கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வம்சவிருத்தி

Page 1


Page 2
பற்னொரு
காதகள்
வம்ச விருத்தி
அ. மூத்துலிங்கம்


Page 3
WAMSA WIRUTH
* Eleven New Storic
in Tumi
by A. M Y TITI U LI NGAM
First Edition :
17 April 1996
Price: Rs. 80
Pages 268 + xх
(C) A M TTULING AM
lustrations : TROTSKY MARU DU
This Edition is for Sale in India and Sri Lanka Only
ISBN 1876 195g 18
Published by : Dr. PoN. A NUIA
ónithira fóiliticaí
3 JNRO STREET 37578. O ARCOT ROAD 39 WANNAH STREET EASTWOOD 212 MADRAS 600 C24 BATTICALOA (EP) ASTRALA NDIA SRI LANKA
 
 

வம்ச விருத்தி
அ. முத்துலிங்கம்
அச்சு :
ஓவிய அமைப்பு : டிராட்ஸ்கி மருது
இந்தப் பதிப்பு இந்தியா மற்றும் இலங்கையில் LDIGGuo விற்பனைக்கு உரியது.
*மித்ர வெளியீடு
சிட்னி- சென்னை-மட்டகளப்பு

Page 4
Luisoy : VIII Tair pisody : IX முன்னுரை : XV qypsë sofG : XVIII
உள்ளே
கதைகள்
துரி 25 ஒரு சாதம் 44. கிரகணம் 70 விழுக்காடு 91 பீஃனிக்ஸ் பறவை 107
முழுவிலக்கு s 134 முடிச்சு : 159 ஞானம் : 182 சிலம்பு" செல்லப்பா 8 199 வம்ச விருத்தி 224
பருத்திப் பூ + 248

பொறுமையின் இருப்பிடமான என்னுயிர் மனைவி
Jóataf
என் எழுத்துப் பணிகளுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் எனதன்பு மகன்
சஞ்சயன்
என் மீது அளவில்லாத
பாசம் கொண்ட ஆசை மகள்
வைதேகி
ஆகியோருக்கு
இந்நூல்
சமர்ப்பணம்

Page 5

பதிப்புரை
*யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது சங்க காலத்து செந்நாப் புலவன் ஒருவன் கற்பித்த இனிய உலகம். அந்த உலகளாவிய மனித தேயம் போற்றப் பட்ட சங்க காலத்தில், தமிழுக்கு வளம் ஊட்டிய இன்னொரு சங்கச் சான்றோன் ஈழத்து பூதன் தேவ னார். இவர் ஈழத் தமிழரின் தாய்மொழி நேசிப்பை நாட்டினார் என ஈழத் தமிழர் கொண்டாடுவர். இது வரலாறல்ல; ஐதிகமே என்று சொல்வாரும் உளர். ஆனால், சென்ற நூற்றாண்டில் ஆறுமுகன் என்னும் இளைஞன் தமிழ்நாடு சென்றான். தனது சொல் வன்மையினால் "நாவலர்' என்று மகிமை பெற்றார். அவருடைய தமிழ் வசன ஆளுமையைத் தமிழ்நாடு ஏற்றது. இந்த நூற்றாண்டில் விபுலாந்த அடிகளாரை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தனது முதலாவது தமிழ்ப் பேராசிரியராய் சிறப்பித்தது, ஆஹா, தமிழகத்திற்கும் ஈழத்துக்கும் இடையில், எத்தகைய நாகரிகமான புரிந்துணர்வும், பரஸ்பர வித்துவ அங்கீகரிப்பும் நிகழ்ந்தது!
பிறகு, சமன்பாடுகள் மாறின. தமிழகத்திலே, வியாபாரத்திலே முதன்மை பெற்ற சஞ்சிகைகள் சில, தமிழ் இலக்கியப் படைப்புத் தங்களுடைய ஏகபோகம் என்று சத்தம் போட்டன. இலங்கை அரசியலில் "காலாள்கள்" போல நகர்த்தப்பட்ட ஈழத்தமிழர் . சிலர், "தமிழகச் சஞ்சிகைகளுக்குத் தடை விதியுங் கள்" என்ற கோஷங்கள் வைத்து ஆர்ப்பரித்தனர். இரண்டு தவறுகள் இணைந்து ஒரு சரியாகி விடுமா? இல்லை என்பது தான் உண்மை.

Page 6
இப்பொழுது மீண்டும் சமன்பாடுகள் மாறியுள் ளன. தமிழ்நாடு - ஈழம் ஆகிய இரு நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாலும், தமிழ் இலக்கியப் படைப்பும் பகிர்வும் நடைபெறும் நிதர்சனம் விடிந்துள்ளது. உலகளாவிய இந்தத் தமிழ் இலக்கிய வியாபித்தலினால், தமிழே செழிப்பும் சேமமும் பெறும் என்கிற இதம் தமிழ் நாட்டில் கனிந்துள்ளது. இத்தகைய ஒரு சகாயச் சூழலிலே, புலம் பெயர்ந்த ஈழத் தமிழருடைய இலக்கியப் படைப்புகள் உரிய வகையிலே தமிழ் நாட்டில் பிரசித்தமாகுதல் வேண்டும். அவ்வாறே, தமிழ் நாட்டின் ஆதர்சமான படைப்புகள் புலம் பெயர்ந்த ஈழத்தமிழ் வாசகர்களைச் சென்றடைதல் வேண்டும். இந்தப் பணியினை முன் னெடுத்துச் செல்வதையும் மித்ர வெளியீடு தனது இலக்கிய ஊழியமாக வரித்துள்ளது.
*வம்ச விருத்தி'யில் உள்ள கதைகள் பல, தமிழுக் குப் புதிது. இதுவரை தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகப் படுத்தாத புதிய கதைக் களங்களையும், கதைப் பொருளுக்கான புதிய அக்கறைகளையும் இத்தொகுதி யின் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு அ. முத்துலிங்கம் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ்ச் சுவைஞர்கள் மட்டு மன்றி, தமிழ்க் கதைப்படைப்பாளிகளும் வம்சவிருத்தி யினாலே பயனடைவார்களென்று நம்புகின்றேன்.
-råLi Qurér. e sy
mith Ra puBLICATIOmS
/ All( $മ 、哆 222 a2S7%A4
G)02/6r-2567

எனனுரை
'ஒஸ்கார் வொயில்டு" என்ற சிறந்த ஆங்கில அறிஞர் ஒரு நாள் முழுக்க எழுத்து வேலைகளில் மும்முரமாக இருந்தார். அவர் மதிய உணவு அருந்துவதற்காக வந்த போது அவருடைய நண்பர் ஒருவர் ‘நீங்கள் நிறைய எழுதி முடித்து விட்டீர்கள் போலிருக்கிறதே? என்றார். அதற்கு ஒஸ்கார் வொயில்டு "ஆமாம், ஒரு காமா போட்டேன்' என்று கூறினாராம். அன்று இரவு மறுபடியும் அதே நண்பர் அவரிடம் "இரவு வந்தது கூடத் தெரியாமல் விழுந்து விழுந்து எழுதிக் கொண்டிருந்தீரே! என்ன? இன்னொரு காமா போட்டீரா?' என்று கிண்டலாகக் கேட்டார். அதற்கு ஒஸ்கார் வொயில்டு, மூச்சுவிடும்நேரம் கூட எடுக்காமல்,"இல்லை, ஏற்கனவே போட்டகாமாவை மீண்டும் அடித்துவிட்டேன்’ என்று கூறினாராம்.
இந்த நிலைதான் அநேகமான எழுத்தாளர்களுக்கு” ஆனால் என்னுடைய நிலைமையோ இன்னும் மோச மானது. நான் தமிழ் பண்டிதன் அல்லன். என் அநுபவங் களையும், கருத்துக்களையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற அடக்க முடியாத அவாவிலே புறப்பட்ட சாதாரணன். ஒவ்வொரு வார்த்தையாக பொறுக்கி எடுத்து அவற்றை நேர்த்தியாகக் கோத்து, நகாசு வேலை செய்து சிறுக்தை வடிவங்களாக தருவதற்கு பல மாதங்களாகி விட்டன. இந்தக் கருக்கள் வடிவமின்றி என் மனதிலே தூங்கிக் கொண்டிருந்த காலமோ மிகப் பெரியது. ஆனால் அவற்றை எழுத்து வடிவத்திலே கொண்டு வருவதற்குத்தான் இவ்வளவு ஆக்கினைப் பட வேண்டி வந்துவிட்டது.
முப்பது வருட அஞ்ஞாதவாசத்திற்குப் பறகு திரும்ப வும் இலக்கியம் படைக்க வந்தது ஏன்? இதுதான் பலரு டைய கேள்வி? தமிழ்கூறும் நல்லுலகம் நட்டப்பட்டு போகாமல் மிகவும் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறது. அப்படியிருக்க, திடீரென்று எழுத வேண்டும் என்ற உத் வேகம் பிறந்தது எப்போது? சம்பந்தரைப்போல ஞானப்

Page 7
х
பால் குடித்து பிறக்கவில்லை என்பது நிச்சயம்; காள மேகக் கவியைப்போல எச்சில் தம்பலத்தை சுவைத்தபின் எழுந்த உற்சாகத்தில் எழுத்தாணியை எடுக்கவில்லை யென்பதும் நிசம். பிரம்மாவே வந்து வால்மீகிக்கு சந்தம் எடுத்துக் கொடுத்தது போன்ற பாக்கியமும்எனக்கு கிட்ட வில்லை; எனக்குக் கிடைத்ததெல்லாம் ஒரு நண்பருடைய முழங்கை இடிதான். -
தமிழ்நாட்டில் ஓர் இசைவிழாக் கச்சேரியை உன்னிப் பாக கேட்டுக் கொண்டிருந்தபோது பக்கத்திலிருந்த நண் பர் சள்ளையிலே ஓர் இடி இடித்து இதற்கு கால்கோள் விழா நாட்டினார். அவர் உசுப்பிவிட்ட தைத் தொடர்ந்து மற்ற நண்பர்கள் கொடுத்த ஊக்கமும், உசாரும்தான் இதற்குக் காரணம்.
நான் சிறுவனாக இருந்தபோது அம்மா எனக்கு அடிக்கடி கதைகள் சொல்லுவார். அந்தக் கதைகளை “கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது' என்று சொல்லி முடிப்பார்கள், கதைக்கும், கத்தரிக்காய்க்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நான் பல நாட்களாக கற் பனை செய்து வைத்திருந்தேன். கத்தரிக்காய் காய்த்தால் காய்த்துவிட்டு போகட்டும். ஆனால் என் கதைகள் *முடிவது” எனக்கு சம்மதமில்லை. அவைகள் 'நிறைவு பெறுவதையே நான் விரும்புகிறேன். தமிழ் வாசகர்களின் கற்பனை விலாசத்திலும், மதியூகத்திலும் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. எனவே என் கதைகளின் கடைசி வரிகளைப் படித்த வாசகர்களின் கற்பனை ஓட்டத்திலே அந்தக் கதைகள் பூர்த்தியடைவதையே நான் இச்சிக் கிறேன். அவைதான் சிறப்பான கதைகளென்றும் எண்ணு கிறேன்.
நான் அளப்பரிய மரியாதை வைத்திருக்கும் ஒர் எழுத் தாளர் அண்மையில் ஒரு பத்திரிகையில் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். கதை படிக்க மிகவும் ரசமாக இருந்தது. நகைச்சுவை இழையோ டி சில இடங்களில் வாய்விடடுச் சிரிக்கக்கூடத் தோன்றியது. ஆனால் கடைசி வாக்கியம்

X
முடிந்தபோது கதையும் 'முடிந்துவிட்டது. ஒரு நீண்ட விகடத்துணுக்கை படித்தது போலத்தான் எனக்கு இருந் தது. வெங்காயத்தை உரித்து, உரித்து கடைசியிலே ஒன்றுமே இல்லாமல் ஆகியதுபோல எனக்கு பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது. இவ்வளவுக்கும், அந்தக் கதையானது சிறுகதை இலக்கணத்துக்குள் மிகவும் கச்சித மாகப் பொருந்தித்தான் இருந்தது.
இப்பவெல்லாம் அடிக்கடி அழகுப் போட்டிகள் நடப் பதைப் பார்க்கிறோம். உலக அழகுப் போட்டிகளெல்லாம் Beauty with a Purpose GT air D (pa) nudo pao) L.G.Lig/Saif கின்றன. ‘அழகுக்கு ஒரு குறிக்கோள்” என்று சொல்லிக் கொண்டு இந்த அழகிகள் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து மனிதவளத்தை மேம்படுத்தும் நற்பணி களில் ஈடுபடுகிறார்கள். முன்புபோல் உடல் அழகையோ,
முக லட்சணத்தையோ ஆராதித்த சகாப்தம் போய்
திருவாதவூரரடிகள் போற்றிய ‘சித்தம் அழகியரை உலக அழகியராக தேர்ந்தெடுக்கும் காலம் வந்துவிட்டது.
*இதுபோல நாங்கள் எழுதும் கதைகளிலும் ஏன் ஒரு
'குறிக்கோள் இருக்கக் கூடாது? அது என்ன அப்படி ஓர்
அபவித்திரமான வார்த்தையா? இப்படித்தான் ஓர் எண் ணம் எனக்கு அடிக்கடி வரலாயிற்று.
இதன் காரணமாக்த்தான் இந்தத் தொகுதியில் நீங்கள் படிக்கும் கதைகள் சிறிது மாறுபட்டவையாக இருப்பதைக் காண்பீர்கள். இந்தியா, இலங்கை, சுடான், பாகிஸ்தான், சியரா லியோன், சுவீடன், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் எல்லாம் கதைக் களங்களாக அமைக்கப்பட்டு இருக்கின்றன. கதை மாந்தர்களும்
அப்படியே. கதையின் கருப்பொருளும் சிறிது வித்தியாச
மானதாகவே இருக்கும். நகைச் சுவைக்காகவோ, வாசகர்
(56) at கிச்சுகிச்சுமூட்டவோ எழுதப்பட்டவையல்ல.
இந்தக் கதைகள். பொழுதுபோக்கிற்காக எத்தனையோ
கதைகள் வெளிவருகின்றனவே! அந்தக் கணக்கில் இவை

Page 8
XI
தவறியும் சேர்ந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையில் படைக்கப்பட்டவை.
அமெரிக்காவில் ஒரு தலைசிறந்த நாவிதரிடம் ஒருவர் தலை அலங்காரம் செய்து கொள்ளப் போனாராம். அந்த நாவிதர் ஐந்து நிமிடங்களிலேயே காரியத்தை முடித்து விட்டு நூறு டொலர் கேட்டாராம். திடுக்கிட்டுப் போன அந்த வாடிக்கையாளர் என்ன இது? நாலு முடியை வெட்டியதற்கு நூறு டொலரா?' என்று கேட்டார். அதற்கு அந்த நாவிதர் "ஐயா, இந்த சன்மானம் வெட்டிய தலைமுடியின் அளவை வைத்து தீர்மானிக்கப்பட வில்லை; வெட்டாமல் தலையிலே விட்டுவைத்த சிகையை வைத்தல்லவோ நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினாராம்.
நான் இந்தக் கதைகளை அந்தக் கண்ணோட்டத்தில் தான்பார்க்கிறேன். சொல்ல வந்த விஷயத்தை தெம்பாகப் பிடித்துக்கொண்டு மீதியைத் தயவு தாட்சண்யம் இன்றி நீக்கிவிட்டிருக்கிறேன். இதன் காரணமாக, என் மனதிற்கு வெகு பிரியமாயும், இதயத்திறகு கிட்டவுமுள்ள 'உயிர் நேயம், பிரபஞ்சநேயம்' ஆகியவை இந்தக் கதைகளில் கொஞ்சம் தூக்கலாக இருந்தால் அதற்கு என் பேராசை தான் காரணம். வாசகர்களுடைய மன்னப்பை அச்சார மாக இப்பவே கேட்டுக் கொள்கிறேன்.
சமீபத்தில் ஒரு தமிழ்நாட்டு நண்பருடன் கதைத்த போது அவர் 'உங்கள் கதைகளை படித்தேன்; மிகவும் நன்றாக இருந்தன. யாழ்ப்பாணத் தமிழ் தொல்லை கொடுக்கவில்லை’ என்று கூறினார். எனக்கு சிரிப்பாக வந்தது. யாழ்ப்பாணத் தமிழ் இப்படி தமிழ்நாட்டு வாசகர்களை ‘ஆட்டி வைக்கும் விஷயம் எனக்கு அன்று வரை தெரியாது. இந்தத் தொகுப்பில் வரும் கதைக் களங்கள் அநேகமாக அந்நிய நாடுகளில் ஊன்றியிருந்தா லும், ‘கதை சொல்லி மாத்திரம் ஒரு யாழ்ப்பாணத்தவன் என்றபடியால் இடைக்கிடை ஒர் உண்மைத் தன்மையை

XI
நிலைநாட்ட 'அந்தத் தமிழ் தலைகாட்டும். கதையின் உண்மைக்கும், அழகுக்கும் சத்தியத்துக்கும் அவை உதவும் என்றே நம்புகிறேன்.
சிறுகதையின் உருவம் மாறிக்கொண்டே வருகிறது. அதில் சந்தேகமே இல்லை. ஆனால் 'இதுதான் சிறுகதை யின் வடிவம்' என்று யாரால்தான் திட்டவட்டமாகக் கூற முடியும்? ஒரு 'கதைசொல்லி" தான் சொல்லவந்த கதையை வாசகனுககு நேரடியாகப் போய்ச் சேர வேண்டிய முறையில் சொல்ல வேண்டும். சொல்ல வந்த விஷயத்தைப் பொறுத்து வடிவம் சில வேளைகளில் சிறிது மாறுபடலாம். கதைப் பொருள்தான் முக்கியம். உருவத் துக்காக வில்லுக்கத்தியை மடக்குவதுபோல கதையை மடித்துப் போட்டுவிட்டால் கதையின் யோக்கியத் தன்மை கெட்டு விடும்.
இதுபற்றி நான் மிகவும் மதித்து போற்றும் இந்தியா வின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான திரு. கி. ராஜநாராயணன் என்ன கூறுகிறார் என்று பார்ப் போம். ‘ஒரு சம்பவத்தை (நடப்பை) அப்படியே சொகமாக வர்ணித்து முடிக்கிறீர்கள். விமர்சகர்கள் இதைச் சிறுகதை வடிவம் இல்லை என்று சொல்வார்கள். "இப்படியும் எழுதலாம்’ என்பதே என் கருத்து. சிறுகதை வடிவம் உடைந்து மறுவடிவம் எடுப்பது என்பதுஇப்படித் தான்; புதுக்கவிதைபோல. மரத்திலிருந்து வித்தியாசமான ஒரு கிளையை வெட்டி எடுத்து முன்னும் பின்னும் தறித்து விட்டு அதீை வரவேற்பு அறையில் நிறுத்தி வைக்கிறோம். அதில் செதுக்கல் இல்லை; சிற்பமில்லை; என்றாலும் அதில் ஒரு அபூர்வ வடிவம் தெரியும்; அதுபோல.”
பூக்களைத் தொடுத்துக் கொண்டு நிற்கும் நார்போல ஒர் ஒருமைத் தன்மையுடன் கதையிருக்க வேண்டும். தானு று வருடங்கள் நடந்த ஒரு கதையை நாலு வரியில் சொல்லலாம்; நாலு நிமிடங்களில் நேர்ந்த ஒரு சம்ப வத்தை நாற்பது பக்க கதையாகவும் விரிக்கலாம். ஆனால்
-l

Page 9
XV
கதையினுடைய 'தொனி மாத்திரம் மாறாமல் கதையை ஊடுருவி நிற்கவேண்டும். இப்படித்தான் நான் அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
காகித விரயத்தில் எனக்கு உவப்பில்லை. ஒரு காகி தத்தை கசக்கி எறியும்போது எங்கோ ஒரு மரத்தின் இலை கண்ணிர் வடிக்கிறது என்று நிச்சயமாக நம்புகிறவன் தான். இந்தத் தாள்களில் அச்சாகி வரும் கதைகளால் ஒரு வித பயனுமில்லை என்றால் இந்தக் காகிதங்களைத் தரு வதற்காக அழிக்கப்பட்ட மரங்களுக்காக நான் கண்ணிர் வடிக்கிறேன். ஒ மரங்களே! என்னை மன்னிப்பீர்களாக! இந்தப் புத்தகத்தை வெளிக்கொண்டு வருவதற்கு உறு துணையாக இருந்த அன்புள்ளங்களை நான் மறக்க முடி யாது. தலைக்குமேல் இருந்த வேலைத் தொல்லைகளுக் கிடையிலும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்ற கதைகள் ஒவ்வொன்றையும் படித்து அருமையான முறையில் முன்னுரை வழங்கிய பெருமதிப்பிற்குரிய திரு. மாலன் அவர்களுக்கும், நண்பனாய், வழிகாட்டியாய் என்னை உற்சாகப்படுத்தி, ஆலோசனைகள் தந்து இந்தப் புத்த கத்தை சிறப்பாக வெளியிடுவதற்கு தூண்டுகோலாக இருந்த என் நெடுநாளைய நண்பர் எஸ். பொன்னுத் துரைக்கும், தக்க படங்கள் வரைந்துதவிய ஓவியர் மருது வுக்கும், என் பளுவைத் தன் பளுபோல் சுமந்த நண்பர் வி. சுந்தரலிங்கத்துக்கும், தன்னலம் கருதாது ஒயாது உழைத்துதவிய கவிஞர் எஸ். வைதீஸ்வரனுக்கும், அச்சிடும் வேலைகளை அக்கறையுடன் கவனித்த இளம்பிறை எம். ஏ. ரஹ்மானுக்கும், புத்தகத்தை செம்மையாக பதிப்பித்த மித்ர நிறுவனத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
அ. முத்துலிங்கம் House No. 32 19ம் நாள், தை மாதம், 1996 Street 4
F 8/3, Islamabad PAKSTAN

முன்னுரை
இன்றைக்கு வந்த தபால்களை உடைத்து மேசையில் கொண்டு வந்து வைத்தார்கள்.
"இன்டர் நெட் போன்ற வசதிகள் வந்துவிட்டனவே அவை நமது கற்பனைக்குச் சமாதி கட்டிவிடுமோ, புதினம் என்பதே அழிந்து போகுமோ?" என்றொரு வாசகர் கேள்வி எழுப்பியிருந்தார்.
யோசிக்க வைத்த கேள்வி.
தமிழன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தொழில்நுட்ப அதிசயங்கள், புலம்பெயரும் நிர்ப்பந்தங் கள், அவனது கலையாத கல்விக்கும் குலையாத திறமைக் கும் பரிசுகளாகக் கிடைத்த அயல் கலாசார சிநேகங்கள், இவையெல்லாம் தமிழனது பழைய வாழ்க்கையை மெல்ல மெல்லத் தூர்த்து வருகின்றன. அவனது வாழ்க்கை இனி யாழ்ப்பாணத்துப் பனங்காட்டிலும், கொழும்பு திணைக் களத்துக் கதிரைகளிலும், சென்னைப் புழுதியிலும், கரிசல் காட்டு வெக்கையிலும் மட்டும் விரிந்து கிடக்க வில்லை. அது நார்வேப் பணியில் உறைந்து கிடக்கிறது; நீயு ஜெர்சி ஷாப்பிங் மால் ட்ராலிகளில் நகர்ந்து வரு கிறது; ஆப்ரிக்க நுளம்புகளின் ரீங்காரத்தில் எதிரொலிக் கிறது. இனி நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை.
களங்களும், தளங்களும், மனங்களும்கூட மாறிவிட்ட இந்தப் புதுத் தமிழனைப் பதிவு செய்ய யார் இருக் கிறார்கள்?
இந்தக் கதைகளைப் படித்தபோது அலுத்துக் கொள்ள அவசியமில்லை என்றுதான் தோன்றியது.
இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் தமிழுக்குப் புதிது. தமிழனுக்குப் புதிய அனுபவம் தருபவை.

Page 10
XVI
தாழவுற்று வறுமை மிஞ்சிய சியாரா லியோனை வாழ்விக்க வந்த இத்தாலியனைப் பற்றி, மீந்த பழங் களை நடுச்சாமத்தில் நீரில் அலம்பித் தின்னும் ரக்கூன் என்ற மிருகத்தைப் பற்றி, இடருற்ற உயிரினம் என்ற அறிவிக்கப்பட்டு விட்ட மலை ஆட்டைப் பிடிக்க பாகிஸ்தானின் வடக்கு மலைப் பிராந்தியத்தில் அலைகிற வனின் வம்ச விருத்தியைப் பற்றித் தமிழில் எத்தனை கதைகள் வந்திருக்கும்?
பொருள் புதிது. தமிழ்நாட்டுப் பத்திரிகை வாசக னுக்குச் சொல்லும் புதிதாகத்தான் இருக்கும் ("இந்த நேரத்தில்தான் அவள் ஆத்தாமல் போய் கீழிறங்கி வந்து சங்கை கெட்ட ஹவுஸ் மெய்ட் வேலைக்கு மனுப் போட் டாள்.').
எனக்கு நடை மிகவும் பிடித்திருந்தது. கடலோர வீட்டில் காற்று உலவுவது போலச் சுகமான, லகுவான நடை. ஒரு சாம்பிள் பாருங்களேன். ‘புதுக்கப் புதுகக அவளைப் பார்ப்பது போலிருந்தது அவருக்கு-இவர் அவளுடைய கண்களையே பார்த்தார். அவள் துணுக் 'குறவும் இல்லை. கீழே பார்க்கவும் இல்லை. திருப்பி அவர் கண்களை நிதானமாகப் பார்த்தாள். நல்லூர் *சப்பரம் போல மெள்ள மீெள்ள நகர்ந்து இவர் "இருக்கைக்குக் கிட்டே வந்தாள்.'
புதுமைப் பித்தன் தன்னுடைய நடையைத் தவளைப் பாய்ச்சல் நடை என்று சொல்லிக் கொள்வதுண்டு. முத்துலிங்கத்தின் நடையும் அப்படித்தான், மேலே உள்ள விவரணைக்கு அடுத்த பத்தி எப்படி ஆரம்பிக்கிறது தெரி யுமா? "அவர்களுடைய திருமணம் ஆடம்பரமின்றி ஒரு கிராமத்துச் சர்ச்சில் நடைபெற்றது.*
கிண்டலும்கூட புதுமைப்பித்தன் ஜாடையில் இருக் கிறது. குழந்தையோடு, கணவனால் கைவிடப்பட்ட பெண் மதுக் கடையில் நடனமாடும் வேலையில் சேர்

XVII
கிறாள். 'அப்பொழுதுதான் அவளுக்கு இரண்டாவது பிள்ளை பிறந்தது. இது எப்படி என்று சமத்காரமான கேள்விகள் கேட்கக்கூடாது. கற்பு பற்றித் திருக்குறளை யும் சிலப்பதிகாரத்தையும் மேற்கோள்கள் காட்டி வியாக் கியானங்கள் இல்லாத ஆப்ரிக்காவில் அப்படித்தான்.'
354flu656ù show, don't tell 6Tapi 6?C5 235 உண்டு. இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று வார்த்தைகளைக் கொட்டி அளந்து கொண்டிராமல், நடந்ததைக் காட்சியாகத் தீட்டிக் காண்பிப்பது வலு வான தாக்கம் ஏற்படுத்தும் என்பது அதன் பின்னுள்ள நம்பிக்கை. வார்த்தைகளை அளந்தெடுத்துக் கச்சிதமாகப் பயன்படுத்தினாலும் முத்துலிங்கம் வார்த்தைகளை மட்டுமே நம்புவதில்லை. சின்னச் சின்னக் காட்சிகளைக் கூர்மையாகத் தீட்டிக் கதை நடுவில் செருகிவிடுகிறார். விழுக்காட்டில், இலையான் புழு எடுக்கும் காட்சி, துரியில் காருக்குள் துரியோதனன் தவிக்கும் காட்சி, வம்சவிருததி யில், மிர்ஸாவை இப்ராஹிம் சுட்டுக் கொல்லும் காட்சி எல்லாவற்றிலும் தனியொரு சிறுகதை மட்டுமல்ல, கொஞ்சம் டிராமாவும் இருக்கிறது.
இலங்கை எழுத்துக்களின் வாசனையை நான் கொஞ் சம் லேசாக அறிவேன் என்ற போதிலும், இந்த நூலாசிரி யரின் பிற நூல்களைப் புதினங்களை இதற்கு முன்பு நான் படித்ததில்லை, அவரைச் சந்தித்ததோ, அவரது பொழிவு எதனையும் கேட்டதோகூட இல்லை. அவரது பெயரைத் தவிர வேறெதுவும் அறியேன். ஆனால், நூலாசிரியரின் படிப்பிற்கும், இலக்கிய ரசனைக்கும் மனித நேசத்திற்கும் கூட இந்தப் புத்தகம் சாட்சியளிக்கிறது. ஒரு பிரமிப் போடு இந்தப் புத்தகத்தைப் படித்தேன். நீங்களும் அப்படித்தான் படிக்கப் போகிறீர்கள்.
சென்னை-41 undsredsår
18 pitfirst 96

Page 11
முன்னிடு
வம்ச விருத்தி, நண்பர் அ. முத்துலிங்கத்தின் மூன்றா வது கதைத் தொகுதி. முதலாவது தொகுதியான 'அக்கா" முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. யாழ்ப் பாண வாழ்க்கையின் அழகிலும் சலனங்களிலும் தோய்ந்தவாறு அவர் எழுதிய பதினொரு கதைகள் அதில் அமைந்தன. உலகளாவிய வாழ்க்கை அநுபவங்களிலே மூன்று தசாப்தங்கள் முதிர்ந்தவராக, அவர் எழுதிய பதி னொரு கதைகளைக் கொண்ட தொகுதி இது. இடையில், "திகடசக்கரம்’ என்கிற கதைத் தொகுதியையும், இரண்டு நூல்களை ஆங்கிலத்திலும் தந்துள்ளார். ஆங்கில நூல்கள் தொழில் சார்ந்த நுட்பத்திலே அவர் பெற்ற ஞானப் பகிர்வின் ஆசை பற்றிய ஆக்கங்கள். இந்த 'முன்னீடு"வை எழுதும் பணியில் அமர்கையில், அவருடைய ஆங்கில J5/16.5Gal (Getting to know visual basic procedures-an introduction to macro language) auctilo Lugg 6 g) மனசிலே மின்னல் சொடுக்கின்றது.
The king is seated on the golden throne.
Shakuntala raises her eyes and sees her beloved. For a moment she forgets everything. The earth
stands still. And then in a clear voice she says: "My son, make your obeisance to the kiag, your father.
They are direct, simple and precise, without waste. A good macro should be like that. விரயமற்ற, நேரான-எளிமையான-திட்டமான சொல்திறன்! கம்புயூட்டர் பயன்பாட்டிற்கு உதவும் MACRO மொழி பற்றிய தேடலிலேகூட, சகுந்தலாவின் ஆளுமை வீச்சுக்கு முத்துலிங்கம் மசிகிறார். படைப்பாளி யின் உள்ளத்திலே வாழும் சுவைத்திறன் உறங்குவதே இல்லை. அவனுடைய தேடல்களுக்கு அந்தமும் இல்லை. . .
தேடல் அற்புதமான அநுபவமே தொலைந்துபோன இனத்துவ கெளரவம், சுயம்புவான சுயமரபு ஆகியன தேடல்களில் ஈடுபட்டிருக்கும் பரதேசி நான். தொலைந்து

XIX
போன நினைவுப் பொருளின் தேடலும் காவியமய மானது. அல்லையேல், ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனது சிருஷ்டி அற்புதத்தினால் உலக மஹாகவி யாக உயர்ந்த காளிதாஸனின் "அபிஞாந சகுந்தலா" உலக இலக்கியச் சுவைப்புக்கு வாய்த்திருக்குமா? அப்சரஸ் மகளான சகுந்தலா அழகுக் கொழுந்தாய்; இயற்கையின் சாந்திப் புதல்வியாய், துறவியின் பர்ணசாலைச் சூழலிலே செப்பம்; விண்ணையும் மண்ணையும் ஒருமைப்படுத்தும் தத்துவ விளக்கம்; மனஅமைதி; வாழ்க்கையின் தலையாய இலட்சியம்;-எனப் பல சுருதிகளாய் இந்நாடகக் காவியம் நம் சுவைத் தாகங்களை அசத்தும். மனிதம் பற்றிய தேடலின் ஒரு சாயலாக, மனிதன் அடையக்கூடிய இன்பங்களுக்கு ஆதாரமாய் அமைவது இயற்கையுடன் கூடிய வாழ்க்கை என்று இயற்கையின் உறவை முழுமை யான உவமைப் பொருத்தங்களுடன் நிறுவுப் காளிதாஸ் னின் சிருஷ்டி நுட்பம் ஒர் ஆதர்ஷம், சேக்ஸ்பியரின் படைப்பு ஒர்மத்துக்குத் துதி பாடுதல் வஞ்சகமற்ற இலக் கிய நயப்பு என்று ஞானப் பகிர்வினை அகலித்துக் கொண்டு, காளிதாஸனின் கலாமேதையை ஆரிய மாயை என்று நித்தித்தல் ஞான அறத்துக்கு ஏற்றதா? அதனை இந்திய சிருஷ்டிப் பண்பாட்டின் அடையாளமாக இனங் கண்டு, அந்தத் தனித்துவமே அதற்கு சமஸ்தத்தினையும் அமரததுவத்தினையும் அருளின எனப் பூரித்து என் வசப் படுத்துதல் என் அறத்துக்கும் என் தேடலுக்கும் உகந்தது: இலக்கியத்தின் பரமார்த்த பக்தனான பரதேசி என்கிற என் தளத்திற்கும் ஏற்றது. விஞ்ஞானம் பற்றிய, புதுப் புனைவுகள் பற்றிய தேடல்கள் நமது ஞானத்தை அகலிப் பதுடன், வாழ்க்கையின் செளகரியங்களைப் பெருக்கித் தரத்தை உயர்த்துவன உண்மை. இருப்பினும், நியூட்டன் இல்லாவிட்டால், இன்னொருவன். அவன் தத்துவத்தைத் திருத்திச் செப்பம் உரைப்பதற்கு ஐன்ஸ்டீன் இல்லாவிட் டால், இன்னொருவன். வான் பறப்பிலே ரைட் சகோ தரர்கள் முந்திக் கொண்டார்கள். அவ்வளவுதான்.

Page 12
XX
ஆனால், காளிதாஸனின்றி, இலக்கியத்தினைச் சதா வளப்படுத்தும் அபிஞாந சகுந்தலா தோன்றியிருத்தல் சாத்தியமே அல்ல. இலக்கிய ஞானியின் படைப்பாற்றல், பல்வேறுபட்ட சமூகக் காரணிகளுக்கும் அநுபவங்களுக் கும் உட்பட்ட போதிலும், சில வேளைகளில் அவற்றின் வனைவிலேயே ஸ்தூல வடிவம் பெற்றாலுங்கூட, படைப் பாளியின் தனித்துவ ஆளுமை என்கிற ஒர் மை அவனுக்கே உரியது. அந்த ஓர்மத்தை வாலாயப்படுத்துதலும், அதன் உபாசகனாய் உழைத்தலும் இந்தப் பரதேசிக்கும் உவப்பான மதமாய் அமையும். மதத்துக்கு அநுஷ்டானங் கள் மட்டுமல்ல, வெறியும் உண்டு.
‘வம்ச விருத்தி’ என்னும் இக்கதைத் தொகைக்கு முன்னீடு எழுதும் யோகத்திலே ஈடுபடும்பொழுது, என் மனசு இப்படியெல்லாம் குதியன் குத்துகிறது. அடுத்த நூற்றாண்டின் கதை முயற்சிகளுக்குக் கட்டியமாக அமை யும் படைப்புகள் சிலவற்றை இதில் படிக்க நேர்ந்ததினா லும், இந்த அவதி. இக்கதைகளைத் தமிழ்ச் சுவைஞர்கள், உரிய முறையிலே தரிசித்தலைத் தடுக்கும் நந்திகள், புத்தி ஜீவிகள் போர்வையில், தமிழ்நாட்டிலும் உண்டு. ஈசுரார்ப்பண ஈடுபாடும், பரமார்த்த பக்தியும் ஜெயிக்க ணும். நந்தன் கடைத்தேறவேண்டும்! அதைத் தடுக்கும் கொடுமையிலே நந்திகள் வெற்றி சு கித்தல் கூடாது. இந்த விநோதப் புத்திஜீவிகள் நாளையைச் சென்றடைய வேண்டி இலக்கியத் தரத்தினை நிர்ணயிக்க வல்ல ஏக போகம் தங்கள் வசத்தே என்று சாமி ஆடுதல் மகா கொடுமை. .பாரதியார் கருத்து முதல்வாதி; இருப்பி னும் இயங்கியல் பார்வை இருந்தது; பாரதி மார்க்ஸை படித்திருப்பதாகக் கருதச் சான்றுகளில்லை. என்று பாரதியாரின் கவிதா வீரியத்தினையே உரைத்துப் பார்க் கும் இவர்கள, பாவம் காளிதாஸனை எப்படி எல்லாம் மிதித்துத் தள்ளுவார்கள்? மார்க்ஸிய வேதம் பேட்டை ரெளடிகளின் நாட்டு வெடிகுண்டாக்கப்பட்ட அவலம் ஒருபுறம். ரொமன்டிஸம், நச்சுரலிஸம், ரியலிஸம்,

சோஷலிஸ்ட் ரியலிஸம், சோஷலிஸ்ட் ரியலிஸம் (இடது ஸர்ரியலிஸம், மஜிக் ரியலிஸம், எக்ஸிஸ்டென்ஷியலிஸம் ஸ்ட்ரக்சுரலிஸம், போஸ்ட் மார்டனிஸம் என்று மேலைத் திசையிலே உருண்டோடிய பதங்களை வைத்துக்கொண்டு தமிழ் இலக்கிய விமர்சனத் துறையிலே சொக்கட்டான் ஆடும் கிலிசகேடு மறுபுறம். அந்த வார்த்தைகள் சுமக்கும் கருத்துவங்கள் பற்றிய ஞானம் வியர்த்தம் என்பதல்ல என் கட்சி. அறிவு சார்ந்த சேகரம் என்பதற்கு அப்பால், அவை தமிழ் மரபுகளுடனும் நிகழ் காலத் தமிழர்தம் அநு பவங்களுடனும் செமிபாடடைந்து படைப்பு வீரியமாக முகிழவில்லை என்பதுதான் என் வியாகூலம். அவை பிறந்த மண்ணிலேயே வலுவிழந்து நீர்த்துப்போன நிலை யிலேயே, தமிழுக்குப் பெயர்க்கப்படுகின்றன. இலக்கியத் தின் சங்கதி-உள்ளீடு-உயிர்ப்பு இடையறாத தேடலின் விளைவு. அஃது அநுபவத்தினாலும், பக்குவத்தினாலும் வனையப்படுவது. நேர்த்தியான கலைப் படைப்பாகப் பட்டை தீட்டி எடுப்பதற்கு உபகாரமாய் அமையும் பாங்கத்திற்கு-கோலத்திற்கு-உருவத்திற்கு அவை எவ் வாறு உதவலாம் என்கிற உசாவலும் முயற்சியுங்கூட இவர்களுக்குப் பூஜ்யம். menopause எய்திய கருப்பை யிலே புதியனவற்றின் படைப்பு என்று வற்புறுத்துதல் வித்துவ வக்கிரஞ் சார்ந்தது என்கிற பிரக்ஞைகூட இந்தக் கோஷதாரிகளுக்குக் கிடையாது. இந்தப் புத்தி ஜீவிதத் தண்டால்களை ஒதுக்கி வைத்துவிட்டு. பெரு வகைச் சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் படைப்பிலக்கி யத்தை அற்ப நுகர் பொருளாக்கி, எழுத்தாளர்களை "லேபிள் ஒட்டும் சிற்றுாழியர்களாக மாற்றும் வணிகப் பணியில் ஈடுபட்டுள்ளன. அரசியலிலே லஞ்ச ஊழல்கள் கூட நியாயப்படுத்தப்படுவது போலவே, நலிந்து போன கோஷங்கள் இலக்கியத்திற்கான தொனிப் பொருள்களாக வற்புறுத்தப்படுகின்றன. இவற்றுககு 'அரோகரா" போடும் புழுக்களும் பெருகியுள்ளன. சினிமா வாய்ப்புகள் என்கிற அங்கலாய்ப்புகளும் அவர்களை அலைக்கழிக்

Page 13
2
கின்றன. உலகளாவியதாக முளை விடும் தமிழ் இலக்கிய ஒர் மத்துக்குத் தலைமை தாங்கும் தத்துவத்தினைத் தமிழ் நாடு இவ்வாறு நிராகரிக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்தி ருப்பது மகா விசனத்துக்குரியது. இப்போக்குகளினால் பொதுவாகவே தமிழ் இலக்கியம் முட்டுப்படும் என்பதும் மெய்தான்!
"இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம் சர்வதேச மயப்படும். அதற்குப் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுடைய படைப்பாற்றல் தலைமை தாங்கும்’ என்கிற சுவிசேஷத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் மேற்கொண்ட இலக்கிய யாத்ராவின்போது பிரசித்தஞ் செய்தேன். இது மண்பற்றிலும் அதீத இன மானத்திலும் வேர்கொண்ட ஆசையல்ல. தீர்க்கதரிசன மான உள்ளுணர்வு என்று பொய் செப்ப ஒப்பேன். தமிழ் நாட்டு இலக்கியக் களத்திலே உருவாகியுள்ள அவலங்கள் என்கிற பின்னணியில், ‘புதிய வானம், புதிய பூமி’ என்று தினமும் புதிய அநுபவங்களின் தாக்கங்களுக்கு உட்பட்டு, ஆனாலும் புதிய சூழல்களின் அசுர வசதிகளுக்கு முற்றி லும் அடிபணியாது, தமிழ் இனத்தின் தனித்துவ அடை ய! எங்களைத் தங்களுடனும், தங்கள் வம்ச வேர்களுட னும் தக்க வைத்துக் கொள்ளுதல் வேண்டும் என்கிற விடுதலை வெறியிலும், பக்திச் செறிவிலும் புலம் பெயர்ந் துள்ள ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் ஈடுபட்டுள்ள இடை யறாத தேடல்கள், இதனைச் சாத்தியப்படுத்தும் என்பதை மட்டிடுவதற்குப் புத்தி ஜீவித மிடுக்குத் தேவை யில்லை.
அந்த இலக்கிய யாத்ராவின்போது, இருபத்தியோராம் நூற்றாண்டின் புதிய கதைக் கலையின் சாங்கங்களைச் சுட்டும் வகையில், முப்பத்தொன்பது கதைகளைத் தொகுக்கும் பணியிலே ஈடுபட்டமை தற்செயலே. அந்தப் பணியிலே நண்பர் இந்திராபார்த்தசாரதியின் ஒத்துழைப் பும் துணை நின்றது. அத்தொகுதியில் இடம்பெற்ற

3.
ஆக்கங்கள் பலவற்றை வரவேற்று, மதிப்பீடு செய்து, அவற்றைப் பிரசித்தப்படுத்துவதிலே நண்பர் சுஜாதா முதன்மையான அக்கறை காட்டினார். ‘பனியும் பனை யும்' என்கிற அத்தொகுதியில் கதை படைத்த ஒரு சிலரே றும், இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியத் துககு வளமூட்டக்கூடியவர்களாகத் தேறுவார்கள் என் கிற நம்பிக்கை ஊட்டுபவர்கள். ஆனாலும், அத்தகைய வர்களுடைய வகை சிறந்த ஆக்கங்கள் அதிலே இடம்பெற் றன என உரிமை பாராட்டுவதற்கில்லை. ஒரு காலக் கூறின் இடைவெளிவிட்டு இப்பொழுது அதனை வாசிக் கும்பொழுது, பெரும்பாலான கதைகளிலே புகுந்துள்ள பலவீனங்கள் தெரிகின்றன. புதிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்லும் எத்தனங்களிலே குறுக்கிடும் இடர்கள்; புதிய நாடுகளிலே வதிவிட உரிமை கிடைக் குமா என்கிற எதிர்பார்ப்பின் சஞ்சலங்கள்; சொந்த மண்ணிலே விட்டு வந்த கடன்கள்-கடமைகள்உறவுகள் ஆகியன தொற்றிய சுமைகள்; புதிய தட்ப வெட்பச் சூழல்களையும் தொழில் உறவுகளையும் எதிர் கொள்வதிலுள்ள சவால்கள்; இனப்படுகொலை மேலா திக்கத்திலிருந்து எந்தத் தனித்துவத்தைப் பேணி அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க முடியுமா என்கிற சந்தேகங்கள்; -இவை அனைத்துமே அவர்களுடைய நிகழ்கால எழுத்துகளைப் பாதிக்கின்றன. அவலங்கள்ஏக்கங்கள்-ஆசைகள்-இச்சாபங்கங்கள்-இயலாமைகள் ஆகிய உணர்வுகளிலிருந்து விடுபட இயலாத ஆக்கினை! இதனால், துயர்-சோகம்-ஏலாமை ஆகிய சுருதிகளின் ஓங்காரம் மிகும். அகதி முகாம்களிலே வாழும் குறுக்கத் தின் புழுக்கம் வெளிப்படும். self-pity என்கிற பலவீனம், pessimistic பார்வையை மேலோங்கச் செய்து, நமயிககை வரட்சியைத் துலமாகத் தொனிக்கும். இந்தக் கோலங்கள் தவிர்க்க இயலாத passing phase மனித நேயத் தேட லிலே, வாழ்க்கையை நம்பிக்கையுடன் அணுகும் தரி

Page 14
4
சனமே ஆகுமானது. அந்த நம்பிக்கைதான் நாளையையும் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக்கும். வாழ்க்கை என்பது கொதிக்கும் கொப்பரையிலிருந்து, எரி நெருப் புக்குள் வீழ்ந்து கருகுவதல்ல. புதிய நிர்ப்பந்தங்களின் அடிமையாவதல்ல. புதிய சூழலை வசப்படுத்துதல்! புதிய சூழலிலும் நாம் இழக்கத் தயாராக இல்லாத தனித்துவத் தைத் தக்க வைத்துக் கொண்டே, புதிய சூழலிலே குதிரும் வாகான புதிய சுருதிகளை இனங்கண்டு, அவற்றைத் தமிழின் அனைத்து உயர்வுகளுக்கும் இசைவடக்கிப் புதிய நம்பிக்கைகளை வென்றெடுத்தல்! அவலங்களை-அக்கிர மங்களை-அட்டூழியங்களை-அவநம்பிக்கைகளை நாண வைக்கும் தேடல்கள் நமது படைப்புகளிலே கதைப் பொருள்களாகக் கணிதல் வேண்டும். எனவே, ‘பனியும் பனையும் தொகையிலே இடம் பெற்ற கதைகள் பல வற்றை piot-project ஆகத் தரிசித்தலே பொருந்தும். நடுங்க வைக்கும் குளிர் பணியைத் தொடர்ந்து, கோடை வெயில் எரிக்கவே செய்யும்!
புலம் பெயர்ந்த ஈழத் தமிழருடைய இருபத்தியோ ராம் நூற்றாண்டின் கதைக் கோலங்களுக்கு வெள் ளோட்டமாக அமையும் கதைத் தொகுதியைத் தேடுகிறீர் களா? கவலையைவிடுங்கள். இதோ, அ. முத்துலிங்கத்தின் வம்ச விருத்தி இருக்கிறது. நான் கருவியாய் அமைந்து பரம்பிய சுவிசேஷத்தின் சத்தியத்தை எண்பிக்கும் வகை யில் பல கதைகளை இத்தொகுதியிலே படைத்துத் தந்து, வெளளோட்டத்தினை அவர் வெற்றியாக நடத்தியிருத் தல் மிகுந்த மன மகிழ்ச்சியைத் தருகின்றது. மகிழ்ச்சியைப் பகிர்தலும் மனிதம்!
நான்கு தசாப்தங்களுக்கு முன்னர், 'ஊர்வலம்' என்ற சிறுகதை மூலம் 'தினகரன்' பண்ணையிலே முத்துலிங்கம் கதைஞராய் அறிமுகமானார். 1960இல் ‘பக்குவம்" கதைக்கு முதல் பரிசு பெற்றார். தமிழ் விழா மலருக்கு அவருடைய 'அக்கா' மணமூட்டியது. இவ்வாறு,

5
ஈழத்துக் கதைஞர் வரிசையிலே கெளரவம் பெற்ற அவரு டைய பதினொரு கதைகள் அடங்கிய 'அக்கா" தொகுதி அறுபதுகளின் நடுப்பகுதியில் வெளிவந்தது. "நான் கண்ட, கேட்ட, அநுபவித்த சம்பவங்களையும் உணர்ச்சி களையும் என் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்" எனத் தம்மைச் சாமானியனாக அறிமுகப்படுத்திக் கொண்டாலும், "அக்கா’ மூலம் தமிழ்ச் சுவைஞர்களு டைய அபிமானத்தை மட்டுமன்றி, கைலாசபதி போன்ற விமர்சகர்களுடைய பாராட்டையும் சம்பாதித்தார். பிறகு, அவர் எழுத்தூழியத்திலே ஒதுக்கம் காட்டிய காலத்தில், அவருடைய முகவரியைத் தொலைத்து விட் டேன். விசாரித்ததில், ஆபிரிக்க நாடொன்றில், உயர் உத்தியோகம் பெற்றுச் சென்று விட்டதாகத் தகவல் கிடைத்தது. ஆபிரிக்கா எங்கே? மட்டக்களப்பு எங்கே? ஊழ் என்னையும் துரத்தியது. ஆபிரிக்க இலக்கியம் கறபிக்கும் ஆசானாய் நான் ஆபிரிக்க நாடொன்றுக்குச் செல்ல நேர்ந்தது. பக்கத்து வீட்டுக்குக் குடியேறிய மனோ நிலையில் மீண்டும் முகவரியைத் தேடினேன். அவர் உலக வங்கி உத்தியோகத்திலே சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்ததும் என் தேடுதல் ஒய்ந்தது.
கடைசியாக ‘பனியும் பனையும் தொகுதி மூலம் எங்களுடைய இலக்கிய உறவு மீளுயிர்ப்புப் பெறறது! தேடி ஓய்ந்தது, தேடாத வேளையிலே கிட்டும். அஃது ஒரு வகையில் பொசிப்பு!
தொலைபேசி, Fax போன்ற நவீன தொடர்புச் சாத னங்கள் மூலம், பாகிஸ்தானுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடைப்பட்ட தூரம் குறுகியது. இடைக்காலத்தில் அவர் வெளியிட்ட திகட சக்கரம்’ என்ற கதைத் தொகுதியை என் சுவைப்பிற்கு அனுப்பி வைத்தார். கைவசமிருந்த என்” நூல்களை அவருக்கு அனுப்பினேன். ‘பனியும் பனையும் தொகுதியிலுள்ள குறை நிறைகளைப் பற்றிப் பேசினோம். மூன்று தசாப்த இடைவெளியில் நடந்த

Page 15
6
இலக்கிய சமாசாரங்களிலே சல்லாபித்தோம். புதிய படைப்புகள் பற்றிய கனவுகளிலே ஈடுபட்டோம். அடுத்த நூற்றாண்டின் கதைக் கலையின் கோலங்கள் பற்றி உரத்துச் சிந்தித்தோம். யாழ்ப்பான வாழ்க்கையிலும், ஆபிரிக்க அநுபவங்களிலும் நனவுகளிலும் தோய்ந்தோம். ஆபிரிக்க வாழ்க்கை அநுபவங்களைத் தமிழ் இலக்கிய மாக்குவதிலுள்ள பயன் குறித்துப் பேசினோம். தொலைந், தன கிட்டுதல் காளிதாஸனின் சகுந்தலாவுக்கு மட்டுமல்ல, மனிதனுக்குமே இனிமை தரும்.
முதலில் ஆபிரிக்கப் பின்னணியில் எழுதப்பட்ட கதை களை என் சுவைப்புக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து ஏனையன. இவ்வாறு, இதில் இடம் பெறும் பதினொரு கதைகளும் என் சுவைப்பிற்கே முதலிற் கிட்டின. இந்தக் கதைகளை, என் 'முன்னீடு"வுடன் இணைத்து, இவ்வாறு வெளியிடுதல், நாளைய இலக்கியப் பணிகளிலே இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்கிற சங்கையின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம்.
இனி, வம்ச விருத்தியில் இடம் பெறும் கதைகளுக்குள் நுழைவோம்.
முத்துலிங்கம் ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, அமேரிக்கா ஆகிய நான்கு கண்டங்களைச் சேர்ந்த பல நாடுகளிலே வாழ்ந்து தமது அநுபவங்களைப் பெருக்கிக் கொண்டவர். இந்நாடுகள் பலவற்றைக் கதைக் களங் களாகக் கொண்டு, இருபத்தியோராம் நூற்றாண்டிலும் வாழக் கூடிய தமிழ்க் கதை மாந்தர் சிலரை அறிமுகப் படுத்தி. அவர்களுடைய கதைகளை இங்கு சொல்லியுள் at nir. serious writing Tai Lugs, '66m diG).5GTGao37 til Frti பிடும் முகத்தையும் உணர்வையும் எழுத்திலே ஏற்படுத்து வதல்ல. வாழ்க்கையின் எந்த நிலையிலும் வாழ்க்கையை Positive ஆக நோக்கும் Optimism முத்துலிங்கத்தின் கதைப் பாணியிலே மிளிர்கின்றது. இடுக்கண் கண்டு நகும் ஒர் உறுதி; மனித நேய நட்புணர்வுகளை அணைக்கும்

7
அட்டகாசமில்லாத நகைச்சுவை; கதைக் களங்களின் யதார்த்தம்; கதை நிகழ்வுகளுடன் ஒட்டிப் பயணிக்கும் அக்கறை ஆகியன அவருடைய கதை சித்திரிக்கும் உபாயத்திற்குக் கை தருகின்றன.
'துரி’, ‘ஒரு சாதம்' ஆகிய இரண்டும் அமேரிக்காவை யும் கனடாவையும் பின்னணியாகக் கொண்டு, அந்நாடு களின் வாழ்க்கை அநுபவங்களை இணைத்துக் கொள்ளு கின்றன. "விழுக்காடு’, ‘முழுவிலக்கு’, ‘ஞானம்' ஆகிய மூன்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் வாழ்க்கைக் கோலங்களுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன. 'கிரகணம்’, ‘வம்ச விருத்தி ஆகிய இரண்டு கதைகளும் பாகிஸ்தான் நாட்டின் முஸ்லிம் பின்னணியைக் கொண் டன. பருத்திப் பூ' வட ஆபிரிக்க சுடான் நாட்டின் பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் அயலுக்கு அழைத்துச் செல்கின்றது. "பீஃனிக்ஸ் பறவை சுவீடன் நாட்டினைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட போதிலும், சுற்றுச் சூழலை இயற்கை நிலையில் வைத்திருக்கும் பக்கு வத்தினை வசப்படுத்தும் இருபத்தோராம் நூற்றாண்டின் மிக முன்னேறிய மனித சமூகத்திலே ஏற்படக்கூடிய புதிய பிரச்சினைகளே கதைக் களமோ என்கிற நிறப்பிரிகை ஜாலமும் காட்டுகிறது.
மனிதம் பற்றிய இடையறாத தேடலாகவும் இலக்கி யத்தினைச் சம்பாவனை செய்தல் என் சுபாவம். மனிதனின் விடுதலை அல்லது விமுக்தி ஆநந்த, அதுவே வீடு அறம்-பொருள-இன்பம் ஆகியன அந்த வீட்டினை அடைவதற்கான செம்மைகள் என்கிற நம்பிக்கை நமது மரபின் முதுசொம். பழையன கழிந்து புதியன புனைத லும் மரபு. மாறாத சீர்மையும் மரபு. சுழலும் சக்கரத்தின் அசையாப் புள்ளி! பிறிது பிறிதாகி விடாது, வாழ்க்கைத் தொடர்ச்சியையும் முன்னோர் அளித்த அருஞ்செல்வங் களுக்கு நம்மையும் உரிமைக்காரராய் நியமிப்பதற்கான தகுதியையும் மரபு நமக்கு அளிக்கின்றது. இதனை ஒதுக்

Page 16
8
கும் புதுமைகள் வெறும் Fads! பித்தங்கொண்டு சந்தத மாடும் வேகத்திலே மறைந்துவிடும் போலிகள். இந்த அவ தானம் இருபத்தியோராம் நூற்றாண்டின் இலக்கியப் படைப்பாளிக்கு அவசியம். இந்த அவதானம் இத்தொகுதி யின் கதைகள் பலவற்றிலும் பற்றிப்படர்கின்றது. இந்தப் படர்வே ஒரு நிறைவும்.
அதே சமயம், இத்தொகுதியிலுள்ள சில கதை களேனும் மனித நேயத்துக்குப் புதிய பரிமாணந் தேடுகின் றன. தொகுதியின் முகப்புக் கதை 'துரி" அமேரிக்க வாழ்க்கையின் கோலங்களைத் தரிசிப்பதற்கு துரி என்றழைக்கப்படும் நாய் நாயக பாத்திரமாக உயர்வு பெறுகின்றது. அமேரிக்க நாய்க்கும், மகாபாரதத்தில் வரும் துரியோதனன் பாத்திரத்திற்கும் அபூர்வ முடிச் சொன்று போடப்படுகின்றது" உயிர் நேசிப்பிலே நட்புக் கும் தோழமைக்கும் உள்ள உறவுகள் ஆரவாரமின்றி இக் கதையிலே பிரஸ்தாபம் பெறுகின்றன. நாயை நண்ப னாய்-தோழனாய்ப் பாராட்டுதல் எத்தகைய மானிட நேசிப்பு "ஞானம் கதையிலே, Ph. D. பட்டம் பெறு வதற்கான ஆராய்ச்சிகளை நடத்துவதற்கான அமேரிக்கப் பல்கலைக் கழக மாணாக்கர் இருவர் ஆபிரிக்க நாடொன்றுக்கு வருகிறார்கள். அங்கு வாழும் கொலபஸ் குரங்குகளைப் பிடித்து ஆராய்ச்சி நடத்த வந்தவர்கள், ஆபிரிக்க மக்களுடைய மூடநம்பிக்கையினால் சாகப் போகும் ஆந்தையையும் குஞ்சுகளையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகி றார்கள் அந்த ஆந்தைகள் ஆபிரிக்க உணவு உற்பத்திப் பெருக்கத்துக்கு உதவுகின்றன. அவை வாழவேண்டும். அவற்றை வாழவைப்பதற்காக ஏற்படும் பின்னடைவுகள் ஒரு பொருட்டல்ல. “உயிர் நேயம்" என்கிற சங்கதி இக்கதையிலே எத்தகைய விஸ்வரூபம் பெறுகின்றது! மானிட நேசிப்பு உயிர் நேசிப்பாகவும் பிரபஞ்ச நேசிப் பாகவும் விரிவடைதல் வேண்டும் என்ற அக்கறைகளைப்

பிரசாரத் தொனியின்றிச் சில கதைகள் ஏற்படுத்து கின்றன. “வம்ச விருத்தியிலே பாகிஸ்தானின் வடமலைப் பிரதேசத்தில் பயணிக்கிறோம். இக்கதையில் இஸ்லாமிய மக்களுடைய ஆசாரங்களும் அநுட்டானங்களும் விரவிக் கிடக்கின்றன. இவை அனைத்துமே கதையின் பின்னணி யாகப் பின் தள்ளப்பட்டு, இடருற்ற உயிரினத்தின் (Endangered species) பாதுகாப்பு கதையின் இறுதியிலே ஓங்காரம் பெறுகின்றது. பிரபஞ்ச நேசிப்பின் இன்னொரு வடிவமாக இந்த அக்கறையை நாம் தரிசித்தல் தகும். மனிதனைப் பலிவாங்கும் லீ என்ஃபீல்டு துப்பாக்கி, "ரத்தப் பணம்’ என்கிற கொலை நாகரிகத்தின் ஊடாக அழைத்துச் சென்று, மலை ஆட்டின் மரணம் மகா அநியாயமானது என்கிற உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்து தல் சீர்மை நிறைந்த கலைத்திறன். 'இலங்கையில் தமிழன் Sef (Endangeed soceies) GTGS750 gof 676 i 303 to arsir பிடரியைக் கடித்தது. சுவைஞனின் கற்பனை விகசிப்பு இன்னொரு பரிமாணம். ஆக்கியோனின் தயாாம் இத்தகைய சிலிர்ப்பினை அனுமதிக்கும். பாகிஸ்தானைக் களமாகக் கொண்ட ' இன்னொரு கதை “கிரகணம்" இந்தக் கதையிலே வரும் பஸ்மினாவின் பாத்திர வார்ப்பு கதை முழுவதையும் அப்புகிறது. அவள் எழுப்பும் மதிநுட்பக் கேள்விகள் மலைக்க வைக்கின்றன. சாதாரண sentiments மண்டிய கதையோ என்று ஏற்படக்கூடிய ஒர் உணர்வை பஸ்மினாவின் பாத்திர வார்ப்பு விழுங்கி ஏப்பமிட்டு விடுகின்றது! இதன் வாகு இது.
*விழுக்காடு சியரா லியோனைப் பின்னணியாகக் கொண்ட கதை. சுபீட்ச நிலையில் அடிமட்ட நாடான அங்கே, ஐக்கிய நாடுகள் நிறுவனம் எடுக்கும் நடவடிக்கை கள் வியர்த்தமாகும் பின்னணியிலே, அந்நாட்டின் வாழ்க்கை அவலங்களைப் பிரசாரத் தொனியின்றிச் சித்திரித்து, அந்த அவலங்களின் மத்தியிலே, ஆண்-பெண் உறவாகக கனியுங் காதல்கூட மனித நேசிப்பின்
2سيس.

Page 17
瓦)
இன்னொரு ஸ்திதியாக இக்கதை கோலங் காட்டுகிறது. மேற்கு ஆபிரிக்க அநுபவங்களின் மிகுதியால், உருவாகி யுளள இன்னொரு கதை ‘முழுவிலககு'. 'பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு இது பழமொழி. ஆபிரிக்க நாடொன்றை புலம் பெயரும் நாடாக வரித்துக் கொண்டால், உணவுப் பழக்கம் எவ்வாறு அமையும் என்பது நயமான நகைச்சுவை. தொகுக்கப்படும் மலர்கள் நளினமான சிரிப்பை எழுப்புபவை. அவற்றைத் தொடுக் கும் நாரிலே சோகச் சுருதி மண்டிக் கிடக்கிறது. இஃது அசாதாரண உபாயம். Menopause ஏற்படுத்தும் உள-உடல் பாதிப்புகளை இது விசாரணை செய்கிறது. சங்கீதாவைச் சுறறி எழும் சோக அலைகள் கூட ஒரு positive note சிலேயே முற்றுப்பெறுகின்றது. மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக சிறப்பிப்பது இந்த அழுங்குப்பிடியான நம்பிக்கைதானே? குடியேறிய நீாட்டின் தன்மைக்கும் தேவைக்கும் ஏற்ப இசைவாக்கம் பெறுவதை நுட்பமாகச் சித்திரிக்கின்றது ‘ஒரு சாதம்'. food clothing and shetter -6Dulu eup6sT JÓ BAJŮ. STölu@ửd இசைவாக்கம்! இந்த இசைவாக்கம் வாழ்க்கையை வசதிப்படுத்தும்; அதுவே வாழ்க்கையின் வெற்றியல்ல. அறிவாற்றலைப் பிரயோகித்து, முன்னேறும் முயற்சியில் சதா நடத்தும் தேடலே வெற்றியைச் சம்பாதித்துத் தரும் என்கிற நம்பிக்கையை இக்கதை பிரசித்தஞ் செய்கின்றது. Oru Satham என்பது ஒரு சாதமா அல்லது ஒரு சதமா? நல்ல பகடி! w
"பருத்திப் பூவின் நாயக பாத்திரம் குண சிங்கம், யாழ்ப்பானத்து உரும்பிராய் மண்ணிலே விளைந்த அசல் "கிழங்கு'! ஆயிரம் கன்று வாழைத் தோட்டத்துக்கு பாத்தி கோலிய காலத்திலேயே, தண்ணிரின் செட்டான உபயோகத்திற்கும் உயிர் வாழ்தலுக்குமுள்ள ஆத்மார்த்த தொடர்பிலே ஞானம் பெற்ற சம்பந்தரும். இன்று ான்ஜினியர், நீர்வள நிபுணர், கண்டிப்பு-கடின உழைப்பு

11
நேர்மை-சிக்கனம் ஆகியன அவருடைய வாழ்க்கையை ஒழுங்கு செய்பவை. ஆனால், தெற்கிலிருந்து அகதியாக வடக்கே புலம் பெயர்ந்து வந்த அந்தக் குடியானவக் கிழவியை ‘எஃத்திராம் என வாஞ்சை பாராட்டி அழைக்க வைத்தது எது? அக்கிழவியின் வாழ்க்கை உயர்வுக்காக, தமது வேலையையும் கெளரவத்தையும் இழக்கத் தயாராக இருக்கும் அவருடைய செயல், மானிட நேசிப்பின் உந்நதம் அல்லவா? கதையை வாசித்து முடித்த பிறகும், குணசிங்கம் நமது நெஞ்சத்திலே உறைந்து கொள்ளுகிறார். அவரைப் பற்றிய உலகமொன்று நமது பிரக்ஞையை வசீகரித்துக் கொள்ளுகிறது. "ஒடும் ரயிலில் இருந்து குதிக்கும் ஒருவன் இறங்கிய பின்னும் ரயிலுடன் சிறிது நேரம் ஒடுகிறான் அல்லவா! அதுபோல, ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனை யானது கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஒட வேண்டும்.இது என்னுடைய சித்தாந்தம்' என்று 'திகடசக்கரம்’ என்ற தமது சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் முத்துலிங்கம் குறிப்பிடுகின்றார். இந்தக் கதையில் அவருனிடய சித்தாந்தம் முழு வெற்றி பெறு கின்றது. நல்லதொரு கதையை வாசித்த திருப்தி பல நாள்களாக என் மனசை மகிழ்வித்தது.
"பீஃனிக்ஸ் பறவை நாளைய இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் கழிந்த ஒரு நாளையட உலகத்திற்குள் நம்மை லாகவமாக அழைத்துச் செல் கின்றது. சுற்றாடலை மாசுபடுத்தாச் செம்மையிலே வெற்றி காணும் அந்த உலகத்திலேகூட, நிறைவேறாத மனித ஆசைகள் புதிய பரிமாணங்களையும் தேடல்களை யும் கொண்டிருக்கும் என்கிற தொனிப் பொருளை இந்தக் ககை சாமர்த்தியமாகச் சித்திரிக்கின்றது. நாளைய உலகின் சித்திரிப்பிலே விஞ்ஞான ஞானம் ஆசிரியருக்குத் துணை நிற்கின்றது. மானுஷிகத்தின் விஸ்வரூபத்திற்குள் இந்த விஞ்ஞானம் ஞான ஒடுக்கமும் பெறுகிறது.

Page 18
12
இவற்றிலிருந்து வேறுபட்ட களங்களை மற்றைய இரண்டு கதைகளும் கொண்டுள்ளன. கிரேக்க புராணங் களிலே பிரஸ்தாபிக்கப்படும் கோர்டியன் முடிச்சிலே துவங்கி, இடையில் ‘நொடிகள் போல, கந்தையா வாத்தியார், ஹென்றி மொஸ்லே, நமது “தொந்தி" விநாயகர் ஆகியோர் சம்பந்தப்பட்ட பல முடிச்சுகளின் அறிமுகத்துடனேயே ‘முடிச்சு’ ஆரம்பிக்கின்றது. இந்த ஆரவாரங்களுக்குப் பிறகுதான் கதை. முடிச்சுகள் என்கிற குகையின் ஊடாக, ஒளியை நாடிய தேடல் திருவண்ணா மலை வரை நீளுகின்றது. அங்கே விசித்திரமான யோகி யார். அவரிடமிருந்து அறிவுரையோ, ஆசியோ கிட்டாது. சம்பந்தா சம்பந்தம் இல்லாததுபோல பேசி, அறிவைத் தூண்டி விடுதல் யோகியாரின் speciality! இந்து தர்ம சிந்தனைகள் தீர்வுகள் அல்ல. மன ஒடுக்கத்துக்கும் ஞான விடிவுக்கும் தொடர்பு இருக்கலாம். தேடும்பொழுது ஞானம் எத்தகைய அற்பங்களிலிருந்துவெளிப்படுகின்றது முடிச்சுகளை அவிழ்க்க நடத்தும் தேடல் ஞானமுமாம். *சிலம்பு செல்லப்பா "இலங்கை மண்ணின் வாழ்க்கைக் கோலங்களுக்குள் ஆசிரியர் மீள்பிரவேசம் செய்யும் எத்தனம். է 165)ւՔա சம்பவங்களை அசைபோடும் கோலமும் புகுந்து கொள்ளுகிறது. சமாந்திரமாகவே சிலப்பதிகாரம் பற்றிய உசாவல்களும். ஆனால், சுழல் பாவிப்புப் பற்றிய awarenessஐ, தயிர்ச் சட்டியுடன் தொடர்புபடுத்தி சுழல் பாவிப்புக்கும் மாதவி எழுதிய ஒலையின் சுழல்பாவிப்புக்கும் அபூர்வ முடிச்சுப் போட்டு, நம்மை குலுக்கி எடுக்கிறார். சிரிப்பிலா? சிந்தனையிலா? என் பிடிமானத்துக்குள் சிக்கவில்லை. உங்களுக்கு?
அனைத்துக் கதைகளிலும், கதை நிகழ் களங்களின் வாழ்க்கை அழகுகளிலே, பிரசாரத் தொனி இல்லாமல் படைப்பாளியின் சுய விருப்பு-வெறுப்புகளைத் திணிக் காமல், நம்மையும் பயணிக்கச் செய்து, புதிய அனுபவங் களிலே தோய்த்து எடுப்பதில் ஆசிரியர் வெற்றி பெற்றுள்

13
ளார். அதே சமயம், தமது மனசுக்கு உவப்பான வாழ்க் கையையும் விழுமியங்களையும் அழுத்திச் சொல்வதற்கும் அவர் தயங்கவில்லை. அதிலே நழுவல் கிடையாது. சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பு, சுழல் பாவிப்பு, மானிட நேயம், பிரபஞ்ச நேயம் ஆகியன பற்றிய ஆசிரியரின் அக்கறை சத்தியமானது என்கிற உணர்வை அவர் பதிக்கின்றார். இதனை, "ஒரு காகிதத்தைக் கசக்கி எறியும்போது எங்கோ ஒரு மரத்தின் இலை கண்ணிர் வடிகதிறது என்று நிச்சயமாக, நம்புகிறவன் நான்" என்று தமது ‘என்னுரை'யிலே மீள வலியுறுத்தவும் அவர் வெட்கப்படவில்லை.
இந்தக் கதைகள் அனைத்தும் சிறுகதை இலக்கண விதிகளுக்குள் அமையுமா என்பது குறித்து விவாதிக்கும் அரிப்பு சிலருக்கு ஏற்படலாம். அரை நூற்றாண்டுக்கு முன்னரே, 1940ஆம் ஆண்டில், புதுமைப்பித்தனின் சிறுகதைகள் அடங்கிய தொகுதி வெளிவந்தது. அதற்கு ரா. பூஞர். தேசிகன் அவர்கள் காத்திரமான முன்னுரை ஒன்று எழுதியிருந்தார். ‘இலக்கியம் ஓர் அகண்ட நந்த வனம்’ எனத் துவங்கி, ‘ஜனங்கள் சிறுகதை மலர்களின் மனத்தை அதிகமாய் விரும்பவே, இலக்கிய நந்தவனத் திலே அந்தப் பூக்கள் அதிகமாகப் பயிரிடப்பட்டன" எனக் கூறி, சிறுகதை இலக்கிய வடிவத்தின் உலகளாவிய தோற் றம் என்னும் படுதாவிலே, ‘முகம் அறியாத புதுமைப் பித்தனின் தமிழ்ச் சாதனையை அவர் சிலாகித்தார். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சிக் கட்டத்திலே அதற்கு ஒரு தனிக் கெளரவம் சம்பாதிப்பதிலும், மேலை நாட்டிலே பயின்ற உருவ அமைதிக்குத் தமிழ் முழுமம் வடிப்பதிலும் புதுமைப்பித்தன் அடைந்த வெற்றி, அரிய இலக்கியச் சாதனையே. சந்தேகமில்லை. ஆனால், அன்று சிறுகதை உருவத்துக்கு உலக அங்கீகாரம் பெற உழைத்தவர்கள் (மாபஸான் உட்பட) வாழ்ந்த நாடுகளி

Page 19
l4
லேயே சிறுகதை இலக்கிய வடிவம் தனது மவுசினை இழந்துவிட்டது. 'அவசர யுகத்திலே சிறுகதை இலக்கி யமே நின்று வாழும்" என முன் வைக்கப்பட்ட கருது கோள்கூடப் பொய்த்துவிட்டது. அவசரத்திலும் அவசர யுகம் இது. இருப்பினும், நீள் கதைகளுக்கும் தாவல் களுக்குந்தான் வரவேற்பு. விஷயம் இதுதான். காளிதாஸ் னுக்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கதை சொல்லலும் கேட்டலும் மனித ரஸனைக்கு ஏற்ற தாகவே இருந்து வந்துள்ளது. கதை சொல்லும் முனைப் பும் கதை கேட்கும் (அல்லது வாசிக்கும் அல்லது பார்க் கும்) ஆர்வமும் தொடரும். வித்துவ-தத்துவக் கடைசல் களுக்கு 'டோக்கா கொடுக்கும் என்றுமுளதான மனித ரஸனை இது.
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். புதுமைப்பித்த னின் தோள்களிலே நின்று கதைக் கோலங்களைப் பார்க் கும் வசதி நமக்கிருக்கிறது. புதிய கதைக் கோலங்களை உருவாக்கும் நிர்ப்பந்தமும் தேவையும் இருபத்தியோராம் நூற்றாண்டின் கதைஞனுக்கும் நிச்சயம் ஏற்படும். புதிய தேவைகள் இலக்கிய சமாசார சல்லாபம் மட்டுமல்ல. வாழ்க்கையின் புதிய அநுபவ ஞானப் பகிர்வினைப் பகிர்ந்து கொளஞம் அவதியும். கதைக் கலையிலே புதிய வடிவங்கள் உருவாக வேண்டும். உருவாகும். அவற்றை ஏற்கும் சுவை விசாலம் தமிழ்ச்சுவைஞர்களுக்குத் தேவை. புதுமைப் பித்தனை விட்டால் ஆளில்லை" என்று பழசிலே தொங்கிக் கொண்டு பொச்சடித்தல்கூட, தமிழ் நாட்டின் புத்திஜீவித வித்துவ வக்கிரமாகக் கொச்சைப் படுதலும் சாலும். இத்தகைய வைதீக வயிற்று வலிக்கு, புதிய ஆக்கங்கள் பலியாகிவிடக்கூடாது. இந்தத் தொகுதி யிலே புதிய வடிவங்கள் அறிமுகமாகவிலலை. உண்மை. ஆனால, மரபு ரீதியான சிறுகதை இலக்கணம் பல இடங் களிலே நெகிழ்த்தப்பட்டிருக்கின்றது. இந்த நெகிழ்த்தலே, புதிய வடிவங்களுக்கு வழி சமைக்கும் என்கிற சேதநை முத்துலிங்கத்திற்கு இருக்கலாம். உருவம்-உள்ளீடு

15
பாணி-பாங்கம்-சித்திரிப்பு - கலைத்துவம் ஆகியன எழுத்தாளனின் சுதர்மத்திற்கும் சுயாதீனத்துக்கும் உரியன என்பது என் கட்சி. என் அறத்தைப் பறிப்பதற்கு சாந்த இலக்கியக் கொம்பனுக்கும், விமர்சன வித்துவானுக் கும் உரிமை இல்லை என்பதும் என் இலக்கிய மதம். இத்த கைய மதமூர்க்கம், என்னிலும் பார்க்க, அடுத்த நூற றாண்டின் படைப்பாளிகளுக்கு அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்ப்போமாக!
புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளுடைய இலக்கிய ஊழியத்தை உரிய முறையிலே தரிசிப்பதற்கு உதவும் இன்னொன்றையும் இங்கு பிரஸ்தாபித்தல் அவசியம்.
தொலைந்துபோன நினைவுப் பொருளின் தேடல், சகுந்தலா படைப்புக்கு முன்னரே இருந்து வந்துள்ள ஒன்றுதான். ஆனால் இந்த நூற்றாண்டின் இறுதிக் கந்தாயத்திலே, தொலைத்தலும் தேடலும் ஈழத் தமிழர் களுடைய வாழ்க்கையில் புதிய அர்த்தமும் சுருதியும் கொண்டுள்ளன. இலங்கையின் புத்த ஹாமுத்ருக்கள் புத்த பகவான் போதித்த அகிம்ஸை-தயை--காருண்யம் தர்மம்-சீலம் அனைத்தையும் தொலைத்துவிட்டார்கள். ஆட்சியாளர்கள் இறைமாட்சி அறத்தையும் ஜனநாயக நாகரிகத்தையும் தொலைத்துவிட்டார்கள். சமதர்மம் பேசியஇடதுசாரிகள் மார்க்ஸிய வேதத்தைத் தொலைத்து விட்டார்கள். இந்த அனைவரும் மேலாதிக்க உன்மத்தத் தில், மானிடத்தின் அடிப்படை உரிமைகள் பற்றிய நினைவையே தொலைத்துவிட்டார்கள். இவற்றால், ஈழத் தமிழர்கள் தர்ம நியாயம்-மனநிம்மதி-தாயக மண்-தமிழ்மொழி-சுய கெளரவம்-மனித வாழ்க்கை. என நிரல்படுத்தக்கூடிய அனைத்தையும் தொலைக்க நேர்ந்தது. தொலைக்கவில்லை. கொள்ளையடிக்கப் பட்டன! சொந்த மண்ணிலும் அகதிகள்; புகுந்த நாடு களிலும் அகதிகள். தனித்துவ அடையாளங்களை மட்டு மல்ல, முகத்தையும் இழந்த மனிதர்கள். தொலைத்த

Page 20
16
'வற்றைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தேடலோ
நெ:யது; கொடியது. இத்தேடல் தொற்றிய சோகங்கள்
இழப்புகள் - சமர்கள் - அநுபவங்கள் - யாகங்கள் - தவங்கள் அனைத்துமே இன்றைய தமிழுக்குப் புதிது.
இந்தப் புதிதும் இணைந்ததுதான் இருபத்தியோராம்
நூறறாண்டின் தமிழ் இலக்கியம்.
ஒரு விஷயத்தில், செந்தமிழ் நாட்டினர் பாக்கியவான் களும்! நீலத் திரைக்கடல் ஒரத்தில் நின்று தவஞ் செய் குமரி; வடமாலவன் குன்றம்' என்று தமது தாயக மண்ணின் எல்லைகளைக் கவித்துவமாக நினைத்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த மண்ணிலே, நிலவினில் ஆடிக் களித்த மண்ணிலே, தங்க மதலைகள் ஈன் றமுது ட்டித் தழுவிய மண்ணிலே, ரா. பூரீ. தேசிகன் ஆற்றுப்படுத்தியவாறு, அகண்ட நந்தவனங்கள் அமைப்ப தற்குப் , அதன் பாங்கரிலே சிறுகதைத் தோட்டங்கள் அமைத்துப் பராமரிப்பதற்கும் தோதும் வசதியும் அவர் களுக்கு வந்து பொருந்தலாம். பெண்ணியத்திற்கு ஒரு புதிய பாய்ச்சல், தலித் இலக்கியத்துக்கு ஒரு புதிய பரிமாணம் என்று 'கதை அளப்பதற்கும் ஓய்வு உண்டு. சினிமா நாயக-நாயகியரை இரட்சகர்களாயும் கடவுளர் களாயும் உயர்த்துவதற்கு ‘விசில் அடித்துக்கொண்டே, "ஜூனியர் விகடன்' "நக்கீரன்’ ஆகியன தரும் investigative கதைகளை விழுந்து விழுந்து வாசித்துக்
கொண்டே, மாதவியா-கண்ணகியா - கோப்பெருந்
தேவியா கற்பிற் சிறந்தவள் என்ற மிகு ஆராய்ச்சிகள் நடத்திக் கொண்டே, serious இலக்கியம் பற்றி ஒரு Changeற்காகப் பேசுவதற்கும் அவர்களுக்கு வசதிகளும் of . இத்தகைய சுகபோகங்கள் அவர்களுக்குக் கொள்ளையாகக் கிடைப்பதுபற்றி அழுக்காறு கொள்ளத்
தானும் ஈழத் தமிழருக்கு நேரமில்லை. பாவம், அவர்கள்
சபிக்கப்பட்டவர்களும்! இருப்பினும், தாங்கள் மேற்.

17
கொண்டுள்ள இரட்சண்ய யாத்திரையையும், தங்களு டைய தேடல்களையும் மனித நேயத்துடன் புரிந்துகொள் ளும் பக்குவம் or at least அநுதாப மனோநிலை, பேசும் மொழியால் உடன்பிறப்புகளான செந்தமிழ் நாட்டின ருக்கு ஏற்படுதல் வேண்டுமென்று பிரார்த்திக்கும் உரிமை யாவது ஈழத் தமிழருக்குக் கிடையாதா?
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று மக்கள் voteற்குத் தூண்டில்போடும் மேடைகளிலே ஒலிப்பதுடன் தமிழ்ப்பற்று ஒய்ந்துவிடலாகாது ஒயுதல் செய்யும் செளகரியம் ஈழத் தமிழர்களுக்கு இல்லை. 'விலங்குகளாய் 'அடிமைகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லப் பான்மை கேட்டு வாழமாட்டோம்" என்று சினந்தெழுந்த வர்கள், ஈழத்தமிழர்கள்! போரே தர்மமாக அவர்கள்மீது திணிக்கப்பட்ட பொழுது, அதனை ஏற்றார்கள். தர்ம ஆவேசத்துடன் ஏற்றார்கள். விடுதலை அவர்கள் வெறி யாகியது. தமிழின் சேவிப்பே அவர்களது மதமும் பக்தி யுமாகியது. இந்த நூற்றாண்டிலே, மொழியின் நிமித்தம் இத்தகைய ஆக்கினைகளை எந்த மனித இனம் எதிர் கொண்டது? இந்த ஆக்கினைகளுக்கு அவர்கள் பணிய வில்லை. பதர்களாகவில்லை. ரட்சிப்புக்காக முள்முடி தரித்து, சிலுவை சுமந்து திரிகிறார்கள். முள்முடியும் சிலுவையும் குறியீடுகளே. குறியீடுகளின் அர்த்தங்கள் பக்குவத்துக்கும் ஞானத்துக்கும் ஏற்ப விரியும். ஆக்கினை களின் சங்காரத்திலே விடுதலை வெறியனானவன் எதற் கும் அஞ்சான். மானிடத்தின் விமுக்தி அவன் வாழ்க்கை ஊழியமாய்க் கனியும். இந்நிலையில் அவனுடைய படைப்பின் சரஸ் பிரவகிக்கும். இலக்குப் புதிது" பார்வை புதிது. ரீதி புதிது. சுருதி புதிது. எனவே தமிழும் புதிது. இந்நிலையில், "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல்வேண்டும்’ என்பது கோஷமல்ல; வாழ்க்கையின்-எழுத்தின்-தமிழின் பிரிக்க ஒண்ணா அம்ஸம்!

Page 21
8
இத்தகைய எண்ணங்கள் என்னைப் பரவசப்படுத்தும் திலையிலே, வம்ச விருத்தி கதைத் தொகுதியை இன்னொரு தடவை புரட்டுகின்றேன். 'லொட்டோ எண்ணைப் போன்று வந்த பக்கத்தில், முத்துலிங்கம் என்ன எழுதுகின்றார்? அதனை உங்களுடன் சேர்ந்து வாசிக்க ஆசை:
“அடுத்த நாள் அதிகாலையிலே சத்தம் கேட்டு விழித் துக் கொண்டோம். ஆரவாரம் காதைப் பிளக்க வெளியே வந்து பார்த்தோம். தலைக்குடி மகனை கயிற்றுப் பல்லக் கில் தூக்கியபடி பல்லக்குக் காவிகள் ஒட்டமும் நடையு மாகச் சென்று கொண்டிருந்தார்கள். மலையைப் போன்ற உடம்பை நிமிர்த்தி வைத்து இடமும் வலமும் பார்த்தபடி போனார் தலைக்குடி மகன்.
*சூரன்போர் திருவிழாவில் சூரன், சிங்கமுகன், பானு கோபன் என்று மாறி மாறி வரும். உடம்பு ஒன்று தலை மாத்திரம் மாறும். சகடையில் வைத்துத் தள்ளி வரும் போது புன்னாலைக் கட்டுவன் தச்சனார் பின்னாலிருந்து சூரனுடைய காதுகளை இறுக்கிப் பிடித்து இடமும் வலமும் ஆட் டியபடியே இருப்பார். அதற்கேற்றபடி கைவாளும் மேலும் கீழும் ஆடும். நாங்கள் சூப்புத்தடியை தக்கியவாறு பயத்துடன் இந்த வைபவத்தைப் பார்த்துக கொண்டு இருப்போம். அப்ப பானுகோபன், பானு கோபன்’ என்று சத்தம் கேட்கும். சூரனுடைய மகன், பதுமகோமளைக்குப் பிறந்தவன், சிறுபிள்ளையாக இருந்தபோது கோபத்தில் சூரியனையே பிடித்து தொட் டில் காலுடன் கட்டியவன், தலையை இரண்டு பக்கமும் ஆட்டியபடி வருவான். நாங்கள் பயததுடன் பெரியவர் களுடைய கையைப் பிடித்துக் கொள்ளுவோம்.
"அது போலத்தான் தலைக்குடிமகன் வந்து கொண்டி ருந்தார்."
புலம் பெயர்ந்து, அமேரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டே, ஆபிரிக்கக்

19
காட்டிலே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஈழத் தமிழன் "ஞானம்' என்ற கதையிலே தன் அநுபவத்தை மேற்கண்ட் வாறு சொல்லுகிறான். இன்றைய அநுபவத்தைச் சிததிரிக்கும் பொழுது, பிறந்த மண்ணின் நினைவுகள் இயல்பாகவே, குறுக்கிழையில் ஒட, கோலச் சித்திரம் நெசவாகின்றது. அந்த இடத்தில் கொக்குவிலானான முத்துலிங்கம் மறுஜனனம் எடுத்து விட்டான்! குப்புத்தடி நககும், பொய்மை அறியாப் பாலகன். சூரன்போர், சகடை , தச்சனார் என்று காவிய மயமான ஒவிய சுகம் அவன் நெஞ்சை நிறைக்கின்றது! அந்த நேரத்தில், அவன் எழுத்து சத்தியக் கனலிலே புனிதம் கண்டு, அழகியல் காயகல்பத்தில் இளமை பூண்டு. அஃது எழுத்தின் அமர நிலை. இந்த அமர நிலை, பிறந்த மண்ணின் நினைவுகள், தாயின் மடியிலும், மண்ணின் புழுதியிலும் பயின்ற தமிழிலேதான் சாத்தியப்படும். மண்ணும், அதன் நினை வும், அந்த நினைவுகள் கூத்தாடும் மொழியும் புலம் பெயர்ந்தவனின் நித்திய தியானத்தில் மண்டிக் கிடப் பவை. அவை இன்றி அவன் வெறுமை; வெறும் பூஜ்யம், எனவே, இவ்வாறு சித்திரிப்பதே இயல்பு; அழகு;
உண்மை. "எந்த இடத்தில் அழகும் உண்மையும் தாண்டவமாடுகின்றனவோ, அவ்விடத்தைக் கை கூப்பித் தொழ வேண்டும்; அதுதான் கோயில்' என்று
ரா. பூஜீ. தேசிகன் அரை நூற்றாண்டுக்கு முன்னரே மகிழ்ந்தார். எத்தகைய ரஸனைப் பக்குவம்! இதனை விடுத்து, புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர்களிடம் தங்கள் வட்டார வழக்கைத் தொடர்ந்து பயன்படுத்தும் பிடிவாதம் இருக்கிறது என்றும்; இதனால், சில சமயங் களில் கதைகள் மற்ற நாட்டுத் தமிழர்களுக்குப் புரிவதில் சிரமமிருந்து அவைகளின் சர்வதேசத் தன்மையை இழந்து விடுகின்றன என்றும் முறையீடு செய்வது வடி வில்லை.
'கோவைத் தமிழ் கரும்பு. கல்லுப் போலிருந்தாலும் அத்தனையும் இனிப்பு. திட்டும்போது கூடத் தித்திப்பை

Page 22
20
விட்டு விடாதவர்கள் அவர்கள். நடுராத்திரியில் அவித்துக் கொடுக்கும் இட்லியைப்போல மதுரைத் தமிழ் மென்மை யானது. ஆனால், அவர்களது விமர்சனமோ மிளகாய்ப் பொடி. என்ன இருந்தாலும் நக்கீரன் நடமாடிய தலம் அல்லவா? நெல்லைத் தமிழ் கவிதைத் தமிழ், ஒலிநயமும் உவமையும் ஊடும் பாவுமாய் ஒடும் தமிழ். திட்டவே தெரியாது திருநெல்வேலிக்காரர்களுக்கு’ என்று வட்டார வழக்குச் சிலவற்றுக்குக் குமுத"மான பாராட்டு உண்டு. சென்னைத் தமிழ், அக்ரகாரத் தமிழ், கரிசல் காட்டுத் தமிழ், நாஞ்சில் தமிழ், தலித் தமிழ். இவை அனைத்தும் தனித்தும், இணைந்தும் செந்தமிழ் நாட்டின் இன்றைய படைப்பிலக்கியத்தின் கருவிகளாய் உயர்ந்துள்ளன. இந்த வட்டார வழக்கினால் தேசியம் சங்கை கெட்டது என்று சொல்வாரும் உளரோ? ஈழத் தமிழை உரிய முறையிலே அங்கீகரிப்பதிலே, கலைமகள் கி.வா.ஜ. காலத்திலிருந்தே ஒருவித பஞ்சி தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் பலருக்கு இருக்கிறது. இதற்கான ஏது என் பிடிமானத்திற்குள் சிக்குபபடுவதாகவும் இல்லை. தாம்பூலந் தரித்து நா நோகாத் தமிழ்ச் சல்லாபம் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் கள் சுகிக்க முடியாத ஒன்று. எதுகை மோனை செய்து, பட்டிமன்றங்களிலே வித்துவம் ஊன்றும் "பேறு அவர் களுக்கு இல்லை. இலக்கியமும் அதன் படைப்பும் அவர் களுக்கு செளந்தர்ய உபாசனையல்ல. கலை ஆராதனையு மல்ல. எழுத்துக் கலை அவர்களுக்குக் கிளர்ச்சியின் வெளிப் பாடு. ஞானத்தின் பகிர்வு. சத்தியத்தின் பதிவு. சுய மானத்தை இழந்து விடாத அக்கறை. மானிட மேன்மை யன் தேடல். விடுதலையின் உள்ளொளி. இவையே அவர் களுடைய எழுத்து ஊழியத்திற்கான உந்து விசைகள். ப ைமும் புகழும் விடுதலைக்கு ஈடு அல்ல. படைப்பு முனைப்புக்கூட விடுதலையின் இன்னொரு ஸ்திதி என்கிற சப் பாவனையே! தொழிலிலும் புறவாழ்விலும் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்தை ஏற்றவர்கள். வீட்டு மொழி

21
யாக மட்டுமே தமிழை வசப்படுத்தும் நிர்ப்பத்தம். ஆனால், தமிழை மறப்பதினால் தமது ஆன்மாவையே இழந்து விடலாம் என்கிற அச்சத்துடன் வாழ்கிறார்கள். தாயிடம் பாலமுது அருந்திய காலத்திலே பயின்ற தமிழ், குஞ்சுப் பருவத்திலே பார்த்த காட்சிகளிலும், அநுபவித்த கோலங்களிலும் உறைந்து நின்ற மொழிதான் அவர்கள் வாலாயப்படுத்தும் தமிழ். அது வித்துவத்தினால் பழுது படாது. வேறு தமிழில் எழுத முனைந்தால் உண்மையின் அழகையும், சத்தியத்தின் ஓர்மையையும், ஆன்மாவின் உள்ளொளியையும் அவர்களுடைய படைப்பு இழந்து விடும் அபாயம் உண்டு. “பெரியவர்கள் இதனைப் புரிந்து கொள்ள ஏன் பஞ்சிப்பட வேண்டும்?
இலக்கியத்துக்கு சுத்த சுயம்புவான சர்வதேசத் தன்மை எதுவும் கிடையாது. சர்வதேச இலக்கிய அளவு கோல்கள் வைத்துக் கொண்டா காளிதாஸன் ‘அபிஞத சகுந்தலா'வைப் படைத்தான்? தாகூரின் கீதாஞ்சலி, வங்காள மொழியின் ஆள் பயிற்சிக்காகவா உலக இலக்கிய அங்கீகாரத்தைச் சம்பாதித்தது? மொழியின் செம்மையான பயன்பாட்டினால் மட்டும் சர்வதேசத் தன்மையை இலக்கியத்துக்குச் சம்பாதிக்கலாம் என்பது பிரமை. உலகத்தின் மிகக் குறுகலான ஒரு மூலையிலே ஒளிந்து கிடக்கும் மானிடத்தை ஒளிரச் செய்யும் இலக் கியப் படைப்பு, அது மிகச் சிறிய மக்கள் கூட்டத்திலே பயிலப்படும் மொழியிலேதான் படைக்கப்பட்டது என்றா லும், அஃது உலக இலக்கியமாக உயரும. மொழியின் GuéjoulJuDépa); படைப்பின் வல்லபம், மானிடத்தின் வல்லபம்! ஒரு காலத்தில், மாட்சிமை பொருந்திய பெரிய பிரித்தானிய மன்னர் முன்னிலைப்படுத்திய ஆங்கிலமே சர்வதேச இலக்கியம் தோன்றுவதற்கான மொழி என்று நினைத்திருந்தார்கள். அந்தக் காலத்தில், அமேரிக்கக் யேற்றவாசிகளும் வ்வாே னைத்தார்கள். ಟ್ವಿ: ಫೆ?: தின் இலக்கிய ஆதிக்கம் நீண்ட காலத்துக்கு நின்று பிடிக்க

Page 23
22
வில்லை. "புதிய வானம் புதிய பூமி’ என முகிழ்ந்த தமது புதிய அநுபவங்களை, அங்கு வழக்கில் முகிழ்ந்த மொழி யில், தேசிய இலக்கியமாகப் படைத்தார்கள். ஒரு விதத்தில், அந்த மொழி வட்டார வழக்கே! வட்டார வழக்கில் அவர்கள் ஊன்றிய பிடிவாதத்தினாலும், அமேரிக்கத் தேசிய இலக்கியம் உருவாயிற்று. அடிப்படை யில் தேசியத் தன்மைகளை நிறைவாக உறிஞசிக் கொள்ளும் இலக்கியமே கால ஓட்டத்தில் சர்வதேச இலக்கியமாக அங்கீகாரம் பெறுகின்றது! எனவே, இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியப் பரப்பு உலகளாவியதாக அகலிக்கும் பொழுது, ஈழத் தமிழையும் இணைத்துத்தான் அதன் மொழிவளம் வீறு கொள்ளும். இதுவே நியதி. இது சமத்காரமான நியாயப்படுத்துதல் அல்ல; சத்தியம்!
மேலும், இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் கதைகளின் களங்கள் பனை வளராப் பணி பெய்யும் நாடுகளிலும், முத்துலிங்கம் போன்றவர்களுக்கு sub-Sahara நாடுகளிலும், விரிவுபடும். அக்கதை களிலே மானிடத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை யும் மனித நேயமும் ஒளிரும். மொழி-கலாசாரம்-பண் பாடு-மதம்-நிறம் ஆகிய அனைத்து வேறுபாடுகளும் இற்று, எல்லோரும் கேளிர்- KIN-சுற்றத்தார் என முகிழ்ந்திடும் மானிடம்! யாரவன்? புலவனா? சான் றேனா? "யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றல்லவா பாடினான்? ஒமோம். கணியன் பூங்குன்றன்! அந்த அற்புத DYLLஇன் கிளர்ச்சியை, உலகத் தமிழ் ஆராய்வு களுக்கான ஒரு கோஷமாக எல்லோர் வாயிலும் மன சிலும் ஒலிக்கச் செய்தவர் தனிநாயகம் அடிகளார். புத்திஜீவித வக்கிரங்களினால் தேசப் பிரஷ்டம் செய்யப் பட்ட ஈழத்தமிழர் அவர். அவர் தேடலிலே, பூங்குன்றன், புதிய உயிர்ப்பும் வீரியமும் சுகித்தான். கேளிரைக் கேளிராக்கி, ஆராய்வுகளை அரசியற் சிறு தெய்வங்களின் பரதசேவைக் கேளிக்கைகளாக்கும் பேதையருக்கு அந்தப்

23.
பாடலின் ஆன்மா சிக்கமாட்டாது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்தம் இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ்ப் படைப்பு ஊழியம், அந்தப் பாடலின் இறுதி வரிகளையும் ஆதார சுருதிகளாக இணைத்துக் கொள்ளும்.
காட்சியிற் தெளிந்தனம்; ஆகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! இஃது எத்தகைய vision-தரிசனம் *.அனைத்துல. கும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே, உன் சீரிளமைத் திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே” என்று ஒப்பாசாரத்துக்காக, எழுந்து நின்று, தமிழணங்கை வாழ்த்துவதோடு தமிழ் பற்றிய அக்கறை சம்பூரணம் பெற்றதா? தமிழணங்கின் சீரிளமைத் திறனை வளர்ப்பதிலும் வளப்படுத்துவதிலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இணைந்துள்ளார்கள் என்பதை மதித்து, செத்தமிழ் நாட்டினரும் அவர்களைக் கேளிராக அணைத்தல் எத்தகைய ஆனந்த நிலை!
அடுத்த நூற்றாண்டின் கதைக் களங்களும், பொருள் க்ளும் இவற்றை இசைக்கும் பாணிகளிலும் உபாயங்களும் உத்திகளும் மாறும். மாற்றமே வளர்ச்சியுமாம். இவை பற்றிய தேடல்களின் கோலங்களை வம்ச விருத்தி"யிலே தரிசிக்கின்றேன். நாளைய நூற்றாண்டின், நாளைய கதைகளின் சாங்கங்களைப் பதிவுசெய்வதினாலும், வம்ச விருத்தியை வெள்ளோட்டம்-lanch எனக் குறித்தேன். நண்பர் முத்துலிங்கம் ஒரு சாமான்யனாகவே வசப்படுத்தி யுள்ள சாமான்யத் தமிழிலே, கடந்த சில தசாப்தங்களாக மேற்கொண்ட ஒரு வகை நாடோடி வாழ்க்கையிலே திரட்டிக் கொண்ட அநுபவங்களிலே காலூன்றி, இந்தத் தொகுதிக்கான கதைகளைப் படைத்துள்ளார் என்கிற சங்கதி சட்டென்று வாசகனின் பிடிமானத்திற்குள் சிக்கிக் கொள்ளும். இவற்றின் மத்தியிலே தாம் ஒரு யுகசந்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கும் பிரக்ஞையை

Page 24
24
அவர் துறக்கவில்லை. 'இருபது வயசிலே அறிந்த உண்மைகளின் பேர்பாதி நாற்பது வயசிலே உண்மைத் தன்மையை இழந்து விடுகின்றன; நாற்பது வயசிலே அறிந்து கொள்ளும் உண்மைகள் இருபது வயசிலே அறியப்படாதவையாக இருந்தன" என்கிற ஞானஉதைப்பு கதைகள் பலவற்றிலே பூடகமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால், 'சாமான்யன்’ என்பதிலே அவர் பூண்டிருக்கும் தோரணை, அன்று கொக்குவில் அயலிலே சேகரஞ் செய்த அந்த இனிமைகளை இழக்காத ஒர் இயல்பையும் இணைக் கின்றது. இது யுகசந்திப் பிரக்ஞையே! இந்தப் பிரக்ஞை யுடைய ஓர் எழுத்தாளனாலேதான், அடுத்த நூற்றாண் டின் கதைக்கலை உலகினை வரவேற்கும் நுழைவர்யிலிலே தோரணங்கள் கட்டுதல் ஏலும், ஏலும் மட்டுமல்ல, தகுதியும் முத்துலிங்கத்திற்கு நிறைவாகவே இருக்கின்றது. சான்வே, அவருடைய தமிழ் ஊழியத்தை நெஞ்சம் மணக்கப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன்.
நாடு-நிறம்-இனம்-மதம் ஆகிய குறுக்கங்களை எகிறிய ஒரு தேடலாய் அமைந்துள்ள 'வம்ச விருத்தி’ நாம் ஊன்றவேண்டிய அக்கறைகள் சிலவற்றைச் சுட்டு கின்றது. புதிய அநுபவங்களையும் கற்பிதங்களையும் இணைக்கின்றது. புலம் பெயர்ந்த நாடுகளின் நாளைய தமிழ் எழுத்தாளர்களுடைய சிரத்தைகளை நெறிப்படுத்து கின்றது. இவறறை நாம் உரிய முறையில் தரிசித்தல் வேண்டும் என்ற ஆசையினாலும், மூன்று தலைமுறைக்கு மேலாகவும் எழுத்து ஊழியத்தைச் சேவிக்கும் தமிழ்த் தவனம் மறக்காத பரதேசி என்ற ஹேதாவிலும், இந்த முன்னீடு இவ்வாறு சமைந்தது. தலைக்கேறிவிட்ட என் தமிழ்ப் பித்து எனக் கொண்டு, இதன் நீளத்தைப் பொறுத்தருள்க.
"ஒ மரங்களே, என்னை மன்னிப்பீர்களாக!" என்று முத்துலிங்கம் பாவமன்னிப்புக் கோரவேண்டிய அவசியமே இல்லை. அவருடைய தமிழ் ஊழியம், நாளைய நமது எழுத்தாளர்களுக்கும் பயன்படும். அவருடைய தமிழ் ஊழியம் தொடரவும், நின்று நிலவவும் என் ஆசிகள்.
எஸ். பொ அவுஸ்ரேலியா
6-4 - 1996

துரி
3 سه6hu>

Page 25
நான் வழக்கம்போல என் கதிரையிலே சாய்ந்தி ருந்தேன். அந்த இலையுதிர் பருவத்தின் மெளனமான ழாலை வேளையில் மின்கணப்பு மெதுவாக எரிந்து கொண்டிருந்தது. துரி என் காலடியில் படுத்திருந் தது. அன்று முழுக்க அது சாப்பிடவில்லை. சாப் பாட்டை போய் முகர்வதும், மறுபடியும் வந்து படுப்பதுமாக இருந்தது. என்னுடைய மகன் கல்லூரிக்கு போன நாள் தொடங்கி இப்படித்தான்.
இரண்டு நாள் முன்பு நானும் என் மனைவியும் காரிலேபோய் எங்கள் மகனை அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இருக்கும் பேர்க்லி கல்லூரியிலே சேர்த்துவிட்டு வந்திருந்தோம். அந்தக் கல்லூரி எங்கள் வீட்டிலிருந்து 300 மைல் தொலைவில் இருந்தது.
எங்களைப்போல இன்னும் பல பெற்றோரும் அமெரிக்காவின் பலபகுதிகளிலும் இருந்து அங்கே வந்திருந்தனர். பதினேழு வயது தாண்டிய பிள்ளை களை இப்படி பெற்றோர் கூட்டிவந்து கல்லூரிகளில் சேர்ப்பது இங்கே ஒரு சடங்கு. பிள்ளைகளுடன் பெற்றோருடைய உறவுகள் துண்டிக்கப்படும் முக்கிய மான நாள் இது. இதன் பிறகு பெற்றோர் வேறு, பிள்ளைகள வேறு என்று தங்கள் பாதையில் பிரிந்து சென்று விடுவார்கள்.
என் மகனுடைய சாமான்கள் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு போய் அவனுக்காக ஒதுக்கப்பட்ட அறையிலே வைத்தோம். முதன்முறையாக எங் களைப் பிரிந்து இருக்கப் போவதால் அவன் கண்கள் கலங்கிவிட்டன. அதைக் காட்டாமல் இருக்க அவன் பெரிதும் பிரயத்தனப்பட்டான். என் மனைவியோ பொங்கிவந்த அழுகையை அடக்கத் தெரியாமல் விம்மத் தொடங்கினாள். செய்வதறியாது துரியை வாரியெடுத்து திருப்பித் திருப்பி கொஞ்சினான் என்.

அ. முத்துலிங்கம் (1 27
மகன். அவனுடைய பத்தாவது வயதிலே பிறந்த நாள் பரிசாக நாங்கள் கொடுத்த நாய்தான் துரி, கடந்த ஏழு வருடங்கள் அவன் துரியைவிட்டு பிரிந் திருந்ததே இல்லை. முதன்முறையாக இப்படி பிரிவது எங்கள் எல்லோருக்கும் வருத்தமாகத்தான் இருந்தது.
நாங்கள் வீடு வந்து சேர்ந்தபோது வீடு ஓவென்று சுடுகாடு போல காட்சியளித்தது. மனம் கேளாமல் மகனுடன் டெலிபோனில் கதைத்தோம். அவன் துரியைப் பற்றித்தான் விசாரித்தான். நாங்கள் துரியை டெலிபோன் வாய்க்கருகே கொண்டுபோய் பிடிக்க அது ‘வள், வள்’ என்று குரைத்து தன் ஆற்றா மையை தெரியப்படுத்தியது. என் மகனுடைய அறைக்குள் ஒடிப்போய் அவன் படுக்கையையும், புத்தகங்களையும், உடுப்புகளையும் மணந்து மணந்து பார்த்துவிட்டு மறுபடியும் திரும்பி வந்து என் காலடி யில் படுத்துக்கொண்டது. நீர் தேங்கிய கண்களை உயர்த்தி முகத்தை என் மடியிலே தேய்த்து 'ங்.ங்’ என்று முனகியது. அதனுடைய துக்கத்தை யார் தேற்றுவார்கள்? V V
அந்த நாய்க்குட்டி பிறந்து ஆறு வாரங்களி லேயே எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. கால் களைத் தூக்கி ஆண் நாய் என்று நிச்சயித்துக் கொண்டு என்ன பெயர் வைப்பது என்ற விசாரத்தில் மூழ்கினோம். பல பெயர்களை நிராகரித்த பின்பு 'துரியோதனன்’ என்ற பேரை நான்தான் முன் மொழிந்தேன். என் மகன் என்னை கீழ்க்கண்ணால் ஊடுருவிப் பார்த்தான். பேர்களை 'வீட்டோ பண் னும் உரிமை அவனிடம் இருந்தது. "ஆ, துரி என்று கூப்பிடுவோம்’ என்று இறுதியில் சொல்லிவிட்டான். பெயரும் அபபடியே நிலைத்துவிட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து எங்களைப் பார்க்க அடிக்கடி

Page 26
28 0 துரி
வரும் நண்பர் ஒருவருக்கு அந்தப் பேர் பிடிக்க வில்லை: 'ஏன், வேறு பேர் கிடைக்கவில்லையா? என்று கேட்டார். நான் 'இல்லை, முதலில் திருதராட்டினன் என்று வைப்பதாகத்தான் இருந் தோம். ஆனால் அந்தப பேரில் நாய்க்கு அவ்வளவாக சம்மதமில்லை; அதுதான் 'துரியோதனன்’ என்று வைத்திருக்கிறோம். இந்தப் பேர் அதற்கு நன்றாகப் பிடித்துக்கொண்டது" என்று சொல்லிவிட்டேன். பிறகு அந்த நண்பர் வாயே திறக்கவில்லை.
இடக்காக அவருக்கு பதில் கூறினாலும், துரியோதனன் என்று பேர் வைத்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. மகாபாரதத்திலே சிறப்பாக பேசப்படும் நட்பு கிருஷ்ணன், அர்ஜுனன் நட்பு தான். இரண்டுபேருமே ராஜவம்சம்; நெருங்கிய உறவு. இதிலே என்ன அதிசயம்? உண்மையில், எங்கள் இதிகாசங்களில் கூறியபடி மிகச்சிறந்த நட்புக்கும், விசுவாசத்திற்கும், அன்புக்கும் இலக் கனம் துரியோதனன்தான். அர்ஜூனனுடன் துவந்த யுத்தம் தொடங்க முன்பு “உன் குலத்தை உரைப்பா யாக’ என்று சபை நடுவே கேட்டதும் தலைகுனிந்த கர்ணனை கட்டித் தழுவி அந்தக்கணமே அவனை அங்கததேசத்து அரசனாக அபிஷேகம்செய்த துரியோ தனனை மறக்க முடியுமா? சொக்கட்டான் விளை யாட்டின் உச்சக்கட்டத்தில் பானுமதியெழுந்ததும் அவள் முந்தானையை கர்ணன் பிடித்து இழுக்க, முத்துமாலை அறுந்து சிதறிவிழ, உள்ளே வந்த வணங்காமுடி மன்னன் துரியோதனன் முழங்காலில் இருந்து *பொறுக்கவா, கோக்கவா’ என்று கேட்ட அவனுடைய ஆழ்ந்த நட்பின் அடையாளமாக வைத்த பெயரல்லவா இது? இந்த வியாக்கியானம் எல்லாம் கழிவுநீர் கால்வாய் திருத்தும் லாஸ்

ce. முத்துலிங்கம் 29
ஏஞ்சல்ஸ் நண்பருக்கு விளங்கவா போகிறது என்று நானும் பேசாதிருந்துவிட்டேன்.
துரி சிறு வயதிலே செய்த கூத்தை இங்கே வர்ணிக்க முடியாது. அது வந்த நாளில் இருந்து எங்கள் வீட்டு நடைமுறைகள் எல்லாம் மாறி விட்டன. எங்கள் எலலோருடைய செயல்பாடுகளும் அதை மையமாக வைத்துத்தான் நடந்தன. அதற்கு பால் பருக்குவது, சாப்பாடு ஊட்டுவது, குளிசிசி வார்ப்பது என்று எல்லாவற்றையும் போட்டி போட்டுக்கொண்டு செய்தோம். என் மகனுடன் செய்த ஒப்பந்தப்படி துரியன் கழிவு உபாதைகளை அவனே பார்த்துக்கொண்டான். படுக்கப் போகுமுன் பத்திரிகைகளையெல்லாம் பரப்பி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டோம். பனிக் குளிர் அடிக்கும் இரவு நேரங்களில் என் மகன் துரியைக் கூட்டிக்கொண்டு வெளியேவிட்டு நடுக்கத் துடன் காத்துக்கொண்டிருப்பான். அந்தக் காட்சி என் மனதை வெகுவாக உருக்கிவிடும்.
சில வேளைகளில் துரி தவறுதலாக விலையுயர்ந்த கார்பெட்டில் ஒன்றுக்குப் போய்விடும். நாங்கள் அதை அதட்டும்போது அது மிகவும் நொந்துபோகும். அவமானப்பட்டு போய் உடலைக் கூனிக்குறுகி ஒரு மூலையிலே அனுங்கிக்கொண்டே ஒளியப் பார்க்கும். அது புத்திசாலியான நாய் என்றாலும் சிறுபிள்ளை களுக்கே உரிய விஷமத்தோடு அது செய்த லீலை களுக்கு அளவில்லை.
முதலில் இருந்தே சில ரூல்ஸை நாங்கள் துரிக்காக ஏற்படுத்திக் கொண்டோம். அதிலே ஒன்று துரிக்கு நாங்கள் சாப்பிடும் உணவு கொடுப்பதில்லை என்பது தான். காலையிலே இரண்டு கப் பால்; பின்னேரம் ஐந்து மணியளவில் டின்னிலே வரும் நாய் உணவை

Page 27
30 O gyrff)
அளவோடு எடுத்து துரியுடைய பிளேட்டில் போட்டு விடுவோம். அது பாய்ந்தடித்து சாப்பிடாது; வைத்து வைத்து வேண்டியபோது சாப்பிட்டுக் கொள்ளும். ஒரு நாய் தன் சாப்பாட்டிற்காக கெஞ்சு வதோ, வாயைப் பார்த்துக்கொண்டு நிற்பதோ அதனுடைய தன்மானத்திற்கு இழுக்கு என்பது எங்கள் கருத்து.
குட்டி நாயான துரிக்கு குழந்தைப்புத்தி சுபாவம் அதிகம். பதுங்கி பதுங்கி வந்து நாங்கள் அணியும் "சொக்ஸை திருடிக் கொண்டுபோய் தோட்டத்திலே புதைத்துவிடும். இப்படியாக எங்கள் சொக்ஸ் எல்லாம் அதிதீவிரமாக மறைந்துகொண்டு வந்தன. ஒருநாள் பிடிபட்டு விட்டது. ‘எங்கே?' என்று உறுக்கி கேட்டதும் தோட்டத்திலேபோய் பரபரப் பாகத் தோண்டியது. சுந்தரமூர்த்தி நாயனார் பரவையரை 'இம்பிரெஸ் செய்வதற்காக ஆற்றிலே போட்ட பொற்காசை திருவாரூர் தாமரைக்குளத்தில் எடுத்துக் கொடுத்தாரல்லவா? எங்களுடைய துரியும் எங்களை இம்பிரெஸ் செய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகளெல்லாம்படுதோல்வியடைந்தன. அதற்குப் பிறகு நாங்கள் எல்லாரும் எங்கள் சொக்ஸை கண்ணும் கருத்துமாக காவாந்து செய்யத் தொடங் கினோம். . ஆனால் இதை எதிர்பார்த்த துரி இன்னொருபடி முன்னேறி விட்டது. ஒருநாள் இரவு என் மகனுடைய காலணியை கடித்து வைத்திருந்தது. அன்று நாங்கள் இது எங்களுக்கு ஒப்பான விஷயம் இல்லை என்பதை மிகவும் கஷ்டப்பட்டு துரிக்கு விளங்க வைத்தோம். ஆனால், அடுத்த நாலாம் நாளே என்னுடைய நூற்றி நாற்பது டொலர் சப்பாத்தை இது கடித்து ஒட்டை போட்டுவிட்டது. இது ஒரு சீரியஸ் விஷயம் என்பதை துரிக்கு எப்படி உணர்த்துவது? அடுத்த நாள்

அ. முத்துலிங்கம் ( 31
சாப்பாட்டு நேரத்துக்கு துரியினுடைய பிளேட்டில் உபயோகத்தில் இல்லாத பழைய சப்பாத்துகள், செருப்புகள் எல்லாவற்றையும் போட்டு அதன் முன்னால் வைத்தோம். துரி திடுக்கிட்டு விட்டது. இரண்டு நாள் தொடர்ந்து இப்படியே செய்து கொண்டு வந்தோம். அதுவும் சிவபட்டினியாகக் கிடந்தது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு துரி சப்பாத்தை கண்டால் மற்ற பக்கமாக ஒடும்.
துரியை வாங்கும்போது எங்களுக்கு அதனுடைய பெடிகிறி கார்டையும் தந்திருந்தார்கள். பெடிகிறி கார்டு என்பது அந்த நாயுடைய பூர்வாங்கத்தை கூறும் அட்டை. அது ஒரு ஒஸ்ட்ரேலியன் செப்பர்ட். அதனுடைய மூதாதையர் ஸ்பெயினில் இருந்து ஒஸ்ரேலியா போய் அங்கேயிருந்து நூறு வருடங் களுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு வந்தவை. பிறக்கும்போதே ஒட்டிய வாலுடன் பிறக்கும் இந்த நாய்கள் ஒஸ்ட்ரேலியாவில் ஆட்டு மந்தைகளை சீராக வைத்திருப்பதற்கு ஒருகாலத்தில் பயன்படுத்தப் பட்டவை. நீலநிறக் கண்களும், மடிந்த காதுகளும், மெத்தென்று பத்தையாக இருககும் மயிரும் இந்தச் சாதி நாயை சட்டென்று இனம் காட்டி விடும். அறுபது பவுண்ட் எடையும் இரண்டு அடி உயரமும் கொண்ட இது மனிதனுக்கு கடவுளால் அளிக்கப் பட்ட விசுவாசமான ஒரு தோழன்.
துரியுடைய மேல்முடி சொக்லேட் கலரில் அடர்த்தி யாக இருக்கும். முகமும் கீழ்கால்களும் மாத்திரம் தேக்குமர நிறம், அதன் கழுத்துக்குக் கீழே கொஞ்சம் வெள்ளைப் பிரதேசம். கண்கள் கனிந்து இருக்கும்; அண்ணாந்து பார்க்கும்போது ‘என்னை அணை' என்று கெஞ்சுவதுபோல தோன்றும். கண்களுக்கு மேலே இரண்டு வட்டங்கள். அது படுத்து நித்திரை

Page 28
32 0 துரி
கொள்ளும்போதும் கண் விழித்திருக்கிறது போன்ற பிரமையை உண்டு பண்ணும். ஆட்டு மந்தைகளை மேய்க்கும்போது ஆடுகள் இது தூங்கும்போதும் விழித்திருக்கிறது என்று நினைத்து மயங்கி பயபக்தி யோடு செயல்படுமாம்.
மேய்ச்சலில் இருக்கும்போது இது மந்தையை சுற்றிச் சுற்றி வந்து ஆடுகளின் கால்களை மெல்லக் கடித்து அவற்றை ஒழுங்கு படுத்தும். அந்தப் பழகி கத்தை இது இன்னும் முற்றிலும் மறக்கவில்லை. நாலைந்து பேரோடு இதைக் கூட்டிக்கொண்டு ரோட்டிலே போனால் இது ஆட்களைச் சுற்றிச்சுற்றி வந்து குதிக்காலை மெல்லக் கடித்து ஒழுங்குபண்ணப் பார்க்கும். இன்னொரு பரம்பரை விசேஷமும்இதற்கு உண்டு. ஆட்டு மந்தையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு போக வேண்டுமென்றால் இது சுற்றி வந்து போகாது. ஒரு ஆட்டின் மேலேறி அப்படியே ஒவ்வொரு ஆடாக டாய்ந்து பாய்ந்து அந்தக் கரை போய் சேர்ந்து விடும். இந்தப் பழக்கம் இன்னமும் இதன் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு போவ தற்கு இன்றுகூட இது தன் குலாசாரப்படி எதிர்ப் பட்டதெல்லாவற்றையும் ஏறிப் பாய்ந்து பாய்ந்து தான் போய்ச் சேரும்.
நான் வளர்த்த நாய்களில் துரி போன்ற அறிவுக் கூர்மையுள்ள நாயை நான் கண்டது கிடையாது. ஆனாலும் அதற்கு ஒரு வயதுப் பிராயம் முடிவதற் கிடையில் தகுந்த ட்ரெயினரிடம் பயிற்சி கொடுப்ப தென்று முடிவு செய்தோம். ட்ரெயினர் சொன்ன வாசகம் எனக்கு இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. "நாய்கள் நல்ல புத்திகூர்மை உடையவை. அவைக்கு ட்ரெயினிங் தேவையில்லை. ட்ரெயினிங் எல்லாம் உங்களுக்குத்தான்’ என்று அந்த மெக்ஸிகோக்காரன்

அ. முத்துலிங்கம் O 33
என்னைச் சுட்டிக்காட்டி கூறினான். எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.
நாலே நாலு வார்த்தைகள்தான் எங்களுக்கு கற்பித்தான். அதன் பிறகு துரியில் எவ்வளவு மாற்றம். *கம் வா என்பது; "சிட்” இரு என்பது; ஸ்டே நில் என்பது; இவை எல்லாவற்றையும் நானும் துரியும் வெகு சிரத்தையாகக் கற்றுவிட் டோம். வீட்டுப்பாடம் கூட சரியாக செய்தோம். ஆனால் ‘ஹீல்" என்பது எங்கள் இரண்டு பேரையும் வாட்டி எடுத்துவிட்டது. இடது கையிலே நாயுடைய சங்கிலியை பிடித்துக்கொண்டு நாயையும் இடது பக்கமாக நடத்திச் செல்லவேண்டும். செய்து பார்த் தால் தெரியும் வினை. நடக்கும்போது நாய் என்னு டைய குதிக்காலுடனேயே வந்து கொண்டிருக்க வேண்டும். நான் நிற்கும்போது அதுவும் நிற்க வேண்டும்; நடக்கும்போது அதுவும் நடக்கவேண்டும். கொஞ்சம் முந்தியும் போகக்கூடாது. பிந்தியும் வரக் கூடாது. நாயுடைய வேகத்துக்கு ஏற்ப நான் என்னு டைய வேகத்தை மட்டுப்படுத்த பார்ப்பேன். மெக்ஸி கோக்காரன் கத்துவான். நாய்தான் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும்; நானல்ல. காசையும் கொடுத்து இந்த மெக்ஸிகோக்காரனிடம் இப்படி பேச்சு வாங்க வேண்டியிருக்கிறதே என்று நான் என்னை நொந்து கொள்வேன். கடைசியில் ஒருவாறாக பரீட்சையில் இருவருமே பாஸாகி விட்டோம்.
இதுதவிர மெக்ஸிகோக்காரன் ஒரு விஸிலும் தந் திருந்தான். அந்த விஸிலை ஊதினால் சத்தமே கேட் காது. அந்தச் சத்தம் நாய்க்கு மாத்திரம்தான் கேட்கும். அது எங்கே இருந்தாலும் ஓடி வந்து விடும். அதற்கு பிறகு துரியுடன் வாக் போவதும், பார்க்கிற்கு போய் விளையாடுவதும் எனக்கும் என் மகனுக்கும்

Page 29
34 0 துரி
சொர்க்க வாசலைத் திறந்துவிட்டதுபோல ஆகி விட்டது. இந்த நாலு வார்த்தைகளும் எங்களுக்கு ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்திவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.
‘போ’ என்று சொல்வதற்கு மெக்ஸிகோக்காரன் ட்ரெயினிங் இல்லை என்றும், நாயை அந்தவார்த்தை குழப்பும் என்றும் கூறியிருந்தான். 'போ' என்ற வார்த்தை உண்மையில் தேவையில்லை என்பதை நாங்கள் வெகுநாள் கழித்துத்தான் கண்டு கொண் டோம்.
எங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் துரி அவசரமாக வந்து அவர்களை ஒருமுறை முகர்ந்து பார்க்கும். பிறகு போய் விடும். அதனுடைய கம்ப் யூட்டர் மூளையில் விருந்தினருடைய மணம் பதிவாகி எஜமானருக்கு இவர்கள் வேண்டியவர்கள் என்ற செய்தி ஆயுளுக்கும் நிச்சயமாகிவிடும். சூப்பர் மார்க்கட் போனால் துரி எங்களுக்காக வெளியே காத்து நிற்கும். எவ்வளவுதான் அதற்கு தொந்தரவு வந்தாலும் அசையாது. ஒரேஒரு முறை மாத்திரம் அதற்கு ஒரு சோதனை ஏற்பட்டது.
துரி இப்படி ஒருநாள் வெளியே இருக்கும் சமயம் பார்த்து சடை வைதது சிலுப்பிய பெண் நாய் ஒன்று அதை மயக்கி விட்டது. வேத அத்யயணத்தில் கவன மாயிருந்த ரிஷ்யசிருங்கரைப்போல விஷயானுபவங் கள் தெரியாமலே இது வளர்ந்து விட்டது. இதற்கு முன் இப்படியான உணர்ச்சிகளை அது அனுபவித்த தில்லை. அந்தச் சடை நாயைக் கண்டதும் அதன் பின்னாலேயே சுற்றிக் கொண்டு போய் விட்டது. நாங்கள் துரியைத் தேடிக் கண்டுபிடித்தபோது எங்களை அந்நியர்போல பார்த்தது. ‘ங், ங் என்று அழுதுகொண்டே எங்களுடன் வேண்டாவெறுப்பாக

அ. முத்துலிங்கம் () 35
வந்தது. அந்தச் சடை ககார சிறுக்கி துரியின்மனத்தை அப்படி கெடுத்து விட்டது.
அப்போது நான் ஒரு துரோகமான காரியத்தை செய்யவேண்டி வந்தது. கடவுளால் படைக்கப்பட்ட ஒரு ஜவனின் பால் உணர்ச்சியுடன் விளையாட எனக்கு என்ன உரிமை இருக்கிறது. சுயநலம் கருதி மிருக வைத்தியரிடம் போய் துரிக்கு ‘நலம் அடித்து" (பால்நீக்கம் - neutering) வந்தோம். ஆண் நாய்கள் பெண் நாய்களுக்குப் பின் குறிகெட்டு அலையாமல் இருந்து வீட்டை நலமாகக் காப்பதற்காக யாழ்ப் பாணத்தில் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வந்த உபாயம். நாங்கள் செய்த துரோகம் தெரியாது என் செல்லக்கட்டி துரி எங்களை நக்கியபடியே விசுவாச மாக பின் தொடர்ந்தது என் மனதை மிகவும் கஷ்டப்
படுத்தியது.
ஒருநாள் இப்படித்தான் துரியை காரிலேயே விட்டு விட்டு கண்ணாடியையும் உயர போட்டுவிட்டு ஒரு அவசர காரியமாக டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் ஒன்றுக்குள் போய்விட்டேன். ‘ஐந்து நிமிடங்களில் வந்து விடுவேன்’ என்றுதான் நினைத்திருந்தேன். அங்கே கனநாள் காணாத ஒரு நண்பரைக் கண்டு நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருந்து விட்டேன். அவருடைய வற்புறுத்தலுக்கு இணங்கி அவருடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு திரும்பும்போது தான் துரியினுடைய ஞாபகம் சடுதியாக வந்தது.
அது ஒரு கோடைகாலம். பதைத்துக்கொண்டு நான் ஓடிவந்தபோது காரைச் சுற்றி இரண்டு மூன்று பேர்; ஒரு போலீஸ்காரர். பாண் போறணை போல வேகிக் கொண்டிருக்கும் காரிலே இப்படி வாயில்லாத பிராணியை விட்டுப்போவது எவ்வளவு பாபமான காரியம் என்பது எனக்குத் தெரியும். தவறுதலாக

Page 30
36 0 துரி
நடந்துவிட்டது என்று பொலீஸ்காரரிடம் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். ஆனால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு துரியிடம் மன்னிப்பு கேட்பேன்? துரி முகத்தை உயர்த்தி நீர் கசிந்த கண்களால் என்னைப் பார்த்துவிட்டு தலையை என் மடியில் உரசி தன் மன்னிப்பை அறி வித்தது; ஆனால் நான மாத்திரம் என்னை மன்னிக் கவே இல்லை.
இந்த சமயத்தில்தான் துரி தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பாடத்தைக் கற்றது. நாங்களும் தான். எங்கள் வீட்டின் பின்னால் மரங்களடர்ந்த ஒரு தோப்பு இருந்தது. மரங்களென்றால் கவையாகிக் கொம்பாகி வளர்ந்த ஒக் மரங்களும், அமெரிக்கன் ஹைவே போன்று வளைவே இல்லாத சிவப்பு மரங் களும் அந்தத் தோப்பை நிறைத்து இருந்தன. நிமிர்த்தி வைத்த நாதஸ்வரம் போன்ற டக்ளஸ் மரங் களில் வண்ணக்கலர் மரங்கொத்திகள் நேர் நேராய் ஒட்டைகள் துளைத்து அவற்றிலே வரப் போகும் பனிக் காலத்துக்கு ஒக் விதைகளைச் சேமித்து வைத்தி ருப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தேன் சிட்டு களும், மரங்கொத்திகளும், கொண்டைக் குருவிகளும், ஹம்மிங் பறவைகளும் அங்கே நிரந்தரமாக குடியிருந் தன. அவைகளுடைய சலசலப்பு அதிகாலை வேளையி லேயே எங்களையெல்லாம் எழுப்பிவிடும்.
துரிக்கென்று ஒரு சிறிய மரக்கதவு ரப்பர் வளை யம் போட்டு எங்கள் வீட்டு சுவரிலே பொருத்தியிருந் தோம். துரி வேண்டிய நேரம் போகவும் வரவும் அது வசதியாக இருந்தது. துரி அடிக்கடி வெளியே போய் தன் கீழ் பிரஜைகளாகிய அணில்களுக்கும், தேன் சிட்டுகளுக்கும், மரங்கொத்திகளுக்கும் காட்டும் முகமாக ராஜநடை நடந்து தன் ராஜ்யத்தை பரிபாலனம் செய்து திரும்பும். அவையும் இதைக்

அ. முத்துலிங்கம் 0 37
கண்டவுடன் "கீ கீ’ என்று சத்தமிட்டு மரியாதை செய்து ஒதுங்கி நிற்கும். துரி இப்படி புது லாடம் அடித்த குதிரைபோல தலையை நிமிர்த்தி நகர் வலம் வரும்போது அந்தந்த மூலைகளில் ஒரொரு சொட்டு சிறுநீர் தெளித்து தன் எல்லைகளை திரும்பவும் வலி யுறுத்தி வைக்கும்.
ஒரு நாள் இரவு பதினொரு மணியிருக்கும். என் மகன் ஹைஸ்கூல் சோதனைக்கு விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தான். நானும் மனைவியும் தொலைக்காட்சி பார்த்தவாறு இருந்தோம். எங்கள் காலடியில் துரி கதகதப்பாக படுத்திருந்தது. திடீ ரென்று ஒரு வாடை வீசியது. நாங்கள் இதற்கு முன்பு அறிந்திராத ஒரு நெடி. நாங்கள் ஆளையாள் பார்ப் பதற்கிடையில் துரி விசுக்கென்று எழும்பி நாய்க் கதவைத் தள்ளிக்கொண்டு வெளியே பாய்ந்தது. அங்கே வேவு பார்க்க வந்த வரிபோட்ட தேவாங்கு (Striped SkumK) ஒன்றை துரி துரத்தியபடி போய்க் கொண்டிருந்தது. ஒரு நொடிதான் அந்தக் காட்சியை பார்த்தாலும் மனதை விட்டகலாத காட்சியது. அந்த தேவாங்கு ஒன்றரை அடி உயரம்தான் இருக்கும். கறுப்பு நிறத்தில் முதுகிலே மட்டும் வெள்ளைக் கோடு; அத்தோடு குஞ்சம் கட்டியதுபோல அடர்த்தி யான வால் அதற்கு.
‘இனி ஆத்தாது' என்று தெரிந்ததும் தேவாங்கு பக்கவாட்டில் நின்று கால்களைத்தூக்கி இப்படியான ஆபத்து சமயங்களுக்கென்று கடவுளால் கொடுக்கப் பட்ட, பின்னங்கால்களுக்கிடையில் இருக்கும் கண் ணுக்குத் தெரியாத இரு சுரப்பைகளில் இருந்து ஒரு திரவத்தை பீச்சியடித்தது. துரியின் கண்களை நோக் கித்தான் இந்த திரவம் வந்தது. துரி எவ்வளவு முயன்றும் அதனால் இதைத் தவிர்க்க முடியவில்லை.

Page 31
38 () துரி
துரி புல்தரையலே விழுந்து உருண்டு உருண் கதறியது. Y
நாங்கள் ஒடி அதனிடம் வந்தபோது வெளிர் மஞ்சள் கலரிலே இருந்த அந்தத் திரவம் அதன்உடம்பு பூராவும் பரவி விட்டது. ‘ஒ, ஓ’ என்று ஒலமிட்டு ஊரைக் கூட்டியது. நாங்கள் துரியைக் கிட்ட அணு காதபடி அந்த நெடி எங்களையும் தாக்கியது. ரப்பரை எரிக்கும்போது வருமே அப்படியாக நாசித். துவாரத்தை அரித்துக் கொண்டு போகும்படியான துர் நெடி அது. துரியை உள்ளே கொண்டு வந்து அது ஒலமிட, ஒலமிட குளிக்க வார்த்து அதன் வேத னையை தீர்க்க முயன்றோம். முடியவில்லை. கடைசி யில் தக்காளிப் பழச்சாறு பிழிந்து அதில் அதை முக்கி முக்கி எடுத்தோம். மூன்று நாள் வரை அதன் ரணம் ஆறவில்லை; வீட்டைச் சுற்றி அப்பியிருந்த மணமும் போகவில்லை. தேவாங்கு அதற்குப் பிறகு என்ன நினைத்ததோ தெரியவில்லை. துரியின் ராஜ்யத்தில் அதனுடைய மணம் கமழும் படையெடுப்பு மீண்டும் நடைபெறவேயில்லை.
ஆனால் இந்த சமயத்தில்தான் துரி வேறொரு நிரந்தரமான எதிரியைத் தேடிக் கொண்டது. பின் தோட்டத்திலே பறவைகளுக்காக ஒரு தட்டிலே எப்பவும் தண்ணிர் வைத்திருக்கும். பறவைகளும், அணில்களும். தேன்சிட்டுகளும் வந்து இந்த தண்ணி ரைக் குடித்து இளைப்பாறி செல்லும். சில வேளை களில் இந்த தண்ணிர் மண் கலந்து சேற்றுத் தண்ணீர் போல கலங்கி இருக்கும்.
முதலில் நான் இது பற்றி சட்டை செய்யவில்லை. ஆனால் நாளாக நாளாக எனக்கு அதிசயமாக இருந் தது. இரவிலே தெளிந்த ஒடைபோல இருக்கும் தண்ணீர் இப்படி சகதியாவது எப்படி?

அ. முத்துலிங்கம் () 39
ஒருநாள் தற்செயலாக இதற்கான விடை கிடைத் தது. நடுச்சாமம் போல நாங்கள் பின்னால் வைத்தி ருக்கும் குப்பை வாளியை அடிககும் சத்தம் கேட்டது. நல்ல நிலா எரியும் மோகனமான இரவு வேளை அது. ஒரு றக்கூன் (Raccoon) வந்து குப்பை வாளியை உருட்டி கையை விட்டு எதையோ தேடிக் கொண்டு இருந்தது. கையிலே கிடைத்த மிச்சம் மீதி பழ வகையை கொண்டுவந்து தண்ணிரிலே அலம்பி சாப் பிட்டது. ஒரு சிறிய நாய் அளவுக்கு உயரமாக அது இருந்தது. கறுப்பும் வெள்ளையும் கலந்த நிறம். வாலிலேயும், கண்களிலும் மஞ்சளும் வெள்ளையு "மான வளையங்கள். இதன் கண்களுககு மேலேஇருந்த கறுப்பு வட்டம் முகமூடி போட்டது போல பார்க்க அழகாக இருந்தது.
இது ஒரு இரவுப்பட்சணி. பழங்கள், தானியங் கள், தவளை, குருவி முட்டை போன்றவற்றை தேடி. யெடுத்து சாப்பிடும். ஆனால் இதில் ஒரு விசேஷம். எடுப்பவற்றை தண்ணிரில் கழுவித்தான் இது சாப் பிடும். மிருகங்களிலேயே றக்கூனுக்குத்தான் இப்படி சுகாதாரத்தில் இவ்வளவு ஈடுபாடு. கரடியைப்போல இந்த றக்கூனும் எல்லாவிதமான சாப்பாடும் ஒருவித தயக்கமுமின்றி சாப்பிட வல்லது.
தானும் தன்பாடுமாக இருந்த துரிக்கு இப்படி "யாக றக்கூன் வந்து தன்னுடைய ராஜ்யத்தில் தலை யிடுவது பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அதிதீவிரமாக, அது தன்னுடைய கடமைகளை கவனிக்கத் தொடங் கியது. இரவு நேரங்களில் றக்கூன் ரகசியமாக வந்து குபபை வாளியைத் தட்டி உ0ை1வு தேடுவதும், கிடைப் பதை தண்ணீரில் அலம்பி சாப்பிடுவதும், ஆற்ற முடியாத ஆவேசத்துடன் துரி துரத்திப் போவதும் இப்போது வழக்கமாகி விட்டது. அச்சவாரம் குடுத்து பிடித்த இணுவில் தவில் செட் டம்டம்' என்றுவிடாப்

Page 32
40 0 துரி
பிடியாக அடிப்பதுபோல நடு இரவு வேளைகளில் தவறாமல் குப்பை வாளி சத்தம் நீட்டுக்கு கேட்கத் தொடங்கியது. அந்த நேரங்களில் துரி பிய்த்துக் கொண்டு நாய்க் கதவு வழியாக ஒடுவதும், நாய்க் கதவு டக்கென்ற சத்தத்துடன் திறப்பதும், மூடுவதும் இப்பவெல்லாம் என் காதுகளுக்கு கேட்டுக் கேட்டு பழக்கமாகி விட்டது.
துரியோதனனுக்கும் வீமனுக்கும் நடந்தது போன்ற இந்த துவந்த யுத்தம் முடிவேயின்றி ஒவ்வொரு இரவும் நடைபெற்றது. பகல் நேரங்களில் நிர்ப்பந்தமாக ஒத்தி வைக்கப்பட்டு இரவுநேரங்களில் பழைய மூர்க்கத்துடன் இது தொடர்ந்தது. துரியும், றக்கூனும் அந்த ஆவேசமான இரவு நேரங்களுக் காகவே வாழ்வதுபோல எனக்குப் பட்டது. துரி பகல் நேரங்களில் மூசி மூசி நித்திரை கொண்டு இரவுநேரங் களுக்காக தன்னைத் தயார் செய்து கொண்டது.
எங்கள் வீதியில் ஆயிரம் பஸ்கள் ஒடியபடியே இருக்கும். ஆனால் என் மகன் வரும் பள்ளிக்கூட பஸ் சத்தம் மட்டும் துரிக்கு நிதர்சனமாகத் தெரிந்துவிடும். ஓடிப்போய் வாசலில் நின்று அவனைக் கூட்டி வரும். அவன் வந்த பிறகு அவனுடைய காலுக்கு பின்னா லேயே போய்க்கொண்டிருக்கும். வெளியே போய் அவனுடன் விளையாடவும், பிறகு அவன் வந்து படிக்கும்போது அவன் காலின் கீழ படுத்திருக்கவும், காலை நேரங்களில் அவன் காலை நக்கி எழுப்பவும், வாசலிலே விழும் பேப்பரை ஒடி எடுத்துகொண்டு வரவும் பழகியிருந்தது.
நண்பனாக, ஆசானாக, விளையாட்டுப் பிள்ளை யாக எங்கள் வீட்டை- துரி முழுக்க ஆக்கிரமித்த இந்த இனிமையான நேரத்தில்தான் என் மகன் இப்படி சடுதியாக எங்களையெல்லாம் விட்டு கல்லூரிக்கு படிக்கச் செல்ல வேண்டி வந்தது. அதற்குப் பிறகு துரி

அ. முத்துலிங்கம் 0 41 முற்றிலும் ஒரு புதியதுரியாக மாறிவிட்டது. நானும், மனைவியும் எவ்வளவோ முயன்று எங்கள் மகனு டைய இடத்தை ஈடுகட்ட முயன்றோம். முதலில் என் மகன் இரண்டு கிழமைக்கு ஒருமுறை வந்து போனான்; பிறகு, மாதத்திற்கு ஒருமுறை என் றானது. அதற்குப் பிறகு ஒவ்வொரு செமஸ்டர் முடி விலும் வந்து போகத் தலைப்பட்டான்.
துரி கொஞ்சம் கொஞ்சமாக இந்த புதுச் சூழ நிலையை ஏற்று அதற்கேற்றமாதிரி தன்வாழ்க்கையை அமைத்துக் கொண்டது. என் மகன் கல்லூரியை முடித்து நல்லதொரு தனியார் கம்பெனியில் வேலை யில் சேர்ந்து விட்டான். இப்பொழுது அவன் வேலை பார்க்கும் இடமோ இன்னும் தூரமானது. வீட்டிற்கு வந்து சேர்வதற்கு அரை நாள் எடுக்கும். சில வேளை களில் டெலிபோனில் கூப்பிடும்போது துரியைப் பற்றி கேட்பான்; நாங்களும் அவ்வப்போது துரியைப் பற்றிய புதினங்களைச் சொல்லி வைப்போம்.
சூரியன் யாருடைய உத்தரவையும் எதிர்பாராமல் மாலை நேரங்களில் ஒளிவது போல சொல்லாமல் கொள்ளாமல் துரியனுடைய யெளவனப் பிராயத்து சேட்டைகளும் மறையத் தொடங்கின. முந்திய வீர்யம்போய் சில மாற்றங்கள் தென்பட்டன. விடி யும்போது அதனால் முன்புபோல் துள்ளிக்கொண்டு எழும்பமுடிவதில்லை. கால்களை நிமிர்த்தி வளைத்து மெதுவாகத்தான் சோம்பல் முறித்தது. இருந்தாலும் அது தன் கடமைகளைச் சரிவர செய்வதில் குறியாக விருந்தது. தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பிரதேசத் தில் மற்ற பிராணிகளோ, பறவைகளோ ஆக்கிரமிக் காமல் இருப்பதில் மிக்க கவனமாக செயல்பட்டது. ஓர் அணிலையோ, குருவியையோ துரத்தியபின் மிகக் கெப்பருடன் நடந்து தன்னுடைய ராஜ்யத்தின்
6 F-4

Page 33
42 C) gf) மூலைகளில் போய் ஒவ்வொரு சொட்டு சிறுநீர் பாய்ச்சி சுற்றுலா வந்து கம்பீரமாக படுத்துக் கொள்ளும்.
இந்த நேரங்களில் றக்கூன் துரியை ஒரு புதுவித மான மூர்க்கத்துடன் தாக்கத் தலைப்பட்டது. அடிக் கடி வந்து தொல்லை கொடுத்தது. துரி அடக்க முடியாத ஆங்காரத்துடன் எழும்பி அதைத் துரத்தி விட்டு மீண்டும் வந்து படுத்துக்கொள்ளும். மறுபடி யும் றக்கூன் வேண்டுமென்றே வந்து இதைச் சீண்டத் தொடங்கியது. அது வேகத்துடன் மரத்திலேறும் வல்லமை படைத்ததால் துரி தொண்டை வறளக் குரைத்தும, உறுமியும் தன் பாத்தியதையை நிலை நாட்டிவிட்டே திரும்பும்.
ஒருநாள் தருணம் பார்த்து துரியனுடைய பரம எதிரியான றக்கூன் ஒரு வஞ்சகமான சூழ்ச்சி செய் தது. அதிகாலை ஐந்து மணி இருக்கும். "டங்டங்' என்று வாளிச் சத்தம் கேட்டது. துரி வழக்கம்போல் தன் வாசல் வழியாக பாய்ந்து ஓடியது. அது அப்படி கடக்கும்போது அதன் கதவு "டக்" என்று சத்தத் துடன் திறந்து மூடிக்கொள்ளும், றக்கூனும் இங்கும் அங்கும் ஒடுவது போல் பாய்ச்சல் காட்டிவிட்டு வழக்கம்போல் மரத்தில் ஏறாமல் வேலியிலே அது செய்துவைத்த ஓர் ஒட்டை வழியாக பாய்ந்து போனது. யுத்தத்தின் உத்வேகத்தில் அறிவு மழுங்க துரியும் அதைத் துரத்திக்கொண்டு ரோட்டைக் கடந்து ஓடியது. அந்த நேரம் பார்த்து வேகமாக வந்த ஒரு கார் துரியின் மேல் ஏறிவிட்டது.
நான் ஓடிப்போய் துரியை அள்ளி எடுத்தபோது அதனுடைய மூச்சு இழைபோல ஒடிக்கொண்டிருந் தது. அதன் பணித்த கண்கள் என்னையே பார்த்தபடி இருந்தன. எனது நீண்டகால நண்பனான துரியினு

அ. முத்துலிங்கம் 0 43
டைய கடைசி சுவாசம் என் கைகளில் மெதுவாத் ஊர்ந்து முடிந்தது. துரியோதனன் என்ற தல்ை வணங்கா மன்னன் அநியாயமாக இடது தொடையில் அடிபட்டு இறந்ததுபோல துரியும் தனது இடது தொடை நசுக்கப்பட்டு என் மடியில் உயிரை நீத்தது. என் மகனுக்கு உடனேயே டெலிபோனில் அறி வித்தேன். அன்று பின்னேரமே அவன் வந்துவிட் டான். ஒரு பழைய கம்பளியில் துரியை சுற்றி பின் தோட்டத்தில் ஒரு கிடங்கு தோண்டி அங்கே புதைத் தோம். கண்களை பிறங்கையால் துடைத்தபடி துரியை புதைத்த இடத்தில் அதன் ஞாபகமாக என் மகன் ஒரு ‘ஒக் செடியை நட்டு வைத்தான்.
அன்று இரவும் குப்பை வாளிச் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து தண்ணியில் சளசளவென்று அலம்பும் ஓசை வந்தது. வழக்கமாக நாய்க் கதவு ‘படக் என்று திறக்கும் ஒசையும் அதைத் தொடர்ந்து துரி சறுக்கி சறுக்கி ஓடும சத்தமும் கேட்கும். இனி மேல் துரியின் உயிர்ப்பு என் காதுகளுக்கு கேட்கப் போவதில்லை.
ஓ! என் இனிய நண்பனே! நீயும் தொடையிலே அடிபட்டு இறக்கக்கூடும் என்கிற சிறு சமுசயமாவது எனக்கு இருந்திருந்தால் 'துரியோதனன்’ என்கிற பேரை உன்மீது சுமத்த நான் பிரியப்பட்டிருக்க மாட்டேனே!

Page 34
*ஒரு சாதம்”
 

பாதையை நிறைத்து பனி மூடியிருந்தது. கனடா வின் அன்றைய வெட்பநிலை மைனஸ் 20 டிகிரி. டாக்சி மெதுவாக ஊர்ந்து 32ம் நம்பர் வீட்டு வாச லில் போய் நின்றது. வீட்டின் பெயர் "ஒரு சாதம்' என்று போட்டிருந்தது.
ஹோட்டலில் இருந்து அங்கே வர பரமனாத ணுக்கு இருபது டொலர் ஆகிவிட்டது. காசைக் கொடுத்துவிட்டு ஒவர் கோட், மப்ளர், தொப்பி, பூட்ஸ் என்ற சம்பிரமங்களுடன் கையிலே பையையும் தூக்கிக்கொண்டு டாக்சியில் இருந்து பணி சறுக்காத இடமாக காலை வைத்து சிவதாண்டவம் செய்து ஒரு மாதிரி இறங்கிவிட்டான்.
வீட்டினுள்ளே சிவலிங்கம் ஒரு சாரமும், பனியனு மாக நின்றான். கனடாவில் வீடுகளை அந்தமாதிரிக் கட்டியிருந்தார்கள்; குளிர் அண்டவே முடியாது. பரமனாதன் "ஸ்ரிப் ரீஸ்' போல ஒவ்வொன்றாகக் கழற்றி வாசலிலே குவித்தான்; ஒவர் கோட், மப்ளர், தொப்பி, பூட்ஸ், அப்பா! அரைவாசி பாரம் குறைந்து விட்டது.
சிவலிங்கத்தின் மனைவி பூர்ணிமா வந்தாள். அவளுடைய அழகு அழிவில்லாத அழகுதான். சிவலிங்கமும் பூர்ணிமாவும் பரிமாறிய காதல் கடிதங் களை எல்லாம் அந்தக் காலத்தில் எடிட் செய்ததே பரமனாதன்தான். பதின்மூன்று வருடங்களுக்கு பிறகு அவர்களை பரமனாதன் முதன் முறையாக கனடா வில் பார்க்கிறான். சிவலிங்கத்துக்கு இப்போது இரண்டு பெண் குழந்தைகள்; மூத்தவளுக்கு வயது பன்னிரண்டு இருக்கலாம்; அடுத்தவளுக்கு நாலு.
பரமனாதன் கேட்டான்: "இது என்ன புது வித மான வீட்டுப் பேர்? 'ஒரு சாதம் என்று வைத்திருக் கிறாய்?

Page 35
46 0 ஒரு சாதம்
'அதுவா? இந்தப் பனிக் குளிரில் வீடு தேடி வாற வைக்கு ஒரு பிடி சாதமாவது போட வேணும் என்ற பிடிவாதத்தில் வைத்த பேர்,' என்றான் சிவலிங்கம். இதைக் கேட்டுக் கொணடிருந்த அவனுடைய மூத்த மகள் ‘களுக்’ என்று சிரித்துக்கொண்டே உள்ளே ஓடி விட்டாள்.
; ‘சாதம்’ என்ற வார்த்தையைக் கேட்ட பரமனாதனுக்கு கதையை மாற்றப் பிடிக்கவில்லை. கடந்த பத்து நாட்களாக ஹோட்டலில்தான் அவன் வாசம். ரொட்டியும், வெண்ணெயும், பழங்களு மாகச் சாப்பிட்டு, சாப்பிட்டு அவனுக்கு அலுத்துப் போய் விட்டது. கனடாவின் படுபயங்கரக் குளிருக்கு அவனுடைய வயிறு கொண்டா, கொண்டா” என்று கேட்டுக் கொண்டிருந்தது. சாதத்தை அவன் அங்கே கண்ணால் கூட காணவில்லை. ‘என்ன? சோறு கறி வகைகள் எல்லாம் இங்கே தாராளமாகக் கிடைக் குமா?’ என்றான் பரமனாதன். அவன் மனமானது சம்பா அரிசிச் சோற்றையும், மீன் குழம்பு கறியையும் நினைத்துப் பறந்தது.
இதற்கு பூர்ணிமா, 'இதென்ன இப்பிடிக் கேக் கிறியள்? இது ஒரு சின்ன யாழ்ப்பாணம்தான்; யாழ்ப்பாணத்தில் கிடைக்காததுகூட இங்கே கிடைக்கும். அப்ப பாருங்கோ' என்றாள். பரமனாத னுடைய வாய் அப்பவே ஊறத் தொடங்கி விட்டது.
அப்போதெல்லாம் சிலோனில் பரமனாதனும் சிவலிங்கமும் அடிக்கடி “கிரின்லாண்ட்ஸில்’ சாப்பிடு வார்கள். சிவலிங்கத்தின் காதல் உச்சக் கட்டத்தில் இருந்த காலம் அது. இருவரும் சார்டர்ட் அக்கவுண் டண்ட் சோதனைக்கு படித்துக் கொண்டிருந்தார்கள். சிவலிங்கம் படிக்கவே மாட்டான்; பெட்டையின் பின்னாலேயே அலைந்து கொண்டிருந்தான்,

அ. முத்துலிங்கம் (1 47 '... : படிப்பைத் தவிர மற்ற எல்லாம் செய்து வந் தான்; படிக்காத புத்தகங்கள் இல்லை; எல்லாம் அறிவு சார்ந்த புத்தகங்கள். அந்தக் காலத்திலேயே அறிவு ஜீவி. ஒரு விஷயத்தை ஒருக்கால் சொன்னால் பிடித்துக் கொண்டு விடுவான்; அபாரமான ஞாபக சக்தி. அவனோடு வாதம் செய்து வெல்வது என்பது நடக்காத காரியம்.
எல்லோரும் அதிசயிக்கும் படி ஒரே முறையில் சோதனை பாஸ் பண்ணிவிட்டான். அவன் முழு மூச்சாகப் படித்தது என்னவோ இரண்டு வாரங்களே! மிகப் பெரிய தனியார் கம்பெனி ஒன்றில் சேர்ந்து கிடுகிடுவென்று மேலுக்கு வந்து விட்டான். பூர்ணிமாவை, பெற்றோரை எதிர்த்து மணமுடித் தான். அவனுடைய வாழ்க்கையானது இப்படி அந்தரலோக சுகபோகத்தில் சென்று கொண்டிருந்த போதுதான் 1977 கலவரம் வந்தது. இவனுக்கு ஒரு பிரம்மாண்டமான வீடு கம்பெனி கொடுத்திருந்தது; அத்துடன் நாலு வேலைக்காரர்கள், தோட்டக் காரன், டிரைவர், காவல்காரன் என்று பலபேர்.
அந்தக் கம்பனியிலே பத்தாயிரத்துக்கு மேலான பேர் வேலை செய்தார்கள். அங்கே வேலை செய்த தமிழர்களை விரல்விட்டு எண்ணலாம். எல்லாம் சிங்களவர்கள். இவனுடைய பதவியோ மிகமிக உயர்ந்தது. கலவரம் வந்தபோது எல்லாவற்றையும் துறந்து விட்டு ‘உயிர் தப்பினால் போதும்' என்று இந்தியாவுக்கு பூர்ணிமாவுடன் ஓடி வந்து விட்ட்ான். அங்கே சிவலிங்கம் பட்ட இன்னல்களை இங்கே விவரிக்க இயலாது. ஒரு உயர்ந்த பதவியில் சகல செளகரியங்களுடனும் வாழ்க்கை நடத்திவிட்டு அகதி யாக வந்து இம்சைப் படுகிற அவதி சொல்லி விளங் காது. கடைசியில், எவ்வளவோ கஷ்டப்பட்டு, அவ னும் பூர்ணிமாவும் கனடாவுக்கு அகதிகளாக வந்து

Page 36
48 0 ஒரு சாதம்
தஞ்சம் புகுந்தார்கள். இத்தனை வருடங்களுக்கு பிறகு பரமனாதன் முதன் முறையாக அவர்களைப் பார்க்கிறான். w W
பசி பிடுங்கியது பரமனாதனுக்கு. ஆனால் பூர்ணிமா அவர்களுடன் இருந்து சுவாரஸ்யமாகப் பேசிக் கொணடிருந்தாள். சாப்பாடு அடுககுகள் ஒன் றையும் காணவில்லை. முதலில் பரமனாதனுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது; பிறகு திகில் பிடித்து விட்டது. “சாப்பாடே ஒரு வேளை கிடைக்காதோ?” என்று நெஞ்சு அடிக்கத் தொடங்கி விட்டது.
பூர்ணிமா ச டு தி யாக ச் சொன்னாள்: "இஞ்சருங்கோ டு போர் ஒன்னை (241) டெலி போனில் கூப்பிடுவமா?’ பரமனாதன் பாவம்,
ஒன்றும் புரியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த் தான். சிவலிங்கம் விளங்கப்படுத்தினான்: 'டு போர் வன் நம்பரை டயல் பண்ணி ஒரு பெரிய பீஸா ரொட்டி ஒடர் பண்ணினால், ஒரு காசுக்கு இரண்டு ரொட்டி கொண்டு வந்து கொடுப்பார்கள்; ஒன்று பெரிசு, மற்றது சிறிசு. சிறிய ரொட்டி இலவசம். டூ போர் வன் (ஒரு காசுக்கு இரண்டு). பதினைந்து நிமிடங்களுக்கிடையில் வீட்டிற்கே கொண்டு வந்து தருவார்கள். அது பிந்தினால் ரொட்டி இலவசம். அதைத் தான் பூர்ணிமா கேட்கிறா? ஒடர் பண்ணு 6 DIT?””
பரமனாதனுக்கு இடி விழுந்தது. ‘என்னடா! வந்திறங்கியவுடன் ஏதோ ஒரு பிடி சாதம் என்றெல் லாம் கதைத்தாய். இப்ப மெல்ல ரொட்டிக்கு தாவப் பார்க்கிறாயே!’ என்றான்.
‘ஒ, ஓ மறந்து விட்டேன். சாதம்தான், சாதம் தான்' என்று கூறிவிட்டு மனைவியைப் பார்த்தான்,

அ. முத்துலிங்கம் L 49
சிவலிங்கம். பூர்ணிமாவும் புன்சிரிப்புடன் மறுபடியும் டயல் பண்ணத் தொடங்கினாள்.
சிவலிங்சம் விஸ்தாரமாக கனடாக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்த போதே சாப்பாடு வந்து விட்டது. பரமனாதனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. "ஆஹா! என்ன சாப்பாடு. சம்பா அரிசிச் சோறு, மீன்குழம்பு, கத்தரிக்காய் பொரியல், மாசுச் சம்பல், முருங்கைக்காய் கூட்டு. இது என்ன கனடாவா, அல்லது யாழ்ப்பாணமா? ருசி, மணம் எல்லாம் தூக்கி அடித்தது. இவ்வளவு சீக்கிரம் வீட் டுக்கே கொண்டு வந்து கொடுத்து விட்டார்களே?
எல்லோருமாக மேசையில் சுற்றி வர இருந்து சுடச்சுட சாப்பிட்டார்கள். பரமனாதனுக்குஉலகமே மறந்து விட்டது. அவன் பசிக்காகச் சாப்பிடுகிறவன் அல்ல; நாக்குக்காகச் சாப்பிடும் பேர்வழி விட்டு வைப்பானா?
பூர்ணிமா சொன்னாள்: ‘'இங்கே புருசன் பெண் சாதி இரண்டு பேருமே அநேகமாக வேலைக்குப் போகினம். அதனாலே இஞ்ச கன குடும்பங்களில் இப்பிடித்தான் ஒடர் பண்ணிச் சாப்பிடுகினம். நல்ல சாப்பாடு, விலையும் பரவாயில்லை.'
'நாங்கள் இங்கு வந்த மூட்டம்அகதிகள் உதவிப் பணத்தில்தான் மிகவும் சிக்கனமாக சீவித்தனாங்கள்; பிள்ளைகள் கனடா உணவு பழகி விட்டார்கள். இப்படி நாங்கள் ஒடர் பண்ணிச் சாப்பிடுவது இப்ப கொஞ்ச நாளாய்த்தான்’ என்றான் சிவலிங்கம்.
சாப்பாடு முடியுந் தறுவாயில் பூர்ணிமா, 'உங்கடை ப்ரண்டு வீட்டுப் பேரைப் பற்றி கேட் டார். நீங்கள் எதோ சொல்லி சமாளித்து போட்டி யள். இவருக்கு நாங்கள் இஞ்ச வந்து பட்ட

Page 37
50 () ஒரு சாதம்
பாட்டைக் கட்டாயம் சொல்ல வேணும்' என்றாள சிவலிங்கத்திற்கு விஸ்தாரமாக கதை சொல்லுவது என்றால் அளவற்ற பிரியம், விடுவானா?
"இஞ்ச எல்லோருக்கும் நடக்கிறது போலத்தான் எங்களுக்கும் நடந்தது. ஆனால் எங்கடை கஷ்டம் கொஞ்சம் வித்தியாசமானது; அனுபவித்தால்தான் தெரியும்.
“இருபத்தைந்து வருடங்களுக்கு முன் சிலோனில் நடந்த சம்பவம் இது. அப்ப ஒரு கம்பனிக்கு கணக் காய்வு (Audit) செய்யப் போயிருந்தேன். அங்கே பொன்னுசாமி என்றொரு கிழவர் நாறபது வருட மாக வேலை பார்த்து வந்தார். பேரேடுகளைத் தயா ரித்து ரயல பாலன்ஸ் எடுத்து கணக்காய்வாளரிடம் (Auditor) கொடுப்பது அவர் பொறுப்பு. கணக்கு எழுதுவதில் அவர் புலி. எந்தக் கஷ்டமான சிக்கல் என்றாலும் அவிழ்த்து விடுவார்.
‘நாற்பது வருட காலமாக வராத ஒரு கஷ்டம் அவருக்கு அப்போது வந்தது. அவருடைய ரயல் பாலன்ஸ் அந்த வருடம் பொருந்தவில்லை; ஒரு சதம் வித்தியாசத்தில் நொண்டிக் கொண்டு நின்றது.
'பொன்னுசாமிக்கு இது ஒரு பெரிய சவால். இதை எப்படி அவர் ஏற்பார்? இரவு பகலாகக் கண் விழித்து முழுக கணக்குகளையும் இன்னொரு முறை சரி பார்த்தார். அந்த ஒரு சதத்தை அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. பெரிய மானப் பிரச்சனையாக இது உருவெடுத்து விட்டது. கணக்காய்வு தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. ரயல் பாலன்ஸ் சரி வரா மல் கணக்குகளை முடிக்க முடியாதே?
*ஏர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய ஒரு கதை படித் திருப்பாய். ஒரு கிழவன் தன் சிறு வள்ளத்தில் மீன் பிடிக்கப் போனான். துண்டில் போட்டு மீனைப்

அ. முத்துலிங்கம் D 51
பிடித்து விட்டான். ஆனால் அகப்பட்டதோ ஒரு ராட்சச மீன். பலத்த போட்டி. கிழவன் மீனை விடுவ தாக இல்லை; மீனும் பிடி கொடுப்பதாக இல்லை. இந்தச் சண்டை நாள் கணக்காக நீடிக்கிறது. ஒன்றில் மீன் சாக வேண்டும் அல்லது கிழவன் சாக வேண்டும். அப்படியான ஒரு நிலை.
- “egg) போலத்தான் பொன்று, சாமிக்கும் பேரேட்டுக்கும் நடந்த போராட்டம் முடிவில்லாமலே நீண்டு கொண்டு போனது. ஒரு திங்கள் காலை நான் போகிறேன். பொன்னுசாமி தலைவிரி கோலமாய் என் முன்னே வந்து நிற்கிறார். அவர் கண்கள் எல்லாம் சிவந்து காணப்படுகின்றன. சனி, ஞாயிறு விடுமுறைக்கு அவர் வீட்டுக்கே போகவில்லை. இரவு பகலாக பேரேடுகளை மீண்டும் மீண்டும் சரி பார்த் திருக்கிறார்.
"அவருடைய கண்கள் கீழே பார்த்தபடி இருந் தன. தன் பைக்குள் கையை விட்டு ஒரு சதக் காசை எடுத்து என் மேசை மேல் வைத்தார். 'தம்பி, இந்த ஒரு சதத்தை வைத்துக் கொள்ளுங்கள். என்னால் இந்த வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியவே இல்லை. இது எனக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி. என்னை விட்டு விடுங்கள்’ என்றார். பொன்னுசாமியுடைய கஷ்டம் எனக்கு அப்பொழுது முற்றாக விளங்கவில்லை. ஆனால் அதே போன்ற ஒரு சங்கடம் எனக்கும் இங்கே கனடாவில் ஏற் Lll-t-gil.
‘நாங்கள் அகதிகளாக வந்து சீரழிந்த கதை நீண்டு கொண்டே போகும். அதை விட்டுவிடுவோம். என்னுடைய விண்ணப்பத்தை எழுதிக் கொண்டு கம்பனி கம்பனியாக ஏறி இறங்கினேன். நூற்றுக் கணக்கான விண்ணப்பங்களைத் தபாலிலும் அனுப்பி

Page 38
52 0 ஒரு சாதம்
னேன். அகதிகள் உதவிப் பணத்தில் சிக்கனமாக வாழ்க்கை நடத்தினோம்.
“இங்கே பெண்களுக்கு வேலை கிடைப்பது வெகு சுலபம். பூர்ணிமாவுக்கு வேலை கிடைத்து விட்டது. ஆனால் அவள் அப்போது கர்ப்பம். அதனால் வேலையை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.
“சில பேர் எனக்கு குறுக்கு மூளை சொல்லித் தந் தார்கள். கனடா அரசாங்கத்தை ஏமாற்றி உதவித் தொகை அதிகரிப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின் றன; அதில் ஒன்று மனைவியை தற்காலிகமாக நீக்கி வைப்பது. என் மனம் உடன்படவில்லை. சொந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வந்து தஞ்சம் புகுந்த நாட்டை இப்படி ஏமாற்றுவதா?
**கனடாவில் மீண்டும் ஒருமுறை படித்து கண்க காளர் தேர்வு எழுதி முடித்தேன். வேலை கிடைப்பது இப்போது இன்னும் கஷ்டமாகி விட்டது. விஷயம் இதுதான். என்னுடைய படிப்புக்கும், அனுபவத் துக்கும் ஏற்ற வேலை எடுத்த வீச்சே தரமாட்டார் களாம். கீழ் மட்டத்தில் சேர்ந்து படிப்படியாகத் தான் உயர வேணும். அப்படிக் கீழ்மட்டத்தில் எடுப் பதற்கும் கம்பனிகள் பயப்பட்டன.
'நீ சொன்னால் நம்ப மாட்டாய், கடைசியில் எனக்குக் கிடைத்த வேலை வாட்ச்மேன் உத்தி யோகம்தான். அதற்கும்கூட எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பேன் தெரியுமா? ஒரு இந்தியாக்காரர், சுந்தரம் என்று பேர், அவர்தான் எனக்கு அந்த வேலையை எடுத்துக் கொடுத்தார். அதற்கென்று பிரத்தியேகமான பயிற்சிகள் எல்லாம் தந்தார்கள். எங்கள் ஊரில் சைக்கிள் கடை வைத்திருந்தவர்களும், பேப்பர் போட்ட பெடியன்களும் BMW காரில்

அ. முத்துலிங்கம் D 53
இங்கே உலாவந்து கொண்டிருந்தார்கள். நான் இவ் வளவு படித்துவிட்டு இப்படியாக காவல்கார வேலை செய்ய வேண்டி வந்து விட்டதே! விதியே என்று நொந்து கொண்டேன்.
‘எங்கள் கம்பெனி பிரெஸிடெண்ட் போகும் போதும் வரும் போதும் நான் அவருக்கு தவறாமல் சலாம் செய்வேன். அவருடைய கவனத்தை எப்படி யும் ஈர்க்க வேண்டும் என்பதில் ஆர்வமாக செயல் பட்டேன். அவருடைய கடைக்கண் பார்வை பட்டால் என் கஷ்டமெல்லாம் தீர்ந்து விடுமே!
'என் வேலையோ மிகவும் கடுமையானது. முன் பின் எனக்கு அப்படி வேலை செய்து பழக்கமில்லை. இரவு முழுவதும் ரோந்து வந்து மெஷினைப் பஞ்ச் பண்ணிய படியே இருக்க வேண்டும். பனியென்றால் ஒவர் கோட்டையும், பூட்சையும் மேலாடைகளையும் மீறி குளிர் உள்ளே போய் உயிரைத் தொடும்.
‘ஒருநாள் என் வீட்டுக்கு போய் காலுறையைக் கழற்றியபோது காலுறையெல்லாம இரத்தம். பூர்ணிமா அழுது விட்டாள். அன்று இரவு வெகு நேரமாக ஒரு விண்ணப்பம் தயாரித்தேன். எங்கள் கம்பெனி பிரெஸிடெண்டுக்கு எப்படியும் ஒரு சின்ன வேலையாவது போட்டுத் தருமாறு என் தகுதிகளை எல்லாம் காட்டி விளக்கினேன். தருணம் பார்த் திருந்து ஒருநாள் அதை அவர் கையிலும் சேர்த்து விட்டேன். ر. "
'அதன்பிறகு ஒவ்வொரு நாளும், அவர் போகும் போதும் வரும் போதும், அவருடைய முகத்தையே பார்த்தபடி இருப்பேன். ஏதாவது ஒருநாள் அவர் வாயிலிருந்து நல்ல வார்த்தை வருமா என்று: பார்த்துப் பார்த்து ஏமாந்தேன்.

Page 39
54 () ஒரு சாதம்
"அந்தச் சமயத்தில்தான் James Geick எழுதிய Chaos என்ற புத்தகம் வெளியாகி எங்கும் பரபரப் பாகப் பேசப்பட்டது. அறிவுஜீவிகளுக்காக மட்டுமே எழுதப்பட்ட புத்தகம் அது என்று உனக்குத் தெரியும்.
‘நான் சிலோனில் இருந்தபோது புத்தகங்களை வாங்கி வாங்கி குவிப்பேன். வாங்கின புத்தகங்களை இரவு பகலாக வாசித்து முடித்து விடுவேன். இங்கே புத்தகங்களின் விலையோ எக்கச்சக்கம். ஒரு புத்தகம் கூட வாங்க முடிவதில்லை. புத்தகக் கடைகளைப் பார்த்துப் பார்த்து ஏங்குவேன்.
‘ஒருநாள் பிரெஸிடெண்ட் கையில் அந்த Chaos புத்தகத்தைப் பார்த்தேன். அடுத்த நாளே புத்தகக் கடையில் போய் நாலும் ஒன்று வாங்கி விட்டேன். விலையோ 12 டொலர். பூர்ணிமா என்னுடன் சண்டை போட்டாள், எங்கள் வரும்படிக்கு அது ஒரு அநாவசியமான செலவு என்று. புத்தகத்தை முதலில் இருந்து கடைசிவரை மூன்று தடவை படித்தேன்; சில பகுதிகளைக் கரைத்துப் குடித்து விட்டேன்.
*அதற்குப் பிறகு அந்தப் புத்தகத்தை வைத்துக் கொண்டு உலாவத் தொடங்கினேன். பிரஸிடெண்ட் வரும் சமயம் பார்த்து புத்தக அட்டை தெரியக்கூடிய தாக பிடித்த பிடியே அங்குமிங்கும் அலைந்தேன்.
‘என்னுடைய யுக்தி ஒருநாள் பலித்தது. அவசர மாய் போன பிரெஸிடெண்ட் நின்று உற்றுப் பார்த்துவிட்டு 'ஆஹா! James GeicK?’ என்றார். அவர் வாய் மூடு முன் நான் அந்த எழுத்தாளர் கூறிய தததுவங்கள் பற்றி என் கருத்தை எடுத்து விட்டேன். குளத்தின் நடுவே ஏற்படும் சிறு சலனம் எப்படி விரிந்து விரிந்து கரையை அடைகிறதோ அதே போன்று வளிமண்டலத்தில் ஏற்படும் அணுப்பிர

அ. முத்துலிங்கம் 0 55
மாணமான சிறு மாற்றம்கூட வானிலையை ஏன் பூதாகரமாகப் பாதிக்கிறது என்பதைப் பற்றி விளக் கினேன். அதனால்தான் கிரகணம். நீர்மட்ட ஏற்ற இறக்கம் பற்றியெல்லாம் கச்சிதமாக முன்கூட்டியே கூறிவிடும் விஞ்ஞானம், பருவ நிலையை மாத்திரம் முன்னறிவித்தல் செய்வதறகு திக்குமுக்காடுகிறது என்பது பற்றி கூறினேன்.
** "எங்கள் நாட்டில் ஒளவையார் என்று ஒரு மிகப் படித்த பெண் புலவர் இருந்தார். அவர் ஒரு அரசனை வாழ்த்தப் போய் வரப்புயர' என்று மட்டும் கூறி பேசாமல் இருந்து விட்டார். அதன் தாற்பரியத்தை பின்பு அவரே விளக்கினார்."
விவரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும் நெல் உயர, குடி உயரும் குடி உயர, கோல் உயரும் கோல் உயர கோன் உயர்வான்.?
' 'ஒரு துளி காரியம் எப்படிப் பிரம்மா சண்ட மான ஒரு தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதற்கு இது சான்று. இது எனககு மிகவும் பிடித்தமான ஒரு கருதது" என்று மூச்சு விடாமல் சொல்லி நிறுத் தினேன். பிரெஸிடெண்ட் ஆடி விட்டார். ‘அட! மிக நல்ல வியாக்கியானமாய் இருக்கிறதே! குட், குட்" என்று சொல்லிவிட்டு வேகமாய் போய் விட்டார்.
'அடுத்த நாள் எனக்கு ஒர் அதிசயம் காத்திருந் தது. கணக்காளர் பிரிவில் ஒரு அடிமட்ட வேலை எனக்கு கிடைத்து விட்டது. எனக்குண்டான மகிழ்ச் சிக்கு அளவே இல்லை. வேலை என்பது பத்தாம் வகுப்பு படித்தவனை பாலர் வகுப்பில் போட்டது

Page 40
56 D ஒரு சாதம்
போலத்தான். ஆனால் அதை நான் பொருட்படுத்த வில்லை. இரண்டு நாள் வேலையை இரண்டு மணி நேரத்தில் முடித்து விடுவேன். ஓய்வு நேரங்களில் மற்றவர்களுடைய வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வேன். இரண்டு மாதத்தில் அந்தப் பிரிவு வேலையெல்லாம் எனக்கு தண்ணி பட்ட பாடு.
‘என்னுடைய செக்ஷனில் எல்லோரிடமும் கம்ப் யூட்டர் இருந்தது; எனக்கு மட்டும் இல்லை. செக்ஷன் தலைவரிடம் வழவழவென்று ஒரு கம்ப் யூட்டர். அந்த வழியால் போகும்போதெல்லாம் அதைத் தொட்டுத் தடவி விட்டுத்தான் போவேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களுடைய கம்ப்யூட்டரில் வரும் சிறிய பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைப்பேன்.
*இதற்கிடையில், ஐம்பது டொலருக்கு நான் ஒரு ஒட்டை கம்ப்யூட்டர் வாங்கி விட்டேன். மற்ற கம்ப்யூட்டர்கள் பென்ஸ் கார் என்றால் இதை *திருக்கல்வண்டி’ என்று சொல்லலாம். அவ்வளவு மெதுவாகப் போகும். கம்பெனியில் சிக்கலான சில வேலைகளை வீட்டில் கொண்டு வந்து இதில் தட்டி சரி செய்து விடுவேன். ... --
*அப்போது ஒரு நாள் எங்கள் செக்ஷன் தலை வர் சில நாள் லீவு போட்டார். அந்தப் பகுதி வேலை கள் எல்லாத்தையும் நான் பார்க்கும்படி வந்தது. விடுவேனா? அதிலும் அந்த கம்புயூட்டரில் வேலை செய்யக் கொடுத்து வைக்க வேணுமே? அப்படி வேலை செய்யும்போதுதான் ஒரு நாள் கவனித்தேன்; கம்புயூட்டர் பிரிண்ட் பண்ணும்போது ஒரு சதம் தவறியிருந்தது. -

அ. முத்துலிங்கம் o 57
'இது பெரிய விஷயமில்லை. ஆனால் இது திருப் பித் திருப்பி நடந்தது. என்ன செய்தும் போக வில்லை. குத்துக்கரணம் அடித்து வித்தை காட்டினா லும் அந்த ஒரு சத வித்தியாசம் போவதாகத் தெரிய வில்லை.
'கம்புயூட்டர் என்பது கணக்குகளைச் சரியாக வும், வேகமாகவும் போடுவதற்கென்றே பிறவியெடுத் தது. இப்படி பிழை நடக்கலாமா? விடேன், தொடேன்’ என்று நான் இந்த ரகஸ்யத்தை உடைக்க முற்பட்டேன். V−
“ஒரு நாள் பிரெஸிடெண்ட் தனியாக இருக்கும் சமயம் பார்த்து அவர் முன்பு போய் நின்றேன். அந்த ஆதிமூலத்துக்குள் என் போன்ற சாதாரண மனிதப் பதர்கள் காலடி எடுதது வைக்க முடியாது. என்றா லும் நான் துணிந்து போய் விட்டேன்.
‘முதலிலேயே மன்னிப்பு கோரி, இப்படி அடிக் கடி வரும் ஒரு சத வித்தியாசத்தைப் பற்றி அவரிடம் விஸ்தரித்தேன். அவர் அதைப் பொறுமையாக கேட்டு விட்டு, புன்சிரிப்புடன் அதை பார்த்து விட்டாயா? உண்மைதான். நாங்கள் கடந்த ஆறு வருடங்களாக முயன்றும் அந்த ஒரு சதம் உதைப்பதை நீக்க முடிய வில்ல்ை. சில வெளி இடத்து நிபுணர்கள்கூட வந்து பார்த்து விட்டார்கள். முடியவில்லை. இந்த ஒரு சதப் பிழையைத் திருத்துவதற்காக எண்பதாயிரம் டாலர் வரை செலவு செய்து விட்டோம். இது தவிர, இது என்ன, ஒரு சதம் தானே! இதை ஆர் நுணுக்கமாகப் பார்க்கப் போகிறார்கள். இது வேஸ்ட் என்று முடிவு செய்து விட்டோம். இதில் கவனத்தைத் திருப்பாதே" என்றார்.'
அந்த நேரம் பார்த்து சிவலிங்கத்தின் மூத்த மகள் வந்து கணக்குப் பாடத்தில் ஒரு சந்தேகம் கேட்டாள்.
வ-5

Page 41
58 () ஒரு சாதம்
சிவலிங்கம் பொறுமையாக அவளுக்கு அந்தக் கணக்கை விளங்கப்படுத்தினான்; பிறகு மறுபடியும் தொடர்ந்தான்:
“மகாத்மாகாந்தி இங்கிலாந்து அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக லண்டன் பயணமானார். எப்போதும்போல சாதாரண இந்தியக் குடிமகன் போல நாலு முழத்துண்டும், மேற்போர்வையும், செருப்புடனும் வெளிக்கிட்டார். அவருடைய உண வுப் பழக்கமோ உலகம் அறிந்தது. பேரிச்சம் பழம், ஆட்டுப் பால், வெண்ணெய் இப்படி வெகு எளிமை யானது. இங்கிலாந்து அரசாங்கம் அவருடைய சாப் பாட்டில் அக்கறை கொண்டு ஒரு ஆட்டையும் கப்ப லில் அவருடன் லண்டன் வரவழைத்திருந்தது. அப்போது லண்டன் பேப்பர்களில் இப்படி ஒருசெய்தி வந்ததாம்: “மகாத்மா காந்தியை அவர் ஏற்றுக் கொண்ட ஏழ்மை நிலையில் வைத்திருப்பதற்கு இங்கி லாந்து அரசு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பவுண் செலவு செய்ய வேண்டி இருககிறது.'
‘அது போலத்தான் இந்தக் கதையும் இருந்தது. நான் தைரியத்தையெல்லாம் வரவழைத்துக்கொண்டு, 'ஐயா, எனக்கு ஒரு முறை இதைப் பார்க்க அனுமதி கொடுப்பீர்களா? என்று கேட்டேன்.
'அவர் சிறிது யோசித்தபடி இருந்தார். அந்த ஒரு நிமிடத்தில் என் மூச்சு ஓடாமல் நின்றது. கடைசி யில் என்ன நினைத்தாரோ “சரி” என்று கூறி விட்டார்.
'அன்றிரவு என் போராட்டம் ஆரம்பித்தது. கிழவனுககும் மீனுக்கும் நடந்தது போன்ற போராட் டம் பீமனுக்குப் ஜராசந்தனுக்கும் நடந்த துவந்த யுத்தம் போன்று முடிவில்லாத ஒரு யுத்தம்.

அ. முத்துலிங்கம் 0 59
"170 பக்கங்கள் கொண்ட ப்ரோகிராம் அது. நுணுக்கமாக, வரிவரியாக அதைச் சோதித்தபடியே வரவேண்டும். மூலை முடுக்கெல்லாம் தடவித் தடவி தேடிக் கொண்டே வருகிறேன். எங்கோ ஒருமூலையில் அந்த தவறு ஒளித்திருந்துகொண்டு என்னைப் பார்த்த படியே இருக்கிறது.
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகியை கரதலத்தில் கவர்ந்த காதல் உள்ளிருக்கும் என நினைந்து உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி
என்ற கம்பனுடைய பாடல் ஒன்று இருக்கிறது. ஜானகியைக் கவர்ந்த காதல் எங்கே ஒளிந்திருக்கிறது என்று ராவணனுடைய உடலை கூரிய அம்பினால் ஒட்டை போட்டு, ஒட்டை போட்டு தடவிப் பார்க கிறதாம் ராமனுடைய பாணம். அதுபோலத்தான் எங்கேயோ ஒளிந்திருக்கும் அந்த பிழையைத் துருவித் துருவி தேடிப் பார்க்கிறேன். என் கண்ணுக்கு அது தென்படவே இல்லை.
‘என் நண்பர்கள் என்னைப் பார்த்து பரிகசிப்பு துண்டு; கம்புயூட்டரை இயக்க முன் நான் வழக்கம் போல சொல்லும் ஸ்தோத்திரத்தைச் சொல்லி துதிக் கிறேன்:
மனிதனை உய்விப்பதற்காக அவதரித்த
கம்புயூட்டரே உனக்கு அநேக கோடி வணக்கங்கள்! உன்னுடைய விஸ்வரூபத்தின் முன் நான் சிறுதுளி. உன் பரிபூரண கடாட்சம், என் மீது பாயட்டும்! சகல கதவுகளையும் திறந்து

Page 42
60 0 ஒரு சாதம்
உன் ரகஸ்யங்களை என் வசமாக்குவாயாக! உன் வாசலிலே புக அநுமதி கேட்டு
. . . நிற்கிறேன், நமஸ்காரம் நமஸ்காரம்!
இப்படியாக அதை வணங்கி இயக்குகிறேன். அது கிர்ரென்ற சத்தத்துடன் உயிர் பெறுகிறது. தன் பரந்த உலகத்தை என் முன்னே விரிக்கிறது. ஒவ் வொரு கதவாகத்தட்டி விடையைத் தேடிக்கொண்டே வருகிறேன். விடையும் என் கைக்குள் சிக்காமல்தப்பிக் கொண்டே போகிறது.
'ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல. பல நாட்கள் இப்படியாக பயனின்றி ஓடி விட்டன. கந்தோரிலிருந்து வந்ததும் நேராகப் போய் கம்புயூட் டரின் முன் இருந்து விடுவேன். இரவு இரண்டு மணி, மூன்று மணி வரை வேலை செய்வேன். களைத்துப் போய் அப்படியே படுத்து தூங்கியும் இருக்கிறேன். மறு நாளும் இது போலவே போய் விடும். ஆனால் அந்த ஒரு சதம் என் கைக்குள் அகப்படாமல் தப்பிக் கொண்டு வந்தது.
‘நான் உண்பதில்லை; வடிவாக உறங்கு
வதில்லை. வேறு ஒன்றிலும் கவனமில்லை. என் புத்தி யெல்லாம் இதிலேயே செலவழிந்தது. உன்மத்தம் என்று சொல்வார்களே, அப்படியான ஒருநிலைதான். கம்புயூட்டர் தேவதை என்னை உதாசீனப்படுத்தி அலைக்கழித்துக் கொண்டிருந்தாள்.'
இந்த இடத்தில் சிவலிங்கம் கதையை நிற்பாட்டி விட்டு மனைவி கொண்டு வந்து வைத்த காபியை சிறிது பருகினான்; பிறகு மறுபடியும் தொடர்த் தான்:

அ. முத்துலிங்கம் D 64
"நாங்கள் கலாசாலையில் படித்தபோது வேதி யியல் பேராசிரியர் கூறியது உனக்கு ஞாபகமிருக் கிறதா? பென்சீனுடைய (Benzene) அணு அடுக்கு முறையைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் பட் டபாடு. அதிலும் பிரடெரிக் கேகுலே என்ற விஞ்ஞானி ஒன் றல்ல, இரண்டலல ஏழு வருடங்கள் இதற்காகப் போராடினார். எப்படித்தான் படம் போட்டாலும் ஆறு கார்டன் அணுக்களையும், ஆறு ஹைட்ரஜன் அணுக்களையும் விகிதமுறை தவறாமல் அவரால் அடுக்க முடியவில்லை.
'கடைசியிலே ஒரு நாள் மாலை அவர் களைப் புடன் குதிரை வண்டியில் பிரயாணம் செய்து கொண் டிருந்தபோது சிறிது அயர்ந்து விட்டார். அப்போது அந்த விஞ்ஞானியின் கனவிலே பாம்புகள் தோன்றின வாம். அதிலே ஒரு பாம்பு தன் வாலைப் பிடித்து தானே விழுங்கத் தொடங்கியது. அந்தச் சமயம் பார்த்து இவருக்கு விழிப்பு வந்து திடீரென்று எழுந்து விட்டார். அந்த கனவைத் தொடர்ந்து அணுக்களை வட்டமாக வரிசைப் படுத்தும் எண்ணம் உதித்தது. அப்படியே செய்து பார்த்தபோது அந்த அணு அமைப்பு சரியாக வந்து விட்டது.
**இது மாதிரியான சம்பவம்தான் எனக்கும் இங்கே ஏற்பட்டது. ஆறு மாத காலம் இப்படியே விரயமாகக் கழிந்தது. போராட்டத்திற்கு முடிவே இல்லை. என் மனைவிக்கும் வெறுத்து விட்டது. ஒரு நாள் கம்புயூட்டரைத் தூக்கி எறிவதற்கு கூடத் துணிந்து விட்டாள். ஒரு சரஸ்வதி பூசை நாள். மனைவி மும்முரமாக பூசை அடுக்குகள் செய்கிறாள். கம்புயூட்டரில் மூழ்கி இருந்த என்னிடம் வந்து சொல் கிறாள்:
'இண்டைக்காவது இதை விடுங்கோ! மூளைக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்துப் பாருங்கோ. ஒரு

Page 43
82 0 ஒரு சாதம்
நாள் போனால் என்ன நாளைக்கு வேலை செய்ய லாம் தானே' என்று என்னை இழுத்துக் கொண்டு போய் விட்டாள். நானும் அன்று கம்ப்யூட்டரை தொடுவதில்லை என்று சத்தியம் செய்து மூடிவிட் டேன். ஆனாலும் என்ன பயன்?
‘சாமி கும்பிடும் போதும் சரி, மனைவியுடன் பேசும்போதும் சரி, குழந்தையுடன் விளையாடும் போதும் சரி என் மனமானது கம்புயூட்டருடனேயே ரகஸ்யமாகச் சல்லாபித்துக் கொண்டு இருந்தது.
'அன்றிரவு வழக்கத்துக்கு மாறாக பத்து மணிக்கே படுக்கப் போய் விட்டேன். நித்திரையிலே எனக்கு ஒரு கனவு வந்தது. அப்போது பளிர் என்று என் மூளையிலே ஒரு மின்னலடித்தது. அந்த தப்புக் கான விடை. அங்கே என் முன்னே குதித்துக் கொண்டு நின்றது. எழும்ப விட்டேன். நேரம் மூன்று மணி காட்டியது. ப்ரோகிராமை எடுத்துப் பார்த்தேன். பதினேழாவது பக்கம், நாலாவது வரியில் நான் நினைத்த மாதிரியே இருந்தது. என் கண்களை நம்பவே முடியவில்லை.
"பூரீரங்கநாதர் நீண்டு சயனிப்பதுபோல் அந்தப் பிழையானது நீளவாட்டில் படுத்துக் கொண்டிருந் தது. இதே பாதையால் முன்னுாறு தடவையாவது போயிருப்பேனே! நான் பார்க்கவில்லையே! இன்று என்ன இவ்வளவு துல்லியமாகத் தெரிகிறது.இவ்வளவு காலமும் ஏன் என் கண்கள் இதைக் கவனிக்க வில்லை?
"என் நெஞ்சு படக்படக்கென்று வேகமாக அடிக் கத் தொடங்கியது. வெளியிலேயோ பணி கொட்டு கிறது. மனைவி, குழந்தைபோல அமைதியாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறாள். மெதுவாக ஒவர் கோட்டையும், பூட்ஸையும் எடுத்துக் கொண்டு

அ. முத்துலிங்கம் 0 63
பூாணிமாவுக்கு ஒரு சிறு குறிப்பு எழுதி வைத்துவிட்டு ஓசைப்படாமல் நழுவுகிறேன்.
"அப்போது என்னிடம் காரில்லை. டாக்ஸி ஒன்றை டெலிபோனில் கூப்பிட்டு என்னுடைய கந்தோருக்கு போய் இறங்கினேன். சுந்தரம்தான் காவல் காக்கிறான். செக்கியூரிட்டி கார்ட்டை கத விடுக்கில் சொருகி கதவைத் திறந்துகொண்டு உள்ளே போகிறேன். 'கம்ப்யூட்டர் தேவதையே! இன்று எனக்கு நீ இணங்கி விடு’ என்று வேண்டிக்கொண்டே அதை இயக்குகிறேன்.
'கம்ப்யூட்டர் கிர்ரென்று உயிர்பெற்று தன் வாசல்களை எனக்குத் திறக்கிறது. ஒவ்வொரு வாச லாகத் தட்டிக்கொண்டே செல்கிறேன். அங்கே இஷ்டப்பட்ட என் அணங்கு கைகளைப் பரப்பிக் கொண்டு எனக்காகக் காத்திருந்தாள். பதினேழாவது பக்கத்திலே அந்தப் பிழையானது வியாபித்து நிற் கிறது. நிமிடத்தில் அதைச் சரி செய்துவிட்டு ஒட்டிப் பார்க்கிறேன். ஒரு சதம் போய் விட்டது; விளம்பரங் களில் சொல்வதுபோல் ‘போயே போய் விட்டது.
‘என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. இன்னும் ஒரு இருபது தடவை திருப்பித் திருப்பி ஒட்டிப் பார்த்தேன். ஒரு சத வித்தியாசம் மறைந்து விட்டது. யாரிடமாவது சொல்லிக் கதற வேண்டும் போல் இருந்தது. "சுந்தரம் சுந்தரம்' என்று ஓடி னேன். அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு உளறி னேன். "என்ன தம்பி, என்ன ஆச்சு? கம்ப்யூட்டரை உடைச்சுப்பிட்டியா? என்றான். 'இல்லை, சுந்தரம் ஒரு சதம் ஒன்று இவ்வளவு நாளும் காணாமல் போச்சு. இன்று கிடைத்துவிட்டது' என்றுகூறினேன். அவன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.

Page 44
64 0 ஒரு சாதம்
"நான் அந்த ப்ரோகிராமை திருப்பித் திருப்பி ஒட வைத்து அதன் லாவண்யத்தை ரசித்தபடியே இருந்தேன். அந்த அழகு கொள்ளை அழகு; அதை எத்தனை தரம் பார்த்தாலும் ஆசை தீராது.
‘அந்தச் சமயம் பார்த்து இன்னொரு அதிசயம் நடந்தது. பனி சறுக்கு விளையாட்டுக்கு எங்கள் பிரெஸிடெண்ட் அடிக்கடி போவதுண்டு. அன்று சனிக்கிழமை. அதிகாலையிலேயே அவர் கந்தோருக்கு வந்திருந்தார், தன்னுடைய உபகரணங்களை எடுப்ப தற்காக. என்னைக் கண்டதும் திகைத்து விட்டார்; என்னுடைய குழம்பிய தலையையும், சிவந்த கண் களையும் பார்த்து உண்மையாகவே அவர் அதிர்ந்து விட்டார். ‘என்ன நடந்தது?" என்று கேட்டார்.
* ‘அந்த ஒரு சதம், அதைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்றேன். அதைச் சொன்னபோது எனக்கு நாக்கு குழறியது; கண்களிலே பொலபொல வென்று கண்ணிர். "எங்கே பார்ப்போம்?’ என்றார். ஒட்டிக் காட்டினேன். ‘இன்னொரு முறை" என்றார். கம்ப்யூட்டர் மறுபடியும் ஒடி ஒய்ந்தது. "ஆஹா, போய் விட்டதே. ஆறு வருடமாக எங்களை அலைக் கழித்தது இன்றோடு ஒழிந்தது; எக்சலண்ட் வேர்க்; காங்கிரஜ"லேசன்ஸ்’ என்றார்.
‘என் மனதில் ஏதோ ஒன்று நெருடியது. "ஐயா, இதன் உண்மையான தாத்பரியம் தங்களுக்கு தெரி கிறதா?’ என்றேன். ‘என்ன" என்று இன்னொரு முறை கேட்டார். இந்தப் பிழை நீக்கத்தால் இந்த வருடம் மட்டும் 384,000 டொலர் லாபம் அதிக மாகிறது; போன வருடம் இந்தத் தவறினால் 292,000 டொலர் இழந்து விட்டோம். அது போனது போனதுதான். அடுத்த வருட பட்ஜட்டின்படி 438,000 டொலர் லாபம் மிகையாக வரும் என்றேன்.

அ. முத்துலிங்கம் 65。
‘தொடர்ந்து அதற்கான கணக்குகளையும் பட படவென்று போட்டுக் காட்டினேன். ஆறுதலாக, அமைதியாக எல்லாவற்றையும் கேட்டார். அவர் முகத்தில் அவமானம், அதிர்ச்சி, மகிழ்ச்சி எல்லாம் ஒடியது. போய் விட்டார்.
'அடுத்த நாளே எனக்கு ஒரு ப்ரமோவுன் காத்துக் கொண்டிருந்தது. எங்கள் கம்பனியில் இருந்த எட்டு பினான்ஸியல் கொண்ட்ரோலர்களில் ஒருவராக நான் நியமிக்கப்பட்டேன். இதுதான் என் சரித்திரம்' என்றான்.
'மிச்சத்தையும் சொல்லுங்கோ’ என்றாள் மனைவி.
‘இது மனசுக்கு கொஞ்சம் கஷ்டமான விஷயம். புது வேலையில் உயர்த்தப்பட்ட உடனேயே என் வழக்கப்படி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு கற்று விட்டேன். கம்ப்யூட்டர் மூலம் வேலைகளை எளிமையாக்கினேன்; நஷ்டத்தை குறைத்து லாபத்தை விரிவடையச் செய்தேன்.
‘ஒருமுறை ஒரு சோதனையான காலம். கம்ப் யூட்டர் பிரிவு தலைமை அதிகாரி லீவிலே போய் விட்டார். சில அந்தரங்க அறிக்கைகள் தயாராக வேண்டி இருந்தது. கம்ப்யூட்டரில் ஒரு சிக்கல். ஆலோசகர்களைத் தருவிக்க நேரமில்லை. அவர்கள் ஒட்டாவாவில் இருந்து வரவேண்டும். இரண்டு நாட் களாக கம்பனி இயக்குனர்கள் ஒடிஓடி தாங்களாகவே அதை நிவர்த்தி செய்யப் பார்த்தார்கள். முடிய வில்லை. கெடு நாளும் நெருங்கிக்கொண்டே வந்தது.
‘பிரெஸிடெண்ட் என்னைத் தனிமையில்
அழைத்து "இதை பார்க்க முடியுமா? இதில் ஏதோ பெரிய சிக்கல், நாளைக்கே ரிப்போர்ட் தயாராக

Page 45
66 0 ஒரு சாதம்
வேண்டும், உங்கள் உதவி மிகவும் அவசியம்' என்றார்.
"அந்தரங்கமான அறிக்கைகள் அவை. என் போன்றவர்கள் அவற்றைப் பார்க்க அருகதை இல்லை. 'ஆபத்துக்கு பாவம் இல்லை' என்று என் கையில் அது வந்து விட்டது. கடவுளாக அனுப்பிய பிரசாதம்.
'பெரும் காப்பியங்களை எழுதும்போது ‘காப்பு என்று கடவுள் வாழ்த்துப் பாடி பின்பே காப்பி யத்தை தொடங்குவார்கள். அது போல இந்தப் ப்ரோகிராமிலும் காப்பு போல ஒன்று இருந்தது. அதற்கு பிறகே முறையான ப்ரோகிராம்
தொடங்கும். " .
'நான் ப்ரோகிராமைப் பார்த்தேன். பார்த்த வுடனேயே தெரிந்து விட்டது. காப்பிலேயே பிழை. கனதூரம் போகத் தேவையில்லை. "ஆஹா, இதோ" என்று சொல்ல வாய் திறந்துவிட்டு சடாரென்று மூடிக் கொண்டேன். "இது கொஞ்சம் சிக்கலாக இருக்கும்போலத் தெரிகிறது. நாளைவரை ரைம் கொடுங்கள்’ என்று சொல்லி ப்ரோகிராமை பெற்றுக் கொண்டேன்.
'முதல் ஒரு நிமிடத்திலேயே பிழையைத் திருத்தி விட்டேன், மீதி இரவெல்லாம் ப்ரோக்கிராமை அணு அணுவாக ஆராய்ந்து மனதில் பதித்து வைத்துக் கொண்டேன். இப்படியான சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்காதல்லவா?
"அந்த சம்பவத்திற்கு பின்புதான் எனக்கு Deputy Finance Director பதவி கிடைத்தது. அதற்கு முன்பு அந்த வேலையில் இருந்தவரை நீக்கி விட்டார்கள். அவர் நல்ல மனிதர். அன்பான சுபாவம். என்னைப் போல அகதியாக வந்து உயர்ந்தவர். அவரை நீக்கி

அ. முத்துலிங்கம் () 67
எனக்கு அந்த வேலையைக் கொடுத்தபோது மிகவும் சங்கடமாகி விட்டது.'
"இப்பவும் அதே வேலைதானா? இனி எப்ப அடுத்த ப்ரமோஷன்?" என்று பரமனாதன் கேட்டான்.
'சூரபத்மன் ஒரு வரம் வாங்கினான். சாகாத வரம், தெரியுமல்லவா? அவன் செய்த கொடுமைகள் பொறுக்கமுடியாமல் தேவர்கள் முறையிட்டார்கள். முருகப் பெருமானும் மனமிரங்கி வேலாயுதத்தை எறிந்து சூரனை இரு கூறாக்கினார். அவன் ஒரு பாதி சேவலும், மறு பாதி மயிலுமாக மாறினான். இறக்க வில்லை; உருவம்தான் மாறினான். முருகப்பெருமான் சேவலை கொடியாக தன் தலை மேலும், மயிலை வாகனமாக காலின் கீழும் வைத்துக் கொண்டார். சூரனுடைய தலையும் (சேவல் வாலும் (மயில்) என்றைக்கும் ஆடாமல் தன்னுடைய நேரடிக் கண் காணிப்பில் வைத்துக் கொண்டதாக அர்த்தம். கொஞ்சம் அசந்தால் சூரன் தன் பழைய குணத்தைக் காட்டத் தொடங்கிவிடுவான் என்பது முருகனுக்குத் தான் தெரியும்.
"என் நிலமையும் அதுதான். என்னை நிமிர விடாமல் ஒரு முருகப்பெருமான் எனக்கு மேலே, அது தான் Finance Director. என்மேல் அவருக்கு எப்பவும் ஒரு பயம். என்னால் தன்னுடைய வேலைக்கு ஆபத்து வந்து விடுமோ என்று நித்தமும் கலங்கியபடி இருக் கிறார். நான் இதற்கு என்ன செய்யலாம்' என்றான்.
"எனக்கு உன்னைத் தெரியாதா? நான் உன்னை அடுத்த முறை பார்க்கும்போது நீ உன் மேலதிகாரி யின் வேலைக்கு வெடி வைத்துவிட்டு பிரெஸிடெண் டின் வேலையில் கண் வைத்திருப்பாய்’ என்றான் பரமனாதன்.

Page 46
68 D ஒரு சாதம் ,
அப்படிச் சொல்லிவிட்டு பரமனாதன் தன் நண்பனைப் பார்த்து புன்னகை செய்தான். சிவலிங் கத்தின்மேல் அவனுக்கு ஒரு அளவில்லாத மரியாதை யும், அன்பும் சுரந்தது.
"வெறும் கையோடு அகதிகளாக ஓடி வந்த எங்களை கனடா அரவணைத்து வாழ இடம் கொடுத்தது. இந்த வீட்டை நான் அடிமட்ட வேலை யில் சேர்ந்தபோது கடனுக்கு வாங்கினேன். இன்று நான் முழுக் காசையும் கட்டிவிட்டேன். என்னுடைய சம்பளம் பத்து மடங்கு பெருகிவிட்டது. இது என் சொந்த வீடு. நான் மிக்க சந்தோஷமாக இருக் கிறேன்' என்று சிவலிங்கம் கண்கலங்கியப்டியே கூறினான், . .
அப்போது அவனுடைய இளைய மகள், நாலு வயது இருக்கும்; ஒரு கரடி பொம்மையை தலைகீழாக இழுத்தபடி அரை நித்திரையில்வந்து, தகப்பனுடைய மடியில் தாவி ஏறினாள். சிவலிங்கம் அவளைத் துக்கி அணைத்து வைத்துக் கொண்டு, ‘என் ஆசை மகளே, உனக்குத்தான் இந்த வீடு' என்றான்.
அப்போது அவனுடைய மூத்த மகள், மேசையில் படித்துக் கொண்டிருந்தவள், ஓடோடி வந்து தகப்பனின் மற்ற மடியில் துள்ளி ஏறி இருந்து கொண்டு 'அப்ப எனக்கு, அப்ப எனக்கு' என்றாள்.
சிவலிங்கம் சொன்னான்: 'உனக்கு இல்லாமலா என்ரை மகளே! புத்தம் புது வீடு ஒன்று உனக்குத் தானே வாங்கப் போறன்."
*அப்ப, என்ரை வீட்டுக்கு என்ன பேர் வைக்க போlங்கள்?' என்றாள் அவள்.

அ. முத்துலிங்கம் () 69
** "பத்து சதம்’ என்று வைச்சால் போச்சு' என்றான் சிவலிங்கம்.
பரமனாதனின் மூளையில் பளீரென்று ஒரு மின்னல் அடித்தது. சிவலிங்கத்தினுடைய வீட்டின் பெயர் ‘ஒரு சதம் (Oru Satham), பரமனாதன்தான் எப்போதும் போல முட்டாள்தனமாக அவசரப்பட்டு "ஒரு சாதம்" என்று நினைத்து விட்டான்.
பரமனாதன் நண்பனைப் பார்த்துஅர்த்தத்தோடு சிரித்தான். சிவலிங்கமும் பதிலுக்கு புன்முறுவல் பூத்தான். s O

Page 47
கிரகணம்
 

நான் மணமுடித்து லண்டனுக்கு குடிவந்து ஐந்து வருடங்கள் பறந்து விட்டன. அப்போதுதான் ஒரு வசந்தகாலத்து காலைப்போதில் அபூர்வமாக வரும் சூரியகிரகணத்தை பார்ப்பதற்காக என் கணவர் என்னை கூப்பிட்டார்.
நான போகவில்லை; என் கணவர் மிகவும் வற் புறுத்தினார்; முடியவில்லை. சனங்கள் கும்பல் கும்ப லாக எதிர் இருக்கும் 'பார்க் புல்வெளியில் நின்று பாதுகாக்கப்பட்ட கறுப்பு நிற கண்ணாடியின் ஊடாக மேல்நோக்கி பார்த்த வண்ணம் இருந் தார்கள்.
நான் பார்க்காத கிரகணமா? ஒரு முறை பார்த். தால் போதாதா? இருபது வருடங்களாக அல்லவா பாகிஸ்தானில் நடந்த அந்த சம்பவத்தை நான் மறக்க முயன்று வருகிறேன்
பஸ்மினாவை அப்பா முதன்முதலாக எங்கள் வீட்டுக்கு கூட்டி வந்தது ஞாபகம் வந்தது. அப்போது பஸ்மினாவுக்கு எட்டுவயது இருக்கும்; என்னிலும் ஒரு வயது குறைவு. எலும்பும் தோலுமாகத்தான் இருந் தாள். கண்கள் மாத்திரம் பச்சை நிறத்தில் பெரிதாக இருந்தன. அவள் உடுத்தியிருந்த உடையில் இருந்து ஒரு கெட்ட நாற்றம் வந்தது. தலை மயிர் சடைபிடித் துப் போய் ஒட்டிக்கொண்டு கிடந்தது.
எங்களையும் வீட்டையும் பார்த்து பிரமித்துப் போய் நின்றாள் பஸ்மினா. நேரே பார்க்கக் கூசி கீழேயே பார்த்த வண்ணம் இருந்தாள்.
' அம்மா செய்த முதல் வேலை அவளுடைய தலை மயிரை ஒட்ட வழித்து வெட்டியதுதான். அடுத்து அவளுக்கு குளிக்க வார்த்து புது சல்வார் கமிஸ் போட்டு விட்டாள். எனக்கு அவளைப் பார்க்க புதின மாக இருந்தது. அவளுக்கும் அப்படித்தான் இருந் திருக்க வேண்டும். .

Page 48
72 O கிரகணம்
அவளுக்கு புஸ்து பாஷைதான் தெரியும்; எனக்கோ தமிழும் ஆங்கிலமும். அவளிடம் கதைக்கப் போன போதெல்லாம் மற்றப்பக்கம் திரும்பிக்கொண்
டாள். ヘい
அப்போது அப்பா மனித உரிமைச் சங்கம் தொடர்பாக பாகிஸ்தானில் ‘மர்தான்’ என்னும் ஊரில் வேலை பார்த்து வந்தார். போலீசாரின் உதவி யோடு நடத்திய திடீர் சோதனையில் ஆறு சிறுமிகள் மீட்கப்பட்டனர். அதில் பஸ்மினாவும்ஒருத்தி. மூன்று வருடங்களாக ஒரு வீட்டிலே பூட்டி வைக்கப்பட்டு மற்றப் பெண்களுடன் சேர்ந்து கம்பளம் நெய்து கொண்டு இருந்தாளாம் அவள்.
அந்தப் பெண்களிலே இவளுடைய கண்களைப் பார்த்து அபபா மயங்கி எங்கள் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்துவிட டார். அவளை மற்றப் பெண் களைப்போல் ‘டாருல் அமானில் கொண்டுபோய் விடுவதற்கு அப்பா விரும்பவில்லை. மறுபடியும் அவள் தகப்பனார் இப்ராஹிமிடம் ஒப்படைக்கவும் தயங்கினார்கள். இப்ராஹிமிக்கு ஒன்பது பிள்ளை கள். அவர் மறுபடியும் பணத்துக்கு ஆசைப்பட்டு ப்ஸ்மினாவை விற்று விடுவாரோ என்று பயந்தார் எங்கள் அப்பா.
அதனால் அப்பா ஒரு ஒப்பந்தம் செய்தார். அதன் படி இப்ராஹிம் எங்கள்வீட்டு ‘மாலியாக மாறினார். மாதாமாதம் சம்பளம் அவருக்கு கிடைக்கும். தினமும் வரும்போது பஸ்மினாவைக் கூட்டி வரவேண்டும்; பின்னேரம் போகும்போது கூட்டிப் போகலாம். பஸ்மினா என் ஐந்து வயதுத் தம்பியுடன் விளையாடு வது என்றுதான் ஏற்பாடு. r
இன்னுமொரு அநுகூலம். அப்பா என்னிடம் சொன்னார்: "சுகன்யா, நீ பஸ்மினாவுடன் புஸ்து

அ. முத்துலிங்கம் 0 73
விலேயே பேசிப் பழகிக்கொள். நீயும் ஒரு புதிய பாஷை சுலபத்தில் கற்றுவிடலாம்' என்றார். இந்த ஏற்பாடு எவ்வளவு விபரீதமானது என்று பின்னாலே தான் எங்களுக்கு தெரிந்தது.
பஸ்மினா வந்த புதிதில் எங்கள் வீட்டில் சாப் பிட்டதெல்லாம் வாந்தி எடுத்தாள். அச்சப்படும் கண் களை அகல விரித்து, சைகையினாலேயே பேசினாள்: மிகவும் வெட்கப்பட்டாள். எல்லாப் பொருள்களை யும் ஆச்சரியத்தோடு தொட்டுத் தொட்டுப் பார்த் தாள்.
இரண்டு வாரத்திலேயே பஸ்மினாவில் பெரிய மாற்றம் தெரிந்தது. கண்களில் உயிர் வந்தது. உடம் பின் கலர் பொன்னிறமாக மாறியது. தம்பியிடமும் என்னிடமும் கூச்சத்தை விட்டு பேச முற்பட்டாள். புஸ்துவில் அல்ல; தமிழ் அல்லது ஆங்கிலத்தில்.
அவளுடைய திடீர் கண்டுபிடிப்பு புத்தகம்தான்; அடுத்து வீடியோவில் படம் பார்ப்பது. தம்பியுடன் சேர்ந்து அவனுடைய நர்ஸ்ரி ரைம் எல்லாம் கரைத்து பாடமாக்கி விட்டாள்; படத்தைப் பார்த்து சொல் லிக் கொண்டே இருப்பாள். புத்தகத்தில் அப்படி ஒரு மோகம். ஒருமுறை வீடியோவில் படம் பார்த்தால் அவள் நினைவில் ஒவ்வொரு ப்ரேமும் அசையாது நிற்கும். மறப்பதென்பதே கிடையாது.
ஆறு மாதத்தில் ஆங்கிலமும் தமிழும் சரளமாகப் பேசப் பழகிக் கொண்டாள். என்னுடைய புஸ்து இருப்பிடத்தை விட்டு புறப்படவே இல்லை. பஸ்மினாவின் அறிவுத்தாகம் எல்லையில்லாமல் விரிந்துகொண்டே போனது. ஓயாமல் என்னைக் கேள்விகள் கேட்டு துளைத்துக் கொண்டே இருப் பாள். ஒரு படம் பார்க்கும்போது விளங்காத சம்ப
5-س-6J

Page 49
74 () கிரகணம்
வங்களையும் சொற்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வாள். தம்பிக்கு வாங்கும் புதுப் புத்தகங்களை ஆவலுடன் வாசித்து முடித்து விடுவாள். தம்பியுடன் சேர்ந்து மெள்ள மெள்ள ஆங்கிலமும் தமிழும் தானாகவே எழுதவும் கற்றுக்கொண்டு விட்டாள்.
ஒரு நாள் நான் பள்ளியில் இருந்து வந்து இவளை த தேடிப் போனேன். இவள் என்னுடைய ஒரு ஆங்கிலக் கதைப் புத்தகத்தை தம்பிக்கு வாசித்துக் காட்டிக்கொண்டு இருந்தாள். அது மாத்திரமல்ல; அதைத் தமிழிலும் தம்பிக்கு அப்பப்ப மொழி பெயர்த்தபடியே வந்தாள். எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம். நான் மெதுவாக ஓடி அம்மாவைக் கூட்டி வந்து இந்த அதிசயத்தைக் காட்டினேன். அம்மாவும் திகைத்து நின்று விட்டாள்.
அவள் பஸ்மினாவிடம் 'நீ எப்படி இவ்வளவு சீக்கிரம் வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டாய்” என்று கேட்டாள். அதற்கு பஸ்மினா “தம்பியும், சுகன்யாவும் படிக்கும்போதெல்லாம் பக்கத்திலேயே நிற்பேன்; பார்த்துப் பார்த்து பழகிவிட்டது" என்றாள் சர்வ சாதாரணமாக, என்னால் நம்பவே முடியவில்லை.
இந்தச் சம்பவத்திற்கு பிறகுதான் அப்பா பஸ்மினாவை விரைவிலேயே ஒரு பள்ளியில் சேர்க்க வேண்டிய அவசியத்தை உணர்நதார். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. அவளை எந்த வகுப்பில் சேர்ப் பது என்பதுதான் பிரச்சனை. அவள்தான் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு கிளாஸாக மேலே ஏறிக் கொண் டிருந்தாளே!
நான் என்னுடைய புத்தகங்களை அவளுக்கு படிக்கக் கொடுத்ததோடு பள்ளிக்கூட லைப்ரரியி

அ. முத்துலிங்கம் D 75
லிருந்தும் புத்தகங்களை அள்ளிவரலானேன். அவளும்
அசுர வேகத்தோடு அவற்றை வாசித்து முடித்து விடுவாள்.
ஒருநாள் நான் சிறுவர்களுக்கான பைபிளைக் கொண்டு வந்தேன். அதிலே வண்ணப் படங்களுடன் கதைகளை அழகாகச் சொல்லியிருந்தார்கள். அதை வாசித்துவிட்டு அவள் அப்பாவிடம் கேட்டாள்: **பைபிள் வேதத்தில் கூறியதன்படி கடவுள் ஒளியை முதல் நாள் படைத்தார்; ஆனால் சூரியனையும் சந்தி ரனையும் நாலாம் நாள் தானே படைத்தார், இது எப்படி சாத்தியம்?' என்றாள்.
அப்பா முதலில் கொஞ்சம் ஆடிவிட்டார் என்று தான் நினைக்கிறேன். ஆனால் பிறகு சமாளித்துக் கொண்டே கூறினார்: 'பைபிளைப் பற்றி விமர்சிக்க எங்களுக்கு என்ன தகுதி? பைபிளை விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது; அதில்சொல்லி பிருக்கும் தத்துவத்தைத்தான் யோசிக்க வேண்டும். ஒளிதான் ஜீவன். அதனால்தான் ஒளி முதலில் வந் தது; சூரியனுக்கே ஒளியைக கொடுத்தவர் கடவுள் அல்லவா? அதனால்தான் சூரியனுடைய படைப்பு பின்னால் வந்தது.'
பைபிளை நான் எத்தனை தரம் படித்திருப் பேன்? எனக்கு அந்த முரண்பாடு தெரியவில்லையே! பஸ்மினா எப்படி அதை ஒரு கணத்தில் கண்டுகொண் டாள்? /
பின்னேரம் ஆனதும் பஸ்மினா வழக்கம்போல் தகப்பன் இப்ராஹிமுடன் வீட்டுக்கு போய் விடுவாள். தூக்கிலிடப் போகும் கைதிபோல கால்களை இழுத்த படியே விருப்பமின்றி போவாள். அவள் போனாலும் அவளுடைய நினைவெல்லாம் எங்கள் வீட்டைச்

Page 50
76 கிரகணம்
சுற்றியபடியே இருந்திருக்கும். அவளுடைய புத்தகங் களை விட்டு அவள் எப்படிப் பிரிவாள்?
அந்த சமயத்தில்தான் ஒரு சூரியகிரகணம் பாகிஸ் தானில் தெரியப் போவதாகப் பேப்பர்களில் செய்தி வந்தது. அதைப் பார்ப்பதற்காக நாங்கள்எல்லோரும் ஆர்வத்துடன் வெளிக்கிட்டோம். என் மனம் மட்டும் சங்கடப்பட்டுக் கொண்டே இருந்தது; காரணம் தெரியவில்லை. அப்பாவும், அம்மாவும், தம்பியும் முன் சீட்டில்; நானும் பஸ்மினாவும் காரின் பின் சீட்டில் உட்கார்ந்து "ரக்ஸ்பாய்’ என்னும் சிறு மலையின் உச்சியை நோக்கி போய்க் கொண்டிருந் தோம். அங்கே ஏற்கனவே சனங்கள் நிறைந்து விட்டார்கள்.
மறக்க முடியாத நிகழ்ச்சி அது. ஒளிவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த பூமி கண நேரத்தில் இருண்டு விட்டது. பஸ்மினா ஒரு குழந்தையின் ஆர்வத்துட னும் ஒரு விஞ்ஞானியின் புத்தி சாதுர்யத்துடனும் கேள்வி மேல் கேளவியாகக் கேட்டாள். அப்பாவும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டு வந்தார். திரும்பி வரும்போது ‘சர்சதா' என்னும் இடத்தில் ஆற்றின் கரையோரமாக இருந்து சப்ளி கெபாப்பும்" "நான் ரொட்டியும் சாப்பிட்டு பின்னேரம் ஆறுமணி போல வீடு திரும்பினோம்.
வீடு வந்து கேட் முன்னால் நின்று ஹார்ன் அடித்தும் மாலி இப்ராஹிம் கதவைத் திறக்கவில்லை. ஐந்து நிமிடம் கழித்து அப்பா கேட் மேல் ஏறிப் பாய்ந்து குதித்து உள்ளே போனார். அங்கு அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி எப்படி இருந்திருக்குமென்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன்.
இப்ராஹிம் கொலை செய்யப்பட்டு * g sT fr போயில் குப்புறக் கிடந்தார். கத்தியால் மூன்று

அ. முத்துலிங்கம் 0 77
நான்கு இடங்களில் படு காயம். அம்மாவும் அப்பா வும் என்னையும் தம்பியையும் பஸ்மினாவையும் அதைப் பார்க்கவிடாமல் மறைத்தார்கள். பஸ்மினா கதறிக் கதறி அழுதாள்; அம்மாவும் அழுதாள்; நானும் அழுதேன், பஸ்மினா அழுவதைப் பார்த்து.
இரண்டு நாட்களாக போலீஸ் வந்து விசாரணை எல்லாம் நடந்தது. மூன்று தலைமுறையாக இப்ராஹிம் குடும்பத்திற்கும், இன்னொரு குடும்பத் திற்கும் இடையில் தொடரும் இரத்தப்பகைதான் (blood feud) இதற்கு காரணம். சாப்பிட வழி யில்லை; ஆனால் கொலை செய்வதற்கு மாத்திரம் தயங்க மாட்டார்கள். கொலை செய்த குடும்பம் பிராயச்சித்தமாக இரத்தக் காசு (blood money) கொடுத்தாலொழிய இந்தச் சண்டை தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்பா இதை எங்களுக்கு அப்போது விளக்கியது ஞாபகம் இருக்கிறது.
இப்பொழுது அப்பாவின் தலையில் பஸ்மினா வுக்கு ஒரு வழிசெய்ய வேண்டிய பொறுப்பு வந்து சேர்ந்தது. அப்பா இப்ராஹிமின் தம்பியைக் கூப் பிட்டு கதைத்தார். அப்பா தொடர்ந்து மாதம் மாதம் இப்ராஹிமுக்கு கொடுத்த சம்பளத்தை இப்ராஹிமின் குடும்பத்துக்கு கொடுப்பதாகவும் பஸ்மினா எங்க ளுடன் நிரந்தரமாக தங்குவதாகவும் ஏற்பாடு செய் யப்பட்டது. இது எல்லோருக்கும் நல்ல தீர்வாகப் பட்டது.
இந்தச் சம்பவத்திற்கு பிறகுதான் பஸ்மினா அடிக்கடி மயங்கி விழத் தொடங்கினாள். அம்மா அவளை வைத்தியரிடம் அழைத்துச் சென்று பரி சோதனை செய்து மருந்துகள் வாங்கிக் கொடுத்தாள்.

Page 51
78 D கிரகணம்
பஸ்மினாவும் கிரமமாக அவற்றை சாப்பிட்டு குண மாகி வந்தாள். ஆனால் வைத்தியர் அவளுடைய இருதயத்தில் ஒரு பிசகு இருப்பது போலப் படுவதாக வும், அவள் கொஞ்சம் பெரியவளானதும் இதை இன்னொரு முறை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறினார். அம்மா வழக்கம்போல் இதைப் பெரிது படுத்தி கவலைப்பட ஆரம்பித்தாள். அப்பாவோ *அவளுக்குத்தான் இப்ப எல்லாம் சரியாகி விட்டதே, பயப்படுவதற்கு இனி ஒன்றுமில்லை' என்று கூறி
அம்மாவை அடக்கிவிட்டார்.
இப்பொழுது பஸ்மினா எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகி விட்டாள். நல்ல வசதியும் நேரத்திற்கு சாப்பாடும் அமைதியும் சேர்ந்து அவள் உடம்பில் ஒரு வனப்பை ஏற்படுத்தியது. கூந்தல் கருகருவென்று வளர்ந்து விட்டது. கண்களில் அறிவு ஒளி மின் னியது. அவள் வடிவை பார்த்துக் கொண்டேயிருக்க (6) s TLLÓ.
நான் பள்ளியில் இருந்து வரும் நேரத்தை பார்த்த படி வாசலிலேயே நிற்பாள் பஸ்மினா, நான்வந்ததும் எங்களுக்குப் பிடித்தமான பீபள் மரத்தின்கீழ் இருந்து விளையாடுவோம். மணிக்கணக்காக விளையாடு வோம். விளையாட்டு என்பதை முதலில் அவள் அறிந்ததே எங்கள் வீட்டில்தான். ‘மொனபொலி' அவளுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. அதில் அவளைத் தோற்கடிக்கவே முடியாது. அப்பாகூட எத்தனையோ முறை அவளிடம் தோற்றிருக்கிறார்.
ஒரு முறை இப்படித்தான் நாங்கள் எங்கள் வழக்கப்படி பீபள் மரத்தின் கீழ விளையாடிக் கொண்டிருந்தபோது பஸ்மினா திடீரென்று என் கையிரண்டையும் பிடித்தாள். அவள் கண்கள் கலங்கி

அ. முத்துலிங்கம் L) 79
யிருந்தன. என்னைப் பார்த்து, ‘சுகன்யா, நீ என்னை மறக்கமாட்டாயே?" என்று கேட்டாள்.
நான் ‘உன்னை எப்படி நான் மறப்பேன். உயிர் போகும்வரை மறக்க மாட்டேன்' என்றேன்.
'யாருடைய உயிர்?' என்றாள் அவள்; சொல்லி விட்டு அழத் தொடங்கினாள்.
அப்போது நான் கூறினேன், ‘பஸ்மி, நீ எனக்கு கூடப்பிறக்காத சகோதரி. உன்னை நான் என் உயிராகவல்லவா நினைக்கிறேன்.'
பளிரென்று அவள் முகத்திலே ஒரு பிரகாசம் வந்தது. அந்த பச்சை நிறக் கண்களிலே நிரந்தர மாகக் குடியிருந்த அச்சம் கொஞ்சம் விலகியது போலத்தான் எனக்குப் பட்டது.
எங்களுடைய படுக்கை அறையில் பஸ்மினாவின் கட்டில் கிழக்குப் பார்த்து இருக்கும்; என்னுடையது எதிர்ப்புறம். பஸ்மினாவின் கட்டிலுக்கு பக்கத்தில் ஒரு சின்னப் பெட்டகம். அதிலே அவள் தன்னுடைய சாமான்களை போட்டு வைத்திருப்பாள்.
ஒருநாள் ஏதோ தேடும்போது தற்செயலாக அவளுடைய பெட்டகத்தை திறக்கவேண்டி வந்தது. திறந்த நான் அதிர்ந்து போய் சில நிமிடங்கள் நின்றேன். ஒருவிதமான துர்நாற்றம் வந்தபடியே இருந்தது. அந்தப் பெட்டகத்துக்குள் பாதி சாப் பிட்ட கொய்யாக்காய், பத்துப் பதினைந்து காய்ந்து போன பாண் துண்டுகள், கடலை, முறுக்கு, பிஸ்கட் என்று பலவிதமான உணவுப் பொருட்கள் அடைந்து கிடந்தன. நான் ஒடிப் போய் அம்மாவைக் கூட்டி வந்து காட்டினேன்.

Page 52
80 கிரகணம்
அம்மாவும் நம்ப முடியாமல் கொஞ்ச நேரம் அதைப் பார்த்தபடியே நின்றாள். பஸ்மினா இப்படி சாப்பாட்டை யாாரவது வைப்பார்களா? பஸ்மினா அப்போது எங்களுடன் நாலுமாத காலம் இருந்து விட்டாள். ள் தற்காக சாப் பாடு களவெடுக்க வேண்டும்? போதிய சாப்பாடு அவளுக்கு கிடைக்கவில்லையா? அல்லது சேர்த்து வைத்து வீட்டுக்கு களவாக அனுப்புகிறாளா? ஏன் இந்த புத்தி?
இதுபற்றி அம்மா தீர யோசித்துவிட்டு பஸ்மி னாவை கூப்பிட்டு விசாரித்தாள். பஸ்மினா இதை எதிர்பார்க்கவில்லை. நிலத்தையே பார்த்தபடி கொஞ்சநேரம் இருந்துவிட்டு விம்மி விம்மி அழத் தொடங்கி விட்டாள். எவ்வளவு கேட்டும் அழுகை தான் பதிலாக வந்தது.
கடைசியில் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது அப்பாதான். ‘பஸ்மினா, பயப்படாதே. நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம். உனக்கு இங்கே சாப் பாடு போதியது கிடைக்கவில்லையா? சொல்' என்றார். அடுத்து பஸ்மினா சொன்ன வாசகங்கள் எங்கள் நெஞ்சை உருக்குவதாய் இருந்தது.
'எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் நினைப்பதெல்லாம் சாப்பாட்னடப் பற்றித்தான். இருட்டறையில் பூட்டி வைக்கப்பட்டு ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் வேலை செய்து வந்தேன். ஒருநாளா, இரண்டு நாளா? மூன்று நான்கு வருடங் கள். பகலும் தெரியாது, இரவும் தெரியாது. கைவிரல்கள் எல்லாம் வலியெடுத்துவிடும்; கண்கள் குத்திக்கொண்டே இருக்கும்: சாப்பிடக் கிடைப் பதுவோ உலர்ந்த ரொட்டியும் தேநீரும்தான்.

அ. முத்துலிங்கம் () 8.
அதுவும் சீனி போடாத தேநீர். அதுகூட போதியது கிடைக்காது. விடிய சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே மத்தியானச் சாப்பாட்டுக் கவலை வந்து விடும். சாப்பாடு கிடைக்குமா என்ற கவலை. எவ் வளவு கிடைக்கும் என்ற கவலை. மத்தியானம் மறு படியும் காய்ந்த ரொட்டித் துண்டும் பருப்பும் கொடுப்பார்கள்; வேலையில் பிழைவிட்டால் அது வும் கிடையாது. இரவு ஒன்றுமே இல்லை; தேநீர் மாத்திரம்தான்.
'உணவைப் பற்றிய ஸ்மரணைதான் எங்களுக்கு எந்த நேரமும். இந்த ஏக்கம்தான் என்னை உயிரோடு வைத்திருந்தது. உயிர் வாழ்வதற்கு ஏக்கம் மிகவும் முக்கியமானது. அந்த நரகத்தில் இருந்து என்னை மீட்டீர்கள்; ஆனால் பசியிலிருந்து மீட்கவில்லை.
‘என் தகப்பனாருடன் நான் இரவு வீட்டுக்குப் பேர்வேன். அங்கே என் தகப்பனாரும், மூன்று அண்ணன்மாரும், காக்காவும் (தகப்பனாரின் தம்பி) இருப்பார்கள். அம்மா சமைத்த உணவை அவர் களுக்கு போட்டு ஹ"ஜ்ராவுக்கு அனுப்பி விடுவாள். நானும் மற்ற அக்காமாரும்-எங்களில் எல்லாமாக ஆறு பெண் குழந்தைகள்-அம்மாவைச் சுற்றி உட் கார்ந்தபடியே காத்துக்கொண்டு இருப்போம். அவர் கள் சாப்பிட்டபிறகு மிஞ்சியிருப்பதை நாங்கள் பங்கு போட்டுக் கொள்வோம். கால் வயிற்றுக்கும் காணாது.
"சில வேளைகளில் எங்கள் தகப்பனார் சாப்பிட உட்காரும்போது யாராவது விருந்தினர்கள் வந்து விடுவார்கள். அவர்களும் சாப்பிட்டால் எங்களுக்கு மீதமிருக்காது. அன்று நாங்கள் எல்லாம் பட்டினி தான். தண்ணீரைக் குடித்துவிட்டு படுத்து விடு

Page 53
82 () கிரகணம்
வோம். அவர்கள் சாப்பிடக் குந்தியவுடன் நானும் என் அக்காமாரும் அல்லாவைப் பிரார்த்தித்தபடியே இருப்போம், யாராவது விருந்தினர்கள் அன்று வந்து விடக் கூடாதென்று.
*முதன்முறையாக என் வாழ்க்கையில் இப் பொழுதுதான் நான் பசியில்லாமல் இருக்கிறேன்; நம்ப முடியவில்லை, என்றாலும் எனக்கு பயமா யிருக்கு. மேசையில் குவித்து சாப்பாட்டைக் கானும் போதெல்லாம் ‘நாளைக்கு கிடைக்குமா?’ என்ற பயம் பிடித்துவிடும். எவ்வளவுதான் துரத்தினாலும் இந்கப் பயம் போவதில்லை. எப்படியும் சாப் பாட்டைத் திருடிக் கொண்டு வந்து வைத்து விடு கிறேன். நான் என்ன செய்வேன்’ என்று விக் கினாள.
அம்மா அவளுடைய கண்களைத் துடைத்து ‘அதற்கென்ன, நீ செய்தது பிழையில்லை. இன்றிலி ருந்து நீ மேசையிலிருந்து திருடத் தேவையில்லை. நானே நிறைய பழங்களும், பிஸ்கட்டும், கடலையும், முறுக்குமாக உன் பெட்டியை நிறைத்து விடுகிறேன். நீ வேண்டும்போது சாப்பிடலாம். நீயாகவே வேண்டி யதை எடுத்தும் வைத்துக் கொள்ளலாம்; ஆனால் களவெடுக்கத் தேவையில்லை' என்று சொல்லி பஸ்மினாவைத் தேற்றினாள்.
அதன்பிறகு பஸ்மினா உணவு திருடுவதில்லை. அவளுடைய பெட்டியில் எப்பவும் சாப்பாடு நிறைந்தே இருக்கும். இருந்தாலும் பஸ்மினா இறுதி வரை அந்தப் பயத்தில் இருந்து விடுபட்டாளா என்பது ஐயம்தான்.
ஒருநாள் இரவு நாங்கள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது டஸ்மினா ‘அப்பா'

அ. முத்துலிங்கம் 0 83
என்றாள். இப்போதெல்லாம் பஸ்மினா என்னுடைய அப்பாவை ‘அப்பா' என்றே அழைக்கத் தொடங்கி இருந்தாள். நான் அம்மாவைப் பார்த்தேன். அம்மா வும் என்னைப் பார்த்தாள். சாப்பிடும் நேரங்களில் இப்படி பஸ்மினா அழைத்தால் ஏதோ குண்டு விழப் போகிறது என்றுதான் அர்த்தம். அன்று பகல் முழு வதும் அவள் ஏதோவொரு புத்தகத்தை விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தாள்.
*அப்பா, தேவர்களும் அசுரர்களும் பாற் கடலைக் கடைந்தபோது மந்தார மலையை மத்தாக வும், வாசுகியை கயிறாகவும் இழுத்தார்கள் அல்லவா? கடைசியில் ஆலகால விஷம் தோன்றிய போது எல்லோரும் அதன் உக்கிரம் தாங்காமல் பயத் தில் ஓடிவிட்டார்கள். அப்பொழுது சிவபெருமான் தேவர்களின் கஷ்டம் நீங்குவதற்காக அந்த விஷத்தை கையிலே எடுத்து உண்டார். அந்த விஷமும் சிவ பெருமானுடைய கண்டத்தில் நிரந்தரமாகத் தங்கி விட்டது; அவரும் நீலகண்டன் என்று பெயர் பெற்றார். சகல ஜீவராசிகளும் ரட்சிக்கப்பெற்றன.'
**ஆமாம், அப்படித்தான் சொல்லியிருக்கிறது.'
*சிவபெருமான் அப்படி உண்ணும்போது ஒரு சிறுதுளி விஷம் தவறி பூமியிலே வந்து விழுந்தது. அதன் பிறகுதான் பாம்புகளுக்கு வாயிலே விஷம் வந்தது, இல்லையா?*
*அதற்கென்ன?"
‘அப்படியானால பாற்கடலை கடைந்தபோது ஆரம்பத்தில் வாசுகி வேதனை தாங்காமல் விஷம் கக்கியது என்று வருகிறதே! அது எப்படி? என்றாள்.

Page 54
-84 கிரகணம்
எங்கள் எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. அப்பா அப்படியே ஸ்தம்பித்து விட்டார். அம்மா சாப்பிட வாயைத் திறந்தவள் அப்படியே மூடாமல் பஸ்மினா வைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
ள்னக்கு பஸ்மினா கேட்டதன் அர்த்தம்அப்போது பூரணமாக விளங்கவில்லை. அப்போது அவளுக்கு வயது பத்து இருக்கும். முறையாகப் படித்த தென்பது கிடையாது. ஆனால் அவளுடைய புத்திக் கூர்மையானது கட்டுக்கடங்காத குதிரையைப் போல திமிறிக்கொண்டு ஓடியது.
அன்றிரவு அப்பா அம்மாவுக்கு தனிமையில் சொன்னார்: "நான் என் தொழில்முறையிலும் சரி மற்றும்படியும் சரி எத்தனையோ குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் பஸ்மினா போன்ற ஒரு அறிவுத் தாகமுள்ள குழந்தையை நான் இதுவரை பார்த்ததே இல்லை."
அம்மா ‘இது கடவுளாகப் பார்த்து அவளுக்கு கொடுத்தது. நாங்கள் எங்களால் முடிந்தமட்டும் பஸ்மினாவை ஊக்கப்படுத்த வேண்டும்' என்றாள்.
“GLD606 frtGd5Grid exceptionally gifted children என்று ஒரு பிரிவு இருக்கிறது. பஸ்மினா இதிலே அடங்குவாள். இவள் வந்து இங்கே பிறந்து இருக்கி றாளே? அதுவும் ஐந்து வயதிலேயே பெற்றோர் கேவ லம் நூற்றிஐம்பது ரூபாய்க்கு கம்பளம் நெய்ய விற்று விட்டார்களே! அமெரிக்கா போன்ற நாடுகளில் இதற்கென்று பிரத்தியேகமான பள்ளிகள் எல்லாம் உண்டு. ஸ்பெஷல் ஆசிரியர்களும் பயிற்சிகளும் கூட இருக்கின்றன. என்ன துரதிர்ஷ்டம்.' என்றார் அப்பா.
‘அப்ப நீங்கள் இவளுக்கு ஏதாவது செய்ய முடியாதா?’’

அ. முத்துலிங்கம் L 85
'முயற்சி செய்து பார்ப்போம். அதுவரையில் எங்களால் இயன்ற வசதிகளை இங்கேயே செய்து கொடுப்போம்' என்றார் அப்பா.
இப்பொழுதெல்லாம் அப்பா புத்தகம் புத்தக மாகக் கொண்டுவந்து குவித்தார். ஆங்கிலப் புத்தக மும் தமிழ் புத்தகமுமாக பஸ்மினா வாசித்து தள்ளி னாள். முழுப்பட்டினி கிடந்த ஒருத்தி ஆவலுடன் சாப்பிடுவதுபோல அவசர அவசரமாக வாசித்து முடித்தாள். படிப்பதென்றால் நுனிப்புல் மேய்வது போல் அல்ல. ஆழமாகக் கிரகித்துத்தான் படித்தாள். அடிக்கடி அப்பாவுடன் படித்ததைப் பற்றி விவாதம் செய்வதிலிருந்து அதை நான் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.
அவளுடைய ஞாபகசக்தி அசாதாரணமானது. ஒன்றைப் படித்தால் அது அவளுடைய மனத்தில் படம்போல ஒட்டிக்கொள்ளும். இயற்கை கொடுத்த வரப்பிரசாதம். ஒரு புத்தகத்தை இன்னொரு தடவை படிப்பது என்பதே கிடையாது. தேவையில்லை. எனக்குத் தெரிந்து சேக்ஸ்பியருடைய கிங் லியர் என்ற கதையை மாத்திரம் இரண்டு தரம் படித்தாள். அவளுக்கு அந்தக் கதையில் அமோகமான பிடிப்பு.
கம்புயூட்டர் விஷயமும் அப்படித்தான். அப்பா புெடைய கம்புயூட்டரில் அடிக்கடி தான் நினைப்ப வற்றை டைப் பண்ணி வைத்துக் கொள்வாள். அவ ளுடைய கைவிரல்கள், கம்பளம் நெய்த அதே விரல் கள், கம்புயூட்டர் விரல் கட்டைகள் மீது அதீத விசையுடன் நர்த்தனமாடும். பள்ளிக்கூடத்து வாச லையே மிதிக்காத அவளுடைய மனத்திலிருந்து சிந்தனைக் கோவைகள் அழகிய ஆங்கிலத்தில் போட்டி போட்டுக் கொண்டு வெளியே வந்தவண் ணம் இருக்கும்.

Page 55
86 கிரகணம்
ஒரு முறை அப்பா ஆபீஸில் இருந்து வரும்போது தமிழ் கம்புயூட்டர் ப்ரோகிராம் ஒன்று கொண்டு வந்தார். அதை எங்கள் வீட்டுக் கம்புயூட்டரில் மாட்டி எப்படிச் செயல்படுத்துவது என்று எனக்கும் Lஸ்மினாவுக்கும் விளக்கினார். இருபது நிமிடங்களில் எங்களுக்கு அது வேலை செய்யும் விதம் புரிந்து விட்டது.
அப்பா என்னிடம் ‘எங்கே ஒரு வசனம் தமிழில் டைப் செய் பார்ப்போம்' என்றார். நானும் ‘இது ஒரு தமிழ் கம்புயூட்டர் ப்ரோகிராம்' என்று எழுதிக் காட்டினேன். இதற்கு ஒரு ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன். தொடர்ந்து பஸ்மினாவை எழுதச் சொன்னார் அப்பா. அவள் எழுதிய வாசகம் கிட்டத் தட்ட பின் வருமாறு இருந்தது:
'மரம் மனிதனுடைய மிகச் சிறந்த நண்பன்: கடவுளுக்குச் சமானம். உலகிலே உயிர் வாழ்வன வற்றில் எல்லாம் மிகவும் பெரியது மரம்தான்; மிக அதிக காலம் உயர் வாழ்வதுவும் அதுதான்; ஐயாயிரம் வருடங்கள் கூட சில மரங்கள் உயிர் வாழும். மரம் இல்லாவிட்டால் மனிதனுக்கு உணவு ஏது? மனிதனுடைய உயிர் நாடியே மரம்தான். பெய்யும் மழைகூட மரம் கொடுத்த வரம்தானே! ஒரு மரத்தை வெட்டும்போது மனிதன் தன்னையே அழித்துக் கொள்கிறான். மரம் போனால் அவனும் போய் விடுவான்.'
இதை ஒரு நிமிடத்தில் ஒரு பிழையுமில்லாமல் எழுதி முடித்தாள். அப்பா என்னைப் பார்த்தார். ‘பஸ்மினா வேறு எப்படி எழுதுவாள்?' என்பது போல இருந்தது அந்தப் பார்வை.
அப்பாவின் வேலை ஒப்பந்தம் முடிய இன்னும் ஆறே மாதங்கள்தான் இருந்தன. அப்பா முழு வேலை

அ. முத்துலிங்கம் 0 87
யாக பஸ்மினாவை தத்து எடுப்பதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யலானார். இத்துடன் அமெ ரிக்காவில் அவளை ஒரு பிரத்தியேகமான பாடசாலை யில் சேர்ப்பதற்கும் பல கடிதங்களை எழுதியபடியே இருந்தார்.
ஆனால் இது மிகவும் கடினமான வேலை. பாகிஸ்தானில் ஒர் இளம் முஸ்லிம் பெண்ணை தத்து எடுப்பதென்றால் அது அப்படி ஒன்றும் லேசான காரியமல்ல. எத்தனையோ பேரைப் போய் பார்க்க வேண்டும்; பேப்பருக்கு மேல் பேப்பராக நிரப்பிக் கொடுக்க வேண்டும். கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதி நினைவூட்ட வேண்டும்.
இந்த வேலைகள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. எனக்கு பஸ்மினாவை விட்டு போக வேண்டி வந்து விடுமோ என்ற கவலை பிடித்து ஆட்டத் தொடங்கி . الزنج سL -لاته.
பஸ்மினாவுக்கு இந்தக் கவலை இல்லை. பகல் முழுக்க அவள் படித்துக் கொண்டிருப்பாள்; அல்லது கம்புயூட்டருடன் விளையாடிக் கொண்டிருப்பாள். சில வேளைகளில் தம்பிக்கு நீண்ட நீண்ட கதைகள் சொல்லி விளையாட்டுக் காட்டுவாள்.
அப்படித்தான் ஒரு நாள். சனிக்கிழமை. மஸ்பாஹின் தொழுகை அழைப்பு தூரத்திலே கேட் டது. மத்தியான உணவு முடிந்து சற்று ஒய்வாக இருந்த நேரம். ஆனி மாதத்து வெய்யில் அனலாகக் கொதித்துக் கொண்டு இருந்தது. விளையாட்டுக் களைப்பு. வழக்கமாக நான் அந்த நேரம் துங்குவதே யில்லை. படுத்தபடி என்னையறியாமல் சிறிது கண்ணயர்ந்து விட்டேன். யாரோ உலுக்குவதுபோல

Page 56
88 D கிரகணம்
இருந்தது. திடுக்கிட்டு விழித்தேன். ஏதோ இனம் தெரியாத பயம் என்னைச் சூழ்ந்து கொண்டது.
‘பஸ்மி, பஸ்மி" என்று கூப்பிட்டுக் கொண்டே வெளியே வந்தேன். பஸ்மினாவைக் காணவில்லை. கம்புயூட்டர் அறைக்கு ஓடினேன். அங்கே பஸ்மினா தலையை மேசைமேல் வைத்து சுருண்டு போய்க் கிடந்தாள். அவள் அப்படித் தூங்கி நான் கண்டதே. யில்லை.
‘பஸ்மி' என்று மெள்ளத் தொட்டு எழுப் பினேன். அவள் தலை துவண்டு விழுந்தது. உடம் பெல்லாம் பதற ‘பஸ்மீ' என்று கத்திக்கொண்டே அம்மாவிடம் நான் உள்ளே ஓடினேன்.
பிறகு நடந்தது எனக்கு முழுவதும் ஞாபக மில்லை. கனவுபோல் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. என் உயிருக்குயிரான பஸ்மினா சடுதியில் என்னைவிட்டுப் போய் விட்டாள். வந்த மாதிரியே போயும் விட்டாள்.
பஸ்மினாவின் உடலை இஸ்லாம் முறைப்படி அடக்கம் செய்தார்கள். அப்பா அவளுடைய ஜனா ஸாவில் எந்தவிதமான குறையும் வைக்கவில்லை. எல்லாம் முடிந்தபிறகு பிற்பாடு என் தம்பிதான் அதை எனக்கு சுட்டிக் காட்டினான்.
கம்ப்யூட்டர் ஓடிக் கொண்டிருந்தது. பஸ்மினா இறப்பதற்கு சில வினாடிகள் முன்பு எழுதிய வாச கங்கள் அதில் மின்னிக் கொண்டு இருந்தன:
‘சூரிய கிரகணம் எனக்குப் பிடிப்பதில்லை. சில
நிமிடங்கள் பூமியை அந்தகாரம் சூழ்ந்து கொள் கிறது. சூரியனுக்கும் பூமிக்குமிடையில் சந்திரன்

அ. முத்துலிங்கம் ( 89
புகுந்து சூரியனுடைய சக்தி வெள்ளத்தை ஏழரை நிமிடங்கள் தடுத்து விடுகிறது. இது இரவு வருவது போன்றதல்ல. எங்களுக்கு இரவு நடந்து கொண்டி ருக்கும்போது இந்தப் பூமியின் இன்னொரு பகுதியை சூரியனுடைய ஒளிக் கதிர்கள் தாக்கிக் கொண்டிருக் கும். கிரகணத்தின்போதோ, அந்த ஏழரை நிமிடங் கள், சூரியனுடைய உயிரூட்டும் சக்தி பூமியை அடைவதேயில்லை! தடைபட்டு போகிறது. பூமி அந்த சக்தியை நிரந்தரமாக இழந்து விடுகிறது. அது ஈடு செய்யமுடியாத ஒரு நட்டம்.
**உஃகாப் பறவையை எனக்குப் பிடிக்கும். அதன் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதன் நீண்ட சிறகுகளும், வளைந்த மூக்கும், கம்பீரமும் வேறு எந்தப் பறவைக்கு வரும்? ஆகாயத்தில் புள்ளி போல வட்டமிட்டுக் கொண்டு நின்று இரையைக் கண்டதும் இறாஞ்சிக் கொண்டு சிறகைக் குவித்துக் கீழே விழுந்து, கூரிய நகங்களால் அதைப் பற்றி மேலெழும்பும் லாவகம் இதற்கு மாத்திரமே அமைந் தது. உஃகாப் பறவையும் என்னைப் போலத்தான், அதற்கும் சூரியகிரகணம் பிடிப்பதில்லை. ஏனெனில்..'
நான் கம்ப்யூட்டரை பரபரப்பாகத் தட்டி மேலும் கீழும் தேடிப் பார்த்தேன். பஸ்மினா எழுதிய கடைசி வாசகங்கள் அவைதான்.
விஞ்ஞானிகள் பலரும் சூரியகிரகணத்தைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் கூட இந்த சக்தியிழப்பைப் பற்றி கவலைப்பட்ட தாகத் தெரியவில்லையே! பஸ்மினாவுக்கு என்ன அது பற்றி அவ்வளவு கவலை, அந்த வயதில்? போகட்டும்.
வ-7

Page 57
90 0 கிரகணம்
உஃகாப் பறவைக்கும் சூரிய கிரகணத்துக்கும் என்ன சம்பந்தம்?
நானும் பின்னால் மேற்படிப்பு படித்தபோது
இதுபற்றி ஆராய்ச்சிசெய்ததுண்டு. எல்லாப் புத்தகங் களையும் துருவித் துருவி படித்துவிட்டேன். பஸ்மினா விட்டுப்போன புதிர் அவிழ்க்காமலே கிடக் கிறது.
சூரிய கிரகணங்கள் வந்து வந்து போய்க்கொண் டிருந்தன. பஸ்மினாவை நான் மறக்கமுடியுமா? சிறுபிள்ளைத்தனமாக நானும் அவளும் அவசரமாக பீபள் மரத்தின் கீழ் செய்துகொண்ட பிரதிக்ஞையின் படி அவளை நான் மறக்காமலிருக்க பஸ்மினா செய்த சூழ்ச்சியா இது?
வாழ்க்கை என்ற நீண்ட பயணத்தில் சூரியகிரக ணத்தின் நிழல் போல பஸ்மினா என்னுடன் சிறிது தூரம் நடந்து வந்தாள்; பிறகு மறைந்து விட்டாள். பஸ்மினா முடிக்காமல் விட்ட வாசகத்தின் தாத்பரி யம் என்ன? இருபது வருடங்களாக எனக்கு நிம்மதி யில்லை.
இதற்கு யார் விடை கூறுவார்கள்?

விழுக்காடு

Page 58
முன்குறிப்பு :- கான் ஆபிரிக்காவில் ஐ.நா.வுக்காக வேலை செய்தபோது கடந்த கதை இது. ஊரும், பேரும் சம்பவங்களும் முற்றிலும் உண்மையானவை. அதற்கு நான் கொஞ்சம் உப்பு - புளியிட்டு, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து மணம் கூட்டியிருக்கிறேன். வேறொன்றுமில்லை. தயவுசெய்து கதை முடிந்தபிறகே பின்குறிப்பைப் படிக்கவும்.
அவருடைய பெயர் ஹென்றிகே லோடா. இத்தா லியர். ஐ. நா.வின் பிரதிநிதியாக மேற்கு ஆபிரிக்கா விலுள்ள சியராலியோனுக்கு வந்திருந்தார். நாற்பத் தெட்டு வயதுக்காரர். உயரம் ஐந்தரை அடியும், எடை நூற்றிமுப்பது கிலோவுமாக உருண்டையாக இருப்பார். கண் புருவங்கள் அடர்த்தியாகவும், வசீகரமாகவும் இருக்கும். அவர் நடந்து வருவதும் உருண்டு வருவதும் ஒன்றுபோலத்தான் தோற்ற மளிக்கும்.
அநேக வருடங்களுக்கு முன்பு அவர் ஒர் இத்தா லியப் பெண்ணை மணந்து பத்து வருடங்கள் வரை வாழ்க்கை நடத்தினார். பிறகு அலுத்துப்போய் அவளை விவாகரத்து செய்து கொண்டார். இப் பொழுது பதினெட்டு வயதில் மகன் ஒருத்தன் கல் லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அதற்கு பின்பு, அவருக்கு பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மாற்றல் கிடைத்த போது அங்கே அவர் ஒரு பிலிப்பினோ பெண்ணை, அவள் தேங்காய்ப்பாலில் செய்யும் கோழிக்கறியில் மோகித்து, மணந்து கொண்டார். அதுவும் இரண்டு வருடம்தான் நீடித்தது; பிறகு அவளையும் கோழி யையும் ரத்து செய்து கொண்டார். இப்பொழுது *ரீ பைண்ட்' செய்த புத்தகம்போல மறுபடியும் தன்னை பிரம்மச்சாரியாக புதுப்பித்துக் கொண்டு "மாயப்பொய் பல கூட்டும் பெண்களின் சகவாசத் தில் இனிமேல் எதுவரினும் "விழுவதே இல்லை யென்ற திட சங்கல்பத்துடன் வந்திருந்தார். சிய்ரா

அ. முத்துலிங்கம் O 93
லியோனில் ஒரு பிரம்மச்சாரி தன் கற்பைக் காப்பது எவ்வளவு கடினம் என்ற விஷயத்தை அவருக்குயாரும் அப்போது உபதேசம் செய்திருக்கவில்லை.
அவர் பிரதிநிதியாக வேலை ஏற்பது இதுதான் முதல் தடவை. இதறகு முன் பலநாடுகளில் அவர் உப பிரதிநிதியாக இருந்திருக்கிறார். நல்ல படிப்பாளி: வேலையில் உலக அளவில் பிரக்கியாதி பெற்றவர். சியரா லியோனுக்கு வரும்போது அவரிடம் ஒரு விசேஷமான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதில் பூரண வெற்றி பெற வேண்டும் என்ற வெறி யில் அவர் முதல் நாளிலிருந்தே ஆவேசத்தோடு ஈடு பட்டார்.
உலகத்தின் நூற்றி அறுபத்தியேழு நாடுகளின் சுபிட்ச நிலையை எச்.டி.ஐ முறையில் ஐ.நா கணித்த தில், கனடா முதலாவது நாடாகவும், அமெரிக்கா இரண்டாவதாகவும், ஜப்பான் மூன்றாவதாகவும், சியரா லியோன் நூற்றி அறுபத்தியாறாவதாகவும் வந்திருந்தன. ஒரு நாட்டின் தராதரத்தை எச்.டி.ஐ என்று சொல்லப்படும் மனிதவள மேம்பாட்டு arl G. Lasr (Human Development Index) (p65) sould) கணிப்பது இந்தக் காலத்திய வழக்கம். இந்தக் கணிப் பில் மனிதனுடைய சராசரி வருமானம், படிப்பறிவு, வாழும் வயது எல்லாம் அடங்கும். சியரா லியோனு டைய சுபிட்ச நிலையை தனது பதவிக் காலத்தில் ஒரு புள்ளியிலும் புள்ளியளவாவது உயர்த்திவிட வேண் டும் என்ற மேலான குறிக்கோளுடன்தான் லோடா அந்த நாட்டின் லூங்கே விமான நிலையத்தில் வந்து தனது வலதுகாலை வைத்து இறங்கியிருந்தார்.
அவருக்கு ஒரு நல்ல வீடு ஓ.ஏ.யூ வில்லேஜில்
அரசாங்கம் ஒதுக்கியிருந்தது, அது ஒரு பக்கம் ‘சியரா மலையைப் பார்த்தபடியும், மறுபக்கம்

Page 59
94 0 விழுக்காடு
"லம்லி கடற்கரையை அணைத்தபடியும்ஒய்யாரமாக இருந்தது. ஒரு "மென்டே சமையல்காரனையும், "புஃல்லா காவல்காரனையும், ‘ரிம்னி" தோட்டக் காரனையும் அவர் ஏற்பாடு செய்துவிட்டார். இந்த இந்த வேலைகளுக்கு இன்ன இன்ன இனத்தவரைத் தான் ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது அங்கே தொன்று தொட்டு வந்த ஒரு மரபு. ஆனால் ஒரு நல்ல ஹவுஸ் மெய்ட்' மாத்திரம் அவருக்கு கிடைக்க வில்லை. வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும், அவரு டைய ஆடையணிகளை கவனிக்கவும், வேறும் அத்தி யாவசிய தேவைகளைப் பார்க்கவும் நம்பிக்கையான ஒரு பெண் வேலையாள் அவருக்கு தேவைப்பட்டது.
இத்துடன் பல பெண்களை அவர் நேர்முகத் தேர்வுக்கு அழைத்து பரீட்சித்துப் பார்த்து விட்டார். ஒருவராவது அதில் தேறவில்லை. சியரா லியோனில் இப்படியான வேலைகளுக்கு மிகவும் தேர்ச்சி வாய்ந்த பெண்கள் பலர் அலைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் விரும்பிய குணாதிசயங்கள் கொண்ட பெண் மட்டும் அவருக்கு ஏனோ லேசில் கிடைக்க வில்லை.
அப்பொழுதுதான் அவருடைய அலுவலக செய லதிகாரி அமீனாத்துவை அவருக்கு அறிமுகப்படுத்தி னார். அவள் தேர்வுக்கு வந்தபோது ஊழியர்கள் எல்லோருடைய கண்களும் அவளோடு போய் விட்டன. சலீர், சலீர் என்று அவளுடைய பாதங் கள் கேட்காத ஒரு தாளத்துக்கு நடந்துவருவதுபோல இருந்தது. அவள் உடுத்தியிருந்தது சாதாரணமான ஏழை ஆபிரிக்கர்கள் அணியும் 'லப்பா உடைதான். தலைமுடியை சிறுசிறு பின்னல்களாக பின்னி வளை யம் வைத்துக் கட்டியிருந்தாள். முதுகை நேராக நிறுத்தி, கால்களை எட்டி வைத்து அவள் நடந்தது

அ. முத்துலிங்கம் () 95
கறுப்பு தேவதை ஒன்று வழி தவறி வந்து விட்டது போல இருந்தது.
ஆபிரிக்கப் பெண்களின் அழகைப் பற்றி ஒன்று சொல்லவேண்டும். "மெல்ல நட, மெல்ல நட, மேனி என்னாகும்?' என்ற கவிதைகளுக்கெல்லாம் அங்கே வேலையில்லை. நிலத்திலே ‘தாம், தாம்’ என்று சத்தம் அதிரத்தான் நடப்பார்கள். சாமத்தியச் சடங்கு நேரத்தில், பூப்பெய்திய பெதும்பைக்கு சேலையுடுத்தி, சோடித்து, நகை நட்டெல்லாம். போட்டு அலங்காரம் செய்து, தலைநிறையப் பூ வைத்து ‘குனியடி’ என்று தாய்மார் தலையிலே குட்டி மணவறைக்கு அனுப்பி வைக்கும் கற்பின் கருவூலங் களை ஆபிரிக்காவில் காண முடியாது. தேர் வடம் போல "உருண்டு திரண்டு வஜ்ரமாகத்தான் அவர் களுக்கு கைகளும் கால்களும் இருக்கும். முதுகு நிமிர்ந்து, கண்கள் நேராக நோக்கும். பச்சரிசியை குத்தி வறுத்தெடுத்தது போல பொதுநிறத்துக்கும் மேலான ஒரு கறுப்பு. பார்க்கப் பார்க்க தூண்டும் அழகு. அப்படித்தான் இருந்தாள் அமீனாத்து.
ஆனால் அப்பேர்ப்பட்ட "ஏரோபிக்ஸ்’ அழகு கூட லோடாவிடம் விலை போகவில்லை. பாவம், போதிய முன் அநுபவம் இல்லையென்று அவளுக்கும் அந்த வேலையை லோடா கொடுக்க மறுத்து விட்டார். சியரா லியோனின் ஜனத்தொகையில் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் எண்பது வீதத்தில் அமீனாத்துவின் குடும்பமும் அடங்கும். பதினொரு பேர் கொண்ட அவளுடைய குடும்பம் அவள் ஒருத்தி யின் உழைப்பையே நம்பியிருந்தது. இரண்டு மாத காலமாக அவள் இந்த வேலைக்காக அலைந்து கொண்டிருந்தாள். இந்த வேலையும் கிடைக்கா

Page 60
96 0 விழுக்காடு
விட்டால் அவள் குடும்பம் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்.
பிறந்தநாளிலிருந்து இன்றுவரை அவள் கண்டது கஷ்டம்தான். ஒரு மங்கிய விடிவெள்ளியை இன்ன மும் தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்தாள். செக்பீமா என்னும் குக்கிராமத்தில்தான் அவள் பிறந்து வளர்ந் தாள். பரம ஏழையாகப் பிறந்தாலும் அவள் வனப் பில் கோடீசுவரியாக இருந்தாள். அவள் பதின்மூன்று வயதிலேயே மணமுடித்ததற்கான காரணம் அவளு டைய மயக்கும் அழகுதான்.
அறுவடை முடிந்த கையோடு அந்த வருடம் பருவமான பெண் பிள்ளைகளை காட்டில் கொண்டு போய் வைத்து தனிக் குடிசை போட்டு சில ரகஸ்ய சடங்குகள் செய்வது ஆபிரிக்காவில் வழக்கம். அந்த வருட சடங்குப் பெண்களில் அமீனாத்துவும் ஒருத்தி. சடங்கு முடிந்ததும் ஊர் வழமைப்படி இடுப்பில் மட்டும் லேஞ்சியளவு ஒரு துணியைக் கட்டிக் கொண்டு உடம்பு முழுக்க கசாவா மாவைப் பூசி நிர்வாணமாக ஊரைச் சுற்றியபடி இந்தப் பெண்கள் வரவேண்டும். ஊருக்கு மூத்த பெண்கள் ஆடிக் கொண்டும், அவர்கள் பிரலாபத்தை உரத்து பாடிக் கொண்டும் முன்னே செல்ல ஆண்கள் எல்லாம் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஊர்வலம் போகும் பெண்ணை யாராவது ஆண் பிள்ளை பார்த்து விட் டால் உடனேயே அந்தப் பெண்ணை அவன் மணம் முடிக்கவேண்டும் என்பது சம்பிரதாயம்.
அவள் ஊர்வலம் வந்த அடுத்த நாளே ம்பாயோ என்பவன் நாலு ஆடுகளை சீதனமாகக் கொடுத்து அவளை மணமுடிக்க வந்து விட்டான். அமீனாத்து வின் தகப்பனார் நாலு ஆடுகளை ஒருமிக்க சேர்த்து அவர் ஆயுசிலேயே பார்த்ததில்லை. அவருடைய

அ. முத்துலிங்கம் ) 97
மகிழ்ச்சிக்கு கேட்க வேண்டுமா? அப்படித்தான் அவ ளுடைய இல்வாழ்க்கை திடீரென்று ஆரம்பித்து ஒரு பிள்ளையும் பிறந்தது. ஆனால், யெங்கிமா ஆற்றை கடந்து வேலை தேடிப்போன அவளுடைய புருஷன் மீண்டும் திரும்பி வரவேயில்லை. அமீனாத்து பிள்ளை யையும் எடுத்துக்கொண்டு மறுபடியும் பெற்றோ ருடன் வந்து சேர்ந்து கொண்டாள்.
அதற்கு பிறகுதான் ஒரு மதுக்கடையில் நடன மாதுவாக அவள் சேர்ந்தாள். மது குடிக்க வரும் ஆடவர்களுடன் நடனமாடுவதுதான் அவள் வேலை. நடனம் அவளுடைய ரத்தத்தில் ஊறியிருந்தது கிடைக்கும் ‘சம்பாவனை அவள் குடும்பத்தை பரா மரிக்க போதுமானதாக இருந்தது. அப்பொழுதுதான் அவளுக்கு இரண்டாவது பிள்ளை பிறந்தது. (இது எப்படி?’ என்று சமத்காரமான கேள்விகள் எல்லாம் கேட்கக் கூடாது. ‘கற்பு' பற்றி திருக்குறளையும், சிலப்பதிகாரத்தையும் மேற்கோள் காட்டி வியாக்கி யானங்கள் செய்பவர்கள் இல்லாத ஆபிரிக்காவில் அப்படித்தான். இப்படியும் நடக்கும்.)
டொங்கா வைரச் சுரங்கத்தில் வேலை செய்ய நூற்றுக் கணக்கான பேர் அவளுடைய கிராமத்தை விட்டு அள்ளுப்பட்டு போனபோது மதுக்கடை வரு மானம் விழுந்தது. அமீனாத்து என்ன செய்வாள்? வறுமையின் கொடுமை தாளாமல் தனது குடும்பத் துடன் தலைநகரமான "ப்ரீ ரெளனுக்கு வந்து சேர்ந் தாள். அப்போது அவளுக்கு வயது பத்தொன்பது தான். ஆனால் இங்கே பார்த்தால் இன்னும் மோசம். சிறு பெண்களெல்லாம் நடன மாதுக்களாக போட்டி போட்டுக்கொண்டு ஆடினர். இவளால் அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு நேரச் சாப்பாட்டிற் குகசுட வழியில்லை என்று வந்துவிட்டது. இந்த

Page 61
98 0 விழுக்காடு
நேரத்தில் அவள் ஆத்தாமல்போய் கீழிறங்கி வந்து சங்கைகெட்ட ஹவுஸ் மெய்ட் வேலைக்கு மனுப் போட்டாள். இபபடியான ஒரு வேலையில் சேர்ந்தா லாவது அவளுடைய தரித்திரம் நிரந்தரமாக தன்னை விட்டு ஓடிவிடக் கூடும் என்ற அளவில் அப்படிச் செய்து விட்டாள். பசியைத் தீர்ப்பதற்காக இந்த அவமானததைக்கூட அவள் தாங்குவதற்கு சித்தமாக இருந்தாள்.
காலையில் காரில் அலுவலகத்துக்கு போகும் போதும், மாலையில் திரும்பும்போதும் அந்தப் பெண் அவர் வீட்டு வாசலிலே பழியாய் கிடப்பதை லோடா அவதானித்தார். கடந்த நாலு நாட்களாக இது நடந்து வந்தது. கடைசியில் ஒருநாள் கார் சாரதி யிடம் சொல்லி காரை நிறுத்தி அவளிடம் ‘என்ன வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அவள் "மாஸ்டர், எங்கள் நாட்டு வறுமையைத் தீர்ப்பதற் காக வந்த கடவுள் நீங்கள் என்று பேப்பர்கள் எழுது கின்றன. நானோ ஒரு முறி * கசாவாவுக்கும் ஒரு கரண்டி "பாம் எண்ணெய்க்கும்கூட வழியில்லாத பரம ஏழை. என்னை நம்பி பத்துபேர் பட்டினியுடன் காத்திருக்கிறார்கள். எனக்கு வேலை கிடைத்தால் பதினொரு பேருடைய வறுமை தீரும். மாஸ்டர், எனக்கு இந்த வேலையை ஒருவாரத்திற்கு சம்பள மின்றி தந்து பாருங்கள். அதற்குப்பிறகு உங்கள் முடிவு' என்றாள்.
லோடாவுக்கு அவளுடைய நேர்மை பிடித்துக் கொண்டது. ஏழையென்றாலும் அவள் குழையாமல் நிமிர்ந்து நின்று கண்களைப் பார்த்து பேசியது பிடித் துக் கொண்டது. மிகவும் சொற்பமான ஆங்கில வார்த்தைகளை உபயோகித்து, சிக்கனமாகத்தான் சொல்ல வேண்டிய கருத்துக்களை நிதானமாக

அ. முத்துலிங்கம் 0 99
நிறுத்தி நிறுத்தி சொன்னது பிடித்துக் கொண்டது. எல்லாவற்றிற்கும் மேலாக அவளுடைய அறிவான கண்களும், ஆர்வமும் துணிச்சலும் அவருக்குமெத்தப் பிடித்துக் கொண்டது.
இப்படித்தான் அமீனாத்து அங்கே வேலைக்கு சேர்ந்தாள். ஒரு வார காலத்தில் வீட்டையே மாற்றி அமைத்து விட்டாள். வீடு எப்பவும் பளிச்சென்று இருந்தது. லோடாவுடைய பழக்க வழக்கங்களை அவதானித்து அதற்கேற்ற மாதிரி அவருடைய உடை க்ளைப் பேணி அந்தந்த நேரத்துக்கு அணிவதற்கு தகுந்தவற்றை தேர்ந்தெடுத்து வைத்தாள். ஒருமுறை ஒன்றை சொன்னால் ஆணியடித்ததுபோல அவளு டைய மூளையில் அது பதிந்துவிடும். லோடாவுக்கு தான் செய்த முடிவு மிகுந்த சந்தோஷத்தை கொடுத் தது. அமீனாத்தும் அவருடைய நல்லெண்ணத்தை கவர்வதில் முழுமூச்சுடன் செயல்பட்டாள்.
மனைவி இல்லாவிட்டாலும் லோடாவின் வீட்டு நிர்வாகம் இப்படி சீராகப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக அலுவல கத்து வேலையில் ஒழுங்கீனங்கள் மலிந்து கிடந்தன. ஒரு அடி ஏறினால் ஒன்பதடி வழுக்கியது. எச்.டி.ஐயை எப்படியும் உயர்த்தி விடவேண்டும் என்ற அவர் ஆசையில் மண் விழுந்துவிடும்போல இருந்தது. அவருடைய அபிவிருத்தித் திட்டங்களில் முதன்மையானவை பெண்கள் நலன்பேணும் திட்டங் களும், வறுமை ஒழிப்பு திட்டங்களும்தான். இவை யெல்லாம் அரசாங்க ஒத்துழைப்புடன் நடக்க வேண் டியவை. ஆனால் அதிகாரிகளுக்கு இவற்றினால் ஒரு வித லாபமும் இல்லையென்றபடியால் கிளித்தட்டு விளையாட்டு போல கோப்புகளை இங்குமங்கும்

Page 62
100 0 விழுக்காடு
மாற்றி மாற்றி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் ஒரு பயனும் காணவில்லை.
அதிகாரிகளுடன் ஓயாது சண்டை போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தால் அங்கே நுளம்புகளுடன் இவரு டைய போராட்டம் தொடரும். வீட்டைச் சுற்றி மருந்துகள் அடித்தும், நுளம்பு வலைக்குள் படுத்தும் கூட ஒன்றிரண்டு நுளம்புகள் அவரைப் பிரியமுடன் தேடி வந்துவிடும். சியரா லியோன் நுளம்புகள் மலேரியா மருந்துகளுக்கு பயப்படாதவை. மலேரியா மருந்தை மிகக் கிரமமாக சாப்பிட்டும் அவருக்கு ஒரு நாள் மலேரியா வந்துவிட்டது. இந்தக காய்ச்சல் முந்திப்பிந்தி லோடாவுக்கு வந்ததில்லை. அங்கே அது எல்லாருக்கும் அடிக்கடி தடிமன் காய்ச்சல்போல வந்து வந்து போகும். இவரைப் போட்டு இது உலுப்பி எடுத்து விட்டது. அமீனாத்து இவரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்தாள். மலேரியா மருந்தை நேரம் தவறாமல் கொடுத்தாள். குவினைன் மரப்பட்டைகளையும், “தோஃறா இலையையும் போட்டு அவித்த குடிநீரை காலையும் மாலையும் அவருக்கு வலுக்கட்டாயமாகப் புகட்டினாள். அவளுடைய கரிசனம் லோடாவின் மனதை நெகிழ வைத்தது.
உண்மையான ஊழியத்துக்கு எப்பவும் பயன் உண்டு அல்லவா? லோடா அவளுடைய சம்பளத்தை
உயர்த்தினார்; சலுகைகளை அதிகரித்தார். அமீனாத்து உச்சி குளிர்ந்து போனாள். அவளுக்கு தன் எஜமானரிடம் உண்மையான பக்தியும்
அசைக்க முடியாத விசுவாசமும் ஏற்பட்டுவிட்டது. ‘லிம்பா இனத்துப் பெண்களைப்போல் அவள் இனி மேல் லோடாவுக்காக தன் உயிரையும் கொடுப்பதற்கு தயங்க மாட்டாள். −

அ. முத்துலிங்கம் () 101
லிம்பா இனத்தவர் பொதுவாக அழகுக்கும், விசு வாசத்துக்கும் பேர் போனவர்கள். அதிலும் பெண் கள் முற்றிலும் பழுக்காத நாவல் பழம் போன்ற நிறமும், செதுக்கிய சிலை போன்ற அழகும் கொண் டிருப்பார்கள். முந்திய ஜனாதிபதி பதவியேற்ற சமயம் லிம்பா இனத்தவர் எல்லாம் ஒன்று சேர்ந்து அவருக்கு ஒரு பதினாறு வயது நிரம்பாத யெளவன அழகியை பரிசாக அளித்தார்களாம். லோடாவும் இந்த லிம்பா அழகியின் உண்மையான சேவையில் மகிழ்ந்து போனார்.
நுளம்பைத் தொடர்ந்து இப்பொழுது ஒரு இலை யான் அவர் வாழ்க்கையில் குறுக்கிட்டது. சியரா லியோனில் அம்பாரமாகக் காணப்படும் இதற்கு பேர் 'தும்பு இலையான். பார்த்தால் மாட்டு இலையான் போன்று பெரிதாகத் தோன்றும். அது ஈரமாயிருக் கும் துணிமணியில் வந்து நைசாக முட்டை இட்டு விட்டு போய்விடும். அந்தத் துணியை யாராவது அணிந்தால் அந்த முட்டை சருமத்துக்குள் போய் அங்கேயே பொரித்துவிடும். ஐந்தாறு நாட்களில் ஒரு கொப்புளம் தோன்றி உபாதை கொடுக்கத் தொடங் கும். கொப்புளம் சுண்டைக்காய் அளவு பருமன் ஆன தும் வலியோ தாங்க முடியாமல் போகும். சியரா லியோனுக்கு புதிதாக வருபவர்கள் இந்த தும்பு இலை யானிடம் தப்பி போனது கிடையாது.
ஆனால் ஆபிரிக்கர்களுக்கு இது சர்வ சாதாரணம். அவாகள் ஆயுள் பரியந்தமும் இந்த இலையானுட னேயே குடித்தனம் செய்து பழக்கப்பட்டவர்கள். லோடாவுக்கு இந்த தும்பு இலையான் பற்றிய சரித்திரம் ஒன்றும் தெரியாது. அது ஒருநாள் அவர் நடுமுதுகிலே குடிவந்து பெரிய கொப்புளமாகி நமைச்சல் கொடுக்கத் தொடங்கியது. இவர் ஒருநாள்

Page 63
102 0 விழுக்காடு
கண்ணாடியை தன் பின்புறம் வைத்து முதுகைப் பார்ப்பதைக் கண்ட அமீனாத்து திடுக்கிட்டுவிட் டாள். உடனேயே இவருடைய உத்தரவைக்கூட எதிர்பாராமல் வாஸ்லைன் கொண்டுவந்து மெது வாக தடவிவிட்டாள். சிறிது நேரத்தில் நாவல்பழம் போல பழுத்த கொப்புளத்தில் புழு நெளிவது அவள் கண்களுக்கு தெரிந்தது. இரண்டு பெருவிரல்களையும் சேர்த்து நடுமுதுகில் வைத்து அமுக்கியவுடன் குண்டு மணியளவு கொழுத்த புழு ஒன்று வெளியே வந்து விழுந்தது. அவளுக்கு இது சர்வ சாதாரணம். இது போல் ஆயிரம் தடவை இதற்கு முன்பு அவள் இதைச் செய்திருக்கிறாள். லோடாதான் பாவம், கொஞ்ச நேரம் “லொடலொடவென்று ஆடிப் போய்விட் டார். தாங்க முடியாத முதுகு நோவு கனநேரத்தில் மறைந்துவிட்டது.
அவள் முரட்டுத்தனமாக முதுகிலே அமுக்கிய ஸ்பரிசம் இவர் நெஞ்சிலே போய் இனித்தது. இப்போ தெல்லாம் லோடாவுடைய சிந்தனையை அடிக்கடி அமீனாத்து வந்து நிறைக்கத் தொடங்கினாள். ஒரு பதினேழு வயதுப் பெடியனைப்போல அவளுடைய இதயம் அல்லாடியது. இது என்னவென்று அவருக்கு வியப்பாக இருந்தது. ஒருநாள் சனிக்கிழமை பகல் நேரம். அன்று ஹமட்டான் காற்று பலமாக வீசியது. ஆகாயம் முழுவதையும் தூசிப்படலம் மறைத்து விட்டது. பத்தடி தள்ளி நிற்பவரைக்கூட பார்க்க முடியாதபடி வானம் இருண்டுபோய் கிடந்தது. அவர் வழக்கம்போல கோல்ப் விளையாடப் போக வில்லை. மேற்கத்திய இசையை ஒலிநாடாவில் ஒட விட்டு சுகமாக ரசித்தபடி ஏதோ எழுத்து வேலையில் ஈடுபட்டிருந்தார். -
அமீனாத்து தன் நீளமான கால்களை எட்டி வைத்து வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டி

அ. முததுலிங்கம் 0 103
ருந்தாள். இக்கிரிப் பத்தைபோல் அடர்த்தியாய் வளர்ந்திருந்த சுருள்முடியை இரும்பினால் செய்த சிக்குவாங்கியால் ஒட்ட இழுத்து சிறுசிறு பின்னல் களாகப் பின்னி மடித்து லப்பாத் துணியனால் இறுக்கி கட்டியிருந்தாள் அவள்; தென்னம்பாளை வெடித்தது போன்ற அவள் பற்களுக்கு "மாட்ச்சாக" கறுப்பு கழுத்திலே ஒரு வெண்சங்கு மாலை தொங் கியது. தன்னை மறந்து இசைக்கேற்ப தன் உடலை அசைத்தபடி இயங்கிக் கொண்டிருந்தாள். நடன மாது அல்லவா? நடனம் தானாகவே அவளிடம் ஒடி வந்தது.
லோடா அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார். புதுக்கப் புதுக்க அவளைப் பார்ப்பது போலிருந்தது அவருக்கு. ஆபிரிக்க அழகையெல்லாம் மொத்தமாக குத்தகை எடுத்ததுபோல அவள் காணப்பட்டாள். சிறு பிள்ளைபோல அவள் தன்னைமறந்து ஆடையை ஆரவாரமின்றி அசைத்தாடுவது அழகாக இருந்தது. இவர் அவளுடைய கண்களையே பார்த்தார். அவள் துணுக்குறவும் இல்லை; கீழே பார்க்கவும் இல்லை. திருப்பி இவர் கண்களை நிதானமாகப் பார்ததாள். நல்லூர் சப்பரம் போல மெள்ள மெள்ள நகர்ந்து இவர் இருக்கைக்கு கிட்ட வந்தாள்; சாவதானமாக இவருடைய மேசையை மறுபடியும் சுத்தம் செய்யத் தொடங்கினாள். அப்பொழுது லோடா எட்டி அவளு டைய கையைப் பிடித்தார். அவள் அப்படியே அவர் மேல் சரிந்தாள்.
அவர்களுடைய திருமணம் ஆடம்பரமின்றி ஒரு கிராமத்து சர்ச்சில் நடைபெற்றது. வெகு நெருங்கிய சினேகிதர்களும், உறவுக்காரர்களும் மட்டுமே வந்தி ருந்தனர். அமீனாத்துவின் விருப்பத்திற்கிணங்க லோடா கொழுத்த மாடொன்றை அடித்து ஒரு.

Page 64
'104 O விழுக்காடு
பெரிய விருந்து கொடுத்தார். "ஜொலஃப் ரைஸும்”, * புகைபோட்ட "பொங்கா’ மீனும், "பாம் எண் ணெய்க் குழம்பும் அந்த ஊர் முழுக்க மணத்தது. அந்த விருந்தைப் பற்றியே அவர்கள் ஒரு வார கால மாக கதைத்தார்கள். அவளுக்கு அடித்த யோகத்தை நம்ப முடியாதவர்களாக அந்த எளிய கிராமத்து மக்கள் பிரமித்துப் போய் நின்றார்கள். பரம ஏழையான அமீனாத்து தான் ஊதியத்துக்கு வேலை செய்த அதே வீட்டின் இல்லத்தரசியாக பதவியேற் றாள.
லோடா தன் அந்தஸ்துக்கு ஏற்ப வாழ்வதற்கு அவளை வெகு சீக்கிரமே பழக்கி வைத்தார். அமீனாத்து காரோட்ட பழகிக்கொணடாள்; இங்கி * லாந்திலிருந்து விதவிதமான மேல்நாட்டு உடைகள் தருவித்து அணிந்துகொண்டாள். அவள் அவற்றைப் போட்டபோது கடைந்தெடுத்த கறுப்பு மாடல்" போல இருந்தாள். சீக்கிரத்திலேயே மீன்குஞ்சு நீத்துப் பழகுவதுபோல வெகு இயற்கையாக அவருடைய சமூக அந்தஸ்துக்கு ஏற்ப அவள் தன்னை உயர்த்திக் கொண்டாள். ஆனாலும் அவள் தனது இல்லத் து வேலைகளை தானே தொடர்ந்து செய்தாள்; ஒரு வேலைக்காரியை வைப்பதற்கு மட்டும் தீர்க்கமாக மறுத்துவிட்டாள்.
லோடாவினுடைய வாழ்க்கையானது இப்படி யாக திடீரென்று கந்தர் வலோக வாழ்க்கையாக மாறி விட்டது. தன் வாழ்நாளிலேயே இவ்வளவு சந்தோஷ மாக இருந்தது அவருக்கு ஞாபகமில்லை. கிஷ்கிந்தை யிலே சுக்கிரீவன் மாரிகாலம் முடிந்தபின்பும் ராம காரியத்தை முற்றிலும் மறந்து அந்தப்புர போகத்தில் மூழ்கிக் கிடந்ததுபோல லோடாவும் தன் அலுவலக காரியங்களை அறவே மறந்தார். அவளோ வாலிபத்

அ. முத்துலிங்கம் L) 105
தின் உச்சியில் இருந்தாள்; இவருடைய 'பாட்ட ரியோ கடைசி மூச்சில் இருந்தது. அவளுடன் சுகித் திருப்பதே மோட்சம் என்ற நிலையில் ‘விடுதல் அறியா விருப்பனன் ஆகி அவள் காலடியில் உல கத்தை தரிசித்தவர் அலுவலகத்தை தரிசிக்கத் தவறி விட்டார்.
சியரா லியோனின் எச்.டி.ஐயை அணுவள வேனும் உயர்த்தி விடவேண்டும் என்ற அவருடைய ஆரம்ப காலத்து ஆர்வமெல்லாம் போன இடம் தெரியவில்லை. இவரின் கீழ் வேலை பார்த்த அதிகாரி கள் எல்லாம் சங்கீத சீஸனில் முன்வரிசையில் உட் கார்ந்து சிரக்கம்பம் செய்யும் மகா ரஸிகர்கள் போல இவர் சொன்னதற்கெல்லாம் தலையை ‘ஆட்டு, ஆட்டு’ என்று ஆட்டினார்களே ஒழிய காரியத்தில் கவனம் செலுத்தவில்லை. சிறுசிறு குடிசைக் கைத் தொழில்கள் மூலம் கிராமத்துப் பெண்களின் வரு வாயை அதிகரிக்கும் அவருடைய சிலாக்கியமான திட்டம் படுதோல்வி அடைந்தது. மூலதனமாக அவர்கள் கொடுத்த உபகரணங்களும், பொருட்களும் கூட திருட்டுப் போயின. குதிரையை தண்ணிர் காட்ட இழுத்துப் போகலாம்; குடிக்கப் பண்ண முடியுமா? இப்படியாக லோடா தன் மனதை தானே தேற்றிக் கொண்டார்.
அவருடைய பதவிக்காலம் முடிந்து வேறு நாட் டுக்கு மாற்றல் வந்தபோது லோடா திடுக்கிட்டு விழித்துக் கொண்டார். தான் சாதித்தது அவருக்கு பெருமை தருவதாக இல்லை. ஆனாலும், அலுவலகத் தில் செய்ய முடியாததை தன் சொந்த வாழ்க்கையில் சாதித்தது அவருக்கு கொஞ்சம் சமாதானமாக இருந் தது. சமுதாயத்தின் அடிமட்டத்தில் தரித்திரத்தில் உத்தரித்த ஒரு பெண்ணுக்கு அவர் வாழ்வு கொடுத்தி ருந்தார் அல்லவா? அவள் இன்று செல்வத்தில்
al-8

Page 65
106 0 விழுக்காடு
திளைப்பது மட்டுமில்லாமல் அவருடைய இல்லத் துக்கும் அரசியாகிவிட்டாள். அவருக்கு புன்சிரிப்பு வந்தது. இப்படியான ஓர் அழகி அவர் வீட்டுக்கும், அவருடைய இதயத்துக்கும் ராணியானது அவரு டைய அதிர்ஷ்டம்தான. இந்த ஒரு விஷயத்திலாவது சியரா லியோனின் எச்.டி.ஐ சிறிது உயர்ந்திருக்குமல் லவா ?
புள்ளி விபரங்களை கரதலப் பாடமாக உய்த்தி ருந்த லோடா இங்கேதான் ஒரு மிகப்பெரிய தவறு செய்தார். அந்த வருடம் வெளியான எச்.டி.ஐ விப ரங்களை சிறிது அவதானித்து நோக்குவாராயின் அவ ருக்கு தான் செய்த தவறு புரிந்திருக்கும். அவர் அமீனாத்துவை மணம் புரிந்ததினால் உள்ளபடியாக எச்.டி.ஐ அணுப்பிரமாணமான அளவில் விழுந்து தான் போனது; கூடவில்லை.
காதல் கண்ணை மறைக்கும் என்று சொல்வார் கள. லோடா விஷயத்தில் அது அவர் மூளையையும் மறைத்து விட்டது. O
பின்குறிப்பு :- உலகத்து நாடுகளின் தராதரத்தை கணிப்பதற்கு எச்.டி. ஐ. முறையை ஐ.கா. கடைபிடிக் கிறது. ஒரு பெண் ஊதியத்துக்கு வேலை செய்யும் போது அவளுடைய ஊழியம் எச். டி. ஐ கணக்கிலே சேர்க்கப்படுகிறது. அதே பெண் தனக்கு சம்பளம் கொடுக்கும் எஜமானரை மணம் முடித்து அந்த வேலையை சம்பளமின்றி செய்ய நேர்கையில் 6إوعJSز டைய உழைப்பு கணக்கிலே சேர்த்துக்கொள்ளப் படுவ தில்லை. இதனால் எச். டி.ஐ விழுக்காடு அடைகிறது. பெண்களுடைய ஊதியமில்லாத உழைப்பை கணக்கிலே சேர்க்காததால் ஏற்படும் முரண்பாட்டை இந்தக் கதை சுட்டிக்காட்டுகிறது என்று சிலர் சொல்லலாம். அதை நம்புவதும் நம்பாததும் உங்கள் பொறுப்பு.

Y
கஸ் பறவை
பிஃனி

Page 66
நான் திருகோணமலை சர்வதேச விமான நிலை யத்திலிருந்து வெளிக்கிட்டு அர்லாண்டா விமான நிலையத்தில் வந்திறங்கினேன். இதற்குமுன் நான் வெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தவளல்ல. விமானக் கூடத்தில் இருந்த ஜனத்திரளில் என் மகனுடைய முகத்தைத் தேடியபோது எனக்கு பயம் பிடித்துக் கொண்டது.
ஸ்டாக்ஹோமில் நான் வந்திறங்கிய வருடம் 2018. என் மகன் என்னை விட்டுப் பிரிந்து ஸ்வீட னுக்கு படிக்கப்போன வருடம் 1998. அப்ப அவனுக்கு வயது 15. என்னால் நம்பவே முடியவில்லை. இருபது வருடங்கள் என் ஒரே மகனைப் பிரிந்து வாழ்ந்திருக் கிறேன். இப்போது அவனுக்கு வயது 35; மணமாகி ஆறு வயதில் ஒரு மகனும் உண்டு.
நான் கண்களை நாலா பக்கமும் சுழட்டி தேடிய படியே வந்தேன். காணவில்லை. என்னைப் பிரியும் போது அவன் குழந்தைதான்; மீசை கூட அரும்ப வில்லை. விடும்போது ஏர்போர்ட்டில் என்னைக் கட்டிப்பிடித்து கசக்கி அழுஅழுவென்று அழுதான். என் மனம் என்ன பாடுபட்டது! அப்போது அவர் இருந்தார். இப்ப அவரும் போய்விட்டார். நானும் வேலையிலிருந்து ஒய்வெடுத்து விட்டேன். என் மகன் எத்தனை தரம் டெலிபோனில் கதைத்தான்; எவ்வளவு கடிதங்கள். 'அம்மா! நீங்கள் அங்கையிருந்து என்ன செய்யப் போறியள் இஞ்ச எங்களோடை வந்தி டுங்கோ; உங்களுக்கு ஒரு குறையும் வராமல் பார்ப் போம்' என்று கெஞ்சியபடியே இருந்தான். எனக்கும் வேறு யார் இருக்கிறார்கள்? பிறந்த மண்ணைவிட்டு ஒரேயடியாக புறப்பட்டு விட்டேன்.
ஒர் இளம் கணவனும் மனைவியும் என்னை
உற்றுப் பார்த்தபடியே கடந்து போனார்கள். என் மகனுடைய கண்கள் எப்படி இருக்கும்? குழந்தையாக

அ. முத்துலிங்கம் 0 109
இருந்தபோது மடியிலே கிடத்தி மணிக்கணக்காக அவன் கண்களையே பார்த்தபடி இருப்பேன். மகா பாரதத்தில் வரும் அர்ஜுன் என்ற பேரையே அவனுக்கும் வைத்திருந்தேன். என் மகன் என்னிடம் 'உள்ள குப்பையெல்லாம் கொண்டு வர வேண்டாம். தேவையானதை மாத்திரம் கொண்டு வாங்கோ: இஞ்ச வைக்கவும் இடமில்லை" என்று பத்துத் தடவையாவது சொல்லியிருந்தான். அதனாலே வாழ் நாள் முழுக்க சேகரித்ததெல்லாவற்றையும் மனமின்றி துறந்துவிட்டு இரண்டேரெண்டு சூட்கேசுடன் வந்திறங்கினேன். என்னுடைய துணிமணிகள், புத்த கங்கள், இவர் ஞாபகமாக சில பொருள்கள், அவ்வளவுதான்.
தள்ளு வண்டியைத் தள்ளுவது கூட கஷ்டமாக எனக்குப் பட்டது. ஒரு சூட்கேஸ் நழுவி நழுவி கீழே விழுந்தபடி இருந்தது. எங்கே போனான் இவன்? எனக்கு பதட்டமாக வந்தது. ஐந்து வருடமாக இவ னும் பாவம்; என்ன கஷ்டப்பட்டு விட்டான்? ஸ்வீடன் நாடு மற்ற நாடுகள் போல அல்ல. ஜனத் தொகை விஷயத்தில் சரியான கண்டிப்பு. அவர்கள் ஜனத்தொகை 110 லட்சம். அந்தத் தொகை இந்தத் தானத்தை தாண்டாமல் வெகு கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள். பெரும் போராட்டத்திற்கு பிறகு தான் எனக்கு நிரந்தர குடியுரிமை கொடுத்தார் களாம்!
'அம்மா’ என்ற குரல் கேட்டது. தமிழ்க் குரல் தான், தேனாக அது என் காதில் வந்து விழுந்தது. என் மகன்தான் ஓடோடி வந்து கொண்டிருந்தான். என்ன கண்கள! ஆறடிக்கும் மேலே உயரமாக வளர்ந்து விட்டான். புதர்போல கட்டுக்கடங்காமல் இருக்கும் தலைமயிரை அடக்கி வாரி அழகாக விட்டி ருந்தான். ஒரு டீ சேர்ட்டும், ஜீன்ஸும் அணிந்திருந்

Page 67
110 0 பீஃனிக்ஸ் பறவை
தான். அவனுக்கு குளிரே இல்லை. என்னைத் தொட்டுத் தொட்டு பார்த்துவிட்டு அப்படியே ஆகா யத்தில் துக்கிவிட்டான். மெத்தென்று வெல்வெட் போல இருந்த அவனுடைய தேகம் இப்ப வஜ்ரமாக இருந்தது. பன்னாலேயே அவள் நின்றாள். பெயர் ஸ்வென்கா. முதன்முறையாக பார்க்கிறேன். இவனைப் போல அவளும் உயரம்தான். இயற்கை யான சிரிப்பு அவளுக்கு இருந்தது. பொன் நிறத்தில் தலைமயிர். அசப்பில் பார்த்தால் சினிமாவில் நடிக்கக் கூடிய அழகோடு தென்பட்டாள். நான் அதிசயப் பட்டது அவளுடைய இடையைப் பார்த்துத்தான். ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். நீண்ட வழுவழு வென்ற கைகள் என்றாலும் உருண்டு திரண்டு வலு வாக இருந்தன.
*மொர்மோ, மொர் மோ' என்று என் பேரன் கையை இழுத்தான். அவனை ஆசையுடன் தூக்கி முகர்ந்தேன். முகத்தைச் சுழித்தான். "ஹோர்கன்" என்று பேர் வைத்திருந்தார்கள்; வாயில் வராத Guňř.
நாங்கள் கதைத்துக்கொண்டு நிற்கும்போதே என் மருமகள் சிட்டுப்போல ஒடிப்போய் காரை எடுத்து வந்தாள். குதித்து இறங்கி இருபது கிலோ குட்கேசு களை பூவைத் தூக்குவதுபோல பட்பட்டென்று ஒன்றைக் கையால் தூக்கி காரிலே வைத்தாள்.
ஸ்வென்காதான் ஒட்டினாள். அர்ஜுன் ஒரு பக்கத்தில் இருந்து என் கைகளைப் பிடித்தபடி வந்தான். மற்றப் பக்கத்தில் என் பேரன். என் கண் களில் நீர் பணித்தது. முடிந்துபோன இருபது வருடங் கள் இனி திரும்பவும் வரப் போவதில்லை.
கார் சின்னதாக அடக்கமாக இருக்கக. லும் சூரிய 7%ශී%ණ්, : ಅಸ್ತಿ? 粤懿

அ. முத்துலிங்கம் D 111
காடன்' பிரதான ரோட்டிலே போய்க் கொண்டிருந்
தது. ஒலி நா.ாவில் உலகப் புகழபெற்ற "இங்வார். கார்ல்ஸன்” பாடிய ஸ்வாலா, ஸ்வாலா" என்னும் பாடல் பைரவி ராகத்தின் சாயலில் ஒலித்துக் கொண் டிருந்தது. பெட்ரோல், டீசல் வாகனங்கள் போய் இப்ப எவ்வளவோ காலம். சாலையின் இரு மருங்கி லும் அடர்த்தியான மரங்கள். பாதையெல்லாம் வழித்துத் துடைத்ததுபோல நல்ல துப்புரவாக இருந்தது.
தான் வியந்த இன்னொரு காட்சி வழியிலே லிளம்பர போர்டுகள் ஒன்றும் இல்லாததுதான். அர்ஜ"னிடம் அது பற்றி விசாரித்தேன். அரசாங்கம் விளம்பரங்களையெல்லாம் பத்து வருடங்களாக ஒழித்து விட்டதாக அவன் சொன்னான். அதனால் பொருள்கள் மக்களுக்கு இருபது வீதம் மலிவாகவே கிடைக்கிறதாம். வர்த்தகத் துறை தொடர்ந்து மஞ்சள் பக்கங்கள் மூலம் விளம்பரங்களை இலவச மாக செய்வதற்கு அரசு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறதாம். இந்தப் புத்தி ஏன் மனுசனுக்கு முன்பே தோன்றவில்லை" என்று நான் நினைத்துக் கொண்டேன்.
வீடு வந்து சேர்ந்தோம். வீடும் மரச்சோலை களினூடே ஆடம்பரமின்றி அடக்கமாக இருந்தது. என் மகன் தன் இடுப்பிலிருந்த ‘ஐ. டீ. பெல்ட்டிலி ருந்து ஒரு மெல்லிய நீளமான பிளாஸ்டிக் குச்சியை இழுத்தான். கதவிடுக்கில் அதை உரசி கதவைத் திறந்து கொண்டான்.
நான் வந்து சேர்ந்த உடனேயே அர்ஜுன் செய்த முதல் காரியம் என் சார்பாக ஒரு ஐ.டீ பெல்ட்டுக்கு விண்ணப்பம் செய்ததுதான். இதுதான் இங்கே எனக்கு அதிசயத்திலும் அதிசயம். இது பற்றி

Page 68
112 0 பீஃனிக்ஸ் பறவை
கேள்விப்பட்டு இருக்கிறேன்; படித்துமிருக்கிறேன். ஆனால் நேரில் பார்த்தபோதுதான் அதன் உண்மை யான தாக்கம் புரிந்தது. கர்ணனின் கவசகுண்டலம் போல இந்த ஐ.டீ பெல்ட்டை எல்லோரும் கட்டிய படியே திரிவார்கள், படுக்கும் நேரம் தவிர, ஐந்து வயதுக் குழந்தையிலிருந்து அறுபது வயதுக் கிழவர் வரை இதைக் கட்டாமல் ஒருவரும் வெளிக்கிடுவ தில்லை.
இங்கே காசு, கிரெடிட் கார்ட் எல்லாம் முற்றாக ஒழிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. காசையோ, கிரெடிட் கார்டையோ கண்டால் அதை ஆவலுடன் வாங்கித் தொட்டு தொட்டு பார்க்கிறார்கள். ‘எங்கள் நாட்டில் எதற்கும் நாங்கள் கிரெடிட் கார்ட்தான் பாவிக்கிறோம்" என்று சொன்னால் நம்ப மறுக் கிறார்கள். ஒரு மனித உயிர் பிறந்தவுடனேயே அதன் டீ.என்.ஏயையும், கைரேகையையும் ராட்சஸ் கம்ப் யூட்டர்களில் பதிந்து ஒரு ஐ.டீ நம்பர் கொடுத்துவிடு வார்கள். அதன்பிறகு அந்த மனிதன் இறக்கும்வரை அவனைப் பற்றிய சகல விபரங்களும் அந்த நம்பரில் பதிவாகி விடும்.
என்னுடைய அடையாள அட்டை வந்தபோது தான் நான் அதன் மகாத்மியத்தை உணர்ந்தேன். எங்கே போனாலும் என் அடையாளத்தை நிரூபிக்க இதைக் கொடுத்தால் போதும். அவர்கள் அதை கம்ப் யூட்டர் முனையில் சொருகினால் என்னுடைய சாதகம் பூராவும் தெரிந்துவிடும். வீட்டுக் கதவு, அலு வலகக் கதவு, கார்க் கதவு இப்படி எந்தக் கதவு திறப் பதற்கும் இதை ப்ரோகிராம் பண்ணி வைத்துக் கொள்ளலாம். ஒருவர் கார்டை இன்னொருவர் பாவிக்க முடியாது; கைரேகை காட்டி கொடுத்து விடும். ஆனால் இதனுடைய முக்கியமான தாக்கம்

அ. முத்துலிங்கம் 0 113
என்னவென்றால் இது வந்தபிறகு அநேகமான வங்கி களை இழுத்து மூட வேண்டி வந்ததுதான்.
பாதைக் கடையிலே ஒரு "புல்புல் ஐஸ் கிரீம் வாங்கினாலும் சரி, இரண்டு மாடிக் கட்டிடம் வாங்கினாலும் சரி உங்கள் அட்டையை கம்ப்யூட்டர் முனையில் சொருக வேண்டியதுதான். உங்கள் கணக் கிலிருந்து அவர்கள் கணக்குக்கு பணம் மாறிவிடும். வங்கிகள் அனேகமாக வெளிநாட்டினருககும், வணி கத்துக்கும் மட்டுமே பயன்பட்டன. தவணைமுறை யில் பணம் கட்டுவதற்குக்கூட ஒருமுறை ஆணை கொடுத்து விட்டால் போதும் மாதாமாதம் பணம் மாறியபடியே இருக்கும்.
இதைவிட இன்னும் இரண்டு விசேஷங்கள் இந்த அடையாள பெல்ட்டில் இருந்தன. எந்தக் காடு, மலை, மேட்டிலிருந்தும் டெலிபோன் பண்ணவும், கிடைக்கவும் வசதி இருந்தது. ஒரு முனையல் முணு முணுத்தாலே போதும். மறுபக்கத்தில் துல்லியமாகக் கேட்டுவிடும். உலகின் எந்த மூலை முடுக்கிலிருந்தும் தொடர்பு கொள்ளலாம். அடுத்த விசேஷம், இந்தக் கார்டை வைத்து ஒருவர் தன் இருப்பிடத்தை கன கச்சிதமாக சட்டிலைட் மூலம் கணித்துவிடலாம். ஒரு ஐந்து வயதுக் குழந்தையை ஸ்வீடனில் கண்காணாத ஒரு பகுதியில் கொண்டு போய் விட்டாலும் அது இந்தக் கார்டை வைத்து வீடு தேடி வந்துவிடும். இங்கேயெல்லாம் தொலைந்து போவது என்பது மிகவும் கஷ்டமான காரியம். ட்யூசன் வைத்தால்கூட (Ա)ւգ-Աin Ցil.
இப்பொழுது எங்களுடையதும் முன்னேறிய நாடுதான். ஆனால் இவர்களைப் பார்த்தால் தாங்கள் இன்னும் இருபது வருடம் பின்தங்கிவிட்டது போலத்தான் எனக்குப் பட்டது. கண்ணால் பார்ப்ப

Page 69
114 ( பீஃனிக்ஸ் பறவை
தெல்லாமே புதினமாக இருந்தது. சடுதியாக இந்தச் சூழ்நிலையை என்னால் சரிக்கட்ட முடியவில்லை. என் மகன் என்னுடைய வசதியில் மிகுந்த அக்கறை யோடுதான் இருந்தான். இருந்தாலும் சின்னச் சின்ன விஷயங்கள்கூட என்னைத் தடுமாற வைத்தன.
இவர்களுடைய ஆதாரசக்தி சூரியன்தான். ஒரு வீட்டிலே பிடிக்கும் சூரியசக்தி அந்த வீட்டிற்கு போதுமானதாக இருக்கிறது. தண்ணிர் போதியது இருந்தாலும் சுழல் பாவிப்பு முறைதான்; மிதமான நீர் தோட்டத்துக்கு போய்விடும். சொட்டு நீர்முறை யில் புல்லும், பூச்செடிகளும், மரங்களும் செழிப்பாக இருக்கின்றன. இருந்தாலும் எனக்கு ஒரே தண்ணியை திருப்பித் திருப்பி குடிக்கிறோம் என்று தெரிந்ததும் முதலில் கொஞ்சம் அருவருப்பாகத்தான் இருந்தது.
என்னை உண்மையில் திடுக்கிட வைத்த விஷயம் குளிக்கும் முறைதான். கதிற்றோன்" கதிர் அலை களில் குளிப்பது எனக்கு சங்கடமாக இருந்தது. என்ன இருந்தாலும் நிறையத் தண்ணிரில் சோசோ வென்று குளிர்ந்து, நனைந்து, சோப் போட்டு குளிப்பதுபோல் வருமா? இது குளித்ததுபோலவே இருக்காது. என் பேரன் சொல்கிறான் கதிரியக்கத்தில் குளிப்பது எங்களுக்கு மிகவும் நல்லதாம்; பக்டீரியாக் கிருமிகள் உடனுக்குடன் செத்துவிடுகின்றன; சருமம் புது ஊட்டச் சக்தி பெறுகிறது; தண்ணிரும் மிச்சப் படுகிறதாம். ஆனால் குளித்தது போலவே இல்லையே?
மற்றது, சாப்பாட்டு முறைகள். சமையல் அடுப் பென்பதே கிடையாது. எல்லாம் கதிரியக்கத்தில் சமைத்ததுதான். அதுவும் கம்ப்யூட்டரில் முதலிலேயே ப்ரோகிராம் பண்ணியபடி. சாப்பாடு சப்பென்றிருக் கிறது. ஆனால் எல்லாம் அளவுடன் செய்த சத்துள்ள

அ. முத்துலிங்கம் 0 115
உணவாம். ஆசைக்கு ஒரு கோப்பி கூடப் போட வழி யில்லை. அதுவும் கம்ப்யூட்டர் போட்டதுதான். ஒரு முறை, நல்ல பாலும் சீனியும் போட்டு இஞ்சி கலந்த கடுங்கோப்பியொன்று குடிக்க ஆசையாக இருந்தது. கம்ப்யூட்டரை திருப்பித் திருப்பி நாலைந்து தடவை ப்ரோகிராம் பண்ணிப் பார்த்தேன்; சரிவரவில்லை. அலுத்துப் போய் அப்படியே விட்டுவிட்டேன்.
இது எல்லாத்துக்கும் ஈடுகட்டுவதுபோல என் பேரன் இருந்தான். அவன் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம், ஆசை தீராது. சின்ன வயதில் என் மகன் இருந்ததுபோல அச்சாக இருப் பான். வந்த நாளில் இருந்தே என்னோடு ஒட்டி விட்டான். எப்பவும் அவனுக்கு ஏதாவது கதை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
**மொர்மோ, மொர்மோ! சொல்லு மொர்மோ" என்றான் ஒருநாள் என் பேரன். 'ஹோர்கன்’ என்ற அவன் பேரை நான் எவ்வளவு முயற்சி செய்து சரியாக உச்சரித்தாலும் சிரித்துவிடுவான். ஆனபடி யால் இனிமேல் நான் அவனை சொக்கன்" என்றே கூப்பிடுவதாக ரகசிய ஒப்பந்தம் செய்து கொண் டோம். அவனும் சம்மதித்தான். இவன் எனக்கு சொக்குப் பொடி போட்டுவிட்டதால் சொக்கன் பொருத்தமாகத்தான் இருந்தது.
அவனுடைய கண்களும் என் மகனுடையது போலவே அகன்று இருக்கும். தலைமயிர் தாயினுடை யதைப்போல் தங்க நிறம். அவனுடைய சருமம் கடைந்தெடுத்த வெண்ணெய் என்பார்களே அப்படி இருக்கும். பார்க்கும்போதெல்லாம் வாரிக் கொஞ்ச வேண்டும்போல ஆசை தூண்டும். ஆனால் இடம் கொடுக்க மாட்டான். லஞ்சம் கொடுத்தால்தான் உண்டு.

Page 70
116 ( பீஃணிக்ஸ் பறவை
இங்கே பள்ளிகள் வாரத்திற்கு ஒரு முறைதான். மற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் மூலமாக பாடங்களை படித்து விடுவார்கள். கம்ப்யூட்டர் மூலமாகவே ஆசிரி யரும் தொடர்பு கொண்டு வீட்டுப் பாடங்களை கொடுப்பார். லெமிங் என்ற மிருகம் பற்றி ஒரு ப்ரொ ஜெக்ட் எழுதவேணும் என்றான் சொக்கன். என்னி டம் அதுபற்றி சொல்லும்படி தொந்தரவு செய்து கொண்டேயிருந்தான். 'நீ கம்ப்யூட்டரைப் பார், பிறகு புத்தகத்தை படி, அதற்குப் பிறகு நான் சொல்லித் தருகிறேன்' என்றேன். ‘இல்லை, மொர்மோ! நீ சொல். கதைபோல சொல்; நான் பிறகு எழுதுகிறேன், ப்ளிஸ்’ என்றான், கண் களை அகல மருட்டி, இதற்கு மறுப்பு சொல்ல என் இதயம் இடம் கொடுக்குமா?
'லெமிங் ஒரு அப்பாவிப் பிராணி. ஸ்வீடன் நோர்வே போன்ற நாடுகளில் மிகுந்து காணப்படும். ஐந்து அங்குல நீளம்தான் இருக்கும். கட்டைக்கால், உருண்டையான தலை, சாம்பல் நிறம், இப்படியாக பார்ப்பதற்கு "ஐயோ’ என்று இருக்கும். புல், பூண்டு, தாவரம் எல்லாம் சாப்பிடும். எவ்வளவு குட்டிகள் போடும், தெரியுமோ? ஒரு வருடத்திற்கு பத்து குட்டி
கள் வரை ஈனும்,
**ஆனால், பாவம் அவைக்கு பெரிய சோதனை. மூன்று நாலுவருடங்களில் அவைகளுடைய பெருக்கம் நாடு தாங்காது. சாப்பாடு போதாமல் போய் விடும். அப்ப அவையெல்லாம் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்துபோய் அப்படியே கடலில் மூழ்கிச் செத்துப் போகும்.'
"ஐயோ, பாவம்! மொர்மோ, எல்லாம் செத்துப் போகுமா?’ என்றான் ஹோர்கன். அவன் கண்கள் இப்ப கொஞ்சம் கலங்கி விட்டன.

அ. முத்துலிங்கம் D 117
"கடலுக்குப் போன எல்லாம் செத்துப் போகும். மிஞ்சியிருக்கிறவை மறுபடியும் பெருக ஆரம்பிக்கும். நாலு வருடங்களில் பழையபடி நாடு தாங்காது. அப்படியே அவையும் போய் கடலில் விழுந்து விடும். இப்படியே இது தொடரும்."
சொக்கன் கொஞ்சநேரம் யோசித்தபடியே இருந் தான். நான் கதையை மாற்ற எண்ணி சொன்னேன். ‘எங்கள் ஊரில் பெரும் புலவர் ஒருத்தர் இருந்தார். அவருக்கு லெமிங் என்றால் உயிர். அவர் அதைப் பற்றி பாடி இருக்கிறார். நீ அதை எழுதினால் ப்ரொஜெக்டில் உனக்குத்தான் அதிக மதிப்பெண் கிடைக்கும்' என்றேன்.
ஆர்வத்தோடு 'சீக்கிரம் சொல், மொர்மோ" என்றான்.
ஓத என் லெமிங்குகளே, ஆயிரக் கணக்கில் கூட்டம் சேர்த்து குதித்துக் குதித்து எங்கே செல்கிறீர்கள்? வைத்த சாமானை எடுக்க போவதுபோல் வழிமேல் குறிவைத்து ஓடுகிறீர்களே,
ரன்? போகும் வழியில் உள்ள புல் பூண்டு தாவரம் எல்லாம் வதம் செய்து விரைகிறீர்களே என்ன அவசரம்? அரைநொடியும் ஆறாமல் வயல்வெளி தாண்டி ஆற்றையும் குளத்தையும்

Page 71
118 ( பீஃனிக்ஸ் பறவை
நீந்திக் கடந்து ஒடிக் கொண்டிருக்கிறீர்களே கொஞ்சம் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளக் கூடாதா? கடலை நீங்கள் அடைந்ததும் கால்கள் துவள நீந்தி நீந்தி மாய்ந்துகொள்ளப் போகிறீர்களே! வரும் சந்ததிகளுக்கு வழிவிடும் தியாகிகளே! சற்று நில்லுங்கள் உங்கள் முகங்களை நான் இன்னொரு முறை பார்த்துக் கொள்கிறேன், நினைவில் வைக்க
சொக்கன் யோசித்தபடியே இருந்தான். அவனு டைய சிறிய வதனம் வாடிவிட்டது.
**மொர்மோ, ஏன் இந்த லெமிங்குகள் இப்படி சாக வேணும்?"
இவை அபூர்வமான பிராணிகள். தங்கள் சந்ததிகளுக்கு வழிவிட தங்களையே அழித்துக் கொள்ளுகின்றன. எவ்வளவு தியாக மனப் பான்மை?’’
*மொர்மோ, வேறு மிருகங்கள் அல்லது பறவை கள் இப்படி இருக்கா?
'எனக்கு தெரிந்த மட்டில் மிருகம் கிடையாது. ஆனால் கிரேக்க புராணங்களில் ஒரு கற்பனைப் பறவை உண்டு; பெயர் பீஃனிக்ஸ், அரேபியாவின்

அ. முத்துலிங்கம் - D 119
பாலைவனங்களில் இது காணப்படும். ஒரேஒரு பறவைதான்; இதற்கு துணையும் இல்லை; முட்டை யும் இல்லை. ஐந்நூறு வருடங்கள் வரை ஜிவிக்கும். அதற்குப் பிறகு தானே சுள்ளிகள் பொறுக்கி அடுக்கி சூரிய வெப்பத்தில் பற்ற வைத்து அந்த சிதையில் விழுந்து தன்னை மாய்த்து சாம்பலாகிவிடும். அதற்கு பிறகு அந்த சாம்பலில் இருந்து இன்னொரு பீஃனிக்ஸ் பறவை தோன்றி இன்னொரு ஐந்நூறு வருடங்கள் வாழுமாம்.'
‘என்ன மொர்மோ, எல்லாம் இப்படி செத்துப் போகிற கதை சொல்கிறாயே!' என்று அலுத்துக் கொண்டான்.
‘என் குட்டிப் பேரனே, பிறக்கும் உயிர்கள் எல் லாம் ஒரு நாளைக்கு இறக்கத்தானே வேண்டும். அதுவும் இந்த உயிர்கள் எவ்வளவு உயர்ந்தவை. இவை தங்கள் சந்ததி வளர்வதற்காக தங்களையே மாய்த்துக் கொள்கின்றன. பழசு போனால்தான் புதியது வரும்.'
என் பேரன் கொஞ்ச நேரம் முகத்தைஉம்மென்று வைத்துக்கொண்டிருந்தான். பிறகு ‘ஹால் காவ்ரன்! நீ பழசு, போ' என்று சொல்லி என் கன்னத்தில் தன் சின்னக் கையால் இடித்துவிட்டு ஓடிப் போனான்.
நான் சொன்ன கதையின் உண்மையை சோதிக் கும் படியான ஒரு திடுக்கிடும் சம்பவம் சீக்கிரத்தி லேயே நடந்தது. உலகிலேயே மிகவும் முன்னேறிய நாடு ஸ்வீடன். அமெரிக்காவும், ஜப்பானும்கூட சில விஷயங்களில் பத்து வருடங்கள் பின் தங்கி விட்டார் கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு கருணை மரணம் (Euthansia) ஒருஉதாரணம். ஆற்றொணாக் கொடுநோயினால் துன்புறுபவர்களும், தீராதவியாதி

Page 72
120 0 பீஃனிக்ஸ் பறவை
வந்தவர்களும், கருணை மரணத்துக்கு விண்ணப்பிக்க ஸ்வீடனில் சலுகை உண்டு. அது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் உலகத்திலே எங்கும் காணாத ஒரு ஆச்சரியமான வழக்கம் கடந்த சில வருடங்களாக அரசாங்கத்தின் முழு ஆதரவோடும் இங்கே நடந்து கொண்டிருந்தது.
எனக்கு இந்த நாடு பிடித்துவிட்டது. என்ன மாதிரி சுற்றுச்சூழலை பேணுகிறார்கள்? எப்படி துரிதமாக விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை தங்கள் மேம்பாட்டுக்கு பயன்படுத்துகிறார்கள்? ஆனாலும், சில விஷயங்களை என்னால் ஜீரணிக்க முடியவில் லையே! பக்கத்து வீட்டிலே ஒரு பிறந்த தின கொண் டாட்டம் நடந்தது. முதனமுறையாக எனக்கும் சேர்த்து ஒரு அழைப்பு வந்திருந்தது. அது என்ன மாதிரி கொணடாட்டமென்று யாராவது முன்பே எனக்கு எச்சரிக்கைசெய்திருக்கலாம். அப்படியானால் நான் போவதைத் தவிர்த்து இருப்பேன்.
ஹென்னிங்ஸன் அவருடைய பெயர். எழுபது வயதுக் கிழவர். அவருக்குத்தான் பிறந்த தினம். இருபதுபேர் மட்டில் வந்திருந்தார்கள். பெரிய கேக் கில் ஏழு மெழுகுவர்த்திகள் கொழுத்தி வைக்கப்பட்டி ருந்தன. எல்லோரும் பாட்டுப் பாடி, வழக்கம்போல் கேக் வெட்டி சாப்பிட்டு, அதற்குப் பிறகு அதிவிசேஷ மான சாம்பெய்ன் மது அருந்தி வெண்ணெய் கட்டி யும் சாப்பிட்டோம். பிற்பாடு ஹென்னிங்ஸன் ஒரு சிற்றுரை ஆற்றினார். அதில் தான் எழுபது ஆண்டுப் பிராயம் அடைந்து விட்டதாகவும், பூரண ஆரோக் கியத்துடன் நிறைந்த வாழ்வு வாழ்ந்ததாகவும், இனி மேல் கருணை மரணத்தை தழுவ முடிவு செய்ததாக வும் சொன்னார். எல்லோரும் எழுந்து நின்று கை தட்டி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

அ. மூத்துலிங்கம் () 121
ஒருவர் கண்களிலும் நீரில்லை. அவருடைய சொந்தப் பிள்ளைகள்கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எனக்கு அந்தக் காட்சி மனசைப் பிழிந்தது.
வழக்கமாக வந்த விருந்தினர்தான் பரிசுகள் தருவது வழக்கம். இங்கே பிரியாவிடை முகமாக கிழவர்தான் பரிசுகள் கொடுத்தார். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொன்று பரிசளித்தார். முன்பின் தெரி யாத எனக்குக்கூட மூன்றாம் குஸ்ராவ் மன்னர் காலத்திய நாணயம் ஒன்றை தந்தார். விலை மதிப் பில்லாத நாணயம் அது என்று பின்னால் தெரிந்து கொண்டேன். விருந்தின் முடிவில் இரண்டு டாக்டர் கள் வந்து அவரை அழைத்துக் கொண்டு போய் தயாராக இருந்த ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென் றார்கள்.
அன்றிரவு எனக்கு துக்கம் வரவில்லை. (Մ9(Կ) ஆரோக்கியத்துடனும், புத்தி சுவாதீனததுடனும் உள்ள ஒருவர் இப்படிப்பட்ட முடிவு எடுப்பது சரி தானா? அரசு கூட இதை ஆதரிக்கிறதே! அரசாங்கத் தின் வாதமோ ஆணித்தரமாக இருந்தது. ஸ்வீடனில் இப்போது சராசரி வயது ஐம்பதுக்கு மேல் போய் விட்டது. இளைஞர் சமுதாயம் வெகுவாக குறைந்து விட்டது. ஆனபடியால் அரசு எழுபது வயதிற்கு மேற் பட்டவர்கள் இப்படி விண்ணப்பம் செய்வதை வர வேற்கிறது. ஒருவர் இறந்தவுடன் அவருடைய எண் கம்புயூட்டரிலிருந்து நீக்கப்படுகிறது. உடனே அந்த இடத்தை ஒரு புதிதாகப் பிறக்கும் குழந்தை நிரப்பி விடுகிறது. ஹென்னிங்ஸன் ஒரு விஞ்ஞானி. அவர் கண்டுபிடித்த சித்தாந்தங்கள் இன்றும் பாடப்புத்த கங்களில் இருக்கிறதாம். அவர் சாகவேண்டி அப்படி என்ன அவசியம்? எனக்கு இது மிகவும் அதியாயமாக பட்டது.
ബ്-9

Page 73
122 0 பீஃனிக்ஸ் பறவை
எங்கள் இதிகாசங்களில் பிராயோபவேசம் என்று சொல்லியிருக்கிறது. பாரதப்போர் முடிவில் வில்லுக்கு அதிபதியான விதுரன் என்ன செய்தார்? காட்டிலேபோய் தர்ப்பைமீது படுத்து பிராயோப வேசம் செய்துகொண்டார். ஏன், சந்திர வம்சத்து மன்னர் யயாதி செய்தது என்ன? எவ்வளவு சுகம் அனுபவித்தாலும் யயாதிக்கு போதவில்லை. கெஞ்சிக் கூத்தாடி மகனிடம் இளமையை கடன் வாங்கிக் கொண்டார். இன்னொரு மூச்சு அனுபலிக்க வேண் டும் என்று ஆசை. பிறகு ஒரு ஆயிரம் வருடங்கள் அனுபவித்தார். அப்படியும் போதவில்லையாம். கடைசியிலே எல்லாவற்றையும் துறந்து காட்டிற்கு போய் உயிரைவிட்டார்.
இரவு இரண்டு மணி. வெளியே பார்த்தேன். சூரியனுடைய கதிர்கள் கீழ்வானத்தில் பரவிக் கிடந் தன. அப்படியே உறங்கி விட்டேன். இந்த சம்பவம் பெரிய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தி விட்டது. ஆனால் மகனோ, என் மருமகள் ஸ்வென்காவோ இதை பெரிதுபடுத்தவில்லை. என் மருமகள் போல ஒரு பெண் இந்த உலகத்தில் கிடைப்பது அபூர்வம். எப்பவும் அவளுக்கு சிரித்தபடியிருக்கும் கண்கள். ஆனால் சில சில்லறை விஷயங்கள்தான் எனக்குப் பிடி படுவதில்லை. சொக்கன் பசியென்று ஓடிவந்து சாப் பாடு கேட்பான். ஸ்வென்கா கம்புயூட்டர் நம்பரை மட்டுமே சொல்லுவாள். பாவம், அவனே செய்து சாப்பிட வேண்டுமாம். தங்கள் வேலைகளை தாங் களே செய்யவேண்டும் என்பதில் மிகவும் பிடிவாத மாக இருந்தாள்.
மூன்று நாள் சென்று ஹென்னிங்ஸனுடைய"சாம் பலை ஒரு மரப்பேழையில் வைத்து கொண்டு வந்து பக்கத்து வீட்டில் கொடுத்தார்கள். அதை தோட்டத்

அ. முத்துலிங்கம் () 123
திலே ஒரு நல்ல இடமாகப் பார்த்து அவர்கள் புதைத்து அதன் மேல் ஒரு பேர்ச் செடியையும் நட் டார்கள். வில்லியம் கிறிஸ்ரர் ஹென்னிங்ஸன் என்ற விஞ்ஞானி தானாகவே ‘பேர்ச் செடிக்கு உரமாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
எங்களுடைய வீட்டைப்பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லை. ஸ்வீடனில் தொண்ணுரறு வீதம் வீடுகள் எங்கள் வீட்டைப்போலவே இருக்கின்றன. நடுவீட்டில் வரவேற்பறையும், சமையல், சாப்பாட்டு அறைகளும் இருக்கும். கீழே அலுவலகம்/படிப்பு அறைகளும், ஜிம் (தேகப்பியாசம்) அறையும் இருக் கும். மேலே படுக்கை, குளியல் அறைகள். எல்லோ ருக்கும் கம்புயூட்டர் முனைகள் உண்டு. பலவிதமான வேலைகளும் கம்புயூட்டர் மூலமாகவே நடைபெறும். ஸ்வென்கா முகம் சுழித்தோ, மனம்வருந்தி அழுதோ நான் கண்டது கிடையாது. முன்பே கூறிய படி அவளுக்கு எப்பவும் மலர்ந்த முகம்தான். தற் செயலாக அவள் ஒருமுறை அழுததை நான் பார்க்க நேரிட்டது. எனக்கு அடிவயிற்றை என்னவோ செய்தது.
ஒருநாள் வழக்கம் போல மூன்றுபேரும் கீழே யுள்ள ஜிம்மில் ஏரோபிக்ஸ் ஒரு மணித்தியாலம்வரை செய்துவிட்டு வந்தார்கள். மரக்காலணிகளுடன் அவர்கள் நடந்து வந்தபோது "டக், டக் என்று வடி வாகத்தான் இருந்தது. என் மகனைப் பார்த்தேன். என்ன அழகாக இருக்கிறான். அந்தக் கண்களுடைய ஒளி என்ன சுபாவமாக வீசுகிறது. ஸ்வென்கா "லியோரார்ட் உடுப்பில் உயரமாக தோன்றினாள். என் கண்ணே பட்டுவிடும் போல இருந்தது. சிறு - துளி வியர்வை பிரகாசிக்க அப்ஸரஸ் போலத்தான் வந்தாள். அவளுக்கு ஆறுவயதுப் பையன் இருப்ப

Page 74
124 0 பீஃனிக்ஸ் பறவை
தாகச் சொன்னால் யாராவது நம்புவார்களா? கன நீர் பற்றி ஆராய்ச்சி செய்கிறாளே என்று எண்ணுவேன். -
இவளுடைய இடை என்ன இப்படி இருக்கிறது. பதினேழு வயகப் பெண்போல? ஒரு நாள் நான் கேட்டுவிட்டேன். அவள் சிரித்துவிட்டு சொன் னதைக் கேட்ட நான்தான் அதிர்ச்சியடைந்தேன். அர்ஜுன்கூட. எனக்கு இதுவரை இதைப்பற்றி சொல்லவில்லையே!
என் மகனுக்கு 29 வயது நடககும்போது இவர்கள் மணம்செய்து கொண்டார்கள். முதலில் என்னமாதிரி குழந்தைவேணும் என்று தீர்மானித்துக் கொண்டார் களாம். இவள் தங்கநிறத் தலைமயிர் வேண்டும் என்றாள்; அர்ஜுனோ பெரிய நீலக்கண்கள் கொண்ட ஒரு ஆண்மகவு சான்றானாம். கருவங்கியிலே போய் தங்கள் கருக்களைக் கொடுத்தார்கள. அவர்கள் லபோரட்டரியில் கருக்களை இணைத்து கம்புயூட்டர் மூலம் கணித்து சிசு எதிர்காலத்தில் எப்படி பரிமளிக் கும் என்று கூறிவிடுவார்கள். இவர்கள் போய் பார்த்தபோது கம்புயூட்டரில் ஆறு உற்பத்தி நிலை சிசுக்களைக் காட்டினார்களாம். நோய், நொடி இல் லாத ஆரோக்கியமான நிலையில் தங்கத்தலைமயிரும், நீலக்கண்களும் கொண்ட ஒரு ஆண் சிசுவை இவர்கள் தெரிவு செய்தார்களாம்.
அதற்கு பிறகு இரண்டு மாதம் சிசு லபோரட்டரி யிலேயே வளர்ந்தது. பிறகுதான் சங்கடம். செவிலித் தாயைத் தேட வேண்டும். ரஸ்யாவில் இருந்து ஏழைப் பட்டாளம் இதற்காகவே வருவார்கள். ஒரு பிள்ளையை ஐந்து மாதம் வரை சுமப்பதற்கு சுமை கூலி கேட்பார்கள். ஐந்துமாத முடிவில் பிள்ளையை

அ. முத்துலிங்கம் ( 125
சிசேரியன் முறையில் வெளியே கொண்டு வந்துவிடு வார்கள். பிறகும் இன்னொரு இரண்டு மாதம் குழந்தை சூட்டுப் பேழையில் வளரும். அதற்குப் பிறகுதான் குழந்தையை கையிலே தூக்கி கொடுப் பார்கள். அப்படித்தான் ஹோர்கன் பிறந்ததாக அவள் கூறினாள்.
‘அப்ப, நீ பெறவே இல்லையா?" என்று கேட் டேன், அதிர்ந்துபோய்.
"ஹோர்கன் உங்கள் மகனுடைய கருவும், என்னு டைய கருவும் சேர்ந்து உண்டான பிள்ளை முழுக்க முழுக்க எங்கள் பிள்ளை; ரஸ்யாக்காரி வெறும் சுமை கூலிக்காரிதான். அவளுக்கு நாங்கள் ஒப்பந்தப்படி ஐந்து மாதங்களுக்கு 20000 யூரோடொலர் கொடுத் தோம். அவளுக்கு இது பெரிய காசு; இரண்டு வருடத் திற்கு போதுமானது' என்றாள். ஸ்வென்காவின் உடம்பின் லாவண்யம் எனக்கு அப்போதுதான் முற் றிலும் புரிந்தது.
அன்று ஜிம்மிலிருந்து வந்து கம்புயூட்டரில் அன்றைய முக்கிய செய்திகளைப் படித்தாள். இங்கே பத்திரிகைகள் வீட்டுக்கு வருவது கிடையாது. சந்தா கட்டிவிட்டால் வேண்டிய செய்திகளை விட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம். தேவையானதை பிரிண்ட் பண்ணியும் வைக்கலாம். எவ்வளவு பேப்பர் மீதமா கிறது?
அடுத்து, கம்புயூட்டரில் வந்த ஈமெயில் கடிதங் களை படித்துவிட்டு திடீரென்று அழத் தொடங்கி விட்டாள். அவள் அப்படி அழுது நான் பார்க்கவே யில்லை. அர்ஜுன் ஓடிவந்தான். அவனும் பார்த்து விட்டு திகைத்துப்போய் சிறிது நேரம் நின்றான். பிறகு ஸ்வென்காவைத் தேற்றினான். அவளுடைய

Page 75
126 () பீஃனிக்ஸ் பறவை
அழுகை அடக்க முடியாமல் நீண்டுகொண்டே போனது.
விஷயம் இதுதான். இவர்கள் இரண்டாவது பிள்ளை பெறுவதற்கு போட்ட மனுவை அரசாங்கம் நிராகரித்துவிட்டது. அது ஒரு பெண் குழந்தையாம்; உயரம் ஐந்து அடி எட்டு அங்குலம். கறுப்பு தலை மயிரும், கபிலநிறக் கண்களுமாக இருக்குமாம். கரு உற்பத்தியான நாளிலிருந்து மூன்று வருடமாகிவிட்ட தாம். 'எப்போ இவர்கள் அனுமதி தரப்போகி றார்கள்? இது என்ன அநியாயம்! என் சிநேகிதிகள் எல்லோருக்கும் கிடைத்துவிட்டதே! எனக்கு மட்டும் ஏன் இப்படி? இதைக் கேட்பாரில்லையா?" என்று விம்மி விம்மி அழுதாள்.
அர்ஜ"ன் அவளைத் தேற்றி எல்லாவற்றையும் விளகதினான். கம்புயூட்டரில் அவர்கள் விண்ணப்பம் இருக்கிறது. ஒவ்வொரு பிறப்பும், இறப்பும் அங்கே பதிவாகிறது கம்புயூட்டர் இவற்றை கணக்குப் பண்ணிக்கொண்டே வரும், அவர்கள் முறை வந்த தும் அனுமதி தானாகவே கிடைத்துவிடுமென்று ஆறுதல் கூறினான். எனக்கு ஸ்வென்காவை பார்க்கப் பாவமாக இருந்தது. அவளுடைய நெஞ்சுக்குள் இப்படியான ஒரு தீராத கவலை இருக்கும் விஷயம் எனக்கு அன்றுவரை தெரியாது.
இது நடந்து பிறகு ஒரு குளிர் காலத்தையும் நான் முற்றிலும் பார்த்துவிட்டேன். குளிர்காலத்தை நினைத்து மிகவும் பயந்துகொண்டே இருந்தேன். ஆனால் தப்பிவிட்டேன். வீட்டை சூரிய சக்தியை பயன்படுத்தி தகுந்த வெப்பநிலையில் வைத்திருந் தார்கள். அத்துடன், நான் இப்பவெல்லாம் ஏரோபிக்ஸும் செய்ய பழகிக்கொண்டேன். என்னு

அ. முத்துலிங்கம் () 127
டைய குரு வேறு யார்? சொக்கன்தான். நல்ல ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. சுவாசிக்கும் காற்று மிகவும் சுத்தம். காற்றுச் சூழலைப் பேணு வதற்கு அதிக முக்யத்வம் கொடுக்கிறார்கள். இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை. எனக்கு சந் தோஷமாக இருந்தது.
ஒருநாள் கம்புயூட்டரில் எனக்கு ஒரு செய்தி வந்தது. நான் ஆச்சரியப்பட்டு விட்டேன். அதுதான் எனக்கு முதன்முறை அப்படிச் செய்தி வருவது. விட்டமின் ‘டி’ சத்துக் காணாது என்றும், புரதச் சத்தைக் குறைக்கும்படியுந்தான் செய்தி. எனக்கு வியப்புத் தாங்கவில்லை. என் மகன்தான் விளக்கி னான். 'கம்புயூட்டர், நாங்கள் சாப்பிடுவதைக் கணித்தபடியே இருக்கிறது. அத்துடன் மாதா மாதம் எங்கள் இரத்தம், சிறுநீர், இரத்த அமுக்கம், இதயத் துடிப்பு முதலிய கணிப்புகளை கம்புயூட்டரில் பதிவு செய்து கொண்டே வருகிறோமல்லவா? இவற்றை யெல்லாம் கம்புயூட்டர் கிரகித்து அப்பப்டோ நோய் வருவதைத் தடுக்க குறிப்புகள் கொடுத்த வண்ணமே இருக்கும். இங்கேயெல்லாம் வருமுன் தடுப்பதில் அர சாங்கம் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுகிறது’ என்றான். -
ஒருமுறை அர்ஜுன், ஸ்வென்காவையும், என்னை யும் கருவங்கிக்கு கூட்டிச் சென்றான். அங்கே சேமித்து வைத்த இவர்களுடைய கருநிலை சிசுக் களை" கம்புயூட்டரில் போட்டுப் பார்க்க அனுமதி கிடைத்தது. எல்லாமாக பதினேழு பெண் கருக்கள் தயார் நிலையில் இருந்தன. ஸ்வென்கா, தான் தெரிவு செய்த பெண் குழந்தைக்கு ‘காமாட்சி" என்றபேரைப் பதிவு செய்திருந்தாள். அது என்னுடைய தாயாரு டைய பெயர். என் மனம் நெகிழ்ந்தது. அந்தப்

Page 76
128 0 பீஃனிக்ஸ் பறவை
பதினேழு குழந்தைகளிலும் காமாட்சிதான் கண் ணைப் பறிக்கும் அழகியாகஇருத்தாள். இருபத்தொரு வயது வரைக்கும் கம்புயூட்டரில் அவளுடைய பரிணாம வளர்ச்சியை அவதானித்துக் கொண்டே வந்தோம், விதவிதமான தலை அலங்காரம் செய்து, வெவ்வேறு உடைகளில் அவளைக் கண் குளிரப் பார்த்தோம். டென்னிஸ் போன்ற விளையாட்டு களில் அவள் வீராங்கனையாக விளங்குவாளாம்; மனிதவியல் போன்ற பாடங்களில் அவளுக்கு இயற்கையான திறமை இருக்குமாம். அப்படியே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். ஸ்வென்காவின் கண்களில் நீர்த் துளி. எனக்கே அழுகையாக வந்தது.
அப்போது ஸ்வென்கா ஒரு செய்தி சொன்னாள். இப்போதெல்லாம் செவிலித் தாய்மார் மிகவும் மலி வாகக் கிடைக்கிறார்களாம். ரஸ்யா, லட்டின் அமெ ரிக்கா, அரபு நாடுகளில் இருந்தெல்லாம் பெண்கள் வந்து குவிந்தபடியே இருக்கிறார்கள். சூரியசக்தியின் உபயோகம் உலகத்தில் வேகமாகப் பரவி விட்டதால் அரபு நாடுகளில் எண்ணெய் விலை போகாமல் வறுமை பீடித்து விட்டதாம். அங்கேயெல்லாம் செவிலிப் பெண்களுக்கு பஞ்சமில்லை; ஸ்வீடன் அர சாங்கத்தின் அனுமதியில்தான் பஞ்சமாம்.
அப்ப என் மகன் இன்னொரு ஆச்சரியமான தகவலையும் சொன்னான், ஸ்வீடனில் அநேகமாக எல்லோரும் செவிலித் தாய் முறையைத்தான் கையாளுகிறார்கள். குழந்தைகளையும் சிசேரியன் முறையில்தான் பிறக்க வைக்கிறார்கள். இதுதான் தாய்க்கும் சேய்க்கும் சிறந்த முறை என்று கருதப்படு கிறது. இப்பொழுது அமெரிக்கா, ஜப்பான் போன்ற இடங்களில் இருந்துகூட சில பெண்கள் வருகிறார்

அ. முததுலிங்கம் () 129
கள். ஒப்பந்தம் இல்லாமல் இலவசமாகவே பிளளை யைச் சுமக்க அவர்கள் சம்மதிக்கிறார்களாம். ஆனால், பிள்ளை இயற்கை முறையில்தான் பிறக்க வேண்டுமாம்; சிசேரியன் ஆகாதாம். அவர்களுக்கு பிள்ளை பெறும் அனுபவத்தை உண்மையிலேயே அனுபவிக்க ஆசை. ஒர் அமெரிக்க பெண்மணி தான் நிஜமாகவே பிள்ளை பெற்ற அனுபவத்தை புத்தக மாக எழுதி நிறையப் பணம் சம்பாதித்து விட்டா 6 TLC,
**இந்தியா, சீனா, பூணூலங்கா போன்ற இடங்களி லிருந்து செவிலித் தாய்மார் கிடைக்க மாட்டார் களா?' என்று கேட்டேன், நான்.
*அவையெல்லாம் முன்னேறிய நாடுகள். அங்கே யிருந்தெல்லாம் மலிவாகக் கிடைக்க மாட்டார்கள்,' எள்றான் அர்ஜுன்.
நாங்கள் திரும்பி வரும்போது நான் இதே யோசனையாக இருந்தேன். நான் என் மகனை வயிற் றிலே பத்து மாதம் சுமந்ததை நினைத்துப் பார்த் தேன். அப்போது எனக்கு வயது முப்பது மண முடித்து ஐந்து வருடங்கள். கணக்கில்லாத விரதங்கள் அநுஷ்டித்து, தவமிருந்து 1983ம் ஆண்டு ஆடி மாதக் கலவரத்தில் அவனைப் பெறறேன். அது எவ்வளவு கஷ்டமான காலம்! தெஹிவளை ஆஸ்பத்திரியில் என் மகன் பிறந்த இரண்டாவது நாளே கலவரம் தொடங்கிவிட்டது. அந்த வார்டில் நான் ஒருத்தி மாத்திரமே தமிழ். பயந்து நடுங்கிக் கொண்டு இருந் தேன். மூன்றாம் நாள் இரவு இரண்டு நர்ஸ்மார் என் னைச் சுட்டிக்காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தார் கள். எனக்குப் பயம் பிடித்துவிட்டது. அன்று இரவே ஒருவருக்கும் தெரியாமல் பிள்ளையையும் எடுத்துக்

Page 77
130 ) பீஃணிக்ஸ் பறவை
கொண்டு ஓடிவிட்டேன். இன்று கூட அதை நினைக் கும்போது எனக்கு குலை நடுங்கும். அன்று அதை எப்படிச் செய்தேனோ தெரியாது?
பத்து மாதம் சுமப்பது என்பது கதையாகி விட் டது. இப்போது ஐந்து மாதம் என்று ஆகிவிட்டது. விஞ்ஞானிகள் இன்னும் தொடர்ந்து வேலை செய் கிறார்கள். இந்த ஐந்து மாதம்கூட மேலும் சுருங்கி மூன்று மாதம்கூட ஆகலாம்; ஒரு வேளை ஒரேயடி யாக பிள்ளைப் பேறே தேவையில்லாமல் போகலாம். விஞ்ஞானம் போகிற போக்கில் என்ன நடக்கும் என்று யாரால் கூற முடியும்?
கார் பல வெறுமையான கட்டிடங்களை தாண்டி போய்க் கொண்டிருந்தது. புதிதாகக் கட்டிடங்கள் கட்டுவது எப்பவோ நின்றுபோன ஒரு காரியம். ஆக, செப்பனிடும் வேலைகள்தான் இப்பவெல்லாம் செய் கிறார்கள். பழைய கட்டிடங்களை என்ன செய்வது என்று அரசாங்கம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. முந்தின வங்கிக் கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள் எல்லாம் சீந்துவாரின்றிக் கிடந்தன. ஆஸ்பத்திரிகள்கூட குறைந்து விட்டனவாம். எல்லோரும் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைப் பார்க்கிறார்கள்; வாரத்தில் ஒரு முறைதான் போய் வருகிறார்கள்.
வங்கிகள் பத்திலே ஒன்பது மூடிவிட்டன. காலி யான கட்டிடங்களை சமுதாய நலச் சங்கங்களுக்கு விட்டுவிட்டார்கள். அனாதைகளே கிடையாது, ஆன படியால் அனாதை ஆச்சிரமங்களும் இல்லை. முன்பு போல கூன், குருடு, செவிடாகவும் ஒருத்தரும் பிறப்ப தில்லை; ஜனத்தொகையும் கூடப் போவதில்லை. ஒரே வழி, கட்டிடங்களையெல்லாம் இடித்துப்

அ. முத்துலிங்கம் () 131
பூங்காக்களாக மாற்றுவதுதான்; அதுதான் அரசாங் கம் இது பற்றி தீவிரமாக சிந்தித்து கொண்டு வருகிறதாம். மனிதன் முன்னேற, முன்னேற பிரச் சினைகளும் புதிதாகத் தோன்றிய வண்ணம் இருக் கின்றன.
ஸ்வென்கா இயற்கையிலேயே ஒரு குதூகலமான பெண். ஆனபடியால் பெண் குழந்தை இல்லாத குறையைப் பெரிது படுத்தி எப்பவும் மனதைப் போட்டு வருத்திக் கொள்பவளல்ல. இருந்தாலும் சில வேளைகளில் இந்த சோகம் அவளை மிகவும் பாரத் துடன் தாக்கும். அந்த சமயங்களில் ஸ்வென்கா சிறிது ஆடிவிடுவாள். மற்றும்படி தன்னுடைய ஆராய்ச்சியிலும், குடும்பத்தை பராமரிப்பதிலுமே கவனமாக இருந்தாள்.
ஆனாலும் ஸ்வென்கா தன் போராட்டத்தை தளர்த்தவில்லை; தன்னுடைய விண்ணப்பத்தைப் பற்றி அரசாங்கத்துக்கு திருப்பித் திருப்பி நினைவூட் டிக் கொண்டே இருந்தாள். ஆறு வருடங்களாக தன் கோரிக்கை கவனிப்பாரற்று கிடப்பதை வெகு தயவாக சுட்டிக் காட்டினாள். இப்பொழுது சொக்க னுக்கு பத்து வயது நிரம்பி விட்டது" நாங்கள் எல்லோரும் முற்றிலும் நம்பிக்கை இழந்து விட் டோம்; ஆனால் ஸ்வென்கா அயரவில்லை. அப்பொழுதுதான் ஸ்வென்காவுக்கு மாத்திரமல்ல, இன்னும் எத்தனையோ இளம் தம்பதியருக்கும் விமோசனம் அளிக்கும் வகையில் ஒரு புதிய சட்டம் பிறந்தது.
சட்டம் இதுதான்: எழுபது வயதுக்கு மேலான ஒருவர் கருணை மரணத்தை தழுவுவாராயின் அவர் தன்னால் ஏற்படும் காலி ஸ்தானத்தை தனக்கு நெருங் கிய ரத்த உறவுள்ள ஒருவருக்கு அளிக்கலாம்.

Page 78
132 0 பீஃரிைக்ஸ் பறவை
அவ்வளவுதான். இந்தச் செய்தி அறிக்கையை தொலைக்காட்சியில் திருப்பித் திருப்பிக் காட்டினார் கள். இளம் தம்பதியரும், இளைய தலைமுறையினரும் கூட்டம் கூட்டமாக நின்று இந்தச் சட்டத்தை வர வேற்று கொண்டாடினார்கள். சில பார்களிலே இல வச சாம்பெய்ன் வழங்கி குடித்து இரவு முழுக்க ஆடி மகிழ்ந்தார்கள். இந்தச் சட்டம் இவ்வளவு பாரதூர மான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் கூட எதிர்பார்க்கவில்லை.
இது நடந்த வருடம் 2022. இந்த வருடத்தில் இன்னொரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது. இருநூறு வருடங்களாகத் தொடர்ந்த முடியாட்சி ஒழிந்து கிறிஸ்டீனா ராணி முடி துறந்ததும் இந்த வருடம்தான். சில வாரங்களில் என்னுடைய பிறந்த நாள் வந்தது. நான் இப்பவெல்லாம் சொக்கனுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்வீடிஷ் மொழியில் பேசக் கற்றுக் கொண்டேன். அவன் 'ஹால் காவ்ரன்’ என்றால் நானும் திருப்பி ‘ஹால் காவ்ரன்' என்று சொல்லி விடுவேன். எங்களுக்குள் எவ்வளவோ ரகஸ் யங்கள். என் மகன் சிறுவயதில் எப்படி இருந்தானோ அப்படியே இவனும் அச்சாக இருந்தான். சொக்கன் தான் சொன்னான், இன்றைக்கு எனக்கு ‘பெரிய விருந்து' என்று. நான்தான் முட்டாள்போல அதை முற்றிலும் கிரகிக்க தவறி விட்டேன்.
அன்று இரவு எங்கள் வீட்டில் ஒர் இருபது பேர் மட்டில் கூடிவிட்டார்கள். பெரிய வட்டமான கேக். ஏழு மெழுகுவர்த்திகள் அதை அலங்கரித்தன; ரிப்பன் கட்டியபடி பக்கத்திலே ஒரு கத்தி. நான் என்னிடம் இருந்த சேலைகளில் மிகவும் உயர்ந்ததைக் கட்டிக் கொண்டேன். கண்ணாடியில் பார்த்தேன், எழுபது

அ. முத்துலிங்கம் 0 133
வயதுபோல் தோற்றவே இல்லை. எனக்கு என் கண வருடைய ஞாபகம் வந்து கண் கலங்கியது.
நான் அறைக்குள் காலடி வைத்ததும் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரித்து என்னை வர வேற்றார்கள். கேக்கை வெட்டினேன். விருந்தினர்கள் ஒவ்வொரு துண்டு எடுத்துக் கொண்டார்கள் அதன் பிறகு சாம்பெய்னும், வெண்ணெய்க் கட்டியும் பரி மாறப்பட்டது.
அப்பொழுதுதான் என் மகனுடைய கண்களைப் பார்த்தேன். அந்தக் கண்களின் ஆழத்தை என்னால் என்றும் காணவே முடியாது. சிறுபிள்ளையாக மடி யில் கிடத்தி அவன் கண்களையே நான் பார்த்துக் கொண்டிருந்தது எனக்கு ஞாபகத்துககு வந்தது. என் அன்பு மகனே, உன் கண்கள் என்ன சொல்கின்றன? என் கால்கள் துவண் டன.
என் சிற்றுரையை வழங்க நான் விருந்தினர்களை நோக்கி மெதுவாக நடந்தேன். Ο

Page 79
முழுவிலக்கு
 

கணேசானந்தனுக்கு தன்னுடைய பெயரைப் பிடித் திருந்தது; ஆனால் அது ஆபிரிக்காவுக்கு வரும் வரைக் கும்தான். இங்கே அவனுடைய பெயர் செய்த கூத்தை விவரிக்க முடியாது. போகிற இடமெல்லாம் முழுப் பெயரையும் எழுதும்படி கேட்பார்கள். "தாமோதிரம்பிள்ளை கணேசானந்தன்' என்று விஸ்தாரமாக இவன் எழுதி முடிப்பதற்கிடையில் அவர்கள் தங்கள் சுருண்ட தலைமுடியை பிய்த்துக் கொண்டு நிற்பார்கள். குடும்பப் பெயர், நடுப்பெயர், கிறிஸ்டியன் பெயர், முதற் பெயர் என்று மாறி மாறி ஏதாவது கேட்பார்கள். இவனுக்கும் அலுத்துவிடும். சில வேளைகளில் ‘தலையா, பூவா' போட்டு ஒரு பேரை எழுதி வைப்பான். சில சமயங்களில் சண்டை போட்டும் பார்ப்பான். ‘நான் இந்து; எனக்கு கிறிஸ் டியன் பெயர் கிடையாது’ என்று கெஞ்சினாலும் விடமாட்டார்கள். ஏதாவது ஒன்றை எழுதச்சொல்லி நிர்ப்பந்திப்பார்கள்.
ஒருமுறை உச்சக்கோபத்தில் தன்னுடைய முழுப் பெயரையும் இரண்டு வரிகளில் எழுதிவிட்டு 'ஐயா, என்னுடைய எல்லாப் பெயர்களும் இதற்குள்ளே அடக்கம்; உங்களுக்கு எந்தெந்தப் பெயர் தேவையோ அவற்றை இதிலிருந்து பிய்த்து எடுத்துக் கொள்ளுங் கள்' என்று கூறிவிட்டான். கடைசியில், வந்து பல வருடங்களுக்கு பிறகுதான் இதற்கான ஒரு சுலபமான வழியைக் கண்டுபிடித்தான். 'கணேசானந்தன்' என்ற பெயரை மூன்று பகுதிகளாக பிரித்து 'கணே சா நந்தன்' என்று அமைத்துக் கொண்டான். அவர்கள் விருப்பப்படியே எல்லாப் பெயர்களும் அதனுள் அடக் கம். இவனுக்கும் தொல்லை விட்டது.
ஆபிரிக்காவிலுள்ள அந்த குடிவரவு அலுவலகத்
துக்கு இத்துடன் பலமுறை அவன் வந்து விட்டான். கொடுத்த பாரங்களையெல்லாம் வெகு நேர்த்தியாக

Page 80
136 0 முழுவிலக்கு
பூர்த்தி செய்தான். பெயர்கள் இப்போது தொல்லை கொடுப்பதில்லை. பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து ஆபிரிக்காவிலேயே தங்கி விட்டதால் நிரந்தரக் குடியுரிமை விரைவிலேயே கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்தான். மேலதிகாரியைப் பார்ப் பதற்காக அவன் காத்திருந்தான்
அலுவலகம் இப்போது கொஞ்சம் சுறுசுறுப்பு அடையத் தொடங்கியிருந்தது. ஒவ்வொருவராக வந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்து பைல்களை இழுத்து தூசு தட்டத் தொடங்கினார்கள். தோடம் பழக் கூடைக்காரி ஒருத்தி உள்ளே வந்து மேசை மேசையாகப் போய் விலைபேசி விற்றபடியே வத்து கொண்டிருந்தாள். எல்லாமே தோல் சீவி வைத்த நேர்த்தியான பழங்கள். தடிமாடு போன்ற ஒருத்தன் வந்து இலவசமாக ஒரு பழத்தை கைவிட்டு எடுத்து விட்டான். கையை நீட்டி அடித்து அதைப் பறிதது விட்டு இடுப்பிலே கையை வைத்து ‘ஆர்த்த குர லெடுத்து அவளுடைய குலதர்மம் பிசகாமல் அவனை வையத் தொடங்கினாள் அவள். நல்ல நல்ல அசிங்க மான வார்த்தைகளை பொறுக்கியெடுத்து திட்டி னாள். ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. எல்லாரும் தங்கள் தங்கள் தோடம்பழங்களில் கருமமே கண்ணா யிருந்தனர். பழத்தில் சிறு ஒட்டை துளைத்து, ஒரே உறிஞ்சில் முழுச்சாற்றையும் உள்ளிழுத்து, கொட்டை களை ‘து துர' என்று காலடியில் துப்பி, நிமிடத்தில் மூன்று நான்கு பழங்களை கணக்குத் தீர்க்கும் கலை யில் அவர்கள் சூரர்கள்.
சங்கீதா ஆபிரிக்காவுக்கு வந்து கணேசானந்தனை பதிவுத் திருமணம் செய்து இரண்டு வருடங்களாகி விட்டன. ஆனால் இவனுடைய சங்கடம் இன் னும் தீர்ந்தபாடில்லை. நிச்சயமாக குடியுரிமை

அ. முத்துலிங்கம் 0ே 137
கிடைக்கும் வரை பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை என்று சங்கீதா பிரதிக்ஞை செய்திருந்தாள். எத்த னையோ பேர் எத்தனையோ விதமான பிரதிக்ஞை எடுக்கிறாாகள். ஆனால் இவள் மங்கம்மா செய்தது போல் அவசரப்பட்டு இப்படி ஒரு சடதம் செய்து விட்டாளே! இவனும் எவ்வளவோ சொல்லிப் பார்த் தான். காலை முடக்கி முரண்டு செய்யும் மாடுபோல மறுத்து விட்டாள். -
இவர்களுடைய காதல் யாழ்ப்பாணத்தில் வேம் படியில் அரும்பியது. கணேசானந்தன் அப்பொழுது சென்ட்ரல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவனுடைய பள்ளி விட்டதோ இல்லையோ வேம்படி பள்ளி விடும் நேரமாகப் பார்த்து துடித்துக் கொண்டு சைக்கிளிலே பாய்ந்து போய்விடுவான். மணிக்கூட்டு வீதி வழியாக அவன் வேகமாக மிதிக்கவும் அவள் வர வும் நேரம் சரியாக இருக்கும். வெள்ளை மலரை அள்ளி வீசியதுபோல வெள்ளைச் சீருடை தேவதை யர்கள் வந்து கொண்டிருப்பார்கள். அவர்களிலே இவள்தான் உயரம். வாழைத்தார் போல திரண்டி ருக்கும் கூந்தலை இரட்டைச் சடையாகப் போட்டி ருப்பாள். அவளுடைய விசேஷம் கண்கள்தான். சஞ் சலப்படும் கண்கள் என்று சொல்வார்களே, அப்படி ஒரு நிலையில் நில்லாத கண்கள். நிமிர்ந்து ஒருமுறை கண்ணை வீசிவிட்டு போய்விடுவாள். அந்தக் காலத் திலேயே விடாமுயற்சிக்கு பேர் போனவன் கனேசா னந்தன். ஒரு வருட காலம் இப்படித்தான் கண்ணி லேயே செலவழிந்தது.
புட்டுக்கு தேங்காய் போட்டதுபோல விட்டு விட்டு தொடர்ந்த பெருமை கொண்டது இவர்கள் காதல். பல்கலைக் கழகத்தில் இவன் படிக்கப் போன பின்பு காதல் தொடர வழியின்றி தேங்கிவிட்டது.
anj-10 v

Page 81
138 0 முழுவிலக்கு
படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டி ருந்த சமயம்தான் மறுபடி அவளுடைய தரிசனம் கிடைத்தது. கிடுகிடுவென்று வளர்ந்து விட்டாள். கண்கள் முகத்தில் சரிபாதியை அடைத்துக் கொண்டு கிடந்தன. முதல்முறையாக அவளுடன் பேசினான். இரண்டு முறை பல்கலைக் கழக தேர்வு எழுதியும் சரி வரவில்லையாம். பெற்றோருக்கு மாத்தறைக்கு வேலை மாற்றம் கிடைத்தபடியால் கொழும்பு விடுதி ஒன்றில தங்கி கம்புயூட்டர் படிக்கிறாளாம். கம்புயூட் டர் ஒரு பாஷனாக இருந்த காலம் அது.
அந்த நாலு வருடங்கள் கணேசானந்தனுக்கு நிரந்தரமான வேலையில்லை. தொட்டு தொட்டு தற் காலிகமாக நிறைய வேலைகள் பார்த்தான். சங்கீதா ஒரு வங்கியிலே வேலைக்கு சேர்ந்து விட்டாள். அந்த சமயம்தான் அவனுக்கு ஒரு நண்பனின் உதவியால் ஆபிரிக்காவில ஒரு வாத்தியார் உத்தியோகம் கிடைத் தது. மூன்று வருட ஒப்பந்தம். நல்ல சம்பளம், சங்கீதாவிடம் தன் காதலை வெளியிடமுன் நிலை யான ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்ற அவன் பிரார்த்தனை நிறைவேறி விட்டது.
புறப்படுமுன் இவன் போய் சங்கீதாவிடம் விடை பெற்றது ஒரு சுவையான சம்பவம். அதை எத்த னையோ தடவை தனிமையில் நினைத்து நினைத்து அனுபவித்திருக்கிறான். விடுதியிலே இவன் போய் கீழே அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான். மேல் வீட்டிலிருந்து படிகளிலே குதித்து குதித்து அவள் சுபாவப்படி இறங்கி வந்தாள், தேவதை ஒன்று வானுலகில் இருந்து இறங்குவது போல. இவன் இருப் பதை அவள் காணவில்லை. கீழே இருந்த ஒரு நிலைக் கண்ணாடியின் முன் இளைக்க இளைக்க ஒரு செகண்ட் நின்று தலைமுடியை சரி செய்து கொண்

அ. முத்துலிங்கம் 0 139 டாள்; இமையை நீவி விட்டாள். திரும்பியவள் இவ னைக் கண்டு வெட்கித்துப் போனாள்.
ஒரு பெண் ஒருவனுக்காக தன்னை செம்மைப் படுத்துகிறாள் என்ற நினைவு அவனுக்கு எவ்வளவு களிப்பூட்டும்! அன்று தனிமையில் இருவரும் நெடு நேரம் கதைத்துக் கொண்டு இருந்தார்கள். அடுத்த நாள் அவன் வெளிநாடு போவதாக இருந்தான். அன்று எப்படியும் தன் காதல் மாரிகையின் மேல் கத வைத் தட்டுவது என்ற தீர்மானத்தோடுதான் அவன் வந்திருந்தான். மனத்தில் துணிவு இருந்த அளவுக்கு கையில் பலமில்லை. கடைசியில் பிரியும் சமயத்தில், மைமலான அந்த மழை நாளில் ஒரு மூலையில் அவளை தள்ளிக் கொண்டு போய் வைத்து, உத்தேச மாக அவள் இதழ்களை தேடி ஒரு முத்தம் பதித்துவிட் டான். பெட்டைக்கோழி செட்டைகளைப் படபட வென்று அடிப்பதுபோல் அவள் இரண்டுகைகளாலும் அவன் கழுத்தைக கட்டி உதறினாள். அவள் தள்ளி னாளா அல்லது அணைத்தாளா என்பது கடைசி வரை அவனுக்கு தெரியவில்லை.
பிளேனில் பறக்கும்போது அவளுடைய சிந்தனை யாகவே இருந்த்ான். விமானத்தில் யேர்சித்து வைத்து பதில் எழுதும்படி அவள் ஒரு விடுகதையும் சொல்லி யிருந்தாள். அவர்களுடைய காதலுக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கிறதாம்.
‘ஒரு மரம், ஆனால் இரண்டு பூ அந்த மரம் என்ன? பூ என்ன?"
இவனும் யோசித்து, யோசித்து பார்த்தான்; புரிபட வில்லை. பன்னிரெண்டு வருடம் அவனைக் காக்க வைத்துவிட்டுத்தான் விடையைக் கூறினாள்.

Page 82
'மரம்: தென்னை மரம். பூ தென்னம்பூ, தேங்காய்பூ"
அவன் ஆபிரிக்கா போன பிறகு அவர்கள் காதல் வலுப்பெற்றது கடிதங்கள் மூலமாகத்தான். துணிந்து இவன் தன் காதலை பிரகடனப்படுத்தினான். மூன்று வருட ஒப்பந்தக் காலம் முடிந்து இரண்டு மாத விடுப் பில் வந்தபோது எப்படியும் அவளை மணமுடித்து தன்னுடன் அழைத்துப்போவது என்றுதான் வந்திருந் தான். அந்தச சமயத்திலேதான் அவன் தன் வாழ் நாளிலேயே மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய தவறு செய்ய நேரிட்டது.
இவனுக்கென்று கலியாணம் பேச பெரிசாய் ஒரு வரும் அங்கே இல்லை. சங்கீதாவின் தகப்பனார் சபாபதி நல்ல மனுஷன். தாயும், தகப்பனும் பரிபூரண சம்மதத்தை தந்துவிட்டனர். ஒரே மகளை பிரிந்திருப் பது கஷ்டம்தான்; ஆனால் அவர்கள் அதைத் தாங்கு வதற்கும் சித்தமாக இருந்தனர். மடைத்தனமாக காலை இழுத்தது கணேசானந்தன்தான்.
பத்து மணியளவில் இவனை உள்ளே கூப்பிட் டார் அதிகாரி. ஜன்னல்கள் கண்டுபிடிக்கமுன் கட்டிய சுட்டிடம் அது. அதைக் கட்டிய கொத்தனாருக்கும் சூரியனுக்கும் ஜென்மப் பகை, கன்னங்கரேலென்று கதிரையை நிறைத்து இருந்த அதிகாரியைப் பார்ப் பதற்கு கண்களைப் பழக்கப்படுத்த சிறிது நேரம் எடுத்தது. முரசு தெரிய பளிச்சென்று பற்களைக் காட்டி சிரித்தார். முகம் சிநேகமாக இருந்தாலும் கண்கள் தீர்க்கமாக கணக்குப் போட்டபடியே
இருந்தன,
இந்த அதிகாரியை இதற்கு முன்பும் பல தடவை பார்த்திருக்கிறான்; இருவரும் தங்கள் சேம நலன்

அ. முத்துலிங்கம் a *1
களை "ஹவ்தி பொடி, பொடி பைன், குஸே, குலே', 'ஹவ்தி பொடி, பொடி பைன், குஸே, குஸே" st sign திருப்பித் திருப்பி சொல்லி விசாரித்துக் கொண்டார் கள். இந்த சேம விசாரிப்பு ஐந்து நிமிடங்கள் வரை
தொடர்ந்தது. "உங்களுடைய நலம் எப்படி?’. ‘பெற்றோர் நலம் எப்படி?’, ‘மனைவி நலம் எப்படி?’, 'பிள்ளைகள் நலம் எப்படி?’, 'பக்கத்து
வீட்டுக்காரர் எப்படி?’ என்று இந்த நலன் விசாரிப்பு கள் எட்டு முழ வேட்டிபோல முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும்.
அதிகாரி கோப்பிலே ஒரு சிறிய சிக்கல் இருக் கிறது என்றும் அதற்கு தான் விரைவிலேயே சட்ட விலக்கு அளிப்பதாகவும் நிரந்தர குடியுரிமை இரண்டே மாதத்தில் கிடைத்துவிடும் என்றும் உறுதி கூறினார்.
கணேசானந்தன் வீட்டுக்கு வந்து நடந்த விப ரத்தை மனைவியிடம் கூறினான். அவளுக்கும் சப் பென்று ஆகிவிட்டது. இந்த முறை கட்டாயம் கிடைக்கும் என்று அவள் மிக்க எதிர்பார்ப்போடு இருந்தாள்.
அன்றிரவு சங்கீதா ஸ்வூவ்வூவும், ஒக்ரா சூப்பும்" செய்திருந்தாள். இந்த இரண்டு வருடத்திலே அவள் ஆபிரிக்கச் சாப்ப்ாட்டு முறைகளை ஒரு ஆவேசத் துடன் கற்றுத் தேர்ந்து விட்டாள். அவள் ஒரு காரணம் வைத்திருந்தாள். ஆபிரிக்காவிலேயே நிரந் தர பிரஜையாக தங்கிவிடுவது என்று முடிவெடுத்த பிறகு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக் கிரம் அவர்களுடைய பழக்கவழக்கங்கள், சாப்பாடு, கலாச்சாரத்துடன் ஒன்றிவிட வேண்டும் என்பது அவள் வாதம். 'உங்களுடைய தேசத்து பழக்கவழக் கங்கள் அவ்வளவு உயர்ந்ததென்றால் ஏன் நாடு

Page 83
142 0 முழுவிலக்கு
விட்டு நாடு வந்தீர்கள்?’ என்பதுதான் அவளுடைய கேள்வி.
*வ்வூவ்வூ" என்பது யாழ்ப்பாணத்து களிமாதிரி. ஆனால் பத்து மடங்கு பவர் கூட. விஷயம் தெரியாத வர்கள் அவசரப்பட்டு ஒரு விள்ளல் எடுத்து வாயிலே போட்டால் அது தொண்டைக் குழியிலே போய் அங்கேயே தங்கிவிடும். கீழுக்கும் இறங்காது, மேலுக் கும் போகாது. அது வயிற்றில் போய் சேர்வதற்கிடை யில் உயிர் பிரிந்து விடும். இதற்கென்று பிரத்தியேக மான ஒரு சூப். அதுதான் ஒக்ரா சூப்; வழுவழு வென்று இருக்கும். வ்வூவ்வூவை எடுத்து இந்த சூப்பில் தோய்த்து வாயில் போட்டால் அது அப் படியே நழுவிக் கொண்டு போய் வயிற்றிலே விழுந்து விடும்.
தொடக்கத்தில் இது நல்லாகத்தான் இருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் சாப்பிட முடியுமா? தேவாமிர்தமென்றாலும் ஒரு நாளைக்கு அலுக்கத் தானே செய்யும். ஒரு நாள் இவன் நாக்சிலே சனி. "மெய்யே, ஒரு நாளைக்கு புட்டு செய்யுமென் கன நாள் சாப்பிட்டு' என்று சொல்லி விட்டான். அவ ளுக்கு அது பிடிக்கவில்லை. வெஞ்சினம் கொண்ட வேங்கைபோல சீறினாள். 'உங்களுக்கு புட்டும், முசுட்டை இலை வறையும், விளை மீனும், பலாப்பழ மும் வேணுமெண்டால் என்னத்துக்கு சிலோனை விட்டு வெளிக்கிட்ட நீங்கள். அங்கைபோய் அடி வாங்கிக் கொண்டு குசாலாய் இருக்க வேண்டியது தானே? இது எங்களுக்கு தஞ்சம் கொடுத்த நாடு. இவர்களுடைய சாப்பாடுதான் இனிமேல் எங்களு டைய சாப்பாடு' என்று அடித்துக் கூறிவிட்டாள். 'அந்தச் சிவபிரானே கேவலம் உதிர்ந்த புட்டுக்காக மண் சுமந்து அரிமர்த்தன பாண்டியனிடம் பொற்

அ. முத்துலிங்கம் 0 143
பிரம்படி வாங்கினானே! இங்கே நான் கேவலம் சொற் பிரம்படி தானே பெற்றேன்?" என்று மல்லாக் காக படுத்து மனதை தேற்றிக்கொண்டான். அதற்குப் பிறகு கணேசானந்தனுக்கு புட்டு சாப்பிடும் ஆசையே வேரோடு போய் விட்டது.
புட்டும், தேங்காய்ப்பூவும் போன்ற அவனுடைய காதல் வாழ்க்கை இப்படித்தான் எட்டு வருடங்கள் தேங்காய்ப்பூவாக தேய்ந்து போயிற்று. இரண்டா வது ஒப்பந்தத்தை ஏற்றுவிட்டு கணேசானந்தன் பயணச்சீட்டும், விசாவும் ஒழுங்கு பண்ணிய பிறகு தான் அந்த இடி வந்து விழுந்தது. இவள் தன்னை மறந்து விடும்படியும் தனக்கு கலியாணமே வேண்டா மென்றும் எழுதி விட்டாள். எண்பத்திமூன்று கல வரத்தில் சபாபதி அநியாயமாக மனைவியைப் பறி கொடுத்து விட்டார். அதிலிருந்து புத்தி பேதலித்தவர் போல புசத்திக் கொண்டு திரிந்தார். சங்கீதாவால் அவரை அந்த நிலையில் தனித்து விட்டு விட்டு வர முடியவில்லை. எந்தப் பெண்தான் அப்படி பெற்ற தகப்பனை நிர்க்கதியாக விட்டு வர சம்மதிப்பாள்?
சங்கீதா நக்கீரர் பரம்பரையைச் சேர்ந்தவள் என்பதை முதல் தடவையாக கணேசானந்தன் உணர்ந்தது அப்போதுதான். அவளில் அவன் உயிரையே வைத்திருந்தான். அவளும் அப்படித்தான். ஆனால் அவளுடைய பிடிவாத குணம்தான் அவனால் நம்பமுடியாததாக இருந்தது. அந்த எட்டு வருடங் களும் அவளை அசைக்க முடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவளுடைய தகப்பனார் இறந்தபோதுதான் கண்ணிரில் தோய்த்து ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அப்பொழுதுதான் முதன்முறையாக அவனுக்கு அவளுடைய காதலின் ஆழம் தெரிந்தது.

Page 84
144 0 முழுவிலக்கு
குடியுரிமைக்கும், பிள்ளை பெற்றுக்கொள்வதற் கும் என்ன சம்பந்தம்? இப்படி பிடிவாதமாக இருக்கி றாளே? குழந்தைகள் என்றால் அவளுக்கு உயிர். நேரம் போவது தெரியாமல் விளையாடிக்கொண்டி ருப்பாள். ஆனால் குடியுரிமை கிடைப்பதற்கிடையில் கருத்தரிக்காமல் இருக்கவேண்டும் என்பதில் எதற்காக இவ்வளவு எச்சரிக்கை? 'பன்னிரெண்டு வருடங்கள் பாழாகிவிட்டதே' என்ற யோசனைகூட இல்லையா அவளுக்கு? என்ன படிவாதம்?
மீன்காரி ஒருத்தி அவர்கள் வீட்டுக்கு வாடிக்கை யாக வந்துபோவாள். தொடை சைஸ் ‘கூட்டா' மீன்களை கூடையிலே வைத்து தூக்கிக்கொண்டு ஒயிலாக நடந்து வருவாள். தலையிலே வைத்த கூடையை கையாலே பிடித்துக்கொண்டு வரும் பழக்க மெல்லாம் அங்கே கிடையாது. கரகாட்டக்காரனு டைய கரகம்போல கூடை தலையிலே ஒட்டிவைத்தது போல இருக்கும். இப்படி மீன்காரிகள், நாப்பது
லா கூடையை தலையில் சுமந்தபடி, மடித்த வில்லுக்கத்தியை நிமித்தியது போன்ற முதுகிலே ஒரு குழந்தையையும் கட்டிக்கொண்டு, ‘கை வீசம்மா கை வீசு" என்று இரண்டு கைகளையும் வீசிக் கொண்டு, ஆபிரிக்காவின் சிவப்பு மண் புழுதியை கிளப்பியபடி, பரந்து விரிந்த டம்ளா மரங்களின் நிழலை ஆற அமர அநுபவித்தபடி வரும் இந்த அதிசயத்தை உலகத்திலேயே ஆபிரிக்காவில் மட்டும் தான் பார்க்கலாம்.
கூட்டா மீன் குழம்பு நல்ல ருசியாக இருக்கும். பெரிய பெரிய துண்டங்களாக வெட்டித்தான் அதை குழம்பு வைப்பார்கள். ஆபிரிக்காவில் ஒரு மிளகாய் இருக்கிறது. பெயர் "ஸ்மோல்பெப்பே. உருண்டை யாக, சிவப்பாக பார்த்தால் வெகு சாதுவாக இருக்

அ. முத்துலிங்கம் 0 145
கும். காரம் நாலரைக்கட்டைக்கு தூக்கும். "பாம்" எண்ணெயோ ரத்தச் சிவப்பாக இருக்கும். பதமாக வெட்டிய மரவள்ளி இலையையும், மீன் துண்டங் களையும் இந்த எண்ணெயில் மிதக்கவிட்டு, மிள காயையும் வதக்கிப்போட்டு, கொறுக்காப்புளியும் சேர்த்து, ஒரு குழம்பு வைத்தால் அந்த வாசனையே ஊரைக் கூட்டிவிடும்.
சங்கீதாவுக்கு மீன் என்றால் பிடிக்கும்; அதிலும் மீன்காரியுடன் போம் பேசுவது இன்னொரு சுவை யான விஷயம். பேரம் என்றால் சங்கீதத்தில் வரும் நிரவல் போல சூடுபிடித்துக் கொண்டே போகும். அடிமட்ட விலை தரைதட்டியவுடன் மீன்காரி ஆத்தா மல் "யூ லவ்மீ’ என்று ஒலமிடுவாள். அவளுடைய பாஷையில் 'நீ என்னைக் காதலிக்கிறாயல்லவா! இப்படி என்னை படுத்தலாமா?" என்று பொருள். அப்படி அவள் சரணாகதி அடைந்த பிறகுதான் பேரம் முடிவுபெறும் ,
சங்கீதா மீன்காரிக்கு யூலவ்மீ" என்றே பெயர்
வைத்துவிட்டாள். இவர்களுடைய மீன் பேரச் சண்டையை ஆர்வத்தோடு அவதானித்தபடி இருக்கும் அவள் முதுகோடு ஒட்டிக்கொண்டிருக்கும் குழந்தை. அது சிணுங்கி சங்கீதா கண்டதில்லை. கன்னங்கரேல் என்று உருண்டையாக இருக்கும். இரண்டு கண்களும் இரண்டு வெள்ளி மணிகள்போல மினுங்கும். சங்கீதா அந்தக் குழந்தைக்கும் ஒரு பெயர் வைத்திருந்தாள். கரிக்குருவி.
கணேசானந்தன் பள்ளியில் இருந்து வந்ததும் சங்கீதா படபடவென்று வாய்ப்பாடு ஒப்பிப்பது போல அன்றையச் சங்கதிகளைச் சொல்லுவாள். அதிலே கரிக்குருவியைப் பற்றியும் ஒரு அத்தியாயம்

Page 85
146 0 முழுவிலக்கு
கட்டாயம் இருக்கும். அப்பொழுதெல்லாம் கணேசானந்தன், "இப்படி குழந்தைமேலே ஆசை யுள்ளவள் எப்படித்தான் இந்த விஷயத்தில் மட்டும் இவ்வளவு உஷாராக இருக்கிறாளோ! என்று நினைத்துக் கொள்வான்.
கரிக்குருவி உண்மையிலேயே யூலவ்மீயின் குழந்தையல்ல; அவளுடைய தங்கை ஒனைஸாவின் பிள்ளை, ஒனைஸாவுக்கு வயது பதினைந்துதான்; ஒட்டு மாங்கன்று போல இருப்பாள்; இன்னும் பள்ளி யிலே படிக்கிறாள். பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் "மன்ஸாரே என்ற மன்மதனின் மோகத்தில் விழுந்து அவனுடன் சரசமாடி செய்து கொண்ட கந்தர்வ திருமணத்தின் பெறுபேறுதான் கரிக்குருவி. கரிக்குருவி பிறந்தபோது ஒனைஸாவின் பெற்றோர்களுக்கு அளவற்ற சந்தோசமாம்.
களவாய்ப் போட்ட சீட்டுக்காசைத் தைலாப் பெட்டியில் வைத்து காப்பதுபோல விரதம் காக்கும் கற்புக்கரசிகளை ஆபிரிக்காவில் காணமுடியாது. ஒரு பெண் பருவமடைந்ததும் எவ்வளவு சீக்கிரம் முடி யுமோ அவ்வளவு சீக்கிரம் அவள் தன் கருவளத்தை உலகுக்கு காட்டிவிட வேண்டும். ஒருபிள்ளை பெற்று விட்டால் அவள் அந்தஸ்து உயர்ந்துவிடும். அவளை முடிப்பதற்கு ஆடவர்கள் போட்டி போடுவார்கள். ஒரு பெண்ணின் உண்மையான விலைமதிப்பு அவளு டைய பிள்ளை பெறும் தகுதியை வைத்துத்தான் அங்கே நிர்ணயிக்கப்படுகிறது.
அது ஒரு பெண்வழிச் சமுதாயமானபடியால் அங்கேயெல்லாம் ஒரு ஆணைப்பார்த்து "உனக்கு எத்தனை பிள்ளைகள்?’ என்று மறத்து போயும் கேட்கக்கூடாது. அடிக்க வந்து விடுவார்கள். அவர்

அ. முத்துலிங்கம் 0 147
களுக்கே அது தெரியாது. கணேசானந்தன் படிப்பிக் கும் பள்ளியிலே இப்படித்தான் அடிக்கடி பெண் பிள்ளைகள் மூன்று, நான்கு மாசங்களுக்கு மறைந்து விடுவார்கள். கேட்டால் "பிரசவம்" என்று வெகு சாதாரணமாக சொல்லிவிட்டு இவன் தலையைக் குனிவதைப் பார்த்து சிரிப்பார்கள்.
ஆனால் யூலவ்மீக்கு ஏற்கனவே ஏழு பிள்ளைகள், அவளுக்கு கரிக்குருவியும் வந்து சேர்ந்ததில் கொஞ்சம் கஷ்டம்தான். "யாராவது இந்தப் பிள்ளையை கேட் டால் கொடுத்துவிடுவேன்’ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தாள். அவளுடைய தங்கை படிப்பை முடிக்கும்வரை கரிக்குருவியை யூலவ்மீதான் வளர்த் தெடுக்க வேண்டுமாம்.
கணேசானந்தன் தன் மனைவிக்கும் ஆசிரியையாக ஒரு சிறிய பள்ளியிலே வேலை பிடித்துக்கொடுத்திருந் தான். வங்கியிலே வேலை செய்தவள் இப்படி வந்து ஒரு ஒட்டைப் பள்ளியிலே வேலை பார்க்கவேண்டி வந்துவிட்டதே என்று இவனுக்கு ஆதங்கம்தான். ஆனால் சங்கீதா மிகவும் மகிழ்ச்சியுடனேதான் அந்த வேலையை ஏற்றுக்கொண்டாள். இவளுடைய பாடங்கள் சுகாதாரமும், ஆங்கிலமும், அந்தச் சின்னச் சின்ன முகங்களை பார்த்துக்கொண்டே பாடம் சொல்லிக் கொடுப்பதில் தான் பட்ட கஷ்டங் களை எல்லாம் மறந்துவிடுவாள். பள்ளி முடிந்ததும் இந்தப் பாலர்களெல்லாம் தங்கள் தங்கள் கதிரை களைத்தூக்கி தலைமேல் வைத்துக்கொண்டு, புத்தகங் களையும் முதுகில் கட்டியபடி, சிட்டுக்கள் போல கூவிககொண்டு வீட்டுக்கு பறந்து போகும்போது இவள் வயிற்றை என்னவோ செய்யும்.
கணேசானந்தன் திருநீலகண்ட நாயனாருடைய திண்டாட்டத்தில் இருந்தான். பரத்தையிடம் இவர்

Page 86
148 ) முழுவிலக்கு
போய் வந்தது தெரிந்ததும் ‘எம்மைத் தொடாதீர்; திருநீலகண்டம்மீது ஆணை’ என்று சாபம் இட்டுவிட் டாள் மனைவி. கணேசானந்தன என்ன நாயனாரா தொடாமல் இருக்க? பன்னிரெண்டு வருடம் காத் திருந்து அடைந்த மனைவியை பக்கத்திலே வைத்துக் கொண்டு பிரம்மச்சரியம் கடைப்பிடிப்பது எவ்வளவு கொடுரம்?
குடிவரவு அலுவலகத்து பதிகம் அதிகாரி கூறியது போல இரண்டு மாதத்திலேயே குடியுரிமை பத்திரம் கிடைத்து விட்டது. திருவானைக்காவில் பாடிய வுடன் கோயில் கதவு திறந்து கொண்டது அல்லவா? குடியுரிமைச் சீட்டு இவன் கையிலே இருந்தது. இனி மேல் எந்தக் கதவுதான் அவனுக்கு சாத்தியருக்கும்? இரண்டு வருடங்கள் இப்படியாக அநியாயமாகப் பலி போய் விட்டதே! அவை எப்படிப்பட்ட மகத்தான இரண்டு வருடங்கள் என்பதை பின்னாலேதான் கணேசானந்தன் உணர்ந்து கொள்வான்.
திருவானைக்காவுக்கு டிக்கெட் கிடைத்ததும் கணேசானந்தன் முற்றிலும் மாறிவிட்டான். 'அடையா நெடுங்கதவையே ஜபித்துக் கொண்டிருந் தான். ஒரே நினைப்புதான். மற்றதெல்லாம் மறந்து விட்டான். பள்ளிக்கூடத்தை மறந்தான்; பிள்ளை களை மறந்தான்; ஹிஸ்டரி பாடத்தை மறந்தான். இராவணனுடைய நிலைதான் அவனுக்கும்.
கேரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து
நின்றான் உரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான்
வெற்றி
அரணையும் கொண்ட காமன் அம்பினால்,
முன்னைப்பெற்ற வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை
மறந்திலாதான்?

4N • முத்துலிங்கம் 149
கம்பரைப் படிக்காத ஆபிரிக்கப் பிரின்ஸிபாலுக்கு இது எல்லாம் எங்கே விளங்கப் போகிறது? பள்ளிக் கூடம்விட்டதும் கணேசானந்தன்கோடடித்ததுபோல நேராக வீட்டுக்கு ஓடியதன் மர்மம் அவருக்கு புரிய வில்லை. ஒருமுறை அவசரமாக நேர அட்டவணை போட வேண்டியிருந்தது. இவன் கவலைப்படாமல் வீட்டுக்கு ஓடிவிட்டான். நேர அட்டவணை போடு வதில் கணேசானந்தனை அடிக்க ஆளில்லை. இந்த திறமையை வைத்துத்தான் அவன் கடகட வென்று ஆபிரிக்காவில் முன்னுக்கு வந்தவன். இவனுடைய பிரின்ஸிபாலுக்கு, இந்த ஒரு விஷயம் மாத்திரம் SL-IT g). India man has magic at air ill pit did, ty. சொல்லிக் கொளவார். ஒருமுறை அவர் அட்டவணை போட்ட விண்ணாணத்தை இப்பவும் சொல்லிச் சொல்லி சிரிப்பார்கள். அந்த அட்டவணையின்படி ஒரு கிளாஸில் மூன்று வாத்திமார்கள் ஒரே சமயத்தில் படிப்பிக்க வந்துவிட்டார்களாம். அதை கணேசானந் தன்தான் பிறகு ஒருமாதிரி சரிக் கட்டினானாம்.
கணேசானந்தனின் பிரயாசை கடைசியில் ஒரு நாள் பலித்தது. ஆறே மாத காலத்தில் சங்கீதாவிடம் அவன் ஆவலுடன் எதிர்பார்த்த மாற்றம் தெரியத் தொடங்கியது. முன்பு விரும்பிச் சாப்பிட்டதெல்லா வற்றையும் இப்ப தூக்கி எறிந்தாள். மீன்குழம்பு என் றால் பிடிப்பதில்லை; யூலவ்மீயை தூரத்தில் பார்த் தாலே ஒடி ஒழிந்து கொள்வாள்.
ஒரு நல்ல நாளில் தன் மனைவியைக் கூட்டிக் கொண்டு நர்ஸிங்ஹோமுக்கு "செக்கப்பிற்கு" போனான் கணேசானந்தன். பிரசவத்தை அங்கேயே வைப்பதென்று நினைத்திருந்தான். ஆபிரிக்காவில் வசதிகள் அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. வெளிநாடுகளில் படித்த டாக்டர்களும்,

Page 87
150 0 முழுவிலக்கு
நர் ஸ்மார்களும்தான் அங்கே வேலை செய்தார்கள். ஆனாலும், 'போதிய உபகரணங்களும், மருந்துகளும் இல்லாவிட்டால்?" என்ற கவலை அவனுக்கிருந்தது.
சங்கீதா இவன் பக்கத்தில் இருந்து நெளிந்தாள். இவன் திரும்பிப் பார்த்தான். இவனுக்காகப் பன்னி ரெண்டு வருடங்கள் தவம் செய்தவளல்லவா? எந்தப் பெண்தான் இப்படியான தியாகத்தை செய்ய முன் வருவாள்? நினைக்கும்போதெல்லாம் இவனுக்கு அவழிமல் அன்பு சுரந்தது.
மெய்கண்டான் கலண்டர் பொய் சொல்லாது. இப்ப அவளுக்கு மூன்று மாதம் தள்ளிப்போய் விட்டது. அடிக்கடி வாந்தி வேறு வருகிறது என் கிறாள். மாங்காய் பிஞ்சையும், "கோலா தட்டையும்’ ஆர்வத்தோடு சப்பியபடியே இருக்கிறாள். நடக்க அவளுக்குத் தெரியாது. துள்ளித்தான் திரிவாள்; இப் போது அடிக்கடி சோர்ந்துபோய் காணப்படுகிறாள்; 'தூக்கம் வருவதில்லை; தலை சுற்றி மயக்கம் வரு கிறது" என்று சொல்கிறாள். பாடசாலைக்கு கூட இரண்டு நாளாக போகவில்லை.
அவளுடைய வயிற்றை பார்த்தான். அதுஆலிலை அளவுக்கு சிறுத்து வழுவழென்று இருந்தது. இந்தச் சிறிய வயிற்றிலிருந்து எப்படி இன்னொரு உயிர் வரும்? சடையைப் பார்த்தான். அது எப்போதும் போல் இப்பவும் கருநாகமாக கைப்பிடிக்குள் அடங் காமல் இருந்தது. காதோர மயிர் கற்றைகளை ஆபரிக்கர்கள் செய்வதுபோல எலிவாலாகப் பின்னி நுனியில் நீளமாக மணிகள் கோத்து கட்டியிருந்தாள். அதுவும் பார்க்க ஒரு அழகாகத்தான் இருந்தது. குனிந்து அவள் காதருகே "உம்மைப் பார்க்க ஒரு சின்னப் ப்ெட்டைபோல இருக்கு' என்று கண்ணைச்

அ. முத்துலிங்கம் 0 15
சிமிட்டிக் கொண்டு சொன்னான். அவள் கீழ் கண் ணால் பார்த்தபடி தலையை வெடுக்கென்று திருப்ப அந்த மணிகள் கிணுகினுவென்று ஆடின.
அந்த நேரம் பார்த்து டாக்டர் கையிலே கன ரிப்போர்டுகளுடன் அவசரமாக வந்தார். கணேசா னந்தன் எதிர்பார்த்ததுபோல 'கன்கிராட்ஜு லேசன்ஸ்" என்று அவர் கூறவில்லை. சிறிது நேரம் இவர்களையே பார்த்தபடி இருந்தார். பிறகு மறுபடி யும் ரிப்போர்டுகளை சரிபார்த்துக் கொண்டார். இன் னொரு முறை இவர்கள் முகத்தை நோக்கி யோசித்த படியே மெதுவாக 'நீங்கள் எதிர்பார்ப்பதுபோல இல்லை’ என்றார். கணேசானந்தன் அதிர்ச்சியடைந் தவனாக "என்ன? கர்ப்பம் இல்லை என்றால் வேறு ஏதாவது வருத்தமா?' என்றான்.
அவர் சிறிது மெளனம் சாதித்துவிட்டு 'இல்லை, இல்லை உங்கள் மனைவிக்கு மாதவிடாய் முற்றிலும் நின்றுவிட்டது, அதாவது menopause’ என்றார்.
விக்கித்துப்போய் இவர்கள் ஆளையாள் un rrë துக் கொண்டார்கள். ‘என்ன டாக்டர், உண்மை யாகவா? என் மனைவிக்கு 39 வயதுதான் ஆகிறது" என்றான்.
'ஆசியப் பெண்களுக்கு பொதுவாக 40-45 வயதி லேயே முழுவிலக்கு வந்து விடுகிறது. அவர்கள் பூப்பெய்திய காலத்திலிருந்து அநேகமாக முப்பது வருடங்கள் கருவளம் தொடரும். உங்கள். மனைவி எத்தனையாவது வயதில் பருவமடைந்தார்?" சான்றார். . . .
கணேசானந்தன் தன் மனைவியைப் பார்த்தான். அவள் கண்களிலே இப்போது நீர் கட்டிவிட்டது. ச்ன்னமான குரலில் 'பத்து' என்றாள்.

Page 88
132 ) முழுவிலக்கு
"அதுதான் சொன்னேன், முப்பது வருடங்கள் உங்கள் மனைவி கருவளம் உள்ளவராக இருந்திருக் கிறார். இனிமேல் கருத்தரிக்கும் சாத்தியக் கூறு இல்லை' என்றார் டாக்டர்.
முதன்முறையாக அவன் மனைவி டாக்டரிடம் பேசினாள். ‘இதற்கு மருந்துகள் ஒன்றும் இல்லையா, டாக்டர்? நாங்கள் மணம்முடித்து இரண்டே வருடங் கள்தான் ஆகின்றன.'
அப்பொழுது டாக்டர் சொன்னார்: "இதற்கு மருந்துகளே இல்லை, அம்மா. ஒரு பெண் பிறக்கும் போதே அவளுக்கு எத்தனை கருமுட்டைகள் என்று அவளுடைய கர்ப்பப் பையில் நிர்ணயிக்கப்பட்டு விடு கிறது. என்னதான் தலைகீழாக நின்றாலும் அதை மாற்ற முடியாது.'
அவனால் தன் மனைவியன் முகத்தை பார்க்கவே முடியவில்லை. திரும்பி வரும்போது வழிநெடுக விம் மிக்கொண்டே வந்தாள். திடீரென்று அவள் அரற்றி னாள்: ‘ஐயோ! பிரம்மா எல்லாருக்கும் தலையிலே எழுதுவான்; எனக்கு மட்டும் கர்ப்பப் பையில் எழுதி விட்டானே!' என்று இரண்டு கைகளையும் தலை யிலே வைத்து கோவென்று கதறினாள்.
ஒரு நாள் கணேசானந்தன் நித்திரையாய் இருந்த போது இவள் அவனை உலுக்கி எழுப்பினாள். அவன் எழும்பி பார்த்தபோது இவள் தலைவிரி கோலமாக அழுதபடி இருந்தாள். 'பன்னிரெண்டு வருடங்களாக படித்தேன்; பரீட்சை எழுதவில்லையே! பன்னி ரெண்டு வருடங்களாக சமைத்தேன்; சாப்பிடவில் லையே! நான் என்ன செய்ய?’ என்று தலையிலே அடிக்கத் தொடங்கி விட்டாள்.

அ. முத்துலிங்கம் 0 153
இப்படி அடிக்கடி இவள் தலையிலே அடிக்கத் தொடங்கியதும் கணேசானந்தனுக்கு என்ன செய்வ தென்று தெரியவில்லை. 'திடீர், திடீர் என்று சன்ன தம் வந்ததுபோல இவள் நடக்கிறாளே! இது சாதா ரண உடல் மாற்றம்; இதைப்போய் பெரிசு படுத்த லாமா? இப்படியே கட்டுக்கடங்காமல் போனால் டாக்டரிடம் போய் யோசனை கேட்க வேண்டியது தான்' என்று முடிவு செய்துகொண்டான்,
சில காலம் இப்படியே போய்விட்டது. அவள் பேருக்கு மறுபடியும் பள்ளிக்கூடம் போய் வரத் தொடங்கினாள். ஆனால் சிற்சில வேளைகளில் அவளுடைய நிலைகுத்திய பார்வையும், அசாதாரண மான செய்கையும் இவனைக்கூட அச்சப்பட வைத் தன.
ஒரு நாள் அதிகாலை மூன்று மணியிருக்கும். கணேசானந்தன் திடீர் என்று விழிப்பு வந்து எழுந் தான். பக்கத்திலே தடவிப் பார்த்தான். இவளைக் காணவில்லை. தேடிப்போன இவன் கண்ட காட்சி அதிர்ச்சி தருவதாக இருந்தது. சமையலறைக்கும், வரவேற்பறைக்கும் இடையில் உள்ள ஒடையில் இவள் சுவரிலே தலையைச் சாய்த்து உட்கார்ந்திருந் தாள். இவள் உடல் எல்லாம் வேர்த்து தெப்பமாகி யிருந்தது.
இவன் ஒன்றுமே பேசவில்லை. பக்கத்திலேபோய் அமர்ந்து கொண்டான். அவள் தலையை வருடி னான். சடுதியாக திரும்பி அவனைப் பார்த்து நெஞ்சு சட்டையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்: 'நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்? பன்னிரெண்டு வருடங்கள் எனக்காக காத்திருந்தீர்களே? இதற் காகத்தானா? உங்கள் பிள்ளையை என் வயிற்றில் சுமக்க வேண்டும் என்று தவம் செய்தேனே! என்
Gi-ll

Page 89
154 ) முழுவிலக்கு
அச்ட்டுப் பிடிவாதத்தினால் எல்லாத்தையும் இழந்து
விட்டேனே!" -
g, கண்ணைத் துடையும். ஏதோ உலகம்و، ،
கவிழ்ந்ததுபோல? இது என்ன?”
'குதிரை போனபின் லாயத்தைப் பூட்டி என்ன பயன்? நான் இப்பொழுது என்ன? பெண்ணா? இல்லை, ஆணா? அல்லது பேடியா? பெண்மை இல் லாத ஒரு பெண்ணை எப்படி அழைப்பது? இனி நான் ஒரு எண்ணிக்கைக்கு மாத்திரமே என்னால் ஒரு பிர யோசனமும் கிடையாது.'
'இது என்ன விசர்க் கதை? எல்லாருக்கும் வரு கிறதுதானே! சங்ககாலக் கணக்கின்படி இதுஏழாவது வாசல்; அதாவது பேரிளம்பெண்". இனிமேல்தான் வாழ்க்கையின் ருசியே தெரியப் போகிறது' என்றான் அவன், முகத்தில் வலுக்கட்டாயமாக வரவழைத்த புேன்சிரிப்புடன்.
'உங்களுக்கு எங்கே விளங்கப் போகுது? நீங்களும் ஒரு ஆண்தானே! இது கடவுள் எனக்குக் கொடுத்த தண்டனை. எனக்கு வேணும். கடவுளுடைய வரப் பிரசாதத்தை என் ஆணவத்தினால் வேண்டுமென்றே இரண்டு வருடங்கள் தள்ளி வைத்தேன். கருவளம் இருந்தபோது நான் அதை மதிக்கவில்லை. ஆபிரிக்கர் கள் அதை எப்படி போற்றுகிறார்கள்! இல்லாவிட் "ட்ால் எங்கள் நாட்டு சிறுமைகள் தாங்க முடியாமல் புகலிடம் ஒடி கேட்டு வந்த இந்த நாட்டில் எங்க ரூக்கு பிறக்கும் பிள்ளை முழு ஆபிரிக்கனாக இருக்க வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தேன். ஆனால் ஒன்றை மறந்து விட்டேனே?’’
“ ‘GTGTGOT?”

அ. முத்துலிங்கம் 0 155
“பிள்ளை பிறந்து ஆண் என்றால் அரவிந்தன்" என்றும் பெண் என்றால் "அபிராமி? என்றும் அகர வரிசையில் பேர் வைப்பதாக தீர்மானம் பண்ணி னோமே? அது எவ்வளவு பிழை? நாங்கள் மனத்தள வில் மாறவில்லையென்றுதானே அர்த்தம்.'
கணேசானந்தனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்ற வில்லை. அவள் சொல்வதில் ஞாயம் இருப்பதாகப் u l-gi. ' '
“பெண் எவ்வளவு கேவலமாகப் படைக்கப்பட்டி ருக்கிறாள். முதலில் பருவம் அடையும் தொல்லை; பிறகு மாதா மாதம் வரும் உபத்திரவம். கர்ப்பம் அடையும்போது ஒன்பது மாதம் அவள் பிள்ளையை சுமக்கிறாள். அதைத் தொடர்ந்து அவள் படும் பிரசவ வேதனை. ஆனால் இது எல்லாவற்றிலும் கேவலமானது அவளுக்கு ஏற்படும் பெண்மை நீக்கம் தான். இந்த அவஸ்தையெல்லாம் ஆணுக்கில் லையே!??
இப்படியான நேரங்களில் கணேசானந்தன் <ֆԱ! தல் கூற முயற்சிப்பதில்லை. அது வியர்த்தம். ஆற் றோட்டத்துடன்தான் போய் அடுத்த கரையை அடைய வேண்டும் என்பது அவன் சித்தாந்தம். ஆனால் அவனுடைய மனைவி கூறியது முற்றிலும் உண்மைதான் என்று அவனுக்குப் لاL--- نیj].6?(Uز பசுஞ் சோலை கருகி அவன் கண் முன்னே பாலைவனமாகிக் கொண்டிருந்தது; பருவத் தோப்பொன்று மூப்பை நோக்கி அடியெடுத்து வைத்தது. ஒளவையார் $ჯაღნ பெண் புலவரல்லவா? அவருக்குக் கூடவா இந்தக் கொடுமை தென்படவில்லை? ‘கொடிது, கொடிது வறுமை கொடிது? என்று தானே அவர் Llstiglarst si.

Page 90
156 0 முழுவிலக்கு
ஒரு பிராயத்திலே பெண்ணுக்கு ஏற்படும் இந்த அநீதி பற்றியல்லவா அவர் பாடியிருக்க வேண்டும்?
உள்ளிழுத்த தலையை ஆமை மெள்ள மெள்ள வெளியே விடுவதுபோல் சங்கீதாவும் மெதுவாக வெளியே வரலானாள். பள்ளிக்கு புதுத் தென்புடன் வந்து போனாள். தன் உடைகளிலும் ஒப்பனைகளி லும் முன்புபோல் கவனம் செலுத்தினாள். இடைக் கிடை அந்த வீட்டில் அவளுடைய குபிர் சிரிப்பு மறு படியும் ஒலிக்கத் தொடங்கியது.
கோப்பி என்றால் ஐரிஷ் கோப்பி, துருக்கி கோப்பி, இந்தியா கோப்பி என்று இப்படி பலவகை உண்டு. ஆனால் ‘முட்டை கோப்பி’ என்பது இந்த உலகத்திலேயே யாழ்ப்பாணத்தில்தான் அகப்படும். இந்த அதிகாலை வேளையில் கடந்த ஐந்து நிமிடங் களாக சங்கீதா அதைத்தான் போட்டு "இந்த அடி? அடித்துக் கொண்டிருந்தாள். தாய்மார்கள், சாமத் தியப்பட்ட பெண்களுக்கும், புதுமணப் பெண்கள் தங்கள் கணவன்மாருக்கும் தவறாமல் கொடுத்துவந்த பாரம்பரியமான காயகல்பம் இது. சங்கீதா இவ்வளவு கர்மசிரத்தையாக முட்டைக்கோப்பி டோடுவது அவ னுக்கு அதிசயமாயிருந்தது.
ஆனால் இதைவிட அதிசயம் அன்று பள்ளியிலி ருந்து திரும்பி வந்தபோது அவனுக்கு அங்கே காத்தி ருந்தது. அவன் வீட்டிலிருந்து ஓர் ஆபிரிக்கப்பாடல் மெல்லிய குரலில் ஒலித்தது.
ராலம் தாங் கீ
ரா ஆலம்
ரெல் பாபா கோட் தாங்கி
Gau" FF - G8 ur. 8

அ. முத்துலிங்கம் D 157
gCarr Gydb தாங் கி
‘கடவுளே நன்றி, என்னை மீட்டதற்கு நன்றி என்ற “கிறியோல் பாடலை முணுமுணுத்தபடி சங்கீதா சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டி ருந்தாள். அதிலே இன்னொரு விசேஷம், இவள் முது கிலே ஒட்டிக் கொண்டு லப்பாத் துணியினால் வரிந்து கட்டப்பட்டிருந்தது ஒரு ஆபிரிக்கக் குழந்தை, அது வேறு யாருமில்லை, கரிக்குருவிதான். கறுத்த உருண்டையான கண்கள் அதற்கு. அந்தக் கண்களை மலர்த்தி தலையை இரண்டு பக்கமும் ஆட்டி அசைந்து கொண்டிருந்தது. /...
சங்கீதா கால்களை தரையில் தேய்த்து தேய்த்து உடம்பை அசைத்து பாட்டிற்கேற்ப ஆடிக் கொண்டி ருந்தாள். பரத நாட்டியத்திற்கு பரம சத்துரு ஆபி ரிக்க நடனம். பரத முனிவர் பரதநாட்டிய சாஸ்திரம் எழுதும்போது இடையின் கீழ்ப்பகுதி அசையாமல் நேராக நிற்க வேண்டும் என்பதை 'அண்டர்லைன்" பண்ணி எழுதி இருந்தார். ஆபிரிக்க நடனம் அப்படி யல்ல. இடைக்குமேல் உடம்பு நேராக நிமிர்ந்து நிற்கும்; வேலையெல்லாம் பிருஷ்டத்துக்குத்தான். பெண்டுலம் போல அது இடமும் வலமும் அசைந்து மனசை அலங்கோலப்படுத்தும்.
சங்கீதா அப்படித்தான் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தாள். இந்த மாதிரி குதூகலத்தை கணேசானந்தன் அவளிடம் கண்டு பல மாதங்களாகி விட்டன. அன்றிரவு அவர்கள் படுக்கைக்கு சென்ற போது 'கரிக்குருவியை படுக்கையின் நடுவே அவள் கிடத்தியிருந்தாள், "அப்ப, என்ன பேர் வைத்திருக் கிறீர்? அபிராமியா?" என்றான் அவன், கண்களைச்

Page 91
158 3 முழுவிலக்கு
சிமிட்டிக்கொண்டே 'ச்சீ, இல்லை; "அய்சாத்து", என்ன இனிமை பாருங்கோ! அசல் ஆபிரிக்க பேர்."
'ஆஹா! இதுவும் அகர வரிசைதான்; அப்ப இன் னும் பதினொரு பேருக்கு இடமிருக்கு."
'ஏன், மெய்யெழுத்தையும் சேர்ப்பதுதானே! 'அய்சாத்து' என்றால் ஆபிரிக்க பாஷையில் என்ன பொருள் தெரியுமா?" என்றாள் சங்கீதா. அவள் கண்கள் என்றுமில்லாதபடி வெட்டிக் கொண்டு இருந்தன.
"நீயே சொல்" என்றான் அவன், அவள் கண் களை அள்ளியபடியே.
'நம்பிக்கை' என்றாள் சங்கீதா, மந்தகாசமாக சிரித்தபடி.
சிறிது நேர மெளனத்திற்கு பிறகு அவன் சொன் னான்: ‘கடவுள் பெண்மைக்குதான் ஓர் எல்லை வைக்கமுடியும்; ஆனால் தாய்மையை எடுக்க முடியா தல்லவா?"
இப்படிச் சொல்லிக்கொண்டே அவளை மெல்ல தன் பக்கம் இழுத்தான். அவள் சிணுங்கிக்கொண்டே நெருங்கினாள்.
அவள் முகத்திலே பெண்மை வந்து கவிழந்தது.
O


Page 92
Gråas uqyr GTVTrias sfidò auqdiireer கோர்டியன் முடிச்சு என்பது ப்ரிகியா தேசத்து அரசன் கோர்டியஸினால் போடப்பட்ட முடிச்சாகும். கோர்டியஸ் அரசனாவதற்கு முன்பு சாதாரண குடி யானவனாக இருந்தவன். ஒருகாள் அவன் தன் வண்டியை ஒட்டிக் கொண்டு முதன் முறையாக ப்ரிகியா நகரத்துக்குள் நுழைந்தபோது தெய்வ வாய்மொழிப் பிரகாரம் அவனை அரச னாக அந்த காட்டு மக்கள் ஏற்றுக் கொண்டனர். தன் நன்றிக் கடனாக சீயஸ் என்ற கடவுளுக்கு அந்த வண் டியை கோர்டியஸ் அர்ப்பணித்து வண்டியின் நுகத்தடியைச் சேர்த்து ஒரு முடிச்சுப் போட்டான். அந்த முடிச் சானது கடுஞ்சிக்கல்கள் கொண்ட ஒரு நூதனமான முடிச்சு. அந்த முடிச் சினை அவிழ்ப்பார் ஆசியாவுக்கு மகுடாதிபதியாவார் என்பது தொன்று தொட்டு வந்த வாக்கு ஆண்டாண்டு காலமாக அந்த முடிச்சை அவிழ்க்க பலரும் முனைந்து தோற்றுப் போயி னர். மாவீரன் அலெக்சாந்தர் இத னைக் கேள்வியுற்று அந்த முடிச்சின் முன்னால் வந்து கின்றான்; கிதான மாகப் பார்த்தான்; தன் உடைவானை உருவி ஓங்கி ஒரே வீச்சில் முடிச்சை இரு கூறாக்கினான்.

அ. முத்துலிங்கம் 0 161
- மைக்கிரோசொப்ட் - என்காத்தா
நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது கந்தையா வாத்தியார் கொடுத்த கணக்கு இதுதான்: 'இரண்டு மரங்களுக்கிடையிலிருக்கும் தூரம் பத்து மைல். ஒரு மரத்திலிருந்து ஒரு மனிதன் மணிக்கு ஐந்து மைல் வேகத்தில் மற்ற மரத்தை நோக்கி நடக்கிறான். அதே நேரத்தில் மற்ற மரத்தில் இருந்து புறப்பட்ட நாய் ஒன்று மணிக்கு இருபது மைல் வேகத்தில் மனிதனை நோக்கி ஒடு கிறது. நாய் மனிதனிடம் வந்து சேர்ந்ததும் திரும்ப வும் தான் புறப்பட்ட மரத்தை நோக்கி போகிறது. மரம் வந்ததும் திரும்பவும் மனிதனை நோக்கி ஒடு கிறது. இப்படியே மாறி மாறி அது ஒடிக்கொண்டே யிருக்கிறது. கடைசியில் மனிதனும் நாயும் மற்ற மரத்தடியில் வந்து சேருகிறார்கள். நாய் ஓடிய துரம் எவ்வளவு?'
கந்தையா வாத்தியார் இதைச் செய் பவருக்கு ஒரு ரூபா கொடுப்பதாக அறிவித்திருந்தார். கடந்த இரண்டு வாரங்களாக நேரமும், தூரமும் கணக்குகளை உச்சந் தலையில் அடித்தடித்து உள்ளே இறக்கியிருந் தார். ஆனால் இந்த நாய்க் கணக்கு என்னை நாயாய் அலைத்து விட்டது. இரண்டு நாளாக இதைத் தூக்கிக்கொண்டு திரிந்தேன். அப்ப

Page 93
162 O (puqëør
தான் இந்த ‘மண்டையன்’ வந் தான். சூல்கொண்ட தேங்காய் போல அவனுக்கு பெரிய தலை, தலை முழுக்க அவனுக்கு மூளை என்று பரவலாக ஒரு பேச்சுமிருந் தது. இரண்டு கால்களையும் பரப்பி வைத்து, G)95356) GT பின்னால் கட்டிக்கொண்டு' என்ன கணக்கு?" என்றான். நான் சொன்னேன். யோசிப்பதுபோல் கொஞ் சம் கண்ணை மூடி 'இன்னொருக்கால் சொல்' என்று அதிகாரம் செய் தான், நானும் ‘சிவனே' என்று இன்னொரு முறை கூறினேன். அவன் ‘ஆ! விடை நாப்பதுமைல்” என்றான். நான் ‘எப்டி, எப்டி?” என்று பறந்தேன். மண்டையன் ஏளனமான ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு சொன்னான்: 'பத்து மைல் தூரத்தை மனிதன் இரண்டு மணி நேரத்தில் கடக்கிறான். நாயின் வேகமோ மணிக்கு இருபது மைல்; இரண்டு மணியில் நாய் நாற்பது மைல் தூரத்தைக் கடக்கும்.'
நான் வாயைப் பிளந்து கொண்டு சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றேன். இந்தச் சிறிய கணக்கை என்னாலே செய்ய (LDL9-Lİ வில்லையே? அந்த நேரம் கந்தையா வாத்தியார் சொன்னது ஞாபகத் துக்கு வந்தது. "எந்தவொரு சிக்க

அ. முத்துலிங்கம் a 168
லான கணக்குக்கும் இலகுவான ஒரு
பாதைஇருக்கிறது; உன் விவேகத் தால் அந்தப் பாதையை நீ கண்டு
பிடிக்க வேண்டும்.'
கணக்கிலே நான் படு புலியென்றாலும் இப்படி பலதரம் புல்லை சாப்பிட வேண்டி வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் எனக்கு நானே தேறுதல் கூறிக்கொள்வேன். கலாசாலையில் முதல் வருடம் படிக்கும் போதும் இப்படித்தான் ஒரு கணக்கு என் காலை வாரி விட்டது.
‘ஒரு காதலன் தன் காதலியோடு ஆற் றின் ஓட்டத்துக்கு எதிராக படகிலே போகி றான். ஆற்றின் வேகம் மணிக்கு பத்து மைல்; படகின் வேகமோ மணிக்கு ஐந்து மைல். காதலரை வருடிய தென்றல் காற்று காதலன் போட்டிருந்த தொப்பியை நீரிலே தள்ளி விடுகிறது. (ஏன் இவன் காதல் செய்வ தற்கு தொப்பி போட்டுக்கொண்டு போனான், முட்டாள்) காதல் வேகத்தில் இவன் அதைக் கவனிக்கவில்லை. அரை மணி நேரம் கழித்து பதைபதைத்து தொப்பியைத் தேடுகிறான். காணவில்லை. படாரென்று படகைத் திருப்பிக்கொண்டு (கருமி, கருமி) வந்த வழியே போகிறான். எவ்வளவு மணி நேரத்தில் அவன் தொப்பியை மீட்பான்?"
இந்தக் கணக்கிலேயும் நான் அதே தவறைத்தான் செய்தேன். மூளையைக் கசக்கி விடையைத் தேடினேன். ஆற்றிலே போட்டுவிட்டு குளத்திலே தேடினால் விடை

Page 94
164 to முடிச்சு
கிடைத்து விடுமா? அடுத்த நாள எங்கள் பேராசிரியர் கணக்கை விளக்கிய போது தான் "அடே' என்று எனக்குப் பட்டது; அவ மானமாகப் போய்விட்டது. விடை: அரை மணி நேரம்தான் (இந்த விடை வந்த கார ணத்தை இங்கே விளக்கினால் இதுவே ஒரு கணக்குப் புத்தகமாகிவிடும். மேலே தொடருவோம்.)
சாதாரண மனிதர்களுக்குத்தான் இப்படியென்றில்லை. ஒரு விஞ்ஞானிக்கு நடந்ததைப் பார்ப்போம். பாரிஸ் நக ரில் ஜோர்ஜ் உர்பெய்ன் என்று ஒரு தலைசிறந்த விஞ்ஞானி இருந்தார். இவர் பல வருடங்களாக மூளையைச் செலவழித்தும், பணத்தை இறைத்தும் மிக அரிதான நாலு தனிமங்களை பொடிசெய்து குழம்பாக்கி பிறகு அவற்றை விஞ்ஞான முறைப்படி வேறு படுத்தி தனிமங்களை கண்டுபிடிக்கும் அபூர்வ வித்தையைத் தெரிந்து வைத் திருந்தார். இவர் இந்தக் குழம்பைத் தூக்கி நளாயினி போல தலையிலே வைத்துக்கொண்டு ஒவ்வொரு விஞ் ஞானியாகத் தேடிச் சென்றார். இந்தக் குழம்பைத் தனிப்படுத்தி தனிமங்களின் பெயரைச் சொல்லும்படி இவர் மற்ற விஞ்ஞானிகளுக்கு சவால் விட்டார்.
ஹென்றி க்வியின் மொஸ்லே என்ற ஆங்கிலேய விஞ்ஞானி மாத்திரம் யாருமே எதிர்பாராத விதமாக ஒரு காரியம் செய்தார். அந்தக் குழம்பின்

அ. முத்துலிங்கம் () 165
எலக்ட்ரான்களைப் பாய்ச்சி அதிலி ருந்து புறப்பட்ட எக்ஸ் ரே அலைகளின் நீளத்தை கணித்து அந்த நாலு தனிமங் களின் பெயர்களையும் கடகடவென்று இரண்டே நிமிடத்தில் கூறிவிட்டாராம். இருபத்தியாறு வயதுகூட நிரம்பாத இளைஞர் மொஸ்லே, உர்பெய்ன் ஆடி விட்டார்; இத்தனை வருடத்து ஆராய்ச்சிகள் எல்லாம் வியர்த்தமான தில் அவருக்கு தாங்கமுடியாத வருத்தம் தான். எனினும் விஞ்ஞானத்துக்கு ஒரு புது வழி கிடைத்து விட்டதே என்று மகிழ்ந்து போனாராம்.
சாதாரண விஞ்ஞானிகளை விடு வோம்; கடவுளருக்கு வருவோம். நாதருடைய கையிலே ஒரு அழகிய மாம்பழம் இருந்தது. விநாயகர் அந்தப் பழம் வேணுமென்று ‘தாம் தாம்’ என்று குதித்தார்; முருகன் தனக்குத்தான் வேணுமென்று அடம் பிடித்தார். நாரதர் சொன்னார்: ‘யார் முதலில் உலகத்தை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் தான் பழம்." முருகன் யோசிக்க வில்லை. அந்தக்கணமே மயில் வாகனத்தை ஸ்டார்ட் பண்ணி அதி வேகமாக உலகத்தை வலம்வர புறப் பட்டார். பிள்ளையார் டொங்கு, டொங்கு' என்று எலியிடம் ஓடி னார். எலி அவரை ஏற்றிக் கொண்டு இரண்டு அடி வைப்பதற் கிடையில் ‘மூசு மூசு என்று மூச்சு

Page 95
55 pņš
வாங்கியது. அப்படியே நசுங்கி நிலத்தோடு படுத்து விட்டது. ‘என்ன நின்று விட்டாயா? இப்ப முருகன் ஆபிரிக்காவின் மேல் போய்க் கொண்டிருக்கிறானே! நான் இங்கே வாசற்படி கூடத் தாண்டவில்லை' என்று பெருமூச்சு விட்டார். **ஸ்வாமி, நீங்கள் கொஞ்சம் ஓவர் வெயிட் காரட் ஜ"ஸ் மட்டும் இனி சாப்பிட்டு பாருங்கள்' என்றது எலி. விநாய கருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. உடனே வேறு ஒரு யுக்தி பண்ணினார். ‘அம்மையும், அப் பணு மல்லவோ உலகம்; நான் அவர் களை வலம் வந்தாலே போது மானது' என்று நினைத்து அம்மை யப்பனை வலம்வந்து மாம்பழத்தை கையிலே வாங்கும் தருணம் முருகன் மயலிலே வீச்சாக வந்து "சடன் பிரேக்' போட்டு நின்றார். விநாய கர் அவ்வளவுக்கும் நிற்பாரா, என்ன? தும்பிக்கையை எட்டிப் பழத்தைப் பறித்துக் கொண்டு மெள்ள நகர்ந்து விட்டார்.
நான் இப்படியான ஒரு சிக்கலில் மாட்டிக்
கொண்டு பெரும்
அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருந்
தேன். நான் ஹாவார்டில் படித்துக் கொண்டிருந்த
போது எங்கள்
பேராசிரியர் அடிக்கடி கூறுவார்.
பூட்டுச் செய்தவன் சாவியும் செய்திருப்பான்’ என்று
சாவியைத்தான்
நான் தேடிக் கொண்டிருந்தேன்.

அ. முத்துலிங்கம் 0 167
மனக்கண்ணினால் ஐந்தாம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு வரை நான் படித்தது எல்லாவற்றை 'யும் அலசிப் பார்த்து விட்டேன். இதிகாசங்களையும், புராணங்களையும் தேடியாகிவிட்டது. கணிதவிய லையும், பொருளியலையும் ஆராயவும் தவறவில்லை.
மனிதர்கள் இரண்டுவிதமானவர்கள். முதலாவது ரகம், சாதாரணமான நேரங்களில் சாதாரண வேலை செய்வார்கள், கழுத்தைப் பிடிக்கும் நெருக் கடி சமயம் சுடர்விட்டு பிரகாசிப்பார்கள். இரண்டா வது ரகம், சாதாரண நேரங்களில் அசாதாரண திற மையுடன் செயல் படுவார்கள், ஆனால் நெருக்கடி யான சந்தர்ப்பங்களில் தலையை தொங்கப்போட்டுக் கொண்டு செய்வதறியாமல் திகைப்பார்கள்.
இதில் இரண்டாவது ரகம் இதிகாசத்தில் கர்ணன். வில் வித்தையில் கர்ணன் அர்ஜுனனைவிட ஒரு இழை மேல் என்றே சொல்லலாம். ஆனால் உக் கிரமான போர் நடந்து கொண்டிருக்கும் சமயங் களில், பாவம் கர்ணன் செய்வதறியாது தடுமாறி நின்று போய் விடுவான். இந்தக் கால உதாரணம் வேண்டுமென்றால் டென்னிஸ் வீரன் கோரன்இவானி ஸேவிக்கை சொல்லலாம். இவனுடைய சர்வீஸ் 135 மைல் வேகத்தில் போகும். கண் வெட்டுவதற்கிடை யில் மளமளவென்று புள்ளிகளைக் குவித்து விடுவான். ஆனாலும் என்ன பயன்? வெற்றித் தேவதை அணைக்கவரும் நேரத்தில், பாவம் இவனுக்கு கை கால்கள் சோர்ந்துவிடும். சர்வீஸ் "பொத், பொத்' என்று விழும். எதிராளி தட்டிக்கொண்டு போய்விடு வான். இவன் விளையாட்டைப் பார்க்கும் போதெல் லாம் எனக்கு அழுகையாக வரும்.
நான் முதலாவது ரகம், அசாதாரண நெருக்கடி களுக்கு தீர்வு காண்பதுதான் என் விசேஷத் திறமை,

Page 96
168 0 முடிச்சு
அதற்காகவே படித்துப் பட்டம் பெற்றவன். சூறா வளி என்றால் அதற்கு ஒரு மையம் இருக்கும்; மகா விருட்சம் என்றால் அதற்கு ஒரு ஆணி வேர் இருக் கும். எந்தவிதமான சங்கடத்துக்கும் ஒருஉயிர் மையம் இருக்கும். அதைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்.
மறுபடியும் பேராசிரியர் சொன்னது ஞாபகத் திற்கு வந்தது. ஒரு பெரிய பாழடைந்த பத்து மாடிக் கட்டிடம். இதை உடைத்தெறிய உத்தரவு வந்து விட் டது. நாங்கள் தகர்ப்பு விற்பன்னர்களைக் கூட்டி இந்தக் காரியத்தை ஒப்படைக்கிறோம். இது சாதா ரண காரியமில்லை. ஒரு கட்டிடத்தைக் கட்டுவதிலும் பார்க்க மிகவும் சிரமமானது. அவர்கள் இந்தக் கட்டிட வரைபடத்தை முதலில் ஆராய்ச்சி செய்து கட்டிடத்தைத் தாங்கும் ஆதார மையங்களில் வெடி மருந்துகளைப் பொருத்துவார்கள். அது வெடித்ததும் கட்டிடம் ஆடாமல், அசங்காமல் சொன்னபடி கேட்டு அதே இடத்தில் வேறு சேதம் விளைவிக்கா மல் பொத்தென்று வந்து விழும். உன்னுடைய வில்லங் கங்களை ஒட்டுமொத்தமாக தீர்க்க வேண்டுமானால் பிரச்சனையின் உயிர்நாடியைக் கண்டுபிடிக்க வேணும். அல்லாவிடின் மலேரியாக் காய்ச்சல்கார னுக்கு மாதவிடாய் நிற்க மருந்து கொடுத்தது போல அனர்த்தம்தான் விழையும்.
விஷயம் இதுதான். மிகவும் பெரிய ஒரு கம்பனி யின் மானேஜிங் டைரக்டராக நான் இரண்டு வருட காலத்திற்கு முன்பாக பதவி உயர்வு பெற்றிருந்தேன். எனக்கு வயது முப்பத்தைந்து; எனக்கு முன்பு இருந் தவர் வயதானவர்; திடீரென்று மாரடைப்பில் இறந்து போனார். கம்பெனி இயக்குனர்கள் என் பேரில் முழு நம்பிக்கை வைத்து இந்தப் பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தனர்.

அ. முத்துலிங்கம் 0 169
எல்லாம் நல்லாய்த்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று சனிதிசை பிடித்து ஆட்டத் தொடங்கியது.
விற்பனைகள் சரியத் தொடங்கின. தொழிலாளர் கள் அதிருப்தி காட்டி முணுமுணுக்க ஆரம்பித் தார்கள். முன்பிருந்த மானேஜிங் டைரக்டரின் மரு மகன், ஜெயந்தன் என்பவன் கம்பெனிக்கு எதிராக நாசகார வேலைகள் பார்க்கிறானாம். இவன் என் னுடைய பதவியில் கண்வைத்து ஆவலாக எதிர் பார்த்து இருந்தவன் சில இயக்குனர்களையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறானாம். பிங்கு மார்க்கெட்டில் கம்பெனியின் பங்குகள் சரியத் தொடங்கின. ஆனால் இது எல்லாத்தையும் விட மோசம் கிட்ட டியில் வந்த செய்திதான்.
கம்பனியின் முழுமூச்சு ஏற்றுமதிதான், அமெ ரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சரக்கு மாத்திரம் எழுபது வீதம். சமீப காலங்களில் வந்த ஒடர்களை முற்றிலும் நிறைவேற்ற முடியாமல் கம்பனி தத்தளித்தது. எதிராளிக் கம்பனி ஒன்று இந்த ஒடரில் ஒருபகுதியை தன் வசமாக்க முயற்சிகள் செய்து வந்தது. இது அவர்களுக்கு போனால் வேறுவினையே வேண்டாம்; கம்பனியை இழுத்து மூட வேண்டியதுதான்.
தலைக்குமேலே தண்ணி போய்விட்டது. இனி என்ன செய்யலாம் என்று மூக்கைப் பிடித்துக் கொண்டு யோசித்த போதுதான் திருவண்ணாமலை ஞாபகம் வந்தது. அங்கே ஒரு மகாயோகி இருக் கிறார். எனக்கு இப்படியான இக்கட்டுகள் வரும் போது அவரிடம்தான் ஒடுவேன். இதே மாதிரி இரண்டு முறை முன்பு போயிருக்கிறேன். அவர் ஆறி
வ-12

Page 97
70 முடிச்சு
வுரை, ஆசியென்றெல்லாம் வழங்க மாட்டார்; உங் கள் சிந்திக்கும் திறனைத் தூண்டி விடுவார்.
அடுத்த நாளே திருவண்ணாமலை போய் விட் டேன். இரண்டு நாளாக யோகியாரை எங்குதேடியும் காணக் கிடைக்கவில்லை. கடைசியில் யாரோ சொன் னார்கள் யோகியார் பதினாறு கால் மண்டபத்தில் இருப்பதாக, யோகியாரிடம் ஓடினேன். அவர் சிரித்த படியே இருந்தார். அந்தச் சிரிப்பிலே எத்தனையோ அர்த்தங்கள் எனக்கு தெரிந்தன. ஸ்வாமியைப் பார்த்தவுடன் எனக்கு வந்த காரியம் எல்லாம் மறந்து விட்டது; அது மாத்திரமல்ல, என் கஷ்டமெல்லாம் அர்த்தம் இல்லாததாகவும் பட்டது. என் கண்கள் பனித்துவிட்டன. ஸ்வாமி என்னையே பார்த்தபடி இருந்தார்.
'ஆதிமூலத்தை அறிந்து விட்டாயா?" என்றார். *ஸ்வாமி, அதைத்தான் தேடிக் கொண்டிருக் கிறேன்; நீங்கள்தான் காட்ட வேணும்" என்றேன்.
*மடையா, நான் என்னத்தைக் காட்டுவது? நீதான் தேடிப் பிடிக்க வேணும்" என்றார்.
'ஸ்வாமி, எனக்கு சமீபத்தில் பதவி உயர்வு கிடைத்தது.'
'என்ன, சாயுஜ்யபதவியா?" என்றார், ஸ்வாமி சிரித்தபடி.
'இல்லை, இது சாதாரண பதவிதான். மிக தல்லாக முன்னேறி வ்ந்த கம்பனி காரணமின்றி பட பட்வென்று சரியத் தொடங்கி விட்டது. நாலா பக்கத்திலும் இருந்து எனக்கு தொல்லைகள். தலை நிமிர்த்தவே முடியவில்லை; மீழும் வழியும் தெரிய வில்லை' என்றேன். . . . . . . :

அ. முத்துலிங்கம் () 171
'நாலா பக்கமும் பிரச்சனைகள் இல்லை; பிரச்ச னையின் மூலம் ஒன்றுதான். நீதான் நாலு பக்கமும் பார்க்கிறாய். ஸ்பெய்ன் நாட்டில் நடக்கும் மாட்டுச் சண்டை பற்றி கேள்விப் பட்டிருக்கிறாயா?"
'சொல்லுங்கள், ஸ்வாமி'
‘மேரடோர் என்பவன் எருதுடன் சண்டை போட்டு அதைக் கொல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட வீரன். எருதுக்கும் இவனுக்கும் ஒரு நீண்ட போர் நடக்கும். இறுதியில் எருது களைத்து, தலையைத் தாழ்த்தி சோர்ந்துபோய், ஆனால் கடைசி மூச்சின் ஆங்காரத்தோடு சண்டை போடும். எருது தலை குனிந்திருக்கும் அந்தக் கணத்தில் மேரடோர் என்ப வன் தன் நீண்ட வாளை உருவி மாட்டின் தோள் பட்டைகளின் இடையே உள்ள ஒரு நுண்ணிய துவாரத்தில் வாளை நுழைத்து அதன் ஆதார நாடியை சேதித்து விடுவான். இந்த நேரம்தான் மகத் தான உண்மையான நேரம். எருது அந்தக் கணமே விழுந்து இறந்து விடும்.'
'ஸ்வாமி, எனக்கு எல்லாம் புரிகிறது. ஆனால் அந்த ஆதாரநாடி எங்கே இருக்கிறது என்று தெரிய வில்லையே? திசை தெரியாத பறவை போல அல்லவா சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறேன்! ஒரு வழி
காட்ட முடியாதா?"
ஸ்வாமி யாரோ பக்தர்கள் கொடுத்துவிட்டுப் போன ஒரு சீப்பு வாழைப்பழத்தில் இருந்து இரண்டு பழங்களைப் பிய்த்தார். 'இந்தா, இதைக் கொண்டு போ. இரண்டு நாளைக்கு இதுதான் உனக்கு சாப் பாடு. கொஞ்சம், பால் வேண்டுமானால் மட்டும் பருகலாம். மூன்றாம் நாள் காலை இங்கிருந்து போய்

Page 98
72 O (puqës,
விடு" என்றார். நானும் பழத்தை எடுத்துக்கொண்டு என்னுடைய மடத்தை நோக்கி புறப்பட்டேன்.
அடுத்த நாள் காலை. ஒரு பழமும் ஒரு அண்ட் (ா பாலும் சாப்பிட்ட பிறகு பசியும் ஆறவில்லை; பிரச்சனையும் தீரவில்லை. நான் படித்ததெல்லா வற்றையும் மறுபடி அசைபோட்டு பார்த்தேன். பீட்டர் ட்ரக்கர் கூறியதையும், கென்னத் கல்பிரெய்த் சொன்ன சித்தாந்தங்களையும், பிரடெரிக் டெய்லர் எழுதி வைத்ததையும் நினைவுகூர்ந்து பார்த்தேன். மனமானது சுழன்று சுழன்று வந்ததே ஒழிய ஒரு பிடி யும் கிடைக்கவில்லை.
சிந்திப்பது மூன்று வகைப்படும். ஒன்று செக்கு மாட்டு வகை; ஒன்றையே திருப்பித் திருப்பி அசை போடுவது. இது பிரயோசனமில்லாமல் நீன்று கொண்டே போகும். இரண்டாவது தொடர் சங்கிலி சிந்தனை முறை. இது ஒன்றைத் தொடர்ந்து இன் னொன்றாக தர்க்க ரீதியாக வருவது. மூன்றாவது பரவல் சிந்தனை. அறிவியலுக்கு ஆதாரமான பல சித்தாந்தங்களை பரவல் சிந்தனை மூலம்தான் விஞ் ஞானிகள் கண்டுபிடித்தார்கள். ஆகாய விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களாகட்டும், பெனிசி லினைக் கண்டுபிடித்த அலெக்சாந்தர் பிளெமிங் ஆகட்டும் பரவல் சிந்தனை மூலம்தான் தங்கள் மகா கண்டுபிடிப்புகளை உலகத்திற்கு அளித்தார்கள்.
இத்தாலி மகாவிஞ்ஞானி கலீலியோ ஒரு நல்ல கிறிஸ்துவர். அவர் தன் சித்தாந்தங்களை வெளி யிட்டபோது அவை அன்றைய கிறிஸ்துவ நம்பிக்கை களுக்கு முரணாக இருந்தன. இருந்தும் அவர் தன் கருத்துக்களை அவசரமாக பகிரங்கப் படுத்திவிட் டார். தேவாலயத்து மதகுருக்களுக்கு அவர் கூறியது

அ. முத்துலிங்கம் ( 173
சங்கடமாக இருந்தது. வேறு என்ன? அவர் 'பூமி, சூரியனைச் சுற்றி வருகிறது" என்று அபத்தமாக உள. றினால் அவர்களுக்கு கோபம் வராமல் என்ன செய் யும்? அவருக்கு அறுபத்தொன்பது வயது நடக்கும் போது தேவாலயத்தினர் அவரைச் சிறையில் இட்ட னர்; சொன்னதை மறுதலிக்கும்படி வற்புறுத்தினர். கலீலியோ ‘பூமி சூரியனை சுற்றவில்லை, பூமி சூரி யனை சுற்றவில்லை' என்று உரத்துச் சொல்லிவிட்டு மன்திற்குள், தனக்கும் பூமிக்கும் மட்டுமே கேட்கும் படி, ‘என்றாலும் சுற்றுகிறது' என்று கூறி GOTIT TTLs),
உலகத்தின் இன்றைய முன்னேற்றத்திற்கு காரணம் கலீலியோ போன்ற விஞ்ஞானிகளின் பரவல் சிந்தனைகள் மூலம் பிறந்த அருமையான கண்டுபிடிப்புகள்தான். நான் தேடிக்கொண்டிருக்கும் விடையும் இப்படியான சிந்தனைகளில்தான் தங்கி யிருக்கிறது என்று எனக்குபட்டது. மனதைக் குவித்து 'ஏக்ாக்கிரக சிந்தனை' என்று சொல்வார்களே அப்படி நேர்ப்படுத்தினேன்.
மறுபடியும் யோசித்துப் பார்த்தேன். தொழிற் சாலையில் போதிய ஒடர்கள் வந்து குவிகின்றன; உற்பத்தி வேகமும் குறைந்ததாகத் தெரியவில்லை. விற்பனைகள் சரிவதின் காரணமென்ன? ஜெயந்தன் செய்யும் நாச வேலைகளாக இருக்குமா? அவன் இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் கம்பெனியி லிருந்து ஒரு பெண்ணாக கூட்டிக்கொண்டு திரிகி றானே, இதற்கு நேரம் இருக்குமா? ܥ
ஜெயந்தனுடன் நேர் மோதலை தான் தவிர்த்து வந்தேன். ஒருமுறை கேட்டுவிட்டேன்: "ஜெயந்தன்,

Page 99
174 0 முடிச்சு
நீ என்ன இப்படி ஒரு நாளைக்கு ஒரு பெண்ணுடன் சுற்றுகிறாயே! இது உனக்கும் நல்லதல்ல பெண்ணுக் கும் நல்லதல்ல; கம்பெனிக்கும் நல்லதல்ல?"
அதற்கு அவன் கூறிய பதில் விசித்திரமாக இருந் தது. 'எனக்கு பதின்மூன்று வயதாகியதிலிருந்து நான் இப்படி ஒரு விரதம் காத்து வருகிறேன், எப்ப வும் கன்னிப் பெண்கள் பாதுகாப்பில் இருக்கவேண்டு மென்பதுதான் அது. எனக்குக் கிடைக்கும் அந்த பாதுகாப்பை இப்படி சடுதியாக துறக்கச் சொல்கி றாயே. இது நியாயமா? நீ அதற்குப் பொறுப் பேற்பாயா?" என்றான். நான் அவனுக்கு பைத்தியம் முற்றிப் போய்விட்டது என்று நினைத்து பேசாமல் இருந்துவிட்டேன்.
உண்மையிலேயே இவன் பைத்தியக்காரத்தன மான வேலைகள் செய்வானோ? தொழிலாளர் களுக்கு வேண்டிய சலுகைகளெல்லாம் செய்து கொடுத்திருக்கிறோமே! சக தொழிலாளருடன் ஒப் பிடும்போது இவர்களுடைய சம்பளமும் வருமான மும் மிகக் கூடுதலாகவல்லவா இருக்கிறது! இருந்தும் அவர்களுடைய அதிருப்தியை தூண்டிவிடுவதற்கு இவன் காரணமாக இருப்பானோ?
திருப்பித் திருப்பி செக்குமாடு போலத்தான் சிந் தனை சுழன்று கொண்டே வந்தது. இரண்டு நாள் இரண்டு யுகம் போல சென்றது. மிஞ்சியது பசியும் களைப்பும்தான். மூன்றாம் நாள் அதிகாலையே எழுப்பிவிட்டேன். நான் வந்தது வியர்த்தம் போலத் தான் பட்டது. பிரச்சனை அப்படியே கொழுக் கட்டைபோல் முழுசாக இருந்தது. நல்ல பசி. சாப் பிட்டுவிட்டு திரும்புவோம் என்ற முடிவோடு புறப் பட்டேன்.

அ. முத்துலிங்கம் 0 175
பாதையோரத்தில் அந்தக் கிழவி சுடச்சுட தோசை வார்த்து விற்றுக் கொண்டிருந்தாள். நான் போனபோது அங்கே ஒரு சிறுமி மாத்திரம் தோசை, வாங்கிப்போக வந்திருந்தாள். கிழவி தோசையை ஒரு பெட்டியில் அடுக்கிவிட்டு அதை மூட முயற்சி செய்து பார்த்தாள். வாழை இலை நேராக நட்டுக்கொண்டு நின்றது. அப்போ அந்தச் சிறுபெண் 'பாட்டி, வாழை இலையை மடித்துவிடு, மடித்துவிடு' என்று மணியடிப்பது போல சொல்லிக் கொண்டிருந்தாள். அதைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு மூளையிலே ஒரு மின்பொறி தட்டியது. 'அப்படியும் இருக்குமா?" என்று மனசு போட்டு அடித்துக்கொண்டது.
அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு உடனேயே புறப்பட்டேன். வழிநெடுக சிந்தனை தொடர்ந்தது. ஒரு பெரிய கேள்விக்கு சிறிய விடை கொடுப்பதும் ஒரு சிறிய கேள்விக்கு பெரிய விடையொன்று தருவ தும் சில வேளைகளில் நடப்பதுதான். மிகவும்படித்து இறுமாந்த ஒளவைக் கிழவி ஒரு மாடுமேய்க்கும் சிறுவ னிடம் தோற்கவில்லையா? கிழவி, சிறுவன்தானே என்று பாராமல் அவனுடைய கேள்விக்கு ஆழ்ந்து யோசித்திருந்தால் சரியான விடை கூறியிருப்பாள் அல்லவோ? ஒளவையார் பழத்தை எடுத்து 'பூ, பூ" என்று ஊதியபோது சிறுவன், ‘என்ன பாட்டி! பழம் சுடுகிறதா?’ என்று கேட்டு சிரித்த அந்தத் தருணத் தில் ஒளவையாருடைய மனம் என்ன பாடு பட்டிருக் கும்? ஒரு கணத்திலும் கணம் சிந்திக்கத் தவறியதன் விளைவல்லவா இது?
தொழிற்சாலையை வந்து அடைந்ததும் முதல் வேலையாக கணக்கு வழக்குகளைச் சரி பார்த்தேன். நான் நினைத்தது சரிதான். ஒடர்கள் எல்லாம் உரிய்

Page 100
176 0 முடிச்சு
காலத்தில் தொழில்சாலையில் முடிககப்பட்டு விட் டன. ஏற்றுமதியில் தான் பிரச்சனை. துறைமுகத் திலே தேக்கம்; துறைமுகத்துக்கு எடுத்துப் போகும் வாகனங்களின் பற்றாக்குறை; ஆனபடியால் தொழில்சாலை கிடங்கிலும் ஏற்றுமதிப் பொருட்கள் குவிந்து கிடந்தன. •
எங்கள் தொழிற்சாலையில், நாங்கள் உற்பத்தி செய்தது உயர்ந்த ரக சமையல் பாத்திரங்கள். சமையல் பாத்திரங்கள் என்றால் சாதாரண வீட்டு சமையல் பாத்திரங்கள் அல்ல. இவையோமிகப்பெரிய ஹோட்டல்களிலும், சமையல் விடுதிகளும் பாவிக்கும். உறுதியான எஃகுப் பாத்திரங்கள்; செப்பு அடித்தகடு வைத்த பென்னம்பெரிய பாத்திரங்கள். நாலு பருமன் களில் ஒன்பது ரக பாத்திரங்களை நாங்கள் செய்து கொண்டிருந்தோம். இதற்காக தயாரித்த விசேஷ, மான பெரிய அட்டைப் பெட்டிகளில் அவற்றைப் போட்டு அடைத்து ஏற்றுமதி செய்வதுதான் வழக்கம்,
இந்தப் பாத்திரங்களின் கைபிடிகள் பெரிதாக மேலே நீட்டிக்கொண்டு நிற்கும். முதல் வேலையாக கம்பனி வரைபட வல்லுனரைக் கூப்பிட்டு இந்தப் பாத்திரங்களின் கைபிடிகளை மடித்துவிடக் கூடிய தாக செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர்சிறிது நேரம் யோசித்தார். அவருடைய சிந்தனையும் என் னுடையதுபோல ஒரே நேர்க்கோட்டில் போயிருக்க வேணும். ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு ஒன்றும் பேசாமலே போய் விட்டார். அடுத்த நாள் அவர் கொண்டு வந்த புது டிசைனில் ஒரு பாத்திரத்தை செய்து பார்த்தோம். அது நல்லாகவே வந்தி ருந்தது. -

அ. முத்துலிங்கம் () 177
அதிர்ஷ்டவசமாக 'பக்கிங்' பெட்டிகளில் ஒரு சிறு மாற்றம்தான் செய்ய வேண்டியதாக இருந்தது. அறுநூறு கன அடியில் முன்பெல்லாம் நூறு பாத் திரங்கள் அடைத்து அனுப்ப முடிந்தது. இந்தப் புது டிசைன்படி நூற்றி நாற்பத்திமூன்று பாத்திரங்கள் அடைக்கக் கூடியதாக இருந்தது. எங்கள் வாடிக்கைக் காரர்கள் இந்தப் புது டிசைனை வரவேற்றார்கள்.
என்னுடைய ஊகம் சரிதான். உற்பத்தி குறைய வில்லையென்றாலும் ஏற்றுமதியில்தான் பிரச்சினை. தொழில்சாலையில் இருந்து கப்பலுக்கு போவதில் சுணக்கம்; துறைமுகத்தில் கப்பலில் ஏற்றுமதி செய் வதில் தடங்கல். பாத்திரங்களின் கைபிடியை மடக்கு வதால் இப்போது முந்திய கனஅளவில் கூடிய பாத்தி ரங்களை அனுப்பக்கூடியதாக இருந்தது.
எங்கள் புது டிசைனை நடைமுறைக்கு கொண்டு வந்தேன். கிடுகிடென்று துறைமுகத்தில் தேங்கி யிருந்த பெட்டிகள் குறையத் தொடங்கின. தொழில் சாலை சூடு பிடித்தது. ஆறே மாதத்தில் தேங்கி நின்ற பொருட்கள் எல்லாம் கப்பலேறிவிட்டன. ஒடர்கள் வரவர அவை உற்பத்தியாக்கப்பட்டு அதே வேகத் துடன் 'பக்' செய்யப்பட்டு அனுப்பப்பட்டன. ஏற்று மதியின் வேகம் பார்த்து. புது ஒடர்களும் வந்து குவிந்தன.
இதற்கிடையில் தொழிற்சாலை போனஸ் முறை யிலும் சிறு மாற்றம் கொண்டு வரப்பட்டது. முன் பெல்லாம் உற்பத்தியில் போனஸ் கொடுக்கப் பட்டது. இப்போதோ ஏற்றுமதி அல்லது விற்பனை என்ற அடிப்படையில் கூடிய விகிதத்தில் போனஸ் வழங்கப்பட்டது. விளைவு? தொழிலாளரிடம் கூடிய

Page 101
178 0 முடிச்சு
ஒற்றுமை இருந்தது; எல்லோரும் ஒரே நோக்கத் தோடு பாடுபட்டார்கள்; தேக்கம் என்பதே அரிதாகி விட்டது.
எங்கள் வரைபட வல்லுனரின் பெயர் சின்ன பாரதி. அவருடைய தகப்பனார் பாரதியின் ரஸிக ராக இருந்திருக்கக் கூடும். அவர் அதிசயித்துப் போனார். அவர் முப்பது வருடமாக அங்கே வேலை பார்த்து வருகிறார். அவர் கேட்டார்: “இத்தனை வருட காலமும் ஏன் ஒருவரும் இது பற்றி சிந்திக்க வில்லை???
அதற்கு நான், 'சில பேர் சில விஷயங்களை ஒர் இக்கட்டான சமயம் வரும்போதுதான் கண்டு கொள் கிறார்கள். இப்படியான கஷ்டம் எங்களுக்கு முன்பு வந்ததில்லையே' என்றேன்.
ஆனால் எனக்கு இன்னுமொரு வேலை இருந்தது. இழந்துபோன ஒடர்களை மீட்பதற்கும், புது ஒடர் களைத் தொடர்ந்து ஸ்திரப்படுத்துவதற்கும்: வாடிக்கைக்காரர்களின் நன்மதிப்பை பெறுவதற்கும் ஒரு புதுவித அணுகுமுறை தேவைப்பட்டது. ஜெயந் தன் அதற்கு மிகவும் தகுந்த ஆளாகப் பட்டார். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து கம்பனிக்கு ஒரு புதுமுகத்தை தயார் பண்ணவேண்டிய பொறுப்பை அவரிடம் கொடுக்க முடிவு செய்தேன்.
சின்னபாரதி இதைக் கேள்விப்பட்டதும் அசந்து விட்டார். அவர் அனுபவஸ்தர்; நம்பகமானவர். அவருடைய அறிவுரைகளை நான் அவ்வப்போது கேட்பதுண்டு. அவர் சொன்னார்: "ஜெயந்தனுடைய அசைந்தாடும் நெஞ்சில் எனக்கு அசைக்க முடியாத

அ. முத்துலிங்கம் 0 179
நம்பிக்கை இருக்கிறது. அவனிடம் இப்படியொரு பொறுப்பை ஒப்படைக்கலாமா? அரபுக் குதிரை போல் நிமிர்ந்து திரியும் வெள்ளைக்கார மோகினி களின் கண் வீச்சிலே இவனுடைய புத்தி சிதறிவிடுமே! இது இன்னும் சீரழிவையல்லவோ கொண்டு வரும்.'
ஆனால் என்னுடைய உள்மனதுக்கு நான் செய் வது சரிபோல பட்டது. துணிந்து இந்தக் காரியத்தை ஜெயந்தனிடம் ஒப்படைத்தேன். ஜெயந்தனுக்கு அள வற்ற மகிழ்ச்சி. அவருக்கு இப்படியாக கம்பனி செல வில் உலகம் சுற்றுவது மிகவும் பிடித்த காரியமாகப் போய்விட்டது. இதுதவிர இன்னுமொரு முக்கிய மான காரணமும் இருந்தது.
அவருடைய மாதச் சம்பளத்தை தவிர அவர் பிடிக்கும் ஒடர்களின் பிரகாரம் அவருக்கு ஒரு ஸ்பெஷல் போனஸ் இப்போதெல்லாம் வழங்கப்பட் டது. ஜெயந்தன் ஒரு வருடத்தில் பத்து மாதங்கள் வெளியே தங்கினார். ஒடர்கள் வந்து குவிந்த வண் ணமே இருந்தன. தொழில்சாலையில் தொழிலாளர் கள் வெகுமும்முரமாக வேலையில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு வேறு விஷயங்களுக்கு நேரமே இல்லை. ஏற்றுமதி போனஸ் மூலம் அவர்கள் வரும்படிநல்லாக விரிவடைந்திருந்தது.
என்னுடைய கல்யாண குணங்களில் சிரேட்ட மானது அடக்கம். என் எதிரிகள் என்னை 'மகா மேதாவி’ என்றும் "அறிவுஜீவி” என்றும் திட்டும் போதெல்லாம் நான் மறுப்பதில்லை; பேசாமல் இருந்துவிடுவேன். ஆனபடியால் என்னுடைய தனித் திறமையால் கம்பனியை அதலபாதாளத்தில் இருந்து மீட்டு விட்டேன் என்று நான் சொல்லிக்கொள்ள மாட்டேன். அது தற்பெருமைபோல் தோன்றும்.

Page 102
180 பிற முடிச்சு
ஆறு மாதத்தில் கம்பனி இழந்த விற்பனைகள்ை எல்ல்ாம் மீட்டுவிட்டது. நடப்பு வருடத்து விற்பன்ை முந்திய வருடத்து விற்பனையிலும் பார்க்க இருபது சதவீதம் அதிகரித்து விட்டது. மூன்று வருடங்களில் கம்பனியின் விற்பனை இரண்டு மடங்காகி விட்டது: லாபம் எழுபது வீதம் கூடிவிட்டது. பங்கு விலைகள் கிறுகிறென்று ஏறிவிட்டன. இயக்குனர்கள் எல்லாம் ஒன்றுகூடி என் திறமையை சிலாகித்தார்கள். கம்பனியை இன்னும் விஸ்தரிப்பது பற்றி பேசிக் கொண்டார்கள். தொழில்சாலையை விரிவு செய்ய வும், புது மெசின்கள் வாங்கவும் ஆலோசனைகள் தர வெளிநாட்டு நிபுணர்கள் தருவிக்கப்பட்டார்கள்.
இப்படியாக என்னுடைய வாழ்க்கைத தேர் அந்தரலேர்கத்தில் பவனி வந்தது. அரம்பையர், சாமரம் வீசி பன்னீர் தெளித்தனர். தேவதூதர்கள் துந்துபி முழங்கினார்கள்; தேவதூதிகள் தும்புரு, (அது என்ன தும்புரு?) வாசித்தார்கள். இந்த மயக்கத் தில் வெள்ளை முயல் போன்ற மேகக்கூட்டங்களில், சஞ்சரித்துக் கொண்டிருந்த போதுதான் நான் எதிர் பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது.
அரசாங்கம் திடீர் என்று கொண்டுவந்த ஒரு. புதிய சட்டத்தினால் கம்பனியின் ஏற்றுமதிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டன. எங்களுக்கு கிடைத்த சில சலுகைகள் நீக்கப்பட்டன. பார்த்துக் கொண்டிருக்கும்போதே கம்பனி கடகட வென்று கவிழத் தொடங்கியது. இந்த சமயத்தில் நான் கற்ற வித்தை ஒன்றும் பயன் தரவில்லை. தலைக்குமேல் தண்ணி போனபின் எனக்கு மறுபடியும் திருவண்ணா மலை ஞாபகம்தான் வந்தது. ஓடோடியும் சென்: றேன்.

அ. முத்துலிங்கம் 0 181
அங்கே யோகியார் என்னை எதிர்பார்த்து இருந் தது போல புன்சிரிப்புடன் வரவேற்றார். இந்த முறை எனக்கு வாழைப்பழம்கூட இல்லை; வெறும் தண்ணி தான். யோகியார் நான் சொன்ன எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டார். பிறகு என் கண்களைப் பார்த்தபடி பேசத் தொடங்கினார்
அது இன்னொரு கதை. கடிதத்திலே ஆர்வமுள்ள வாசகர்களுக்கு மாத்திரம்: பிரஸ்தாபிக்கப்பட்ட கணக்குக்கு விடை.
ஆற்றை உறைய வைக்க வேண் டும். அதன்பிறகு படகின் வேகம் மணிக்கு பதினைந்து மைல். தொப்பி விழுந்தபோது அது ஆற் றில் அப்படியே இருக்கும். அரை மணியில் ஏழரை மைல் போனபடகு திரும்பவும் அதே துரத்தை கடக்க அரை மணி ஆகும். G)

Page 103
ஞானம்
 

அமெரிக்காவின் நாஷனல் சயன்ஸ் பவுண்டேஷ. னின் ஆதரவில் நாங்கள் இருவரும் மேற்கு ஆபிரிக்கா வின் சியரா லியோனுக்கு வந்திருந்தோம். எங்கள் பி.எச்.டி. படிப்பில் இது ஒரு முக்கியமான கட்டம் அபூர்வ குரங்கு ஜாதியான கொலபஸ் பற்றிய ஆராய்ச்சிக்காக கடந்த ஐந்துவருடங்களாக பி.எச்.டி மாணவர்கள் ஆபிரிக்காவுக்கு வந்து போய்க் கொண் டிருந்தார்கள். இம்முறை நானும் டேமியனும் இந்த ஆராய்ச்சிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தோம். டார்வினின் சித்தாந்தப்படி குரங்குகள் எங்கள் மூதாதையரல்லவா? அந்த கோட்பாட்டில் உள்ள ஒட்டைகள் சிலவற்றை இந்த ஆராய்ச்சி நிரப்பும் என்று நாங்கள் நம்பினோம். இது என்னுடைய இரண்டாவது வருடம்; டேமியனுக்கு இதுதான் முதல் தடவை.
கலவரத்தின் உச்சத்தில் மடியைப் பிடித்தபடி ஐரோப்பா, அமெரிக்காவென்று அகதிகளாக தெறித்து ஓடி, நிலைமை சீரடைந்த சமயங்களில் திரும்பவும் யாழ்ப்பாண மண்ணில் மிதித்து, தமது மூத்த தலைமுறையினரை பார்த்து அதிசயித்து, ஆராய்ந்து, மூக்கின்மேல் விரலை வைத்து வியந்து இது என்ன கோணாக் கோணாக் காய்?" என்று கேட்டு, 'இதுதான் கோத்தை வித்த புளியங்காய்" என்று பதிலடிபட்டு, மூக்கின்மேல் வைத்த விரலை எடுத்து, ஆராய்ச்சிக்கான குறிப்புகளை மூட்டை கட்டிக் கொண்டு சலியாது திரும்புபவர்கள்போல, நாங்களும் எங்களுக்கு கிடைத்த நிதியுதவியில் சகல ஆராய்ச்சிகளையும் இரண்டே மாதங்களிலே பூர்த்தி செய்து எங்கள் பூர்வீக குடியினரின் மூலஸ்தானத்து

Page 104
184 0 ஞானம்
ரகஸ்யங்களை உலகத்துக்கு 'ஆசை பற்றி அறைய" வந்திருந்தோம்.
டேமியன் அமெரிக்கனாக இருந்தாலும் உயரத் தில் சராசரிதான். மெலிந்த தேகம். புத்திக் கூர்மை -யான கண்கள். எதையும் ஆராய்ந்து அறியும் வேட்கை இயல்பாகவே அவனுக்குஇருந்தது. கால்கள் ஒரு இடத்தில் நிற்காது. எப்பவும் சாகசமாக எதை யும் சாதிப்பதற்கு தருணம் பார்த்திருப்பான். கற் பாறைகளை வெறும் கையால் பிடித்து ஏறும் வித்தை யில் கெட்டிக்காரன். அதற்கேற்ற உடல்வாகு அவ ணுக்கு இருந்தது. பெண்களும், ஆண்களும் சமமாக பங்கேற்கும் விளையாட்டு இந்த உலகத்திலேயே இது ஒன்றுதான். இதற்கு உடல் அமைப்பு சிறியதாகவும், கைவலிமை பெரியதாகவும் இருக்க வேண்டும். இந்த தகுதி டேமியனுக்கு இருந்தது. செங்குத்தான பாறை களில் வெறும் கைகளை மூலாதாரமாகப் பற்றிஇவன் கிறுகிறுவென்று ஏறும்போது பார்ப்பவர்கள் நெஞ் சம் துணுக்குறும். இரண்டு மாதகாலம் ஆபிரிக்கக காட்டில் வேலை செய்வதற்கு அளவில்லாத ஆர் வத்தை அள்ளிக்கொண்டு இவன் என்னோடு வந் திருந்தான்.
இந்த இரண்டு மாத காலமும் நாங்கள நடுக் காட்டில் கடைபரப்பி கொலபஸ் குரங்குகளின் பூர் வீகத்தையும், சமுதாய வாழ்க்கை லிபரங்களையும் அவதானித்து குறிப்புகள் சேகரிக்க வேண்டும். புலம் பெயர்வு, உணவுமுறை, குடும்பம், குட்டிகளைப் பராமரித்தல் எல்லாம் இவற்றில் அடங்கும். இறுதி பில் அந்தப் பிராந்தியத்தில் உள்ள கொலபஸ் குரங்கு களைக் கைபற்றி PIT முறையில் அடையாள எண் னிட்டு அவைகளைப் பற்றிய குறிப்புகளை கம்புயூட்

அ. முத்துலிங்கம் 0 183
டரில் பதிந்துகொண்டு காட்டிலேயே அவைகளை திருப்பி விட்டுவிட வேண்டும். அடுத்த வருட தொடர் ஆராய்ச்சியில் இந்தக் குரங்குகளின் புலம் பெயர்வு, பழக்கவழக்க மாற்றங்கள் எல்லாம் இலகுவில் தெளி வாகி விடும்.
PT at air fort di) Passive integrated Transponders. குரங்குகளைப் பிடித்ததும் இஞ்செக்ஷன் மூலம் குண்டூசி தலையளவு பருமலுள்ள துகளை அந்தக் குரங்குகளின் தோலின் கீழே செலுத்திவிடவேண்டும். எங்கள் ஊர்களில் மாடுகளை சாய்த்துப் போட்டு, கொல்லனுடைய உலையில் பழுக்கக் காய்ச்சிய இரும் பின: ல் நாமம் சுடுவதுபோல இதுவும் ஒரு அடை யாள நம்பர் முறைதான், ஆனால் இந்த முறையில் குரங்கு சூடுபட்டு துடிக்கத் தேவையில்லை. அந்தக் குரங்கின் நம்பர் அந்தத் துகளில் இருக்கும். இதற் கென்று இருக்கும் எலக்ட்ரோனிக் கருவியை அந்த குரங்குக்கு கிட்ட கொணடு வந்ததும் அந்த நம்பர் பளிச்சென்று தெரியும். குரங்குக்கு ஒரு நோவும் இல்லாமல் அந்தத் துகள் அதன் உடம்பில் ஆயுள் பரி யந்தமும் இருக்கும். அந்த நம்பரில் குரங்கு பற்றிய விபரங்களெல்லாம் கலிபோர்மனியாவில் உள்ள e(5 கல்லூரி கம்புயூட்டரில் பதிவாகிக் கொண்டிருக்கும்.
நாங்கள் காட்டிலேயே வாழ்ந்து எங்கள் வேலை களை கண்ணும் கருத்துமாக பல வாரங்கள் தொடர்ந் தோம். ஒரு விக்கினமும் இன்றி ஆராய்ச்சிகள் நன்றாக நடைபெற்று முடியுந் தறுவாயில் இருந்தன. எங்கள் குடிசையிலே எங்கே பார்த்தாலும் கததை கத்தையாக குறிப்புகளும், டயரிகளும், புத்தகங்களும், கோப்புகளுமாக கிடந்தன. இனிமேல் எல்லாக்குறிப்பு களையும் சீர்படுத்தி கலிபோர்னியாவில் போய
வ-13

Page 105
186 0 ஞானம்
ஆய்வைத் தொடர வேண்டியதுதான். குரங்குகளைப் பிடிக்கவேண்டிய தருணம் இறுதியில் வந்தது. தலைக் குடிமகனிடம் போய் முந்திய வருடம்போல குரங்கு களைப் பிடிக்க வேண்டிய உதவிகள் செய்யுமாறு கேட்டுக் கொள்வதென்று தீர்மானித்தோம். அங்கேதான் எங்களுக்கு ஒரு வில்லங்கம் காத் திருந்தது.
நாங்கள் அவரைப் பார்க்கப் போனபோது அவர் முன் விறாந்தையில் இருந்த ஒரு வலை ஏணையில்" (hammock) ஒய்யாரமாக சாய்ந்துகொண்டு இருந் தார். கறுப்பு மலையை உருட்டிவிட்டது போல இருந் தது அந்தக் காட்சி. வண்ணப்பூக்கள் போட்ட நீண்ட வெள்ளை அங்கியும், அதே கலர் தொப்பியும் அணிந் திருந்தார். அவருடைய வாய் ஒயாது "கோலா நட்டை சப்பியபடியே இருந்தது. மேலே கூரையில் இரண்டு கோழிகள் காலில் கட்டப்பட்டு தலை கீழாக தொங்கிக்கொண்டு இருந்தன. அவைஅடிக்கடி செட்டைகளை அடிக்கும்போது மெல்லிய காற்று வந்து அவருடைய பிரும்மாண்டமான உடம்பை ஆற்றியது. கோழிகள் களைப்படைந்து ஒய்வெடுக் கும்போது இவர் தன் கையிலிருக்கும் 'பாம்" ஒலை விசிறியால் விசிறிக் கொண்டார். அப்போது அவர் முகத்திலே அப்பிக் கொண்டிருந்த இலையான்கள் எல் லாம் ஒன்றுகூடி எழுந்து ஒரு வட்டம் அடித்துவிட்டு திரும்பவும் வந்து தங்கள் தங்கள் 'சீட்களில் உட் கார்ந்து கொண்டன.
ஆரவாரத்துடன் எங்களை வரவேற்றவர் முன் பென்றும் இல்லாத மாதிரி பற்கள் தெரிய அட்டகாச மாக சிரித்தபடியே குரங்குகள் பிடிக்கும் செலவிற்கு பேரம் பேசத் தொடங்கினார். அந்தக் கால அரசர்

அ. முத்துலிங்கம் (ப் 187
களிடம் அஸ்வசாஸ்திரம் தெரிந்த விற்பன்னர்கள் பக்கத்திலேயே இருப்பார்களாம். அதுபோல இவரிட மும் குரங்கு சாஸ்திர நிபுணர் ஒருவர் நீண்ட நெடுமர மாக ஒரு பக்கத்திலே நின்றுகொண்டு அவ்வப்போது தன் ஞானக்கண்ணைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தார். கத்தி படாத தாடையை சொறிந்து சொறிந்து ஒன்றிரண்டு ஞானமுத்துக்களை உதிர்த் தார். மற்றப் பக்கத்திலே அடைப்பைக்காரன் போல ஒருத்தர் அவ்வப்போது கோலாநட் சப்ளை செய்த வண்ணம் இருந்தார். இவர் முகத்திலே, காவடி எடுப் பவர்கள் செடில் குத்தியதுபோல கன்னங்களிலும், நெற்றியிலும், கண்களுக்குக் கீழேயும், உதட்டின் மேலேயும், நாடியிலும் மீன் செதிள் போன்ற மென்டே இனத்து சின்னங்கள் விழுப்புண்களாக பரவிக் கிடந்து அழகூட்டின.
ஒரு குரங்கு பிடிப்பதற்கு காசு இருநூறு லியோன் வரை தயங்காமல் கேட்டார் தலைக்குடிமகன். இவர் கள் இருவரும் ஒரே “கரண்டில் வேலை செய்வது போல் வேகமாக ஆமோதித்து தலையாட்டினார்கள். இது போன வருடத்திலும் பார்க்க பத்து மடங்கு அதிகம், நாங்கள் என்ன, குரங்கைப் பிடித்துமூட்டை கட்டி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப் போகி றோமா? பிடிப்பதற்குத்தானே பணம்; மறுபடியும் காட்டிலே விட்டுவிடத்தானே போகிறோம்!
கடைசி விலை நாற்பது லியோன் என்று நான் சொன்னதும் தலைக்குடிமகன் ஆவென்று வாயைப் பிளந்தார். அங்கே முப்பத்திரண்டு பற்களும், அறு பத்திநாலு சானல்களும் தெரிந்தன, நீண்ட நேர மந்திராலோசனைக்குப் பிறகு ஒருவாறு தலைக்குடி மகன் இறங்கி வந்தார். நூறு லியொனுக்கு பேரம்

Page 106
88 D ஞானம்
பூர்த்தியானது. பட்ஜெட் இடிக்கத் தொடங்கிவிட் .து; என்றாலும் வேறு வழியென்ன? பாதி சவாரி யில் இறங்க முடியுமா? நாங்கள் அவர் கேட்ட அக்கிரமமான விலையை கொடுப்பதற்கு சம்மதித் தோம்.
ஆபிரிக்கக் காட்டில் இரண்டு மாதங்கள் ஓடி விட் டன. ஆரம்பகாலத்து ஆர்வமெல்லாம் மறைந்து எங்கள் முகங்கள் களையிழந்து காணப்பட்டன. நுளம்புகள் கடித்து பண்பட்ட எங்கள் உடம்பு திட்டுத் திட்டாகத் தடித்து தடுக்குப் பாய்போல ஆகி யிருந்தது. பசளையில்லாமல் பயிரிட்ட பாவக்காய் போல முறுகி, ‘புல்ல்லா பிரட்' என்று சிறப்பு நாம தேயம் பெற்ற ரொட்டியையும், அவித்த கடலையை யும், வறுத்த சோளத்தையும் சாப்பிட்டு, சாப்பிட்டு வாய் மரத்துவிட்டது. கடைசி மாவிலே பிடித்த கொழுக்கட்டைபோல "மொக்கட்டி, நெக்கட்டி யான’ படுக்கையிலே ஒரு கண் நித்திரைகூட வர மறுத்தது. "படுக்கை நொந்ததடி' என்ற பாடல் வரி களின் அர்த்தம் மூளையில் இறங்கியது. குலையீனா வாழைக் குருத்துகள் போன்ற இளம் ஆபிரிக்கப் பெண்கள் காலையும், மாலையும் தண்ணிருக்கும், விறகுக்குமாக அலைந்து திரிந்து தலைச்சுமையோடு அசைந்து நடந்து வரும் அழகை காத்திருந்து பார்ப்பதுகூட எங்களுக்கு இப்பவெல்லாம் அலுத்து விட்டிது.
இப்படியாக மனமுடைந்திருந்த சமயத்தில்தான் ஒரு நாள் அதிகாலை தலைக் குடிமகனிடம் இருந்து நாங்கள் எதிர்பார்த்த செய்தி வந்தது. சிறுவர்களும் பெரியவர்களுமாக தாரை தப்பட்டைகளை தட்டிய

அ. முத்துலிங்கம் ) 189
படியே குரங்கு கூட்டத்தை துரத்தி வந்து ஒரு பெரும் மரத்திலே ஏற்றி விட்டார்கள். நாங்கள் அங்கே ஓடி வந்தபோது பக்கத்திலே வளர்ந்திருந்த சிறுமரங்களை யும் செடிகளையும் தறித்துவெறுமையாக்கி கொண்டி ருந்தார்கள். குரங்குகள் பாவம் “கீயா மாயா' என்று கத்தியபடி கீழேயும் மேலேயும் போய் அலறத் தொடங்கின. போச வழியில்லை என்று தெரிந்ததும் அலறல் அழுகையாக மாறத் தொடங்கியது. மரத்தின் கீழே வலைபரப்பி தயார் நிலையில் இருந்தது. குரங்கு சாஸ்திர விற்பன்னரும், அடைப்பைக்காரரும் ஒடியா டி மேற்பார்வை செய்து கொண்டிருந் தார்கள்.
அந்தக் காட்சி ஓர் அபூர்வமான காட்சி. வாழ் நாளிலே காணக் கிடைக்காத காட்சி. சின்னதும் பெரிதுமாக எத்தனை நிறத்தில் எத்தனை விதமான குரங்குகள். திகிலுடன் கிளைக்கு கிளை பாய்ந்து "கீகி' என்று கோஷமிட்டு அவை செய்த கூத்தை விவ ரிக்க ஏலாது. தவ்வல் குட்டிகள் தாயின் மடியை இறுக்கிப் பிடிக்க தாய் குரங்குகள் தடுமாறியபடி கிளைக்கு கிளை தாவி தப்புவதற்கு வழி தேடின. சின்ன விரல் சைஸ் கிளைகளின் நுனியில் குரங்குகள் தொங்கியபடி ஊஞ்சல் ஆடின. மனம் "என்ன ஆகுமோ?’ என்று பயந்து துணுக்குற்றது. ‘என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ, உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?" என்ற கம்பர் கூற்றின் உட்கருத்து எனக்கு புலனா கியது. Μ r
ஆனால் நாங்கள் எதிர்பார்த்தபடி குரங்குகள் பொத் பொத்தென்று எங்கள் கைகளில் வந்து குதிப்ப தாய் தெரியவில்லை. அப்பொழுது அடைப்பைக் காரர் பெரிய கோடாரியொன்றை எடுத்து மரத்தை

Page 107
190 0 ஞானம்
“டம், டம்' என்று அடிக்கத் தொடங்கினார். அனுபவ மில்லாத ஒரு குரங்கு மரத்தை யாரோ வெட்டுகிறார் களென்று பயந்து அவசரமாக குதித்தது. அதைத் தொடர்ந்து வெள்ளையும் சிவப்புமாக குரங்குகள் குதிக்கத் தொடங்கின. அந்தக் காட்சி வெள்ளை மலர்களையும் சிவப்பு மலர்களையும் தேவர்கள் ஆகாயத்திலிருந்து கொட்டுவது போல இருந்தது. "ஸ்வீட் ஜீசஸ்" என்று கத்தியபடி டேமியன் செய்வ தறியாது அங்குமிங்கும் ஓடினான். அளவுக்கு மீறிய பரபரப்பான சமயங்களில் டேமியன் இப்படி கத்து வது வழக்கம். குரங்குகள் குதிக்க குதிக்க ஆபிரிக்க சிறுவர்கள் 'பொக்கு பிளென்டி லெவ்வாம், லெவ் வாம்!' என்று கூவியபடி கோழிக்குஞ்சை அமுக்குவது போல் பக்கென்று அவற்றைப் பிடித்துக்கொண்டு ஒடியோடிப்போய் மூங்கில் கூட்டிலே அடைத்துவிட்டு வந்தார்கள்.
கொலபஸ் குரங்குகளில் இரண்டு விதம் இருந்தது. ஒன்று சிவப்பு வகை; மற்றது கழுத்திலே வெள்ளை வளையம் போட்டது. தவறுதலாக வலையில் பிடி பட்ட சாதாரண குரங்குகளை நாங்கள் திரும்பவும் கொண்டு போய் காட்டிலே விட்டுவிட்டோம். ஒன் றிரண்டு கொழுத்த குரங்குகளை அவர்கள் சாப்பாட் டுக்காக வைத்துக்கொண்டார்கள். குரங்கு இறைச் சியை ஆபிரிக்காவின் மென்டே இனம் விரும்பிச் சாப்பிடும். நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான வெற்றி. ஆஹா, என்ன நிம்மதி! இனி எங்கள் வேலைகள் இரண்டு நாளிலேயே சுலபமாக முடிந்து விடும்.
டேமியனுக்கு சந்தோஷம் தலைகால் புரிய வில்லை. அதைக் காட்டும் முகமாக "பாம் மரங்களில்

அ. முத்துலிங்கம் 0 191
ஏறி ஏறி இறங்கினான். அவனுக்கு பாம் மரங்களில் ஏறுவதும், எஸ்கலேட்டரில் மேலே போவதும் ஒன்று தான். மரத்தின் உசசிக்குப் போனதும் முட்டிகளில் வடிந்திருக்கும் பாம் வைனை ஒரு மிடறு குடித்து ருசி பார்த்துவிட்டு போன வீச்சில் இறங்கிவிடுவான். கற் பாறைகளை வெறும் கையால் பிடித்து ஏறுபவனுக்கு பாம் மரம் ஏறுவது ஒரு காரியமா? வேலைகள் தலைக்குமேல் இருக்கும்போது இவன் இப்படி சிறு பிள்ளைத்தனமாக விளையாடிக் கொண்டிருந்தது, எனக்கு எரிச்சலாக இருந்தது. அவனுடைய மரம் ஏறும் வித்தைக்கு விரைவிலேயே ஓர் உபயோகம் வரப் போகும் விஷயம் எனக்கு அப்போது தெரிய வில்லை.
ஆபிரிக்கக் காடுகளின் உட்பகுதிகளில் கட்டியிருக் கும் சில குடிசைகளின் பக்கம் அந்நிய மனிதர்கள் அணுக முடியாது. களி மண்ணும் வைக்கோலும் சேர்த்து பிசைந்த ஒரு கலவையால் கட்டிய குடிசை கள் அவை. வைக்கோல் கூரை. இந்தக் குடிசைகளில் தான் ஆபிரிக்க சிறுவர்களுக்கான சில ரகஸ்ய சடங்கு கள் நடைபெறும். மிகவும் ரகஸ்யமாக நடக்கும் இந்த சடங்கின் பின்தான் ஒரு சிறுவன் மனிதன் ஆகிறான் என்பது இங்கே ஐதீகம். அந்த சடங்கிற்காக போடப் பட்ட பழைய குடிசை ஒன்றிலே பெரியவர்கள் ஒர் ஆந்தையையும் இரண்டு குஞ்சுகளையும் கண்டு விட் டார்கள். ஆந்தை என்றால் ஆபிரிக்காவில் பேய் பறவை என்று பேர். எங்கே கண்டாலும் அதை அந்தக் கணமே கொன்றுவிட வேண்டும். துப்பும் பாம்பைக்கூட சட்டை செய்யாமல் கிட்டப்போய் வெறும் கையினால் பிடித்துவிடும் ஆபிரிக்கர்கள் ஆந்தையைக் கண்டால் ஒரு கட்டை தூரம் ஓடிவிடு வார்கள்.

Page 108
192 இ ஞானம்
ஆந்தை அவர்களுக்கு கெடுதல் விளைவிக்கிறது என்று முழு மூச்சுடன் நம்பினார்கள். ஒருமுறை ஆந்தையினால் அந்த கிராமத்தில் பேதி வந்து அரை வாசிப் பேர் இறந்து போனார்களாம். இன்னொரு தடவை உரிய நேரத்துக்கு மழை வராமல் பயிர்கள் எல்லாம் அழித்து விட்டனவாம். முழு கிராமமும் ஒன்றுகூடி இது பற்றி நீண்ட நேரம் விவாதம் செய் தது. முடிவாக குடிசை யுடனேயே சேர்த்து ஆந்தை யையும் குஞ்சுகளையும் கொளுத்தி விடுவது என்று தீர்மானமாகியது.
இந்த செய்திகள் அவ்வப்போது எங்களுக்கு மெண்டே சிறுவர்கள் மூலம் வந்து கொண்டிருந்தன. எனக்கு தெரிந்த கொஞ்சம் மென்டே பாஷையை வைத்து அவர்கள் கூறுவதை புரிந்து கொண்டேன். இதை நான் டேமியனுக்குச் சொன்னதும் அவன் "ஸ்வீட் ஜீஸஸ் என்று தலையிலே கைவைத்து கத் தினான். ஆந்தைகளைப் பற்றி அவனுடைய ஞானம் அபாரமானது. தீவிர ஆராய்ச்சிகள் செய்து சயன்ஸ் பத்திரிகைகளில் கட்டுரைகள் எல்லாம் எழுதியிருக்கிறான். அவனால் இந்த அநீதியை ஜீர -ணிக்க முடியாமல் இருந்தது. எப்படியும் அந்த ஆந்தைகளை காப்பாற்றுவது என்று அவன் மன திலே தீர்மானித்துக் கொண்டான்; இதற்கு அவன் என் தயவையோ, கட்டளையையோ எதிர்பார்க்க வில்லை.
கடவுளால் படைக்கப்பட்ட அத்தனை ஜீவராசி களிலும் மிகவும் அற்புதமானது ஆந்தை என்பது அவன் கருத்து. முதலாவதாக, பறவை இனத்திலே அது ஒன்றுதான் இரவு பட்சிணி வெளவால் பறவை யல்ல, மிருகம். ஆகவே அதைக் கணக்கிலே சேர்க்கக்

அ. முத்துலிங்கம் 0 193
கூடாது. இரண்டாவதாக கண்களை திருப்பாமல் கழுத்தை மட்டும் நூற்றியம்பது டிகிரி திருப்பி தன் இரையைத் தேடும் வல்லமை படைத்தது. வேறொரு மிருகத்துக்கோ பறவைக்கோ இந்த சலுகை கிடை யாது. கண்கள் பெரிதாக இரவிலே பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும். காதுகள் இரண்டும் ஒன்று மேல் பார்த்தும் மற்றது கீழ் பார்த்தும் இருட்டிலே திசையறிவதற்கு ஏற்றமாதிரி அமைந்திருந்தன. அது மாத்திரமல்ல, உடம்பின் ஒவ்வொரு பகுதியும் ஒலியை வாங்கி திசையறிவதற்கு தகுந்தமாதிரி இதற்கு அமைக்கப்பட்டிருந்தது.
இது பறக்கும் விசித்திரத்தை விஞ்ஞானிகள் இன்னும் முற்றிலும் கற்றுத் தேறவில்லை. மற்றப் பறவைகள் பறக்கும்போது சடசடவென்று செட்டை களை அடித்து பறக்கும். இரவு வேளைகளில் இப்படி ஆரவாரம் செய்து பறந்தால் இதனுடைய இரை ஓடி மறைந்து கொள்ளும் அபாயம் உள்ளது. ஆகவே, இது பட்டம் பறப்பதுபோல் ஒருவித சத்தமும் போடாமல் விசுக்கென்று இறாஞ்சி விழுந்து இரை யைப் பிடித்துவிடும். கும்மருட்டிலே காதுகளின் ஒலியை மட்டுமே வைத்து எங்கோ புதருக்குள் ஒடும் எலியை வந்து லபக்கென்று பிடித்துவிடும் அற்புதம் வேறு எந்த பறவையிடமும் கிடையாது.
ஆனால் இதனிலும் விசித்திரம் அது சாப்பிடும் முறைதான். பிடிக்கும் இரையை அது அப்படியே முழுசாக விழுங்கிவிடும். மற்றப் பறவையினம்போல இரையை கால் நகங்களிலே கெளவிப் பிடித்து அலகி னால் கொத்திக் கிழித்து சாப்பிட இதற்குத் தெரி யாது. சில பெரிய ஆந்தைகள் ஒரு சிறிய முயற் குட்டியைக்கூட அப்படியே முழுசாக தூக்கி விழுங்கி விடுமாம். உண்ட சிறிது நேரத்தில் உணவு செரித்த

Page 109
194 0 ஞானம்
பின் வேண்டாத எலும்புகளையும் கழிவுகளையும் அப்படியே துப்பிவிடும்.
இதிலே அதிசயம் என்னவென்றால் ஆபிரிக்க ஆந்தைகள் விவசாயத்திற்கு செய்யும் தொண்டு அளப்பரியது. மனிதன் பாடுபட்டு விளைவித்த தானியங்களைச் சேதமாக்கும் சுண்டெலிகள், எலிகள், பெருச்சாளிகள் போன்ற எல்லாவற்றையும் ஆந்தைகள் தேடிப்பிடித்து சாப்பிட்டுவிடும். ஆந்தை களினால் மனிதனுக்கு நன்மையே ஒழிய ஒருவித தீங்கும் கிடையாது. டேமியன் செய்த ஆராய்ச்சியின் பிரகாரம் ஆந்தைகள் இல்லாவிட்டால் ஆபிரிக்கா வின் உணவுப் பற்றாக்குறை இருபதுவீதம் அதி கரித்து விடுமாம்,
இதுதான் டேமியனுக்கு பொறுக்க முடியாததாக இருந்தது. அவனை என்னால் தடுக்க முடியாது. ஆகவே உதவி செய்வதாகத் தீர்மானித்தேன். இந்தக் காரியத்தில் அவன் பிடிபட்டால் என்ன நடக்கும் என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால் எங்களுடைய ஐந்து வருட கொலபஸ் ஆராய்ச்சி மட்டும் தொடர முடியாமல் ஸ்தம்பித்து போகும் என்பதில் எனக்கு ஒருவித சந்தேகமும் இல்லை.
அன்றிரவு நடுநிசியளவில் டேமியன் கையுறை களையும், முதுகுப் பையையும் மாட்டி, வளையம் வைத்த லைட்டையும் தலையிலே பொருத்திக் கொண்டு துணிச்சலுடன் புறப்பட்டான். நான் வேவு பார்த்துக்கொண்டு வெளியிலேயே காவல் இருந் தேன். ரகஸ்ய சடங்கு குடிசையை அடைந்ததும் டேமியன் தலையில் மாட்டிய லைட்டை இயக்

அ. முத்துலிங்கம் 0 195
கினான். அதிர்ஷ்டவசமாக தாய் ஆந்தையும், குஞ்சு களும் அங்கேயே இருந்தன. திடீரென லைட்டைக் கண்டு திகைத்திருந்த தாய் ஆந்தையை முதலில் பிடிப் பதில் டேமியனுக்கு ஒருவித சிரமமும் இருக்கவில்லை. பிறகு இரண்டு குஞ்சுகளையும் பிடித்து முதுகுப் பையிலே போட்டுக் கொண்டான். பட்டுப்போன பாம் மரம் ஒன்று சிறிது தூரத்திலேயே இருந்தது. டேமியன் அந்த மரத்தில் சறுசறுவென்று ஏறி ஆந்தையையும் குஞ்சுகளையும் வெகு கவனமாக ஒரு மரங்கொத்திப் பொந்தில் வைத்துவிட்டு இறங்கி விட்டான். போன சுவடு தெரியாமல் இருவரும் வெகு சாதுவாக திரும்பி வந்து படுத்து விட்டோம்.
அடுத்த நாள் அதிகாலையிலேயே சத்தம் கேட்டு விழித்துக் கொண்டோம். ஆரவாரம் காதைப் பிளக்க வெளியே வந்து பார்த்தோம். தலைக்குடிமகனை கயிற்றுப் பல்லக்கில் தூக்கியபடி பல்லக்கு காவிகள் ஒட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தனர். மலைபோன்ற உடம்பை நிமிர்த்தி வைத்து இடமும் வலமும் பார்த்தபடி போனார் தலைக்குடிமகன்.
சூரன்போர் திருவிழாவில் சூரன், சிங்கமுகன், பானுகோபன் என்று மாறிமாறி வரும். உடம்பு ஒன்று; தலைமாத்திரம்தான் மாறும். சகடையில் வைத்து தள்ளிவரும்போது புன்னாலைக்கட்டுவன் தச்சனார் பின்னாலிருந்து சூரனுடைய காதுகளை இறுக்கிப் பிடித்து இடமும் வலமும் ஆட்டியபடியே இருப்பார். அதற்கேற்றபடி கைவாளும் மேலும் கீழும் ஆடும். நாங்கள் சூப்புத்தடியை நக்கியவாறு பயத்துடன் இந்த வைபவத்தை பார்த்துக்கொண்டு இருப்போம். அப்ப ‘பானுகோபன், பானுகோபன்’ என்று சத்தம் கேட்கும். சூரனுடைய மகன் பதும

Page 110
196 () ஞானம்
கோமளைக்கு பிறந்தவன், சிறுபிள்ளையாக இருத்த போது கோபத்தில் சூரியனையே பிடித்து தொட்டில் காலுடன் கட்டியவன், தலையை இரண்டு பக்கமும் ஆட்டியபடி வருவான். நாங்கள் பயத்துடன் பெரிய வர்கள கையைப் பிடித்துக் கொள்வோம்.
அதுபோலத்தான் தலைக்குடிமகன் வந்து கொண் டிருந்தார். அறுத்துக்கொண்டோடிய மாடுகள்போல முன்னுக்கும் பின்னுக்குமாக சனங்கள் தலைைெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆரவாரம் காதைப் பிளந் தது. பெரியவர்களும், சிறுவர்களும், பெண்களுமாக கூட்டம். எங்கள் ஊரில் சொக்கப்பானை எரிப்பது போல் அந்தக் குடிசை எரிந்து கொண்டிருந்தது. தலைக் குடிமகன் இந்தச் சொக்கப்பானை வைப வத்தை நேரிலே மேற்பார்வை செய்துகொண்டிருந் தார். அவருக்குப் பின்னால் அடைப்பைக்காரரும், பல்லக்கு காவிகளும் மிகவும் பவ்யமாக நின்று கொண்டிருந்தனர், நாங்களும் ஒன்றும் அறியாத பூனைகள்போல போய் அந்த ஆரவாரத்தில் கலந்து கொண்டோம்.
திரும்பி வரும்போது இந்த மூட நம்பிக்கையைப் பற்றி டேமியன் தாங்கியபடியே வந்தான். முழுக்க முழுக்க மனிதனுக்கு நன்மையே செய்யும் ஒரு பறவையை கெட்ட சகுனமாக கருதுவது எவ்வளவு மடமை என்றெல்லாம் உரத்து பேசியபடியே எங்கள் குடிசைக்கு கிட்ட வந்தான். அப்படி வந்தவன் சடுதி யில் வாயை திறந்தபடியே மூடாது "ஆ"வென்று சிறிதுநேரம் வைத்துக் கொண்டிருந்தான். கண்கள் நிலைகுத்தி நின்றன, பறகு "ஸ்வீட் ஜீஸஸ்" என்றான். நாங்கள் பாடுபட்டு கட்டிய மூங்கில் கூடு திறந்து கிடந்தது. கொலபஸ் குரங்குகள் எல்லாம் மாயமாய் மறைந்து விட்டன.

அ. முத்துலிங்கம் D1 197
நான் மாடக்கூடலில் நரியைப் பரியாக்கிய அற் புதம் இங்கேயும் நடக்கிறதா? கூட்டிலே அடைத்து வைத்த குரங்குகள மறைந்த மாயம் என்ன? ஒன்றை யொன்று சாப்பிட்டு விட்டனவா? பூமியிலே புதைந்து விட்டனவா? காற்றிலே கரைந்து விட்டனவா? *கறையான் தின்றதோ, கள்வன் கவர்ந்து சென் றானோ? என்று தர்பார் ராகத்தில் வாய்விட்டு அழு தோம். குரங்குகளைக் காணவில்லை; காரணமும் தெரியவில்லை. டேமியன் கூட்டுக் கதவை சரியாக கட்டவில்லை என்பது என் வாதம். குரங்குகளே கிதவைத் திறந்து விட்டன என்பது அவனுடைய கட்சி, −
குனிந்த தலையுடன் இருவருமாக தலைக்குடிமக ரிைடம் போய் எங்களுக்கு நேர்ந்த கதியை முறையிட் டோம். அவருடைய உதட்டிலே புன்சிரிப்பு குரங்கு சாஸ்திர விற்பன்னரை நோக்கி அவர் பார்வை திரும் பியது. அவர் ஒடோடி வந்து தலைக்குடிமகன் பக்கத் திலே நின்று கொண்டார். இப்போது இரண்டாவது ‘எபிஸோட் தொடங்கியது. அவருடைய கவலை யெல்லாம் இன்னொரு தடவை குரங்கு பிடிக்கும் போது எவ்வளவு வருமானம் அதிகரிக்கும் என்று கணிப்பதிலேயே இருந்தது. முந்திப் பேசிய விலைப் படி இன்னொரு முறை குரங்கு கூட்டத்தை பிடிப்ப தற்கு சம்மதம் தந்தார். எவ்வளவு கெஞ்சியும் அவர் விலையை குறைக்கவில்லை. பட்டம் பிய்த்துக் கொண்டு போவதுபோல எங்கள் பட்ஜெட் தறி கெட்டு போவதை செய்வதறியாது பார்த்துக் கொண்டு நின்றோம்.
டேமியன் உலகம் கவிழ்ந்ததுபோல இருந்தான். ஆந்தையினால் கிராமத்துக்கு ஏற்பட வேண்டிய

Page 111
198 d ஞானம்
கெடுதல் எங்களுக்கு வந்துவிட்டது என்று அவன் நினைத்தான். எனக்கு இது அதிசயமாக இருந்தது. நான் 'எங்கள் கவனக்குறைவால் ஏற்பட்ட நஷ்டத் திற்கு ஆந்தை என்ன செய்யும்? ஆந்தை இறக்க வில்லை; ஆனால் அது இறந்து விட்டதென்று கிராம மக்கள் நம்புகிறார்கள். அவர்களுக்கு நஷ்டத்திற்குப் பதிலாக இப்போது இரட்டிப்பு லாபம் அல்லவா கிடைக்கிறது? அவர்களைப் பொறுத்த மட்டில் ஆந்தை அவர்களுக்கு ஒரு அதிர்ஸ்ட தேவதைதான்' என்றேன். டேமியன் ஒன்றுமே பேசவில்லை. துண்டு விழும் கணக்கை எப்படி சமாளிப்பது என்ற விசாரத் தில் மூழ்கிக் கிடந்தான். அவனைப் பார்க்க பரிதாப
மாக இருந்தது.
அன்றிரவு பாதுகாப்பான மரப்பொந்திலிருந்து ஆந்தையுடைய அற்புதமான கூவல் ‘க்கூம், க்கூம்' என்று டேமியனுக்கு நன்றி கூறுவதுபோல கேட்டது. அப்படியான ஒரு சோகமான இனிமையை நான் என் வாழ்நாளில் கேட்டதேயில்லை. மனிதர்களின் அறியா மையை நினைத்து அதனுடைய சோக கீதம் இருந் திருக்கலாம்; அல்லது ஆபிரிக்காவின் உணவு உற் பத்தியில் தனக்கிருக்கும் பங்கை பறை சாற்றுவதாக வும் இருந்திருக்கலாம். அந்த தாலாட்டில் எப் பொழுது தூங்கினேன் என்பது எனக்கு நினைவு இல்லை. O

4
*சிலம்பு" செல்லப்பா

Page 112
சிேலம்பு செல்லப்பா என்று முகத்துக்கு முன்னா லும், 'அலம்பல் செல்லப்பா என்று முதுகுக்குப் பின் னாலும் அழைக்கப்படும் செல்லப்பாவை நான் முதன் முதலில் நாலு வருடங்களுக்கு முன்புதான் சந்தித் தேன். மறக்க முடியாத சந்திப்பு அது. பல வருடங் களாக வெளிநாடுகளிலேயே உத்தியோகம் பார்த்து வந்த நான், ஒரு ப்ரொஜெகட் விஷயமாக ஓர் ஆறு மாத காலம் கொழும்பில் வேலை பார்க்க வேண்டி வந்தது. அந்த சமயத்தில்தான் என் பழைய நண்பர் சண்முகத்தின் தரிசனமும் அவர் மூலம் செல்லப்பா வின் நட்பும் எனக்கு கிட்டின.
ஆறு மாதங்களுககு ஒரு தனிவீடு எடுத்து இருப் பது எனக்கு தோதுப்படவில்லை. ஒரு வாரத்திற்கு மேல் ஹோட்டல் சாப்பாடும் தாங்காது. காலி ரோடும், சென்ற லோரன்ஸ் வீதியும் சேரும் சந்திப் பில் நின்றபடி ஒரு மாலை நேரம் இதுபற்றி நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போதுதான் என் குருகுலவாச நண்பரான சண்முகம் தென்பட் டார். அந்தக காலத்திலேயே என்னைத் 'தம்பி" என்று பாசத்தோடு அழைத்தவர்; இருபது வருடம் ஆகியும் வெகு சுலபமாக என்னை அடையாளம் கண்டுகொண்டு விட்டார்.
அதன் விளைவுதான் என்னுடைய சமறி" வாழ்க்கை, விடாப்பிடியாக கையைப் பிடித்து அழைத்து வந்துவிட்டார் சண்முகம். அவருடைய உடம்பைப் போலவே அவருக்கு தாராளமான மனக. அவர்தான் எனக்கு ‘சிலம்பு செல்லப்பாவை அறி முகம் செய்து வைத்தவர். "சிலம்பு' என்ற அடை மொழி வந்த விருத்தாந்தத்தை நான் இங்கே விளக் கத் தேவையில்லை. அந்த மகத்தான காரியத்தை

அ. முத்துலிங்கம் L 201
நீங்களே ஏற்கனவே செய்து முடித்திருப்பீர்கள். சிலப் பதிகாரத்திற்கு நடமாடும் authority செல்லப்பா தான். இளங்கோ அடிகள் உயிரோடு இருந்திருந்தால் அவரே வந்து இவரிடம் சில ஐயங்களை தீர்த்துக் கொண்டிருப்பார்.
செல்லப்பாவுக்கு வயது 45க்கு மேலே இருக்கும். நித்தமும் ஏகாதசி விரதம் அநுட்டிப்பவர் போன்ற மெலிந்த தோற்றம். நாலு நாள் தாடி, வெள்ளை மயிரும் கறுப்பு மயிரும் சரிசமமாக பங்குபோட்டு அவர் தாடையிலே படர்ந்திருக்கும். உணர்ச்சிவசப் படும் மெல்லிய நீண்ட மூக்கு ஆழ்ந்து யோசிக்கும் கண்கள். வெற்றிலைப் பிரியர். நாறப்பாக்கு, பிஞ்சுப் பாக்கு, களிப்பாக்கு என்று அலங்காரமாக அடுக்கி வைத்து, தன் கையால் சீவி, வாய்க்கு ஒய்வு கொடுக் காமல் மென்று கொண்டேயிருப்பார். பேசத் தொடங்கினார் என்றால் பாத்திரம் அலம்புவது போல நீட்டுக்கு பேசிக்கொண்டே போவார். அவ ருக்கு வேண்டாதவர்கள் 'பிரேக் இல்லாத சைக்கிள்" என்று அவரை வர்ணித்தால் அதை நீங்கள் கண்டு கொள்ளக் கூடாது.
தமிழ் தினசரி ஒன்றில் கடந்த பதினைந்து வருடங்களாக வேலை பார்த்து வந்தார். அவர் பத் திரிகையில் தொடர்ந்து எழுதிய "சிலம்பின் சிறப்பு" கட்டுரைகள் புத்தகமாக வந்திருந்தது. இலக்கியத்தில் இடைவிடாத ஆர்வம். தானும் தன் வெற்றிலையு மென்று இருப்பார். சிலப்பதிகாரத்தில் அவருடைய ஈடுபாட்டை கேள்விப்பட்ட உடனேயே பள்ளி நாட் கள் தொட்டு எனக்கு இருந்து வந்த ஒரு சந்தேகத்தை கேட்டுவிடுவதென்று தீர்மானித்துக் கொண்டேன். சாப்பிடும்போதுதான் இதற்கு சரியான வசதி. பல
வ-14

Page 113
202 () சிலம்பு செல்லப்பா
விவாதங்களும், போர்களும், சிரிப்புகளும் அதே சாப பாட்டு மேசையை சுற்றியே அங்கே நடைபெற்றன. நான் உண்மையில் என்னுடைய ஐயத்தை கிளப்பிய தன் காரணம் அவருடைய ஆழ்ந்த புலமையை சோதிப்பதற்காகவும் இருக்கலாம்.
'சிலப்பதிகார்த்தில், புகார்க் காண்டத்தில் வரும் மங்கல வாழ்த்துப் பாடல், "திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!" என்று தொடங்குகிறது. அதற்குப் பிறகுதான் “ஞாயிறு போற்றுதும்" என்று வருகிறது. இது என்ன நியாயம்? உயிர்களுக்கெல் லாம் ஆதாரம் சூரியன் அல்லவா? சூரியன் இல்லா விடில் சந்திரன் ஏது? சந்திரனை முன் வைத்து, சூரி யனை பின் வைத்தது சரியா?" எள்பதுதான் என் ஐயம்.
செல்லப்பா சிறிது நேரம் என்னையே உற்றுப் பார்த்தார். அவர் என்னுடைய கேள்விக்கு அவகாசம் வேண்டி நேரத்தை கடத்தவில்லை. ‘இவர் என்னைச் சோதிக்கிறாரோ?" என்பது போலத்தான் அந்த பார்வை இருந்தது. அதை நிச்சயம் செய்துகொண்டு செல்லப்பா கதைக்கத் தொடங்கினார்:
'சிலப்பதிகாரத்தை படிக்கும்போது அவசரம் கூடாது. அதில் சொல்லாத விஷயங்களே இல்லை. இந்தக் கேள்விக்குப் பதில் பின்னால் 'அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில் வருகிறது.
'நீங்கள் ஒரு நண்பர் வீட்டுக்கு போகும்போது அவர் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி போகிறீர்கள் அல்லவா? குழந்தைக்கு செய்வது பெற்றோருக்கு செய்வதுபோல. பெருங்காப்பியங்கள் பாடும்போது விநாயகருக்குத்தானே முதல் வணக்கம்; மற்றக் கடை

அ. முத்துலிங்கம் 0 203
ளருக்கு பின்னால்தான். பிள்ளையை வணங்கினால் பெற்றோரை வணங்கியதற்கு சமம்.
*சூரியன் கடலிலே மறைந்து விட்டான். பூமா தேவி தன் ஆசைநாயகனை காணாது வருந்துகிறாள். *கதிர்கள் எல்லாம் பரப்பி என்னை ஆள்பவனை திடீ ரென்று காணவில்லையே! நிலவுக்கதிர்களை விரித்து ஒளிசெய்யும் என் செல்வன் சந்திரனையும் காண் கிலேனே! என்று நிலமடந்தை புலம்புகிறாள்.
'பூமியை அரசியாகவும், சூரியனை அரசனாக வும், சந்திரனை அவர்கள் செல்வனாகவும் கண்ட புலவருடைய கற்பனை இது.
விரிகதிர் பரப்பி உலகம் முழுதாண்ட ஒருதனித் திகிரி உரவோன் காணேன்; அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும் திங்கள் அம் செல்வன் யாண்டுளன் கொல்?
"இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் "திங்களைப் போற்றுதும்? முதலடியாக வந்தது பெரிய குற்றமாகத் தெரியாது. எமக்கு முன் வந்து பாடி வைத்துப் போன முனிவர்கள் தியானத்தில் இருந்துவிட்டு பாடியவை இவை. ஒவ்வொரு வார்த் தையையும் ஆழ்ந்து சிந்தித்த பின்தான் அவர்கள் பாடலை இயற்றினார்கள்' என்றார்.
செல்லப்பாவின் புலமையில் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்துக்கு நான் எனக்குள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.
"சமறி வாழ்க்கை எனக்கு புதுமையாகவும், வசதியாகவும் இருந்தது. சமைத்துப் போட ஒரு நல்ல சமையல்காரர் இருந்தார்; வீட்டைக் கூட்டி சுத்த

Page 114
204 oசிலம்பு செல்லப்பா
மாக வைப்பதற்கு ஒரு மனுசி வந்து போகும்; ஞாயிறு தோறும் சலவைக்காரர் வருவார். எல்லாமாக அந்த சமறியில் எட்டுப் பேர் குடியிருந்தார்கள். மாதமுடி வில் கணக்குப்பண்ணி செலவை எட்டில் ஒரு பங்காக பிரித்துக் கொள்வோம். எல்லோருமே மணமுடித்த பேர்வழிகள், சிலர் மனைவியை இழந்தவர்கள்; சிலர் ஒய்வெடுத்தவர்கள்; சிலர் பிள்ளைகளின் படிப்புக் காக குடும்பத்தை பிரிந்து வந்தவர்கள்.
அங்கே பிரதானமாக மூன்று ‘குரூப்கள் இருந் தன. கடுதாசி விளையாடி. தண்ணி அடிப்பதை தலையாய பொழுதுபோக்காகக் கொண்டது ஒன்று; அடுத்து, அலுவலகத்தில் ஒவர் டைம் செய்து வீட்டிலே வந்து நித்திரை கொண்டு தீர்க்கும் கும்பல். இது தொல்லையில்லாத, சத்தமேயில்லாத குரூப். மூன்றாவது குழுவில்தான் செல்லப்பாவும், சண்முக மும் நானும் அடங்குவோம். படங்கள் பார்ப்பது, சஞ்சிகைகள், புத்தகங்கள் படிப்பது, இலக்கிய சர்ச்சை இப்படியாக எங்கள் பொழுது போகும்.
அடுத்து வந்த ஞாயிறு ஒன்றில் சமையலறை அல்லோல கல்லோலப்பட்டது. சண்முகம் சமையற் காரனை அனுப்பிவிட்டு தானே கருவாட்டுக்கறி சமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டி ருந்தார். இப்படி அடிக்கடி அங்கே சமையலறை ஆட்சி மாறும். சுதுமலையாருடைய முறைப்படி கரு வாட்டுக்கறி வைப்பதில் இவர் ஒரு விண்ணர், கரு வாட்டை நீளநீளமாக வெட்டி எண்ணெய்ச் சட்டி யில் போட்டு ‘தீய்ச்சுக்" கொண்டிருந்தார்.
கல்லோயா சாராயம் ஒரு பெக் அடித்திருந்ததி னால் ஒரு சாண் உயரத்தில் மிதந்து கொண்டிருந்

அ. முத்துலிங்கம் O 205
தார். எனக்கு கனநாளாக கேட்கவேணும் என்றிருந்த "அந்த விஷயத்தை" கேட்பதற்கு இது நல்ல சந்தர்ப் பம் போல பட்டது.
நாங்கள் படிக்கும்போது நாகலிங்க மாஸ்டர் தான் எங்களுக்கு ஆங்கிலம் எடுத்தவர். நேற்றுத் தான் சிவதனுசை முறித்தவர் போன்ற தோற்றம். விலத்தி, விலத்திதான் நடப்பார். எங்கள் கிளாஸில் தங்கரத்தினம் என்று ஒரு பெட்டை. நெருப்பில் சுட்ட ராசவள்ளிக் கிழங்குபோல் சிவப்பாய் இருப் பாள். எந்த நேரமும் பசலை நோய் வாட்டும் கண்கள், சண்முகத்துக்கு அப்ப காதல் செய்யும் வயசு, சும்மா இருப்பாரா? இரவும் பகலும் கண் விழித்து அவளுக்கு ஒரு காதல் வாசகம் எழுதினார். சமயம் வரும்போது கொடுப்பதற்காக 'Tale of Two Cities’ புத்தகத்தின் கடைசி ஒற்றையில் ஒளித்து வைத்திருந்தார். அன்றைக்கென்று பார்த்து இவரு டைய புத்தகத்தை வாங்கி பரடம் எடுத்தார் நாக லிங்க மாஸ்டர். இவருடைய காதலின் ஆழத்தையும் ஆங்கில விசாலத்தையும் காட்டுவதற்காக தீட்டப் பட்ட அந்தக் கடிதம் சமய சந்தர்ப்பம் தெரியாமல் மாஸ்டரின் காலடியில் விழுந்தது.
My dear Thangaratinam, When your father and mother went to sees aparam (Pugh) tonight l will come to your house.
இவ்வளவுதான் கடிதத்தின் வாசகம், மாஸ்ட ருக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்துவிட்டது. நுனியிலே சுட்டு பதப்படுத்தப்பட்ட துவரந்தடியை எடுத்து விளாசத் தொடங்கினார். அவர் அடிக்கும் போது 'இங்கிலீஸில் எழுதுவியா? இங்கிலீஸில் எழுதுவியா?' என்று சொல்லிச் சொல்லித்தான்

Page 115
206 () சிலம்பு செல்லப்பா
அடித்தார். பார்க்க பாவமாயிருந்தது. பெட்டைக்கு முன்னால் அடி வாங்குவது எவ்வளவு அவமானம்! 9y pö35’ LuGh Gifflaj sin ở Sầ) gyös Tale of Two Lovers கொஞ்ச காலமாக மூலை முடுக்கெல்லாம் இழுபறிப் பட்டது.
அந்த விவகாரத்தின் முடிவு என்ன? அதைப் பற்றித்தான் கேட்பதற்கு நான் "சுழன்று, சுழன்று' வந்து கொண்டிருந்தேன். நான் துணிவை வர வழைத்து அவரைக் கேட்டபோது, 'தம்பி, சிவப்பு பெட்டையளை நம்பக்கூடாது; அவள் சும்மாளனக்கு போக்கு காட்டினவள். பிறகு ஒரு சப்இன்ஸ்பெக் டரை முடிச்சுக்கொண்டு ஓடிப் போட்டாள்’ என்று கதைக்கு முத்தாய்ப்பு வைத்தார்.
r யாழ்ப்பாணத்தில் சமையலறையை ஆண் பிள் ளைகள் அண்ட முடியாது. சண்முகம் என்னவென் றால் கை தேர்ந்த பரிசாரகனைப்போல சமைத்து வைத்திருந்தார். அந்த மணத்துடன் அரைப்பானை சோறு சாப்பிடலாம். கருவாட்டை பல்லிலே கடித்து இழுத்து ரசித்தபோது நாலாவது பரிமாணத்துக்கு ஆளைத் தூக்கிப் போனது. ‘எங்கே இப்படி வைக்கக் கற்றுக் கொண்டார்?" என்று கேட்கத் தோன்றியது. சித்திரகூட மலையில் இலக்குமணன் தன்னந்தனியாக கட்டிய பர்ணசாலையை பார்த்த ராமன் ‘என்று கற்றனை நீ இதுபோல்?’ என்று கட்டி அணைத்து அழுதார் அல்லவா? அதுபோல் சண்முகத்தை கட்டி அணைக்கத்தான் தோன்றியது. அவர் பலூன்போல மிதந்து கொண்டிருந்த படியால் அந்த எண்ணத்தை நான் கைவிட வேண்டி வந்தது.
சாப்பிடும்போது வழக்கம்போல செல்லப்பா வந்து கலந்து கொண்டார். சாப்பாடோ நல்ல

அ. முத்துலிங்கம் 0 207
உறைப்பு. சண்முகம் சிறிது தலையை ஆட்டியபடி, கண்களிலே நீர் ஒட, சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தங்கரத்தினத்தின் ஞாபகம் வந்ததோ? என்னவோ? அப்படிச் சாப்பிட்டவர் சடுதியாக செல்லப்பாவின் பக்கம் திரும்பினார்.
சண்முகத்துக்கு சிலப்பதிகாரப் புத்தகத்தின் அட்டை கூட எப்படி இருக்கும் என்று தெரியாது: ஆனால் எங்கள் வாக்குவாதங்களில் உற்சாகமாக ஆலவட்டம் பிடித்து, 'சிரித்துக் கொடுத்து கதைக்கு சுவை சேர்ப்பதுதான் அவருடைய பங்கு. சண்முகம் வாய் திறந்தால் அநேகமாக அது செல்லப்பாவை சீண்டுவதற்காகத்தான் இருக்கும். கருவாட்டைக் கடிச்சு இழுத்துக் கொண்டு செல்லப்பாவை நோக்கி ஒரு கேள்விக் கணை தொடுத்தார், சண்முகம். நான் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
'ஏன் ஐஸே! சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகியெல்லாம் கருவாடு சாப்பிட்டிருப் பினமோ?" என்று துருவினார்.
செல்லப்பா சிரித்துவிட்டு பேசாமல் இருநது விடுவார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அவர் வாயிலிருந்த கடைசி கருவாட்டுதுண்டை சப்பி விழுங்கிவிட்டு, தாடையைத் தடவி, புருவத்தை நெரித்து, சண்முகம் கேட்ட கேள்விக்கு சீரியஸாக பதில் சொல்லத் தொடங்கினார். கதை கேட்பதற்கு அவருக்கு முன்னால் ஆட்கள் இருந்தால் அவர் அவ்வளவு சுலபத்தில் அந்த சான்ஸை இழக்க சம் மதிப்பாரா?
'அரச வம்சத்தினர் முறையாக வேட்டையாடி யதை உண்பது தர்மம் என்று வால்மீகியே கூறியிருக் கிறார். சிலப்பதிகாரம், வணிக குலத்தின் சிறப்பை

Page 116
208 () சிலம்பு செல்லப்பா
சித்தரிக்க எழுந்த முதல் நூல். இதிலே காணல்
வரியிலே கடற்கரையில் காயப்போட்ட கருவாட்டை பறவைகள் கொத்தாமல் அழகிய பெண்கள் காத்துக் கொண்டு நின்றார்கள் என்றுவருகிறது. கருவாட்டை விருப்பமுடன் தின்பவர்கள் அப்போது நிறைய இருந் திருக்கிறார்கள். ஆனால் கோவலன் உண்டானா என்பது தெரியவில்லை? அவன் மதுரைக்கு போய் கொலை படுமுன் கண்ணகி கையால் உண்ட கடைசி உணவைப் பற்றி சிலப்பதிகாரம் அழகுடன் வர்ணிக் கிறது.
* “குமரி வாழையின் குருத்தகம் விரித்து’கண்ணகி யானவள் கோவலனுக்கு உணவு பரிமாறுகிறாள். 6T657 as Frtill unt G?
கோளிப் பாகல் கொழுங்கணித் திரள்காய் வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய்
மாவின் கனியொடு, வாழைத் தீங்கனி
இவற்றுடன் சோறும் சமைத்து, பால் நெய் மோருடன் கோவலனுக்கு கடைசி முறையாக உணவு பரிமாறுகிறாள், கண்ணகி. அந்த சாப்பாடு செரிக்கு முன்பே அவன் இறக்கப்போவது அவளுக்குஅப்போது தெரியாது."
உருக்கமாக செல்லப்பா வர்ணித்ததைக் கேட்ட போது அவர் புலமையை வியக்காமல் இருக்க முடிய வில்லை. அத்துடன் நின்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? ஆனால் அதற்கு அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் தெரியாமல் போய் ஒரு கேள்வியை கேட்டு நான் எல்லாவற்றையும் கெடுத்து விட்டேன்,

அ. முத்துலிங்கம் () 209
சண்முகம் என்னோடு ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில், ஒரு வருடம் படித்தவர். 'கற்க கசடறக் கற்க" என்பதற்கிணங்க ஆறஅமரப் படிக்கவேண்டும் என்ற அசைக்க முடியாத ஆசையுள்ளவர். அந்த லட்சியத்தை சாதிப்பதற்காக ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று வருடம் தங்கி தன் அறிவை விருத்தி செய்தவர். அவர் எட்டாம் வகுப்பில் வாங்கு தேய்ச்சுக் கொண்டிருந்தபோது நான் அவரை எட்டிப் பிடித்துவிட்டேன். அப்பவே அவர் இளந் தாரி, என்னைத் 'தம்பி’ என்றுதான் அழைப்பார். வஞ்சகமில்லாத அவருடைய உடம்பு வத்தகப்பழம் போல ‘பொதுக், பொதுக்’ என்று இருக்கும். எந்தக் கிளாஸ்"க்கு போனாலும் கடைசி வாங்கு ஆட்சி யுரிமை அவருக்குத்தான்.
அவருடைய முகம் ‘பக்கீஸ்' பெட்டி வடிவத்தில் சதுரமாக இருந்ததால் அவர் 'சப்பட்டை சண்முகம் என்று ஆசையாக அழைக்கப்பட்டார். இலவசமாகக் கிடைக்கும் கோயில் தளிசைக்கு உயிரையும் கொடுப் பார். சின்னப்பெடியன் கூட சேட்டைவிடும் அள வுக்கு நல்ல மனிதர்.
அவருடைய உயரத்தையும், அகலத்தையும் பார்த்து உதைபந்தாட்ட அணியில் அவரை சேர்த்துக் கொண்டார்கள். எங்களுக்கு பெருமை. எட்டாம் வகுப்பில் இருந்து எடுபட்டவர் இவர் ஒருவரே. Right Full back ஆக பதவியேற்றார். பந்து வரும் போதெல்லாம் ஓங்கி, ஒங்கி அடிப்பார். காலில் பந்து பட்டுதோ எட்டுமூலைக் கொடிபோல விண் கூவிக் கொண்டு பறந்து அடுத்த கோல் போஸ்டுக்கு கிட்டப் போய் விழும். ஆனால் பத்துக்கு ஒன்பது தடவை மிஸ் பண்ணி விடுவார்.

Page 117
210 0 சிலம்பு செல்லப்பா
அந்தக் காலத்தில் இப்படி தவறி விடுவதை *ஒலம் விடுதல்" என்று சொல்லுவார்கள். அது 'தமிழ் வார்த்தையா, ஆங்கில வார்த்தையா' என்பது எனக்கு இன்றுவரை தெரியாது. ஒருநாள் முற்றவெளி யில் நடந்த ஒரு முக்கிய மாட்ச்சில் இப்படி இவர் “காலைத் தூக்கி ஆடி அளவுக்கு அதிகமாக 'ஒலம் விட்டு எங்களுக்கு தோல்வியைத் தேடித் தந்தார்.
அடுத்த நாள் காலை எங்கள் தமிழ் மாஸ்டர் வகுப்புக்குள் நுழைந்தார். அவருடைய சொண்டுகள் சிறியவை; அவருடைய எடுப்பான பற்களை மூட தைரியமில்லாதவை. அறமிஞ்சி கோபம் வந்தா லொழிய அடிக்க மாட்டார். அவர் வந்ததுமே என்று மில்லாத வழக்கமாக பின்வரும் கந்தப்புராணப் பாடலை கரும்பலகையில் எழுதினார்:
நண்ணுதற் கினியாய் ஒலம் ஞான நாயகனே ஒலம் பண்ணவற் கிறையே ஒலம் பரஞ்சுடர் முதலே ஒலம்
இதை எழுதிவிட்டு என்ன, சண்முகம் சரி தானே? என்று கேட்டார். கிளாஸ் முழுகக ‘கொல்" என்று சிரித்தது. கொஞ்ச நாளாக அவர் "ஒலம் சண்முகம்’ என்று அழைக்கப்படாத ஞாபகம். காலப் போக்கில் இந்த சங்கதி மறந்து அவர் பழையபடி 'சப்பட்டை சண்முகமானார்.
இது தவிர, மறக்கமுடியாத உற்ற நண்பராக நான் அவரை கருதுவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவர்தான் முதன்முதலாக எனக்கு ‘எப்படி சோதனைக்கு படிப்பது?’ என்ற தேவரகஸ் யத்தை உபதேசித்தவர். ஒரு பெரிய அண்டாவில்

அ. முததுலிங்கம் 0 211
சுடுநீர் நிரப்பி அதற்குள்ளே காலை வைத்து இரவு ஒரு மணி, இரண்டு மணி என்று படிப்பாராம். இந்த சூட்சுமத்தை எனக்கு மட்டுமே அவர் கூறியிருந்தார். ஆனால் இந்த வழியைப் பின்பற்றி அவர் அடைந்த வெற்றி வாகைகளை கணக்கெடுத்த நான் அதிக நாள் தொடர்ந்து இந்த முறையை அநுசரிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
இப்படியாக பல விதங்களில் குருவாகவும், நண்ப னாகவும் இருந்த சண்முகம் எனக்கு சமறி வாழ்க்கை யின் நெளிவு சுழிவுகளை நுணுக்கமாக கற்றுத் தந் தார். சமறி வாழ்க்கையின் அநுகூலங்கள் தெரியாமல் "இவ்வளவு நாளும் என் வாழ்க்கையை வீணாக்கிவிட் டேனே' என்று வருத்தப்பட்டேன். அது சொர்க்கத் துக்கு அடுத்தபடி, தின்னவேலி சூத்திரக்கிணறு சுத்துவதுபோல எல்லாம் ஒரு கிரமத்துடன்தான் அங்கே நடக்கும். பிச்சுப்பிடுங்கல் இல்லை; அதி காலைகளில் மனைவியின் சுப்ரபாதம் போன்ற நச்ச ரிப்பு கிடையாது. தேடிச்சோறு நிதம் தின்று, பல சின்னம் சிறு கதைகள் பேசி சோம்பலை வளர்ப்ப தற்கு இதைவிட சொர்க்கம் பூலோகத்திலே இல்லை யென்று அடித்துச் சொல்லலாம்.
இந்த மாதிரி அமைதியாகப் போகும் வாழ்க்கை, சனிக்கிழமை காலை வேளைகளில் திசை மாறிவிடும். 'சனி நீராடு என்று ஒளவையார் எழுதிவைத்தது யாழ்ப்பாணத் தமிழருக்கென்பது உலகறிந்தவிஷயம். இந்த நாட்களில்தான் யாழ்ப்பாணத்து கோழிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். சைக்கிள் கரிய ரில் உமலைக் கட்டியபடி பெரியகடைக்கு கணவாய் வாங்கப் போகும் ஜனக்கூட்டங்களும் இந்த நாட் களில்தான், சமறி குடும்பத்தினர் எல்லாம் வழிய,

Page 118
212 () சிலம்பு செல்லப்பா
வழிய எண்ணெய் வைத்து முழுகி தங்கள் பாரம்பரிய தர்மத்தை நிலைநாட்டுவதும் இந்தச் சனிக்கிழமை களில்தான்.
எல்லோரும் இப்படி எண்ணெய் தேய்த்து, சுவற விட்டு 'தப்பு தப்பு’ என்று தப்பி நிற்கும்போது பார்த் தால் ஏதோ மல்யுத்த விளையாட்டுக்கு தயார் செய் வதுபோலத் தோன்றும். அதிலும் சண்முகம் சப் பாத்திக்கு தட்டுவதுபோல "தப்தப்" என்று தப்பாமல் தட்டியவாறே இருப்பார். செல்லப்பா தப்பல் பிரியர் அல்ல; அவருடைய சித்தாந்தம் சூடுபறக்கத் தேய்ப் பது, ஆகவே அவர் இந்த நாட்களில் தேய்த்து தேய்த்து கால் இஞ்சி கட்டையாகிவிடுவார்.
சண்முகம், அச்சரக்கூட்டை அரக்கிவிட்டு, வயிற் றிலுள்ள சுருக்கங்களை இழுத்து நெளிவெடுத்து எண்ணெய் தேய்ப்பது பார்க்க அம்சமாக இருக்கும். முன்னொரு காலத்தில் ஒரு பிரம்மாண்டமான யாவாரி நல்லூரில் இருந்தாராம். அவருடைய வயிற்று மடிப்புகளை கலைத்து எண்ணெய் பூச இரண்டு பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தாராம். ஒருமுறை அவருடைய வயிற்று மடிப்பை குலைத்த போது தேரை ஒன்று துள்ளிப் பாய்ந்ததாம், அப்படித் தான், சண்முகம் மடிப்புகளை விரித்து விடும்போது நான் கண்களை ஆவலோடு மேயவிட்டு காத்துக் கொண்டிருப்பேன். ஆனால் இந்த அற்புதமான மத்தி யான ஆர்ப்பாட்டங்கள் என்னுடைய ஒரு மடைத் தனமான கேள்வியால் ஒருநாள் சரிந்து வீழ்ந்தன.
சாலிவாகனன் என்று ஒரு பிராம்மணச் சிறுவன். சிக்கலான வழக்குகளுக்கு தீர்ப்புக் கூறுவதில் வெகு சமர்த்தன். அரசன் கைவிட்ட ஒரு கேஸை எடுத்து அதிசாமர்த்தியமாக தீர்ப்பு வழங்கி அரசனுடைய கோபத்துக்கு ஆளாகியவன்.

அ. முத்துலிங்கம் 0 213
சாகக் கிடந்த ஒரு வைசியன் தன் நாலு பிள்ளை களையும் அழைத்து தான் இறந்த பிறகு தன் திரவியம் எல்லாவற்றையும் தன்னுடைய கட்டில் காலின் கீழ் வைத்திருக்கும் குறிப்பின்படி பகிர்ந்து கொள்ளும்படி கூறி இறந்துவிட்டான். ஒரு கட்டில் காலின் கீழ் உமியும், ஒரு காலின் கீழ் மண்ணும், மற்றதின் கீழ் சாணமும், கடைசிக் காலின் கீழ் ஒரு பொற்காசும் இருந்ததை கண்டார்கள். இந்த குறிப்பின்படி மன்னன்கூடத் தீர்ப்பு கூற முடியவில்லை. ஆனால் சாலிவாகனன் அந்தக் குறிப்புகளை சரியாக உணர்ந்து முதல் பிள்ளைக்கு நெல்தானியமும், மற்ற வனுக்கு நிலமும், அடுத்தவனுக்கு மாடுகளும், கடைசிப் பிள்ளைக்கு தங்க நகைகளுமாகப் பிரித்து கொடுக்கும்படி தீர்ப்பு வழங்கினானாம். இப்படி நீதி வழுவாத மூதாதையரைக் கொண்ட நாட்டின் வழி வந்த பாண்டியன் நெடுஞ்செழியன் செய்த காரியம் அட்டூழியமாகப் பட்டது. இதைச் சொல்லப் போய் தான் எனக்கு ஒரு பெரிய சோதனை ஏற்பட்டது.
'பாண்டிய மன்னன் ஊடலில் இருக்கும் தேவி யைத் தணிப்பதற்காக அவளுடைய அந்தப்புரம் நோக்கி வேகமாகப் போகிறான். அந்த நேரம் பார்த்து பொற்கொல்லன் வந்து சிலம்பு திருடிய கள்வனைப் பற்றிய விபரம் சொல்கிறான். அதற்கு அரசன், தன் அவசரத்தில் நிதானம் இழந்து கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு என்று கூறி விடுகிறான். ஒர் அரசனுடைய தலையாய கடமை நீதிவழுவாது ஆட்சி புரிவது. இங்கே அந்த நீதித் துறை அமைச்சையே வெறும் ஊர்க்காவலரிடம் கொடுத்து விடுகிறான்.
'இரண்டாவதாக, கோவலனிடமிருந்து ஊர்க் காவலர் பிடுங்கி வந்த சிலம்பை அரசியாருடைய

Page 119
214 () சிலம்பு செல்லப்பா
சிலம்புடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம்; அரசன் செய்யவில்லை. ஓசையை ஒத்துப் பார்த்திருக்கலாம், அதுவுமில்லை. சிலம்பின் மூட்டுவாயை திறந்து உள்ளிருக்கும் பரல்கள் முத்தா? மாணிக்கமா? என்றாவது ஆராய்ந்திருக்கலாம்; அதையும் செய்ய வில்லை.
'சரி, கடைசியில் நடந்ததைப் பார்ப்போம். விரித்த குழலும், கையில் தனிச்சிலம்புமாக பாண்டி யன் சபையில் நுழைகிறாள், கண்ணகி. அந்தச் சமயத்திலாவது அரசன் நிதானமாக கோவலனிட மிருந்து கைப்பற்றிய சிலம்பை தன் அதிகாரிகளிடம் கொடுத்து விசாரித்திருக்கலாம், இல்லையா? மாறாக, இருந்த ஒரே evidenceஐயும் கண்ணகியிடம் கொடுக்க அவள் சபை நடுவே அதை உடைத்து வீசுகிறாள். இதுதான் நீதி வழுவா நெறிமுறையா?’ என்று நான் மூச்சு விடாமல் ஆவேசத்துடன் சொல்லி நிறுத்தி, னேன்.
செல்லப்பாவுக்கு கோபம் வந்து நான் இதற்கு முன்பு கண்டதில்லை. சண்முகம் எவ்வளவு சீண்டினா லும் சிரித்துவிட்டு போகும் அவர் என்மீது எரி கொள்ளிபோல் பாய்ந்தார். 'என்ன, நான் கடந்த இருபது வருடங்களாக இதைத்தான் படிக்கிறேன்; எழுதுகிறேன்; சிந்திக்கிறேன். நேற்று வந்த உமக்கு அவ்வளவு தெரியுமா? அரையும், குறையுமாய் படித்து விட்டு ஆகாயத்தில் குதிக்கிறீரே? சிலப்பதிகாரத்தின் சாரம் ஒருவர் தன் ஆயுளில் படித்து அறியக் கூடியதோ?
'வழக்குரை காதையில் சொல்லியுள்ள கடைசி செய்யுளை படித்துப் பாரும். தீர விசாரிக்காம அவ சரத்தில் செய்த காரியம் பாண்டியன் மனதை நெரு

அ. முத்துலிங்கம் 0 215
டிக் கொண்டே இருந்தது. தான் செய்தது பெருங் குற்றம் என்பதை அவன் ஏற்கனவே உள்ளூர உணர்ந் திருந்தான். காதல் மயக்கத்தில் ஒரு கணம் அறி விழந்து விட்டான். அது எவ்வளவு பாரதூரமான நிகழச்சியாக உருவெடுத்துவிட்டது. "ஒரு பெண் விரித்த கூந்தலும், நீர்வழிந்த கண்களுமாக, கையில் தனிச் சிலம்புடன் வந்திருக்கிறாள்' என்றதுமே பாண்டியனுக்கு தான் நீதி தவறியதும், தன் முடிவு காலம் நெருங்கியதும் தெரிந்து விடுகிறது. அவன் பிராயச்சித்தமாக தன் உயிரைக் கொடுத்தான்; கோப்பெருந்தேவியை பலி கொடுத்தான்; மதுரை மாநகரத்தையே தீக்கிரையாகக் கொடுத்தான்.
*மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணிரும்-வையக்கோன் கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொற்
Osawa உண்டளவே தோற்றான் உயிர்.?
'இன்ன குற்றத்திற்கு இன்ன தண்டனை என்று வரைமுறை உண்டு. பாண்டியன் அநுபவித்த தண்ட னையோ மகா கொடியது. இதிலும் பார்க்க வேறு என்ன ஐயா வேண்டும்?' இப்படிக் கோபாவேச மாகச் சொல்லிக் கொண்டே கையை துவாலையில் வேகமாகத் துடைத்துக் கொண்டார். பிறகுதுணியை மேசைமீது விசுக்கென்று வீசிவிட்டு போய்விட்டார்.
எனக்கு நாதாளி முள் குத்தியதுபோல சுருக்கென் றது. "ஏன்டா இப்படிக் கேட்டோம்? சாதுவான இந்த மனுசன் சாரைப் பாம்புபோல என்மேல் சீறி விட்டாரே!” என்று வருத்தப்பட்டேன்.
சண்முகத்துக்கு தெரியாத பூர்வாங்கமே கிடை யாது. மனைவியையும், மகளையும் பிரிந்து

Page 120
216 0 சிலம்பு செல்லப்பா
செல்லப்பா சமறியில் வாழும் காரணத்தை அவர் ஒருநாள் எனக்கு விளக்கினார்.
அப்ப செல்லப்பாவின் மகளுக்கு பதினான்கு வய திருக்குமாம். ஒரே மகள். சில்லறைக் காசைக் கிலுக் கியதுபோல எப்பவும் சிரித்தபடியே இருப்பாள். இவரை எட்டியெட்டி கொஞ்சுவாள். அவள்மேல் இவரும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஒரு முறை கொழும்பிலிருந்து விடுப்பில்போய் இவர் நின்றபோதுதான் அது நடந்தது. அவர்கள் வீட்டு வேலியில் ஓஸோன் ஒட்டை போல ஒர் ஒட்டை. அந்தப் பொட்டு வழியாக அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்த இவருடைய மகள் பக்கத்து வீட்டுப் பெடியனோடு சிரித்துப் பேசிக் கொண்டி ருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டாள். ஆத்திரத்தில் மதிகெட்டுப்போன செல்லப்பா அவள் கன்னத்தில் அஞ்சு விரலும் பதிய அறைந்துவிட்டார். அவள் திடுக்கிட்டுவிட்டாள். பிறந்த நாளிலிருந்து அவளை அணைப்பதற்கு மட்டுமே தொட்ட கை அது. அவளால் நம்பவே முடியவில்லை. "பட்சமுள்ள அப்பா, பட்சமுள்ள அப்பா" என்று கிழமை தவறா மல் கடிதம் எழுதியவள் பிறகு எழுதவேயில்லை; கதைக்கவுமில்லை. அவர் கொழும்பில் வீடு பார்த்த பிறகும் வர மறுத்து விட்டாள். தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு ஒரு குழந்தையின் நட்பை விகாரப் படுத்தியதற்காக செல்லப்பா தன்னை பெரிதும் வருத் திக் கொண்டார்.
சிலப்பதிகாரத்தை மட்டுமே நெஞ்சிலே சுமக் கிறார் என்று நான் நினைத்திருந்த செல்லப்பா இப்படி ஒரு பாரத்தையும் தாங்குகிறார் என்ற விஷயம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கன்னத்

அ. முத்துலிங்கம் 0 217
திலே ஒரு தட்டு தட்டியதற்காக ஐந்து வருடங்களாகி யும் அவள் கதைக்கவில்லை. எவ்வளவு பெரிய தண்டனை அப்போதுதான் இனிமேல் எங்கள் சம்பாஷணைகளில் 'சிலப்பதிகாரம் தவறியும் புகுந்து விடாமல் பார்க்க வேண்டுமென்று நான் சங்கல்பம் செய்துகொண்டேன்.
யேசு ஆனவர் கடைசி உணவு அருந்தியபின் தன் பிரதம சீடரான பீட்டரைப் பார்த்து 'என் அன்புக் குரியவனே, இன்றிரவு சேவல் கூவுமுன் நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்’ என்று கூறினார். பீட்டர் "அது நடக்காத காரியம்' என்று சங்கல்பம் செய்து கொண்டார். ஆனால் யேசு பிரான் உரைத்த பிர காரம் பீட்டர் மூன்றுதரம் மறுதலிக்க வேண்டி வந்தது அல்லவா?
அதுமாதிரி இந்த விஷயத்திலும் நான் எடுத்த சங்கல்பம் விரைவிலேயே தவிடு பொடியாகியது. ஆனால் குற்றவாளி நான் அல்ல.
இந்த சொற்ப காலத்தில் கிடைத்த அற்புதமான சிநேகிதத்தை அநியாயமாக இழப்பது எனக்கு வருத்தமாக இருந்தது. அவர் செய்த குற்றத்திற்கு அவருக்கு கிடைத்த தண்டனை அதீதமானதுதான். ஆனால் நான் செய்த மகாபாபம் என்ன? என்னை அறியாமல் ஒரு மெல்லிய நரம்பை உரசிவிட்டேன் போலத் தோன்றியது. அந்தச் சம்பவத்திற்கு பிறகு செல்லப்பா திண்ணையில், காயப் போட்ட தேங்காய் மூடிபோல எட்டிப் போய்விட்டார். என்னுடன் முகம் கொடுத்து பேசவுமில்லை; பழகவுமில்லை. முன்புபோல் சத்தம்போட்டு எங்களோடு கதைப் பதற்கும், சிரிப்பதற்கும் ஏதோவொன்று அவரைத் தடுத்து வந்தது. −
l5سسس-du

Page 121
218 D சிலம்பு செல்லப்பா
என்னுடைய பயணச்சீட்டு வந்துவிட்டது இன் னும் சில தாட்களே இருந்தன. ஒரு மத்தியான வேளை நாங்கள் மூவரும் மேசையில் வந்து அமர்ந் தோம், மற்றவர்கள் சாப்பிட்டுவிட்டு சிறு தூக்கம் போட போய்விட்டார்கள். நாங்கள் சாப்பிட்டு முடியுந்தறுவாயில் சமையல்காரன் தயிர் கொண்டு வந்து வைத்தான். தயிர் இல்லாவிட்டால் எனக்கு சாப்பிட்டது போலவே இருக்காது. எல்லோருக்கும் அது தெரிந்த விஷயம். செல்லப்பா ஒரு சிறங்கை தயிர் அள்ளி சாப்பிட்டுவிட்டு 'ஆஹ்" என்றார்.
வழக்கமாக சட்டியில்தான் தயிர் வரும். ஆனால் அன்று சூப்பர்மார்க்கெட்டில் வாங்கிய பிளாஸ்டிக் பெட்டியில் வந்திருந்தது. "என்ன இண்டைக்கு இப்பிடி தயிர்?' என்றேன். அதற்கு வேலைக்காரன் 'இல்லை ஐயா, இது ரண்டுரூவா தான் கூட. பிளாஸ் டிக் பெட்டி பார்க்க வடிவாயிருக்கு இப்ப எல்லாரும் இதுதான் வாங்கினம்’’ என்றான்.
நான் அன்று தயிரைத் தொடவில்லை. பிளாஸ் டிக் பெட்டிகளில் வரும் உணவை நான் தொடு வதில்லை என்ற விஷயம் சண்முகத்துக்கு தெரியாது. அவருக்கு மனசு வருத்தமாகிவிட்டது. ‘என்ன தம்பி, இதில ஏதாவது கெடுதலா?" என்றார்.
'இல்லை, முன்னேற வேண்டிய நாங்கள் இப்படி பின்னாலே போய்க் கொண்டிருக்கிறோமே! சட்டி யில வாற தயிர் என்ன வடிவு? எவ்வளவு ருசி? இப்ப என்ன அவசரத்துக்கு பிளாஸ்டிக்குக்கு மாற வேண் டும்? சட்டியென்றால் தயிரிலே மிதக்கும் உபரித் தண்ணியை அது உறிஞ்சுவிடும். அதைச் செய்யும் ஏழைக் குயவனுக்கு வேலை கிடைக்கிறது. அதே சட்டியை திருப்பித் திருப்பி பாவிக்கலாம்; உடைந்து

அ. முத்துலிங்கம் 0 219
போனால் மண்ணுடன் சேர்ந்துபோகும்; சுற்றுச் சூழலுக்கு ஒருவித கெடுதலும் இல்லை.
'ஆனால், பிளாஸ்டிக் என்று வரும்போது விலை கூடுகிறது. பாவித்து விட்டு எறிந்து விடுகிறோம்; திருப்பி பாவிக்க முடியாது. இதனால் எவ்வளவு கெடுதல் தெரியுமா? இந்த பிளாஸ்டிக் சாகாவரம் பெற்றது. நூறு வருடங்கள் வரை உயிர் வாழும். இதை அழிப்பது மகா கஷ்டம். மண்ணோடு முற்றும் கலக்க நானூறு வருடங்கள் வரை பிடிக்குமாம். இதை எரித்தால் வரும் நச்சுப் புகை காற்றுமண்டலத் தில் சேர்ந்து நாசம் விளைவிக்கும். எங்களுக்கு ஏனப்பா இந்த அவசரம்?"
"பிளாஸ்டிக்கில் இவ்வளவு கெடுதலா? எனக்கு தெரியவே இல்லை, தம்பி?' என்றார் சண்முகம்.
"பூமாதேவி பொறுமையானவள். பிறந்த நாளி லிருந்து அவளுக்கு நாங்கள் ஏதாவது ஆக்கினைகள் செய்துகொண்டே இருக்கிறோம். நாம் போகுமுன் ஏதாவதொரு நல்ல காரியம் திருப்பி செய்ய வேண் டாமா? அவள் 'செமிக்க முடியாதபடி நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான பிளாஸ்டிக் பைகளை யும், பெட்டிகளையும் அவள்மீது திணித்தபடியே இருக்கிறோமே! எவ்வளவு நாளைக்குத்தான் அவள் பொறுக்க முடியும்?'
"அப்ப கடலில் போடமுடியாதா?
‘அங்கேதான் வந்தது வினை. இந்த பிளாஸ்டிக் சாமான்களில் முக்கால்வாசி கடைசியில் போய்ச் சேருவது கடலில்தான். சூரிய வெளிச்சத்துக்கு மின் னும் இந்த பிளாஸ்டிக் பைகளை கணவாய் என்று நினைத்து கடல் ஆமைகள் விழுங்கிவிடும். அது

Page 122
220 D சிலம்பு செல்லப்பா
தொண்டையில் சிக்கி எத்தனையோ கடல் ஆமைகள் மரணம். அதைச் சாப்பிடும் மீன்களுக்கும் அதே கதி தான். நாரை, பெலிகன் போன்ற பறவைகளும் இதி லிருந்து தப்புவதில்லை.
'முந்தியெல்லாம் நாங்கள் சாக்கு, உமல், கடகப் பெட்டி என்று பயன்படுத்துவோம். திருப்பி திருப்பி அவற்றை பாவித்து முடிந்தவுடன் தூக்கி எறிந்து விடு வோம். இவையெல்லாம் சுற்றுச்சூழலுக்கு ஒருவித கெடுதலுமின்றி மண்ணோடு கலந்துவிடும். ஐம்பது வருடத்துக்கு முன்பு இந்த பிளாஸ்டிக் அரக்கனின் கொடுமையில்லையே?’’
"அப்ப பிளாஸ்டிக்கே தேவையில்லையென்று சொல்லுறிரோ?"
'அப்படியில்லை. ஆனால் தவிர்க்க முடியாதென் றால் சுழல்பாவிப்பு (recycling) முறையையாவது கடைப்பிடிக்கலாமே? அதாவது, ஒருமுறை பாவித்து விட்டு தூக்கி எறியாமல் நாலு முறையாவது திருப் பித் திருப்பி பாவிக்கலாமே? பூமாதேவியின் பாரம் நாலு மடங்கு குறைந்து விடுமே?”
நாங்கள் இப்படி காரசாரமாக கதைத்துக் கொண்டிருந்தபோது, செல்லப்பா ஒன்றுமே சொல் லாமல், வெற்றிலையைக் குதப்பியவாறு அவதானித்த படியே வந்தார். அவர் சம்பாஷணையில் தலையை நுழைக்கவில்லை. அப்ப பார்த்து இந்த வம்பு, சண்முகம், அவரை எங்கள் சண்டையில் இழுக்கும் முயற்சியாக, "ஏன் செல்லப்பா, சிலப்பதிகாரத்தில் இந்த சுழல்பாவிப்பு முறை சொல்லியிருக்கோ?" என்று நோண்டினார்.
உடனே செல்லப்பா தியானத்தில் இருந்து திடுக கிட்டு விழித்து 'சிலப்பதிகாரத்தில் சொல்லாததே

அ. முத்துலிங்கம் ) 221
இல்லை; என்ன சுழல்பாவிப்பு முறைதானே? அதா வது ஒரே பொருளை திருப்பித் திருப்பி பாவிப்பது, அப்படித்தானே!" என்றார். " . .
"ஒமோம்' என்றார் சண்முகம்.
நான் அப்ப மூன்றாம் வகுப்பு என்று ஞாபகம். எங்கள் கணக்கு வாத்தியாரை எல்லாரும் K. P என்று தான் கூப்பிடுவார்கள். அவருடைய பெயர் ஒருவருக கும் தெரியாது. கிட்ணன் அவருடைய பெயர், "குறுக் கால போவான்' என்று சொன்னதை நான் கனகாலம் நம்பிக்கொண்டு இருந்தேன். "கேப்பி’ கணக்கு கேட்கும்போதே ஆரவாரத்துடன் மோதிரத்தை கழட்டி மற்றக் கை விரலில் போட்டு ஆயத்தங்கள் செய்வார். எங்கள் கண்கள் அவருடைய கைகளின் அசைவையே ஆராய்ந்து கொண்டிருக்கும் அவர் குட்டினால் 'ஒரு பட்டை தண்ணி நிக்கும்" என்று அந்தக் காலத்திலேயே புகழ்கொடி நாட்டினவர்.
"எட்டும் அஞ்சும் எவ்வளவு? என்று கேட்டுவிட்டு மோதிரத்தை தடவிக்கொண்டு நிற்பார். எங்கள் கண்
கள் அலைபாயும். ‘எட்டும் அஞ்சோ? எட்டும் அஞ்சோ?’ என்று மூச்சு விடுவதற்கு அவகாசம் எடுத்துக்கொண்டு, கைவிரல்களை ரகஸ்யமாக
விரித்து, ‘விடை பத்துக்குமேல் வரும் போலிருக்கே" என்று விசனப்பட்டு, கால்விரல்களையும் துணைக்கு கூப்பிட்டு, ஒரு கண்ணை விரல்களிலேயும், மறு கண்ணை வாத்தியாரின் மோதிரத்திலேயும் அலைய விட்டு, தவித்து.
ஆனால் மூச்சு விடுவதற்குகூட அவகாசம் எடுக் காமல், இமைவெட்டும் நேரத்தில் சாவதானமாக கதையை சொல்ல ஆரம்பித்தார் செல்லப்பா. அது

Page 123
222 0 சிலம்பு செல்லப்பா
தான் அவருடைய விசேஷம். யோசிப்பதற்கு என்று நேரம் எடுப்பதே கிடையாது. ۰ * ، ز
"கோவலனும், கண்ணகியும், கவுந்தியடிகளும் சூரியனுடைய வெப்பத்தைத் தவிர்க்க இரவு நேரத் தில் மதுரையை நோக்கி நடக்கிறார்கள். விடிந்ததும், கோவலன் மட்டும் தண்ணிர் வேண்டி ஒரு நீர் நிலையை தேடிச் செல்கிறான். அப்போது மாதவியிட மிருந்து ஒர் ஒலையை கொண்டுவந்து கோவலனிடம் தருகின்றான், கெளசிகன். மாதவியிடமிருந்து வந்த அந்த ஒலையை தவிப்புடன் வாங்குகிறான் கோவலன்:
'அடிகளே, உம்முன்னே நான் பணிகின்றேன். என் சொற்கள் தெளிவற்றதாயினும் என்னில் மன மிரங்க வேண்டும். முதுமைப் பிராயம் அடைந்த இரு வருககு தொண்டு செய்ய மறந்தது பிழையன்றோ? உயர்குடிப் பிறந்த மனையாட்டியுடன் நள்ளிரவில் ஊரைவிட்டுப் போயினதும் பிழையன்றோ? என் தவறு யாதென்று தெரியாது நெஞ்சம் செயலிழந் தேன் பொய்மையின்றி உண்மை காண்பவரே, உம்மை போற்றுகின்றேன்.
அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்; வடியாக்கிளவி மனக்கொளல் வேண்டும்; குரவர் பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியோடு இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது; கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்; பொய்தீர் காட்சிப் புரையோய், போற்றி! *கோவலன் ஒலையைப் படிக்கின்றான்; மாதவி யிடம் அவனுடைய மனம் அலைக்கழிகின்றது.
பெற்றோர்களை நினைந்து வருந்துகிறான். பிறகு கெளசிகனைப் பார்த்து "இந்த ஒலையில் உள்ள

அ. முத்துலிங்கம் 0 223
வாசகம் என் ப்ெற்றோருக்கு நான் எழுதியது போல வும் பொருந்துகிறது; ஆகவே இதை எடுத்துப்போய் என் பெற்றோரிடம் சேர்த்து அவர்கள் துயரை தீர்ப் பாயாக" என்று கூறி அதே ஒலையை திருப்பி கெளசி கனிடமே கொடுக்கின்றான்."
"அப்ப பார்த்தீரா,1800 வருடங்களுக்கு முன்னா லேயே "சுழல்பாவிப்பு' முறை வழக்கத்தில் இருந் திருக்கிறது" என்று சொல்லிவிட்டு செல்லப்பா கெக்கட்டம் விட்டு சிரிக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து நானும் பலமாகச் சிரித்தேன். சிறிது நேரம் திகைத்தபடி இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு சண்முகமும் எங்கள் சிரிப்பில் கலந்து கொண்டார்.
ஆனால் நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக சிரித்தோம்.
அப்படித்தான் எனக்குத் தோன்றியது. O

Page 124
(a
 

பாகிஸ்தானின் வடமலைப் பிராந்தியத்தில் அவர்கள் வெகு நேரமாக பயணம் செய்தார்கள். அஸ்காரி முன்னாலே சென்றார்; அவரைத தொடர்ந்து அவருடைய ஒரே மகன் அலி, பன்னி ரெண்டு வயதுகூட நிரம்பாதவன், வந்து கொண்டி ருந்தான். மூன்று துப்பாக்கிகளும், ஒரு கைத் துப்பாக்கியும் அவர்களிடம் இருந்தன. இவர்களுடன் முபாஸர் என்ற வேலைக்காரன் அவர்கள் குடிப் பதற்கு தண்ணிரும், சாப்பிடுவதற்கு ரொட்டியும், பழங்களும் ஒரு கூடையில் வைத்து காவியபடியே பின்னாலே வந்தான்.
அந்த வேட்டைக்கு அன்று விடிகாலை மூன்று மணிக்கே அவர்கள் புறப்பட்டு விட்டார்கள். பன்னி ரெண்டு மணி நேரம் அவர்கள் நடக்க வேண்டும். வெயில் தலைமேல் வருமுன்னரே அவர்கள் மலையடி வாரத்திற்கு வந்து விட்டார்கள். பாறைகள் குத்துக் குத்தாக இருந்தன. செங்குத்தான அந்தப் பாறை களில் துவக்குகளையும் மாட்டிக் கொண்டு ஏறுவ தென்பது எல்லோராலும் இயலாத காரியம்.
அஸ்காரி நிதானமாகவும் லாவகமாகவும் பாறை களில் கால் வைத்து ஏறினார். அலி ஆர்வத்தோடு வேகமாகப் பின் தொடர்ந்தான். அஸ்காரியின் பார்வை மாத்திரம் அங்குமிங்கும் அலை பாய்ந்த படியே இருந்தது. இது அலியினுடைய முதல் வேட்டை. அவனுடைய எதிர்காலமே அந்த வேட் டையில் அடங்கியிருந்தது. அல்லாவின் கடாட்சம் இருந்தால் அலி திரும்பும்போது ஆண் மகனாகத் திரும்புவான். ஓர் அணிலையோ, முயலையோ

Page 125
226 D வம்ச விருத்தி
காட்டுக் கோழியையோகூட சுடலாம்; பிழை யில்லை. ஆனால் அஸ்காரியின் பேராசை அலி ஒரு மலை ஆட்டை வேட்டையாட வேண்டுமென்பது தான்.
அஸ்காரி ஆசையுடன் ஒருமுறை தன் மகனைப் பார்த்துக் கொண்டார். சிறுவனாக இருந்தாலும் அவன் புஜங்கள் என்ன திடகாத்திரமாக இருக் கின்றன. இவனை தவம் செய்தல்லவோ அவர் பெற் றுக் கொண்டார். எத்தனை கஸ்டங்களை அவர் அனுபவிக்க வேண்டியிருந்தது. அவருடைய முதல் மனைவி நூர்ஜஹான் பிழியப் பிழிய அழுதுவிட் டாள். பன்னிரெண்டு வருட காலம் அவருடன் வாழ்ந்தவள் ஆயிற்றே! அவளைத்துறந்துவிட்டு அவ் வளவு சுலபத்தில் இரண்டாவது மனைவியை எடுத்து விட முடியுமா?
தனிமையில் இருக்கும்போது நூர்ஜஹானிடம் *நீ ஏன் கலங்குகிறாய்? நான் உன்மீது வைத்திருக்கும் அன்பின் ஆழம் உனக்கு தெரியாதா? ஆண வாரிசு வேண்டுமென்றல்லவோ இந்தக் காரியத்தை செய்யத் துணிந்தேன்' என்று அவள் மோவாயைப் பிடித்து கூறினார். பதிலாக நூர்ஜஹானுடைய கண்களில் மெல்லிய நீர்ப்படலம் கோத்து நின்றது.
முந்தியகாலம் போலவேண்டியபோது இருக்கும் மனைவியைத் தள்ளி வைத்துவிட்டு புது மனைவியை இப்போதெல்லாம் தேடிக்கொள்ள இயலாது. முதல் மனைவியின் சம்மதத்தை பெறவேண்டும். அஸ்காரி வேறு வழியின்றித்தான் இப்படி நூர்ஜஹானிடம் கெஞ்சவேண்டி இருந்தது.
அஸ்காரியின் தகப்பனாருக்கு இறக்கும்வரை அந்தப் பயம் இருந்தது, தனக்கு பிறகு தன்னுடைய

அ. முத்துலிங்கம் 0 227
வம்சம் அழிந்துவிடுமோ என்று. ஏனெனில் அவரு டைய தகப்பனாருக்கு அவர் ஒரே ஆண் பிள்ளை. பாட்டனாருக்கும் அப்படித்தான். அவர்கள் வம்சத் தில் பல பெண்கள் பிறந்தாலும் ஆண் வாரிசு ஒன்று தான். இப்ப மூன்று தலைமுறைகளாக, எத்தனை பெண்கள் இருந்தாலும் ஓர் ஆண் பிள்ளைச்கு ஈடு வருமா?
அஸ்காரிக்கு இருபது வயது இருக்கும்போதே நிக்காஹ் ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. பக்கத்து ஊரிலே நல்ல வசதியான இடத்தில் இருந்துதான் 'நூர்ஜஹான் வந்தாள். அவள் மயக்கும் அழகி யில்லை. ஆனால் யெளவனப் பிராயத்தில் எந்தப் பெண்தான் கண்ணுக்கு அழகாக தெரிய மாட்டாள்.
பஃராத் அன்று அவளை பல்லக்கில் கொண்டு வந்து இறக்கினார்கள். ஊர் முழுக்க அங்கே கூடி நின்றது. பின்னாலேயே நாலு வண்டிகளில் அவள் வீட்டு சீதனமும் வந்தது. பதினைந்து சால்வார் கமிஸ், தங்க நகைகள், வெள்ளிக் கொலுசுகள், சம்ை யல் பாத்திரங்கள், கட்டில், மெத்தை, வீட்டு தள பாடங்கள் இதுவெல்லாம் தவிர இன்னுமொரு விசேஷமான சாமானும் இருந்தது. அது ஒரு ட்ரான் ஸிஸ்டர் ரேடியோதான். அந்தக் காலத்தில் அது ஒரு வரிடமும் கிடையாது. அவள் கொண்டுவந்த சாமான் கள் எல்லாவற்றையும் பரப்பி வைத்தபோது ஊரில் எல்லாரும் வந்து அதிசயமாகப் பார்த்துப் பார்த்து அது பற்றியே பேசிக்கொண்டு போனார்கள். நூர் ஜஹானுக்கு எவ்வளவு பெருமை இருந்தது.
முதல் வருடமே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அஸ்காரிக்கு பெரிய ஏமாற்றம் ஆனால் அவர் அதைக்காட்டவில்லை. இரண்டாவது பெண். அடுத்தடுத்து நாலு பெண் குழந்தைகள் பிறந்

Page 126
228 0 வம்ச விருத்தி
தன. ஊரிலே எல்லாரும் ஒரு மாதிரி இவரை இளப்ப மாக பார்ப்பதுபோல பட்டது. அப்பொழுதுதான் அஸ்காரி ஹக்கீமை தேடி ஓடினார். மருந்துகள் பொட்டலம் பொட்டலமாக வாங்கி மனைவிக்கு கொடுத்துப் பார்த்தார். சரிப்படவில்லை. ஐந்தாவது பெண்ணும் பொட்டலம்போல பிறந்தபோது இவர் நூர்ஜஹானை பிரசவ அறை என்றுகூட பார்க்காமல் அடித்து விட்டார்.
அஸ்காரியின் தகப்பனார் பயந்தது போலவே நடந்தது. அவர் ஆண் வாரிசுவைப் பார்க்காமலே இறந்து போனார். அஸ்காரி தன்னுடைய சந்ததி தனக்கு அஸ்தமனமாகி விடுமோ என்று நிறைய கவலைப்படத் தொடங்கினார்.
அந்த நேரம் பார்த்துத்தான் ஜிர்காவில் தன்னு டைய பிரச்சினையை கிளப்பினார் அஸ்காரி. இரண் டாலது மனைவியை எடுப்பது தவிர அவருக்கு வேறு வழி ஒன்றும் தோன்றவில்லை. நூர்ஜஹான், பாவம் அவள், கண்களில் நீருடன் தன்னுடைய கையெழுத் தைப் போட்டு தந்தாள. ஆனால் சம்மதம் வாங்கிய பிறகு பார்த்தால் இவள் இன்னுமொரு முறை கர்ப் பம், நாள் தவறினாலும் வருடாவருடம் இவள் கர்ப்பமாவது மட்டும் தவறியது கிடையாது. அஸ்காரி அவசரப்படாமல் பொறுத்திருந்து பார்த் தார். ஆனால் ஆறாவதும் பெண் குழந்தையாகத் தான் பறந்தது.
முல்லாஇமானுல்லா பரமஏழை. ஆனால் அல்லா வின் பரிபூரண அருளால் குழந்தை செல்வத்துக்கு மட்டும் குறைவில்லை. அவருக்கு பதினொரு குழந் தைகள். இரண்டு நேரம் சாப்பிடுவதற்கும், உடுப்ப தற்கும் வசதி இருந்தது. அவருடைய மூத்த பெண்ணை ஒருநாள் அவர் தலைநிமிர்ந்து பார்த்த

அ. முத்துலிங்கம் (1 229
போது திடுக்கிட்டு விட்டார். அவள் இப்படி கிடு கிடென்று வளர்ந்து விடுவாள் என்று யார் எதிர் பார்த்தார்கள்?
முல்லா நேரம் தவறாமல் தொழுகை செய்வார். அதற்கு சாட்சியாக அவருடைய நெற்றியிலே கொட்டைப் பாக்கு அளவில் ஒரு பொட்டணம் இருக்கும். அதைப் பார்த்தவர்கள் அவருக்கு அதி மரியாதை செலுத்தி தள்ளிப் போவார்கள். குரல் வளம் அவருக்கு இந்த வயதிலும் கணிரென்றுதான் இருந்தது. அவருடைய தொழுகை அழைப்பு அடுத்த கிராமம்வரை கேட்கும்.
முல்லாவினுடைய மூத்த மகள் மெஹ்ருன்னிஸா வுக்கு பதினேழு வயது நடக்கும்போது அஸ்காரி வந்து இரண்டாந்தாரமாக பெண் கேட்டார். இமானுல்லா மெய்மறந்து விட்டார். அல்லாவின் கருணையை நினைத்து நினைத்து வியந்தார். இம் முறை பல்லக்கில் மெஹ்ருன்னிஸா வந்து இறங்கிய போது அவள் பின்னால் வந்த டொங்காவில் ஒட்டை சட்டி பானைகளும், உடைந்த கட்டிலும்தான் வந் தது. ஏழை முல்லாவிடம் வேறு என்ன இருக்கும்; திமுதிமுவென்று பார்க்கவந்த ஊாசனங்கள் எல்லாம் ஏமாந்து போய் திரும்பி விட்டார்கள்.
ஆனால் அஸ்காரி ஏமாறவில்லை. அளக்கமுடி யாத செளந்தர்யத்தை மெஹ்ருன்னிஸா அள்ளிக் கொண்டு வந்திருந்தாள். அஸ்காரி ஆசை மேலிட்டு அணுகியபோது அவளுடை அழகு இன்னும் பிரகா சித்தது. முதல் தாளிலிருந்தே அவருக்கு அவளிடம் மையல் ஏற்பட்டு விட்டது. அவருக்கோ வயது முப்பத்தைந்து தாண்டிவிட்டது. மெஹ்ருன்னிஸா வுக்கு இன்னும் பதினேழு முடியவில்லை. மையல் வராமல் என்ன செய்யும்?

Page 127
230 () வம்ச விருத்தி
முல்லாவின் மகள் என்றாலும் மெஹ்ருன்னிஸா வுக்கு, இயற்கை அளித்த அழகை கணவனை அடிமை கொள்ள எப்படியெல்லாம் பிரயோகிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தது. அஸ்காரியை முதல் நாள், முதல் கணத்திலிருந்தே தன்வசமாக்கி விட்டாள். அவருடைய முதல் மனைவி இவ்வளவு காலமாக அறியாத நுணுக்கங்களெல்லாம் மெஹ்ருன்னிஸா வுக்கு அத்துபடி. ஒரு பெண்ணிடம் இத்தனை விசேஷங்கள் இருப்பது அஸ்காரிக்கு தெரியாமல் போய்விட்டது. நூர்ஜஹான் இவ்வளவு காலமும் தன்னை ஏமாற்றி விட்டாள் என்று நினைத்துக் கொண்டார்.
அஸ்காரிக்கு மெஹருன்னிஸாவிடம் பிடித்தது அவளுடைய சூட்சுமமான குறிப்பறியும் தன்மையும், குக்கிராமத்துப் பெண்களுக்கு இயற்கையாகவே உள்ள புத்தி சாதுர்யமும்தான். பிரியமுடன் அஸ்காரி வரும்போதெல்லாம் அவள் எதேச்சையாக தன் தலைத்திரையை நழுவ விடுவாள். அதை அவள் எப்படிச் செய்கிறாள் என்பது இவர் கடைசிவரை கண்டுபிடிக்க முடியாத ஒரு ரகஸ்யமாக போய் விட்டது.
அவள் கர்ப்பமானவுடன் அவளுக்கு விருப்பமான அல்வாவை ரஹ்மான் கடையில் வாங்கி ரகஸ்யமாக பேப்பரில் சுத்தி எடுத்துக் கொண்டு அஸ்காரி ஓடோடி வருவார்; தனிமையில் இருக்கும்போது அதை விள்ளி அவள் வாயில் ஊட்டுவார். அவள் காதுகளில் செல்லமாக காதல் வார்த்தைகளில் கொஞ்சுவார்.
அந்தக் கொஞ்சல்கள் கனகாலம் நீடிக்கவில்லை. அவளுக்கும் பெண் குழந்தைதான் பிறந்தது. மரியம்

அ. முத்துலிங்கம் 0 231
என்று பேர் வைத்தார்கள். அஸ்கர்ரி பேயறைந்தவர். போல நடந்துகொண்டார். யாரையும் பர்ர்க்க பிடிக்கவில்லை. அடிக்கடி ஆற்றங்கரையிலே போய், விசராந்தியாக உட்கார்ந்து கொண்டு தீவிரமாக யோசித்தார்.
அஸ்காரி தன்னைச் சுற்றிலும் ஒருமுறை பார்த் துக்கொண்டார். திடீரென்று ஒற்றையடிப் பாதை மறைந்து இப்போது காட்டுப் பாதையாக மாறி விட்டது. அலி ஒரு பாறையில் ஏறி நின்று சுற்றி வரவும் பார்த்தான். அவன் சிறுவன்தானே! அவன் நினைத்ததுபோல் மலை ஆடுகள் கூட்டம் கூட்டமாக அந்தப் பிராந்தியத்தை நிறைத்து திரியவில்லை. இது வரை அவர்கள் கண்டதெல்லாம் ஒரு காட்டுக் கோழி யும், முயலும்தான். மலை ஆடு எப்படி இருக்கும் என்றுகூட அலிக்குத் தெரியாது.
சாம்பலும் பழுப்பும் கலந்த நிறமாக பாறைகளு டன் கரைந்துதான் அவை காணப்படும். கூட்டம் கூட்டமாக ஒரு காலத்தில் திரிந்த அந்த ஆடுகளின்
எண்ணிக்கை இப்போது வெகுவாகக் குறைந்து
விட்டது. உயரம் இரண்டரை அடிதான் இருந்தாலும் நேரான கொம்புகளுடன் அவை கம்பீரமாக, இருக்கும்.
அவைகளின் கால் அமைப்பு ஒரு பாறையில் இருந்து இன்னொரு பாறைக்கு தாவுவதற்கு ஏற்ற மாதிரி அமைந்திருக்கும். ஒவ்வொரு பாறையாக அவை அனாயாசமாகத் தாண்டும்போது பார்த்தால் பறப்பது போலவே இருக்கும்; கீழே நிலத்தை அடை யும்போது முன்னங் கால்களை ஒருங்கே குவித்து வைத்துத்தான் விழும்; சறுக்கி விழுந்ததென்பது அவைகளின் ஜாதகத்திலேயே கிடையாது. கண்களை அலைய விட்டபடியே மேயும்; ஒரு சிறிய அசுகை

Page 128
232 23 வம்ச விருத்தி
அவற்றைக் காற்றிலே தூக்கி எழுப்பிவிடும். அந்தரத் திலேயே செங்குத்தாக திரும்பும் வல்லமை படைத் தவை. மனிதனுடைய விவேகத்துக்கும், சக்திக்கும் சவாலாக கடவுளால் படைக்கப்பட்ட ஜீவன் அவை.
மலை ஆடுகள் பாகிஸ்தானின் வடமலைப் பிர தேசங்களில் பல்லாயிரம் ஆண்டு காலமாக உயிர் வாழ்ந்தவை. வரவர அவைகளுடைய இனம்இயற்கை யின் சீற்றத்தாலும் மனிதனுடைய ஆக்கிரமிப்பாலும் குறுகி விட்டது. இந்த மாதிரி மலை ஆடுகள் உலகின் வேறெந்தப் பரப்பிலும் கிடையாது. இவை வேரோடு மறைந்துவிடும் அபாயத்தை உணர்ந்த பாகிஸ்தான் அரசு இந்த ஆடுகளை இடருற்ற உயிரினம் (endangered species) 576örg}} -9 (Öañ56Gé5g. இவற்றை பிடிப்பதோ, வேட்டையாடுவதோ சட்டத் திற்கு புறம்பானது.
ஆனால் இப்படியான அறிவிப்புகள் மூலை முடுக்கிலுள்ள கிராமங்களுக்கு வடிகட்டி வர கன காலம் ஆகும். அப்படியே தெரிய வந்தாலும் கிராமத்து மக்கள் அதை சட்டை செய்யப் போவ தில்லை. அந்த ஆடுகளோ, தம்மை பாதுகாக்க விசேஷமான சட்டம் போட்ட விஷயம் தெரியாத படியால், இன்னமும் பயந்தபடியே அந்த மலைப் பிராந்தியங்களின் செடிகளை மென்றபடி திரிந்து கொண்டிருந்தன.
அஸ்காரி ஆசையுடன் மெஹ்ரூனை இன்னொரு முறை நினைத்துக் கொண்டார். இவளுடைய நினைவே அவருக்கு உற்சாகமூட்டியது. இவளை மணமுடித்து முதல் பிரசவம் பெண் குழந்தையாக இருக்கக் கண்டு அவர் மனம் என்ன பாடுபட்டது. இவளை தள்ளி வைக்கக் கூட நினைத்தாரே!

அ. முத்துலிங்கம் 0 233 அப்போதுதான் ஹஜ் யாத்திரை போவதென்ற தீர். மானத்துக்கு அவர் வந்தார். . . .
அந்த வருட்ம் ஹஜ் யாத்திரைக்காக 60,000 பேருக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்க முடிவு செய்திருந்தது. அஸ்காரியின் பெயரும் அந்தப் பட்டியலில் இருந்தது. அவருடைய பிரார்த்தனை எல்லாம் ஓர் ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென் பதுதான். அவர் உயிராக நேசிக்கும் மெஹ்ருன்னி ஸாவும் இப்படி தன்னை ஏமாற்றுவாள் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. இப்ப மொலுமொலு வென்று ஏழு பெண் குழந்தைகள் அவர் வீட்டை அடைத்துக் கிடந்தனர். முதல் மனைவியிடம் பிறந்த மூத்த மகள ரஸ்மா பூப்பெய்தி விட்டாள். தலையில் முக்காடு போட்டுத்தான் அவள் இப்போதெல்லாம் காணப்படுகிறாள். தன் சந்ததியை வளர்க்க வேண்டும் என்ற ஆசையில் மண் விழுந்துவிடுமோ என்று அவர் பெருமூச்சு விட்டார்
மெஹ்ருன்னிடம் இவருக்கு அளவு கடந்த மோகம். கடைசல் உடம்பு என்பார்களே , அப்படி அவளுக்கு. வழவழவென்றிருப்பாள். ஒரு வீச்சில் என்னவெல்லாமோ சொல்கிற கண். இவர் காதல் மேலிட்டு நிற்கும் வேளைகளில் என்ன மாதிரி இலக மாக இவரிடம் வந்து சேர்ந்து கொள்வாள். முல்லா வின் மகளாக இருந்துகொண்டு இந்த செப்படி வித்தையெல்லாம் எங்கே கற்றாள்? அவளை எப்படி தள்ளி வைக்க முடியும்! மூன்றாவது மனைவி ஆண் மகவு தருவாள் என்பது என்ன நிச்சயம்? Y
ஹஜ்யாத்திரை மேற்கொண்டபோது அல்லாவின் அளப்பரிய கருணையால் தனக்கு ஒரு விடிவு காலம் கிட்டும் என்று எதிர்பார்த்தார். தையல் போடாத இரண்டு ஒற்றைத் துணிகளை உடுத்திக்கொண்டு
வ-16

Page 129
234 () வம்ச விருத்தி
அல்லாவின் சன்னிதியில் நின்றபோது அந்த ஜன வெள்ளத்தில் இவர் தன்னை ஒரு துளியாகத்தான் உணர்ந்தார். இடது தோளை மூடிக்கொண்டு வலது கையின் துணியை இடுக்கிக் கொண்டு தல்பியாவை ஓதியபடி இடம்வரத் தொடங்கினார் :
லப்பய்க்க அல்லாஹ"ம்மா லப்பய்க்க லப்பய்க்க லா ஸரிக்க
லக லப்பய்க்க
ஒ அல்லாவே சரணம் உன் அடிமை நான் இங்கே உனக்கு சமானம் யார் அல்லாவே நான் இங்கே
அஸ்காரியின் கண்களில் நீர் பணித்தது. சஃபா மலைக்கும் மர்வா மலைக்கும் இடையில் "சாய்’ செய் யத் தொடங்கியபோது அவர் கண்களில் கண்ணிர் கொட்டியது. ஏழுதரம் மாறி மாறி ஓடினார். பச்சை குழந்தை இஸ்மாயில் தன் சின்னக் கால்களை உதைத்துக்கொண்டு தண்ணிருக்காக கதறியபோது தடுப் பாலைவனத்தில் தண்ணிர் ஊற்றை தோற்று வித்தாய் அல்லவா? என் கண்ணிர் உனக்குத் தெரிய வில்லையா? குழந்தை இஸ்மாயிலின் சந்ததி பெரு கியது போல என் வம்சம் விருத்தியாக ஒரு வழி செய்ய மாட்டாயா?"
குர்பானை முடித்து தலைமயிரையும் ஒட்ட மழித்த பிறகு அவர் மனதிலே இத்தனை காலமும் அழுத்திய பாரம் இறங்கியதுபோல இருந்தது. திரும்ப ஊருக்கு வந்தபோது வழக்கம்போல ஹஜ் விருந்துகள் பல நாட்கள் தொடர்ந்தன. அவர் கொண்டுவந்த பவித்திரமான 'ஸம் ஸ்ம் தண்ணிரை

அ. முத்துலிங்கம் 0 235
வடக்குப் பார்த்தபடி எல்லோரும் ஒரொரு சொட்டு வாயிலே விட்டுக் கொண்டார்கள்.
மெஹ்ருன்னிஸாவை தனிமையில் அணுகுவதற்கு அவருக்கு மூன்று நாள் பிடித்தது. என்ன வசீகரமாக இருந்தாள். அவளுடைய புன்னகை ஒரு புதுவிதமான அர்த்தத்தோடு விகஸித்தது. இவர் அவளுக்காக கொண்டுவந்த தங்கச் சங்கிலியை அவள கழுத்திலே கட்டி விட்டார். "மரியமின் அம்மாவே, மரியமின் அம்மாவே' என்று கூப்பிடும் இவர் தனிமையில் இருக்கும்போது “மெ.ஹ்.ரூ.ன்" என்று செல்ல மாக அவள் காதுகளில் கூவினார். இம்முறை நிச்சய மாக பையன்தான் என்று இவர் உள்ளுணர்வுக்கு பட்டது.
"வாழ்ந்தால் அலிபோல் வாழ், இறந்தால் ஹ"சைன் போல் இற' என்ற வாசகம் அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனபடியால் பிறக்கும் குழந் தைக்கு அலி என்று பெயர் வைப்பதாகவே தன் மனதிற்குள்ளே முடிவு செய்தார். அவருடைய மனைவியின் விருப்பம் வேறுவிதமாக இருக்குமென் பது அப்போது அவருக்குத் தெரியாது.
இரண்டுநாளாக அவர் மனைவி பிரசவ வலியிலே துடித்தாள். மூன்றாம் நாள் இரவு ஓர் ஆண்மகவைப் பெற்றாள். பொன்னாங்காணி தண்டுபோல சிவப்பு நிறம்; கருநீலக் கண்கள்; தலை நிறைய சுருள் மயிர். அப்படியான ஒரு அழகை அவர் ஆயுசிலேயே பார்த்த தில்லை.
பிள்ளையினுடைய அழகைப் பார்த்து அவர் மனைவி, யூசுப் என்று பேர் வைக்கலாம் என்று யோசனை சொன்னாள். யூசுப்பையும் மிஞ்சிய ஓர் அழகான ஆண்மகனை இந்த மண்ணுலகம் பார்த் திருக்க முடியுமா: யூசுப் என்ற அடிமை ஸ"லைகா

Page 130
236 0 வம்ச விருத்தி
வுடைய விருந்து மண்டபத்திற்குள் காலடி எடுத்து. வைத்தபோது ஸுலைகாவினுடைய அரசவைத் தோழியர் பழங்கள் நறுக்கிக் கொண்டிருந்தனராம். அவனுடைய பேரழகைப் பார்த்த தோழியர் வைத்த கண்ணை எடுக்க முடியாமல் மயங்கி கைவிரல்களை வெட்டிக் கொண்டார்களாம். அப்படியான ஒரு பேரழகுடன் பிறந்த பிள்ளைக்கு யூசுப் என்று பேர் வைப்பதுதான் பொருத்தம். அதனால் இருவரும் யோசித்து யூசுப் அலி என்று பேர் வைப்பதாக முடிவு செய்தனர்.
அஸ்காரியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஹ"ஜ்ராவில் சனம் நிறைந்துவிட்டது. துப்பாக்கியை நூறு ரவுண்டு, இருநூறு ரவுண்டு என்று சுட்டு ஊர் முழுக்க பிரகடனம் செய்தார்கள், வண்ணக் கலர் ரவைத் துப்பாக்கிகளை வெடித்து வானத்தை மத்தாப்புபோல அலங்கரித்து ஆரவாரித்தார்கள். ஒரு கொழுத்த எருமை மாட்டை வெட்டி விருந்து பேர்ட்டார் அஸ்காரி. அவர் இனிமேல் ஜிர்கா கூட் டங்களுக்கு தலைநிமிர்ந்து போகலாம்.
அலி பிறந்த அன்று முன்கூட்டியே 'டாராவில்" சொல்லி வைத்து வாங்கிய பளபளவென்று மின்னும் புதிய கைத்துப்பாக்கி ஒன்று அலியினுடைய சின்னஞ் சிறு தலையணையின் கீழ் வைக்கப்பட்டது. இனிமேல் அவன் தலையணையின் கீழ் அந்த துப்பாக்கி அவன் இறக்கும்வரை இருக்கும்.
அலி கிடுகிடென்று வளர்ந்துவந்தான். "கண்ண்ை இமை காப்பது என்று சொல்வார்களே அது மாதிரித் தான் அவனைப் பார்த்தார்கள். ஏழு பெண் குழந் தைகள் பிறந்த வீட்டில் ஒரே ஆண் பிள்ளை வேறு ப்படி வளரும்? வீடு முழுக்க அவனிடம் உயிரையே வைத்திருந்தது. இரண்டு வயது வரையில் அவனு

அ. முத்துலிங்கம் 0 237
டைய கால்கள் நிலத்தில் படவேஇல்லை. ஒருத்தியின் இடுப்பிலிருந்து மற்றவளின் இடுப்புக்கு மாறிய படியே இருப்பான். அவனுடைய தளிர் ஸ்பரிசம் பட எல்லோரும் தவம் கிடந்தார்கள். சொந்த தாய்க்குக் கூட அவனை வைத்து கொஞ்ச முடியவில்லை.
இவனுடைய ராஜ்யம்தான் நடந்து கொண்டி ருந்தது. இவன் பேச்சுக்கு மறு பேச்சில்லை, எல்லோ ரும் தனக்கு சேவகம் செய்யவேண்டும் என்று எதிர் பார்த்தான். அழகும் ஆணவமும் சேர்ந்த ஒரு பையனாக வளர்ந்து வந்தான். ஏழு வயது வரையில் தாய் தமக்கையருடன் வீட்டிலேயே இருந்தான். பிறகு அவர்கள் வழக்கப்படி ஹ"ஜ்ராவுக்கு தகப்பனுடன் மாறிவிட்டான். அன்றிலிருந்து தாயையும் தமக்கை யரையும் உதாசீனம் செய்துவிட்டு தகப்பனுடனேயே சுற்றத் தொடங்கினான்.
பள்ளிக்கூடம் என்று பேருக்குத்தான் போனான். அவன் கவனம் முழுக்க ஆற்றில் மீன் பிடிப்பதிலும், சிறு பிராணிகளுக்கு பொறி வைப்பதிலுமாக போய்க் கொண்டிருந்தது அஸ்காரியுடன் சேர்ந்து துவக்கு களையும், பிஸ்டல்களையும் சுத்தப்படுத்துவதும், வேட்டைக்குப் போவதும் அவனுக்கு மிகவும் பிடித்த மான விஷயங்கள்.
இவனுடைய அதிகாரத்திறகு தாய்மாரும் தமக்கையரும் நடுங்குவார்கள். இப்படித்தான் ஒரு நாள் ஹ"ஜ்ராவில் விருந்தினர் வந்திருந்தார்கள். ஷெனானா வீட்டிற்குப் போய் சீக்கிரம் சாப்பாடு அனுப்பும்படி அதிகாரம் செய்துவிட்டு வந்தான். அப்படியும் சாப்பாடு வரவில்லை. இன்னொரு முறை போய் அதட்டிப் பார்த்தான். அப்ப இவனுடைய பெரியம்மாவின் இரண்டாவது மகள் நுஸ்ரத், அவளுக்கு பதினாறு வயதிருக்கும், எரிச்சல் தாங்கா

Page 131
238 0 வம்ச விருத்தி
மல் 'நீ சும்மா போய் உன் வேலையைப் பார், சாப்பாடு ரெடியானதும் தானே வரும்' என்று சொல்லி விட்டாள். இவனுக்கு அசாத்திய கோபம் வந்து விட்டது. அப்படி யாரும் இதற்கு முன்பு இவனிடம் கதைத்ததில்லை. தன்னுடைய சின்னக் காலைத் தூக்கி அவளுடைய முழங்காலைப் பார்த்து ஓர் உதைவிட்டான். அவள் உஃப் மோஃரே என்று காலைப் பிடித்தபடியே இருந்து விட்டாள். இவனு டைய தாயார் துப்பட்டாவை எடுத்து வாய்க்குள்ளே திணித்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள். பெரிய தாயார் மட்டும் தன்னுடைய தலைச் சிலையை நன்றாக முன்னுக்கு இழுத்துவிட்டு மற்றப்பக்கம் திரும்பிக் கொண்டாள்.
அதற்குபயிறகு அலிக்கு வேண்டிய மரியாதை கிடைத்தது. எட்டு, ஒன்பது வயதிலேயே எல்லாவித மான துப்பாக்கிகளையும் கழட்டி சுத்தம் செய்து திருப்பியும் பூட்டி விடுவான். பத்து வயதிலேயே துப்பாக்கியை தூக்கிப் பிடித்து குறி பார்த்து சுடப் பழகிக் கொண்டான். துப்பாக்கி சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் அவனுக்கு தண்ணிபட்ட பாடு. ஒரு புதுத் துப்பாக்கி பற்றி பெரியவர்களுக்கிடையில் சர்ச்சை வந்தால் அதைத் தீர்த்து வைப்பது அலி தான்.
அந்தக் கிராமமும் மற்றக் கிராமங்கள் போல ஒரு வழக்கம் வைத்திருந்தது. சிறுவர்களுக்கு உபநயனம் செய்து பூணுால் அணிவிப்பது போல இங்கேயும் ஒரு சடங்கு இருந்தது. இதன் பிறகுதான் ஒரு சிறுவன் உண்மையான ஆண் மகன் ஆவான். அது முதல்முறை யாக காட்டுக்குப் போய் ஒரு மிருகத்தையோ பறவையையோ வேட்டையாடி வருவதுதான். இந்த வேட்டையை வைத்து அவரவரின் தகுதியை ஊர் கணித்துவிடும்.

அ. முத்துலிங்கம் 0 239
அஸ்காரி அவருட்ைய வாழ்நாளில் அறுபது, எழு பது வேட்டைகளுக்கு போயிருப்பார். காட்டுக்கோழி, வாத்து, மான், முயல், காட்டுப்பன்றி என்றுதான் வழக்கமான வேட்டை ஆனால் இவை எல்லாத்திற் கும் சிகரம் வைத்தது போலத்தான் மலை ஆட்டு வேட்டை இருக்கும். அஸ்காரி இரண்டே இரண்டு முறைதான் மலை ஆட்டு வேட்டையில் வெற்றி பெற் றிருக்கிறார். அதைக் கொல்லுவதென்பது லேசுப் பட்ட காரியம் அல்ல. யாராவது வெற்றியுடன் திரும்புவார்களாகில் அன்று கிராமம் முழுக்க திமி லோகப்படும். வேட்டை பிரதாபத்தை எல்லாரும் சுற்றி இருந்து கேட்பார்கள். அந்த இறைச்சியின் ருசியே ஒரு தனி ரகம்கான்.
அஸ்காரி தன் கைய லே இருந்த இரண்டு துப் பாக்கிகளில் ஒன்றை அலியிடம் கொடுத்தார். அது பரம்பரையாக அவருடைய பாட்டனார் காலத்தில் இருந்து வந்த துப்பாக்கி. அதற்கு பின்னே ஒரு பெரிய கதை இருந்தது. அந்தத் துப்பாக்கிககு தொண்ணுறு வயசு, அது 'டாராவில் குடிசைக் கைத்தொழில் போல் ஒரிஜினல் லீ என்ஃபீல்டு துப்பாக்கியைப் பார்த்து செய்தது. ஒருமுறை ஒரு வெள்ளைக்காரன் கூட அதன் செய்கையைப் பார்த்து அது ஒரிஜினல் தான் என்று ஏமாந்து விட்டான். அவர்கள் வம்சத்தை அது காப்பாற்றுகிறது என்று நம்பி 6Sf TT 9, 6.
அவருடைய பாட்டனார் "பட்டான்கிளர்ச்சியில்" பங்கு பெற்று பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக சண்டை போட்டவர். அப்போது அவருக்கு வயது பதினெட்டுத்தான். கர்ஸன் துரை 35,000 துருப்பு களை அனுப்பி அவர்கள் புரட்சியை முறியடித்த போது அப்கானிஸ்தானுக்கு தப்பியோடி பத்து வருட

Page 132
240 D வம்ச விருத்தி
காலம் தலைமறைவாக இருந்தவர். அதற்குப் பிறகு தான் திரும்பி வந்து 'டாராவில் இதை வாங்கினா ராம்,
பாட்டனார் காலத்திலே பல வேட்டைகளுக்கு இந்தத் துப்பாக்கி போயிருக்கிறது. அவருக்குப் பிறகு அஸ்காரியின் தகப்பனார் அஸ்துல்லா இப்ராஹிமிடம் இது வந்து சேர்ந்தது. அஸ்காரியுடைய காலம்முடிந்த பிறகு அலிக்கு போய் சேரும். இது ஒரு அதிர்ஸ்ட மான துப்பாக்கி. இதில் குறி வைத்தால் அது தப்பாது, இது பல உயிரைக் குடித்திருந்தாலும் ஒரே ஒரு மனித உயிரைத்தான் இன்று வரை எடுத்திருக் கிறது.
இந்த சம்பவம் அஸ்காரி பிறக்க வெகு நாள் முன்பே நடந்தது. மற்றவர்கள் சொல்லித்தான் இவ ருக்கு தெரியும். இவருடைய தகப்பனார் இப்ராஹிம் பல தடவை ஹஜ் யாத்திரை போனவர். நல்ல உயரமாய் மீசையுடன் கம்பீரமாய் இருப்பார். அவருடைய உடம்பு ஈரத் துணியை முறுக்கி எடுத்தது போல இறுகிப்போய் இருக்கும்.
இப்ராஹிமின் நிக்காஹ் ஒர் அதிசயமான முறை யில் நடந்தது. சிறு வயது முதல் கொண்டே ஜமால் அகமதின் மகள் டுரிஷாவாரையே இப்ராஹிம் நிக்காஹ் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந் தது. ஒரு நாள் இவர் வீட்டுக்கு ஒரு கிழட்டு விருந் தாளி ஜமால் அகமதின் இரண்டாவது மகள் ஸ்புன்னி ஸாவை வர்ணிக்கக் கேட்டார். அன்றிலிருந்து இவ ருக்கு அவள் மேல் மோகம் ஏற்பட்டுவிட்டது. இவர் எவ்வளவு முயற்சி செய்தும் இவரால் அவளை மறக்க முடியவில்லை. கண்ணாலேயே பார்க்காத ஒரு பெண் ணிடம் காதல் ஏற்படக் கூடும்ா? .

அ. முத்துலிங்கம் L 24
அக்பர் பாதுஷாவுடைய அந்தப்புரத்தில் எத்த னையோ ராணிகள் காத்துக் கிடந்தனர். ஒருமுறை வழிப்போக்கன் ஒருவன் ரூபமதி என்னும் பெண்ணின் லாவண்யத்தை வர்ணித்து பாடிய பாட்டொன்றைக் கேட்டார். அப்படியே அவளுடைய அழகின் வர்ண னையில் மதி மயங்கி உருகிவிட்டார். அதன் பிறகு அக்பர் அவளுடைய சிந்தனையாகவே இருந்தார். ராஜ்யபாரத்தில் கவனம் செல்லவே இல்லை. நேரே பார்க்காமல் ஒரு பாட்டு வர்ணனையைக் கேட்டுஉன் மத்தமாவது சாத்தியம்தான். அக்பர் பிறகு அந்தப் பெண்ணுக்காக சைன்யத்தையெல்லாம் திரட்டிபடை யெடுத்துப் போனது சரித்திரம்.
இப்ராஹிம் படை எடுக்காவிட்டாலும் மனத்தி னாலே பலமுறை படை எடுத்து விட்டார். ஆனால் ஸபுன்னிஸாவை வர்ணித்தவன் ஒரு கடைந்தெடுத்த முட்டாள். அவள் அழகு வர்ணனைக்கு அப்பாற்பட் டது. இவர் அவளை மணமுடிக்க பட்ட கஷ்டமெல் லாம் அவளை மணமுடித்த அன்று இரவு அவள் முகத் திரையை நீக்கியபோது பஞ்சாய்ப் பறந்து விட்டது. இவர் வாயிலிருந்து 'ஆ' என்று ஒரு சன்னமான ஒலி இவரையும் அறியாமல் எழும்பியது. ஒரு அக்பர் பாதுஷா இன்று இருந்திருந்தால் இவளுக்காகஒன்பது மடங்கு சைன்யத்தையெல்லாம் திரட்டியிருப்பாரே என்று இப்ராஹிம் நினைத்தார்.
இவர் மனைவியின் அழகு மதியை மயக்கி ஆளை கிறங்க வைக்கும் அழகு. மணமுடித்த நாளில் இருந்து இவருக்கு அவள் மேல் அளவு கடந்த பிரேமை. இந்த அழகு ஏற்படுத்திய விபரீதம் ஒருநாள் அந்த ஊரிலே கொலையாகப் போய் விழுந்தது.
ஸபுன்னிஸாவின் பிரசித்தமான அழகை ஊர் முழுக்க கேள்விப்பட்டிருந்தது. ஆனால் பெண்களைத்

Page 133
242 0 வம்ச விருத்தி
தவிர வேறொருவர் பார்த்தது கிடையாது. அதற்கும் ஒரு நாள் சந்தர்ப்பம் வந்தது.
அந்த குக்கிராமத்தில் இருந்த ஒரேயொரு பால் கடை அஹமத் மிர்ஸாவுடையதுதான். அவனிடம் எட்டு எருமை மாடுகளும் பத்து பதினைந்து ஆடு களும் இருந்தன. பால் சப்ளை தட்டுப்படும் சமயத் தில் மற்றவர்களிடம் பால் வாங்கி சமாளித்து வந்தான். அப்படித்தான் ஒருநாள் பால் சப்ளை அவசரமாகத் தேவைப்பட்டதால் ஒரு மத்தியானம் போல இப்ராஹிம் வீடு தேடிப் போனான். அந்த சமயத்தில் ஒருவரும் அப்படி வீடு தேடி வருவது கிடையாது. இப்ராஹிம் அந்த நேரங்களில் கரும்புத் தோட்டத்தில் இருப்பார் என்பது ஊர் அறிந்த சேதி.
அஹமத் மிர்ஸா வீடு தேடி வந்தபோது ஸ்புன்னிஸா எருமை மாட்டடியில் வேலையாக இருந் தாள். வேலையில் கண்ணாயிருநதவள் தலைத்திரை நழுவியதை கவனிக்கவில்லை. அஹமத் மிர்ஸா பிழையான வழியில் போறவன் அல்ல. ஐந்து நேரத் தொழுகை தவறாமல் செய்து வருபவன். அப்படிப் பட்டவன் மாபெரும் தவறு ஒன்றை அன்று செய்து விட்டான்.
அவளைப் பார்த்த கண்களை அவனால் அகற்ற முடியவில்லை. வைத்த கண் வாங்காமல் அப்படியே கொஞ்ச நேரம் நின்றான். கொக்கி போட்டது போல ஏதோ ஒன்று அவனைப் பிடித்து இழுத்து நிறுத்தி வைத்தது; புத்தி அடியோடு மழுங்கிவிட்டது. வெற்றிக்களிப்பில் துரியோதனன் மதி மயங்கி ஒற்றை ஆடையோடு இருந்த திரெளபதியை சபைக்குஇழுத்து வரச் சொல்லி அவள் பார்க்க தனது இடது

அ. முததுலிங்கம் 0 243
தொடையை கையினால் தட்டவில்லையா? அது மாதிரி ஒரு கணம் உன்மத்தனாகி விட்டான்.
அதற்கு பிறகு மகா பாபமான ஒரு காரியத்தை செய்தான் மிர்ஸா. கண்வெட்டாமல் அவளையே பார்த்தபடி சீப்பைனடுத்து தன் தலையை வாரினான். இது கிராமங்களில் பாரதூரமான ஒரு அசிங்கமான சைகை, இப்படியான நடத்தைக்கு மன்னிப்பே கிடை யாது. இதுபோல கீழ்த்தரமாக நடக்கும் ஆணுக்கு கிடைக்கும் தண்டனையும் எல்லோருக்கும் தெரிந்தது தான.
சிறிது நேரம் சென்றது. ஸ்புன்னிஸாவுககு இது ஒன்றும் தெரியாது. அவள் பாட்டுக்கு தன் வேலை யிலேயே கண்ணாயிருந்தாள். திடுக்கிட்டு நிமிர்ந் தவள் இவனைப் பார்த்துவிட்டு அரண்டு போய் வீட்டுக்கு உள்ளே ஓடி விட்டாள்.
அன்று பின்னேரம் இப்ராஹிம் இதைக் கேள்விப் பட்டார். அவர் இருதயத்தை யாரோ திருகிப் பிழிஞ் சதுபோல ஆகிவிட்டது. அவர் செய்யவேண்டியதைச் செய்தே ஆகவேண்டும். வேறு வழியே இல்லை.
இப்ராஹிம், மிர்ஸாவைத் தேடிப் போனபோது மிர்ஸா கடையில்தான் இருந்தான். கடையிலே இன்னும் இரண்டு வாடிககைக்காரர்களும் இருந் தார்கள். இப்ராஹிமின் கைகளில் துப்பாக்கியைக் கண்டதும் மிர்ஸாவின் கண்கள் மிரண்டன. இப்ராஹிம் அவர்களது வம்சத்து சொத்தாகிய லீ என்ஃபீல்டு துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்து குறி பார்த்து சுட்டார். குறி தவறவில்லை. மிர்ஸா அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து மரணமானான். போன கையோடு இப்ராஹிம் திரும்பி வந்து துப்பாக் கியை சுவரில் சாத்திவிட்டு ஒன்றுமே நடக்காதது

Page 134
244 0 வம்ச விருத்தி
போல சும்மா இருந்தபோதுதான் ஸபுன்னிஸா விம்மி விம்மி அழத் தொடங்கினாள். . . ;
அன்றிரவே ஜிர்கா அவசர அவசரமாகக் கூடியது. இப்ராஹிம் சுட்டதை ஒருத்தரும்ஆட்சேபிக்கவே முடி யாது; அது செய்ய வேண்டியதுதான். ஆனால் இது ஒரு பெரிய ‘பரம்பரை ரத்தச் சண்டையாக மாறி விடக் கூடாது என்றுதான் பயப்பட்டார்கள். மிஸ்ரா வுக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும். அவள் எங்கே போவாள்? மிர்ஸா பகுதியினர் 'ரத்தப் பணம் கேட்டார்கள். ஜிர்காவில், மிர்ஸாவுடைய குடும்பத்துக்கு, இப்ராஹிம் நாலு எருமை மாடுகளும் அந்த வருடத்திய கரும்பு சாகுபடியில் பாதியும் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பாகியது.
அஸ்காரியின் நிக்காஹ் கன காலம் தள்ளிப் போனதுக்கும் காரணம் அவருடைய தாயார் ஸபுன்னிஸ்ாதான். தன் தாயைப் போன்ற அழகான பெண்தான் தனக்கு மனைவியாக வேண்டும் என்று அஸ்காரி கேட்டுக் கொண்டிருந்தார். அது அவ்வளவு இலகுவான காரியமா என்ன? அஸ்காரியின் தாயார் இப்போது இல்லையென்றாலும் அந்த மாதிரி ஒரு அழகை அஸ்காரி பிறகு இந்தப் பிரபஞ்சத்தில் காணவேயில்லை.
அஸ்காரி திரும்பிப் பார்த்தார். அலியும் முபாஸ் ரும் கொஞ்சம் தளர்ந்து விட்டார்கள். விரைந்து வருமாறு சைகை காட்டிவிட்டு மேலும் தொடர்ந் தார். இப்போதெல்லாம் மலை ஆட்டைக் காண்ப துவே அரிதாகி விட்டது. மலையின் உச்சியில் ஒன்றோ, இரண்டோ தனித்து காணப்படும். மனித வாடை பட்டதும் மாயமாய் மறைந்துவிடும். ராமா யணத்தில் வரும் மாய மானைப்போல அது துரிதமாக

அ. முத்துலிங்கம் ) 245
பறந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே காற்றிலே ஐக்கியமாகிவிடும்.
அதிர்ஷ்டம் இருந்தால் இன்று அலியின் முதல் வேட்டை ஒரு மலை ஆடாக இருக்கும். அலி பன்னிரண்டு வயதுப் பையனாக இருந்தாலும் அவனு டைய தோள்கள் துப்பாக்கியைத் தாங்கும் வலு வுடன்தான் இருந்தன. நெற்றியில் சிறிது வியர்வை அரும்ப தடுமாற்றமில்லாமல் ஒவ்வொரு பாறையாக லாவகமாகப் பாய்ந்து குருவிபோல வந்து கொண்டி ருந்தான் அலி. மலை ஆட்டுக்கு இவன் பெரிய சவா லாகத்தான் இருப்பான்.
வேட்டைக்காரர்களுக்கு கண்களின் சக்தி வெகு தூரம் வரை இருக்கும். நாலா பக்கமும் கண்களை துழாவியபடியே வந்து கொண்டிருந்தார்கள். முயல் காட்டுக் கோழி எல்லாம் சுடும் துரத்தில் இருந்தும் அவர்கள் அவற்றைத் தாண்டி வந்து விட்டார்கள். பாறைகளின் உச்சியில் தனிமையில் நின்று வேவு பார்க்கும் மலை ஆடு மட்டும் அவர்களுக்கு தென் படவே இல்லை. . . . . . . . . .
நேரம் பதினோரு மணியாகிக் கொண்டு வந்தது. இவர்கள் மூவருக்கும் களைப்பு மேலிட்டு விட்டது. பாறைகளில் இருந்து சூடு மெதுவாக :ே எழும்பிக் கொண்டிருந்தது. “கொஞ்சம் இளைப்பாற் லாமா? என்று அஸ்காரி நினைத்த போதுதான் வெகு தூரத்தில் பாறையன் உச்சியில் நிழலாக 1ாறை யோடு ஒர் ஆடு தன் சாதகத்தை முடிக்க வந்தவர்கள் எதிரில் வருவது தெரியாமல் . செடியொன்றை நிமிண்டிக் கொண்டு நிற்பது தெரிந்தது.
அஸ்காரியின் இதயம் ‘படக், படக் என்று அடிக்கத் தொடங்கியது. அவருடைய வாழ்

Page 135
246 0 வம்ச விருத்தி
நாளிலேயே அந்த இதயம் இப்படி வீச்சோடு துடித்த தில்லை. மலை ஆடு நிமிர்ந்து இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு மறுபடியும் தன் வேலைக்குத் திரும்பி நிமிண்டத் தொடங்கியது.
அஸ்காரி காற்றின் திசை பார்த்து அலியையும், முபாலரையும் தன் பின்னால் வேகமாக வரும்படி சைகை காட்டினார். அலியும் முபாஸரும் நிலத்தோடு அமுங்கிப் போய் மெதுவாக முன்னேறினார்கள். மலை ஆட்டை நோக்கி சாவு ஊர்ந்து கொண்டிருந் தது. அந்த ஆடு அந்தச் சிறிய செடியில் மனதைப் பறிகொடுத்து அதைக் கடித்து இழுத்துக் கொண்டி ருந்தது.
அலி ஒரு புதர் மறைவில் குந்தி முழங்காலில் உட் கார்ந்து கொண்டான். நிதானமாக துப்பாக்கியை நிமிர்த்தி தோள்மீது தாங்கு கொடுத்து குறி வைத் தான். சிறு பையன் ஆனாலும் வேட்டைக்காரன் பிள்ளையாதலால் அவன் கைகள் கன் கிரீட் போல ஆடாமல் அசையாமல் நின்றன.
கடைசி முறையாக அந்த ஆடு செடியைவிட்டு நிமிர்ந்து தன்னைச் சுற்றியுள்ள இந்த உலகத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டது. அஸ்காரி கண் சாடை காட்டினார். அலி ஆற அமர அவசரப்படாமல் விசையை நிதானமாக அமுக்கினான். படீரென்ற ஒலி காடு முழுக்க பரவியது. 'டும், டும்" என்று பாறைகள் எதிரொலித்தன. மலை ஆடு ஆறடி உயரத்துக்கு எவ்விப்போய் தூர விழுந்தது.
அஸ்காரி மகனைப் பார்த்தார். LD56T தகப்பனைப் பார்த்தான். இரண்டு பேரும் கையை உயர்த்தி கூஹாய்" என்று கத்திக் கொண்டே ஆட்டை நோக்கி ஓடினார்கள். முபாஸரும் கூடையை

அ. முத்துலிங்கம் 0 247
புதரடியில் போட்டுவிட்டு கத்தியை எடுத்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தான்.
அன்று அவர்கள் கிராமத்தில் ஒரே கொண் டாட்டமாக இருக்கும். இந்தச் செய்தி மற்றக் கிராமங்களுக்கும் பரவிவிடும். அலியின் பிரதாபத்தை கேட்பதற்கு எல்லோரும் வந்து கூடுவார்கள். மலை ஆட்டு விருந்து இரவு முழுக்க தொடரும். அந்த இறைக்சியின் ருசி பற்றி எல்லோரும் சிலாகிப் பார்கள். அவன் ஒரு முழு ஆண்மகனாகி விட்ட 1ான். அல்லாவின் கருணையால் அவர்கள் வம்சம் இனி இடையூறின்றி தொடரும்.
அவர்கள் கிராமத்தை நோக்கி வேகமாக நடந் தார்கள். மைமலாவதற்கு முன்பே அவர்கள் போய்ச் சேர்ந்து விடவேண்டும். அலியின் முகத்தில் பெரு மிதம். முபாஸர் ஆட்டைத் தூக்கியபடி பின்னாலே இளைக்க இளைக்க வந்து கொண்டிருந்தான்.
இந்த உலகின் பரப்பிலே, பாகிஸ்தானின் வட மலைப் பகுதிகளில் மட்டுமே இந்த மலை ஆடுகள் உலவி வந்தன. அவற்றின் உலக எண்ணிக்கை நேற்று வரை 84ஆக இருந்தது. இன்று அது 83ஆக சுருங்கி
அலியும் தகப்பனும் தங்கள் வெற்றியைக் கொண் டாட கிராமத்தை நோக்கி எட்டி நடை போட்டனர்.
O.

Page 136

"என் ராஜ்யத்திலுள்ள நாடு அநேக மலைகளாலும், அடர்ந்த காடுகளாலும், நீர்த்தேக்கங்களாலும் சூழப்பட்டு கவலைதரும் நெருக்கத்திலிருக்கிறது. இப்படியான காட்டில் பெய்யும் மழையில் ஒரு துளியேனும் ஆற்றின் வழியேகி மனிதனுக்கு பயன்தராத வகையில் சமுத்திரத் தை அடைவது மகாபாபமாகும்."
-இலங்கை அரசன் பராக்கிரமபாகு (கி.பி.1153-1186) சூளவம்சம் : அதிகாரம் LXVIII, செய்யுள் 11.
அவருடைய நித்திரை திடீரென்று கலைந்தது. குழாயிலிருந்து தண்ணிர் சொட்டும் சத்தம் நிதர்சன மாகக் கேட்டது. தண்ணிர்க் குழாயைத் திறந்தால் வடிவாகப் பூட்டும்படி ஆயிரம் தடவை சொல்லி யிருப்பார். யார் கேட்கிறார்கள்? அவர் ஆழ்ந்த நித் திரையாக இருக்கும்போது ‘புக்காறா' விமானத்திலி ருந்து குண்டு விழுந்தாலும் அவருக்கு கேட்காது ஆனால் ஒரு சொட்டு தண்ணர் அநாதையாக விழும் அந்த சத்தத்தை மாத்திரம் அவரால் தாங்கமுடியாது. அவருடைய மனைவிக்கும் மகளுக்கும் இதுதான் பெரிய ஆச்சரியம்.
இதில் என்ன ஆச்சரியம்! தண்ணிர்தான் அவரு டைய உயிர்மூச்சு. தண்ணிரென்றாலும் பொன் னென்றாலும் குணசிங்கத்துக்கு ஒன்றுதான். சுடா னிலுள்ள கெஸிரா நீர்ப்பாசனத் துறையில் நீர் வள நிபுணராக அவர் கடந்த பன்னிரண்டு வருடங்களாக வேலை பார்க்கிறார். உயர்ந்த பதவி. ஒவ்வொரு சொட்டு நீர்க்கும் ஆலாய்ப் பறக்கும் அந்த நாட்டில் தண்ணிர் பங்கீட்டைக் கவனிப்பது என்ன சாதாரண காரியமா?
பொறுப்பான அந்த வேலையை சரிவரச் செய்யும் யோக்கியதை அவரைத் தவிர வேறு யாருக்கு இருக்
17 سس-{A@

Page 137
250 பருத்திப் பூ
கிறது? ஆறேயில்லாத யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர். உரும்பிராய் வாழைத் தோட்டத்தில் தான் அவருடைய ஆரம்ப தீட்சை. ஆயிரம் கன்று தோட்டம் அது. அவருடைய அப்பா பட்டையைப் பிடிக்க, சித்தப்பா துலா மிதிக்க, இவர் படபட வென்று பாத்தி கட்டிக்கொண்டே வருவார். தண்ணி வரவர வேகமாக ஈடுகொடுத்துக் கொண்டு வரவேண் டும். கொஞ்சம் சுணங்கினாலும் கிணற்று நீர் வற்றி விடும்; நூறு வாழைக் கன்றுகள் அன்று தண்ணி யில்லாமலே போக வேண்டியிருக்கும்.
அப்பா பாத்திபிடித்த கைகளில் இன்று சுடானின் பொருளாதார ஏற்ற இறக்கம் இருந்தது. எகிப்து நாட்டுடன் செய்த ஒப்பந்தப் பிரகாரம் நைல் நதியில் பிரவகித்து வரும் நீரில் 20,000 கோடி கன மீட்டர் தண்ணிரை மட்டும் வைத்துக்கொண்டு மிகுதியை எகிப்து நாட்டுக்கு விட்டுவிட வேண்டும். சேமித்த நீரை சாதுர்யமாக அந்தந்தப் பகுதியிலுள்ள விவ சாயிகளுக்கு பருத்தி, கோதுமை, சோளம் என்று பயிருக்கு தக்கபடி தரவேண்டும். உயிர் நாடியான இந்த வேலையை குணசிங்கம் சூட்சுமமான விதி முறைகளை வகுத்து வெற்றிகரமாகச் செய்து வந்தார். சிறுகக் கொடுத்து பெரிய வளம் சேர்க்கும் கலையில் குணசிங்கத்தை அடிக்க ஆளில்லை.
ஐந்துமணி அடித்தபோது படுக்கையை விட்டு எழுந்தாா. மனைவியும் மகளும் இன்னும் ஆழ்ந்த தூக்கத்திலேயே இருந்தார்கள். சோம்பலை ஆராதிப் பவர்கள் அவர்கள். எனவே ஆச்சரியப்படுவதற் கில்லை. பரபரவென்று குளியல் வேலைகளை கவனிக்க முற்பட்டார். அந்த அதிகாலையிலேயே வெய்யில் சூடு ஏறத் தொடங்கி விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் பைப்பில் சூடு தண்ணிர் மட்டும்.

அ. முத்துலிங்கம் (1 251
தான்வரும். வீட்டின் மேலேயுள்ள தண்ணித்தொட்டி சூடாகத் தொடங்கி விட்டால் பிறகு பச்சைத் தண்ணிரை காணவே முடியாது.
காலைநேரத்து அநுட்டானாதிகள் என்றால் அவருக்கு ஒரு ஒழுங்கின்படிதான் நடக்க வேண்டும். வழக்கம்போல ஷேவ் எடுக்கும்போது ஒரு பேணியில் தண்ணிபிடித்து வைத்து செய்வார். பைப்பை திறந்து போட்டு அது பாட்டுக்கு தண்ணி ஓட ஷேவ்செய்ய மாட்டார். இந்த முறையில் தண்ணிர் எவ்வளவு மிச்சப்படுகிறது என்பதற்கு கணக்கெல்லாம் வைத் திருக்கிறார். பூவிசிறல் குளியல் மிகவும் பிரியம் என்றாலும் தவிர்த்துவிடுவார். இரண்டு வாளியிலே தண்ணியை செட்டாகப் பிடித்து வைத்து குளியலை முடித்துக் கொள்வார். அவருடைய மனைவிக்கு இது ஒரு வெட்கக் கேடு. இவருடைய முகத்துக்கு முன்னாலேகூட சில சமயங்களில் சிரித்திருக்கிறாள்.
சுடான் வழக்கப்படி அவர் காலைவேளையில் வீட்டில் ஒன்றுமே சாப்பிடுவதில்லை. ஏழுமணிக்கெல் லாம் அலுவலகத்துக்கு போய் சேர்ந்துவிடும் முதல் ஆள் அவர்தான். பத்துமணிக்குத்தான் காலை உணவு. அப்துல்லாய் அவருடைய பஃத்தூரை எடுத்து வருவான். இப்ப பல வருடங்களாக அவருக்கு ஃபூல்தான் காலை உணவு. இட்லியும், வடையும் போல இதுவும் ஒரு இன்றியமையாத தேவையாகி விட்டது. இரண்டு கப் சாயும், ஃபூலும் சாப்பிட்ட பிறகு மறுபடியும் அவர் தன்னுடைய வேலைகளில் மூழ்கி விடுவார்,
இப்ப சில காலமாக அவருக்கு ஒரு சமுசயம். உலோபி-கருமி என்றெல்லாம் மற்றவர்கள் நினைப் பதைஅவர் பெரிதும்பொருட்படுத்தவில்லை. முதுகுக்கு

Page 138
252 0 பருத்திப் பூ
பின்னால் அவர்கள உள்ளூர நகைப்பதைத்தான் அவரால் தாங்க முடியவில்லை. சிக்கனமாக இருப்ப தற்கும் கருமித்தனத்துக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்ைைலயா? பொதுச் சொத்தை சீரழியாமல் பார்ப்பதுகூட கருமித்தனமா? கோடிக்கணக்கான கன மீட்டர் தண்ணிரை அவர் பங்கீடு செய்கிறார். ஆனால் ஓர் ஏழைக் கிழவிக்கு கொஞ்சம் தண்ணர் விட்டதற்கு அவரை விசாரணை வரைக்கும் இழுத்து விட்டார்களே!
இங்கிலாந்திலிருந்து சுடானுக்கு வேலை பார்க்க வந்த இருபத்திநாலு என்ஜினியர்களில் குணசிங்கமும் ஒருவர். அவர் ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் வெள்ளைக்காரர்கள். ஒப்பந்தப் பிரகாரம் ஒவ்வொரு வராக கெஸிராத் திட்டத்தில் தங்கள் வேலைகளை முடித்து திரும்பவும் இங்கிலாந்து போய்விட்டார்கள. குணசிங்கம் மாத்திரம் எஞ்சிநின்றார். அவர் அவசரப் பட்டு திரும்பி போகாததற்கு இரண்டு காரணங்கள். முதலாவதாக, இந்த தண்ணிர்ப் பங்கீட்டு வேலை அவருக்கு நிறைய ஆத்ம திருப்தியைக் கொடுத்தது. இரண்டாவது, அவருடைய ஒரே மகள் காயத்திரி ஒரு நல்ல பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந் தாள். அவளுக்கு இப்ப பதினாலு வயது; அடுத்த வருடம் அவள் இறுதியாண்டு சோதனை எடுத்து முடித்ததும் அவளுடைய மேற்படிப்பு விஷயமாக சுடானைவிட்டு ஒரேயடியாகப் போய்விடுவது என்று தீர்மானித்திருந்தார்.
உலகத்திலேயே மிகவும் பிரம்மாண்டமான நீர்ப் பாசனத் திட்டம் அது. நீல நைல் நதியும் வெள்ளை நைல் நதியும் சந்திக்கும் அந்த முக்கோணப் பிரதேசத் தில் 25 லட்சம் ஏக்கர் பரப்புகளைக் கொண்டது

அ. முத்துலிங்கம் ) 253
அந்தத் திட்டம். ஓர் எல்லையில் இருந்து மறு எல்லைக்கு ஜீப்பில் போவதற்கு அவருக்கு ஒருமுறை இரண்டு நாள் பிடித்தது. அன்னியச் செலவாணி கொண்டு வருவதில் முன்னிற்கும் கெஸிராவில் எண்பது வீதம் உற்பத்தி பருத்திதான்; மீதியில் சோளமும், கோதுமையும், வேர்கட லையும், காய்கறி வகையும் பயிரிடப்பட்டன.
சு டான் போன்ற பாலைவனப் பிரதேசத்தில் மழையை நம்பி பிரயோசனமில்லை. நைல் அவர் களுடைய ஜீவநதி ஓர் இளங்கோ அடிகள் இங்கே இருந்திருந்தால் "உழவருடைய ஏரியின் ஓசையும், மத கிலே நீர் வடியும் ஒலியும், வரப்புகளை மீறிப் பாயும் நீரின் சலசலப்பும், மக்களின் மகிழ்ச்சி ஆரவாரமும் பின்னணியாகக் கொண்டு நடந்தாய் வாழி, நைல் நதி' என்றல்லவோ பாடியிருப்பார்? ஆஹா! அது தான் எவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கும். நைல் நதியில்லாவிட்டால் சர்வதேச அரங்கில் அவர்களை நிமிர்த்தி உட்கார வைத்திருக்கும் இந்த நீர்ப்பாசனத் திட்டமும் இல்லை; குணசிங்கம் போன்ற உலக அளவில் புகழ்பெற்ற நிபுணர்களும் இருந்திருக்க
மாட்டார்கள்.
அலுவலகத்துக்கு அணியும் ஆடையை அணிந்து வெளியே வந்தார் குணசிங்கம். வெய்யில் சுள்ளெனப் பாயத் தொடங்கி விட்டது சுடானியர்கள் அணியும் ஜிலேபியா என்னும் நீண்ட வெள்ளை அங்கியைத் தான் இப்போதெல்லாம் அவர் அணிந்துகொள்வார். அது அவருக்கு வசதியாக இருந்தாலும் அவருடைய குள்ளமான உருவத்துக்கு பொருத்தமாக இல்லை. அவருடைய குரல் வேறு கீச்சென்று இருக்கும். உரத்துக் கத்தக்கூட அவருக்கு யாரும் பயிற்சி

Page 139
254 0 பருத்திப் பூ
கொடுத்ததில்லை. கத்தினாலும் குருவி கத்தியது போலிருக்கும். மற்றவர்களுக்கு கைவராத இப்படி யான அதிமுக்கிய வேலையை அவர் திறம்பட செய்த போதிலும் அலுவலகத்தில் யாரும் அவரை மதிக்கா ததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.
வெளியே வந்து பார்த்தபோது கஃபீர் வாசலிலே குர்ஆன் ஓதியபடி இருந்தான். வழக்கம்போல இவர் குளித்த தண்ணிரைப் பிடித்து பூமரங்களுக்கும், செடி களுக்கும் பாய்ச்சியிருந்தான். ரோஜாச் செடிகளுடன் போட்டி போட்டு பருத்திச் செடி வைத்தது இவர் ஒருவர்தான். மண்ணில் மலரும் பூக்களிலேயே மிகவும் உன்னதமானதும், எளிமையானதும், ஆரவாரமில்லா ததும் இந்தப் பருத்திதான் என்பது இவர் கருத்து. சிறுவனாக இருந்தபோது கத்தரித்தோட்டத்து வெருளியைக் கண்டால் அதைவிட்டு போகவே மனம் வராது அவருக்கு. அதுபோல இந்தப் பருத்தி எங்கே பூத்திருந்தாலும் அவர் அதன் அழகைப் பார்த்துக் கொண்டே மணிக்கணக்காக இருப்பார்.
அவருக்கு பருத்தியை பிடித்ததற்கான காரணம் அதுவும் அவரைப்போல மிகவும் சிக்கனமான ஒரு செடி. குறைய எடுத்து நிறையத் தருவது அது. அள வோடு பருகும் தண்ணீர் அவ்வளவையும் வெண் ணிறப் பூக்களாக மாற்றிவிடும். சூரியனுக்கும், மண் ணுக்கும் ஏற்பட்ட முப்பரிமாண ஒப்பந்தத்தில் பிறந்த இந்தப் பருத்திப்பூ ஐயாயிரம் வருடங்களாக அல்லவா மனிதனுடைய மானத்தைக் காத்துவந்திருக் கிறது!
மற்றவர்கள் இவரை அபூர்வப் பிறவி என்று கருதுவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. இவர் வேலைக்குப் போய் வருவது ஒரு வோக்ஸ்

அ. முத்துலிங்கம் 255
வாகன்' காரில். அதுவும் இருபது வயதுப் பராயம் கடந்த கார். சுடானில் டொயோரா, நிஸான், ஹொண்டா போன்ற ஜப்பான் கார்கள் வண்ண வண்ணக் கலர்களில் ரோட்டுக்களை அடைத்துக் கொண்டு ஒடும். மிகவும் உயர் அதிகாரிகள் என்றால் பென்ஸ் கார்தான். அப்படிப்பட்ட நாட்டிலே இவர் ஒருத்தர்தான் இப்படியாக ஒரு குருவிக்கூட்டு காரை வைத்திருந்தார். இவருக்கு பின்னால் வந்த இளம் என்ஜினியர்கள் கூட விதம் விதமான புது கார்களில் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பணம் எல்லாம் நேர்வழியில் வந்ததுதான் என்று நினைக்கும் அளவுக்கு இவர் ஓர் அப்பாவி,
இவருடைய கார் என்ஜினில் எண்ணெய் வெகு தீவிரமாக ஓரிடத்தில் ஒழுகிக் கொண்டிருக்கும். வரையாது கொடுக்கும் வள்ளல்போல இந்த என்ஜின் குறையாது ஒழுகும் வரம் பெற்றது. கஃபீர் கீழே குனிந்து மிகவும் லாவகமாக ஒழுக்குக்கு வைத்திருந்த டின்னை எடுத்தான். இவர் காரை பின்னுக்கு எடுத்து திருப்பினார். ஜெட்டா வீதியில் உள்ள எல்லோ ருக்கும் இவருடைய கார் ‘டுப், டுப்' என்று கட்டியம் கூறிக் கொண்டு புறப்பட்டது கேட்டது. அவர்கள் தங்கள் கடிகாரங்களைச் சரி பார்த்துக் கொண் டார்கள்.
கல்லுக்கட்டி வளர்த்த புடலங்காய்போல நெடுஞ் சாலை வளைவே இல்லாமல் நேராகப் போய்க் கொண்டிருந்தது. ஒட்டகங்கள் வரிசை வரிசையாக "ஒம்டுர்மான் சந்தையை நோக்கி நடை போட்டன. பாதையோரங்களில் குவித்துக் குவித்து வெள்ளரிப் பழங்களை அடுக்கிவைத்து 'தஹ்திர், தஹ்திர்' என்று வியாபாரிகள் கத்திக்கொண்டு இருந்தார்கள். இவ்

Page 140
256 0 பருத்திப் பூ
வளவு வெள்ளரிப் பழங்கள் சாப்பிடுவதற்கு இங்கே ஜனத்தொகை இருக்கிறதா? அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.
நீல உடையும், தாவணி போன்ற வெள்ளைத் *தோஃப்பும் அணிந்த யுவதிகள் கூட்டமாகப் பள்ளி களுக்கு சென்று கொண்டிருந்தனர். தாவணியின் ஒரு முனையை இடது அக்குளிலே சொருகிமீதியை சுற்றிக் கொண்டு வந்து தலையை மூடி தொங்க விட்டிருந்த னர். அசப்பிலே பார்த்தால் அவருடைய ஊர்ப்பெண் களைப்போலவே இருந்தார்கள். இதுவும் ஒரு அழ காகத்தான் இருந்தது. அவருடைய மகளும் இப்ப எழும்பி சோம்பல்முறித்து கொட்டாவி கொண்டாடி பள்ளிக்கு ஆயத்தம் செய்து கொண்டிருப்பாள். இவ ருடைய விசாரணை பாதகமாக முடிந்தால் அவளு டைய படிப்பு இந்நாட்டிலே தடைபட்டு போகும். இன்னும் ஒரே வருடம்தான் அவளுக்கு இருந்தது.
அவருடைய மனைவியைப்பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. அது பேசி வைத்த கல்யாணம்தான். ஆன படியால் காதல் பிரவாகமாகக் கொட்டும் என்று எதிர்பார்க்க இயலாது. போன ஆனி மாசத்து பெளர்ணமியில் இருந்து சாவித்திரி விரதம் அநுஷ்டிக் கத் தொடங்கியிருக்கிறாள். வைதவ்யம் வராதிருக்க அவள் கண்டுபிடித்த சுருக்கு வழி. எதற்காக இந்த திடீர் மாற்றம்? வாரத்தில் இரண்டு நாள் 'ஓம்டுர் மான் கடைகளை சேத்திராடனம் செய்துஒன்றுக்கும் உதவாத பித்தளைப் பாத்திரங்களையும், வெள்ளிக் கொலுசுகளையும் வாங்கிக் குவிப்பதை மட்டும் அவள் நிறுத்தவில்லை.
அவருடைய காரைப்பற்றி கூறும்போது * ஒட்டைக்கார்’ என்ற அடைமொழியையும் சேர்த்தே

அ. முத்துலிங்கம் (ப் 287
சொல்கிறாள். பொடி வைத்து பேசுவதை ஸ்பெஷல் சப்ஜெக்டாக எடுத்திருப்பாள் போலும். இப்பவெல் லாம் அவருடன் சேர்ந்து வெளியே வருவதற்குக்கூட கூசுகிறாள் போல பட்டது. அவளுக்கு அவமானமாக இருக்கிறதோ?
அலுவலகம் அமைதியாகத் தூங்கிக் கொண்டு இருந்தது. இவரைக் கண்டதும் வழக்கம்போல ஒடிப் போய் சாய் கொண்டுவந்து வைத்துவிட்டான் அப்துல்லாய். அவருக்காக ஏற்படுத்தப்பட்ட “மெர் ஸால்", விசுவாசமான ஒரே வேலைக்காரன். உப யோகித்த கடித உறைகளை பின்பக்கமாகத் திருப்பி 'அளவான துண்டுகளாக வெட்டி அவர் மேசையிலே வைத்திருந்தான். அவருடைய சிறு குறிப்புகளுக்கு அவற்றை அவர் விருப்பத்தோடு பயன்படுத்துவார். ஒரு சிறு காகிதம்கூட விரயமாவதை அவர் சகிக்க மாட்டார். அப்துல்லாய்கூட இப்பவெல்லாம் அவரை அலட்சியப்படுத்துவது போல பட்டது. எல்லாம் அந்த விசாரணை வந்த பிறகுதான். ஒரு சின்ன விஷயம். அதை இப்படி ஈவுளியில் ஈர்பிடித்ததுபோல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்களே! விசார ணைக் குழுவினருடைய அறிக்கை அன்றுதான் போர்ட் மீட்டிங்கில் விவாதிக்கப்படப் போகிறதாம்.
தண்ணீர் பக்கீட்டைச சரியாகச் செய்தாலும் கடந்த நாலு வருடங்களாக அவருக்கு ஒர் ஆசை. தன்னுடைய சொட்டுநீர் பிரயோக முறையை எப்படி யும் அறிமுகப்படுத்திவிட வேண்டுமென்று முயன் றாள். சுடான் போன்ற தண்ணிர் பற்றாக்குறை நாட் டில் சொட்டுநீர் பிரயோகம் எவ்வளவு அவசியம் என்று வாதாடினார். அவருடைய கரைச்சல் தாங்கா மல் ஓர் இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை சொட்டுநீர்

Page 141
258 0 பருத்திப் பூ
முறைக்கு மாற்றினார்கள். பத்தில் ஒரு பங்கு தண்ணி ரில் இரட்டிப்பு மடங்கு விளைச்சல் காட்ட முடியும் என்று நிரூபித்தார். எல்லோரும் அவரைப் பாராட்டி னார்கள். ஆனால் ஆயிரக்கணக்கான பேருக்குவேலை போய்விடும் என்று இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார்கள்.
சொட்டுநீர் முறையில் சிலாக்கியத்தை இவர் உணர்த்தியது உண்மைதான். ஆனால் அதே ஸ்மரணையாக, விடாப்பிடியாக, அதை நிமிண்டிக் கொண்டிருப்பது சேர்மனுக்கு பிடிக்கவில்லை. தண் ணிர் விநியோகம் பற்றி தலையிலே தூக்கிவைத்து காவடி ஆடுவதும் அவருக்கு வெறுப்பைக் கூட்டியது. இதன் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் விநியோகப் பிரிவில் இவருடைய பங்கு வெகுவாகக் குறைக்கப்பட்டு விட்டது. அந்த அவ மானத்தை பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக் கொண்டார்.
புதிதாக வாய்க்கால் போடும் பிரிவுக்கு குணசிங் கத்தை மாற்றினார்கள். அந்த வருடத்து வாய்க்கால் ஐம்பது மைலும் அவர் பொறுப்பில் விடப்பட்டது. அப்போதுதான் இவ்வளவு காலமும் மிகவும் கவன மாகவும் பொறுப்பாகவும் வேலை பார்த்த குணசிங் கம் ஒரு பெரிய தவறு செய்ய நேர்ந்தது. கருமமே கண்ணான அவருக்கு இப்படியான ஒரு சோதனை ஏற்பட்டிருக்கவே கூடாது.
புதிய வாய்க்கால் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது இவர் கண்ட ஒரு காட்சி இவரை பெரிதும் நெகிழ வைத்தது. பொட்டல் காட் டில் அந்தக் கிழவி ஒரு குடிசையில் தரித்திரத்தை மட் டும் துணையாக வைத்து வாழ்ந்து கொண்டிருந் தாள். ஒவ்வொரு நாளும் இரண்டு மைல் தூரம் நடந்துபோய் தண்ணிர் பிடித்து வந்தாள். அந்தத் தள்ளாத வயதில் தன்னந்தனியாக அந்தக் கிழவி த

அ. முத்துலிங்கம் 0 259
ணிருக்காகப் படும் இன்னல் இவர் மனதைத் தாக் கியது.
தெற்கே நடக்கும் போரின் உக்கிரம் தாங்காமல் குடி பெயர்ந்தவள் இந்தக் கிழவி. எல்லாவற்றையும் இழந்து நூற்றுக்கணக்கான மைல்கள் கால்நடை யாகவே நடந்து வந்தவள். சொந்தபந்தம் எல்லோ ரையும் சண்டைக்கு பலிகொடுத்த இந்த ஜூபா இனத்துக் கிழவி இப்படி தனித்துப் போய் சாவோடு போராடிக் கொண்டு இருந்தாள்.
சுடான் கடைகளில் அமோகமாக விற்பனை யாவது "பாமியா’ என்ற வெய்யிலில் உலர்த்திய வெண்டைக்காய். அதைப் பொடிசெய்து கூழ்போலக் காய்ச்சி குடிப்பார்கள். அப்படியாக இந்த உலர்ந்த வெண்டைக்காய்போல இருந்தாள் இந்தக் கிழவி. கறுத்து மெலிந்த தேகம்; நெடிய உருவம். வயது ஐம்பதும் இருக்கலாம்; ஐந்நூறும் இருக்கலாம், அவள் முகம் எல்லாம் கெலீரா ரயில்பாதை வரை படம்போல கோடுகள். அவளைப் பார்த்ததுமே குணசிங்கத்தின் மனசை என்னவோ செய்தது. அவருக்கு தன்னுடைய ஊர் ஞாபகம் வந்திருக்கலாம். கிழவியை எடுத்த வீச்சே 'எஃத்திராம் (பாட்டி) என்று அழைக்கத் தொடங்கினார்.
அவளுடைய கதையைக் கேட்டதும் அவர் உருகி விட்டார் அப்பொழுதுதான் அவர் ஒரு முடிவு எடுத்தார். அது அவருடைய மனச்சாட்சிக்கு சரியான முடிவு என்று பட்டது. அவர்கள் போட்டு வந்த புதிய கால்வாயை வரைபடத்திலிருந்து சிறிது மாறுபடுத்தி கிழவியினுடைய குடிசைக்கு அண்மை ய்ாகப் போகுமாறு பண்ணினார். இந்த மாற்றத் தினால் கிழவிக்கு தண்ணீர் வேண்டிய அளவு சுலபமாகக் கிடைத்தது.

Page 142
260 0 பருத்திப் பூ
கால்வாய் வேலைகள் முடிந்த பிற்பாடு அவர் கையைப் பிடித்துக்கொண்டு நன்றி கூறியது இன்னொரு மறக்கமுடியாத நிகழ்ச்சி. அவர் மனதை அது தொட்டுவிட்டது. கிழவியின் கண்களிலே இப்படி அருவிபோல தண்ணிர் கொட்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. பூர்வஜென்மக் கணக்கை தீர்த்தது போன்ற ஒரு நிம்மதி அவருக்கு ஏற்பட்டது.
ஆனால் அப்பொழுதுதான் ஒரு புதுப்பிரச்சினை முளைத்தது. இவருடைய கால்வாய் வெட்டும் பட்ஜெட் பதினாறு வீதம் கூரையை பிய்த்துக் கொண்டு மேலே போய்விட்டது. அதற்கான காரணத்தை காட்டும்படி இவருக்கு கடிதம் வந்தது. இப்படி அடிக்கடி கடிதம் வருவதும் பதில்எழுதுவதும் சாதாரணம்தான். ஆனால் இவர் எழுதிய பதில் தான் அசாதாரணம். இவர் நேர்மையாக விளக்கம் கொடுத்து பதிலை எழுதினார். அதிகாரிகள் திகைத்துவிட்டார்கள். இப்படியான பதிலை ஒருவருமே எதிர்பார்க்கவில்லை. கெளtரா நிர்வாகத் தின் சரித்திரத்திலேயே காணாத விசாரணைக் குழு ஒன்று அப்போது அமைக்கப்பட்டது. இவருடைய அத்துமீறிய செயலை தீர்க்கமாக விசாரித்து அறிக்கை கொடுப்பதென்று தீர்மானமாகியது.
இவருடன் வேலை செய்த மற்ற என்ஜினியர்கள் இவருக்கு ஆலோசனை வழங்கினார்கள். வரைபடத் திலுள்ள சில பிழைகளால் மேற்படி தவறு ஏற்பட்ட தென்று காட்டும்படி சிலர் சொன்னார்கள். இன்னும் சிலர், பாதையிலே எதிர்பாராதவிதமாக குறுக்கிட்ட கற்பாறைகளின் விளைவாக கால்வாயை நகர்த்த வேண்டி வந்ததென்று எழுதும்படி கூறினார்கள். இவர் மறுத்துவிட்டார்.

அ. முத்துலிங்கம் 0 281
விசாரணையில் கேட்டார்கள். இவர் நெஞ்சை நிமிர்த்தி, கண்களை நேராகப் பார்த்து சொன்னார்:
"ஐயா, தண்ணிருக்காக இரண்டு மைல் போகும் கொடுமையை என் கண்களாலே பார்த்தேன். தள்ளாத வயதுக் கிழவி. உங்கள் அம்மாவாகக்கூட இருக்கலாம். என்னால் அந்தக் கிழவி படும் கஷ்டத்தை பார்க்க முடியவில்லை. அதுதான் நான் கால்வாய் பாதையை சிறிது மாற்றி அமைக்கவேண்டி வந்தது. இது பாரதூரமான குற்றமா? இன்று அந்தக் கிழவி போட்டிருக்கும் பருத்தித் தோட்டத்தை பார்க்கும்போது என் கண்கள் குளிருகின்றன. கிழவி யுடைய புன்னகை போல பருத்தி பூத்து நிறைந்திருக கின்றது. கடவுளால் கைவிடப்பட்ட கதியில்லாத ஏழைகசூ இந்தக் கால்வாய் வாழ்வு கொடுத்து விட்டது."
அவருடைய தலைவிதியை நிர்ணயிக்கும் நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. மணி ஒன்பது. சபை அங்கத்தினர்கள் ஒவ்வொருவராக வந்துகொண்டி ருந்தனர். எல்லோருமே அவருக்கு தெரிந்தவர்கள் தான். இன்று அவரைக் கண்டுகொள்ளாத மாதிரி பரபரப்பாக போய்க்கொண்டிருத்தனர். அவருக்கு ‘எஃத்திராமை' பார்க்கவேண்டும் போல் தோன் றியது. இனிமேல் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கா தென்று அவர் உள்ளுணர்வு கூறியது.
குணசிங்கம் காரில் ஏறியதை யாரும் பார்க்க வில்லை. அவர் நடக்கும்போது நடப்பதுபோலவே தெரியாது. காரில் ஏறியதும் அதை ஸ்டார்ட் பண்ணியதும் கன வேகத்தில் நடந்தன. ஆனால் அது ஒரு அமைதியான வேகம். 'டுப், டுப்' என்று அவரு

Page 143
262 0 பருத்திப் பூ
டைய கார் உயிர்பெற்றதும்தான் பல கண்கள் தன்னை பார்ப்பதை அவர் உணர்ந்தார். அந்த நேரத்தில் குணசிங்கம் காரை எடுத்துக்கொண்டு போவது அவர்களுக்கு அதிசயமாக இருந்தது, காரை நேராக எஃத்திராமின் குடிசையை நோக்கிவிட்டார். அவளைப் பார்ப்பதினால் சிலவேளை அவருடைய மனப்பாரம் சிறிது குறையக்கூடும்.
எஃத்திராம் குணசிங்கத்தை கண்டவுடன் மகிழ்ச் சியால் பூரித்துப் போனாள். பருத்திச் செடி வளர்ந்து கொத்துக் கொத்தாக வெடித்து நின்றது. ஆயிரம் யுவதிகள் தலை நிறைய வெள்ளைப் பூ வைத்து குணிந்து நிற்பதுபோல் பருத்திச் செடிகள் மொலு மொலுவென்று பார்த்த இடமெங்கும் நிறைந்து கிடந்தன. இரண்டு வருடங்களுக்கு முன்பு அது பொட்டல் காடாக இருந்தது என்று சொன்ளால் யாராவது நம்புவார்களா! காற்றுச் சுழன்று வீசிய போது அங்கு நிலவிய வெப்பம் தணிய பருத்திச் செடிகள் சிறிது ஆடின. வெள்ளிக்கிழமை காலை வேளையில் தலையில் முழுகிவிட்டு குமரிகள் தலை யைச் சிலுப்பியது போன்ற அந்த காட்சியை பார்ப்ப தற்கு குணசிங்கம் ஆயிரம் மைல்கள் கூட நடந்து போவதற்கு தயாராக இருந்தார்.
கிழவியின் முகம் ஒரு யெளவனப் பெண்ணின் குதூகலத்துடன் காட்சியளித்தது. ** என்ன வால்டிஹ்! உன் முகம் இப்படி சோர்ந்துபோய் இருக் கிறதே?’ என்றபடி எஃத்திராம், கெனானா சர்க் கரை நிறையப் போட்ட ‘கெக்கடே பானத்தை கொண்டு வந்து தந்தாள். கிழவி அவரை அதற்கு முன்பு "வால்டிஹ் (அருமை மகனே) என்று அழைத் தது கிடையாது. அத்த வார்த்தை அவரை என்னவோ செய்து விட்டது. பாரவண்டி இழுக்கிற

அ. முத்துலிங்கம் 0 268
மாடு வாயிலே நுரை தள்ளும்போது அத்த நுரையை வழித்து மாட்டின் முதுகிலே தேய்த்து விடுவார்கள். மாடு அப்போது ஒரு சிலிர்ப்புச் சிலிர்க்கும். அந்த மாதிரி குணசிங்கத்தின் உடம்பெல்லாம் சிலிர்த்தது. நிறைய அழவேண்டும்போல பட்டது. மறுபடியும் தனிமையை நாடியது அவருடைய மனம், அவசர மாக கிழவியிடம் விடை பெற்றுக்கொண்டு திரும் LGBT Třir.
அவர்கள் பதினாறு வீதம் பட்ஜெட்டில் இடிக் கிறது என்று கூறியது அவருக்கு சிரிப்பாக வந்தது. அது என்ன அவ்வளவு பெரிய நஷ்டமா? நாலு வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது?
உலகம் எங்கனும் பகிஷ்கரிக்கப்பட்ட கிருமி நாசினியை இவர்கள் தவறுதலாக ஒடர் பண்ணிவிட் டார்கள். ஒரு வருடத்துக்கு தேவையான கிருமி நாசினி. ஆனால் கப்பலில் வந்து இறங்கிய பிற்பாடு தான் அவை உலக முழுவதிலும் புறக்கணிக்கப்பட்ட விஷயம் இவர்களுக்கு த்ெரிய வந்தது. சுற்றுச் சூழலை மிகவும் கொடூரமாகத் தாக்கும் விஷம் கொண்ட நாசினி அது இரண்டு லட்சம் டொலர் பெறுமதி யான சரக்கு. அவ்வளவையும் தள்ளி வைக்க வேண்டி வந்து விட்டது. அதுமாத்திரமல்ல, அவற்றை அப் படியே அழிக்கவும் உத்தரவு வந்து விட்டது எப்படி அழிப்பது?
பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிவந்தது. அந்த விஷத்தை தக்க வைப்பதற்கும் இடமில்லை; அழிப்பதற்கும் வழியில்லை. அப் பொழுது சிவபெருமான் கருணை கூர்ந்து அந்த விஷத்தை எடுத்து விழுங்கி சகல ஜீவராசிகளையும் இாட்சித்தார் அல்லவா? அதுபோலத்தான் இதுவும்.

Page 144
284 0 பருத்திப்பூ
இக்கட் டான நிலை. மேலும் எவ்வளவோ பணம் செலவு செய்து அந்த விஷத்தை அப்புறப்படுத்தினார் கள். அந்த நஷ்டத்தை எந்தக் கணக்கில் கட்டி GöTf了f丁é万@YT。
அதுதான் போகட்டும். சென்ற வருடம் விமான மூலம் கிருமிநாசினி அடிக்கும் ஒப்பந்தம் ஒரு பெல் ஜியம் கம்பனிக்குக் கிடைத்தது. அந்தக் கம்பனி ஒப்பந்தப்படி நாளுக்கு நாலு விமானங்களில் கிருமி நாசினியைத் தெளித்தபடியே வந்தார்கள். ஆனால் ஒருநாள் ஒரு விபரீதம் நடந்துவிட்டது. அன்று போட்ட முறைப்படி ஹவாஷா 189க்கு மருந்து தெளிக்க வேண்டும். தவறுதலாக விமானிக்கு ஹவாஷா 198 என்று செய்தி போய்விட்டது. ஹவாஷா 198ல் பயிர் செய்த விவசாயிகளுக்கு இந்த விஷயம் தெரியாது. அவர்கள் பாட்டுக்கு வழக்கம் போல தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். விமானி பத்தடி உயரத்துக்கு விமா னத்தை இறக்கி மருந்தை அடித்துக்கொண்டு வந்த போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. சும்மா பருத்திக் காட்டுக்குள் படுத்துக் கொண்டிருந்த ஒட்டகம் ஒன்று சத்தம் கேட்டு அவசரமாய் எழுப்பி யது. இதை விமானி எதிர்பார்க்கவில்லை. விமானம் ஒட்டகத்தில் மோதி தீப்பிடித்தது. விமானியும் ஒட்ட கமும் ஸ்தலத்திலேயே மரணம். இழப்பீடாக லட்சக் கணக்கில் அல்லவா கொடுக்கவேண்டி வந்தது? விசாரணை எங்கே நடந்தது? அந்த தவறான செய்தி அனுப்பிய அதிகாரிக்கு ஒன்றுமே நடக்கவில்லையே!
இவர் அலுவலகத்துக்கு திரும்பி வந்தபோது எல்லோருடைய கண்ககளும் இவரைத் தேடியபடியே இருந்தன. இவருக்கு முடிவு ஏற்கனவே தெரிந்துதான் இருந்தது. என்றாலும் மனதை ஏதோ செய்தது. வயிறு எம்பிவந்து தொண்டைக் குழியை அடைத்துக்

அ. முத்துலிங்கம் 0 265
கொண்டது. சபை இவரைக் கூப்பிட்டனுப்பியது. உடல் சகலமும் சுருங்கி விட்டது. துவண்டுபோன கால்களை நிமிர்த்தி வைத்து இவர் உள்ளே போன போது சேர்மன் இவரைப் பார்த்து பேசினார்:
‘போர்டின் முடிவை அறிவிக்கும் வருத்தமான பணியை என்னிடம் :::ಜ್ಜೈ# என்று தொடங்கினார். அவருடைய வாய் அசைவு மாத்திரம் இவருக்கு தெரிந்தது. உதடுகள் விரிந்து விரிந்து பெருத்துப்போய் முழு அறையையும் அட்ைத்தது. ஒரு சத்தமும் கேட்கவில்லை. சிறிது நேரம் சென்றது. எல்லோரும் இவரையே பார்த் தார்கள். இறுக்கமான மெளனம் நிலவியது. சேர்மன் இன்னொரு முறை கேட்டார். "நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?"
"ஐயா, நான் சொல்ல என்ன இருக்கிறது? என்னுடைய வாழ்வில் பெரும்பகுதியை இந்த கூட்டுத் தாபனத்துக்காக அர்ப்பணித்தேன். நீங்கள் பதினொரு பேர் சேர்ந்து ஒரு முடிவை எடுத்திருக் கிறீர்கள்.அந்த முடிவு சரியானதாகத்தான் இருக்கும். இதே வேலையை என்னிடம் இன்னொருமுறை ஒப்படைத்தால்கூட நான் எடுத்த முடிவில் ம்ாற்றமும் செய்யமாட்டேன். நான் என் பணியை கடந்த பலவருடங்களாக திறம்படவே செய்து வந்திருக்கிறேன். நான் ஏமாற்றவில்லை; கையாட் ல்லை; ப்ொய் பேசவில்லை. நான் செய்ததெல்லாம் ஓர் ஏழைக் கிழவிக்கு தண்ணிர் வழங்கியதுதான். தண்ணிரை வகுத்துக் கொடுப்பதுதான் என் வேலை யென்று நம்பினேன். அது மகா குற்றம் என்றால் அந்த மகத்தான குற்றத்தை நான் தொடர்ந்து செய்யவே விரும்புகிறேன். நான் கொடுத்த ஒவ்வொரு சொட்டு நீரும் இன்று பருத்திப்பூவாக வெடித்திருப் பதை காணும்போது என் கஷ்டமெல்லாம். y என்று சொல்லும்போதே அவர் நா தழுதழுத்தது. ரல் கம்மியது. அப்படியே சபையை விட்டு வெளி றிேனார்.
வெய்யில் அகோரமாக அடித்தது. அவருடைய மனத்தின் வெப்பமும் உக்கிரமாக அவரை வாட்
, . 6hnT—-l8

Page 145
266 0 பருத்திப் பூ
டியது. அலுவலகத்தில் பாதியில் நின்றுபோன வேலை களை முடித்துவிட்டு குணசிங்கம் தன் மேசையை துப்புரவு செய்தார். ஒன்றிரண்டு பேர் அவரிடம் வந்து அநுதாபம் தெரிவித்தார்கள். தன்னுடைய சொந்தப் பொருள்களையெல்லாம் சேகரித்து அவர் கயிறு கொண்டு கட்டியபோது அப்துல்லாய் ஒரு விசுவாசமான நாய்க்குட் டி போல அவற்றை தூக்கிக் கொண்டு அவர் பின்னே வந்தான். அவன் பக்குவ மாக வெட்டிவைத்த கடித உறைத் துண்டுகளையும் மறக்காமல் காரில் வைத்தான். “மா ஸலாமா” என்று விடைகூறியபோது அவன் கண்கள் கலங்கியிருந்தன. குணசிங்கம் தரையை பார்த்தபடி காரில்ே ஏறி உட்கார்ந்து வீட்டை நோக்கி புறப்பட்டார்.
நாஸாவில் (NASA) ஏவுகணை ஒன்று புறப்படு வதற்கு தயார் நிலையில் இருந்தபோது ஆந்தை யொன்று அங்கே கூடு கட்டியிருப்பதை விஞ்ஞானிகள் தற்செயலாகக் கண்டார்கள். ஆந்தையை அப்புறப் படுத்தி இன்னொரு முறை ஏவகணையை தயார் செய்வதென்றால் இன்னும் பல நாட்கள் ஆகலாம்; லட்சக்கணக்கான டாலர்கள் நட்டமேற்படும். ஆந்தையை பாராட்டாமல் ஏவுகணையை ஏவி ன் லோ ஒரு பாபமும் அறியாத ஆந்தை உயிர் இழக்க நேரிடும். ஆனால் அந்த விஞ்ஞானிகள் தயக்கமில்லாமல் அவ்வளவு பெரிய நட்டத்தை ஏற்று அந்த ஆந்தையின் உயிரை காப்பாற்றினார்களாம். இங்கே என்னவென்றால் ஓர் ஏழைக்கிழவிக்கு தண்ணீர் வழங்கியதை பாப்ச் செயல் என்று தீர்மானித்து விட்டார்களே!
அர்ஜுனன் சரக்கூடம் போட்டதுபோல புழுதிப் படலம் எழும்பி சூரியனை மறைத்து பாக்கி விட்டது. புயல் வரும்போன்ற அறிகுறி தென்பட்டது. காரை வேகமாக இயக்கினார். ஆமையை விரட்டியடித்து அறுபது மைல் வேகம் ஒடவைக்க முடியுமா? இவருடைய கார் என்னவோ அதற்கு வசதியான ஸ்பீடிலேயே போய்க் கொண்டி ருந்தது. அகோரமான மண்புயல் உருவாகியது. சுழன்று சுழன்று ஆக்ரோஷத்துடன் வீசிய காற்று

அ. முத்துலிங்கம் 0 287
கெட்டியான மண் படலம் ஒன்றை ஆகாயத்திலே தூக்கி எறிந்து முழு உலகத்தையுமே கண் நேரததில் மூடிவிட்டது. வாகனங்கள் எல்லாம் மெல்ல மெல்ல ஊர்ந்து இறுதியில் ஒரேயடியாக ஸ்தம்பித்து நின்று விட்டன. அவருடைய வாய் கந்தசஷ்டி கவசத்தை முணுமுணுக்கத் தொடங்கியது.
இதற்கு முன்பு எத்தனையோ தடவை மல்) ற் புயல் பார்த்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் அவருடைய மனத்தை பயம் வந்து கவ்விக்கொள்ளும் குணசிங்கம் லைட்டை போட்டுவிட்டு காரை ஒரு ஒரத்திலே நிற்பாட்டினார். இவருக்குப் பக்கத்தில் ஒரு ஒட்டக ஓட்டியும் ஒட்டகத்தை நிறுத்திவிட்டு தன்னுடைய தலையிலே சுற்றியிருந்த ஈமாஹ் துணியை எடுத்து வாயையும் மூக்கையும் காதுகளை யும் மூடிக்கொண்டு ஒட்டகத்தின் கீழே குந்திக் கொண்டான். ஒட்டகத்திற்கு அந்தக்கவலை இல்லை. வசந்த மண்டபத்தில் இருப்பதுபோல் சாவதானமாக இளைப்பாறியது. நீண்ட தடித்த இமைகளால் கண்களை இறுக்கிக் கொண்டும், மூக்குத்துவாங் களை சவ்வுகளினால் மூடிக்கொண்டும் மணற்புயலை நன்றாக அநுபவித்தது.
குணசிங்கத்தின் மனதிலே அடித்த சூறாவளி போல் புயல் நீண்ட நேரம் தொடர்ந்தது. ன் வி ரெண்டு வருடத்து விசுவாசமான சேவைக்கு ஒரு முடிவு வந்துவிட்டது. அவருடைய மனதிலே 路忍霜 தளிக்கும் புயலுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இது சாதாரண புயல்தான். பருத்தியில் அவர் கொண்ட மோகத்துக்கும் தண்ணிரில் அவர் வைத்திருக்கும் பக்திக்கும் இப்படியாக ஒரு புயல் வந்து முற்றுப் புள்ளி வைப்பதும் நியாயம்தான்.
கார் முழுக்க புழுதி மயமாக மாறி விட்டது. ஒன் றுமே கந்தசஷ்டி ## *န္တီးနိူ భ్మీ மெத்தாக வேலாயுதனார், சித்தி பெற்றடியேன் சிறப் புடன் வாழ்க’ என்ற அடிகள் வந்ததும் புயல் ஒரு சீற்றம் குறைந்தது. வாகனங்கள் ஒவ்வொன்றாக ம்று படியும் ஊரத் தொடங்கின. இவர் வெளியே இறங்கி கார்க் கண்ணாடிகளைத் துடைத்துவிட்டு காரை மறு

Page 146
268 0 பருத்திப் பூ
படியும் எடுத்தார். கச்சான் காற்றில் சிக்கிய கிடு
ஒரு சில #? ??? கொப்புகள், கூரைகள், குப்பைகள் என்று வீதியெல் லாம் மாறிய விந்தையை நினைத்துப் பார்த்தார்.
அன்று வழக்கத்திலும் பார்க்க ஒரு மணி நேரம் முன்பாகவே வீட்டுக்கு வந்துவிட்டார். கஃபீரை காண வில்லை. தானே கேட்டை திறந்து காரை உள்ளே செலுத்தி பார்க் பண்ணிவிட்டு தகரப் பேணியை எடுத்து காரின் கீழே எண்ணெய் சொட்டும் இடத்தில் சரி பார்த்து வைத்தார்.
வீட்டுக் கதவைத் திறப்பு போட்டு திறந்து உள்ளே தள்ளினார். புயலுக்காக வைக்கும் மண் நிரப்பிய சாக்கு கதவு நீக்கலை அடைத்துக் கொண்டு கிடந்தது. மெதுவாக காலை நுழைத்து அதை நகர்த்தி உள்ளே வந்து கதிரையில் அமர்ந்தார். கைகளை முழங்காலில் வைத்து நாரியை நிமிர்த்தி அண்ணாந்து பார்த்தார். மனைவியையும் மகளையும் காணவில்லை.
பாத்ரூமில் சத்தம் கேட்டது; தண்ணிர் ஒடும் சப்தம். தாய் மகளுக்கு தலையில் ஹென்னாபோட்டுக் கொண்டிருக்க வேண்டும். தலை கழுவும் ஆரவாரம் தொடர்ந்தது.
**கெதியாய் கழுவடி அப்பா வந்து கத்தப் போறார்."
‘எரியுது அம்மா! மெள்ளப் போடுங்கோ.'
தண்ணிர் சளசளவென்று கொட்டிக் கொண்டி
ருந்தது. அந்தச் சத்தத்தை அவரால் தாங்க முடிய
ᎧᏓ)ᎧᎼ0ᎧhᎧ .
ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். புயலினு டைய அக்கிரமத்தினால் மணல் குளித்து அவருடைய பருத்திச் செடிகள் சோர்ந்துபோய் நின்றன. அதிலே ஒரே ஒரு செடி மாத்திரம் அவசரப்பட்டு பூத்தி ருந்தது. அவர் பார்க்கும்போதே பஞ்சுத் துகள் ஒன்று காற்றுக்கு பிய்த்துக்கொண்டு மேலே மேலே போய்க் கொண்டிருந்தது. O


Page 147
தொடுக்கப்படும் மலர்க எழுப்புபவை. அவற்றைத் சுருதி மண்டிக் கிடக்கிறது. இதிலே வெற்றி டெ திரு. அ. முத்துலிங்கம்.
சிறுகதை வடிவம் உடைந் என்பது இப்படித்தான், புதுச்
ஆ..இப்படி எல்லாம் நடக் எல்லாம் ஆட்கள் இருக்கி நடந்து கொள்ளுகிறார்கள் செய்கின்றன.
எனக்கு நடை மிகவும் பிடித்த காற்று உல்வுவது போல : புதுமைப்பித்தன் தன்னுை பாய்ச்சல் நடை என்று செ முத்துலிங்கத்தின் நடையும்
 

ள் நளினமான சிரிப்பை தொடுக்கும் நாரிலே சோகச் இஃது அசாதாரண உபாயம். பற்றிருக்கிருர், நண்பர்
- எஸ்.பொன்னுத்துரை
*து. மறுவடிவம் எடுப்பது $கவிதை போல,
- கி.ராஜநாராயணன்
க்கின்றன, ஒ.இது மாதிரி றார்கள். இப்படி எல்லாம் i என்று நினைக்கும்படி
- வல்லிக்கண்ணன்
நிருந்தது. கடலோர வீட்டில் FFFE II, I ÉLET லகுவான நடை, ELLI நடையை தவளைப் ால்லிக் கொள்வதுண்டு. அப்படித்தான். - மாலன்
| |