கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணிலைவாதம் பொருத்தமானதே

Page 1
பெண்நிலைவாதப்
பொருத்தமானதே
 


Page 2

முன்னுரை
இச் சிறு நூல் கொழும்பு, பெண்நிலைவாத ஆய்வு வட்டத்தின unt di) (Feminist Study Circle) GhiaiuSulliull- Feminism is Relevant என்ற ஆங்கில நூலின் மொழி பெயர்ப்பாகும். பெண்நிலைவா தத்தின் அரசியல், பொருளாதார, வரலாற்று அம்சங்களை இது மிகச் சுருக்கமாக எடுத்துக் காட்டுகிறது.
இன்று எம் மத்தியில் பெண்விடுதலை, பெண் நிலைவாதம் என்பன குறித்துப் பரவலாகப் பேசப்படுகிறது. பலரும் பல்வேறு தேவைகளுக் காகவும். பல்வேறு அர்த்தங்களிலும் இதனை நோக்குகின்றனர். இச் சந் தர்ப்பத்தில் பெண்நிலைவாதத்தின் அடிப்படை நோக்கத்தையும் உண் மையான கருத்தையும் தெளிவுபடுத்துவது அவசியமானதாகும்.
இன்று காணப்படும், பெண்கள் மீதான சகல சமூக, பொருளா தார, கலாசார ஒடுக்குமுறைகளைக் களைவதற்கு பெண் என்பதால் வேறுபாடு காட்டப்படாமல் மனித ஜீவி என்ற வகையில் உரிமைகளை யும் சுதந்திரத்தையும் பெறுவதற்குமான போராட்டமும் அப்போராட் டத்திற்கான வழிமுறைகளும் பெண் நிலைவாதத்தின் முக்கிய நோக்கங் களாகும். இவ்வகையில் பெண்நிலைவாதம் பற்றிய அத்தியாவசியமான அடிப்படை விளக்கங்களை இந்நூல் சுருக்கமாகவும், தெளிவாகவும் எளி மையான வடிவில் தருகின்றது எனக் கருதியதால் இதனை நாம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகின்ருேம்.

Page 3
இன்று பெண்விடுதலை குறித்து பேசப்பட்ட போதிலும் அது அறிவுபூர்வமான ஒரு தத்துவமாக எம்மிடையே வளர்ச்சி பெறவில்லை. ஒடுக்குமுறை வடிவங்களின் இயல்பையும் அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளையும் அறிவுரீதியாக நோக்கி இனங்காணுவது இதனை ஒரு தத்துவமாக்க உதவும். இவ்வகையில் ஆராய்ச்சிகளையும் அவற்றின் அடிப் படையான கருத்துக்களையும் எழுத்து வடிவில் வெளிக்கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை நாம் உணர்ந்துள்ளோம். இவ்வகையில் தொடர்ந்து நாம் பிரசுரங்களை வெளியிடவும் உள்ளோம்.
இங்கு நாம் பலருக்கும் தெரிந்த பெண் விடுதலை என்ற சொல் லைப் பயன்படுத்தாமல் பெண்நிலைவாதம் (Feminism) என்ற தொட ரைப் பயன்படுத்தியமைக்குக் குறிப்பான காரணங்கள் உண்டு. சகல ஒடுக்குமுறை வடிவங்களிலிருந்தும் பெண் விடுதலை பெறுதல் என்ற கருத்தினை மட்டும் அல்லாது பெண் என்ற நோக்கிலிருந்து பிரச்சனைகளை அணுகுதல், தீர்வுகளை முன்வைத்தல், ஆய்வுகளை மேற்கொள்ளல் ஆகிய யாவற்றையுமே ஒருங்கு குறிப்பதாக இத் தொடர் அமைகின்றது. இவ் வகையில் இது பரந்த, ஆழமான அர்த்தங்களை உடையது.
இந் நூலினத் தமிழில் வெளியிட அனுமதி அளித்த பெண்நிலை வாத ஆய்வு வட்டத்தினருக்கு எமது நன்றி.
பெண்கள் ஆய்வு வட்டம் - யாழ்ப்பாணம்.

1. பெண்நிலவாதம் (Feminism) என்றல் என்ன? இதனை ஓர்
அண்மைக்காலக் கிறுக்குத்தனம் எனக் குறிப்பிடலாமா?
பெண்நிலைவாதம் என்ற சொல் 19ஆம் நூற்றுண்டிலும் 20ஆம் நூற் ருண்டின் ஆரம்பத்திலும் முதன்முதலாக உபயோகிக்கப்பட்டது. அப் போது பெண்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தையே அது குறித்தது.
96.06),
கல்வி, வேலவாய்ப்பு, உரிமைகள் சொத்துடமைக்கான உரிமை
வாக்களிக்கும் உரிமை − பாராளுமன்றத்திற்குச் செல்லும் உரிமை
பிறப்புக்கட்டுப்பாடு செய்யும் உரிமை
விவாகரத்தி செய்யும் உரிமை போன்ற ஏனைய உரிமைகள் ஆகும்.
.2 மேற்குறிப்பிட்ட உரிமைகள் யாவும் இப்போது எமக்குக் கிடைத்துள் ளன. எனவே இன்று பெண் விடுதலே எனக் கருதப்படுவது யாது?
இன்று பெண்நிலேவாதம் பாரபட்சமான தன்மைகளுக்கெதிரான சட்டரீதியான சீர்திருத்தங்கள், கட்டுப்பாடுகளை அகற்றுதல் ஆகிய எல்லைகளைக் கடந்து விட்டது.
பெண்கள் விட்டில் ஆண்களுக்குக் கீழ்ப்படிதல் e குடும் அமைப்பினுல் பெண்கள் கரண்டப்படுதல்  ைதொழிலிலும், சிமூகத்திலும், நாட்டின் கலாசாரத்திலும் பெண்கள் தொடர்ந்து குறைவான அந்தஸ்து உடையவராய் இருத்தல் 9 பெண்கள் உற்பத்தியிலும் சந்ததி உற்பத்தியிலும் ஈடுபடுவ
தால் ஏற்படும் இரட்டைச்சுமை
ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களேயும் உள்ளடக்கியதாக இன்று பெண்திலேவாதம் அமைந்துள்ளது. இதனுல் பெண்கள் கட்டுப் uT(MessGrifiliiv இருந்து விடுபடுவதற்காக மட்டுமன்றி, அரசினுலும், சமூ கத்தினுலும் ஆண்களாலும் விதிக்கப்படுகின்ற சகல அடக்குமுறை களுக்கு எதிராகவும் போராடி விடுதலை பெற வேண்டியவர்களாக
ஐ.ஸ்ளனர்.

Page 4
பெண்கள்,
சுரண்டல் (உ ம் சமனற்ற சம்பளம், குறைந்த சம்பளம்) கீழ்ப்படிதல் (உ-ம் ஆண் ஆதிக்கத்திற்கு ஐ.ட்படுதல்)
அடக்குமுறை (உ+ :ம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்)
ஆகியவற்றிற்கு ரைபோவதுடன் அவர்கள் இவ் வாரு ன பிரச்சனைகளை ஏனைய பெண்களும் எதிர்நோக்குகின்ருதர்கள் என்பதனை உணர்ந்துள்ளனர். அத்துடன் தமது இந்த நிலைமை மாறுவதற்கும் சமுதாயத்தை மாற்றுவதற்கும் தா)ே ஒருங்கினேந்து செயற்பட வேண்டும் என்பதலோ:ம் கி.ணர்ந்துள்ளனர்.
3. ஆணுல் அனேகமானுேர் பெண் லேவாதமானது. ஒரு :ேற்கத் தைய கோட்பாடு எனவும், அது எந்தவிதமான விமர்சன நோக் குமின்றி ஆசியப் பெண்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது ១ ៩១ கூறுகின்றனர். இது உண்மையா?
அவ்வாறில்லை. பெண்நிலைவாதமானது 'அன்னியக்
வின் ஒரு பகுதியென்ருே, செயற்கையான முறையில் ஆசியப் பெண்
களில் திணிக்கப்பட்டது என்ருே கூற முடியாது. ஆசியாவில் யக உரிமைகள் பற்றியும், அரைவாசி மக்கட் தொகையினருக் படை உரிமைகளே வழங்கப்படவில்லை என்ற நியாயமற்: யும் ஒரு விழிப்புணர்வு தோன்றி வளர்ந்து டோதே பெண்திலைவா
மும், பெண்நிலைவாதப் போராட்டங்களும் எழுச்சியடைந்தன. ஆசி யாவில் அரசியல் விழிப்புணர்வு உச்சக்கட்டத்தை அடைந்த குறிப் பிட்ட வரலாற்றுக் காலகட்டங்களில் பெண்றிலேவாத tழிப்புEார் வும் ஏற்பட்டது. குறிப்பாக 19ஆம் நூற்ருண்டிலும் 29ஆம் நூற்ருண் டின் ஆரம்பக் காலத்திலும் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகவும், உள் ளூர் சர்வாதிகார, நிலப்பிரபுத்துவ ஆட்சியாளருக்கு எதிராகம் போராட்டங்கள் ஏற்பட்ட போதே பெண்நிலைவாத உலர்வும் ஏற்
ull-gi.
4. காலனித்துவ ஆட்சிக் காலத்திற்கு முன்பே ஆசியாவில் பெண்களின் சமூக அந்தஸ்து பற்றிய வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்
றனவா?
ஆம். பெண்கள் பற்றிய தர்க்கம் மிகவும் பழமையானது. உதா ரணமாகப் பெண்கள் பெளத்த சங்கத்தில் சேர்ந்து துறவிகளாகலாமா என்பது பற்றி கி. மு. 6 ஆம் நூற்ருண்டிலேயே புத்தர் பெருமானும் அவரது சீடர்களும் விவாதித்தனர். "பெண்கள் கல்வி பற்றி ஆசியா விலும் ஐரோப்பாவிலும் தொடர்ச்சியான கருத்து மோதல்கள் இடம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெற்றன. 18 ஆம் நூற்றண்டில் சென் - ஹிங் மெள (Chen - Hung Mou - 1696 - 1711) என்ற சீன மேதை, மேரி வோல்ஸ்ரென்கிராவ்ட் (Mary Wollstonecraft) க்கு முன்பாகவே பெண்கல்வி பற்றி ஒரே விதமான கருத்துக்களைக் கூறினர்.
இந்த உலகில் கல்வி கற்றுக்கொள்ள முடியாதவர் என்று யாரு மில்லை; அத்துடன் எங்களால் கற்பிக்க முடியாதவர் என்றும் யாரு மில்லை.இவ்வாறிருக்க நாம் ஏன் பெண் பிள்ளைகளுக்கு கல்வி போதிப் பதில் மட்டும் கவனமின்றி இருக்கின்றேம்? குழந்தைப் பருவத் தைக் கடந்ததும் பெண்களின் வாசஸ்தலங்களிலேயே அவர்கள் வளர்க்கப் பட்டதோடு கவனமாகப் பாதுகாக்கவும்பட்டனர். அவர் கள் ஆண்பிள்ளைகள் போன்று வெளியே சென்று ஆசிரியரிடம் கல்வி கற்பதஞல் பெறும் நன்மைகளைப் பெற முடியாதுள்ளனர். ஆசிரி யர், நண்பர் ஆகியோருடன் பழகுவதால் ஏற்படும் தூண்டுதல் கள் இவர்களுக்குக் கிடைப்பதில்லை . பெண் பிள்ளைகள் வளர்ச்சி அடைகின்ற போது, அவர்களுக்குக் கற்பிக்கப்படுவதெல்லாம் எவ் வாறு தமக்குத் தேவையான சீதனங்களைச் சேர்த்துக் கொள்வது, எவ்வாறு பூவேலைப்பாடு செய்வது என்பது மட்டுமேயாகும்.
5. இவையெல்லாம் ஆண்களின் உணர்வுகளுக்கு எடுத்துக்காட்டுகளாக
உள்ளன. ஆண்களே பெண்நிலை வாதிகளாக இருக்க முடியுமா?
ஆம். கிழக்கு நாடுகளில் ஆண் சீர்திருத்தவாதிகளே ஆரம்ப காலங்களில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். சீனுவில் உதாரணமாக காங் யு-வெய் (KanqYu-Wei 1859-1927) என்பவர் பெண்களின் பாதக்கட்டுகளை எதிர்த்ததோடு, ஆண்களுக்குக் கீழ்ப்படித்து பெண்கள் நடக்க வேண்டும் என்ற நடை முறையையும் எதிர்த்தார்.
"எனக்கு இப்போது ஒரு கடமை உள்ளது. அதாவது கடத்த காலத் தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கணக்கிடப்படாததுன்பங்களுக் காகக் குரல் கொடுப்பது எனக்கு இப்போது ஒரு பேரார்வம் உள் ளது;அதாவது என்னுடைய காலத்தில் துன்பக்கடலில் மூழ்கி இருக் கும் 800 கோடி பெண்களையும் காப்பாற்றிக் கொள்வது.எனக்கு எதிர்காலம் பற்றியும் ஒர் கனவுள்ளது; அதாவது எண்ணிலடங் காத பெண்களுக்கு எதிர்காலத்தில் சுதந்திரத்தையும் சமத்துவத் தையும் சந்தோஷமாக அனுபவிக்கும் நிலையினை ஏற்படுத்திக் கொடுப்பது.
3.

Page 5
எகிப்தில் அகமட் ஃபெயார் எல் சிட்யாக் (Ahmed Fares El Shid yak) என்பவர் பெண்கள் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங் களை ஆதரித்து “ஒரு கால் மற்றக் காலுக்கு மேலாக உள்ளது" (One' Leq Crossed Over the Other) 6T63rd DITGólar 1885 -gh gargai) எழுதினர்.காசிம் அமின்(Kasim Amin 1865-1908) என்பவர்,புதுமைப் பெண் (The New Woman) என்ற ஒரு நூலின எழுதியதன் மூலம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஈரானில் பெண்களை ஒதுக்கி வைத்தல், பல மனைவியர் மணம் ஆகியவற்றை, பல ஆண் புத்திஜீவிகள் 1880 களிலும் 1890 களிலும் எதிர்த்ததோடு, பெண்கள் உரிமைக்காகப் போராடினர்.
இந்தியாவில் ராஜாராம் மோகன் ராயின் காலத்தில் (1772-1883) இருந்து, சமூக, அரசியல் சீர்திருத்தவாதிகள் பலர் சதி, பெண்ணடிமை ஆகியவற்றிற்கு எதிராகப் போராடியதைக் காணலாம். வித்தியாசாகர், ஏாமகிருஷ்ணர், ரவீந்திர நாத தாகூர், காந்தி, நேரு போன்ருேர் இவர் களிற் சிலராவார்.
6. இந்தக் கால கட்டங்களில் ஆசியாவில் பெண்கள் உரிமைக்காகப்
போராடிய பெண்கள் எவருமே இருக்கவில்லையா? シ
இருந்தனர். 19 ஆம் நூற்ருண்டில் கூடப் பலர் இருந்தனர். இந்தி யாவில் 1880 களிலேயே பண்டித ராமாபாய் (1885-1922) என்ற பெண் பெண்களின் சுதந்திரம் பற்றிப் பேசியவராவார். இவரைப்பற்றி உலகம் அதிகம் அறியவில்லை. பெண்கள் சுதந்திரம் பற்றிக் குரல் கொடுத்த தோடு இந்து சமயப் பழமை வாதத்தை எதிர்த்து சுதந்திரமான வாழ்க் கையும் நடத்தினர். கார்த்தினி (Kartini 1879-1904) என்பவர் இந் தோனேஷியாவில் பெண்கள் கல்விக்காவும் பெண் தளைகளை நீக்குவதற். காகவும் பாராடினர். அவர் பெண்களுக்குத் தனியான கல்விக் கூடங்களை அமைப்பதற்கு எதிராகத் தீவிரமாகப் போராடினர். ஈரான் நாட்டு பாபி (Babi) இனத்தைச் சேர்ந்த குவாரத் உல் அயின் (Quாrat Ul Ayin 1815-51) என்ற பெண்துறவி குடும்பத்தை விட்டு வெளியேறியதோடு. தாமே முகத்திரையிடலைக் கைவிட்டதோடு, முகத்திரையின்றிப் பகிரங் கமாகப் பிரசாரம் செய்தார். இவர் போர்க்களத்திலேயே இறந்தார். gui-gîsi (Jiu Jin 1875-1907) என்ற சீனப் பெண் வீட்டை விட்டு வெளியேறி ரோக்கியோ சென்று கல்வி கற்ருர், அங்கு அவர் புரட்சிகர அரசியல் விடயங்களில் ஈடுபட்டதுடன், பெண்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டார். ஆனல் கைதுசெய்யப்பட்டு மரணதண்டனை பெற்றர்.
4 :

பெண்களுக்கான சமத்துவ உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் புரட் சியானது எங்கள் வீடுகளிலேயே ஆரம்பமாதல் வேண்டும் என இவர் கூறினர்.
7. இவை பூராவும் இலங்கையரல்லாதவர் பற்றிய விடயங்கள். இலங்கை
யின் நிலை எவ்வாறிருந்தது?
சுகலா, கஜமன் நோணு ஆகிய இரு பெண்களும் பெண்களின் தலித்துவங்களுக்காகப் போராடினர். சுகலா (மகாவம்சத்தில் குறிப் பிடப்படும்) தன் நாட்டைக் காப்பதற்காக முதலாம் பராக்கிரம பாகுவுடன் போராடினுள்: கஜமன் நோனு பெண்கள் வாசிப்பதற்கு அனுமதிக்கப்படக் கூடாத கவிதைகள் என ஆண்களால் கருதப்பட்ட பல கவிதைகளை எழுதினுள்.
8. ஆணுல் இந்த போராட்டம் இன்று பொருத்தமானதா? ஏனெ னில் பெண்களுக்குப் பல ஜனநாயக உரிமைகள்-கல்வி, தொழில் வாய்ப்பு, வாக்குரிமை போன்றவற்றுடன் உடல் ரீதியான தரமான வாழ்க்கை என்பன ஆசியாவிலேயே உயர்ந்த அளவில் இலங்கை யில் காணப்படுகின்றன.
த பெண்களின் ஆயுட்காலம் : 67 வருடங்கள்(ஆண்கள்: 65)
பெண்களில் எழுதவாசிக்கத் தெரிந்தோர் : 83%  ைபிரசவத்தின்போது இறப்பு வீதம் 1000 உயிருடன் பிறக்கும்
குழந்தைகளுக்கு 1.2 சிசு இறப்புவீதம் 1000ற்கு 40
f
இத்துடன்
9 முதல் பெண் பிரதமரை நாங்கள் கொண்டிருந்தமை
 ை1893 இல் முதலாவது மாணவி மருத்துவக்கல்லூரிக்கு அனு
மதி பெற்றமை
 ைநாங்கள் பல தொழிற்துறைகளில் பெண்களைக் கொண்டுள்
GTG)
 ைமற்றும் பெண் ராஜதந்திரிகள், மருத்துவர், பொறியியலாளர்,
வழக்கறிஞர், ப்ேராசிரியர்கள் என்ப்ோரைக் கொண்டுள்ள&ை உண்மை இல்லையா?
அப்படியானுல் பிரச்சனை என்ன? பெண் நிலைவாதம் எமக்குத் தேவையா?

Page 6
பெண்கள் தரமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்த போதும் ஆண் தலைமை நடைமுறையில் இருக்கும் நா ட் டி ற்கு இலங்கை ஒரு உதாரணமாகும். சில விடயங்களைத் தனித்தனியாக எடுப்போம். முதலில் அரசியல். அரசியலில் பெண்கள் பங்குபற்றி யமை தொடர்பான புள்ளி விபரங்கள் வியப்பூட்டுபவையாக உள் ளன. இந்த உண்மையை வைத்துப் பார்க்கும்போது உலக நாடுகள் யாவும் பெருமைப்படக்கூடிய அளவு பெண்கள் ஆண்களுடன் வாழ்க் கையின் எந்த ஒரு அம்சத்திலும் பங்கு கொண்டவர்கள் என நாம் பெருமை பேசலாம். சுதந்திரம் கிடைத்ததிலிருந்து (1948) இன்று வரை பார்ாளுமன்றத்தில் 20 பெண் உறுப்பினர்களே இருந்துள்ளனர்.
9. ஆஞல் பெண்கள் எமது உழைப்பாளர்களிடையே செயலுரக்கம் வாய்ந்த பங்கு வகிப்பதுடன் பொருளாதார ரீதியிலும் வலுவ டைந்துள்ளணர். அதே நேரம் தொடர்ச்சியாகப் பெரிய எண்ணிக்கை யில் உழைப்ாாளர்களாகவும் மாறிவருகின்றனர். ஆணுல் உண்மை யில் அவர்கள் என்ன வகையான செல்வாக்கைக் கொண்டுள்ளனர்?
தொழில் செய்வோர் விபரம் (1982 குடிசன மதிப்பீடு)
பெண்களின் வீதம்
உயர் தொழில் நுட்பம் 14. நிர்வாக முகாமைத்துவம் 0.4 எழுதுவினை 6.0 விற்பனைப் பணியாளர் 3. G சேவைத்துறைப் பணியாளர் 4.3
விவசாயம், மிருகவளர்ப்பு, காட்டுத்தொழில், மீன்பிடி 52.1 உற்பத்தி, உற்பத்திசார் தொழிலாளர், போக்கு
'வரத்து எந்திர இயக்குனரும் தொழிலாளரும் 6, 8 தொழில் குறிப்பிடப்படாதோர் 2.0 தொழில் செய்வோரின் மொத்த விகிதாசாரம் 24.9
இத்தோடு 13.2% ஆண்கள் வேலையில்லாது இருக்கின்றனர். 31.8% பெண்களும் வேலையற்று இருக்கின்றனர்.
10. நிச்சயமாகச் சமீபகாலக் கொள்கைகள் பெண்களின் விடுதலைக்கு வழி வகுத்திருக்கின்றன. சுதந்திர வர்த்தக வலயம், மத் தி ய கிழக்கு வேலைவாய்ப்பு, உல்லாசப் பிரயாணத்துறை ஆகியன பெண்

களே வீடுகளில் இருந்து விடுபடச் செய்து உழைப்பாளர் ஆக்கியதுடன்
அவர்களுக்குப் பொருளாதார ரீதியான சுதந்திரத்தையும் அளித்
பெண்கள் வீடுகளில் இருந்து விடுபட்டு உழைப்பாளராவதற்கு நாம் ஆதரவளிக்கிருேம், ஆனல் பெண்களின் உழைப்பைச் சுரண்டும் அதாவது பெண்களுக்குக் குறைந்த கூலி வழங்கல், சுகாதாரமற்ற பலே செய்தல், மேலதிக வேலை, எழுத்தமானத்தில் ۔۔۔۔۔۔۔۔
M
த்தலும் விலக்கலும், பெண்கள் ர் அமைப்பாக தந்திரத்தைத் தடுத்தல், பாலியல் சுரண்டல் போன்ற ந:நிக்கும் கொள்கைக்கு நாம் எதிரானவர்களாவோம்
i. sறுவது சரியாக இருக்கலாம். உதாரணமாக சுதந்திர : வலயங்கள் பேண்களே இரவில் வேலேசெய்ய அனுமதிக் இன் ஜன. அதன் வி:ாக அவர்கள் ஒழுக்கத்தில் தவற இடமுண் குடும்பர், ஈ.ட:ைகனேக் கவனிக்க முடியா:லும் போகும்.
Cិនព្រះទៅ , ஆண்க:-எவராது இரவு ගීකi%ty செய்வதை நாம்
576 கலாசார அல்லது ஒழுக்கரீதியான காரணங்களுக்
வேர்களின் உடல்நிக் கெட்டுப்போவதுடன் வாழ்வே
என்பதால். அத்துடன் அவர்களுக்கு வழங்குவதாக
உறுதியளிக்கப்பட்ட போக்குவரத்து, ஓய்வு வசதிகள் போன்ற அனு கூலங்களும் வழங்: ப்படவில்லை. வேலை பார்க்கும் பெண் 'ஒழுக்கத்தில் தளர்த்தவள்’ என்று கைமாதிரி எண்ணக்கருவானது சமூகத்தால் நிச்ச10ாகச் கைவிடப்பட வேண்டியதாகும். உண்மை என்னவெனில் இரவில் பெண்கள் வேலை பார்ப்பதால் ஒழுக்கரீதியான தவறு ஏற்படு வதிலும் பார்க்க பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு அவர்கள் ஆளாவதற்கே அதிக சந்தர்ப்பங்கள் உண்டு.
12 ஆஞல் இலங்கை தனது சமூக நலக் கொள்கைகளுக்காக உலகில் பிரசித்தி பெற்ற நாடாகும். இங்கு வேறெந்த சமூகத்திலும் பெற முடியாத சமூக நலவுரிமைகளைப் பெண்கள் அனுபவிக்கின்றனர்.
(அ) பிரசவ விடுமுறை: சர்வதேச தொழில் மரபின் 3-ம் பிரிவின்படி பெண் தொழிலாளர்களுக்குக் குறைந்தது 12 வாரங்களாவது பிரசவ கால விடுமுறை வழங்கப்பட வேண்டும். எமது அயல் நாடுகள் உட்பட அநேக நாடுகள் இந்தத் தரங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. அத்துடன் சோஷலிச நாடுகள் இதற்கு மேலாகப் பெண்களுக்கு 15 வாரங்கள் பிரசவ விடுமுறை வழங்குகின்றன. எனினும்
7

Page 7
ஆ)
இலங்கைப் பெண்கள் 6 வாரங்கள் மட்டுமே பிரசவ விடு முறை பெறுவதற்கு உரிமை உடையவர்கள். இதற்கு மேலாக தந்தைக்குரிய லீவு பற்றிய எண்ணக்கரு இது வரை எமது சட்டத்தில் இடம்பெறவில்லே. பெற்றேர் இருபாலாருமே தொழில் செய்பவராக இருந்தபோதும் வளர்ப்பு பெண்ணின் கடமை என்றே ஒற்றுக்கொள்ளப் பட்டுள்ளது
பிரசவத்தின் பின் கவனிப்பு: வேறு நாடுகளில் கொடுக்கப் படுவது போன்று எமது நாட்டில் குழந்தை பிறந்தபின்னர் உடனடியான கவனிப்புகளுக்கு ஒர் குடும்பத்திற்கு அரசு எந்த வித ஆதாரமும் வழங்கவில்லை. பிரசவநலச் சட்டத் தில் குழந்தை பராமரிப்பு நிலையங்கள், பாலூட்டும் நேர இடைவேளை போன்றவற்றிற்கான திருத்தங்கள் சேர்க்கப் பட்டபோதும் இந்த ஏற்பாடுகள் இதுவரை நிறைவேற்றுப் ՀՀ full-62si) 23).
(இ) குடும்பத்தலைமை: அபிவிருத்தித் தி ட் டத் தின் கீழான
அநேக சமூக நல நன்மைகள் (உதாரணமாக மகாவலித் திட்டம் போன்றவற்றில்) "குடும்பத்தின் தலைவனுக்கே’’ கொடுக்கப்படுகின்றன. அத்தலைவன் இலங்கைச் சட்டப் படி வழமையாக ஆணுகவே உள்ளான். கணவன் இல்லா திருந்தால் மட்டுமே பெண்கள் இந்த உரிமைகளை அனுப விக்கின்றனர். கணவன் குடும்பத்தில் இருந்து விலகி ல்ை இந்த நன்மைகளும் அவனுடனேயே விலகிவிடுகின்றன. சகல சமூக நலன்புரித் திட்டங்களிலும் ஆணே குடும்பத் தலைவனக ஏற்று கொள்ளப்படுகின்றன். பெண் இரண்டாம் தரநிலை மட்டுமே வகிப்பதாக இவை கருதுகின்றன. இதன்விளைவாக ஆண்கள் பல சந்தர்ப்பங்களில் பெண்கள் பெருத உரிமைகளுக்கு உரித்தாகுகின்றனர் பெண், தானே குடும்பத்தின் பிரதான உழைப்பாளி என்பதை நிரூபித்தால் மட்டுமே இந்த நன்மைகள் பெண்களுக்கு உரித்தாகும். அநேக இலங்கைப் பெண்கள் இந்த நடைமுறை பற்றிய பிரக்ஞை அற்று இருக்கின்றனர். பெண்களே பெருமளவில் தொழில் புரியும் சுதந்திர வர்த்தக வலயம் பெருந்தோட் டங்கள், தனியே பெண்களின் தலைமையைக் கொண்ட குடும்பங்கள், நகர்ப்பகுதிகளில் 40% பெண்கள் தொழில் செய்தல் ஆகிய நிலைமைகளைக் கொண்ட எமது சமூகத்தில்

குடும்பப் பொருளாதாரத்தில் பெண்கள் இரண்டாம்தர நிலையே வகிக்கின்றனர் என்று சமூக நலப் பகுதியினர் கருதுவது பொருத்தமற்றதாகும்.
13. ஆணுல் நிச்சயமாக நாம் முன்னேற விரும்பினுல் இத்தகைய சுரண் டல் வடிவங்கனே சிறிது காலத்திற்குத் தானும் பொறுத்துக்கொள்ள வேண்டும். நாம் முன்னேறிய பின்னர் இந்த எதிர்மறையான
அம்சங்கள் மறைந்து விடும்.
இந்தவகையான வளர்ச்சி (முன்னேற்றம்) முதலாளித்துவ உற் பத்தி முறைமையை அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக முன்னர் ஐரோப்பாவில் வீடு உற்பத்தி மையமாக இருந்து வந்துள் ளது. (உணவு, உடை, சவர்க்காரம், மெழுகுவர்த்தி போன்றவை) இந்த உற்பத்தியில் பெண்கள் முக்கியமான ஒரு பங்கினைப் பெற்றிருந்த துடன் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் கைத்தொழிற் புரட்சியுடன் பெண்களுடைய நிலை மாற்றமடைந்தது.
(அ) ஏழைப் பெண் கள் (பாட்டாளிவர்க்கப் பெண்கள்) தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும்(குறைந்த கூலியில்) வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டதுடன் அடுத்த தலைமுறை உழைப்பாளர்களையும் உற்பத்தி (சந்ததி உற்பத்தி) செய் தனர்.
(ஆ) பூர்ஷ்வாப் பெண்கள் குடும்பப் பெண்களாகவே வைக்கப் பட்டிருந்ததுடன் உற்பத்தியில் எதுவித பங்குமற்றிருந்த னர். ஆனல் தமக்குப் பின்னர் சொத்துக்கு வாரிசாகக் கூடிய தலைமுறையை மீள உற்பத்தி செய்து கொண்டி ருந்தனர்.
(இ) மாருக, இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட மறுத்த சுதந்திரமான பூர்ஷ்வாப் பெண்கள் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதுடன் தண்டிக்கவும்பட்டனர்.
பாட்டாளி வர்க்கப் பெண்களைச் சுரண்டுவதும் செல்வந்தப் ப்ெண் களை தனிமைப்படுத்தி வைத்தலும் தீவிரமாகின.

Page 8
14. ஆணுல் 18 ம் நூற்றண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட வளர்ச்சி
களுக்கும் இலங்கைப் பெண்களுக்குமுள்ள தொடர்பு என்ன?
ஆசிய நாடுகள் காலனித்துவப்படுத்தப்பட்ட பொழுது பெண் களின் நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமை தான் இணைக்கும் தொடர்பாக உள்ளது. உதாரணமாகக் காலனித்துவத்திற்கு முற்பட்ட சமுதா:பத்தில் பெண்கள் விவசாய வேலைகளே மாத்திரமே செய்தனர். ஆணுல் காலனித்துவத்துடன் பல பிாற்றம்கள் ஏற்பட்டன.
é பெண்கள் கோப்பி, ஜப்பர், தேயிலே பற்றும் ஏ&னப தோட்
டங்களில் வேலை செய்வதற்கு சேர்க்கப்பட்டனர்.
& பெண்கள் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் வேலை
செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டனர்.
ஐ விவசாய வேலைகளிலும் பெண்கள் தொடர்ந்து ஈடுபட்
-6 .
க்கப் பெண்கள்
நிலைமைக்கு மாருக இலங்கையின் பூச்சுவா :ே
ஐரோப்பியப் பெண்கள் போல வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த போதிலும் கல்வி புகட்டப்பட்டதுடன் சில அடிப்படை உரிமைகள்
கொடு
சப்பட்டுமிருந்தனர்,
இவ்வாறு தந்தை வழிச் சமூகத்தின் எல்லா அம்சங்களும் மிக உறுதிகாகக் காலனித்துவ நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டன. முற்பட்ட தாய் வழிச் சமூக அமைப்பின் மீச்ச சொச்சங்களும் முற்ருக நீக்கப் பட்டன. பெண்கள் விடயத்தில் அன்னிய ஆட்சி:T6:சீன் கொள்கை கள் பின்பற்றப்பட்டன.
இவ்வாறு முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் ஐரோப்பாவிலும், காலனித்துவ நாடுகளிலும் தந்தை வழிச் சமூக அமைப்பு முறைகள் வலுவாக்கப்பட்டன. வீட்டிற்குரிய உற்பத்திகளில் முன்பு தமக்கிருந்த உரிமைகளைப் பெண்கள் இழந்ததுடன் வீடுகளில் இவர்கள் கட்டுப்படுத் தப்பட்டனர் அல்லது விளைநிலங்களிலும் தொழிற்சாலைகளிலும் சுரண் டப்பட்டனர். பூர்ஷ்வா வர்க்கப் பெண்களுக்கு குறிப்பிட்ட சில உரிமை கள்வழங்கப்பட்ட அதே வேளையில் அடிப்படைச் சட்டங்கள் ஆணைக் குடும் பக் தலைவனுகக் கொள்கின்ற தந்தை வழிச் சமூகத்திற்குரிய தாகவே இருந்தன.
முதலாளித்துவ கலாசாரமும் தந்தை வழிச் சமூக அமைப்பினை மீளவும் வலுப்படுத்தியதுடன் ஏகாதிபத்திய வாதிகளும், மூன்ரும் உலக முதலாளித்துவ வர்க்க ஆண்களும் தந்தை வழிச் சமூகப் பெறுமானங் களை அடிப்படையில் ஏற்றுக் கொண்டிருத்தனர்.
If
 
 
 
 

13. பெண்கள் வீட்டு வாழ்க்கையில் அடுகளவு அக்கறையுள்ளவர்களாக இருப்பதால் ஆண்களை விடக் குறைந்த அளவிலேயே அவர்கள் உற்பத்தி செய்வதானது வேலைத்தலங்களிற் காணப்படும் சமத்துவ மின்மைக்கு உண்மையான காரணம் என்று கூறலாமா?
முதலாளித்துவம் இந்த வாதத்தை ஆதாரமாகப் பயன்படுத்து வதோடு, ஆண்களேயே குடும்பத்தின் தலைவனுகக் கருதி "குடும்ப வேதனம்" என் முறையைப் பின்பற்றுகின்றது. அதாவது ஒரு குடும் பத்தலைவனும் அவனது மல்வி மக்களும் வாழ்க்கையை நடத்துவ தற்குப் போதுமான அளவு வேதனத்தைக் கோடுப்பதாகும். இந்தக் கருத்தின்படி பெண்கள் உற்பத்தியில் ஈடுபடும் போது, குடும்பத்தின் :ேதி: வருமானத்திற்காகவே அவள் உழைப்பதாகக் கருதி, சம ஞன :ேஃகளின் போது: குறைந்தளவு வேதனத்தையே வழங்கு
ឆិor Gr,
ሥ”
ஆணுல் உண்மைநிலை வேகுஜனதாகும். பல நாடுகள் {இலங்கை
உட்பட) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் 25%-40% வரையிலான குடும்பங்கள் பெண்களின் உழைப்பிலேயே தங்கி பல்வேயாகவோ, தனியே பெண்களின் தலேமையைக் கொண்ட குடும்பங்களாகவோ உள்ளன எனக் காட்டுகின்றன. இவர்களுட் பெரும்பாலான பெண் கள் :ேறுமையின் எல்லைக்கோட்:ல் வாழ்கின்றனர் அல்லது குறை வான க. தரும் தொழில்களில் தங்கி வாழ்கின்றனர். இவர்கள் முதலாளித்துவ ஆண்வழித் தீர்மானங்களைக் கொண்ட வேலைத்தலங்
களில் சமனற்ற கூலி பெறுதலுக்கும், ஏனைய டாரபட்சமான நடை
முறைகட்கும் உட்படுகின்றனர்.
அது மட்டுமன்றி தொழிற்சாலை, வயல் அல்லது பெருந்தோட் டம் ஆகிய எவற்றிலாவது தொழில் செய்யும் பெண்கள் கூடுதலான நேரங்க7ே வீட்டு வேலைகளிலும் செலவிடவேண்டியதாக உள்ளது. சமையல், துப்பரவு செய்தல், துணி கழுவுதல், நீர் எடுத்தல், விறகு சேகரித்தல், குழந்தை பராமரித்தல் போன்றவை அத்தகைய வேலை களாகும். இதனுல் பெண்கள் இரண்டு வேலேச்சுமைகளே அநுபவிக்க வேண்டியதாக உள்ளது. ஒரு புறத்தில் கூலி பெறும் உற்பத்தியில் ஈடுபடும் பெண்ணுனவள் கூலியற்ற விட்டு வேலைக்காரியாகவும் உழைக்க வேண்டியுள்ளது.
16. எனினும் கூட நவீன மயமாக்கத்தின் மூலம் பெண்கள் தமக்குரிய இடத்தைச் சமுதாயத்தில் பெறு வார் கள், வீட்டில் உள்ள
I.

Page 9
அவர்களது வேலைப்பளு குறைந்து போகும். வெளியே சென்று உழைப்பதன் மூலம் பொருளாதார ரீதியில் சுதந்திரம் பெறுவர்.
நவீனமயமாக்கத் திட்டங்களில் 'ஆண்சார்பு இயல்பாகவே காணப்படுவதால் கருத்து ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் பெண்களைப் பொறுத்து பாரபட்சமான அம்சங்கள் இடம்ப்ெற்றுள் ளன என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. சில வேளைகளில் பெண்கள் உற்பத்தியில் ஈடுபடாதவாறு புறக்கணிக்கப்பட்டுள்ளனர். உதாரண மாக பஞ்சாப்பில் பசுமைப்புரட்சியின் போது இடம் பெற்ற கூடுத லான இயந்திரமயமாக்கமானது, பெண்கள் பாரம்பரிய Ga!5Frrugë தொழில்களில் ஈடுபடும் வாய்ப்பை இல்லாமற் செய்தது. தொழில் நுட்ப வேலைகள், பிரதானமாக ஆண்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட தால் பெண்கள் வேலையில்லாப் பிரச்சனையை எதிர் நோக்க வேண்டிய தாயிற்று. மேலும் இத்தகைய முயற்சிகளால் செல்வச் செழிப்புப் பெற்ற விவசாயிகள் தமது பெண்களை வெளியே உழைக்கவிடாது வீட்டில் வைத்திருத்தல் அந்தஸ்தின் சின்னமாகவும் கருதப்பட்டது. இலங்கையில் மகாவலித்திட்டத்தினுல் இதே போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டன. மிகவும் குறைந்த அளவு நிலமே சுதந்திரமான பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு கடன், தொழில் நுட்பம் என்பனவற்றைப் பெறுவதிலும் சிரமங்கள் இருந்தன. இத ஞல் அவர்கள் குறைந்த அளவு கூலி கிடைக்கும் தொழில்களைச் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர் அல்லது மீண் டு ம் வீட்டு உழைப்பில் ஈடுபடவேண்டி இருந்தது. இதனுல் அவர்கள் பொருளா தார சுதந்திரம் பெறுவதற்கான எத்தகைய முயற்சிகளையும் செய் யாமல் தடுக்கவும் பட்டனர்.
17. பெண்கள் மீதான வன்முறைக்கெதிரான இப் போராட்டங்கள் எத்தகையன? பெண்ணுரிமைத் தீவிரவாதிகள் பலாத்காரம் தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டுமென வாதிடுகின்றனர். இலங்கைச் சட்டமோ பலாத்காரம் செய்யபபட் டவரினதும், செய்தவர் எனக் குற்றம் சாட்டப்படுபவரினதும் நலன் களைச் சமமாகப் பேணுவதாகும்.
1833 ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட, பெண்களைப் உலாத்காரம் செய்தல் பற்றிய சட்டம் இன்னமும் மாற்றப்படவில்லே. அதனல் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்ரேலியா ஆகிய இடங்க வில் மேற்கொள்ளப்பட்ட சட்டமாற்றங்கள் எதையும் அது கருத்தில்
2

கொள்ளவில்லை. இலங்கைச் சட்டத்தரணிகள் மட்டும் இப்பொழுதும் அந்தச்சட்டத்தை சரியென வாதிடுகின்றனர். பிரித்தானியர்கள் அந் தச் சட்டங்களைத் தம் நாட்டில் மாற்றியிருந்த போதிலும், இலங் கைச் சட்டத்தரணிகள் 100 வருடங்களுக்கு முன்பே செய்து வைத்த சட்டங்கள் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கப் போதுமானவை என வாதிடுகின்றனர்.
இன்று இலங்கையில் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்குத்தாக்கல் செய்தால் அதற்குச் சாட்சிகளைத் தருதல் வேண் டும். சட்டங்கள் இதனைத் தெளிவாகக் கூருவிடினும் நடைமுறையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது. பலாத்காரம் தனிப்பட்ட குற்றமாகும். இது பொது இடத்தில் செய்யப்படுவதில்லை. கொலை, களவு போலன்றி இது ஒரு பெண்மீது மேற்கொள்ளப்படுவது. உடலுறவு அடையா ளங்கள் மட்டுமே சான்றுகளாக உள்ளன. சாட்சிகள் கேட்பதானது ஏற்கனவே அச்சமடைந்தத பெண்ணை மேலும் பலவீனப்படுத்துகிறது. இலங்கை போலன்றி ஏனைய நாடுகளில் சாட்சிகளின்மை வழக்கைத்
தள்ளுபடி செய்யாது. தமக்கு முன்னுள்ள உண்மைகளை வைத்து
ஜுரர்கள் அல்லது நீதிபதி தமது முடிவுகளை எடுக்கலாம்.
இரண்டாவதாக, இலங்கைப் பெண்கள் பலாத்கார வழக்கில் தமது சம்மதமின்மையை நிரூபிக்கும்படி கேட்கப்படுகின்றனர். இது
மேலும் பெண்களைத் துன்புறுத்துவதாகும். பொலிசாரும் வைத்திய
ரும் பலாத்காரத்தை எதிர்க்க வேண்டாம். அது கொலைக்கு வழி வகுக்கும் எனக் கூறுகின்றனர். ஆணுல் நீதிமன்றங்களோ ஒரு டெண் இதனை எதிர்க்காவிட்டால் அதனை அவளது சம்மதத்திற்கு அத்தாட் சியாகக் கொள்கின்றன. பலாத்காரத்திற்காக ஆண்கள் தண்டனை பெற வேண்டுமெனப் பெண்கள் விரும்பினுல் இறப்புக்கும் இடமளிக் கும் நிலையை இலங்கைச் சட்டங்கள் ஏற்படுத்துகின்றன. ஏனைய நாடு களில் இவ்வாறில்லை.
இலங்கையில் ஒரு பெண்ணின் கடந்தகால பாலியல் வாழ்வும் வழக்கின் போது எடுத்து அலசப்படலாம். (அவள் திருமணமாகாத
கன்னியா, அல்லது முறைதகா உறவுடையவளா? ஆகிய விஞக்கள்)
அவள் ஒழுக்கரீதியாக தவறிய பெண் என்பதைக் காட்டுவதற்கு அவ
ாது தனிப்பட்ட வாழ்க்கை எடுத்துக்காட்டப்படுவதுடன், பலாத்
காரத்தை அவளே தூண்டினுள் எனவும் நிரூபிக்கப்படலாம். ஏனைய
நாடுகளில் சட்டங்கள் இத்தகைய நிலையை அனுமதிப்பதில்லே. அத்
துடன் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை அவமதிப்பதையும் (பன்மையாகத் தடுக்கின்றேன்.

Page 10
சில பகுதிகளில் பலாத்காரம் அதிக அளவில் அதிகரித்து வருவ தாக சமூக விஞ்ஞானிகள் கூறியபோதும் ஒரு சில பலாத்கார வழக்கு களே நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன. பெரும்பாலான பெண்கள் பாரம்பரியக் குடும்பங்களைச் சார்ந்தவர்களாக இருப்பதா லும், பெண்களுக்கு நீதி வழங்கப்படுவதை சட்டங்கள் தடுப்பதா லும் இந் நிலைமை ஏற்படுகிறது. மிகச் சுதந்திரமான நிலைமைகளி
லும் கூட பெண், பலாத்கார வழக்குத் தாக்கல் செய்வதை இவை தடை செய்யலாம்,
பெண்களுக்கு எதிரஈன வன்முறை பற்றிக்
18. நீங்கள் ஒரு புறத்
கூறுகிறீர்கள். ஆணுல் மறுபுறத்தில் பேண்தீவிரவாதிகள் கருச் சிதைவு செய்வதன: இந் நாட்டில் சட்டபூர்வமானதாக்க ខ្លាឯង ருர்கள். நாம் இதனைத் தடுக்* முயலவேண்டும். ஒவ்ேெ:கரு முதிர் கருவிற்கும் வாழ உரிமையுண்டு. நாம் குழந்தைகளின்
கொலேயைச் சட்டபூர்வமானதாக்கக் கூடாது.
1833 ஆண்டின் பீனல் சட்டக்கோர்வையின் 30 ஆம் பிரிவின்பபடி இன்று வரையும் கருச்சிதைவு இலங்கையில் சட்டபூர்வ12ற்றதாகவே: உள்ளது. சனத்தொகை அளவுக்கு மீறி அதிகரிப்பது, பிறப்பு வீதத் தினைக் குறைப்பதற்கு பெரும் முயற்சி எடுக்கப்படுவது ஆகியன காணப்படினும் கூட கருச்சிதைவானது சட்டபூர்வமற்றதாகவே அம்ை கிறது. ஏனெனில் கருக்கொண்ட நேரத்தில் இருந்து கருவிற்கு உயி ரும், வாழ்வும் உண்டு எனவும் பெண்ணினது உடல் அதன் பிறப்பிற் கான ஒரு சாதனம் எனவும் கருதப்படுவதால் ஆகும். வேறு வகை யிற் கூறுவதனுல் கருக்கொள்ளும் கண்த்திலிருந்து பெண்ணின் கருப் பையானது சமுதாய உற்பத்தியாக மாறுகிறது. அவள் தன்னுடை4 உடலில் தனக்கிருக்கும் உரிமையை இழந்து விடுகிருள். அரசு பெண் னினது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் உரிமையைப் பெறுகிறது.
இக்கருத்தானது விஞ்ஞான நோக்கிலும் நடைமுறை நோக்கி லும் எதிர்த்துரைக்கக் கூடியதொன்ருகும். அமெரிக்க உயர்நீதிமன் றத்துக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள், உதாரணங்கள் மூலம் கருவானது மூன்ரும் மாதம் வரை உயிரற்றது என்பதனை எடுத்துக் காட்டியுள்ளார்கள். இக் காரணத்தால் அமெரிக்க உயர்நீதிமன்றம் மூன்ரும் மாதம் வரை கருவானது பெண்ணின் கருப்பையின் (!, பகுதியாக அமைகிறதாகையால் பெண் தனது உடல் மீதான உரி மையைப் பேணலாம் என்று கூறி மூன்ரும் மாதம் வரை கருச்சிதைவு செய்து கொள்தைனை அனுமதிக்கிறது. நடைமுறை நோக்கில் கூட இலங்கையில் கருச்சிதைவானது அதிகரிக்கிறது என்பதைச் சமீபகாலப்
1 4
 

பத்ஒரிகைக் கட்டுரைகள் மூலமாக அறிய முடிகிறது. பணக்காரட் பெண்கள் வைத்தியர்களின் சேவையைப் பெறுவதன் மூலமாகவோ கருச்சிதைவு சட்டபூர்வமாக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்வதன் மூல மாகவோ கருச்சிதைவு செய்கிருச்கள். மறுபுறத்தில் ஏழிைப்பெண் கள் தேர்ச்சியற்ற வைத்தியரிடம் செல்கின்றனர் அல்லது தமக்குத் தாமே கருச்சிதைவு செய்ய முனைகின்றனர். இவ்வாறு செய்யும் போது பல பெண்கள் இறக்கிரு?ர்கள். அல்லது தமது உறுப்பைச் சிதைத் துக்கொள்கிருர்கள்.
நடைமு)ை
ல் நோச்குகையில் சமுதாயத்தை உண்மையில்
இரு தெரிவுகள் எதிர்நோக்குகின்றன. ஒன்று பெண்ணினது உயிரை
யும் உறுப்பையும் பாதுகாத்தல், மற்றது, பிற வாத, பெண்ணின் கருப்பையுடன் இணைக்கப்பட்ட, தேவையற்ற கருவை-சிதைவிரூல் அல்லது ஆயுள்வேத முறைகளில்ை அல்லது பெண்ணுல் ஏற்படுத்தப் பட்ட காயங்களால் இறக்கக்கூடிய கருவைக் காப்பாற்றுதல் ஆகும். இப்படிப்பட்ட பழமையான நடைமுறையில் இருந்து தப்பிக் கொள்ள நாம் கருச்சிதைவை சட்டபூர்வமானதாக மாற்றுவதுடன் அதனை
மருத்துவ சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்த வேண்டும்.
19. எனினும் வன்முறை பற்றிய பிரச்சனை வாதப்பிரதிவாதங்களை ஏற் படுத்துவது என்றே நான் கருதுகிறேன். நீங்கள் உண்மையாகப் பேசுவது எதைப்பற்றி?
பெண்கள் மீதான சமூகக்கட்டுப்பாட்டைப் பேணுவதற்கு தந்தை வழிச் சமூக அமைப்பு வன்முறைகளே ஒரு சாதனமாக அனுமதிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை பலவகைகளில் நிகழ்கிறது, முன்மும் உலகநாடுகளில் பாலுறுப்புச் சிதைத்தல், பெண்களை அடித்தல், பாலாத் ) காரம் ஆகியவை பொதுவான வன்முறை வடிவங்களாகும். இளம் பெண் பிள்ளைகளின் பாலுறுப்புக்களேச் சிதைத்தல் சில மத்தியகிழக்கு, ஆபிரிக்க நாடுகளில் மிகப் பொதுவான அம்சமாக உள்ளது. பெண்க ளது பாலியலைக் கட்டுப்படுத்துவதும், ஒடுக்குவதும் ஒரு ஆணின் சொத் துக்கு உரிமையைப் பெறக்கூடிய சந்ததி அவனுடையதே என்பதை நிச் சயப்படுத்திக் கொள்ளுதலுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளது. இவ்வாறு ஒரு ஆணின் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்கு ஒரு பெண் னின் உடல் சிதைக்கப்படுகிறது.
2. Ni
வடஇந்தியாவில் இன்று அதிகளவில் பொதுமக்கள் கவனத்திற்குக்
கொண்டு வரப்பட்டிருக்கும் சீதனச்சாவுகள் மூலம் பெண்களது வாழ்
வின் இரங்கத்தக்க நிலையை அறிந்து கொள்ளலாம். திருமணமான
5

Page 11
இளம் பெண்கள் தற்கொலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். திரு. மணத்தின் போது பெண் கொண்டு வந்த சீதனம் குறைவானது அல்லது தரமற்றது என்பதற்காக அதிருப்தியடைந்த கணவன், மாமன் - மாமி ஆகியோர் அவளைக் கொலை செய்கின்றனர். ஒரு மட்டத்தில் திருமண நிறுவனத்துக்கு அவள் கொண்டு வரும் சீதனப் பொருட்களின் அந்தஸ் தை அவளும் பங்கிட்டுக் கொள்கிருள். இன்னேர் மட்டத்தில் இப் பொருட்களைப் பாதுகாத்து புதிய தலேமுறைக்குக் கையளிக்கும் (5G56 utir. கவும் பயன்படுகிருள்.
20. ஆணுல் இது உலகின் மற்றைய பாகங்களில் அல்லவா? இலங்கை
யின் நிலைமை எவ்வாறனது?
இலங்கையில் முஸ்லிம் பெண்கள் பலர் விருத்த சேதனம் செய்யப் பட்டு பாலுறுப்புச் சிதைவினல் துன்புறுகின்றனர். பெண்களை அடிப் பதும் பரவலாகக் காணப்படுகிறது. பெண்களை அடிப்பது சமுதாயத் தில் அனுமதிக்கப்படுவதோடு அல்லாமல் ஏற்றுக் கொள்ளவும்படுகி" றது. பெண்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து, விடப்படும் வன்முறை களின் வகைகளிலே இதனைப்பற்றி எவரும் சர்ச்சை செய்யாதிருப்ப தற்குக் காரணம் அது தந்தைவழிச் சமூகத்தின் அதிகார அமைப்புக் குள் அடங்கிய புனிதத்தன்மை வாய்ந்த குடும்ப ஈல்லைக்குள் நடை பெறுவதாலாகும். ஒரு தவறிய? பெண்ணே,-அவள் எவ்வித கார ணங்கள் வைத்திருந்தாலும், ~அவளது கணவன் அல்லது காதலன் அல்லது பாதுகாவலன் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் நன்கு அடிக்கலாம். சமுதாய யதார்த்தம் அவளுக்கெதிராக இருப்பதாலும் தப்பமுடியாத ஒரு பொறியில் அகப்பட்டிருப்பதாக அவள் உணர்வ தாலும் அவள் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாதவளாக்கப்பட்டுள்ளாள். தான் அடி வாங்குவது அடிப்பவனின் கையாலாகாத்தனத்தாலும் அவனது பயங்களாலும் அல்லாது தான் செய்த குற்றத்திற்காக என்றும் நம்புகிருள். பெண்களே அடிப்பதை, வர்க்க, சாதி, இன எல்லைகளைக் கடந்து மூன்ருவது உலக நாட்டுப் பெண்கள் குழுக்கள் எடுத்துக் கூறி வருகின்றன. சில *லாசாரங்களிலும் சமூக அமைப் புக்களிலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒழுக்கங்களான திருமணத்திற்கு முன் பால் உறவு கொள்ளுவதும், கணவனல்லாதவனூேடு உறவு: கொள்ளலும் அவளேக் கொலேத்தண்டனைச்கு உட்படுத்தும்.
21. வேறு எந்தவகை வன்முறைக்குப் பெண்கள் I u II : L 368Esijr App6es fir?
அநேகமாக வன்முறையின் இயல்பே பாலியல் சம்பந்தமானது. ஆண் பாதுகாவலன், அவளைத் தாக்குபவன் என்ற பரஸ்பரம், மாறக்
6

கூடிய பாத்திரங்களை ஏற்பது பெண்களின் பாலியலுடன் நேரடித் தொடர்புள்ளது. மூத்தவர்களிடமிருத்து ஒருவன் பெறும் புகழும், கெளரவமும் அவன் தனது பெண்களை மற்றைய ஆண்களின் ஆதிக் கத்திற்கு உட்பட்டு விடாமல் எவ்வாறு பாதுகாக்கிருன் என்பதில் தங்கியுள்ளது,
கடந்தகாலத்தில் ஆண் வரலாற்ருசிரியர்கள் சமூக வரலாற்றில் பெண்களைப் பலாத்காரம் செய்வது ஒரு முக்கிய அம்சமாக இருந்தது என்பதை ஏற்றுக்கொண்டதில்லை. பெருமளவில் பெண்களைப் பலாத் காரம் செய்தல் எதிர்ப்புணர்ச்சியுடைய பெண்களை மட்டுமன்றி அவர் கன் மூலம் ஆண்களையும் பயமுறுத்தப் பயன்பட்டது. பங்களாதேஷில் பாகிஸ்தானிய படையெடுப்பு, வியட்நாமில் அமெரிச்சப் படையெடுப்பு, லெபனனின் உள்நாட்டுயுத்தம், இப்பொழுது இங்கு இடம் பெறும் இனப்பிரச்சனை என்பன உள்நாட்டிலும் உலக அரங்கிலும் தெளிவான உதாரணங்கள் ஆகும். சாதி, வர்க்கப் பிரச்சனைகளிலும் பாலியல் வன்முறைகள் பெண்களுக்கெதிராகப் பயன்படுகின்றன. உதாரணமாக விவசாயிகள் காணியற்ற கூலியாட்களிடமிருந்து நிலங்களை அபகரிக்கும் பொழுது காணிச் சொந்தக்காரர்கள் கூலிக்கமர்த்தப்பட்ட குண்டர் களை உபயோகித்து தீவிர எதிர்ப்புத் தெரிவிக்கும் பெண்களையும், பார்வையாளர்களையும் பெருந்தொகையாக பலாத்காரம் செய்வர். இச் செயல்கள் பெண்களைப் பயப்படுத்துவதுடன் ஆண்களுக்கு அவர் களது பெண்களைக் காப்பாற்ற முடியாமையையும் உணர்த்துகிறது. தாழ்ந்த வர்க்க, சாதியைச் சேர்ந்த பெண்களுக்கெதிரான வலுவுள்ள ஆயுதமாகப் பலாத்காரம் செய்தலை அதிகாரத்தில் உள்ளோர் பயன் படுத்துகின்றனர். தந்தைவழிச் சமூகமானது ஆண்கள் மற்றவர்களில் அதிகாரம் செலுத்துவதையும், அவர்களைக் கட்டுப்படுத்துவதையும் எதிர்பார்க்கிறது. ஆனல் ஒரு ஏழை மனிதனுக்கோ தனது பெண்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கு மட்டுமே சமூக அங்கீகாரம் உள்ளது. அதனல் அத்தகைய ஆண்கள் தமது பெண்கள் மீது மற்றவர்கள் பாலியல் வன்செயல்களைக் கட்டவிழ்த்து விடும் பொழுது தம்மை முற்றிலும் ஆண்மையற்றவராக உணர்கின்றனர்.

Page 12
பெண்கள் ஆப்வு வட்டம்
நோக்கங்கள்
1.
8
இன்று இலங்கையில் பெண்கள் மத்தியில் நிலவும் ஒடுக்குமுறை வடிவங்களை இனங்காண்பதும் அவற்றை நீக்குவதற்கான முயற் சியில் ஈடுபடுதல்,
இலங்கையில் நகர-கிராம-தோட்டப்புற உழைக்கும் பெண்கள் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை பெண்நிலைவாத நோக்கில் மேற் கொண்டு, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சமுகத்திற்கு வெளிப்படுத்தல்; அவற்றிற்கான தீர்வுகளை முன்வைத்தல்,
பெண்கள் தொடர்பான (திருமணம், சொத்து, பலாத்காரம், கருச்சிதைவு, பிறப்புக்கட்டுப்பாடு) சட்டங்களை மதிப்பிடல்; அவை பற்றிய திருத்தங்களுக்காக நடவடிக்கைகள் மேற்கொள் ளல்.
வெகுஜன தொடர்புச் சாதனங்களில் வெளிப்படுத்தப்படும் பெண் கள் பற்றிய மதிப்பீடுகளையிட்டு எச்சரிக்கையாகவும் விழிப்பாக வும் இருப்பதோடு அவசியமான சந்தர்ப்பங்களில் நடவடிக்கை களை மேற்கொள்ளல்.
பெண்கள் மத்தியிலேயே காணப்படுகின்ற பிற்போக்குத்தனமான
கருத்துக்களை நீக்குவதற்கான முயற்சிகளைச் செய்தல்.
சமூகத்தில் நீதிக்கும் சமத்துவத்திற்குமாக உழைக்கின்ற ஏனைய பெண்கள் அமைப்புக்களுடன் தொடர்புகள் வைத்திருத்தல்; அவசியமான சந்தர்ப்பங்களில் ஒருங்கிணந்து செயலாற்றல்.
பெண்கள் பற்றி முழுச் சமூகத்தினதும் விழிப்புணர்வை உயர்த்து வதற்காக பிரசுரங்களை வெளியிடுதல்.

பெண்கள் ஆய்வுவட்ட வெளியீடு- இல. 1
ஆகஸ்ட் 1985
afa 3-50
அட்டை - நன்றி - சங்காரிஷ்
ENNILAIVATHAM Poruthamanathe a Tamil Translation of Feminism is Relevant by Feminist Study Circle, 6/4, Cambridge Place, Colombo 7, Sri Lanka published by Women's Study Circle, 51, Sankiliyan Weethy, Nallur, Jaffna, Sri Lanka. August 1985.
புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்,
900 பிரதான வீதி, Runrubu'Lumrawuh.

Page 13
பெண்கள் இயக்கம் இன்றைய உலகில் வரலாற்று முக்கியத்து வம் உடையதாகும். இது உலகெங்கணும் மனித உறவுகளின்
குளும்சத்தை முன்னேற்றும் சக்தி படைத்தது.
- Τα τε τν τν - , ττ .