கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழன் மாட்சி

Page 1


Page 2


Page 3


Page 4

இளைஞன் வெளியீடு: 1.
தமிழன் மாட்சி
(HISTORY OF TAMILS)
ஆசிரியர் : தெல்லியூர் எவ்ஸ். ᏰᏏᎿ --frfᎢᎦfᎢ .
(வீரகேசரி துணை ஆசிரியர்)
இளைஞன் பிரசுராலயம்,
நிர், 2, கிரான்ட்பாவிய வீதி,
கொழும்பு,
நிப்புரிமை ஆசிரியருக்கு

Page 5
முதற் பதிப்பு: 1947 2000 பிரதிகள்.
a2a (5. 1. 25.
அழுத்தகம் :
பூரீ பார்வதி அச்சியந்திரசாலை, 288, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.

ஆக்கியே ான் முன்னுரை.
உலக மக்கள் உற்பத்திக்கு மூலஸ்தானமாக விளங்கிய எம் தமிழ் நாட்டைப்பற்றிப் பல அறிஞர்களும் கூறிப் போந்தனர். பாரதியின் விரப் பாக்களால் உணர்ச்சியூட்டப்பெற்றேர் புதிய மலர்ச்சியுடன் தமிழ்த் தாய்க்குக் கொண்டுசெய்ய முற்பட்டனர். சுதந்திர மக்களாக - நாகரிகத்தின் சிகரமாக - விளங்கிய தமிழ் மக்கள் சரிதையினை இன்றைய உலக மாணவர்களும் பிறரும் எளிதில் கற்றறியும் பான்மையில் வெளிப்படுத்த வேண்டுமென் னும் பேரவா இதனை எழுதும்படி என்னைத் தூண்டிற்று.
எனது சிற்றறிவிற்கு எட்டியவரையில் அறிஞர் பலரின் ஆராய்ச்சி நூல்கள் பலவற்றின் உதவியுடன் இந்நூலைத் தெள் ளிய நடையில் எழுதியிருக் கின் றே ன். இன்றைய உலகம் இளைஞர்களாலேயே உய்வடையவேண்டியிருத்தலால் தமிழ் மக் கள் உயர்விற்கு இளைஞர்களின் ஐக்கியமே அத்தியாவசியகம் என் பதை வலியுறுத்தியுள்ளேன். t
இந்நூலை ஆராய்ந்து எழுதுங்காலத்து அடியேன்பால் அன்பு பாராட்டி ஐயங்கள் தீர அறிவுறுத்தியும், ஒப்புநோக்கியும் பேரு தவி புரிந்த பல அறிஞருக்கும் தோழர்களுக்கும் அடியேன் செய் யுங் கைம்மாறு என்றென்றும் பாராட்டிப் போற்றுவதேயாகும். எனது அறிவுக் குறைவால் இந்நூலின்கண் பிழைகள் நேர்ந் திருத்தல் கூடும். அவற்றினை அறிஞர்கள் எனக்குத் தெரிவிப் பார்கள் என்றும், அங்ஙனம் தெரிவிக்கப்படுபவைகளை அன்புடன் ஏற்று மறுபதிப்பில் திருத்திக்கொள்ளலாகுமென்றும் எதிர்ப்ார்க் திருக்கிறேன்.
தமிழ் வளர்ச்சியில் ஊக்கமுடைய இளஞ்சிருர் பலர் பெருகிய இங்நாளிலே இந்நூல் அவருள்ளத்தே உண்மையான தமிழ் அபி மானத்தை வளர்க்க உதவுமாயின் அதுவே இதனை எழுதியதாற் பெற்ற பெரும் பயணுக மதிக்கப்படும்.
இந்நூல் தமிழ் மக்கள் யாவரிடத்தும் பரவி அவர்களுள் ளத்தே அபிமானத்தை யுண்டாக்கி அதல்ை தாம் தமிழர்’ என்பதை யுணர்ந்து பண்டைய பெருமை பெற்றுச் சுதந்திரமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் திருவருள் கூட்டுவதாக
தெல்லிப்பழை, }
தை, 1947 செல்லையா நடராசா,

Page 6
பதிப் புரை
ஒரு நாட்டில் வாழும் மக்களது நாகரிகம் அந்நாட்டில் வழங்கும் மொழிகளில் எழுதப்படும் நூல்களால் நன்கு வெளிப் படும் என்பது சரித்திர உண்மை. சங்க நூல்களே தமிழ் அகத் தைப்பற்றிய செய்திகளை இன்று எமக் குக் கொடுக்கின்றன. சிலம்பின் கதாநாயகியான கண்ணகி சோழ நாட்டில் பிறந்து, பாண்டி நாட்டிலே தனது கற்பின் பெருமை காட்டி, சேர நாட் டிலே சென்று விண்ணுலகடைந்ததாக சிலப்பதிகாரம் கூறுகின் றது. மூவேந்தர்க்கும் முத்தமிழ் நாட்டிற்கும் பொதுவான நூலாக இது விளங்குகின்றது. இந்நூலாசிரியர் தமிழ் அகச்சிறப்பை ஆங் காங்கே எடுத்துக்காட்டியுள்ளார்.
கடலின் ஆழங் காண்பதுவும் தமிழ் நாட்டின் நாகரிக ஆழங் காண்பதுவும் ஒன்று. ஆராய்ச்சியாளர்கள் இந்திய நாட்டைப் பற்றிய வேறுபட்ட அபிப்பிராயங்களை யுடையோராக இருந்தனர். ஞால ஆராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி, அகப்பொருள் ஆராய்ச்சி முதலானவைகளின் வளர்ச்சியுடன் ஆராய்ச்சியாளர்களின் வேறு பட்ட அபிப்பிராயங்கள் மறைந்துவிட்டன. இந்திய நாடு பண் டைய தமிழ் உலகின் அழியாத நிலப்பரப்பேயென்ற உறுதியாக அவர்கள் கூறுகின்றனர்.
உலக மக்கட் பிறவியின் தோற்றம் கடல்கொண்ட தமிழ் காட்டிலேயே ஆரம்பமாயது. தமிழ்நாடு கடல்கொள்ளப்பட்ட காலத்து ஆங்கிருந்த மக்கள் வடக்கே சென்று உலகம் முழுவதும் பரவினர். தமிழ்மக்கள் நாகரிகமே உலக நாகரிகங்களுக்கு அடிப் படை. தமிழ்மக்கள் அங்கங்கு போக்குவரவின்றித் தங்கிய காலத் தில் அவர்கள் தாய்மொழியே பல்வேறுவகையான இந்திய மொழி களாகத் திரிந்து நின்றன. திரிந்த மொழிகள் பின்னர் ஒன்றுடன் ஒன்று கலந்து பல்வேறுபட்டன. மொழி பல்வேறுபடவே மக் களும் பல சாகியத்தாராயினர். இதனுல் உண்மைத் தமிழ்மக்கள் யார் என்பதே தெரிந்துகொள்வது அரிதாயிற்று.
பண்டைத் தமிழ் அகத்திருந்த பல்லாயிர நூல்கள் மறைந் தொழிந்ததால் பல விபரங்கள் எமக்குக் கிடைத்தில. இருக்கும்

விபரங்களைக் கொண்டு கமிழ் மக்கள் சரித்திரத்தை இக்கால இளை ஞர்கள் அறிவான் வேண்டித் தெள்ளிய நடையில் ஆசிரியர் இந் நூலை எழுதியுள்ளார்.
ஒரு நூலைப் புரியாத பண்டித நடையிலும் எழுதப்படாது. அதிக சாதாரணமான ஆபாச நடையிலும் எழுதப்படாது. சாகா ரண மனிதனுக்குப் புரியக்கூடிய முறையில் அவனவன் சிந்தனை யைக் தட்டியெழுப்பும் உணர்ச்சி மிகுந்த முறையில் எழுதப்பட வேண்டும் எழுதப்படுபவை உணர்ச்சியை ஊட்டக்கூடியவைக
ளாக இருக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் சாதியாலும் மொழியாலும் சமயத்தாலும் பல பிரிவுகள் தோன்றிவிட்டன. ஒற் று  ைம குன்றிவிட்டது. இவ் வொற்றுமையைப் பெருக்கித் தமிழ் நா ட் டை முன்னுக்குக் கொண்டுவரும் பொறுப்பு இன்றைய இளைஞர்களிடமே இருக் கின்றது. வருங்சால உலகில் வாழ்வகற்குரிய முறைகளை வகை யுடன் கேடுபவர்களே இன்பங் கருதும் இளைஞர்களாகும். இவ் விளைஞர்கள் தங்கள் கடமைகளை உணராதவரையில் அடிமையென் லும் அரக்கனும், மடிமை என்னும் தீயப் பேயும் அழிவதற்கு வழியில்லை.
உலகிலே உண்டகற்கும் உறங்குவதற்கும் இளைஞன் பிறக்க வில்லை. பண்புறும் செயல்கள் புரிந்து நாட்டின் அடிமைத் தளை அகற்றி நல்வாழ்வு பெற்று வாழவே இளைஞர் முன்வரவேண்டும். பழைய சரித்திரங்களை அலசி அலசிப் பார்த்து எழுதிய இச் சிறு நூலில் இளைஞர்கள் தமிழ் உலக முன்னேற்றத்திற்கு அடிகோல வேண்டுமென ஆசிரியர் வற்புறுத்தியுள்ளார், வீண் கிளர்ச்சிகளும் வேற்றுமைகளும் நீங்கிச் சகோகரத்துவம், சமத்துவம் உலகில் நிலைத்து மக்கள் சுதந்திரம் பெற்று அமைதியுடன் வாழவேண்டும்.
இன்றைய உலகம் நாகரிகப் பாதையில் முன்னே ற ம் பொழுது தமிழன் மாத்திரம் பின்னடைவதா? ஆரம்பம் முதல் இறுதிவரை உணர்ச்சி கதும்பும் உற்சாக முறையில் கெளிந்த கடையில் ஆசிரியர் இந் நூலை எழுதியுள்ளார். தமிழ் அகத்துள்ள யாவரிடத்தும் இந் நூல் பரவி தமிழ் நாட்டின் நிலையை உயர்த்த வேண்டுமென்பகே இந் நூலின் நோக்கம். ஆசிரியரின் நோக்கம் நிறைவேற, தமிழ் தெய்வம் திருவருள் கூட்டுவதாக,
GG இளைஞன் 沙%

Page 7
é Göö
0.
ll.
12,
13.
l4.
உள் வண் ண ம்
பொருள் காட்டின் கோற்றமும் பழமையும்
ஆராய்ச்சியும் முத்கமிழ் நாடும் ஐவகை நிலமும் மக்களும்
மக்களும் வாழ்க்கையும்
ஆட்சியும் பாதுகாப்பும்
செல்வ நிலையும் வாணிகமும்
முக்கமிழ்ப் பெருமை
நாட்டின் கலைச் சிறப்பு முத்தமிழ்ச் சங்கங்கள்
கடவுட் கொள்கை
புதிய ஆராய்ச்சிகள்
கமிழ்ப் பெண்பாலார்
இன்றைய கமிழ் காட்டின் நிலை
சமிழ் நாட்டின் உயர்வழி
p
o
பக்கம்
1.
16
20
28
33
4l
44
49
55
60
64

நாட்டின் தோற்றமும் பழமையும்
*தமிழ் நாடு” என்று பண்டு முதல் அழைக்கப்பட்டு வந்த காடு எமது நாடாகும். சமிழ் மொழி வழங்கி வங்க நாடே தமிழ் நாடு என்று வழங்கப்படுகிறது. எமது மொழி இன்ன காலத் திற்கு முன் தோன்றியது என்று கிட்டமாகக் கூற முடியாது. மொழித் தோற்றம் அங்ஙனமிருப்பின் நாட்டின் தோற்றம் அதற் கும் எத் துணையோ ஆண்டுகட்கு முற்பட்டிருத்தல் வேண்டும் என்பது வெள்ளிடை மலே.
ஒரு நாட்டை அங்குள்ள மொழி கொண்டு அழைப்பது பசிபுமுறை, அது போன்றே தமிழ் வழங்கிவந்த காட்டை "தமிழ் நாடு’ என்று அழைத்தனர். இதற்கு அனேக உதாரணங் கள் உண்டு. மொழியின் வேறுபாடுகட்கு ஏற்ப பல நாடுகள் வெவ் வேறு பெயரால் அழைக்கப்படுகின்றன. தொல்காப்பியச் சிறப் ւմ பாயிரத்தில் ‘தமிழ் கூறும் கல்லுலகம்’ என்பதனல் இவ் வுண்மை விளங்கும்.
உலகில் மக்கள் உற்பத்தி சம்பக்கமாக ஆராய்ச்சியாளர் பல விதமாக கூறிவந்தனர். சமீப கா லத்தில் கீன் என்னும் பண்டி கர் தமது உடற் கூற்று நூலில், ஜாவா, சுமத்திரா முதலிய தீவுகளே மக்கள் தோற்றுவாய் செய்த இடமென்று கூறுகின்றர். இப்பகுதி கள் பண்டைய தமிழ் உலகத்தின் கீழைப் பகு கி க ள் என்று ஆராய்ச்சி வல்லுனர் திடமாகக் கூறுகின்றனர். இவ்விடங்களிலே
தமிழர்களது சமய நிலையம் போன்றவை பல இன்றும் காணக்

Page 8
2 தமிழின் மாட்சி
கிடக்கின்றன. இதனல் தமிழ்ப் பெரு நாடுதானே மக்கள் உற்பத் திக்கும் மூலஸ்தானமாகிறது. மக்கள் தோற்றக்திற்கு இருப்பிட மாக விளங்கிய தமிழ்ப் பெரு நாட்டில் வழங்கப்பட்டு வந்த மொழி தமிழ் மொழி யென்பது சேங்கோன்தரைச் செலவு முக லிய பழந் தமிழ் நூல்களால் அறியக்கிடக்கின்றது. -
உலகில் மனிதப் பிறவி முதன்முதலாகத் தோன்றிப் பல காலம் வரைக்கும் அவர்களிடையே மொழி கை பாளப்பட்டு வரப் படவில்லை. இந் நிலவுலகில் மக்கட் கூட்டம் முதன் முதலாகத் தோன்றியது இற்றைக் கைந்நூருயிர மாண்டிற்கு மேல் என்பது பல அறிஞர்கள் கூற்று. இஃது எங்ங்ணமிருந்த போதிலும் நாகரிக உற்பத்தி இற்றைக்கு அறுபதினுயிர மாண்டிற்கு முன்னராகவே யிருக்கு மென்றும், மொழியின் உபயோகம் கையாளப்படத் தொடங்கி சற்றேறக்குறைய முப்பதினுயிர மாண்டுகள் இருக்கு மென்றும் அறிஞர்கள் துணிகின்றனர்.
உலக உற்பத்தியில் ஒன்ருக உற்பவித்த மனிதக் குழாம் தனித்து வாழத் தொடங்கியதே மு சுற்படியாகும். மனிதர் விலங் கினம் போன்று கான கக்தில் தனித்தனியே உண விற் கா க அலைந்து திரிந்தும், பின்ன்ர் உணர்ச்சி ஏற்பட ஒன்று கூடி குழு வினராக வாழ்ந்தும், அப்படி வாழுங்காலையில் தம்முள் சல்லாபம் செய்ய விரும்பி சைகை மூலம் கதைத்தும், பின்னர் அதற்கு ஒசையைக் கொடுத்தும் மொழியை ஆரம்பித்து வைத்தனர். நாளடைவில் பலவித மாறுதல்களுக்கும் இலக்காகி தேறிய உருப் பெற்றுத் திகழ்ந்த அக் காலத்தில் அம்மொழியின் பெயரையே காட்டிற்கும் இட்டு அழைத்து வந்திருப்பர். இவ்விதக் கோன்றியது தான் தமிழ்நாடு என்பதும் அறிஞர் கொள்கை.
அகில உலகின் மக்கட்பிறவித் தோற்றம் தமிழ் நாடேயேன்பது இன்று மறுக்க முடியாத நிலையில் நிரூபிக்கப்பட்டுள்ள்து. அக் காலத்தில் இந்துமாக்கடலில் குமரிக்கண்டம் என்று ஒரு பெரிய கிலப்பரப்பு இருந்தது. மக்கட் பிறவியின் தோற்றம் இங்குதான் உண்டாயது. அக் கண்டம் சிறிது சிறிதாக கடலில் ஆழ்ந்த பொழுது மக்கள் வடக்கே சென்று உலகமெங்கணும் பரவி, பல பாஷைகளைப் பேசி, அப்பாஷைகளைக் கொண்டு பல சாகியத்தார்

காட்டின் தோற்றமும் பழமையும் 3
களாக மாறினர். இன்றுள்ள தமிழ் நாடு எஞ்ஞான்றும் அழியாத நிலப்பரப்பாகும். வடக்கிலும் மேற்கிலும் பரவிய மக்கள் தமிழ் மக்களே. மேலும், இக் குமரிக் கண்டச் கிலிருந்து வெளிச் சென் முேரே வேற்று மொழியாளர் போன்று இமயமலைப்பகுதியால் இக் திய காட்டில் புகுந்துள்ளனர் என்பதற் கையமின்று. இக் தமிழ் மக்கள் நாகரிகங்களே உலக நாகரிகங்களுக்கு அடிப்படை. 6 இடங்களிலும் தமிழ் மக்கள் தனித்து குழுக்குழுவாக வாழ்ந்த காலத்தில் கமிழ் மொழியும் மாறுபாடடைந்திருக்கும். இவ்விதம் மொழி திரியவே மக்களும் பலராகப் பிரிந்தனர். இகனல் உண் மைத் தமிழர் இன்றைய உலகில் பல சாகியத்தாராக விளங்கு கின்றனர்.
மிகப் பழைய மனிதர் விலங்குகள் போன்று கணித்த முரட்டு வாழ்க்கையை நடத்தி வங்கனர். அவர்கள் அப்பொழுது உணவாக அகப்பட்டவற்றை உண்டு மிருக வாழ்க்கையையே நடத்தி வந்துள்ளார்கள், பின்னர் உண்வுக்காகவும், தம்மைப் பாதுகாக்கும் பொருட்டும் ஒன்றுகூடி சிறு சிறு மனிதக் குழாங் களாக வாழத் தொடங்கினர். அப்பொழுது அவர்கள் இயல்பாகக் கிடைத்த கற்களை ஆயுதங்களாக உபயோகித்து உணவைத் தேடி னர்கள். பின்னர் இயற்கையின் உற்பத்தியான பல உலோகங்களை யும் படிப்படியாக உபயோகத்திற்குக் கொண்டு வந்தனர். ஆற். றங்கரைகளிலும், சம வெளிகளிலும் வீடுகளை அமைத்தார்கள், தமக்கு வேண்டிய பண்டங்களை மண்ணுலேயே செய்தனர். உண விற்குக் தானிய உற்பத்தி செய்தார்கள். இகனல் மாரி காலத்தில் அவர்களுக்குச் சுயமாகச் சிந்திக்க அவகாசம சிடைத்தது. برقیے Lj ! பொழுது மொழியைப்பற்றிய சிந்தனை உண்டாயது. சுயமாக வழக்கில் இருந்துவங்க சைகைமுறைச் சம்பா ஷணையை சித்திர எழுத்துக்களாகக் களிமண் தகடுகளில் தீட்டினர்கள. படிப்படி யாக அச்சொல் மூலங்களுக்கு ஒசையைக் கொடுத்தனர். தமக்கு வேண்டிய கோயில்களை அமைத்தனர். தம்மிடத்து எஞ்சிய பொருள்களை அவற்றை வேண்டியோருக்குக் கொடுத்து அவர் களிடமிருந்து தமக்கு வேண்டியவற்றைப் பெற்றனர். இவ்விதம் பண்டமாற்று ஆரம்பமாயது. இப் பழக்கமே வாணிபமாக வளர்க் தது. மக்கள் கலந்துறவாடும் பொழுது நாகரிகம் பரவத் தொடங்
கியது. பழக்கவழக்கங்கள், கலைகள், மத உணர்ச்சிகள் முதலியன

Page 9
4. தமி ழின் மாட்சி
இக்கலக் துறவாடலால் மாறுபடுதல் இயல்பு. மக்கள் இடைக்காலங்
களில் கல்விடங்களைத் தேடிப்போயினர். அக்காலத்தில் அவர்கள் வாழ்ந்த நகரங்கள் இயற்கை மாறுபாட்டால் மண்ணுள் மறைக் தன. இன்றைய மக்கள் உள்ளத்தில் பண்டைய 5ாகரிகத்தையும், முன்னேர் வாழ்க்கையையும் அறியவேண்டும் என்னும் அவா வால் எழுந்ததே ஆராய்ச்சி. புகை பொருள் ஆராய்ச்சியால்இயற்கை மாறுபாட்டால்-கூறடைந்த நகரங்கள் பல கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. இவற்றைப் பிற்கூறுவாம்.
உலக நாகரிகத்திற்கு பண்டைக் கமிழர் செய்துள்ள தொண் திகள் மறக்க முடியாதவை. நாகரிக முன்னணியில் இன்று விளங் கும் ஐரோப்பா உரோமபேரரசிலிருந்து பிறந்ததாகும். உரோம சக்கிராதிபத்தியம் கிரேக்கர்களிடமிருந்து அறிந்த நாகரிகத்தால் உண்டாயது. கி ரே க் கர் பாரஸிக மக்களை வெற்றி கொண்ட தாலேயே உன்னத நிலை அடைந்தனர். பாரஸிக மக்கள் யாரிட மிருந்து அறிந்தனர்? A.
பாரஸிக நாடுகளில் பண்டைத் தமிழ் மக்கள் குடியேறி தமது நாகரிகத்தைப் பரப்பியதற்கு உயர் சான்றுகள் பலவுள. இவற்றினே ஆராய்ச்சியாளர் இன்றைய உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர். ஆகவே தமிழ் மக்களே அவர்கள் என்பதில் ஐயப்பாடு தோன்ற இடமில்லை. எமது வரலாற்றுத் தொடர்பை அறிய மு ற் பட வே ஆராய்ச்சி தொடங்குகிறது.

ஆராய்ச்சியும் முத்தமிழ்நாடும்
உலகின் பல பிரிவுகளிலும் ஆராய்ச்சிகள் நடத்தி வந்தோர் அவ்வவ்விடங்களைப்பற்றி எழுதிய நூ ல் களை ஆராயுமிடத்து எல்லா இடங்களிலும் கமிழர் தொடர்பு காணக்கூடியதாக இருக் சின்றது. குமரிக்கண்டமே உலக மக்கள் உற்பத்தியிடத்தின் மத்திய இடம் என்றும் ஆண்டு பேசப்பட்டுவங்க தமிழ் மொழியே அவர்களது மொழியென்றும் அகனல் ஆங்கு வாழ்ந்தோர் தமிழ் மக்களே என்றும் உறுதியாக இவ்வாராய்ச்சிகளால் அறியக் கிடக்கின்றன.
தற்பொழுதுள்ள குமரிமுனை ச்குக் கெற்கே அலைகொழிக் கும் இந்து சமுக்திரத்தினூடே பெரிய கிலப்பரப்பிருந்ததென ஆங்கில பெளதிசு நூல் வல்லார் கூறுவர். தமிழ்ப் புராண வர லர் றுகளும், இலங்கையின் சரித்திரமும், தமிழ் இலக்கியங்களும் கர்ன பரம்பசைக் கதைகளும் இச்கூற்றிற்கு ஆதாரமாகின்றன. வீரமகேந்திரபுரி என்னும் சூரபன்மன் தலைநகர் இருந்த இடமே பழைய இலங்கை யென்றும் அது மிகப் பரந்த தேசமாக இருந்த தென்றும் தெரிகிறது. இராவணன் காலத்திய இலங்கைக்கூடாக மத்திய ரேகை செல்வதாக இந்திய வான சாஸ்திரிகள் பசருகின் றனர். இந்த இராவணன் காலத்திய இலங்கையின் கீழைப் பகுதியே சுமாத்திரா ஜாவாவாக இருக்கலாமெனக் கருதப்படு கிறது. இராசாவளி’ என்னும் சிங்கள நூலில் கடல் கொள்ளப் பட்ட இராவணன் இலங்கைபற்றிக் கூறப்படுவதாகத் தெரிகிறது. "நெடியோன் குன்றமும் தேடியேள்பெளவமும்” என்னும் சிலப் பதிகார செய்யுளடிக்கு உரை கூறுமிடத்து குமரிமுனைக்குத் தெற்கே நாற்பத்தோன்பது நாடுகள் இருந்ததாக அடியார்க்கு நல் லார் கூறுகின்றர். செங்கோன்தரைச் செலவு என்னும் நூலில் அடியார்க்கு கல்லாருரையில் காணப்படாத சில இடப் பெயர்கள் காணப்படுகின்றன. புற நானூற்றில் பஃறுளி ஆற்றைப்பற்றி சொல்லப்படுகிறது,
ஆசித்தமிழ் அகத்தில் மனு என்னும் அரசனின் மகளான ஈழம் என்பவளுக்கு குமரி என்றும் ஒரு பெயர் இருந்ததாகத்

Page 10
6 தமிழின் மாட்சி
தெரிகிறது. அவள் அரசாண்ட இடத்திற்கு குமரிக்கண்டமெனப் பெயர் வந்தது. கன்னியாகவே இருந்ததால் இப் பிரதேசத்திற்கும் கன்னியா குமரிக்கண்டம் என்னும் பெயர் வழங்கப்பட்டது. குமரிக் கண்டத்திலே சேர, சோழ, பாண்டிய க ச டு க ளும் இலங்கைபோன்ற நாசெளுமாக நாற்பத்தொன்பது தேசங்கள் இருந்தன. பிற்காலத்தில் ஏற்பட்ட ஜலப் பிரளயத்தால் பெரும் பகுதியான நிலப்பரப்பு நீர்ப்பரப்பாக மாறிவிட்டது. பழைய கமிழ்நூல்களும் இப்பிரளயத்தில் அழிந்தொழிந்தன. ஜலம்கொள் ளாதொழிந்த பிரதேசம் பரதகண்டமாகவும் இலங்கைத் தீவாகவும் பிரிந்தன. இந்த இடங்களிலே வாழ்ந்த தமிழ் மக்களைப் பரதர், காகர், இயக்கர், சித்தர் எனப் பல திறப்படுத்தி அழைத்தனர்.
இலங்கையும் அன்றைய குமரிக் கண்டத்தின் நாடாத வின் அதனை ஈழம் என்னும் குமரி அரசாண்டனள். இதனல் இலங் கைக்கு ஈழம் என்னும் பெயரும் சூட்டபட்டது. தமிழ்த்தேசம், குமரி நாடு, குபேர நாடு, இராவணன் நாடு, நாகதீவு, இயக்க நாடு எனப் பல பெயர்களும் இலங்கைக்கு இருந்தன. அறிவிற் சிறந்த தமிழ் மக்களையே இயக்கர், நாகர் என அழைத்தனர். இலங் கையை அரசாண்ட சுகேசன் என்னும் அரசன் சந்திரஞாலம் என்னும் விமானத்தில் போக்கு வரவு செய்தான். இவற்றினலே அன்றைய தமிழ் நாட்டின் பரப்பு இன்று குறைந்துள்ளதென் பது வெள்ளிடைமலை,
பழைய தமிழ் நாட்டில் கடலில் மூழ்கிய பகுதிபோக இன்று கிலப்பரப்பாக இருக்கும் பகுதிபற்றி மேற் கூறியுள்ளோம். இங்கு ஆராய்ச்சிகள் நடத்தியதன் பயனக கிடைக்கப்பெற்றுள்ள பல வகைச் சாதனங்களும் தமிழ் மக்களையே குறிக்கின்றன. ஆகவே தமிழ்ச் சாகியத்தாரே இங்கு வாழ்ந்துள்ளனரென்பது அங்கை கெல்லிக்கனியாகின்றது.
“குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும் கான் கெல்லையின் இருந்த தமிழ்” என்னும் கூற்றல் கடல்கொண்ட நாடு போக எஞ்சியிருந்த தமிழ்நாடு இன்றைய இந்திய5ாடு முழுமையுமென்பது விளங்கு கின்றது.

ஆராய்ச்சியும் முத்தமிழ்நாடும் 7
பண்டைய நாகரிக உற்பத்தி காடுகளென்று கொண்டாடப் பெறும் பாபிலோனியா முதலிய இடங்களிலும், எகிப்து, கிரேக்க நாடு, உரோமாபுரி முதலிய இடங்களிலும், மெக்ஸிக்கோ முத லிய அமெரிக்க நாடுகளிலும், சீனம் போன்ற தேசங்களிலும் நடத்திய ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை உற்று நோக்குமிடத்து ஆங்குக் காணப்படுவதென்னை? பண்டைய உலகில் வாழ்ந்தோர் தமிழ் மக்களில் இருந்து பிரிந்தவர்கள் என்னும் உண்மை தெளி வாகின்றது.
கடல்கொண்ட தமிழ் நாடுபற்றி அதிகம் அறியக்கூடியதாக தமிழ் நூல்களில் இன்று இல்லை. பழைய தமிழ் நூல்கள் ஜலப் பிரளயத்தில் மறைக்தொழிந்ததால் இன்று அக்கால சரித்திரங் களை அறிய முடியவில்லை. ஜலப் பிசளயத்தின் பின் இருந்த தமிழ் நாட்டை முப்பிரிவுகளாக வகுத்திருந்தனர். இந்நாடுகளைப் பரிமே லழகர் திருக்குறள்குடிமை அத்தியாயத்தில் வரும் செய்யுளில் உள்ள பழங்குடி என்பதற்கு உரை கூறுமிடத்து விளக்குகின் முர்.
*வழங்குவதுள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற்றலைப் பிதலின்று?
இந்தத் திருக்குறளுக்கு அவர் கூறும் உரை கொண்டும் ஏனைய நூல்களில் கிடைக்கும் ஆதாரங்கள் கொண்டும் நோக்கு மிடத்துச் சேர, சோழ, பாண்டிய நாடுகள் மூன்றும் பழம் நாடு கள் ஆகின்றன. இம் முப்பிரிவுகளையும் ஆண்டோர் பழம் மக்களா தலின் அன்னர் காலம் வரையறுக்க முடியாது.
சேர, சோழ, பாண்டிய நாடுகளில் வழங்கிவந்த மொழி தமிழ் மொழியே. இம் மொழியொன்றே இத்தமிழ் நாட்டின் பெருமைக்குப் போதியதாகும். இம் மூன்று நாடுகளிலும் பாண்டி காடே தமிழுக்குப் போதிய ஊக்கமளித்ததென நூல்கள் கூரு கிற்கும்.
பாண்டிய6ாடு சோழ தேசத்திற்குத் தென்மேற்கில் கன் னியாகுமரி வரையில் உள்ள தேசமாகும். இதனை அக்காலத்தில் “மாறதேசம்" என்றும் "மாறன்பதி” என்றும் வழங்கி வந்தனர். பாண்டியர் அரசியற்றினமையின் இதற்குப் பாண்டிய நாடென்

Page 11
8 தமிழின் மாட்சி
னும் பெயர் உண்டாயிற்று. தென் மதுரையும், கன்னியாகுமரியின் தென்பால் விசாலித்து வளர்ந்தோங்கிய பூமிப்பரப்பும், அப்பூமிப் பிரதேசத்திற்கு நீர்ப்பாய்ச்சிய பஃறுளியாறும் பண்டொருகாட் பெரு கிய கடற்பெருக்கில் மறைந்துவிட்டன. சப்த நதிகளில் ஒன்றகும் குமரி தீர்த்தமும் இதில் அமிழ்ந்தி மறைந்தது. கடல்கொண்ட தமிழ் நாடுபற்றி சிலப்பதிகாரத்தில் மதுரைக் காண்டத்தில் நாடு காண் காதையில்
*வடிவேல் எறிந்த வான்பகை பொருது பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" எனக் கூறுகின்றர். இஃது இன்றைய ஆராய்ச்சியாளர் கூறும் குமரிக் கண்டத்திற்குப் போதிய சான் ருகும்.
தென்பகுதி கடல்கொண்ட பின்னர் கபாடபுரம் இராச தானியாக ஏற்பட்டது. பாண்டியமன்னர் இக்கடற் பெருக்கால் இழந்த நிலப்பகுதிக்கு ஈடாக சோழநாட்டில் இருந்தும், சேர நாட்டில் இருந்தும் சில பகுதிகளைச் சேர்த்துக்கொண்டனர். இதனை அடியார்க்கு நல்லாரின் "அங்ஙனமாய நிலக்குறைக்குச் சோழ நாட்டெல்லையிலே முத்தார்க் கூற் ற மும் சேரமா நாட்டுக் குன்றார்க் கூற்றமும் என்னுமிவற்றின. y என்னுங் கூற்று தெளிவாக்குகின்றது. கபாடபுரத்தைத் தலை நீக ராகக் கொண்டு ஆளும் காலத்தில் அதுவும் கடற்பெருக்கில் அமிழ்க்கி மறைய உத்தரமதுரை இராசதானியாகக் கொள்ளப் பட்டது. இந்நகரின் பண்டைச் சிறப்புகளைப் பரிபாடல், மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம், கல்லாடம் முதலிய நூல்கள் வியந்து கூறுகின்றன.
பாண்டிய நாட்டில் வைகை ஆறு நீர் வளத்தால் சிறந்து செல்வத்தைப் பெருக்கியது. பண்டைக் காலத்தில் வைகை ஆறு மிகவும் ஆளமுடையதாகவும். வற்ருத நீர்ப் பெருக்குடையதாக வும் இருந்தது. வைகை ஆற்றைக் கடத்தற்கு குதிரைமுகப் படகும், யானைமுகப் படகும், சிங்கமுகப் படகும் ஆங்காங்கே துறைகளில் காணப்பட்டன என்றும் அவைகளில், மக்கள், அவ சவர்கள் தகுதிக்கும் செல்வத்திற்கும் ஏற்க படகுகளில் ஏறி ஆற்றைக் கடந்தனரென்றும் அறியப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் வைகை ஆற்றைப்பற்றி ஆசிரியர் கூறுமிடத்து,

ஆராய்ச்சியும் முத்தமிழ்நாடும் 9
*உலகு புரந்தூட்டும் உயர் பேர் ஒழுக்கத்தையும்
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
வையை யென்ற பொய்யாக் குலக்கொடி’ எனப் புகழ்ந்துரைக்கின் ருர், பாண்டிய நாட்டில் வைகையே
நீர் வளத்தினை மிகைப்படுத்தியது.
சோழகுலத்தரசர்க்குரிய தேசம் சோழம் அல்லது சோழ மண்டலம் என்று அழைக்கப்பட்டது. காவிரியாம் போன்னி நதி பாயுநாடாதலின் இதனை நீர்மலிவான்’ என்றும் ‘புனல் நாடு' என்றும் கூறுவர். ஆதியில் இதன் தலைநகர் உறையூர், அதன் பின்னர் காவிரிப்பூம் பட்டினம் அல்லது புகார் என்னும் நகரம் கலைநகராக விளங்கியது. இத்தலத்திற்குப் பல பெயர்கள் சூட்டப் பெற்றிருந்தன. கவேரன் என்னும் மன்னனுடன் தெ ரீ டர் பு கொண்டிருந்தபடியால் பொன்னி நதி காவேரி என்று அழைக்கப் பட்டு வந்தது.
‘சோழநாடு சோறுடைத்து"
என்னும் ஒளவைப் பிராட்டியார் கூற்றினல் அந்நாடு வளம் பொருந்தியிருந்த தென்பது தெளிவாகும்.
சேரநாடு என்பது இக்காலத்திய திருவனந்தபுரம், கொச்சி, மலையாளம், கோயம்புத்தூர் முதலிய இடங்களும் சேலத்தின் ஒரு பகுதியும் ஆகும். இங்காட்டின் தலைநகரம் வஞ்சி என்றும் திரு வஞ்சைக்களம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இயற்கை வனப்பிற் சிறந்து விளங்குவது சேரநாடு என்று பலர் புகழ்ந்து கூறியுள்ளனர். புகழ்பெற்ற சிலப்பதிகாரத்தின் தந்தையும் இச் சேரர் குலக் கொழுந்தே,
சேரநாட்டில் மலைவளமும் அம்மலையினின்றும் இழிந்த அருவியின் வளமும் நீர் கி  ைற ந் த பெரியாறு என்னும் பெருநதியும் பொருனை என்னும் பொய்யா நதியும் விளங்கித் தோன்றின.
*மூதிர் பூம்பாப்பின் ஒருபுனல் தனித்து மதுகாம் ஞமிளொடு வண்டினம் பாட நெடியோன் மார்பில் ஆரம்போன்று பெருமலை விலங்கிய பேரியாற்று அடைகரை”

Page 12
10 தமிழன் மாட்சி
எனச் சிலப்பதிகார ஆசிரியர் கூறுவதால் இவ் வா ற் றி ன் வளமும் சிறப்பும் ஒருவாறு அறியப்படும். திருநெல்வேலி நாட் டில் 5லம் பெருக்கும் பொருனை யென்னும் பெயர்பெற்ற தாம்பிர வர்ணியாறு சேரநாட்டைச் சேர்ந்தது. இவ்வாற்று வளத்தால் சேரநாட்டில் பயிர்த்தொழில் மிக மேம்பாடடைந்தது.
இந்த முத்தமிழ் நாடுகளிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் தாம் வாழ்ந்த இடங்களை ஐத்திறப்படுத்தியிருந்தனர். இவ்வைந்து நிலங்களைப்பற்றியும் அவற்றில் வாழ்ந்த மக்களைப்பற்றியும் நாம் அறிதல் முக்கியமாகும்.

ஐவகை நிலமும் மக்களும்
தமிழ் நாட்டின் முத்தமிழ் நாட்டுப் பிரிவுகளையும் ஐவகை நிலங்களாக மக்கள் பகுத்திருந்தனர். இவ்வைவகை நிலங்களி லும் வாழ்ந்துவக்க மக்கள் அவ்வந் நிலப் பெயர்களையே கொண்டு அழைக்கப்பட்டனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு கிலங்களாக நாடுகள் பகுக்கப்பட்டிருந்தன. குறிஞ்சி கிலத்திலும், முல்லை நிலத்திலும் சூரியனது வெப்ப மிகுதியால் கம் இயல்பழிந்து மணல் வெளியாக மாறுவதுமுண்டு. இதனைப் பாலைநில மென்டர். இவ்வைவகை நிலத்திலும் வாழ்ந்தவர்கள், தமிழ் மக்கள். இங்கில மக்களுக்கு அவ்வக் கிலப்பெயர்களே வழங்கப்பட்டிருந்தன என நூல்கள் கூறும்,
மலையும மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். மலை நாட்டில் வாழ்வோர் வில்லில் அம்பு பூட்டி எய்வதில் மிகுந்த வல்லமை யுடையவர்கள். மலையிடத்தே திரியும் மிருகங்களை வேட்டையாடியும், அவ்விடத்திற் கிடைக்கும் பழம், கிழங்கு தேன் முதலியவற்றினை உண்டும் வாழ்ந்தனர். ஆடவர் வேட்டை யாடு தற்கு வெளியே சென்ற காலத்து பெண்கள் பழ வகை களும் மூங்கிலரிசியும் மலைநெல்லும் சேகரித்து வைப்பார்கள்.
இக் குறிஞ்சி கிலத்தின் கண்ணே கல்வி கேள்விகளிலும் வீரத் திலும் சிறந்து விளங்கும் ஆடவனை போருப்பன், வெற்பன், சிலம் பன் என அழைப்பர். இவனே இங்கில மக்கள் தலைவன் ஆவான். மற்றைய ஆடவர் குறவர், கானவர் எனப்படுவர். கல்வி முதலிய வற்றல் சிறப்புடைய பெண் ண க் குறத்தி, கோடிச்சி என அழைப்பர். இவள் இக் நிலத்தலைவன் மனைக்கிளக்தி ஆவள். மற்றும் பெண்கள் குறத்தியர் என அழைக்கப்படுவர்.
இங்கில மக்கள் பெரிய விவாகக் கிரியைகளால் கட்டுப்படுக் தப்படவில்லை. காளையரும் கன்னியரும் ஒருவரையொருவர் காதலித்து மணந்துகொள்வர். சிலநாட்களின் பின் உ ற வின ர் எ ல் லோரும் ஒன்று கூடியிருந்து கொண்டாடுவதே அக்கால மணக் கிரியையாக இருந்தது. ஆடவரும் பெண்களும் - பிரதான மாகப் பெண்கள்தான் - தம்மை அலங்கரித்துக்கொள்வதில் மிக்க

Page 13
12 தமிழன் மாட்சி
விருப்பமுடையவர்களாயிருந்தனர். இங்குள்ள பெண்கள் தங்கள் கூந்தலை ஐவகையாகப் பின்னி முடிவர். மணிகளைப் பொறுக்கிக் கோர்த் தும், மலர்களைப் பறித்து மாலையாகக் தொடுத்தும் அணிந்து கொள்வர். கம் காதலர் வீரவேட்டையின் அறிகுறி யாகக் கொணரும் புலிப்பற்களை மாலையாகக் கோர்த்துத் தாலி யாக அணிவர். இவ்வழக்கே இன்றும் தமிழ் மக்களிடையே மணவினையின்பொழுது தாலி தரிக்கும் வழக்கம் நிலவுகின்றது
மலைநாட்டு மக்களது குலதெய்வம் குமரக்கடவுள் ஆகும். இங்குள்ள மக்கள் முருகக்கடவுளை வழிபட்ட முறைபற்றித் திரு முருகாற்றுப்படையில் பழமுதிர்ச் சோலை யென்னும் பகுதியின் கீழ் அழகாகக் கூறப்பட்டுள்ளது.
குறிஞ்சி நிலத்து மக்கள் பெருகத் தொடங்கினர்கள். மலை யிடக்தே கிடைக்கும் பொருள் அங்குள்ளார்களுக்குப் போதாத தாயிற்று. ஆக வே அவர்கள் கீழே சென்று காடுகளில் கம் வாழ்க்கையை நடத்தினர். காடும் காடு சார்ந்த இடமும் முல்லை கிலமென்பர். இங்கு ள் ள மக்கள் தாம் வேட்டையாடுதற்கு உபயோகித்த 5ாய்களையும், ஆடு, மாடு, எருமை முதலியவற்றை யும் வீடுகளில் வளர்த்து வந்தனர். ஆடு மாடுகளை மேய்த்து அவை கொடுக்கும் பிரயோசனங்களை நம்பியே இவர்கள் வாழ வேண்டியவர்களானர்கள். டோர், தயிர் முதலியவற்றினை மருத நிலத்கே கொண்டுசென்று விற்று அங்கிலத்தில் விளையும் நெல் முசலியனவற்றைப் பெற்று வாழ்க்கையை நடச்தினர். இடையர் ஆடு மாடுகளைக் காட்டிற் கொண்டு சென்று மேய்த்து மாலைக் காலத்தே வீடு திரும்புவர்.
முல்லை கிலத்து மக்களிலே கல்வி முதலியவற்றிலே சிறந்த ஆடவனைக் குறும்பொறைநாடன் தோன்றல் என அழைத்தனர். இவனையே இங்கிலத் தலைவகைக் கொண்டனர். கல்வி கேள்வி களில் சிறந்த பெண்ணை மனைவி, கிளத்தி என அழைப்பர். இவள் இங்கிலத் தலைவனது மனைவியாவாள். இங்குள்ள மற்றும் ஆடவர் களை இடையர், ஆயர் எனவும், மற்றும் பெண்களை இடைச்சியர், ஆய்ச்சியர் எனவும் அழைப்பர். மகளிரும் மைந்தரும் மணம் முடிந்த பின்னர் வாழ்க்கையை நடத்துவ காய கற்பு இவ்விடத் தில்தான் நிலைபெற்றது என நூல்கள் கூறும்.

ஐவகை நிலமும் மக்களும் 13
இங்கில மக்கள் தாம் வசித்த இடங்களைப் பல பிரி வுகளாகப் பகுச்திருந்தனர். பல குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து ஐக்கியமாக வாழ்க்கன. இக் குடும்பங்களுக்குக் தலைவனக ஒருவன் இருந் தான். இவ்வாறு முல்லை நில கதே முதல் அ0 சன் தோன்றி னன். அரசனைக் கோன் என்றும் அழைப்பர். இப் பெயரே இதற்கு உதாரணமாகும். முல்லைநில மக்கள் வாசுதேவனை வழி படுவர். இங்கிலப் பெண்கள் மாயன் புகழ்பாடிக் கைகோர்த்துக் குரவைக் கூத்தாடுவர்.
வயலும் வயல் சார்க்க இடமம் மருத நில மெனப்படும். மருத நிலம் நீர் வளம் பொருந்தியது. அங்கு மருத மரங்கள் செழித்து வளரும். மக்கள் நெல், கரும்பு முதலியவற்றை ટિંir வித்த அவற்றின் பயன்களைப் பெறுவர். அரசர்க்குரிய தலைநகரம் பெரும்பாலும் மருதநிலத்திலேதான் உண்டு. ஆறுகளில் இருக் கும் வெள்ளத்தை வயல்களுக்குப் பாய்ச்சிப் பயிர்களை விளைவிக்க இங்குள்ளவர்கள் கற்றிருந்தனர். இவர்கள் வெள்ளத்தை ஆண் டமையால் வெள்ளாளர் எனவும், வேளாண்மை செய்தமையால் வேளாளர் எனவும் அழைக்கப்பட்டனர். இங்கில மக்களிடையே கல்வி கேள்விகளிலே சிறந்த ஆடவனை ஊரன், மகிழ்நன் என அழைத்தனர். இவன் இந்நில மக்கள் தலைவனவான். கல்வி கேள்வி களில் சிறந்த பெண்ணை கிளத்தி, மனைவி என அழைப்பர். இவள் இங்கிலத் தலைவன் மனைக்கிளத்தியாவாள். இந் நிலக்கேயுள்ள மற் றைய ஆடவர்களை உழவர், கடையர் எனவும் பெண்களை உழத் தியர், கடைச்சியர் எனவும் அழைக்தனர்.
இவ்விடத்தே மக்கள் சந்தோஷமான வாழ்க்கையை நடத் தினர். ஆடல் பாடல்களும், பரத்தையர் சேரிகளும் பொழுது போக்கிற்குரிய பல இடங்களும் இங்கேயிருந்தன. இங்கில மக்க ளுக்கு இந்திரனே தெய்வம், இந்திரனுக்கு ஆண்டுதோறும் பெரிய கொடியேற்று விழா நடந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்படும். நெய் தல் நில மக்களுள் கல்வி கேள்விகளிற் சிறந்த ஆடவனச் Gařů பன், புலம்பன் என அழைப்பர். கல்வி கேள்விகளிற் சிறந்த பெண்ணைப் பரத்தி, நுளைச்சி என அழைப்பர். இவள் இந்நிலத் தலைவன் மனையாளாகும், மற்றும் ஆடவரை நுளையர், பரதர், 96T லர் என்றும், பெண்டிரை நுளைச்சியர், பரத்தியர், அளத்தியர் என் அறும அழைபபா. -

Page 14
14 தமிழன் மாட்சி
நெய்தல் நிலத்து மக்க ள் மீன்பிடி படகுகளில் சென்று ஆழ்ந்த கடலிடத்தே வலைவீசி மீன்களைப் பிடிப்பர். பிடித்த மீன் களைக் கரையிடத்தேயுள்ள மணலில் காயவிடுவர். பரதவரின் இளைய மகளிர் புன்னை மரங்களின் நிழலில் இருந்து உணங்கும் மீனைக்
கவரவரும் புட்களை ஒட்டிக் கலைப்பர்.
கடற்கரைகளில் அரசர்களால் கிறுவப்பட்ட பண்டகசாலை கள் காண ப் படும். வெளித் தேசங்களுக்கு அனுப்பப்படும் பொருள்களும் கடல் மார்க்கமாக வந்திறங்கிய பொருள்களும் அப் பண்டகசாலைகளில் தேங்கிக் கிடக்கும். கடல் மார்க்கமாக வர்த்த கப் பொருள்கள் தமிழகத்திற்கு வந்ததுபற்றிப் பல நூல்களும் கூறுகின்றன.
* கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
குலத்திற் குன்முக் கொழுங்குடிச் செல்வர்
எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றதை ஆய்ந்தால் பல உண்மைகளை அறியலாகும். கடற்கரைகளில் அமைத்திருந்த பண்டகசாலைகளில் இருக்கும் பொருள் களை க் கடலிற் செல்வோர் பகுத்துணரும் பொருட்டுப் பல கொடிகள் நாட்டப்பெற்றிருந்தன.
கடலிலே செல்லும் கப்பல்கள் திசை அறிந்து செல்வதற்கு கடற்கரைகளில் வெளிச்ச வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. உப் பங் கழிகளில் விளைந்த உப்பை, உமணர்கள் வண்டி வண்டிகளாக ஏற்றிச் சென்றனர். நெய்தல் கிலத்தின் கண்ணே சிறந்த பட்டணங் கள் உண்டு. இங்கு பெரிய சைவர்கள் மாடி வீடுகளில் வாழ்வர். மயில் போன்ற சாயலும் குயில் போன்ற குரலுமுடைய ஒள்ளிய வளையல்களை அணிந்த மெல்லியல் மகளிர் கடற்கரைகளில் உலாவு வர். இக் கடல் ஒரங்களில் இருந்த பரதவரே அரேபியா, எகிப்து, மலாயா, காம்போதியம், சீனம் ஆகிய நாடுகட்குச் சென்ற பெரிய மாலுமிகளாவர். இவர்கள் வருணனையே தெய்வமாக வணங்குவர்.
குறிஞ்சி சிலத்தும் முல்லை நிலத்தும் உள்ள சில பகுதிகள் சூரிய வெப்பத்தால் தம் இயல்பழிந்து பாலைநிலமாக மாறுவதுண்டு. வேட்டை மிருகங்களைத் துரத்திச் செல்லும் மக்கள் இந்தப் பாலை வனங்களில் தங்கிவிடுதலும் வழக்கம். இவ்விடத்தில் ஜனங்கள் கிலே யான வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர் என்பது தெரியவில்லை"

ஐவகை நிலமும் மக்களும் 15
பாலைவன வழிகளிலே கள்வர்கள் தங்கி அவ்வழியே செல்லும் மக் களைக் கொன்று அவர் பொருள்களைக் கவர்வர்.
இங்கிலத்து வாழ்ந்த மக்களுள் சல்வி கேள்வி முதலியவற்றில் சிறங்க ஆடவரை விடலை, காளை, மீளி என அழைப்பர். இவன் இங்கிலத் தலைவன் ஆவான். மற்றும் ஆடவர் 6ाuS60ाां, மறவர் என அழைக்கப்படுவர். கல்வியிற் சிறந்த பெண்ணை எயிற்றியென்பர். இவள் இங்கிலத் தலைவன் மனையாளாகும், மற்றப் பெண்களை எயிற்றியர், மறத்தியர் என அழைப்பர்.
இவ்விதமாக முத்தமிழ் நாட்டிலும் வாழ்ந்து வந்த ஐக்கில மக் களது வாழ்க்கை விபரம் நமக்கு அத்தியாவசியகமாகும். வளம் பொருந்திய தமிழ் நாட்டில் மக்கள் செல்வம் கொழிக்கத் திகழ்ந் தார்கள். முத்தமிழ் நாடுகளும் தமிழராய தமது சொந்த நாடு என்று வாழ்ந்து வந்தார்கள். இவைகளில் வாழ்ந்துவக்த மக்களின் வீடு, வாயில், நடை உடை பாவனை, பழக்க வழக்கங்களைப்பற்றிப் பத்திப் பாட்டில் காணலாம். தமிழகம் முழுவதும் வாழ்ந்த தமிழ்
மக்கள் வாழ்க்கையை நோக்கல் எமக்கு அவசியம்

Page 15
மக்களும், வாழ்க்கையும்.
பண்டைக் காலத்து வாழ்ந்து வந்த எம் முன்னேர் வாழ்க் கைபற்றி அறிய எம் உள்ள ங் கள் கொந்தளிப்பது இயற்கை. பண்டை மக்கள் தமது வாழ்க்கைக்கு வகுக்த முறைகள் இன்றும் கின்று கிலவி வருகின்றன, நாகரிக உலகில் இருந்துவரும் இன் றைய வீட்டு அமைப்பு முறைகள் பண்டைத் தமிழ் மக்கள் காட் டிய வழியையே பின்பற்றியுள்ளன வென்பதை மறுக்க முடியாது. அந் நாட்களில் காற்ருேட்டம் மிக்க தெருக்களை அமைத்து நகர அமைப்பில் தமக்கிருந்த பண்பட்ட அறிவை உலகுக்குக் காட்டி னர். சுட்ட செங்கற்களையும், உலர்ந்த செங்கட்டிகளையும் வீடுகள் அமைப்பதற்குப் பயன்படுத்தியுள்ளனர். சில பகுதிகளில் பெருங் கற்பாறைகளை மலையையே புரட்டிவிடுவது போன்று தூண்கள் அமைத்து வீடுகள் கட்டி னர். சில இடங்களில் மலைகளையே குடைந்து கட்டிடங்கள் அமைத்தனர். வீட்டுச் சுவர்கள், சாளரங் கள், வாயிற் படிகள் முதலியன ஒழுங்காக அமைக்கப்பட்டிருந் தன. அக்காலத்திய கொத்தர்கள் கட்டிட நிர்மாணத்திலே சிறந்த வர்கள் என்பதற்கு இன்றும் நிலவும் பாரிய வேலைப்பாடுகள் எடுத் துக்காட்டாக விளங்குகின்றன. அக்காலத்தில் அணிஅணியாகவே வீடுகள் அமைக்கப்பட்டன. மாடி வீ டு கள், பல வகைப்பட்ட
பாரிய கட்டிடங்கள் தமிழ் நாட்டில் மிளிர்ந்தன.
இரண்டிற்கு மேற்பட்ட அடுக்கு மாடங்களைக் கொண்ட மாளிகைகள் பல்கிக் கிடந்தன. பெரிய கட்டிடங்களிற் பாரிய கூடங்கள், அகன்று நீண்ட தாழ்வாரங்கள், அகன்ற முற்றங்கள், சிறிய பெரிய வாயில்கள் முதலியன விசேட அமைப்புகளாகும் படுக்கை அறைகள், நீராடும் அறைகள், மலங்கழிக்கும் ஒதுக் கிடங்கள் முதலியன நன்மாதிரி அமைக்கப்பெற்றிருந்தன. இவ் விதம் மக்கள் விடுகளும் கட்டிடங்களும் திகழ்ந்தன. சித் திர வேலைப்பாடுகள் மல்கிக் கிடந்தன. அரசன் அரண்மனையோ கூறத் தரமன்று. அரண்மனை அமைப்புகள் பண்டைத் தமிழ் மன்னர் களின் சிறப்புக்களையே பன்மடங்கு பெருக்குவனவாக இருக்கின் றன. வீடுகள், பொதுக் கட்டிடங்கள், அரண்மனைகள், ஆலயங்கள்

ஐவகை நிலமும் மக்களும் 17
முதலியன மக்களின் நாகரிக முதிர்ச்சியை இ ன் னு ம் நமக்கு அறிவுறுத்துகின்றன.
நீர் மொள்ளக் கிணறுகள் பல வீட்டிற்கு ஒவ்வொன்முக அமைக்கப்பட்டிருந்தன. அழகிய செய் குளங்கள் மக்கள் நீராட அமைக்கப்பட்டிருந்தன. பண்டை மக்கள் செயற்கைக் குளங்களை யும், நவீன நீர்வீழ்ச்சி சாதனங்களையும் அக்காலத்தில் அமைத் திருந்தனர் என்பதற்கு அத்தாட்சிகள் கூறவேண்டிய அவசிய மின்று. இவைகள் கண்கூடாகவுள்ளன. அக்காலத்தில் நீர் வசதிகள் தக்க சிறந்த முறை யில் மக்களுக்குச் செய்து கொடுக்கப்பட் டிருந்தன.
தமிழ்நாட்டு மக்கள் தம் வாழ்க்கைக்குத் தேவையான எல் லாப் பொருள்களையும் பெற்றிருந்தனர். களிமண்ணுலும் மாத் தாலும், செம்பாலும், வெண்கலத்தாலும், மற்றும் உலோகங்க ளாலும் தமக்கு வேண்டிய பொருள்களைச் சேகரித்திருந்தனர். கன் முறையிற் செய்யப்பட்ட மட்பாண்டங்களே மக்கள் உபயோ கத்தில் இருந்தன. பொன் வெள்ளிகளினல் செய்யப்பட்ட பாத்தி ரங்கள் செல்வர்களது மாளிகைகளிலே பல்கிக் கிடந்தன. அப் பாத்திரங்களின்மீது அழகிய ஒவியங்களும், சித்திரங்களும் வரை யப்பட்டிருந்தன. இன்றும் எம் இல்லங்களிலும் இத் த ைகய பண்டை மக்களின் வீட்டுப் பொருள்களைப் போன்றவைகளைக் காணலாகும். வீ டு களி லும் பலவகைச் சிலைகளைச் செய்து வைப்பதுடன் எங்கு நோக்கினும் சிற்பக் கலையும், ஒவியமும் மிளிரும்படி செய்து வந்தனர். பலவகை எந்திர சாதனங்களும் அன்னர் உபயோகத்தில் இருந்து வந்திருக்கின்றன. பீங்கான் கள் கூட அக்கால தமிழ் மக்களிடையே கையாளப்பட்டு வந்த பா த் தி ர ங் கள ரீ க விளங்கின என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. வீடுகளில் பல்வேறு வகைப்பட்ட விளக்குகள் உபயோகத்தில் இருந்திருக்கின்ற்ன. விஷேட தினங்களுக்குப் புதுவித விளக்குகள் பாவிக்கப்பட்டன.
குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் பல இருந்தன. இன்றும் இருக்கின்றன. ஆனல் பண்டு எம் மக்களிடையே பரவி யிருந்த விளையாட்டுப் பொருள் கள் இன்றையவற்றிலும் u637 மடங்கு சிறப்புடையன என்பதை மறுக்க முடியாது.
தமிழ் மக்கள் பொன்னலும் மணியாலும் செய்த ஆபரணங் களைப் பூண்டனர். அக்காலத்தில் தமிழ் நாட்டில் செ ல் வம்

Page 16
18 தமிழன் மாட்சி
கொழித்தது. முத்துக்களும் பவளங்களும் இன்னும் பல கடல் படு திரவியங்களும் பொன்னும் மணியும் நகரங்களில் குவிந்து கிடந்தன. மக்களின் அணிகலன்களும் அளப்பரியன. சிலப்பதி கார ஆசிரியர் மாதவி பூண்ட அணிகலன்களைப்பற்றி அழகாக எடுத்துக் கூறுகின்றர். இதனல் தமிழ்நாட்டு அணிகலன்கள் தெளிவாகின்றன.
அக்காலத்திய யுத்தவீரர் ஈட்டிகள், உடைவாள்கள், கத்திகள், வேல்கள், அம்புகள் முதலியவற்றை உலோகங்களாற் செய்திருந் தனர். அக்காலத்தில் உலோகங்களாற் செய்யப்பட்ட ஆயுதங்கள், வீட்டுப் பொருள்கள், அணிகலன்கள் முதலியன தமிழ் நாட்டில் பல்கிக் கிடந்தனவென்பதில் ஐயமின்று.
அக்காலத்து மக்கள் இல்வாழ்க்கையைப் பெரிதும் விரும்பி யிருந்தனர். இல்வாழ்க்கையில் வருவாய்க்கு ஏற்ப செலவையே தமிழ் மக்கள் செய்து வந்தனர். தமது செல்வத்தைத் தேடுவதற்கு அவர்கள் பல தொழிலையும் செய்து வந்தார்கள். இடங்களுக்கு ஏற்பப் பல தொழில்களையும் மக்கள் கையாண்டு வந்தனர். மக்கள் எல்லோரும் ஒற்றுமையைப் போற்றி வாழ்ந்தனர். விவசாயம் மக்களால் கையாளப்பட்டது. விளைந்த தானியங்களைத் தாமும் உண்டு மிகுதியை அங்கிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தனர். தமிழ் மக்களின் உணவு வகைகளையோ அல்லது உடை முறை களையோ அன்றி வாழ்க்கையிற் கை யாண்ட பண்பாகுபாடு
களையோ கூறின் விரியும்,
இல்லறம், துறவறம் என்னும் இருவகை அறங்களும் நிலைத் திருந்ததாகத் தெரிகின்றது. இல்லறத்தை மேற்கொண்டோர்கள் பலவகைத் தானதருமங்களையும் முறையின் வண்ணம் செய்து வந்தனர். இல்லறத்தில் நல்லறங்கள் செய்வதற்குக் கணவனும் மனைவியும், கண்ணிரண்டும் ஒரு பொருளையே காணுதல்போல, மனமொத்து நடத்துவதே முறை என்பது சிலப்பதிகாரத்தால் விளங்குகிறது. கண்ணகி தன் கணவனைப் பிரிந்த பின்னர் இல்ல றத்தின் நல்லறங்களை இயற்றும் பெருமையைத் தான் இழந்ததாக கூறுகின்றனஸ். இதனுல் கணவனும் மனைவியும் ஒத்தே இல்லற த ரு மத்  ைத நடத்தவேண்டு மென்பது பண்டைய மக்கள்
கொள்கையெனத் தெளிவாகின்றது.

ஐவகை நிலமும் மக்களும் 19
இல்லற வாழ்க்கையில் கணவன் இறப்பின் அவர் வாழ்க்கைத் துணையான மாதும் உயிர்துறக்கும் வழக்கம் தமிழ் மக்களிடையே இருந்தி வந்தது. பாண்டிய அரசன் உயிர் துறந்ததும் அன்னவன் மனைவியும் உடன் உயிர் திறந்தன ள் என்று தலையாய கற்பின் தன்மையை சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு காத லனுடன் உயிர்துறவாத மாதர்கள் கைம்மை நோன் பாகிய விரதங் களை அனுட்டிக்கவேண்டும். இவ்வழக்கு தமிழ் நாட்டில் இன்றும் இடையிடையே காணக்கூடியதாக இருக்கின்றது.
இல்வாழ்க்கையைத் துன்பமென்றறிந்த ஆண்களும் பெண் களும் துறவறத்தை மேற்கொண்டு வாழ்ந்தனர். பெண்கள் துற வறக்கை மேற்கொள்ளும் வழக்கம் அந்நாளில் இருந்தது. சிலப் பதிகாரத்தில் கவிந்தி, மாதவி, மணிமேகலை இவர்களின் துறவு இதற்கு உதாரணமாகும். ஆக்கலும் அழித்தலும் துறவறத்தை மேற்கொண்டிருந்தாரிடம் விளங்கியதென நூல்கள் கூறும்
ஒரு சமுதாயத்தின் வாழ்க் கை க் கு இன்றியமையாதது முயற்சி. முயற்சி மூலம் தொழில், தொழில்களைச் செய்வதால் தமக்கும் மற்றையோருக்கும் உதவி செய்து கொள்ளுதல். இப் படியே பரஸ்பர உதவி ஒத்தாசைகளுடன் வாழ்ந்து வந்தனர் தமிழ் மக்கள். தமிழர்கள் வாழ்க்கையில் கல் வி, முயற் சி, தொழில், வாணிபம், ஒற்றுமை, கடவுட் கொள்கை முதலியலுை விசேட அம்ஸங்களாகும். அவர்களது நகர அமைப்புகளும் ஆட்சி முறைகளும் அவர்கள் வாழ்க்கையில் அத்தியாவசியமானவை களாகும். அக்கால அரசர்கள் நடத்திய போர்த்திறன் இன்றைய தமிழன் உள்ளத்தில் இல்லை. அக்காலத் தமிழ் மக்களின் வீரம் மறைந்துவிட்டது. பெரும்பாலான தமிழ் மக்கள் உணர்ச்சி அற்ற வர்களாக இருக்கிருர்கள். அன்று உலகின் உன்னத வணிகர்களாக கடல் கடந்து வர்த்தகம் செய்த மக்கள் இன்று அடிமைகளாக வாளாவிருக்கிறர்கள். அவர்கள் மொழி உருக் குன்றியும் குன்ரு மலும் இருக்கின்றது. மறுமலர்ச்சி இயக்கத்தினரும், பண்டைக் கொள்கையினரும் தம்முட் பொருதுகின்றனர். அ டி  ைம த் தளையை அகற்ற ஆற்றலற்றவர் தம்முட் பொருது பயன் உண்டா? பண்டைய தமிழர் வாழ்க்கையும் இ ன்  ைற ய தமிழர் நிலையும் என்ன? மக்கள் உன்னத வாழ்க்கையும் இன்றைய தமிழர் நிலை யும் என்ன? மக்கள் உன்னத வாழ்க்கைக்கும், நாட்டின் சிறப் பிற்கும் அரசாட்சியே இன்றியமையாதது.

Page 17
ஆட்சியும் பாதுகாப்பும்
நாட்டின் உன்னத நிலைக்கு அதனை வழிநடத்தும் அர சாட்சியே இன்றியமையாதது. இடையனற்ற ஆட்டு மந்தை எங் ங்னமுருப்படும் நாட்டிற்கு அரசன் தான் வழிகாட்டி, அவனே அந் நாட்டிற்குப் பாதுகாவலன். மக்களை ஆட்சி செய்து நீதி, ஒழுக்கம், ஒற்றுமை முதலியவற்றை கிலை நாட்டுபவனும் அவனே. நகரம் சிறந்த முறையில் அமைக்கப்படவேண்டும். அப்பொழுது தான் மக்கள் சிறப்புடன் வாழ முடியும். அரசன் தனது ஆட்சியை சிறப்பாக நடத்தச் சிறந்த நகர அமைப்பு இன்றியமையாதது.
மக்கள் அறிவு முதிரமுதிர ஆற்ருே ரங்களில் நகரங்களை அமைத்தனர். மரக்கலங்களின் போக்கு வரத்து கருதியே முத லில் நகரங்கள் ஆற்றே ரங்களில் அமைக்கப்பட்டன. பண்டை நாளில் வாணிபத்தில் புகழ்பெற்ற தமிழ் மக்கள் தமது செல்வங் களை அந்நிய நாடுகளில் இருந்து சேகரிப்ப்தற்காகவே இம்முறை யைக் கையாண்டனர் என்பது தெளிவாகின்றது. ஆற்றின் கரை களிலேயுள்ள பரந்த வெளிகளிலேயே நகரங்கள் கிருமாணிக்கப் பட்டன. நகரங்களின் விதிகளின் அமைப்பு அந்நகரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குவனவாகும். காற்று வசதிகள் நோக் கியே வீதிகள் பெரும்பாலும் அமைக்கப்பட்டன. வீதிகள் மருங் கிலே வானை அளாவும் மாடமாளிகைகள் விளங்கின. வீதிகளின் கரையோரங்களில் கால்வாய் அமைப்புகள் சிறந்த முறையில் இருந்தன. இக்கால்வாய்கள் மூலம் சாக்கடை நீரும், மழை காலத் தில் வெள்ளமும் கழிக்கப்படும். பெரும்பாலும் கால்வாய்கள் மேற்பாகம் மூடப்பெற்றிருக்கும். பண்டைத் தமிழ்மக்களிடையே நிலவி வந்த கட்டிட நிர்மாண வேலைகளே ஒரு தனி அம்ஸமாகும். கட்டிட நிர்மாணம் ஒரு பரந்த சாஸ்திரமுமாகும். நகரம் கோட் டங்களாகவோ அன்றி பகுதிகளாகவோ பிரிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு அமைக்கப்பட்ட நகரங்களில் இருந்துதான் மன்னர் தம் பிரஜைகள் மீது ஆட்சி செலுத்தி வந்தனர். நாகரிகத்தில் மிகுத்துள்ள மேலை நாடுகளிலும் காணற்கரிய சுகாதார முறைகளே

ஆட்சியும் பாதுகாப்பும் 21
அக்காலத் தமிழ் மக்கள் அனுஷ்டித்தனர். ஒழுங்கு முறையும் கட்டுப்பாடுகளும் மக்களாகவே வகுத்துக் கொண்டவைகளாகும். பூம்பொழில்கள் ஒவ்வொரு நகரங்களிலும் பல இருந்தன. பண் டைத் தமிழ்நாட்டு நகரங்களின் அமைப்பே தனிச் சிறப்புப் பொருந்தியவைகளாகும். நீண்ட அழகிய தெருக்களும், உயர்ந்த மாடமாளிகைகளும் இருந்தன. நாடுகளில் சுகாதார முறைகளை அனுட்டித்து வந்தது மாத்திரமன்றி, நகரங்களின் பல பாகங்களி அலும் காவற் கூட்டங்கள் இருந்தன என்பதும் அவ ற்  ைற க் கொண்டு நகரத்தைப் பாதுகாத்த முறைகளும் தெளிவாக நூல் களில் காணப்படுகின்றன.
நாட்டிற்கு வேண்டிய கல்வி, தொழில், கலனுேம்பல் முத லிய பொது விஷயங்களில் மக்களை வழிப்படுத்தவும் பகைவர், கள்வர் முதலியோரிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் இன் ம்ை இவைபோன்ற பிறவற்றைச் செய்வதற்கும் நல்ல அரசையே அக்கால மக்கள் அமைத்திருந்தனர். அன்றைய தமிழ் மக்கள் இவற்றை உணர்ந்தி அதன்வழி நடந்திருத்தலினலேயே தமிழ் நாகரிகமும் அரசியல் ஆதிக்கமும் உயர்ந்த நிலையில் இருந்தது எனலாம். குடிமக்களுக்காகவே அரசாட்சியென்பதை பண்டை மன்னர்கள் காட்டி நடந்துள்ளனர். இன்றைய உலகத்தில் இருப் பது போன்று அதிகார ஆட்சியின் சுரண்டலுக்காக குடிமக்கள் வாழவேண்டுமென்ற கொள்கை அவர்களிடையே நிலவவில்லை ஆட்சியைச் செவ்வனே நடாத்துவதற்கு உதவியாக ஐம்பெருங்குழு எண்பேராயம் மிகவும் துணை புரிந்துள்ளன. இவைகள் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய மன்றங்களேயாகும். குடிமக்களின் சார் பான கருத்துக்களை இம்மன்றங்களிலுள்ளோர் அரசர்க்கு எடுத் துக் கூறுவர். அரசரும் அன்னரின் அறிவுரைவழியே நடப்பர். நல்லமைச்சர், படைத்தலைவர், காவற்றலைவர், தூதுவர், தற்றர் முதலியோரெல்லாம் இப்பாகுபாடுகளில் உள்ளோராகும். நீதிக்கு மாறன எக்காரியங்களையும் நிறைவேற விடாது தடுக்க மன்னன் முயற்சியெடுத்துக் கொள்வான். மன்னன் பிறழும் நேரத்தில் மதி மந்திரிகள் பக்கத்துணையாக நின்று உயர்வழி காட்டுவர்.
பழைய காலத்தில் தமிழ்நாட்டை ஆண்டுவந்த அரசர்கள் நீதியைக் கண்ணுங் கருத்துமாகப் போற்றினர்கள் என்பது சிலப் பதிகாரத்தில் இனிது விளங்குகின்றது. அர சர் க ள் குடிகளின் நலத்தையே தம் நலம்போற் பேணி வந்தனர்.

Page 18
22 தமிழின் மாட்சி
சோழ நாட்டு மன்னரின் ரீதியான ஆட்சியை சிலப்பதிகார ஆசிரியர் கண்ணகி வாயிலாகக் கூறுகின்றர்.
“வாயிற் கடைமணி நடு நா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுட தான் தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும் பெயர் புகார் என்பதியே’ சேக்கிழார் பேருமான் பெரியபுராணத்தில் மனுநீதி கண்ட சோழனைப்பற்றிக் கூறுமிடத்து,
“ஒருமைந்தன் தன் குலத்துக்குள்ளான் என்பதும் உணரான்
தருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன் மருமந்தன் தோாழி உற ஊர்ந்தான் மனுவேந்தன் அருமந்த அரசாட்சி அரிதோ மற்றெளிதோ தான்'
/ என்று தெரிவிக்கின்றர். இன்னும் சிபிச் சக்கரவர்த்தியின் மீதியை சிலப்பதிகார ஆசிரியர், பின்வருமாறு கூறுகின் முர்,
*குருநடைப் புறவின் நெடுந்துயர் தீர வெரிதரு பருந்தின் இடும்பை நீங்க அரிந்து உடம்பிட்டோன் அறந்தரு கோனும் திரிந்து வேருகும் காலமும் உண்டோ'
பாண்டிய நாட்டை ஆண்டுவந்த ம ன் னர் க ள் ரீதியின் பொருட்டு அரிய செயல்கள் பல புரிந்துள்ளனர். பொற்கைப் பாண்டியன் சரிதையை மதுரைமா தெய்வம் கண்ணகிக்கு கூறு வதாக ஆசிரியர் வர்ணிக்குமிடத்தில்,
'நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று
வச்சிாத்தடக்கை அமரர் கோமான் உச்சிப் பொன்முடி ஒளிவனை உடைத்தகை குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து இறைக் குடிப்பிறர் தோர்க்கு இழுக்கம் இன்மை' என்று பா ன் டி ய ன் செங்கோன்மையைப் பாராட்டுகின்ருர். தட்டானின் சொல்லைக் கேட்டு கோவலனை "கள்வன் ’ எனக் கொலை செய்த பாண்டியன் கண்ணகியால் உண்மை அறிந்தான். தன் நீதி பிழைத்தது என மயங்கிச் சிங்காதனத்திருந்து வீழ்ந்து மாண்டான். அதனைச் சிலப்பதிகார ஆசிரியர்
*மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச் சிலம்பும் கண்ணிருழ்-வையைக்கோன் கண்டளவே தோற்முன், அக்காரிகை தன் சொற்செவியில் உண்டளவே தோற்ருன் உயிர்”

ஆட்சியும் பாதுகாப்பும் 23
என்று அழகிய வெண்பாவாற் கூறுகின்றர். நீதி தோற்ற பாண் டியன் நீதிக்காக உயிர்கொடுத்தான் எனக் கேள்வியுற்ற சேர மன் னன் பாண்டியனின் நீதியைப் புகழ்ந்துரைத்தான். சிலப்பதிகார ஆசிரியர் அதனைச் சேர மன்னன் வாயிலாகக் கூறுகின்றர்.
“எம்மோரென்ன வேந்தர்க்கு இற்றெனச்
செம்மையின் இகழ்ந்தசொல் செவிப்புலம் படாமுன் உயிர்ப்பதிப் பெயர்ந்தமை உறுக ஈங்கென வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோலாக்கியது.”
இறுதியில் சேரன் செங்குட்டுவனுக்கு கண்ணகித் தெய்வம் காட்சி கொடுத்தபொழுது
*தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில்
கல்விருந்தாயினன், நானவன் தன் மகன்’ என்று கூறியருளியதால் பாண்டியன் நீதி தவறிய மன்னன் அல்
• லன் என்பது தெளிவாகின்றது.
சேர மன்னர்களும் நீதி வழுவாது ஒழுக்க நெறியுடன் மக் களே ஆட்சி செய்து வந்தனர். பண்டை நூல்கள் இவர்கள் ஆட்சி முறையினை உலகிற்கு எடுத்துக் காட்டா கிற்கின்றன.
அக்கால அரசர் எக்கருமத்தைச் செய்யினும் அறிவால் மிக்க அமைச்சர்களையும் மற்றும் அறிவாளர்களையும் கலந்தே செய்வர். பண்டைய அரச சபைகளில் காலக் கணிதர்களும், தூதுவரும், சேனைத் தலைவர்களும், ஒற்றர்களும் இருப்பார்கள் எனச் சிலப் பதிகாரம் கூறுகிறது. இன்றைய உலகில் இருப்பதுபோன்று பண் டைத் தமிழ் உலகில் ஒற்றர்படை ஒவ்வொரு நாட்டினரிடமும் இருந்தது என்பது நூல்கள் வாயிலாக அறியக்கூடியதாக இருக் கின்றது. சிந்தாமணிச் செய்யுளொன்று பழைய அரசர்கள் எவ் விதம் ஒற்றர்கள் மூலம் விஷயங்களைக் கிரகித்தார்கள் எனக் காட்டுகின்றது, us
“ஒற்றர் சங்களை ஒற்றரின் ஆய்தலும்
கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலும் சுற்றம் சூழ்ச்து பெருக்கலும் சூதரோ கொற்றம் கொள்குறிக் கொற்றவர்க் கென்பவே’

Page 19
24 தமிழன் மாட்சி
சிலப்பதிகாரத்தில் பொதிந்துள்ள மூன்று கொள்கைகளிலும் முதன்மையாக அரச நீதியையே எடுத்துக் கூறுகின்றர் ஆசிரியர். அரசியலில் இருந்து வழுவும் மன்னர்களை அறக்கடவுள் தண்டிப் பாசென்று கூறப்படுகிறது, சோழ நாட்டில் பாவைமன்றமென ஒன்று இருந்ததாகவும் அந்நாட்டு மன்னர் நீதி தவறி நடந்தால் அல்லது மக்கள் நீதி தவறினுல் உடனே அப்பாவை மன்றத்தி லுள்ள பாவையின் இரு கண்களாலும் கண்ணீர் வடியும் எனக் கூறப்படுகிறது. இதனை
'அரசுகோல் கோடினும் அறங்கூற வையத்து
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்து
ed நின்றழும் பாவை மன்றமும’
என சிலப்பதிகார ஆசிரியர் எடுத்துக் கூறுகின்றர். பண்டைத் தமிழகத்தில் நீதியொழுக்கம் தலை சிறந்து இருந்ததென்பது வெள்
ளிடை மலையாகக் காணக்கிடக்கின்றது.
நாட்டை வளம்படுத்தி, மக்கள் நிலையையுயர்த்தி, கல்வி தொழில் முதலியவற்றில் மக்களை ஊக்கமும் உணர்ச்சியும் கொள் ளச் செய்தலே மன்னனின் முக்கிய கடமையாகும். “மன்னனுயிர்த்தே மலர்தலையுலகம்’
என்னும் கூற்றுப்படி நாட்டிற்கு மன்னன் முக்கியமானவன கின்றன். அக்கால மன்னர்கள் தமிழ்ச் சங்கங்களை அமைத்து கல்வியை ஆதரித்து வந்தனர். மன்னர் அவைகளில் புலவ சிகா மணிகள் கிறைந்திருந்தனர். அரிய பெரிய நூல்கள் பல அக்காலத் தில் மக்களுக்கு அளிக்கப்பட்டன. அக்காலத் தமிழ் மக்கள் அறி ஞர்களையும் புலவர்களையும் ஆதரித்ததினலேயே அரிய நூல்கள் பல்கிப் பெருகின. மக்களுக்காக அநேக பூங்காக்கள் ஆங்காங்கு அமைக்கப்பெற்றிருந்தன. மாலை நேரங்களை உல்லாசமாக மக்கள் கழிக்க களியாட்ட சாலைகள் இடையிடையே இலங்கின.
மக்களைப் போர் என்னும் அரக்கனிடமிருந்து காப்பாற்ற அன்றைய மக்கள் கையாண்ட முறைகள் விசித்திரமானவைகளா கும். அங்கிய நாட்டவரின் படை யெழுச்சிகளிலிருந்தும், பகை யாசர்களின் கலகங்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க அரசர்கள்

ஆட்சியும் பாதுகாப்பும் 25
பெரிதும் முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். அக் காலத் தில் நடந்த போருக்குரிய காரணங்கள் மிகமிக விசித்திரமானவை களாக இருக்கும். இன்றைய காலக்தைப் போன்று வர்க்கக நோக் குக் கருதி யுத்தம் செய்யவோ அன்றி ஒருநாட்டை இன்னுெரு நாட்டுடன் தூண்டி விடவோ மக்கள் முயற்சிக்கவில்லை.
அக்கால அரசர்கள் நல்ல வீரர்களாகவும் யூகசாலிகளாகவும் இருந்தார்கள். போர்க் கலைகளை உரிய முறைப்படி பயின்றிருந் தனர். தமது குடிமக்களைப் பகைவர் அடக்கு முறைகளில் இருந்த காப்பாற்றுவதற்கு அன்னர் பல வழிவகைகளைக் கையாண்டனர். அவர்கள் கையாண்ட போர்க் கருவிகள் மிகப்பல. நகரத்தின் வெளிப்புறம் இருந்து கோட்டையின் உள்ளிடம் வரையில் பலத்த காவல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இயற்கையே பலவிடங்களில் தக்க அரண்களாக உதவின. செயற்கைக் கோட்டைகள் ஒவ் வொரு நாட்டிலும் பல இருக்கும். கோட்டைகளின் அமைப்பு கள் பகைவரைத் திண்டாட வைக்குங் கன்மையனவாக விளங் கின. கோட்டைச் சுவர்களின் உச்சியில் பலவகை எந்திரப் பொறி களும் வைக்கப்பட்டிருக்கும். சிலப்பதிகாரம் புறகானாறு போன்ற நூல்களில் அக்கால ஆயுதங்கள் பற்றியும் கோட்டை அரண்கள் பற்றியும் காணலாகும். போர்முறைகளுக்காக இங்ங்ணம் வசதிகள் செய்யப்பட்ட போதிலும் அறத்தினின்றும் அரசர்கள் வழுவமாட் Ll-W (Tag,56 T.
"அறநெறி முதற்றே அரசன் கொற்றம்"
என்பது இதனை விளக்கும். பகை நேரினும் அப்பகையை நட் பாக்க முயல்வாேயன்றி அதனைப் பகைமையாக சாதிக்கமாட்டார் கள். பகையரசர்களைத் தோழர்களாகச் செய்துகொள்ளவே டெரி தும் முயல்வார்கள். அப்படிப் போர் நிகழினும் அறநெறி பிசக மாட்டார்கள். தமிழனுக்குக் கருணை யெண்ணமானது அவர்கள் தாயிடம் பால் ஊட்டும்பொழுதே உட்புகுந்த அரிய குணமாகும். தமிழன் உள்ளத்தில் கருணை வெள்ளமே ஊற்றெடுக்கும்.
போருக்குரிய காரணங்கள் பலவாக இருக்கும். அக்காலத் தில் ஒரு அரசன் பிறிதொரு அரசனின் மகளைக் கேட்டவிடத்து அவன் கொடுக்க மறுப்பின் இத்தகைய போர்கள் நடப்பதி சக ஐம். இங்ஙனம் பெண் மறுத்துக் கூறுகலை 'ம கண் மறு த் து மொழிதல்’ என்று இலக்கியங்கள் கூறும். பாலை நிலத்து மறக் குடித் தலைவர்கள் பெரும்பாலும் முல்லை நிலத்து நிரை களைக் கவர்ந்து வந்து கள்ளுக்கு விலையாகக் கொடுப்பர். ஒரு அரசன் வேற்று அரசனுடன் போர்புரிய முற்படின் முதலில் நிமித்தம்

Page 20
26 தமிழன் மாட்சி
பார்த்து தெய்வம் வணங்கியே செல்வான். எதிரி அர சனி ன் ஆநிரைகளையே அரசன் படைகள் முதலில் கவரும். சில சமயம் கவரப்பட்ட ஆகிரைகளைச் சொந்த அரசன் மீட்டுச் செல்வது முண்டு. மக்கள் மாட்டையே செல்வமாகக் கொண்டிருந்த காலக் தில் இப்படிப் போர்முறை நடந்திருக்கலாம். அக்காலத்தில் வெட் சிப் பூச்சூடல், கரந்தைப் பூவணிதல், வாகைசூடல் முதலியன போர்க்குரிய சின்னங்களாகும். சில சின்னங்கள் போருக்கு ஆயத் தம் என்பதைக் குறிக்கும். சில போரைக் குறிக்கும். இன்னும் சில வெற்றியைக் குறிக்கும். இத்தகைய போர்களில் சிறந்த தொண்டாற்றும் வீரர்களுக்கு ஏதிை, காவிதி போன்ற பட்டங் கள் வழங்கப்படுவதுடன் பரிசுகளும் அளிக்கப்படும். இவற்றைப் பெரும்பாணுற்றுப் படை, சிலப்பதிகாரம் முதலியவற்றில் காண லாகும.
இப்படி நடக்கும் யுத்தங்களில் தீரங்காட்டி உயிர்விடும் வீரர் சளுக்கு வீரக்கல் நாட்டுதல் மரபு. இம்முறை இன்னும் இருந்து வருகிறது. இதனை வீரக்கல் நாட்டல்' என்று கூறுவர்.
*பட்டார் பெயரும் ஆற்றலு மெழுதி
நட்ட கல்லு மூதூர் நத்தமும்"
--சோமான் பெருமான். என இலக்கியங்களில் கூறப்பட்டிருத்தலைக் காணலாகும். வீரக்கல் நாட்டலைப்பற்றி அகநானூறு போன்ற நூல்களில் காணலாகும். பழந்தமிழ் இலக்கணமாகிய தோல்காப்பியத்தில் வீரக்கல் நட்டு வழிபடும் வழக்கத்தை ஆசிரியர் நன்கு கூறியுள்ளார். போரிற் சிறந்த வீரனுக்கு கல் காட்டும் வழக்கத்தை ஆசிரியர் தொல்காப் பியனர்
*காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல்"
என்று கூறிப் போந்தனர். இன்னும் சிலப்பதிகாரத்திலும் கல் நாட்டும் வழக்கம் பற்றிப் பாக்கக் காணலாகும்.
தமிழர்கள் கடற் சண்டைகளிலும் சிறந்து விளங்கினர். அந் நிய நாடுகளுக்குப் படை யெடுத்துச் சென்று வெற்றியும் கொண் டனர். வர்த்தக காலங்களில் மரக்கலங்களைக் கொள்ளையடிக்க வரும் கடற் கொள்ளைக்காரருடன் எதிர்த்துத் தங்களைப் பாது காப்பதற்கு தனவணிகர் பாரிய கடற்படைகளை வைத்திருந்தனர்.

ஆட்சியும் பாதுகாப்பும் 27
இவைபற்றி புறநானூறு, மணிமேகலை முதலியவற்றில் காண லாகும். தமிழ்நாட்டு மன்னர்கள் கடற்போர் புரிந்தனர் என்பதற் குப் பல ஆதாரங்களுண்டு.
ஒரு அரசன் பிறிதொரு அரசனுக்கிருக்கும் பெருமையை யும் புகழையும் கண்டு பொருமை மேலீட்டால் யுக்தம் செய்த லும் உண்டு. மண்ணுசை கொண்டும் மன்னர்கள் யுத்தம் செய் வார்கள். திறை கொடுக்க மறுக்கும் சிற்றரசர்களுக்கும் udäöt ୫୪, if களுக்கும் யுத்தம் நடப்பதிம் வழக்கம். இப்படிப்பட்ட ஆபக்திக் காலங்களிலும் அரசினை நிலை தளம்பாது பாதுகாத்தலே மன்னன் 85 laid
அரசினை நடத்துவதற்குப் பணம் வேண்டும். அப்பணம் முழுவதும் வரிமூலம் மக்களிடமிருந்தே பெற்று நகரங்களை நன் முறையில் மன்னர்கள் ஆண்டு வந்தனர். அங்கிய நா டு களி ல் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கும், தமிழ் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கும் சுங்க வரிகள் விதிக்கப்பட்டன. சிற்றரசர்கள் திறைப் பணங்கள் கொடுப்பார்கள். குடிமக்கள் தாம் நாட்டில் இருந்து அடையும் ஊதியத்தில் இருந்து தமது வரிப் பணங்களைச் செலுத்துவார்கள். இவ்விதம் வரும் வருமானமே நாட்டிற்கு உதவியது. பெ ரு ம் பாணுற்றுப் படை, மலைபடுகழாம் முதலிய நூல்களில் இவை காணப்படுகின்றன. அரசன் நல்ல ஆட்சியைச் செலுத்துவதற்கு சான்றேர் உறுதுணையாக இருப்பர். இச்சான்ருேர் அரசர்க்கு வேண்டும்போதெல்லாம் அறிவுறுத்தி தேசத்தை நன்னிலையில் விளங்க வைப்பார்கள்.
பண்டைக்காலத் தமிழ் மக்கள் நல்லாட்சியில் நலம்பெற வாழ்ந்தனர். இன்றைய உலகில் உள்ள கொடுங்கோனுட்சியோ அன்றி அதர்ம அடக்கு முறைகளோ அல்லது சுதந்திரப் பறிப்போ அக்காலத்தில் இல்லை. மக்களுக்காகவே அரசு இருந்தது. அன் றைய தமிழ் மக்கள் ഉേക്ര வழிகாட்டிகளாக விளங்கினர். அன்னர் செல்வம் வாணிபத்தில் மிகவுந் தங்கியிருந்தது. நாட்டிற்கு நலனைக் கொடுப்பது வாணிபமே. இன்றைய உலகிலும் ஒவ்வொரு நாட்டையும் செல்வத்தில் திகழச் செய்வது வாணிபம் என்பதை மறுகக முடியாது.
- Mega

Page 21
செல்வ நிலையும் வாணிகமும்
இன்றைய உலகில் ஆதிக்க நாடுகள் தம்முட் பொருதுவதன் கர்ரணத்தை ஆராய்கின் வாணிகத்தின் சிறப்பு கெற்றென விளங் கும். பண்டைத் தமிழ் மக்களுக்கு இப்பெருமை தெரிந்தே இருந் தது. அக்காலத் தமிழ் மக்கள் வணிகத்துறையில் மிக முன்னேற்ற மடைந்திருந்தனர். நாட்டிற்கு மக்கள் செய்யும் உதவியில் வணிகர் செய்யும் உதவி முக்கியமானதாகும். காட்டில் ஒரு இடத்தில் உண்டாகும் விளை பொருள்களை அப்பொருள் விளையாத மற்ருே? ரிடத்திற்கு அனுப்பி, அங்குள்ள மக்களுக்கு அப்பொருள்களை உதவி நாடு முழுமையும் வளமுண்டாக்கும் செயல் அவர்களைச் சார்ந்ததாகும். வணிகரைத் ‘தாழ்விலாச் செல்வர்” என்று திரு வள்ளுவர் குறிக்கின்ருர், சிறந்த நகரங்களில் இவர்கள் அரசர் களுக்கு அடுத்தபடியாக செல்வத்தில் சிறந்து விளங்கினர்கள். ஆரம்பத்தில் உலக மக்களுக்கு உதவியாகவே வாணிகம் நடை பெற்று வந்தது. "பொருள் ஈட்டும் எண்ணம் அப்பொழுது அவர் களுக்கு உண்டாக வில்லை. நாடு முழுவதும் மக்கள் நலனுடன் வாழ வேண்டி பண்டமாற்று முறையையே அக்கால வணிகர் பின்பற் றினர். வணிகர்களின் உண்மை உள்ள்ங்களையும் அவர்கள் நேர் மையையும் பட்டினப் பாலை யென்னும் நூல் அழகாக எடுத்துக் கூறுகிறது.
தரை வழியாகவும் கடல் வழியாகவும் அயல் நாடுகளோடு வாணிகம் செய்து வந்தனர் என்பதற்குச் சிலப்பதிகாரத்தில் காணும் உதாரணம் பலவாகும்.
“கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
குலத்திற் குன்ருக் கொழுங்குடிச் செல்வர்” வாழ்ந்து வந்தார்கள் எனக் கூறப்படுவதால் கடல் மூலம் வாணிகம் பண்டு நடைபெற்றதென்பது வெள்ளிடை மலையாகின்றது.
வாணிகத்தில் சிறந்த மார்க்கமான கடல் வாணிகத்திலும் தமிழ் மக்கள் சிறந்து விளங்கினர். மேல் நாட்டினர் பலரும் இவர் களுடன் வியாபாரத் தொடர்புடையோராக இருந்திருக்கின்றனர். தமிழர் கடற் பிரயாணத்தில் நன்கு பயின்றிருந்தார்கள் என்ப தற்கு அநேக உதாரணங்கள் இருக்கின்றன.

செல்வ நிலையும் வாணிகமும் 29
இந்து சமுத்திரத்தில் தமிழர்களது மரக்கலங்களே பெரும் பாலும் ஒடிக்கொண்டிருந்தன. நமது நாட்டிலேயே கடற்கரை நகரங்கள் வாணிப நோக்கமாகவே அமைக்கப்பட்டிருந்தன. ஈழம், காழகம், கடாரம், சீனம், அரபு, ஜவனம், எகிப்து முதலிய காடுகளுடன் எம் முன்னேர் வாணிபத் தொடர்பு மாத்திரமன்றி கலைத்தொடர்புங் கொண்டிருந்தனர். இவ்வரலாறுகள் பழந்தமிழ் நூல்களில் மலிந்து கிடக்கின்றன. குறுக்தொகை நூல்களில் தமிழ் நாட்டு குறிஞ்சி நிலங்கள் பற்றிக் கூறுமிடத்து ஆங்கு வைடூரியங் கள் அகப்படுவதாகக் குறிக்கப்பட்டுள்ளன. அத்தகை வைடூரியங், சுள் இங்கிருந்து மொஸ்ப்பத்தேமியா போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக சான்றுகள் இன்றும் உள்ளன.
வாணிகத்தின் பொருட்டு பலநாட்டு மக்களும் தமிழ் காட்டில் குடியேறி வாழ்ந்து வந்தார்கள். இதனை இளங்கோவடிகள்,
“கலந்தரு திருவில் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும்" என்று கூறிப் போந்தார். இவ்வாறு வாழ்ந்த அங்கியநாட்டு மக்கள் மரக்கலங்களுக்கு உதவியாக துறைமுகங்கள் தோறும் கலங்கரை விளக்கங்கள் அமைத்தனர். அவ்வக் துறைகளில் சேமித்து வைக் கப்பட்ட சரக்கு வகைகளைப் பகுத்து உணர்த்துவதற்குச் சிறு கொடிகள் ஆங்காங்கு நாட்டப்பெற்றிருந்தன எனச் சிலப்பதி காரம் கூறுகின்றது. பட்டினப் பாலை யென்னும் நூலில் தமிழ் இாட்டில் இருந்த வாணிபப் பொருள்கள் பற்றிப் பாக்கக் காணப் படுகின்றன. ஒரிடத்தில்
“நீரின் வந்த நிர்ே பரிப் புரவியும்
காலில் வந்த கருங் களிமூடையும் V வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்துணவும் காழகத் தூக்கமும்" எனக் கூறப்படுதலைக் காண்க.
கிறீஸ்துவிற்கு முன்னர் பல நூற்முண்டுகளாக மேற்கு ஆசி யாவிற்கும் தென்னிந்தியாவிற்கும் கப்பல் மூலம் வியாபாரம் நடந்த தற்குப் பல சா ன் று க ள் உள்ளன. கி. Cup, 4000 ஆண்டு

Page 22
30 தமிழன் மாட்சி
வரையில் அமைக்கப்பட்ட சாலடியரின் நகரமாகிய ஊர் என்னு மிடத்தின் அழிபாடுகளில், மலையாளக் கரைகளில் மாத்திரம் காணப்படும் தேக்கமாத் துண்டுகள் கண்டெடுக் கப்பட்டன. தமிழர் கள் அதற்கும் பல நூற்றண்டுகள் முன்னராகவே வியாபாரத் அறையில் நன்கு பயின்றிருந்தார்கள் என்பது இதனுல் விளங்கும்.
ஆடை வகைகளும் அவற்றிற்குரிய பலவகைச் சாதனங்களும் இந்நாட்டில் இருந்து பிறநாடுகட்குச் சென்றிருக்கின்றன. ஐரோப் பாவிற்கு மஸ்லின் போன்ற பட்டு உடைவகைகள் ஏராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளனவென்று நூல்கள் குறிக்கின்றன. கிரேக்க நாட்டினரும் உரோம மக்களும் தமிழ்நாட்டு உடைகளை யும் அணிகலன்களையும் அதிக விலை கொடுத்து வாங்கியதாகப் பல நூல்களிலும் கூறப்படுகிறது. அங்கிய நாட்டு நாணய வகைகள் புதைபொருள் ஆராய்ச்சியாளரால் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கி. மு. 1700இல் எகிப்து சென்ற ஜோசேப்பின் வரலாறு அக்கால எகிப்து, சீரியா முதலிய நாடுகளுடன் இந்தியாவின் வியாபாரத் தொடர்புகளைக் குறிக்கின்றது.
கி. மு. 11-ம் நூற்றண்டில் இந்தியாவிற்கும் மேற்கேயுள்ள நாடுகளிற்கும் வியாபாரத் தொடர்பு இருந்ததென்பதை எகிப்திய சித்திர எழுத்து நூல்களில் காணக் கிடக்கின்றது. கி. மு. 1462இல் முடிவெய்திய எகிப்திய 18-ம் பரம்பரையிலுள்ள அரசரின் பிணங் கள் இந்திய மஸ்லின் துணிகளாற் சுற்றப்பட்டிருந்தன. ஒபிர் என்பது தென்னிந்தியாவின் "உவரி’ என்னும் துறைமுகம் எனக் கருதப்படுகிறது. கி. மு. 1000 ஆண்டளவில் சாலமன் என்னும் பூத் அரசன் சந்தனக் கட்டைகள், குரங்குகள், மயில்கள் முதலிய வற்றை ஒபிரினின்றும் பெற்றன். மேல் நாட்டிற்குச் சென்ற தமிழ் நாட்டுப் பொருள்கள் தங்களுடன் தங்களுக்குரிய கமிழ்ப் பெயரையுங் கொண்டு சென்றன. இந்தியாவினின்றும் பொன், பட்டு, முத்து வாசனைத் திரவியங்கள் ஆகிய பண்டங்கள் கிரேக்க நாட்டுக்குக் கொண்டு போகப்பட்டன. ஹோமர் என்னும் கிரேக்க கவி இந்தியாவிலிருந்து கிடைக்கும் பொருள்களைப் பற்றிக் கூறி யுள்ளார். முற்காலத்தில் தங்கம் இங்கிருந்து பிறநாடுகளுக்கு ஏற்று மதியாகியதற்குப் போதிய சான்றுகள் உண்டு.

செல்வ கிலேயும் வாணிகமும் 3.
மயிற்றே கை, அரிசி, கந்தம் முதலியனவும் பல நாடுகளுக் கும் அனுப்பப்பட்டன. தமிழ் மக்கள் கடல் வாணிபத் துறையில் சிறந்திருந்தார்கள் என்பது தொல்காப்பிய நூலில் காணப்படும் சூத்திரங்களால் அறியலாகும். மணிமேகலை, சிலப்பதிகாரம் முத லியவற்றிலும் பரக்கக் காணலாகும்.
தமிழகக் கிலே கப்பல்களைச் செய்வதற்கென ஒரு ாேரார் இருந்துள்ளனரென்று நூல்கள் தெரிவிக்கின்றன. கப்பலைக் குறிக் கும் பல பெயர்கள் தமிழ் நூல்களில் காணப்படுகின்றன. கடலைக் குறிக்கும் பல பதங்களும் காணப்படுகின்றன. புணை, Lકિ6), கட்டு மரம், தோணி, திமில், ஓடம், படகு, அம்பி, வங்கம், கப்பல், நாவாய் முதலியன கடலில் உபயோகப்படுத்தப்பட்ட பல வகைக் கப்பல்களையும் குறிப்பனவாகும்.
தொண்டி, கொற்கை, காவிரிப்பூம்பட்டினம் எ ன் இனும் துறைமுக நகரங்களின் சரித்திரங்கள் விரிவாகக் கிடைத்துள்ளன. அவற்றில் பிறநாட்டு வாணிபக்தைப் பற்றிக் காணப்படுகின்றன. கி. (p. 8-ம் நூற்றண்டில் நடந்த வியாபாரத்தைப் பற்றிய ஆகா ரங்கள் தெளிவாகக் கிடைத்துள்ளன. பாபிலோ னியா வில் தைகிரஸ், யூபிரதஸ் நதிகள் சந்திக்குமிடத்திற்குச் சமீபத்தில் தமி ழர்கள் குடியேறியிருந்தார்கள். ஆங்கு கிருட்டின பலதேவ வழி பாடுகள் இருந்தனவென்றும் அறியப்படுகிறது. அர்த்த சாஸ்திரம் செய்த கெளடலியர் வர்த்தகத்தில் சிறந்து விளங்கியது தமிழ் நாடேயென்று கூறியுள்ளார். கி. மு. 20-ம் ஆண்டில் பாண்டிய அரசனுெருவன் அகஸ்தஸ்சீஸர் என்ற உரோம சக்கரவர்த்திக்குத் தூது அனுப்பினன். கிரேக்க போர் வீரர்கள் பாண் டி ய ரி ன் கோட்டை வாயில்களைக் காவல் புரிந்தனர். இவ்வாறு அநேக வர லாறுகள் நூல்களில் காணப்படுகின்றன.
கிறிஸ்துவிற்குப் பல நூற்ருண்டுகட்கு முன்னர் இந்திய வியாபாரிகள் பர்மா வழியாகவும் அதன் தென்கரை வழியாகவும் சென்று காம்போதியா நாட்டில் வியாபாரத் தொடர்பை ஏற்படுத் தினர். கடல் தரை என்னும் இரு வழிகளாலும் இந்தியாவிற்கும் சீனுவிற்கும போக்கு வரவு இருந்தது. கிறிஸ்து பிறப்பதற்கு முன் பும் தமிழர் பலதீவுகளுடனும் வியாபாரத் தொடர்பு உடையோராக இருந்துள்ளனர். பாலி யென்னுங் தீவில் தமிழர் நாகரிகச் சின் னங்கள் காணப்படுகின்றன.

Page 23
32 தமிழன் மாட்சி
ஜாவா, சுமத்திரா முதலிய தீவுப் பகுதிகளில் தமிழர்களது சமய நிலையங்கள் போன்றவை இன்றும் சிறப்புடன் விளங்குவதைக் காணலாம். இந்தோசீனம் போன்ற இடங்களில் தமிழர்களது சிற்ப வேலைகள் மிளிரும் கட்டிடங்கள் காணப்படுகின்றன.
உள்நாட்டு வாணிபமே ஆரம்பத்தில் நடந்து வந்துள்ளது. மக்கள் கம் வியாபாரப் பொருள் களை எருதுகளிலும் கழுதை களிலும் ஏற்றிச் சென்று அப் பொருள்களை வேண்டுவோருக்குக் கொடுத்து அன்னரிடமிருந்து தமக்குத்தேவையான பொருள்களைப் பெறுவர். பெரும்பாணுற்றில் இதுபற்றிக் காணலாகும். பழைய தமிழ் மக்கள் வாணிபத்திற்கு வேண்டிய சகல குணநலன்களும் அமையப்பெற்று விளங்கினர். தமிழ் நாட்டின் கடை விதிகளின் சிறப்பே தனிச் சிறப்பாகும். பண்டைக் காவியங்களும் பிற நூல் களும் அச்சிறப்புக்களை நவில்கின்றன.
博
தமிழ் நாட்டு வாணிகர்கள் தமது வர்க்கத்துடனேயே தமது காலம் முழுவதையும் கழிக்கவில்லை. பொது மக்கள் சேவையை யும் தமது நோக்காகக் கொண்டிருந்தனர். இவர்கள் தமது அரசர் களுக்கு பல வகைகளிலும் உதவி புரிந்துள்ளனர். மு ற் கா ல வாணிகர் சிறந்த அறிஞர்களாகவும் விளங்கினர். அன்னுரிடையே விளங்கிய மொழி தமிழாகும். அத் தனிமொழியின் சிறப்பை அவர் கள் உணர்ந்திருந்தனர். மொழிப் பெருமையே அவர்க்குப் போதிய
ازت آfت

முத்தமிழ்ப் பெருமை
தமிழ் மக்கள் வழங்கிவந்த மொழியை தமிழ் மொழியென்றே அழைப்பர். இம் மொழி இனிமையானது என்று எல்லோரும் கூறுவர். ‘இன் தமிழ்’, ‘தீந்தமிழ்', 'தேமதுரத் தமிழ் என்று பல ரும் பலவாறு கூறுவர். பலவறிஞர்களும் தேர்ந்தெடுத்து எழுகிய மொழி இத்தகைய சித்திப்புத்தன்மை கொண்டது. பல மொழி களையும் கற்றுணர்ந்த வரகவி சுப்பிரமணிய பாரதியார் தமிழ் மொழிபற்றிப் பாடியுள்ள பாட்டைப் பாருங்கள்.
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவதெங்கும் காணுேம் பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திருத்தல் நன்றே சொல்வீர்? தேமதுசத் தமிழோசை உலகெல்லாம்
பாவும் வகை செய்தல் வேண்டும்”
மேற்போந்த பாரதியாரின் பாட்டில் இரு இடங்களில் தமிழ் மொழியின் இனிமைபற்றிக் கூறப்பட்டுள்ளது. இவற்றினல் தமி ழின் இனிமை புலப்படும்.
அறிஞர் கூடி ஆராய்தலே மொழிக்கு அழகாகும். தமிழ் மொழிக்கு சங்கமிருந்தது போன்று வேறு எம்மொழிக்கும் சங் கம் இருந்ததுமில்லை. இதனலேயே தமிழ் மொழியை ‘சங்கத் தமிழ்’ எனச் சிறப்பாக அழைப்பர். அக்காலத் கில் வெளிப்படுத்தப் பட்ட நூல்களைச் சங்க நூல்கள் என்பர். தமிழ் மொழி தெய்வக் தன்மை வாய்ந்ததென்பதற்குப் பல சான்றுகள் உண்டு. திருஞான சம்பந்தர் கூற்று இதற்குதாரணமாகும்.
தமிழ் மக்களது சேந்தமிழ் உலகிற்கு எத்துணைப் பயன்தர வல்லது என்பதுபற்றி திருவாளர் பா. வே. மாணிக்ககாயக்கரவர் கள் தம் நுண்ணிய ஆராய்ச்சியால் காட்டியுள்ளார். அக்காலத்தில் எம் தமிழ் மொழி முப்பிரிவாக்கப்பட்டிருந்தது. அதனை முத்தமிழ்

Page 24
34 தமிழன் மாட்சி
எனச் சிறப்பாக அழைத்து வந்தனர். இயற்பகுதியே இலக்கிய மென ஏனைய மொழிகளுள் வளங்கவும் இசைக்கோரு பிரிவும், கூத்திற்குப் பிறிதொரு பகுதியுஞ் சேர்த்து மூன்றக நமது மொழி வழங்கிய பான்மை உள்ளம், மொழி, உடல் என்னும் இம் மூன் றையும் நன்கு காட்டும் மூன்று கண்ணுடி போன்று முத்தமிழ் நில வியதென்பதை உறுதிப்படுத்துகின்றது.
இயற்றமிழ் இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்றும் சேர்ந்து முத்தமிழ் எனப்படும். பொதுவாக மக்கள் பேசுவதும் எழுதுவதும் இயற்றமிழ். அதனை இசையுடன் அதற்கேற்ற ஒலி யுடன் பாடும்போது அதன இசைத்தமிழ் என்பர். இயல் இசை என்னும் இவ்விரண்டுடனும் நடிப்புச் சேருமானல் அங் நடிப்பிற் கேற்ற மொழிகளோடு கூடிய தமிழ் நாடகத் தமிழ் எனப்படும். இயல்பாக மக்கள் பேசிக்கொள்ளும் பேச்சுக்களை விட இசை யோடு பாடுவதற்கு ஏற்ற மொழிகளும், குறிப்புடன் நடிப்பதற்கு ஏற்ற தொடர்களும் எல்லா மக்களுக்கும் அளவுகடந்த இன்பத் தைக் கொடுக்கும். இன் பத் தமிழ் மொழியில்தான் இத்தகைய முப்பாகுபாடு உண்டேயன்றி வேறு எம்மொழிக்கும் இச் சிறப்பு இன்று.
இயல்பாக மக்கள் தம்முள் ஒரு பொருளே இன்னெருவருக்கு விளங்க வைக்கும்பொழுது சாதாரணமாக பேசிக்கொள்கிருர்கள். அவர்கள் ஈடத்தும் சாதாரண இயல்பான தமிழ் நடையை இயற் றமிழ் என்பர். இயல்பாக செய்யுளிலும் அவ்விதம் கூறலாம். பொதுவாக் இலக்கண வரம்பிற்குட்படப் பேசுவதையும் எழுது வதையும் இத்தமிழ்ப் பாகுபாட்டினுள் சேர்த்துக்கொள்ளலாம். இயல்பாக உண்டாகும் இக் தமிழ் சர்வ சாதாரணமானது. இத் தமிழை சிறிது இசையுடன் படிக்கப் புகுங்கால் அது இசைத் தமிழ் என்னும் பெயரைப் பெறுகின்றது. இயற்றமிழை வளர்த் தற்காக சங்கங்களில் இயற்றமிழ்ப் பிரிவு ஒன்று இருந்துள்ளது.
இயற்றமிழை அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு பகுதிகளாகப் பிரித்துள்ளனர். திருக்குறளில் இல்லறம், துறவறம் என்று அறக்கை இரண்டு பகுதிகளாகப் பாகுபாடு செய்யப் பட்டுள்ளது. அரச நீதி, சட்டசபை, நீதிமன்றக் கொள்கைகள், பொருளாதாரம், சாஸ்திரம் என்ற இக்கால தேசப் படிப்புக்களைக்

முத்தமிழ்ப் பெருமை 35
கொண்ட அடிப்படையான கருத்துக்கள் திருக்குறட் 'பொருட் பாலில் அடங்கியுள்ளன. அரசத்தன்மை. அமைச்சன் தன்மை, பகைவரை எதிர்த்தல், அரசர்க்கு வேண்டிய பொருள்கள் என் பனபற்றி 'அரசியலில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ‘இன்பப் பால்' மனத்திற்கு இதத் தருகின்ற நூலைப்பற்றிக் கூறுகின்றது. 'வீட்டு நூல்கள்' மேலுலக இன்பத்தைப்பற்றிக் கூறுகின்றன. இயற்றமிழின் பெருமை அளப்பரியது.
இசை மிகவும் இனிமையானது. இசைத் தமிழிற்கெனத் தனி இலக்கண வரம்புகூட அமைக்கப்பட்டுள்ளது. இசையென்பது பாடல். பாலராக இருக்கும் பருவத்தில் ஊசல் வரிகளைக் கேட் டானந்திக்கிருேம், பாலியர் பருவத்தில் கந்து, கவரி முதலான பாட்டினங்களைக் கேட்டானந்திக்கிருேம். பெரியவர்களாகி மண வினைப்பொழுது மங்கலப் பாக்களைக் கேட்டுச் சந்தோஷமடை கின்ருேம். இவ்விதம் ஒவ்வொரு தகுதியையும் நிலையையும் அடை யும் பொழுதும் இசையையே கேட்டானந்திக்கிறுேம், இசைத் தமிழ் பசந்த சமுத்திரம் போன்று எங்ஙனும் அகன்று பாங் துள்ளது.
இயற்றமிழிலும் பார்க்க இசைத்தமிழை மேன்மையாகக் கொண்டாடுவர். பண்டைய நூல்கள் பலவற்றிலும் இசைத்தமி ழின் சிறப்பைக் கண்டு நுகரலாம். பண்டைக் காலத்தில் இசைக் கருவிகள் பல்கிக் கிடந்தன. இசைக் கருவிகளையே முத்திறப் படுத்தியிருந்தனர் முன்னேர். சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் இவைகளைக் காணலாகும். அக்காலத்தில் பாணர் என்று ஒரு சாராரும் இசையில் வல்லுனராக இருந்திருக்கின்றனர். அவர்களே இசைவாணர் என்றும் அழைப்பர். பெருங்கதை போன்ற நூல் களில் இசையின் சிறப்பைக் காணலாகும். சோழ நாட்டிலே இசைக்கிருந்த சிறந்த பாகுபாட்டை விவரிக்கும்பொழுது,
"குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழுவின்றிசைத்து வழித்திறம் காட்டும் அரும் பெறல் மரபில் பெரும் பாணிருக்கையம் அமைந்து, விளங்கின" - - - -
என்று சிலப்பதிகாரத்தில் அதன் ஆசிரியர் கூறியுள்ளார். இன் லும் அந்நூலின் ஆசிரியர் இசைக்கருவியை மாதவி இயக்கியதை

Page 25
36 தமிழன் மாட்சி
'மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள் பயிர்வண்டின் கிளைபோலப் பன்னாம்பின் மிசைப்படா’ என வர்ணிக்கின் முர். பண்டைச் சங்க நூல்களில் இசைக்கலை பற்றியும் அக்கால மக்களில் இசை வல்லுனன் ரப் பற்றியும் பரக் கக் காணலாகம்.
கு
இயல் இசை இரண்டிலும் மேம்பாடாகக் கூறப்படுவது நாட கத் தமிழ் ஆகும். நாடகத் தமிழில் முத்தமிழும் பொதிந்திருக் கும். இயல்பாகவுள்ளதை இசையுடன் பாடி அதனை ஆடி நடித் கலே நாடகமாகும். ஒழுங்கான முறையில் ஒரு விஷயத்தை நடித்துக் காட்டலையே நாடகம் என்று கூறுவர். கருத்துக்களை நடித்தல், கதைகளை நடிக்கல் என்று நாடகத்தில் இரு பகுதிகள் அமையும், நாடகத்தில் நடிப்புத்தான் உயிர். அக்காலத்தில் நாடக அசங்கங்கள் பல இடங்களிலும் இருந்தன. பெண்களும் ஆண் களும் அவ்வவ்விடங்களில் நாடக மாடுவர். எப்பொருளை எடுப்பி னும் ஆங்கு நடிப்புக் கலையைக் காணலாம். லிரம், அச்சம், இழிவு, வியப்பு, இன்பம், துன்பம், நகை, நடுவு நிலைமை, வேகுளி முத லிய ஒன்பது சுவைகள் நடிப்பில் உண்டு. நாடகத்தின் நோக்க மும் பல்வேறு வகைகளாகவிருக்கும். தமிழ் நாட்டில் நாடகத்தை நடிப்பதற்கென்றே தனிப்பட்ட சாகியத்தார் இருந்துள்ளனர். பண்டைக் காலக்கில் நாடகக் கலை மிகவும் உயர்நிலையில் இருந்த தற்குப் பல நூல்களும் சான்றுகள் பகரும், இயல் இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் இயல்புகளையும் எடுத்துக்காட்டச் சிலப்பதி காரம் ஒன்றே போதுமானது. தமிழின் முப்பகுதிகளையும் முக் கலைகளாகப் பாதுகாத்தல் இன்றியமையாததுவாகும். நாட்டின் செல்வம் கலைகளே.
ལྷོ་
菇 \స్ర

நாட்டின் கலைச் சிறப்பு
ஒரு நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சிக்கு முக்கியமானது கலைகளேயாகும். கலைகளே உயிரறிவின் செய்கை, கலைகளாகிய உயிர் உடம்பில் ஊசலாடும்பொழுதுதான் நாடாய உடம்பு நல லுடன் வாழ முடியும். கலைஞர்களும் தொழிலாளர்களுந்தான் நாட்டினைச் செல்வம் கொழிக்கச் செய்ய வல்லவர்கள். தமிழ் நாட்டில் பண்டைக் காலத்தில் ஐங்கிலப் பிரிவுகளைக்கொண்டே மக்கள் வகுக்கப்பட்டிருந்தனர். பின்னர் ஏற்பட்ட கலைவளர்ச் சியினுல் ஆரம்பித்து வைக்கப்பட்டதுதான் இன்றைய சாதிப் பிரி வினை. தனித்தனி இடங்கள் ஒவ்வொரு சாகியத்தாருக்கும் வகுக் கப்பட்டிருந்தது. கலைகளின் உணர்ச்சி தமிழ் மக்கள் இதயத்தில் ஊறியிருந்தன.
அறிவினல் அறியும் கலைகளை அறிவுக் கலைகள் என்றும், அறி வினல் அறிந்து உடம்பு முயற்சியினுல் தொழில்கள் செய்துகொள் ளத்தக்கவற்றை உடம்புக் கலைகள் என்றும் பிரிப்பர். உணர்வுக் கலை, பொருட் கலை எனப்படுவனவும் அவைகளே. பொருட் கலையை மெய்யுணர்வுக் கலை, இன்பவுணர்வுக் கலை என்றும் பகுப்பர். கலைகளை இன்னும் நுணுகி ஆராயப்புகின் இன்னும் பல பிரிவுகளாகப் பகுக்க முடியும்.
பண்டைக்காலத்தில் மெய்யுணர்வுக் கலையுள் சமய தத்துவ சாஸ்திரங்களை அடக்கியும், இன்பவுணர்வுக் கலைக்குள் ஒவியம், சிற்பம் போன்றவற்றை அடக்கியும், வான நூல், கோள் நூல் போன்றவற்றையும், அரசியற் கலை, நாடகக் கலை போன்ற பல கலைகளையும் கையாண்டுள்ளனர் என்றும் நூல்கள் கூறுகின்றன. தமிழ் உலகம் கலைவளர்ச்சியில் தனக்கு ஈடிணையற்று விளங்கிய கென்றே கூறலாகும். உலகத்தில் இன்றுள்ள பல்வகைச் சாஸ்திர வகைகளை அன்று தமிழ் மக்கள் கையாண்டிருந்தனர் என்பது வெளிப்படையாகும். பண்டு தொட்டுப் பின்வருவனவற்றை முற் கூட்டியுரைக்கும் பஞ்சாங்கம்’ போன்ற சாஸ்திர நூல்களை நாக ரிகம் பழுத்த நவ உலகில் காண முடியுமா? அதற்கு ஈடு இணை யுள்ள சாஸ்திர நூல்களை அங்கிய பாஷையில் காட்ட முடியுமா?

Page 26
38 தமிழன் மாட்சி
உலகின் உன்னத மெய்யுணர்ச்சிக் கலைகளைத் தமிழ் மக்கள் அளித்துள்ளனர். சைவ சமயத்தின் ஒவ்வொரு கத்துவங்களையும் படிப்படியாகப் பிரித்து நோக்கின் அதன் உண்மையை அறியலா கும். கல்வியறிவற்ற பாமரன் முதல் கல்வியில் மேம்பட்டுள்ள பெரியோர் ஈருக உள்ளாரது அறிவிற்கேட்டும் வகையில் சைவம் வகுக்கப்பட்டுள்ளது. உலக உற்பத்திக்கு இடமாக இருந்த கடல் கொண்ட கமிழ் நாட்டில் இருந்து உலகம் முழுதும் பரவிய மக் கள் பல சாகியத்தாராக மாறி வேற்று மொழிகளைப் பேசிப் புறச் சமயங்களைக் கைக்கொண்டனர். எச் சமயத்தினை ஆழ்ந்த நோக் கினும் சைவத்தின் தொடர்பைக் காணலாகும். புத்த மதமோ, கிறீஸ்தவ மதமோ, இஸ்லாமிய மதமோ போதிக்கும் சகல தத்து வங்களும் சைவத்தில் போதிந்து கிடக்கின்றன. எச் சமயத்தை நோக்கினும் தமிழ் மக்களது சமய நிலையையே கடைப்பிடித்துள் ளதைக் காணலாகும். அக் காலத்தில் சமயக்கலை உன்னத நிலையில் இருந்ததென்பதற்கு இன்றைய தமிழ் உலகில் பல சான்றுகளைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
சமய தத்துவார்த்தங்களுடன் சிற்பம், சித்திரம், ஓவியம் முதலியன இடம் பெறுகின்றன. ஆலயங்களைச் சிருஷ்டித்த தமி ழன் இக் கலைகளையும் உலகறியச் செய்துள்ளான். தமிழ் நாட்டில் காலத்திற்குக் காலம் இவ்வகைக் கலைகளில் நடந்த மாற்றங்களை இன்றும் நாம் காணலாம். பண்டைய தமிழ் சிற்பாசாரிகளுக்கு ஈடாக இன்று உலகத்தின் எப் பகுதிகளிலும் காண முடியாதி. உலக மக்களுக்கு வான நூல், கோள் நூல் முதலியவைபற்றி வழிகாட்டி விட்டவர் தமிழ் மக்கள்தான் என்பதை மறுக்க முடி யாது. வீடு அமைப்புகள் இராசிகளின் நிலை கொண்டே கணிக் கப்பட்டு வந்த ன. சமீப காலங்களில் சிந்து வெளியில் புதை பொருள் ஆராய்ச்சியாள்ர் நடத்திய சோதனையின்பின் அங்கு வாழ்ந்தோர் தமிழ் மக்களே யென்றும், அவர்கள் வானநூல் முக லியவற்றில் சிறந்து விளங்கினர் என்றும் கூறப்படுகிறது. அங்கு வசித்த மக்கள் நாகரிகம் கி. மு. 5610 ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்று ஹொஸ் பாதிரியார் தமது நூல்களிற் கூறியுள்ளார்.
அக்காலத் தமிழ் மக்களிடையே கணித சாஸ்திரம், தர்க்க சாஸ்திரம், தனுர் சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம், பரத சாஸ்திரம் முதலிய நூல்களும், யுத்த நூல்கள், நீதி ஒழுக்க நூல்கள், சட்ட

நாட்டின் கலைச் சிறப்பு 39
நூல்கள், வாழ்க்கை விளக்க நூல்கள் முதலியனவும் பல்கிக் கிடந் தன. மக்கள் ஒவ்வொரு வழியிலும் சிறந்து விளங்கினர்கள். இவற் றினைப் பண்டைய சங்க நூல்கள் அழகாக எடுத்துக் காட்டுகின் றன.
மருத்துவக் கலை மிகவும் உன்ன சு ஸ்தானத்தில் இருந்துள் ளது. ஆயுள்வேத மருத்துவக் கலை தமிழ் மக்களாலேயே ஆரம் பிக்கப்பட்டதென்று திட்டமாகக் கூறப்பட்டுள்ளது. இன்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்பிருந்தவராகக் கருதப்படும் விசுவா மித்திரர் 8 வியாதியைக் குணப்படுத்தும் பாக்கியத்தைவிட வேறு சிறந்த பேறு எதுவுமில்லை’ என்று கூறியுள்ளார். கி. மு. 600 வரு டங்களுக்கு முன்னரே கமிழ்நாட்டில் சத்திர சிகிச்சை உன்னத நிலையில் இருந்தது. பண்டைக் காலத்தில் சத்திர சிகிச்சை செய் வதற்கு சம்மோகினி என்னும் மயக்க மருந்தை உபயோகித்தனர். இஃது ஒரு பகற்காலம் வரைக்கும் அபாயம் செய்யாது என்றும் கூறப்படுகிறது. வேண்டியபோது சஞ்சீவி னி என்னும் மருந் தினைப் பிரயோகித்தால் சம்மோகினி என்னும் மயக்க மருந்தின் அதிகாரம் முழுமையும் நீங்கி அறிவு தய மாகும். இக்காலம் * குளோர பாரம் ’ என மேலை நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட் டது சிறிது அபாயத்தை விளைவிக்கும். ஆனல் தமிழ் நாட்டு சம் மோகினி மருந்து அவ்விதமன்று. சஞ்சிவினி மருந்திற்கு ஈடாக மேலை நாட்டினரிடம் ஒருவித மருந்தம் இல்லை. சத்திர வைத்திய உபயோகத்திற்காகத் தமிழ் நாட்டில் 420 வகைக் கரு விகள் கையாளப்பட்டனவென்று நூல்கள் கூறும்.
மேல் நாட்டினர் பலர் கிரேக்க நாடே மருக்தவக் கலைக்கு உற்பத்தி ஸ்தானம் என்று கூறிவந்த போதிலும் அதன் உண்மை அறிவான்வேண்டி உழைக்க அறிஞர் பலருண்டு. ஒயிஸ் (Wise) JIT Sá (Royle), LOT3-6OTói (Macdonall), G 3, Tóo 53 (Colebrook) கன்னிங்காம் (Cummingham) முதலியோர் ' இவ்வுல கில் வைத்தியம் முதன்முதல் இந்தியாவிலேயே பிறந்தது கிரேக் கர்களும், அராபியர்களும், சீனர்களும் இந்தியாவில் இருந்து இந் தச் சாஸ்திரங்களைக் கற்றுக்கொண்டனர். பின்னரே மறு நாடுகளும் இதனைக் கற்றுக்கொண்டன " என்று தங்கள் புத்தகங்களில் நிரூ பித்துள்ளனர். ஆகவே தமிழ்ப் பெருநாடு மக்கள் உற்பத்திக்கு மாத்திரமன்றி அவர்களை ஆரோக்கிய மக்களாக வாழச் செய்யும் வைத்திய கலைக்கும் மூலஸ்தானமாக இருந்திருக்கின்றதென்பது வெள்ளிடை மலையாகும்.

Page 27
40 தமிழன் மாட்சி
இவற்றினைவிட இன்றைய உலகில் மிளிரும் நவீன சயன்ஸ் முறைகளை அக் காலத்தில் கமிழ் மக்கள் தம்முள் வழங்கி வங் துள்ளனர். இக் காலம் விஞ்ஞான சாஸ்திரத்தில் குறிக்கப்பட் டுள்ள மூலப் பொருள்களை அக் காலத்தில் தமிழ் மக்கள் ஐந்து பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விட்டனர். இப்படியே ஒவ்வொன் றையும் தனித்தனியே ஆராயப்புகின் உண்மை புலப்படும். பண் டைக்காலம் முதல் தமிழ் மக்களிடையே வழங்கி வர ப் பட்ட இசைக் கருவிகள் சாஸ்திர முறைப்படியே செய்யப்பட்டுள்ளன. போர்க் கருவிகளைப் பார்த்தால் ஆங்கும் அப்படியே. தானுக இயங்கும் பலவகைப் பொறிகளைப் பண்டைப் போர்களில் மக் கள் உபயோகித்து வந்துள்ளனர். இவைகளெல்லாம் ‘சயன்ஸ்? என்று கூறப் படும் சாஸ்திர முறைக்குள் அடங்கியவைகளே யாகும், இச் சயன்ஸ் முறைகள் அக் காலத்தில் இல்லை. நவீன நாகரிக சாதியினர்தான் கண்டுபிடித்துள்ளனர் ? என வாய்ப்பறை சாற்றுவோருமுண்டு. பண்டு மேலை நாட்டு நாகரிக வாசிகள் மிருக வாழ்க்கை நடத்திய காலத்தில் தமிழ் மக்கள் உன்னத நிலையில் இருந்துள்ளனர் என்பதையும் இச் சயன்ஸ் முறைகள் அக்காலத் தமிழரிடையே இருந்ததென்பதையும் இன்றைய மேலை நாட்டி னரே ஏற்றுக்கொள்கின்றனர். வேறு என்ன வேண்டும் ?
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கையையும் அக் கால நிகழ்ச்சிகளையும் ஆராய்ந்து பார்க்கின் உண்மை வெளிப்படாமற் போகாது. தமிழ் மொழியில் அகத்துடனும் புறத்துடனும் சம் பந்தமான நூல்கள் பல இருக்கின்றன. இவைகளை நாம் அறிய விரும்பின் தமிழை வளர்த்த முச் சங்கங்கள் பற்றி அறிய வேண் டும் முச் சங்கங்களை நிறுவி அதன் வழி வளர்த்த செந்தமிழ் குன் முப் புகழுடைத்து.

முத்தமிழ்ச் சங்கங்கள்
தமிழ் மொழியினையும் அதன் கலைகளையும் வளர்க்கவேண்டி தமிழ் மக்கள் சங்கங்களை நிறுவினர். அரசர்களும் மக்களும் புலவ சிகாமணிகளை ஆதரிக்தனர். அப்படி ஆக்கப்பட்ட சங்கங்களில் பிரதானமானவை "முச் சங்கங்கள்’ என்ற சிறப்புப் பொருந்திய மூன்று சங்கங்களாகும்.
முதற் சங்கம் இருந்த இடம் கடல் கொள்ளப்பட்ட மதுரை யாகும். இத் தலைச் சங்கத்தில் அகத்தியனரும். முப்பு:சங்களையும் எரித்த சிவனும், மலையினப் பிளந்து மக்களைக் காத்தருள் சுரந்த முருகக் கடவுளும், முரஞ்சியூரைச் சேர்ந்த முடி நாகரும், குபேர ம்ை இ ன் னும் பல புலவ் சிகாமணிகளும் இருந்து அதனைச் சிறப்பித்தனர் என்று கூறுவர். இச் சங்கத்திருந்தோர் ஐந்நூற்று நாற்பத்தொன்பதின்மர். இவர் க ளா ற் பாடப் பெற்றன எக் துணையோ பரிபாடல்களும், முது5ாரையும், முதுகுருகும், களரி யாவிசையுமென இத் தொடக்கத்தினவாகும். இவர்கள் நாலாயி ரத்து நானூற்று நாற்பத் தொன்பதியாண்டு சங்கமிருந்தார்க ளென்றும், இவர்கள் அகத்தியத்தையே முதன் நூலாகக் கொண் டிருந்தன ரென்றும் கூறுவர், முதற் சங்க காலத்தில் ச ங் கம் நிறுவப்பெற்றிருந்த மதுரைமா நகரம் கடலால் மூழ்கடிக்கப்பட் டது. அதன் பின்னர் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்திற்கு மாற்றப் படடது என நூலகள கூறும
கபாடபுரத்தை ஸ்தானமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது இரண்டாவது தமிழ்ச் சங்கமே யென்று கூறுவர் அறிஞர். இச் சங்கத்தில் அகத்தியருைம், தொல்காப்பியரும், இருந்தையூர்க் கருங் கோழியும், மோசியும், வெள்ளுர்க் காப்பியனும், சிறு பாண் டரங்கனும், திரையன் மாறனும், துவரைக் கோமானும், கீரக் தையும் என இத் தொடர்பினரே இருந்தனரென்று அறியப்படு கிறது. இச் சங்கத்தில் ஐம்பத்தொன்பதின்மர் இருந்தனசென் றும் அவருள்ளிட்டுப் பாடினுேர் மூவாயிரத் தெழுநூறுவர் என் அறும் கூறுவர். இக்கால புலவ மணிகளால் கலியும், குரு கும், வெண்டாளியும், இசை நுணுக்கமும், பூத புராணமும் இன்னும் பலவும் பாடப்பெற்றன. வெண்டோர்ச் செழியன் முதல் முடத்

Page 28
42 தமிழன் மாட்சி
திருமாறன் ஈமுக ஐம்பத்கொன்பது பாண்டியர் இச் சங்கத்தை நன்னிலையில் வைத்துக் சாப்பாற்றினர். இச் சங்சம் மூவாயிசத்து எழுநூறு வருடம் இருந்தது. இக் காலத்திய நூல் நிலையத்தில் எண்ணுயிரத்து நூற்று நாற்பத்தொன்பது புத்தகங்கள் இருந்தன வென்று கூறப்படுகிறது. கென் குமரியாலும், அகன் கெற்கிலுள்ள நாடுகளும் கடல்வாய்ப் பட்டபொழுது அந் நூல்களும் மறைங் திருக்க வேண்டும்.
கபாடபுரமும் கடல் சொள்ளப்பட்டு மறைய, தமிழ்ச் சங்க மும் இட மாற் றம் பெற்றது. கடைச் சங்கமென இச் சங்க காலத்தை அழைப்பர். ஏனெனில் இச் சங்கக்கின் பின்னர் இவை போன்ற சிறந்த சங்கங்கள் தமிழ் நாட்டில் தோன்றவில்லை. கமிழ் மக்கள் அடிமைத் தளையால் பூட்டப்பெற்றபோது தமிழ்ச் சங்கம் எ ங் B ன ம் நிறுவப்பெறும்? தமிழ் மக்களிடையே சுயநலமும், ஒற்றுமையின் மையுமே அவர்களை அடிமைகளாக்கி அங்கிய மிலேச் சசின் ஆளுகைக்கு அவர்களை உட்படுத்தி விட்டது. இச் சுய நலம் மறைந்து எல்லோரும் ஒன்று எனக் கிரண்டு அடிமைத் தளையைக் களைந்தெறிந்த அன்றே தமிழ் அன்னையின் உதடுகளில் புன்னகை அரும்பும்.
கடைச் சங்கம் எனப்படும் மூன்ருவது தமிழ்ச் சங்கம் உத் தர மதுரையில் ஸ்தாபிக்கப்பட்டதெனக் கூறுவர். இச் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தோர் சிறு மேதாவியார், சேந்தம்பூதனர், அறிவுடை யரனுர், பெருங் குன்றார்க் கிழார், இளந் திரு மாறன், மதுரை யாசிரியர் நல்லந்துவனுர், மருதனிள நாகனர், கணக்காயர் மகன் நக்கீரனுர் என்னும் இத் தொடக்கத்தினராகும். இவர்களுள்ளிட்டு நானூற்று நாற்பத் தொன்பதின்மர் பாடினர்கள். இவர்களாற் பாடப்பெற்றன நெடுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, புற நானூறு, ஐங்குறு நூறு, பதிற்றுப் பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை என இத் தொடக்கத்தினவாகும். இவர்களுக்கு நூல் அகத்தியமும், தொல் காப்பியமுமாகும். இவர்கள் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது ஆயி சத்து எண்ணுற்று ஐம்பது ஆண்டுகளென்றும் அவர்களைச் சங் கமரீயினர் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத் தி ரு மாற ன் முதலாக உக்கிரப் பெருவழுதியிருக நாற்பத்தொன் பதின்மர் என்றும் கூறுவர். இக்கால நூல்களில் அழிந்து பட்

முத்தமிழ்ச் சங்கங்கள் 43
டவை போக எ ஞ் சி யவை பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க் கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங் தேவனர் பாரதம், இறையனர் அகப்பொருள் முதலியனவாகும்.
கடைச் சங்கங் குலைந்தபின் சேர, சோழ, பாண்டிய நாடு களில் பேராதரவில்லாதிருந்தும், செந்தமிழ்ச் செல்வியின் சிறப்பு குன்ருமல் நிலவி வந்தது. பல சமய வித்துவான்களும் மொழி வளர்ச்சியில் சிறிது ஊக்கம் காட்டி வந்தனர். புத்த வைஷ்ணவ வித்துவான்களால் பலருக்கும் பிரயோசனப்படக்கூடிய பொது நூல்கள் இயற்றப்படவில்லை. சமண சமயத்தினர் தமிழ் மொழி வளர்ச்சியில் அதிக ஊக்கம் காட்டினர். நிகண் டு, நன்னூல், காரிகை, நம்பியகப்பொருள் ஆகிய நூல்களும், சிந்தாமணி முக லிய பெருங் காப்பியங்களும் சமணர்களாலேயே இயற்றப்பட்டன வாகும். அப்பால் பல கலை ஞான நூல்களும் புராண காவியங் களும், நைடதம், பாரதம், இராமாயணம், இரகுவமிசம் ஆகிய இதிகாசங்களும் தோன்றின. பல புலவ சிகாமணிகளும் இடை யிடையே தோன்றிப் பிரகாசித்தனர். இடையே அங்கியர் படை யெழுச்சியால் தமிழ் வளர்ச்சி குன்றிய காலத்திலும் அதனை வளர்ச்சியடையச் செய்வகற்கும் பலர் முயற்சி செய்துள்ளனர். சமீப காலத்தில் மதுரை யம் பதியிலே பரீ பாண்டித்துரைத் தேவர் நான்காவது தமிழ்ச் சங்கத்தை ஸ்தாபித்தார். இன்றும் இச் சங்கத்தினால் * செந்தமிழ்” என்னும் பத்திரிகை நடத்தப் பட்டு வரப்படுகிறது. பல அறிஞர்கள் இச் சங்கத்தில் இருந்து தமிழ்த் தொண்டு புரிந்து வருகிருரர்கள்.
முச் சங்க காலத்திலும் அதன் பின்னரும் இயற்றப்பெற்ற நூல்களில் அநேகம் இன்று காணக் கிடைத்தில. இடையிடையே தமிழ்த் தாயின் தவப் புதல்வர்கள் தோன்றி மறைந்த நூல்களைத் தேடித் தே டி மக்கட் குதவுகின்றனர். சிந்திப்போர்க்கும் கற் போர்க்கும் செந்தேன்போனினிமையுடைய எந் தமிழ் மொழி நூல்களைத் தேடி அழியவிடாது பாதுகாக்கப் பலரும் முன்வரல் வேண்டும்.
பண்டைய தமிழ் நால்கள் பலவும் கடவுள் வணக்கத்தை அகத்தே கொண்டேயிருப்பதைக் காணலாம். தமிழ் மக்கள் ‘உல கத்தில் மனிதனுக்கு மேலான ஒருவர் இருக்கிறர்' என்னும் உணர்ச்சியைப் பண்டு தொட்டே கொண்டிருந்தனர் என்பது இவற்றல் தெரிகின்றது. இதல்ை தமிழ் மக்களின் சமயநிலை எமக்கு அத்தியாவசியமாகின்றது.
سد جمعیت

Page 29
கடவுட் கொள்கை
(-Se-Sass
உலக மக்கள் வாழ்க்கையை ஆராயப்புகின் அவர்கள் எவ் விதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றனர் என்பது தெரிய லாகும். சிலர் செல்வத்தையே தமது நோக்கமாக வைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துகின்றனர். சிலர் ஆழ்ந்த தமது உணர்ச்சியினல் நல்ல தமது அறிவுத் தெளிவின்மீது நோக்கைக் கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். பண்டைக் காலத்தில் தமிழ்மக்கள் தமது ஆழ்ந்த நல்ல அறிவுத் தெளிவையே நோக்க மாகக் கொண்டு வாழ்க்கையை கடத்தியுள்ளனர். அவர்கள் உள் ளத்தில் அறிவின் உணர்ச்சி எவ்விதம் உதித்தது?
இருளில் மயங்கி வழி தெரியாது இருக்கும் மக்கள் காலை கதிரோன் உதயமானதும் புத்தொளி பெற்று வழி தெரிந்து நடக்கின்ருரர்கள். அதுபோன்று ஐவகை நிலங்களிலும் வாழ்ந்து வந்த மக்கள் மற்றமற்ற இடங்களைப் பார்த்து வியப்படைந்தனர். அவர்கள் எதையும் உற்றுப் பார்ப்பதில் மிகவும் கருத்துடையோ ராக இருந்திருக்கிருரர்கள். சூரியன் உதயமானதும் உலகத்தில் ஜீவகளை தென்படுகிறதைக் கண்டு மக்கள் ஆச்சர்யம் கொண்ட னர். ஒரு சூரியனல் உலகமே நடக்கின்றது என்ற வியப்பே அவர்களிடம் காணப்பட்டது. “பல உயிரற்ற பொருள்களும் இருந்த இடங்களிலேயே அசைவின்றி இருக்கின்றன. ஆனல் உயிரற்ற சூரியன் அசைந்து உலகையே ஜீவனுடன் திகழச் செய் கின்றது. இதனை நடத்த உண்மையில் யாரோ ஒரு சூத்திரதாரி இருக்கவேண்டும்?’ என்று எண்ணினர். இயக்கும் உயிர்ப் பொரு ளையே "இயவுள்' அல்லது “கடவுள்' என்று கொண்டனர். இம் முடிபே தமிழ் மக்களுக்கு ஒருவித கடவுட் கொள்கையைக் காட்டியது.
பண்டைத் தமிழரின் ஆராய்ச்சியில் உயிர்கள், உலகம், கட வுள் என மூன்று பொருள்கள் இருந்தன. தொல்காப்பியத்தில் இவைபற்றிக் காணலாகும். உயிரின்மூலம் உலகத்தையும் கடவு 2ளயும் துய்க்கலாம். பண்டைத் தமிழ்மக்கள் "தெளிந்த வுணர் வுடையதே கடவுள்' எனக் கருதி வந்துளர். அவ்வுணர்வை

கடவுட் கொள்கை 45
அடையவேண்டியே அக்காலம் முதல் மக்கள் கடவுளை வழிபட்டு வந்துள்ளனர்.
உலகத்துயிர்களெல்லாம் ஆணும், பெண்ணுமாகவேயிருக் கின்றன. இதைக்கொண்டு கடவுளும் ஆண் பெண் வடிவங்களைக் கொண்டுள்ளவராதல் வேண்டுமென்று பண்டைத் தமிழர் கொண் டனர். இறைவன் ஒரு பக்கம் ஆணுகவும், மறு பக்கம் பெண் ணுகவும் விளங்குவதாக ஐங்குறுநூறு என்னும் சங்க நூலில் கூறப் படுகிறது. -
தரையில் இருந்து மக்கள் அதிக பயனைப் பெறுவதாலும், தரையும் மனங் கோணுது மக்களுக்கு உவந்து கொடுப்பதாலும் முற்கால மக்கள் தரையை ஒரு பெண் தெய்வமாக மதித்து வணங்கி வந்தனர். இதனைத் தரைப் பெண் வணக்கம்' அல்லது "பூமாதேவி வணக்கம்’ என்பர். இன்னும் பூமாதேவியை பெற்ற தாய் என்றும் மக்கள் அழைத்து வந்திருக்கின்றனர். இதிலிருந்து பிறந்ததே ' சக்தி வணக்கமும் என்று அறிஞர் கூறுகின்றனர். பண்டைநாளில் நரபலியிடும் வழக்கமும் இருந்து வந்துளது. இச் சார்பு மக்களைக் “கபாலிகர்’ என அழைப்பர். ஆலயங்களில் தேவதைகளைப் பிரீதி செய்யும்பொருட்டு விலங்குகளைப் பலியிடும் வழக்கம் இன்றும் நிலவுகின்றதை நாம் காண்கின்முேம், இவ் வழக்கத்தை அன்று கடவுளை வணங்காக மக்களுக்கெனவே முன் னேர் ஏற்படுத்தியிருத்தல் வேண்டுமென்றும் அப் பழக்கம் இன் றும் எல்லோரிடையேயும் நிலவிவிட்டதென்றும் கூறுகிருரர்கள். எப்பொழுது இப் பலிப் பழக்கம் ஒழியுமோ அன்றே தமிழ் மக்க ளுக்கு விமோசன மேற்படும்.
சிவலிங்க வணக்கமும் மக்களிடையே பரவியிருந்திருக் கிறது. சிவனையே எல்லாத் தெய்வங்களுக்கும் முதல்வர் என மக் கள் கருதி வழிபட்டு வந்துளர். முல்லைநில மக்கள் கண்ணனைத் தெய்வமாக வழிபட்டனர் என்பதற்கு தொல்காப்பியத்தில் வரும் "மாயோன் மேய காடுறை யுலகமும்’ என்பதால் அறியப்படு கிறது. தெய்வங்களுக்குப் பல க ரங் களை யும் சிரங்களையும் அமைத்து ஒவ்வொரு பெயரால் அழைத்து வணங்கி வந்தனர். கந்தி வழிபாடும் மக்களிடையே இருந்துள்ளது. விலங்கினங்கள், பறவைகள், ஊர்வன முதலியனவற்றைத் தெய்வங்களாக எண்ணி

Page 30
46 தமிழன் மாட்சி
வணங்கி வந்துளர். இன்றும் மாடு முதலியவற்றையும், கெருடன் முதலியவற்றையும், நாக ம் முதலியவற்றையும் தெய்வங்களாக வணங்குகின்றனர்.
பண்டும் இன்றும் தமிழ் மக்கள் தங்கள் தெய்வங்களின்மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ஆபத்துக் காலங்களிலெல்லாம் கடவுளை வேண்டிக்கொள்வர். நம்பிக்கையின் பலமும், “கடவுள் இருக்கிருர், அவர் நம்மைக் காப்பாற்றுவார்' என்ற அச்சமின்மை யுமே ஆபத்துக் காலங்களில் அவர்களைத் தப்ப வைக்கின்றது. இதனுல் கடவுள் பக்தி இன்னும் அதிகப்படுகின்றதேயொழியக் குறையமாட்டாது. கடவுளை வேண்டி நேர்ந்தோர் தமது ஆபத்து நீங்கியதும் தமது நேர்த்திக்கடனைச் செய்து முடிப்பர். விக்கிரகங் களை உற்சவ காலங்களில் ஊர்வலம் கொண்டு வருவார்கள். விழாக் காலங்களில் பலவகைப் பொருள்களும் கடவுளுக்குப் படைக்கப் படும். தமிழ் மக்களின் சமயம் சைவமேயாகும். அவர்கள் சமயம் எப்போ ஆரம்பித்தது எனக் காலவரையறுக்துக் கூற முடியாது எனப் பல அறிஞர்களும் கூறிப் போந்துளர். w தமிழ் நாட்டில் பல சமயங்கள் இருந்த காலத்திலும் அவற் றைத் தமிழ் மக்கள் ஒறுக்க கினைக்காது சமயப் பொறுமையையே கையாண்டனர் என்பதற்குப் போதிய சான்றுகள் உள. பண்டை நூல்கள் பலவும் சமயங்களையுங் தழுவியே பெரிதும் எழுதப்பட் டுள்ளன. வேறுபட்ட மதங்கள் மாத்திமமன்றி வேறுபட்ட தெய் வங்களும் மக்களது வணக்கத்தில் இருந்துள்ளன, அக்காலத்தில் அரசரும் தம் மதத்தை மாத்திரம் நிலைநாட்ட வேண்டுமென்னும் எண்ணமின்றி சகல மதத்தினருக்கும் ஆதரவளித்துப் பாதுகாத்து வநதனா.
அக்கால மக்களிடையே ஆரம்பித்து வைக்கப்பட்ட மரபுப் பெயர்கள் யாவும் தொழிலடியாகப் பிறந்தனவேயன்றி வேறில்லை. இன்றைய உலகில் பணமும் ஆதிக்கமும் படைத்தோர் தாம் தமிழ்ச் சாகியத்தார் என்பதை மறந்து மரபு பேதங்களை எடுத்துக் காட்டி ஒரு சார்பு மக்களை ஒதுக்குகின்றனர். உலகிற் பிறந்த சாதி இரண்டேயன்றி வேறில்லை. இன்றைய ஜாதி மரபுகள் ஜீவ னுேபாயத்திற்காக மேற்கொண்ட தொழிலடியாகப் பிறந்தவையே. ஜாதிக் கொள்கைகள் வேரூன்றியிருக்கும் இந்நாளையில் மனித சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் கொள்கைகளை நிலைநாட்டுவது எங்ங்ணம்?

கடவுட் கொள்கை 47
சமயக் கொள்கைகளைப் புதிய உருவில் ஆக்க முற்பட்டோர் இந்த ஜாதிப் பிரிவுகளையும் சமயத்துடன் தொடர்வுபடுத்திவிட் டனர். இந்த ஜாதிக் குழப்பங்கள் நீங்கி எல்லோரும் ஒரே மதம், ஒரே ஜாதி என்ற கொள்கை என்று நிலவுமோ அன்று தமிழன் தன் அடிமைத் தளையிலிருந்து நீங்கிச் சுதந்திரமடைவான்.
தமிழ் மக்கள் தம்முள் இறந்தாரை உரிய ஈமச் சடங்குகள் கிறைவேற்றப்பட்ட பின் ன ர் சுடுகாட்டிற்கெடுத்தேகி அங்கு தகனம் செய்வர். இம் முறை இன்றும் சைவ மக்களிட்ையே நிலவி வருவதைக் காணலாகும். அக்காலத்தில் மனைவி கணவனுடன் இறக்கும் வழக்கமும் ஒரு சாராரிடையே நிலவி வந்துள்ளது. நற்றிணை, குறுந்தொகை, மணிமேகலை முதலியவற்றில் இவற்றைப் பற்றிக் காணலாகும். "தமிழ் மக்களின் சமயக் கோட்பாட்டில் மறுலவுக வாழ்க்கையைப் பற்றிய திடமான உணர்ச்சியிலிருந்து வந்துளது. இன்றும் இத்திட வுணர்ச்சி இருக்கின்றதை நாம் காணலாகும.
பழைய காலத்தில் தமிழ் நாட்டில் சைவமதக் கோவில்கள் திகழ்ந்தன. இன்றும் அவைகளே காட் டி ன் கண்கள்போல இலங்கா கிற்கின்றன. கடல் கொண்ட குமரிக் கண்டத்திலே இத் தகைய பெருங் கோயில்கள் பல இருந்தனவென்று கூறப்படுகின் றது. தமிழ் மக்கள் தமது நாட்கருமங்களில் கடவுள் வழிபாட்டை யும் ஒன்ருகக் கொண்டிருந்தனர். தமிழ் நாட்டின் மக்களிடையே சைவத்தின் கிளைகள் பல தோன்றிப் பரவின. வைஷ்ணவம், புத்தம், ஆருகதம், சமணம் முதலியன சைவத்தின் பல தரத்தி னங்களைக் கொண்டனவாகக் காணப்படுதலை நுணுகி ஆசாய்வோர் எடுத்துக் காட்டுகின்றனர். சைவத்தின் தத்துவங்களை மக்களுக்கு ஏற்ப போதிக்கின்றன இம் மதங்கள். அக் காலத்தில் தமிழ் மக்கள், ஒரு ஆருனது பல இடங்களிலும் ஊற்றெடுத்துப் பல சிறு கிளைகளாகப் பரந்து பாய்ந்து இடையிடையே தம்முட் கலந்து ஈற்றில் ஒன்ருகி ஒரு கடலுட் பாய்வதுபோல் உலகத் திலும் பல சமயங்கள் பல வழிகளிலும் மக்களை அழைத்துச் சென்று ஈற்றில் ஒரு இடத்திற்கே அவர்களைக் காட்டிவிடுவதாகும் என்ற உயர்ந்த கொள்கையைத் தம்முள் கொண்டிருந்தனர். இத னலேயே அவர்கள் இடையிடையே தோன்றிய பல சமயங்களை யும் பரவ விடாது தடுக்க முயற்சியெடுக்கவில்லை. இன்றும் சைவம்

Page 31
48 தமிழன் மாட்சி
தழைத்தோங்குவதற்கு இதுவே முதற் காரணமாகும். உலகில் ஏனைய மதங்கள் தம்மை நிலைநாட்டவேண்டி இரத்தம் சொரிந்த போதிலும் இத் தமிழர் சமயமான சைவம் தானுகவே பரவியது. மறு சமயங்களில் இரத்தக் கறை உண்டு. இதனை மறுக்கமுடி யாது. எங்கள் தமிழர் மகம் உலகம் முழுவதும் பரவியிருந்தது. இதற்குச் சான்றுகள் பலவுண்டு. ஆராய்ச்சியின் பயனல் ஆங் காங்கு தமிழர்களின் சமய நிலையங்கள் வெளிப்பட்டுள்ளன. இச் சமயநிலைகொண்டு தமிழ் மக்கள் குமரிக்கண்டம் முதல் உலகம் முழுவதும் பரவியிருந்தனர் என்பது வெளிப்படையாகத் துலங்கா நிற்கின்றது. தமிழ் மக்களின் உயிர்நிலை போன்றது அவர்கள் சமயநிலை ஆராய்ச்சியே இதற்குச் சான்று பகரும்.
(\ (3)

புதிய ஆராய்ச்சிகள்
ஒவ்வொருவருக்கும் தமக்கு முற்பட்டவர்களின் வாழ்க்கை பற்றி அறிய அவாவுண்டாதல் இயற்கை. இந்த அவா காரணமாக உதயமாவதே ஆராய்ச்சி. சில காலங்களுக்கு முற்பட்டவர்களே தமது சரித்திரங்களை எழுதி வைத்திருந்தனர். பெரும்பாலும் அக்குறிப்புகள் சரித்திரத்தில் சம்பந்தப்படாத விஷயங்களையே கொண்டிருக்கும். இவை எங்ஙனமிருந்தபோதிலும் பண்டை யோர் வாழ்க்கையை அறிவதற்கு மனிதன் எடுத்த முயற்சிகள் பல. அவற்றுள் புதை பொருள் ஆராய்ச்சியே முக்கியமானதாகும். பழைய காலக்தொட்டு இயற்கையின் கூறுபாட்டால் மறைந்த மண் டலங்களை அகழ்ந்து பரிசோதித்தலையே சரித்திரமெழுதுவோர்
மேலாகக் கொள்கின்றனர்.
பழைய வரலாறுகள் ஒழுங்காகக் கிடைக்கப் பெருதுவிடி னும் புதையுண்ட மண்டலங்களில் உள்ள கற் சிலைகள், சமாதிகள், கட்டிடங்கள் முதலியவற்றைக் கொண்டும் ஆங்காங்குள்ள மண்டை ஒடுகள், என்புகள் முதலியவற்றைக் கொண்டும் பழைய மக்கள் வரலாறுகளை நாம் அறியக்கூடியதாக இருக்கிறது. பல மண்டிலங் கள் இயற்கையின் மாறுபாட்டால் மாற்றமடையும்பொழுது அவை மண் மேடாதலும் இயல்பு. அப்படி மண்மேடிட்ட இடங்களைத் கோண்டிப் பார்த்து, அவ்வவ்விடங்களில் காணப்பெறும் பல திறப்பட்ட பொருள்களையும் ஆராய்ந்து அவற்றைப்பற்றிய உண் மைச் செய்திகளையும், அவற்றை உபயோகித்த மக்களைப் பற்றிய செய்திகளையும் அறியும் முயற்சியே புதை பொருள் ஆராய்ச்சி யாகும். இதற்குப் பக்கபலமாக உதவுபவை உடற் கூற்று நூல் களும், கில நூல்களுமாகும்,
பண்டை நூல்களைப் படிக்குங்தோறும் புதையுண்ட அல்லது கடல் கொண்ட நகரங்களைப்பற்றி அறிகின் ருேம். அக்கால மக் களின் வாழ்க்கை பற்றி அறிய அவாவுண்டாகல் இயல்பேயன்ருே இந்த அவாவினலே உந்தப்பட்ட பல அறிஞர்கள் புதை பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களாலேயே பண்டைய சரித்

Page 32
50 தமிழன் மாட்சி
திசம் எமக்குக் கிடைத்திருக்கிறது. இன்றும் கிடைக் து வருகிறது. இன்னும் எமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பலப்பட் டுள்ளது. இதற்குக் காரணம் இன்று நடக்கும் புதை பொருள் ஆராய்ச்சியேயாகும்.
புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஆற்றேரங்களையும், குகை யடிவாரங்களையும், சமவெளிகளையும், மண்மேடுகளையும் ஆராய்ந்து வந்துள்ளனர். இன்றும் ஆராய்ந்து வருகிறர்கள். அவ்வப்பொழுது தாம் தமது ஆராய்ச்சியின் பயனுக கண்டறிந்தனவற்றை உலகில் மற்றையோரும் அறியும்வண்ணம் நூல்களாக வெளியிடுகின்றனர். இந் நூல்கள் எம் பண்டையோரைப் பற்றிய சரித்திரங்களை எமக்குக் கூறுகின்றன. இதுவே ஆராய்ச்சியால் நாம் அடைந்த
அடையும் பயன்களாகும்.
அங்கிய நாடுகளில் இருந்து தமிழ்நாடு போந்த யாத்திரீகர்கள் முதலானேர் எம் நாடுபற்றிக் கூறியுள்ளவை கொண்டு பல புதிய விஷயங்களை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றன. பண்டை நூல்களும் நமக்கு ஊக்கமூட்டுபவைகளாகக் காணப்படுகின்றன. அவாவும் அதிகமாக ஆராய்ச்சி குழுக்கள் தோன்றுகின்றன. இவ் விதம் தோன்றிய ஆராய்ச்சிக் குழுக்களே எமக்குப் பலவற்றையும் உதவியுள்ளன.
இந்திய ஆராய்ச்சிக் குழுவிற்குத் தலைவராக இருந்த ஸர் 9;Geoă6RIT6:Tlf 356T6(figforth (Sir Alexander Cunningham) என்பவரின் உழைப்பின் பயணுக நாளந்தா, தசஷ்சீலம், பாடலிபுரம், கெளசாம்பி, அமராவதி முதலிய பண்டைய நகரங் கள் பற்றி நாம் அறிந்தோம். அவரின் உழைப்பினுலேயே மறைந்த இந் நகரங்கள் பற்றி மக்கள் அறிந்தனர். ஸ்ர். ஜோன் மார்ஷல் (Sir John Marshal) என்பவரின் தலைமையில் நடந்த ஆராய்ச்சி யின் பயனக இந்து நாகரிகம் எமக்குத் தெரிய வந்தது. கி. மு. 5610-ம் ஆண்டிற்கு முற்பட்டதென்று கூறப்பட்ட நாகரிகத்தை யுடைய ஹரப்பா, மொகொஞ்சோ-தாரோ முதலிய இடங்கள் பற்றி நாம் அறியக்கூடியதாக ஆராய்ச்சியாளர்கள் பல நூல்களை வெளி யிட்டுள்ளனர். ஈண்டு வாழ்ந்த மக்கள் தமிழர்களே யென்பது அங்கை நெல்லிக்கனியாகும். அறிஞர் என். ஜி. மஜபம்தார் சான்ஹ"தாரோ என்ற இடத்தைக் கண்டு பிடித்தார். அவர்

புதிய ஆராய்ச்சிகள் 51
மேலும் ஆராய்ச்சி செய்ததின் பயணுக லோஹெஞ்சோ-தாரோ என்ற இடத்தையும் கண்டு பிடித்தார். அறிஞர் வாட்ஸ் என்பவர் சக்பூர் பானிஸியால் என்ற இடத்தைக் கண்டு பிடித்தார். இத் தகைய ஆராய்ச்சிகளால் எமது முன்னேர் நாகரிக வாழ்க்கையை நாம் அறிய முடிந்தது.
கங்கை நதிக் கரைகளை ஆராய்ந்து பார்த்தபொழுது பல மண் டிலங்கள் இருந்தது தெரிய வந்தன. பண்டை நகரங்களான வட மதுரை, கெளசாம்பி, பிரயாகை, வாரணுசி முதலியன இந் நதிக் கரையிலேயே இருந்தனவென்று ஆராய்ச்சியினல் பிறந்துளது. இவ்வாறே நருமதை நதிப்படுக்கை, கோதாவரி, கிருஷ்ணை, காவிரி, தாமிரபரணி, பேரியாறு முதலியவற் றின் கரைகள் ஆதியன ஆராய்ச்சிக்குட்பட்டு அரிய பெரிய விஷயங்கள் இன்று வெளிப் பட்டுள்ளன. பீகார் மண்டில ஆராய்ச்சியால் பாடலிபுரம் பிறந் தது. நடு மண்டில ஆராய்ச்சி. ஒரிஸ்ஸா ஆராய்ச்சி, டேக்கான் ஆராய்ச்சி சென்னைமண்டில ஆராய்ச்சி முதலியவற்றினலும் புதை
யுண்ட பண்டை நாகரிகம் வெளிப்பட்டுள்ளது.
பழைய கற்காலம் முதல் உலோக காலம் வரையிற் தொடர்ச் சியாக உள்ள ஆயுதங்கள் முதலிய சின்னங்கள் இந்தியா முழுமை யும் காணப்படுகின்றன. கற்காலக்திற்கும் உலோக காலத்திற்கும் குறைந்தது இருபதினுயிரம் வருடங்கள் சென்றிருக்க வேண்டு மென ஆராய்ச்சியாளர் கூறுவர். இதனுல் இருபதினுயிரம் ஆண்டு கட்கு முன்னரே மக்கள் இங்கு வாழ்ந்திருந்தனர் என்று வெளி யாகின்றது.
சிந்து வெளியை ஆராய்ச்சி செய்ததன் பயணுக வெளித் தோன்றிய, மகன்யோதாரோவில் கிடைத்துள்ள முத்திரைகளில் இன்று நாம் வழங்கும் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. இறுவன், தாண்டவன், யாழ், வேல், நாய், காலாள், எண்ணுள், கலக்கு, நண்டு, உழவன், கோயில், குட்டை முதலிய சொற்கள் ஆங்குள்ள கற் சிலைகளிலும் முத்திரைகளிலும் காணப்படுகின்றன. இந்தியா முழுமையும் தமிழ் மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பது முடிவாகும்.
சிந்து நதிதீரத்தில் இருந்த தமிழ் மக்கள் பாபிலோனியாவில் சென்று சுமேரியர் என்னும் பெயரோடு குடியேறினர் என்று

Page 33
52 தமிழன் மாட்சி
சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். டாக்டர் ஹோவ் என்னும் சரித்திராசிரியர் தமது ஆராய்ச்சி நூலில் கூறுவதனை நோக்குவாம்.
"சுமேரியரின் உடற்கூறு முதலியன அவர்கள் இந்திய மக்க ளின் இனக்கைச் சார்ந்தவர்கள் எனக் காட்டுகின்றன. இன்றைய இந்திய மக்களின் முகவெட்டு பல்லாயிரமாண்டுகட்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வடிவை ஒத்திருக்கின்றது. இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாகவும், தரை மார்க்கமாகவும் தமிழ்மக்கள் சென்று "யூபிற தீஸ், தைகிரஸ் நதிகளின் பள்ளத்தாக்குகளில் குடியேறிச் சுமேரிய மக்களாயினர். இந்தியாவிலே அக்காலம் நாகரிகம் மேலோங்கி இருந்ததால் அங்கு வந்து குடியேறிய மக்க ளான தமிழர்- சுமேரியர் எனப் பின்னர் அழைக்கப்பட்டோர்
எழுதும் முறையை நன்கு அறிந்திருந்தனர்.”
பாாவலீகத்தில் நடந்த ஆராய் ச் சி யின் பயனக ஆண்டுத் தமிழர் தொடர்பு இருந்ததென்பதற்குரிய சான்றுகள் வெளிப்பட் டுள்ளன. பாரவtகத்தின் பெரும்பகுதி பாலை வனமாக இருந்த போதிலும் ஆங்கு அழகிய மலைக் காட்சிகளும், நகரங்களும் இருக்கின்றன. பழைய சின்னங்களின் ஆராய்ச் சி விளைவால் ஆண்டு வாழ்ந்த மக்கள் தமிழ் மக்களே யென்பது அறிஞர் துணிபு. இவைபற்றிப் பல நூல்கள் இன்று நமக்குக் கிடைத் துளளன.
அரேபியாவில் பல பகுதிகளையும் ஆராய்ச்சி செய்து வந்த புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஆங்காங்கு கண்டு பிடிக்கப்பட்ட பழைய சரித்திர வரலாறுகள் பற்றி உலகுக்கு அறிவித்துள்ளனர். gs (Ur) (535 T ஆராய்ச்சியின் பயனுக கி. மு. 4300 ஆண்டுகட்கு முற்பட்டதென்று கூறப்படும் சுமேரியர்களது நாகரிகம் தெரிய வந்தது. இங்கு திங்கட்கடவுள் வணக்கமும் நிலமகள் வணக்க மும் பரவியிருந்ததற்குச் சான்முக பல கோவில்கள் காணப்படு கின்றன. கதிரவன் கோவில்களும் காணப்படுகின்றன. நிலமகள் கோவிலில் செம்பினுலான எருதும் பறவையும் கண்டு பிடிக்கப் பட்டன. இவையே சுமேரியர் கி. மு. 4300 ஆண்டிற்கு முன் நாகரிகச் சிறப்புடன் வாழ்ந்தனர் என்பதைக் காட்டுகின்றன. பிற்கால ஆராய்ச்சிகளின் பயணுக தமிழ் நாட்டுடன் உர் நகர வியா பாரத் தொடர்புகள் பற்றி நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.

புதிய ஆராய்ச்சிகள் 53
இரு ஆற்று ஒரங்களில் உள்ள பண்டை நாகரிக உலகம் எனப்படும் மொசேப்போத்தேமியா ஆராய்ச்சிக் குட்பட்டபோது ஆங்கு தமிழ் மக்கள் சமய நிலையங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன். மொசெப்பொத்தேமியாவிற்குக் கிழக்கேயுள்ள ஏலம் எனப்பட்ட இடத்திலும் ஆராய்ச்சி நடந்தது. சுசா எனப்பட்ட இதன் தலை நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. அசீரியர் காலத்தின் பின்னர் ஏலம் பாரவீக நாட்டுள் அமுங்கிவிட்டது. இங்கும் தமிழர் கோயில் வணக்கம் காணப்படுகிறதாக அறிஞர் கூறியுள்ளனர். பாலஸ்தீனத் தில் ஆராய்ச்சி நடந்தபொழுது பல நகரங்கள் வெளிப்பட்டுள்ளன. பல தமிழர் நாகரிக சின்னங்கள், பண்டைத் தமிழ் நாட்டு அணி கலன்கள் முதலியன இங்கு காணப்படுகின்றன.
எகிப்து தேசத்தில் ஆராய் ச் சி நடந்தபொழுது ஆங்கும் காணப்படுவது என்ன ? பண்டை எகிப்திய அரசர்கள் கல் லறைகளிலும் கோயில்களிலும் தமிழ் நாட்டு முறைகளைக் கையா ளப்பட்டிருத்தலைக் காணலாம். பழைய தமிழ் மக்கள் அணி கலன்கள், உடைகள் முதலியன இருக்கலையும் அறிஞர் எடுத்துக் காட்டுகின்றனர். கி.மு. 4000 ஆண்டுகட்கு முற்பட்ட பிரமிட் கோபுரங்களை ஆக்குவித்த எகிப்தியர் தமிழருடன் தொடர்புகொண் டிருந்தனர் எனப் பல அறிஞர்களும் கூரு நிற்கின்றனர். பிற்கால ஆராய்ச்சிகளின் பயனுக எகிப்தியரும் தமிழ் மக்களே என்று அறிஞர்கள் துணிகின்றனர். அவற்றிற்குப் போதிய ஆகாசங்களும் கிடைத்துள்ளன. எகிப்து நாட்டிலேயுள்ள தெறல் பஃறி என்னும் ஊரின் கண் உள்ள அஹதாப் அரசியின் கோயிற் சுவரிற் பொறிக் கப்பட்டிருக்கும் ஒவிய எழுத்துக் கல்வெட்டுகளில் இவ் வெகிப் தியர் தென்கட லகத்திருந்த பாண்டிய தேசத்தில் இருந்து வந்து நீலாற்றின் கரைகளில் குடியேறினர்கள் என்று கூறப்படுகிறது. எகிப்திய நாகரிகம் மிகவும் பூர்வீகமானது. இந்த நாகரிகத்திற்கு முற்பட்டது அசுரேய நாட்டின் நாகரிகமாகும். அசுர் என்னும் பட்டணத்தைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்தவர்களே அசுரேயர். இந்த அசுரேய நாகரிகம் பாபிலோனிய நாகரிகத்திற்கு மிகவும் பிந்தியது. பாபிலோனிய நாகரிகம் சுமேரியர் வழி வந்தது. இச் சுமேரிய மக்கள் தமிழ் நாட்டில் இருந்து பாபிலோனியா சென்று குடியேறியவர்கள். இவையெல்லாம் ஆராய்ச்சியாளர்களால் நன்கு ஆராய்ந்து நாட்டப்பட்ட உண்மைகளாகும்.
மக்கித்தரைக் கடலிலுள்ள மா ல் ட் டா என்னும் தீவில் ஆராய்ச்சி நடத்தியவிடத்து லிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ஆங்கும் தமிழர் நாகரிகச் சின்னங்களே மலிந்து கிடக்கின்றன என்று ஆராய்ச்சி நூல்கள் நவிலுகின்றன. at. ஆபிரிக்காவிலே காதேஜ் என்னும் உன்னத ராஜ்யத்தை ஸ்தாபித்த வர்த்தக மக்க

Page 34
54 தமிழன் மாட்சி
ளான பொனிஹியரும் தமிழ் நாட்டினரே யென்று கூறப்படு கின்றது. இப் பொனீஹியர் பாலஸ்தீனத்திற்கு மேற்கேயுள்ள அராபிய நாடுகளில் வாழ்ந்தனர் என்று சரித்திரங்களால் அறியக் கிடக்கின்றது. மத்தித்தரைக் கடலில் பொனிஹிய மக் களின் வாணிபக் கப்பல்களே பெரும்பாலும் ஒடிக்கொண்டிருந்தன. இவர்கள் கணிதத் துறையில் வல்லுனராக இருத்தனர் என்று தெரிகிறது.
வட அமெரிக் கா வில் ருெக்கீஸ் மலைப் பிரதேசத்தில் ஆராய்ச்சி நடத்தியவர்கள் லிங்கங்களைக் கண்டு எடுத்திருப்பதா கக் கூறப்படுகிறது இங்கு நிலத்தில் மறைந்த பண்டைய ஆல யங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க மக் களும் தமிழ் நாட்டில் இருந்து சென்று குடியேறியவர்கள் என ஆராய்ச்சியாளர்கள் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கின்ற னர். அமெரிக்காவில் கொலறடோ என்னும் மாகாணத்திலுள்ள " கனயன்’ ஆற்றேரப் பீடபூமியில் சிவனின் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் வயது குறைந்தது ஒரு இலட்சமாவது இருக்குமென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். நாகரிக ஸ்தானங்களில் ஒன்முன மெக்ஸிக்கோ நாட்டிலே தமிழர் நாகரிக சின்னங்கள் ஆராய்ச்சிகளின் பயனுக வெளிப்பட்டுள்ளன.
பிரிட்ட னில் உரோமருக்கு முன் குடியேறியிருந்தவர்க ளிடையேயுள்ள அறிவாளிகளை ' திராவிட் ??.என அழைத்தனர் என்று கூறப்படுகிறது. இது தமிழ் மக்கள் ஆங்கும் குடியேறி யிருந்தனர் என்பதைக் குறிக்கின்றது.
இவ்வளவு ஆராய்ச்சிகள் நடந்து பண்டைய தமிழ் மக்களின் சிறப்புக்களை அறிந்தும், தமிழ் மக்கள் இன்னும் அடிமைகளாக இருக்கின்றனர் என்ருல் அகனவிட அவமானம் வேறும் வேண் டுமா ? இன்றைய தமிழ் நாட்டின் கிலை மை சீர்திருத்தப்பட வேண்டுமா ? தமிழ் நாட்டின் சீர்திருத்தக்கிற்கு ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தத்தம் பங்குகளை உரிய முறைப்படி, கிறை வேற்றவேண்டும். இன்று பெண்மையை அடிமையாக வீட்டினுள் வைத்திருப்பதாலேயே ஆண் அ ங் கி ய ரு க்கு அடிமையானன். பண்டைக்காலத்தில் பெண்மையும் ஆண்மைக்குச் சமமாக உல கில் பிரகாசிக்ககால் கமிழ்நாடே உலகில் சிறந்து விளங்கியது. இன்றுள்ள பெண்களின் அடிமை நிலைமையை அறிய விரும்பின் அன்னரின் பண்டைய வீர வாழ்க்கையை நாம் அறிதல் முக்கியம். பெண் தெய்வத்தின் உயர்வே தமிழனிற்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
صدھبرابر ہے

தமிழ் நாட்டு பெண்பாலார்
ஒரு நாட்டின் சிறந்த நாகரிக நிலையின் உயர்வை அந் நாட்டு மக்களுடைய அறிவு, ஆற்றல், செல்வநிலை முதலியவற்ருல் உணர லாகும். இம் மூன்றிற்கும் உரிய தெய்வங்களாக 5ாம் கலைமகள் பராசக்தி, திருமகள் என்னுந் தெய்வங்களை வழிபடுகின்ருேம். ஒரு நாட்டிற்கு ஆடவர் எங்ஙனம் பெருமைக்குக் காரண ராய் இருக்கின்ருர்களோ அங்ஙனமே பெண்டிரும் காட்டிற்கு உறு துணையாக இருக்கின்றனர்.
உலக மக்கள் யாவருள்ளும் பெண்டிர்க்குச் சகல உரிமை களையுந் தந்துதவியவர்கள் கமிழரே. ஆடவர் க் கி ரு ங் த சகல உரிமைகளையும் பெண்களும் அனுபவித்து வந்தனர். தமிழ்ப் @ Lu Gior ņ if அறைக்குள் பூட்டி வைக்கப்படாது வெளியுலகில் செல்வச் சுயேச்சை பெற்றிருந்தனர். ஆடவர், மகளிர் இருவருக் கும் அறிவு பொதுவாகும். பண்டை நாளில் அவர்களுக்குரிய உரிமைகள் இருபாலாருக்கும் இருந்தன. இப்பொழுது எமக்குக் கிடைக்கும் சங்க நூற்கள் மூலம் பண்டைய பெண்களின் ل6 ہی மையை அறியக்கூடியதாக இருக்கின்றது. தமிழ் நாட்டில் சுமார் ஐம்பது பெண்மணிகள் இயற்றிய செய்யுட்கள் எமக்கு இன்று கிடைத்துள்ளன. இன்னும் தமிழ்ச் சங்க நூல்களை நன்கு ஆராய், வோமாயின் ஆன்ற கேள்வியும் அகன்ற கல்வியும் வாய் க் கப் பெற்ற பெண்மணிகள் அக்காலத்துத் திகழ்ந்தார்கள் என்பது தெரியவரும்.
பண்டைத் தமிழ் நாட்டில் காக்கை பாடி னியர், சிறு காக்கை பாடினியர், ஒளவையார், நச்சென்னையார், வெள்ளி வீதியார், வெண்ணிக் குயத்தியார், குறமகள் இளவெயினி, குற மகள் குறியெயினி, நன் னு ைகயா ர், பூங்கண்ணுத்திரையார், பொன்மணியார், பாரி மகளிர், ஆதிமந்தியார், பூத பாண்டியன் மனைவி பெருங் கோப் பெண்டு, ஆண்டாள், காரைக்காலம்மை யார், காஞ்சிபுர அம்மைச்சி, குண்டலகேசி, நீலகேசி, விசைய்ை,

Page 35
56 தமிழ் நாட்டு பேண்பாலார்
மசாத்தியார், மங்கையர்க்கரசி, இசைஞானியார், தடாதகைப் பிராட்டியார் ஆகிய பெண்மணிகள் தமிழ்த் தொண்டு புரிந்து மேன்மையடைந்தோராகும்.
அறுபத்துமூன்று நாயன் மார் களில் மூவர் பெண்மணிக ளாகும். இசை ஞானியார், மங்கையர்க்க ரசியார், காரைக்காலம் மையார் என்ற பெரும்புகழ் படைத்த இம் மெல்லியலார் மூவரும் நன்கு கற்றறிந்தவர்கள் எனக் கொள்ள இடமுண்டு. ஆழ்வார் பன்னிருவருள் ஆண்டாள் பெண்மணியே. அவர் பாடிய இன் னிசைப் பாடல்களை ஆராயுமிடத்து அன்னர் அக்காலத்திய தமிழ் நூல்களைக் குற்றமறக் கற்றவர் என்பது தெற்றென விளங்கும். காரைக்காலம்மையாருடைய பாசுரங்கள் சைவத் திருமுறைகளில்
ஒன்ருகிய பதினுெராந் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளது.
இலக்கிய நூல்களைக் காட்டிலும் இலக்கண நூல்களைக் கற் றல் கடினமாகும். காக்கை பாடினியார், சிறு காக்கை பாடினியார் என்ற இரு பெண்களும் செய்யுளைப் பற்றிய இலக்கண நூலை ஆக்கியுள்ளனர். புறநானூற்றில் போன் முடியார் என்பவர் தாய் முதலியோர் கடமையைப்பற்றிப் பாடியுள்ளார்.
ஒளவையாசைப் பற்றிய பல செய்திகள் ஈமக்குக் கிடைக் கின்றன. அவருடைய பெருமை அளவற்றது. அவரது பெயரை வைத்துக்கொண்டு பெருமை பெற்றேர் பிற்காலத்தில் பலர் இருந் திருக்கிருரர்கள் என்று கூறப்படுகிறது. குறமகள் குறியெயினி, குறமகள் இளவெயினி, வெண்ணிக் குயத்தியார் ஆகியோர் குய வர் குலத்துதித்த பெண்மணிகளாகும். v
கரிகாற் சோழனது மகளான ஆதிமந்தியார் பல அரிய செய் யுட்களைப் பாடியுள்ளார். பூதபாண்டியன் மனைவி பெருங் கோப் பெண்டு தன் கணவன் இறந்த காலத்து தீய்ப் பாய்ந்து உயிர் துறந்தனள். அக்காலையில் அவளைத் தடுக்தோரைக் கன ன் நூறு பாடிய செய்யுள் புறநானூற்றில் காணப்படுகின்றது. அரச குடும் பத்துப் பெண்மணிகளும் தமிழ்ப் பயிற்சியுடையோரா யிருந்தி ருக்கின்றனர்.
தமிழ்ப் பெண்கள் வாதப்போர் நடத்தியதாகவும் பல செய் திகள் நமக்குக் கிடைக்கின்றன. குண்டலகேசி யென்னும் பெண் அறிஞருடன் வாதப்போர் புரிந்தாளென நூல்கள் கூறுகின்றன.

தமிழ் நாட்டு பெண்பாலார் 57
குண்டலகேசி யென்னும் பெயரிய காப்பிய மொன்றும் தமிழில் உள்ளது. சிற்சில நூலாசிரியர்கள் அவ்வந் நூல்களில் வரும் பெண்மணிகளின் சிறப்புக்களை எடுத்துக் கூறுகின்றனர். ஜைன நூலில் வரும் நீலகேசியும், சீவக சிந்தாமணியில் வரும் விசயை யும், பேருங்கதையில் வரும் வாசவதத்தையும், மானணிகையும், குண்டலகேசியில் வரும் பத்திரையும் சிறந்தவர்கள் என்று அவ்வங் நூல்களால் அறியக்கூடியதாக இருக்கின்றது.
பெண்கள் சங்கீதப் பயிற்சியுடையோராக இரு ங் த ன ர். குறிஞ்சி நிலப் பெண்கள் தினைப்புனங் காக்குங் காலையில் அழ கான பாட்டுக்களை இன்னிசையுடன் பாடுவர். வீரப் பெண்கள் தம் கணவர் போர்க்களத்திற் புண்பட்டபோது அப் புண்ணினல் உண்டாகும் வருத்தத்தை மாற்ற சங்கீதத்தைக் கைக்கொள்வார் கள். சங்கீதத்திற்கு அதிதேவதை மாதங்கி யென்னும் பெண் தெய் வமே. பெண்கள் வைத்தியம், சோதிடம், சித்திரம், சிற்பம் முத லியவற்றில் சிறந்து விளங்கினர்கள். எவ்வகையான துன்பக்தை யும் பொறுக்கும் ஆற்றலே சிறந்தது. பெண்களிடம் இக் குணப் பண்பு சிறப்பாக அமைந்துள்ளது. பெண்களின் வீசத்திற்கும் கற்பிற்கும் கண்ணகியை எடுத்துக்கொள்ளலாம். புறநானூற்றில் வீரக்குடிப் பெண் களை ப் பற்றி க் கூறப்படும் செய்யுட்களைக் காணலாம். ܫ
பெண்கள் வாளேந்திப் போர்புரியும் திறனும், தேர் செலுத் தும் ஆற்றலும் பெற்றிருந்தனர் எனப் பல நூல்களாலும் நாம் அறிகின்ருேம். மதுரையைத் தலைநகராகக்கொண்டு கமிழ் உலகை அரசாண்ட தடாதகைப் பிராட்டி யார் இமயம் வரை போர் புரிந்து வென்றதி போன்று வீரமும் ஆற்றலும் பெற்று விளங்கிய அரச மகளிர் பலருண்டு. பெண்பாலார் தம் தேகம் வன்மைபெற பல வித விளையாட்டுக்களையும் விளையாடுவர். இன்று மேலை நாட்டுப் பெண்கள் பந்தாடும் வழக்கம் பண்டைத் தமிழ் நாட்டிலேயே முதலில் ஆரம்பமாயது. பெண்கள் பாடிக்கொண்டு பந்தாடுவர். சாழல், தெள்ளோணம், தோணேக்கம், கோலாட்டம், கும்மியடித் தல் முதலியனவற்றை விளையாடுவர்.
பண்டைநாளில் பல உரிமைகளையும் பெற்றிருந்த தமிழ்ப் பெண்கள் இன்று என்ன கிலையில் இருக்கின்றனர் என்பதைப்

Page 36
58 தமிழன் மாட்சி
பார்ப்போம். கூண்டில் அடைபட்ட பறவைகள் போன்று தம் சுதந்திரத்தையும் உரிமைகளையும் இழந்து கிணற்றுத் தவளைகள் போல வெளியுலகம் இத்தகையதென அறியாது வாழ்ந்து வருகின் றனர். * அங்குச் செல்லப்படாது; இங்குச் செல்லப்படாது' எனத் தடுக்கப்பட்டும், ஆடவர் கூறி யாங் குக் கூறுவதற்கும் விரும்பியாங்கு செய்வதற்கும் பழக்கப்பட்டும் வருகின்றனர்.
இன்றுள்ள தமிழ்ப் பெண்கள் ஆடவர்களின் கட்டுப்பாடு களால் தம் குழந்தைகளைப் பாதுகாக்கும் முறைகளை மறந்து, சுகாதார விதிகளைக் கை கடக்க விட்டு அறியாமை என்னும் சாக சத்துள் மூழ்கியுள்ளனர். பெண்கள் கல்வித் துறையில் இன்று பின்னடைந்திருத்தல் ஆடவர் குற்றமே. பெண்களுக்கும் கல்வி அவசியம் என்பது இக்காலத்தில் உள்ள ஒரு சிலருக்குத்தான் விளங்கியுள்ளது. " கண்ணுடைய ரென்போர் கற்றேர் " என்னும் கூற்றினல் கல்லாதவர்களுக்கு ஞானமென்னும் கண்ணில்லை யென் பது புலப்படுகின்றது. இத்தகைய ஞானக் கண்ணற்ற குருட்டுப் பெண்ணுடன் ஒரு ஆடவன் எங்கினம் வாழ்க்கையை நடத்த முடியும்? இல்லாளகத்திருக்க இல்லாத தொன்றில்லை' என இல் லாளுக்கு அத்துணைப் பெருமையைக் கொடுத்துள்ளனர். அப் படிப்பட்ட பெண்ணிற்கு எத்துணை அறிவு இருக்க வேண்டும்? வாழ்க்கைக் துணைவியாக விளங்கும் - விளங்க இருக்கும் - பெண்கள் கல்வி கற்றே ஆகவேண்டும். பெண் சமூகம் முன்னேற வேண்டுமாயின் பெண்கள் கல்வி கற்றே தீரவேண்டும். பெண்க ளுக்கு அவர்கள் ஜீவியத்துடன் சம்பந்தமான துறையில் கல்வி கற்
பிக்கப்பட வேண்டும்.
பெண் களது பெருமை ஆடவர்களது பெருமையுடன் சேர்ந்தே விளங்குகின்றது. சங்கீதத்தில் சுருதி எத்தகையதோ அத் தகையதே வாழ்க்கையிற் பெண்ணின் நிலையும். சுருதியில்லாமற் சங்கீதம் நடைபெற மாட்டாது. ஆனல் சங்கீதத்தில் வாத்திய கோஷங்களும் வாய்ப்பாட்டும் வெளிப்படையாகத் தோன்றி எல் லோராலும் போற்றப்படுகின்றன. சுருதியோ அவ்வளவு பெரு மைக்கும் ஆதாரமாகி நிற்கும். அதுபோலவே பிறர் புகழுக்குப் பெண்கள் அஸ்திவாரமாக இருக்கின்றனர்.

தமிழ் நாட்டு பெண்பாலார் 59
தமிழ் உலகம் இன்று அடிமைத் தளையில் அகப்பட்டு அல் லற்படுவதற் கெல்லாம் மூல காரணம் ஆட வர் கள் பெண்களை அடிமைப்படுத்திச் சிறுமை செய்ததே. பெண்களுக்கு பண்டை உலகில் இருந்த சமத்துவ உரிமைகளை வளங்கி, கொடியும் கொழு கொம்பும் போல பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்தலே தமிழ் உலகை உய்விக்கும். தமிழ் உலகின் இன்றைய நிலையை ஆராய்ந் தறியவேண்டிய கஷ்டம் இல்லை. ஏன்? தமிழ்நாடு இன்றுள்ள நிலைமை வெளிப்படையாகவே தெரிகின்றதே. பின்னர் ஆராய்ச்சி ஏன்? இன்றைய தமிழ் காட்டின் கிலைமையை அறிந்து உயர் வழிக்கு வகை தேடவேண்டும். அதுவே தமிழ் மகன் கடமை, இன்றைய தமிழ் நாட்டின் நிலைமையே வருங் காலத்திற்கும் ஊன்றுகோலாகும்.

Page 37
இன்றைய தமிழ் நாட்டின் நிலை
பண்  ைடய உலகில் குமரிக்கண்டமெனப் புகழ்பெற்ற தமிழ்நாடு இயற்கைத் தேவனின் மாறுபாட்டால் ஒடுக்கப்பட்டுத் தமிழ்ச் சங்க காலத்தில் முத்தமிழ் நாடுகளாக விளங்கியது. அந் நாடுகள் இன்று பின்னரும் ஒடுக்கப்பட்டு விட்டன. தமிழ் மக்கள் இன்று அடி  ைம க ளாக வாழ்கின்றனர். அவர்கள் சுதந்திர உணர்ச்சி குன்றி விட்டது. சுயநலமே பெரும்பாலானேர் போக் காக இருக்கிறது. பரந்திருந்த தமிழ்நாடு அங்கியர் அடக்கு முறை களினல் சிதறிச் சீரழிந்து விட்டது.
மக்கள் வாழ்க்கையை நோக்கினல் அங்கும் ஏமாற்றமே பிரதிபலிக்கின்றது. பண்டைத் தமிழன் பக்தி, சத்தியம், தியாகம் முதலியவற்றையே கடைப்பிடித்து வந்தான். தமிழன் உள்ளத்தில் தாயின்பாலொடு சுரந்தூறிய கருணை இன்று மறைந்து விட்டது. சத்தியத்தின் போக்கே விசித்திரமாக இன்னதென்று கூறமுடியாத கிலையில் இருக்கிறது. சிறிதுகாலம் மறைந்த தியாகவுணர்ச்சியே இன்று தலைகாட்டுகிறது. சிற்சில இடங்களில் இவைகள் இருப் பினும் பரந்த தமிழ் நாட்டில் வாழும் சகலருக்கும் என் தியாக வுணர்ச்சி யில்லையென்று ஆராயப் புகுந்தால் ஆங்கு சுயநலமே பெரிதாகக் காணப்படுகிறது. சுதந்திர மக்களாக தம்மை ஆண்டு வந்த தமிழ் மக்கள் இன்று அடிமைகளாகக் களை பூட்டப்பட்டு விட்டனர். அங்கியர் ஆதிக்கத்தில் மோகங்கொண்டு அவர்கள் ஆட்டும் பொம்மைகள்போல உணர்ச்சியற்று இன்று வாழ்கின்ருர் கள். வீரம் பொலிந்து விளங்கிய தமிழ் உலகத்தில் இன்று பேடித் தன்மையும் தம்முள் சச்சரவுமே காணப்படுகின்றன.
பண்டிருந்த ஒழுக்க முறைகள் இன்று மறைந்து விட்டன. நாட்டின் நலமே பெரிதெனக் கொண்டு சுய நல மற் ருே ராக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் இன்று எவ்விதம் வாழ்கின்றனர்? ஒழுக்க முறைகள் எங்ஙனம் இருக்கின்றன? * கற்பெனப்படுவது பெண்களுக்கே, ஆண்களுக் கன்று ’ எனக் கூறி ஆண்பாலார் செய்யும் பாபச் செயல்கள் எத்தனை? மனதை தம் பண்டைய

இன்றைய தமிழ் நாட்டின் நிலை 6.
ஒழுக்க வழிகளில் கட்டுப்படுத்த முடியாத மாதர்கள் தம் மனம் போன வழிகளில் அலைகின்றனர். எல்லாம் எதனுல்? தமிழனின் ஒழுக்கம் மறைந்ததே காரணம். W
வாணிகத் துறையில் வளம்பெற்ற தமிழ்நாடு இன்றைய உல கில் ஏங்கிலையில் இருக்கின்றதென ஆராய்கின், அங்கும் ஏமாற் றமே அடையவேண்டும். உலகப் போக்கிற்கு ஏற்ப தமிழ் மக்க ளும் இத் துறையில் முன்னேறிச் செல்கின்றனரா ? செல்வம் கொழித்த தமிழ் நாட்டில் இன்றும் பண்டைய நிலை இருக்கிறதா? கப்பலோட்டிய தமிழன் இன்றுள்ள கிலைமைக்கும் அடிமைத் தளை தானே காரணம், இன்றைய நவீன முறை களை ப் பண்டு கையாண்ட தமிழன் இன்று அடிமையாக இருக்கின்றன். உலகி லுள்ள பல நாடுகளும் பண்டைய தமிழனின் போர்முறைகளைக் கற்று காலத்திற்கேற்ப மாற்றி வைத்துள்ளனர். எல்லா நாகரிகத் திற்கும் அடிப்படை தமிழர் வாழ்க்கையே. வீண் தர்க்கங்கள் புரிவதிலும் வானளாவிப் பேசுவதிலும் தமிழ் மக்கள் சளைக்கமாட் டார்கள். அத் திறனைச் செய்கையிலும் காட்டினுல் நாடு சீர்திருந்தி விடுமா? அடிமைத்தளை அகன்று பட்டம் பதவிகள் மறைந்து விடுமா? என்ன!
தமிழ்நாட்டில் நிலப் பிரிவுகளைக்கொண்டே மக்கள் அழைக் கப்பட்டு வந்தனர். பின்னர் மக்கள் அவரவர் செய்யுங் தொழிலை நோக்கிப் பல பெயர்களாலும் அழைக்கப்பட்டு வந்தனர். இன்று அவ்வப் பெயர்களே அவ்வச் சமூகங்களுக்கு கிலைத்துவிட்டது. இதனுல் சாதிப் பிரிவினை காட்டவா பண்டைத் தமிழர் எமக்குக் கற்பித்தனர்? ஒருவன் தனது ஜீவனங் கருதி என்ன தொழிலையும் செய்யலாம். அதைக்கொண்டு சாதிப் பிரிவினை வகுத்தல் தமிழ் மகன் கொள்கையல்ல. சாதியென்ற போர்வையை அகற்றிய பின்னரே சமூகம் முன்னேறும் இன்று, எங்கு நோக்கினும் வைதீகக் கொள்கை, சாதிப் பிரிவினை, சமய பேதம், சுயநலம் என்பனவே தாண்டிவம் புரிகின்றன. பண்டைத் தமிழன் சமய பேதம் காட்டினணு? சமயபேதம் காட்டியிருப்பின் இன்று தமிழ் நாட்டில் இத்துணை பிற மதாசாரங்கள் பசவ முடியுமா?
*நாகரிகம் நாகரிகம்!!? என்று அலறிக்கொண்டு மேட்ைடு வழிகளையே பின்பற்ற இன்றைய தமிழன் அவாவுகிறன். அப்ப

Page 38
62 தமிழன் மாட்சி
டியே நடக்கிமுன். இதனல்தானே தமிழன் என்றும் அடிமையாக இருக்கின்றன். தமிழ் நாட்டில் அன்று இருந்ததைவிடவா இன்று மேலை நாட்டினர் எம்மிடையே பரப்புகின்றனர்? பண்டைத் தமி ழர் வாழ்க்கைக்கும், இன்றுள்ளோர் வாழ்க்கைக்கும் மலைக்கும் மடுவிற்குமுள்ள பேதமன்ருே காணப்படுகின்றது. முற்போக்கு ஒரு நாட்டிற்கு அவசியந்தான். மறு நாட்டினருடன் ஒத்து முன் னேற்றமடைய வேண்டாமென்று யார் எதிர்ப்பது? முன்னேற்ற மடையும்பொழுது பண்டைத் தமிழனின் பழைய வாழ்க்கை யைப் புது மெருகு கொடுத்து நடந்தால் அதன்முன் மேனட்டு நாகரிகம் தலைநிமிர்ந்து கிற்குமா?
தமிழ் நாட்டில் தேன் சொரிந்த அமுதத் தமிழ் மொழியின் சிறப்பு இன்று எங்கேரி இன்றைய தமிழ் மக்கள் பலர் மேனுட்டு நாகரிகங்களைப் தழுவியதால் தம் தாய்ப்பாஷையை மறந்து விடு கின்றனர். தமிழ் வளர்ச்சிக் கூட்டங்களில் பிரசங்கமாரி பொழியும் பொழுது எம் மொழியில் பேசுகின்றனர்? தமிழ் மொழியில்கான அன்றி அந்நிய மொழியிலா? நாம் தமிழர் ? என்று தலைநிமிர்ந்து கூறுவதற்கு அநேகருக்கு அவமானமாக விருக்கிறது. தலைநிமிர்ந்து உலகப் போக்கை எதிர்த்துத் தன் தனிச் சுதந்தரத்தை நிலைநாட்ட மாட்டாத தமிழன் உலகில் வாழ்க்தென்ன பயன் உண்டு
சங்க காலங்களில் எழுதப்பட்ட நூல்கள் இக் காலத்திற்கு ஏற்றனவா கஇல்லையென்றும், அதனலேயேதாம் அங்கிய மொழி களைக் கற்கிருேமென்றும் பலர் கூறுகின்றனர். கமிழ் மொழியைச் சரியாக உரிய முறைப்படி படித்தவர் இங்ங்னம் கூற முன்வர மாட்டார்கள். இன்றைய உலகிலுள்ள பல நூல்களும் தமிழனிடம் அன்று இருந்தன. இதனை மேனட்டு அறிஞர்களே ஒப்புக்கொண் டிருக்கின்றனர். உலக நாகரிகத்திற்கு உற்பத்தியே தமிழ்நாடு. அப்படிப்பட்ட தமிழ் நாட்டில் பிறந்த தமிழ் மொழியில் இன் றைய நூல்கள் இல்லையென்று கூறுவது எதை ஒக்கும் பண் டைய தமிழ்க் கலாசாரத்தினை முற்றும் ஆராயப்புகின் இன்றைய சகல கலைகளையும் நாம் காணலாம். அரசியல் வேண்டுமா! பொரு ளாதாரக் கொள்கைகள்பற்றி அறிய வேண்டுமா! சங்கீத நூல்கள் வேண்டுமா! சமய நூல்கள் வேண்டுமா வைத் திய நூல்கள் வேண்டுமா போர்க்கலை பற்றி வேண்டுமா! நாகரிக வாழ்க்கை
பற்றி வேண்டுமா எதுபற்றி வேண்டும்?

இன்றைய தமிழ் நாட்டின் நிலை 63
தமிழ் மக்கள் பலர் பணம், பட்டம், பதவி முதலியவற்றிற் காகத் தங்கள் சமயத்தில் இருந்து அங்கிய மதங்களைக் தழுவும் பொழுதே அடிமைகளாக மாறிவிட்டனர். எதற்கு அடிமைகள்? பட்டம், பணம், பதவி ஆகிய சுயநலப் பேறுகளுக்கு அடிமைகள். சைவ சமயத்தில் என்ன குறையைக் கண்டு பிற மத ங் களைத் தமிழர் கழுவுகின்றனர்? உலகம் முழுவதும் பரவியுள்ள சகல மத தத்துவங்களும் சைவ சமயத்தில் நாம் காணக்கூடியதாக இருக் கின்றன. சைவ சமயம் தோன்றிய காலம் எப்பொழுதென ala) யறுத்துக் கூற முடியாது. ஒருவராலும் இதுவரை அதன் கால எல்லையை வரையறுத்துக் கூற முடி ய வே முடியவில்லை. அத் துணைப் பழமை வாய்ந்தது சைவம், உலகின் எனைய சமயங்களின் உற்பத் தி காலம் இன்னதுதான் என்று வரையறுத்துக் கூற முடியும். சைவ சமயத்தின் கொள்கைகளே புது மெருகுடன் மறு சமயங்களாகப் பிரகாசிக்கின்றனவேயன்றி வேறில்லை. காலத் திற்கேற்ப மலர்ச்சி வேண்டுமாயின் ஆக்கிக்கொள்ள இடமுண்டு. முன்னும் எம் முன்னுேரே தமக்கு ஏற்றவாறு இவற்றை ஆக்கிக் கொண்டனர். இன்று நாமும் எமக்கு ஏற்றவாறு செய்துகொள்ள முடியும், இன்றைய தமிழ்நாடு சாதி சமய பேதங்கொண்டு பிளப் புண்டுள்ளது. இப் பிளவை இன்னும் பெருக்கிக் கொள்ளவே சுயநலவாதிகள் முற்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் பரந்துள்ள தமிழ் மக்களுள் சாதி சமயப் பிரிவினை ஏன் ? பிரிவினையை விட்டு ஒன்றுகூடி அடிமை வாழ்வை அகற்ற வேண்டுவது அவசி வம். ஐக்கியமே உயர்விற்கு வழி. சுதந்திர தாகம் இன்று உள் ளத்தை ஆட்கொண்டு எம்மை நடத்த முன்வருகிறது. சுதந்தி ரத்தை அடைந்து அடிமை வாழ்வை நீக்கி வாழ உயர் வழிகளை காம் கடைப்பிடிக்க வேண்டும்.
റുടെ

Page 39
தமிழ் நாட்டின் உயர் வழி
தமிழ் வள்ளல்காள்!
உங்கள் மூதாதையர்கள் பல துறைகளிலும் எள்ளத்துணை யும் வழுச் சிறிதுமின்றி வல்லுநராய் விளங்கினர் என்பதற்குச் சான்றுகள் இன்னும் வேண்டுமா? நீங்கள் அவர்கள்பாற் முேன்
றிய வழித்தோன்றல்களன்றே !
மேலைத் தேசங்கள் காடடர்ந்து ஆங்கு வதிந்தோர் கொம்பரி லுலாவி, மந்திப் பருவம் நீங்கி, ஈஞ்சு தொழுது வாழ்ந்த அக் காலத்து எவ்விலக்கணமும் முற்றுற வைத்துப் பல்லிலக்கியங் களை யும் இத்துணைக் காலமும் தகர்த்திட முடியா தமைத்தன ரன்ருே உம் மூதாதையர்கள் தக்தை மகற்காற்றும் உதவி வேறு யாவும் உளதோ?
இத்துணை மகிமையையும் உமக்களித்த த ந்  ைத யர் க்கு *இவன் தந்தை என்னேற்றன் ' என்னும் மகிமையைக் கரவா தளித்தலன்ருே உம் கடன். அங்கினமின்றி - கேவலம்! - நீசச் சாதியார் பண்டைய எம் நாகரிகங்களைக் கைக்கொண்டு தற்கால சாஸ்திர வகைகளால் உம்மை ஒருபுற மொதிக்கியும் ஆதிக்க பலத்தால் மறுபுறம் நசுக்கவும் அடிமை வாழ்வு வாழ்தல் உம்ம னேர்க் கழகா ?
கன்னியாகுமரி முதல் இமயம் வரை இன்று விளங் கும் இந்திய நாடு யாருடையது ? குமரி முனைக்கும் இமயத்திற்கும் இடையேயுள்ள நாடு கடவுளால் எமக்குக் கொடுக்கப்பட்டது. அங்கு அங்கியர் ஆட்சியில் நமக்கு நன்மை பயப்பதாக இருந்தா லும் நாம் அந்த அடிமை வாழ்வை விரும்பலாமா? " என்னுடைய சொந்த வீட்டிற்கு - தாய் நாட்டிற்கு - அங்கியன் அதிகாரியாக இருக்க நாம் அடிமையென்று கூறுவது சுதந்திரமல்ல. எனது வீட்டிற்கு - தேசத்திற்கு நான்தான் அதிகாரி' என்று கூறுவது தான் சுயராஜ்ய பேரிகையாகும். எங்கள் முன்னேர்கள் ஆண்ட
முத்தமிழ் நாடு முழுவதும் எமக்கே சொந்தமாகும். சத்தியம்,

தமிழ் நாட்டின் உயர் வழி 65
பொறுமை, அன்பு இவற்றல் நல்ல வழியில் நாம் செல்லவேண்டும்.
முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடப்படாது. விடுதலையை
விரைவில் அடைந்தே தீரவேண்டும். பாரதநாடு தமிழ் மகனின்
சொத்து. அங்கு அவன் சுதந்திரமாக வாழ ஏன் அவனுக்கு உரிமையில்லை?
"இமயந் தொட்டுக் குமரி மட்டும்
இசை பரந்த மக்கள் நாம் இனியும் அந்தப் பெருமை கொள்ள
ஏற்ற யாவும் செய்கு வோம்”
என்று நாமக்கல் கவிஞர் ஊக்கம் கொடுக்தம் என் வாழா விருக்கிறீர்கள்? பாரதியின் சுகந்திரப்பாக்கள் கூட தமிழ்மகனுக்கு உணர்ச்சி யூட்டவில்லை யென்ருல் வேறு என்னதான் தமிழனை விழிப்படையச் செய்யும்? உலகிலே எவனுெருவனுக்கு எண்ண உரிமை, எழுத உரிமை இருக்கென்று பாத்தியம் கொண்டாடிக் கொண்டு அதே நேரத்தில் அவ்வுரிமைகளை மற்றவனுக்கு வழங்க மறுக்கின்றனே அன்றே நாம் அதனை எதிர்க்க வேண்டும். ஜாதி யையும் மதத்தையும் நாம் கொள்ளப்படாது. அவற்றை வீட்டுட னேயே வைத்துக்கொள்ள வேண்டும். நாட்டில் யாவரும் சமம் என்ற கொள்கையுடன் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போரிட வேண்டும். சுதந்திரம் பெற்ற பின்னர் பண்டைத் தமிழனின் புக ழுக்கு ஏற்ப எம் வாழ்க்கையையும் நாம் மேன்மையடையச் செய் தல் வேண்டும். எம் மொழியும் உலகில் உன்னத நிலையை மீட்டும் பெற வழி தேடவேண்டும் பண்டு மேலை நாடுகளிலும் பார்க்க எங்ஙனம் எங்கள் மூதாதையர் மேன்மையுடன் விளங்கினரோ அதிலும் மேன்மையுடன் விளங்குதலே எமது கடன். பொன் போன்ற நேரத்தை வீணே கழிச்து இன்னலுருது இன்றே அது வும் இப்பொழுதே சுதந்திரமடைந்து உலகில் உன்ன த ஸ்தா னத்தை அடைய எழுங்கள். உங்களுக்குள் ஐக்கியம் அவசியம்.
ஐக்கியமிருப்பின் சுதந்திரம் அடைவது சுலபம்.
இன்றைய உலகில் ஒவ்வொரு தமிழனும் தன்னல் தன் பரி சனத்திற்கும், தன் சமூகத்திற்கும், தன்னுட்டிற்கும் பயன்பட வாழ வேண்டும். இன்று பலர் தம் கிலையை எண்ணி எண்ணி Da)7th கொதித்தெழுகின்றனர். அநேகர் வாழா விருக்கும்பொழுது

Page 40
66 தமிழன் மாட்சி
ஒரு சிலரால் என்செய்ய முடியும்? நீர்மேற் குமிழிபோல் கிலை யிலா இம் மாயவாழ்வு எத்துணைக் காலம் நீடிக்கும்? அக்கால எல் லைக்குள் மகத்தான தியாகமே உலகில் முன்னிற்க வேண்டும். இன் றைய உலகில் உள்ள இளைஞர்களாலேயே வருங்காலம் உயர் வடைய முடியும்.
இளந் தமிழ்ச் சிங்கங்காள்!
ஒன்றுபடுங்கள். ஒற்றுமையாக நாட்டின் சுதந்திர கீதத்தைப் பொழியுங்கள். முன்னேற்றப் பாதையில் கடவுங்கள். உங்களா லேயே நாட்டிற்கு விமோசனம். உங்கள் நாடே உங்கள் பொக் கிஷம். சாதி, சமய, மொழிப் பிரிவினை உமக்கு வேண்டாம். ' எல்லோரும் ஒர் குலம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்று பாரதி அறைந்த மொழிகளையே உயிராகக் கொள்ளுங்கள். உங்கள் சுதந்திரத்தைப் பெற்று உங்கள் மொழியைப் பேணுங்கள்.
* தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும் ” எனப் பாரதி கூறுங் தொண்டை ஆற்றுவது உங்கள் கடமை.
* சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத் தொழுது படித்திடடி பாப்பா"
来源
* யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணுேம்'
米
* செந்தமிழ் நாடென்னும் போதினிலே -- இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே " என்று பாரதியார் தமிழ்மொழிபற்றிக் கூறியவற்றை உண ருங்கள். உணர்ந்தால் உங்களுக்குள் ஒற்றுமையுணர்ச்சியும், சுதந் திரப் பற்றும், மொழி ஆர்வமும் உண்டாகும்.
பண்டைத் தமிழனது உள்ளத்துதித்தது கருணை வெள்ளம். அதனை மறக்கப்படாது. சுதந்திரத்தை அடைந்து தமிழர் தலை கிமிர்ந்து நிற்பதற்கு வெற்றி வேண்டும். ஆனல்,

தமிழ் நாட்டின் உயர் வழி 67
* வெற்றி என்பது கொலையல்ல
வெற்றியும் அதனுல் நிலையல்ல " என்னும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கரின் வாக்கை ஒர்ந் துணருங்கள்.
இளைஞர்களே !
* நாம் அடிமைகள் அல்ல' என்று கூறும் ஆண்மைதான் சுதந்திசம், கருணையைப் பின்பற்றியே உங்கள் கடமையைச் செய்யுங்கள்.
* தமிழ் நாட்டின் சரித்திரத்தை மனதில் வைத்து
தாராளத் தமிழர்களின் தன்மை கற்று அமிழ்தான தமிழ்மொழியில் அடங்கியுள்ள
அகிலத்தின் கல்லறிவு அனைத்துங்கொண்டு நமதாகும் மிகச்சிறக்த நாகரிகம்
நானிலத்திற் கிப்போது நன்மைகாட்ட எமதாகும் மிகப்பெரிய கடமையென்று
எண்ணியெண்ணித் தீர்மானம் பண்ணவேண்டும்’
என்னும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கரின் கூற்று இளைஞர் களாய உங்கள் மனதில் நன்கு பதிய வேண்டும். " நாம் தமிழர். இனியும் அடிமைகளாக இருக்கப்போவதில்லை ? எனத் தலை நிமிர்ந்து செல்லவேண்டும். அச்சம் விட்டதுதான் சுதந்திரம். அஞ்சாநெஞ்சமே சுய ராஜ் யம், வெறும் கோஷங்களாலோ, எழுத்துக்களாலோ சுயராஜ்யத்தை அடைய முடியாது. உங்கள் மனம், வாக்கு, காயம் மூன்றும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். மனதில் நல்லதை கினைக்து வாயால் நல்லதை நவின்று தேசத்தால் தேசத்திற்குப் பயன்படும் செய்கைகளைச் செய்வதே இளைஞர் களின் கடமை. தமிழ்ச் சமூகம் முன்னேறி பண்டைய உச்ச கிலையை அடைய, இளைஞர்களே! சுதந்திர தேத்தைப் பொழி யுங்கள். உயரிய வழியில் கடவுங்கள். உங்கள் அடிமைத் தளை அகலும், தமிழ்நாடு, தமிழ்மக்கள், தமிழ்மொழி மூன்றும் விமோ சன மடையும,
مسھڑی ہسے

Page 41
பிழை திருத்தம்
-aor
பக்கம் வரி பிழை திருக்கம் 5 22 கெடியேள் கொடியோள் 6 29 இருக்ககமிழ் இருக்கிமிழ் 7 17 பிகலின்று பிரிகலின்று 8 28 ஆளமுடைய -29 pool-lu 9 29 ஒரு புனல் தனித்து ஒழுகு புனல் ஒளிக் து 9 30 Dமிளொடு ஞமிருெடு 12 7 வழக்கம் வழக்கமாக 13 20 கிளத்தி கிழக்தி 13 21 கிளக்தியாவாள் கிழக்தியாவாள் 13 35 அளலர் அளவர் 19 12 கவித்தி கவுந்தி 21 27 தற்றர் ஒற்றர் 22 17 கோனும் கோலும் 22 25, ஒளிவனை ஒளிவளை 23 13 தன் மகன் தன் மகள் 34 2 வளங்கவும் வழங்கவும் ፰8 3. ஹொஸ் ஹெரஸ் 47 13 உணர்ச்சியிலிருந்து உணர்ச்சியிருந்து 55 23 நச்சென்னையார் நச்செள்?ளயார்


Page 42


Page 43


Page 44