கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கைலாயமாலை

Page 1
.97لإمبكر .سي
முத்துராச கவிராசரின் கைலாய மாலை
'f
، يد 11 عزبة
Fos f
11 42ےCP
முதிது Stei Ye.

கிக் , ஆ | 8 ,
th sL6 è te
言副 ஆம் நஆண்கள் * * * ['Abo!
பதிப்பrசிரியர் மயிலங்கூடலூர் பி. நடராசன்

Page 2


Page 3

முத்து ராச கவிராசரின் கைலாய மாலி
செட்டியூார் அச்சகம், காங்கேசன்துறை வீதி ாாழ்ப்பாணம்,
உரையாசிரியர்
இராஜராஜேகவரி கணேசலிங்கம் பீ. ஏ. (சிறப்பு), எம். விக்
பதிப்பாசிரியர்: ஐமயிலங்கூடலூர்.பி. நடராசன்

Page 4
KATELAYAMAR.A:
By Foet Math Trajes
- A Legend i aேni
Commentary & Synopsis
Mr. R. Ganesaiaga, B.A. (rana). M. Air
܋ܨ
Translation iTI. Singlistat Nasalarkgdaarn, A. Mootootani Spills
Et: Mailangpodaho IJE *. Nadar AjAFFF
Publisher:
Chettia Press, K. K. S. Road Jaffna.
*ւ у
அள்ளியம்மை முத்துவேலு ஆவர்கள் நினேவுக்குச்
சமர்ப்பூனம்
முதற்பதிப்புச் 983-02-25
வி3ல: ரூபா 5
 
 
 

பதிப்புரை
ஈழத் தமிழரின் வரலாந்தைக் கூறும் ஈழத்துத் தமிழ் வர ஜரந்து நூல்கள் சிலவே. அவற்றுள்ளும் கைலாமானே. சியா பாடல் யாழ்ப்வர கனபரிமாவிே என்பன லே இன்று எமக்கு முழுமையாகக் கிடைத்துள்ளன. எனினும் ஏவடிவ மாஃபே பெரிதும் பயின்று பல பதிப்புக்கரேக் கண்டது. குல் சபாநாதன் 1949, 1953 ஆம் ஆண்டுகவில் இரு பதிப்புக்களே கிெளியிட்டார். கலாநிதி க. செ. நடராசா வையாபாடலே 21 ஆம் ஆண்டு வெளி யிட்டுள்ளார்.
முத்துராச கவிதாசர் இந்நிங் இகரையமரலேவை முதன் முதலாக 1908 ஆம் ஆண்டு நாவலர் மருகர், த. ஆஓரசயிர்வே அவர்கள் வாழ்ப்பானம் வித்திவாதுபரவிைர யந்திரசாலேபில் அச்சிட்டு வெளியிட்டார். கன்சூரகம் அ. குரரசுவாமிப்புலவர் யாத்த கைவிாசப் விங்ைேமார் ஊஞ்சலும் இதனுடன் இனேந்து வெளி யிடப்பட்டது.
பின்னர், கதிரைாஃப்ள்ேளு, தண்டிகைக் கனகராமன் மள்ளு முத விய ஈழத்து இலக்கியங்களே விெழ்கியிட்ட தெல்லிப்பழை, சட்டத் தரணி வ. குமாரசுவார்பி பீ. ஏ. அர்ேகன் இத்துமே வேளியிட முயன்று வந்தார். அவர்கள் நூல் தொடர்பான ஆராய்ச்சிக் குறிப்புக்களே எழுதுவதில் ஈடுபட்டிருந்தபோது அமரர ஞர். வ, குமாரசுவாமி அவர்களது தான்களேத் தமிழகத்தில் வெளியிட்ட திருமயிலே, சே. வே. ஒரேவிங்கம்பீல்சே அவர்களுடைடி வேண்டு கோட்படி குமாரசுவாமி அவர்களது மூத்த புதல்வர் கு என்னிய ங்ேகம் அவர்கன் (கோப்பாய்த்தொகுதி முன்ரூன் பா. உ. தாகலாய மாறேக்குக் குறிப்புரை. ஆராய்ச்சியுரை என்பவற்றை எழுது வித்தாரி. குறிப்புரையைக் குமாரசுவாமி அவர்ககின் கரும் B.A. (HDE., M. க், பட்டதாரிவரமான திருமதி இராஜராஜேகவரி கணேசவிங்கம் எழுதிமூர், வரலாத்து அறிஞரஈல செ இராசநாயக முதலிEர் ஆராய்ச்சியுரையை எழுதிஞர். இவற்குேடு தமிழறிஞர் நாவலர் கோட்டம், ஆ. மூத்துத்தம்பீல்பில்ாே அவர்கன் 397இல்?? வெளியிட்ட பதிப்பிற்கு எழுதிய ஆங்கிலப் பொழிப்டிகர்பையும் சேர்த்து திருமயிலே, சே. வே. ஒம்புலிங்கம்பின் ரே அவரூன் கைலாயமாலேவை 999 ஆம் ஆண்டு சென்ளே, சாந்தி அச்சுக் கூடத்தில் வெளியிட்டாரிகள்,
ஜம்புலிங்கம்பிள்ளே அவர்கள் பதிப்பின் பிரதிகள் இன்று அருகி, கைாையமாலே கிடைப்பது ஆரிதாகிவிட்டது. இத்திலே

Page 5
யில் இப் புதிய பதிப்பு வெளிவருவது மிகவும் இன்றியமையாத தாகிவிட்டது.
இந் ந்ால் தமிழ் மாணவருக்கும் வரலாற்று ஆய்வாளருக்கும்
பொதுமக்களுக்கும் பெருமி பயன் தரவல்லது. தமிழி கூறும் நல்லுலகம் இதனே உவந்தேற்குமி என்பது உறுதி.
இந் நூலுக்குத் தாமி எழுதிய குறிப்புரையையுமீ பொழிப் புரையையுமி இப் பதிப்பிற் சேர்த்துக்கொள்ள இசைவளித்த திரும சி விராஜராஜே சுவரி கணேசலிங்கமி அவர்களுக்கு எமது உளங்கனிந்த நன்றி.
நல்லூரி த. கைலாசபிள்ளே அவர்கள் பதிப்பித்த நூற் பிரதியை அறிஞரும் சைவப்புலவருமி நூலாசிரியருமான க சி குலத்தினம் அவர்களும் தென்மயிலே, ஜம்புலிங்கம்பிள்ளை அவர்கள் பதிப்பை யாழ்ப்பாணப் பல்கலக்கழக நூலகர் சி. முருகவேள் அவர்களும் படியெடுப்பதற்கும் ஒப்புநோக்கு வதற்கும் தந்துதவிஞர்கள்.
இந் நூலைப் பதிப்பிப்பதற்கு வேண்டிய ஆலோசனைகளை யாழ்ப்பாகப் பல்கலைக் கழகச் சமஸ்கிருதத் துறைத் தல்வரி வி சிவசாமி அவர்களும் இந்து நாகரிகத் துறைத் தலவர் கலாநிதி ப. கோபாலகிருஷ்ணன் அவர்களும் பலாலி ஆசிரியர் அழக விரிவுரையாளர் ஆ சொக்கலிங்கிமீ அவர்களும் வழங்கிஞர் கள் இந் நூலில் வெளியாகும் ஆய்வுரையைப் படித்து வேண்டிய திருத்தங்களே யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரை யாளர் பொ. இரகுபதி எமீ. ஏ. அவர்கள் எடுதிதுரைத்தார்கள். செல்வி திருமகள் பரநிருபசிங்கம் இந் நூல் முழுவதையும் கையெழுத் துப் படியாக ஆகிசிதி தந்ததோடு அச்சுப்படிகளேத் திருத்து வதிலு: துனே செய்தார்.
இவர்கள் அனைவருகி செய்த உதவிகளுக்கு எமது நன்றி உரித்தாகிறது.
தரமான விஞ்ஞான நூல்களே வெனிட்டுவரும் செட்டிடிார் அச்சகத்தினர் இந்நூலே வெளியிட முன்வந்தனர். இந்நூலே அழகுற அச்சிட்டு வெளியிட்டுள்ள செட்டியார் அச்சகத்தினர்க்கு, சிறப் பாக அச்சகப் பங்காளர் திரு. இ. சங்கர் அவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நன்றி கூறும்,
"திருப்பெருந்துறை"
42 செம்மணி வீதி, நாயன்மார்கட்டு, பதிப்பாசிரியர் யாழ்ப்பாணம்.
- I

கைலாயமாலைக்குப்
புதிய ஒளி
ஈழத்துத் தமிழ் வரலாற்று நூல்கள்
ஈழத்துத் தமிழரின் வரலாற்றைக் கூறும் நூல்களில் கைலாய மாலே, வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை ஆகிய மூன்றும் சிறப் பிடம் பெறுகின்றன. இவற்றுள் வையாபாடல் காலத்தால் முந் தியதென்பர் சிலர். எனினுமி, இன்றைய வடிவத்தில் அது கைலாய மாலையை விடக் காலத்தால் முந்தியதல்ல. கதிரை மலேப்பள்ளேப் போலவே வையாபாடலும் வன்னி நாட்டிற் பெரிதும் பயின்றுவந்துள்ளது. எனவே, கதிரைமலைப் பள்ளு கதிரையப்பர் பள்ளு - முள்ளியவளை அரிய குட்டிப்பிள்ளை தொகுப்பு.) அடங்காப்பற்றில் அ ைட ந் த புறவேற்றுமைத் திரிபுகள் போல வையாபாடலும் "வாய் மொழி நிலையில் பல மாற்றங்களே அடைந்துள்ளது. கைலாயம்ாலேயும் வையாபாட லும் முறையே யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் நிகழ்ந்த குடியேற்றங்களை முதன்மையாகக் கூறுவதால் ஒரு நூலின் இரு பகுதிகளாகக் கொள்ளத் தக்கன. யாழ்ப்பாண வைபவமாலை யாழ்ப்பாண வரலாற்றைக் கால வரன்முறைப்படுத்திக் கூறும் நூலாகும். வைபவமாலையிலும் பல இடைச் செருகல்கள் உள் என்பர்.
கைலாயமாலே ஆசிரியர்
ஈழத்துத் தமிழர் வரலாற்றைக் கற்பனைப் புனைவுகளின்றிக் கைலாயமாலே கூறுகிறது. இந்நூலை உறையூர்ச் செந்தியப்பன் மகன் முத்துராசன் எழுதியதாக நூலின் பின்னிணைப்பு வெண்பா கூறுகிறது. இவர் வரலாற்ருளரெனினும் ஆற்றல் வாய்ந்த கவிஞராகவே மேலோங்கி நிற்கிருர், நூல் கலிவெண்பா யாப்பி ஞல் ஆனது; காப்பு நீங்கலாக 310 கண்ணிகளைக் கொண்டது. மெய்க்கீர்த்தி மாலை, உலா என்ற நூல்வகைகளின் பாடுபொரு ளும் யாப்பும் இணைந்த கலவையாக நூல் அமைந்துள்ளது.

Page 6
நூலெழுந்த காலம்
முத்துராச கவிராசரின் காலத்தை உறுதியாகக் கூறக் கூடிய அகச்சான்று எதுவுமில்லை. யாழ்ப்பாண வைபவ மாலை ஆசிரியர் மயில் வாகனப் புலவர் கைலாயமாலையை முதல் நூலா கக் கொண்டாரென வைபவமாலையின் சிறப்புப் பாயிரம் கூறுவ தால் இது கி. பி. 1736 க்கு முன்னர் எழுதப்பட்டது என இதன் மேல் எல்லையை வரலாற்றறிஞர் கொள்வர் முதலியார் இராசநாய கம் (கைலாயமாலை, ஆராய்ச்சி முன்னுரை, பக். V , 1939)
'1604 க்கும் 1619 க்கும் இடைப்பட்ட காலத்தில் (நல்லூர்க் கைலாசநாதர்) கோவிலுங் கட்டி, நூலும் எழுதப்பட்டதெனக் கொள்ள வேண்டும்’ என்பர். ஈழத்தறிஞர் பலரும் முதலியாரின் இக் கருத்தை ஒப்புக் கொள்கின்றனர். எனினும், தமிழக அறிஞரான கே. சேசாத்திரி (இராமேஸ்வரம் மகா கும்பாபிஷேகச் சிறப்பு மலர், பக் 186, f) 1975 கைலாயமாலையின் காலம் 15 ஆம் நூற்ருண்டென்பர்.
முதலியார் இராசநாயகம் கி.பி. 1604 க்குப் பின் கோவில் கட்டப்பட்டதென்பதற்கு,
சேது பதிக்குச் செழும்பா சுரமனுப்பி (கை. மா. கண்ணி 234)
என்ற தொடர் ஆதாரமென்பர். இதில் வரும் சேதுபதி "இராம நாதபுரத்து மன்னராகிய சேதுபதி என்றே கொள்ளக் கிடக் கிறது. உடையான் சேதுபதியெனப் பெயர் பூண்ட சடையக்க தேவரே முதல் முதல் இராமநாத புரத்துக்குத் தலைவராக மதுரை நாயக்கவரசனுகிய முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கி. பி. 1604 இல் நியமிக்கப்பட்டனர். அச் சேதுபதியென்னும் பெயர் இந்நூலகத்துக் குறிக்கப்பட்டதென்பது தெளிவு" (கை. மா. பக். 111) என்பர்.
அஞல், சேசாத்திரி (டிெ. சிறப்பு மலர் பக். 186 g.) பரராச சேகரன் கி.பி. 1414இல் சேதுபதி இராமேஸ்வரம் கோயிலைக் கட்டு வதற்குத் திருகோணமலையிலிருந்து வெட்டிச் சீராக்கப்பட்ட கற் களை அனுப்பியதாகக்கூறி, சேதுபதிக்கும் 15ஆம் நூற்ருண்டுக் குரிய யாழ்ப்பாண அரசர்களுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பை விளக்குவார். கலாநிதி யேம்சு டேர்சஸ் (indian Antiquary Vol. XIII) S. L. 1434 ARád G Tyhjiöss5 z-GOLULU Arif G.Fg பதி பற்றிக் கூறுவார். சேதுபதிகள் பாண்டி மறவர்கள். அவர்கள் சேதுபதி என்ற விருதைத் தொடர்ந்தும் கொண்டிருந் தார்கள் என ஆய்வாளர் Gn-gast. (Rev. James Tracy, The Madras
vi

Journal of Literature and Science). 6T607 (36), gyrfps frusts அவர்கள் காட்டிய ஆதாரங்கள் வலுவிழக்கின்றன. "நல்லூர் கைலாச நாதர் கோவில் முதலாம் சிங்கையாரியன். காலத்தில் (கி. பி. 1260) கட்டப்பட்டது என்பதை மறுக்க எள் வித ஆதாரமுமில்லை" என்பார் சி. பத்மநாதன் (The Kingdoa of Jaffna, P. 194; 1978). எனினும், நூலெழுந்த காலத்தை உறுதியாகக் கூறமுடியாதுள்ளது. வையாபாடலிலும் (16 ஆம் நூ. ஆ.?) "சேதுபதி (செய். 38) வருவது நோக்கத்தக்கது.
நூல் நுவல் பொருள்
செகராசன் என்னும் சிங்கையாரியன் வரலாறும் நல்லூர்க் கைலாசநாதர் ஆலயம் உருவான நிகழ்வும் நூலில் சிறப்பிடம் பெறுகின்றன. 41 ஆம் கண்ணியிலிருந்து 212 ஆம் கண்ணி வரை சிங்கையாரியன் வரலாறும் 213 ஆம் கண்ணியிலிருந்து நூல் முடிவுவரை (310 ஆம் கண்ணி வரை) கைலாசநாதர் கோவில் அமைப்பும் குடழுகுக்கும் கூறப்படுகின்றன.
இதற்கு முன்னுேடியாகக் கதிரைமலை அரசன் சோழன் மக ளொருத்தியை மணந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்ற நிகழ்ச்சி யும் அவர்களுக்கு மணம் முடித்ததும்
வரசிங்க ராயன் மகாராச ராசன் நரசிங்க ராசனெனு நாமத் துரைசிங்கம்
கதிரைமலையில் அரசாண்டிருந்த போது யாழ்ப்பாணன் கவி பாடி யாழில் அமைவுற வாசித்து, யாழ்ப்பாண நகரைப் பரிசாகப் பெற்றதும் யாழ்ப்பாடி யாழ்ப்பாணத்திலிருந்து ஆட்சி புரிந்து மறைந்ததும் கூறப்படுகின்றன (கண்ணிகள் 1 - 46). பின்னச் யாழ்ப்பாணம் அரசனின்றித் தளம்பச் சிங்கையாரியன் யாழ்ப் பாணம் வந்து பாண்டிமழவன் முடிசூட்ட யாழ்ப்பாணப் பேரரசனுகிருன்,
வாலசிங்கன் பெயரோ மாருதப்புரவீகவல்லி பெயரோ இவர்களது பிள்ளைகள் இருவரும் ஒருவரையொருவர் மணந் ததோ, பாதி விலங்கு - பாதி மனித உருவோடு பிறந் ததோ இந்நூலிற் கூறப்படவில்லை. இங்கு வரும் வருணனை யோடு மயில்வாகனப்புலவர் மகாவம்சத்துள்ள விசயன் கதை யையும் பிற செவிவழிக் கதைகளையும் இணைத்து ஒரு புதிய வரலாற்றை அகில இலங்கை அடிப்படையில் புனைந்துள்ளார்.
vii

Page 7
என்றே தோன்றுகிறது. இவற்றைக் கைலாய மாலை மீதேற்ற எவ்வித ஆதாரமும் நூலகத்தில்லை.
முறைப்படி முடிசூடி நகரமைத்த சிங்கையாரியன் தனது ஆட்சியில் மேற்கொண்ட ஆட்சிமுறை ஏற்பாடுகள் நூலகத்தே கூறப்படுகின்றன. நல்லூர் (புவநேகபாகு), திருநெல்வேலி (பாண்டி மழவன், செண்பக மழவன் முதலியோர்), மயிலிட்டி (நரசிங்கதேவன்), தெல்லிப்பழை (செண்பகமாப்பாணன், சந் திரசேகர மாப்பாணன், கனகராயன்), இணுவில் (பேராயிர வன்), பச்சிலைப்பள்ளி (நீலகண்டன் முதலியோர்), புலோலி (கனகமழவன் முதலியோர்), தொல்புரம் (கூபகாரேந்திரன், நரங்குதேவன்), கோவிலாக்கண்டி (தேவராசேந்திரன்), இருபாலை (மண்ணுடு கொண்ட முதலி), தென்பற்று, நெடுந்தீவு (தனிநாய கன்), வெளிநாடு (பல்லவன், பார்த்திவர் இருவர்) ஆகிய பிரிவு களுக்கான தலைவர்களை நியமித்தமை முதலிற் கூறப்படுகின்றது. இவை நெடுங்காலம் தொடர்ந்து நிகழ்ந்த குடியேற்றங்களின் ஒன்றிணைந்த நினைவுத் தொகுப்பா என்பது ஆராயத் தக்கது.
அடுத்ததாகத் தலையாரிகளையும் சேவகர்களையும் சிங்கை யாரியன் நியமித்தமை கூறப்படுகிறது. மேற்பற்று (வல்லிய மாதாக்கன்), வடபற்று (இமையாண மாதாக்கன்), கீழ்ப்பற்று (செண்பகமாப்பாணன்), தென்பற்று (வெற்றி மாதாக்கன் ஆகிய பெரும் பிரிவுகளுக்குத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். வீர சிங்கனென்னும் படை வீரன் சேனைத் தலைவனுக நியமிக்கப் பட்டான். பிரிவுத் தலைவர்கள், பற்றுத் தலைவர்கள், படைத் தலைவர்கள் ஆகியோரை நட்சத்திரங்களாகவும், அரசனைத் திங் களாகவும் முத்துராசர் உவமிக்கிறர்.
புவநேகபாகு −
இப்பகுதியில் புவநேகபாகுவைப் பற்றி நூலாசிரியர் கூறிய கருத்து மயில்வாகனப்புலவர் முதலியோரால் திரிபுபடுத் தப்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது.
புவநேக வாகுவென்னும் போரமைச்சன் தன்னை நலமேவு நல்லூரில் நண்ணுவித்து என்றே கவிராசர் கூறுகிருர், ஏனையோருக்கு அரசன், பிரபு, வெள்ளாமரசன் முதலிய அடைகள் கொடுத்தது போலப் புவ நேகவாகுவுக்குப் போரமைச்சன், இராசமந்திரி என்ற அடை கொடுக்கிருர், அரசன் அவனை அமைச்சளுக்கிஞன் என்று கவிராசர் எங்கும் கூறவில்லை. .
vi

ஆனல், மயில் வாகனப் புலவர் புவநேக வாகு பற்றி ஒரு தொட்ர்கதையை உருவாக்குகிறர் :
"சிங்கையாரியராசன் மறுத்துப் பேசாமல் பாண்டி மழவன் கேள்விக்கு உடன்பட்டு, . உத்தண்ட வீர சிகாமணி யாகிய புவனேக வாகு என்னும் மந்திரியையும்.
(யாழ்ப்பாண வைபவமாலை (1953) பக்.23)
"இங்ங்ன மிருக்கையில், ஒரு நாள் புவனேகவாகுவுட்ன் ஆலோசித்துச் ifril 60 surfusir - ...' .
(மேற்படி பக். 27) “சிங்கையாரிய மகாராசன் இப்படியே அரசாட்சியைக் கையேற்று நடத்தி வருகையில் புறமதில் வேலையையுங் கந்த சுவாமி கோவிற். றிருப்பணியையுஞ் சாலிவாகன சகாத்தம் 87 ஆம் வருஷத்திலே புவனேகவாகு என்னும் மந்திரி நிறை வேற்றி முடித்தான்."
)32 ,31 .மேற்படி பக்( ר
மயில்வாகனப் புலவரின் இக் கூற்றுக்கு, இலகிய சகாத்தம் எண்ணுாற் றெழுபதா மாண்ட் தெல்ல அலர்பொலி மாலை மார்ப ஞம்புவ னேக வரகு நலமிகும் யாழ்ப்பா ணத்து நகரிகட் டுவித்து நல்லைக் குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித் தானே
என்ற தனிப்பாடலே ஆதாரம் போலும்.
இவ்வாறு மயில்வாகனப் புலவர் புவனேகவாகு மந்திரியின் கதையை மேலும் வளர்த்துச் செல்கிருர் (பார்க்க: மேற்படி பக். 32, 33). வரலாற்றுணர்வு மிக்க கவிராசர் கூற்றைக் காவியப் போக்குடன் மயில்வாகனப் புலவர் வளர்த்துச் செல்வதால் ஏற்பட்ட முரண்பாடுகள் எண்ணிலடங்கா.
கைலாயநாதர் கோயில்
பூபாலர் வேந்தன் புதிய நகராதிபதி ஆகிய சிங்கை ஆரி யன் புவி திருத்தி ஆண்ட வரலாற்றைக் கூறி முடித்த கவிராசர் தொடர்ந்து நல்லூர்க் கைலாயநாதர் கோயிலமைப்பையும் குட முழுக்கையும் இறைவன் எழுந்தருளியதையும் கூறுகிருர். இப் பகுதி சைவசமய, இந்து நாகரிக ஆய்வாளர்களுக்கான சிறந்த தகவற் சுரங்கமாக அமைந்துள்ளது. இப்பகுதியில் 266 ஆம் கண்ணி முதல் 287ஆம் கண்ணி வரை கைலாய நாதரின் போற்றியாக அமைந்துள்ளது. இது நூலாசிரியரது சமய அறிவை விளக்குகிறது.
ія

Page 8
கைலாயமாலையை நுணுகி ஆராய்பவர்கள் அதனை யாழ்ப் பாண அரசர்களின் தோற்றுவாயைக் கூறும் புராண மரபுப் புனைவு என்ற குறுகிய வட்டத்துக்குள் அடக்கிவிட முடியாது. இது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் யாழ்ப்பாணத்தில் வலிமிக்க "பேரரசு" தோன்றிய காலம் வரையுமுள்ள வரலாற் றைக் குறியீட்டு முறையில் விளக்குகின்ற வரலாற்று நூலாகும். ஈழத்தில் தமிழரின் தொன்மையையும் கதிரைமலை, சிங்கை நகர், யாழ்ப்பாணம், நல்லூர் முதலிய பகுதிகளில் நிலவிய தமிழரசுகளின் சங்கமத்தையும் - ஒன்று கூடலையும் - கயிலாய மாலை குறியீட்டு முறையில் விளக்குகிறது என்றே கொள்ள வேண்டும். இங்கு எந்தத் தனி அரசனின் பெயரும் கூறப்பட வில்லை. பல இனக் குழுக்களின் வரலாறே குறியீட்டு முறையிற் கூறப்படுவது போலத் தோன்றுகிறது. இது விரிவாக ஆராயத் தக்கதாகும்.
சில சிக்கல்கள்
யாழ்ப்பாண அரசின் வரலாற்றை ஆராய முற்பட்டவர்கள் கைலாயமாலையைத் தக்கவாறு புரிந்து திறமையுடன் பயன்படுத்தவில்லை - எனக் கலாநிதி சி பத்மநாதன் "ஈழத்து தமிழ் வரலாற்று நூல்கள்” 1972, பக்.1) கூறுகிறர். இக்கூற்று முழுவதும் உண்மையே. தமிழ் வரலாற்று மூலாதாரங்களைச் சரியாகப் யயன்படுத்தாததற்குப் பல காரணங்கள் உள்ளன. கைலாயமாலையை யாழ்ப்பாண வைபவ மாலை தரும் ஒளியில் புரிந்துகொள்ளுதல், மகாவம்சப் புனைவுகளுடனும் அதிலுள்ள காலம் நிர்ணயிக்கப்பட்ாத வரலாறு களுடனும் தொடர்புறுத்திப் பொருள் கொள்ளுதல், கி பி. 13ஆம் நூற்ருண்டுக்கு முன் யாழ்ப்பாண அரசு இருந்தது என்பதை நிறுவச் சான்றுகளைப் பெறமுடியாதிருத்தல், இயக்கரும் நாக ரும் மனிதரல்லர் என்ற எடுகோள், நல்லூர்க் கந்தசுவாமி கோவிற் கட்டியத்துக்கு அளவுக்கு மீறிய முதன்மை அளித்தல் இவை போன்ற பல காரணங்கள் ஈழத் தமிழர் வரலாற்றில் இருள்படியச் செய்திருந்தன. இன்று நிகழும் அகழ்வாய்வுகள், தொல்லெழுத்தியல் ஆய்வுகள், மானிடவியல் ஆய்வுகள் என்பன ஈழத் தமிழர் வரலாற்றில் ஒளியைப் பாய்ச்சுகின்றன. யாழ்ப் பாணப் பல்கலைக் கழகம், பென்சில் வேனியப் பல்கலைக் கழகம், பேராதனைப் பல்கலைக் கழகம், சிக்காகோப் பல்கலைக் கழகம், காவாட் பல்கலைக் கழகம் என்பவற்றிலுள்ள வரலாற்றறிஞர்

கள் ஈழத் தமிழர் வரலாற்றில் புதிய ஒளியைப் பாய்ச்சி வரு கிருர்கள். இது நம்பிக்கையூட்டும் திருப்புமுனை என்பதில் ஐய மில்லை.
மீண்டும் புவநேகவாகு:
நல்லூரில் ‘நண்ணிய" புவநேகவாகு, யாழ்ப்பாணத்தை வென்று அடக்கிய 'சப்புமால் குமாரய’ என்ற செண்பகப் பெருமாள் என்ற யூரீ சங்கபோதி புவநேகவாகு ஆகிய இருவரையும் ஒருவரெனக் கொண்டதும் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கட்டியத்துக்கு வரலாற்று முதன்மை தந்ததும் ஈழத் தமிழர் வரலாற்றில் சங் கிலித் தொடரான குழப்பங்களை ஏற்படுத்தின.
கைலாய மாலை கூறும் பவநேசவாகு மதுரையிலிருந்து வந்த ஒரு சாத9ரண 'குடிபதி'யே. அவன் அமைச்சனல்ல என்று கொள்வதே சரியெனப்படுகிறது வையா பாடலிற் கூறப் படும் செய்திகளும் இதனை உறுதிசெய்யப் பயன்படும் நல்ல வாகு, வச்சிரவாகு. வாகுதேவன், வாகுநாதன், வாகுசிங்கபூபதி முதலி யோர் வன்னியிற் குடியேறியதாக வையாபாடல் கூறுகிறது. எனவே, "வாகு" என்ற பெயர் "புவநேகவாகு உட்படக் குடியேறி யோர் அனைவருக்கும் பொதுவான பெயர்க்கூறு ஆகும் பாண்டிய மன்னனுன குலசேகரனும் "புவதேகவீர" என்ற விருது பெற்றவன் என்பது இங்கு நினைவு கூரற்பாலது. எனவே, இவ னைச் சிங்கள அரசனென்று கொள்ளவேண்டியதில்லை. சகல லோகச் சக்கரவர்த்தியான ராசநாராயண சம்புவராயன் (1344) வெளியிட்ட திருவொற்றியூர்க் கல்வெட்டு,
புவதேகவாகு தேவனென்ற கலியுக வீரபத்திர
தேவரின் முகவரான முதலியார் சாரங்கதேவர் Luis Sld in Apáps. (urd dids: T. N. Subramaniam, Fresh Light From A Thiruvottiyur Inscription, ssioGal Gd sco is gigs, 1966, பக். 19 - 199). இப் புவநேகவாகு நாளுதேசியரென்ற திசையாயிரத் தைஞ்ஞாற்றுவர் குழுவில் சக்திவாய்ந்த தலைவ னென்று தெரிகிறது. இவனைத் திரு. சுப்பிரமணியம் 4 ஆம் புவநேகவாகு என இனங்காண முயன்றுள்ளார். அம்முடிவு ஏற் றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை பதிப்பித்துள்ள சமயத்தார் கல்வெட்டுக்கள் (Ceylon Tamil Inscriptions, Part T, 1971, Ljš. 46-57) goj5 ஆய்வில் துணை செய்யும். இச் சான்றுகளைக் கொண்டு நோக்கும்போது "புவநேக பாகு" என்ற பெயர் சிங்கள அரசர்க்கு மட்டும் உரியபெயர்
xi

Page 9
எனக் கொள்ளமுடியாது. எனவே, பல புவநேகவாகுகளையும் ஒன்றிணைத்து நோக்கவேண்டிய அவசியமில்லை என்றே தோன்று கிறது.
நல்லூர்க் கந்தசுவாமிகோவிற் கட்டியம்
சோட்ச மகாதான சூர்யவம்சோத்பவ
ழரீமத் சங்கபோதி புவநேகபாகு
சிவகோத்திரோத்பவ இரகுநாத மாப்பாண எனக் கூறுவதாக அறிஞர் எடுத்துக்காட்டியுள்ளனர். (சி. பத்ம நாதன், 1978, பக்.282) எனவே, இக்கட்டியம் ஒல்லாந்தர் காலத் தில் கோவிலைப் புதுக்கிய இரகுநாத மாப்பாண முதலியார் காலத் துக்குரியது எனக் கொள்ளலாம். அது சரியெனில், அக்காலத் தில் புகழ்பெற்றிருந்த மயில்வாகனப்புலவர் தாக்கமும் இதில் இருந்திருக்க முடியும். இவன் ஆரும் புவநேகவாகு என்று கொள்வது:வரலாற்றுக்குப் பொருந்தாது. ஏனெனில், கேரளஞன சண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தை விட்டுக் கோட்டைக்குச் சென்று பெளத்த மத காவலஞன பின்பே பூரீ சங்க போதி புவனேகவாகு ஆஞன். ஆகவே, புவனேகவாகு என்று கட்டியம் கூறுவதிலுள்ள முரண்பாடு மேலும் ஆராயப்பட வேண்டியதே
கன்ன(ர) தேவன்
யாழ்ப்பாண அரசஞன பரராசனின் உயிர்த்தோழன் கன்ன தேவர் என்ற தொண்டைமண்டல அரசன் என வையாடல் (89,90) கூறுகிறது. இவனைக் கிருஷ்ண தேவராயர் (1509-1530) என ஈழத்து வரலாற்றறிஞர் கொள்வர். (கலாநிதி க. செ. நடராசா, வையா பாடல், 1980. பக். 55) ஆணுல். தேவராயரின் திருப்புத்தூர், பிரான்மலை மங்கை நாதேசுவரர் கோயிற் கல்வெட்டு (1518) இவனை, YA
Famir an 6öTGauf Bsvg as sürdhv ஏழு நாளையில் ஈழந்திறை கொண்ட் பெருமாள்
எனக் கூறுகிறது (சாசனமாலை, 1960, பக். 57). எனவே, இவன் யாழ்ப்பாண அரசனின் நண்பனுக இருந்திருக்க முடியுமா என்பது விசாரிக்கத்தக்கது.
புதுச்சேரி, பாகூர் கல்வெட்டு ஒன்று கன்னர தேவன் (கி. பி. 962) பற்றிக் கூறுகிறது. சோழ நாட்டை ஆண்ட அரிஞ் சயன் (கி. பி. 956 - 957) வடக்கு நோக்கிச் சென்றபோது
xii

தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி ஆண்ட இராட்டிர கூட மன்னஞன கன்னர தேவனும் எதிர்த்துப் போரிட்டான் எனவும் சுந்தரச் சோழன் (பராந்தகன் 957 - 970) கன்னர தேவனை வென்றன் எனவும் தமிழக வரலாறு (ரெ. சேஷாசலம், 1962 பக். 129) கூறுகிறது. இக் கன்ன(ர) தேவன் காலத்தில் அல்லது வேருெரு கன்னரதேவன் காலத்தில் தொண்ட்ை மண்டலத்தி லிருந்து வன்னியர்கள் குடிபெயர்ந்ததையே வையா பாடல் நினைவு கூர்கிறதா என்பது ஆராயத் தக்கது
மேற் கூறப்பட்ட செய்தி, கி. பி. 9 ஆம் நூற்றண்டுக்குரிய (கலி 3925) சிங்கையாரியனின் நாயன்மார்கட்டு அரசகேசரிப் பிள்ளைய்ார் ஆலயக் கல்வெட்டுச் செய்தி, கி. பி. 0 22 go பரராசசேகரன் சிதம்பரத்தில் ஆற்றிய திருப்பணி பற்றிய செய்தி சி. பத்மநாதன், இரு தமிழ்ச் செப்பேடுகள், சிந்தனை 3:1 1970 பக். 52 - 57), என்பன 1260க்கு முன் யாழ்ப்பாணத்தில் தமிழரசு இருந்தமைக்கான சான்றுகளாகத் தோன்றுகின்றன. இவை கி. பி. 12 ஆம் நூற்றண்டுக்குப் பின்பே யாழ்ப்பாணத்தில் அரசு தோன்றியது. என்ற எடுகோளால் நிராகரிக்கப்பட்ட ஈழத் தமிழ் வரலாற்று ஆவணங்களாகும். இவை மேலும் ஆராயத்தக்கன.
மீளாய்வு
பேராசிரியர் இந்திரபாலா (1972), கலாநிதி சி, பத்மநாதன் (1978) ஆகிய இருவரும் கி. பி. 13 ஆம் நூற்றண்டுக்குப் பிற் பட்ட யாழ்ப்பாண அரசர்கள் வரலாற்றை நுணுக்கமாக ஆராய்ந்து நூல்களை வெளியிட்டுள்ளார்கள். பொன்பரிப்பிலும் . யாழ்ப்பாணத்திலுமி அநுராதபுரம் கெடிகேயிலும் திருக்கேதீச் சரத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆழமும் அகலமும் மிக்க அகழ்வாய்வுகள் பல புதிய செய்திகளை வெளியிட்டுள்ளன. இவை ஈழத் தமிழர்வரலாற்றில் புதிய ஒளியைப் பாய்ச்சும் என இவர்கள் நம்புகிறர்கள். ஐராவதம் மகாதேவன் முதலியோர் தமிழகத்தில் மேற்கொண்ட தொல்லெழுத்தியல் ஆய்வுகள் ஈழத்துக் குகைச் சாசனங்களுக்குப் புதிய விளக்கங்களைத்தரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஈழத்தில் ஆங்காங்கே நிதழ்த்தப்பட்ட மேலாய்வுகள் இங் கும் பெருங்கற் பண்பாடு நிலவியது என்ற கருத்தை உருவாக் கின. பென்சில்வேனியப் பல்கலைக் கழகத்தினர் கந்தரோடை யில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகளின் மூலம் தென்னிந்

Page 10
தியாவில் நிலவியதை ஒத்த பெருங்கற் பண்பாடு யாழ்ப்பாணத் திலும் இருந்தமைக்குரிய நம்பிக்கைகள் தெரிவிக்கப்பட்டன.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையைச் சார்ந்த பேராசிரியர் கா. இந்திரபாலா, கலாநிதி சி. க. சிற்றம் பலம், பொ. இரகுபதி எம். ஏ. ஆகியோர் யாழ்ப்பாணத்தில் பெருங்கற் பண்பாடு நிலவியதைப் பரந்துபட்ட ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியதுடன் அதன் வரலாற்றுத் தொடர்ச்சி பற்றியும் ஆராய்ந்து வருகிறர்கள். ஆனைக்கோட்டையிலும் காரைநகரிலும் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற் பண்பாட்டுப் புதைகுழிகளான தாழிக்காடுகள் இங்கு இப்பண்பாடு நிலைத் திருந்ததை உறுதிசெய்கின்றன.
கந்தரோடையில் நிகழ்ந்த அகழ்வாய்வு மூலம் பெறப்பட்ட பொருள்கள் காபன் - 14 ஆய்வுமுறைக் காலக் கணிப்புக்கு all. படுத்தப்பட்டன. இக்காலக் கணிப்புக்கள் கந்தரோடையிற் பெருங்கற் பண்பாட்டுக் காலத்தை கி. மு. 500 க்கும் பழமை யானதாகக் கொண்டு செல்ல உதவுகின்றன. சில கணிப்புகள் மேலும் உறுதிசெய்யப்பட்டால் இக்காலம் கி.மு. 700 க்கு முன்பு கூடக் கொண்டு செல்லப்படலாம். -
இலங்கையில் தமிழர் நிலப்பரப்புக்கான இடையீடற்ற தொடர்ச்சியான வரலாற்றை உருவாக்கும் நாள் நெருங்கி வருகி றது. எனவே, சங்க இலக்கியப் புலவரான மதுரை ஈழத்துப் பூதன் தேவனுரும் கி. மு. மு த லா ம் நூற்றண்டுக்குரியதாக ஏற்றுக் கொள்ளப்படும் திருப்பரங்குன்றக் கல்வெட்டுக் குறிக் கும் எருகாட்டூர் ஈழ குடும்பிகன் பொலாலேயனும் வரலாற்று ஆதார மற்ற உதிரிகளல்லர். இலங்கையின் தொடர்ச்சியான தமிழ் மரபொன்றின் பிரதிநிதிகளே என இன்று துணிந்து கூறக் கூடியதாக உள்ளது.
புதிய ஆய்வுச் சிந்தனைகளின் ஒளியில் கைலாயமாலையும் புதிய விளக்கங்களைப் பெறும் என நம்பலாம்.

கைலாயமாலை
காப்பு வெண்பா திங்களொடு கங்கையணி செஞ்சடையர் மங்கையொரு பங்கர் கயிலாய மாலைக்குத் - துங்கச் சயிலமிசைப் பாரதத்தைத் தானெழுதும் அங்கைச் சயிலமுகத் தோன்துணைய தாம்.
துல் சச் சயிலமிசை - பெருமை பொருந்திய (மேகு) மலமேல் சயில முகத்தோன் - யானை முகத்தையுடைய விநாயகப் பெருமாள். சயிலம் மலை, மலை போன்ற யானைக்கு ஆகுபெயர்.

Page 11
நூல் கலிவெண்பா பீடிகை சீர்தேவு மேருகிரிக் தென்கிசையோர் சம்புமரம் பேர்மேவ நின்ற பெருமையினுல் - ஏர்மேவு நாவலந்தீ வென்னுமொரு நாமமுற அத்தீவிற் சாவல் மருவுநவ கண்டிகளாய் - மேவதனுள் | நான வளங்கெழுசீர் நற்பரத கண்டத்துள் வாஞேர் புகழீழ மண்டலத்தில் - மேல்நாள்
குறிப்பு: எண்கள் கண்ணிகளேக் குறிக்கும் 1. மேருகிரித் தென் திசை - மேருமலைக்குத் தெற்கே. .ே நவகண்டிகள் - ஒன்பது கண்டங்கள். புரானங்களிற் கூறப்படும் ஒன்பது பிரிவுகள் அவையாவன: பரதகண்டர், கிம்புருட கண்டம்,
அரிகண்டம், கேதுமாலகண்டம், பத்திராசுவகண்டம், இளா விருதகண்டம், இரமியeண்டம், இரணியகண்டம், குருகண்டம்
3. மேல் நாள் - முற்காலத்தில்
மாருதப்புரவீகவல்லி வரலாறு மாருதப்புரவீக வல்லியின் தந்தையான சோழன் பிரபாவம்
உத பகுல ராசன் உதயமதி வாசன் சிதைவின்மனு ராசவம்ச தீரன் - துதையளிகள்
பாடுமலர் ஆத்திபுனை பார்த்திவன்தன் சீர்த்திமுற்றும் தேடுந் தனிக்கவிகைச் செம்பியர்கோன் - நீடுகரைப்
4. உதயகுல ராசன் - சூரிய குலத்த அரசன். உதய மதி வாசன் - அறி வுக்கு இருப்பிடமானவன். சிதைவில் - கெடுதல் இல்லாத. துதை அளிகள் பாடும் - நெருங்கி வண்டுகள் பாடுகின்ற
ஆதிதிமாலே சோழர் குடிக்கு உரியது.
தனிக் கவிகைச் செம்பியர் கோன் - தனி நிழற்றும் வெண் கொற்றக் குடையை உடைய சோழராசன்.
நீடுகரை - உயர்ந்த கரை, கரிகாலன் காவிரிக்கு இருமருங்கும் உயர்ந்த கரை கட்டினுள் என்பது பழைய நூல்கள் குறிப் பிடும் வரலாறு.
2
 

மாருதப் புரவீகவல்லி ரிேலேக்க வந்து தீர்ந்தமாடிக் குடுரைமுகம் நீங்கப்பெற்றுப் பாடி வீடமைத்துத் தங்குதல் பொன்னித் துறைவன் புலிக்கொடியன் பூவில்மன்னர் மன்னனெனுஞ் சோழன் மகளொருத்தி . அன்னிமின்னர் தேடுங் கடலருவித் தீர்த்தசுத்த நீரகத்துள் ஆடிப் பினிதனிப்பத் தானினேந்து - சேடியர் தஞ் சேவைகளுங் காவலுறு சேனையுமாய் வந்திறங்கிப் பாலையுறு தீர்த்தம் படிந்ததற் பின் - ஏர்வைபெறு கங்குலுற எங்குமிகு சாவ லரண்பரப்பிச் சங்கையுறு கூடாரக தானமைத்து மங்கிை விரிந்தசப்ர மஞ்சமெத்தை மெல்ல8ணயின் மீதே பொருந்துதுயி லாயிருக்கும் போது - வரிந்தசிலே O பொன்னித் துறைவன் - காவிரி நதிக்கு உரிமையுடைய Garrr p47. பூவில் - பூமியில். கன்னி மின்ஞர் சோழன் மகளொருத்தியென
FOU das ச. கேடும் என்பது - கணுவிற் சிவபிரான் கூறியபடி அவ்விடத்தைத்
தேடுகின்ற.சேடியர் - தோழியர். gs - ரிைவிடை, பாவையுறு தீர்த்தம் - அரசகுமாரி விரும் பிய நீர்த்தம் ர. சுங்குல் உற-இரவாக காவல் அரண்" காதுவாகிய பாதுகாப்பு.
சங்கை உறு கூடாரம் - பாடிவீடு. ச. சபர மஞ்சம் - சிங்காரக் கட்டில்
வாலசிங்கன் குலதெய்வமான குமரன் பிரபாவம் வேடர்குல மாதுபுணர் வேலா யுதகரன்செங் காடன் புதல்வன் கதிர்காமன் - ஏடவிழுந் தார்க்கடம்பன் பேர்முருகன் தாமோ தரன்மருகன் ர்ேக்குரவன் தேவர் திரட்கொருவன் - சூர்ப்பகையை
. இதுவேடர் குலமாது - வில்பேயுடைய வேடர்குலப் பெண்ணு
வள்ளி நாயகியாா. செங்காடன் புதல்வன் - திருச்செங்காட் டில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது குமாரன். 1. தாமோதரன் = தாம + உகரன் கயிற்றிஞல் கட்டப்பட்ட வயிற்றிக்ாயுடையவன். சீர்க்குரவன் " சிறப்புமிக்க குருநாதன் தேவர் திரட்கு ஒருவன் - தேவர் கூட்டத்துக்கு ஒப்பற்ற தாவன்

Page 12
வாலசிங்கன் மாருதப்புரவீகவல்லியைக் கைப்பற்றி மணம்புரிதல்
மாற்றுங் குகன்குழகன் வாய்ந்தஅடி யார்துயரை ஆற்றுங் குமரன் அருளாலே - போற்றுதவர் வாய்ந்த கதிரைமலை வாழு மடங்கன்முகத் தாய்ந்த நராகத்(து) அடலேறு - சாய்ந்துகங்குல் போவதன்முன் ஏகியந்தப் போர்வேந்தன் மாமகள்தன் காவல் கடந்தவளைக் கைப்பிடித்தே - ஆவலுடன் 5
கொண்டேகித் தன்பழைய கோலமலை மாமுழைஞ்சில் வண்டார் குழலை மணம்புணர்ந்(து) - உண்டான
பூவிலநு போகம் பொருந்திப் புலோமசையுங் காவலனும் போலக் கலந்திடுநாள் - தாவில்மணப்
1. குகன் - தியானிப்பவரது இருதயமாகிய குகையிலே வசிப்பவன்.
குழகன் - இளமை பொருந்தியவன்.
12-14 போற்று தவர் வாய்ந்த - முருகப்பிரான வணங்கும் தபோ
தனர் வாழும், 14. மடங்கல் முகத்து ஆய்ந்த நர ஆகத்து அடல் ஏறு - சிங்க முகத் தையும் (வல்லவர்கள்) ஆராய்ந்து கூறிய சாமுத்திரிகா லக்ஷணன் கள் அனைத்தும் பொருந்திய) மனித தேகத்தையும் உடையவனும் போரில் ஆண்சிங்கம் போன்றவனுமான வாலசிங்க மகாராசன் 14-15 கங்குல் சாய்ந்து போவதன்முன் - இரவு கழியுமுன். 16. கோல மலை மா முழைஞ்சு - அழகிய மலைக்குகை, 17. பூவில் அநுபோகம் பொருந்தி - பூமியில் இல்லற இன்பத்தை அநுபவிதது புலோமசை - புலோமன் புதல்வியான இந்திராணி. காவலன் - அரசரில் தலைவனுன தேவேந்திரன், 17 - 18 தா இல் மணப் பூமான் - குற்றமற்ற வாசண் பொருந்திய செற் தாமரையில் வீற்றிருக்கும் மகாலக்ஷமி.புவிமான் - பூமிதேவி. நாமான் - யாவர். நாவிலும் எழுந்தருளி இருக்கும் சரஸ்வதி 19. உன்னி - (சகல கலைகளும் இப்பொழுது அவதரிக்கப்போகும் அரசனுல் ஆதரிக்கப்பட்தி அபிவிருத்தி அடையப்போவதை நினைத்து. ஆசி உரைத்து - ஆசீர்வாதம் செய்து.
- 4 -

வாலசிங்கன் மகனுன நரசிங்கன் அவதாரத்தால்
உளவாகும் நன்மைகள்.
பூமான் மதிக்கப் புவிமான் மகிழ்ச்சியுறக் கோமான் மனுவின் குலம்விளங்க - நாமானும்
உன்னி மிகும் ஆசி உரைத்துத் திருத்தமிகு தன்னிதய சந்தோஷந் தான் பெருக - மன்னுபவி
மாந்தர் சுக மேவ மனுநீதி யுண்டாக வேந்தர்கள் தம் நெஞ்சம் மிகநடுங்கப் - பூந்தவிசின் 20 வேதன் கை நோகவரும் மேலோன் விழிதுயிலப் போதன் மணி மேனி புளகரும்பச் சோதிபெறு
தேவா லயங்கள் செயும்பூ சனசிறக்க மேவு ஆலை வில்லி விருதுகட்ட - நாவார் மறையோர்கள் வேள்விமல்க மாதவங்க ளோங்கக் குறையாது நன்மாரி கொள்ள - நிறைவாகச்
29 - 21 பூந்தவிசின் வேதன் கை நோக - தாமரைப் பூ ஆசனத்தில் வீற்றிருக்கும் பிரமனது கைநோக. - அவதரிக்கப் போகும் அரச னது பரிபாலனத்தில் சகல உயிர் வர்க்கங்சளும் பெருகில் செழிக்குமாதலால் பிரமனுக்குச் சிருஷ்டிவேலை அதிகமாகி கை நோகும் ள்ன்பது குறிப்பு. இத்துணை அழகும் சிறப்பும் வாய்ந்த செல்வனைச் சிருட்டிப் பது கஷ்ட சாத்தியமானகங்ால் கைநோக வருந்திச் சிருட் டித்தான பிரமன் என்னுமாம். 21. வரும் மேலோன் விழிதுயில - பிரமனுக்கு மேலாக அடுத்துக் கூறப்படும் விஷ்ணு கவலையின்றி நித்திரைசெய்ய. அவதரிக்கம் போகும் அரசன் உலகம் முழுவதும் கசக்கும் பாரத்தைத் தான் மேற்கொள்ளுதலின், காவற் கடவுளான விஷ்ணு நிம்மதியாக நித்திரை செய்யலாம் என்பது குறிப்பு 21. போதன் மணி மேனி புளகரும்ப - (சிறந்த சிவபக்தன் ஒருவன் அவதரித்தலால்) ஞானவடிவினரான சிவபிரானது அழகிய திரு மேணி புளகாங்கிதம் கொள்ள, மணிமேனி - செம்மணி நிறத் திருமேனி.
22. மேவு ஆலை வில்லி விருதுகட்ட் - பொருந்திய கருப்பு வில்ை உடைய மன்மதன் விருதுக்கொடி பிடிக்க, பேரழகள் ஒருவன்
5

Page 13
அவதரிப்பதால் இனி எத்தகைய மனவுறுதி வாய்ந்த பெண்ணை யும் என் பானங்களால் நிலகுலையச் செய்துவிடுவேன் என்று மன்மதன் விருதுகூறலாஞன். A - J prairit மறையோர்கள் Gaudinas? மல்ா - வேதம் ஒதும்
நாவையுடைய பிராமணர் செய்யும் பாகங்கள் செழிக்க.
நரசிங்கராசனும் அவன் தங்கையும் அவதரித்தல்
செந்நெல் விளையச் செகம்செழிக்கச் செல்வமுற மன்னன் மகள்தன மணிவயிற்றில் - மன்னு கருவாய்ந்து) அயனமைத்த கட்டளைகள் திட்ட உருவாய்ந்து பத்துமத யொத்துத் - திருவாய்ந்த 露$ திங்கள் முகத்தழகுஞ் செய்யவடி வாலழகும் துங்கமுறும ೭.ಆಆಆ சுழியழகும் - பொங்குமணிக் கண்ணழகும் மூக்கழகுங் காதழகுங் கையழகும் மண்ணல் நரா\போல் வடிவழகும் - தண்ணி வரசிங்க ராயன் மகாராச ராசன் நரசிங்க ராசனெனும நாமத் - துரைசிங்கம் வந்துபிறந் திந்தவள மண்டலமெல் லாம்மதிக்க இந்துகென வேவளரும் ஏல்வையினிற் - பிந்தி மியாரு பெண்பிறந்தாள் அந்தவெழிற பெண்ணையுமுன்
w அண்ணலையுங் கண்போல் வளர்த்துக் கவின்பெறலும் நண்பாகத் 50 3. அயன் அமைத்த கட்டளைகள் திட்ட உருவாய்ந்து - பிரமன்
விதித்த விதிகளின்படி ஒழுங்காக உருவம் அமைத்து. பத்து மதி ஒத்து - பத்து மாதம் நிரம்பி. 6. செய்ய வடி வால் - அழகிய நீண்ட வால். துங்கமுறும் உச்சிச் சுழி பழகும் - பெருமை பொருந்திய சிங்கத் தலையில் உள்ள சுழியின் அழகும். பொங்கு மணிக் கண் - பெரிய அழகிய கண். 07. மண்ணில் நர போல் வடிவழகும் - பூமியில் வாழும் மனிதர்
வடிவின் அழகும். ச வரசிங்கராயன் - மேலான சிங்க (முகமுடைய) ராசன்.
நரசிங்கராயன் - அவதரித்த குமாரனது நாமம். துரைசிங்கம் - அரசருள்ளே ஆண் சிங்கம் போன்றவன்
S

9, (piss வளமண்டலம் - இந்தச் செழிப்புப் பொருந்திய ஈழமகிங்
லம். இந்து - சந்திரன்; ஏல்வை . av fðu uh.
0. முன் அண்ணல் - அவளுக்கு முன்பிறந்த பெருமையிற் சிறந்த
நரசிங்க rry Fal
30. கவின் - இளமைக்குரிய) அழகு.
நரசிங்க ராசன் விவாகமும் பட்டாபிஷேகமும் தந்தையர்க்குந் தாயருக்குஞ் சாற்றுமணம் ஆற்றுவித்த கந்தனுமை மைந்தன் கருணையினல் - வந்த இருவருக்கும் நன்முகூர்த்த மிட்டுமகிழ் பூப்பத் தருவிருக்கு மாலைவடஞ் சாத்தித் - திருவிருக்குஞ் செய்யமணஞ் செய்து திறல்வேந்தர் போற்றிநிற்பத் துய்யநவ ரத்னமுடி சூட்டியபின் - பையரவின்
32 தரு இருக்கும் - மரத்கிலே (பூத்து) இருக்கின்ற, மாலை, வடம் என்
பன பூமாலே விசேடங்கள். திரு இருக்கும் - மங்களகரமான தமைவது தங்கையை மணந்ததாகக் கூறப்பட்டிருப்பதும் அதனே வேற்றரசர் புகழ்ந்தார்களென்பதும் ஆராய்தற்குரியன
நரசிங்க மகாராசன் ஆட்சி வைபவம் உச்சியினின் ருடும் ஒருவனிவன் ஆகுமென்ன மெச்சுசக்ர வாளகிரி வெற்புமட்டும் - உச்சிதஞ்சேர் தன்னுணை செல்லத் தரியலர்கள் தாள்வணங்கப் பொன்னட் டரசன் புகழ்குறையப் - பன்னட் டரசர் திறையளப்ப அந்தணர்கள் வாழ்த்த முரசதிரப் பேரி முழங்க - வரிசையுடன் சங்கமெழுந் தார்ப்பத் தமனியப்பொற் காளாஞ்சி மங்கையர்க ளேந்தி மருங்கி(ல்)நிற்ப - எங்குமிகு கட்டியங்க ளார்ப்பக் கனஅரி யாசனத்தில் இட்டமெத்தை மீதில் இனிதிருந்து - திட்டமுடன் நங்கோ னிராமன் நடத்தியுல காண்டதுபோற் செங்கோ லரசு செலுத்தும்நாள் - மங்காத
y

Page 14
ச3-34 பையரவின் உச்சியில் நின்று ஆடும் ஒருவன் இவன் ஆகும் என - (காளிங்கன் என்னும்) பாம்பின் தலையில் நின்று நடனம் செய்கின்ற விஷ்ணுவே இவன் என்று கண்டோர் நிளேக்கும் படியாக, சககரவான கிரி - உலகத்தை மதில்போலச் சுற்றி யிருப்பதாகப் புராணங்களிற் கூறப்படும் மலை. உச்சிதம் மேன்மை. − 85. தரியலர்கள் க் பகைவரி. 86. முரசு - அட்டமங்கலத்தொன்று. வெற்றி முரசென்பதும் இதுவே. இராசசின்னத்து மொன்று பேரியென்பது பறைப் பொது. பேசி பொதுப்பறையும் முரசு சிறப்புப் பறையுமாகும். 37. தமனியப் பொற் காளாஞ்சி - பொன்ஞலாகிய அழகிய காளாஞ்சி.
38. கனக அரி ஆசனம் = பொற் சிங்காசனம்.
யாழ்ப்பாணன் நரசிங்கராயனைப் பாடிப் பரிசுபெற்று யாழ்ப்பாண நகரை ஆண்டு காலஞ்சென்ற வரலாறு
பாவலர்கள் வேந்தன் பகருமி யாழ்ப்பாணன் காவலன்தன் மீது கவிதைசொல்லி - நாவலர் முன் 40 அனகவி யாழின் அமைவுறவா சித்திலும் மானபரன் சிந்தை மகிழ்வாகிச் - சோனக் கருமுகில் நேருங் கரன்பரிசி லாக வருநகர மொன்றை வழங்கத் - தருநகரம் அன்றுமுதல் யாழ்ப்பாணம் ஆன பெரும்பெயராய் நின்ற பதியில் நெடுங்காலம் - வென்றிப் புவிராசன் போலப் புகழினுட ஞண்ட கவிராசன் காலங் கழிய - அவிர்கிரண
4. யாழின் அமைவுற - யாழிலேபொருந்த, மானபரன் - uortavšaosad
(ஆபரணமாகத்) தாங்கியவன். 41-42 சோனக் கருமுகில் நேரும் கரன் க தாரையாக Loan p?aford யும் கருமுகில யொத்த கையை (கோடையை) உடையவன். தரும் நகரம் - (அவ்வாறு) கொடுக்கப்பட்ட பட்டினம். 44. கவிராசன் - கவிக்கு அரசஞன புலவன். காலங்கழிய - ஆயுட்
காலம் முடிந்து இறக்க.
8

யாழ்ப்பாணம் அரசனின்றித் தடுமாறல் சந்திரனில் லாதவெழிற் முரகைபோல் வானரசாள் இந்திரனில் லாத இமையவர்போல் - விந்தை 45 கரைசேரிம் மாநகர்க்கோர் காவலரண் செய்யுந் தரையரச னின்றித் தளம்ப - விரைசேருந் 45. விந்தை - வெற்றிக்கு அதிதேவதையான gtféens. 46. விரைசேரும் - வாசனை பொருந்திய,
செகராசசிங்கையாரியன் பிரதாபம்
தாமமணி மார்பன் தபனகுல ராசன் சேமறிதி யாளன்திறற் பணியால் - நாமநன்னீர் மேவரச ராதிபதி வேலினரை நேர்விறல்கொள் மேவலவர் ஆவிகவர் வீரபரன் - பாவின்மொழி மாதர்மடல் மீதெழுது மாமதன ரூபன்மதி ஆதரவு நீதி அருட்குரிசில் - தீதகலும் மாகதர்கள் கோசலர்ம லாடிர்கரு நாடர்மிகு கேகயர்கள் மாளவர்கள் கேரளர்கள் . வாகைபெறு 50 சோனகர்வி ராடர்துளு வாதியர்கள் சூரமிகு சீனரொடு சாவகர்கள் சேதியர்கள் - ஆனவெகு சேனைபுடை சூழவய மாவின்மிசை சேனையின மானமுடன் மேவுமகா ராசதுரை - வானகத்தில் தூண்டிடினும் தீயினிடைத் தூண்டிடினும் நீரினிடைத் தூண்டிடினும் செல்லுந் துரகத்தான் - நீண்ட உரகன்முடி நோவ உரசரண நாட்டுங் கரடதட கும்பக் களிற்ருன் - முரண் இரவி இட்டதனி யாழி யிரதமிணை யல்லவெனும் வட்டமுறு மாழி மணித்தேரோன் - முட்டருதாள் கஞ்சன் படைகள் களம்வரினுங் காதமெதிர் பஞ்செனநீ ருக்கும் பதாதியான் செஞ்சுடரோன்
9

Page 15
ஓங்கு கிரண உலக அர சைச்செயித்துத் தாங்கிநிழல் செய்யுந் தணிக்குடையான் - நீங்காமல் அண்டர் உலகம்நிமிர்ந் தாடும் பரிசுடைத்தாய்க் கொண்டவிடை காட்டுங் கொடியிஞன் - ஒண்டிறல்சேர் கொண்டல்க ளோர்ஏழும் குரைகடல்ஏ முங்குமுறி மண்டுவபோல் ஆர்ப்பரிக்கும் வாத்தியத்தான் - புண்டரி
- கத்(து இந்திரைமுன் எண்மர் இலக்குமியர் தம்பதியாச் சந்ததம்நின் ருடுஞ் சமுகத்தான் - சந்த்ரதரன் 位
47. தாமம் - மாலே, தபாகுலம் - சூரியகுலம், சேம நிதியாளன் -
திரட்டிப் பாதுகாத்த செல்வத்தை யுடையவன் (சோழன்) திறற் பணியால் - வலிமை பொருந்திய கட்டளையால்,
நாமநன்னீர் மேவரசர் ஆதிபதி - அச்சம் தரும் கடல் (சூழ்ந் உலகின்) அரசர்க்குத் தல்வஞக இருப்பவன். சோழனுல் நி மிக்கப்பெற்று அச் சோழனுக்லு அடங்கிய சிற்றரசர்க் பெங்லாம் அடக்கி ஆளும் அதிகாரி செகராசசிங்கையாரியன் என்றவாறு. - சீ. வேவினரை நேர் விறக்கொன் வீரபரன், மேவலர் ஆவிசுவர் வீர
பசன் எனக் கூட்டுக. வேவிசாரி - வேலாயுதத்தைதி தாங்கிய சுத் சுவாமியைப் போன்ற). கேவலவர் ஆவிசுவர் வீரபுரன் - பகை ரது உயிர் கவருந் வீரத் தாங்கியவன்.
பச இன்மொழி மாதர் - பண் போதும் இனிய சொன்அேடைய Čugi.
4. மடல் மீது எழுதும் - மடலூர்திற் பொருட்டுக் கிழியில் எழுதும், மாம்தள் ரூபன் - சிறந்த மன்மத வடிவத்தை உடையவன். இரு இக்ாருள் தான் காதவித்த பெண்ணே அடைய முயன்றும் விது கைகூடாவிடில் அவள் உருவைக் கிழியில் எழுதிக் கையிற் பிடித்துக் கொண்டு, எருக்க மாலேசூடி, உடல் முழுதும் நீறுபூசி இக்குப் பதித்த செய்கைக் குதிரை மீதேறி, பரேமடற் சுருக்குத் தன் உடலெல்லாம் றே, உதிரம் பாய, தன் கையிற் பிடித்த கிறி தான் உயிர்விடத் துணிந்த காரணத்தை உலகிற் காட்ட மெளனத்தோடு தன் காதலி வாழும் நூரர் வீதியில் உலாவரு வான். இக் கொடுமை அண்டு ஊராரும் உற்ருருவி இவன் செய மேத் தடுத்து அப்பெண்னே இவனுக்கு மணமுடிந்து வைப்பின், தன்மஞேரதம் ஈடேறப்பெற்று வாழ்வன் இன்றேல் மடல் உணர்ந்தே உயிர்விடுகங். இம் மட்லுரர்தல் அகப்பொருட்டுறை வில் ஒன்று. பெண்கள் மடல் ஊர்தல் சம்பிரதாயம் அன்று
1 Ο
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாதவிக்கப்பட்டவன் மானிடஞகாது, தெய்வமாய வழி மட்டுமே பெண்கட்கு மடலூர்தல் கூறப்படும். செகராசன் பொருட்டுப் பெண்கள் மடலூர்தல் கூறுதலின் ஆசிரியர் அவனத் தெய்வ மாகக் கொண்டாடாது போகுலும், பெண்கள் மடலூருதற்குத் தாலும் விரும்பும் அழகுடையனென்பதைக் குறிப்பிட்டார்.
மதி ஆதரவு நிதி அருட்ஒரிசில் - புத்திநுட்பமும் சேர்ந்தோரைத்
தாங்கும் இயல்பும் நீதியும் இரக்கமும் வாய்ந்த சிறந்த ஆண் மகன். நீது அகலும் - தீமை இல்லாத.
59 - 5 Z LETTEs faer . செதியர்கள் - செகராசன் சேசினயிலுள்ள
凸黑
*星,
பல்வேறு தேசத்து வீரர்கள். மாகாதரி - ம்சத தேசத்தார்.
கோசலர் = கோசல தேசத்தார். மலாடர் = மலாடு எனப்படும்
மயோகா (சேர) தேசத்தாரி. துளுவாதியர் - துளுவர் முதலானுேர், சூரமிகு சீனர் - வீரம் மிகுந்த சீனர். சாவகர் - சாவக நாட்டினர். இது இக்காலத்தில் யாவா எனப்படும். -
வய மாவின் மிசை - வெற்றி மிகுந்த குதிரை மேல். சேண் இளம் மான முடன் மேவும் - சேத்னக் கூட்டங்கள் வரிசைகள் விருது களுடன் பொருந்திய வானகத்தில் தூண்டிடினும் - ஆகாயத்திற் செலுத்திஞலும்
துரகதத்தான் - குதிரையையுடையவன். நீண்ட உரகன் முடி நோவ - நீண்ட உருவமுடைய (ஆதிசேஷன் என்னும்) பாம்பின் உச்சி (பூமியைத் தாங்கியிருப்பதால் யானே அழுத்தி மிதிக்க அஆக்சி) தோவெடுக்க,
உரசரணம் நாட்டும் - வவிய கால்களே எடுத்து விவக்கும். கரட தடகும்பக் களிற்ருள் - மதம் சொரிகின்ற பெரிய மத்த கத்தையுடைய யானேயை உடையவன்.
55-56 சூரியனது தேரும் செகராசன் தேர்க்கு ஒப்பாகாது என்பது
ாருத்து. முள் திருதான் கஞ்சன் - முள்ளுடைய நண்டில்
மலர்ந்த நாடிரையிலிருக்கும் பிரகள். கஞ்சன் படைகள் - பிரமாஸ்திரங்கள், அளம் - போர் செய்யும் இடம். காதம் எதிர் பஞ்சு - காத தூரத்திற்கு அப்பாலே நீ முன் பஞ்சு போல் (அக்கினியில் அகப்பட்ட பஞ்சு)
58 - 57 செஞ்சுடரோன் . தனிக்குடையான் - சிவந்த ஒளியை
யுடைய சூரியனது மிகுந்த கிரணங்களின் ஆட்சி, வெப்பத்தை அடக்கித் (தான் வெம்மையைத்) தாங்கி நிழல்க் கொடுக் கின்ற ஒப்பற்ற வெண்கொற்றக் குடை உடையவள்.
11

Page 16
3. அண்டருலகம் நிமிர்ந்து - தேவலோகம் வரை உயர்ந்து,
விடை காட்டும் கொடி - இடபக்கொடி. இதுவே யாழ்ப்பாரைத் அரசர்க்குரிய கொடியாயிற்று. 59-80 புண்டரிகத்து இந்திரை முன் எண்மர் இலக்குமியர் - தாமை மலரில் வீற்றிருக்கும் தனலகழ்மி முதலான அஷ்டலகழ்மிகள் தம் பதியா - தமது வாசஸ்தலமாகக் கொண்டு. நின்று ஆடும் சமுகத்தான் - நின்று தாண்டவமாடும் சந்நிதான மாக வியங்குபவன். சந்த்ரதரன் - சந்திரனத் தரித்த சிவன்.
செகராசசிங்கன் கேசாதிபாத வருணனே நம்பன் பரசுதரன் நாதன் கபிலாயன் செம்பதுமத் தாள்வணங்குஞ் சென்னியான் -
அம்பொனிற்செய்
வென்றிதரும் பட்டமுடன் வெண்திருநீ றுந்துலங்க ஒன்ற அணிந்ததுத லோடையான் - துன்றியுறை விஞ்சுபடி யோர்கள் மெலிவுகுறை பார்த்தருள்செய் கஞ்சமலர் அஞ்சுமிரு கண்ணினுன் - சஞ்சரிக்கத் தேனுலவு பூமணமுஞ் சேர்சந் தனம்பனிநீர் நானமண முங்கமழும் நாசியான் - வானுலகுங் காசினியும் பாதலமுங் காவல் செயவரினும் வாசகந்தப் பாதசத்ய வாய்மையான் - தேசுபெற 6S அப்புலவுஞ் செஞ்சடிவத்து அண்ணல் பெருமைகளைச் செப்பமுடன் கேட்குந் திருச்செவியான் - எப்பொழுதுங் காதலொடு காண்போர் கலிபசிதுக் கந்தணிக்குஞ் சீதபுண்ட ரிகத் திருமுகத்தான் - மீதுயர்ந்த அட்டகிரி அற்பமென அம்புவியைத் தாங்குதற்குத் திட்டமுடன் வாய்ந்த திறற்புயத்தான் - கட்டழகன் கேசவன்தன் மார்பிற் கிளர்சலசை நேசமுடன் வாசமுறச் சேரும் மருமத்தான் - ஒசைப் பனகமுடி மீதுவளர் பாரரசர் தங்கள் கனகமுடி ஓங்குகழற் காலான் - தனதணிகர் 70
12
 
 

மாதனத்தான் மாதிறத்தான் மாதுரத்தான் மால்நிறத்தான் ஆதரத்தான் ஆழிவைத்தான் ஆர்வனத்தான் - வேதன்
அத்தான்
போலும் எழிலுடையான் பூவுடையான் பூணுடையான் மேலும் வயமுடையான் வீறுடையான் - கோலநகர்ச்
செல்வமது ரைச்செழிய சேகரன்செய் மாதவங்கள் மல்க வியன்மகவாய் வந்தபிரான் - கல்விநிறை
தென்ன(ன்)நிக ரான செகராசன் தென்னிலங்கை மன்னவனு குஞ்சிங்கை ஆரியமால் - தன்னுழையிற்
5. நம்பன் . நமது பெருமான் (சிவன்). பரசு தரன் - மழுவைத் தாங்
நிது Gius.
8.2 நுதல் ஒடையான் - நெற்றிப் பட்டத்தையுடையவன். துன்றி
உறை - (குடி) நெருங்கி வாழும்.
விசு படியோர்கள் - (தொகை) மிகுந்த உலகின் ஜனங்களது சஞ்சரிகம் - வண்டு (கள் மொய்க்கும்)
க. நானம் = கஸ்தூரி. நாசி - முக்கு,
64-65 வானுலகும் . வாய்மையான் - மூவுலக ஆட்சியையே ஒரு பொய்க்குப் பரிசாகப் பெறுவதாயிருந்தாலும் சொன்ன சொல் நவருத சத்திய விரதங். ஒரு சேவன் - திருமால், சலசை - இலக்குமி, மருமம் - மார்: 70. ஒசைப் பணகமுடி மீதுவளர் பார் - ஆரவாரம் பொருந்திய பாம் பின் தலையில் இருக்கின்ற பூமி. பன்னகம் - பாம்பு. அது பண்க மெனக் குறுகிற்று. தனதன் நிகர்" குபேரனுக்கு ஒப்பான 71. மா தனத்தான் - பெரிய செல்வமுட்ையவன். மா நிறத்தான் - மிகுந்த சாமர்த்தியசாலி. மா துரத்தான் - இனிமை உடையவன். மால்நிறத்தான் ஆதரத்தான் - மேகநிறம் உட்ைய விஷ்ணுவின் அருள் பெற்றவள்.
71. ஆழிவைத்தான் - ஆஞ்ருாசக்கரம் (செலுத்துபவன் ஆரிவனத் தான் - சோழனுல் நியமிக்கப் பெற்று ஏகாய சிற்றரசரை அடக்கியாளும் அதிகாரத்துடன், சோழன் பிரதிநிதியாதலால் சோழனுக்கு உரிய) ஆத்திமால் குடும் உரிமையும் பெற்று அதை) மிகுதியாது (காடுபோல) அவிந்தவன்.
13

Page 17
71-72 வேதன் அத்தான் போலும் எழில் உடையான் - பிரமன
மைத்துனஞன சுப்பிரம்ணிய சுவாமிபோல் அழகு உடையவன் L 0LTLLLLLLL LTTL S aTTTTTTLTT TLTL LL0LeLLLLSS S TTTT LAL0L eeee அழகிங் உடையணிந்தவன் எனலுமாம் பூண் உடையான் ஆபரணங்கள் உடையவன்.
7. வ்யம் - வெற்றி, வீறு - பெருமிதம், கோல நகர் - அழகிய பட
டினம், செழிய சேகரன் - பாண்டியல்
74. தன்னுழையில் - தன்னிடத்தில். aaarat விஷ்ணு விம்ச!
G.Apsigrarssó)sb Geaprareðkur *uoad' erárgf.
பாண்டிமழவன் செகராசசிங்கையாரியனிடம் யாழ்ப்பாணத்தரசை ஏற்க வேண்டுதல் பாண்டி மழவன் பிரதாபம்
பொன்பற்றி யூரனண்டர் போரில் அழல்சூரன் மின்பற்று காலின் விலங்குதன்னை உஅன்புற்று 7恋 வெட்டுவித்து விட்டபுகழ் வேளாளர் வங்கிஷத்தில் திட்டமுடின் வந்து செனனித்தோன் - மட்டுவுைஞ் செங்குவளைத் தார்மார்பன் செல்வரா யன்பயந்த துங்கமலை யுச்சிச் சுடர்விளக்குக் - கங்கைகுலம் கொண்டாடுங் கொண்டல் குடிமைகளோர் ஐவரையுந் த்ொண்டாக வேகொணர்ந்த சூழ்ச்சியுள்ளான் உறண்டு
6iat. தூண்டும்ஏ ராளன் சுகிர்தன் சுயவசனன் பாண்டி மழவன் பரிந்துசென்று - வேண்டிப் பெருகுபுகழ் யாழ்ப்பாணம் பேரரசு செய்ய h வருகுதிநீ யென்று வணங்கத் திருவரசு 80
75. பொன்பற்றியூரன் - பொன்பற்றி யூரைப் பிறப்பிடமாக உடைய வன். அண்டர் போரில் அழல் சூரன் - பகைவர் போரில் கோபங் கொள்ளும் வீரன். உக்கிரகுமார பாண்டியன் மேகங்களைப் பற்றி
விலங்கிட்டுச் சிறையிட, வேளாளர் விடுவித்தனர் எனும் கதைவைத் தழுவியது திருவிக்ளயாடற் புராணம் - இந்திரன் முடிமேல் வளைவெறிந்த படலம் காண்க.
4

76. மட்டு உலவும் - தேன் பாய்கின்ற, Gairéibagrvua - is in eiltirí9.
மழவன் தந்தை. 78. குடிமைகள் ஐவரி - வண்ணுல், நாவிதன், குயவன். urvasvár,
பறையன். 80. திரு அரசு - லசுஷ்மீகரமான ராஜ்யம்.
செகராசன் யாழ்ப்பாண அரசை ஏற்றுக்கொள்ள இயைதல்.
மாறற்குச் செம்பொன் மகுடமணிந் தோனின்வழி காரணிவ னனபெருங் காரணத்தாற் " பேறுதரச் சாற்று மிவன் மொழியைத் தன்னைத்தோர்ந்(து) எண்ணிமறு மாற்றமுரை ய்ாதுநல்ல வாய்மைசொல்லித் - தோற்றமிகு பாண்டவர்கள் தங்கள் பழையதக ரைத்துறந்து a மீண்டு)இந் திரப்பிரத்த மேவியபோல் - நீண்டவனும் நீடுவட மதுரை நீத்துமக ராலயவாய் - நாடுந் திருத்துவரை நண்ணியபோற் - சூடுமலர்ச் கொன்றைச் சடையோன் குளிர்சுவர்க்கம் விட்டிறங்கிச் சென்றுதிரு வாரூரிற் சேர்ந்ததுபோல் - துன்றுபுகழ்த் 5 6. Aeitao ġibeg5 • • • • • • வழிகாரன் - பாண்டியனுக்கு முடி தொட்டுக்
கொடுக்கும் வேளாளனது வம்சத்தவன் இந்தப் பாண்டி மழவன் பேறு தரச்சாற்றும் - இராஜ்ய செல்வம் தருவதாகச் சொல்லும் 89. நீண்டவன் - திரிவிக்கிரமிஞள Roberabalhurrar Robard. 84, மதராலபவாய் - கடலில்ே, துவரை - துவாரகை.
85. கொன்றைச் சடையோன் - சிவன்
Canrif auoAD... . . . சேர்ந்தது போல் - இந்திரன் பூசித்து வந்த விடங்கப் பெருமான முசுகுந்தன் அவனிடமிருந்து GauAbpyl) பூமிக்குக் கொணர்ந்து திருவாரூரிற் பிரதிஷ்டை செய்த வரலாறு இங்குக் குறிக்கங்படுகின்றது.
யாழ்ப்பாண ராசதானியாகிய நல்லூரின் aAu6mrib
தென்மதுரை விட்டுத் திருநகர்யாழ்ப் பாணத்து மன்னரசு செய்ய மனமகிழ்ந்து - மின்னெளிசேர்
5

Page 18
வெங்கதிரைக் கண்டு விரிந்துகளி கொண்டலர்ந்த செங்கமலங் கூம்பத் திசையிருண்டு - கங்குல்வரச் சங்கினங்கள் ஈன்ற தரளத்தைச் சந்த்ரனென்ப் ܂ܢܝ ܡ ܐ பொங்குங் குமுதம் பொதியவிழ்ப்பப் - பொங்கருறு b பூவினளி மூசநிறை யும்புனவில் வாழ்கியல்கண் மேவிவளர் பூக மிடறுடைப்பத் - தாவும்
87. வெங்கதிர் - சூரியன். கூம்ப - சுருங்க, சூரியாக் கண்டு அலசித்த
தாமரை, திசை இருண்டு இரவு வரச் சுருங்கலாயிற்று. கங்குல்" இரவு. 88. சங்குக் கூட்டங்கள் ஈன்ற முத்தின் ஒளியை நிலவோனியென்று
குமுதம் அலர்ந்தது. பொங்கர்-சோலே. 89. பூவில் அளி மூச - பூவில் வண்டுகள் ரீங்காரம் செய்ய, புனலில்
வாழ் கயல்கள் - நீரில் வாழும் கயல் மீன்கள். பூசுமிடறு உடைப்பத் தான்ம் - கமுகின் கழுத்தைக் கீறப்பாயும். கயல் மீன் குதித்துக் கமுகின் கழுத்திலுள்ள மடலேக் கீதப் பாரே விரியும் என்க.
நல்லூர் நகர நிர்மானம் மதித்த வளங்கொள் வயல் செறிநல் லூரிற் கதித்தமனே செய்யக் கருதி - விதித்ததொரு 90 நல்ல முகூர்த்தமிட்டு நாலுமதி லுந்திருத்திச் சொல்லுஞ் சுவரியற்றித் தூண்நிரைத்து - நல்ல பருமுத் தரம்பரப்பிப் பல்கணியும் நாட்டித் திருமச்சு மேல்வீடு சேர்த்துக் - கருமச் 94. பல்களி - சாளரம்; மச்சு - மேனிலேப் பாவு பலகை, கருமச்
சிகரம் - வேலப்பாடுள்ள கோபுரம்,
கொலு மண்டப வர்ணனை
சிகரந் திருத்தித் திருவாயி லாற்றி மிகுசித்ர மெல்லாம் விளக்கி - நிகரற்ற சுற்றுநவ ரத்னவகை சுற்றியழுத் தித்திருத்திப் பத்திசெறி சிங்கா சனம்பதித்து = ஒத்தபந்தற்
16
 
 
 
 
 
 
 

-
கோலவி தானமிட்டுக் கொத்துமுத்தின் குச்சணிந்து
நாலுதிக்கும் சித்ரமம் நாட்டுவித்துச் - சாலும் ց է:
93. மிகுசித்ர மெல்லாக் விளக்கி - நல்ல நுட்பமான விநோத வெண்ம்
பாடுகளெல்லாம் காட்டி
95 பந்தற் கோல விதானம் - நிழல் தரும் அழகிய மேற்கட்டி
கொத்து முத்தின் குச்சணிந்து - கூட்டமாகிய முத்துகி குச்சுனாால் அலங்கரித்து. சித்ரமடம் - அழகிய மண்டபம், .ܠܐܼ
பட்டாபிஷேகத்துக்கு நகர் அலங்கரித்தல்
அணிவீதி தோறும் வளர்கமுகு வாழை அணியணியா பங்கே அமைத்துத் " துணிவுபெறுந் தோரணங்க ளிட்டுச் சுதாகலச கும்பநிகர் பூரண கும்பம் பொருந்தவைத்துக்" காரணமாய்
97, சுதாகலச கும்பம் - அமுதம் நிறைந்த கும்பம்.
மன்னன் கோலங்கொள்ளுதல் எல்லா எழிலும் இயற்றி நிறைந்தபின்பு நல்லோர் அருள்முகூர்த்தம் நண்ணுமென்று - சொல்விடிலும் மன்னவனுஞ் சீதநதி மஞ்சனமா டிச்செறிந்து சென்னியின்நீ ராற்றிச் சிகைதிருத்தித் - துன்னுமெழிற் பொன்னினங்கி சாத்திப் புகழ்கனகப் பட்டுடுத்து மன்னுதிரு நீறுவடி வாயணிந்து - உண்ணுமொளி 100 உத்தரி கஞ்சாத்தி உயர்ந்தசெம்பொற் பாகைதன்னைச் சித்திரம தாகச் சிரத்தணிந்தே - ஒத்த சுடுக்கனிட்டுக் கைகளுக்குக் கங்கணமுஞ் சாத்தி அடுக்க விரல் ஆழி யணிந்து - தொடுத்தமைத்த கண்டசரத் தோடுவரு காய்கதிரோன் தன்கிரணம் மூண்ட பதக்கம் உரத்தணிந்து " கொண்டுடையிற் சுற்றியரை ஞாண்பொருத்தித் த்ோள்வலயஞ் சோதிமணி வெற்றிக் கழல்பதத்தின் மீதணிந்து - மற்றுஞ்
לרן

Page 19
98. முகூர்த்தம் நண்ணும். சுபமுகத் கிட்டுகிறது. 99. சீதநதி மஞ்சனமாடி - குளிர்ந்து புண்ணிய நதி நீரில் ஸ்நான
செய்து சென்னியின் நீராற்றி - தஃபிரம் புவர்த்தி, 100 பொன்னின் அங்கி பொறிசரிகைச் சட்டை, உண்ணும் ஒாசி
உத்தரிகம் = ஒளியைப் பருவி (மீண்டும் வெளிவீசும்) உந்தரியம் 1914 செம்பொற் பாதுை. பீதாம்பரத்தாலாய தலைப்பாகை 08. ஆழி - மோதிரம்.
கண்டசரம் - கழுத்தில் அணியும் பொற்சரம். காப்ததிரோன் தன் கிரணம் உண்ட பதக்கம் - சூரிய கிரணங் பருகியிருந்து ஒளிரும் பதக்கம். உரத்து அணிந்து - மார் பில் தரித்து.
முடிசூட்டு வைபவம் சகலா பரணமிட்டுத் தந்திமுகற் போற்றிப் புகழ்பூ சனேகள் புரிந்து - அகலாது O சிங்கார மாக்கித் திருத்தியழ காயமைத்த சிங்கா சன த்திற் சிறந்திருப்பச் . சங்கார்ப்பத் அண்ணுமைசல் லாரி தடாரி திமில்முரசு நண்ணு முருடு நகுபேரி - எண்ணுகின்ற மத்தளங்கைத் தாள மணிக்கா களஞ்சுரிகை தித்திமுதல் வாத்தியங்கள் சேர்ந்ததிர - வித்வசனர் தம்புருவேய் வீணை சரமண் டலந்தொனித்துச் சம்பிரம சங்கீதந் தாமிசைப்ப - விம்பக் சசிநேர் குடைநிழற்றச் சாமரைகள் வீச நிசியோட்டு தீவர்த்தி நீட்டச் - சுசியான பன்னீர் சிவிறப் பரிமளமெங் குங்கமழ நன்னீர்மை யாலத்தி நாட்டமிடச் . சொன்னீர்மை
ஆசிமறை யோர்புகல ஆரவமுண் டாக்கியிடக் காசின்மணித் தீபங் கவின்நிரைப்பப் பேசுபுகழ்ப் பாண்டி மழவன் பழையவழி பின்வழியே பூண்டதுதற் பட்டம் புனைந்தருள வாண்டிருந்து பூதானம் பொற்ருனம் போற்றுகன்னி ாேதானம் Tெதானேம் அன்டு அருள்தானம் - கோதானம்

யாவும் மகிழ்ந்துகொடுத் தாரெழில்சேர் பேரொளிகள் தாவுமனி மண்டபத்திற் சார்ந்திருந்து - மேவுமருள் 118
தேன்போல் மொழியாகர்ச் சிந்தைசெய்து வந்தனையாய் ஆன்பால் பழமும் அருந்தியபின் - தான்பாரப்
பொற்கலத்தில் இட்டபகம் புத்தமுதம் என்னநின்ற நற்கறிபால் சீனி நறுநெய்யும் - அற்புதமாய்
ஆணரச மாக்கதலி ஆர்வருக்கைத் திங்கனிநல் தேன்மிகுந்த திவ்யமுள தீஞ்சுவையோ(டு) - ஆன(து)
அருந்திப் பசிபாறி அஞ்சுசுத்தி செய்து திருந்துமணிப் பந்தரின்கீழ்ச் சென்று - பொருந்தியசீர்
107. தண்ணுமை, சல்லாரி தடாரி, திமில், முரசு என்பன வாத்திய
FIFAIS Fair முருடு, பேரி, மத்தளம், வைத்தாளம், காசுளம், Arfleum, தித்தி என்பனவும் வாத்திய விசேடங்கள்,
08. விதிவசதுர் - சங்கீத) விற்பன்னர்
1றது. வேய் = புல்லாங்குழல்
நம்புரு, வேப் வீண், சரமண்டலம் என்பன இன்னிசைக் கருவிகள்.
பிரமம் - பெருஞ் சிறப்பும் நிறைவும்: விபச் சசிநேரி குடை-சந்திரனது நிதிவிம்பம் போன்ற வெண்கொற்றக் குடை
10. நிதி ஒட்டு தீவர்த்தி - இருளேத் துரத்தும் தீப்பந்தங்கள்
11. நன்னீர்மை ஆலத்தி நாட்டமிட - நல்ல மங்களத் தன்மை
L– ஆலத்தி தோன்ற
112: புசுணா - சொல்லி ஆரவம் உண்டாக்கியிட - ஆரவாரஞ் செய்ய,
13. துதற்பட்டம் - இங்கே நெற்றியில் பொருந்தத் தலையில் அணி
பும் நிரிடம், பாண்டி மழவன் . -- புனேந்தருள - பாண்டிய மன்னர்க்கு முடி தொட்டுக் கொடுக்கும் வேளாளர் மரபிளஞன பாண்டி மழ வன் செழியசேகர பாண்டியன் புதங்வஞன செகராச சேகர ஒனுக்குப் பழையவழியின்படியே பட்டம் புனேயும் உரிமை புடையனுயினுள். "மாறற்குச் செந்பொன் மகுட மணிந்தோனின் வழிகாரன் இவன்' என்ருர் முன்னும் - கண்ணி 18.
19

Page 20
ஆண்டு இருந்து-அங்கே (முடிசூட்டு மண்டபத்திலேதானே) இருந்து. 114. பூதானம் - பூமியைத் தானம் செய்தல். பொற்ருனம் - பொசி
இனத்தானம் செய்தல், கன்னிகா தானம் - கன்னிகையைத் தானம் செய்தல், ஆதானம் - பசுவரிக்கத்தைச் சேர்ந்த எருமை முதலியவற்றைத் தானஞ் செய்தல். அன்னம் அருள் தானம் - உணவு தான செய்தல், கோதானம் - பசுவைத் தானஞ் செய்தல். 16. தேன் போல். செய்து - தேன்போல் இனிய சொல்லேயுடை
உமாதேவி பாகரான சிவபிரானேத் தியானித்து. ஆள்பால் பசுப்பால்,
117. புத்தமுதம் - புதிய அமிர்தம். ஆன ரச மா (கனி) = இனிய சிறந்த மாம்பழம். சுதலி (சுனி - வாழைப்பழம். ஆர் வருச் கைத் தீங்கனி - இனியசுவை நிறைந்த பலாப்பழம்.
18. (மேற்கூறிய முக்கனியும்) தேன் மிகுந்த திவ்யமுள தீஞ்சுனை
யோடு கூடியவற்றை அருந்தி,
119. ஐந்து சுத்தி - கால்கள் 8, கைாள் 2, வாப் ,
செகராசசேகரன் பவனி மேல் அம் பரத்தரசன் மேவும் அயி ராவதத்தின் கோலம் பொருந்துமத குஞ்சரத்தை - ஞாலம் 20 அகழக் கொணர்ந்தமைத்த பூஷணங்க ளெல்லாந் திகழச் சமைத்துத் திருத்தி - மகிழ்வுபெறச் சீமான் செயவீரன் சித்தசன் நே ரொத்தமன்னன் கோமா னெனுஞ்சிங்கை யாரியர்கோ - ஞமான்மெய்த் துங்கக் களிற்றில் துலங்கமகிழ்ந் தேறுதலும் மங்கலஞ்சேர் பல்லியங்கள் மற்றதிர - அங்கமுறு தந்திரமோர் நான்குஞ் சகலவிர துஞ்சூழ இந்த்ரபத வீதியென ஏற்றமிஞ்ச - மைந்துபொலி வங்கங் குலுங்க மலாடிங் கிடுகிடென்னக் கொங்கங் கலங்கிக் குடிவாங்க - வங்கம்
2O
 
 
 
 
 

பயந்துநெரிந் தேங்கிப் பதைபதைக்க LT2:OT நயந்தபதம் வாங்கி நடந்து - வியந்ததெரு விஒயினில் ஏகநகர் மேவுசனர் பாவ்ர்களும் நீதிமன்னர் யாரும் நெறிக்கொண்டே - ஆதிதொட்டு இந்நாள் வரைக்கும்நம்பால் எய்துதுயர் எங்காச்சோ மன்னு உனக்கண்ட மாத்திரத்தே - இன்னேதான் ஈடேறி ைேம்மிகவும் இன்பமுற்ருேம் எம்.வறுமை காடேறி யோடக் கரைகண்டோம் - தோடேறு மாலையணி மார்பா வயவிமா வாளபிமா மாலைநிகர் மன்னு வருகவென்பார் - (&லயென்னக் 0ே கோத்தபெருஞ் சேனைக் குலவேந்தா எம்முகத்தைப் பார்த்தருளாய் எங்கே பராக்கென்பார் - கீர்த்தியுடன் முட்டுவார் போல முடுகுவார் நாலுதிக்குங் ட்ெடுவார் நல்வசனங் கேட்டிடுவார் " சட்டமுடின் படுவார் வாசப் பரிமளங்கள் வீசுவார் ஆடுவார் ஆர்களிகொண் டார்த்தெழுவார் - சூடுமதிக் தங்காள நாதன் கறைக்கண்டன் மாதுமையோர்
ங்காளன் தன்திருக்கண் பார்வையினல் " மங்காமல் ஆண்டிலொரு நூறும் அழியாமை இப்பதியை ஆண்டுமிக வாழ்வாய் அரசவென - ஈண்டி 3. மலர்மாரி தூவி வருவார்கள் யாரும் பலகாலும் பாதம் பணிய - நலமான
10. மேல் அம்பரத்து அரசன்மேவும் அபிராவதத்தின் கோலம் பொருந்தும் மதகுஞ்சரம் - தேவலோகத்து அரசஞன இந்திரன் ஏறும் ஐராவதம்போல் அழகுவாய்ந்த மதங்கொண்ட பம் படத்து யானே
12. சித்தரசன் நேரொந்த மன்னன்" மன்மதனுக்குச் சரிசமானமான
அழகுடைய அரசன்
23. பல் இயங்கள் - பலவித வாத்தியங்கள். அங்கம் உறு- உறுப்புக்
கள் துறையாத,
2

Page 21
14. தந்திரம் ஓர் நான்கு = நால்வகைச் சேனே. கசஏத, துரசு,
பதாதிகள். இந்தசபத விதி - தேவேந்திரனது பவனி, மைந்து பொலி - வீரம் மிகுந்த,
125 - 188, வங்கம், மலாடம் கொங்கம் முதலான தேசங்கள் அஞ்சி நடுங்க யாரே கால் தூக்கி வைத்து என்பது இக் கண்ணிகளிற் போந்த பொருள். 18. நகர். நெறிக் கொண்டே - நகர மாந்தரும் சிற்றரசரும்
அரசின் பவனி சேவித்து உடன் செல்பவரா 29. நோடேறு - இதழ் பொருந்திய, 10. வயவிமா - வலிமையில் வீமனை ஒத்தவனே. வாள் அபிமா - வாள்
வித்தையில் அர்ச்சுனன் புதன்வன் அபிமன்யுவை ஒத்தவனே. மாலே நிகர் மன்னு - விஷ்ணுவை ஒத்த அரசனே. 131, வேலையெனக் கோத்த பெருஞ்சேன் - கடல் போவத் தொடர்ந்து
வரும் பெரிய சேணே (யையுடைய). எங்கே UITTäg - வேறெங்கேயோ எதையோ பார்க்கின்ருயே! 38. கீர்த்தியுடன் முட்டுவார் போல முடுகுவாரி - அரசன் LIof
கூறிக் கொண்டே வெகு சமீபத்தில் விரைந்து வருவார்கள். (சிலர்). நல்வசனம் கேட்டிடுவார் -"அரசள் கூறும் அருள் மொழிகளைக் கேட்டு மகிழ்வார் (சிலர்). சட்டம் - ஒழுங்கு 13. ஆர்களி - நிறைந்த சந்தோசம். ஆர்த்து - ஆரவாரஞ் செய்து.
அரசன் பவனிகாணப் பெண்கள் ஓடிவருதல். மங்கையர்சூழ் மன்னன் வரவறிந்து வாய்ந்தகுடக் கொங்கை குலுங்கக் குழல்சரியச் - செங்கைவளை ஆர்ப்பச் சிலம்புகொஞ்ச அம்புலியைப் போல்வதனம் வேர்க்கவிரைந் தோடிமணி வீதிவந்து - பார்க்கிலிவன்
பவனி காண வந்த பெண்கள் பலவாறு கூறுதல்.
விண்ணவனே ஆதி விரிஞ்சனே செங்கமலக் கண்ணனுே பேரளதைக் காவலனே - மண்ணரசாள்
வேந்தர்களின் முன்னும் விசயனே வீடுமனுே ஆய்ந்த ரகுகுலஞ்சேர் ஆரியனே - போந்தவன்றன் 140 சந்தமணி மார்பழுந்தச் சார திருந்தனமேல் இந்தமுலை யென்னே வெழுந்ததென்பார் - மந்திரமாய்
22
 
 
 
 

நாமொருதூ தேவி நயந்திவனை மேவியின்பக் காமரசம் உண்போம் கலக்கமென்பார் . பூமியில்யாம்
கொண்டவிர கந்திரக் கொங்கையினில் இங்கிவன்கை முண்டகந்தொட் டால்அதுவே மோட்சமென்பார் = வண்டு
செறிந்ததொடை யான்இவனைச் சேராமல் பாமும் இறந்ததினுல் என்னபய னென்பார் - நிறந்திகழ இப்பிறப்பில் இங்கிவனச் சேராமல் யாமிறந்தால் எப்பிறப்பில் துய்ப்போம்.இவ் வின்பமென்பார் - இப்படியே பேதையர்முன் ணுய்எழில்சேர் பேரிளம்பெண் ஈருகக் காதலிடை மூழ்கிவிடக் காவலனும் " போத
நகரி வலம்வந்து நானிலமும் போற்றப் புகலுமணி மாளிகையிற் போந்து - இகலரிமாத்
10. ரகு குலஞ்சேரி ஆரியஞே - ரகுதல் திலகஞன பூரீராமனுெ?
41. மந்திரமாய் - இரகசியமாய் 42. கலங்கம் - கலங்க மாட்டோம்.
143. தை முண்டகம் - an 5 MLurTğr)Lu AnTLD63af"r 14. தொடை - மால்.
15. துய்ப்போம் - அநுபவிப்போம்.
16. எழில் - அழகு
GLn 5. ... பேரிளம் பெண் ஈருக - பேதை, பேதும்பை LOAbena மடந்தை, அரிவை தெரிவை பேரினம் பெண் என்னும் ஏழுபருவப் பெண்களும் (இவை வி3லமாதர் வீதியில் நிகழ்ச்சி பகம் கொள்க. உலா இலக்கணம் அதுவே) போது - திருப்தி பாக = நன்ருக.
17. நானிலமும் போற்ற - குறிஞ்சி முல்கி, மருதம் நெய்தல் ஆகிய நாலுவகை நிலத்து மகிகளும் துதிக்க, இசுல் அரிமா" துவிய சிங்கம், -
48. தண்ணளி-குளிர்ந்த கிருபை, மெய்ந்தவன்" தேக காந்தி - அழகு.
அங்கு உன்னி - அப்போது ஆகவேண்டியவைகளே ஆலோசித்து.
s
18. தேம் கமழும் - தேன்வாசம் வீசம்,
23

Page 22
புவனேகவாகு என்னும் பிராமண மந்திரியை நல்லூரிற் குடியிருத்துதல் தாங்குமணி ஆசனத்தில் தண்ணளியும் மெய்ந்நலனும் ஒங்கநனி வீற்றிருந்தங்(கு) உன்னித் - தேங்கமழும் புண்டரிக மார்பன் புகலுமது ராபுரியோன் எண்டிசையும் ஏத்தும் இராசமந்த்ரி - கொண்டதொரு வேதக் கொடியன் விருதுபல பெற்றதுரை கீதப் பிரவுடிகன் கிர்பையுள்ளான் - தீதற்ற 150 புந்தியுள்ளான் மேன்மையுள்ளான் புண்ணியமுள்
ளான் "புவியோர்
வந்திறைஞ்சும் பாத மகிமையுள்ளான் - முந்(து) அரிபால் தோன்றி அகிலாண்ட கோடியெல்லாந் தோற்றமுற ஈன்ருேன் குலத்தில் எழுகுலத்தான் - சான்ருேன் 19. புண்டரிச மார்பன் - தாமரை மால் அணிந்தவன். தாமரை
மால் பிராமணர்க குரியது.
10. வேதக் கொடியன் - வேதக் கொடியும் பிராமணர்க்கு உரியது: விருது - வெற்றிச் சின்னம்; கீதப்பிரவுடிகன் - புகழும் பிரபுத்து வமும் உடையவன். கிரிபை உள்ளான் - இரச்சம் உடையவன்
15. புந்தி - (சூட்சும) புத்தி
151 - 153. அரிபாற் ருேன்றி. சன்ருேள் - பிரமா.
வேளாண் தலைவர்களே அங்காங்குக் குடியிருத்துதல்
அரசனுக்கு முடிசூட்டும் உரிமை பெற்ற பாண்டிமழவன் பிரதாபம் புவனேக வாகுவென்னும் போரமைச்சன் தன்னை நவமேவு நல்லூரில் நண்ணுவித்துச் - சிவநேச ஆகத்தான் தோன்றும் அனிசத்தான் அன்னமருள் தாகத்தான் விஞ்சுந் தருமத்தான் - சோகந்தீர்
* புவியோர் என்ற சொல் த. கைலாசபிள்ளே செ. வெ. ஐம்புலிங் கம்பிள்ளே பதிப்புக்களில் இல்லே. ஆ. சதாசிவம் பதிப்பில் (ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்) உள்ளது.
24
 

பாகி ரதிகுலத்தான் பைெேபான்மே பூழித்துவசன் பாகாரும் வேங்கைப் பருப்பதத்தான் - வாகாருங் 155
கார்காத்து விட்டதென்னக் காமுறுபொன் ப்ற்றியென்னும் ஊர்காத்து விட்டுவந்த உச்சிதவான் - பேர்சாற்றில்
வாசவன் நேர் பாண்டி மழவனையுந் தம்பியையும் நேசமுறு மைத்துனமை நேர்ந்ததுரை - பேசுபுகழ்ச்
158. சிவநேச ஆகத்தான் - சிவனிடத்தே அன்பு கொண்ட இதய
i litri LLIAI Eir.
154. தோன்றும் அனுஷத்தான் - அனுஷ் நகர்த்திரத்திற் பிறந்தவள். அன்னம் அருள் தாகத்தான் - பசித்து வந்தோர்க்கு அன்னம் அளிக்கும் பெருவிருப்பு உடையவன். விஞ்சுந் தருமத்தான் - மிகுந்த தருமவான்.
155. பாகாரும் வேங்கைப் பருப்பதத்தான் - கரும்பு வளரும்
வேங்கை மஃப் பிரதேசத்துக்கு உரிமை பூண்டவன்.
பாண்டி மழவனேயும் அவன் தம்பியையும் அவர்கள் மைத்து னன் செண்பக மழவனே யும் அவன் தம்பியையும் திருநெல் வேலியிற் குடியிருத்தியமை கூறிஞர்.
நரசிங்கதேவன் பிரதாபம்
செண்பகப்பேர் வாய்ந்த திறன்மழவ னுேடும்அவன் நண்புபெறு தம்பியையும் நானிலத்திற் - பண்புசெறி தக்க பலவளமுஞ் சார்ந்துகல்வி நாகரிகம் மிக்கதிரு நெல்வேலி மேவுவித்துத் - தக்கவர்கள் எல்லாரு மேத்தும் இரவிகுல மன்னவனுர் சொல்லும் பெயர்புனைந்த சுத்தபர - நல்லபுகழ் 1 :D குழுங்கங் காகுலத்துத் துய்யதுளு வக்கூட்டம் வாழும் படிக்குவந்த மாசின்மணி - ஏழுகடல் சுற்றுபுவி முற்றுந் துதிக்குஞ் சுகபோசன் கற்றவருக் கீயுங் கனகதரு - வெற்றிதரு க்ாவிமலர் மார்பன் கருதும்வெள் ளாமரசன் மேவுகலை ஞான வினேததுரை - காவிரியூர்ச்
25

Page 23
கோலமிகு மேழிக் கொடியாளன் - மூலமிகு
சேய்ய நரசிங்க தேவனநற் சீர்வளங்கள் வைகுமயி விட்டிதனில் வாழவைத்து - வையகத்து
169 இரவிகுலம் மன்னவளுரி சொல்லும் பெயர் - இராமாவதார
மெடுத்த விஷ்ணுவின் திருராமங்களில் ஒன்ருன 'நரசிங்கம்" என்னும் பெயர். 61. கங்கா குலத்துத்.மாசில்மணிகங்கா குன வேளாளரில் துளு
வேளாளர் மரபில் வந்த இரத்தினம் போன்றவன். 162. போசள் - சுலஞர்களே ஆதரிப்பதில் போசராசளே ஒத்தவன்,
கனக தரு - கற்பக விருட்சம் 16. காவிரியூர் -நரசிங்க தேவன் பிறப்பிடம்,
64. செய்ய. வாழ வைத்து - நரசிங்க தேவனே மயிலிட்டியிற்
குடியிருத்தியமை கூறிஞர்
செண்பகமாப் பாணன் பிரதாபம்
முத்தமிழ்சேர் சித்தன் முகசீ தளவசனன் சித்தச ரூபன்மன் திருச்சமுகன் - மெத்தியசீர் I6 )
வாலிநகர் வாசன் மருள்செறிவெள் ளாமரசன்
செண்பகமாப் பாணனையுஞ் சேர்ந்தகுலத் தில்வந்த தண்குவளைத் தார்ச்சந்த்ர சேகரனும் - பண்புடைய
185. முக சீதள வசனன் - "சீதனம்" என்பாதத் தாப்பிசையாக "முகம்" "வசனம்" இரண்டுடனும் கூட்டுக. குளிர்ந்த அருள் நிறைந்த முகத்தையும் இனிய வசனத்தையும் உடையவன். மன் திருச் சமுகள் - அரச சபையில் வீற்றிருக்கும் பெருமை
LLuajir.
I66. av mtGß? Aesais rf – GaFañasr Lua மாப்பாணனது சென்னதார். மூலம்
மிகு - வம்சப் பெருமையுடைய,
167. செண்பக மாப்பாணனயும். மாப்பான பூபனையும் - செண்பக மாப்பாணனேயும் அவள் தலத்திலே தொன்றியவனும் குளிரிந்து குவண் மாலே அணிந்தவனுமான சத்திரசேகர மாட் பாணனேயும்,
26
 
 
 
 
 
 
 
 

கனகராயன் பிரதாபம்
மாப்பான பூபனேயும் மாசில்புகழ்க் காயல்நகர்ப் பூப்பாணன் என்னவந்த பொன்வசியன் - கோப்பான
சீரகத்தார் மார்பன் செறிகனக ராயனேயும் பாரகத்துள் மேன்மை பலவுடைத்தாய் - நீரகத்தாய்த் 188. காயல் நகரி - கனராஜன் பதி.
பூப்பாணன் - புஷ்ப பானங்களேயுடைய மன்மதுள். பெசன் வசியன் - தனவைசிது குலத்தவன். கோப்பான சீரகதி தார் - கோக்கப்பட்ட சீரக மாலே தனவைசியர்க் குரியது 186 - 170 செண்பகமாப் பாணஃனயும் கனகராயளேயும் தெல்விப்
பழையிற் குடியிருத்தியமை கூறிஞர்.
பேராயிரவன் பிரதாபம்.
தொல்லுலகோர் நாளுந் தொகுத்துப் பிரித்துரைக்குந் தெல்லிப் பழையில் திகழவைத்து - நல்விருதாய்க் 70 கோட்டுமே பூழித்துவசன் கோவற் பதிவாசன் சூட்டு மலர்க்காவித் தொடைவாசன் - நாட்டீமுறும் ஆதிக்க வேளாளன் ஆயுங் கலேயனேத்துஞ் சாதித்த ரூப சவுந்தரியன் - ஆதித்தன் ஒரா யிரங்கதிரோடு) ஒத்தவொளிப் பொற்பணியோன் பேரா யிரவினெனும் பேரரசைச் - சீராருங்
கன்னல் செறிவாழை கமுகுபுடை சூழ்கழனி துன்னும் இணுவில் துலங்கவைத்துப் - பொன்னுலகிற்
170. நல் விருதாய்க் கோட்டும் மேழித்துவசங் - நல்ல வெற்றிச் சில்வா மாா எழுதப்பட்ட கலப்பை பொருத்திய கொடிபை உடைய வன்.
172. ஆதிக்கம் - தலேகம. ஆயும் கசிஸ் அக்னத்தும் சாதித்த (வள்) -
ஆராய்ந்த ககோள் பாவும் சற்றுத் துறைபோகிபவள். ஆதித்தன் ஒராயிரம் .பொற்பணியோன் - சூரியனது ஆயி ரங் கதிர்கள் வீசும் ஒளிக்குச் சமமாக ஒளிவீசும் பொன்ஞபர னம் அனிந்தவன்.
173. கன்னல் - கரும்பு, புடைசூழ் - பக்கத்தே சூழ்ந்த, சுழனி - வயல்
27

Page 24
நீலகண்டன் பிரதாபம்
கற்பகநேர் கைத்தலத்தான் கச்சூர் வளம் பதியான் மற்பொலியுந் தோட்குவளை மாலையினன் - போற்பார் 17
நதிகுலவெள் ளாமரசன் நானிலத்தின் மேன்மை அதிக புகழ் பெற்றஅழ காளன் - நிதிபதிபோல் மன்னன்நிக ரான்மன்னன் மாமுத் திரைகள்பெற்ற தன்னிகரில் லாதவிறல் தாட்டிகவான் - இந்நிலத்தில் ஆலமுண்ட கண்டன் அடியைமற வாதவள்ளல் நீலகண்டி னென்னும் நிருபஃனயும் - மேலுமவன் தம்பியரோர் நால்வரையுந் தான்பச் சிலப்பளியில் உம்பர்தரு வென்ன உகந்துவைத்துச் - செம்பதும
175. சுற்பக நேர் கைத்தலத்தான் - கற்பகத்தை ஒப்பக் கொடுக்கு
கையை உடையவன். கச்சூர் - நீல கண்டன் முன் வாழ்ந்த இடம் மற்பொலியும். மாலேயினுன் - வலிமை மிகுந்த தோளின் குவளே மாலே அணிந்தவன். பொற்புஆர் - அழகு பொருந்திய, 178, நதிகுலம் - கங்கை குலம், நிதிபதி - செல்வத்துக்கு அதிபதியான
குபேரன் 177. மன்னன் நிகரான் - அரசனே ஒத்தவன். மன்னவன் மா முத்திரை கள் பெற்ற - அரசன் கொடுத்த விருதுப் பத்திரங்கள் பெற்ற. விறல் தாட்டிகவான் - வீரமும் பலமும் உடையவன். 178. ஆலம் உண்ட கண்டன் - சிவன். நிருபன் - அரசன், 179. உம்பர் தரு - தேவ விருட்சம் - கற்பகம்
நீலகண்டனேயும் தம்பியர் நால்வரையும் பச்சிலேப் பள்ளியில் குடியிருத்தியமை கூறுகின்ருர்,
கனகமழவன் பிரதாபம்
மாதுவள ருஞ்சிகரி மாநகர் வெள் ளா மரசன் சாதுரியன் காவிமலர்த் தாரழகன் = ஒதுமொழி I80 உண்மையுள்ளான் கல்வி யுகப்புள்ளான் ஊக்கமுள்ளான் வண்மையுள்ளான் மேலும் வளமையுள்ளான்-திண்மைபெறு
28
 
 
 
 

மாரன் கனக மழவனைப்பின் நால்வருடன் சேரும் புலோலி திகழவைத்துப் - பேரளகைக் 180, செம்பதும மாது வளரும் சிகரி - தாமரையில் வாழும் மகா லக்ஷ்மி வாசம் செய்யும் சிகரி சிகரி - கனகமழவன் செனனவூர். கனகமழவனேயும் வேறு நால்வரையும் புலோலியிற் குடி யிருத்தியமை கூறினர்.
கூபகாரேந்திரன் பிரதாபம் காவலன்நேர் செல்வன்மலர்க் காவியணி யும்புயத்தான் பாவலருக் கின்பப் பசுமேகம் = பூவில்வரு கங்கா குலத்துங்கன் கவின் பெறுமே பூழிக்கொடியோன் மங்காமல் வைத்த மணிவிளக்குச் - சிங்கார
சு பகநா டாளன் குனராசன் நற்சமுகன் கூடகா ரேந்த்ரக் குரிசிலையுஞ் - சோபமுற 85 நண்ணக் குலத்தின் நரங்குதே வப்பெயர்சேர் புண்ய மகிபால பூபனேயும் - மண்ணினிடைப் பல்புரத்தின் நல்வளமு மொவ்வாப் பலவளஞ்சேர் தொல்புரத்தின் மேன்மை துலங்கவைத்து - வில்லில் 188 பேரளகைக் காவலன் நேர் செல்வன் - பெரிய அளகாபுரிக்கு
அரசகுன குபேரனே ஒத்த செல்வமுடையவன். 185. கூபக நாடாளன் - கூபது நாட்டுத் தலைவன். சூரிசில் = குெமை
யிற் சிறந்தவன், சோபம் - சோபிதம் - பெருமை. 188. நண்ணக் குலத்தில் வந்த - அந்தக்குடியிற் பிறந்த
87. பல் புரத்தின் நல் வளமும் ஒவ்வா. பல நகர்களின் நல்ல செல்வ
மும் ஒருங்கு சேர்ந்தாலும் ஒப்பாக மாட்ட்ாத
கூபகாரேந்திரனேயும் அவன் ஞாதியான நரங்குதேவனேயும் தொல்புரத்திற் குடியிருத்தியம்ை கூறிஞர்.
தேவராசேந்திரன் பிரதாபம்
விசயன்போர் வீமனுயர் வீறுகொடைக் கன்னன் இசையிற் பொறையில் இயல்தருமன் - வசையற்ற புல்லூர்த் தலைவன் புகழ்செறிவெள் ளாமரசன் எல்லோர்க்கும் மேலாம் இரத்னமுடிச் - செல்வமுறு
29

Page 25
தேவரா சேந்த்ரனெனுஞ் செம்மல்தனை - இந் நிலத்திற் கோவிலாக் கண்டி குறித்துவைத்து நாவிரியும் 90 188. இசை - புகழ். பொறை - பொறுமை. இயல் - சான் முண்மை.
வசை அற்ற - குற்றம் இல்லாத. 189. புல்லூரி - தெவராசேந்திரன் பதி. இரத்தினமுடிச் செல்வம் -
இரத்தினமூடி தரித்தற் கொத்த செல்வம். 190. செம்மல் - பெருமையிற் சிறந்தவன்;. தேவராசேந்திரனைக்
கோவிலாக் கண்டியிற் குடியிருத்தியமை கூறிஞர்.
மண்ணுடு கொண்ட முதலி பிரதாபம்
சீர்த்தியுறு செம்மல் செழுந்தொண்டை நாட்டரசன் கோத்தமணப் பூந்தார்க் குவளையிஞன் - ஆர்த்தகவிக் கம்பனுரைத்த சுவியோ ரெழுபதுக்குஞ் செம்பொ(ன்)அபி சேகஞ் செயுங்குலத்தான் - பைம்புயல்நேர் ண்ைணுடு கொண்ட முதலியெனும் மன்னவனை உள்நாட் டிருபாலை ஊரில்வைத்து - விண்ணுட்(டுர் 19. நா விரியும் சீர்த்தி - தாவினுல் சொல்லுந்தோறும் பெருகுகின்ற
புகழ். ஆர்த்த கவிக்கம்பன் உரைத்த. குலத்தான் - கம்பர்
ஏரெழுபது பாடி அரங்கேற்றியபோது அவருக்குக் கனகாபிஷே கம் செய்து வேளாளன் குலத்திலே பிறந்தவன்;
19. உள்நாட்டு - நடுவூரிலே, மண்ணுடு கொண்ட மூதவியை இரு
பாலையிற் குடியிருத்தியமை கூறிஞர்.
தனிநாயக முதலி பிரதாபம் இறைவனிகர் செல்வன் எழில்செறிசே யூரன் நிறைபொறுமை நீதியக லாதான் - நறைகமழும் பூங்காவி மார்பன் புகழுளவெள் ளாமரசன் நீங்காத கீர்த்தி நிலையாளன் - பாங்காய் 95 இனியொருவர் ஒவ்வா இருகுலமுந் துய்யன் தனிநா யகனெனும்பேர் தாங்கு - முனியவனை மற்றுமுள பற்று நகர்வளமை சூழ்ந்திடுதென் பற்று தெடுந்தீவு பரிக்கவைத்துச் - சுற்றுபுகழ்
3O

194 எழில் செறி சேயூரன் - அழகு நிறைந்த சேயூரைப் பிறப்பி.
மாக உடையவன்.
நிறை - நடுவு நிலைமை. நறை கமழும் - தேன் வாசம் வீசும்,
196. இருகுலமும் துய்யன் - தந்தை குலம், தாய் குலம் ஆகிய இரு
மரபும் குற்றமற்றவன் 197 பரிக்க - தாங்க - as Tacitur y ffôAD.
இருமரபும் துய்து தனிநாயக முதலியைத் தென்பற்றிலுள்ள நெடுந்தீவிற் குடியிருத்தியது கூறினர்.
பல்லவன் பிரதாபம் வில்லவன்தன் வஞ்சி நகருறைவென் ளாமரசன் பல்லவனே டிரண்டு பார்த்திவரை - நல்விளைவு தாவுங் களனிகளுஞ் சாற்றும் பலவளமும் மேவுவெளி நாட்டில் விளங்கவைத்துப் - பூவில்
98. வில்லவன் - சேரன். வஞ்சிரகரி - சேர ராஜதானி - பல்லவனது
பதி. பார்த்திவர் - அரசர் - தலவர்.
198-199, பல்லவளேயும் வேறிருவரையும் வெளிநாட்டிற் குடியிருந்தி
யமை கூறிஞர்.
நகர்காவலர், சேனைத்தலைவர் முதலியோரை நியமித்தல் தலையாரி சேவகரில் தக்கவர்கள் தம்மை நிலையாக நாட்ட நினைத்துச் - சிலைதரித்த 200 வல்லியமா தாக்கனென்னு மசசூர வீரியனைச் சொல்லியமேற் பற்றுத் துவங்கவைத்து - நல்ல இமையாண மாதாக்க னென்னும் இகலோனை அமைவாம் வடபற்றி லாக்கி - இமயமறி செண்பகமா தாக்களெனுஞ் சீர்விறலோன் தன்னையிரு கண்போலக் கீழ்ப்பற்றைக் காக்கவைத்து - ஒண்பயிலும் வெற்றிமா தாக்கனெனும் வெய்யதிற லோனைமிக உற்றிடுதென் பற்றி லுகற்துவைத்துச் - செற்றவரை இவன்ற படைவீர சிங்கனெனும் வீரியனைத் தன்திருச்சே கிளக்குத் தலைமைசெய்து துன்றினரும் 20
3

Page 26
200 நாட்ட - நியமிக்சு. கிலே - வில். 201. மரகுர வீரியன் - மிகுந்த தீரம் பொருந்திய வீன் எல்விய மாதாக்கனே மேற்பற்றுக் காக்க நியமித்தமை கூறிது" . 202. இகல் - வலிமை, இமையான மாதாக்கனே வடபற்றுக காக்க
வைத்தமை கூறிஞர். ெே3. இமயம் அறி - இமயம் வரை புகழ் பரவப் பெற்ற,
செண்பக மாதாக்கனேக் கீழ்ப்பற்றுக் காக்க ஏற்படுத்தியமை கூறிஞர். ஒண் பயிலும் - புகழ் மிகுந்த, 204. வெற்றி மாதாக்கனத் தென்பற்றுக் காக்க நியமித்தமை
கூறினுரி, கே. படைவீர சிங்கனப் படைத்தலேவனுகப் பணித்தமை கூறிஞர்
சேனேகட்கு இட்ம் வகுத்தல் ஆண் குதிரை யமரு மிடங்கடல்போற் சேனே மனிதர் செறியிடமோ(டு) - ஆனவெல்லாம்
0ே6. கட்ல்போற் சேனே மனிதர் செறி இடம் - கடல் போற் பெரிய சேனேயிலுள்ள யானே வீரர், குதிரை வீரர், தேர் வீரா காலாட்கள் ஆகியோர் நெருங்கி வாழும் இடங்கள். ஆன எல்லாம் - இன்னும் சேனைக்கு வேண்டிய ஆசினப்பந்தி, குதிரைப் பந்தி முதலியன.
செகராசன் புகழ் அங்கங்கே சேர்வித் தருள்தார காகணத்துள் திங்க ளிருந்தரசு செய்வதுபோல் - துங்கமுறு பூபாலர் வேந்தன் புதியநக ராதிபதி சாபாலங் காரந் தருராமன் - மாபா ரதமாற்று மாயவண்பேச லெய்துபகை மாற்றும் மிதமாய்ந்த வீரர் விநோதன் - பதுமமலர்ப் புங்கவனைப் போலப் புவிதிருத்தி யாண்டுவைத்த சங்கச் சமூகத் தமிழாழன் - பொங்குந் 20 தரைராசன் அம்புவியைத் தாங்குமகா ராசன் துரைராசன் தூயபுவி ராசன் டி வரமார்
32
 

27. தாரகா கனத்துள் திங்ாள் - நகர்த்திரங்கட்கிடையே சந்திரன். 208 சாப அலங்காரம் தரு ராமன் - வில்லே ஆபரணமாகத் தரித்த
இராமனே ஒத்தவன். 209, மாபாரதம் ஆற்றும் மாயவன் போல் - மகா பாரத யுத்தத்தை நடத்தி முடித்த கிருஷ்ணன் போல. எய்து பகை மாற்றும் விதம் ஆய்ந்த வீரர் வினுேதன் - ஏற்பட்ட பகையை அழிக்கும் விதங்களே ஆராய்ந்தறிந்தவன்; மேலும் வீரச் செயல்களை விருே தமாகச் செய்பவன். 210, புங் வனப் போலப் புவி கிருத்தி ஆண்டு வைத்த சங்கச் சமு கத் தமிழாளன் - யசுரம் உடம்படு மெய்யாதலால். ஆண்டு அவ் விடத்தில் (யாழ்ப்பாணத்தில்) எனவும், வைத்த - தன்னுல் நிறுவப்பட்ட எனவும், சங்கம் - தமிழ்ச் சங்கம் எனவும், சமுகம் புலவர் கூட்டம் எனவும், தமிழாளன் - (பூமியை ஆளுத் திறமை போல்) தமிழ்க் கலைகளைப் பரிபாலிக்கும் அறிவுடைய வன் எனவும் பொருள்பட்டு, தேவாாசனப் போல் பூமியைத் திருத்தி வளம் படுத்தித் தனது இராஜதானியாகிய யாழ்ப் பாணத்தில் நிறுவப்பட்ட தமிழ்ச்சங்கத்திலுள்ள புலவர் கூட் டத்திலிருந்த தமிழறிஞன் எனக் கொள்க.
அரசன் சொக்கநாதர் கோவில் அமைத்துப் பிரதிஷ்டை செய்ய உத்தேசித்தல்
செயசிங்க ஆரியனும் செய்யகுல ராசன் நயந்துபுவி ஆண்டிருக்கு நாளில் - வியந்த மதுரைநகர்ச் சொக்கர் மலர்ப்பாதம் போற்றி இதயத் திரவுபக லெய்தி - விதனமுறும் அக்கவின் சேர் கோவி லமைத்துப்ர திட்டைசெய்து சொக்கலிங்க மென்றுபெயர் சூட்டுமென்ன - மிக்க 213. விதனம் உறும் .அமைத்து - (சொக்கநாத சுவாமி கோவி
வில் வழிபாடு செய்வதற்கில்வேயே என்னும்) கவலைக்கு விஷய
மான அச்சொக்கநாதர் கோவிலை (நல்லூரிலே அமைத்து. 214 சூட்டும் என்ன - குட்டுவோம் என்று.
அரசனுக்குக் கயிலாயநாத சுவாமி
கனவில் தோன்றி அருளுதல்
மனநினைவின் மன்னன் மதித்துமஞ்ச மீதிற் புனதுயிலாய் மேவியிடும் போது - புனிதமிகு
墨 33

Page 27
மாயனுக்கும் வேதனுக்கும் மாமறைக்கும் எட்டாத தூயபெரு ஞானச் சுடர்ப்பிழம்பு - காய்கதிரோ(டு) ஒத்ததிருமேனி உருவமொழித் துப்புவியில் வைத்த மனிதர் வடிவாகிச் - சித்ரமிகு காதிற் கடுக்கனிட்டுக் கைக்கங் கன மணிந்து சோதித் திருவலயந் தோளிலிட்டுப் - பாதத்தில் வீரக் கழலணிந்து மிக்கசெம்பொற் பட்டுடுத்துச் சாரு மகுடந் தலேயிலிட்டுப் - பாரச்
சகல பணியுமிட்டுத் தன்மனையென் ருேர்பெண் புகலுஞ் சருவாங்க பூஷணியாய் - மிகவெழில்சேர் 220 "a வம்பார் குழவியொடு மல்குகன வின்கண்நின்று
நம்பேர் கயிலாய நாதனென்ன - நம்பி விழித்தெழுந்து மன்னன் விடையேறு நாதன் ஒளித்துநின்(று)ஆட் கொண்டானென்(று) உன்னிக் -
களித்துமனப் பூரணம தாகிப் புனிதா லயமியற்றக் காரணமாய் நன்முகூர்த்தங் காட்டுவித்து - ஆரணத்திற் 1ே8. காய் கதிரோடு ஒத்த - வெயில் வீசும் சூரியண் ஒத்த,
19. சாரும் மதடம் - பொருந்திய முடி,
220. சநவாங்க பூஷணி - சகல உறுப்புகளிலும் ஆபரணம் அணித்
தவள். 21. வம்பார் குழலி - வாசசீன பொருந்திய கூந்தலை உடையவள்
(உமாதேவி)
228. பூரணம் - திறைவு. புனித ஆலயம் - பரிசுத்தமான கோவில்
FiT ஆலயம் ஆதிய அமைத்தல் சொன்னமுறை தப்பாமற் சுற்றிச் சுவரியற்றி மன்னுசபை மூன்றும் வகுத்தமைத்து - உன்னி அதிசயிப்ப ஈசனுறை ஆலயமாற் றிப்பார்ப் பதிகோவில் பாங்கருறப் பண்ணி - விதியாற் 22
34 to
F=ےي
 
 
 
 
 

பரிவார தேவர் பதியாக சாலை உரிதாம் இடங்களில்உண் டாக்கி - அரிதான
உச்ராண வீடு(ம்)அமைத் தோதுதிரு மஞ்சனத்து மிக்கதிரு வாவியுடன் வெட்டுவித்து - முக்யமுறு
மாமறையோர் வாழு மணி.ஆல யங்கள் செய்து ஒமமுறை செய்யுமிடம் உண்டாக்கிச் - சாமநிதம்
ஒதுவிக்கும் ஆலயம்செய் துண்டுபசி தீர்த்துவைக ஒதனத்தா னப்பதியும் உண்டாக்கிச் - சோதியுறை
தேரோடும் வீதி திருத்திமட மும்சமைத்துக் காரோடும் பொங்கர்களும் காரணித்துச் - சீரான 20
செம்பதும ஒடைகளும் செய்யமணி மேடைகளும் உம்பர்பதி என்னமகிழ்ந்(து) உண்டாக்கி - அம்புவியுட்
228. வேதத்திற் கோயில் அமைப்புக் கூறவில்லே. ஆகமத்திற் கூறப்
பட்டுள்ளது. இனம் பற்றி உபசரித்துக் கூறிஞர்.
224. சபை மூன்று - மூலத்தானம், நிருத்தமண்டபம், மகாமண்டபம்
225. ஆலயம் ஆற்றி - ஆலயம் உண்டாக்கி.
85. பார்ப்பதி கோவில் பாங்கர் உறப் பண்ணி -உமாதேவி கோவி
லும் பக்கத்தில் அமைத்து. 28. பரிவார தேவர் பதி பாசு சாக் உரிதாம் இடங்களில் உண் டாக்கி - பரிவார தேவர்கட்குக் கோயிலும் யாகசாலேயும் உரிய இடங்கிளில் அமைத்து.
s + 1 27. டிக்கிராண வீடு - பண்டசாலே.
ஒது திரு மஞ்சனத்து. வெட்டுவித்து - சொல்லப்படும் திரு மஞ்சனக் குளமும் வெட்டுவித்து. முககியம் உறு - பிரதான LT) f'RT. 228. சாமம் நிதம் ஒதுவிக்கும் ஆலயம் - சாம வேதத்தைத் தின
l மும் அத்தியயனம் செய்யும் மண்டபம்.
9. ஒதனத் தானப் பதி - அன்னதானமடம். சோதி உறை - ஒளி
வடிவினரான சிவன் எழுந்தருளிய 20. கார் ஓடும் பொங்கர் - மேகம் தவழும் சோல். காரணித்து -
Elein LITát fel.
81. செம்பதும ஒடை 4 செந்தாமரைக் குள
35

Page 28
பிரதிஷ்டை வைபவம்
கேதாரந் தன்னிற் கிளர்மதன் அர்ச் சித்துவைத்த ஆதார லிங்கம் அழைத்தருளி - மீதாக வந்தபிர திட்டை மகிழ்வோடு செய்தருள அந்தணருள் ஆய்ந்திங்கு அனுப்புமெனச் - செந்திருவார் சேது பதிக்குச் செழும்பா சுரமனுப்பி
ஆதிமறை யோர்கள் புகழ் ஆசிரியன் - வேதமுணர்
கங்கா தரனெனும்பேர்க் காசிநக ரோனஇனி(து) இங்கே யவனனுப்ப எய்தியபின் - செங்கனிவாய்ச் 235 சீதை கொழுநன் திகழ்ராம நாதனேஅப் போதுபிர திட்டை புரிந்ததுபோல் = ஒதுவன்னச் சந்தனக்கால் நாட்டிச் சலாகைநிரைத் துப்பரவிச் சுந்தரப்பொற் பந்தல் துலங்கவிட்டு - அந்தரத்தில் ஆடுகொடி கட்டி அதுமுதலாய் செய்தமைத்து நீடு விதானம் நிறைவேற்றிக் - கோடிவன்னக் கச்சால் அலங்கரித்துக் கற்றைமுத்தின் குச்சணிந்து பச்சைகறுப் புச்சிவப்புப் பத்தியிட்டு - இச்சையுடன் துப்புக் குவைபிணித்துச் சுத்திதனக் கொத்திசைத்துக் குப்பைக் கனகக் குசைபரப்பி - ஒப்பமுறப் O பாக்குக் குலைகதலிப் பைங்குலைதா ழங்குலையுந் தூக்கியணிந் தெங்குந் துலங்கவிட்டு - வீக்குஞ் சிலேபோல் வலயமிட்டுச் சித்திரங்க ளாகக் கலையாற் குடம்பரப்பிக் கட்டி - நிலையான கன்னலொடு பச்சைக் கமுகுகத லித்தொகைகள் துன்னுமணி வீதியிட்டுத் தோரவித்துப் - பொன்நகர்போற் சோடித்த தன்பின் எயில் சூழ்ந்தமணி ஆலயத்தை நாடுற்ற சந்தனத்தி ஞல்மெழுகி - நீடுமொளி மாணிக்கம் நீலம் வைடூ ரியம்வயிரம் ஆணித் தரளத்(து) அமைத்தழுத்திப் - பாணித்துப் 24
36
 
 

பத்துத் திசையும் பரந்துதயங் குங்கிரண சித்ரமுறு சிங்கா சனம்திருத்தி - வைத்தபின்பு மாசின்மறை யோர்குரவன் மஞ்சனமா டித்திரும்பிப் பேசுரட்சா பந்தனமும் பேணியிட்டு - ஒசைவிடை கோட்டித் திசைகளெட்டுங் கொண்டசுத்த தண்டிலத்தை போட்டுக் கமலதளம் போற்பரப்பி = நாட்டமிட்டுப் பஞ்சவன்னந் தூவியிட்டுப் பச்சைக் குசைபரப்பி விஞ்சுபொற் கும்பகல மீதுவைத்து - அஞ்சலியாய்க் கோலமலர் தூவிக் குளிர்ந்த செம்பொற் பட்டுடுத்திப் பாலிகைகள் சுற்றிப் பரப்பிவைத்து - மூலபரன் 罗59 ஆகமத்தால் அவ்வகை ஆக அமைத் துச்சந்த்ர சேகரனே ஆகமததிற் சேர்த்துவைத்துப் - பாகமுற முப்பத் திரண்டறமும் முற்றவளர்த் திட்டவருட் செப் புற்ற சொர்க்கச் சிவையைவைத்தே - ஒப்பற்ற ஆபரண வாசி அழகுறுபொற் பட்டுடைகள் சோபனம தாகத் துலங்கணிந்து - தூபமிட்டுச் சாதிகர வீரமொடு சண்பகஞ்செங் காந்தள்பிச்சி சீத வனசம் திருக்கடுக்கை - ஆதியவாம் மாமலர்கள் வாரி மலர்ப்பதத்தின் மீச்சொரிந்து தாமவட மும்துலங்கச், சாத்தியிட்டுத் - தூய்மையுறு 255 சம்பா அடிசில் சகலவித மாச்சமைத்து விம்பவட மேருவென்ன வேகுவித்துச் - சம்பிரமாய் மாங்கனியோ(டு) ஆரும் வருக்கைக் கணிகதலித் தீங்கனியும் மந்தரம்போற் சேர்த்துவைத்துப் - பாங்கரிவிற் பச்சிளநீர் நெய்தேன் பலகாரம் பால்முதலா உச்சிதம தாக உவந்துவைத்து - வச்ரமணி அள்ளி அழுத்தி அழகுறுகா ளாஞ்சிதனில் வெள்ளிலையும் பாகும் விளங்கவைத்துத் - தெள்ளியகீர்த் தாமத் தரளத் தவளக் குடைநிழற்றக் காமருறும் ஆலவட்டங் கைப்பிடிக்கச் - சேமமடற் 6ே0
37

Page 29
சல்லரி பொற்பேரி தவில்முரசு தண்ணுமைமற் றெல்லா முரசு மெழுந்தொலிப்பச் - சொல்லரிய மங்களங்க ளார்ப்ப வணிதையர்பல் லாண்டிசைப்பப் பொங்குங் கவரி புடையிரட்டப் - பங்கமுடன் நாடகத்தின் மாதர் நடிக்கத் தொனியெழும்பச் சோடசபூ சாவிதங்கள் தோற்றமிட்டு - ஆடு மயில்போல் உமாபதிக்கு வாய்த்த திருநாமங் கயிலாய நாதனெனக் காட்டி - வெயிலிமைக்குஞ் செக்கர்த் திருவுருவிற் சீரபிடேகம் புரிய அக்கினியின் ஒமகன்மம் ஆற்றியபின் - பக்கமுறு 265 கும்பமுறு மஞ்சனத்தைக் கொண்டமலர்க் கையினெடுத்(து) அம்பொன்மணி மேனியினில் ஆக்குதலும் - உம்பருக்குந் கைலாயநாதன் புகழ் தூயமுனி வோர்க்கும் துறவியர்க்கும் எட்டாத மாயமல கன்மமற்ற மாசில்பரன் - வாய்மையிடில் வாக்கு மனவிகற்ப மாமறைக்கும் எட்டா மற் போக்குவரத் தில்லாப் புனிதபரன் - நோக்கியிடிற் புண்டரிகத் தோற்கும் புருடோத் தமற்குமெட்டா அண்டரண்டம் எங்கும்நிறை ஆதிபரன் - கொண்ட்மைந்த ஒத்த அருவுருவாய் ஒப்புவமை ஒன்றுமில்லாச் s சுத்தசித்த சந்தான சூட்சபரன் - சித்தமுற 270 ஆதிநடு ஈறும் அடிமுடியும் நாடரிதாய்ச் சோதிமய மாகிநின்ற சுத்தபரன் - நீதியினிற் சேருந் திரிபுரமும் தீப்படுத்தச் சிந்தைசெய்து மேருச் சிலைவளைத்த வீரபரன் - பாரமுறும் ஓங்காரத் துள்ளொளியாய் உற்றதொகை அட்சரத்துர நீங்காம லேநிறைந்த நித்தபரன் - வாங்காது புக்க இருவினையாய்ப் போதமுமாய் உட்பொருளாய்த் துக்கசுகம் இல்லாத தூயபரன் - அக்கிணியாய் மண்ணுய்ப் பரந்துலவு மாருதமாய் வார்புனலாய் விண்ணுகி நின்ற விமலபரன் - எண்ணுகின்ற 275
38

ஒன்ருய்ப் பலவாய் உள்ளதுமாய் இல்லதுமாய் நன்றுதீ தற்றிருக்கும் ஞானபரன் - அன்றியுமே தோன்றுபதி ஞலுலகில் தோற்றுமுயிர் வர்க்கமெலாம் ஈன்றவளை வாமத் திருத்துபரன் - ஊன்றுமணப் பத்தியுள் ளோர்கட்குப் பரவரிய சாயுச்ய முத்திகொடுக் குங்கருணை மூர்த்தபரன் - சித்தசன்முன் கூறுமலர் அம்புதொடக் கோலநூதல் தீவிழியால் நீறுபட அன்றெரித்த நித்தபரன் - பூருவத்தில் தந்தி முகவனையும் தம்பிமுரு கேசனையும் , . . மைந்தரெனத் தந்தருளும் மாயபரன் - சுந்தரன்தன் 280 தூதாய்ப் பரவையெனுந் தோகையிடத் தேஇரவின், மீதே தடந்த விமலபரன் - பாதமலர் சன்றச்சிலம்பு கொஞ்சக்' கங்கை உAட லம்பதற மன்றுள் நட மாடும் வரதபரன் - என்றுமுள போதசிவ ஞான புராணமய மாய்முதிய வேதவடி வாகி விளங்குபரன் - ஒதுமுறை கைதொழுவோர் தங்கள் கருத்தொருமை - ஓர்ந்துருகு மெய்யுருவாய் நின்று விளங்குபரன் - வையகத்திற் சிந்தித்(து) ஒருகால் சிவாவென்றுரைக்கி(ல்) அதற்(கு) அந்தரமாய் நின்றங்(கு) அருள்செய்பரன் - மந்தரத்தைப் பாற்கடலி லேகடையப் பண்பொடெழுந்(து) அண்டரஞ்ச ஆர்க்குமுழு நஞ்சையுண்ட வாதிபரன் - போர்க்கெழுந்த மத்தகெசம் உட்கி மறுகிவரத் தோலையுரித்(து) - உத்தரிய மாசு உவந்தபரன் . அத்தனர்
இறைவன் எழுந்தருளல் இந்தவித மெல்லாம் இதயத் துணர்ந்தருளி நந்தி திருமுகத்தில் நாட்டமிட்டு - நந்தமிர்தச் சித்திரகை லாசமொடு தென்கயிலை இவ்விரண்டு நித்தமுளம் ஓர்ந்துற்ையும் நேய்பத்தி * அத்துடனே முக்கைலை யாகநல்லை மூதூரின் நன்றமைந்த(து) அக்கைலை மீதின் அமர்ந்தின்றய - இக்கணமே 290
39

Page 30
உன்கணமும் நீயும் உளமகிழ்ச்சி யோடெழுந்தெம் முன்பு வருகென்று மொழிவழங்கிப் - பொன்புடையும் மிக்கதிரு மேனியிடை வெண்ணீ றணிதுலங்க அக்கமணி மாலை யழகெறிப்பக் - கொக்கிறகும் திங்கட் பருதி செறிந்து துலக்கமுறக் கங்கை மறுகிக் கரைபுரளக் - கங்குலினுஞ்
சங்கக் குழைதுலங்கச் சர்ப்பா பரணமின்னத் துங்கக் கடுக்கைத் தொடைதுலங்க - வெங்கயத்தின் போர்வை தயங்கப் புலியின் அதள்வயங்கக் கோவை தலைமாலைக் கோப்பிலங்கப் - பேர்வதிந்த 293 அத்தியுடல் மத்தம் அழகெறிப்ப ஐயிரண்டு கைத்தலத்தின் ஒன்றிற் கல்ைதுலங்க ஒத்திருக்கும் ஒன்பது கைத்தலத்தும் ஓங்குமணி சூலபயம் மின்பொலியும் வச்சிரம்வாள் வெங்கயிறு - அன்புபெறும் அங்குசம்வெம் போகி அரிமான் இவை தயங்கப் பங்குடையான் மேனி பளபளென்ன - அங்கணன் ஊர் மால்விடையின் மீது மகிழ்வொடுவந் தேறுதலும் நாலுமறை யுங்குமிறி நாவிசைப்பக் - கோலமலர்ப் பங்கயனும் மாலும்இரு பக்கமணி யாகவரப் புங்கவர்க ளெல்லோரும் பூச்சொரிய - மங்குலுறை 300 தேவன் சிவசிவென்னச் சித்தர்வித்தி யாதரர்கள் கூவியரன் நாமமெல்லாங் கூறிவர - மேவியுறு தும்புருவும் நாரதனும் தூயமணி யாழிசைப்பக் கிம்புருடர் கின்னரர்கள் கீர்த்திசொல்லி - அம்பருறை மாமுனிகள் அட்ட வசுக்கள்சப் தரிஷிகள் ஆமுறையில் யாரும் கிரகரென்னச் - சேமமுள்ள அட்டதிக்குப் பாலகர்கள் ஆரும்அரு காகவந்து கட்டியங்கள் கூறிக் களித்துவரத் - திட்டமுடன் நந்திகணஞ் சூழ்ந்துவர நாகர்பதி மேவுபல துந்துபி கள் ஆர்த்துத் தொணியெழுப்ப - எந்தைபிரான் 205
4O

எல்லாரும் போற்ற எழிலினுட னேயமைத்த நல்லூர்க் கயிலைதனில் நாடிவந்து - சொல்லரிய
கர்ப்பூர தீபங் கனாமடல் மீதெடுப்பச் சிற்பரன் ஈதெல்லாஞ் சிறந்(து)உவந்து - பொற்பினெடு
செப்புமலங் காரமிட்ட தேரில் எழுந்தருளி அப்பரிசே யாரும் அணிந்துவர - ஒப்பரிய
வீதிவல மாகவந்து மேவுமனி ஆலயம்புக்கு) ஆதிபர னங்கே யமர்ந்துறைந்து - நீதியுறு
மன்னவருஞ் சீரும் மனிதர்களும் வாழ்ந்திருக்க
உன்னியருள் செய்தான் உகந்து. 30
238. கேதாரம்.அழைத்தருளி - திருக்கேதாரத்திலே மன்மதரூற்
பூசிக்கன்பட்ட் ஆதார லிங்கத்தை அழைப்பித்து,
26. வன்னம் - அழகு.
237. சந்தனக்கால் - சந்தன மரத்தால் பந்தற்கால்.
238. கோடி வன்னக் கச்சு - புதிய அழகிய வஸ்திரம்.
239. ruž3 - offsear.
240, gud gani - Luavard Futilasakra கூட்டமாக்கி. பிணித்து. 5ਡ Currey பொற் குவியல் வைத்து தருப்பைப் புல்லப் பரப்பி. M
241. வீக்கும் சிலை - வன்த்த வில்.
242 வலயம் - பாத்தி, அந்தணர் இம்பம் வைத்து uses செய்யும் இடம். சித்திரள்களாக - விசித்திரமாக, கலையால் குடம் பரப்பிக் கட்டி - சீலேயால் கும்பத்தைச் சுற்றிக் கட்டி.
243. தோரணித்து - தோரணங்கள் கட்டி,
244. எயில் சூழ்ந்த - மதில் சூழ்ந்த,
247. மறையோர் குரவன் - பிராமண ஆசிரியல் - கங்காதரக்
குருக்கள். ரட்சா பத்தனம் பேணியிட்டு - காப்புத் தரித்து. ஒசை விடை கோட்டி - சிறந்த இடப உருவை எழுதி.
4

Page 31
48.
49.
密50。
8Ꮜ1.
25露。
253.
254.
農55。
56.
57.
259.
260
2.
器6露。
தண்டிலம் - ஒமாக்கினி தாபிக்கும் பொருட்டுச் சதுரமாக மணல் பரப்பிய இடம். கமல தளம் - தாமரை இதழ்.
பஞ்ச அன்னம் - ஐந்து வகைத் தானியம். பச்சைக் குசைபசிய தருப்பை. விஞ்சு - பெருமை மிகுந்த பொற் கும்ப சலம் - பொற் குடமாகிய பாத்திரம். அஞ்சலி - கைகூப்பி வணங்குதல்.
பாலிகைகள் - முளைப் பாலிகை. மூலபரன் ஆகமத்தால் - சிவ பிரான் அருளிய ஆகம விதிப்படி.
சந்திரசேகரன - சந்திரனைச் சென்னியிற் சூடிய சிவனை. -eas
மத்தில் சேர்த்து வைத்து - ஆகம மந்திரங்களால் ஆவாசனஞ் செய்து, பாகம் உற - பக்கத்திலே,
முப்பத்திரண்டு . வளர்த்திட்ட அருள் - சாஞ்சீபுரத்திலே காமாசுழி என்னுந் திருநாமத்தோடு முப்பத்திரண்டு அறங்களை யும் நிறைவுபெற வளர்த்த கருணை (வாய்ந்த). செப்பு உற்ற சொர்க்கம் சிவை - பொற் செப்பை ஒத்த தனங்களையுடைய 2.
ஆபரண வாசி - அணிகல வகைகள்.
சாதி - சிறு செண்பகப்பூ, கரவிரம் - அலரிப்பூ. சீத வனசம் -
குளிர்ச்சி பொருத்திங் தாமரைப்பூ, திருக்கடுக்கை - திருக் கொன்றை,
தாமம், வடம் - மால் விசேடங்கள்.
சம்பா அடிசில் - சம்பாச் சோறு. சகல விதமாச் சமைத்து - சித் திரான்ன வகை எத்தனை உண்டோ அத்தனை விதமும் அமைத்து, வடமேரு விம்பம் எனவே குவித்து - வட்க்கே உள்ள மேரு மலயின் பிரதிவடிவம் எனும்படி குவித்து.
வருக்கைக் கணி - பலாப்பழம். மந்தரம் - மந்தரமலை, பாங்க ரினில் - பக்கத்தில்.
வெள்ளிலையும் பாகும் - வெற்றில்யும் பாக்கும்.
தரளத் தாமத் தவளக் குடை - முத்து மாலை தூக்கிய வெண் கொற்றக் குடை w
சல்லரி, பேரி, தவில், முரசு, தண்ணுமை - வாத்திய விசே டங்கள். −
பங்கம் - வளைவு, பங்காமுடன் - அங்கத்தை வளைத்து.
42

263
264.
65.
66.
68.
ይ70.
Ꮭ7Ꮽ.
274.
282.
28.
284.
& 5。
7.
388.
93.
சோடச பூசா விதங்கள் - பூஜா உபசாரங்கள் பதிகுறு. அவை யாவன: தூபம், தீவம், நைவேத்தியம், தாம்பூலம், சந்தனம்,
புஷ்க்வம், கர்ப்பூரம், ஜலம் எண்ணெய் கண்ணுடி குட்ை,
விசிறி, ஆலவட்டம், சாமரை, கொடி, வஸ்திரம் என்பவை.
ஆடும் மயில்போல் உமாபதி - ஆடுகின்ற மயில் போலுஞ் சாயலேயுடைய உமையின் நாயகன். வெயில் இமைக்கும் - ஒளி வீசுகின்ற
செக்கர்த் திருவுரு - கிவந்த திருமேனி. ஓம கன்மம் - ஒமக் Griffisiadau.
கும்பத்தில் வைத்த திருமஞ்சன நீரை எடுத்து அழகிய பொன் பேசலும் திருமேனியில் அபிஷேகம் செய்த அளவிலே,
N போக்கு வரத்து - இறப்புப் பிறப்பு. சுத்த சித்த சத்து - மலமற்றதும் அறிவு வடிவானதும் ஆகிய உண்மைப் பொருள்.
தொகை அட்சரத்து - கூட்டமாகிய எழுத்துகள் ஒவ்வொன் றிலும், இருவினையாய்- நல்வினை, தீவினையாகி, போதமுமாய் ஞான மும் ஆகி. Eunts libóid doire - தாம்ரை போன்ற பாதம் சிவக்க. ஒது முறை - வேத ஆகமங்களிற் கூறிய விதிப் படியே. ைேகதொழுவோர்.ஓரிந்து - வணங்குகின்ற அன்பர்கட்குப் பிறிது சிந்தனை இல்லாமையைப் பரிசோதித்துத் திருவுளத்திற் கொண்டு. குருமெய்யுருவாய் நின்று விளங்கு பரன் - உண்மை ஞானத்தைப் போதிக்கும் குருவடிவாய் வந்து ஆட்கொள்ளும்
அந்தரமாய் நின்று - மறைவாக நின்று. மத்த கெசம் - மதயானை வடிவினஞன கயாசுரன்; அத்தளும் சகல உயிர் கட்கும் பரம பிதாவான சிவன்.
இந்த வித மெல்லாம் இதயத்து உணர்ந்து அருளி - நல்லூரிக் கைலாக நாத சுவாமி கோவிற் பிரதிஷ்டையில் நிகழ்ந்தவை களை யெல்லாம் திருவுளத்திற் கொண்டு. ܡ
திங்க, பருதி - சந்திர மண்டலம் ஒளி எனினுமாம்.
43

Page 32
墨9言,
፱§û.....
97 -
29.
MUI),
303
ತಿ04
-
W.
5.
3.
கோவை - கோக்கப் பட்ட, கோப்பு - பெருமை, பேர் வதிந்த = புகழ் பெற்ற,
அத்தி - ஆத்தி (மாலே), குறுக்கல் விகாரம். மத்தம் - வித்த மாஸ், ஐபிரண்டு கைத்தவம் - பத்துத் திருக்கைக்ள். கனல் - நெருப்பு 9ே8. ஓங்கும் மணி, சூலம், அபயம், வச்சிரம், வாள், கயிறு, அங்குசம், பாம்பு, மான் ஆகிய இவை முறையே பற்ற ஒன்பது திருக்கைகளிலும் விளங்க, மின் பொலியும் வச்சிரம் - ஒளி மிகுந்த வச்சிராயுதம்
வெம்போகி - கொடிய பாம்பு, அரிமாள் - அழகிய மான். பங்கு உடையாள் - பாகத்தில் இருக்கும் உமாதேவி. அங்கனன் - அழகிய கிருபையுடைய சிவன்.
மங்குல் உறை தேவன் - மேகத்தை வாகனமாக உடைய இந் திரன்.
அம்பர் - அவ்விடம் - மேல் உலகம்
பொருந்திய முறைப்படி யாவரும் "அரகர" என்று கோஷிக்க, சேமம் - காவல்.
ஆகும் - யாவரும். அருகாசு - சமீபத்தில், நந்தி கணம் - நந்தி கனத்தவர். நாகரி பதி - தேவலோகம்
கனக மடல் - பொன்ஞலாய கர்ப்பூரமடல், சிற்பரன் - ஞான வடிவினரான சிவன். சிறந்து உவந்து - சிறப்பாக மகிழ்வுடன் ஏற்று. அம்பரிகே - முன் 292 - 305 கண்ணிகளில் சொல்லிய முறையே அணிந்து வர - வரிசையாக வர,
மன்னவரும் - செகராச சிங்கையாரியனும் அவன் வம்சத்தாரும்,
நூலாசிரியர்
நேரிசை வெண்பா கற்ருேர் புகழக் கயிலாய மாலைதன்னை நற்றமிழி ஞற்றெடுத்து நாட்டினன் - சுற்றுறையூர்ச் செந்தியப்பன் தந்தசிறு வன்முத்து ராசனென வந்தகவி ராசங்கு டம்.
". தி 4
 
 
 

கைலாய மாலையிற் கூறப்பட்ட வரலாறு
பண்டிதை, திருமதி
இராஜராஜேசுவரி கணேசலிங்கம்
பீ. ஏ. சிறப்பு), எம். விற்.
பூவுலகத்திலே, மேருமலைக்குத் தெற்கோ, நாவலந்திவிலே பாத கண்டத்திலே, சோழ மண்டலத்திலே சோழராசன் மகளாக உதித்த மாருதப்புரவீகவல்லி தனக்கு உளதாய குதிரை முகம் என்னுங் கொடிய நோயை நீக்க வேண்டி ஈழ மண்டலத்திலே கீரிமலைக் கடலருவியில் தீர்த்தமாட விரும்பி அங்குச் சென்று நீராடி நோய் நீங்கப் பெற்றுச் சூரியாஸ்தனமாதலும் அங்கே தானே கூடாரம் அமைத்துக் காவலும் நியமித்துத் தோழியரு டன் துயில் வாளாயினள்.
கதிர்காமத்துக் கந்தவேளருளால் கதிரமலையை இராசதானி யாகக் கொண்டு ஈழ மண்டலத்தை அந் நாளில் அரசாண்டு வந்தவனும் சிங்க முகமும் மனித உடலும் உடையவனுமான வாலசிங்க மகாராசன் பொழுது புலரமுன் மாருதப் புரவீக வல்லி தங்கியிருந்த இடத்தை அடைந்து காவல்களே யெல்லாம் கடந்து அவளேத் தன் உறைவிடத்துக்குக் கொண்டுபோய் மணம் புரிந்து கொண்டான். இவர்கள் இருவரும் இந்திரனும் இந்தி ராணியும் போல இன்புற்று வாழும் நாளில் நன்னிமித்தங்கள் பல தோன்ற நன்குளில் மாருதப்புரவீகவல்லி ஒர் மைந்தனேப் பெற்ருள். சிங்க வாலும் மனித உருவும் உடையவனும்பத் தோன்றிய அப்புதல்வனுக்கு நரசிங்கன் என நாமமிட்டு வளர்த் தனர். பின் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிள்ளைகள் இரு வரையும் இருகண் போல் வளர்த்து மனப்பருவம் வந்ததும் இருவருக்கும் விமரிசையாக விவாகஞ் செய்து நரசிங்கனுக்குப் பட்டாபிாஷகமும் செய்து வைத்தனர்.
நரசிங்கனும் செங்கோல் செலுத்தி நாடாண்டு வருகையில் கவியரசனுன யாழ்ப்பாடி அரசன் மீது கவிபாடி வந்து, சபை யில் கவியை யாழிலிட்டு வாசித்துப்பாட அரசன் மகிழ்ந்து ஓர் ஊரைப் பரிசிலாக அளித்தான். யாழ்ப்பாடி தான் பரிசாகப் பெற்ற ஊருக்கு யாழ்ப்பாணம் என்று பெயரிட்டு நெடுங்காலம்
45

Page 33
அவ்வூரை ஆண்டான். யாழ்ப்பாடி காலஞ்சென்ற பின் யாழ்ப் பானம் அரசனின்றி அலமரலாயிற்று. இது கண்டு பொன் பற்றியூரில் கார்காத்த வேளாளர் குலத்திலே செல்வராயன் மகளுகத் தோன்றிக் குடிமைகளுடன் யாழ்ப்பாணத்தில் வந்து குடியேறியிருந்த பாண்டி மழவன் யாழ்ப்பாணத்துக்கு ஓர் அரசனேத் தேடிக் கொண்டுவர இந்தியாவிற்குச் சென்ருன். அங்கே மதுரைச் செழியசேகர பாண்டியனது தவத்தால் அவன் மகனங் அவதரித்து, சோழ சக்கரவர்த்தியால் சோழ சக்கராதி பத்தியத்தை நிர்வகிக்கும் உயர்ந்த உத்தியோகத்தில் நியமிக் கப்பட்டிருந்த செகராசன் என்னும் சிங்கையாரியன் அரச லக்ஷணங்கள் அனைத்தும் அமைந்தவனுயிருத்தலேக் கேள்வியுற் றுப் பாண்டிமழவன் அவனிடம் சென்று யாழ்ப்பாணத்து அரசை ஏற்கும்படி அவனே வேண்டினுன். பாண்டிய மன் னர்க்கு முடி தொட்டுக் கொடுக்கும் பரம்பரையினனுண பாண்டி மழவன் வேண்டுகோளேச் சிங்கையாரியன் ஏற்று யாழ்ப்பா னத்துக்கு வந்து நல்லூரை இராசதானியாகத் தேர்ந்தெடுத்து நகரி நிர்மாணித்து பட்டாபிஷேகத்துக்கு வேண்டிய சாமக் கிரியைகளெல்லாம் சேகரித்து நன்முகூர்த்தத்தில் மங்கள வாத் திய முழங்க மறையவர் ஆசிகூறச் சகல சம்பிரமங்களு டனும் பட்டாபிஷேகம் பெற்று, பாண்டிமழவன் முடிதொட்டுக் கொடுக்க முடியும் சூட்டப் பெற்றன். பின் அரசன் பலவகைத் தானங்களும் செய்து சிவபிரான வழிபட்டு அறுசுவை உண்டி அருந்தி மகிழ்ந்து பட்டத்து யானை மேலேறிப் பவனி வரக் கண்டு நகர மக்கள் பலவாறு புகழ்ந்து வாழ்ந்து வரலாயினர். நங்கையர் அவன் அழகைக் கண்டு மயங்கிப் பலவாறு வியக் கலாயினர். இவ்வாறு நகரத்தார் அனேவர்க்கும் கண்களிப்புண் டாகக் காவலன் ஊர்வலம் வந்து அரண்மனையை அடைந்து சிங்காசனத்திருந்து இராச்சிய விஷங்களேக் கவனிக்கலாயினன்.
மதுரையை ஜன்மஸ்தானமாக வுடையவனும், பிராமன குலத்தவனும் வேதக் கொடி யுடையவனும் தாமரை மாலே யணிந்தவனும் பல விருத கள் பெற்றவனும் பெருந் தகைமை, அருள். விவேகம், காம்பீரியம் ஆகிய நற்குணங்கள் அமைந்த சான்றேனுமான புவனேகபாகு என்பவனைத் தன் மந்திரியாக்கி நல்லூரிற் குடியிருத்தினுன்
சிவநேசச் செல்வனும் அன்னதானம் முதலாய தருமங்கள்
செய்வதில் அளவில்லாத விருப்பமுடையவனும் மேழிக்கொடி உடையவனும் வேங்கை மலைத் தலைவனும் கார்சாத்த வேளர்
46
 

ளர் குலத்தவனுமான பொன்பற்றியூர்ப் பாண்டி மழவனையும் அவன் தம்பியையும் இவ் விருவர்க்கும் மைத்துனனுன செண் பக மழவனேயும் அவன் தம்பியையும் செல்வம், கல்வி, நாகரி
கம் யாவற்றிலும் சிறந்த திருநெல்வேலியிற் குடியேற்றிஞன்
துளுவ வேளாளனும் கீர்த்திமானும் கலைஞரை ஆதரிப்ப வனும் அருங்கலே வினுே தனும் குவளே மாலே அணிந்தவனு மான காவிரியூர் நரசிங்கதேவனை வளம் மிகுந்த மயிலிட்டியில் வாழவைத்தான்.
முத்தமிழ் வித்தகனும் மலர் முகமும் இன்சொல்லும் அழ, கும் உடையவனும் அரச சபைக்குரிய கம்பீரமுடையவனும் மேழிக் கொடியாளனுமான வாலிநகர் வேளாளன் செண்பக மாப் பாணனேயும் அவன் ஞாதியும் குவளை மாலே யணிந்தவனுமான சந் , ரசேகர மாப்பானனேயும் காயல் நகர்ப் பொன் வைசியனும் ரூபவானும் சீரகமாலை அணிந்தவனுமான கனகராயனேயும் நீர் வளமுடைய தெல்லிப்பழையிற் குடியிருத்திசூன்.
மேழிக் கொடியினனும் குவளே மாலேயுடையவனும் வேளாண் தலைவனும் சிறந்த கலைஞனும் செளந்தரியவானும், பொன்கு பரணங்கள் அணிந்தவனுமான பேராயிரவனேச் சோலேவளம் மிகுந்த இணுவிலிற் குடியேற்றினன்.
பெருங் கொடையாளனும், குவளே மாலே யணிந்தவனும் பெருஞ் செல்வனும் பராக்கிரமசாலியும் சிவபத்தனுமான கச்சூர் வேளாளன் நீலகண்டனேயும், அவன் தம்பியர் நால் வரையும் பச்சிலேப்பள்ளியிற் குடியிருத்தினூன்.
சாதுரியவானும், குவளை மாலை அணிந்தவனும் சத்திய சந் தனும் கல்விமானும் கொடையாளனும் செல்வனும் ரூபவா னும் சிகரிநகர் வேளாளனுமான கனகமழவனேயும் வேறு நால்வரையும் புலோலியிற் குடியிருத்திகுன்.
பெருஞ்செல்வனும் குவளே மாலே யணிந்தவனும் கவிஞரை ஆதரிப்பவனும் மேழிக் கொடியாளனுமான கூபக நாட்டு வேளா என் கூபகாரேந்திரனேயும் அவன் ஞாதியான நரங்கு தேவனே யும் வளம் மிகுந்த தொல்புரத்தில் இருத்திஞன்.
வில்லில் விசயனேயும் போரில் வீமனையும் கொடையிற் கன்னனையும் புகழிலும் பொறையிலும் தருமனேயும் ஒத்த
ܓܕ ܐ
47

Page 34
புல்லூர் வேளாளன் தேவராசேந்திரனைக் கோவிலாக் கண்டியில் இருத்தினுன்.
கீர்த்திமானும், தொண்டை மண்டலத்து வேளாளனும் குவளை மாலையாளனும், கம்பர் பாடிய ஏரெழுபது கொண்டு ஒவ்வோர் பாட்டுக்கும் கனகாபிஷேகம் செய்த வேளாளர் குலத் தில் வந்தவனுமான மண்ணுடு கொண்ட முதலியை இருபாலை யிற் குடியிருத்திகுன்,
பெருஞ் செல்வனும் மனவுறுதி, பொறுமை, நீதி ஆகிய வற்றை உடையவனும் குவளை மாலை உடையவனும் கீர்த்தி மானும், செய்யூர் வேளாளனுமான இருகுலமுந் துய்ய தனிநா யக முதலியைத் தென்பற்றையும் நெடுந்தீவையும் பாதுகாக் நியமித்தான்.
வஞ்சிநகர் வேளாளன் பல்லவனையும் மற்றும் இருவன ரயும் வயல் வளம் நிறைந்த வெளிநாட்டிலிருத்தினன்.
பின் தலையாரி, சேவர்களை நியுமிக்கத் தொடங்கி வல்லிய மாதாக்கனை மேற் பற்றுக்குக் கர்வலாக வைத்தான் இமை யாண மாதாக்கனை வட பற்றுக்கும் செண்பக மாதாக்கனைக் கீழ்ப்பற்றுக்கும் வெற்றி மாதாக்கனை மேற் பற்றுக்கும் காவ லாக வைத்தான். படை வீரசிங்கனைச் சேஞதிபதியாக நியமித்
is reor.
ஆனைப்பந்தி, குதிரை லாயம், படைவீரர் தங்குமிடம் ஆகிய வெல்லாம் அடைவே அமைப்பித்தான்.
இவ்வாறு ஆகவேண்டியவெல்லாம் அமைத்து முடித்து, இர வும் பகலும் மதுரைச் சொக்கநாதர் திருப்பதங்களையே சிந் தித்து அரசாண்டு வருகையில், யாழ்ப்பாணத்திலே சொக்க நாதர் கோவிலமைக்க விரும்பி அவ்வாறு செய்வதென ஒரு நாள் தீர்மானித்தான். அன்றிரவு அரசன் துயில் கையில், பிரம விஷ்ணுகளுக்கும் வேதங்களுக்கும் எட்டாத பூரீ கயிலாயநாதப் பெருமான், சர்வாங்க பூஷிதரான மானுட வடிவந்தாங்கிச் சர்வாங்க பூஷணியான தேவியுடன் அரசன் சொர்ப்பனத்திற் காட்சியளித்து, "நம்பெயர் கைலாயநாதன், நம்மை மறந் தாயோ?” என்றருளி மறைந்தனர். அதுயிலுணர்ந்து திருவருளைட் போற்றித் திருக்கோவிலமைக்க முகூர்த்தம் தேர்ந்து, வேத விதிப்படி மதில் அமைத்து, மூன்று பிரகாரங்களும் வகுத்து,
48

ஈசனுக்கு ஆலயம் அமைத்துப் பக்கத்திற் பார்வதியம்மைக்கும் திருக்கோயில் அமைத்து, பரிவார தேவர் கோவில்க்ள், யாக சாலை ஆகியவும் உரிய இடங்களிலமைத்து, உக்கிராணசாலையும் உண்டாக்கி, திருமஞ்சனக் குளமும் திருத்தி, அந்தணர் வாழும் மாளிகைகளும் அமைத்து வேதாத்தியயன சாலை, அன்னதான மடம், தேரோடும் வீதி, மடங்கள், நந்தனவனங்கள், தாமரைக் குளங்கள். சந்திரகாந்த மேடைகள் ஆகியனவும் அமைத்து, திருக்கேதாரத்திலிருந்து மன்மதஞல் அருச்சிக்கப்பட்ட சிவலிங் கம் அழைப்பித்து, பிரதிஷ்டை செய்ய ஒரு நல்ல சைவா சாரியரை அனுப்பிவைக்குமாறு சேதுபதிக்குத் திருமுகமும் அனுப்பினுன் செகராசசிங்கையாரியன். சேதுபதி காசி நகரத் தவ(கம் வேத பாரகருமான கங் காதரக் குருக்களை அனுப்ப, அவரும் வந்துசேர்ந்தார். பிரதிஷ்டைக்குப் பந்தல் இட்டு, மேற்கட்டி கட்டி, அலங்கரித்து, முறைப்படி கிரியைகள் யாவுஞ் செய்து, சந்திரசேகரப் பெருமானுக்கும் உமையம்மைக்கும் பீதாம்பர ஆபரணுதி அலங்காரங்கள் யாவும் செய்து, சோட சோபசாரங்களும் அளித்து, கயிலாயநாதர் எனச் சிவபிரானுக்கு நாமகரணமும் செய்து, ஓமம் முதலிய கிரியைகளும் முடித்து, மங்கல ஆம்பத்தில் திருமஞ்சன நீரை எடுத்து எம்பெருமானது
திருமேனியிற் சொரிந்த வளவிலே, திருக்கயிலாய ഥി
எழுந் கருளியிருக்கும் பூரீ கயிலாயநாதர் இவை களையெல்லாம் திருவுளத்திற் கொண்டருளி திருநந்தி தேவரை நோக்கி
"இதுவரை இந்தக் கயிலாயமலையும் தென்கயிலை எனப்படும் திருக்காளத்தி மலையுமாகிய இரண்டிடத்தும் பெருவிருப்போடு
உறைந்தோம். இன்று மூன்ருவது கைலையாகிய நல்லூரிலே கைலாசநாத சுவாமி கோவில் ஒன்று அமைந்தது. மற்றக் கயிலைகளிற் போலவே அங்கும் மாருமகிழ்வுடன் அமர்ந்தருள வேண்டும். இக்கணமே அங்குச் செல்வதற்கு உன் கணங்களும் நீயும் புறப்படுவாயாக" என்று திருவாய்மலர்ந்தருளிஞர். நந்தி தேவரும் உடனே புறப்பட, எம்பெருமான் பார்வதி சமேத ராழத் தேவர், சித்தர், வித்யாதரர் முதலியவர்கள் போற்றக் கணநாதர் புடை சூழ எழுந்தருளி நல்லூர்க் கயிலையை நாடி வந்து அங்குப் பிரதிஷ்டை செய்யப்பட்ட தமது திவ்ய மங்கள் விக்கிரகத்தில் சாந்நித்தியமாய்க் கர்ப்பூர தீபாராதனை யாதிகளை யெல்லாம் உவந்தேற்றுக் கொண்டபின் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வீதிவலம் வந்து மீண்டும் திருக்கோவிலில் புகுந்து அரசரும் குடிகளும் சிறப்புடன் வாழுமாறு அவ்வால யத்தில் எழுந்தருளிஞர்.
49

Page 35
KALAYAMALA
A TRANSLATION
Navalarkoddam A. Mootootambypillay
INVoCATION
May God Ganesha, the elephant-headed who wrote the Mahabharata on the lofty Himalayas, be a help to the Kailaya Malai (wreath to put) oa Him who wears on his matted lock of hair the Moon and the Ganges and whose half is his consort
TEXT
In Jambudwipa which derives its name from a jambu tree which stands to the south of Meru, and in one of its nine divisions which is called Baratakanda of great fertility and in the country called Ilamandala of celestial face, there is by the -ide of the sea a sacred spring.
Once on a time, long long ago, there ruled a king of the Solar dynasty, of appearaace like the rising Moon, and a dodcendant of Maru, whose garland was of Raceanosa, and whose umbrella was matchless and of great fame. He belonged to the Chola family, was the lord of the country by the side of the Kaviri; he had a flag with the emblem of a tiger and was known by the same of Jagaraja Raja Cholan. One of his daughters, a virgin of lightning beauty, having resolved to bathe in the sacred spring in order to be cured of her disease, started with ber attendants and servants along with her body-guards, caane down to the spring and bathed. When night approached, she pitched a tent, had it guarded on all sides and went to sleep on a fine couch. Then the lion-faced King of Kadiramalai, a devotee of Kartikeya, sora of Chěnkada, the protector of the Devas, suddenly entered the canop, took her away to his old cave and married her there. Both lived in the palace in great bliss, and were as happy as lindra and his consort.
5O

In due course the princess gave birth to a beautiful sea, who was afterwards called Narasinga Raja and was brought up with great care. A few years after, she brought forth a female child. Both the children were brought up with great fondness and care. The prince - when he came of age - was married to his sister and was crowned with immense pomp, to the great Joy of the people, in that they cxpected from him a more prosperous and peaceful rule. His power was so great that his rule extended over a vast area. He subdued all the neighbouring kings and ruled with as much independence as Rama.
s
One day a flute-player (Yalpananj went to his court and played on his flute so charmingly that the king was greatly pleased and he made a gift of the tract of land which is henceforth called Yalpanam (Jaffna), meaning the flute-player's land. The flute-player, having received the land, ruled over it for a long time. After his death, there was a short interregnum.
Seeiag that the country was suffering without a king, Pandi Malava. som of Selvaraja of Ponpattiyur who belongs to a high Vellala family, which held the hereditary right of handing over the crown to the officiating priest on the occasion of the coronation ceremonies of the kings of Madura, went to the prince Singai Ariyan, the son of Pandiya Sekara, then ruling over Madura and begged of him that he might become the king of Jaffna. To which, the prince readily consented and went over to Jaffaa with his retinue and founded the town of Nallur.
There he constructed a beautiful palace where he was crowned with great pomp and festivity to the great joy of the country men and the royal insignia were handed over to him by Paradi Malava. Free gifts of lands and gold were made to Brahmans and others. The poor were sumptuously fed and all over the country there was endless airth and joy. The royal elephant was decorated and the Rag was taken on it in prooed hion through the streets. The people in the streets paid their respects with due homage, greeted, praised and prayed for th ki" log life aad prosperity.
The king after ascending the throne appointed as his Prime Mlalu ter, Buyaneka Vaku, a learned Brahman of a high family
5

Page 36
in Madura, and made him reside at Nallur. He made Pandi Malaya of Ponpattiyur, formerly of Venkatagiri, a man of Gengakula, a man who had a plough flag, a man of great generosity and liberality, who was fully disposed to feed the poor and rich alike, to reside at Tirunelveli with his brother and brother-in-law. Chempaka Malava. Next came in Narasinga Deva of the Tuluva clan of the Vellala division; a man of Gengakula and a nobleman of worldwide fame who freely patronised the learned, and used to wear a garland of water lilies, was a great lover of learning, whose native place was Kaviriyur. He was nade to reside at Mayiliddi.
Then came another leading Vellala who had a plough flag, whose native place was Valinagar. He had the appearance of Cupid; he was well versed in all the three branches of Tamil, and his natue was Chenpaka Mappana. He and a relation of ai called Chandrasekara Mappana and another called Kanakaraya, a Vellan Chetty by caste who used to wear a garland of cummia, were made to reside at Tellippalai, a place of great. fertility ind of never-failing water-supply and of unique distinction.
The next was the Vellala of Koyalur who had a plough flag and a garland of water-lilies, He was a man of great influence, learning and chalming appearance, and his name was Prayiraua. He was made to reside at Inuyil, a village abounding
with sugarcane, plantaia and are canut trees and with paddy fields.
The next was a Vellala of Kachchur, whose hands were liberal as the Kalpa tree. He had a garland of water-lilies, he was a man of great wealth and of handsome appearance. He was of itscore parable valour, and of great devotion to Siva, and his name was Nilakanda. He and his four brothers were made to reside at Pachilalpalli.
The next was the Velala of Sikari, a man of great istelligence who had a garland of water-lilies. He was famous for truthfulness, learning, civility, industry and was full of resource. He had a commanding appearance, and his name was Kanaka Malaya. He with his four brothers was made to reside at Puloli.
52

The next was the Vellala of Kupakan. He was as wealthy as Kubera, he had a garland of water-lilies, he was a patron of the learned, he had a plough flag and his name was Kupakarendra. He and Narangudeva a relation of his, famous for charitable deeds, were made to rsside at Tholpuram, a town without an equal.
The next was the Vellala of Pullur, an Arjuna in archery a Bhima in warfare, a Kana in liberality, a Dharma in fame and forbearance, whose name, was Devarajendra. He had corwin of old set with precious stones. He was asked to reside at Koyilakkandi.
The next was the Wellala of the family of him who shed over Kamban a shower of gold for the work of Erezhupatu, whose country was Tondainadu, who had a widespread name, who used to wear a lotus garland and whose name was Maynaduka. mida Mí udali. He was made to reside at Irupalai.
The next was the Vellala of Seyur, who was as wealthy as ladra, and who never deviated from the path of virtue whose garland was of water lilies, whose fame was great and whose paternal and maternal lines were matchless and pure and whose name was Taninayaga. He was made a chief of Naduntive.
The next was the Vellala of Vanchi, whose name was Pallaya. He, with two other chiefs, was placed at Welinadu.
The king having appointed these, thought of appointing headmen and other servants and accordingly appointed ValliaMatakan, a man of great valour and power, to be the headaa of the Western 4ivision; Imaiyana Matakan to be the headman of the Northern division; Chenpaka Matakan, a powerful man whose name was known even as far as the Himalayas, to be the headman of the Eastern division; Vetti Matakan, a man of great power, te be the headman of the Southern division; Virasingan, who fought several battles and an experienced soldier, to be
the commander-in-chief of his army.
His army consisting of elephants, cavalry and infantry was made into several divisions and posted in different quarters,
53

Page 37
The king made all such other arrangements and ruled in peace the country of Yalpanam. He directed his attention towards agriculture and the cultivation of the Tamil language by establishing an academy.
The king had long cherished in his mind an idea to build a temple at Nallur for his beloved Sokkalingam, the form of . Siva in which he is worshipped at Madura, and this was working day and night in his mind. One day, God Siva, who cannot be seen even by Brahma, Vishnu or the Vedas, and who is but an absolute flame of wisdom, assumed a human body and appeared to him in a dream wearing beautiful Barrings, bracelets, an upper epaulet, anklets, a golden dress and a crown, accompanied by his consort beautifully dressed God Siva addressed the king and said that His name was Kailayanata. The king awoke and believing that it was Siva who enslaved him under that disguise, felt happier than ever.
The next morning he sought an auspicious day to coamence the work and on the fixed hour started the work aad duly completed the temple. As enjoined in the shastras, he constructed beautiful encircling walls, three divine courts, a shrine of admirable architecture for Siva, a shrine to Parvati with side apartments for minor deities, a sacrificial hall, a store - house and a tank for the divine bath. After coopleting the temple, he built mansions for priests, a chamber for offering incense and camphor, a hall for chanting Sana Veda and a free feeding-house, and constructed a road for the car. He then prepared a flower-garden and beautiful parks all around, a boun. ding with high trees and with tanks shining with water-lilies.
and lot uses and with artistic terraces to that the spot looked like a celestial city. In the meantime, he ordered out from Ketaram a Lingam which was originally worshipped by Manmata, the God of love. He had also applied by a letter to the Raja of Ramnad (Setupati) to select and send a Brahman as an officiating priest, and the Raja of Ramaad seat a Benares Brahman of high repure and of attainment in Vedic knowledge, whose name was
Gangadava.
54

On his arrival, the king fixed an auspicious hour for the dedication. The temple within and outside was tastefully decorated with booths constructed on sandal posts and ceiled with variegated cloths of artistic designs in different colours and finished with fringes of cloth, and flower garland and with tassels of pears at regular intervals. The booths were adorned with numberless flags and the fronts with bunches of plantains, arecanuts and screwpine fruits. The streets were decorated on both sides with plantain, areca and Sugarcsine trees and with cords hanging with garlands. The floor of the temple was smeared with fragrant sandal paste and there a throne of great splendour set with rubies, blue sapphires, cat-eyes. diamonds and pearls was placed. The Brahman priest, having bathed. and wearing aa amulet on his right wrist, drew a figure of a bull on the floor and over it heaped rice brought from all the eight qua ters aud spread it in the shape of a lotus. Over it were spread powders of five colours and then a layer of sacred Kusa grass Upon the grass a gold pot was placed, the Priests then showered flowers over the pot and worshipped with joined hands. Then he encircled the pot with a silk and spread round prouts of corn. Afterwards chanting Maratras he set there the images of Siva and Uma and dressed them with sile and adorned them with beautiful jewels. He burnt fragrant incense and offered flowers one by one chanting Vedic mantras and heaped at the divine feet flowers of lotus, jasmine and cf many other kinds. He offered several tinds of rice preparations in heaps like hills, with piles of mangoes, jack. plantains and other sweet fruits. Besides these, he made offerings of young cocoanuts, honey, ghee, fruit juice, milk and curds, finally betel and outs in beautiful trays. At last, the priest took the golden pot filled with holy water and poured ove the images and consecrated them in the midst of great roar of musical truppets, and drums of various kinds and praises, songs and hymns and colled Siva by the name of Kailayanata and invoked Him at the image.
And God Siva who is not visible even to Devas, holy Sages and to those who renounced the world who cannot be pereeived by the mental faculty, who cannot be described by words and even by Vedas, who has no beginning nor end, who is all
55

Page 38
pervading though invisible even to the great Brahma and Vishnu,
who is without coaparison and never changing, who is nought else but pure and self evident truth, who is without a for a and whose begining, end, middle, whole crown and foot cannot
be imagined, who is an effulgence of conciousness, who as a deed of justice bent the Meru as his bow and burnt the three forts, who shines whinia the mystical letter AUM" who forms the soul of all the letters, I who forms the dua deeds, the intelligence and the self of every thing, who is still not affcted by happines or sorrow, whose manifestations are fire, earth,
air, water and space, who is one and all, who is existenc at d non-existence, who sees good and bad alike, who is the
God of wisdon who has as, His lovelier half the Mother who gave birth to all the fourteen worlds and the animate and inanicate kingdoms thereof, who so kindly and
graciously confers endless bliss on those who are devoted to Him, who with his third eye on the forehend burnt the God ( f Love, who has been so gracious to give us His sons the Eleph ant faced God and his brother Kartikeya, who is so indulgent to his devotee as in the case of Sundara to run as a messenger, who dances on the stage of the creative hail with his soun
ding anklets to sound and the Ganges on his head inspiring fear whose forms are Puranas and Vedas and who takes such forms
as imagined by his devotees, who so graciously grants the prayers ef those who once utter the syllable of Siva, who swallowed the deadly poison which arose from the sea of milk when the Devas were churning it for sectar and there by protected them from being overwhelmed by the poison, who flayed and wore the skin of the terrible elephant which came out to destroy the world. He received in to his gracious heart the humble, pious the earnest prayer of the priest, and was graciously pleased to take Nallur as his third Kailasa and as one of his favourite abodes and accordingly came down with his divine following to dwell in the image and to grant his devotees
their wishes.
The Author
It was I, Muturaja, the crown of poets, and tke som of Sentiappan of Uraiyur who composed and laid down Kailaya Malai in high Tamil to the approval of the learned.
56

----thușeș sindqnotos@ avogsqadhẹluoso)@) ugïonwq (soo@gdgs æresgoogiseltias»· --- »goodwa ulio lyofeso)ș ude&souosog)4yJIĠęła�4$s.foudresso -germīnī£ qıfı)as@@@stogąİĞ)g(o) 食090794塔一-��sqauusųøfteg)*Affợrış»os)syfầeg)«pænugjự9? |-thusos)?sionoș»e4«Illus preo)] đĩærıņ99qog&)4ysgïgoure49:9 sriņuon soruş9°C) -,fiusoe)?\sing)gieo gagur | sorodowe og | sq rispune,ț¢韃 sydson lors@ị thuosoofing)49.940-tallo qørelo) | (fæøTTņģșqęgĒC) yogigo urteși souristudidoeg)11&s= quae@ uorgio· -tnuosae)?&fqigos gøreqpes) ygsg) igoqorto usoqi dhọujos)(3) ugforsvg |49 dgs dousryw gasono 0,3--•agorngresourie|| ởficerīņsgogoșc) postomus�rnu domes, - ·4ıraşıạo qortođơnoaso Įidoqi so usogoodonutsspree)[991]æg)h | yogi uomųog{«gøređơnomos bıqiņs@(q11ccounsfiurn) | (@ugsfiggs)-喻 asgugiL9F(g)专;1ķīūō-仁同예제ymrių) įrbas; /*91点"。一) 一圈封es
1įoo! fe (logoể sẽ sụīēG SÉs gimgÍ 1ęsmụumousią goumooto

Page 39
4».org/s9d so
·1șoregsgo, ĝigogog) igogosmylimotorsgeuńsoo «poptouw sąfree) - fająfrișoe) 49°? uos van orilogo? :) - Kỉ qorı,fig , ! 1ţsoņrtsasgoĚ și@qğrı sãoặgingÍ 1çsmụumotsessigeusoe)
«poș ușuqi rngsspre - Rīgfrīqfơno «şoşujouan mae Lim Jaú, $ - sĩqỉrı-arts
41090ausgfo@**』JJ』お「Jeシeagunovë) | (0-sr-ı«», oe, &soft) - ngelse,QQgg 4,377&o uos huse, poñand«» ue ulloreg)德A형sAG통 3gragsreușo•rvasmudrad Assissanuá57 \ųjśgsono udỡ svænaseviusthusosoportsg)«şooșơngedurioçıs@gogiựHudsoơn@unkgígyruh «pus uusreo-49uogoșuoạnsơregnæstfron@.aerae),岭đfforrás
•••••••thusos)?&fiợig)劑***nesov封慧 |- •<»• din uus preso©augígsres)qysosegons ·主岛4. re&##4ılırw
·●4행r결●**r? 4ysoso@g9.gs sørgeon yosonaegre@鲁quæ Ø (4/orgio)ggi세대, 1,200%;"|-|| =4ırasıqigo 4s-iașoseaegs �49° domuuselpreo)gogorasadoq&sortபூடிெச{49Tingswoogi qi-17.Two șos@@ 知事-que@ uwięış|--, gænge usoAge od 77 ulio lyonso) |사용합니T&9.5mon4/fīų,9 uso«proog)sosyɛɛdaj įqi&s@劑「Q劑「 დ?uთtiuose)•ĮIīsās ymrie, grossgos
는同利 ミモgoミシg s
gogoymnobi@

கைலாயமாலையிலுள்ள இடப்பெயர்கள்
இணுவில் - 27 இருபாலை - 30 ஈழமண்டலம் - 2 உறையூர் - 44 கச்சூர் - 28 கதிரைமலை - 4 காசிநகர் - 36 காயல்நகர் - 27 காவிரியூர் - 23 ழ்ேப்பற்று - ே கூபகநாடு - 29 கொங்கம் - 20 கோவற்பதி - 27 கோவிலாக்கண்டி - 30 சக்கரவாளகிரி - 7 திகரிமாநகர் - 28 சேயூர் - 30 திருநெல்வேலி - 25 தெல்லிப்பழை - 27 தென்பற்று - 30, 31 தென்மதுரை - 15 தென்னிலங்கை - 13
தொண்டைநாடு - 30 தொல்புரம் உ29 நல்லூர் - 16, 24, 39, 44 நாவலந்தீவு - 2 நெடுந்தீவு - 30 பச்சிலைப்பள்ளி - 28 பரதகண்டம் - 2 புல்லூர் - 29 புலோலி - 29 பொன்பற்றி - 14, 25 மதுராபுரி - 24 மதுரை - 13, 3 மயிலிட்டி - 23 up6wrt-th = 20 மேற்பற்று - 31
யாழ்ப்பாணம் - 8, 14, 15 வங்கம் - 20
வஞ்சிநகர் = 81 வடபற்று - 31 வாலிநகர் - இ9 வெளிநாடு - 31
கைலாயமாலையிலுள்ள நாட்டின(குல)ப் பெயர்கள்
இரவிகுலம் - 2
கங்கை(கா)குலம்- 14, 25, 29
கருநாடர் = 9 கேகயர் - 9 கேரளர் ம 9 கோசலர் - 9 சனவகம் உ9 gøTrif - 9 சேதியர் 9
சோனகர் - 9 தயனகுலம் - 9
துளுவர் உ9 5ே
நதிகுலம் - 28 பாகீரதிகுலம் ல் 25மலாடர் - 9 arrasasi - 9 மாளவர் - இ afprrıf2 = 9
59

Page 40
கைலாயமாலையிலுள்ள மக்கட் பெயர்கள்
இமையாண மாதாக்கன் - 81 இராமன் - 7 கங்காதரன் -36 கம்பன் - 30 கனகமழவன் - 29 கனகமழவன் தம்பியர் = 29 கனகராயன் - 27 கூபகாரேந்திரன் - 29 சந்திரசேகரமாப்பாணன் - 26 சிங்கையாரியர்கோ - 20 சிங்கையாரியன் - 13 செகராசன் - 19 செந்தியப்பன் - 44
செண்பகமழவன் - 25 செண்பகமழவன் தம்பி - 25 செண்பகமாதாக்கன் - 81 செண்பகமாப்பாணன் - 26 செயசிங்கவாரியன் - 38 செயவீரன் - 20 செல்வராசன் - 14 செழியசேகரன் - 13 சேதுபதி - 38
єо
சோழன் மகள் உ3 தனிநாயகன் = 80 தேவராசேந்திரன் -30 நரங்குதேவன் - 29 நரசிங்கதேவன் - 26
நரசிங்கராசன் - 6
நராகத்தடலேறு - 4 நீலகண்டன் - 28 நீலகண்டன் தம்பியர் - 28 u6i)6w6nuair - 81. பாண்டவர்கள் ம 15 பாண்டிமழவன் - 14, 18, 25 பாண்டிமழவன் தம்பி உ25 பார்த்திவர் இருவர் - 3
புவநேகவாகு - 24
பேராயிரவன் - 27 மண்ணுடுகொண்டமுதலி-30 முத்துராசன் - 44
யாழ்ப்பாணன் = 8
வல்லியமாதாக்கன் - 31
வீரசிங்கன் - 31
வெற்றிமாதாக்கன் - 31


Page 41

பிழை திருத்தம்
பக்கம் 24 153 ஆம் கண்ணியை 152ஆம் கண்ணியுடன் சேர்க்க
இப் பக்கத்திலுள்ள அடிக்குறிப்பை முற்றக நீக்குக.
பக்கம் 25 158, 159ஆம் கண்ணிகளை 157ஆம் கண்ணியுடன் சேர்க்க.
Luis 27 170 ஆம் கண்ணியை 169 ஆம் கண்ணியுடீன் சேர்க்க.

Page 42