கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோடை

Page 1
■■ ■ --'('「魔_*
Nosae – †
 


Page 2


Page 3

மஹாகவியின் கோடை

Page 4
எழுதியது: பெப்ரவரி 1966 முதல் மேடையேற்றம்: ஒகஸ்ட் 1969 முதல் பதிப்பு: செப்டம்பர் 1970 இரண்டாம் பதிப்பு: நவம்பர் 1988 மூன்ரும் பதிப்பு: ஜூன் 1990
C) திருமதி பத்மாசனி உருத்திரமூர்த்தி
வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம்.
அச்சு: ஆசிர்வாதம் அச்சகம் யாழ்ப்பாணம்.
அட்டை: புனிதவளன் அச்சகம்
யாழ்ப்பாணம்.
Lakasaasira xiw -- 74 - 88
as a

தேவநேசன் நேசையா
சென்ற இடங்கள்
இறக்கப் பணி யாற்றி
நின்ற பெரியன்
அதனுல் நினக் கன்புக்
காணிக்கை இந்தக் கவி.
மஹாக வி
11 - 9 - 1970

Page 5
கோடையின் பிறப்பு
நாடகம் பலப்பல நடக்கக் காண்கிருேம், ஆடுவோர் தேவரும் அரக்கரும் ஆன புராண காலப் பொய்களே அதிகம். ஆடையும் அணிகளும் மினுங்கும் அரிய அரசர்க ளுடைய பெருமைகள் கூறும் சரித்திரக் கதைகளும் சரிக்குச் சரியே,
அச்சிலே அடித்த பாத்திரங்களையும் அச்சிலே அடித்த சம்பவங்களையும் கண்டு கண்டு கவலைகள் கொண்டோம்.
நேற்றைய செய்தியை நிதமும் பார்த்துச் சீற்றம் அடைந்த மிகச்சில பேர்கள் இன்றைய காலத் திறங்கி வந்தனர்.
இவர்களும், - அதிசய மாக அந்தநாள் அறிந்தும், புதிய காலப் போக்குகள் உணராக் கேலியும் பகிடியும் கிண்டலு மான போலிகள் படைத்து விகடம் புரிந்தனர்.

இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள், இன்றைய காலத் தியங்கும் நோக்குகள், இன்றைய காலத் திழுப்புகள், எதிர்ப்புகள், இன்றைய காலத் திக்கட்டுக்கள் என்றிவை காணவோ மேடையில்லை.
புதிய களங்கள், புதிய போர்கள், புதிய வெற்றிகள் - இவைகளைப் புனையும் நாடகம் வேண்டி நம்மொழி கிடந்தது கோடையை எழுதும் காலமும் குதிர்ந்தது.
எழுதி எழுதி ஏட்டொடு கிடக்கும் பா நாடகங்களே பயிலும் தமிழில், கோடை ஒர் புதிய கொடி உயர்த்தியது.
தாசீசியஸ் அதைத் தயாரித் தளித்தார். நுஃமான் அதனை நூல் செய்கின்ருர் . சைத்திரீகர் "செள' வின் கோடுகள், சிவலிங்கத்தின் சித்திரம் கிடைத்தன. இவர்களுக் கெனது நன்றிகள் இயல்க.
நாடகம் புதியதோர் நடையில் ஒடுக இனி இக் கோடை யோடுமே!
மஹாகவி
11-9-1970.

Page 6
இரண்டாம் பதிப்பின் முன்னுரை
சரியாகப் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மஹாகவியின் கோடை இரண்டாம் பதிப்பாக வெளிவருகின்றது. இதன் முதற் பதிப்பு 1970 செப்டம்பரில் வாசகர் சங்க வெளியீடாக எம்மால் வெளி யிடப்பட்டது. அப்போது அதன் அச்சாக்கத்தில் மஹாகவி எம்மோடு கூட இருந்து உதவினர்.
மஹாகவி கோடையை எழுதி இருபத்திரண்டு ஆண்டுகளா கின்றன. இந்த இடைக்காலத்தில் ஈழத்தில் தமிழ் நாடகத்துறை கணிசமான வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. குறிப்பிடத்தக்க சில நாடக நூல்களாவது வெளிவந்திருக்கின்றன. நல்ல நாடகங்கள் பலமூலமாகவும் மொழிபெயர்ப்பாகவும் - மேடையேறி உள்ளன. நாட கம் பற்றிய அறிவும் ஆர்வமும் அதிகரித்திருக்கின்றன. நாடகப் பயிற்சி முகாம்கள் பரவலாக நடைபெற்றிருக்கின்றன. பல மாணவர் கள் க. பொ. த. (உயர்தர) பரீட்சைக்கு நாடகத்தை ஒரு பாடமாகப் பயில்கின்றனர். பாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பட்டப் படிப்புக்கு நாடகத்தை ஒரு பாடமாக அங்கீகரித்துள்ளது. இவையெல்லாம் கடந்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களாக நமது நாட்டில் செயற்பட்டு வந்த நவீன நாடக இயக்கங்களின் பெறுபேறு என்று தான் சொல்ல வேண்டும்.
கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று ஆகிய மேடைப்பா நாடகங்களை எழுதியதன் மூலம் ஈழத்து நவீன தமிழ் நாடக இயக் கத்தில் மஹாகவியும் ஒருவராகிருர், நவீன தமிழ் நாடக வரலாற்றில் மஹாகவியின் கோடைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. ஒரு யதார்த்த நாடகம் என்ற வகையிலும் பாநாடகம் என்ற வகையிலும் கோடை தமிழில் இன்னும் ஒரு முன்மாதிரிப் படைப்பாகவே இருக்கின்றது. மஹாகவி ஒரு சிறந்த கவிஞர் மட்டுமல்ல. ஒரு நல்ல நாடக ஆசிரியரும் தான் என்பதைக் கோடை நமக்கு உணர்த்துகின்றது.
vi

இவ்வாண்டில்இருந்து வெளிவாரிப் பட்டப்படிப்புக்குத் தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு கோடை ஒரு பாடநூலாக வைக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி தருகிறது, வழக்கம்போல் வெறுமனே பரீட்சை நோக்கில் மட்டுமன்றி இலக்கிய நோக்கிலும் அரங்கியல் நோக்கிலும் வரலாற்று உணர்வுடன் இந் நாடகம் அணுகப்பட்டால் அது மாணவர் மத்தியில் நாடகப் பிரக்ஞையை ஏற்படுத்தப் பெரிதும் உதவும் என்பது எமது நம்பிக்கை.
இது வரை ஐந்து தடவைகள் கோடை மேடையேறி உள்ளது. ஒவ்வொரு மேடையேற்றத்திலும் இது ஒரு நல்ல நாடகம் என்பது நிரூபணமாகியது, நமது சமூகச் சூழல் சாதகமாக அமைந்திருந்தால் 80 களில் இந்நாடகம் இன்னும் பல தடவைகள் மேடையேறி இருக்க லாம். எதிர் காலத்தில் இது இன்னும் பல மேடைகளைக் காணும் என நம்பலாம்.
இந்நூலில் இடம் பெற்றுள்ள மேடைக்குறிப்புகளில் பெரும் பாலானவை கோடையை முதல் முதல் நெறிப்படுத்திய நண்பர் திரு. அ. தாசீசியஸ் எழுதியவை. முதல் பதிப்பில் இத்தகவல் விடுபட்டுப்போயிற்று. கோடையை நெறிப்படுத்தவிரும்பும் பிறிதொரு நெறியாளருக்கு இக்குறிப்புகள் அவசியப்படாதிருக்கலாம். அவர் வேறுவகையான மேடைக் குறிப்புகளை எழுதக்கூடும். அது நெறியாளரின் சுதந்திரம்.
இந்நூலை இரண்டாம் பதிப்பாக வெளியிட முன்வந்த பூபால சிங்கம் புத்தகசாலை உரிமையாளர்களுக்கும் இதன் அச்சுப்படிகளைத் திருத்துவதில் பெரிதும் உதவிய நண்பர் மயிலங்கூடலூர் பி. நடராசன் அவர்களுக்கும் இதை நல்ல முறையில் அச்சிட்ட ஆசீர்வாதம் அச் சகத்தினருக்கும் மஹாகவியின் படைப்புக்களைப் பதிப்பிக்கும் பொறுப் பினே இன்னும் என்னிடமே விட்டுவைத்துள்ள மஹாகவி குடும்பத் தினருக்கும் எனது நன்றிகள்.
எம். ஏ. நுஃமான் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் 30-0-1988
vil

Page 7
முதற் பதிப்பின் முன்னுரை
*கோடை மஹாகவியின் முக்கியமான படைப்புகளுள் ஒன்று, அரசாங்கத்தாலும் தமிழ்ப் பிரமுகர்களினுலும் இருமுறை தடை செய்யப்பட்ட பெருமை இந்நாடகத்துக்கு உண்டு. நான் அறிந்தவரை யில் மேடையேற்ருமல் தடைசெய்யப்பட்ட தமிழ் நாடகம் இது ஒன்றே, "கோடை பிரபுத்துவ சாதி அமைப்பைக் கேலி செய்வதும் உதாசீனம் செய்வதுமே பிரமுகர்களின் கோபத்துக்குக் காரணமாகும்.
கோடையின் முதல் மேடையேற்றத்தின்போது அதைத் தடை செய்யுமாறு இத் தமிழ்ப் பிரமுகர்களே அரசாங்கத்துக்குத் தகவுரை செய்தார்கள். பரிசீலனையின் பின்னர் இத்தடை நீக்கப்பட்டது. இரண்டாம் தடவை கொழும்பில் ஒரு நாவலர் விழாவில் கோடையை மேடையேற்றும்படி கேட்டார்கள். எனினும் இப்பிரமுகர்களின் உள் வெட்டுக்களினல் கடைசி நிமிடத்தில் - நடிகர்கள் ஒப்பனைக்குத் தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில் - நாடகம் தடுக்கப்பட்டது. நாடகத்தில் சில காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்பது இவர்கள் கோரிக்கை. குறிப்பாக, ஐயர் நாயனக்காரர் வீட்டில் இட்டிலி சாப்பிடக் கூடாது என்று அவர்கள் சொன்னர்கள். நெறியாளரும் நடிகர்களும் அதற்குச் சம்மதிக்கவில்லை;அதஞல் திரும்பிச் சென்ருர்கள்.
இவ்வாறு பிரபுத்துவ சமுதாயச் சின்னங்களைத் தாக்குகின்றது என்ற பெருமைக்குரிய குற்றச்சாட்டு கோடையின்மீது சுமத்தப்பட்ட போதிலும் அதன் அடிப்படைப் பொருள் அது அல்ல. அந்நிய ஏகாதி பத்திய ஆட்சியினுல் கிராம சமுதாய மனப்பாங்கில் ஏற்பட்ட விளைவு கள், முரண்பாடுகளே கோடையின் அடிப்படையாகும். நாடகம் முழு வதும் இந்த அம்சமே விரவியிருக்கின்றது.
viii

இதைப் புரிந்துகொள்ள முடியாத சிலர் இது ஒரு காதல் கதை தானே என்று மிகச் சுலபமாகக் கூறியுள்ளார்கள் , காதலையும் நாயனக் கலையையும் இம் முரண்பாடுகளே வெளிக் கொண்டுவரும் ஊடக மாகவே மஹாகவி உபயோகித்துள்ளார் என்பது சற்று நிதானித்து நோக்கிளுல் தெளிவாகும், w
செல்வம் தன் மகளின் காதலைப் புறக்கணித்து ஒர் அசட்டுப் பொலீஸ்காரனை-அவன் மாதச் சம்பளம் பெறும் அரசாங்க ஊழியன் என்பதற்காகவே-அவளுக்கு மணம் முடித்துவைக்க முயல்வதும், தன் மகனின் கலையார் வத்தை வெறுப்போடு நோக்கி அவனை ஆங்கிலம் கற்பித்து ஒரு கிளாக்காக மாற்றவேண்டும் என்று விரும்புவதும் தேசியக் கலையையும் கலைஞரையும் மேல்தட்டில் உள்ளவர்கள் ஒதுக்கு வதும் அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியின் சமுதாய விளைவுகளே, பிரிட்டிசாரின் வரவின் முன்னர் இத்தகைய மனப்பாங்கு நமது சமூகத் தில் தோன்றி இருக்கவில்லை. வெளியார் ஆட்சியினல் சமுதாய வாழ் வில் ஏற்பட்ட கோடை காலமாக இதை நாடகம் சித்திரிக்கின் றது, 'இதுவோ கடுங்கோடை, வெய்யிலினல் அல்ல, வெளியார் அரசாட்சி செய்யும் கொடுமைச் சிறப்பே அதுதானே" என்பது பஞ்சையரின் குரல்.
இந்த வகையில் கோடை ஒரு சமுதாய வரலாற்று நாடகமா கும். சுதந்திரத்துக்கு முற்பட்ட காலகட்டத்தின் சமுதாய வாழ்வை ஒரு நாயனக் கலைஞனின் குடும்பத்தின் ஊடாக இயல்பு குன்ருமல் அது சித்திரிக்கின்றது.
எனினும் இவ்வரலாற்று விளைவுகளைக் கோடை வெறுமனே யன்றி ஒர் ஆழமான நோக்குடனேயே சித்திரிக்கின்றது. ஏகாதிபத் தியப் பிடிகளுக்கு எதிரான உணர்வைத் தூண்டுவதே அந்நோக்கா கும். நாடகத்தின் கதைப் பொருள் அதை நோக்கியே வளர்ச்சி யடைகின்றது. சோமுவும் கமலியும் தளைகளைத் துணிவோடு அறுத்துக் கொண்டு வெளியேறும் இனந் தலேமுறையினராவர். பஞ்சையர் அக் காலகட்டத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பாளரும் முற்போக்காளருமாக உருவாக்கப்பட்டுள்ளார்.
எனினும் தீவிரமான கிளர்ச்சிகளும் போராட்டங்களும் இன்றி குடும்ப நிகழ்ச்சிகளின் ஊடாக நாடகம் அமைதியாக வளர்ச்சியடைவ தால் சிலர் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ளவில்லை. அந்நிய ஆட்சிக்கு
ix

Page 8
எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தி எதிர்காலத்தைப் பற்றிய நம் பிக்கை தெரிவிப்பதுடன் பஞ்சையர் அமைந்து விடுவது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. ஆனல் மஹாகவி இதற்கு மாற்றமாக நாடகத்தைப் படைத்திருக்க முடியாது. அவ்வாறு படைத்திருந்தால் அது இயல்பு குன்றிய மிகைப்படுத்தலாகவே முடிந்திருக்கும்.
ஏனெனில் இலங்கையில் வெகுஜன ரீதியான தீவிரமான சுதந்திரப் போராட்டம் நிகழவில்லை. மத்தியதர, உயர்மத்தியதர வர்க்கத்தினரே இங்கு சுதந்திரத்துக்காகப் பாடுபட்டார்கள். அவர் களின் போராட்டம் தூதுக்குழுக்கள் மூலமும் அரசாங்க சபைத் தர்க்கங்கள் மூலமுமே நிகழ்ந்து முடிந்தது. ஆகவே கிராமங்களில் அதன் தாக்கம் வலுப்பெறவில்லை. பஞ்சையர் போன்ற படித்த சிந்தனை யாளர்களே அங்கு தோன்றி இருக்க முடியும். ஆகவே மஹாகவி தன்னைச் சுற்றியுள்ள சாதாரண மக்கள் மத்தியில் இருந்து தேர்ந் தெடுத்த பாத்திரங்கள் இதைத்தவிர வேறு விதத்தில் இயங்கி இருக்க (upLq_ULu FTA5I .
எனினும் எதிர்காலத்தின் மீது பஞ்சையர் தெரிவிக்கும் நம் பிக்கை தெளிவானதும் பலம் மிக்கதுமாகும்.
*" என்ருே ஒருநாள், இருந்துபார் மாணிக்கம்: நின்றந்தக் கோயில் நிமிர்ந்து, நெடுந்தூரம் பார்த்துப் பயன்கள் விளைக்கின்ற கோபுரமும், வேர்த்துக் கலைஞர் விளைத்த மணி மண்டபமும், வீதிகளும், நூறு விளக்கும், பரதத்தின் சேதிகளைக் கூறும் சிலம்புச் சிறுபாதம் ஆடும் அரங்கும், அறிந்து சுவைஞர்கள் நாடிப் புகுந்து நயந்திட நீ சோமனுடன் ஊதும் குழலில் உயிர் பெற்று உடல் புளசித்து ஆதி அறையில் அமரும் கடவுளுமாய் என்ருே ஒருநாள் எழும்'
பஞ்சையரின் இக்குரல் வெறுமனே கலைகளினதும் சமயத்தின தும் புத்தெழுச்சி பற்றியது மட்டுமல்ல. தளைகள் அனைத்தையும் ஒடித்துவிட்டு எழுச்சியுறும் ஒரு புதிய சமுதாயத்தைப் பற்றியதுமா கும். பேசுபவர் ஓர் ஐயர், கேட்பவன் ஒரு கலைஞன் என்றபடியிஞல்
X

இது அவர்கள் வாழ்க்கையோடு ஒட்டிய எதிர்கால நம்பிக்கையாக அமைந்த போதிலும் உண்மையில் இதன் தொனி எல்லைகள் கடந்த முழுச் சமுதாயத்தையும் பற்றியதாகவே ஒலிக்கின்றது. -
**கோடை சுதந்திரத்துக்கு முற்பட்ட காலகட்டத்தைச் சித்திரிப் பதஞல் அதன் தற்காலப் பெறுமதி என்ன?" என்ற ஒரு கேள்விக்கு இடம் உண்டு. இலங்கையின் தற்கால நிலையும் சுதந்திரத்துக்கு முற் பட்ட நிலையும் அதிகம் வேறுபட்டவையல்ல என்பதே அதற்குரிய பதிலாகும். இலங்கை இன்னும் உண்மையான சுதந்திரம் பெறவில்லை. மாட்சிமை தங்கிய மகாராணியின் பெயராலேயே நாம் இன்னும் ஆளப்படுகின்ருேம். அந்நிய ஏகாதிபத்தியத்தின் பிடி இன்னும் பல மாகவே இருக்கின்றது. வெள்ளைக்காரரின் ஆட்சிமுறை, கல்வி, சட்டம், பொருளாதாரப் பிடி அனைத்தும் அப்படியே இருக்கின்றன. அதஞல் அடிமை மனப்பாங்கின் சின்னங்கள் நமது சமூகத்தில் இன்னும் இருக்கின்றன. உண்மையில் 1956ஆம் ஆண்டின் பின்னரே இலங்கை யில் தேசியப் போராட்டம் ஆரம்பமாகியது. அது இன்னும் முடிய வில்லை. ஆகவே நாடகத்தின் கால வேறுபாடு வாசகனைப் பாதிப்ப தில்லை.
எனினும் பஞ்சையரின் குரல் இன்று நான்கு திசைகளிலும் இருந்து தெளிவாகவும் பலமாகவும் ஒலிப்பதை வாசகன் அதிகமாக உணர்வான். வாசகனின் குரலும் அதுவாகவே இருக்கும்.
கோடையின் கலையாக்கம்பற்றிச் சொல்வதற்கு அதிகம் உண்டு, எனினும் விரித்துரைக்க வேண்டியதில்லை என்றே நினைக்கின்றேன். நாடகத்தில் கடைசிவரை வாசகனை ஆழ்த்திவைப்பது அதன் கலையாக் கத் திறனே. நாடக ஆக்கம் பற்றிய அநேக முன் உதாரணங்கள் கோடையில் உண்டு என்பதை விமர்சகர்களும் படைப்பாளிகளும் கண்டுகொள்வார்கள்.
கதைப் பொருளின் சீரான வளர்ச்சியும், பாத்திரங்களின் இயல்பான நடத்தையும், குண இயல்பும், உரையாடலும், முரண்பட்ட பாத்திரங் களின் இயக்கமுமே நாடகத்தின் உயிர். இவ்வுயிர்ப் பண்பு கோடை யில் நன்கு பேணப்பட்டுள்ளது, கோடையில் பாத்திரங்கள் தம் இச்சைப்படி, இயல்புக்கு ஏற்ப இயங்குகின்றன. பொம்மலாட்டக் காரனைப் போல் மஹாகவி அவற்றை இயக்கவில்லை. ஒரு யதார்த்தம்
xi

Page 9
படைப்பில் படைப்பாளி பாத்திரங்களைத் தம் இயல்புக் கேற்ப இயங்கவிடுவது இன்றியமையாததாகும். கோடையில் இவ்வம்சம் மிக நுட்பமாகக் கையாளப்பட்டுள்ளது.
தமிழில் தோன்றிய கவிதை நாடகங்களுள் கோடைக்கு ஒரு தனி இடம் உண்டு. இதுவரை எழுதப்பட்ட கவிதை நாடகங்கள் அனைத்தும் இரண்டொன்றைத் தவிர-பழைய இதிகாசங்களிலும் இலக்கியங்களிலும் காணப்படும் உபகதைகளையும், பழங் கவிஞர் களினதும் சமயச் சான்ருேர்களினதும் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் சொல்வனவாகவே உள்ளன. கோடை மட்டுமே சமூக வாழ்வின் முக்கியமான பிரச்சினைகளை, வரலாற்று விளைவுகளை அடிப்படையாகக் கொண்ட கலாபூர்வமான யதார்த்தப் படைப்பாகும். இது ஒரு புதிய மரபின் தோற்றமாகும்.
கோடையை நூலாக்கும் வாய்ப்பை எமக்களித்த மஹாகவிக்கு எனது நன்றி.
எம். ஏ. நுஃமான் நூறி மன்ஸில், கல்முனை-6. . 1970 سے 9 ۔ 20

மஹாகவியின் கோடை

Page 10

இடம்:
ஈழத்தின் வடக்கே ஒரு கிராமம்
களம் 1:
மாணிக்க நாயனக்காரர் வீட்டுத் தலைவாசல்
களம் 2:
பஞ்சையரின் சிவன் கோயில் மண்டபம்
காலம்:
1937 ஆம் ஆண்டு, ஆனியில் ஒரு நாள்
வைகறை தொடக்கம் மறு வைகறை வரை

Page 11
ST
மாணிக்கம் :
செல்லம்
கமலி
கணேசு
சோமு
பஞ்சையர் :
முருகப்டி
விதானை
காசி
σπιδuι πή
நாயனக்காரர்
அவர் மகிாவி
gyari
J9Haurf
அவர்
J961 rł
9 ouri
yohiri
அவர்
96ř
மகள்
шоғызекіт
சிட்சைப் பிள்ளை
சுவைஞர்
மனைவியின் உறவினர்
ஊரவரி
வண்ணுன்
அறியாப் பரதேசி

முற்கூற்று
பாடல்: பூபாளம்:
நாடகம் சுண்டு நயக்கத் தெரிந்தோர் நடுவினில் வந்து ஆடல் விழைந்தோம். வணக்கங்கள் கோடி, அண்வருக்கும், மேடையின் மீது வெளி நாட்டார் ஆட்சி விளைத்த ஒரு
கோடை.
நாயன இசையில் பூபாளம் கேட்டுத் தணிதல். கூறல்:
எனினும் குழலொன் றிதென்ன? குளிர்கிறதே!
நாயனம் கேட்டுத் தணிதல்,
பாடல்; மோகனம்:
அள்ளி இறைத்த அமிழ்தாய் எழுந்ததிவ் ஆயிரத்துத் தொள்ளா யிரத்து முப் பத்தே ழிலும், ஒர் துணிந்த கலே! மெள்ள நம் மாணிக்க நாயனக் காரரின் வீடுவரை உள்ளம் இழுக்கும் தொடர்வோம் வருக, உறவினரே.

Page 12
ஆனிமாதம் 1937இல் ஒருநாள் அதிகாலை. ஈழத்தின் வடக்கே ஒரு கிராமத்தில் உள்ள மாணிக்க நாயனக்காரர் வீட்டுத் தலைவாசல். திரை விலக, மேடை முழுவதும் இருள். வைகறைப் பொழுதை உணர்த்தும் வண்ணம் மேடைப் பின்புற வெண்திரை செவ்வரி படர்ந்திருக்கிறது. நாயனம் கேட்டுப் பாடல் தொடங்கியதும் மேடையில் ஒளி சிறிது அதிகரிக்கின்றது. மங்கிய ஒளியிலே மேடையின் வலது மூலையில் ஒலைக் குடில் ஒன்றின் வாயில் தெரிகிறது. வாயிலின் ஒரு புறத்தில் கிளிக்கூடு ஒன்று தொங்குகின்றது, வலது புறத் திண்ணையில் சிறுவன் கணேசு தவிலை அடிக்கும் பாவனையிலே சிலையாக அமர்ந்திருக்கிருன். திண்ணைக்கு முன்னல் ஒரு மரக்குற்றி இருக்கிறது. மறுபுறத் திண்ணையில் ஒரு வெற்றிலைத் தட்டம் காணப்படுகிறது. இடதுபுறத் திண்ணைக்கு வெளியே ஒரு சாய்வு நாற்காவி. அதிலே அமர்ந்திருக்கும் சோமு நாயனக் குழலைத் துடைக்கும் பாவனையில் சிலையாக இருக்கிருன். மேடையின் இடது மூலையில் கிணற்றடி வேலியும் வேலியின்மேல் எட்டிப் பார்க்கும் வாழைகளும் தெரிகின்றன. கிணற்றுக்கும் வீட்டுக்கும் இடையில் செல்லம், நீர் நிறைந்த தண்ணிர்க் குடத்தை இடுப்பில் வைத்த வண்ணம், சிலையாக நிற்கிருள். மேடையின் இடதுபுற முன் பகுதியில் குனிந்து முற்றம் பெருக்கும் பாவனையில் விளக்குமாற்ருேடு கமலி சிலையாக நிற்கின்ருள். பாடல் முடிந்ததும் சிலையானுேர் செயற்படத் தொடங்குகின்றர்கள். கணேசு வேகமாகத் தவிலைத் தட்டுகிருன். சோமு குழலைத் துடைக்கிருன். செல்லம் நடந்து முன்புறம் வந்து இடப்புறம் குடத்தை இறக்கி வைத்துவிட்டு கணேசுவிடம் வந்து எரிச்சலோடு அவனைப் பார்க்கிருள். கமலி கூட்டியவள், கிணற்றுப் பக்கம் போகிருள். இவர்கள் செயற்படத் தொடங்கியதும் மேடையில் ஒளி நிறைகிறது. பின் வெண்திரையில் , இளஞ் சூரிய ஒளி சிறிது சிறிதாக மறைகிறது.

செல்லம்:
கணேசு:
செல்லம்:
கணேசு:
s Losú):
கணேக:
கமலி:
கணேசு:
கணேசு:
தம்பி, எழும்பு! தைையப் பார், கற்றையாய்ச்
செம்பட்டை பற்றிக் கிடக்கு. போய்ச் சீவையா.
கொம்பர் வெளிக் கெழுந்து போன பொழுது முதல்,
இப்படியே சும்மா இதை ஏன் அடிக்கிருய்?
கொஞ்சம் பொறம்மா, கொதிக்காமல், நானும், அஞ்சாறு நாளாய் அடிக்கிறேன். இந்தச் சொல் பஞ்சிப் படுது வருவதற்கு.
um ri --Jðsm l கட்டை எடுத்துக் கடகடென்று நாளெல்லாம் தட்டுகிறதே உனக்கும் தலை எழுத்து?
airn
('பிள்ளே " என 3, 4 தரம் கூப்பிடுகிரன்; கமலி கிணற்றடியிலிருந்து வருகிருள்)
இவனைப் பிடித்துக் குளிப்பாட்டிப் பள்ளிக் கனுப்பு!
செல்லம் போதல்)
(சைகை மூலம் கமலியை அருகே அழைத்து)
வலகாரம் என்னக்கா?
எங்கே, சொல் பார்ப்போம்
எனக்கா தெரியாது , ... : 2
தோசை! தாளித்த துவையல் மணக்கிறதே ஆசை யுடையேன் அதன்மேல், அதஞலே
ஏழெட்டு வேணும் எனக்கு!
இல்லை.
இல்லையோ..? இல்லையென்ருல்..? (சிணுங்குகிருன்)
இன்றைக்குத் தோசை அல்ல என்றேன்
உது சும்மா.
என்றைக்கும் உன் வாய் இடையே பிறக்கிறது. பொய்தானே!
இந்த

Page 13
சோமு:
கணேசு:
சோமு:
கமலி:
சோமு:
கமலி
சோமு:
கமலி:
நேற்றுப் பொழுது படும் பொழுது **மெய்தான் அரும்பி விதிர் விதிர்க்கக், கைநோக, ஆட்டுக்கற் பக்கம் அமர்ந்திருந்தாய் அல்லவா?
பாட்டும் முணுமுணுத்துக் கொண்டு!
பயித்தியமே, பாட்டென் றதனேச் சுருக்கிப் பகராதே, நீட்டு நிலத்தின் நிகரற்ற ஒசை யெல்லாம் கூட்டாய் விளைந்து குழைந்து, குளிர் வுடலில் ஊட்டும் ஓர் விந்தை! ஒதுக்கிலே நின்றபடி கேட்டிருந்தேன் நானும்! எதற்காகக் கேட்டிருந்தார்? இங்கே ஓர் பாட்டை உதட்டுள் இழுப்பதற்கும் சங்கீதம் கற்றோர் விடமாட்டார்!
சாகு முன்னர் என்ருே, உன் நாவில் எழுகின்ற சங்கதி நன்ருய் அதே போல, நான் எடுத்த நாயனம் , பேச வைத்தல் வேண்டும் எனப் பேராசை கொண்டவன் நான்!
ஆசை மெத்திப் போன தறிவேன்! அது எனது பாட்டிலோ?
அன்றி அந்தப் வாட்டை விளைக்கும் இன்பக் கூட்டிலோ? பொல்லாக் குறுக்கு விசாரணைதான்?
(சோமு எழுந்து பேசியபடியே நடந்து குழலை வைத்துவிட்டு மீண்டும் பழைய இடத்திற்கு வந்து நின்று சோம்பல் முறிக்கிருன்)
பாட்டேது, இதழின் பவளங்கள் இல்லாது..? நாடோ சுவைக்க அறிந்தால், நடுச் சபையில் மேடையிலே வீற்றிருந்து மேம்பாட்டைக் காட்டி நீ பாடுதல் கூடும் பலர் கேட்க!
ஐயையோ ! (போய்க் கணேசுவின் அருகே திண்ணையில் அமர்கிருள்) வாய்க்குள் முணுமுணுத்தால் கூட, மதிப்புரைகள் தூக்கி வந்து வாசிக்கும் தொல்லை நிலையிலே, மேடையிலே ஏறும் விருப்பத்தை விட்டிடலாம்.

சோமு:
கமலி:
asi, Caesarrass:
கமலி:
கணேசு:
சோமு:
கணேசு:
தாடையிலே தொட்டுத் தடவாக் குறையாக, எத்தனை நாட் கெஞ்சி இருந்தேன், ஒரு பாட்டைப் பாடிக் காட்டென்று, முழுதாய்! பயனில்லை. ஓடி முகம் கழுவி ஒய்யார மாய் நீறு பூசிப் பெரியதொரு பொட்டிட்டுக் கொண்டு வந்து கந்த ரலங்காரம் பாடிக் கரம் குவித்துக் குத்து விளக் கெதிரே கும்பிட்டு நீ இருக்க, வைத்த செவி, விழிகள் வாங்காமல் உண்டு நான் கற்றவைகள் நூறு, கமலி!
கடும் புகழ்ச்சி வித்தையும் மிச்சம் வருகிறதே உங்களுக்கு!
பாட்டை விடுங்கோ பலகாரம் என்ன? சாப் பாட்டை நினைத்தல் பழுதில்லை இவ்வேளை, சட்டென்று சொல்லு, தமிழன்னை மீதாணை! இட்டிலியாம் இன்றைக்கு இணியேனும் பல்லைத் தேய். இட்டிலியா? ஆகா! இதுவும் சுவை உடைத்தே! கொட்டை உழுந்தைக் குளிர் நீரில் ஊற வைத்துத்
தோலை அகற்றித் தொழிலா Oனி ஒருத்தி கால் மடக்கிக் கருங்கல்லின் முன்னமர்ந்தே ஓர் கை குழவி உருட்டப் பிறிதோர் கை ஈர மாத் தள்ளி இருக்க, உழைத்திடுவாள். மற்ற நாட்காலை மலரக் கிணற்றடியில் அற்புதம் ஒன்ருகும். அடடா! புளிகொண்டு வெண்கலத்தைத் தொட்டு விளக்கச் செம் பொன்ஞகும், கண்களே கூசிக் கலங்கும் படியாக! செந்நெருப்பை மூட்டி, அடுப்பில் அதைச் சேர்த்து, மின்னிருக்கும் சிற்றிடையார் மெள்ள, மிகமெள்ள மாவைத் துணியில் வடித்து, அந்தப் பாத்திரத்துள் ஆவி பட வைத் தயர் வார் .
அயரா முன் வெந்துமுடிந்து, விரிந்து மலர்ந்து அவிந்து, சிந்தை குளிர்ந்து கிளர்ந்து மகிழ்ந்து உசும்பச் சந்திரர்கள் போலச் சமைந்து விளைகின்ற இட்டிலியா? ஆகா, இதுவே சுவை உடைத்து! (சப்புக்கொட்டி)
சட்டினி தானே மணந்த தக்கா?

Page 14
கமலி:
கணேசு:
шотягоR :
செல்லம்:
மாணி:
செல்லம்:
Korsal:
சாப்பாட்டு ராமா, இனி வா, சனியன்!
(படலே மூடும் சத்தம் கேட்கிறது)
இராத்திரி நீ ஒன்றுமே உண்ணு துறங்கி விட்ட மாதிரி அன்ருே புலம்புகிருய் ? அப்பா வருகிருர் . ஒடு கிணற்றடிக்கு! m
ஒமக்கா!
(கனேசுவும் கமலியும் கிணற்றடிக்குப் போதல், சோமு முன் இடப் புறத்தால் வெளியேறல் சில கனத்தில் மாணிக்கம் புகுதல்.)
கேட்டியே ஆடு அவிழ்த்துக் கொண்டேன் அலகிறது? முற்றத்தில்
நட்ட கொடியை நறநறென்று தின்கிறதே கட்டி வைக்க ஒர் ஆள் கிடையாதே இவ் வீட்டில்
(செல்லம் கோப்பியுடன் புகுதல்)
பெட்டை எங்கே? ?
என்ன? வரும் போதே பேச்சோடு?
கொண்டு வா,
(வலதுபுறத் திண்ணையில் அமர்கிருர், செல்லம் கோப்பி கொடுத்தல்)
ஆட்டை, அவிழாமல் கட்டத் தெரியாதே?
நேற்றைக்கு
(சிரித்துவிட்டு)
நீங்கள்தான் கட்டியது!
மேய்தானே?
(செல்லம் போதல், மாணிக்கம் கோப்பி குடித்தல். பிறகு தோடி இராகத்தை விரிவாக வாய்க்குள் இசைத்தல். செல்லம் சில கணத்தில் திட்டத்துடன் திரும்புதல்.)

செல்லம்:
armf:
Gwójnyin:
иртон):
Nasavano :
மாணி:
செல்லம்:
மாணி:
ιοπεδή:
மாணி:
Covstvavúo
43 מL
கட்டவிழ வில்லை. கயிற்ருேடு, கட்டி வைத்த கட்டையையும் சேர்த்துப் பிடுங்கியது! கட்டி விட்டேன். தட்டம் இந்தாருங்கோ.
(தோடியைத் தொடர்ந் திசைத்தல்)
தட்டம் இந்தாருங்கோ!
(திகைத்துத் திரும்பி)
சரி, தா.
தவிற்காரர் உங்களிடம் ஏதோ உரைக்க இருந்தாராம் சொன்னுரா ஏதேனும்?
சுண்ணும்பைக் காணுேமே?
என்ன? கரண்டகம் தட்டத் திருந்ததே?
இங்கே இருக்குக் கரண்டகம், சுண்ணும் பதனுள் எங்கே இருக்குது? எடுத்துவா நீர் கொஞ்சம்.
(மாணிக்கம் தோடியைத் தொkர்தல், செல்லம் போய்ப் பேணியில் நீர் கொண்டுவந்து கொடுக்கிருள்.)
(தோடியை நிறுத்தி)
சொன்னர் தவிற்காரர்
சொன்னுரா?
சொன்னர்!
(தாமதித்து, சுண்ணும்பு தடவுகிமுரி,
செல்லம் ஆவல் பொங்க அவரருகே சென்று
மரக்குற்றியை இழுத்தும் போட்டு, அதிலமர்ந்து ஆவலோடு அவரைப் வார்க்கிருள்)
தம்
மன்னுரிற் கட்டிக் கொடுத்த மகளுக்கு நித்தம் அடியாம்! நெடுகக் குடித்து விட்டுப் பிய்த்தெடுக்கின் ருளும் பிரிய மருமகன்!
அவ்வளவு தானே..?

Page 15
шоталі:
செல்லம்:
Lorr saf:
செல்லம்:
pres:
செல்லம்:
10
அதற்கு மிஞ்சி வேறென்ன? செவ்விளநீர் போலச் சிவந்த சிறுபெட்டை! அந்தக் குடியன் அடித்துக் கலக்குகிருன் , கந்தோரில் வேலை. களிசான் சயிக்கிளிலே தந்தி கொண்டு செல்கின்ற தம்பி என்று கட்டிவைத்தார் .
(பேருமூச்சு) பாவம், தவிலைப் பழுதின்றித் தட்டும் அந்த நாவற் புலப் பொடிய னுக்கு நடத்திருந்தால், இப்படியா போகும்? இதெல்லாம் தலைவிதி!
அப்ப அவர் வேறென்றும் சொல்லவில்லை?
இல்லையே! (இல்லையே" என்ற பின்னர் மாணிக்கம் நீமிர்ந்து செல்லத்தின் முகத்தை உற்றுப் பார்க்கிருர் - 'ஏன், என்ன விடயம்” என்ற கருத்திலே, செல்லத்திற்கு ஏமாற்றம். மாணிக்கத்தின் நேர்ப்பார்வை தாக்குவதால் எங்கெம்கோ பார்க்கிருள். நேரடியாக விடயத்தைக் கூறும் தயக்கத்துடன், குனிந்து கீழே கிடக்கும் “குறை ஒலப் பெட்டி" யை எடுத்து அதனை இழைத்தபடி பேசுகிருள்.)
ாப்போதோ தொட்டதனைச் சொல்ல இருந்தாராம், வந்தொரு நாள் என்னிடம் தான் வாய்விட்டார். தூரத்துச் சொந்தம்தான்; என்ருலும் என்னிடம் சொல்லி என்ன? உங்களிடம் போய்க் கேட்டு ஒமென்ருல் பாருங்கோ: எங்களின்ரை இட்டமோ, என்றேன். இது சொல்லித் திங்களொடு திங்கள் எட்டுச். செவ்வாய். புதன், பத்து நாளாயிற்று. அந்த நடேசுத் தவிற்காரர் இன்னும் ஏன் சொல்லா திருந்தாரோ!
ஐயையோ,
என்ன கதையை எடுத்துப் பிடிக்கிருய்? ஒத்துக் காரற்றை மகனின் உபகதையே? ஒத்து வராது நமக் கந்தச் சம்பந்தம்! சத்த மிடாமற் கதையுங்கோ ! (கணேசவும் கமலியும் உட்புறமிருந்து புகுதல். கணேசு பள்ளிக்குத் தயாராய் உCத்து, புத்தகங்களுடன் இழுத்து வரப்படுகிருன்)
தங்கச்சி,
என்ன பிள்ளை வேணும்?

கமலி:
செல்லம்:
:i&66 חסu
செல்லம்:
இவன் போக மாட்டாளும். வாத்தியார், தன்ரை வலக்கை விரல் மொளியில் நேற்றடித்தார் என்று சொல்லி நின்று சிணுங்குகிருன்.
{ செல்லம், மடியில் பணமெடுத்து நீட்டி)
இந்தாடா, தம்பி, இதைக் கொண்டேத் தாமரது சந்திக் கடையில் கடலைச் சரை வாங்கு. (கணேசு அவளிடம் போய்ப் பணம் வாய்கல்)
பள்ளிக்குப் போதல் பழுதில்லை. ஒடிப்போ. (தயங்கும் கணேசுவைப் பார்த்து அவர் எழ, அவன் போருேன் அவர் அவன் பின்னல் சிறிது சென்றுவிட்டு மீள்கிறர்)
மெய்யேப்பா
(பேசுவதை நிறுத்திக் கமலியை முறைக்க, Javsir alari öğı alsit Gar Gaf6&Grdir.
நல்ல விசரே உனக்கு? என்றும் செய்யா இடத்திலே சம்பந்தம் செய்வதற்கு நிற்கிருய் வீணுய், நினைத்துப் பார் கொஞ்சம். அந்த முத்து குடும்பத்தார் மூன்று தலை முறையாய் ஒத்தைப் பிடித்தே.உழைத்தவர்கள்.
ஆணுலும்,
குத்தகைக்குப் பெற்ற நிலத்தில் குறையாமல்
:600h חuD
posvud:
அத்தனை காய் பிஞ்சும் அடுக்காய் விளைக்கிருர் . கொத்தவரை கூடக் குலை குலையாய்க் காய்க்கிறது. கணி ஒன்று வாங்கி அதில் வீடும் ஒன்று கட்டிவிட்டார். போன வரிசம் புதிய கிண முென்றும் வெட்டி விட்டார். சும்மா விடுங்கள் வெறும் பேச்சை. தண்ணிர் கிணற்றில் தயிர் போல் இருக்கிறதாம். உண்ண முடியாத உப்புக் கரிச்சல் அல்ல, எங்கள் கிணற்றில் இருக்கிறது போல!
தண்ணிரும் வீடும் சரிதான்! தயவு செய்தென் பெண்ணை அவர்க்குக் கொடுக்கும் பிழை செய்யும் எண்ணத்தை மட்டும் எனக்குக் கொடுக்காதே, உன்ஞனே! w
ஐயோ, எதற்குப் போய்ச் சத்தியங்கள் பண்ணுகி றீர்கள் பொடியர் படித்தவர்.
11

Page 16
щотsяї:
செல்லம்:
шопяsї:
சோமு:
GosF sisud:
மாணி:
செல்வம்:
12
எங்களைப் போல், தந்தி எதுவும் கிடைத்த தென்முல் இங்கிருந்து கையில் எடுத்துப் பிடித்தபடி சிங்கப்பூர்ப் பெஞ்சன் எடுக்கும் சிவராச சிங்கத்தார் வீட்டு வெளித் திண்ணையிலே போய்க் குந்தி வாசித்துக் கேட்டு வருகிற மாதிரியே? யோசிக்க வேண்டும் எதற் கெனிலும்! இல்லை யென்ருல் யாசிக்க வேண்டும் தெருவில், எவ ரெனிலும்!
பூசிக்கத் தக்க புதுப் பொன் மொழி புகன்ருய்! பேசத் தெரிதல் பிசகன்று. எனினும் உன தாசையைக் கொஞ்சம் அழகா னதன்மேலே வைத்திருந்தால் என்ன ?
வலிய வருந் திருவை முற்றத்தில் விட்டுக் கதவை முழுசாகப் பூட்டி விட்டால், எங்கே பொழுது விடிகிறது? (சோமு இடது முன்புறத்தால் புகுதல்)
வந்துவிட் டாயா:
"வசதியில்லை இப்போது, தந்துவிடுவேன் விரைவிலே, தம்பி’ என்று சொல்லி விட்டார்.
பேந்தென்ன? சொல்லிவிட்டார்!
(எழுந்து முன்னே சென்று நிற்கிருன்)
சொன்னபடி
நல்ல கெட்டிக்காரர் நடப்பார் ஒம், நம்பிக்கை! பஞ்சையர்தானே..?
எதற்குப் பறக்கிருப்?
(எழுந்து அவனருகே வந்து)
கொஞ்சம் பொறன் நீ.
பொறுத்தாச்சே போது மட்டும்! போன வரிசத் திருவெம்பாக் காசு இன்றைக்கு ஆனி பதினெட்டும் ஆச்சு, வரவில்லை!
(சோமு வலது பின்புறம் வெளியேறல்)

மாணி:
செல்லிம்:
ιΟ τευση:
செல்லம்:
பஞ்சை:
மாணி:
பஞ்சை:
செல்லம்:
பஞ்சை:
சொல்ல மட்டும் கோபம் வருகிறதாம். ஐயரது பல்லி மூட்டைப் பேச்சைப் பசி யின்றிக் கேட்டிருங்கள் வில்வம் சருகே பணம்?
நீ லிளங்காமற் பேசுவதால் தானே பெரும் புவியே சுற்றுதாம்! ஈசன் செயல் என் றெதுவும் கிடையாதே! - வில்லங்க காலம். நமக்குத்தான் வில்லங்கம் அல்ல. அவர்க்கும் அதுதானே? ஐயருக்குக் கோயிலிலே வந்து குவிகிறதே செல்வ மெல்லாம்?
வண்டிகளிற் காணிக்கை வந்திறங்க வில்லை யென்ருல், கொண்ட கடனக் கொடுக்கிறது கூடாதே;
கோயிற் கடனைப் புரிந்தேன். அவர் கடனே? வாயில் வருவதெல்லாம் வார்த்தை என்று பேசாதே?
ஐயோ, அவர்தான் வருகிருர்!
(ஒடிப்போய் திண்ைையத் துப்புரவாக்குகிருன், மாணிக்கமும் பின்ருல் செல்கிருர், பஞ்சையர் புகுதல்)
Lorrosofii stb, மெய்யே, இதென்ன? பெரிய விவாதமோ?
ஐயா, வாருங்கோ, அமருங்கோ. செல்லம், அந்த மான்தோலை வாங்கில் வடிவாகப் போட்டுவிடன்.
ஏனப்பா, நீயும் இர்ன். இந்த ஆசாரம் தானே நமது தலையைக் குழப்புவது.
(மாணிக்கம் குடுமியைக் கோதிக்கட்டி முடிதல். ஐயர் சாய்மனைக் கதிரையில் அமர்தல். மாணிக்கம் திண்ணையில் அமர்தல்)
பாசல் என்ன கையில், பெரிதாய்? திருவெம்பாக் காசை யெல்லாம் வட்டியுடன் கட்டிக் கொணர்ந்தியளோ?
செல்லம் பகிடி சிரிப்பு வராப் பகிடி! எல்லாம் சரிதான்!
(செல்லம் பாசிலேயே உற்றுப் பார்த்தபடி நிற்கிருள். மாணிக்கத்தைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்த ஐயர், அவள் பார்வையை உணர்ந்து பேச்சை நிறுத்தி, பாசலையும் அவளையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு)
13

Page 17
செல்லம்:
பஞ்சை:
செல்லம்?
வஞ்சை:
மாணி:
பஞ்சை:
மாணி:
பஞ்சை
14
இதுவோ? இது நேற்றுச் சிங்கப்பூர்ப் பெஞ்சன் எடுக்கும் சிவராச சிங்கத்தார் வீட்டிற் கிடைத்த சிலுக் கொன்று!
யப்பான் சிலுக்கோ? தெரியவில்லை. யாவாரம் இப்போ ததற்கே. இதை ரன் எனக்கென்ருள் எங்கள் கிருகத் திலக்குமி! நான் வாங்கியதை உங்களுக் கேனும் உதவும் என்று கொண்டு வந்தேன் தங்கச்சி கட்டச் சரியாய் இருக்குமோ? எட்டுயார் கூட இதில் இல்லை!
அதுக்கென்ன? பட்டென்ருல் வாங்குதற்கும் பஞ்சிப் படுகிறதே? கட்டிப் பார்க் கட்டும் கமn! く
(செல்லம் வீட்டினுள்ளே போதல்)
கதையன், அப்பா ! சோமு வந்தான் காலமை, நீ சொல்லி அனுப்பியதாய்?
ஒமோம், ஒருக்கால் அனுப்பினேன்.
உண்மையிலே காசெங்கே மாணிக்கம் கையிற் கிடைக்கிறது? அந்தியட்டி என்ருல் அரிசி, சில கத்தரிக்காய், மொந்தன் வா ழைக்காய் . முழுசாய் ஒரு கருணை வந்து விடாது! வயற்காரர் பாடுகளும் இந்தப் படிதான். இதுவோ கடுங்கோடை. *வெய்யிலினல் அல்ல! வெளியார் அரசாட்சி
செய்யும் கொடுமைச் சிறப்பே அதுதானே? மாட்டைக் கடிக்கும் மணிசர்கள் இங்கு வந்து நாட்டை நடத்துவது நல்லதென்றே சொல்கிருய்?
ஊருக் குழுகிறது மாடு, பசுவோ ந11 யாருக்கும் பாலாய்ப் பொழிந்து தருவது.
தோடியினைக் கண்ணெதிரே தொட்டெடுத்து வைப்பாய்நீ. ஆடும் உடலம் அதன் முன்குல். ஆஞலும், ஆடு கொண்டு போவார், அது உனது நாயனத் தோடு நடக்கும், உயிர் நீக்க!

цртsoої:
பஞ்சை
மாணி:
பஞ்சை:
DNT GB:
பஞ்சை:
DT sof:
பஞ்சை:
மாணி:
வேள்வி யென்ருல், கூடு வதிலே குறைச்சல் இல்லை, எங்களது கோயிற் பழம் மண் டபத்துக் கோ, கூரையில்லை!
ஆயிரங்கால் மண்டபம் அக் காலத் திருந்தனவாம் எங்களது கோயிலுக்கோ
எட்டுத்தூண்!
எட்டுக்கும்
சாந்தேனும் பூசிச் சரிக்கட்டக் காலமில்லை!
கோபுரம், ஆண்டாண்டாய்க் கொடுவெய்யில்,காற்று, மழை பாவம் புரிந்த படியால், படிப்படியாய்ச்
ஒற்பி இருந்து செதுக்கி முடிந்த சிலைப்
பொற் புடைந்து கெட்டுப் பொலிவு சிதைந் தழிந்து மொட்டை உருவாய் முடமாகி நிற்கிறது.
(சிறிது முன்னே செல்கிருர்)
சட்டங்கள் செய்யும் அரசோ சரி எனக் கை கட்டி நின்று பார்த்தால், கறுமம் தான் கைஒங்கும்!
என்றே ஒருநாள், இருந்துபார் மாணிக்கம்; நின் றந்தக் கோயில் நிமிர்ந்து, நெடுந்தூரம் பார்த்துப் பயன்கள் விளைக்கின்ற கோபுரமும் வேர்த்துக் கலைஞர் விளைத்த மணி மண்டபமும் வீதிகளும் நூறு விளக்கும் பரதத்தின் சேதிகளைக் கூறும் சிலம்புச் சிறு பாதம் ஆடும் அரங்கும் அறிந்த சுவைஞர்கள் நாடிப் புகுந்து நயந்திட நீ சோமனுடன் ஊதும் குழலில் உயிர்பெற்று உடல் புளகித்து ஆதி அறையில் அமரும் கடவுளுமாய் என்றே ஒருநாள் எழும்பும், இருந்துபார்!
தன்ருய் இருக்கு நினைத்தாலும்!
நாளெல்லாம் தேவாரம் கேட்கும், திருவா சகம் என்னும் பா, ஈர மாக்கும் பலர் கண்ணை, நிச்சயமாய், கந்த புராணப் படிப்பும் நடக்கட்டும்! இந்த ஊர் முற்றும் இருந்ததனைக் கேட்க வரும்! (செல்லம் புகுதல்)
15

Page 18
பஞ்சை:
செல்லம்:
பஞ்சை:
மாணி:
பஞ்சை:
மாணி:
பஞ்சை:
16
எந்த வாரிற் சென் றிருந்தீர்கள்? ஏதேதோ பேச்சு மிகவும் பெரிதாய் நடக்கிறதே! ஐயர் நினவு திருப்பணியில்: ஆகாரம் செய்வதைக் கூடச் சிறிதும் நினையாரே!
ஆகாரம் இன்றி முடியுமா அம்மணி?
ஆதாரம் இந்த உலகுக் கதுதானே?
அப்படிக் கூறுங்கள், அதுதானே நான் நினைத்தேன், எப்பொழுது கோயில் எழும்புமோ, அப்பொழுதே ஐயர் வருவாய் அதிகரிக்கும். அர்ச்சனைக்குத் தேங்காய் மலைகள் திரளும். பழ வகைகள் ஒங்கிக் குவியும், பசுப்பால் ஒரு குளமாய்த் தேங்கிக் கிடக்கும். இதெல்லாம் தெரியாதே
செல்லம் பகிடி சிரிப்புக் கிளப்பாது! நல்லது, இனிநாம் நடப்பம் .
(கமலி கொண்டுவந்து கொடுக்க, வாங்கித் தட்டோடு இட்டிலி வைக்கிருள் செல்லக், கமலி போதல்.)
இதுவென்ன? இட்டிலியே? சேச்சே! எதற்காக? வீட்டிலே சுட்டு வைக்க வைக்கச், சுடச்சுட நான் இப்போதான் தோசை ஐந்து தின்று தொடர்ந் திங்கே வந்துள்ளேன். ஆசை கொடிதே! அதற்கென்ன. ஆகட்டும்!
பாலிருந்தால் வெள்ளிப் பாத்திரத்தில் கொண்டுவா. மேலும் ஒன்று?
(செல்லம் போய்ப் பால் கொணரல்)
வேண்டாம் விடப்பா, இனிப் போதும்! ஏலுமட்டும் தின்றேன், எழும்ப முடியாது,
மூலையிலே கையைக் கழுவுங்கோ.
(பஞ்சையர் கை கழுவுதல்) முற்றத்தில் நிற்கிற தென்ன விதானையார் வாருங்கோ.
(விதானையார் புகுதல். திகைப்பு விழி விழித்தல்)
ங்கே பிமையாய் ள ம் நடக்கவில்லை.
եք gil of LD I5

விதானை:
பஞ்சை
விதான:
செல்லம்:
விதானை:
செல்லம்:
பஞ்சை
சங்கைப் பிசகு நடந்திருக்குப் போலிருக்கு.
வாரும், வடிவாய் இருங்காணும் வாங்கிலே.
மாணிக்கம், தேடி வர வைத்து விட்டாயே ஏன் அந்தப் பக்கம் நீ இல்லைக் கனகாலம்?
சோடா என்ருல் தான் குடிப்பார். கடைப்பக்கம் ஒடப் பொடியள் ஒருத்தரும் வீட்டில் இல்லை.
வேண்டாம் பாருங்கோ, விடியற் புறம் எழும்பி
(செல்லம் மீதி இட்டிலியுடன் போதல்) ஆண்டான் நம் வீட்டின் அடிவளவிற் சீவுகிற பாளை வடித்த பத நீர் அருந்தி வந்தேன் ஆளுக்கு நல்ல ததுதானே, ஐயரே, தட்டத்தை மட்டும் இங்கே தள்ளுங்கோ, போதும் அது ! சட்டப் படி குற்றம் இல்லை எனினும், எங்கள் அப்பருக்கும் அப்பர், அவர் அப்பர், அவ்வப்பர் அப்பருக்கும் அப்பர், அவர் அப்பர் காலமுதல், இன்று வரையும் இருந்து வருகின்ற ஒன்று மரபென் றுளதே. அதனுல், நாம் கோப்பி உங்கள் வீட்டில் குடிப்பதற்கு ஞாயம் இல்லை! சாப்பிடவும் மாட்டோம்! சரிதானே? ஐயரோ ஞானி. பிள்ளை குட்டி இல்லாத தனி நபர். நானே உலகில் நடக்கிறவன். நாளைக்கு ஊர் ஏனுே தானே என் றெதையும் கதைக்குமே. அப்பருக்கும் அப்பர், அவர் அப்பர், அவ்வப்பர் அப்பருக்கும் அப்பர், அவர் அப்பர் கால முதல் நாமே இவ் வூரை நடத்துகிருேம். ஆதலினல், ஒமோம், எமக்கென் றிருக்கு தொரு பொறுப்பு. தின்னக் குடிக்க முடியாது நும் வீட்டில்! எங்களுக் கோர் கொள்கை இருக்கிற தையரே!
(புகுந்து பேணியோடு கோப்பி வைத்தல்)
கொள்கை இருக்கட்டும், கோப்பி குடியுங்கோ.
மெள்ள மெள்ள எல்லாம் சரியாய் வரத்தானே வேணும். குடியும். கதை வெளியில் போகாது காணும்!
17

Page 19
விதானே:
செல்லம்:
լքո հմմ:
செல்லம்:
uonssi:
விதானை:
pm son:
பஞ்சை:
assr2OT:
оп өлімі:
விதானை:
18
சரிதான். கடவுள் துணை எங்கே..?
(விதான பேணியில் வாய் வைத்து கோப்பி, குடித்தல். மாணிக்கம் மேடையின் முன்புறம் வகுதல் செல்லம் மாணிக்கத்தின் அருகே சென்று மெல்லக் கதைத்தல்)
எச்சிலாக்கி எல்லே இவர் போய்க் குடிக்கிருர் . βάβ. 1
அதுக் கென்ன செல்லம்? பிற கதை நீ வொச்சுச் சுடுசாம்பல் போட்டு விளக்கிவிடன்.
எத்தனை நாட் சொல்வேன் நான், வீட்டில் கிளாசிரண்டு வைத்திருக்க வேண்டுமென்று?
வாங்கித் தருகிறேன். சத்தம் இடாதே. தயைசெய். வொறு, செல்லம்!
(விதான கோப்பி குடித்தல், நிமிரல்)
சட்டப்படி இதற்கோர் "சாச்சீட் கிடையாது! இட்டிலியைத் தின்ருர் அவர், நான் இதைக் குடித்தேன். உண்டலிலும் பார்க்கப் பருகல் உறைப்பில்லைக் கண்டியளே.!
உண்மை!
கடும் உண்மை, அப்பனே!
கை பிழை பாடான குடிப்புத்தான் என் குடிப்பு. ஐயரின் உண்போ அது போல அன்று. அவர் எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை: புண்ணியம் பாவம் புதிதாமே ஐயருக்கு.? வந்த அலுவல் சொல்ல மறந்து விட்டேன்!
சொல்லுங்கோ.
அந்தப் பழைய அரசாங்க ஏச்சண்டர் சொந்த ஊர் போ கப், புதிதாய் வருகின்ற இந்தத் துரைக்கோர் வரவேற் பெடுக்கின்ருேம். பட்டணத்தில் உள்ள பழைய நகர் மண்டபத்தில் கட்டிப் பறக்க விடுகிாழுர் கண்நிறைய "யூனியன் யாக்குக் கொடிகள். புதுத் துரையும் ஏனையோர் போல, எமக் கெல்லாம் நல்லதுகள்

Gastos)úo:
விதானை:
Luá5snv:
GJF anulo :
மாணி:
விதான:
செய்வார் எனத்தான் தெரிகிறது. செய்யட்டும்! உய்வு கிடைக்கும் விசுவாசம் உள்ளவர்க்கு இங்கிலிசுக் காரன் இருக்கும் வரை நமக்கோர் பங்கமுறும் என்று பயப்படத் தேவையில்லைத் தானே..? அதுதான் தகுந்த வரவேற்பாய் நானும், எனப்போற் பிறரும், ஒருங்காகக் கூடி எடுத்தல் குறித்தோம். அதனுல்தான்
ஓடி வந்தேன் என்னுடைய பங்காக உன் மேளம்
அங்கே நடக்க அடுக்குகள் நான் பார்க்கிறேன். சங்கீதம் இன்றிச் சரிப்படுமே ஓர் விழவு?
திட்டம் சரிதான். விதானையார் திட்டமென்ருல். நட்டம் நமக்கே, நயமோ அவருக்கு! வெட்டியடி தானே.?
விடுங்கோ பழங் கதையை! கட்டாயம் நான் இதற்குக் காசு தருவிப்பேன். முட்டாள் என் றென்னை நினைத்தீரோ? முந்நூறு ரூபாய் கிடைக்கும். இதோ முப்பது ரூபாய். (மாணிக்கம் பணத்தைப் பெற்றுச் செல்லத்திடம் கொடுத்தல்)
சா பா நீ பா வுக்கும் சல்லி தர வேண்டும் எனக் கச்சேரியிலே கடுமையாய்க் கூறியுள்ளேன். இச்சேதி உன்னே டிருக்கட்டும், மாணிக்கம்.
அச்சா ! மாணிக்கம், அரசாங்கச் சேவகம்!
f
பஞ்சைய ருக்குப் பகிடி. நமக்குத்தான் பஞ்சி, அதனைச் சிரித்துச் சுவைப்பதற்கு!
(செல்லம் போதல்)
6TuiGLunt வரவேணும்?
இன்றைக்கே. இல்லை என்ருல்
இப்படி ஏன் ஓடி இளைக்க வருகின்றேன்? ஏழரை போல் வந் திறங்கி விடவேணும். கூறிவிட்டேன். பிந்திவிடக் கூடாது சொன்னுற் போல் மாறு கரை வேட்டி, வைரக் கடுக்கனெடு பட்டின் சிவப்பிற் சரிகை பளபளக்கப் பொட்டுமிட்டுக் கொண்டு, பொலிவாய், அதிபொலிவாய், வந்து நில்லு, கண்டு மருளட்டும் வெள்ளேயன்.
9

Page 20
பஞ்சை:
விதானே
Garsi)6) to:
விதானை:
:60%iחסו
Gay 6)6)o:
பஞ்சை:
செல்லம்:
மாணி:
20
**ஆடவர் பெண்மை அவாவும்" படிபோலும்?
சாடையாய் ஏதோ மொழிகிருர், என்னவோ? அந்த நாளில் நீ ஓர் ஆண்பிளைதான். இன்றைக்கும், இந்த வயதிலும் என்ன குறை? சபையில்
(செல்லம் புகுதல்)
குந்தினய் என்ருல் குசு குசுப்பார் பெண்டுகள்!
எங்கள் விதானை இதென்ன அலட்டுகிருர்? தங்கமக்கை கேட்டால் தலையில் அடித்திடுவா. ஆம்பிளையை ஆம்பிளைபோய் அந்த விதம் புகழ்ந்தால், நாம் போம் கதி?
நான் நடக்கட்டே? வேறென்ன? உங்களின் ரை கோப்பி உருசிதான். என்ரை அவ தங்கத்தின் கோப்பி சரியாய் வருவதில்லை. ஆன படியால் அனுதினமும் எம்வீட்டில் தேயிலையைத் தானே கரைத்துக் குடிக்கின்ருேம் ! அப்ப நான் வாறன்.?
அதுக்கென்ன, வாருங்கோ.
(விதானை போதல்)
முப்பது ரூபாய் முழு சாகத் தந்து விட்டார். அப்படியே கொண்டே அடுக்குப் பானேக்குள்ளே வைத்துவிட்டு வந்தேன். இரவு வரும் போது மிச்சம் இருநூற் றெழுபதையும் கையோடு வாங்கி வரா விட்டால் வராது, தெரியுமெல்லே? வெள்ளைய னுக்கு விருந்து மருந்தென்ருல், உன்னை அதற்குள் எதற்காய் இழுக்கிருன்? என்னவாம் ஐயர்? தென்ன அநியாயம்? அந்தக்கா லத்தில் அவர் போல நம்முடைய இந்தக்கா லத்தில் இருக்கிற ராசாக்கள் கூப்பிட்டனுப்பக் கொடுத்து வைத்த தெங்களுக்கும்? அந்தக் காலத்தவர்கள் எங்களது ராசாக்கள்! சிந்தை கொடுத்துச் செவி மடுத்து நிற்பார்கள். இந்தப் பறங்கி எதிரிற் போய் வாசித்தால், * 'இந்த ஆள் பெண்ணுே?’’ எனத்தான், நகை நட்டைப் பார்த்து நகைத்துப் பகிடிவிடப் போகிருன்.

பஞ்சை:
செல்லம்:
மாணி:
செல்லம்:
:6oiחtp
செல்லம்:
மாணி:
Ga sis) if:
மாணி:
நேர்த்திகளைக் கண்டு நெகிழ இவர்க் காகுமோ? ஏதோ நடக்கட்டும். என்ன, வரட்டுமே? (பஞ்சைவர் போதல்) ஐயர் என்ன அந்த விதம் சொன்னர்?
அவர் என்ன, கையால் உனைப்போற் கரிப் பானை தேய்ப்பவரே?
பின்னே எதற்காம் சகுனப் பிழையாக தன்னுடைய நாக்கால் தகாதது போல் கூறிஞர்? பல்லி சொல்லா நேரத்தில் பார்ப்பான் அதை எதற்குச் சொல்ல வருவான்?
சுடும் நாக் குணக் காத்தை! அந்த மனிசன் அறியாமற் பேசாது. வெந்தயத்தைப் போட்டு வெகுவாய்க் கமகமக்க, நீ வை குழம்பு, தலே இதுக்குள் நீட்டாதே. பூவையர் களுக்குப் பொது ஞாயம் கூடாது. நாவை அடக்கித்தான் நாடே கிடக்கிறது என்று சொல் கின்ருர், அவர் . நீயோ, உள்ளதுகள் ஒன்றும் தெரியா துளறத் துணிகிருய்! பஞ்சையர் வீட்டுப் பழைய அலுமாரி மிஞ்சி வழிகிற தென்ன விளங்குமே?
புத்தகங்கள் அவ்வளவும் புத்தகங்கள்! வேறென்ன?
மெத்தப் படித்த மனிசன். நீ சொல்லுகிற ஒத்துக்கா ரற்றை மகன் போல என்று வையன்!
எல்லாம் தெரியும் எனக்கு! சில நாளாய் இங்கிலிசு கூடப் படித்து வருகிருர், என்ற தெல்லாம் என்ன, எனக்குத் தெரியாதே? இங்கிலிசை ஏஞம் இவர் போய்ப் படிக்கிருர்?
உங்கள் முருகப் பெதற்காய்ப் படித்தான்? அதற்காக அல்ல! இவர் ஏன், நகரில் குதிக்கால் உளையக் கொடுங் கோடை வெய்யிலிலே, ஏச்சண்டர் வீட்டுக் கெதிரில், நடுத் தெருவில் சப்பாத்துக் காலும் கடும் சட்டை தொபபியுமாய், இப்போ துபோ, இப்போ நில் என்று காட்டிக், கை தூக்கி நடனம் தொடங்க நினைக்கிருர்?
21

Page 21
செல்லம்:
rങ്ങി:
ଜୋoff}} edlid:
மாணி:
22
நாக்கில் உங்கட்கு நரம்பு கிடையாது! முத்து, மகனை முயன்று படிப்பித்து, அவ்
வொத்துத் தொழில்விட் டுயர்ந்தாலும், உங்களுக்குப்
பத்தியம் இல்லை. அதுவும் தொழில்தான்! பொலிசாளர் வேலை பொருந்தாத வேலையே?
நல்வாய்ப் பொருந்தும் உனக்கென்ருல்! என்னுடைய பிள்ளைக் குதுகள் சரியில்லைப் பேசாதே!
எல்லாம் தெரியும் எனக்கு உந்தச் சோமனே நான் இந்த வரைக்கும் இருக்க விட்ட தென் பிசகு, சிட்சைக்கு வந்தான். சிவனே எனப் பாடம் கற்று முடிந்தால் கடை கட்ட வேண்டாமோ? இன்னும் இருந்தான், இடும்பன்போல். என் வீட்டில் என்னுடைய பிள்ளை உலாவ இடமில்லை. மிச்சம் இடம் கொடுத்து விட்டீர்கள். பேய்ச்சியும் பட்சம் நிறைந்தவள் போல் அந்தப் பயலைத்தான் முற்றம், விருந்தை, தலைவாசல், உள்வீடு, அடுப்படி, கோடி, கிணற்றடி, திண்ணை, படலை, ஒழுங்கை வரை பார்த்துக் கலைத்துத் திரிகிருள். எல்லாம் சிரிப்பாய்ச் சிரிக்குது. சங்கீதம் கற்று முடிந்தால், சரி போவன். பஞ்சையர் வாலைப் பிடித்துத் திரிந்து,
• சமுக்கிறுதம் ஏனும் தடியன் அடிக்கிருன்? ஆரும் உவரைத் திவசம் அதுகளுக்கு வாரும் என்று கேட்டு வருவினமே ஊரிலை? ஊதுவதோ உந்தக் குழலைத்தான். உள்ளுக்கோ ஏதோ பெரிய எடுப்பும் நினைப்புகளும். ஆசைகளுக்கும் அளவிருக்க வேண்டாமே? இன்றைக் கொரு முற் றிதற்கெடுக்க வேண்டும், நான். அந்தப் பொலிசுப் பெடியருக்குப் பெண் கொடுக்க வந்து வடலி அடைப்பார் நெருக்குகினம் இன்றைக் கொரு முற் றிதற்கு!.
(முருகப்பு புகுதல்)
முருகப்பு?--
வா. இரு. வாறன்.
(மாணிக்கம் போதல்)

செல்லம்:
(p(55t:
Garsismo:
முருகப்பு:
செல்லம்:
முருகப்பு:
செல்லம்:
முருகப்பு:
முருகப்பு:
செல்லம்:
வழி தெரிந்து விட்டதே? போவீர், வருவீர் ஒழுங்கையிலே. வீட்டுக்குள் ஏனே வராமல் இருப்பீர் என இருந்தேன் ஏன, பீளுற, சீன என்று படித்து விட்டால் ஆருக்கும் கொஞ்சம் அதிகம் தலைவீக்கம்!
அத்தை, அதிகம் புகழுறியள் நீங்கள்!
உடம்பிப்படி ஏன் உருகிக் கிடக்கு? கடுமை தான் போல உங்கள் கந்தோரில் வேலை?
விடுங்களத்தை சும்மா! நான் வேலைக்கும் அஞ்சுவனே?
முத்துவின் பிள்ளை முழு மாப்பிள்ளை யாகி உத்தியோகத்தில் அமர்ந்து விட்டால், உள்ளபடி நாங்கள் மகிழ்வதற்கு ஞாயம் இல்லை என்பீரே? என்னுடைய தாயார், அவவுடைய தயாரும்.
என்னுடைய தயார், அவவுடைய தந்தையும் கூடப் பிறந்த தெனக்குத் தெரியாதே?
ஆதலினல் நான் உமது மச்சாள்! என் பிள்ளை உம் மச்சினி பிள்ளை. அதெல்லாம் முறை சரிதான்.
ஓடுவது நம்முள் ஒரே இரத்தம் தான் அத்தை. அண்ணர் எங்கே போனர் அவசரமாய்.
எங்கும் இல்லை. இன்று பறுவம், அதனல் கிணற்றடிக்குச் சென்றிருப்பார் தோய, திரும்பி இதோ வந்திடுவார். நீரும் பறுவ விரதம் பிடிக்கிறதே?
ஆருக் குதுகள்? அரசாங்கம் எங்களுக்குப் பூரணைக்கு லீவு கொடுக்க முடியுமே?
உத்தியோகத் தார்க்கு உதுகள் முடியாது. பத்து வரிசம் இருக்கும் அவள் பாக்கியம் செத்து, சிறு குஞ்சுகளாப் பத்தை விட்டுப் போய் விட்ட ஸ் பாவி. எனினும் மணிசர்கள் ஆய்வீட்டீர் நீங்கள். அவள் செய்த புண்ணியத்தால்! சாப்பிடு (ஸ்.? பிள்ளை. சமையல் முடிந்ததே! (வாழைப் பொத்தியைக் கொத்திக் கொண்டு கையில் கத்தியுடன் கமலி புகுதல்)
23

Page 22
მნup6წ):
செல்லம்:
கமலி:
செல்லம்:
முருகப்பு:
செல்லம் :
24
கூப்பிட்டியளே? குழம் படுப்பில் வைத்திருக்கு. வாழைப்பூ இன்னும் வறுக்க அரியவில்லை. கீரை கடையக் கிடக்கு. ரசம் வைக்க உள்ளி யில்லை. கொஞ்சம் உருளைக் கிழங்கெடுத்து வெள்ளைக் கறி யொன்று காய்ச்சி விடட்டுமே.
அம்மா,
நீ என்ன அடுப்படிக்குள் இவ்வளவும் சும்மாவே நின்முய்? சுறுக்காகச் சமை பிள்ளை, கொப்பர் இப்போது குளித்து விட்டு வந்திடுவார்.
(பொத்தியின் பித்தைக் கத்தியால் சுண்டிவிடுகிருள் கமலி. அது முருகப்புவின் மேல் விழுகிறது. முருகப்புவை விறைத்து நோக்கி)
எங்கே அம்மா கொடுவாட் கத்தி இருக்குது?
உப்புமுட்டிப் பக்கம், அடுப்புப் புகட்டிலை தான்!
இன்றைக்கு வேண்டாம். இனி ஒருநாள் வாறன் அத்தை. எங்கடை வீட்டில் இருல் குழம்பும் முட்டையும், அப்பு வடிவாய்ச் சமைம்பார்,
அது தெரியும்! என்றைக்குப் பின்னே வருவீர்?
சனிக்கிழமை?
எண்ணெய் வைத்து நல்லாய் முழுகி விட்டு வந்துவிடும்
அன்றைக் குத்தானே அபரபக்கத் தட்டமி!
(கமலி போதல்)
கட்டாயம் வந்தெம் கறி வண்ணம் கண்டு போம். பிள்ளே இறைச்சிப் பிரட்டற் கறிவைத்தால் அள்ளி அள்ளித் தின்ருலும் ஆசை அடங்குமே? எட்ட ஒதுங்கி இராமல் அடிக்கடி நீர் வந்தால், கணேசனுக்கும் வாய்ப்பு, பொடியனுக்கு எந்த விதமாய் வருகிற திங்கிலிசு! நீரும் பாடத்தை நெருக்கிப் படிப்பித்தால், தோதாய் இருக்கும். தொழிலை மறப்பித்தல்
வேண்டும்.

முருகப்பு:
@g ຄໍາ sub:
(ւp(55նւկ:
செல்லம்:
முருகப்பு:
அருமை அத்தை, மிச்சம் சரி அத்தை! ஒமத்தை வாறன் ஒழுங்காய் இனி வரவே?
நாம் எத்தனை முயற்சி செய்வோமோ, அத்தனை வெற்றி, வரத்தானே வேணும்!
அவன் வீரன் கற்று விடுவான்.
கமலி!
வரட்டுமே..?
(கமலி புகுதல். முருகப்பு போனவன், கமலி வரக் கண்டு திரும்பல்)
சங்கரப்பிள்ளை விதானையார் வந்தாராம் இங்கே? எதற்காம்? எதுவும் கரைச்சலே?.
(பாடல்) ۔۔۔۔
சங்கரப் பிள்ளை விதானை இங்கு வந்த தேளும்? ங்? திங்களன் றடுத்த வீட்டுப் புங்கன் ஏசினுளும்? ங்? சங்கரப் பிள்ளை விதானை இங்கு வந்த தேளும்?. தங்கள் வீட்டு மூலையில் தழைத்து நின்ற வெண்டிக் கன்றை உங்கள் வீட்டில் ஆடு வந்து திங்கு தென்று தொங்கித் தொங்கித் திங்களன் றடுத்த வீட்டுப் புங்கன் ஏசினணும்? ங்?. கேள்விப் பட்ட நேரம் தொட் டுடல் துடிக்குதே! ஆள் விட்டால் வரேனே நான் நெருப் பெடுக்கவே? வேள்வி ஆட்டைப் போல் அவனை வெட்டிச் சரிப்பேன். வெட்டிப் பின்னர் கட்டித் தூக்கித் தோலை உரிப்பேன். உரித்த தோலே இழுத்துக் கட்டி மேளம் அடிப்பேன்!
25

Page 23
கமலி:
செல்லம்:
கமலி:
G)g'sið svið:
கமலி:
செல்லம்:
26
தங்கிடு தத்தா தீம். தங்கிடு தத்தா தீம் தங்கிடு தத்தா தீம் ,
அடுத்த
திங்களன் றடுத்த வீட்டுப் புங்கன் ரசுவானே?
கிழட்டுச்
சங்கரப்பிள்ளை விதான இங்கு மீளுவானே? எங்களையும் உங்களையும் யாரென் றெண்ணிஞரோ? கேள்விப் பட்ட நேரம் தொட் டுடல் டுடிக்குடே? டல்டு டிக்குடே! டல்டு டிக்குடே!.
அம்மா, ஏன் அண்ணர் அதிகம் படபடத்து இம் மாதிரியாய் எழுந்து நின்று கொட்டகை கூரை அதிரக் குதிக்கிருர்?
(முருகப்பு வெட்கி தழுவல்)
என்ன பெட்டை, அண்ணர் முறை வைத் தழைக்கிருய் இப்படி! என்னுடைய தாயார், அவவுடைய தயாரும் இன்னவரின் தாயார், அவவுடைய தந்தையும் கூடப் பிறந்த தென்று கூடத் தெரியாதே? ஆடப் பிறந்தவள் போல் அப்படி நீ அன்னவரைக் கூப்பிட்டாய் என்ருல் குடிமுழுகிப் போய்விடும். * சித்தப்பா" என்று சிறப்பாய் அழைத்திடலாம், ஆள் எங்கே, காணுேம்? அடடா, ஒரு வயிறு சாப்பிடவும் நிற்காமல் போய் விட்டார். சை, பாவம் ! நாக் குணக்குக் கொஞ்சம் நறுக்கப் பட வேண்டும்! போக் கெல்லாம் பச்சைப் பிழையாகப் போகுதென! அந்தப் பொடியரை நீர் ஆர்தான் என நினைத்தீர்? ஒத்தினையே மூன்று தலைமுறையாய் ஊதுகிற முத்துவின் மூத்த மகன் எல்லே?
பொலிசாளர்! -- வித்தை என்று சொல்லி, விடியும் வரை இரவு
முற்றும் முளித்திருந்து, மூசிக் குழல் மூலம் கத்தும் தொழிலே? கணிக்கப்படும் தொழில்!

கமலி:
செல்லம்:
விடு, மடித்தால் விறைப்பாக நிற்கும் உடை யோடு, பணமும் ஒழுங்காய்த் தரும் அரச சேவகம் என்று தெரிந்து கொண்டால் நல்லது நீ! ஆடு பிடிபட்டால் அன்னருக் காள் விடுதல் கூடும். இதை நான் குறித்துக் கொள்ளட்டுமே! தங்கச்சி, என்ன தமிழே நீ பேசுகிருப்? இங்கே பார், கொம்மா எதற்காய் உனை வருத்த எண்ணுகிறேன்? நாளைக் கெனைப் போல் உலையாதே. திண்ணையிலே குந்தித் தினங்கள் கினங்கள் வரும் என் றெதிர் பார்த் தென்றும் இருந்தபடி ஏங்காமலச் அன்ருடம் வேலைக் கழகாய் உடுத்துப்போய், மாதா மாதம் தம் மடியில் படி கொணரும் மாப்பிளையைக் கட்டி மகிழ்ந்து குடும்பத்தைப் பார்ப்பாய்! இதற்காய்ப் பல வாய் முயல்கின்றேன். போய்ப் பார் வெளியில், பொடியனைக் காணவில்லை.
கமலி போதல்)
பள்ளி விட்டால் அந்தப் பயல் நேரே இங்கூரில் உள்ளதுகள் போல் எங்கே ஓடி வருகிருன்? கொல்லன் உலைமுன் குனிந்து கொண்டு நிற்கிறதும் செல்லயா வினரை வளவில் சில பேர்கள் கொட்டில் ஒன்றில் வீற்றிருந்து கொண்டு புகையிலையைத் தொட்டுக் கிழித்தெடுத்துச் சோணையினைக் காப்பிலேயில் இட்டுச் சுருட்டி இமைத்திடுமுன் நூலாலே
கட்டி, மிசின்போல் கடகடென்று மட்டமாய் வெட்டி முடித் தடுக்கப் பார்த்து வியக்கிறதும், பெட்டைகளைக் கண்டால் இப்போதே பெரும் ஆள் போல் கிட்டப் போய் நின்று வியழங்கள் கேட்கிறதும், கட்டை மணியன் குடித்துவிட்டுக் கத்துகிற மெட்டுகளைக் கேட்டோர் மினிற்றில் பிடிக்கிறதும், பட்ட பனையில் பழைய மரங்கொத்தி குட்டுவதில் ஓர் புதுத் தாளம் கண்டு கொண்டு விட்டுக்கு வந்தால் விசரனைப் போலவே ஓட்டமாய் ஒடி ஒதுக்கில் இருந் தந்தக் கட்டை எடுத்துக் கடகடென்று நாளெல்லாம் தட்டு கிறதும் சரியாய் விளங்கவில்லை.
எந்த வழியில் இறக்கி விடினும் °店岛 அந்த வழியில் அடையாத உச்சிகளை
எட்டிப் பிடிக்க எனத் தானே, என் வயிற்றை

Page 24
கணேசு:
Geografy6n) D :
கமலி:
கணேசு:
செல்லம்:
கணேசு:
கமலி:
செல்லம்:
கணேசு:
28
கமலி:
விட்டுத் தரையில் விழுந்த மகா வீரன்! ஐயர் உரைப்பார் அடிக்கடி, இவ்வூரிலே உள்ள அரசோ உதவாத வேற்றரசு, பிள்ளை வளர்த்தல் பெரிதும் அரிதென்று! கண்டவர் ஆர் உண்மையினை? கட்டாயம் இங்கிலிசுப் பண்டிதர் தம் பட்டணத்துப் பள்ளிவரை போக்காட்டிப் பேனை எடுத்துப் பிடித்துப் பெரி தெழுதும் ஆணுனப் பட்ட அரிய கிளாக்கராய் ஆக்கினுல் அன்றி அடியேன் உயிர் பிரியேன். காக்கக் கடவுள்! அவன் கட்டையினைத் தட்டுவதை நீக்கல் முதற் கண் நிகழ்த்தின் நிலை திருந்தும்.
(கமலியும் , கைவில் ஓர் வெட்டை நாய்க் குட்டியுடன் கணேசுவும் புகுதல்)
பார்த்தாயா அம்மா?
பறை நாய்!
எதற்கம்மா வார்த்தை இது, தம்பி வாசலிலே வந்திடு முன்?
ஏனம்மா ஈதைப் பறைநாய் எனச் சொன்னுய்?
பின்னே உதென்ன, பெருஞ் சாதி என்கிறியே? பள்ளர், பறையர், பரிகாரி, பண்டாரம், வெள்ளாளர், தச்சர், கரையார், விதானமார் , பிராமணர், கொல்லர் - பிற இன் ஞே ரன்ன அரிய பெரிய பிரிவு முறைகள்
நிறைய உடைய பிரிய மணிசர்கள் நாய்களுக்கும் அந்த நடப்பைக் கொடுக்கிறதே?
நீ எதுக்குச் சும்மா நெடுக அலட்டுகிருய்?
எங்கே பிடித்தாய் இதை நீ?
வழியிலே, தங்க மக்கை வீட்டுத் தலை வாசலின் முன்னல் நின்றதுகள், ஒன்றை எடுத்து விந்தேன் நேராக! என்ன பெயர் அக்கா நாம் இதற்கு வைக்கலாம்?
நாய்க்குட்டி அந்த விதானையார் வீட்டானே?

Goles sib neo:
கணேசு:
கமலி:
as Gory:
(og svsvid:
கமலி:
செல்லம்:
கணேசு:
செல்லம்:
(நாய்க்குட்டியை வாங்கிப் பார்த்தல்)
பேப்பெட்டை ஆரோ பிடிக்காமல் வீசிவிட்ட பெட்டை நாய்!
பெட்டை நாய்! மெய்தானே? பார்ப்பம் அக்கா?
(கனேக நாயை வாங்கப் போகக், கமலி ஒதுங்கல்)
எட்ட நில்லு, சும்மா!
(சபையை நோக்கி)
இதென்ன ஒரே குழப்பம். விட்ட பகிடி கிடையாது, எதற்காகக் கை தட்டல், சிரித்தல், தலையைத் திருப்புதல்? கொட்டு கொட் டென்று விழித்தல்? குசு குசுத்தல் கட்டையிலே போக, கலிகாலம் அல்லவோ..? கெட்ட நிலை, கேவலங்கள் இன்னும் குறைய வில்லை! அன்னியர் ஆட்சி அகன்ற பிறகேனும் இன்ன இதற்குச் சிரிக்கலாம், இன்னதற்குக் கட்டி அழலாம் எனக் காணும் காலம் இல்லை! பஞ்சையர் ஏதோ பகர்வார், குடி உயரும் கோன் உயர - இல்லை இல்லைக் கோன் மாற என்றெல்லாம் !
ஐயோ, இதென்ன ன்ன்ரை பிள்ளை அலட்டுதே!
வையா புரியா ரிடம் எண்ணை வாங்கி வைத்தால் எல்லாம் சரியாய் விடு மம்மா. இப்படித்தான் சித்தப்பருக்கும் ஒருக்கால் சிரசில் அடித்து, எப்படியோ மாற்றி எடுத்துவிட்டார் அல்லவே?
கொப்பர் பரவணியில் உள்ள குறை ஆச்சி! என்ரை பிள்ளை!
(செல்லம் அந்தரித்துப் பிள்ளையைத் தழுவல்)
அம்மா, எதற்குக் குளறுகிருய்?
(கனேக நில் திருந்தியது கண்டு தேறி)
ஒன்றும் இல்லை! ஒன்றும் இல்லை!
29

Page 25
கமலி: ஒன்று மில்லைத் தம்பி வா.
கணேசு:
செல்லம்:
Safsús) p:
GAavd96mbŭo:
30
a Tuf:
g Tub:
g TLE:
செல்லம்:
art f:
சாப்பிடுவம், உள்ளே.
சரியக்கா,
(கனேசு, கமலி போதல்)
என்னுடைய மாரியம்மா, தாயே! மறு ஒன்றும் நேராமல் ஊரில் பிறர் போல என்னையும் உய்யவிடு! இன்றைக்கே தேங்காய் உடைப்பேன். வருகிற வெள்ளிக்கிழமை விரதம் இருந்துவிட்டுக் கோயிலுக்குப் “பெட்டி கொடுக்க வருகிறேன், தாயே!
(sArLSunsi Luntsgä கேட்டல்)
வாயில் எல்லாம் வாழை! வயலெல்லாம் நெற் கதிர்கள்! கோயில் எல்லாம் எல்லாக் கலையும் குவிந்தனவாம்!.
அது யார் படலையிலே?
(ፌዛፐk-d)
கோயில் எல்லாம் எல்லாக் கலையும் குவிந்த தெல்லாம் போயதேன்?
arritu flau urrriro!
(பாடிக்கொண்டு சாமியார் புகுதல்)
ஏஞே புழுவானுேம் மாரியம்மா..?
(படங்டப்போடு தடுக்கை எடுத்தவள், அதை எறிந்துவிட்டு மான்தோல் விரித்து)
சாமி இருங்கோ ! இருங்கோ தயவு செய்து!
(சாமியார் சாப் கதிரையில் அமர்கிருf)
யார் நீ, மனிதப் புழுவே? உனக்காக அம்மாள் என இங் கனுப்பி அலைக்கழித்தாள் ! மாரியம்மா! உன்றன் விளையாட்டை எப்படி இப்
பாரில் அலையும் பரதேசி கண்டறிவான்? வேண்டியதைக் கூறு விரைவாய். உலகை 3 ல்லாம்

செல்லம்:
a Tib:
செல்லம் :
asFm L5:
a FT if:
ஆண்டவள்! நீலி அழகி! அதிகாரி! காண்டகை காளி கமலி!
(செல்லம் திறக்கிடல்)
கடு மோடி!
வேண்டியதைக் கூறு விரைவாக.
என் பிள்ளைக்கு. ஆண்டாண்டு தோறும் அருக்கன் விரதமிரு! வேண்டியதைத் தந்துவிட்டேன்! - வீரி! வெகு சூரி1 (திருநீறு எறிந்து, கையிலும் கொடுத்து)
கொண்டோடு!
(ஒடுகிருள்)
வா இங்கே!
(வருகிருள்)
நில்லு!
(நிற்கிருள்)
நிமிர்ந்து நில்!
(திமிர்ந்து நிற்கிருள்,
சண்டி! சண்டாளி சஞக்கி! பராசக்தி! அன்னையின் ஆணை! - அதை எடுத்துக் கொண்டு வா
என்னத்தைச் சாமி, எடுத்து வர?
ஏய்க்காதே! பானையிலே உள்ள பதார்த்தத்தைக் கொண்டு வா?
(செல்லம் போய் முட்டி ஒன்றைக் கொண்டு வற்து அதிலிருந்து முப்பது ரூபாவை எண்ணிக் கொடுத்துக் குனிந்து வணக்கல்)
போ நீ, அப்பாலே! பொடிக்குச் சுகம் வரும்!
(சாமியார் நழுதல்)
31

Page 26
செல்லம்:
கணேசு:
கமலி:
செல்லம்:
கணேசு:
செல்லம்:
கமலி:
கணேசு:
கமலி:
செல்லம்:
முருகப்பு:
32
காலம் கலிகாலம் என்று கதைப்பார்! ஆ. ணு,லும் இதுவும் நிகழ்ந்ததே இன்றைக்கு! **போ நீ, அப்பாலே!" எனவும் புகன் ருரே. எப்பாலே.? அப்பாலா இப்பாலா. உப்பாலா" உப்பாலா. உப்பாலோ. உப்பாலே உப்பாலே!
(கமலி, கனேசு புகுதல்)
உப்பாலே..?
உப்பாலே.? என்னம்மா உப்பாலே .?
உப்பெடுத்து கொஞ்சம் கரைத்துக் கொண்டோடிவா!
கமலி போதல்)
அப்பா, மகனே!
(கணேசுவைக் கட்டித் தழுவுதல்)
இதென்ன அநியாயம்!
(கமலி உப்புச் சிரட்டையுடன் புகுதல் கமலியும் செல்லமுமாக உப்புநீரைக் கணேசுவுக்குப் பருக்குதல். அவன் துப்பல்)
துப்பாதே துப்பாதே!
துப்பாதே!
துப்பாதே...?
என்னம்மா, கந்தோர் இடங்களிலே காண்கின்ற போட்டில் இருக்கிறதைப் பொன் மொழி போற் பேசிறியள்?
இப்போ சுகம் அம்மா!
என்ன, சுகம் தானே?
அப்பா! முருகப்பா!
(முருகப்பு புகுதல்)
அத்தை அழைத்தியளே.! ஏதோ அமளியைப் போல இருக்குது! தீதேதும் நேர்ந்த துளதோ? தெரிவியுங்கள்!

Gossiblawio:
கமலி
செல்லம்:
கமலி:
செல்லம்:
கமலி:
செல்லம்:
மூகுகப்பு:
கமலி:
முருகப்பு:
கணேசு:
செல்லம்:
இங்கிலீ சாட்சி இனிதாய் நடக்கையிலே எங்கடை வீட்டில் இதென்ன அமிலோதி? நாங்கள் மலைபோல் இருக்கப் பிழை நடந்தால் போங்கள், எனக்கேன் பொலிசில் ஒரு வேலை?
இங்கே அநியாயம் ஏதும் நிகழவில்லை. எங்கோ இருந்து புகுந்த ஒரு சாமியார் தீர்த்துவிட்டார் நோயை! அது தெய்வச் செயல்தானே பார்த்து வைத்தாற் போலப் பகர்ந்தாரே, "பானையொடு கொண்டா அதனைக் கொடு!" என்று!
பின்னர்.?
கொடுத்துவிட்டேனே! எதனே? எதனை அம்மா?
முப்பது ரூபாய், அதன. முழுக்கவுமோ?
எப்படியோ என்னுடைய பின்ளை எழும்பி விட்டர்ன்! அவ்வளவும் போதும்
Jeyptuurrului !
geouGun"
கொஞ்சம் பொறுங்கள்! கொணர்வேன். ஒரு கணத்தில் வெற்றி! முழுவெற்றி!
வெற்றி! முழுவெற்றி!
(šodi)
நெற்றியில் ஓர் பொட்டை இடு கமலி!
(முருகப்பு தலயை நீட்டல்)
நான் மாட்டேன்.
(aGaura dra ASTäEdv Gasm முருகப்பு நெற்றியில் இடுகிருன்)
: பிற்பாடு பார்ப்போம். பிழையில்லை! இப்போது அவ்
வற்பன் தனப் பிடிக்க ஆயத்தம் ஆகின்றேன்,
33

Page 27
செல்லம்:
கணேசு:
கமலி:
செல்லம்:
கணேசு:
34
கற்பனை உண் டென்ருல், கடலை வறுத்திடலாம்! தள்ளுங்கள்! தாரும் விடை! ஆம், திரும்பிடுவேன், கள்ளப் பரதேசி காதிற் பிடித்தபடி!
(போதல்)
எல்லாம் பெரிய குழப்பம்! ஒரே குழப்பம்!
வாழ் வோர் பெரிய குழப்பம்தான்! ஒர் பக்கம் தாழ்வு! தளர்வு! தவிப்பு மறுபுறமோ ஆள்வு! பணத்தின் அதிகரிம்பு! அப்பப்பா !
நீ போய்ப் படம்மா!
எதற்கு?
(தெளிவுற்று)
வா, சாப்பிடுவம்
(செல்லம், கமலி, போதல்)
சா பா நீ பா வுக்கும் சல்லி தரவேண்டும்.
(கனேசு தவிலுடன் குத்தி அதனை அடிக்கத்
தொடங்குகிருன். திரை விழுகிறது. தவில் அடி இடைவேளை முழுதும் கேட்டுக்கொண்டிருக்கிறது)
இடைவேளை

சோமு:
கணேசு:
சோமு:
கணேசு:
சோமு:
கணேசு:
Gg Frp:
கணேசு
கமலி:
சோமு:
(திரை விலகும்போது இடைவேளையிற் கேட்ட தவிலடி தொடர்கிறது. முந்திய காட்சி தொடர்கிறது. கணேசு தவிலடித்துக்கொண்டிருக்கச், சோமு வெளியில் இருந்து புகுதல்)
நீ என்ன தம்பி நினைத்தாய்.? எதைப் பற்றி.
சாயந்தரம் நாங்கள் • சாதரா' விற்போகும் சேவகத்தைப் பற்றி?
அதற்கென்ன செல்கையிலே கூட வர நான் குதிக்கிறேன். கூட்டிக்கொண்டு ஏகுவீ ராணுல் எனக்குத் திறுத்திதான். ஆகட்டும், பார்ப்போம். நான் அண்ணரிடம்சொல்கிறேன் தாளத்தை என் கையிற் தந்துவிடுங்கள் அண்ணு! நீளக் கச்சேரி நிகழ்ந்தாலும், நேராகப் பின்னல் இருந்து பிசகின்றிப் போடுகிறேன்.
உன்னுல் அது முடியும் என்கிறதோ உண்மைதான்! கொம்மா விடாவே கொலிச்சில் படிக்கவைத்து, எம் மாதிரியா? - எழுதிக் கிழிக்கின்ற
பெம்மானே ஆக்கப் பெரிதும் நினைத்துள்ளா.
தாளத்தை நீ இரண்டு கைகளிலே தாங்கி இன்று ஆளுவோர் முன்னல் அமர்ந்திருந்து தட்டுவதோ ? த ளைக் கவனே நடத்துகிற கச்சேரிக் கோயிலுக் குள்ளோர் குறுந்தெய்வம் ஆக்கிவிட எண்ணி யிருக்கும் இவவுக்கு நீ இன்று
பண்ணி யிருக்கும் நினைப்புப் பழுதன்ருே?
அம்மா நினைக்கும் நினைப்பும் நடக்குமே?
(புகுத்து)
அம்மா நினைக்கும் நினைப்பு நடப்ப தென்ருல், நாங்கள் நினைக்கும் நினைப்பும் நடக்குமே?
செம்மறிகள் போலச் செயலில் இறங்காமல், சும்மா இருந்தால் எதுவும் நடக்குமே? எம்மா நினைப்பை நினைத்தாலும் அந்நினைப்பை இம்மா நிலத்தில் எளிதில் நிகழ்த்திடலாம். ஆசை இருந்தால்!
35

Page 28
கமலி:
சோமு:
கமலி:
Gs mi Cup:
கமலி:
சோமு:
கமலி:
சோமு:
கணேசு:
சோமு:
38
அடடா, இசை வீரர் காசை மதித்துக் கடவுளுக்கே ஏற்கிற பாட்டை அறியாப் பரதேசி முன்னிலையில் காட்ட முனைந்து, கடுக்கன் வயிரத்திற் போட்டு நடக்கப் புகும்போது பேசுகிற பேச்சே இவைகள்? எனக்குப் பிடிக்கவில்லை, சேச்சே.!
கமலி, சிறந்த கருத் தொன்றைக் கூறி விட்டாயே, குறுக்கி! கலையினை எவ் வாறும் அதனை அறியாதான் தர்வாரில் ஏறி இசைத்தல் இழுக் கென்ருய்?
losăr(e)sursărar?
நூறு நிசத்தை நிகர்த்த தொரு நுண்ணிய வார்த்தை! எனினும் வயிறரிக்கும் மட்டும் அதைப் பார்த்து நடத்தல் பழுது, பயணில்லை! தேடி என்ருே ஓர் திருநாளில், ஆனியிலோ ஆடியிலோ வந் தடைகிற சேவகத்தை மோடி செய்து கண்ணுல் முளிசிக் கலைத்துவிட்டால்
சாப்பிட வேண்டாமே?
சமையல் முடிந்திருக்குச் égFnru'ul 9G65)niii G339sir 6Qu6öT ?
சரிதான்! நமக்கு மட்டும் சாப்பா டிருந்தால் சரியாகிப் போகுமே?
ஊராருக் கெல்லாம் உணவு கிடைக்கட்டும், சீராக. பின்னர் சிறப்பாய் உடுத்து வந்து கூடி எமது குழல் கேட்கக் குந்துவார்.
ஊருக்கு முற்றும் உணவு பரிமாற ஆருக் கியலும்? அடுப்படியும் போதாதே!
ஊருக்கு முற்றும் உணவு பரிமாற உள்ளதுதான் ஆட்சி!
**உறுபசியும், ஒவாப் பிணியும், சிறுபகையும் சேரா தியல்வ*" தரசு!
அதனை உருட்டுவதோ வெள்ளையன். அந்த விடாக்கண்டன் தன்னுடைய

as Gissursa:
சோமு:
கமலி:
சோமு:
கமலி:
சோமு:
கமலி:
சோமு:
கமலி:
கணேசு
கப்பலிலே ஏறிக் கடலைக் கடக்கட்டும் சிப்பாய்களோடு சிறு பெண்ணே, பின்னல் நம் உப்பு வியர்வை நம் சோற்றுக் குதவுமடி!
வேர்வையினைக் காய்ச்சிக் கறிக்குள் விடலாமே? (கமலி குழைந்து சோமுவைப் பார்த்தல்) w
ஆரும் எனக் கோர் பதிலளிக்கக் கூடாதோ!
பார்வையில் நீ காட்டும் பணியைப் புரிவதற்குக் காலம் இருக்கு!
கவுண்மேந்து மாறுமட்டும்
போலும்
எடியே, பொடிச்சி, அதுமட்டும் என்னல் இருக்க இயலாது!
சாப்பிட்ட பின்னும், எனக்கோர் பெரிய பசி கிளம்பி ஒடும் உடலம் முழுதும், வயிற்றில் அல்ல!
நாடடிமை மீளுவது நாளைக் கிருக்கட்டும்! ஆடியிலே நாள் வைத் தழைத்தாலும், ஒடிப்போய் நாடி மயிரை மழித்துக் குளித்து விட்டுக் கோடி உடுத்துக் குசாலாய் மணவறையிற் குந்தி விடத்தான் குறி"பார்த் திருக்கிறேன். அந்தோ, உன் அன்னை அவதான் அசையாத நந்தி போல் வந்தா நமக்கிடையில்! இவ்வேழை நந்தன் என்ன செய்வான்?
'நகர்!" என்று பாட் டொன்றைப் பாடப் பிடித்தாற் பயன் விளையும் பாருங்கோ!
போடி பச்சைக் கள்ளி! புலாலின் சுவை அறிய
ஆடறுத்தால் அன்றி நமக் காகாதிப் போதைக்கே!
ஆகா தென ஒர் குழலைப் பிடித்தபடி நோகா திருங்கோ! நுளம்பால் இரவெல்லாம் தூக்கம் வராமல் துடிக்கின்றேன்.
ான்னக்கா?
ஆனியிலே எங்கே நுளம்பு.
3y

Page 29
சோமு: அட, நீ நில்! இந்தக்
கோடை நுணம்பு கொடிதே! அதனேடு வாடையும் சேர்ந்தால் வறுத் தெடுத்துப் போடும் என்று புத்தகங்கள் கூறும், புளுகல்ல!
கணேசு யன்பர்களே,
யேதேதோ யெல்லாம் யெடுத்து யியம்புகின்ரீர். காதலரைப் போலத்தான் காண்கின்ரீர். யானுலும் யோதித் யிருந்தால் யுலகம் யுருப்படுமா? தீதோ, நலமோ ஷெய லாற்ர வேண்டும். மறக்கவோ, ஈதை மறிக்கவோ, அன்ரி மறைக்கவோ, இல்லை மறுக்கவோ ஆகா தென்ரு அன்போ டறைந்து விட யாஷைப் படுகின்ரேன். ஆக்கமும் ஊக்கமும் நல்கி அருகிலே நிற்ரல் விடுத்தோர் நிமிசம் யகல்கின்ரேன்!
(போதல்)
சோமு: கற்றல், இருந்து கணித்தல் இவைகளால் முற்றுப் பெருது. முனைந்தக் கணிப்புகளை ஷற்றுப் புரிந்து ஷரிபார்த்தல் யேற்ற தம்மா
(காசி புகுதல். திடுக்கிட்ட கமலி கதவருகே ஒடல். சோமு வலப்புறம் நகர்ந்து நிற்றல்)
காசி நாடகம் ஏதோ நடக்குது போலிருக்கு?
மேடைக்கு நானும் வரட்டே? உதிலைதான் அஞ்சு நிமிசம் அசுகை புரியாமல் வந்து நின்று பார்த்தேன், வடிவாய்; படுமோ சம்! இந்த விதமே நடிக்கிறது? எங்கடை அண்ணுவி கண்டால் அடித்துக் கலைத்திருப்பார்! வண்ணுன் எனினும் எனக்கு வரும் உதுகள். காதல் என்ருல் சும்மா கதைக்கிறதே உப்பிடி..?
கமலி: மூதேவிக் காசி!
(சோமு கமலி அருகே வருகிருரன்)
காகி முடியாதே உங்களுக்கு?
பார் தம்பி இந்தப் படி யெல்லோ ஆடுவது? இத்திரீப் பாட் தான் எனக்கு வரும் பாருங்கோ,
(நடித்தல்)
38

கமலி:
சோமு:
EST:
சுமலி:
Bryg:
கமலி:
as tଖି :
சோமு:
EmG:
நாதா! அடியாள் நகத்தை தொடுதலும் ஆகாதா? இதற் கந்தக் கண்ணகிதான் உங்களுக்குத் தோதா? புரிகிறது வாதா? பல முத்தம் தாதா ! என் வேதா! சங்கீதா! பொந் காதா..!"ஆ, மாதா! ஏ-சாதா? எப்போ தா? இப்போ தா! தா!
(திரும்பி மறுபடி பாடி மேடையைச் சுற்றி ஆடிவந்து நிற்றல்)
அச்சா !
பகுத்தச்சா !
அப்படிச் சொல்லுங்கள். முச்சந்திக் கொட்டகையில் முன்னளில் ஆடியது மிச்சம் மறந்தேன்! மெதுவாகப் பேசிறியள்பொச்சம் தீராது, பொடியன் உதனுலே! **பட்டணத்துக் கொட்டகையிற் காட்டும் வகச்கோப்பில் விட்டுக் கலைத்தல் வெகு சோர்!’ என் றிப்பதை முட்டாள் பொடியள் மொழியும், முழுமோசம்! துட்டுக் குதவாது துர! துர! துர
(துப்பல் போல் பாவனை)
综并缪亭G! துப்பாதே வீட்டுக்குள்.
சூ! ச்கு! பொறு பிள்ளை. துப்பாக்கிக் கிந்தப் பயமில்லை இப்போது துப்பலுக் கிந்தப் பயமே? துடிக்கிறியள்?
துப்பாக்கிக் காராம் பயமில்லை? சொல்லுகிருய்!
ஐயோ! அதுகள் உனக்குத் தெரியாதே? மெய்யாக? காந்தி கடலை வறுக்க வந்தார், உப் பாக்க என்ரும்! உடனே அவ் வெள்ளையன் துப்பாக்கி நீட்டித், துடும் என்று சுட்டானும்! சப்பாத்துக் காலால் உதைத்தானும் .
அப்புறம்?
காந்தி உதுக் கெல்லாம் சாவாரே? கண்டியளே? ஆந்தை உருவெடுத் தோர் ஆல மரக் கொப்பில் ஏறி இருந்து, சிரித்தார்!
39

Page 30
சோமு,
GarrCup:
கமலி:
சோமு:
காசி:
சோமு:
as rà:
சோமு:
காசி:
Gs woup:
கணேசு :
аъм5A :
கமலி: அடே, அப்பா !
வேறு விதமப்பா, நான் கேள்விப்பட்டது! ஆணுலும் உன்ரை கதைதான் அசல் என்பேன்!
பேனே எடுத்துப் பிடித்துப் பெரிசாக **மேனகா - அல்லது - வேசி உயில்' என்றெல்லாம் ஆரணியிலே இருந்தோர் ஐயங்கார் செய்கிற நூறு கதை உன்ரை ஒன்றின் முன் நிற்குமே?
**வெள்ளையன் சுட்டான்' என ஒன்று சொன்னியே, இல்லை! இதில்தான் பிசகொன் றிருக்கிறது.
சொல்லு தம்பி, பார்ப்பம்? எனக்குத் தெரியுமே? ஆக்கள் கதைக்கிறதைக் கேட்டுவிட்டுச் சொல்லுறன். பத்திரிகை நீங்கள் படிப்பியள், சொல்லு தம்பி. கத்தமாய் சொல்லு! சுதியாய் இருக்குமே
இந்தியாக் காரன்தான் சுட்டான்!
அதெப்படி? உந்தப் புழுகை ஒருக்காலும் நான் நம்பன்! காந்தி தமிழன் எல்லே? காந்தியைப் போய்க் காந்தியின்ரை சொந்த ஊர்க் காரர் சுடுவினமே?
சொல்லக் கேள்! வெள்ளையன்தான் ராசா. அவன்தானே அந்த ஊர்ப் பள்ளிகளை எல்லாம் நடத்தினவன்? பள்ளியிலே பிள்ளைகளுக் கெல்லாம் எதனைப் படிப்பித்தான்?
சொல்லு தம்பி, கேட்பம், சுகமாய் இருக்குது:
(கணேசு புகுதல்)
"நாங்கள் மடையர் நமக்கென்றே ஒன்றும் இல்லை. ஆங்கிலே யன்தான் அரசன் அவன் வாயாற் சொல்லுவதைக் கேட்டாற் சுவர்க்கம்! அவனுடைய காலைப் பிடித்தால் கடுஞ் சுவர்க்கம்!'". இப்படித்தான்!
பஞ்சையர் செல்லுகிற பாட் டொன்று இருக்குதல்லே!
கொஞ்சம் அதைச் சொல்லு தம்பி! நல்லாய் இருக்குமே?

கணேசு :
காசி:
கணேசு :
STS:
சோமு:
3, Tà:
சோமு:
காசி
சோமு:
函阿角出
இந்தப் பாட்டுத்தான் எனக்குப் பிடித்தது,
(ஓதல்)
**ஆணிஅடிப்பதைப் பொறுக்கவோ அமைந்ததுன் தலையே? ஆள்பவர்க் குதவவோ அமைந்ததுன் கூரே? அடுத்தவர் கைபட் டமைந்ததுன் உருவம்
ஆதலால்,
விரும்பிய வண்ணம் நின் இரும்பு மேனி இரு புறம் கூர் எடுத்து இன்னு புரிபவர்க் கீண்ட எப்பொழுதும் ஆகாதே’’
பாட்டே இது? ச, வடிவாய் விளங்குது. கேட்கவும் மிச்சம் ருசியாய் இருக்குது?
வேத மென்று சிொன்னல் இதுதான் புது வேதம்
ஒதியதும் நல்ல ஒழுக்கம்! சபாசு தம்பி, எங்கள் முனி பா கவதர், இதைக் கொடுத்தால், காய் கோத் தொரு தங்கக் கம்பி தரித்துள்ள தொண்டையிலே போட்டுக் குலுக்கிக் கலக்கிவிட்டுத் துண்டு துண்டாய்த் தள்ளி நிரவல் தொடங்குவார். அண்டை அயலிலே நிற்க முடியுமே. எண்டாலும் தம்பி கணேசு வலு விண்ணன் சுண்டங்காய் ஆட்டம் இருந்துகொண்டு, பார் ஆன்!
இந்தியாக் காரப் பொலிசுதான் சுட்டது
அந்தப் வொலிசை அவன் ஆணியைப் போலடித்து வைத்துக் கொள்கின்ருன், அதுதானே தாற்பரியம்?
மெத்தச் சரிதான்! பொலிசுகளை மட்டுமல்ல, ஊரை முழுதும் உதைப் போல்தான் வைத்திருந்தான். ஆரும் அவனுக் கவன் அடிக்கும் ஆணிதான்!
காந்தி தவிர ?
அவர் போற் சிலர் தவிர!”
ஒகோ, இப்போதான் உதெல்லாம் விளங்குது. தொட்டு மிசினைத் துடைக்கும் தொழில் தருவான்;
A1

Page 31
சோமு:
முருகப்பு:
கணேசு :
முருகப்பு:
42
дета:
காசி:
கமலி:
கமலி:
எட்டி உள்ளே பார்த்தால்-இதுகள் பிடிக்காது! கட்டை அவிழ்ப்போமே? கதைத்த தெல்லாம் போது மெல்லே?
(மாராப்துை அவிழ்த்தல், அதற்குள் நிதமும் சரிகையும் பளபளக்கும் பட்டு வேட்டி சால்வைகள்)
எப்படி வேலை?
எடுப்பாய் இருக்குது!
அப்படிக் கொத்த அநியாயக் காரன் முன் கைப்பட நானே கழுவி மினுக்கியதைப் போட்டால் எனக்குப் பிடிக்காது! போகட்டும்! நாட்டாண்மை பண்ணுதற்கு நான்வருதல் கூடுமே? உங்களின்ரை பட்டுகள், நீங்களே சாத்திறியள் எங்கள் குலத்துக் கிழுக் கில்லை, என்ன தம்பி?
{முருகப்பு களைத்துப் புகுதல்)
ஆளைப் பிடித்தேன்! அடித்தேன்! அவனிடம் அத் தாளப் பறித்தேன்! குறித்தேன் டயறியிலே நம்பர்களை எல்லாம்! நடப்பேனு? ஓடிவந்தேன்!
(சுமலி, கணேசு, சோமு, காசி நகைத்தல்)
நம்பத்தான் மாட்டீர்! இதோ அந்த தம்பர்கள்: எல். எட்டு லச்சத் தெழுபத்தை யாயிரம்! எல். ஐந்து லச்சத்தோ டெண்பத் தையாயிரம்! எல். ஐந்து லச்சத் தெழுபத் தெண்ணு யிரத்து மூன்று!
கணேசு, சோமு, காசி சபாசு!
முயற்சி உடையவர் எஞ் ஞான்றும் இகழ்ச்சி அடையார்! இவர் வாழ்க!
அத்தை எங்கே போஞ.? கொடுத்த தாள் நம்பர் முற்றும் உமக்குத் தெரியுமே?
(வாய் பிதுக்கி)
இல்லையே..?

முருகப்பு:
கமலி:
காசி:
கமலி:
முருகப்பு:
கமலி:
முருகப்பு:
கமலி:
அத்தை எங்கே? அத்தை எங்கே..?
(நெளித்து)
அத்தை உள்ளே நித்திரையாம்!
(முருகப்பு உள்ளே போதல்)
பித்தன, இல்லைப் பிசாசா, பொலிசா? ஏன் கத்துகிருன்?
காசி! அவர் நம் பொலிசாளர்!
(முருகப்பு புகுதல்)
அத்தையின் தாள் நம்பர் அவன் தாளின் நம்பருடன் ஒத்து வந்த தென்ருல் உடனே புறுவாச்சு!
காசிப்போ யார் கையில்?
அந்தக் கழுதையிடம்
வீசி விட்டேனே! நாம் வேண்டியது நம்ப ரன்ருே? சீசீ, இதுவா சிறிதும் விளங்கவில்லை?
(தொண்டையைச் செருமிக் கொண்டு இன்றைய அரசியல் வாதியின் மெட்டில்)
தேங்கிக் கிடந்த சிறு தீவை வெள்ளையன்
ஓங்கி வளர உயர்த்தினன். இன்றிங்கே
தார்த் தெருக்கள் ஒடும் தடத்தில் ரயில் ஒடும்! வார்த்தைகளில் எல்லாம் வழித் தோடும் இங்கிலிசு! பார்த்திருக்க மாட்டீர் இவற்றை அவனின்றி! முத்திரைச் சந்தி முகப்பிற் பட மோடும்; பார்த்திருக்க மாட்டீர் இதனை அவனின்றி. இங்கிலீ சாட்சி இதமாய் நடக்கையிலே எங்களது நாட்டிலோ, எங்களது வீட்டிலோ ஏதும் பிசகு நடத்தல் இயலாதாம்! ஆதலால் இந்த வழக் கெமக்கு வெற்றியே ஆக அமையும்! அதன் பின் வருவேன் சான் தோகை மயிலே, துடிக்காதே காத்திருப்பாய்!
சி, கழுதை கண் மண் சிறிதும் தெரியவில்லை! ஒடும் ஒழுங்கை வழியாக நீர் ஓடும்!
(முருளப்பு ஒடிப்போதல்)
43

Page 32
EST:
கணேசு:
கமலி:
கணேசு:
கமலி:
கனேசு
கமலி:
கணேசு:
44
நானும். நடப்பம்? எங்கள் நாயனக் காரர் ஏதேனும் கதைத்தால் இருந்து கொஞ்சம் கேட்கலாம் என்று நினைத்தேன். இவர் இல்லை வீட்டிலே! பட்டணத்தில் அந்தப் பழைய நகரசபைக் கொட்டகை போய் நானும் குழல் கேட்க எண்ணுகிறேன். கிட்ட நுழைய விடுவானே, என்னவோ? வாறன் எணை தங்கச்சி!
வாழ்க! வணக்கங்கள்!
(காசி போதல்)
சிங்கப்பூர் பெஞ்சன் எடுக்கும் சிவராச சிங்கத்தார் பெற்ற சிறிய மகன் கந்தோரில் லீ வெடுத்துக் கொண்டு கொழும்பில் இருந்து வந்து நிற்கிறதால், தாய்க்காரி நேரே போய்க் கோயிலிலே "பெட்டி கொடுத்தா வாம்!
பிறகு? பிறகென்ன?
நூறு வடை மோதகங்கள் நூறு-தயாரித்துத் தாரும் என்று கேட்டுத் தயவாகக் கோயில் அம்மா ஆளோடு சாமான் அனுப்பின. ஆதலினல் புத்தகத்தை நீ எடுத்திப் வோது படித்திருந்தால் பத்துப் பதினைந் துனக்குத் தருவேன் நான்!
பத்துப் பதினைந்து? நூற்றைம்பது தானே?
போ, போ. படி நீ இப்போது!
(கமலி போதல், சோமு மேடையின் அடியில் உள்ள அலுமாரியின் பின் மறைதல், கணேசு படித்தல்)
* 'இங்கிலாந்து தேசத்தில் எங்கள் மன்னர் இருக்கின்றார். இவரது பேர் ஐந்தாம் யோச்சாம் இங்கிலிசுக் காயிரத் தெண்ணுற்றுப் பத்தில் இவர் பிறந்தார்! தை மாதம் ஏழாந் தேதி!
(1810 தை 7 ஆம் திகதி என்று பல தடவை கூறி
மனனம் பண்ணல்)
அங்கிருந்தபடி நம்மை ஆளுகின்ருர், அன்போடு அருளோடும் அருமை யாகத் திங்களுக்கு மும்மாரி பொழியும் வண்ணம்'

சோமு:
கணேசு:
சோமு:
கணேசு:
கமலி:
(திங்களென்ருல் ஆண்டோ? சரியாய்த் தெரியவில்லை! எங்களுக்கோர் ஆண்டில்தான் மூன்று மழை பெய்கிறது!) * இவருடைய திருநாமம் வாழ்க! வாழ்க!" - என்ன இதெல்லாம் பழசாய் இருக்கே? அம் மன்னவர் செத்து மறு ஆளும் வந்து, போய் விட்டாரே, என்ன விசர்ப் புத்தகம் இது? GF ! எட்டாம் எற்வேட்டை எனக்குத் தெரியும்! அவர்
(பாடல்)
முடிதுறந்தாரே! மன்னர்
முடிதுறந்தாரே! சிம்சன்
உடன் பறந்தாரே! ஆயிரத்து எண்ணுாற்றுத் தொண்ணுரற் றைந்திலே அவதரித்த எங்கள் வெள்ளை அரச வள்ளலே ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத் தாநிலே அரசை விட்டு மண முடித்தார்-அதுவும் நல்லதே! முடிதுறந்தாரே! சிம்சன்
உடன் பறந்தாரே!.
(சோமு அலுமாரி மறைவிலிருந்து முகம் மழித்தபடி, முகத்தில் நிறைய சவர்க்கார நுரையுடன், புகுதல்)
பாட்டுப் பிரமாதமாக இருக்குதடா! கேட்டுக் கிறுகிறுத்துப் போனேன் அடா! அடா!
கட்டை மணியம் குடித்து விட்டுக் கத்துகிற மெட் டுங்களுக்கும் பிடித்திருக்கே? மெய்யே? ஒர் பெட்டைக்காய் அந்தப் பெரிய அரசை யெல்லாம் விட்டுவிட் டந்தாள் வெளிக்கிட்டு விட்டுதே.? கெட்ட பழக்கம்!
சரிதான், போ
(கமலி புகுதல் கண்டு)
கேளுங்கோ பெட்டைகளாலே எவர்க்கும் பெருந் தொல்லை!
ஆறுகிறீர் போல. படிப்பை முடித்துவிட்டு வேறு தொழிலை விரும்பும்! எதைப் படித்தீர்
கூறும், இப்போ மட்டும்.
45

Page 33
கணேசு:
கமலி:
கணேசு :
கணேசு ,
கமலி:
கணேசு :
சோமு:
செல்லம்:
46
குடையாதே அம்மா போல்!
நூறுவடை, இன்ஞெரு நூறு மோதகம், எல்லாம் ‘றெடி தானே..?
(கொணர்ந்த பெட்டியிலிருந்து மோதகம் எடுத்துக் கொடுத்து
இந்தா!
மிக
சோமு: நன்றி
(a).6%160ae'r pawri)
நல்லபிள்ளை நீ! தின்று தின்று நடந்தபடி, கோயில் அம்மா வீட்டில் இதைக் கொண்டேக் கொடுத்துவிட்டு, வீதியிலே நின்று விளையாடி விட்டு, மகிழம்பூ கொட்டுண் டிருக்கும். பொறுக்கி மடியில் நிறைய வடிவாய் முடிந்து கொண்டு, ஆறுதலாய் வா தம்பி!
(வடை மோதகத்துடன் பெட்டியைக் கொடுத்தல்)
(பெட்டியை வாங்கிக் கொண்டு)
அப்படியே ஆகுக!
(போதல்)
"நாதீ! எனது நகத்தைத் தொடுதலும் ஆ காதீ? இதற்கு முருகப்புவா உனக்குத் தோதீ.? புரிகிறது வதி.? பல முத்தம்.
(சோமு தொடர இருவரும் அலுமாரியின் பின் மறைதல், செல்லம் புகுதல்)
என்ரை பிழை அல்ல துதுவும் நடக்குமே? பொல்லாத பொய்யன்! பொறுக்கி! புலைப் பயல்! புல்லன்! புளுகன்! புரட்டன்! புப். புண்ணுக்கன்!
(மேடையில் திரிதல்)
என்ரை மருமோன் இதுக் கோர் முடிவெடுப்பான்.

மாணி:
(திரிதல்)
பானையிலே உள்ள பழஞ்சோற்றைப் போட்டிருந்தால் ஏனிந்தத் தொல்லை? இழவு.? பழிப்பெல்லாம்? காவி உடுத்த கடைப்புளிகள் வந்தால், அப் பாவிகளின் பற்கள் உடைக்கப் பட வேண்டும் பிள்ளை கமலி!
பெடிச்சி எங்கே போய் விட்டாள்.?
செல்லம் வோய்த்திரும்பவும், சோமுவும் கமலியும் அலுமாரியின் பின் இறந்து வெளிவரவும் சரியாய் இருக்கிறது. கமலியின் கன்னத்திலும் சவர்க்கார நுரை)
உள்ளுக்கும் இல்லை.
(கண்டு கொண்டு)
உதுவும் நடக்குதுவே? சை சை. எனக் குதுகள் இவ்வளவுக் கானதெல்லாம் ஐயோ, தெரியாமற் பேச்சுதே. ஆச்சி! போடி அடுப்படிக்கு!
(arupas உட்புறமும் சோமு வெளிப்புறமும் போதல்)
போச்சுதே மானமெல்லாம். எங்கிருந்தோ வந்தான் இடும்பன்! இடைச்சாதி (ஆவேசத்தோடு அதை இதை எடுத்தெறிதல் உட்புறம் போதல், மேடையில் சிலகணம் வெறுமை, இருள்கிறது. கமலி புகுந்து அரிக்கன் லாம் பொன்றைத் திண்னேயில் வைத்துத் தூண்டிவிட்டுப் போதல், சோமுவும் மாணிக்கமும் சேவகத்துக்கு வெளிக்கிடுவது தெரிதல்)
சோமு, வா தம்பி, சுறுக்காய் வெளிக்கிடன். நேரமாச் செல்லே? நெடுக இருக்கிறை?
(சோமு அலுமாரியின் பின் மறைந்து வேட்டி மாற்றி வருதல்)
என்ன, தவிற்காரர் இன்னும் வரவில்லை? ஒத்துக்காரர் தான் அடுக்களைக்குள் நிற்கிருர் .
(வெற்றில் போடுதல்)
ஊமையன்ரை காருக்குச் சொன்னி யெல்லே .?
47

Page 34
சோமு:
மாணி:
சோமு:
மாணி:
48
சொல்லி விட்டேன்.
(பொட்9 வைத்துக் கொள்ளல்)
காரை இன்னும் காணன்? வருவானே கட்டாயம்.?
(கார்வந்து நிற்கும் சத்தம்)
வந்து விட்டான் போல!
(சம்கிலியைப் போட்டுக்கொண்டு
உடுப்புகளைச் சரி செய்தல்)
வரட்டும், வெளிக்கிடுவம்.
(எதையோ நினைத்தவர்போல்)
அந்தக் காலத்தில் அவர் பெரிய வித்துவான்.
(காசி கொணர்ந்த துணியிடை யெதையோ தேடல்)
கந்தையா என்று சொன்னுல் கல்லும் குழையுமாம். இந்தியா போன இடத்தில் அவருடைய வாசிப்பைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தனல்
(தேடிய சாதராவைக் கண்டெடுத்தல்)
தாத்தாவுக் கந்தத் தருமபுரத் தாதீனம் போர்த்தியது தம்பி இப் பொன்னுடை!
(அலுவல்ல நிறுத்திப் பரவசப் பட்டு)
அன்ருெருநாள் மார்கழி மாதம் - மதிநிறைந்த நன்னுள் - இவ் வூரிலே யாரும் உறக்கத் திருக்கையிலே - நள்ளிரவு தாண்டிச் சில நாழிகை கடந்த வேளை - உதே இடத்தில் வீற்றிருந்து வாசித்தாய் சூழ மணிசர் கிடையாது - சொக்கிப் போய்ப் பஞ்சையர் மட்டும் ஒரு பாயில் இருக்கிருர் விஞ்சி எழுந்த இசையின் விசையில் இரு கண்கள் கலங்கக் கலங்கத் துடைக்கிருர். ஏழை இருந்தேன், இதோ, இவ்விடத்தில்தான்! ஆழிக் குமுறல், அலைகின்ற மென்காற்றுப் பேசும் மொழிகள், பெரிய உல கழியும் ஊழிக் கதறல், உருண்டு சில கல் மீது

சோமு:
цсптєть?:
சோமு:
uorossî):
சோமு:
uотяжї:
வீழும் அருவி மிழற்றும் மழலைகளாய், பாடல், கவிதை, பரதம் இவை ஒன்றி ஒடப் பிழிந்த சுவையாய்ச் செவிகாணும் ஒசை, அரவம், துளணி, ஒலி, தமரம், ஒதை, அமலை ஒழுங்கோ டெழுப்ப ஒரு புல்லை நறுக்கிம் புகுத்தி முடித்த குழல் வில்லை நீ ஆள விளைந்த வியப்பிடையேபஞ்சையர் மேனி பதறுகிருர் : சொல்லுகிருர்: 'அஞ்சுகிறேன் அப்பா ! உது மனித சாதனையை மிஞ்சியது! தெய்வம், இல்லையேல் பிசாசுதான்."" அன்றே நினைத்தேன்! அதை இன்றே செய்கிறேன்.
காங்களே போற்றத் தலை ஏதோ செய்கிறதே
(கண் துடைத்தல்)
கொஞ்சம் குனிந் திதனைப் போட்டுக்கொள் தம்பி! (மாணிக்கம் சோமு தோளில் சால்வையை இடல்)
அண்ணு இதென்ன? எனக்கா அது ஏற்கும்?
இன்றைக்கு நாங்கள் இருந் தொன்ருய் வாசிக்கும் ஆசையினுல் இப்போ தவதிப் படுகிறேன். பேசாதே!
(மாணிக்கத்தின் உதவியுடன் சோமு பொன்குடையைச் சீராகப் போர்த்திக் கொள்ளல்)
அண்ணு, கலையிற் பெரியவர்கள் தாங்கள்! இதனைத் தரும்போது மேலும் பெரியவர்கள் ஆனிர்கள்! நானே சிறியேன்! ஒரு கதையும் வேண்டாம், உரைக்கக் கேள் தம்பி, சங்கீதம் ஒன்று, சகல உலகுக்கும்! வெள்ளையர்கள் என்ருல் மிருகங்கள் அல்லவே!
(பரவசப் பட்டு)
நாமும் நமக்கோர் நலியாக் கலை உடையோம்! நாமும் நிலத்தினது நாகரிக வாழ்வுக்கு நம்மால் இயன்ற பணிகள் நடத்திடுவோம்! சும்மா இரோம்! என்று சொல்லி உயிர் சிலிர்க்க
49

Page 35
சோமு:
ιοπευτή:
சோமு:
மாணி:
சோமு:
Lorraví:
சோமு,
செல்லம்:
ιοπουδή:
விதானை:
50
மாணி
ஊதப்பா, சோமு உடல் துடிக்க வந்து அவர் உன் பாதத்தில் வீழ்க! பணிக! பணி புரிக!
(தன்வசம் மீண்டு)
என்னுல் உனக்குத் தரத்தக்க காணிக்கை
இவ்வளவே!
அண்ணு, இதிலும் பெரி தில்லை!
இன்றுவரை நான் இதைப் போட்டுக் கொண்டதோ என்றைக்கும் இல்லை!
எனக்குத் தெரியும், அண்ணு!
நீதான் மகனே தகுதி நிறைந்தவன்,
அண்ணு, என் பொல்லா அறிவீனம் நான் அறிவேன்!
கண்ணிர் எதற்கு?
(சோமு விழுந்து வணங்க முயலல், செல்லம் புகுதல்)
மாணி, செல்லம்: கடவுளே!
உங்கை என்ன கூத்து நடத்திறியள்? கண்டறியாக் கூத்துகள்! பார்த்தாற் சனங்கள் சிரிக்கும் பயித்தியமே? தாத்தாவின் பட்டும் தரப்பட்டு விட்டதுவே? என்னத்தைக் கூறி, எவரிடம் போய் ஆறுவேன், ஆச்சி!
இதென்ன அமளிப் படுகிருய்? கூச்சல் இடாமல் குறை இருந்தால் சொல், ஆத்தை!
(விதான புகுதல், செல்லம் அமைதியுறல்)
என்ன? வெளிக்கிட்டு விட்டியளே..?
வாருங்கோ!
ஐந்து விஞடி பொறுங்கோ! அதுக்குள்ளே வந்து விடுவோம்!

விதானை:
шоп63fl,
விதானே:
uroT 6:
Garsid 6:
விதானை:
செல்லம்:
abroT:
பொறுங்கோவன்!
(வாங்கிச் சாவகாசமாகக் குத்தல்)
சின்னப் பிசகெல்லே ஒன்று வந்து.
செல்லம்: என்னது?
சின்னப் பிசகெல்லே ஒன்று வந்து சேர்ந்தது? என்னிற் பிழை சொல்ல மாட்டியள்!
சொல்லுங்கோ !
என்ன விதானே..? இழுக்கிறியள்,. சொல்லுங்கோ!
நாங்கள் நினைக்கிற தெல்லாம் நடக்குமே? ஒற்றைக் காலில் நின் றுரக்கத்தான் பேசினன்.
மற்றவர்கள் யாபேரும் 'மாட்டம்' என்று விட்டான்கள். ஒற்றைக் காலில்தான் அவன்களும் நின்ருன்கள்!
சற்று விளக்கமாய்ச் சொல்லும்.
grífl gefl
**வெள்ளையணுக்கு விழா வெடுக்கும் வேளையிலே அள்ளி வைக்கப் பார்த்தாய்' - அடிக்கவும் வந்தான்கள்! (சுமலி புகுதல்) -
பிள்ளை சொல்லு பார்ப்பும், பிழை என்ன 576ir மேலே? மெள்ள வந்தேன் இங்கே, விசயத்தைச் சொல்லிவிட வேண்டு மெல்லே உங்களுக்கு? வேண்டாமாம் உங்க.ை
f
(Lurrarostih ...... ?)
* எட்டுலகை முற்ருளும் இங்கிலண்டுக் காரர் முன் நட்டுவ மேளம் நடக்க விடுவோமோ? சட்டையும் போடாமற் சனியன்கள் வந்துவிடும்?" முட்டாட் பயல்கள் மொழிந்தார்கள் இப்படியே! நட்டம் உமக்குத்தான், நான் என்ன செய்கிறது? சங்கீத ஞானமே இல்லாத் த்ரித்திரங்கள் - என்னை அதுக்குப் பிழை சொல்லக் கூடாது . வைத்த படியே விழாவை நடத்துதற்குச் சத்தமோ ஆட்கள் சரியாகப் பார்த்துவிட்டார்! கைத்தாளம், தோசை சுடும் கல்லளவாம்! ஊதுகுழல்
51

Page 36
மாணி:
செல்லம்:
விதானை:
செல்லம்:
விதானை:
சோமு:
மாணி:
52
எத்தனை நீளம், வளைவு! டமாரங்கள் மெத்தப் பெரிசு முழக்கர்களின் கூட்டமும் பத்தே? பதினைந்தே.? ஐம்பது பேர்! தங்களது பொத்தான் மினுங்கப் பொலி சடித்த சப்பாத்தோ டத்தனை பேரும் வர ரூபாய் ஐந்நூறு.!
சத்தத்துக் காட்கள் சரியாகப் பார்த்து விட்டார்.
* "பாண்டு' வெள்ளையன்ரை பறை தானே..?
சுச்சுச் கு, வேண்டாம் பழிப்பு! விடுங்கோ என்னைப் போக. அச்சாரம் தந்தேன்?
அதின்னும் இருக்குதே.? V− அச்சாரம் எல்லே? அதைத் திருப்பிக் கேட்பேனே ..? மிச்சம் உபகாரம். வேறேன்ன? செம்பிலே பச்சைத் தண்ணிர் இருந்தால் தாரும். விடாய்க்குது.
(செல்லம் போதல்)
கோப்பி யொன்றும் வேண்டாம்! (செல்லம் புகுந்து செம்பில் நீர் கொடுத்தல்)
குடியும்,
(வாயை வைத்துக் குடித்துவிட்டு)
வரட்டுமே?
(விதானை போதல், கார்க் கோணை)
இழுத்து அடித்துக் கேட்டல்)
நீங்கள் தவிர்த்தல் நியதி, அவர்களே தாங்கள் தவிர்த்தார்.
இரண்டும் சரிதானே? நாங்கள் அவமாய் நடத்தப் படவில்லை. (மறுபடியும் கார்க் கோண் கேட்டல்) ஊமையனும் கார்க் கோணை ஊதத் தொடங்கிவிட்டான். சோமு, கார்வேண்டாம். போ, சொல்லிப் போக்காட்டிவிடு சாமி, முருகா!

செல்லம்:
மாணி:
செல்லம்:
uom san:
செல்லம்:
மாணி:
செல்லம்:
uотяй:
செல்லம்:
(சோமு வெளிப்புறமும் கமலி உட்புறமும் போதல்)
சரிந்து படுத்து விட்டால், ஓமோம், எதுவும் அதோடை ஒழிந்துவிடும்! ஆமையைப் போல அடங்கிக் கிடக்காமல், ஓம் அல்ல தில்லை, ஒரு வார்த்தை சொல்லுங்கோ,
என்னத்தை ஆச்சி இதுக்குள் நெருக்குகிறை?
முன்னத்தைத் தானே முதலில் முடிக்கிறது? அங்கே வடலி அடைப்பார் நெருக்குகினம். இன்றைக் கொரு முற் றிதற்கு; தங்கச்சிக் கந்தப் பொடியரைத் தான் செய்கிறது; இங்கே நான் சோமன் இருக்க விடமாட்டேன்.
சோமுவைப் போ என்று சொல்ல முடியுமே? ஏதோ எனக்குத் தெரிந்த உருப்படிகள் இன்னும் இரண்டொன் றிருக்கு; கொடுத்துவிட்டால், அப்புறம் என்ரை அலுவல் முடிஞ்சுது!
அப்ப அறுங்கோ ! அறிவின்றிப் பேசிறியள்.? செப்பமாய் என்றைக் கெதனைத்தான் செய்கிறியள்? (வீட்டுக் கதவில் கமலி தோன்றுதல், தரித்தல்.
திகைத்தல். மறைதல். மாணிக்கமோ செல்லமோ கமலியைக் காணவில்லை)
உள்ளபடி உன் விருப்ப்ம் அது வென்றல், பிள்ளைக் கதுதான் பிரிய மென்ருல், நீ அந்தச் சள்ளைப் பயலுக்கே செய்யன். சரிப்படுத்தப் பாரன். அது உனது பாரம்! சரி சரி, போ,
(திருத்தி அடைந்து)
நேரமாச் செல்லே, நெடுக இருக்கிறியள்?
வாருங்கோ சாப்பிட
வேண்டாம்.
படுங்கோவன்.
(செல்லம், மாணிக்கம் உட்புறம் போதல்,
சோமு புகுதல் கண்டு செல்வம் திரும்பல், சோமு குவிந்ததல் நிமிர்த்தவில்லை)
53

Page 37
G
செல்லம்
செல்லம்:
Gayпр:
சல்லம்:
சோமு:
சோமு:
சோமு:
54
சோமு முதலில் உனக்குத்தான் சொல்லுவன். நீதான் முழுவதையும் நின்று நடத்துவி: அண்ணர் வேறே யார் அவளுக் கிருக்கினம்.?
ess -...-ories?
ஒத்துக் காரற்றை பொலிசுப் பொடியருக்கு அத்தை மகளின் மகள் தானே இக் கமலி. ஒத்துக்கொண்டிட்டார் இருவரும். உனக்கும் அது சந்தோசம் தானே. சரியே.? சரி தானே..?
(ஒதுக்கி ஓர் வாங்கில் குந்தல்)
சாப்பிட வாவன்.
தயவு செய்து வேண்டாம்!
படு தம்பி, பின்ன!
(லாம்பைத் தணித்துவிட்இச் செல்லம் போதல்) படுத்துக் கிடந்து துடிப்பதோ எங்கள் துறை!
(சிறிது நேரம் இருத்தல். பிறகு எழுந்து வோய்ச் சுவரில் மாட்டியுள்ள குழலை எடுத்தல். மணி 12 அடித்தல். குழலைப் பார்த்து)
அண்ணனும் கூட அவமதிக்கத் தக்கதிது!
(குழலத் தோளில் மாட்டல்) உண்மை கொடிதே! உலகில் அதனுடனே
போரிட்டு வாழப் புகுந்தோம். கலங்குவதோ?
(பெற்ற சால்வையை எடுத்து விரித்து வடிவாகப் போட்டுக்கொள்ளல்)
விரிட்டு அலறி விழுந்து புரளுவதோ பார் எட்டுத் திக்காய்ப் பரந்து கிடக்கிறது.
(தீர்மானத்தோடு நடந்து போதல், மேடைவில் இருள ஆரம்பிக்கிறது பஞ்சையரின் குரல் பின்னணியின் ஒதிக் கேட்டல், அதோடு ஏற்ற ஒலிகள்)

குரல்:
கமலி:
நின்றந்தக் கோயில் நிமிர்து, நெடுந்தூரம் பார்த்துப் பயன்கள் விளைக்கின்ற கோபுரமும்,
(கண்டா மணி ஓசை)
வேர்த்துக் கலைஞர் விளைத்த மணி மண்டபமும், வீதிகளும், நூறு விளக்கும், பரதத்தின்
(பரத நாட்டியப் பல்லியம்)
சேதிகளேக் கூறும் சிலம்புச் சிறுபாதம் ஆடும் அரங்கும், அறிந்து சுவைஞர்கள்நாடிப் புகுந்து நயந்திட, நீ சோமனுடன் ஊதும் சூழலில் உயிர் பெற் றுடல் புளசித்து ஆதி அறையில் அமரும் கடவுளுமாய்
(ஓசைகள் அடம்கல்)
என்ருே ஒரு நாள் எழும்.
(திடீரென தனி நாயனந்தோசை மேலே எழுந்து அபாரமாகக் கேட்டல், கமலி மணமகன் போன்ற அலங்கார உடையுடன் புகுந்து சோமுவைத் தேடி அங்கு மிங்கும் , அலுமாரியின் பின்னும் பார்த்து விட்டு)
உண்மை கொடிதே உலகில் அதனுடனே போரிட்டு வாழப் புகுந்தோம், கலங்குவதோ? வீரிட் டலறி விழுந்து புரளுவதோ? பார் எட்டுத் திக்காய்ப் பரந்து கிடக்கிறது!
(கமலி கூட்டிலிருந்து விளியை எடுத்து அனேந்தபடி,
தீர்மானத்தோடு வெளியேறல்; மேடையை இருள் முற்ருகச் சூழ்கிறது.)
55

Page 38
பஞ்சை:
பஞ்சை:
56
பிற்கூறு
(மேடையைச் சூழ்ந்த இருளிடையே சில கணங்கள் நாயனம் ஓங்கிக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுச் சற்றுத் தணிய, இருட்டிடை பஞ்சையர் மட்டும் தெரிதல்)
கீதம் உயிரைக் கிளறிப் பிழிந்தெழுந்து வேதம்போல் ஓங்கி வெளியெங்கும் பொங்கியதே! தூய அமிழ்தின் துமியோ? துடித் தழைக்கும் சேயின் குரலோ? செழுந்தமிழோ? சாமத்தில் கோயில் இடத்து நின்று கூப்பிட்டுக் கேட்கிறதே!
(இருகணம் மறுபடியும் நாயனம் ஓங்கிவிட்டுத் தணிதல்)
ஆரோ பெரியன் குழலோடு அழுதிருகண் நீரால் நனையும் என் நெஞ்சு!
(இருகணம் மறுபடியும் நாயனம் ஓங்கிட்விடுத் தணிதல்)
சோமா, இதுவென்ன சொர்ப்பனமோ! நத்தோடு கூகை இருந்து குரல் காட்டும் கும்மிருட்டில்
(நெருப்புப் பெட்டியைத் தட்டி ஒரு துரண்டாமணி விளக்கை ஏற்றுகிருர். திருப்பணி புரியப்பட வேண்டிய பழைய கோவிலின் சிறு மண்டபப் பகுதி ஒன்றும், அதில் தந்தி வாகனத் தருகில் சோமு இருந்து குழல் ஊதுவதும் தெரிகிறது,
நீயோ, உனது நிழலோ, குழ லெடுத்தீர்?.
(Garropsidiir (75 GB abpi sairai JayajāTai
குழப்பாமல் ஒரு கப்போடு குத்துகிருர், சோமு காணுமல் தொடர்ந்து ஊதிக்கொண்டிருக்கிருன்)

பஞ்சை :
ஓயாத இன்பம் உனது !
கண்ணேத் துடைத்தல், குழல் ஓசை ஓங்குகிறது, சில கணத்தில் பாதசரத்தொலி, அதை அணிந்தவள் அந்தரித்தோடி வருவதுபோல் கேட்கிறது. சோமு ஊதி முடித்துக் குழலை வைத்துவிட்டு நிமிர்கிருரன். மேடையின் எல்லையில் கமலி தோன்றிச் சோமுவின் அருகிற் செல்லக் கொட்டுமேன ஓசை தொடக்கிப் பெரிதாகக் கேட்கிறது. தொடர்ந்து மந்திரம் ஒதிக் கேட்டல், ஐயர் ஒரு மலரைக் கீழே கிடக்கக் கண்டெடுத்துச் சோமு விடம் கொடுக்க, அவன் அதனைக் கமலியின் பின்னலிற் சூடல், பிறகு, சோமுவும் கமலியும் கோயிற் கருவறையை நோக்கி வணங்குதல், வணங்கியவாறு சபையை நோக்கித் திரும்பி முன்மேடை கு வர அவர்களுக்குப் பின்ஞல் திரை விழுகிறது. நாடகத்தின் பிற பாத்திரங்களும் ஒவ்வொருவராக வந்து நின்று சபையை வணங்க, சபையில் விளக்குகள் மெல்ல மெல்ல மீள்கின்றன. நாடக ஆரம்பத்தில் கேட்ட தவிலடி மீண்டும் கேட்க ஆரம்பிக்கிறது.
9dteraafiab um)
நாடகம் கண்டு நயக்கத் தெரிந்தோர் நடுவினில் வந்து ஆடி மகிழ்ந்தோம்; வணக்கங்கள் கோடி, அனைவருக்கும்!
முற்றிற்று
57

Page 39
மஹாகவியும் தமிழ்க் கவிதையும்
சண்முகம் சிவலிங்கம்
கடந்தமுப்பது வருட காலமாகக் கவிதை எழுதிவரும் மஹாகவி அவர்கள் பொதுவாக அன்றிலிருந்து இன்றுவரை இலங்கையின் தலையாய தமிழ்க் கவிஞர் என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட் டுள்ளார். இன்றுள்ள தற்காலக் கவிஞருள்ளே காலத்தால் முந்திய வரும் இவரே.
இவருடைய நூற்றுக் கணக்கான தனிக் கவிதைகளும் பல காவியங்களும் கவிதை நாடகங்களும் இசைப் பாடல்களும் பத்திரிகை மூலமாகப் பிரசுரமாகி யுள்ளன. நூலுருவமாக வள்ளி, குறும்பா என்ற கவிதைத் தொகுதிகளும், லடிஸ் வீரமணி அவர்களால் மக்கள் மத்தியில் வில்லுப்பாட்டாக இசைக்கப்படும் கண்மணியாள் காதை (கலட்டி) என்ற காவியமும் வெளிவந்துள்ளன. சிறிது காலம் தேன் மொழி என்னும் கவிதை இதழையும் நடத்தியுள்ளார். இப்போது, **நாடோடிகள்’ நாடகக் குழுவினரால் பலமுறை மேடையேற்றப் பட்டு, வைதீகர்களின் எதிர்ப்பையும் மக்களின் ஆதரவையும் பெற்ற கோடை என்னும் கவிதை நாடகம் வெளிவந்துள்ளது. புதியதொரு
வீடு, முற்றிற்று, கோலம் முதலிய அவருடைய மற்ற நாடகங்களும் மேடை யேற்றப்பட உள்ளதாக அறிகிருேம்.
இவ்வளவு அதிகமான ஆக்கங்களை வெளிக் கொணர்ந்திருந் தும், அவரைப் பற்றிய ஆதார பூர்வமான விமர்சனம் எதுவும் இன் னும் நம்மிடையே முயற்சி செய்யப்படவில்லை. அவரைப் பற்றி மட்டு மல்ல, பொதுவாக அநேக தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியநிலைமையும் இதுவே. அண்மைக் காலத்தில், மாக்ஸிசக் கண்ணுேட்டத்தில் எமது சில இலக்கியப் படைப்புகள் பொருள் ரீதியாக ஆராயப்படுகின்றன எனினும், கலை ஆக்க ரீதியாக எமது படைப்புகளை ஆராய்வதற்குத் தகுந்த அடிப்படைக் கோட்பாடுகளை இன்னும் நாம் வகுத்துக் கொள்ளவில்லை.
58

இந்த நிலையில் தற்காலத் தமிழ்க் கவிதைப் பரப்பில் மஹா கவிக்கு உள்ள இடத்தையும், தற்காலத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அவர் சாதித்து இருப்பதையும், வருகின்ற சில ஆண்டுகளில் நாம் மேலும் மேலும் சீர்தூக்கிப் பரிசீலித்துப் பார்ப்பது அவசியம்.
2
எந்த ஒரு இலக்கியக்காரனும், அவன் வாழ்கின்ற நாட்டின் சரித்திரச் சூழலாலும் அவனுக்கு அமைந்த வர்க்கத் தொடர்பா லும் பாதிக்கப்படுகிருன் என்பதும், அவற்றின் பிரதிபலிப்பு அவ னுடைய படைப்புகளில் இடம் பெறும் என்பதும், பொதுவாக ஒப் புக்கொள்ளப்படும் உண்மை, அதே போல, இந்தப் புறச்சூழற் பாதிப் புக்கு ஒவ்வொரு இலக்கியக்காரனும் தன்னில் அமைந்த சில தன்மைப்பாடுகளினல் முகம் கொடுக்கிருன் என்பதும் அந்த முகம் கொடுத்தலில் காணப்படும் இணக்கமும் இணக்க மின்மையுமே அவனுடைய வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் என்பதும், அவ் வாறு ஒரு சரித்திரச் சூழலுக்கு அவனுடைய தன்மைப்பாடு உரு வாக்கும் இணக்கம் அல்லது இசைவாக்கம் பின்தொடரப் படுமாயின், அவன் ஒரு புதிய சந்ததியை விருத்தியாக்கியுள்ளான் எனப் பொருள் படும் என்பதும் ஆழ்ந்து பெற்றுக் கொள்ளக்கூடிய உண் மைகளே.
மஹாகவி, நாட்டின் அரசியல் சுதந்திரத்திற்கான கோரிக்கை வலுப்பெற்ற காலகட்டத்திலிருந்து, தமிழ் - சிங்கள தேசிய மறு மலர்ச்சிக் காலகட்டத்தினுாடாக வர்க்க முரண்பாடுகள் கூர்மை யடைந்துவரும் இன்றைய காலகட்டத்தினுள் பிரவேசிக்கிருர் என் பதையும், அவர் யாழ்ப்பாணத்துக் கிராமம் ஒன்றில் சாதாரண மத் தியதர வர்க்கத்தில் பிறந்து, பெரும் பகுதிக்காலம் கொழும்பில் உத் தியோகம் பார்த்து, அரசாங்க நிர்வாக சேவையாளராகி, இன்று நாட் டின் ஏனைய பகுதிகளிலும் கடமையாற்றும் ஒரு புத்திஜீவி என்ப தையும் நாம் மனதில் வைத்துக் கொண்டால் அவருடைய படைப்பில் காணப்படக்கூடிய சரித்திரப் புறத்தாக்கங்களை நாம் பெரும்பாலும் எல்லைப் படுத்திக் கிரகித்துக் கொள்ளலாம்.
அரசியல், பொருளாதாரச் சுதந்திரத்திற்கான கோரிக்கை களும் மாறுதல்களும், சமூக சுதந்திரம், பண்பாட்டுச் சுதந்திரம் ஆகி யவற்றிற்கான கோரிக்கைகளையும், மாறுதல்களையும் அவற்றின் உடன்விளைவாகத் தோற்றுவிக்கின்றன. மனிதாபிமானத்தை அடிப் படையாகக்கொண்ட சமூகச் சுதந்திரஉணர்வு, சாதிக் கட்டுப்பாடு, பெண்ணடிமை, பண்ணையடிமை போன்ற சமுகத் தளைகளிலிருந்து
59

Page 40
விடுதலை கோருகின்றது. பண்பாட்டுச் சுதந்திர உணர்வு, விதேசியக் கலாச்சாரத்தை வெறுத்து, சுதேசியக் கலாச்சாரத்தை மீட்டெடுத் தலுடன், பழைய நிலமான்ய சமுக அமைப்பின் ஆசார அனுஷ்ட டான சடங்கு சம்பிரதாயங்களிலிருந்து விடுதலையையும், தனி மனித மனப்பான்மையையும், பகுத்தறிவு வாதத்தையும், பழைய கலை இலக்கிய வடிவங்களை உடைத்துக் கொண்டு, தனக்குப் பொருத்த மான புதிய கலை இலக்கிய வடிவங்களை ஆக்கிக் கொள்ளும் வேட் கையையும் உண்டாக்குகிறது. எப்பொருளும் கவிதைக்கு - இலக்கி யத்திற்கு - ஆகும் என்ற கட்டற்ற தேடலையும் அதனல் கவிதை வெளியீட்டிலும் புதிய புதிய முறைகளையும், சொல் வார்ப்புக்களையும், உவமானங்களையும், உருவகங்களையும் கவிதையுள்ளம் நாடுவதற்குரிய பெளதிகச் சூழலும் இதுவே. சாரியாகச் சொன்னல், தற்காலக் கவிதை அல்லது நவீன கவிதை என்பதே இந்தச் சகாப்தத்திற்கு உரிய ஒரு புதிய வார்ப்புத்தான்.
தேசிய மறுமலர்ச்சிக் காலத்தில் மத்தியதர வர்க்கத்தின் சிந் தனையில் ஏற்பட்ட இந்தப் பொதுவான வளர்ச்சிக்கும் மாறுதலுக் கும் மஹாகவி பிரத்தியேகமானவரல்ல. உண்மையில் அவரே அதன் சிறந்த பிரதிநிதியாய் - மேற்குறித்த சகல சிந்தனை, உணர்வுகளை யும், தமது கவிதைப் பொருளாகக் கொண்டு - விளங்குவதை அவரு டைய படைப்புகளிலிருந்து அறியலாம். இன்று வரையுள்ள மஹா கவியின் கவிதைப் பொருட் பரப்பை விரிவாக ஆராய விரும்புகிற வர்கள் இந்தப் பொதுவான எல்லைப்பாட்டை அறிவார்கள்.
ஆனல் பொருள் ரீதியான இந்த எல்லைப்பாடு, அல்லது, இந்தப் பொதுவான சரித்திரச் சூழல் மஹாகவியின் சிந்தனையை எப்படிப் பாதித்தது என்ற விபரங்கள், தமிழ்க் கவிதைப் பரப்பில் அவருடைய பங்கு எத்தகையது என்பதைச் சரியாக அறியத்தர மாட்டாது. இந்தச் சரித்திரச் சூழலின் பாதிப்புக்கு மஹாகவி முகம் இடுக்கும்போது, அவர் தன்னிடம் அமைந்த என்ன தன்மைப் பாடுகளிஞல், என்ன இணக்கத்தைத் தமிழ்க் கவிதைக்கு ஏற்படுத்தி ஞர் என்பதை ஆராய்வதன் மூலமே, அவருடைய சரியான பங்கை அறிந்துகொள்ள முடியும். உதாரணமாகப் பாரதியும் பெரும்பாலும் தேசிய மறுமலர்ச்சிக் காலத்தவர்தான். பாரதியின் சிந்தனை - உணர் வுகளும், ஏறக்குறைய மேற்குறித்த எல்லைக்குள்ளேயே உள்ளன. எனி னும் பாரதியின் கவிதைக்கும், மஹாகவியின் கவிதைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது மேலோட்டமான வேறுபாடு அல்ல. மிக வும் ஆழமான வேறுபாடு ஆகும், இத்தகைது வேறுபாடே அவர வரின் தன்மைப்பாடும் இணக்கப் போக்கும் ஆகும். பாரதியைப் பொறுத்த வரையில், பரந்துபட்ட மக்களின் சமூக அரசியல் விழிப் புணர்ச்சிக்கும், போராட்டத்திற்கும் தமிழ்ச் செய்யுளையும் கவிதை
60

யையும் அழைத்ததே அவருடைய தன்மைப்பாடு ஆகும். அதன் பயனுய்த் தமிழ்ச் செய்யுளும் கவிதையும் சில பிரத்தியேகத் தன்மை களைப் பெற்றன. அத்தன்மைகள் வழிவழியாகச் சிலரின் கவிதை களில் வளர்ச்சி அடைந்தன. அதுதான் பாரதியின் முக்கியத்துவம். அப்படியல்லாமல், அந்தக் காலத்துச் சமூக அரசியல் விழிப்புணர்ச்சிக் கும் போராட்டத்திற்கும் பாரதி வசனத்தை மாத்திரம் அழைத்திருந் தால், அல்லது தீவிரமான இயக்க நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொண்டிருந்தால் பாரதி தமிழ்க் கவிதை உலகு அறியாத ஒருவ ராகவே இருந்திருப்பார். அல்லது அவர் கவிதையைத், தோத்திரப் பாடல், கீர்த்தனைகள், குயிற்பாட்டு போன்றவற்றிக்கு மட் டு ம் அழைத்திருந்தால், ஒரு இடைக்காலப் புலவனுக்குக் கூடிய எந்த அந்தஸ்தும் பாரதிக்கு ஏற்பட்டிருக்காது. அதுபோல மஹாகவி யின் முக்கியத்துவத்தையும் நாம் சரியாகக் கண்டறிய வேண்டு மாஞல், குறித்த சரித்திரச் சூழலுக்கு முகம் கொடுத்த அவரின் தன்மைப்பாடு எனவும், அதனுல் தமிழ்க் கவிதைக்கு ஏற்பட்ட இணக்கத்திறன் எனவும் ஏதாவது இருந்தால் அவை எவை எனக் கண்டறிதல் வேண்டும்.
3
இதற்கு முதலில் தமிழ் நாட்டினதும் இலங்கையினதும் சம காலக் கவிதைப் போக்கை ஒப்பு நோக்கிப் பார்ப்பது அவசியம்.
தமிழ் நாட்டின் தற்காலக் கவிதை பாரதியுடன் ஆரம்பமா வதாகச் சொல்லப்படுகிறது. பாரதியின் தேசிய இயக இசைப் பாடல்களையும், தோத்திரப் பாடல்களையும், பழைய காவிய மரபில் தோன்றிய முப்பெரும் பாடல்களையும், சில தனிக் கவிதைகளையுந் தொடர்ந்து, பாரதிதாசன் திராவிட இயக்கத்திற்காக எழுதிய பிரச்சாரச் செய்யுள்களும், அதே தொனியில் அமைந்த சில காவி யங்களும் தோன்றின. அத் துட ன் இசைப் பாடல்களின் சந்த அமைப்பில் ஒரு வித்தியாசத்தையும், இயற்கை அழகுபற்றித் தனித்துண்டமாக எழுதும் ஒரு மரபையும் அவர் தோற்றுவித்தார். அதே காலத்தில் வா பூழ் ந் த நாமக்கல்லார், தேவி, சுத்தானந்த பாரதியார் போன்றேர் பெரும்பாலும் பாரதியும் பாரதிதாசனும் கையாண்ட விருத்தப் பாக்கக்ளயும் சிந்துகளையும் அதே பாணியில் கையாண்டார்கள். பாரதி பரம்பரை என ஒன்று அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது.
பாரதி பரம்பரையின் வளர்ச்சி திருப்திகரமான தல்ல என்பது இன்று தமிழ் நாட்டில் பலரது தீர்க்கமான கருத்து. அவர்கள்
61

Page 41
பெரும்பாலும் எழுதும் சிந்துகளும் விருத்தங்களும், இயற்கை வரு ணனையும் காதலும் கருத்துரையும் மலிந்த சொற்சிலம்பமாகி விட்டது என்பதை அநேகமாக எல்லோரும் ஒப்புக் கொள்கிருர்கள்.
பாரதி இலகு படுத்தியதாகக் கூறப்படும் செய்யுள் நடை இவ்வாறு ஜீவனுள்ள எதையும் தாங்க முடியாத வெற்றுக் கூடாகி, வெறும் சிலம்பொலியாகிக் காணப்படும் தமிழ்நாட்டில்தான் செய்யுள் உருவம் உடைக்கப்பட்டு, வசன கவிதை அதன் உடைந்த ஒடுகளினுள் இருந்து குஞ்சு பொரித்து வரவும் காண்கின்ருேம். இந்த வசன கவிதை, சிதம்பர ரகுநாதன் சில கா ல ம் காட்டிக்கொள்ள முயன்றது போலத் தமிழ்நாட்டில் மடிந்துகொண்டுபோகும் ஒரு மரபு அல்ல. மாருக, இன்று தமிழ்நாட்டில் கவிதை என ஏதாவது எழுதப்படுமானல், அதை வசன கவிதை எழுதுபவர்களிடையேதான் காண முடியும் என்ற ஒரு நிலை உருவாகிவிட்டது. எழுத்தில் மட்டு மல்லாது, கணையாழி, நடை, ஞானரதம் முதலியவை போன்ற பல பத்திரிகைகளிலும் செய்யுள் நடை வழக்கொழிந்த வசனப் பாணியி லான இந்த வசனகவிதைகளே பிரசுரமாகின்றன. தாமரையில் வெளிவரும் கவிதைகள் கூட, அந்தப் புதுக் கவிதைகளின் விகாரத் தன்மை அற்றனவாய் இருப்பினும், வசனத் தன்மையை-செய்யுள் உடைவை-அதிகமாகக் கொண்டவையே. கலைமகள், கல்கி, தீபம் போன்ற பத்திரிகைகளும் வழக்கமான கவிதையைப் புறக்கணித் துள்ளன.
இலங்கையின் நிலை என்ன? பாரதியையும் பாரதிதாசனேயும் பின்பற்றிய, அவர்கள் பரம்பரையினர் எழுதிய அதே விருத்தப்பாக் களையும் சிந்துக்களையும்தான் இலங்கையிலும் ஒரு தற்காலக் கவிஞர் பரம்பரையிர் எழுதத் தொடங்கினர் என்று கூறக் கூடுமாயினும் அதைத் தொடர்ந்து இங்கு மூன்று முக்கியமான மாற்றங்கள் நடந் துள்ளதைப் பின்னேக்கிக் காணலாம். அவை:
(அ) சிந்துவகை வரவரத் தன் முக்கியத்துவத்தை இழந்து
ஆரம்பக் கவிஞர்களின் ஆரம்பப் படியாக ஓய்ந்தது. (ஆ) வெண்பாப் பயிற்சி பரவலாக்கப்பட்டு, அதன் ஒசை பேச்சோசைத் தொனிக்கு மாற்றப்வட்டது. அகவலிலும் இவ்வாறே. (இ) விருந்தப்பா முதலியவை, இரு கிளையாக வளர்ச்சியடை யத் தொடங்கின. ஒரு கிளை சந்த விகற்பங்களை வளர்த்து வளர்த்து, 160ம் ஆண்டுகளில் ஷிணிக்கத் தொடங்கியது. மறு கிளை பேச்சுமொழியின் தொணியை நோக்கி வளர்ந்தது; இன்னும் வளர்கிறது.
62

இலங்கைத் தமிழ்க் கவிதைகளில் பரிணமித்துள்ள இந்தப் பேச்சோசை அறுபதாம் ஆண்டுகளில் இனம் கண்டுகொள்ளப்பட்டது. 4 - 1 - 68ல் பேச்சோ சையும், பாட்டோசையும் என்ற தலைப்பில் எழுதிய முருகையன், 'பேசும் குரலுக்கேற்ற சுதந்திரமான தாள லயத்துடன் ஒழுங்கு கெடாமல் இயங்கிச் செல்வதே' பேச்சோசை இயற்பா என வரையறை செய்தார். 1-3-70 ல் பேச்சுமொழியும் கவிதையும் என்ற தலைப்பில் எழுதிய நுஃமான், பேச்சோசைப் பண்பு பெற்ற சில இலங்கைக் கவிதைகளை எடுத்துக்காட்டிப் பின்வருமாறு எழுதுகிருர்: "(இக்கவிதைகள்) ஒரு செய்யுளுக்குரிய எதுகை மோனை, சீர், தளைக் கட்டுப்பாடுகளை இழக்காமலேயே பேச்சோசை யின் சகல பண்புகளையும் கொண்டுள்ளன. வசனத்தைப் போல் நிறுத்தக் குறிகளைப் பெற்று, சிறு தொடர் அமைப்புகளைக் கொண்டு, செய்யுள் இசையின் ஆதிக்கத்தை விட்டு நீங்கி உள்ளதை நாம் இங்கு காண்கின்ருேம். மரபு ரீதியான எல்லாச் செய்யுள் உருவங் களிலும், ருறிப்பாக வெண்பா, கட்டளைக்கலிப்பா, கட்டளைக்கலித் துறை, கலிவிருத்தம் போன்ற வரையறுப்புகள் மிகுந்த வடிவங் களிலும், இன்றைய எமது நவீன கவிஞர்கள் இந்தப் பேச்சுமொழிப் பண்பைச் செயற்படுத்தி இருக்கின்றர்கள், ஈழத்துத் தமிழ்க் கவிதை இலக்கியத்துடன் தொடர்பு கொண்டவர்களுக்கு அது தெரியும். '
ஆகவே இரு நாட்டுக் கவிதைப் போக்குகளையும். நாம் ஆராயும் போது, தமிழ் நாட்டில் செய்யுள் உடைந்து வசன கவிதை தோன் றியுள்ளதையும், இலங்கையில் செய்யுளில் உடைவு நிகழாமல், அது பேச்சோசை என்னும் ஒரு புதிய் கட்டத்திற்கு உயர்த்தப்பட்டு உள் ளதையும் அவதானிக்கிருேம். இலங்கையில் வசன கவிதை தோன்ற வில்லை. அதாவது தமிழ் நாட்டில் செய்யுள் உடைந்து, புதிய பொருளை உள்ளடக்க முடியாத ஒரு வக்கற்ற பழம் பாத்திரமாக இற்றுப் போக, இலங்கையில், புதிய சூழ்நிலைகளையும் புதிய பொருளையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தொனிக்கு அது மாற்றப்பட்டுள்ளது,
4.
இவ்வாறு, தமிழ் நாட்டின் கவிதைப் போக்கிற்கு முற்றிலும் மாறுபட்டு, இலங்கையில் சுயாதீனமான ஒரு கவிதைப் போக்கு வளர்ந்துள்ளது என்ருல் அதற்கு இலங்கைக் கவிஞரே பொறுப்பாளி யாவர் என்பதும், இந்த மாற்றம் ஒரு கவிஞருக்குள்ளேயே அடங் கிக் கிடக்க முடியாததெனினும், அதன் முதற் காரணமாக ஒரு கவி ஞரே அமைந்திருப்பார் என்பதும் வெளிப்படை. உண்மையில் , இலங்கைக் கவிதையின் பேச்சோசைப் பண்பை இனங்கண்டு எழுதிய விமர்சகர்களின் கட்டுரைகளில், பேச்சோசைப் பண்புடையன எனக் கொடுக்கப்பட்ட பல எடுத்துக்காட்டுகளிலும் பெரும்பாலானவை மஹாகவியினுடையவை என்பது வெறும் சந்தர்ப்ப வசமல்ல. இது
63

Page 42
வரை பிரசுரமாகியுள்ள தமிழ்க் கவிதைப் பரப்பில், பேச்சோசைப் பண்பைச் சரியாக நிதானித்துக் கொண்டு பார்க்கும் போது, பேச் சோசைப் பண்பு பெற்ற கவிதைகளின் தரப் பெறுமானத்திலும் தொகைப் பெறுமானத்திலும், மஹாகவியே முதன்மை பெறுகிருர் என்பதுடன், காலத்தால் முத்தியவையும் அவருடையனவே என்பதை யும் அவதானிக்கலாம்.
மஹாகவியின் கவிதைகள் இப்பேச்சோசைத் தன்மை பெறக் காரணம் என்ன?
நெடுங்காலமாக, சங்க காலத்திற்கும் சங்கம் மருவிய பதி னெண் கீழ்க் கணக்கு நூல்களின் காலத்திற்கும் பிறகு வந்த ஏறத் தாழ எண்ணுறு ஆண்டுகளாகத் தமிழ்க் கவிதை சந்தத்தையும் ஒசை மிகைப்பையுமே பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்ந்து வத்திருக் கிறது. கவிதையின் மொழி ஊடகமான செய்யுளே இசைப்பாடலின் மொழி ஊடகமாகவும் இருந்ததால், இசைப் பாடலின் செவிப்புலக் கலையாக்கம் கவிதையின் கலையாக்க முறையாகவும் ஆனதே இதற் குக் காரணம் எனலாம்.
ஆனல் சங்க காலத்துக் கவிதைகளில் சந்தமும் ஒசை மிகைப் பும் கலைப் பாணியாகக் காணப்படவில்லை. முதற்பொருள், கருப் பொருள் என்னும் பருமையான, உருப்படியான காட்சிப் பொருள் களின் மூலம் உரிப்பொருளை உணர்த்தும் கட்புலக் கலையாக்கம், அந் நாளில் ஒரு நெறியாகவே வளர்க்கப்பட்டது இதற்குக் காரணம் ஆகும்,
ஆகவே செவிப்புலக் கலையாக்கம், கட்புலக் கலையாக்கம் என இருவகையான கலையாக்கங்களை நாம் பிரித்தறியலாம். இசை பொருந் திய செவிப்புலக் கலையாக்கம், உணர்வை உணர்ச்சி நிலையில் பரி வர்த்தனை செய்ய முற்படுகிறது கவிதைக்கு உணர்ச்சி இன்றியமை யாதது என்ற ஒரு கோட்பாடு இதன் அடிப்படையாகவே வந்தது, ஆனல் கவிதைக்கு உணர்ச்சி இன்றியமையாத ஒன்றல்ல. சங்க காலத்துக் கவிதைகளை வாசித்து ஒருவன் உணர்ச்சி வசப்பட இய லாது. ஆனல் அவன் ஆழ்ந்த உணர்வினுள் ஆழ முடியும். கட்புலப் படிமங்களினூடாக அங்கு உணர்வு பரிவர்த்தனை செய்யப்படுவதே இதற்குக் காரணமாகும்.
அது எப்படி எனினும், சந்தமும் ஓசை மிகைப்பும் உள்ள இசை தழுவிய செவிப்புலக் கலையாக்கம் உணர்வை, உணர்ச்சி என் னும் பாய்நிலை ஊடகத்தில் பரிவர்த்தனை செய்யக்கூடியது என் பதே இங்கு மனம் கொள்ள வேண்டியது. சமூக இயக்கங்கள் வலுப்
64

பெறும் காலம் உணர்ச்சிப் பெருக்குள்ள காலமாதலால், செவிப் புலக் கலையாக்கமுள்ள கவிதைகளே அக்காலத்தில் தோன்றும். உதா ரணமாக, பக்தி இயக்க காலம். தமிழ் நாட்டின் சுதந்திரப் போராட்ட இயக்க காலத்திலும், திராவிட இயக்கப் பொற்காலக் கனவு நிலைக் காலத்திலும் இதுவே நிலைமை. அந்த இயக்க காலங்களில் பாரதி யும், பாரதிதாசனும் எழுதிய தேசிய, திராவிட இயக்க இசைப் பாடல்களினதும் சிந்துகளினதும் செல்வாக்குத் தவிர்க்க முடியாத வாறு செய்யுளின் ஓசை நயத்தையே கவிதையின் கலைப்பானியாக மாற்றிவிட்டது.
ஆனல் இலங்கையின் புறநிலைக் காரணிகள் சற்று வித்தியாச மாய் இருந்தன. இங்கு சுதந்திரப் போராட்டம் என ஒன்று நடக்க வில்லை என்பதோடு, ஆதி வரலாறு பற்றிய பொற்காலக் கனவும் சற் றுத் தூரத்திலேயே இருந்தது. தமிழரசுக் கட்சியின் இயக்கத்திற் கான ஒசைப் பாங்கான செய்யுட்கள் எழுதப்பட்டன வென்முலும், அதன் மிச்ச சொச்சங்களை இப்பொழுதும் காணலா மென்ருலு அது, நீடிக்கவில்லை. தவிர மஹாகவி என்ன காரணத்திஞலோ தேசிய மறுமலர்ச்சி உணர்வு நிறையக் கொண்டிருந்தும், அத்தகைய இயக் கப் பாடல்களில் அவ்வளவாக ஈடுபடவுமில்லை. இலங்கையின் சமூக பொருளாதார - அரசியல் சூழலில் தமிழரசுக் கட்சியின் அந்த இயக்க மும் அணுகல் முறையும் பயன் அற்றது என்ற கருத்து அந்நாட் களிலிருந்தே பலரிடமிருந்து வந்தது ஒரு காரணமாய் இருந்திருக்க லாம். எப்படியெனினும் 1958 ஆம் ஆண்டு இணக் கலவரத்துக்குப் பிற கும் 1960ஆம் ஆண்டுச் சத்தியாக்கிரகத்திற்குப் பிறகும் அத்தகைய இயக்கப் பாடல்கள் கெளரவக் குறைவாகவே கருதப்பட்டன.
இந்த நிலையில் மஹாகவியின் கவிதை தவிர்க்க முடியாத வாறு இயக்கப் போக்குகளிலிருந்து அன்ருட வாழ்க்கை நிகழ்ச்சிகளை யும் அனுபவங்களையும் நோக்கித் திரும்பியது. அன்ருட நிகழ்ச்சிகளை யும் அனுபவங்களையும் நோக்கி மஹாகவியின் கவிதை திரும்பியதே முக்கியமான ஒரு திருப்புமுனேயாகும். ஏனெனில், மஹாகவிபோல் தமிழ் நாட்டில் பிச்சமூர்த்தியோ அல்லது வேறு எவரோ அன்ருட வாழ்க்கை நிகழ்ச்சி அனுபவம் என்னும் பெளதிக அடிப்படையை அல் லது யதார்த்த அடிப்படையை நோக்கித் திரும்பியிருந்தால் இன்று தமிழ் நாட்டின் கவிதைச் சரித்திரம் வேருக இருந்திருக்கும். ஆனல் அந்தத் திருப்பம் ஏற்படமுடியாத தனிமையும் விரக்தியுமுள்ள ஒரு வர்க்க நிலைப்பாட்டை பிச்சமூர்த்தி முதலியோர் கொண்டிருந்த தால், அவர்கள் அன்ருட நிகழ்ச்சி அனுபவங்களின் அடியான யதார்த்தத்தில் நிலைகொள்ளாது அதிலிருந்து பெறும் கருத்துக் களையே முதன்மையாக வைத்து, கருத்துச் சூக்குமத்தையே கலையாக்க மாகவும் கொண்டார்கள். அவர்களைப் போலி என்றும், டூப் என்றும்
to. 9 65

Page 43
முருகையன் முதலியோர் கேலி செய்தாலும், அவர்களுடைய போக் கிற்குரிய இந்தப் பெளதிக அடிப்படையை அல்லது தன்மைப்பாட்டை நாம் தெத்திக் கடந்துவிட முடியாது. கருத்து நிலையை முதன்மை யாக வைத்து, செவிப்புலக் கலையாக்கத்தை மறுத்து, கட்புலக் கலை யாக்கத்தின் இயல்பின்பாற்படாமற், கருத்துச் சூக்குமக் கலையாக் கத்தை அவர்கள் மேற்கொண்டபடியால்தான், செய்யுளின் தவருத ஒத்திசைப்பையும் தமக்கு அயலாகக் கண்டு இடைக்கிடை நேரும் குறைந்த பட்ச ஒத்திசைப்போடு வசன கவிதைக்காரர் ஆஞர்கள். ஆனல் மஹாகவியோ இந்தக் கருத்துமுதல் நிலைக்கு உட்படாமல், திடமான, மெய்ம்மையான, யதார்த்தமான அன்ருட நிகழ்ச்சி அனு பவங்களில் கால்குத்தி நின்ருர், இதுவே, தமிழ்க் கவிதைப் பரப்பில் வேறெங்கும் காணமுடியாத அவருடைய தன்மைப்பாடு ஆகும். மஹாகவி அன்ருட நிகழ்ச்சி அனுபவங்களுக்கு உணர்வு முனைப் பட்டு, அவைகளை அவருடைய உள்ளம் ஆழமாகத் துருவி நோக்கு வதை, வீடும் வெளியும், கண்களும் கால்களும், சீமாட்டி, செத்துப் பிறந்த சிசு, விட்டமுதல், பல்லி, மற்றவர்க்காய்ப் பட்டதுயர், நீருழ வன் முதலிய மிகப் பல கவிதைகளில் பரக்கக் காணலாம். இவை களில் அந்நிகழ்ச்சி அனுபவத்தின் இயக்கபூர்வமான ஆக்கத்தை முன் எப்போதும் இல்லாத முறையில் சிருஷ்டித்துள்ளார்.
இந்த அன்ருட நிகழ்ச்சி அனுபவம் என்பது கூரிய அறிதிற னும் கண்டுபிடிப்பாற்றலும் பெற்றது. அன்ருட நிகழ்ச்சி என்பது அன்ருடம் சந்திக்கும் மனிதர்களின் உறவையும், அவர்களின் இன்ப துன்பத்தையும் உடன் அமைத்தது. அன்ருட வாழ்வில் சந்திக்கும் பல மனிதர்களையும் அவர்கள் உறவுகளையும் கவிதையில் சரியாக வார்க் கும்போது, அவர்களின் அன்ருடப் பிரச்சினைகளும், அதன் மூலமாக அவர்களின் பொதுவான மனப்போக்கும் இயல்புகளும், அவர்கள் அமைந்துள்ள சமயத்தில் நடைபெறுகின்ற மாற்றங்களும் புலப்படா மல்போக இயலாது.
இவ்வாறு தனித்தனி நிகழ்ச்சிகளிலிருந்து, தம்மைச் சுற்றி வாழுக் மனிதர்களின் பிரச்சினைகளையும், மனுேபாவங்களையும், இயல் புகளையும், அந்தச் சமூகத்தில் நிகழும் மாறுதல்களையும் அவற்றின் முழு மொத்தமான சமூக சட்டத்தையும் அவதானிக்கும் போது, அந்த முழு மொத்தமான சமூக, மனித குல ஓட்டத்தை உள்ளடக் கிய பெரும் படைப்புகள் ஓர் இலக்கியக்காரனிடமிருந்து தோன்று தல் இயல்பே, தனிக் கவிதைகளிலிருந்து காவியத்துக்கும் நாடகங் களுக்கும் மஹாகவியின் பிரவேசம் இப்படித்தான் ஆரம்பமாகிறது. சட்ங்கு, கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனின் சரித் திரம் போன்ற அவரது காவியங்களையும், கோடை, முற்றிற்று, புதிய தொரு வீடு போன்ற அவரது கவிதை நாடகங்களையும் பார்க்கும் போது தன்னைச் சுற்றியுள்ள கிராமிய சமூகத்தையும், தனிமனி
66

தர்களையும், அவரவரின் இயல்பும், முரண்பாடும், மாறுதலும், தேடு தலும் புலப்படும்படி அவர் எவ்வாறு சிருஷ்டித்துள்ளார் என் பது விளங்கும்.
சடங்கு என்ற காவியத்தில் ஒரு யாழ்ப்பாணத்து விவசாயக் குடும்பத்தின் வகைமாதிரியான சில பாத்திரங்களை வார்ப்பதோடு, முந்திய நிலமான்ய சமூக அமைப்பின் மிச்ச சொச்சங்களை மீற முடி யாத பழைய தலைமுறையினர் போலியான சமுக ஆசாரங்களிலும் சடங்குகளிலும் எவ்வாறு கட்டுண்டு கிடக்கின்றனர் என்பதையும், புதிய தலைமுறையினர் அந்தச் சடங்குகளை உடைத்தெறிய எவ்வாறு முனைகின்றனர் என்பதையும், அவ்வாறு உடைத்தெறிதலின் உட ணிகழ்ச்சியாகக் குடிப்பெயர்வு அல்லது பிரதேச மாற்றம் நிகழ்வதை யும் மஹாகவி சித்திரிக்கிருர்,
கண்மணியாள் காதை, சில ஆண்டுகளுக்கு முன்னர் எமது கிராமங்களில் இளைஞர்கள் மத்தியில் உண்டான சுதேசிய விழிப்பின தும், தமது கிராமத்து ஸ்தாபனங்களையும் மக்களையும் முன்னேற்று வதற்கு அவர்கள் எடுத்த சிறு முயற்சிகளினதும் சீர்திருத்த நட வடிக்கைகளினதும் பின்னணியில் ஒர் இளைஞனை வளர்த்தெடுத்து, அவன் மூலமாக யாழ்ப்பாணத்தில் இந்நாளைய புரட்சி வெடிக் கக் காரணமான சாதிப்பிரச்சினையில் வெடிகுண்டு வீசி, அந்தப் பிரச் சினை காதல் மூலமாகவோ கலப்புத் திருமணத்தின் மூலமாகவோ, உயர்சாதிப் பையன்களின் தய்ாள சிந்தையினலோ தீர்க்கப்பட முடி யாது என்பதைக் காட்டுகிறது. இரத்தக் களரியில் முடிகின்ற இந் தக் காவியம், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்குப் போராடும் ஒரு வஞ்சினத்தை வாசகரிடையே தோற்றுவிப்பதுடன், ‘ஒருசேதி: கீழ்ப்புற வானில் ஞாயிறு நீதி காண எழுந்தது' என்ற அழுத்தமான நம்பிக்கைக் குரலுடன் முடிகிறது. தன்னிலும் தன் நாட்டவர் திற மையிலும், பொதுவாக மக்களினத்திலும், வாழ்க்கையின் ஒயாத, முன் உந்தும் முனைவிலும் மஹாகவிக்கு உள்ள நம்பிக்கை தடித்த வைர முடையது. வெறும் கோட்வாட்டளவில் இல்லாது, அவருடைய வாழ்க்கையோடு ஒன்றிய இதனை அவருடைய படைப்புகளிலிருந்து பலர் கண்டு எதிர்காலத்தில் பேசுவார்கள்.
ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம், அற்புதமான சிருஷ் டித் திறனுடன் தமிழ்ச் செய்யுள் வரலாற்றில் ஒரு சாதனே என்று சொல்லத் தக்க எளிமையும் அழகும் இயற்பண்பும் கொண்ட கட் டளைக் கலிபாக்களால் ஆகி, பிறப்புத் தொடக்கம் இறப்புவரை ஒரு மத்தியதர வர்க்கத்து மனிதனின் ஊசலாட்ட நிலையைச் சித் திரித்து, உயிர் ஒரு நெடுந்தொடர்ப் பரிணுமம் என்பதை உணர்த்து கின்றது. இளமை, வாலிபம், ஆண் - பெண் உறவு, முதுமை முத லியவற்றின் ஊடுள்ள வாழ்வியல் இயக்கத்தை ஒரு முழுமையாகக்
10 10. 67

Page 44
காணுகின்ற முயற்சியே அது. வாழ்வை, அதன் சகல புறநிலை முரண் பாடுகளும் உள்ளடங்கிப் போக, அதனை ஒர் உயிர்ப்பு இயக்கமாகக் காணும் மஹாகவியின் முயற்சியின் மிக உயர்ந்த பேறு என்றும் அத்' னைக் குறிப்பிடலாம்.
கோடை, இலங்கையில் பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது, யாழ்ப்பாணத்துக் கிராமம் ஒன்றிலுள்ள ஒரு நாயனக்காரரின் ஒரு நாள் வீட்டு நிகழ்வைக் கொண்டது, ஒரு காலனித்துவ நாட்டில், ஏகாதிபத்திய வாதிகளின் தேவைக்காகப் புகுத்தப்படும் கல்வி முறை யும், அதற்கமைந்த தொழில் முறையும், ஒரு சிறிய கிராமத்து மக் களின் மனுேபாவத்தைக்கூட எவ்வளவு பாதிக்கும் என்பதையும், அதளுல் மதிப்பீடுகள் எவ்வளவு தலைமாறிப்போய் இருந்தன என் பதையும், அந்நாளில் ஊர்ச்சனங்களின் மத்தியில் அந்நிய ஆட்சிக் கெதிராக எவ்விதம் புகைச்சலும் குமைச்சலும் இருந்தன என்பதை பும் தொட்டுச் செல்லும் இந்நாடகத்தில் ஒரு கிராமத்தின் குறுக்கு வெட்டு முகத்தையே சந்திப்பது தமிழ்க் கவிதை நாடகத் கில் நேர்ந்த முதலாவது சந்திப்பாகும். முற்றிற்று, புதியதொரு . டு போன்ற நாடகங்களிலும் இதுபோல் சொல்லலாம். மஹாகவியின் யதார்த்தத் தன்மைப்பாட்டை இவைகள் மிக ஆழமாகக் கீறித் துலக்குகின்றன. ܖ ".
இவ்வாறு அன்ருட நிகழ்ச்சிகளையும், அன்ருட நிகழ்ச்சிகளில் சந்திக்கும் மனிதர்களையும், அவர்கள் நினைப்பனவற்றையும் நிகழ்த் துவனவற்றையும் கவிதையாகச் சித்திரிப்பதாய் இருப்பதால், இத்த கைய சித்திரிப்பின் கலையாக்கம் நிச்சயமாகச் செவிப்புலனை அடிப்ப படையாகக்கொண்ட ஒலிமயப் பாணியில் அமைய முடியாது. இது கேட்டுக் கிளர்ந்தெழச் செய்கின்ற விஷயமோ அல்லது தாளம் போட்டுத் தலையாட்டச் செய்கின்ற விஷயமோ அல்ல. இது நிகழ்ச்சிகளையும், நிகழ்ச்சிகளின் காரணங்களாக இயங்கும் மனிதர் களையும் வாசகன் கண்முன் கொண்டுவர வேண்டிய விஷயம். இந்த நிகழ்வையும் இயக்கத்தையும் வாசகன் கண்முன் கொண்டுவர வேண் டுமானல், இவைகளின் தொடர்புக்கும் துலக்கத்துக்கும் இன்றிய மையாத பின்னணியையும் களத்தையும் இயங்கு முறையில் கட் புலப் படிமங்களின் மூலம் சிருஷ்டிக்க வேண்டியது அவசியம். இந்த அவசியத்தை நாம் இன்று உணர்வதற்கும் காரணமாகி, ஒரு படைப் பாளியின் யூகத்தோடும் செய்திறனுேடும் ஒர்ந்து, அன்ருடம் சந் திக்கும் வகைமாதிரி மனிதர்களைக்கொண்டு, காலம், களம் ஆகிய வற்ருேடு கூடிய ஒர் இயங்கு முறைக் கலையாக்கத்தை மஹாகவி உரு வாக்கினர். மஹாகவி உருவாக்கிய இந்தக் கலையாக்கத்திற்கும், சங்க காலத்து அகத்துறைப் பாடல்களின் கலையாக்கத்திற்கும் ஒற் றுமை உண்டு, ஆனல் சங்காலத்துப் பாடல்களில் வருகின்ற பாத் திரங்கள் தனித்தன்மையோ, வகைமாதிரித் தன்மையோ உள்ளன
68

வாக இல்லாமல், ஒரே அச்சு வார்ப்பில் அமைந்த குறி உருவமாக அமைந்துள்ளன. இது இரண்டு காலத்துக்குமுள்ள சமூக வளர்ச்சியின் வேறுபாடு. ஆகவே மஹாகவி தமிழ்க் கவிதைக்கு உருவாக்கிய கலை யாக்கம் தனித்தன்மை வாய்ந்தது. இதையே நாம் யதார்த்த நெறி என் கிருேம்.
இந்த யதார்த்த நெறிக் கலையாக்கத்திற்குக் கட்புலப் படிமங்களை இயங்குமுறையில் அமைக்கும்போது, வெவ்வேருண அளவீடுகளும், குறுகிய வாக்கிய அமைப்புகளும் இடம் பெறும். இதனல் தாளக் கட்டுக் குறைந்து கட்டின்மை மிகும். தாளத்தின் கட்டின்மை மிகும்போது, பாட்டோசை குன்றிப் பேச்சோ சையே மிகும். அவசி வமின்றி ஒசைக்காகச் சேர்த்துக்கொள்ளப்படும் அடைமொழிகள், பண்புச் சொற்கள் ஆகியன தவிர்க்கப் படுவதுடன், ஏகார ஈறுகள் புறக்கணிக்கப்படும். அடிகளின் வரி உருவமும் பொருட் புலப் பாட்டுக்குத் தக்கபடி மாற்றி யமைக்கப்படும். ஆகவே மஹாகவியின் கவிதைகளில் காணப்படும் பேச்சோசைப் பண் பு அவருடைய யதார்த்த நெறிக் கலேயாக்கத்தினுல் விளைந்ததாகும்.
5
இதுவரை அவதானிக்கப்பட்ட விஷயங்களிலிருந்து,
(அ) மஹாகவி தேசிய மறுமலர்ச்சிக் காலத்து மத்தியதர வர்க்க முற்போக்குச் சிந்தனையைப் பிரதிபலித்தவர் என்பதும் ,
(ஆ) அன்ருட நிகழ்ச்சிகளினதும் அனுபவங்களினதும் அடிப் படையில் யதார்த்த பூர்வமாய், அல்லது மெய்ம்மை சார்ந்து செய்யப்பட்ட படைப்புகள் மூலம் அந்தச் சிந் தனையைப் புலப்படுத்தியவர் என்பதும்,
(இ) அந்த யதார்த்த பூர் வமா ன படைப்புக்குத் தேவை யான முறையில் செய்யுள் நடையை ஒரு புதிய கட்டத் திற்கு வளர்த்தெடுத்தவர் என்பதும்
பெறப்படும்.
ஆஞல், அவர் வளர்த்தெடுத்த இந்தக் கவிதைப் பண்புகள் அவருடனேயோ அல்லது அவர் பிரதிபலித்த மத்தியதர வர்க்க முற்போக்குச் சிந்தனைகளுடனே மட்டும் முடிந்துவிடப் போகிறவை அல்ல என்பதுதான் நாம் இறுதியாகத் தெரிந்துகொள்ள வேண்டியது. இன்று அவருடைய தலைமுறையைச் சேர்ந்த கவிஞர்களிடமும் அதை
69

Page 45
அடுத்த தலைமுறையைச் சேர்ந்த கவிஞர்களிடமும் இப்பண்புகள் காணப் படுகின்றன என்பது மட்டுமல்ல, இன்றைய இளம் சந்ததியினரிடையே, இன்றைய காலகட்டத்தில் உலகெங்கணும் மிகவும் கூர்மையடைந்து வரும் வர்க்கப்போராட்டத்தைச்சித்திரிக்கவும் திசைப்படுத்தவும் அவர் வளர்த்த இக்கவிதைப் பண்புகள் சக்தி மிக்க ஆயுதமாகப் பாவிக்கப்படு கின்றன. மஹாகவியின் மூலம் கிடைத்த இந்த யதார்த்தப் பண்பு கள் சமுதாய மாற்றத்திற்கான கீழ்த்தட்டு மக்களின் போராட்ட உணர்வைச் சித்திரிக்கப் பயன் படுத்தப்படும் பொழுது, இந்தப் போராட்ட உணர்வுக் கவிதை இலக்கியத்திலே ஒரு புதிய கட்டம் உண்டாகிறது எனலாம். ஏனெனில், இதுவரை இந்தப் போராட்ட உணர்வுகள், பாரதி, பாரதிதாசன் பாணியில் வெறும் பிரச்சார மாகவே இசைக்கப்பட்டு வந்தன. ஆளுல் இன்றைய இளம் சந்ததி யினர் போராட்ட உணர்வுமிக்க தமது படை ப் பு களை இந்த யதார்த்த நெறியில் சிருஷ்டிக்கப் புகுவதால், ஆழ்ந்த பாதிப்புள்ள போராட்டப் படைப்புகளை ஆக்கும் திறமையைப் பெற்றுள்ளார்கள். அந்த அளவுக்கு மஹாகவியின் யதார்த்தப் பண்பை அவர்கள் மேலும் வளர்த்து இணக்கமுறச் செய்ய உள்ளார்கள்.
ஆகவேதான் மஹாகவி ஒரு புதிய சந்ததியை விருத்தியாக்கும் ஒரு கால கட்டம் ஆகிருர் . நாம் இ ன் ன மும் பாரதி யுகத்தில் இருக்கிருேம் என்று சொல்வது தவறு. பாரதி பரம்பரையின் இறு தித் தளிர்கள் பழுத்துக் கொண்டிருக்கின்றன. பாரதி ஒரு யுகசந்தி என்பது மெய்யே. ஆனல் அந்த யுகசந்தி பிரிந்துவிட்டது. அதன் ஒருகிளை பிச்சமூர்த்தி என்ருல், அதன் மறுகிளை மஹாகவியே. பாரதி வளர்த்த சில கவிதைப் பண்புகளின் தோல்வியே பிச்ச மூர்த்தி என்ருல், அத்தோல்வி நிகழாமல் அதனை இன்னுமொரு கட்டத்திற்கு உயர்த்திய வெற்றியே மஹாகவி எனலாம்.
20 - 9 - 1970
70

கோடையின்
நெறியாட்சி
அ. தாசீசியஸ்
*நாடோடிகள்' இலக்கியக் குழுவின் மாதாந்தக் கூட்டமொன்றிலே 'தரமான நாடகங்கள் தமிழிலே உள்ளனவா? " என்ற ஆய்வை நாம் மேற்கொண்ட வேளை நண்பர் வி. சிங்காரவேலன் “மஹாகவியின் கோடை"யை எமக்கு அறிமுகப்படுத்தினர்.
"கோடை யாழ்ப்பாணக் கிராமம் ஒன்றைக் களமாகக் கொண்டது. 1937 ஆம் ஆண்டிலே நம் நாட்டைப் பிற நாட்டார் ஆண்ட வேளையிலே, சாதாரண மக்களிடையே வெளியாட்சி பற்றி நிலவிய கருத்துக்களும், மக்களை எதிர்நோக்கிய பிரச்சினைகளும், நம் நாட்டுக் கலைகள் புறக்கணிக்கப்பட்ட விதமும் கோடையிலே அலசப்பட்டுள. ஆட்சி நம் கைகளுக்கு மாறிய பின்னர் எத்தனையோ குறைகள் நிவர்த்தியாகிவிடும் எனக் கிராமங்களில் வாழும் பல்வேறு திறத்தோர் ஏங்கினர். 1937 இலே வாழ்ந்த மக்கள் மாத்திரமன்றி அதற்கு முந்திய பரம்பரைகளும் இதே பிரச்சினைகளை எதிர்நோக்கின; இதே இலட்சியங்களைக் கனவுகளாகக் கண்டு ஏங்கி நின்றன; இவை யனைத்தும் நாடோடிகளின் கவனத்தை ஈர்த்தன. அவ்வாறே அன்றைய பிரச்சினைகள் வேறுபட்ட வடிவங்களிலும் வேகங்களிலும் இன்றைய சமுதாயத்தையும் பீடித்திருப்பதைக் கண்ணுற்ருேம் . அக்குறைகள் நிவர்த்தியாக்கப்பட வேண்டும் என்ற தாகம் இன்றும் நிலவுவதையும் நாம் உணர்ந்து கொண்டோம், எனவே "கோடை"யை மேடையேற்றத் துணிந்தோம்.
7

Page 46
*கோடை கவிதையால் நெய்யப்பட்டது. கவிதை நாடகம் எதிையும் நாம் மேடையிலே இதற்குமுன்னர் பார்த்ததில்லை, எனவே "கோடை" க்கு வடிவம் கொடுத்து மேடையிலே நாடகமாக்குதற்கு இதற்கு முந்தி மேடையேற்றப்பட்ட நாடகம் எதையும் நாம் உரைகல்லாகக் கொள்ள முடியவில்லை. எனவே தன்னம்பிக்கையையும் துணிவையும் மூலதனமாகக் கொண்டே நாடோடிகள் இந் நாடகத்தைத் தயாரிக்கத் துணிந்தார்கள். * மஹாகவியின் கோடை வார்த்தைச் சோடனை குறைந்தது; எளிய சொற்களாலானது; பிரதேச வழக்குகள் பொதிந்தது; கருத்துக்கள் நிறைந்தது. சொற் சிக்கனம் மிக்கதாயும் கருத்து மலிந்ததாயும் இருந்ததாதலின், அழுத்திக் கூற வேண்டியவற்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. கூறப்படும் அனைத்தையும் அழுத்திக் கூறின், அழுத்தத்தின் கருத்துப் பயனற்றதாகி விடும். எனவே முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை வலியுறுத்துவதன் மூலம், கருத்துக்களை வெளிக்கொணர்ந்தோம். இவ்வழி, கவிதை நாடகம் சிறக்குமென்பது உறுதி. சொற்களின் இறுதியை அமுக்கி விடுவது நாடக நடிகரிடையே பொதுவாகக் காணப்படும் குறைபாடாகும். வார்த்தைகளின் முடிவு “விழுங்கப்படின் கவிதையே ஊறுபடும்; நாடகமும் தரங்குன்றும். எனவே வார்த்தைகள் முழுமையாக 'உச்சரிக்கப்படுவது நாடகத்திற்கு அவசியமானது; கவிதை நாடகத்திற்கு மேலும் இன்றி யமையாதது. எனவே எமது நாடக நடிகர்களுக்கு மேடைப் பேச்சுப் பயிற்சிக்குப் பெரிதும் உகந்ததாகவும் இக்கவிதை நாடகம் காணப்பட்டது. எமது நடிகர்களிடையே கவிதையைக் கவியரங்கங்களிற் படித்த அனுபவ முடையவர்கள் ஒரிருவரே. ஏனைய நடிகர்கள் கவிதையை வாய்விட்டுப் படித்து அனுபவம் பெற்றிருக்காதது, கவிதை வசனங்களைச் சாதாரண வசனங்களாகப் பேசுதற்கு வாய்ப்பாக அமைந்தது என்றே கூறவேண்டும் . " கவிதையின் தாள ஒசைக்காக நாம் கவலைப்பட வேண்டிய அவசியமிருக்கவில்லை. அவ்வோசையிற் கவனஞ் செலுத்துவதும் வேண்டாததொன்று. வார்த்தைகள் முழுமையாக உச்சரிக்கப்படின் கவிதை யோசை வெளியாக ஒலிக்காத் தாளமாக விழுந்துகொண்டே யிருக்கும்.
72

நாடகங்களை மேடையேற்ற முயற்சிக்கும் மன்றங்கள், தரமிக்க
கவிதை நாடகங்களை மேடையேற்றினுல் . வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து அழுத்தங் கொடுத்தற்கும் பயிற்சிபெறுவர். மேலே நாடுகளிலும், புதிதாகத் தோன்றும் நாடகக் குழுக்கள் பயிற்சி பெறும் நோக்கோடு கவிதை நாடகங்களைப் பெரிதும் உவந்தேற்று மேடையேற்றுகின்றன.
மஹாகவி ஈழத்திலே தனக்கெனத் தனியான இடம் பெற்ற கவிஞர். கோடை பெற்ற வெற்றி ஈழத்து நாடக ஆசிரியர்களுள் தலே சிறந்தோருள் ஒருவராகவும் அவரை வெளிக் கொணர்கிறது. முற்றிற்று", * கோலம்’, ‘புதியதொரு வீடு' ஆதியன அவர் எழுதிய நாட்கங்களுட் குறிப்பிடத் தக்கன.
அவையும் விரைவிலே மேடையேறுமென எதிர்பார்க்கலாம்.
நூல் வடிவிலேயுள்ள தமிழ் நாடகங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. பல்வேறு கவிஞர்களின் முத்துக்களைத் தொடுத்துக் 'கவிஞன்" வடிவிலே வெளியிட்டு வரும் நுஃமான் கோடையைப் பிரசுரிப்பதன் மூலம் நாடக இலக்கியத்திற்கும் நல்லதொரு பணி புரிகிருர் .
1-6 - 1970
73

Page 47
மஹாகவியின் கோடை
மேடையேற்றங்கள்
நாடோடிகள் தயாரிப்பில்
அ. தாசிசியஸ் நெறியாட்சியில்
1969-8-15 லும்பினி அரங்கு, கொழும்பு 1970-2-6 திறந்தவெளியரங்கு, மட்டக்களப்பு
நாடக அரங்கக் கல்லூரியின் தயாரிப்பில் வி. எம். குகராஜா நெறியாட்சியில்
1979-3-2 வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம்
1982-5-29 வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம்
1982-6-26 குருநகர் கலையரங்கு, யாழ்ப்பாணம்
நடிகர்கள்
மாணிக்கம்
செல்லம்
கமலி
சோமு
பஞ்சையர்
கணேசு
விதானையார்:
முருகப்பு
льпт9
sırrıf urfir
74.
தி. சச்சிதானந்தன், அ. பிரான்சிஸ் ஜெனம் ஈஸ்வரGதி இராசரத்தினம், ஆனந்தராணி இராசரத்தினம், கெளரி வரதராசன்
சித்திரா ராம்ஈஸ்வரா, கெளரி வேதநாயகம், ஆர். பிரேமாவதி
த. நமசிவாயம், சோ. தேவராஜா செ. தங்கராசா, ரி. எஸ். லோகநாதன் சாந்தகுமார் சண்முகம், உ. சேரன், பேர்மினஸ் ரின்மி சி. சுந்தரலிங்கம், ஜி. பி. பேர்மினஸ் எஸ். தோமஸ் லம்பேட், நா. சண்முகநாதன், செ. சுந்தரலிங்கம்
வி. சிங்காரவேலு, ஏ. ரி. பொன்னுத்துரை ச. முத்துலிங்கம், கே. தனபாலசிங்கம்
(முதல் தயாரிப்பில் நடித்த தடிகர்களின் பெயர் முதலில் தரப்பட்டுள்ளது.)


Page 48


Page 49
ஐம்புத் தமிழ்ச் சங்கம்
-ர நிஃச் சந்:
 
 

*=
( 岳
● !5|| T =
--