந்த அளவுக்குக் காலம், களம் என்னும் இரண்டோடும் இரண்டறக் கலந்து நிற்கிறது என்பதைப் பொறுத்தே அதன் வெற்றி அமைகிறது. அந்த இரண்டினோடும், தனது கதை நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் பொருத்தி இணைத்து விடுகிற ஆசிரியனுக்கே அந்த வெற்றி கிடைக்கிறது. இதிலுள்ள கதைகள் அனைத்திலுமே இந்த வெற்றியைப் பெறு கிறார் பொன்னுத்துரை. இந்த வெற்றியைப் பெறு தற்கு அவர் கையாளும் வகை வகையான உத்தி களால்,-இந்தப் புத்தகத்தின் எந்த ஓர் இடத்திலும் மடிப்போ தளர்வோ இரட்டிப்போ தோன்றவில்லை.
கதைகளின் அளவிலேகூட இந்த வகைமைப் பாடு உள்ளது. ஒரு குடும்பத்தின் பன்முகத் தன்மையை விளக்கி, அதன் ஒரே ஒரு பாத்திரத்தை இலட்சியப் பாத்திரமாகச் சுட்டிக் காட்டும் தேர் 32 பக்க அளவில் விரிகிறது ; முகம்மது நபியின் ஒரு பெரிய பண்பை விளக்கும் சுவை என்னும் கதை இரண்டே இரண்டு பக்கங்களில் முடிந்து விடுகிறது. இந்தப் பெரிய அளவு வேறுபாடு இருப்பினும் தேரிலே மிகை எதுவும் தோன்ற வில்லை : சுவையிலே குறை எதுவும் தோன்றவில்லை.
நம்பிக்கை மலர்கள்
இலக்கியம் என்பது வாழ்க்கையிலே நம்பிக்கை யைத் தரவேண்டும் ; அதை ஒரு நளினமான முறை யிலே தரவேண்டும். "வீ யின் கதைகளிலே இந்த இலக்கிய நலம் இனிமையாக ஊடாடுகிறது.
வேலி என்னும் கதையில் மூன்று பேர் முக்கியப் பாத்திரங்கள் : சித்திரவேலு என்னும் விவசாயி, அவனுடைய இளம் மனைவி கனகி, அவளுடைய பழைய காதலன் என்னும் இவர்களைக் கொண்டே

() ஒரு மதிப்பீடு 21
கதை நடக்கிறது. கனகியை மணந்து கொண்ட போது, அவளுக்கும் அவளுடைய ஆசிரியராக இருந்த ஒருவனுக்கும் (காதல்) கடிதப் போக்குவரத்து இருந்தது என்பது சித்திரவேலுவுக்குத் தெரியாது. வயலில் இரவு தங்குவதாக இருந்த அவன் எதிர்பாராமல் வீட்டுக்கு வருகிறான். அங்கே, காவலுக்கு இருந்த சொக்கனின் ஒத்துழைப்புடன் 96 (6550)llur பழைய காதலன் அவளிடம் தவறாக நடக்க முற்படுகிறான் :
* கதவு இலேசாகத் திறந்து கிடக்கிறது. கனகியின் குரல் கேட்கிறது. சித்திரவேலுவின் உள்ளம் வெள்ளத் திற் கழுவப்படும் பயிராக அலைகின்றது. ’’
**அவர்தான் என்ற புருஷன். ஒரு நாளும் துரோகம்
செய்ய மாட்டன்.""
** இப்ப பத்தினி வேஷம் போடுறியா ? முதுநிலை படிக்கும் பொழுது நீ என்னுடன் வைத்திருந்த தொடர்புகள் எல்லாவற்றையும் சொல்லி உன்னை அவமானப்படுத்துவன். இணங்கு!'
** அந்தக் காலத்தில் நீ என்னைக் கட்டுவாயென்று நினைச்சு நடந்தன். நீ மாஸ்டர் என்னை விட்டிட்டு, பெரிய சீதனத்தோடை ஒரு ரீச்சரை முடிச்சாய், ரெண்டு கையையும் எடுத்துக் கும்பிட்டன்.கலியாணங் கட்டித் திருகோணமலைக்குத் துலைஞ்சு போன நீ இஞ்ச இண்டைக்கு எப்பிடி வந்தாய் ?.' ܵ
**கனகி...நான் மல்லிகைத் தீவுப் பாடசாலைக்கு மாறி வந்ததிலிருந்து இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்.""
* * ur6!” '

Page 119
212 Firs6of )
'ஏன் சத்தம் போடுகிறாய்? உன்ர புருஷன் இன்றிரவு வர மாட்டான். சொக்கன் சொன்னான். நானும் வந்த காரியத்தை முடிக்காமல் போகவும் மாட்டன்.""
* "அவனுக்குப் போட்ட சோத்தை ஒரு நாய்க்குப் போட்டு வளத்திருந்தாலும் உன்னை இப்பக் கடிச்சுத் துரத்தியிருக்கும். சித்திரவேலாயுதச் சாமி யறியச் சொல்லுறன் . கையைத் தொடாதை விடு. ’’
'இணங்காவிட்டால், நீ எனக்கு எழுதியிருக்கிற கடிதத்தை எல்லாம் உன்ர புருஷனுக்குக் காட்டி, உன்னை விலக்கி வைக்கச் செய்வேன். . . "'
**செய். உன்னோட கூடிட்டுச் சின்னத்தனம் பட
Lotto L-sör, ""
ஈப்பூச்சி பயிரில் விழுந்து பாலைக் குடிச்சால் அது பதராகும். சூடடித்து தூற்றும் பொழுதுதான் அதுஅகற் றப்படும். ஆனால் கனகி ?
**சிந்தனையில் நின்ற சித்திரவேலு சுய உணர்வு பெறுகின்றான். தொண்டையைக் கனைத்து, கனகி" என்று குரல் கொடுக்கிறான்.'"
இங்கே நாம் சந்திக்கும் கனகி இன்றையச் சமுதா யத்தின் ஒரு சாதாரணப் பெண்; அவளிடம் வெறும் தசை ஆசை மட்டுமே கொண்ட ஆசிரியனும், நாம் பரவலாகக் காணும் பாத்திரமே. ஏற்கனவே இவர் களுக்குள் தொடர்பு இருந்தது என்பதைத் திடீரென்று அறியவரும் சித்திரவேலுதான் சற்றே லட்சிய வண்ணம் ஏறிய பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளான். சித்திர வேலு அவளுடைய பழைய தவறுகளை LDApbģ

() ஒரு மதிப்பீடு 213
அவளை ஏற்றுக்கொள்ளக் கூடியவனே என்பதை உறுதிப்படுத்தவே, கதை நெடுக , அவனுடைய பாத்தி ரம் மிகுந்த மனிதாபிமானப் பொறுப்புணர்ச்சி உள்ள பாத்திரமாக வளர்த்து வரப்படுகிறது.
வயலில் காவலிருந்த சித்திரவேலு, மாற்று ஆள் வந்துவிட்டதால், இரவில் கனகியை நினைத்தவனாக வீட்டுக்குப் புறப்படுகிறான். வழியிலே.
** அரச மரத்தடித் துண்டால் இறங்குகிறான். வாய்க்காலில் இன்னும் நீர் வடியவில்லை. அந்த நீரில் நடப்பதில் சிறு பிள்ளைத்தனமான குதூகலம் இருக்கிறது. நடக்கிறவன், ஏதோ கால்களிலே தட்டுப் பட நிற்கிறான். குளத்து மீன் பிடிக்க யாரோ வைத்த பறி. எடுத்துப் பார்க்கிறான். ஒரு பனையான் மீன் துள்ளிக் கொண்டிருக்கிறது. ‘எந்த ஏழையின்ற பிழைப் போ?" என்று பறியை மீண்டும் நீருக்குள் அமுக்கி விடுகிறான்.""
" "மீன் பறிகளில் கால் தடக்குப்படலாமென்ற நினைப்பில் வரம்பில் நடக்கிறான். சளக்", வலக்கால் புதைகிறது. குனிந்து பார்க்கிறான். வக்கடையை மறித்து, நீர் வராமல் எழுப்பப்பட்டிருக்கும் ஈரவரம் பை மிதித்து விட்டான். வாய்க்கால் நீர் உணர விடப் பட்டிருந்த வயலுக்குள் கசிந்து கொண்டிருக்கிறது. * பாழாப் போன நிதானம்' என்று முணுமுணுத்துக் கொண்டே, கையினால் சேற்றை அள்ளி வரம்பைச் சரிசெய்கிறான். சேறுபட்ட கையை வாய்க்கால் நீரில் அலம்பிக் கொண்டு மறுபடியும் வாய்க்காலில் இறங்கி நடக்கிறான்.”
அன்றைக்குச் சந்திக்க முடியாது என்று நினைத் திருந்த மனைவியைச் சந்திக்கக் கிடைத்த எதிர்பாராத வாய்ப்பினால் ஆர்வம் துள்ள விரையும்போது கூட,

Page 120
214 சாலினி
சித்திரவேலு, தன் பொறுப்புணர்ச்சியில் சற்றும் குறைவு படவில்லை. அரசமாதேவியின் ஊடல் தீர்க்கப்போன அவசரத்தில் பாண்டியன் தவறான ஆணை பிறப்பித்து விட்டான் என்று (சிலப்பதிகாரத்திலே) படித்திருக்கிற நமக்கு,- எழும்பிய மீன் பறியைக் கீழே அமுக்கி வைத்தும் சிதைந்த வரம்பைச் சீர்செய்து விட்டுமே மனைவியை நோக்கி விரையும் சித்திரவேலுவின் பண் பாடு புதியதோர் மகிழ்ச்சியைத் தருகிறது. "ஒரு மனி தன் இவ்வளவு பொறுப் புணர்ச்சியோடாவது இருக்க வேண்டாமா?" என்று நயந்து ஏற்கிறோம். இங்கே அவனை இப்படிப் பார்த்திருப்பதாலேதான், பிறன் ஒருவனோடு பழந்தொடர்புடைய கனகியை அவன் ஏற்றுக் கொள்ளும் போது, நாம், வியப்போ அதிர்ச் சியோ அடையவில்லை. Y
ஒழுக்கம் தவறிப்போன அகல்யையை மன்னித்த கவுதம முனிவனைப் புதுமைப் பித்தனின் ‘அகல்யை" யிலே சந்திக்கிறோம்; அந்தக் கடைசி முடிவுக்கு ஏற்ற விதமாகவே, கவுதமன் பாத்திரம், அங்கே தொடக்கம் முதல் ஓர் உயர்ந்த தளத்தில் வளர்த்து வரப்படுகிறது. ஆனாலும், அதிலே இல்லாத ஒர் எதார்த்தத்தை-நடப் பியலுக்கு ஒத்தபோக்கை இந்தக் கதையிலே இழைய விடுகிறார் பொன்னுத்துரை. அது கனகியின் பாத்திரப் படைப்பிலே மிளிர்கிறது.
ஒருமுறை (ஆசிரியக் காதலனிடம்) ஏமாந்த கனகி இப்போது அவனிடம் ஏமாறத் தயாராக இல்லை; அவனுடைய அச்சுறுத்தல்களிலே ஆட்டம் கண்டு இழி விலே சாய்ந்து விடவும் இல்லை. அவளுடைய இந்த உறுதிப்பாடே கணவனின் மன்னிப்பையும் அன்பையும் பெறத் தக்க தகுதிப் பாட்டை அவளுக்கு வழங்குகிறது. அதுமட்டுமல்ல; ஒருமுறை ஏதோ சூழ்நிலையால் தவறி விட்ட பெண், அதன் காரணமாகவே, தொடர்ந்த

s ஒரு மதிப்பீடு 215 口
தவறுகளுக்கு ஆளாக வேண்டியதில்லை என்னும் நம் பிக்கையையும் இந்தக் கதை வழங்குகிறது. தவறு செய்தவர்கள், நிதானத்துக்கு வந்து, திருந்திவாழ முடிவுசெய்து விட்டால் அவர்களுக்கு வாழ்வு உண்டு என்னும் பெரிய நம்பிக்கையே இந்தக் கதையின் தனிச் சிறப்பு. ---
நயமிக்க நடப்பியல்
இதே போல்,-வாழ்க்கையின் வேறொரு தளத்தில் மணவிலக்கு என்னும் எல்லைக்குப் போய்விட்ட குடும் பப் பிளவு எப்படி இணங்கிப் பொருந்திப் போகிறது என்பதை ' விலை' என்னும் கதை விளக்குகிறது.
'வேலி'யில் ஓரளவு வாய்ப்புள்ளநடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சந்தித்த நாம் , " விலையில் அன்றாடக் கூலி வேலை செய்து பிழைக்கும் கடைத்தட்டுக் குடும்பம் ஒன்றைச் சந்திக்கிறோம். தனபாக்கியத்தை மணந்து ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகியிருந்த கணபதி, தன் மனைவியின் கண்ணெதிரிலேயே ஒழுக்கக் கேடி யான, ஒரு சிங்களப் பெண்ணுடன் தொடர்பு கொள்ளு கிறான். அதைக் கண்டித்த மனைவியைத் தாய்வீட் டுக்கு விரட்டி விடுகிறான்.
பிரிந்து போன இரண்டு பேரின் வாழ்விலும் ஏற் படும் அனுபவங்கள் அவர்களை மறுசிந்தனைக்குத் தூண்டுகின்றன. இந்தச் சமயத்தில், இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்த பெரியவர், கணபதி யின் மீது தனபாக்கியம் தாவரிப்பு (ஜீவனாம்ச) வழக் குத் தொடுக்குமாறு செய்கிறார். தாவரிப்பு வழக்கு களுக்கே உரிய அந்த நீதிமன்றத்தின் நடவடிக்கை களைப் பார்க்கப் பார்க்க, 'அவன் ஒழிந்து போகட்
-டும்' என்று பிடிவாதமாக இருந்த பாக்கியத்தின்

Page 121
ロ 216 FIT 65 of .
நெஞ்சம் நெகிழ்கிறது; கூலிவேலை செய்யும் இடங் களில் பெண்களின் ஒழுக்கத்துக்குப் பாதுகாப்பு இல்லை என்கிற எதார்த்த நிலையும் அவளை இளக்கி இணக், கத்துக்குத் திருப்புகிறது. தன் மகளின் எதிர் காலத் தைப் பற்றிய நினைவும் அவளைப் புதிய தடத்தில் சிந்திக்கச் செய்கிறது: "நான் இனி எப்படிப் போனா லும், இந்தப் பொடிச்சியத் தாவரிக்கிற ஆர்? ஒரு. பொழுதுக்கு ஒரு தியாலத்துக்குத் தேவை யெண்டா ஒம்ப புருஷனும் பிடிக்கலாம், ஆனா, சாகு மட்டும். பொடிச்சியயும் வெச்சுத் தாவரிக்கிறதுக்கு. மனிஷன்ர சீவியம் சொல்லிக் கிடக்கா?’’அதே சமயம்,தன் கள்ளக். காதலியால் பட்ட வேதனையும் அவமானத்தையும் நினைந்து குன்றிப்போன கணபதி, கழிந்ததற்கு இரங்கிக் கண்ணிர் மல்க நிற்கின்றான். இந்த நிலை யைப் பயன்படுத்திக் கொண்டு, பெரியவர், அவர்கள் இருவரையும் மீண்டும் இணைத்து வைக்கிறார்.
முதலாளித்துவச் சமுதாய அமைப்பில் கடைத் தட்டு: மக்களின் வாழ்விலே வீசும் அன்றாடப் புயலை அடிப் படையாகக் கொண்டு தனபாக்கியம்-கணபதி கதை. இயங்குகிறது. இவர்களைப் பொறுத்தவரையில் குடும்ப வாழ்க்கை என்பது வேதனை நிறைந்த ஒரு பட கோட்டமே. என்றாலும், அதிலிருந்து கீழே தாவி விட்டால், பெண்களின் வாழ்வு,-ஒன்றில், ஒழுக்க மில்லாத அழுக்காகிப் போகிறது; அல்லது பசிக்கும் பிணிக்குமே நிலைக்களனாகிப் போகிறது இந்தச் சமுதாய அமைப்பு மாற்றப்படாத வரையில், தனபாக் கியங்கள், ஆடவர் உலகின் கெடுநடைகளுக்கு ஓரளவில் ஈடுகொடுத்துத்தான் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த இரண்டு கதைகளிலுமே ஓர் இயல்பான தன்மை நிரம்பி வழிகிறது : பாத்திரங்களின் பொருளா

() ஒரு மதிப்பீடு 217 El
தாரப் பின்னணியும் சமுதாய நிலையும் அவர்களை இயக்குவதும் தெளிவாகத் தெரிகிறது. முன் நிகழ்ச்சி களை நோக்க, இரண்டு கதைகளின் முடிவும் எதிர் பாராததாகவே உள்ளது. ஆனால், அங்கே சித்திர வேலுவும் இங்கே தனபாக்கியமும் மேற்கொள்ளும் முடிவு பொறுப்புணர்ந்த விநய நடையினரான அவர் களின் இயல்புக்கு ஒத்ததாகவே உள்ளது. அதனா லேயே, இந்தக் கதைகள் உடன்காலச் சமுதாயத் தின் சில கூறுகளை அப்பட்டமாகச் சொல்லோவியம் செய்கின்றன என்னும் மனநிறைவு நமக்கு ஏற்படு கிறது.
இருவேறு நிமிர்வுகள்
இவைகளினின்று சிறிது மாறுபட்ட நிலையில் நடைபெறுகிறது 'மறு' என்னும் கதை. வேலியில் புண்படுத்தப்பட்ட கனகி, கொடியவனின் அச்சுறுத்த லுக்குப் பணியாமல் நிமிர்ந்து நிற்கிறாள்; விலையில் புண்படுத்தப்பட்ட தனபாக்கியம், தன் மகளின் எதிர் காலத்தையும் தறிகெட்ட கணவனின் திருந்துமுகத் தையும் கருதிப், பழையவற்றை மறந்து இணங்கிப் போகிறாள். மறுவிலோ, பழித்துப் புண்படுத்தப்பட்ட புனிதம், அடிபட்ட புலியாக எழுந்து சீறுகிறாள். ;
மனைவியை யாழ்ப்பாணத்தில் தனியே விட்டுத் தென்னிலங்கைக்கு, வேலைக்குப் போனான் சிவக் கொழுந்து. போன இடத்தில் தனக்கு ஒரு வைப்பாட்டி யைத் தேடிக் கொண்டான். புனிதம் இருக்கிறாளா செத்தாளா என்று கூட அவன் இரண்டு வருடங்களாகக் கவலைப் பட்டதில்லை. யாரோ எழுதிய கோள்க், கடிதத்தை நம்பி, தன் மனைவி நடத்தை கெட்டவள் என்ற முடிவுக்கு வந்த அவன், திடீரென்று ஒரு வார விடுமுறையில் யாழ்ப்பாணத்துக்கு வருகிறான். இவன்

Page 122
亡 218 சாலினி 3
பால் வளர்ந்து நின்ற சந்தேகமும் அவள்பால் வளர்ந்து நின்ற புறக்கணிப்புப் பொருமலும் மோதிக் கொள்ளு கின்றன. வார்த்தை தடித்து, சிவக்கொழுந்து மலடன் என்கிற உண்மை அவன் முகத்துக்கு எதிரேயே எழுந்து நிற்கிறது. பொறுப்பின்மை, கையாலாகாத்தனம் என்ப வைகளின் மொத்த வடிவமான சிவக்கொழுந்து தனக்கு வைப்பாட்டி தேடிக்கொண்ட குற்றத்தை மறந்து அவள் மீது பாயவே, புனிதம் கொதித்து எழுகி றாள். அந்தக் கொதிப்பிலே, பெண்களுக்கு உரிமை மறுப்பு என்னும் விலங்கை மாட்டியுள்ள சமுதாய அமைப்பே கிடுகிடுத்து நடுங்குகிறது.
இலங்கை நாட்டு வரலாற்று நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாகக் கொண்ட 'கணை' என்னும் கதை புறக்கணித்து அவமதிக்கப்படும் பெண்ணுடைய உணர்ச்சி வெளிப்பாட்டின் மற்றொரு முகத்தைச் சித்திரிக்கிறது.
தன் அண்ணனின் மனைவியான அனுலா தேவி யைத் தன் மனைவியாக்கிக் கொண்ட வட்ட காமினி பழம்பகை தீர்க்கப் போரெடுத்து வந்த தமிழக வீரர் களிடம் தோற்று ஓடும் போது, தன் இரண்டாவது மனைவியான சோமாதேவியை நட்ட நடுக்காட்டில் இறக்கி விட்டுவிட்டுப் போய்விடுகிறான். தமிழ் வீரர் களிடம் சிறைப்பட்ட சோமா, தன் கணவர் முதல் மனைவியை வைத்துக் கொண்டு தன்னை மட்டும் விட்டுச் சென்ற கொடுமையை நினைத்துக் குமுறு கிறாள். அந்தக் கோபக் குமுறலிலே, தனது கணவனின் எதிரியான தமிழ் வீரனின் படுக்கையறைப் பாவையாக மாறிவிடுகிறாள்:
*" கற்பு? அது மலருக்குங் கிடையாது; கணிகைக் குங் கிடையாது. அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே

3) ஒரு மதிப்பீடு 219
உடலின் தசைத் திரள்களைப் படுக்கையாக்கிய அனுலா தேவிக்கு இருக்கின்றதா? ஏன் எனக்கு மட்டும் தேவை?’’
* அம்மா."-பணிப்பெண்களுடன் வந்து, திரும் பிச் செல்லாத வண்ணமகள் வசந்தமாலையின் அழைப்பு. குறுகிய காலத்தொடர்பு ஆழமான ஈடுபாடு. விழியெறிந்து பார்க்கின்றாள்.
இந்த வண்ணமகளின் வண்ண முகத்தில் கார் மேகத்தை அள்ளி அப்பியது யார்?
* ‘ஏண்டி, உனக்கிந்த கலக்கம்? எனக்கில்லாக் கவலை?"
**நீங்கள் சுந்தரச் சிங்களத்தியாகவும் நான் தமிழச் சியாகவுமிருக்கலாம். ஆனால் இருவரும் பெண்கள். கற்யே பெண்ணின் பெருமை. அதனை நீங்கள் இழந் தாலும் நான் இழந்தாலும், ஒரு பெண் தன்னுடைய கற்பை இழந்தாள் என்னுங் கறையே எஞ்சும். கற்பை பாதுகாக்கும் போராட்டத்திலே உயிரைப் பலியிடுபவ ருக்கு சுவர்க்க பதவி கிட்டுகின்றது என்று என் குலத் தவர்கள் நம்புகிறார்கள். ’’-அர்த்தச் செறிவைத் தேக் கித் தன் மோதிரத்தைக் காட்டுகிறாள். அந்த மோதிர முகப்பின் கள்ள அறையில் நஞ்சு இருப்பதை ஊகிக்க முடிகின்றது.
**நஞ்சு தரும் சாவு வீரத்தின் பரிசா?"
சோமாதேவி தொண்டைக்குள் சலங்கை கிலுக்கிச் சிரிக்கிறாள்.
* கவலையை மறப்பதற்கு வழி இன்ப மது மாந்து வது தான். பைத்தியக்காரி. புண்ணைச் சொறிந்து கூட இன்பம் அனுபவிக்கலாம். வண்ணமகளே உன் கலைவண்ணம் காட்டு,என் வாலை வனப்பும் வசீகரமும்

Page 123
220 'சாலினி (
எவரையுங் கிறங்கச் செய்யும் விதத்தில் ஒப்பனை செய். ஏன் தயக்கம்? இந்நாட்டில் எப்படியடி, முதலிர வுக்குப் பெண்களைத் தயார் செய்வார்கள்?"
பெண்களையே மையமாகக் கொண்ட இந்த நாலு: கதைகளிலும், வழக்கமான, மொத்தமான லட்சியப் பெண்மை பேசப்படவில்லை. அவளவளுக்கும் வாய்த்த சூழ்நிலையில் ஒவ்வொரு பெண்ணும் எப்படி எப்படி நடந்து கொள்கிறாள் என்பதே விளக்கப்படுகிறது. ஆனாலும், எந்த ஒரு கதையிலும், பெண் குனிந்து விட்டதாகவோ நலிந்துவிட்டதாகவோ ஆசிரியர் காட்ட வில்லை. பெண், விட்டுக் கொடுத்தாலும், மற்ற வர்களின் நலனுக்காகவே விட்டுக் கொடுப்பாள்; பற்றுக் கோடு கிடைக்கும்போது தனது அழிவையும் பொருட் படுத்தாமல் உயர்வைக் கெட்டியாகப் பிடித்துக் கொள் வாள் ;-தன் தூய்மைக்குக் களங்கம் கற்பிக்கப்பட்டால் நெருப்பாக எழுந்து சீறுவாள்:- தன்னை ஒரு பொருட் டாக மதிக்காமல் தூக்கி எறிபவர்களின் சட்டதிட்டங் களுக்குத் தன்னை பலியிட்டுக் கொள்ள மாட்டாள். இவைகளே பெண்களைப் பற்றி ஆசிரியர் தந்துள்ள சித்திரங்கள்.
தேரின் அழகு
இந்தச் சிறுகதைத் தொகுதிக்கும் தமிழ்ச் சிறு கதை, இலக்கியத்துக்கும் தனிப் பெருமை தருவதாக இதிலுள்ள "தேர்' என்னும் கதை அமைந்துள்ளது. ஆண்களும் பெண்களுமாகப் பல குழந்தைகளைப் பெற்று, அவர்களில் பலரின் மக்களை அள்ளிக். கொஞ்சும் வயதினரான (ஆறுமுகம் என்னும்) ஒருவரின் மனவோட்டமாக இந்தக் கதை நடைபெறு கிறது. ஆசிரியரும் இடையிடையே தோன்றிக் கதையை நடத்துகிறார்.

L) ஒரு மதிப்பீடு 221 O
சமுதாயத்திலே சாதி, மதம் என்னும் அமைப்பு களுக்கு எதிரானகுரல் கேட்கத்தொடங்கிய ஒரு காலக் கட்டத்தில் இந்தக் கதை (யாழ்ப்பாணத்திலே) நடை பெறுகிறது. ஆறுமுகத்தாரின் மக்களிலே பலபேர் வழக்கமான யாழ்ப்பாண இந்துக் கலாசார நடை முறைகளை அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பவர்கள். அவருடைய மகன்களில் ஒருவனான குமாரசாமி அந்தப் பழம்போக்கை மீறி வேறு சாதியையும் வேறு மதத்தையும் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து மணந்து கொள்ளுகிறான். இதனால் அவனுக்கும் குடும் பத்து மற்றவர்களுக்குமிடையே பெரியதொரு பிளவுச் சுவர் எழுந்து விடுகிறது.
இப்படி வளர்ந்து வரும் கதை, குடும்பத் தலைவரின் நினைவோட்டமாக விரிவதால், ‘இரண்டு சாராரையும் பற்றி அவர் என்ன நினைக்கிறார்?' என்பதே கதையின் இயக்கு சக்தியாக நிலைக்கிறது. இந்தக் கேள்விக்கு ஆசிரியர் கொடுக்கும் பதிலே இந்தக் கதையை ஓர் இலக்கியக் கதையின் தளத்துக்கு உயர்த்துகிறது.
'அவன்ரை(குமாரசாமியினுடைய) போக்கு ஒருதனிப்
போக்கு இஞ்சை ஒருத்தருக்கும் விளங்கிறேல்லை. "உங்கை யாழ்ப்பாணத்துக் கிடுகு வேலியளாலை சங்கையை மறைச்சுக் கொண்டு மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்துகொண்டே வாழ்பவருக்கு என்ரை போக்கு விளங்காது. என்ரை போக்கு எனக்கு விளங்கும்’ என்று ஒரு நாள் உங்கினை சத்தம் போட்டான். இதுகளிலையும் புழையில்லை. ஒட்டி நடக்காதவனோடு என்ன சகவாசம் என்று விலகிக் கொண்டுதுகள். புறம்பு காட்டி நடக்கிற உவைய ளோடை எனக்கென்ன தொடர்சல் என்று அவனும் விலகிக் கொண்டான்.

Page 124
223 afirosof
மெய்தான். அவனுடைய போக்கு யாருக்கும் விளங் கலை. அதோட அந்தப் போக்கிலை ஒருத்தருக்கும் விருப்பமுமில்லை. ஒரு மாதிரியான கோபத்தனல் இவையளின்னரை மனங்களிலை இருக்குது. என்ன இருந்தாலும் சகோதர பாசம் எண்ட சாம்பல் அதுகளை மூடிவைச்சிருக்குது. வீட்டிலை எல்லோரும் அவனைக் குறையாகத்தான் பேசுவினம். நான் மட்டுந்தான் அவன் ரை பக்கத்திலை பேசுறது. என்ன இருந்தாலும் அவனும் என்ற மேன்தானே ?’’
இப்படி, கயிற்றின் மேல் நடப்பது போன்ற நிதானத்தோடு நிலைமையை விளக்கிவரும் ஆறுமுகத் தார், புதுக்காலப் புதுப்போக்கின் பிரதிநிதியான குமாரசாமியையே விரும்புகிறார் என்பது நினைவோட் டத்திலேயே உறுதிப்பட்டு விடுகிறது.
இவையள் ஆயிரத்தைச் சொல்லட்டும் ; சவுந்தரம் பரிமளமாக இருக்கட்டும்; சுப்பிரமணியமா இருக்கட்டும்; மனோகரன் பத்மாவாக இருக்கட்டும். முகத்தார் ஆறுமுகத்தின்ரை புள்ளையளெண்டுதான் ஊர் தேசத் திலை தெரியும். ஏன், சதாசிவம் தங்கராசா எண்டோப் போலை என்ன? என்ரை மருமக்கள் எண்டாத்தான் நல்லா விளப்பமாத் தெரியும். ஆனா கடைத்தெருவிலை எத்தினை பேருக்கு என்னைக் குமாரசாமியின்ரை அப்பனெண்டுதான் தெரியுமெண்டு இவையஞக்குத் தெரியுமே? அண்டைக்கு பஸ்ஸிலேநான் தெல்லிப் பளைக்குப் போகேக்கிள்ளை ஒரு பொடியன் " "நீங்கள் குமாரசாமியின் ரை தகப்பனில்லோ?' எண்டு கேட்டுப் போட்டு தான் குந்தியிருந்த இடத்தை எனக்குத் தாறான். அந்தப் பொடியனும் பெரிய படிப்புத் தானாக்கும்!
ஒரு தந்தை என்ற முறையில், ஒரவஞ்சனை இல்லா மல் எல்லாப் பிள்ளைகளிடமும் அன்பு காட்டுகிறார்

13 ஒரு மதிப்பீடு 223
ஆறுமுகம்; அவருடைய இளைய மகன் குமாரசாமியின் போக்கு, குடும்பத்திலும் ஊரிலும் வெறுக்கப்படுகிறது. ஆனாலும், வாழ்வின் நேரிய அனுபவங்களால் வாழ்வின் உள்ளோட்டத்தை அறிந்தவர் என்கிற முறையில், குமாரசாமியின் புதுப்போக்கையே அவர் விரும்புகிறார் என்பது, கதைக்கு ஒரு பெரிய திருப்பத்தையும் சமுதாய துக்கு ஒரு சரியான செய்தியையும் வழங்கு கிறது. எனவேதான் இந்தக் கதையானது காலமும் களமும் அளாவிய கருத்தையும், அதனைத் திறம்படச் சித்திரித்த நுட்பத்தையும், இவைகளால் தொனித்துத் தெரியும் ஓர் வாழ்க்கை நோக்கையும் கொண்ட சிறந்த படைப்பாக மிளிர்கிறது.
சீரிய இலக்கியம்
ஒரு யானையை எந்தப் பக்கத்திலிருந்து பார்த் தாலும், அதன் எந்த ஓர் உறுப்பைப் பார்த்தாலும், அது யானை என்கிற அடையாளம் அப்பட்டமாகத் தெரிவது போல - எந்த நோக்கிலே பார்த்தாலும் இனிமை கொழிப்பதே சீரிய இலக்கியம். ** தேர்' என்னும் இந்தச் சிறுகதை அத்தகையதோர் இலக்கிய மாக விளங்குவதோடு, ஒரு லட்சியச் சிறுகதைக்கு இலக்கணமாகவும் அமைகிறது.
இந்த ஒரு கதையை மட்டும் பலமுறை படித்தே, நாம் யாழ்ப்பாணத் தமிழ் வாழ்வின் எல்லா அம்சங் களையும் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது; கதையின் மூலப் பாத்திரங்களான முகத்தாரும் குமார சாமியும் மட்டுமல்லாமல், -குமாரசாமியின் வருகை யைப்பற்றி முகத்தாரிடம் தெரிவிக்கும் தேநீர்க் கடைக்காரனும் அவரோடு சேர்ந்து மது அருந்தும் அய்யமபிள்ளையும் கூட யாழ்ப்பாணக் கலாசாரத்தையும் கதையின் கருவையும் விளக்குவதில் முழுமையாகப் பயன்படுகிறார்கள்.

Page 125
224 aחיr6660ft ם
மிகப் பலவான பாத்திரங்களைக் கொண்டு நடை பெறும் இந்தச் சிறுகதை, அந்தப் பாத்திரங்களில் பல பேரை இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலைப் பாத்திரங்களாக்கி,-அவர்களை ஆறுமுகத்தாரோடு அல்லது அவருடைய நினைவோட் டத்தோடு தொடர்பு படுத்தி,-அவர்களின் முதன்மையையே ஒடுக்கிவிடு கிறது; கதை முழுவதும் ஆறுமுகத்தார் இல்லாமல் அந்தப் பாத்திரங்களில் ஒன்றுக்குக் கூட தனிநிலை இல்லவே இல்லை என்பதை நாம் உணரவேண்டும். இதனாலேதான், கதை, எந்த இடத்திலும் மூலப் பாத்திரத்திலிருந்து விலகாமலும், அது எடுத்து விளக் கும் கருத்திலிருந்து பிறழாமலும் இயங்குகிறது.
ஒரு சிறுகதைக்கு உரிய தளத்திலெ நின்று, ஒரு சமுதாயத்தின் பல நிலைகளையும் விளக்கி வைப் பது என்பது எளிதான காரியமல்ல; அப்படிச் செய்ய முயலும் போது, சிறுகதையின் கரையே அழிந்துவிடுவ தற்கு மிகப்பல வாய்ப்புகள் உண்டு. ஆயினும், அடி மரத்தை மிஞ்சாத விழுதுகளும், அதன் பலத்திலேயே படர்ந்துவிரியும்கிளைகளுமாகத்துணைநிகழ்ச்சிகளையும் துணைப் பாத்திரங்களையும் படைத்துவிடுகிறார் பொன் னுத்துரை. அதன் காரணமாக, எந்த இடத்திலும், முகத்தார் எடுத்து விளக்க விரும்பும் அனுபவப்பிழிவான கருத்திலிருந்து விலகாமலே நடக்கிறது கதை
ஒரு வீட்டை மய்யமாக்கி, ஒரு சமுதாயத்தின் அனைத்து அம்சங்களையும் அதிலே குவித்து பேசச் செய்த திறம், இந்தக் கதைக்குத் தனித்த தலைமை யைக் கொடுப்பதோடு அதன் ஆசிரியருக்கு, மாபெரும் கலைஞன் என்ற புகழ்ப் பட்டயத்தையும் தேடித் தந்து விடுகிறது.

() ஒரு மதிப்பீடு 225.
ஒன்றிக் கலந்து.
ஒரே ஒரு கருத்து, ஒரே ஒரு உணர்ச்சி அல்லது ஒரே ஒரு நினைவுக் கூறுதான் சிறுகதைக்குரிய ஆட்சி எல்லை. இந்த ஒருமைத் தன்மையைச் சிதையாமல் காப்பதே ஆசிரியனின் திறமை. பொன்னுத்துரையின் கதைகளைப் படிக்கும்போது, அவைகளின் ஒவ்வொரு வாக்கியமும், அந்த ஒரே கருத்து அல்லது உணர்ச்சி யின் மயமாக நிற்பது போன்ற பிரமை நமக்கு உண்டாகி விடுகிறது. அந்த அளவுக்குத் தம்முடைய கதையின் மயமாகி நின்று அதை நமக்குச் சொல்லுகிறார் பொன்னுத்துரை.
கணை என்னும் கதை புறக்கணிக்கப்பட்ட சோமா தேவியின் குமுறலையும் அதன் விளைவான முடிவையும் உணர்த்துகிறது ; இந்தக் குமுறல் கதையின் ஒவ்வோரி டத்திலும் அவளுடைய மனவோட்டமாக வெளிப்பட்டு வந்து கதையின் முடிவுக்குச் சரியான அரணாக நிற் கிறது.
மன்னன், மூத்தாளையும் மகனையும் தேரில் வைத் துக்கொண்டு தன்னைக் காட்டு வழியில் இறக்கி விட்ட நிகழ்ச்சியே அவளுடைய மனத்தை ஆள்கிறது. அவள் நினைக்கிறாள் :
** இரண்டு திங்கள்களுக்கிடையில் நான் , தேன் இற்ற மலரானேனா ? என் வாலை வனப்பும் வசீகரமும் அழிந்தனவா ?. அந்தக் கிழவி மட்டும் இன்னும் இனிக் கிறாளா? இல்லையேல்?. போர்க்களம் விட்டுத் தப்பி யோடும் தேரிலிருந்து ஏன், நான் மட்டும் இறக்கப்
u Gisör ?... ” ’
வி-15

Page 126
ロ 226 சாலினி (?
அவள் மேல் மோகங் கொண்டு சிறைப்பிடித்து வந்த தமிழ்வீரன், தனக்கு அவள் மீது தணியாக் காதல் என்கிறான். அங்கேயும் தன் மனக் குமுறலையே பதிலாக்குகிறாள் சோமாதேவி :
* சிறைப்பட்ட ஒருத்தியிடம் காதல் செய்ய வத் துள்ள உங்கள் வீரத்திற்கும், தனக்கு வாழ்க்கைப் படடவளின் கற்பைக் காப்பாற்ற வக்கற்ற என் கணவ ரின் வீரத்திற்கும் என்ன வித்தியாசம் ?’’ இது போன்ற குமுறலைக் கதை முழுதும் விதைப்பதன் மூலம், புண் படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் இதயக் குமுறலே கதை யின் அடிநாதம் என்பதை அழுத்தமாக நிலை நாட்டு கிறார் ஆசிரியர். W
**அணி" என்னும் கதை, முடிதிருத்தும் தொழி லாளி ஒருவன், வாடிக்கையாளரிடம் பேச்சுக் கொடுத் துக் கொண்டே அலுப்பில்லாமல் தொழில் புரியும் பான். மையை விளக்குகிறது. ஓரளவு அனுபவம் பெற்ற முடி திருத்தும் தொழிலாளிகள், முடி வெட்டிக் கொள்ள வரு கிறவர்கள் சுவைத்துக் கேட்கும் விதமாக ஏதாவது பேசிக்கொண்டே வேலை செய்வார்கள். அந்த நடை முறை இந்தக் கதையில் அழகாகச் சொல்லப்படுகிறது,
யாழ்ப்பாணத்தில் சாதி வெறி தாண்டவமாடுவது, அங்கேயே முடிதிருத்தும் தொழிலாளியான விக்டர் அந்த வெறியை எதிர்த்து நின்றது என்பவைகளைச் சொல்லி வரும் அவன், குறுக்கே முடிவெட்டிக் கொள்ள வந்த வரின் தலைப்பொடுகுக்கு மருந்து சொல்லுகிறான்! அவரை வழியனுப்பி அடுத்த இளைஞனை வரவேற்பதற் குள்ளாகவே, அவன் சொல்லி வந்த விக்டரின் இரத்தக் கறை படிந்த அவலக்கதை அவனுக்கு மற்ந்து போகிறது: "சுதுமலையிலே படிப்பித்துக் கொண்டி ருந்த டீச்சர் பொடிச்சியைக் கிளப்பிக் கொண்டு போன

() ஒரு மதிப்பீடு 227 to
வன் எந்தப் பகுதி?" என்று அவனிடம் கேள்வி போடு கிறான், வருகிறவர்களின் வயதுக்கும் மனநிலைக்கும் ஏற்பக் கதை பேசுகிறவன் இந்தத் தொழிலாளி என்பது இங்கே முற்ற முழுதாக உறுதியாகி விடுகிறது.
இந்தத் தொகுதியின் முதல் கதையான தேர், குடும் பத் தலைவராகிய ஆறுமுகத்தின் மனவோட்டமாக நடைபெறுகிறது; தமது குடும்பமே ஓர் இனியதேர் போல நடக்கிறது என்று மகிழ்ச்சி பொங்குகிறார் ஆறு முகம். பெற்றுப் பெருகி வாழ்ந்த ஒருவரின் சிந்தனை யும் நினைவுகளுமே இந்த கதையாதலால், இதிலே நாலு வரிக்கு ஒரு முறை குடும்ப உறுப்பினர் ஒருவரைப் பற்றிய பேச்சே (நினைவே) வருகிறது. மகன்கள், மகள்கள், மருமக்கள் மார், பேரன் பேத்திகள் என்று ஒவ்வொருவரையும் நினைவிற் கொண்டு வந்து, அவர் களை ஆறுமுகத் தலைவர் மதீப்பீடு செய்வதே கதையாக நீளுகிறது; அக்கம்பக்கம் உள்ளவர்களும் தொடர்புபட்ட வர்களும் அங்கங்கே தலை நீட்டுகிறார்கள். எனவே, கதையின் எந்த இடத்தைப் படிக்கும் போதும் குடும்பத் தேரின் ஒரு தட்டிலே நின்று கொண்டு இருப்பது போன்ற உணர்வே நமக்கு உண்டாகிறது.
அதிசயிக்கத் தக்க இந்தக் கதை ஒருமைப்பாடே எஸ். பொன்னுத்துரையின் தனிச் சிறந்த ஆற்றல். இந்த ஆற்றலே, கதையைப் படிக்கிறோம் என்ற நினைப்பையே வாசகர் நெஞ்சிலிருந்து அகற்றி விட்டு அங்கே கதை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுகிறது. இதனால் கதையின் பாத்திரங்கள் அப்பட்டமான தசை யும் குருதியோட்டமும் உடைய மனிதர்களாக வாசகர் களின் நெஞ்சோடு உறவாடுகிறார்கள். உண்மையில், பொன்னுத்துரையின் ஒரு கதையைப் படித்த பிறகு, அதை மீண்டும் படித்து அதிலே வரும் பாத்திரங்களோடு மீண்டும் தொடர்பு கொள்ளவேண்டும் என்ற ஓர்

Page 127
228 FITssef
ஆசையே உண்டாகிவிடுகிறது; ஏதோ கதையைப் படித் தோம்-மறப்போம் என்று நினைக்கவே முடியவில்லை!
சில குறைகள்
நெல்லுக்கு உமியும், நீருக்கு நுரையும், பூவுக்குப் புல்லிதழும் போல, இந்த இனிய கதைக் கோவையில் சில சிறிய குறைகளும் உள்ளன; கணை என்னும் கதை, தன்னையும் தன் எழிலையும் தன்னால் தரக்கூடிய இன்பத்தையும் அவமதித்த தன் கணவன் மீது ஏற்பட்ட சிற்றத்தால் மாற்றானின் பஞ்சணைப் பாவையாகிப் போன ஒரு பெண்ணைச் சித்திரிக்கிறது. ஆனாலும், இதிலே , தேவைக்கும் சற்று அதிகமாகவே காமவாடை வீசுகிறது; அந்தச் சொற்களுக்கு ஆசிரியர் ஆடை கட்டி யிருக்கவேண்டும். விலை என்னும் கதையிலும் இந்த நெடி சற்று அதிகமாகத் தான் வீசுகிறது.
ஆனாலும் நிறைவு
ஆனாலும், இந்தச் சிறிய ஆபாசச் சிற்பங்களால் பொன்னுத்துரையின் கலாமண்டபமாகிய " "வீ” பெருமளவு பாதிக்கப்படவில்லை. இவைகளையும் மீறி, அதன் அழகு நிமிர்ந்தே நிற்கிறது. 女


Page 128
ஆக்சிம்,
எஸ்.பொ.வின் இரு நூல்கள்
நனவிடை தோய்தல்
இது சுய புராண்மோ
சுயசரிதையோ அல்ல, ஒரு சமூகத் தின் கதை.
[그
#வடு
ilire குறுநாவங்கள் தொகுப்பு
 


Page 129
வெற்றி
LD6)f 856it
ஒரு சிறுகதை மல் நாம் எதிர்பாராத விட்டு நினைத்துப் தது சரிதாள்" என்று அதைத் தருகிறது. கதை, யாரோ ஒருவர் கரை அழிந்து நாம் வ அம்சமே இது என் R-TLTD 5.
இலங்கை வரலா lurat anakatuta னம் பெரிய சிந்தனை ஓம் சரி, ஒவ்வொன் ஏற்கத் தக்கதான ஒரு பொன்றுத்துரை. பெ. விளக்கும் இடத்திலும் புதுமை நாட்டத்தை இடத்திலும் இதே ெ அந்தந்தக் கதையும், தமிழ் நடையிலும் டே ளைப் பிலிற்றும்போ, ஒரு பயிர் அதிலே வ எண்னக் கிளர்ச்சி பூ காரணங்களாலும், இந்தக் கதைகளில் கியத் தன்மைகளாஜ் என்னும் சிறு கதைத் சிறந்த சிறுகதைக்
Wrapper Printed at the AR prints,
 

என்பது, நடப்பியல் நெறி பிறழா செய்திகளைத் தருகிறது; படித்து பார்க்கும்போது, "இப்படி நடக் நாமே ஒப்புக் கொள்ளும் விதமாக இப்படித் தருவதாலேயே அந்தக் கற்பித்தது என்கிற நினைவின் ாழும் சமுதாயத்து வாழ்வின் ஒ கிற எண்ணம் படிப்போருக்கு
ற்றின் ஒரு சின்னஞ்சிறிய நிகழ்ச் ாலும் சரி, "கவுதமயுத்தரின் பென் T ஏட்டைத் துலக்கும் வீடு ஆயி எறிலும், நாம் உண்மை என்று ந தன்மையை ஏற்றுவிடுகிறார் ண்களின் பல்வேறு பண்புகளை b, கடமை தவறாத ஒரு தந்தை யே தனது நாட்டமாக ஏற்கும் வற்றி அவருக்குக் கிடைக்கிறது" அதனதன் பாத்திரங்களுக் கேற்ற பச்சுத் தோரணையிலும் சொற்க து, அந்த மண்ணுக்கே உரிஸ் ாமாக எழுந்து வளர்வது போன்ற மக்கு உண்டாகிறது. இந்தப் பல இவைகளுக்கு அப்பாற்பட்டு நிறைந்துள்ள வேறு பல இலக் பம் பொன்னுத்துரையின் "வி" 5 தொகுதி தமிழின் தனிச் கொத்தாக விளங்குகிறது.
-சாலினி இளந்திரையன்
375-8, Arcot Road, Madras-24

Page 130
252 () பணியும் பனையும்
இந்த மனிசன் சொன்ன மாதிரி ஆசுப்பத்திரிக்கு வராம லும் விட்டிடும். அங்கு ஒரு இளவும் எனக்கு விளங் காது." "எனக்கு உக்காந்து நிம்மதியா எண்டாலும் இருக்கே லாது. இஞ்சபாரன் வயித்துள்ள உதைநடக்குது. ஒடி விளையாடுது. '
இரண்டாவது மகள் மட்டும் அம்மாவை ஒரு தடவை திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் படத்தில் லயித்து விட் டாள். இந்த முறையும் பெட்டை பிறந்திட்டால்?. இவள் மூத்தவளுக்கும் அப்பிடி இப்பிடி எண்டு கொஞ்சம் டொச்கதைப்பாள். நான் எப்படி இதுகளை சமாளிக்கப் போறன்? கடவுளே! எனக்கு இந்த முறை எப்பிடியெண் டாலும் ஒரு ஆண்பிள்ளை பிறக்கவேணும். ஊரில்ல இருக்கிற அம்மனுக்கு வைச்ச நேத்திக்கடனை எப்பிடி யும் முடிப்பன். இன்னும் நாலு கிழமைக்குள் பிள்ளை பிறக்கும் என்று டொக்டரும் சொல்லிப் போட்டார். டொக்டர் சொல்ற தெல்லாம் இதுக்கு விளங்குதோ? எல்லாத்துக்கும் தலை யாட்டிப் போட்டு வரும். இஞ்ச என்னட்டைத்தான் எல்லாப் போடும் போடுவார். "மூடுங்கடி ரி.வி. யை, ஒரே பாத்தபடி. படிக்கிறதில் லையோ?’ பாமினிக்கு எல்லாவற்றிலும் வெறுப்பு வந்தது. இந்தப்பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷ மாய் இருக்கிறார்கள். எதற்கோ எல்லாப் பெண்களும் சேர்ந்து சிரித்தார்கள். அவள் வார்த்தையை யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை. "இப்ப மூடப்போநீங்களோ. இல்லையோ..? கொப்பர் வரட்டும் சொல்லித்தாறன்.
கொப்பிய நாளைக்கு மாமா வந்து திருப்பிக் கொண்டு. போடுவார். பாத்துப் போட்டுத்தாறன் எண்டு நீங்க தானே வேண்டினியள். வந்த எரிச்சலில் பாமினி,

ஆண்பிள்ளை () 253
‘ஓம். ஓம். பொழுது விடிஞ்சா உங்களுக்கு படம் தான்" என்றவளுக்கு படுத்தால் தேவலை என்றிருந்தது. நீண்டு கிடந்த மூன்று கிழமைக்காலம் அவளுக்கு பெரிய பாரத்தைத் தந்தது. பெட்டையாய் பிறந்திட்டால். ஊருக்கு போயிடுவன் இஞ்சை இருந்து என்ன செய்ய? ஒரே நோயும் குளிரும் தான். இந்த மனுசனும் பத்து வருஷமாய் உழைச்சு உழைச்சு என்னத்தைக் கண்டது? பேசாம அங்கேயே இருந்திருக்கலாம். இடுப்புவலி வருகிற மாதிரி இருந்தது. புரண்டு படுத்தாள். இன்னும் நாள் கிடக்குதானே ஆம்பிளையெண்டால் முந்திப் பிறக்கும் எண்டு சொல்லுவினம். அவளுக்கு சில சமயம் சந்தோஷமாயும் இருந்தது. அந்த மகிழ்ச்சியில் உறங்கிப் போனாள். அவள் கணவன் வந்து தனது பக்கத்தில் படுத்துக் கொண்டதோ, தனது பெண் கள் சாப்பிட்டதோ அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. அவள் விழித்து எழுந்திருக்க முயற்சி செய்த போது வயிறு மீண்டும் பாரம் கூடினமாதிரி தெரிந்தது. பாத்தி ரங்களைக் கழுவிக் கொண்டிருந்தபோது மோகனும் * எழுந்துவிட்டான்.
"இண்டைக்கு டொக்டரிட்ட போவேணும் தெரியும் தானே?’ பாமினியின் குரல் ஒரு எதிர்ப்பார்ப்போடு இருந்தது.
'இவள் மூத்தவளை கூட்டிக்கொண்டு போவன். நான் லீவு எடுக்கேலாது’ 'நேற்றும் எனக்கு சாடையா வலிவந்திட்டுது. சில வேளை ஆம்பிளயிள்ளையோ? அவன் முகத்தை ஆவலோடு பார்த்தாள் பாமினி. ‘பார்ப்போம் உம்மட லக் எப்பிடி எண்டு. நான் சொன்னபடி செய்வன். உமக்கு ரெண்டு பவுண் கொடியில போட வாங்கித் தருவன்’ கணவன் கண்களைச்சிமிட்டி சொன்னபோது, அவளுக்கு பெருமையாய் இருந்தது.

Page 131
254 3 uafuqúb Luar qib
"ஆண்பிளபிள்ளைதான்." *சரி சரி தேத்தண்ணியகொண்டா. பகல் ஷிப்ருக்கு போக முந்தி இன்னொரு நித்திரை கொள்ளவேணும்’ "இஞ்ச பாருங்கோ. பருப்பு, மரக்கறி வேண்டவேணும். காசை தந்திட்டு போய்ப்படுங்கோ." *காசு காசு எண்டுதான் அழுவியள், பாங்குக்குத்தான் போகவேணும்' அவன் சேட்டை மாட்டிக் கொண்டு போகும்போது பாமினி நினைத்தாள். பாங்கில காசை எப்படி எடுக்கிறதெண்டு காட்டி குடுத் தால் நானும் போய் எடுப்பன் தானே?. தானும் பத்தும் ஐந்தும் ஆக வீட்டுச்செலவுக்கு கொடுக்கும் காசில் பிச்சம் பிடித்து வருவது இவருக்கு எங்கே தெரியப் போகிறது? இவர் பத்து வருஷமா உழைச்சவராம்! என்னத்தைக் கண்டார்? நான் வந்து அப்பிடி இப்பிடி எண்டு ரெண்டு செயின் வாங்கிப் போட்டன். இவ்வளவு காலத்துக்கு நான் எண்டா எவ்வளவு சேத்திருப்பன்? பாமினிக்கு கொஞ்சம் அலைந்து திரிந்தால் தேவலை போலிருந்தது. வயிற்றுப்பாரம் முட்டிமுட்டி நெஞ்சுக்கு ஏறிக்கொண்டு இருந்தது. இந்தக் கிழமை பிறந் திட்டா. அவள் நினைவுகள் தன் கணவன் விருப்பு வெறுப்பு களிலேயே நிலைத்தது. சில வேளை பிறந்திட்டால். தன் மீதே வெறுப்பு வளர்ந்தது. பின்நேரம் டொக்ட ரிட்ட போகாமல் விட்டால்தான் என்ன...? ஒழுங்காய் செக் பண்ணினால், தானாமே ஏதோ உதவிக்காகம் கிடைக்குமாம். இல்லாட்டி இவரும் பேசுவார். போகத் தான் வேணும். இந்த மனிசன் வரமாட்டுதாமே. இவள் மூத்தவளைத்தான் கூட்டிக் கொண்டு போவம். அவளும் எவ்வளவு நாளா கேட்டு கொண்டிருக்கிறாள்.
றேடியோவுக்கு பற்றிரி வேணுமெண்டு, அது வேண்டி கொடுத்தாத்தான் வருவாள். இவரிட்ட கேப்பம்.

ஆண்பிள்ளை () 255
கதவு திறக்கப்படும் சத்தம் கேட்ட மோகன் திரும்பி விட்டான். இடுப்புவலி சாடையா வந்தபடியால் இண்டைக்கு டொக்டரிட்ட போ." "நீங்க வாங்கோவன் லீவு போட்டுட்டு அவனுடைய அன்பைத்தேடி அலைந்தது அவளது ஆத்மாவும் கூட. “உமக்கென்ன விசரே எத்தனை பெட்டயள பெத்திட்டீர். இன்று. ...நான் லீவுபோட அவன் என்ன மச்சானா. காசை அவள் கையில் திணித்துவிட்டுப் படுக்கப்போய் விட்டான். பாமினிக்கு உலகமே வெறுத்துப் போனது. பேசாம ஊரில் கிடந்திருக்கலாம். மகளை இழுத்துக்கொண்டு போனாள் டொக்டரிடம்,
அங்கே.பரிசோதனையின் பின் வெளியில் நின்ற மகள் உள்ளே வந்தாள், ! உங்கள இப்பவே ஆசுப்பத்திரிக்கு போகட்டாம். பாமினியின் கால்கள் பலமிழந்து போயின. "நான் போகேலாது. நாள் கிடக்குத்தானே. சொல்லன்? மகள் திருப்பி இவளிடமே வந்தாள், "அவளவ சொல்லினம் உங்கள ஆசுபத்திரிக்குப் போகட்டாம்.'
*அப்ப கொப்பருக்கு யார் சொல்லுறது? என்ற துணி மணிகள் எப்பிடி எடுக்கிறது?" *தான் கொணந்து தாறன். வாங்க போவம் ஆசுப் பத்திரிக்கு. பாமினிக்கு முழு உடம்பும் நடுங்க ஆரம்பித்தது. தன் உடம்பு ஏன் இப்படி பாரமாகிப் போனது? கால்கள் அடியெடுத்து வைக்கவே மறுத்தன. "பிள்ள இண்டைக்கே பிறந்திடுமோ? இந்த மனுசன் என்னைத் தேடி பாக்கவருமோ...' எல்லாம் வெள்ளை பாய் வெறுமையாய் தெரிந்தது. கட்டிலில் ஏறிப்படுத்தது மட்டும் தெரியும். ஒன்றையும் யோசிக்க முடியவில்லை. தான் செத்துப் போய் விட்டால் என்ன என்ற நினைப்பு மேலோங்கி நின்றது. பாமினி நினைவிழந்தான்.

Page 132
,: 256 C uafquid i asuruh
யாரோ தொட்டு தன்னை எழுப்பின மாதிரி இருந்தது. மோகனின் சிரித்த முகம் அவள் கனவில் வந்த மாதிரி தெரிந்தது. வயிற்றை தொட்டுப் பார்த்தாள். பாரம் குறைந்து சுருங்கி இருந்தது.
பிள்ளை எங்கே...? அதிர்ச்சியடைந்து போன பாமினியை மோகனின் கரங்கள் சமாதானப்படுத்தின. பக்கத்துத் தொட்டிலில் ஒரு சின்ன ஜீவன் உறங்கிக் கொண்டிருந்தது.

.பனியும்
ஜீவமுரளி
பனைகளுக்கும், பனம்பொருளின் மகிமைக்கும் புதிய பரிமாணம் கண்டது பருத்தித்துறை. அங்கிருந்து சென்ற எனது நண்பன் மைக்கல். அமெரிக்காவுக்குப் .ա. u-17

Page 133
258 o Luafqub Luansur nquh
பக்கத்திலுள்ள கனடாவைக் கண்டுபிடித்தான். அதற்கு அத்தாட்சியாக மூன்று வரி ஹைகூ கவிதையொன்றை அனுப்பியிருந்தான்.
நிலவை உடைத்தேன் ஆவல் மீற
உள்ளிருந்ததோ
இருளின் கண்கள் ஐரோப்பாவிலிருந்து சென்ற கொலம்பஸ் அமெரிக் காவைக் கொன்று பிடித்த ஐநூறு ஆண்டுகளின் பின் தான் நான். ராஸ்தா, அல்போன்ஸ், சிரி, யூனா எல்லோரும் ஐரோப்பாவைக் கண்டு பிடித்தோம்! ஜேர்மனியை நாங்கள் கண்டுபிடித்த பின்புதான் சிறைக் கைதிகளாக்கப் பட்டோம். ஜேர்மனி, டொச்லாண்ட் என்ற பொருளில் துப்புரவு செய்யப்பட, நாங்கள் 6ᏰᏜᎥ எறிவதற்கொப்பரன குப்பைகளானோம். யூதர்களின் அவலச்சுவடுகள் மீண்டும் மிதந்து வர நாங்கள் சிறையினுள் ஒடுங்கியிருந்தோம். நான் இலங்கையன். ராஸ்தா, அல்போன்ஸ், சிறி, யூனா ஆபிரிக்கர்கள், முறையே நைஜீரியா, எபறிக் கோஸ், கம்பியா, லைபீரியாவைச் சேர்ந்தவர்கள். பின்பு சல்வத்தோறையும் வந்தான். அவன் இத்தாலியன். பழைய சிறை துப்புரவு செய்யப்பட்டதன் பெயரில் கைதிகள் வெவ்வேறு நகரங்களிலுள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். பழைய சிறை இனி ஜேர்மனியக் கைதிகளுக்கு மட்டுமே என்று பேசப்பட்டது.
ராஸ்தாவும் நானும் இன்னும் சில கைதிகளும் பஸ் ஒன்றில் ஏற்றப் பட்டோம். அது நான்கு பேர் கொள்ளக் கூடிய குட்டி அறைகளைக் கொண்ட நீண்ட பஸ்.
ராஸ்தா, நான், இரண்டு யூகோஸ்லாவியர்கள். இந்த நால்வரும் பஸ்ஸின் குட்டிச்சிறை ஒன்றுக்குள்ளிருந் தோம். பஸ் ஒடிக்கொண்டிருந்தது. ராஸ்தா கதைத்துக்

... Lisofiuyúb O - 259
கொண்டிருந்தான். அவன் எங்கள் மூவரில் யாருடனும் பேசவில்லை. யாருடனோ கதைத்துக் கொண்டிருந் தான். இரண்டு மாதங்களின் பின்னர் பஸ்ஸின் சிறிய கண்ணாடி வழியாக மரங்களைப் பார்க்க முடிந்தது.
ராஸ்தாவுக்கு அலட்சியமாய் விடப்பட்ட சுருண்ட கட்டையான தாடி, கீழ்வாய் உதடுகளை முட்ட எத்த னிக்கும் மீசை, பிரித்தெடுக்க முடியாத ஒன்றுடன் ஒன்று ஒட்டிப்போன நீண்டு சுருண்ட தலைமுடி. அவன் பெயர் றொபேட் ராஸ்தா என்றே அழைத்தேரம்.
அவன் யாரையும் லட்சியம் செய்வதாயில்லை. தொடர்ந்து கதைத்துக் கொண்டும், இடையிடையே திட்டிக் கொண்டுமிருந்தான். நிறுத்தவில்லை. உயர்ந்த கடவுளிடமும், தன் ஆத்மாவுடனும் பேசிக் கொள்கின் றானாம். அவன் அப்படித்தான் சொல்லிக் கொண் டான். கைதிகள் எல்லோரும் இவன் கிறுக்கன் என்றே பேசிக் கொண்டனர்.
காற்சட்டைப் பையில் கையை விட்டு ஏதோ தேடிக் கொண்டிருந்தான். ஒன்றும் அகப்படவில்லை. குனிந்து, பொலித்தீன் பாக் ஒன்றை எடுத்தான். அதிலிருந்து காகிதச் சரையொன்றை எடுத்தான். மோசமான நெடி. ஒட்டி உறிஞ்சி வீசப்பட்ட சிகரட், ரபாக் அடிக்கட்டை கள். ஒரு விரல் நீளமான காகிதம் ஒன்றைக் கிழித்து, அதன்மேல் ரபாக் தூள்களை உதிர்த்து புதிய ரபாக் சுருளொன்றை தயாரிக்க முயன்றான். - - -
"ஏய் ராஸ்த்தா! அதை வீசு. இந்தா...' என்று ஒரு சிகரெட்டை நீட்டினேன். பற்ற வைத்துக்கொண்டான்.
க்ளுக்.க்ளுக் ஒரு விக்கல் சிரிப்பு. அவன் விக்கல் சிரிப்பு எப்பொழுதும் முப்பது வினாடிகளுக்கு குறையாது.
எனது உடுப்புக்கள் இருந்த "பாக்கின் மேல் ஒரு அப்பிள். அதை அடிக்கடி பார்ப்பதும் சிரிப்பதுமாக விருந்தான்.

Page 134
260 [...] usefuiúb uaairuilib
"ஏய்! இந்த அப்பிளை எனக்குத் தருவாயா?" "தாராளமாக, இந்தா எடுத்துக்கொள்' என்றேன். அப்பிளைக் கடித்தபடியும் புகைத்தபடியும் பாடத் தொடங்கினான். அது ஓர் ஆபிரிக்கப் பாட்டாக இருக்க வேண்டும். *ஒப ஒப நம் கிம் கொ. ஒப ஒப ம் கிங் கொ." யூகோஸ்லாவியர்கள் இருவரும் கை தட்ட, நான் பஸ் -ஸின் சுவரில் தாளம் போட அவன் தலையையும் தோள் களையும் ஆட்டி பாடிக் கொண்டிருந்தான். இடையில் பாட்டை நிறுத்திவிட்டு "ஏய்! ஏய்!” என்ற படி என் தோள்களைத் தட்டினான், "ஏய். அப்பிள் அப்பிள். * என்னிடம் ஒன்றுதான் இருந்தது. அதைத்தான் தந்து விட்டேனே' என்றேன். *அது, இல்லை. அப்பிள். அப்பிள். உனக்குத் தெரியுமா?" ஒரு வார்த்தையை இரண்டு தடவைகள் உச்சரித்தான். சிலவேளை நான்கைந்து தடவைகள்கூட உச்சரித்தான். எங்கள் மூவரில் ஒருவர்க்கும் ஒன்றும் விளங்கவில்லை. *ஓம். அ பிள். அப்பிள்." என்று தனக்குள் பேசினான். தலைக்கு மேல் வலது கையை உயர்த்தி விரலைச் சுரண்டியபடி, "உனக்குத் தெரியுமா? உனக்குத் தெரி யுமா?. அ.ஆ. ஆண்களும் ஆண்களும் தங்களின் அன்பை தெரிவிக்க அப்பிள் பரிமாறிக் கொள்ளலாம் என்ன?. இது நல்ல விசயம். இது நல்ல விசயம். அது தான் சரியானது. அது சரியானது' என்ற படி மீண்டும் பாடத் தொடங்கினான். நான் யன்னலின் சிறு கண்ணாடி வழியாக மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மறுபடியும் என்னைச் சுரண்டினான்.

- ...ufh 261
'ஏய். தக்காளி. தக்காளி. மீண்டும் தலைக்கு மேல் வலது கையை உயர்த்திச் சுண்டியபடி, "பெண்களும். பெண்களும் தங்களின் அன்பை தெரிவிக்க தக்காளி பரிமாறிக் கொள்ளலாம் என்ன! இது நல்லது. இது நல்லது.” பாடுவதுபோல சொன்னான். 'இனிமையான விசயம். இனிமையான விசயம்.அ. ஆ. மீண்டும் நீண்ட விக்கல் சிரிப்பு, வெள்ளை பற்: களும் வெளிச்சமான கண்களும்.
நானும் அவன் கூற்றிற்கு தலையாட்டிவிட்டு "மனிதர் களும் மனிதர்களும் தங்கள் அன்பைத் தெரிவிக்க கோதுமையும் அரிசியும் பரிமாறிக் கொள்வதில் தடை கள் விழுந்து விட்டனவே!’ என்று கவலை தெரி வித்தேன். *அ. ஆ. நீ மனிசன். நீ சரி. நீ சரி.." என்றபடி பொலித்தீன் பையிலிருந்து சில காகிதங்களையும் டைம் சஞ்சிகை ஒன்றினையும் எடுத்தான். சஞ்சிகையின் அட்டைப்படத்தில் உள்ள புஷ்ஷின் தலையிலும், கிளின்டனின் தலையிலும் புள்ஷிட்" என்று எழுதப் பட்டிருந்தது. காகிதங்களில் தாறுமாறாக எழுதியிருந் தான்.
தான் நினைத்ததை உச்சரித்தபடியே உயர்ந்த கடவுள ரையும் ஆத்மாவையும் நோக்கி அவர்களுடன் பேசிய படியே எழுதத் தொடங்கினான்.
*உனக்குத் தெரியுமா. உனக்குத் தெரியுமா?. எனக், குத்தெரியும். இந்த வெள்ளையர்களின் இனவெறி எந்தளவு என்று எனக்குத் தெரியும். நான் களைத்துப் போய்விட்டேன். இந்த வெள்ளையர்களினால் நான் நிறையவே களைத்துப் போய்விட்டேன். நான் வீட்டிற்கு போகவேண்டும். நைஜீரியா எனது வீடு. நான் வீட்டிற்கு போகவேண்டும்."

Page 135
262' . [ ] usiniúil, uasmuiúb
அவன் கைகளால் மேலே எழுதமுடியவில்லை. தூஷணங்' களை உச்சரித்தபடியே மீண்டும் எழுத முயன்றான். முடியவில்லை. அந்த காகிதத்தை வைத்துவிட்டு புதிய தொன்றையெடுத்து அத்தியாயம் ஒன்று, அத்தியாயம்' இரண்டு என்று மேலிருந்து கீழாக பத்து வரை எழுதி னான்,
அத்தியாயம் ஒன்றில் ஜப்பான் என்றும், அத்தியாயம் பத்தில் உயர்ந்த கடவுள் என்றும் எழுதிவிட்டு எங்கள் மூவரையும் கூர்ந்து பார்த்தான். பின் அத்தியாயம் இரண்டில் ஜேர்மெனியென்றும், மூன்றில் இனவெறி யென்றும், நான்கில் அகதியென்றும், ஐந்து ஆறு ஏழு தவிர்த்து, எட்டில் புத்தனென்றும் ஒன்பதில் அணுகுண் டென்றும் எழுதிவிட்டு விக்கி விக்கி சிரித்தபடியே, ‘பைத்தியக்காரர்கள். பைத்தியக்காரர்கள். என் றான். நாங்கள் அடுத்த சிறையையும் வந்தடைந்துவிட்டோம். ராஸ்தாவோ ஆயாசமாய் தன் வீட்டிற்குப் போவதற் காக விமானநிலையம் வந்திருப்பதாகவே எண்ணி யிருந்தான்.
ராஸ்தா எழுந்து கண்ணாடி வழியே பார்த்துவிட்டு, 'ஏய்.இது எந்த விமான நிலையம்?' என்று கேட்க, 'இது விமான நிலையம் இல்லை, இன்னொரு சிறை. என்றேன். கைகளை ஓங்கி பஸ்ஸின் சுவரில் குத்தினான். "புள்ஷிட்.புள்ஷிட்...'தன் காற்சட்டைப்பையில் மறுபடி யும் கையை விட்டுத் தேடினான். ஒன்றும் அகப்பட் வில்லை. பெரும் சுற்று மதில்களைக் கொண்ட் மிகப் பழைல் சிறை. முன்னைய சிறைக்கும் இதற்குமுள்ள வித்தி யாசங்களை மிக எளிதில் தெரிந்து கொண்டோம். இது ஹிட்லர் காலத்துச் சுவடுகளில் ஒன்றாகவே இருந்தது.

... Loßh (* 26.
ஜேர்மனியின் எந்தச் சிறைகளும் இதுபோல இல்லை. என்பது முன்அனுபவமுள்ள சல்வதோறின் கணிப்பு ராஸ்தாவும் நானும் தனித்தனி அறைகளில் பிரிக்கப் பட்டு விட்டோம். நேற்றும் உருளைக்கிழங்கு இன்றும் உருளைக்கிழங்கு நாளையும் அதுதான். பாண் துண்டுகள். பைப் தண்ணி. நாக்குச் செத்துவிட்டது. பூட்டுவதும் திறப்பதுவுமாக காவலாளிகள் இருந்தனர். பகல் வந்து, மறைந்து மறைந்து இரவுகள் மட்டுமே தெரிந்தன. 's ஒவ்வொரு காலையும் ஒரு மணி நேரம் நூறு பேருக்குக் குறையாமல் சிறைக்குள் உள்ள ஒரு சிறிய நிலப்பரப்பில் ஆட்டுமந்தைகள் போல் சுற்றி நடந்தோம். அது. *" விடுதலை" மணித்தியாலம் என்று சொல்லப்பட்டது. ஒரு நாளின் 23 மணித்தியாலங்கள் பூட்டிய அறையில் இருந்தோம். யூகோஸ்லாவியர்கள் ஒரு குழுவாக, பஞ்சாபியர்கள்- ஆபிரிக்கர்கள் என்றும் குழுக்களாக, நான், தனித்த ஒருவனாக, சுற்றி நடந்தோம். நான் ஆபிரிக்கர்களான அல்போன்ஸ், சிறி, யூனாவோடு இணைந்துகொண்டேன். ராஸ்தாவும் எங்களுடனேயே இருந்தான். ஆனால் அவன் உயர்ந்த கடவுளரிடமும் ஆத்மாவுடனும் பேசியபடியே தனித்த ஒருவனாகவே நடந்தான். சிகரெட்டுக்கும் ரபாக்குக்கும் வைரக் கல்லைக்கூட மாற்றாகக் கொடுப்பதற்கு கைதிகள் தயாராகவிருந்த னர். ராஸ்தா இன்று காலை வந்ததிலிருந்து எல்லாரிட மும் ரபாக் கேட்டுப் பார்த்துவிட்டான். கையை விரித்து விட்டார்கள். இடதுகையை இடுப்பில் வைத்தபடி, வலதுகையை உயர்த்தி சுட்டுவிரலைக் காட்டியபடி திட்டிக் கொண்டே வேகமாக நடக்கத் தொடங்கினான். குனிந்து ரபாக் அடிக்கட்டைகள் தேடிப்பார்த்தான். ஒன்றும் அகப்படி வில்லை. அவை ஏற்கனவே பொறுக்கப்பட்டுவிட்டன.

Page 136
264 O uafugib uaavuth
உரத்துத் திட்டியபடியே கைகளை வீசி, வானத்தைப் பார்த்துத் துப்பி அமெரிக்காவையும் பிரிட்டனையும் ஜேர்மனியையும் திட்டிக் கொண்டு நடந்தான். அல்போன்சும் நானும் ஒரு மூலையில் குந்தியிருந்தோம். அவனிடம் நான்கு அல்லது ஐந்து ரபாக்குகள் சுற்றக் கூடிய தூள்கள் மட்டுமே இருந்தன. அதில் ஒரு ரபாக்கிற்கு அளவான தூள்களை மட்டும் வெளியே எடுத்து ஒளித்து வைத்து சுற்றினான். ராஸ்தா கண்டு விட்டு ஓடிவந்தான். அல்போன்ஸ் தன்னிடம் ஒன்று மில்லாத போல் ஒளிக்க, ராஸ்தா கோபத்தோடு காவ லாளிகளிடம் திரும்பி ஓடினான். 'ஏய்! நான் உடனேயே வீட்டிற்குப் போகவேண்டும் நைஜீரியாவிற்கு- ஓம் வீட்டிற்குப் போகவேண்டும். அனுப்ப ஏற்பாடு செய்" அவன் அதையே திருப்பி திருப்பிச் சொல்லிக் கொண் டிருந்தான். காவலாளிகள் விழுந்துவிழுந்து சிரித்தனர். சககைதிகளும் வேடிக்கை பார்த்தபடி அவனுக்குகிறுக்கு என்றே பேசிக் கொண்டனார். அல்போன்ஸ் ஓடிச் சென்று ராஸ்தாவின் கையைப் பிடித்து குந்தியிருந்த மூலைக்குக் கூட்டிவந்து ரபாக் சுருளொன்றைக் கொடுத்தான். விக்கல் சிரிப்பும் சந்தோஷமும் பொங்க கண்களைக் கூசியபடியே சூரியனைப் பார்த்தான். ரபாக் கிடைத்த பொழுதுகளில். அவன் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தான். நான் அவனிடம் அந்த ஜப்பான் விசயத்தைப் பற்றிக் கேட்டேன். அவன் குஷியாகிவிட்டான். ஜப்பானில் தனக்கு ஐந்து காதலிகள் என்றும், அதில் இரண்டுபேர் ஜப்பானிலும், ஒருத்தி நைஜீரியாவிலும், மற்றொருத்தி அமெரிக்காவிலும் இருப்பதாகச் சொன்னான். அல்போன்ஸ் என்னைப் பார்த்து சிரித்தான்.
* ஏய்! உனக்குத்தானே அமெரிக்கா பிடிக்காது” என்றேன் நான்.

... Luawfiqh O 265
அமெரிக்கக் கறுப்பர்கள் மீது தனக்கு மிகுந்த மரி யாதை இருப்பதாகவும், தன்காதலி ஒரு அமெரிக்க கறுப்பி என்றும் விளக்கினான்.
ஜப்பானில் உனக்கு இரண்டு காதலிகளா?" என்றபடி அல்போன்ஸ்" கொடுப்புக்குள் சிரித்தான். ராஸ்தானின் குஷி கூடிக்கொண்டே போனது. ஜப்பான் காதலிகள் பற்றி நிறையச் சொல்லத் தொடங்கி விட்டான். நாங்கள் இருவரும் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்தோம். இடையில் அல்போன்சிடம் ரபாக் கேட்க, அவன் கையை விரித்தான். ராஸ்தா எழுந்து கைகளை வீசியபடி உயர்ந்த கடவுளரிடமும் ஆத்மாவிட மும் பேசியபடி நடக்கத் தொடங்கினான். மறுநாள் காலை 'விடுதலை’’ மணித்தியாலம் என்று எங்களுக்குச் சொல்லப்பட்ட நேரத்தில் நான், அல்போன்ஸ், சிரி, யூனா வட்டமாய் ஒரு மூலையில் இருந்து ராஸ்தாவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ராஸ்தா, இன்று அமைதியாகவே உயர்ந்த கடவுளரிடமும், ஆத்மாவிடமும் பேசியபடி நடந்து கொண்டிருந்தான். காரணம், யூனா தன்னிடமிருந்த காசில் ரபாக் பக்கற்றொன்றைப் பரிசளித்திருந்தான். ராஸ்தாவை சிறியும் கிறுக்கன் என்றே சொல்லிக் கொண்டான். நானும், அல்போன்சும், யூனாவும் மறுத்தோம். ராஸ்தாவைச் சுற்றி ஆறு, ஏழு பேர் நிற்க அவர் களுக்கு ரபாக் தானம் செய்து கொண்டிருந்தான். இப்ப என்ன சொல்கிறாய் என்றான் அல்போன்ஸ். சிறியோ, அவனுக்குக் கிறுக்கைத் தவிர வேறொன்று மில்லையென்றான். எங்களை நோக்கி வந்த ராஸ்தா எங்களிடம் இருக் கிறதா என்று கேட்க நாங்கள் ஒமென்றோம். கையில் வைத்திருந்த ரபாக் பக்கற்றை காற்சட்டைப் பொக். கற்றுக்கள் வைத்துவிட்டு இனி என்னிடமும் இல்லை.

Page 137
266 L பனியும் பனையும்
யாக்கும் என்றபடியே திரும்பி நடந்தவன், சில அடிகள் தள்ளி நின்று, "ஏய் ஆபிரிக்காவின் அதிகாரம் எங்களின் கையில் தான் கிடைக்கும். இருந்து பார், சிங்கிள் வாழைப்பழம்கூட இந்த வெள்ளையர்களுக்கு போகவிடமாட்டேன்’ என்றான். சிறியால் இந்தமுறை ராஸ்தாவிற்கு கிறுக்கென்று சொல்ல முடியவில்லை. நாங்கள் குந்தியிருந்த மதில் களில் விழுந்த வெயில் தாழ்த்து வந்தது. மேலாடை களைக் கழற்றி வெயில் காய்ந்து கொண்டிருந்தோம். அல்போன்ஸ் ஒரு ஆபிரிக்க நடன கலைஞன். உடற்” பயிற்சியால் இறுகிப்போன அவன் உடல் இங்கு வந்து ஒரு மாத காலத்திற்குள் சற்று தளர்ந்து போய்விட்டது. இருந்தாலும் இத்த வெயிலில் அவன் தேகமும், முகமும் பொலிவாகவே இருந்தது. தன்னளவில் தான்" சுதந்திரமாகத் திரிந்ததாகவும் விடுதலை என்றால் எப்படி இருக்கும் என்று இப்பொழுது உணருவதாகவும்: சொல்லிக் கொண்டான். "எங்களுக்கு கண்பர்கள் இருந்தார்கள். காங்கள் கண்பர்களை இழந்தோம்’ என்று பாடிக்கொண்டே அல்போன்ஸ் ஆடத்தொடங் கினான். அவன் மிகச் சத்தமாக மதில்களின் உயரத் திற்கு மேலால் பாடினான். உடல் வியர்த்துக் கொட்டியது. ஒவ்வொரு வியர்வை முத்துக்களிலும் ஒவ்வொரு சூரியன் தெரிந்தது. காவலாளிகளில் ஒருவன் சத்தம் போட்டான். "ஏய்! ஆபிரிக்கனா பாடாதே நிப்பாட்டு. இது சிறை தெரியுமா? பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.' சிறி எழுந்து நின்று சத்தம் போட்டு சிரிக்கத் தொடங்கி விட்டான். "என்ன சிரிப்பதும் கூடவா?’ என்றபடி காவலாளியைப் பார்த்தான்.

.பனியும் 0 287
கள்வலாளி பேசாமல் இருந்து விட்டான். மறுபடி சிறி சத்தமாக குரலெடுத்து சிரித்தான். "சும்மா இரு சிறி. அவன் வெள்ளையன் அப்படித் தான் சொல்லுவான்' என்று அல்போன்ஸ் தடுத்தான். "அவன் வெள்ளையன் என்றால், நான் சர்வதேசக் கறுப்பன்" என்றபடி அல்போன்ஸைப் பார்த்தான். 'இல்லை அல்போன்ஸ், இவங்கள் எங்களை எப்பொழு தும் மனிசனாய் பார்த்ததில்லை. எப்படி மனிசனாய் இருக்கிறது என்பதுவும் இவங்களுக்கு மறந்து போச்சு. எல்லாரும் தனித்தனி " "ப்ரோக்கிரட்'..." ஜேர்மனி மேல் சலிப்பும் வெறுப்பும் மீற, கம்பியா விற்குத் திரும்பிச் செல்வதற்காக சோஷல் அதிகாரி யிடம் உதவி கேட்டு சென்றிருக்கிறான் சிறி. இவனிடம் பாஸ்போட் இருக்கவில்லை. சோஷல் அதிகாரி பொலிஸைக் கூப்பிட, பொலிஸ் வந்து, "பாஸ்போட் தயாராகும் வரை உள்ளே இரு' என்று சொல்லி விட்டது. அவனிடம் விசா இருந்தும், எவ்வளவு வாதாடியும், கம்பியாவிற்கு திரும்பிப் போகப் பொலிஸ் அனுமதிக்கவில்லை.
பூன்ாவோ லைபீரிய இராணுவம் குறித்து நடுங்கிக் கொண்டிருந்தான். இங்கு ஒரு கிராமத்தில் தனக்கு ஒரு காதலி இருந்ததாகவும், பின் பிரிந்து சென்று விட்டதாயும், அதன் பிறகு அந்தக் கிராமத்தில் ஒரு இளைஞனும் அவளைக் காதல் செய்ய வரவில்லை யென்றும், பின்பு ஒருநாள் தன்னிடம் திரும்பி வந்து விட்டதாயும், அவளின் மேல் தனக்கு மிகுந்த காதல் இன்றளவில் இருப்பதாயும், இந்த இரண்டு காரணங் களிற்காகவும் தான் வழக்கறிஞர் மூலம் வாதாடி இங்கேயே இருந்துவிடப் போவதாகவும் சொன்னான். அல்போன்சும், சிறியும் பூனாவைப் பார்த்து சிரித் தார்கள்.

Page 138
268 O uaftuh luarnih
'யூனா நீ இன்னும் திருந்தவில்லையா? இனியும் இங்கு இருக்க விரும்புகிறாயா!' "நான் லைபீரியாவிற்கு போகமுடியாது. போனால் செத்து விடுவேன்" என்றான் யூனா.
வேண்டாம், நீ ஐவரிக்கோஸ்ற்ருக்கு வா" என்றான் அல்போன்ஸ்.
"அதெப்படி முடியும்?' என்றான் யூனா, *அதெப்படியோ? இங்கு மட்டும் தொடர்ந்து இருக்க நினைக்காதே, உன்னை அழிக்க நினைக்காதே" என்றான் சிறி.
நானும் முழி பிதுங்க இவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அல்போன்ஸ் என்னைப் பார்த்து சிரித்தபடியே, "நீ என்ன சொல்கிறாய்?’ என்றான். நான் யூனாவை ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டு, *எனது சொந்த DMIs60 யாழ்ப்பாணத்திற்கு சென்றால், என் கடைசித் தம்பி விளையாட்டாகவே சுட்டுவிடுவான்' என்றேன். பிறகு, இராணுவம் குறித்துப் பயம் இருந்தபோதிலும், வீட்டிற்குப் போக கொள்ளை ஆசை இருப்பதைச் சொன்னேன். நான் இலங்கைக்குப் போவது ஆபத்தென்றும் இங்கேயே இருக்கவேண்டுமென்றும் வாதாடினான்
60TT. அல்போன்சும் சிறியும், யூனா என்னைக் கெடுப்பதாகச் சொன்னார்கள்
அமைதியாக நடந்து கொண்டிருந்த ராஸ்தாவை அல்போன்ஸ் கூப்பிட்டு இது குறித்து அபிப்ராயம் கேட்டான்.

.பனியும் 269
'These guys ara crazy; Fucking Germans I want to go home...' என்றபடி ராஸ்தா உயர்ந்த கடவுள ரிடமும் ஆத்மாவுடனும் பேசியபடி மீண்டும் நடக்கத் தொடங்கினான். உருளைக்கிழங்கின் மேல் வெறுப்பு ஏற்பட்டது. பகலில் தூங்குவதும் வழக்கமாகியது. விழித்திருந்து கற்பனை செய்வதைவிட, தூங்குவது நல்லதாகப் பட்டது. தூங்கினால், கனவுகள் தூக்கத்தைக் கெடுத்து விடுகின்றன. கனவுகளிடமிருந்து தப்பித்துக் கொண் டிருந்தால் இந்தக் காவலாளிகள் கதவைத் திறந்து பூட்டும் இடியோசையும், அருகிலுள்ள சேச்சின் மணி யொலியும் இம்சிக்கின்றன.
தொடர்ந்து கட்டிலில் தூங்குவதும், தூங்கமுடியாமல் படுத்திருப்பதாலும், உடல்முழுக்க வலி ஏற்பட்டது. எனக்கு வியர்த்துக் கொட்டவேண்டும். உடல் இலேசாக வேண்டும். ஒரு மாற்றத்திற்காக உடற்பயிற்சி செய்யத் தொடங்கினேன்.
நாளின் ஒரு மணிநேரம் தவிர மீதியை இந்த மூன்று வாரங்களும் தனித்தே கழித்துவிட்டேன். நேற்று சர்வ தோரை வந்தது நாளின் நீளத்தைக் குறைத்துவிட்டது. இரட்டையடுக்குக் கட்டிலில் எனக்கு மேல் படுக்கை. அவனுக்கு கீழ் படுக்கை. என் படுக்கையோரம் ஜன்னல். இதிலிருந்து சுற்று மதிலைத்தாண்டி வெளியே பார்த்தால், மரங்களின் உச்சியும், சேச்சின் கோபுரமும், கோபுரத்தின் மேல் யேசுவின் சிலுவையும், சிலுவையின் உச்சியில் ஒரு கோழியும் தெரியும். சேச்சின் பக்கமாக நகரின் வேலைவாய்ப்பு அலுவலகம். கோபுரத்தின் உச்சியைப் பார்க்கும் போதெல்லாம் அந்தக் கோழியின் மேல் கேள்வியும் பரிதாபமும் ஏற் பட்டது. என்னைப் போல் பகலில் தூங்க முடியாது, தூங்குவது போல் பாசாங்கை வரவழைத்து, பிரண்டு பிரண்டு படுத்திருந்த சல்வதோரையைத் தட்டினேன்.

Page 139
270 0 பனியும் பனையும்
'ஏய்! அந்தக் கோழியைப் பார்த்தாயா?" "கோழியா! எங்கே?' என்று திடுக்கிட்டு எழும்பினான். நான் கோபுரத்தின் உச்சியைக் காட்டினேன். "அதுவா. நானும் ஏதோ உண்மைக் கோழி என்று நினைத்துவிட்டேன். மக்டொனாஸ்டிலிருந்து தப்பி வந் திருக்கும் என்று. வாக்கியத்தை முடிக்காமலே திரும் பிப் படுத்துவிட்டான். நான் என் படுக்கையிலிருந்தபடியே அந்தக் கோழி யையே பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் மாறு தலுக்காக திரும்பினால் வானம் தெரியும். சேச்மணி ஒலிக்கத் தொடங்கியது. குறைந்தது பத்து நிமிடங்களாவது இந்த ஒலியைச் சகித்தாக வேண்டும். சல்வதோரை 'இது வேற சனியன்' என்றபடி கட்டிலை விட்டு எழும்பி, இந்தச் சிறிய அறைக்குள் மாறி மாறி நடக்கத் தொடங்கினான். நான் அந்தக் கோழியைப் பார்த்தபடியே இருந்தேன். ‘என்ன கோழி பறந்துவிட்டதா? இருக்கிறதா?’ என் றான் சல்வதோரை. "அது அங்கேயே நிற்கிறது’ என்றேன் நான்.
'ஏய் அந்தக் கோழியும் என்னைப் போல் தஞ்சம் கேட்டி ருக்குமா பார். அதற்கு சிறகுகளைக்கூட காணவில்லை. அந்தரத்தில் வேறு நிற்கிறது. அதை இறக்கிவிட்டால் என்ன?’ என்றபடி சல்வதோரையிடம் திரும்பினேன். நடந்து கொண்டிருந்தவன், யன்னலோரம் வந்து என்னையும் கோழியையும் மாறி மாறிப் பார்த்துச் சிரித் தான். ஒரத்திலிருந்த கதிரையை இழுத்துப்போட்டு இருந்தான். கடுமையான யோசனை செய்பவன் போலத் தோன்றினான். சேச்மணி இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் மறுபடியும் எழும்பி மாறிமாறி நடந்தான்.

•••uणीमb O 271
*டாண் டாண். டாண் டாண்’ என்று அவனும் ஒலி எழுப்பியபடியே மணியொலிக் கேற்றவாறு வலது தோளையும் இடது தோளையும் அசைத்தபடி நடந் தான். "ஹிட்லர் ர்ர்ர்ர்" என்று நீட்டிக் கத்தினான். மறுபடியும், "டாண் டாண். டாண் டாண்’ என்று எனக்கு கிட்ட வந்து கையைக் காட்டி சிரித்தபடியே, மணியோசையுடன் கத்தினான்.
அவனால் ஓர் இடத்தில் நிற்க முடியவில்லை. அங்கும் இங்கும் நடப்பதாகவும் புகைப்பதாகவும் இருந்தான். நானும் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். மூன்று குழந்தைகள். மனைவி இருபத்தைந்து வருடமாக ஜேர்மனியில் இருப்பதாகவும், ஒரு திருட்டுக் குற்றத் திற்காக பத்தொன்பது மாதங்களாக பன்னிரண்டு வருடங்களிற்கு முன்பு கைதியாக இருந்ததினால் இந்த நாடு கடத்தலென்றும், இனி ஆறு வருடங்களிற் குள் ஜேர்மனிக்குள் நுழைய முடியாதென்றும் சொன் னான்.
"இத்தாலிக்குப் போனால் என்ன செய்வாய்? குடும்பம்? திரும்பி வருவாயா?" எனக் கேட்டேன். இல்லையென்றும், தன் மனைவி ஹொலண்டைச் சேர்ந் தவளென்றும், அங்கு, குடியேறவிருப்பதாகவும் சொன் 60 troit.
அந்தத் திருட்டு விசயத்தைப் பற்றி கேட்க எனக்கு விருப்பமாகவிருந்தது. கோபித்துக் கொள்வானோ என ஒரு தடவை யோசித்தேன். இருந்தாலும் கேட்டேன். அவன் அதைப் பற்றி உற்சாகமாகவே சொன்னான். ஒரு மில்லியன் பெறுமதியான சுவர்க்கடிகாரம் என்றும் அப்படி உலகத்தில் நான்கைந்து தான் இருக்கிற தென்றும், அதுவொரு பணக்காரன் வீட்டில் இருந்த தென்றும், அதைத்தான் திருடி இருநூற்றியம்பது ஆயிரம் மார்க்குகளுக்கு ஒரு யூதனுக்கு விற்றுவிட்ட

Page 140
272 ) uafuqih uaswr Iqb
தாகவும், அப்பணத்திலே தான் கோட் செலவுகள் செய்ததாகவும், மீதியில் ஹொலண்டில் வீடு வாங்கிய தாகவும் சொன்னான். * பகிடி தெரியுமா? நான் திருடியதாக கோட்டால் நிரூபிக்க முடியவில்லை" என்றான் சல்வதோரை சிரித்தபடியே. "திருடனென்று நிரூபிக்காமலா பத்தொன்பது மாதங் கள் சிறையிலிருந்தாய்." * அதைவிடு. பணம் கிடைத்ததே." என்றான் உத்ஸாக - D 35. மாலை ஒன்பது மணியைத் தாண்டிவிட்டது. வெயில் இன்னும் தாழவில்லை. நானும் சல்வதோரையும் பேசிக்கொண்டிருந்தோம். பக்கத்து அறைக் கதவு உதைத்து சத்தம் கேட்டது. அதில் அல்போன்சும் சிறியும் இருந்தார்கள். காலையில் அல்போன்ஸ் தனக்கு உடம்பு சரியில்லையென்றது ஞாபகம் வந்தது. கதவு தொடர்ந்து தட்டப்பட்டுக் கொண்டிருந்தது. காவலாளி வந்து, " என்ன வேண்டும் உங்களுக்கு என்று கத்தினான். "டொக்டரைக் கூப்பிடு, அல்போன்சுக்கு நெஞ்சுவலி.. கதவைத்திற' என்று சிறி கத்தினான், * . . . இப்ப முடியாது. ஜன்னலைத் திறந்துவிட்டு படு. காலையில் விண்ணப்பம் எழுதிக் கொடு’ என்று கத்திக் கொண்டு காவலாளி போய்விட்டான்.
‘இன்றைக்குச் செத்துப் போ. நாளைக்கு விண்ணப்பம் எழுது. விண்ணப்பம் தெரியுமா விண்ணப்பம்’ என்று எனக்குச் சொன்னபடியே சிறி கதவருகில் போய் நின்றான். குரலைச் செருமி காவலாளிகளின் தடித்த குரலை தனக்கும் வரவழைத்தபடி, "என்ன என்ன வேண்டும் உனக்கு முடியாது.இப்ப இல்லை

.பனியும் ப 273
நாளைக்கு. ஓம் நாளைக்கு விண்ணப்பம் எழுது' என்று 'மிமிக்கி செய்து சிரித்துக் கொண்டிருந்தான். விண்ணப்பம் எழுதி எழுதி நாங்கள் ஓய்ந்து போனோம். *தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்பதற்கிணங்க நாங்கள் "தட்டிக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தோம். திறக்கப்பட்டதா கொடுக்கப் பட்டதா என்பது செத்துப்போன யேசுவிற்கு தெரிய நியாயமில்லை. நாங்கள் தேடிக்கொண்டு மட்டும் இருந்தோம். சல்வதோரைக்கு ஹிட்லரைக் கண்டு பிடிக்க இருப்பத்தைந்து வருடங்கள் ஆயின. அம்மா சூரியன். அப்பா நிலவு. நாங்கள் வெயிலின் குழந்தைகளாகப் பிறந்தோம். .பனியிலும், பனியின் நிழலிலும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டோம். பனி வெள்ளை நிறம் என்பதைக் கண்டு பிடித்தோம். . . . . பணி நிலத்தின் வெயில் காலமொன்றில் கைதிகளாக்கப் பட்டோம்.
எங்களின் தோலின் நிறம் வெள்ளை அல்ல என்பதை ஐரோப்பாவை நாங்கள் கண்டுபிடித்த பின்னர்தான் உணர்ந்து கொண்டோம். எங்களை சமுத்திரத்திலும், நிலத்திலும் தேசங்கள் தாண்டி தேசங்களுக்கு வீசி எறியவும் ஐரோப்பியர் களின் கண்டுபிடிப்புகள், அவர்களுக்காகவே உதவின என்பதையும் கண்டுபிடித்தோம். கொலம்பஸின் வாரிசுகள் உலகத்தின் தரித்திரங்க ளென்றும், ஐரோப்பாவையும் ஐரோப்பியரையும், ஹிட்லரையும், ஹிட்லரின் ஜேர்மனியையும், ஜேர்மனி யரையும் பிரித்துப் பிரித்து கண்டுபிடித்தோம். எங்களின் செல்வங்கள், எங்களின் கோதுமை, எங்களின் அரிசி, எங்களின் ஆடைகள், எங்களின் உழைப்பு, எல்லாம் L. U-18

Page 141
174 0 பனியும் பனையும்
கொள்ளை கொண்டு மலையாய் ஐரோப்பாவில் குவித்து வைத்ததையும் கண்டுவிடித்தோம்.
பின் குறிப்புகள்:
ராஸ்தா, அல்போன்ஸ், சிறி எல்லோரும் வீட்டிற்குப் போகிறார்கள். நானும் யூனாவும் ஒரு வீட்டில் வாழ்வது எப்படி என்று கற்றுக் கொண்டோம். ஆனால் அதற்கு வீடுதான் இல்லை! எங்களுக்கு முன்பு வீடுகள் இருந்தன. ராஸ்தாவைப் போல் உயர்ந்த கடவுள ரிடமும், ஆத்மாவிடமும் வாய்விட்டு பேசும் வாய்ப்பை எங்கள் வீடுகள் இழந்தன. O

வட அமேரிக்கக் கதைகள்
SS SS SS SS SS SS SSSSSSS SS SS
பத்து

Page 142
கதைஞர்
அளவெட்டி சிறிசுக்கந்தராசா
ஆனந்த் பிரசாத்
கந்தசாமி, அ கிரிதரன், வ.க
சக்கரவர்த்தி
நவம், க
கிலா-குகதாசன்
பவான்
மஹாலிங்கம், என்.கே
ஜோர்ஜ் குருசேவ்

மரபுகளும் உறவுகளும்
அளவெட்டி சிறிசுக்கந்தராசா
''DONNE E BUOI PAESE TUOI'' இத்தாலிய நாடோடிப் பழமொழி. (பெண்களும் காளைமாடுகளும் உங்களுங்கள் நாட்டி லேயே... எடுக்கப்பட வேண்டும்)

Page 143
278 i Luafinqib ulamaurųúb
முன் குறுணிக் குறிப்பு:
மேற்படி நாடோடிப் பழமொழியை ஆதரித்தோ, விஸ்தரித்தோ, தர்க்கிக்கவென்றோ இக்கதை எழுதப் படவேயில்லை.
முதலாவது இரண்டாவது: நடுமண்டை சுடுவெயிலும் ஈத்தம்பியின் கடுமண்டைச் சிடுசிடு சினமும் படு (ஊ) காங்கையாய்க் கெடு நெருப் படித்தன. * பரதேசிக்கு அவள் என்னபெட்டையெண்டுதெரியுமோ? ... யின்ரை மேள். அவளைக்கொண்டுதிரியிறாராமோ? நாய்ப்பயல். . . தொடுசல் வைக்க எங்கடையெங்கடை குடி, கும்பலிலை ஒண்டுமே கிடையாதோ? வரட்டுக்கு.. இண்டைக்கு ஒண்டும் ஒண்டும் இரண்டில்லையெண்டு. பண்ணிவிடுகிறன் . . . . . . s “எடி அச்சி. . . என்ன மூலைத்தைலாப்பெட்டியை நேர்ந்து கொண்டு முழுசுறாய்? கெடுசாதி நாராணிக்கு அவள் என்ன குலமெண்டு தெரியுமே...? *தெரியுமெண்டுதான் நினைக்கிறன்..." *போனாராம் உடையார் பீநாறிப் பூக்கொய்ய... ‘தெரியுமெண்டுதான் நினைக்கிறியோ நீ. ஆத்தையும் குத்தியனுந்தான் சேர்ந்து கொண்டு அடுகிடைபடுகிடை
பண்ணுகிறியள் போலை. சன்னதங் கொண்டால் இந்த இன்னாசித் தம்பியன் என்னவென்ன, செய்வா னெண்டு தெரியுந்தானே. அருவாள் மிடங்காலை கரம் சிதறும். கொலை விழும், கொலை."
இ. தம்பியாகிய ஈத்தம்பி என்ற இன்னாசித் தம்பியின் கொலை அச்சுறுத்தலில் அச்சி அபரிமிதமாய் வெகுண் டெரிய வெக்கை வெளியே மிதமாய் காங்கித்தது. *அந்த எடுபட்ட... யோடை இனிமேல் இந்த விழுவான் பறைச்சல் பேச்சல் வைச்சானெண்டு அறிஞ்சால் .....

Dylases b al-phasish O 279
பரசுத்தியாய் பிரண்டடிக்கும் பார். . . “ என்று ஈத்தம்பி ரெளத்திரிக்க பரதேசியாகிய குத்தியனென்ற விழுவான் சமசாலைச் சூத்திரக் குண்டடியில் சிப்பியுடன் பறைச்சல் பேச்சல் வைத்துக் கொண்டிருந்தான். ஆதலின் தர்க்கரீதியாகவும் ஈத்தம்பியின் அச்சுறுத்தல் எச்சரிக்கையின் பிரகாரமும். . . பரசுத்தியாய் புரண்ட டிக்கும் என்றபடிக்கிருந்தும் நிலத்தை வெறுத்து நெடி துயர்ந்து இணை தொடர்ந்திருந்த மொக்கோ மொக்குப் பனைமரங்களின் காவோலைகளின் குரல் வளைச் சரசரப் பொலியை அதீதமாய் விஞ்சுகிற தினுஸில் சூத்திரக் குண்டடியில் லோகம் பிசிறடைந்து மங்கிக்கிற வண்ணத்துக்கு குருடடிக்கும் காதல் ஸரஸ் ஸஞ்ஸாரத்தில் கும்பனும் சிப்பியும் குந்தியிருந்தனர். காவோலையைக் கங்கும் சூத்திரவாளியைப் பிணைச்ச லும் சிப்பியைக் கும்பனும் அணைத்தபடி தான். . . "எனக்கெண்டால் என்னவோ எக்கச் சக்கமாய்ப் பயமாய்க் கிடக்கு...'
ஏன் . . .?" *கொப்பருக்குத் தெரிஞ்சால் கொண்டெல்லே போடு 6) Trř. ..." “யாமிருக்கப் பயமேன்?" என்றான் கும்பன் சிறீமுருக் னாகி. * சாதிச் செருக்குப் பிடிச்ச அந்தாள். . .யிலை உங்க ளுக்கு லவ்வெண்டறிஞ்சால் சும்மாவே விடும்?" * ‘யாமார்க்கும் குடியல்லோம். யாம் யமது குடியு மல்லோம் ... யமது யப்பனையும் யஞ்சோம். . . யப்பா னையும் அமெரிக்காவையும் கூட யஞ்சவேயஞ்சோம்.' என்று கும்பன் இம்முறை குரவனானான்.
*யுங்களுக்கு யச்சமில்லை. . . «F fl. , , யெனக் கெல்லோ யச்சமாயிருக்கு...",

Page 144
280 (o Lafabruaparui.
*யோசியாதையும். .. எல்லாம் வளத்திலை வரும்...' "யோசிக்காமல் யென்ன யெய்யிறது..."
"வாயை மூடும். துத்தேறி. சும்மா பேச்சுக் கெடுத்தால் இண்டு முழுக்க யகரத்திலையே இச்சிக் கிறது. . . சிப்பி வாயை மூடவுமில்லை.
இரண்டாவது முதலாவது: *முட்டாள். . . விளங்கிக் கொள்கிறமாதிரிப் பேசு. இல்லையேல் எனக்கு முத்தந் தருவதற்காக மட்டும் வாயைத் திற..." *மூதேவி ஸ்திரீ. . . உனது பானை மண்டையின் விறுத் தத்திற்கு இந்தச் சங்கதிகள் எங்கே புரியப் போகின்றன. ..?" *உனக்குத்தான் பெரிதாய் ஏதோ இந்தத் துருப்பிடித் சப்பாத்துத் தூசுகள் புரிகிறதாக்கும். . . வாழ்க்கையை உமியத்தெரியாத பசலிப்பயல். . . அது கிடக்கட்டும். . . இரா குழுவிழாவுக்கு வருகின்றாயா இல்லையா கும்ஸ்ஸ்?’ என்று லெளறா அதீதமாய் ஆடித்திரிந்தாள். கும்பன், "வருகிறேனெடி’ என்று சரணாகதியானான். குமாரதீபன் என்று பிறப்பு நாமகரணம் பெற்று கும்பன் என்று சிறப்பு நாமோதயம் அடைந்து நண்பர் களிடத்து. இப்போது எலிவால் தலைமயிர்க்காரி யுடைய அலவாய்ப் பட்ட உச்சரிப்பில் ‘கும்ஸ்ஸ்" ஆக சங்கைகெட்ட ரீதியில் சீரழிந்தான் இன்னாசித்தம்பி குமாரதீபன், இந்த நாட்டில்... "உனது கரு நீளக் கூந்தல்காரக் குட்டி என்ன செய் கிறது அந்த நாட்டில்...? "அந்த நாட்டில் எனக்கேது குட்டி? நீதான் எனது குட்டி, கன்று எல்லாமே..."
*வெடுக்கடிக்கிற கூழ்மூட்டை ரகத்தில் பொய் பேசாதே. கும்ஸ்ஸ். . . எனக்குத் தெரியாதா நீஇன்னும்

மரபுகளும் உறவுகளும் 0 281
உனது நாட்டு ஒற்றைக் குச்சி மாஜிக் காதலிக்காக விரகிப்பதையிட்டு...' "வாயை மூடு. துத்தேறி. மாஜியும். காதலியும் மண்திட்டியும். . . உடனுக்குடன் உள்ளதுதான் வாழ்வு. மாஜி என்பது இறந்த காலத்துச் சொல்... நடக்கிற காலத்திற்கேற்ப மாஜி என்ற சொல்லுக்கான உருபு எது தெரியுமா?"
'இல்லை கும்ஸ்ஸ் நீயே சொல்லு. கும்பனைக் கட்டிக் கொண்டாள் அவள். "அப்போ இந்த நிகழ்காலத்து அழகுச்சிமிழை எப்போது திருமணம் செய்யப்போகிறாய்...?" *திருமணம் நிகழ்காலத்துச் சொல் அல்ல...' என்றான் கும்பன். "என்னது? திருமணம் நிகழ்காலச் சொல் இல்லையா? இது என்ன அடம். ஈவா காலத்துப் பதமா?” 'அடமும் ஈவாப்பத்தினியும் கல்யாணமின்றியே கூடிக் குட்டிபோட்டார்களென்று தெரியாதா உனக்கு? "அவர்களுக்கு மணம் முடிக்க மனமாயிருந்தும் பாதிரி யாரோ வேறெவருமோ இல்லாதபடியால் அது நிறை வேறாதிருக்கலாமல்லவா? கும்பன் "ஹக்ஹக்காஹ்' என்று தொனித்துச் சிரித் தான். "நீ சமயங்களில் புத்திசாலியாகவும் சிந்திக்கிறாய்..." *சமயங்களிலென்ன. எப்போதுமேதான். அது இருக்கட்டும். எப்போது இந்தப் புத்திஜீவியை முழுதாகி ஏற்று மணமுடிக்க போகிறாயென்றதற்கு இன்னமும் நீ பதில் சொல்லவில்லையே...?" ‘அங்குபார். . . அந்தத் தள்ளுவண்டில் மாதங்களையே தாண்டாத குழந்தை என்ன நேர்த்தியாய் கையசைத்து வந்தனம் சொல்கிறது."

Page 145
282 O uiqib tradirib
யோவோயோவ். எப்போதையும் போல இப்போதும் கதையை மாற்றாதே...' "பாதிரியாரும். . . வேறுபலரும். எனக்கு ஈடுபாடும் உனக்கு.. , கழிந்து மூன்று நாட்களும் வருகிறபோது. திருமண வைபவத்தை வைத்தால் போயிற்று..." *ஹெய்யய்... எனக்கு...நேற்றுத்தான்முடிவடைந்தது. நாளை மறுநாள் வைப்போமா?" 'த்த. . . பார். . . எவ்வளவு ரம்மியமாய் அந்த உருள் வண்டி வாண்டு சிரிக்கிறது. , , ' *பிறகு பார். . . ஒட்டைக் குச்சி. . . கதையை மாற்றி பம்மாத்து விடுகிறான். . . முடிவாக நீ எப்போது எமக்குத் திருமணம் என்று சொல்லாவிடின் எனது படுக்கையில் நான் மட்டுந்தான் படுப்பேன்.? “எனக்கு இப்போதைக்கு மணமுடிக்கிற சிந்தனை கிடையாது லெளறா...'
இரண்டாவது இரண்டாவது "உவ்வுவ் வென்று சீறி எகிறும் வாகனங்களுக்கு மேலே குறுவீடும் விட்டினுள் குளிரும் சூடாக்கிகளும் ஈத்தம்பி, அச்சி சமேதரான கும்பனின் குடும்பமுமிருந் தன. சந்ததிகளே சொர்ப்பனத்திலும் நினைத்தேகாத சங்கதியாய் பிறந்து உறைந்த ஜென்மலோகத்துக்கு இப்பால் ஆயிரமாயிரங் காதங்கள் தாண்டி வந்து வாழ் வீற்றை பலிதமாக்குவதன் சாத்தியத்தை இங்குள்ள நூறானவர்களில் யார் நினைத்தார்கள்? குளியலறையின் மாரி இரைச்சல் திடுமென நிற்க உப்பிப்பருத்த சரீரத்து பூவிசிறல் ஸ்நானத்தால் 'பிளாஸ்ரிக்" சேலையை ஏமாற்றி வெளிக் கொட்டிய ஜலம் கீழ்க் கதவிடுக்கினூடு சர்ப்ப நெளிவாய் முதலில் வந்தது; பின்னால் கும்பநெளிவாய் ஈத்தம்பி வந்தார்.

மரபுகளும் உறவுகளும் 0 28
வரவேற்பறையில் அச்சி ஆச்சி முழங்கை மூட்டில் நெற்றி விட்டத்தை வைத்தபடி அழுது கொண்டிருந்தது.
* சாதி இறக்கமெண்டு w குலத்தலை 0. மேளோடை, பறைச்சல் பேச்சல் வைக்கிறானெண்டு குத்தி முறிஞ்சம். . . இண்டைக்குப் பாருங்கோவன். வெள்ளைக்காறியோடை வெக்கங்கெட்டதனமாய் வெளிக்கிட்டுத் திரியிறான் தம்பி, சச்சச்சய், நாச மறுப்பு. . . எத்தினையெல்லாம் நினைச்சன். . . கண் குளிருகிற கணக்குக்கு கண்ணகிமாதிரி மருமகள்ப் பெட்டையொருத்தி வருவாள். கயிட்டமில்லாமல் கண்ணைமூடுவமெண்டால். . . சந்திக்குத்தி வைரவரே, அடுக்குமோ இந்தச் சோதனை? ஈத்தம்பிக்கு உடன் குளிப்பு உடலத்தில் விஸ்தாரித் திருந்த குளிர் நிலைபரத்தை மேவியபடிக்கு உஸ்ணம் தேகம்பூரா ஏறி வியர்க்க வாரம்பித்தது.
ஏனெணை ஒப்பாரி வைக்கிறாய். , .? இது சீமை தேசம்.. ஊரகத்து தரவை வரம்புக்கட்டும், திருக்கை வண்டிலும், தொழுவத்து மாவெள்ளையனும் சீரிக்கிற ஊர்க்காடி இல்லை. அங்கினேக்கையே அடங்காப் பிடாரனாய் எத்துப்பட்ட பொடியன் திறந்து போட்ட இந்த மண்ணிலையே வழத்திலை வரப்போறான்...? சலிக்காதையெணை நீ...?? *சும்மா இருங்கோப்பா நீங்கள். . . நான் படுகிற வேதனை எனக்கெல்லோ தெரியும். . . கொள்ளி வைக்க வெண்டு கோயிலான கோயிலுக்கெல்லாம் மாவிளக்குக் கொளுத்தி ஆசையருமையாய்ப் பெத்த ஒற்றை வாரிசு, கண்ணுக்கும் மூக்குக்கும் பூசி மெழுகிக் கொண்டு அரை தெரியிற விறுத்தத்துக்கு அலையிற ஆட்டக் காறி யோடை. பெத்த மனசுக்கு பொச்சு வைக்க நெருப்பு மூளாதோ...'
சரி. சரி. சலிச்சுக் குத்தி என்ன புண்ணியம்?. . சொல் வழி கேக்கிற பருவம் சீமையேறிப் போச்சு...

Page 146
284. O Lisfilujúb ulosvrujúb
அனாதரவாய் எல்லிக் கொப்பருக்கும் புக்கயைாறாப் பிளேனுக்கும் பயந்து கிடங்கு வழிய கிடக்கிறமெண்டு இச்சுப்பொன்சர் பண்ணிக் கூப்பிட்டிருக்கிறான் தம்பி. அவனை விட்டால் எங்களுக்கு இஞ்சை என்ன ஆறுதல்...? அரக்காதையெண்டால் அரிக்கன் ஆடுகூட அசை போடாத செட்டு எழும்பின இன்னாசித் தம்பி யான இன்னாசித்தம்பியே நொடிஞ்சு போய் பாண் போறணை மாதிரியான அப்பாமார்க்கண்டிலைஅடங்கிப் போயிருக்கிறான். நீ ஏனெணை அச்சி அழுது முழியிறாய்?" "உங்களுக் கென்னப்பா? அசுமாத்தம் இல்லாமலுக்குச் சொல்லிப் போட்டியள்... என்ரை தவிப்பை ஆரிட்டைச் சொல்லி ஆறுகிறது? அறையை விட்டு அசையேலாத மாதிரி வெளி விறைச்சுப் போய்க் கிடக்கு. ஆள்வா யிலை காலாற நடந்துதிரிய வழியில்லை. . . அடுப்படி யிலை பலகைக் கட்டையைப் போட்டுக் கொண்டு பன்னாடையையும் பனங்கங்கையும் எரிச்சு நாக்குப் பொச்சந் தீர நாலு கறி வைச்சுத்தின்ன நிலவர மில்லை. . . அங்கை சவுக்காரத்தை மட்டுந்தான் சுத்தி வித்தாங்கள். இஞ்சை என்னெடாவெண்டால் எதை எடுத்தாலும் பக்கெற்றுக்கைதான் போட்டுக் கிடக்கு... கேப்பை மாட்டு மடியிலையிருந்து சூடுபறக்கச் செம் பிலை கறக்கிற பாலான பால் கூட பெட்டிலையெல்லே வருகுது. நாசமறுப்பு. சுவிச்சியைத் தொட்டால்தான் எந்தக் கோதாரியும் வேலை செய்யுது. சிச்சிச்சீ. சீர் கெட்ட சீவியம்! அச்சி மீள அழத்தொடங்கினாள். ஈத்தம்பியர் "மலியெத்தா'வைப் போட்டு அதன் மேல் முதுகை மூடித்துவாய்த் துண்டைப் போர்த்தியபடி அச்சியை நெருங்கி செளரி பிணைத்த அவளது நரை சடைக் கொண்டையை மிருதுவாய்த் தடவி விட்டார். "அழாதையெணை. செல்லம். எல்லாம் எங்கடை , விதி. தேசம் விட்டு தேசாந்திர விலக்கம் வந்து

மரபுகளும் உறவுகளும் () 285
சீவியம் விழுகிறதெண்டால் இப்பிடித்தான். எங்கடை எழுப்பங்களையும் சடங்கு, சம்பிரதாயங்களையும் ஊரோடை ஒருக்களிச்சு விட்டிட்டு வந்த மாதிரி எடுக்க வேண்டியதுதான்." ܗܝ "அதுக்காக செம்பட்டைப் பரட்டை மயிரை ஒழுக்கி, கழுத்து விட்டமும் கமக்கட்டடியும் கண்டாவளை வெளி கணியத்துக்கு தெரியிறமாதிரி பிட்டத்தைக் கிளப்பிக் கொண்டு திரியிற ஒடுகாலி வெள்ளைச்சியே எனக்கு மருமகளாய் வாறது. * விதிச்சபடிக்குத்தான் வெள்ளாமை கண்டியோ அச்சி? எங்கடை தலையிலை சந்திக் குத்தி வைரவன் எழுதின எழுத்து அதுதானெண்டால் தலையாலை கிடங்கு கிண்டி என்னப்பா செய்யிறது நாங்கள். நடக்கிறது நடக்கட்டன்.’
முதலாவது முதலாவதும் முடிவதும்: "விசாரக் கேடன். போக்கி. உனது எதிர்மறை வாதமும்.தன்னலத்துக் கீழ்க்குணமும் குறுக்கே நின்று என் மேலான பிரியத்தை மழுங்கடிப்பது எனக்குத் தெரியும்.
"அதல்ல விவகாரம் 'வாயை மூடு. சப்பாத்துத் தூக்க காரணங்களைக் கற்பித்து என்ன மேலும் முட்டாளாக்காதே’ *அதுவுமல்ல. துத்தேறி.தொடர்ச்சியாய் கிணுகினுக் காமல் நான் சொல்வதையும் கொஞ்சம் கேளேன்" * என்னத்தைப் பெரிதாய்ச் சொல்லிக் கிழிக்கப் போகிறாய்?"
‘த்த்.பார் லெளறா. பொட்டாகக் குறுகியது தான் வாழ்க்கை என்றாலும், சம்பந்தப்பட்டு வாழுகிற மனிதரின் மட்டத்தில் வைத்து வரிக்கையில் அதே

Page 147
288 D பணியும் பனையும்
வாழ்க்கை ரொம்பவும் நீண்டது மட்டுமல்ல செழுமிய உத்தாரணத்தைத் தூக்கித் தரவும்கூடியது. இதனால் A5 stair. . . . . . வாழ்வுப் பிணைப்பின் இணைத்தேர்வில் அதீதமான அவதானங் கொள்ள வேண்டியிருக்கிறது. புவியியலும் மானிடவியலும் படுவேகமாய் எவ்வளவு தான் நெருங்கிவரினும், நடைமுறை நிதர்சனங்களை அசட்டு வீரிப்பிற்காகப் புறந்தள்ள முடியாது என்னால்? “என்ன கும்ஸ்ஸ் நீ? அபரிமிதமாய் ஆலாபனை செய் கிறாய். நீ எங்கே வருகிறாயென்பது எனக்குப்புரி கிறது. நான் கீழைத்தேயக் குப்பையிலிருந்து வந்த வன். நீ வாழ்வை கல அணுவால் மாமிச வகையாய் ருசிக்கிற வெள்ளைப் பரத்தை. உன்னை மணந்து நாளும் கணமும் ஏன் துக்கித்தழிவான் என்று கலா' சாரத்தையும் பண்பாட்டையும் இடையில் போட்டு உடைத்தழல்கிறாய் அதுதானே? அப்புறம் என்ன..க்கு என்னிடம் நெருங்கினாய்?. எனது கட்டிலின் பாதியூை உன்னுடன் சேர்த்துப் போர்வையால் மூடினாய்?" குப்பனுக்கு குளிர் வளி சூடேற்றத் தொடங்கிற்று. "உனது போர்வைக்குக்குள் நானும் வந்த பிற்பாடு தான், எனக்கு என்னுடைய ஜென்ம பூமியின் நிறம் பளிரிட்டது. இதற்காக உன்னை ஏமாற்றியதாயோ உனது வழக்க தோஸங்களுக்கு துரோகமிழைத்த தாயோ கணக்கிடுவதாயிருந்தால் நீ ஒருநாள் மண முடிக்கப்போகும் உனது எதிர்கால புருஸா பிள்ளை யாண்டான் என்று ஒருவனுமில்லை என்றிருக்க வேண்டும். உனக்கே தெரியும், இது சாத்தியத்துக்கே சாத்திய மற்றதொன்றென்று..."
TAL PIECE: அசுக்கென்று படு சினமாய் தருக்காவில் இருந்து கும்பனை வசைத்து விலகி நடந்து லெளறா திரும்பி வரவேயில்லையாம்; அந்த அதே வழியில் "..." யின்ரை மேள்-சிப்பி வந்ததாய்க் கேள்வி. O

அவர் நாண.
ஆனந்த் பிரசாத்
சனிக்கிழமை. குறைந்தது ஒன்பது மணி வரையுமா, வது படுக்க வேண்டுமென்று முயன்றாலும் ஐந்தரை , ஆறு மணிக்கு மேல் முடிவதில்லை. பிரச்சனைகள்

Page 148
288 ) Laufiqih LuaDauraqub
எழுப்பி விட்டு விடுகிறதேயன்றி நானாக நினைத் தொன்றும் செய்வதில்லை. எறும்பு மொய்த்தது போல் ஒன்றன் பின் ஒன்றாக ஆரம்பித்துப் பின்பு மொத்தமாக ஒன்று திரண்டு மூளையைக் கடித்துக் குதறிக் கொண் டிருக்கும். இந்த மூன்று வருடக் கனடா வாழ்க்கையில் பிரச்சனை எறும்புகளில் அன்றாட மேய்ச்சல். நாற்பத்தி யெட்டு வயதில் இப்படி யொரு வாழ்க்கை.
இந்த ‘பிரிட்ஜ்’ வேறு சனியன். எந்த நேரமும் *கிர் கிர்" ரென்று சத்தம் போட்டபடி, எரிச்சலாக வருகிறது. இந்தக் காலையின் அழகையும், அமைதியை யும் குலைத்துக் கொண்டிருக்கிறது. எழுந்து போய் சுவருடன் சேர்ந்து ஒரு தள்ளுத் தள்ளிப் பார்க்கிறேன். அப்போது முற்றாக நிற்காவிட்டாலும் கொஞ்சம் குனறந்திருக்கிறது. இதற்கு மேலும் ஏதாவது செய் தால் பின்புறமுள்ள "கொம்பிரெசர் உடைந்து (பிரிட்ஜ்) இதற்குள் இரண்டு கிழமையாக இருக்கும் கறி வகைகள் பழுதாகிவிடும். இந்தச் சனி, ஞாயிறில் அவற்றை ஒரு குழையல் போட்டுச் சாப்பிட்டு முடிப்பதோடு இன்னும் இரண்டுகிழமைக்குப் புதிதாக ஏதாவது சமைத்துவைக்க வேண்டுமென்கிற என்னுடைய திட சங்கற்பங்க ளெல் லாம் கூடவே உடைந்து நொருங்கிவிடும். என் அட்சய பாத்திரத்தை" இனிமேலும் அலுப்புக் கொடுக்கக் கூடாதென்று விட்டு விடுகிறேன். இதில் இன்னுமொரு சிக்கலும் இருக்கிறது. இந்தப் பெரிய பிரிட்ஜ் ஜை அரக்கிக் கிரக்கி ஏதாவது செய்யப்போக நாரிக்குள் பிடித்துவிட்டால் அவ்வளவுதான். திங்கட்கிழமை குமாருக்கு அவல் கிடைத்த மாதிரி சும்மாவே காரண மில்லாமல் வள் வள்” ளென்று ஏறி விழுபவன், நான் வேலைக்குப் போய் திங்கட்கிழமையும் அதுவுமாகக் குனியவோ, நிமிரவோ ஏலாமல் சிரமப்பட்டால் உலுக்கி யெடுத்து விடுவான்.

அவர் காண. 0 289
கடந்த ஆறு மாத காலமாக இந்தக் குமாரோடும் இவன் சகாக்களோடும்-எல்லோருக்கும் என்னில் பாதி வயது தான்!-பட்டு வரும் அவஸ்தைகளும், மன உளைச்சல் களும் கொஞ்ச நஞ்சமல்ல. சுமார் நான்கு வருடங் களுக்கு முன்பு இந்த குமார் கனடாவுக்கு விமான மூலம் வந்தான். கூட வந்த எல்லோரும் "பிளேனை’ விட்டு இறங்கி விட்டார்கள். இவன் மட்டும் மிதந்தபடி நேரே இந்த ‘பாக்டறிக்குள்’ வந்து வேலைக்குச் சேர்ந்து, ஏற்கெனவே புளிப்பேறின தலைக்கு "போர்மென்" என்கிற தொப்பியை வேறு போட்டுவிட பிள்ளைக்குத் தலைகால் தெரியாமல் போனதில் தான் இந்த *வள் வள். இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு மிதந்து கொண்டேயிருப்பான் என்பது கணிப்பு. இதென்ன? ஐந்து நாட்களும் இவனுடன் அலுப்புப் பட்டுவிட்டு இந்தச் சனிக்கிழமை விடுமுறை நாளிலும் இவனையே நினைத்துக் கொண்டு? ஒருவாறு காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வெளியே போக ஆயத்தமாகிறேன். ஜன்னலைத் திறந்து பார்த்ததில் வெளியே குளிரில்லை சும்மா "ஷேர்ட் டோடு போக லாம் போல் தெரிகிறது. 'பாங்க்' கிற்குப் போய் பின்பு *ஜான் தலோன் மார்க்கற்' இல் காய் கறி, அதன் பின்பு செயின்ற் லோரன்ட்" இல் இறைச்சி. திட்டம் போட்டாயிற்று. எனக்கு இரண்டு வாரங்களுக்கொரு முறை சம்பளம் தருவதால் ஒவ்வொரு இரண்டு வாரங் களிலும் இந்த அவஸ்தை.
ஜான் தலோனில் இறங்கிய போது ரமேஷ் எதிர்ப்பக்க மாய் நடந்து வந்து கொண்டிருந்தான். இன்றைக்கு *ஒவர் டைம்’ செய்ய வேண்டுமென்று நேற்றுச் சொல்லிக் கொண்டிருந்தான்.
இப்போது இங்கே நிற்கிறான்? ஒரு வேளை போக
வில்லை போல, ஒரு காதில் கடுக்கனும், பிடரியில் சிறிய lu. Lu -- 1 9

Page 149
290 0 பணியும் பனையும்
குடுமியுமாய்- ஹாய்"ட நான் பேசாமல் கையைக் காட்டிவிட்டுப் போய்க் கொண்டிருக்கிறேன். இந்த ‘ஹாய்' உட்பட இன்னுமொரு நாலைந்து வார்த்தை களுடன் இவன் ஆங்கில அறிவு முற்றுப் பெற்று விடுகிறது.
எனக்கு மாத்திரம் இந்த ஆங்கில அறிவும் இல்லாது போயிருக்குமானால் என்னை நாய் கொண்டு போயிருக் கும். இவன்கள் என்னை வைத்து “பேஸ்பால் ஆடி யிருப்பான்கள்.
ஒரு வழியாக "செயின்ற் லோரன்ட்” வந்து சேர பன்னி ரண்டு மணியாகி விட்டது. இறைச்சிக் கடையில் ஏகப் பட்ட சனம். வழமை போலஅநேகமான தமிழ் முகங்கள். பாலன் கையில் இரண்டு வீடியோ கசற்’ றுகளுடன் நின்று, கொண்டிருந்தான். அது என்ன வீடியோ என்பதும், அவன் ஏன் "செயின்ற் லோரன்ட்"டில் அலை கிறான் என்பதுவும், "பாக்ரறி முழுவதும் பிரசித்தமான விஷயம். பகல் சாப்பாட்டு இடைவேளையின் போது பக்கத்து மேசையிலிருந்து கொண்டு எனக்குக் கேட்கா தென்று நினைத்துக் கொண்டு குமாரும், இவனுகளும் கூடிக் கூடி நேற்றிரவு பார்த்த "புளுபிலிம் பற்றிச் சிலாகித்துப் பேசுவதைத்தான் தினமும் கேட்கிறேனே. எனக்கு எதுவும் கேட்கவில்லையென்பதாகக் காட்டிக் கொள்வதற்கு நான் படும் பிரயத்தனங்கள் கொடுமை. எனக்கும் கேட்கிறதாக இவன்களுக்குத் தெரிந்தாலோ இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விடும். பிறகு எனது "செக்ஸ்’ அனுபவங்களைப்பற்றி பேட்டி காணவும், "மாடர்ன் டெக்னாலஜி' பற்றிப் போதிக்க வும் ஆரம்பித்து விடுவான்கள்.
என்ன மாஸ்ரர், இறைச்சி வாங்க வந்தனியள் போல’ வழிந்து கொண்டு கேட்கிறான் பாலன். "பின்ன என்ன இருபத்தி ஐந்து சதத்தை போட்டு ஓட்டைக்குள்ளால்

gosauri astr6WT. . . O 291
விடுப்புப் பார்ப்பதற்கே வந்தனான்?" என்று எரிந்து கொண்டே மனதிற்குள் சொல்லிக் கொண்டாலும் வெளியில், "ஒமோம்" என்பதோடு வெட்டிக் கொண்டு, வெட்டி முடித்த இறைச்சியையும் பெற்றுக் கொண்டு வழமை போலவே ஒரு சிறிய பலன் ரைன்ஸ்" விஸ்கிப் போத்தலையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர மூன்றரை மணியாகி விட்டது.
ஞாயிற்றுக் கிழமை. ஒன்பது மணிவரையும் நிம்மதியாக தூங்கி யெழும்ப முடிந்தது, பலன் ரைன்ஸ் உடைய புண்ணியத்தில். பிரச்சினைகள் எதுவும் பெரிதாகப் பாதிக்காது, மூளை கொஞ்சம் சுகமாக இருக்கிறது. முகம் கழுவலாமென்று போனால் குளியலறையைக் கொஞ்சம் சுத்தம் பண்ணவேணும். துவைப்பதற்காக ஊறப் போட்ட உடுப்புகள் இரண்டு நாட்களுக்கு மேலாக இழுபடுகிறது. துவைத்துவிட்டால் நாளைக்கு வேலைக்குப் போட்டுக் கொண்டு போகலாம். இல்லையேல் நல்ல உடுப்புகளை அணிந்து கொண்டு போய் வேலை செய்யும் போது எதிலாவது மாட்டிக் கிழிந்து போய் விடுமோவென்று பயந்து, நெளிந்து கொண்டிருக்கும் போதில் முதுகிற்குள் கொளுவிப் பிடித்து விடும். பிறகு பெட்டி தூக்கும் போது வலிக்கும். மெதுவாக வேலை செய்தால் குமார் குளறுவான். முன்பும் ஒருக்கா இப்படி நடந்து குமார், ரமேஷிடம் சொல்லிக் கொண்டிருந்ததை என் காதுபடக் கேட்ட போது வாழ்க்கையே வெறுத்து விட்டது. * மச்சான் இந்தக் கிழடுகள் எல்லாம் ஊரில் "பென்ஷன்" காசோட கோயில் குளமென்று இருக்காமல் காசுக்கு அவாப்பட்டு இஞ்சை வந்து பெரிய உபத்திரவம்." அப்போதுதான் எனக்குள் எனது நாற்பத்தியெட்டு
சாதுவாக உறைத்தது. பாதியாய் நான் செத்ததும் அப்போதுதான். என்னுடைய பதினெட்டு வருட

Page 150
292 0 பணியும் பனையும்
ஆசிரியத் தொழிலில் ஒரு மாணவனையாவது கை தொட்டோ பிரம்பாலோ அடித்திருக்க மாட்டன். இவன் சொற்களால் என்னை உடைத்து விட்டான். அந்த நாட்களில் "சோக்கட்டி' யைத் தவிர வேறெ தையும் தூக்கியறிய மாட்டன் என்றெல்லாம் மனதிற் குள் புழுங்கிப் புலம்பிக் கொண்டிருந்தேன்.
*இதேன் இந்த வில்லங்கம்?" என்று முனு. முணுத்துக் கொண்டே தோய்த்து முடித்து, ஒரு அம்சமான குளியலும் முடித்துவிட்டு வெளியே வந்ததில் உடலுக்கும், மனதிற்கும் ஒரு சாந்தி கிடைத்தது போன்ற உணர்வு. நாளைக்கு வேலைக்குப் போய் முறிவதற்கான தெம்பு வந்து விட்டது. இதோடு இன்னும் ஐந்து நாட்களை ஒட்டிவிடலாம். ஞாயிற்றுக் கிழமை ரொம்பவும் அமைதியாக மன உளைச்சல்கள் எதுவுமின்றிக் கழிந்து போகிறது. திங்கட் கிழமை. காலை நேரத்துப் பரபரப்புகள் எதுவும் எனக்குக் கிடையாது. வழமையே போல் ஆறு மணிக்கு எழுந்திருக்கிறேன். ஜன்னலைத் திறந்து பார்த்தால் வெளியே மழைக் குணமாகத் தெரிகிறது. கனடாவின் கால நிலை தமிழ் நாட்டு அரசியல்வாதி யைப் போல. அரைமணி நேர "பிரேக்கிற்குள் சாப் பிடக்கூடிய மாதிரி நாலு துண்டுப் பாணுக்கு நடுவே எதையோ அடைத்து கொண்டு தோளில் கொளுவிக் கொண்டு போகும் பையில் வைக்கிறேன்.
*இந்த வயதிலேயும் "ஸ்கூல் பெடியன் மாதிரி மாஸ்ர ருக்கு ஒரு ஸ்ரைலான பாக்' என்று முன்பு ஒருநாள் இந்தப் பை வாங்கிய புதிதில் பாலன் நக்கலடித்தது. இன்னமும் காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது. நெஞ்சுக்குள் "சுருக் கென்று தைத்தாலும் வெளியே சேர்ந்து சிரித்து மழுப்பி விட்டேன். இந்த ஊர்க் கிழடு கள் அரைக்காற் சட்டையும், சன் கிளாசும் போட்டுக்

solai Abramur... O 293
கொண்டு போனால் இவனுகளுக்கு அது ஒரு பிரச்சினை யில்லை. சரியாக எட்டுக்குப் பத்து நிமிடம் இருக்க ‘பாக் ரறிக்குள்’ நுழைந்து “காட் பஞ்ச்" பண்ணிக் கொள்ளும் போது, "குட் மார்ணிங் மாஸ்ரர்" வெல வெலத்துப் போய், என் காதுகளையே நம்ப முடியாதவனாய்த் திரும்பிப் பார்த்தால் குமார். இப்போது என் கண்களையும் ஏன் என்னையும் நம்ப முடியவில்லை. இதென்ன “ஓவர்நைற் ரெவல்யூஷன்" இந்த ஆறுமாத வரலாற்றிலேயே இல்லாத ஒரு வரவேற்பு. நானொரு கொர்பச்சேவாகவும் அவன் ஒரு ஜோர்ஜ் புஷ் ஆகவும் எனக்குப் பட்டது. புல்லரித்துப் போனேன். இதை விடவும் பல அதிசயங்கள் இன்றைக்கு நடக்கவிருப்பதை அனுமானிக்கும் திராணி யற்றுப் போனேன். பத்து மணி "பிரேக் கிற்கு பெப்சி” வாங்கித் தந்தான். பாலன், ரமேஷ், அங்கிருந்த இயந்திரங்கள், நான் தூக்கி அடுக்கும் பெட்டிகள் எல்லோருக்கும் பரம ஆச்சரியம். பிறகு இன்று முழுவதும் என்னைப் பெட்டி தூக்கவே விடவில்லை. எல்லாவற்றையும் தானே செய்தான். என்னை அவைகளை எண்ணிக் கணக்குப் பார்த்து “பில் தயாரிப்பதை மட்டும் செய்யச் சொல்லி அன்போடு பணித்துவிட்டும் போனான். இதென்ன? இந்தத் தமிழ்ப்படங்களில் வில்லன் செய்யாத அநியாய மெல்லாம் செய்துவிட்டு கடைசி ரீல்" முடியக் கிட்டவாக திடீரென்று திருந்தி நல்லவனாகி விடுவதோடு ‘உதிரி யாக ஒரு "டயலாக்கும் பேசுவானே அது போலக் குமார் நடந்து கொண்டான். இன்று முழுவதும் நான் மிதந்து கொண்டிருந்தேன். கால்கள் தரையில் பாவ வில்லை.
மாலை நான்கு மணி. வேலை முடிய இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது. உடல் கொஞ்சம் களைத்திருந்

Page 151
294 D usefuiú uairdsruth
தாலும் மனம் என்னவோ உற்சாகமாகவே இருக்கிறது. குமார் குழைந்த குழையலைப் பார்த்துவிட்டு பாலனும் ரமேஷம் என்னுடன் பேரன்பு பூண்டனர். ஏதோ நல்லது நடக்கட்டும் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தபோது குமார் வந்து, "மாஸ்ரர், ஒரு நிமிஷம்" என்று , சொல்லிக் கூட்டிக் கொண்டு சாப் பாட்டு அறைக்குப் போனான், மற்ற நாட்களில் வேலை நேரத்தில் அவசரமாக ஒன்றுக்குப் போனாலே *ம். சலரோகக்காரரை யெல்லாம் வேலைக்குவைத்துக் கொண்டு நான் படுகிற பாடு?’ என்று புறுபுறுப்பவன், இன்று. சரி, சரி விடு. எல்லா நேரமும் ஒரு மனுஷன் ஒரே மாதிரியா இருப்பான்? என்று என்னை நானே திட்டிக் கொண்டும், இவன் ஏதோ ஒரு முக்கியமான விடயம் என்னுடன் பேசப்போகிறான் என்பதை அனுமானித்துக் கொண்டும் அவன் கூடப் போகிறேன். "மாஸ்டர் நீங்கள் எனக்கு ஒரு பெரிய உதவி செய்ய வேணும். செய்வியளே? * என்ன எண்டு சொல்லும் தம்பி. என்னால ஏலுமெண் டால் கட்டாயம். '
-சிறிது நேரத் தயக்கத்தின் பின்பு, "மாஸ்ரர், எனக்கு "இமிக்ரேஷன்' இல இருந்து "இன்குவயரி’க்கு வரச் சொல்லி "அப்பொயின்மன்ற் லெற்றர்? வந்திருக்கு. அதில் ஊருப்பட்ட போம்? நிரப்ப வேணும் அதோட என்ரை கேசும்? எழுதித் தந்து நீங்கள்தான் உதவி செய்ய வேணும். மாஸ்ரரைக் கஷ்டப்படுத் திறனோ தெரியேல்ல. நீங்கள் படிச்ச நீங்கள். கட்டாயம் வடிவாய் நிரப்பித் தருவியளெண்ட நம்பிக் கையில்தான் மாஸ்ரர் உங்களிட்டைக் கேட்கிறேன்" என்றான்.
கொஞ்ச நேரம் எனக்கு என்ன செய்வது, சொல்வது என்றே தெரியவில்லை. இதுநாள் வரை இவன்

Sejauử Nusrawr. . . O 295
என்னுடன் நடந்து கொண்ட எல்லாவற்றுக்கும், இப்போது இவன் பேசியது என் "ஈகோ' வைத் திருப்திப்படுத்தியதாகவே எனக்குப்பட்டது. பிறகு இப்படி நான் நினைப்பது அற்பத்தனமானதென்று எனக்கு உறைக்க ஆரம்பித்தது. சின்னப்பெடியன். இவனுடைய எதிர்காலமே இதில்தான் அடங்கியிருக் கிறது. நான் மிகவும் பொறுப்பாக இதைச் செய்து கொடுக்கவேண்டும். "என்ன மாஸ்ரர் யோசிக்கிறியள்?" "இல்லை தம்பி, இன்றைக்குத் திங்கட்கிழமை. நல்ல நாள். வேலை முடிய அப்பிடியே என்னுடைய வீட்ட போவம். தம்பிக்கேதும் வேற அலுவல் இருக்கே?" "இல்ல மாஸ்ரர். இதைவிட வேற என்ன வேலை? அப்பிடியே காரிலை போவம்."
-மனது மிகவும் இலேசாகியிருந்தது. O

Page 152
விடிவு தூரத்தில்
அ. கந்தசாமி
அவனுக்குள் உறக்கம் கலைந்து வெகு நேரத்தின் பின்பே அலார்ம் கிணுகினுத்தது. ‘குல்ற்' இற்குள் அவனது தோளோடு மரவட்டையைப் போல் குறங்கிக்
 

விடிவு தூரத்தில் 0 297
கிடந்த சுதாவிற்கு அப்போதுதான் விழிப்பு வந்தது. பயங்கர கனவொன்று கண்டது போன்ற திடுக்காட்டில் அவள் எழுந்தாள் சோம்பல் முறித்துக் கொட்டாவி விட்டு அணுங்கல், சிணுங்கல்களோடு அசதியாக நித்திரைவிட்டு எழும் பழக்கமெல்லாம் யாழ்ப்பாணத்து மண்ணோடு போய் விட்டது. இப்போதெல்லாம் துப்பாக்கி குண்டு பாய்ந்த தும் உடலில் ஏற்படும் ஒரு வித சிலிர்ப்போடுதான் அவளால் நித்திரை முறிந்து எழமுடிகிறது. கட்டிலை விட்டு இறங்கி கால் கார்பெட்டில் பட்டதும் உள்ளங்கால்களில் பனிமுள்முனைகளாய் ஏறுவதை உணர்ந்தான். "வீட்டுக்காரருக்கு என்ன ஹீட்டரைக் குறைச்சுப் போடு வினம், காஸ்பில் ஏறிவிடும் எண்டு. அவைக்கு மேல் வீட்டில் குளிர் இல்லை. நாங்கள் இங்க பேஸ்மெண்' டிலை ஐஸ்பெட்டிக்குளை இருக்கிறம்."
சற்று உரக்கவே அவள் தனக்குள் முணுமுணுப்பது அவனுக்கு தெளிவாக கேட்டது. அவன் புரண்டு படுத்தான். இரண்டு வேலை அடித்து வரும் அலுப்பு அவனைப் பாரமாய் அழுத்தியது. சுதாவை நினைக்கையில் அவனுக்கு ஆற்றாமையும் வேதனையும் நிழலாடின. கைவிரல்களை ஸ்பரிசிக்கும்போதே அவள் கண்களில் மின்னலிடும் கிறக்கமும், கன்னங்களில் வெட்டி மறை யும் செம்மையும். அந்த மல்லிகை மணம் வீசும் அவள் மடியில் முகம் புதைக்க, அலையாய் சுருண்ட அவன் தலைமுடியில் அவள் விரல்கள் விளையாடு.
ஒ. சொர்க்கம் கைப்பிடிக்குள் இருந்தது ஒரு காலம்.

Page 153
298 ( unufluqūb uaRrugŭis
அந்த மென்மை, கனிவு, கனிந்துருக வைக்கும் பெண்மை எல்லாம் இன்று எங்கோ போயிற்று?
*ஒருவேளை தாய் தகப்பன் பேசிய அந்த கிளறிக்கல் மாப்பிள்ளையை செய்திருந்தால் சந்தோசமாய் இருந் திருப்பாளோ? நிச்சயமாய் நிம்மதியாய் இருந்திருப் பாள். என்னோட சேர்ந்து நாடோடியாய் காயத் தேவையில்லை."
* என்னப்பா. நேரமாகுதெல்லோ எழும்புங்கோவன்"
சுதாவின் குரல் அவன் நினைவோட்டத்தை தடை செய்தது.
"ஒமோம். இதுக்கு மேலயும் கிடந்தா அங்க பக்டறியில் ஃபோமனோட அலுப்பு."
அவன் வோஷ்ரூமுக்குள் நுழையும்போது அடுக்களைப் பக்கமாய் பரபரப்புத் தெரிந்தது. ஜீவாவும் சுதாவும் வீட்டை விட்டு வெளிவரும் போது இருள் மைமலாக இருந்தது. தெருவிளக்குகளின் வெளிச்சத்தில் பார்வை யிற்பட்டவையெல்லாம் விதவைக் கோலத்தில் வெளிரிட் டன. ஆங்காங்கே கிறிஸ்மஸ் மரங்கள் மட்டும் வெண் பனிப் போர்வையை விலக்கிக் கொண்டு சிலபகுதிகளில் பச்சை காட்டின. மற்றப்படி சாலையோரத்தில் வரிசை யாய் நின்ற அத்தனை மரங்களும் வெறும் கொப்பு களை விரித்து சூனியத்தில் நிலைத்தன.
இரவு பெய்த வெண்பனியில் எது நடைபாதை, எது புற்றரை என்பது சுதாவின் கண்களுக்கு மட்டுப்பட விலலை. தடுமாற்றத்தை தடுக்க ஒரடி முன்னால்போன ஜீவாவின் கையை இறுக்கிப் பிடித்தாள்.
இதே அழுங்குப் பிடிதான இதே போலதான் அன்றும் அவன் கைகளை இறுகப் பற்றினாள்.

விடிவு தூரத்தில் 0 299
"எனக்கு நீங்கள் ஒருத்தரும் வேண்டாம். நான் ஜீவா அத்தானோடயே போறன். அவர் கடைசி வரை என்னைக் கைவிடமாட்டார். *சொந்த மச்சானாய் இருக்கலாம். ஆனா உருப்படி யான படிப்பு இல்லாத ஆமான வேலை வெட்டி இல்லாத ஒருத்தனை நம்பி எப்படி பெண் குடுப்பது." என்ற பெற்றோரின் நியாயமான கேள்விகளுக்கு இப்ப டித்தான் அவள் பதிலளித்தாள். நினைவுகளின் சுணைப்பில் ஸ்மரணை இன்றி நடந்து கொண்டிருந்த ஜீவா "ஒட்டன் பாக்" பஸ்தரிப்புக்கு அருகில் தாங்கள் வந்து விட்டதை உணர்ந்தான். 133ம் இலக்க பஸ் ஒட்டன் பாக் தரிப்பில் நின்று நிதான மாக சோம்பல் முறித்தது. விடியற்காலையில் ஒடத் தொடங்கிய முதல் பஸ் என்பதால் பயணிகளை கை விரல்களில் மடக்கிவிடலாம். பஸ்ஸின் உள்ளே சென் ரன்றி ஹொஸ்பிட்டலில் செக்குறிட்டி முடிந்து வரும் லிங்கத்தார் முன்சீற்றில் யூனிபோமுடன் மோனநிலை யில் சரிந்திருந்தார். 83இல் கொழும்பில் இருந்த இரண்டு வீட்டையும் சிங்கள சகோதரர்களின் வாண விளையாட்டுகளுக்கு அர்ப்பணித்து விட்டு இந்த பனிப்பிரதேசத்தில் தஞ்சம் புகுந்தவர். எண்பதுகளில் வவுனியா அரசாங்கச் செயல திகாரியாக இருந்தவர் என்பதை மறந்தும் நினைவிற்கு கொண்டு வராதிருக்கும் பயிற்சியை கனடாவின் சில வருட வாழ்வு அவருக்கு கற்றுத் தந்திருந்தது. 'தம்பி, பழைய கதையளை கதைக்காதேங்கோ. இப்ப நான் ஒரு நல்ல காவல்காரன்." அவருடைய கோழித் தூக்கத்தை கலைத்துவிடாமல் இரண்டு இருக்கைகள் தள்ளி இவர்கள் இருவரும் அமர்ந்தனர்.

Page 154
300 0 பனியும் பனையும்
வெளியே மில்ரறி றெயிலில் பசுமைபூத்த மரக்கூடல் கள் எல்லாம் பனிமலைகளாக காட்சி தந்தன. தெருவில் நிறைந்திருந்த பனிப்படலங்கள்ை "கிறேடர்கள்" வாரி அள்ளிக் கரையில் ஒதுங்கிக் கொண்டிருந்தன. "என்னப்பா இந்த முறைச் சீட்டுக்கு என்ன யோசிச்சு இருக்கிறியள்?" யன்னலுக்கு வெளியே நகரும் காட்சிகளில் கரைந்து கொண்டிருந்த ஜீவாவை சுதா பஸ்ஸிற்குள் கொண்டு வந்தாள்.
* என்ன செய்யச் சொல்றீர்?"
இயலாமையில் நெளியும் கீழுதட்டை விரல்களால் நீவிய படி அவளைப் பார்த்தான். பனிக்குளிரில் வெளிறிய அவள் முகமும் உடலில் பளிச்சிடும் வெறுமையும் அவனை ஏதோ செய்தது. கழுத்துச் சட்டையை நீக்கிக் கொண்டு தலை நீட்டும் அந்த தாலிக்கொடி மட்டும் அவனுள் ஒரு நிம்மதியான உணர்வை ஏற்படுத்தியது.
"மாஸ்டர் நேற்று பாக்டரிக்கு போன் அடிச்சவர். டவுண் ரவுணில ஏதோ கார் பார்க்கில் ஒப்பிணிங் இருக்காம். வீக் எண்ட் வேலை. ஏழில இருந்து மூண்டு வரை சுப்ப வைசருக்கு ஒரு போத்தல் குடுத்து சரிக்கட்டலாம் எண்டவர். கிடைச்சிடும் எண்டு நினைக்கிறன்." *சரி. அது கிடைச்சு நீங்கள் போய். அடுத்த மாதப் பிரச்சனையை சமாளிக்கிறம் எண்டு வைச்சுக் கொள்ளு வம். இந்த மாதம் மோகன் ஆக்களின்ரை காசைக் குடுக்க வேணுமே! மாதா மாதம் பிந்தாமல் காசு தாறது கள். என்ன செய்யிற." "இதில யோசிக்க என்ன இருக்கு? எப்படியாவது குடுக்க வேண்டியது நான்’ "எங்கே இருந்தப்பா குடுக்கப் போறியள்?"

விடிவு தூரத்தில் 0 301
அவளையும் மீறி உயர்ந்த குரலை மட்டுப்படுத்திக் கொண்டு கிசுகிசுத்தாள். *கிறடிட் காட்டுகளையும் நல்லா இறுக்கி வைச்சிருக். கிறியள். என்ன செய்யப் போறமோ தெரியேலை. இதையெல்லாம் நினைக்கேக்கை எனக்கு ராத்திரியெல்: லாம் நித்திரை வருகுதில்லை. *அப்ப என்னையும் எழுப்பாதையுமன். நேரமாவது கொஞ்சம் பிரயோசனமாய் போயிருக்கும்." கொடுப்புக்குள் புதைந்த குறும்புடன் அவளைப் பார்த் தான். ஜீவாவின் கையில் அவள் விரல் நகங்கள் சிவப்புக் கோடு களை பதித்தன. தலையை திருப்பி சுற்றி வர யாரும் தங்களை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்த, திருப்தியுடன் சுதா மெளனமானாள். வாழ்க்கையில் ஜீவாவிட்ட முதற்பிழை டொலர் நோட் டுக்கள் சாலையோர மரங்களில் எல்லாம் பூத்து தொங்கு வதாக நினைத்துக் கொண்டு கனடாவுக்குள் வந்தது. இரண்டாவது பிழை பிரச்சனைகளில் இருந்து விடுபடும் குறுக்கு வழியாக சீட்டுப் போட நினைத்தது.
கனடா வந்து மூன்று வருடங்கள் ஓடி மறைந்த பின்பு, வந்து சேர்ந்ததற்கான கடனும், வட்டியும் கட்டியது போக எஞ்சி நின்றது அவனும் அவளுமே. இந்த நிலை யில் ஏதாவது கட்டாய சேமிப்பு வேண்டும் என்ற உணர்வு இவனுக்குள் தலையை நீட்டியபோது ராஜேஸ் தான் இந்த யோசனையைச் சொன்னான்.
பக்டறியில் பிறேக் நேரங்களில் *ஜீவா இங்கை கண்ட வன் நிண்டவன் எல்லாம் சீட்டு துவங்கிறான். கொஞ் சம் பேரைச் சேர்த்துக் கொண்டு நீயும் ஒண்டு துவங் கன். நாங்களும் சேருறம். எத்தனை நாளைக்கு சுதா அக்காவை இப்படி மூளியா வைச்சிருக்கப் போறாய்”

Page 155
302 0 பனியும் பனையும்
என்று கொம்பு சீவியவன் அவன் தான், இருபது "துண்டுகளுக்கு ஆட்களுக்கு எங்கே போவது என்று இவன் தயங்கிய போது நாலைந்து நல்ல "காய் களையும்’ இந்த படுபாவிப் "பிளேனையும்" கொண்டு வந்து சேர்த்தவனும் ராஜேஸ்தான். அப்போதுதான் ஜீவாவின் பாதங்களில் எங்கோ தண்ணிர் படாத பகுதி சனிபகவான் பரர்வையில் பட்டி ருக்க வேண்டும், பாங்க் ஒஃப் மொன்றியலைக் கடக்கும்போது, தான் எடுத்திருந்த ஓ.டி.ஐ. கட்டும்படி நேற்று வந்திருந்த கடிதம் ஜீவாவின் நினைவுக்கு மீண்டது. *நல்ல வேளை சுதாவிற்கு அது இன்னமும் தெரியாது. ‘இனி என்ன செய்யப்போறம்? இந்தக் கேள்வியே பல குறியீடுகளில் கொம்பியூட்டரில் விளம்பர எழுத்துக்களாய் ஓடி மறைந்தது மீண்டும். * தேவையில்லாத வீண் வேலை. ஏன் இந்த சீட்டை துவங்கினன்.” சுதா கூட எவ்வளவோ தடுத்துப் பார்த்தாள். "இப்ப கொஞ்ச நாளைக்கு முந்திதான் எம்.பி.யே சீட்டை முறிச்சுப் போட்டாராம். இங்க ஒரு சனத்தை, யும் நம்பேலாதப்பா' ‘குஞ்சு! மடைத்தனமாய் எங்கள சனங்கள் ஏமாறுற துக்கு மற்றவையை ஏன் குறை சொல்றீர்? இந்த எம்.பி மாரெல்லாம் ஊரை அடிச்சு உலையில் போடுற ஆக்கள் எண்டு நல்லாத் தெரிஞ்சு கொண்டும் உவையளோட சீட்டுப் போட்டால் அது ஆரிடை பிழை? நீரும் எவ்வளவு காலத்துக்கு வெறும் காது கழுத்தோட இருக்கப் போறிர்? இப்படி ஒரு ஒழுங்கைச் செய்யாட்டா நீர் நினைக்கிறீரோ இந்தப் பிறவியில நாங்கள் ஏதும் சேர்ப் பம் எண்டு."

விடிவு தூரற்தில் O 308
கல்யாணம் செய்து எவ்வளவு காலமும் தலைகாட்டாத ஆசைகள் சில அவளில் இப்போது வேர் விடத்தொடங்கி இருந்தன. தலைமுறையாகச் சுமந்து வந்த எண்ணங் களின் தாக்கங்கள் அவளுள் மொட்டவிழ்த்தன. *சின்னதாய் ஒரு ஏழெட்டுப் பவுணில ஒரு தாலிக் கொடி, நாலு சோடி காப்பு "உங்கட அகண்ட நெஞ்சுக்கு ஒரு கோல்ட் செயின் வடிவாய் இருக்குமப்பா' * எது நெஞ்சா. கோல்ட் செயினா.நீர் தான் உழைக் கிறீரே. செய்து தாருமன்." மார்பின் உரோமங்களில் அவள் விரல்கள் சிக்காட. கட்டாயம் அவற்றை கழுத்துக்கு 'ஓம்' பென்ரன் போட்ட ஒரு சங்கிலி, மிஞ்சினா ஒரு காருக்கு டவுன் பேமன்ட்.
ஒரு சீட்டுப் போட்டால்தான் இது எல்லாம் சாத்தியம், காலை கடன்களை நியதியைப் போல் சீட்டுப் போடுவ தும் பிடிப்பதும் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகி விட்ட நிலையில் சுற்றுவதும், எடுத்துக் கொண்டு மாறு வதும், ஏனென்று கேட்டால் கத்தியை நீட்டுவதும் அங்கீகரிக்கப்பட்ட நடத்தைகளாகவே ஜீரணித்துக் கொண்டு விட்ட ஒரு சமூகத்தில் ஒருவன் தப்பி பிழைப் பது தலை அல்லது பூ விழுவதைம் போல தான். இருப்பினும் ஒரு முரட்டுத்துணிவோடு ஜீவா சீட்டை தொடங்கினான். முதல் ஆறழு சீட்டுக்கள் இப்படியும் மனிதர்கள் இந்த பூமியில் வாழ்கிறார்களா என்ற வியப்பில் ஓடி மறைந் தது. பத்தாவது சீட்டை "பிளேன்’ எடுத்தான். ஏதோ அவசரத் தேவையாம். அதிகபடியான கழிவு. அடுத்த ஒரு வாரமாக பாக்டறியில் ஆளின் சிலமன், இல்லை. கூடித்திரிந்த ராஜேசிற்கும் தெரியவில்லை.

Page 156
304 0 பணியும் பனையும்
பாக்டறிக்கே தகவல் கொடுக்கப்படவில்லை. அவனின் அப்பாட்மெண்டிற்கு போன் செய்தபோது அது தொடர்ந்து ஒலித்தது.
தெளிவாகியது,
பிளேனுக்கு பத்து சீட்டுக்கு மேல் பல இடங்களில், போதாதற்கு தனியாக ஒரு . அவன் இலங்கைக்கு பிளேன் ஏறியபோது ஏறத்தாள ஒரு லிகரத்துக்கு மேல டொடல் இருந்திருக்க வேண்டும். கொண்டு சென்ற கிறடிட் காட்டுகள் எத்தனையோ இது மோகன் போட்ட கணக்குக்குள் இல்லை.
இப்போது தன்னுடையதையும் சேர்த்து இரண்டு (pGpš துண்டுகள் ஜீவாவின் தலையில், VM
கார் வாங்கும் ஆசை காலவ ரையறையின்றி பின்வாங்க செய்த நகைகள் எல்லாம் "பெத்ததுக்கு பெற** மீண்டும் காசாக, “ஓம்' பென்ரன் போட்ட சங்கிலி கருவில் கருக, சுதாவின் கழுத்தில் தாலிக்கொடி மட்டுமே தனித்தது.
* “ւն]G6f6նr** இப்போது கொழும்பில் இருந்து 'சுவிஸ்* போக முயற்சி செய்வதாக Tr68e36ňo சொன்னான். அங்கும் அவன் சீட்டுக்கள் போடுவான், அங்கிருந்து வேறு நாடுகளுக்கும் LDTд06uт6йт அங்கும்.
'சீச்சீ, உந்த எளியதுகளை பெத்த வயித்திலை பிரண்டை வைசசுக் கட்ட வேணும். '

விடிவு தூரத்தில் D 308
"பெலாமி'யில் பஸ் நின்றபோது பனிப்புகாரை பிரித்துக் கொண்டு பாயும் மஞ்சள் ஒளிபோல சுதா வோடு ஒரே தையல் கொம்பனியில் பணிபுரியும் கீதா தனித்துத் தெரிந்தாள். வலது தோளிற் தொங்கிய கைப்பைக்குள் பனிக்குல்லாயையும் கையுறைகளையும் கழற்றித் திணித்துக் கொண்டே இயல்பான சிரிப்புடன் இவர்களை நோக்கி நகர்ந்தாள். "பொப்' செய்யப்பட்ட தலைமயிரில் முன் பகுதி கற்றையாக சரிந்து அவள் அகன்ற நெற்றியை மூன்றாம் பிறையாக்கியது. அணிந்திருந்த ஸ்வெற்ற ரையும் மீறிச் சதைப்பிடிப்பான சில பகுதிகள் கூர்மை காட்டின. இடுப்பிற்கு கீழே **டெனிம் ஜின்ஸ்' எந்தப் பகுதியில் எப்போ பிரியப்போகிறதோ என்று அவனுள் அச்சமேற்படுத்தும் அளவு இறுக்கம். ஒரே இடத்தில் வேலை செய்தாலும் இந்த நாகரீகம் இன்னும் சுதா மீது படியவில்லை. இவன் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டதாலோ சுதாவின் முழங்கை அவன் இடுப்பில் இடித்தது. கீதா பின்னால் வெறுமையாக இருந்த சீற் ஒன்றில் அமர்ந்து கொண்டாள். கீதாவும் இவர்களும் ஒரே கால கட்டத்தில் கனடா வந்த வர்கள். போன மாதம் தான் அவள் வாங்கிய 35 வீட்டிற்கு பால் காய்ச்சினாள். சுதாவும் ஜீவாவும் கூடப் போயிருந்தனர். 'அவவின்ர ஹஸ்பெண்ட் நல்ல ஆளப்பா. கீதா ஒரு கோடு போட்டாள் எண்டால் அதை அவர் தாண்ட மாட்டார்.
"ஒரு வேளை முந்தானைக்குள்ள இருந்தாத்தான் கனடாவில் காசு சேர்க்கலாம் போல'
N.L-20

Page 157
306 D பணியும் பனையும்
ஸ்காபறோ சென்ரரில் பஸ் நிற்க 17ம் நம்பர் பஸ்சை நோக்கி கீதாவின் பின்னால் விரைந்து கொண்டிருந்த சுதாவின் கண்கள் ஜீவாவை தேடின. ஜீவா எஸ்கலேட் டரில் ஏறிக் கொண்டிருந்தான். இரவு ஒரு மணிக்கு மேல் ஜீவா ரெஸ்ரோறன்ட வேலையையும் முடித்துக் கொண்டு திரும்பியபோது சுதா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அறை விளக்கைப் போடாமலே உடைகளைக் களைந்து சாறத்தை உடுத்திக் கொண்டு வோஷ்ரூமுக்குள் நுளைந்தான். முகம் அலம்பும் போது கண்களுக்கு கீழே கருவளையங்கள் அலையிட்டிருப்பது தெரிந்தது. இருபத்தியெட்டு வயதுக்குள் அவன் அரைக் கிழவனாகி விட்டான்.
* 'இருந்தென்ன செத்தே தொலையலாம்.' விழுந்தவனை மாடு மிதித்து சாணமும் போட்டது போல் எல்லாமே நடந்து முடிந்து விட்டது. நாளைக்கு மோகன் ஆக்களின் சீட்டுக்காசு கொடுக்க வேண்டிய கடைசித் தவணை என்பதால் இன்னும் காசு தராத சில இவங்களுக்கு "பிறேக்' நேரத்தில் போன் செய்த போது தான் இந்தப் பேரிடி தலையில் இறங்கியது. 'அந்தப் 'பிளேன்' தான் கழுத்த அறுத்தான் எண்டால் இந்த சிறியும் இப்படியா?" வழக்கமாக சீட்டுக்கூறும்போதே சிறி பணத்தோடு வந்திருப்பவன் மூன்று மாதங்களுக்கு முன்பே சீட்டு எடுத்துவிட்டதால் இப்போதுகூறலுக்கு வருவதில்லை. ஆனால் பாங்கில் காலம் பிந்தாது கட்டி விடுவான். இந்த முறை இதுவரை பணம் வரதாதால் அவன் வேலை இடத்திற்கு போன் செய்ய சிறி வேலையை விட்டு இரண்டு கிழமையானது தெரிந்தது. வீட்டிற்கு

விடிவு தூரத்தில் O 307
போன் பண்ணிய போது அப்படி ஒரு இலக்கத் தொடர் இப்போ வழக்கில் இல்லை என்றும் மீண்டும் சரிபார்த்து உறுதிப்படுத்தும்படியும் ஒலிப்பதிவு நாடா அறிவுரை வழங்கியது. வேலைக்கு அரைநாள் லீவு போட்டு விட்டு சிறியை தேடி அலைந்ததில் அவன் வீட்டு தட்டு முட்டுச் சாமான்களுடன் மொன்றியலுக்கு நிரந்தரமாக மாறி விட்டதை அறிந்தான். வேறு விபரம் எதுவும் யாருக்குமே தெரியவில்லை. சிறியும் ஏமாற்றி விட்டானா? 'இந்த உலகத்தில் மனிசரை நம்பக் கூடாதப்பா' ராஜேஸ் உடனும் இன்னும் சில நம்பிக்கையானவர் களோடும் கட்டி அழுதபோது அவர்கள் வழிவழி வந்த மரபுகளை, அதாவது சீட்டை முறித்த முன்னோடிகள் தொடர்ந்து போட்டு ஏமாந்த சிலருக்கு முன்வைத்த யோசனைகளை இவனது பரிசீலனைக்கு கொண்டு வந்தனர். சீட்டில் பங்கு கொண்டோரை எல்லாம் பக்குவமாக ஓரிடத்தில் கூட்டி நடந்தவற்றை விளக்கி அவர்கள் இது வரை கட்டிய பணத்தை வட்டியுடன் காலகதியில் எப்படி யும் தந்து விடலாம் என்ற ஒரு பக்க முடிவைக் கூறுவது. அவர்கள் ஏற்க மறுத்தால் அடுத்ததாக 'சரி லாபத்தில் எல்லாரும் பங்கு கொண்டதுபோல நட்டத்திலும் பங்கெடுப்போம். அந்த இரண்டு துண்டுகளையும் மேற்கொண்டு ஏதாவது நடந்தால் அவற்றையும் எல்லாரும் சேர்ந்தே கட்டுவோம்' என்ற பிரமாஸ் திரத்தை உபயோகிப்பது. வீரத்தமிழனை இந்த அஸ்திரம் எப்படியும் வீழ்த்தி விடும்.
இதைவிட வேறு வழியே இல்லை. சுதாவை எழுப்பி நடந்தவற்றையும் தான் எடுத்த முடிவையும் விளக்கியபோது அவள் அதிர்ந்து போவாள்

Page 158
308 O Lafiqih Loarnid
என்றே நினைத்தான். ஆனால் அவளோ நித்திரைச் சோம்பலுடன் கூடிய அமைதியுடன் அவன் சொன்ன வற்றையெல்லாம் கேட்டுக் கொண்டாள்.
அவன் கதைத்து முடிக்கும்போது அவள் பார்வை சுவர் மணிக்கூட்டில் கூடு கட்டிக் கொண்டிருந்தது. முகத்தில் களைப்பும் ஆயாசமும் திரையிட அவள் மெளனமாயிருந். தாள். அந்த தொடர்ந்த மெளனம் அவனை ஏதோ செய்தது. இதில இருந்து மீளுறதுக்கு எனக்கு வேற ஒரு வழியும். தெரியேல்லை?
அவளது கண்கள் ஜீவாவின் பேச்சை இடைமறித்து அவனை ஊடுருவியது.
ஆறு வருட தாம்பத்தியத்தில் அவளிடம் இப்படி ஒரு. எரிக்கும் பார்வையை கண்டதில்லை.
'உந்தக் கதையளை தானே சீட்டுகளை முறிச்சுச் சனங் களை ஏமாத்தின எல்லாரும் சொன்னவை. அவை யளைப்பற்றி நீங்க என்ன கதைச்ச நீங்க. இப்ப உங்க ளூக்கும் அந்த சுத்து மாத்துக்காறங்களுக்கும் என்ன வித்தியாசம்? ஞாயம் நீதி எல்லாம் மற்றவைக்கு, இப்ப எங்களுக்கு எண்டா வேறை மாதிரியா? உந்த சீட்டிலை சேர்ந்தவை யாரும் தாங்களா வந்து சேர்ந்தவையே? நீங்களாக கேட்டு உங்களை நம்பி வந்ததுகள். அவை யில் எத்தனை பேருக்கு பிளேனையும் சிறியையும் தெரி யும். உங்களை ஒரு மனிசன் எண்டு நம்பித்தான் கட்டி னதுகள். அதுகளுக்கு போய் துரோகம் செய்யிறதெண் டால். சீச்சி. உப்படி ஒரு யோசனை உங்கட மன. நிலை வருமெண்டு நான் கனவில்கூட நினைக்கேலை. இதைவிட நீங்கள் ஒமெண்டு சொல்லுங்கோ. நான் வேசையாடி எண்டாலும் இந்த சீடனுகளை அடைக் கிறன்."

Magrud (J 309
ஜீவாவின் விரல் நகங்களில் ஊசிகள் செலுத்தப்பட்டன. அவளுக்குள் இப்படி ஒரு எரிமலை கருக்கட்டி இருப்பது அவனுக்கு திகைப்பாய் இருந்தது. 'ஏமாத்தி வாழுறதுக்கு நாடு விட்டு நாடு வந்திருக்க தேவையில்லை. அங்கையே சாகிற சனங்களோட சேர்ந்து செத்திருக்கலாம். இது கனடா அப்பா. உழைக்க நல்ல வசதி இருக்கு. கக்கூசு கழுவுற வேலை எண்டாலும் பரவாயில்லை. அடுத்த கிழமையில இருந்து நானும் சனி, ஞாயிறு வேலைக்கு போறன். நாளைக்கு எங்களுக்கு பிறக்கப்போற பிள்ளையஞக்கு சொத்து சேர்க்க வேண்டாம். தாய் தகப்பன் ஏமாத்துக்காரர் எண்ட அவப்பேர் இல்லாவிட்டாப் போதும்.' * சுதா ஏன் இப்படி எல்லாம் கதைக்கிறீர். எனக்குவேற வழியில்லை. அப்படி எண்டா நான் தற்கொலைதான் செய்ய வேணும்.' அவள் விரக்தியோடு சிரித்தாள். நீங்கள் நினைக் கிறியளே நானும் உங்களோடு சேர்ந்து சாகப் போறன் எண்டு சொல்லுவன் அப்படியெண்டு. இல்லை. ஒருக் காலும் இல்லை. உங்கடை கடனுகளை கட்டும் வரை நான் உயிரோடு இருப்பன். அறுதலியாய் வேணு மெண்டா இருந்திட்டுப் போவன். ஆனா உங்களை ஏமாத்துக்காறன் எண்டு ஊர் சொல்ல கேட்டுக் கொண்டு இருக்க மாட்டன்." இந்த அலையில்லாக் குளத்தில் இத்தனை ஆழமா? * சரி, நீர் சொல்லியபடியே இரண்டு பேரும் வீக் எண்ட்ல வேலைக்குப் போவம். அடுத்த மாதம் பிரச்சனையை சமாளிப்பம். இப்ப நாளைக்கு மோகனுக்கு என்ன சொல்லிறது. ஆயிரம் டொலருக்கு மேல குறையுது. தூக்கம் அழுத்தும் இமைகளின் கனத்தோடு உடை களை சரி செய்து கொண்டு அவள் கட்டிலை விட்டிறங் கியபோது ஜீவாவின் நெஞ்சில் ஏதோ ஊர்ந்தது.

Page 159
310 O uslugih usparuh
*உதுக்குத் தானே யோசிக்கிறியள். இந்தாங்கோ. இதைக் கொண்டு போய் இந்த மாதப் பிரச்சனையை தீருங்கோ." அவசரத்தில் தாலிக்கொடியை இழுத்து கழற்ற முயலும் போது மெழுகுப் பிடிப்புக் கழன்று அது அவள் கையோடு வந்தது. ஜீவாவின் முகத்தில் யாரோ அக்கினித் திராவகத்தைக் கொட்டினார்கள். "நீங்கள் கட்டினது உங்கடை மானத்தைக்காக்க உதவா மல் என்ரை கழுத்துக்கு வெறும் சுமையாய்...' ஜீவா கலங்கிய கண்களோடு அவளைப் பார்த்தான். ()

ஒரு மா(நா)ட்டுப் பிரச்சனை
வ.ந. கிரிதரன்
ஞாயிற்றுக்கிழமையாதலால் றோட்டினில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் கொண்டா அக்கோர்ட்" சென்ற் கிளயர் வெஸ்டில் ஆறுதலாக வளர்ந்து கொண்டிருக்

Page 160
3 1 2 i Luafuqůh uae aruqúb
கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித டென்ஷனு மின்றி பின்னால் ஹோர்ன் அடிப்பாங்களென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்ல லாமல்லவா? இருந்தாலும் அண்மைக் காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஹோர்ன் அடிக்கத்தான் தொடங்கி விட்டாங்கள். சிட்டி பெருக்கத் தொடங் கிட்டுது. சிட்டி பெருக்கப் பெருக்க சனங்களும் பொறு மையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை. இவ்விதம் அத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். நகரம் வளரு கின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத் தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால்பிரச்சனைதான் என்றும் சிலவேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடனும் அவன் சிந்தித்துக் கொள்வான். ஒல்ட் வெஸ்டன் றோட்டைக் கடந்து "கீல்" இன்டர் செக்ஷனையும் கார் கடந்து விரைந்தது. இடப்புறத்தில் * கனடா பக்கர்ஸின் ஸ்லோட்டர் கவுஸ் பெரியதொரு இடத்தைப் பிடித்து படர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மாடுகளை துண்டுபோடும் பெரிய தொரு கசாப்புக் கூடம். பொன்னையா இயற்கையிலேயே சிறிது கருணை வாய்ந்தவன். ஏனைய உயிர்களின் மேல் அன்பு வைக்க நினைப்பவன். ஊரிலை இருக்கும் மட்டும் சுத்த சைவம் தான். இங்கு வந்ததும் கொஞ்சங் கொஞ்சமாக மாறி விட்டான். இங்கத்தைய கிளைமட்டிற்கு இதையும் சாப்பிடாட்டி மனுசன் செத்துத் துலைக்க வேண்டியது தான். திடீரென ஊர்ந்து கொண்டிருந்த ட்ரபிக் தடைப் பட்டது. பொன்னையா மணியைப் பார்த்தான். நேரம் பதினொன்றைத் தாண்டிவிட்டிருந்தது. பஞ்சாப்காரன் Tபத்துமணிக்கே வரச் சொல்லியிருந்தான்.

ஒரு மா(கா)ட்டுப் பிரச்சனை O 313
பொன்னையாவிற்குத் தெரிந்த ஓரளவு நாணயமான கராஜ் அந்தப் பஞ்சாப்காரனின் கராஜ்தான். நேற்றிலிருந்து அதைக் காட்டத்தான் பொன்னையா விரைந்து கொண்டிருந்தான். நேரங்கெட்ட நேரத்தில் இதென்ன ட்ரபிக் புளக். இவ்விதம் எண்ணியபடி ட்ரபிக் புளக்கிற்குக் காரணம் என்னவாகயிருக்குமென எதிரே நோக்கினான். இதற்குள் றோட்டுக் கரையில் சனங்கள் விண்ணானம் பார்க்கக் கூடத் தொடங்கிட்டுதுகள். இந்த விசயத்தில் 6T66). It மனுஷருமே ஒன்றுதான். எதிரே அவன் பார்வையை கனடா பக்கர்ஸிற்குச் சொந்தமான பெரிய ட்ரக்கொன்று நின்றதால் இவனால் ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை. றோட்டுக்கரையில் விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்த சைனாக்காரனொருவனைப் பார்த்து ‘ஏ. மேன் வட்ஸ் த மட்டர்? வட்ஸ் கோயிங் ஒன்...' என்று பலமாகக் கத்தினான். அதற்கு அந்த சைனாக்காரன் தனக்கு தெரிந்த ஆங்கி லத்தில் "பீவ்.எஸ்கேப்.ஸ்லோட்டர்' என்றான். அருகிலிருந்த வெள்ளையனொருவன் சைனாக்காரனின் ஆங்கிலத்தைக் கேட்டுச் சிரித்தான். இவனுக்கும் சிரிப்பாக இருந்தது. ஆனால் அந்த ஆங்கிலம் கூட விளங்கியது. மாடொன்று ஸ்லோட்டர் ஹவுஸ்ஸி லிருந்து தப்பி வந்து விட்டது என்பதைத்தான் அந்த சைனாக்காரன் அவ்விதம் கூறினான் என்பது விளங்கியது. மரணத்திலிருந்து தப்பிவந்த அந்த இனந்தெரியாத மாட்டின் மேல் ஒருவித பரிதாபம் தோன்றியது, அது தாபம் படர்ந்தது. காரை வெட்டி றோட்டுக்கரை யோரம் பார்க் பண்ணிவிட்டு பொன்னையா காரை விட்டிறங்கி வேடிக்கை பார்க்கும் சனங்களில் ஒன்றா

Page 161
314 O LJRefluqús Lu6uB6wraqá
னான். "ஸ்ட்ரீட் கார்’ செல்லும் இரும்புப் பாதையின் மேல், சுற்றிவர வேடிக்கை பார்த்தபடி நிற்பவர்களைப் பார்த்து முறைத்தபடி அந்த மாடு நின்றது. அதன் கண்களில் மரண பயம் கவ்விக் கிடந்ததை இவன் உணர்ந்தான். அதைப் பார்க்கப் பாவமாகவிருந்தது. பொன்னையாவிற்குக் கவலை தோன்றியது. உருண்டு திரண்டு கொழு கொழு வென்று வாட்டசாட்ட மாக வளர்ந்திருந்தது. அருகில் சென்று பிடிக்க முனைந்த "கனடா பக்கர்ஸ் ஊழியர்களைப் பார்த்து முறைத்தது. முட்டுவது போல்பாசாங்கு செய்து முரண்டு பிடித்தது. அருகில் ஒருவரையும் வரவிடாமல் தடுத்து வைப்பதில் ஓரளவு வெற்றி கண்டிருந்தது. எவ்வளவு நேரத்திற்குத் தான் அதனால், அந்த ஐந்தறி உயிரினால் தாக்குப்பிடிக்க முடியும்? மட மாடே மனிதனுடன் போட்டி போட்டு உன்னால் வெல்ல முடியுமா என்ன?
திடீரென பொன்னையாவின் சிந்தனையில் ஒரு எண்ணம் எழுந்தது. "இந்த மாட்டின் மனநிலைஎன்னவாகயிருக்கும்?' அருகி லுள்ள ஸ்லோட்டர் ஹவுஸிற்குள் வெட்டுப்படுவதற் காகக் காத்து நிற்கும் ஏனைய மாடுகளின் ஞாபகமும் எழுந்தது. இவ்விதம் தப்பி வர இந்த மாடு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? கிடைத்த சுதந்திரத்தின் நிரந்தரமற்ற தன்மையை பாவம் இந்த மாட்டால் உணரமுடியவில்லை.அதனால் தான் தன்னுயிரைக் காத்துக் கொள்ள கிடைத்த அற்ப சுதந்திரத்தைப் பாதுகாக்க இந்த மாடு வீராவேசத் துடன் முயல்கின்றது. ஊரில் இருப்பவர்களின் நினைவுகளும் எழாமலில்லை. இந்த மாட்டைப் போன்ற நிலையில் இருப்பவர்கள் எத்தனை பேர்..? அறைகுறையாகத் தப்பி மீண்டும்.

ஒரு மா(கா)ட்டுப் பிரச்சனை O 315
அகப்பட்டவர்கள் தப்புவதற்கு முடியாமல் சமாதியாகிப் போனவர்கள். மீண்டும் கவனம் மாட்டின் மேல் திரும்புகின்றது.இன்ன மும் அது மூர்க்கத்துடன் தன்னை நெருங்குபவர்களை எதிர்க்கின்றது. யாரும் நெருங்காத சமயங்களில் ஒருவித சோகம் கலந்த பாவத்துடன் அமைதியாக ஒருவித பயத்துடன் நிற் கிறது. அதன் கண்களிலிருந்து மெல்ல மெல்ல இலேசாகக் கண்ணிர் வடிகிறது. எதை நினைத்து அழுகிறது? தன் பரிதாபகரமான நிலையை நினைத்தா? தன்னைச் சமாதியாக்குவதற்குக் கங்கணம் கட்டி நிற்கும் மனிதர் களால் தனக்கேற்பட்ட நிராதரவான நிலையை உணர்ந்தா? ஏன் அது அழுகிறது. திடீரென பொன்னையாவிற்கு ஒரு எண்ணம் தோன்று கின்றது. "ஏன் இந்த மாட்டிற்குரிய விலையை குடுத்து, இதன் உயிரைக் காப்பாற்றினாலென்ன?’ ஊரிலென் றாலும் வீட்டு வளவிலையாவது கொண்டு போய்க் கட்டி வைக்கலாம்.இங்கு எங்கு போய்க்கட்டிவைப்பது. அப்பார்ட் மன்ற்றிலையா.,..அப்படித்தான் காப்பாற் றினாலும் இந்த ஒரு மாட்டைக் காப்பாற்றுவதால் மட்டும் இதன் நிலையில் இருக்கின்ற ஏனைய மாடு களின் பிரச்சனை தீர்ந்து விடுமா? இதற்கிடையில் யாரோ மாடு ட்ரபிக்கிற்குத் தடை யாகயிருப்பதை பொலிஸிற்கு அறிவித்து விட்டார்கள் போலும். எமர்ஜன்சி பிளாஷிங் லைட்டுடன் சைரன் முழங்க பொலிஸ்காரொன்று விரைந்து வந்து இறங் கியது. இரு பொலிசார் இறங்கினார்கள். கயிரொன்றில் வளையம் செய்து சிறிது நேரம் முயற்சி செய்தார்கள். பலனில்லை. மாடு மிகவும் உறுதியாகவே எதிர்த்து நின்றது.

Page 162
316 G usufiuqúb uaosurujúb
இதற்கிடையில் விஷயத்தை மோப்பம் பிடித்துப் பத்திரிகைக்காரங்கள் தொலைக்காட்சிக்காரங்களென்று கமராக்களுடன் கூடிவிட்டனர்.
மாடு தன்னுயிரைக் காப்பதற்கானதொரு போராட்டத் தில், ஜீவமரணப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றது. இதை அடக்க, வேடிக்கை பார்க்க, படம்பிடிக்க ஒரு கூட்டம். ஒன்றிற்கும் செயல்பட முடியாத, இயலாத கூட்டம் தானும் அக்கூட்டத்தில் ஒருவன் என்பதை நினைக்கையில் பொன்னையாவிற்கு தன்மேல் ஒருவித வெறுப்புக்கூட தோன்றியது.
தங்கள் முயற்சி சிறிது தோல்வியுற்றதைக் கண்ட பொலிசார் தங்களிற்குள் கூடிக் கதைத்தார்கள். இதற்குள் வீதியில் இரு திசைகளிலும் வாகனங்கள் பெருமளவில் முடங்கி விட்டன.
தொலைவிலிருந்தவர்கள் போக்குவரத்து தடைப்பட்ட தன் காரணத்தை அறியாத நிலையில் ஹோர்ன்களை மாறி மாறி அடிக்கத் தொடங்கி விட்டார்கள். நிலைமை கட்டுமீறுவதை பொலிசார் உணர்ந்தார்கள். இறுதியில் மாட்டுப் பிரச்சினை ஒரு முடிவிற்கு வந்தது. ஆறறிவுப் பிராணியின் முன்னால் சுதந்திரவேட்கை நசுக்கப்பட்ட நிலையில் ட்ரான்குலைசரால் மயக்கப் பட்டு சாய்ந்த மாட்டை தூக்கிய கனடா பக்கர்ஸ் ஊழியர்கள் அதனை ஸ்லோட்டர் ஹவுஸ்ஸிற்குக் கொண்டு சென்றார்கள்.
ஒரு வழியாகப் போக்குவரத்துச் சீர்பட்டது. சனங்கள் ஒவ்வொருவராக கலையத் தொடங்கினார்கள். பஞ்சாப்காரன் திட்டப்போகிறான் என்ற நினைப்புடன் தன் காரில் பாய்ந்தேறினான் பொன்னையா. கூடவே "அடிக்கடி மிருகங்களை வதைப்பதாகக் கூறி வழக்குப்

ஒரு மா(கா)ட்டுப் பிரச்சனை ( 317
போடும் "ஹியூமேன் சொசைட்டி"யின் நினைவு வந்தது. சிரிப்பு வந்தது.
சிறிது போராடித் தோல்வியுற்ற மாட்டின் நிலைமை அநுதாபத்தைத் தந்தாலும் அதன் சுதந்திர வேட்கை யும் அதற்காக அது போராடிய தீவிரமும் அதன்மேல் ஒருவித பயபக்தியை பெருமிதத்தை ஏற்படுத்தியது. சொன்னால் நம்பமாட்டீர்கள்! அன்றிலிருந்து பொன்னையா மீண்டும் முழுச் சைவமாகிவிட்டான். o,

Page 163
60
சக்கரவர்த்தி
பனி கொட்டலும்-கொட்டிய பணி கொடுரம் கொள்ள லும். அப்புறமாய் உஷ்ணம் பட்டு உருகலும் வேடிக் கையா? இல்லையேல் எதுவேனும் தத்துவக் குறியீடா?
 

tours 319
*சொல்லு என்ட பிரச்சினைக்கு ஒரு முடிவு சொல்லு. ப்ளீஸ். உன்னால முடியும். நீ கதை எழுதுறவன். கதையில எவ்வளவோ பிரச்சினைக்கு நீ லேசா முடிவு எடுக்கிறாய். உன்னை நம்பித்தான் வந்திருக்கிறன். உன்னால முடியும் என்ர வாழ்க்கைக்கு ஒரு முடிவு சொல்லு."
கண்ணாடி ஜன்னலில் இருந்த என் பார்வையைத் திருப்பி சீதாராமனைப் பார்த்தேன். அவன் பார்வை வெறித்துக் கிடந்தது. நிலைகுற்றி என்னையே அவை வெறித்தன.
“ஒளிபடைத்த கண்ணினாய் வா.வா.வா. உறுதிகொண்ட நெஞ்சினாய் வா.வா.வா. சீதாரமனின் அப்பா இவனைப் பார்த்து எப்போதே னும் இப்படிப் பாடியிருக்கக் கூடும். கைபிடித்து களுதாவளைப் பிள்ளையார் கோவிலுக்கோ களுவாஞ்சிக்குடி கடைத் தெருவுக்கோ அழைத்துப் போய் வேடிக்கை காட்டியிருக்கலாம். "அன்னாபோகுது பாரு. அதான் கப்பல். * கடலுக்குள்ள, அங்க தூரத்தில் ஆருரோட்டுப் போட் டது? *உஹலிம். அது தண்ணியில ஒடுறது நீராவிக் கப்பல் அது."
"அது எங்க போகுது?"
"சிங்கப்பூருக்கு." சின்னக்காலத்தில் அப்பனும் பிள்ளையுமாய் ஊர்க் கடற் கரையில் நின்று பேசியிருக்கக்கூடும். நெஞ்சம் நிறைந்த கனவுகளோடு தூரத்து நிலவைக்
காட்டிச் சோறு கொடுத்திருக்கக் கூடும், இவன், அம்மா .

Page 164
320 O LaRagib ua Rrugih
இந்த ஒளியிழந்த கண்களையும் உறுதி இழந்த நெஞ்சி னையும் இவன் அப்பாவோ அம்மாவோ பார்க்கக் கூடு மாயின், அவர்களால் என்ன பேசத் தோன்றும்! "என்ன மண்ணாங்கட்டிய யோசிக்கிறாய்? எனக்கொரு முடிவு சொல்லு. ஒரு புத்திஜீவியான உன்னால் முடிவு சொல்ல ஏலாதே...? சீதாராமன் பார்வையை மாற்றாது அப்படியே வெறித் துக்கொண்டு என்னை விரட்டினான். விழி ஓரங்களைச் சுற்றியிருந்த கறுப்பு அரை வளையங்கள் மாத்திரம் அகன்றும், சில சமயம் சுருங்கியும் கொண்டன. "உன் னோட வாழ்க்கை நீயாக உருவாக்கின பிரச்சினை. நீதான் முடிவு எடுக்கவேணும். நல்லா இருந்தால் வர வேற்கவும் கெட்டதா இருந்தால் மறுக்கவும்தான் என்னால முடியும்." சீதாராமன் இமைகளை இறுக மூடிக்கொண்டான். மெளனித்திருந்தான்! மெளனம் மிக அழகான, அர்த்தமான, அற்புதமான மொழி ஆயினும் எந்த ஒரு பொழுதிலும் மெளனம் பிரச்சினைகளை தீர்த்ததில்லை. தீர்க்கப் போவதும் இல்லை.
மெளனம் தொடர்ந்தது. சிறு அசைவுகூட இல்லாது ஜடமாய் இருந்தான். "சீதா...'
* சீத்தா..."
*ம்.ஆங்.." முனகலாக அடித்தொண்டைக்குள் சத்தம் அசைந்தது. இமை மூடியேதான் கிடந்தது. "கண்ணைத்திற. கண்ணைத் திறந்து என்னப்பாகு!"

oara L 32
*வேணாம். நான் கண் திறக்கவேணாம். சுகம் இல்லாத வாழ்க்கைய என்னால அனுபவிக்க முடியாது. ஐம் கோயிங் டு டை."
கண்ணைத் திறக்க மறுத்தான். *பயித்தியம். உளறாத, செத்திட்டால். பிரச்சினைக்கு முடிவு அதுதானா? வாழ வேணும். இன்பமோ துன் பமோ அனுபவிக்க வேணும். அதுதான் வாழ்க்கை."
கண்களைத் திறந்தான். கண்கள் சிவந்து கிடந்தன. பார்வை நிலத்தை நோக்கிற்று. இடது கால் பெரி விரலை, வலக்கால் குதியால் மிதித்தான். மெல்லிய நீர் படலம், விழியள் திரண்டது. வினாடிகள் கடந்து போக, திரண்ட நீர் விழியின் கீழ் ஒரமாய் சேர்ந்தது. விழிப் படலத்தின் கொள் அளவு காணாததால் நீர் வெளித் தள்ளப்பட்டது.
ஆண்அழுவது st Gorr?
வீரன் என்பவன் யார்? இறுகிய மனதுடன் எப்போதும் கல்லாக இருப்பானே, அவனா? இன்பத்திலும் துன்பத்திலும்- வெற்றியிலும் தோல்வியிலும்- நல்லதிலும் கெட்டதிலும் இறுகிய மன துடன் கல்லாக இருப்பானே, அவனா வீரன்?ஆமெனில் இன்பத்தில் மகிழ்பவனும் கெட்டதில் கவலை கொள் பவனும் யார்? அவன் ஒரு சராசரி மனிதன்! உணர்ச்சி களுக்கு கட்டுப்பட்ட சராசரி மனிதன்!
சீதாராமன் உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்ட சராசரி மனிதன். அவனால் அழவும் சிரிக்கவுமே முடிகின்றது. இங்கு மெளனம் என்பது தற்காலிகமாய் தப்பித்தலுக்கு மாத்திரமே பயன்படுகின்ற மொழி ஜடமாய் அசை யாது இருத்தல் கூட நிரந்தரமாய் முடியாது. அது வீரனால் கூட முடியாதது. தவசிகளால் முடியக்கூடியது. இங்கு தவசிகள் கிடையாது. வீரர்கள் கிடையாது.
L. u-21

Page 165
322 0 பனியும் பனையும்
மனிதர்கள். சராசரி மனிதர்கள். சகலரும் அப்படியே..! எது வாழ்க்கை? எங்கேயோ குடிச்சுப் போட்டு விடியச் சாமம் ரெண்டு மணிக்கு எவனோ ஒரு ஆம்புளையோட வாற பொஞ்சாதியோட எப்படி வாழ முடியும், சொல்லு பாப்பம்?"
ஜன்னல் வழியாய் பார்த்துக் கொண்டே சீதாராமன் கேட்டான். அவன் பார்வை வேறு திசையில். அவன் முகத்தை சங்கடம் இன்றி பார்க்க முடிந்தது. என் உதட்டைக் காட்டிலும் கருமையாய் இருந்தன அவன் உதடுகள். அதிகமாய் புகைக்கின்றானோ? இடது காதில் துவாரம் மட்டும் கறுப்பு நிறத்தில் ஏதோ வடு மாதிரி காணப்பட்டது. கடுக்கனைக் காண வில்லை. தலைமுடியில் இடைவெளிகள் அதிகம் தெரிந்தது. நரை கூட ஏகமாய் பரவிக் கிடந்தது. முப்பது வயதுக்குள் முதுமையா? இது முதுமையா? இல்லை. இது வெம்பல்! *சொல்லுடாப்பா. எப்படி வாழ ஏலும்?" என்னைப் பார்ப்பதை தவிர்க்க விரும்புகிறான் போலும். கொட்டும் பணியை தொடர்ந்து வெறித் தான். "ஏன் முடியாது? முடியும் முடியிது! அந்த வகையான கலாசாரம்- பண்பாடுகளைக் கொண்ட சனத்தால அப்படி வாழ முடியும். வாழுதுகள். அதுகளோட வாழ்க்கை அப்படித்தான்! "எனக்கு பிடிக்கையில்லை. என்ன பண்பாடும் கலா சாரமும்?" *அதெப்படி; நீ அப்படிச் சொல்ல ஏலும்?' என் குரலை இறுக்க, முகமும் இறுகிக் கொண்டது. என் ஆத்திரம் அவனால் உணரப்பட்டது. திடீரென என்னை

diplms to sers O 323
நோக்கினான். என்னை பார்த்த வண்ணமே
தரை பார்த்து மெளனித்தான்.
*உன்ர அம்மா அப்பாவோ இல்லாட்டி சொந்தக் காறங்களோ பார்த்துக் கட்டிவைச்ச கலியாணமா இது? நீயாகக் கட்டிக் கொண்டது. எத்தின தரம் வேணாம்டா வேணாம்டா எண்டு சொல்லியிருப்பன். கேட்டியா? உடம்புத் திமிர்! இப்ப அடங்கிட்டுத்தானே." என் கோபம் நியாயம் என்பதை சீதாராமன் ஏற்றுக் கொள்கின்றான் என்பதை அவன் முகத்தை வைத்துக் கணிப்பிட்டேன். பாவி. எப்படியெல்லாம் ஆடினான். இப்போது இரத்தம் சுட்டுப்போக புத்தி தெளிகின்றது. கடவுள் மனிதனுக்கு இரண்டு வழிகளை காட்டு கின்றான்; ஒன்று பூந்தோட்டம்! மற்றயது வாசல் மட்டும் அழகாய் உள்ள குகைப் பொறி! பூந்தோட்டமா, குகைப்பொறியா வேண்டும் என்பதை தீர்மானிப்பது மனிதனின்புத்தி! இந்த சீதாராமனின் பாழாய்ப்போன புத்தி குகைப் பொறியைத் தெரிந்தெடுத்து உள்ளே நுழைந்துவிட்டது.
தெரியல்ல மச்சான். உண்மையில என்ர வாழ்க்கை இப்படி நாசம் கெட்டுப் போகும் எண்டு நான் முதல்ல நினைச்சுக்கூடப் பார்க்கயில்லை." சீதாராமன் வேதனைப்பட்டுக் கொண்டான். *நீ ஆசைப்பட்ட வாழ்க்கை இதுதானே?" நான் கேட்க, கை இரண்டையும் உயரத் தூக்கி தலைக்கு மேலாகப் பிடித்துக் கொண்டான். வியப்பா இருந்தது அவன் செய்கை. இரண்டு கைகளையும் மெல்ல மெல்ல
பதித்துக் கொண்டே வந்தான். வந்து, 3.
கன்னத்துக்கு அருகே

Page 166
324 i Lafaqih Luanawrůb
நிறுத்திக் கொண்டான். என் கண்களை நேராய் இமை சிமிட்டாது பார்த்தான். வளர்த்த நாயை விட்டுப் பிரியப் போகின்றோம் என்பதை மணந்து கொண்ட நாய் ஒரு வகையாய் பார்க்குமே. அதே மாதிரி ஈனம் கலந்த வெறிச்சென்ற பார்வை. கைகள் இரண்டும் அகல விரிந்தன. வேகமாய் ஒடுங்கி ஒரே நேரத்தில் அவன் கன்னத்தை படபடவென தாக்கின. சீதாராமனின் செய்கைக்கு அர்த்தம் புரிந்தது! இது உச்ச வலியின் செயற்பாடு! சுய தவறின் உண்மையை உணர்தல், சுயமாய் தன்னை தண்டிக்க, கேவலப்படுத்த எல்லாராலுமா முடிகின்றது? சீதா ராமனைப்போல எல்லாராலும் முடியும்; இவனைப் போலவே எல்லோரும் உச்சவலியை உணர்கின்ற போது...!
அடித்துக் கொண்டே இருந்தான். நான் தடுக்க வில்ல்ை. வெறுமனே அவனைப் பார்த்துக் கொண் டிருந்தேன். அன்றைய அந்த முகம் எங்கே? அந்தப் பார்வை இப்போது எங்கே? அந்த பேச்சு எங்கே? அந்த திமிர், கர்வம் எல்லாம் எங்கே?
*பயித்தியக்காரத்தனமான சுத்த பம்மாத்து கல்ச்சர், நம்மளோட கல்ச்சர்! இந்த தமிழிச்சிகள் தலையைக் குனியிறதும், ஒடுறதும், வெக்கப்படுறதும், வோஷ்ரூம் போகக்கூட அவையஞக்கு ஆம்புள வேணும். ச் சி சுத்த பம்மாத்து. கார்பேஜ்! சோஷலாப் பழகவேணும். வேறு பாடு பார்க்காமல் தோள்ள கைபோட்டு திரியவேணும். ஒண்டா இருந்து தண்ணியடிக்கவேணும். ஒரு சிகரட்ட புருஷனும் பொஞ்சாதியும் பாதி பாதியா பத்த வேணும். பார்ட்டியில கட்டிப்புடிச்சு டான்ஸ் ஆட வேணும்.'
ஆசை ஆசையாய் கனவு கண்டு தேடிக் கண்டுபிடித்துக் கட்டிக் கொண்ட வாழ்க்கை அத்தனையும் நான்கைந்து

on D 325
ஆண்டுக்குள் வெறுத்துவிட்டது. உள்ளத்தை சுட்டு விட்டது. தொடர்ந்து அறைவதற்கு கைகள் வலுவிழந்தன. அடி யின் வேகம் குறைந்து மெது மெதுவாய் கன்னத்தை தாக்கிற்று. கைகள் முற்றாக வலுவிழந்தன. கைகள் அசைவற்று, மூட்டெலும்பு கழன்றுவிட்ட மாதிரி சும்மா கிடந்தன. *சீதா..."
மெல்லிய வருடலாய் அழைத்தேன். உடலில் சிறு அசைவு மாத்திரம் தென்பட்டது. அவன் தலையை நிமிர்த்தினேன். நேராய் நிற்க மறுத்தது . கண்கள் இறுக மூடிக்கிடந்தன. *ஏதாவது சாப்புடுறியா?"
* Gus?'
* தா"
அவசரமாய் விழி திறந்தான். ஒரு போத்தல் பியரை உடைத்துக் கொடுத்தேன். ஒரு முடர் குடித்துவிட்டு, போத்தலை எட்ட வைத்தான். இடப்பக்கக் கன்னமேடு மெல்ல மேல் எழுந்தது. கசப் பாய் இடப்பக்க உதடுமாத்திரம் புன்னகைத்தது. "ஹொட் ட்றிங்க் இல்லையா?" *இல்ல. . . நான் ஹொட் ட்ரிங்க் பாவிக்கிறது இல்லை." * க்ளவ்டியா இப்ப எங்க?" * அங்கதான், மொன்றியல்ல...' *வரேக்க சொல்லிட்டே வந்த நீ?" "இல்ல சொல்லயில்லை. . . சும்மா நிண்டவாக்கில பஸ் எடுத்து வந்திட்டன். என்னத்துக்கச் சொல்லவேணும்? வேணாம் எண்டு போட்டு வந்தநான். ஏன் அவளிட்ட

Page 167
328 - O usurfaqúb uae awuqúh
சொல்ல வேணும்? பியரை எடுத்து மடமடவென்று அரைப்போத்தல் காலியாகும் வரை குடித்தான். "பிழைதான் மச்சான். யோசிக்காமல் கல்யாணம் கட்டி னது பிழைதான். ஒரு புருஷன் குடிச்சால் குடிக்காத எண்டு பொஞ்சாதி சொல்ல வேணும். பறிச்சிக் குடிக்கிற பொம்புளையோட எப்படிடா வாழறது? அசிங்கமான பழக்க வழக்கமுள்ள பொஞ்சாதியோட குடும்பம் நடத் திறது எவ்வளவு கொடுமை எண்டு எனக்கு இப்பத்தான் தெரியுது." சொல்லிவிட்டு மறுபடி முழு பியரையும் உறிஞ்சினான். உறிஞ்சி முடிய காலிப் போத்தலை என்னிடம் நீட்ட, வாங்கிக் கொண்டேன். இன்னும் ஒரு முழுப்போத் தலைக் கொடுக்க, வாங்கி ஒரமாய் வைத்துவிட்டுக் கன்னத்தைத் தடவினான். அறையின் தாக்கம் கன்னத்தில் வலியை உண்டாக்கு கின்றது போலும்,
*வலிக்கிறதா?”
*ம்.! நீ பியர் குடிக்கயில்லையா?"
வேணாம் நீ குடி!'
"எனக்கொரு முடிவு சொல்லன்" "நீதான் முடிவு எடுக்கவேணும்' "நான் ஊருக்கு போகட்டா?"
* GSu Truitu . . ...?" *தெரியல்ல. ஆனா போகவேணும் போல இருக்கு" உன்ர பிள்ளை?"
"வெள்ளைக்காறிக்குப் பிறந்தது. எப்பிடியும் அது பிழைச்சுக் கொள்ளும்!" 'தப்பி ஓடப் போறாய். அப்பிடித்தானே.” *உயிரியல் விதி என்னால எதிர்த்தாக்குதல் நடத்த ஏலாது பலயினமா இருக்கு. தப்பி ஓடத்தான் வேணும்."

”!(0) ہو“۔ மறுப்பேன் என்று எதிர்பார்த்தானோ என்னவோ தெரியவில்லை, அதிர்ந்து என்னைப் பார்த்தான். பார்த்துக் கொண்டே ஜக்கட் பையுள் எதையோ தேடி னான். ஒவ்வொரு பையாய் துழாவினான். கிடைக்க வில்லை போலும்.
"சிகரட் இருந்தால் தா!' பெட்டியுடன் கொடுத்தேன். லைட்டர் வைத்திருந்தான். ஒன்றை உருவி பற்றவைத்துக்கொண்டான். புகையை வெளியே விட்டுக் கொண்டே சிரித்தான். *என்னட்ட சிகரட் இல்லாட்டி க்ளவ்டியாட்ட கேட் டால் தருவாள். ஆனா திரும்பக் குடுத்திட வேணும். இல்லாட்டித் திட்டுவாள். வாழ்க்கை பண்ட மாற்று என்றது என்ர வாழ்க்கை தான். கட்டில் ஒண்டைத் தவிர மற்ற எல்லாமே வேற வேறதான்! பிள்ளையைக் கூட அவள் ஒரு நாள்-நான் ஒரு நாள் பாத்துக்கொள்ள வேணும். என்ர ரேண்ல பிள்ளைக்குச் சுகம் இல்லெண் டால்கூட கிட்ட வரமாட்டாள். அவலசுஷ்ணமாகப் படுத்துக் கிடப்பாள். என்ன வாழ்க்கை சொல்லு. தனியா சம்பாதிச்சு, தனியாச் சாப்பிட ஒரு குடும்பம் வேணுமா? நித்திரையைக் கூட தனித்தனியாக் கொள்ள லாம். ஆனால் ஒரு தேவைக்காக மட்டும் ஒரே கட்டில்ல படுக்கவேண்டி இருக்கு. அது மட்டுந்தான்வாழ்க்கையா? அதுக்கு மட்டும்தானா குடும்பம்? எனக்கு வெறுத்துப்
போச்சு."
ரொம்பவும் அடிபட்டு நொந்துவிட்டான்.
குகைப் பொறிக்குள் இருந்த சகல ஜந்துகளும் இவனைத் தீண்டிவிட்டன. விஷம் முழுதாய் பரவி விட்டது. இப்பொழுது மீட்சி தேவைப்படுகின்றது.

Page 168
320 o Luaufiqib uanawruh
பலமாய், இறுக்கமாய் என்னில் கேள்வி எழுகின்றது. இவன் பிரச்சனைக்கு ஒரே தீர்வு இவன் சொல்வது போல, தப்பித்து ஓடலே தீர்வு! ஸ்நேகிதன் என்கின்ற நெருக்கம். ஒரு பக்க சார்பாய் நான் நினைத்துக் கொள்ளலில் ஏதேனும் பிழை இருப்ப தாய் தெரியவில்லை. இது மனித இயல்பு. வேண்டப்பட்டவர்களுக்கு சார்பாய் இருத்தல் இயல்பு! அப்படியாயின் சீதாராமனின் பிள்ளை? எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டப்பட்ட உயிர். ஸ்நேகிதன் பின்ளை என்கின்ற சின்ன நெருக்கம். மடியில் தூக்கி வைத்து, முத்தமிட்டு நடைபழக்கிய சில மணிநேர நெருக்கம். "இவன் அப்பன் அம்மாவை விட்டுட்டு ஓடிட்டான்" என்று அந்த பிள்ளையை பார்த்து எந்தப் பிள்ளையும் பள்ளியில் கிண்டப்போவதில்லை. ஆனால்‘என்னுடைய அப்பா இவர். உன்னுடைய அப்பா ? யார்?" என்று கேட்கக் கூடும். பிள்ளை விழிக்கும். அம்மாவிடம் கேட்கும். அந்த நேரம் அம்மா போதையில் கிடக்கக்கூடும். இல்லையேல் வேறு பிற புருஷனுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கக் கூடும். பிள்ளை தன்னிடம் கேட்கும். விடை தெரியாது திகைக் கும். நாள் ஆக ஆக மனது வக்கிரம் கொள்ளும். கேட்க, பார்க்க நாதி அற்று அலையும். அக்கிரமம் பண்ணும். குற்றம் புரியும். ஆக மொத்தம், என் ஸ்நேகிதன் மூலமாய் இந்தச் சமூகம் ஒரு விரோதியை பெற்றுக் கொள்ளப் போகின்றது. வேண்டாமே இது இதை தவிர்க்க முடியாதா? வேண் டும். தடுத்தாக வேண்டும்!

Bawa O 329
நிமிர்ந்து பார்த்தேன். சீதாராமன் கண்கனை மூடி இருந்தான். * சீதா.'
S.
4 up
***sттruoro o
"நித்திரையா? உள்ள வந்து கட்டில்ல படன்." சரிந்து சோபாவுக்குள் முடங்கிக் கொண்டான். * பாவம் சீதாராமன்" தவறுவது மனித இயல்பு. ஆசைப்படுவது பாவம் இல்லை. இவைகளால் அழிந்துபோவது கொடுமை. மகா கொடுமை! தூக்கம் வரமறுத்தது. எண்ணங்கள், கவலைகள், ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தன. சீதாராமன், க்ளவ்டியா, இவர்கள் பிள்ளை மாறிமாறி வந்தார்கள். ஒன்றாகச் சேர்ந்தும் வந்தார்கள். நேரம் எப்படியும் ஒரு மணியை கடந்திருக்கலாம். இனி தூக்கம் வருமா?
"மச்சான் டேய்!”* கால் மாட்டில் சத்தம் மெல்லிதாய் கேட்டது. கண்களைத் திறந்து பார்த்தேன். கால் மாட்டில், கட்டில் விளிம்பில் சீதாராமன் இருப்பது இருளில் தெரிந்தது. ** என்ன நித்திரை வரயில்லையா? பசிக்கிதா?என்னமும், சாப்பாடு செய்து தரட்டா?" எழுந்து உட்கார்ந்து கொண்டேன். **மொன்றியலுக்கு இப்ப பஸ் கிடைக்குமா?'ஒரு வகை. அயர்ச்சி அவன் வார்த்தைகளில் காணப்பட்டது. அதன் அர்த்தம் புரிந்து கொள்ள சிரமமாய் இருந்தது.

Page 169
330 L] usflugúð uæermúd.
"ஏன் கேட்கிறாய்?" 'நான் மொன்றியலுக்குப் போக வேணும்.'
• 66ir?' ' **ப்ளிஸ், கோ ஸ்ரேஷன்ல என்னைக் கொண்டு போய் விடு. நான் மொன்றியலுக்கு போக வேணும்.' “ “®rፍör?” ”
மெளனமாய் தலை குனிந்தான். அது இயல்பாய் இருந்தது. சீதாராமன் கூடஇயல்பாய் இருந்தான். )

க. குழம்பும் க. முரண்பாடும்
க. நவம்
56
ான் கனடாவுக்கு வந்த புதுசு.
அவரும் நானும்
ଗ ஆனோம். தற்செயலாகவே அறைஞர்கள்

Page 170
332 C uaflugú uaornús
அவர் என்னைவிட ஒரு வருடம் முந்திக் கனடாவுக்குள் வந்து தரை தட்டியவர். அந்தத் தராதரம் மிக்க தகுதியின் அடிப்படையில்-அவரது பரிபாஷையில்அவர் ஒரு பழைய காய், கனடா பற்றிய கற்கை நெறியில், அவரோடு தங்கி வாழ்ந்த ஆரம்பகால வாழ்க்கை எனக்கு ஒரு வகையில் குருகுலவாசம்தான்! கண்ணைக் கட்டிக் கனடாவுள் விடப்பட்டது போன்ற எனது பரிதாபகரமான அந்த நாட்களில் அவரது ஆலோசனைகளும் புத்திமதிகளும்ஏன் குயுக்திகளும்கூட-எனது காதுக்குள் வேதமாய் ஒதப்பட்டன. கொஞ்ச நேரம் பேசக்கிடைத்தால் போதும்-ஐஸ்ே -என்ற முகமனுடன் உபநியாசம் ஆரம்பமாகும். கனேடிய அரசு, மக்கள், கலை கலாசாரம், வாழ்க்கை முறை இத்தியாதிகளுடன் இந்த நாட்டு இமிகிறேஷன், வெல்ஃபெயர் சட்டதிட்ட, வளைவு சுழிவுகள் யாவும். அந்த மனிதருக்கு அத்துப்படி! உலக நடப்புகளையெல் லாம் உப்புப் புளியிட்டுச் சொல்லுவார். உலகம் ஒரு பல்கலைக்கழகம். உலக அனுபவம் தான் ஐஸே, பட்டப்படிப்பு. இதை ஒரு நாளில் குறைந்தது ஐந்து தடவையாவது அடித்துச் சொல்லி, அடிக்கடி என்னை பயமுறுத்துவார். பேசப்படாத வார்த்தைகளின் பெறுமதி கருதி பொது வாக நான் கடைப்பிடிக்கும் மெளனத்தை, பெருமாள் கோவில் கால்நடையாரின் குணாம்சமாக அவர் கணித்துக் கொண்டாரோ என்னவோ, இரண்டொரு தினங்களில் அவருக்கு என்னை வெகுவாகப் பிடித்துக் கொண்டதாம்! தனக்கு உகந்த சகதோழனாக என்னை அங்கீகரித்து அந்த அறையை நான் தொடர்ந்தும் தன்னோடு பகிர்ந்துகொள்வதில் தனக்குப் பூரண சம்மதம் என்று

es. (eyúlyúb és. egvalurur(Gúb 0 333
திடீரென ஒருநாள் திருவாய் மலர்ந்தருளினார். தோழமை என்றவர் சொல்லிய சொல் என் நெஞ்சை நிறைத்திருந்தது!
அறையில் பாவனைப் பொருட்கள் எனது-அவரது என்ற பாகுபாட்டை இழந்து பொதுவுடமை ஆயின. பூட்டுத்திறப்புக் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி, எந்நேர மும் திறந்தபடியே இருந்த ஒருவரது பெட்டிக்குள் மற்றவர் கேட்டுக் கேள்வி இல்லாமல் கைவைக்கவும் வேண்டிய நேரங்களில் காசு பணங்களைக்கூட எடுக் கவும் பின்னர் திருப்பிக் கொடுக்கவும் பழகிக் கொண் டோம். செலவு சித்தாயங்கள் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டன. சமையல் சாப்பாடு, கூட்டித் துடைப்பு யாவுமே அந்தச் சமறி வாழ்க்கையில் சம கடப்பாடுகளாயின.
ஓய்வு நேரங்களில் வீட்டுக் காரியங்களை இருவரும் சேர்ந்து செய்தெடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் கூட்டுவாழ்க்கை, ஒற்றுமை, ஒருமைப்பாடு, புரிந் துணர்வு, பரஸ்பர விட்டுக்கொடுப்பு. இன்னோரன்ன, தலையைச்சுற்றும் இன்ரலெக்சுவல் தலைப்புகளில் எனக்கு இடையறாத பிரசங்கங்கள். இவைபற்றிய "பிரக்ஞை' இல்லாமல் போனதால் தான் எங்களுக்கு இந்த இழிநிலை என்று ஏகப்பட்ட உயிருள்ள-உயிரிழந்த உதாரணங்கள் எனது உச்சந் தலையில் அடித்து இறுக்கப்படும். சுவாரஸ்யம் வேண்டி, சிலவேளைகளில் வாதப் பிரதி வாதங்களை நானும் மெதுவாகக் கிளறிவிடுவதும் உண்டு. ஆனாலும் உலகானுபவங்களில் aar,ó7š திளைத்துப் பதப்படுத்தப்பட்ட அவருடனான எல்லாவித பொதுவிவகாரக் கருத்துப் பரிமாறல்களும் - கருத்து மோதல்களும் ஈற்றில் "சுபம்' என்ற சுலோகத்துடன் இனிதே நிறைவுறுதல்தான் வழக்கம்.

Page 171
334 ( பணியும் பனையும்
ஒரு சில மாதங்களின் பின்னர் ஒருநாள் இது நடந்தது. அன்று மதிய உணவு தயாரிப்பில் இருவரும் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை கத்தரிக்காயைக் கழுவி எடுத்து, நீள்பக்கமாக நான்காகப் பிளந்து, பின்னர் குறுக்காக சுமார் இரண்டங்குல நீளத்துண்டுகளாக வெட்டிக் கொண்டிருந்தேன். வழமையான தனி ஆவர்த்தன வாசிப்புடன் பருப்பைக் கழுவிப் பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைக்கப் போனவர், நான் கத்தரிக்காய் வெட்டிய விதத்தைப் பார்த்துவிட்டார்.
கத்தரிக்காயை அந்த விதமாக வெட்டக் கூடாதென்றும் கனேடிய டொலர் நாணயக் குற்றியாட்டம் வட்டம் வட்டமாக வெட்டவேண்டும் என்றும் நெறிப்படுத் தினார்.
"பாதிக்கு மேல் வெட்டியாயிற்று- இன்றைக்கு இந்த மாதிரி வெட்டிக் கறி வைப்போம்” என்று முதன் முறை யாக மறுதலித்த நான், 'நீளக் கீலங்களாக வெட்டிக் கறி வைத்தாலும் நன்றாக இருக்குமே" என்று சொல்லிக் கொண்டே கத்தரிக்காயைக் கத்திக்கு இரை யாக்கினேன்.
‘ஐஸே, அது சாவகச்சேரியாற்றை முறை-குழம்புக்கு நல்லாயில்லை, பண்டத்தரிப்பு முறைதான் குழம்புக்கு மணியாயிருக்கும்.’ என்று ஆரம்பித்தவர் ஒரு நீண்ட விலாசமானநிரவலை முழங்கி முடிக்கவும் நான் முழுக் கத்தரிக்காயையும் வெட்டிச் சட்டியிலிட்டு அடுப்பில் ஏற்றவும் நேரம் சரியாக இருந்தது. என் எண்ணப்படி கத்தரி அடுப்பேறி, ஒருபடி சமையலும் முடிந்தது. ஸ்நானம், போசனம், சயனம் என்ற வரிசைக்கிரமத் திலான அந்நாளைய முக்கிருத்திய வாழ்க்கையில் ஸ்நானம் அவ்வப்போதுஒரவஞ்சனைக்குட்படுவதுண்டு. அன்றும் ஸ்நானத்துக்கு அதே கதிதான்.

as. Syphlquh as. Upyair Lu T6th O 335
இருவரும் மதிய உணவைக் கோப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு சாப்பாட்டு மேசைக்கு வந்து சாப்பிட ஆரம்பித்தபோதுதான் அவதானித்தேன். அவரது கோப்பையில் கத்தரிக் குழம்பைக் காணவில்லை! சாப்பாட்டை முடித்துக்கொண்டு ஒரு முக்கிய அலுவ லாக வெளியே போய் இரவு எட்டு மணியளவில் நான் அறைக்குத் திரும்பியபோது, அவர் இராச் சாப்பாட் டுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து கொள்ளவென அவசர அவசரமாக உடைகளை மாற்றிக் கொண்டிருந்த எனது கண்களுக் குள் அகஸ்மாத்தாய் அவரது சூட்கேசுப்பெட்டி சிக்கியது. பெட்டி ஒரு பெரிய மாங்காய்ப் பூட்டினால் பூட்டப் பட்டிருந்தது! O

Page 172
பிரசவம்
நிலா குகதாசன்
அந்தச் சூழல் அவனுக்குப் புதிதாயிருந்தது. அடிக்கடி அவளிடமிருந்து எழும் முக்கலையும், முனகலையும்
தவிர, அந்த அறை நிசப்தமாயிருந்தது. அவளின் ஒரு
 

Ars Gau 3 o 337
கையில் "சேலேன்" செலுத்தப்பட்டுக் கொண்டிருக்க, அடுத்த கையில் இணைக்கப்பட்ட கருவிகள் மூலமாக நாடித்துடிப்பிலிருந்து, இரத்த அமுக்கம் வரை முன்னா லுள்ள சிறிய திரை காட்டிக்கொண்டிருந்தது. அடிக்கடி டொக்டர்மாரும், நர்சும் வந்து பார்த்துப் போனார்கள். 'அம்மா..!" திடீரென அவள் அலறி
66. பிரசவ வேதனையென்பது உண்மையிலேயே தாங்க முடியாததுதான். ஒவ்வொரு பிரசவத்தின்போதும் பெண்கள் இறப்பின் எல்லைவரை போய் வருகிறார்க ளென்ற உண்மை பலருக்குத் தெரியாது. ஏனோ அவனுக்கு அம்மாவின் நினைவு வந்தது: "அம்மா எப்பிடித்தான் பத்துப் பேரைப் பெற்றெடுத் தாளோ..?’ "ஐயோ! அம்மா..!’’ அவள் ஓலமிட்டாள். "டொக்ட ரிட்டச் சொல்லி ஒப்புரேசன் பண்ணச் சொல்லுங்கோ என்னால தாங்க ஏலாமக் கிடக்குது..!' அவன் கையை இறுக்கிப்பிடித்தபடி அவள் அழுதாள். அவள் பிடித்த இடம் கன்றிச் சிவந்து எரிந்தது. அவன் போய் நர்சைக் கூட்டிவரும்போது உறவினர்கள் சிலரும், அவனது தங்கையும் வந்திருந்தனர். நர்ஸ் ஒவ்வொன்றாகப் பரிசோதித்தாள். "இப்ப ஒவ்வொரு அண்ர மணித்தியாலத்துக்கும் தான் குத்து வருகுதாம். அது ஒவ்வொரு அஞ்சு நிமிசத்துக் கும் வரவேணுமாம்.’’ நர்ஸ் சொன்னதை அவன் அவர்களிடம் சொன் னான். ‘இஞ்ச பிள்ளை பிறக்கக் குடுத்துவச்சிருக்க வேணும். டொக்டர்மார். நேர்ஸ்மாரெல்லாம் எவ்வளவு ஆதரவாகக் கதைக்கினம். ஊரிலயெண்ட சிலவேளை அடியும் கிடைக்கும்.’’ அன்ரி தான் சொன்னா.
L. L-22

Page 173
338 ] uafuqih uansur uqh
*.இது தலைப்பிரசவம்தானே!.அதாலதான்இப்பிடி. எப்படியும் இண்டைக்கிரவு பிறக்கும்'இது பெரியம்மா.
அவள் மெல்லக் கண்ணயர்ந்து போனாள். "அவள் படுக்கட்டும். நாங்கள் வெளியிலபோய் நிண்டு கதைப்பம்.’’ அவன் சொல்லியவாறே அவர்களைக்
கூட்டிப் போனான்.
இரவு ஒரு மணி தாண்டிவிட்டது. ஆஸ்பத்திரிக்கு வந்து எட்டு மணித்தியாலம் முடிந்துவிட்டது. உறவினர்களெல் லாம் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள்.இன்னும் குழந்தை பிறப்பதாக இல்லை. தானும் நிற்பதாகச் சொன்ன தங்கையை அவன் மறுத்துவிட்டுத் திருப்பி அனுப்பியிருந்தான். அவள் அடிக்கடி வீரிட்டு அழுவதும் பின்னர் அயர்ச்சியுடன் படுப்பதுமாயிருந்தாள். குழந்தைக்கு ஆசைப்படாமலேயே இருந்திருக்கலா மென்ற எண்ணம் ஏனோ அடிக்கடி அவனுக்கு வந்தது. பக்கத்து அறைகளிலிருந்தும் அவ்வப்பொது அழுகைச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. அவன் எழும்பி வெளியே வந்தான். யாரோ ஒரு கறுப் பினப் பெண்ணை 'ஸ்ரெச்சரில் வைத்துத் தள்ளியபடி வந்தார்கள். அவள் அந்த ஆஸ்பத்திரியே உடைந்து விழுமாப்போல அலறினாள்.! அவன் அலறிக்கொண்டிருந்தான். நிர்வாணமாக அவனைக் குப்புறக்கிடத்தி ஒருவன் தலைமயிரைப் பிடித்து அழுத்தியபடி இருக்க, ஒருவன் கால் பாதங் களை அசையாமல் பிடித்திருந்தான். மூன்றாமவன் அவன் முதுகில் இருந்தபடி அவனது பிருட்ட பாகத்தின் சதைப்பகுதியில் ஒரு கதிரைக்காலினால் ஓங்கி அடித்துக்கொண்டிருந்தான். ஓரிரு அடிகளுள் அந்த சதைப்பகுதி கிழிந்து, ரத்தமும் தோலும் கதிரைக்காலுடன் ஒட்டியபடி பிய்ந்து கொண்டு போவதை அவனால் உணர முடிந்தது.

Lysaú O 330
வாய்க்குள் : உப்புக்கரித்தது. அலறிய அலற்ல் தொண்டை வரண்டு சாவின் விளிம்பிலே அவன் இருந் தான். கண்கள் இருண்டு மெல்ல மேலே பறப்பது போலிருந்தது. w திடீரென அடி நின்றது. தலைமயிரில் பிடித்து ஒருவன் தூக்கியபடி கேட்டான் 'உம்பள்ர ஊரில நீ கொட்டியா லீடர்தானே?’’
கேள்விபுரியவே கொஞ்ச நேரமெடுத்தது. பதில் சொல்ல முடியாமல் உடம்பு நடுங்கியது. * .அடே! நம்பள் கேக்கிறான்! நீ சும்மா இருக்குறது தானெ...!’’ * . . . இல்ல; எனக்கு. . . எனக்கு ஒண்டுமே த்ெரி யாது." அவன் ஒவ்வொரு சொல்லாகச் சொல்லப் பிரயத்தனப்பட்டான். ஆனால் எந்தச் சத்தமும் வெளியே வரவில்லை.
கிழிந்த நாராக அவள் கட்டிலில் கிடந்தாள். ஒருநாள் பூரணமாக முடிந்துவிட்டது. ஆனால் பிரசவத்துக்கான் எந்த அறிகுறியுமில்லை. அடிக்கடி வலியுண்டாகி அவள் அலறுவதுடன் சரி. நேற்றிரவு கொண்டுவந்த கறிப்பினப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்து விட்டது. அதுவரை அவள் செய்த அட்டகாசம். . .
நர்ஸ் வந்து "சேலேனை" மாற்றிவிட்டுப் போனாள். இது எட்டாவது போத்தல். இன்னும் சிலநேரத்தில் டொக்டர் வருவாரென்று சொல்லிவிட்டுப் போனாள். பல உறவினர், நண்பர்கள் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லிவிட்டுப் போனார்கள். மொத்தத்தில் அவனைக் குழப்பிவிட்டுப் போனார்கள். ஒவ்வொரு கணமும்,

Page 174
340 பணியும் பனையும்
ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது. நேற்றிரவு முழுவதும் தூக்கமில்லாமல் கண்கள் எரிந்தன.
"Hi...Honey" என்றபடியே டொக்டர் வந்தார். ஐம்பது வயதிருக்கும். அவரது பேச்சிலே பாரம் கொஞ்சம் குறைந்தது போலிருந்தது. *பிளிஸ் டொக்டர் என்னால தாங்க ஏலாது. . . ஒப்பு ரேசன்செய்யுங்க... ' அவள் அழுதாள். அவளைப் பரிசோதித்தபடியே. No Dalin D worry You'll be O.K....' 6T6irp6 it,
கமோன்! இன்னும் கொஞ்சநேரத்தில் சுகப்பிரசவம். நோமல் டெலிவிரி. ஒப்புரேசனுக்கான தேவையே யில்லை. .' சொல்லியபடியே டொக்டர் அடுத்த அறைக்குள் போனார். "ஐயோ.. அம்மா! என்னால தாங்க ஏலாமக் கிடக்கப்பா. இதில ஒருக்காத் தடவி விடுங்கப்பா...' அவள் அழுதாள். ஒரு நீளமான வாங்கில் அவனைக் குப்புறக் கிடத்தி யிருந்தார்கள். இருநாட்களுக்கு முன்பு பிருட்டபாகத்தில் அடித்த அடியில் சதை சிதைந்து ரணமாகி அது சாறத் துடன் ஒட்டியிருந்தது. சாறம் முழுதும் ரத்தவாடை...! மீண்டும் இன்று தாக்குதலுக்குத் தயாரிப்பு நடந்து கொண்டிருந்தது. பக்கத்து அறைகளிலிருந்து கேட்கும் கதறல் சத்தங்கள் காதுகளைச் செவிடாக்கிக் கொண் டிருந்தன. ஒருவன் வந்து சிங்களத்தில் கெட்ட வார்த்தையில் ஏசிய படி அவனது தலையைத் தூக்கிப் பலமாக வாங்கில் மோதினான். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நெற் றியில் பட்ட அடியைவிட மூக்கில்பட்ட அடி நொந்தது. மூக்கிலிருந்து ரத்தம் வந்து வாயில்பட்டு உப்புக்கரித்
so -

duwmeer garah O 341
**அடே வீணா சாவப்போற. . . உங்களுக்கு என்ன கொற இருக்குது... ஏண்டா ஈலம் கேக்கிற..." அடித்தவன் நன்றாகத் தமிழ் பேசினான். தான் ஆறு வரிசம் சுன்னாகம் பொலிஸ்ரேசனில் வேலை செய்த தாகச் சொன்னான். மூக்கில்பட்ட அடியால் தலை சுற்றியது. "ஈழம்கூட ஒரு பிரசவம்தான்! ஆனால் அது சுகப்பிரசவ மல்ல! அறுவைச் சிகிச்சைதான்! அதற்கு விலையாக எத்தனையோ கொலைகள் நடக்கலாம். ஏராளமான உயிர்ப்பலிகள் நடக்கலாம். உயிரின் ஒவ்வொரு அணுவுமே சிதைந்து போகலாம்; ஆனால் நம்பிக்கை அதுமட்டும் சிதைந்து போகக் கூடாது. நம்பிக்கை, உள்ளத்தின் உறுதி, இவை இருந்தால் போதும்! எந்தச் சித்திரவதைகளையும் தாங்கலாம்.’’ அரசியலை அவனக்கு அறிமுகப்படுத்தியவர் சொன்ன தெல்லாம் நினைவிற்கு வந்தது. **அடே! ஏண்டா இப்படி அடி வாங்குற. . . உம்மைய சொல்றதுதான்.இல்லாட்டி போனா இனி "லெக்வே" தான்.'" குப்புறப்படுக்க வைத்து குதிக்காலில் கதிரைக்காலால் அல்லது மரச்சட்டத்தினால் அடிப்பதுதான் “லெக்வே". முதல் அடியிலேயே மண்டைக்குள் மூளை சிதறியது போலிருந்தது. ‘ஐய்யோ...!" அவன் திமிறியபடி தலையைத் தூக்கினான். w அது ஒரு சிறிய அறை. . . அறையினுள் அவனுக்கு முன்னே மூலையில் ஒரு புத்தர் படம். படத்தின் முன்னே சில தாமரை மொட்டுக்கள். புத்தர் மோன நிலையில் அமர்ந்திருந்தார். தலையை மீண்டும் கீழே அமத்தியபடி அடி தொடர்ந் தது. அடிக்குமேல் அடி. அவன் கதறினான். மூளை

Page 175
342 O usufiuyah LaRrugë
கொஞ்சம் கொஞ்சமாகச் சிதறுவது போலிருந்தது. திடீரென அடி நின்றது. ஒருவன் அவனது தலையைத் தூக்க, இன்னொருவன் புத்தர் படத்தின் முன்னாலிருந்த தாமரை மொட் டொன்றை எடுத்து அவனது வாயினுள் திணித்தான். மூச்செடுக்க முடியாதபடி அவன் திமிற அடி தொடர்ந்
. لق25 மூளை சிதறிப் பறக்க கண்களினுள் கலர் கலராக வந்து போனது. வலி குறைவதற்காகப் போட்ட ஊசியினால் அவள் அயர்ந்து தூங்கினாள். நர்ஸ் வந்து எல்லாம் சரியா யிருக்கிறதா என்று பார்த்துப் போனாள். "இந்த ஊசி இருமணித்தியாலங்களுக்கு வலியைக் கட்டுப்படுத்தும்." அவனுக்கு ஒவ்வொரு கணமும் கழிவதே சிரமமாகத் தோன்றியது. அவன் கீழே போய் ஒரு கோப்பி வாங்கிக் குடித்துவிட்டு வந்தான். போய் வரும்போது பல இலங் கையரைச் சந்தித்தான். கனடாவில் தமிழர் தொகை உண்மையிலேயே கூடித்தானுள்ளது. அவன் திரும்பி வந்தபோது அன்ரியும், அவனது தங்கை யும் வந்திருந்தனர். அவள் அலறிக் கொண்டிருந்தாள். ஊசியின் சக்தி குறைந்துவிட்டது போலும். இங்கு வந்து நாற்பதுமணி நேரங்கள் கடந்துவிட்டன. இப்போது அவளுக்கு வலி அதிகமாயிருந்தது. வெயிலில் போட்ட மண்புழுவைப்போலத் துடித்தாள். *"ஐயோ அம்மா! என்னால தாங்க ஏலாது. டொக்ட ரிடம் போய், வெட்டி எடுக்கச் சொல்லுங்க” " அவள் அவனது சேட்டைப் பிடித்து இழுத்தபடி சொன்னாள். இழுத்த இழுப்பில் ஒரு பொத்தான் அறுந்து விழுந்தது. ‘எப்பிடியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் பிறந் திடும்.’’ அன்ரிதான் சொன்னா.

is aan i feab O 343
அவனுக்கு நினைவு வந்தபோது அவன் படுத்திருந் தான். பின்பக்கம் சாறத்துடன் ஒட்டிப்பிடித்து அவன் எழும்ப முயற்சித்தபோது அது கழன்று பிய்ந்த அந்த இடம் மிளகாய்த்தூள் பட்ட புண்ணாக எரிந்தது. காலைத் தூக்க முயன்றான். ஆனால் கால் என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. இனி நடக்கவே முடியாதா என எண்ணியபோது அழவேண்டும் போலி ருந்தது. அந்த அறையில் அவனுடன் சேர்த்து எட்டுப்பேர். எல்லாருமே தோல் உரித்த ஆடாகக் கிடந்தார்கள். . .
பக்கவாட்டில் திரும்பிக் காலைப் பார்த்தான். குதிக் காலில் அடித்த அடியில் கால் விறைத் துப் பூனைக்குட்டி போல் வீங்கியிருந்தது. பக்கத்தில் படுத்திருந்தவர் களில் பாதிப்பேர்க்கு உயிர் இருப்பதாகவே தெரிய வில்லை. அந்த வயதானவர் மட்டும் முனகியவாறு கிடந்தார். அவனுக்குத் தண்ணிர் குடிக்க வேணும் போலிருந்தது. கேட்டால் மீண்டும் அடிவிழலாம் என்று மனம் எச்சரித் தது. தலைசுற்றுவது போலிருந்தது. மீண்டும் நினைவு தவறியது. முதுகில் விழுந்த அடியினால் திடுக்கிட்டு எழும்ப முயற். சித்தபோது உடம்பில் பாக்கியில்லாமல் எல்லா இடமும் எரிந்தது ..! பக்கத்தில் கிடந்தவர்களில் பாதிப்பேரின் முகம் அடிபட்ட காரின் முற்பகுதி போல் அலங்கோல மாகக் கிடந்தது. Yn '... எலும்பங்கடா நாயளே!. இன்னைக்கி உங்கள வேற இடத்துக்கு எடுத்துக் கொண்டு போறதுதானே! அங்கினி வச்சுத்தான் இனி வெசாரணை நடத் துறது. . .' டொக்டர் வந்து பரிசோதித்து விட்டுச் சொன்னார்.

Page 176
344 D ausefuiúb uasaruiúil
'O.K. Sweety Time to go to the labour room' அவனுக்கும் ஒரு வெளிர் நீல ஆடை தரப்பட்டது. பிரசவ மாகும் போது கணவன் கூடவே நிற்கலாம். வளர்ச்சி யடைந்த நாடுகளில் வரவேற்கத்தக்க அம்சங்களில் ஒன்று. அவளைத்தூக்கி ஸ்ரெச்சரில் கிடத்தினார்கள். அவனது தங்கையும், மற்றவர்களும் அந்த அறை யிலேயே நின்றனர். அவன் அவளுடன் அந்த புதிய அறைக்குள் போனான். சுற்றிலும் ஏகப்பட்ட சாதனங்கள். பளபளவென்று கத்திகள். கத்திரிக்கோல்கள். இன்னும் பெயர் தெரி யாத கருவிகள். நான்கு பக்கமும் பெரிய பெரிய சுவர்மணிக்கூடுகள். அவள் அதைப் பார்த்து மிரள மிரள விழித்தாள். இப்போது அழுகை நின்றிருந்தது. கால்களை அகட்டியபடி அவளைக் கிடத்தினார்கள். டொக்டர், அவன், இரண்டு நர்ஸ்மார், அவள்மொத்தம் ஐந்து பேர் மட்டுமே அந்த அறையில். மூச்சைப்பிடித்து எப்படி முக்கித் தள்ளவேண்டுமென்று அவளுக்குச் சொல்லிக் கொடுத்தாள் ஒரு நர்ஸ். அவள் அவனது கையைப் பிடித்தபடி, அதுபோலவே செய்து கொண்டிருந்தாள்.
ஓர் அலறலுடன் தலை வெளியே வந்தது! "இன்னும் கொஞ்சம்..இன்னும் பலமாக.இன்னும். ஆ.அப்படித்தான்.” அழுகையுடன் வெளியே வந்த அந்தப் புதிய ஜீவனை நர்ஸ் ஏந்திப்பிடித்தாள். “Congratulations! It's a baby girl..." G& Tsus tu ulஅவளிடம் தொப்புள் கொடியைத் துண்டிக்கு மாறு கத்தரிக்கோலைக் கொடுத்தார் டாக்டர்.
அவள் கண்ணிர் நிறைந்த கண்களுடன் சிரித்தாள்.

saysalib O 345
தாய்மை! அது எவ்வளவு உன்னதமானது என்னதான் செய்தாலும் ஒரு ஆணால் முடியாத செயல் அவன் அழுதான்...! "ஏனப்பா அழுறியள்...? பொட்டையெண்டா..?" "...இல்லயம்மா . . . இத்தின நோவுக்குப்பிறகும். . . நீ சுகமாகப் பெத்திட்டாய்... ஆனா.ஆனா நான். . . எனக்கு... என்ர பிரசவம்தான்...' பதிலைச் சொல்லாமல் மனதுக்குள் அடக்கியபடி அழுதான். . . ! அவளுக்கு அவனது அழுகை புரியவேயில்லை. ()

Page 177
முகமிழந்த மனிதர்கள்
பவான்
தலை குத்திய இரும்புப் பறவை வயிற்றிலிருந்து சிறகுக்குக் கீழாய் என்னை வெளித்தள்ளிய போது, உள்ளே கண்ணால் சிரித்த சீரான உடையணிந்த
 

(yposthyia uaaapiadir O 347
அழகிய இளம் பெண் பரிமாறிய மேலைத்தேய உணவு தொண்டைக்கு மேலாய் ஏறித் தொக்கி நின்றது. பனிப் புகைக்குள் புதைந்து கிடந்த கட்டிடத் தொடர்களை நோக்கி ஓடுபாதையில் வெள்ளையர்களை முன்னே விட்டு நடந்து கொண்டிருந்தேன். புறக்கோட்டை பேமன்ரில் வாங்கிய ஜக்கற்றுக்குள் உடலெங்கும் ஊசி களாய்க் குளிர் குத்துகிறது. ஒறிஜினலாய் வந்ததால் பயமோ அவஸ்தையோ இல்லைத்தான். ஆனாலும் ஒரு படபடப்பு. அந்தா அண்ணா நிக்கிறான். சவண்டிக் கொண்டு நிக்கிறதவச்சே அவன் தானெண்டு தெரியுது. அண்ணா! நான் தம்பியெண்டு வேகமெடுத்தேன். வாசலில் நின்றவன் கையிலிருந்த சிறு பொல்லால் தடுத்து நிறுத்தினான். அண்ணா வலுங்கஸ்ரப்பட்டு ஏதோ சொல்லி எதையோ எல்லாம் வேண்டிப் பார்த்து விட்டு போய்த்தொலை என்பது போல் கழுத்திலிருந்து பொல்லை எடுத்தான். மீசையும் ஆளும் என்னால் மட்டுக்கட்ட முடியேல என்றான் அண்ணா. நிண்ட நிலையில் சிலர் சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சுடச்சுடக் கோப்பி வேண்டிக் கொண்டுவரும்போதே கேட்டான், ஞாபகமிருக்கா நான் வெளிநாடு வரேக்க நீ வளையம் உருட்டிக்கொண்டு வந்து வழியனுப்பினது' எண்டு. ‘அப்ப நீ கூட தலைமயிருக்கு கெயா பின் குத்தியிருந்தாய். இப்ப மொட்டையை மறைக்க தொப்பி போட்டிருக்கிறாய்' என்றேன். இருவரும் சிரித்தோம். காரில் நின்ற அவன் நண்பர்களுடன் அவன் சொன்னபடியே கையைக் குலுக்கிவிட்டு ஏறி யமர்ந்தேன். எல்லோர் கைகளும் சொரசொரப்பாக இருந்தது. இப்படித்தான் நான் வெளிநாடு போகிறேன் என்று விடைபெற்றபோது "விஷ் யூ ஒல் த பெஸ்ற்” என்று எதிர்பாராத வகையில் கையை நீட்டினாள் அவள். நான் தடுமாறிக் குலுக்குவதற்குள் அவள் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தக் கையின்

Page 178
348 [...] usefluib uasraith i ** **
மென்மையை முதன் முதலில் ஸ்பரிஸ்தித்த போதும், அவள் முகத்தில் படர்ந்த சோகத்தை பார்த்த போதும் பயணத்தை ஒத்திவைத்துவிட்டு இன்னும் கொஞ்ச நாளாவது லெளவ் பண்ணவேண்டும் போல் இருந்தது. நெடுங் கோடாய்க் கறுப்புத் தெருக்கள் பின் னோக்கி ஓடிக் கொண்டிருக்க மேகத்திலிருந்து பஞ்சு வெடித்துப் பறந்து கொண்டிருந்தது. முடிவிலி யாய் முன்னும் பின்னும் வாகனங்கள் கண்ணுக் கெட்டியவரை கண் கூசும் படியாய் ஒளியை உமிழ்ந்தபடி இயங்கிக் கொண்டிருந்தன. இரு மருங்கிலும் மினுங்கும் பனிப்பாறைப் படிமங்கள் எம்மைக் கடந்தபடி, மரங்களிலெல்லாம் பணி பூத்தி ருந்தது. எம்மை வரவேற்பதற்காய் அண்ணனின் நண்பர்கள் வாசலில் வந்து நின்றார்கள். தெருவாலே போனவர்கள் மொறக்கினோ என்று கத்தவே எங்களில் ஒருவன் நாம் மொறக்கினோ இல்லை என திருப்பிக் கத்தினான். சிறுகுசினி, ரொய்லற், றுரம் எல்லாமே ஒன்றுக்குள் ஒன்றாய் இருந்த பேஸ்மன்ரில் இருந்து வந்த கோழிக்கறி மணம் என்னைத் தூக்கி நிறுத்தியது. எல்லோரும் பரபரப்பாய் சாப்பிட்டு தட்டைக் கழுவி வைத்துவிட்டு சாவோ ( BYE) சொல்லிக் கொண்டே பறந்து கொண்டிருந்தார்கள். ஒருவனை சற்று தாமதிக் கச் சொல்லவே, மேடம் கொண்டு போடுவாள் நான் போறன் என்று பறந்தான். சிறிது வீடு ஊர் நண்பர்கள் என கதைத்துக் கொண்டிருந்து விட்டு" "வெளிக்கிடு என்ர வீட்ட போவம்' என்றான். 'அப்ப இது?" **இது லீவு நாட்களில் பொடியள் ஒண்டாய்ச் சேர்ந்து சமச்சுச் சாப்பிட. நான் வேல செய்யிற வீட்டிலேயே நீயும் கொஞ்ச நாள் தங்கலாம்' என்றான். பஸ்ஸில் போகும் போது தெரு, விளக்குகள், மனிதர்கள் எல்லாமே புதுமையாக தெரிந்தது. உள்ளே ஹோலிலே உண வுண்டு கொண்டிருந்த பொஸ் மேடம், அவர்கள் மகள்

முகமிழந்த மனிதர்கள் 0 349
எழுந்து அட்டகாசமாய் கைய குலுக்க கூச்சம் மறுபுறம் சந்தோசம் ஒருபுறம் அதுவும் பொம்ம போல இருந்த மேடத்தின்ர பொட்ட குலுக்கேக்க உடம்பு கூச வேறு செய்தது. மாடியிலே அண்ணா அறையாக பாவித்த பழைய சாமான்கள் போட்டு வைத்திருந்த ஸ்ரோர் நூமில் எனக்கும் ஒரு கட்டில் போட்டான் உறக்கத்தில். ஏர்போட் வெள்ளைக்காற இளம்பெண்கள், வண்ண வண்ண வாகனங்கள், உயர்ந்துயர்ந்த கட்டிடங்கள் மத்தியில் பஞ்சுப் பொதிகளிடை நான் மிதந்து கொண் டிருந்தேன். கட்டிலில் அண்ணாவைக் காணவில்லை. கீழே எட்டிப் பார்த்தேன். வீடு கூட்டிக் கொண்டிருந் தான். சோம்பல் முறித்துவிட்டு பல்லுத் தீட்டியபடியே ரொய்லற் ஜன்னலை மெதுவாய் திறந்தேன். நாய்க் கூட்டிற்குள் நுளைந்து யாரோ அது செய்து வைத் திருந்த அசிங்கத்தை சுத்தம் பண்ணிக் கொண்டிருந் தார்கள். அந்தா வெளியால வருகிது அது.அது அண்ணா தான்.
கீழே இறங்கி வந்தேன். அண்ணா கழிவு நீர்க் கால் வாயை சுத்தம் செய்து கொண்டு நின்றான். அவனைப் பார்க்கவே குமட்டிக் கொண்டு வந்தது. எனக்கு பாட்டி அடிக்கடி சொல்லிற உடையார் பரம்பரை' என்பது ஏனோ ஞாபகம் வந்தது. நல்ல வேளை அவள் இறந்து விட்டாள். வீட்டிலே சாப்பிட்ட கோப்பை கழுவாத அண்ணா அவர்கள் சாப்பிட்ட கோப்பையை கழுவிக் கொண்டிருந்தான். கழுவி முடிந்ததும் அவர்கள் சாப் பிட்ட மிச்சத்தை காவல் நின்று எடுத்து வந்து எனக்கும் போட்டு தானும் சாப்பிட்டான். சில நாள் விருந்தாளி போல இருந்து கொண்டிருந்தேன். அண்ணா ஒரு நாள் காய்ச்சலில் படுத்தான். வீடு கூட்டினேன். அப்புறம் ஒரு நாள் மேடம் நாய்ப்பீ அள்ளச் சொன்னாள். அப்புறம் அண்ணா அடிக்கடி காணாமல் போனான். ரொய்லற் கழுவினேன். கொஞ்சம் சமைக்கவும் கற்றுக் கொண்

Page 179
350 O Lufth Drh
டேன். ஞாயிறு விடுமுறையில நண்பர்களைச் சந்திக்கும் போது சொல்வார்கள் இங்க கறுவல் மொறக்கினோ ஒருவனையும் வீட்டு வேலைக்கு எடுக்கிறேல. சிறீலங் கனமாத்திரம் தான். எங்களில அவ்வளவு நம்பிக்கை, நல்லெண்ணம் அவங்களுக்கென்று’ எனக்கு சிரிப்பொரு பக்கம், ஒரு பக்கம் பரிதாபமாக இருந்தது. தோட்டக் காட்டிலே இருந்து வீட்டு வேல செய்ய வந்த ஆக்கள நாங்க நடத்தின மாதிரிக்கு, நாங்க குடுத்து வச்ச -னாங்க, குறஞ்சது மனுசன் மாதிரியாவது நடத்தினான் என்று ஆசாவசப்படுவோரும் உண்டு. நான் வீட்டு வேலையில் இசைவாக்கம் அடைவதை கண்ட அண்ணா எனக்குமொரு வீட்டு வேலை கதைக்க கூட்டிச் சென் றான். மேடம் பூனையோடு கொஞ்சிக் கொண்டிருந் தாள். ஒவ்வொரு நாளும் கூட்டோனும் ரொய்லந் கழுவோணும் நாய் பூனையிட அசிங்கம் எல்லாம் சுத்தம் செய்து, உடுப்புத் தோச்சு. அடுக்கிக் கொண்டு போனாள். அண்ணாவுக்குச் சந்தோசம், ஒரு இடமும் இந்தச் சம்பளம் கிடைக்காதெண்டு வளிவளியாச் சொல் லிக்கொண்டு வந்தான். இரவு உறக்கம் வரமறுத்தது, யோசித்தேன். இந்த வேலைக்குப் போனால் நானும் இவனைப் போல இந்த அடிமை வாழ்வுக்கு என்னை பழக்கப்படுத்தி விடுவேன். ஏற்கனவே என்னையறியாமல் கொஞ்சம் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டேன் என்று தெரிந்தது. உள்ளே தூங்கிக்கிடந்த ஏதோ ஒன்று சுறுசுறுப்பானது. எழுந்து பெட்டியை எடுத்து உடுப்பை அடுக்கி வைத் தேன். பொஸ் விடிந்ததும் விடியாததுமாய் அண்ணாவை ஏனோ திட்டிக் கொண்டிருந்தான். இரவு சைனிஸ் ஹோட்டலில் சாப்பாடு வேண்டித் தந்து றெயினேத்தி விட்டான் அண்ணா. றெயின் வந்து நின்றது. ஒடிச் சென்று சீற்றுக்குக் கீழே படுத்துக் கொண்டேன்.

முகமிழந்த மனிதர்கள் 0 351
சிற்றில் வந்து இருந்த வெள்ளை மனிதன் என் மூஞ்சியில் சப்பாத்துக் காலால் மிதித்துக் கொண்டு, காலை ஆட்டிய படி இருந்தான். முகம் எரிந்தது. ஆறு மணி நேரமாய் மூச்சை அடக்கிக் கொண்டும், சிறுநீரை அடக்கிக் கொண்டும், சப்பாத்துக் கால்களுக்குக் கீழ் முகமிழந்து படுத்திருந்தேன், புதியதோர் வாழ்வுக்காய்! O

Page 180
வெறுமை
என்.கே. மஹாலிங்கம்
வெள்ளிக் குச்சிகள் இருள் திரையை மேகத்துடன் சேர்த்துக் குத்தி வைத்திருந்தன. இருள் படிய மரங்கள் பயத்தை உருட்டிச் சேர்த்து வைத்திருந்தன. தொட்
 

Gla plate C1 353
டால் பொட்டு வைக்கலாம் போன்ற குழம்பு இருட்டு சில மரங்களில் தேங்கி இருந்தது. வழக்கத்தைவிட வெறுமை, விரக்தி, பயங்கரம், வெறுப்பு ஆகியவை ஊன்றி மனதைக் குடைந்தன.
சாவைப் பற்றிய பயமோ துன்பமோ இருப்பதாகத் துளி கூட நினைவில்லை. மாறாக, அப்படி இருந்தால் சந்தோஷமான நினைவுகள்தான் வரும் போல இருந் தன. விடியும் மட்டும் விழித்திருந்து எதையும் ஊன்றி நினைக்காமல், சிந்திக்காமல் இருந்தால் சுகமாக இருக் கும் என்று நினைத்துக் கொண்டான். சிந்தனைகள் வெறுப்பையும் பல வேளை அலுப்பையும் ஊட்டின. அது சிந்தனைக்கு எதிரான, அறிவுக்கு எதிரான கட்சியைச் சார்ந்ததல்ல. சோம்பலுமல்ல. ஆனால் எதிலும் தேவை தேவையற்ற என்ற பாகு பாடற்ற நிலை. அது முக்தி நிலையுமல்ல துறவுமல்ல. வெறுமையின் மையம், விளக்கங்களை வெறுக்கும் நிலை. அந்த நிலையில் காலத்தின் பிரக்ஞை இல்லா மல் காலத்தை ஒட்டிவிடலாம் என்ற நினைவு இருப்பி னும் காலம் என்ற கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்த காரணத் தால் காலத்தின் நினைவுகள் இடைக்கிடை உதைத்து உலகத்தின் இருப்பை உணர்த்தும். எந்த நினைவுகளு மற்ற வெறுமையில் தியானம் செய்வது அசாத்திய மானதோ?
கட்டுப்பாடுகளற்ற, கட்டற்ற நிலை. குறைந்தது மனத் தின் தளத்தில் கூட ஏற்படுவது, எட்டிவிடுவது இயலாத ஒன்றோ! ஞானிகளின் ஞானத்தின் நிலைகள். ஒளி போட்டுக் காட்டிவிட்டு மறைந்து தோன்றும் மின்நிை களின் தோற்றங்களா? நிலையான நிழல் படத்தின் தெளிவான இருப்பா? அல்லது அவனின் இயலாமை யின் அழுங்குப் 19ңштөрт மனமில்லாமையின் வெளிப் பாடா? அப்படியானால் அந்த நிலை எட்டாத கனியா? L. L-23

Page 181
354 CD Laufiqih LuasDaerah
அந்தக் கணிக்குத்தான் ஏன் ஏங்க வேண்டும். அவற் றைக்கூட அவாவும் நிலை வரக்கூடாது என்பது தான் அதன் அர்த்தமா?
எங்கோ நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கான தாக்கம் அடி மனதில் நோவாக் குடைகின்றதே! அதற்கான காரண காரியங்களை நிகழ்ச்சிகளின் படங்கள் விழித்திரையில் விழுகின்றனவே! அவையின் உண்மைகள் பல ஊடகங் கள் வாயிலாக வந்து தாக்குகின்றனவே! நினைவுகளின் ஏற்கனவே உள்ள அனுபவங்களின் தாக்கமும் விளைவும் வெளிப்பாடுமா அவை? வாழ்க்கை இன்றுள்ளதா அல் லது ஆரம்பம் தொட்டு வந்துள்ள அனுபவங்களினதும் இன்றுள்ளனதும். நாளை நடக்கப்போகும் என்பவற்றின் கற்பனைகளின் கூட்டுக் கலப்பா? எவ்வளவு தான் தூர இருந்தாலும் பலவற்றின் தாக்கம் பல அனுபவங்களுக்கு வழி சமைத்துக் கொடுத்து விழிப்படையச் செய்கின் றனவே.
வெறுமையான இல்லாத ஒன்றை (?) தேடி அலைகின் றது மனம், அதற்குச் சாந்தியை எது கொடுக்கும்; எதுவுமே அற்ற அலைச்சலா? மனத்தின் அலைச்சலே அதற்குரிய மருந்தையும் இதமாகத் தடவி விடுகிறதா? வெறுமையின் வெறுமையைத் தேடும் மனத்தின் இறுதி யில் சாந்தியைப் போன்றதொரு சுகமான தென்றல்இலைகளின் அசைவுகளற்ற தன்மைத்தான வெளிப் பாடான சுகத்தைத் தருகின்றதே.
காலத்தின் இடைவெளிக்குள் இவை கட்டுப்படும் போது சுகத்தின் வசந்தம் குறைந்து விடுகிறது. வினா கவலைகள் குறுக்கிட்டு விடுகின்றன. காலம்தான் இவற். றுக்கெல்லாம் இடையூறாக நின்று வெறுமையின் விளக் கத்தை வீணடித்து விடுகின்றதோ? காலத்தை வென்ற,

வெறுமை D 355
வெறுமையை அடையும் உரித்தாக்கும் நிலையும் எண்ணமும் வீணானதோ? காற்றின் அசைவோ உயிரின் பிரிவோ இலை ஒன்றை உதிர்த்தது. அது அவன் முன்னே விழுந்து, சருகாக அசைந்தது. அது ஏதோ ஒன்றின் இருப்பை வெறுமையின் எதை?- காட்டியது. உயிரற்ற உடல்களின் இருப்பையா? அல்லது சடத்தின் பரிணாமத்தின் வளர்ச்சியையா? எது எப்படி இருப்பினும் அது வேறொன்றின் அனுபவத்தின் வருகையையும் இருப்பையும் உணர்த் தியது. C

Page 182
EX-அலைகளில்
ஜோர்ஜ் குருசேவ்
முதன் முதலாக காதலர்கள் தினமான Vainine's day அன்று தான் எனக்கு அவன் ரொம்பவும் நெருக்க மானான். முன்னரேயே அவனுடைய சில பாட்டுக்
 

EX-அலைகளில் O 357
களைக் கேட்டிருக்கிறேன். அவனைப் பற்றி நிறைய வாசித்துமிருக்கிறேன். (இவன் மெக்சிக்கோவில் பாடப் போனபோது அங்கு பெற்றோல் தட்டுப்பாடு வந்த தும், இவனது முன்னாள் மனைவியரை விட்டு எக்கச்சக் கமான வயது குறைந்த தற்போதைய மனைவிக்காக அவன் பிளேனில் அலைந்ததும், தனது larger than 1ife image ஐ விட்டு லொஸ் ஏன்ஜல்ஸில் நண்பர்களுடன் down to earth guy மாதிரி உதைபந்தாட்டம் ஆடுவது பற்றியும்.பல விடயங்கள் எனக்கு அத்துபடி) ஆனா லும் எனக்கு அவன் பரிச்சயமானது என்னோடு வேலை செய்யும் பிலிப்பினோ நண்பன் அலுஜோ மூலமாகத் தான். அவன்தான் ஆங்கிலப் பாடல்களுக்கு எனக்கு e2, FITsir. -96.16ir Ohuh oh ye yei 6T6irp) 3 (p.5g, Tsi, 5 stoir suit 65(555. love you more than I can say (TU) - sef Ff U is 5tsi) 56 Tssir 6f flu Hey Man You know that song 6T 6öT U T6iiiir. . . Hm... its from Lee Sayer 6T6irgs தன்னடக்கமாகச் Gy itsi)6)... You have the cassette'? . . . oaர. 1"| bin "morrow என்பேன். எனக்கு தெரி யாத ஆங்கிலப் பாடல்கள் ரேடியோவில் ஒலிபரப்பா னால் யார் பாடியது என்று அவனைத் தான் கேட்க முடியும். குரல் அந்த இந்த மாதிரித்தான் என்றாலும் தானும் சேர்ந்து பாடுவான். அப்படி ஒரு நாள் வேலை வெட்டி இல்லாமல் நாங்கள் அரசியல், செக்ஸ் என்று முக்கியமான விடயங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது காதலர்கள் தினத்தை ஒட்டி யாரோ ஒருத்தி தன் காதலனுக்காய் விரும்பிக் கேட்ட பாடல் ஒலிபரப்பானது. You are in my heart ... should I grow old You are my love... You are in my soul என் இதயத்திலும் நீ தான். என் ஆன்மாவிலும் நீ தான். நான் வயதானாலும் நீ தான் என் மூச்சு. நீயே என் காதலி. நீயே என் நல்ல நண்பி. நீ என் ஆன்மா

Page 183
356 O usefluib uaparuh
வில் இருக்கிறாய்.சமீப காலத்தில் என் வாழ்வில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் காரணமாக மிகவும் நொந்து போயிருந்தேன். அதனால்தானோ என்னவோ அந்தப் பாடல் என் மனதைத் தொட்டது. Hey man. Who is it? 962 Gigir 6T 6ör 60d60T GS56óluu TTSÜ Un fö5T6är. Youdon'tknowhim?No...Its Rod Stewart. e9jö5 கணம் முதலே எனக்கு றொட் ஸ்ருவாட்டைப் பிடித்துக் போயிற்று. அவனது குரல் கொஞ்சம் வித்தியாசமான குரல்.வீட்டில் ஆச்சிக்கு பட்டுக் குழைக்க மா குத்துவ தற்கு பேணி வேண்டுமென்பதற்காக ரின்போல் பேணியை மதில் சுவர்களில் உரஞ்சும் போது பற்களைக் கூசப் பண்ணி வருமே ஒரு சத்தம். அதற்கும்.மாரி காலத்தில் நூறு தவளைகள் சேர்ந்து கிணற்றுக்குள் இருந்து கத்துமே அதற்கும் இடையில் ஒரு வகையான குரல்.எங்கள் தமிழ் பாடகர்களின் குரலோடு ஒப்பிடும் போது மோசமானதுதான்.ஆனாலும் அதிலும் ஒரு இனிமை இருக்கும். வேலை முடிந்து வரும் போதெல்லாம் என்னைத் தன் காரிலே கொண்டு வந்து விடுவான் அலுஜோ. அப்போ தெல்லாம் Best of Rod stewart கசெற்றைப் போட்டு கேட்டதில் றொட்டை எனக்கு நிரம்பவும் பிடித்துப் போயிற்று. மாலை மம்மலுக்குள் வெட்டிய வாழைக்குலைகளை மாட்டுவண்டிலில் கட்டிக் கொண்டு, கனகம்மான் சுன்னாகச் சந்தைக்குப் போகும் போது பனிக்குளிரை யும் ஊடறுத்து ஜல் என்று சலங்கை கலகலத்து வந்து நெஞ்சை நிறைக்குமே, அதைப்போல் ஜல் ஜல் என்று கிட்டார் ஒலி வர, றொட் பாடுவான். I dont wanna talk ... my heart நீ என் இதயத்தை எப்படி உடைத்தாய் என்பதைப் பற்றி நான் கதைக்க விரும்பவில்லை.என் கண்களில்

EX-அலைகளில் D 358
நிறைக்கும். என் இதயமும் எப்படி உடைந்து போனது? .
can tell by your eyes... they are mirrors உன் கண்களைப் பார்த்து நான் சொல்ல முடியும், நீ எப்போதுமே அழுது கொண்டிருக்கக் கூடும் என்று. வானத்து நட்சத்திரங்கள் உனக்கு ஒன்றுமேயில்லை, வெறும் கண்ணாடிகள் தான். J dont wanna talk ... broke my heart . நீ என் இதயத்தை எப்படி உடைத்தாய் என்பதைப் பற்றி நான் பேசவிரும்பவில்லை. lf stay here just a little bit longer... my heart oh my heart நீ இன்னும் கொஞ்ச நேரம் இங்கே நின்றால், நான் இங்கே நின்றால் நீ என் இதயத்தில் ஒலியைக் கேட்க மாட்டாயா?
If I standall alone, ... they are mirrors
நான் தனியே நின்றால் நிழல் என் இதயத்தின் நிறத்தை மறைக்கும், கண்ணிருக்கு நீலமும் இரவுக்கு கறுப்பும், வானத்து நட்சத்திரங்களைப் பார்த்துப் பயப் படும். அவை உனக்கு ஒன்றுமேயில்லை, வெறும் கண்ணாடிகள் தான். አ மென்மையாய், பிரிவுத் துயரினால் வாடுகின்ற ஒருவ னின் இதய துடிப்பாய் அந்தப் பாடல் என்னை நெகிழக் செய்யும். எங்காவது மலையடிவாரத்தில், மனித நட மாட்டமேயில்லாத புல்வெளியில் உட்கார்ந்து, மலை களில் எதிரொலிக்க, ‘ஓ’வென்று கதறி அழ வேண்டும் போலிருக்கும். என் இதயத்தை ரணமாக்கி, என் அன்பை உதாசீனம் செய்து அக்கரைப் பச்சையைத் தேடியலைந்த அவளை நினைத்து, அந்தப் புல்வெளி யில். கைகளைத் தலையணையாக்கி. மேகங்கள் இல்

Page 184
360 OG Luafqúb Lamauriqih
லாத தெளிந்த வானத்தைப் பார்த்தபடி, என் கண் களில் இருந்து வழியும் கண்ணீர் கரையோரங்களால் வழிந்து ஓட விம்மி விம்மி அழத் தோன்றும். காதலில் தோல்வி அடைந்தவன் எல்லாம் பாடுவது போல் "அவள் பறந்து போனாளே, என்னை மறந்து, போனாளே' என்று பாட முடியவில்லை. பள்ளிக்கூடக் காதல் என்றால் "அவள் பறந்து போனாளே' என்று பாட பக்கத்தில் இருப்பவன் போனால் போகட்டும் போடா' என்று ஒரு moral support தருவான். இந்த கோடை காலத்தில் அவன் ரொறன்ரோவுக்கு இசை நிகழ்ச்சி நடத்த வருகிறான் என்று அறிவிப்பு வந்தது. அலுஜோவைக் கேட்டேன். தனக்கு வேலை இருக்கிறது என்று மறுத்தான். எனக்கு றொட் ஸ்ருவாட்டைப் பார்க்க வேண்டும் என்ற பிரச்சனை இல்லை. அவனது நிகழ்ச்சிக்குப் போய் அவன் பாட் டைக்கேட்டு அழவேண்டும் போல் தோன்றியது. விபரீத மான ஆசை தான். எனக்கு வேறென்ன ஆறுதல் தான் கிடைக்கும்? டிக்கட் எடுப்பதற்காக போன் பண்ணினேன். மூன்று நாட்களாக எடுக்கவே முடியவில்லை. அவ்வளவு லைன் பிஸி. மூன்றாம் நாள் ஒரு மாதிரி துரத்திப் பிடித்தேன். விற்றுத் தீரும் தறுவாயில் சில டிக்கட்டுகளே இருந்தன. மைதானத்திற்கு நடுவில் இருக்க வேண்டி வரும் என்று டிக்கட் விற்றவன் பயமுறுத்தினான். எனக்கு றொட் டைப் பார்ப்பதில் ஆர்வமில்லையே. அவன் பாட்டு மட்டும்தானே கேட்க வேண்டும். கிறடிட் காட் உபயத் துடன் மறுகிழமை டிக்கட் தபாலில் வந்தது. ஒரு மாதம் இருந்தது. ஆகஸ்ட் 28ம் திகதி, வியாழக்கிழமை.CNE எனப்படும் Canadian National Exibition 9,665) Ex GTsirgil Gafsis மாக அழைக்கப்படுகிற ஸ்ரேடியத்தில் concer. எட்டு

EX-sgarossfib O 36.
மணிக்கு நிகழ்ச்சி. ஆறே காலுக்கு அங்கே நின்றேன். மனிதர்கள் எல்லாம் துயரங்களை விட்டெறிந்து கவலை மறந்து, இந்த நரக உலகை மறந்து சந்தோசமாய் இருக்க வந்திருக்கிறார்கள். நான் ஒருவன் தான் என் துயரங்களையும் சேர்த்துக் கொண்டு இங்கே வந்திருக், கிறேன். அழுவதற்கு காசு கொடுத்து வந்திருக்கிறேன். ஜோடிகளாய், மனது நிறைந்தவளோடும் நிறைந்த வனோடும் உல்லாசமாய், யதார்த்தத்தின் கொடு மையை விரட்ட, சொற்ப நேர சந்தோசத்துக்காய் வந்த மனிதர்கள். எங்கு பார்த்தாலும் முகங்கள். முகங்கள். . சந்தோசமான, குழந்தைத்தனமான முகங்கள். எந்த முகங்களிலும் சோகம் படரவில்லை. நான் மட்டும் தான் மனதிலும் முகத்திலும் வேதனையை வரித்துக் கொண்ட ஒரு பரிதாபமான ஜீவனாக.
தூரத்தே Cane ஒன்றில் ஏறி கால்களில் றப்பர் கயிற் றைக்கட்டிக் கொண்டு தலைகீழாய் குதிக்கும் Bungee umping சர்க்கஸ் கூடு மாதிரி ஒன்றில் ஏறி உயரே போய் காலில் கட்டிய கயிறுடன் குதித்து மேலே போய் மகா பயங்கரமாக ஆட. கீழே இருந்த கூட்டம் Wow என்று மோசமாய் அலறும். No pain. No gain, No guts No glory GT6śrugi (SL T6b UTüś6örndare devil66ór u Guäs கரகோஷத்துடன் வீரபுருஷர்களாக இறங்கி வருவார்கள் எனக்கும் பாயவேண்டும் போல் தோன்றியது. தலை கீழாக, வயிறு ஜிவ் என்று உள்ளே இழுத்துக் கொள்ள, இதயம் தொண்டைக்குள்ளால் வரும் பிரமையோடு இரத்தம் வேகமாய் முகத்தில் பாய்ந்துசிவக்க, கைகளும் தலைமயிரும் கீழே தொங்க. பாயும்போது அந்தக் கணப்பொழுதில் ஏற்படும் வேதனையோடும் மகிழ்ச்சி யோடும் பயத்தோடும் என் துயரங்களும் அவளின் நினைவுகளும் வெடித்துச் சிதறி என் இதயத்தில் இருந்து எந்தத் தடயமும் இல்லாமல் அழிந்து போய் விடாதோ என்ற எண்ணம்.

Page 185
.362 Lia Lusithrú uadaraith
-ஏக்கம். வேண்டாம். இன்றைக்கு பாட்டுக் கேட்டு அழவேண்டும். சுமையைக் குறைத்துக் கொள் வோம். ஏன்? சோகத்திலும் எனக்கு சுகம் உண்டோ?
அந்தப் பிரிவுத் துயரிலும் ஒரு இன்பம் உண்டோ? நாடி பிடித்த வைத்தியன் வேண்டியவர்களுக்கு சொல்லி அனுப்புங்கள்’ என்ற பின்னும் மனதிலே ஒரு நம்பிக்கைக் கீற்றை வைத்துக் கொண்டு உயிர் வாழ எத்தனிக்கும் மனிதன் போல், எனக்குள்ளும் ஒரு நம்பிக்கைக் கீற்று உண்டோ? ஏன் அந்த தடயங்களை அழிக்க விரும் பாமல், வெறுமனே சுமையைக் குறைக்க நினைக் கிறேன். என் மனதுக்குள் அவள் மீது நான் வைத் திருந்த அன்பு இன்னமும் எங்கோ மறைந்திருந்து உறங்கிக் கொண்டிருக்கிறதோ? ஏன்? ஏன் என்னால் மறக்க முடியவில்லை. அவள் மீது கொண்ட நேசம் உண்மையானது என்பதாலா? எனக்கு காதலியாக இல்லாமல், மகளாக அவளை நேசித்ததாலா?
ஸ்ரேடியத்தின் உள்ளே நுழைந்தேன். சுற்றி வளைத்த பவிலியனில் மனிதர்கள் நிறைந்து கொண் டார்கள். விதம் விதமாய், சிறுசுகளும், தியாகராஜர் பாட்டுக் கேட்கும் வயதில் உள்ள முதியவர்களுமாய். இவர்கள் ஐம்பதாயிரம் பேரும் என்னைப் போல் அழுவ தற்குத்தான் வந்திருப்பார்களோ? ஒவ்வொருவரும் இதயத்தில் ஒவ்வொருவரைச் சுமந்து கொண்டு அந்தத் தழும்புகளைத் தடவிப் பார்க்கும்போது ஏற்படும் சுகத் திற்காக வந்திருக்கிறார்களோ? நடுவில் மைதானத்தில் கைைைைடைசியாக இருந்தவரிசையில் எனக்காக ஒதுக் கப்பட்ட கதிரையில் உட்கார்ந்தேன். கலியாண வீடு களில் இருந்தது போல்...எனக்குப் பிடித்தமான இடம். எல்லோரையும் அவதானிக்க முடியும்.ஆனால் மேடை யைச் சரியாகப் பார்க்க முடியாது. எட்டு மணிக்கு ஆரம்பம். நான் ஏற்கனவே ஏழே காலுக்கு நிற்கிறேன்.மேடையின் அருகே இரண்டு

EX-gamosos affidò o 36
பெரிய தொலைக்காட்சித் திரைகள். Rod Stewart, Vagabond Tour என்று எழுதி ஒரு இதயத்தை ஒரு கோடி ஊடுருவிச் செல்லும் படத்துடன் மேடையின் அருகே ஒரு திரை.என் இதயத்தையும் எத்தனை ஈட்டிகள் ஊடுருவி யிருக்கும்? இறைச்சியை அலங்கோலமாய் வெட்டி சிற்பம் செய்த மனிதராய், செக்கியூரிட்டி காட்கள். எழுந்து நின்றவர் களை இருக்கச் சொன்னார்கள். எட்டு மணிக்கு சரி யாக ஆரம்பம். பொப் மார்லியின் மகன் ஸிக்கி மார்லி யின் குழு களத்தில்இறங்கியது.பெரும்பாலான பாட்டுக் கள் எனக்குத் தெரிந்திருக்காதவை. தகப்பனின் பாடல் assir fla) unti-65TIt6it... Get up. Stand up stand upfor your rights. Dont give up the fight... (paid, T6i LD60f நேரத்தில் முடித்துக் கொண்டார்கள்.
மீண்டும் ஒளி வெள்ளம் மைதானத்தை பகலாக் கியது. என் wallet ஐ எடுத்தேன். திறக்க உள்ளே அவள் சிரித்துக் கொண்டிருந்தாள. அவள். என் மாஜிக் காதலி. Ex-girlfriend. உள்ளேகசங்கி, அழுக்குப் படிந்து மடிப்புகளில் கிழிந்து tape இனால் ஒட்டப்பட்ட கடிதம். வந்ததில் இருந்து எத்தனை தடவை வாசித்திருப்பேன்? சில தடவைகளில் விழுந்த என் கண்ணிர் எழுத்துக்களை அழித்திருந்தது. ஒவ்வொரு வரியும் எனக்கு மனப்பாடம். ஆனாலும் ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் புதிய புதிய கருத்துக்கள் தென்படும். 'நீ பொய் சொல்லி என்னை ஏமாத்திப் போட்டாய்' 'நீ நல்ல வடிவாயிருக்கிறா யடி’ என்றதை விட அப்படி நான் என்ன பொய் சொன் னேன்? கண்களில் திரையிட்ட கண்ணிரையும் மீறிச் சிரிப்பு வந்தது. உள்ளே என் நெஞ்சோடு இருக்க வேண்டும் என்பதற்காக அவள் தந்த இதயவடிவிலான அவளது முதல் எழுத்துப் பொறித்த ஒரு பதக்கம்.

Page 186
364 La uaflurb usaeraib
*எல்லாம் என்னுடைய பிழை தான். உன்னை காதலித்ததை விட, என் அப்பா அம்மா பார்த்து வைக் கும் ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டுவது மேலானது' கையை வெட்டி தன் காதலை நிரூபிப்பதற்காக ‘உன் னோடு என் வாழ்க்கை அமையாவிட்டால் நான்செத்துப் போய் விடுவேன்' என்று இரத்தத்தால் எழுதிய அவளா இப்படி எழுதினாள்? இப்போது என்ன செய்து கொண்டிருப்பாளோ? தந்தையின் கடை இருக்கும் இடத்தில் இருந்து தொட் டாட்டு வேலைக்காக கொண்டு வரப்பட்ட பையனோடு இவளுடைய அக்கா தொட்டாட்டு வேலைகளில் ஈடு பட்டதால் வீங்கிய வயிற்றைக் கண்டு, அந்தத் தோட் டக்காட்டுப் பெடியனை fire பண்ணி (அதாவது நெருப்பால் சுட்டு, வேலையில் இருந்து நீக்கி) *பிள்ளைக்கு வயித்திலை கட்டி வளருது" என்று ஊர் வாயை மூட முயற்சித்து, யாரோ ஒரு பரியாரியைப் q-355 S96JG56DLU E fib6O)Lu Full reconditioning செய்து இவளுடைய அத்தாருக்கு "கன்னிகாதானம்" செய்து கொடுத்தது போல். மூன்றாம் வகுப்புடன் உயர்கல்வியை முடித்துக் கொண்டு, சீமெந்துப் பையில் di ib plu 9-60)l6)LD5615Lsir on the job trainingdiasitas சிங்கள நாட்டுக்கு யாரோ ஒரு முதலாளியுடன் அனுப் பப்பட்டு, தொழிலைக் கற்றுக் கொண்டு, minding his own business செய்யும் ஐந்து விரல்களிலும் மோதிரம் போட்ட யாராவது ஒரு முதலாளிக்கு, திருவிழாக் காலங் களில் இரவுகளில் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்குள் என்னோடு ஒதுங்கியும் தன் கற்பைத் தவிர மற்ற எல்லாவற்றையும் இழந்த இவளை, குடும்ப பாரம்பரியத்தை மீறாமல் கட்டிக் கொடுத்திருக்கக் கூடும். அவனும் பொங்கல், தீபாவளி, வருஷம் போன்ற நாட்களில் மட்டும் அன்னாசிப்பழம், றம்புட்டான் பழத்துடன் வந்து, வசியம் செய்து, யாவா

Ex-அலைகளில் 0 388
ரத்தைக் கவனிக்க நம்பிக்கையான ஒரு heirapparent (வாரிசு) வேண்டும் என்பதற்காகவும், அதையும் விட வீட்டுக்கு வருகின்ற யாராவது தன்னுடைய பிள்ளைக்கு biological தந்தையாகி விடக்கூடாது என்பதற்காகவும் இவளது வயிற்றை நிறைத்துச் செல்ல. இடுப்பிலும் வயிற்றிலும் குஞ்சுகுருமான்களை அனைத்துக் கொண்டு, பறந்து வரும் பொம்பர்களில் இருந்து தப்ப, பங்கர்களை நோக்கி 'குறுக்காலை போவாரைத்"திட் டிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கக் கூடும். இல்லாவிட்டால். . .
உவனை உனக்கு செய்து தர நாங்கள் ஒன்றும் தரங் கெட்டுக் கிடக்கவில்லை’ என்று கூறிய அவளது அண்ணன் நாளும் கோளும் பார்த்து, சீதனத்தை ஊரில் உள்ள மாப்பிள்ளைப் பெடியனின் அம்மா, அப்பாவுக்கு கொடுத்து, யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளையை கட்டி வைத்து, குடும்ப கெளரவத்தைக் காத்துக் கொள்ள. ஏதாவது மேற்கு ஐரோப்பிய நாடொன்றில் அவளையும் கற்பையும் ஒன்றாக வைத்து பூட்டிச் செல் லும் ‘என்ரை அவரைப்பற்றி அன்பான அப்பா அம்மா வுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கக் கூடும். அல்லது ஏதாவது வீடியோவுக்குள் தலையை அமுக்கி, தமிழ் திரையுலகம் சம்பந்தப்பட்ட தன்.O.வை வளர்த்துக் கொண்டிருக்கக் கூடும்.
இல்லாவிட்டால்...
பிரபல கனடிய நிறுவனம் ஒன்றில், பொறுப்பான பதவி வகிப்பவரும் (என்ன, செக்கியுரிட்டி காட் தான்) சொந்த வீடு, கார் என்பவற்றைக் கொண்டிருப்பவருமான சைவ வேளாண்குல உயர்குடிப்பிறந்த குலதிலக, கனடியப் பிரஜையான 39 வயதான தமிழ் வாலிபருக்கு (மனித ருக்கு?) "அழகும் இளமையும் கல்வி அறிவும் (அறிவைப் பற்றி எனக்கல்லவோ தெரியும்) நிரம்பிய" இவளுடைய "தமிழ் பண்பாட்டுடன் கூடிய" படத்தை அனுப்பி, எச்

Page 187
366 J usflub Laosuruh
சிலை கோடாவாக்கி விற்ற சுருட்டினால் சம்பாதித்த பணத்தில் கலவரங்களில் எரிந்த, பறிக்கப்பட்ட சொத் துக்கள் போக மீதிப் பணத்தைக் கொண்டு சீதனம் கொடுத்து, கனடாவுக்கு அனுப்பி ஏதாவது ஒரு "நிகழும் பிரம்மஹத்தி வருடத்தில் பெரியோர்களால் நிச்சயித்து திருமாங்கல்யதாரணம் செய்து வைத்திருக்கக் கூடும். அவளும் இங்கு வந்து மோட்கேஜ் கட்டுவதற்காக இரண்டு வேலை செய்யும் "இஞ்சேருங்கோ'வுடன் தானும் வேலை செய்து, பிள்ளைகள் பிறக்க பிந்து கோஷ் மாதிரி வீங்கி முட்டிப்போய் அடிக்கடி ஏதாவது கோயிலுக்குப் போய் வந்து கொண்டிருக்கக் கூடும். எதுவுமே சாத்தியம் தான். என்னைத் திருமணம் செய் யாவிட்டால் தற்கொலை செய்வேன் என்றவள் எனக்கு இப்படி கடிதம் எழுத முடியும் என்றால் எதுவுமே இங்கு சாத்தியம் தான். ஏன் நான் negative ஆன விடயங்கள் பற்றி மட்டும் யோசிக்கின்றேன். அவள் உண்மையிலேயே யாராவது ஒருத்தனைக் கலியாணம் செய்து, சந்தோசமாய் எங்கா வது ஒரு மூலையில் என் நினைவே இல்லாமல் வாழக் கூடுமோ? எப்படி முடியும்? அப்படி என்றால் எனக்குச் சொன்னதெல்லாம். நீ தான் என் உயிர், நீ இல்லா விட்டால் வாழ்வே இல்லை என்றதெல்லாம் வெறும் பொய் தானா? சனம் பொறுமையிழக்கத் தொடங்கியது. முக்கால் மணி நேரமாக எதுவுமே இல்லை. இடையில் மனதை நெருடும் ஒரு கிட்டார் இசை இதயத்தைக் கிழித்தது. 6j-Fuub Jimi Hendrix, Santa na 95b6d5 Eric Clapton வாசித்ததாக இருக்க வேண்டும். . . கண்ணை மூடிக் கொண்டே இதயத்தைத் தொட அதில் லயித்துப் போனேன். மழைக்கால இரவுகளில் கிளுவைகளில் இருந்து வழியும் , மழைத்துளிகளின் ஒலியைத் தவிர வேறும் கேட்காத

EX-sensos.sfb 367
நிலையில், தூரத்தே இருந்து சோவென்ற இரைச்சலு டன் ஓடி வருமே மழை, அதைப் போல் ஒலி ஒன்று மைதானத்தைச் சூழ ஓடி வந்தது. . திரும்பிப் பார்த் தேன். பவிலியனின் ஒரு மூலையில் இருப்பவர்கள் எழுந்து கைகளை உயர்த்தி ஓவென்று அலற. கைகள் உயர்ந்து அலைபோல் உயர்ந்து இறங்கிச் செல்ல அதோடு அந்த சோ என்ற இரைச்சலுடன் ஒடிச் செல்ல அதில் கூட ஒரு Rhythm ஒன்று இருந்தது. நடுவில் இருந்தவர்கள் எழுந்து கூச்சலிட்டு தங்கள் ஆதரவைத். தெரிவித்துக் கொண்டார்கள். மனிதர்கள் கவலைமறந்து குழந்தைகளாக மாறிவிட்டார்கள் ஒவ்வொரு மனித னுக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை இந்த நேரங்களில் உறக்கம் கலைந்து வந்து வளர்ந்து போன மனிதனை விரட்டி விட்டு செல்லமாய் துள்ளி விளையாடும்.இதமாக இருந்தது. சூழ வர எழுந்து அடங்கும் ஓசையும் உயர்த்திய கைகளும் அட்ட காசம் செய்தன. மீண்டும் விளக்குகள் அணைய, பெரும் கூச்சல் எழுந்தது. .அதே சோ. பனிக்கால இரவு களில் கும்மிருட்டில்,பாடியபடியே சைக்கிளில் ஓடி வரும் போது வேலியோரங்களில் நியோன் விளக்குகளாய் மின்மினிகள் குருத்துப் பச்சை நிறத்தில் மின்னுமே, அதைப் போல் ஏதோ ஒரு நீண்ட குச்சிகளை வாங்கிய கும்பல் ஆங்காங்கே வைத்துக் கொண்டிருந்தது. புற் களுக்கு நடுவில் மின்மினிகளை அந்த ஒளி ஞாபகப்படுத் தியது. ሎ ஒரு கும்பலுக்கும் அதன் நாடித்துடிப்பைக்கட்டுப்படுத்த 6) G35 T (5 gasuth g(5 did pg5. A mob doesn't have a mind on its own 6T6örg) 6Ti525(up LT6ir சொன்னான்? இந்த கூட்டத்துக்கும் ஒரு இதயம் இருப்பதால் தானே தன்னை அறியாமல் இந்த குழந்தைத் தனங்களில் மகிழ்ந்து கொள்கிறது.

Page 188
368 D பணியும் பனையும்
திடீரென்ற ஓவென்ற கூச்சல்.எழுந்து பார்த்தேன். தூரத்தே மரவள்ளித் தோட்டங்களில் காவலுக்கு லாம்பை வைத்து விட்டு இருக்கும் கொட்டில்களில் இருந்து வரும் வெளிச்சம் போல்...துரத்தே மேடையில் றொட் வந்திருந்தான். கூட்டம் ஆனந்தப் பரவசத்தில் கூச்சல் போட்டது.எனக்கு முன்னால் இருந்த எல்லாருமே கதிரைகளில் ஏறி விட்டார்கள். காதலர் களுடன் வந்திருந்த பெண்களில் பலர் காதலர்களின் தோள்களில் ஏறிக் கொண்டார்கள்.
எனக்கு கதிரையில் ஏறியும் எதுவுமே தெரியவில்லை. பின்னால் எக்கச்சக்கமான தூரத்தில் பவிலியனில் வெறுமையாய் கிடந்த இடங்களை, நடுவில் இருந்த கூட்டம் நிறைக்கத் தொடங்கியது. நானும் பாய்ந்து போய் வசதியான இடத்தில் அமர்ந்து கொண்டேன். ஆளைத் தெரியாவிட்டாலும் என்ன நடக்கிறது என்பது தெரிந்தது. அருகில் இருந்த ராட்சச திரைகள் அவன் நளினங்களை காட்டி மகிழ்ந்தது. இருபதே வயதான Maggie May என்ற பாட்டுடன்ஆரம்பித்தான். வினோத மான தலைவாரலும், உடையலங்காரமும் வித்தியாச மாய் இருக்க.மைக் ஸ்ராண்டைத் தூக்சியபடி மேடை யில் அங்குமிங்குமாய் துள்ளினான்.கூச்சல் வானைப் பிளக்க.ஸ்பீக்கர் ஒலி காதைப் பிளக்க...அவன் துள்ள, முன்னால் இருந்த கூட்டம் கைகளை உயர்த்தி தட்டிய படி.கதிர் வந்த குரக்கன் போல் ஆடிக் கொண்டிருந் தது. மேடையிலே கடுமையாய் இல்லாமல் மேக நீலத்தி லும் மெல்லிய குங்குமத்திலும் ஒரு வெண்பச்சையிலும் ஒளி மேடையை ஆக்கிரமித்தது. அடுத்து Down Town Train. பலத்த ஹிட்டுகள் பாடப்பட கூட்டம் உருக் கொண்டு எழுந்தது. 90.55Some Guys Have All The LuckGT6örg G25 stLiás ஓவென்று கூட்டம் அலற.தமிழ் படப்பாடல் போல் அவன் அடிக்கடி உடைகள் மாறினான்.காட்டூன்

Ex-saosaheb O 39
படங்களில் வரும் நாயும் பூனையும் ஒலி கேட்காமல் மெதுவாய் நீண்ட அடி எடுத்து வைக்குமே அதைப் போல். நீண்ட அடிகளுடன் எடுத்து. வைத்து. இடைக்கிடை வாத்துப் போல் நடந்தும். மைக் ஸ்ராண்டைத் தூக்கி கம்பு வீசியும் மேடையை ஆக்கிர மித்தான். ரசிகர் கூட்டம் நுனிக்கதிரையில் இருந்தது. "Some guys have all the luck... do nothing but complain' சிலருக்கு எப்போதும் அதிஷ்டம், சிலருக்கு எப்போதுமே வேதனை, சிலருக்கு முழுவதுமே புத்திசாலித்தனம். சிலர் குறைகூறுவதைத் தவிர வேறு எதுவும் செய்வ தில்லை. உண்மை. எனக்கு எங்கே அதிர்ஷ்டம் இருக்கிறது? எப்போதுமே வேதனைதானே.அதிர்ஷ்டம் இருந்திருந் தால் அவள் என்னோடு இப்போது இருந்திருப்பாளே. அருகே இருந்த நடுத்தர வயதான ஒரு தம்பதி; அந்தப் பெண் கணவனின் முகத்தில் கிடந்த மயிரைத்தட்டி விட்டு, அவன் முகத்தைத் துடைத்து ஆதங்கத்தோடு கணவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு உள்ளே ஏதோ நெருடியது? அவள் இன்று என்னோடு இருந்திருந்தாள் என்ன செய்திருப்பாள்? என் கைகளை தன் நெஞ்சோடு அணைத்தபடி வந்து “எனக்கு ஒண்டும் விளங்கேலையுங்கோ, இவங்கள் என்ன கத்துறாங்கள்’ என்றிருக்கக் கூடுமோ? அல்லது அந்தப் பெண்ணைப் போல் என் தோள்களின் முன் னால் என் நெஞ்சோடு சாய்ந்து கொண்டு சிணுங்கிக் கொண்டிருக்கக் கூடுமோ? அவள் வந்திருந்தாலும் என் தோள்களில் ஏறி நின்றிருப்பாளோ.. obLDT இருங்கோ, எனக்கு வெக்கமாயிருக்கு’ என்று தான் *தமிழ்ப் பெண் என்பதைக் காட்டியிருப்பாளோ? t. Li-24

Page 189
: 370 n uafuqúb uae awuqub
இல்லை, "சும்மா இருங்கோ, நான் வரேலை, அங்க வந்தால் அவளவை ஆடிக் கொண்டிருப்பாளவை, எனக் குப்பிடிக்காது’ என்று சொல்லியிருப்பாளோ? அல்லது *உங்களுக்குத் தேவை இல்லாத வேலை, வீண்காசு. தமிழ் படம், தமிழ் பாட்டு மாதிரி அர்த்தமுள்ள விசயம் இங்கிலிஷில இருக்கோ’ என்று என்னோடு விவாதத் துக்கு தயாராய் சண்டை செய்திருப்பாளோ? இல்லை, தனியே போகும் என்னை கட்டியணைத்து முத்தம் தந்து 'அங்க வடிவான பெட்டையளைக் கண்டிட்டுப் பல்லைக் காட்டிறேலை" என்று கண்ணைச் சிமிட்டியபடி எச்சரித்திருப்பாளோ? எத்தனை கற்பனைகளை இத் தனை வருடங்களில் கொண்டிருப்பேன்? என் கற்பனை வாழ்வில் எந்தத் துன்பம் தான் இருந்தது? காலையில் எழுந்து வந்து போர்வையை இழுத்து தூக்கம் கலைத்து வேலைக்கு துரத்தி, வேலையால் வரும் வரை எனக் காக காத்திருந்து, எனக்காகவே வாழ்ந்து, தன்னைப் பற்றிய கவலை இல்லாமல், சதா ‘அத்தானைப்" பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருந்திருப்பாள். எல்லாம் வெறும் கற்பனை மட்டும் தான். என் வாழ்வே முழுவதும் கற்பனை தான். இலட்சியங்கள், காதல், அன்பு எல்லாம் வெறும் கனவுகளாகத் தானே இறுதி வரை இருந்திருக்கின்றன. வாழ்வில் வேதனை தானே 1665éug5!...Some guys have all the luck 96.16ir Li Tir போட்டுவிட்ட பகுதிகளில் கூட்டம் கோரஸ் போட்டது. அவனது ஒவ்வொருbeatக்கும் சனவெள்ளம் துடித்தது. Sweet little Rock 'n' Roller, Da Ya Think I'm Sexy, Passion, Motown Song 6T6örg Gs TL if is g5 stair. கூட்டம் ஆனந்தப் பரவசத்தில் மூழ்கித் திளைத்தது. gGolu's Tonight is the night, its gonna be alright என்று பாடினான். இது "செங்கனியில் தலைவன் பசியாற, சென்ற இடம் தேனின் சுவை ஊற" என்ற மாதிரிய்ான ஒரு கருத்து "ஆழம் மிக்க ஒரு பாடல். துள்ளித் துள்ளி ஆடிய அவன் எல்லாவற்றையும்

EX-அலைகளில் 0 -373
நிறுத்தி, கதிரைகள் கொண்டு வரச் செய்து, பியானோ வும் கொண்டு வந்து, இந்தப் பாடலைப் பாடும்போது என் மனைவிக்கு எட்டு வயது என்று நகைச்சுவையாகக் கூறிக் கொண்டு பாடத் தொடங்கினான். s I didnt know what day it was ... The attraction was purely physical, Oh அந்த நாள் எது என்று எனக்குத் தெரியாது, நீ அந்த அறைக்குள் நுழைந்தபோது, நான் ஹலோ என்று கூப்பிட்டேன், கவனிக்கப்படாமல், நீ விரைவாக குட்பை சொன்னாய்,. நான் உனக்குச் சொல்லி மன்னிப்புப் பெற வேண்டும், அந்தக் கவர்ச்சி வெறும் உடல் ரீதியா னது தான். I took all those habits of yours ... But my heart cried out for you உன்னுடைய பழக்கங்களை எல்லாம் நான் எடுத்துக் கொண்டேன். ஆரம்பத்தில் உன் பாஷன் உணர்வுகளை ஏற்றுக் கொள்ளக் கஷ்டமாய் இருந்தது. நான் அணுப வத்துக்காக வைத்துக் கொண்டேன்..... ஆனாலும், என் இதயம் உனக்காக அழுதது. அடுத்த வரிகளைப் பாடத் தொடங்க, நான் குழந்தைப் பிள்ளைபோல் குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தேன். இருளானதால் அருகில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக், காது.அவர்கள் இருந்து கொண்ட வேகத்தில் என்னைக் சட்டை செய்திருக்கவும் முடியாது. முழங்கையால் கதி, ரையின் கரையில் முண்டுகொடுத்துக் கொண்டு கையால் முகத்தை மறைத்துக் கொண்டு, நான் விம்மி அழுதேன்.' my heart cried out for you o Gotá sits stair gut அழுதது. திருவிழாக்களில் தொலைந்து போன குழந்தைபோல் என்ன செய்வது என்றே தெரியாமல் க்ண்ணீர் ஓரங்களில் வழிய, "நான் உனக்கு என்ன ಸ್ಥಿತಃ என்னை இவ்வளவு சுலபமாக மறந்து
-

Page 190
372 O tindah uaparnya
You are in my heart ... You are in my souf என் இதயத்திலும் நீ தான்.என் ஆன்மாவிலும் நீதான்.
கூட்டம் அவனோடு சேர்ந்து கோரஸ் Guri" -தி அவன் பாடலை நிறுத்த, இந்த ஐம்ப தாயிரம் சனமும் இரவுகளில் மெதுவாக இரையும் மழை போல் பாடிக் கொண்டிருந்தது. இங்கு வந்த எல்லாருமே என்னைப் போல் நொந்து போன இதயத்தில் ஒருவரைச் சமிந்து கொண்டு, என்னைப் போல் அழுது கொண்டிருப்பார்களோ.எனக்கு விக்கல் எடுத்தது.விக்கலை நிறுத்த, அழுகை வெடித்தது. ஏன் நான் குழந்தை போல் அழுது கொண்டிருக் கிறேன்?
My love for you is immeasurable ... But Honey, What do you see in me? உன் மீது நான் கொண்ட காதல் அளவிட முடியாதது, மதிப்பு அதிகமானது. நீ முதுமையடையாதவள், காலத் தால் அழியாதவள், நீ முடிவில்லாதவள், அழகுபடுத்தப் பட்டவள், அற்புதமானவள், அழகானவள், நேர்த்தி யானவள், நீ வீரப் பாடல், நகைச்சுவைப் படைப்பு, சங்கீதம், நாடகம் போன்றவள், எழுதப்பட்ட காதல் பாடல்கள் ஒவ்வொன்றுமே நீதான்.ஆனால் தேனே, நீ என்னில் என்ன காண்கிறாய்?.
'You are an essay in glamour... "Cause you're the warmest thing I've ever found
வசீகரத்தில் நீ ஒரு கட்டுரை போன்றவள், என்னுடைய இலக்கணத்தை மன்னித்துக் கொள், ஆனால் நீ தான் ஒவ்வொரு பாடசாலை DIT600T66fsir கனவு... , ஆனால் குழந்தையே நான் முடிவு செய்து விட்டேன், நீ தான்

EX-possfib. O 37
நான் கண்ட சிறந்த குழு, எனக்கு பல தொடர்புகள் இருந்தன, பல தடவைகள் நான் விலக நினைத்தேன். நான் என் உதட்டைக் கடித்துக் கொண்டு திரும்பி னேன். ஏனென்றால் நான் கண்ட மிகவும் கதகதப்பான பொருள் நீதான். எனக்கு எந்த விதமான வேறு தொடர்புகளும் இல்லை என்பதைத் தவிர எனக்காகவே எல்லாம் எழுதப்பட்டது போல் தோன்றியது. என் வாழ்வில் நான் கண்ட மிகவும் கதகதப்பான பொருள் அவள் தானே... என் நினைவுகளில் அவள் தந்த கதகதப்புகள்தான் என்னை இப்போதும் அவளையே நினைத்துக் கொண்டிருக்க வைத்தது. கூட்டம் உணர்ச்சி மேலீட்டால் ஆரவாரம் செய்தது. அவன் விட்ட இடங்களில் கோரஸ் பாடியது. நானோ அழுது கொண்டிருந்தேன். பாடி முடிந்தவுடன் அடுத்த பாட்டு... The first cut is the deepest . பழைய காதலி தந்த வேதனையை மனதில் சுமந்து கொண்டே, தனது புதிய காதலிக்காக பாடும் பாட்டு.
would have given you all of my heart ... Baby / try to love again, But I know நான் உனக்கு என் முழு இதயத்தையுமே தந்திருக்கக் கூடும். ஆனால் என் இதயத்தை ஒருத்தி கிழித்து விட் டாள். நான் கொண்டிருந்த எல்லாவற்றையும் எடுத்து விட்டாள். ஆனால் நீ விரும்பினால் நான் திரும்பவும் காதல் செய்ய முயற்திக்கிறேன். ஆனால் எனக்குத் தெரியும். The first cut is the deepest... to lovin me, she is WOSe. முதலாவது காயம்தான் ஆழமானது, என்னைக் காதலிப் பது என்பதில் அவள் மோசமானவள்.

Page 191
374 [ ] usflnú usosraúb
f still want you by my side ... but I know இப்போதும் நீ என் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். என் கண்ணிரை காய வைக்க நீ உதவ வேண்டும் என்று, உண்மையில் நான் முயற்சி செய்வேன். ஏனென்றால் நீ விரும்பினால் நான் திரும் பவும் காதல் செய்ய முயற்சிப்பேன். என்னால் ஏன் இன்னொருத்தியை நினைக்க முடிய வில்லை. என் காயம் என் இதயத்தை துண்டாடி விட்ட தாலா? என்னை நானாக ஏற்றுக் கொண்டு, என்னை மீண்டும் கைவிடாத ஒருத்தி எனக்கு கிடைப்பாளா? "உன் இதயம்தானே புண்ணாக உள்ளது, உன் பாதங்கள் அல்லவே, நடந்து வா அந்த நதிக்கரைக்கு. வெந்துபோன உன் இதயத்தில் எத்தனை வடுக்கள்' என்று எண்ணிப் பார்க்கப் போகிறேன். நொந்து போன உன் இதயத்தை நான் எடுத்துக் கொண்டு என் இதயத்தை உனக்குத் தருகின்றேன்' என்று ஒருத்தி வருவாளா? ” என்னை தன் மடியில் உறங்க வைத்து, மிருதுவாய் என் நெற்றியை முத்தமிட்டு, என் கேசத்தைக்கலைத்து வருடி . . . தன் மகன் போல் பாசத்துடன் வளர்க்கக் கூடிய ஒருத்தி எனக்கு கிடைப்பாளா? நான் அவளைப் பற்றிப் பேசும் போதெல்லாம், 'இப்போதும் அவளைப் பற்றி நினைத்துக் கொண் டிருக்கிறாயே" என்று முகம் கோணாமல், குழந்தை போல் கன்னத்தில் கை வைத்தபடி ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருப்பாளோ? என் இதயத்தின் காயங்களைத் தடவி மருந்து போட்டு, அந்த நினைவுகளை ஏற்றுக் கொண்டு, அவளைப் போலல்ல நான் என்று நிரூபிக்கும் ஒருத்தி எனக்கு கிடைப்பாளா? தன் நெஞ்சோடு என்னை அணைத்துக் கொண்டு, ஓவென்று விம்மியழும் என்னை, கட்டி

Ex-அலைகளில் O 325,
யணைத்து 'என்ரை செல்லமல்லோ' என்று குழந்தை போல் ஆறுதல் சொல்வாளா? ஏன் என்னால் இன். னொருத்தியைத் தேடிக் கொள்ள முடியவில்லை? நான் இன்னொரு காயத்தை வாங்கிக் கொள்ள பயப் படுகிறேனா? இல்லை, இவளைப் போல் இன் னொருத்தி, இவளைவிட மேலான இன்னொருத்தி எனக்கு கிடைக்க மாட்டாள் என்று நினைக்கிறேனே? ஏன்? அழுகை தாள முடியவில்லை. மீண்டும் விக்கல்வர, அழத் தொடங்கினேன். . .
சோகம் முடிந்த கூட்டம் Rock n Rollக்கு திரும்பி, துள்ளியது. நான் பேசாமல் கண்ணீர் வழிய பார்த்துக் கொண்டிருந்தேன். பாடி முடிய கூச்சல் போட்ட சனம் அவன் மீண்டும் வருவான் என்ற எதிர்பார்ப்பிலோ என்னவோ காத் திருந்தது. நிரம்பி வழியும் தொட்டி போல் மெதுவாக சனம் வழிந்தது. வெளியே வந்தேன். ஒரு மரத்தின் கீழ் இருட்டாக இருந்த பகுதியில் விழுந்தேன். கைகளை தலையணையாக்கி, மேலே பார்த்தேன். C.N கோபுரத்தின் மேலால் சந்திரன் பாதியாய் வந்து கொண்டிருந்தான். கூட்டம் கூட்டமாய் செல்லும் கும்பலில் சிறுவயதுக் e5bust 96irg), F5.5LDTil You're in my heart 6T6irg பாடிக் கொண்டே சென்றது. கண்களால் வழிந்த கண்ணிர் கரையோரங்களால் வழிய, நான் அவளை நினைத்து அழுது கொண்டிருந்தேன். இவள் நினைவு கள் ஆக்கிரமித்த என் இதயத்தில் தற்போதைக்கு இன்னொருத்திக்கும் இடம் இல்லை. விக்கி அழுது கொண்டிருக்க, தொண்டைக்குள் நொந்தது. ஏனடி என்னை விட்டுப் போனாய்.
தூரத்தே Bungee jumping crane தலை நீட்டிக்கொண் டிருந்தது.

Page 192
376 O uatuqë janareib
தலைகீழாக, வயிறு ஜிவ் என்று உள்ளே இழுத்துக் கொள்ள, இதயம் தொண்டைக்குள்ளால் வரும் பிரமை யோடு இரத்தம் வேகமாய் முகத்தில் பாய்ந்து சிவக்க, கைகளும் தலைமயிரும் கீழே தொங்க. பாயும் போது அந்தக் கணப்பொழுதில் ஏற்படும் வேதனையோடும் மகிழ்ச்சியோடும் பயத்தோடும் என் துயரங்களும் அவளின் நினைவுகளும் வெடித்துச் சிதறி என் இதயத்தில் இருந்து எந்தத் தடயமும் இல்லாமல் அழிந்து போய் விடவேண்டும்.
Once and for all, I don't want to talk about it, How she broke my heart
சனிக்கிழமை வந்து நான் Bungee Jumping செய்ய வேண்டும். . . O

ddírafilmaurů : மேலும் ஒர் ஐரோப்பியக் கதை நோர்வே :
செக்குமாடு
ஜெயபாலன், வ.ஐ.ச
தனக்குத் தொல்லை தருகிற பேய் ஒளிந்திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடிய வில்லை. அன்றைக்கு பொழுது சாய்வதற்கு முன்னமே,

Page 193
- 378 D. uaffluúh uaaraqih
அந்தக் கொடிய பேயைக் கண்டு பிடித்து நொருக்கிப் போடுவதாகச் சங்கற்பம் செய்திருந்தான்' அவன். நோர்வே போன்ற துருவத்து நாடுகளில் கோடை நாள்களில் பொழுது சாய்வதில்லை யென்பது வேறு விடயம், அந்தப் பேயை யார் ஏவி விட்டிருப்பார்கள் என்பது பிடிபடவில்லை. அவனைச் சந்திப்பதற்காகச் சென் னைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகத் தவமிருக்கும் அவனது தாய் கனகம்மாவுக்கும் காதலியும் தூரத்து உறவுக்காரியுமான கமலிக்கும் கூட இது பற்றிக் கடிதம் எழுதியிருந்தான். பதறிப் போன அவர்கள் மறு கடிதத்துக்குள்ளேயே மந்திரித்த நூலும் சென்னை வடபழனி முருகன் கோவில் விபூதி பிரசாதமும் வைத்து அனுப்பினார்கள். இது அவசர முதலுதவி. இதைவிட அவனது நலத்துக்காகத் தமிழகத்துக் கோவில்களுக்கு யாத்திரை போய் பிரார்த்தனை செய்யப் போவதாகவும் அவர்கள் கடிதம் எழுதியிருந் தார்கள். தங்கள் சேமிப்பில் கொஞ்சம் பணமிருப்ப தாகவும் தங்களது யாத்திரைக்காக பணம் அனுப்புவது அவசியம் இல்லையென்றும் வேறு எழுதியிருந்தார்கள். ராசன்தான் குமரனுக்குச் செய்வினை செய்து பேயை ஏவி விட்டிருக்கிறான் என்ற விடயத்தையும் கண்டு பிடித்து எழுதியிருந்தாள் கனகம்மா. மந்திரவாதிகளின் ஊரான மட்டக்களப்பிற்கு அண்மையில் ராசன் போய் வந்திருப்பதாக அவளுக்கு துப்புக் கிடைத்திருக்கிற தாம். தன்னை நேசிக்க இரண்டு பேராவது உலகத்தில் இருக் கிறார்களே என்கிற விடயம் பாறாங்கல்லாக உறைந்து போயிருந்த அவன் மனதை நெகிழ வைத்திருக்க வேண்டும். கடிதம் வந்த அன்று அந்தக் கடிதத்தை

ClarksjuAfD O 379E
முத்தமிட்டுக் கொண்டு நெடு நேரமாக அழுது கொண்: டிருந்தான் குமரன். பல்வேறு சமூக விடயங்களில் தாங்களே உயர்ந்தவர்கள் என்று கருதிய போதும் இந்து சமய, தமிழ் கலை கலாசார விடயங்களில் மட்டும் தமிழகம் சம்பந்தப் பட்டவை எல்லாம் மகத்தானவை என்றும் கருதுகிற சராசரி இலங்கைத் தமிழன்தான் அவனும். அம்மா வினதும் கமலியினதும் கடிதம் அவனுக்கு மகிழ்ச்சி யைத் தந்தது. மந்திரித்த நூலைக் கையிற் கட்டிக் கொண்டு "இனி ஏலுமென்றால் ஆட்டிப்பார்" எனத் தனக்குத் தொல்லை தருகிற பேய்க்குச் சவாலும் விட்டான் அவன். கொஞ்ச நாள்களுக்குப் பேய் தென்படவில்லை. பேய்க்கு நேர்ந்த கதியைப்பற்றி அம்மாவுக்கும் கமலிக், கும் மகிழ்ச்சியோடு கடிதமெழுதிய அன்று இரவே மீண்டும் பேயின் சேட்டைகள் ஆரம்பித்து விட்டன." பாத்திரங்களை உருட்டி ஒலி எழுப்புகிற வழமையான சேட்டைகளோடு பேய் இப்போது ரகசியத் தொனியில் பேசவும் செய்தது. நச்சுக்கொல்லி மருந்துகளுக்கு பழக்கப்பட்டு விடுகிற கொசுக் களைப் போல அந்தப் பேயும் விபூதிக்கும் மந்திரித்த நூலுக்கும் பழக்கப்பட்டு விட்டது என்பதைப் புரிந்து கொண்டபோது அச்சத்தில் குமரனின் உடல் நடுக்கமெடுத்தது. இரண்டு வருடங்களுக்கு மேலாக குமரன் ஒஸ்லோவின் மத்தியில் இருக்கும் உணவு விடுதி ஒன்றில் பாத்திரம் கழுவுகிற மெசினுக்கு எடுபிடி ஆளாக இருந்து வரு கிறான். வந்து குவிகிற எச்சில் தட்டுக்களையும் அழுக்குச் சமையல் பாத்திரங்களையும் அந்த இரும்புப் பூதத்தின் வாயினுள் திணிக்கிறதும் அது நக்கித் துடைத்துத் தருகிறவற்றை மீண்டும் வெளியில் எடுத்து அடுக்கி வைக்கிறதும் மட்டும் தான் அந்த உணவு

Page 194
389 O Luasqüé udalearúis
விடுதியில் அவன் செய்து வருகிற வேலை. பயிற்று வித்தால் ஒரு குரங்கு கூட இதைச் செய்துவிடும் என்பது புரிகிற போதெல்லாம் குமரனுக்கு வாழ்க்கையே வெறுத்து விடும். மழைநாள்களில் எச்சில் தட்டுக்கள் அவ்வளவாகப் பெருகாது. கழுவுகிற மெசினும் அவனும் சற்று ஒய்ந்திருப்பார்கள். அப்போதெல்லாம் தான் ஒரு பல்கலைக்கழகப் பட்டதாரி என்கிற விசயத்தை அந்த மெசினுக்குப் புரிய வைக்க முயற்சி செய்வான். வீட்டுச் சொந்தக்காரி "பேரித்', அந்த உணவு விடுதி நிர்வாகி "ஆரில்ட்' என அவனோடு சம்பந்தப்படுகிற நோர் வேஜியர்களைப் போலவே அந்த மெசினும் அவனு டைய சிறப்பியல்புகளைப் புரிந்து கொள்வதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. இது தான் அந்த மெசின் மீது அவனுக்கிருந்த மனத்தாங்கலுக்குக் காரணம். வாட்ட சாட்டமான தேகத்துடன் வேலை தேடி வந்திருக்கிறவன் இலங்கைத் தமிழனென்று தெரிந்த துமே அந்த உணவு விடுதியின் நிர்வாகி ஆரில்ட் பாத்திரம் கழுவுகிற வேலைக்கு குமரனே மிகவும் பொருத்தமான நபர் என புரிந்து கொண்டு குமரனுக்கு வேலை வழங்கினான். அந்த மெசினுக்குக் கூட நெடுங் sited its இலங்கைத் தமிழர்களது சகவாசம் இருந்ததில் தமிழைப் புரிந்து கொண்டது. குமரனும் அந்த மெசினுக்கு உண்மையுடன் குறிப்பறிந்து பணி புரிந்தான். முறைப்படி அதனைப் பராமரிப்பது வேலை முடிந்தபின் குளிப்பாட்டி ஈரம் துவட்டிவிடுவது என அவன் அந்த மெசினுக்கு எந்த ஒரு குறையும் வைத்த தில்லை. தன்னை அழிப்பதற்குச் சதி செய்கிற பேயுடன் அந்த மெசின் தொடர்பு வைத்திருக்கிற விடயம் தெரிந்த போது அவன் ஆடிப்போய் விட்டான். இந்தக் குழப் பத்தில் அந்த மெசினை அவன் உதைத்தது என்னவோ

செக்குமாடு () ே
உண்மைதான். இதைப் போய் அந்த உணவுவிடுதியின் நிர்வாகி பெரிது படுத்தியிருக்க வேண்டாம். நிர்வாகி பக்கத்தில் எங்கோ நிக்கிற நேரம் பார்த்து அந்தப் பாத்திரம் கழுவும் மெசின் "சிசுக் கொலைகாரன், சிசுக் கொலைக்காரன்” என அவனைக் கிண்டல் செய்தது.
அதுவரை பேய் மட்டும்தான் அவன்மீது இப்படி ஒரு பழியைச் சுமத்தி வந்தது. ஆத்திரத்துடன் "நீயுமா புரூட்டஸ்" என்று கத்தியபடி பாத்திரம் கழுவுகிற மெசினுக்கு உதைத்து விட்டான் குமரன். இன்றைய நாள் முடிவதற்குள்ளேயே அந்தப் பேயைத் தேடிப்பிடித்து நொருக்கிப் போட வேண்டுமென்று குமரனுக்கு வெறியேற்பட்டதற்கு போதிய காரணங்கள் இருந்தன. குமரன் எப்போது வீட்டுக்குப் போனாலும் அவனது அறை மூலையில் இருந்த மின்சார அடுப்பங் கரையில் நாற்றமெடுக்கும் எச்சில் கோப்பைகளை பேய் குவித்து வைத்திருக்கும். அந்தப் பேய் இதனோடு திருப்திப்படாமல் இரவிரவாக அந்த எச்சில் பாத்திரங் களை நிலத்தில் எறிந்து உருட்டி ஒலி எழுப்பி அவனது தூக்கத்தையும் கூட கெடுத்தது. காலையில் போய்ப் பார்த்தால் பாத்திரங்கள் எதுவும் நிலத்தில் உருண் டிருக்காது. ஒருமுறை எதிர்பாராத விதமாக அவனது வீட்டுக்கும் ஒரு விருந்தாளி வந்திருந்தான். பல்கலைக்கழக நண்பனான அந்த விருந்தாளி வீட்டுக்கு வந்த வுடனேயே பேயின் ஆதரவாளனாக மாறிவிட்டதில் குமரனது கோபத்துக்கு ஆளாக வேண்டியிருந்தது. அடுப்பங்கரையில் எச்சில் கோப்பைகளைக் குவித்து வைப்பது பேயல்ல குமரன் தான் என்பது அவனது வாதம். "ஒஸ்லோ நகரம் முழுவதற்குமே எச்சில் கோப்பை கழுவித்தாறவன் நான் என்னைப் பார்த்து காப்பிட்ட கோப்பை கழுவ வக்கில்லாதவன் என்று

Page 195
382 o , uafquae suruh
சொல்ல நீயாரடா" என்று பேசி அவனைத் துரத்தி விட்டான் குமரன். அந்த இரவு எச்சில் பாத்திரங்களைப் போட்டு உடைத் துக் கொண்டிருந்தது பேய். அவனுக்கு கோபம் தாள வில்லை. சொல், நான் யாருக்கு என்ன பாவம் செய் தேன்" எனக் கத்தினான் அவன். மின்சார அடுப்பங் கரைப் பக்கமாகப் பேய் சிரிக்கும் சத்தம் கேட்டது. "உனது அக்கா குந்தவையின் சிசுவைக் கொலை செய்தது பாவமில்லாமல் என்னவாம்" என்று பேய் முணுமுணுத்தபோது அவன் உண்மையிலேயே தடுமாறிப் போனான். அவனது முகம் வெளிறிப் போனது. உடல் நடுங்கியது. ‘குந்தவை அக்காவின் பிள்ளையை நானா கொன்றேன்" என்று தன்னைத் தானே விசாரித்துத் துக்கித்தான்.
அவனுக்கு மூன்று சகோதரர்கள். அக்காவின் பெயர் குந்தவை. தங்கையின் பெயர் செல்வி. தம்பி சுரேஷ். நாட்டு நிலைமையால் மரணத்தைத் தழுவியவன்.
குமரனின் அக்கா பிறந்த தசாப்தத்தில் பிறந்த பல ருக்கு குந்தவை என்ற பெயர் வாய்த்திருந்தது. கல்கி பின் பொன்னியின் செல்வன் என்ற சரித்திர நாவலை வாசித்து விட்டு யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் சிலர் சோழ அரசர்களாகவும் இளவரசிகளாகவும் தங்களை வரித்துக் கொண்டு பகல் கனவுகளில் புலிக் கொடியுடன் பவனி வந்த நாள்கள் அது. புலிக்கொடி தாங்கியபடி குதிரைகளிலும் கப்பல்களிலும் திரிந்த அவர்கள் தமது கனவுலகச் சுப்பர்மான்களான சோழ அரசர்களது பெயர்களை தமது பிள்ளைகளுக்கும் சூட்டினர். அவனது அக்காவும் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் வெளிவந்த காலத்தில் பிறந்தவள்தான். அவளுக்குச் சோழ இளவரசி குந்தவைப் பிராட்டியின் பெயர் இப்படித்தான் வாய்த்தது.

செக்குமாடு :) 383
பெயரின் பின்னணி எதுவாயிருந்த போதும் குந்தவை சராசரியான யாழ்ப்பாணத்துப் பெண்தான். சின்ன வயதிலிருந்தே படிப்பில் அவளுக்கு ஈடுபாடிருக்க வில்லை. வீட்டுப் பணிகளை ஒரு ஈடுபாட்டோடு செய் கிறது, ஊர் ஊராக ஆள் அனுப்பி நல்ல பூக்கன்று தாற்றுக்களைச் சேகரித்து வீட்டு வளவையும் முற்றத். தையும் பூஞ்சோலையாக்குவது, இலங்கை வானொலி
பூவும் பொட்டும்-மங்கையர் மஞ்சரி' நிகழ்ச்சிக்கு, கடிதங்கள் சிறுகதைகள் எழுதி அனுப்பி வானொலியில் அவை வாசிக்கப்படுகிற போது உச்சி குளிர்ந்து, போவது, இப்படி அவளது உலகம் யாழ்ப்பாணத்து, சராசரி இளம் பெண்களின் உலகம் தான். இலங்கை. வானொலியில் வாசிக்கப்பட்ட குந்தவையின் மிக சாதாரண கவிதை ஒன்றை பெண் பெயரில் "ஒகோ ஒகோ' என புகழ்ந்து பாராட்டிக்கடிதமெழுதி குந்தவை யின் சினேகிதனாகியவன்தான் ராசன். இதனை மோப்பம் பிடித்தது, ராசனின் ஊர், பெயர். சாதிசனங் களைப் பற்றி தகவல்களை விசாரித்து அறிந்தது, பின்னர் குந்தவையை விசாரித்து எச்சரித்தது இவை எல்லாமே யாருக்கும் தெரியாமல் நான்கு சுவருக்குள் கனகம்மாவே நடத்தி முடித்திருந்த நாடகம். முதலில் காதல் ஒன்றும் இல்லை வானொலிக் கவிதைகள் தொடர்பாக பாராட்டி ராசன் கடிதம் எழுதியது மட்டும் தான் நடந்தது என்று வாதிட்ட குந்தவைக்கு தான் கைப்பற்றி வைத்திருந்த கடிதங்களைக் காட்டினாள் கனகம்மா. பின்னர் பழி முழுவதையும் ராசனில் போட் டாள் குத்தவை. இனி ராசனோடு தொடர்பு வைக்கிற தில்லை எனச் சத்தியம் வாங்கிக் கொண்டு கதையை தங்கள் இருவருக்குள்ளும் அமுக்கி விட்டாள்
கனகம்மாள்.
இது நடந்து நான்கைந்து வருடங்களுக்குப் பின் மீண்டும் ராசனும் குந்தவையும் தொடர்ந்தும்

Page 196
384 O usofilujúh unsurugúb
தொடர்புகளை பராமரிக்கும் விசயம் கனகம்மாவுக்கு தெரிய வந்தது. அப்பாவுக்குக்கூட இதனைச் சொல்ல வேண்டாம் என்றநிபந்தனையில் அப்போது பல்கலைக் கழக மாணவனாக இருந்த குமரனிடம் குந்தவையின் காதல் விபரம் சொன்னாள் கனகம்மா. குமரனே அப்பாவாக அவதாரம் எடுத்து குந்தவையை அக்கா என்றும் பாராமல் கன்னத்தில் அறைந்து அட்டகாசம் செய்து விட்டான். "எங்கள் அந்தஸ்தென்ன கேவலம் ஒரு சிறு சாப்பாட்டுக்கடை நடத்திற நாயை கலியாணம் கட்டப் போறியா' என்று கத்தினான் குமரன். 'தம்பி நீ பேசுகிற கொம்யூனிசம் இதுதானா' என்று கிளர்ந்த குந்தவை பின் பணிந்து போய் இனி ராசனிடம் தொடர்பு கொள்வதில்லை என்று மீண்டும் சத்தியம் செய்து கொடுத்தாள். இத்தடவை கனகம்மா அவளை நம்பவில்லை. பின்னர் குந்தவைக்கு திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்த போதும் சாதகத்தில் செவ்வாய் ஏழாவது வீட்டில் குந்தியிருந்து கொண்டு திருமண முயற்சிகளைத் தோற்கடித்துக் கொண்டிருந்தது. இதுதான் அவர்கள் வாழ்வை தலைகீழாக மாற்றிப் போட்ட சம்பவங்கள் பல வேகமாக இடம் பெற்ற கால கட்டம். "சுரேஷ் காணாமல் போனது, தங்கை செல்வி பூப்படைந்தது, குமரன் பட்டதாரியாகியது, நாகலிங்கம் பணியில் இருந்து ஓய்வூதியம் பெற்று வீட்டில் சாய் மனை நாற்காலிவாசியானது, குமரன் நோர்வேக்கு அகதியாக வந்து சேர்ந்து வீட்டாரின் சுமைதாங்கி யானது எல்லாம் அடுத்தடுத்து இடம் பெற்ற சம்ப வங்கள்.
குமரன் அகதியாக நோர்வே வந்து சிதைய யாழ்ப் பாணத்தில் அவனது குடும்பம் சமூக பொருளாதார ரீதியாக பலப்படத் தொடங்கியது. புதுப்பவிசு வந்ததில் நாகலிங்கம் தன்னையும் பணக்காரர் வரிசையில் தூக்கி இருத்திக் கொண்டார். கடந்த சில வருடங்களாகக்

செக்குமாடு 0 385
குந்தவைக்கு பள்ளி ஆரிசியர் மட்டத்தில் கூட ஒரு மாப்பிள்ளை தேட முடியாமல் கஷ்டப்பட்ட நாகலிங்கம் திடீரென்று டாக்டர், என்ஜினியர், பல்கலைக்கழக விரிவுரையாளர் என்ற மட்டத்தில் மாப்பிள்ளை தேட் ஆரம்பித்தார். குந்தவைக்கு கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளரான பேரின்பத்தை திருமணம் பேசப் பட்டது. மாப்பிள்ளை வீட்டார் மூன்று லட்சம் சீதனம் கேட்பதாக முதலில் கடிதம் வந்தது. குமரனும் சரி பணம் அனுப்புகிறேன் என்று வழி மொழிந்து பதில் எழுதினான். இதற்குள் பேரின் பத்தின் தாயார் மகனுக்கு பல பணக் கார வீடுகளில் இருந்து திருமணம் பேசி வருகிறார்கள் என்றும் ஐந்து ஆறுலட்சம் என்று அவர்கள் சீதனம் தருகிறதாகச் சொல்கிறார்கள் என்றும் கூறி தங்களது பெருமை பேசத் தொடங்கினாள். "நாங்கள் மட்டும் என்ன சின்னப் பணக்காரரா? எனது மகன் குமரன் நோர்வேயில் கோடீஸ்வரனாக இருக்கிறான். பட்டதாரி, பெரிய அறிஞன், நோர்வே அரசாங்கமே அவனை இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விடாமல் வேலை வீடு எல்லாம் கொடுத்து தங்கள் நாட்டோடு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலகாலத்தில் அவனுக்குக் குடியுரிமை கூடக் கொடுத்து விடுவார்கள். நாங்களும் பணக்காரர்தான் எங்களாலும் ஐந்து லட்சம் சீதனமாகக் கொடுக்க முடியும்!" என்று ஆத்திரப்பட்டு பொரிந்து தள்ளிய நாகலிங்கம் வாக்குறுதியும் வேறு கொடுத்து விட்டார். வீட்டில் கனகம்மா, செல்வி, குந்தவை எல்லோருமே இதைக் கேட்டு அதிர்ந்து போய் விட்டார்கள். இதை அறிந் ததும் குமரனுக்கு ஐந்தாறு நாளாகக் கைகால் ஓடவில்லை. ஒருநாள் முழுவதும் அறையைப் பூட்டிக் கொண்டு கண்ணிர் விட்டு அழுதான். தனது தந்தையா L. 1-25

Page 197
C sufle yapariqih
ரான நாகலிங்கத்தை ஏகவசனத்தில் திட்டித் தீர்த்து நீண்ட கடிதமொன்றும் எழுதினான். சம்பிரதாய பூர்வ மாக உங்கள் அன்பு மகன் குமரன்’ என்று வீட்டுக்கு எழுதும் கடிதங்களை கையொப்பமிட்டு முடிப்பது அவனது வழக்கம். ஆனால் அந்தக் கடிதத்தில் அவன் வெறுமனே குமரன் என்று மட்டுமே கையொப்பம் இட்டிருந்தான், நாகலிங்கம் அதைப்பற்றி ஒன்றுமே அலட்டிக் கொள்ளவில்லை. உனது பெருமையை நிலைநாட்டத்தான் அப்படிச் சொன்னேன். அந்த லெக்சரர் மாப்பிள்ளை ஐந்து என்ன பத்து லட்சழே பெறுவான்.
சீதனப் பணத்தைக் கூடிய விரைவில் அனுப்பி வையென்று நான்கு வரியில் அவர் கடிதம் எழுதியிருந் தார்.
ஒருவாறு பாரமிழுக்கிற மிருகம் போலாகி உறக்கத் தையும் ஓய்வையும் மறந்து இரண்டு மூன்று உணவு விடுதிகளில் ஓடி ஓடிக் கழுவி ஐந்து லட்சம் ரூபா திரட்டி அனுப்பியபோது, கனகம்மா குந்தவையும் கையுமாகக் கொழும்புக்கு வந்து தொலைபேசியில் விக்கி விக்கி அழுதாள். குந்தவை கர்ப்பமாயிருக்கிறாள். அந்தப் படுபாவி ராசன்தான் அவளை ஏமாற்றிக் கெடுத்துப் போட்டான் என்று அழுத அம்மாவைச் சமாதானம் செய்த குமரன் ரகசியமாகக் கருச்சிதைவு செய்துவிட்டு பேசி ஒழுங்காய் இருக்கிற மாதிரி குந்தவையை பேரின் பத்துக்கு திருமணம் செய்து வைத்து விடுங்கள் என்று தொலைபேசி மூலமே தீர்ப்பு வழங்கினான்.
'நீ மட்டும் கமலியைக் காதலிக்கலாம். நான் ராசனை விரும்பினால் மட்டும் பிழையா,’ என்று வாதாட முற்பட்ட குந்தவையை *பொத்தடி வாய்' என்ற நெத்தியடியில் வாயை அடைத்தவன் கருச்சிதைவுக்கு

செக்குமாடு 0 387
முன் அவளோடு எதுவும் பேசமுடியாது என்றும் மறுத்து விட்டான். செப்புச் சல்லியும் சீதனமாகத் தனக்கு வேண்டாம் என்று ராசன் கடிதம் எழுதியிருக்கிறான். மகனே குந்தவையை ராசனுக்கும் செல்வியைப் பேரின்பத் துக்கும் கலியாணம் செய்து வைப்போமா என்று தொலைபேசியில் தயங்கித் தயங்கி கோரிக்கை விடுத்த தாய் மீதும் வெறுப்பைக் கக்கினான். நாகலிங்கமும் குமரனும் ராசனை நிராகரித்ததற்கு ஒரு சிறு உணவு விடுதியின் சொந்தக்காரனான ராசனது தாழ்ந்த சமூக அந்தஸ்துதான் காரணம், மற்றும்படி ராசனும் அவர் களும் ஒரே சாதிசனம்தான். குந்தவையின் திருமணம் நடந்தது. அதற்குள் இரண்டு வருடமாகி விட்டது. அவள் இப்போது தனது கணவன் பேரின்பத்துடன் லண்டனுக்கு வரவிருக்கிறாள். ‘அத்தானுக்கு மேற் படிப்புக்காக புலமைப்பரிசில் கிடைத்திருக்கிறது. வருகிற யூன் மாதமளவில் லண்டன் செல்கிறோம். நான் தாயாகி இருக்கிறேன். நீ கட்டாயம் என்னை வந்து பார்க்கவேண்டும். எனக் குந்தவை மகிழ்ச்சி யோடு கடிதம் எழுதியிருந்தாள். லண்டனில்தான் குழந்தை பிறக்குமாம். இரவும் பேய், "சிசுக் கொலைகாரன்' என்று குற்றம் சாட்டியதில் குமரனுக்கு நித்திரை கொள்ள முடிய வில்லை. குந்தவையின் கருச்சிதைவுக்கு ஒருவகையில் தான் தான் காரணமென அவனது மனம் அடித்துக் கொண்டது. கருச்சிதைவைச் ‘சிசுக்கொலை' என்று பேய் சொல்லுகிறது. பேயின் கூற்றில் அவனுக்கு சம்மத மில்லை. காலையில் எழுந்தவன் நேரே அடுப்பங்கரைக்கு போய் பார்த்தான். பாத்திரங்கள் எதுவும் நிலத்தில் உருண்டி ருக்கவில்லை. எனினும் மின் அடுப்பிலும் கழுவும் தொட் டியிலும் எச்சில் கோப்பைகளையும் உணவு அடிப்பிடித்த

Page 198
388 0 ‘பனியும் பனையும்
ப்ாத்திரங்களையும் பேய் குவித்து வைத்திருந்தது. பேயின் தொல்லையால் அவன் இளைத்துப் போனான். தூக்கமின்மையால் நிரந்தரமாகவே கண்களும் சிவந்து போனது. தலைவலியும் குடிகொண்டது. தலைவலி தாங்க முடியாத ஒரு பொழுதில் சென்ற மாதமே அவன் வைத்தியர் ஒருவரைப் போய்ப் பார்த்திருந்தான். துக்க மும் தூக்கமின்மையும் காரணமாக குமரனது மனநிலை பாதிப்படைந்திருப்பதாக அந்த வைத்தியர் கூறினார்.
வைத்தியருக்கு விசயம் தெரிந்திருக்க நியாயமில்லை. தன்னுடைய வீட்டில் பேய்த் தொல்லை இருப்பதையும் தூக்கமின்மைக்கு அதுதான் காரணமென்பதையும் அந்த டாக்டருக்கு எடுத்துச் சொல்ல முயன்றான் குமரன். அவனது அரைவேக்காட்டு நோர்வேஜிய மொழி அறிவு அதற்கு ஒத்துவரவில்லை. மூன்றாம் பேர்வழிக்கு இந்தவிடயம் தெரியவேண்டாம் என்பதால் மொழிபெயர்ப்பாளர் ஏற்பாடுக்கு குமரன் ஒருப்பட வில்லை. அவனது கதைகளையெல்லாம் கேட்ட அந்த வைத்தியர் 'இரண்டு வருடங்களாக இந்தியாவுக்கு சென்று அம்மாவைப் பார்க்கவும் கமலியைத் திருமணம் செய்யவும் ஏன் என்னால் முடியாமலிருக்கிறது’’ என்று ஆச்சரியத்தோடு வினவினார். 'எனக்கு முதலில் இந்திய விசா கிடைத்தது. அப்போ எனது தங்கை செல்விக்கு சீதனம் உழைத்து அனுப்ப வேண்டியிருந்த தால் இந்தியாவுக்குப் போக முடியவில்லை. இப்போ இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா விசா தருகிறார்கள் இல்லை’ என்று தனக்குத் தெரிந்த நோர்வேஜியமொழி யில் சிரமத்துடன் எடுத்துச் சொன்ன போதும் அவன் மனமுடைந்து அழுதான். இலங்கைத் தமிழன் என்ப தால் இந்திய விசா கிடைக்கவில்லையா என்று அந்த வைத்தியர் ஆச்சரியப்பட்டார். டாக்டர் இரண்டு சீட்டுக்கள் எழுதித் தந்தார். ஒன்று மருந்துக்கடைக்கு. மற்றது இந்தியத் தூதுவருக்கு. குமர்

செக்குமாடு 0 389
னின் மனநிலையை கருத்திற்கொண்டு அவனுக்கு இந்தியா விசா வழங்கி உதவிட வேண்டும் என கோரும் இந்திய தூதுவருக்கான சிறு கடிதம் அது. டாக்டர் நல்லவர் போலத்தான் தோன்றினார். அவரு டைய மாத்திரைகளுக்கு பேயை விரட்டுகிற சக்தி இருக்" கிறதாகவே பட்டது. முன்பு மந்திரித்த விபூதிக்கும் நூலுக்கும் பழக்கப்பட்டது போல இந்த மருந்துக்கும் பேய் பழக்கப்பட்டு விடுமோ என குமரன் அஞ்சினான். வைத்தியரின் கடிதத்தை பார்த்து விட்டு இந்திய விசா தந்துவிடுவார்கள் என்றும் நம்பத் தலைப்பட்டதில் அவன் மீண்டும் உயிர்க்கத் தொடங்கியிருந்தான். வைத்தியரை சந்தித்த இரவு முழுக்க அவன் மூசி மூசி தூங்கினான். நெடுநாளைக்குப் பிறகு கனவுகள் கண்டான். காலையில் வேலைக்கு வருகிறபோதும் பேயின் சேட்டை இருந்தது. இரண்டொரு தடவை, ஒடிக் கடந்து செல் கிற மோட்டார் வண்டிகளுக்குள்பாய்ந்து அந்தப் பேயை வண்டிச் சக்கரங்களுக்குள் நசித்துப் போட வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. வருகிற வழியில் நெடுநேரம் ஆற்றுப்பாலத்தில் நின்றான். ஆற்றில் பாய்ந்தால் பேயை ஆற்றில் மூழ்கடித்து விட்டு தான் மட்டும் தப்பித்து கரைசேர முடியுமா என்பது பற்றி அவனால் ஒர் இறுதி முடிவு எடுக்க முடியவில்லை. எனினும் நின்று முடிவு எடுத்து ஆறுதல் அடைகிறது சாத்தியமில்லை. குவிகிற எச்சில் தட்டுகளும் கழுவி ஒய்கிற மெசினும் அவனை வா, வா என அதட்டிக் கொண்டிருந்தன. நோர்வே நாட்டுக்கு வருகிற வரைக்கும் எச்சில் தட்டு களற்ற ஒரு உலகத்தில் வாழ்ந்தவன் குமரன். படிக்கிற போதும் சரி பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய போதும் சரி அவனது உலகத்தில் எச்சில் தட்டுக்களும்

Page 199
3ðÓ CJ uöflujú uáöruú
அழுக்குச் சமையல் பாத்திரங்களும் இருக்கவில்லை. எப்போதாவது அதிகாலைப் பொழுதில் எழுந்து வெளியில் வந்தால் புழைக்கடையில் வாழைமரக் கூட்டத்தின் அடியில் லாம்பு வெளிச்சம் தெரியும். கொட்டும் பனியில் எச்சில் தட்டுக்களையும் சமையல் பாத்திரங்களையும் குவித்து வைத்து பல்லுத் தேய்த்த படி கனகம்மாவும் குந்தவையும் பேசிக் கொண்டிருப் பார்கள். மெசினில் இருந்து கழுவிய பாத்திரங்களை வெளியே எடுத்து வைத்த குமரன், புதிதாக அழுக்குப் பாத்திரங்களை அதன் வாயுள் திணித்து ஓடவிட்டு விட்டு, மீண்டும் சன்னல் அருகே வந்தான். இப்போதும் கனவுச்சூரியன் மலைமேல் சிரித்துக் கொண்டிருந்தது. சூரியனுக்குக் கீழே மலையில் புதிதாக ஒரு இந்துக் கோவில் இருந்தது. "ஐயோ எனக்குத் தீர்ப்புநாள் வந்து விட்டது' என்று பரபரப்படைந்தான் குமரன். வீட்டில் இருந்து உணவு விடுதிக்கு வரும் வழியில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. ஓரிருசமயம் அந்தத் தேவாலயத்துக்குப் போன அவன் கடவுளுடன் கூட பேசியிருக்கிறான். ‘என்னை விசாரித்து தண்டனை வழங்கிவிடு' என்று முழங்காலில் இருந்து வேண்டுதல் செய்திருக்கிறான். ஆனால் அப்பொதெல்லாம் என்னை சிலுவையால் இறக்கி விடு என்று கடவுள் அவனைக் கேட்டுக் கொள்வார். ஒருமுறை கடவுளுக்கு உதவப் போனவனை கோவிலின் காவல்காரன் பிடித்துக் கொண்டான். கடவுளைச் சிலுவையில் இருந்து இறக் கினால் சேச்சின் வருமானம் போய்விடுமென காவல் காரன் கவலைப்பட்டிருக்க வேண்டும். காவல்காரனின் பிடியில் இருந்தபோதே 'கடவுளே எனது பேயைத் துரத்தி விடு' என்று கத்தினான். 'நீ என்னைக் காப்பாற்று உன்னை நான் காப்பாற்றுகிறேன்" என்பதுதான் குமரனின் நிலைப்பாடு. 'குந்தவையின் சிதைந்த கருவும் நாகலிங்கத்தின் பேராசையும்தான் உன்னைப் பிடித்த பேய்கள்' என்று கடவுள் சொல்லி

Cassalés isir6 0 3g f' முடிக்க முன்னம்ே கோவில் காவல்காரன் குமரணிை முற்றத்துக்கு இழுத்து வந்துவிட்டான்.
மலையில் தெரிந்தது இந்துக்கோவில். இந்துக்கடவுளர் களுக்கு தன்னை பீடித்த பேய்களை துரத்துகிற கெட்டித்தனம் இருக்குமென குமரனுக்குத்தோன்றியது.
மீண்டும் திரும்பிப் போய் பாத்திரம் கழுவும் மெசினுக்கு வழமையான பணிவிடைகள் செய்து விட்டு சன்ன லண்டை வந்தபோது சூரியனும் இந்துக் கோவிலும் மறைந்து விட்டிருந்தது. உணவு விடுதியில் ஆட்களும் சந்தடியும் குறைந்து காணப்பட்டது.
பல்கலைக்கழக தேர்வு எழுதி முடித்த வசந்த கால நாள்கள் குமரனுக்கு ஞாபகம் வந்தது. அது அவனைச் சுற்றி தேவ தூதர்களும் தேவதைகளும் இறகு கட்டிப் பறந்து திரிந்த காலம். பரீட்சை முடிவு எப்படி அமையுமோ என்கிற விசாரம் இருந்தது. கமலியைப் பிரிந்து வெளிநாடு செல்வது இனியும் தவிர்க்க இயலாதது என்கிறதை அவன் உணர்ந்தான். பிரிவின் தவிர்க்க இயலாமையை கமலியும் உணர்ந்தாள். அவளது நெஞ்சு துணுக்குற்று நார் நாராக உடைந் தது. எதற்கும் துணிந்தவளாக திடீரென்று கமலி ஒத்துழைக்க தொடங்கியதில் இருவருமே கவலை மேகங்களுக்கு மேலே சுடர்ந்த இன்பத்துள் சிறகுகட்டிப் பறந்தார்கள். காலம் தனது திசையில் மட்டுமே நகர்ந்து சென்றது.
குமரனது மனப் பதற்றங்களுக்கு பல காரணங்கள் இருந்தன. பரீட்சைப் பெறுபேறுகள் எப்படி அமை யுமோ. வெளிநாட்டுக்கு ஆட்களை அகதிகளாக அனுப்புகிற பயண முகவர்கள் காசை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விடுவார்களோ என்பன போன்ற வழமையான ஏக்கங்களைவிட வெளிநாட்டுப் பயணத்
துக்கு முன் ஒரு தடவையாவது கமலியுடன் நிறை

Page 200
392 O Luawfiqh uanawuqh
கலவிச் சுகம் தேடிய மனதில் துக்கம் பெரிதாக இருந் தது. ஒருநாள் அதுவும் கைகூடியது.
உணவு விடுதி மூடப்பட்டதும் தெருவில் இறங்கிய குமரன் பஸ் தரிப்பை நோக்கி விரைந்தான். இரண்டு பக்கமும் கட்டிடங்களில் வண்ண வண்ண கீற்றுக்களாய் குறிஒளிகள். தெருவெல்லாம் வசந்த காலத்து இரவை அனுபவிக்கிற இளைய தலைமுறையின் கும்மாளம். இவற்றையெல்லாம் அனுபவிக்கிற மனித ரசனையை ஏற்கனவே அவன் இழந்து விட்டிருந்தான். சகோதரி களது சீதனம், பெற்றோரின் பேராசை, வயசு வந்தும் காதலும் காமமும் இன்மை என்பவற்றுள் நசிந்து சிதை கிற யாழ்ப்பாணத்து அகதி இளைஞர்கள் தருகிற முதல் பலி மனித ரசனை தானே.
பஸ் தரிப்பில் யாருமில்லை. வெளியே மெல்லிய இருளும் குளிரும் தலையெடுத்திருந்தது. நான்கு குமரிகளும் மூன்று இளைஞர்களும் பியர்ப் போத்தல்களுடன் அவனைக் கடந்து சென்றார்கள். அவர்களில் ஒருத்தி தன்னைப் போலவே கபில நிறமாக இருந்ததில் அவனுக்கு சிடு சிடுப்பு ஏற்பட்டது. அந்தப் பெண் தமிழச்சியாக இருக்கமாட்டாள் என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டான். வானம் மேலும் இருண் டது. ஏன் இன்னமும் பஸ் வண்டி வரவில்லை என்பது அவனுக்குப் புரியவில்லை. மீண்டும் அவன் தனது பாவப் பட்ட வாழ்வின் நினைவுக் குளிக்குள் இடறி வீழ்ந் தான். குந்தவைக்கு சீதனமாக ஐந்து லட்சம் ரூபாய் அனுப்பியதுமே கமலியைத் திருமணம் செய்து கொள் வதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார் நாகலிங்கம். பின்னர் அவர், உனக்கு நல்ல சீதனத்தில் திருமணம் , பேசி வருகிறார்கள். சீதனத்தை வாங்கி செல்விக்கு கொடுத்துவிட்டு அவர்களில் ஒருத்தியைத் திருமணம் செய்து கொள் என வலியுறுத்தத் தொடங்கினார்.

செக்குமாடு 0 393
நாகலிங்கத்தை முதல் முதலாக எடுத்தெறிந்து அவன் கடிதம் எழுதியதே கமலியின் விடயத்தில்தான். 'உங்க ளுக்கு காதலைப்பற்றி ஒன்றுமே தெரியாது. இதற்கு மேலும் எங்கள் காதலுக்கு குறுக்கே நின்றால் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வேன்" என்று கோபமும் துணிச்சலும் மிகுந்திருந்த ஒரு தருணத்தில் கடிதமெழுதி அஞ்சல் செய்தான். அதன் பின் நாகலிங்கம் வாய்மூடி மெளனமாக ஒதுங்கிக் கொண் டார். குந்தவையின் திருமணம் முடிந்த கையோடு கனகம்மா கமலியை அழைத்துக் கொண்டுசென்னைக்கு வந்து சேர்ந்தாள். எல்லாம் கனவு போல இனித்தது. ஒரு கனவில் பசிய சோலைகளின் ஊடாக அவன் சிறகசைத்துப் பறந் தான். திடீரென்று விபத்தில் அகப்பட்டது வாழ்வு. செல்வியின் கடிதம் அவனது இதயத்தை ஊனப்படுத்தி யது. சகமனிதர்கள் மீதான நம்பிக்கை அதிர்ந்தது. **அண்ணா எனது பெயருக்கு ஐந்து லட்சம் ரூபாய் வங்கியில் போட்டு விட்டு நீ கமலியைத் திருமணம் செய்து கொள்ளலாம்' என செல்வி எழுதியிருந்தாள். நாகலிங்கமும் தனது நெடு நாளைய மெளனத்தைக் கலைத்து செல்வியின் கடிதத்துக்குக் கீழே **அவள் மூர்க்கத்தோடு இருக்கிறாள். எனக்குப் பயமாகவிருக் கிறது. எதுவும் செய்துவிடுவாள்.’’ என்று கிறுக்கியிருந் தார். எதுவும் செய்வதென்பது, தற்கொலை செய்தல், போராளியாக இயக்கத்துக்கு ஓடுதல், குடும்பத்துக்கு அவமானம் விளைவிக்கக் கூடிய மாதிரியான சாதி தாழ்ந்த காதல் திருமணம் செய்து கொள்ளுதல் என பல்வேறு அர்த்தங்களாக முடிச்சு அவிழ்ந்ததில் குமரன் பதறிப் போனான். செல்விக்கு ஏற்கனவே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனோடு கடிதத் தொடர்பு இருந்தமை

Page 201
39° i fiMaia ålder nyå
வீட்டில் கண்டு பிடிக்கப்பட்டதும் கட்டுக்காவல் அதிகரிக் பட்டதும் குமரனுக்கு ஞாபகத்தில் வந்தது. அதன்பின் செல்வி இயக்கத்துக்கு ஓடிவிடவும் எத்தனித்திருக்கி றாள். தன்மீது அனுதாபம் இல்லாத ஒருவனாகவும், காதலைப் பற்றிய மனிதப் புரிந்துணர்வில்லாத ஒருவ னாகவும், அவள் குமரனை பார்த்தாள். ‘வாழ்தல் என்பது வாழ்வைப் பணயம் வைத்து அந்தஸ்துக்காக ஆடும் சூதல்ல. அண்ணாவோடு நீ வாழ்வை அனுப விக்க முடியும் என்று வீண்கனவு காணாதே' என்று கமலிக்குக் கூட புத்திமதி கூறி எழுதியிருக்கிறாள் செல்வி.
செல்வியின் கடிதம் குமரனை மட்டுமல்ல கமலியையும் கன கம்மாவையும் கூட கிழித்துப்போட்டது. இது செல்வி யின் வேலையல்ல. அந்த சுயநலம் பிடித்த கிழவனின் சதியென நாகலிங்கத்தைத் திட்டி கடிதம் எழுதியிருந்
தாள் கனகம்மா.
கமலியை உனது கையில் பிடித்துத் தராமல் நான் வீடு திரும்பமாட்டேன். உனக்காக சென்னையில் கமலியுடன் காத்திருப்பேன் என எழுதி சிவப்புமையில் அடிக்கோடு வேறு போட்டிருந்தாள் அவள், அடிக்கோடு கமலியின் வேலையென்பதை குமரனும் புரிந்து கொண்டான். கமலியைத் திருமணம் முடித்தபின் இருவருமாக வேலை செய்து ஒருவருடத்துக்குள்ளேயே செல்வியின் சீதனம் ஐந்து லட்சம் ரூபாவும் அனுப்பி வைப்பதாக குமரன் எழுதிய கடிதத்துக்கு வீட்டில் இருந்து ஒரு பதிலும் வரவில்லை.
தனது மனிதக் கனவுகளை புதைத்துவிட்டு இரவும் பகலும் வேலை வேலையென்று சிதைந்து போகிற அவலம் அவனது இருப்பில் இப்படித்தான் தொற்றிக் கொண்டது. 'எனக்கென்று இந்த உலகத்தில் இருப்ப தெல்லாம் அம்மாவும் கமலியும்தான்" என அவன்

d4!? Unedigbe o o 39 iš
தன்து நீர்ட் குறிப்பில் எழுதினான். 'மற்ற எல்லோ ருமே போனபிறவியில் எனக்கு வட்டிக்கு பணம் தந்தவர்கள். இந்தப் பிறவியில் வெனிஸ் நகரத்து சைலொக் போல உறவுகளாகப் பிறந்து வந்திருக் கிறார்கள்.' சம்பந்தப் படுகிறவர்களால் சகமானுடமாக் அடை யாளப் படுத்தப் படுகிறதுதான் பாக்கியம். இதனா லேயே மனித இருப்பு வாழ்வாகச் செழித்து அர்த்தப் படுகிறது. நோர்வே வந்து சேர்ந்ததிலிருந்தே குமரன் இந்த வரப்பிரசாதத்தை இழந்து போனான். இதுதான் துர் அதிர்ஷ்டம். தன்னை தனது மனித முகத்தை சிதை சிதையென்று சிதைத்து ஐந்து லட்சம் ரூபாய் திரட்டி ஊருக்கு அனுப்பிய போது குமரனின் தலையில் புதிய இடி யொன்று விழுந்தது. அதிர்ச்சி தருகிற சென்னைச் செய்திகளும் அதைத் தொடர்ந்து தூதரகம் தமிழர்களுக்கு விசா வழங்குவதை திடீரென்று நிறுத்தி வைத்ததும் அவனது கனவுகளை நிர்மூலமாக்கியது.
"ஐயோ நான் என்ன பாவம் செய்தேன்' என பஸ் தரிப்பில் நின்றபடி வாய் திறந்து அழத் தொடங்கினான் குமரன். காளைக்கே மீண்டும் தூதரகத்துக்கு செல்ல வேண்டும் ான்றும் அவன் தீர்மானித்துக் கொண்டான். விசா கிடைத்தால் சிதம்பரம் கோவில் உண்டியலில் இந்தியப் பணம் பத்தாயிரம் போடுவதாகவும் கதிர் காமத்துக்கு ஆயிரம் ரூபாய் தபாலில் அனுப்புவதாகவும் பஸ்சில் இருந்து கொண்டே அவன் தாராளமாக நேர்த்தி வைத்தான். இத்தொகை இரண்டு மாதங் களுக்கு முன்னம் சிதம்பரத்துக்கு ஐயாயிரமும் கதிர் காமத்துக்கு ஐநூறும் என்றிருந்தது. பணம் தேடுகிற

Page 202
396 fin Lusfuqúb Luar quh
சக்தியைத் தவிர ஏனையவற்றை எல்லாம் ஏற்கனவே இழந்து போயிருந்தவனுக்கு முடிந்தது எல்லாம் அவ் வளவுதான். கமலியை நோர்வேக்குக் கூப்பிட்டுவிட்டால் தனது துயரங்கள் எல்லாம் தீர்ந்துவிடும் என அவன் மனப்பூர்வ மாக நம்பினான். வேலை முடிந்து வீடு திரும்புகிற போது கமலினி வீட்டில் இருப்பாள். எச்சில் பாத்திரங் கள் எல்லாம் கழுவி அடுக்கி இருக்கும்.உணவு விடுதிக்கு வருகிற நோர்வீஜிர்களைப்போல சாப்பாட்டு மேசை யில் போய் உட்கார வேண்டியதுதான். கமலினி செல்லம் கொஞ்சிக் கொஞ்சி அவனுக்கு உணவு பரிமாறு வாள். 'பெண்கள் குந்தியிருந்து அரட்டை அடிக்கிறது எனக்குப் பிடிக்காது' கமலி வந்த உடனேயே ஒரு நல்ல தொலைக்காட்சிப் பெட்டியும் வி.சி.ஆரும் வாங்க வேண் டும் என்று அவன் மீண்டும் உறுதி செய்து கொண் டான். அவன் தனது கனவுகளிலிருந்து மீண்டு பஸ்ஸில் இருந்து கீழே இறங்க சற்று நேரம் எடுத்தது. நள்ளிரவிலும் சூரியன் மறையாது நிற்கிறகாலமது. எனினும் வானில் பரவியிருந்தது அதிகாலை வெளிச்சம் தான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். ஒற்றையடிப் பாதையில் இறங்கி வீட்டை நோக்கி நடந்தபோது பிசாசு பின் தொடர்ந்து வருவதை குமரன் உணர்ந்தான். திரும்பிப் பாராமலே தன்னைத் தொடர்வது ஒரு பெண் பிசாசு என்பதை அவன் ஊகித்து அறிந்து கொண் டான். எதிரில் பூத்துக்கிடந்த அப்பிள் தோட்டம் இன்னமும் இருண்டு கிடந்தது.

திருக்கடைக் காப்பு
கதைக் களஞ்சியத்துக்கு முன்னோட்டமாக, புலம் பெயர்ந்த நாடுகளின் படைப்பாளிகளுடைய கதைத் தொகுதி ஒன்றினை வெளியிடும் தீர்மானம், என் இந்தத் தமிழ்நாட்டுப் பயணத்தின்போது சடுதியாக எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளும் பணி என்மீது சுமத்தப்பட்டது. கதைக் களஞ்சிய முயற்சிகளிலே என்னுடன் இணைந்திருக்கும் நண்பர் லெ. முருகபூபதியுடன் முதலியே தொடர்பு கொண்டேன். அவர் திரட்டித் தம் வசம் வைத்திருந்த சுமார் பத்துக் கதைகளை உடன் அனுப்பி உதவினார். என் இலக்கிய நண்பர்களாக இனிமை பாராட்டும். மு. நித்தியானந்தன், கலாமோகன், 'disits) ஆசிரியர் செல்வம், 'தாயகம்' ஆசிரியர் ஜோர்ஜ், 'நான்காவது பரிமாணம்’ ஆசிரியர் நவம் ஆகியோ ருடன் தமிழ்நாட்டிலிருந்தே தொடர்பு கொண்டேன். இந்த ஐவரும் என் உதவிக்கு வந்தனர். அனைவருக்கும் என் நன்றிகள். இவர்களுள் நித்தியின் உதவியை விசேடமாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஐரோப்பியக் கதைகள் என்னும் பகுதி ஏழு நாடுகளைத் தக்கவாறு பிரதிநிதித்துவப் படுத்துதல் வேண்டும் என்பதிலே அவர் ஊன்றிய அக்கறை அசாதாரணமானது. இதற். காகவே அவர் பல பயணங்களை மேற்கொண்டார். இங்கு இடம்பெறும் பாதிப் படைப்புகள் அவர் மூலம் கிடைத்தவையே. ஐரோப்பாவின் முக்கிய படைப்பு களும் படைப்பாளிகளும் விடுபட்டுவிடலாகாது என்ப திலே அவர் ஊன்றிய அக்கறை, தமிழ் இலக்கியத்தில் அவர் கொண்டுள்ள ஆத்மார்த்த ஈடுபாட்டினைக், காட்டுவதாக விளங்கி, மகிழ்கின்றேன். இத்தொகுதியிலே மூன்று கண்டங்களைச் சேர்ந்த, ஒன்பது நாடுகளில் வாழும் முப்பத்தொன்பது கதைஞர் களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. அருண் விஜய ராணி, ஆதவன், கலாமோகன், மஹாலிங்கம், மாத்தளை

Page 203
சோமு, முருகபூபதி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ஜெயபாலன் ஆகியோருடைய எழுத்தாற்றல், அவர்கள் புலம் பெயர்ந்து செல்வதற்கு முன்னரே அங்கீகரிக்கப்பட்டவை. ஆனந்த் பிரசாத், க. நவம், புவனன், மாவை நித்தியானந்தன், முருகபூபதி, யாழ் பாஸ்கர், ஜோர்ஜ் ஆகிய பலரும் சிறுசஞ்சிகைகள் வெளியிடும் இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள். ஜிவமுரளி, ஜெயபாலன் போன்றவர்கள் கவிதைத் துறையிலே வெற்றிபெற்ற பின்னர் கதைத்துறைக்கு வந்தவர்கள். தமயந்தி, ஜெயக்கொடி, ஜெயந்தன் சிவசாமி ஆகியோருடைய நல்ல கதைகள் சக்தி", "சுமைகள்’ ஆகிய சஞ்சிகைகளிலே வெளி வந்த தாக நினைவு. பிரான்ஸில் வாழும் வாசுதேவனின் * ஊஞ்சல்' என்னும் கதையும் நல்லது. இவர்களுடைய ஆக்கங்களை இற்றைவரை பெற முடியவில்லை. *நந்தி', 'வசந்தன்' ஆகிய அவுஸ்ரேலியக் கதைஞர் களுடைய கதைகள் உரிய காலத்திலே கிடைக்க வில்லை. கனடாவில் வாழும் மூத்த தலைமுறை எழுத்தாளர் குறமகள், இளந் தலைமுறை எழுத்தாளர் மொனிக்கா ஆகியோருடைய புலம்பெயர்ந்த வாழ்க்கை நிலையைச் சித்திரிக்கும் கதைகளும் நமக்குக் கிடைக்க வில்லை. இதில் இடம்பெறும் கதைஞர்களுடைய வேறு படைப்புகள், இவற்றைப் பார்க்கிலும் தரமான வையாகவும் இருக்கலாம். ஒப்புக் கொள்கிறேன். இவை எனக்குத் தெரிந்த சங்கதிகள். என் பார்வைக்குக் கிட்டாத படைப்புகளும், என் கவனத்திலே படாத கதைஞர்களும் இருத்தல் சாத்தியமே. எனவே, இத்தொகுதியிலே அனைத்து ஆற்றல்களும் முழுமை யாக இணைக்கப்பட்டுள்ளன என்று நான் உரிமை பாராட்டவில்லை. இனிவரும் தொகுதிகளிலாவது அவர்களுடைய ஆக்கங்களையும் இணைத்துக் கொள் வதற்கான வாய்ப்புகள் குதிரும் என்று நம்புகின்றேன்.

3a)
நம்பிக்கைதான் முழுத்துவம் நோக்கிய பயணத்தின் ஆதார சுருதி. ஒவ்வொரு கதையின் ஆரம்பத்திலும், எழுத்தாளர் களுடைய புகைப்படங்களும், அவர்கள் பற்றிய ஆதாரக் குறிப்புகளும் வெளியிட வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தது. சிலரைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவதே மகாசிரமமாக அமைந்தது. உதாரணமாக, *கலாசாரங்கள்" எழுதிய சந்திராதேவி, ஆணா பெண்ணா, சொந்தப் பெயரா புனைபெயரா, "சக்தி' யில் இக்கதை வெளிவந்த போதிலும் அவர் நோர்வே வாசியா என்கிற விபரங்களைத் தொலைபேசித் தொடர் புகள் கொண்டும் அறிய முடியவில்லை. சிலருடைய படங்களையும், பலர் பற்றிய குறிப்புகளையும் வெளி யிட்டிருக்கலாம். சிலர் பற்றிய விபரங்களையேனும் நம் அஞ்ஞானம் காரணமாக வெளியிடாது விடுதல் தர்மமாகாது. வீக்க தாக்கங்களுக்கு இடமளித்த கோல மும் காட்டும். எனவே, இந்த ஆசையை இத்தொகுதி யில் துறந்தோம். எதிர்காலத்தில், படைப்பாளி களுடைய ஒத்துழைப்புடன், கதைஞர் பற்றிய விபரங் களுடன் படங்களையும், பிரசுரித்து முழுமைப்படுத்த முயல்வோம். இத்தொகுதியிலுள்ள கதைகளைத்தேர்ந்தெடுப்பதிலும், அதன் குறை நிறைகளைப் பாராட்டுவதிலும், ஒரு சில கதைகளிலே குறைந்தபட்ச, அவசியமான, திருத்தங் களைச் செய்வதிலும் நண்பர் இந்திரா பார்த்தசாரதி மிகவும் உற்சாகத்துடன் உதவினார். இத்தொகுதியிலே ஒரு நிதான அணுகுமுறையைச் சமைப்பதில் அவர் பங்களிப்பு மகத்தானது.
இந்தத் தொகுதிக்கு முன்னுரை தந்த குமுதம் ஆசிரியர் சுஜாதாவுக்கும், அழகிய அட்டை அமைத்துத் தந்த ஓவிய நண்பர் மருதுவுக்கும். இந்நூலுக்குக்

Page 204
400
கோலாகலமான வெளியீட்டு விழா ஏற்பாடு செய்து தந்த என் மாணவனும் மதுரா டிராவல் சர்வீஸ் தலைவ ருமான வி.கே.டி.பாலனுக்கும், பிறவழிகளில் ஊக்கந் தந்த நண்பர் தியாகேசனுக்கும் என் மனசார்ந்த நன்றிகள். இத்தொகுதியின் பொலிவுக்கும் சிறப்புக்கும் படைப் பாளிகளும், இதில் பலவகைகளிலும் உதவிய அனைவ ருமே பொறுப்பு. ஆனால் குறைபாடுகள் அனைத்துக் கும் கூட்டுத் தொகுப்பாசிரியருள் ஒருவன் என்ற முறை யில் நான் மட்டுமேபொறுப்பேற்றுக்கொள்ளுகின்றேன். இதன் அனைத்துக் குறைபாடுகளையும் தயவு கூர்ந்து என் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள். தயவு தாட்சண்யம் பாராட்டாமல் உங்கள் விமர்சனங்களை எழுதுங்கள். அவை இப்பணியைமேலும் சீராக்க உதவும். உங்கள் ஆலோசனைகள், ஆதரவுகள், அக்கறைகள் அனைத்தும் புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளி களுடைய தமிழ் ஒர்மத்திற்கு ஓர் அங்கீகாரத்தினையும் மரியாதையையும் வென்றெடுக்கும் என்று சத்திய மாகவே நம்புகின்றேன். s
எஸ். பொன்னுத்துரை
* வேரும் வாழ்வும்’ என்ற மகுடத்தில்,
புலம் பெயர்ந்த
6ġpůju6ODůlu ir sí i mith Ra pus Catoms களின் சிறுகதை
ඊ. 6ir அடங்கிய //l( $bar அடுத்த தொகுதி ded.222 யின் பணிகள் a257%A4 துவங்கியுள்ளதை
அறியத் தருவதில் O(2) tof-2567 மகிழ்கின்றேன்.
என் தொடர்பு
முகவரி: -


Page 205
சந்திரிகாஞ்சன் மாத்தளைச் சோமு மான முருகபூபதி யாழ் பாஸ்கர் யோகன் ரதி வாசுே விஜயராணி அருட்குமான் ராஜேஸ்வரிபால சாள்ஸ் லோகா செல்வ மதிந்திரன் ஆதவன் முல்லையூரான் சந்திாதேவி தேவகி இராம sannaisit staggious east Louisits.T கருணாகரமூர்த்தி சிறிங்கன் கருணாகரமூர் சுசீந்திரன் தேவா ஜீவமுரளி ஜெயபாலன் அளவெட்டி சிறிசுக்கந்தாசா ஆனந்த்பிரசாத் சக்கரவர்த்தி நவம் நீலாகுகதாசன் பவான் ஜோர்ஜ் குருசேவ் ஜோர்ஜ் குருசேவ் ஜோர்ஜ் சந்திரிகாஞ்சன் மாத்தளைச் சோமு மாவை முருகபூபதி யாழ் பாஸ்கர் யோகன் ரதி வாசுே விஜயாணி அருட்குமான் ராஜேஸ்வரிபால் சாள்ஸ் லோகா செல்ல மதிந்திரன் ஆதவன் ச முல்லையூரான் சந்திாதேவி தேவகி இராமந கலாமோகன் கனவச்செல்பன் சுகன் புலபனான் கருணாகரமூர்த்தி சிறிங்கன் கருணாகரமூர்த் கந்திரன் தேவா ஜீவமுாளி ஜெயபாலன் அளவெட்டி சிறிசுக்கந்தாசா ஆனந்த்தி சக்கரவர்த்தி நவம் நீலாகுகதாசரி ஜோர்ஜ் குருசேவ் ஜோர்ஜ் து சந்திரிகாஞ்சன் மாத்தா முருகபூபதி யாழ் பாஸ்கர் விஜயராணி அருட்கு Ill HalnehIT முல்லையூரான் சந்திர IELTTIEEE Ell கருணாகரமூர்த்தி சிறிங் சுசீந்திரன் தேவா ஜீவமுரளி ஜெயபாலன் அளவெட்டி சிறிகக்கந்தராசா ஆனந்த்பிரசாத் சக்காவர்த்தி நவம் நீலாகுகதாசன் பவான் ஜோர்ஜ் குருசேவ் ஜோர்ஜ் குருசேவ் ஜோர்ஜ் சந்திரிகாஞ்சன் பாத்தளைச் சோமு மாவை முருகபூபதி யாழ் பாஸ்கர் போகன் தி வாசுே விஜயாணி அருட்குமான் ராஜேஸ்வரிபால சாள்ஸ் லோகா செல்வ மதிந்திரன் ஆதவன் சு முல்னபூான் சந்திராதேவி தேவகி இராமந காமோகன் கலைச்செல்வன் சுகன் பு:பன் கருணாகரமூர்த்தி சிறீரங்கன் கருணாகரமூர்த் கசிந்திரன் தேவா ஜீவமுரளி ஜெயபாலன் அளவெட்டி சிறிசுக்கந்தராசா ஆனந்த்பிரசாத் சக்கரவர்த்தி நவம் நீாகுகதாசன் பவான் ஜோர்ஜ் குருசேவ் ஜோர்ஜ் குருசேவ் ஜோர்ஜ் சந்திரிகாஞ்சன் மாத்தளைச் சோமு மாலை முருகபூபதி யாழ் பாஸ்கர் யோகன் ரதி வாகே விஜயாணி அருட்குமாரன் ராஜேஸ்வரிபால சாள்ஸ் லோகா செல்வ மதிந்திரன் ஆதவன் முல்லையூரான் சந்திாதேவி தேவகி இராமர anëtasit arsity gjelist i ulët si :
 
 

வேதாசன் சாள்ஸ் லோகா செல்வ மத்தி தள் முல்லையூான் சந்திராதேவி தேவக் E கலாமோகன் கலைச்செல்வன் ககன் புனுள் = திசிறிங்கள் கருணாகரமூர்த்தி சிங்கன் து சுசீந்திரன் தேவா ஜீவமுரளி ஜெயபாலன் கந்தசாமி கிரிதரன் அளபெட்டி சிறிசுக்கந்தராக ஹாலிங்கம் சக்கரவர்த்தி நவம் நீவாகுகதா
துருசேவ் ஜோர்ஜ் குருசேவ் ஜோர்ஜ் குருகே நித்தியானந்தன் சந்திரிகாஞ்சன் மாத்தனை பன் முருகபூபதி யாழ் பாஸ்கர் யோகன் தி பிரமணியம் விஜயராணி அருட்குமான் ராே வைதான் சாள்ஸ் லோகா செல்வ மதிந்திரன் தன் முல்லையூரான் சந்திராதேவி துேவக் ଛୋଲା லாமோகன் கலைச்செல்வன் சுகன் புன்ை தி சிறீரங்கன் கருணாகரமூர்த்தி சிங்கன்
1:ér gifsi LLEIST Eg ஆாகாமூர்த்தி சிறீரங்கன் க சிந்திரன் தேவா ஜீவமுரளி ஜெயபாலன் ந்தசாமி கிரிதரன் அளவெட்டி சிறிக்கந்தார ாலிங்கம் சக்கரவர்த்தி நவம் நீலாகுகதாசன் குருசேவ் ஜோர்ஜ் குருசேவ் ஜோர்ஜ் குருசேல் நித்தியானந்தன் சந்திரிகாஞ்சன் மாத்தளைத் பன் முருகபூபதி யாழ் பாஸ்கர் யோகன் ரதி வா பிரமணியம் விஜயராணி அருட்குமான் ராஜே வேதாசன் சாள்ஸ் லோகா செல்வ மத்திரன் தன் முல்லையூரான் சந்திராதே து
ாமோகன் கலைச்செல்வன் சுகள் புனன் த
சிறிங்கன் கருணாகாமூர்த்தி சிறீரங்கன் க சீந்திரன் தேவா ஜீவமுரளி ஜெயபாலன் தசாமி கிரிதரன் அளவெட்டி சிறிசுக்கந்தராசா ாலிங்கம் சக்கரவர்த்தி நவம் நீயாருகதாசன் குருசேவ் ஜோர்ஜ் குருசேவ் ஜோர்ஜ் கு நித்தியானந்தன் சந்திரிகாஞ்சன் பாத்தன: பன் முருகபூபதி யாழ் பாஸ்கர் போகன் தி வா பிரமணியம் விஜயராணி அருட்குமாரன் ராஜேஸ் வைதாசன் சாள்ஸ் லோகா செல்வ பதிந்தின் ன் முல்லையூான் சந்திாதேவி தேவகி இரா ாமோகன் கலைச்செல்வன் சுகன் புரான் கா
E. Ilire