கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்  
 

கோப்பாய் சிவம்

 

இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்

கோப்பாய் சிவம்

------------------------------------------------------------

இலங்கையில்
தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்


(1841-1984)



ஒரு கையேடு


கோப்பாய் - சிவம்

------------------------------------------------------------

Title - Ilnakaiyil Tamizh Pathirikaikal - Sanchikaikal (a collection of Tamil Papers and Periodicals)
Author - P. Sivananda sarma (Kopay - Sivam)
Adress - Near Sivan Temple, Avarangal, Puttur.
Copy right - To the Author
Date of Publication - 1985 June
Printers - Sarvasakthi, Gurukulam, Kilinochchi

Prics - 7/50

ஆசிரியரின் பிற நூல்கள்
கனவுப் பூக்கள் (புதுக்கவிதைகள்)
(சௌமினி சிவம்)
அன்னை பராசக்தி (ஆன்மீகக் கட்டுரைகள்)
நியாயமான போராட்டங்கள்.
(ரூபா 5,000 பரிசுபெற்ற சிறுகதைத் தொகுதி)

------------------------------------------------------------
அணிந்துரை


பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் தமிழ்த்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

நூல்கள் எரிந்து போகின்ற ஒரு காலகட்டத்திலே வாழ்கின்ற நாம் எம்முடைய பல்வேறு நிலைப்பட்ட பல நாட்டுத் தரவுகளையும் செய்திகளையும் ஆவணப்படுத்தி வைப்பது முக்கியமான கடமையாகும். எம்முடைய நாட்டிலே தோன்றிய தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஆகியன பற்றி எமது எதிர்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ள அவற்றை நூலகங்லிலே அரும் பொருளகங்களிலே சேகரித்து வைக்க வேண்டும். அவற்றைச் சேகரித்து வைக்க முடியாவிட்டாலும் அவை பற்றிய தகவல்களை ஒன்று திரட்டிச் சேர்ப்பதாவது பயன் தரும்.

திரு. ப. சிவானந்த சர்;மா (கோப்பாய்- சிவம்) இத்தகைய பயனுள்ள பணியினையே இந்நூல்; மூலமாகச் செய்துள்ளாhர். 1841ல் தொடங்;;கிய முதல் பத்திரிகையாகிய உதயதாரகை இன்னும் வெளிவந்து கொண்;;;டிருக்கும் வரலாற்றுப் பெருமையுடையது. அதன் பின்னர் முன்னூறுக்கு மேற்;பட்.ட தமிழ்ப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் வெளிவந்துள்ளன. அவை பற்றிய விபரங்;களையெல்லாம் ஒன்று திரட்டிம் பணியினைக்; கோப்பாய் சிவம் அவர்கள் மேற்;கொண்டுள்ளார். அப்பணியின் விளைவாக வெளிவருதே இலங்கையின் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்னும் இந்த நூலாகும்.

நூல் மூன்று பெரும் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. || வெறுமனே பட்டியலை மட்டும் கொடுப்பதைவிட, குறிப்பிடத்தக்க சில பத்திரிகைகளைப் பற்றிய மேலோட்டமான கருத்துக்களை || முதலாவது பகுதியில் ஆசிரியர் தருகின்றார்.

1841ல் தொடங்கிய உதயதாரகை தொடக்;கம் 1984ல் தொடங்கிய சுவர் வரை வெளிவந்த பத்திரிகைகள், சஞ்;சிகைகள் ஆகியனவற்றின் மேலெழுந்தவாரியாக நோக்கி, அவற்றுள் விதந்து குறிப்பிடப்படவேண்டியனவற்றுக்குச் சுருக்கமான கருத்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

வீரகேசரி ஆசிரியர் திரு ஆ. சிவநேசச் செல்வனும் தினகரன் ஆசிரியர் திரு. இ. சிவகுருநாதனும் இத்துறையிலே ஆராய்ச்சி செய்து முதுகலைமானிப் பட்டம் பெற்றுள்ளனர். அவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆய்வுபூர்வமாகப் பல தரவுகளைக் கொண்டிருக்கின்றன.

| கோப்பாய் சிவம் | அவர்களுடைய நூல் ஆய்வு நோக்குடையதல்ல. அது ஆய்வுக்குத் தரவாக அமையும் நூல் எனவே அது தமிழுலகுக்குப் பயனுடையது.

நூலின் இரண்டாவது பகுதி 1984வரை வெளிவந்த தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஆண்டுவரிசைப்படி நிரைப்படுத்திய பட்டியலையுடையது. பத்திரிகையின் பெயர், ஆசிரியர் அல்லது வெளியிடும் நிறுவனத்தின் பெயர், முகவரி ஆரம்பித்த ஆண்டு ஆகிய விபரங்கைளைக் கொண்டதாக இப்பட்டியல் அமைகின்றது.

ஈழத்துத் தமிழியல் ஆய்வு மாணவர்களுக்கு இப்பட்டியல் பெரிதும் உதவவல்லது. எறக்குறைய 375 தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் பற்றிய விபரங்களைத் தேடிச் சேகரித்துப் பட்டியல் போட்டுத்தருவது இலகுவானகாரியமல்ல. பிரபலமான பத்திரிகைகள் சஞ்சிகைகளை அறிந்துகொள்வதிலே கஷ்டமிருக்காது. ஆனால், ஆசிரியரோ இந்நாட்டில் எழுந்த எந்த சிறிய பத்திகையையும் விடாது குறிப்பிடவேண்டும் என்னும் நோக்குடையவராக அமைகிறார்.

எனினும், எங்களுக்கேயுரிய சில விசேட காரணங்களால் பாடசாலைகள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் முதலியவற்றிலிருந்து ஆண்டுதோறும் தனிப்பட்டவகையில் வெளியிடப்படும். சஞ்சிகைகளை இப்பட்டியலிலே சேர்த்துகொள்ளவில்லை, இத்தொகுப்பிலே இடம்பெற்றுள்ள எல்லாப் பத்திரிகைகள். சஞ்சிகைகளின் பெயர்கள் அகரவரிசைப்படி அட்டவனைப்படுத்தி நூலின் மூன்றாவது பகுதியாக வழங்கப்பட்டுள்ளது.

இவருடைய தந்தையார் திரு. ச. பஞ்சாட்சர சர்மா மறுமலர்ச்சி தந்த ஓர் எழுத்தாளர். கோப்பாய் - சிவம் பல பத்திரிகைகள் சஞ்சிகைகள் மூலம் தன் ஆக்கங்களை வெளியிட்டுள்ளார். தந்தையார் பெயரையும் தன் பெயரையும். முன்வைத்த பத்திரிகைகள் சஞ்சிகைகளின் பெயர்களையும் முன்வைக்கவேண்டும் என்னும் ஒரு தார்மீகக்கடமையுடன் ஆசிரியர் இந்த நூலை அமைத்துள்ளார்.

ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சிப்போக்கிலே நினைவில் வைக்கவேண்டியவை என ஈழகேசரி, மறுமலர்ச்சி, கலைச் செல்வி ஆகிய மூன்று சஞ்சிகைகளைக்கூறி. அவை தென்னிந்தியாவிலே |மணிக்கொடிக்காலம் | |சரஸ்வதி காலம் |, என்று கூறப்படுவதுபோல ஈழத்திலும் தமக்கென ஒவ்வொரு காலகட்டத்தை ஏற்படுத்தி மிகச்சிறிய காலமெனினும் அக்காலகட்டத்தை ஏற்படுத்தி மிகச்சிறிய காலமெனினும் அக்காலகட்டத்தில் பல புதுமைகள் புரட்சிகள் செய்து நினைவில் நிற்பவை என்று ஆசிரியர் பொருத்தமாகக் கூறியுள்ளார்.அதேவேளையில் மல்லிகை, சிரித்திரன் ஆகிய இதழ்களின் சிறப்பினையும் ஆசிரியர் எடுத்துக் கூறத்தவறவில்லை. தூய இலக்கியத்திற்காகவும், நகைச்சுவைக்காகவும் என்று தொடர்ந்து நீண்ட காலமாக வெளிவரும் மல்லிகை சிரித்திரன் ஆகியவற்றின் வெற்றி நடை நம்மை இறும்பூதெய்வைக்கிறது என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

நூலகவியல் மாணவர்களே இத்தகைய முயற்சிகளிலே ஈடுபடுவது வழக்கம். ஆனால், ஆக்க இலக்கியம் படைப்பவரான கோப்பாய் -சிவம் இம் முயற்;சியிலே ஈடுபட்டிருப்பது பராட்டுக்குரியதாகும். உடனடி உசாவலுக்கென சில நூல்;கள் நூலகத்திலே வைக்கப்பட்டிருக்கும். இத்தகைய நூல்;களுள் இதுவும் ஒன்றாகும். எங்கள் நாட்டுப் பத்திரிகைகளை சஞ்சிகைகளை நேரே பார்த்து விரிவான தகவல்;களைப் பெறுவதற்கு முன்னர், அவை பற்றிய முக்கியமான தகவல்;களை பெறுவதற்கு இந்நூல் நன்கு உதவும்.

தமிழியல் மாணவர்களுக்கும் நூலகவியல் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க வகையிலே இந்நூலை ஆக்கி வெளியிடும் கோப்பாய் சிவம் அவர்களுக்கு தமிழ் உலகம் சார்பில் நன்றி கூறுகின்;றேன்.

பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ்
தமிழ்த்துறை
யாழ் பல்கலைக்கழகம்.
-------------------------------------------------------------

ஆக்கியோன் முன்னுரை

கலை கலாச்சார, இலக்கிய வளர்ச்சிக்கும் விஞ:ஞான அறிவியற் தேவைகட்கும் பரஸ்பர அறிவு உணர்வுப் பரிமாறல்கட்கும் செய்திப் பரவல்களுக்கும் இணையற்ற சாதனங்களாக பத்திரிகைகள் சஞ்சிகைகள் இருந்து வருகின்றன. அவைபற்றிய ஆய்வு சுவையான ஒர் அனுபவமாகும் .

தமிழ் நாட்டிலிருந்து இத்தகைய பத்திரிகைகள் சஞ்சிகைகள் பற்றிய ஆய்வுகள், பட்டியல்கள் பல நூல் வடிவில் வெளியாகியிருக்கின்றன. அவற்றுட் சிலநூல்களில் ஈழத்துப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் சிலவற்றைப் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இலங்கையின் பத்திரிகைத் துறைக்கு சுமார் ஒன்றரை நூற்றாண்டுகால வரலாறு இருக்கிற தெனினும், அத்துறையில் பூரணமான ஆய்வு எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை என்பது கவலைக்குரிய ஒரு விடயம்.

நான் அறிந்தவரையில் குரும்பசிட்டி கனகரத்தினம், ஆ.சிவநேசச்செல்வன், இ.சிவகுருநாதன், ச. பஞ்சாட்சரசர்மா ஆகியோர் இத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்ட சிலராவர். முதலாமவர் இத்துறையில்; சுடர் சஞ்சிகையில் கட்டுரைகள் வெளியிட்டிருந்தார். ஆ, சிவநேசச்செல்வன் இ.சிவகுருநாதன் இருவரும் இத்துறையில் ஆய்வுகள் சில மேற்கொண்டிருந்தனர். எனது தந்தையாரான பண்டிதர் ச.பஞ்சாட்சரசர்மா அவர்கள் ஆரம்பத்திலிருந்தே பல பத்திரிகைகள் - சஞ்சிகைகளை (மாதிரிப்பிரதிகளையாவது) சேகரித்து வந்ததுடன் பல தகவல்களையும் சேகரித்து வந்தார்.

அவர் வழியில் இம்முயற்சியை நான் தொடர்ந்து மேற்கொண்டு வந்தேன் 1974 ஆம் ஆண்டில் இத்துறையில் இரு கட்டுரைகளை | வானொலி மஞ்சரி |யில் வெளியிட்டிருந்தேன். இதைத் தொடர்ந்து மலர் சஞ்சிகை பற்றிய விமர்சனத்தை இலங்கை வானொலி | கலைக்கோலம் | நிகழ்ச்சியிலும் | மரகதம் | பற்றிய விமர்சனக் கட்டுரையை || தினகரன் || பத்திகையிலும் தேன்மொழி, கற்பகம் ஆகியன பற்றிய கட்டுரைகளை மல்லிகையிலும் எழுதினேன்.

ஈழத்தின் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் சம்பந்தமான ஆய்வுக்கட்டுரை அல்லது பட்டியல் தானும் இதுவரை நூல் வடிவில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்தந்தையார் தேடித்தொகுத்து வைத்த தகவல்களுடன் படுத்திய பட்டியலை வெளியீட்டுக்குத்தயாராக வைத்திருந்தேன். இருந்த போதும் இப்பட்டியல் பூரணமானதா என்ற ஐயப்பாட்டினாலும் மேலும் தகவல்களைச் சேகரிக்கும் ஆவல் காரணமாகவும், பிரசுரவசதிகள் கிட்டாததனாலும் பல ஆண்டுகள் தாமதிக்க நேர்ந்தது.

இன்று இத்தொகுப்;பை உங்கள் முன் சமர்ப்பிக்கும் துணிவை நான் அடைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இதனைப் பூரணப்படுத்துவதே நமது பார்வைக்குத் தட்டுப்படாமலும் கேள்விக்கு எட்டாலும் பல இதழ்கள் வெளிவந்திருக்கலாம். மலையகத்திலும், மட்டுநகர், திருகோணமலை போன்ற இடங்களிலும் வெளியிடப்பட்ட பல இதழ்கள் நமது கேள்விக்கு எட்டாமலே இருந்திருக்;கலாம்.

இந்;நூலை வெளியிடுவதன் மூலம் இதனைப் படிக்கும் பலரும் இதில் இடம் பெறாத விபரங்களையோ அல்லது தவறாக இடம் பெற்ற வேறு தகவல்களுக்கான திருத்தங்களையோ எமக்கு அனுப்பி வைக்க முடியும். அதன் மூலம் இத் தொகுப்பை பூரணப்படுத்தி மேலும் விரிவான ஆய்வுக்கட்டுரைகள் சிலவற்றையும் சேர்த்து மறுபடி இதனை தரமான ஒரு நூலாக வெளியிடலாம் என எண்;ணியிருக்கின்றேன்.

மேலும் இலங்கைப் பத்திரிகைத் துறையில் விரிவான ஆய்வினை மேற்கொள்வதற்கு இச்சிறு நூல் ஒரு முதல் நூலாக அமையும் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

ஆகவே தமிழன்பர்கள் அனைவரும் இச்சிறுநூலை வாசித்து தங்;கள் அபிப்பிராயங்களையும் பயன்தரக் கூடிய விபரமான தகவல்களையும் முடியுமானால் தாங்கள் வெளியிட்ட மாதிரி பிரதிகளையும் எனக்கு அனுப்பிவைப்பார்களானால் மிகவும் நன்றியுடையவனாயிருப்பேன்.

இந்நூலை வெளியிடுவதற்கேற்றவகையில் எனக்கு உதவியும் உற்சாகமும் ஊட்;டிய எனது மேலதிகாரி கிளிநொச்சிப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணியாளார் திரு. ம. சபாரத்தினம் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன். எனது ஆத்மீக கலை இலக்கியப்பணிகள் யாவற்;றையும் பாராட்டியும் மூட்டியும், வேண்டிய வேளைகளில் உதவிகளும் நல்கும் அவர் இந்நூல் வெளியிPட்டு முயற்சி பற்றிக் கூறியதும் மனமுவர்ந்து உதவியளித்தமைக்காக எனது மனமார்ந்த நன்றிகளைத்; தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னோடு முன்னர் நேரடி பழக்கமெதும் இல்;லாமல் இருந்தும் கூட நான் போய்; கேட்டவுடன் இந்நூலுக்குப் பொருத்தமான ஒரு அணிந்துரையை இன்முகத்துடன் உவந்த ளித்;த பேராசிரியர் கலாநிதி. அ. சண்முகதாஸ் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன்.

பல இதழ்களைப் பற்றிய தகவல்களை எனக்குக் கிடைக்கச் செய்த எழுத்தாளர் திருவாளர் மயிலங்கூடலூர் நடராஐன் அவர்களுக்கும் இந்நூலை உருவாக்கும் போது வேண்;டிய ஆலோசனைகள் வழங்கி உருவமைப்புக்கொடுத்த திரு. பா. பாலசண்முகநாதன் அவர்களுக்கும் அழகுற அச்சேற்றித்தந்த சர்வசக்தி அச்சகத்தாருக்கும் ஊழியர்களுக்கும் எனது அன்பு நன்றிகள் உரித்தாகுக.

கோப்பாய் சிவம்
பிரதிப்பணிப்பாளர் பணிமனை,
நீர்ப்பாசனத் திணைக்களம்,
கிளிநொச்சி.

+++++++++

இலங்கையில் -
தமிழ்ப்பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஒருநோக்கு

1841 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை இலங்கையில் வெளிவந்த சுமார் 375 தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் பற்றிய விபரங்;கள் இந்நூலில் கொடுக்கப்படுகின்றன. பத்திரிகையின் பெயர் ஆசிரியர் அல்லது வெளியிடும் நிறுவனத்தின் பெயர் முகவரி, ஆரம்பித்த ஆண்டு என்பன வெளியிடப்பட்ட ஆண்டு வரிசையின்;படி முதலாவது பட்டியலில் கொடுக்கப்பட்;டிருக்கின்றன. பத்திரிகையின் சுருக்கமான குறிப்புக்களும் மாத, வார, நாளிதழ் என்பதும் இலக்கியம், ஆன்மீகம் அரசியல் என்றவகை விபரமும்- கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இத் தொகுப்பில் இடம்;பெற்றுள்ள அனைத்துப் பத்திரிகை, சஞ்சிகைகளின் பெயர்களும் அகரவரிசைப்படி இரண்டாவது பட்;டியலில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
வெறுமனே பட்;டியலை மட்டும் கொடுப்பதைவிட குறிப்பிடத்தக்க சில பத்திரிகைகளைப் பற்றிய மேலோட்டமான கருத்துரைகளை இக்; கட்டுரையில் தருவதன் மூலம் வாசகர்களுக்கு அதிக பயன்பாட்டை நல்க முடியும் என எண்ணுகிறேன்.

ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமையைப் பெற்றுக் கொள்வது 1841ஆம் ஆண்டில் அமெரிக்க மிஷன் மூலம் வெளியிடப்பட்ட ||உதயதாரகை || யாகும். அதில் ஓர்; அதிசயம் என்னவென்றால் ஈழத்துத் தமிழ்ப்பத்திரிகை உலகின் உதயதாரகையாக உதித்த இப்பத்திரிகை இன்றும் தொடர்ந்து வெளிவருகின்றது.

இதையடுத்து வெளிவர ஆரம்பித்த | சத்திய வேத பாதுகாவலன் | |முஸ்லீம் நேசன் | |இஸ்லாம் மித்திரன் | | இந்து சாசனம் | என்பவையும் பெரும்பாலும் மதப்பிரசார நோக்கமுடையவையாகவும், செய்திப் பத்திரிகைகள் போலவும் அமைந்தன. இந்து சாசனம் இலக்கிய வளர்ச்சிக்கும் ஓரளவு பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

1859 ஆம் ஆண்;டில் யாழ்;ப்பாணத்திலிருந்து | பாலியர் நேசன் | என்ற பெயரில் சிறுவர் பத்திரிகையொன்று வெளியிடப்பட்டது. ஆனால் அதன் ஆசிரியர் யாரென்பதும் பிற விபரங்களும் தெரியவில்லை.

பத்தொன்;பதாம் நூற்றாண்;டிலே சுமார் இருபத்தைந்;துக்கு மேற்;பட்ட பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றுள் இப்போதும் தொடர்;ந்து வெளிவருகின்றவையான உதயதாரகை, சத்தியவேத பாதுகாவலன், இந்து சாசனம் மூன்றுமே மூன்று சமய ஸ்தானங்களால் மதப்;பிரசார சாசனங்களாக யாழ்ப்பாணத்திலே தொடங்கப்பட்டவை.

உதயதாரகை ஆசிரியர்களுள் கரோல் விசுவநாதபிள்;ளை ஆனல் சதாசிவம்பிள்ளை ஆகியோரும் இந்து சாசனம் ஆசிரியர்களுள் த. கைலாசபிள்ளை ம.வே. திருஞானசம்பந்தபிள்ளை ஆகியோரும் என்றும் நினைக்கப்பட வேண்டியவர்கள்.

ஈழத்தின் முதலாவது செய்திப் பத்திரிகை. க. அ. மீராமிகைதீன் என்பவரால் நடத்தப்;பட்ட தினத்தபால் என்பதாகும். ஆனால் இது வெளிவர ஆரம்பித்த காலம் சரியாகத் தெரியவில்லை.

தென்னிந்தியாவிலே மணிக்கொடி சாலம் சரஸ்வதிகாலம் என்று கூறப்படுவது போல ஈழத்திலும் தமக்கென ஒவ்வொரு காலகட்டத்தை ஏற்படுத்தி மிகச்சிறிய காலமெனினும் அக்காலகட்டத்தில் பல புதுமைகள் புரட்சிகள் செய்து நினைவில் நிற்பவை ஈழகேசரி மறுறுமலர்ச்;சி கலைச்செல்;வி என்;பனவாகும். இவைவ ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய விடிவெள்ளிகளாகும். இன்று பழம்பெரும் எழுத்தாளர்களாகக் கணிக்கப்படும் பலர் இவற்றில் முளைகொண்டவர்களே!

நா. பொன்னையா என்ற பெரியாரின் முயற்சியால் பலகாலம் பெரும் பணியாற்றிய ||ஈழகேசரி|| பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடாமலிருக்க முடியாது. பிரபல எழுத்தாளர் சோ. சிவபாதசுந்தரம் ஈழகேசரியின் வளர்ச்சிக்காக அரும்பணியாற்றி அக்காலத்தில் மாணவர்களாய் இருந்த இளைய தலைமுறையினரின் படைப்புக்களை வெளியிட்டு அவர்களது ஆர்வத்தை அதிகப்படுத்திப் புதியதொரு எழுத்தாளர் சமூகத்;தை உருவாக்கினார். ஈழகேசரி வெளியிட்ட ஆண்டு மடல்;கள் அரிய கலைப்படைப்புக்களாகும். வெள்ளிவிழாக் கொண்டாடிய சில காலங்களில் ||ஈழகேசரி|| மறைந்து விட்டது.

||ஈழகேசரி||ப்பண்ணையில் முளைகொண்ட இளைஞர்;கள் சிலர் கூடி 1945ஆம்; ஆண்டிலே |மறுமலர்ச்சி | யை மலரவைத்தனர். முதலிலே கையெழுத்துச் சஞ்சிகையாக ஆரம்பித்துப் படிப்படியாக வளர்ச்சியுற்றுத் தென்னிந்தியாவிலே கூட இன்றும் பெயரடிபடும் படியாகச் செயலாற்றிய இளைஞர் குழுவினரில் தி;.ச. வரதராசன் (வரதர்) அ. செ. முருகானந்தன் ச. பஞ்சாட்சரசர்மா, நாவற்குழியூர் நடராஜன், இ. சரணமுத்து (சராதா) ஆகியோர் குறிப்பிடத்தக்க சிலர்.

1948ல் ஆரம்பமான ||பாரதி || நம் இலக்கிய உலகில் ஒரு திருப்பு முனையாக இருக்கிறது. கே. ராமநாதன் கே.கனேஷ் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த பாரதி பொதுவுடமைச் சிந்தனைகளுடன் புரட்சிகரமான இலக்கிய உலகத்தை அக்காலத்திலேயே சிருஷ்டிக்க முயற்சித்தது.

1958ஆம் ஆண்;டில்; | கலைச்செல்வி | தனது சகாப்தத்தை ஆரம்பித்தது. சுமார் எட்டு ஆண்டுகள் பிரமிக்கத்தக்க வகையில் சாதனைகளை நிகழ்த்தியது. பற்பல எழுத்தாளர்களை முக்கியமாகப் பெண் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிய பெருமை இதற்குரியது. இதன் ஆசிரியர் சரவணபவன் (சிற்;பி) இலகுவில் மறந்து விடமுடியாதவர்.

அரசாங்க சமாசாரப் பகுதியினரால் 1948 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட |ஸ்ரீலங்கா குல சபாநாதன் அ.ந. கந்;தசாமி ஆகியோரின் காலத்தில் இலக்கியவளர்ச்சியிலும் ஈடுபட்;டிருந்தது.

இருபதாம் நூற்றாண்;டின் முன் அரைப்பகுதியில் வெளிவந்த சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட பத்திரிகை சஞ்;சிகைகளுள் சில குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தனித்துவமான பெருமைக்குரியன.

பூலோ கௌஷதோபகாரி (1904) என்ற பெயரில் கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு வைத்திய இதழ் பாலர் மித்திரன் (சி. பத்மநாப ஐயர் 1923) என்ற சிறுவர் இதழ,; |சித்திரம்| என்ற (தேவராஐ ஐயர் 1923) ஓவியக்கலை சார்ந்த இதழ் சோதிட பரிபாலினி என்ற (இரகுநாதையா); சோதிட என்ற இதழ் தமிழ் மகள் (மா. மங்கம்மாள்) என்ற பெண்;கள் இதழ், | சைவ சாஸ்திர பரிபாலனம்| (ச. குமாரசாமிக்குருக்கள்) என்ற சமய இதழ் என்பன இவற்றுட்சில.

இங்கு குறிப்பிடப்பட்டவை யாவும் தரத்தின் சிறப்புநோக்கி அன்று வைத்தியம் சித்திரம், சோதிடம், சமயம், சிறுவரிலக்கியம் என்றிப்படிப் பலவகைப்பட்ட துறைகளிலும் அந்தக் காலத்திலேயே இவை தொடங்;கப்பட்ட சிறப்பு நோக்கியே கூறப்பட்டது. |தமிழ் மக்கள் பத்திரிகையை நடத்தியதன் மூலம் முதலாவது பெண் பத்திராதிபர் என்ற பெயரினைத் திருமதி. மா. மங்கம்மாள் பெற்றுக்கொள்;;கிறார்.

இப்போது பிரபலமான தினசரிகளாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்ற ||தினகரன்|| வீரகேசரி என்பனவும் வார இதழான சுகந்திரனும் இக்காலகட்டத்தில்தான் ஆரம்பமாயின. ஈழத்தமிழரிடையே வாசிப்புப் பயிற்சியை ஏற்படுத்தியவை இப்பத்திரிகைகளே என்று துணிந்த கூறலாம். கலாநிதி. க. கைலாசபதி ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் தினகரன் சிறப்பான இலக்கியப்பணியாற்றியது. |சுகந்திரன் 1947ஆம் ஆண்டில் கோ. நடேசையரை ஆசிரியராகக் கொண்டு தினசரியாக ஆரம்பித்து சுமார் ஐந்து ஆண்டுகளில் வார இதழாக மாற்றப்பட்டது. சுமார் முப்பத்தைந்து வருடத்துக்கு மேல்;வெளிவந்த இப் பத்திரிகை அண்;மையில் நின்றுபோனதும் வருத்தத்திற்குரிய ஒரு விஷயம். இது ஒரு தீவிரமான அரசியல் ஏடாக இருந்தாலும் மிகப்பரவலாக இலக்கிய விஷயங்களைத் தாங்கி வந்ததும் பல எழுத்தாளர்;களை இனங்கண்டு சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது. கோவை மகேசன் ஆசிரியராக இருந்த காலத்தில் இதன் காரமான அரசியல் தலையங்;;கங்கள் பிரபலமாகப் பேசப்பட்டவை.

இலங்கைப் பல்கலைக்கழகப் பேராதனை வளாகத் தமிழ்ச் சங்கத்தினரால் 1948 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட இளங்கதிர் ஆண்டு தோறும் அரிய இலக்கிய மலராக மலர்ந்தது. இதேபோல் யாழ்ப்பாண வளாகத்திலிருந்து வெளிவந்த சிந்தனையும் குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலம் சிறந்த விவசாய சஞ்சிகையாக வெளிவந்த கமத்தொழில் விளக்கம் 1930இல் nஐபரத்தினம் என்பாரை ஆசிரியராகக் கொண்டு கமத்தொழில் திணைக்களத்தினரால் வெளியிடப்பட்டது.

1950இற்குப் பிந்தியவற்றை நோக்குவோம் | மறுமலர்ச்சி | நடத்தி அனுபவம் பெற்ற திரு.ச. வரதராசன் அதன் பின் 1953ல் |ஆனந்தன் | 1955ல் |தேன் மொழி | 1961ல் | புதினம் | 1971ல் | வெள்ளி | ஆகிய சஞ்சிகைகளை நடத்;தினார்.

|ஆனந்தன் | ஏறக்குறைய ஒரு சிலசிறுவர் சஞ்;சிகையை நினைவூட்டத்தக்க வகையில் சாதாரணமான இலக்கிய இதழாக இருந்தது. தேன்மொழி ஈழத்தமிழருக்கு முற்றிலும் புதிய ஒரு தனித்துவமான கவிதை இதழாக அழகிய சிறிய அமைப்பில் வெளிவந்தது. இதற்கு கவிஞர் மகாகவியின் உதவியையும் வரதர் பெற்றுக் கொண்டார்.

| புதினம் | இவற்றிலிருந்து சற்று மாறுபட்டதாக ஒரு செய்திக் கதம்பமாக மாதமிருமுறை மலர்ந்தது. தினசரிகளின் வார இதழ்கள் போன்று ஆனால் சஞ்சிகை ரூபமாக வந்த புதினத்திற்கு வாசகர்களிடையே நன்மதிப்பு இருந்தது.

| வெள்ளி | கல்கண்டுடாணி இதழாக அமைந்த அதே வேளையில் அதற்கென அமைந்த சில தனித்துவமான தன்மைகளுடன் மாத இதழாக இதழாக்கப்பட்டு ஈற்றில் நிறுத்தப்பட்டது.

| வரதரின் | | தேன்மொழி | போன்று தனிக்கவிதைப் பத்திரிகைகளாக 1969ல் எம். எ.நுஃமான் அவர்கள் என்ற கவிஞன் என்ற பெயரிலும் இ. முருகையன் நோக்கு என்ற பெயரிலும் ஆரம்பித்தவை மிகச்சில இதழ்களுடன் நின்றுவிட்டன.

சி. பத்மநாபஐயர் என்பவரும் வரதர் போலவே பல பத்திரிகைகளை நடத்தியர் இவர். 1921ல் |ஆனந்த சாகரம் | 1923இல் |பாலர் மித்திரன் | 1928ல் | சரஸ்வதி | என்பவற்றைத் தொடங்கி நடத்தினார்.

1956ல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினால் புதுமை இலக்கியம் என்ற புரட்சிகரமான இலக்கிய இதழ் ஆரம்பிக்கபட்டது. இது சிலவருடங்களில் நின்று விட்டது. 1962இல் அகில இலங்கை எழுத்தாளர் மாநாட்டு மலர் ஒன்றை வெளியிட்டிருந்தது. அது ஒன்றே புதுமை இலக்கியத்தின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டு. 120 பக்கங்களில் அரியதொரு பொக்கிஷமாக அது மலர்ந்தது.

யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு தமிழ்த் தினசரியாக வெள்ளிவிழாக்கண்ட | ஈழநாடு | 1959இல் வார இதழாக ஆரம்பிக்கபட்பட்டு இன்றும் வெளிவருகிறது. (யாழ்ப்பாணத்தின் மற்றொரு தினசரியான | ஈழமுரசு | 1984இல் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்;கப்பட்டு இன்று தினசரியாக மலர்;கிறது.)

ஆரம்பத்தில் இந்;திய எழுத்தாளர்களின் படைப்புக்களோடு வெளியிடப்பட்டு பின்னர் சினிமா இதழாக மாறி இடையிடையே தலைகாட்டி வந்த கதம்பம் சஞ்;சிகை கே. வி. எஸ். மோகனால் 1959ல் தொடங்கப்பட்டது.

ஆசீர்வாதம் அவர்களால் ஆரம்பிக்;கப்பட்டு இடையில் சிறிது காலம் கெம்சியன் செல்;வன் செங்கை ஆழியான் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு கணிசமான பணியாற்றிய ||விவேகி || யும் இக்காலகட்டத்திலேயே ஆரம்பமானது.

|இளங்கீரன் | நடத்திய |மரகதம் | நான்கு இதழ்கள் மட்டுமே வெளியிடப்பட்டபோதும் மிகத்தரமானதாகப் படங்களுடனும் ஐனரஞ்சகமாகவும் நடைபெற்றது.

1961­-63 இலும் 1976-71 இலும் ஈழத்துத் தமிழ் பத்திரிகைத்துறை வரலாற்றில் முக்கிய காலங்களாகும். இக்காலகட்டங்களில் மிக அதிகமான இதழ்களும் புதிதாக வெளியிடப்பட்டன. 1962ஆம் ஆண்டில் மட்டும் சுமார் இருபத்தைந்து இதழ்களும் 1963-70 ஆம் ஆண்டுகளில் சுமார் இருபதுக்கு மேற்பட்ட இதழ்களும் ஆரம்பிக்கப்பட்டன.

|உன்னைப் பற்றி | மனோதத்துவம் | கலைப்பூங்கா-இலக்கியம்,|நாதம்| |சங்;;;;கீதம|;, |இலங்கைசாரணன் சாரணீயம், | வெற்றிமணி |- சிறுவர் இதழ் |சுகாதார ஒலி |- சுகாதாரம் |அறிவொளி |- விஞ்ஞானம் |Nஐhதிடம|;- சோதிட இதழ் நூல் விமர்சனம் என்பன இக்காலகட்டத்தில் பல்வேறு துறைகளுள் நடத்தப்பட்ட பல சஞ்;சிகைகளுள் குறிப்;;பிடத்தக்க சிலவாகும்.

இவற்றோடு தமிழ் இளைஞன்; விஞ்ஞானி சமுதாயம் சமூக மஞ்சரி போன்ற அறிவியல் ஏடுகளும் வேறுபல சமய இலக்கிய இதழ்களும் வெளியாகின.

|வெற்றிமணி | எளிமையான ஆனால் சிறந்த சிறுவர் இதழாக பன்னிரண்டு வருடங்கள் மாணவ உலகிற்கு நற்பணியாற்றி மறைந்தது. இதை நடத்திய மு. க. சுப்பிரமணியம் பாராட்டுக்குரியவர். எம். ஏ. ரஹ்மான் 1964 முதல் ஆறு ஆண்டுகள் வெளியிட்ட | இளம்பிறை | நல்ல ஒரு இலக்கிய ஏடாக அமைந்தது.

யாழ்ப்பாண ஐக்கிய மேற்பார்வைச் சபையினால் நீண்ட காலம் நடத்தப்பட்டு வந்த (1944முதல்) |ஐக்கிய தீபம் | மற்றும் | கூட்டுறவு | என்பன ஒரளவு இலக்கியத்துக்கு இடமளித்ததோடு கூட்டுறவு சம்பந்தமான விஷயங்;களுடன் வெளிவந்தன.

நாவலப்பிட்டியிலிருந்த நா. முத்தையாவினால் வெளியி;டப்பட்ட |ஆத்மNஐhதி| யும் (1947) யாழ்ப்பாணம் சிவ தொண்டன் நிலையம் வெளியிட்ட |சிவத்தொண்ட |னும் (1936) மிக நீண்டகாலமாக அமைதியானமுறையில் அதிகம் பேருக்குத் தெரியாமலே சமயப்பணியாற்றி வந்தன.

அரசியல் பிரசாரரீதியான நடத்தப்பட்ட பல பத்திரிகை மக்கள் மனத்தில் என்றும் இடம்பிடித்திருக்கின்;றன. ஏற்கெனவே சுதந்திரன் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். கே. கணேஷ_டன இணைந்து பாரதி பத்திரிகையை நடத்திய கே. இராமநாதன் 1946ஆம் ஆண்;டிலே |தேசாபிமானி | என்ற பொதுவுடமை வார இதழை ஆரம்பித்து நடத்தினார்.

இரா. நாகலிங்கம் 1963இல் ஆரம்பித்;த செய்திப் பத்திரிகையும் பொதுவுடமைக் கட்சிக்குக் கீசமான பங்களிப்பை நீண்டகாலம் செய்திருக்கிறது. சுயாட்சிக்கழகத்தின் |விடுதலை | பத்திரிகை நவரத்தினத்தினால் நடத்தப்பட்டது. அந்தனிசில் 1967இல் தீப்பொறி 1970இல் பல்கலை,1972இல் ஒரு தீப்பொறி ஆகிய மூன்று பத்திரிகைகளை அவ்வப்போதிருந்த தமது அரசியற்கோட்பாடுகளுக்கேற்ற வகையில் நடத்தினார். இவரது அடுக்குமொழித் தலைப்புக்கள் நீண்ட காலம் பொதுமக்களால் பேசப்பட்டுவந்தன.

1967ல் ஆரம்பித்த | தமிழ் உலகம் |,1947இல் ஆரம்பித்த | புதுயுகம் | என்;பனவும் கட்சி அரசியல் hPதியாக வெளியிடப்பட்டவையே.

1967ஆம் ஆண்டில் முதன் முதலாக விஞ்;ஞான வார இதழ் ஈழத்தில் தோன்;றியது.அது வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட நவீன விஞ்ஞானியாகும். இது சுமார் ஒரு வருடம் தொடர்ந்து வெளிவந்தது.

1966இல் குணசேனா நிறுவனத்தினரால் | தினபதி | நாளிதழ் எஸ். டி.சிவநாயகத்தை ஆசிரியராகக் கொண்டும் சிந்தாமணி இராஐஅரியரத்தினத்தை ஆசிரியராகக்; கொண்டும் வெளியிடப்பட்டன. இன்றும் அவை தொடர்ந்து வெளிவருகின்றன.

1965ல் ஆரம்பித்த |சிரித்திரன |; நகைச்சுவை மாசிகையும் 1966ல் ஆரம்பித்த |மல்லிகை| இலக்கிய மாசிகையும் இன்றுவரை தொடர்ந்து ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் வெளிவருகின்றன.

1965ல் இ. செ. கந்தசாமி ஆரம்பித்த வசந்தம் தரமான ஒரு இலக்கிய ஏடாகச் சில காலம் வெளிவந்தது.

அறுபதுகளின் கடைசிப்பகுதியிலும் எழுபதுகளின் ஆரம்பத்திலும் நமது பத்திரிகை உலகம் வியக்கும்படி சுமார் அறுபதுக்கு மேற்;பட்ட சஞ்சிகைகள் வெளிவர ஆரம்பித்தன. ஆனால் இவற்றில் தொடர்ந்து ஆரோக்கியமாக வெளிவருபவை எவை என்பது கேள்விக்குறி.

|குயிலோசை|, | சிலம்பொலி |,| புன்னகை| | பூம்பொழில் |, | சிப்பி| |ரோஐh|,|வானவில|; |விகடன|; |தமிழ்அமிழ்தம்| , | பூமாலை|, |மங்கை|, |அமுதா|, |சாட்டை|, |பொய்கை|,| முல்லை|, |கலைக்குயில|;, |பூங்குன்றம|;,| கற்;கண்டு|,| கன்னி|,| தீவகம|;, என்;பவற்றை நோக்கும்போது எந்தவித இலட்சிய நோக்;கோ அன்றித்தரமான முயற்சிகளோ இல்லாமல், வெறுமனே பத்திரிகை நடத்தவேண்டுமென்ற பேரவாவை மட்டும் முதலாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டவையாகத் தெரிகின்றன. இவை ஒன்றிரண்டு இதழ்களுடன் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன.

மு. தளையசிங்கம், மு. பொன்னம்பலம் ஆகியோரால் 1969இல் வெளியிடப்பட்ட உள்ஒளி இலக்கியம் விமர்சனம் என்பவற்றுக்காக வெளியிடப்பட்ட கனமான இதழாகக் காணப்பட்டபோதும் ஓர் இதழுடன் நின்றுவிட்டதென்றே நினைக்கிறேன்.

|எழில் | மனு அரியநாயகம் என்பவரால் 1969ல் ஆரம்பிக்கப்பட்ட தரமான இலக்கிய இதழ் இது சுமார் ஐந்து அல்லது ஆறு இதழ்களுடன் நின்றுவிட்டது. |குங்குமம்; | 1969முதல் இரண்டு வருடங்கள் ஓரளவு தரமானதாக வெளிவந்தது. திருகோணமலைச் சிறப்பிதழ் ஒன்றை நல்லமுறையில் | குங்குமம் | வெளியிட்டிருந்தது. |அரவிந்தம் | தரமான ஓர் இதழாக இருந்தும் ஓரிதழுடன் நின்றுவிட்டது.

|கற்பகம் | கலை இலக்கிய அறிவியல் இருதிங்கள் இதழ் | ஒளி | இலக்கிய மாத இதழ் | இதயம் | இலக்கிய மாத இதழ், | ரோஐhப் பூ | இலக்கிய சினிமா மாதஇதழ் என்பன சிலகாலம் தொடர்ந்து வெளிவந்த ஓரளவு தரமான ஏடுகளாகும். 1971இல் இதயம் பெண்கள் மலர் ஒன்றை வெளியிட்டது. இது ஈழத்துப் பெண்எழுத்தாளர்களை இனம்காணஉதவியது.

|மலர்|, |தமிழமுது|, |அஞ்சலி| என்பன நல்ல ஐனரஞ்கமான தரமான இலக்கிய இதழ்களாக வெளிவந்தன வெனினும் இரண்டு மூன்று வருடங்களுள் மறைந்ததும் நம் துரதிர்ஷடமே.

நல்லைக்குமரன் 1970ல் | இசையருவி | என்ற பெயரில் சங்கீதப் பத்திரிகைஆரம்பித்து நடத்தியபின் 1971இல் | கலைஅருவி | என்று பெயர் மாற்றம் செய்தார். இது கலை இலக்கியம், சங்கீதம் இவற்றுடன் மூன்று இதழ்கள் வெளிவந்தபின் ஓய்துவிட்டது.

தென்னிந்தியச் சஞ்சிகைகளின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் காலகட்டத்தில்(எழுபதுகளின் ஆரம்பம்) பல சஞ்கிகைகள் புதிது புதிதாக வெளிவரஆரம்பித்தன. இவற்றில் பல தென்னிந்தியச் சஞ்சிகைகளின் தோற்றங்கள் அமைப்புக்களை அப்படியே அப்பட்டமாகப் பின்பற்றி தமக்கென்றொரு தனித்துவத்தைப் பேணமுயலாமல் வெளிவந்தன.

கலசம்,வாணி, கற்கண்டு, மாணிக்கம் என்பன இவற்றுட் சிலவாகும். |மாணிக்கம்| ஜெயராஜ்பாணிப் படங்களுடனும் படு கவர்ச்சியான கதைகளுடனும் வெளியிடப்பட்டது. இதன் ஆசிரியர் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது. |சத்தியம்|(1970) |கலைக்கண்|(1972) கலைவாணன் (1972) என்பன செய்தித் தாள்களைப் போன்ற அமைப்பில் வெளிவந்த- குறிப்பிடத்தக்க- பத்திரிகைகள். இவையும் மிகச்சில இதழ்களுடன் நின்றுவிட்டன.

|செங்கதிர்| என்ற தரமான மாணவர் அறிவியல் ஏடு 1971ல் பொன்னா குமாரசூரியரை ஆசிரியராகக் கொண்டு ஐந்து இதழ்;கள் வெளிவந்து இடையில் நின்றிருந்தது. பின்னர் 1973ல் புத்துயிர் பெற்று த. இந்திரலிங்கம், கோப்பாய் - சிவம், செல்வி புஷ்பா மாணிக்கம்,எம். எல். எம். இக்பால் ஆகியோரை உதவி ஆசிரியர்களாகக் கொண்டு மேலும் சில இதழ்கள் வெளிவந்தன.

|குமரன்| 1971ல் மாணவர் மாதஇதழ் என்ற மகுடத்துடன் ஆரம்பித்துப் பின்னர் தீவிரமான பொதுவுடமைக் கருத்துக்களுடன் இலக்கிய சஞ்;சிகையாகச் சில ஆண்டுகள் நன்முறையில் நடந்தது. 1972ல் ஆரம்பித்த | பூரணி| படைப்பிலக்கியக் காலாண்டிதழ் மிகத்தரமான சஞ்சிகையாக என். கே. மகாலிங்கம், க. சட்டநாதன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு சிலகாலம் வெளிவந்தது.

முன்பு தமிழ் இளைஞன் நடத்தியது போல 1972முதல் இருதிங்கள் இதழாக |ஊற்று| சஞ்சிகையை இலங்கைப் பல்கலைக்கழகப் பேராதனை வளாகத்தினர் வெளியிட்டு வந்தனர். இது தமிழ் இளைஞனைவிடவும் தரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் ஆசிரியராக இருந்தவர் ப. சிவகடாட்சம்.

|சுடா|; சஞ்சிகை குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தின் பிரசாரக் கருவியாக இருந்த அதேவேளையில் ஓர் கலை இலக்கிய இதழாகவும் அமைந்து படிப்படியாகத் தரமுயர்ந்து வந்து ஈற்றில் நிறுத்தப்படவேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டது. நமது துரதிர்ஷ்டமே.

அலை சற்று உயர்ந்த தரத்தில் புத்திஐPவிகளின் உரத்த சிந்தனைகளை வெளியிட்டு வரும் ஒரு சஞ்சிகை மு. புஷ்பராஜன்,அ. யேசுராசா ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு இடைவெளிகள்விட்டு ஆனால் தொடர்ந்து வந்துகொண்;டிருக்கிறது.

|சிரித்திரன|; நகைச்சுவைப் பத்திரிகையின் வெற்றியைக் கண்டு ஆசையுற்ற சிலர் தாமும் அதுபோல வெளியிட முயன்று தோல்வியைத் தழுவினர். இணுவிலிலிருந்து தீசன் பாஸ்கர் கண்ணன் என்பவர்களால் 1972ல் ||கலகலப்பு|| என்ற ஏடும் நல்லூரிலிருந்து ||கிறுக்கன||; என்ற ஏடும் ஸ்ரீஸ்கந்தராஐhவினால் வெளியிடப்பட்டன. ஆனால் இவை வெறும் கேலிக்கூத்தாகவே அமைந்திருந்தன.

இலங்கையின் புதுக்கவிதையின் தாக்கம் மிக அதிகரித்து பத்திரிகைகள் சஞ்சிகைகள் தோறும் பவனிவரத் தொடங்கிய காலத்தில் புதுக்கவிதை மடல்கள் பல தோன்றின. வானம்பாடியைப் பின்பற்றி விலையிலாக் கவிமடல்களாகத் தோன்றியவை சில. இவை பெரும்பாலும் கடைகளில் விற்பனைக்கு வராமல் தபால் மூலம் நண்பர்களுக்கு மட்டும் அனுப்பும் இதழ்களாகவே அமைந்தன.

இவற்றுள் சில தட்டச்சு செய்யப்பெற்று, அல்லது கையால் எழுதி கல்லச்சுப்பிரதியாக வெளியிடப்படுகின்றன. இவ்வகையில் புத்தளம், தொத்தாந்தீவு ராஜகுரு சேனாதிபதி இமானுவேல் புஷ்பராஜாவினால் வெளியிடப்படும் ~~காற்று|| குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகள், ஆசிரிய பயிற்சிக்கலாசாலைகள் முதலியவற்றிலிருந்து ஆண்டுதோறும் தனிப்பட்டவகையில் வெளியிடப்படும் சஞ்சிகைகளை இப்பட்டியலிலே சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் பல்கலைக்கழகப் பேராதனை வளாகத்தின் வெளியீடுகளான இளங்கதிர், தமிழ்இளைஞன் ~ஊற்று| என்பவை போல இலக்கிய அல்லது அறிவியல் ஏடுகளாகப் பொது மக்களின் அறிவுப் பசியைத் தீர்க்கும் வகையில் பரவலாக வெளியிட்டு விற்பனைக்குச் சந்தைப்படுத்தப்பட்ட சில சஞ்;சிகைகளை பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும்.

இவ் வகையில் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட ~~விஞ்ஞானி||புத்தூர் சோமஸ்கந்தக கல்லூரித் தமிழ்மன்றம் வெளியிட்ட |புதுவை| றேயல் கல்லூரியின் |இந்து தர்மம்| யாழ் மத்திய கல்லூர்pயின் |மத்தியதீபம்| என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இதேபோல் அரசாங்க நிறுவனங்கள் கூட்டுத்தாபனங்கள் தனியார் ஸ்தானங்களும் தமது உறுப்பினர்களிடையே விநியோகிக்கும் சில தனிப்பட்ட சஞ்சிகைகைளை விட சில பொது வெளியீடுகளையும் வெளியிடுகின்றன.

முன்னர் குறிப்பிட்ட கமத்தொழில் விளக்கம் ஸ்ரீலங்கா என்பவை போல ~பொருளியல் நோக்கு| ~காப்புறுதி| ~மில்க்வைற் செய்தி| சோயா செய்திகள் போன்றவற்றை இத்துறையில் குறிப்பிடலாம். நீர்ப்பாசனத் திணைக்களத் தமிழ்ப் பண்பாட்டுக்கழகம் கொழும்பில் தட்டச்சுப்பிரதியாக வெளியிட்டுவந்த ||அருவி|| சஞ்சிகை ஆண்டிற்கு இரு இதழ்களாக 1984முதல் கிளிநொச்சிக் கிளையினரால் அச்சில் வெளியிடப்படுகிறது.

~மில்க்வைற் செய்தி ஒரு வியாபார நிறுவனத்தின் இதழாயிருப்பினும் பலதுறைசார்ந்த சிறந்த அம்சங்;கள் பலவற்றைத் திரட்டித்தரும் ஆசிரியர் க. சிவ குலரத்தினத்தின் பணி பாராட்டுக்குரியது.

சுமார் ஒன்றரை நூற்றாண்டுகால ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைத்துறை வரலாற்றை எடுத்து நோக்கினால் அற்பாயுளில் மறைந்த பல நூற்றாண்டுக்கான பத்திரிகைகளின் தகவல்களே கிடைக்கின்றன. தரமான அநேக இதழ்;கள் இவ்விதம் மடிந்து போன செய்திகள் வருத்தம் தருவனவே! இருந்தாலும் இவற்றுள்சில, தம் சிறிய வாழ்வுக் காலத்தில் சாதித்தவை மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கதே.

முன்னர் குறிப்பிட்ட வண்ணம் ஈழகேசரி, மறுமலர்ச்சி, என்பவற்றின் ஆரம்பகால இலக்கிய எழுச்சியும், கலைச்செல்வி விவேகி என்பவற்றின் இலக்கிய வளர்ச்சிப்படி முறையும் பாரதி, வசந்தம், மரகதம், எழில், ரோஜாப்பூ, மலர், தமிழமுது, கற்பகம், ஒளி, அஞ்சலி, இதயம், குமரன், பூரணி, அலை சுடர் கலைஅருவி, செங்கதிர், ஊற்று, ஆகியவற்றின் இலக்கியத்தரம், அறிவியல் மேம்பாடு என்பனவும் உதயதாரகை, சத்தியவேதபாதுகாவலன், இந்துசாசனம் ஆகியவற்றின் ஆன்;மீக இலக்கியப்பணியுடன் இணைந்த நீண்டகால வரலாறும் பெருமிதத்துடன் அவதானித்து மகிழவேண்டியவை.

தூய இலக்கியத்துக்காகவும், நகைச்சுவைக்காகவுமென்று தொடர்ந்து நீண்டகாலமாக வெளிவரும் |மல்லிகை| |சிரித்திரன்| ஆகியவற்றின் வெற்றிநடை நம்மை இறும்பூதெய்தவைக்கிறது. அவற்றின் ஆசிரியர்கள் டொமினிக்ஜீவா, சிவஞாசுந்தரம் ஆகியோரின் உழைப்பு பராட்டத்தக்கது.

அண்மையில் கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரத்தொடங்கியுள்ள தாரகை, களம் என்ற இரண்டு சஞ்சிகைகளும் ஓரளவு ஆரோக்கியமாக வந்து கொண்டிருக்கின்றன.

தலைநகரிலிருந்து பாரிய நிறுவனங்களின் பலமான பின்ணனியில் வெளிவந்துகொண்டிருக்கும் தினகரன், வீரகேசரி, தினபதி ஆகிய தினசரிகளும் இவற்றின் வாரமஞ்சரிகளும் தமிழர்;களிடையே செய்திப் பரவல்களுக்கும் இலக்கிய வளர்சிக்கும் போதிய துணை செய்கின்றன என்பதை மறுக்க முடியாது. மித்திரன் பற்றியும் இங்கு குறிப்பிடுதல் அவசியமா?

பலவித தொல்லைகள், எதிர்ப்புக்கள் போராட்டங்களினூடாகவும் அஞ்சா நெஞ்சத்துடன் போராடி வெள்ளிவிழாக்கொண்டாடிய ~ஈழநாடு| தேசிய தினசரியும் அண்மையில் துணிவுடன் ஆரம்பிக்கப்பட்டு வீறுநடை போட்டுவரும் ~ஈழமுரசு| தினசரியும் தமிழர்களால் தமிழ்களுக்;காக நடத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகளாகும் இவற்றின் வார இதழ்கள் இலக்கிய சஞ்சிகைகள் போல அமைவதும் குறிப்பிடத்தக்ககது.

கலைப் புலவர். க. நவரத்தினத்தின் பெருமுயற்சியால் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் வெளிவந்த கலையாகவும் கருதிய முத்திங்;;கள் வெளியீடாகன ~ஞாயிறு| ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்சங்கம் வெளியிட்ட முத்திங்கன் வெளியீடான ~~கலாநிதி|| இரண்டும் சில ஆண்டுகளே வெளிவந்தன வெனினும் தமிழறிஞர்;களால் நன்கு மதிக்கப்பட்ட உயர்தரமான சஞ்சிகைகள்.

ஞானமிர்தம், ஞானபாநு, விஜயத்துவசம் என்பன இலங்கையர் இந்தியாவில் வெளியிட்ட பத்திரிகைகள் இவ்வாறே தமிழ்நாட்டவர் இலங்கையில் வெளியிட்ட சில இதழ்களும் உள்ளன.

இப்படியாக இதுவரை வெளிவரத் தொடங்கிய சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பத்திரிகைகளுள் ஆறு செய்தித் தினசரிகளும் இரண்டு மாசிகைகளும் நிச்சயமானவையாக ஆரோக்கியமானவையாக வெளிவருகின்றன. இவற்றை விட சமயப் பத்திரிகைகள் சில வெளிவருகின்றன. சுமார் நான்கு அல்லது ஐந்து இலக்கியச் சிற்றேடுகள் இடையிடையே தலைகாட்டி வருகின்றன.

இந்தநிலை இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்? இலங்கை தமிழனின் பத்திரிகைத் துறைக்கு நல்ல எதிர்காலம் கிடைப்பது எப்போது? இன்று நம் நாட்டு மக்களிடையே நிறைய வாசிக்கும் பழக்கம் வளர்ந்திருப்பது மட்டுமல்லாமல் விலை கொடுத்து நூல்களையும் பத்திரிகைகளையும் வாங்கும் பழக்கமும் ஏற்பட்டிருக்கிறது. இது நல்ல ஒரு வளர்ச்சிக்கு அறிகுறி. இதே நிலை இன்னும் மேம்பட்டு நம் நாட்டின் கலை இலக்கிய வளர்ச்சியில் உள்ள அக்கறை சாதாரண மக்களிடமும் ஏற்படவேண்டும். அந்த நாள் வெகுதூரத்தில்லை.

ஆரம்பித்த ஆண்டு வரிசையில்
இதழ்களின் பட்டியல்

உதயதாரகை(இரு மொழி, மாதமிருமுறை) அமெரிக்கமிஷன், வட்டுக்கோட்டை 1841
உதயாதித்தன் சைமன்காசிச்செட்டி 1841
இலங்கைநேசன் முத்துசாமி யாழ்ப்;பாணம் 1848
பாலியர் நேசன் (சிறுவர்இதழ்) யாழ்ப்பாணம் 1859
சத்தியவேதபாதுகாவலன் கத்தோலிக்க திருச்சபை யாழ்ப்பாணம் 1859
சைவஉதயபாநு (சரவணமுத்துப்புலவர் யாழ்ப்பாணம்) 1882
முஸ்லீம் நேசன் எம். சி. சித்திலெப்பை கொழும்பு 1882
சன்மார்க்கப் போதினி (மாதமிருமுறை) ச. தம்பிமுத்துப்பிள்ளை அச்சுவேலி. 1885
ஞானமிர்தம் (சைவசமயஇதழ்) சபாபதிநாவலர் சென்னை 1888
இந்துசாசனம் (சைவம், இலக்கியம், மாதமிருமுறை)த.கைலாசபிள்ளை வண்ணார்பண்ணை 1889
ஞானதீபம் எம். சி. சித்திலெப்பை கொழும்பு 1892
இஸ்லாம் மித்திரன் எல். எம் உதுமான். 1893
இலங்கைப் புதினத்தாள் கொழும்பு 1893
விசயத்துவசம் (மாதமிருமுறை) சி. தாமோதரம்பிள்ளை பாளையங்கோட்டை. 1894
திராவிட கோகிலம் (இருமொழி) யாழ்ப்பாணம் 1900
முஸ்லீம் பாதுகாவலன் ஐ. எல். எம். அப்துல். அஸ_ன் 1901
சுதேசநாட்டியம் கல்;லடி வேலுப்பிள்ளை வசாவிளாள் 1902
விவேகானந்தன் (வைசமயம்) ச. இளையதம்பி யாழ்ப்பாணம் 1902
பூலோகௌஷதோபகாரி (வைத்தியம்) கொழும்பு 1904
ஆத்மபோதினி (சைவசமயம்)க. வைத்தியநாதசர்மா யாழ்ப்பாணம் 1907
குருசந்திரோதயம் எஸ். ஏ. செல்லத்துரைப்பிள்ளை யாழ்;ப்பாணம் 1907
ஞானசித்தி சி. தமோதரம்பிள்ளை வதிரி 1908
விஜயலட்சுமி இ. சி. விநாயகமுதலியார் யாழ்ப்பாணம் 1908
பாலச்சந்திரன் இ. செல்லையாபிள்ளை கொழும்பு 1910
ஞானப்பிரகாசம் பொ. மாணிக்கம் பிள்ளை யாழ்ப்பாணம் 1910
சைவபாலியசம்போதினி யாழ்ப்பாணம் 1910
சண்முகநாதன் சு. சரவணமுத்துப் புலவர் யாழ்ப்பாணம் 1911
சிவதர்மபோதினி கொழும்பு 1920
ஆனந்த சாகரம் சி. பத்மநாபஐயர் கொழும்பு 1921
தேசாபிமானி (தினத்தாள்) மாசிலாமணிப்பிள்ளை யாழ்ப்பாணம் 1921
தமிழ் (மாதஇதழ்) 1922
பாலர் மித்திரன் (சிறுவர்இதழ் சி. பத்மநாபஐயர் கொழும்பு) 1923
விவேகானந்தன் கொழும்பு 1926
சரஸ்வதி (மாதஇதழ்) சி. பத்மநாபஐயர் கொழும்பு 1927
சித்திரம் (ஓவியக்கலைமாதஇதழ் )தேவராஜ ஐயர் கொழும்பு 1929
லங்கா (மாதஇதழ்) கே.எஸ். அனந்தநாராயணஐயர் கொழும்பு 1930
கமத்தொழில்விளக்கம் (விவசாய மாதஇதழ்)விவாசய இலாகா கொழும்பு 1930
வீரகேசரி (தினசரி) எச். நெல்லையா கொழும்பு 1930
ஈழகேசரி (வாரஇதழ்) நா. பொன்னையா சுண்ணாகம் 1930
தினகரன் (தினசரி த. சா. தங்கையா ஏரிக்கரை கொழும்பு 1932
ஞாயிறு (கலைஇலக்கிய மும்மாத இதழ்) க. நவரத்தினம்(கலாநிலையம்) யாழ்ப்பாணம் 1930
வித்தகம் தென்கோவை கந்தையாப்பிள்ளை புதுச்சேரி 1933
வித்தியாசமாராப்பத்திரிகை கல்வி இலாக கொழும்பு 1935
சிவத்தொண்டன் (சமய மாதஇதழ்) திருமதி மா. மங்களம்மாள் வண்ணார் பண்ணை 1937
இலங்கை விகடன் செல்வநாயகம் யாழ்ப்பாணம் 1938
சைவசாஸ்திர பரிபாலனம் (சைவசமய மாதஇதழ்) ச.குமாரசாமிக்குருக்கள் அச்சுவேலி 1939
தமிழன் வே. சாரங்கபாணியாழ்ப்பாணம் கலாநிதி (தமிழராய்ச்சி, மும்மாதஇதழ்
தி. சதாசிவ ஐயர் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் யாழ்ப்பாணம் 1942
ஐக்கிய தீபம் (கூட்டுறவு மாதஇதழ்) வட பகுதி ஐக்கிய மேற்பார்வைச் சபை யாழ்ப்பாணம் 1944
மறுமலர்ச்சி (இலக்கிய மாதஇதழ்) தி. ச. வரதராசன் (மறுமலர்ச்சிச் சங்கம்) யாழ்ப்பாணம் 1945
ஆசிரிய தீபம் (மாதஇதழ்) அகில இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணம் 1945
வைத்தியன்(மருத்துவ மாதஇதழ்) பரிபூரணானந்தா சித்த ஆயுர்வேத வைத்தியர் சங்கம்
யாழ்ப்பாணம். 1945
சுவதர்மபோதம் (சைசவமயமும்மாதஇதழ்) தி.சதாசிவஐயர் (பிராமணசமாஜம்) யாழ்ப்பாணம் 1945
தேசாபிமானி (பொதுவுடமைவாரஇதழ்) கே. ராமநாதன் கொழும்பு 1946
மின்னொலி (மாதஇதழ்) மயிலன் ஜாஎல 1946
காந்தீயம் சி.க வேலாயுதபிள்ளை அ.இ. காந்திசேவா சங்கம் யாழ்ப்பாணம் 1947
நாவலன் சி. கனகசுந்தரம் (சைவஆசிரியர் கலாசாலை) திருநெல்வேலி; 1947
கலைஞானி தெல்லியூர் செ. நடராஜா 1947
சுகந்திரன் (அரசியல், இலக்கியம்) கோ. நடேசையர் கொழும்பு 1947
ஈழமணி (இலக்கியமாதஇதழ்) நா. முத்தையா நாலப்பிட்டி 1947
இளங்கதிர் (ஆண்டுக்கொருமலர்); பேராதனைப் பல்கலைக்கழகம் கண்டி 1948
பாரதி கே. ராமநாதன் கே.கணேஸ் கொழும்பு 1948
ஸ்ரீலங்கா குல.சபாநாதன் (அரசாங்க செய்திப்பிரிவினர்) கொழும்பு 1948
சமுதாயம் ஹனீபா கல்ஹின்னை 1948
வானொலிமஞ்சரி இலங்கைவானொலி நிலையம் கொழும்பு 1948
தமிழ்மணி தெ.செ.நடராசா தெல்லிப்பழை 1949
ஆறுமுகநாவலர் (சைவசமயஇதழ்) ச. குமாரசாமிக்குருக்கள்
(வேதாகமசைவசித்தாந்தசபை) யாழ்ப்பாணம் 1949
பாலபாரதி பண்டிதர் எஸ்.கே.தம்பையா யாழ்ப்பாணம் 1950
சமூகத்தொண்டன் விடிவெள்ளி முத்தையா (சனசமூகநிலையங்களின்
ஒன்றியம்) யாழ்ப்பாணம் 1950
ஆனந்தன் தி.ச. வரதராசன் யாழ்ப்பாணம் 1953
மாணவமலர் க. மனோகரன் கொழும்பு 1953
விஞ்ஞானி யாழ் மத்திய கல்லூரி யாழ்ப்பாணம் 1953
தமிழ் ஒலி (வாரஇதழ்) சி.வி. செபஸ்தியான் கொழும்பு 1953
உதயம் வரன் கொழும்பு 1954
தேன்மொழி (கவிதைஇதழ்) தி.ச.வரதராசன் மஹாகவி யாழ்ப்பாணம் 1955
விவேகானந்தன் (சைவசமய மாதஇதழ்)விவேகானந்தசபை கொழும்பு 1955
புதுமை இலக்கியம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பு 1956
சிறுவர் சுடர் கொழும்பு 1956
வேல் மட்டக்களப்பு 1957
மத்தியதீபம் மாதஇதழ் இளம் எழுத்தாளர் சங்கம் யாழ்ப்பாணம் 1957
கலைச்செல்வி (இலக்கியமாதஇதழ்) சி. சரவணபவன் (சிற்பி) சுண்ணாகம் 1958
நாவலன் (சைவசமயமாதஇதழ்) நா. கணேசலிங்கம் யாழ்ப்பாணம் 1959
மறுமலர்ச்சி (வாரஇதழ்) சற்குணம் கிளிநொச்சி 1959
முஸ்லிம் லங்கா ஏ.எம், ஏ.காதர் கொழும்பு 1959
ஈழநாடு(தேசிய வாரஇதழ்) இராஜ அரியரத்தினம் யாழ்ப்பாணம் 1959
தீபம் சு.தியாகராஜா கொழும்பு 1959
கதம்பம் கே.வி. மோகன் கொழும்பு 1959
கலைமதி சி. ஆறுமுகம் வ.பொன்னம்பலம் அளவெட்டி 1959
இலக்கியப் புதையல் நா. ஞானசம்பந்தன் வட்டுக்கோட்டை 1959
தழிழ்மணி திருகோணமலை 1959
முத்துச்சரம் இளந்திங்களன் பதுளை 1960
ஆனந்த சாகரம் மு. நாகலிங்கம் சுழிபுரம் 1960
விவேகி மு.வி. ஆசீர்வாதம் யாழ்ப்பாணம் 1960
மணிக்குரல் எம். சி. எம். சலீம் பண்டாரவளை 1960
முத்தமிழ் முழக்கம் மலையகம் 1960
தமிழின்பம் எஸ்.டி. சிவநாயகம் (மெய்கண்டான் பதிப்பகம்) கொழும்பு 1960
இந்து இளைஞன் இந்து வாலிபர் சங்கம் கொழும்பு 1960
புதுச்செய்தி( மாலைத்தினசரி) சி.வி. செபஸ்தியான் யாழ்ப்பாணம் 1960
அருளமுதம் சி. எஸ் மணிபாகவதர் நல்லூர் 1961
சங்கம் (மாதஇதழ்) சமூகத்தொண்டன்) கொழும்பு 1961
கலைச்செல்வம் வெலிமடை 1961
அமுதம் (இலக்கியம்) தமிழ்நெஞ்சன் கொழும்பு 1961
மரகதம் (இலக்கிய மாதஇதழ்) இளங்கீரன் கொழும்பு 1961
கலைப்பூங்கா (இலக்கியம்)சாஹித்திய மண்டலம் கொழும்பு 1961
உன்னைப்பற்றி (மனோதத்துவம்) நல்லையா ராஜநாயம் கொழும்பு 1961
மலர் (இலக்கிய மாதஇதழ்) பி.எஸ்.சி. பருத்தித்துறை 1961
வெண்தாமரை கே.ரி.ராஜசிங்கம் பருத்தித்துறை 1961
உதயசூரியன் இணுவை சானா இணுவில் 1961
புதினம் (செய்திக்கதம்பம்) தி.ச.வரதராசன் யாழ்ப்பாணம் 1961
சிவாயவாசி எம். வடிவேல் கொழும்பு 1961
நாதம் (சங்கீத இதழ்) என் சண்முகரத்தினம் (இசைத்தமிழ் நிலையம்) உடுவில் 1962
தேச பக்தன் கலைதாசன் கொழும்பு 1962
கரும்பு ஏலவாணன் நுகேகொடை 1962
மலர்விழி (மாதஇதழ்) எம். சி ஜேசுதாசன் யாழ்ப்பாணம் 1962
தேனருவி அருண்மொழி கொழும்பு 1962
பகுத்தறிவு (சமூகசீர்திருத்த அறிவியல் மாதஇதழ்) வேலணை வீரசிங்கம்
(அ.இ.பகுத்தறிவு இயக்கம் கொழும்பு 1962
மலைமுழக்கம் (மாதஇதழ்) என். கந்தையா இரத்தினபுரி 1962
கலைமலர் (மாதஇதழ்) சுபைர்தானி 1962
கண்கள் சு. கணபதிப்பிள்ளை அல்வாய் 1962
சங்கு (மாதஇதழ்) கே.டி. கே.பிள்ளை தலவாக்கொல்லை 1962
சங்கப்பலகை (மாதமிருமுறை) நக்கீpரன் சுண்ணாகம் 1962
மலைமுரசு(மாதஇதழ்) க.ப. சிவம் மு.கு.ஈழக்குமார் கண்டி 1962
தமிழ் முரசு நவாலியூர் நடேசன் மானிப்பாய் 1962
செந்தாமரை (மாதஇதழ்) செல்வி சுகந்தமலர் கொழும்பு 1962
கலைமுரசு கலைத்தொண்டன் சம்மாந்துற 1962
இலங்கைச் சாரணன் சாரணர் சங்கம் கொழும்பு 1962
எரிமலை திலகம் நாவலப்பிட்டி 1962
திருமகன் (மாதமிருமுறை) குகா கொழும்பு 1962
வெற்றிமணி (சிறுவர்மாதஇதழ்) மு.க. சுப்பிரமணியம் முள்ளியவளை 1962
நிலையக்குரல் க. வாமதேவன் சுழிபுரம் 1963
கலையரசு அ. குகதாசன் யாழ்ப்பாணம் 1963
இதயஒலி (மாணவர்;வெளியீடு)க. ராமகிருஸ்ணர் கொழும்பு 1963
முன்னணி (கலைஇலக்கியமாதமிருமுறை) கே.வி. சங்கரன் கொழும்பு 1963
கலைக்குரல் ஆர். வரதராஜன் கொழும்பு 1963
மலைப்பொறி (மாதமிருமுறை) இரா. பாலா டிக்கோயா 1963
ஈழமணி தலைப்பித்தன் கம்பளை 1963
அறிவொளி (விஞ்;;ஞான மாதஇதழ்) ஏ. ஜி. அருணாசலம் மலையகம் 1964
ஊடுருவி பூச்சாண்டி கம்பளை 1964
ரோஜா (மாணவர் மாத இதழ்) ஏட்வேட். ஏ. டானியல் நாவலப்பிட்டி 1964
உதயசூரியன்;(மாஇதழ்) இ. நாகலிங்கம் கொட்டகெல 1964
பகவதி (இருமொழி) நித்யானந்தர் யாழ்ப்பாணம். 1964
ஜோதிடம் (ஜோதிடமாதஇதழ்) செ. தெல்லியூர் யாழ்ப்பாணம் 1964
கம்பன் (இலங்கை கம்பன் கழகம் யாழ்ப்பாணம் 1964
புவியியல் (பூமிசாஸ்திர மாதஇதழ்) க. குணராஜா) யாழ்ப்பாணம் 1964
தீ (மாதமிருமுறை)இல நாகலிங்கம் கொட்டகெல 1964
கலைவாணி வேல்மாறன் (பி. ஆனந்தராயர்) யாழ்ப்பாணம் 1964
விடுதலை க.கு. அடியான் யாழ்ப்;பாணம் 1964
பண்டிதன் (காலாண்டிதழ்) பண்;டித மாணவர் கழகம் மல்லாகம் 1964
இளம்பிறை (இலக்கியம்)எம். ஏ. ரஹ்மான் கொழும்பு 1964
ஈழச்சுடர் (கலைஇலக்கியம்) சிவனருள் தெஹிவளை 1964
கலைமலர் சி. பெ.. முத்துக்குமாரு (யாழ். நுண்கலைக் கழகம் யாழ்ப்பாணம்) 1964
விடுதலை (அரசியல் வாரஇதழ்) தமிழர் சுயாட்சிக் கழகம் கொழும்பு 1965
நிலா (கலை. இலக்கிய மாத இதழ்) கொழும்பு 1965
வசந்தம் (இலக்கியம்) இ. செ. கந்தசாமி நல்லூர்; 1965
நூல் (விமர்சனம்) நந்தி (தமிழ்ப்புத்தக வெளியீட்டுக் கழகம்) யாழ்ப்பாணம் 1965
சிரித்திரன் (நகைச்சுவை மாதஇதழ்) சி. சிவஞர்னசுந்தரம் கொழும்பு 1965
ஞானதீபம் (சைவசமய இதழ்)க. வை. ஆ. சர்மா யாழ்ப்பாணம் 1965
வர்த்தக மஞ்சரி (மாதமிருமுறை) யுனைடெட்மேச்சென்ற் லிமிடெட் 1966
தினபதி (தினசரி ) எஸ். டி. சிவநாயகம் கொழும்பு 1966
கலைமதி பீற்றர் பொன்கலன் வவுனியா 1966
மல்லிகை (மாலைத்தினசரி) வீரகேசரித்தாபனம் கொழும்பு 1966
ஆசிரிய உலகம் இ. அம்பிகைபாகன் (வடமாகாண ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணம்)1966
அருளொளி (சைவசமய மாதஇதழ்)ச. மு. விவேகானந்தன் கொழும்பு 1967
மாணவமுரசு (மாணவர் இதழ்) எஸ். ஏ.ஹனீபா கொழும்பு 1967
கலைமதி தில்லைவாணன் கொழும்பு 1967
நவீன விஞ்ஞானி மாணவர் வாரஇதழ்) வீரகேசரிஸ்தாபனம் கொழும்பு 1967
தீப்பொறி அரசியல் எம்.கே. அந்தனிசில் யாழ்ப்பாணம் 1967
பாடும்மீன் நீலாவாணான் கல்முனை 1967
தமிழ் உலகம் ( அரசியல் சமூக மாதஇதழ்) ஆ. நடராசா கொழும்பு 1967
பாவை அன்பு இறைதாசன் அக்கரைப்பற்று 1967
தமிழ் இளைஞன் இளைஞர்; ஒன்றியம் (பேராதனைப் பல்கலைக்கழகம்) கண்டி. 1968
சமூக தீபம் (கலைவிஞ்ஞான மஞ்சரி) உதயம் புத்தகாலயம் கொழும்பு 1969
குயிலோசை கங்கா மன்னார் 1969
உள்ஒளி மு. தளையசிங்கம் மு. பொன்னம்பலம்(சர்வ மத சங்கம் புங்குடுதீவு) 1969
பிரபு வி. ரி. ஸ்ரீகாந்தன் கொழும்பு 1969
அரவிந்தம் (இலக்கியம்) யாழ்ப்பாணம் 1969
எழில் (கலை இலக்கிய விஞ.ஞான இருதிங்கள் இதழ்) மனு. அரியநாயகம் கொழும்பு 1969
குங்குமம் (இலக்கியமாதஇதழ்) குங்கும நாதன்; கொழும்பு 1969
நாவேந்தன் (இலக்கிய மாதஇதழ்) ரி.எஸ. ஆனந்தன் சுண்;ணாகம் 1969
விவசாயி வட பகுதி விவசாய உற்பத்தியாளர் கூட்டுறவுச் சமாசம் யாழ்ப்பாணம். 1969
கவிஞன்; (கவிதைக்; காலாண்டிதழ்) எமட. ஏ. நுஃமான் கல்முனை 1969
கலாவல்லி காண்டீபன் 1969
யோகி (சோதிடஇதழ்) கா. கந்தப்பு யாழ்ப்பாணம் 1969
சைவ காவலன் (மாதமிருமுறை) ச. குமாரசாமிக் குருக்கள் யாழ்ப்பாணம் 1969
நல்லை நாவலன்(சைவசமய மாதஇதழ்) ஆறுமுகநாவலர் சபை கொழும்பு 1969
பல்கலை (அரசியல்) ம.க. அ. அந்தினிசில் யாழ்ப்பாணம் 1970
நெஞ்சம் (நான்குமாதத்திற்கொருமுறை) வேலனை ஆனந்;தன் கொழும்பு 1969
கற்பகம் (கலை இலக்கிய இருதிங்கள் இதழ்) இளம் எழுத்தாளர் முன்னேற்றப்
பேரவை கொழும்பு 1970
சிலம்பொலி (இலக்கியமாதஇதழ்) வண்ணை தேய்வேந்திரம் யாழ்ப்பாணம் 1969
தமிழமுது (இலக்கியக் காலாண்டிதழ்) சரவணையூர் மணிசேகரன் கொழும்பு 1970
இசையருவி (இசைத்தமிழ் மாதஇதழ்) நல்லைக்குமரன் கோப்பாய் 1970
ரோஜாப்பூ (கலை இலக்கியம் சினிமா) இ. பிரேமகாந்தன் கொழும்பு 1970
மலர் (இலக்கிய மாதஇதழ்) இரா. நாகலிங்கம் மட்டக்களப்பு 1970
புன்னகை கவிஞர் ஜெயபாலன் கொழும்பு 1970
சத்தியம் (மாதமிருமுறை) சர்வமத சங்கம் யாழ்ப்;பாணம் 1970
சக்தி.சி. ஜெகநாதன் யாழ்ப்பாணம் 1970
வைகறை (இலக்கிய முத்திங்கள் இதழ்) விஜேந்திரன் மல்லாகம் 1970.
வெள்ளி தி. ச. வரதராஜன் யாழ்ப்பாணம் 1970
இதயம் சி. மகேஸ்வரன் யாழ்ப்பாணம் 1971
உங்கள் விதி (சோதிட வாரஇதழ்) எம்.பி. ராமன் கொழும்பு 1971
புதுயுகம் (பொதுவுடமை வாரஇதழ்) செ. குமாரசுவாமி கொழும்பு 1971
அஞ்சலி (இலக்;கிய மாதஇதழ்) ஏ.எம் செல்வராசா வத்தளை 1971
செங்கதிர் (மாணவர் மாதஇதழ்)பி. Nகு. பொன்னம்பலம் கொழும்புத்துறை 1971
குமரன் (மாதஇதழ் கணேசலிங்கம் கொழும்பு 1971
சிப்பி (இருதிங்;கள் இதழ் கி. கங்கநாதசிவம் சாவகச்சேரி 1971
பூம்பொழில் (மாதஇதழ்) சுழிபுரம் 1971
தீ (மாணவர் இதழ்)க. நடராசா யாழ்ப்பாணம் 1971
ரோஜா (மாதஇதழ்) எம்.எஸ். மபாஹிர் காலி 1971
கலைக்குயில் (மாதஇதழ்) நாதன் பண்டாரவளை 1971
பொய்கை (கலைஇலக்கிய மாதஇதழ்) பொய்கை குழுவினர் அடம்பன் 1971
பூங்குன்றம் கண்டி 1971
நுதா (மாணவர் மாதமிருமுறை) மன்மதராஜன் குரும்பசிட்டி 1971
வானவில் (மாதஇதழ்)வடமாகாண விஞ்ஞான ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணம் 1971
கலையருவி (கலை இலக்கியம் இசை) நல்லைக் குமரன் கோப்பாய் 1971
ஒளி எஸ். பஞ்சரத்தினம் யாழ்ப்பாணம் 1971
இந்து (சைவசமய மாதஇதழ்) ஜெ. நாகேஸ்வரன் 1971
நல்லூர் 1971
இசையாளன் எஸ். ஆர்ஃ ஞானசுந்தரம் மாவிட்டபுரம் 1972
ஒருதீப்பொறி (அரசியல்)ம.க. அ. அந்தனிசில்; யாழ்ப்பாணம் 1972
குயில் இணுவையூர்; பாஸ்கரன் இணுவில் 1972
புதுவை புத்தூர்; சோமஸ்கந்தக் கல்லூரித் தமிழ் மன்றம் புத்தூர்; 1972
காவலன் (இலக்கியம்) வடக்கு கிழக்க மாகாண அபிவிருத்திச் சங்கம் யாழ்ப்பாணம் 1972
சுந்தரி (வாரஇதழ்) குணசேனா நிறுவனம் கொழும்பு 1972
புயல் (மாதமிருமுறை) ஐ. ஏ.சமத்கொழும்பு 1972
வாணி (குடும்பப் பத்திரிகை) ஈழத்தீபன் வல்வட்டித்துறை 1972
தமிழின்பம் (இலக்கிய சமயம்) மெய்கண்டான் நிறுவனம் யாழ்ப்பாணம் 1972
விகடன் (இலக்கியம் சினிமா) மா. குலேந்திரன் யாழ்ப்பாணம் 1972
கலகலப்பு (நகைச்சுவை தீசன் 1972
கிறுக்கன் (நகைச்சுவை) ஸ்ரீஸ்கந்தராஜா நல்லூர்; 1972
முல்லை (இலக்கியம் சினிமா) கே.ஜி குகானந்தன் யாழ்ப்பாணம் 1972
தமிழமுதம் (இலக்கியம் சினிமா) முஸ்டாhக் முகம்மட் கொழும்பு 1972
கற்கண்டு (அரசியல் சினிமா) கே. குகானந்தன் யாழ்ப்பாணம் 1972
கலைவாணன்; (இலக்கியம்) பொன் சந்திரலிங்கன் யாழ்ப்பாணம் 1972
கலசம் (இலக்கியம் சினிமா) கனக பாலசுப்பிரமணியம் கொழும்பு 1972
கலைக்கண் (இலக்கியம்)இ.நாகராஜன், ஓவியர் பெனடிக்ற் யாழ்ப்பாணம் 1972
பூமாலை (இலக்கியம் சினிமா) ஜீவா திருநாவுக்கரசு கொழும்பு 1972
கன்னி (இலக்கியம் சினிமா) எழுத்து வேந்தன் யாழ்ப்பாணம் 1972
தீவகம் திருநாவுக்கரசு (சர்வோதயம்) புங்குடுதீவு 1972
பொன்மகள் கே. செல்வராஜா யாழ்ப்பாணம் 1972
பூரணி (படைப்பிலக்கியக் காலாண்டிதழ்
என்.கே. மகாலிங்கம் க. சட்டநாதன் கொழும்பு) 1972
ஊற்று (அறிவியல்;) பேராதனைப் பல்கலைக்கழகம் கண்டி 1972
சிரிப்பொலி (நகைச்சுவை) வை. இந்திரதாஸ் கு. சிவமைந்தன் உரும்பிராய் 1973
மாணிக்கம் திருமதி. சரோஜினிகைலாசபிள்ளை கொழும்பு 1973
நளினி (இலக்கியம்) என். ஆர் சந்திரன் கொழும்பு 1973
அமுதம் (குழந்தைகள் சஞ்சிகை) தம்பித்துரை பதிப்பகம் கொழும்பு 1973
அணு (இலக்கியம்) செம்மலர்கள் இலக்கிய வட்டம் யாழ்ப்பாணம் 1973
களணி (இலக்கிய மும்மாதஇதழ்) ஆர். சிவசங்கர் யாழ்ப்பாணம் 1973
அமுதா (இலக்கியம்) க. குணரத்தினம் காங்கேசன்துறை 1973
அம்பு (விஞ்ஞானமாதஇதழ்) சாஹிராக்கல்லூரி
விஞ்ஞானமன்றம் கல்முனை 1973
மாவலி சி. வி. வேலுப்பிள்ளை கொழும்பு 1973
அறிவு (மாதஇதழ்) கல்வி அமைச்சு கொழும்பு 1973
கவிதை நீள்கரைநம்பி அப்துல்சத்தார் 1973
கமநலம் (காலாண்டு விவசாய இதழ்) கமநல ஆராய்ச்சிப் பிரிவு கொழும்பு 1973
உலகத்தமிழர் குரல் குரும்பசிட்டி இரா. கனகரத்தினம்
(உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்) கண்டி 1974
தாயகம் தேசிய கலை இலக்கியப் பேரவை யாழ்ப்பாணம் 1974
சங்கமம் வி. ஸ்ரீகதிர்காமநாதன் க. நாகேஸ்வரன் சரவணபவன் யாழ்ப்பாணம் 1974
நான் (உளவியல்) அ. ம. தி. குருமடம் யாழ்ப்பாணம் 1974
கண்மணி (சிறுவர் இதழ்) எஸ். சிவஞானசுந்தரம் யாழ்ப்பாணம் 1974
பொருளியல்நோக்கு மக்கள் வங்கி கொழும்பு 1975
அபியுக்தன் எச்.எம். பி;. முகைதீன் கல்கிசை 1975
அருட்குரல் (சைவசமயம்) ஆர்.கே. முருகேசு கொழும்பு 1975
பொன்மடல் (விலையிலாக்கவிமடல்) தில்லையடிச்செல்வன் புத்தளம் 1975
சுடர் கரிகாலன் (சிலோன் நியூஸ்பேப்;பேர்ஸ்லிமிடெட் ) கொழும்பு 1975
அக்னி ஈழவாணன் கொழும்பு 1975
நதி (கலை இலக்கியம்) மு, ராஸாங்கம் (கலாசராக்குழு) கண்டி 1975
தமிழ் அமுதம் யாழ்ப்பாணம் 1975
அலை (இலக்கியம்)அ. யேசுராசா மு. புஸ்பராஜன் குருநகர் 1975
தமிழோசை க. நவசோதி கொழும்பு 1976
சிந்தனை (காலாண்டு அறியியல்) அ. சண்முகதாஸ்
(யாழ்ப்பாணவளாக மனிதப்பண்பியற்பீடம்) யாழ்ப்பாணம் 1976
கலாவல்லி சோ. நடராஜன் கொழும்பு 1976
செவ்வந்தி (சட்டம், கலை இலக்கியம்) பா. தவபாலன் யாழ்ப்பாணம் 1976
அறிவுப் பொழில் வை. ராஜேஸ்வரன் யாழ்ப்பாணம் 1976
மில்க்வைற்செய்தி க. சி. குலரத்தினம் (மில்க்வைற்தாபனம்) யாழ்ப்பாணம் 1976
சந்திரதீபம் (சமயசீர்திருத்தம்) வை. நல்லையா கொக்குவில் 1977
அநுபவம் யாழ் மாவட்ட ஆரம்பக் கல்விக் குழு யாழ்ப்பாணம் 1977
உண்மைக்குரல் (அரசியல் )கி. திருவருள் சுருவில் 1977
கடமை அறிவரசன் 1977
பண்ணும் பரதமும்(முத்தீங்கள் இதழ்;) பி. சந்திரசேகரம்
(இலங்கை இசைப் பேரவை) யாழ்ப்பாணம் 1977
தாரணி சு. கந்தசாமி 1977
புதிய உலகம் கரவையூர் செல்வம் கொழும்பு 1977
மனிதன் (சமூகபொருளாதார இதழ்)அ. விமலதாசன் பண்டத்தரிப்பு 1977
தென்றல் ருத்;ரா முதலியோர் யாழ்ப்பாணம் 1977
ஹரே கிருஷ்ணா (சமயம்)இரா. நவசீலன் (அ.உ. கிருஷ்ணபக்தி இயக்கம்)
கொழும்பு 1978
சோதிடமலர் கி. சதாசிவசர்மா மட்டுவில் 1978
சோதிட பரிபாலினி இ. வேங்கடேசஐயர் கொக்குவில் 1978
வானோசை க. ஐ. யோகராசா வானொலி நேயர் சங்கம் கல்முனை 1978
இளைஞர்குரல் (அரசியல்) சொ. யோகநாதன் (தமிழ் இளைஞர் பேரவை)
தெல்லிப்பழை 1978
அறிவலை (சமூக அறிவியல் இருதிங்களிதழ்) பல்கலைக் கழக
மாணவர் வெளியீடு பேராதனை 1978
வெண்ணிலா காவியன் மருதமுனை 1978
மின்விழி (இலக்கியம் சினிமா) நல்லைக் குமரன் கே. ஜெயராம் இ. பிரேமகாந்தன் 1978
கடல் எம். எஸ். ஐ. ஸராஜீடீன் வேர்விலை 1978
சமர் (கலை இலக்கியம் விமர்சனம் ) டானியல் அன்ரனி யாழ்ப்பாணம் 1979
அருவி இலக்கியம் அறிவியல்) நீர்ப்பாசனத் திணைக்களத் தமிழ்ப்பண்பாட்டுக்
கழகம் கொழும்பு. 1979
செந்தாமரை எஸ். நிரஞ்சன் யாழ்ப்பாணம் 1979
கீற்று நா. லோகேந்திரலிங்கம் கல்லூரன் கல்முனை 1979
யாழ் (மாதஇதழ்) பா. பாலசண்முகநாதன் யாழ்ப்பாணம் 1980
சிவகாமி (சைவமுத்திங்களிதழ்) இணுவில் இந்து மகாசபை இணுவில் 1980
தீர்த்தக்ரை (இலக்கியக் காலாண்டிதழ்) எல். சாந்திக்குமார் கண்டி 1980
புதுசு (இலக்கிய மும்மாதஇதழ்) இளவாலை விஜயேந்திரன் அளவெட்டி
மஅ. ரவி இளவாலை 1980
அக்கினிக் குஞ்சு முல்லையூரான் யாழ்ப்பாணம் 1980
கிருதயுதம் (தமிழ்த்துவாசிகை) பண்டிதர் வீரகத்தி யாழ்;ப்பாணம் 1981
மேகம் (இலக்கிய இருதிங்களிதழ்) கணபதி கணேசன் யாழ்;ப்பாணம் 1981
தமிழ்ஒலி எஸ். உமாகாந்தன் (வானோலி நேயர் மன்றம்) 1981
வாழ்;வில் வசந்தம் பி. பாலாம்பிகை(அரசாங்க மருத்துவ மாதர் சங்கம்) வேலணை 1981
வாகை (கலை இலக்கிய விமர்சன மும்மாத இதழ் வி. ரி. இளங்கோவன் யாழ்ப்பாணம் 1981
மதுரம் (கல்வி இலக்கியம் இருதிங்கள் ) ந. சண்முகப்பிரபு
(பேராதனைப் பல்கலைக்கழக விவசாயபீடம்) கண்டி 1981
பூபாளம் கவிதை கலாண்டிதழ் ) அல்அஸ_மத் கவின் கமல் மத்துமகல 1982
மெய்கண்டான் மெய்கண்டார் ஆதினம் பருத்தித்துறை 1982
தாரகை (இலக்கியம்;)கண. மகேஸ்வரன் மட்டக்களப்பு 1982
காலைக்; கதிர்(வார இதழ்) எஸ். எம். கோபாலரத்தினம் யாழ்ப்பாணம் 1982
அறிவு கந். தர்மலிங்கம் (சமூக ஆய்வு மன்றம் முள்ளியவளை 1982
தூது ஆர் . எம் நௌஷாத் (புதுமை கலை இலக்கிய வட்டம்) கல்முனை 1983
இந்துமதி (இந்துமத கலை இலக்கியப் பிரசாரம்) க.ஐ. யோகராசா கல்முனை 1983
தளிர் யாழ் பல்;கலைக்கழக மறுமலர்ச்சிக் கழகம் யாழ்ப்பாணம் 1983
மாருதம் காவலூர் ஜெகநாதன் பேராதனை திரள் மலையகம் 1983
சக்தி (அரசியல்) பொன். குமாரசாமி (இலங்கைக் கம்யூனிஸ்கட்சி) கொழும்பு 1983
மாற்று (இலக்கியக் காலாண்டிதழ்) திருநெல்வேலி 1983
காற்று (தட்டச்சுக் கவிதை இதழ்) ராஜகுருசேநாதிபதி இமானுவேலி
புஷ்பராஜன் புத்தளம் 1983
சந்திப்பு (மாதஇதழ்) என். பி; கனகலிங்கம் வி.எஸ் அமிர்தலிங்கம் கொழும்பு 1983
தடாகம் கலைமகள் ஹிதாயா மஜீத் சாய்ந்த மருது 1984
களம் (இலக்கியம்) களம் இலக்கிய வட்டம் மட்டக்களப்பு 1984
ஈழமுரசு சாயிபாபா அட்வட்டைசிங் அசோசியேட்டெட் யாழ்ப்பாணம் 1984
தோழி செல்வி எஸ். தியாகராஜா திருநெல்வேலி 1984
சுமைதாங்கி (கிறிஸ்தவ இலக்கிய மாதஇதழ்) ரி; பாக்கியநாயகம் மட்டக்களப்பு 1984
டி.வி நியுஸ் (மாதஇதழ்) 1984
இளமதி (தட்டச்சு) றேல்ஸ் றேய்ஸ் விளையாட்டுக்கழகம் வாழைச்சேனை. 1984
செய்திமடல் (தட்டச்சு) செம்பியன் செல்வன் (யாழ்இலக்கியவட்டம்)
யாழ்ப்பாணம். 1984
அலைஓசை (தட்டச்சு) உடப்பூர் வீரசொக்கன் (இளம்தாரகை வட்டம்) உடப்பு. 1984
ஜோஸ்சியர் (சோதிடஇதழ்) அனுசியா சச்சிதானந்தம் யாழ்ப்பாணம். 1984
சுவர் தேவி மன்றம் மல்லாகம். 1984

இந்நூலை வாசிக்கும் அன்பர்கள் அனைவரும் பட்டியலைப் பூரணப்படுத்த உதவ வேண்டும்.
இப் பட்டியலில் இடம்பெறாத இதழ்களின் விபரங்களை, முடிந்தால் அவற்றின் மாதிரிப் பிரதிகளையும் அனுப்பி உதவுங்கள்.
தவறாக இடம்பெற்றிருக்கும் விபரங்களின் திருத்தமான தகவல்;களையும் அனுப்பி உதவுங்கள்.

முகவரி
ப. சிவானந்தசர்மா,
பிரதிப்பணிப்பாளர் அலுவலகம்,
நீர்ப்பாசனத்திணைக்களம்,
கிளிநொச்சி.


அகரவரிசையில் இதழ்களின் பட்டியல்
(வெளிவர ஆரம்பித்த ஆண்டுகளுடன்)

அக்கினி 1975 ஆத்மபோதினி 1907
அக்கினிக்குஞ்சு 1980 ஆத்மஜோதி 1947
அஞ்சல் 1971 ஆறுமுகநாவலர் 1949
அணு 1973 ஆனந்த சாகரம் 1921
அநுபவம் 1977 ஆனந்தசகரம் 1960
அபியுக்தன் 1975 ஆனந்தன் 1953
அம்பு 1973 இசையருவி 1970
அமுதசுரப்பி ---- இசையாளன் 1972
அமுதா 1961 இதயஒலி 1963
அமுதம் 1973 இதயம் 1971
அமுதா 1973 இந்து 1971
அரவிந்தம் 1969 இந்துஇளைஞன் 1960
அருட்குரல் 1975 இந்தசாசனம் 1889
அருவி 1979 இந்துமதி 1983
அருளமுதம் 1961 இலக்கியப் புதையல் 1959
அருள்ஒளி 1967 இலங்காபிமானி ----
அலை 1964 இலங்கை எழுத்தாளன் 1963
அலை 1975 இலங்கைச்சாரணன் 1962
அலைஓசை 1984 இலங்கை நேசன் 1848
அறிவலை 1978 இலங்கைப் புதினத்தாள் 1893
அறிவு 1973 இலங்கை விகடன் 1938
அறிவு 1982 இளங்கதிர் 1948
அறிவுப்பொழில் 1976 இளமதி 1984
அறிவொளி 1963 இளம்பிறை 1964
ஆசிரியர் உலகம் 1966 இளைஞர்;குரல் 1978
ஆசிரியர் தீபம் 1945 இஸ்லாம் மித்திரன் 1893
ஆசிரியன் ----- ஈழகேசரி 1930
ஈழச்சுடர் 1962 கலகலப்பு 1927
ஈழநாடு 1959 கலங்கரை
ஈழமணி 1947 கலசம் 1972
ஈழமணி 1963 கலாநிதி
ஈழமுரசு 1984 கலாவல்லி
உங்கள் விதி 1961 கலாவல்லி 1969
உண்மைக்குரல் 1977 கலாவல்லி 1976
உதயசூரியன் 1961 கலிகாலதீபம்
உதயசூரியன் 1964 கலையரசு 1963
உதயதாரகை 1841 கலையருவி 1971
உதயம் 1954 கலையமுதம்
உதயாதித்தன் 1841 தலைக்கண் 1972
உலகத்தமிழர் குரல் 1974 கலைக்கதிர்
உள்ளொளி 1969 கலைக்குயில் 1971
உன்னைப்பற்றி 1961 கலைக்குறள் 1963
ஊடுருவி 1964 கலைச்சுடர்
ஊற்று 1972 கலைச்செல்வம் 1961
எரிமலை ---- கலைச்செல்வி 1958
எரிமலை 1962 கலைஞானி 1947
எழில் 1969 கலைப்பூங்கா 1961
எழிச்சி ----- கலைமஞ்சரி
ஐக்கியதீபம் 1944 கலைமதி 1959
ஒருதீப்பொறி 1972 கலைமதி 1966
ஒளி 1971 கலைமதி 1967
கடமை 1977 கலைமலர் 1962
கடல் 1978 கலைமலர் 1964
கண்கள் 1962 கலைமுரசு 1962
கண்மணி 1974 கலைவாணன் 1972
கதம்பம் 1959 கலைவாணன் 1964
கமத்தொழில் விளக்கம் 1930 கவிதை 1973
கமநலம் 1973 கவிஞன் 1969
கம்பன் 1964 களம் 1984
கரும்பு 1962 களனி 1973
கற்;கண்டு 1972 சமர் 1979
கற்பகத் 1970 சமுதாயம் 1948
கன்னி 1972 சமூகதீபம் 1969
காந்தீயம் 1947 சமூகத்தொண்டன் 1950
காப்புறுதி ------ சரஸ்வதி 1927
காலரதம் ------- சர்வசனநேசன் 1886
காலைக்கதிர் 1982 சன்மார்க்கபோதினி 1885
காவலன் 1972 சாட்டை 1970
காற்று 1983 சானா ----
கிருதயுகம் 1981 சித்திரம் 1929
கிழக்குத்தபால் ------ சிந்தனை 1976
கிறுக்கன் 1972 சிப்பி 1971
கீற்று 1979 சிரித்திரன் 1965
குங்குமம் 1969 சிரிப்பொலி 1973
குமரன் 1971 சிலம்பொலி 1970
குயிலோசை 1969 சிவகாமி 1980
குயில் 1972 சிவதர்மபோதினி 1920
குருசந்திரோதயம் 1907 சிவதொண்டன் 1936
கூட்டுறவு ------ சிவாயவாசி 1961
கோபுரம் ------ சிவாயவாசி 1961
சக்தி 1970 சிறுவர் சுடர் ஏ56
சக்தி 1983 சுடர் 1975
சங்கப்பலகை 1962 சுதந்திரன் 1947
சங்கமம் 1962 சுதேசநாட்டியம் 1902
சங்கம் 1961 சுந்தரி 1972
சங்கு 1962 சுமைதாங்கி 1984
சண்முகநாதன் 1911 சுவதர்மபோதம் 1945
சத்தியம் 1970 சுவர் 1984
சத்தியவேதபாதுகாவலன் 1876 செங்கதிர் 1971
சத்தியாபிமானி ----- செந்தமிழன் 1978
சந்திப்பு 1983 செந்தாமரை 1962
சந்திரதீபம் 1977 செந்தாமரை 1979

செய்தி 1963 தமிழ்ஒலி 1981
செய்திமடல் 1984 தமிழ்மகள் 1939
செவ்வந்தி 1976 தமிழ்மணி 1949
சைவஉதயபாநு 1882 தமிழ்மணி 1959
சைவசாஸ்திரபரிபாலனம் 1939 தமிழ்முரசு 1962
சைவசூக்குமார்த்தபோதினி---- தர்க்கீகம் ----
சைவாபிமானி ----- தாயகம் 1974
சோதிடபரிபாலினி 1978 தாரகை 1977
சோயாசெய்திகள் திரள் 1983
ஞாயிறு 1933 திராவிடகோகிலம் 1900
ஞானசித்தி 1908 திருமகன்; 1962
ஞானதீபம் 1892 தினகரன் 1932
ஞானதீபம் 1965 தினத்தபால் ----
ஞானப்பிரகாசம் 1910 தினபதி 1966
ஞானமிர்தம் 1888 தினபதி 1966
டி.வி நியூஸ் 1984 தீ 1964
தடாகம் 1984 தீ 1971
தந்தி ----- தீச்சுவாலை ----
தமிழமுது 1970 தீபம் 1959
தமிழகம் --- தீப்பொறி 1967
தமிழன் 1941 தீர்த்தக்கரை 1980
தமிழன் ---- தீவகம் 1972
தமிழின்பன் 1960 தூது 1983
தமிழின்பன் 1972 தென்றல் 1977
தமிழோசை 1976 தேசபக்தன் 1962
தமிழ் 1922 தேசாபிமானி 1946
தமிழ் அமிழ்தம் 1972 தேசாபிமானி 1946
தமிழ் அமுதம் 1975 தேனருவி 1962
தமிழ் இளைஞன் 1968 தேன்கூடு 1978
தமிழ் உலகம் 1967 தேன்மொழி 1955
தமிழ் ஒலி 1953 தோழன் ----
தோழி 1984 புதுமை இலக்கியம் 1956
நதி 1975 புதியஉலலகம் 1977
நல்லை நாவலன் 1969 புதுயுகம் 1971
நவீனவிஞ்ஞானி 1967 புதுவை 1972
நளினி 1973 புயல் 1972
நாதம் 1962 புவியியல் 1964
நாவலன் 1947 புன்னகை 1970
நாவலன் 19549 பூ ----
நாவேந்தன் 1969 பூங்குன்றம் 1971
நான் 1974 பூபாளம் 1982
நிலா 1965 பூமாலை 1972
நிலையக்குரல் 1963 பூம்பொழில் 1971
நினைவு ----- பூரணி 1972
நுதா 1971 பூலோகௌ~தோபகாரி 1904
நூல் 1965 பொய்கை 1971
நெஞ்சம் 1970 பொருளியல் நோக்கு 1975
நோக்கு 1970 பொன்மகள் 1972
பகவதி 1964 பொன்மடல் 1975
பகுத்தறிவு 1962 போர்வாள் ----
பண்டிதன் 1964 போர்வீரன் 1 963
பண்ணும் பரதமும் 1977 மங்கை 1963
பல்கலை 1970 மதுரம் 1981
பாடும்மீன் 1967 மணிக்குரல் 1960
பாரதி 1948 மணிமஞ்சரி ------
பாலசந்திரன் 1910 மத்தியதீபம் 1957
பாலபாரதி 1950 மரகதம் 1961
பாலமித்திரன் 1923 மலர் 1961
பாலியர்நேசன் 1959 மலர் 1970
பாவை 1967 மலர்விழி 1962
பிரபு 1969 மலைப்பொறி 1963
புதினம் 1961 மலைமுரசு 1962
புதுசு 1980 மலைமுழக்கம் 1962
புதுக்குரல் ----- மல்லிகை 1966
புதுச்செய்தி 1960 மறுமலர்ச்சி 1945
மறுமலர்ச்சி 1959 வாணி 1972
மனிதன் 1977 வாழ்வில் வசந்தம் 1981
மாணவர்மலர் 1953 வானவில் 1971
மாணவமுரசு 1967 வானொலி மஞ்சரி 1948
மாணவன் குரல் ---- வானோசை 1978
மாணிக்கம் 1973 விகடன் 1972
மாருதம் 1983 விசயத்துவசம் 1993
மாவலி 1973 விஞ்ஞானி 1953
மாற்று 1983 விஞ்ஞானி 1971
மித்திரன் 1966 விடுதலை 1964
மில்க்வைற் செய்தி 1976 விடுதலை 1965
மின்விழி 1978 வித்தகம் 1933
மின்னொளி 1946 வித்தியாசமாசாரப்பத்திரிகை 1935
முத்தமிழ் ------ முழக்கம் 1960
முத்துச்சரம் 1960 விவசாயி 1969
முல்லை 1972 விவேகதிவாகரன் ----
முன்னணி 1963 விவேகானந்தன் 1902
முஸ்லீம் நேசன் 1982 விவேகானந்தன் 1926
முஸ்லீம் பாதுகாவலன் 1901 விவேகானந்தன் 1955
முஸ்லீம் புதினாலங்காரி ----- விவேகி 1960
முஸ்லீம் லங்கா 1959 விஜயபாநு ----
மெய்கண்டான் 1982 விஜயலட்சுமி 1908
மேகம் 1981 வீரகேசரி 1930
யாழ் 1980 வெண்ணிலா 1978
யாழ் தீபம் ---- வெண்தாமரை 1969
யோகி 1969 வெள்ளி 1970
ராதா ------ வெற்றிமணி 1962
ரோஜா 1964 வேல் 1957
ரோஜா 1971 வைகறை 1970
ரோஜாப்பூ 1970 வைத்தியவிசாரிணி -----
லங்கா 1930 வைத்தியன் 1945
லங்காஜோதி ------ ஜோதி -----
வசந்தம் 1965 ஜோதிடம் 1964
வர்த்தகமஞ்சரி 1966 ஜோஸ்யர் 1984
வர்த்தக மஞ்சரி 1966 ஸ்ரீலங்கா 1948
வாகை 1981 ஹரேகிருஸ்ணா 1978

---------------------------------------------------

வெளிவரஆரம்பித்த ஆண்டு விபரம் தெரியாதவை
(அகரவரிசை)

அமுரசுரப்பி
ஆசிரியர் - இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க வெளியீடு
இலங்காபிமானி - யாழ்ப்பாணம்
இஸ்லாமியதாரகை
எரிமலை - அ. செ. முருகானந்தம் திருகோணமலை
எழுச்சி - அரசாங்க எழுதுவினைஞர் சங்கம்
கலங்கரை - மருதூர் கொத்தன்
கலாவல்லி - ஐ. பொன்னையா ஏழாலை
கலிகாலதீபம் - மண்டைதீவு
கலை அமுதம் -
கலைக்கதிர் - விவசாயப் பத்திரிகை கிளிநொச்சி
கலைச்சுடர் - (மாதஇதழ்) பதுளை 195ற்குமுன்
கலைமஞ்சரி - க. சிவசுப்பிரமணியம் பேராதனை
காப்புறுதி - காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
காலரதம் - மிலாத்தீரன் எம். வரதராஜன் பாண்டிருப்பு
கிழக்குத்தபால் - புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
கூட்டுறவு
கோபுரம் - (இந்துசமயச் சஞ்சிகை) மு. கணபதிப்பிள்ளை (இந்து கலாச்சார அமைச்சு) கொழும்பு
சத்தியாபிமானி -
சானா - மு. சண்முகநாதன் யாழ்ப்பாணம்
சைவசூக்குமார்த்த போதினி - வேலணைகந்தப்பிள்ளை யாழ்ப்பாணம்
சைவபிமானி - வல்லை வைத்திலிங்கம் யாழ்ப்பாணம்
சோயாசெய்திகள் - கெ. ஆர் நிறுவனம்
தந்தி - (மாலைத்தினசரி) குணசேனா நிறுவனம் கொழும்பு
தமிழகம் - செ. இராசதுரை மட்டக்களப்பு
தமிழன் - தழிழ்க்காங்கிரஸ் வெளியீடு
தழிழ் முழக்கம் -
தர்க்கீகம் -
தினத்தபால் - (முதலாவது செய்தித்தினசரி) க. ஆ. மீராமுகையதீன்
தினவர்தமானி -
தீச்சுவாலை -
தோழன் - நூர்முகமது
நினைவு - மலையம்
பதுக்குரல் -
பூ -
போர்வாள் -
மணிமஞ்சரி - மலையகம்
மாணவன் குரல்
யாழ்தீபம்
ராதா - குணசேனா நிறுவனம் கொழும்பு
லங்காஜோதி - எச். எம். பி முகைதீன்
விவேக திவாகரன் - யாழ்ப்பாணம்
விஜயபாநு - கொக்குவில்
வைத்தியவிசாரிணி
ஜோதி - வீரகேசரி ஸ்தாபனம் கொழும்பு