கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை வாழ் தமிழர் வரலாறு

Page 1

Li
56)|LIäťLili?:]

Page 2


Page 3

இலங்கை வ Tyjb
தமிழர் வரலாறு
இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்
க. கணபதிப் பிள்ளை
பேராதனை 1956.

Page 4
முதற் பதிப்பு: ஆவணி 1956,
(5. T. 1-00.
கொழும்பு
சுதந்திரன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது

முன்னுரை
-o-o-o-o-o-
ஈழநாட்டின வடபாகத்திலிருந்து செங் கோலோச்சிய அரசரின் வரலாற்றைச் சுருக் கமாக எடுத்துக் கூறு கி ன் ற து இந்நூல். கி.பி. 1519 முதல் கி.பி. 1565 வரை யாழ்ப் பாணத்தை அரசாண்ட சங்கிலி என்பவ னைத் தலைவனுகக் கொண்டு இயற்றப்பட்ட சங்கிலி என்னும் நாடக நூலின் ஒரு பகுதி யாக அமைந்த இவ்வரலாறு பலர் வேண்டு கோளுக்கிணங்கத் தனிநூலாக வெளியிடப் படுகின்றது. ஈழத்துத் தமிழ் மக்களின் வர லாற்றைப் பற்றிய விரிவான நூல் ஒன்று மிகவும் விரைவில் வெளிவரும்.
இந்நூலை ஆக்குங்கால் உடனிருந்துத விய நண் பர் க் கு ம் ஆ யோ லே தூக்கி ஆராய்ந்த அன்பர்க்கும் நாம் பெரிதும் கட மைப் பட்டுள்ளோம். நூலினை நல்ல முறை யில் அச்சிட்டுதவிய சுதந்திரன் அச்சகத் தா ர் க் கும் எம் நன்றி உரித்து. குற்றம் களைந்து குணங்கொண்டு எம்மை ஊக்குவித் தல் பெரியோர் கடன்.
க. கணபதிப்பிள்ளை
பல்கலைக்கழகம் பேராதனை 20-8 - 1956

Page 5
எல்லா உரிமையும் ஆக்கியோனுக்கே.

பொருளடக்கம்
-storm
முன்னுரை
சரித்திரகாலத்திற்கு முந்திய காலம் உக்கிரசிங்கன் தொடக்கம் பாணன் வரை பாணன் தொடக்கம் ஆரியச்சக்கரவர்த்தி வரை ஆரியச்சக்கரவர்த்திகள்-முதலாம் பரம்பரை பிற்கால யாழ்ப்பாணத்தரசர் விடுதலைப் போராட்டம்
Bibiliography
பக்கம்
iii
1-4
5-9
10-17
18-27
28-33
34-35
36-37

Page 6
விரைவில் வெளிவர இருக்கும் நூல்கள்:
பேராசிரியர்
க. கணபதிப்பிள்ளை எழுதியவை:
துரோகிகள்.
மேலைச்சிலம்பொலி.
சுந்தரம் எங்கே?
தேனக்காதை,
சிந்தனைப்பூங்கா.
ஒகை உள்ளம்.

சரித்திரகாலத்துக்கு முந்திய
யாழ்ப்பாணம்
இராமாயணத்தினின்று இலங்கை இராவண ஞல் ஆளப்பட்டுவந்தநாடு என அறிகின்ருேம். இராவணன் அசுர வமிசத்தைச் சேர்ந்தவன். ஆரி யர் இந்தியாவுக்கு வந்தபோது தாசர் என்னுஞ் சாதியாரோடு போராடினர் என இருக்குவேதம் முதலியவற்ருல் அறிகின்ருேம். / அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த நாகசாதியினரையே ஆரி யர், "அசுரர்’ என்றும் 'தாசர்’ என்றும் அழைத் தனர் என்பது அறிஞர் கருத்து 1. நாகர் என்னும் பெயர் வேதங்களில் வழங்கப்படவில்லை. எனி னும், இருக்குவேதத்தில் அசுரர் அல்லது தாசரைப்பற்றிப் பே சு மி ட த் து, " அஹி " (பாம்பு) என்ற சொல் வருகின்றது 2.
/** விருத்திரனை இந்திரன் வச்சிராயுதத்தினுல் அடித்தபோது, வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் போல் அஹி என்பான் வீழ்ந்து கிடந்தான்" 3.
இதினின்றும், பிற சான்று களி னின்றும், நாகரை அசுரரென அழைத்தல் வழக்கமாய் இருந்த தெனத் தெரிகின்றது.
அடுத்து, புராண காலத்தில் நாக அரசர்கள் கடலுக்குக் கீழேயுள்ள பாதாளத்திலிருந்து அரசாண்டனர் எனப் புராணங்கள் கூறும். இக்கு வாகுவின் மகனன அரியாச வன் என்பான் மகள் யாதுவை, தூயவர்மன் எனும் நாக அரசன் கடலுக்குக் கீழேயுள்ள நாட்டிற்குக் கொண்டு சென்ரு ன் எனவும், அந்நாட்டின் பெயர் "இர
1. C. V. Vaidya; Medieval India, Vol I. p. 82. 2. Bothlingk and Roth: Sanskrit Worterbuch. See Ahi. 3. Rig Veda, I. 32: 5, 8.

Page 7
2
தினத்துவீபம்’ எனவும், அந்நாட்டிலுள்ளோர்" நாவாய் பல வைத்திருந்தனர் எனவும், அவர் கடல் வணிகஞ் செய்தனர் எனவும், முத்துக் குளித்தனர் எனவும் அரிவமிசம் என்னும் புராண நூல் நவிலும் 4.
அசுரர் என்பார் திராவிடரென ஆராய்ச்சி யாளர் முடிபுக்கு வந்திருக்கின்றனர் 5.
கெளதம புத்தர் மூன்று முறை இலங்கைக்கு வந்ததாக மகாவமிசம் கூறும் முதன்முறை மகியங்கனை என்னும் இடத்திற்கும், இரண்டாம் முறை நாகதீபத்துக்கும், மூன்ரும் முறை கலி யாணி என்ற பெயருடைய களனி என்னும் இடத் துக்கும் வந்தார் எனவும், நாகதீபத்திலும் கலி யாணியிலும் நாகர் வசித்தனர் எனவும், நாக தீபத்திலுள்ள அரச குடும்பத்தில் அரசு கட்டில் ஒன்றன் பொருட்டாக ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்ப்பதற்காக வந்தார் எனவும் அந்நூல் நவி லும். மேலும் நாகதீபத்தில் உள்ள அரச குடும்பத்தின் உறவினர் கலியாணியில் இருந்தன ரெனவும் அப்பாளி நூல் கூறும் 6.
இதனின்றும், இலங்கையின் ஒரு பெரும் பிரிவில், பண்டைக்காலத்தில் நாகர் குடி பரவி யிருந்ததெனத் தெரிகின்றது. இக்கருத்தினை, கி. பி. இரண்டாம் மூன்ரும் நூற்றண்டளவில் எழுந்த மணிமேகலையும் வலியுறுத்தும். வட இலங்கையிலுள்ள நாகர் குடியிருப்பிற்குப் பண் டைய நாட்களில் தலைநகராய் இருந்தது கந்த, ரோடை என்னும் நகர் என ஆராய்ச்சியாளர் கரு, துவர். மேலும் இந்தியாவிலிருது சங்கமித்தை,
4. விஷ்ணுபுராணத்தில் பா தா ளத்  ைத ப் பற்றி நாரத முனிவர் கூறும் பகுதிகளே நோக்குக. J. Vogel: Indian Serpent Lore, Introduction, p. 31.. Harivamsa I : 399 - 401 5. C. F. Oldham:. The Sun and The Serpent. 6. MIV. Ch. l.

3
புத்தகாயாவிலிருந்த புனித வெள்ளரசுக் கிளையை இலங்கைக்குக் கொண்டுவந்தபோது இலங்கையின் வடபகுதியிலுள்ள சம்புகோளம் என்னுந் துறையில் வந்திறங்கினள் என மகா வமிசம் கூறும் 7
பண்டைக்காலத்தில் வடஇலங்கை கிரேக்க உரோமர்களோடு வணிகத் தொடர்பு கொண் டிருந்தது. இந்த உண்மை அங்கு கண்டெடுத்த கிரேக்க - உரோம நாணயங்களினுல் தெரிகின் றது 8.
நாகதீபமெனும் பகுதி எங்குள்ளதெனச் ச ரி த் தி ர ஆராய்ச்சியாளர் தடுமாறியிருக் கையில் வல்லிபுரக்கோயிலிலே செ ப் பே ட் டுச் சாசனம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதின்படி வட இலங்கையையே பண்டைக் காலத்தில் நாகதீப மெனக் 9 குறித்தனர் எனத்தெரிந்தது. விசயன் பிறப்பதற்கு முன்னரேயே நாகதீபம் (வடஇலங்கை) மிகவும் செழிப்புள்ள பெரிய வணிகத்தலமாக விளங்கி யது. பின்னர் இவ்வடபகுதியில் வாழ்ந்த நாக சாதியினர் காலத்துக்குக் காலம் தமிழரோடு கலப்பாராயினர்.
அதனல் அண்மையிலிருக்கும் தமிழகத்தி லிருந்து பல குடிகள் வந்திறங்கின. க ர ல ப் போக்கில் வடஇலங்கை தமிழக் குடியிருப்பாக மாறியது. பல்லவ காலத்தில் வாழ்ந்த சைவ நாயன்மார் இலங்கையின் வடபகுதியிலுள்ள திருக்கேதீச்சரம், திருக்கோணமலை ஆகிய தலங் களைப் பாடியிருப்பதும் இங்கு நோக்கத்தக்கது
7. Mv. 19: 28.
8. P. E. Peiris: Nagadipa and Buddhist Remains-JRAS
(C B) Vol. XXVIII.
9. Epigraphica Zeylanica, Vol. IV, pp 229 - 237.

Page 8
4.
சைவசமயத்தை மேற்கொண்டொழுகிய தமிழர் இப்பகுதிகளில் வாழ்ந்தனர் என்பது இதனல் அறியப்படுமன்ருே!
இதுவரை பெரும்பாலும் புராண வரலாறு களைக் கொண்டும் மகாவமிசத்தில் சொல்லப் பட்டவற்றைக்கொண்டும் கர்ணபரம்பரைக் கதைகளைச் சேர்த்தும் ஒருவாறு இப்பகுதியின் பழைய வரலாற்றைத் தொகுத்துக் கூறினுேம். இனி, பிறசரித்திரச் சான்றுகளின் துணை க் கொண்டு பிற்கால வரலாற்றினை ஒருவாறு
ஆராய்வாம்.

5
உக்கிரசிங்கன் தொடக்கம் பாணன் வரை
பண்டைக்காலத்திலே, வட் இலங்கை நாக சாதியினர் குடியிருப்பாக இருந்த காலத்து, சிங்கைபுரம் அல்லது சிங்கைநகர் என்று பெயர் கொண்டு விளங்கிய நகரத்திலே கலிங்கதேசத்தி லிருந்து வந்து குடியேறிய குடும்பங்கள் சில வாழ்ந்து வந்தன. உத்தரப் பிரதேசமென்று மகாவமிசம் குறிப்பிடும் இப்பகுதியில் தென்னி ந்தியாவிலிருந்து வந்து குடியேறிய தமிழ்க் குடும் பங்கள் பல வாழ்ந்து வந்தன. 1. இக்காலப் பகுதியில் சிங்கள அரசர்கள் அனுராதபுரத் தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையின் பிற பகுதிகளை ஆண்டு வந்தனர்.
மகாவமிசம் எடுத்து மொழிந்த அரசபரம் பரையின் வரலாற்றைத் தொடர்ந்து கூறும் சூளவமிசம் மேலும் “ஆறு இராசாக்கள் காலம்" என்னும் பிரிவில் இவ்வுத் தரப் பிரதேசத்தில் கலகங்கள் முறைக்கு முறையெழுந்தன வென வும், அவற்றை அனுராதபுரத்திலிருந்தரசா ண்ட அரசரின் சேனைகள் அங்குப் போய் அட க்கி வந் த ன வெ ன வும் இயம்பும். 2 சீல மேகன் என்னும் சிங்கள அரசன் மகன் மகிந் தன் என்பான் மாதோட்டத்தில் எழுந்த புரட் சியை அடக்கி, உத்தரதேசத்தைத் தன து ஆணைக்குள் ஆக்கினன் என அந்நூல் கூறும்,
A.
ஈண்டுக் குறிப்பிடுங் காலத்திலே கலிங்க தேசத்தினின்று வந்து வட இலங்கையிற் குடி யேறிய குடும்பங்களுக்கு உக்கிரசிங்கனென் பான் தலைவனுக இருந்தான் என ஊகிக்கக் கிடக்கின்றது. இவனைக் குறித்து யாழ்ப்பாண
1. Mv. 1454; XXXV: 124 2. Cv. 48: 83-85

Page 9
6
வைபவ மாலையும் 3, கைலாய மாலையும் எடுத்து மொழியுமேயன்றித் தென்னிந்திய வரலாருே, சூளவமிசமோ, கல்வெட்டுக்களோ யாதுங் கூரு குறித் த உக்கிரசிங்கன் தன் காலத்து வாழ்ந்த ஏனைய உ த் த ர தேச த் தலைவ ரோடு சேர்ந்து அனுராதபுரத்திலிருந்தாண்ட சிங்கள அரசருக் கெதிராகக் கலகங்கள் விளைத் துத் திரிந்தான் என எண்ண இடமுண்டு. சூளவமிசம் உத்தரப்பிரதேசத்தைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் தருங் குறிப்புக்களைப் பார்க்கும்பொழுது வட இலங்கைக்கும் தனியர சொன்று இருந்ததென நாம் ஊகிக்கக் கிடக் கின்றது.
அக்காலத்திலும் தமிழ்த் தலைவர்கள் அனு ராதபுர அரசின்கீழ் மிகுந்த செல்வாக்குப் பெற்ற பிரதானிகளாயிருந்து ஆட்சி செலுத் தின ரென்பது சூளவமிசத்திற் காணப்படும் பொத்தக் குட்டன் 4 என்பான் வரலாற்றிணி ன்றும் தெரிகின்றது. 5
அன்றியும் அனுராதபுரம் சிங்கள நாட்டுத் தலைநகராய் விளங்கிய காலத்துத் தமிழ் அரச ரும் காலத்துக்குக் காலம் அங்கு ஆண்டு வந்த னர் என்பது 6 இங்கு குறிக்கப்படத்தக்கது.
இன்னும் சிங்கள அரசர் சிலர் அரசியற் ருெல்லைகள் ஏற்படுங்காலத்து வட இலங்கைக் குச் சென்று அங்கு தங்காலத்தை அமைதியாகக் கழித்தனர் என்றும் தெரியவருகின்றது. 7
பின்னர் மகிந்தன் அனுராதபுரத்து அரச பீடத்தேறி இரண்டாம் மகிந்தன் என்னும் பேரு டன் ஆண்டு வருங் காலத்தில் அவ்வரசினுக்கு
3. யாழ்ப்பாண வைபவமாலை: பக். 13
6. S. K. Aiygngar: Some Contributions of South India
to Indian Culture, Ch. 3. 7. CV. 47: 3.

7
உரிமை கோரித் தப்புளன் முதலியோர் அவ்வர சினைக் கவரும் பொருட்டு மகிந்தனேடு போர் புரிந்து கலகம் விளைதது வந்தனர் 8 அக்காரண த்தால் நாட்டில் அமைதி குன்றியது. அந்நிலை யைப் பயன்படுத்தி வட பகுதியில் வலிமை யோடு விளங்கிய உக்கிரசிங்கன், வட பகுதியி லுள்ளே தலைவர்களை யெல்லாம் அடக்கியபின், மாற்ருர் கைக்கு இலகுவில் படக்கூடிய கடற் கரைப் பட்டினமாகிய சிங்கைநகரைத் தன் தலைநகராகக் கொள்ளாது அங்கிருந்து வெளி யேறிப் பாதுகாக்கக் கூடியதும், மாற்றர் கைக்கு எளிதில் அகப்பட முடியாததும், நிலப்பரப்பி னல் சூழப்பட்டதும், பழைய நாகர் தலைநகரா யிருந்ததுமான கந்தரோடை என்னும் நக ரத்தினைத் தன் தலைநகராக்கினன் ஆளும் அரசனைத் தொலைத்து நாட்டிற் கலகங்கள் ஏற் படுங் காலங்களில் வலிமையுள்ளான் ஒருவன், தன் வலிமையினல் ஆங்குத் தன் ஆட்சியை நிறுவித் தானே அரசனுதல் சரித்திரங் காணுத தொன்றன்று.
"இவ்வாறு அரசு கிட்டிலேறிய உக்கிரசிங்கன்
* மாவிட்டபுரம்' என இப்பொழுது வழங்கும் ஊரில், தென்னிந்தியாவிலிருந்து உடல்நலங் காரணமாக வந்திருந்த ‘மாருதப்புரவீகவல்லி” என்னும் அரச கன்னிகையைக் கண்டு அவளைத் தன் வாழ்க்கைத் துணைவியாக ஆக்கிக் கொண் டான் என்று கூறும் வரலாறு 9. இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தனர். அவர்களுள் ஒருவன கிய சயதுங்க வரராசசிங்கன் தந்தையின் பின் செங்கோலோச்சினன்.
இஃது நிகழுங்காலையில் அனுராதபுரத் தினை முதலாஞ்சேனன் (கி. பி. 831-851) ஆண்டு கொண்டிருந்தான்* இதே காலத்தில்
8. Cv. 48: 90 9. யாழ்ப்பாண வைபவமாலை: பக்கம் 21-22.

Page 10
8
தென்னிந்தியாவில் வலிமையோடிருந்த பல்லவ அரசு வலி குன்றியது. முதலாம் பாண்டியப் பேரரசு தலை தூக்கத் தொடங்கியது 10,
முதலாஞ்சேனன் காலத்துப் பாண்டிய அரச னுெருவன் இலங்கை அரசினைக் கைப்பற்றும் நோக்கத்துடன் வட இலங்கையில் வந்திறங்கி ஞனென சூளவமிச மெனும் பாளிநூல் கூறும் 11. இப்பாண்டிய அரசன், வரகுண பாண்டியனென் னும் ப ரா ந் த க நெடுஞ்சடையன் மகன் பூரீமாற பூரீவல்லபன் ஆவன். பாண்டியன் வந் திறங்கியதை அறிந்த சிங்கள அரசன் அவனுக் கெதிராகப் படையொன்றினை யனுப்பினன். இச் சிங்களப்படையைப் பாண்டிய மன்னன் எளிதிற். தோற்கடித்து உத்தரதேசத்தைக் கைப்பற்றி ** மகாதாலித்த காமம்’ 12 என்னும் ஊரில் பாடி வீடமைத்துத் தன் படையுடன் இருந்தான். உத்தரப்பிரதேசம் தமிழ்க்குடியிருப்பாக இருந்த தனல் அங்கு வாழ்ந்தோர் பாண்டியன் பக்கஞ். சேர்ந்தனர். அதனல் பாண்டியப்படை இரு மடங்கு வலியுற்றது. இவ்வாறு தன்னெடு சேர்ந்த இலங்கைத் தமிழ்ப்படையின் உதவி கொண்டு, தட்டுத் தடக்கின்றி அனுராதபுரத் தேகி அந் நகரைக் கைப்பற்றினன்.
எனினும் பாண்டியப்படை வட இலங்கைக் கரையில் இறங்கியபோது, அக்காலத்து அங்கிரு ந்து ஆணை செலுத்திய தலைவனகிய செயதுங்க. வரராசசிங்கன் அவனை எதிர்த்தான் போலும். அதனல் போர் மூண்டது. அப்போரில் செயதுங்க. வரராசசிங்கன் மடிந்திருக்க வேண்டும். பின்பு பாண்டியன் நாட்டைவிட்டுச் சென்றபோது கலகங்களும் குழப்பங்களும் இருந்து வந்தன. இத. னைக் கண்ணுற்ற சூழ்ச்சித்திறனும் வலிமையும் படைத்த பாணன் ஒருவன் தருணத்தைத் தப்ப விடாது குடிகளை யடக்கித் தானே அரசனனன். 10. K. A. Nilakanta Sastri: Pandyan Kingdom, Ch. 6. 11. Cv. 50: 12-20 12. யாழ்ப்பாணத்துப் "பளை' என்னும் ஊருக்கருகா மையில் கடற்கரையோரத்திலுள்ள தாழையடி’ என்னும் ஊரே, "மகாதாலித்தகாமம்" என்று: அழைக்கப்பட்டிருக்கலாம்.

يح
செயதுங்க வரராசசிங்கன் வழித்தோன்றல்" கள் விசயசுழங்கைச் சக்கரவர்த்தி காலம் வரை நாட்டையாண்டு வந்ததாக யாழ்ப்பான. வைபவமாலை ஒன்றே கூறும்; பாணனைப்பற்றிய பரம் பரைக்கதைகளை நவிலும் பிறசான்றுகள் எவையும் இதைப்பற்றி கூறிற்றில 13. சரித் திரத்தில் சடுதியில் பதவி பெற்று உயர்ந்தோர் போலவே இவனும் பெருமித முற்றுத் தன்பெய ரையும் புகழையும் நிறுத்தும் வண்ணம், தன் பெயரினுல் ஒரு சிறு பட்டினத்தை நிறுவி அதனை யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டனன் போலும். இதுவே பரம் பரைக் கதைகளினின்று நாம் எடுக் கக்கூடிய வரலாற்றுக்கிடக்கை
13. C. Rasanayagam : Ancient Jaffna, P 247.

Page 11
O
பாணன் தொடக்கம் ஆரியச்சக்கரவர்த்தி வரை.
ஒன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதியில் இந்தி :யாவில், சோழப் பேரரசின் காலம் தொடங்கு கிறது. இது ஏறத்தாழ கி. பி. 840க்குப் பின்னக இருக்கலாம். இக்காலத்துப் பராந்தக சோழன் (கி.பி. 907-956) இலங்கைக்குப் படையெடுத்து வந்தான். அப்பொழுது அனுராதபுரத்திலிருந்து ஆண்டு வந்தவன் உதயன் ( கி. பி. 945-953 ) ஆவன். இச்சிங்கள அரசன் வடஇலங்கையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தினணுே தெரிய வில்லை; இதைப் பற்றிய குறிப்பேதும் சூளவமி சத்தில் இலது.
பாணனும் அவன் பரம்பரையினரும் யாழ்ப் பாணத்தில் ஒரு சிறு பாகத்தையே ஆண்டிருத் த ல் வேண்டும். ஏனைய பகுதிகளை வேறு வேறு தமிழ்த்தலைவர்கள் ஆண்டனர் போலும். ஒரு குடைக்கீழ் ஒரு தனியரசன் யாழ்ப்பாணம் முழு வதையும் ஆண்டான் என்பதற்கு ஆதார மெது வும் இல்லை.
நிலைமை இவ்வாறிருக்க யாழ்ப்பாணக் கடலெங்கணும் சோழக் கடற்படை உலாவித் திரிந்தது. யாழ்ப்பாணத்து நாகர் கோயிலுக்கு அண்மையிலுள்ள நெய்தற் கிராமம் ஒன்றிற்குச் *செம்பியன் பற்று" என்ற பெயர் இன்றும் உளது. சோழப்படைகள் இப்பகுதியில் வந் திறங்கின என்பதை இது வலியுறுத்தும்k கி. பி. ஒன்பதாம் பத்தாம் நூற்ருண்டுகளில் சிங்கள மன்னர் அனுராதபுரத்தை விடுத்து புலத்திநகர் எனப்படும் பொலநறுவையைத் தமது தலைநக ராகக் கொண்டனர் 1. செம்பியன் பற்றிலிருந்து பொலநறுவைக்கு நேராகச் செல்லப்பெருந் தெரு ஒன்று அமைந்திருந்தது: ஆகை யால் சோழர் தமது சேனைகளைச் செம்பியன் பற்றில் இறக்கி அத்தெருவினுரடாகப் பொல நறுவைக்கு நடத்திச்சென்றனர் போலும் 2
1. G. C. Mendis: Early History of Ceylon, Ch. 111. 2. C. Rasanayagam : Ancient Jaffna, p. 320.

1
அன்றியும் மாவிட்டபுரப்பகுதியில் ஓரிடம் வள வர் கோன் பள்ளம்’ என்னும் பெயரால் இன் றும் வழங்குகிறது. சோழர் இப்பகுதியில் பெரி தும் நடமாடினர் என்பதற்கு இதுவும் சான்று பகரும்*
இஃதிங்ங்ணமிருக்க, இராட்டிரகூட அரச ஞன மூன் (ரம் கிருட்டினன் (கி. பி. 940-967) என் பவன் தக்கோலம் என்னும் ஊரில் நடந்த போரில் பராந்தக சோழனை முறியடித்தான். அதனல் இதுகாறும் முன்னேறி வந்த சோழ வரசு சிறுகாலந் தடையுற்றது 3. தக்கோலத் தில் வெற்றியீட்டிய கிருட்டினன் வெற்றிவிரு துடன் தன் புகழை நிலைநாட்டப் பெருமிதத்து டன் எங்கணுத் திரிந்தான் என்பதை இராமே ச்சரத்தில் அவன் நாட்டிய கல்வெட்டுச் சான்று பகரும். அவன் இராமேச்சரம் வந்த நாட்க ளில் இலங்கையின் வட கோடியிலுள்ள நாக தீபத்திற்கும் (நயினதிவு) வந்தனனெனச் சூளவமி கூறும் 4. இவ்வரசன் வெற்றி வருகையைக் கேள்வியுற்ற சிங்களவரசன் நான்காம் மகிந் தன் (கி.பி. 956-972) தனது சேனதிபதி சேனன் என்பானை யனுப்பி அவனைத் தோற்கடித்தான் என்றும், பின்னர் குறிப்பிட்ட இராட்டிரகூட அரசனுடன் நட்புறவு பூண்டு ஓர் உடன்படி க்கை செய்து கொண்டான் என்றும், சரித்திர த்தை ஒருமுகமாய்க் கூறிச்செல்லும் தன் இயல் புக் கிணங்க மெழுகிக் கூறும் அந்நூல். இது காறும் பாண்டிய சோழ நெருக்கங்களினல் மிகத் தளர்ந்திருந்த சிங்கள அரசு இக்காலத் துச் சிறிது தழைக்கத் தொடங்கியது. அதனல்
3. A. L. Basham: Packground to the rise of Para kramabahu II-See Ceylon Historical Journal, Vol, IV, p. 21
4. 9 y - s 99
A. S. Altekar: Rashtrakutas and Their Times, p 118. - 119.

Page 12
12
பழையபடி சிங்களவருடைய ஆதிக்கம் யாழ்ப் பாணத்திலும் ஒருசிறிது பரவிற்று எனக் கொள் ளலாம்.
தக்கோலப் பெரும் போரின் விளைவாகச் சில காலம் அடங்கிக் கிடந்த சோழப் பேரரசு, பின்பு சுந்தரச் சோழன் பட்டத்துக்கு வந்ததும் முன்னேறத் தொடங்கியது. கி. பி. 1001 ம் ஆண்டிற்கும் 1004 ம் ஆண்டிற்கும் இடையில் முத லாம் இராசராசன் (கி.பி. 985-10 16) இலங்கை க்குப் படையெடுத்துவந்து வட பகுதியையும் தனதாட்சிக்குள்ளாக்கினன் 5. இதனல் இதுகாறுஞ், சிறிது சிறிதாக முன்னேறி வந்த யாழ்ப்பான அரசு கி. பி. 1070 வரை, இலங்கையின் ஏனைய பாகங்களைப் போலவே, சோழப் பெருமன்னர் ஆட்சிக்குக் கீழ் இருந்து வந்தது. சோழப் படை வீரர் பேய் பிசாசுகள் போல் இரத்த வெறி கொண்டு எங்குந் திரிந்து நாட்டிலுள்ள புத்த பள்ளிகளையும் தவச்சாலைகளையும் குறையாடிப் பாழ்படுத்தினரெனச் சூளவமிசம் புலம்பும் 6. ஆனல் அண்மையில் திருக்கோணமலையில் கண் டெடுத்த கல்வெட்டொன்றினல் இராச ராசச் சோழன் காலத்து ‘இராசராசப் பெரும் பள்ளி? என்னும் பெயருடன் ஒரு புத்தபள்ளி யமைத்து அதற்கு மானியமும் வழங்கப் பட்டது என அறி கிருேம். பின் முதலாம் குலோத்துங்கசோழன் (இ.பி.1070-1120) ஆட்சிக்கு வந்த காலத்து அவன் தளபதி கருணுக ரத் தொண்டைமான் கலிங்கமெறிந்ததோடு அமையாது இலங்கையை யும் கைப்பற்றினனெனக் கலிங்கத்துப்பரணி என்னும் நூல் இயம்பும் 7. கருணகரத் தொண் டைமானே தொண்டைமானுற்றை வெட்டிய வனவான். கரணவாய் வெள்ளைப் பரவை ஆகிய இ ட ங் களி ல் விளை யும் உ ப்  ைப இவ்
வா ற் றி ன் g)61 L fT 5 di  ெக |ா ண் டு
5. இராசராசன் மெய்க்கீர்த்தி: 'முரட்டொழிற்
சிங்களர் ஈழமண்டலமும் திண்டிறல் வென்றித் , தண்டாற் கொண்டு. 9 Cv. 5S: 15-22
6. Cv. 55: 20-21
7. கலிங்கத்துப்பரணி: கடை திறப்பு, 64 ம்பாட்டு.

13
*சென்று கப்பல்களில் ஏற்றிச் சோழநாட்டுக்கு அனுப்பினுனென இராசநாயக முதலியார் கூறு . 8 fחו (6
குலோத்துங்க சோழனுக்குப்பின் சிங்கள மன்னர்களாகிய முதலாம் விசயவாகு, முதலாம் பராக்கிரம வாகு ஆகியோர் காலத்தில் யாழ்ப் பாண அரசின் நிலையைப் பற்றிய செய்தி எது வும் நன்கு தெரியவில்லை. இவ்விரு மன்னர் காலத்தும், இலங்கை முழுவதும், ஒரு முடிக் கீழ் இருந்து வந்தது எனினும் வட இலங்கை யில், பராக்கிரம வாகுவின் ஆட்சிக் காலத்திலும் உரிமைப் போர் நடை பெ ரு ம லி ல் லை. பராக்கிரம வாகு அரசு கட்டிலேறிய பதினருமா ண்டிலே (கி. பி. 1168-1169) மாதோட்டப் பகுதியில் வாழ்ந்த தமிழர் இவ்வரசனின் ஆட் சிக்குக்கீழ் அடங்கி வாழ்வதிலும் இற ந் து படுதலே நன்றெனத் துணிந்து புரட்சிக் கொடியை உயர்த்தினர். இப்புரட்சியினை யட க்க, வலிமிக்க மன்னனுகிய முதலாம் பராக்கி ரம வாகு தன் ஆணைக்குட்பட்ட நாற்பெரும் படை களையும் மாதோட்டத்திற்கு அனுப்பவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இவ்வாறு சூளவமிசம் கூறும் 9. அஃதவ் வாழுயின் அப்புரட்சி எத்துணை வலிபடைத்ததாய் இருந்திருத்தல் வேண்டும்?
/ முதலாம் பராக்கிரமவாகுவிற்குப் பின்_இல ங்கையில் அரசுரிமை பற்றிய குழப்பங்கள் இருந் தமையால் அங்கு நிலையான ஆட்சி இருக்க வில்லை. அவனுக்குப்பின் தளபதிகள் பலர் நாட்டை ஆண்டு வந்தனர். இதற்கின் டயில் பாண்டிய பரம்பரையில் இருந்து வந்து சிங்கள அரச குடும்பத்தோடு தொடர்பு பூண்டிருந்த பராக்கிரம பாண்டியன் என்பானும் சில காலம் ஆண்டான், இவ்வாறு பராக்கிரம பாண்டியன் அரசாளுகையில் கலிங்கதேசத்திலிருந்து கேரளப்
8. 'C. Rasanayagam: Ancient Jaffna, p. 266.
-9. CW. 76: 79.
Cv. 76: 79, foot note 4.

Page 13
4
படையுடன் மாகன் என்பான் சிங்களஅரசுக்கு உரி மைகோரி வட இலங்கையில் வந்து இறங்கினன். இவன் செயவாகு என்பவனே டு சேர்ந்து முதல் வட இலங்கை முழுவதையும் தன் ஆணைக்குள் அடக்கிக் கோட்டை கொத்தளங்கள் அமைத்த னன். 'கொட்டசார** 10, கங்காத ளாக 11, காகாலய 12, பதீ 13, குறுந்தி, மஞ மத்த, மாகி ந்த 14. மன்னர், 15. பலச் சேரித்துறை, வாலிகா கம 16, கோண 17, கோனுசு 18, மதுபாத வதி த்த சூக ரதித்த 19 ஆகிய இடங்களில் அரண்கள் அமைத்து வட இலங்கை முழுவதையும் பல்லாண்டுகள் ஆண்டு வந்தனர் 20. அதன் பின் புலத்திநகர் என்ற பொல்லநறுவையைக் கைப் பற்றி அதனைத் தனது தலைநகராக்கினன். இவன் காலம் கி. பி. 1215-1235 ஆகும் N
இவனது ஆட்சிக்காலம்தொடக்கம் இலங்கை யில் தமிழரசு வலியுறத் தொடங்கியது./ புத் தளத்திலிருந்து திருக்கோணமலை வரைக்கும் ஒரு கோடு கிழித்தால் அக்கோட்டின் வடக்குப் பாகம் முழுவதும் தமிழ் இராச்சியமாக அமை" ந்திருந்த தென்பது மேற் கூறியவற்ருல் விளங் கும். அன்றியும் தமிழர் ஆதிக்கமும் அவர் தம் அரசியற் செல்வாக்கும் ‘மாயரட்டை’’ எனப்படும் நீர் கொழும்பு சிலாபப் பகுதி வரை யும் பரந்தது 21
10. கொட்டியாரம்
11. கந்தளாய்
12. காக்காய்ப் பள்ளியாக இருக்கலாம்
13. பத வியக் குளப்பகுதி
14. மாதோட்டம்
15. மன்னுர்
18. வலிகாமம்
17. திருகோண மலை ?
18. இதன் கருத்து 'கள்ளுமரத் துறை" என்பதாகும்.
இடம் தெரியவில்லை.
19. இதன் கருத்து "பன்றித்துறை' எ ன் ப த ஈ ம்.
ஆ வே “ஊராத்துறை'. 20. Cv. S3: 15-19 21. Early History of Ceylon, p. 78.

5
அதன்பின் பண்டித பராக்கிரம வாகு என் னும் இரண்டாம் பராக்கிரமவாகு (கி.பி. 12361271) அரசினைக் கைப்பற்றினன். எனினும் வட இலங்கையில் நிறுவப்பட்ட தமிழரசினை அவனல் அடக்க முடியாது போயிற்று. இப்பராக்கிரம வாகு காலத்தில் (கி. பி. 1244) மலாய தீபகற்பத் துத் தாம்பிறலிங்கம் என்னும் பகுதியை ஆண்ட புத்த அரசன் சந்திரபானு என்பான் அற்புதங் கள் நிகழ்த்தக் கூடிய புத்த சிலை ஒன்று இலங்கையில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அத னைக் கைப்பற்றும் நோக்கமாக இலங்கைக்குப் படையெடுத்து வந்தான். அப்பொழுது சிங்க ளப் படை இவனை முறியடித்தது. இவன் மீண் டும் நான்காம் விசயவாகு (கி. பி. 1271-1273) காலத்தில் படையெடுத்து வந்து வட இலங்கை யிலுள்ள மாதோட்டத்தில் இறங்கினன். அங்கிரு. ந்து வடக்கு நோ க் கி ச் சென்று சில இடங் களில் பாடிபோட்டிருந்தான். அவனுடைய சாவ கப்படை தங்கியிருந்தபடியாலேயே சாவகச் சேரி, நாவற் குழியிலுள்ள சாவகன்கோட்டை ஆகிய இடங்கள் இப்பெயர்களைப் பெற்றன
என்பர் 22.
இக்கலகம் அடங்கியபின்னர் யாப்பகுவை யிலிருந்து அரசோச்சிய நான்காம் விசயவாகு காடடர்ந்து கிடந்த அனுராதபுரத்துக்கு வந்து அந்நகரிலுள்ள புத்தகோயில்களைத் திருத்து வித்தான்.\
இக்காலத்தில் வன்னிப்பகுதி தமிழ்ச் சிற் றரசரின் கீழ் இருந்து வந்தது. குறிப்பிட்ட சிங் கள அரசன், இச்சிற்றரசர் கையில், அனுராத புரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்ப டைத்தான்.
இஃதிவ்வாறிருக்க கி. பி. 1216 ம் ஆண்டுக் குப் பின்னர் தென்னிந்தியாவில் இரண்டாம் பாண்டியப்பேரரசு உருப்பெறத் தொடங்கியது
22. H. C. Codrington: Short History of Ceylon, p. 78

Page 14
16
இப்பேரரசு சடா வர்மன் சுந்தரபாண்டியன் (கி. பி. 1253-1270) காலத்தில் உயர்நிலை யடைந்தது. சடாவர்மன் இலங்கைக்குப் படை யெடுத்து வந்து சிங்கள அரசனை வென்று திறை கொண்டு சென்ருன்\23. இப்பாண்டி யன் ஈட்டிய வெற்றியைக் குறித்துப் புத்த சரித்திர நூலாகிய சூளவமிசம் எதுவும் கூருது வாயடைத்து நிற்கும்.
/சுந்தரபாண்டியன் வெற்றிகளிலும் கீர்த்திப் பிரவாகங்களிலும் நெருங்கிய தொடர்பு கொண்டவணுகிய அவன் மகன் சடாவர்மன் வீரபாண்டியன் (கி. பி. 1253-1268) இலங்கை யைப் பாண்டிய சாம்ராச்சியத்தினுள் அடக்கும் பொருட்டு பூநகரிக்கு அண்மையில் வந்திறங்கி னன். அவன் வந்திறங்கிய இடத்தை இன் றும் வீரபாண்டியன் முனை என அழைப்பர். தனது படையை எதிர்த்த அங்குள்ள அரசனைக் கொன்ருெழித்த பின், பொலநறுவைக்குப் போகும் அரசப் பெருந் தெருவழியாகச் சென்று திருக்கோளுமலையை யடைந்தான். அங்குத் தன் வெற்றிக்கறிகுறியாகப் பாண்டிய சின்ன மான இரு மீன் முத்திரையைப் பொறித்து மீனக் கொடியையும் உயர்த்தினன். இவன் வெற்றிச் செலவினை யறிந்த சிங்கள மன்னணு கிய இரண்டாம் பராக்கிர்மவாகு அடிபணிந்து திறை கொடுத்தான். வீரபாண்டியன் பொறி த்த வெற்றிச் சின்னத்தை **விறடறிக்கு' க் கோட்டை 24 வாயிலில் இன்றும் காணலாம். பின்பு பாண்டி நாட்டில் மாறவர்மன் குலசேக ரன் (கி.பி. 1268-1801) பட்டத்திற்கு வந்ததும் இலங்கைக்குத் தளபதியாக ‘ஆரியச் சக்கர வர்த்தி’’ எ ன் னு ந் தண்டத் தலைவனை அனு ப் பி ஞ ன் 25. அ வ ன் நாட்டை மேற்பார்வை இட் டு க் கொண் டு 67 Lܚܝ
23. Pandyan Kingdom, p. 177
24. Fort Frederick
25. Pandyan Kingdom, p. 185
Cv. 90: 44

வடஇலங்கையிலேயே தங்கினன். இவனி லிருந்தே யாழ்ப்பாணத் தெழுந்த புதியTஅரச பரம்பரை தோன்றியிருத்தல் வேண்டும். இவனுக் குப்பின் வந்த யாழ்ப்பாணத்து மன்னர் யாவரும் **ஆரியச் சக்கரவர்த்தி' என்னும் அரச பட்டப் பெயரைக் கொண்டு விளங்கினர்.\

Page 15
18 ஆரியச் சக்கரவர்த்திகள் முதலாம் பரம்பரை
வலிமிக்க தளபதிகள் தாஞ் சென்ற சென்ற இடங்களில் தருணம் வாய்க்கும்போது தம்மை அரசராக்கிக் கொள்ளும் வழக்கம் சரித்திரத் திற்குப் புதிய தொன்றல்ல 1.
பதின்மூன்ரும் நூற்ருண்டின் இறுதிக்காலத் திலும், பதினன்காம் நூற்ருண்டின் தொடக் கத்திலும் தென்னிந்தியாவில் நிகழ்ந்த இசிலா மியப் படையெடுப்பால் பாண்டிநாட்டில் கல கங்கள் மலிந்து கிடந்தன. அதனேடு அ ங் கு உள்நாட்டுக் கலகங்களும் இரு ந் து வந் த ன . மேலும் இந்நாட்களில் சிங்கள இராச்சியம் வலி குன்றியிருந்தது. இவற்றினைப் பாண்டியத்தளபதி யாகிய ஆரியச் சக்கரவர்த்தி பெரிதும் பயன் படுத்தித் தன்னையே வட இலங்கைத் தமிழ்ப்பகு திக்கு அரசனுக்கிக்கொண் டான் எனக் கருத இட முண்டு.
இத்தொடர்பில் யாழ்ப்பாண வைபவமாலை கூறுவதையும் சிறிது நோக்குவோம். மயில்வாக னப் புலவர் யாழ்ப்பாண வைபவமாலையைப் பதினெட்டாம் நூற்றண்டின் பிற்பகுதியில் எழு தினர். இவர் தமது நூலுக்குக் கையாண்ட முதனூல்கள் யாவும் புராண முறையில் அமைந் து ஸ் ள னவே ய ன் றி ம க ரா வ மிச ம், சூள வ மி ச ம், இராசதரங்கிணி, கொங்குதேச இராசாக்கள், இராசாவளி (மைசூர்) ஆகிய நூல்களைப்போல ஓரளவிற்காவது சரித்திர ஒழுங் கில் எழுதப்பட்டனவல்ல. மயில் வாகனப் புலவர் தமது நூலைக் கைலாயமாலை, வையாபாடல், பர ராசசேகரனுலா, இராசமுறை முதலிய நூல்களைக் கொண்டு எழுதியதோடமையாது தாம் கர்ண பரம்பரையாக் கேட்ட கதைகளையும் கூட்டிப்
1. சீதியப்பேரரசின் இந்தியப் பகுதியை ஆண்ட உருத்திரதாமன், யூ-ஏச்சி மன்னன் கனிஷ்கன் ஆகியோர் வரலாற்றினை நோக்குக.

19
புனைந்துள்ளார் எனத் தெரிகிறது. காலம் பொருந் தாமை தலை தடுமாற்றம் ஆகியவை இந்நூலில் மலிந்து கிடக்கின்றன.
சாசனச் சான்றுகளும், பிற சான்றுகளும் யாழ்ப்பாணச் சரித்திரத்துக்கு இதுகாறும் இல்லாமையினல் இவர் கூறும் உண்மையான ச ரித் தி ர சம்பவங்களைக்கூட வரலாற்று முறையில் வைத்து யாழ்ப்பாணச் சரித்திரத் தினை ஆராய்ந்து கொள்ள இயலவில்லை. யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் ‘*யாழ்ப் பாணங் கொஞ்சக்காலம் தளம்பிக்கொண்டிரு க்கையில் பொன்பற்றியூர் வேளாள ன் பாண்டி மழவனென்னும் பிரபு மதுரைக்குப் போய் அவ் விடத்திலே, சோழநாட்டிலிருந்து வந்து இராச உத்தியோகத்துக்கேற்ற கல்வி கற்றுக்கொண்டி ருந்த சிங்கையாரியன் என்னுஞ் சூரிய வமிச த்து இராசகுமாரனைக் கண்டு யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்ய வேண்டுமென்று கேட்க அவன் தன் பரிவாரங்களுடன் பிரயாணப்பட்டு, பாண்டிராசன் வழிவிட்டனுப்பி வைக்க, யாழ்ப் பாணத்தில் வந்திறங்கி நல்லூரைத் தனது இராசதானியாக்கி யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்தான்' என்பர்.
மதுரைக்குச் சென்ற பாண் டிம ழ வன் சோழநாட்டிலிருந்து அங்கு வந்திருந்த சிங்கை யாரியனைக் கொண்டுவந்தான் எ ன வு ம் , அவனைப் பாண்டிய மன்னன் வழியனுப்பி வைத் தானெனவும் ஆசிரியர் கூறுகின்ருர், அவனைப் பரிவாரங்களுடன் அனுப்பி வைத்தான் எனவும் அங்கு கூறுகின்றர். இஃது பாண், டிய மன்னன் தன் சேனையோடு தளபதியைப் போருக்கு அனு ப்பினன் என்னும் வரலாற்றுச் செய்தியைத் திரித்துக் கூறியதாய் இருத்தல் வேண்டும்.
இவ்வாரியச் சக்கரவர்த்தியைக் கூழங்கை யாரியன், விசய கூழங்கைச் சக்கரவர்த்தி, சிங்கை யாரிய மகாராசன் என்னும் பெயர்களாலும்

Page 16
20
வைபவமாலை அழைக்கும். இஃது தமிழ் நாட் டிலே ப்லப்பல காலங்களில்ே உருப்பெற்ற அரச் ப்ரம்பரைக் கதைகளை இவ்வாரியச் சக்கர வர்த்தி மேலேற்றும் எண்ணத்தால் ஏற்பட்ட மயக்கம் 2 எனக் கருதுதல் பிழையன்று.
பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் அரசு கட்டிலேறிய முப்பத்தேழாவது ஆண்டு ( கி. பி. 1305 ) குறித் த இவ்வாரியச் சக்கரவர்த்தி இலங்கை மேற் படையெடுத்தான் 3. சூளவமிசத் தின்படி 4 இவன் தான் சூறையாடிய பொருட் களுடன் பாண்டி நாட்டிற்குத் திரும்பினன்.
ஆரியச் சக்கரவர்த்தி என்னும் இத்தண்ட நாயகன்கீழ் வந்த பாண்டியப் படையெடுப்பின் பின் யாழ்ப்பாணத்தினை யாண்ட ஒவ்வோர் அரச னும் தனக்கு ஆரியச் சக்கரவர்த்தி யென்னும் பட்டப்பெயரைச் சூட்டிக் கொள்வது வழக்க மாயிற்று. தண்டநாயகன் ஆரியச்சக்கரவர்த்தி பாண்டிநாடு திரும்பினுனெனச் சூளவமிசம் கூறும். ஆனல் ஆரியச் சக்கர வர்த்தி என்ற பட் டப் பெயருடன் அரசபரம்பரை யொன்று யாழ்ப் பாணத்தை ஆண் டு வந்தது என்பது வெளிப் படை. எனவே, இவ் வாரியச்சக்கரவர்த்தி பரம் பரை இக்காலத்திலே தொடங்கியதென்பது சரித் திர உண்மை.
கி. பி. 1344 ல் இலங்கைக்கு வந்த புகழ் பெற்ற இசிலாமியப் பிரயாணியான இபுன் பத்தூத்தா வடஇலங்கையில் ஆரியச் சக்கர வர்த்தி என்னும் அரசன் ஆண்டதாகக் கூறுவான்
2. கூழங்கை, விசய கூழங்கை என்பன பொற் கைப் பாண்டியன் கதையைப் பின்பற்றி எழு ந் தன. போலும் 3. Annual Report of Epigraphy (Madras), No. 1 i0,
of 190 . . 4. Cv. 90: 46.

1.
2
இவன் வந்தபோது வடஇலங்கை அரசனும் ஆரி யச் சக்கரவர்த்தி மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்கினனெனவும் கூறுகின்றன். இத்தகைய வளமும் வலியும் ஒர் இராச்சியத்தில் ஏற்படுதற் குப் போதுமான காலந்தேவை. ஆகையால் இந்த அரச பரம்பரை கி. பி. 1305 -1344 க்கு இடை யில் தொடங்கியிருத்தல் வேண்டும். இப்பரம் பரை அரசினரின் தலைநகர் ‘சிங்கைநகர்’ என்பர். இதனைக் கோட்டகமக் கல்வெட்டிலும், அரச கேசரி பராக்கிரமபாண்டியனின் தென்காசிக் கோயிற் கல்வெட்டிலும் காணலாம்.
இவ்வரசபரம்பரை யாழ் ப் பா ன த்  ைத ஆளும் பொழுது ( கி. பி. 1450) கோட்டை இராச்சியத்தை ஆரும் பராக்கிரம வாகு ஆண் டான். அவன் காலத்திலே அவன் வளர்ப்புப் பிள்ளையாகிய சப்புமால் குமரையா 5 யாழ் ப் பா ண த் தி ற் குப் படையெடுத்துக்கோட்டை கொத்தளங்களையழித்துத் தமிழ் ப் பகுதி யை ஆண்ட மன்னனைத் துரத்தித் தானே அரசாண் டான். சப்புமால் குமரையன் தொடுத்து வெற்றி கண்ட போரைத் தமிழ் மன்னருக் கெதிரான சிங்களக் கலகமென வைபவமாலை கூறு ம். மேலும் இப்போர் நடந்தது கனகசூரியன் என் னும் அரசன் காலத்திலே என்றும் அது நவிலும், ஆரியச்சக்கரவர்த்தியென்னும் பட்டப்பெயர் கொண்ட அரசபரம்பரையைத் தொடங்கிய வனுக்கும் குமரையன் முறியடித்த கனகசூரிய னுக்குமிடையில் ஒன்பது அரசர்கள் சிங்கை நக ரிலிருந்து ஆண்டதாக வைபவமாலை கூறும் இவ் வரசர்களைப் பற்றிய செய்திகளொன்றும் தெளி வாகத் தெரியவில்லை. இவர் ஆண்ட ஒழுங்கு முறைகளைக் கால வரிசைப்படுத்திக் கூறவும் முடியவில்லை. வைபவமாலையின்படி குறித்த அரச பரம்பரை மேல் வருமாறு:-
விசய *ழங்கைச் சிங்கையாரியச் சக்கரவர்த்தி
சகர
l.
2. குலே - se p 3. குலோத்துங்க p 4. விக்கிரம 9 - p is
5. இவனைச் சண்பகப் பெருமாள் என்பர் .

Page 17
22
. வரோதய சிங்கையாரியச் சக்கர வர்த்தி மார்த்தாண்ட p 9 9 يرو
குணபூசண 9 p. 99. வீரோதய p. y p sp, செயவீர குணவீர 9 9 s. கனகசூரிய 9 p. 9 d
1.
இக்காலப்பகுதியில் தமிழ் இராச்சியம் மிகு ந்த வலியோடு செல்வமும் செழிப்புமோங்கிக் கீர்த்தியோடு விளங்கியது. மன்னர் சிலாபத் துறை முதலிய இடங்களில் நடந்த முத்துக் குளிப்பினுல் செல்வங்கொழித்தது. பெரிய கடற்படை யொன்று ஆரியச் சக்கரவர்த்தி கையில் இருந்தது. அதனல் ஈழத்தமிழர், மலை யாளம் முதலிய இடங்களுக்குச் சென்று வாணி கம் வளர்த்து வந்தனர். இத்தகைய செவ்வி வாய்ந்த ஈழத்தமிழ்நாட்டிற்குப் பலர் பிற, நாடுகளிலிருந்தும் வந்தனர். அவருள் இபுன் பத்துரத்தா, மார்க்கோ போலோ என்போர் குறிப்பிடத்தக்கவர் \ இவ்வரசனையும் அரசி னையும் பற்றி இபுன்பத்தூத்தா கூறுஞ்செய்தி
கள் கவர்ச்சிகரமானவை. **இவ்வரசனின் பெயர் ஆரியச் சக்கரவர்த்தி; கடற்படை வலி கொண்டவன்; மலையாளத்திலே யான்
தங்கியிருந்தபொழுது இவன் நாவாய்கள், சிறிய, வும் பெரியவுமாக நூறுகப்பல்கள் நங்கூரமிட் டுக் கெம்பீரமாய் அங்கு நின்றன; அதிதிகளை உபசரிக்கும் அன்புசார்ந்த நெஞ் சின ன் , பாரசீக மொழியிலே வல்லுனன்; அம்மொழி யில் எ ன் னு ட ன் உரையாடினன்; எனக்கு, நல்ல பரிசில்களை வாரி வாரி யி றைத் தா ன் . அவை மட்டுமோ, தன் இராச்சியத்தில் கிடைக், கும் திறமான முத்துக்களையும் பரிசாக ஈந்தான். அன்றியும் யான் விரும்பியவண்ணம் ஆதாம் மலைக்கு யாத்திரைசெய்ய உதவியுஞ் செய் தான்’’. இபுன் பத்தூத்தாவின் கூற்றின்படி ஆரியச்சக்கரவர்த்தியின் தலைநகரம் ‘புத்தல** என்பதாகும். சரித்திர ஆசிரியர் பலர் இதனைப்

ፖ3
புத்தளம் எனக்குறிப்பர். ஆனல், இவன் ஆதாம் மலேக்குப்போகும் பிரயாணத்தை விரித்துக் கூறு மிடத்து, ‘புத் த ல' என்னுமிடத்திலிருந்து பாதை மூலம் ஆற்றைக் கடந்து மன்னருக்குச் சென்றதாகவும் அதன்பின் சிலாபத்தை அடைந் ததாகவும் கூறுவான். ஆகவே, ‘புத்தல' வென் பது புத்தளமாக இருக்கமுடியாது. ‘சிங்கை நகர்” எனக் கூறப்படும் வல்லிபுரக்குறிச்சிக்கு அணித்தாயுள்ள ‘புட்டளை’’ என இப்போது வழங்கும் கிராமமே இப் ‘புத்தல* வாகவிருக் கலாம். மேலும் இவ்வரசபரம்பரையினரைச் சிங்கையாரியச்சக்கரவர்த்திகள் என்றும் குறிப் பான். புட்டளை சிங்கையின் ஒருபகுதி. சிங்கை யென்னும் பகுதி கி. பி. மூன்ரும் நூற்ருண்டள வில் கீர்த்திவாய்ந்த இடமாயிருந்தது. இதற் குச் சான்று வல்லிபுரத்திற் கண்டெடுக்கப் பட்ட பொன்னேட்டுச் சாசனம். அன்றியும் அங்கு, பல கட்டிடங்களும், கோட்டை கொத்தளங் களும் அழிந்தொழிந்து மண்ணுல் மூடப்பெற். றிருப்பதை இன்றும் அங்குச் செல்வோர் காண லாம். அத்துடன் இதனருகே ஒரு பெருந்துறையு முளது. அங்கிருந்து கப்பல்கள் அக்காலத்தில் போக்குவரத்துச் செய்தன. இப்பொழுதும் அத் துறையைக் கப்பற்றுறையென அழைப்பர்.
பதினலாம் நூற்ருண்டு முற்பகுதி தொடக் கம் பதினைந்தாம் நூற்ருண்டின் முற்பகுதிவரை சிங்கள அரசின்நிலை தலைகீழாயிருந்தது. இக்கா லப்பகுதியில் சிங்களவரசின் தலை நகரம் அடிக் கடி இடத்துக்கிடம் மாற்றப்பட்டுவந்தது.
தென்னிந்தியப் படையெடுப்பு கட் குப் பயந்து சிங்கள அரசர் அநுராதபுரப்பகுதியைக் கைவிட்டனர். அதனுல் பொருள் வருவாயைக் கொடுத்த அப்பகுதியிலுள்ள நெல்வயல் முதலி யன பாழடைந்தன. இதேகாலத்து அராபியவணி கர், காலிதொடக்கம் புத்தளம் வரையுள்ள சில இடங்களைத் தமது வணிகத்திற்கு நிலைக்களஞக ஆக்கிக்கொண்டனர். காலி, வெருவலை,கொழும்பு ஆகிய இடங்கள் அராபியரின் வணிகத்திற்கு மிக

Page 18
24
முக்கிய இடங்களாக விளங்கின. அதனல், விவசா யத்துறையில் போதிய வருவாய் அற்றிருந்த சிங் கள அரசர், இவ்வணிகத்தைப் பயன் படுத்தி அராபிய வணிகருக்கு வேண்டிய கறுவா முதலிய பொருட்களை விற்பதற்காகத் தலைநகரைத் தென் மேற்குக் கரையோரமாக நிறுவினர். இ த ன் பயணுகப் பாணந்துறை, கொறனைப் பெருந்தெரு விலுள்ள இருகம் கோறளை ஆகியவற்றிலிருந்து அரசர் சிலர் செங்கோலோச்சினர். இதன்பின் மூன்ரும் விக்கிரமவாகு காலத்தில் (கி. பி. 13571374) பேராதனையிலிருந்து அளகக்கோனர் என் னும் பெயருடைய சிங்களத் தலைவன் ஒருவன் செயவர்த்தனபுரத்தில் கோட்டை கொத்தளம் எழுப்பி ஓர் அழகிய நகரைக் கட்டினன். கி. பி. 1348 ல் பாப்பரசரின் துரதன் மரிக்குநெல்லி 6 என்பாள் சீனத்துக்குச் சென்று இலங்கை வழி யாக உரோமாபுரிக்குத் திரும்புகையில் கொழு ம்பில் வந்திறங்கினன். அப்பொழுது அளகக் கோனர் கட்டியெழுப்பிய மாளிகையைக் கண்டு அதன் அமைப்புச்சிறப்பினை வியந்தான்.
அப்போது இலங்கையின் அரசியலமைப்பில் இருந்த தலை தடுமாற்றம் அக்கால வரலாற் றைக் கூறும் சிங்கள சரித்திரநூல்களிலும் பிரதி பலிக்கின்றது. எந்தச் சரித்திர நூலாவது இக் கால வரலாற்றைத் தெளிவாகக் கூறுவதாகத் தெரியவில்லை. அன்றியும் ஆரியச்சக்கரவர்த்தி பரம்பரையினரின் ஆட்சியில், இக்காலப்பகுதி யிலே, தமிழரசு மிகுந்த உச்சநிலையை அடை கின்றது. படிப்படியாகத் தமிழரசர் தங்கள் நாட்டெல்லையைப் பெருப்பித்து இலங்கை யின் பெரும்பாலான பகுதியை ஆளத்தொடங்கு கின்றனர்.
6. Marignolie

25
அன்றியும் தங்கள் ஆதிக்கத்தைச் சிங்கள ஆட் சிக்குக் கீழிருந்த பகுதிகளிலும் செலுத்தக்கூடிய தாயிருந்தது. சிங்கள அரசனிடமிருந்து திறை பெறவுந் தொடங்கிவிட்டனர். அராபிய வணி தருடன் நடக்கும் கறுவாவணிகத்தில் பங்கெடு த்துக்கொள்ள நீர்கொழும்பு, வத்தளை முத லிய ஊர்களைப் பிடித்து அவற்றைச் சிலகாலம் தமது ஆதிக்கத்தில் வைத்திருந்தனர்.
ஒருமுறை தமிழரசின் வரி வாங்குவோர் சிலர் வரி வாங்கியபோது சிங்களச் சிங்காசனத் தில் கண்வைத்திருந்த அளகக்கோனர், இத் தருணத்தைப் பயன்படுத்தி இவ் வரிவாங்கு வோரைப் பிடித்துத் தூக்கில் இடுவித்துக் கொன் முன். இதையறிந்த ஆரியச்சக்கரவர்த்தி சீற்றங் கொண்டு இரு பெருஞ் சேனைகளைச் சிங்களஅர சிற் கெதிராய் அனுப்பினன். ஒரு படை கரை யோரமாக வந்து பாணந்துறையிற் பாடிபோட் டது. மற்றது பன்னகம் (மாத்தளை) வழியாகக் கோட்டை நகர் நோக்கிச் சென்றது. கொழும்புக் கண்மையிலுள்ள கோட்டை, பாணந்துறை, நீர் கொழும்பு ஆகிய இடங்களில் தமிழப்படைக் கும் சிங்களப் படைக்குமிடையில் பெரும்போர் நி க ழ் ந் த து. கேகாலைக் 7 கண்மையிலுள்ள கோட்டகமக் கல்வெட்டு இப்போரை மேல்வரு LD ПТ00] குறிக்கும்,
கங்கணம் வேற்கண்ணிணேயார் காட்டினர் காமர்வரேப் பங்கயக் கைமேற் றிலதம் பசரித்தார் -பொங்கொலிநீர்ச் சிங்கைநக ராரியனைச் சேரா வனுரேசர் 8. தங்கள் மட0ாதர் தாம். -
இதன்படி இங்கு நடந்த போரில் தமிழப் படையே வெற்றிகண்டதெனத் தெரிகின்றது.
7. H. C. P. Bell: Archaeological Report of the
Kegalle District, 191 l
8. அநுரேசர்-அநுராசபுரத்து அரசரைக் குறித் தது. இக்கருத்தை ‘சிங்கையில் அனுரையில். வென்றிகண்டெப் பாற்றியு மிசைவிளக்கேற்றி" என வரும் தொடரிலும் காண்க - Travancore Archaelogical Series, Vol. 1 No. 11

Page 19
26
இவ்வாறு யாழ்ப்பாணத்தரசு வெற்றியோடு விளங்கியகாலத்து அதற்கும் விசயநகரப்பேரர சுக்குமிடையில் நல்லுறவு இருந்து வந்தது. இந்நிலையில் ஆரும் பராக்கிரம வாகு என்பான் (கி. பி. 1412-14 18) சிங்கள அரசு கட்டிலேறிய தும் நிலைமை ஒருவாறு மாறத்தொடங்கியது. மங்கு திசையிலிருந்த சிங்களவரசு இவ்வரசன் கீழ்த் தலை தூக்கத்தொடங்கியது. இலங்கை முழுவதையும் தனிச்சிங்கள இராச்சியமாக்க விரு ம்பினன். இக்குறிக்கோளோடு வேண்டிய ஏற் பாடுகளைப் படிப்படியாகச் செய்துகொண்டு வந்தான். தமிழரசன் வலியையுந் தனது வலி யையும் செவ்வனே நோக்கித் தகுந்த தருணத் தில் போர் தொடுக்க வேண்டுமெனக் காத்திரு ந்தான். தன் வளர்ப்பு மகஞகிய செண்பகப் பெருமாள் என்னும் சப்புமால் குமரையனைப் படையொன்றுடன் தருணம் பார்த்து யாழ்ப் பாணத்தரசனுக் கெதிராக அனுப்பினன். நட ந்த போரில் அவன் தமிழரசனல் முறியடிக், கப்பட்டான். இதனல் பராக்கிரமவாகுவின் எண் ணம் கைகூடாது போயிற்று. சிறிதுகாலத்தில் இரண்டாம் முறையும், குமரையன் தமிழரசன் மீது படையெடுத்துச் சென்றன். இப்போரில் யாழ்ப்பாணத்தரசன் தோற்ரு ன். அவன் தோற். றதற்கு, அவனுக்கு தவக் கூடிய விசயநகர மன்னன் வராததும் ஒரு கா ர ன மா கு ம். வெற்றிகொண்ட குமரையன் அக்காலத்து யாழ்ப்பாணத் தலைநகராகிய சிங்கைநகரைக் கைப்பற்றி அதைக் கொள்ளையடித்து அழித் தான். அன்று சிங்கைநகரிலிருந்து அரசாண்ட வன் கனகசூரிய சிங்கையாரியனென யாழ்ப் பாண வைபவமாலை கூறும். கனகசூரியன்
தென்னிந்தியாவிற்கு ஒளித்தோடினன்.
இவ்வாறு வெற்றிக்கொடி நாட்டிய கும ரையன் பழைய இராசதானியாகிய சிங்கை நகரை விடுத்து, பாணன் கட்டிய யாழ்ப்பாணத் திற்கு அணித்தாயுள்ள நல்லூரிலேடதுநகர் ஒன்று கட்டினன். அங்குக் கந்தவேளுக்கு ஒரு கோயி

2了
லும் கட்டியெழுப்பினன் 9. இன்றும் நல்லூர்க். கந்தசாமிகோயிற் றிருவிழாநாளில் உற்சவமூர் த்தி வீதிவலம் வரும்போதும், திரும்பிக் கோயிலி' னுட் புகும்போதும் கூறப்படுங் கட்டியங்களில் இவனுடைய பட்டத்துப் பெயராகிய ‘பூரீ சங்க போதி புவனேகவாகு' என்பதும் கூறப்படு: கிறது. W
9. இலகிய சகாத்த மெண்ணுாற் றெழுபதா
மாண்ட தெல்ஃல - அலர் பொலி மாலை மார்பனம்புவ னேகவாகு நலமிகுந் திடு யாழ்ப் பாண நகரிகட் டுவித்து நல்லேக் குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித் தானே.
-யாழ்ப்பாண வைபவ மாலை: பக். 32.

Page 20
28
பிற்கால யாழ்ப்பாணத்தரசர் குமரையன் யாழ்ப்பாணத் தமிழர சை ஆண்டுவந்த காலத்தில் கோட்டை இராச்சியத் தின் நிலைமை மாறிக்கொண்டுவந்தது. ஆரும் பராக்கிரம வாகு இறந்ததும் அவனுடைய பேரப் பிள்ளையாகிய சயவாகு பட்டத்திற்கு வந்தான். அவன் ஒன்றரை ஆண்டுகள் ஆண்டபின் இறந் தான். அப்பொழுது அவன் உடன் பிறந்தாளா கிய மாணிக்கம் என்பாள் அரைப்பித்தணுகிய த ன் ம ரு கனே அரசு கட்டிலேற்றினளென டீ. கூட்டோ என்னும் போர்த்துக்கேயச் சரித்திரா சிரியன் கூறுவான் 1. ஆனல் இவன் அரசாளுந் திறன் அற்றவனெனக்கண்டு பெரிதுங்க வலை யுற்று, அந்நாட்களில் வாழ்ந்த அரச குமாரருட் பெருவலி செறிந்தவனகிய குமரையனை உடனே வந்து அரச பொறுப்பை ஏற்கும் வ ண் ண ம் வேண்டினள். இதை யறிந்ததும் குமரையன் யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டை நகர் நோக் கிப் புறப்பட்டான். அங்குச் சென்றதும் புவனேக வாகு என்னும் பட்டப்பெயருடன் அரசு கட்டி லேறினன். எனினும் இவன் கோட்டைக்குச் சென்ற பிறகும் சிங்களப்பகுயிதில் உள்நாட்டுக் கலகம் மலிந்து கிடந்தது.
யாழ்ப்பாணத்தில் அடங்கிக்கிடந்த தமி ழரசு இக் குழப்பங்களைப் பயன் படுத்தியது. குமரையனுல் கி. பி. 1450-ல் முறியடிக்கப்பட்ட மன்னன் மகனுகிய பரராசசேகரன் (கி.பி. 14781519) யாழ்ப்பாண அரசைத் திரும்பப் பிடித்துத் தனிச் செங்கோலோச்சினன் இவனுக்குப்பின் சங்கிலி செகராசசேகரன் (கி. பி. 1519-1561) அரசனுன்ைx
அக்காலத்திலே யாழ்ப்பாணம், மன்னர்க் கரைகளில் வந்து கரையேறிய கப்பல்களையும் அவற்றிலுள்ள பொருட்களையும், உரிமைப்படி யாழ்ப்பாண அரசர் எடுத்துக்கொள்வர். இவ் வழக்கத்தை யொட்டி அங்கு வந்தடைந்த பல போர்த்துக்கேயக் கப்பல்களைச் சங்கிலி கைப் பற்றினன்.
1. 1. De Couto: J RAS. (CB) Vol. XX, P 62
சில ஆசிரியர் வேறுவிதமாகக் கூறுவர். EHC p 104.

29
சங்கிலியின் இச் செயலைத் தடுப்பதற்காகக் கி. பி 1543ல் மாட்டின் அல்பொன்சோ த சூசா என்பவன் போர்த்துக்கேய அரசின் கீழ் அடங்கி யிருக்கும் வண்ணம் அவனைப் பணித்தான். கி. பி. 1544 ம் ஆண்டிற்கு முற்பட்ட சில காலங்களில் போர்த்துக்கேயரின் முயற்சியினல் மன்னரில் வாழ்ந்த மக்களிற் சிலர் கத்தோலிக்கராய் மத மாறி வாழ்ந்தனர். கி. பி. 1544 ம் ஆண்டு மட்டில் அர்ச். பிரான்சிஸ் சவேரியாரின் தூண்டுதலினுல் மன்னர் மக்களுட் பெருந்தொகையானேர் கத் தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்டனர். இதை யறிந்த சங்கிலி மன்னருக்குப் படையனுப்பி மதம் மாறிய யாவரையுந் தண்டித்தான். இக் காலந்தொடக்கம் யாழ்ப்பாணத்தரசு போர்த் , துக்கேயருக்கு எதிராகவே இருந்து வந்தது. சிங் கள நாட்டில் போர்த்துக்கேயருக்கு மாரு ன எழு ச்சிகளின் முன்னணியில் நின்றவன் மாயாதுன்னை என்னும் சிங்கள அரச குமாரன். இவனும் சங்கிலி யும் போர்த்துக்கேயரை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்து கொண்டனர். 1547ல் சங்கிலி மா யா துன்னையுடன் சேர்ந்து போர்த்துக் கேயருக்கெதி ராகப் போர்புரிந்ததாகத் தெரிகிறது. இதற்கு இவரிரு வரும் தஞ்சை அரசனு ன சேவப்பநாயக் கன் (கி. பி. 1532-1580) உதவியைப் பெற்ற தாகவுந் தெரிகிறது.
கோட்டை அரசினை ஆண்ட எட்டாம் புவ னேகவாகுவின் (கி. பி. 1521-1551) மருகனன வீதியபண்டாரமென்பான் கோட்டை இராச் சியத்திற்கு அரசனுக ஆசை கொண்டான். ஆணுல் தன்னெண்ணங் கைகூடாதது கண்டு பலப்பல இடங்கள் தோறும் சென்று உதவி கோரினன். எங்கணும் அவன் எண்ணங் கைகூடவில்லை. இறுதியில் யாழ்ப்பாணத்தை ஆண்டுகொண் டிருந்த சங்கிலி செகராசசேகரனிடம் வந் து
சர்ந்தான்.
2. Afonso de Souza

Page 21
30
சங்கிலி போர்த்துக்கேயருக்கு மாருகப் பொருதுகொண்டு நின்ருனுகையால் வீதியபண் டா ரத் தி ன் கோரிக்கைக்கு உடன்பட்டான். ஆனல் வீதியபண்டாரத்தின் திடீர் மரணத்தினுல் போர்த்துக்கேயருக்கு மாரு ன இவ்வுடன்படி க்கை சிறிதும் பயன்படாது போயிற்று.
சங்கிலியைத் தண்டிக்கும் வகைதேடிக் காலம் பார்த்திருந்த போர்த்துக்கேயர் கி. பி. 1560ல் கொன்ஸ்தாந்தீன் த பிறகன்சாவின் 3 கீழ் கடல்வழியாக ஒரு பெரும் ப  ைட யி னை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினர். பிறகன்சா கொழும்புத்துறையில் இறங்கி ந ல் லூ  ைர யடைந்து சங்கிலியின் கோட்டை கொத்தளங் களை அழித்தான். இதைக் கண்ட சங்கிலி தன் மாளி கையைத் தீக்கிரையாக்கிவிட்டுக் கோப்பாய் க்கு ஒடிஞன். அங்கும் போர்த்துக்கேயர் அவனைப் பின்தொடரவே வன்னிப்பகுதியில் போய் ஒளித் தான். அப்பொழுது தாம் புதிதாகக் கைப்பற் றிய யாழ்ப்பாணத்திலே போர்த்துக்கேயர் தலை வரும் அவர் சேனையும் வேட்டையாடுதல் விருந் த பருதல் முதலிய ஏகபோக சுகங்களை அனுப வித் து க் கொ ன் டி ரு ந் த ன ர். அவற்றைக் கண்டு மனம் பொருத நாட்டுமக்கள் அவருக்கு மாரு கப் புரண்டெழுந்து அங்கிருந்த போர்த் துக்கேயரை வெட்டி வீழ்த்திக் கலகம் விளைத் தனர். இத்தருணத்தைப் பயன்படுத்திச் சங் கிலிமன்னன் நல்லூர் வந்து சிதறுண்ட தன் படைகளைச் சேர்த்துப் போர்த்துக்கேயருக் கெதிராகப் பெரும்போர் நிகழ்த்தினன். இவ் வெதிர்ப்புக்கு நின்று பிடிக்க ஏலாது போர்த்துக் கேயர் கப்பலேறினர்.
சங்கிலிக்குப் பின் புவிராச பண்டார மென் பான், பரராசசேகரன் என்னும் பட்டப்பெய ரோடு அரசு கட்டிலேறினன். அவனைப் போர்த் துக்கேயர் போரிலே கொன்று பெரியபிள்ளை என் பானை அரசு கட்டிலேற்றினர். அவன் பரராச
3. Don Constatutine de Braganza.

3.
சேகரன் என்னும் பெயருடன் கி. பி. 1570ம் ஆண்டிலே போர்த்துக்கேயர் உதவியுடன் அரசு கட்டிலேறிஞனயினும் அவனுக்குப் அவர்மேல் அ ட ங் கி க் கி ட ந் த வெறு ப் புணர் ச் சி சிலவாண்டில் கொழுந்து விட்டெரியத் தொட ங்கியது. தஞ்சை மன்னனு ன அச்சு தப்ப நாயக்கன் உதவியுடன் மன்னரில் நிலைத்திரு ந்த போர்த்துக்கேயருக்கு எதிராகப் போர் தொடங்கினன். இப்போரில் இவன் வென்ற தாகத் தெரியவில்லை.
இவனுக்குப்பின் புவிராச பண்டாரமென் ε_ι Π 6ότ பரராசசேகரன் என்னும் பட்டப் பெயருடன் கி. பி. 1582 ல் அரசஞனன். இவ னும் தன் முன்னுேர்போலப் போர்த்துக் கேயரை எதிர்த்தான். மன்னுரை அவர் கையினின்றும் விடுவிக்க இருமுறை முயற்சித் துப் போர் நடத்தினன். இரண்டாம் முறை யாக கி. பி. 1519 ம் ஆண்டு மன்னுரைத் தாக் கியபோது போர்த்துக்கேயர் இவன் தாக்கு தலைப் பொறுக்க முடியாது அந்திரே போர்த் தாடோ த மென்டோன்கா 4 என்னும் தள பதியை யாழ்ப்பாணத்திற்குப் படையெடுத் துச் செல்லுமாறு கட்டளையிட்டனர். நடந்த போரில் பரராசசேகரன் இறந்துபட்டான். அப்பொழுது போர்த்துக்கேயர் பெரியபிள்ளை செகராசசேரனின் மகனும் எதிர் மன்னசிங் கனை அரசனுக்கினர். இவன் பரராசகேரன் என்னும் பட்டப்பெயருடன் (கி. பி. 1519-1615) ஆட்சி செலுத்தினன்.
இவ்வரசன் போர்த்துக்கேயர் கைப்பொம் -G60) LD l TT d55 விளங்கினமை கண்டும், யாழ்ப் பாண அரசியல் அலுவல்களில் அவர் பெரும் பங்கெடுக்க விட்டமை கண்டும், மனம் பொருத தமிழ்த்தலைவர்களான முதலிமாரும் தலைமைக்
4. Andre de Furtado de Mendonca.

Page 22
3
32
காரரும் மேற்படி நிலைமையை மாற்ற வழிவகை தேடினர். இந் நோக்கத்தைக் கொண்டு சோன கர், வடுகர், மறவர், ஆகியோர் உட்பட ஒரு சேனையைத் திரட்டிக்கொண்டு, தஞ்சை மன்ன ணுகிய அச்சுதப்ப நாயக்கன் கண்டி மன்னணுகிய விமலதரும சூரியன் ஆகியோரின் படையுதவியை நாடி நின்றனர். இத்திட்டங்களை ஏதோ ஒரு வகையாக அறிந்த எதிர் மன்னசிங்கன் மன்ஞ. ரிலுள்ள போர்த்துக்கேயத் தலைவனுக்கு அறிவித் தான். தஞ்சைநாயக்கன் கடற்படை மன்னு ருக் கணித்தாய் வருகையில் போர்த்துக்கேயர் அதனை முறியடித்தனர். இதனேடு கலகம் அடங்கி எதிர்மன்னசிங்கன் கி. பி. 1615ல் இறக் கும்வரை அமைதி நிலவிற்று. அவன் இறக்குந் தறுவாயில் இருக்கும்போது மூன்று வயதுள்ள தன் மகனை அரசனுக்கி அவனுக்கு வயதுவரும் வரையும் தன் தம்பியாம் அரச கேசரி பண்டாரத்தை அரசபாதுகாவலனுய் நியமித்தான்.\
/எதிர் மன்ன சிங்கன் இறந்தபின்பு அரச குடும்பத்தினருள் ஒருவனுன சங்கிலிகுமாரன் என்பான் அரசகேசரி பண்டாரத்தைக் கொன்று தானே அரசபாதுகாவலனனன். இச்செயலைக் குறித்துப் போர்த்துக்கேயர் எதிர்ப்புக் கிளப் பிய பொழுது, அவருக்கு வேண்டிய திறை யைக் கொடுத்து நாட்டை ஆள்வதாக வாக்குறுதி செய்தான். ஆனல் சிறிது காலத்தின் பின்னர் கண்டிக்குச் செல்லும் வடுகப்படையைத் தன் இராச்சியத்துக் கூடாகப் போக விடுத்ததாலும் தன் எண்ணப்படியே தன் மருமகனைத் தனக் குப்பின் அரசாள நியமித்ததாலும் போர்த்துக் கேயருக்கு முறைப்புடி திறையைச் செலுத்தாத தாலும், முன்கொடுத்த வாக்குறுதியைக் காற் றில் விட்டானெனத் தெரிகிறது. இதை யறிந்த போர்த்துக்கேயர் அவனை நெருக்கினர். அதனல், சிலகாலம் ஊராத்துறையில் ஒளித்திருந்தான்.

33
நெருக்கடியான இந்நிலையைக் கண்டு அவன் தேவியர் தஞ்சைப் பெருமன்னன் இரகுநாத நாயக்கனிடம் சென்று முறையிட்டனர் 5. கேம் நாயக்கன் என்பான் தலைமையில் இரகுநாத நாயக்கன் அனுப்பிய தஞ்சைப் ப ைடயி ன் உதவிகொண்டு திரும்பவும் அரசைக் கைப் ப ற் றின ன். இரகுநாதநாயக்கனே யாழ்ப் பாணம் வந்து போரிற் பங்கெடுத்துக் கொண். டதாகவும் கருதப்படுகின்றது. ஆனல் போர்த் துக்கேயர் வரலாற்று நூல்கள் இரகுநாதன் வருகை பற்றி எதுவுங் கூறிற்றில:
இன்னும் சங்கிலியின் அரச பரிபாலனத்தில் தமிழ் மக்கள் திருத்தியடைய வில்லை. அதனேடு தஞ்சை நாயக்கனின் உதவிப் பல த் தி ன ல் போர்த்துக்கேயரை மதியாமலும் நடந்தான். ப்ோர்த்துக்கேயருக்கு மாருகக் கண்டியரச னுக்கு உதவியளித்தான். அதனேடு போர்த்துக் கேயருக் கெதிராய் ஒல்லாந்தருடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினன். இதனுல் சங்கிலி மீது சீற்றமும் ஆத்திரமும் கொண்ட போர்த் துக்கேயர் அவனை ஒழித்துக் கட்டப் பிலிப்பு த ஒலிவீரா 6 என்னும் தலைவனின் கீழ் கி. பி. 1619 ல் பெரும் படையொன்றை அனுப்பினர். சங்கிலியும் படை திரட்டினன். இரு படை களும் பெரும்போர் நிகழ்த்தின. எனினும் சங் கிலியின் படை தோற்கடிக்கப் பட்டது. சங்கிலி பிடிபட்டான். போர்த்துக்கேயர் சங்கிலியைக் கோவாவுக்கு அனுப்பினர். யாழ்ப்பாணத் தமி ழரசு ஒலிவீராவின்  ைக யி ற் சி க் கி யது. இதனேடு தமிழரசர் பரம்பரையும் முடிந்தது
5. Rama Bhadrambha: Raghunatha Abhyudharam; Yajna Narayana Dikshitar: Sahitya Ratnakara. 6. Philip de Oliveiyra.

Page 23
34
விடுதலைப் போராட்டம்
அரசபரம்பரை ஒழிந்தது. தன்மானம் என் னும் பெரிய தனத்தை இழந்து விட்டோமே யென்னும் மனப்பாரம் யாழ்ப்பாணத்து மகன் ஒவ்வொருவனது இதயத்தையும் அமுக்கியது. மதித்தற்கரிய மாணிக்கமாகிய சுதந்திரச் செல் வத்தை இழந்து விட்டோமே என்ற கவலை மக் களை வாட்டியது. விடுதலை வேட்கை பொங்கி யெ ழுந்தது. நாடு தொலைந்து பிறன் கைப்பட்ட ஈராண்டுக் கிடையில் ஆறுமுறை புரட்சி வெள் ளம் கான்யாறு போல் கரைபுரண்டோடியதுN இதனைப் போர்த்துக்கேய வரலாற்ருசிரியரே கூறிப் போவார்.
முதல் முறை "கரையார் தலைவன் போர்த்
துக்கேயருக் கெதிராய் படையோடெழும்பி
ஞன். நல்லூருக் கருகாமையில் நடந்த போர் ஒன்றில் ஒலிவீரா இவனை முறியடித்தான்.
அடுத்து, அரசகுமாரன் ஒருவனை யாழ்ப் ப்ாணத்தரசனுக்க விரும்பி, சின்னமிக்கேல் பிள்ளை என்பவன் தஞ்சைக்குச் சென்று ஆயிரம் போர் வீரரைப் பன்னிரண்டு தோணிகளில் ஏற்றி வந்து தலைமன்னரை அடைந்து, அங்கிருந்து போர்த்துக்கேயரை எதிர்த்தான். ஒலி வீரா இம்முயற்சியையும் தோற்கடித்தான். பின்னர் முதலியார் ஒருவர் நடத்திய விடுதலைப் போரும் தோல்வியடைந்தது. சின்ன மிக்கேல்பிள்ளை தஞ்சை நாயக்கரிடம் தி ரு ம் பவுஞ் சென்று யாழ்ப்பாண அரசிற்குத் தன்னே அரசனுக்கும்படி வேண்டினன். தஞ்சைப் பேரரசின் கீழ் யாழ்ப் பாணத்தைக் கொண்டுவர ஆண்டு 1620 கார் த்திகைத் திங்கள் முயற்சிகள் தொடங்கின. யாழ்ப்பாணத்தையும் அடுத்துள்ள பகுதிகளை யும் கைப்பற்றுவதற்குத் தஞ்சைப்பெரும் படை யொன்று வருவதாக ஒரு செய்தி நல்லூரிலிருந்த ஒலிவீராவின் காதுக்கெட்டியது. அந்தோணி

A
35
யோ த மோத்தா கல்வாஒ 1 என்பவன் கீழ் போர் த் து க் கே ய ப் படையொன்று பருத்தித்துறை யில் தஞ்சை நாயக்கரின் படையைக் காத்திரு ந்தது. நாயக்கரின் படை வந்ததும் பெரும் போர் நிகழ்ந்தது. மீண்டும் போர்த்துக்கேயர் கையால் தமிழர் சேனை முறியடிக்கப்பட்டது: இதுவே இலங்கைத் த மி ழ ரி ன் கடைசி விடு தலைப் போராட்டம்"
1. Antonide motha Galvao
. இதுகாறும் ஒருவாறு யாழ்ப்பாணத்தமிழரின் வரி லாற்றைக் கூறினேம். இன்னும் திருக்கோளுமலை மட்டக்களப்பு, வன்னி, மலை நாடு, முதலிய இடங்க ளில் வாழுந் தமிழர் வரலாற்றையும் இவ்வாறு ஆராய்ந்து வருகின்ருேம். இவை யாவற்றையும் இறுதியில் ஒருங்குசேர்த்து இலங்கைத் தமிழர் வரலாறு என்னும் பெருநூலாக வெளியிடுதல் எமது நோக்கம். இந்நன் கோக்கத்துக்குச் சான்று கள் தந்து உதவிபுரியும் அன்பர் தமக்கு ஆசிரியர் என்றும் கடப்பாடுள்ளவராய் இருப்பார்.
வாழ்க 15 ற் ற மிழ்,
SÜD)

Page 24
BIBILIOGRAPHY
கலிங்கத்துப்பரணி: பெ; பழனிவேல் பிள்ளை உரை, கழகப்பதிப்பு 1950 -
யாழ்ப்பாண வைபவமாலை: குல. சபாநாதன் பதிப் சரஸ்வதி புத்தக சாலை, கொழும்பு 1953,
Rama Bhadramba ; Raghunathabhyudhyam. Ed. by Dr.
T. R., Chintamani, (Madras University)
Yajna Narayana Dikshita: Sahitya Ratnakara. Ed. by Dr. T. R. Chinta mani, (Madras University)
Altekar, A. S., : Rashtrakutas and Their Times, Poona
Oriental Book Agency, 1934
Annual Report of Epigraphy, Madras. Archaeological Report of the Kegalle District-H. C. P. Bel Bothlingk and Roth : Sanskrit - Worterbuch, St Peter
sburg, 1855 Ceylon Historical Journal . .
Codrington, H. C. : Short History of Ceylon, Macmillan
& Co, London, 1926
Epigraphica Zeylanica
Geiger, Wilhelm : (1) Culavamsa, Pali Text Society, Lon
don, 1929 & 1939
(2) Mahavamsa, Ceylon Government Information Department, Colombo 1950
Harivamsa : Ed. by M. N. Dutt, Calcutta. 1897
Ibn Batuta : The Rehla of Ibn Batuta, Baroda Oriental Ins
titute, 1953
Journal of the Royal Asiatic Society (Ceylon Branch)
Krishnaswamy Aiyangar, S. K. :- Some Contributions of South India to Indian Culture, University of Calcutta, 1923

37
Mendis, G. C. : Early History of Ceylon, Y. M. C. A. Publishing House, Calcutta, Ninth Impression, 1948
Nilakanta Sastri, K. N. (1) Colas, University of Madras, 1935 (2) Pandyan Kingdom, Luzac & Co
London, 1929
Obeyasekara, Donald : Outlines of Ceylon History
Times of Ceylon, Colombo 1911
Oldham, C. F. : The Sun and the Serpent. Archibald
Constable & Co. Ltd, London, 1905
Rasanayagam, C. : Ancient Jaffna, Everyman ' s Publish
ers Ltd, Madras, 1926
Rg Vedavyakhya, : Ed. by C. K. Raja, Adyar Library, 1939
Sewell, R.: A Forgotten Empire, George Allen & Unwin Ltd.
London, Reprint 1924
South Indian Inscriptions.
Travancore Archaeological Series.
Vaidya, C. V. History of Medieval Hindu India, Oriental
Book Agency, Poona, 1921-1924
Vogel, J. : Indian Serpent Lore. Arthur Probsthain, London,
926 Vriddhagirisan, : The Nayaks of Tanjore, University ' Annamalainagar, 1942.
D

Page 25


Page 26


Page 27
இந்நூலாசி வேறு
காதலி ஆற்றுப்பு
நாளுடகம்
LDFI sår, Lost:
இருநாடகம்
பூஞ்சோலே
நீரரமங்கையர்
வாழ்க்கையின் வி ܒܒܕ
gFrü999)
 
 
 

ரியர் இயற்றிய
நூல்கள்.
L
ܬܬܐ