கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்தில் ஒப்பனைக் கலை

Page 1

ல் ஒப்பனைக் கலை
தி
ஈழத்
மகவமி - கலை இலக்கிய நிறுவனம்

Page 2
நண்பர்களுக்கு
அமரர் மு. தளைய சிங்கம் இலங்கை எழுத்தாளர். 1956 துவங்கி, அவர் மறைந்த 1973 வரை எழுதியிருக்கிருர், அவர் எழுதிய சிறு கதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் எல்லாம் தமிழ் மொழி கண்ட முதல் தரமான இலக்கியப் படைப்புகள், சுயமான ஆனல் புதிய சிந்தனைகள்.
இருந்தும், படிப்பதையே வாழ்க்கையின் முழுப் பயனுகக் கருதி, முடிவில்லாமல் படித்துக் கொண்டிருந்த எனக்கே இப்படி ஒரு எழுத்தாளர் இருந்தார் என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது வியப்பானதுதான்,
தளைய சிங்கம் தம்முடைய ஒரு புத்தகத்துக்கு எழுதிய மூன்னுரை ஒன்று காலங் கடந்து, ஒரு பிரபலமில்லாத பத்திரிகையில் பிரசுரமாகி, அதை இன்னெரு பிரபலமில்லாத பத்திரிகையில் மறுபிரசுரமான போது என் கண்ணில் பட்டது. அப்போது அது எழுதி 14 ஆண்டுகள் முடிந்து விட்டன.
நமது முன்னணி எழுத்தாளர் கி. ராஜநாராயணன், o "urář கையிலோ “போர்ப்பறை" இருந்ததை வாங்கி அவசர வெட்டில் ஒரு பார்வை பார்த்தது. கொஞ்சம் கண் நுழைஞ் சதுமே அடே என்று மனசில் தைக்கும்படி இருந்தது. படிக்க ஆரம்பித்ததுமே சிறந்த ஒரு சுயம்பான சிந்தனையாளர் அவர் என்பது தெரிந்து விடும்’ என்று தளைய சிங்கம் அவருக்கு அறிமுகமான விதத்தைக் கூறுகிருர், எனக்கும் அப்படிப்பட்ட அனுபவமாகத்தான் இருந்தது. இன்னும் ஒருபடி மேலே, உலுக்கல், பெரும் மனக்கிளர்ச்சி என்ற அளவில் இருந்தது.
உண்மையின் முழுமையான தரிசனத்திற்காக, தனியாத தாகத்துடன் இருந்த உள்ளத்திற்கு தளைய சிங்கம் பெரிய ஆறுதலாக விளங்குகிருர்,
கண்டும் காணுமலும், தொட்டும் தொடாமலும் பாத்திரை செய்த ஒரு ஆத்மாவிற்கே தரையசிங்கம் உடனே நிறைவு தருவார். மற்றவர்களுக்கு ஒரு குழப்பமாகப்பட்டால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. } W
2

மனித குலத்துக்கு உயர்ந்த ஞான தரிசனம் காட்டும் பாரதத்தின் புராதன செல்வங்களான வேதங்களும், உப நிஷத்துகளும் இன்று மறைந்து கிடக்கின்றன. அவை நம் சநாதன வாதிகளிடம் சிறை பட்டுக் கிடக்கின்றன. எல்லாவற் றுக்கும் மேலாக டாக்டர் ராம் மனுேகர் லோகியா சலித்துக் கொண்ட நம் அறிவுச் சோம்பல் நம்மை அப்பெரும் செல்வத் திற்கு தகுதியற்ற வாரிசுகளாக்கி விட்டிருக்கின்றன,
இந்நிலையில் அமரர் தளையசிங்கத்தின் சத்தியத்தைக் காணும் அறிவு சார்ந்த எழுத்துக்கள் குழப்பங்களாக சிலருக்கு படுவதில் வியப்பில்லை. vn
தனி மனிதன், சமுதாயம் - மனித குலம் சாபல்யம் அடைய சர்வோதயமே ராஜபாட்டை. புதுயுகத்தின் முன் னுேடி காந்திஜியே. இந்த உண்மைகளை முழுமையாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக விளங்குகிறது தளைய சிங்கத்தின் எழுத்துக்கள், ஒரு புதுயுக சகாப்தத்திற்கு கட்டியம் கூறும் தளையசிங்கத்தின் இலக்கியம். சிந்தனைகள் இனி ஒளி விட்டுப் பிரகாசிக்கும் என்று நம்புகிருேம்.
தளைய சிங்கத்தின் மேன்மையை, அவரின் முக்கியத்துவம் வாய்ந்த தனிச் சிறப்பை நமது முன்னணி எழுத்தாளர் திரு. சுந்தர ராமசாமி நமக்கு அறிமுகப்படுத்துகிருர், தளைய சிங்கத்தின் சகோதரர் திரு. மு. பொன்னம்பலம் இன்னுெரு கோணத்தில் தளைய் சிங்கத்தின் பின்னணியை தமக்கு எடுத் துக் காட்டுகிருச்.
இந்த பிரசுரத்தில் இடம் பெறும் இருவரின் கட்டுரை களும் தளைய சிங்கத்தை அறிமுகம் செய்கிறது.
இந்த அறிமுகத்திற்குப் பின் தளைய சிங்கத்தின் நூல்கள் தமிழ் மக்களின் அதிக கவனத்தைப் பெறும் என்றும் அது ஒரு புதிய கலாச்சார எழுச்சியை நம்மிடையே ஏற்படுத்தும் என்று திடமாக நம்புகிருேம்.
தமிழ் புத்தாண்டு சி. கோவிந்தன்
1985 --
பதிப்பாளன்

Page 3
БЈ JIDFI
தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்
மு. தளையசிங்கம் தமிழகத்தில் போதிய அறிமுகம் பெரு தவர். இவருடைய மூன்று புத்தகங்கள் அச்சேறியுள்ளன. புதுயுகம் பிறக்கிறது" - பதினெறு சிறு கதைகளின் தொகுப்பு, முதல் பதிப்பு 1965. போர்ப்பறை" கதைகள், கட்டுரைகள். கவிதைகள் ஆகியவற்றின் தொகுப்பு. முதற் பதிப்பு 1970. * மெய்யுள் கட்டுரைகள், சம்பாஷணைகள், கவிதைகள், நாவல் ஆகியவற்றின் தொகுப்பு. தளையசிங்கத்தின் மறைவுக்குப் பின் 1974 இல் வெளிவந்தது. இவை தவிர அச்சில் வந்தவையாகவும், கையெழுத்துப் பிரதிகளாகவும் வேறு எழுத்துக்களும் உள்ளன. "ஒரு தனி வீடு'. 'யாத்திரை", "கல்கி புராணம்" ஆகிய நாவல்கள் முழுமை பெற்றவை. "ஒளியை நோக்கி" என்ற நாவல் குறையாக நிற்கிறது. ‘குருசேஷத்திரம்", "எதிரிகள்', "ஒமாக்கினி" ஆகிய முயற்சிகளும் உள்ளன. "ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - சில அவசரக் குறிப்புகள்" என்ற தலைப்பில் ஈழத்து நவீன இலக்கியத்தை விமர்சிக்கும் கட்டுர்ைகள் செய்திப் பத்திரிகையில் அவர் வாழ்நளி லேயே தொடர் கட்டுரைகளாக வந்து முழுமை அடைந்துள்ளன. இன்னும் புத்தக் உருவம்பெறவில்லை. "மல்லிகை", "பூரணி", *சத்தியம்" ஆகியவற்றில் வெளிவந்து தொகுக்கப்பட்டுள்ள எழுத் துக்களும் புத்தக வடிவம் பெறவில்லை.
வாழ்க்கைக் குறிப்பு:
தளையசிங்கம் 1935 இல் பிறந்தார். 1957ல் பல்கலைக் கழகத் தில் படித்துக் கொண்டிருக்கும்போது "சுதந்திரம" என்ற பத்திரி கையில் இவருடைய முதல் சிறுக்தையான "தியாகம்" வெளிவந்த்து. முதல் நாவலான "ஒரு தனி வீடு 1960ல் எழுதப்பட்டது. இர்த்தின புரியில் தான் படித்து வந்த கல்லூரியிலேயே இவர் ஆசிரியரானர். விமர்சனத்தில் தீவிர ஆர்வம்கொண்டார். "விமர்சன விக்கிர்கங்கள்" கட்டுரைத் தொடர் 'தினகர னில் வந்தபோது சர்ச்சைக்கு உள்ளா யிற்று. இக்காலத்தில் முற்போக்கு, நற்போக்கு இரண்டினது
v

குறைகளையும் எடுத்துக் காட்டும் கட்டுரைகளே எழுதியிருக்கிருர், 1983ல் இவர் எழுதிய ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - சில அவசரக் குறிப்புகள்" தமிழ் இலக்கிய விமர்சனத் துறையில் ஒரு மைல் கல் என்று கருதப்படத் தக்கது. 1966ல் இவர் தனது குருவான பூரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியில் சந்தித்தார். இக்காலத்தில் இவருடைய வேலை புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாறிற்று. புங்குடுதீவில் பல ஆத்மீகப் பயிற்சிகளைமேற்கொண்டு ஆத்மீக வகுப்பு கள் நடத்தினர். 1968ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்தார். 1969ல் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான முயற்சி களில் ஈடுபட்டார். 1970ல் சத்தியம்பத்திரிகையை வெளியிட்டார். தேர்தலில் சர்வோதய அரசியல் முன்னணியை உருவாக்கினுர், 1971ல் புங்குடுதீவு கண்ணகியம்மன் கோவிலில் நன்நீர்க் கிணறு களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் அளிக்கும்படி போராட, போலீசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 1972ல் "மெய்யுள் என்ற புதிய இலக்கிய உருவம் போடப்பட்டது. 1973ல் இரண்டு மாதம் நோய்வாய்ப்பட்டு ஏப்ரல் 2 ஆம் தேதி மறைந்தார்.
நான் என் கட்டுரையை தமிழக வாசகர்களின் வசதியைக் கருதி அச்சேறியுள்ள இவரது மூன்று புத்தகங்களைச் சார்ந்து எழுதியிருக் கிறேன். முதற் பகுதி தளையசிங்கத்தின் கருத்துலகம் பற்றி அதிகமும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தியே கூறுகிறேன், இரண்டாவது பகுதி, இவருடைய சிந்தனைகளைப் பற்றி எனது எதிர்வினைகள்.
தளையசிங்கம் தனது கலைப் பார்வையை, "பிரபஞ்ச யதார்த்தம்" என்று அழைக்கிருர், "பிரபஞ்ச யதார்த்தம் என்ருல் என்ன? இதைத் தெரிந்து கொள்வதற்கான முயற்சிதான் இந்தக் கட்டுரை. கலைப் பார்வை வாழ்க்கைப் பார்வையின் ஒரு பகுதி. வாழ்க்கை பார்வையைத் தெரிந்து கொள்ளாமல் கலைப் பார்வையை முழுமையாக அறிய முடியாது. ஆகவே தளையசிங்கத்தின் வாழ்க்கைப் பார்வையை மிகச் சுருக்கமாக பார்ப்போம்.
உலகெங்கும் மனிதன் அதிருப்தியில் ஆழ்ந்து கிடக்கிருன். அதிருப்தியின் வெளிமுகங்கள் பல. பயனற்ற பொழுது போக்குக ளில் காலத்தை வீணடித்தல், போதைப் பொருட்களில் விழுந்து கிடத்தல், போலிக் கலைகள் எழுப்பும் கனவுகளில் தன்னை மறந்து நிற்றல், வாழ்க்கையில் ஆர்வமின்மை, சோம்பல், வன்முறை இவ்
5

Page 4
வாருண எதிர்மறைச் செயல்க்ள் ஒருபக்கம். மறுபக்கம் வெவ்வேறு தளங்களில் சமூக மாற்றத்திற்கான முயற்சிகள் போராட்டங்கள். இந்த வெளிப்பாடுகளில் பிரச்னையின் ஆழத்தை உணர முடிகிறதா? முடியவில்லை. விஞ்ஞானம் பாய்ச்சல்கள் நிகழ்த்திக் கொண்டு வருகிறது. மனம் கசந்த மனிதன் சமூகத்தை உதறி வெளியேறிக் கொண்டிருக்கிருன். உலகெங்கும் வெவ்வேறு விதமான சமூக அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. அவற்றை நாம் எப்பெயர் இட்டு அழைப்பினும் அங்கு அதிருப்தி மிஞ்சுகிறது. சமூக மாற்றங் கள் எவற்றைக் குறிக்கோளாகக் கொள்ள. வேண்டும்? மெய்யான வளர்ச்சி எது? கட்சிகள், அரசுகள், நிறுவனங்கள் ஆகியவை தம் குறிக்கோள் பற்றித் தெளிவாக இருக்கின்றனவா? சமூக பொருளா தார மாற்றங்கள் பொருளாதாரக் காரணங்களுக்காகவே கொண்டு வரும்போது மேலான வாழ்வு மலருமா? இவற்றைத் தாண்டி மற் ருெரு எழுச்சிக்குரிய தளமாக இம்மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்ற னவா? பெளதிக சமூக, பொருளாதார, அரசியல் நிலைக்கும் அப் பாற்பட்ட உண்மை என்று ஒன்று இருக்கிறதா? இருக்கிறது. அதுதான் சத்திய நிலை. இதை உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொண்டு எந்த நாட்டு அரசாங்கமும் இன்று நிருவாகத்தை நடத்த வில்லை. கடவுள் என்பது மாற்றமற்ற சத்தியம். கடவுளை ஏற்றுக் கொள்ள விரும்பாதோர் புத்தர் கூறிய நிர்வாணத்தை ஏற்றுக் கொள்ளலாம். பெளத்தர்கள் கட்வுளை மறுப்பினும், கடவுளை ஏற்பவர் கள் நிர்வாணத்தை ஈற்றுக்கொள்வர். நிர்வாண நிலைதான் திருப் தியை அளிக்கக் கூடியது. இந்த சத்திய நிலை முழுச் சமூகத்திலும் பரவாதவரையிலும் அதிருப்திகள் தொடரும்.
சத்திய எழுச்சி என்ருல் என்ன?
சடம், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணுமம் இன்று மனத்தையும் தாண்டிச் செல்ல முயல்கிறது. மனத்தைத் தாண்டிய நிலையில்தான் சத்தியத்தின் பூரணப் பிரவாகம் உட்புக முடியும். இன்று வரையிலும் ஞானிகளே இந்நிலையை அடைந்திருக் கின்றனர். கடுமையான பயிற்சிகள் மூலம் இந்நிலையை இவர்கள் அடைந்தனர். ஞானிகளிடம் தோன்றிய சத்திய எழுச்சியை எங்கும் நீக்கமற நிறையச் செய்ய வேண்டும். ஆகவே இன்றைய பிரச்னைகளை ஆராயும்போது அவற்றை அரசியல், சமூக, கலாச்சார,
பொருளாதாரத் தளத்தில் மட்டும் வைத்து ஆராயாமல் பூரண
6

பரிணுமத் தேவையான சத்திய எழுச்சிக்குரிய ஆழம் வரையிலும் விரித்துப் பார்க்கவேண்டும். அதிருப்தியாளனே போராட முன் வருவான். அதிருப்தியாளர்களில் கலைஞர்கள் நுட்பமான உணர்வு களும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண் டவர்கள். அடுத்த கட்ட பரிணும வளர்ச்சிக்குரிய சமிக்ஞையின் அலைகள், ஞானிகளை விட்டுவிட்டால் கலைஞர்களிடமே அதிக அள வில் தட்டுப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த அலைகளுக்கு உருவம் கொடுக்கவேண்டிய பொறுப்பில் இன்றைய கலைஞன் இருக் கிருன். ஞானிகளின் மேலான நிலைக்கு முழு மனித குலத்தையும் உயர்த்த வேண்டும். இந்தத் தாண்டல் நிறைவேறுவதற்கு முன் சிறு சிறு கூட்டங்கள் இணைந்து பெருங்கூட்டமாக மலர வேண்டி யுள்ளது. இது கலைஞர்களின் கூட்டமாகவும் சிந்தனையாளர்களின் கூட்டமாகவும் இருக்கும். . , -
மெய்யான மதத்திற்கும், மெய்யான விஞ்ஞானத்திற்கும் முரண் பாடு எதுவும் இல்லை. ஒன்று உண்மைக்கு உள்ளுணர்வுகளை நாட, மற்ருென்று புற் உலகைச் சார்ந்து நிற்கிறது. ஒன்று அனுபவம். மற்ருென்று ஆராய்ச்சி. சீரழிந்த மதமும் சீரழிந்த விஞ்ஞானமும், பொது ஒற்றுமைகளைக் கொண்டவை. வாழ்க்கையையும் சமூகத் தையும் துறக்கத் தூண்டிய மதத்தைக் கேலி செய்தது விஞ்ஞானம். மேற்கே அதே விஞ்ஞானம் முதலாளித்துவத்திற்கு தன் ஆத்மாவை விற்று வாழ்வை அழித்தது. நீக்ரோக்களை ஒதுக்கி வைக்கும் சமூகம் எந்த அளவு விஞ்ஞான பூர்வமானது? மனிதத் தன்மைகளை பண நாயகம் விழுங்கிக் கொண்டிருப்பது வரையிலும், உலக சர்வாதி காரத்திற்கு கனவுகள் கண்டு கொண்டிருப்பது வரையிலும், சந்திர யாத்திரைக்கும் காசி யாத்திரைக்கும் அதிக வேற்றுமை இல்லை.
முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடைமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களுக்கு வழி வகுக்கவேண்டும். முதலாளித்துவ அமைப்பு பொது உடமை அமைப்பு வழியாகத் தான் சத்திய எழுச் சிக்குரிய தளத்திற்குச் செல்ல வேண்டும் என்பதில்லை. முதலாளித் துவ அமைப்புத் தோன்றுவதற்கு முன்னரே நிலவுடமை அமைப்பி லிருந்தே நேராக பொதுவுடமை அமைப்புக்குப் போக typңч மென்ருல், முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப் பைத் தாண்டி சத்திய எழுச்சிக்குரிய தளத்திற்குச் செல்ல முடியும், ஒவ்வொரு சமூக அமைப்பும் மாற்றமடைந்து கொண்டிருக்கிறது.
7

Page 5
சமூகம் மாற மதிப்பீடுகள் மாறுகின்றன. இம்மாற்றத்தை விஞ்ஞான ரீதியாக உணர்ந்த மார்க்சியவாதிகள், முழுமையை நோக்கி சமு தாயத்தைத் துரிதப்படுத்தி வளர்க்க முயன்று கொண்டிருக்கிருர்கள். சத்தியத்தைப்பற்றிய தரிசனங்கள் அறிவுக்குள் சீராக இறக்கப்பட்டு அறிவின் உதவி மூலம் வியாக்கியானப்படுத்தப்படும் போதுதான் மனித வளர்ச்சிக்கு உதவும் பார்வை விரிவடையும்.
இன்று நடைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரிய தத்துவம் மார்க்சியம் மட்டுமேதான். வாழ்வின் அன்ருடப் பிரச்னை களை விளக்கிக் கொள்ளவும், அந்த விளக்கத்தின் மூலம் சமூகத்தின் பிற துறைகளுக்குரிய செயல்களை நிர்ணயிக்கவும் எந்தத் தத்துவம் மக்களால் பயன்படுத்தப்படுகிறதோ அது வாழும் தத்துவமாக அமைகிறது. மற்றச் சிந்தனைகளால் முழுச் சமூகத் தையும் அரசியல், பொருளாதாரம், கலை போன்ற பிற துறைகளை யும் ஸ்பரிசித்துப் பேச முடியாது. ஆகவே, இன்றைய நிலையில் கலைஞன் தனது கலையின் ஆட்சியை இன்னும் கூர்மையாகவும், வ்லுவாகவும் செலுத்த வேண்டும் என்ருல் ஒன்று அவன் மார்க்சிய வாதியாக இருக்க வேண்டும். அல்லது மார்க்சியத்தை வெல்லும் மற்ருெரு பார்வையைத் தேடிக்கண்டுபிடிப்பவனுக இருக்கவேண்டும். மார்க்சியத்தை இன்னும்யாரும் முழுமையாக வென்று விடவில்லை. வெல்ல முயன்றவர்கள் பூரண வெற்றி பெறவுமில்லை. மார்க்சியம் தோற்கும் இடத்தில் கூட, அது கொண்டு வந்த நன்மைகளை எடுத்துச் செல்லும் விசாலப் பார்வை வேண்டும்.
மார்க்சியத்தின் மறு பக்கத்தையும் பார்ப்போம். சரித்திரத்தின் புதிய தேவையை மார்க்சியம் நிறைவேற்றமுடியாத நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. சரித்திர வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் தத்துவப் பார்வை வளரவேண்டுமென்ருல், அந்த தத்துவத்தின் அடிப்படை யாகக் கருதப்படும் சில அம்சங்களை தகர்க்க வேண்டியதாக இருக் கிறது. ஆனல் மார்க்சியவாதிகள் இதனை உணரமுடியாதவர்களாக இருக்கிருர்கள். மார்க்சியத்தை மறுப்பவர்கள் மார்க்சியத்தின் நியாயமான நன்மைகளை ஒப்புக் கொள்ள மறுப்பதுபோல், இந்த மார்க்சியவாதிகளும் தங்களது இறுக்கமான தத்துவத்தையும் மீறிக் கொண்டு புதுப்பார்வைக்குரிய கால கட்டம் வந்துவிட்டது என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிருர்கள். சத்தியத்தின் ஒரு கால கட்ட சரித்திர வளர்ச்சிக்கு எவ்வளவுதான் ஒரு தத்துவப்பார்வை உதவிஞ
8.

லும், அக்கால கட்டத்தில் எவ்வளவுதான் அப்பார்வை பூர்ணமாக இருந்தாலும், பரிபூரணமான சத்தியத்தின் முழுப்போக்கையும் அது அடைந்துவிடப் போவதில்லை.எல்லாத் தத்துவங்களும், தத்துவங் களையும் கடந்த ஒரு நிரந்தரமான சத்தியத்தின் அந்தந்தக் கால வெளிக்காட்டல்களை அல்லது தர்ம வளர்ச்சியை படம் பிடிக்க முயலும் தர்காலிகப் பார்வை அழுத்தங்களேதான். எனவே அந்தந்தக் காலத் தத்துவப் பார்வைகளை அந்தந்தக் காலத் தேவை களுக்காகப் பயன்படுத்தும் போதுகூட, அதே தத்துவங்களையும் மீறி சத்தியத்தில் தன்னை நிறுத்திக் கொள்பவன்தான் சார்புநிலையில் தர்ம வளர்ச்சிக்கு ஏற்றவாறு சரியாக மாறக் கூடியவனாகவும் போராடக் கூடியவனாகவும் இருக்கிருன்.
வர்க்க வேறுபாடுகளைத் தாண்டிய பொதுவுடமை சோஷலி சத்தை மட்டும் அடைந்தால் போதாது. அதைத் தனியாகக் கொண்டு வரவும் இயலாது. பொதுவுடமைப் போராட்டத்தோடு அகத்தே காணும் வேறுபாடுகளையும், முழுச் சமூகத்தையும் தாண் டினல் தான் உண்மையான சோஷலிசமும் உண்மையான ஞான எழுச்சியும், அடுத்த கட்ட மனிதப் பரிணுமமும் காணமுடியும். இனிவரும் காலத்தில் கலைத்துறைகள் மட்டுமே பரவசத்தையும், மன அமைதியையும், தெளிவையும், நிறைவையும் தந்து நோயைப் போக்கும் மருந்தாக இருக்கப் போவதில்லை. இனிமேல் எல்லாத் தொழில்களுமே கலையாகவும் யோகமாகவும் தொழுகையாகவுமிருக் குமாறு செய்யவேண்டும், ஃப்பிராயிடு கூறிய மனச் சிக்கல்களும் மார்க்ஸ் கூறிய மனப்பிறழ்வும் நீங்கிய முழுமையான மனிதனை உருவாக்க வேண்டும். இன்றைய எழுத்தாளன் அரசியலோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருக்க வேண்டும். சகல துறைகளையும் ஒன்ருேடொன்று தொடர்பு படுத்தி அவற்றை முழுமை அடையச் செய்வதற்கும் சகலதுறைகளையும் திட்டமிட்டு சம வேகத்தில் புதுமையை நோக்கி வளர்ப்பதற்கும் அரசியல் அதிகாரமே நேரிடையான வழியைக் காட்டுகிறது. ஜனநாயக அமைப்பு சமூக மாற்றத்திற்குப் பூரணமாக உதவாத அமைப்பா கவே இருக்கிறது. சமூகத்தின் சகல துறைகளும் பிரிவுற்று; குறியற்றுத் தாமத நடை போட தடுமாற்றங்களும் சிதறல்களும் தோன்றுகின்றன. மத்தியிலிருந்து அதிகாரம் குவிக்கப்படும் பொதுவுடமை அமைப்பிலோ பொருள் உற்பத்தி நிச்சய பலன் களை தரும்போதும், ஜனநாயக மன உணர்வுகள் பலியாகி, அதி
9

Page 6
குப்தி மிஞ்சுகிறது. சமய ஞானம் மறுக்கப்படுவதால் முழுமையற்ற ஒரு பார்வையைக் கொண்டே முழுமையை எட்ட முயற்சிகள் செய்யப்படுகின்றன. சமயமும் சமயவாதிகளும் இதுகாலம் வரை யிலும் பிற்போக்கு வாதத்தின் தூண்களாக இருந்தார்கள் என் பதற்காக சமய ஞானத்தை மறுக்கத் தேவையில்லை. முற்போக்கை விரும்புகிறவர்கள் தங்களது லட்சியத்திற்காக இதைப் புரட்சிகர மாகப் பயன்படுத்தலாம். மார்க்சியவாதிகள் இதை இன்னும் உணராதவர்களாகவே இருக்கிருர்கள். ஆனல் சமய ஞானத்தை ஏற்றுக் கொள்ளும் பூரண பொதுவுடமையை ஏற்றுக்கொள்வதால் மட்டும் சர்வாதிகாரத்தின் இறுக்கம் தளர்ந்து சுதந்திர மலர்ச்சி வந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. ஓரளவுக்காவது மத்தியில் அதிகாரம் திரட்டப்படாமல் முழுமைப்படுத்தும் முயற்சியை மேற் கொள்ள முடியாது. ஆனல் அது தேவைக்கு அதிகமான சர்வா திகாரமாக, தனிப்பட்டவர்களின் குறைகளையும் தீர்க்கதரிசன மின்மையையும் மறைக்கும். சர்வாதிகாரமாக மாறாமல் இருப்ப தற்கு சமய ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பூரணத்துவம் மட்டும் வழி தரப்போவதில்லை. நடைமுறைப்படுத்துபவர்களின் மன வளர்ச்சியையும் பக்குவத்தையும் பொறுத்தும் இது இருக்கும் அதல்ை தான் கலைஞர்களும் எழுத்தாளர்களும்-அந்த பூரண விரிவை வெளிப்படுத்தும் பக்குவத்தை வளர்க்கக் கூடியவர்களாக இருப் பதால் - அரசியலில் அதிகமாக பங்கு பற்ற வேண்டியவர்களாக இருக்கிருர்கள். ஒவ்வொருவரும் தன் அக ஆழத்தை கண்டுபிடிக் காதவரைக்கும் முழுமையின் பூரணத்துவம் பெறப் போவதில்லை. ஆகவே சமய ஞானிகளின் கண்டுபிடிப்பைப் பூரணமாகப் பயன் படுத்த இன்றைய எழுத்தாளர்கள் தான் முன்வரவேண்டும்.
சமய ஞானத்திடமிருக்கும் உண்மையை சமூக வளர்ச்சிக்கு உதவும் வகையில் எல்லாத் துறைகளிலும் பிரவேசிக்கச் செய்ய வேண்டும். அதற்காக முதலில் ஒவ்வொருவரும் தனது அகத் திலேயே அந்த ஞானத்தை எழுப்ப வேண்டும். 3' வர்க்கவேறுபாடு களும் குண வேறுபாடுகளும் அங்குதான் புதைந்து கிட்க்கின்றன. அவையே பிற்போக்குக் கோட்டையாகவும் பிறப்பு பிறப்பாய் வரும் இயல்புகளின் மறைவிடங்களாகவும் இருக்கின்றன. அவற் றைக் கைப்பற்றி அங்கு புரட்சியை கொண்டு சென்று முழுமை யின் மலச்சியை ஏற்படுத்தாத வரைக்கும் புறச் சூழலில் மட்டும் புரட்சியை நடத்தி பூரண இலக்கியத்தையும் சரி. முழுமையான
10

வாழ்க்கையையும் சரி கொண்டு வரமுடியாது. எழுத்தாளர்கள் இனி யேனும் இதை உணர வேண்டும். இவ்வாறு இலக்கியத்தில் ஆரம் பமாகும் இந்த ஞான அலை - பிரபஞ்ச யதார்த்தம் - முழுச் சமூகத் திலும் "பரவுவதே சர்வோதயம்."
S. W இன்றைய சமூகத்தில் காணப்படும் கலைஞர்களை 4 படைப்பாளி களை - ான்கு வகையினருகப் பிரிக்கலாம்:
1. மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளும் படைப்பாளிகள்.
2. மார்க்சியத்தை மறுத்து அதை வெல்லக் கூடிய திட்ட வட்டமான தத்துவப் பார்வை ஏதும் இன்றி-தங்கள் உள்ளுணர்வுகளின் உந்தல்களுக்கு கலையுருவம் கொடுப் பவர்கள்.
3. கட்டுப் பெட்டிகளும், போலிகளும்.
4. வியாபாரிகள்.
மார்க்சியத்தை மறுப்பவர்களில் சிலர் உள்ளுணர்வுகளின் மூலம் ஆழமான கலையுருவத்தைத் தேடி போயிருக்கின்றனர். புதுமைப்பித்தன், மெளனி, சி, சு. செல்லப்பா போன்றவர் களுக்கு திட்டவட்டமான பார்வை ஏதும் இல்லாததால் தர்ம WM வளர்ச்சிக்காகத் தீவிரமாகப் போராட முடியவில்லை. இவர்கள் மார்க்சியச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களை விடவும் சிறப் பாக எழுதியிருக்கிருர்கள் என்ருல் அச்சித்தாந்தத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் மேலும் சிறப்பாக எழுதியிருப்பார்கள் என் பதைத் தான் காட்டுகிறது. மார்க்சியச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தோல்வி அடைந்திருக்கிருர்கள் என்ருல் அவர் களின் பார்வை விரிவுக்கு ஏற்ப கலைத் திறமையும் அவர்களுக்கு இல்லை என்றே அர்த்தமாகிறது. நம் பின்னணியில் திறமை மிகுந்த கலைஞர்கள் பெரும்பாலும் மார்க்சியத்தால் கவரப்படுவ தில்லை. இந்தியப் பண்பாட்டின் ஆழம் அதிகம். மார்க்சியத்தை விடவும் அதிகம். அதனுல் இந்திய பண்பாட்டையே சார்ந்து நின்று திறமை மிகுந்த கலைஞர்கள் அதன் பழத்தோற்றத் துடனேயே திருப்தியடைந்து விடுகின்றனர். , .
கட்டுப்பெட்டிகளுக்கு உதாரணமாக பண்டிதமணி கணபதிப் பிள்ளை முதல் மு. வ. வரைப் பலரைச் சொல்லலாம். இன்று வரை
11

Page 7
w
யிலும் சமூகம் கண்டுபிடித்த உண்மைகளை கட்டிக்காத்து வருகின்ற னர் என்ற அளவுக்குத் தான் சமூகம் இவர்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறது. இந்த அளவுக்கு இவர்கள் அவசியமானவர்களே. போலிகளுக்கு உதாரணமாக அகிலன் முதல் நா. பார்த்தசாரதி வரை இருக்கின்றனர். போலிகளிலும் ஒத்தோட மறுப்பவர்கள் அண்ணு, மு. கருணுநிதி போன்றவர்கள். கட்டுப் பெட்டிகளும் போலிகளும் மலிந்த ஒரு சமூகத்தில் இவர்கள் புரட்சிவாதி களாகத் தெரிவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவர்கள் காட்டும் வளர்ச்சி வெறும் மாயை தான். V.
பிறந்து கொண்டிருக்கும் புது யுகத்திற்குரிய இலக்கிய வார்ப் புகள் எப்படி இருக்கும்?
இவை அடிப்படையான உருவ உள்ளடக்க மாற்றங்களைக் காட்டும் என்பதை இப்போதே நிச்சயமாகச் சொல்லிவிடலாம். ஐரோப்பிய அறிவு வாதத்திற்கு முந்திய இலக்கியப் படைப்புகள் உள்ளுணர்வு செறிந்த கற்பனைக் காவியங்களாக இருப்பதுபோல் அறிவு வாதத்திற்குப் பிந்திய படைப்புகள் ஐம்புலன்கள் சார்ந்த அறிவும் செறிந்த யதார்த்த இலக்கியங்களாக இருக்கின்றன. முந்தியவற்றில் பிரபஞ்ச உணர்வு இருந்தது. பிந்தியவற்றில் இந்த உலகத்து உணர்வும் குறிப்பாக பிரதேச, சமூக, பொருளா தார நிலைகளுக்குரிய உணர்வுகளும் அதிகமாக இருக்கின்றன. இனிவரும் படைப்புகளில் மீண்டும் பிரபஞ்ச உணர்வு தலைதூக்கும்: ஆனல் அறிவு வாதத்தாலும் அதற்குரிய விஞ்ஞானத்தாலும் பெறப்பட்ட யதார்த்த உணர்வுகளும் கூடவே நிற்கும். இதனை "பிரபஞ்சயதார்த்தம்" என்று கூறலாம். விஞ்ஞானமும் ஆத்ம ஞானமும் கலந்த பேரறிவு இது.
பிறக்கப் போகும் இலக்கியத்தில் உருவமும் உள்ளடக்கமும் புதிய தளத்துக்குரிய உருவ உள்ளடக்கத்தைப் பெறும். இதுதான் மெய்யுள். இது ஒரு புதிய இலக்கிய உருவம். இது ஒரு பூரண உருவமாகவும் இருப்பதினுல் சிறுகதை. நாவல், கவிதை, கட்டுரை என்ற பாகுபாடுகளை உடைத்தும், கடந்தும் செல்லும் ஒரு உருவமாகவும் இருக்கும். செய்யுள், உரைநடை என்ற வித்தி யாசங்களை இது ஏற்காது. இதுகால வரையிலுமுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக் குரியவையே. "மெய்யுள்" கற்பனைக் கோலங்களைத் துறந்து
12

அவற்றின் தளங்களையும் தகர்த்துக்கொண்டு நித்திய சத்தியத்தை ந்ோக்கிய நேரிடி அனுபவ ரீதியான ஊடுருவல்களுக்குரிய இலக்கிய உருவமாகும். அதன் உள்ளும் புறமும் உள்ளடக் க்மும் மெய்யாகவே இருக்கும். அதனுல் இது இதுகால வரையுள்ள கலை இலக்கிய்ங்களை அழிக்கும் கலை இலக்கியமாக 6th இருக்கும். அதேபோல் தத்துவ, சரித்திர, விஞ்ஞான உரு வங்களாகவும் இருக்கும். சமூக, பொருளாதார, அரசியல், ஆத்மீக மெய் வாழ்க்கை அனுபவங்களாகவும் அமையும்.
இன்றைய இலக்கியத்தைப் ப்ார்க்கும்போது ஞான அலையின் உந்துதல்களை பெரிய அளவில் உணர்ந்து செயல்பட்டவர் பாரதி. புதுமைப்பித்தன் கதைகள் நடைமுறையிலுள்ள ஆத்மீக வீழ்ச் சியை கேலி செய்யும் முயற்சிகள் தான். s fresult ao களின் ஆரம்பம் ချွဲနန္ဒိနီ ??” ஃேற்குே: தாளர்கள் இந்த அலையை உணர்ந்தாலும் அதற்குப் பிழையான அர்த்தம் கொடுத்து இடையே இடையே அதைத் திருகி சாகடித்துக் கொன்றுவிடுகின்றன்ர். அவர்கள் காட்டும் இலக்கோடு அந்த அலை நின்றுவிடப் போவதில்லை, அத்துடன் அவர்கள் ஆதரிக்கும் சர் வாதிகாரம் இதற்கு நேர்மர்ருனது. புதுமைப்பித்தனிடம் காணப் படும் கேலி உணர்ச்சியும், இயலாமை உணர்வும் இவர்களது சர்வாதிகாரத்திற்குப் பின்னூல் பெருமளவு மறைந்து கிடக்கின்றன. புதுயுக ஞான அலை பிறப்பிக்கப்போகும் வீரத்திற்கும் செயல் வேகத்திற்கும் முன்னுல் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் மார்க்சியத்தின் இயலாமையும் தாழ்வு உணர்ச்சிகளும் தெரிய வரும், முற்போக்கு மார்க்சிய எழுத்தாளர்கள் புதுயுக ஞான அலையைப் பிழையாகப் புரிந்துகொண்டவர்கள் தான். பாரதிக்குப் பின் இப்புதியஅலையின் பிறப்பு பிரக்ஞை பூர்வமான அளவுக்கு வளர்ந்திருப்பது ஜெயகாந்தனின் "பிரம்மோபதேசம்", "விழுதுகள்": “பிரளயம் என்ற கதைகளிலும், மு. பொன்னம்பலத்தின் "அது என்ற் கவிதைத் தொகுதியிலும்தான். ஜெயகாந்தனிடம் இது திரண்டு பெருத்த சக்தியாய் உருவெடுத்து வருகிறது.
له:
மு. தண்யசிங்கம் பெருமளவுக்கு தன்னில் இருபதாம் நூற் குண்டிற்குரிய பிரச்னைகளையும் ஓரளவு இருபது நூற்ருண்டுகளின் சாரத்தையும் - வெளிப்படுத்த முயன்ற ஒரு சிந்தனையாளர். உடல்
13

Page 8
கள் இருபதாம் நூற்ருண்டில் கிடந்து உழல, பிரக்ஞை முந்திய நூற்ருண்டு ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ கூறுபட்டுக் கிடக்க பிரச்னைகளுக்கு எதிர்வினையாக வாய்க்கு வரும் சொற் களை உதிர்க்கும் நம் "சிந்தனையாளர்"களின் மத்தியில் விதிவிலக் காக வந்து சேர்ந்தவர் தளையசிங்கம். இருபதாம் நூற்ருண்டின் முக்கால் பகுதியை நெருங்கிக்கொண்டிருக்கும்போது இவருடைய சிந்தனைகள் கருக்கொண்டுள்ளன என்று சொல்லலாம். ருஷ்யப் புரட்சிக்கு ஏகதேசமாக ஐம்பது ஆண்டுகள் பிந்திய காலப்பகுதி இது. தான் பிறந்து வளர்ந்த மண்ணையும், கலாச்சாரத்தையும் சார்ந்தும், கடல் தாண்டிய தேசங்களைச் சார்ந்தும், இவ்வுலகின் முழுமை சார்ந்தும் பிரபஞ்சம் சார்ந்தும் அவர் சிந்திக்க முற்பட்டார். இப்பிரச்னைகளைப் புரிந்து கொள்ளும் பொருட்டு, சுய வாழ்வின் அனுபவ ஆய்வுகளுக்கு மேலாக உலகத் தளத்தைச் சார்ந்த-கிழக் கிலும் மேற்கிலுமான - படைப்புகளையும் அறிவுகளையும் திரட்டி தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிருர், தத்துவம், சமயம், இலக்கியம் ஆகியவற்றில் விசேஷ ஈடுபாடும், விஞ்ஞானத்தில் ஆர்வமும் இவர் கொண்டிருப்பதை இவரது எழுத்து நமக்குக் காட்டுகிறது. பிரச்னைகளுக்கு விடைகள் தேடிச்செல்லும்போது தனது தேசம், தனது மொழி, தனது சமயம், தனது இலக்கியம் ஆகியவற்றின் வட்டங்களிலிருந்து விடுதலை பெற்று, முன் தீர்மா னங்களின் சொச்சங்களைச் சுமக்காமல் உண்மைகளைத் தேடிச் செல்வதை உணர முடிகிறது. பிரச்னைகள்; அவற்றை புரிந்து கொள்வதற்கான தயாரிப்பு", விருப்பு வெறுப்பற்ற ஆராய்ச்சிகள்." உணர்வு நிலைகள் தாண்டி தருக்க மொழியில் தன் எண்ணங்கள்ை தெளிவாகக் கூறல், இவை தான் தளையசிங்கத்தின் அடிப்படை யான பண்புகள். '
இருபதாம் நூற்ருண்டில் வாழ்ந்ததற்கான சாயல்களை இவரைப்போல் முழுவீச்சோடு வெளிப்படுத்திய ஆளுமைகள் நம்மிடையே வேறு உள்ளனவா? இந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இரண்டு பெயர்கள் கிடைக்கின்றன. ஒருவர் பாரதி, மற்றொருவர் புதுமைப்பித்தன். பாரதி தாழ்ந்து போனமைக்கு துக்கித்து மேலான ஒன்றை எழுப்ப முயன்ருர், புதுமைப்பித்தன் தாழ்ந்து போனதை வெட்ட வெளிச்சமாக்கினர். இந்த வரிசை யில் மூன்ருவதாக வருபவர் தளையசிங்கம். பாரதியின் கருத்து லகத்தை விடவும் தளையசிங்கத்தின் கருத்துலகம் முழுமையானது. மற்ருெரு விதத்தில் சொன்னல் பாரதியின் சிந்தனையை, இவர்
14

தம் காலத்திற்கு கொண்டு வந்து, இடைக்கால சரித்திரத்திற்கும் எதிர்வினை தந்து இடைவெளிகளை அடைத்து முழுமைப்படுத்த முயன்ருர் என்று சொல்லலாம்.
அணுகுமுறையில் தளையசிங்கத்தின் மேலான குணமென்ன?
பிரச்னைகளை ஏக காலத்தில் பலர் எதிர்கொள்ளும்போது பொதுவான சிந்தனைகள் தோன்றுகின்றன. இச்சிந்தனைகள் இணைந்து தளங்கள் உருவாகின்றன தத்துவம். சமயம், கட்சி, நிறுவனங்கள், சபைகள் ஆகியவற்றின் பொதுப் பெயர் ராக தளம் என்று வைத்துக் கொள்வோம். தளங்களின் தோற்ற நியாயங்கள் என்ன? பிரச்னைகள் ஆராயப்படுகின்றன. விடை கள் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வுக்கான நடைமுறைகள் அமுலாகின்றன. இவ்வளவு நிலைகளும் உண்மை என்ருல் சிந்தனையாளன் தன் முழு ஆற்றலையும் பிரச் னைகளை முன்னிறுத்திச் சிந்திப்பதிலும் அதற்கான விடைகளை கண்டுபிடிப்பதிலுமே கரைத்துக் கொள்ள வேண்டும். பிரச்னைகளின் தீர்வுகளுக்கு அவனை நகர்த்தும் உண்மைகளை அவை எந்தத் தளத்தைச் சார்ந்த உண்மை என்ருலும் சரி : எடுத்து தன்னில் இணைத்துக் கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாத விதியாக அவனிடம் தொழிற்பட வேண்டும். இவ்வாருன ஒரு விதிக்கு அவன் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும்போது பிற தளங்களை விமர்சித்து ஒதுக்குவதில் மட்டுமல்ல, தன்னிடம் விட்டுப்போன உண்மைகளின் துணுக்குகளேனும் பிறதளங்களில் ஒதுங்கி நிற்கின்றனவா என்பதை அவன் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியவளுகவும் இருக்கிருன், முன் விதிகளையும், அனுமானங்களையும், தத்துவ முடிவுகளையுமே தாண்டி பிரச்னைகளின் புதுமுகங்களோடு வரும் வாழ்வின் முன் அவன் தன்னை இன்றைய மனிதனுக வைத்துக் கொள்ள வேண்டு மெனில் அவன் நிரந்தரம் சேர்த்துக் கொள்ள வேண்டியவனுகவும் இருக்கிருன் முழு உண்மையும் இன்னும் எவரிடத்திலும் குத்தகை போய்விடவில்லை என்பதிலும், எவரிடத்து நின்றும் அதன் கீற்று எந்த நிமிஷமும் வெளிப்படலாம் என்பதிலும், அவன் விழிப்புணர் வுள்ளவனாக இருக்கவேண்டும். இப்புதிய உண்மைகளை ஏற்கவோ, பயன்படுத்தவோ, அவன் இணைந்து கொண்டிருக்கும் தளத்தோடு கொண்டுள்ள இறுக்கமான உறவுகளோ, முன்விதிகளோ தடையாக இருக்கக் கூடாது. புதிய உண்மைகளை ஏற்பதன் மூலம் தன்
1S

Page 9
தளத்தின் உருவம் சிதைந்துபோகும் எனவும், அச்சிதைவு அத்தளத் தில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனது துணுக்கு முகத்தை சிதைத்து விடும் எனவும் அஞ்சக் கூடியவன் தனது முகத்தை தக்க வைத்துக் கொள்ள தளத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிருனே அன்றி பிரச்னை களுக்கு தீர்வு காண தன்னைத் தூண்டுபவன் அல்லன். பிரச்ன்ைகளின் தீவிரத்தால் பாதிக்கப்பட்டு, விடைகள் தேடிய முயற்சியில் தளங் களில் வந்து ஒதுங்கியவன், தளங்களைக் காப்பாற்றும் முயற்சியில் சீரழிந்து சிறுத்துப்போவதை இன்று உலகெங்கும் பார்த்துக் கொண் டிருக்கிருேம். இப்பின்னணியில் தளங்களைவிட உண்மை முக்கியம் என்று சிந்திக்கத் தலைப்பட்ட தளையசிங்கம் மிக முக்கியமானவர்.
மேற்கு - கிழக்கு என்ருே, நேற்று - இன்று என்ருே,தனது மதம் - பிற மதங்கள் என்ருே, தன் கலாச்சாரம் . பிற கலாச்சாரங் கள் என்றே, ஆத்மீகம் - பெளதிகம் என்ருே பாகுபாடுகளில் தன்னைக் குறுக்கிக் கொள்ளாமல் இவற்றிலிருந்து விடுதலை பெற்று மனத்தயக்கங்கள் இன்றியும், விருப்பு வெறுப்புக்கள் இன்றியும், சிந்தனை உலகில் மேற்கொண்டிருக்கும் பயணத்தை இவர் எழுத்துக் கள் காட்டுகின்றன.
தளைய சிங்கத்தின் சிந்தனையின் மையம் என்ன? அந்த மையத் தில் நாம் காண வேண்டிய சிறப்பு என்ன?
பரிணுமத்தின் அடுத்த கட்டத்திற்கு மனித சாசியை நகர்த்து வதற்கு இன்று வரையிலும் நம்மை வந்து எட்டியிருக்கும் தத்துவங் களின் போதாமையை இவர் ஆராய்கிருர், மனிதனின் மிக முக்கிய மான ஒரு கூறு அவன் தன் சுயநல வட்டங்களிலிருந்து எப்போதும் வெளியே சாடி தனது வீச்சைப் பெருக்கியும் அகலப்படுத்தியும் வைத்துக் கொள்வதில் நிறைவு காண்கிருன் என்பதாகும். @ü முனைப்பு நபருக்கு ஏற்ப அண்டை வீடு வரையிலுமோ பிரபஞ்ச்த்தின் எல்லை வரையிலுமோ விரிகிறது. மனித வளர்ச்சிக்கு இந்த் அம்சம் ஆற்றியுள்ள பங்கு மிகப் பெரியது. தனக்கும், பிற ஜீவராசிகளுக்கும் இயற்கைக்கும், பொருளுக்கும் பொதுவான ஏதோ ஒன்று இருப் பதான உணர்வு வெளிப்படுவதின் உருவங்களே சுயத்தைத் தாண்டி நிகழும் யாத்திரைகள். இதை வசதிக்காக பிரபஞ்ச உணர்வு என்று சொல்லலாம். இப்பிரபஞ்ச உணர்வின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்கான உந்தல் எப்போதும் மனிதனை ஆட்டிக் கொண்டி ருக்கிறது. இவ்வுணர்வு மனிதனுக்கு இருப்பது வரையிலும்
16

பெளதிகத் தேவைகளின் நிறைவேற்றங்களை அவன் தனது பயணத்
தின் இறுதி இலட்சியமாகக் கொள்ள வாய்ப்பில்லை. பெளதிகத் Y தேவைகள்நிறைவேறியபின்பும் பரிணமம்தொடரும். அதன் போக்கு
இன்றைய் நம் அனுமானத்திற்கு அப்பாற்பட்டது என்ருலும்.
இன்று உலகெங்கும் வியாபித்திருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு . காண வேண்டும் என்ருல் அப்பிரச்னைகளின் முழுமையை ஆராய்ந்து அறியும் ஆற்றல் நாம் பெற வேண்டும். இந்த ஆற்றல் இன்று நமக்கு இல்லை. சார்ந்து நிற்கும் தளங்களின் கருவியாகப் பயன் படுவது நின்று, தளங்களைக் கருவியாகப் பயன்படுத்தும் சுதந்திரத் தை எடுத்துக் கொள்ள இன்று நமக்கு தெரியவில்லை. முதலில் இச் சுதந்திர நிலை உருவாக வேண்டும். பிரச்னைகளின் முகங்களை தத்துவம் அவதானிக்கும்போது காலம் நின்றுகொண்டிருப்பதில்லை. நகரும் காலங்கள் தத்துவம் அவதானிக்காத புதுப்பிரச்னைகளை எப்போதும் கொண்டு வருகின்றன. இவற்றையும் சேர்த்து சிந்திப் பதற்கு தத்துவ அறிவும் தத்துவத்திலிருந்து பெறும் விடுதலையும் தேவையாகின்றன. தத்துவ அறிவு புதுமையைச் சார்ந்தது எனில் தத்துவத்திலிருந்துபெறும் விடுதலை புடைப்பு மனத்தைச் சார்ந்தது. படைப்பு மனமற்ற புலமை இன்றையப் பிரச்னைகளைப் பற்றிச்சிந்திப் பதான பாவனையில் நேற்றையச் சரித்திரத்தைக் கிளறிக் கொண்டி ருக்கிறது. படைப்பு வைபவங்களோ அவை எத்தளத்தைச் சார்ந்து இருப்பினும், பிரச்னைகளின் முதல் பதிவுகளை நிகழ்த்துவதற்குக் காரணம் அவை நேற்றையச் சுமையிலிருந்து விடுதலை பெற்று நிற்பதாகும். . . . . . . . . . .
அடுத்து மனிதனின் மனம் சம்பந்தப்பட்ட தடை. இன்று மனிதன் தன்னைப் பற்றி முழுமையாக அறியவில்லை, மனத்தைப் பற்றிய பெளதிக சித்தாந்தங்களின் செல்வாக்கில் இதை அறிந்து கொள்வதற்கான முயற்சிகளும் பின் தள்ளப் பட்டு விட்டன. புற உலகுக்கும் மன ம் தவிர்க்க முடியாத இணைப்புகள் உள்ளன. ஒன்றில் நிகழும் மாற்றங்கள் மற்றொன்றை பாதிக்கக் கூடியன. இருப்பினும், மனத்தைப் புது உலகின் தவிர்க்க முடியாத தொகுப் பாக மட்டும் கருதுவதில் விடுதல்கள் உள்ளன. இந்த விடுதல்கள் பெரும் இடைவெளிய்ை ஏற்படுத்தி நிச்சயமான ஆராய்ச்சியிலிருந்து கூட நிச்சய பலன்களைப் பெற முடியாமல் தடுத்துக் கொண்டிருக் கின்றன. மனத்தின் மிகச்சுருக்கமான பகுதியோடு கொண்டிருக்கும் தொடர்பையே "நான்’ என எண்ணி இயங்குகிருன் மனிதன்.
17

Page 10
மனதின் சிறு பகுதிக்குச் சுதந்திர இயக்கம் இல்லை. மனதின் மறைந்து நிற்கும் பெரும் பகுதி சிறு பகுதியை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதுபற்றிய அறிவுகள் மேற்கிலும் கிழக்கிலும், ஒன்றில் a u ஆய்வு மூலமோ, அல்லது புறப் பரீட்சைகளின் மூலமோ தொகுக்கப்பட்டு உண்மைகள் வெளியாகிவிட்டன. மனிதனை ஆட்டிப்படைக்கும் சக்தி அதிகாரத்திற்கான உந்தல் எனவும், பாலுணர்ச்சி எனவும், மன உணர்வுகள் எனவும் ஆராய்ச்சி விரிந்து கொண்டு போகிறது. ஆகவே, மனிதன் தன் மனத்தை முழுமை யாக அறியாமல், அதன் விருப்பு, வெறுப்புகளைத் தாண்டிச் செல்ல முடியாது. இவ்விருப்பு வெறுப்புகளை அறியாத நிலையில் அவனுக்கும் உண்மைக்குமான தொடர்புகள் மங்கலாகவோ மறைந்தோ அல்லது மாறாட்டமாகவோதான் இருக்க முடியும். புற உலகத்தின் விளை வாக மட்டுமே மனத்தைப் பார்ப்பதும், புற உலகு மாறும்போது மனத் தொகுப்பு அதற்கேற்ப இயற்கையான மாற்றம் கொள்ளும் என முடிவு கட்டுவதும் முழுமையான உண்மை அல்ல என்பது இன்று தெளிவாகிவிட்டது. மேலே கூறிய இடைவெளிகளைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க முற்பட்டமையே தளையசிங்கத்தின் மிக முக்கிய மான மையம் என நாம் கொள்ள வேண்டும்.
பரிணுமத்தின் அடுத்த கட்டமான சத்திய எழுச்சிக்கு மனித ராசியை நகர்த்த புற உலகையும், அக உலகையும், பொருளையும் மனத்தையும், சமயத்தையும் விஞ்ஞானம் உள்ளிட்ட்ப் பிற அறிவுத் துறைகளையும், அனைத்திலும் அழுகிப் போன பகுதிகளை கழித்து, ஜீவனுள்ளி பகுதிகளைச் சேர்த்து புதுக்கண்டுபிடிப்புகளையும் உடனுக் குடன் அணைத்தபடி திரவத் தன்மையுடன் இயங்கும் சில சிந்தனை களை வடிக்க அவர் முயல்கிருர், இவை அவரது எழுத்துக்களில் மூன்று பகுதிகளாகப் பிரிகின்றன:
1. இன்றைய அதிருப்தி நிலை பற்றிய விவரிப்பு,
2. இன்று வரை வந்துள்ள தத்துவங்களின் குறைகளும்
போதாமைகளும்,
3. சமயத்தின் ஜீவனைப் புதுப்பித்தல்,
4. புதுப்பித்த சமய நோக்கின் ஜீவனையும் அறிவுத்துறை
களையும் இணைத்தல்.
T18

தளையசிங்கத்தின் கவனம் பெருமளவு மார்க்சியவாதிகளுடன் சம்பாஷணைகள் நிகழ்த்துவதிலேயே இருக்கிறது. உண்மையைத் தேடும் மனத்தின் பக்குவம்நிறைந்த சம்பாஷணைகள் இவை. இந்தச் சம்பாஷணைகள் பொதுவுட்மைப் புரட்சிக்குப் பிந்திய அரை நூற்ருண்டுச் சரித்திரத்தை நுட்பமாக எதிர்கொண்டதின் விளைவு களாகும். லட்சியவாதிகளையும் புதுஉலகம் மலரக் கணுக் கண்டவர் களையும் பார்த்து சரித்திரம் மிக கொடுமையாகச் சிரித்த காலப் பகுதி இது. தளையசிங்கத்தை எதிர் கொள்ள வரும் மார்க்சியவாதிகள். இக்காலச் சரித்திரம் அளித்த ஏமாற்றங்களையும், கொடுமைகளையும், தளையசிங்கம் தன் மூளையின் பின்பகுதியில் சுமக்கிருர் என்பதை உணர வேண்டும். இக்காலப் பகுதியின் ஊனங்களை ஏற்றுக் கொள்ளும் மனங்களே தளையசிங்கத்துடன் மறு சம்பாஷணைகள் நிகழ்த்த முடியும். இக்காலப் பகுதி அளித்த ஏமாற்றங்களையும் கொடுமைகளையும், விவரித்துப் பேச தளையசிங்கம் மறுத்திருப்பது கட்சி - எதிர்க்கட்சியாடும் கொண்டாட்டம் அல்ல அவருடைய உந்தல் என்பதும், சரித்திரத்திலிருந்து படிப்பினைகள் கற்று மேற் கொண்டு சிந்தித்து புதிய சரித்திரத்தை உருவாக்கும் தர்மத்தி லேயே தன்னை அவர் பிணைத்துக் கொண்டிருக்கிருர் என்பதும் தெரிய வரும். இக்காலச் சரித்திரத்தின் ஏமாற்றங்கள் ஒருவன் மனதில் உறையும் போது தத்துவங்கள் தன்னளவில் வலுவற்றவை என்பதும் அதோடு உறவுகொள்ளும் மனிதனின் நற்பண்புகளுக்கு ஏற்றவாறுதான் அவை பயன்படுகின்றன என்பதும் அழுத்தம் பெற்றுவிடுகிறது. சீரழிந்த மனிதன் பெரும் தத்துவங்களை தான் ஸ்ப்ரிசித்த மாத்திரத்தில் சீரழித்து நாற அடித்ததையும், பொது புத்தியும் எளிய உண்மையுணர்வும் மட்டுமே கொண்டவன் இவற்றி லிருந்து கூட சிறு மலர்களைப் பூக்க வைத்துக் காண்பிப்பதையும் இன்று எல்லாத் துறைகளிலும் பார்த்துக் கொண்டிருக்கிருேம். தத்துவம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மனிதப்பண்பு என்ருகிவிட்டது. தத்துவம் ஏட்டிலிருந்து மண்ணிலிறங்கவேண்டிய நற்பண்பை தத்துவம் அளிக்க இயலவில்லை என்றும் ஆகிவிட்டது. எளிய நற்பண்புகளிலிருந்து அகமலர்ச்சி என்ற தளத்திற்கு விரியும் போது தத்துவத்திலிருந்தும் புற உலகத்திலிருந்தும் அவன் சுவீகரித்துக்கொள்ளும் உண்மைகளும் அதன் ஆற்றலும் மிக அதிகமாகவே இருக்கும். இந்த வளர்ச்சியை அடைந்து மனிதராசி முழுமையும் அதன் பயனைப் பெறவேண்டும் என்பதே தளையசிங்கத்தின் குறிக்கோள், ! : :د . . . . . . ب .
19

Page 11
தளையசிங்கத்தின் சிந்தனைகள் எந்த அளவுக்கு நிறைவேற்ற
சாத்தியம் கொண்டவை?
இன்று இவரது சிந்தனைகள் "உட்டோப்பியா” என்ற எண் ணத்தை ஏற்படுத்தக் கூடியவை. "மண் வாடைய்ற்ற கனவு’ என்ற அர்த்தத்தில் நான் இதைப் பயன்படுத்தவில்லை. மு. வ. வின் கி. பி. 2000 மோ அல்லது வ. ரா. வின் "கோதைத் தீவு வரிசையிலோ போகக்கூடிய கற்பனைச் சிறகடிப்புகள் அல்ல தளைய சிங்கத்தின் சிந்தனைகள். தம் காலத்திய உலகு பற்றிய பிரக்ஞை யுடன் அறிவு வாதங்களுக்கும் விஞ்ஞானத்தின் முன்னேற்றத் திற்கும் தன்னை ஆட்படுத்திக் கொண்டு இந்த உட்டோபியாவை முன்வைத்திருக்கிருர் தளையசிங்கம். எந்தக் கோட்பாடுமே அது வாழ்வில் அமுலாவதற்கு முன் அதன் நடைமுறை சாத்தியமற்ற பகுதிகளை சிலிர்த்துக் கொண்டு நிற்கும். நாம் விழுந்து கிடக்கும் பள்ளமோ சிறு லட்சியங்களைக்கூட அமல்படுத்த இயலாது என்ற மனச்சோர்வைத் தருவதாக இருக்கிறது. ஞானிகள் பெற்ற சத்திய எழுச்சியை முழு மனித குலமும் பெற வேண்டும் என்ற லட்சியம், செல்லவேண்டிய பாதைகள் பற்றிய விவரிப்போ குறிப்போ அற்ற நிலையில் கனவாக நிற்கிறது. எங்கு ஆரம்பித்து என்னென்ன செய்து எவ்வழி சென்ருல் லட்சிய நிறைவேற்றம் பெற முடியும் என்ற திகைப்பு ஏற்படுகிறது. கருத்துகளை மனித மனங் களுக்கு எடுத்துச் செல்லும் ஊடகங்கள் முற்ருக அழுகிப்போய் விட்ட நிலையில் எவற்றை நம்பி இயக்கத்தை ஆரம்பிப்பது? இந்த நடைமுறைப் பிரச்னைகளை தளையசிங்கம் எதிர் கொண்ட தாகத் தெரியவில்லை. ஆத்மார்த்தமான மனங்கள் பிரக்ஞையின் தீவிரத்தை உணரும்போது ஏதோ ஒரு மையத்திலிருந்து இயக் கம் ஆரம்பம் கொண்டு அதன் பார்வை விகாசத்தினல் பற்றிப் படரும் என அவர் கருதியிருக்கக் கூடும். அவரது வாழ்க்கைக் குறிப்பும் அவர் பின்பற்றிய நடைமுறை இதுதான் என்ற எண் ணத்தையே ஏற்படுத்துகிறது.
பிரபஞ்ச உணர்வுகள் ஞானிகளுக்கு அடுத்தாற்போல் U6RDL-ü பாளிகளிடமே வெளியாகும் என அவர் கருதியதால் இலக்கியம் பற்றிய தன் எண்ணங்களையும் வெளியிட்டுள்ளார். வரவிருக்கும் காலத்தில், உள்ளுணர்வுகள், அறிவுவாதம் இவற்றின் பலத்தை ஆதாரமாகக் கொண்டு பிரத்தியட்ச உலகம் சாராத கற்பனைகளை
20

ஒதுக்கி நடைமுறை வாழ்வு உண்மையின் தளத்தில் சோதிக்கப்பட வேண்டும் என்கிருர். இவ்வாறு தனது புதிய இலக்கியக் கோட் பாட்டை தளையசிங்கம் வரையறுக்கும்போது இன்று வரையிலும் வந்து சேர்ந்துள்ள இலக்கியம் இவ்வுண்மைகளை பின்பற்றி இயங்காதது மூலம் உலகத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுவிட் டது என்றும் "மெய்யுள்' சார்ந்த வழியிலேயே இயங்கியிருந்தால் பெரும் ஆக்கங்கள் ஏற்பட்டிருக்கும் என்று இவர் நம்புகிருர், இந்நிலை பற்றி நாம் யோசிக்கவேண்டும்.
இலக்கியத்திற்கு வாழ்க்கைதான் அடிப்படையாக இருக்கிறது. பயணங்கள் வாழ்வின் தளத்திலிருந்து தான் மேற்கொள்ளப்படு கின்றன. கலைஞரின் ஆற்றலுக்கு ஏற்ப, உள்ளுணர்வுகளுக்கும் புற அறிவுக்கும் ஏற்ப யாத்திரை விரிவடைகிறது. சுய அனுப வத்திலிருந்து சுய அனுபவத்தின் தெளிவற்ற கோலத்திலிருந்து; முன்னுக்கு பின் முரணுன கோலத்திலிருந்து, முழுமையற்ற கோலத்திலிருந்து உண்மைகளைத் தேடித் தொகுத்து வாழ்க்கை பற்றிய தன்பார்வையை முன் வைத்துச் செல்லும் யாத்திரை இது. இவ்வாருன தொகுப்புக்கு கற்பனையின் தீண்டல் தவிர்க்க முடியாதது. இவ்வாறு நிகழவில்லை என்பதில்தான் படைப்புக் கற்பனையே தவிர நிகழ்ந்ததில் நான் கண்டது இதுதான்" என்று ஆசிரியரின் கூற்றில் இது தான் அவனது அனுபவ உண்மை. புற உலகம் அதன் தெளிவற்ற நிலையில் தறிகெட்ட கற்பனையாகவும், பட்ைப்பு உலகம் அதன்-தெளிவற்ற-நிலையில் கலைஞனின் உண்மை யாகவும் பார்வையால்கூடும் ஒருமை உணர்ச்சியில் உண்மையாகவும் நிற்கிறது. படைப்பு, சரித்திரம் அல்லதான், ஆணுல் சரித்திரம் எப் போதும் இலக்கியப் படைப்புக்களில்தான் மனிதத்தன்மை பெறு கிறது. ஒரு தேசத்தைப் பற்றிய புரிதலில் சரித்திரம் தராத ஒரு பரிணுமத்தை இலக்கியம் எப்போதும் தந்து கொண்டிருப்பது இதனுல் தான். இதெல்லாம் பெரிய இலக்கியங்கள் சார்ந்து பேசப்பட வேண்டியவை. அதாவது இலக்கியம் சார்ந்து பேசப்பட வேண்டிவை. இலக்கியம் போன்றவை சார்ந்து பேசப்பட வேண்டிவை அல்ல.
இலக்கியம் சார்ந்து பேசப்படும் போது உண்மையின் தொகுப்புக்கு கற்பனையைச் சார்ந்து நின்ற கலைஞர்களை "மெய்யுள்" முன்னுல் வைத்து பின் தள்ளுவது சாத்தியமற்றதா
21

Page 12
கவே இருக்கிறது. "மெய்யுள்" வரையறுக்கும் கருத்தோட்டம் இலக்கியத்தைப் போலி செய்யும் எழுத்துக்களுக்கு முன்னுல்தான் வலுப்படக்கூடியது. இங்கு கற்பனை இலக்கிய நோக்கத்திற்கு நேர் எதிரான நோக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. மெய்யான கலைஞன் வாழ்வின் சத்தியத்தைத் தொகுத்து மயக்கத்தை அகற் றும்போது, போலி வாழ்வின் தெளிவற்ற நிலையைப் பயன் படுத்தி அவற்றின் கனவைக்கலந்து மயக்கங்களை உருவாக்குகிருன். இப்போலிகள் தங்கள் கீழான தொழிலை உதறி அன்றாட வாழ்வைச் சார்ந்த பொருள் பொதிந்த நிகழ்வுகளைத் தேர்ந்து அவற்றை உண்மையின் தளத்தில் வைத்து ஆராய முற்படுவார்கள் என்றால் அவை சமூக ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியதாக இருக்கும். நாம் படித்துப் பார்க்கக்கூடியதாகவும் இவை இருந்துவிடக்கூடும். தளையசிங்கமே எழுதிக் காட்டியுள்ள "கலைஞ னின் தாகம்" என்ற நாவல் எப்படி சாதாரண உலக நிகழ்வும், கற்பனை தவிர்த்து, உண்மையின் தளத்திற்கு நகர்த்தப்பட்டு விருப்பு வெறுப்பற்ற மனங்களின் ஆராய்வுக்கு உட்படும்போது முகத்திரைகள் வரிசையாகக் கிழிபட, கண்டுபிடிப்புகள் வெளிப் படுவதிலுள்ள "உயர்நிலைப் பரபரப்பு ஏற்படுத்தச் செய்கிறது என்பதை நிரூபிக்கிறது. ஆனல் இதுபோன்ற முயற்சிகள் பெரிய குரல்கள் சாதித்துள்ள கற்பனை சார்ந்த படைப்பின் முன்னுல் பின் தங்கியே நிற்கும். ஏனெனில் மெய்யுளில் ஆராய்வு இருக்கின்ற அளவு புனர்ப் படைப்பு இல்லை. புனர்ப்படைப்பு கற்பனையின் துணை இழந்து நிகழ்த்தக் கூடியதும் அல்ல.
இனி உருவ உள்ளடக்கங்கள் பற்றி, உள்ளடக்கமே உருவத்தை தீர்மானிக்கிறது என்ற சரியான நிலையிலிருத்து தன் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு போகிருர் தளையசிங்கம். சோவியத்தில் புரட்சிக்குபின் புதிய உருவங்கள் ஏற்படாததால் அங்கு புதிய உள்ளடக்கமும் ஏற்படவில்லை என்ற முடிவுக்கு வந்து கலையில் புதிய உள்ளடக்கத்தையும் அதனுல் புதிய உருவத்தையும் பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றங்கள் நிகழ்த்தாது என்றும், சிந்தனையில் ஏற்படும் புரட்சியே இலக்கியத்திலும் புரட்சி ஏற்படுத்தும் என்றும் கூறுகிருர். இவர் ஒரு விமர்சகனுகச் செயல்படுவதில் முழு முனைப்புக் கொண்டவரல்லர். இல்க்கிய விமர்சனத்தில் ஆரம்பித்து தத்துவவாதியாக உருக்கொள்ளும் திசையே இவருடைய போக்கு. இலக்கிய படைப்புக்கள் பற்றிய
22

இவரது முடிவுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ள முடியாத படியே இருக்கின்றன. இதற்கான காரணத்தை பார்க்கலாம்.
படைப்பின் உள்ளடக்கத்தை அலசி ஆராயும் முடிவுகள் சிந்தனை உலகைச் சார்ந்த விஷயம். இலக்கிய விமர்சனம் அல்ல. படைப்பில் உள்ளடக்கத்தைப் பார்ப்பது, உள்ளடக்கத்தைப் பார்ப் பதாகுமே தவிர, படைப்பைப் பார்ப்பது ஆகாது. உள்ளடக்க ஆராய்ச்சியில் படைப்பு கீழ்நிலைக்கு இறக்கப்படுகிறது. படைப்பில் உள்ளடக்க உருவக்கூறுகள் உருகி இறுதி புதிய வடிவம் எடுத்து விடுகிறது. இந்த வடிவத்தைச் சிதைக்காமல் இதன் கூறுகளைப் பிரிக்க முடியாது. இம் முழுமையை மறந்து படைப்பின் உள் ளடக்கத்தை மட்டும் கருதி ஒரு படைப்பை உள்ளடக்கத்தில் கொள்ளும் கருத்து வேற்றுமையினுல் கருத்தொற்றுமை கொண்ட மற்றொரு படைப்பை முன் படைப்புக்கு மேலாக வைப்பதும் விமர்சனத் தளத்தில் மிக தவருண முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். சத்திய எழுச்சியின் தோற்றத்தை ஜெயகாந்தன் வெளிப்படுத்துகிருர் என்ற முடிவில் நின்று, நிதர்சனத்தின் அவலத்தை முன் வைத்த புதுமைப்பித்தனை முன்னவரிற் பின்னே தள்ளுவது ஒரு உதாரணம். சத்தியத்தின் தளத்தில் புதுமைபித்தன் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத கலை உறவையும் தனது விருப்பங்களை புற உலகில் படியவைத்து கதைகளை “உருவாக்கும்" ஜெயகாந்தனுக்குமுள்ள வேற்றுமை அறியாமல் போனது உள்ள டக்க ஆராய்ச்சி சார்ந்து படைப்பை மதிப்பிட்டதில் பெற்ற கோணலாகும்.
ஒரு விவாதத்திற்கான குறிப்புகளாக இந்த எண்ணங்களே முன் வைத்திருக்கிறேன்.
(1982-gib ஆண்டு கோவை, "இலக்கு மகாநாட்டில் படித்தது.

Page 13
மு. பொன்னம்பலம்:
மெய்யுள் பற்றி ஒரு மெய்யுள்
இப்போ நீ என்னென்ன எழுதுகிருய்? இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய் கிருய்? என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று எழுத் தில் எழுதியவையும், இலக்கியத்தில் செய்யும் புது முயற்சி களும் வாழ்க்கையில் இருக்கிறதா? வாழ்க்கையில் நடை பெறுகின்றனவா? என்று கேட்கும் புதுச்சூழல் இன்று. ?உனது வாழ்க்கையை எப்படிக் காண்கிருய் م -
உனது வாழ்க்கையைப் பொது a'8 வாழ்க்கையாய் மாற்ற என்னென்ன புது முயற்சிகள் செய்கிருய்? என்ற பார்வை வலுப்பெறும் யுகம் இன்று. அந்தப் பார்வை யின் வலு புதுக் கலை இலக்கியங்களைக் கோரி நிற்கிறது.
அந்தப் - முயற்சிகள் வாழ்க்கையாகவே மாறு கின்றன. வாழ்க்கையே aడి; வாழ்க்கையே பேர் இலக் கியம். இதை ஆற்றுப்படுத்துகிறது இன்றைய மெய் முதல்வாதப் பெருந் தத்துவம்.
இந்த மெய் முதல் வாதப் போக்கின் பிரகடனமா w கவே திரு. மு. தளையசிங்கம் அவர்களின் இம் மெய்யுள் தொகுப்பு வெளிவருகிறது.
இது அவரின் மூன்ருவது நூல்.
முதலாவது 1965 இல் வெளியான 'புதுயுகம் பிறக் கிறது,
இரண்டாவது 1970 இல் வெளியான "போர்ப்பறை". "மெய்யுள்' 1974 இல் வெளியாகிறது."
24

இம் மூன்று நூல்களுக்கிடையே உள்ள முக்கியத் துவம் சுவையானது.
மூன்றுமே. மெய்யை - சத்தியத்தை - அழுத்திய நூல்கள்தான். ر
ஆஞல், அழுத்தம் பெற்ற விதங்கள் ஒவ்வொன்றிலும் வேளுகியும், தொடர்புபட்டும் ஒரு தத்துவ முழுமையாகிப் பரிணமிக்கின்றன.
தன்னில் மட்டும் மெய்யை அழுத்திய உள்ளொதுக்கிய போக்கு ‘புதுயுகம் பிறக்கிறதின்" கடைசிக் கதையான “வெளி" க்குரியதென்ருல், சகலதையும் மெய்யில் அழுத்தி விரியும் தத்துவ வார்ப்பு "போர்ப்பறை" நூலுக்குரித்தாகிறது.
"மெய்யுளோ" சகலதின் இயக்கங்களையும், அவற்றின் இயக்க விதிகளையும் மெய்யின் பின்னணியில் வைத்து அழுத்திக் காட்டுகிறது. "போர்ப்பறை" விரித்த தத்து வத்தின் பிரயோகப் படுத்தலுக்கான விதிகள் இதிலே (கலைஞனின் தாகம்) போடப்படுகின்றன.
இந்தப் பார்வையில் வர்க்கவியல் என்பது அற்பமாக, குணவியலே எல்லா இயக்கங்களுக்கும் எக்காலத்துக்கும் உரிய உண்மைப் பின்னணி என்பது விளக்கப்படுகிறது.
குணக் கலவைகளின் வார்ப்புக்கேற்ப "நான் நடத்தும் இயக்கங்களே அன்றிலிருந்து இன்றுவரை தேவ - அசுர, தர்ம . அதர்ம, நல்ல . தீய, தொழிலாளி . முதலாளி போக்குகளாக மாறி மாறிக் காலத்துக்கேற்ற கோலங்களில் தோன்றுகின்றன. V−
குணவியலை அறியாத வரைக்கும் தொழிலாளருக் குள் இருக்கும் முதலாளிகளையும், முதலாளிகளுக்குள் இருக்கும் தொழிலாளிகளையும் பொதுவுடைமை வாதி கள் அறியப் போவதில்லை.
அதனுல்தான் தொழிலாளர் புரட்சி துரைத்தனமா " கத் தேங்குவற்கும், தொழிலாளர் சர்வாதிகாாம் சோஷ விசத்தை விட்டு நகராமைக்கும் உரிய காரணங்களைப் பொதுவுடைமை வாதிகள் அறிவதில்லை.
25

Page 14
பொதுவுடைமைப் போக்கின் இன்றைய தேக்கமே அதன் அறியாமையிலேயே ஆரம்பிக்கிறது.
"மெய்யுளின் வருகை பொதுவுடைமைப் போக்கின் தேக்கத்தை உடைக்கும் அதே வேளையில், அதன் தேக் கத்துக்குரிய அடிப்படைக் கோளாறுகளான லோகாயத வர்க்க - இயக்கவியல் வரையறைகளையும் தகர்த்துவிடு கிறது,
இதன்மூலம் பொதுவுடைமைப் ப்ோக்கே விடுதலை பெறுகிறது.
விடுதலை பெறும் பொதுவுடைமைப் போக்கு பூரண சர்வோதய எழுச்சிக்குரிய முக்கிய அம்சங்களில் ஒன்ருக மெய்முதல் வாதத்தின் மூலம் முன்னெடுத்துச் செல்லப் படுகிறது.
மு த. தனக்கும் தன்னைப் போன்ற சிலருக்கும் ஆத் மீகத் தீட்சை கொடுத்தவரையும், தீட்சை கொடுக்கப் பட்ட தின்த்தையும் அடிக்கடி நினைவுகூருவார்.
தீட்சை கொடுத்தவர் இருபதாம் நூற்ருண்டின் பேரவதாரமான பகவான் பூரீநந்தகோபாலகிரி.
தீட்சை கொடுக்கப்பட்ட தினம் அரவிந்தர் தினம்; கூடவே இந்தியா விடுதலை பெற்ற தினமுமாகும். (1966 - ஆகஸ்ட் 15) w
இந்திய விடுதலைப் போராட்டம் சாதாரண தேசிய விடுதலைப் போராட்டம் அல்ல. ஞானிகளால் முன்னின்று நடத்தப்பட்ட அப்போராட்டம், "உலகின் ஆன்மீக விடுதலைக் காக இந்தியர் நடத்திய முதல் புரட்சி" என்றே அரவிந்தர் அதைக் குறிக்கிருர்.
− காந்தியின் வருகைக்கு முன், இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய அரவிந்தருக்குச் சிறையில் விவேகானந்தர் தோன்றி பேர்மனம்’ பற்றி விளக்குகிருர்.
26

வெளியே சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருக்க அதன் ஆன்மீகக் கொள்கை விளக்கம் அரவிந்தருக்கு உள்ளே நடைபெறுகிறது.
உடல், உயிர், மனம் என்று வளர்ந்துவிட்ட இன்றைய
மனித பரிணுமம் பேர்மனம் ஆகிற அடுத்த கட்டத்தை எட்டி விட்டதை அரவிந்தர் சிறையை விட்டு விடுதலை பெற்று
வெளியே வந்து பிரகடனப் படுத்துகிருர்.
அந்தப் பேர்மன வளர்ச்சியின் பரவலான எழுச்சிக்குச் சர்வமத ஞானமே அடிப்படை என்பதன் வலியுறுத்தலே தந்த கோபாலகிரி என்ற பேர் அவதாரமாகும். விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண அவதாரம் அருட்டிவிட்டுச் சென்ற சர்வமத ஐக்கியத்தின் முற்றிய தொடர்ச்சி. vn
‘சர்வ மதங்களும் சமமானவையல்ல, எல்லாம் ஒன்றே என்ற ஞானம், சகல மக்களினதும் இன, மத, மொழி, கலாசார ஆணவத் தடைகளை அறுப்பதோடு, அதன் இடத்தில் எழுகின்ற புது யுகத்தின் எல்லாப் பொதுமைகளை நிலைநாட்டவும், சகல மக்களையும் மெய்யை நோக்கி ஆற்றுப் படுத்தவும் அது தானுகவே தூண்டுகிறது. ሥ
இத் தூண்டுதலின் கலை ஒலிப்பே பாரதி கண்ட கிருத யுகம். பாரதி விவேகானந்தரின்சிஷ்ஷையான நிவேதிதாவின் சீடன், அரவிந்தரோடு உறவாடியவன்.
இந்த ஆன்மீகச் சூழலின் தரிசன வார்ப்பாகவே மு. தளையசிங்கம் திகழ்கிருர்.
அவர் நூலின் முக்கியத்துவத்தையும், இதன் அடிப் படையிலேயே நோக்கவேண்டும்.
அரவிந்தர் மனதின் அடுத்தகட்ட பரிணும வளர்ச்சி பற்றியும் பேர்மன உச்ச்ங்கள், அதன் கீழ் இடைத்தர உட் சுழிவுகள் பற்றியும் எழுதியுள்ள அளவுக்கு, இன்றைய இடைபட்ட நிலையில் பேர்மனதை நோக்கி மனித குலத்தை ஆற்றுப்படுத்துவதற்குரிய சமூக, பொருளாதார, அரசியல், தத்துவ இயக்கவியல் பற்றி எழுதுவதைத் தன் பணியாகக் கொள்ளவில்லை. -
27

Page 15
- அந்தப் பணிக்குரிய தத்துவ வார்ப்பாகவே மு. த. வின் "போர்ப்பறையும்", "மெய்யுளும்" வெளிக்காட்டப்படுகின்றன.
அதனுல்தான் மு. த. வின் பூரண சர்வோதயக்கோட் பாட்டை இன்றைய நியோ மார்க்ஸிய, எக்லெட்டிச போக்கு களோடு ஒப்பிடும் சில மார்க்ஸிய வாதிகளின் அர்த்தமற்ற பார்வை சிரிப்புக்கிடமானதாக அமைகிறது.
மத ஸ்தாபனங்களை மத உண்மைகளாக மாருட்டம் செய்து புறுடன், போர்ப்பாச், ஹெகல் என்று பலரின் சிந்தனைகளைத் தனது மாருட்ட அறியாமைக்கேற்றவாறு ஒத்திசைவித்த மார்க்ஸின் தத்துவம் ஒருவேளை எக்லெட்டிசத்துக்குக் கிட்டே வந்தாலும் “உடல், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணுமம் இனிப் பேர்மனமாக வளரப் போகிறது" என்ற பேர்ஞான உண்மையின் அடிப்படையில் தனது தத்துவத்தை நிறுவி, அந்த உண்மையை நோக்கிச் சமூக இயக்கங்கள் அனைத்தையும் வளர்த்துக் காட்டும் பூரண சர்வோதயக் கோட்பாட்டை அப்படி நினைப்பது தத்துவம் பற்றிய அறியா மையேயாகும்.
சகலவற்றையும் மெய்யின் எழுச்சிக்குரிய பூரண சர்வோ தய மாற்றத்துக்கு ஆற்றுப்படுத்துவதே மெய் முதல் வாதம்.
அந்தச் சகல மாற்றங்களும் ஆரம்பத்தில் கலை, இலக்கிய, கலாசாரப் புரட்சிகளோடேயே தொடங்குவதால், மெய்யுள் உருவம் அப்புரட்சியைத் தொடக்கி வைக்கிறது.
அப்புரட்சி எழுத்தில் மட்டும் உன்னத இலட்சியங்களையும், கலைப்பரவசத்தையும் 'படைத்து விட்டு வாழ்க்கையில் அவற்றுக்கு முற்றும் மாருக வாழும் இன்றைய கலை இலக்கிய கர்த்தாக்களின் போக்கைத் தகர்த்துவிடுகிறது.
இத்தகர்ப்பு வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படாத இலட் சியங்களின் கூடாரமாக, வாழ்க்கையின் போலிப் பிரதிப் பொருளாக அமைந்துள்ள கலை இலக்கியம் என்ற தனியான ஸ்தாபனத்தையும் தகர்த்துவிடுகிறது.
இதன்மூலம் கதை, கட்டுரை, கவிதை என்ற இலக்கிய கர்த்தாக்களின் கற்பனைச் சிறையிலிருந்து கலை இலக்கியமே விடுதலை பெறுகிறது.
28

இந்த விடுதல் சகலரையும் கலைஞர் ஆக்குவதோடு அவர் புரியும் சகல தொழிலையும் கலையாக்குகிறது, இலக்கிய மாக்குகிறது.
இந்த நோக்கின் உன்னத சிருஷ்டியாகவே "கலைஞனின் தாகம் மெய்யுள் அமைகிறது.
இத்தரிசனத் தேவைகளின் நிகழ்வான மெய்யுள் உருவம் இன்றைய இலக்கியத்தை அழிக்கும் இலக்கியமாகவும், கலையை அழிக்கும் கலையாகவும் செயற்படும் அதேவேளையில் வாழ்க்கையையே கலையாகக் காணவைக்கும் சாதனமாகவும் அச்சாதனையின் மூலம் తాడి இலக்கியத்தின் உச்ச தரிசன வெளிக்காட்டலாகவும் அமைகிறது.
அதனுற்ருன்மெய்யுள் உருவம் பழைய இலக்கிய உருவங் களின் உடைப்பாகவும்,அதே வேளை அவற்றின் கலைப்பாகவும். அவைக்கும் அப்பாற்பட்ட மெய்-றியலிஸ (மெய் Realism) . பிரபஞ்ச யதார்த்த வார்ப்பாகவும் அமையும்.
இம் மெய்யுள் தொகுப்பிற் காணப்படும் "மெய்யும்" உள்ளும் மெய்", பூரண இலக்கியமும் அதன் தேவைகளும்" ஆகிய இரண்டு மெய்யுள்களையுந் தவிர மற்றவை எல்லாம் 1972 இன் கடைசிக் காலங்களில் எழுதப்பட்டவையாகும். ‘மெய்யும் உள்ளும் மெய்" 72 ஜூன் 'மல்லிகை” யில் வெளிவந்தது. "பூரண இலக்கியுமும் அதன் தேவைகளும்" 71 'சத்தியம்’ இதழில் வெளிவந்தது. "வர்க்கவியலும் குணவியலும்" என்பது 'கலை, தொழுகை, விடுதலை, சத்தியம் என்ற தலைப்பில் சிறு நூலாக எழுதப்படவிருந்த மெய்யுளின் ஆரம்பக் குறிப்பே. "கலைஞனின் தாகத்தின்" கடைசிப்பகுதி (அதாவது A - 2 வின் குணங்களை ஆராயும் இடத்திலிருந்து) ஆசிரியரால் விரித்து எழுதப்படவிருந்தும் அது நிறைவேற்றப் படாததால் அதற்கு ஆசிரியர் போட்டிருந்த குறிப்பு களோடேயே அது நிறைவு பெறுகிறது. ' ' ... ;
மு. த. வின் மெய்யுள்களில் காணப்படும் நல்லசிவம் ஒரு கற்பனைப் பாத்திரமல்ல. அவரது வெளிமனத்துக்கு அகத்தின் ஆன்மீக உந்துதல் தூதனுப்பிய தூய உள்ளுணர்வே
29

Page 16
நல்லசிவம். அரவிந்தரின் வார்த்தையில் சொல்வதானுல் அந்த உள்ளுணர்வை "Over mind" என்று அழைக்கலாம். அதனுல் நல்லசிவம் ஆத்மீக உண்மைக்கெதிரான எந்தச் சிறுமைகளையும், தடைகளையும், மாயைகளையும் உடைக்கும் நித்திய இயக்கமாகவே திகழ்கிருன்.
அந்த நல்லசிவத்தின் குரல் உங்களுக்குள்ளேயும் கேட்கிற காலம் தொடங்கிவிட்டது. இதோ அவன் உங்களுக்குள்ளே குரல் எழுப்புகிருன்.
சத்தியச் செங்காவலர் வருகிருர், தயார்ப்படுங்கள், தயார்ப்படுங்கள் உங்கள் கட்டுக்களை கலைக்கதயார்ப் படுங்கள்
காலங்காலமாய் கலை இலக்கியமென்றும், கட்டுரை யென்றும், கட்டுக்கதை, கவிதை என்றும் எழுதியும் அவை உங்கள். . . . .
சுயநலக் கட்டுக்களை அறுக்கவில்லை. தூக்கத்தைப் போக்கவில்லை. கனவுகளைக் கலைக்கவில்லை. மாருகக் கட்டுக்களோடு இன்னெரு கட்டு. கலை இலக்கியக் கட்டு ! இவற்றைக் கலைக்கச் செங்காவலர் வருகிருர். எழுதியபடியும், சொன்னபடியும் வாழாத நீங்கள் சத்தியத் துக்கெதிரான திரிபுவாதிகள். -- XX -
"நான் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள். உங்களை விசாரிக்கக் கலை இலக்கியச் செங்காவலர் வரு கிருர்,
அவர் நடத்தும் ஆத்ம கலாச்சாரப் புரட்சியில் உங்கள் கலை இலக்கியக் கறுப்புச் சந்தைத்தனம் கலபடப்போகிறது.
30

அந்தக் கலைப்புத்தான் இனிவரும் இலக்கியம் கலையை அழிக்கும் கலை. இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம்.
தயார்ப்படுங்கள் ! தயார்ப்படுங்கள் !!
(மெய்யுள் என்ற தளைய சிங்கத்தின் நூலுக்கு 1974-ல் எழுதப்பட்ட முகவுரை)

Page 17
سے 26 -۔
தனக்குத் தென்பட்டது என்ற கருத்தை அவர்வற்புறுத்துகிறார். மக் களிடையே சமாதானமும் நல்லுறவும் ஏற்பட இக்கூத்துக்கலை மக் களுக்குக் கை கொடுத்தது என்பதில் பெஞ்சமின் உறுதியுடையவரா கின்றார். W
ஈழத்தமிழறிஞர் பலருடன் தொடர்பு  ைட ய வ ரா கப் பெஞ்சமின் காணப்படுகின்றார். க. செ, நடராசாவின் தொடர் பினாற் சைவமங்கையர் கழகம் இராமகிருஷ்ண மண்டபத்தில் 1952இல் மேடை ஏற்றிய சத்தியவான் சாவித்திரி நாடகத்திற்கு இவர் ஒப்பனை செய்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து விவேகானந்தசபையில் நிகழ்ந்த ஞானசவுந்தரி நாடகத்திற்கும் ரகுநாதன் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுபோய் கொழும்பு டவர்ஹோலில் மேடைஏற்றிய நாடகங்களுக்கும் இவரே ஒப்ப னையாளர், பேராசிரியர் சு. வித்தியானந்தன் இலங்கைக் கலைக் கழகத்தின் நாடகக்குழுத்தலைவராக இருந்தவேளை அவர் பாட சாலைகளுக்கிடையிலான நாடகப்போட்டிகள் நடத்தியபோது, அவருடன் கண்டி, மட்டக்களப்பு, மன்னார் முதலிய இடங்களுக் கும் சென்று அந்நாடகங்களுக்கும் இவர் ஒப்பனை செய்திரும் கிறார்.
1970களில் திரு பாலேந்திராஈழத்தமிழ்நாடக அரங்கிற்சாதனை புரிந்த காலத்தில் அவரது நாடகங்களுக்கும் யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு ஆகிய இடங்களில் ஒப்பனைப் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செயற்பட்டிருக்கிறார். இது போன்றே அ. தாஸிசியஸ் தாயாரித்த நாடகங்களுக்கும் 'பெஞ்சமினின் கைவண்ணமும் சேர்வதாயிற்று, இன்று நம்மிடையே வாழும் சிறந்த நாடகவிற்பன்னரான குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களோடு பெஞ்சமின் நீண்டகாலப் பழக்கமுடையவர். சண் முகலிங்கம், கலையரசு சொர்ணலிங்கத்தின் தேரோட்டி மகனில் அருச்சுனனாக நடித்த காட்சியையும், அந்நாடகத்திற்குத் தான் செய்த ஒப்பனையையும் மகிழ்வுடன் நினைத்துப் பார்த்து திருப்தியடைகின்றார் பெஞ்சமின்,
யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெருவில் 1954 அளவில் யாழ்ப்பாணம் நடனக்கல்லூரி"யை நடாத்திய இராசநாயகம்

- 27 -
அவர்கள் இந்திய நாடகக்கலைஞர்களை வரவழைத்து மட்டக் ளப்பு, திருகோணமலை, நாவலப்பிட்டி, மாத்தளை, கற்றன் முதலிய இடங்களில் இசை நாடகங்களை தாடாத்தியிருக்கிறார் இவர்களுடன் ஆங்காங்கெல்லாம் சென்று ஒப்ப  ைள  ைய மெற்கோண்டவர் பெஞ்சமின்,
யாழ்ப்பாணக்குடாநாட்டிலும் தீவுப்பகுதிகளிலும் எங்கெங்கு நாடகம் நடைபெற்றதோ அங்கங்கெல்லாம் சென்று ஒப்பனைப் பொறுப்பை ஏற்றுச் செயற்பட்ட திரு பெஞ்சமின் இப்பிரதேசத் திலே நாடகத்துறையிலீடுபாடு காட்டி வந்த அனைத்துப் பாட சாலைகளிலும் தமது ஒப்பனைக்கலைச் சாதனையை நிரூபித் இருக்கிறார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாடக நிகழ்வுகளில் பெஞ்ச்மின் பெரும் பங்குவகித்திருக்கிறார். முக் கியமாக நிர்மலா நித்தியானந்தனின் நாடகங்களுக்கு இவரே ஒப்பனை செய்தார். அண்மையில் பல்கலைக்கழக மாணவர் களைக் கோண்டு கலாநிதி இ. பாலசுந்தரம் தயாரித்து நெறிப் படுத்திய காத்தவராயன் இசை நாடகம் பலமேடைகள் ஏறியும், தேடவ" கினியில் ஒளிபரப்பாகியும் புகழ் பெற்றுக்கொண்டிருக் கிறது. இற்றைவரை நிகழ்ந்த அனைத்துக் காத்தவராயன் நாடக அரங்குகளிலும் பெஞ்சமின் அவர்களே பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒப்பனை செய்தவர் என்பதில் அவர் பெருமைப் பட்டுக் கொள்கிறார்.
1939 இலிருந்து இற்றைவரை தொடர்ச்சியாக நாடக ஒப் பனைக்கலையில் ஈடுபட்டுவரும் பெஞ்சமின் அவர்கள் அண்ண அளவாக சுமார் 4000 நாடகங்களுக்குமேல் தான் ஒப்பனை செய் ததாகக் கணக்குக் கூறுகிறார். நா ட் டுக் கூ த் து இ  ைச நாடகம், சமூக நாடகம், திருச்சபை நாடகங்கள், பாடசாலை நாடகங்கள் என அவர் ஈடுபட்ட நாடகங்களோபலவகையின; பல தரத்தன. ஒப்பனைத் துறையில் அரை நூற்றாண்டு அனுப் வம் பெற்ற பெஞ்சமின் அவர்களிடமிருந்து ஒப்பினைக்கலை
NSN:*KAZ”.
பற்றி அறிந்து கொள்ளவேண்டிய விடயங்கள் பலப்பல. அம்ை

Page 18
-- 28 ܚ
தியும், அடக்கமும் புகழ்விரும்பாத் தன்மையு ? , எளிமையும், இவரது இலட்சணங்கள். எடுப்பான உடற்கட்டு, வெள்ளை நிறத்தோற்றம், வெள்ளைவேட்டி, சால்வை வெள்ளை அரைச் கைச் சட்டை - இவை அவரது உருவத்தோற்றம் தமிழ்ப் பன் பாடே அவரது வாழ்வு. அவரது பணிகளை அவரது பிள்ளைகள் இமானுவேல், அன்ரனி, டன்சன், சாள்ஸ் ஆகியோர் தொடர் கின்றனர் என்று அவர் கூறும்போது அவரிடம் அமைதியும் திருப் தியும் காணப்படுகின்றன.
இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் ஒப்பனைக் கலைஞர்களில் திரு. ஸ்ரனிலாஸ், திரு. அ. த. இராசரெத்தினம், திரு. எஸ். திருநாவுக்கரசு ( அரசு ), திரு. மு. சிவபாலன், நடமாடி எஸ் இராசரெத்தினம், திரு. வி. ரி. செல்வராசா முதலியோரது பணிகள் தனித்தனியாக ஆராயப்பட வேண்டி யனவாகும் இவர்கள் அனைவரும் திரு சா. பெஞ்சமினுக்கு இத் த  ைக ய பாராட்டு நடைபெறுவதை மனப்பூர்வமாக வாழ்த்துகிறார்கள். அவரது சேவையைப் போற்றுகிறார்கள். இவர்களால் அங்கீகாரம் பெறும்போது பெஞ்சமின் அவர்களது புகழ் மேலும் சிறக்கின் றது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்து நுண்கலைத்துறையினர் ஈழத்து ஒப்பனைக்கலைபற்றி ஆராய்ந்து இக்கலைஞர்களின் தனித்துவத்தை மதிப்பிடுவார்கன் என நாடகக் கலையுலகு எதிர்பார்க்கின்றது.

4.
5.
7.
அடிக்குறிப்புகள்
South Indian Inscription, Wol, I, p.211, of 1921
No. 520.
Tiruvidaimaruthur Inscription, No. 124, S. II, II. Wol, III No. 124,
காரை செ. சுந்தரம்பிள்ளை: ஈழத்து இசைநாடக வரலாறு 1990 மதிப்புரை, பக். Xiv
616ň0. fi. Jeurs: "AstrL-as š4samovujúh ஒப்பனையும்", திசை,
! 3. O4. 90), t. At 6.
Encyclopeadia Britannica : Vol. 20: P. 578,
காரை செ. சுந்தரம்பிள்கின: ஈழத்து இசைநாடக வரலாறு, மதிப்புரை வார்க்க.
எஸ். ரி. அரசு, திசை, 13. 04. 1990 பார்க்க
சி. மெளனகுரு, மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் - கலா நிதிப்பட்ட ஆய்வுக்கட்டுரை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் 1983 ۔۔۔۔ - காரை செ. சுந்தரம்பிள்ளை, 1990, பக், 71