கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விமானங்கள் மீண்டும் வரும்

Page 1
நெல்லே க. பேரன்
இலங்கையில் பொதுமக்களி டையே மிகவும் பிரபல்யம்பெற்ற எழுத்தாளர்களுள் நெல்லே சு பேரனும் ஒருவராவர். இவரு டைய எழுத்துக்கள் எல்லாமே பொதுமக்களது வாழ்வியக்கத் துடன் பின்னிப் பினேந்தவையாக அமைந்து விடுகின்றன. மக்களது வாழ்வின் அன்ருட நிகழ்ச்சிகனே இவரது எழுத்தின் கருப்பொரு
ாகின்றன. காலத்திற்கும் சூழ
விற்கு ஏற்ப மாறும் மனித வாழ்வு இவரது எழுத்தின் பணிகப்
வெளிநாட்டுவாழ்வை மைய
Ly வெளிவந்துள்ள போதிலும், மத் திய கிழக்கில் வாழும் யாழ்ப்
பானத்து இளஞனின் அபிலா
வுைகளே வெளிப்படுத்தும் முதல் நாவல் இதுவென்றே கூறவேண் டும் இந்த வகையில் வன்னிப் பகுதியின் காடுசார் வாழ்வை முதலில் அறிமுகப்படுத்திய அ. பாவமஒேகரனின் "நிலக்கினி" யுடன் இது ஒப்பிடத்தக்கது. மத் திய கிழக்கில் வாழும் எமது இளே ஞர்களே சித்தரிக்கும் முதல் । । ।।।। குத் தரலாம்.
- குப்பிளான் ஐ. சண்முகன்
羁
 

ܘܬܪܥܘܒܵ67g
BS -- る。グーア
இரசிகமணி கனக. செந்திநாதன் ஞாபகார்த்த
குறுநாவல் போட்டியில் முதற்பரிசு பெற்றது.

Page 2

விமானங்கள் மீண்டும் வரும்
(முதற் பரிசுக் குறுநாவல்)
நெல்லை க. பேரன்
வெளியீடு: ஷர்மிளா பதிப்பகம்
நெல்லியடி, கரவெட்டி,

Page 3
விமானங்கள் மீண்டும் வரும் (குறுநாவல்)
எழுதியவர்: நெல்லை க பேரன்
பதிப்புரிமை ஆசிரியருக்கு
அச்சகம் கலாலய - நெல்லியடி
முதற்பதிப்பு: 18-12-1985
e3a): e5ur 9/50
Viimanankal Meendum Varum" (Short Novel)
(C)
Author: Nelai Ka Peran
Address: Nelliady, Karaveddy, Srilanka. Printed at KALALAYA", Nelliady.
First Edition: 8-12-1985.
திரைகடலோடியுந் திரவியந் தேட்ச் சென்ற எமது
நாட்ட்வர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்

என்னுரை.
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் வெள்ளைக் காரர்களுடன் வேலை செய்த பலர் இன்றும் அவர்களுடைய வேலைத்திறமைகளையும் ஒழுங்கு முறைகள், கட்டுப்பாடு என் பனபற்றியும் பெருமையாகப் பேசுவதைக் காணமுடிகிறது. இவற்றில் உண்மை இல்லாமல் இல்லை என்பதை “குவைத்” தில் உள்ள லிபெக்சிம் சர்வதேச சிமெந்துக் கொம்பனி ஒன் றில் இரண்டேகால் வருடங்கள் வேலைபார்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தில் நேரடியாக அறிந்து கொண்டேன். சொந்த ஊரில் சாதிப்பெருமை பேசுகிறவர்கள் இங்கு வந்து செய் கின்ற வேலைகளையும் வெள்ளைக்கார அதிகாரிகளிடம் கேளாத பேச்செல்லாம் கேட்பதையும் இதன் பிறகும் ஊருக்கு வந்து பழைய குலப்பெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பதையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். பெரியtன் சின்னமீனை விழுங்குகிறது. மனிதன் மனிதனை விழுங்குகிருன். நல்ல மனங்களை நோகச் செய்யும் பான்மையும் விட்டுக் கொடுப்புகள் இல்லாமல் சமூக அநீதிகளுக்கு உரமூட்டும் செய்கைகளும் மலிந்து சமுதாயம் நலிவடைந்து செல்கிறது. குவைத்தில் நான் வாழ்ந்த காலத்தில் பல புதிய அணு பவங்கள் ஏற்பட்டன. எனது சொந்த அனுபவங்களையும் நண்பர்களது அனுபவங்களையும் தொகுத்து நாவல் வடிவில் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. ‘ஈழநாடு’ நிறுவனமும் யாழ் இலக்கிய வட்டமும் இணைந்து நடாத்திய இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டி அதற்கு வித்திட்டது. எனது இந்தக் குறுநாவலுக்கு முதலாவது பரிசும் கிடைத்து ஈழநாடு வார மலரிலும் இது பிரசுரமானது.
இந்தக் கதையை வாசித்த பலர் அங்கு இப்படியெல் லாம் நடக்கிறதா என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள். இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் மத்திய கிழக்கு நாடு களுக்குப் போகாதவர்கள் இல்லை. அவர்களைக் கேட்டால் உண்மை புரியும். எழுத்தாளன்தான் பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் மற்றவர்களுக்குச் சொல்லாமல் மறைப்

Page 4
ii
பது என்பது இலக்கிய உலகிற்கு அவன் செய்யும் துரோக மாகும். இந்நாவலுக்கு விமர்சனம் எழுதியுள்ள செ. யோக ராசா (கருணையோகன்) ஒரு சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார். மத்திய கிழக்கில் கெட்டுச் சீரழிவது அந்தோனிகளும் சில் வாக்களும் மட்டுந்தான? ஆறுமுகங்கள் இல்லையா? என்று கேட்டுள்ளார். ஏன் இல்லை? நீங்கள் அந்தோனி என்று வாசிப் பதை ஆறுமுகம் என்றே அல்லது அஹமது என்றேகூட வாசிக்கலாம். நான் ஒன்றும் ஆறுமுகங்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை. என்னேடு கூடுதலாகப் பழகிய சிலரை மட்டும் ஞாபகம் வைத்து அவர்களது பெயர்களில் சிறு மாற்றம் செய்து எழுதினேன். அவ்வளவு தான்.
ஆனல் ஒன்று. தங்களுடைய சகோதரிகளின் சுகங்களுக் காக ஒவ்வொரு குடும்பத்திலும் இளைஞர்கள் எவ்வளவு தூரம் கஷ்டப்படுகிருர்கள் என்பதை இந்த நாவல் ஒரளவிற் காவது உணர்த்தும். இன்று எரிகின்ற பிரச்சனைகளின் மத்தி யிலும் எவ்வளவு கஷ்டங்களுடன் போக்குவரத்துச் செய்து எமது இளைஞர்கள் இங்கு பணம் அனுப்புகிருர்கள். இதை ஊதாரித்தனமாகச் செலவழித்து விட்டுக் குடும்பத்தைச் சீரழிப்பவர்களும் இருக்கிருர்கள். மத்திய கிழக்கிற்குச் செல் லும் எல்லாப் பெண்களுமே கெட்டவர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. சூழ்நிலைகள் பலரை மாற்றி விடுகின் றன. இக்கதையைச் சுவைபட வாசித்தபலர் ஏன் திடீரென முடித்து விட்டீர்கள் என்று கேட்டார்கள். சினிமாவில் வரு வது போல இது ஒன்றும் உண்மைக்குப் புறம்பான திடீர் முடிவல்லவே. சகோதரிகளுக்காக உழைத்த சங்கர் தனக்கு என்று உழைக்க மறுபடியும் புறப்பட்டுப் போகிருன். அவ டைய விமானம் மீண்டும் வரத்தான் போகிறது. கதையும் பிறகு தொடரத்தான் போகிறது. கடைசி வரைக்கும் எழு திக் கொண்டிருந்தால் பிறகு முடிவுதான் ஏது?
கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டு காதல் கதை களை மாத்திரம் எழுதிக் கொண்டிருப்பது எனக்குப் பிடிக் காத விடயம். நான் அன்ருடம் காணும் பொது மக்களையும் அவர்களது சமகாலப் பிரச்சனைகளையும் வாழ்க்கை முறை களையும் எனது சக்திக்கு உட்பட்டவரை எனது படைப்புக்

iii
கள் மூலம் தெரிவிக்க வேண்டும் என்பதே எனது விருப்ப மாகும். எமது இளைஞர்களின் மத்தியகிழக்கு வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் ரீதியில் தமிழ் மொழியில் வெளி வந்த முதலாவது நாவல் இதுதான் என்று பலர் எனக்குச் சொல்லியிருக்கிருர்கள். இதுபோலவே வேறு நாடுகளில் வாழக்கூடிய தமிழ் எழுத்தாளர்களும் நிச்சயமாகத் தம் அனுபவங்களை எழுத வேண்டும் என்பது என் விருப்பமாகும்.
‘ஈழநாட்டில் இக்கதை தொடராக வந்து கொண்டி ருந்த போது என்னை நேரில் கண்டு பாராட்டியவர்களுக்கும் கடிதங்களை எழுதி உற்சாகப்படுத்தியவர்களுக்கும் என் நன்றி உரியது. குவைத்தில் என்ஞேடு வாழ்ந்த எனது எழுத்துக் களே அறிந்து கொண்ட பல நண்பர்கள் எமது அனுபவங் களை வைத்துக் ‘கதை’ எழுதுங்கள் என்று வற்புறுத்தினர் கள். அவர்களுடைய கரங்களுக்கும் இப்புத்தகம் கிடைக்கத் தான் போகிறது. குவைத்தில் என்னேடு மிக அன்பாகப் பழகி ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் நாவலுக்குப் பரிசு தந்த யாழ் இலக்கிய வட்டம், ஈழநாடு ஆசிரியர் குழு வினர், குறிப்பாக நண்பர் ‘சசிபாரதி” ஆகியோருக்கும் என் றும் எனது இலக்கிய முயற்சிகளுக்கு உற்சாகமளித்து வரும் வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, ஈழநாடு, ஈழமுரசு, மல் லிகை, சிரித்திரன் ஆகியவற்றின் ஆசிரியர்களுக்கும், அறி முக விமர்சனம் எழுதித்தந்த செ. யோகராசா, ஈழநாடு ஒவியர் சபா, நவீன முகப்போவியத்தை வரைந்த ஒவியர் மாற்கு மற்றும் இந்நாவலை அழகுற அச்சிட்டு உதவிய கலா லய அச்சகத்தினருக்கும் என்நன்றி உரியது. எனது'ஒரு பட்ட தாரி நெசவுக்குப் போகிருள்” (சிறுகதைத் தொகுதி), வளைவு களும் நேர் கோடுகளும்’ (வீரகேசரி நாவல்) என்பனவற் றைத் தொடர்ந்து இந்தக் குறுநாவலுக்கும் நீங்கள் ஆதர வளிப்பதுடன் உங்கள் விமர்சனங்களையும் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
நெல்லியடி, நெல்லை. க பேரன் கரவெட்டி, 18-12-85.

Page 5
விமானங்கள் மீண்டும் வரும்
அறிமுக விமர்சனம்
Ga. Gutsy Tarr B. A. Hons, B. phil, Dip in E.
ஈழத்துத் தமிழ் உலகில் கடந்த சில மாதங்களாக வித் தியாசமான சில ஆக்கங்கள் நூலுருப் பெற்று வருவதை அவதானிக்கின்ருேம். “ஊரடங்கு வாழ்வு’ (ஈழநாடு-ஆசிரி யத் தலையங்கங்கள்), ‘தேன்பொழுது’ (கலைஞர்களின் செவ்வி) 'அடிமைகள்’ (நாவல்), "ஒளி சிறந்த நாட்டிலே’ (பயண அணு பவங்கள்) என்ற இவ்வரிசையில் இப்போது நூலுருப் பெற் றுள்ள நெல்லை க. பேரனின் *விமானங்கள் மீண்டும் வரும்’ என்ற குறுநாவலையும் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை.
*விமானங்கள் மீண்டும் வரும்” என்ற தலைப்பிலிருந்து இக்குறுநாவல் எதுபற்றிப் பேசுகிறது என்பதனே ஓரளவு ஊகித்துக் கொள்ள முடிகிறது. வேலை வாய்ப்பின் நிமித்தம் பல்லாயிரக்கணக்கான இளேஞர்கள் மத்தியகிழக்கு நாடு களுக்குச் செல்லும் இக்காலகட்டத்தில் குவைத்திற்குச் சென்ற இளைஞனுெருவனின் பல்வேறு அனுபவங்களே இத னுாடு வெளிப்படுகின்றன. ஆனல், இது அனுபவங்களின் தொகுப்பு மட்டுமன்று; அவ்விளைஞன் குவைத்திற்குச் செல் வதற்கான அவனது குடும்ப நிர்ப்பந்தங்களும், இங்கிருந்து செல்லும் கடிதங்கள் கூறும் புதினங்களும், இன்னும் ஆசிரிய ரது எழுத்தாற்றலும் சேர்ந்து இவ்வனுபவங்களை ஒரு குறு நாவலாகப் பரிணமிக்கச் செய்துவிட்டன என்பதே உண்மை யாகும். அத்துடன் மத்தியகிழச்கு அனுபவங்கள் உண்மை அனுபவங்களாக, அதுவும் ஆசிரியரது சொந்த அனுபவங் களாகவும் வெளிப்பட்டுள்ளன. இவ்விதங்களில் ஈழத்தின் முதற் குறுநாவலென்ற சிறப்பையும் இது பெற்றுவிடுகின் றது எனலாம்.
இக்குறு நாவலினுளடாக வெளிப்படுத்தப்படும் அனுப வங்கள் பலவும் புதியனவாகும்; அவற்றை இங்கு எடுத்துக் காட்டுவதைவிட, வாசகர் அவற்றைத் தாமே வாசித்து அறிந்து கொள்வதே பொருத்தமானது. எனவே, அவை

V
பற்றி எடுத்துரைக்காமல், அவ்வனுபவங்களிலிருந்து வாசகர் பெற்றுக்கொள்ள யாதேனும் உண்டோ எனப்பார்ப்போம். இவ்விதத்தில் ஒன்றை மட்டும் நோக்குவோம். தனது சகோதரிகள் மூவரையும் கரைசேர்க்கச் சங்கர் (கதாநாயகன்) படும் கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமன்று. சீமெந்தைத் தூளாக கப்பல்களிலிருந்து இறக்கி அவற்றைப் பைக்கெற்றுகளில் அடைக்கும் வேலையைச் செய்துவரும் சங்கர், வீட்டிலிருந்து வரும் கடிதத்தின் தூண்டுதலால் - அடைவு நகைகளை மீட் பதும், ஊர்ப்புருேக்கர் திலகத்திற்கு மாப்பிள்ளை பார்ப்ப பதும் - ஒவர் ரைம் செய்யத் தொடங்குகின்றன். "ஒவர் ரைம் வேலையாக கீழே கொட்டுண்ட சீமெந்தைப் பைக்கற் றுக்களில் அள்ளிக்கொடுத்தும், கப்பல் அடித்தளத்தின் கறள் களைச் சுரண்டியும், கிணறு போன்ற ஹச்சுக்குள் இறங்கிக் கட்டிபட்ட சீமெந்தைக் கடப்பாரினல் அடித்து நொறுக்கித் தூளாக்கியும் கஷ்டப்பட்டு வேலை செய்தான். லீவு நாட் களில் கொம்பனி நிர்வாகத்திற்குத் தெரியாமல் கார்கழுவும் வேலையிலும் ஈடுபடுகின்றன். விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த வேளையில், புவனத்திற்காக மேலும் உழைக்க வேண்டியதை உணர்கிருன். எனவே திரும்பிச் சென்றபின் 'பகல் வேலை முடிந்ததும் இரவில் ஹச்கிளின் பண்ண ஆட்கள் தேவை என்று அறிந்தால் பாஜ்ஜிலேயே எங்காவது சீமெந்து பைக் கற்றுக்களின் மத்தியில் படுத்து உறங்குவான். தேவையான நேரத்தில் எழுப்பி விடும்படி இரவு எஞ்சினியரிடம் சொல்லி விட்டுப்படுப்பான். ஒருநாள் இரவு ஒரு மணிக்குப் பாதித் தூக்கத்தில் வேலைக்குச் சென்று ஏணிப்படிகளில் ஏறும்போது கால்தடக்கி வீழ்ந்து கையை முறித்துக் கொள்கிருன். இதன் பின் அவனுல் முன்னர்போல் உழைக்க முடியவில்லை. எனவே இவ்வாறெல்லாம் சங்கர் படும் கஷ்டங்கள், மத்திய கிழக் கிலிருந்து வரும் பணத்தை இங்கு ஊதாரித் தனமாகச் செலவு செய்வோருக்கும், அங்கிருந்து உழைத்தனுப்புவது போதாது என்று குறை கூறுவோருக்கும் ஒரு படிப்பினை யாக அமைய வேண்டுமன்ருே?
மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிப் பெண்களாகச் செல்லும் பெண்களின் வாழ்க்கை முறையும் விசனிக்கத் தக்கதாகும். வருமானத்தைப் பெருக்கும் அவாவும், சுதந்திர

Page 6
vi
மும், சூழலின் நீர்ப்பந்தமும், ஊரிலிருக்கும் ஏனைய உறவி னர்களுக்குத் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் எண்ணமும் இங்கிருந்து செல்லும் பெரும்பாலான பெண் களை அங்கு முறைகேடான வாழ்வு வாழ வைக்கின்றன. ‘வாழ்க்கை” ஒழுக்கம் என்பவற்றை இங்கு வாழ்பவர்கள் சர்வசாதாரணமாகவே கருதுவதைக் காணமுடிகிறது. ‘மூரு காப்” பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்களில் சிங்களத்தில் எமது நாட்டு மானத்தைக் காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கை க3ளக் காணும்போது சங்கருக்குக் கவலையாக இருக்கும். சங்கருக்கு மட்டுமல்ல, எங்களுக்குமே இவையெல்லாம் ஆழ மாகச் சிந்திக்கத் தக்கனவாகும்.
இது குறுநாவலாயினும் பல பாத்திரங்கள் - சங்கர், தில கம், புவனம், கமலம், அந்தோணி, சில்வா, சூரி, தரகர் முருகேசம்மான் முதலாக வந்து போகின்றன ஆசிரியர் இன் னேரிடத்தில் குறிப்பிட்டதுபோல், "சமூகத்தில் நேரடியாகப் பார்த்தும் பழகியும் அனுபவரீதியாக உணர்ந்தும் கொண்ட மனிதர்களின் பிரதிமைகளையே பாத்திரங்களாக, இங்கும் படைத்துள்ளார். இவர்களுள் சங்கர், கமலம், அந்தோனி மூவரும் குறிப்பிடத்தக்கோராவர்.
சங்கரும் கமலமும் சாதி அமைப்பினைத் தகர்த்தெறியும் நேர் கோடுகளாகவும் விளங்குகின்றனர். திலகத்திற்குப் பேசிய மாப்பிள்ளையின் சாதி கொஞ்சம் குறைவு தாம்ை என்று கடிதத்தில் எழுதப்பட்டிருப்பது கண்டு சங்கரின் சிந் த%ன இப்படிச் செல்கின்றது. ‘தானும் சூரியும் இஞ்சை செய்யிற வேலைகளைக் கண்டால் ஊரில் துரும்பனும் அந்த வேலைகளைச் செய்வானே எண்டு கேட்பினம். தாங்கள் அனுப் புற காசு எல்லாத்தையும் போர்த்து மூடிப்போடும். இஞ்சை கக்கூசு கழுவினுலும் ஊருக்கு வரேக்கை நல்ல வெட்டுப் போட்ட குதிரைப்பவுண் சங்கிலியும் ஹொண்டாவும் ஹெல் மெட்டுமாகத் திரிஞ்சால் அந்தக் கெளரவம் ஒன்றே மாப் பிள்ளை அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்துவிடும். பின்னர் ஒரு தடவை முருகேசம்மானுக்கு சங்கர் கறுகின்ருன்:
"அம்மான், கனக்கக் கதையாதையுங்கோ. நீங்கள் சாதிக்காரர் எண்டாப்போலை அடிக்காமல் விட்டவங்

vii
களே. எத்தனை தரம் அடி, உதை வாங்கியும் உங் களுக்கு இன்னும் அந்தப்பரம்பரைப்புத்தி போகேல்லை” கமலா மாற்றமுற்றுவரும் உயர்கல்வி பற்றிய சிந்தனை களின் வடிவமாகவும் உள்ளாள். அதாவது முன்னேறிவரும் விஞ்ஞான யுகத்தில் பல்கலைக் கழகப் பட்டப்படிப்புகளைவிட கொம்பியூட்டர் சயன்ஸ், எக்கவுண்டன்சி போன்ற தொழில் ரீதியான படிப்புகள் விரைவான பலனையும் பணம் சம்பாதிக் கும் வழிகளையும் தரும்’ என்று நம்பி கம்பியூட்டர் சயன்ஸ்
படித்து வருகின்ருள். அவளது காதல் விவகாரமும் புரட்சி
கரமானதே. அவளது நேசிப்புக்குரிய சேகர் ஒரு சலவைத் தொழிலாளியின் மகனே. 'நல்ல சிந்தனையாளனும், உழைப் பாளியும் புரட்சிகரமான மனப்போக்குடையவனுமான சங் கரின் உதவி கிடைக்குமென்று எதிர்பார்க்கின்ருள். அவள் நம்பிக்கை வீண்போகவில்லை. முக்கியமான சந்தர்ப்பத்தில் சங்கர் தரகர் முருகேசம்மானுக்கு இவ்வாறு கூறுவது குறிப் பிடத்தக்கது:
‘என்ரை தங்கச்சிக்கு நான் விரும்பின இடத்திலை
செய்வன். சேகரின்ரை படிப்பு உங்கட பிள்ளையஸ்
கூடப் படிக்கேல்லை. ஏன் இந்த ஊரிலையே ஒருதரும்
படிக்கேல்லை. நாளைக்கு அவன் வெளிநாடு போனல்
முப்பது முப்பத்தையாயிரம் எண்டு சம்பளம் வாங்
குவான். பிறகு வந்து காரும் பங்களாவும் எண்டு காசை வீசி எறிஞ்சால் நீங்கள்தான் முதல் தேடிப் போவியள்.” இவற்றை நோக்கும்போது இக்குறுநாவல் மத்திய கிழக்கு அனுபவங்களை மட்டும் வெளிப்படுத்துகின்றதென்று கூற லாமோ? அவ்வாறன்று. ஒரு சமூகச் சீர்திருத்தக் குறுநாவ லாகவும் விளங்குகின்றதல்லவா?
அந்தோனி! நாங்கள் ரிக்கெற்றுக்கு குடுக்கிற காசுக்கு இதெல்லாம் சும்மாதான் மச்சான் காசில்லை. இதெல்லாம் இலங்கையிலை வாங்கிறதெண்டால் மனம் வராது. நீயும் பாவிச்சுப்பார் சங்கர்’ என்று அறிமுகப்படுத்தப்படும்போதே அவன் எத்தகையவன் என்பது புரிந்துவிடுகின்றது. இங்கி ருந்து செல்லும் விமானத்தில் தன்னுடன் பயணஞ்கெய்யும் ஒரு பெண்ணுடன் அப்போதே நெருங்கிப்பழகும் அந்தோ

Page 7
னிக்கு மத்திய கிழக்கு வாழ்க்கைமுறை சொர்க்கலோகமாக அமைந்ததில் வியப்பில்லை. அத்துடன், அங்கே சிறந்ததொரு குடிகாரணுக மாறி தான் தங்கும் காம்பில் குடிவகைகளைக் கள்ளமாகத் தயாரித்து விற்கும் நிலைக்கு உயர்ந்து விடுகின் முன். இறுதியில் கொம்பனி நிர்வாகமே சீட்டுக்கிழித்து நட வடிக்கை எடுக்கும் நிலைக்கு வருகிறது. மொத்தத்தில் மத் திய கிழக்கு நாடுகளில் மனம் போனவாறு வாழும் ஆண் களின் உயிர்ச் சித்திரமே அந்தோணி என்பதில் தவறில்லை.
சுவையாகவும், இயல்பாகவும், அனயாசமாகவும் கதை கூறும் ஆசிரியர்து ஆற்றல் குறுநாவலெங்கும் இழையோடு கின்றது. இதற்கோர் எடுத்துக் காட்டு, இப்பகுதி:
*குவைத் போகவென்று மூன்று தடவைகள் ஆயத்த மாகக் கொழும்புக்கு வந்ததும் ஒவ்வொரு தடவை
டயும் ஏஜெண்ட் ஏதாவது சாட்டுக்களைச் சொல்லிச் சமாதானப் படுத்தித் திருப்பி அனுப்பினன். ஒரு தடவை விசா வரவில்லை என்ருன். இன்னெரு தடவை பிளேனில் டிக்கெற் இல்லை என்ருன். இன்னுேரு தடவை பிளேனில் சீற் இல்லை என்ருன். எப்படியோ நாலாவது தடவை மனமிரங்கிப் பிளேன் ஏறச்செய்து விட்டான். இந்தப் பிரச்சினைகளால் ஒவ்வொரு தட வையும் சங்கர் வீட்டில் இருந்து புறப்படும் பொழுது அலுவலாகக் கொழும்புக்குப் போகிறேன். சிலவேளை சரிவந்தால் அப்படியே வெளிநாடு போய்விடுவேன் என்று சொல்லிக் கொண்டுதான் வருவான். முதல் தடவை கொடிகாமம் வரைக்கும் அவனது தாயாரும் மூன்று சகோதரிகளும் வந்து வழியனுப்பி வைத்தார் கள். அதன்பிறகு ஊரில் பஸ் நிலையம் வரைக்குமாவது யாரும் வருவதில்லை.”
இவ்வாறே, யாழ்ப்பாணத்தில் கேட்கும் வெடிச்சத்தங் களில் மினிவான்கள் அலறிப் புடைத்துக் கொண்டு ஒடும் போது கமலாவைப் பாதுகாப்பாக வாகனங்களில் ஏற்றி வழி யனுப்பும் சந்தர்ப்பங்கள், கமலா சேகரை விரும்ப வாய்ப் பளிக்கின்றதாகக் கூறப்படுவதுமாகும். இவ்வாறே ஊரிலி ருந்து வரும் கடிதங்களில் இடம்பெறும் சமகால உண்மை

ΙΧ
நிகழ்ச்சிகளின் பதிவுமாகும்: 'ஊரில் அடிக்கடி நடக்கிற பிரச்சினைகளைப்பற்றிப் பூடகமாக எழுதிய அவள், எங்கடை மண் வீட்டையும் சுத்தியுள்ள வாழை பூவரசு மரங்களையும் கிண்டிக்கிண்டி ஆயுதங்கள் ஏதும் தாட்டுக் கிடக்குதோ எண்டு பார்த்தவை எண்டும் அவன்ரை படத்தைக்கண்டு போட்டு ஏன் வெளிநாடு போனவர் எண்டு விசாரிச்சவை எண்டும் பல புதினங்களை எழுதியிருந்தாள்.?
இனி, இக்குறுநாவலின் தலைப்பும் கவனத்தை ஈர்க்கின் றது. ஓரிடத்தில் இவ்வாறு கூறப்படுகின்றது: அக்கா திலகத் திற்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாகவும் அவவுக்கு ஏதாவது பணம் அனுப்பினுல் நல்லது என்றும் எழுதியிருந்தான். அடப்பாவமே . இரட்டைக் குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகளா..? சகோதரிகளுக்கு உழைத் துப் பிறகு மருமக்களுக்கும் உழைக்கவேண்டி வருமோ..? என்று சங்கர் பயப்படுவதில் நியாயமுண்டு; ஏனெனில் அது உண்மையாகக் கூடியதுதான். அது பொய்யாகும் வரையும், சமூக அமைப்பு மாற்றங்காணும் வரையும் “விமானங்கள் மீண்டும் வரும்” மீண்டும் மீண்டும் வரும் என்பது உண்மை தானே!
ஆயினும் இக்குறுநாவலே ஆழ்ந்து படிக்கும்போது ஒரு நியாயமான சந்தேகம் எழாமற் போகாது; மத்திய கிழக்கு நாடுகளில் முறைகேடாக வாழும் ஆண்கள், அந்தோனி களும் சில்வாக்களும் மட்டுமா? ஆறுமுகங்கள் இல்லையா? என்பதே அது.
எனினும் இவை எல்லாவற்றையும் விட, இன்ஞெரு காரணத்திற்காக நெல்லை க. பேரன் பாராட்டுக்குரியவரா கின்ருர்,
*சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்? என்று பாடியவன் பாரதி. இன்று மத்தியகிழக்கு நாடு களுக்குச் செல்பவர் பலராயிருந்தாலும் கலைச்செல்வம் - கதைச்செல்வம் அளிப்பவர் எத்தனை பேர்? அவ்விதத்தில் ஒரு குறுநாவல் செல்வத்தை இவர் அளித்தார் என்பதற் காகவும் பாராட்டுக்குரியவரன்றே! o

Page 8

விமானங்கள் மீண்டும் வரும். . .
விமானம் தரையில் ஒடு பாதையில் மெது வாக ஊர்ந்து பின்னர் நேராக விரைந்து உறு மிக் கொண்டே மெல்ல மெல்ல உயரக் கிளம்பியது. மூலை ஆசனத்தில் இருந்த சங்கர் ஆழமான வேலைப்பாடுகளுடனுன அந்த மெல்லிய திரைச்சீலையை விலக்கி விட்டு வட்டமான கண்ணுடி ஜன்னலூடே வெளியே எட்டிப் பார்த்தான். கட்டு நாயக்கா விமான நிலையத்தின் அருகே தென்னந்தோப்புக் குள் முள்ளு வேலிகளுக்கும் தடைகளுக்கும் அப்பால் பிர யாணிகளை வழியனுப்ப வந்தவர்கள் இப்போது சிறு பூச்சி களைப் போலத் தெரிய ஆரம்பித்தார்கள். சாய்வாக உயரப் பறந்த விமானம் இப்போது நேராக மிதக்கத் தொடங்கியது,
சங்கருக்கு விமானப் பயணம் புது அனுபவம். சிவப்பு விளக்குகளினூடே வந்த சமிக்  ைஞ களின்படி இடுப்புப் பெல்டை இறுக்கிப் பூட்டியிருந்த அவன் இப்போது அதை அவிழ்க்கத் தெரியாமல் திண்டாடுவதைக் கண்ட பணிப் பெண் அவனது உதவிக்கு வந்தாள். நீல நிற அமெரிக்கன் ஜோர்ஜெட் சாறியில் கரைகளுக்கு அழகான கட்டம் போட்ட பூ வேலைப்பாடுகளுடன் அப்பெண் தேவலோகத்து அழகிகளைப் போன்று அவனுக்குக் காட்சியளித்தாள். தேவ லாகத்து அழகிகளை அவன் நேரில் கண்டிராவிட்டாலும் கதைகளிலும், சினிமாக்களிலும் நிறைய அறிந்திருக்கிருன்.

Page 9
2 நெல்லை க. பேரன்
அவளைப் போன்று இன்னும் ஐந்தாறு பெண்களும் மூன்று ஆண்களும் விமானத்திற்குள் அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
மூன்று பணிப்பெண்கள் சுமார் இருபதடி இடைவெளி தூரத்தில் நேராக நின்று கொண்டு விபத்து நேர்ந்தால் இருக்கையின் அடியில் உள்ள உயிர்காப்புச் சாதனத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று விளக்கிக் கொண்டிருந் தார்கள். சிறிது நேரத்தில் ஒரேஞ் ஜுஸ் எல்லோருக்கும் கொடுத்தார்கள். அத்தோடு எல்லோருடைய இருக்கைகளின் முன்பாக உள்ள தற்காலிக மேசைகளில் அழகாக அச்சிட்ட கார்ட் ஒன்றையும் வைத்தார்கள் ஒவ்வொரு இருக்கைகளின் பின்னலும் மடித்து விரிக்கக் கூடிய சிறுதட்டுக்கள் இருந்தன. தேவையானபோது இவற்றை மேசையாகப் பாவிக்கலாம். சங்கர் ஜி. சி. ஈ அட்வான்ஸ் லெவல் வரைக்கும் படித்திருந் : ஆங்கிலம் நன்ருக வாசிப்பான். விமானத்தில் வழங் கப்படும் மேல்நாட்டுக் குடிவகைகளின் பெயர்கள்தான் அங்கு காணப்பட்டன. சங்கரோடு குவைத்துக்குப் பயணமான மற்ற யாழ்ப்பாணத்து நண்பர்களைப் பார்த்தான். சிலர் பணிப்பெண்களிடம் பியர், விஸ்கி என்று ஒடர் செய்து வாங்கிக் குடித்தார்சள். சங்கர் ஊரில் இந்தப் பழக்கங் களுக்கு அடிமையாகாதவன். அருகில் இருந்த அந்தோனி உற்சாகப்படுத்தினுன்
“நாங்கள் ரிக்கற்றுக்குக் குடுக்கிற காசுக்கு இதெல்லாம் சும்மாதான் மச்சான் காசில்லை இதெல்லாம் இலங்கையில் வாங்கிறதெண்டால் மனம் வராது. நீயும் பாவிச்சுப்பார் சங்கர். ...” “அந்தோனி! தயவு செய்து என்னைக் குழப் பாதை ஒரேஞ் ஜுஸ் போதும் நீ வேணுமென்டால் வாங் கிக் குடி!?
அந்தோனி அவனைக் கட்டாயப் படுத்தவில்லை. அப்சரஸ் போன்ற அழகான பணிப்பெண் ஒருத்தி அன்னம் போல அவனருகே நடை பயின்று வந்து பூவேலைப்பாடுகள் நிறைந்த மேல் நாட்டுக் கிளாசில் அவனுக்கு விஸ்கி ஊற்றிக் கொடுத்

விமானங்கள் மீண்டும் வரும் . 3.
தாள். கூடவே சிறிது ஐஸ் கட்டியையும் போட்டுக் கலக்கிக் கொடுத்தாள்.
ஓ மை கோட். இந்த ஒரு கட்டத்திற்கு மட்டும் பத்தாயிரம் குடுக்கலாம் மச்சான். ஏஜன்சிக்கு இருபத்தி ரண்டு கட்டினலும் பரவாயில்லை. அந்தோனி கொஞ்சம் விஸ்கி உள்ளே ஏறியதும் பிதற்ற ஆரம்பித்தான்.
சங்கருக்கு அவனைக் காண எரிச்சலாக வந்தது. இருபத் திரண்டாயிரம் கொடுத்ததை எவ்வளவு சாதாரணமாகச் சொல்லிவிட்டான். தன்னுடைய மூன்று பெண் சகோதரங் களின் கழுத்திலும் காதுகளிலும் இருந்த நகைகளை அடைவு வைத்தல்லவா அவன் காசு புரட்டினன். ஊரிலே கமஞ் செய்வதற்குக் காணியில்லை என்பதால் தகப்பணுருடன் விஸ்வ மடுக் குளத்தில் குத்தகைக்குக் காணி எடுத்துக் கமஞ் செய் யப்போனதும் மழை தண்ணி இல்லாமல் மிளகாய்ச் செடி கள் காய்ந்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டதும் வயதான தகப்பனுரைக் கமத்திற்குக் காவல் வைத்து விட்டு ஊருக்கு வந்த போது ஒருநாள் இரவு அவனது கொட்டிலுக்கு யானை வந்து அவரை அடித்துக் கொன்றதும் எல்லா இழப்புகளை யும் ஈடுசெய்வதற்காக அவன் வெளிநாடு போவதற்காக இரண்டு வருஷங்களாக நாயாக அலைந்ததும் ஆரம்பத்தில் கொழும்பில் ஒரு ஏஜன்சியிடம் ஐயாயிரம் அட்வான்ஸ் கொடுத்து ஏமாந்ததும் பிறகு இப்ப இருபத்திரண்டாயிரம் கொடுத்து ஒருவாறு பிளேன் ஏறியதும் எல்லாம் ஒவ்வொன் ருக அவன் மனத்திரையில் வந்துபோயின. குவைத் போக வென்று மூன்று தடவைகள் ஆயத்தமாகக் கொழும்புக்கு வந்தும் ஒவ்வொரு தடவையும் ஏஜன்ட் ஏதாவது சாட்டுக் களைச் சொல்லிச் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினன். ஒரு தடவை ‘விசா" வரவில்லை என்ருன். இன்னெரு தடவை பிளேனில் டிக்கட் இல்லை என்ருன். இன்னெரு தடவை பிளேனில் சீற் இல்லை என்ருன். எப்படியோ நாலாவது தடவை மனமிரங்கிப் பிளேன் ஏறச் செய்து விட்டான். இந்தப் பிரச்சனைகளால் ஒவ்வொரு தடவையும் சங்கர் வீட் டில் இருந்து புறப்படும் பொழுது அலுவலாகக் கொழும்

Page 10
4. நெல்லை க. பேரன்
புக்குப் போகிறேன். சிலவேளை சரிவந்தால் அப்படியே வெளி நாடு போய்விடுவேன் என்று சொல்லித் தான் வருவான். முதல் தடவை கொடிகாமம் வரைக்கும் அவனது தாயா ரும் மூன்று சகோதரிகளும் வந்து வழியனுப்பி வைத்தார் கள். அதன் பிறகு ஊரில் ப ஸ் நிலை யம் வரைக்குமாவது யாரும் வருவதில்லை.
அந்தோனிக்குக் கொழும்பில் வேலை பார்க்கும் அவனது மச்சான் பயணமனுப்ப வந்திருந்தான். அந்தோனி இப் போது விஸ்கியையும் ஜின்னயும் ஒன்முக ஊற்றிக் குடித்து விட்டு அரை மயக்க நிலையில் இருக்கையில் சாய்ந்திருந் தான். சிறு வண்டிலை நகர்த்திக் கொண்டே இரண்டு பணிப் பெண்கள் பிளா ஸ் ரிக் தட்டுக்களில் உணவு பரிமாறிக் கொண்டுவந்தார்கள். கொஞ்சம் சோறும், இறைச்சி,முட்டை இலைக்கறிகள், தக்காளிப்பழம் என்பன இருந்தன. புறுாட் சலாட்டும் வைத்தார்கள். ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கரண்டிகள், மிளகுத்தூளும், உப்பும் பக்கற்றுக்களில் வந்தன. பிளாஸ்ரிக் கப்பில் ஐஸ்வாட்டர் வைத்தார்கள். கை, முகம் துடைப்பதற்கு ரிஷ்யூவினல் ஆன ஈரப்பதமையான பேப்பர் ஒன்றையும் மடித்துத் தந்தார்கள். ஆகா! எல்லாவற்றை யும் எவ்வளவு அழகாகவும், சுத்தமாகவும் செய்கிருர்கள். இதுவல்லவோ உபசரிக்கும் பண்பு என்று சங்கர் மனதுக் குள்ளே வியந்தான்.
உணவு சூடாகவும், சுவையாகவும் போதுமானதாகவும் இருந்தது. “சாப்பிடு மச்சான்’ குடுத்த காசுக்கு நல்லாச் சாப்பிடு. இப்படிச் சாப்பாட்டையும், இப்படிக் குடியையும் நாங்கள் கண்டிருப்பமே. வீட்டை சம்பலும் சோறும் திண்டிட்டு இஞ்சை வெள்’ க்காரன்ரை சாப்பாடு.ம். சாப்பிடு” அத்தோணிதான் பிதற்றினன். கரண்டிகளை வைத்து விட்டு அவன் கையாலேயே எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான்.
விமானத்தில் ஆண்களைவிடப் பெண்களே அதிகமாக இருந்தார்கள். எல்லாரும்பணிப்பெண்களாகச் செல்பவர்கள்

விமானங்கள் மீண்டும் வரும். 5
பதினெட்டு வயது முதல் ஐம்பது வயது வரை பெண்கள் இருந்தார்கள். கணவன்மாருடன் கோபித்துக் கொண்டு வெளிநாடு செல்பவர்களும், வாழத்தெரியாமல் வாழ்ந்து விட்டுப் பண்பையும் பணத்தையும் அழித்துவிட்டுப் பிறகும் பனந்தேடிப் புறப்படுபவர்களும், வறுமையின் கொடுமை தாங்காமல் விருப்பமில்லாமலேயே புறப்படுபவர்களும், பல் வேறு நோக்கங்களுக்காக விரும்பியே வந்தவர்களும் என்று பல ரகத்தினர் அந்த விமானத்தில் பயணம் செய்தனர். எல்லாரும் ஒரே குடும்பத்தினர் போன்று அங்கும் இங்கும் நடந்து திரிந்து தெரிந்தவர்களுடனும் நண்பர்களுடனும் அளவளாவினர். ஏற்கனவே அறிமுகமில்லாதவர்களும் சில பெண்களின் அருகே சென்று கதைத்து அறிமுகமாகிக் கொண் டனர். சிலர் விலாசங்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.
அந்தோனிக்கு அருகே இருந்த ஒரு பெண் அவனுடன் சரளமாகக் கதைத்துக்கொண்டு வந்தாள். இருக்கையின் கைப்பிடியோடு பொருத்தப்பட்டிருந்த வானெலி கேட்கும் கருவியின் வெள்ளை வயர்களையும் இயர்போனையும் அவளு டைய காதுகளில் பொருத்தி அவள் சிங்களம் அல்லது ஆங் கிலப் பாடல்களையும் கேட்பதற்கு உதவி செய்தான். காது களில் வைத்துக்கேட்கும் அந்த வயர்களேக் குவியலாக சங்கர் கொழும்பு தடைபாதைக் கடையில் பார்த்திருக்கிருன். விமா னங்களில் பாவித்துக்கழிக்கப்பட்ட பிளாஸ்ரிக் கோப்பைகள், தட்டுக்கள், வயர்கள் என்பன நடைபாதைக் கடைகளில் வில்போவதை அடிக்கடி காணமுடியும்,

Page 11
6 நெல்லை க. பேரன்
சிறிது நேரத்தில் விமானத்தின் உள்ளே நடுவில் எல் லோரும் பார்க்கக்கூடியவாறு சிறிய திரை ஒன்று இறக்கப் பட்டது. புறுாஸ்லீயின் சண்டைப்படம் ஒன்று ஓடிக்கொண் டிருந்தது. இந்திரலோகம் போன்று மின்னிக் கொண்டிருந்த சிறிய பெரிய விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டு மங்கலாக ஓரிரண்டு பல்புகள் மட்டும் எரிந்து கொண்டிருந்தன. குதிரை ஓட்டங்களும் சண்டையும் என்று படம் தன்பாட்டில் ஒடிக் கொண்டிருந்தது. சங்கர் அந்தோணியைத் திரும்பிப் பார்த் தான். அவன் அருகிலிருந்த பெண்ணின் தோள்மீது சாய்ந்து என்னவோ செய்து கொண்டிருப்பது போல் தெரிந்தது.
மெதுவாக முகத்தைத் திருப்பிக் கொண்டான். தாய் நாட்டோடு சேர்த்துத் தன் மானத்தையும் விட்டு விட்டுப் பிரயாணம் செய்யும் இப்படியான பெண்களை நினைத்தால் அவனுக்கு அருவருப்பாக இருந்தது.
அவன் கண்களை மூடிக் கொண்டே வீட்டு நினைவுகளில் ஆழ்ந்து விட்டான்.
மூத்தக்கா திலகம் இருபத்தொன்பது வயதாகியும் இன் னும் மணமுடிக்காமல் இருக்கிருள். ஊர் பாடசாலையிலே ஜி. சி. ஈ. வரை படித்த அவள் தகப்பஞர் இறந்த பிறகு பரீட்சை எடுக்காமலேயே வீட்டு வேலைகளின் பாரத்தை ஏற்றுக் கொண்டிருக்கிருள். தாயாருடன் சேர்ந்து இருவரு மாகப் பலகாரம் செய்து கடைகளுக்குக் கொடுத்து வருகிருர் கள். அவனுக்கு இளையவளான புவனம் பக்கத்தூரில் தொழில் திணைக்களம் நடத்தும் தையல் வகுப்பிற்குப் போய் வருகிருள். கடைக்குட்டி கமலா இப்ப எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிருள். தான் தன்ருகப் படித்து ஒரு டாக்டராக வந்து குடும்பத்தைக் காப்பாற்றுவேன் என்று அவள் அடிக் கடி சொல்லுவாள். குவைத் கம்பனியில் மாதம் நாலாயிரம் ரூபா சம்பளம் கிடைக்கும் என்று ஏஜண்ட் சொன்ஞன். அப்படிக் கிடைத்தால் அவனுக்குக் கடன் வாங்கிக் குடுத்த பணத்தையும் வட்டியையும் உழைக்க முதல் ஆறு மாதங் கள் செலவாகும். அதற்குப் பிறகு தான் வீட்டிற்காக

விமானங்கள் மீண்டும் வரும் . -w- 7
உழைக்கமுடியும், கூடிய விரைவில் புவனத்திற்கு ஒரு தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தால் அவள் அதை வைச்சு நாலு காசு சம்பாதிச்சுப் போடுவாள். ஐயா விட்டிட்டுப் போன இந்த மண் வீட்டை இடிச்சுத்தான் மூன்று குமருக்கும் வீடு கட்டிக் குடுக்க வேணும்.
எத்தனையோ முதலாளிமார் ஆறுலட்சம் ஏழுலட்சம் என்று பணத்தை வீசிப் பங்களாக்க3ளத் கட்டுகிருர்கள். எங்களைப் போல வறியதுகளுக்கு ஒரு சின்னவீடு தன்னும் கட்ட வழியில்லாமல் இருக்கே . எல்லாருக்கும் இருக்க வீடும் எல்லாருக்கும் வேலையும் வயிறு நிறையச் சாப்பாடும் எப்பதான் கிடைக்கப் போகுதோ என்று சங்கர் மனதுள் அங்கலாய்த்தான்.
எல்லாரும் வெளிநாட்டு உழைப்பைத் தேடிக் கொண்ட தால் ஊரில் காணிகளின் விலை எக்கச்சக்கமாக ஏறிவிட்டதை அவன்ம்உணர்ந்தான். கேட்பாரற்றுக் கிடந்த மலவெட்டை, வடலிக்காணிகளுக்கும், உப்புத்தரவையளுக்கும் திடீரென மார்க்கட் வந்து விட்டது.
நையீரியாவில் பலகாலம் உழைத்து விட்டு ஊருக்கு வந்த டாக்டர் ஒருவர் தங்களுடைய ஒன்றரைப் பரப்புக் காணி யையும் இரண்டுலட்சம் தருவதாகச் சொல்லிக் கேட்டபோது அதை விற்றுவிட்டு விஸ்வமடுவில் போய் குடியேறினுல் என்ன என்று தாயார் கேட்டதற்கு அவன் பதில் ஒன்றும் சொல்லாமலேயே வந்துவிட்டான். தகப்பனும் இல்லாத இடத்தில் மூன்று குமருகளையும் தாயையும் தனியாகக் காட் டுப் பிரதேசத்தில் குடியமர்த்த அவனுக்கு விருப்பமில்லை. அதுவும் தகப்பன யானை அடித்துக் கோன்ற பயம் இன்னும் அவனை விட்டு நீங்கவில்லை. எல்லாரையும் போலத் தானு உழைத்துப் பிறந்த ஊரிலேயே வீடுகட்டிக் கொடுத்துத் தன் மூன்று சகோதரிகளையும் வாழவைப்பேன் என்ற வைராக் கியத்துடன் அவன் கிளம்பி விட்டான்.
'அபுதாபி ஏயாப்போட்டில் சுமார் இருபது நிமிடங் கள் தரித்த விமானம் மறுபடியும் உயரக் கிளம்பி மிதக்க

Page 12
8 நெல்லை க. பேரன்
ஆரம்பித்தது. பாலைவனப் பிரதேசமும் பள்ளத்தாக்குகளும் சங்கருக்குப் புதிய காட்சிகளாக இருந்தன. இன்னும் அரை மணித்தியாலத்தில் குவைத் வந்துவிடும் என்று அறிவுப்புச் செய்தார்கள்.
பெல்ட்டுக்களை இறுக்கிக் கட்டினுேம், பிற்பகல் இரண்டு மணிக்கு விமானம் குவைத் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது. விமானம் மெதுவாக ஒடிநிற்கும் வரைக் கும் பெல்ட்டுகளை அவிழ்க்கவேண்டாம் என்று சொன்னர்கள்.
விமானத்தில் அருகிலேயே பெரியபஸ் ஒன்றைக்கொண்டு வந்து எல்லோரையும் ஏற்றினர்கள். எல்லோரும் விமான நிலையத்தின் கட்டிடத்தினுள்ளே நுழைந்தோம், தலையில் வெள்ளைப் படுதாவும் அதைச் சுற்றிக் கறுப்புறப்பர் போன்ற வளையமும் அணிந்த அராபியர்களே அங்கு பணிபுரிந்தார் கள். பொலிஸார் இளநீலநிற யூனிபோம் அணிந்திருந்தார் கள். ஒவ்வொரு பொலிஸாரின் இடுப்பிலும் றிவோல்வர் தொங்கியது.
அவர்களைக் குவைத் நாட்டினுள் அனுமதிப்பதற்கான விசாக்களின் பிரதிகளைக் கம்பனி ஏஜண்டுகள் ஏற்கனவே விமான நிலையத்திற்கு அனுப்பியிருந்ததால் சங்கர் விரைவில் தன் நண்பர்களுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறக் கூடியதாக இருந்தது. அங்கிருந்த அதிகாரிகள் ஆங்கிலம் தெரியாதவர்கள். மிகச் சிலருக்கே ஒரளவு ஆங்கிலம் தெரி யும். அராபிய மொழியிலேயே அவர்கள் கதைத்தார்கள்.
பெயர்களை வாசிக்கக் கஷ்டப்பட்ட அதிகாரி ஒருவர் விசாப்பத்திரங்களில் இணைத்திருந்த புகைப்படங்களை வைத்து அடையாளங் காட்டியே பிரயாணிகளை வரிசையாக வெளி யேற அனுமதித்தார். சுங்கத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு பொதிகளையும் பிரித்துப் பார்த்தார்கள். சங்க ருடைய சூட்கேசினுள் சில உடுப்புக்களும் அவனது நண்பன் சூரிக்கு அவனது தாயார் தந்துவிட்ட சில எண்ணெய்ப் பல காரங்களும், புழுக்கொடியல், தூள், ஊறுகாய் என்பனவும்

பொலித்தீன் பையினல் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந் தன. சங்கர் கடதாசிப்பெட்டிக்குள் கொண்டுவந்த நல்லெண் னெய்ப் போத்தலைத் துருவித்துருவி ஆராய்ந்தார்கள். ஒரு அதிகாரி மணந்து பார்த்தார். குவைத்தில் குடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் யாராவது மதுவகை கடத்தி ஞல் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சங்கர் கேள்விப்பட்டிருந்தான்.
அருகில் சென்றதும் தானகவே திறக்கும் எலெக்ரோ னிக் கண்ணுடிக் கதவுகளையும் தாண்டி அனைவரும் வெளியே வந்தார்கள். அந்தோனியின் அருகேசல்லாபமிட்டுக் கொண்டு வந்த பெண்ணும் அவனிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டு தன்னுடைய எஜமானருடன் போய்விட்டாள். விமான நிலையத்தில் பல அராபிய எஜமானர்கள் தமக்கு வரவேண்டிய பணிப்பெண்களின் புகைப்படங்களை வைத்துக் கொண்டு காவலிருப்பார்கள். ஆளை அடையாளம் கண்ட தும் கூட்டிக்கொண்டு போவார்கள். சில வேளைகளில் எஜ மானர்களின் சப் ஏஜண்டுகள் அல்லது றைவர்மார் வந்து ஆளை அடையாளம் கண்டு கூட்டிக்கொண்டு போவார்கள்.
சங்கருக்கு ஆங்கிலம் தெரிந்தபடியால் விமானத்திற்குள் வழங்கப்பட்ட பிரயாணப் பத்திரங்களை நிரப்புவதற்காகப் பணிப்பெண்கள் அவனைச் சுற்றி முற்றுகையிட்டுக் கொண் டிருப்பதையும் குவைத் விமான நிலையத்துள் அவனுடைய உதவியைப் பெற்று நிரப்ப வேண்டிய பத்திரங்களை நிரப்பி யும் தொலைபேசியில் கதைக்க வேண்டிய தங்களுடைய எஜ மானர்களுடன் ஆங்கிலத்தில் கதைத்தும் விஷயங்களைப் பெறுவதற்காகச் சில பெண்கள் அவைேடு உரசிக்கொண்டும், செல்லமாகச் சிரித்துக் கதைத்துக் கொண்டும், சிமிட்டிக் கொண்டும் நடந்து கொண்ட விதங்களை நினைத்தால். -- அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
இரும்பையே உருக்குமாப்போல் வெளியே தகித்துக் கொண்டிருந்தது. காற்றுப்பட்டபோது அனல்வெக்கையைப் போன்று உடம்பு கொதித்தது. சங்கருக்கு நினைக்கவே பய

Page 13
10 நெல்லை க. பேரன்
மாயிருந்தது. இரண்டு வருடங்களை இந்தப் பாலைவனத்தில் எப்படிக் கழிக்கப் போகிருேம் என்று பயந்தான். இந்த வெக் கையைவிட விஸ்வமடுக் குளக்கமத்தின் வெக்கை பரவா யில்லை என்று நினைத்தான்.
அத்தோணி பொலிகண்டியில் கரவலை போட்டும் வள்ளத் தில் சென்றும் மீன் பிடிப்பவன். அவன் ஒரு கடல் மீன். வெய்யில் குடித்துக் கறுத்துப் போன அவனது கரியமேனிக் குக் குவைத் வெய்யில் அதிகம் உறைத்ததாகத் தெரியவில்லை. அவர்களை வேலைக்கு அழைத்த கொம்பனியிலிருந்து ஒருபச்சை வானும் இன்னெரு பஸ் வண்டியும் வந்திருந்தன. இரண்டு வாகனங்களை அராபியர்களே ஒட்டினர்கள். கொம்பனியின் நிர்வாகச் செயலாளர் வந்திருந்தார். அவரோடு இரண்டு ஜேர்மனியர்களும் ஒரு இந்தியரும் வந்திருந்தனர். இந்தியர் உருதுக்காரர். நன்முக ஆங்கிலம் பேசினர். ஜேர்மனியர் களும் நன்ரூக ஆங்கிலம் கதைத்தார்கள். நிர்வாகச் செய லாளர் சங்கருடைய பாஸ்போட்டையும் அவனுேடு வந்தி ருந்த மற்ற இலங்கை வாலிபர்களுடைய பாஸ்போட்டுகளை யும் வாங்கிக் கொண்டார். இனிமேல் அவர்கள் விடுமுறை யில் திரும்பிச் செல்லும்போது தான் பாஸ்போட்டுக்களைத் திருப்பிக் கொடுப்பார்களாம். அதுவரைக்கும் கொம்பனிச் சட்டதிட்டங்களுக்கு அமைந்து நடக்க வேண்டும். தகராறு செய்தால் பொலிசாரின் உதவியுடன் திரும்பவும் இலங் கைக்கே அனுப்பி விடுவார்களாம். பாரதூரமான குற்றங் களென்ருல் குவைத்தில் சிறையும் வைத்து விடுவார்கள்.
அபுகலிபா என்ற இடத்தில் காம்ப் கட்டியிருந்தார்கள். சுமார் இருநூறு தொழிலாளர்களை அங்கு குடியமர்த்தினர் கள். கீழேயும் மேல்மாடியிலுமாகச் சுமார் இருபத்தைந்து அறைகள் இருக்கும். ஒவ்வொரு அறைக்குள்ளும் ஆறுபேர் வீதம் தங்க வைத்தார்கள். கீழேயும் மேலேயுமாகப் பொருத் தப்பட்ட இரட்டை ஸ்பிரிங் கட்டில்கள், சியெஸ்ரா மெத் தைகள், தலையணை, பெட்சீட், ரவல், சோப், சலவை செய் யும் ரைட் பவுடர் எல்லாம் கொடுத்தார்கள். ஒவ்வொரு

விமானங்கள் மீண்டும் வரும். 11
admiraraka
அறைக்கும் தனித்தனி ஏயர்கன்டிஷன் பொருத்தப்பட்டி ருந்தது. வெளியே பிரயாணம் செய்து வெக்கையில் வாடிப் போன சங்கருக்குக் குளுகுளு வென்ற ஏயர்கண்டிஷன் றும் இதமாக இருத்தது. வெளிநாட்டுக் கொம்பனிகளைப் பற்றித் தான் கேள்விப்பட்டவற்றை மனத்தில் வைத்துப் பயந்த காரணத்தால் வீட்டில் இருந்து தலையணியும் பெட்சீட்டும் கொண்டு வந்த சங்கருக்கு இங்கு கொம்பனியில் வழங்கப் பட்ட வரவேற்பு மிகவும் வியப்பாக இருந்தது.
நாளடைவில் எல்லாக் கொம்பனிகளிலும் இப்படி இல்லை என்பதைத் தெரிந்து கொண்டான்.
"இப்பிடி ஏயர் கொண்டிஷன் றுாமையும், மெத்தை யையும் உன்ரை வாழ்க்கையிலே கண்டிருப்பியாடா” என்று அந்தோனி அடிக்கடி கேட்டுக் கொள்வான்.
காம்ப்பில் கீழே டைனிங்ஹோலும் ரி. வி. றுரமும், பாத் றுாம்களும் கட்டப்பட்டிருந்தன. மாடியிலும் பாத்றுாம்கள் இருந்தன. மலகூடமும் பாத்றுாமும் ஒன்றுகவே கட்டியிருந் தார்கள். சங்கர் அலுப்புத்தீரக் குளிப்பதற்காகச் சென்றன். தண்ணீரின் சூடு தாங்கமுடியவில்லை. மேலே தகர டாங்கி களில் சேகரித்த தண்ணிர் வெய்யில் சூட்டில் சூடேறித்தான் இப்படிக் கொதித்தது. அனேகமானவர்கள் இரவில் குளிப்பை வைத்துக் கொண்டார்கள். சிலர் பெரிய வாளிகளில் தண் னிரை நிரப்பி விட்டுச் சூடு ஆறின பிறகு குளித்தார்கள்.
குவைத்தில் எல்லாவீடுகளின் மேலும் தண்ணிர்த்தாங்கி கள் கட்டப்பட்டிருக்கும். தினமும் பவுசர்களில் தண்ணிர் கொண்டு வந்து "பம்ப்" செய்வார்கள். ஒரு பவுசர் தண்ணீர் இலங்கைக் காசில் சுமார் நானுாற்றைம்பது அல்லது ஐநூறு ரூபாய் வரும். காம்ப்பின் கூரைக்கு மேல் மூன்று அலுமி னியத் தண்ணீர்த் தாங்கிகள் இருந்தன.
மறுநாளே வேலைத்தளத்திற்குக் கூட்டிச் சென்ருர்கள். வெளிநாடுகளில் இருந்து தூள் சீமெந்தை கப்பல் கப்பலாக வாங்கி அதைப் பக்கற்றுக்களில் அடைத்து ஈராக்கிற்கு விற்

Page 14
12 நெல்லை க. பேரன்
பனே செய்வதுதான் அந்தக் சம்பனியின் முக்கிய வியாபார மாக இருந்தது. ஈரான் - ஈராக் யுத்தத்தினுல் ஈராக்கின் இடிந்து போன கட்டிடங்களைச் சீர்படுத்தவும், புதிய வீதி களை அமைக்கவும் அதிகமான சீமெந்து தேவைப்பட்டது. இதன் பெரும் பகுதியை வழங்கும் குத்தகை ஒப்பந்தம் சங்கர் தொழிலாளியாக வேலை செய்த அக்கம்பனிக்குக் கிடைத் திருந்தது. அந்தோனி கப்பல் தள உதவியாளாகச் (டெக் ஹாண்ட்) சேர்ந்திருந்தான். சங்கருக்கு எண்பது அமெரிக்க டாலர்களும் அந்தோனிக்கு நூறு அமெரிக்க டாலர்களும் சம்பளமாகக் கிடைத்தன. சங்கர் இரவு பகலாக ஓவர்ரைம் செய்து சுமார் நூற்றைம்பது டாலர்களை (ஒரு டாலர் இரு பத்தாறு ரூபாய் மட்டில்) உழைத்தான். சில மாதங்களில் ஓவர்ரைம் கிடைக்காது.
குவைத்தின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றன சுஹைபா’ துறைமுகத்திலேயே சங்கரும் நண்பர்களும் வேலை செய்ய வேண்டிய தொழிற்சாலை மிதந்து கொண்டிருந்தது. ஆம். அது ஒரு கப்பல். ஆங்கிலத்தில் ‘பாஜ்' என்று சொல்வார் கள். சுமார் நூற்றைம்பது அடி நீளமும் நாற்பத்தைந்து அடி அகலமும் கொண் ட அக்கப்பலில் என்ஜின்றுாம், ஸ்ரோர்றும், மனேஜரின் ஒவ்வீஸ் (பாஜ் கப்டனை மனேஜர் என்பார்கள்) றேடியோறுாமும் கப்டனின் ஒவ்வீசும், பைக் கற் செய்யும் மெகரின்கள் உள்ள பகுதி, தொழிலாளர் கன் டீன், ஒவ்வீசரின் மெஸ் என்று பல பகுதிகள் இருந்தன. சீமெந்துத் தூளை இருப்பில் வைக்கும் நான்கு பெரிய கிடங்கு கள் (ஹச் என்பார்கள்) இருந்தன. இக்கிடங்குகளுக்குள் சீமெந்தை ஹைட்ரோலிக் பவரினல் தானே திறந்து மூடும் இரும்பு வாளிகளைத் தூக்கியும் அங்கும் இங்கும் ஆட்டியும் வேலைசெய்யும் நான்கு விஞ்சுகள் (கப்பிகள்) இருந்தன. இந் தக் கப்பிகளை இயக்குவதற்காக இலங்கையில் துறைமுகங் களில் வேலைசெய்த பதினன்கு விஞ்ச் ஒப்ரேட்டர்களும் வந் திருந்தார்கள். இவர்கள் ஏற்கனவே ஈராக்கில் வேலை செய் தவர்கள். இவர்களுக்கு முன்னூறு டொலர் தொடக்கம் முன் னுாற்றி முப்பதுவரை சம்பளமாக வழங்கப்பட்டது.

விமானங்கள் மீண்டும் வரும் . 13
sur
சங்கர் அங்கு சேர்ந்த சில தினங்களுக்குள்ளேயே பல விடயங்களை அறிந்து கொண்டான். ஆங்கிலம் நன்கு பேசத் இதரிந்ததால் வெள்ளைக்கார மனேஜரின் நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டு விரைவில் அவருடைய “மெஸ்போய்” ஆக மாறிவிட்டான். மனேஜரின் கிளார்க் ஆக ஒரு யாழ்ப் பாணத் தமிழரே வந்திருந்தார். இவர் அரசாங்க திணைக் களம் ஒன்றில் இருந்து இரண்டு வருடங்கள் சம்பளமற்ற விடுமுறை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். ஆங்கிலத்தில் கடிதங்களை ரைப்செய்வதும் மனேஜருக்கு உதவியாக எழுத்து வேலைகளைக் கவனிப்பதும் வயர்லசில் கதைத்துத் தகவல்களைச் சேகரிப்பதும் கொடுப்பதும் இவரது கடமைகளாக இருந்தன. சங்கரின் பொறுப்புணர்வும் குடும்பக் கஷ்டங்களும் அமைதி யான நடவடிக்கைகளும் கிளாக்கரை மிகவும் கவர்ந்திருந் தன. இருவரும் நேரம் கிடைக்கும் போது தமது சுகதுக்கங் களைப் பகிர்ந்து கொள்வார்கள். கிளாக்கருக்கு நூறுடொலர் களே வழங்கப்பட்டது. ஒவர்ரைமுடன் சேர்த்து இவர் சரா சரி நூற்றைம்பது அல்லது நூற்றியெழுபது டொலர்களை உழைத்தார். சாப்பாடு, தங்குமிட வசதிகளைக் கொம்பனியே கவனித்துக் கொண்டதால் பரவாயில்லாமல் இருந்தது.
இலங்கை எஞ்சினியர்களும், வெள்ளைக்கார எஞ்சினி யர்களும் கிரேக்க கப்டன் ஒருவரும் அக்கப்பலில் வேலை செய் தனர். இலங்கை எஞ்சினியர்கள் அன்பாக வேலை வாங்கு வார்கள். ஒரு சிலர் தொழிலாளர்களுடன் கண்டிப்பாக நடந்து கொண்டாலும் அவர்களுடைய சுகதுக்கங்களில் மிக வும் அக்கறையோடு கலந்து கொள்வார்கள். முதலாளி லெப ஞனைச் சேர்ந்த அராபியராக இருந்தபடியால் இலங்கைத் தொழிலாளர்களைக் கொண்டு வேலை வாங்குவதற்காக வெள் ளைக் காரர்களை எஞ்சினியர்களாக வைத்து நல்ல சம்பளம் கொடுத்தார். ஒரு தடித்த எஞ்சினியர் மட்டும் சற்றுக் கொடூரமாக நடந்து கொண்டார். தொழிலாளர்களுடன் கண்டபடி ஏசியும் அதட்டியும் வெருட்டியும் நடந்து கொள் வார். சங்கருக்கு இவரைக் கண்டாலே பயந்தான் வரும்.

Page 15
14 \ நெல்லை க. பேரன்
எத்தனை தடவை ‘ரீ” ஊற்றிக் கொடுத்தாலும் ஏதாவது ஒரு குறை கண்டு பிடிப்பார். வெயிலில் களைத்து வேலை செய்து விட்டு வரும் தொழிலாளிகள் சற்று ஆறுதலாகக் கன்ரீனில் இருந்து தேனீர் குடிப்பதைக் கண்டால் அவருக் குப் பொறுக் காது. உடனே ‘வட் ஆர் யூ டூயிங்” என்று கேட்டுக் கொண்டே மேய்ப்பவர் போல வந்து நிற்பார், தேனீர் கலந்த பாத்திரத்தை அப்படியே கடலினுள் தூக் கிக் கவிழ்த்து ஊற்றிய சந்தர்ப்பங்களும் உண்டு. நாடுகளை அடக்கியாண்ட ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பிரதிநிதி களின் எச்ச சொச்சங்களின் சின்னமாகவே இந்தப் பருத்த ਕਰਨ பற்றிச் சங்கர் நினைத்தான். அந்தோனி அவரை வேண்டுமென்றே தமிழில் தூஷணத்தால் ஏசுவான். அவருக்குத் தமிழ்தெரியாததால் தப்பித்தான். இல்லாவிடில் அன்றைக்கே மனேஜரிடம் றிப்போட் பண்ணி ரிக்கற்றை வாங்கிக் கொடுத்திருப்பான்.
குவைத்திற்கு வந்து இரண்டு வாரங்களாக பாகீல் நக ரத்தில் உள்ள இந்திய, கேரள முதலாளிகளின் உணவுக் கடைகளிலேயே உணவுக்குக் கூட்டிச் சென்ருர்கள். சாப்பிட ஆரம்பிக்க முதலேயே கிரஷ் குடிப்பார்கள். பின்பு சப்பாத்தி, முட்டை, கோழி, இறைச்சி என்று நன்முகக் கேட்டுச் சாப் பிடுவார்கள். இப்போதைய விலைவாசியில் ஊரில், கடை களில் இப்படிச் சாப்பிடுவதென்ருல் ஒரு ஆளுக்கு வேளைக்கு நூற்றிஐம்பது ரூபாய் முடியும். நாளடைவில் பாகீலில் உள்ள கேரளத்து முதலாளியையே காம்ப்பில் உள்ள கன்டீன நடத் தும்படி குத்தகை பேசிக் கொடுத்து விட்டார்கள். இதனுல் மத்தியானத்தில் சோறும், இரவில் சப்பாத்தி அல்லது பாணும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் தோசையும்கிடைத் தன. தொடர்ந்து ஒரே வகையான சாப்பாடுகளைச் சாப் பிட்டதால் சங்கருக்கு நாக்குச் சப்புக் கொட்டியது. லீவு நாளான வெள்ளிக்கிழமைகளில் பாகீலுக்குப் போய் அந் தோனி இருல், மீன், நண்டு என்று வாங்கி வருவான். தங் களுடைய அறைக்குள்ளேயே ஹிட்டரைப் பொருத்தி அதில் ஏதாவது சிறு பாத்திரங்களை வைத்துச் சமைப்பார்கள். வெங்

விமானங்கள் மீண்டும் வரும் . 15
க்ர்யம், மிளகாய், பட்டர், ஒலிவ்எண்ணெய் என்பனவற்றைக் கேரளத்து அண்ணுச்சியிடமே கேட்டு வாங்கிக் கொள்வார் க்ள். அண்ணுச்சி தமிழ்ப் பொடியளுடன் மிகவும் அனுதா பத்துடன் நடந்து கொள்வார். சங்கரும் அந்தோனியும் சாதி, மத, மொழி வேறுபாடின்றி எல்லோருடனும் அன் பாகவே பழகி வந்தார்கள். சங்கர் எட்டாம் வகுப்பு வரை சிங்களம் படித்திருந்தான். உத்தியோகங்களுக்கு விண்ணப் பிப்பதற்காக முன்பு படித்ததால் இப்போது காம்ப்பில் உள்ள சிங்கள நண்பர்களுடன் சேர்ந்து மெல்ல மெல்லச் சிங்களம் பேசவும் கற்றுக் கொண்டான். கொம்பனியில் றைவராக இருக்கும் சில்வா நீண்ட காலமாக அங்கு வேலை செய்வதால் ரி. வி, வீடியோ, டெக் எல்லாம் எடுத்து வைத் திருந்தான். பக்கத்து அறை என்பதால் சங்கர் அங்கு அடிக் கடி படம் பார்க்கப்போவதும் கதைப்பதும் வழக்கமாக
இருந்தது.
3
அடைவு வைத்த நகைகளை விரைவில் மீண்டு விடவேண் டும் என்றும் ஊர்ப்புருேக்கர் திலகத்திற்கு எங்கேயோ மாப் பிள்ளை பார்த்துத் திரிகிருர் என்றும் அம்மாவின் கடிதம் அடிக்கடி வந்து கொண்டிருந்தது. சங்கர் ஒவ்வொரு த்ட வையும் ஊருக்கு எழுதும்போது தான் நன்முகச் சாப்பிடு வதாகவும் வசதியாக இருப்பதாகவும் மாதாமாதம் அனுப் பும் பணத்தில் சீட்டுக்கட்டி அடைவு நகைகள்ை மீளும் படி யும் எழுதுவான். அதிக பணம் அனுப்ப வேண்டும் என்பதற் காகத் தன்னுடைய மெஸ்போய் வேலை  ைய முடித்துக் கொண்டு ஓவர்ரைம் வேலையாகக் கீழே கொட்டுண்ட சீமெந்

Page 16
6 நெல்லை க. பேரன்
தைப் பைக்கற்றுகளில் அள்ளிக்கொடுத்தும், கப்பல் தளத் தின் கறள்களைச் சுரண்டியும், கிணறு போன்ற ஹச்சுகளுக் குள் இறங்கிக் கட்டிபட்டசிமெந்தைக் கடப்பாரினல் அடித்து நொறுக்கித் தூளாக்கியும் கஷ்டப்பட்டு வேலை செய்வான். இடுப்பில் பெல்டைக் கட்டிக் கொண்டு அந்தரத்தில் தொங் கிக் கப்பல் தளங்களையும் புறப்பாகங்களையும் சுரண்டும் போது பார்ப்பவர் கண்கள் கலங்கும். ‘ஹச் கிளினிங்" என் முல் கொம்பனியில் தனியான ஸ்பெஷல் ஒவர் ரைம். ஒரு ஹச் கிளின் பண்ணப் பத்து முதல் பன்னிரண்டு தொழிலா ளர்கள் உள்ளே இறங்குவார்கள். முகத்திற்கு மாஸ்க், கண் களுக்குப் பாதுகாப்புக் கண்ணுடி (கொகிள்ஸ்), தலைப்பாகை எல்லாம் போட்டுக் கொண்டு சுமார் நாற்பத்தைந்து அடி ஆழமான ஹச்சுக்குள் இறங்கிச் சீமெந்துப் புழுதிப்படலம் மூடி மறைக்க வேலை செய்பவர்கள். பொப்காட் இயந்திரம் கட்டிச் சீமெந்துகளை உடைத்துக் கூட்டித் தள்ளிக் கொண் டிருக்கும். மேலே விஞ்ச் இரும்பு வாளிகள் வேலை செய்து கொண்டிருக்கும். கரணம் தப்பினல் மரணம் என்ற கழைக் கூத்தாடியின் நிலைமையில்தான் இந்த வேளையில் தொழிலா ளர்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
மனேஜரும், உதவிக்கப்டன்களும், எஞ்சினியர் மாரும், கொன்றேல் றுாம் ஒப்பறேட்டரும், விஞ்ச் ஒப்பறேட்டர் களும் துரிதமாக வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
சங்கரோடு சேர்ந்து அந்தோனியும் ஹச்சினுள் இறங்கி விடுவான். சீமெந்து கொண்டு வருகின்ற ஒவ்வொரு கப்பல் களிலும் ஹச் கிளினிங் இருக்கும். ஜப்பானியக் கப்பல்களி லும் கிறீக் கப்பல்களிலும் சீமெந்து கொண்டு வருவார்கள். சீமெந்தை அள்ளி மிதக்கும் பாஜ்ஜினுள் போட்டதும் அவர் களுடைய கப்பல்களைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக் கும் மெக்கானிக்குகளுக்கும் சில வேளைகளில் கேஸ் கணக் கில் பியர் கொடுப்பார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் ஆந்தோனி சங்கரின் பங்கையும் சேர்த்து வாங்கிவிடுவான். கிறீக்கப்பலில் இலங்கை வாலிபர்களும் வருவார்கள். இவர் *" °ந்தால் அன்று கொண்டாட்டந்தான். ஒருவரை ஒரு

விமானங்கள் மீண்டும் வரும். 17
வர் அன்போடு உபசரிப்பார்கள். பாஜ்ஜில் உள்ள தொழி லாளர்கள் சோற்றுப்பார்சலைக் கொடுத்துவிட்டுப் பதிலுக் குக் கப்பல்களுக்குள் உள்ள இலங்கையர்களின் கபின்களுக் குச் சென்று வேண்டிய மட்டும் குடிப்பார்கள். புளூபிலிம் பார்ப்பார்கள். கடலுக்குள் நடக்கும் இக்காரியங்களைச் சட்டம் எதுவும் செய்யாமலிருக்கும்.
ஆறுமாதங்களில் சங்கர் நகைகளை அடைவு மீட்பதற் குத் தேவையான பணத்தை அனுப்பி விட்டான். வெள்ளிக் கிழமைகளில் குவைத் சிற்றியான ‘சவாத்தில் உள்ள ஒமான் எக்சேஞ்ச் கொம்பனி அல்லது ஹபீப்எக்சேஞ்ச் கொம்பனி யில் சென்று டினர்களைக் கொடுத்து அமெரிக்க டொலர் களாகவோ அல்லது இலங்கை ரூபாயாகவோ டிருவ்டுகளே எடுத்துத் தாயாரின் பெயருக்கே பதிவுத்தபாலில் அனுப்பி விடுவான். எக்சேஞ்ச் கொம்பனிகளில் பதிவுத் தபாலுக்கான பணத்தைக் கொடுத்தால் அவர்களே டிருவ்ட்டையும் கடிதத் தையும் சேர்த்து உரியவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள் பணம் அனுப்புவதற்காகச் சிற்றிக்குப் போகும் நாட்களில் அந்தோனி மிகவும் குதூகலமாக இருப்பான். பாகீலில் இருந்து 101 பஸ் எடுத்து “முருகாப்” சிற்றி பஸ் நிலையத் திற்குப் போவார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு கடமை யாற்றும் இலங்கைப் பணிப்பெண்களில் அனேகர் முருகாப் பில் உள்ள கனிசாவுக்கு வருவார்கள். சேர்ச்சையும் அதைச் சூழவுள்ள பூங்காவையும் கணிசா? என்று சொல்வார்கள். எல்லாப் பெண்களும் இங்கு வழிபாட்டிற்கு வருவதில்லே. பாகிஸ்தானிய, இந்திய, இலங்கை ஆண்களுடன் நட்புக் கொண்டு பார்க்கிலும் தனிப்பட்ட இரகசிய வீடுகளிலும் கூட்டிச் சென்று சிலர் முறைகேடாகவும் நடந்து கொள் கிருர்கள். இதனல் பெண்களுக்கு நிறையப்பணம் கிடைக் கிறது. இந்த விதமாக மாதமொன்றுக்கு ஐயாயிரம் முதல் ஆருயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கும் பெண்களைப்பற்றியும் சங்கர் கேள்விப்பட்டிருக்கிருன், முருகாப் பஸ்நிலையத்திற்கு வரும் பஸ்களில் சிங்களத்தில் எழுதப்பட்ட எமது நாட்டு

Page 17
8 - - - - நெல்லை க. பேரன்
மானத்தைக் காப்பா ற் று ங் கள் என்ற கோரிக்கைகளைக் காணும்போது சங்கருக்குக் கவலையாயிருக்கும்.
வரும்போது விமானத்தில் சந்தித்துப் பழகிய பெண்ணை அந்தோனி கனிசாவில் இனங்கண்டு கொண்டான். இவ்வ ளவு நாளும் யாரோ ஒரு பாகிஸ்தானிய முதியவருடன் தொடர்பு வைத்திருந்த அவள் இப்போது அந்தோணியை இறுகப் பிடித்துவிட்டாள். அந்தோனி தன் சம்பளத்தின் பெரும்பகுதியை அவளுக்காகவே செலவழிக்கத் தொடங்கி
விட்டான்.
றைவர் சில்வாவையும் வேறு பல சிங்கள, முஸ்லீம் நண் பர்களையும் கனிசாவில் வெவ்வேறு பெண்களுடன் கண்டான். சில்வாவுக்குக்கண்டியில் ஏற்கனவே மனைவியும் இரண்டுகுமர்ப் பிள்ளைகளும் உள்ளார்கள். அப்படியிருந்தும் அவன் குவைத் தில் இன்னுெரு பணிப்பெண்ணை மனைவியாக வைத்திருக் கிருன் என்று கேள்விப்பட்டான். ஒருநாள் நாசூக்காக இது பற்றிக் கேட்டபோது இது தன் மனைவிக்குத் தெரியுமென் றும், அதனல் பரவாயில்லே. வெளிநாட்டிலிருக்கும் வரை தானே. கட்டுநாயக்கா போனதும் எல்லாம் மறந்து போகும் என்ருன்.
வாழ்க்கை, ஒழுக்கம் என்பனவற்றை இங்கு வாழ்பவர் கள் மிகவும் சாதாரணமாகவே கருதுவதைக் காணமுடிந்தது. சங்கர் விரும்பினுல் தன் மூன்று சகோதரிகளையும் இங்கு வேலைக்குக் கூப்பிட்டிருக்க முடியும். ஒரு ஹஜ்ஜியிடம் அவர் களுடைய படத்தைக் காட்டினல் போதும். அவன் உடனே விசா எடுக்க அலுவல் பார்க்கத் தொடங்கிவிடுவான். நல்ல அராபியக் குடும்பங்களில் வேலை செய்யும் எத்தனையோ பணிப்பெண்கள் தமது திறமையினல் தமது எஜமானகிய ‘பபா’வைக் கவர்ந்து அவர்களின் உதவியினல் இலங்கையில் உள்ள தமது தம்பிமாரையும், காதலர்களையும் றைவர்மா ராக வேலைக்குச் சேர்த்துக் கொண்ட சம்பவங்களையும் சங் கர் அவதானிக்க முடிந்தது.

விமானங்கள் மீண்டும் வரும் . 19
4
காம்பில் அந்தோணியின் நடவடிக்கைகளினல் சங்கர் நாளுக்குநாள் கவலைப்பட்டான். குடிப்பது அங்கு தடை என் ருலும் ட்ரக் சாரதிகளின் உதவியினல் ஈராக்கிலிருந்தும் பாஜ்ஜில் வேலை செய்யும் விஞ்ச் தொழிலாளர்கள் மற்றும் சில இளைஞர்களினலும் வெளிநாட்டுக் குடிவகைகள் பிளாக் கில் விற்பனையாகின்றன. கப்பல்களில் இலங்கை அல்லது வெளிநாட்டுமாலுமிகளினல் களவாகவிற்கப்படும் ஸ்கொட்ச் விஸ்கி அல்லது பிரண்டியை ஐந்து டொலர் கொடுத்து வாங் கிச் சுங்கப் பகுதியினரின் கண்களில் மண்ணைத்தூவி விட்டுக் காற்சட்டையால் மூடி வெளியே தெரியாமல் சப்பாத்து, ஷொக்ஸ்களுக்குள் மறைவாக வைத்துக் கட்டிக் கொண்டு வருவார்கள். அந்தோனிக்கு இது கைபட்ட பாடு. பிளாக் கில் கொண்டு வருவதைத்தானும் குடித்து மற்றவர்களுக் கும் விற்பான். சில குடிப்பிரியர்கள் இருபது டிஞர் வரை கொடுத்து (இலங்கைப் பணத்தில் ரூபா 1500/-) ஒரு போத் தல் ஸ்கொட்ச்விஸ்கி வாங்கிக் குடிப்பதும் உண்டு. இத்தோடு அந்தோனி வேறு சில நண்பர்களுடன் சேர்ந்து லோக்கலா கக் காம்பிலேயே குடிவகை தயாரிக்கவும் களவாக விற்கவும் தொடங்கிவிட்டான். சிங்களத்தில் இதை "அளஹொதி. என்று பிரபல்யப்படுத்தினர்கள். கள்ளின் சுவை இருக்கும். பேரீச்சம்பழம், திராட்சைப்பழம், அப்பிள்பழம் என்பவற் றைப் பெரிய பாத்திரத்தினுள் போட்டு இரண்டு வாரங் களுக்கு நீருற்றி ஈஸ்ட்டும் போட்டு நொதிக்க வைப்பார்கள்’ சிலர் பழைய இரும்புக் கம்பியையும் இதனுள் போடுவதாகக் கேள்வி. பிற்கு நன்முக வடித்துப் போத்தல்களில் அடைத்து ஒரு போத்தல் ஒரு டினர் என்று (எழுபத்தைந்து ரூபா) விற்பார்கள். இப்படிச் சம்பாதித்தே ஒரு காவலாளி ஊருக்கு நல்ல காசு அனுப்பி வைக்கிருர். இந்த லோக்கல் தயாரிப்பை இரவிரவாக அருந்தி விட்டுக் காம்ப்பில் பாடியும், ஆடியும்,

Page 18
20 நெல்லை க. பேரன்
சண்டை பிடித்தும் க2ளத்துப்போகும் சில இளைஞர்கள் மறு நாள் வேலைக்கு ஒழுங்காக வரமாட்டார்கள். இவர்களுள் அந்தோனியும் ஒருவனனன். இன்னெருநாள் அந்தோனியின் குவைத் ஆலியான அந்த விமானச் இனேகிதி அவனைத் தேடிக்கொண்டு காம்ப்புக்கே வந்துவிட்டாள். ஒருபகல் முழு வதும் அவனுடைய அறையில் தனியாக இருந்தார்கள் என்ற விஷயம் கொம்பனி நிர்வாகத்தினருக்குத் தெரிந்து விட் டது. தான் கெட்டதோடு மற்றத் தொழிலாளர்களையும் கெடச் செய்கின்றன் என்ற காரணத்தினுல் கொம்பனி நிர் வாகம் அந்தோனிக்குச் சீட்டுக் கிழிக்க நடவடிக்கை எடுத் தது. தன்னே அனுப்பப் போகின்றர்கள் என்று தெரிந்ததும் ஒரு நாள் பின்னேரம் “சிற்றிக்கு’ என்று போன அந்தோனி ஒரும்பி வரவேயில்லை. ஒரு வாரத்திற்கு முன்புதான் பக்கீர் என்ற ரலிகிளார்க் ஒருத்தன் ஈராக் லொறி ஒன்றில் 5 பைக்கற் சீமேந்தைக் கூடுதலாக ஏற்றி அனுப்பினன் என்பதற்காகவும் றைவரிடம் பத்து டினர் லஞ்சம் வாங்கி ஞன் என்பதற்காகவும் மனேஜரிடம் பிடிபட்டு விசாரணையில் இருந்தான். ஒருநாள் இரவு அவனும் காம்ப்பை விட்டு வேறு எங்கோ ஓடிவிட்டான்.
இப்படிக் கொம்பனிகளுடன் பிரச்சனைப்பட்டு வேறு கொம்பனிகளுக்குக் களவாக ஒடுபவர்களது எண்ணிக்கை குவைத்தில் சகஜமாகிவிட்டது. ஆனல் சமீபத்தில் அங்கு கொண்டுவரப்பட்ட தொழிற்சட்டம் இப்படியான நடவடிக் கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
இப்படி வேறு இ டங்களுக்குக் களவாக ஒடுபவர்கள் கூடிய சம்பளத்தில் எங்காவது வேலே செய்துவிட்டுத் தமது விசா முடிவடையும் காலத்தில் பொலிசில் பிடிபடுவார்கள். அப் போது பொலிசார் இவர்களை வேலைக்குச் சேர்த்த கொம்ப னியிடம் கூட்டி வந்து பாஸ்போட்டையும் ரிக்கற்றையும் வாங்கி உடனே தாய் நாட்டிற்குத் திருப்பி அனுப்புவார்கள். ಆಹಾ...? குழப்படிகள் செய்தாலும் அந்தோனி கு மிகவும் உதவியாக இருந்தான். தொழில் செய்யும்

விமானங்கள் மீண்டும் வரும். 21
போதும் சங்கர் உடல் நோகிருன் என்ருல் உடனே அந்த இடத்திற்கு ஓடிச்சென்று உதவி செய்வான். பாகீலில் மாதத் தில் ஒரு தமிழ்ப்படம் போடுவார்கள். சிலவேளைகளில் மலை யாளப்படங்கள் போடுவார்கள். இருவரும் சேர்ந்தே தியேட் டருக்குப் போவார்கள். எப்போதாவது வெள்ளிக்கிழமை களில் ஹருஜ்ஜுக்குப் போய் அங்குள்ள மொத்த விற்பன வுச் சந்தையில் விற்பனையாகும் பொருட்களில் தமக்கு வாங் கக் கூடியவற்றை வாங்குவார்கள். பழைய, பாவித்த பொருட் களும் அங்கு மலிவாக விற்பனைக்கு வரும். சங்கருக்கு இந்த ஆவணியில் விடுமுறை என்பதால் ஹருஜ்ஜில் ஏழு டினர் கொடுத்துக் கறுப்புச்சிவப்புக் கட்டம் போட்ட லெதர் சூட் கேஸ் ஒன்று வாங்கினன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளி லும் ரவுணுக்குப் போகும் வேளைகளில் சிறிது சிறிதாகப் பொருட்களை வாங்கினன். மூன்று சகோதரிகளுக்கும் பொருத் தமான சாறிகள் வாங்கினன். ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்க வுள்ள குளிர்கால சீசனுக்காகக் கம்பளி உடுப்புக்கள் வாங் கினன். குளிர்காலம் தாங்கமுடியாதது என்று எல்லோரும் பயமூட்டினர்கள். தானும் அந்தோனியும் சேர்ந்து திரிந்த இடங்களையும் வாங்கிய பொருட்களையும் சங்கர் ஞாபகப் படுத்திப் பார்ப்பான். ஆமதியில் உள்ள அழகான பூங்கா வையும் குவைத் சிற்றிக்கு அண்மையிலுள்ள மூன்று உயர்ந்த கோபுரங்களைக் கொண்ட சுழரும் ஹோட்டலையும், றெக் காவின் பிரபலமான அல்அடான் அரசினர் ஆஸ்பத்திரியை யும், ஜாராவில் உள்ள பல்கலைக்கழக கட்டிடங்களையும், அழ கான மசூதிகளையும் அவனல் மறக்க முடியாது.
அந்தோனி இல்லாதது அறையில் சப்பென்று இருந்தது. எப்போதாவது சில்வாவின் அறைக்குள் போய் ரி. வி. பார்ப் பான். சில்வாவின் அறை நண்பன் தயாரத்ன இப்போது அரை டினருக்கு மயிர்வெட்டத் தொடங்கியிருந்தான். பாகீல் ரவுனில் ஒரு டிஞர் கொடுத்து இந்தியர்கள் அல்லது பாகிஸ் தானியருடைய சலூன்களில் மயிர்வெட்ட வேண்டும். தயா ரத்னவிடம் அரைடினருக்கு அழகாக வெட்டலாம். பாகீல் போறதுக்கு பஸ் செலவும் மிச்சம்.

Page 19
22 நெல்லை க. பேரன்
சில்வாவை அதிகம் அறையில் காணமுடியாது. அவன் லீவு நேரத்தைப் பெரும்பாலும் தன் காதலியின் அறையி லேயே கழிப்பான். சில சந்தர்ப்பங்களில் வேறு நண்பர்களை யும் அங்கு கூட்டிச் செல்வான். அவனது காதலியும் அவ் வாறே தன் சினேகிதிகளை அங்கு வரச் செய்வாள்.
அந்தோனியும் பக்கீரும் வேறு சிலரும் கொம்பனியை விட்டு ஓடியதற்குக் கொம்பனி பத்திரிகைகளில் படங்களைப் போட்டு விளம்பரங் கொடுத்திருந்தது. அதாவது இவர்களை வேறு கொம்பனிகளில் வேலைக்குச் சேர்ப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே. இதன் பிறகு அவர் களைத் தேடுவார் இல்லை. திடீரென்று ஒருநாள் இரவு பன் னிரண்டு மணிக்கு அந்தோணி அறைக்கு வந்து தன்னுடைய சில உடுப்புக்களை எடுத்துச் சென்றன். ஜாராவில் உள்ள கராஜ் ஒன்றில் தான் வேலை செய்வதாகவும் நல்ல சம்பளம் என்றும், விரும்பினுல் சங்கரை ஓடிவரும்படியும் வற்புறுத் தினன். சங்கர் மறுத்துவிட்டான். அவன் வாயில் மதுவாடை வீசியதைச் சங்கர் அவதானித்தான். அவன் போய்விட்டான்.
குளிர்காலம் மெல்லமெல்ல ஆரம்பித்தது. அபுஹலிபா கடற்கரையில் காய்ந்து போய் இருந்த செடிகளில் சில பூக்க ளைக் காணக்கூடியதாக இருந்தது. ஆங்காங்கே காணப்பட்ட பேரீச்சமரங்களிலும் காய்கள் பிடிக்க ஆரம்பித்தன. சங்கர் இப்போது அபுஹலிபா கடற்கரைக்குக் குளிக்கப் போவதை நிறுத்தியிருந்தான். வெள்ளிக்கிழமைகளில் ஊர் நண்பனுன சூரியிடம் போக ஆரம்பித்திருந்தான். சூரி அங்கு கிளினிங் கொம்பனி ஒன்றில் தொழிலாளியாக இருக்கின்றன். பல் கலைக்கழகங்கள், ஆஸ்பத்திரிகள், பாடசாலைக் கட்டிடங்கள், துறைமுகங்கள் தெருக்களைச் சுத்தப்படுத்துவதே அக்கொம் பனியின் வேலை. நல்ல ஓவர்ரைம் கொடுக்கின்றர்கள். அத் தோடு சூரி லீவு நாட்களில் அராபியர்களின் வீடுகளுக்குச் சென்று அங்குள்ள சிறுவேலைகளைக் கேட்டுச் செய்வான். ஜன்னல் கண்ணுடிகள், கம்பளங்களைச் சுத்திகரிப்பதற்குத் தனியாகப் பணம் கொடுப்பார்கள். பீச்சிற்கும் ரவுணுக்கும்

விமானங்கள் மீண்டும் வரும். 23
போனல் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களைக் கழுவினல் காருக்கு ஒரு டினர் அல்லது அரை டினர் கொடுப் பார்கள். ஒருவாளி தண்ணீரும் ஒரு துடைக்கும் துணியும் இருந்தால் ஒரே நாளில் ஒன்பது பத்துக் கார்களைக் கழுவ லாம். குவைத்தின் சுவாத்தியம் விசித்திரமானது. திடீரென்று காற்று வீசித் தூசி கிளப்பிக் கட்டிடங்களையும் கார்களையும் அழுக்காக்கிவிடும். மழையைக் காண்பதே அருமை.
சூரியுடன் சேர்ந்து தானும் கார் கழுவவும் வீட்டு Gວນອ່ືນ களைச் செய்யவும் போக வேண்டும் என்று சங்கர் விரும்பி னன். சூரியும் உதவி செய்ததால் தன்னுடைய கொம்பனி நிர்வாகத்தினருக்குத் தெரியாமல் களவாகச் சூரியுடன் சேர்ந்து லீவு நாட்களில் பிறைவேற் வேலை செய்து சம்பா தித்தான்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு புவனத்தின் கடிதம் வந்தி ருந்தது. தன்னுடைய தையல் வகுப்பு முடிந்து விட்டது என்றும் சங்கர் அனுப்பிய காசில் சிங்கர் தையல் மெஷின் ஒன்றுக்கு ஒடர் கொடுத்திருப்பதாகவும் எழுதியிருந்தாள். மூத்தக்கா திலகத்தின் கலியாணமும் சரிவரும் போல இருக் கென்றும் ஆவணியில் லீவில் வரும்போது குறைந்தது முப் பதினயிரமாவது கையில் கொண்டு வந்தால் இருக்கிற காணி யையும் நகைநட்டையும் கொடுத்து ஒரு மாதிரி ஒப்பேத் தலாமெண்டும் எழுதியிருந்தாள். புருேக்கர் முருகேசர் பேசி வந்த பொடியன் தூர இடம் என்றும் சின்ன அரசாங்க உச் யோகம் எண்டாலும் சாதி கோஞ்சம் குறைவுதானம் எண்டு ஆக்கள் கதைக்கினம் என்பன போன்ற விஷயங்களை நாகுக் காக எழுதியிருந்தாள். ஊரில் அடிக்கடி ந்டக்கிற பிரச்சனே களைப் பற்றிப் பூடகமாக எழுதிய அவள் எங்கடை மண் வீட்டையும் சுத்தியுள்ள வாழை, பூவர்சு மரங்களையும் கிண் டிக்கிண்டி ஆயுதங்கள் ஏதும் தாட்டுக்கிடக்கோ எண்டு பாத் தவை எண்டும் அவன்ரை படத்தைக்கண்டு போட்டு ஏன் வெளிநாடு போனவர் எண்டு விசாரிச்சவை எண்டும் பல புதினங்களை எழுதியிருந்தாள். அவளது கடிதத்தில் மாப்

Page 20
24 நெல்லை க. பேரன்
பிள்ளை சாதி கொஞ்சம் குறைவுதானும் என்ற வசனங்கள் அவனுக்குச் சிரிப்பைமூட்டின. தானும் சூரியும் இஞ்சை செய்கிற வேலையளைக் கண்டால் ஊரிலே துரும்பனும் அந்த வேலையளைச் செய்வானே எண்டு கேட்பினம், நாங்கள் அனுப் புகின்ற காசு எல்லாத்தையும் போர்த்து மூடிப்போடும். இஞ்சை கக்கூசு கழுவினலும் ஊருக்கு வரேக்கை நல்ல வெட் டுப் போட்ட குதிரைப்பவுண் சங்கிலியும் ஹொண்டாவும் ஹெல்மெட்டுமாகத் திரிஞ்சால் அந்தக் கெளரவம் ஒன்றே "மாப்பிள்ளை’ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்துவிடும்.
ம். இந்தச் சனங்கள். என்று பெருமூச்சுவிட்டான் சங்கர்,
5
விடுமுறையில் ஊருக்குத் திரும்பியபோது சங்கருக்கு வரவேற்புப் பலமாக இருந்தது. திருமணம் நிச்சயமான கார ணத்தாலோ என்னவோ அக்கா திலகம் கலகலப்பாகக் காணப் பட்டாள். வீட்டில் புதிய தையல் மெஷினின் கடகட சத்தம் காதுக்குக் குளிர்ச்சியாக இருந்தது.
சங்கர் வந்ததைக் கேள்விப்பட்ட தரகர் முருகேசர் விடி யற்காலையிலேயே வாயில் சுருட்டு மணக்க வந்துவிட்டார். "அம்மான் இந்தாருங்கோ. ருெத்மன் சிகரெட். உங் களுக்கெண்டு ஏயாப்போட்டிலை டியூட்டிபிறீ ஷொப்பிலை வாங்கிக்கொண்டு வந்தனன்.?
முருகேசர் மகிழ்ச்சியில் கடைவாய்ப்பல் தெரியச் சிரித் Ցn fi.
பேந்தென்ன. என்ன நினைச்சுப் பொடியன் வாங்கி யந்திட்டான்.ம். அதெல்லாம் கிடக்கட்டும். பேச்சின்படி

விமானங்கள் மீண்டும் வரும். 25
மாப்பிள்ளை வீட்டாருக்கு முப்பதாயிரம் இனம் குடுக்க வேணும். பொடிச்சி திலகத்துக்கு இந்த ஒண்டரைப்பரப்புக் காணியும் வீடும் குடுக்கவேணும். அளவான நகைநட்டுப் போதும். முருகேசர் தொடர்ந்தார்.
சங்கருக்கு நெஞ்சு திக்கென்றது. இருக்கிற எல்லாக் காணியையும் அக்காவுக்குக் கொடுத்திட்டால் புவனம் - கமலா இருவருக்கும்.
“என்ன தம்பி யோசிக்கிருய். வெளிநாட்டிலை உழைக் கப் போனணி இப்படி யோசிக்காதே. எல்லாம் கிடைக்கிற காலத்திலை கிடைக்கும் தம்பி. இப்ப ஒமெண்டு சொல்லும் வாற புதன் கிழமைக்கே முருகையன் கோயிலடியில் தாலி கட்டி வைப்பம்."
சங்கருடைய மெளனத்தைப் புவனம் கலைத்தாள். ‘அண்ணு. அக்காவின்ரை விஷயம் இப்ப முடியட்டும்நாங்கள் விஸ்வமடுவிலை எண்டாலும் போய் இருப்பம். பாவம் அக்கா . பலகாரம் சுட்டு இவ்வளவு நாளும் கஷ்டப் பட்டவ. அவவை நல்லா வாழ வைக்க வேணும்."
கமலாவின் குரல் பலமாகவே ஒலித்தது. ‘அண்ணு தான் ஏ. எல். பாஸ் பண்ணிப்போட்டு ரீச்சிங்குக்குப் போடப் போறன். நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்படவேண்டாம்’
‘சரி அம்மான். எல்லாம் நல்ல படியாய் நடக்கட்டும்' சங்கர் பதில் சொல்லி விட்டான். புதன்கிழமை மூருகன் கோயிலில் திலகத்தின் திருமணம்ஆடம்பரமில்லாமல் அமைதி யான முறையில் சிறப்பாக நடைபெற்றது.
பதினைந்து நாட்களில் சங்கர் மறுபடியும் குவைத்துக் குப் பயணமாகி விட்டான்.
சங்கரின் வாழ்க்கை மறுபடியும் குவைத்தில் சீமெந்துக் கொம்பனியில் உருளத் தொடங்கியது. இவ்வருடம் பெரிய சிேதலாளி வந்து எல்லாருக்கும் சம்பளம் கூட்டியிருந்தார். சங்கருக்கு நூற்றிநாற்பது டொலர் கிடைத்தது.

Page 21
26 நெல்லை க. பேரன்
இம்முறை புவனத்தை மனதில் வைத்துக்கொண்டு சங் கர் கடுமையாக உழைக்கத் தொடங்கினன். பகல் வேலை முடிந்ததும் இரவில் ஹச் கிளின் பண்ண ஆட்கள் தேவை என்று அறிந்தால் பாஜ்ஜிலேயே எங்காவது சீமெந்துப் பைக் கற்றுக்களின் மத்தியில் படுத்து உறங்குவான். தேவையான நேரத்தில் எழுப்பிவிடும்படி இரவு எஞ்சினியரிடம் சொல்லி விட்டுப் படுப்பான்.
சீமெந்தை இறக்கியதும் எவ்வளவு விரைவாகக் கப்ப லைச் சுத்தப்படுத்தி அனுப்புகிறர்களோ அவ்வளவுக்கவ்வளவு விரைவாக அடுத்த கப்பல் வந்து சேரும். மேலும் இதனல் கொம்பனிக்கும் நிறைய லாபம் கிட்டும்.
அன்று வியாழக்கிழமை. மறுநாள் லீவுதினம் என்பதால் டுபாயின் "ராஸல்கைமா' துறைமுகத்தில் இருந்து வந்த சாம் என்ற கப்பலைச் சுத்தப்படுத்தி விரைவாக அனுப்பவேண்டும். இரவு ஒரு மணிக்குப் பாதித்தூக்கத்துடன் சங்கர் ஹச்சிற் குள் இறக்கப்பட்டான். அரைவாசித்தூரம் ஏணிப்படிகளில் இறங்கியவன் கால் தடக்கித் திடீரென்று ஐயோ என்ற அலறலுடன் அடித்தளத்தில் போய் விழுந்தான். திடீரென்று மயக்கமுற்ருன்.
மற்றத் தொழிலாளர்கள் பரபரப்புடன் ஒடிஞர்கள். இரவு வேலைக்குப் பொறுப்பான எஞ்சினியரிடம் விஷயத் தைத் தெரிவித்தார்கள். எப்பொழுதும் தயாராகவுள்ள டட் சன்°பிக் அப்' வாகனத்தில் சாரதி வீரசிங்கம் சங்கரைத் தூக் கிக் கொண்டு சுஹைபா துறைமுக ஆஸ்பத்திரிக்கு ஒடிஞன். சில தொழிலாளர்களும் எஞ்சினியரும் கூடவே சென்றிருந் தார்கள். சுஹைபா துறைமுக டாக்டர் பார்த்து விட்டுக் கை எலும்புமுறிந்து விட்டது என்றும் உடனே ‘அல்அடான்' அரசினர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும் படியும் துண்டு கொடுத்துவிட்டார்.
a நோக்கிப் பறந்தது. இயல்பாகவே ாரதி வீரசிங்கம் இப்போது மணிக்கு 7ே9விறம்பது மைல் வேகத்தில் பறந்தான்.

விமானங்கள் மீண்டும் வரும் . 27
அங்கே வெளிநாட்டு வைத்தியர்கள் சங்கரைப் பரிசோ தித்தார்கள். கம்பியூட்டர் எக்ஸ்ட்ரே எடுத்துத் தள்ளியது. உடனே சத்திரசிகிச்சை அறைக்கு அனுப்பினர்கள்.
மறுநாள் வெள்ளிக்கிழமை என்பதால் சக தொழிலா ளர்களும் "காம்ப்” மனேஜரும் பஸ்சில் சங்கரைப் பார்க்கச் சென்ருர்கள். காம்ப் மனேஜர் ஒரு அராபியர். சங்கர் ஆஸ் பத்திரியில் இருக்கும் வரைக்கும் கொம்பனி றைவரிடம் ஒழுங் காகச் சாப்பாடு கொடுத்து அனுப்பினர். சூப், பழவகைகள், கொடுத்து அனுப்பினர். பாஜ் மனேஜர் மிகவும் கண்டிப் பானவர் என்ருலும் இரக்ககுணம் படைத்தவர். சங்கர் கஷ் டப்பட்டு வேலை செய்வது அவருக்குத் தெரியும். கை முறிவு பொருத்தப்பட்டு நன்கு குணமாகி வரும் வரைக்கும் சம்ப ளத்துடன் விசேட லீவு வழங்கினர்.
றைவர் சில்வா, தயாரத்தின எல்லோரும் சங்கரை அடிக்கடி போய்ப்பார்ப்பார்கள்.
இரண்டு வாரத்தில் சங்கர் ஆஸ்பத்திரியில் இருந்து வந்துவிட்டான். மறுபடியும் காம்ப்பில் ஒரு வாரம் ஒய்வெடுத் தான். காம்ப் வைத்தியர் அதற்கான அத்தாட்சிப்பத்திரத்தை வழங்கினர். ஞாயிற்றுக்கிழமைகளில் சிற்றிக்குப் பெண்களைத் தேடிப்போகும் தொழிலாளர்கள் அன்று தமக்குச் சுகமில்லை என்று சாட்டுச் சொல்லிக் காம்ப் வைத்தியரிடம் லீவு கேட் பார்கள். கொம்பனிச் சட்டப்படி வருடத்தில் பதினேந்து நாட்கள் சுகவீன லீவு கிடைக்கும்.
சங்கர் இப்போது ஹச் கிளினிங் செய்வது இல்லை. மெஸ் போய் வேலையோடு நிறுத்திக் கொண்டான். முன்னர்போல நன்முக உழைக்க முடியவில்லை. லீவு நாட்களில் குரியுடன் செய்து வந்த பிறைவேற் வேலைகளையும் நிறுத்திக் கொண் டான்.
கொம்பனி முதலாளி கிறிஸ்தவர் என்பதால் நத்தாரை முன்னிட்டு எல்லோருக்கும் ஒரு மாதச் சம்பளம் போனஸ் ஆகக் கிடைத்தது. எஞ்சினியர்களுக்கு ஒன்றரை மாதமும்

Page 22
28 நெல்லை க. பேரன்
தொழிலாளர்களுக்கு ஒரு மாதமும் கொடுத்தார்கள். காம்ப் கன்சீன் அறையில் கிறிஸ்மஸ் மரம் நாட்டி மின்விளக்கு களாலும் வர்ணக் கடதாசிகளாலும் சோடித்தார்கள். சில கிறிஸ்தவத் தொழிலாளர்களுடைய அறைகளும் சோடிக்கப் பட்டன. முதலாளி வந்து எல்லோருக்கும் கேக்கும் வான் கோழி இறைச்சியுடன் பிரியாணிச் சாப்பாடும் வழங்கினர். அன்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு விசேட பூஜைகளைக் காண்பதற்காக ஆமதி சேர்ச்சுக்குக் கொம்பனி பஸ்களில் எல்லோரும் புறப்பட்டார்கள். அன்றிரவு காம்ப்புக்கு அந் தோனி வருவதாகச் சொன்னபடியால் சங்கர் தேவாலயத் திற்குப் போகவில்லை: சரியாகப் பன்னிரண்டு மணிக்கு அந் தோனி இன்னெரு நண்பனின் காரில் வந்தான். சங்கரைக் காம்புக்கு வெளியே தனியான இடத்தில் கூப்பிட்டுக் கதைத் தான். காருக்குள் அவனது காதலியும் இருந்தாள். தான் அவளைக் குவைத்தில் திருமணம் செய்யப்போவதாக அந் தானி தெரிவித்தான். சிறிது நேரம் இருந்து கதைத்துவிட்டு அவன் போய்விட்டான்.
ஊருக்குப் போய் வந்த சங்கரின் குடும்பத்தாரின் புதி ணங்களையும் வேறு பிரச்சனைகளைப் பற்றிய செய்திகளையும் அறிந்து கொண்டு அந்தோனி போய்விட்டான். முதல் ஒரு கொம்பனி விசாவில் வந்தவர்கள் வேறு இடத்தில் களவாக வேலை செய்தால் மூன்று மாதங்களுள் பழைய கொம்பனிக் குத் திரும்பிவிடவேண்டும். இல்லாவிடில் சொந்த நாட்டிற்கு அவர்களைக் கூப்பிட்ட கொம்பனியே அனுப்பிவிடவேண்டும். தவறிஞல் தண்டனை வழங்கப்படும் என்று சட்டம் இயற்றப் பட்டுவிட்டது. இதனல் பக்கீரும் அந்தோனியும் வேறு சிலரும் விரைவில் நாடு திரும்ப வேண்டியிருந்தது. அந்தோனி தான் வேலை செய்யும் கருஜ் முதலாளியுடன் கதைத்து அவர்மூலம் புதிய விசா பெறுவதற்கு ஏற்பாடு செய்து விட்டான்.
எதற்கும் இலங்கை போய்த்தான் திரும்பவேண்டும். கூடிய விரைவில் தான் இலங்கைத் தூதுவராலய அதிகாரி கள் மூலம் கொம்பனிக்கு வந்து பாஸ்போட்டையும் ரிக்கற் °றயும் வாங்கிக் கொண்டு ஊர்போகப் போவதாயும் பிறகு

விமானங்கள் மீண்டும் வரும். 29
வேறு கொம்பனி விசாவில் குவைத்துக்கு வரப்போவதாயும் அந்தோனி சொல்லியிருந்தான். அவன்மறுபடியும் வரவிரும்பு வது அந்தக் காதலிக்காகவே தவிர அவனுடைய குடும்பத் திற்காக இல்லை என்று சங்கருக்குப் புரியாமல் இல்லை. சேற் றில் அகப்பட்டவனைக் கரைசேர்க்க முடியாமல் தவித்தான்.
6
சங்கருக்குக் கேரளத்து முதலாளியின் சாப்பாடு வெறுக் கும் வேளைகளில் சூரியிடம் போய் விடுவான். சூரியின் கொம் பணியில் சாப்பாட்டிற்குத் தனியாகப் பணம் கொடுக்கிருர் கள். அவனும் அவனது அறை நண்பர்களும் சேர்ந்து பொருட் களே வாங்கிச் சமைக்கிறர்கள். குளிர்ப்பெட்டியில் வைத்த கோழி இறைச்சியை மிகவும் சுவையாகச் சமைப்பார்கள். அப்பளம், இருல் என்று சமைப்பார்கள். மசீலா பீச் ஹோட் டலுக்கு அண்மையில் உள்ள கடற்கரைக்கு நடந்து சென்று குளித்துவிட்டு வந்து எல்லோரும் அறைக்குள் வட்டமாக உட்கார்ந்து பசியாறச் சாப்பிடுவார்கள்.
சூரியின் பொறுப்பான போக்கிலும் கஷ்டப்பட்டு உழிைக் கும் ஆர்வத்திலும் சங்கருக்கு மிகவும் விருப்பம் இருந்தது. ஒரு நாள் இருவருமாகக் கடலில் குளித்துக் கொண்டிருக் கும்போது சங்கர் தன் சகோதரி புவனத்தை அவன் விரும்பு வான என்று வாய்விட்டே கேட்டு விட்டான். சங்கரின் குடும்பநிலை சூரிக்கு நன்கு தெரியும். தன்னுடைய தாயார் நியாயமான சீதனத்தை எதிர்பார்ப்பா என்றும் அதற்கு மறுத்தால் இக்கலியாணத்தை விரும்பமாட்டா என்று: சொன்னுன்.

Page 23
30 நெல்லை க. பேரன்
*சென்ற வருட உழைப்பெல்லாம் புவனத்தின் கலியா ணத்திற்குத்தான். நீ இம்முறை ஊருக்குப் போகும்போது இரண்டு பேருக்கும் எழுதிப்போட்டாவது வரவேணும். நான் உனக்கு இயன்றதைத் தருவன் என்று சங்கர் தாகுக்காகக் கதைத்துச் சூரியின் மனத்தை மாற்றிவிட்டான்.
ஊருக்குக் கடிதம் எழுதினன் திலகம் தன் சேமிப் பி கொஞ்சப்பணம் கொடுத்து உதவுவதாக எழுதினுள். சூரிக் குப் பெண் சகோதரங்கள் இல்லையென்பதால் தகப்பஞரின் வடலிக்காணி ஒன்று முதிசமாகக் கிடைத்தது. அக்காணி யைத் திருத்தி வீடு கட்டித்தருவதாகச் சங்கர் ஒப்புக் கொண்
L-fT6Öf.
சூரி ஊருக்குப் போனபோது புவனத்திற்கும் அவனுக்கும் கலியாண எழுத்து நடந்தது. சூரி திரும்ப வரும்போது படங்களைக் கொண்டுவந்து சங்கரிடம் காட்டினன்.
இந்த வருட உழைப்பு முழுவதும் புவனத்திற்கு வீடு கட்டுவதில் செலவானது. வருடாந்த லீவுக்கு ஊர் போகாது விட்டால் போய்வரும் பிளேனின் ரிக்கற்காசு கிடைக்கும். அதற்காகப் போகாமல் நின்று அந்தப்பணத்தையும் வாங் கிப் புவனத்திற்கு அனுப்பினுன்.
காலம் உருண்டு கொண்டிருந்தது. சங்கருக்கு வயது மூப்பத்திமூன்றைத் தாண்டி விட்டது. இளைய சகோதரி கமலாவின் பிரச்சனையையும் தீர்த்துவிட்டால் பிறகு அவன் தன்னுடைய கலியாணத்தைப் பற்றிச் சிந்திக்கலாம்.
தொழிலாளர்கள் யாராவது பாஜ் மனேஜரிடம் தமது கலியாணத்திற்காக லீவு கேட்டு வருவார்கள். அப்போது மனேஜர் பகிடியாக அவனைப்பார்த்து உமது கலியாணம் எப்போது என்று கேட்பார். ஒவ்வீசில் இருக்கும் கிளாக்கர் மனேஜருக்குச் சங்கருடைய குடும்ப வரலாறு, தியாகங்கள் எல்லாவற்றையும் சொல்லி யாழ்ப்பாணச் சமூகத்தில் சகோ கீரிகளுக்காக உழைத்து வாழும் உன்னதமான வாலிபர் சமு தாயத்தைப் பற்றிப் பெரிதாக லெக்சர் அடிக்கத் தொடங்கி

விமானங்கள் மீண்டும் வரும் . 3.
விடுவார். வெள்ளைக்காரர் புன்சிரிப்போடு கேட்டுவிட்டு எல் லாம் சுத்த அசட்டுத்தனம் என்று கேலி செய்வார்.
சுப்பையா என்ருெரு தமிழ்நாட்டு மெக்கானிக் இருந் தார். இவர் தனது சகோதரிக்காக எவ்வளவோ உழைத்துக் கொடுத்தாரம், கடைசியில் தந்தது காணுது என்று அவரை குறை சொல்லத் தொடங்கிவிட்டாளாம். போதாக்குறைக்கு அவளுக்கு வாய்த்த புருஷனும் தனக்குச் சீதனம் காணுது என்று மனம் புழுங்கத் தொடங்கி விட்டாரம். இப்போது சுப்பையன் தமிழ்நாட்டிற்கே போகாமல் குவைத்தில் கேர ளப் பணிப்பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு *றெக்கா"வில் வாடகை அறையில் சுகமாகக் குடித்தனம் நடத்துகிருர்,
கமலாவின் கடிதம் இப்போது அடிக்கடி வரத்தொடங் கியது. தான் ஏ, எல் பரீட்சை எழுதி விட்டதாகவும் பல் கலைக்கழகப் படிப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லே யென்றும் ஆனல் யாழ்ப்பாணத்தில் பிறைவேற்றுக எக்கவுண் டன்சி அல்லது கொம்பியூட்டர் சயன்ஸ் படிக்க எண்ணம் கொண்டிருப்பதாயும் அதற்குப் பணம் அனுப்பும் படியும் எழுதியிருந்தாள். அக்கா திலகத்திற்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாயும் அவவுக்கு ஏதாவது பணம் அனுப்பினுல் நல்லது என்றும் எழுதியிருந்தாள். அடப் பாவமே . இரட்டைக் குழந்தைகளா ? சகோதரிகளுக்காக உழைத்துப் பிறகு மருமக்களுக்கும் உழைக்க வேண்டி வரு மோ. என்று சங்கர் பயந்தான்.

Page 24
32 நெல்லை க. பேரன்
7
கமலா இப்போது யாழ்ப்பாணத்திற்குத் தினமும் பஸ் ஏறிப் படிக்கப் போய் வருகிருள். முன்னேறி வரும் விஞ் ஞான யுகத்தில் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளை விடக் கொம்பியூட்டர் சயன்ஸ், எக்கவுண்டன்சி போன்ற தொழில் ரீதியான படிப்புக்கள் விரைவான பலனையும் பணம் சம்பா திக்கும் வழிகளையும் தரும் என்று கமலா நம்பினுள். சினி மாத் தியேட்டர்களையே மூடிவிடும் அளவிற்கு இலங்கையில் ரி. வி யுகம் வந்துவிட்டது. அடுத்தது எலெக்ரோனிக் கொம் பியூட்டர் யுகந்தான். அரசாங்க காரியாலயங்களிலும் தனி யார் கடைகளிலும் கொம்பியூட்டர் சாதனங்களை அறிமுகப் படுத்தும் காலம் நெருங்கி விட்டது. மேலும் இந்த விஞ் னத்தைத் தெரிந்து கொண்டால் சிங்கப்பூர், மத்திய கிழக்கு, லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பல ஆயிரக் கணக்கான ரூபாய்களைச் சம்பளமாகப் பெறமுடியும் என்று அவள் தெரிந்து கொண்டாள். ஜி. சி. ஈ (சாதாரணம்) ஆங் கிலத்தில் கிறடிற் எடுத்திருந்தாள்.
ஊரிலுள்ள விசேட அபிவிருத்திச்சபை நூலகத்திற்குப் போய் ஆங்கிலப் பத்திரிகைகள், வெளிநாட்டுச் சஞ்சிகை களை வாசித்து வந்தாள். அழகும் சுறுசுறுப்பும் நிரம்பிய கமலா ஊரில் சராசரிப் பெண்களை விடவும் வித்தியாசமான அறிவு ஜீவியாகவே தென்பட்டாள்.
தன்னேடு பேச்சுக் கொடுக்கும் எவருடனும் அவரவர் அறிவுக்கும் போக்கிற்கும் ஏற்பச் சரளமாகப் பேசத் தெரிந்து கொண்டாள். யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள தனி யார் நிறுவனமொன்றில் கொம்பியூட்டர் சாதனங்களைப் பற்றிப் படித்து வந்தாள்.
தினமும் காலையில் பஸ்சிற்காகக் காத்து நின்று இடம் கிடைக்காமல் நெரிபட்டும் இடிபட்டும் கஷ்டமான பிரயா

விமானங்கள் மீண்டும் வரும் 33
ணம் செய்து வந்தாள். சின்ன மினிவான்களில் ஏறி அவள் இடம் கிடைக்காமல் குனிந்து நிற்கும்போது அவள் மேனியை வட்டமிடும் கழுகுக் கண்கள்தான் எத்தனை? தனக்குப் பரிந்து இடம் தருமாப்போல் சற்றே நகர்ந்து “இப்பிடி இரும் பிள்ளை’ என்று சொல்லும் வயது போனவர்களின் கள்ள மனங்களை அவள் நன்கு அறிவாள். பெண்ணுகப் பிறந்தவள் படிக்கவும், வேலைக்கும் என்று கிளம்பிவிட்டால் வீடு வந்து சேரும் வரையில் எத்தனை பேருடைய பார்வைகளுக்கும் அருவருப் பான சிந்தனைகளுக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது. இவர் களுக்குப் பயந்து சதா வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்க முடியுமா? பாரதி விரும்பிய புதுமைப் பெண்களாக வாழ வேண்டாமா?
யாழ்ப்பாணத்தில் எங்காவது வெடிச்சத்தங்கள் கேட் டால் போதும். உடனே மினிவான்கள் அலறிப்புடைத்துக் கொண்டு ஒடும். பஸ் ஓட்டங்கள் நிறுத்தப்படும். இப்படி யான இக்கட்டான தருணங்களில் ஸ்ரான்லி வீதியில் இருந்து அவளைப் பாதுகாப்பாகக் கூட்டிக்கொண்டு போய் வாகனங் களில் ஏற்றி ஊருக்கு அனுப்ப ஒரு புண்ணியவாளன் இருந் தான். அவளோடு ஒன்ருகப் படிக்கும் சேகர்தான் அவன். சேகர் யாழ்ப்பாணத்தில் தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்றில் எக்கவுண்ட்ஸ் கிளார்க் ஆக வேலைபார்த்தான். அவ னது திறமையில் நம்பிக்கை கொண்ட அந்த ஸ்தாபனம் தனது எதிர்கால வளர்ச்சிக்காகக் கம்பியூட்டர் விஞ்ஞானப் படிப்பை மேற்கொள்வதற்கு என்று ஸ்கலர்ஷிப் வழங்கி யிருந்தது.
வகுப்பில் சேகரும் க ம லா வும் போட்டி போட்டுத் திறமைசாலிகளாக விளங்கினர்கள். திறமையும் அழகும் ஒருங்கே அமைந்த சேகரைக் கமலாவும் விரும்பினுள். இரு வரும் மனம் விட்டுத் தமது பிரச்சனைகளையும் எதிர்காலத் திட்டங்களேயும் ஆராய்ந்தனர். சேகரின் தகப்பஞர் ஒரு சலவைத் தொழிலாளி. ஆனல் தான் கஷ்டப்பட்டு மகனப் படிக்க வைத்து முன்னேறச் செய்தார். பரம்பரைத் தொழிலை அவனுக்குப் பழக்கவில்லை.

Page 25
34 நெல்லை க. பேரன்
கமலாவின் குடும்ப நிலையும் சங்கரின் கடும் உழைப்பும் சேகருக்கு நன்கு தெரியும். கமலாவுக்குத் தன் அண்ணனின் புரட்சிகரமான மனப்போக்குத் தெரியும். அம்மாதான் பரம் பரை, மானம், மரியாதை என்று பீற்றிக் கொண்டாலும் நல்ல சிந்தனையாளரும் சிறந்த உழைப்பாளியுமான சங்கர் தன் விருப்பத்தை நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கையுடன் கமலா தன் காதல்செடிக்கு நீர் ஊற்றி வளர்க்க ஆரம்பித் தாள.
கமலா தன் முன்னேற்றங்கள் பற்றி அவ்வப்போது தமை யனுக்கு மறைக்காமல் கடிதமூலம் தெரிவித்து வந்தாள். சேகரைப் பற்றியும் ஒளிவு மறைவின்றி எழுதியிருந்தாள். கமலாவின் நேர்மையான போக்கில் விருப்பம் கொண்ட சங் கர் அவளது மனம் நோகாமல் புத்திமதிகளை எழுதினன். காதலுக்குத் தான் எதிர்ப்பில்லே என்றும் ஆனல் ஆண்களைப் பற்றித்தீர ஆராய்ந்து சந்தேகமற்ற முடிவுக்கு வந்த பிறகே பெண்கள் தம்மை அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என் றும் எழுதினன். மற்றச் சகோதரிகளப் போலவே கமலா வுக்கும் வஞ்சனை இல்லாமல் பணம் தருவதாகவும் இம்முறை ஊருக்கு வந்து கமலாவின் திருமணத்தை நிறைவேற்றிவிட்டு மறுபடியும் குவைத் வந்து உழைத்துக் கடைசியாகவே தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக எழுதினன்.
கமலா தனக்கும் சேகருக்கும் கொம்பியூட்டர் சயன்ஸ் சம்பந்தமான வேலைகள் வரும்போது விண்ணப்பம் அனுப்பி உதவும்படி எழுதினுள். சங்கர் குவைத் ைேடம்ஸ், அராப் டைம்ஸ் என்பனவற்றின் விளம்பரப்பகுதிகளே நிரப்பித் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இலவச விளம்பரங்கள் வரச்செய்தான். குவைத் பத்திரிகைகளின் விளம்பரப்பகுதி நல்ல சேவை செய்து வருகிறது. சங்கர் ஒருதடவை பேணு நண்பர் பகுதிக்கு விளம்பரஞ்செய்து பிலிப்பைன்ஸ், மணிலா, வடஅமெரிக்காவில் இருந்தும் அவனது நட்பைக் கோரிக் கடிதங்கள் வந்தன. செலவுக்குப்பயந்து தொடர்புகளை இடை யில் நிறுத்தி விட்டான்.

விமானங்கள் மீண்டும் வரும். 35
இந்தமுறை சங்கர் லீவுக்கு யாழ்ப்பாணம் வந்தபோது முருகேசம்மான் அவனை எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்க வில்லை. கமலாவின் காதல் விவகாரம் அவருக்கும் தெரிந்து "ஆரோ சாதி குறைஞ்சவனேட யாழ்ப்பாணத்திலை சுத்து ருளாம். உன்ரை அருமைத் தங்கச்சி. இந்தக் காலத்துக் குமரியளைப் பஸ் ஏறிப் படிக்கவிட்டால் அவை நல்லசுகமாக மாப்பிள்ளை பிடிக்கினம். பிடிச்சவள் ஒரு ஆனவளுகப் பார்த்துப் பிடிக்க வேண்டாமே" என்றுநெளிக்கத் தொடங்கி விட்டார்.
'அம்மான் கனக்கக் கதையாதையுங்கோ. நீங்கள் சாதிக் காரர் எண்டாப்போலை போன ஆடிக்கலவரத்திலை உங்கட பிள்ளையஞக்கு அவங்கள் அடிக்காமல் விட்டவங்களே. எத் தனை தரம் அடி உதை வாங்கியும் உங்களுக்கு இன்னும் அத்தப் பரம்பரைப் புத்தி போகேல்லை. என்ரை தங்கச் சிக்கு நான் விரும்பின இடத்திலை செய்வன். சேகரின்ரை படிப்பு உங்கட பிள்ளைகள் கூடப் படிக்கேல்லை . நாளைக்கு அவன் வெளிநாட்டிலை போனல் முப்பது முப்பத்தையாயிரம் எண்டு சம்பளம் வாங்குவன். பிறகு வந்து காரும், பங்களா வும் எண்டு காசை வீசி எறிஞ்சால் நீங்கள் தான் முதல் தேடிப்போவியள். நரம்பில்லாத நாக்காலே எதையும் கதைக்கலாம். கதையளுக்கும் ஒரு நியாயம் இருக்கவேனும் சங்கர் பொரிந்து தள்ளினுன்
தரகருக்குச் சப்போட்டாகக் கதைக்க வந்த தாய் மக னுடைய கோபத்தைக் கண்டு மெதுவாக உள்ளே போய் விட்டாள்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கோவில் ஒன்றில் கமலா - சேகர் திருமணம் அமைதியான முறையில் நடை பெற்றது.
சேகர் யாழ்ப்பாணத்திலேயே வாடகை வீடொன்றில் கமலாவுடன் வசித்து வருகிருன்.
சங்கரின் கிராமத்தில் மழை நன்முகப் பெய்து நிலமும் மரஞ்செடிகளும் நீர் குடித்து அழகாகக் காட்சி தருகின்றன.

Page 26
36 நெல்லை க. பேரன்
கிராமத்துச் சுவர்களில் புதியபுதிய சிந்தனைகளைத் தோற்று விக்கும் புதிய பரம்பரையினரின் வாசகங்கள் சுவரொட்டி களாகக் காட்சிதருகின்றன.
காலம் மாறிவிட்டது. மக்களும் எவ்வளவோ மாறிவிட் டார்கள் - பழமை மரபுகளும் மூடக்கொள்கைகளும் மெல்ல மெல்ல கண்மூடிக் கொண்டு போகின்றன.
மூருகேசம்மான் பழைய கோபம் தணிந்து சங்கருடன் மெதுவாகப் பேச்சுக் கொடுக்கிறர்.
'தம்பி. சகோதரங்களுக்காக உழைச்சு உரமேறின உன் னைப் போல பொடியன்கள் இண்டைக்குக் கனபேர் யாழ்ப் பாணத்திலை இருக்கினம். நீங்கள் மனந்தளராமல் உழைச்சுக் கடைசியிலை உங்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கையைத் தேடிக் கொள்ளவேணும். நீ இந்த முறை போய் உழைச்சுக் கொண்டு வா தம்பி நான் இந்த ஊரிலே உனக்குத் தோதான ஒரு நல்ல பெட்டையாகப் பார்த்து வைக்கிறன்.”
‘நல்லது அம்மான் . நான் கட்டாயம் திரும்பி வருவன். சொன்னதை மறந்து போகாதையுங்கோ..?
சங்கர் மறுபடியும் பயணமாகிவிட்டான். விமானம் மறு படியும் ஊர்ந்து, வளைந்து, நேரான பாதையில் ஓடி மெது வாக மெதுவாக உயர்ந்து உயர்ந்து உறுமிக் கொண்டே வானத்தில் மிதக்கிறது.
(முற்றும்)

இந்நூலசிரியரின் ஏனைய நூல்கள்
ஒரு பட்ட்தாரி நெசவுக்குப் போகிறள் - சிறுகதைத்
தொகுப்பு (1975 - முன்னுரை பேராசிரியர் க. கைலாசபதி) வளைவுகளும் நேர்கோடுகளும் - நாவல் (1978 - வீரகேசரி பிரசுரம் 62) சந்திப்பு - (கட்டைவேலி ஞானசாரியர் சஞ்சிகை
ஆசிரியர்கள் எண்மருடனுன பேட்டி - 1985)
நூலுருவில் வராதவை
டில்லியில் ஒரு மாதம் - பிரயாணத் தொட்ர்கட்டுரை (20.9-68 - 27-10-68 ஜோதி வாரமலர்) சித்திரை மாதம் பெளர்ணமி நேரம் - நாவல்
15-6-71 - 11-10-71 - மித்திரன் வாரமலர் (ராஜி விஜி" என்ற புனைபெயரில்) . பரமலிங்கத்தாரின் பாதயாத்திரை
(நகைச்சுவை நடைச்சித்திரத் தொடர் -
1971 - 1972 மித்திரன் வாரமலர்) ஒரு இலக்கியகாரனின் மட்டக்களப்பு அனுபவங்கள்
- தொடர் கட்டுரை (1981 தினகரன் வாரமலர்)
வானுெலி நாடகங்கள்
1. திருவிழா - 1978
மாற்றத காசோலைகள் - 1979 எரியும் சுடர்களை அணக்கும் கரங்கள் - 1979
அடுத்த வெளியீடுகள்
பேரன் சிறுகதைகள் (பத்திரிகைகளில் வெளியானவை) பேரன் கவிதைகள் (கவியரங்குக் கவிதைகள்)