கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கால தரிசனம்

Page 1

ானசேகரன்
U

Page 2


Page 3

கால தரிசனம்
(சிறுகதைகள் )
தி. ஞானசேகரன்
வெளியீடு :
கணேச சனசமூக நிலையம் புன்னுலைக்கட்டுவன்

Page 4
கணேச சனசமூக நிலைய வெளியீடு-2
முதற்பதிப்பு : பிரமாதீச சித் திரை
விலை ரூபா : 3-5O
( உரிமை ஆக்கியோனுக்கு)
அச்சுப் பதிவு : திருமகள் அழுத்தகம் சுன்னுகம்.
KĀLA THARISANAM (SHORT STORIES)
Author : T. Gnanasekaran
Release : Ganesa Community Centre
Punnalaikkadduvan
First Edition l5th April, 1973
Price : Rs. 3-5O

ஆயர்க்கடவையானுக்கு

Page 5
s
I 2.
உள்ளே . . . . .
முன்னுரை
என்னுரை
ஒளியைத் தேடி சங்கு சுட்டாலும் . ஒரு சின்னப் பையன் அப்பாவா கிருன் பலி × a
சுமங்கவி
பிழைப்பு
இதுதான் தீபாவளி
கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக் குட்டியும் இப்படியும் ஓர் உறவு A. பிறந்த மண்
உயிர்த் துணை
கால தரிசனம்
asb
xi
8
3
40
全9
59
70
80
89
97
O 6

இலங்கைப் பல்கலைக் கழகக் கொழும்பு வளாக சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர்
கலாநிதி க. கைலாசபதி அவர்கள் அளித்த
முன்னுரை
ܣܚ-ܡ�ܚܘܝܚܗ
தனது சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை ஒன்று எழுதித்தர வேண்டும் என்று திரு. தி. ஞானசேகரன் என்னிடம் வந்து கேட்டபொழுது சற்றுத் தயங்கினேன். ஏதோ ஒரு வகையில் பழக்கமும் தொடர்பும் உடைய வர்களின் ஆக்கங்களுக்கே பொதுவாக ஒருவர் முன்னுரை வழங்குவது வழக்கம். எடுத்ததற்கெல்லாம் பழைய இலக்கண விதிகளை நாம் பற்றிக்கொள்ள வேண்டியதில்லையாயினும், சிறப்புப்பாயிரம் செய்தற் குரியார் இவரென்று நன்னூல் கூறுவது நமக்கு நினைவு வராமலிருக்கப் போகிறதா ? தன் ஆசிரியன், தன் னேடு பாடங்கேட்டவன், தன் மாணுக்கன், தனது நூலுக்குத் தகுந்த உரை செய்தவன் ஆகிய இந்நால் வருள் ஒருவர் சிறப்புப்பாயிரம் சொல்லுதல்-அதாவது முன்னுரை, அணிந்துரை என்பன எழுதுதல்-முறைமை யாகும் என்பது பவணந்தியார் கூற்று. மேற்கூறிய நால்வகைத் தொடர்பு எதுவும் இல்லாததுமட்டுமன்றி, முகப்பழக்கமும் அற்றநிலையில் முன்னுரை எழுதுவது எப்படி என்றே முதலில் தயக்கமடைந்தேன்
ஆயினும், முகப்பரிச்சயம் இல்லாமையே ஒரு வகையில் இசைவானது என்ற தீர்மானத்துடன் முன்னுரை எழுதுதற்குச் சம்மதித்தேன். முகதாட்சிணி யத்துக்காகப் பூசிமெழுகாமல் மனத்தில் தோன்றிய வாறே கருத்துக்களைக் கூற இது வாய்ப்பளிக்குமல்லவா?

Page 6
V
கடந்த பத்தாண்டுக் காலத்தில் ஆசிரியர் எழுதிய சிறுகதைகளிற் சில இத்தொகுதியிலே இடம்பெற் dତitଘTଶ୪r. கதாசிரியர்கள் சிலர் கைக்கொள்ளும் முறையை அனுசரித்து இக்கதைகள் வெளிவந்த வருடங் களைக் குறிப்பிட்டிருக்கிறர் ஆசிரியர். இவற்றைக் கால அடைவில் வைத்து நோக்கி ஆசிரியரது மன வளர்ச்சி օԾԱյսյւծ հ%n) முதிர்ச்சியையும் கணிக்க இம்முறை ஓரளவு பயன்படும் எனலாம்.
இலக்கிய முதிர்ச்சியென்பது எப்பொழுதுமே ஏக பரிமாண வளர்ச்சியாய் இருக்கும் என்பதற்கில்ஜல. அவ்வாறு இருத்தல் வேண்டும் என்பது வரையறுத்த நியதியுமன்று. எத்தனையோ இலக்கிய கர்த்தாக்கள் பின்னடைதலைக்கூட நாம் காண்கின்ருேம். ஆயினும் திரு. ஞானசேகரத்தைப் பொறுத்தவரையில், மன விகசிப்பும் கலைமெருகும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் வளர்ச்சிபெற்று வந்துள்ளமை கண்கூடு. காட்டாக, சுமங்கலி (1964), என்ற கதையையும் கால தரிசனம் (1973 ) என்ற கதையையும் ஒப்பிட்டுப் பார்ப்போருக்குச் சிற்சில வளர்ச்சிக் கூறுகள் புலப்படா மற் போகா, எனினும் இப் படிமுறை வளர்ச்சியை அளவுக்கு மீறி அழுத்திக் கூற நான் விரும்பவில்லை. ஏனெனில், ஆசிரியர் அறிந்தோ அறியாமலோ, ஈழத்துத் தமிழிலக்கிய உலகில் ஏற்பட்டு வந்திருக்கும் மாற்றங்கள், வளர்ச்சிப் போக்குகள், கருத்தோட்டங்கள் ஆகியவற் ருற் பாதிக்கப்பட்டிருக்கிறர் என்பதும் நினைந்து கொள்ள வேண்டியது ஒன்ருகும்.
இத்தொகுதியை முழுமொத்தமாக நோக்கும் பொழுது பொதுவான சில அம்சங்கள் தெளிவாகத் தெரிகின்றன. அவற்றில் முனைப்பாய்த் தோன்றுவதும் தொனிப்பதும் சோக உணர்ச்சியாகும். துன்ப இயற் கைக் கோட்பாடு பெரும்பாலான கதைகளுக்கு ஓர் ஒருமைப்பாட்டை அளிக்கிறது. பிழைப்பு, சுமங்கலி, சங்கு சுட்டாலும், இப்படியும் ஒர் உறவு முதலிய கதைகளில் சோக உணர்ச்சியே அடிநாதமாய்க் கேட்கிறது:

vii
பிழைப்பு என்ற கதையில் பாத்திரம் ஒன்று பின்வரு மாறு கூறுகிறது. - *" என் மனம் சிறிது வேதனைப்பட்டது.
பாவம் இந்த இளம் வயதில் அவளுக்கு இவ்வளவு கொடுமையா ?
விதி யாரைத்தான் விட்டு வைத்தது . .
எனது கண்கள் குளமாகின.
அவளின் நிலைகண்ட எந்த மனித இதயமும் கலங்காமல் இருக்கமாட்டாது.”*
கற்பனைப் பாத்திரம் ஒன்றின் கூற்ருக இது இருப்பி னும், கதாசிரியரது வாழ்க்கைத் தத்துவத்துக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது எனக் கொள்வதில் தவறில்லை என்று எண்ணுகிறேன்.
வறுமையினல் ஒரு பெண் தன் உடலை விற்றுப் பிழைக்க முற்படும் அடிக்கருத்தை மையமாகக்கொண்ட பிழைப்பு என்னும் இக்கதை, இன்னெரு விதத்திலுங் குறிப்பிடத்தக்கதா யிருக்கிறது. புதுமைப்பித்தனி லிருந்து ஜெயகாந்தன்வரை, என்றுமுள்ள இப்பொரு ளைப் பல ஆசிரியர்கள் பல்வேறு கோணங்களிலிருந்து அணுகியுள்ளனர். புதுமைப்பித்தன் எழுதிய கவந்த னும் காமனும், வி. லோகநாதன் ( 'லோகு" ) எழுதிய சப்பிய மாங்கொட்டை என்ற சிறுகதைகளும், ** மஹா கவி' இயற்றிய சீெமாட்டி, விட்ட முதல் ஆகிய கவிதை களும் உடனடியாகவே என் நினைவுக்கு வருகின்றன. புதுமைப்பித்தனது கதையைப் படித்த அருட்டுணர்வில் ஆசிரியர் இக்கதையை எழுதியிருத்தல்கூடும் என்ற எண்ணத்தை ஏற்காது புறந்தள்ளுவது சிரமமாயிருக் கிறது.
என்ருலும், நோக்கிலும் போக்கிலும் இருகதைக
ளுக்குமிடையே பல நுணுக்க வேறுபாடுகள் இருப்பது வெளிப்படை, பிழைப்பு என்ற கதை வெளிப்படுத்திக்

Page 7
Viii
காட்டும் மிகையுணர்ச்சி, கதையின் அவலப்பொருளுக் குரிய கருத்தாழத்திற்குக் குந்தகம் செய்கிறது என்றே கூறவேண்டும். இதனுல் கதையில் மெய்ம்மையின் நாதம் குன்றியே ஒலிக்கிறது. எனினும் மொத்தத்தில் இத் தொகுதியிலுள்ள கதைகளிலே மிகையுணர்ச்சி மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இது இலக்கிய நலத் திற்கு உதவுகிற பண்பாகும். மேலும், இளம் எழுத் தாளர் பலரின் முற்பட்ட முயற்சிகளிலே எடுப்பாகத் தோன்றும் பின்பற்றும் இயல்பு, வார்த்தை ஜாலம், வீண் அலங்காரம், பகட்டுச் சமத்காரம், உத்திப்பித்து என்பனவும் இந்நூலாசிரியரிடத்துக் காணப்படாமை மகிழ்ச்சிக்குரிய தொன்ருகும். எளிமைநயமே இக்கதை களின் சிறப்பியல்பு எனலாம். கதைகளின் பிரதான பண்பாயுள்ள சோக உணர்ச்சிக்குச் செயற்கை அணி ஒப்பனைசெய்ய ஆசிரியர் முற்படவில்லை.
சோக உணர்ச்சியே சிறுகதையின் சிறப்பியல்பு என்றும் உயிர்நிலை என்றும் வற்புறுத்திக் கூறுவோர் பலர் இருக்கின்றனர். பிராங்க் ஓ’ கொனர் என்னும் பிரபல திறனய்வாளர், " சிறுகதை அமுக்கப்பட்ட தனி மனிதரின் குரலேயாகும் " என்று வரைவிலக்கணமே வகுத்தார். அந்த அளவில் இந்நூலாசிரியரது சோர்வு வாதத்தை ஒருவாறு விளங்கிக் கொள்ளலாம். ஆயினும் சிறுகதையிலே சோக உணர்ச்சிக்கு முதலிடம் அளிக்கும் வரைவிலக்கணத்தையோ, இலக்கியக் கோட் பாட்டையோ நாம் முடிந்த முடிபாகக் கருதவேண்டிய தில்லை. V
சோக உணர்ச்சி இக்கதைகளில் முனைப்பாக இடம் பெறுவதன் காரணமாகவும், காரியமாகவும் இவற் றிலே உளவியற் சார்பு சற்று மேம்பட்டுக் காணப் படுகிறது. இன்னுெரு விதத்தில் சொன்னல் கதா பாத்திரங்கள் வாழும் புறஉலகிலும் பார்க்க அப் பாத்திரங்களின் அக உலகையே ஆசிரியர் கூடுதலான ஈடுபாடுடனும், தன்னம்பிக்கையுடனும் சித்திரித்துள் ளார். பலி, இப்படியும் ஓர் உறவு ஆகிய இரு கதை

iX
களையும் எடுத்துக்கொண்டால், வள்ளி, வேலன், சிகப் பாயி, முனியாண்டி இவர்களின் அல்லலுக்கும் அவ திக்கும் அடிப்படை ஏதுவான சமுதாயப் பிரச்சினையைப் போதியளவு இணைத்துக் காணவும், காட்டவும் ஆசிரியர் தவறிவிட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது.
ஒரு சின்னப் பையன் அப்பாவாகிறன் என்னும் கதை ஆசிரியரது உளவியற் சார்புக்கு மட்டு மல் லா து மென்மையான விஷயங்களைக் கையாளும் போக்கிற்கும், திறமைக்கும் தக்க உதாரணமாய் உள்ளது. இக் கதை யைப் படித்தபொழுது என்னையறியாமலே, இலங்கையர் கோனின் மச்சாள், கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு அ. முத்துலிங்கத்தின் அக்கா என்பனவற்றை மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.
மண்வாசனை ‘ என்ற பதம் எமது எழுத்துலகத்தில் அடிக்கடி அடிபடுவதொன்று. பிறந்தமண் என்ற கதையிலே அப்பதம் குறித்து நிற்கும் உணர்வின் ஒரு துளியைக் காண்கிருேம் . மலையகத்திலே பணிபுரியும் ஆசிரியரது கதைகளிற் சில அப்பிரதேசத்தைக் கள மாகக் கொண்டிருப்பதில் வியப்பு எதுவுமில்லை. அப் பிரதேசத்து மண்வாசனையையும் தனது எழுத்தில் வடிக்க முற்பட்டமை பாராட்டுக்குரியது. கடந்த சில காலமாக அப்பிரதேசம் எமது எழுத்தாளர் பலரது கவனத்தை ஈர்த்திருப்பது மகிழ்ச்சிக்குரியதுமாகும்.
இறுதியாக கால தரிசனம் என்ற கதையைப் பற்றிச் சில வார்த்கைகள் :
முட்டுப்பட்ட குடும்பங்களிலுள்ள குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் படும் துன்ப துயரங்களை அடிக் கருத்தாகக் கொண்டு பல கதைகள் இழைக்கப்பட் டிருக்கின்றன. ஈழத்தில் எழுதப்பட்ட கதைகளுள் விசிறி (அழகு-சுப்பிரமணியம்), வாத்தியார் அழுதார் (வரதர்), கரும்பலகை (டொமினிக் ஜீவா), கல்வி (காவலூர் இராசதுரை,) ஒரு கிராமத்துப் பையன் கல்லூ

Page 8
Χ
ரிக்குச் செல்லுகிறன் (செ. கதிர்காமநாதன்) என்பன சிலருக்கு நினைவு வரலாம். கால தரிசனம் இவ் வரிசை யில் வருவது. மூர்த்தி ஐயர், முத்து, பரமகுரு ஆகிய மூன்று சிறுவர்களின் எண்ண அலைகளினூடாகச் சமுதாய மாற்றத்தைப்பற்றிச் சிந்திக்கும் படியில் அடியெடுத்து வைத்திருக்கிருர் ஆசிரியர். இது நம்பிக்கையூட்டும் அறிகுறியாகும் கால தரிசனம்" என்ற சொற்ருெடரைப் பிரக்ஞைபூர்வமாகவே ஆசிரியர் விரும்பித் தெரிந்தெடுத்துள்ளார் என எண்ணு கிறேன். இத்தகைய உணர்வுடனும் தெளிவுடனும் துணிவுடனும் ஆசிரியர் தொடர்ந்து பிரயாணத்தை மேற்கொண்டால் அவருக்கு மேலும் வெற்றிகள் கிட்டும் ள்ன்பதில் ஐயமில்லை.
29 42ஆவது ஒழுங்கை s. கைலாசபதி
கொழும்பு 6 V

என்னுரை
பத்தாண்டு காலமாக எழுதிவந்த கதைகளில், பெரும்பாலான நண்பர்களாலும் வாசகர்களாலும் பாராட்டப்பட்ட பன்னிரண்டு கதைகளை இத் தொகுதி யிலே சேர்த்திருக்கிறேன்.
இக் கதைத்தொகுதியை வாசிக்கப்போகும் அன்பர் களுக்கு முதலில் ஒரு வார்த்தை சொல்லிவைக்க விரும்புகிறேன். நீங்கள் நேரத்தைக் கழிப்பதற்காக இக் கதைகளை வாசிப்பதானுல் தயவுசெய்து இப்போதே புத்தகத்தை மூடிவைத்து விடுங்கள் : எனது கதைகள் பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்டவை அல்ல. இக் கதைகள் யாவும் சாதாரண மனிதர்களின் பிரச்சினை களை, அபிலாஷைகளை, ஆசாபாசங்களை, உள்ளப் போராட்டங்களை எடுத்துப் பேசுகின்றன.
எனது கதைகள் யாவும் ஏதாவதொரு வகையில் சமுதாயத்திற்கு நன்மை பயக்கவேண்டுமென் நான் விரும்புகிறேன். இதற்காகச் சமுதாயத்தின் ஏதாவ தொரு தளத்திலே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சாராரின் முகத்திலே ' படீரென அறைந்து விடுவது போல எதையோ எழுதியிருக்கிறேன் என்ருே அல்லது ஆங்காங்கே உங்களை நிறுத்தி வைத்து ° லெக்சர் " அடிப்பேன் என்ருே யாரும் அவசர முடிவுக்கு வர வேண்டாம்.
சிறுகதையில் சமுதாயப் பார்வை எவ்வளவு முக்கி யமோ அதேபோன்று யதார்த்தத்திற்குப் புறம்போகாத கதையம்சமும், கலையம்சமும் இருக்கவேண்டுமென்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. ஆழமான சமுதாயப் பார்வை யை வீசி, சொல்லவேண்டிய கருத்தை, முடிந்தவரை மிக நுட்பமாகவும் கலையழகுட னும் சொல்லியிருக்கிறேன்.
எனது கதைகளை வாசித்தவர்களிற் சிலர் மனந்
திறந்து பாராட்டினர்கள். சிலர் முகத்தைச் சுளித்துக் கொள்ளவும் செய்தனர்:

Page 9
x ii
"என்ன நீங்களா இப்படி எழுதுகிறீர்கள்? நீங்கள் இப்படியெல்லாம் எழுதலாமா ?’ என்று என்னைக் கேட்டவர்களுமுண்டு.
இவர்களுக்கு ஒன்றுமட்டும் சொல்வேன். எழுத் தாளன் எந்தத் தளத்தில் வாழ்பவன், எந்த வகுப்பைச் சேர்ந்தவன் என்றெல்லாம் பார்த்து அவனது படைப் புக்களை அளவிடக்கூடாது; அப்படி அளவிடுவது நேர்மை யான விமர்சனமும் ஆகாது.
நான் பார்த்ததை, கேட்டதை, அநுபவித்ததைத் தான் எனது கதைகளிலே வடித்திருக்கிறேன். எனது மனேதர்மத்திற்குப் புறம்பாக நான் எதையுமே எழுதுவ தில்லை; அப்படி எழுதி என்னை நானே ஏமாற்றிக் கொள்ளவும் முடியாது.
எனது முதற் கதை " " பிழைப்பு' கலைச்செல்வியில் வெளியாகியது. "உயிர்த்துணை’ என்ற கதை கலைமகளி லும், மற்றைய கதைகள் வீரகேசரி, தினகரன், ஈழநாடு, சிந்தாமணி, கதம்பம், கலசம் முதலிய பத்திரிகை களிலும் வெளிவந்தவை. அவ்வாசிரியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
எனது வேண்டுகோளை ஏற்று, சிரமத்தையும் பாராது இந்நூலுக்கு முன்னுரை தந்துதவிய கலாநிதி க. கைலாசபதி அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பா டுடையேன்.
எனது இலக்கியப் பணிக்கு உத்வேகம் அளித்த என் இனிய நண்பரும் எழுத்தாளருமான புலோலியூர் திரு. க. சதாசிவம் அவர்களையும் இவ்வேளையில் நினைவு கூர விரும்புகிறேன்.
இத் தொகுதியினை உருவாக்குவதற்கு ஊக்கமளித்த அன்பர் திரு. ஏ. ரி. பொன்னுத்துரை அவர்களுக்கும், அழகாக அட்டைப் படம் வரைந்து உதவிய f567 Lurio ‘ழரீகாந்திற்கும், குறுகிய காலத்தில் அச்சிட்டு உதவிய ருமகள் அழுத்தக அதிபர் திரு. மு. சபாரத்தினம் அவர்களுக்கும், அச்சக ஊழியர்களுக்கும் என் நன்றி என்றும் உரியது. ‘ராஜஸ்தானி" தி. ஞானசேகரன் புன்னுலைக்கட்டுவன்.

ஒளியைத் தேடி
நான் மட்டும் தனியாக இருக்கும் அந்த நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது. யன்னலின் திரையை நீக்கி வெளியே பார்க்கிறேன். நான் நினைத்தது போலவே புகையிலைத் தரகர் பொன்னம்பலந்தான் நின்றுகொண்டிருந்தார்.
கதவைத் திறக்காமலே அண்ணன் வீட்டிலில்லை என்பதை அவரிடம் கூறிவிடலாமா என ஒரு கணம் யோசிக்கிறேன். ஆணுலும் நான் அப்படிச் செய்யவில்லை.
பொன்னம்பலம் உள்ளே வந்து கதிரையில் உட்காரு கிருர். நான் அவருக்குத் தேநீர் தயாரிப்பதற்காகச் சமையல் அறைப்பக்கம் போகிறேன்.
பொன்னம்பலத்திடம் எல்லோரும் மரியாதையுடன் தான் பழகுவார்கள். அதற்குக் காரணம் அவர் தனது தொழிலிற் காட்டும் நேர்மையாகத்தான் இருக்க வேண்டும் ,

Page 10
ー2ー
பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு, நான் கல்லூரி மாணவியாக இருந்தபோது கண்ட பொன்னம் பலத்தின் இளமைத் தோற்றம் இன்றும் அப்படியே இருக்கிறது. அவர் அப்போதெல்லாம் adulumturrr விஷயமாக எங்கள் வீட்டுக்கு வருவார்: அப்பொழுது எங்கள் தந்தை உயிரோடு இருந்தார் : குடும்பமும் நல்ல நிலையில் இருந்தது:
அண்ணனுக்கு அரசாங்கத்தில் ஆசிரியத் தொழில் கிடைத்த பின்னர் தோட்டத்தைக் கவனிப்பதற்கு நேரம் இல்லாமற் போய்விட்டது. எங்களிடம் இப் போது விற்பனைக்குப் புகையிலைக் கன்றுகளும் இல்லை.
எங்களது தந்தை இறந்தபின்பு எங்களுக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களோ பல அப்போது பொன்னம்பலத் தான் எங்களுக்கு உதவியாக இருந்தார். அவர் ஒருவர் தான் இப்பொழுதும் எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிருர்.
அண்ணன் சிறிது நேரத்திற்கு முன்புதான் வெளியே சென்ருர், பொன்னம்பலம் அதனைக் கவனித்த பின்புதான் இங்கு வந்திருக்க வேண்டும்.
கடந்த சில நாட்களாகப் பொன்னம்பலம் என் னிடம் பழகும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனினும் நான் அதனை உணர்ந்து கொண்டவள்போல அவரிடம் காட்டிக்கொள்வதில்லை.
தேநீரைக் கிளாஸில் ஊற்றிப் பொன்னம்பலத்திடம் கொடுக்கிறேன். அதனை வாங்கும்போது அவருடைய கை எனது விரல்களிற் படுகிறது.
பொன்னம்பலம் சிரிக்கிருர். அவருடைய உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றத்தினலோ என்னவோ முகத்தில் அசடு வழிகிறது.
'பூமணி! நீ எவ்வளவு வடிவாய் இருக்கிருய் !"

- 3 -
பொன்னம்பலம் இப்படிக் கூறியதைக் கேட்க எனக்கு உள்ளூர ஆசையாக இருந்தாலும் ஏதோ ஒரு வித பயமும் இருக்கத்தான் செய்கிறது.
பொன்னம்பலம் எழுந்து நிற்கிருர், 'பூமணி 1 நான்.நான் உன்னை ஒண்டு கேட் கிறேன். நீ அண்ணனிட்டைச் சொல்லுவியோ?"
நாக்கு மேலே ஒட்டிக்கொண்டதுபோல அவரது குரல் தடுமாறுகிறது. உடல் சிறிது நடுங்குகிறது. அவர் சொல்லி முடித்ததும் எச்சிலை விழுங்குவது நன்ருகத் தெரிகிறது. அவரது முகம் மாறிவிட்டது.
அண்ணனிடம் சொல்லமாட்டேன் என்பதற்கு அடையாளமாக, நான் தலையை மட்டும் அசைக்கிறேன். அவர் கேட்கப்போவது என்ன என்பதை அறிய எனக்கு ஆவலாக இருக்கிறது.
அண்ணன் வருவது தூரத்தே தெரிகிறது .பொன்னம் பலம் சமாளித்துக்கொண்டு கதிரையில் உட்காருகிருர், நான் சமையல் அறைப்பக்கம் போகிறேன்.
அண்ணனும் பொன்னம்பலமும் முன் கூடத்திற் பேசிக்கொண்டிருக்கிருர்கள், பொன்னம்பலம் சிறிது காலமாக அண்ணனிடம் பேசுவதெல்லாம் எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டிய அவசியத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும்
அவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்பதற்கு எனக்குக் கொள்ளை ஆசை.
** பூமணிக்கு வயசு முப்பதாகுது. இனிமேலும் அவளுக்குக் கலியாணஞ் செய்து வைக்காமல் இருக் கிறது சரியில்லைத் தம்பி.”*
பொன்னம்பலம் அண்ணனிடம் கூறிய வார்த்தைகள் என் காதிலும் விழுகின்றன.
அண்ணன் மெளனமாக இருக்கிருர். அவரால் என்னதான் செய்யமுடியும் ?

Page 11
- 4 -
ஏழெட்டு வருடங்களாக எனக்குத் திருமணஞ் செய்து வைப்பதற்கு ஏருத வாசற் படிகளெல்லாம் ஏறியிறங்கி விட்டார். பலன்தான் கிட்டவில்லையே.
எனக்குப் பெரிய இடத்தில் கைநிறையச் சம்பளம் எடுக்கும் ஒரு தல்ல மாப்பிள்ளையைக் கட்டிவைக்க வேண்டுமென்பது அண்ணனுடைய விருப்பம் ,
நான் மணப் பருவம் எய்திய நாளிலிருந்தே அண்ணன் அதனை என்னிடம் அடிக்கடி கூறுவார். அதனுலேதான் என் மனதிலும் அந்த ஆசை வேரூன்றி விட்டதோ என்னவோ !
நான் பெரியவளாகிச் சில மாதங்களுக்குள் என்னைத் தனது மகனுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டு மென மாமா விரும்பினர். ஆனல் நான் அதனைத் துளி கூட விரும்பியதில்லை. எனது தோழி சுகுணு ஓர் என்ஜினியரைத் திருமணம்செய்து வாழ்க்கை நடத்து கிருள். நான் மட்டும் ஒரு கமக்காரனுக்கு வாழ்க்கைப் படுவதா ?
பெரிய இடங்களில் எனக்குத் திருமணம் பேசிய போதெல்லாம் அத்திருமணம் நடந்துவிடாதா என என் மனம் ஏங்குவதுண்டு. எனக்கு அழகில்லை என் முர்கள் சிலர், எங்களுடைய அந்தஸ்துப் போதாதென் ரூர்கள் வேறு சிலர். எங்களால் கொடுக்க முடியாத அளவு சீதனம் கேட்டுத் தட்டிக் கழித்தனர் பலர். இப் போது எனக்கு வயது அதிகமாகி விட்டது என்ற காரண மும் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது.
பேசுகிறவர்கள் எதையும் பேசிவிட்டுப் போகட்டும். எனக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கத்தான் போகிறது.
அன்று சுகுணு தனது கணவர் சந்திரனுடன் வந் திருந்தாள். அவளுடைய கணவனைப் போன்று அவ ளுடைய குழந்தையும் அழகாகத்தான் இருக்கிருன். முன் கூடத்தில் அண்ணனுடன் அவர்கள் பேசிக் கொண்

- S -
டிருக்கும்போது நான் மட்டும் சமையலறையில் அந்தக் குழந்தையுடன் கொஞ்சிக்கொண்டிருந்தேன்.
நானும் ஒரு நாள் சுகுணுவைப்போல ஒரு பெரிய உத்தியோகத்தரைக் கலியாணஞ் செய்வேன். எனக்கும் அழகான ஒரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தையை எப்பொழுதும் என்னிடம் வைத்துக் கொஞ்சுவேன்? அப்போது என் கணவர் தன்னிடம் எனக்கிருந்த அன்பு குறைந்து விட்டதென்று செல்லமாகக் குறைப்படுவார்.
நான் சுகுணுவின் குழந்தையை நெஞ்சோடுஅணைத்து அதன் கன்னங்களை மாறி மாறி முத்தமிடுகிறேன். குழந்தை கன்னங் குழியச் சிரிக்கிருன். அவனுடைய மிருதுவான கேசங்கள் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன.
குழந்தை தன் பிஞ்சுக் கரங்களால் என் மார்புச் சட்டையைப் பிடித்து இழுக்கிருன். கற்பனையில் எனக்கு ஏதேதோ ஆசைகள் எழுகின்றன. எனக்கு நாணமாக இருக்கிறது.
நான் வழுகியிருந்த மேலாடையைச் சரிப்படுத்து கிறேன்.
பால் கொடுக்கலாமென்ருல், பாற்காரன் காலந் தாழ்ந்தும் இன்னும் வரவில்லையே!
சுகுணு வந்து குழந்தைக்குப் பாலூட்டுகிருள். குழந்தை செய்யும் குறும்புத்தனங்களை எனக்குச் சொல்லும்போது அவளுக்குப் பெருமையாக இருக் கிறது. சுகுணுவைப்போல் நானும் என்றுதான் பெருமைப்படப் போகிறேனே ?
சுகுணுவின் பேச்சுத் திசை திரும்புகிறது. 'பூமணி! அண்ணர் உமக்கு எப்ப கலியாணஞ் செய்துவைக்கப் போகிருர் ??
** இப்ப என்ன அவசரம்? ஆறுதலாய்ச் செய்யிறது: கலியாணஞ் செய்தால் சுதந்திரமாய் இருக்கேலாது. குழந்தை குட்டியென்று பெரிய கரைச்சல்."

Page 12
- 6 -
சுகுணு சிரிக்கிருள். அவளும் இப்படித்தான் திருமணம் நிறைவேறு முன்பு சொல்லிக்கொண்டிருந் தாளா? அல்லது எனது ஆதங்கத்தைப் புரிந்துகொண் ug:QUE LLunir Gnr nr ?
சுகுணுவும் அவளது கணவரும் எங்களிடம் விடை பெற்றுக்கொண்டு போய்விட்டார்கள்.
அண்ணன் என்றுமில்லாத மகிழ்வுடன் இருக்கிருர், "" பூமணி! கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார். நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கிடைத்து விட்டது. சுகுணுவின் கணவன் சந்திரனுக்கு ஒரு தம்பி இருக்கிருணும், கொழும்பில் ஒரு " கம்பனி 'யில் Göගuශිy; கைநிறையச் சம்பளமும் கிடைக்கிறது. நானும் சந்திரனும் இதைப்பற்றித்தான் பேசிக்கொண் டிருந்தோம். அவர்களுக்கு இந்தச் சம்பந்தத்தில் நல்ல சந்தோஷம். வருகிற மாதமே திருமணத்தை நடத்தி விடவேண்டுமென்று சொல்கிருர்கள்."
அண்ணு இதனை என்னிடம் கூறும்போது உணர்ச்சி வசப்படுகிறர். ஆனந்த மிகுதியால் அவரது கண்கள் கலங்குகின்றன.
என்னுள்ளமும் மகிழ்ச்சியால் துள்ளுகிறது. என் னுடைய நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகின்றன. இன்னும் ஒருமாதத்தில் நான் ஒரு பெரிய உத்தியோகத் தரின் மனைவியாகி விடுவேன்.
அண்ணனிடம் எந்தப் பதிலையும் சொல்ல என்னுல் முடியவில்லை சமையல் அறைக்குள் ஓடிவிடவேண்டும் போல் இருக்கிறது: எனது மகிழ்ச்சியைக் கண்டுகொண் டால் அண்ணன் கேலி செய்வார். எனக்கு வெட்கமாக இருக்கும்.
எனக்குத் திருமணஞ் செய்துவைக்க அண்ணன் இவ்வளவு காலமும் எவ்வளவு கஷ்டப்பட்டார். இப் போது திருமணம் தானகவே வந்து கைகூடப் போகிறது: ஏதாவது காரணங்களால் இம்முறையும் என் திருமணம் குழம்பிவிடாமல் இருக்கவேண்டுமே.

- 7 -
" பூமணி, எங்கள் இருவருக்கும் ஒரே பந்தலில் திருமணம் நடக்கப்போகிறது. சந்திரனின் தங்கையைத் தான் நான் திருமணஞ் செய்யப்போகிறேன்."
"ஐயோ ! அண்ணு ' என்று அலற வேண்டும்போல இருக்கிறது. எனக்கு எல்லாமே ஒரே நொடியில் விளங்குகின்றன.
சந்திரனின் தங்கை ஒரு குருடி. எனக்கு வாழ் வளிப்பதற்காக ஒரு பிறவிக் குருடியை அண்ணன் திருமணஞ் செய்யப்போகிருர், அண்ணுவுக்கு முன்னல் என்னல் நிற்கமுடியவில்லை; நான் சமையல் அறைக்குள் ஒடுகிறேன்.
அண்ணன் சிரிக்கிருர், திருமணத்தைப்பற்றிச் சொன்னதும் எனக்கு வெட்கம் ஏற்பட்டுவிட்டதென நினைத்துச் சிரிக்கிருரா ? எனக்கு எல்லாமே மங்கலாகத் தெரிகின்றன.
இரவில் படுக்கும்போது தூக்கமே வருவதில்லை. என் தலையே வெடித்துவிடும்போல் இருக்கிறது.
அண்ணு எனக்குத் திருமணஞ் செய்துவைப்பதற் குப் பணம் வேண்டுமென்ற காரணத்தால், நான் பெரியவ ளாகியதும் நீ மேலே தொடர்ந்து படிக்காமல், உன் உயர்வைக் குறுக்கிக்கொண்டு ஊரிலேயே உத்தியோ கத்தில் அமர்ந்துகொண்டாய்.
உழைக்கத் தொடங்கியதும் உனது பணத்தில் உனக்காக ஒன்றும் செலவுசெய்யாது என் திருமணத்திற் காகப் பணத்தைச் சேர்த்து வைத்தாய்.
அழகான பெண்ணுடன் வசதியான வாழ்க்கையை உனக்கு அமைத்துத்தரப் பலர் முன்வந்தபோதும் எனது திருமணத்தின் பின்புதான் உனக்குத் திருமணம் என்று திடசித்தம் செய்துகொண்டாய்.
இப்போது எனக்காகக் குருட்டு வாழ்க்கை நடத்த வும் திட்டமிட்டு விட்டாயா?

Page 13
- 8 -
நான் இதற்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன். இந்தத் திருமணம் நடக்க ஒரு போதும் விடமாட் டேன். எனக்குத் தெரியும், நீ என் பேச்சைக் கேட்க மாட்டாய்.
எத்தனையோ இரக்கமற்ற இரவுகள் என்னைச் சித்திரவதை செய்கின்றன.
புகையிலைத் தரகர் பொன்னம்பலம் வழக்கம்போல எங்களது வீட்டுக்கு வந்துபோய்க்கொண்டுதான் இருக் &მლფf.
அன்ருெருநாள் தனிமையில் என்னிடம் கேட்கத் தயங்கியதை இன்று துணிவுடன் கேட்கிருர் . நான் அதற்குச் சம்மதிக்கிறேன். என் மனதில் என்றுமில்லாத சாந்தி நிலவுகிறது. عي விடிவதற்கு இன்னும் சிறிது நேரந்தான் இருக் கிறது: பொன்னம்பலம் எங்களது வீட்டு வாசலில் காருடன் எனக்காகக் காத்திருக்கிருர். அவர் மிகவும் நல்லவர் எனக்கு ஒரு குறையுமில்லாமற் காப் Lumibgpaunti .
அண்ணன் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக் Sagi.
"" அண்ணு ! உனக்கு மட்டுந்தான் தியாகம் செய்யத் தெரியுமென்று எண்ணுதே. நான் உன் தங்கை, எனக்கும் தியாகம் செய்யத் தெரியும், "
கலங்கும் கண்களால் மானசீகமாக அண்ணனிடம் விடை பெறுகிறேன்.
அண்ணன் நித்திரையில் புன்னகை பூக்கிருர். கீழ்வானம் சிவந்து ஒளிமயமாகத் தெரிகிறது. எங்கோ பறவைகள் இனிமையாகப் பாடுகின்றன,
விடிந்துவிட்டது:
(இலங்கை சாகித்திய மண்டலம் நடாத்திய அகில இலங்கைச் சிறு கதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை.

2
சங்கு சுட்டாலும். . .
பொன்னுத்துரை மாஸ்டர் தமிழ்ப் பாடசாலைக்கு மாற்றலாகி வந்த பின்னர் எங்களது கிராமத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
நான் சிறுவனக இருந்தபோது விளையாடித் திரிந்த செம்மண் புழுதி நிறைந்த பிள்ளையார் கோவில் வீதி, இப்போது அழகான தேரோடும் வீதியாக மாறி விட்டது. கோவிலின் வலதுபுறத்தில் இருந்த பனை வடலிகளை அழித்து, தூர்ந்துபோயிருந்த கேணியையும் நிரப்பிய பின்பு, அப்பகுதி இப்போது வெட்டை வெளி யாக அழகாகத் தெரிகிறது.
கோவிலின் முன் புறத்தில் தெருவோரமாக அடர்த்தியாக வளர்ந்திருந்த சவுக்க மரங்களையும் மகிழ மரங்களையும் தழுவிவரும் இதமான காற்று, பெயர் பெற்ற யாழ்ப்பாண வெயிலின் தகிப்பைத் தாங்க முடியாது தவித்துக்கொண்டிருக்கும் கிராமத்து மக்க

Page 14
- 10 -
ளுக்கு, எவ்வளவோ இன்பத்தைக் கொடுக்கும். மின் சாரக் கம்பங்கள் நாட்டுவதற்காக, அந்த அருமையான மரங்களில் சிலவற்றை இப்போது வெட்டிச் சாய்த்து விட்டார்கள். ஆனலும் அந்தச் சூழலில் தவழும் குளிர்மை இன்னும் குறையாமல் இருக்கிறது.
வழிப்போக்கர்கள் தங்கிச் செல்வதற்காகக் கட்டப் பட்டிருந்த அந்த மடம், எப்போதோ வாசிகசாலையாக மாற்றப்பட்டிருந்த போதிலும், இப்போது இன்னும் விஸ்தரிக்கப்பட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது.
நான்கைந்து வருடங்களுக் குள்ளாக இவ்வளவு மாற்றங்களும் நிகழ்ந்துவிட்டன. கொழும்பில் வேலை பார்க்கும் நான், ஒவ்வொரு தடவையும் கிராமத்துக்கு வரும்போது இந்த மாற்றங்களைப் படிப்படியாக அனு பவித்து மகிழ்ந்திருக்கிறேன்.
பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் பொன்னுத்துரை மாஸ்டர் எங்கள் கிராமத்துத் தமிழ்ப் பாடசாலையில் எனக்குத் தமிழ்ப் பாடஞ் சொல்லித் தந்திருக்கிருர், அதன், பின்னர் அரசினரால் வெளி யிடங்களுக்கு மாற்றஞ் செய்யப்பட்டு, அங்கெல்லாம் சேவை புரிந்துவிட்டு, மீண்டும் எங்கள் கிராமத்துப் பாட சாலைக்கே மாற்றலாகி வந்துவிட்டார். பொன்னுத்துரை மாஸ்டர் வெளியிடங்களுக்கு மாற்றலாகிப் போகா திருந்திருந்தால் எங்களது கிராமம் இன்னும் எவ்வளவோ சிறப்பான மாற்றங்களை அடைந்திருக்கும்:
எங்களது கிராமத்தின் இளஞ் சந்ததியினர் எல்லோ ருக்குமே பொன்னுத்துரை மாஸ்டரிடம் தனி மரியாதை யுண்டு. அதற்குக் காரணம், அநேக மாணவர்கள் அவரிடம் கல்வி கற்ருேம். அவரது உயர்ந்த கருத்துக் களினல் கவரப்பட்டிருக்கிருேம். சமூக நலனுக்காக அவரது வாழ்வின் பெரும்பகுதி அர்ப்பணமாகி வருவதை உணர்ந்திருக்கிருேம்.
பொன்னுத்துரை மாஸ்டரின் எளிமையான தோற்றமே எல்லோரையும் இலகுவில் கவர்ந்துவிடும்.

பாடசாலைக்குப் போகும் நேரங்களைத் தவிர மற்ற நேரத்தில் அரையில் ஒரு நாலுமுழ வேட்டியுடனும் தோளில் ஒரு சால்வையுடனுந் தான் அவரைப் பார்க் கலாம். அவரது கரிய தோற்றத்தில் பளிச்சென்று தெரியும் திருநீற்றுப் பூச்சும், நெற்றியில் எப்போதும் துலங்கிக்கொண்டிருக்கும் சந்தனப் பொட்டும், எவரை யும் வசீகரிக்கும் புன்னகையும், அவரை அறிந்துகொள் ளாதவர்களைக்கூட அவரிடம் பணிந்து நடக்க வைத்து விடும்.
பொன்னுத்துரை மாஸ்டருக்கு வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். திருமணமாகவில்லை. தனியாகத்தான் வாழ்ந்து வருகிருர். சமூக சேவையிலும், ஆத்மீகத் துறையிலும் தனது வாழ்வின் பெரும் பகுதியைச் செலவழித்ததனுலேதான் அவருக்குத் திருமணஞ் செய் வதில் நாட்டம் ஏற்படவில்லையோவென நான் அடிக்கடி எண்ணுவதுண்டு .
கிராமத்துக்கு வரும்போதெல்லாம் பொன்னுத்
துரை மாஸ்டரைச் சந்திக்காமல் நான் கொழும்புக்குத் திரும்புவதில்லை. அவரைப் பார்த்துச் சிறிது நேரம் உரையாடாமல் இருந்துவிட்டால் என் மனதில் நிறைவு ஏற்படுவதில்லை.
பொன்னுத்துரை மாஸ்டரை மாலை வேளைகளில் அநேகமாக வாசிகசாலையில் அல்லது கோவிலின் சுற் ருடலில் பார்க்கலாம். இந்தத் தடவை நான் கிராமத் துக்கு வந்தபோது பொன்னுத்துரை மாஸ்டரைப் பல இடங்களில் தேடியும் சந்திக்க முடியவில்லை.
பிள்ளையார் கோவில் குருக்களிடம் பொன்னுத்துரை மாஸ்டரைப் பற்றி விசாரித்தபோது, அவர் வெறுப் போடு கூறிய பதில் என்னைத் திடுக்கிட வைத்து விட்டது.
பொன்னுத்துரை மாஸ்டர் சம்சாரியாகிவிட்டா
ராம். அவருக்குப் பொது விஷயங்களில் ஈடுபடுவதற்கு இப்போது நேரம் இருப்பதில்லையாம். குருக்கள் ஏனே

Page 15
- 2 -
பொன்னுத்துரை மாஸ்டரைப் பற்றிய விபரங்களைத் தொடர்ந்து கூறுவதற்கு விரும்பவில்லை.
என் மனதில் அந்தரம் புகுந்துகொண்டுவிட்டது. என்னல் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பொன்னுத் துரை மாஸ்டருக்கு என்ன நடந்துவிட்டது?
வாசிகசாலையிலிருந்து சீட்டு விளையாடிக்கொண்டு, வாசிப்பவர்களுக்குத் தங்களால் கஷ்டம் ஏற்படுமே என்பதையும் நினைத்துப் பாராமல் பெரிதாகச் சத்தம் செய்துகொண்டு, வாசிகசாலையின் ஒழுங்குகளையும் மீறிப் பீடி புகைத்துக்கொண்டு, சதா ஊர்வம்பு பேசி மற்ற வர்களைக் கேலியும் கிண்டலுஞ் செய்துகொண்டு காலங் கடத்திவரும் கூட்டமொன்று எங்கள் ஊரில் இருக் கிறது.
நான் வாசிகசாலையை அடைந்தபோது, நானும் பொன்னுத்துரை மாஸ்டரிடம் நன்மதிப்பு வைத்திருப் பவன் என்ற காரணத்தினலோ ஏனே அவர்கள் பொன்னுத்துரை மாஸ்டரைப் பற்றிக் கதைக்கத் தொடங்கினர்கள்.
* கிழட்டு வயசிலும் பொன்னுத்துரை வாத்தியா ருக்குக் கலியாணம் !"
** இந்தக் காலத்திலை யாரைத்தான் நம்புகிறது!"
' பென்ஷன் எடுக்கிற வயசிலும் ஒரு கலியா 67 GBL DIT?””
*இதுவும் அவருடைய "சோஷல்சேர்வீஸ்' தான்.”
பொன்னுத்துரை மாஸ்டரைப்பற்றி அவர்கள் தொடர்ந்தும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
தீப்பந்தம் ஒன்றை எடுத்து எனது உடலில் மாறி மாறிச் சுடுவதைப்போன்று, அவர்கள் சொற்களால் என்னை வதைத்தார்கள். என்னல் தொடர்ந்து அவர்க

13 -س--
ளது பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டு இருக்க முடிய வில்லை. எனது உடலெல்லாம் எரிச்சல் எடுப்பதைப் போலிருந்தது. உடனே எழுந்து வந்துவிட்டேன்.
பொன்னுத்துரை மாஸ்டரைச் சந்தித்து, “ இப்படி யெல்லாம் மற்றவர்கள் கேவலம் பண்ணும்படி ஏன் நடந்துகொண்டீர்கள்?" என அவரிடம் கேட்க வேண்டு மென்ற வேகம் என்னுள் துளிர்த்தெழுந்தது.
பொன்னுத்துரை மாஸ்டரின் வீட்டை நான் அடைந்தபோது, வெளி விருந்தையிலே கிடந்த, "ஈசிச் செயரில் " அவர் சாய்ந்திருந்தார். என்னைக் கண்டதும் வழமையான புன்னகையோடு ' வா தம்பி, இப்படி உட்கார் "" என வரவேற்ருர்,
அவரை நான் கூர்ந்து கவனித்தேன். அவர் என்னைப் புன்னகையோடு வரவேற்றபோதும், அந்தப் புன்னகை யில் நிறைவைக் காணமுடியவில்லை. இரண்டு மாதங் களுக்கு முன்பு பார்த்ததைவிட, அவர் இந்தத் தடவை மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். அவரிடம் வழக்க மாக இருக்கும் கம்பீரமும் கலகலப்பும் எங்கோ மறைந்து விட்டன. நல்ல எண்ணங்களையும், நல்ல செயல்களையும் மனிதன் மறந்து விடும்போது எல்லாவற்றையுமே இழந்து விடுகிருஞ ?
எப்படிப் பொன்னுத்துரை மாஸ்டரிடம் பேச்சைத் தொடங்குவது என யோசித்துக் கொண்டிருந்த வேளை யில், அவராகவே கதைக்கத் தொடங்கினர்.
** நான் திருமணம் செய்துவிட்டேன் என்பதைக் கேள்விப்பட்ட பின்புதான், நீ இங்கு வந்திருக்கிருய் என்பது எனக்குத் தெரியும். இது எனது சொந்த் விஷயம். இதில் தலையிடுவதற்கு யாருக்குமே உரிமை கிடையாது. மற்றவர்கள் எனது விஷயங்களில் தலையிடு வதை நான் ஒருபோதும் விரும்பமாட்டேன்.""
தொடக்கத்திலேயே எனக்கு வாய்ப்பூட்டுப் போடு கின்ருரா?

Page 16
- 14 -
"சொந்த விஷயமாக இருந்தாலும், சமூகம் ஏற்றுக் கொள்ளாத ஒரு செயலைப் புரியும்போது, பலமுறை சிந்திக்கவேண்டுமென நீங்கள்தானே அடிக்கடி கூறு வீர்கள்.”*
அவர் செய்தது எனக்குப் பிடிக்கவில்லை என்பதனை நாகுக்காக அவர் அறியும்படி செய்தேன்.
அப்போது வீட்டின் உள்ளே இருந்து ஒரு பெண் எனக்கும், மாஸ்டருக்கும் தேநீர் கொண்டுவந்தாள்.
யாரது தேவகியக்காளா? - நான் அதிர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டேன். தேவகியக் காளையா பொன்னுத் துரை மாஸ்டர் திருமணஞ் செய்திருக்கிருர்?
தேவகியக்காள் புன் ன கையுடன் தேநீரைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
நான் சிறுவனுக இருந்தபோது எனது மனதிலே பெருந் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சியொன்று, தேவகியக்காளைப் பார்த்ததும் எனது மனதில் உறுத் தத் தொடங்கியது.
எனக்கு அப்போது பத்து வயதுதான் இருக்கலாம். தேவகியக்காளின் வீடு எங்களது வீட்டிலிருந்து கொஞ்சத் தூரத்திலேதான் இருக்கிறது. நான் அடிக்கடி தேவகி யக்காளிடம் செல்வதுண்டு. தேவகியக்காளும் அவளது தாயும் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். தேவகியக் காளின் தந்தை வெகு காலத்துக்கு முன்பே இறந்துவிட்டாராம். அவர்களுக்கு வேறு யாருமே துணை யில்லை.
அப்போது தேவகியக்காளுக்குத் திருமண ஏற் பாடுகள் நடந்துகொண்டிருந்தன. தேவகியக்காளின் சொந்த மச்சான் தேவகியக் காளைத் திருமணஞ் செய்வ தாக இருந்தார். திருமணத்திற்கு ஒரு மாதம் இருக்கை யிலேயே அவர்கள் அதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தார்கள். தேவகியக்காளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தாள்.

- 15 -
ஆனல் சிறிது நாட்களில் நிலைமை மாறிவிட்டது. நான் தேவகியக் காளிடம் சென்றபோது அவள் அழுது கொண்டிருந்தாள். தேவகியக்காள் அழுவதைப் பார்த்த போது நானும் கலங்கி விட்டேன்.
தேவகியக்காளைத் திருமணம் செய்வதாக இருந்த அவளது மச்சான், கடைசி நேரத்தில் மறுத்துவிட்டா ராம். அவருக்கு வேறு இடத்தில் நல்ல சீதனம் கொடுக்க யாரோ முன்வந்ததினுல், அத்திருமணம் தடைப்பட்டு விட்டது. தேவகியக் காளுக்குச் சீதனம் கொடுப்பதற்கு அவர்களிடம் எதுவுமே இல்லை;
அதன் பின்னர் பல வருடங்களாக எத்தனையோ இடங்களில் தேவகியக்காளுக்குத் திருமணம் பேசி ஞர்கள். அப்போதெல்லாம் சீதனம் ஒரு பெரும் பிரச் சனையாக இருந்ததால், தேவகியக்காளுக்குத் திருமணம் நிடக்காமல் போய்விட்டது.
தேவகியக்காளுக்கு வயது ஏறிக்கொண்டிருந்தது. அவளது தாயும் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் சாய்ந்துவிட்டாள்.
எனக்கு உத்தியோகம் கிடைத்த பின்னர், நான் வெளியிடங்களிலேயே காலத்தைக் கழித்ததினுல் தேவகி யக்காளைப்பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை. அவளைப் பற்றிய நினைவுகளும் படிப்படியாக எனது நினைவிலிருந்து அகன்றுவிட்டன.
இன்றுதான் திடீரெனப் பொன்னுத்துரை மாஸ்ட ரின் வீட்டில், வெகுகாலத்துக்குப் பின் தேவகியக்காளை மீண்டும் பார்க்கிறேன்.
பொன்னுத்துரை மாஸ்டரின் செருமல் சத்தம் என் நினைவுகளைத் தடை செய்கிறது.
‘'தேவகிக்குத் துணையாக இருந்த அவளது தாயும் இறந்துவிட்டாள். அனதையாகிவிட்ட ஓர் ஏழைக்குஇனிமேல் வாழ்வே கிடைக்கப்போவதில்லை என்றிருந்த ஒரு பெண்ணுக்கு-நான் வாழ்வளித்திருக்கிறேன். இதை நீயும் தவறென்று சொல்லுகிருயா?"

Page 17
- 16 -
நான் ஒரு கணம் சிந்தித்தேன். எனது மனம் அவர் செய்ததைச் சரியென ஒப்புக்கொள்ள மறுத்தது.
*" வயது சென்ற உங்களைத் திருமணம் செய்து கொள்வதால், ஒர் இளம்பெண் என்ன வாழ்க்கையை அனுபவித்துவிடப்போகிருள்? " - என்னையும் மீறி, நான் வார்த்தைகளைக் கொட்டிவிட்டேன்.
*" என்னுல் அவளுக்கு எவ்விதமான இன்பவாழ்க்கை யையும் கொடுக்கமுடியாது என்பது உண்மைதான். அவளை நான் பதிவுத் திருமணம் மட்டுந்தான் செய்தி ருக்கிறேன். சட்டத்தின்படி அவள் என் மனைவி. சட்டத்தைத் தவிர்ந்த எவ்வகையிலும் அவள் எனக்கு மனைவியாகவில்லை. எனக்கொரு துணையாகத்தான் இருக்கிருள்."
மென்மையான மலர்ச் செடியை நடுவில் வைத்து, அதனைச் சுற்றிச் சட்டமென்ற தீப்பிழம்பினல் வட்டமாக வரம்பு கட்டியிருக்கிருரா பொன்னுத்துரை மாஸ்டர் ? என்னுல் எதுவுமே பேசமுடியவில்லை; தொடர்ந்தும் பொன்னுத்துரை மாஸ்டர்தான் பேசினர்.
"" எனது வயிற்றில் வெகு காலமாக இருந்துவந்த நோயைச் சிறிது காலத்துக்கு முன்புதான் புற்றுநோய் எனக் கண்டிருக்கிருர்கள் வைத்தியர்கள். நோய் நன்முக முற்றி உடலெங்கும் பரவிவிட்டதாம் . புற்று நோயைக் குணப்படுத்த முடியாது என்பது எனக்குத் தெரியும். -2.698)th ... ... . . . . . . . .''
ஐயோ, எவ்வளவு கொடூரத்தனமாக ஒரு பெண்ணின் வாழ்வோடு இவர் விளையாடியிருக்கிருர்? வாழ்வின் இறுதிக் காலத்தில் திருமணஞ் செய்து, ஒரு பெண்ணின் வாழ்வையே கருகச் செய்ய வேண்டுமா?
நான் இருந்த இடத்தில் ஆயிரம் ஈட்டிகள் ஒரே சமயத்தில் திடீரென முளைத்துக் கழுவாய்களாக என்னைத் துளைப்பதுபோல் இருந்தது: என்னல் அங்கு இருக்க முடியவில்லை எழுந்துவிட்டேன்.

- 17 -
எனது தவிப்பைக் கண்டதும் பொன்னுத்துரை மாஸ்டர் என்னை அமைதியாக இருக்கும்படி கைகளி ணுல் சைகை காட்டிவிட்டு, மேசையில் இருந்த தேநீரை எடுத்து மிகவும் சாவதானமாகப் பருகினர்.
எனக்கு வைக்கப்பட்டிருந்த தேநீர் ஆறிக்கிடந்தது.
** நன்ருகச் சிந்தித்த பின்தான் நான் தேவகியைத் திருமணஞ் செய்திருக்கிறேன். இன்று நான் செய்ததைத் தவறெனக் கருதுபவர்கள் யாருமே ஏழ்மை நிலையில் அனதரவாகிவிட்ட அவளது வாழ்வை மலரச் செய்ய எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. யாரும் எதையும் இலகுவாகக் கதைத்து விடலாம். ஆனல் எதையும் சாதனையிற் காட்டுவதுதான் கடினமானது.
" சட்டத்தின்படி தேவகி எனது மனைவி. நான் இறந்த பின்னர், அரசாங்கத்தினுல் வழங்கப்படும் பென்ஷன் பணம் அவளுக்குக் கிடைத்துக்கொண்டே யிருக்கும். எனது வாழ்க்கை முடிந்த பின்னரும் அவள் சீவிப்பதற்கு வழியமைத்துக் கொடுப்பதற்காகத்தான் தேவகியைச் சட்டத்தினுல் எனது மனைவியாக்கிக் கொண்டேன். வாழ வழியற்ற ஓர் இளம் பெண்ணுக்கு இந்த ஏழை வாத்தியாரால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லையே.* பொன்னுத்துரை மாஸ்டரின் கண் களில் நீர் பளபளத்தது.
நான் பதில் ஏதும் கூறமுடியாமற் கண்களை மூடிக் கொண்டேன். திடீரெனப் பொன்னுத்துரை மாஸ்டரின் உருவம் பெரிது பெரிதாகிக்கொண்டே வந்து, அந்த அறைமுழுவதும் நிறைந்து, அதற்கப்பாலும் பெருகி எங்கும் வியாபித்தது போன்று என் மனக்கண்களுக்குத் தோன்றியது.
-- seeb 972

Page 18
ஒரு சின்னப் பையன் அப்பாவாகிருன்
இரவு எட்டு மணியாகிவிட்டால் எனக்கு நித்திரை வந்துவிடும். சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுவேன். இன் றைக்கு நான் இன்னும் படுக்கைக்குப் போகவில்லை. கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் மணி ஒன்பது அடித் தது. எனக்கு நித்திரை வரவில்லை. கொழும்பிலிருந்து யாழ்தேவி றெயிலில் அக்கா வருவா. அவவுடன் அத்தா னும் வருவார். அக்காவைப் பார்க்கிறதுக்கு எனக்கு ஆசையாக இருக்கிறது. போன வருஷந்தான் அத்தான் அக்காவைக் கலியாணஞ்செய்து கொழும்புக்குக் கூட்டிக் கொண்டு போனவர். அத் தானுக்குக் கொழும்பிலை தான் வேலை. அக்காவுக்கு என்னிடம் நல்ல விருப்பம். கலியாணஞ் செய்யிறதுக்கு முன்னம், அக்கா எனக்கு ஒவ்வொரு நாளும் குளிக்க வாத்துவிடுவா. தலை சீவி விடுவா, இரவில் பாடமுஞ் சொல்லித் தருவா .

-س- 19 --
அண்ணன் மார் இரண்டு பேரும் " போர்டிங் "கிலை இருந்து படிக்கினம். அவையளை எனக்குப் பிடிக்காது. அவையஞக்கு என்னுடைய தலையிலை நோகக் கூடிய தாகக் குட்டத்தான் தெரியும். வேறையொண்டுந் தெரி யாது. அப்பாவுக்கும் கொழும்பிலைதான் வேலை. நான் வீட்டிலை கடைக்குட்டி. அதனுல் எனக்குக் கொஞ்சம் செல்லம்.
அக்கா கொழும்புக்குப் போனபிறகு அவவின் எண்ணம் எனக்கு அடிக்கடி வரும். அக்காவை உடனே பார்க்கவேணும் போல இருக்கும். அக்கா கொழும்பி லிருந்து அடிக்கடி வீட்டுக்குக் கடுதாசி எழுதுவா. அதை நான் எழுத்துக் கூட்டி வாசிப்பேன். அதை வாசிக்கிற பொழுது எனக்குச் சந்தோஷமாக இருக்கும். அக்கா மிச்சம் நல்லவ. நான் குழப்படி செய்தாலும் ஒருநாளும் அடிக்கிறது இல்லை. நான் கொஞ்சம் குழப்படிதான். ஆணுல் அக்கா சொன்னல் கேட்டு நடப்பன். எந்தக் குழப்படியும் செய்யமாட்டன்.
வீட்டுப் படலையடியில் கார் வந்து நிற்கிறது. ** அம்மா. அம்மா. அக்கா வந்திட்டா " " என்று கூவிக் கொண்டு சந்தோஷத்துடன் துள்ளிக் குதித்துப் படலை யடிக்கு ஓடுகிறேன். மற்ற நாட்களில் இருட்டிவிட்டால் நான் வீட்டுக்கு வெளியே வரவும் மாட்டேன். இருட் டைக் கண்டால் எனக்குச் சரியான பயம்.
அம்மா அரிக்கன் லாந்தரை எடுத்துக்கொண்டு எனக்குப் பின்னல் வருகிரு. அக்காவும் அத்தானும் காரில் இருந்து இறங்குகிருர்கள். எனக்கு அக்காவின் கையைப் பிடித்துக்கொண்டு துள்ள வேண்டும்போல் இருக்கிறது. அக்கா கையில் ஏதோ பார்சல் வைத் திருக்கிரு. அதனல் அக்காவின் கையை நான் பிடிக்க வில்லை. பார்சலில் என்ன இருக்குமென்று எனக்குத் தெரியும் சொக்கிலேட், பிஸ்கட், இனிப்பு எல்லாந் தான் இருக்கும். அக்கா எனக்கு ஏதும் விளையாட்டுச் சாமான்களும் கொண்டு வந்திருப்பா.

Page 19
- 20 -
** இண்டைக்கு றெயிலிலை சரியான சணம். இருக்கிற துக்கும் இடம் கிடைக்கேல்லை." அம்மாவிடந்தான் அக்கா சொல்லுகிரு. அத்தான் கார்க்காரனுக்குக் காசைக் கொடுத்துவிட்டுச் சூட்கேசையும் தூக்கிக் கொண்டு நடக்கிருர், நானும் அவர்களுக்குப் பின்னல் நடக்கிறேன்.
அக்கா என்னுேடை ஏன் கதைக்கவில்லை? இருட்டில் நான் நிற்கிறதைக் கவனிக்கவில்லையோ? அக்காவுக்குத் தெரியும்படியாக முன்னுக்குப் போகிறேன். அக்கா இப்பவும் என்னேடை கதைக்கவில்லை. அக்கா பாவம், றெயிலில் வந்தபடியால் சரியான களைப்புப்போல இருக்கு. அக்காவைச் சுமக்கவிடக்கூடாது. கையில் இருக் கும் பார்சலை வாங்கிக்கொள்வதற்காக நான் கையை நீட்டுகிறேன். அக்கா ஒன்றும் பேசாமல் பார்சலைக் கொடுக்கிரு.
வீட்டுக்கு வந்ததும் அத்தான் தன் சூட்கேசை மேசையில் வைக்கிருர் . நானும் பார்சலை அதற்குப் பக் கத்தில் வைக்கிறேன். அக்கா அதையெல்லாம் எடுத்துக் கொண்டு அறைக்குள் போகிரு. அத்தானும் அக்கா வுக்குப் பின்னல் போகிருர், இரண்டு பேரும் உடுப்பை மாற்றிக்கொண்டு முகம் கழுவுவதற்குக் கிணற்றடிக்குப் போகிருர்கள்.
அக்காவும் அத்தானும் முகம் கழுவிக்கொண்டு வந்த பிறகு சாப்பிட உட்காருகிறர்கள். நானும் அவர்க ளோடு உட்காருகிறேன். அம்மா எல்லோருக்கும் சாப் பாடு போடுகிரு.
அக்கா ஏதோ கொழும்புப் புதினங்களை யெல்லாம் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு சாப்பிடுகிரு. அத்தா னும் ஏதோவெல்லாம் சொல்லுகிருர், அம்மா ஊர்ப் புதினங்களைச் சொல்லுகிரு.
முருங்கைக்காய்க் கறியென்ருல் அத்தானுக்கு நல்ல விருப்பமாம். அத்தானுக்குக் கொஞ்சம் முருங்கைக் காய்க் கறி போடும்படி அக்கா சொல்லுகிரு. அம்மா அத்தானுக்கு நிறைய முருங்கைக்காய்க் கறி போடுகிரு.

அவர்கள் கதைப்பதையெல்லாம் கேட்டுக்கொண்டு நான் சாப்பிடுகிறேன். அக்காவின் முகத்தை அடிக்கடி ஆசையோடு நிமிர்ந்து பார்க்கிறேன். அக்கா என்னைப் பார்க்கவில்லை. என்னுடன் ஒரு கதையும் பேசவில்லை. அக்கா அத்தானைத்தான் கவனித்துக்கொள்ளுகிரு.
அத்தானும் அக்காவும் சாப்பிட்டு முடிந்ததும் கைகழுவப் போய்விட்டார்கள். நான் இன்னும் கோப் பையில் இருந்த அரைவாசிச் சோற்றைக்கூடச் சாப் பிடவில்லை. என்னுல் சாப்பிட முடியவில்லை. அக்கா என்னுடன் ஏன் கதைக்கவில்லை ? சாப்பாடு தொண் டைக்குக் கீழே இறங்குவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. கலியாணம் முடிச்சபிறகு அக்கா எவ்வளவோ மாறி விட்டா. அவவுக்கு அத்தான்தான் பெரிசாப் போச்சு, எனக்குக் கண்கள் கலங்குகின்றன. அழுகை வந்துவிடும் போல் இருக்கிறது.
*" ஏனடா மணி, மிளகாயைக் கடிச்சுப்போட்டியே ? தண்ணியைக் குடி, "" என்று சொல்லி அம்மா மூக்குப் பேணியுடன் தண்ணீரை எனக்கு முன்னுல் வைக்கிரு. நான் " மடக் மடக் "கென்று தண்ணியைக் குடிச்சிட்டுச் சோற்றைக் கையால் அளைந்தபடி இருக்கிறேன்.
அக்காவும் அத்தானும் பாயை எடுத்துக்கொண்டு அறைக்குள் போகிருர்கள்; அக்கா அறைக் கதவைச் சாத்திரு.
எனக்குப் புரையேறுகிறது. முந்தியென்ருல் அக்கா என்னுடன்தான் படுப்பா. இப்ப அத்தானைக் கலியாணஞ் செய்தபிறகு அறைக்குள் படுப்பதற்குப் போகிரு. இண்டைக்கென்றலும் நான் அக்காவுடன் படுக்கலா மெண்டு ஆசையோடு இருந்தேன்: அக்காவுக்கு இப்ப நான் ஒருத்தன் இருக்கிறன் என்ற நினைப்பே இல்லைப் போல இருக்கு.
எல்லாம் இந்த அத்தான் வந்த பிறகுதான் அக்கா இப்படி மாறிவிட்டா. அத்தானின் மேல் எனக்குக்

Page 20
----- 22 حس۔
கோபங் கோபமாக வருகிறது. அவருக்குப் பெரிய நடப்பு. ஏன் இண்டைக்கெண்டாலும் அக்காவை என் னேடு படுக்கவிட்டால் என்ன ?
எனக்குக் கண்ணிலே நீர் முட்டிவிட்டது. கன்னத் திலே வழிந்துவிடும்போல இருக்கிறது. அம்மாவுக்குத் தெரியாமல் கோப்பையுடன் சோற்றை வெளியே எடுத்துக்கொண்டு போகிறேன். வெளியே இருட்டாகத் தான் இருக்கிறது. எனக்குப் பயம் வரவில்லை. ஏன் நான் பயப்பிடவேணும்? அம்மாவுக்குத் தெரியாமல் சோற்றை எறிந்துவிடவேணும். அம்மா கண்டால் ஏச்சுத்தான் கிடைக்கும்.
எங்கோ வெளியில் படுத்திருந்த எங்களுடைய நாய் பப்பி, இப்போது என்னுடன் விளையாட வருகிறது. தனது முன்னங் கால்களைத் தூக்கி என்மேல் வைத்துக் கொண்டு செல்லங் கொட்டுகிறது.
"சீ சனியன் இந்த நேரத்திலைதான் இவருக்கு
என்னுேடை விளையாட்டு '-நான் சினத்துடன் பப்பி
யைக் காலால் உதைக்கிறேன். அது "வாள் வாள்" என்று கத்திக்கொண்டு ஒப்பாரி வைக்கிறது.
** இந்த மூதேவி ஏன் இப்படிக் கத்துகிறது? நான் மெல்லவாய்த்தானே தட்டினனன். ஏதோ கால் முறிஞ்சுபோன மாதிரியெல்லே சத்தம் போடுது.' நான் அம்மாவுக்குக் கேட்கக் கூடியதாகக் கூறுகிறேன்:
சோற்றை வெளியே வீசிவிட்டுக் கையைக் கழுவு கிறேன்.
எனக்கு நித்திரை வரவில்லை. பாயில் படுத்திருந்து ஒருவருக்குந் தெரியாமல் அழுகிறேன். நாளைக்கு அக்கா என்னுேடை கதைச்சாலும் நான் அவவோடை கதைக்க மாட்டன். அவவுக்கு இப்ப பெரிய எண்ணம். கலியாணம் முடிச்சபிறகு கண்கடை தெரியேல்லை. அவ என்னேடை கதைக்காட்டில் எனக்கென்ன ? எனக் கொண்டும் குறையமாட்டுது.

- 23 -
எனக்கு எப்ப நித்திரை வந்ததோ தெரியாது காலையில் எழுந்திருக்கிறதுக்கு நேரமாகிவிட்டது.
** மணி! மேசையிலை உனக்கு பிஸ்கட் வைச்சிருக் சிறன் எடுத்துத் தின் " அக்காதான் சொல்லுகிரு.
நான் கேட்காதவன் போல அந்த இடத்தைவிட்டு நழுவுகிறேன். அவ கொண்டுவந்த பிஸ்கட் எனக்குத் தேவையில்லை.
அடுத்த வீட்டு ராணி விளையாடுவதற்கு வந்திருக் ருள். ராணியுடன் அவளுடைய சின்னத் தம்பியும் ந்திருக்கிருன். நானும் ராணியுந்தான் விளையாடு வாம். ராணியுடைய தம்பிக்கு விளையாடத் தெரியாது. ாங்கள் வீடுகட்டி விளையாடினுல் அதைஉடைக்கத்தான் தரியும் நாங்கள் மண்ணில் சோறு கறி சமைச்சுக் காடுத்தால் அதைச் சாப்பிடவுந் தெரியாது. சும்மா துகொண்டு எங்களை விளையாடவிடாமல் குழப்பத் தான் தெரியும். விளையாட வருகிறபோது தம்பியைக் கூட்டிக்கொண்டு வரவேண்டா மென்று ராணியிடம் *ொன்னுல் அவள் கேட்கமாட்டாள். ஒவ்வொரு
ம் கூட்டிக்கொண்டுதான் வருவாள்.
நானும் ராணியும் அப்பா அம்மா விளையாட்டு விளயாடிக்கொண்டு இருக்கிருேம். நான் அப்பா ராணி தான் அம்மா. அவள் மூன்று கற்களை எடுத்து அடுப்பு மாதிரி வைக்கிருள். அந்தக் கற்களின்மேல் ஒரு சிரட்டையை வைத்து அதற்குள் தண்ணீரை ஊற்று கிருள். அடுப்பில் பானையை வைத்துத் தண்ணிர் ஊற்றி யாகிவிட்டது. உலையிலே போடுவதற்கு நான்தான் அரிசி கொணர்ந்து கொடுக்க வேண்டும்.
நான் தெருப்பக்கம் போய்க் குறுணிக் கற்களைப் பொறுக்கிக் கொண்டு வருகிறேன். அதுதான் அரிசி!
நான் அரிசியைக் கொண்டுவரும்போது அத்தா ம் அக்காவும் முன் விருந்தையில் கதைச்சுக்கொண்டு ருக்கினம். ராணியின் தம்பி ஒரு பிஸ்கட்டை வைத்துக்

Page 21
- 24 -
திருக்க வேண்டும். நான் ராணியைப் பார்க்கிறேன். அவளும் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிருள். அக்காவும் அத்தானும் எங்களுடைய விளையாட்ை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கினம், நான் அவர் களைப் பார்க்காதவன் போல வேறு பக்கம் திரும்பிக் கொண்டு வருகிறேன்.
கடித்துக் கொண்டிருக்கிருன். அக்காதான் န္တီ
'டேய் மணி, இங்கை வா '-அக்கா பிஸ் கட்டைக் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூப்பிடுகிரு.
நான் பேசாமல் இருக்கிறேன்.
*" என்னடா உனக்குக் காது கேக்கல்லையோ பிஸ்கட் தரக் கூப்பிட்டால் கேட்காதவன் மாதிரி GLumro? uiu. ’ ”
*" எனக்கு உம்முடைய பிஸ்கட் தேவையில்லை."
“ “ T6CT litri, உனக்கெண்டுதானே வாங்கியத ஞங்கள்."
** நான் உம்மோடை கோவம். நீர் என்னுேஷ்ட கதைக்கத் தேவையில்லை.** நான் முகத்தைக் கோப மாக வைத்துக் கொண்டு சொல்லுகிறேன். அக்காவை நல்லாய்க் கெஞ்ச வைக்க வேணும். அதற்குப் 色 தான் பிஸ்கட்டை வாங்க வேணும் ,
அப்போது, எங்களுடைய நாய் பப்பி அங்கே வரு கிறது. நான் பப்பியை உற்றுப் பார்க்கிறேன். அக்கா தான் இதற்குப் பப்பி என்று பெயர் வைச்சவ. அவ வுக்குப் பெயர் வைக்கக் கூடத் தெரியாது. ** பப்பள்' என்றல்லோ பெயர் வைச்சிருக்க வேணும்.
பப்பி திடீரெனப் பாய்ந்து ராணியின் தம்பி வைச் சிருந்த பிஸ்கட்டைக் கெளவிக்கொண்டு ஓட்டம் எடுக் கிறது.
எனக்குச் சிரிப்புத்தான் வந்தது, கையைத் தட்டிக் கொண்டு துள்ளித் துள்ளிச் சிரிக்கிறேன்.

தம்பி "வீரென்று அழத் தொடங்கிவிட்டான். அவ ருக்கு நல்லாய் வேணும். எங்கடை அக்கா கொண்டு வந்த பிஸ்கட்டை நான் தின்னுமல் இருக்க, அவர் மட்டும் தின்னலாமோ ?
தம்பி அழுவதைப் பார்க்க ராணிக்கும் அழுகை வந்துவிட்டது, அவள் வைச்சிருந்த பிஸ்கட்டைத் தம்பிக்குக் கொடுக்கிருள்; அப்போதுதான் அவனுடைய அழுகை அடங்கியது. ராணி தன்னுடைய சட்டையால் தம்பியின் கண்ணிரைத் துடைத்துவிட்டாள். ராணி அப்படிச் செய்வதைப் பார்க்க எனக்குக் கோபம் வரு கிறது.
* "ராணி! உன்னுேடை நான் விளையாடமாட்டன். உனக்கு விளையாடத் தெரியாது. நான் அப்பா, நீ அம்மா. அப்பிடி யெண்டால் நான் புருஷன், நீ பெண் சாதி, கலியாணம் முடிச்ச பிறகு பெண் சாதி புருஷ னிட்டைத்தான் அன்பாயிருப்பா; தம்பியிடம் அன்பா யிருக்க மாட்டா. தம்பி இருக்கிறதையே அவ மறந்து போயிடுவா." நான் அப்படிச் சொல்லுகிறபோது எனக்கு அழுகை வந்துவிடும் போலிருக்கிறது,
"வெடுக்கென்று தம்பியின் கையிலிருந்த பிஸ்கட் டைப் பறித்துப் பப்பியிடம் வீசி எறிகிறேன்.
** டேய் மணி, இங்கை வாடா'' -அக்கா என்னை அதட்டிக் கூப்பிடுகிரு. நான் அக்காவைப் பார்க்கிறேன். ஏன் அக்காவின் கண்கள் கலங்கியிருக்கின்றன?
அக்கா வந்து என்னுடைய கையைப் பிடிச்சு இழுத்துக் கொண்டுபோய், மீண்டும் அத்தானின் பக் கத்தில் உட்காருகிரு. நான் வேறெங்கோ பார்த்தபடி அக்காவின் அருகில் நிற்கிறேன்.
'ஏனடா உனக்கு என்னுேடை கோவம்?"
என்னுல் பேசமுடியவில்லை; அழுகை அழுகையாக வருகிறது. கண்களில் நீர் முட்டிக் கன்னத்தில் வழிகிறது.

Page 22
- 26 -
அக்கா என்னைத் தன்னுடைய மார்போடு அணைக் கிரு. நான் அக்காவுடைய நெஞ்சிலே முகத்தைப் புதைச்சுக்கொண்டு விம்மி விம்மி அழுகிறேன்.
"சீ வெக்கமில்லையேடா உனக்கு? ஏன் இப்படி அழு கிருய்?" அக்கா எனது தலைமயிர்களை ஆதரவோடு கோதிவிட்டுக்கொண்டு என்னிடம் கேட்கிரு. அதன் பின்பு அக்கா எனக்கு நிறைய பிஸ்கட்டும் இனிப்பும் தருகிரு; நான் சாப்பிடுகிறேன்.
அத்தான் நாலைஞ்சு நாள் கழிச்சுக் கொழும்புக்குப் போகிருர். அக்கா போகவில்லை. அக்காவுக்குக் கொஞ்ச நாளில் குழந்தை பிறக்கப்போகிறதாம்; குழந்தை பிறந்த பிறகுதான் அக்கா கொழும்புக்குப் போவா வாம். அதைக் கேட்க எனக்கு நல்ல சந்தோஷமாக இருக்கு. அக்கா கொஞ்ச நாளைக்கு வீட்டிலை இருப்பா என்பதை நினைக்க எனக்கு மிகவும் சந்தோஷம்.
ராணி ஒவ்வொரு நாளும் எங்களுடைய வீட்டுக்கு வருவாள். எங்களுக்கு அக்கா புதிசு புதிசாக விளையாட் டுக்கள் சொல்லித் தருவா. அக்காவுக்குக் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையோடும் நாங்கள் விளை , turr Larth.
கொஞ்ச நாளில் அக்காவுக்கு ஒரு தம்பிப் பாப்பா பிறந்தது. அக்கா கட்டிலில் படுத்திருந்தா. தம்பிப் பாப்பாவைத் தொட்டிலிலே கிடத்தியிருந்தார்கள். அந்தப் பாப்பாவைத் தொட்டுப் பார்க்க எனக்கு ஆசை யாக இருந்தது. தூக்கி விளையாட வேணும் போல இருந்தது. நான் சின்னப் பொடியன் குழந்தையைத் துரக்கக் கூடாதாம். பெரிசா வளர்ந்த பிறகுதான் தூக்கலாமாம்; அக்காதான் சொன்ன. நான் பாப் பாவைத் தொட்டுப் பார்க்கிறேன். குட்டிக் குட்டி விரல்கள், எனக்கு ஆசையாக இருக்கு.
பாப்பா பிறந்தவுடன் அத்தானுக்குத் தந்தி கொடுத்தார்கள். ஆனல் அவர் உடனே வரவில்லை,

- 27 -
அவருக்கு வேலை செய்யிற இடத்திலை லீவு எடுக்க முடிய வில்லையாம். அத்தான் உடனே வராதது எனக்குச் சந்தோஷமாக இருந்தது. அத்தான் வந்தால், அக்கா அத்தானைத்தான் கவனிப்பா. அவரோடைதான் அன்பாயிருப்பா. அத்தானுேடைதான் அடிக்கடி பேசுவா. என்னேடை பேசுவதற்கு அக்காவுக்கு நேரம் இருக்காது.
திடீரென்று ஒருநாள் விடியும்போது அத்தான் காரில் வந்து இறங்கினர். நான் தான் முதலில் அத்தான் வருவதைக் கண்டேன். அக்காவிடம் ஒடிப்போய் ** அத்தான் வந்திட்டார் ' என்று சொன்னேன். உடனே அக்கா எழுந்து முன்வாசலுக்கு ஓடிவருவா என்றுதான் நான் நினைத்தேன். அக்கா எழுந்திருக்கக் கூட இல்லை. தம்பிப் பாப்பாவோடு கொஞ்சி விளை யாடிக்கொண்டிருந்தா, அத்தான் வரும்போது அக்கா எழுந்து, அத்தானை வரவேற்க வாசலுக்குக்கூட வராதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அத்தான். அக்கா இருந்த அறைக்கு வந்தார். அக்கா தம்பிப் பாப்பாவை அத்தானுக்குக் காட்டிரு. அத்தானையே உரிச்சு வைச் சதுபோலத் தம்பிப் பாப்பா இருக்கிருளும்; அக்காதான் அத்தானிடம் சொன்ன . அத்தானுக்குப் பெரிய புழுகம். அத்தான் தம்பிப் பாப்பாவைத் தூக்கி முத்தங் கொடுக்கிருர்,
'ஐயையோ, குழந்தைக்கு நோகப்போகிறது ' என்று சொல்லி அக்கா உடனே தம்பிப் பாப்பாவை வாங்கிக் கொள்ளுகிரு.
அத்தான் இரவு றெயிலில் வந்தவர். அதனல் அவருக்குக் களைப்புப் போலத் தெரியுது. அக்காவிடம் கோப்பி போட்டுத் தரும்படி சொல்லுகிருர் .
*" குழந்தைக்குப் பசிக்கும், பால் கொடுத்துவிட்டு உங்களுக்குக் கோப்பி தருகிறேன்" என்று சொல்லிக் கொண்டு அக்கா தம்பிப் பாப்பாவுக்குப் பால்
கொடுக்கிரு.

Page 23
- 28 -
முந்தியென்ருல் அத்தான் படுக்கையில் இருக்கும் போதே அக்கா கோப்பி போட்டுக் கொண்டுவந்து அத்தானை எழுப்புவா. அத்தான் கோப்பி குடிச்ச பிறகு தான் கட்டிலை விட்டு இறங்குவார். அத்தான் கேட் காமலே அக்கா அவருக்கு வேண்டியதை யெல்லாம் செய்வா. இண்டைக்கு அத்தான் கோப்பி போட்டுத் தரும்படி கேட்டும் அவருக்குக் கோப்பி கிடைக்கவில்லை.
அக்கா பால் கொடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, அம்மா கோப்பி போட்டுக்கொண்டு வந்து அத்தானுக்குக் கொடுக்கிரு. அவருக்குச் சாப் பாடும் அம்மாதான் கொடுக்கிரு.
அக்கா தம்பிப் பாப்பாவைத்தான் நன்ருகக் கவ னிக்கிரு. தம்பிப் பாப்பாவைக் குளிக்க வார்க்கிரு, பவுடர் போடுகிரு, பால் கொடுக்கிரு. தம்பிப் பாப்பா வோடுதான் அக்கா இரவில் படுக்கிரு.
இதையெல்லாம் பார்க்க எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. அத்தானை நினைக்கும்போது பாவமாகவும் இருக்கிறது.
அத்தான் நிறைய பிஸ்கட், சொக்கிலெட் எல்லாம் வாங்கி வந்தார். எனக்கு விளையாடுகிறதுக்கு ஒரு பொம்மையும் வாங்கி வந்தார். அது நல்ல வடிவான ரப்பர்ப் பொம்மை.
ராணி வந்ததும் நானும் அவளும் அந்தப் பொம்மையை வைச்சு விளையாடுகிருேம். இண்டைக்கும் எங்களுக்கு அப்பா அம்மா விளையாட்டுத்தான். நான் அப்பா, ராணி அம்மா, பொம்மைதான் எங்களுடைய gublo Lumit In .
ராணி அந்தப் பொம்மையை மடியில் வைச்சுக் கொண்டு "ஆராரோ" என்று தாலாட்டுகிருள், குழந்தை யைத் தூங்க வைக்கிருளாம் .
'குழந்தைக்குப் பசிக்கும் பால் கொடு" - நான் ராணியிடம் சொல்லுகிறேன்.

- 29 -
அக்கா குழந்தைக்குப் பால் கொடுக்கிறதைப் போலவே, ராணியும் அந்தப் பொம்மையை இரண்டு கைகளாலும் தூக்கித் தன்னுடைய நெஞ்சோடு அணைச் சுப் பால் கொடுக்கிருள்.
முன் விருந்தையில் இருந்த அக்காவும் அத்தானும் அதைப் பார்த்துச் சிரிக்கிருர்கள்.
ராணிக்கு வெட்கம் வந்துவிட்டது.
** சீ ராணி, உதென்ன விளையாட்டு?" என்று அக்கா அதட்டுகிரு.
இவ்வளவு நேரமும் தூரத்திலிருந்து எங்களுடைய விளையாட்டைக் கவனித்துக்கொண்டிருந்த பப்பி, மெதுவாக வந்து, திடீரென்று எனக்குப் பக்கத்திலே கிடந்த பிஸ்கட் பெட்டியைக் கெளவிக்கொண்டு ஓட்டம் எடுக்கிறது.
நான் அதைப் பறித்து எடுப்பதற்காகப் பப்பியைத் துரத்திக்கொண்டு பாய்ந்து ஒடுகிறேன். சனியன் பிடிச்ச கல்லொன்று என்னுடைய காலை இடறிவிட்டது. நான் நெஞ்சு அடிபட விழுந்துவிட்டேன். என்னுல் எழும்ப முடியவில்லை. முழங்கால் நன்ருக நிலத்திலே உரஞ்சுப்பட்டுவிட்டது. கொஞ்சம் ரத்தம் வருகிறது. துப்பலைத் தொட்டுக் காயத்தில் அப்புகிறேன்; அப்பவும் எரிச்சல் குறையவில்லை. எனக்கு அழுகை வந்துவிட்டது.
ராணி பொம்மையை வீசி எறிந்துவிட்டு என்னிடம் ஓடி வருகிருள். என்னுடைய கையைப் பிடித்து மெது வாகத் துரக்குகிருள்.
நான் ராணியின் கையைக் கோபத்தோடு தட்டி விடுகிறேன்; எனக்கு ராணியின் மேல் கோபங் கோபமாக வருகிறது. ராணிக்கு அப்பா அம்மா விளை யாட்டு விளையாடவே தெரியாது, தம்பிப் பாப்பாவை வீசி எறிஞ்சுவிட்டு அவள் வருவதைப் பார்க்க எனக்கு எரிச்சலாக இருக்கிறது.

Page 24
- - 30 -
நான் விழுந்துவிட்டதைப் பார்த்ததும் அக்காவும் அத்தானும் அருகே ஓடிவருகிருர்கள்.
"" தம்பிப் பாப்பா கிடைச்ச பிறகு நீ அதிலைதான் அன்பாயிருக்க வேணும். தம்பிப் பாப்பாவைத்தான் நீ முதலில் கவனிக்கவேணும். அதைக் கவனிச்ச பிறகு தான் என்னைக் கவனிக்கவேணும். பெம்பிளையளென் ருல் அப்பிடித்தான்; பாப்பா கிடைச்ச பிறகு புருஷனை விடப் பாப்பாவிடந்தான் கூட அன்பாயிருப்பினம்."" நான் ராணியிடம் சொல்லுகிறேன்.
நான் சொல்லிறது ஒண்டும் அவளுக்கு விளங்க வில்லை; முழிக்கிருள்,
*" கள்ளப்பயலே என்னடா சொன்னனி ? உனக்கு இதிலையிருக்கிற மூளை படிப்பிலை இல்லை." என்று சொல்லிக்கொண்டு அக்கா என்னை மெதுவாகத் தூக்குகிரு. அக்காவும் அத்தானும் சிரிக்கிருர்கள்.
நான் ராணியை இழுத்துக்கொண்டு திரும்பவும் அப்பா அம்மா விளையாட்டு விளையாடப் போகிறேன். பப்பி தூரத்திலிருந்து எங்களைப் பார்த்துக்கொண் டிருக்கிறது. நாங்கள் விளையாடுகிருேம்.
பொம்மை, தம்பிப் பாப்பாவாகிறது. ராணி அம்மாவாகிருள். நான் அப்பாவாகிறேன்.
- கதம்பம் 1971
(இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத் தமிழ் இலக்கிய மன்றம் நடாத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற கதை.

பலி
துரத்தில் வள்ளி வருவது தெரிந்தபோது கொத்து வதை நிறுத்திவிட்டு, மண்வெட்டியைத் தோளிற் சாய்த்தபடி மாட்டுக்கொட்டிலின் பக்கம் போகிருன் வேலன்:
கொத்தி முடிந்த நிலப்பரப்பைப் பார்க்கும்போது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வழக்கத்தைவிட அவன் இன்று அதிகமாக வேலை செய்திருக்கிருன்
காலையிலிருந்து மழை பிசுபிசுத்துக்கொண்டிருக் கிறது. பலமாகப் பெய்து நிலம் நன்ருக நனைந்தால், கொத்துவதற்குச் சுலபமாக இருக்கும், வரட்சிக்குப் பின் மழைத் துளிகள் விழுவதால் மண்வாசனை வீசத் தொடங்கியது.
மண்வெட்டியிற் படிந்திருந்த மண்ணை, இடுப்பிற் செருகியிருந்த சுரண்டியால் ஒருதடவை வழித்துவிட்டு மீண்டும் சுரண்டியை இடுப்பிற் செருகுகிருன்.

Page 25
- 32 -
தலையிற் கட்டியிருந்த துண்டை அவிழ்த்துத் தேகத்தில் வழிந்திருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே மண்வரம்பின்மேல் வள்ளி நடந்துவரும் அழகை அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.
சேலைத் தலைப்பை இடுப்பில் வரிந்து கட்டிவிட்டு, தலையில் இருந்த சோற்றுப் பெட்டியை ஒரு கையாற் தாங்கிக்கொண்டு ஒரு கையில் தேநீர்ப் போத்தலையும் தூக்கியபடி, ஏதோ பாரத்தைச் சுமந்து வருபவள் போல வேலனைப்பார்த்துக் குறும்புத்தனமாக அபிநயஞ் செய்து, தோட்டத்து மண் வரம்பில் நடந்து வந்து கொண்டிருந்தாள் வள்ளி,
அவர்களுடைய பெட்டை நாய் கறுப்பியும் அவளைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.
வரம்பின் வலப் புறத்தில் கந்தையாக் கமக்கார னின் மதாளித்த புகையிலைக் கன்றுகள் நிமிர்ந்து நிற் கின்றன. மறுபுறம் பரந்து கிடக்கும் வெற்றுத் தரையை இப்போதுதான் வேலன் கொத்திக்கொண் டிருக்கிருன்.
தோட்டம் முழுவதுமே கந்தையாக் கமக்கார னுக்குத்தான் சொந்தம், ஆணுலும் ஒரு பகுதியைப் பயிர் செய்வதற்கு மாத்திரம் வேலனுக்குக் கொடுத்து, நடு விலே வரம்பு வகுத்து எல்லை பொறித்திருக்கிருர் கமக் காரன். இந்த வரம்புதான் தோட்டத்துக்கு வழியாக வும் அமைந்திருக்கிறது.
வரம்பின் ஒரு கோடியில் கந்தையாக் கமக்காரன் பெரிய வீட்டில் வாழ்கிருர். மறு கோடியில் வேலனும் வள்ளியும் ஒரு குடிசையில் வசிக்கிருர்கள்.
கமக்காரனின் பாவனைக்காக வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கிணறு இருக்கிறது. அதில் வேலன் கயிறு பிடித்துத் தண்ணிர் இறைக்கக் கூடாது, தோட்டத்தின் நடுவில் இருக்கும் கிணற்றில் இருந்துதான் வேலன் தோட்டத் திற்கு நீர்பாய்ச்சுவான். கமக்காரன் தனது வசதிக்காக அதனை அனுமதித்திருக்கிருர்,

- 33 -
கந்தையாக் கமக்காரனுடைய பகுதியில் முக்கிய மான தோட்ட வேலைகள் இருக்கும்போது, வேலன் அதைச் செய்து முடித்த பின்புதான் தனது தோட்டத் தைக் கவனிக்க முடியும். வசிப்பதற்கும் பயிர் செய் வதற்கும் நிலம் கொடுத்தபடியால் அவன் அதைச் செய் , கிருன்
தோட்டத்து மூலையில் இருக்கும் பனைகளில் இறக்கும் கள்ளில் ஒரு போத்தலைத் தினமும் கமக்காரனுக்குக் கொடுக்க வேண்டும். பனைகளில் கள்ளு வடிப்பதற்குக் கமக்காரன் அனுமதித்தபடியால் அவன் அதைச் செய் கிருன்.
இவற்றையெல்லாம் விடச் சுளையாக நூறு ரூபாய் களைக் கமக்காரன் குத்தகைக் காசு என்று கூறி அவ னிடம் ஒவ்வொரு வருடமும் பெற்றுக்கொள்ளுகிறர்.
வேலனைப் போன்றுதான் அவனுடைய சொந்தக் காரர்களிற் பலர் பரம்பரை பரம்பரையாகக் கமக்காரர் களின் தயவில் வாழ்கிருர்கள். அவர்களுக்குச் சொந்த மாக ஒரு துண்டு நிலங்கூடக் கிடையாது. கமக் காரர்கள் அவர்களுக்குமட்டும் காணியை விலைக்குக் கொடுக்கமாட்டார்கள்.
வள்ளி சோற்றுப் பெட்டியை இறக்கிவைத்தாள். என்ன மச்சான், களைச்சுப் போனியே ? கறி வைக்கக் கொஞ்சம் சுணங்கிப் போச்சு " என்று தான் தாமதித்து வந்ததற்குக் காரணம் கூறிக்கொண்டே வள்ளி அவன் அருகில் அமர்ந்தாள்.
பழைய சோற்றில் கறியைச் சேர்த்துப் பிசைந்து திரட்டி ஒரு உருண்டையை வாழையிலையில் வைத்து வேலனிடம் கொடுத்தாள்.
*" வள்ளி! நீயும் கொஞ்சம் சாப்பிடன் " . என்று கூறி வேலன் இலைத்துண்டில் பாதியைக் கிழித்து அவ ளிடம் கொடுத்தான். அவர்களுடைய நாய் கறுப்பியும் வாலை ஆட்டிக்கொண்டு அவர்களிடம் பங்கு கேட்டது.

Page 26
- 34 -
வள்ளி மகிழ்ச்சியோடு ஒரு கவளத்தைக் கறுப்பிக் கும் கொடுத்தாள். சதா வேலனையே சுற்றிக்கொண் டிருந்த கறுப்பி ஒரு கிழமைக்குள் வள்ளியுடன் எவ்வளவு ஐக்கியமாகிவிட்டது!
தனிக்கட்டையாக இருந்த வேலனை, அவனுடைய தாய் மாமன் அழைத்து ஒரு நல்ல நாளில் வள்ளியின் கையால் " சோறு குடுப்பித்தான்."
வள்ளி வீட்டுக்கு வந்த பின்புதான் வேலனுக்கு வயிருரச் சாப்பாடு கிடைக்கிறது. வள்ளியின் கை வண்ணம் எவ்வளவு ருசிக்கிறது.
தூரத்தே கந்தையாக் கமக்காரன் வருகிருர்;
அவசர அவசரமாகச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, பானையிலிருந்த தண்ணீரில் கையைக் கழுவி விட்டு எழுந்திருந்தான் வேலன் வள்ளியும் சோற்றுப் பெட்டியை மூடிவிட்டு, வேலனிடம் விடைபெற்றுக் கொண்டு குடிசையை நோக்கிப் புறப்பட்டாள்.
வள்ளி எழுந்து செல்வதைக் கவனித்தபடியே வேல னிடம் வந்தார் கந்தையாக் கமக்காரன்.
இவ்வளவு நேரமும் சிறு தூறல்களாக விழுந்து கொண்டிருந்த மழை இப்போது பலக்க ஆரம்பித்து விட்டது.
" " அதிலை போறதார் வள்ளியே ? சின்னப் பொடிச்சி யாய்த் திரிஞ்சவள் " கொழு கொழு"வெண்டு நல்லாய்க் கொழுத்திட்டாள்.'
கந்தையாக் கமக்காரன் வரம்பிலிருந்து சறுக்கித் தடுமாறுகிறர்.
"வரம்பு நனைஞ்சு நுதம்பலாய்க் கிடக்குக் கமக் காறன், கவனமாய் வாருங்கோ.'
ஒரு கிழமையாக வள்ளியைக் கந்தையாக் கமக் காரன் தினமும் பார்க்கிருர் இன்றுமட்டும் திடீ ரென்று வள்ளியைப்பற்றி அவர் கேட்டபோது, வேல Eன் மனதுக்குச் சங்கடமாக இருந்தது.

- 35 -
‘'நீ ஒருக்கா வீட்டுக்கு வா, சுன்னுகத்துக்கு ஒரு நடை போட்டு வரவேணும்." .
நேற்றுத்தான் கந்தையாக் கமக்காரன் தன்து மனைவியை, அயற் கிராமத்தில் உள்ள அவளது தந்தை யின் வீட்டுக்கு அனுப்பிவைத்தார். அது விஷயமாகத் தான் தன்னையும் அங்கு அனுப்பப் போகிருர் என நினைத்தபடி வேலன் அவரைப் பின்தொடர்ந்தான்.
கந்தையாக் கமக்காரனின் வீட்டு முற்றத்தில் வேலன் வெகுநேரமாகக் காத்துக்கொண்டிருந்தான். உள்ளே சென்ற கமக்காரன் இன்னும் வெளியே வர வில்லை.
சிறிது நேரம் ஓய்ந்திருந்த மழை மீண்டும் பலக்கத் தொடங்கியது.
நனந்துவிடாமல் இருப்பதற்காக முற்றத்தில் நின்ற வேலன் இப்போது வீட்டின் வாசற்படியில் ஏறிக் கத வோரமாக நின்றன்.
கந்தையாக் கமக்காரன் கையில் ஒரு கடிதத்துடன் வெளியே வந்தபோது, வீட்டு வாசற்படியில் கதவு ஒரம்வரை வேலன் வந்துவிட்டதைக் கவனிக்கிருர். அவரது முகம் மாற்றம் அடைகிறது.
'இறங்கடா பணிய, கீழ்சாதி! வீட்டுக்குள்ளையும் வந்துவிடுவாய் போலை கிடக்கு"
வேலன் வெலவெலத்துப்போய்க் கீழே இறங்கினன். வாசற்படியில் நின்றதற்கு இப்படி அவர் தன்னை ஏசுவார் என்பதை அவன் எதிர்பார்க்கவே இல்லை. கமக்காரனுக்கு மனசு சரியில்லைப்போலிருக்கிறது. −
அதன் பின்பு கந்தையாக் கமக்காரன் ஒன்றும் பேசவில்லை. கடிதத்தை மட்டும் அவனிடம் நீட்டினர். வேலன் பணிவோடு அதனை வாங்கிக்கொண்டு, குழம்பிய மனத்துடன் சுன்னகத்தை நோக்கி நடக்கத் தொடங் கினன்.

Page 27
- 36 -
நாய் குரைக்குஞ் சத்தங் கேட்டுக் குடிசைக்குள் சமைத்துக்கொண்டிருந்த வள்ளி வெளியே வந்து பார்த்தாள். கந்தையாக் கமக்காரன் நின்றுகொண் டிருந்தார்.
“வேலன் சுன்னகத்துக்குப் போட்டான். நீ ஒரு போத்தல் கள்ளு எடுத்துக்கொண்டு வா.”*
வள்ளியின் பதிலை எதிர்பார்க்காமலே தனது வீட்டுப் பக்கம் திரும்பி நடந்தார் கமக்காரன்.
வழக்கமாகக் கமக்காரன் ஒரு போத்தல் கள்ளுத் தான் வாங்குவார். காலையிலேயே அதனை வேலன் அவருக்குக் கொடுத்துவிட்டுத்தான் தோட்டத்திற்குச் சென்றன். இப்பொழுது மீண்டும் இன்னும் ஒரு போத்தல் கள்ளு அவருக்குத் தேவைப்பட்டபோது வள்ளிக்கு ஆச்சரியமாக இருந்தது.
தன்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் வேலன் சுன்னுகத்துக்குப் போய்விட்டதை எண்ணிய போது அவளுக்குக் கோபமும் வந்தது;
முட்டியில் இருந்த கள்ளைப் போத்தலில் வார்த்து எடுத்துக்கொண்டு, கந்தையாக் கமக்காரனின் வீட்டை நோக்கி நடந்தாள் வள்ளி.
அவளுடைய நாய் கறுப்பியும் வாலை ஆட்டிக்கொண்டு. அவளைப் பின்தொடர்ந்து சென்றது.
எங்கோ திரியும் தெருநாய் ஒன்று கறுப்பியின் பின் புறத்தில் நெருக்கமாகத் தொடர்ந்து வந்துகொண் டிருந்தது. அது ஆண் நாயாகத்தான் இருக்கவேண்டும். கறுப்பி கோபத்துடன் அந்தத் தெருநாயைப் பார்த்து உறுமியது. ஆனலும் அந்த நாய், கறுப்பியைத் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.
* சீ! சனியன்' என்று கடிந்துகொண்டே, ஒரு கல்லை எடுத்து அந்த ஆண் நாயின்மேல் விட்டெறிந்தாள் வள்ளி.
இப்போது அந்த நாய் தூரத்தில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

- 37 -
கள்ளுப்போத்தலுடன் வள்ளி கந்தையாக் கமக் காரணின் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டாள். கமக்காரன் உள்ளே யிருக்கிருர் போலத் தெரிகிறது. தயங்கிய படியே வாசற்படிகளில் ஏறிக் கதவோரத்தில் சிறிது
நேரம் நின்ருள். ,
"ஏன் வள்ளி வாசற்படியிலை நிற்கிருய், உள்ளுக்கு வாவன்." கமக்காரன்தான் அப்படிச் சொன்னர்.
வள்ளிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் எந்தக் கமக்காரன் வீட்டுக்குள்ளும் ஒருநாளும் சென்றதில்லை. 'இல்லைக் கமக்காறன் நான் போகவேணும்” என்று சொல்லிக்கொண்டே அவள் கள்ளுப்போத்தலை வாசற் படியில் வைத்தாள்.
"வள்ளி! வாசற்படியிலை போத்தலை வைக்காதை, உள்ளுக்குக் கொண்டுவந்து மேசையிலை வை."
கந்தையாக் கமக்காரனின் குரல் கொஞ்சங் கடுமை யாக இருந்தது:
வள்ளி தயங்கினுள். கமக்காரன் கோபித்துக்கொள் வாரோ என அவளுக்குப் பயமாகவும் இருந்தது. கமக்காரனின் சொல்லுக்குப் பணியாவிட்டால் அவர் சிலவேளை தோட்டத்தை விட்டுத் துரத்திவிடவும் கூடும். பின்பு இருப்பதற்கும் இடமில்லாமல், பிழைப்பதற்கும் வழியின்றித் தவிக்கவேண்டிய நிலைதான் ஏற்படும்.
வள்ளி மெதுவாக நடந்து உள்ளே சென்ருள். அவ ளுடைய கால்கள் கூசின.
இவ்வளவு நேரமும் அவளுடன் துணையாக வந்து கொண்டிருந்த கறுப்பி, இப்போது வெளியே நின்று விட்டது. தூரத்தில் வந்துகொண்டிருந்த அந்த ஆண் நாய் இப்போது கறுப்பியை நெருங்கிக்கொண்டிருந்தது. "வள்ளி ! இப்ப இங்கை ஒருதரும் வரமாட்டினம், நீ ஆறுதலாய்ப் போகலாம்."" V.
வள்ளியின் மனதில் ஏதோ உறுத்தியது; அந்த இடத்தை விட்டு உடனே ஓடிவிடவேண்டும் போல்

Page 28
- 38 -
தோன்றியது. அதற்குள் கந்தையாக் கமக்காரன் எழுந்து சென்று முன் கதவைப் பூட்டினர்.
வள்ளி நடுங்கினள்; "ஐயோ கமக்காறன் நான் போகவேணும்' எனத் துடித்தாள்.
கந்தையாக் கமக்காரன் மெதுவாகச் சிரித்தார்: *" பயப்பிடாதை வள்ளி! வேலனுக்கு ஒண்டுந் தெரிய வராது. நீ கொஞ்ச நேரம் என்னுேடை இருந்திட்டுப் GBu urtas6urrub. "”
வள்ளி கதவின் பக்கம் பாய்ந்தாள். ஆனல் சாவி கமக்காரனின் கையிலேதான் இருக்கிறது. அவர் எழுந்து சென்று வள்ளியின் வலது கையைப் பற்றினர்.
"ஐயோ! கமக்காறன் என்னை ஒண்டுஞ் செய்யாதை
யுங்கோ."
வள்ளி கெஞ்சினுள், மன்ருடினுள், அழுதாள்? ** பயப்பிடாதை வள்ளி" என்று மட்டுந்தான் கந்தை யாக் கமக்காரன் சொன்னர். ஆனல் வள்ளியின் கையை மட்டும் அவர் விட்டுவிடவில்லை.
வள்ளியின் கெஞ்சலும் மன்ருட்டமும் ஆதரவற்றுத் தேய்ந்தன. அவள் ஆவேசத்துடன் திமிறினள். ஆனலும் கமக்காரனின் அசுரப் பிடியிலிருந்து அவளால் விடுபட முடியவில்லை, அவள் பத்திரகாளியானள். மறுகணம் * பளி" ரென்று அந்தச் சாதிமானின் கன்னத்தில் பல மாக அறைந்தாள்.
தீண்டத்தகாத சாதிக்காரி ஒருத்தி தனது கன் னத்திலே தீண்டிவிட்டதனல் கந்தையாக் கமக்கார னுக்குக் கோபாவேசம் பொங்கியது. அவரது கண்கள் சிவந்தன.
அறைந்துவிட்ட அவளது கையைப் பிடித்துப் பல மாகத் திருகினர். வள்ளிக்கு வலியெடுத்தது; தலை சுற்றியது: கண்கள் இருண்டன. அவள் போராட்டத் திலே தோற்றுப்போய் நிலத்திற் சாய்ந்தாள்:

- 39 -
வெளியே கறுப்பி பலமாக உறுமிக்கொண்டிருந்தது. பின்பு சிறிது சிறிதாக அதன் குரல் தேய்ந்து மெலிந் தது. இப்போது அந்தப் பிரதேசத்தையே துன்பத்தில் ஆழ்த்துவதுபோல அது சோகமாக ஊழையிடத் தொடங்கியது.
வள்ளி மயக்கந் தெளிந்து எழுந்திருந்தபோது அவளது உடலும், உள்ளமும் தழலாகத் தகித்தன.
"நீயும் ஒரு மனுசனே! பெரிய சாதிக்காறனே? சீ துர. " அவள் காறியுமிழ்ந்தாள்.
கந்தையாக் கமக்காரன் எழுந்து சென்று கதவைத் திறந்துவிட்டார்.
வள்ளி தள்ளாடியபடியே வெளியே வந்தாள்: அவளது நாய் வாலைக் குழைத்துக்கொண்டு அவளைச் சுற்றி வந்தது.
கறுப்பி இடங் கொடுக்காததினுல் ரோசமடைந்த அந்த ஆண்நாய் இப்போது தூரத்தில் போய்க்கொண் டிருந்தது.
-சிந்தாமணி 1970

Page 29
சுமங்கலி
உள்ளத்தை வேதனைப்படுத்தும் அந்தச் செய்தியைத் தாங்கிக்கொள்ளப் பொன்னம்மாவின் மென்மையான இதயத்திற்குக் கஷ்டமாக இருந்தது.
வேகவைக்கும் ஈயக்குழம்பு காதிற்கூடாகத் தசை
களை அறுத்துச் சென்று இதயத்திற் தேங்கிக் குமிழி பரப்பிக்கொண்டிருப்பதைப் போன்ற வேதனை.
வாழ்நாளில் அனுபவித்திராத துன்பம் அவளை வாட்டச் சிறிது நேரம் எதையுமே சிந்திக்கும் சக்தியை இழந்துவிட்டாள்; விழிகளை மேவிப் பெருகிய கண்ணிர் குழிவிழுந்திருந்த அவளது கன்னத்தின் சுருக்கங்களை நிரப்பி வழிந்துகொண்டிருந்தது.
நெற்றியிலே பட்டையாகத் தீட்டியிருந்த திரு நீற்றைக் கரைத்துக் கசிந்திருந்த வியர்வைத் துளிகளைத் தன் சேலைத் தலைப்பினல் ஒற்றியபொழுது குங்குமம் அழிந்துவிடக்கூடாதேயென்ற கவனமும் அவள் நினைவில் வந்தது.

- 41 -
*" பொன்னம்மா ! சாத்திரியாருக்கு ஒருத்தினை தேத் தண்ணி ஊத்திக்கொண்டு வா."
அடுப்பிற்கு முன்னுல் வெகுநேரம்வரை தன்னை மறந்திருந்த பொன்னம்மா, புருஷனின் குரல்கேட்டுத் திடுக்குற்று அவசர அவசரமாகப் பன்னடையை அடுப் பிற்குள் செருகினள்.
சாத்திரியார் கூறிய செய்தி அவளின் மனச்சுவர்களை அரித்துப் புண்படுத்திக்கொண்டிருந்தது.
அவளது கணவன் சதாசிவம் இன்னும் ஒரு மாதத்திற்குள் இறந்துவிடுவாராம்."
எவ்வளவு இரக்கமற்றதனமாக அந்தச் செய்தியைச் சாத்திரியார் கூறினர். அவர் கூறிய வார்த்தைகள் பொய்த்துவிட்டால் பொன்னம்மா சந்தோஷத்தால் பூரித்துப்போவாள்.
ஆணுல், சாத்திரியார் கூறும் வார்த்தைகள் ஒரு போதும் பொய்த்துவிடுவதில்லை என்பதைப் பொன் னம்மா நன்ருக அறிந்திருந்தாள்.
அவளுக்கும் சதாசிவத்திற்கும் கலியாணம் நடந்த புதிதில், அவர்களுக்குப் புத்திரபாக்கியம் இல்லையென்று சாத்திரியார் கூறியதை முதலில் பொன்னம்மா நம்ப வில்லைத்தான். ஆணுல் இன்றுவரை அது எவ்வளவு உண்மையாகிவிட்டது ×
சாத்திரியாரிடத்தில் ஏதோ தெய்வம் நின்று பேசு கிறது என்று பலர் கூறுவதைப் பொன்னம்மா கேட் டிருக்கிருள். உண்மையில் தெய்வந்தான் நிற்கிறதோ அல்லது சாத்திரத்தின் மகிமைதானே அவர் கூறுவது மட்டும் உண்மையாகிவிடுவதைப் பொன்னம்மா பல முறை கண்டிருக்கிருள்.
செம்பிலிருந்த தேநீரை மூக்குப் பேணியில் ஊற்றிச் சாத்திரியாரிடம் கொடுத்துவிட்டு மிகுதியைக் கண வணின் பக்கத்தில் வைத்தாள் பொன்னம்மா.
ஏணுே சிறிது நேரம் அவ்விடத்தில் அமைதி நிலவியது. சதாசிவம் மனைவி கொணர்ந்து வைத்த தேநீரையே

Page 30
- 42 -
வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். முகத்திலே தேங்கும் துன்பத்தைப் பொன்னம்மா பார்த்துவிடக் கூடாதேயென்ற பயம் அவருக்கு
சாத்திரியாருடைய மனமும் வேதனையடைந்தது அவர் கூறிய செய்தி அந்த இணைபிரியாத தம்பதிகளை எவ்வளவு தூரம் வாட்டி வருத்துகிறது; நீண்ட நாட்க ளாக அவர்களுடைய குடும்ப நண்பராக இருந்து அவர்களின் அன்புப் பிணைப்பை நன்கு அறிந்தபின்பும் தான் செய்த தவறுக்காக, மறைக்க வேண்டிய உண்மை யைக் கூறியதற்காக, அவர் தன்னைத்தானே நொந்து கொண்டார்.
சாதகக் குறிப்புகள் அடங்கிய ஏட்டின் எழுத்துக்கள் சாத்திரியாரின் கண்களுக்கு மங்கலாகத் தெரிந்தன. வழக்கம்போல் முருங்கையிலையின் தளிர்களைக் கசக்கி எழுத்துக்களின்மேல் அவர் தேய்த்தபொழுது, இலைச் சாறு எழுத்தின் வெட்டுக்களை நிரப்பி அவற்றைப் பச்சை வர்ணங்களிலே துலங்கச் செய்தது. ஆனலும் அவரது கலங்கிய கண்களுக்கு இப்பொழுதும் எழுத் துக்கள் துலங்கவில்லை.
ஒரு கணம் இலைச்சாற்றின் நெடி அவ்விடத்திற் பரவியது.
அங்கு நிலவிய அமைதி சாத்திரியாருக்கு ஏதோ பயங்கரச் சூழ்நிலையாகி மனதிலே கொந்தளிப்பை ஏற் படுத்த, அந்த அமைதியைக் குலைக்கும் வகையில் அவரே தான் முதலில் பேசினர்.
‘ என்ன பொன்னம்மா சுகமில்லையோ? ஒரு மாதிரி யிருக்கிருய், கண்ணெல்லாம் சிவந்து போய்க் கிடக்கு." 'இல்லைச் சாத்திரியார், தேத்தண்ணிக்கு அடுப்பு மூட்டேக்க, சாம்பல் கண்ணுக்குள்ளை பறந்திட்டுது, " இதைச் சொல்லி முடிப்பதற்குள் அழுது புலம்பி விடாமல் இருப்பதற்காகப் பொன்னம்மா எவ்வளவோ முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

- 43 -
2
சாத்திரியார் எழுந்து சென்று வெகுநேரமாகியும்
சதாசிவம் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை. தான் இறந்தபின் பொன்னம்மா இறக்கையொடிந்த பறவையாகத் துடித்துப்போவாளே என்பதை நினைத்த பொழுது, அவரது இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போல் இருந்தது.
இளமைப் பருவத்தில் பொன்னம்மாவுடன் கழித்த இன்ப நாட்கள் அவரது மனக்கண்முன் நிழலாடின.
வெகு காலத்துக்குப்பின் அன்ருெருநாள் தனது மாமன் வீட்டுக்குப் போயிருந்த சதாசிவம் ஒரு கணம் பிரமித்துப்போஞர்.
நெற்றியிலே தோன்றும் வியர்வைத் துளிகளைத் தனது அழுக்குப் படிந்த சட்டையால் துடைத்துவிட்டு, மூக்கால் வழியும் சளியை நாக்கினல் உறிஞ்சிக் கொண்டு, அவருடன் சிறுவயதிற் கெந்திவிளையாடிய பொன்னம்மா இன்று எப்படி வளர்ந்துவிட்டாள்!
சித்தாடை கட்டிய சிங்காரப் பெண்ணுக அவரைத் தன் கருவண்டுக் கண்களால் மருள விழித்ததும், தன்னை யும் மறந்து "அத்தான் வந்திருக்கிருரம்மா " என்று அகமகிழக் கூவியதும், வதனமெல்லாம் செம்மை படரப் புன்னகைத்ததும், நிலத்திலே கால்விரலால் ஏதேதோ கோலமிட்டதும் . அப்பப்பா! சதாசிவம் என்ற கட்டிளங் காளை கிறங்கிப்போனன்.
அன்று பொன்னம்மா ஒடியற்கூழ் காய்ச்சி யிருந்தாள். அவளின் கைவண்ணத்திற்குத்தான் எவ் வளவு சுவை ! சதாசிவத்திற்கு ஒடியற்கூழ் என்ருல் கொள்ளை ஆசையென்று எப்படித்தான் அவளுக்குத் தெரிந்ததோ?
பெண்களே இப்படித்தான்; தாங்கள் யாரிடம் அன்பு செலுத்துகிருர்களோ அவர்களின் மனவிருப் பத்தை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையிற் செயற்படுவதில் பெருஞ் சாமர்த்தியசாலிகள்,

Page 31
- 44 -
மடித்துக்கோலிய பலாவிலைக்குள் பொன்னம்மா கூழை வார்க்க, அதை உறிஞ்சிச் சுவைப்பதுபோல் சதாசிவம் வாஞ்சையுடன் ஒரக்கண்ணுல் அவளை நோக்கியபோது, ஆசை வழியும் கண்களால் கள்ளத் தனமாகச் சதாசிவத்தையே பார்த்துக்கொண்டிருந்த பொன்னம்மாவுக்கு வெட்கமாகிவிட்டது.
சதாசிவம் வீட்டிற்குப் புறப்பட்டபொழுது பொன் னம்மா அவரிடம் "அத்தான்.நான்." என்று ஏதோ கூற முயன்று, வெட்கித் தடுமாறி அதைக் கூருமல் விட்டபோதிலும், தனது மனத் துடிப்பிலேதான் அவளும் இருக்கிருள் என்பதைப் புரிந்துகொள்ளச் சதாசிவத் திற்கு அதிகநேரம் பிடிக்கவில்லை.
* பொன்னம்மாவுக்கு ஏழிற் செவ்வாய், மண முடித்தால் கணவனுக்குத்தான் கூடாதாம் ' - ஊரி லுள்ள பெரிய மனிதர்கள் சதாசிவத்திற்குப் புத்திமதி கூறிஞர்கள். ஆனல் அவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளக்கூடிய நிலையில் அப்போது சதாசிவம் இருக்க வில்லை. பொன்னம்மா இல்லாத வாழ்வு வரண்ட பாலைவனமாகிவிடும் போல் அவருக்குத் தோன்றியது.
அதன் பின்இந்நாள்வரை அவர்களுடைய இல்லற வாழ்க்கை இனிமை நிறைந்ததாய், இன்பத்துள் இன்பமாய்க் கழிந்துவிட்டது.
ஆனல், இன்று சாத்திரியார் கூறிய வார்த்தைகள்எதிர்காலத்தைத்தான் துன்பம் எதிர்நோக்கி நிற் கிறதா ? w
பொன்னம்மாவின் முன்னல் போடப்பட்டிருந்த வாழை இலையில் பிசைந்துவிடப்பட்டிருந்த சோறு அப்படியே கிடந்தது. அவள் தன்னை மறந்த நிலையில் எங்கோ பார்த்தபடியிருந்தாள். எவ்வளவு நேரந்தான் அப்படியிருந்தாளோ அவளுக்கே தெரியாது. உணவைக் கண்டால் அவளுக்கு வெறுப்பாக இருந்தது. தொண்டைக்குள் ஏதோ இருந்துகொண்டு உணவை

- 45 -
உட்செல்லவிடாமல் தடை செய்வதைப் போன்ற ஒரு பிரமை, அவளுக்குப் பசியே எடுக்கவில்லை.
ஊரில் யாரோ இறந்திருக்க வேண்டும். எங்கோ பறைமேளம் கேட்டுக்கொண்டிருந்தது. பொன்னம்மா இடியேறு கேட்ட நாகம்போலத் தவிக்கிருள். நெஞ்சு வேகமாகப் படபடக்கிறது. இன்னும் சில நாட்களில் அவளுடைய வீட்டிலும் இதயத்தைப் பிளக்கும் அந்த ஓசை கேட்கப் போகிறதா ?
பொன்னம்மாவின் முகம் பயங்கரமாக மாற மனதிற்குள் ஒரு செத்தவீடு நடந்து ஒய்கிறது.
எந்த நிமிடத்தில் அந்தப் பயங்கரம் நிகழ்ந்து விடுமோ வென்ற தவிப்பு மலைபோல் வளர்ந்து அவளது நெஞ்சை அடைத்துக்கொண்டு பெருஞ் சுமையாகக் கனத்தது.
பொன்னம்மா படுக்கையிற் புரண்டுகொண்டிருந் தாள். இரவில் படுத்துக்கொள்ள வேண்டுமென்பதற் காகப் படுத்தாளே தவிர, அவள் படுத்தாலும் படுக்கா விட்டாலும் ஒன்றுதான், பல நாட்களாக நித்திரை யில்லாததால் அவளது கண்கள் சிவப்பேறி மடல்கள் வீங்கியிருந்தன.
கலைந்திருந்த கூந்தலும், செம்மை படர்ந்த கண் களும், அழுக்குப்படிந்த உடையும், அவளின் பைத்தியக் காரத் தோற்றத்தை மிகைப்படுத்தின.
அவள் ஏக்கத்துடன் படலையை நோக்கியபடியே இருந்தாள்.
அருகில் இருந்த கைவிளக்கு காற்றில் அசைந் தாடுகிறது. நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு எங்கோ சாமக்கோழி ஒலி எழுப்புகிறது.
அயலூருக்குச் சென்ற சதாசிவம் ஏன் இன்னும் திரும்பவில்லை? மனைவி வீட்டில் தனியாக இருக்கப் பயப்படுவாளே என்று, பொழுது மங்கிவிட்டால் வீட்டைவிட்டுக் கிளம்பாத சதாசிவத்தை இன்று வெகு நேரமாகியும் காணவில்லை.

Page 32
- 46 -
பக்கத்திலிருந்த பனை வடலிக்குள் பாம்பொன்று பயங்கரமாகக் கொறித்துக்கொண்டிருந்தது.
திடீரென்று பேரிரைச்சலுடன் வீசிய காற்று அருகி லிருந்த தீபத்தின் ஒளியைத் துடிக்கவைத்து அணைத்து, இருளைக் கவித்தது.
பொன்னம்மாவின் நெஞ்சு ஒரு கணம் விறைத் துப் போயிற்று.
"ஒருவேளை அவருக்கு ஏதேனும்.’’ இதயத்தைப் பிசைந்து எழுந்த எண்ணங்களைப் பொன்னம்மாவால் தாங்க முடியவில்லை.
"ஆயாக்கடவைப் பிள்ளையாரே, நீதான் அவரைக் காப்பாற்றவேணும்." கண்களை மூடிக்கொண்டு பொன்னம்மா வேண்டுதல் செய்கிருள்.
படலை கிறிச்சிடும் சத்தம். கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு அவள் பார்க்கிருள். இருளில் மங்கலாகத் தெரியும். உருவம்.சதாசிவம்தான்.
பொன்னம்மாவின் நெஞ்சிலிருந்து நிம்மதியான பெருமூச்சுக் கிளம்புகிறது.
பயம் என்பது ஒரு பிசாசு; அது மனதிற்குட் புகுந்து விட்டால் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் தனக்குச் சாதக மாக்கி, விழுங்கி ஏப்பம்விட்டு விசுவரூபம் எடுத்துக் கொண்டேயிருக்கும்.
பொன்னம்மாவைக் கலங்கவைக்கும் வகையில் அடுத்த நாளும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
சற்று முன்பு அவள் கேட்ட பயங்கர ஓசை. "லொறி"யின் சக்கரங்கள் அவளது நெஞ்சைச் சிருய்ப் பதுபோலச் சடுதியாய்த் தெருவை உராசி நிறுத்தப் பட்டு. ஐயோ! இப்பதானே அவரும் தெருவுக்குப் போனவர், ஒருவேளை சக்கரங்களுக்குள் சிதைந்து இரத்தக் களரியாகி.." பொன்னம்மா தெருவை எட்டிப் பார்ப்பதற்கே அஞ்சினுள்.

- 47 -
ஒரு மாதத்திற்கு முன்பு பக்கத்து வீட்டுச் செல்லக் குஞ்சாச்சி "காரில்" அடிபட்டு அந்த இடத்திலேயே செத்துப்போனது அவளின் நினைவில் வந்தபொழுது நெஞ்சுக்குள் ஏதோ செய்தது.
மறுகணம் பொன்னம்மா தெருவை நோக்கி ஒடு கிருள்.
நிதானம் இழந்துவிட்ட அவளது கால்களைப் பாதை யிலே கிடந்த கல்லொன்று பதம்பார்த்து விடுகிறது. அவள் நெஞ்சு அடிபட நிலத்திலே சாய்ந்தாள்.
"ஒரு மயிரிழை தப்பிவிட்டுது, இல்லாட்டில் சதா சிவத்தை உயிரோடை பாக்கேலாது." யாரோ வழிப் போக்கன் கூறியது பொன்னம்மாவின் காதுகளிலும் விழுந்தது.
பொன்னம்மாவின் உணர்ச்சிகள் வெடித்துப் பெரு மூச்சாகப் பிரதிபலிக்கின்றன; அவளது தலை சுற்று கிறது. கண்கள் இருட்டடைகின்றன. நெஞ்சுக்குள் பல மான வலியொன்று ஏற்படுகிறது. அவளால் எழுந் திருக்க முடியவில்லை.
நிலத்திலே விழுந்து கிடந்த பொன்னம்மாவைச் சதாசிவம்தான் தூக்கிச்சென்று கட்டிலிலே கிடத்து Slogis
நான்கைந்து நாட்கள் கழிகின்றன. பொன்னம்மா புரண்டு படுக்கிருள். அவளால் அந் தச் சோக நிகழ்ச்சியைத் தாங்க முடியவில்லை. சதா சிவத்தின் உடலை யாரோ துணியால் மூடிவிட்டார்கள். அயலவர்களின் ஒப்பாரி அந்தச் சுற்றுவட்டாரத்தையே துக்கத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது. சதாசிவத்தின் விசுவாசமான உழைப்பாளி ஒருவன் கலங்கிய கண்க ளுடன் பாடை கட்டுவதில் முனைந்திருந்தான்.
பொன்னம்மாவின் கண்களில் மட்டும் ஏன் கண்ணிர் துளிர்க்கவில்லை ? அழுதழுது கண்ணிர் வற்றி விட்டதா? அவள் கணவனின் உடலையே வெறித்துப் பார்த்த வண்ணம் இருந்தாள்.

Page 33
- 48 -
நெற்றியிலே கசிந்த வியர்வையில் அவளணிந்திருந்த குங்குமம் கரைந்து வழிந்தது. அரக்கத்தனமாக அவ ளின் கூந்தலை யாரோ அவிழ்த்து விட்டார்கள்: பொன்னம்மா இனிமேல் சபை சந்திக்கு உதவாதவள்-- அறுதலிS
யாருமே இல்லாத வரண்ட பாலைவனத்தில் தான் தன்னந்தனியணுக விடப்பட்டுக் கணவனையே நினைத்துக் கதறிக்கொண்டிருப்பதுபோல அவளுக்குத் தோன்றியது. யாரோ அந்திமக் கிரியைகள் செய்கிருர்கள். பாடை நகர்கிறது; பறைமேளம் நாராசமாய்க் காதில் விழுகிறது. t
பொன்னம்மா கதற முயற்சிக்கிருள். 'ஐ. 1 ஐயோ.. !’ கண்ணீர் கருமணிகளை அறுத்துக்கொண்டு பிர வகித்துப் பாய்கிறது. நெஞ்சுக்குள் ஏதோ கிழிந்து சிதறுவிதைப்போல் இருந்தது. உலகமெல்லாம் இருண்டு வந்து சூனியப் பெருவெளியாகியது.
*" பொன்னம்மா ! என பொன்னம்மா ! என்ன குளறுகிருய்? கணுக்கண்டனியோ?*
சதாசிவம் அவளின் தோள்களை உலுப்புகிறர். பொன்னம்மா இனிமேல் விழித்துப் பார்க்க மாட் டாள். அவளது தவிப்பு அடங்கிவிட்டது,
அவள் மேல்நோக்கிப் பறந்துகொண்டிருந்தாள். என்றுமில்லாத புத்தொளி அவளது வதனத்தில் நிறைந் திருந்தது. எங்கிருந்தோ மங்கல கீதங்கள் அவளது காதுகளில் விழுந்தன. வானத்திலிருந்து சொரிந்த ந மலர்கள் அவளுக்கு வரவேற்புக் கூறின.
** பொன்னம்மா... ! ' உலகத்துச் சோகமெல்லாம் இழையோடிய சதாசிவத்தின் அலறல் நிராதரவாய் ஒலித்துக்கொண்டிருந்தது.
-ஈழநாடு 1964

பிழைப்பு
நிான் மருதானைச் சந்தி வழியாக வந்து "பஞ்சிகா வத்தை ரோட் ’டில் திரும்பிக்கொண்டிருந்தேன். பகல் முழுவதும் ஓயாது ஓடும் “ட்ராலி பஸ்கள் இப்போது ஓய்ந்துவிட்டன. தெருவில் "கார் களோ 'பஸ்"களோ ஒன்றையும் காணுேம். "லாபாய், லாபாய்" என்று கத்திக்கொண்டிருக்கும் வியாபார தந்திரிகள் தங்கள் கடைகளை மூடிவிட்டார்கள். இரவு பகல் இருபத்து நான்கு மணிநேரமும் சேவைசெய்யும் ஒரு தேநீர்க்கடை மட்டுந் திறந்திருந்தது. முன்பகுதியிலுள்ள மேசை யருகே முதலாளி தூங்கிவழிந்து கொண்டிருந்தார். அவரைத் தவிர வேறு ஒருவரையுமே கடையில் காண வில்லை. அருகிலுள்ள புகையிரத நிலையத்தின் "குட் செட்டில் இயந்திரங்களின் ஒலிகள் இடையிடையே கேட்டுக்கொண்டிருந்தன. வெகு தூரத்தில் மங்கலாக இரு உருவங்கள். மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்களைத் தவிர அத்தெருவில் மனித சஞ்சாரமே அற்றுப்போயிருந்தது.

Page 34
- 50 -
புகையிரத நிலையத்தின் மணிக்கூண்டுக் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தேன். இரவு ஒன்று ஐம்பத்தைந்தாகி விட்டது எனது நடையில் வேகம் கூடியதை உணர்ந் தேன். சட்டைப் "பாக்கெட்"டில் இருந்த ரூபாய் நோட் டுக்கள் பெருஞ் சுமையாய்க் கனத்துக்கொண்டிருந்தன.
ஒன்றரை மாத காலமாகத் தியேட்டர் ஒன்றில் கடமையாற்றியதில் இன்றுதான் சம்பளம் கிடைத்தது. தினமும் இரவு இரண்டாங் காட்சி முடிந்து வீடு திரும்பு வதற்கு எப்படியும் நேரமாகிவிடும். முன்பெல்லாம், நான் இவ்வழியாக வரும்பொழுது அதிகம் பயப்படுவ தில்லை. இன்று ஏனே எனது மனதைப் பயம் கெளவிக் கொண்டுவிட்டது.
மருதானை வீதிகளில் இரவில் நடமாடுவது கவன மாக இருக்கவேண்டும். இங்கு வழிப்பறிகள் நடப்ப துண்டு. அத்தோடு வேறுவிதமான கொள்ளைகளும் நடக்கும். மருதானை நகருக்கு இரவெல்லாம் பகல் தான். வெறியர்களின் கூத்துகளும், கும்மாளங்களும், வேறு பல கேளிக்கைகளும் இங்கு நடைபெறும். வாழ் நாள் முழுவதும் உழைக்கும் பணத்தை நொடிப் பொழுதில் தீர்த்துக் கட்டக்கூடிய பணம்விழுங்கிகளின் சுவர்க்க பூமியிது. அவர்களின் வலைக்குள் அகப்பட்ட எத்தனையோ அப்பாவிகளின் கதைகளை நான் கேள்விப் பட்டிருக்கிறேன். * η
சிறிது காலத்துக்கு முன் எனது ஏழை நண்பன் ஒருவன் என்னிடம் வந்தான். தனது சகோதரிக்கு ஏதோ பண இடைஞ்சலாம். சம்பளப் பணம் முழு வதையும் அவளிடம் கொடுத்துவிட்டானும், கைச் செலவுக்குப் பணம் வேண்டுமென்று என்னிடம் கடன் கேட்டான். ஏதோ கையிலிருந்த பணத்தைக் கொடுத்து அனுப்பினேன். நான்கைந்து நாட்களின் பின்தான் உண்மை வெளிப்பட்டது; அவன் சினிமாவுக்குச் சென்று திரும்புகையில் தனது சம்பளத்தைப் பறிகொடுத்து விட்டான் என்பதை வேறுசிலர் கூறத்தான் கேள்விப் பட்டேன். அவனிடம் உண்மையை விளக்கமாகக்

- 51 -
கூறும்படி கேட்டால் வெட்கமும், வேதனையும் அடை வானேயென்று பேசாமல் இருந்துவிட்டேன். பாவம், அவன்மேல் எனக்கு அனுதாபந்தான் ஏற்பட்டது.
அருகிலிருக்கும் தியேட்டரில் இரவு இரண்டாங் காட்சியாக ஏதோ பயங்கரமான படம் காட்டுகிருர் கள் போலிருக்கிறது. இடையிடையே அலறும் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன.
மிகவும் சமீபத்திலிருந்து ஏதோ துர்நாற்றம் என் மூக்கைக் துளைத்தது. விரல்களால் மூக்கை அழுத்திப் பிடித்துக்கொண்டே நடந்தேன். சில நாட்களுக்கு முன் தெருவோரத்தில் ஒரு காகம் செத்துப்போய்க் கிடந்தது. அதன் அழுகிய நாற்றமாகத்தான் இருக்குமோ..? அப்படியும் நினைத்துவிட முடியாது. ஏனெனில், வெகு காலமாகவே இத்துர்நாற்றம் இவ்விடத்தில் இருக்கின் றது. சிறிது தூரத்தில் சாக்கடை நீர் தேங்கிநிற்கின் றது. அதன் நாற்றமாகத்தான் இருக்க வேண்டும்.
தெருவின் வளைவை அடைந்துவிட்டேன். வரிசை யாகத் தொழிலாளர்களின் குடிசைகள் தென்படுகின் றன. அவற்றைத் தாண்டிவிட்டால் நான் குடியிருக்கும் வீட்டை அடைந்துவிடலாம்.
நான் கண்களைக் கூர்மையாக்கிக்கொண்டு பார்த் தேன். அதோ ஒரு பெண்ணின் உருவம் தெரிகிறது. குடிசையொன்றின் முன்வாசலில் அவள் நிற்கின்ருள்.
வழக்கமாக, எதிர்ப் பக்கத்திலுள்ள கட்டிடத்தின் மேல்மாடியில் அமைந்திருக்கும் விளம்பரப் பலகையில் மின்சார "பல்ப்புகள் எரிவதும் அணைவதுமாக விருக்கும். அதனல் அவ்விடத்தில் யார் நின்ருலும் துலக்கமாகத் தெரியும். ஆனல், இன்று அந்த இடம் இருள் கவிந்து இருக்கின்றது. மின்சார "பல்ப்புகள் பழுதடைந்திருக்க வேண்டும். தூரத்திலுள்ள மின்சாரக் கம்பத்தின் வெளிச்சம் அவ்விடத்தில் சிறிது மங்கலாகத் தெரி கிறது:

Page 35
நான் அவ்விடத்தைச் சமீபித்துக்கொண்டிருந் தேன். இப்போது அவளின் உருவம் தெளிவாகத் தெரிகிறது. இளம் பெண்ணுக இருக்கின்ருளே.! அவள் தெருவின் இரு பக்கங்களையும் பார்த்துவிட்டுக் குடிசையின் வாசலை அடைகிருள். அவளுடைய பார் வையில் ஏன் ஏக்கம் தெரிகிறது? அவள் யாருடைய வரவை எதிர்பார்த்து நிற்கின்ருள்?
அவள் தன்னை அலங்கரித்திருப்பது நன்ருகத் தெரி கிறது. இந்த அக்ால வேளையில் அப்படி என்ன அலங் காரம் வேண்டிக்கிடக்கிறது? தலைவாரிப் பூச்சூடி அழகாக உடையணிந்திருக்கிருள். ஒருவேளை இவளும். ? அப்படித் தான் இருக்கவேண்டும். தனது காதலன. இல்லைக் காதலர்களை எதிர்பார்த்து நிற்பவளாக இருக்க வேண்டும்.
நான் அவளைச் சமீபித்து விட்டேன். 'க்கும்’-ஒரு செருமல் ஒலி அவளது அடித் தொண்டையிலிருந்து கிளம்புகின்றது. w
எனது தலை நிமிரவேயில்லை. நான் நடந்துகொண் டிருந்தேன். ஆனலும் நடையின் வேகம் குறைந்து விட்டது. அவளின் செருமலுக்கு அவ்வளவு சக்தியா? கடைக்கண்ணுல் அவளைப் பார்த்தேன்.
அவள் சிறிது சத்தமாகச் சிரிக்கின்ருள். ஜல தரங்கத்தின் நாதமல்லவா கேட்கிறது. என்னையும் மீறிக்கொண்டு எனது தலை நிமிர்கின்றது. அவள் புன்னகை புரிந்தவண்ணம் தன்னிடம் வரும்படி கையால் அழைத்தாள்.
ஏன் எனது நடை தடைப்பட்டுவிட்டது? கால்கள் இயங்க மறுக்கின்றன. நான் நகராமல் நின்றுவிட் டேன். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. எனது இதயம் வேகமாக அடித்துக்கொள்ளுகின்றது. இந்தத் தருணத்தில் பயத்தைக் களைந்தெறிந்து விட்டுப் புத்திசாலித்தனமாகவல்லவா நடந்துகொள்ள வேண்டும். ஏன் என் புத்தி மழுங்கிவிட்டதா?

- 53 -
இதோ அவள் என்னைநோக்கி வந்துகொண்டிருக் கிருள். "நெருங்காதே" என்று கத்தவேண்டும்போலத் தோன்றுகின்றது; எனது தொண்டை ஏன் அடைத்துக் கொண்டுவிட்டது? உமிழ்நீரைக்கூட விழுங்க முடிய வில்லையே! இந்த இடத்தைவிட்டே ஓடிவிடுவோமா? ஆம், அதுதான் சரியான யோசனை. ஆளுல் எனது கால் களை நகர்த்தக்கூட முடியவில்லையே கால்களுக்கு இவ் வளவு கனம் திடீரென்று எப்படி வந்தது?
அவள் என்னருகில் நிற்கின்ருள். இதழ்களிலே புன்னகை அரும்பி நிற்கின்றது. அப்பப்பா அவளது வதனத்திலே எவ்வளவு கவர்ச்சி!-நாகபாம்பின் உடலிலே ஒருவகை வழவழப்பான அழகு தோன்றுமே அதேபோலத்தான்.
ஐயோ, அவள் என் கைகளைப் பற்றுகின்ருளே! ஏன் என் தேகமெல்லாம் வியர்த்துக் கொட்டுகின்றது? எனது உரோமக் கால்கள் குத்திட்டு நிற்கின்றன. நான் மரக் கட்டை போலாகிவிட்டேனே. எனது கைகளை விடு வித்துக் கொள்ளக்கூடிய சக்தி எங்கே ஓடி மறைந்து விட்டது. இந்நிலையில் யாராவது பார்த்துவிட்டால் .? நான்கு பக்கங்களையும் கவனிக்கின்றேன்; நல்லவேளை ஒருவருமே இல்லை.
* உள்ளே வாருங்கள் " என்று கூறிக்கொண்டே எனது பதிலையும் எதிர்பாராது அவள் குடிசைக்குள் என்னை அழைத்துச் சென்ருள்.
நாம் செய்யக் கூடாதென்று திடசங்கற்பம் செய்திருக்கும் செயல்களைச் சிலவேளைகளில் சந்தர்ப்ப வசத்தால் நம்மையும் மறந்து செய்து விடுகின்ருேமே. up on A இதே நிலையில்தான் நானும் இருந்தேன்.
அவளது குடிசை மிகவும் சிறியதுதான். பலன்கத் துண்டுகளினலும், தகரத்தினலும் அமைக்கப்பட்டிருந் தது. குடிசைக்குள் நுழைவதற்கு நன்ருகக் குனிய வேண்டி யிருந்தது. முன் பகுதியில் அதிக வெளிச்சம் இல்லை. எதிலோ என் கால்கள் இடறி நிலை தளருகின்றது:

Page 36
- 54 -
அவள் என்னைத் தாங்கிக்கொண்டாள் குடிசையின் மூலையில் ஒரு சிறு கயிற்றுக்கட்டில் போடப்பட்டிருந் தது. அதிலே என்னை அமரும்படி கூறிவிட்டுக் குடிசையின் முன் கதவை அவள் சாத்தினுள்.
அப்பப்பா சிறிது நேரத்திற்குள் எனது உடைக ளெல்லாம் வியர்வையால் நனைந்துவிட்டதே! சே! ஏன் எனது உடம்பெல்லாம் இப்படி நடுங்குகின்றது? நான் மிகவும் தென்புடன் அல்லவா இருக்கவேண்டும்: எனது பயந்தாங்கொள்ளித்தனத்தை இவள் அறிந்து கொண்டால் மிகவும் சாதுரியமான முறையில் எனது பணத்தைப் பெற்றுக்கொண்டு விடுவாளே!
எனது சிறுதொகைப் பணத்தைச் செலவு செய் வதற்கு நான் போட்டுவைத்திருந்த திட்டங்கள் மனக் கண்முன் வந்தன. எனக்கு வேலை கிடைத்தவுடன் முதற் சம்பளத்தில், ஊர்ப்பிள்ளையாருக்கு ஒரு தீபம் வாங்கிக் கொடுப்பதாக எனது அன்னை நேர்த்திக்கடன் செய்திருந் தாள்; முக்கியமாக அதனை நிறைவேற்றவேண்டும். எனது ஏழைத் தங்கைக்கு ஒரு சேலை வாங்கியனுப்ப வேண்டும். பாடசாலைக்கு வசதிச்சம்பளம் கட்டுவதற்குப் பணம் வேண்டுமென்று தம்பி கடிதத்துக்குமேல் கடித மாக எழுதியிருந்தான். இவற்றையெல்லாம் விட வேறும் பல சில்லறைச் செலவுகள்.
நான் மிகவும் சாதாரணமாக இருப்பவனைப்போல் நடித்துக்கொண்டு நான்கு பக்கமும் நோட்டம் விட் டேன். எதிர் மூலையில் ஏதோ பாத்திரங்கள் உருண்டு கிடந்தன. அறையின் நடுவே ஒரு பிரம்புத்தட்டி தொங்கிக்கொண்டிருந்தது. மறு பக்கத்திலே தான் சமையலறை போலிருக்கிறது. உள் வளை மரங்களில் புகை ஒட்டறைகள் படிந்திருந்தன. எதிரேயிருந்த கதிரை யொன்றில் இரும்புப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. எதிர்ப்பக்கத்தில் சேலைகளும் வேறு உடைகளும் இருந் தன. இவைகளைப் பார்த்தால் அக்குடிசையில் அவளைத் தவிர வேறு ஒருவரும் வசிப்பதில்லைப்போல் தெரிகின் றது. இவள் தனியாகவா இங்கு இருக்கின்ருள்?

- 55 -
மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் மேற் கூரையில் ஏதோ மின்னியவாறு தெரிந்தது. உற்றுக் கவனித்தேன்.
ஒரு சிலந்தி வலை பின்னியிருந்தது; அது வட்டம் வட்டமாக எவ்வளவு அழகாக இருக்கின்றது. அதன் நடுவே சிலந்தி! அந்த வலையில் பூச்சியொன்று விழுந்து துடித்துக்கொண்டிருந்தது.
அவள் திரும்பி வந்தாள். விளக்கு வெளிச்சத்தில் அவளின் தோற்றத்தை நன்கு கவனித்தேன். எவ்வளவு அழகாக இருக்கின்ருள்! அவளது தோற்றத்தில் நாரீ மணிகளின் அதிமித அலங்காரம் இருக்கவில்லை. குடும்பப் பெண்ணுக்குரிய அலங்காரத் தோற்றந்தான் இருந்தது? அவளைப் பார்க்கும்போது அவளின்மேல் எனக்கு அனுதாபந்தான் ஏற்பட்டது.
இவள் தனது வாழ்வைச் சரியான பாதையிலே செலுத்தியிருந்தால் நிச்சயம் ஒரு சிறந்த குடும்பப் பெண்ணுகியிருப்பாள் என் எண்ணத் தோன்றியது.
ஏன் இவ்வளவு கீழ்த்தரமான வழியில் இறங்கி யிருக்கிருள்? ஒருவேளை வறுமையாக இருக்குமோ? நிச்சயம் அப்படியிருக்க முடியாது. வறு மை யைப் போக்கிக்கொள்ள எவ்வளவோ கண்ணியமான தொழில் கள் இருக்கின்றனவே. படுகுழியில் விழவேண்டியதில்லை யே! பின் இந்நிலைக்கு இவள் வருவதற்குக் காரணந் தான் என்ன?
அவர்கள் வாழும் கீழ்த்தரமான டாம்பீக வாழ்க்கை முறையாகத்தான் இருக்க வேண்டும். குடிக்கும், கும் மாளத்திற்கும் கண்ணியமாகப் புரியும் தொழில்களின் வருமானங்கள் போதுவதில்லை. அதனலேதான் குறுக்கு வழியை நாடுகின்ருர்கள் போலும். ஆனலும் இந்த முடிவை எனது மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அவளுடன் கதைத்து ஏதாவது கிரகித்துக்கொள்ளலாம் போலத் தோன்றியது.

Page 37
இதோ அவள் எதையோ நீட்டுகின்ருள். கிண் ணத்துடன் பாலை வாங்கிச் சுவைத்தேன். அவள் என்முன் அடக்கமாக நின்றுகொண்டிருந்தாள். நான் இங்கு வந்தபோது அவளிடம் காணப்பட்ட கலகலப்பு எங்கே ஒடிமறைந்து விட்டது? கிண்ணத்தைக் கட்டிலின் ஒரத்திலே வைத்தேன்;
விம்மும் ஒலி கேட்கின்றதே! அவளை உற்றுக் கவனித்தேன். கண்ணிர்! .இது என்ன தொந்தரவாக இருக்கின்றது. எதற்காக இவள் அழுகின்ருள்? அழவேண்டுமானல் தனிமையிலிருந்து அழுது தொலைக்கலாமே. என்ன இங்கு அழைத்துக் கொண்டு வந்து வைத்து ஏன் அழவேண்டும்? வரவர அழுகை அதிகரிக்கின்றதே, எனக்கு அவளைப் பார்ப் பதற்கு அனுதாபமாகவும், சங்கடமாகவும் இருந்ததும்
"ஏன் அழுகின்ருய்?' அவள் அதிகமாக விம்மினுள் எனக்குப் பொறுமை குறைந்துகொண்டு வந்தது. கேட்பதற்குப் பதில் கூருமல் இப்படி அழுதுகொண்டிருந்தால்...? ஆத்திரந்தான் பொங்கியது. ஆனலும் அடக்கிக்கொண்டு அவளின் அழுகைக்குக் காரணத்தைக் கண்டிப்புடன் கேட்டேன். இப்போது அவள் ஒருவாறு தனது அழுகையைக் குறைத்துக்கொண்டாள்.
"நான் ஒரு அனுதை, சிறுவயதிலே தாய்தந்தை யரை இழந்த எனக்கு அண்ணு ஒருவர் துணையாக இருந் தார். ஆனல் அவரும் சிறிது நாட்களுக்குமுன் நோய் வாய்ப்பட்டு இறந்துவிட்டார். நான் தனியணுகி விட் டேன். எனது துன்பத்தை நினைக்கும்போது அழுகை வந்துவிட்டது." என்று கூறிக்கொண்டே அவள் நிலத் தில் அமர்ந்தாள்.
என்மனம் சிறிது வேதனைப்பட்டது. பாவம், இந்த இளம் வயதில் அவளுக்கு இவ்வளவு கொடுமையா? விதி யாரைத்தான் விட்டு வைத்தது!

- 57 -
ஆணுலும் அவள் புரியும் இழிவான தொழிலை நினைக்கும்போது மனதிலே கசப்புத்தான் ஏற்பட்டது. ஒருவேளை தனியாக விடப்பட்ட அவள் வயிற்றை நிரப்பு வதற்குத்தான் இத்தொழிலைப் புரிகின்ருளா?
'ஏன், ஏதாவது கண்ணியமான தொழிலைச் செய்து சம்பாதிக்கலாமே" என்று மெதுவாகக் கேட்டு வைத் தேன்.
"நேற்றுவரை என்னிடமிருந்த நகைகளை விற்றுக் கண்ணியமான முறையில் சீவனத்தை நடத்திவிட்டேன். என்னிடமிருந்த பண மெல்லாம் கரைந்துவிட்டது. தனிமையில் விடப்பட்ட ஓர் இளம்பெண் எந்தக் கண்ணிய மான தொழிலைச் செய்யலாம்? அவளைச் சுற்றியிருக்கும் சிலர் எப்படியும் அவளை இழிவு நிலைக்குக் கொணர்ந்து விடுவார்கள். அப்படியொரு நிலை பிறரால் ஏற்படுமுன் நானே இந்நிலைக்கு வந்துவிடுவதெனத் தீர்மானித்தேன். நீங்கள்தான் முதன்முதல் என்னிடம் வந்திருக்கிறீர் கள்."
நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். புதுமலரின் வருணிக்கமுடியாத ஒருவித வனப்பு அவளிடம் மறைந் திருந்ததை என் உள்மனம் உணர்ந்துகொண்டது. நுகரப்படாத மலரா அவள்? நமது சமுதாயத்தில் தேவையற்ற முறையில் எவ்வளவு மலர்கள் அநியாய மாகக் கசங்கி விடுகின்றன.
அவள் தொடர்ந்தாள். ". ஆணுல் உங்களைக் கண்ட வுடன் நான் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட் டேன். என் சகோதரனை உங்கள் உருவத்தில் பார்க் கின்றேன். என் அண்ணுவின் அதே கனிந்த பார்வை, தோற்றம் யாவும் உங்களிடம் அமைந்திருக்கின்றன. அண்.ணு!" விம்மியபடியே அவள் என்னை அழைத் தாள். உணர்ச்சி இழையோடிய அவளது அன்புக் குரலின் சக்தி என் உள்ளத்தை இளகச் செய்தது.
எனது கண்கள் குளமாகின. அவளின் நிலைகண்ட எந்த மனித இதயமும் கலங்காமல் இருக்கமாட்டாது.

Page 38
- 58 -
அவள் தனது உள்ளத்தைத் திறந்து எல்லாவற்றையுமே கூறிவிட்டாள். இந்த உத்தமப் பெண்ணுடன் உடன் பிறக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லையே என்று எனது மனம் அழுதது. ஆனலும் நான் அவளுக்கு என்ன உதவியைச் செய்யப் போகின்றேன்? எனது குடும்பத்தில் எனக்கு இருக்கும் பொறுப்பே சுமக்க முடியாமல் கனக்கின்றதே. A.
எனது சட்டைப் "பாக்கெட்"டில் கிடந்த பணத்தில் நூறு ரூபாவை எடுத்து அவளிடம் நீட்டினேன். அவள் தயங்கினுள்.
'ஓர் இளம்பெண் தனியாக வாழமுடியாதென்று நினைத்துக்கொள்ளாதே. மனத்திடமும், துணிவுங் கொண்ட எந்தப் பெண்ணும் துன்பமில்லாது வாழலாம். கண்ணியமான ஏதாவது தொழிலைச் செய்து வாழக் கற்றுக்கொள். அதற்கு இந்தப் பணம் மூலதனமாக வாவது உதவட்டும்" என்று கூறி அவளது கையில் பணத்தைத் திணித்தேன். V
நான் அவளுக்குக் கூறிய வார்த்தைகளும் செய்த சிறு உதவியும் எனது மனதிற்குத் திருப்தி அளிக்க வில்லை. ஆனலும் என் நிலைமையில் அதைத்தான் என்னுல் செய்ய முடிந்தது.
நன்றிப் பெருக்கால் அவளது கண்கள் கலங்கின. நான் புறப்படும்பொழுது 'போய்வாருங்கள். அண்ணு' என்று கூறி அன்புடன் விடைதந்தாள்.
வாழ்விலே நல்ல காரியம் ஒன்றைச் சாதித்த மனநிறைவுடன் எனது அறையை அடைந்தேன்.
வழக்கம்போல் அடுத்தநாள் இரவு அவ்வழியாக வந்துகொண்டிருந்தபொழுது என்னையறியாமலே எனது பார்வை அவளது குடிசையின் பக்கம் திரும்பியது. அங்கே நான் கண்ட காட்சி!- ஒர் இளம் வாலிபனை அணைத்த படியே அவள் குடிசைக்குள் நுழைந்துகொண்டிருந்தாள்.
அ. கலைச்செல்வி 1964

7
இதுதான் தீபாவளி
தீபாவளி நாளிலும் இப்படி வெகுநேரம் தூங்கி விட்டேனே என்ற ஆதங்கத்துடன் எழுந்திருந்தேன்.
நேற்று மாலை "யாழ்தேவி”யில் ஊருக்கு வந்த நான், பிரயாணக் களைப்பினுல் சற்று அதிகமாகவே நித்திரை யில் ஆழ்ந்துவிட்டேன். சனக்கூட்டங் காரணமாகப் புகையிரதத்தில் இருப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. பண்டிகை நாட்களில் அரசாங்கத்தாரால் ஒழுங்கு செய்யப்படும் விசேஷ வண்டியில் பயணஞ் செய்தால் நெருக்கடியாக இருக்குமே என்றுதான் "யாழ்தேவி”யில் பயணஞ் செய்தேன். விசேஷ றெயிலைவிட "யாழ்தேவி" யிலேதான் கூட்டம் அதிகமோ என எண்ணும் படியாகி விட்டது.
எனக்கு இருப்பதற்கு இடம் கிடைக்காததினல் நான் கவலை கொள்ளவில்லை. தீபாவளிக் கொண்டாட் டங்களைக் கண்டுகளிப்பதற்காக என்னுடன் முதன்முறை யாக யாழ்ப்பாணத்திற்கு வரும் சிங்கள நண்பன்

Page 39
- 60 -
பியசேனவுக்கு இருக்க இடம் கிடைத்திருந்தால் எனது மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும்.
என்னைப் போன்றுதான் நண்பனும் வெகுநேரம் தூங்கியிருப்பானே என நினைத்துக்கொண்டே பியசேன வின் கட்டில் இருந்த பக்கம் திரும்பினேன். அவன் எனக்கு முன்னதாகவே விழித்துக்கொண்டுவிட்டான். கட்டிலில் இருந்தவண்ணம் யன்னலின் திரையை நீக்கி ஆர்வத்தோடு வெளியே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனது பார்வையை எனது பக்கம் திருப்பும் வகையில் "குட்மோணிங்" என வந்தனம் தெரிவித்த படியே எழுந்து அவனது அருகில் சென்றேன்.
எனது குரல் கேட்டுத் திடுக்குற்றவன்போல அவன் எனது பக்கம் திரும்பிப் புன்னகையோடு பதிலுக்கு வந்தனம் கூறினன்.
யன்னலின் அருகிற் சென்று திரையை நன்ருக நீக்கி விட்டு வெளியே நோக்கினேன்;
அங்கே எனது தங்கை ராணி முற்றத்தை அலங் கரித்துக் கோலம் வரைந்துகொண்டிருந்தாள். தன்னை மறந்து கோலமிடுவதிலே கற்பனைகளை விரியவிட்ட அவளது வதனத்தில் எத்தனை எத்தனையோ பாவங்கள் தெரிந்தன.
'யுவர் ஸிஸ்டர் லுக்ஸ் வெரி சார்மிங்.' நண்பன் பியசேன ராணியின் அழகை வர்ணித்தபோது மனதில் ஒருவித குறுகுறுப்பு எனக்கு ஏற்பட்ட போதி லும் அசடு வழியச் சிரித்து வைத்தேன்.
* இது கொழும்பில்லையடா, யாழ்ப்பாணம். அதுவும் தமிழ்ப் பண்பாடு நிறைந்த ஒரு கிராமம். இங்குள்ள வாழ்க்கை முறைகளும், பண்பாடுகளும் வேறுபாடா னவை. இங்கு ஒரு வயது வந்த பெண்ணை இப்படிப் பார்ப்பதும், வர்ணிப்பதும் குற்றமாகும்’-என்று நண்ப னிடம் சொல்ல எனக்குத் துணிவில்லை.

- 61 -
ஏனென்ருல் பியசேனவின் உயர்ந்த மனப்பக்கு வத்தைப் பற்றி எனக்கு நன்ருகத் தெரியும். அவனும் நானும் கொழும்பு மாநகரில் ஒரே அறையில் ஆறு வருடங்களுக்கு மேலாகக் காலத்தைக் கடத்தி வரு கிருேம்.
பியசேன சிங்களப் பத்திரிகைகளில் கதைகளும் கட்டுரைகளும் எழுதிவரும் பிரபல இளம் எழுத்தாளன். சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளையும், கலாசாரங் களையும், பண்பாடுகளையும் அலசி ஆராய்வது அவனது இனிய பொழுதுபோக்கு. அந்த ஆராய்ச்சியின் பய ஞகத் தோன்றும் பல பிரச்சினைகள் எங்கள் இருவருக்கு மிடையில் சர்ச்சைகளையும், வாதங்களையும் ஏற்படுத்தி எங்களது நட்பை இறுக்கிக் கொள்ளும்.
தீபாவளியைக் கொண்டாடுவதற்காகக் கொழும்பி லிருந்து நான் புறப்பட்டபோது, பியசேனவும் என்னு டன் வருவதற்கு ஆசைப்படுவதாகக் கூறினன். தீபாவளிக்காகக் கிடைத்த விடுமுறையை வீணுக்காமல் என்னுடன் வந்து யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறைகளை அவன் அறிந்துகொள்ள விரும்பினன். நானும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன்.
நாங்கள் இருவரும் புறப்பட்டு யாழ்ப்பாணத்தில் எனது கிராமமாகிய புன்னுலைக்கட்டுவனுக்கு வந்து சேர்ந்ததும், எனது தாய் தந்தையரை நண்பன் பார்த்த போது இரு கைகளையும் கூப்பி "வணக்கம்" எனக் கூறி எங்கள் எல்லோரையும் கவர்ந்தான்.
பியசேனவுக்குத் தமிழ் பேசத் தெரியாவிட்டாலும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ருற்போல இரண்டொரு வார்த் தைகளை "விளாசுவதில் கெட்டிக்காரன்.
இவ்வளவு நேரமும் கோலத்தின் அழகினை இரசித்துக் கொண்டிருந்த பியசேன என் பக்கம் திரும்பி **வை டூ யூ செலிபறேற் டீபாவலி ?' எனத் தீபாவளி கொண் டாடுவதற்குரிய காரணத்தைக் கேட்டான்.

Page 40
- 62 -
வழக்கம்போல எங்களது சம்பாஷணை ஆங்கிலத்தில் தொடர்ந்தது.
""முன்பொரு காலத்தில் நரகாசுரனின் கொடுமை களிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் விஷ்ணு பெருமானிடம் வேண்டுதல் செய்ய, அவர் அந்த அசுரனை அழித்துத் தேவர்களைக் காத்தருளினர். நரகாசுரன் இறக்கும் தருணத்தில், தான் இறந் தொழிந்த நாளை உலகத்தோர் மகிழ்ச்சியாகக் கொண் டாட வேண்டுமென விரும்பினன். அதனல் நாங்கள் அவன் இறந்துபட்ட இத்தீபாவளி நாளில் எமது இல்லங்களைச் சுத்தஞ்செய்து, அலங்கரித்து நீராடிப் புத்தாடை புனைந்து, தெய்வ வழிபாடு செய்து மகிழ் வடைகிருேம்' என நண்பனுக்கு விளக்கினேன்.
" "அப்படியானல் தீபாவளி எங்கள் எல்லோருக்குமே மகிழ்ச்சிகரமான நாள்தான். நானும் உங்களுடன் சேர்ந்து தீபாவளியைக் கொண்டாடி எல்லோரது மகிழ்ச்சியிலும் கலந்துகொள்ளப் போகிறேன். எனக் காக எதையும் மிகைப்படுத்தவோ குறைத்துக்கொள் ளவோ வேண்டாம். வழமை போலக் கொண்டாடுங் கள். அப்போதுதான் நான் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும் ' என்ருன் ,
அதன்படி நானும் பியசேனவும் குளித்து முடித்த பின் முதலில் கோவிலுக்குச் செல்வதற்காகப் புறப் பட்டோம்.
நான் தீபாவளிக்காக வேண்டிய புதிய வேட்டியை அணிந்துகொண்டபோது, தனக்கும் ஒரு வேட்டி தரும்படி வேண்டினன் பியசேன. அவனுடைய ஆசை யைக் கெடுப்பானேன் என நினைத்து அவனது விருப் பத்தைப் பூர்த்தி செய்தேன்.
அவன் வேட்டியை அரையில் சுற்றியபோது அது நழுவிக் கீழே விழ, மீண்டும் அதனை எடுத்து அவன் அணிந்துகொண்டபோது அதன் தலைப்பு நிலத்தில் இழுபட, திருப்திப்படாதவனப் அதனைத் திரும்பத்

திரும்ப அணிய முயற்சித்தபோது எனக்கு வேடிக்கை யாக இருந்தது.
அந்த நேரத்தில் அயல் வீடுகளிலுள்ள சிறுவர் கூட்டமொன்று அங்கே வந்தது. அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம். போகுமிடமெல்லாம் அவர்களுக்கு இன்று பணியாரங்களும் பட்சணங்களும் கிடைக்கும். தாங்கள் அணிந்திருக்கும் புது வண்ண உடைகளை மற்ற வர்கள் பார்த்து இரசிக்கும்போது அந்தப் பிஞ்சு உள் ளங்களில் உவகை பொங்கி வழியும்.
பியசேன வேட்டியணிந்துகொள்ளத் தெரியாமல் திண்டாடுவதைப் பார்த்த துடுக்குத்தனமான சிறுமி ஒருத்தி கைகொட்டிச் சிரித்தாள். அவளுடன் சேர்ந்து மற்றவர்களும் சத்தமிட்டுக் கேலிசெய்து கைகொட்டிச் சிரித்தனர்.
பியசேன கொஞ்சங்கூட வெட்கப்படாதவனப் அந்தச் சிறுவர்களோடு சேர்ந்து தானும் சிரித்து மகிழ்ந்தான்.
நண்பனின் அரையில் வேட்டியை நன்ருக வரிந்து கட்டி, அவிழ்ந்து விடாமல் இருப்பதற்காக ஒரு "பெல்ற்’ ரையும் அணிவித்தேன்.
சிறுவர்களின் சிரிப்பொலி கேட்டு அதன் கார ணத்தை அறிந்துகொள்வதற்காக மறைவிலிருந்து கவனித்த எனது தங்கை ராணி, தன்னுள் பொங்கிவந்த சிரிப்பை அடக்க முயன்று திணறிப்போய்க் 'களுக்" கென்று சிரிப்புதிர்த்தாள்.
பியசேனவுக்கு இப்போது ஏனே நாணம் பற்றிக் கொண்டது. அவனது புன்னகை அசடாக வழிந்தது.
நாங்கள் இருவரும் கோவிலைச் சென்றடைவதற் குச் சிறிது தாமதமாகி விட்டது. கோவிலில் நிறைந் திருந்த பக்திச் சூழல் பியசேனவைப் பெரிதும் கவர்ந் 点gi·

Page 41
- 64 -
பக்தர்களில் சிலர் தேவார திருவாசகங்களைப் பாடி யும், சிலர் கண்ணிர் வடித்து இறைவனிடம் ஏதேதோ இறைஞ்சி நின்றபோதும், அந்த ஒலிகள் அவனுள் ஏற் படுத்திய புள காங்கிதத்தில் தன்னை மறந்து கைகூப்பி வழிபட்டு நின்றபோது எனது உரோமக்கால்கள் குத் திட்டு நின்றன.
அர்ச்சகர் கொடுத்த பிரசாதத்தை அவன் இரு கைகளாலும் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்ட போதும், கண்களை மூடிக்கொண்டே திருநீற்றைத் தனது நெற்றியில் அணிந்துகொண்டபோதும், அந்த வெண்ணிற்றின் மையமாய்ச் சந்தனப் பொட்டிட்ட போதும் அவன் எவ்வளவு தெய்வீக பக்தனய்க் காட்சியளித்தான் !
நீறுபூத்த நெருப்பாய் மிளிரும் அவனது கலையுள் ளத்தில் எம்மதமும் சம்மதந்தான ?
வழிபாட்டை முடித்துக்கொண்டு கோவிலின் பிர காரத்தைச் சுற்றிப் பார்த்தபோது அவன் அறிய விரும்பியவற்றிற்கு நான் விளக்கம் கொடுத்தவண்ணம் இருந்தேன்.
ஸ்தூபியில் நிறைந்திருந்த சிற்பவேலைகளும் ஆங் காங்கே சுவர்களில் வரைந்திருந்த ஒவியங்களும் அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்தன.
'புத்த கோவில்களில் நாங்கள் வணங்கும் முறை களும் இந்துக் கோவில்களில் நீங்கள் வழிபடும் முறை களும் சில வழிகளில் ஒத்திருக்கின்றன. புத்தர் பெரு மானை வழிபடும் நாங்களும் உங்களைப்போல் விநாயகக் கடவுளையும் முருகனையும் வழிபடுகிருேம். அப்படியாயின் இந்த இரு மதங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன அல்லவா?"
பியசேன கூறிய வார்த்தைகளில் பொதிந்திருந்த உண்மைக் கருத்துக்களில் சிந்தனையைத் தேக்கியபடி நடந்துகொண்டிருந்தேன்.

- 65 -
"" ஆனலும் உங்களது ஆலயங்களில் நான் காணும் சிற்பங்களையும், ஓவியங்களையும் அவற்றில் தேங்கி நிற்கும் கொள்ளை அழகுகளையும், அவைகள் உணர்த்தும் உங்கள் பண்பாடுகளையும் கலாசாரங்களையும் பார்த்து நான் தலைவணங்கும்போது நீங்களும் உயர்ந்து நிற்கிறீர்கள் என்பதை மறுக்க முடியாது. "'
அவன் அப்படிக் கூறும்போது எனக்குப் பெருமை யாக இருந்தது.
கோவிலில் இருந்து நாங்கள் புறப்பட்டு வீட்டுக்கு வரும் வழியில் எனது பெருமையெல்லாம் சிதறிப் போகும் வகையில் அந்த நிகழ்ச்சி நடந்தது5
தெருவின் திருப்பத்தில் இரட்டைக் காளைகள் பூட்டிய அந்த வண்டியில் நான்குபேர் சவாரி செய்து கொண்டிருந்தார்கள். நெடுந்தூரம் பிரயாணஞ் செய் தவைபோன்று அந்தக் காளைகள் களைப்படைந்து வாயி னல் நுரை கக்கியவண்ணம் இருந்தன. வண்டியை ஒட்டுபவன் அரக்கத்தனமாகக் காளைகளின் முதுகில் கழிகொண்டு அடிக்கும்போது, அவை வேதனை தாங்காது விரைந்தோட, கழுத்தின் சலங்கைகள் கலகலத்தன. அந்த வேகத்தில் திருப்திப்படாதவன்போல வண்டி ஒட்டுபவன் காளைகளின் வால்களை வாயினுல் கடித்துத் துன்புறுத்தினன்.
அந்த வண்டியின் பின் பக்கத்தில் கழுத்து வெட்டப் பட்டு முண்டமான ஓர் ஆட்டை அதன் கால்களில் கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள். ஆட்டின் தலையைத் தனியே எடுத்து வண்டியிலிருந்த ஒருவன் வைத்திருந் தான். வண்டி ஓடும் வேகத்தில் அந்த ஆட்டின் உடல் இடையிடையே தெருவில் உராய்ந்து இரத்தத்தால் வழியைக் கறைப்படுத்திக்கொண்டிருந்தது.
இதனைப் பார்த்த பியசேன ஒரு கணம் திடுக்குற்று நின்றன். அவனது முகத்தில் ஒருவித அருவருப்பும்

Page 42
一66一
வேதனையும் கலந்தன. அவனல் உடனே எதுவும் பேச முடியவில்லை. விபரமறிய விரும்பி என்பக்கம் திரும்பி
** இங்குள்ள சிலர் தீபாவளியை மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடுவதாக நினைத்து மா மிச மும் புசிக்கி ருர்கள் " என்றேன். இதைக் கூறுவதற்குள் நான் ஏன் குறுகிப்போனேன். ?
பியசேன எவ்வித பதிலும் பேசவில்லை. கோவிலில் இருந்தபோது ஏற்பட்ட உற்சாகம் திடீரென்று அவனிட மிருந்து மறைந்து போயிற்று. அவன் சிந்தனை செய்த படியே வழியில் பதிந்திருந்த அந்தச் செங்குருதியைப் பார்த்த வண்ணம் மெளனமாக நடந்துகொண்டிருந் தான்.
அவனது மெளனம் என்னைச் சித்திரவதை செய்தது ஆனல் அந்த மெளனத்தைக் கலைக்கக்கூடிய சக்தி எனக் கில்லை. நான் கதைக்கத் தொடங்கினல் அவன் வேறும் ஏதாவது கேட்டுவிடுவானே எனப் பயந்தேன்.
பியசேன எதைப்பற்றி இப்போது சிந்தனை செய் கிருன் ? - -
யாழ்ப்பாணத்தின் வாழ்க்கை முறைகளையும் பண் பாடுகளையும் அறிந்துகொள்ளும் பொருட்டு அவன் என் னுடன் அளவளாவும் போதெல்லாம் எங்களைப்பற்றி எவ்வளவு உயர்த்திக் கூறியிருந்தேன். நான் கூறுவதை அவன் ஆர்வத்தோடு கேட்பதைப் பார்த்து எவ்வளவு பெருமையடைந்தேன். எங்களது பெருமைகளெல்லாம் வாய்ச்சொல்லில் மட்டுந்தான் என யோசிக்கிருஞ?
நாங்கள் வீடுவந்து சேர்ந்ததும் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டோம். அப் பொழுது எங்கோ வெளியே சென்றுவிட்டுத் திரும்பிய எனது தந்தை, மது வெறியில் பலத்த சத்த மிட்டு ஒப்பாரி வைத்துக் கொண்டே வந்துகொண்டிருந்தார். அவர் வாடிக்கை யாக மதுவருந்தும் குண்டுமணியனின் கள்ளுக் கொட்டி

- 67 -
லில் தீப்பற்றிக்கொண்டது என்பதை அவர் பாடிய ஒப்பாரியிலிருந்து புரிந்துகொண்டேன். அவருக்கு அந் நிகழ்ச்சி பெருங் கவலையை உண்டாக்கவே, வசை பாடத் தொடங்கினர்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த நண்பன் பிய சேன " வை யுவர் பாதர் இஸ் ஸிங்கிங்?"-ஏன் உனது தந்தை பாடுகிருர் என என்னிடங் கேட்டான்.
எனது தந்தை பாடவில்லை, கள்ளுக் கொட்டில் எரிந்து விட்டதென ஒப்பாரி வைக்கிருர், என்று எப்படி நான் சொல்வேன்? நான் மெளனமானேன்.
கோவிலில் பக்தர் ஒருவர் தேவாரம் பாடிய போதும் பியசேன இதே கேள்வியைத்தான் என்னிடம் கேட்டான்.
அப்போது தேவார திருவாசகங்களின் மகிமை களைப் பற்றியும் அவற்றைப் பாடிய நாயன்மார்களைப் பற்றியும் அவர்கள் செய்த சைவப் பணிகளையும் விளக்கி ஆர்வத்தோடு ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தேன்.
எனது மெளனத்தைக் கலைக்கும் வகையில் பியசேன என்னிடம் கேட்டான், " " இஸ் யுவர் பாதர் ஸிங்கிங் டேவாரம்?' - உனது தந்தை தேவாரம் பாடுகிருரா ?
நாக்கைப் பிடுங்கிக்கொண்டு என் உயிரை மாய்த்து விடலாம்போலிருந்தது. முன்பொருபோதும் அடைந் திராத பெரும் அவமானமடைந்தேன். ஐயகோ தந்தை மகற்காற்றும் உதவி இதுதான ?
எனது தந்தை மது அருந்தியிருக்கிருர் என்று கூறு வதற்கு என் நாக் கூசியபோது, எனது முகத்திலே தெரிந்த அவமானத்தைக் கண்டுகொண்ட இங்கிதம் தெரிந்த நண்பன் நல்லவேளையாக வேறு எதுவுமே என்னைக் கேட்கவில்லை,

Page 43
- 68 -
நிலைமையைச் சமாளிப்பதற்காக எனது அன்னையும்
தங்கை ராணியும் அருமைத் தந்தையைக் கிணற்றடிக்கு அழைத்துச் சென்ருர்கள்
கிணற்றடியில் தந்தைக்குத் தீபாவளி ஸ்நானம் நடந்தது.
எனது அன்னை அவருக்குத் தலையில் அரப்பு வைத் துத் தேய்த்துவிட, தங்கை கிணற்றிலிருந்து நீரிறைத்துக் குளிப்பாட்டினள்.
மதுமயக்கத்தில் இருந்தவர் அவர்களது பிடியி லிருந்து திமிறி எழுந்தோட, எனது அன்னையும் தங்கை யும் துரத்திப் பிடித்து மல்லுக்கட்டிக் கிணற்றடிக்கு இழுத்துவந்து மீண்டும் குளிப்பாட்ட முயற்சித்தனர்.
தீபாவளி நாட்களில் இவையெல்லாம் இங்கு சாதாரண நிகழ்ச்சிகள். ஆனல் பியசேனவுக்கு வாழ்க்கையிலே கண்டிராத கண்கொள்ளாக் காட்சி களாக இருந்தன. அவன் விஷமச் சிரிப்போடு இந்த நிகழ்ச்சிகளை இரசித்தவண்ணம் இருந்தான்.
பியசேன ஒரு நல்ல இரசிகன். அத்தோடு எழுத் தாளனும் அல்லவா. கதையோ கட்டுரையோ எழுதுவ தற்கு ஏற்ற சம்பவங்கள் அவனுக்கு நிறையக் கிடைத் திருக்குமே.
எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரிவதைப்போல இருந்தது. பியசேனவை நிமிர்ந்து பார்ப்பதற்குக்கூட அருகதையற்றவனுய், ஒரு சமுதாயமே தலைகுனிந்து நிற்பதைப் போன்று நான் வெட்கித்து நின்றேன்.
ஒருவாருக எனது தந்தை குளித்து முடித்தபின் எல் லோருமாகச் சேர்ந்து உணவருந்திவிட்டுச் சிறிது நேரம் ஒய்வெடுத்தோம்.

- 69 -
அன்று மாலை பியசேன கொழும்புக்குத் திரும்ப வேண்டியிருந்தது. நான் தீபாவளியோடு சேர்த்து ஒரு கிழமை லீவு எடுத்திருந்தமையால் அவனைமட்டும் வழி யனுப்பிவிட்டுக் கனத்த மனத்தோடு வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தேன்.
கறை படிந்த வழியில் நடக்கும்போது உடலெல் லாம் கூசுகிறது.
காலையில் ஆட்டிலிருந்து வழியெங்கும் வடிந்த அந்தச் செங்குருதி இப்போது காய்ந்து கருமையாகித் தெரி
கிறது.
- syGas Fif 1969

Page 44
கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக் குட்டியும்
கதிரி தனது பிள்ளைக்குப் பால் கொடுத்துக்கொண் டிருக்கிருள். வியர் வைத் துளிகள் அவளது நெற்றியில் அரும்பியிருக்கின்றன. பின்வளவைக் கூட்டித் துப்புர வாக்கிக்கொண்டிருந்த அவளிடம், அழுது அடம்பிடித்து வெற்றியடைந்துவிட்ட களிப்பில் அந்தச் சிறுவன் பால் குடித்துக்கொண்டிருக்கிருன். பால் கொடுப் பதிலே ஏதோ சுகத்தைக் காண்பவள் போல கதிரி கண்களை மூடிய வண்ணம் சுவரோடு சாய்ந்திருக்கிருள். அவளது மடியில் முழங்கால்களை அழுத்தி, தலையை நிமிர்த்தி, தன் பிஞ்சுக் கரங்களால் தாயின் மார்பில் விளையாடிக்கொண்டே அவன் பால் குடித்துக்கொண்டிருக்கிருன், சில வேளை களில் தனது சிறிய கால்களை நிலத்திலே உதைத்துத் தாயின் மார்பிலே தலையால் முட்டுகிருன். அப்படிச் செய்வது அவனுக்கு ஒரு விளையாட்டோ என்னவோ,

- 71 -
கண்ணுடியின் முன்னுல் நின்று கண் புருவத்துக்கு மைதீட்டிக்கொண்டிருந்த வசந்தியின் பார்வை, கோடிப் புறத்து யன்னலின் ஊடாகக் கதிரியின்மேல் விழுகிறது. மைதீட்டுவதை நிறுத் தி விட்டு அவள் மெதுவாக யன்னலின் அருகில் வந்து கம்பிகளைப் பிடித்தவண்ணம் கதிரி பால் கொடுப்பதையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிருள். அவளது பார்வை சிறிதுநேரம் கதிரியின் மார்பிலே மேய்கிறது. கதிரியின் உடலமைப்பைக் கவனித்தபோது வசந்திக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.
வளவு கூட்டுவதற்காக மாதத்தில் இரண்டு தடவை யாவது கதிரி அங்கு வருவாள். நெல் குத்துதல், மாவு இடித்தல் போன்ற வேறு வேலைகளிருந்து சொல்லி யனுப்பினுலும் அவள் வந்து செய்து கொடுப்பாள்.
வசந்தி கொழும்பிலிருந்து ஊருக்கு வந்திருந்த வேளைகளில், கதிரி அங்கு வேலைக்கு வர வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படாமல் போய்விட்டன. அதனல் கதிரியை ஐந்தாறு வருடங்களாக வசந்தியால் பார்க்க முடியவில்லை.
வசந்தி கல்யாணஞ் செய்து கணவனுடன் கொழும் புக்குப் போவதற்குமுன் கதிரியை அடிக்கடி பார்த்திருக் கிருள். அப்போது இருந்த அவளது இறுக் கமான உடலமைப்பும், அழகும் இன்றும் மாருமல் அப்படியே இருக்கின்றன.
"நறுக்கென்று அந்தச் சிறுவன் கதிரியின் மார்புக் காம்பிலே கடித்து விடுகிருன்.
"ஆ" என்று ஒருவித வேதனையோடு அந்தச் சிறுவனத் தூக்கி நிமிர்த்திய கதிரி, "ஏன்ரா கள்ளா கடிச்சனி?" என அவனிடம் செல்லமாகக் கடிந்து கொள்ளுகிருள்.
அவன் தாயைப் பார்த்துச் சிரிக்கிருன். அவனது கடைவாய்களிலிருந்து பால் வழிகிறது. கதிரி தன் சேலைத் தலைப்பினல் அந்தச் சிறுவனின் வாயைத் துடைத்துவிட்டு, நெஞ்சை மறைத்துக் "குறுக்குக் கட்டு’க் கட்டிக்கொள்ளுகிருள், h−

Page 45
- 72 -
இப்போது அந்தச் சிறுவன் எழுந்து நிற்கிருன். அவனது உடல் முழுவதும் புழுதி படிந்திருக்கிறது. அவனது மெலிந்த உடலின் நெஞ்சு எலும்புகள் பளிச்சென்று தெரிகின்றன. அவனது தோற்றத்துக்குக் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாமல் வயிறு மட்டும் முட்டிக்கொண்டு பெரிதாக இருக்கிறது.
கொழும்பிலிருக்கும் மாதர் சங்கம் ஒன்றிற்கு வசந்தி அடிக் கடி செல் வாள். அந்தச் சங்கத்தில் அங்கத்தவர்களாக இருக்கும் அவளது சிநேகிதிகளில் பலர், குழந்தை பிறந்த ஒருசில மாதங்களிலேயே பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள்.
பால் கொடுப்பதனல் உடலுறுப்புகளின் இறுக்கமும், கவர்ச்சியும் குறைந்து விடுவதைப்பற்றி அவளுடைய சிநேகிதிகள் அடிக்கடி கதைத்துக்கொள்வார்கள். சிறிது காலத்துக்கு முன்பு மாதர் சங்கத் தலைவி, பால் கொடுப் பதை நிறுத்துவதற்கு இலகுவா ன முறைகள் எவை என்பதைப்பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தாள். இவையெல்லாம் ஒன்றன்பின் ஒன்ருக வசந்தியின் நினைவில் வந்துகொண்டிருந்தன.
வசந்தியின் மனது துருதுருக்கிறது. வளர்ந்துவிட்ட குழந்தையொன்றுக்குப் பால் கொடுக்கும் கதிரியின் உடல் எவ்வளவு அழகாக இருக்கிறது! வசந்தி கதிரி யிருக்கும் இடத்திற்கு வருகிருள்.
"பிள்ளை, எப்ப கொழும்பாலை வந்தது?' வசந்தி யைக் கண்டதும் ஆச்சரியத்தோடு கேட்கிருள் கதிரி.
*" காலைமைதான் வந்தனன் ; நான் வந்ததைப் பற்றி அம்மா உன்னட்டைச் சொல்லேல்லையோ?"
** இல்லைப் பிள்ளை, நான் வரேக்கை அவ அடுப்படி யிலை வேலையாயிருந்தா, அவவையேன் குழப்புவான் எண்டு நான் பின் வள வுக் குக் குப்பை கூட்டப் Gurt J.L-6ërs''

- 73 -
அந்தச் சிறுவன் இப்போது வசந்தியை "ஆச்சரிய மாகப் பார்க்கிருன். பின்பு பயத்துடன் தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக்கொள்ளுகிருன்.
** இவன்தான் பிள்ளை என்ரை கடைசிப் பெடியன், ஆள் வலு சுட்டியன். பிள்ளையை ஒருநாளும் பார்க் கேல்லையெல்லே; அதுதான் பயப்பிடுகிருன்." அந்தச் சிறுவனின் தலைமயிர்களைத் தன் விரல்களினுல் கோதிய படியே கூறுகிருள் கதிரி.
" உவனுக்கு எத்தனை வயசு ?”
** ஒ, இவன் பிறந்தது பிள்ளைக்குத் தெரியாது தானே. இந்த முறை எங்கடை அன்னமார் கோயில் வேள்வி வந்தால் இரண்டு முடிஞ்சுபோம். **
* இப்பவும் நீ உவனுக்குப் பால் கொடுக்கிருய்: ஏன் நிற்பாட்டேல்லை ? நெடுகப் பால் கொடுத்தால் உன்னுடைய உடம்பு பழுதாய்ப் போமெல்லே."
** என்ன பிள்ளை உப்பிடிச் சொல்லுகிருய்? உவன் வயித்திலை வாறவரைக்கும் முந்தினவன் மூண்டரை வரிய மாய்க் குடிச்சவன். பால் நிற்பாட்ட ஏலாமல் வேப் பெண்ணை பூசித்தான் நிற்பாட்டினனன். என்ரை நடு விலாளும் அப்பிடித்தான் இரண்டு வரியமாய்க் குடிச் சவள். பெத்த பிள்ளையஞக்குப் பாலைக் குடுக்காமல் அப்பிடியென்ன எங்கடை உடம்பைக் கட்டிக்காக்க வேணுமே???
கதிரி சொல்லுவது வசந்திக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவள் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு மூன்று வருடங்களுக்குக் குறையாமல் பால் கொடுத் திருக்கிருள்!
வீட்டினுள்ளேயிருந்து குழந்தையின் அழுகைக் குரல் கேட்கிறது.
** பிள்ளைக்கும் போன பொங்கலுக்கையெல்லோ குழந்தை பிறந்தது; கொழும்பிலை ஆசுப்பத்திரியிலை

Page 46
- 74 -
தான் பிறந்ததெண்டு கொம்மா சொன்னவ. இப்ப குழந்தைக்கு ஏழு மாசமிருக்குமே ?"
** இல்லை ஆறு மாசந்தான் "".
** எடி வசந்தி, குழந்தை அழுகிறசத்தம் உனக்குக் கேக்கல்லையோ ? அதுக்குப் பசிக்குதுபோலை உங்கை கதிரியோடையிருந்து என்ன கதைச்சுக்கொண்டிருக் கிருய்?"
வசந்தியின் தாய் அன்னம்மா, குழந்தையைத் தூக் கிக்கொண்டு அவர்கள் கதைத்துக்கொண்டிருக்கும் இடத்திற்கு வருகிருள்.
* ஏதோ கணுக்கண்டு அழுகுதாக்கும். காலைமை எட்டுமணிக்குத்தானே பால் கொடுத்தனன். இனி பன் னிரண்டு மணிக்குத்தான் கொடுக்கவேணும்.' வசந்தி தான் கூறுகிருள்.
** இந்தா குழந்தையைப் பிடி, நீ என்னத்தை யாவது செய். நான் போய்க் கதிரிக்குத் தேத் தண்ணி ஊத்திக்கொண்டு வாறன்.' வசந்தியிடம் குழந்தை யைக் கொடுத்துவிட்டு அன்னம்மா திரும்புகிருள்.
குழந்தையை இறுக அணைத்து, அதன் தொடை களைத் தட்டி அழுகையைக் குறை க் க முயலுகிருள் வசந்தி. குழந்தை வசந்தியின் மார்பிலே முகத்தைப் புதைத்துக்கொண்டு வீரிட்டு அழுகிறது.
'அம்மா தொட்டிலுக்கை சூப்பி இருக்கு, அதையும் எடுத்துக்கொண்டு வாங்கோ "
அன்னம்மா கதிரிக்குத் தேநீர் கொண்டு வரும்போது சூப்பியையும் மறக்காமல் எடுத்து வருகிருள். வசந்தி அதனை வாங்கிக் குழந்தையின் வாயில் வைத்தபின்பு தான் ஒருவாறு அதன் அழுகை ஓய்கிறது. குழந்தை தாயின் முகத்தைப் பார்த்தபடி அந்த "றப்பரை' ஆவ லுடன் உமியத் தொடங்குகிறது

- 75 -
கதிரி எழுந்து கோடிப்புறத்து வேலியிலே செருகி யிருந்த தனது சிரட்டையை எடுத்துத் துடைத்து, அதிலே படிந்திருந்த தூசியை நிலத்திலே தட்டி நீக்கி விட்டு அன்னம்மாவிடம் நீட்டுகிருள். அந்தச் சிரட்டை யிலே செம்பு முட்டிவிடக்கூடாதே என்ற கவனத்துடன் அன்னம்மா அதற்குள் தேநீரை வார்க்கிருள்.
"பிள்ளை, குழந்தைக்குப் பசிக்குதுபோலை ; பாலைக் குடுமன்.' வசந்தியைப் பார்த்துக் கதிரி கூறுகிருள்.
"அழுகிற நேரமெல்லாம் பால் கொடுக்கப்படாது. பிறகு பால் நிற்பாட்டிறது கரைச்சல், நான் இப்ப பால் கொடுக்கிறத்தைக் குறைச்சுப்போட்டன்; வாற மாசத் தோடை நிற்பாட்டப்போறன், நேரத்தின்படிதான் பால் கொடுக்கவேணும்."
அதைக் கேட்டபோது கதிரியின் மனசுக்குக் கஷ்ட மாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைக்குப் பசிக்கிறது. அதற்குப் பால் கொடுக்காமல் ஏமாற்றுகிருள் தாய் கதிரியின் தொண்டைக்குள் ஏதோ அடைப்பதைப் போல இருக்கிறது. தேநீர் உள்ளே இறங்க மறுக்கிறது.
*" ஏன் கதிரி தேத் தண்ணியைக் குடிக்காமல் வைச்சுக் கொண்டிருக்கிருய்? சுறுக்காய்க் குடிச்சிட்டுப் போய்க் குப்பையைக் கூட்டன், கையோடை ஒரு கத்தை வைக் கலையும் எடுத்துக்கொண்டுபோய் மாட்டுக்குப் போட்டு விடு. காலைமை தொடக்கம் அது கத்திக்கொண்டு நிற்குது."
கதிரியிடம் கூறிவிட்டு அன்னம்மா வீட்டுக்குள் செல்கிருள். அவளைத் தொடர்ந்து வசந்தியும் குழந்தை யுடன் செல்கிருள்.
கதிரியால் தேநீரைக் குடிக்க முடியவில்லை; அவள் அதனை வெளியே ஊற்றிவிட்டு சிரட்டையை வேலியில் செருகுகிருள். பின்பு கோடியில் அடுக்கியிருந்த வைக் கோற் போரில் ஒரு க ற் றை வைக்கோலை எடுத்துக்

Page 47
- 76 -
கொண்டு மாட்டுக் கொட்டிலுக்குச் செல்லுகிருள்; அவ ளைப் பின்தொடர்ந்து அந்தச் சிறுவனும் செல்லுகிருன்.
கதிரியைப் பார்த்ததும் அந்தப் பசுமாடு உறுமு கிறது. கொட்டிலின் மறுபுறத்தில் கட்டப்பட்டிருந்த அதன் கன்று, பால் குடிப்பதற்காகக் கயிற்றை இழுத்துக் கொண்டு தாய்ப்பசுவின் அருகே வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. தாய்ப்பசு கன்றின் முகத்தைத் தன் நாவினல் நக்குகிறது. இப்போது பசுவின் முலைக் காம்பிலிருந்து பால் சுரந்து சொட்டுச் சொட்டாக நிலத் திலே சிந்துகிறது. கதிரி அதனை உற்றுப் பார்க்கிருள் அந்தப் பசு நல்ல உயர்சாதிப் பசுவாகத்தான் இருக்க வேண்டும்.
கதிரி வைக்கோலைத் தொட்டிலுக்குள் போட்டு உதறி விடுகிருள். பின்பு அதன் கன்றை ஆதரவாகத் தடவிவிட்டு அதற்கும் சிறிது வைக்கோலைப் போடுகிருள்
வெயில் உக்கிரமாக எறிக்கிறது. கதிரிக்குக் களைப் பாகவும் ஆயாசமாகவுமிருக்கிறது. தொடர்ந்தும் வேலை செய்ய அவளால் முடியவில்லை. அருகிலிருக்கும் வேப்ப மரநிழலின்கீழ் தனது சேலைத் தலைப்பை விரித்து அதிலே சாய்ந்து கொள்ளுகிருள். அவளது சிறுவன் தூரத்திலே விளையாடிக் கொண்டிருக்கிருன்,
வசந்தி தன் தோழி ஒருத்தியின் கல்யாணத்திற்குச் செல்வதற்காகத் தன்னை அலங்காரம் செய்து கொண் டிருக்கிருள். வெகுநேரமாகக் கண்ணுடியின் முன்னல் நின்று ஒரு புதிய "பாஷன் கொண்டையைப் போடு வதில் அவள் முனைந்திருக்கிருள்.
அந்தக் கொண்டை அவளது தோற்றத்துக்கு மிகவும் எடுப்பாகவிருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஒரு நாள் அந்தக் கொண்டையோடு அவள் மாதர் சங்கத் துக்கு போயிருந்தபோது, அங்கிருந்த எல்லோரும் ஒரு முகமாக அவளது அழகைப் புகழ்ந்தார்கள். அன்று அந்தக் கொண்டையை அடுத்த வீட்டிலிருக்கும் அவளது தோழிதான் போட்டுவிட்டாள்.

WM 77
கொண்டை போட்டு முடிந்திவிட்ட்து*ஆஞலும்
வசந்திக்கு அது திருப்தியை அளிக்கவில்லை. ஒருவா ருகத் தனது அலங்காரத்தை முடித்துக்கொண்டு அவள் புறப்பட்டுவிட்டாள்.
வெகு நேரமாகத் தூங்கிக்கொண்டிருந்த வசந்தி யின் குழந்தை அழத் தொடங்குகிறது. அன்னம்மா ஒடிச் சென்று குழந்தையைத் தூக்குகிருள். அவளைப் பார்த்த தும் குழந்தை வீரிட்டு அழுகிறது. அதன் அழுகையை நிறுத்த எண்ணிய அன்னம்மா, சூப்பியை எடுத்து அதன் வாயிலே வைக்கிருள். குழந்தையின் அழுகை சிறிது நேரம் அடங்குகிறது. அதனைத் தன் தோளிற் சாய்த்து, முதுகிலே தட்டி நித்திரையாக்க முயலுகிருள் அன் னம்மா. குழந்தை மீண்டும் வீரிட்டு அழுகிறது அன் னம்மா எவ்வளவோ முயற்சி செய்தபோதும் அதன் அழுகையை நிற்பாட்ட முடியவில்லை. குழந்தை மீண்டும் மீண்டும் அழுதுகொண்டிருக்கிறது. அதன் வாயிலிருந்த சூப்பி நிலத்திலே விழுகிறது.
கண்ணயர்ந்திருந்த கதிரி எழுந்து உட்காருகிருள். ஏன் அந்தக் குழந்தை வெகுநேரமாக அழுதுகொண் டிருக்கிறது? குழந்தையின் அழுகை கதிரியின் நெஞ்சுக் குள் ஏதோ செய்தது. அவளால் பொறுமையாக இருக்க முடியவில்லை.
" ஏன் கமக்காறிச்சி குழந்தை அழுகுது? பிள்ளை யைக் கூப்பிட்டு பாலைக் குடுக்கச் சொல்லுமன்". அன் னம்மாவிடம் கூறுகிருள் கதிரி.
*" இனி ஆறு மணிக்குத்தான் பால் குடுக்கவேணு மெண்டு சொல்லிப்போட்டு அவள் எங்கையோ கலி யாணத்துக்குப் போட்டாள் இங்கை குழந்தை கிடந்து பசியிலை துடிக்குது. அப்பவும் நான் சொன்னனுன், குழந்தையையும் கொண்டுபோகச்சொல்லி அவள் கேட்டால்தானே. பால் குடுக்கிற நேரத்துக்கு வருவ னெண்டு சொல்லிப்போட்டுப் போட்டாள்g இப்ப என்ன செய்யிறது ? அழுதழுது இதுகின்ரை தொண்டை யும் அடைச்சுப்போச்சு " .

Page 48
- 78 -
அன்னம்மாவின் குரலையும் மீறிக்கொண்டு துடித் துத் துடித்து அழுகிறது குழந்தை.
அன்னம்மா விளையாட்டுப் பொருட்களைக் காட்டிக் குழந்தையின் அழுகையை அடக்க முயற்சிக்கிருள். ஆனலும் அதன் அழுகை அடங்கவில்லை. அன்னம்மா வுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
வெகு நேரமாக அழுது சளைத்துப்போன அந்தக் குழந்தைக்கு இப் போது அழுவதற்கே சக்தியிருக்க வில்லை. அது இப்போது முனகிக்கொண்டிருக்கிறது.
அன்னம்மாவின் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
கொட்டிலில் கட்டியிருந்த பசுமாடு அம்மா, அம்மா " என்று குரல் கொடுக்கிறது. பால் கறக்கும் நேரம் வந்துவிட்டால் அது கத்தத் தொடங்கிவிடும். மாட்டுடன் சேர்ந்து இடையிடையே கன்றும் குரல் கொடுக்கிறது.
இப்போது முனகுவதற்குக் கூடச் சத்தியில்லாமல் குழந்தை அன்னம்மாவைப் பரிதாபமாகப் பார்க்கிறது.
*" கமக்காறிச்சி, குழந்தை இனித் தாங்கமாட் டுது; பசுப்பாலையாவது குடுமன்." கதிரி அன்னம் மாவிடம் கூறுகிருள்.
' குழந்தையைக் கொஞ்சம் பார்த்துக்கொள் கதிரி, நான் ஒடிப்போய்ப் பாலைக் கறந்து கொண்டுவாறன்."
முற்றத்து விரு ந் தை யிலுள் ள திண்ணையில் பாயொன்றை விரித்துக் குழந்தையை அதிலே கிடத்தி விட்டு, செம்பை எடுத்துக்கொண்டு மாட்டுக்கொட்டில் பக்கம் போகிருள் அன்னம்மா.
குழந்தை மீண்டும் அழத் தொடங்குகிறது. அது தன் பிஞ்சுக் கால்களால் நிலத்தில் உதைத்து, உடலை நெளித்துத் துடிக்கிறது.
கதிரி ஒரு கணம் கண்களை மூடிக்கொள்ளுகிருள். அவளால் குழந்தைபடும் வேதனையைப் பார்க்க முடிய வில்லை.

- 79 -
துடித்துப் புரண்டுகொண்டிருந்த குழந்தை திண்ணை யின் ஒரத்திற்கு வந்து விடுகிறது.
ஐயோ! குழந்தை விழப் போகிறதே !
கதிரி ஒடிச்சென்று, திண்ணையின் நடுவிலே குழந்தை யைக் கிடத்துவதற்காகத் தன் இரு கைகளாலும் அதைத் தூக்குகிருள். Y * அம் . மா ' குழந்தை அவளது முகத்தைப் பார்த்து வெம்புகிறது. .
குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி நிலத்திலே உட்கார்ந்துவிடுகிருள் கதிரி.
குழந்தை அவளது நெஞ்சிலே முகத்தைப் புதைத் துக் கொண்டு முனகுகிறது. தன் பிஞ்சுக் கரங்களால் அவளது நெஞ்சை விருண்டுகிறது. நெஞ்சை மறைத்துக் குறுக்குக்கட்டுக் கட்டியிருந்த அவளது சேலை அவிழ்ந்து விடுகிறது.
"" அ . ம்மா, அம் . மr ** கதிரி தன்னை மறக்கிருள். கதிரியின் மார்புக் காம்புகள் நனைந்துவிடுகின்றன. மறுகணம் அந்தக் குழந்தை அவளது மார்பில் வாயை வைத்து உமியத் தொடங்குகிறது.
* ஐயோ கதிரி, மாடெல்லோ கயித்தை அறுத்துக் கொண்டு கண்டுக்குப் பாலைக் குடுத்துட்டுப் போட்டுது”. மாட்டுக் கொட்டிலில் இருந்தபடியே அன்னம்மா பலமாகக் கூறுகிருள்.
அவள் கூறுவதைக் கேட்கக்கூடிய நிலையில், அப் போது கதிரி இருக்கவில்லை.
கல்யாண வீட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வசந்தி, இப்போது தனது "ஹான்பாக்” கைத் திறந்து அதற்குளிருந்த கண்ணுடியில் முகத்தைப் பார்த்து, கலைந்திருந்த தனது அலங்காரத்தைச் சரி செய்து கொள்ளுகிருள்.
- ഖിj്കി 1973

Page 49
இப்படியும் ஓர் உறவு
எனது வைத்தியக் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மலைநாட்டிலுள்ள நாக சேனைத் தேயிலைத் தோட்டத்தில் வைத்தியணுகப் பதவியேற்று ஒரு வருடத் திற்கு மேலாகிறது. இந்தக் கால ஓட்டத்தில் எனக்கு எவ்வளவோ விசித்திரமான அனுபவங்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன.
கல்லூரியிலே கற்ற தொழில் முறைகளெல்லாம் இங்கு வேலை பார்க்கும்போது சில வேளைகளில் என்னைக் கைவிட்டு விடுகின்றன. தேயிலைத் தோட்டத்துத் தொழி லாளர்களுக்கு வைத்தியம் பார்ப்பதற்குப் புதுவிதமான திறமை வேண்டுமென்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.
எனக்குக் கொடுக்கப்பட்ட பங்களா வைத்திய சாலைக்குப் பக்கத்திலேதான் இருக்கிறது. சிகிச்சைக்

一81一
காகப் பலர் வைத்தியசாலையில் கூடிவிட்டார்கள் என்பதனை அவர்கள் எழுப்பிய பலமான பேச்சுக் குரலில் இருந்து புரிந்துகொண்டேன்.
எனது பங்களாவிலிருந்து புறப்பட்டு வைத்திய சாலையை நான் அடைந்தபோது, பலர் எழுந்து வணக்கம் தெரிவிக்கிருர்கள்.
** சலாங்க " " .
** சலாம் ". நான் அவர்களுக்குப் பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு வைத்தியசாலைக்குள் நுழைகிறேன்.
* மருந்துக்காரன் அதாவது வைத்தியசாலையில் வேலை செய்யும் கூலியாள் அறையைச் சுத்தமாகக் கூட்டித் துடைத்துக் கிருமிநாசினி தெளித்திருந்தான்: அதன் வாசனை அறையெங்கும் நிறைந்திருந்தது. தினந் தினம் நுகர்ந்து பழகிப்போன அந்த வாசனை என் மனதுக்கு இதமாக இருந்தது; வெளியே சிலர் மூக்கைச் சுழித்தார்கள்
நோயாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்து தங்களது நோய்களைக் கூறிச் சிகிச்சை பெற்றுக் கொண்டு திரும்பிய வண்ணம் இருக்கிருர்கள்.
அடுத்துக் கறுப்பையாக் கங்காணி வருகிருர், மலை யில் பெண்கள் கொழுந்தெடுக்கும்போது இவர்தான் மேற்பார்வை செய்பவர். அவர் அணிந்திருக்கும் "கோட்டும் காவிபடிந்த பற்களால் உதிர்க்கும் சிரிப் பும், குழைந்து பேசும் நயமும் கங்காணிமார்களுக்கே உரித்தான தனிச் சிறப்புக்கள்.
*" சலாமுங்க ??
" சலாம் கங்காணி, என்ன வேணும் ? '
' கொழந்தை பொறந்திருக்குங்க, பேர் பதி யணும் ".
நான் கங்காணியை உற்றுப் பார்க்கிறேன். அவரது தலையில் நரைத்திருந்த கேசங்கள் எனக்குப் பல கதை கள் சொல்லுகின்றன.
எனது சிந்தனைப் பொறிகளில் ஒருகணம் தாக்கம் ஏற்படுகின்றது; நான் மெளனமாகின்றேன்.

Page 50
- 82 -
கங்காணியின் மனைவி கறுப்பாயி நேற்றுத்தான் காலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு மருந்து கட்டுவ தற்காக வைத்தியசாலைக்கு வந்திருந்தாள். அவளது தோற்றத்தை எனது மனக் கண்ணின் முன்னுல் நிறுத்திப் Lumrai iš 6 Gp Gör கறுப்பாயி கர்ப்பிணியாக இருக்க வில்லையே!
* யாருக்குக் கங்காணி குழந்தை பிறந்திருக்கு ? கறுப்பாயிக்கா ? '
* இல்லீங்க சாமி, செகப்பீயிக்கு."
யார் அந்த சிகப்பாயி? " நான் கங்காணியிடம் கேட்கிறேன்.
என்னுேட கொழுந்தயா தானுங்க. சம்சாரத் தோட தங்கச்சிங்க, நான் ரெண்டாந் தாரமாக் கட்டிக்கிட்டேனுங்க '.
எனது பொறிகள் கலங்குகின்றன. சிகப்பாயியை எனக்கு நன்ருகத் தெரியும். அவள் தினமும் காலையில் வைத்தியசாலையின் வழியாகத்தான் மலைக்குக் கொழுந் தெடுக்கச் செல்வாள். அப்பொழுதெல்லாம் சிகப்பாயி யின் அழகை நான் பலமுறை இரசித்திருக்கிறேன்;
பெயருக்கேற்ற நிறம், அழகான வதனம், கரு வண்டுக் கண்கள், கொஞ்சிப் பேசும் குரல். கொழுந்துக் கூடையைப் பின் புறத்தில் மாட்டிக்கொண்டு நாக சேனைத் தோட்டத்திற்கே ராணபோல அவள் நடந்து செல்லும் அழகே அலாதியானது. தோட்டத்து வாலிபர்களின் உள்ளங்களையெல்லாம் கிறங்க வைத்த அந்தச் சிகப்பாயியா இந்தக் கிழவனை மணந்துகொண் டிருக்கிருள் !
என் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது.
'சிகப்பாயியை எப்போது கலியாணஞ் செய்தாய்?” நான் ஆவலோடு கறுப்பையாக் கங்காணியை வினவு கின்றேன்.

- 83 -
* கலியான ஞ் செய்யல்லீங்க, எடுத்துக்கிட்டே னுங்க." இதைக் கூறும்போது வெட்கத்தோடு தலையைச் சொறிந்துகொண்டே குழைந்தார் கங்காணி.
முறைப்படி விவாகம் செய்யாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்யும் போது தாய் தந்தையரின் கையொப்பத்தையும் பதிவுப் புத்தகத்தில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதனைக் கங்காணியிடம் விளக்கமாகக் கூறி, இருவருடைய கையொப்பத்தையும் பெற்றுக்கொள்வதற்கு நேரில் அவர்கள் வசிக்கும் லயத்திற்கு வருவதாகவும் சொல்லிக் கங்காணியை அனுப்பிவைத்தேன்.
அதற்குப்பின் எனது வேலை என் கருத்தில் அமைய வில்லை வைத்தியத்திற்கு வந்தவர்களை ஒவ்வொருவ ராக அனுப்பிவிட்டு, மருந்துக்காரனையும் கூட்டிக் கொண்டு சிகப்பாயி வசிக்கும் லயத்திற்குப் போகிறேன்.
லயத்தில் சிகப்பாயி இருக்கும் ‘காம்பரா'வுக்குள் நுழையும்போது கங்காணி என்னை வாசலிலே நின்று வரவேற்கிருர், சிகப்பாயியின் தாயும் தந்தையும் எனக்குச் சலாம் வைக்கிறர்கள்.
எனக்கு அவர்களைப் பார்க்கும்போது எரிச்சலாக இருந்தது. அழகான கிளிபோன்ற பெண்ணை வளர்த்து இந்தக் கிழட்டுப் பூனையிடம் கொடுத்துவிட்டார்களே யென என் மனம் ஏங்குகிறது.
நான் சிகப்பாயியைப் பார்க்கிறேன். சிகப்பாயிக்கு என்ன நேர்ந்துவிட்டது? அவளது உடலெல்லாம் மெலிந்து பெலவீனமடைந்திருக்கிருள். அவளது முகத்திலே ஏன் இவ்வளவு சோகம்? ஏன் அவளது கண்கள் கலங்குகின்றன? தோட்டத்து வாலிபர்களை ஏங்கவைத்த சிகப்பாயியா இவள் !
சிகப்பாயியையும் அவளது குழந்தையையும் பரி சோதனை செய்தபின்னர், குழந்தையின் பிறப்பைப் பதிவுசெய்யவேண்டிய எல்லா விபரங்களையும் ஒவ்வொன். முகக் கேட்கிறேன்.

Page 51
- 84 -
ஏன் சிகப்பாயி மெளனமாக இருக்கிருள்? கங்காணி யும் சிகப்பாயியின் தாய் தந்தையரும் எனக்கு வேண்டிய விபரங்களைக் கூறுகிருர்கள். அவற்றைக் குறித்துக் கொண்ட பின்னர், கங்காணி பிறப்புப் பதிவுப் புத்த கத்தில் கையொப்பமிடுகிருர்,
சிகப்பாயியின் பெருவிரலை மையில் தோய்த்துப் புத்தகத்தில் ஒப்பமாக அழுத்துகிறேன். அவளது விரல்கள் நடுங்குகின்றன. அவளையும் மீறிக்கொண்டு ஒரு விம்மல் சோகமாக என் காதுகளைத் துளைக்கிறது. மறுகணம் அவள் மயக்கமடைந்துவிட்டாள்.
அவளது நாடித்துடிப்பை நான் அவசர அவசரமாகச் சோதனை செய்கிறேன். பயப்படும்படியாக ஒன்றுமில்லை. அவளுக்கு ஏதோ அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அவ ளுக்கு இப்போது பூரண ஒய்வு தேவை. அவள் மனதை அலட்டிக்கொள்ளாமல் நிம்மதியாக நித்திரை செய்யும், வண்ணம் வேண்டிய மருந்தை ஊசிமூலம் அவளது உட லிலே பாய்ச்சிவிட்டு வைத்தியசாலைக்குத் திரும்புகிறேன். எனது மனம் குமைச்சல் எடுக்கிறது. சிகப்பாயி ஏன் திடீரென்று மயக்கமடைந்தாள்? அவளுக்கு அதிர்ச்சி ஏற்படக் காரணமென்ன ? அவள் ஏன் மெளனம் சாதிக்கிருள்?
ஏழெட்டு நாட்களாகச் சிகப்பாயியின் சோக உருவம் இடையிடையே என் மனதிலே தோன்றி என்னை அலைக்கழித்தவண்ணம் இருந்தது.
ஒருநாள் இரவு நடுநிசி நேரத்தில் எனது பங்களா வின் கதவு அவசர அவசரமாகத் தட்டப்படும் ஒசை கேட்கிறது. யாருக்கோ கடுமையான சுகவீனமாக இருக்கவேண்டும். நான் கதவைத் திறக்கிறேன்.
முனியாண்டி வாசலில் நின்றுகொண்டிருந்தான். அவன் தோட்டத்திலுள்ள படித்த வாலிபர்களில் ஒரு வன். அவனிடம் எப்பொழுதும் எனக்கு ஒர் அபிமானம் உண்டு; அவன் எதைப் பேசும்போதும் நிதானத்துட னும், முன்யோசனையுடனுந்தான் பேசுவான். அவனது பேச்சில் ஒருவித தணிக்கவர்ச்சி இருக்கும். முனியாண்டி

- 85 -
மிகவும் களைத்துப் போயிருந்தான். எங்கிருந்தோ அவசர மாக ஓடிவந்ததால் அவனுக்கு மூச்சு வாங்குகிறது.
** ஐயா , செகப்பாயிக்கு ரெம்ப வருத்தமுங்க. வெரசா வந்து பாருங்க. ' அவனது குரலில் பதற்றம் தொனிக்கிறது.
நான் உடையை மாற்றிக்கொண்டு மருந்துப் பெட்டி யுடன் அவனைப் பின்தொடர்கிறேன்.
சிகப்பாயி இருக்கும் காம்பராவுக்குள் நுழைந்த போது அங்கு டாலர் கூடியிருந்தார்கள். எனது வரவை அவர்கள் எதிர்பார்க்கவில்லைப்போலத் தெரிகிறது. என்னைக் கண்டதும் எல்லோரும் எழுந்து நிற்கிருர்கள். சிலர் சமாளித்துக்கொண்டு சலாம் வைக்கிருர்கள். என்னுடன் வந்த முனியாண்டியை உள்ளே நுழைய விடாமல் அங்கு நின்ற சிலர் தடுத்துவிட்டார்கள். அவர்கள் கோபத்தோடு முனியாண்டியைப் பார்த்த பார்வை பயங்கரமாக இருந்தது. நான் நிதானத்துடன் அங்கிருந்த சூழ்நிலையை அவதானித்தேன்.
அந்த அறையின் ஒரு பகுதியிலே தோட்டத்துப் பூசாரி ஒருவன் கையில் உடுக்கு ஒன்றை வைத்து அடித்த படியே தாளத்துக்கேற்ப ஏதோ மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருந்தான். அவனது கண்கள் சிகப் பாயியை வெறித்துப் பார்த்தவண்ணம் இருந்தன. சிகப்பாயியைச் சுவரோடு சாய்த்து இருத்தி, சாய்ந்து விடாமல் இருப்பதற்காக இருவர் அவளைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவளது கேசங்கள் கலைந்திருந் தன. பூசாரியின் மந்திர உச்சாடனம் உச்சஸ்தாயியை அடையும்போதெல்லாம் அவன் பக்கத்திலே கிடந்த செம்பிலிருந்து தண்ணிரை எடுத்துச் சிகப்பாயியின் முகத்தில் அடித்தான்.
எனது வரவை யாரோ பூசாரிக்குச் சொல்லியிருக்க வேண்டும். அவன் சமாளித்துக்கொண்டு எழுந்திருந் தான். அசடு வழியக் குழைந்துகொண்டே 'செகப்பா யிக்குப் பேய்க் கோளாறுங்க, அதுதான் சாமி பார்க் கிறமுங்க” என்ருன் ,

Page 52
ہ۔ 86 ہے۔
எனக்குப் பொங்கிவந்த கோபத்தில் எதையுமே என்னுல் பேச முடியவில்லை. நான் அங்கு இருந்தவர் களின்மேல் வீசிய பார்வையின் பயங்கரத்தில் எல்லோ ரும் ஒடுங்கிப்போய் நின்றர்கள்.
சிகப்பாயியைத் தூக்கிப் பக்கத்திலே கிடந்த சாக்கில் படுக்க வைக்கும்படி கங்காணியிடம் கூறினேன்.
கங்காணியும் வேறு சிலரும் அவளைத் தூக்க முயன்ற போது ஈனசுரத்தில் அவள் கூறினுள்:
** அடே, கறுப்பையாக் கங்காணி என்னைத் தொடாதேடா.”*
கங்காணி இதை எதிர்பார்க்கவேயில்லை. செய்வ தறியாது திகைத்து நின்ருர். அங்கு நின்ற பெண்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். கங்காணியின் பெயரைச் சிகப்பாயி சொல்லியது அவர்களுக்கு வெறுப்பைக் கொடுத்தது. தோட்டத்துப் பெண்கள் வாழ்நாளில் தவறுதலாகக்கூடத் தங்கள் கணவன்மார்களின் பெயரைச் சொல்லமாட்டார்கள். நான் சிகப்பாயியைப் பரிசோதனை செய்தேன்; எனது இதயம் ஒரு துடிப்பை இழந்து மீண்டுந் துடித்தது, சிகப்பாயியின் நாடித் துடிப்புக் குறைந்து விட்டது. அவளது இதயம் பலவீனமாகத் துடித்துக் கொண்டிருந் தது. இனிச் சிகப்பாயி பிழைக்கமாட்டாள்.
அவளது இதயத் துடிப்பையும் சுவாசத்தையும் துரிதப்படுத்த எண்ணி ' கொருமின் ஊசிமருந்தை அவளது உடலிலே பாய்ச்சுகிறேன். காலங்கடந்த இந்த முயற்சி ஏற்ற பலனைத் தராது என்று எனக்குத் தெரிந்துங்கூட என்னுல் சும்மா இருக்க முடியவில்லை; எல்லாமே எனக்கு ஒரு நொடிப்பொழுதில் விளங்கு கின்றது. சிகப்பாயிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அவளுக்குச் சித்தப்பிரமையை ஏற்படுத்தியிருக்கிறது. பேய் பிடித்து ஆட்டுகிறதென்ற மூடநம்பிக்கையில் அவளுக்கு ஏற்ற வைத்தியம் செய்விக்காமல், அவளுக்குத் தேவையான ஓய்வு உறக்கத்தைக் கொடுக்காமல் இரவு பகலாக

- 87 -
அவள் பூசாரியின் சித்திரவதைக்கு ஆளாகியிருக்கிருள். இந்த மூடநம்பிக்கைதான் அவளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சிகப்பாயி மெதுவாகக் கண்விழித்துப் பார்த்தாள் நான் ஆவலோடு அவளை நோக்கியவண்ணம் இருந் தேன். ஏக்கம் நிறைந்த அவளது பார்வை யாரையோ தேடியது. அங்கிருந்த ஒவ்வொருவரின் மேலும் வரிசை யாக அவளது பார்வை திரும்பியது. திடீரென்று கண்களில் மலர்ச்சி தோன்றுவதை என்னுல் அவதா னிக்க முடிந்தது.
சிகப்பாயி மிகவும் கஷ்டத்தோடு முனகினுள். ** என் ராசா வந்திட்டாரு."
** யார் சிகப்பாயி, யார் வந்தது? யார் ... நான் ஆவலோடு அவளிடம் கேட்கிறேன்.
அவள் பதில் பேசவில்லை; வாழ்வு அணைந்துபோகும் அந்த நேரத்திலும் அவளது வதனத்தில் இலேசாக நாணம் பரவுவதைக் கண்டேன். அவள் தனது ராசா வின் பெயரைச் சொல்லமாட்டாள்.
சிகப்பாயியின் கண்கள் முனியாண்டியை நோக்கிய வண்ணம் இருந்தன.
முனியாண்டி மற்றவர்களின் பிடியிலிருந்து திமிறிக் கொண்டு உள்ளே ஓடிவந்தான். அவனைத் தடுத்து நிறுத்த முயன்றவர்களை எனது அதிகாரத் தொனியில் அடக்கி வைத்தேன். அப்போது அங்கிருந்த சூழ்நிலை யில் எல்லோரும் எனது பேச்சுக்குக் கீழ்ப்படிய வேண் டித்தான் இருந்தது.
அங்கு கூடியிருந்தவர்கள் கதைத்த கதைகளிலிருந்து எனக்குச் சில விஷயங்கள் தெரியவந்தன
முனியாண்டியும் சிகப்பாயியும் காதலர்கள். முனி யாண்டி குறைந்த சாதிக்காரணுக இருந்தபடியால், தங்களது காதலுக்கு மற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிப் பார்கள் என எண்ணிய அவன், தோட்டத்துமாரியம்மன்

Page 53
- 88 -
கோவிலின் தனிமையான சுற்றுப் புறங்களில் சிகப் பாயியை அடிக்கடி சந்தித்திருக்கிருன்.
அப்பொழுதெல்லாம் தங்க ளது குலதெய்வமான மாரியம்மன்தான் இந்த உறவுக்குத் துணைநிற்கவேண்டு மென அவன் அடிக்கடி வேண்டிக்கொள்வான்.
சிகப்பாயி கர்ப்பவதியாகிச் சில மாதங்களின் பின்பு தான் அவளது தாய்தந்தையருக்கு விஷயம் தெரியவந் திருக்கிறது. அவர்கள் அவளை வெளியே செல்ல விடாமல் வீட்டினுள்ளேயே வைத்துக் கண்காணித்திருக் கிருர்கள். முனியாண்டியால் எந்தவழியிலும் சிகப்பாயி யைச் சந்திக்க முடியவில்லை.
சிகப்பாயிக்குக் குழந்தை பிறந்ததும் அவளைப் பயமுறுத்தி, முனியாண்டியிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்துவிட அவளது தாய்தந்தையர்கள் சூழ்ச்சி செய் திருக்கிருர்கள். கறுப்பையாக் கங்காணியும் அவர்க ளுக்கு உடந்தையாக இருந்திருக்கிருர்,
உள்ளே வந்த முனியாண்டி சிகப்பாயியின் அருகில் அமர்ந்து, அவளது தலையைத் தூக்கித் தனது மடியில் வைத்தான்;
அவள் அவனிடம் ஏதோ கூறுவதற்கு முயன்ருள். அவன் அவளது வதனத்தை நோக்கிக் குனிந்தான். அவனது கண்கள் கலங்கியிருந்தன.
"ராசா. ராசா." அவள் முனகினுள். அதற்கு மேல் பேசுவதற்கு அவளிடம் சக்தியிருக்கவில்லை. மறு கணம் அவளது தலை சாய்ந்துவிட்டது.
y
நான் கண்களை மூடிக்கொண்டேன்.
அங்கு நின்றவர்கள் யாருமே எதையும் பேசவில்லை. எங்கும் ஒரே நிசப்தம்.
எல்லாமே முடிந்துவிட்டன.
சிகப்பாயி பெற்றெடுத்த அந்தப் பச்சிளங் குழந்தை திடீரென்று வீரிட்டு அழத்தொடங்கியது. அந்த ஒலி அப்பிரதேசத்தையே துன்பத்தில் ஆழ்த்துவதுபோல் சோகமாக ஒலித்துக்கொண்டிருந்தது.
-விரகேசரி 1970

10
பிறந்த மண்
‘அப்பா, நான் இந்தியாவுக்கு வரப்போறதில்லே’ வேலைக்குப் புறப்பட்டுச் செல்லும்போது இருளப்பன் கூறிவிட்டுச் சென்ற வார்த்தைகள் மாணிக்கத்தேவரை நிலைகுலையச் செய்தன. &
இலங்கைக்கு வந்து நாற்பது வருட காலமாக மரகத மலைத் தேயிலைத் தோட்டத்தில் தனது வாழ்நாளின் முக்கிய பகுதியைக் கழித்துவிட்டு இப்போது தாய்நாட் டுக்குத் திரும்ப முடிவு செய்துவிட்ட மாணிக்கத்தேவர், கடைசிநேரத்தில் தன் மகன் இப்படியான அதிர்ச்சி தரும் முடிவுக்கு வருவானென எதிர்பார்க்கவேயில்லை.
மாணிக்கத்தேவர் இந்நாட்டிலே வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடவில்லையென எண்ணும்படியாக அவரிடம் இருந்த ஒரேயொரு செல்வம் அவரது மகன் இருளப்பன் தான்.

Page 54
- 90 -
தனது விலைமதிப்பற்ற செல்வத்தை இழந்து வெறுங் கையோடு தன் தாய்நாட்டுக்குத் திரும்பவேண்டிய நிலைமை வந்துவிட்டதை நினைத்தபோது மாணிக்கத் தேவரின் குழிவிழுந்த கண்களுக்குள் நீர் திரையிடுகிறது.
* வழுக்கற்பாறை லயத்தின் வலது பக்கத்திலுள்ள கடைசிக் காம்பராவிலேதான் மாணிக்கத்தேவர் வசிக் கிருர், காம்பராவின் முன்பகுதியிலுள்ள 'இஸ்தோப்பில்? அடுப்புக்கு முன்னல் இதுவரை நேரமும் குளிர்காய்ந்து கொண்டிருந்த மாணிக்கத்தேவரின் மனம் நிலைகொள் ளாமல் தவிக்கிறது. பக்கத்திற் கிடந்த கம்பளியை எடுத்துப் போர்த்திக்கொண்டு மெதுவாக எழுந்து வாச லுக்கு வருகிருர்,
பனிமூட்டம் இன்னும் அகலவில்லை. குளிர் காற்று மாணிக்கத்தேவரின் முகத்தில் சுரீரெனப் பாய்கிறது. அவரது உடல் சிறிதாக நடுங்குகிறது. A.
தூரத்தில் நெருக்கமாக வளர்ந்திருந்த தேயிலைச் செடிகள் பச்சைநிறப் பட்டுப் படுதா விரித்திருப்பது போல் அழகாகக் காட்சிதருகின்றன. அதன்மேல் காலைக் கதிரவன் தன் பொற் கதிர்க் கரங்களால் தங்கக் கலவையை அள்ளித் தெளித்து அழகு தேவதையின் சித்திரம் வரைந்துகொண்டிருக்கிருன்.
அாரத்தில் மேட்டு லயமும் அதன் கீழேயுள்ள பணிய லயங்களும் பனிமூட்டத்தில் அமுங்கிக் கிடக்கின்றன. வேலைக்குப் புறப்பட்ட பெண்கள் கொழுந்துக் கூடை களை முதுகுப்புறத்தில் தொங்கவிட்டுக்கொண்டு கரத்தை ருேட்டுவழியாக மலைக்குச் சென்றுகொண்டிருக்கிருர்கள்.
அவர்களைப் பார்த்தபோது மாணிக்கத்தேவருக்கு அவரது மனைவி மீனச்சியின் நினைவு வருகிறது.
* அவள் மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந் தால், இருளப்பனைப் பிரிந்து இந்தியாவுக்குச் செல்ல முடியாமல் அவளது தாயுள்ளம் எவ்வளவு வேதனை யடைந்திருக்கும். இப்படியான ஒரு பிரிவை அவளால்

- 91 -
தாங்கிக்கொள்ளமுடியாது என்ற காரணத்தினலேதான் இறைவன் அவளை இந்த உலகத்தை விட்டே பிரித்து விட்டாணு ' என அவர் எண்ணினர்.
மாணிக்கத்தேவருக்கு இந்நாட்டில் பிரஜாவுரிமை யில்லை. அவர் இந்தியப் பிரஜையோவென்ருல் அதுவும் இல்லை. இந்தியாவில் பிறந்தவர், இந்த நாட்டில் வாழ் பவர் எந்த நாட்டிலும் அவருக்கு உரிமையில்லை. மாணிக்கத்தேவர் இலங்கைக்கு வந்த காலத்தில் இருந்த சட்டங்களும், சலுகைகளும் அற்றுப்போய்விட்டன. இப்போதுள்ள நிலைமையில் ஏதாவதொரு நாட்டின் பிரஜாவுரிமை உள்ளவர்கள்தான் ஒரு நாட்டிலிருந்து வேருெரு நாட்டுக்குப் போய்வர முடியும்.
மாணிக்கத்தேவர் தனது பிறந்த நாட்டை ஒரு தடவையாவது பார்க்கவேண்டுமென விரும்பியபோ தெல்லாம் தனது ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள் 6. Trr
யாராவது இந்தியாவுக்குச்சென்று திரும்பியவர்களை மாணிக்கத்தேவர் சந்தித்தால் இலேசில் விட்டுவிட மாட்டார். இந்திய நாட்டின் அரிசி விலையிலிருந்து அரசியல் நிலைவரை எல்லாவற்றையுமே துருவித்துருவிக் கேட்டுத் தனது பிறந்த நாட்டை மானசீகமாகத் தரிசிப் பதில் அவருக்கு அளவுகடந்த ஆனந்தம்.
இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த நாளிலேதான் அவரது மகன் இருளப்பன் பிறந்தான். அப்போது மாணிக்கத்தேவர் தனது மனைவியிடம் கூறி மகிழ்ந்த வார்த்தைகள் அவரது நினைவில் வருகின்றன.
'மீனச்சி நான் இங்கே வர்ரப்போ நம்ப நாட்டிலே சுதந்திரப் போராட்டம் நடத்திக்கிட்டிருந்தாங்க. அந்தப் போராட்டத்திலே ரெம்பப் பேரு சிறைக்குப் போய்க்கிட்டிருந்தாங்க. அவங்க பட்ட கஷ்டத்தாலே நம்ப நாட்டுச் சுதந்திரம் கிடைச்சிடுச்சு. இப்போ நான் அந்த மண்ணிலே இருந்தா' 'வந்தே மாதரம்” என்னு சொல்லிக்கிட்டு அந்தச் சுதந்திர பூமியிலே விழுந்து

Page 55
- 92 -
புரண்டிருப்பேன்; ஆசையோடு அந்த மண்ணுக்கு முத்தம் கொடுத்திருப்பேன். தெருவெல்லாம் ஒடிச்சென்று சந்திச்சவங்க கிட்டேயெல்லாம் நம்ம நாட்டுக்குச் சுதந் திரம் கிடைச்சிடிச்சு என்னு சொல்லிச் சந்தோஷப் பட்டிருப்பேன்.
எனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கல்லே. ஏனென்ன பிறந்த நாட்டுக்காகப் போராட வேண்டிய நேரத்திலே பிழைப்பைத்தேடி இங்கே வந்திட்டேன். அதனுலேதான் சாபக்கேடு மாதிரி சுதந்திரமில்லாமே இங்கேயிருந்து கஷ்டப்படுறேன்.
சாகிறத்துக்கு முன்னலே அந்தப் புண்ணிய பூமிக்கு நான் போகணும். நான் போறப்போ கூட்டிக்கிட்டுப் போறதுக்கு நீயிருக்கே. அத்தோட என் சொந்த மென்னு சொல்லிக்க இன்னிக்கு ஒரு மகனையும் பெத்துத் தந்திருக்கே. நாடு அடிமையா இருக்கிறப்போ நான் தனியாகத்தான் புறப்பட்டு வந்தேன். ஆணு திரும்பிப் போறப்போ குடும்பத்தோட அந்தச் சுதந்திர பூமிக்கு போவேன் எங்கிறத நெனைக்க எனக்கு ரெம்பப் பெருமை யாயிருக்கு."
வெகு நாட்களாகத் தன் பிறந்த நாட்டைக் காணத் துடித்துக்கொண்டிருந்த மாணிக்கத்தேவருக்கு, அவரது ஆசை நிறைவேறக்கூடிய காலம் இப்பொழுதுதான் ஏற்பட்டிருக்கிறது.
இலங்கை இந்திய அரசுகள் செய்த ஒப்பந்தத்தின் பேரில், காடாகக் கிடந்த இந்த நாட்டைத் தங்களின் கடுமையான உழைப்பால் செல்வங் கொழிக்கும் பூமி யாக மாற்றிய இந்தியத் தமிழர்களில் லட்சக் கணக் காஞேர் அவர்களது தாய்நாட்டுக்குத் திருப்பி யனுப்பப்படுகிருர்கள்.
தான் பிறந்த மண்ணில் வாழத்தான் கொடுத்து வைக்கவில்லை யென்ருலும், தன் வாழ்நாளின் இறுதிக் காலத்திலாவது அந்த மண்ணிலேயிருந்து கண்ணை மூட வேண்டுமென விரும்பிய மாணிக்கத்தேவரும் அவர்க ளுள் ஒருவராகிவிட்டார் .

-93 -
தனது மனைவியையும் மகனையும் தன்னேடு இந்தியா வுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென நினைத்திருந்த மாணிக்கத்தேவரது ஆசையை நிராசையாக்கி விட்டு இருளப்பன் பிறந்த மறுவருடமே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாள் மீனுச்சி. அவள் இறக்கும்போது இருளப்பனை வளர்க்கும் பொறுப்பை மாணிக்கத்தேவ ரிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் சென்ருள்.
இருளப்பனை வளர்த்து ஆளாக்கி விடுவதற்குள் மாணிக்கத்தேவர் அடைந்த கஷ்ட நஷ்டங்கள் கணக்கி லடங்கா.
லயத்தில் ஆடு மாடுகளைக் கட்டிவைத்திருக்கும் தொழுவங்கள் போன்ற காம்பராக்களில் பல குடும் பங்கள் சுகாதார் வசதியற்ற வாழ்க்கை நடத்தவேண் டிய நிர்ப்பந்தமும், காலையிலிருந்து மாலைவரை மழை யிலும் வெயிலிலும் வேலை செய்தால் கிடைக் கும் குறைந்த ஊதியமும், தோட்ட நிர்வாகத்தினர் தொழி லாளர்களின் பிள்ளைகளுக்குப் போதிய கல்வி கற்கும் வசதியை ஏற்படுதித்திக் கொடுக்காமல் அவர்களின் சிந்திக்கும் ஆற்றலை மழுங்க வைத்துத் தங்கள் நிர்வா கத்துக்குச் சாதகமான தொழிலாளர் பரம்பரையை உருவாக்கும் முறையும், சிறிய உத்தியோகத்தர்களுக்குக் கூடப் பயந்து "சலாம்? போடவேண்டிய நிலைமையும் மாணிக்கத்தேவருக்குத் தோட்டத்து வாழ்க்கையை வெறுப்படையச் செய்தன.
இருளப்பனும் தன்னைப்போன்று ஒரு தோட்டத் தொழிலாளியாவதை மாணிக்கத்தேவர் விரும்பவில்லை. அவன் மேற்படிப்புப் படித்து உயர்ந்த உத்தியோகம் பார்க்கவேண்டுமென அவர் விரும்பியதால் அவனே 'டவுனில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.
தந்தையின் விருப்பத்தையும் அவர் படும் கஷ்டங் களையும் உணர்ந்த இருளப்பன் மிகவும் கவனமாகப் படித்தான், அவனது முயற்சி வீண்போகவில்லை, சிரேஷ்ட

Page 56
س۔ 94 س۔
திராதரப் பத்திரப் பரீட்சையில் விசேஷ சித்திகளுடன் அந்த வட்டாரத்திலேயே முதன்மையாகத் தேறினன் இருளப்பன்:
மாணிக்கத்தேவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே யில்லை. ' என் மகன் சோதனையிலே பாஸ் பண்ணிட் டான். இனிமே அவனுக்கு உத்தியோகம் கிடைச்சிடும். அப்புறம் நான் செவனே'ன்னு பென்சன் வாங்கிக்க வேண்டியதுதான்", தோட்டம் முழுவதும் தனது மகன் சோதனையில் சித்தியடைந்த செய்தியைக் கூறிச் சந்தோஷப்பட்டார் மாணிக்கத்தேவர்.
இருளப்பன் அரசாங்க உத்தியோகங்களுக்கு மனு அனுப்பியபோதும், நேர்முகப்பரீட்சைகளுக்குச் சென்று வந்தபோதுந்தான் அந்த அதிர்ச்சி தரும் விஷயம் மானிக்கத்தேவருக்குத் தெரிய வந்தது. ጳ
இருளப்பனுக்குப் பிரஜாவுரிமை இல்லை. அதனல் 9D F finis, உத்தியோகங்களுக்கு அவன் அனுப்பிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தேயிலைத் தோட்டங்களில் வெற்றிடமாகும் உத்தி யோகங்களுக்கு இருளப்பனது மனுக்கள் கவனிக்கப் படவேயில்லை. ஏனெனில் அந்த உத்யோகங்களுக்குப் பெரிய மனிதர்களின் சிபார்ச்சு வேண்டியிருந்தது.
பெரிய மனிதர்களின் படிக்காத பிள்ளைகளுக்குக் கூட எவ்வளவு இலகுவில் தேயிலைத் தோட்டங்களில் உத்தியோகங்கள் கிடைத்துவிடுகின்றன.
இருளப்பன் உத்தியோகத்திற்காக முயற்சித்துக் களைப்படைந்து விட்டான், அவனுக்கு மறு வருடமே தோட்டத்தில் பெயர் பதியப்பட்டது. இப்போது இருளப்பனும் ஒரு தேயிலைத் தோட்டத் தொழிலாளி:
""நாமெல்லாம் பிறந்த பொன்னட்டை மறந்த வங்க, அந்த மண்ணிலே பாடுபட்டு உழைச்சிருந்தா சொந்த மண்ணிலே பாடுபட்டோம் என்ற பெருமை

யாவது இருந்திருக்கும். இங்கே வந்து இதுவும் நம்ப நாடுதான் என்கிற நெனைப்போடதான் பாடுபட் டோம். நாம இந்த மண்ணுக்கு வஞ்சகம் செய்யலே. நாமதான் வஞ்சிக்கப்பட்டோம். நாம பாடுபட்ட மண் னிலே நாமதான் நல்லா வாழலேன்னு நம்ப புள்ளை யிங்களாவது நல்லா வாழ வழியில்லே.”
மாணிக்கத்தேவர் தன்னைச் சந்தித்தவர்களிடம் மேற்கண்டவாறு கூறிப் புலம்பினர். அவரால் வேறு என்னதான் செய்யமுடியும் ?
மாணிக்கத்தேவரின் நினைவுகள் கலைகின்றன. காலை யில் இருளப்பன் அவசர அவசரமாகப் புறப்பட்டுச் சென்ற நேரத்தில் கதைப்பதற்குப் போதிய அவகாசம் கிடைக்காததினுல், அவன் இந்தியாவுக்குத் தன்னுடன் வர மறுக்கும் காரணத்தை மாணிக்கத்தேவரால் கேட்டு அறிந்துகொள்ள முடியவில்லை.
இருளப்பன் வேலை முடிந்து திரும்பியபோது மாணிக் கத்தேவர் சாவகாசமாக அவனிடம் கேட்டார். '"நான் தான் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டேன். நீயும் இங்கேயிருந்து கஷ்டப்படப்போறியா?*
" கஷ்டப்படுறவங்க யாருமே எந்த நாளும் கஷ் டப்படுறதில்லே. இந்தியாவுக்குப் போனவங்க போக மீதிப்பேரு இந்த நாட்டிலேதான் வாழப்போருங்க. அவங்களிலே ஒருத்தன நானும் இருந்திட்டுப்போறேன்.
நீங்க இந்தியாவுக்குப் போன ரெம்பக் கஷ்டப்படு வீங்க. வயசான காலத்திலே அங்கே போய் உங்க ளாலே என்ன செய்யமுடியும்? உழைச்சுத் திங்கத்தான் முடியுமா? சொந்தமென்னு சொல்லிக்க யாருமே இல் லாத இடத்திலே ஒரு நேரச் சாப்பாட்டுக்கே வழி யில்லாமே கஷ்டப்படப்போlங்களா? நீங்க அங்கே போயிட்டா, எங்கே இருக்கிறீங்களோ எப்படியெல்லாம் கஷ்டப்படுறிங்களோ என்று என் மனசு வேதனைப்பட் டுக்கிட்டே இருக்குமப்பா. நான் உங்களுக்கு ஒரே

Page 57
- 96 -
பிள்ளை. வயசான காலத்திலே உங்களுக்கு உதவியா இருக்க ஆசைப்படுறேன். நீங்க உங்க முடிவை மாத் திக்கிட்டு இங்கேதான் இருக்கணும். உங்களைப் பிரிஞ்சு என்னலே வாழமுடியாதப்பா"
இருளப்பன் இப்படிக் கூறியபோது துக்கத்தினல் அவனது தொண்டை அடைத்தது; கண்கள் கலங்கின.
"இருளப்பா ! உனக்கு இந்த நாட்டிலே பிரஜா வுரிமையே இல்லையே, அப்புறம் எந்த உரிமையோட நீ இங்கே வாழப்போறே ? நீதான் உன் முடிவை மாத்திக்கணும் என்னேட இந்தியாவுக்கு நீ வரத்தான் வேணும் "
‘* பிரஜாவுரிமை கிடைக்கிறதுன்ன எத்தனையோ சட்டதிட்டங்கள் இருக்கப்பா. அந்த உரிமை எனக்குக் கிடையாமலே போயிடலாம். ஆனல் நான் இந்த நாட்டிலே பிறந்தவன் என்கிற நெனப்பை அந்த நெனப்பிலே கிடைக்கிற நெறைவை எதனுலும் என் மனசிலே இருந்து அழிக்கமுடியாது. நீங்க உங்க பிறந்த மண்ணை நெனைச்சு ஏங்குறீங்க. அதேபோல என் பிறந்த மண்ணை என்னலே மறக்க முடியாதப்பா. நான் உங்ககூட இந்தியாவுக்கு வந்தாலும் இந்த மண்ணுேட நெணேப்பு என்னை வதைச்சுக் கொண்டேயிருக்கும். பிறந்த மண் தெய்வம் மாதிரி. அதை மறந்தவங்க யாரும் நல்லா வாழமுடியாதப்பா "
இருளப்பன் கூறிய வார்த்தைகள் மாணிக்கத் தேவரது நெஞ்சின் அடித்தளத்தையே தொட்டன. அவரது கண்கள் கலங்கின.
இப்போது அவரது கண்கள் கலங்குவது தனது மகனே இன்னும் சிறிது காலத்தில் பிரிந்து செல்ல வேண்டுமே என்பதற்காகவல்ல!

11
உயிர்த் துணை
பொன்னி !
இப்போது நினைத்தாலும் என் உடலெல்லாம் சிலிர்க்குதடி ! உனக்கு எவ்வளவு தியாக சிந்தை ! மனிதப் பிறவியெடுத்த எவருமே செய்யத் துணியாத தியாகமல்லவா நீ செய்தது !
அதனை நினைக்கும்போது என் கண்கள் குளமாகுதடி . கண்களென்ரு சொன்னேன்? எனக்கேது கண்கள்?
கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் இரு குழிகள் அல்லவா இருக்கின்றன.
நீதானே எனக்குக் கண்களாக இருந்தாய்! ஏன் எனது உற்ருர் உறவினர், சொந்த பந்தம் எல்லாமாக இருந்தவளும் நீதானே.
நான் ஒரு பிச்சைக்காரன் இந்தக் குருட்டுப் பிச்சைக்காரனேடு நீயும் சேர்ந்துகொண்டாய். இத ஞல் உனக்குக் கிடைத்த பலன்?

Page 58
- 98 -
நான் பட்டினி கிடக்கும்போது நீயும் பட்டினி கிடந்தாய். நான் அரை வயிற்றுக்கு உண்ணும்போது நீயும் அரை வயிற்றுக்கு உண்டாய். நான் கவலைப் படும்போது நீயும் கவலைப்பட்டாய். இந்தக் கபோதி யோடு சேர்ந்துகொண்டதால் ஒரு நாளாவது நீ மகிழ்ச்சி யடைந்திருப்பாய் என நான் நினைக்கவில்லை.
பொன்னி ! உன்னை நான் முதன் முதலில் சந்தித்த நிகழ்ச்சி இப்போதுகூட என் நினைவில் இருக்கிறது. அந்தப் பசுமையான நினைவை எப்படி என்னுல் மறந்துவிட முடியும் ?
ஊரின் ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு மடந்தான் எனது இருப்பிடம். அந்த மடத்தில் வழக்கம்போல் அன்றும் நான் தனியாகத்தான் படுத்திருந்தேன். * வெகுநேரமாகத் தொடர்ந்து மழை பெய்துகொண் டிருந்தது. என்னல் எங்கும் வெளியே செல்ல முடிய வில்லை. எத்தனையோ நாட்கள் பட்டினியாகக் கிடந்து என் வயிற்றைப் பழக்கியிருக்கிறேன். அன்றும் நான் பட்டினி யாகத்தான் இருந்தேன். பசி மயக்கத்தில் கிறங்கிப்போய்க் கிடந்தேன்.
பறவைகளின் கீதங்கள், மனிதர்களின் குரல்கள், இயந்திரங்களின் இரைச்சல்கள் நிறைந்திருக்கும் நேரந் தான் பகற் பொழுதாக இருந்தால், அன்று நான் உன்னைச் சந்தித்தது இரவு நேரமாகத்தான் இருக்க வேண்டும்.
அப்போது எனக்கு உடமையாக இருந்தபொருட்கள் ஒரு போர்வையும் கைத்தடியுந்தான். போர்வையை நிலத்திலே விரித்து, கைத்தடியையும் பக்கத்திலே வைத்துக்கொண்டு படுத்திருந்தேன்.
திடீரென ஏதோ அரவம் கேட்டது எனக்குப் பக்கத்தில் யாரோ படுத்திருப்பதைப் போன்ற ஒரு பிரமை.

- 99 -
மெதுவாகக் கையினல் தடவிப் பார்த்தேன்.
எனது உடலிலே ஒரு சிலிர்ப்பு! அச்சத்தோடு கையை இழுத்துக்கொண்டேன்.
வெளியே மழை கொட்டிக்கொண்டிருந்தது. நீயும் என்னைப்போன்ற ஓர் அனதையாகத்தான் இருக்க வேண்டும். புகலிடந் தேடித்தான் நீ அங்கு வந்திருக். கிருய் என்பதைப் புரிந்துகொண்டேன்
எங்கோ இடியிடிக்கும் ஒசை. அதற்கு முன்னர் மின்னலும் இருந்திருக்க வேண்டும்.
எனது உள்ளத்திலே நடுக்கம். இடிமின்னல் என்ருல் எனக்கு ஒரே பயம். நான் பதினறு வயதுக் கட்டிளங் காளையாகக் கல்லூரிக்குச் சென்றுவந்துகொண்டிருந்த காலத்தில், ஒரு பயங்கரமான மின்னலின் தாக்குதலி ஞலேதான் என் பார்வையை இழந்தேன்.
மீண்டும் இடியிடிக்கும் ஒசை. பயத்தினல் நான் உன்னைக் கட்டிப் பிடித்தேன். நீ மெளனமாகப் படுத்திருந்தாய். உனக்கும் அப்போது பசி மயக்கமாக இருந்திருக்குமோ என்னவோ.
எனது பயம் சிறிது குறைந்தபோது நான் உன் உடலை ஆதரவோடு தலையிலிருந்து கால்வரை தடவிக் கொடுத்தேன். எங்கே நீ என்மேல் கோபித்துக்கொள் வாயோ என அப்போது எனக்கு அச்சமாகவும் இருந்தது.
நீ எனது ஸ்பர்சத்தை உணர்ந்து கொள்ளாதவள் போலப் படுத்திருந்தாய்.
உனக்குத் தருவதற்கு என்னிடம் உணவு ஏதும் இல்லையே என நான் கவலையடைந்தேன். எனது பசி கூட அப்போது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் என்னை அறியாமலே நான் நித்திரை யாகி விட்டேன்.
எங்கோ பறவைகள் பாடின.

Page 59
- 100 -
நான் நித்திரை கலைந்து எழுந்திருந்தபோது, நீயும் பக்கத்திலே படுத்திருக்கிருயா என ஆவலுடன் தடவிப் பார்த்தேன்.
நீ எனக்கு முன்னரே எங்கோ எழுந்து சென்று விட்டாய்.
மறுநாள் இரவும் நீ வந்தாய். உரிமையுள்ளவள் போல் என் பக்கத்திலே வந்து படுத்தாய்.
எனக்கு அழவில்லாத மகிழ்ச்சி. யாருமற்ற அஞதை யாக இருந்த எனக்கு உனது உறவு கிடைத்ததில் ஒரு வித மனநிறைவு.
அன்றும் உனது உடலை ஆசையோடு நான் தடவி னேன். உனது அழகைப்பார்த்து மகிழ்வதற்கு எனக்குக் கண்கள் இல்லை என்பதைத் தெரிந்துதானே என்னவோ, உனது உடலை நான் தடவிப் பார்ப்பதற்கு நீ எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தாய்.
அன்று எனக்காக வைத்திருந்த உணவில் உனக்கும் பகிர்ந்து கொடுத்தேன். நீ அருந்தினுய்.
அன்று இரவு முழுவதும் எனக்கும் நித்திரை வர வில்லை. ஏதேதோ கற்பனைகளில் திளைத்திருந்தேன்.
அதன்பின்னர் அல்லும் பகலும் நீ என்னைவிட்டுப் பிரியாமல் இருக்கத் தொடங்கிவிட்டாய்,
பொன்னி !
ஆதரவற்றுத் தனிமனிதனுகத் திரிந்த எனக்கு நீ வந்தபின்புதான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படத் தொடங்கியது: எத்தனையோ நாட்கள் சோம்பற்றன மாகப் பட்டினியாகவே நான் காலத்தைக் கடத்தி யிருக்கிறேன். ஆனல் நீ வந்த பின்னர் உனக்கு உணவு தரவேண்டுமே என்ற உணர்வில், என்னுள் புதிய தென்பு பிறந்தது. நான் ஒரு புது மனிதனுகினேன்.

-س- 101 -سن
பிச்சையெடுக்கும் பணத்தில் சிறிது சிறிதாகச் சேர்த்து, ஒரு சங்கிலி வாங்கி உன் கழுத்தில் அணிந்து உனது அழகை என் அகக் கண்களால் பார்த்து மகிழ்ந் தேன்.
பொன்னி !
நான் ஐந்து வயதுச் சிறுவனக இருந்தபோது ஒரு குருடனைப் பார்த்திருக்கிறேன். அவனுக்குத் துணையாக ஒரு சிறுவன் இருந்தான் அந்தக் குருடனது கைத் தடியைப் பற்றிக்கொண்டு சிறுவன் முன்னே நடந்து செல்வான். குருடன் அவனைப் பின்தொடர்வான். அந்தக் குருடன் போகவேண்டிய இடங்களுக்கெல்லாம் சிறுவன் அவனை அழைத்துச் செல்வான். அல்லும் பகலும் அந்தச் சிறுவன் குருடனுக்குத் துணையாக இருந் தான்
அந்தக் குருடனுக்குச் சிறுவன்
மகன்.
ஆஞல் எனக்கு நீ
பொன்னி !
நான் பெரிய சுயநலக்காரன். நீ எங்கே என்னை விட்டுப் பிரிந்துவிடுவாயோ என்ற பயத்தில், நான் உன் சுதந்திரத்திலேகூடக் குறுக்கிட்டிருக்கிறேன். அதனை நினைக்கும்போது எனக்கு இப்பொழுதும் வெட்கமும் வேதனையாகவும் இருக்குதடி.
உன் அரையிலே ஒரு கயிற்றைச் சுற்றி, அந்தக் கயிற்றின் தலைப்பை நான் பிடித்துக்கொள்வேன். நீ முன்னே நடந்துசெல்வாய். என் வழிகாட்டியாக, ஒளி விளக்காக. என் கண்களாக . . என்னைக் காப்பாற் றும் உறுதுணையாக நீ முன்னே செல்வாய். நான் உன்னைப் பின்தொடர்வேன்.
எத்தனையோ மனிதர்கள் இந்தக் காட்சியைப் பார்த்துச் சிரித்திருப்பார்கள், கேலி செய்திருப்பார்கள்.

Page 60
- 102 -
பிறரைப் பார்த்துச் சிரிப்பதும் கேலி செய்வதும் மனித இனத்துக்கே சொந்தமான பலவீனங்கள்தானே.
அப்போது உனக்கு வெட்கமாக இருந்திருக்குமோ என்னவோ. உனது விருப்பத்துக்கு மாருக நான் எத் தனையோ தடவை நடந்திருக்கிறேன்.
ஆணுல் ஒருபொழுதாகிலும் என் செய்கைகளுக்கு நீ எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. நீ சாதிப்பதெல்லாம் மெளனந்தான் !
ஏன் பொன்னி ! இந்தக் குருடனின் மனதைப் புண் படுத்தக் கூடாதென்ரு அப்படி மெளனம் சாதித்தாய்?
காலையில் என்னை மனிதர்கள் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் செல்வாய். நீ அநேகமாக என்னை அழைத் துச் செல்லுமிடம் ஒரு நாற்சந்தி என்பதையும், அங்கு ஒரு மூலையில் மின்சாரக் கம்பமும், அதையடுத்து பஸ் தரிப்பு நிலையமும் இருக்கின்றன என்பதையும், என் உணர்வுகளால் அறிந்திருக்கிறேன்.
பகல் முழுவதும் அந்தத் தெருவால் போகிறவர்க ளிடத்திலும், பஸ்தரிப்பு நிலையத்தில் நிற்பவர்களிடத் திலும் நான் யாசித்துக் கொண்டிருப்பேன். என் முன்னே ஒரு துண்டு விரிக்கப்பட்டிருக்கும்.
இரக்க மனம் படைத்த புண்ணியவான்கள் சிலர் என் துண்டிலே சில்லறையை வீசுவார்கள்.
ஒருநாள். அன்றுதானடி உன் கோபத்தைக் கண்டேன். சன நடமாட்டம் குறைந்த நேரம். பஸ்தரிப்பில் நின்று கொண்டிருந்த யாரோ ஒருவன் என் துண்டிலே சில்லறை யைப் போடுவதுபோல் நடித்து, துண்டிலே இருந்த சில்லறையில் சிலவற்றைத் திருடிவிட்டான்.
அந்தக் கயவனின் செய்கையைக் கண்டபோது அப்பப்பா நீ அடைந்த சீற்றம் !

- 103 -
அப்போது எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தில், துண்டி லிருந்த பணம் சரியாக இருக்கிறதா எனத் தடவிப் பார்த்தபோதுதான் நான் இதனை உணர்ந்துகொண் டேன்.
சிறுமை கண்டு பொங்குவாய் நீ, என்பதை அன்று தான் நான் அறிந்தேன். பொன்னி! உனக்கு அவ்வளவு கோபம் கூடாதடி .
மனிதர்களிற் சிலர் மனிதாபிமானமற்ற வாழ்க்கை நடத்துவது உனக்குக் தெரிந்திருக்க முடியாதுதான்.
பிழைவிடுவது மனித இயற்கையென்றல் மன்னிப் பது தெய்வ குணமடி. நான் அப்போது உன்னைத் தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால், நீ அவனை என்ன செய்திருப்பாயோ எனக்கே தெரியாது. உனது சீற்றத் தைக் கண்ட அந்தக் கயவன்தான் எடுத்த பணத்தைப் போட்டுவிட்டு ஒரே ஒட்டமாக ஓடிவிட்டான்.
பொன்னி !
நான் உன்னைச் சந்திப்பதற்கு முன்னல் அடைந்த கஷ்டங்களுக்கு அளவேயில்லை. அப்போது எனது கைத் தடிதான் என் வழிகாட்டி. நான் செல்லும் பாதையைக் கைத்தடியினல் தட்டித் தட்டி ஆராய்ந்தபடி நடப்பேன். எத்தனையோ நாட்கள் எனது கால்களைக் கற்களும் முட்களும் பதம் பார்த்திருக்கின்றன. எத்தனையோ நாட்கள் பள்ளங்களிலும் மேடுகளிலும் நான் விழுந்து எழுந்திருக்கிறேன். எத்தனையோ நாட்கள் கார்களி லும், பஸ்களிலும் மோதி என் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டன. ஒரு நாளாவது எனது உடலில் காயமே இல்லாத நாள் இருந்ததில்லையடி.
நீ வந்த பின்புதான் என் கஷ்டங்கள் எல்லாம் நீங்கின. என் வாழ்வின் ஒளிமயமான காலம் பிறந்தது. நான் உன் கண்களால் உலகத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.

Page 61
- 104 -
பொன்னி ! இப்பொழுது நினைத்தாலும் என் உள்ளம் பதறு தடி என் உடலெல்லாம் நடுங்குதடி அந்தச் சோக நிகழ்ச்சி என் இரத்தத்தையே உறையச் செய்யுதடி.
அன்று கடும் மழை, இடி, பேய்க்காற்று, எங்கோ மரங்கள் முறிந்து விழும் ஒசை.
இயற்கையின் சீற்றம் - இது என் வாழ்க்கையில் எவ்விதமெல்லாம் விளையாடி விட்டதடி !
மழை சிறிது ஓய்ந்தபோது நான் உன்னையும் அழைத்துக்கொண்டு வெளியே புறப்பட்டேன்.
உனது நடையிலே ஏனுே தளர்ச்சி ! என்னை வெளியே அழைத்துப் போவதற்கு நீ அப்போது விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.
ஆணுலும் என்ன செய்வது? நான் பிச்சையெடுக்கா விட்டால், நான் மட்டுமா பட்டினி கிடப்பேன்? என்' னுடன் சேர்ந்து நீயுமல்லவா பட்டினி கிடக்க நேரிடும். வழக்கமாக நீ என்னை அழைத்துச் செல்லும் நாற் சந்திக்குத்தான் அன்றும் அழைத்துச் சென்ருய். பஸ் தரிப்பு நிலையத்தைத் தாண்டி, கம்பத்தின் அருகிற் சென்றதும் வழக்கம்போலத் துண்டை விரித்து நான் உட்கார்ந்தேன்.
திடீரென என் காலின் ஊடாக ஆயிரம் மின்னல்கள் ஒன்றுசேர்ந்து வெட்டிப்பாய்வதைப் போலிருந்தது.
* ஐயோ ! அந்தக் குருடனின் கால் மின்சாரக் கம்பிக்குள் சிக்கிவிட்டது." பஸ்தரிப்பில் நின்ற யாரோ கத்தினர்கள்.
கடும் மழையாலும் புயலாலும் சேதமடைந்த மின்சாரக் கம்பத்திலிருந்து தொங்கி, நிலத்திலே படர்ந்திருந்த கம்பியில் எனது கால் சிக்கியிருக்க வேண்டும்.
நான் துடித்துப் புரண்டேன். எனது கைகளும் கால்களும் மாறி மாறி நிலத்தில் அடித்தன. எனது உடல் வலித்து வலித்து இழுத்தது.

- 105 -
உயிர்த்துடிப்பு ! கணப்பொழுதில் அங்கு சனக்கூட்டம் நிறைந்து விட்டது. பலரது இரக்கம் நிறைந்த ஒலங்கள், கூச்சல் கள், கூக்குரல்கள்-எங்கும் ஒரே பரிதாபக் குரல்கள். ஆனல் இந்தக் குருடனைக் காப்பாற்ற ஒருவராவது முன்வரவில்லை; ஒரு குருடனுக்காகத் தங்களது உயி ருக்கே ஆபத்துத்தேட யாருமே விரும்பவில்லை.
பொன்னி ! பொன்னி !! நான் பலங்கொண்ட மட்டும் கத்தினேன். எனது குரல் தொண்டையிலிருந்து வெளிவர மறுத்து எனக் குள்ளேயே எதிரொலிப்பதைப் போலிருந்தது.
பொன்னி ! உனக்கு எப்படித்தான் அந்த வேகம் வந்ததடி ! திடீரெனப் பாய்ந்து வெறிகொண்டவள்போல, நீ எனது காலிலே சிக்கியிருந்த கம்பியை உனது வாயினுற் கடித்து இழுத்துக் குதறுவதை நான் உணர்ந்தேன்.
ஐயோ ..., ! அந்தக் கணத்திலே உனது மரணத் துடிப்பை அங்கு நின்றவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்திருப்பார் கள். உனது மரண ஒலம் எனது இதயத்தைப் பிளந்து ஒலித்தது. : .
ஆறறிவு படைத்த மனித ஜென்மங்கள் என் உயிரைக் காப்பாற்றத் தயங்கியபோது, வாய்பேசாத நாற்கால் பிராணியாகிய நீ, உனது உயிரைப் பணயம் வைத்து என்னைக் காப்பாற்றினய்.
உயிர்த்துணையான உன்னைப் பிரிந்த பின்பும் நான் உயிரோடு இந்த உலகத்தில் இருக்கிறேன்; நானும் ஒரு மனித ஜென்மந்தானே !
eg06o të ...... .
நன்றியுள்ள ஒரு நாய்.
- கலைமகள் 1973

Page 62
12
கால தரிசனம்
மூர்த்தி ஐயர் :-
என்னுடைய பெயர் மூர்த்தி ஐயர். எல்லோரும் என்னை மூர்த்தி என்றுதான் கூப்பிடுவார்கள். பள்ளிக் கூடித்திலை மாத்திரம் முழுப்பெயர் சொல்லிக் கூப்பிடு வினம். எங்களுடைய வகுப்பில் பரமகுருதான் அடிக்கடி சோதனையில் முதலாம் பிள்ளையாய் வருவான்; ஏனென்று எனக்குத் தெரியும். பரமகுருவினுடைய அப்பாத்ான் எங்களுடைய வகுப்பு வாத்தியார். அவர் தன்னுடைய மகனுக்கு நிறைய மாக்ஸ் போடுகிறவர்.
பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலை இருக்கிற பிள்ளையார் கோ வி லி ல் என்னுடைய அப்பா குருக்களாக இருக் கிருர், வாத்தியார் அடிக்கடி கோயில் கும்பிட வாறவர். பூசை முடிஞ்ச பிறகு அப்பாவும் வாத்தியாரும் கதைச்சுக் கொண்டிருப்பினம். சில நேரத்திலே வாத்தியார் என்னைப் பற்றி அப்பாவிடம் கோள் மூட்டிக் கொடுப்பார். "படிப் பிலை கவனமில்லை, விளையாட்டுப் புத்தி எண்டு சொல்லு

- 107 -
வார். பள்ளிக்கூடத்திலை ஏதும் குழப்படி செய்தால் அதையும் அப்பாவிடம் சொல்லிப்போடுவார். அப்பா, வாத்தியாரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு என்னை ஏசு வார். அப்பாவும், வாத்தியாரும் கதைக் கிறதைக் கண் டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும்.
எங்களுடைய வகுப்பிலை கடைசி வாங்கிலை தான் வழக்கமாக முத்து இருப்பான். அவனைக் கடைசி வாங் கிலை இருக்கச் சொல்லி வாத்தியார்தான் சொன்ஞர். முத்துவும் படிப்பில் வலு கெட்டிக்காரன். ஒவ்வொரு தவணையும் சோதனையில் என்னை முந்திவிடுவான்.
கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூட்டுப் பிரார்த்தனை நடக்கும். பள்ளிக்கூடப் பிள்ளைகள் எல் லோரும் கட்டாயம் கூட்டுப்பிரார்த்தனைக்கு வரவேண்டு மென வாத்தியார் சொல்லுவார். அதனல் நாங்கள் எல்லோரும் வெள்ளி க் கிழமை களில் தவருமல் கோயிலுக்குப் போவோம்.
முத்து கோயிலுக்குள்ளே வருவதில்லை. வெளியே நிண்டுதான் கூட்டுப்பிரார்த்தனை செய்வான். தான் சொல்லுவது எங்களுக்கும் வாத்தியாருக்கும் கேட்க வேண்டு மென்பதற்காக அவன் பலமாகக் கத்தி, கூட்டுப் பிரார்த்தனை செய்யிறதைப் பார்க்கப் பாவமாக இருக்கும்'
என்னுடைய அண்ணன் கொழும்பில் வேலை செய் கிறர். அண்ணனும் முந்தி நான் படிக்கிற தமிழ்ப் பள்ளிக்கூடத்திலைதான் படிச்சவர். பிறகு யாழ்ப்பாணத் திலை பெரிய பள்ளிக்கூடத்திலை சேர்ந்து படிச்சார். அண்ணன் பள்ளிக்கூடம் போகிற காலத்திலை குடுமி வைச் சிருந்தவர். அண்ணனுக்கு குடுமி முடியத் தெரியாது, அம் மாதான் அவருக்குத் தலைவாரி, குடுமி முடிஞ்சு விடுகிறவ. அண்ணன் அப்போது காதில் கடுக்கனும் போட்டிருந் தார். பள்ளிக்கூடம் போகும்போது சந்தனப் பொட்டுப் போட்டுக்கொண்டுதான் போவார்.

Page 63
- 108 -
தன்னைப்போன்று அண்ணனையும் பெரிய குருக்களாக்கி விட வேண்டுமென்றுதான் அப்பா விரும்பினர். அதனலே தான் அண்ணன் பள்ளிக்கூடத்திலை படிக்கிற காலத்தி லேயே வீட்டில் சமஸ்கிருதமும் படிச்சார். கோயில் வேலைகளும் பழகினர். ஆனல் அப்பாவுடைய விருப்பம் நிறைவேறவில்லை. அண்ணனுக்கு அரசாங்கத்தில் வேலை கிடைத்தது. அண்ணன் குடுமியை வெட்டிவிட்டுச் சிலுப் பாத் தலையோடு வேலைக்குப் போய்விட்டார்.
அண்ணன் வேலைக்குப் போனது அப்பாவுக்குக் கொஞ்சங்கூட விருப்பமில்லை. ஆனல் அம்மாவுக்கு அண் ண ன் வேலை பார்க்கிறதைப்பற்றி நல்ல சந்தோஷம்.
அண்ணன் குடுமியோடை இருந்தபோது இருந்த வடிவும், முகவெட்டும் இப்ப இல்லையெண்டு அம்மா சில வேளை சொல்லுவா. அதைக்கேட்க எனக்கு வேடிக்கை யாக இருக்கும்.
அண்ணன் படிக்கிற காலத்திலே குடுமி வைச்சிருந் ததைப்போல நான் இப்ப குடுமி வைச்சிருக்கவில்லை. கடுக்கனும் போடுறதில்லை. பள்ளிக்கூடம் போறபோது சந்தனப் பொட்டு மாத்திரம் போடுவன். ஏனென்ருல், பொட்டுப் போடாவிட்டால் அப்பா ஏசுவார்.
போன வெள்ளிக்கிழமை எங்களுடைய கோயிலில் பிரசங்கியார் வந்து கண்ணப்பநாயனுரைப்பற்றிப் பிர சங்கம் செய்தார். எல்லோரும் பிரசங்கத்தைக் கவன மாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
". . . . . . அறிவு, அருள், அடக்கம், தவம், சிவபக்தி எல்லாம் நிறைந்தொரு வடிவம் எடுத்தாற்போன்ற சிவகோசரியார் என்ற பிராமணர், சைவாகம விதிப் படி அருச்சித்த சிவலிங்கப் பெருமானுக்கு வேடுவத் தலைவனுகிய திண்ணன் தான் சுவைத்து உருசிபார்த்த இறைச்சிகளை நெய்வேத்தியமாகப் படைத்தான்."

- 109 -
இதைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு மனசிலே அருவருப்பு ஏற்பட்டது. நான் ஒரு வேடனுடைய தோற்றத்தை நினைத்துப் பார்த்தேன். கறுத்த உருவ மும் பரட்டைத் தலையும் தாடி மீசையும் பெரிய பற் களுமாகக் கோவணத்துடன் . சீ எவ்வளவு அருவருப்பாக இருக்கிறது.
அன்றிரவு படுக்கையில் படுத்திருந்த பொழுது அப்பா வுடைய தோற்றமும் .ஒரு வேடனுடைய தோற்றமும் என் நினைவிலே மாறிமாறி வந்துகொண்டே யிருந்தது. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தேன். பூசை செய் வதற்குப் பக்திதான் மிகவும் முக்கியம் வேறு எதுவும் முக்கியமில்லை என்பது இப்ப எனக்கு நன்ருக விளங்கு கிறது.
*கோயிலுக்குப் பூசை செய்வதில் இருக்கிற மதிப்பு எந்தத் தொழிலிலுமில்லை" என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். W
கொஞ்சநாளைக்கு முந்தி நானும் அப்பாவும் பஸ்ஸில் யாழ்ப்பாணம் போனுேம், பஸ்ஸிலே சரியான கூட்டம். எங்களுக்கு இருக்க இடம் கிடைக்கவில்லை. நாங்கள் பின்னுக்கு நின்றுகொண்டிருந்தம்.
முந்தி நான் கொழும்புக்குப் போயிருந்தபோது அண்ணரோடு எத்தனையோ தடவை பஸ்ஸில் பிரயாணம் செய்திருக்கிறேன். அப்ப, யாராவது புத்த குருமார் வந் தால் இருக்கிறவர்கள் எழுந்து குருமாருக்கு இடம் கொடுப் பினம். அந்த நினைவு எனக்கு வந்தபோது, "குருமா ருக்கு’ என்று ஒதுக்கியிருக்கிற இடத்தைப் பார்த்தேன். அந்த இடத்திலை யார் யாரோ இருந்தார்கள். யாரும் எழுந்து அப்பாவுக்கு இருக்க இடம் கொடுக்கவில்லை.
அப்பா காலையில் எழுந்தவுடன் குளித்து, சந்தியா வந்தனம் செய்து, சிவபூசை பண்ணியபிறகுதான் சாப் பிடுவார். அவருடைய எண்ணம் முழுவதும் கோயிலைப்

Page 64
- 110 -
பற்றியும், கடவுளைப்பற்றியுந்தான் இருக்கும். அப்படி இருக்கிறவருக்கு அவருடைய தொழில் பெரிதாகத்தான் இருக்கும்.
* "முந்தின காலத்திலை எங்களுடைய ஆக்கள் எல்லோ ரும் அப்பாவைப் போலத்தான் இருந்தார்கள். இந்தக் காலத்துச் சூழ்நிலையில் ஆசாரத்தோடும் கட்டுப்பாட்டோ டும் இருக்கிறது மிகவும் கஷ்டம், காலம் மாறிப்போச் சுது' என்று அம்மா அடிக்கடி சொல்லுவா. அம்மா சொல்லுறது சரிபோலத்தான் எனக்குத் தெரிகிறது.
முத்து :-
அப்பு காலமையும் பின்னேரத்திலையும் கள்ளு இறக்கப் போறவர். வாத்தியார் வீட்டுப் பனையளிலைதான் அப்பு கள்ளு இறக்கிறவர். எங்களுக்கும் குடியிருக்கிறதுக்கு வாத்தியார்தான் காணி தந்திருக்கிருர், வாத்தியார் வீட்டுக்குப் பின்னலை இருக்கிற பெரிய காணியிலைதான் நாங்கள் குடியிருக்கிறம். வாத்தியாருக்கு நிறையக் காணியள் இருக்கு.
வாத்தியாரை அப்பு ‘க மக்காறன்’ என்று மரியாதை யோடு கூப்பிடுவார். நான் எப்பவும் வாத்தியார் என்று தான் கூப்பிடுறஞன்,
வாத்தியாரைக் கண்டால் அப்புவுக்குச் சரியான பயம். தலையில் கட்டியிருக்கும் துண்டை அவிழ்த்து கக் கத்துக் குள்  ைவத் து குழைந்துகொண்டுதான் வாத்தியாருடன் அவர் கதைப்பார். வாத்தியார் எதைச் சொன்னலும் அப்பு அதைத் தட்டாமல் உடனே செய்து விட்டுத்தான் மறுவேலே பார்ப்பார்.
வாத்தியாருடைய வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத் தில், வாத்தியார் கமஞ்செய்கிருர், நிலத்தைக் கொத் திறது, வரம்பு கட்டுறது, கன்று நடுகிறது, இறைக்கிறது எல்லாம் அப்புதான் செய்யிறவர். வாத்தியார் மேற் பார்வை மட்டும் பார்ப்பார்.

– 111 -
வாத்தியாருடைய தோட்டத்திலை வேலைசெய்து முடிஞ்சதுந்தான் அப்பு எங்கடை தோட்டத்திலை Göකq ඊa) Ge) fuieum fi.
அப்பு வியர்வை வழிய வழிய வாத்தியாற்றை தோட் டத்திலை நின்று வேலை செய்யிறதைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கும்.
ஒவ்வொரு நாளும் பின்னேரத்திலை வாத்தியாருக் கென்று அப்பு இரண்டு போத்தல் கள்ளு எடுத்துக் கொண்டுபோய் அவருடைய வீட்டிலை கொடுத்துவிட்டு வருவார். வெள்ளிக்கிழமையிலை மாத்திரம் வாத்தியார் கள்ளுக் குடிக்கமாட்டார். கோயிலுக்குப் போவார். வாத்தியாருக்கு அப்பு கலப்பில்லாத கள்ளுத்தான் கொடுப்பார்.
சில நாட்களில், அப்புவுக்கு நேரமில்லாவிட்டால் நான்தான் வாத்தியார் வீட்டுக்குக் கள்ளு எடுத்துகி கொண்டு போறனன்.
மதுபானம் அருந்தக்கூடாதென்று பாடப்புத்தகர் திலே எழுதியிருக்கு. ஒருநாள் வாத்தியார் அந்தப் பாடத்தை எங்களுக்குச் சொல்லித் தந்தார்.
அதுக்குப்பிறகு ஒருநாளும் நான் வாத்தியார் வீட் டுக்குக் கள்ளு எடுத்துக்கொண்டு போறதில்லை. மது பானம் அருந்தக்கூடாதென்று படிப்பித்த வாத்தியா ருக்கு நானே எப்படி மதுபானம் கொண்டுபோய்க் கொடுக்கிறது? எனக்குப் பயமாக இருக்கும்.
போன கிழமை கோயிலில் நடந்த பிரசங்கத்தை நானும் கவனமாகக் கேட்டன். கண்ணப்பநாயனரின் கதையைக் கேடடுக்கொண்டிருந்தபோது, என்னுடைய உடம்பில் ஏதோ ஒரு புது வேகம் உண்டாகிறதைப் போல இருந்தது.

Page 65
- 12 -
'.சிவலிங்கப் பெருமானின் வலக்கண்ணிலே இரத் தம் வடிந்தபோது பதைபதைத்து ஆவிசோர்ந்து தனது கண்ணைத் தோண்டி சுவாமியின் கண்ணிலே அப்பினுன் வேடுவர் தலைவனுகிய திண்ணன். அப் போது சுவாமியின் இடக்கண்ணிலிருந்து இரத்தம் வடியத் தொடங்கியது.
சிவலிங்கப் பெருமானை மோந்து, முத்தமிட்டு, வாயிலே கொண்டுவந்த திருமஞ்சன நீரைத் தனது மனசிலுள்ள அன்பை உமிழ்வதுபோலத் திருமுடியின் மேல் உமிழ்ந்து, தனது தலையிலிருந்த பூக்களைச் சாத்தி வழிபட்ட திண்ணனர், இப்போது சுவாமியி னுடைய கண்ணிலே அடையாளமாகச் செருப்பை வைத்துக்கொண்டு தனது மறுகண்ணையும் தோண் டுவதற்காக அம்பை வைத்தார்.
தயாநிதியாகிய எம்பிரான் "நில்லு கண்ணப்பா, நில்லு கண்ணப்பா' எனத் திருவாய்மலர்ந்து கண் ணேத் தோண்டும் கையைத் தனது திருக்கரத்தினலே தடுத்தார்.
எனக்கு உடம்பு புல்லரித்தது. கண்ணப்பநாயன ரைப் போல நானும் கடவுளேக் கட்டிப்பிடித்து முத்த மிட்டுத் தழுவிக் கும்பிடவேண்டும் போல ஒரு வெறி எனக்கு ஏற்பட்டது. நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். எனக்கு ஏனே அழுகை வந்தது. விம்மி விம்மி அழுதுகொண்டு கடவுளைக் கும்பிட்டேன்.
எங்களுடைய வகுப்பிலை படிக்கிற மூர்த்தி ஐயர் நான் அழுகிறதைப் பார்த்துவிட்டு, என்னை அழவேண்டா மென்று சொன்னர், அவருக்கு என்னிடத்திலை நல்ல விருப்பம், ஒருத்தருக்கும் தெரியாமல் மடப்பள்ளியி லிருந்து நிறையக் கடலையும் வாழைப்பழமும் எடுத்துக் கொண்டுவந்து எனக்குத் தந்தார்.
போன தவணைச் சோதனையில் நான் பரமகுருவை முத்திவிட்டன். நான்தான் வகுப்பில் முதலாம் பிள்ஆள.

- 113 -
பரமகுருவுக்குப் தமிழ்ப்பாடத்திலை 'மாக்ஸ் குறைஞ்சு போச்சது. 'சாதி யிரண்டொழிய வேறில்லை' என்ற Lurru LG) எழுதச்சொல்லிக் கேள்வி வந்தது. அந்தப் பாட்டு பரமகுருவுக்குப் பாடமில்லை. எனக்கு நல்ல கரைஞ்ச பாடம்.
நான் வகுப்பிலை முதலாம்பிள்ளையாய் வந்தபோது அப்பு நல்ல சந்தோஷப்பட்டார். அப்பு படிக்கிறகாலத் திலை எங்கடை ஆட்கள் ஒருத்தரும் பெரிய உத்தியோ கங்களுக்குப் படிக்கிறதில்லையாம். இப்ப காலம் மாறிப் போச்சுது.
எங்களுடைய ஆட்கள் பலபேர் படிச்சு உத்தியோ கம் பார்க்கினம். அப்பு என்னை எப்படியும் கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கிறனெண்டு சொல்லியிருக்கிருர். நானும் கவனமாகப் படிச்சு உத்தியோகம் பார்க்கத்தான் போறன், பிறகு எங்களுக்கு ஒரு கஷ்டமும் இருக்காது. நாங்களும் மற்றவைய3ளப்போல நல்லா இருக்கலாம்.
பரமகுரு :-
நானும் முத்துவும் எங்களுடைய வளவிலிருக்கும் தோட்டத்தில் சேர்ந்து விளையாடுவோம். நான் முத்து வோடு விளையாடுவதை அப்பா கண்டால் எனக்கு நல்ல அடிதான் கிடைக்கும். அதனுல் அப்பா எங்காவது வெளியிலே போன நேரத்திலைதான் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து விளையாடுவோம்.
முத்து இந்தத் தவணைச் சோதனையில் என்னை முந்தி விட்டான். அதைப்பற்றி எனக்குப் பொருமையில்லை. அவன் படிச்சுப் பெரியவனகியதும் கொழும்புக்குப்போய் மூர்த்தி ஐயரின் தமையனைப்போலத் தானும் உத்தியோ கம் பார்ப்பானம்.
முத்துவினுடைய தகப்பன் எங்களுடைய தோட்டத் திலை கஷ்டப்பட்டு வேலை செய்யிறதைப் பார்க்க எனக் குப் பாவமாக இருக்கும். அவையளுக்குக் காணியில்லாத படியாலைதான் எங்களுடைய நிலத்திலை கஷ்டப்படு

Page 66
- 114 -
கினம் இப்ப அவையஞக்குக் காணியில்லாவிட்டால் என்ன? நான் வளர்ந்து பெரியவனுகியதும் எங்களுக்கு இருக்கிற காணிகளில் ஒன்றை முத்துவுக்குச் சொந்த மாகக் கொடுத்துவிடுவன்.
எனக்கு ஒரேயொரு அண்ணன் மட்டுந்தான் இருக் கிருர். அவர் யாழ்ப்பாணத்திலைதான் வேலை செய்கிருர் . அவர்மேல் எனக்கு நல்ல விருப்பம். அண்ணன் எங் களுடைய வீட்டுக்கு வருவதில்லை. அப்பாதான் அவரை வரவேண்டாமென்று சொன்னவர். அண்ணனுக்கு நிறை யச் சீதனம் வாங்கிக் கலியாணம் செய்துவைக்க வேண்டு மென்று அப்பா விரும்பினர். அண்ணர் தனக்கு விருப்ப மான ஒரு பெம்பிளையைக் கலியாணம் செய்யவேண்டு மென்று பிடிவாதமாக இருந்தார். அந்தப் பெம்பிளை பகுதி வேதக்காறராம். அவவும் அண்ணரோடைதான் வேலை செய்கிறவவாம். கடைசியில் அண்ணர் தன்னு டைய விருப்பப்படிதான் கலியாணஞ் செய்தார்.
கலியாணம் முடிஞ்சவுடனை அண்ணர் பெம்பிள்ளை யையும் கூட்டிக்கொண்டு வந்தார். அப்பா, 'இனிமேல் வீட்டுவாசல் மிதிக்கக்கூடாதென்று அண்ணரை ஏசிக் கலைச்சுப்போட்டார். இது நடந்து ஒரு வருஷத்துக்குப் பிறகு அண்ணருக்கு ஒரு ஆம்பிளைப்பிள்ளை பிறந்தது. அதைக் கேள்விப்பட்டவுடன, அம்மா தான் போய்ப் பார்க்கவேணுமென்று அப்பாவிடம் பயந்து பயந்து கேட்டா. அப்பா தடுக்கவில்லை. அம்மா மட்டும் போய் அண்ணரையும், மச்சாளையும், பிள்ளையையும் பார்த்து விட்டு வந்து புதினங்களைச் சொன்னு. அப்பா ஆசை யோடு அதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்பா வுக் கும் அந்தப் பிள்ளையைப் போய்ப் பார்க்க ஆசைதான். ஆனல் அவர் அதை வெளிக்காட்டுகிருரில்லை. அவரு டைய பெருமை அவரை விடுகுதில்லை.
போன வெள்ளிக்கிழமை நான் அப்பாவோடை கோயி லுக்குப் போயிருந்தன். மூர்த்தி ஐயருடைய தகப்பன்தான் வழக்கமாகக் கோயிலில் பூசை செய்யிறவர். அன்

- 115 -
றைக்கு அவர் கோயிலுக்கு வரவில்லை. அவருக்கு ஏதோ சுகமில்லையாம். கொழும்பிலை உத்தியோகம் பார்க்கிற, குருக்களுடைய மூத்த மகன்தான் அன்றைக்குப் பூசை செய்தவர். தகப்பனுக்குச் சுகமில்லாதபடியால் அவர் லீவு எடுத்து வந்தவராம். பெரிய குருக்களைப்போல இவர் குடுமி வைச்சிருக்கவில்லை. பெரிய குருக்களைப் போல இவர் கோயிலுக்கு நடந்து வரவில்லை; சைக்கி ளிதைான் வந்தவர். பூசை முடிஞ்சதும் எல்லோருட னும் சேர்ந்து நானும் அன்று நடந்த பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தன்.
". புலால் உண்பவர்கள் புலையர்கள். சிவலிங் கப் பெருமானுடைய சந்நிதியில் வெந்த இறைச்சி யும், எலும்பும் கிடக்கக்கண்ட சிவகோசரியார் வேட் டுவப் புலையர்கள்தான் இந்த அநுசிதத்தைச் செய் தார்கள் போலும், இதற்குத் தேவரீர் திருவுளம் இசைந்தீரோ?" என மனம் வெதும்பினர்.
. வேட்டுவப் புலையரெனத் தான் திட்டிய திண் ண னுரைச் சிவலிங்கப் பெருமான் 'கண்ணப்பா' என்று அழைத்ததோடு, தன் வலப்பக்கத்தில் நிற் கும்படி திருவாய் மலர்ந்தபோது சிவகோசரியார் மெய்தானரும்பி விதிர் விதிர்த்துச் சிவலிங்கப் பெரு மானை வணங்கி நின்ருர் ."
மறுநாள் எங்கடையூர் வயிரவர் கோயிலில் வேள்வி நடந்தது. எங்களுடைய வீட்டிலும் இறைச்சி வாங்கி ஞர்கள். அப்பாவுக்கு ஆட்டிறைச்சி என்ருல் நல்ல விருப் பம். எனக்கும் விருப்பந்தான். சாப்பிடும்போது அம்மா எங்கள் இருவருக்கும் நிறைய இறைச்சி போட்டா.
முதன்நாள் கோயிலில் கேட்ட பிரசங்கம் என் நினை வுக்கு வந்தது.
"நாங்கள் இறைச்சி தின்னிறம், அப்படியானல் நாங் களும் புலையர்களோ?' என்று அப்பாவிடம் கேட்டன்.

Page 67
- 1 16 -
அதைக் கேட்டதும் அம்மா சிரித்தா? அப்பா கொஞ்ச நேரம் பேசவில்லை; ஏதோ யோசித்தார். அவருக்கு நான் கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை.
** முந்தின காலத்தில் புலையர்கள்தான் இறைச்சி சாப்பிடுவார்கள்; வேளாளர் சாப்பிடுவதில்லை. அதனுலை தான் வேளாளரைச் சைவ வேளாளர் என்று சொல்லு வார்கள். இப்ப காலம் மாறிப்போச்சு. இந்தக் காலத் திலை பல பேர் மாமிசம் சாப்பிடுகிறர்கள். அதனுல் மாமி சம் புசிப்பது பிழையென்று யாரும் நினைப்பதில்லை' என்று அப்பா சொன்னர்.
நான் யோசித்துப் பார்த்தன்.
அப்படியானுல் இப்ப நாங்கள் பிழையென்று நினைக் கிற விஷயங்கள் காலம் மாறினல் பிழையற்றதாகி விடுமோ? M
காலம் மாறிக்கொண்டுதானே இருக்கிறது!
வீரகேசரி 1973


Page 68


Page 69
திருமகள் அழுத்தகம், சுன்னூகம்

திரு. தி. ஞான சேகரன் -றிந்த எழுத்தாளர். இவர் எனுலேக் கட்டுவன் வித்துவ ராமணி பிரம்மபூரீ சி. கணே Fயர் அவர்களின் பூட்டனும், லறு சுவாமிநாதத் தம்பி ன் சுவாமிகளின் மருகனு
El J " .
பத்து ஆண்டுக எர்ாகச் சிறு
தத் துறையிற் சாதனேகள் ந்துவரும் இவரது படைப்புக் ா இந்திய சஞ்சிகையாகிய லேமக "ளூம், ஈழத்திலுள்ள ல பத்திரிகைகளும் விரும்பிப் சுரித்து வருகின்றன. 1969இல் இலங்கை சாகித்ய எடலம் நடாத்திய சிறுகதைப் ாட்டியில் இரண்டாம் பரிசு ாற்று, பிரதம மந்திரி அவர்க ாற் கெளரவிக்கப்பட்டவர்.
ஈழத்துச் சிறுகதை இலக்கிய
ார்ச்சியைப் பெரிதும் பிரதி
விக்கும் வகையில் அமைந்த பரது படைப்புக்களில் புதிய ாக்கு இழையோடுகிறது. ஆழ
ன சமுதாயப் பார்வையை
நிற்கும் இவரது கதைகள், ட்சமும், செழுமையும்
றந்த புதியதொரு காலத் 3த் தரிசித்து நிற்கின்றன. புசல்லாவை "நியூ பிக்கொக் பாப்' வைத்திய அதிகாரியாகக் மையாற்றும் இவர், கலே லக்கிய தாகம் கொண்ட ளஞர் கலேஞரைப் போற்றும் ரும் பண்பினர்.
- ஏ. ரி. பொன்னுத்துரை
曹

Page 70
தமிழ் இலக்கிய வழக்கிலே காணப்படா லாம். இலக்கிய வழக்கு ந, ன என்பவற்றுக் உச்சரிப்பில் இவ்விரண்டு ஒலிகளுக்குமிடையிலா எழுத்து வழக்கில் நகரம் மொழிக்கு முதலில் அளவு கோலாகக் கொண்டு பார்க்கும்போது ச களில் இடம்பெறுவதைக் காணக் கூடியதாகக் இ கள் தமிழ் எழுத்திலேயே வரையப்பட்டுள்ளன. முழுவதும் கிரந்தத்திலும், சில இடங்களில் சில
தென்னிந்தியத் தமிழ்ச் சாசனங்களுட போது, தென்னிந்தியாவிற் பெளத்த மதத் தொ ளன. இலங்கைத் தமிழ்ச் சாசனங்சளிற் குறிப் புடையனவாகும். பெளத்த மதத் தொடர்பான காரணங்கள் கூறலாம். இலங்கைத் தமிழ் மக் பெளத்தத்தை ஆதரிப்பவராகவோ இருந்திருக்க விளங்கிய இடங்களில் தமிழர் செல்வாக்குக் கு! டும். சோழப் பெருமன்னர் காலத்தில் திருகே கோவில் பெற்ற ஆதரவு இங்கு சிறப்பாகக் கு இக்காலத் தமிழ் மக்கள் வைத்த பெயராகும். பெருமன்னர் காலத்து அக்கோவிலுக்கு வழங்கிய விகாரை எனப்பட்டது. வெல்கம் விகாரமான சாசனங்களில் இடம்பெறுகிறது. இப்பள்ளியில் ட கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிக்கு நந்த நெய்க்காகக் கொடுத்தது முதலிய விடயங்களை இ யின் தலைநகர்களாக விளங்கிய பொலநறுவை, ச தொடர்பான தமிழ்ச் சாசனங்கள் கிடைத்துள்ள நீண்டதான இலங்காதிலக விகாரைச் சாசனம் ( வையிலுள்ள வேளைக்காரர் சாசனம் பெளத்தர் பெளத்த குருமார் தமிழ்ப் படைகளின் துணைன
இலங்கைத் தமிழ்ச் சாசனங்களில் இன்ெ சாசனங்களாகும். பதினெண் பூமிகளிலும் வணி சாசனங்கள் பதவியாவிலிருந்து தம்பதேனியாவை பூரீபதிக்கிராமம் என்று வழங்கப்பட்ட பதவியா வணிகர் குழுவின் சாசனம் மட்டுமல்லாது த கிடைத்துள்ளன. வணிகர்களால் நிர்வகிக்கப்பட றன. பதவியாச் சாசனங்கள் செட்டிகள் சைவ றன. பொலநறுவைச் சாசனத்தில் வணிகர்குழு கிறது. வணிகர்குழுவின் சாசனங்கள் சில, நீண் களில் ஒரு பகுதியினர் இலங்கை நகரங் வில் மிக இச்சாசனங்களிலிருந்து தெரியவருகின்றது.

த வேறும் இரண்டு இயல்புகளை இங்கே சுட்ட டையிலான வேறுபாட்டைப் பேணிவருகிறது. ன வேறுபாடு மறைந்து விட்டது. ஆனல், மட்டும் வருகிறது. இந்த இலக்கிய வழக்கை சன வழக்கில் நகர னகர மயக்கம் பல இடங் நக்கிறது. தமிழ் இலக்கிய வழக்கில் வடசொற் சாசனங்களில் வட சொற்கள் சில இடங்களில் ாழுத்துக்கள் கிரந்தத்திலும் எழுதப்பட்டுள்ளன.
ண் இலங்கைத் தமிழ்ச் சாசனங்களை ஒப்பிடும் டர்பான சாசனங்கள் மிகச் சிலவே கிடைத்துள் பிடத்தக்க ஒரு பகுதி பெளத்த மதத் தொடர் தமிழ்ச் சாசனங்கள் பல எழுந்தமைக்கு இரண்டு களில் ஒரு பகுதியனராவது பெளத்தராகவோ வேண்டும். பெளத்த மதத் சின்னங்கள் பிப்பிடக்கூடிய அளவினதாக இருந்திருக்கவேண் ாணமலை கட்டுக்குளம்பற்றிலிருந்த நாதனூர் றிப்பிடத்தக்கது. நாதர்ை கோவில் என்பது இராசராசப் பெரும்பள்ளி என்பதே சோழப் பெயர், அதற்கும் முன்பு அக்கோவில் வெல்கம் இராசராசப் பெரும்பள்ளி என்ற பெயர் சில மட்டும் பதினைந்து தமிழ்ச் சாசனங்கள் வரையிற் 5ாவிளக்கு வைத்தது, எருமை, பசு முதலியன ச்சாசனங்கள் எடுத்துக் கூறுகின்றன : இலங்கை 5ம்பளை ஆகிய இடங்களிலும் பெளத்த சமயத் ன. இலங்கைத் தமிழ்ச் சாசனங்களுள் மிகவும் பெளத்த சமயத் தொடர்பானது; பொலநறு களின் புனித சின்னமான பல்லைப் பாதுகாக்கப் ய நாடியமையை எடுத்துக் கூறுகிறது.
ருை குறிப்பிடத்தக்க பகுதி தமிழ் வணிகர்களின் கம் செய்த திசையாயிரத்து ஐஞ்ஞாற்றுவரின் ர பல இடங்களிற் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 'விலே திசையாயிரத்து ஐஞ்ஞாற்றுவர் என்ற னிப்பட்ட வணிகர்கள் பலரின் சாசனங்களும் ட்ட வீரபட்டினம் பற்றிச் சாசனங்கள் கூறுகின் த்தை ஆதரித்து வந்ததை எடுத்துக்காட்டுகின்
பெளத்தப் பள்ளி நிறுவியது குறிப்பிடப்படு - னவாக அமைந்துள்ளன. இலங்கைத் தமிழர்
நீண்ட காலமாக வணிகர்களாக இருந்துள்ளது
62

Page 71
நாவலர் நிலைநா
பேராசிரியர் சு. வித்தியா
தமிழ்மொழியையும் நல்லொழுக்கத்தை போல் ஒருவருமில்லை. மொழிபெயர்ப்புக் க யாழ்பாணத்தமிழ் செந்தமிழ் என்பதனையும் செ பெயர்ப்பு அரங்கேற்றத்தின் மூலம் தமிழ் நாட
1847ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் கோயிலிற் சைவ ஆகமங்கள் பற்றியும் சமயகுர ருந்து தமிழில் விரிவுரையாற்றும் முறையைத் களிற் படிக்கும் புராண இதிகாசங்களுக்கு விரிவு ஒரு பொருள் பற்றித் தமிழில் விரிவுரை நிகழ்த் போல விரிவுரை நிகழ்த்துபவர் வேருெருவரும் னம் நாவலர் என்ற பட்டத்தை அவருககு அளி வான் மீனுட்சிசுந்தரம்பிள்ளையைக் குறிப்பதுபே போல, நாவலர் என்ருல் ஆறுமுகநாவலரையே இடங்களிலும் பெரியார்க ரின் இலக்கிய இலக்க கெல்லாம் மேல்வரிச் சட்டமாக அவர் விளங் முடிந்த முடிபாகக் கொள்ளப்பட்டது.
சைவமும் தமிழும முன்னேற வேண் அமையவேண்டுமென்பதஃா அவரைப்போல் உ தமிழ்மொழியாக அமையின் அது தமிழ் மக்களு அத்தகைய கல்வி தமிழரின் உண்மையான பொருத்தமாயிருக்குமென்பதனையும் உணர்ந்த அமைக்கத் திட்டமிட்டார். யாழ்ப்பாணத் வித்தியாசாலை நூறு ஆண்டுகளுக்கு மேற் சைவ கின்றது. சிதம்பர த்தில் அவர் நிறுவிய சைவப் பல்கலைக் கழகம் தோன்ற வழிகாட்டியது. குழு பயனளித்தது. பாடசாலைகளைத் தாபித்ததன் டொற வழி வகுத்தார். அவரை இலவசக் கல்வி வின்றிக் கற்க வைத்தது மின்றி, வழிவகையில்ல பாடசாலையில் இலக்கிய இலக்கணத்துடன் கணி மை, சிற்பம் முதலியவற்றைப் படிப்பிக்க ஒழு
மாணவருக்கும் பொதுமக்களுக்கும .ெ துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட அச்சகம் அதன் பயனுகச் சமய அறிவு பலரிடம் பரவிய கூடிய பல நூல்கள் வெளிவந்தன. அவர் ட இயற்றியும் வெளியிட்ட நூல்கள் 59; அச்சிற் எழுதத் தொடங்கியவை 9. அவரது 22 வய யாகிய 35 ஆண்டுகளுக்கிடையில் பிரசங்கஞ் ே

"ட்டிய சாதனைகள்
Grig567, Ph.D. ( Lond. )
பும் சைவசமயத்தையும் வளர்த்தவர் நாவலரைப் லயில் ஈழத்தவர் தலைசிறந்தவர் என்பதனையும், ன்னப்பட்டணத்தில் நடைபெற்ற பைபிள் மொழி ட்டிலே நிலைநாட்டியவர் நாவலரே.
31ம் நாள் வண்ணுர்பண்ேைன வைத்தீசுவரன் வர் பற்றியும முதன்முதற் பிரசங்கம் செய்ததிலி தொடக்கிவைத்தார். அவருக்கு முன் கோயில் ரை காணுதலே வழக்கமாக இரூந்தது; புறம்பான துவதை அவரே தொடக்கி 3 வத்தார். அவரைப் இல்லையென்பதனுலேயே திருவாவடுதுறை ஆதீ ‘த்தது. தமிழகத்திற் பிள்ளையென்றல் மகா வித்து ால, ஐயர் என்ருல் சாமிநாதையரையே குறிப்பது ப குறிக்கும். ம்ேலும் பல ஆதினங்களிலும் வேறு ண ஐயங்களைத் தீர்த்து அக்கால வித்துவான்களுக் கினர். அவர் கண்ட முடிபே யாவரும் ஒப்ப
டுமாயின் போதனுமொழி தமிழ் மொழியாக ணர்ந்தவர் வேருெருவருமல்லை. போதனுமொழி நக்குப் பல்வகைப் பயனை அளிக்குமென்பதனையும், ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு இயற்கையோடு மையாலேயே ஊர் தோறும் பள்ளிக்க டங்களை தில் அவர் நிறுவிய வண் லைச் சைவப்பிரகாச த் தமிழ் மாணவருக்குக் கல்வி அளித்து வந்திருக் பிரகாச வித்தியா சாலை அங்கு பின்பு அண்ணுமலைப் நகுல முறைப்படி வந்த தமிழ்கல்வி ஒரு சிலருக்கே மூலம் இம்முறையை மாற்றிப் பலர் கல்வி அறிவு யின் தந்தை எனவும் கூறலாம். மாணவர் செல ாத மாண வருக்கு உணவும் உடையும் அளித்தார். தம், தருக்கம், வைத்தியம், வாலணிகம், வேளாண் பங்கு செய்தமையும் அவர் செய்த புரட்சிய, கும்.
சவ உண்மைகளை விளக்குவதற்குரிய நூல்சளையும் றுவியதும் அவர் செய்த பெருந் தொண்டாகும். து. மாணவருக்கும் ஏனையோருக்கும் பயன்படக் பரிசோ சித்தும், புதிய உரை எழுதியும், புதிதாய்
பதிப்பிககும் நோக்குடன் எழுதிமுடித்தவை 10; திலருந்து அவர் இறக்கும்வரையுள்ள காலப் சய்தல், மதப் பிரசாரம் செய்தல், மாணவருக்குக்
63

Page 72
கல்வி கற்றுக்கொடுத்தல் முதலிய பல பாரிய ே வியக்கத்தக்கது. அச்சுக்கூட வசதிகள் மிகக் குை முடித்தமை அரிய பெரிய சாதனையாகும்
மேலும் அவர் வெளியிட்ட 59 நூல்களுட இலக்கணப் பிழையோ இல்லாதிருந்தமை வேறெ லர் பதிப்பு என்ருல் நல்ல பதிப்பு என்” மதிப்பு திருவாவடுதுறை மகா சந்நிதானம் சுப்பிரமணி இராமநாதபுரத்துப் பொன்னுசாமித்தேவர் முத பரிசோதித்து வெளியிடச் செய்தனர். அவரை
'மூலமு முரையும் முறைமுறை நே ஏலவே திருத்தி, யெழுதா வெழு பதிப்பித் தளித்தனன்’’.
எனத் தாண்டவராய முதலியார் பாடியிருப்பது கும்.
வசனநடை என்ருல் இஃதென்று எழுதி கைவந்த வல்லாளர்’ எனப் பாராட்டினர். நாவ செய்யுள் வடிவத்திலேயே இருந்தது. நுண்ணு பயன்பட்டன. நாவலர் எழுத்தைப் பயன்படுத் பினுற் பலர் பயனடையவேண்டுமாயின் அப்பணி உணர்ந்தார். எனவே ஆறுமுகநாவலர் வசனந எனலாம். மேலும் அவ்வசன நடை உரையாசிரிய உரைநடையாசிரியர் நடைபோலவோ இருந்தார் உரைநடையினைத் தொடக்கிவைத்தார். சொல் செறிவும், இன்னேசையும், குறியீடுகளுங் கொ நடையின் தந்தையாக விளங்கினர்.
ஈழத்திலும் தமிழகத்திலும் சைவம் வா தென்ற காரணத்தினலேயே அவர் ஐந்தாம் விருத்தியின் பொருட்டு நாவலர் முயன்ற போ: எதிர்ப்பு ஒரு புறமிருக்க, சைவ சமயிகளாலே அவ. ‘நம்முடைய சைவ சமயிகள், தங்கள் சமயமும் ! செய்யும் முயற்சிகளுக்கு உதவி செய்யாமை மாத் திப்பும் இடையூறுமே செய்கிறர்கள்' என்று சூழலிற் சைவத்தை வளர்த்தவர் வேருெருவருமி
மதசீர்திருத்த வாதியாகவும் நாவலர் விள அக்கிரமங்களையும் அவற்றிற்குக் காலாகிய தர் செய்து அம்பலத்துக்கு இழுத்துப் போராடினர். பிரசங்கங்கள் மூலம் தாக்கினர். இவற்றின் மூ
இவ்வாறு மிகச் சுருங்கிய கால எல்லையிற் ட யொரு மனிதர் வேருெருவரும் இல்லை எனலாம்.
64

வலைகளுடன் 59 நூல்களை எழுதி அச்சிட்டமை றவாக இருந்த அக்காலத்திலே இதனைச் செய்து
ஓர் எழுத்துப் பிழையோ அச்சுப் பிழையோ வரும் இதுவரை சாதியாததொன்ருகும். நாவ அவர் பதிப்பு நூல்களுக்கு இருந்தமையாலேயே ய தேசிகர், சி. வை. தாமோதரம்பிள்ளை, லியோர் நாவலரைக் கொண்டு பல நூல்களைப்
அக்காலப் பதிப்பாள மன்னன் எனலாம்.
ாக்கி த்திற்
நாவலர் பதிப்பின் மதிப்பிற்குத் தக்க சான்ற
க் காட்டியமையாலேயே அவரை வசனநடை லர் காலத்துக்கு முன் இலக்கியம் பெரும்பாலும் ணர்வு படைத்த புலமை வல்லார்க்கே அவை தியது. பொது மக்களுக்காகவே. தமது படைப் டைப்பு வசன நடையில் அமையவேண்டுமென டையைக் கையாண்டதும் பொது நலம் கருதி பர்கள் நடைபோலவோ, தமக்கு முன்தோன்றிய ) பயனில்லை என்பதனை உணர்ந்து, புதியதோர் பலின் வளமும், தெள்ளிய நடையும், கருத்துச் ண்ட நடையினைக் கையாண்டு இக்கால உரை
ழ ஆறுமுகநாவலர் ஆற்றிய பணி அளப்பரிய குரவராகக் கணிக்கப்படுகின்றர். சைவசமய தும் கிறித்துவரும் ஆங்கில ஆட்சியுங் காட்டிய மதிப்பும் இடையூறும் பலவாறு செய்யப்பட்டன. பாஷையும் விருத்தி அடையும் பொருட்டு நான் திாையின் அமையாது, பெருமபான்மையும் அவம நாவலரே வருந்திக் கூறியுள்ளார். இத்தகைய
ங்கிஞர். கோயில்களில் நடக்கும் ஊழல்களையும் ம கர்த்தாக்களையும் காரசாரமாக விமர்சனம்
சிவ ஆகம நிந்தனை செய்யும் தீக்ஷிதர்களையும் லம் ஒரு சீர்திருத்தவாதியாகவும் விளங்கினர்.
ல துறைகளிலே சாதனைகளை நிலைநாட்டிய தனி

Page 73
விபுலாநந்:
** ஈழவே
ஈழத்திலே கிழக்கிற் பண்பாடும் மீன் உ சாமித்தம்பியாருக்கும் கண்ணம்மையாருக்கும் பெயரும் சூட்டப்பட்டார். இவர் பிறந்த இ சாமிநாத ஐயரும் சிலப்பதிகாரத்தை அச்சுவாக மாறிய மயில்வாகனனுருக்கு மங்காப் புகழ் அளி யாழ் நூலிற்குப் பொன்ருப் பெருந்துணையாய் 6 டன் சிலம்பிற் சிறப்போடு வழுத்தப்படும் கண் பெரும் கோயிலும் இவர் பிறந்த ஊரில் எழுப்பட் ம்ேற்கூறிய இந்நிகழ்ச்சிகளும் விபுலாநந்தரின் சி அமைந்தன என்று கூறலாம். விபுலாநந்த அடி பட்டு, ‘அவர் ஒரு அடிகள் எழுதி வைத்தார். அடிக்கடி கூறியதில் இருந்து இது அறியக் கிடக்கி
இளங்கோ அடிகள் அரசியல் வாழ்வையு அருந்தமிழைத் துறக்க முடியவில்லை; காரணம், ப கொண்டுவிட்டது. அந்தப்பற்று, நெஞ்சை ஆ மயில்வாகனனரும் மண்ணையும் பெண் 25லயும் மடத்திலே துறவியாகி விபுலாநந்த அடிகளாக இத்து:ய துறவியையும் தமிழ் தாவி அஃனைத்துக் தாழ்த்திய துறவி யாழ்நால்‘, ‘மகங்க சூளா ஏனைய நன் மணிகளையும் அணிவித்துத் தமிழ் சுருங்கக் கூறின் அடிகளின் துறவறம் தமிழ் கா தவப்பயன் என்றே கூறியாகவேண்டும்.
விபுலாநந்த அடிகளை எண்ணும்பொழுது அவர் யாத்த யாழ் நூலே. அவர் புகழ் நிலமி என்னும், இவ் ஏதுகொண்டு இவர் பண யா கருதுவது தவறு. அவரின் உள்ளம் பரந்து வி உள்ளம். அவர் பணி, பல்துறையிற் பரவிப் பை நின்றது. ب. ب. م را
பாட்டுக்கொரு புலவன் பாரதியிடம் பாரதியைப் போற்றிப் பண்டிதர்கள் தயங்கிய க தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கிய விபுலா பாலித்த பாரதியின் பல்துறைப்பாவின் நலத் விரிவுரைகள் நிகழ்த்திஞர். பாரதியின் ஒவ்வொரு
இந்தியாவில் அவர் வாழும் பொழுது ே ரையும் அன்போடு அனைத்து, 'சிவனடியார்" எ
அவர்கள் வாழ்வை வளம்பெறச் செய்தார்.

த அடிகள்
ந்தன்'
லவும் மட்டுநகரிற் காரைதீவில் 1892.3.29இல் மகவாய்ப் பிறந்து, மயில்வாகனம் எனப் |தே ஆண்டிலேதான் தமிழ்த் தாத்தா உ. வே. னம் ஏற்றினூர், காலப்போக்கில் விபுலாநந்தராக த்து நிற்பது அவரின் யாழ்நூலே, அவர் யாத்த விளங்கியது இளங்கோ அடிகளின் சிலம்பு. அத்து ணகி என்னும் பத்தினித் தெய்வத்திற்குப் பழம் பட்டுள்ளது என்பதும் ஈணடு குறிப்பிடத்தக்கது. ந்தையைச் சிலம்பின்பால் ஈர்க்கக் காரணமாய் டகள் கூட, சிலப்பதிகாரத்தினுல் ஆட்கொள்ளப்
நான் ஒரு அடிகள் அதை விளக்குவேன்' என ன்ெறது.
ம் உலகியல் இன்பத்தையும் துறந்தார்; ஆஞல், ற்றற்ற துறவியையும் பைந்தமிழ்ப் பற்று பற்றிக் அள்ளும் சிலப்பதிகாரத்தை எமகசூ அளித்தது. துறந்து, 1922இல் மயிலாப்பூர் இராமகிருஷ்ண மாறிஞர் பற்றற்ருன் பற்றினைப்பற்றி நின்ற கொண்டது. த.வி அணேத்த தமிழுக்குத் தலை மணி’ என்று மதிக்கமுடியா அணிகலன்களையும் நங்கையின் எழில் உருவிற் சொக்கித் திளைத்தார், க்கும் நல்லறமாக மாறியது-தமிழ் இனம் செய்த
து எம் நினைவலைகளில் மோதும் முதல் எண்ணம் சை நீடு வாழ வழிவகுத்தது அவர் யாழ்நூலே, ாழ் நூல் யாத்ததோடு முடிவடைந்தது என்று ரிந்த உள்ளம்; தொண்டாற்றத் துடித்த தூய ந்தமிழருக்கும், பாருக்கும் நல்வாழ்வை அளித்து
அடிகளுக்கு நாட்டம் மிகுதி. அதனுலேதான் 7 லத்திலேயே அண்ணுமலைப் பல்கலைக் கழகத்திலே நந்த அடிகள், பாட்டுத்திறத்த்ாலே வையத்தைப் தினை நற்றமிழர் கேட்டு நலிவு நீங்க நயம்பட ந பாடலும் இவரின் வாழ்விற்கு வளம் ஊட்டியது.
சரிவாழ் தீண்டத்தகாதோர் எனப்பட்ட எல்லோ ானப் பெயரும் சூட்டி, தீந்தமிழ் உணவு ஊட்டி, அத்தோடு பெருமக்களின் துணைகொண்டு காரை
65

Page 74
தீவில் (மட்டுநகர்) சாரதா கல்லூரி, கல்லடி உப் யில் 'இந்து-ஆங்கிலக் கல்லூரி ஆகியவற்றைத் தீர்க்கப் பெரும் முயற்சி செய்தார். மற்றும்
வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பணி சொல்லில்
பிறநாட்டு நல்லறிஞர் கலைகள் தமிழ் ந வேண்டும் என்பது விபுலாநந்தரின் விடுதல் அறி கலையாகக் கொண்டு, வங் த்துதித்த செங்கதிர் ே யற்ற புலவர் செகப்பிரியர் (ஷேக்ஸ்பியர்), ஷெ செஞ்சொற்கவி அமுதையெல்லாம நெஞ்சந்தொ தந்தார். மொழிபெயர்ப்பு என்ற நினைவையே அமைந்திருந்தன.
‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா' என்று அன் நின்றர். எனினும், அழிவியல் நம்மை ஆளு? விபுலாநந்த அடிகள் மேற்குறித்த முத்துறையில் கருதி, அறிவியல் (விஞ்ஞானம்) துறையிலும் தம 1936ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் மன்ற பற்றி வழிவகைகள் ஆராயத் தமிழ் அறிஞர் கூட விபுலாநந்த அடிகள் தமழிற் கலைச் சொல் ஆக்கம் ஒரு பகுதி பின்வருமாறு, 'நமது தாய் மொழி எல்லாக் கலைச்சொற்களையும் ஆக்க வசதியுண்டு. கலைச்சொற்களை அமைக்கவேண்டும். தமிழில் ே என்று கூறுவது தவறு. இன்று புரியாத ஒன்று நா எளியவையாகிவிடும். ஆதலின் அறிஞர் முயன் முயற்சியாகும்'. அன்னவரின் இச் செவ்விய எம் செந்த மிழ் சிறப்புறும்.
அடிகளின் அருந் தமிழ், ஆங்கிலக் கட்டுை வாய்ந்தவை. அவற்றின் சொற்செறிவும் பொரு விடும். தமிழ்ப்பொழில், செந்தமிழ், இராமகிரு அவர் கட்டுரைகளைப் படிப்போர் இவ்வுண்மையை ஆங்கில நாட்டின் கலைச்செல்வம் பற்றிப் பண்டி மணிமலரில் விபுலாநந்தர் வரைந்துள்ள கட் சொல்லாட்சி ஆற்றலையும் இனிது இயம்பி நிற் Libo) ''THE BOOK OF BOOKS OF TAMII OF ANCIENT TAMI L LAND” GT6Typ CAL a; Gaoguib ''ORIGIN AND GROWTH OF T நூற்ருண்டு ஆங்கில மலரில் வெளிவந்த கட்டு: 6?66) ją Guilb.) Luftbro? MODERN REVIEW G. களாரின் ஆழ்ந்தகன்ற ஆராய்ச்சி அறிவையும் செய்த தன்மையையும் எமக்கு எடுத்துக் காட்
நம் அடிகள் முத்தமிழ் உணர்ந்த வி ஆங்கிலத்தையும் நன்கு கற்று, அவற்றிற்கு அடி செல்வத்தை நம் தமிழ் மொழியின் வளத்திற்கு
6

போடையில் சிவ ) னந்த வித்தியாலயம், திருமலை தோற்றுவித்துத் தமிழினத்தின் அறிவுப் பசி ஈழத்தின் பல்வேறு கல்லூரிகளின் வாழ்விற்கும்.
அடங்கா.
ாட்டையும் தமிழ் மொழியையும் வளமபடுத்த பா விருப்பு. அதனல், மொழிபெயர்ப்பை ஒரு வந்தன் (ரவீந்திரர்) இங்கிலாந்து ஈந்த இ%r ல்லி, பைரன், கீட்ஸ் ஆகியோரின் சீரிய சுரிய டும் முறையில் கொஞ்சும் தமிழிற் குழைத்துத்
மறக்கச் செய்யும் முறையில் அவரின் பாக்கள்
இவை நாலும் கலந்து 2.5க்கு நான் தருவேன் றைய நம் ஒளவைமூதாட்டி இறைவனை இறைஞ்சி கின்ற இவ்விருபதாம் நூற்றண்டிலே வாழ்ந்த மட்டும் தமிழ் வளர்ந்தாற் போதாது என்று ழ்ெ ஆக்கம் பெறவேண்டும் என விழைந்தார். த்திலே தமிழிற் கலைச்சொல் ஆக்கம் செய்வதைப் டினர். அக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பற்றி அறைந்த ஆணித்தரமான கருத்துக்களில் பழபையும் சிறப்பும் பொருந்தியது. அதனில்
அறிஞர் அவசரப்படாமல் நன்கு ஆராய்ந்து வெளிவரும் கலைச்சொற்கள் எளிதிற் புரிவதில்லை ாளை புரியும். பழகப் பழக எல்லாச் சொற்களும் று தமிழிற் கலைச் சொற்கள் ஆக்குதல் நல்ல உரையை நம் சிந்தையில் ஏற்றுச் செயற்படின்
ரகளின் வன்மையும், வனப்பும் தனித் தன்ம்ை 5ட்பொலிவும் எம்மை அப்படியே ஆட்கொண்டு ஷ்ண விஷயம் முதலிய இதழ்களில் வெளிவந்த உணர்வர். "ஆங்கிலவாணி' என்ற தலைப்பில் தமணி கதிரேசன் செட்டியாரின் அறுபதாண்டு டுாை அவரின் நுண்ணறிவின் திறத்தினையும் கும். வேதாந்த கேசரியில் (1940) திருக்குறளைப் , LAND’’ GT Görp 5l Goutuqub “THE HARPS CUTTA REVIEW Góão : ( 1 9 4 1 ) Gant Grifau ți; 35 AMIL LITERATURE' Graig guit LD So 6600T ரையும் PHONETICS (தமிழ், நெடுங்கணக்கின் ன்னும் இதழில் வெளிவந்த கட்டுரையும் அடி , ஆங்கிலம் அவருக்கு அடிப்ணந்து குற்றேவல் டுகின்றன.
த்தகச் செல்வர். அத்துடன் ஆரியத்தையும் மையா காது அவற்றில் இபாதிந்திருக்கும் அறிவுச் ப் பயன்படுத்தியவர், தமிழக மறுமலர்ச்சியின்
* : . بسی
S

Page 75
தந்தையும் இவரின் உற்றநண்பருப்ாகிய மற்ைம் ளத்தோடு ஒன்றியிருந்ததை உணரும்போது
அடிகளின் மும்மொழி அறிவே 'மதங்க சூளாம அளிக்கத் துணை புரிந்துள்ளது. வட மொழியில் நாடக அமைதிகளும், செகப்பிரியரின் நாட8 பப் பெற்ற நாடகச் சிறப்பியல்புகளும் அவரி
எல்லாத் துறைகளிலும் தமிழன் வாழ்வி யில் ஆகிலும் தமிழிற் பண் இசைக்க வேண்டுப் வேண்டும் என்ற புத்துணர்ச்சி புதுமலர்ச்சி தே அறிஞர் ஆர். கே. சண்முகம் செட்டியார் ஆகிே கிறது என்பதை யாம் ஏற்கவேண்டும். இந்த இ வீசியது விபுலாநந்தரின் யாழ்நூல் என்பதை முடியாது. அதனுல்தான் அடிகளாரின் தலையாய பணி-அவரின் யாழ் நூல் அரங்கேற்றம் என்ப?
தமிழ்ச் சொற்களாகிய இசையும் பண் மாருது தடுத்தது இவரின் யாழ் நூலே, மற்றுப் பரண்ம், கரகரப்பிரிய, தோடி, கல்யாணி, அரி களுக்கு) முறையே செம்பாலைப் பண், படுமஃ பாலைப்பண், கோடிப் பாலைப்பண், விளரிப்பா? வழக்கில் இருந்தன என இந்நூல் வாயிலாக அறி என்ற ஏழு சுரங்களுக்கு முறையே குரல், துத் தட தமிழ்ப் பெயர்கள் நிலவின என்றும் அறியக் கி மகரயாழ், சீரியாழ் சகோடயாழ், முதலிய சிற தனர் என்பதை எண்ணும்பே. து எம் உள்ளம்
பல்துறையிலே தமிழ் மொழிக்கும் தய உலகில் எமக்குத் தனி இடம் பெற்றுத்தந்த விபு துயரில் ஆழ்த்தி 1947.7.19இல் தன் இன்னுய சென்றுவிட்டார். அவர் மறைந்து இன்று ஏ ஆண்டுகள் பல ஓடினும் அவர் நினைவு எம் நெஞ்
**சங்கமனம் கமழுகின்று தனி
சிங்கமெனத் தமிழர்குலம் துங்கமிகு பொதுநலமும் து தங்குவிபு லானந்தர் தமிழி

லேய்டிகளின் உள்ளமும் இத்துறையில் இவர் உள் எம் உள்ளமும் உவகையுறுகின்றது. விபுலாநந்த ண்,' என்ற சிறந்த நாடக நூலை எமக்கு அவர் 0 உள்ள 'தச ரூபம்’ முதலிய நூல்களில் உள்ள இயல்புகளும், இளங்கோவின் சிலம்பிற் செப் ன் நூலின் உள்ளடக்கமாய் அமைகின்றன.
iல் மறுமலர்ச்சி ஏற்படாவிடினும் இன்சத் துறை ); பாடவேண்டும், இதனைக் கேட்டுச் சுவைக்க ான்றுவதற்கு அரசர் அண்ணுமலைச் செட்டியார், யாரின் தமிழ் இசை இயக்கம் காரன். மய் அமை பக்கத்திற்கு ஊன்றுகோ லாய் உயிராய் ஒளிவிட்டு யாம் மறக்கவோ, மறுக்கவோ , மறைக்கவோ தமிழ்ப்பணி-இசையுலகிற்கு ஆற்றிய ஒப்பற்ற தை யாம் ஒப்பவேண்டி இருக்கின்றது.
ாணும் சங்கீதமாகவும் இராகமாகவும் பெரிதும் ம் வட மொழியிற் பெயர் தாங்கி நிற்கும் சங்கரா காம்போதி, பைரவி என்ற பண்களுக்கு (ராகங் லப் பாலைப்பண், செவ்வழிப்பாலைப்பண், அரும் லப் பண் என்ற தனித் தமிழ் பெயர்கள் அன்று கின்ருேம். இப்போது உள்ள ச ரி க ம ப த நி ச ம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ட்ெக்கின்றது. மேலும் நம் தமிழ் மூதாதையர் ந்த இசைக்கருவிகளை மீட்டு இன்பம் எய்தி வாழ்ந்
பெருமிதமும் பேருவகையும் எய்துகின்றது.
மிழ் இனத்திற்கும் தமிழகத்திற்கும் பணியாற்றி லாநந்த அடிகள் எம்மை எல்லாம் ஆறருெணத் பிர் நீத்து, இறையோடு இன்தமிழ் இசை மீட்கச் றக்குறைய இருபத்தாறு ஆண்டுகள் ஆகின்றன. சத்தில் இருந்து அகல் மறுக்கின்றது.
த்தமிழின் மணிமொழியும் திண்மையுறத் தலைநிமிர றவுறத்தின் ஒளிநலமும் சைபோல் வாழியவே’
-- சுத்தானந்த பாரதியார்
57

Page 76
நல்லூர் சுவாமி
3. Raufruf), M
சுவாமிநாதபிள்ளை வைத்திலிங்கம் (பிர் மாணிப்பாயிற் பிறந்து 1947லே தேகவியோகம ஆங்கிலம் ஆகிய மொழிகளிலே தேர்ச்சி பெற் பதவிக்கான பரீட்சையிலே மிகத் திறமையாகச் செவ்வனே பணிபுரிந்தார். 1895ல் அவர் அச் திருப்பணி செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந் லிலே மிக்க தேர்ச்சிபெற்று 1901லே குருப்பட்ட கத்தோலிக்க சமயத்திருப்பணியிலும், தமிழியற்
இவர் உலகிலுள்ள பிரதான மொழிகள் லத்தீன், போர்த்துக்கேயம், ஜேர்மானியம், பிர முதலியன உட்படச் சுமார் எழுபது மொழிகளில் றுடன், வரலாறு, தொல்பொருளியல், இந்துசமய பெற்றிருந்தார். இவற்றுட் பலவற்றினைத் தாப
கத்தோலிக்க திருப்பணியும் தமிழியற் பணி *மனித குலம் ஒன்று' என்ற கருத்திலே சுவாமி படைப்பு ஒன்றே என்பது இன்றைக்கு எல்லா விஞ் என்று அவரே குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தின் ஆராய்ச்சி அமைந்துள்ளமை குறிப்பிடற்பாலg யாலோ, ஒப்பியலறிவாலோ கிறித்துவ வுேதத் இவையாவற்றினலுமோ ஏற்பட்டிருக்கலாம்.
சுவாமிகளின் தமிழ் ஆராய்ச்சி பெரும் துள்ளது. இவ் ஒப்பியலாராய்ச்சி மூலமாக:ே எனலாம். இவர் நன்கு முயற்சித்து எழுதிய செ. கையிலும் வெளிநாடுகள் சிலவற்றிலும் இருந்து வற்றிலும் ஒப்பியலடிப்படையிலிவர் எழுதியுள்ள பிட்ட அகராதியினைச் சுவாமிகள் ஒவ்வொன்று வெளியிடத்திட்டமிட்டிருந்தார். ஆனல், அவற்று பட்டுள்ளன. ஞானப்பிரகாசரின் பிறிதொரு ஆர! தாம.
தமிழர் நாகரிகம், குறிப்பாக, ஈழத்தமி ஈடுபாட்டினைப் பின்வரும் நூல்க்ள் மூலம் அறிய
(அ) தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமு பழஞ் சீர்திருத்தமும் - ஒரு புதிய ஆராய்ச்சி !
6

ஞானப்பிரகாசர்
I. A. (Cey.).
கால ஞானப்பிரகாச சுவாமிகள்) 1875 லே ாயினர். இளம் வயதிலே தமிழ், வடமொழி, று, 1893லே நடைபெற்ற புகையிரத விகிதர் சித்தியடைந்து, அதே சேவையில் ஈராண்டுகள் சேவையினின்றும் விலகிக் கத்தோலிக்க சமயத் த இறையியற் கல்லூரியிற் சேர்ந்து, இறையிய ம் பெற்ருர், தொடர்ந்து இறுதி மூச்சுள்ளவரை
தொண்டிலும் ஈடுபட்டுவந்தார்.
, கிளை மொழிகள் பலவற்றிலே - கிரேக்கம், ான்சியம், எகிப்தியம், எபிரேயம், சீனமொழி ஸ் - ஓரளவு தேர்ச்சி பெற்றிருந்தார். இவற் ம், பெளத்தம் முதலியவற்றிலும் பாண்டித்தியம்
மாகவே கற்றுக்கொண்டார்.
i புமே சுவாமிகளின் பிரதான இலட்சியங்களாம். கள் அசையாத நம்பிக்கை யுள்ளவர். "மக்கள் ஞான சாத்திரிகளும் ஒப்புக் கொண்ட உண்மை’ ா அடிப்படையிலேதான் அவருடைய தமிழியல் து. இக்கருத்து அவரின் பன்மொழிப்புலமை திற் கொண்ட திடமான நம்பிக்கையாலோ,
பாலும் ஒப்பியல் அடிப்படையிலேதான் அமைந் வ, அறிஞர் பலர் இவரைப் பற்றி அறிந்தனர் ாற்பிறப்பு ஒப்பியலகராதி என்ற நூலும் இலங் வெளிவரும் சஞ்சிகைகள், பத்திரிகைகள் சில
கட்டுரைகளும் குறிப்பிடற்பாலன. மேற்குறிப் றும் 100 பக்கங்கள் அடங்கிய 20 பாகங்களாக ள் முதல் ஆறு பாகங்கள் மட்டுமே வெளியிடப் ‘ய்ச்சி நூல் தமிழ் அமைப்புற்ற வரலாறு என்ப
ஓர் வரலாறு ஆகியலுற்றிலே சுவாமிகளுக்கிருந்த antib: 1.11.
ம் (1920); (ஆ) தமிழரின் ஆதி இருப்பிடமும் நூல் (செந்தமிழ் பத்திரிகையிலே கட்டுரை வடி
8

Page 77
விலே வெளிவந்து நூல் வடிவம் பெறுதற்கான CASTE AMONG THE TAMILS; (FF) utput JAFFNA DURING THE PORTUGUESE PE (ஊ) வையா வசனம்-பதிப்பு 1921; (எ) ( இவற்றுள்ளே பின்னைய நான்கும் யாழ்ப்பாண பற்றிய மரபு வழி நூல்களிலே விமர்சன நோக்கி3 Glogy in INDIA'S ANCIENT CHRONOLO ஆய்வு நூலும் எழுதியுள்ளார்.
கத்தோலிக்க சமயக் கோட்பாடுகள், ! கட்டுரைகள் ஆகியனவற்றைப் பல அளவில் எ பாப்புமார் சரித்திர சங்கிரகம்; (ஆ) ஆண்டவ. CATHOLIC CHURCH IN CEYLON-P (FF) CATHOLICISM IN JAFFNA FRC PRESENT DAY (1926) (p565ualibaood (
பிற சமயங்கள், குறிப்பாக, சைவ சமயம் 5 Göstl-8r gift 6vassiffGav (2 ) PHILOSOPHICAL (இ) பிள்ஃாயார் ஆராய்ச்சி; (ஈ) HISTORIC BUDDHISM (p3, G52u gii) Giosan és á: -2. j5T :
சமகாலத்திலே ஸ்பெயினிலிருந்து வந்து இந்தியவியல், குறிப்டாகத், திராவிடவியலாரா அவர்களுடன் சுவாமிகள் தொடர்பு கொண்டி வந்து ய7ழ்ப்பாணத்திலே ஞானப்பிரக சரைச் ஆய்விலீடுபட்டு, அது தமழர் நாகரி5,ம் எனக் க திறனைக் கண்டு ஜெர்மானிய அரசாங்கமே அவ தனி முத்திரையொன்றும் வெளியிட்டது.
தமிழினை ஓர் உயர் கல்வி மொழியாகப் ஆய்வுகளைத் தமிழில் எழுதி முன்மாதிரியாக வி சம்பந்தமாகவும் இவர் கூறியுள்ள சில கருத்துச் ஏற்காவிடினும், சமகாலச் சூழ்நிலையிலவை குறி
மேலும் இவர் யாழ்ப்பாண வரலாற்று: இலங்கியவர். வேத்தியல் ஆசியக் கழகத்தின் இ தமிழ்ச் சங்கங்கள் சிலவற்றிலே பிரமுகராகவு ஆசிரியராகவும் திகழ்ந்தவர்.
இவ்வர் று கத்தோலிக்க மத குருவாக யாசிரியர், மொழி நூலறிஞர், ஒப்பியலறிஞர், பதிப்பாசிரியர், பேச்சாளர், நாவல. சிரியராகவு

சுவடி நிலையில் உள்ளது); (இ) ORIGIN OF ண வைபவ விமர்சனம் (1928); (உ) KINGS OF ERIOD OF CEYLON HISTORY (1920); செகராச சேகரன் ஒரு சரித்திர நாவல்.
வரலாறு பற்ற யவை. யாழ்ப்பாண வரலாறு ன முதன் முதலாகப் பயன் படுத்தியவர் இவரே. GY AND CIVILIZATION Tairpo go
வரலாறு பற்றிப் பெருந்தொகையான நூல்கள், ழுதியுள்ளார். அவற்றுள்ளே (அ) ஆதிகாலப் i Fifi Sub; (g) A HISTORY OF THE ERIOD OF BEGINNINGS ( 1505-1602); M THE EARLIEST TIMES TO THE குறிப்பிடலாம்.
பற்றிச் சுவாமிகள் அவ்வப்போது எழுதியுள்ள SAWISM; (ஆ) சுப்பிரமணியர் ஆராய்ச்சி; AL ASPECT OF CHRISTIANITY AND
டலாம்.
து, இந்தியாவில் சித்தோலிக்கத் திருப்பணயும் , ய்ச்சியும் செய்து வந்த வண. பிதா ஹெரஸ் டருந்தார். ஹெரஸ் சுவாமிகள் இலங்கைக்கு சந்தித்தார். இருவரும் சிந்து சமவெளி நாகரிக றினர். ஞானப்பிரகாசரின் மொழி ஆராய்ச்சித் ரை வரவழைத்தது; அவரைச் சிறப்பித்தற்குத்
பயன் படுத்தத் தக்கவகையிலே சுவாமிகள் பல 'ளங்கிஞர். மொழி சம்பந்துமாகவும், வரலாறு களை இன்றைய ஆராய்ச்சியாளரில் ஒரு சாரார் ப்பிடற்பாலன.
க் கழகத்தின் உப தலைவராகவும், தலைவராகவும் லங்கைக் கிளையின் உறுப்பினராகவும, சம காலத் ம் விளங்கியவர். கத்தோலிக்க பாதுக்ாவலன்
மட்டுமன்றி பல்துறை விற்பன்னராக, கட்டுரை வரலாற்ருராய்ச்சியாளர், பத்திரிகைய்ாசிரியர், ம் கூட, சுவாமிகள் சிறந்து விளங்கிஞர்.
69

Page 78
ஈழத்துத் தமி
(பதினெட்டாம் நூ
கலாநிதி பொ.
கி. பி. பதினன்கா b நூற்றண்டிற்கு மு லாற்றில்ே இருட்சி பொருந்தி மருட்சி அளிப்ப நீண்ட காலமாம் வெளியிலே ஈழத்திலே நடைெ வதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைக்குமாறில்ை களை மூலதனமாகக் கொண்டு தொடர்பான
• . s؟ கடினமாகும.
பூதன்றேவஞர் ஈழத்துப் பூதன்றேவன பெயர்களையுடையவர் மூவேந்தர் ஆட்சிக் காலத் அகநானூறு என்னும் தொகை நூல்களாற் புலன என்பதற்கு ஆதாரம் கிடைக்குமாறில்லை. என ஏனைய இரு பெயர்களுக்கு உரியவர் ஒருவரா அ. பெயரும் ஒருவரையே சுட்டுவதாக ஈழத்துத் தட கட்டுவன் மகாவித்துவான் சி. கணேசையர் (1 கெர்ண்ட கருத்தினை ஆதரிக்கும் சான்றுகள் சுட்
எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலு ஊர்ப்பெயரோடு அல்லது நாடு, ஊர் ஆகிய இரு பெயரோடு மட்டும் ஆட்பெயர் வழங்கியமை ச (மதுரை) ஈழத்துப் பூதன்றேவனர் என்ற பெய றன. ஈழத்துணவு' 'ஈழத்தரையர்' என்று வழ வழங்குவதோடு அமைதி கண்டனரோ தெரியவி என்னும் சொல் இலங்கை நாட்டினைத்தான் குறி தக்கதா என்பது சிந்திக்கத் தக்கது.
மேலும் களவியலுரை தலைச்சங்கத்தினர் இயற்கை அழிவுச் சக்திகளை எதிர்த்து நிலைப்பெ களிலே இலங்கையைச் சேர்ந்த ஒருவரோ அல் நோக்கத்தக்கது. a
இந்நிலையிலே ஈழத்துப் பூதன்றேவனர் இ யது அவசியமாகத் தெரியவில்லை, "கடல் கடந்: மலர், 1960) சு. நடேசபிள்ளை 'பூதன் என் வழங்கிவருவதாகும்" என்று கூறியிருக்கிருர், இ இப்பெயர் வழங்குவதை அவர் எக்காரணம் பற

ழ் இலக்கியம்
ாற்ருண்டுவரை).
பூலோகசிங்கம்
ற்பட்ட காலம் ஈழத்துத் தமிழ் இலக்கிய வ0 தாகக் காணப்படுகின்றது. ஏனெனில், இந்த பற்ற தமிழ் இலக்கிய முயற்சிகளைப் பற்றி அறி ல. உதிரியாகக் கிடைக்கப்பெறும் சில ஆதாரங் இலக்கிய வளர்ச்சி எதனையும் அவதானித்தல்
ர், மதுரை ஈழத்துப் பூதன்றேவஞர் என்ற திலே வாழ்ந்தமை குறுந்தொகை, நற்றிணை, கும். பூதன்றேவனர் இலங்கையைச் சேர்ந்தவர் வே அப்பெயரைத் தவிர்த்து நோக்குமிடித்து, ல்லது இருவரா ள்ன்று துணிவதற்கில்லை. இரு மிழ்ப் புலவர் சரிதம் (1939) கண்ட புன்ஞலைக் 878-1958) முதலானேர் கருதினர். அவர்கள் ட்டுவதற்கில்லை.
ம் இடப் பெயரோடு சார்த்திவரும் பெயர்கள் பெயரோடும் வருவதையே காணலாம்; நாட்டுப் 1ாணப்பெறுதலரிது. ஈழத்துப் பூதன்றேவனுர், ர்கள் இப்பொதுமுறைக்கு விலக்காக அமைகின் ங்குதல் போன்று ஈழத்துப்பூதன்றேவனுர் என்று ல்லை. எனவே இவ்விரு பெயர்களில் வரும் ஈழம் ப்பிடுகின்றது என்று சித்தாந்தமாகக் கொள்ளத்
"ாகக் கூறும் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடல் ற்றது போன்று நானூறுக்கு மேற்பட்ட புலவர் லது இருவரோ பாடியவை தப்பியிருந்தமையும்
}லங்கையிலே எந்தவூரினர் என்று துணிய வேண்டி * தமிழ்" என்ற கட்டுரையிலே (கல்கி, தீபாவளி றப் பெயர் யாழ்ப்பாணத்தில் இப்பொழுதும் லங்கையில்ே தமிழ் வழங்கும் வேறு பகுதிகளிலும் றியோ சுட்டவில்லை.
70

Page 79
ஈழத்துப் பூகன்றேவனர் பற்றிய ஆய்வு
'திருவளர் மதுரைத்
புலவரு ளொருவரா
பூதந் தேவனர் மு;
தேர்ன்றுதற் கிடமா
திரைவளை ஈழம். . . . என நாம் கூறுவது கவி மரபாகவே எண்ண
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1858-19 ஈழத்தவரை இனங்கான முயற்சித்தவர்களிற் யுடைய பெயர்களையுடையோர் ஈழத்தவர் என்ற சியூரையும் மன்னர் மாவட்டத்திலே உள்ள முச "ஈழமண்டலப் புலவர்" என்னும் கட்டுரையிலே முரஞ்சியூர் முடிநாகராயர் பற்றித் தாம் கூறிய ச கொள்ளுவதும் அறிஞர் கடன்' எனக் கூறியை நலம்’ என்று குறிப்பிடுவதனல் அம்மூவனரையு. என்னும் வழக்குகளை உரைப்பதனலே தொல்காட் லே கூறியவருமுளர். முத்துத்தம்பிப்பிள்ளை ஈழத்தவரைத் தேட எடுத்துக்கொண்ட முயற்சி தாகக் கூறுவதற்கில்லை.
பண்டைய தமிழ்ப் பாடல்களிலே ஈழ நூற்ருண்டிற்கு முற்பட்ட காலவெளியை நோக் பெற்றிருக்க வேண்டும் என்று கருத வைக்கும் விழாவிற் கடல்சூழ் இலங்கைக் காவல் வேந்த *ழத்துத் தலங்களைப் பாடியமையும் சிலப்பதிக வாக்கு ஈழத்திலும் படிந்திருக்கக் கூடும் என்று வரும் சோழப் பேரரசரின் காலத்தில் ஈழம் பெற்றமையாலே தமிழ்நாட்டில் சிறப்பெய்திய என்று எண்ணவைக்கின்றது. ஆயினும் இக்கூ காணப்படுகின்றன.
பத்தாம் நூற்றண்டிற்குரியதாகக் கருத ரெண்டாம் நூற்றண்டிற்குரிய நிசங்கமல்லனின் யிற் குறிப்பிடத் தக்கவை." நான்கு நாட்டா ஒருவர் வெண்பாவிலே போற்றப்படுகிருர், பண் கலந்த தமிழ்ச் செய்யுள் வடிவமாக அமைகின்ற களிலே தமிழ்ச் செய்யுள்வழக்கு போற்றப்படு பேசப்பட்ட பகுதிகளில் இலக்கிய முயற்சிகள் வதிற் பிழையிருப்பதற்கில்லை.
பத்தாம் நூற்ருண்டின் கடைக்கூறிலே தமிழ் மொழியின் செல்வாக்கு பாரம்பரியமாக வந்துள்ளது: "பொலநறுவைக் காலம் எனப்படும் கள் பல சிங்கள மக்கள் வாழ்ந்த பகுதிகளிலே
இன்று நமக்குக் கிடைக்கும் ஈழத்துத் வரையறுக்கத்தக்கதாய் இருப்பது சரசோதிமா பெருமn ள் என அழைக்கப்பட்ட போசராச் ப

புகளைத் தொடர முடியாத நிலையிலே,
தென்றமிழ்ச் சங்கப் ய்ப் புவியிசை நாட்டிய தலிய சான்றேர் ந் தொன்றுகோள் சீர்த்தித்
த்தக்கது.
17) அவர்கள் பண்டைய புலவர் பட்டியலிலே குறிப்பிடத்தக்கவர். “நாகர்’ என்ற இறுதிகளை 0 கருத்தினை வெளியிட்டதோடமையாது முரஞ் லியாக இருக்கலாம் என்று கூறியவர். அன்னர் (செந்தமிழ், 12, 10.375 - 385; 1914) ருத்தைத் 'தகாதாயிற் தள்ளுவதும் தக்கதாயிற் ம வரவேற்கத்தக்கது. "மாந்தையன்ன இவள் ம் பனியத்து, மழையத்து, வெயிலத்து, பனுட்டு பியரையும் ஈழத்தவர் என்று அண்மைக் காலத்தி முதலானேர் பண்டைய புலவர் பட்டியலிலே வரவேற்கத்தக்கதர்யினும் வெற்றி அளித்திருப்ப
த்தவரைத் தேடுவதை விடுத்துப் பதிஞன்காம் க்குமிடத்துத் தமிழ் இலக்கிய முயற்சிகள் நடை செய்திகள் சில பெறப்படுகின்றன. கண்ணகி }ன் கலந்து கொண்டமையும் தேவாரமுதலிகள் ரகாலம், தேவாரகாலம் என்பனவற்றின் செல் கருதவைக்கின்றன. தேவார காலத்தையடுத்து அப்பேரரசரின் மண்டலங்களிலொன்ருக ஆளப் பேரிலக்கிய நெறி ஈழத்திலும் கிளைத்திருக்கலாம் ற்றுகள் ஊகத்தின் பாற்படுவதால் வலுவிழந்து
>ப்படும் நான்கு நாட்டார் கல்வெட்டும் பன்னி “பண்டுவஸ் நுவர கல்வெட்டும் இக்காலவெளி ர் கல்வெட்டின் ஈற்றிலே பெளத்தப் பெரியார் டுவஸ்நுவர கல்வெட்டு கிரந்த எழுத்துக்களோடு து என்பர். சிங்கள மன்னர் ஆட்சிபுரிந்த பகுதி வதை நோக்குமிடத்து பாரம்பரியமாகத் தமிழ் நடைபெற்றனவாதல் வேண்டும் என்று கருது
சோழராட்சி ஏற்பட்ட காலத்தினையெர்ட்டித் சிங்கள மக்கள் வாழ்ந்த பகுதிகளிலும் அதிகரித்து காலப்பிரிவிலே தமிழ்மொழியிலமைந்த சாசனங் காணப்படுகின்றன. . ”
தமிழ் நூல்களிலே காலத்தால் முற்பட்டது என ல என்னும் சோதிட் நூலாகும். தேனுவரைப் ண்டிதர் அந்நூலை இயற்றி 1310-ம் ஆண்டிலே
7 Ι

Page 80
அரங்கேற்றனர். தம்பதேனியாவைத் தலைநகரா பாகுவின் வேண்டுகோளுக்கு இணங்க இயற்றப் ஆதரித்தமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின் சிறப்பிடம் பெறும் தம்பதேனிய அரசர் காலத் ஆக்கங்களிலே ஈடுபட்டனரோ என்பதை அறிய தளவிலே, அவர்களின் எச்சமாக விளங்கும் ச அமைகின்றது என்று கூறுவதற்கில்லை. -
பதின்மூன்றும் நூற்றண்டின் பிற்பகு யாழ்ப்பாணக் குடாநாட்டினைத் தமதாக்கி, செகர் பெயர்க்ளை மாறிமாறிப் பூண்டு, போர்த்துக்கேய புரிந்தவர்களை ஆரியச்சக்கரவர்த்திகள் என்றழை குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கிய வளர்ச்சி காண மிக்கவர்களாகத் திகழ்ந்தமையும் அதனுற புல4 விளங்கியமையும் இலக்கிய வளர்ச்சிக்குத் தூண் இவர்களுடைய ஆட்சிக்காலத்தில் வட இலங்கை தொடர்பும் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியிருக்கே டழுமரம் தேரும் பறவை மானத் தமிழ்ப்புலவர் பெற்று ஏகியமைக்குப் புகழேந்திப் புலவர், அந்த டாடல்கள் சான்றுபகர்வன.
ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்திலே சோதி யுள்ளன. செகராசசேகரம், பரராசசேகரம் என்னு செகராசசேகரமாலை என்னும் சோதிட நூலும் ஆ இயற்றப்பட்டன என்றுகருத இடமுண்டு. இந்நூல்: பட்டுள்ளது. ஆயினும் ஆக்குவித்தோன் எந்தச் ராசசேகரன் என்றே துணிவதற்கில்லை. சுவாம பிள்ளை (1895-1965) முதலானேர் இவ்வழியிலே கொள்ளத்தக்கன என்று கூறுவதற்கில்லை. இந்து திற்கும் ஆரியச்சக்கரவர்த்திகள் அளித்த முக்கி துவத்திற்குத் தமிழகம் எவ்வாறு காரணமாயிரு
ஆரிய்ச்சக்கரவர்த்திகள் காலத்திலெழுந் சம்பந்தமானவை. வையா பாடல், கைலாயமான முறை என்பதுவும் இவ்வகையில் அடங்குமென்பர் அதன் தன்மைபற்றிக் கூறுவதற்கில்லை. வையா இயற்றியதாகக் கூறல் மரபு. பெளராணிகர் ( வையாபாடல் வன்னியரின் வரலாற்றிற்கு முச் செய்திகளையும் வையாபாடல் கூறுவதால் பதினேழ வையாபாடல் பெற்றதாதல் வேண்டும். உறை அரசரின் தோற்றத்தையும் குடியேற்றத்தையும் 6 யும் கூறுகின்றது. சேதுபதியைக் குறிப்பிடும் 6 சேதுபதி என்ற பட்டத்தையும் இராமநாதபுர யிலிருந்த முத்துகிருஷ்ணப்ப நாயக்கரிடமிருந்து இயற்றப்பட்டதாதல் வேண்டும்.

க் கொண்டு ஆட்சி புரிந்த மூன்ரும் பராக்கிரம ாட்ட சரசோதிமாலை சிங்கள மன்னர் தமிழை து. ஆயினும் சிங்கள இலக்கிய வரலாற்றிலே லே தமிழ்ப் புலவர் குறிப்பிடத்தக்க இலக்கிய pடியலில்லை. இலக்கிய மாணக்கரைப் பொறுத் சோதிமாலை, அவர்களுக்குச் சிறப்பளிப்பதாக
தியிலே தென்பாண்டி நாட்டிலிருந்து வந்து, ாசசேகரன், பரராசசேகரன் என்னும் வேத்தியற் ர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும்வரை ஆட்சி ப்பர். இவர்களுடைய காலத்திலே ஈழத்திற் படுகின்றது. இவர்களிற் சிலர் தாமே புலமை மை உள்ளவரை ஆதரிக்கத் தெரிந்தவர்களாக டுகோலாக அமைந்திருக்கவேண்டும். மேலும் யர் தமிழகத்தோடு கொண்டிருந்த நெருங்கிய வண்டும். இவர்களுடைய ஆட்சியின் போது
தமிழகத்திலிருந்து ஈழத்திற்கு வந்து, பரிசில் |க்கவி வீரராகவமுதலியார் ஆகியோரின் தனிப்
திடம், வைத்தியம் பற்றிய நூல்கள் சில தோன்றி ணும் வைத்தியநூல்களும் சோமசன்மா இயற்றிய ஆரியச்சக்கரவர்த்திகளின் தூண்டுதலின் பேரில் களிலே ஆக்குவித்தோன் புகழ் ஆங்காங்கே பாடப் செகராசசேகரன் என்றே அல்லது எந்தப் பர ஞானப்பிரகாசர் (1875-1947), சு. நடேச p எடுத்துக்கொண்ட முடிவுகள் சித்தாந்தமாகக் ால்கள் ஆயுள்வேதவைத்தியத்திற்கும் சோதிடத் பத்துவத்தைக் காட்டுகின்றன. இம்முக்கியத்து ந்தது என்பது ஆராயற்பாலது.
த பிறிதொரு வகையான நூல்கள் வரலாறு p என்பன இவ்வகையைச் சார்ந்தவை. இராச ஆயினும் அந்நூல் கிடைக்கப்பெருமையால், அல்லது வையாபுரிஐயர் என்பவர் வையாபாடலை மறையிலே யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் கியத்துவம் தருகின்றது. பறங்கியர் பற்றிய ாம் நூற்ருண்டளவிலே அதன் இறுதிவடிவத்தை பூர் முத்துராசரின் கைலாயமாலை யாழ்ப்பாண கலாயநாதர் கோயிற் பிரதிட்டை வரலாற்றை கலாயமாலை சடையக்க தேவன் 'உடையான் த்தின் மீதான ஆட்சியதிகாரத்தையும் மதுரை கி. பி. 1604-ம் ஆண்டிற் பெற்றதன் பின்பே
72

Page 81
கவிராஜவரோதயர் இயற்றிய கோணே போதும், அது கூறும் வரலாறு திரிகோணமை கூறினும் அதனைத் தலபுராணம் எனல் பொருந் கைலாசபுராணத்தோடு தொடர்பு படுத்தி ஆ ஆயினும் அவ்வாறு கொள்வதற்கு ஆதாரங்கள் ( 11ாகும். ۔۔۔ ۔۔۔
சோதிடம், வைத்தியம், வரலாறு பற்றி காலத்தில் எழுந்த இலக்கிய நூல்களாக இர காணப்படுகின்றன . மேலும் இளங்கோவடிக செய்யுணுாலொன்று இக்காலத்தில் எழுந்ததென உலா என்னும் பிரபந்தமும் இக்காலத்தில் எழுந் விட்டது.
பதினரும் நூற்ருண்டின் கடைக்கூறிலு ஆட்சி புரிந்த எதிர்மன்னசிங்கன் என்னும் பரர சூனருமான அரசகேசரி என்பவரால் இயற்றப்பட் தாசர் இயற்றிய இரகுவம்மிசத்தின் மொழிபெ காரங்களும் பொருளலங்காரங்களும் மலிந்து, அ காணப்படும் இரகுவம்மிசம் அரசகேசரியீன் வித்துவப்போட்டியிலே ஈழத்தை இகழ்ந்தவர்க இருபத்தாறு படலங்களைக் கொண்ட இரகுவம் யெழுதிய புன்னலைக்கட்டுவன் மகாவித்துவான் கூறக் கடமைப்பட்டிருக்கிறர்கள்.
மச்சேந்திய புராணத்தைத் தழுவிநிற்குப் களின் காலப்பிரிவிலே இயற்றப்பட்டது என்று ( புரம் மகாவித்துவான் மீனட்சி சுந்தரம்பிள்ளைக் களைப் புகுத்தியவர்களிலே தட்கிணகைலாச புரா சருக்கத்திலே ஈழநாட்டு வரலாற்றேடு தொ இடம் பெறுதல் குறிப்பிடத்தக்கது. இரகுவ புராணம் எளிமை" பொருந்திய செய்யுள்கை கைலாசபுராணத்தில் ஆசிரியர் பற்றிக் கருத்து ( யர்களாகிய காரைதீவு கா. சிவசிதம்பரஐயரும் (1916) முறையே சிங்கைச் செகராசசேகரன், தி ராகக் கொண்டனர். இரு பதிப்பாசிரியர்களும் பதிப்பித்துள்ளனர். எனவே இவர்களுக்குக் ! உண்மை காண்பதரிது.
கோவலஞர் கதை (1962), கண்ணகி வ நோக்குபவர்கள் அவ்விரு நூல்களின் ஆசிரியர் ஆசிரியர் பற்றிய அகச்சான்றினைக் கண்டு மை தழுவி ஆதியிலே ஒருவர் எழுதிய கதை கால வள வேறுபாடுகளைக் கண்டபோதும் அடிப்படைக் கூறு மையினை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது வர் ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தவராக இ தேவையர்கோன் என்னும் பெயர்கள் இடந்தருகி குறிப்பன.

சர் கல்வெட்டும் வரலாறு கூறுவதாக இருந்த லச் சிவதலத்தின் வரலாருகும். தலவரலாறு தாது. கவிராஜவரோதயரைச் சிலர் தட்சிண சியச்சக்கரவர்த்திகளின் காலத்தவர் என்பர். போதாமலிருப்பதை ஈண்டு சுட்டுவது பொருத்த,
ப நூல்கள் நீங்கலாக, ஆரியச்சக்கரவர்த்திகளின் குவம்மிசம், தட்சிணகைலாசபுராணம் என்பன iளின் சிலப்பதிகாரத்தின் கதையைத் தழுவிய க் கொள்ளவும் இடமுண்டு. பரராசசேகரன் ததாக அறிய முடிகின்றது; அந்நூல் மறைந்து
ம் பதினேழாம் நூற்ருண்டின் முதற் கூறிலும் ாசசேகரன் காலத்தவரும் அவருடைய தமைய டது இரகுவம்மிசம். சங்கதமொழியிலே காளி யர்ப்பே அரசகேசரியின் நூலாகும். சொல்லலங் ரிதுணர்தற்பாலனவாகிய செய்யுள்கள் நிறைந்து வித்துவப்டெருமையை எடுத்துக்காட்டுகிறது: ளூக்கு நல்லறிவுச் சுடர் கொளுத்த உதவுவது, மிசத்தின் முதற் பதினுறு படலங்களுக்கு உரை சி. கணேசையருக்குத் தமிழ் மாணுக்கர் நன்றி
) தட்சிண கைலாசபுராணம் ஆரியச்சக்கரவர்த்தி கொள்ள அகச்சான்றுகள் உதவுகின்றன. திரிசிர கு முன்பே தலபுராணங்களிற் காவிய லட்சணங் ண ஆசிரியரும் சிறப்பிடம் பெறுவர். திருநகரச் டர்புடைய பல செய்திகள் இப்புராணத்திலே ம்மிசத்தோடு ஒப்பிடும்போது தட்சிணகைலாச ாக் கொண்டிருத்தல் நோக்கற்பாலது. தட்சிண வேறுபாடு நிலவுகின்றது. இந்நூலின் பதிப்பாசிரி (1887) புலோலி பொ. வைத்தியலிங்கதேசிகரும் ரிகோணமலை பண்டிதராசர் 6 ன்பவரை நூலாசிரி தங்கள் கூற்றுக்கிணங்கப் பரிசோதனை செயது கிட்டாத ஏட்டுப்பிரதிகள் வெளிப்பட்டாலன்றி
1ழக்குரை (1968) என்னும் பதிப்புகளை ஒப்பிட்டு ஒருவரல்லர் என்று துணியும் வேளையிலே, ஒரே லவுற வேண்டியிருக்கும். சிலப்பதிகாரத்தினைத் ர்ச்சியோடும் இடமாற்றத்தோடும் பலவிதமான புகளிலே ஒற்றுமையுடையதாக நிலவுகின்ற பான் 1. ஆதியிலே சிலப்பதிகாரத்தைத் தழுவி எழுதி ருக்கலாம் என்று கருதுவதற்குக் காங்கேயன், ன்றன. இப்பெயர்கள் ஆரியச்சக்கரவர்த்திகளைக்
73

Page 82
கோட்டகம கல்வெட்டில் இடம்பெறு யும் யாழ்ப்பாண வைபவமாலையிற் காணப்படும் பாடியதாக வழங்கும் பாடல்களையும் ஆரியச்சக்கர கொள்ளலாம்.
அகத்தியத்தாபனம் என்றழைக்கப்படும் க மான் மியத்தைக் கூறும் திருக்கரைசைப்புராணம் கருத்து ஆராயத்தக்கது. இப்புராணத்தின் டெ சுவாமிப்புலவர் (1854-1922) பாயிரத்தில் இ கூறுமிடத்து இந்நூல் செய்தோர் உமாபதி சிவாசா ஆணுல், இதன் பதிப்பாசிரியர் திரிகோணமலை சாரியாரின் பரம்பரையினுள்ளார் ஒருவர் என்ப காலம் புலப்படுமா றில்லை.
முல்லைத்தீவுப் பகுதியைச் சேர்ந்த புல6 கருதத்தக்க கதிரைமலைப்பள்ளு. “பதிஞரும் நூற் வ. குமாரசுவாமி அவர்கள் கருதுவர். குமாரசுவி கூர்மையை எடுத்துக்காட்டியபோதும் அவற்ை கதை மூலமும் வரலாற்று உண்மைகளை நிறுவ மு! ளப்படுவத ன்று
பதிஞரும் நூற்றுண்டின் முற்பகுதியிலே களின் ஆட்சி பதினேழாம் நூற்றண்டின் இரண் அவர்களைத் தொடர்ந்து முதலிற் போர்த்துக்கேயரு தமதாக்கிக் கொண்டனர். யாழ்ப்பாணத்தை கூழங்கைத்தம்பிரான் இயற்கையெய்தியதாகத் ெ யைத் தனிப்பிரிவாகக் கொள்ளலாம்.
சங்கிலியின் ஆட்சிக்காலத்தில் (1519-15 தழுவினர். 1544-ம் ஆண்டு மன்னுர்ப் பகுதியி தம்முயிரைப் பரித்தியாகம் செய்தனர். கென்றி ெ ques ) 1561-1564 ஆண்டுகளிலே மன்ஞ் தமிழ்மொழியின் விளக்கத்தின்பொருட்டு இலக்க சமயநூல்கள் பலவற்றையும் இயற்றியவர் என்! ஆட்சி புரிந்தவர்கள் காலங்களிலே யாழ்ப்பாடு அதிகரித்தது. சங்கிலிகுமாரனின் வீழ்ச்சியோடு சிக்குட்படுத்தினர்.
பதிறரும் நூற்ருண்டின் பிற்பகுதியிலே போர்த்துக்கேயரின் செல்வாக்கு அதிகரித்தகாலை வந்தனர். நிறுவனரீதியிலே இவர்கள் ஈழத்திற் தொடர்ந்து நிறுவனரீதியிலே, 1602-ம் ஆண்டு ஆண்டு ஈழம் வந்த டொமினிகன் சபையின அகஸ்தீனியன் (Augustinians) சபையினர் 1606சமயப்பணி புரிந்தனரோ என்பதைக் கூறமுடியவி
போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்திலே ஞ னும் நூல்கள் தோன்றியுள்ளன. யேக சபையிலை கீரின் வேண்டுகோளுக்கிணங்க இயற்றப்பட்ட இவர் 1644-ம் ஆண்டு கொழும்பில் இருந்த யே

ம் ஆரியச்சக்கரவர்த்தியைப் போற்றும் பாடலை புவனேகவாகு பாடல்களையும் பரராசசேகரன் வர்த்திகள் காலத்திற்குரிய தனிப்பாடல்களாகக்
ரைசையம்பதியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் உமாபதிசிவா சாரியர் க. லத்திலெழுந்தது என்ற ாழிப்புரை ஆசிரியர் சுன்னகம் அ. குமார டம்பெறும் செய்யுள்கள் இரண்டினைப் பற்றிக் rரியரின் சீடர் என்பாரும் உளர் என்றுரைத்தார்; வே. அகிலேசபிள்ளை அவர்கள், உமாபதிசிவா ர் சிலர் என்று கூறிஞர். இந்நிலையில் நூலின்
வர் ஒருவரால் இயற்றப்பட்டிருக்கலாம் என்று ருண்டிற் குரியதாக நிச்சயிக்கத்தக்கது' என்று பாமியவர்களின் வாதங்கள் அவருடைய அறிவுக் ற ஏற்பது கடினமாகும். ஐதீகத்தின் மூலமும் பல்வது அறிவியல் அடிப்படையில் ஏற்றுக்கொள்
வலிகுன்றத் தொடங்கிய ஆரியச்சக்கரவர்த்தி டாம் தசாப்தத்தோடு முடிவடைந்து விட்டது. நம் பின்பு ஒல்லாந்தரும் தமிழ் பேசும் பகுதிகளைத் ஆங்கிலேயர் கைப்பற்றிய ஆண்டினையொட்டிக் தரிவதால், அவர் காலம் வரையிலுள்ள பகுதி
31) மன்ஞர்ப் பகுதியிலே பலர் கதலிக மதத்தைத் லே பலர் தாம் மேற்கொண்ட சமயத்திற்காகத் le görı9ğsı, 6.6Jrrıflöcir ( Rev.Fr. Henry Henri றர்ப்பகுதியிலே சமயப்பணி புரிந்தவர். இவர் ணம், அகராதி என்பனசெய்ததோடமையாது பது குறிப்பிடத்தக்கது. சங்கிலிக்குப் பின்னர் ணப்பகுதியிலே போர்த்துக்கேயர் செல்வாக்கு போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைத் தமதாட்
) பிரான்சிஸ்கன் ( Franciscans ) சபையினர் சமயப் பிரசாரம் செய்யும் நோக்கிலே வடக்கே கு 1543-ம் ஆண்டு வந்தவர்கள். இவர்களைத் ஈழம்வந்த யேசு சபையினரும் பின்னர் 1605-ம் 5b . (Dominicans), al-96) găg 6.545 săi ri. ம் ஆண்டு ஈழம் வந்தனர். அவர்கள் வடக்கிலே
ானப்பள்ளு, சந்தியோகுமையூர் அம்மானை என் ாச் சேர்ந்த செபஸ்தியான் பொஞ்சேகா சுவாமி து ஞானப்பள்ளு (ஞானப்பள்ளு, செய். 4). சுசபையினரின் கலாசாலையிலே தலைவராகவிளங்கி
74

Page 83
ии этгѓ; 1 650—ib ஆண்டு கொச்சின்" என்னும் ெ நியமனம் பெற்றவர். எனவே ஞானப்பள்ளு 16 கருதலாம். கிறித்தவ வேதாகமத்தின் உண்டு ஞானப்பள்ளு. பள்ளின் கதைப்போக்கினை ஆகி செய்கிருர். இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவ மையூர் அம்மானையின் ஆசிரியரும் ஒருவரே எ எவ்விதத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகத் 1847-ம் ஆண்டிலே சந்தியே:குமையூர் அம்மா சார்ந்த கிழாலி என்னும் கிராமத்திலுள்ள சந். திருவாசகம் போன்ற இலக்கியங்களிற் காணப்படு போன்ற அம்மானைகளுக்கும் அமைப்பிலே பல
**பேரான பாராளும் பிடுத் பிறதானம் வீசவே கூவாய் என்று ஞானப்பள்ளின் ஆசிரியர் வர்ழ்த்தியபோது காலப்பிரிவிலே கிடைத்த அரசியலாதரவு தமிழ் கில்லை. ஞானப்பள்ளின் ஆசிரியருடைய வாழ்த் தம் சமயத்தை ஈழநாட்டிலே பரப்புவதற்கான கின்றரேயொழிய, தமிழ்ப் பற்றுடைய மன்னனை
பறங்கியர் ஆட்சிக்காலத்திலே யாழ்ப்பா ஞானப்பிரகாச முனிவர். தில்லைநாதத்தம்பிரா பறங்கியர் என ஈண்டு சுட்டப்படுபவர்களைப் டே சிலரும் கூறுவர். திருநெல்வேலி ஞானப்பிரகாச நாடுவிட்டேகியவர் என்பது மரபு. அளவெ வெறுப்பினுலே தென்னகம் சென்றவர் என்பர் 1
திருவண்ணுமலேயாதீனத்தின் தம்பிரானுக சைவப்பண்டாரங்கள்ர் தம்பிரான்கள் CLP செய்தருளி, நடராச தரிசனத்தை விரும்பிச் சித திருக்குளத்தை அ!ைப்பித்து, அவ்விடத்திலே முனிவர் சங்கத்திலே பல நூல்களை இயற்றியதே உரையும் கண்டனர். இவருரையைச் சிவசமவ கண்டித்தனர். இவர் காலத்தவரான வைத் யுள்ளார். தில்லைநாதத் தம்பிரான் திருமறை பெற்றதாகும். ெேதாTணிய தலவிசார%ன : மூலமாகவேயாம்.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்திலே கதலிக யத்தின் வளத்தினைப் பெருக்கத் தம்மாலான பூலோகசிங்க முதலியார், கொன்சால்வெஸ் ச காவிரியேல் பச்சேகோ சுவாமிகள் என்பவர்கள் நூற்ருண்டின் கடைக்கூறிலும் பதினெட்டாம் ! பழை பூலோகசிங்க முதலியார் (அருளப்ப நாவலி பிரகலாதன் கதையினை ஒத்த திருச்செல்வர் வ் சுவைத்து இன்புறுமாறு காவியவுணர்வோடு, அ, பொதுமக்கள் கேட்டு இன்புறுமாறு திருச்செல் இடமுண்டு.

தன்னிந்திய நகரிலுள்ள கலாசாலையின் தலைவராக 50-ம் ஆண்டிற்கு முன்னர் இயற்றப்பட்டதாகக் மைகளை அறிவுறுத்தும் முகமாகக் தோன்றியது ரியர் ஆங்காங்கே இடைமறித்து சமயபோதனை பில்லை. சிலர் இந்நூலின் ஆசிரியரும் சந்தியோகு ன்று கூற முற்பட்டுள்ளனர். அவர்கள் கூற்று தெரியவில்லை. தெல்லிப்பழை பேதுறுப்புலவர் னையைப் பாடிஞர். பச்சிலைப்பள்ளிப்பற்றினைச் யேம்ஸ் பேரில் எழுந்ததே இவ்வம்மானை, யாகும். ம் அம்மானைக்கும் சந்தியோகுமையூர் அம்மானை வேறுபாடுகளுள.
3துக்கால் மனுவென்றன்
குயிலே’’ தும் இவர்களுடைய ஆட்சிக்காலத்திலே முன்னைய bப் புலவருக்கு கிடைத்திருப்பதாகக் கூறுவதற் துத் தமிழ் வாழ்த்தல்ல; சமயவாழ்த்து. புலவர் முயற்சிகளை மேற்கொண்ட மன்னனை வாழ்த்த: எ வாழ்த்தவில்லை.
ணத்தை விட்டுத் தென்னிந்தியா சென்றவர்கள் .வைத்தியநாத முனிவர் என்பவராவர் و SF பார்த்துக்கேயர் எனச் சிலரும் ஒல்லாந்தர் எனச் ரும் வரணி தில்லைநாதரும் கோவதைக்கு அஞ்சி ட்டி வைத்தியநாதர் உறவினர்மேற் கொண்ட பாவலர் சரித்திர தீபகத்தின் ஆசிரியர்.
த் திகழ்ந்து, சோழமண்டலத்திலுள்ள ஆதிசைவர், நலியோர் பலருக்குச் சைவாகமோபதேசம் ம்பரத்தை அடைந்து, ஞானப்பிரகாசம் என்னும் வதிந்து, பரிபூரணமடைந்த ஞானப்பிரகாச தாடமையாது சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கு ாதவுரையென்று திருவாவடுதுறையாதீனத்தினர் தியநாதமுனிவர் வியாக்கிரபாதபுராணம் பாடி க்காட்டிலே செய்த சிவாலயத்திருப்பணி பேர் உரிமை வரணிச்சை3ருக்குக் கிடைத்தது இவர்
மதத்தைச் சேர்ந்த அறிஞர் சிலர் தமிழ் இலக்கி முயற்சிகளைச் செய்துள்ளனர். தெல்லிப்புழை சவாமிகள், மாதோட்டம் லோரெஞ்சுப்புலவர், அவர்களிலே குறிப்பிடத்தக்கவர். பதினேழாம் தாற்ருண்டின் முற்கூறிலும் வாழ்ந்த தெல்லிப் Jர்) திருச்செல்வர் காவியத்தினைப்பாடியுள்ளார். ாலாற்றினைக் கற்றறிந்த பொரியோர் படித்துச் தன் லட்சணங்கள் பொருந்தப் பாடிய ஆசிரியர் }வர் அம்மானையையும் பாடிஞர் என்று கருத
75

Page 84
கதலிக மதத்திற்குப் புத்துயிர் ஊட்ட வந்த யோசேவாஸ் சுவாமிகளின் ( Rev.Fr. 1705-ம் ஆண்டில் கோவாவில் இருந்து ஈழம் வ Goncalvez 1676-1742) என்னும் சாங்கோபாங்க யிலும் அநேக நூல்களை இயற்றியுள்ளார். ே சங்க்ஷேபம், சுவிசேஷ விருத்தியுரை, வியாகுல பி என்பன அவற்றிற் சிலவாம். யோசேவாஸ் சுவ யினைச் ( Oratorians ) சேர்ந்தவரும் கூழங் பதினெட்டாம் நூற்றண்டின் பிற்பகுதியிலே கே பச்சேகோ சுவாமிகளும் ( Gabriel Pacheco ) கதை, நவதின உற்சவம் முதலிய நூல்களை இய தசாப்தங்கள் வரை ஈழத்திலே சமயப்பணி பு
பதினெட்டாம் நூற்றண்டின் நடுப்பகு லோரெஞ்சுப்புலவர் யேசுநாதர், தேவமாதா சிறந்த நாடகாசிரியராகவும் திகழ்ந்தார். மாதே லே சிறப்புற்றிலங்கிய நாடகாசிரியர் பலருக்கு குறிப்பிடத்தக்கது.
பதினெட்டாம் நூற்றண்டிலே குறிப்பிட மாது' சமயத்தினைச் சேர்ந்த பிலிப்பு த மெல்ே இராசவாசல் முதலியார் சீமோன் த மெல்லோ பிறந்த மெல்லோ இறப்பிறமாது' சமயத்தின்
ராவர். மெல்லோ பாதிரியார் புதிய ஏற்பா ஆண்டிலே அச்சிடுவித்ததோடு அமையாது பழை ஈடுபட்டிருந்தார். அப்பணிமுடிவடையும் முன் பெயர்ப்பில் ஈடுபட்ட மெல்லோ பாதிரியார் சமயப்பாடல்கள் பலவற்றையும் மருதப்பக் குறெ ஆண்டிலே மானிப்பாயில் அச்சிடப்பெற்ற சூடா செய்யுள்கள் சில சேர்க்கப்பட்டுள்ளதாகத் 'தய
இக்காலகட்டத்திற் குறிப்பிடத்தக்க த. தம்பிப்புலவர். பதினெட்டாம் நூற்ருண்டினர் மறைசையந்தாதி, பருளைவிநாயகர் பள்ளு, கர் இயற்றியுள்ளார். நாலு மந்திரி கும்மி என்னும் இவர் பாடிய அந்தாதிகளும் பள்ளும் தலசம்ப பிள்ளை என்பவர் மேற்று. சின்னத்தம்பிப்புலவர் 8 மரபாகிவிட்டது. ஆயினும் இருவரும் சமகா சிறப்புப்பாயிரங்களின் அடிப்படையிலேயே கால தக்கது.
வரதபுண்டிதர் விரத மகிமைகளைக் கூ பிள்ளையார் கதை என்னும் நூல்களையும் கண்ணி விற்கோட்ட விநாயகர் ஊஞ்சல் என்னும் பிர நூலையும் இயற் மியுள்ளார்.

இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு 1687-ம் ஆண்டில் oseph Va2 ) முக்கிய சீடர்களில் ஒருவராக ந்த யாக்கோமே கொன்சால்வெஸ் ( Jacome சுவாமிகள் சிங்கள மொழியிலும் தமிழ்மொழி தவ அருள்வேதபுராணம், சத்திய வேதாகம ரசங்கம், ஞான உணர்ச்சி, சுகிர்த தர்ப்பணம் "மிகளின் "தியானசம்பிரதாயம்" என்னும் சபை கைத் தம்பிரானிடம் தமிழ்ப்பாடம் கேட்டவரும் ாவாவிலிருந்து ஈழம் வந்தவருமான காபிரியேல் தமிழ் மொழியிலே தேவப்பிரசையின் திருக் பற்றிப் பத்தொன்பதாம் நூற்றண்டின் ஆரம்ப ந்துள்ளார்.
தியிலே வாழ்ந்த மாதோட்டம் இலந்தைவான் துே பற்பல கீதங்கள் பாடியதோடு அமையாது 7 ட்டப் பகுதியிலே பத்தொன்பதாம் நூற்றண்டி
இவரே குருவாக அமைந்திருந்தார் என்பது
த்தக்க தமிழ்ப் பெரியார்கரில் ஒருவர் இறப்பிற லா (1723-1790) என்னும் பாதிரியாராவர். என்னும் தமிழரின் புதல்வராக கொழும்பிலே குருவாக ஈழத்திலே நியமிக்கப்பட்ட முதல்வ ாட்டினைத் தமிழிலே மொழிபெயர்த்து 1759-ம் }ய ஏற்பாட்டினை மொழிபெயர்க்கும் பணியிலும் 'பு வியோகமடைந்தார். வேதாகம மொழி செய்யுளியற்றும் வன்மையும் பெற்றிருந்தார். பஞ்சியையும் அவர் இயற்றியுள்ளார். 1856-ம் மணி நிகண்டிலே மெல்லோ பாதிரியார் பாடிய மிழ் புளூராக்' ஆசிரியர் கூறுவர்.
மிழ்ப்புலவர்களில் ஒருவர். நல்லூர் வி. சின்னத் rான சின்னத்தம்பிப் புலவர் கல்வளையந்தாதி, rவைவேலன் கோவை ஆகிய பிரபந்தங்களை நூலையும் இவரியற்றியதாக வெளியிட்டுள்ளனர். ந்தமானவை; கோவை கரவெட்டி வேலாயுத ாலத்தவர் கன்ருகம் அ. வரதபண்டிதர் என்பது லத்தவர் என்பதற்குப் போதிய ஆதாரமில்லை. ம் நிறுவப்பட்டுள்ளது . என்பது மனங்கொளத்
றும் சிவராத்திரிபுராணம், ஏகாதசி புராணம், யவளை குருநாதசுவாமி கிள்ளைவிடுதூது, கணேச பந்தங்களையும் அமுதாகரம் என்னும் வைத்திய

Page 85
வன்னிநாட்டிலே அரசுக்கெதிராக நை லாந்த அரசினரின் கெளரவத்தினைப் பெற்ற வ சேகரக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவராக யுடையவராகவும் திகழ்ந்தார். இவர் பேரன் புதல்வரே ஊர்காவற்றுறை நீதிபதியாகத் (1829-1904).
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்திலே ‘கோயிற் சி. சின்னத்தம்பிப் புலவர். இவர் இணுவை சிவ பிள்ளைத்தமிழ் என்னும் தலசம்பந்தமான பிரபந் சார்பான பிரபந்தத்தையும் கோவலனடகம் நாடகங்களையும் இயற்றியுள்ளார்.
பாவலர் சரித்திர தீபகத்தில் இடம்பெ. கோடரி என்பவற்றைப் பாடிய சுதுமலைப்புல காரைக்குறவஞ்சி இயற்றிய காரைதீவு மே. ஆக்கிய வட்டுக்கோட்டை சு. முத்துக்குமாரர் கூறிலே வாழ்ந்தவராகலாம்.
இராமலிங்க முனிவர் ஆகிய அராலியை 1667-ம் ஆண்டிலே முதன்முதலாக வாக்கிய மு தோடு அமையாது சந்தானதீபிகை, ள்ன்னும்
வெருகல் சித்திரவேலாயுதர் காதல் என்! இராசசிங்கனை இன்னர் என்று தெளிவாக நிறு வீரக்கோன் முதலியாரைப் பதினேழாம் நூற்ரு
பதினெட்டாம் நூற்றண்டின் பிற்பகுதி கூழங்கைத் தம்பிரான். காஞ்சிபுரத்திற் பிறந் பெயர் வழங்கியிருக்கலாம் என்று கருத இடமு: பாடியவரும் நன்னுலுக்கு உரை கண்டவருமா ஈழத்துத் தமிழ் இலக்கிய கதியின் இயக்கத்திற்கு லே முக்கிய பங்கு கொண்டவர் என்பது குறிப்

-பெற்ற கலகங்களை அடக்குவதில் ஈடுபட்டு ஒல் ஸ்வெட்டி கப்டன் சந்திரசேகர முதலியார் சந்திர விளங்கியதோடு அமையாது பாடும் வன்மை
குமாரசுவாமி முதலியாரின் (1792-1874) திகழ்ந்த வைமன் கதிரைவேற்பிள்ளையவர்கள்
சட்டம்பி” யாகப் பணிபுரிந்தவர் இணுவில் காமி யம்மை பதிகம், இணுவை சிவகாமியம்மை தங்களையும் பஞ்சவன்னத்தூது என்னும் உலகியல்
நொண்டிநாடகம் அனிருந்தநாடகம் முதலிய
றுபவர்களாகிய கதிரைமலைக் குறவஞ்சி, குருக்கள் வன் விநாயகர்; நல்லைநாயக நான்மணிமாலை, சுப்பையர் கஞ்சன் காவியம், வலைவீசுபுராணம் முதலியோரும் ஒல்லாந்தர் காலத்தின் கடைக்
பச் சேர்ந்த ச. இராமலிங்க ஐயர் ( 1 649- ) மறைப்படி பஞ்சாங்கம் கணித்து வெளிப்படுத்திய சோதிடநூலையும் இயற்றினர்.
லும் பிரபந்தத்திலே போற்றப்படும் கண்டியரசன் வ. முடியாமல் இருப்பதாலே தம்பலகாமம் ஐ. ண்டினர் என்று சித்தாந்தமாகக் கூறுவதற்கில்லை.
யிலே யாழ்ப்பாணத்திலே சிறப்புடன் திகழ்ந்தவர் த கூழங்கையருக்குக் கனகசபாபதியோகி என்ற ண்டு. யோசேப்பு புராணம் முதலாம் நூல்களைப் “ன கூழங்கையர் பத்தொன்பதாம் நூற்ருண்டிலே நக் காரணமான வித்துவ பரம்பரையின் ஆக்கத்தி பிடத்தக்கது.

Page 86
ஈழத்துத் தமிழ்க்
சி. தில்லைநாதன்,
நாகரிகமடைந்த ஏனைய மக்கட் கூட்ட மக்களும் தமது பழமைமிக்க இலக்கிய வகையா. பழமைக்குச் சான்ருகக் காட்டப்படுபவை சங்க ஃவிதைகளாகும். அவர் காலம் முதல் பன்ன ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்ட கா
ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணத் நூற்றண்டு முதல் 17ம் நூற்றண்டின் முற்பகுதிவ அக்காலப் பகுதியிற் புலவர்களுக்கு அரச ஆதர காலச் செய்யுள் நூல்கள் பெரிதும் வைத்தியம், ! மிப்புராணங்களின் மொழி பெயர்ப்புக்களாகவுே
தமிழ்ப் புலவர்களுக்குச் சிங்கள அரசர்களி விலமர்ந்து ஆட்சி புரிந்த மூன்ரும் பராக்கிரம கண்டியை ஆண்ட கடைசி வேந்தனைக் கெள லிருந்து கிள்ளைவிடு தூது பாடிக்கொண்டு சென்ற போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆங்கி காலம் எனப்படும் காலப்பகுதியிலே (17ம் நூற் பல புலவர்கள் தோன்றிப் பல நூல்களை யாத்து பாலும் விசயநகர நாயக்க மன்னர் ஆட்சிக் கால போலவே சமயச் சார்பினவாகவும் புலமைத்திற சைவ, கிறித்தவ, இஸ்லாமிய சமயங்களைச் சார் தங்களும் தோன்றின. அத்தோடு நாயக்கர்கால பொதுமக்கட் சார்பான பள்ளு, குறவஞ்சி நூல் எண்ணிக்கையில் அதிகமான புலவர்களு வாழ்ந்த புலவர்களுள், யேசுமதப் பெருமைபாடு புலவர், சிவசம்புப்புலவர், புலவர் சுப்பையனர், குமாரசுவாமிப் புலவர், பாவலர் துரையப்பா சிறப்பாகக் குறிப்பிடத்தவர்களாவர். சொல்லா லும் தமக்கிருந்த திறனை இக்காலப் புலவர் பலர் ந பிரச்சினைகளையும் பொது மக்களுக்குப் பொருள் பாவலர் துரையப்பா பிள்ளையை ஈழத்துத் தமி கொள்ளல் கூடும். 、° 。
எவ்வாருயினும், ஈழம் அரசியல் விடுதலை இலக்கணம், நூற்பதிப்பு ஆகிய துறைகளில் ஈ கவிதைத்துறையில் ஈட்டவில்லை என்று கொள்ளு
இருபதாம் நூற்றண்டின் ஐந்தாவது அரசியற் சிந்தனைகளினுலும் பாரதியினுலும் ஆக கவிதை எனச் சிற்பிக்கத்தக்க கவிதை தோன்ற பால் மட்டும் மறுகி நிற்காது தேசத்தினதும் மக்க மானிடனும் அவனது சமூகமும் சிறந்துயர வேை களைத் தட்டியெழுப்பிற்று. செய்யுள் யாப்பே மாறி, உணர்ச்சிவெளியீட்டுச் சாதனமாகக் களி இக்காலத்தே பரவி வந்த தேசிய உணர்வின் சாய

கவிதை வளர்ச்சி
M. Litt. (Madras)
தினர்களைப் போலவே, ஈழத்துத் தமிழ் பேசும் க் கவிதையையே கொண்டிருக்கின்றனர். அப் காலத்தைச் சேர்ந்த ஈழத்துப் பூதன்றேவனர் ரண்டாம் நூற்ருண்டுவரையுள்ள காலப்பகுதி லமாகவே கிடக்கின்றது. ...' .
தை ஆண்ட காலப் பகுதியில், அதாவது 13ம் ரை, பல செய்யுள் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. வு கிடைத்தமையும் அவதானிக்கத்தக்கது. அக் சோதிடம் சம்பந்தமானவையாகவும், வடமொ ம அமைந்தன,
ன் ஆதரவும் கிடைத்திருக்கிறது. தம்பதேனியா பாகு போசராச பண்டிதனைப் புரந்தமையும், ரவித்துச் சிற்றம்பலப்புலவர் யாழ்ப்பாணத்தி மையும் சுட்டிக்காட்டப்படும் நிகழ்ச்சிகளாகும். லேயரும் இலங்கையை ஆண்ட ஐரோப்பியர் ருண்டுமுதல் ஈழம் சுதந்திரம் பெறும் வரை) ள்ளனர். அக்காலத் தெழுந்த நூல்கள் பெரும் vத்துத் தமிழ் நாட்டிலே தோன்றிய நூல்களைப் னை விளம்பரப்படுத்துவனவாகவும் அமைந்தன. ந்த பல புராணங்களும் வேறுபலவகைப் பிரபந் இறுதிக்கட்டத்திலே பிறந்தவற்றைப் போன்ற கள் பலவும் ஈழத்தில் எழுந்தன. ۔۔۔۔۔۔
ம் நூல்களும் தோன்றிய அக்காலப் பகுதியில் ம் ஞானப்பள்ளின் ஆசிரியரும், சின்னத்தம்பிப் அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர், சுன்னுகம் பிள்ளை, விபுலாநந்த அடிகள் முதலியோரும் ட்சியிலும் பல்வேறு யாப்புவகைப் பிரயோகத்தி ன்கு காட்டினர். சமகாலச் சமூகத் தேவைகளையும் விளங்கத்தக்கவாறு எடுத்துக் கூறிய வகையிற் bக் கவிதை வரலாற்றின் ஒரு மைற்கல்லெனக்
பெற்ற காலம்வரை, ஈழத்தவர்கள் உரைநடை, ட்டியதொத்த பெயரையும் புகழையும் தமிழ்க் வதே சாலும். ஆருவது தசாப்தங்களிலேதான் சமகாலச் சமூக ஷிக்கப்பட்ட கவிஞர்கள் தோன்றி, ஈழத்தமிழ்க் அடிகோலினர். அவர்களது பார்வை சமயத்தின் ளினதும் தேவைகளையும் நோக்கத் தலைப்பட்டது. எடும் என்னும் வேட்கை அவர்களது உணர்ச்சி இலக்கிய வடிவெனச் கொள்ளப்பட்ட நிலையும் தை உயரலாயிற்று. கீழைத்தேயமெங்கணும் லும் கவிதைகளிலே படிவதாயிற்று.
8

Page 87
புதிய தலைமுறைக் கவிஞர்கள் தாங்கள் மக்களையும் நோக்கி, ஈழத்தமிழ் மக்களின் 'நெஞ் கவிதைகளைச் செவியுறத் தெளிந்த நடையில் நெய் யினர் என்று ப. கு. சரவணபவன், சோமசுந்த பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பண்டிதர் சச்சிதா சுந்தரப் புலவர், பேராசிரியர் கணபதிப்பிள்ளை வாசனையை ஓரளவு தெரிவாகவே அனுபவிக்கல
மொழிப் பற்றினையும் சீர்திருத்த உண கருவியாக மறுமலர்ச்சிக்குழுவைச் சேர்ந்த நா. நீலாவணன், அ. ந. கந்தசாமி முதலியோர் பயன் வேகமும் பெற்றது.
இக்கவிஞர்களின் நோக்கும் வாக்கும் வி கவி, முருகையன், நீலாவணன், தான்தோன்றிக் வேந்தனர் முதலியவர்களை உள்ளடக்கிய தமிழ் தக்க ஒரு கவிஞர் பரம்பரை உதயமாயிற்று. இரத்தினதுரை, மெளனகுரு முதலிய இளைஞர்கள் மானிடனின், சிறப்பாக ஈழத்து மானிடனின், அ பொழிகின்றனர். அவனது விறுமைகள் கழியவு காலத்துக் கேற்ற சமூக, பொருளாதார, அரசிய மாக வெளியிடும் திறனைத் தமிழ்க்கவிதை இவர்க் விளக்கங்களை எளிய தமிழிற் கவிதை யாக்கியுள்
பாரதிதாசனுக்குப் பின்னர் தமிழ் இலாகாக்களை நோக்கிக் காவடியெடுக்க ஈழத்து தன் உறவினை வலுப்படுத்திக்கொண்டிருக்கின்ற
அதற்கு உதவின.
9-10.55 T69 விஞ்ஞான, சமூக, அரசிய தம்முள் மாறு படும் வாழ்க்கை முறைகளும் ச வதையும், மக்களோடு அநாயாசமாகத் தொட கையாளப்படுவதையும், எதார்த்தப் பண்பும் இன்றைய ஈழத் தமிழ்க் கவிதைகளிற் பரக்கக் ச
மக்கள் உள்ளங்களைத் தொடவல்லதெ மறுத்துப் புதுச் சிந்தனை ஓட்டங்களை யாப்புள பலரும் ஈழத்திலுள்ளனர். அவர்களுட் சிலர் யோட்டங்களை வெளியிடுகின்றனர். அவர்களு திறனும், மக்களை வசப்படுத்தும் வேட்கையும் வ நயமும் பெறுவதை அவதானிக்க முடிகின்றது.
விற்பனை வசதிகளை மிக மிகக் குறைவ
நூற்ருண்டுக் காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கலி படத்தக்கதே. .

நின்றிருந்த மண் % யும் தங்களைச் சூழ வாழ்ந்த நசகத்தாவலை வெ ரியிடும் தனித்துவும் வாய்ந்த ப்ய அடியெடுத்துக் கொடுத்த பழைய தலைமுறை ரப்புலவர், முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி, ானந்தன் ஆகியோரைக் குறிப்பிடலாம். சோமி ஆகியோரின் கவிதைகளில் உள்ளூர் மண்
Th.
ார்வினையும் ஊட்டுவதற்குக் கவிதையை ஒரு வற்குழியூர் நடராசன், முருகையன், மஹாகவி, படுத்திய போது, அது உணர்ச்சியூட்டும் வலுவும்
சாலமும் வளமும் பெற்ற வேளையிலேயே மஹா கவிராயர், புரட்சிக்கமால், அண்ணல், வித்துவான் நாட்டுடன் ஒப்பிட்டுப் பெருமைப் பாராட்டக் எம். ஏ. நுஃமான், இ. சிவானந்தன், புதுவை ர் இப்பரம்பரையைச் சேர்ந்தவர்களே. இவர்கள் அகத்தையும் புறத்தையும் விண்டுணர்ந்து கவிதை ம் பெருமைகள் கூடவும் கவிதை பாடுகின்றனர். பல், விஞ்ஞான, மானிட உணர்வுகளை இலாவக 5ள் கரங்களிலே பெற்று வாழ்கின்றது. விஞ்ஞான ளார் இ. சிவானந்தன்.
நாட்டுக் கவிதையானது சினிமாப் பாடல்
க் கவிதை பொதுமக்களை நாடி அவர்களோடு ரது கவியரங்கங்களும் கவிதை நாடகங்களும்
ற் கருத்துக்களும நிகழ்ச்சிகளும் மட்டுமன்றித் மூக மதிப்பீடுகளும் பொருளாகக் கொள்ளப்படு ர்பு கொள்ளும் பேச்சு வழக்கும் பேச்சோசையும் அங்கதச் சுவையும் பொருந்தியிருப்பதையும் iாணலாம்.
னக் கொள்ளப்படும் ஒசைநயத்துக்கு இடமளிக்க டங்காப் ‘புதுக்கவிதை களாக வெளியிடுவோர் மனதிற் பதியும் வகையில் மெச்சத் தக்க சிந்தனை க்குப் புதிய சிந்தனைத் தெளிவும், சொல்லாட்சித் 1ளரவளர அவர்களது படைப்புக்கள் செம்மையும்
1ாகக் கொண்ட எமது நாட்டிற் கடந்த கால் பிதைத் தொகுதிகள் வெளிவந்திருப்பது பெருமைப்
79

Page 88
புதிய ஈழத்துத்த
சு. கலாபரமேஸ்வ
இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேற்பட்ட ஈழத்துத் தமிழ்க் கவிதையின் இன்றைய காலத்ை இணும், பிற நவீன இலக்கிய வடிவங்கள் போலன்றி லத்திலேயே இனங்கன்டு கொள்ளக் கூடியதாகவுள் லும் கவிதை மறுமலர்ச்சியின் தாக்கங்களை ஆங் பொதுவான இலக்கியப் பண்புகளாகவோ, ஈழத்தி வோகொள்ளமுடியாதிருக்கின்றன. ஆனல் தமிழகத் கள் சிறிது சிறிதாகத் தேய்ந்துகொண்டு சென்ற :ே இம் வீறும் பெற்றது. அக்காலகட்டத்தையே இ6 தோற்றக் காலம் எனக் கொள்ளலாம் எனத் தெரி
எளிய பதங்கள், எளிய நடை, வெகுஜனபா தமிழ்க் கவிதையை நடக்கச் செய்து இன்றைய கின்ருர் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ள நத்தை ஆற்றல்மிக்க புரட்சிக் கவிஞர் பாரதிதாச கவிதை புதுவளம் பெற்றுப் பொலிந்தது எனினு! திக்குப் பிறகு தோன்றியவர்களின் கவிதை வளர் பலதிறனுய்வாளர்கள் கருத்துத் தெரிவித்து வரு
அரசியல் இயக்கங்களாலே தமது கவித்து கண்ணதாசனுல் தமிழ்க் கவிதை உலகின் வெறுை எனினும், பாரதிபரம்பரை எனத் தம்மைக் கூறி வைக் காணக் கூசி ஒதுங்கித் தமக்கு மட்டுமே உரி திக் கொண்டும், கற்பனை உலகிற் சிறகடித்துப் காலங்கடந்த கவி வடிவங்களிலும் அலுத்துப்ே பண்பினைக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு பார, தமிழ்க்கவிதைக்கு ஈழத்திலே புதிய வலுவும் வி உடனடியாக இல்லா விட்டாலும், ஐம்பதுகளை ஆதார சுருதியாகக் கொண்டு புதிய செய்யுள் வடி பண்பும் கலை மெருகும் குன்ருத வளமுள்ள தை கவிஞர்கள் ஈழத்திலே தோன்றினர்கள்,
1948ல் இலங்கை அடைந்த சுதந்திரம், இந்: டம் எதுவுமே இல்லாது கொடுக்கப்பட்ட ஒன்ருச யாகப் பின்னரும், தேசிய உணர்ச்சி சுடர்விடும் தாகத்திலே பாரதி பொழிந்த கவிமழை ஈழத்தில் கூறலாம். நாட்டு மக்களின் தனித்துவம், பார * கவிபுனைந்த'திற் சோமசுந்தரப் புலவர், நல்லதம் மானவர்கள். எனினும், அப்பண்பானது, இவர் கூறிவிட முடியாது. இவர்களை அடுத்துத் தோன்ற பிள்ளை, சு. நடேசபிள்ளை, பேராசிரியர் கணபதி களிற் கவியாற்றலைக் காணக் கூடியதாகவிருந்த அபிவிருத்திகளையோ, கவிதைத்துறையிற் ருேன்றி தடத்திலேயே சென்றனர். ஈழத்தமிழ் வளர்ச்சி

மிழ்க்கவிதை
JST, B. A. (Hons.)
வரலாற்றினை உடையதாகச் சொல்லப்படும் தப் பற்றித் தெளிவாகக் கூறக் கூடியதாயிருப்பி க் கவிதையின் தற்காலப்பண்பு மிகவும் பிற்கா ாது. பாரதியை ஒட்டிய காலப் பகுதியிலே ஈழத்தி காங்கே காணக்கூடியதாக இருப்பினும் அ ைவ ாதனித்துவமான அம்சங்களைச் சுட்டிநிற்பனவாக திலே பாரதி பரம்பரையினரின் கவிதைச் சாதனை பளையிலேயே ஈழத்திலே தமிழ்க்கவிதை புதியவலு ாறைய ஈழத்துத் தமிழ்க் கவிதையின் மெய்யான கின்றது.
ணிை, புதிய கருத்து என்று உயிர்தரும் போக்கிலே தமிழ்க்கவிதையின் தலைமகளுகப் பாரதி விளங்கு Tப்பட்ட ஒர் உண்மையாகும். பாரதியின் மாற் ன் புதிய திசையில் இட்டுச் சென்றபோது தமிழ்க் ம், ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது, பார “ச்சி பெருமைப்படத்தக்க அளவு இல்லை என்று கின்றனர்.
வத்தைப் பலியிடாமல் இருந்திருப்பாரேயா, னற் மயை ஓரளவாவது நிறைவு செய்திருக்கக் கூடும். க்கொள்ளும் பலர் சாதாரண மக்களின் வாழ் த்தான தனி உலகிலே தம்மைத் தனிமைப்படுத் பறந்தும், பழந்தமிழ்ப் பெருமையில் மூழ்கியும் போன உத்திமுறைகளிலும் கவிபாடும் நசிவான திக்குப் பின் வலுவிழந்து சென்று கொண்டிருந்த றும் கொடுக்கப்பட்டன. பாரதிக்குப் பிறகு, அடுத்து, நமது காலத்திய அன்ருட வாழ்வை வங்களில் நவீன உத்தி முறைகளுடன் இயற்கைப் ரிச்சிறப்பான கவித்ைகளை ஆக்கியளிக்கின்ற பல
நியா ஈட்டிய சுதந்திரம் போலன்றிப், போராட்
இருந்தமையால் அதற்கு முன்னரும், உடனடி பாடல்கள் எழவில்லை. ஒரு வகையிற் சுதந்திர அப்போது பொருளற்றதாக இருந்தது எனவும் ம்பரியம், விதேசிய எதிர்ப்பு என்பன பற்றிக் பிப் புலவர், சரவணபவன் ஆகிய மூவரும் முக்கிய 1ளது கவிதையின் தனிச்சிறப்பான பண்பு எனக் ய நவநீதகிருஷ்ணபாரதியார், ஏ. பெரியதம்பிப் பிள்ளை, நவாலியூர், சோ. நடராசன் ஆகியவர் ாலும், அவர்கள் சமூகத்திற் ருேன்றிய புதிய பவிழிப்புணர்ச்சியையோ பிரதிபலிக்காது பழைய பிலே பிற நவீன இலக்கிய வடிவங்களிலே மறு
80

Page 89
மலர்ச்சிக் காலமாக விளங்கிய நாற்பதுகளிலே கட் வியப்பானதே. இதற்குச் சிறிது பிற்பட்ட ஐம்ப விழிப்புணர்ச்சிக் காலம் தொடங்குகின்றது. அ ஆரம்பம் போலத் தெரிகின்றது. இதன் பிரதி முருகையன், நீலாவணன், சில்லையூர் செல்வராச
நாற்பத்தெட்டின் அரசியற் சுதந்திரம் ஒ மக்கள் தமது பேச்சு, சிந்தனை, கல்வி, சமுதாய வம் இழந்து விதேசிய கலாசார ஆதிக்கத்தினின்று யர் போல அடங்கி வாழ்ந்தனர். சமூக பொருள மான சுதந்திரம் கிடைக்காத போது, அவர்கள் வ மான வாழ்வு முறைகளைப் பேணவும், தமது காளி பிரச்சினைகளின் அடிவேர்களை ஆழ்ந்து ஆயவும்
ஈழத்து வரலாற்றிலே 1956 ல் ஏற்பட்ட தாரத் துறைகளிற் புதிய விழிப்புணர்வு ஏற்பட பொங்கிப் பிரவகித்தது. இந்நிலையிலே தமக்கே பண்புகளைப் பேண வேண்டும் என்றவொரு முனை கிராமிய மகன் அடங்கியிருந்த முன்னைய நிலைக்கு ப காண விழைந்தமையும் மிகவும் முக்கியமானவை கைப் போக்கை எந்தளவு பாதித்தன எனத் மனிதன் சமூக வாழ்விலே தலை தூக்கியமையான அது எமது வாழ்க்கைப் போக்கில் ஒரு பெரும் ம மறுக்க முடியாது. y
இம்மாற்றங்களின் உள்ளார்ந்த அம்சங்க முழுமையாக உணர்ந்திருந்த அதே அளவுக்குத் னர் என மேற்போக்காகக் கூறிவிட முடியாது என சிறுகதை போலக் கவிதையின் பொருளிலும் வடி அதன் வழிப் புதிய மாற்றத்திற்கான விழைவு தெளிவாகப் புலப்படுகின்றது. 1956ன் பின் தமி போராட்டங்களும் நடாத்திய போது அதனை ெ வளமுள்ள கவிதைகள் காசி. ஆனந்தன், டிரமஹ ருேராற் பாடப்பட்டபோதும், அது ஈழத்துக் க பண்பாக நின்று நீடிக்கவில்லை. நம்மவரின் தமிழு டெழச் செய்யப் பாரதி, பாரதி தாசன், கன் இந்நிலையிலே, சாதாரண மக்களின் வாழ்வையு களையும் முனைப்புக்களையும் கலாபூர்வமாகப் புலப் தொடங்கியமை நமது கவிதை வரலாற்றிலேெ குறித்து நிற்கின்றது. ஐம்பதுகளின் நடுப்பகுதிவ பல சமூக விடயங்கள் புதிய ஈழத்துக் கவிதைக் புதுநிலை, முரண்பாடு, அதிருப்தி உட்பட்ட சக தளைகளால் மக்கள் பட்டிருந்த அவதி, நிலப் பிர வலுவாக்கியவகை, சமூகத்திலே போலி ஆச புதிய பார்வையில் நேர்மையாகவும் நிதரிசனம தொடங்கின.

விதை மட்டும் பழைய தடத்திலேயே சென்றமை துகளின் நடுப்பகுதியிற்ருன் ஈழத்துக் கவிதையின் துவே தற்கால ஈழத்துக் கவிதையின் மெய்யான நிதிகளாக நாவற்குழியூர் நடராசன், மஹாகவி, ன், வேந்தனர், அண்ணல் ஆகியோர் தோன்றி
ரு வெற்று வடிவமாக இருந்த நிலையிற் சாதாரண நோக்கு, வாழ்க்கை எல்லாவற்றிலும் தனித்து ம் நீங்கமுடியாமற் பிறந்த மண்ணலேயே அன்னி ாதாரத் துறைகளில் நாட்டு மக்களுக்கு நிதரிசன ழிவழிவந்த இம்மண்ணுக்கே உரித்தான தனித்துவ 2த்துச் சாதாரண மக்களின் அன்ருட வாழ்க்கைப் முனையவில்லை.
மாற்றத்தின் வழி அரசியல், சமூக, பொருளா ட்டதுடன், நாட்டிலே ‘தேசியம்’ என்ற பேரலை சிறப்பாக வாய்த்த பாரம்பரியக் கலாசாரப் :ப்புப் பலமாகத் தலை தூக்கியமையும் சாதாரண மாருகத் தனது சமூக நிலையிலே புதிய எழுச்சியைக் 1. இவையெல்லாம் ஈழத் தமிழ் மக்களின் வாழ்க் திட்டமாகக் கூறமுடியாவிட்டாலும், சாதாரண து நாட்டுக்கே ஒரு பொது நிகழ்வு என்பதனையும் ாற்றத்தைச் சுட்டி நிற்கின்றது என்பதனையும்
ளை அன்றைய சிங்களச்சிருஷ்டி இலக்கிய வாதிகள் தமிழ்க் கவிஞரும் எழுத்தாளரும் உணர்ந்திருந்த Eனும் இன்று பின் நோக்கிப் பார்க்கின்ற போது டவிலும் தமது காலம், சமூகம் பற்றிய பிரக்ஞை, என்பவை அக்கால கட்டத்திலே தோன்றியமை ழ் மக்கள் தமது உரிமைகளைக் கோரி இயக்கங்களும் வாட்டித் தமிழுணர்வு நிரம்பிய ஒசைப்பாங்கான றம்ஸதாசன், ராஜபாரதி, கரவைக்கிழார் போன் விதையின் உயிர்த்துடிப்புள்ள பொது இலக்கியப் ழணர்வையும் சுதந்திர தாகத்தையும் வீறுகொண் "ணதாசன் ஆகியோரே பயன்படுத்தப்பட்டனர் , ம் சம காலத்திய சமுதாய வாழ்வின் சகல முனை படுத்துகின்ற கவிதைகள் ஈழத்திலே தோன்றத் யாரு புதிய கால கட்டத்தின் தொடக்கத்தைக் ரை இலக்கியத்தில் எடுக்கப்படாது ஒதுக்கப்ப்ட்ட க்குப் பொருளாயின. சமுதாயத்திலே தோன்றிய ல கருத்தோட்டங்கள், பொருளாதார அடிமைத் ாபுத்துவமும் தீண்டாமையும் சமூகப் பிரச்சினை கிளை ாரங்களின் ஆதிக்கம் போன்றவற்றையெல்லாம் ாகவும் பாடும் கவிதைகள் பெருனாரியாக வரத்

Page 90
ஈழத்துக் கவிஞர் கவிதைப் பொருளில் வெளியீட்டிலும் வடிவிலும் உத்திகளிலும் புதியபு யினரை ஒத்து ஈழத்திலும் எளிய தமிழிலே சிந்துச சிறிது சிறிதாக முக்கியத்துவம் இழக்கத்தொடங் கிளை வளர்த்துத் தேய்ந்து சென்ற போது, மறுபுற தது. தற்கால வசன அமைப்புடன், பெரும் அள நிரம்பிய, இலக்கண வளம் குன்ருத செய்யுள் வாக் நிரம்பிய கருத்துக் கோர்வையுடன், இயற்கைய இழையோடத் தம் கவிதைகளை ஆக்கத் தொடங்! கூட - குறிப்பாக வெண்பா, கட்டளைக்கலிப்பா, ச கள் மிகுந்த வடிவங்களிலும் - இன்றைய எமது நவ செயறபடுத்தி உள்ளார்கள்," என நுஃமான் கு பக். 34, பங்குணி, 1968),
ஈழத்துத் தற்காலக் கவிஞர்களுட் காலத் வழங்கு தமிழில் மிடுக்கு நடையுடன் வளமான கவி பல புதிய தனித்துவமான கவிப்பண்புகள் கொண் சிலம்பொலியையும் காதலையும் சுவையாகப் பா கருத்தோட்டங்களையும் கூடவே தொட்டுச் செல்கி குக் கொடுத்த சிறப்பிடம் இன்றைய ஈழத்துத் தமி
மஹாகவி இன்றைய ஈழத்துத் தமிழ்க் க கொள்ளக் கூடியதுமான வடிவப்பண்புக்ளை அளி மே வியெழும் தமிழ்க்கவிஞணுக வளரும் திறமையு மு. தளையசிங்கம் குறிப்பிட்டது வெறும் புகழா 1968) பிற நவீன சிருஷ்டியிலக்கியங்கள் போன்று ஜனரஞ்சகமாக்கி, அதனை இன்றைய உலகுக்கு அருகி வரும் கலையாகிவிடும் என மஹாகவி பூர முகவுரை) "சாதாரண மனிதனின் பழுதுபடஈ உ கருதினர் (பேராசிரியர் சு. வித்தியானந்தன்,மஹி
அதற்கியைய நாளாந்தம் நமது வாழ்வி பிரச்சினேகள், உறவுகள், ஏக்கங்கள், அபிலாவுை நிதரிசனக் காட்சிகள் முதலியவற்றையெல்லாம் தெளிவாகச் சித்தரித்து, அவர்களின் மனப்பாங்கு படுத்தி அதன் வழி மொத்தமான சமூ. இயக்கமுறையிற் காட்டிச் சமூகத்தின் தனிப்பாடல்களைப் பொறுத்தவரையிற் சீமாட்டி, வன், மீண்டும் தொடங்கும் மிடுக்கு போன்ற பா வழி வந்த இடர்களால் மாய்ந்து மடியாமல் எ ஏக்கம் மிகுந்த துயரம் தோய்ந்த உயிர்களையும் போலிகளை நையாண்டி செய்து பொய்ம்மையாள செல்கின்றர். லாவகமான சொல்லாட்சிகளுடன் செல்லும் பணியே தனியானது. அவர்தமது கவி எல்லாவற் றையும் மீறி ஒரு கலைத்துவம் உயிர் ெ தமது தனிப்பாடல்களைத் தவிர கல்லழகி, சடங்கு சரித்திரம் ஆகிய காவியங்களையும், கோடை, பு ஆக்கிஞர். −

ஏற்பட்ட மாற்றத்திற்கு இயையக் கவிதையின் திய முறைகளைத் தொடங்கினர். பாரதிபரம்பரை ளும் விருத்தங்களும் தோன்றிய போதும், அவை கின. விருத்தப்பா ஒரு புறத்திற் சந்த விகற்பங் ம் பேச்சோசைப் பண்பு பெற்றுப் புது நிலையடைந் வு ஒற்றுமையுடைய சிறுதொடர் அமைப்புக்கள் கிய அமைப்பில், ஆற்றெழுக்கான ஒழுங்கமைப்பு ான தாளலயம் குன்ருத பேச்சோசைப் பண்பு கினர். மரபு ரீதியான செய்யுள் உருவங்களிலும் லித்துறை, கலிவிருத்தம் போன்ற வரையறுப்புக் iன கவிஞர்கள் இந்தப் பேச்சு மொழிப் பண்பைச் றிப்பிடுவது மனங்கொள்ளத்தக்கது ( 'கவிஞன்,
3தால் முந்தியவரான நாவற்குழியூர் நடராசன் தைகளை அளித்தபோதும் கூட மஹாகவி போன்று "டு ஒரு மாற்றத்தைச் சுட்டி நிற்கவில்லை. அவர் டியதுடன் நிற்காது சமூகப் பிரச்சினைகளையும் ன்ருர், அன்னர் வானெலியிலே தமிழ்க் கவிதைக் ழ்க் கவிதை வளர்ச்சியிற் குறிப்பிடத்தக்கதாகும்.
விதைக்கு வரையறுக்கக் கூடியதும் இனங்கண்டு த்தார். ‘பாரதிக்குப் பின் பாரதி தாசனையும் ம் செயலும் மஹாகவியிடம் உண்டு" என்று ரம் அல்ல (மு. பொன்னம்பலம்: அது பக். 6, கவிதையிலும் தற்கால விடயங்களைக் கையாண்டு இழுத்து வராவிட்டால் அது உண்மையாகவே ணமாக நம்பினர். (வீடும் வெளியும், 1973, உள்ளத்திற் பாயப்பிறப்பது கவிதை' என அவர் . ற rக வி. நினவுமலர், பக். 7, 1971).
ற் காணும் சாதாரண மனிதர்களின் அன்ருடப் 1கள், அவர்கள் மத்தியில் நாம் காணக் கூசும் இன்றைய சமூக பொருளாதாரப் பின்னணியிலே இயல்புகள், எல்லாவற்றையும் சீராகப் புலப் கத்தின் வாழ்வோட்டத்தைப் பூரணமான மனச்சாட்சியாக விளங்குகின்றார். அவரது செத்துப்பிறந்த சிசு, வீசாதீர், திருட்டு, நீரு ழ டல்களில் இம்மண்ணின் வறுமைக் கொடுமையின் ப்படியும் தம் வல்லமையால் வாழ முனைகின்ற உழைப்பாளர் கூட்டத்தையும் காட்டுகின்றன. ரை வசை பாடித் தமது கவிதையை நடாத்திச் ஆற்ருெழுக்காக அவரது கவிதைகள் அமைந்து தைகளிற்காட்டும் காட்சிகள், வீசும் கருத்துக்கள் பற்று நிற்பதை நாம் காண்கின்றேம். மஹர்கவி , கண்மணியாள் காதை, சாதாரண மனிதனின் யதொரு வீடு ஆகிய கவிதை நாடகங்களையும்
32

Page 91
தாம் சொல்ல வந்த வாழ்நிலை சார்ந்த க மாகக் கவிதையைக் கையாண்ட மஹாகவி, செய் னர். ‘வசனத்தின் உயர்நிலையே செய்யுள்'(வீடும்ெ வசன அமைப்பினை ஒத்து, சிறு தொடர் அை தொழுங்கு அமைந்தும், இயற்கையான தாள ல கவிதைகளைப் புதிய முறையில் அமைத்தார். “குறு செய்தார். இவ்வாறு ஈழத்திற் கவிதை நடைை கவிஞர்க்கும், கவியுணர்வு கொண்டு வேகமும் வீ. பரம்பரைக்கும் மஹாகவி ஒரு முன்னுேடியாக வி
மஹாகவி வாழ்ந்த காலத்தே தமது கவி வணன் ஆகியோரிடமும் இக்கவிதைப் பண்புகை ஏற்பட்ட அகப்புறத்தாக்குதல்கள் சமுதாயத்தை மான புதிய பார்வையில் முருகையன் சித்திரிக்குப் யம் தவருது நடக்கும் இவரது கவிதைகள் எளில் கரில் உயிர்ப்புடன் நடந்து செல்லும் பேச்சோை பெற்றதாகும்.
மஹாகவி தற்கால ஈழத்துக் கவிதைக்குச் வத்துக் கேற்ற வகையிற் சாதகமாக்கிப் புதிய-பர் சத்தியசீலன், சடாட்சரன், புதுவை ரத்தினதுை வி. கந்தவனம், ச. வே. பஞ்சாட்சரம், காரை. நமது இலக்கியத் தனித்துவத்தைப் பேணி வருகி
Maaarawaw
' யாழ்ப்பாணம் ஒரு சிறு நூலையே? நரில்லாத தேசம் என்றீர். தமிழிலே இராமேசர் கிள்ளைவிடுதூது, செகர தாகரம், தகதிண கைலாசபுராணப் புராணம், பரகிதம், புலியூர் யம மறசையந்தாதி, திருவண் சைனக்கு திருநாகைக் குறவஞ்சி,திருநல்லைக்கி திருநல்லை யந்தாதி, வேதாந்த சொ ணிதம், விரிவகராதி முதலியன யா, வென்பதை அறிந்தடங்கக்கடவீர்

விப் பொருளைப் புலப்படுத்துவதற்கேற்ற வாகன யுள் வடிவத்திலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வளியும், முகவுரை) எனக் கருதிய அவர் இன்றைய மப்புக்கள் நிறைந்ததும் ஆற்ருெ முக்கான கருத் யம் குன்ருத பேச்சோசைப்பண்பு பெற்றதுமான 1ம்பா’ மூலம் புதிய கவிதைப் பரிசோதனை யையும் யப் புதிய திசையிற் திருப்பித் தமது காலத்திய றும் மிக்க கவிதைகளை ஆக்கத் தொடங்கிய புதிய ளங்கியமையை எவரும் மறுக்கமாட்டார்.
தை வாழ்க்கையை ஆரம்பித்த முருகையன், நீலா ா காணமுடிகின்றது. நமது சம கால வாழ்வில் ப் பலவாருகப் பாதிக்கும் பாங்கினைக் கலாபூர்வ ப7ணியே தனியானது. ஆற்றெழுக்காக, தாள ல மையும் தெரிவும் கொண்டவை. இவர் கவிதை ச தரும் ஒத்திசைவு வாசகரை இழுக்கும் ஆற்றல்
க்கொடுத்த உயிரான பண்புகளைத் தமது கலைத்து ாப்ரையினரான நுஃமான், மு. பொன்னம்பலம், ர, ஜீவா ஜீவரத்தினம், துரையர் முதலானேரும்
சுந்தரம்பிள்ளை போன்ருேரும் கவிதைகள் ஆக்கி ன்றனர்
னும் ஒருசிற்றுரையையேனும் செய்கு 0 ஹ்ேமாத்திரிகற்பம், இரகுவம்சம், ாசசேகரம், பரராச சேகரம், அமு b, சிவராத்திரி புராணம், ஏகாதசி கவந்தாதி, கல்வளையமகவந்தாதி, றவஞ்சி, திருமாவைக்குறவஞ்சி, ள்ளை விடுதூது, திருநல்லைவெண்பா, rயஞ்சோதி, நியாயலக்கணம், வீசக ழ்ப்பாணத்தா ராற் செய்யப்பட்டன்
ஆறுமுகநாவல்ர் நல்லறிவுச் சுடர் கொளுத்தல்

Page 92
ஈழத்துத் தமிழ்ச் சிறுகள்
அருணுசல
புனைகதை இலக்கியம் சாதாரண மக்க லாஷைகளையும், எழுச்சி வீழ்ச்சிகளையும், இன்பது ரிப்பதாகும். இப்புனைகதை இலக்கியத்தின் ஒரு ஆண்டையடுத்துத் தோன்றியது. ‘ஈழத்துச் சிறு சி. வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியோர் சிறப்
இவ்வாரம்ப காலச் சிறுகதையாசிரியர்க காசக் கருத்துகளுக்கும், ஆண்-பெண் உறவுக்கும், வம் கொடுத்தார்களேயன்றித் தாம் வாழும் ச யதார்த்தத்துடனும் தம் கதைகளிற் பிரதிபலிக்க யர்கோன், வைத்தியலிங்கம் ஆகியோரின் கதை போதும், பிரதேச மண்வாசனையுடன் அவ்வப் பி வனவாக அமையவில்லை. -
ஏறத்தாழ 1940-ம் ஆண்டையடுத்து இ. நாட்டின் மறுமலர்ச்சிச் சிந்தனைகளும், காத்தீய அதனைத் தொடர்ந்து வெளியாகிய வேறுசில பத்தி கூறப்பட்ட மாற்றத்திற்கு உந்து சக்தியாக விளங் மாற்றமும் விரிவும் ஏற்படலாயின. சமுதாய உை தொடங்கின. அ. செ. முருகானந்தம், அ. ந. க. இராசரத்தினம், கனக, செந்திநாதன், சு. வேலுட வாழும் சமுதாயத்துடன் இணைந்து நின்று சமுதா காட்டியதோடு, சமூக சீர்திருத்தத்திற்கும், சமூ யும் ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைந்தனர்.
இம்மரபு ஏறத்தாழ 1956ம் ஆண்டிையொட சியடையத் தொடங்கியது. 'கலை கலைக்காகவே' எ மக்களுக்காக, மக்களின் முன்னேற்றத்திற்காக.எ நாட்டிற் புதுமைப் பித்தன், விந்தன் ரகுநாதன் நீல-பத்மனுபன் முதலியோர் எவ்விதம் தம் கை அகலமாகவும், கூர்மையாகவும் நோக்கிச் சித் பல எழுத்தாளர்கள் சமுதாயப் பிரக்ஞையுட6 தைச் சார்ந்த எழுத்தாளர்கள் மட்டுமின்றித் தா யேயிருந்தும், ஏழைத் தொழிலாளிகள், விவசாயிக றித் தத்தம் சமூகத்தினரின் குறைநிறைகளையும், ! எழுச்சிகளையும் தம் கதைகளிற் தத்ரூபமாகச் சித வட்டத்திற்குள் நில்லாது, யாழ்ப்பாணம், மட்ட போன்ற இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலு தேச மண்வாசனையுடன் சிறப்பாகச் சித்திரித்துள்
8.

தகளிற் சமுதாயநோக்கு
b, B. A. (Hons)
ாத் தலைவர்களாகக் கொண்டு அவர்களின் அபி ண்பங்களையும், பல்வேறு பிரச்சினைகளையும் சித்திரிப் பிரிவான சிறுகதை இலக்கியம் ஈழத்தில் 1930ம் கதை முன்னேடிகள்’ என இலங்கையர்கோன், சிக்கப்படுவர்.
ள் வரலாற்றுச் சம்பவங்களுக்கும், புராண இதி அக உணர்வுப் போராட்டங்களுக்கும் முக்கியத்து முதாயத்தின் பிரச்சினைகளை நேசபாவத்துடனும் ச் செய்வதிற் கவனம் செலுத்தவில்லை. இலங்கை நகள் பல, ஈழத்தைக் களமாகக் கொண்டுள்ள ரதேசங்களின் சமுதாயப் பிரச்சினைகளைக் காட்டு
த்தகைய நிலைமை மாறத் தொடங்கியது. தமிழ்
இயக்கமும், மணிக்கொடிப் பத்திரிகையினதும் திரிகைகளினதும் இலக்கியப் பரிசீலனைகளும் மேற் ங்கின. ஈழத்துச் சிறுகதையின் உள்ளடக்கத்தில் னர்வும் சமுதாய நல ஈடுபாடும் அழுத்தம் பெறக் ந்தசாமி, தி. ச. வரதராசன் (வரதர்), வ. அ. டபிள்ளை (சு. வே.), செக்சன் போன்றேர் தாம் பப்பிரச்சின களை மனிதாபிமானத்துடன் எடுத்துக் க முன்னேற்றத்திற்கும் சிறுகதை இலக்கியத்தை
படிப் புதிய வீறுடன் மிகவும் வலுப் பெற்றுவளர்ச் ன்னும் சித்தாந்தம் கைநெகிழவிடப்பட்டுக் கலை எனும் கொள்கை உரம்பெற ஆரம்பித்தது. தமிழ் அழகிரிசாமி, ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, தகளிற் சமுதாயப் பிரச்சினைகளை ஆழமாகவும், திரித்தனரோ அதே போன்று ஈழத்திலும் சிறுகதைகளை எழுதினர். மத்திய தரவர்க்கத் pத்தப்பட்டவர்கள் எனக் கூறப்படும் மக்களிடை fடையே யிருந்தும் பல எழுத்தாளர்கள் தோன் இன்னல்களை யும், மனக் குமுறல்களையும் எண் ண திரித்தனர். இவ்வெழுத்தாளர்கள் குறுகிய ஒரு ங்களப்பு, திரிகோணமலை, கொழும்பு, மலையகம் ம் வாழும் மக்களின் பிரச்சினைகளை அவ்வப் பிர magiri.

Page 93
செல்வந்தர்கள், பெரியவர்கள், தருமவா சுரண்டுபவர்களின் போலித்தனத்தையும், மனித ஊழல்களையும், யுத்தம், பஞ்சம் போன்ற நெ பயன்படுத்திப் பணத்தைப் பெருக்கிக்கொள்ளும் களின் ஊழல்களையும், ஏழைகளை ஏமாற்றிப் பணம் முருகானந்தம், என். கே. ரகுநாதன், சொக்கன் அம்பலப்படுத்தியுள்ளனர்.
நல்லொழுக்கம், கடவுள் பக்தி, நேர்மை றைப் பற்றி மேடைகளிலே வாய்கிழியப் பேசும் யும் அந்தரங்கஊழல்களையும், சீர்கேடான நடத் களுக்கும் நன்மை செய்வதாகக் கூறிக் கொ ஊறியிருக்கும் சாதிவெறியையும், விந்தையான போன்ருேர் தம் கதைகள் சிலவற்றிற் சுட்டிக்கா
யாழ்ப்பாணத்தில் அடிக்கடி நிகழும் கால் வழக்குப் பேசிப் பணத்தை விரயஞ் செய்யும் இய தம் கதைகளிற் காட்டியுள்ளனர். சமுதாயத்தில் கள் ஏற்படுகையில் பழமைக்கும் புதுமைக்கும் களையும், அத்தோடு மாற்றங்கள் தவிர்க்கமுடிய அ. செ. முருகானந்தம், கனக. செந்திநாதன், மு புலப்படுத்தியுள்ளனர்.
தமிழ்ச் சமுதாயத்தின் சாபக் கேடாக மான உட் பிரிவுகளையும், அதனுல் ஏற்படும் பிரச் பாகத் தம் கதைகளிற் சித்திரித்துள்ளனர். த சாதிப் பிரச்சினையால் அடையும் இன்னல்களையும் களையும் டொமினிக் ஜீவா, டானியல், வ. அ. ஆகியோர் தம் கதைகளில் விரிவாகவும் சிறப்ப
சாதியமைப்புக்கான அடிப்படைக் கார அதற்குரிய மார்க்கங்கள் முதலியவற்றையும், தய தப்பட்டோரெனப்படுவோர் நடத்திவரும் போர கொண்டு வரும் சாதியாசாரங்களையும் டான நீர்வை பொன்னையன், எஸ். பொன்னுத்துரை, யோகநாதன், நகுலன் போன்றேர் தம் கதைக
சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தினரின் ஆடம்பரச் செயல்கள், போலித்தனமான குடும்ட பாடாற்ற விடுதலை, வக்கிரகாமம் முதலியவற்ை பொன்னையன் போன்ருேர் எடுத்துக்காட்டியுள்
ஈழத்தின் பல்வேறு பாகங்களிலு வாரு சீதன முறை முதலியன காரணமாக, வாழ வழி


Page 94
பரிதாப நிலையையும், சீதன முறையினுல் ஏற்படும் பெண்களின் நெறியற்ற நடத்தைகளையும், ஆட கயவர்கள் இளம் ஏழைப் பெண்களை ஏமாற்றி அவ யைக் கெடுக்கும் இராக்கதப் பண்பையும் நகுலன் நாவேந்தன் போன்ருேர் தம் கதைகளிற் காட்டிய துரை ஆகியோர் சமூகப் பிரச்சினைகள் பலவற்றை 6.
தொழிலாளிகள், விவசாயிகள், மீனவர்க களையும், வாழ்வுக்கஷ்டங்களையும் நிலவுடமையாள களினலும் சுரண்டலினலும் அவர்கள் அல்லது தாழ்விற்குரிய அடிப்படைக் காரணங்களையும், :ெ கணேசலிங்கன், டானியல், நீர்வை பொன்னைய மருதூர்க் கொத்தன் போன்றேர் தம் கதைகளி
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பலர் சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளனர். ஆலும், குளிரிலும் நின்று நாள் முழுவதும் மாடா மாக அர்ப்பணித்தும் உழைப்பிற் கேற்ற ஊதிய தோட்டத் தொழிலாளர்களின் இரங்கத்தக்க நிலை களையும் மலையகத்திற்கு வெளியே உள்ள எழுத்த தாளர்கள் பலரும் தம் கதைகளிற் துலாம்பரட வத்தை ஜோசேப், பெனடிக்ற் பாலன், என்.எல் செல்வன், மலரன்பன் போன்ருேர் இவ்வகையிற்
பொன்னம் பலப்பெயர்ப் புட்கலா வர்த்தம் புகழ்சங்க லக்கியப் புணரிரா மாயண றுன்னித் துலங்கிமலி சூதனெலி மாலையாத் ( துங்கவார் கலிபார தப்பரவை லக்கண மின்னித் திடுக்கிட விடித்தியாழ்ப்பாணகிரி ! மேவிப் படிந்துசெந் தமிழ்மேதை நிதி சன்மத்து வித்தியார்த் திப்பயிர் தழைத்திட சந்த்ர மெள லீச்னே யைந்தொழில் வி
- ம. க. வேற்பிள்ளை உ

பிரச்சினைகளையும், பணம் படைத்த நவநாகரிகப் ம்பரப் போக்கினையும், பணம் சம்பாதிக்கும் சில *களை விபசாரிகளாக்கிக் அவர்களின் வாழ்க்கை
பவானி, கணேசலிங்கன், நந்தி, பித்தன், ள்ளனர். மு. தளையசிங்கம், எஸ். பொன்னுத் ப் பாலுணர்வின் அடிப்படையில் நோக்கியுள்ள
* ஆகியோரின் சமூக, பொருளாதாரப் பிரச்சினை "ர்களினதும் முதலாளிகளினதும் அடக்கு முறை துறுவதையும், சமூக பொருளாதார எண்ணத் நாழிலாளி வர்க்கத்தினரின் போராட்டங்களையும் ன், செ. யோகநாதன், வ. அ. இராசரத்தினம், ல் நிதர்சனத்துடன் சித்திரித்துள்ளனர்.
சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்தும் கொடும் மழையிலும், கொளுத்தும் வெய்யி க உழைத்து இரத்தத்தை வியர்வையாக்கி உர பத்தைப் பெருது வாழ வழியற்றுத் தவிக்கும் யையும், அவர்களது பல்வகைப்பட்ட பிரச்சினை ாளர்களும், மலையகத்தைச் சேர்ந்த இளம் எழுத் மாகக் காட்டியுள்ளனர். கணேசலிங்கன், தெளி ஸ். எம். ராமையா, சாரல் நாடன், பன்னீர்ச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.
புராதன நியாயோததி ப் பொருவறு மலக்கர் புவியிற் தொல்பயோ ததிகாவியத் 'த் தொடுகடல்க டுய்த்தெழுந்தே மீதேறி நல்லைமுடிமேன் மாரி மிகவும் பொழிந்திட்டதிச் * சாந்தநா யகிசமேத லாசனே சந்த்ரபுர தலவாசனே
பாத்தியார், சந்திரமௌலீசர் சதகம்

Page 95
ஈழத்துத் தமிழ்
நா. சுப்பிரமணிய ஐ
வசனவடிவத்திற் கணிசமான அளவு நீளமுை கதைப்பொருளுடன், மாந்தரது இயல்பான குை பதாக அமைவது நாவலிலக்கியத்தின் பொதுவிய நாடுகளில் வளர்ச்சி பெற்றுவந்த இவ்விலக்கிய வ தமிழிற் புகுந்தது. தமிழ் நாட்டிலே மாயூரம் ச. ரும் இவ்விலக்கிய முயற்சிகளில் ஈடுபட்ட காலப் தமிழ் நாவலிலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்
பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதி யும் நிறைந்த சூழ்நிலையும், ஆங்கிலக் கல்வியின் பய சமுதாயமும், இலக்கியத்தைப் பொதுமக்களை நோ கன வசதியும், நாவல்போன்ற பொதுமக்களிலக்கிய தன. கிறிஸ்தவசமயப் பிரசார முயற்சியிலீடுபட் டாற்றியவரும் இத்தகைய முயற்சியிலீடுபட்டன தழுவியும் தமிழாக்கியும் வசனவடிவம் தந்தனா வெளியிட்ட காவலப்பன் கதை (1856), சித்திலெ இன்னுசித்தம்பியின் ஊசோன்பாலந்தை கதை. (1 டவை. தமிழ்நாட்டின் நாயக்கராட்சிக்கால வர முதலாவது சரித்திர நாவலை எழுதிய பெருமை ஈழ பிள்ளைக்குரியது. மோகனங்கி (1895) என்ற பெ
Ul -L-gil .
இருபதாம் நூற்ருண்டின் முதல் மூன்று களில் ஈழத்துமக்களின் வாழ்வோடொட்டிய கை பகுதியில் ஈழத்திலே அந்நியப் பண்பாட்டுக்கெ! உரிமைகோரும் உணர்வும் வளரத் தொடங்கின. அவற்றுக்கு எதிராக இந்துக்களின் தற்காப்பு மு: இக்காலப் பகுதியிலும் நடைபெற்றன. சமூகத்தி இருந்தது. தமிழ் நாட்டில் எழுதப்பட்ட நாவல் சன்மார்க்கபோதினி ஆகிய பத்திரிகைகளின் தொ
முதல் இருபது ஆண்டுகளில் எழுதப்ப எழுதிய நொறுங்குண்ட இருதயம் (1914) குறிப் தில் ஏற்படும் பிரச்சினகளுக்குச் சமயத்தில்அமை, க்க வழக்கங்களுள்ள ஆண்களாற் பெண்களடைய ஏற்படும் பல்வேறு பிரச் சினைகளும் இயல்பான கண் ளன. ஈழத்துத் தமிழ் நாவல. சிரியருள் முதலா6 இக்காலப்பகுதியில் சி. வை. சினனப்பபிள்ளை என் முதலிய வரலாற்று நாவல்களை எழுதினர். விஜய யைக் கூறுவது. ஒரு காவியநாயகனுக்குரிய சிறப்பு
அடுத்த பத்தாண்டுகாலப்பகுதியில் எ( முக்கியமானவர். இந்துசாதனப் பத்திரிகை ஆசி முயற்சிகட்கு எதிராகக் காசிநாதன் - நேசமல!

நாவல் இலக்கியம்
turf, M. A. (Ceylon.)
டயதாய், நடைமுறை வாழ்க்கையோ டொட்டிய னங்களை, உணர்ச்சி மோதல்களுடன், சித்திரிப் ல்பு. நான்கு நூற்ருண்டுகளுக்கு மேலாக மேலை டிவம் கடந்த நூற்றண்டின் இறுதிப்பாகத்தில்ே வேதநாயகம்பிள்ளையும், பி. ஆர். ராஜமைய பகுதிக்குச் சற்று முன்பின்னக ஈழத்தவராலும் பட்டன என அறிகிருேம்.
நியில் ஈழத்தில் நிலவிய சமயப்பற்றும் போட்டி ஞக உருவாகத் தொடங்கியிருந்த நடுத் தர வர்க்க ாக்கித் திருப்பிவிடும் சாதனமாயமைந்த அச்சுவா பங்கள் தோன்றுதற்கு ஏற்ற பின்னணியாக அமை டோரும் இஸ்லாமய மறுமலர்ச்சிக்குத் தொண் ர். இவர்கள் தாம் கற்ற மேனுட்டுக் கதைகளைத் ர், யாழ்ப்பாணம் ‘ரிலிஜஸ் சொசைட்டியினர் 0வ்வையின் அஸன்பேயுடைய சரித்திரம் (1890), 891) என்பன இக்காலப்பகுதியில் எழுதப்பட் "லாற்றிற் கதைப்பொருளைத் தேர்ந்து தமிழின் pத்தவரான திருக்கோணமலை த. சரவணமுத்துப் யருடைய இந்நாவல் தமிழ்நாட்டில் வெளியிடப்
தசாப்தங்களில் ஈழத்தில் எழுதப்பட்ட நாவல் தைப்போக்கு உருவாகக் காணலாம். இக்காலப் திரான தேசியப்பண்பாட்டுணர்வும், அரசியலில்
கிறிஸ்தவர்களது சமயப் பிரசார முயற்சிகளும், பற்சிகளும் நாவலர்காலத்தின் தொடர்ச்சியாக ல் வாசிப்புப் பழக்கம் ஓரளவு பரவத்தொடங்கி களை ஈழத்தவரும் வாசித்தனர். இந்துசாதனம், டர்கதைகளாக நாவல்கள் உருவாகின.
ட்டவற்றுள் மங்களநாயகம், தம்பையா என்பார் பிடத்தக்கது. மங்களநாயகம் தம்பையா சமூகத் திக ணும் நோக்கில் இந்நாவலை எழுதினர். தீயபழ பும் துயரும் உள்ளத்து உடைவும், குடும்பங்கள்ஸ் ாணுேட்டத்தில் இக் கதையில் சித்திரிக்கப்பட்டுள் பது பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது பவர் விஜயசீலம் (1916)வீரசிங்கன கதை (1905) சீலம் ஈழத்து முதல்மன்னனன விஜயனின் கதை டன் விஜயன் சித்திரிக்கப்பட்டுள்ளான்.
ழதியோருள் ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை சியராயிருந்த இவர் கிறிஸ்தவ சமயப் Si perp
(1924), கோபால - நேசரத்தினம் (1928)

Page 96
துரைரத்தினம் - நேசமணி (1931) ஆகிய நேசமணி என்ற நாவல் சீதனத்தின் கார காட்டுவதுடன் நகரப்புறங்களில் வாழும் பென
இக்காலப்பகுதியிற் சம்பவச்சுவையும் து களும் எழுந்தன. செ. செல்லம்மாள் எழுதிய இர ஒர்சாதிவேளாளன் (1925) என்பன இவ்வகையி சைவசித்தாந்த அகநிலைத்தத்துவ நாவலையும் (1933), பாவசங்கீர்த்தன இரகசியப்பலி (192 கிறிஸ்தவ சமயத்தினரால் எழுதப்பட்ட நீாவ மக்களது வாழ்க்கையையொட்டிய பிரச்சினைகளை றையும் நோக்காகக் கொண்டு தமிழ் நாவல்கள் தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த தாவலை பரிசோதனைகளில் இறங்கவில்லை.
1930 ஆம் ஆண்டை அடுத்த சுமார் இ நாவலிலக்கிய வரலாற்றிற் பத்திரிகைக்காலம் எ கள் எழுதப்பட்டன. வீரகேசரி, ஈழகேசரி, தின. தினப்பதிப்புக்களிலும் தொடர்ந்து தொடர்க:ை டொனமூர் அரசியற்றிட்டம் நடைமுறைக்கு விழிப்புணர்ச்சியும் செய்திப் பத்திரிகைகளது தே பத்திரிகைகள் தமது துணைநோக்கமாக இலக்கிய ஈழத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட நாவல்கள்
ஈழகேசரியின் தோற்றம் தொடக்கம் (1. காலப் பகுதியில் முதற் பத்தாண்டுகாலத்தில் நெல்லையா என்பவர் தான் வீரகேசரியின் ஆசி பத்து நாவல்களைத் தொடர்கதைகளாகவும், த திடுக்கிடும் சம்பவங்கள் என்பவற்றை இணைத்துக் எழுதினர். ராஜா ராணிக் கதைகள், நகரவா இருபிரிவில் இவர் கதைகள் அமையும். தீண்டான பொருளாகக்கொண்டு இவர் நாவல்கள் எழுதி தொடர் மூலமாக நாவலின் வாசகர் தெ கிருஷ்ணமூர்த்தி என்பர். ஆணுல் அவருக்கு முன் விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீரகேசரியில் நெல்லையா தொடர்கதை சம்பவச் சுவைக்கதைகள் தொடராக வெளிவந்த துப்பறியும் கதைப்பொருள் கொண்ட இவ்வை என்பவர் ஆங்கில நாவலொன்றைத் தழுவித் த வெளியிட்டார். -
1940ம் ஆண்டின் பின் ஈழத்தில் எழுத் நாட்டின் மணிக்கொடி கால கட்டம்போல ஈழ இக்காலப்பகுதியில் ஈழகேசரி ஈழத்தின் மண் சம்பந்தன், சச்சிதானந்தன், கசின், சொக்கன், நாதன், அ. செ. முருகானந்தன், த. சண்முகசு நாவல்களைத் தந்தனர். ஈழத்துச் சிறுகதை மு துறையிலும் ஈடுபாடு கொண்டார். யாழ்ப்பா ளில் புலப்படத்தொடங்கியது. நகைச்சுவையா.

நாவல்களையும் எழுதிஞர்" துரைரத்தினம் ணமாக எழும் குடும்பப் பிரிவுகளை எடுத்துக் ண்களது ஒழுக்கமற்ற போக்கைக்கண்டிக்கிறது.
வப்பறியும் கதைப்போக்கும்கொண்ட சிலநாவல் ாசதுரை (1924), இடைக்காடரின் நீலகண்டன் ன. இடைக்காடர் சித்தகுமாரன் (1925) என்ற எழுதினர். தேம்பாமலர் (1929), ஞானபூரணி 8), புனிதசீலி (1927) என்பன இக்காலத்திற் ல்கள். பொதுவாக இக்காலப்பகுதியை ஈழத்து யும், சமயப்பிரசாரம், சம்பவச்சுவை ஆகியவற் எழுதப்பட்ட காலம் எனலாம். எழுதியவர்கள் வாகனமாகக் கொண்டனரன்றி உருவரீதியாகப்
ருபத்தைந்து ஆண்டுகாலத்தை ஈழத்துத் தமிழ் னலாம். பத்திரிகைத் தொடர்கதைகளாக நாவல் கரன் என்னும் பத்திரிகைகள் வார இதழிகளிலும் தகிளை வெளியிட்ட காலம் இது. ஈழத்தில் வந்ததுடன் தொடர்பாக ஏற்பட்ட சமுதாய ாற்றமும் இக்கால முக்கிய நிகழ்ச்சிகள். செய்திப் பப்டனி செய்யத்தொடங்கின. இப்பிரசுரவசதி
வெளிவரக் காரணமாயது.
930) அதன் நிறைவுவரை (1958) உள்ள இக்கா வீரகேசரி முக்கிய இடம் வகிக்கின்றது. எச். ரியராக இருந்த இப்பத்தாண்டு காலப்பகுதியிற் னிநூல்களாகவும் எழுதினர். காதல், சோகம், கதைபுனைந்தவர் இவர்; விறுவிறுப்பான நடையில் ழ்வோடு தொடர்புடைய சமூகக் கதைகள் என ம, இலங்கையிந்தியர் பிரச்சினை என்பவற்றையும் யுள்ளார். பொதுவாகப் பத்திரிகைக் கதைத் ாகையைப் பெருக்கியவர் **கல்கி ' ரா. பாகவே எச். நெல்லையா அம்முயற்சியில் இறங்கி
iள் எழுதிய காலப்பகுதியில் ஈழகேசரியிலும் பல ன. வரணியூர் ஏ. சி. இராசையா போன்ற சிலர் 5 நாவல்களை எழுதினர். வே. ஏரம்பமுதலி பிழில் அரங்கநாயகி (1934) என்ற நாவலை
எத்துறையில் ஒரு புதிய அலை பாய்ந்தது. தமிழ் த்தில் மறுமலர்ச்சி இலக்கிய காலம் உருவானது. பாசன வீசும் நாவல்களுக்குக் காரணமாகியது.
வ. அ. இராசரத்தினம், தேவன், கனக செந்தி தரம் முதலியோர் ஈழகேசரியின் தளத்தில் நின்று நல்வரில் ஒருவரான சம்பந்தன் நாவலிலக்கியத் ணப்பிரதேச மண்வளம் இவர்களது எழுத்துக்க வும் உணர்ச்சி மோதல்களை உடையனவாகவும்
8

Page 97
இவர்களின் நாவல்கள் எழுதப்பட்டன. மொழிபெயர்ப்பு, தழுவல் நாவல்களும் வெளிவந் மொழி ஆகியவற்றினின்று நாவல்கள் மொழிபெய யில் வங்கம், இந்தி, மராத்தி, ஆங்கில மொழி காலம் இது என்பது ஒப்பு நோக்கற்பாலது. இ முதலியோர் ஈழத்தில் இம்முயற்சியிலீடுபட்ட தமிழுக்கு அறிமுகம் செய்யவேண்டுமென்ற உ பந்தனைப்போல இலங்கையர்கோன், சி. வைத்தி வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசி தழுவல் நாவல்கள் எழுதினர்.
ஈழத்துத் தமிழ்நாவலில் 1958 ம் ஆண் 1948-ம் ஆண்டில் ஈழம் சுதந்திரம் பெற்றது. அந்தச் சுதந்திரத்தின் தாக்கம் உடனடியாகக்க கள் கடந்தபின்பே இலக்கிய ரீதியில் புதிய பார் அரசியல் மாற்றம் ஈழத்தில் தேசிய உணர்வ தேசியம், சமூகப்பார்வை என்பன இவ்வரசியல் தேவை அல்லது பணி பற்றிக் கருத்து மாறுபா நாவல்கள் எழுதுவதற்கு உந்துசக்தியாயின; சமூ கள் சமூகப்பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து குறைபாடுகள் என்பன எழுத்தாளர்களது கவன செ. கணேசலிங்கன், கோகிலம் சுப்பையா, நந்தி, டானியல், அ. பாலமனேகரன் ஆகியோர் எழு பாட்டை இனங்கண்டு அதற்குப்பரிகாரம் காணு (1959) நாவல் சிதம்பரரகுநாதனின் பஞ்சும் சிறப்புடைத்து. ஏழைத் தொழிலாளர் வாழ் தீர்வுகாண விழைவதை இவரது நாவலிற் காண குறைபாடான சாதி உயர்வுதாழ்வும் அதனுல் வி டானியல் ஆகியோரின் நாவல் கட்கும் பொருள் போர்க்கோலம் (1969) என்பன இவ்வகையிற் அடிப்படையுரிமைகள் அற்றநிலையில் அவலவா வரலாற்று நாவலாக அமைத்தது தூரத்துப்பச்6 சித்திரிப்பது சொந்தக்காரன்? (1968) முன்னைய பெனடிக்ட் பாலணுலும் எழுதப்பட்டவை. யாழ் தொடர்புகொண்ட நடுத்தரவர்க்க "கிவறிக்க களைக் கலைக் கண்ணுேட்டத்தில் காட்டிச் சடங்கு னுத்துரை. இந்நாவலில் நிகழ்ச்சிகளைத் தீட்( இவரது திறன் நன்கு புலப்படுகின்றது. ஈழத் அமையக்கூடிய வகையில் வன்னிப்பிரதேசத்தை னின் நிலக்கிளி (1973). சமூகப் பிரச்சினைகளை இயல்பாகச் சித்திரிப்பதிலும் இன்றைய ஈழத்து வகையில் தமிழ்நாட்டு நாவல்களை விட கேர
6)FT | A).

இக்காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு துள்ளன. ஆங்கிலம், ஜெர்மன், வங்கம், ரூசிய ர்க்கப்பட்டன. தமிழ்நாட்டில் கலைமகள் சஞ்சிகை நீாவல்கள் மொழி பெயர்த்து வெளியிடப்பட்ட |லங்கையர்கோன், சி. வைத்திலிங்கம், தேவன் னர். தாம் பிறமொழியிற் கற்ற விடயங்களைத் ந்துதல் இவர்களை வழிநடத்திய தெனலாம். சம் கிலிங்கம் இருவரும் ஈழத்தின் சிறுகதை முதல் ரியர் கணபதிப்பிள்ளை இக்காலப்பகுதியில் சில
ாடிலிருந்து புதிய காலப்பகுதி தொடங்குகின்றது. ஆனல், தமிழ்நாவல், சிறுகதை இலக்கியங்களில் ாணப்படவில்லை. சுதந்திரம் பெற்றுப் பத்தாண்டு வை தொடங்கியது. 1956 ம் ஆண்டில் ஏற்பட்ட |க்கு முக்கியத்துவம் தந்தது. இலக்கியத்திலும் மாற்றத்தாலே தூண்டப்பட்டன. இலக்கியத்தின் “டுகள் தோன்றின. இம்முரண்பாடுகள் தரமான pகப்பார்வை விரிந்தது. ஆற்றலுள்ள எழுத்தாளர் அணுகினர். பின்தங்கிய பிரதேசங்கள், ச்மூகக் த்தை ஈர்ந்தன. இக்காலப்பகுதியில் இளங்கீரன், பெனடிக்ட் பாலன், எஸ். பொன்னுத்துரை, கே. திவருகின்றர்கள். சமூகத்தில் உள்ள வர்க்கமுரண் ம் வகையில் எழுதும் இளங்கீரனின் நீதியே நீ கேள் பசியும் (1953) நாவலுடன் ஒப்பநோக்கத்தக்க பின் இன்னல்களை எடுத்துக்காட்டி அவற்றுக்குத் f(. யாழ்ப்பாணச் சமூகத்தின் முக்கிய சமூகக்וזrע6 ளையும் கொடுமைகளும் செ. கணேசலிங்கன், கே, ாாயின. கணேசலிங்கனின் நீண்டபயணம் (1965) குறிப்பிடத்தக்க சிறப்புடையன. மலையகத்தில் ழ்வு வாழும் தோட்டத்தொழிலாளர்களின் சமூக சை (1964). அம்மக்களது போராட்டவுணர்வினைச் நாவல் கோகிலம் சுப்பையாவாலும் பின்னையது ப்பாணம், கொழும்பு என்ற இரு பிரதேசத் ல்’ உத்தியோகத்தனின் வாழ்க்கைப் பிரச்சினை (1966) என்ற நாவலை எழுதியவர் எஸ். பொன் டுவதிலும் உணர்வுகளைச் சொல்லில் வடிப்பதிலும் துப் பிரதேச இலக்கியங்கட்கு எடுத்துக்காட்டாக இயற்கையாகக் சித்திரிக்கின்றது அ. பாலமனுேகரி இனங்கண்டு காட்டுவதிலும் பிரதேசப்பண்புகளை த் தமிழ் நாவல்கள் சிறந்து விளங்குகின்றன; இவ் ளப்பகுதி நாவல்களுடன் இவை ஒத்துள்ளன என
89

Page 98
சிறுவர் இ
க. நவசோதி
'பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள் பாடி தெள்ளத் தெளிந்த செந்தமிழில் தே
எனும் வாழ்த்தாரம் தமிழகத்துக் குழந்ை தாயினும் அப்புகழ் ஆரத்திற்குத் தகைமைசான் இலக்கிய உலகும்-சிறப்பாகச் சிறுவர் இலக்கியப் பூ பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பாதியிலிருந் முற்பட்ட காலத்திற் காணுததொன்ரும். சிறுவர் ஆக்கப் பணியில் ஈடுபட்ட் பெருமையும் ஈழத்திற்
சிறுவர் கதைகள்
உரைநடைத் துறையில் சிறுவர் இல தகைமை நல்லைநகர் ஆறுமுக நாவலருக்கு (1822 ரே சிறுவர் இலக்கியத்தின் மும்மணிகளான மை நாயகம்பிள்ளை (1876 - 1954) பாரதியார் (18 தமிழகத்தில் சிறப்புற்றுத் திகழ்வுற்றது. இ6 எனக் கண்ட் நாவலர், தாம் இயற்றிய பாலட பெரியபுராண வசனம், திருவிளையாடற் புராண ெ வாலும் வயதாலும் வேறுபாடுற்றேர் இருப்பதை தான உரைநடையை அமைத்தார். இரண்டா கதைகளும் சிறுவர்க்கான சிறுகதை அமையவேண்
சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்குப் பெரிது துறையில் ஈழநாட்டின் வளர்ச்சி தமிழகத்தோடு ஐ யிற் பாட நூல்களாகவும் துண்ைப்பாட நூல்களா வடமொழியிலும் தமிழிலும் அமைந்த இதிகா அவற்றின் கிளைக் கதைகளாகவுமே இடம்பெற்ற6
குமாரசுவாமிப்புலவர் சிறுவர்களுக்காக இ சரிதம் என்ற கதை நூலொன்றையும் எழுதியுள்ள பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி ஆகிய அழகுசுந்தர தேசிக கதை என்னும் இரு நூல்களையும் எழுதினர். சிறு கைக்கு மிஞ்சியும் மாறுபட்டுள்ள கதைகை கதைகளைக் களைந்து, கதையைச் சுருக்கி அமைத்த துப் புதுச் சொற்களையும் சொற்ருெடர்களையும் அ இயற்சொல்லும், சிறுபான்மை திரிசொல் வ படைத்தனர். வட இலங்கைத் தமிழ் நூற்பதிப்பக் கொண்டு இராஜா தேசிங்கு, தமயந்தி, சாவித்தி பள்ளிச் சிறுவர்களுக்காக வெளியிட்டது.
ஈழத்துச் சிறுவர் இலக்கியத்தில் ஒரேயொ வன்' நாவலைக் குறிப்பிடலாம். நாவலின் முதல சிறுவர்களுக்கான அறிவுரைகளையும் அத்தியாயங், டாவது பதிப்பில் (1972) அவை நீக்கப்பட்டமை

இலக்கியம்
S, B.A. (Hons)
ւն Լյուգ மகிழ்வெய்த னுர் கவிகள் செய்துதரும்'
தைக் கவிஞருக்குக் கவிமணியினுற் சூட்டப்பெற்ற "ற கவிஞர் பலரை பொதுவாக ஈழத்துத் தமிழ் பூங்காவும்-பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். து இற்றைவரையிலான இத்துறையின் வளர்ச்சி இலக்கிய வளர்ச்சித் துறையில் முன்னுேடியான கு உரியது. -
க்கியத்தின் முன்னுேடியெனக் கொள்ளத்தகும் -1879) உரியது. நாவலரின் காலத்தின் பின்ன றமலையடிகள் (1876 - 1950) கவிமணி தேசிகவி 32 - 1921) ஆகிய மூவரின் இலக்கியப்பணியும் Eவழங்குநடை வன்ன நடை வசன நடையே ாடம், சைவவிஞவிடை, இலக்கீணச் சுருக்கம் சனம் ஆகிய் நூல்களிடையே சிறுவருள்ளும் அறி உணர்ந்து அதற்கமைந்த பேதங்களைக் கொண்ட ம் பாலபாடத்தின்கண்ணதான இருபத்தொரு ாடிய முறையை நன்கு காட்டுவனவாகும்.
:ம் உதவுவன கதையும் பாட்டும் ஆகும். கதைத் ஒப்பிடக்கூடியதன்று. எனினும், நாவலரின் நெறி கவும் பல நூல்கள் எழுந்தன. இவை ஏற்கனவே ச புராண காவியங்களின் சுருக்கங்களாகவும், மை குறிப்பிடத்தக்கது.
இதோபதேசத்தையும், இளைஞர்க்காகச் சிசுபால ார். ஈழத்தாய் ஈன்ற செந்தமிழ் முனிவன் விண. ' இலகு நடையில் இராமன் கதை, பாண்டவர் வர்க்கு இனிய நூல் படை க்குமிடத்து, இயற் ா மெய்க்கதை போல எழுதிய கற்றலாகாத னர். இளையோராயினும் தமிழ் கற்கப் புகுமிடத் மிதல் வேண்டுமெனும் நோக்கிற் பெரும்பான்மை டசொல்லும் விரவியனவாய் இந்நூல்களைப் ம் மொழியறிவு வளர்ச்சியைக் குறிக்கோளாகக் ரி, குசேலர் சரித்திரம் எனும் கதை நூல்களைப்
ந நாவலாக க. நவசோதி எழுதிய 'ஒடிப்போன வது பதிப்பில் (1968) அறநூல் வாசகங்களையும் ளின் தொடக்கம் தாங்கியிருந்தபோதும் இரண் ம், ஈழத்து மண்வாசனையும், சூழலும் சிறுவரின்
90

Page 99
பள்ளிவாழ்க்கையும் ஒடிப்போனவன் நரி வலின் கன்னண் வெளியீடாக வெளிவந்த ஆர்வி, தே மூர்த்தி பேர்ன்ற எண்ணற்ற குழந்தை எழுத்தா அமைந்திருந்தமை இங்கு மனங்கொளத்தக்கது.
அண்மைக் காலத்தில் தனிப்பட்ட நிறுவ 'தப்பியோடிய தோழர்கள்' 'குரங்கின் தீர்ப் பிள்ளை’ போன்ற கதைப் புத்தகங்கள் வண்ண உலகப் பெரியார்கரின் இளமைக் காலத்தில் இ அறியுமாறு 'இளமைப் பருவத்திலே’ எனும் நூ புகழ்பெற்ற மேனுட்டுக் கதைகளைத் தமிழில் மெ ஈழத்தில் இடம்பெற்றுள்ளது. இத்துறையில் பே மங்கை' 'பூஞ்சோலை’ எனும் கதை நூல்களையு சம்’ எனும கதை நூலையும் குறிப்பிடலாம். சிங் சில நாவல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் முய
சிறுவர் பாடல்கள்
ஈழத்துச் சிறுவர் இலக்கியத்திற் கதைக பெற்றுள்ளன. ஈழத்துக் கல்விக் கூடங்க ரில் ப ஒளவையாரின் வாக்குண்டாம், ஆத்திசூடி, நாதரின் உலகநீதி, அதிவீரராம பாண்டியரின் வெ வள்ளுவரின் குறள் உட்பட்ட அறநூல்கள் வகித் வரையில் கவிமண, பாரதி, சுத்தானந்தபாரதி, ந ஆகியோரின் குழந்தைப்பாடல்களும் ஈழத்தைப் தம்பி, சோமசுந்தாப் புலவர், வேந்தனர் என்டே பெற்று வந்துள்ளன.
சிறுவர்களுக்கேற்ற பாடல்களைக் கொன ஈழத்திலேயே முதன்முதல் 1935 ல் வெளிவரலா க. ச. அருள்நந்தி அவர்களது பெருமுயற்சி தாரால் வெளியிடப்பட்ட 'பிள்ளைப்பாட்டு’* சிறப்பாகக் குறிப்பிடப்படவேண்டியதொன்ருகுப் வெளிக்கொணர்ந்த 'பிள்ளைப்பாட்டு' நூல் மூ அறியலாயிற்று. இவர்களுள், மா, பீதாம்பரம், ( தக்கவராவர். குழந்தைகளின் வயதுக்கேற்ற பா
நூலின் தனிச்சிறப்பாகும்.
தமிழகத்தின் கவிமணி, குழந்தைக் கவி கூடியவர்களாகச் சோமசுந்தரப் புலவர், முதுதமி னர் ஆகிய ஈழத்துக் கவிஞர்க்ளைக் கூறலாம். நவ களிற் பல 'சிறுவர் செந்தமிழ்’ எனும் தனி நு தினத் தமிழில் யாத்த முதுதமிழ்ப் புலவரின் நூலாக 1958 ஆம் ஆண்டில் வெளிவரலாயிற்று கல்லூரி மாணவர் படித்தற்பொருட்டு 'தமிழ்! ஆண்டில் வெளியிட்டுள்ளனர். வித்துவான் வேந் இனிமையும் ஒருங்கு நிறைந்த சிறுவர் பாடல்களை லாம். 1964 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த எனும் இரு காவியங்களும் இடம்பெற்றுள்ளன. பல் பாடல்களை இம்மூவருடைய நூல்களிற் கான
9

சிறப்புப் பண்புகளிற் சிலவாகும். தமிழகத்தில் பார்த்தசாரதி, லெயோ ஜோஸ்ப், ப. கி. ளர்களின் நாவல்கள் சிறுவர்களைப் பற்றியே
பனமொன்றின் முயற்சியால், இளஞ்சிருருக்கென பு' 'பாடசாலைக்குச் சென்ற யானை' 'கிளிப் ச் சித்திரங்களோடு வெளியிடப்பட்டுள்ளன. டம்பெற்ற சுவையான நிகழ்ச்சிகளைச் சிறுவர்கள் லை எழுதியுள்ளார் எம். ஏ. ரஹ்மான். உலகப் ாழி பெயர்த்தும் தழுவியும் எழுதிய முயற்சியும் ராசிரியர் க. கணபதிபிள்ளை எழுதிய 'நீரர ம், சோ. நடராசன் எழுதிய 'விநோதனின் சாக வ்களச் சிறுவர் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்ற் ற்சியிலே சரோஜினி அருணுசலம் ஈடுபட்டுள்ளனர்.
ள் பெற்றிராத முக்கியத்துவத்தினைப் பாடல்கள் யின்ற தமிழ்மொழி நூல்களில், தமிழ் மூதாட்டி
"கொன்றை வேந்தன், நல்வழி, Gib ற்றி வேற்கை, விளம்பிநாகரின் நான்மணிக்கடிகை ந்து வந்த இடத்தினைத் தமிழகத்தினைப் பொறுத்த ா மக்கல் கவிஞர், பெ. தூரன், அழ. வள்ளியப்பா பொறுத்தவரையில் முதுதமிழ்ப்புலவர் மு. நல்ல ாருடைய குழந்தைப் பாடல்களும் படிப்படியாகப்
ண்ட தொகுப்பு நூல் செம்மையான முறையில் யிற்று. வட பெரும்பாக வித்தியாதரியாயிருந்த Fயினல் வட இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத் எனும் இந்த நூல் சிறுவர் இலச்கியத்துறையிற் ம். ஈழத்தின் குழந்தைக் கவிஞர்களின் ஆற்றலை லம், பதின்மூன்று கவிஞர்களை இலக்கிய உலகு சோமசுந்தரப்புலவர் ஆகிய இருவரும் குறிப்பிடத் டல்கள் தரம்பிரிக்கப்பட்டுள்ளமை இத்தொகுப்பு
ஞர் அழ. வள்ளியப்பா ஆகியோருடன் ஒப்பிடக் ழ்ப் புலவர் மு. நல்லதம்பி, வித்துவரின் க. வேந்த ாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல் ாலில் வெளிவந்துள்ளன. ஈழத்துத் தேசிய கீதத் சிறுவர் பாடல்கள் "இளைஞர் விருந்து' என்ற வ. இவர் தமிழாசனுகப் பணியாற்றிய சகிருக் ப் பாடல்கள்’’ எனும் நூலையும் 1937 ஆம் தனரின் எளிமையும் கருத்து வளமும் செந்தமிழ் ாக் 'கவிதைப் பூம்பொழில்’’ எனும் நூலில் காண நூலில் கற்பனைக் காதல்‘, 'அவனும் அவளும்" சிறுவர்களின் உள்ள உவகைக்கு ஊட்டமளிக்கும் ஈணலாம்.
X.
F.

Page 100
இந்நூல்களைவிட, ஈழத்திலே குழந்தை னின் பாலர் கீதம், வெ. விநாயக மூர்த்தி சிறுவர் பாடல், எம். ஸுபைரின் மலரும் ம என்பன வெளிவந்துள்ளன. குழந்தைகளுக்குக் குது கவிஞர்களுள் கந்தவனம், ஆடலிறை, திமிலைத் து முதலியோர் குறிப்பிடத்தக்கவராவார். கோப்ப பேராசிரியை செல்வி செளந்தரம் சந்தன நங்கை தும் குழந்தைக் கவிஞர்களின் பாடல்களுக்கு இ.ை களே சேர்ந்து பாடுவோம்' எனும் பெயரிட்டு இலக்கிய மன்றத்தினர் ஈழத்து இளம் கவிஞர்க தொகுத்து ‘கனியமுது’’ எனும் நூலாக வெளியி
பிறமொழிச் சிறுவர் பாடல்களைத் தமிழி கூறலாம். கு. இராமச்சந்திரன், க. நவசோதி சிங்களப் பாடல்களையும் தமிழில் மொழிபெயர்த் σοτri.
தமிழ் நாட்டைச் சேர்ந்த பதின்மூன்று க களினதும் குழந்தைப் பாடல்களைச் 'சிறுவர் க இதழில் இரசிகனி கனக. செந்திநாதன் அறிமு பெருத தென்பது சுட்டியுரைக்கற்பாலது.
எனினும், தமிழில் சித்திரக் கதைகள், வ ஈழத்துச் சிறுவர் இலக்கியம் பின்தங்கிய நிலையிே துறைகளிலும் சிங்கள மொழியில் சிறுவர் இலக்கி சிறுவர் இலக்கியத்துறை வளர்ச்சிபெறவில்லை என்
w சிறு வர் சஞ்சிகைகள்
-சிறுவர் இலக்கிய வளர்ச்சித் துறையி e:ன்பதற்குத் தமிழ் நாட்டின் ‘அம்புலிமாமா' களாக வெளிவந்து நூலுருப்பெற்ற எண்ணற்ற ெ வெளிவரும் பத்திரிகைகளில் அவ்வப்போது சிறுவ போன்றே சிறுவர் சஞ்சிகைகளும் தோன்றி ம.ை பாப்பா மலர், டமாரம், கரும்பு, மத்தாப்பு, பூஞ்ே மறைந்துள்ளதைப் போன்றே ஈழத்திலும் மலர்ந்: களுக்காக இலங்கையில் முதன் முதலில் "பாலியரி சேர்ந்தவரின் முயர்சியால் 1859 ஆம் ஆண்டில் ே முறையில் 'பாலர் மித்திரன்' என்ற பத்திரி.ை வெளிவந்த சுரபி, மாண வமணி, சிறுவர் உலகம், வெற்றிமணி எனும் சஞ்சிகைகள் இயற்கை மை பட்ைத்துவிடல் இயலாது என்பதையே இச் சஞ்சி
9然

கவிஞர்களின் தனி நூல்களாக, யாழ்ப்பாண யின் பாலர் பாமாலை, இ. நாகராஜனின் ாம், இ. அம்பிகைபாகனின் அம்பிப் பாடல் ா கலமும் மகிழ்வும் ஊட்டவல்ல ஏனைய ஈழத்துக் மிலன், சச்சிதானந்தன், சாரணுகையூம், வீரகத்தி ாய் பெண்கள் அரசினர் ஆசிரியர் கலாசாலைப் கந்தப்பு அவர்கள், தமிழ் நாட்டினதும் ஈழத்தின F அமைத்துத் தொகுத்து ‘செந்தமிழ்ச் சிறுவர் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு தேனமுத ளது நாற்பத்தொரு குழந்தைப் பாடல்களைத் ட்டுள்ளனர்.
ல் அறிமுகப்படுத்தும் பணியில் சில முயற்சிகளைக் ஆகியோர் முறையே ஆங்கிலப் பாடல்களையும் தும் தழுவியும் படைக்கும்பணியில் ஈடுபட்டுள்ள
விஞர்களினதும் ஈழநாட்டின் பன்னிரு கவிஞர் பிநயம்’ எனும் கட்டுரைத் தொடரில் ஈழநாடு Dகஞ்செய்துவைத்த பணி தமிழகத்திலும் இடம்
ரலாறு, நாடகம், கலைகள், அறிவியல் துறைகளில் லேயே இன்று முளது. இது போன்ற பல்வேறு யம் அடைந்துள்ள வளர்ச்சினைப் போல் தமிழில் ாபது கசப்பான உண்மையாகும்.
ல் சஞ்சிகைகள் மகோன்னத பணியாற்றலாம் இதழும் ‘கண்ணன்' இதழில் தொடர்கதை கடுங்கதைகளுமே தக்க சான்றுகளாகும். ஈழத்தில் ர்களுக்கான பகுதிகள் தோன்றி மறைவதைப் றந்துள்ளன. தமிழகத்திலும் அணில், பாப்பா, சோலை, கண்ணன் போன்ற சஞ்சிகைகள் தோன்றி து மறைந்துள்ள சஞ்சிகைகள் எராளம். சிறுவர் நேசன்' எனும் பத்திரிகை அமெரிக்க மிஷனைச் வளிவந்தது. 1924 ஆம் ஆண்டில் மிகச் சிறந்த 5 வெளிவந்தது. இதையடுத்து அவ்வப்போது தமிழ் மாணவன், வெண்ணிலா, மாணவர் முரசு, றவு எய்தின. குழந்தை இலக்கியத்தினை எளிதிற் கைகளின் மறைவும் அறைவனவாம்.

Page 101
参见
மன்னுர்ப் l
ம. பெஞ்சமின்
பண்டைக்காலந்தொட்டு விவசாயம்; மீன் மகமதியம், சைவம் ஆகிய சமயங்களையும் அடிப்பன் மாநில மக்கள். இருபதாம் நூற்றண்டின் ஆரம் யோடு கூடிய விவசாயம் நடைபெறுவதினுல் ம. வளம்மிக்க நாடாக வினங்குகின்றது.
Y இவ்விவசாயிகளுக்குள்ளேயே அவ்வக்கால யுடையோராய்த் திகழ்ந்திருக்கின்றனர். அன்னுரு வானென்னுங் கிராமத்திற் பதினேழாம் நூற்ருண் வரும் கத்தோலிக்குக் கிறிஸ்தவருமாகிய லோறஞ்! கின்ருர், அவர் காலத்துக்கு முன் மன்னுரின் கல் சரித்திரங்களோ கிடைக்கவில்லை.
லோறஞ்சுப்பிள்ளையவர்கள் கல்வியறிவி மக்களிடமிருந்து சாதிக்கொரு மாணவனைத் தொ அளித்தனரென்றும், பிள்ளையவர்களிடம் கற்று யேசுக் கிறிஸ்து நாதரின் சீடர் பன்னிருவர் சரித குலத்தைச் சேர்ந்த மரியானுப் புலவர் தனித்துவி நாடகங்களை மரியானுப்புலவர் பாடினலும் பாது போதைய பாவனையிற் சந்தொம்மையார், சந்தி நால்வர்பேரிற் பாடிய நான்கு நாடகங்களையே இராக அமைப்பிலே தென்பாங்குகளே. வயித்திய பாடியுள்ளார். m
கோதுகப்பித்தான் நாடகம் பாடிய கம் மரிகிருதாள் நாடகம் பாடிய சாணுர வகுப்பைக் பெயர் கிடைத்திலது), திருச்செல்வர், எண்டிறீ மாய்ப் பாடிய கரையார'வகுப்பைச்சேர்ந்த குரு( கடையர் குலத்தைச் சேர்ந்த சூசைப் புலவர் மூ முக்கியத்துவம் பெறுகின்றனர்.
லோறஞ்சுப்பிள்ளை பிற சாகித்திய மாண மாணுக்கியாக்கிப் பயிற்றுவித்தாரென்றும் ஐதீக பாடற்றுறையில் ஈடுபடாவிடினும், தன் வயிற்றி ஒப்பாரும் மிக்காருமற்றுச் சிறந்து விளங்கிய கீத் றிக்கெம்பரதோர், புரிசீனகன்னி ஆகிய நாடகங்க இன்றும் மன்னர் மக்கள் கூறிக்கொண்டே வருகி

புலவர்கள்
செல்வம்
ன் பிடித்தல் ஆகிய தொழில்களையும் கிறிஸ்தவம், டையாகக் கொண்டு வாழ்ந்துவருபவர்கள் மன்னர் ப காலத்திலிருந்து நல்ல நன்னீர்ப்பாசன வசதி ன்னர் இன்று மற்றையோரால் மதிக்கக் கூடிய
பங்களிற் சிற்சிலர் தோன்றி நல்ல தமிழ்ப் புலமை ள் மாந்தைப் பகுதியைச் சேர்ந்தவரும், இலந்தை டில்,வ சித்தவரும், வேளாண் வகுப்பைச் சேர்ந்த சுப்பிள்ளையென்பவர் முக்கியத்தராகக்சனிக்கப்படு வி நிலையைப்பற்றி யறியக் கூடிய சாதனங்களோ "
ல்லாது மன்னரில் வசித்த சாகித்திய் பாமர ரிந்தெடுத்து, அன்னர்க்குத் தக்க கல்வித் தகைமை ப் புலமை மிக்கோ ராய்த் திகழ்ந்தவர்களுள் த்தின் பேரிலும் 12 நாடகங்கள் பாடிய பரத பம் பெற்றுவிளங்கினரென்றும் கூறுவர். பன்னிரு து காப்பற்று அழிந்தொழந்தவைபோகத்" தற் யோ குமையோர், சம்பேதிரு அருளப்பர் ஆகிய காணக் கூடியதாயிருக்கின்றது. இவை நான்கும் த் துறையிலும் மரியானுப்புலவர் பல பாடல்கள்
மாள வகுப்பைச் சேர்ந்த சந்தியோகுப் புலவர், * சேர்ந்த வெள்ளைப் புலவர் (இவரின் உண்மைப் க்கு எம்பரதோர் ஆகியோரின் சரிதங்களை நாட தல நாட்டுத்தேவர், தைரியராசன் நாடகம் பாடிய தலியோரும் இன்னும் சிலரும் புலவர் வரிசையில்
வர்களோடு தன் சாகியத்துக்காகத் தன் மகளையே மாகக் கூறப்பட்டு வருகிறது. அம்மாதராள் தான் ற் பிறந்து இளமை தொட்டுப் பாடல் துறையில் தாம்பிள்ளை என்பவர் எருமை, நொண்டி, எண்டி ள் பாடுதற்கு முக்கிய கர்த்தாவாயிருந்தாரென்று ன்றனர். இக் கீத்தாம்பிள்ளை வரகவிப்புலவன்.
93

Page 102
பிள்ளையவர்களிடம் கற்றுத் தேறிய மா கற்றிருக்கின்ருேம், பாடும் வகை தெரிந்திலமே கற்பிக்கும் முறை தழுவி, மூவிராயர் சரிதையை வி கொடுக்க, அதைப் பின்பற்றி மாணவர்கள் பாடி யுள்ளனவென்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. ே மன்னுர்ப் புலவர் பாடல்களிற் காணப்படுகின்ற வட பாங்கை யாழ்ப்பாண இராகமென்றும் சு மன்னர்ப் பகுதிக்குத் தம் எருமை, நொண்டி, எ பதினெட்டாம் நூற்றண்டில் அறிமுகப் படுத் சாரும்.
லோறஞ்சுப்பிள்ளை, அவர் மாணுக்கர்க பின்பற்றிப் பின்தோன்றிய அநேக புலவர்கள் நூ, யும் சமயச் சார்பாகவும் சமூகச் சார்ப்பாகவ தத்தமக்கிசைந்த பாங்குகளில் ஆக்கியுள்ளனர். ஓரிரவுக் கதையென்றுங் கூறுவர். நாடகங்கள் நடிக்கக் கூடியவைகளே.
பாவனையிலுள்ள மன்னர் நாடகங்களில் ۔۔۔۔۔۔۔ அவர்கள் எடுத்துக்கொண்டஈடுபாட்டினலும் மு அவற்றை அறிஞருலகம் அறிந்து பார்த்துவருகி பிரதிகளாய்க்கட்டுப்பெட்டியிற் கட்டிவைக்கப்பட மைந்துள்ளன என்பதை உன்னுந்தோறும் எந்த 17ம், 18ம், 19ம், 20ம நூறருண்டுகளில் மன்னர் அழிந்து தேடுவாரற்றுப் போனவை அரைவாசிக் பாவனையில் தூற்றுக்கும் குறைவானவையே கா6 முடைய மன்னர்ப் புலவர்களுட் பலர், நாடகம் இலக்கியப் பணியைவிட்டு வைத்தியம், மாந்திரிகம் காலமெல்லாம் உழைத்து வந்துள்ளனர்.
கிறிஸ்தவப் புலவர்களன்றி மன்னர் இஸ் நிறைவேற்றியுள்ளனர். தம் சமய சரித்திர நாட கத்திய வடிவிலனுப்பவேண்டிய எத்தனையோ க பலருக்கனுப்பித் தம்பெயரையும் நிலைநிறுத்தி தம்மாலான தமிழ்ப்பணி புரிந்தேவந்துள்ளனர்
மற்றைய நாட்டுப் புலவர்களாற் கை மன்னர்ப் புலவர்கள் கையாண்டு வந்துள்ளனர் வெழுத்து என்னும் பெயருடையவை. இவற்று கையாண்டுள்ளனர். ஒரு பொருளை யூகியில் மாத் செய்யுளாலமைப்பது தனி மரபு, இவற்றுக்கான முறைப்பாடல்களாற் புலவர் ஒருவர்க்கொருவர் இதன் பாடல்முறை, பொருள் வைப்பு முறை ஆ கின்ருேம்.

ணவர்கள் ஆசிரியரை அணுகித் தங்கள் தயவிஞற் யென வினவ, பாடும் வகையை மாணவர்க்குக் 1ாசகப்பா வடிவில் மாதோட்டம் பாங்கில் யாத்துக் ய அத்தனை பாடல்களும் மாதோட்டப் பாங்கிலே தென்பாங்கு வடபாங்கென இரு இசையமைப்புகள் ன. தென்பாங்கை மாதோட்ட இராகமென்றும், கூறிவருகின்றனர். வட பாங்கை முதன் முதல் ன்டிறீக்கு எம்பரதோர் ஆகிய நாடகங்கள் மூலம் நிய பெருந்தகைமை கீத்தாம்பிள்ளை யவர்களையே
ள், அவர் பேரன் கீத்தாம்பிள்ளை ஆகியோரைப் ற்றுக்கணக்கான நாடகங்களையும் வாசகப்பாக்களை |ம் சிலர் தென்பாங்கிலும் சிலர் வடபாங்கிலும்
வாசகப்பா ஒரு முழுக் கதையின் அரைக்கூறு; இரண்டு, மூன்று, நான்கு இரவுகள் தொடர்ந்து
பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் யற்சியினலும் மூன்றுநாடகங்கள் அச்சேற்றப்பட்டு ன்றது; அவை தவிர மற்றவை யாவும் ஏட்டுப் ட்டு, எலிகளுக்கும் கறையானுக்கும் இரையாய த் தமிழ்மகன் தான் கவலையுரு திருக்க முடியும்? ப் புலவர்களாற் செய்யப்பட்ட முழு நாடகங்களுள் கும் மேலென்றே சொல்லலாம். எஞ்சி இப்போது ணப்படுகின்றன. படிப்புத் திறனும் பாடுந்திறனு , வாசகப்பா முதலியவையை உற்பத்தி செய்யும் ), முதலிய பல வரிசைகளிலீடுபட்டு, அதற்காகவே
0லாமயப் புலவர்களும் தம்பங்கைக் குறைவின்றி கங்கள், மற்றும் பல சரித வரிசைக் கோவைகள், ார ணகாரியங்3ளைப் பத்திய வடிவில் யாத்துப் புள்ள சீனர். சைவப் புலவர்களும் மன்னுருக்குத்
யாளப்படாத பாஷை யென்ருெருவகையையும்
அவை - யூகி - இறை - அலங்காரம் - நடு க்குத் தனி மரபு பொதுமாபென இருவிதிகளைக் திரமோ அன்றி மற்றவையொன்றில் மாத்திரமோ ா சட்டதிட்டங்களுமுள்ளன. இச் சீட்டுக்கவி தம் யூகத்தைப் பாராட்டப் பின் நிற்பவரல்லர். கியவற்றை விபரிக்கின் பெருகுமென அஞ்சி விடு
94

Page 103
மலையகத்தார் புதுமை
படைத்த வமி. வி. ே
கடந்த பல ஆண்டுகளாக மலைநாட்டு எழு நடைச் சித்திரம் ஆதியன - அடிக்கடி பத்திரி ஆண்டுகளாக இவை வெளிவருகின்ற போதிலும் கப் பிரவாகம் எடுப்பதற்குச் சுமார் ஐம்பது வரு களாக மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சியே இ கும். இந்த முயற்சியே மலைநாட்டு இ இந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரும், அதா? யாத காலத்திலிருந்தே, உயர்வான மக்கள் இலக் மாகவும் வளர்ந்து வந்திருக்கின்றது. பரந்த அ நாட்டிலிருந்து எப்போது மக்கள் வந்து இங்கு கலை, கலாசாரம், இலக்கியம் ஆதியன இங்கு வள மான பிரசித்தத்தோடு அத்துறைகள் வளர்ந்தும் பல காரணங்கள் இருந்தன.
1930க்கு முன் மலை நாட்டில் எழுதப் தனிப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே இ பாடசாலைகளிலும் தங்கள் உயர் கல்வியை மே களுக்கு இருந்தன. எனவே, இவர்கள் ஆங்கில: லும் தமிழிலும் அறிவு பெற்ற காரணத்தால் ெ உந்தப்பட்டனர். 1930ம் ஆண்டுக்கு முன்னர் இல் அதிகம் வெளிவரவில்லை. தமிழ் நாட்டில் இருந்து குண போதினி, ஆனந்த போதினி, மகாவி கட ரிவியூ ஆகிய சஞ்சிகைகள் மலைநாட்டிலுள்ள பன
இந்தியர்கள் கடல் கடந்து இங்கு வந்: போர் நடந்து வருவதை மிக உன்னிப்பாகக் கவன அவர்களைத் தாக்கவே செய்தது. அந்தக் காலத்தி பற்றியும் தாகூர், சரோஜினி, பாரதி, நாமக் கவிஞர்கள் உணர்ச்சி பிறக்கும் வகையில் அவ் இவர்கள் மக்களுக்கு எழுச்சியூட்டி வந்தார்கள். பாடகர்கள் கீர்த்தனங்கள் மூலமாகச் சுதேச பாடல்கள் இயற்றிப் பாடிவந்தனர். அதே வே: உடுமலை முத்துசாமிக் கவிராயர் ஆகியோர்களின்
பொதுவாக உரைநடைச் சித்திரம் வள படவில்லை. சாதாரண மக்கள் ஆயிரம் தலைவா இராஜா தேசிங்கு, ப7ண்டவர் வனவாசம், நள் மன் தாலாட்டு, பதினென் சித்தர் பாடல்கள் பாடியும் வந்தார்கள். அநேகமாக மலை நாட்டி வர்களாய் இருந்த போதிலும் "பெரிய வீட்டில் களும் சாதாரண மக்களுக்குப் பலரகமான இலக் யும் இருக்கவே செய்தன.

மத் தமிழ் இலக்கியம் வரலாறு வலுப்பிள்ளே
ழத்துக்கள் - கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல ஒரு சிறு நதியானது திரண்டு நுங்கும் நுரையுமா தடங்கள் பிடித்துள்ளன. இந்த ஐம்பது வருடங் ன்றைய நிலைமைக்கு அத்திவாரமும் ஆதாரமுமா லக்கியத்தின் ஒரு சரித்திரப் பகுதியாகும். வது சாதாரண மக்களுக்கு எழுதப்படிக்கத் தெரி' கியம் இந்தப் புது நிலத்தில் ஆழமாகவும் தாக்க டிப்படையில் நாம் இவற்றை நோக்கிளுல் தமிழ் குடியேறினர்களோ அன்று தொட்டே தமிழ்க் ரத் தொடங்கின. அது மட்டுமல்ல ஒரு தனித்துவ வந்துள்ளன. இத்தகைய தனித்துவ வளர்ச்சிக்குப்
படிக்கத் தெரிந்தவர்கள் பண வசதி மிக்க ஒரு ருந்தனர். அரசாங்க பாடசாலைகளிலும் தனியார் ற்கொள்வதற்கான வசதியும் வாய்ப்பும் இவர் த்தையும், தமிழையும் கற்ருர்கள். ஆங்கிலத்தி வளிநாட்டு இயக்கங்களால் இவர்கள் வெகுவாக 2ங்கையிற் செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் தமிழில் பிரபல சஞ்சிகைகளான லோகோபகாரி, அமிர்த துாதன், நவசக்தி, மொடன் ரிவியூ, இந்தியன் னம் படைத்த வீடுகளுக்கு வருவதுண்டு.
து வாழ்ந்த போதிலும் பாரதத்தில் விடுதலைப் ரித்து வர அவர்கள் தவறவில்லை. அதன் உத்வேகம் ற் சுதேச இயக்கத்தைப் பற்றியும் சுதந்திரத்தைப் கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை ஆகிய பெரும் வப்போது பாடி வந்தார்கள்; சுருங்கக் கூறின் இது தவிர, மதுரை பாஸ்கரதாஸ் போன்ற இயக்கத்தைப் பற்றியும் தலைவர்களைக் குறித்தும் ளேயில் வேதநாயகம் பிள்ளை, சங்கரதாஸ் சுவாமி, படைப்புகளும் மலைநாட்டை எட்டித்தொட்டன.
ர்ந்து வந்த காலமது. புதிய நவீனங்கள் படைக்கப் ங்கிய அபூர்வ சிந்தானி, மின்சார மாயவன், ாமகாராஜன் கதை ஆகய கதைகளையும், மாரியம் ஆகியவற்றையும் மிக ரசனையோடு வாசித்தும் ல் உள்ளவர்கள் எழுத்தறிவில் மிகக் குறைந்த ** இருந்தவர்களுக்கு எழுதப் படிக்க வாய்ப்புக் கியத்தைச் சுவாரஸ்யத்தோடு ரசிக்கும் தன்மை
95

Page 104
1939க்கு முன் இலங்கைக்கும் இந்தியா6 செய்வதற்கான வசதிகள் இருந்தன. அப்பொ பகுதிகளிலும் இருந்து ஏராளமான புலவர்கள், மம், சிவனுெளிபாதமலை யாத்திரையை மேற்ெ வரும் ஒவ்வொரு தனிப்பட்ட துறையில் நன்கு பாரதம் பாடும் புலவர், இராமாயணம் பாடும். பாடகர், தியாகராஜ கீர்த்தனங்களை இசைக்கும் திரைக் காலங்களிற் பெரிய வீடுகளுக்குச் சென்று
அந்தக் காலங்களிற் சினிமா இல்லை. மை கள் தடைபெற்றன. லங்கா தகனம், இராமா வான் சாவித்திரி ஆகிய நாடகங்கள் இவற்றில் நாடகங்களோடு தோட்டங்களில் அரிச்சுனன் த ஒட்ட நாடகம், மருதை வீரன், பொன்னர் ச வந்தன. இவை தவிர ஏனைய கிராமிய ஆடல், பா. லிருந்து மலை நாட்டில் 1930க்கு முன்னரும் உய வளர்வதற்கான வித்துக்கள் இடப்பட்டனவெ
பெரிய வீட்டுப் பிள்ளைகளுக்கு ஆங்கிலமும் முன்ன்ர் குறிப்பிட்டிருந்தேன். இத்தகைய வசதிக மணியம், ஆர். ராமையா, வெற்றிவேல் கவிராய போதினி போன்ற தமிழ்ச் சஞ்சிகைகளுக்குத் வந்தார்கள். இவர்களுடைய படைப்புக்கள் பெரு இருந்தன. இந்தச் சிருஷ்டிகளில் மக்களது பிரச்சி யோ குறிப்பிடப்பட்டவில்லை. அவை அனைத்தும். வைகளாகும். இந்த எழுத்தாளர்கள் திம்புலைப்
இந்தக் காலத்துக்குச் சற்று முன்னர்தா காலத்திற்கும் மத்தியில், மாத்தளைப் பகுதியில் ஆ மலைநாட்டில் மட்டுமல்ல, முஸ்லிம் கவிஞர்கள் ம இவருடைய பாடல்கள் பலவற்றை நான்’கேட்டி கியானம் செய்வதற்கு எனக்குத் தக்க தமிழ் ஞ
எனவே, 1930ம் ஆண்டில் மலைநாட்டு இ கவனிப்போம். இந்திய் தேசிய இயக்கத்திற் பங் ஆற்றல் ஆகியவற்றை வானளாவப் புகழ்ந்து ம கரதாஸ் சுவாமிகளின் கீர்த்தனங்களும் மலை நா அதிமுக்கிய பாடலான "கரும்புத் தோட்டத்திலே மலை ரெட்டியாரின் காவடிச் சிந்துகளும் ஆட்சி செ பாதம், கதிர்காமம் ஆகிய ஸ்தலங்களைப் பற்றிய இடங்களில் நடைபெற்று வந்து குதிரைப் பந்தய குறித்தும், நாவலப்பிட்டி பெரியாம்பிள்ளை, எஸ். எம்டன் ஏ. விஜயரட்ன ஆகியோர் பாடல்களைப் யிட்டுப் பொது மக்கள் மத்தியிற் பாடி விற்பனை
வரகவி தாகூர், சரோஜினி போன்ற இ ரிவிபூ, இந்தியன் ரிவியூ ஆகிய சஞ்சிகைகளும் " உந்துதலில் ஆட்பட்டவர்களில் கே. கணேஷ், ஸி வர்கள். இவர்கள் எழுத்துலகிற் புகுந்த சமயத்தி கடைப் பகுதியிலிருந்து கவிஞர் இ. சிதம்பரநாத துக் கொண்டிருந்தார். “பெளத்த தாயன" எ

புக்கும் இடையே தங்குதடையின்றிப் பிரயாணம் ழுது மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய கவிஞர்கள், அறிவாளிகள் ஆகியோர் கதிர்கா காண்டு இங்கு வந்தனர். இவர்களில் ஒவ்வொரு பாண்டித்தியம் மிக்கவராகத் திகழ்ந்த னர். புலவர், திருப்புகழ்க்கவிராயர், காவடிச் சிந்துப் சங்கீத வித்துவான்கள் ஆகியோர் தமது யாத் பாடி சன்மானம் பெற்றுப் போவதுண்டு.
0 நாட்டின் சில முக்கிய பட்டினங்களில் நாடகங் யணம், குலேபகாவலி, அரிச்சந்திரன், சத்திய பிரக்தியா தி பெற்றவை. அதே வேளையில் இந்த பசு, அரிச்சந்திர விலாசம், நந்தன் சரித்திரம், சங்கர் ஆகிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டு rடல்களும் மலிந்திருந்த கலம் அது. இவற்றி ர்ந்த ரக கலாசாரமும், இலக்கியமும் வேரூன்றி ன்பது தெட்டத் தெளிவாகும்.
தமிழும் படிக்கக் கூடிய வசதி இருந்ததென்று ளைக் கொண்டவர்களில் காலஞ்சென்ற சி. சுப்பிர பர் ஆகியோர் ஆனந்த போதினி, அமிர்த குண தமது உன்னத படைப்புக்களை ஆக்கியளித்து ம்பாலும் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் %னகளைப் பற்றியோ லெளகீக விடயங்களைப் பற்றி ஆத்மீகத் துறையை ஒட்டிப் படைக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள்.
ன், பின் கோப்பி காலத்திற்கும் முன் தேயிலைக் அருட்கவி அப்துல் காதிறுப் புலவர் தோன்றினர். த்தியிலும் இவர் பெருங் கவிஞராக விளங்கினர். டருக்கின்றேன். அவற்றைப் பற்றி இங்கு வியாக் நானமும் ஆற்றலும் இல்லை.
லக்கியம் எந்நிலையில் இருந்ததென்பதை ஊன்றிக் கு கொண்ட தலைவர்களின் தியாகம், பெருமை துரை பாங்கரதாஸ் பாடிய கீர்த்தனங்களும் சங் ட்டில் ஒரு தனி இடத்தை வகித்தன. பாரதியின் என்ற பாடல் இங்கும் எதிரொலித்தது. அண்ணு லுத்தி வந்தன. இவற்றைப் பின்பற்றி சிவனெவி 1ம், பேராதனை, ரதாளை, நுவெரெலியா, ஆகிய விழாக்களைப் பற்றியும், அரசியல் சம்பவங்களைக் எஸ். நாதன், ஜபார், கந்தசாமி கணக்குப்பிள்ளை, புனைந்தனர். இவற்றைப் புத்தகங்களாக வெளி செய்தும் வந்தனர்.
ந்தியப் புலவர்களின் படைப்புக்களும் மொடர்ன் பெரிய வீட்டுப்' பிள்ளைகளைக்கவர்ந்தன. இந்த . வி. வேலுப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்க ல், அதாவது 1934ம் ஆண்டளவில் ரெகிலி காஸ் பாவலர் உயர்ந்த கவிதைகளைப் படைத்து அளித் ன்ற மகுடத்தில் புத்தபெருமான் சரித்திரத்தைக்
96

Page 105
கவிதைகளால் அவர் படைத்துக் கொண்டிருந்த 1940க்கு முன் கணேஷ் தமிழில்மொழிபெயர்த் ஸி. வி. வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய ' நாட்டில் வெளிவந்தன. இந்நூல்கள் பலரின் கன் அவர்கள் கவிதை எழுதும் முயற்சியிலும் சித்தி 1940க்குப் பின் மலை நாட்டில் பெரிய வீட்டுப் கல்வி, எல்லோருக்கும் உரிய சொத்தாக }}رfT ؟'uز கொடி" சகாப்தம் உதயமாயிற்று. ப்
ஆனந்தவிகடன், கல்கி, இதர படைப்புச் பிற் பர்வத் தொடங்கின. இதே வேளையில் மலை லாயின. ஸி. வி. வேலுப்பிள்ளையின் “தேயிலைத் இக்காலத்திலேதான் வெளிவந்தன. தேயிலைத் ( 'மலைநாடு’ என்று குறிப்பிட்டது இந்தக் கட்டு இதற்குச் சற்று முன்பு கான் ஸி. வி. வேலுப்பிள்: நூலும் வெளிவந்தது.
1950 இன் பின்னர் மலை நாட்டில் தோட்டத்து வாழ்க்கையை நிலைக்களஞக வை: செந்தூரன், ரஃபேல், எம். எஸ். எம். இரான வத்தை ஜோசப், தமிழோவியன் ஆகியோர் 4 Lair&tTu? Gör ‘வாழ்வற்ற வாழ்வு' என்ற நவீன தோட்டத்து வாழ்க்கையைப் பின்னணியாகக் கண்ேஷ் ஆங்கிலத்தில் வடித்த கவிதைக்கு ஐப்ப டுக் கிடைத்தது. இக்காலத்தில் டி. எம். பீர்முகம் அப்பாஸ் சிருஷ்டித்த ‘ஒரு துளிக் கண்ணிர்' பாடல்களில் மட்டும் ஈடுபாடு காட்டி வந்த எல் கவிஞர்களாகவும் போற்றப்பட்டார்கள். கோவிர் பட்ட பிரச்சினைகள் சம்பந்தமாகவும், கணக்குப் குறித்தும் பாடல்கள் பல இயற்றிப் பொது மக்
1957க்குப் பின்னர் முற்போக்கு எழுத்து எழுத்தாளர்களின் சிந்தையில் ஒரு புதிய மாற்ற கையைப் பற்றிக் கவிதைகள் புனைவதை வி. டுத்து குரலை எழுத்தில் வடித்தனர். ஸி. வி. வேலுப்பிள் ஆங்கிலத்தில் கவிதை படைத்தார். இந்த ஆங்கி போதிலும் மலைநாட்டைப் பொறுத்த மட்டில் களுக்கு துலாம்பரமாக எடுத்துக் காட்டியது. ( இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள விமர்ச தாலுங்கூட மலை நாட்டில் இருந்து இதைப் шп пѓä கக் கூடிய ஓர் அருட்கவி தோன்றுவான் என்பது 6
1980க்குப் பின்னர் இளம் எழுத்தாள மாகச் சிறுகதை, கவிதை, கட்டுரைகளே ( கவிஞன் தென்னவன், குமரன், இராம. சுப்பிரம குமார், சி. எஸ். காந்தி ஆகியோர் இவர்களி எஸ். விஸ்வரத்தினம், கார்மேகம், கு. இராம யிற் கவனம் செலுத்தினர்
அண்மையில் வெளிவந்த முக்கிய ம மலர், தூவான்ம், தாயகம், மலைநாட்டுச் சிறுக க்ள்’ எனும் நூல் ச் மீபத்தில் வெளியான

காலப் பகுதியும் அதுதானென நினைக்கின்றேன். ; திரு முல்க்ராஜ் ஆனந்தின் ஆங்கில நாவலும், பத்மா ஜEே' என்ற கவிதை நாடக நூலும் மலை பனத்தையும் கவர்ந்து வந்தன. சக்தீ ஏ. பாலேயா ரம் வரையும் பிரயான சயிலும் ஈடுபட்டிருந்தார், பிள்ளைகளின் ஏகபோக சொத்த க விளங்கி வந்த து. இந்தக் காலத்திலே தான் தமிழகத்தில் 'மணிக்
கள், புதுல்சமப்பித்தன் கதைகள் யாவும் இலங்கை நாட்டின் சிறுகதை முயற்சிகள் மேற்கொள்ளப்பட தோட்டத்திலே’ என்ற தொடர் கட்டுரைகளும் தோட்டத்தை முதன் முதலாகப் பெருமையோடு ரை களில் தன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. *ளயின் 'வழிப்போக்கன்' என்ற ஆங்கிலக்கவிதை
محی
உத்வேகம் பிறக்கத் தொடங்கியது. தேயிலைத் த்து திருவாளர்கள் பொ. கிருஷ்ணசாமி, திருச் மயா, தியாகராஜா, பன்னீர்ச் செல்வம், தெளி நீறுகதைகளைப் படைத்தார்கள். வி. வி. வேலுப் மும் தினகரனில் .ெ எளிவந்தது. இது தேயிலைத் கொண்டது. இதற்குச் சற்றுப் பின்னர், கே. ானிய மாளிகையிலிருந்து குறிப்பிடத்தக்க பாராட் மது எழுதிய "கங்ச1ணிமகள்' என்ற புத்தகமும், என்ற நூலும் 3ெ எரிவந்தன. ஆரம்ப காலத்திற் ஸ். எஸ். நாகனும் காலஞ்சென்ற பெரியசாமியும் தசாமித் தேவர் தொழிலாளர்களின் பலதரப்பட் பிள்ளை கந்தசாமி பிரஜாவுரிமைக் கெடுபிடிகள் களிடையே இலக்கிய ஆர்வத்தைத் தூண்டினர்
தும் முற்போக்கு இலட்சியங்களும் மேற்குறிப்பிட்ட த்தை ஏற்படுத்தின. இக்காரணங்களினல், இயற் இலங்கை வாழ் எட்டு லட்சம் மக்களின் அவலக் ளை "தேயிலைத் தோட்டத்திலே’ என்ற தலைப்பில் லக் கவிதை முயற்சி முதன் முயற்சியாக இருந்த இது முக்கியமானது என்பதை ஆங்கில வாசகர் இக்கவிதைகள் நூலுருவில் வெளிவந்த போது, sர்கள் இதைப் பாராட்டியும் போற்றியும் இருந் கிலும் பன்மடங்கு உயர்ந்த கவிதைகளைப் படைக் Tமது நம்பிக்கையாகும்.
ர் குழு ஒன்று தோன்றியது. இக்குழுவினர் அதிக எழுதுவதில் ஈடுபட்டிருக்கிருர்கள். தொழிலாளிக் ணியம், மு. சிவலிங்கம், சிக்கன்ராஜ், மல்லிகை. சி. ல் மிக முக்கியமானவர்கள். இரா சிவலிங்கம், ச்சந்திரன், சாரல் நாடன் ஆகியோர் உரைநடை
லைநாட்டுப் படைப்புக்கள், குறிஞ்சிப்பூ, குறிஞ்சி 5தைத் தொகுதி என்பன. 'உழைக்கப் பிறந்தவர் ஆங்கில நூல்ாகும்.
7.

Page 106
ஈழத்து இலக்கண
பண்டிதர் க.
‘எல்லாம் உரைநடையில்’ என்ற உணர் காலம் 19ம் நூற்ருண்டின் நடுப்பகுதி என்றே சரியாகவும் எழுதுவதற்கான இலக்கணத் துறையி இந்த உணர்விலும் நாட்டத்திலும் இவற்றுக்கு உ ஆன பெருமை, ஈழத்திற்கே உரியதாம்.
புதிய சிந்தனைகளுக்கு உருவம் கொடுத்து இறந்துபடாமற் காத்து, பழையனவற்றுக்கு உரை கண்டு, காலாகலமாக இலக்கண உரையாளர் பினையப்பட்டு வந் துள்ள கி ழட்டுப் பிரச்சினைகட்கு களுக்கு வழிகாட்டி, அனைத்துக்குமே அடி எடுத் யாகும். இம் முயற்சியின் ‘அடிக்கல்’ ஆக அமைகி (1851). “அடியூறல்” தான் விரைவான வளர்ச் ஈழம் உணர்ந்துவிட்டது. இவ்வண்ணம் அடிக்கல் இலக்கண நூல்களைப் புனிதப்படுத்திப் பதிப்பி; சமுதாய நோக்கில் நடைபோட்ட புலமை உந்தலு திருப்பமும் காரணிகளாய் அமைந்த புதிய இலக் கொள்வது பொருத்தமானதாகும்.
Hதுநூல் ஆக்கம் கண்றதும் முன் வரிசை (1874) ஆகும். எந்த மொழியின் இலக்கணமு ஆகும் தொடர் என்ற இலக்கண முக்கூறுகளின் மூன்று சுறுகளையும் தனித்தனியாகக் கொண்டு தொல்காப்பியம் தொட்டு நன்னூல்வரை தனியா வகுத்திடவில்லை என்றல், தொடர் அமைப்பைப் சொல் இலக்கணத்திற்குள்ளேயே தொடர் இலக்
நாவலரோ அதனையும் தனி அதிகாரமாக மொழி அதிகாரம் என மூன்று அதிகாரம் கண்டு தமுமான வசனநடையில் முதன் முதலாக எழு தொல்காப்பியத்திற்கு எவ்வளவு மதிப்புண்டோ நூல்களில் இதற்கும் உண்டு. நாவலரின் இலக்க என்ற பெயரிலேயே இரு நூல்கள் உண்டு. ஒ6 (1848); மற்றென்று மயிலை சவேரிமுத்துப்பிள் வேறு சில இலக்கண நூல்களும் உள. உளவாயி தொல்காப்பியத்தைக் குறிப்பிடுவதுபோல், வச சீருக்கம் எத்துணை முதன்மையானதெனும் முடிவு
அடுத்து, யாழ்ப்பாணத்துச் சங்குவேலிய நெவின்ஸ்) எழுதிய * தமிழ் வியாகரணம்" 6.ண்ப பெருங்கணித நிபுணர்; தர்க்கர் (முதன் முதல் றமிழ்ப் புலவரும் ஆவர். தமிழ் வியாகரணத்தை

στ முயற்சிகள்
வீரகத்தி
வும் உணர்ச்சியும் முகங்கொண்டு முறுகி எழுந்த ஆகும். இதனல், மொழியைத் திருத்தமாகவும் ல் நாட்டம் சென்றது வியப்புக்கு உரியதன்று. ருவம் கொடுத்த செயல் முறைகளிலும் முன்னேடி
வ, புது நூல்கள் ஆக்கம் செய்து, பழையவற்றை "யும் புத்துரையும் தந்து, உரைகளுக்கு விளக்கம் 5ளாற் புலமை நோக்கில் உழக்கப்பட்டு அல்லது அறுதியான தீர்வு கண்டு, புதிய துறை ஆராய்ச்சி துக் கொடுத்து நின்றது ஈழத்து இலக்கண முயற்சி கிறது நாவலரின் நன்னூல் விருத்தி முதற்பதிப்பு சிக்கு வலிவும் வனப்பும் அளிக்கும் என்பதை நாட்டி, ஏட்டில் இறந்து கொண்டிருந்த பழைய த்ததனல் ஏற்பட்ட அநுபவ - அறிவுவளமும், ம், பிறமொழித்தொடர்பால் ஏற்பட்ட சிந்தனைத் 1கண நூல்கர்ன் ஆக்கத்தை முதற்கண் அறிந்து
۶۔
யில் முன்நிற்பது நாவலரின் இலக்கணச்சுருக்கம் Dம், ஒலி, ஒலியால் ஆகும் சொல், சொல்லால் இயல்பை உரைப்பதாகவே அமையும். இம் அமைவதுதான் ஓர் இலக்கண முழு நூலாகும். கத் தொடர் மொழி அதிகாரம் என ஒன்றை பற்றி அவை பேசவில்லை என்பது கருத்தன்று. க்கணத்தையும் அவை கூறிவிட்டன.
க்கி எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர் ), இலக்கணக் கருத்துக்களைத் தெளிவும் திருத் ழதிஞர். சூத்திர யாப்பில் எழுந்த நூல்களிலே ", அவ்வளவு மதிப்பு வசன நடையில் அமைந்த ணச் சுருக்கத்துக்கு முன், இலக்கணச் சுருக்கம்" ன்று முகவை இராமானுச கவிராயர் எழுதியது ளே எழுதியது (1860). வசன நடையிலமைந்த லும், ஒப்பு நோக்குணர்வு, சூத்திர யாப்புக்குத் ன இலக்கண நூல்களில் நாவலர் இலக்கணச் வைப் புலப்படுத்தும்.
பில் வாழ்ந்த மு. சிதம்பரப்பிள்ளை (உவில்லியம் தைக் குறிப்பிடல் வேண்டும். சிதம்பரப்பிள்ளை நியாய வியாகரணம் எழுதியவரும் கூட); நற் 3 ' மூன்று பர்வம் களாகப் பிரித்தெழுதி வெளி
98

Page 107
யிட்டார். மூன்ரும் பர்வமான வசன இலக்கண புதிய சிந்தனைகளுக்கு உருவம் கொடுத்த புதிய பூ க்கு அடி எடுத்துக் கொடுத்தது என்று குறிப்பிட
புதுநூல் ஆக்கத்திற் சுன்னுகம் குமாரச (1897) பெரும்பயன் உள்ள ஒரு நூலாகும். வ சொற்கள் அனைத்துக்கும் நன்னு லார் விதி கூறவி யில் நின்ற சொற்கள் அனைத்தையும் துருவித்து( படையில் வரிசைப்படுத்தி, இலக்கிய ஆதாரங்க ஆகும். குமாரசுவாமிப் புலவரின் வினைப்பகுப முயற்சி என்க. வினைப்பகுதிகளை அறியும் முயற்சி நட என்பது முதல் கொல் என்பது ஈருக 33 த இயற்றிக் கொள்ளே" (வீரசோழியம்-61) என் பின்வந்த நன்னூலார், வடமொழி வினைப்பகுதிக படுத்தி உணர்த்திய பணினிபோல், தமிழ் விை அடிப்படையில் 23 வகைப்படுத்திஞர். இவ்வாறு பட்ட வினை யடிகளை எடுத்துக் காட்டி, அவற்றி ஆகுமாற்றைக் காட்டுகின்றது வினைப்பகுபத வி முடியாத புது முயற்சி இதுவாகும். சொல், சொ6 "இரகசிய பாவனை' யில் அல்லது 'அந்தரங்க 2 விளக்கம்,
கெளரவ பொன். இராமநாதன் எழுதிய வான, புதுமையான வளக்கங்களைக் கொண்ட 'நன்னூல் உதாரண விளக்கம்" (1912), செல் (1864), நீர்வேலிச் சிவப்பிரகாசபண்டிதர் எ குறிப்பிடத்தக்கன.
1851 தொடக்கம் 1890 முடிய உள்ள நூல்கள் அனைத்தையும் அச்சேற்றி விட்டது ஈழம் நல்லுலகத்தின் நன்றிக்கும் வணக்கத்துக்கும் உ திற்குள் தொல்காப்பியம் முழுவதையுமே வெ ஈழத்து இலக்கண முயர்சியே நாடெங்கும் இலக்
பழைய இலக்கணச்சூத்திரங்களிலும் பா பாய்ந்தனவாய் அமைந்துவிட்டன. சூத்திர மூல கூட, பழைய உரைமூலம் செல்லுகின்ற ஒருவ விடுவான். இவ் வல்லங்கத்தைப் போக்குவத ஆரம்பிக்கப்பட்டது; ஒன்று புத்துரை எழுதுவது. இங்கும் ஈழத்து முயற்சியே வழி காட்டி யாய் அ கையுரை எழுதினர் நாவலர். அப்படியில்லை, ெ புதுக்கியும் நாவலர் வெளியிட்டார் எனக் கூறுே யைத் திருத்தியும் புதுக்கியும் எழுதிய சிவஞான( ளப்பட்டு, சிவஞானமுனிவர் விருத்தியுரை என யும் அச்சிட்ட உரையைப், புத்துரை என்று ஏ சொல்லே புத்துரை என்பதைத் தெளிவாக சூத்திரத்திற்கும் புதுக்கப்புதுக்க உரை எழுதிய நாவலர் காண்டிகை உரையே தமிழ் உலகில் சி

ம் 1886 இல் வெளியிடப்பட்டுள்ளது. வாலாகும். இந்நூலைத் தாதுக்களை அ D.
லாம்.
வாமிப் புலவர் எழுதிய "இலக்கண சந்தி கை" டமொழியிலிருந்து தற்பவமாய்த் தமிழுக்கு வந்த ல்லை. நன்னூல் விதிகளுக்கு அடங்காமல், வெளி குவித்தேடி, அவற்றை இறுதி எழுத்துக்கள் அடப் ளுடன் முடித்துக்காட்டுவது இலக்கண சந்திரிகை த விளக்கம் (1912) மிக மிக ஓர் அபூர்வமான 1யை வீரசோழிய ஆசிரியர் தொடக்கி வைத்தார். ாதுக்களைக் கண்டு பிறவற்றையும் 'இவ்வண்ணம் பதுடன் நின்று விட்டார் வீரசோழிய ஆசிரியர். ள் அனைத்தையும் இலக்கண நெறியால் 10 வகைப் சுப்பகுதிகள் அனைத்தையும் மொழி இறுதி எழுத்து வகைப்படுத்திய வினை யடிகளில் 350 க்கு மேற் லிருந்து பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் ளக்கம். எத்தமிழ் அறிஞரும் ஈடுகொடுக்க ஸ்லாக்க ஆராய்ச்சியில் ஈடுபடும் விற்பன்னர்களின் டப நிடதம்’ ஆக உள்ளதாம் இவ்வினைப்பகுபத
ப" "செந்தமிழ் இலக்கணம்’ (1927) மிகத்தெளி து. மேலும், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய ாந்தரநாயகம்பிள்ளை எழுதிய "நன்னூற் சுருக்கம்
/。
r ய ‘இயற்றமிழ் இ லக்கண சாரம்" கியன
Ծք نقد f) రడీ <卷
காலத்துக்குள் அநேகமான பிரதான இலக்கண . நாவலர், சி. வை. தா. ஆதியோர் தமிழ் கூறு உரியவர்களாய்வட்டார்கள். குறிப்பிட்ட காலத் ளிக்கொணர்ந்ததும் ஈழம் தா ன. இத்துறையில் கணப் படிப்புக்கு அடிகோலிவைத்தது.
ர்க்க அவற்றுக்கு எழுதிய பழைய உரைகள் வைரம் த்தை நேரே அணுகக் கூடியதான இடங்களிலும் ன் மூலமுர்த்தியைக் காண வழியின்றித் திகைத்து றகாக இருமுனை முயற்சி ஈழத்துப் புலவர்களால் மற்றது பழைய உரைகளுக்கு விளக்கம் தருவது. மைகின்றது. புத்துரையாக ந6 னுாலுக்குக் காண்டி சாகப்பெருமாள் ஐயர் உள ர0 யயே திருத்தியும் வாரும் உண்டு. சங்கரநமச்சி பாயர் எழுதிய உரை மனிவர் உரை தனி உரைநூலாக ஏற்றுக்கொள் வழங்கப்படுமாயின், நாவலர் திருத்தியும் புதுக்கி ன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? 'திருத்தியும்" என்ற ரூபிக்கின்றது. இலக்கண நூல்களில் ஒவ்வொரு உரை நூல் ஏதும் இல்லை; இருக்கவும் முடியாது. Tஞ்சீவித்துவம் பெற்றுவிட்டது.
99

Page 108
இனி இலக்கணப் படிப்பு நோக்கி, சுன்னை புத்துரை ஒன்றை வெளியிட்டார் (1903). இதே கும் புத்துரை எழுதினர்; நம்பி அகப்பொருளுக்கு அனைவராலும் இன்று பயிலப்படுகின்றன. உடுப் சிரியர் வல்வை வயித்திலிங்கப்பிள்ளை ஆகிய டெ ஆரை எழுதியுள்ளார்கள். இவ்வுரை முயற்சிகே உண்டாக்கிவைத்தவை. - - -
உரைகளுக்கு விளக்கம் எழுதுவதிலும் ! காண்டிகை உரைக்கே விளக்கம் எழுதினர் (19 சுவாமிப்புலவர். இந்த ஜோற்காண்டிகை உரை வாய்ப்பை நல்கியது; விடுபடாதிருந்த இலக்கண ஆகுபெயர் அன்மொழிவேறுபாடே ஈடாட்டம் கா பெருகும். அடுத்து, தொல்காப்பியப்பழைய உரை றிந்த செய்தி.
இவ்வளவுடன் ஈழத்து இலக்கண முயற் தமிழ் படிப்பதற்கும் ஆங்கிலத்தில் தமிழ் இலக் பியர் சிலர் எழுதியிருந்தாலும்,தமிழ்மரபு தவறு Civilians' Tamil Giammar 6T63, to pit & ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இலக்கண நூல்களு
யாழ்ப்பாணத்துச் சங்கரபண்டிதர் வட (1890) எழுதியதையும் அறிக. தொடர்ந்து எழுதியுள்ளார்.
உண்டான காலம் முதல் நோய்வாய்ப் போலி சந்தியக்கரம், அளபெடை முதலிய பிர யெல்லாம் செந்தமிழ் முதலான பத்திரிகைகள் திரிசொற்களின் அகரவரிசைகளைநூல்களாக்கியும் களைப் பதிப்பித்தும், சொற்பிறப்பியல் முயற்சி ஆ தெரியும்.
சீடர். வி. சுப்பிரமணிய பிள்
** இருநிலத்தோர் கோபியெல கொருபொழுது மிலக்காகா உருகியகா தவிற்கொள்ளை பெருகியசுப் பிரமணிய பெ
ֆմ)/(է

குமாரசுவாமிப்புலவர் தண்டியலங்காரத்துக்குப் ஆசிரியரே 1908 இல் யாப்பருங்கலக்காரிகைக் ம் புத்துரை எழுதினர் (1912). இவ்வுரைகளே பிட்டி சிவசம்புப்புலவர், இயற்றமிழ்ப் போதகா ரும்புலவர்களும் ‘காரிகைக்கும் ‘நம்பிக்கும் ளே ஆந்திலக்கணப் படிப்பிலும் ஆர்வத்தை
5ம்மவர்கள் விட்டுவைத்துவிடவில்லை. நன்னூாற் 02) யாழ்ப்பாணத்துப் புலோலியூர் வ. குமார விளக்கம் இருட்டிலிருந்து ஒளிக்குச் செல்லும் "ப் புதிர்களை விடுவித்தது; சிவஞானமுனிவரின் "ண, வழிவகுத்து. ‘விளக்கப் பெருமை விளக்கப் "களுக்குக் கணேசையர் விளக்கம் எழுதியது நாட
சி தேங்கிவிடவில்லை. தமிழர் அல்லாதவர்கள் கண நூல்கள் எழுதப்பட்டன. முன்பும் ஐரோப் மல், யாழ்ப்பாணத்து ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை 1911 இல் வெளியிட்டார். வேறு சில ம் இதன் பின்னல் பிரசுரிக்கப்பட்டுள்ள்ன.
மொழிக்கே இலக்கணமாக 'சத்தசங்கிரகம்’ "தாதுமாலை" என்ற நூலையும் சங்கரபண்டிதரே
பட்டுக் கொண்டிருந்த ஆகுபெயர் அன்மொழி, #சினேகட்கும் முடியான தீர்வு கண்டு, அவற்றை ல் ஈழம் வெளிப்படுத்தியுள்ளது. இயற்சொல், அகராதிகளுக்கு ஆதிமுன்னேடிகளான நிகண்டு ஆரம்பித்தும் ஈழம் செய்த, பணிகள் ஆருக்கும்
ளை ( - 1873) பற்றி:
ா வெடுத்துரைக்கு மெஜ், சினத்துக்
தொழுகியென துளமுழுதும்
கொண்டவுற வினன் சீர்
ருந்தகையோய் நீயன்றே”
pகநாவலர்

Page 109
A Brief Survey of Sol By Ceylon т
V. SIVARAJASINGAI
The main controversy regarding translatio) been humorously remarked that translations are when lovely. However the fact remains that the ( norms and thereby any attempt to measure the regarded as a dubious enterprise. Hence what is a evaluation of some of Ceylons Tamil trans lalion
Perhaps the earliest known translation of Hoisington who re11dered the Sivagnanapotham, Tl 1854. But since this survey confines itsclf only discuss them here. In this brief survey Rev. Iss: deserves to be mentioned first. The work entitled study. It comprises renderings of 366 psalms.
“Poetry Sir, cannot be translated' declar into a crucible that you might uiscover the principi one language into another the creation cf a poet tionary comments however have not detered scho been done in the hope that transla.ions would be valuable. Rev. Issac Tinambiah too must have b pendous task. He thought it best to render the of the poetic renderings done in the 19,h Century English garb. In rendering oriental verse into metre and rhyme. But Rev. I. Thambiah broke; he used the initial rhyme as in most of the Tam would at this juncture be qui e apt to allow the t form. “How far the English in the following pa alliterative charm of the original is not for metc for my poesie. He who insists on verse being in hug that delusion. Tne experiment ofiriial rhy Tney have only to treat the stanza as blank ver attempted but not one of themis constructed om
As a Christian engaged in the translatic n that his purport might be misconstrucd and ther toward off any wrong imprission as to his Chris any possible charge of confusion of Siddhantath of his translation :-

ae English Translations amil Writers.
I, B.A. (Hons.)
is whether it should be literal or literary. It has like women homely when faithful and unfaithful riterion of translation is protean and eludes exact nerit of any work in that fic ld is des, incod to be ttempted below is only a brief survey asid not an Works from Tamil to English.
classical Tamilin Ceylon was done by Rev. H. attuva Kaddalai and Sivapirakasam into English in o Ceylone se translators it would be irrelevant to Lc Thambiah's translaticn of Sage Thayumanavar | Psalms of a Saiva Saint is the result of 15 years of
Ed Dr. Johnscn. “It were as wise to cast a viclet le of its colour and odour as seek to transfuse from ” observed Shelley. Tnese and othersimilar caulars from translating poetic works. For they have at least an echo of the original and thereby prove :en motivated by this idea in undertaking this stuJerses of Thayuma navar into English verse. Most I happened to be a dressing of oriental thought in English verse the translators adopted the English away from tradition to devise a new torm, where in 1 poetic forms, instead cf the terminal rhymes. It ranslator to speak for himself, regal cirg the use of ges has succeeded in reproducing and retaining the mainlein. do not feel urged to offer any apolcgy ot verse ifitis not trocchaiccriambicis vilccme to mes no cd not jar upon cars used to terminal rhymes. se. Vari tis cfsyllabica11angemeishave been iny basis of defiance of rules.'
of a Saiva Mystic work he is beset with the dcubt fcre he concludes his intrcduc icin with anapclogia ian learings and to saf guaic the translation against ughts with Christian Essenvials. Hic reis a specimen
101

Page 110
Him the eternal ome tai who has no fashio Limb mor yet lineament Perfect, the far an Limitless flame in the f Spirit transcending Immanent made mainf Boundless beatituc
بہ
The author has tried his best to capture the have elaborately worked on devising new forms carry us far as possible the cadence of the original he has mechanised verse... Im Rev. Thambiahos tra a poet.
As has been mentioned in Dr. IssacThambi a Saiva Saint, some stanzas of Thayumanavar had Arunachalam. Suffice it to quote Sir. C. P. Rama Studies and Translations, to show the author's a Ramasamy Iyer : “The task of translation is inexp than to say that Sir. P. Arunanchalam's translatic parts of the formal beauty of the original”. Bk si undertook and accomplished the translaticn of Thi purana, Kalladam and Tirukkovaiyar. A stanza below:- -
கோடிவர் நெடுவரை ஆடிய சுனையதாய் அ சூடிய மலர்களாய் ே வாடினன் இனிச்செயு
"Highland maid of Kul that I were the pool ir bathest, the perfumed usest, the flowers thou
This is of course a free rendering of the stal pathetic insight he knew well that rencering it liter
Another remarkable transla ion is Muthu maraswamy, a maternal uncle of Sir. P. Ramanat English prose in the form of drama. He dedicate was staged at the Royal Court and the author him the drama to the English speaking world, the autho peculiarities of the national tone of though'. His garb not only the peculiarities of Indian thought b
1

tiess the holiest
or form ,ill-less Sustaining all
the mear ; ulness of things sense, speed st in bliss, peerless one e let us adore.
rom Adoration— GoLunt (U 6ir 6îGN jissub
spirit of Thayumanavar's pcems. He appears to with valicd syllabic arrangements with a vicw to verses. In this attempt cne is inclined to say that nslation we see more of a technician at work than
th’s introduction to his translation of the Psalms of
been already translated by the great savant Sir.P. samy Iyer's words appearing in his introductic n to ccomplishme ni s as a translator. Says Sir. C. P ressibly difficult and no higher praisc can be given ins enable us to compiéhend the spirit and scne des Thayumanava’s Psalms Sir. P. Arunachalam rumurukattuppa dai and scme stanzas frcm Kanthafrom Kanthapuranam and his translation is given
க் குறவர் மாதுநீ |ணியும் சாந்தமாய் தாயப்பெற்றிலேன் ம் வண்ணம்யாவதே,
ava clan, would , which thou unguents thou
wearest'
1za. Endowed with a fine literary sense and symilly would end-up in transverbalion.
coomaraswamy's Harichandra. Sir Muthucooian, translated the Tamilclassic Halichandra into d it to Queen Victoria, uncer whose patronage it self play d the role of Harichandia. It presenting is intellicin was to deliver'an (Xcellent key to the versicn is an at mpt to rcp1cduce in an English it also the sinuositics and eccentlicities of Incian
)2

Page 111
sentences. The author's attempt to shape the Er from the traditional form. Tnis was indeed a di effort a personal critical standard that allowed an
Ethical Epigrams of Auvaiyar is anotherla1 work comprises the translation of Aathi Soodi, K. Sri Kantha, the author, tells us that his translat Western Scholars like Percival, Robinson and
Another beautiful translation of Dr. SriK appears that this was mcant for private circulation is not literal, for his aim was to convey the mea English readers. Though like a humble scholar he following example will show the polished artist in
“If men could study the art of Chandr human currents that flow through every fo sports of love, the passion of women could a statue made of Chandrakantha moonston
It is rather untortunate that this book has not beer
This survey does not pretend to be exhausti field of translation deserve discussion. The Co1 sionary people to English literature through thei * Ceylonese Counterparts.'
“The death of this disting (Sir Ponnambalam Aru from the ranks of Tamil graces of the Cultures were happily blended'
AS

glish sentence in the Indian pattern was a departure ficult task. The author had to evolve with much adequate appreciation of two different literatures.
dmark in the history of translated literature. This tirai Venthan and Mouthurai. In the introduction lon is a reproduction of some of the renderings by trutt, with alterations here and there.
antha is Athiveera Rama Pandya’s “Kokoham”. It and was therefore not published. he translation ning of the stanzas in language intelligible to the says,' the tran.lation certainly has defects,' the him. The entire translation is in p1ose.
akala, which teaches he pleasures derived from the Fm of the human body and proceed to perform the be satisfied so thoroughly that they would melt like e when exposed to the rays of the moon.'
published.
ve. Several other aspirants and their works in the tribution of non-Ceylonese especially of the miso translations is in no way inferior to that of their
guished Countryman of mine
lachalam) in 1924 removes
Scholars one in whom the
ef the East and the West
omne T. Isaac Tambyah ilms of a Suiya Saint
03

Page 112
ஈழநாட்டில் எழுந்த
எஸ். கெயநேசன் B. /
யாழ்ப்பா ணத்து மக்களின் கல்வி வர்லாற் கம் உன்னதமான காலகட்டமாகும். அக்காலத்தி மிஷனரிமாரின் நடம்ாட்டம், அவர்களின் சூருவ நாட்டவரின் கலாசார சமய உணர்ச்சிகளைத் தட்டி மிக்க பேராட்டம் முதலியன ஒரு உண்மையான தோற்றுவித்தன. சமயப் போட்டி உச்சக் கட்ட தத்துவரீதியான பேச்சுக்களும் மலிந்து காணப்ப
பத்தொன்பதாம் நூற்ருண்டின் ஆரம்பத் மூன்றுவகைப்படுவர். இவர்கள் 1814 ல் வந்த வெ கொங்கிறிகேஷனலிஸ்ட் மிஷனரிகள், 1818 ல் வ வர். இவர்கள் யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு வேதாகம மொழி பெயர்ப்பு, துண்டுப் பிரசுர மாற்றினர். தமிழ் மொழியை ஐயந்திரிபறக் கற்ரு முடியாது என்ற உண்மையை மிஷனரிமார் நன் கற்பதற்கு அத்தியாவசியமாகவிருந்த அகராதி பற் எழுந்தது.
தமிழ் மக்கள் பண்டைக்காலத்தில் அகராதி திகளுடன் ஒப்பிடக் கூடிய நிகண்டுகளை அவர்கள் ெ அந்நிகண்டுகள் சொற்களின் பொருளை எளிதிற் பு குறித்த பல சொற்களையும், ஒரு சொல் குறித்த யுள் வடிவத்திலே கூறின. பத்தொன்பதாம் நூ சதுரகராதியும் 1841ல் உருெட்லரின் தமிழ்-ஆங் தன. உருெட்லரின் தமிழ்-ஆங்கில அகராதி மே பின்பற்றி எழுதப்பட்ட போதிலும், அது புலவி தீ தமிழ் அறிவைப் பெற்றுவிடத் துடித்த ஆங்கிலேய களினதும் தேவையை அவை திருப்தி செய்வனவா
மானிப்பாய் அகராதியும் உலின்சில்ே
1833 ம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திந் தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ், தமிழ்அகராதி9 னரி சங்கத்தைச் சேர்ந்த வண. ஜே. நைற் என்பவ நியமிக்கப்பட்டார். அன்னர் கொழும்பு காபிரியே பாலை சேனதிராய முதலியார் ஆகியோரின் உத ஈடுபட்டார். ஆணுல், 1838 ம் ஆண்டில் வண.  ை! வதனை காணுமலேயே இவ்வுலக வாழ்வை நீத்த
அவர் சேகரித்த விடயங்களை ஆதாரமாக லெவி ஸ்பால்டிங் என்பார் சந்திரசேகர பண்டித 1842ல் ஒரு தமிழ் அகராதியை வெளியிட்டன. தமிழிலும் ஆங்கிலத்திலும் சொற்களுக்கு விளக்க அகராதி, மானிப்பாய் அகராதி என்றும் அழைக்க அகராதி இதுவேயாகும். -

தமிழ் அகராதிகள் 4. (Cey) Dip, in Ed. (Cey)
ஜிலே பத்தொன்பதாம் விற்குண்டின் முதறபா லே மதப்பிரசாரம் செய்யும்படி வந்த மேனுட்டு ளிப் பிரசாரம், அவர்களை எதிர்த்து நின்று நம் யெழுப்பிய நாவலர் பரம்பரையினரின் உணர்ச்சி வித்துவக் கிளர்ச்சி ஏற்படக் கூடிய சூழலைத் -ம் அடைந்தகாலை கண்டனக் கட்டுரைகளும் ...t-6.
தில் யாழ்ப்பாணத்திற் பணிபுரிந்து மிஷனரிமார் ஸ்லியின் மிஷனரிகள், 1816 ல் வந்த அமெரிக்க ந்த ஆங்கிலேய சேர்ச் மிஷனரிகள் என்பாரேயா பகுதிகளிலே தொண்டாற்றிய பொழுதும் ஆக்கம் போன்ற பணிசளில் ஒருமித்தே கரும லொழியத் தமிழ்ப் பிரதேசத்திற் சேவை செய்ய ாகுணர்ந்திருந்தனர். எனவே ஒரு மொ ழியைக் றிய சிந்தனை அவர்கள் உள்ளத்தில் இயல்பாகவே
என்ற வடிவத்தை அறிந்திருக்கவேயில்லை. அகரா பற்றிருந்தார்களென்பது உண்மையேயெனினும், ரிந்து கொள்ள உதவவில்லை. அவை ஒரு பொருள் பல பொருள்களையும் தொகைப் படுத்திச் செய் ாற்ருண்டின் தொடக்கத்திலே வீரமாமுனிவரின் கில அகராதியின் நான்காம் பாகமும் வெளிவந் னுட்டு அகராதிகளின் அமைப்பு முறைகிளைப் த குறைபாடுகள் உடையதாகக் காணப்பட்டது.
அதிகாரிகளினதும் கிறிஸ்தவ மதப்பிரசாரகர் க இருக்கவில்லை.
அகராதியும்
பணிபுரிந்த மேனுட்டு மிஷனரிமார் யாவரும் ளை ஆக்குவதறகுத் திட்டமிட்டனர். சேர்ச் மிஷ ர் இதற்கான பூர்வாங்க வேலைகளைச் செய்யுமாறு ல் திசெர , உடுவல் சந்திரசேகரபண்டிதர், இரு வியுடன் சொற்களைத் தொகுத்து விளக்குவதில் ற் அவர்கள் தமது சீரிய பணி முற்றுப்பெறு
னர்.
க் கொண்டு அமெரிக்க மிஷனைச் சேர்ந்த வண. iர், வண. ஹற்சின்ஸ் ஆகியோரின் உதவியுடன் . இக்கையகராதி 58,500 சொற்களையுடையது. ம் கொடுத்தது. பிற்காலத்தில் இது யாழ்ப்பாண ப்பட்டது. ஈழத்திலேயெழுந்த முதலாவது தமிழ்
04

Page 113
கையகராதி வெளிவந்த போதும் மிஷன ஆங்கில பேரகராதி முயற்சியைக் கைவிடவில்லை. கென ஒரு புதிய செயற்குழுவை நியமித்தனர். அ( சிலோ அவர்கள் பொறுப்பாசிரியராக நிமமிக்கட் யைச் சேர்ந்த கருேல் விசுவநாதபிள்ளை, மெதடி பிள்ளை ஆகியோரின் உதவியுடன் சொற்களை உவி ைகிலோ அவர்கள் அமெரிக்காசென்றபொழுது பீற்றர் பேர்சிவல் என்பாரிடம் ஒப்படைத்தனர் நாவலருடன் ஒருங்கிணைந்து பல அரிய மொழிடெ களுடைய ஊக்கமான உழைப்பினுல் பேரகராதி வந்தது. வண. உவின்சிலோ அவர்கள் அமெரி ராதி துரித வளர்ச்சியடைந்தது. அவர் இதனை முதுபெரும் தமிழறிஞர்களாகிய வீரசா மிசெட்ட கவிராயர் ஆகியோரின் ஆலோசனைகளையும் திரு ஆண்டு இத்தனை பெரியார்களின் அரு முயற்சி பத்தினுலும் தமிழ் ஆங்கில பேரகராதி அச்சுவ,
இவ்வகராதியை மேலெழுந்த வாரியாக செலவாகியிருக்கும் உழைப்பையும் ஆசிரியர்கள் சிலிர்க்காமல் இருக்க முடியாது. 87,452 சொ கொண்டது. வானசாஸ்திரம், சோதிடம், விவ புராணம் போன்ற பல துறைப்பட்ட கலைச்ச்ெ இலக்கியப் பரப்பினை நுணுகி ஆராய்ந்து, ஆங்கே ெ கள், ஆகியோரின் பெயர்களையெல்லாம் தேர்ந், பண்பாட்டினை மேனுட்டவரும் நம்மடிகரும் நன்கு களின் தேவர், சமயம், வழிபாடு, சாஸ்திரங்கள், யுத் தொகுத்துக் கருத்து வழங்கப்பட்டுள்ளது. இ சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனல், வட வதற்கு அவற்றின் மேலே உடுக்குறி போடப்பட தெளிவானவையாகவும் காணப்படுகின்றன." இதுவே வழிகாட்டியாகவிருந்ததென்பர்.
பிற முயற்சிகள்
மேனுட்டுப் பாதிரிமார் யாழ்ப்பாண நம்நாட்டவரும் அவர்கள் காட்டிய பாதையிற் ஈடுபட்டனர். இவ்வகையில் திரு. வைமன் கதிை நாவலர்கோட்டம் முத்துத்தம்பிப்பிள்ளை, பருத் குறிப்பிடத்தக்கவர்கள்.
திரு. வைமன் கதிரைவேற்பிள்ளையவர்க ஒரு பாரிய தமிழ் அகராதியை உருவாக்கவே பட்டனர். திராவிட மொழியியல் நன்கு வளர்ச் சொற்கள் எல்லாவற்றையுமே தமிழ் அகராதியி னம், அளவையியல், சைவசித்தாந்தம், வேதாந் பல துரைக் கலைச்சொற்களை இவர் தேடித்தெ றிற்குக் கொடுக்கப்பட்டுள்ள மிக நுட்பமான தனிமனிதனின் ஆற்றல் இவ்வளவா என்ற திரு. கதிரைவேற்பிள்ளையவர்கள் தமது அகரா வேண்டியதாயிற்று. அவர் தேடித்தொகுத்த வி

ரிகள் தாம் தொடக்கத்திற் திட்டமிட்ட தமிழஅதனைத் தொடர்ந்து தொகுத்து முடிப்பதற் மெரிக்க மிஷனை ச் சேர்ந்த வண. மைரன் உவின் ப்பட்டனர். இவர் வட்டுக்கோட்டை செமினரி ஸ்த சபையைச் சேர்ந்த நெவின்ஸ் சிதம்பரப் த் தொகுத்தனர். 1855 ஆம் ஆண்டில் வண. து இப்பணியை மெதடிஸ்த மஷனரியான வண. வண. பீற்றர் பேர்சிவல் என்பாரே ஆறுமுக 1யர்ப்புப் பணி "ளைச் செய்து முடித்தவர். இவர் கருத்தாழமும், நுட்பமும் வாய்ந்ததாய் உருவாகி க்காவிலிருந்து மீண்டதன் பின்னர், இவ்வக ச் சென்னை க்கு எடுத்துச் சென்று ஆங்கிருந்த டியார், விசாகப்பெருமாளையர், இராமனுஜக் }த்தங்களையும் பெற்றுக் கொண்டனர். 1862 ம் பினுலும், வண. உவின் சிலோவின் திடசங்கற் ாகனமேறி வெளிவந்தது.
ப் பார்க்குமொருவன் இதனை உருவாக்குவதிற் ளின் திடசங்கற்பத்தையும் உணர்ந்து மெய் ாற்களையுடைய இவ்வகராதி 976 பக்கங்களைக் சாயம், பெளதீகம், இரசாயனம், விலங்கியல், சாற்கள் தேடித்தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ் சறிந்துள்ள நூலாசிரியர், புலவர், கதாபாத்திரங் து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழரின் நணர்ந்து கொள்ளும் வண்ணம் தமிழ்க் குடிமக் பழக்க வழக்கங்கள் என்பன பற்றிய சொற்களை இதிலே பேச்சு மொழிச் சொற்களும் வடமொழிச் மொழிச் சொற்கள் எவையெனக் கண்டுகொள் ட்டுள்ளது. விளக்கங்கள் நுட்பமானவையாகவும்
பிற்காலத்தில் எழுந்த மதருஸ் லெக்ஸிகனுக்கு
'த்திலேற்படுத்திவிட்ட வித்துவக்கிளர்ச்சியினல், சென்று அகராதிகளை உருவாக்கும் முயற்சியில் ரவேற்பிள்ளை, சுன்னகம் குமாரசுவாமிப்புலவர். தித்துறை சுப்பிரமணிய சாத்திரியார் ஆகியோர்
5ள் வட்டுக்கோட்டை மிஷனரியிற் கற்றவர். ண்டுமென்று சொற்களைத் தொகுப்பதில் ஈடு சியடையாத அக்காலத்தில் அவர் வட மொழிச் ற் சேர்க்க முனைந்தார். மருத்துவம், இரசாய தம், தத்துவம், அலங்காரம், சோதிடம்முதலிய ாகுத்தார். சொற்களின் தொகையையும் அவற்
விளங்கங்களையும் பார்க்கும் பொழுது ஒரு பிரமிப்பு ஏற்படுகின்றது. துரதிஷ்டவசமாகத் ாதியைப் புத்தகவடிவிற் காணுமலேயே மறைய டயங்கள் யாவும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரி
05

Page 114
டம் ஒப்படைக்கப்பட்டு, மதுரைத் தமிழ்ச் முதலாவது பாகம் 17,600 சொற்களையும் மூன்றுவது பாகம் 28,200 சொற்களையும்
நாவலர் கேட்டம் திரு. ஆ. முத்துத்த முற்பகுதியிலே தமிழர் வரலாறு பற்றிச் இவர் அபிதான கோசம் என்னும் தமிழ்ச் அகராதியையும் ஆக்கியளித்தார். 1908ம் ஆ அகராதி இன்று மாணவர் மத்தியிலே பெருஞ்ச்ெ லச் சொல்லுக்குரிய பல கருத்துக்களைத் தமிழ்ப் பதத்தினைக் கூறுவது இவ்வகராதியி சொற்ருெடர்களுக்கும் இவ்வகராதி விளக்கம்
1914ம் ஆண்டு சுன்னுகம் குமாரசுவா வெளிவந்தது. இது இலக்கண இலக்கிய அறிவு ( இராமாயணம், மகாபாரதம், கலித்தொகை, லுள்ள பெயர்ச்சொற்களே இதனுட் பெரும்ப கொண்ட புதுச்சொற்களை உடுக்குறியினுற் சுட்ட
பருத்தித்துறையில் வாழ்ந்த சி. சுப்பி பொருள் விளக்கமென்னும் ஒரு கையடக்கமான சிறிதெனினும் மாணவருக்கு நல்ல பயன்தரவல்
தமிழுலகில் அகராதி அமைப்பதில் ஒரு காச சுவாமிகளாவர். இவரின் வாழ்க்கையிற் தொன்மையை எடுத்துக்காட்டுவதிலும் செலவிட 5ளைச் சொற்பிறப்பு அடிப்படையில் ஆராய்ந்து தாய்மொழி என்ற கருத்தை அவர் உள்ளத்தில் ஒப்பியல் அகராதியின் ஆறுபாகங்கள் 1938 ஆ பட்ட பகுதியில் வெளிவந்தன. இவ்வகராதியில் கங்கள், தாவரங்கள் ஆகியன நீங்கலாகத் தமிழ் காட்டப்பட்டுள்ளது. சொற்களின் தலையடிகள், பல்வேறு சொற்கள் கிளைக்கும் பான்மையும் ćim.) கள் அவையவை எழுந்த முறையிற் தெரிவி கோள்களும் வரையப்பட்டுள்ளன. போர்த்துக் பிறமொழிச் சொற்களையும் ஆராய்ந்து அவ அகராதி தமிழ் வரலாற்று ஆராய்ச்சியிலும் மொ! ஆனல், இவர் இறக்கும் பொழுது ஆறு பா:ங்கள்
யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரி ருடைய பட mயைத் தொடர்ந்து முடிக்க முனைத் பிறப்பு ஒப்பியல் அகராதியின் மூன்று பாகங்கள்
இவ்வாறு தமிழ் அகராதி அமைப்பில் இருந்து வந்துள்ளது. மேனுட்டு மிஷனரிம1 பரம்பரைபரம்பரையாக வளர்ந்துவிட்ட ஆராய் மாகலாம். இன்று ஈழத்தில் நிலைபெற்றவிட்ட இன்னும் சிறப்பான எதிர்காலம் இங்கு உண்டு 6 ? ார்ந்து வரும் கலைச் சொல்லாக்க முயற்சி .ت

ғБә; பிரசுரமாக வெளிவந்தது. இதனது இரண்டாவது பாகம் 18,100 சொற்களையும் கொண்டு விளங்குகின்றது.
ம்பிப்பிள்ளையவர்கள் இருபதாம் நூற்ருண்டின் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினர். செஞ்சொல் அகராதியையும் ஒரு ஆங்கில-தமிழ் ண்டு வெளிவந்த இவருடைய ஆங்கில-தமிழ் ல்வாக்குப் பெற்றத் திகழ்கின்றது. ஒரு ஆங்கி
தரும்பொழுதே ஒவ்வொரு கருத்தினதும் ன் சிறப்பம்சமாகும். ஆங்கிலத்திலுள்ள மரபுச் கொடுக்கின்றது.
மிப்புலவர் எழுதிய இலக்கியச் சொல்லகராதி பெற்றவர்களுக்கே பெரிதும் பயனiப்பதாகும். சிந்தாமணி முதலிய பழந்தமழி நூல்க. ரி ாலும் தொகுக்கப்பட்டுள்ளன. தாம் சேர்த்துக் 1.க் காட்டுகின்ருர் ஆசிரியர்.
"மணிய சாத்திரியார் 1924 ம் ஆண்டு சொற் அகராதியை வெரியிட்டனர். இது அவிெற் 0லதாக இருக்கின்றது.
புதுமையை ஏற்படுத்தியவர் நல்லூர் ஞானப்பிர பெரும்பகுதி மொழியாராய்ச்சியிலும், தமிழின் டப்பட்டது. இவர் தமிழிலேயுள்ள பல சொற் மகிழ்ந்தார். இவ்வாராய்ச்சி தமிழே உலகின் உதிக்கச செய்தது. இவர் ஆக்கிய சொற்பிறப்பு ம் ஆண்டுக்கும் 1946 ஆம் ஆண்டுக்குமிடைப் ), இடுகுறியாக்கப்பெயர் கொண்டுள்ள சில மிரு ச் சொற்கள் எல்லாவற்றிற்கும் சொற்பிறப்புக் வழியடிகள் எழுந்த வரலாறும் அவற்றினின்று ப்பட்டுள்ளன. அவற்றின் முக்கியமான பொருள் க்கப்பட்டுப் பெரும்பாலும் அவற்றிற்கு மேற் கேயம், சமஸ்கிருதம் முதலியவற்றின் வழிவந்த ]றிற்கும் அடி சு mப்பட்டுள்ளது. இவருடைய மியிலிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுக்கியுள்ளது. ா மட்டுமே வெளிவந்திருந்தன.
ப், பேராசிரியர் வ.ை தாவீது அடிகளார் இவ துள்ளார். வண. தாவீது அடிகளாரின் சொற் அண்மையில் வெளிவந்துள்ளன. . . .
ழம் என்றுமே தமிழகத்திற்கு வழி காட்டியாக ரின் ஊக்கம், யாழ்ப்பாணத்தவரின் ஆர்வம், ச்சி மனப்பான்மை என்பன இதற்குக் காரண
சுயமொழிக் கல்வி, அகராதி வளர்ச்சிக்கு ன்பதஃ ைக் காட்டிநிற்கின்றது. பல த  ைஹகளி ல் தற்குச் சான்று. -
0 6

Page 115
ஈழத்தில் இசைத் சங்கீதபூஷணம் பி. சந்திரே
ஈழத்தில் அநாதியில் நாட்டுப்பாடல்களு களிலே தொழில் செய்யும் பெண்டிரும் ஆட வரும் பலவகைப் பாடல்களே பொது மக்க மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் மிகவும். . சிருங்கார ரஸம் பொருந்தஅமைந்தவை. அப்ப தரு, லாவணி, பள்ளியெழுச்சி, கோலாட்டப்பட னம், தேவாரம் ஆகியனவுமே அப்போதைய திருவிழாக்களில் சின்னமேளசதுர்க்கச்சேரி, கதா ஆதியனவற்றிற்கே அதிக கிரா ககி இருந்துவந் கள் ஒன்றும் அக்காலத்தில் இல்லை. பிற்கால களால் ஆரம்பிக்கப்பட்ட கருநாடக இசை ச1 பெரும் உந்நத நிலையில் வளர்க்கப்பட்டு, வடெ வட இலங்கைச் சங்கீத சபையின் ஆறு வெவ்ெ கிம் தாயகத்திற் கி%ணயாக அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக நாம் சுந்தீரம் பிடில் வித்துவான் அவர்களே ஈழத் தின் அண்ணு மலைச் சர்வகலாசாலைத் ஆங்கு இசைக் கல்லூரி மேற்பார்வையாளராக இசைப் பேராசிரியர் க. பொன்னையாபிள்ளை பயணுக யாழ்நூல் வெளியாற்று. தமிழிற் சில அதற்கொத்தநிலையை விபுலாநந்த அடிகள இயலுக்கு இளங்கோவடிகளும், இசைக்கு விபுலா பினையும், சங்க கால இசைத் திறனையும், சில இசை (தேவார இசை), சாரங்கதேவரது இசை நந்த அடிகள் யாழ்நூல்" இயற்றினர். ஈழத்தி என்றிரங்கியவரெல்லாரும், ஈழத்திசைவளர்ச்சி ரசிகர்களாகிவிட்டனர். ஈழத்தில் இயற்டிையோட விபரிக்கையில், . . .
'நீலவானிலே நிலவு வீசவே, மாலைே சாலநாடியே சலதி நீருளே பாலை என்ன எழுந்த அந்த இன்னில் சத் கன்னலெனக் கேட்டுக் களித்த புல் அன்பன் முகநோக்கி ஆஹா இவ்வு என்னென் றுரைப்பேன் இசைப்பெn
என மட்டக்களப்பு வாவியில் மீன்கள் பாடும் இ இந்தியத் தமிழுலகம் வியக்க யாழிசை ஆராய்ச் சேவை இலங்கைக்குப் பெரும் மதிப்பைத் தேடி சரித்திரங் கண்ட பெருமை வாய்ந்தது.
Il C

தமிழ் வளர்ச்சி
FsJD, Dip. in Music (Anna malai)
நக்கே பெரும் மதிப்பு இருந்துவந்தது. கிராமங் வரும் அவ்வத்தொழில் செய்யுந்தோறும் பாடி ளே மிகவும் கவர்ந்தன, நாட்டுப் பாடல்களுள் -
ரசமானவகையிற் கிராமிய கொச்சைத்தமிழிற் ாடல்களுள் தாலாட்டு, ஒப்பாரி, பாவைப்பாட்டு, ட்டு, நலுங்கு, ஊஞ்சல், என்பனவும் புராணபட ஆரம்ப இசையாக இருந்தன. மேலும் கோவில் ப்பிரசங்கம், கரகம், காவடி, நாகசுரம், மேளம் தது. இப்போதுள்ள மாதிரியான சங்கீதக்கச்சேரி த்தில் யாழ்ப்பாணத்தில் புத்துவாட்டி சகோதரர் ங்கீதபூஷண்ப்பட்டதாரிகளால் ஈழம் முழுவதும் பரும்பாகக கல்வித் தி6ை ணக்களத்தோடு இணைந்த வருண பிரிவுப் பரீட்சைகள் மூலம் வளர்க்கப்பட்
கண்ட. யாழ்பாடி புத்துவாட்டி நா. சோம தில் தோன்றிய விபுலாநந்த அடிகள் தாயகத்
தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது, வும் கடமையாற்றனர். அப்போது ஆங்குள்ள அவர்களோடு கலந்து இசைத்த மழாராய்ந்ததின் ப்பதிகாரம் எத்தகைய இடத்தை வகித்ததோ , ாரது யாழ்நூல் இசைத்துறையில் வகித்தது. நந்த அடிகளுமாக இருந்தனர். பழைய இசைமர ப்பதிகாரத்தின் இசைநயத்தையும் பல்லவர்கால ஆகியவற்றையும் ஆாாய்ந்து, ஈழத்து விபுலா லசைவளம் காணுேம், இசைவளம் கேளோம் கண்டு இறுமாப் பெய்தித் தலை நிமிர்ந்து இசை மைந்த இசையின் நயத்தை விபுலானந்த அடிகள்
வளையே மலைவு தீருவோம்
பாடியே பலரொ டா டுவோம்
தீம்பாடலினைக்
பவனுந்தன்
ற்புதத்தை
ரு ஞணர்ந்தேன்'
Nசையைப் பற்றிக் கவியாத்துள்ளார். தாயகமhம் சி செய்த விபுலாநந்த அடிகளாரது இசைச் த் தந்துளது. இவ்வாற்?ன் ஈழத்திசை வளர்ச்சி

Page 116
ஈழத்திசை, நடனம், கூத்து ஆதியவற் ருக்கின்றது. இன்னும் காலப்போக்கில் ஈழம் கூடிய சாத்தியக் கூறுகள் பலவுள. தென்னிந்: பற்றி நாம் சகலருமறிவோம். ஈழத்திசையின் ே பேரவையை அலங்கரிக்கப் பல இசைப் பேராசிரி கள். யாழ்நூலே முதனு லாகக் கொண்டு ஈழத்தி நுணுக்கம் ஆதிய நூல்கள் இரண்டு ஈழத்திசை பல நூல்கள் இங்கு தோற்றுவிக்கப்படவுள்ள6 ஈழத்திசைக்கலைஞர்கள் நிலைநாட்டியுள்ளனர். ய 1974 தைமாசத்தில் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற
கருநாடக சங்கீதத்தின் உயிர்த்துடிப் நாகசுரம், மேளம் இரண்டும் மகோன்னத நிச் இசைக்கிருப்பிடம் தஞ்சாவூர். ஈழத்தில் இணுை திக்கி% 0ணயாக இந்தியாவிலுமிப்பே. ஒருவருமில் கோவில்களில் திருவிழாப்பட்சம் என்ருல் நாக றைக்குப் சிலவருடங்கட்கு முன்பிருந்த சின்ன விட்டது. அதற்குப் பதிலாக உயர் குடும்பப் ெ கொண்டுள்ளனர். t
யாழ்ப்பாணம், கொழும்பு, மறறும் *பிருந்தா வனமாகக் காட்சியளிக்கின்றன, அதாவ சிறுவர் சிறுமியர் கண்ணனைப் போல் ஆடல்ப எங்கும் நாத ரஜம் நிரம்பிவழிகிறது. எங்கும் இ ஒவ்வொரு வீட்டிலும் ஆண், பெண் குழந்தைகள் துள்ளனர். இப்பிள்ளைகளது ஆடல்பாடல் பெற்ே பெற்றேர் நினைவினிலே நாதவடிவாஜப் பிள்ளைக பண்பு என்ற கொள்கை எங்கும் நிலவுகிறது.
ஈழத்திற் சங்கர சுப்பையர், "நாகலிங்கப் அண்ணுச்சாமிதாயினக்காரர், என். காமாட்சிசுந் ஆதியோர் ஈழத்திலிசைத் தமிழ் வளர வழிவகுத் ஒப்புக் கொள்வர். அக்காலத்தே, கதாப்பிரச கதாப்பிரசங்கம், புராணபடனம், ஒரளவு இசை யும் தனது பங்கைச் செய்து வருகிறது.
தேவாரப் பண்முறை இசையிலும் ஈழம் பண்முறை தேர்ந்த தென்னிந்தியாவிலுள்ள பலர் யாழ்ப்பாணத்திலுள்ள குடும்பங்களுடன் நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டுள்ளனர். தே தளத்தை அநாதிதொட்டு இன்றுவரை கரு:ே தேசிகர் பரப்பரையினரே தருமகர்த்தாமார ஈழத்திலுள்ள திருக்கேதீஸ்வரம், திருக்கோே னர். அருணகிரிநாதர் ஈழத்து கதிர்காம க யுள்ளார். ஈழத்தில் கோவில்களில் நித்திய ல நமி பாட ஒதுவார்கள் இருந்து வருகின்றனர். பலி

றின் வளர்ச்சி நல்ல நிலையை அடைந்து கொண்டி
இசைக் கலைகளில் இந்தியா வையுந் தாண்டி விடச்
திய வித்வசபை , சென்னை இசைச் சங்கத்தைப்
பரவை சீக்கிரம் உண்டாகத்தான் போகிறது.அப்
யர்கள் இப்போது வளிம்படுத்தப்பட்டு வருகிருர்
ல் வழிநூலாக இசையிலக்கணம், இசைச் சாஸ்திர
*ப் பேரறிஞர்களால் வெளிவந்துள்ளன. மேலும்
3. இவ்வாருக இசைத் துறையில் சாதனை யை
ாழ்நகரில் அரசினர் நுண்கலைக்கல்லூரி ஒன்றும்
• آتا (
பு நாகசுரத்திலேயே தங்கியிருக்கிறது. ஈழத்தில் லயை அடைந்துள்ளன. இந்தியாவிற் கருநாடக கயம் பதியாகும். தவில் மேதை மு. தட்சினமூர்த் ல்லை என்ற கோஷம் கிளம்பியுள்ளது. ஈழத்தில் சுரமேளக் கச்சேரிகட்டு அமோக வரவேற்பு. இற் மேளசதுர்க்கச்சேரிக்கு இப்போது மோகங்குன்றி பண்களிக்போது நடனக்கலை பயில்வதில் ஆர்வங்
ஈழத்துப் பட்டினங்கள் இன்று கோகுலம்பது சகல பாடசாலைகளிலும் மற்றுமிடங்களிலும் ாடல் இரண்டினும் நாட்டங்கொண்டுள்ளனர். }சை எதிரொலி கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
அத்தனே பேரும் கானத்திலே அமுதாக நிறைந் ருேர் மனதை நிலைகுலையாததாகச் செய்துள்ளது. ள் காட்சி அளிக்கின்றனர், கலைப் பண்பு கடவுட்
பரதேசியார், புத்துவாட்டி சகோதரர்கள், தரம் தவில் பிரபலமேதை, சங்கீத பூவுணங்கள் தவர்கள். இந்தச் சரித்தி வரலாற்றை எவரும் ங்கத்திற் கிருந்த மதிப்பிற்கோர் எல்லையில்லை. க்கலே வளர்ச்சிக்கு ஆதியில் உதவின. வாஒெலி
விகவும் பாண்டித்தியமடைந்துள்ளது. தேவாரப்
பல இடங்களிலுள்ள சைவத் தேசிகர் விவாக உறவு வைத்து ஈழத்தையே தமது வார இசைக்குப் பேர்போன, வேதாரணியத் வாய் வரர்ை; ஆகிய இடங்களிலுள்ள ஈழத்துத் ாக இருந்து பரிபாலனஞ்செய்து வருகின்றனர். ஈஸ்வரமிரண்டிற்கும் நாயன்மார்பதிகம் Lուգ, ந்தனைத் தரிசித்து கதிர்காமத் திருப்புகழ் பாடி தியக்கிரியைகள் நடைபெறும்போது, தேவாரம் 2ய பண்முறை பிறழாது பாடப்படும் வழக்கம்
OS

Page 117
ஈழத்தில் நடைமு ைrயிலிருந்து வருகிாது. நாய பண் முறைகளை மாற்றிப் பாடுகின்றனர். திருவ திருவிசைப்பாவிற்குரிய தனி அலாதியா ஒ பணி பிறழாது பஞ்சதிருமுறை ஒதும் வழக்கம் இன்னு என்னும் பண்டைய மரபு ராகத்தில் பிறந்தது.
ஈழத்திலிசை, சினிமா ஆரம்பித்த 19 கருநாடக இசையே ஆதிக்கஞ்செலுத்தி வந்தது மெல்லிசை ‘டடடா' வுங்கலந்து, 1960 ல் இ டது. இன்று அது மாத்திரமல்ல "பொப்" இை ஈழத்திசையிலும் நமது ரேடியோவிலுங்கூடத் தா இசைத் தமிழ் வளர்ச்சியை எவ்விதத்திலும் ப் ஈழத்திசைத் தமிழ் வளர்க .
காலமெ ஆறுந்தேர் பாவமாம் பள்ள
கடுகியே யோடுது கண்மூடித் பாலர்கள் பசிகொண்டு பால்மொழி பரிதவித் துன்முகம் பார்த்தழ: மாலுறுத் தும்பஞ்சப் பேய்விரித் தி மார்க்கமொன் றறியாம லேக்ச ஏலுமட் டும்மின்னல் உற்றனம் வா ஈழமா தா பள்ளி எழுந்தரு ள
1 ι

கத்தில் திருமுறைகளை நவீன இசையுலகிற்கேற்க, ாசகத்தை இங்கு சுததாங்கமாகப் பாடுகின்றனர்.
சாளரபாண என்ற 1.ண்ணுகும். இந்த முறை வம் ஈழத்தில் இருந்து வருகிறது. இது பாடி
37 தொடக்கம 1947 - 1950 வரை கூட
1950 ல் இருந்து கருநாடக சங்கீதத்தோடு நந்து மேற்கத்திய "ஹலோ”வும் கலந்து விட்ட சப்புயல் - ஹாபரே நடனம் போன்றவையும் ண்டவமாடுகின்றன. இப்போக்கு நமது கருதப் க ாதிக்காதென்!! : எமது தி.மீ.  ைநம்பிக்கை,
ங் துயிலாய் கூறிப் i Ltrt D st tij
5fr ti.-- முங் கொண்டாய் ழோம் ாயே
- *ழமாதா திருப்பள்ளியெழுச்சி

Page 118
The Influence of Tamil
SinhalaT
By. S. NA
famils, with their Hindu religicus and indiv this island from timesimmc molial sharingits spi1il the 'milieu' of its individual civilizatic n that is from Bharata, the cradle of Asiatic civilizatic n.
The Indian Dramatic tradition kncwn as ' South India from the dim past and is a part and pa exponen's today. According to this traditicin whicl eternal wisdom, D, ama is imitatic n - "Anukriti' w the art. To be exact Bharata uscs he word'Avasth We can extend this refrance o mean situations inli purpose of life ; D'harma, Artha, Kama and Moksha life leading towards a final beatitude known as rele
The most original and interesting part Cftl Drama, which is to evoke sentiment -the rasa--a Porulhiyal refers to as Myypatu. The more appro is' uripporulh', the uttplana and alambana Vibhs sensibility consists in the experiance of a basic deindividualised.
Mention is made of this tradition in Cilappat. probably of the 2nd century A.D. where Madhavi author gives a complete picure of the whole scene believe that the tradition has been at its height during flute player, the harpist, the drummer and all the ens are detailed and the main types of dances are men “Desi” and “Marga” (G3.5Gub, Lotritish ) vii ference is given to “Sinhala dance' which points to catory song by 'Thooriya nakalhir' which reminds and Sinhala dances, the same nomenclature being re play (u TGO ou di Si-ši) which is its modern form is k
Leather dolls in the puppetry of the Culavamsa mentioned by the commentator of Cilappathikaarar teresting to find in Cilappathikaaram commentary th divisions of dances that exhibit sentiments through
Bharata Natyam, the classical type of dance dances like Kathakali of Malabar and other deriva Tamil operatic type of drama which is in vogue toda be an embellishment of the Kathakali of Malabar
11

Dramatic Tradition. On
heatre
DARASA
idualistic culturai links lived and filcurished in al h1 i age and ccntributir g in a langt m.casure to cylcnic se, though its main elements are derived
Bharata Natyam ' found its home exclusively in arcel of the culture cf the Tamils who are its best n is a scibtd to Bhalata, the inspired prcp het of Eich reminc suscf Alistctle's cwn thcc1ics about rukriti which me ans representaticin cfsituaticns. fe because the aim cfd1ama has bc.cn í he fouifold 1-1ights and duties, politics, ccc.ncmics and civic
3.St.
le traditicn is the theory regarding the aim of uniy of impression, which Tholkariyar in his priate term which we find in Tamilian Aesthetics avas of the Sanskit aestheticians. This acsthetic emoticn affecting the mind that is completely
hikaaram, the national epic of the Tamils, a work stages her first debut in Bharata Natya. The with all the technical details that one is led to gthis perica. The music director, the singer, the imble that form the orchestra (2 Digifood) ticned. These dances are of two kinds namely 2. the folk dance and court dance. A rethe dance forms of Ceylon. There is the invoone of Thoriyamangalam of S. India Folk plays tained in Sinhala. There is mention of Puppet nown as rukadaya in Sinhala.
reminds one of the Thootpaavai (Gossitio LuíT GO GAu) as one of the dances for amusement. It is inat Sinhalese dance is classed as one of the main eSture S.
has in its sweep inspired various types of folk tory folk dances of S. India and Ceylon. The y in Ceylon and among the Sinhalese appears to which has drawn much of its inspiration from
)

Page 119
Bharata’s Natya Sastra. Tmis is popularly know. of the Eastern, Western and Northern Sea boar themes of the dances, the idiom of speech and ce redilections of the groups. In the Hindu are asth and Ramayana. In the Buddhist areas they ar stories connected with the incidents of Lord E Catholic areas the themes are Biblical and West tradiional repertoire of villaacans and NaaTaka. slightly different story to tell.
There is in the Sinhalese areas a kind of I toyil being a corrup.ion of the Tamil word Thozh purpose of curing diseases and warding offevilfi (Nhaavuuttu and KaNİNuutu of the Tamils). Tais This reminds one of the “ VetiaaTTu in the Cilappathikaaran and Cangan works of th gods and yakkas. This dance is invariably ccn: passage of ime has influenced other types of da development of Sinhala tradition cfdances. Tni. complicated design through which is woven the Sinhala and Tamil NhaaTakam, goes on throughou by the village priest (who is quite different from t afflicted the patient with various discasts. In t between the priest and the demons who appear bhutas found in Cilappathikaaram. The dances h deviate into ribaldry and vulgarity, perhaps a con
Not only are the demons propitiated but go connected with the worship of Gods, Pathini occu of Cilappathikaaram. Kannagi is con dered as legend among the Sinhalese. Tne storics currer originally a vegetation deity or a native dily in wh Besides Pattini there are the Kataragama Daviyo, sees the Tamil influence in three rituals. During in the garb of Tamil Brhamins and in the conversa and say he is afflicted because of “ KoTivinaith ings are given to the demons in a “pideni tattu'' word for plate. There is a lighting ceremony w used are known by the popular word panhithan and Adayvus are the dance movements of arms and leg
Kolam or the masked play is another type particularly in the Ambalangoda and Bentola to area is also noted for its bali ceremonies discusse it also means appearance; it refers to costume, c. There is a dance form in Malabar which is know where elaborate masks are used; it is interesting
Kathakali, Kolam Kali and Chorkali, the latter
dance forms of Sinhala.

n Naattukkuuththu which is popular in various parts ds of Ceylon. The difference being mainly in the :rtain indigenous embellishments to suit the acial 2 themes are mainly from the stories of Mahabharala e based on Buddhist mythology known as Jataka Buddha in his valicus reincarnations. In RC man tern. The Naattukkuuththu cf Tamil arcas have a ms. The mcdern Tamil and Sinhala drama have a
iual dance known as devil dancing or bali toyil ill-which has been flourishing in the villages for the ecs such as “Asyas 'and “Katavas in Sinhala dance has its artistic me1 it and scoial significance. ’ and தெய வம் ஏறி ஆடும்கூத்து found
e Tamils. Tnese are religious dances to propitiate nected with magic and witchcraft and duling the nces of the Sinhalese and even cont1ibuted to the s dance form reminds cine of Kathakali, a tapestry of hread of occultism. This type of dancing, like the the night and ends with mimetic vicalicus nuances he Buddhist clergy) who exorcises devils who have
his type of dance scrm times cialcgucs take place
with hedicus masks depicting valicus yakkas, the
ough performed wih stricus religic sity sometin (s
cession to entertain the audience.
3ds and goddesses are also appeased. In the rituals pics the chicf place. Pathini is Kannagi, the heroine an incarnation cf. Pathini who has an intere sing it in Ceylon about her birth suggest that she was nom are ccmbined the dei ius cf several phenomena. and the twelve deities aid the nine Planets. One the course of the rituals two characters enter dressed tion that follows the Brahmins examine the patient 2 Tamil word for dire evil, in witchcraft. The of rpidemi being the obligatic n and that Tu the Tamil here vilhakku-(Tamil-lamp) is lit. The torches l, the dance consists of adavus of Bharata tradition. is moving in coordinated rhythm.
of dramatic performance found in Sinhalese areas wnships on the western sea board of Ceylon. This d above. Kolam is a Tamil word used for mask, r appropriate dress cr attie as worn by an actor. nas Kolam Kali similar to the Simhala Kola m dance to note that the three dance forms of Malabarnown as Sokari in Sinhala-are reflected in the
1 11

Page 120
Kolam is a masquerade of mythological ch monies. Some of the characters are down to earth types like the washerman, the soldier, the police, Court carier or the Kattiyakkaran of Tamil K meaning the ki n g * s o r d e r : b er a i for drum). The character who repr Malabar origin and his head gear r by the name of five women pots, 'Pancha Nar, into a design of a pot which is a head dress. Bes the masks of animals like the dog, the tiger, the lio. Vishnu as Narasimha, half man and halflion. Tr already made a recognisable contributicn to mcde and movement of Sinhabahu and Nalibana, the masquerade begins in the night and end with the d that the maskers have come and the pecple mus ading the prologue the actor advances, while two c as the performers act their respecive parts repeatt
Kolan which began as a masquerade cf chai which strves to end up the mesquerade. Tae mcs Jataka and '' Munane' which have been revived The Kolan dancers are introduced by verses which
A dramatic entertainment confined to the H name of Sokari. Tais is usually performed cn th stackcd up during the harves ing season. The cil venient stage. Farmers who cannot leave their fil tainment wih its libald humcur and dramaic incid time. The drum used is the pct drum of the Kandy of the urancing Natauaja. The name Sokari may be entertainment based on dialogue like Kathakali whi
It is in the fild of Nadaga mas-the folk ope influence from Tamil dramas. Nadagana itself is which were invogue in the Tamil areas of Ceylon Dramas prevalent in the Batticalоa district, viz. th mooti andThenmooTi-the one differing from the o The main interest of these operas is the story and t the Kathakali of Malabar and the dresses which art one finds the Bharata Traditicn interpreted in a po people through dance, mime, songs and the spoke subject in his interesing study 'The Sinhalese F clear that the Sinhala Nadagama is wholly derived as Terukkuttu in the Tamil Nad a1 Terukkuttu was in vogue at one time almost entirely from the North. It is now pi in Batticaloa and the neighbouring villages,' The in Jaffna is not correct. It is still a living tradition and the Batticaloa District. .
11

aracters some of which appear in the Bali cerereal characters whom we see in daily life, certain the chettiar, the flighty washe woman etc. The uttu is représented as “ Ana Bera ” (“ama” s the Sanskrit and Tamil word sents the Court Crier is a Panikkar of eveal this. There is an interesting mask Ghata' where five luscicus women are worked des human and mythclogical charac’ers there are m, the fox, bull, the Garuda and the incaraticin of e masks of animals and the Kolan tradiicn have rn Sinhala drama as is evident in the constuming radi, it ral naćagam cr folk play cf tc day. The awn. The Ccurt clier with his dum arrcurces i be ready to witness the perfc1 marce. Afer Fer: haracters accc m fa1ied by tc1 che s sarà up and he legend chaning alternately two verses (ach.
acters later deve lcpedinto a nadagam, a folkplay t prcpular amrong the se plays are “ Sarda Kiriaduru by the modern Sirhal. Theatre with grat Slccess. are reminicent of the Tamil Na TTukwuththu.
till Country and the Wanni areas is kncwn by the e threshing fic: cr when the cc.In is gathere di and - cular the shing fic cr provides them with a corcs in the night have to keep awak ard this enterents of the comic variety serves to while away the an areas or the utukkai which is found in the hand frcm a Malayalam word Solkali which means an schis damabased onstory.
ras of the Sinhalese theatre-we find the greatest a Tamil word to denote the type of Folk plays and Tamilakam. There are two types of Tamil Le Northern style and the Southern style, VaTather in the style of dress and the style of dancing. he dancing which is akin to a degenerate form of ; also reminiscent of the Kathakalidances. Here pula way to attract the attention of the common n idiom. Dr. Saratchandra, who deals with the olk Play and the Modern Theatre’ says '' It is from a vality of South Indian Fclk Play known hd as Withi Nataka in Andhra. The in Jaffna, but has now disappeared eserved in the Eastern Province and mainly statement that the Natiukkuttu has disappeared in Jafina, Mannar, Chilaw, Negombc, Puttalam

Page 121
பத்தொன்பதா
ஈழத்துத் தய
கலாநிதி பொ.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே தாகவும் சிறந்ததாகவும் மிளிர்வது பத்தொன் தமிழ் இலக்கியம் புதிய பல சக்திகளின் தாக்
குரு சிஷ்யக் கிரமத்திலே உயர்கல்வி பயி கும் வகையிலே பத்தொன்பதாம் நூற்றண்டில் களில் நிறுவப்பட்டன. அமெரிக்க மிசன் சபையி கோட்டையிலே 1823 ம் ஆண்டில் ‘வட்டுக்கோ
னதும் அவருடைய பாரியாரினதும் தலைமையிலே ஆண்டிலும் நிறுவியமை சிறப்பாகக் குறிப்பிட பேர்சிவல் பாதிரியார் 1834-ம் ஆண்டில் யாழ் சபையைச் சேர்ந்த ஜோன்ஸ்ரன் பாதிரியார் (பின்னர் அர்ச் யோன் கல்லூரி), காதலிக மதத் ஆண்டளவிலே யாழ்ப்பாண ஆண்கள் செமினறி யையும் (பின்னர் சம்பத்திரிசியார் கல்லூரி) நிறு பரவலாக்கியதோடு அமையாது பாரம்பரியமாக தன. இம்மாற்றங்களினுல் ஏற்பட்ட கல்வி விருத திருந்தது என்று கூறலாம்.
புறச்சமயத்தினர் கல்வித்துறையிலே எடு அ. அருளம்பலமுதலியார் முதலானுேர் ஆங்கா கூடங்களை நிறுவமுற்பட்டனர். அவர்களுடை எடுத்துரைப்பதற்கில்லை. ஆயினும் 1848 ம் ஆ நிறுவிய சைவப்பிரகாச வித்தியாசாலை சைவ மா ருந்தது என்று அறியமுடிகின்றது. வில்லியம் நெ Đurif&v' JITFmråbtavadulu ( The Native Tow வதற்கும் அது பின்னர் இந்துக் கல்லூரியாக வ6 வங்களும் உதவியாயமைந்தன. என்று கூறுவதிற் முறை பாரம்பரியமான கல்வி முறையிலே புதி காண்பதாக அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்க
கல்வி வளர்ச்சிக்கான வித்துகள் ஊன்ற முண்டிலே அச்சியந்திர வசதிகள் குறிப்பிடத்தக் கள் பலவிதமான பிரசுரங்களே வெளியிடத்தக் இலக்கியம் வளர்ச்சி காணக்கூடிய சூழல் உரு:
தேசாதிபதி இம்ஹொப் ( Gustaaf W ஆண்டில் ஈழத்தில் முதன்முதலாக அச்சியந்திர மாதம் முதலாக அவவச்சியந்திரத்திலே அச்சு வே கடைக்கூறிலே வேருெரு அச்சியந்திரம் ஒல்லாந் ஆண்டில் வெளியிடப்பெற்ற சமய வினவிடையும் இருபதுக்கு மேற்பட்ட நூல்களைத் தமிழ்மொழிய

ம் நூற்றண்டு
ழ் வளர்ச்சி
பூலோக சிங்கம்
முன்னைய காலப் பிரிவுக்ளிலும் குறிப்பிடத்தக்க பதாம் நூற்ருண்டு ஆகும். இந்நூற்ருண்டிலே கங்களினுற் பாதிக்கப்பட்டு வளர்ச்சியடைந்தது.
ன்ற தமிழ் மாணுக்கரின் தொகையைப் பரவலாக் ா முற்பகுதியிலே பல கல்லூரிகள் தமிழ்ப்பகுதி னர் டாக்டர் டானியல் பூர் தலைமையில் வட்டுக் ட்டை செமினறி" யையும் வின்ஸ்லோ பாதிரியாரி உடுவில் மகளிர் விடுதிப்பாடசாலையை 1824ம் த்தக்கது. வெஸ்லியன் மிசன் சபையைச் சேர்ந்த ப்பான மத்திய பாடசாலையையும், சேர்ச் மிசன் 1841-ம் ஆண்டிற் சுண்டிக்குளி செமினறியையும் த் தலைவரான பெத்தாசினி சுவாமிகள் 1850-ம் அல்லது யாழ்ப்பாண கதலிக ஆங்கில பாடசாலை அவினர். இக்கல்லூரிகள் மாணுக்கர் தொகையை வழங்கி வந்த கல்விமுறையையும் மாற்றியமைத் த்தி இலக்கியத்திற்கும் வளஞ்சேர்ப்பதாக அமைந்
த்துக்கொண்ட முயற்சிகளை அடுத்து உடுப்பிட்டி ாங்கே சைவ மஞக்கருக்காகச் சிற்சில பள்ளிக் ய முயற்சிசஸின் பலாபலன்கள் பற்றி எ ரிவாக ண்டிலே ஆறு கநாவலர் வண்ணுர்பண்ணையிலே ணுக்கருக்குச் சிறந்த பணியாற்றுவதாக அமைந்தி 'வின்ஸ் (மு. சிதம்பரப்பிள்ளை) சுதேசிய பட்டன /n High School ) 1887 b głbistą Gaj iggy ளர்வதற்கும் நாவலரவர்களின் பணிகளும் அனுப பிழையில்லை எனலாம். நாவலரவர்களின் கல்வி ப ஆங்கிலக் கல்விமுறையை இணைத்து அமைதி gël •
ப்பட்டு மலர்ச்சி காணத்தொடங்கிய இந் நூற் க அளவிற்கு: ஈழத்திலே தோன்றின. இவ்வசதி க வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்தமையால் வாகியது.
illem Baron Van Imhoff ) 35st Guágás 173617,
'ம் ஒன்று நிறுவப்பட்டது. 1737 ம் ஆண்டு மே 1லைகள் நடைபெற்றன. இவருடைய ஆளுகையின் தரால் நிறுவப்பட்டுக் கொண்டிருந்தது. 1739 ம் செபங்களும் என்னும் நூல் முதலாக ஏறக்குறைய லே ஒல்லாந்தர் ஈழத்திலிருந்த தமது அச்சகங்களி
13

Page 122
லிருந்து வெளியிட்டனர். கிறமர், பி.த.விறீஸ்ட், எம். ஜே. ஒத்தாச்சி முதலிய குருவானவர்கள் வும் ‘இறப்பிறமாது' சமயபோதனைக்கு உதவும் மெல்லோ பாதிரியார் மொழிபெயர்த்த புதிய எழுதிய சத்தியத்தின் செயம் எலும் நூலும் (1
பத்தொன்பதாம் நூறருண்டிலே எட்வேட்பா மிசனுக்காகக் கறட் என்பவர் கொண்டு வ அநுமதிக்காததனுற் சேர்ச் மிசன் சங்கத்தினர் அ ஈழத்தின் வடபகுதியில் முதன்முதலாக நிறுவப்ப யோசப் நைற் பாதிரியார் முத்திவழி என்னும்
அமெரிக்க மிசன் சபையினர் தமது அ அதனை மானிப்பாய்க்குக் கொண்டு சென்று 183 கும் ஏனைய புருெடஸ்தாந்து மிசன்களுக்கும் கதலிக மதங்களுக்கெதிராகக் கண்டனம் செய்ய மார்களின் தேவைகளையும் மிசன்கள் நிறுவி சமயப் பிரசாரமல்லாத நூல்களையும் இவ்வச்சிய 1842 ம் ஆண்டிலே மானிப்பாய் அச்சியந்தி நிகண்டு 1856 ல் வெளிவந்தது. டாக்டர் கிர சிலரினதுமான விஞ்ஞான நூல்களும் ஜே. ஆர். இதிகாசம் என்பனவும் வில்லியம் நெவின்ஸ் 6 பிள்ளையின் வீசகணிதம் முதலியனவும் மானிப்ப தக்கது.
"புருெடஸ்தாந்து கிரித்தவர்களுக்கு அ யாக அமைந்திருப்பதைக் கண்ட ஆறுமுகநாவ பாலனயந்திரசாலையை நிறுவினுர். இவ்வச்சியந்தி பட்டது. புறச்சமயத்தாக்கலை எதிர்ப்பதற்காக அதன் மூலம் இலக்கிய வளர்ச்சிக்கும், இவ்: நாவலரவர்களின் பாலபாடங்கள், திருத்தொண்ட யமகவந்தாதியுரை, திருமுருக, ற்றுப்படையுரை பாலனயந்திரசாலேயிலேயே அச்சிடப்பெற்றன.
நாவலரவர்களைப் பின்பற்றிப் பத்தொ6 வரல்லாத7ர் பலர் அச்சியந்திரங்களை நிறுவிச் சம பொஞ்ஜீன் ஆண்டகைக்கு 1870 t. 9 துறையிலே நிறுவப்பட்டு 1871-ம் ஆண்டில் இவ்வச்சியந்திரம் பின்னர் சுண்டிக்குளிக்கு மாற் அச்சியந்திரசாலை என்ற பெயருடன் பயன்ப
யாழ்ப்பாணம் இலங்கை நேசமுத்திரா சாலை, வல்வை பாரதீநிலைய முத்திராக்ஷரசாலை, யன பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்கூறிலே கூறியனவற்றுடன் சேர்ந்து பங்குகொண்டன.
அச்சியந்திரங்கள் நிறுவப்பட்டதையடு பத்திரிகைகள் ஈழத்திலே தமிழ்மொழியிலே த Dழ்மொழியில் இருந்ததாகத் தெரியவில்லை. வ வும் திங்க ரிதழ்களாகவும் பல பத்திரிகைகள் பத்

பிலிப்பு த.மெல்லோ, எஸ். எ. புருென்ஸ்வெல்ட், சுயமாகவும் தழுவலாகவும் மொழிபெயர்ப்பாக பொருட்டு எழுதிய நூல்களேயவை. இவற்றிலே
ஏற்பாடும் (1759) கதலிக மதத்திற்கு எதிராக
53) குறிப்பிடத்தக்கன.
ண்ஸ் பிரபு (1820-1830)காலத்திலே, அமெரிக்க ந்த அச்சியந்திரத்தினை நிறுவத் தேசாதிபதி தனைப் பொறுப்பேற்று நல்லூரிலே நிறுவினர். ட்டதாகக் கொள்ளக் கிடக்கும் இவ்வச்சகத்திலே பிரசுரத்தைப் பதிப்பித்து வெளியிட்டனர்.
ச்சியந்திரத்தை நிறுவ அது மதிக்கப்பட்டதால் 4 ம் ஆண்டிலே நிறுவினர். அமெரிக்க மிசனுக் அவ்வச்சியந்திரம் சமயப்பிரசாரத்திற்கும் இந்து, வும் பேருதவியாக அமைந்தது. ஆயினும் பாதிரி ய பாடசாலைகளின் தேவைகளையும் ஒட்டிச் ந்திரசாலை வெளியிட்டது. மானிப்பாய் அகராதி நிரசாலையிலிருந்து வெளிப்போந்தது; சூடாமணி ன் அவர்க hனதும் அவர்களுடைய மாளுக்கர் ஆனேல்ட் எழுதிய வானசாஸ்திரம், சாதாரண ாழுதிய நியாய இலக்கணம், கறல் விசுவநாத ாயில் அச்சிடப் பெற்ானவே என்பது குறிப்பிடத்
ச்சியந்திரம் சமயப் பிரசாரத்திற்குப் பேருதவி லர் 1849 ம் ஆண்டு நல்லூரிலே வித்தியா நு நிரசாலை பின்னர் வண்ணுர்பண்ணைக்கு மாற்றப் மட்டுமன்றித் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கும், வச்சியந்திர சாலை நாவலரவர்களுக்கு உதவியது. ர் புராணம் (வசனம்). திருச்செந்தில் ரிரோட்டக நன்னூல் விருத்தியுரை முதலியன வித்தியாந1
ன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலே கிறித்த யப் பணியுடன் தமிழ்ப்பணியும் புரிந்தனர். ண்டிலே கிடைத்த அச்சியந்திரம் கொழும்புத் ருந்து அச்சுவேலையிற் பயன்படுத்தப்பட்டது. றப்பட்டு அர்ச். சூசைமாமுனிவர் கத்தோலிக்க டுத்தப்பட்டது.
க்ஷரச.லை. யாழ்ப்பாணம் சைவப்பிரகாசயந்திர அச்சுவேலி ஞானப்பிரகாசயந்திரசாலை முதலி தமிழ்நூல்களை அச்சிடும் பணிகளிலே முன்னர்
த்துப் பத்தொன்பதாம் நூற்ருண்டிலே பல தோன்றயுள்ளன. நாளேடுகள் அக்காலத்திலே ார இதழ்களாக வும் மாதமிருமுறை இதழ்களாக தொன்பதாம் நூற்ருண்டிலே தோன்றியுள்ளன.
1 l 4

Page 123
கென்றி மாட்டின், செத் பேசன் என் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாதமிருமுறை முதலாக வெளிவந்தது உதயதாரகை அல்லது >கயாகும். சீமான் காசிச்செட்டி 1841 ம் ஆண் திங்களிதழ் உதயாதித்தணுகும். வைமன் கதிை வரை தமிழிலும் ஆங்கிலத்திலும் 1853 ம் திங்களிதழ் வித்தியாதர்ப்பு:ணம் அல்லது வில்லியம் சின்னத்தம்பி என்பவர் சிறுவர்களு நடத்திய பத்திரிகை பாலியர் நேசன் ஆகும். எ முதல் நடத்திய Jaffna Freeman தொன்றென்று ஈண்டு குறிப்பிடுதல் பொருத்தம ஆண்டு பெப்ருவரி மாதம் 6-ம் தேதி முதல் இதழிலே கடைசிப் பக்கம் தமிழ்மொழியி: சொலமன் ஜோன்பிள்ளை அதனைப் பொறுப்பே யாக மட்டுமே வெ ரியிடப்பெற்ாது. இப்பத்தி பெற்? பத்திரிகை 1867-ம் ஆண்டில் இணைப்பு
இலங்கைநேசன் 1875-லும் சத்தியவே Guardian 1876-லும் சைவ உதயபானு (upgiussib Gib Fair syájagi Muslim Friend 188 3 Tá56orúb gyáv6v51 - Hindu Organ 1889-gyi பாதுகாவலன் முருகப்பா, பிலிப்பையா என்பவர்க ஆரப்பத்திலே வெளிவந்ததாகும். சைவ உத (-1916) ஆசிரியராகக் கொண்டு வெளிவந்ததா விஞ்ஞானவர்த் தனி. மு. கா. சித்திலெப்பை அ பினை மனதிற் கொண்டு வார இதழாக வெளி கையெழுத்துப் பிரதியாக முன்னர் வழங்கியது; 1934) வெளியிடப்பெற்றது. இந்துசாதனம் ரி திருவினையாகும்.
மானிப்பாப் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை கையை வெளியிட்டுள்ளார்; அதனைத் திங்களி
வல்வை ச, வயித்தியலிங்கபிள்ளை (18 ஏனைய சில பத்திரிகைகளின் விபரங்கள் தேடி
அச்சியந்திர வசதிகள் ஈழத்திலே இ. நூற்ருண்டிலே தோற்றுவித்து அரும்பணி ஆற் 1879), கி. வை. தாமோதரம்பிள்ளை (1832வல்வை ச. வயித்தியலிங்கபிள்ளை (1843 - 19 தமது பரந்துபட்ட பணிகளின் ஊடே ஆறுமுகந மான நூல்களைப் பதிப்பித்துள்ளார். என்றழைக்கப்படும் சிறப்பினைப் பெற்றுள்ளன. (1851), திருக்கோவையாருரை (1860), தி இலக்கணக்கொத்து (1866), பதினுேராம் திரு அவற்றுட் சிலவாம். சி. வை. தாமோதரம் வீரசோழியவுரை (1881), இறையஞரகப்பெn தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சிஞர்க்கி

னும் இரு தமிழரை ஆசிரியராகக் கொண்டு இதழாக 1841 ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி Morning Star என்னும் அமெரிக்க மிசன் பத்திரி கடு முதல் பதின்மூன்று மாதங்களுக்கு நடத்திய ரவேற்பிள்ளை ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆண்டு மே மாதம் 6 ம் தேதி முதல் நடத்திய Literary Mirror என்னும் பத்திரிகையாகும். க்காக 1859 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ன். ஜி. கூல் அவர்கள் 1863-ம ஆண்டு செப்ரம்பர் ஆங்கிலப் பத்திரிகையாகப் பரபரப்பேற்படுத்திய ாகலாம். வைமன் கதிரைவேறயிள்ளை 1863-ம் is 5Su The Ceylon Patriot 6765, gith air u 9 அமைந்திருந்தது. ஆனல் 1865 ம் ஆண்டில் ற்ற பின்பு அப்பத்திரிகை ஆங்கிலப் பத்திரிகை ரிகையுடன் கூல் அவர்களின் முன்னர் குறிப்பிடப் ஒத்தப்பட்டது.
1 & Lit 5/singll agit sióiverg. The Jaffna Catholic 1880-லும் விஞ்ஞானவர்த்தனி 1882-லும் 2-லும் சன்மார்க்கபோதினி 1885-லும் இந்து
முதன்முதலாக வெளிவந்தன. சத்தியவே த. ளை ஆசிரியராகக் கொண்டுமா தமிருமுறை இதழாக யபர்னு ஊரெழு சு. சரவணமுத்துப் பிள்ளையை கும், மூத்ததம்பிச் செட்டியார் வெளியிட்டது வர்கள் (1838-1898) இஸ்லாமிய சமூக விழிப் பிட்டது முஸ்லிம் நேசன், சன்மார்க்க போதினி அச்சுவேலி ச. தம்பிமுத்துப்பிள்ளையால் (1857. பி. செல்லப்பாபிள்ளை அவர்களின் முயற்சியின்
1898-ல் வைத்திய விசாரணி என்னும் பத்திரி தழ் என்பர். . .
43-1900) வெளியிட்ட சைவாபிமானி முதலாம் க் கண்டு கொள்ள வேண்டிய நிலையிலுள்ளன.
rந்த பதிப்பாசிரியர் சிலரைப் பத்தொன்பதாம் றவுதவின. இவர்களிலே ஆறுமுக நாவலர் (18221901), ச. தம்பிமுத்துப்பிள்ளை (1887-1934), 0) முதலியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். ாவலர் ஐம்பதிற்கு மேட்பட்ட சிறியதும் பெரியது, அவருடைய பதிப்புகள் 'நாவலர் பதிப்பு
சூடாமணியுரை (1849), நன்னூல் விருத்தியுரை ருக்குறளுரை (1861), சேதுபுராணம் (1866), குமுறை (1869), கந்தபுராணம் (1869) என்பன பிள்ளை தொல்காப்பியம் சேஞவரையம் (1868) “ருளுரை (1883), தணிகைப்புராணம் (1883), னியமும் போராசிரியமும் (1885), கலித்தொகை
15

Page 124
யுரை (1887), சூளாமணி (1889), இலக்கண
கார ம் நச்சினுர்க்கினியம் (1892) என்பனவற்ை வயித்தியலிங்கபிள்ளை சூடாமணி நிகண்டு (187 தாதியுரை (1887), கந்தரலங்காரவுரை, சிவர ளார். அச்சுவேலி ச. தம்பிமுத்துப்பிள்ளை இ வாழ்ந்தவரெனினும், அவருடைய பதிப்பு முயற் கூறிலே ஆரம்பித்துவிட்டன. கதலிக மதத்தினருை வர் தம்பிமுத்துப்பிள்ளை. திருச்செல்வர் காவியம் ஊசோ ன் பாலந்தை கதை (1891) முதலியவை
இவர்களை விடக் காரைதீவு மு. கார்த்தி சிரோ மணி ச. பொன்னம்பலபிள்ளை 4 1837-1 நூற்றண்டிலே தமிழ் நூற்பதிப்பிலே ஈடுபட்ட
ஆங்கிலக் கல்விமுறையின் அறிமுகத்தி பல போதிக்கப்பட்டன. இவற்றைப் பிறமொழிய பயனளிக்கத் தக்கது என்பதை உணர்ந்து அப்பா லேயே இயற்றும் முயற்சிகள் தோன்றின. இம்மு டாக்டர் எஸ். எப். கிறீன் (1822-1884) அவர் போத், டி. டபிள்யூ. சப்மன், வில்லியம் போ6 கல்விக்கு ஆற்றிய அரும்பண்களாம். இரணவைத் வைத்தியாகரம் (1872), மனுஷ சுகரணம் (1872) இந்து பதார்த்தசாரம் (1884) முதலியன அ விஞ்ஞான நூல்களிலே குறிப்பிடத்தக்கவை. இலக்கணம் (1850), கறல் விசுவநாதபிள்ளை (-1 ஆணுேல்ட் (1820 - 1895) எழுதிய சாதாரண விளான் பே. சுவாம்பிள்ளை எழுதிய கணக்கதிகார பூமிசாத்திரம் (1874) என்பன அறிவியற் கல்வி எழுதப்பட்டனவாம்.
ஆறுமுகநாவலர் எழுதி யாழ்ப்பாணத் (இவை 1852 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பதிே முறைவளர்ச்சிலே தமிழ்க் கல்வி போதிக்க வழி (1875), இலக்கணச்சுருக்கம் (?1874) என்பன புகட்ட வழியமைத்தன. ஜி. பி. சவுந்தரநாய சூத்திரங்களைத் தொகுத்து நன்னூற்சுருக்கம் (1 நெவின்ஸ் அதுவரை காலமும் முக்கியத்துவம் அ வியாகரணம் (1886) என்னும் நூலிலே விளக்கி விகாரமாயும் வந்து தமிழ்மொழியிலே வழங்கு புலவர் (1854-1922) எழுதிய இலக்கணமாகி வெளிவந்தது.
பத்தொன்பதாம் நூற்ருண்டிலே பலவலி தாம் நூற்ருண்டின் ஆரம்ப தசாப்தங்களிலும் வாகனப்புலவர் யாழ்ப்பாண வைபவமாலை என் பல்வேறு சமயத்தினரும் பத்தொன்பதாம் நூ ஏனையவற்றின் குறையாடுகளையும் துண்டுப் பிரச படுத்தியுள்ளனர். கண்டனத்திற்குப் பயன்படுத் பலவிதமான உத்திகளைப் பெறுவதைக் காணல 1870) முதலியோர் இயற்றிய கண்டன் நூல்களை

விளக்கம் (1889), தொல்க, ப்பியம் சொல்லதி m முதன்முதலாகப் பதிப்பித்தனர். வல்வை ச . 5), நம்பியகப்பொருளுரை (1878), கல்வளையந் ாத்திரி புராணம் என்பனவற்றை பதிப்பித்துள் ருபதாம் நூற்ருண்டின் ஆரம்ப தசாப்தங்களிலும் சிகள் பத்தொன்பதாம் நூற்ருண்டின் கடைக் "டய நூல்கள். பலவற்றைப்பதிப்பித்து உதவிய 1896), சந்தியோகுமையோர் அம்மானை (1894), அவர் பதிப் புக ரிலே குறிப்பிடத்தக்கவை.
கேய ஐயர் ( 819-1898), நல்லுர் வித்துவ 897) முதலிய வேறுபலரும் பத்தொன்பதாம் ஈழத்தவராகக் காணப்படுகின்றனர்.
னுலே தமிழ் மாணுக்கருக்குப் புதிய பாடங்கள் பிற் பயிற்றுவதிலும் தாய்மொழியிற் பயிற்றுவது டங்களுக்கு வேண்டிய நூல்களைத் தமிழ்மொழியி மயற்சிகளிலே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை களும் அவர்களுடைய மானுக்கரான ஜே.டன் ல், எஸ். சுவாமிநாதர் ஆகியோர் விஞ்ஞானக் ந்தியம் (1867), மனுஷ அங்காதிபாதம் (1872) , கெமிஸ்தம் (1875), மனுஷ சுகரணம் (1883) வர்கள் மொழிபெயர்த்தும் தொகுத்தும் தந்த வில்லியம் நெவின்ஸ் (-1889) எழுதிய நியாய 880) எழுதிய வீசகணிதம் (1855), ஜே. ஆர். இதிகாசம் (1858), வானசாத்திரம் (1861), ம் (1844), ஆறுமுகநாவலர் எழுதிய இலங் ைஈப் வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு ஈழத்தவரால்
திற் பதிப்பித்த மூன்று பாலபாடநூல்களும் னுராம் தேதிக்கு முன்னர் வெளிவந்தவை) படி வெகுத்தன. அவருடைய இலக்கண வினவிடை
புதுமுறையிலேதமிழ்மொழி இலக்கணத்தைப் கம்பிள்ளை (1882) நன்னுலின் முக்கியமான 362) என வெளியிட்டு உதவினர். வில்லியம் ளிக்கப்பெருத வசன இலக்கணத்தைத் தமிழ் புதவினர். சங்கதமொழியிலிருந்து இயல்பாயும் > சொற்களுக்கு சுன்னகம் அ. குமாரசுவாமிப் ய ‘இலக்கண சத்திரிகை” 1897-ம் ஆண்டில்
கயான வசன நூல்கள் தோன்றின. பத்தொன்ப வாழ்ந்தவராகக் கருதத் தக்க மாதகல் மயில் னும் வரலாறு சம்பந்தமான நூல்ை இயற்றினர். ற்ருண்டிலே தத்தம் சமயத்தின் உயர்வினையும் ரங்கள் மூலமும் சிறுநூல்கள் மூலமும் வெளிப் தப்பட்ட இத்தகைய நூல்களிலே' வசன நடை "ம். ஆறுமுகநாவலர், சங்கரபண்டிதர் (1829எடுத்துக்காட்டாகக் கூறலாம். திருத்தொண்ட்ர்
S

Page 125
புராணம் (1852), வசன சூளாமணி (1898), செய்யுளிலக்கியங்களை அறிமுகப்படுத்த ஈழத்தவர
வசனநடை செல்வாக்குப்பெற்ற பத்திெ தாம் நூற்ருண்டின் பிரதான இலக்கிய வடிவ! தொடங்கின. காவலப்பன் கதை, அசன்பே சரித் என்பன ஈழத்து நாவலிலக்கியத்தின் முன்னேடிகெ பாகவும் தழுவலாகவும் அமைவன. இவற்றிலே இடம் பெறுதல் நோக்கற்பாலது. இதனை பிள்ளை. ஜே. ஆர். ஆணுேல்ட் அவர்களின் நன்ே கதாசிந்தாமணி என்பனவற்றிலே ஈழத்துக் சி நடைபெற்றுள்ளன.
பத்தொன்பதாம் நூற்ருண்டிலே ஈழ: லொன்று அகராதி ஆக்கமாகும். 1833-ம் ஆண்ட நைற் பாதிரியாரின் தலைமையிலே அகராதி ஆக்க லே அமைக்கப்பட்டது. லெவி ஸ்போல்டிங் பாதி லோ பாதிரியார், பேர்சிவல் பாதிரியார் ஆகிே களாவர். கொழும்பு காபிரியல் திசரா (1800-18 கறல் விசுவநாதபிள்ளை, வில்லியம் நெவின்ஸ் முத உதவியாக அமைந்து அகராதி ஆக்கத்திலே பங்கு லியாரும் (= 1840) உதவியதாக அறிகிருேம். இக்கு ஆகிய மூன்றுவகையான அகராதிகளை ஆக்கும் பல -தமிழ் அகராதியும் 1842-ம் ஆண்டிலே ெ 1862-ம் ஆண்டிலே வெளிவந்தது. தமிழகரா: ஆங்கிலம் அகராதி வின்ஸ்லோ அகராதி எனவும் பேர்சிவல் பாதிரியார் சென்னையிலே 1861-ம் ஆ 1867-ம் ஆண்டிலே ஆங்கிலம் தமிழ் அகராதியெ தக்கது. வில்லியம் நெவின்ஸ், கெலக் விசுவநாத பத்தொன்பதாம் நூற்ருண்டிலே அகராதி ஆக் விசுவநாதபிள்ளையின் தமழ்-ஆங்கில அகராதி 18 ஆக்கங்கள் அடைந்த 'கதி அறியுமாறில்லை.
பத்தொன்பதாம் நூற்றண்டில் ஈழத்தல் மொழிபெயர்த்து, அம்மொழி அறிந்தவர்களுக்கு னர். கு, முத்துக்குமாரசுவாமி பிரபு அவர்க ஆங்கிலத்திலே வசனமாக இயற்றியுள்ளார் (186 (1849-1906) குறிஞ்சிப்பாட்டு, பொருநராற் பெயர்த்து வேத்தியல் ஆசிய சங்கத்தின் இலங் (1894), இவர் தம்பியார் பொ. அருணுசலம் பி யும் கந்தபுராணம், கல்லாடம், திருக்கோவைய லுள்ள சிற்சில பாடல்களையும் மொழிபெயர்த்து Translations From the Tamil, Madras, 1898 ). வைபமாலையை மொழிபெயர்த்து ஸ்ளார். (1879 மோசஸ் சித்தாமணி வேலுப்பிள்ளையும் ( , ) முத்துப்பிள்ளையும் ஆங்கிலத்திலிருந்து தமிழ்மொ
ளனர்.
நல்லூர் ம. சரவணமுத்துப்புலவர் (- 1870), சுன்னுகம் அ. நாகநாதபண்டிதர் (.
7

வில்ஹணியம் (1875) முதலியன வசனநடையிற் ால் எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகளாம்.
நான்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலே இருப ங்களான நாவலும் சிறுகதையும் கருக்கொளத் ந்திரம், ஊசோன் பாலந்தை கதை, மோகஞங்கி ாாகக் கருதப்படுகின்றன. இவை மொழிபெயர்ப் நாவலம்சம் மோகனங்கியிற் குறிப்பிடத்தக்களவு இயற்றியவர் திரிகோணமலை சரவணமுத்து னெறிக்கதாசங்கிரகம், ச. சந்தியாகுப்பிள்ளையின் றுகதையின் தோற்றத்தைக் காணும் முயற்சிகள்
த்திலே எடுக்கப்பட்ட முக்கியமான முயற்சிகளி டளவிலே சேர்ச்மிசன் சபையைச் சேர்ந்த ஜோசப் கத்திற்கு ஒரு குழு புருெடஸ்தாந்து" சபைகளின ரியார், சாமுவல் ஹற்சிங்ஸ் பாதிரியார், வின் ஸ் யாரும் இக்குழுவிலே சேர்ந்து பணியாற்றியவர் 38), உடுவில் அ. சந்திரசேகர பண்டிதர் (-1879) தலிய ஈழத்தவர் முற்கிளந்த பாதிரிமார்களுக்கு கொண்டனர். இருபாலை நெ. சேணுதிராய முத ழுவினர் தமிழ்,ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் Eயிலே ஈடுபட்டனர். தமிழகராதியும் ஆங்கிலம் வளியிடப்பெற்றன; தமிழ் - ஆங்கிலம் அகராதி தியானது மானிப்பாய் அகராதியெனவும் தமிழ்அழைக்கப்படுவன. இக்குழுவிலே பணிபுரிந்த ஆண்டிலே தமிழ் ஆங்கில அகராதியொன்றினையும் பான்றினையும் வெளியிட்டமை ஈண்டு குறிப்பிடத் தபிள்ளை (-1884), ஆறுமுகநாவலர் ஆகியோரும் கத்திலே ஈடுபட்டிருந்தனர். இவர்களிலே கெலக் 70-ம் ஆண்டிலே வெளிவந்தது; ஏனையவர்களின்
பர் சிலர் தமிழ் இலக்கியத்தினை ஆங்கிலத்தில் த தமிழ்ப் பெருமையை உணர்த்த முற்பட்டுள்ள ள் (1833-1879) அரிச்சந்திரன் நாடகத்தை 3). இவர் மருகர் பொ. குமாரசுவாமி முதலியார் ]றுப்படை என்பவற்றினை வசனமாக மொழி கைக் கிளையின் சஞ்சிகையிலே வெளியிட்டனர் ரபு அவர்கள் (-1924) திருமுருகாற்றுப்படையை ார், தாயுமானவர் பாடல்கள் முதலியனவற்றி |ப் பாடல்களாகத் தந்துள்ளார் ( Studies and கிறிஸ்ரோபர் பிறிரோ அவர்கள் யாழ்ப்ப:ண 1) கெலக் விசுவநாதபிள்ளையும் யாழ்ப்பாண ம் M. S. Velupillai ) திரிகோணமலை த. சரவண ழியிலே பலவற்றை மொழிபெயர்த்துத் தந்துள்
1845), நீர்வேலி சி. சங்கரபண்டிதர் (18291887), புலோலி வ. கணபதிப்பிள்ளை (-1895)

Page 126
முதலிய ஈழத்தவர் சங்கதமொழியிலே நுண்புலை டிலே விளங்கியவர்கள். இவர்கள் சங்கதத்தில் சங்கதத்திலே உள்ள நூல்களுக்கு உரை வகுத்து 35 GMT na Gurit.
பத்தொன்பதாம் நூற்றண்டிலே நாடக குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்றிருந்தன எ பாவலர் சரித்திர தீபகம் முதலிய நூல்களிலே ப. கந்தப்பிள்ளை (1766-1842) இருபத்தொரு கோட்டை கணபதி ஐயர் (-1803), சுதுமலை வ. (1826-1883), வல்வெட்டி க. குமாரசுவாமி மு நாகேசையர் (-1862) முதலிய பல நாடகாசிரியர் படுத்த முடியும். ஆயினும் இவர்கள் ஆக்கிய நா விட்டமை வருந்தத்தக்கது. நாடகங்களுக்காக அ முதலிய இசைப் பாடல்களைப் பாடிய ஈழத்தவரு ஆயினும் அவர்களுடைய ஆக்கங்கள் இன்றைய காணப்படுகின்றன.
இருபதாம் நூற்றண்டிலே தமிழ் இலக்கி நூல்களிலே சீமான் காசிச்செட்டி (1807-1860 நூலும் (1859) ஜே. ஆர். ஆனுேல்ட் எழுதி குறிப்பிடத்தக்கவை. இவ்விரு நூல்களும் தமிழ்ப்பு தளிப்பனவாம். பேரிசைச் சூத்திரத்தினையொட்டி பதிப்புரையிலே (1881) திருத்தியளித்த 'தமிழ்ட அஸ்பரியின் தமிழ்ப் பாஷை வைபவத்திற்கு (A பின்வந்த இலக்கிய வரலாற்று நூல்களுக்கும் உதவி
மல்லாகம் வி. கனகசபைப்பிள்ளை (185 காணப்பெறும் விசயங்களையும் வெளிநாட்டார் நூ தமிழர் பற்றியுள்ள குறிப்புக்களையும் தொகுத்து சரித்திரப்பாங்குடனும் பரிசீலனை செய்து, பின்னர் தமிழர்" என ஆங்கிலத்தில் 1904-ல் வெளிவந்த Ólafuq” ( Madras Review ) GT Gör gp Ib FS ஆண்டிலாகும்.
பத்தொன்பதாம் நூற்றண்டிலே புராண முதலிய இலக்கிய வடிவங்கள் ஈழத்துப் புலவரிடை இவை பெரும்பாலும் சமயம் அல்லது தலம் எடுத்துக்காட்டாக, பத்தொன்பதாம் நூற்ருள் கரான தொம் பிலிப்பு ஞானனந்தபுராணம் (1874) வெட்டி வே. கனகசபைப்புலவர் (1816-187 கிறித்தவ வேதாகமத்தினை விளக்கிச் செய்யுளா ஆண்டிலே யாழ்ப்பாணம் செய்கு மீரான் அவர்களு முகியித்தீன் புராணத்தைப் பாடினர் (1889); இ (1895), நல்லூர் கந்தசுவாமி கிள்ளை விடுதூது ( மறைசைக்கலம்பகம் (1883) முதலிய தல சட தண்டிகைக்கனகராயன் பள்ளு (1932), அருளம்ப சார்புடையனவாகவும் விளங்குகின்றன.

D பெற்றவர்களாகப் பத்தொன்பதாம் நூற்ருண் எழுந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் ம் சங்கதத்திலேயே எழுதியும் சிறப்படைந்தவர்
க் கலையும் அதன்மூலம் இசைக்கலையும் ஈழத்திலே ன்றுகருதவைக்கும் சான்றுகள் ‘தமிழ் புரூராக்” சாணப்படுகின்றன. நாவலரவர்களின் தந்தை நாடகங்களை இயற்றிஞர் என்பர். வட்டுக் இராமலிங்கம், பார் குமாரகுலசிங்க முதலியார் தலியார் (1792-1874), வட்டுக்கோட்டை இ. ளைப் பத்தொன்பதாம் நூற்றண்டிற்கு வரிசைப் டகங்களிலே பல டேனுவாரற்று அழிந்தொழிந்து புல்லாது தனித்தனிப் பதங்கள், கீர்த்தனங்கள் b பத்தொன்பதாம் நூற்ருண்டிலே வாழ்ந்தனர். சந்ததியினருக்குக் கிடைப்பதற்கரியனவாகவே
ய வரலாறு எழுத முற்பட்டவர்களுக்கு உதவிய ) எழுதிய "தமிழ் பளுராக்” என்னும் ஆங்கில பாவலர் சரித்திர தீபகமும் (1886) சிறப்பாகக் லவர் சரிதங்களே அகரவரிசைப்படுத்தித் தொகுத் . சி. வை, தாமோதரம்பிள்ளை வீரசோழியப் 1ாஷையின் கால வருத்தமானம் ஆர். ஒ. டி. History of Tamil Literature, 1886) LDL "Gud Göpio பியுள்ளமையும் ஈண்டு சுட்டற்பாலதாகும்.
f
5 - 1906) பண்டைத் தமிழ் இலக்கியத்திற் ல்களிலும் இந்திய இலக்கியங்களிலும் பண்டைத் , அவற்றை நேர்மையுடனும் நூட்டத்துடனும் 'ஆயிரத்து எண்ணுரறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலில் இடம்பெற்ற கட்டுரைகளை "மதராஸ் சிகையில் எழுதத் தொடங்கியது 1895-ம்
ம், குறவஞ்சி, தூது, பிள்ளைத்தமிழ், அந்தாதி யே செல்வாக்குப் பெற்றனவாகத்தெரிகின்றன. சம்பந்தமானவைகளாக இயற்றப்பட்டுள்ளன. *ண்டின் ஆரம்ப தசாப்தங்களில் வாழ்ந்த கதலி எனவும் "புருேடஸ்தாந்து சமயத்தினரான அள 3) திருவாக்குப் புராணம் எனவும் (1866) கப் பாடியுள்ளனர். 1815-ம் அல்லது 1816-ம் நடைய பொருளுதவியினுற் பதுறுத்தீன் புலவர் ளசைப்புராணம் (1895), நகுலமல்ைக்குறவஞ்சி 1924), செல்வச்சந்நிதி பிள்ளைத்தமிழ் (1897), }பந்தமான பிரபந்தங்கள் தோன்றியுள்ளன: லககோவை முதலிய சில பிரபந்தங்கள் உலகியற்

Page 127
இப்பிரபந்தங்களிலே கனகிபுராணம், விடுதூது, வடதிருமுல்லைவாயில் மும்மணிக்கோை
வடதிருமுல்லைவாயில் மும்மணிக்கோை இம்மூவருள் இருவர் ஈழத்தவர். தமிழ்நாட்டின் தலமூர்த்தி மீது பாடப்பட்ட இம்மும்மணிக்கே கைலாசபிள்ளை அவர்களும் (1858-1916) வென் அவர்களும் கட்டளைக் கலித்துறைப்பாடல்களை 6 னர். சி. தா. அமிர்தலிங்கம்பிள்ளை அவர்கள் வராவர். இப்பிரபந்தம் சென்னையிலே பிலவடு
சென்னை 'பிரசிடென்சி கல்லூரி நூல்நிை நூற்றுண்டின் பிற்பகுதியிலே வாழ்ந்து மறைந்த கள் பாடிய தத்தைவிடு தூது உருவத்திலும் உ வதாகும். 1892-ம் ஆண்டில் வெளிவந்த தத்ை க்ளின் அவல நிலையை எடுத்துவிளக்கி. அவர் வத்தைக் கூறுவதாக அமைகின்றது.
தாலபுராணம், கோட்டுப்புராணம் பற் களன்றி வேறு விபரங்கள் கிடைக்குமாறில்லை. " புராணம் பணப்பெருமை கூறினும் ஓர்போது ஒ பாவலர் சரித்திர தீபகத்தின் ஆசிரியர். கோ களுக்கு நேரிடும் பன கட்டம், கஷ்டம், ெ இழித்தும் பழித்தும் கூறும் இரலாகும் என்பர்.
“கனகி சயமரம்" என்னும் கனகிபுராண *னகி என்பவளைக் கதாபாத்திரமாகக் கொண்டு ணு, ர் வில்லியப்பிள்ளையின் பஞ்சலட்சணத்திருமு: நாட்டு மருமக்கள் வழி மான்மியம் முதலி முன்னர் எழுந்தது கனகிபுராணம் என்பது குறிப்
தேடரிய பரராச சேகரன் செகராச ே செப்புசின் னத்தம்பி நாவலன் பாடரிய வரராச பண்டிதன் மயில்வாக பரவுசர வணமுத்து வித்துவா6 நாடfய முத்துக் குமாரநா மன்சீர்த்தி ந னவிலுமிவ ரும்பிறரு மீண்டுெ தாடரு மு பாயநீ தந்து தவ வந்தன ஞ் சா சந்த்ர மெள வீசனே யைந்தொ

கோட்டுப்புராணம், தாலபுராணம், தத்தை }வ முதலியலை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.
: :
வ ஒருவராலன்றி மூவராற் பாடப்பட்டதாகும்; கண்ணுள்ளதாகும் வடதிருமுல்லைவாயிலிலுள்ள ாவையிலுள்ள ஆசிரியப்பாக்களை நல்லுர் சிற். ாபாக்களை சிறுப்பிட்டி தா. அமிர்தலிங்கம்பிள்ளை 5. வ. திருவேங்கடநாயுடு அவர்களும் பாடியுள்ள சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் புதல் சித்திரை மீ (1901) பதிப்பிக்கப்பட்டது,
லயத்தின் தலைவராக விளங்கி, பத்தொன்பதாம் திரிகோணமலை த. சரவணமுத்துப்பிள்ளை அவர் உள்ளடக்கத்திலும் புதுமை பொலிந்து விளங்கு தைவிடுதூது இந்து சமுதாயத்திலே உள்ள பெண் களுக்கு விடுதலே அளிக்க வேண்டிய முக்கியத்து
Pப் பாவலர் சரித்திர தீபகம் தரும் செய்தி பனங்காய்ப் பாரதம்' என அழைக்கப்பட்ட கால ருவகைக் கேலிப்பாடலாகவும் இருக்கலாம் என்பர் ட்டுப்புராணம் நீதித்தலத்திலே வாதி பிரதிவாதி தால்லைகளையும். வழக்கறிஞரின் தந்திரங்களே:ம்
ம் வண்னை சிவன்கோயிற் தாசிகளிலொருத்தியாகிய இயற்றப்பட்ட அங்கத இலக்கியமாகும். பிரம க விலாசம், தேசிகவிநாயகம்பிள்ளையின் நாஞ்சில் பிய பேர்பெற்ற அங்கத இலக்கியங்களுக்கு பிடத்தக்கது.
சகரன் செயகேசரி
சேணுதி ராயமா முதலியார் சீர் னப்பெயர்ப் பாவலனியாம் ன் வேன் முதலி படி றில்சம் பந்தமைந்தன் நாட்டுசங் கரபண்டித சந் தமிழ் நிறீஇ நல்லிசை நடாத்துத்தமர் ாந்த நா யகிசமேத ழில் வி லாசைே சந்த்ரபுர தலவாசனே
- சந்திரமெள் லீசர் சதகம்
9

Page 128
ஈழத்தில் புதுக்கவிதை
செ. யோகரா
ஈழத்துக் கவிதை வளர்ச்சியில் குறிப்பிட தியவர்கள் நாற்பதுகளில் தோன்றிய மறுமலர்ச் பட்டு வருகிறது. பழைய செய்யுள் மரபில் நவீ கம், நடை ஆகியவற்றில் - புகுத்திச் சாதனை பு புதுக்கவிதை ஆரம்பகர்த்தாக்களுமாவர். அவர்க சோதி (சோ. தியாகராசா), விஜயன், "தங்கம் முறை, கல்வி முறை முதலியவற்றில் ஏற்பட்ட சிந்தனைகளின் தாக்கமும், புதுமை வேட்கையும், குழுவிடம் நவீன இலக்கியத்தில் ஈடுபாட்டினை தாகத்தின்-வெளிப்பாடே. புதுக்கவிதையை எழுதி
இவர்களது புதுக்கவிதை முயற்சிக்குச் ச சக்தியளித்தது. ஏலவே, ‘மணிக்கொடி" புதுக்க (1938 இல் மணிக்கொடி யில் முதற் புதுக்கவில் முதலியோர் மூலம் மணிக்கொடி ‘பெறற" யில் வளர்ந்தது. புதுக்கவிதை பற்றிய (க. நா. சு. ஆயினும் 1942 அளவில் வெளிவந்த 'கலாமோகி கெடுத்து ஒற்று, 1943 இல் "கிராம ஊழியனு வெளிவரத் தொடங்கிய காலத்திலேயே ஈழத் (1943) தோன்றியது. மறுமலர்ச்சிச் சங்கத்தினர் ( ‘ஈழகேசரி"யிலும் எழுதிவந்த L_u68)l—u'u LunT Yi ஆகியவற்றேடு நெருங்கிய உறவு ஏற்பட்டது; 8 தன. "கலாமோகினி" யில் வெளிவந்த புதுக்கவி பற்றினர்.
ஆரம்பகாலப் புதுக்கவிதைகள் பெரும்ட யும், இயற்கைபற்றிய அனுபவங்களையுமே உள்: வெ ரிவந்த ஈழகேசரியில் ‘ஓர் இரவினிலே எ யொன்றை எழுதியிருந்தார் வரதர், ஈழத்தில் (
'இருள் இருள்! இருள்! இரவிலே நடு ஜாமத்திலே என்கால்கள் தொடும் பூமிதொ கண்பார்வைக் கெட்டாத மேக பு இருள் இருள்! பார்த்தேன்,
பேச்சு மூச்சற்று பிணம் போல கிடந்தது பூமி
என்றுதொடர்ந்து செல்லும் அந் நீண்ட கவிதை
இயற்கையின் கூத்தை வர்ணித்துச் செ ந. பிச்சமூர்த்தியும்' மழைக்கூத்து" என்ருெரு !
丑20

யின் தொடக்க காலம்
FT B. A. (Hons)
த்தக்க முனைப்பான சில மாற்றங்களை ஏற்படுத் ரிக் குழுவினர் என்பது இப்போது ஒரஸ் வு உணரப் ன கவிதைக்குரிய இயல்புகளை உருவம், உள்ளடக் ரிந்த மறுமலர்ச்சிக் குழுவினருள் சிலரே ஈழத்தின் ளுள் இவ்விடத்தில் வரதர் (தி. ச. வரதராசன்). முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்; வாழ்க்கை மாற்றங்களும் சஞ்சிகைகளின் தோற்றமும், புதிய இளமைக் துடிப்பும் ஒன்றுபட்டு இம்மறுமலர்ச்சிக் ஏற்படுத்தின. இத்தகைய ஈடுபாட்டின் பரிசீலனைத் ப்ெ பார்க்கவும் தூண்டிற்றெனலாம்.
மகாலத் தென்னிந்தியப் போக்கும் பெரிதும் உந்து விதை முயற்சியைத் தொடக்கி வைத்திருந்தது. தையை எழுதிய) ந. பிச்சமூர்த்தி, கு. ப. ரா. புதுக்கவிதைக் குழந்தை, "சூருவளி (1939) வின் விவாதங்களும்) சூருவளியில் வெளிவந்தன. னி யிலேயே புதுக்கவிதை வெள்ளம்போற் பெருக் ம் வெளிவரத் தொடங்கிற்று. கிராம ஊழியன் திலும் யாழ்ப்பாணத்தில் மறுமலர்ச்சிச் சங்கம் வெளியிட்ட 'மறுமலர்ச்சி"யிலும், 'பாரதி'யிலும், கட்கு கலாமோகினி, கிராம ஊழியன் ஈழத்தவர் படைப்புக்களும் அவற்றில் வெ சிவத் தை பற்றிய விவாதங்களிலும் ஈழத்தவர் பங்கு
ாலும் வாழ்க்கை பற்றிய பல்வேறு சிந்தனைகளை ாடக்கமாகக் கொண்டிருந்தன. 13.6.43 இல் ான்ற தலைப்பில் சற்று நீண்ட "வசனகவிதை” வெளிவந்த முதற் புதுக்கவிதை" இதுவாகும்.
டங்கி }ண்டலம் வரை
pலும் இக்க.விதை வெளிவந்த காலப் பகுதியிலே விதையினை கலாமோ கினியில் எழுதியிருந்தார்.

Page 129
“பார்தீரோ அதிசயம் கேட்டீரோ அதிசயம் நேற்று நள்ளிரவில் நடைபெற்ற நடிப்பினை யானை இடிகள்
அதிர்ந்து நடந்தி. எட்டுத்திசையும் இடிந்து விழுந்திட பார்த்தீரோ அதிசயம்
வரதரின் கவிதை இயற்கையின் கூத்தினை படுத்த, ந. பி. யின் கவிதை வியப்புணர்ச்சியினை வரதரின் கவிதைக்குத் தூண்டுதல் அளித்திருச் மளவில் வேறுபட்ட உணர்ச்சிகளின் வெளிப்பா
"சோதி” எழுதிய புதுக்கவிதைகளில் ஒன் தொடங்கும்:
“முகை அரும்பி மலர்ந்து கீழே விழு காய்கனிந்து கீழே உதிர்கிறது; பார்: இளமை முற்றி, கனிந்து முழுமையாக
பாரதியில் (நவ. 1947) 'க' என்பவர், கவிதையொன்று வெளிவந்திருந்தது:
'உடலின் அழகு குறைவதா? கண்களின் ஒளி மங்கலா? வனப்பின் மெருகு தேய்வா? வடிவின் மலர்ச்சியும் சக்தியும் தேய்ந்து மாய்ந்து போவதா?
என்று தொடங்குகிறது அக்கவிதை. “சோதியியுப் சிந்தனையுடன் இருக்கும்போது, வாழ்க்கை பற்றி எழுதிய "விஜயன்", தங்கம், ராம் முதலியோர்.
'நீலக்குமிழ் விடும் ஆழமான நதிகள் நவமான செல்வமணி திரளும் கனிகள் இவற்றின்மேல் புதுயுகம் பூத்தது அதன் சிகரம் உயர்ந்துயர்ந்து உழைப்பும் வியர்வையும் இனிது என்று முழக்கம் செய்கின்றது சிரஞ்சீவிக் குரல் கொண்டு என்று "ராம் "சீரஞ்சீவிக் குரல்கொண்டு" என்ற த மாகக் கண்டு கவிதை படைத்தார் ‘தங்கம்’.
‘வெட்ட வெளியாகத் தெரிந்த இட விண்னை யெட்டும் சொர்ண பூமியாகத் அந்த காரத்தின் குகையிலே அதிசயதீ அதன் ஒளியிலே அகிலமே இன்பச்சுரா
எனத் தொடரும் அக்கவிதை. இவ்வாறே கு. ப. வாழ்க்கை இன்பங்கள் பற்றியும் அமைந்துள்ளன:
I 2.

அச்சங்கலந்த அனுபவ உணர்ச்சியுடன் வெளிப் வெளிப்படுத்துகிறது. ந. பி. யின் மழைக்கூத்து கக் கூடுமாயினும் இவ்விருகவிதைகிளும் தத்தம் டுகளே. ་་་་་་་
று ‘வாழ்வுத்திரையில்" என்பது, அது இவ்வாறு
கிறது நாம் அறிகின்ருேமா?
கின்ருேமா? வாடுகிறது; கவனிக்கின்ருேமா?
'ஏதுவயோதிபம்" என்ற தலைப்பில் எழுதிய
'க'வும் வாழ்க்கை நிலையாகை பற்றிய ஒத்த ய நம்பிக்கைக் குரலெழுப்பினர் “பாரதி'யில்
5லேப்பில் எழுதினர். உலகத்தை இன்பச் சுரங்க
ம் இன்று
தெரிகிறது பம் ங்கம்*
ரா. வின் கவிதைகளும் வாழ்க்கை பற்றியும் எடுத்துக்காட்டாக,
21

Page 130
“ ‘வாழ்க்கை ஒரு வெற்றி ஒரு துடிப்பு ஒரு காதற்பா ஒரு இசை'
என்று தொடங்கும் கவிதையை இங்கே குறிப்பி
இவ்வாறு ஈழத்தின் ஆரம்ப காலப் யையும் ‘வாழ்க்கை'யையும் உள்ளடக்கமாகக் தென்னிந்தியப் புதுக்கவிதையாளராகிய ந. பிச் இவற்றைப் பொருளாகக் கொண்டு எழுதியிருந்த திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.
"பாரதி'யில் கவிதை எழுதியோருள் ஒரு சிலவற்றை எழுதியிருந்தமையை அவானிக்கமுடி தொழிலாளர் பற்றியும், போராட்டங்கள் ட முதலியோர் புதுக்கவிதை வடிவில் அவற்றை வெ வித்யா எழுதிய,
'ஜில் எனக் குளிர்ந்த ஆழமிகுந்த ஆ அதன்கரையில் அசையாத சமாதிபே தன்னந்தனியே நிற்கும் தொழிற்ச கட்டிடம் உதவாத சிமிந்திக்க டு எத்தனை ஜன்னல்கள் அர்த்த மற்ற ஒளிகெட்ட ஒனுன்கண் போலத் தி என்று விழிக்கின்றன. புகைமண்டி ட வேகமாகக் கனிந்த இருள் மூட்டம் நர்த்தனம் செய்யும் புகைக்கூண்டு இன்று மத்தியானச் சங்கு ஊதவில் அப்பா வேலைக்குப் போகவில்லை வே
என்று நீண்டு செல்லும் கவிதை இவற்றுள் குறிப்பு
ஆயினும், ஈழத்தில் இவ்வாறு பிறந்து வ பின்பு சோர்ந்துபோய் ஆழ்துயில் கொள்ளத் தெ
ஈழத்தின் ஆரம்பகாலப் புதுக்கவிதைப் கவிதை எழுதவேண்டும் என்ற ஆர்வம் பிரச் முயற்சி என்ற விதத்தில் "மேலெழுந்த வாரியா கூறுதலே பொருந்தும். இன்னெரு விதமாகவும் ஒரு இயல்பு உண்டு. எந்த நிலையில் அது இயங்கி வ இயங்கவேண்டுமென்ற நுண்அவா மனதில் எழு இந்த மாதிரி எதிரிடையான தூண்டுதல் என்னு லும் கவிதையை அமைத்துப் பார்க்கலாமே என் கவிதைகளும் புனைந்தேன்" என்று ந. பிச்சமூ கூறும் ஒரு காரணமிருக்கிறதே அதனைச் சற்று லும் கவிதையை அமைத்துப் பார்க்கலாமே" சிலர் புதுக்கவிதையை எழுதிப்பார்த்தனர் என்
இந்நிலையில், வெளிவந்துகொண்டிருந் வெளிவராமல் தற்கொலை செய்து கொள்கி

டலாம்.
புதுக்கவிதையாளர் பெரும்பாலும் ‘இயற்கை' கொண்டுள்ள்ல்த் அவதானிக்க முடிகிறது. சமூர்த்தி, கு. ப. ரா. முதலியோரும் ஆரம்பத்தில் நமை ஈழத்துப் புதுக்கவிதையாளரையும் பாதித்
நசாரார் சமுதாய நோக்குடைய புதுக்கவிதைகள் கிறது. அ. தா. கந்தசாமி மரபுவழிக் கவிதையில் பற்றியும் எழுதிபிருந்தமை போன்று “வித்யா' ளிப்படுத்தினர். “வேலைநிறுத்தம் ஏன்ற தலைப்பில்
Ա)
s
ாலைக்
வீண்வெரிகள் ருதிரு
மண்டி
ඊඛ)
லைநிறுத்தமாம்'
பிடத்தக்க ஒன்ருகும்.
1ளர்ந்த புதுக்கவிதைக் குழந்தை சில ஆண்டுகளின் ாடங்கிற்று. இதற்குச் சில காரணங்களுண்டு.
படைப்பாளிகட்கு ‘புதுக்கவிதை" அல்லது வசன ைேஞ பூர்வமாகத் தோன்றிய ஒன்றல்ல புது ாகத் தோன்றிய ஆர்வத்தின் வெளிப்பாடு என்று இதனை விளக்கலாம். 'மனதிற்கு வினுேதமான ருகிறதோ அதற்கு நேர் எதிரிடையான முறையில் வதுண்டு. அந்த முறையில் செயல்படுவதும் உண்டு. ள் ஏற்பட்டதும்,அப்பொழுதே மரபான முறையி தோன்றிற்று; அதன் விளைவாக யாப்புக்கிணங்க ர்த்தி தான் மரபு வழிக்கவிதை எழுதியமைக்குக் மாற்றி, அதாவது ‘மரபு ரீதிக்கு மாறன் முறையி என்ற அவாவினல் உந்தப்பட்டு, ஈழத்துக் கவிஞர் ாறு கூறலாம். .
த இலக்கியச் சஞ்சிகைகளும் தொடர்ந்து ன்றன. அதுமட்டுமன்றித் தென்னிந்தியப் புதுக்
122

Page 131
கவிதையாளர்களிடம் புதுக்கவிதை எழுதுவதி களாகத் தொடர்ந்து நிலவிற்று. “சரஸ்வதி
ஆர்வம் காட்டவில்லை. புதுக்கவிதை முன்னே! தாழ பதினுறு வருடங்களாக (1946-1961) { ஆரம்பகாலங்களில் புதுக்கவிதை முயற்சிகளு ‘'சிறுகதையை ரசிப்பதற்கு எப்படிச் சிலகாலம்
ரசிக்க சில காலம் போக வேண்டி இருக்கலா எழுதிய கடிதமொன்றில் குறிப்பிட்டிருந்தார் ந. நிலை காணப்பட்டபோது ஈழத்திலும் புதுக்கவை
எவ்வாரு யினும் இவ்வாரம்பகால ஈழத் சில பண்புகளுண்டு. படிமம், குறியீடு, சொற்சி இடம்பெறும் ‘புதுக்கவிதை” யின் பரிணுமவளர்ச் ளது. அது தவிர்க்க முடியாததே. ஆயின், இத் வழிக்கவிதைகளிலிருந்து முற்றக விடுபடாததும், மான ‘வசன கவிதை’ப் போக்காகும். "இரட்ை பழமுமாகாது செங்காய் என்று சொல்வார்களே நிய பின்பே புதுக்கவிதை, வசன கவிதைப் போ மாறிற்று. அதுவரையும் தென்னிந்தியாவில் புது விளங்கிற்று. ஈழத்திலும் ஆரம்ப காலத்தில் இப்ே கிடந்தது பூமி, ‘மின்னல், - ஆகாயத் தேவன் கட்டிடம் உதவாத சிமிந்துக் கூடு’, ‘நிகழ்கால படிமம், குறியீடு முதலியனவே ஈழத்துக் 'புதுப்
இன்று மீரா, நா. காமராஜன், தமிழ காணப்படும் அடுக்கடுக்கான, புதிய, புதுமையா ஈழத்துப் புதுக்கவிதைகளில் சிலவற்றில் அரும் ‘சோதி யின் புதுக்கவிதையொன்றில் இடம்பெ
"சூரியன் வந்த வேலையைச் செய்யட்டுப் பணக்காரன் ஏழையை வதைக்கட்டும் உடம்பெடுத்தவன் உயிரோடு போராடட்
என்ற அடிக்ளை இங்கு எடுத்துக்காட்டலாம்.
முன்பு குறிப்பிட்ட மந்தமான நிலை மாறி தியாவில் புதுக்கவிதை வீறும் எழுச்சியும் பெற்று கூறின் "வசனகவிதை” “புதுக்கவிதை ஆயிற்றெ புதுக்கவிதையில் ஈடுபாடு கொள்ளச் செய்தது யாளராக தருமு அரூப் சிவராம் அமைந்தார். ஏ பழைய தடத்திலேயே-சற்று மெருகிட்டு கொண்டு புகளே அவர்களது புதுக்கவிதைகளில் அமைந்தன மாறுபட்டாலும் கூட, (உருவத்தைப் பொறுத் வளர்ச்சியிலே நிலையூன்றி, ஊடுருவி, விசாலித்து களுக்கும், ஈழத்துப் புதுக்கவிதைகளுக்கும் இடே முக்கியமானது.
123

ஒருவித உற்சாகமற்ற போக்கு சில வருடங் pதலிய சஞ்சி கைகள் புதுக்கவிதை முயற்சிகளில் களில் ஒருவரான ந. பிச்சமூர்த்தி கூட ஏறத் }லக்கிய முயற்சிகள் மாதிலுமே ஈடுபடவில்லை. கு அவ்வளவு துரம் வரவேற்பிருக்கவுமில்லை. சென்றதோ, அதேபோல இப்புதுக்கவிதையையும் ), ’’ என்று நண்பரொருவருக்கு 1945 அளவில் பிச்சமூர்த்தி. தென்னிந்தியாவில் இவ்வாறன த முயற்சிகள் அருகியன ம வியப்புக்குரியதன்று.
ப் புதுக்கவிதை முயற்சிகளில் அவதானிக்கத்தக்க க்கனம் முதலிய தனித்துவ இயல்புகள் சிறப்பாக சி, மினிக்கவதை என்ற நிலையை இன்று எய்தியுள் தகைய புதுக்கவிதையின் தொடக்க நிலை மரபு வசன நடைக்குரிய சிலதன்மைகளைக் கொண்டது உயர் மொழியில் கூறுவதானல் ‘* பிஞ்சுமாகாது அந்த நிலைதான்', ‘எழுத்துச் சஞ்சிகை தோன் க்கிலிருந்து ‘புதுக்கவிதை” என்ற உரிய நிலைக்கு க்கவிதை ‘வசன கவிதை” யாகவே பெரும்பாலும் பாக்கே காணப்பட்டது எனலாம். "பிண ம்போல் பூமிக்கனுப்பிய தங்கக்கொடி’, ‘தொழிற்சாலைக் ம் என்னும் சுடுகிறை முதலிய செம்மையுருத கவிதை" களில் இடம்பெற்றுள்ளன.
வன் முதலிய புதுக்கவிதையாளரிடம் சிறப்பாகக் ன உவமைத் தொடர்கள் முதலியன அன்றைய பியிருந்தன என்று கூறலாம். உதாரணமாக, றும்,
கூட்டுபவளைப்போல அரிவாளைப்போல டும் நண்பர்களைப்போல’’
அறுபதுகளில் எழுத்துச் சஞ்கையுடன் தென்னி வளர்த்தொடங்கிற்று என்று கூறலாம்; சுருங்கக்  ைலாம். ‘எழுத்து", ஈழத்தவர் பலரைப் முதலாவது படிம, குறியீட்டுப் புதுக்கவிதை ஈய ஈழத்துப் புதுக்கவிதையாளர் பெரும்பாலும் சென்றனர்; அதாவது வசனகவிதைக்குரிய பண் இத்தகைய ஆரம்பகாலப் பண்பே உள்ளடக்கம் தவரையில்) இன்றும் ஈழத்துப் புதுக்கவிதை காணப்படுகிறது. தென்னிந்தியப் புதுக்கவிதை யிலான அடிப்படை வேறுபாடுகளுள் இது மிக

Page 132
ஈழத்துத் தமிழ் ந இ. பாலசுந்தர
உலக இலக்கியங்கள் அனைத்தையும் ஏட்டி இலக்கியம் என இரு பெரும் பிரிவுகளாகப் பகு கற்ருே ரால் ஆக்கப்படுவது; நாட்டார் இலக்கிய இது செந்நெறி இலக்கியத்தை விடத் தொன்மை இலக்கியம் தோற்றம் பெறுவதற்குப் பல நூ தோன்றி வளர்ந்து மக்கள் வாழ்க்கையுடன் வ களிற் செந்நெறி இலக்கியம் தோன்றுவதற்கும் முன்னுேடியாகவும் கருவூலமாகவும் அமைதது முதலிய அறிஞர்கள் இலக்கிய ஆராய்ச்சியின் மூ
ஒரு நாட்டு மக்களின் பண்பாட்டின் சக் பிக்கைகளையும், சமுதாயக்குறை நிறைகளையும் மு கியத்தைவிட நாட்டார் இலக்கியமே தக்க சான்ரு நாட்டுப்பண்பாட்டியல் (Folklore), Jep565 ஆய்வாளர்களுக்கு தக்க ஆய்வுக்கருவூலமாகவும் ( மாகும்.
நாட்டார் இலக்கியப்பரப்பினை பாடல்கள் நான்காகப் பகுக்கலாம். பாடல்களை (Folk S டல்கள், சிறு வர் விளைாாட்டுப் பாடல்கள், தொ பாடல்கள். சமய வழிபாட்டுப்பாடல்கள், கதைப் கதைகளை (Folktalkes) சமூகக்கதைகள், வரலா கதைகள் என நான்காகப் பகுத்து ஆராய்வர், உறுப்புக்களும் செயற்பாடுகளும், உணவும்-உண6 மண்டலம், வாழ்க்கை; சமயம்; உடை உணவு( என பத்துப்பகுதிகளாகப் பகுத்து டொன் விகா துள்ளார். பழமொழிகளையும் பல உபபிரிவுகளா
உலகநாடுகளில் நாட்டார். இலக்கியங்கை சுமார் 200 ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்ற தால் மிகவும் பிந்தித்தோன்றியதோடு, சோம்பிய துவம் நன்கு வெளிப்படுத்தப்படாத நிலையில் முதன்முதலாக நாட்டார் இலக்கியங்களைச் சேகரி டறிஞர்களாவர். சிங்களமக்களின் நாட்டார் ப தொகுத்த எச். பாக்கர் போன்ற, நாட்டார் இ உத்தியோகத்தர்கள் தமிழ்ப் பிரதேசங்களிற் கட நாட்டார் இலக்கியங்கள் பேணிப்பாதுகாக்கப்படு
நாட்டார் இலக்கியங்களைச் கேசரிக்கும் லும் பொழுதுபோக்கு அடிப்படையிலான தனிய நாட்டார் இலக்கிய வரலாற்றுக்கும் பொருந்து முயற்சிகள் அரைநூற்றண்டுகால வரலாற்றை முயற்சியின் அடிப்படையில் நாட்டார் இலக்கியூ பிள்ளை, தி. சதாசிவ ஐயர், மு. இராமலிங்கம், வி. சீ. கநதையா, அ. வி. மயில்வாகனம், இர

ாட்டார் இலக்கியம்
2, В. А. (Hons)
லக்கியம் வாய்மொழி மரபில் வரும் நாட்டார் க்கலாம். ஏட்டிலக்கியம் (செந்நெறி இலக்கியம்) 1ம் பாமர மக்களின் வாழ்க்கையில் மலர்வது. வாய்ந்ததாகும். சகல மொழ களிலும் செந்நெறி ற்ருண்டுகளுக்கு முன்பே நாட்டார் இலக்கியம் ளம் பெற்றுவந்துள்ளது. அத்துடன் அம்மொழி அவற்றின் வளர்ச்சிக்கும் நாட்டார் இலக்கியம் என்பதை சாட்விக், குமுறே, மில்பன் பரி மலம் நிறுவியுள்ளனர்.
ல அம்சங்களையும், பழக்கவழக்கங்களையும். நம் ழுமையாக ஆராய்ந்தறிவதற்கு செந்நெறி இலக் ச அமைந்துள்ளது. மானிட யல் (Anthropology) u Gäv (Sociology), - P-6MTG ulu 6) (Psychology) முதற்சான்ற கவும் அமைவது நாட்டார் இலக்கிய
", கதைகள், பழமொழிகள், விடுகதைகள் என Ongs) வகை செய்யும்போது, தாலாட்டுப் பா ழிற்பாடல்கள், காதற் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் என ஏழாகப் பிரித்து ஆராயலாம் ற்றுக்கதைகள், புராணக்கன் தகள், இதிகாசக் விவசாயம், விலங்கினம்-பட்சிகள், மனிதனது வுதயாரித்தலும், காலநிலை, புவயியல்நிலை-வான சேகரித்தல்; நிலைபெற்ற உபகரணப்பொருட்கள் - ர்ட் என்பவர் விடுகதைகளை (Riddles) ஆராய்ந் கப் பிரித்து ஆராயலாம்.
ளச் சேகரிக்கும் இயக்கங்களும், ஆய்வுவேலைகளும் றன. ஆனல் ஈழத்தமிழரிடம் இவ்வ யக்கம் காலத் நிலையில், ஆதரவற்று, இலக்கியத்தின் முக்கியத் காணப்படுகிறது. இந்திய்ாவிலும் இலங்கையிலும் த்துத் தொகுத்து வெளியிட்டவர்கள் மேல்நாட் ாடல்களைத் தொகுத்த ஹய்நெவில், கதைகளைத் இலக்கியத்தில் அக்கறையுடைய ஆங்கில அரசாங்க மைபுரியாத காரணத்தால் ஈழத் தமிழரது பழைய நிம் சந்தர்ப்பம் இழந்துபோயிற்று.
முயற்சியின் ஆரம்பகாலம், உலகநாடுகள் அனைத்தி பார் முயற்சியாகவே காணப்படுகிறது. இது ஈழத்து ம். ஈழத்தில், நாட்டார் பாடல்களைச் சேகரிக்கும் யுடையதாகும். இக்காலகட்டத்தில் தனியார் ங்களைச் சேகரித்தோர் வரிசையில் சி. அரியகுட்டி அருள்.செல்வநாயகம், எவ்.எக்ஸ்.ஸி. நடராஜா, ட்டையர்கள், க. ச. அருள்நந்தி, ஸி. வி.வேலுப்
丑24

Page 133
பிள்ளை, மு. இராஜரத்தினம், ஏ. ஆர். எம். குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்கள் அரசாங்க இருந்தமையால், நாட்டுமக்களுடன் தொடர்பு நல்ல வாய்ப்புக்கள் கிடைத்தன. பொழுதுபோக் தர்கள் மூலமாகவும் இவற்றைச் கேசரித்து வந்
இவர்கள் காலத்துக்குக் காலம் தாம் :ே சுதந்திரன், வீரகேசரி, ஈழகேசரி, ஈழநாடு, இ வாணி, சிந்தாமணி முதலிய பத்திரிகைகளிலும் பத்திரிகைகளில் தமது பெயர் வரவேண்டுமென் தமது வித்துவத்தைப்பயன்படுத்தி போலிப்பாட6 மேற்குறிப்பிட்ட பத்திரிகைகளின் பழைய பிரதிக பட்டிருப்பதையும் இதைக்கண்டுபிடித்த பத்திரிை கண்டித்துப் பல தடவைகள் எழுதியிருப்பதையு
தனியார் முயற்சியாக ஈடுபட்டோருட் சொந்தப் பணத்தில் தாம் சேகரித்த இலக்கியங்க காலத்தால் முந்தியவர் சி. அரியகுட்டிப்பிள்ளை பன்றிப்பள்ளு, அருவிச் சிந்து, கதிரையப்பர் பள்ளு ஒரு சிறு நூலாக வெளியிட்டார். (இந்நூல் 191 இந்நூற் பிரதிகள் கிடைப்பது அரிது. இதனையடு, தில் பெருவழக்காகக் காணப்படும் வசந்தன் வசந்தன் கவித்திரட்டு’ என்னும் நூலை 1940 இலக்கிய நூல்கள் பல வெளிவந்தபோதிலும், குறிப்புக்கள், விபரங்கள் ஆகியவற்றுடன் நூல் கூறவேண்டும்.
தனியார் முயற்சியிற் சிறப்பிடம் பெறு
நாட்டார் இலக்கியச் சேகரிப்பாளராகவும் உழைத்துவருகிருர், நாட்டார் இல்க்கியத் து (collector) மேற்கொள்ள வேண்டிய வெளிநிலை Methodology) இவர் ஒருவாறு கையாண்டுள்ளா கடிதங்கள் எழுதியும் மக்களுடன் தொடர்பு ெ
வந்துள்ளார். நண்பர்களைப் பல இடங்களிலும் எல்லா இடங்களுக்கும் சென்று நாட்டார் இலக் ளார். இவர் ஆரம்பகாலந் தொடக்கமாக இத் முக்கியமான நூல் வெளியீடுகளையும் செய்துள்ளா (1) இலங்கை நாட்டுப்பாடல்கள் (1951) (2) (3) வட இலங்கையர் போற்றும் நாட்டார் ட பாண்டித்தியம் (1971). என்பனவாம்: விடுக! யாண்ட விடுகதைகள் (1962) பொது அறி கதைகள் பற்றிய இவரது சேவைளும் இங்கு வி சியாக நாட்டார் இலக்கியத்தில் ஈடுபாடு கொ அக்கறைகாட்டி புள்ளனர். ஆனல் இவர் பழமொழி என்பவற்றிலும் நாட்டங்கொண்டு யிட்டுள்ளார்.
அடுத்ததாகக் குறிப்பிடத்தக்கவர் எவ். பாடல்களை மட்டக்களப்பு மாவட்டத்திலே சே

ஸ்லீம், அ. ஸ. அப்துஸ்ஸமது முதலியோர் உத்தியோகத்தர்களாகவும், ஆசிரியர்களாகவும் கொண்டு நாட்டார் இலக்கியங்களைச் சேகரிக்க 5 முறையில், தாமாகவும், தமது உத்தியோகத்
துளளனா. :w
கரித்தவற்றை கலைமகள், தினகரன், பூனிலங்கா த்து சாதனம், மறுமலர்ச்சி, சுரபி, கலாநதி, கலை , சஞ்சிகைகளிலும் பிரசுரித்து வந்துள்ளனர். பதற்காகப் பாடல்களைச் சேகரித்தவர்களுமுளர்; }களைத்தாமே ஆக்கிப் பிரசுரித்தவர்களும் உளர். ல்ே இத்தகைய போலிப்பாடல்கள் பிரசுரிக்கப் க ஆசிரியர்கள் ஆசிரியர் தலைப்பில் இவர்களைக் ம் காணலாம்.
சிலர், பத்திரிகையோடு நின்றுவிடாது, தமது ளே நூல்வடிவாகவும் தந்துள்ளனர். இவர்களுட் பாகும். வவுனியா மாவட்டத்தில் வழக்கிலிருந்த , குருவிப்பள்ளு முதலிய பாடல்களைச் சேகரித்து ல் வெளிவந்திருக்கலாமெனக் கருதப்படுகிறது). த்து, தி. சதாசிவஐயர், மட்டக்களப்பு மாவட்டத் சுத்துப் பாடல்களைத் திரட்டி 'மட்டக்களப்பு
ல் வெளியிட்டிருந்தார். ஈழத்தில் நாட்டார் இந்நூலைப் போன்று சிறந்த முன் னுரை, அடிக் ஸ்கள் வெளியிடப்படாமை பெருங்குறை என்றே
ம் மு. இராமலிங்கம் 1939 ஆம் ஆண்டிலிருந்து, பதிப்பாசிரியராகவும் கட்டுரையாசிரியராகவும் றையிற் சேகரிப்பு வேலையில் ஈடுபடும் ஒருவர் க் களப்பணி ஒழுங்குவிதிகளையும் (Fieldwork ர். பல துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டும் காண்டு நாட்டார் இலக்கியங்களைச் சேகரித்து ஆக்கிக்கொண்டு வசதி ஏற்படும் போதெல்லாம் யம் பயன்படும் முறைகளையும் அவதானித்துள் துறைபற்றிப் பத்திரிகைகளில் எழுதிவந்ததோடு ர். அவற்றிலே நாட்டார் பாடல் வெளியீடுகள் கிராமியக்கவிக் குயில்களின் ஒப்பாரி (1960) ாடல்கள் 1961), (4) நாட்டார் பாடல்களில் தை வெளியீடுகள் (1) சளவுக்காதலர்கள் கை விடுகதைகள் (1970), பழமொழிகள், ரிவாகப் குறிப்பிடத்தக்கன. தனியார் முயற் ண்ட யாவரும் நாட்டார் பாடலில் மட்டும்ே பாடலோடு மட்டுமல்லாது விடுகதை, கதை, வற்றைச் சேகரித்து, பத்திரிகைகளில் வெளி
எக்ஸ். சி. நடராஜாவாகும். இவர் நாட்டார். ரித்து 'ஈழத்து ந. டோடிப் பாடல்கள்’ (1962)
25

Page 134
என்னும் நூலாக வெளியிட்டுள்ளார். அத்து கின்ற "எண்ணெய்ச் சிந்துப்பாடல்’ (1953 முதற்ப்ாகம் (1965) என்னும் நூலையும் வெ
மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்ண
பெரிதும் காணப்படுகின்றன. பண்டிதர் வி. சீ களுட் சில பாடல்களைச் சேகரித்து 'கண்ணி நூல்கள்' (1958) என்னும் ஒரு நூலை வெ
மட்டக்களப்பில் வழக்கிலிருந்த "பூ னியாள் க, த. செல்வராஜகோபால், மட்டக்களப்பு (1969) என்னும் கதைப்பாடலைப் பதிப்பித்து மட்டக்களப்பு மாவட்டத்திற் பெருவழக்குப் ( திரட்டி, ‘கண்ணுன மச்சி' (1970) என்றபெ தெய்வங்கள், தேவதைகள் வழிபாடுகள் பற் என்பவர் மகாமாரித்தேவி திவ்யகரணி’ (19 மா. செ. செல்லையா - கோ வலஞர் கதை (19 கத் தனியார் பலர் தாம் அரிதில் தேடிப்பெற்ற நூலாகத் தந்து அவற்றுக்குப் பர்துகாப்பளித்துள்
உலகநாடுகளைப் போன்றே ஈழத்திலும் நிறுவன அடிப்படையிலான முயற்சிகளும் மே பின்னர் ஈழத்து நாட்டார் இலக்கியச் சேகரிப் இதனைத் தனியார் முயற்சியிலும் நிறுவனங்கள் மட்டக்களப்புப் பிரதேசக் கலாமன்றம், நாட் சுத்துப் பாடல்களான 'அனுவுருத்திர நாடக சீ. வி. கந்தையா அவர்களைப் பதிப்பாசிரியர யாழ்ப்பாணப் பிரதேசக் கலாமன்றமும் நாட்ட யம்" (1961) என்னும் நூலை வெளியிட்டுள்ாது
ஈழத்து நாட்டார் பாடல் வரலாற்றில்
தனியிடமுண்டு. இவரது சேவை நிறுவனங்களு வழங்கிய நாட்டார் பாடல்களைச் சேகரித்து, மன களின் வெளியீடாக “மன்னர் நாட்டுப் பாடல்" அத்துடன் மன்னர் மாவட்டத்தில் வழக்கிலிருந் தோர் நாடகம் (1964) 'மூவிராசாக்கள் நாட என்னும்மூன்று நாடகநூல்ளையும் மன்னர் மாவ பதிப்பித்துள்ளார்.
மட்டக்களப்புக் காரைதீவு இந்து சமய பெருமதிப்புடன் பேணப்படும் கண்ணகி கதை என்னும் கதைப் ப்ாடலை வி. சீ. கந்தையா அவர் ளது. கொழும்புப் பல்கலைக்கழக இந்துமாணவர் ராகக் கொண்டு ‘மார்க்கண்டன் ந்ாடகம், நாடகங்களையும் ஒரே நூலாக வெளியிட்டுள்ளது நூல்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்த
பத்திரிகை நிறுவணங்களும் நாட்டார் ஊக்கமும் அணித்துவந்துள்ளன. பாடல்களைச் சே போதும், பத்திரிகைகளில் வெளியிடக் கூடியவ

ன் திண்%ைணக் கல்வி முறையில், மாணவர்கள் பாடு என்னும் நூலையும் ‘கண்ணகி வழக்குரை' - யிட்டுள்ளார்.
கி வழிபாடும் கண்ணகி வழிபாட்டிலக்கியமும் கந்தையா அவர்கள் கண்ணகி வழிபாட்டிலக்கியங் கை அம்மன் குளுத்திப்பாடல்கள் முதலிய நான்கு ரியிட்டுள்ளார். அருள் செல்வநாயகம் என்பவர் 1ஞ்சல் (1957) பாடலை நூலாகத் தந்துள்ளார்.
மாவட்டத்தில் வழங்கிவந்த 'கபோதகானத”* வெளியிட்டுள்ளார். எம். ஸி. எம். ஸ்லின பர், பருவழக்குப் பெற்றுள்ள காதற்கவிகள் சிவற்றைத் பரில் ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். கிராமியத் ய பாடல்களைச் சேகரித்து க. கணபதிப்பிள்ளை 1) என்னும் ஓர் அரியாது லைப் பதிப்பித்து ஸ்ளார். 2) என்னும் நூலைப் பதிப்பித்துள்ளார். இவ்வாரு பாடல்களைச் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி “ளனர்.
நாட்டார் இலக்கியப் பாதுகாப்புப் பணியில் ற்கொள்ளப்பட்டுள்ளன. 1960 ஆம் ஆண்டுக்குப் பு முயற்சியில் ஒரு மறுமலர்ச்சி காணப்படுகிறது, ன் பணியிலும் உணரக்கூடியதாக இருக்கிறது. டார் இலக்கிய வரிசையிலிடமபெறும் நாட்டுக் ம்’ ‘இராமநாடகம்** இரண்.ைடயும் 1969ல் ாகக்கொண்டு வெளியிட்டுள்ளது. அது போன்றே -ார் பாடல்களைச் சேகரித்து "வாய்மொழி இலக்கி
y
பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களுக்குத் டன் இ3ைணந்ததாகும். மன்ஞர் மாவட்டத்தில் ாஞர் மாவட்டப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங் (1964) என்னும் நூலைப் பதிப்பித்துள்ளார். த நாட்டுக் கூத்துக்களுள் "எண்டிறீக்கு எம்பர கம்’ (1966) “ஞானசவுந்திரிநாடகம்" (1967) ட்ட உள்ளூராட்சிமன்றங்களின் வெளியீடுகளாகப்
பிருத்திச் சங்கம், அப்பிரதேசமக்கள் மத்தியிலே 1ாக உள்ள ‘கண், ணகி வழக்குரை " (1965) ளைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிட்டுள் சங்கம் கா. சிவத்தம்பியவர்களைப்பதிப்பாசிரிய வாளபிமன் நாடகம்" (1963) என்னும் இரு இவ்வாருக நிறுவன முயற்சியாக ஒன்பது க செயலாகும்.
இலக்கியங்களைச் சேகரித்தோருக்கு ஆக்கமும் $ரித்தோர் அவற்றை நூலாக வெளியிடமுடியாத ய்ப்பும் அதற்குரிய பலனும் கிடைத்தமையால்
26

Page 135
இத்துறையிற் சலியாது உழைத்தனர். முன்ன ஆராயும் போது அவற்றிற் பழைய நாட்டர்ர் இ
இலங்கை வானெலி நிறுவனத்தார் 194 யும் பணியில் ஈடுபட்டும் அதில் வெற்றியடைய யில் நாட்டார் இலக்கிய ஒலிபரப்புக்கள் இட தேர்ந்தெடுத்து ஒலிபரப்புச் செய்வதற்காக ஓர் mittee-1950) ஒன்றும் நிறுவப்பட்டது. ‘கிர இலக்கிய ஒலிபரப்புக்கள் நடைபெற்றன. இப்ே றும் நாட்டார் இலக்கிய ஒலிபரப்பு நடைபெறுகி வானெலிக் கூட்டுத்தாபனமும் நாட்டார் இலக் வருகிறது.
அரசாங்கக் கல்வித் திணக்கள அதி: சேகரிக்கும் முயற்சியுடன் உதயதாரகைப் பத்தி முயற்சிக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தி முதல் முயற்சி ஆக்கபூர்வமான எப்பலனையும் அ அமைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நாட் 9C05 (5cup Panel for Folk Songs Folk Dancing இருந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் அ சேகரித்து 'மட்டக்களப்பு நாட்டுப் பாடல்" ( (1962) என்னும் நாட்டுக் கூத்து நூலையும் கஃ நாட்டார் இலக்கியத்துக்குப் புத்துணர்ச்சியூட்டு:
இவ்வாறக ஈழத்து நாட்டார் இலக்கிய ே முயற்சி முதலிடத்தையும் நிறுவன முயற்சி இர இடத்தையும் பெறுவதைக் கவனிக்கலாம்.
*திருவு லாங்கலைப்
லோன்குருச் மருவு ஞானநல் ெ மின்னிமற் ( சுருதி யாமெனத்
னுயிர்க்கரு கருணை யாமென காரிருட் பு
- கூழங்கைத்

குறிப்பிட்ட பத்திரிகைகளின் பழைய பிரதிகளை லக்கியங்களை நாம் காணக்கூடியதாக உள்ளது.
9 ல் நாட்டார் பாடல்களை ஒலிப்பதிவு செய் வில்லை. ஆயினும் 1.5.49 தொடக்கம் வாஞெலி ம் பெறலாயின. சிறந்த நாட்டார் பாடல்களைத் allus Gyu (Radio Ceylon Folk Song Sub-Comாமியசஞ்சிகை' என்ற ஒலிபரப்பில் நாட்டார் பாழுது ‘கிராமிய நிகழ்ச்சி'யாக வாரந்தோ, றது. அனைத்துலக நாடுகளைப் போன்றே இலங்கை கியங்களை மக்கள் யாவருக்கும் அறிமுகம் செய்து
காரிகள் நாட்டார் கதைகளையும் பாடல்களையும் ரிகையில் 6.12. 1929 ல் நாட்டு மக்களுக்கு இம் ருந்தனர். ஆயினும் அரசாங்க ரீதியான இந்த ளிக்கவில்லை. 1953 ல் 'இலங்கைக் கலைக்கழகம்’ டார் பாடல்களுக்கும் நாட்டார் நடனங்களுக்கும் ) அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக புவர்கள் மட்டக்களப்பு நாட்டார் பாடல்களைச் '1960) என்னும் நூலையும், ‘அலங்காரரூபன்' 0க்கழகத்தின் மூலம் பதிப்பித்துள்ளார். இக்குழு வதிற் பல வழிகளில் முயன்றுள்ளது.
‘சகரிப்பு இயக்கத்தை ஆராயும் போது தனியார் ண்டாம் இடத் ைந்யும் அரசாங்க முயற்சி மூன்ரும்
NAMNMVV APSAMMY-AMPTY
பிலிப்புமே
சிந்தை லொளியென ருென்வாய்ச்
தொனித்தின் ணுே டொலேமாக் ப் பொழிந்தது **رGBolر
தம்பிரான், யோசேப்பு புராணம் :
127

Page 136
யாழ்ப்பணத்து த் 颅
வட்டுக்கோட்டை
தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டேயிருக்கும். பல்லாயிரம் ஆண்டுகளாக இன்றும் கல்லாத தமிழரும் முஸ்லிம்களும். கவி படும். அதனுல் கல்லாத பெண்ணன் நாவனின் இலக்கண வதிகொண்ட சங்க இ லக்கியம் போல கருத்த மைதியே நாட்டுப் பாடலிற்கொள்ளற்பா
வம்பு வரத்தல்ல,
வி ரத்துமாடு ஈன்றதல்ல,
பட்டியிலே நிறை
பருஞ்கொம்பன் ஈன்ற கன்று
விலங்கு பறவை முதலிய கருப்பொருள்களின் ெ பொருள் என்பர். இனி, அலங்கார நூலோர் உய ஒட்டணி என்பர். "விம்பு வரத்தல்ல, வரத்தும பிறந்தவனில்லை; குலமகனே என்றும், தாயோ
அந்நியனே? என்ற குள்ள வினவுக்கு ‘பட்டியிலே கோத்திரத்தில் வந்த கோமகனே தந்தை என்
மாற்றுயர்ந்த பொன்னே இந்த மண்டலத்து அதிபதியே பூத்த புதுமலரே என்
பொக்கிஷமேகண் வளராய் கொட்டிவைத்த முத்தே
குவித்த நவரத்தினமே கட்டிப் பசும் பொன்னே
கண்மணியே, நித்திரை செய்
தன் பேரனத் தாலாட்டும் பாட்டி முதலில் அ6 தட்டாரும் நகை வணிகரும் பொன்னை உ என்று பார்த்து, கலப்பு இல்லாத சுத்தப் பொ. எனவே அது மதிப்பில் மிக உயர்ந்ததாகும். அத உவந்து ஏற்பர். அப்படிப்பட்ட பொன் உவம குறிக்கும். குறிக்கவே பாட்டி தன்பேரனை ‘நீ ! வாழ்த்துகின்ருள். 'நாரீனும் பூஷணம் பதி' எ பதியே' என்று சொல்லித்தன் பேரனை மன்னர் “ப அவனை 'பூத்த புதுமலரே” என்கின்ருள். மங்ை புதுமலரைத் தேடிப்பறித்து முதலில் மணந்து அவர்கள் மலையும் மலரும் உண்டோ? கழற் சிங் மன்னனுடன் கோவிலுக்குப் போய், பூமாலை கட் மாலை கட்டுவதற்குரியது என்பதனை மறந்து, ஒரு மூக்கரியப்பட்டாள் என்பர்சேக்கிழார். இதிலிருந் உள்ளங்கால்வரை மோக்குத் தன்மைய்ன், தகுதிே புதுமலரே' என்ருள். எஞ்சிய அடிகளை இவ்வி

ாலாட்டுப் பாடல்கள்
மு. இராமலிங்கம்
கொண்டமக்கள் நாவில் தமிழ் மரபு தொனித்துக் த் தமிழர் நாகரிகம் விருத்தியடைந்து வத்ததஞல், பாடுவதைக் காணலாம். இதுவே வாசனை எனப் ாறும் எழுந்த நாட்டுக் கவியும் தொல்காப்பிய ன்றிருத்தல் வியப்பனறு சொ ல்லமைதியை விட்டுக் “லது.
சயல்களிலிருந்து கொள்ளும் பொருளை இறைச்சிப் பமானத்தால் உபமேயத்தைக் கொள்ள வைத்தலை ாடு ஈன்றதல்ல" என்பதனுல் இச்சிறுவன் வம்பில் குலஸ்திரீ என்றும் சொன்னுள். இனி, தந்தை 0 நின்றபருங்கொம்பன் என்றகன்று’ என்பதனல் ம் பெருமைப்படுத்தினுள்.
வனே ‘மாற்றுயர்ந்த பொன்னே" என்கின்ருள். ரைசுல்லில் உரைத்து அதில் கலப்பு உண்டோ ன்னகில், அதனை மாற்றுயர்ந்த பொன் என்பர். னையே தமிழ்ப் பெண்கள் தம் ஆரபரணங்களுக்கு ஆகு பெயராய் ஓர் அழகிய உயரிய அணிகலனைக் ாரியருக்கு ஆபரணமாகிய பதி” ஆவாய் என்று ன்பர் வடநூலாரும். அடுத்து ‘மண்டலத்து அதி ன்னனே என்று வாழ்த்துகின்ருள். மூன்ருவதாக, கயரே மலரில் மிக விருப்பமுடையர். அவர்கள் பிட்டே பின்னர் தலையில் சூடுவர். முகக்காமல் கன் என்னும் 3ம் நந்தி வர்மன்பட்டத்தரசி தன் டும் மண்டபத்திலிருந்த புதுமலர் இறைவனுக்கு மலரை எடுத்து மோந்தாள். உடனே வாளால் து பாட்டி தன் பேரனை மங்கையர் உச்சியிலிருந்து ாய்ந்தவன், என்று பாராட்டு முகத்தால் 'பூத்த ாறும் பாடுவர்.
28

Page 137
காட்டி வைத்த முத்தோ
குவித்து வைத்த ரத்தினயோ கட்டிப் பசும் பொன்னே
கண்டெடுத்தபொக்கிஷமோ
முத்து ஒரு மணி, அது ஒன்பது மணிகளில் ஒன்( மரகதம், மாணிக்கம், முத்து, வயிரம், வைடு வயிரம், முதலிய ஏழும் நிலத்தில் தோண்டி எடு கடலில் எடுக்கப்படுவை. மாசற்ற முத்தும் களங்: உலகில் அரியன, அவாறிருக்கவும், கொட்டிவை கும் அவனை உவமை கூறியது அவனுடைய செல் பசும் பொன்னே" என்றதுகி9ேடத்தற்கு அரு என்றது.புதையலில் காணும் செல்வம் சங்கநிதி ப அது போன்றவன் என்ருள். 'கண்மணியே கண் ஞள்?சூடுவதில் சிறந்தமணி சூடாமணி, சிரோம 'கண்ணிடைமணி ஒப்பாய்' என்று சுந்தரமூர்த் தினை அறிக. அப்பையன் தன் குலத்திற்கே சிறந்த
பின்னர், தன் பேரனுக்கு உவமிக்கப்பட்ட யும் வர்ணிக்கின் ருள்.
சாதிப் பெருங் கடலில்
t சங்கீன்ற முத்தல்லோ
முத்தான முத்தோ
முது கடலில் ஈன்ற முத்தோ
முத்தான முத்தோ
முது கடலில் ஆணி முத்தோ
சங்கீன்ற முத்தோ
சமுத்திரத்தின் சாதிமுத்தோ
உலகத்திலே சிறந்த முத்துக் கிடைக்கும், குடா, மற்றையது பாரசீக வளைகுடா. பாரசீக மு விலையில் குறைந்தது. மன்னர்க் குடாமுத்துக்கே ஆணிமுத்து-சிறந்த முத்து, மன்னர்க்குடாவிலும் துக்குடிக்கு அருகிலும் மறிச்சுக் கட்டியிலும் ஆகு
முத்தான முத்தோ,
முது கட்லில் ஆணிமுத்தோ சங்கின்ற முத்தோ,
சமுத்திரத்தின் ஆணிமுத்தோ
என்றும் பாடுவார்கள். மன்னர்க்குடாவைப்பற்றி பழைய நூல்களும் கூறுகிறபடியால் அதுவே (pತ್ರಿ
மிருதுவான சதையுடைய முத்துச் சிப்பி கொண்டால், அதைச் செரிக்கமுடியாமல் Gurray, அது நாளாவட்டத்தில் கடினப்பொருளாகிவிடுகின் அபிப்பிராயம். -
29

கும், கோமேதகம், நீலம், பவளம், புருடராகம் யம் ஆகிய ஒன்பதும் நவரத்தினங்களாம். கப்படுபவை. முத்தும் பவளமும் பெரும்பாலும், மறற் இரத்தினமும், ஒவ்வொன்ருய் எடுத்தற்கும் ந்த முத்துக்கும் குவித்துவைத்த இரத்தினத்திற் வச் செருக்கினை விளங்கவைத்தற்காம். “கட்டிப் மை நோக்கியம். கண்டெடுத்தபொக்கிஷிமெ” துமநிதி போன்ற பெருஞ் செல்வமாம்; பேரனும் 1ளராய்' என்பதில் கண்மணி என்று ஏன் சொன் னி அவயவங்களில் சிறந்தது கண்ணின் மணி அடிகளும் சிவபிரான நோக்கிச் சொன்ன கருத் ஒரு சுபீர் விளக்கு என்று கொள்ளவைத்தாள்,
முத்துப் பிரிக்கும் இடத்தையும் அதன் தரத்தை
கடல்கள் இரண்டு. அவற்றில் சிறந்தது மன்ஞர் த்து பழுப்பாகவிருக்கும், மதிப்பில் தாழ்ந்தது, ளோ வெள்ளை வெளேரென்று ஒளி தருபவை: இரண்டு பகுதிகளில் முத்து அகப்படும். தாத் ம், இதனைச் சில ஊர்களில்,
கெளடில்ய அர்த்த சாஸ்திரம் முதலிய மிகப் கடல் எனப்பட்டது.
யின் உடலுக்குள் கடினமான மணல் புகுந்து அதனைச் சுற்றிக் கெட்டியான தசைவளர்ந்து, றது. அதுவே முத்து என்பது விஞ்ஞானிகளின்

Page 138
இந்தியக் கவிஞர்கொள்கை, முத்துச் சி திறந்து மழைத்துள்னய வாயிற்கொண்டதும், வளர்த்து வந்ததே முத்து 6 ன்பதாகும். இன்னு
முத்தான முத்தே,
- முழுவைரம் ஆனமுத்தே
சாதி வலம்புரியே,
சங்கீன்ற* நல்லமுத்தேர்
என்றும் பாடுவார்கள்.
சங்கு ஊர்வனவற்றில் சேர்ந்த கடல் வா நத்தை போன்றதுதான். ஆயினும் அதிக சக்தி வ கின்ருர்கள். முத்துக் குளிப்பில் உள்ள கஷ்டம் ச சங்குகளைத் தேடிப்பிடிக்கத்தக்க அப்பியாசமும் ை டது இடம்புரி, இடம்புரி ஆயிரங்களாற் சூழப்ப இதுவே இராச சங்கு ஆகும். இது "ஓம்" என் செய்யும் தன்மையுடையது. இதனைக் கரைக்குக் எழுப்பும் குரலோசை ஊரையே அழைத்துவிடும்ே ருந்து முத்து பிறக்கும் என்பதை "வலம்புரி ஈன்ற புரிபயத்தை எய்தாது அனையரே மகளிர் (தம் தா
மேலும் முத்து நெற்பயிர், கொண்டல், யும் என நம் பண்டைத் தமிழ் நூல்கள் கூறுகின் பதனை நாம் நேரில் அறிவோம். பாட்டியும் அ
கன்னல் விழைந்து
கணுக்களிலே முத்துதிரப்
பொன்அரி ததி பாயும்
பூமான் மருமகனே
என்கிருள். பொன்னி காவிரி நதி. பொன்னியான செழித்து வளர, அதன் கணுக்களிலே முத்து நாட்டுப்பற்றே, தவ வழிபாடோ, இத்தாலாட்
பாண்டவர்களின் தாயாகிய குந்திதே செய்து வந்தாள். அவர், அவளுக்கு வரமாக கு செய்தனர். அந்த மந்தி ரத்தை உச்சரித்தால் எ உச்சரித்தாள் குந்தி, உச்சரித்த மாத்திரத்தே கர் அவமானத்தை ஒழிக்க அக் குழந்தையைப் பே பேழை எவனுேகையில் அகப்பட அவன் அக்குழ தான், தன் குழந்தையைப் போல் அவனைத் து தனன் இலைபோட்டு உண்ண அமர்ந்தால் ஒரு யிருந்தது. எஞ்சியது புழுவாய் மாறிவிடும். அத் யிலும் ஒவ்வொரு பிடி அன்னம் எடுத்துச் இது ஒது முனிவர் சாபத்தால் ஏற்பட்டது. துரி தான். தற்செயலாகத் தவழ்ந்து வந்தான் குழந்ை யிருந்த தெல்லாம் மீண்டும் அன்னமாகமாறிற் கதை தாலாட்டில் அழகாக உருவாகின்ற தனைப்

பியானது நீரின் மேற்பரப்பில் வந்து வாயைத் வாயைழுடிக் கடலினுள் சென்று. அத்துள்ைேய ந சில ஊர்கள்ல் இதனே
ழ் ஐந்து, சங்கின் உட்பாகத்திலிருக்கும் ஜீவஜந்து ாய்ந்தது. கடல்படு திரவியமாக இதைக் குறிப்பிடு ங்கு குளிப்பதிலும் உண்டு. ஆழ்கடலில் மூச்சடக்கி கரியமுந் தேவை. ஆயிரம் சங்குகளால் சூழப்பட் ட்டது வலம்புரி. இது எளிதில் அகப்படாது. 1ற பிரணவ மந்திரத்தை மைல்களுக்கு ரீங்காரம் கொண்டுவந்து, வீடிழுத்துச் செல்லுமுன் இது பாலிருக்கும் என்பர். இப்படிப்பட்ட வலம்புரியிலி முத்தம் மண்மிசை அவர்கட்கு அல்லால், வலம் யர்க்கு) என்று சிந்தாமணியில் வருவதால் அறிக.
மூங்கில், யானை மருப்பு முதலியவற்றிலும் விளை றன. ஈழத்து யானே மருப்பிலிருந்து முத்து எடுப் வற்றை எல்லாம் அறிந்தவளாய்,
து தவழ்ந்து செல்லும் நாடுகளிலே கரும்ப்ானது உண்டாகி, நிலத்தில் உதிர்கின்றனவாம். தாய் டுக்கு மூலம் என்பது தெரியவில்லே.
வி பாலியத்தில் துருவாச முனிவருக்குச் சேவை ரியபகவானைக்குறித்த திருமந்திரத்தை உபதேசம் ன்ன ஆகும் என்று பரீட்சிக்க ஒரு சமயம் அதனை ப்பவதியாய்ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். ழை ஒன்றில் அடைத்து ஆற்றில் விட்டாள். அப் ந்தையைத் துரியோதனன் அரண்மனையில் சேர்த் ரியோதனன் மனைவி வளர்த்து வந்தாள். துரியோ பிடி அன்னம் மட்டும் எடுத்து உண்ணத்தக்கதா தற்காக நூறு இலைகள் போட்டு ஒவ்வொரு gడి சாப்பிட்டு வயிற்றை நிரப்புவது அவன் வழக்கம். யோதனன் ஒருநாள் சாப்பிட்டுக் கொண்டு இருந் தை, அந்த இலையைத் தொட்டு இழுத்தான். புழுவா று. அக் குழந்தை தான் கர்ணன். இந் நாடோடிக் பாருங்கள். w W
30

Page 139
கிலத்துப் புழு மாற்றி
கண்ணு நீர் உள்ளடக்கி
இலைப்புழு மாற்றி ܗܝ ܫ -
ஏக்கரவு தீர்த்தவனே
இதனை இயற்றிய அன்னையின் கவித்து கொடாத நாடு த்குதியான தாய்மாரைச்சிருஷ்டி
தாழை கடற்கரையில் வளர்கிற்து, சர்ப் கண்டதும் மக்களுக்கு பிரிதி அதிகம். தாழையுள் மக்கள். அதுவும் அஞ்சுதலை நாகமெனின் உடலு கோழியே அருகிற் செல்பவர்களைக் கொத்தப்பார் அனுகுபவர்களைக கடிக்கப்பார்ப்பதுவும் சர்வ சr கிடக்கும் போது அதன்மூர்க்கம் எவ்வளவாயிருக்கு Giỷrrtb. −
அஞ்சு தலை நாகம்
அடைகிடக்குந் தாழையிலே அஞ்சாமல் பூ வெடுககும்
அருச்சுனனுர் உங்கள் ஐயா ப்த்துத் தக் நாகம் , '
பள்ளி கொள்ளும் தாழையிலே பாராமல் பூவெடுக்கும்
பார்த்திபனூர் உங்கள் ஐயா
என்று மகனைத் தாலாட்டுகிருள் ஒரு நங்கை,
கெளரவியன் என்னும் சர்ப்பராசன் ம அர்ச்சுனனைக் கண்டு காமுற்று, அவனை அவளுை மனந்தாள். நாககன்னியை நாகலோகத்திலே ம6 சுவனே? இதனுல் உவமையின் உயர்வைக் கவனிக்க தாலாட்டாலும் தனயனின் உள்ளத்தில் வீரம் உள்ளக்கிடக்கை.
தாழை யொரு மாமாம்,
தாண்ழை பூக்கும் யூ ஆயிரமாம் தாழை, சுற்றிப் பூ வெடுக்கும்
தருமரல்லோ உங்கள் ஐயா புன்னை யொரு மரமாம்
புன்னை பூக்கு ம்யூ ஆயிர மாம் புன்னே சுற்றிப் பூ வெடுக்கும்,
புண்ணியனர் உங்கள் இயா அறுகு சிறு புல்லாம்,
அறுகின் கால் ஆயிரமாம் அறுகெடுத்துப் பூசை செய்யும்
அர்ச்சுனனுர் உங்கள் ஐயா அலரி ஒரு மரமாம் , '
அலரி பூக்கும் பூ ஆயிர மாம் அலரி சுற்றிப் பூ வெடுக்கும்
ஆண்டகையார் உங்கள் ஐயா
பாரதம் படித்திருப்பதுமில்லாது தாவர சாஸ்திர உண்டு என்பது தோக்கத்தக்கது.

ம கவித்துவம், பெண்கல்விக்கு முக்கியத்துவம் க்க முடியாது என்பதனை யாரும் மறுக்க முடியுமா?
பம் அதில் குடிபோகிறது. ஆயினும் தாழைய்ைக்
இருப்பது நாகம் என அறிந்தால் நடுங்குவர் ம் உளமும் ஒருங்கே நடுங்கும். அடை கிடக்குங் ப்பதுவும், வளர்த்த நாயானலும் ஈன்றணிமையில் தாரணம். அங்ங்னமாக அஞ்சுதலைநாகம் அடை ம் என்பதை நீங்களே கற்பனை பண்ணிக் கொள்ள
கள் உலூபி என்பாள் கங்கையில் நீராடும்போது >டய பாதாளலோகத்திற்குக் கொண்டு சென்று னக்கும் அர்ச்சுனன் தாழையில் பூவெடுக்க அஞ் லாம். 'வீரரசம் வீசுகின்றது அன்னையின்நாவில். ஊற்ற வேண்டும் என்பது தமிழ்த் தாயரின்
த்திலும் அவ்வன்னைக்குப் போதிய பரிச்சயம்
31

Page 140
ஈழத்துக் கிராம் பேராசிரியர் சு. வித்திய
எமது நாட்டின் நாகரிகத்தையும் பண் கிராமங்களுக்குரியது. இயற்கைக்கு மிக அருகான உயிரூற்றுடன் கிராமங்கள் நெருங்கிப் பிணைக்க மக்கள் அழகுக் கலையே கிராமிய நாடகம். இது மதிக்க முடியாத சொத்து; அவர்களின் உணர்ச் அவர்களின் உள்ளத்திற்கு அழகையும் இன்பத்ை நாடகத்திற்குத் தேசிய முக்கியத்துவம் உண்டு; அம்சம். நாட்டு மக்களின் உள்ளக் கருத்து; குல முதலியவற்றை எடுத்து விளக்குவது அக்கலை.
பல நூற்றண்டுகளாக ஈழத்திலே யாழ்ப்ட பகுதிகளிலே கிராமிய நாடகங்கள் ஆடப்பட்டு இவற்றை ஆடுவோர் தொகை இன்றுமிகக் குறை லும் மன்னரிலும் பொருளாதாரம் இன்றும் விவ8 சமூக வாழ்க்கை சமயத்தோடு பின்னிக் கிடக்கி அடிப்படையிற் பாடப்பட்ட வட பாங்கு தென்ப ஆடப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பிலே தெ களும் ஆடப்படுகின்றன.
மட்டக்களப்புப் பகுதியில் வழங்கும் நாட நாடகங்களே பெரு வழக்கிலுள்ளன. தென் மே! ஆடல், உட்ை முதலியவற்றில் வேறுபாடு கதைகளைக் கொண்டவை, வட மோடி நாடகங்க வாக நாடகம், பதினெட்டாம் போர், குருக்கே பாண்டவர் வனவாசம், கர்ணன் போர் போன் நாடகங்கள். இவை போர் செய்து வெற்றி டெ அழுகை முதலிய சுவைகள் விரவி வரும். ஈ! பவள வல்லி நாடகம், அலங்கார ரூபன் நாட முதலியவற்றைக் குறிப்பிடலாம். இவை பெரும் காதற் சுவை பயந்து, காதல் கைகூடுவதோடு சுவைகளே பெரும்பாலும் வரும். மேலும், தென் ருக்கும்.
ஆட்டத்திலும் பாட்டிலும் இரு மோட வட மோடி ஆட்டங்களிலும் நுணுக்கமானவை வரவு ஆட்டம் ஆடியதும் களைத்துப் போவத அல்லது பக்கப்பாட்டுக்காரர் பாடுவர். வடமோ ஆட்டத்தி. பின்னர் தமது வரவுப் பாட்டை நடி துப்பாட, வட மோடியிற் சாதாரணமாகப் ப இழுத்தும், வட மோடியிற் சாதாரணமாகவு பாட்டைப் படிக்கப் பக்கப்பாட்டுக்காரர் தோட

|ய நாடகங்கள்
eurissair, Ph. D. (Lond
பையும் உயிரையும் ஓம்பி வளர்த்த பெருமை மயில் இருப்பதன்காரணமாக வாழ்வு என்னும் பட்டுமளன. இத்தகையகிரா மங்களில் வாழும்
பல்லாயிரக் கணக்கான பொது மக்களன் விலை கிகளையும் செயல்களையும் வெளியிடும் சாதனம் . தயும் அளிக்கும் ஆற்றல் இதற்குண்டு. கிராமிய அது நாட்டின் கலாசார பாரம்பரியத்தின் முக்கிய எச் சிறப்பு, கலை, பண்பாடு, வாழ்க்கை முறை
ாணம், மன்னர், சிலாபம், மட்டக்களப்பு ஆகிய வந்தன. யாழ்ப்பாணத்திலும் சிலாபத்திலும் வென்றே கூறவேண்டும். ஆனல், மட்டக்களப்பி ாயத்தை அடிப்படையாகக் கொண்டது;மக்களின் றது. எனவே, மன்னர்ப் பகுதியிற் கிறித்தவ மத ாங்குநரடகங்களும் சபாக்களும் வாசாப்புக்களும் ன்மோடி வட மோடிக் கூத்துக்களும், விலாசங்
டகங்களில் இப்பொழுது தென்மோடி வட மோடி ாடிக்கும் வடமோடிக்கும் கதைப் போக்கு, இசை, உண்டு. வட நாட்டுப் புராதன இதிகாசக் ள். இராம நாடகம், தர்மபுத்திர நாடகம் பப்பிர த்திரன் போர், சூர சம்மாரம், குசலவ நாடகம், றவை இன்று ஈழத்தில் ஆடப்படும் வட மோடி றுவதைக் கூறுவன . இவற்றில் வீரம், கோபம், pத்தில் நடிக்கப்படும் தென்மோடி நாடகங்களிற் கம், வாளபிமன் நாடக்ம், நொண்டி நாடகம் பாலும் தமிழ் நாட்டுக் கதைகளைக் கூறுவனவாய், முடிகின்றன. இவற்றில் நகை, வியப்பு போன்ற மோடியில் பழைய முற்ைப்படியே இசை அமைந்தி
க்கும். வேறுபாடுண்டு. தென்மோடி ஆட்டங்கள் ; கடினமானவை. இதஞலே, தென்மோடி நடிகர் ல் வரவைக் குறிக்கும்பாட்டை, அண்ணுவியார் ஆட்டம் நுணுக்கமற்ற காரணத்தினலே வரவு கரே பாடுவர்.தென் மோடியிற்பாட்டுக்களை இழுத் டிப்பர். இவசனங்களும் இவ்வாறே தென்மோடியில் b சொல்லப்படும். வட மோடியில் நடிகர் ஒரு ர்ந்து அதனை முழுதாகப்படிப்பர், இதன்மோடியிற்
32

Page 141
கடைசி பகுதியை மட்டும் பிற்பாட்டுக்காரர் தொ தருவைப் பாடுவர். கூத்துப் பாட்டுக்களைப் பா சொற்கோப்பே தரு. உதாரணமாக:
பதினறு வயது மகனுருவம் - அவன் பாவையரோ டனுபவிக்கும் பருவம்
என்ற பாட்டுக்கு,
நன்னநன்ன நானநன்ன நானு - நன்ன நானநன்ன நானநன்ன நான
என்று தரு அமையும்.இவ்வாறு தரு பாடப்படும்ே தருப்பாடும் இவ்வழக்கம் தென் மோடிக்கேயுண்
ஒவ்வொரு மோடிக் கூத்துக்கும் உடை உடல் வருந்த வளைந்து ஆடுவது வழக்கம்; எ. கிடையினும் பாரங்குறைந்தனவாய் இருக்கும். 6 தென் மோடி அரசருடைய முடி பூ முடியாகவு ஆகிய மரங்களைக் கோதிச் செய்யப்படும். அதன் வட்டக்குடை என்று பெயர். கெருடத்தில் யா உருவமாக அமைக்கப்படும். வட மே7 டியில் ஆயுதங்களாக அமையும். தென்மோடியில் வாள் உடுப்பு பெரும்பாலும் கரப்பு உடுப்பாகும். இது தட்டினைக் கொண்டதாகவும். அரை உடுப்பு ' ஒவ்வொரு தட்டாகச் செய்து பின்னர்ச் சீலை ஒவ்வொரு கம்பு வளையம் வைத்துப் பொம்மி
ஒவ்வொரு பாத்திரத்தின் வரவும் நடை களை மத்தளத்தில் இசைப்பர். அத்தாளங்கள் : தாளக் கட்டு எனப்படும். ஆட்டத்திற்குரிய தாெ கட்டி அமைத்தலே தாளக் தட்டு. தாளக் கட்ட தில் எட்டு முறை முதற். பன்னிரண்டு முறை வ அதற்குரிய அபிநயம் காட்டி நடிப்பர். இத்தாள கும் பெண்களுக்கும் வேருனவை. ஆண்களுக்கு வாட்டிலும் நடந்து அபிநயம் பிடித்தல்), பொடி தல்), வீசாணம் (வளைந்து வளைந்து பக்கத்திற்கு அமைய வளைந்து ஆடுதல்), நாவடி (ஒரு கை மிதித்தாடுதல்), குத்துமிதி (காலின் முன் புற 4 முறை குத்தி மித்திதல்) பாய்ச்சல் (முன் தாளக் கட்டுக்கு ஏற்பப் பெண்கள் ஆடும் ஆ அகல விரித்துத் தாழ்ந்து இரு கைகளையும் அழ வீசாணம், எட்டு, தட்டடி (இருகால்களிலும்
நெரித்தாடுதல்) அடந்தை (அட தாளம் தொ
1,

--ர்ந்து படித்துவிட்டுப் பாட்டு முழுவதற்குமுரிய ம் முறையை அமைத்துக் காட்டும்ஒரு விதச்
பாது, தருவின் தாளத்திற்கேற்ட நடிகர் ஆடுவர். டு; வட மோடியில் இல்லை.
பும். வேறு வேமுக அமையும். தென் மோடியார் னவே, அவர்களின் உடைகள் வடமோடியார் வட மோடி அரசருடைய முடி கெருடமாகவும் ம் இருக்கும். செருடம் ட லா பரம், நச்சு மரம் உச்சியில் ஒரு குடை இருக்கும்; அதற்குச் சந்திர ானை, யாளி, அன்னம் ஆகியவற்றின் தல்ைகள் வில்லும் அம்பும் தண்டாயுதமும் கட்டாரியும் ஒன்றே ஆயுதமாகும். வட மோடியார் அணியும் வில்லுடுப்பு எனவும் படும். முழு உடுப்பு ஐந்து மூன்று தட்டினைக் கொண்டதாகவும் இருக்கும். பில் ஒட்டிக்கொள்வர் ஒவ்வொரு தட்டுக்கும் நிற்கச் செய்வர். -
பெறும் போது வெவ்வேறு வகையான தர வங் பாயாற் சொல்லப்படும் போது பத வரிசைகள், 1ங்களைச் சொற் கோப்பினுலே தொடுத்து அல்லது டன் முதற் பகுதியை நடிகரின் வர்வுத் தொடக்க ரை அண்ணுவியார் திருப்பித் திருப்பிப்படிக்க, கட்டுகளுக்கு ஏற்ப ஆடும் ஆட்டம் ஆண்களுக் ரிய ஆட்டங்கள் உலா (தின்ற நிலையிலும் பக்க யடி (மெல்ல மெல்ல முன் நோக்கி ஆடிச் செல்லு: சென்று ஆடுதல்) எட்டு (8 என்ற இலக்கத்திற்த் க்கும் திரும்பி -முறையே நாலு முறை குதித்து தாலும் குதிக்காலினலும்.மாறி மாறி முறையே ணும் பின்னும் பாய்ந்து ஆடுதல்) முதலியன. ட்டங்கள் ஒய்யாரம் (நின்ற நிலையிற் கால்களை குற முத்திரை பிடித்துக் காட்டுதல்), பொடிய டி. தனித்தனி தட்டிக் கை அபிநயத்தோடு உடலை ரிக்க ஆடும் துரித ஆட்டம்) குந்துநிலை (நாலடி

Page 142
போட்டுக் குந்தி எழும்புதல்) போன்றவையாகு தாளக்கட்டுக்கு -ஏற்ப அவர்கள் ஆடும் ஆட்ட்
ஒவ்வொரு பாத்திரத்திற்குமேற்ப தா6 பயில் அரசன் உளரிக்கு வரும்போது,
தகதிதா தெய்யத் தெய்தெய் தாத் தெய்யத் தோம் தகதிகதா
என்ற தாளக் கட்டு முதலிற் பாட்டப்பட்டு எ ஆட்டம் ஆடப்படும். விதன்பின் பொடியடி, பெறும். அதன்பின் நடு அரங்கில் ஆடி (
தாம் தாம்தக தந்தரிகிடதக
தீந்தாரத் தில்லாஞ* சுந்தரி
தகனக சுந்தரி ததிமிர்தி கிடதெய் தளங்கு தித்தக தகததிங்கிண தோம் தகததிங்கிணதோம் தந்ததிங்கிணதே
என்ற தாளக் கட்டிற்கு ஏற்ப முன் களரியிலு போது, 'தகததிங்கிணதோம்" என்ற கடைசி இறுக்கி அடிக்கப்படும். இது "தாளம் தீர்தல்" எ கூத்தின் அச்சாணியாகும்,
மன்னர்ப் பகுதியில் வழங்கும் கிரா நோக்குதல் வேண்டும். அவை மாதோட்டப் ட படும். ஃமாதோட்டப் பாங்கைத் தென்பாங்ே பாங்கை வட பாங்கென்றும் வட மெட்டென் வாழ்த்து விருத்தப்பாவிலமையத் தென்பாங்கி பாத்திரங்களுக்குச் சபைத்தரு (ஆடல்தரு) கிடை பொருளும் கதைக் சுருக்கமும் கூறும் தோடைய தென்பாங்கிலே இல்லை. தென்பாங்கில் நாடகச் கூறப்படும்; வட பாங்கிலே தரு சிந்து வண்ணம் பாக்கள் பெரும்பாலும் வல்லோசை உட்ையனேவ சை உடையனவாகவும் அமையும்.
தென்பாங்கிற் பாத்திரங்கள் தத்தம் எத்தனை, முறையும் போய் வரலாம். ஒவ்வொரு கிந்துக்களும் அவற்றற்குரிய ஆடல்முறைசளும்: தில் 'தருமர் ஏழு தடவையும் பிலேந்திரன் ஒவ்வொரு முறை தோன்றும் போதும் தரு, சி. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு வரவே உண்டு வில்லாமலும் ஆடல் தரு இல்லாமலும் கலந்து
13

நடிகருடைய ஆட்டச் சிறப்பினைக் காட்டுவன் களே. (Ā် : ''''''';
க்கட்டு வேறுபடும். உதாரணமாக , வட மோடி
ட்டு முறை தொடங்கி 12 முறைவரை உலா பீசர்ணம், எட்டு முதலிய ஆட்டங்கள் இடம் றுதியாக,
1ம் பக்கங்களிலும் சென்று ஆடுவர். முடிவுறும் த் தாளம் இ"ண்டு மூன்று முறை மத்தளத்தில் ானப்படும். தாளக் கட்டு மட்டக்களப்பு நாட்டுக்
மிய நாடகங்களின் வகைகளை இங்கு சிறிது ாங்கு, யாழ்ப்பாணப் பாங்கு என இரு வகைப் கன்றும் தென்மெட்டென்றும், யாழ்ப்பாணப் றும் வழங்குவதுண்டு. வட பாங்கிற் கடவுள் ல் வெண்பாவில் அமையும். தென்பாங்கிற் யாது. மேலும் தெய்வ வணக்கமும் செயற்படு ம் என்னும் பாவகை வட பாங்கிலே உண்டு.
கதை கவி இன்னிசை மற்றும் பாவகைகளாற்
முதலியவற்றினுற் கூறப்படும். தென்பாங்கிற் rகவும் வட பாங்கிற் பெரும்பாலும் மெல்லோ
கழ்ச்சி முடியப் போய்வரும். ஒரு பாத்திரம் வரவுக்கும் செலவுக்கும் தனித்தனி தருக்களும் ண்டு. உதாரணமாக, ஞானசவுந்திரி நாடகத் பதினுெரு தடவையும் தோன்றுவர். அங்கு து, ஆடல்-முறைகள் உண்டு. வட பாங்கில்
பாத்திர நிகழ்ச்சி மீண்டும் இருந்தால் வர கொள்ளும்.

Page 143
இந்நாடகங்களின் சுருக்கங்களாக அ சொல் வசனம் கலந்த் பிரிட்டு எனப் ப்ொரு பாவர்கவும் பாடுதல் உண்டு. உதாரணமாக அ சந்தொம்மையார் நாடகம், சந்தொம்மையார் சாக்கள் வாசகப்பா எனக் கூத்து நூல்கள் மாதோட்டப் பாங்கிற் பாட, இன் ஞெருவர் நீக்கு எம்பரதோர் வரலாற்றைக் குருகுலநாட்( பிள்ளை யாழ்ப்பாணப் பாங்கிற் பாடினர்.
மன்னர் மாவட்டத்தில்- வழங்கும் கின்றன. அம்மொழியில் வழங்கும் 'நாடகம" பினைப்பின்பற்றியதே. தென்பாங்கு வட பா! காணப்படாத போதும், நாடக அமைப்புப் போன்றவையே. விருத்தம், இன்னிசை, கலி போன்ற பாக்களும் பாவினங்களும் சிங்கள கின்றன. தமிழிலே உள்ள எஸ்தாக்கியர் நா நாடகம் முதலியன ஸ்தாக்கியார், ராஜதுங் தமிழ் நாடகங்களின் மொழி பெயர்ப்புக்களா
தென்னிந்தியக் கிராமிய நாடகங்கள் ளிலே தொடர்புடையன. கன்னட தேசத்து மோடி நாடகத்திற்கும் பல ஒற்றுமைகள் ! களரி போன்றவை இரு வகை நாடகத்திலும் ஒ பாகவத டேன்பவரை ஒத்திருக்கின்ருரர். அங் அறிமுகப் படுத்துவார். நடிகர் வரவுக்கு அங்கு தீவட்டி ஒளியே அங்கும் பாத்திரங்களைக் காலத்திற் பாத்திரங்களுக்கு முன்பும் தீவட்டி நாடகங்களுக்கும் கருவாக அங்கும் அமைந்த
கதகளிக்கும் வட மோடிக்கும் பல ஒ யும் ஆட்டம், இசை, அபிநயம் ஆகியவற்றின் போலவே வீரம் கோபம் போன்ற சுவைகள் அமைக்கின்றது. உடை அலங்காரம், தயாரிப்ட ஒப்புமையைக் காணலாம்.
தமிழகத்திலே தெருக் கூத்துப் பல்ல; போகின்றது. வீதி நாடகம் எனவும் வழங்கு மத்தியிலே ஆடப்படுவது வழக்கம் தெருக் பொருளிலும் வேறு அம்சங்களிலும் ஒத்தி தொடர்பற்றுப் போய்விட்டது. ஆனல், ஈ! நாடக ம இன்றும் பொது மக்கள் வாழ்க்கைே பேசும் மக்களுக்கே உரிய அழக்குக்கலைகளில்

மவன வாசகப் புசாக்கள், வாசகப் பா என்ற படும். ஒரே8தையை நீர்ட்கமாகவும் வாசகப் தோனியார் நாடகம், அந்தோனியார் வாசகப்பா வாசகப்பா, மூவிராசாக்கள் நாடகம், மூன்றிரா இருப்பதைக் காணலாம். ஒரே கதையை ஒருவர் யாழ்ப்பாணப் பாங்கிற்பாடுதலுமுண்டு. எண்டி த்தேவர் மாதோட்டப் பாங்கிற் பாடக் கீத்தாம்
v (
நாடகங்கள் சிங்கள மொழியிலும் காணப்படு எனும் நாடக முறை இந்நாடகங்களின் அமைப் பகு என்ற நாடக முறை சிங்கள நாடகங்களிற் பாவகைகளும் மன்னர்ப் பகுதிக் கூத்துக்கள் ப்பா, தவி, கொச்சகம், வெண்பா, தோடையம் நாடகங்களிலும் அதே பெயர்களுடன் வழங்கு டகம், மூவிராசாக்கள் நாடகம், ஞான சவுந்தரி கட்டுவ, ஞான சவுந்தரி என்ற பெயர்களிலே, 5 , அமைந்துள்ளன. vn
ஈழத்துக் கிராமிய நாடகங்களுடன் சில அம்சங் து யககூடிகான நாடகத்திற்கும் மட்டக்களப்பு வட உள. ஒப்பனை, உடை, விறுவிறுப்பு, ஆட்டம், த்திருக்கின்றன. வட மோடி அண்ணுவி அங்குள்ள கும் அவரே வாழ்த்துப் பாடிப் பாத்திரங்களை ம் இந்த மாதிரிச் சீலையைத் திரையாகப்பிடிப்பர். களரியிலே தெரிய வைக்கின்றது. அங்கும் முற் பிடித்தனர். மகாபாரத இராமாயணக் கதைகளே
w
ற்றுமைகள் உண்டு, வடமோடி போலவே கதகளி
மூலம் கதையை உணர்த்துகின்றது. வட் ,மோடி
மூலம் இதிசாசக் கதைகளைக் காட்சியா க் கதகளி களரி அமைப்பு, ஒளி அமைப்பு முதலியவற்றிலும்
ண்டாக இருந்து வந்தும் இப்போது வழக்கற்றுப் இத்தெருக் கூத்து, இப்போது கிராம வீதிகளின் சுத்து ஈழத்துக் கிராமிய நாடகங் ளைக் கதைப் நந்த போதும், பொது மக்கள் வாழ்க்கையோடு த்தில் மட்டக்களப்பிலும் மன்னரிலும் கிராமிய பாடு பின்னிக் கிடக்கின்றது; ஈழத்துத் தமிழ் பன்ரு 4 மிளிர்கின்றது.
、及35

Page 144
6 கோலம்* : சிங்க
கலாநிதி (செல்வி)
:சிங்கள மக்களிடையே நிகழ்ந்து வழு ஏனையவற்றுள் பெரும்பான்மையினவும் ஏதோ சமயச் சடங்குகளுடன் தொடர்புடையனவாக ஒரு தனிக்குடும்பத்தினராலோ அன்றேல் ஒரு தாலோ அமைகின்றன. கோலம் என்ற இந்த கள் முகமூடி :( Mask ) அணிந்து நடிப்பதா நடிக்கும் நாடிகங்கள் இரண்டு வகை உணடு. { நாடகவகையாகும்.
கோலம் என்ற நாடகம் பல நூற்ரு வாழும் சிங்கள மக்களிடையே ஒரு பொழுது வெலிகம, அம்பாந்தோட்டை, பெந்தர போன் நடிக்கப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் பேய்வி வந்த இந்நிகழ்ச்சி இன்று பெரும்பாலும் பொ ஐதீகக்கதைகளின்படி முதன் முதலில் கோலம் அரசிக்கும் முன் னிலையில் நடைபெற்றதாகத் கர்ப்பந்தரித்திருந்த காலத்தில் களியாட்ட வி இந்த ஆசையை நிறைவேற்ற மன்னன் பல அவற்றுள் எதுவும் அரசியின் மனதைத் திருப் ஒரு கோலம் ஒழுங்கு செய்யும் படி கட்டளை இட டன் செய்யப்பட்ட முகமூடிகளை அணிந்த
அரசியின் மனதை மகழ்வித்தனர். இந்தக் நாடகத்திற்கு மூலமாக 'தொலதுக்க' (கர்ட்
கோலம் என்ற சொல்லை தமிழிலிருந்( சரத்சந்திரா கருதுகின்றர். சிங்களத்தில் இ என்ற சொல் பிறரைச் சிரிக்க வைக்கப்போடு அமைந்துள்ளது. இதிலிருந்து இந்த நாடகம் பாரி பெரு நோக்காகக் கொண்டு நடிக்கப்படுகின்றது
. இந்த கோலத்திற்குரிய கதைகள் ஐ மக்களிடையே 'வழங்கப்பட்டு வந்த கதைகளிலிரு பொருளாக அமையும் விடயங்களுடன் கால துணுக்குகளும் சேர்க்கப்பட்டு நடிக்கப்படுகின்றது படும் கதைகளுள் கோடைம்பரகதா, மனமே, வாய்ந்தவைகளாகும்.
, கோலம் நாடகம் வழக்கமாக ஒரு திற வீட்டு, முற்றத்திலோ அன்றேல் இந்த நாடக விசேட அரங்கிலோ நடைபெறும். இவ்விதம் வடிவில் த் தென்னுேலைகளால் சுற்றி அடைக்கட் வுரும்போது, இத்தென்னேலை அடைப்பைத்த போல் நடிக்கும் பாத்திரங்களே இவ்வண்ணம் பா ஊட்டுவதற்காகப் பாய்வர்.

ா கிராமிய நாடகம்
வி. முத்துக்குமாரு
ம் கிராமிய நாடகங்களுள் ஒன்றன கோலமும், ஒரு வகையில் தம்முடைய மூலத் தோற்றத்தில் வ காணப்படுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள், ராமத்து மக்கள் கூட்டாகச் சேர்ந்து நிகழ்த்துவ கிராமிய நாடகத்தின் தனிச்சிறப்பு பாத்திரங் iம். சிங்கள மக்களிடை முகமூடி அணிந்து ன்று கோலம்; மற்றையது 'சொக்கரி எனப்படும்
ண்டுகளாக இலங்கையின் தெற்குப் பகுதியில் போக்குச் செயலாக நிகழ்கின்றது இன்றும் ற பகுதிகளில் வருஷத்திற்கு ஒரு தடவையாவது "ட்டும் சடங்குகளின் போது அடிக்கடி ஆடப்பட்டு ழுதுபோக்கிற்காகவே ஆடப்படுகிறது. சிங்"ள மகாசம்மத்த என்ற மன்னனுக்கும் அவன் தெரிகின்றது. மகாசம்மத்த மன்னனின் அரசி pாக்கள் பார்க்கப் பெருவிருப்புக் கொண்டாள். நடன நாட்டிய நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தான். திப்படுத்தவில்லை. எனவே, மன்னன் மந்திரிகளை ட்டான். அதன்படி நகரிலுள்ள தச்சரால் திறனு நாட்டியக்காரர் 'கோலம்" நாடகத்தை ஆடி கதையை மனதிற் கொண்டே இன்றும் இந்த பிணியின் அவா") என்பதைக் கூறுவர்.
தே பெற்றிருக்கவேண்டும் என்று பேராசிரியர் ன்றும் வழங்கப்படும் "கோலம் ( Kolama ) b ஒர் கோமாளி வேஷத்தைக் குறிப்பதாகவே வையாளரைச் சிரிக்க வைத்து மகிழ்விப்பதையே என்பது புலனுகின்றது.
ாதகக் கதைகளிலிருந்தோ அன்றேல் சிங்கள ந்தோ எடுக்கப்படுகின்றன. இவ்விதம் கதைப் போக்கில் ஆங்காங்கே புதுப்புது கிராமியத்.
இன்று இலங்கையில் பிரபல்யமாகக் கையாளப் தா, சந்தகிந்துருகதா முதலியன பிரபல்யம்
த வெளி அரங்கில்தான் நடைபெறும். ஒருவரின் நடைபெறுவதற்காகச் சமைக்கப்பட்ட ஒரு
அமைக்கப்படும் அரங்கு வட்டமாக ஒரு தீவு பட்டிருக்கும். கில பாத்திரங்கள் மேடைக்கு ண்டி வந்து குதிப்பர். அநேகமாக அசுரர்கள் *ப்போருக்கு உண்மை நிகழ்ச்சி என்ற உணர்வை
s

Page 145
- பல்வேறு வகைப்பட்ட பாத்திரங்கள் எல்லாக் கோலக் கதைகளும் அமைப்பில் சிறு யும் ஒரே பாத்திரங்களைக் கொண்டனவாகே ரங்களை விட, அந்த நிகழ்ச்சியை நிகழ்த்துவோ திரங்களும் இருப்பர். எல்லாக் கோல நூல்களு அரசி, முதலியார் எனப்படும் ஆராச்சி, டே பிரகடனப்படுத்துவோன், அவன் மனைவி, அ6 கிராமத் தோன், அவன் மனைவி, நாக இர தன், எருது, சிங்கம், புலி, கரடி, நாய், நரி, அதி மானுட பாத்திரங்கள், மானிடபTத்திர பகுக்கலாம்.
கோல நாடக நிகழ்ச்சி தோற்றுவாய், டது. தோற்றுவாய் ஐதீகப்பாத்திரங்களான ம வரும் காட்சியை ஆயத்தம் செய்வதாகவே ஒரு கதை உரைப்போனும் அவனது பின்னணி எப்போதும் மேடையிலேயே நிற்பர். தோற்று பெறும். பின்னர், புத்தருக்கும் தம்மம், 51 அதைத் தொடர்ந்து கதை உரைப்போன், கே டது என்பதைப் பற்றிப் பாடுவான். அத்து பிரச்சினேகளைக் கேலி செய்து சில பாத்திரங்கள் வந்து அமர்ந்ததும், இராக்கதர்கள் நடனம முக்கிய கதை நடிக்கப்படும். இறுதியில் கர லிருந்தும் பரிசுத்தம் பெறுவதற்காக இடம்பெ
ஆரம்பத்தில் நடிக்கப்பட்ட கோல வேறெந்தப் பாத்திரங்களும் பேசுவதில்லை. ஒ போது, கதை உரைப்போன் அப்பாத்திரத்தின் நடனமாட அதற்குரிய பாடல்களைப்பாடுவான். வொரு பாத்திரமும் பேசுவதற்கு முடியாத வி. நிகழ்ச்சிக்கெனச் செய்யப்பட்ட எந்த முகமூடி பிற்காலத்தில் நோய்க்ளை உருவகித்து ஆடும் ப வும், கீழ்ப்பகுதி வேருகவும் அமைந்திருக்கின்ற முதலிய உறுப்புகளுக்கு வெவ்வேருக முகமூடி முகமுடிகள் பேசுவதற்கும் பாடுவதற்கும் இை அணியாது விடப்பட்டன. முதலில் நாடகத்தின் *ள் முகமூடி அணிவதைக் கைவிட்டனர். ட் கைவிடும்போது, ஒரு புதிய நாடக வகையே முழுவதும் கவிதையால் பாடப் படுவதால் அழை களுடன் பெரிதும் ஒத்ததாக இது விளங்குகிறது கதை, சந்திகிந்துர கதை, முதலியன கவி நாட கிராமிய கூத்துக்களின் செல்வாக்கை இங்கு கா
கோல நாடகத்தில் போடப்படும் முகழு முள்முருக்கு போன்ற கனமற்ற மரங்களால் இை இலைகள் முதலியவற்றின் சாறும், ஒருவகைக் கடு
l

இக்கிராமிய நாடகத்தில் இடம்பெறுவர். வேறுபாடு கொண்டிருந்தாலும் பெரும்பான்மை உள்ளன. இவ்விதம் பொதுவாக உள்ள பாத்தி ன் சுவைக்கேற்பப் புகுத்தப்பட்ட புதுப் பாத் க்கும் பொதுவாக உள்ள பாத்திரங்கள், அரசன் "ர்வீரன், எழுதுவினைஞன், அரசனது செய்தி ன் உதவியாளன், சோன்கன், செட்டி, மடைக் க்கதன், பறவை இராக்கதன், மரண இராக்க 5ாரை முதலியவைகளாகும். இப்பாத்திரங்களை வ்கள், மிருக பாத்திரங்கள் என மூவகையாகப்
முக்கிய நாடகம் என்று இருபகுதிகளைக் கொண் ன் 60 லும், அரசியும் நாடகம் பார்க்க மேடைக்கு அமையும், நாடகம் முழுவதையும் உரைப்பதற்கு ப் பாடகர்களும், மேளம் அடிக்கும் இருவரும் வாயின் ஆரம்பத்தில் வாழ்த்துப்பாடல் இடம் கம் முதலியவற்றிற்கும் போற்றுதல் நிகழும் . ால நிகழ்ச்சி முதன் முதலில் எங்கு நடிக்கப்பட்ட டன் கூட வாழ்க்கையில் அன்ருடம் காணும் ர் நடிக்கும். மன்னனும் அரசியும் மேடைக்கு ாடுவர். இத்துடன் தோற்றுவாய் முடிய,
இராக்கதனின் நடனம் எல்லாத் தீமைகளி றும்.
நாடகங்களில் கதை உரைப்போனைத்தவிர, வ்வொரு பாத்திரமும் மேடையில் தோன்றும் சரிதையைப்பாடுவான். பின்னர் அப்பாத்திரம் இவ்விதம் நிகழ்வதற்கு முக்கியகாரணம் ஒவ் தத்தில் முக மூடி அணிந்திருப்பதாகும். கோல பும் பேசும் வசதி பெற்றிருப்பதில்லை. ஆனல், ாத்திரங்களின் முக மூடிகள் மேற்பகுதி வேருக ன. சில சமயங்களில் கண், நாக்கு, மூக்கு, செய்யப்பட்டு அணியப்படும். காலப்போக்கில் ட்யூறு செய்வதாகக் கருதிப் பாத்திரங்களால் தோற்றுவாயின்போது, தோன்றும் பாத்திரங் ன்னர் எல்லாப்பாத்திரங்களும் முகமூடியைக் தான்றிவிட்டது. கவி நாடகம் என நாடகம் க்கப்படுகிறது. தென்னிந்திய கிராமியக் கூத்துக் 1. கோலம், நாடகமாக ஆடப்படும் மனமே மாகவும் நிகழ்த்தப்படுகின்றன. தென்னிந்தியக் 5TGQ)rt Lb.
டிகள் மிகு கவர்ச்சிகரமாக அமைந்திருக்கும். வ செய்யப்படும். சில மரங்கள், கொடிகள், மண்ணும் பூச்சுகளாகப் பயன் படுத்தப்படுகின்
r

Page 146
றன. இராக்கதர்கள், இயக்கர்கள் முதலியோர்
மை வா ய்ந்தனவாகவும் அமைந்திருக்கும். இவை யும், அதீத சக்தியையும் எடுத்துக் காட்டுவன மனித முகம்போல் அமைக்கப்பட்டிருக்கும். கண் வாயும், மூக்கு பெரிதாக அகன்றும், நாக்கு நீ ை தொங்குவதாகவும், பற்கள் தந்தம்போன்று நீண் மரங்கள், மிருகங்கள் முதலியனவும் அழகுக் கப் துகள் தாமரைபோன்றும், நாக பாம்பு போ மூக்கு முதலியவற்றிலிருந்து நாகங்கள் வெளிப்பு லாம் இப்பாத்திரங்களின் அதிமானுஷத்தன் ை!
மனிதர்கள் அணியும் முக மூடிகள் அந்த காட்டுவனவாய் அமைக்கப்பட்டிருக்கும். மன்ன வாய் மற்றைய மக்களைவிட உயர்ந்தவர்கள் மன்னனும் இராணியும் நடனம் ஆடாது நாட்டி யால், இவ்விதம் பெரிதாய் மு மூடி இருப்பது ச களின் முகமூடிகளில் முதிர்ச்சியால் ஏற்பட்ட முதலியவற்றில் காணப்படும். அத்துடன், கு: வாய் முதலிய அமிசங்களும் மிகக்க வனமாகச் அழகை எடுத்துக்காட்ட, ஒழுங்காய் அமைந்த மூக்கு, வளைந்த உதடுகள், ஒழுங்கான பல்வரி செதுக்கப்பட்டுருக்கும். உதாரணமாக வண்ணுன் மிக அழகாகவும் அழுத்தமானதாகவும் இருக்கு போர்வீரனின் முகமூடி உடைந்த மூக்கும், பிய்ந் மானதாக இருக்கும். கிராமத்தான் முகமூடி 8 இலங்கையில் வதியும் ஏனைய சமூகத்தவர்களின் இந்த நாடகத்தில் உண்டு. இத்தகைய பாத் போன்ற முகமூடி அணிந்து வருவர். உதார தமிழ்ப் பெண்ணுயின் மூக்குத்தியுடனும், சோனக் வெள்ளைத்தோலுடையவராய்த் தொப்பியுடனு பறவைகள், மிருகங்களைப்போல் நடிப்பவர்களும்
இவ்விதம் அணியப்படும் முகமூடிகள்
பார்ப்போருக்கு அந்தப் பாத்திரங்களின் குணதி இன்னும் வெளி நாடுகளிலிருந்து வரும் உல்லா பெருந்தொகையான பணத்தைக் கொடுத்து வ
l

அணியும் முகமூடிகள் எடுப்பாகவும் தனித்தன் இப்பாத்திரங்களின் அதி மானுவுத் தன்மையை வாக அமையும். இவற்றில் பல உருக்குலைந்த கள் உருண்டு, பெரிதாய், வெளித்தள்ளி நிற்பன எடு, சிவந்து தடித்த உதடுகளினன்று வெளியே டவைகளாகவும் இருக்கும். இந்த முகமூடிகளில் ாக வரையப்பட்டிருக்கும். சில முகமூடிகளின் ன்றும் இருக்கும். சில முகமூடிகள் வாய், 'ட்டு வருவது போலவும் இருக்கும். இவையெல் 1யை வெளிப்படுத்துவதற்காகவேயாம்.
தப் பாத்திரங்களின் குனதிசயங்களை, எடுத்துக் னதும் அரசியினதும் முகமூடிகள் மிகப் பெரியன என்ற தன்மை6)யக் காட்டுவனவாய் இருக்கும். யத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பவர்களாகை ாத்தியமாகின்றது. வயது முதிர்ந்த பாத்திரங் சுருக்கங்கள், நெற்றி, கன்னம், வாயின் ஒரம் விழுந்த கன்னம், நரை முடி, தாடி, பொக்கை செதுக்கப்பட்டிருக்கும். இளம்பாத்திரங்களின் புருவங்கள், அழகான கண்கள், நேரான சைகள் முதலியன அழகாகவும் கவனமாகவும் ா மனைவியான லென்சீன என்பவளின் முகமூடி ம். போர்க்களத்தில் அடிபட்டு, வீடுதிரும்பும் த உதடுகளும் உடையதாய், பார்க்கப் பயங்கர கிரிப்பைத் தூண்டக்கூடியதாய்க் காணப்படும். குறைகளை வைத்து கேலி செய்யும் பகுதிகளும் திரங்கள் வரும்போது, அவ்வச் சமூகத்தோர் ணமாக தமிழர் ஆயின் தலைப்பாசையுடனும், கர் ஆயின் குல்லாவுடனும், ஐரோப்பியர் ஆயின் ம் முகமூடிகள் அணிந்து வருவர். இதேபோல்,
அவற்றைப்போல் முகமூடி அணிந்து வருவர்.
கோல நாடகம் ஆடாதகாலத்திலும் அதைப் Fயங்களை எடுத்துவிளக்குவனவாக அமைகின்றன. Fப் பிரயாணிகள் பலர் இத்தகைய முகமூடிகளைப் rங்கிச் செல்கின்றனர்.

Page 147
ஈழநாட்டில் மு செ. நவரத்திை
குறிஞ்சிநிலக் கடவுளாகிய முருகனைப்
டுதொட்டு வரும் தமிழர் மரபாகுமென்பதற்கு களாகும். இயற்கையிலேயே தெய்வத்தைக் கை மணம், தெய்வத்தன்மை என்னும் நான்கு டெ கடவுளைக் குறிப்பிடலாயினர். முருகை உடை சேயோன், செவ்வேள், குமரன், கந்தன், ஆறு குறிப்பன. மக்கள் தமது மன எழுச்சிக் கேற்ப வருகின்றனர்.
முருக வழிபாடு ஈழ நாட்டிலே தொ ளது. ஈழ நாட்டு இந்துக்களிடத்திலே பல்வே, வழிபாடு சிறப்பிடம் பெற்றிருந்தது. அத்துடன் கையில் தாம் விரும்பிய வரங்களைப் பெறுவத வழிபடுகின்றனரென்பதும் குறிப்பிடத்தக்கதாகு
வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொடக் சிறப்புற்று வத்ததென அறிய முடிகின்றது. வ கதிர்காமம் வரை முருகனுக்கு ஆலயங்களெடு தமிழ் மக்கள் வாழ்வுடன் முருகன் இரண்ட முருகப் பெருமான் மக்களது வினை தீர்த்து ருள் புரியும் கண்கண்ட தெய்வமாக விளங்குவ போற்றிச் சிறப்பான விழாக்களை எடுத்துச் சிற பெற்றுப் பெருமகிழ்வெய்துகின்றனர், ஆதியும் நின்று, அடியார் வினை நீக்கி, அருள் புரியும் னது காட்சியைக் கண்டு ஆனந்தமடைவதற்காக தென்னிலங்கையில் கதிர்காமமும் வடவிலங்கை ஆகியனவும் கிழக்கிலங்கையில் மண்டூர், சித்தா தமான தலங்களாகும்.
தமிழர்கள் பண்டு தொட்டு அன்பு ெ தற்கு பண்டைத் தமிழிலக்கியங்கள் சான்ரூகுட வழிபாடும் தமிழ் மக்களிடத்திற் காலப்போக்கி கைய இரு வழிபாட்டு முறையினையும் ஈழநா படி ஆலயங்கள் அமைத்து, வேதாகம விதிப்ட உள்ளன. மாவிட்டபுரம், நல்லூர் முதலிய இ றது. அவ்விடங்களில் அந்தணர்கள் வடமொழி -வதைக் காணலாம். கதிர்காமம், செல்வச் சந்

ருக வழிபாடு
úd, B. A. (Hons)
பலவாறு போற்றிப் புகழ்ந்து வழிபடுவது பண் ப் பண்டைத் தமிழிலக்கியங்கள் தக்க சான்று ாடு வணங்கிய தமிழ் மக்கள் அழகு, இளமை, ாருட்களடங்கிய "முருகு' என்னும் சொல்லாற் யனகிய இறைவன் முருகன் எனப்பட்டான். முகன் முதலான திருநாமங்களும் முருகனைக் முருகனது திருநாமங்களைக் கூறி வழிபட்டு
ண்மைக் காலத்திலிருந்து நிலைபெற்று வந்துள் று தெய்வ வழிபாடுகள் நிலவியபோதும் முருக பெளத்த சிங்கள மக்களும் இவ்வுலக வாழ்க் }காக முருகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து
D.
கம் ஈழநாட்டிலே முருக வழிபாடு நிலைபெற்றுச் டக்கே செல்வச் சந்நிதி தொடக்கம் தெற்கே த்து வழிபாடாற்றுவதைக் காணமுடிகின்றது. -றக் கலந்துள்ளான். கலியுக வரதஞகிய வேண்டிய வேண்டியாங்கு அளித்து, நல்ல தால் மக்கள் முருகனை மேலான தெய்வமாகப் ப்பொடு பூசனை செய்து வேண்டிய வரங்களைப் அந்தமும் இல்லாது எங்கும் நீக்கமற நிறைந்து முருகனுக்கு ஆலயங்கள் அமைத்து அங்கு அவ க் கட்டப்பட்டுள்ள ஆலயங்கள் எண்ணற்றவை. பில் மாவிட்டபுரம், நல்லூர், செல்வச்சந்நிதி ண்டி, வெருகல் முதலியனவும் மிகவும் பிரசித்
5றிநின்று முருகனை வழிபட்டு வந்தனரென்ப . அத்துடன், வேதாகம விதிப்படி நடக்கும் லே இடம்பெற்று நிலைபெறுவதாயிற்று. அத்த ட்டிலே நாம் காண முடிகின்றது. ஆகம விதிப் + அந்தணர்கள் பூசை செய்யும் ஆலயங்கள் பல டங்களில் இம்முறையே கைக்கொள்ளப்படுகின் மந்திரங்களைக் கூறி, முருகனுக்குப் பூசை நிகழ் நிதி ஆகிய இடங்களில் முருகனுக்குப் பூசை
9

Page 148
செய்வதற்கு அந்தணர்களில்லை. அங்கு ஆகம வி நெறிப்பட்ட வழிபாட்டினையே அங்கு காணமுடி குமிடங்களிலும் மக்கள் முருகனது சிறப்பினையு யும் புகழ்ந்து கூறியும் முருகனடியார்கள் முருக பரவசத்துடன் அன்பு நெறிநின்று வழிபாடா, திருவுலாப் போகும்கோலத்திலே அன்பர்கள் அ செல்வதனை எல்லா ஆலயங்களிலும் காணலாம்
திருவிழாக்காலங்களிலும் கந்த சஷ்டி கந்தரலங்காரம், கந்தரனுபூதி முதலான நூல்க அதனை நூற்றுக்கணக்கான மக்கள் கேட்டு அனு பாணத்திலே முக்கிய வழக்கமாக இருந்து வருகி பங்களிலும் இவ்வழக்கம் நீண்டகாலமாக நிலைே புராண படிப்பு, யாழ்ப்பாணத்தில் உள்ளதுபே அறிந்தவர்களே மிகக்குறைவு எனலாம். "இந்தி மார்கள் முதலியோர்களுள் கந்தபுராணம் முதலி களுள்ளும் அவை அறியாதார் இலர்,' என்று மனங்கொள்ளத் தக்கது. யாழ்ப்பாணத்தில் அன் பட்டிருந்தபோதும் ஆறுமுகநாவலரவர்களின் வளர்ந்துவருவதாயிற்று.
ஈழநாட்டிலே தேவாரம் பெற்ற தலங்க ஆகியன விளங்குவனபோன்று, திருப்புகழ் பெற றுள்ளது. அருணகிரிநாதர் கதிர்காமத்தின் இய அவன் அடியார்க்கருள் செய்யும் மாண்பினையும் மன்றி வேறுபல தென்னிந்திய பக்தர்களையும் டுகள் தோறும் பல மக்கள் தென்னிந்தியாவிலி( னர். காளமேகப்புலவரும்கதிர் காமத்தைத் தரி3 மூலம் அறியக் கிடக்கின்றது.
விழாக்காலங்களில் அடியார்கள் காவடி முடிகின்றதாயினும் கதிர்காமத்தில் இது சிறப்ப மன்றிப் பெளத்த சிங்கள மக்களிற் பெரும்பா றிக் காவடியாடும் காட்சி கண்கொள்ளாக் காட ஆழ்த்துவதாக உள்ளது. கதிர்காம ஆலயத்தின் டியுடன் அடியார்கள் ஆடிவருவதனைக் காணலா தன் என அழைக்கப்படுகின்றன்.
ஏனைய ஆலயங்களில் உள்ளது போன்று வில்லை. கதிர்காமத்தில் முருகன் ஆலயத்தில் மு தருளியுள்ள காட்சியைத் திரைச் சீலையில் வை முருகனைக் கண்டு வழிபடுகின்றனர். ஆலயத்தினு யவில்லை. அங்கு அழகிய மூர்த்தியின் உருவம் மு கருதுகின்றனர். தகூரிண கைலாச புராணம் கும் போது, இந்திர நீலமணியினுல் செய்த சிா ருன் என்று தெரிவிக்கின்றது. அருணகிரிநாதர்
14

கள் பின்பற்றப்படுவதுமில்லை. தமிழரின் அன்பு கின்றதெனலாம். ஆகம விதிப்படி பூசை நடக் ம், ”அவன் அடியார்க்கருள் புரியும் மாண்பினை ன் மீது பாடிய பாமாலைகளை ஒதியும் ஆனந்த றுகின்றனர். திருவிழாக்காலங்களில் முருகன் வன் புகழைக்கூறும் தோத்திரங்களைப் பாடிச்
முதலிய விரத காலங்களிலும் கந்தபுராணம், ளக் கோவில்களிற் படித்துப் பயனுரைப்பதும் பவிப்பதும் ஈழநாட்டிலே குறிப்பாக யாழ்ப் ன்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள எல்லா ஆல பற்று வருகின்றது. தென்னிந்தியாவிற் கந்த ால் நடைபெறுவதில்லை. அங்கு கந்தபுராணத்தை யாவிலோ வித்துவான்கள் சைவ சமய குரு யன அறிந்தவர் சிலர்; இத்தேசத்திலோ பெண்
ஆறுமுகநாவலர் குறிப்பிட்டிருப்பது இங்கு னியராட்சியாற் கந்தபுராணப் படிப்புத் தடைப் தோற்றத்துடன் மீண்டும் புத்துயிர் பெற்று
ளாகத் திருக்கோணஸ்வரம், திருக்கேதீஸ்வரம் bற தலமாக ஈழத்திற் கதிர்காமம் சிறப்புற் bகை அழகையும் முருகனின் பெருமையினையும் எடுத்துக்கூறியுள்ளார். அருணகிரிநாதரை மட்டு கதிர்காமக் கந்தன் கவர்ந்துள்ளான். ஆண் ருந்து கதிர்காமத்துக்கு யாத்திரை செய்கின்ற சித்துள்ளார்கள் என அவர் பாடல் ஒன்றன்
எடுத்தாடுவதை எல்லா ஆலயங்களிலும் காண ாக நடைபெறுகின்றது. தமிழ் மக்கள் மட்டு லானவர்களும் ஆண் பெண் என்ற வேறுபாடின் ட்சியாகக் காண்போரை ஆனந்த வெள்ளத்துள் வீதியில் விழாக்காலங்களில் எந்நேரமும் காவ ம். இதஞல், கதிர்காம முருகன் காவடிக் கந்
கதிர்காமத்தில் விக்கிரக வழிபாடு காணப்பட ருகக்கடவுள் வள்ளி தெய்வானையுடன் எழுந் “ந்துள்ளனர். அடியார்கள் திரைச்சீலையிலேயே |ள் உருவம் உண்டா இல்லையாவென்பது தெரி }ன்பு இருந்திருக்கவேண்டுமென்று இந்துக்கள் என்னும் நூல் அத்தலத்தைப் பற்றி வருணிக் காதனத்தில் முருகன் எழுந்தருளி இருக்கின்" திருப்புகழில்,

Page 149
"கனகமா னிக்க வடிவனே மி கதிர்காமத்தில் உறைவோே
-என்று பாடுகின்ருரர். இவற்றையெல்லாம் நோக்
தென்பது தெளிவாகின்றது.
அங்கு இப்போது பூசை செய்பவர்கள்
பூசாரியார் மஞ்சள் நிறத்துத் துணியால் வால் கள். வாயை மூடிக் கட்டியபடி பூசை செய்யு யாக இருக்கவேண்டும். பெட்டியொன்றை யாக் வீதியில் திருவுலா வருவதைக்காணலாம். பல்ே காம முருகனை வணங்கி அருள் பெறுகின்றனர் தில் பக்தர்கள் அரோஹரா அரோஹரா என் அத்துடன் கற்பூரக் கட்டியை ஏந்தி, கற்பூர : முருகனது ஊர்தியாக யானையினையும் பண்டை இன்றும் கதிர்காமத்திற் பின்பற்றப்படுவது மு படுத்துவதாக உள்ளதெனலாம்.
சிங்கள மக்கள் பெளத்த மதத்தைத் றுக் காலந்தொடக்கம் அவர்கள் முருகனை வழி உள்ளன. சிங்கள மக்களின் ஆதி கர்த்தாவான அமைப்பித்தானென்று யாழ்ப்பாண வைபவ மா லாளனைத் தோற்கடிப்பதற்காகக் கதிர்காமக் க வனங்கியதாகவும், எல்லாளனைத் தோற்கடித்த வும் “கந்த உபாத' என்ற சிங்கள நூல் கூ சேர்ந்தவனுகிய மாணவர்மன் என்பவன் கண்களை களை முருகனிடம் பெற்றுக்கொண்டானென்று கு சிங்கள மக்களிடம் முருக வணக்கம்" உன்னத
சிங்களத் தலைநகரான கண்டியிலும் மு( ஹரா விழாவின் ஊர்வலத்தில் புத்த தந்தம் முதன்மை கொடுக்கப்பட்டு வந்ததென அறிய டிப் பெரஹரா புத்த தந்தம் சேர்க்கப்படவில் டரகன் தெய்யோவும் (அதாவது கதிர்காமத் போந்தன என்றும் ருெபேட் நொக்ஸ் குறிப்ட் வில் பல்லாயிரக் கணக்கான சிங்கள மக்கள் பிடத்தக்கது.
கண்டியில்உள்ளது போலவே, கொழும் வேல் விழா ஈழநாட்டு மக்கள் அனைவரதும் உ வில் முருகனது உருவம் திருவுலாப் போவதில் வின் போது எடுத்துச் செல்லும் காட்சியும், வழிபாடு செய்யும் காட்சியும் காண்போரை கன் ஈழநாட்டின் எல்லாப் பாகங்களிலும் கே மக்களுக்கும் வேறுபாடின்றி அருள் புரிந்து வ

க்க
-6
கும்போது, அங்கே முருகனது உருவம் இருந்த
சிங்களவர்களேயாவார். கப்புராளை எனப்படும் யை மூடிக்கட்டியபடி பூசையைச் செய்கின்ருர் ம் வழக்கம் பண்டைத்திராவிட மக்களின் முறை 0 மீது வைத்து, கப்புருளையும் யானையில் அமர்ந்து வறு இன மக்களும் மத வேறுபாடின்றி கதிர் . முருகன் யானை மீது திருவுலாவருங் காலத் று ஆனந்த பரவசத்துடன் கோசமிடுகின்றனர். தீபகத்தினுல் முருகனுக்குப் பூசை செய்கின்றனர். த் தமிழ் நூல்கள் கூறுகின்றன. அந்த Lעמ"Lו ருக வணக்கத்தின் தொன்மையினை உறுதிப்
தமது மதமாக ஏற்று வந்த போதும் வரலாற் பெட்டு வந்தமைக்கு வரலாற்றுச் சான்றுகள் பல ா விஜயன் கதிர்காமத்தில் முருகனுக்கு ஆலயம் லே கூறுகின்றது. துட்டகாமினி மன்னன் எல் கந்தனுக்கு நேர்த்தி வைத்ததாகவும், முருகனை ; பின்பு முருகனுக்கு ஆலயம் அமைப்பித்ததா றுகின்றது. பிற்காலத்தில் அரச வம்சத்தைச் முருகனுக்கு அருச்சித்துத் தான் வேண்டிய வரங் ளவம்சம் எடுத்துக் கூறுகின்றது. இவற்றின் மூலம் நிலையைப் பெற்றிருந்ததென்பது புலனுகின்றது.
ருக வழிபாடு சிறப்பிடம் பெற்றிருந்தது. பெர சேர்க்கப்படுமுன்பு கதிர்காமத் தெய்வத்துக்கு
முடிகின்றது. 17 ம் நூற்ருண்டு வரை கண் லை எனவும், அவ்விழாவில் விஷ்ணுவும், கொட் தெய்வமும்) பத்தினித் தெய்வமும் திருவுலாப் பிட்டுள்ளார். இன்றும் கண்டிக் கதிரேசன் கோவி சென்று வழிபட்டு வருகின்றரென்பது குறிப்
பிலும் பல முருகன் கோவில்கள் உள்ளன. ஆடி உள்ளத்தைக் கவர்ந்த விழாவாகும். அவ்விழா லே; வேலையே முருகளுகப் பாவித்து திருவுலா
பெருந்திரளான மக்கள் இனவேறுபாடின்றி ஆனந்த பரவச மூட்டுகின்றன. இவ்வாறு முரு (1 uS6) கொண்டெழுந்தருளியிருந்து எல்லா இன் ருகின்ருன்.
41

Page 150
ஈழத்திற் கண்
ம. சற்குணம்
கிண்ணகி வழிபாடு நீண்டகாலமாகத் றது. பெண்ணைத் தெய்வமாகவும் தெய்வத்.ை டையே நிலமடந்தை வழிபாடு அல்லது பெண் காரியமல்ல. எனவே, திராவிட மக்களிடையே வந்திருக்கவேண்டும் எனலாம்.
பெண்தெய்வ வழிபாட்டைக்கொண்ட ம பகவதி, மாரி, ஐயை, நீலி போன்ற பெண் போலவேதான் கற்புக்கடம்பூண்ட பொற்புடை திருக்கவேண்டும். எல்லாப் பெண்தெய்வங்களுட காலமாக விழிபட்டு வந்திருப்பதைக் கண்ணகி நில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. இவ் என்னும் காவியம் ஒன்றின் மூலமே அறிந்துெ
சேரன் செங்குட்டுவன் சேர நாட்டில் இலங்கைக் கயவாகு வேந்தனும் சென்று சி, கட்டுரையும் வரந்தருகாதையும் கூறியுள்ளன.
இக்கயவாகு வேந்தனே இவ்வழிபாடு ஈ கயவாகு மன்னன் தமிழ்நாடுசென்று கண்ணகி கண்ணகியின் பாதச்சிலம்பையும் வேறு அணிக கின்றது. இவ்வாறு கண்ணகி வழிபாடு ஈழத்தி கண்ணகிக்கு ஆலயங்கள் எழுந்தன. இவற்றைச் 8 கஜவாகு கதை, இராஜரத்னகர என்னும் சிங்கி ஈழத்திற் கண்ணகி வழிபாடு தோன்றி வளர்ச் தான் என்று கூறலாம்.
கயவாகு வேந்தனுற் கொண்டுவரப்பட் சிங்கள தமிழ் மக்களிடையே நிலைத்து வளர்ச்சி வாகக் "கண்ணகை" என்று வணங்கி வரலாய வும், பார்ப்போருக்கு அழகு பொருத்தியவளாக கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்ருள். ஆனற் தமிழகத்தில் இவ்வழிபாடு இன்று பெருவழக்கா
14

னகை வழிபாடு
B. A. (Hons.)
திராவிட மக்களிடையே இருந்து வந்திருக்கின் ப் பெண்ணுகவும் கருதி வழிபட்டுவரும் மக்களி தெய்வ வழிபாடு இடம்பெறுவது விந்தையான கண்ணகி வழிபாடும் நீண்டகாலமாகவே இருந்து
க்களிடையே சக்தி, கொற்றவை, காளி, துர்க்கை, தெய்வங்களுக்கு வழிபாடு ஏற்பட்டன. இது த் தெய்வமான கண்ணகிக்கும் இடம் கிடைத் சக்தியின் தோற்றமே எனக்கொண்டு காலங் வழிபாட்டின் தோற்றம், வளர்ச்சி என்பவற் வழிபாட்டின் சிறப்பினை நாம் சிலப்பதிகாரம் 5ாள்ளக்கூடியதாய் இருக்கின்றது.
கண்ணகிக்கு விழாவெடுத்தபோது கடல்சூழ் றப்பித்தான் எனக் சிலப்பதிகாரம் உரைபெறு
ழத்திலே பரவி வேரூன்றக் காரணமாயிருந்தான், விழாவிற் கலந்துகொண்டு திரும்பிவரும்போது லன்களையும் கொண்டுவந்தான் என அறியமுடி லே பரவி வேரூன்றியதும் பல இடங்களிலும் சிலப்பதிகாரம் உறுதிசெய்வதோடு இராஜாவலி, ள நூல்களும் உறுதிப்படுத்துகின்றன. எனவே, சிபெறக் கயவாகு மன்னனே காரணமாயிருந்
- கண்ணகி வழிபாடு ஈழத்திலே வாழுகின்ற யடையலாயிற்று. ஈழத்துத் தமிழ்மக்கள் பொது பினர். கண்ணுக்கு ஒளியைக் கொடுப்பவளாக வும் இருப்பதனுலே "கண்ணகை' என அழைக் கண்ணகிக்கு வழிபாடு தோன்றிய இந்தியத் க இல்லை. மலேயாள நாட்டிலே சிருங்கனூர்
2

Page 151
அல்லது கொடுங்கலூர் என்னும் இடத்தில் அம்மனுகவே வழிபடப்பட்டு வருகின்ருள். ஆ இடம்பெறவில்லை.
ஈழத்துக்கு இவ்வழிபாட்டைக்கொண்டு தலைநகரிற் பத்திணிக்குப் பெருவிழா எடுத்து "எசலபெரஹரா' ஆரம்பமாய் இருக்கலாம் 'மத்திய காலத்துச் சிங்களக்கலை' என்னும் ஆங்கோர் பாடி விழா' பற்றிச் சில களில் எசலபெரஹரா நடைபெறுவதும் அகச் அமைந்தாலும் தமிழ் மக்கள் கண்ணகி விழா னர். ஆரம்பத்திற் பத்தினிக்கே பிரகாரம் தட விழாவிற் புத்தரின் புனித சின்னத்துக்கும் மு நாததெய்வம், விஷ்ணு தெய்வம், சுதிர்காமத் முக்கிய இடம் உண்டு.
கயவாகு வேந்தன் ஈழத்துக்குத் திரும் வேண்டும். மேற்படி துறைமுகத்தின் வழியாக அங்கணுமைக்கடவையிலே பத்தினிக்குக் கோயி முன்றலில் நிறுவியிருக்கலாம் என முதலியார் முல்லைத்தீவில் உள்ள வற்ருப்பளைக் கண்ணை சிறப்பும் வாய்ந்ததொன்ருகும்.
கண்ணகை வழிபாடு ஈழத்தில் அழியா பகுதிகளிற் பல இடங்களிலும் கண்ணகைக்குக் ஆறுமுகநாவலரும் அவரது சகாக்களும் ஆதரிக் வரி, நாகபூஷணி, ராஜராஜேஸ்வரி அம்மன் கிறது. யாழ்ப்பாணப் பகுதிகளில் அமைந்திரு அம்மன் பள்ளுப்பாடல் ஒன்றின்மூலம் அறியழு வற்ருப்பளை, பொறிக்கடவை, சங்குவயல், கே கைக்குக் கோயில்கள் அமைந்திருந்தனவென அப்ட கண்ணகை அம்மன் ஐந்தலை நாகமாக உருெ நோக்கிச் சென்று முதலில் நயினுதீவை அடை சுருட்டுப்பனை வழியாகச் சீரணி, அங்களுமைக் களிற் தங்கினுள் என்ற ஐதீகம் ஒன்றைச் சு6
ஐந்தலை நாகம் நகர்ந்து சென்ற வழி இவ்வாறு ஓடிய வழியில் அமைந்துள்ள ஊர்க சந்நிதானமும் அமைந்துள்ளன. சீரணியில் உ

உள்ள கோயிலிற் பகவதி அம்மன் ஒற்றைமுலைச்சி ஞல் ஒற்றைமுலைச்சி அம்மன் வழிபாடு ஈழத்தில்
வந்த கயவாகு வேந்தன் ஆடிமாதம்தோறும் வந்தான். இது கண்டி மாநகரில் நடைபெறும் எனக் கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி தனது நூலிற் கூறிப் போந்தார். 'ஆடித் திங்கள் ஆ* ப்பதிகாரம் கூறுவதும், ஆடி ஆவணி மாதங் சான்ருக அமைகின்றன. இவை அகச்சான்ருக வை வைகாசித் திங்களில் எடுத்து வருகின்ற -ாத்தப்பட்டபோதும், பிற்காலத்திலேதான் இவ் க்கிய இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
; தெய்வம் ஆகியோருக்கும் எசலபெரஹராவில்
பியபோது சம்புத்துறை வழியாகவே வந்திருக்க வந்த கயவாகு வேந்தன் கந்தரோடையில் உள்ள லமைத்துத் தனது உருவச்சிலையையும் கோயில் சி. இராசநாயகம் கூறியுள்ளார். இதேபோல க அம்மன் கோயிலும் மிக்க பழைமையும்
த ஒரு வழிபாடாக நிலைத்துள்ளது. யாழ்ப்பாணப் கோயில்கள் தோன்றியிருந்தன. இவ்வழிபாட்டை கவில்லை. எனவே கண்ணகை கோயில்கள் நாகேஸ் கோயில்களாக மாற்றப்பட்டனவென அறியமுடி ந்த கண்ணகை அம்மன் கோயில்களின் விபரங்களை முடிகிறது. அங்கணுமைக்கடவை, செட்டிபுலம், காலங்கிராய் என்பன போன்ற ஊர்களிற் கண்ண பாடல்மூலம் அறிந்து கொள்ளலாம். அதேபோலவே வடுத்து, மதுரை மாநகரம் துறத்து, தெற்கு ந்து, பின்னர் வட்டுக்கோட்டைப்பாங்கரில் உள்ள கடவை, அளவெட்டி, சுருவில் முதலான இடங்
வாமி ஞானப்பிரகாசர் கூறியுள்ளார்.
வழுக்கியாற்றுப் பள்ளமாக மாறியதென்பர். ளிலெல்லாம் ஐந்தலைநாக சந்நிதானமும், அம்மன்
ள்ள கோயில் நாகம்மாள் கோயில் எனவும்,
4彦

Page 152
அளவெட்டி, சுருவில் ஆகிய இடங்களில் உள்ள வழங்கப்பட்டுவருகின்றன. நாகதீவிலிருந்து புற வேலம்பிராய், கச்சாய் வழியாகச் சென்று நாச கூறுவர். பின்னர் கரைச்சியில் உள்ள புளியம் தீவில் உள்ள வற்ருப்பளையை அடைந்தாள் என் மந்திகைக் கண்ணகை அம்மன் ஆலயத்தில் வரு பட்டு வரும் கோவலஞர் கதையிலும், வித்துவ மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மாள் ஊஞ்சற் அறிந்து கொள்ளலாம், S.
யாழ்ப்பாணப் பகுதியினைப்போலவே திரு யிலும் கண்ணகைக்கு ஏராளமான கோயில்கள் குளத்தில் உள்ள கண்ணகை அம்மன் கோயில், ஆர். டபிள்யூ. ஐவேர்ஸ் அவர்கள் குறிப்பிட்ட அம்மனும் பத்தினி அம்மனுகவே வழிபடப்பட்டு பூனகரியில் (பத்தினிபாய்) அமைந்துள்ள கே. எஸ். குமாரசுவாமி கருதியுள்ளார்.
மட்டக்களப்புப் பகுதியில் ஊர்கள் தோறு அவற்றை உடுகுச்சிந்து அல்லது ஊர்சுற்றுக்காவி குயில் வசத்தன் பாடல்களும், டட்டிமேட்டு அ றன. இவற்றில் இருந்து பட்டிமேடு, தம்பிலுவி பாண்டிருப்பு கல்லாறு, மகிழுர், எருவில், கழு தாத்தீவு, செட்டிபாளையம், கிரான்குளம், புதுக் et-T, தாண்டவன்வெளி, கொத்துக்குளம், திமி3 களில் உள்ள கண்ணகை அம்மன் கோயில்களைப்
யாழ்ப்பாணத்திற் கண்ணகை அம்மன் பட்டதைப்போலவே, மட்டக்களப்பு பட்டிமேடு -ւI(U7 வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சீதவா கலாம் என கியூ நெவில் அவர்களும், எஸ். ஓ. 3 "பொற்புரு வந்த காவியம்" மூலம் அறிந்து ெ
ஈழத்திற் தமிழர் வாழும் பிரதேசங்களை லும் பத்தினி க்குக் கோயில்கள் அமைந்து காண கப்பட்ட சக்தனக் கட்டையாலான கண்ணகை கொண்டுவரப்பட்டனவாய் இருக்கவேண்டும் எ நூலிற் ஹென்றி பார்க்கர் கூறியுள்ளார். கொ பகுதியிலே முத்துராசவெளி வயல் வெளிக்கு அணி பிட்டியா என்னும் இடத்தில் பழைய பத்தினி ஆ
44

கோயில்கள் நாகதம்பிரான் கோயில் எனவும் ப்பட்ட கண்ணகை கோப்பாய், மட்டுவில், ர்கோயிலை அடைந்தாள் என்று வேறு சிலர் பொக்கணையை அடைந்து, அப்பால் முல்லைத் ாறும் கூறுவர். இவற்றின் விபரங்களையெல்லாம் நடந்தோறும் வைகாசிப் பூரணையிற் படிக்கப் ான் ச. பொன்னம்பலபிள்ளையால் எழுதப்பட்ட
கண்ணகை சரித்திரச் சுருக்கத்தின் மூலமும்
நகோணமலைப் பகுதியிலும் வவுனியாப் பகுதி அமைந்து காணப்படுகின்றன. கோயிற் புளியங்
பத்தினி அம்மன் கோயிலாய் இருந்ததாக தோடு, மடுத்திருப்பதியில் உள்ள புனித மேரி வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ாயிலும் கண்ணகைக்குரிய கோயிலே என்று
ம் கண்ணகை அம்மனுக்குக் கோயில்கள் உண்டு. யம் விளக்கிச்செல்லும். அதேபோலக் கூவாய் ம்மன் காவியம் போன்றனவும் கூறிச்செல்கின் ல், காரைதீவு, வீரமுனை, கல்முனை, நீலாவணை, வாஞ்சிக்குடி, களுதாவளை, பழுகாமம், தேத் குடியிருப்பு, மகிழடித்தீவு, மண்முனை, முதலைக் லத்தீவு. வந்தாறுமூலை, ஈச்சந்தீவு, ஆகிய இடங் பற்றி அறியமுடிகிறது.
ஐந்தலை நாகமாக ஊர்ந்துசென்று வழிபடப் என்னும் இடத்திற் கண்ணகைக்குப் பொற் "க்கை ஐதீகக் கதையில் இருந்து தோன்றியிருக் கனகரத்தினம் அவர்களும் கருதுவர். இதனைப் காள்ளமுடியும்.
ப்போலவே சிங்கள மக்கள் வாழும் பகுதிகளி ப்படுகின்றன. நிக் கவவ குகையிற் கண்டெடுக்
- கோவலன் சிலைகள், கயவாகு மன்னணுற் னப் 'புராதன ஈழம்" என்னும் ஆங்கில ழம்புக்கு அண்மையில் இருக்கும் கந்தானப் த்தாகக் கடற்கரைகண் அமைந்துள்ள நடுவ பூலயம் ஒன்று காணப்படுகிறது. குருணுகலைப்

Page 153
பகுதி, கட்டுகம்பளைப்பத்து, மினுவங்கொடை, வொரு பழைய இராசதானியிலும், அனுராத தெய்வேந்திரமுனை எனப்படும் தேவிநுவரையி குண்டசாலையிலும், ஹங்குறன்கட்டையிலும் ப
இவ்வாறு ஈழத்தின் பல்வேறிடங்களிலு பப்பட்டு வணக்க முறைகள் நடைபெற்று வந் கண்ணகையாக வணங்கப்பட்டு வந்தபோது அ பவளாகக் கருதப்படுகிருள். அதேபோல சிங்க அம்மை, சின்னமுத்து, பொக்குளிப்பான் போ கலத்தையும் கொடுக்கும் தெய்வமாகக் கருதி டிற் கண்ணகைக்கு அதிக இடம் கிடைத்தது. இருந்து தோற்றம் பெற்றதாக நம்பப்படும் க பார்தாங்கு பத்தினி) மாரி (மழைத் தெய்வம் தப்பட்டு வழிபாடு நடைபெற்றன. சிங்களவரி காளிகள் அவளைச் சூழ்ந்திருப்பதாகவும் கொள்
மழைத் தெய்வத்துக்கும் அழியாத பத் யாவும் கண்ணகை அம்மனேடு பொருத்தப்பட் தின் பல பாகங்களிலும் பாடப்பட்ட மாரியம் போன்றவற்றிற் கண்ணகைக்கும் இடம் கிடைத் லாப் பெண்தெய்வங்களின் அமிசங்களும் கண்க கண்ணகை அம்மன் விருத்தங்களிலும், தோத்தி வல்லமைகள் கண்ணகைக்கு இருப்பதாகவும் ெ களையோடைக் கண்ணகை அம்மன் ஊஞ்சல், கு அம்மன் விருத்தம், மட்டுவில் பன்றித்தலைச்சி சார்ந்தவையே.
எத்திறத்தாலும் வரந்தரும் இவள் பத் சாத்திசெய்ய, நாடு மலிய மழைபெய்து நோய கூறியுள்ளது. எனவே மழைவளம் குறைந்து ட யின் சீற்றமே காரணம் எனக்கொண்டு சாந்தி போர்த்தேங்காய் அடித்தல், குளுத்தி பாடுதல் வழிபாட்டோடு சம்பந்தப்பட்டனவாகவே வசந் பனவும் நடைபெறுகின்றன. மழை வேண்டியே விழாக்கள் யாவும் சிங்கள மக்களிடையேயும் 2
கண்ணகை அம்மன் வழிபாடு தொடர் யம் கண்ணகி வழக்குரையே. இது வழக்குரை, பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. யெனவும், யாழ்ப்பாணப் பகுதிகளிற் கோவலன
14

நீர்கொழும்பு முதலான இடங்களில் ஒவ் ரத்தைவிடப் பத்தினிக்குக் கோயில்கள் உண்டு. லும் பத்தினிக்குக் கோயில் இருந்திருக்கிறது. த்தினிக்குக் கோயில்கள் இருந்திருக்கின்றன.
ம் கண்ணகை அம்மனுக்குக் கோயில்கள் எழுப் தமைக்குக் காரணம் இருக்கவேண்டும். கண்ணகி 1ள் கண்ணுேயில் இருந்து பாதுகாப்பைக் கொடுப் ள மக்களும் தமிழ் மக்களும் கண்ணகையை ண்ற நோயினின்றும், பாதுகாப்பையும் அடைக் வழிபடுவதாலேயே, ஈழத்து மக்களின் வழிபாட் எனவேதான் கொற்றவை, காளி அம்சத்தில் ண்ணகைக்குத் திரெளபதி (அழியாத பத்தினி, ) ஆகிய தெய்வங்களின் அம்சங்களும் பொருத் டையே பத்தினி துர்க்கை அம்மனுகவும், எட்டுக் ளும் ஐதீகம் இன்றும் உண்டு.
திணிக்கும் கொடுக்கும் விசேட ஆராதனைகள் டு வழிபாடு நடைபெற்று வந்ததாலேயே ஈழத் மன் அகவல், காவியம், பிரார்த்தனை, உற்பத்தி ந்தன. சக்தியில் இருந்து தோற்றம்பெற்ற எல் னகையோடு பொருந்தியுள்ளன. எனவேதான் ரங்களிலும் கண்ணகை சக்தியாகவும், சக்தியின் காண்டு பாடல்கள் புனையப்பட்டன. நவாலிக் ஞ்சுப்பரந்தன் பொறிக்கடவை பூரீ கண்ணகை
அம்மாள் ஊஞ்சல் ஆகியன யாவும் இத்துறை
திணிக்கடவுளாகும் எனக்கொண்டு விழாவொடு பும் துன்பமும் நீங்கியனவெனச் சிலப்பதிகாரம் பசியும் பிணியும் ஏற்படும் காலத்திற் கண்ணகை
செய்யவே ஈழத்திற் கொம்பு விளையாட்டு,
போன்றவை தோன்றின. கண்ணகை அம்மன் தன் ஆட்டம், குரவை, தேர்க்கலியாணம் என் மழைக்காவியம் பாடப்பட்டுள்ளது. இச்சாந்தி உண்டு.
பாக ஈழத்திலே தோன்றிய முழுமையான காவி பழிவாங்கிய கதை, கோவலனர் கதை என்று மட்டக்களப்புப் பகுதிகளிற் கண்ணகி வழக்குரை ர் கதை எனவும் இக்காவியம் வருடந்தோறும்
5

Page 154
வைகாசித் திங்களிற் படிக்கப்பட்டு வருகின்றது போதும் பெரும்பாலான இடங்களிற் கதைகூறு கதைகளுக்கு முக்கிய இடம் கொடுத்துக் கண் கிறது. கண் ணகை அம்மன் மாங்கனிப்பிறப்பு,
நாடோடிக் கதைகளாகக் கொள்ளலாம், இவை லன் கதை' என்னும் அம்மானை ரூபத்திற் தழுவாமலும் பலபடப் புனையப்பட்டுள்ளன.
அங்களுமைக்கடவை அம்மன் காவியம், வற்ருப்பளைக் கண்ணகை அம்மன் காவியம் என யாட்டுப் பாடல்கள், வசந்தன் பாடல்கள், குளு கண்ணகை அம்மனேடு தொடர்பான பாடல்கள அம்மனுக்குக் காவியங்களும், கவிதைகளும் தோன் காவியங்கள் நிறையத் தோன்றியுள்ளன.
எனவே கண்ணகி வழிபாடானது ஈழத் ஆத்மீகத் தொடர்பாக இருந்ததோடு, தென் தொடர்பாக மாறிய பெருமையைப் பெற்றது பகுதியிலேதான் இவ்வழிபாடு நன்கு வேரூன் கோயில் இல்லாத ஊரே மட்டக்களப்புப் பகுதியி
Ae S ୪ଟ **
'பழைய சுவடிகள் யாவுங் கீலமாய் ஒல் சேர்த்து அவற்றை எழுதி வைப்பாரும் இலர். மில்லை. சரஸ்வதியைத் தம்பால் வகிக்கப்பெற்ற கின்ருளில்லை. திருவுடையிர் ! நுங்கருணை இந்: தரம் அழிந்த தமிழ் நூற்கஃா மீட்டல் அரிது. இலண்டத்துள் எடுத்துமென்? ஒடன் ருே கிட்டு தேடி எடுப்பினுங் கம்பையும் நாராசமுந்தான் மீ கொடுத்தாலும் வாராது. சங்க மரீஇய நூல்க சயம். முப்பால் அப்பாலாய் விட்டது. என் ச இப்பொழுது தேசங்கடோறுந் தேடியும் அகப்பட கள் காலாந்தரத்தில் ஒன்றன்பின் ஒன்ரு ய் அழி! யும் நூல்களில் உங்களுக்குச் சற்றுவது கிருபை அயலான் அழியக் காண்கினும் மனத்தளம்புகின் அழிய நமக்கென்னென்று வாளா இருக்கின்றீர்க மாணமென்று இவையில்லாதார் பெருமையும் ெ
frřasernra!""
14

இக்காவியம் சிலப்பதிகாரத்தைப் பின்பற்றிய ம் விதத்தில் விலகிச்செல்கின்றது. நாடோடிக் ணகி மதுரையை எரிப்பதோடு நிறைவுபெறு மீகாமன் வெடியரசன் போர் என்பவற்றை பெரும்பாலும் புகழேந்திப் புலவரின் "கோவ பாடப்பட்ட பாடல்களில் இருந்து தழுவியும்
வற்றப்பளைக் கண்ணகை அம்மன் தோத்திரம், ாபனவும், மழைக் காவியம், கொம்பு விளே நத்திப் பாடல்கள், ஊஞ்சற் பாடல்கள் யாவும் ாகவே காணப்படுகின்றன. தமிழிலே கண்ணகை ாறியமைபோலவே, சிங்களத்திலும் பத்திணிக்குக்
திலே சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் னிந்தியக் தமிழ் மக்களையும் இணைக்கும் ஒரு எனலாம். எனினும் ஈழத்தின் மட்டக்களப்புப் ரி நிலைத்துள்ளது. கண்ணகை அம்மனுக்குக் ல் இல்லை எனலாம்.
e
S.
ஈருென்ருய் அழிந்து போகின்றன. புது ஏடுகள் துரைத்தனத்தாருக்கு அதின்மேல் இலட்சிய வித்துவான்களை அவள் மாமி எட்டியும் பார்க் நாட் தவறினல் பின்பு தவம் புரிந்தாலும் ஒரு யானை வாய்ப்பட்ட விளம் பழத்தைப் பின் வது ! காலத்தின் வர்ய்ப்பட்ட ஏடுகளைப் பின் 'ரும். அரைக் காசுக்கழிந்த கற்பு ஆயிரம் பொன் ளூட் சில 'இப்போது தானுங் கிடைப்பது சமு ாலத்தில் யான் பார்க்கப்பெற்ற ஐங்குறுநூறு ட்டிலது. எத்தனையோ திவ்விய மதுர கிரந்தங் ன்ெறன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழி பிறக்கவில்லையா? ஆச்சரியம்! ஆச்சரியம்!! தே! தமிழ் மாது நுந் தாயல்லவா! இவள் ளா! தேசாபிமானம், மதாபிமானம், பா ஷாபி பருமையாமா ! இதனைத் தயைகூர்ந்து சிந்திப்
- சி. வை. தாமோதரம்பிள்ளை கலித்தொகைப் பதிப்புரை, 1887,

Page 155
மிருகங்களும் தமிழர்
கலாநிதி வி. Gs.
மனிதன் தன்னைப்போல் தன் இனத்தை யும் விருட்சங்களையும் நேசித்ததாகச் சமய நூல் தத்துவத்தை தற்பொழுதும் நாம் காணக்கூடிய கங்கள் மேல் வைத்திருக்கும் விருப்பம் அளப்ப தன்மை கொண்டு, மனிதனின் அன்புக்குப் ப மிருகங்களிலிருந்து தோன்றியதோ அந்த இனம றது (totemism), இவ்வுண்மையை உலகிலுள்ள அவர்கள் தாம் அம்மிருகங்களுடன் தொடர்புை தாம் ஆட்கொள்ளப்படுகின்றனறென்ருே கருதுகி முதற்குடி மக்கள், அந்நாட்டுப் பெரும் பற6 பயபக்தியுடன் வணங்குகின்ருர்கள். ஆதிகால தெய்வமாக வழிபட்டனர். நியூ கினியின் அள் தம்மோடு தொடர்புடையனவாகக் கருதுகின்ற6
தமிழர்கள் ஒரு சில மிருகங்களையே தொ அவர்கள் வணங்குவதற்கான காரணம், தா! அல்லது அம்மிருகங்களிலிருந்து தோன்றியவர்கள் கள், பயன்கள், அவை உணர்த்தும் தத்துவங்க சங்களில் கூறப்படும் உயர் கருத்து, ஆகிய கா
களைத் தமிழர்கள் வணங்குகின்றர்கள் என்று 4
உலகத்திலுள்ள மிருகங்கள் யாவற்றிலு! வணங்கப்பட்டு வருகின்றது. எகிப்து, கிரேக்க கள் மதிப்புக்குரியனவாகவும் வணங்குவதற்குரிய போல, ஸ்பெயின் தேசத்திலும் சண்டையிடும் கின்றன.
சாந்தம், அழகு, பொறுமை ஆகிய குடி ஒரு தாவரப்பட்சிணியாகும். மேலும் பசுவிடமி வியமான பால், தயிர், நெய், சாணம், சிறுநீ வத்துக்கான நிவேதனப் பொருள்களைப் பகவி மனிதனுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைக நெய் முதலியவற்றையும் விவசாயத்துக்கு இன் க்ளையும் மனிதனுக்குக் கொடுப்பதினுலும் மேற்கு
14

வழிபாட்டு முறையும்
கணேசலிங்கம்
சார்ந்த மனிதரை மட்டுமன்றி, விலங்குகளை களும் சரித்திர நூல்களும் கூறுகின்றன. இத் தாக இருக்கின்றது. குறிப்பாக மனிதன் மிரு சியது. சில மிருகங்கள் மனிதனில் தங்கி வாழும் ாத்திரமாக வாழுகின்றன. மக்களினம் எந்த ரபுச் சின்னமாகவுள்ள மிருகங்களை வழிபடுகின் ஆதியான மனித சமுதாயங்களில் காண்கிருேம். டயவர்களென்ருே அல்லது அம்மிருகங்களிஞலே நின்றர்கள். உதாரணமாக, அவுஸ்திரேலியாவின் வையையும் (Emu) பாம்பையும், புழுக்களையும் எகிப்தியர், முதலை, பாம்பு ஆகியவற்றைத் buop u9ia?6Tri (Asmat tribe) e5ubu9GuéGaat
Trì.
ன்றுதொட்டு வணங்கிவருகின்றர்கள். அவற்றை ம், அம்மிருகங்களுடன் தொடர்புடையவர்கள் ர் என்பதல்ல; அம்மிருகங்களின் குளுதிசயங் ள், அம்மிருகங்களைப் பற்றிய புராண இதிகா ரணங்களைக் கருத்திற் கொண்டே அம்மிருகங் கருதுதல் பொருந்தும்,
ம், பசு ஒன்றே தமிழரால் தொன்றுதொட்டு நாடு, ருேமாபுரி, போன்ற தேசங்களில் எருது னவாகவும் போற்றப்பட்டு வருகின்றன. இதே எருதுகளும் பெரு மதிப்புள்ளவையாக இருக்
ணங்களையுடையதாக பசு திகழ்கின்றது. அது ருந்தே இறைவனுக்கு அளிக்கப்படும் பஞ்ச கவ் ர் ஆகியவற்றை நாம் பெறுகின்ருேம். தெய் டமிருந்து பெறக்கூடியதாக இருப்பதினலும், ளூம் பெரும்பயன் தருபவையான பால், தயிர், ாறியமையாததான பசளை, முதலிய பொருள் குறிப்பிடப்பட்ட விசேட நற்குணங்களைக் கொண்

Page 156
டிருப்பதினனும், தமிழர் பசுவை வணங்குதற் மேலும், சிவனுக்குப் "பசுபதி என்னும் ஒரு சிந்தனைக்குரியதொன்ருகும்.
இந்தியாவிற் பாம்புகளை வழிபடும் வழ டில் பாம்புகளை வழிபடும் வழக்கம் இந்தியாவி ரத்தொகுதி காட்டுகின்றது. பாம்புகளை மனித ரிக்கர்கள் அவற்றை தம் தெய்வமாக வணங்கு தென் கிழக்காசியாவிலும் யப்பானிலும் தற்பே விலும் மெக்சிக்கோவின் புராதன கலாச்சாரத்தி தது. கிரேக்க நாட்டிலும் ருேமாபுரியிலும் பாப்
தமிழர்கள் தமிழ் இலக்கியங்களிலும்
பாம்புகளின் பண்புகளை ஆதாரமாகக் கொன ** பாம்பு சிவனின் சடையிலும் கழுத்திலும்
மாள் ஆதிசேடன் என்ற நாகத்தின் மேல் துய மாடியும் இவ்வுலகையே இரட்சித்தருளுகின்ரு வாசுகி என்ற பாம்பைக் கயிருகவும் கொண்டு ருந்து நஞ்சு வெளிவர அந்நஞ்சை சிவபெரும ருக்கின்றது” இத்தகைய கருத்துக்கள் தமிழர் பெற்றிருக்கின்றன. இதன் காரணமாகவே பாம்
ஈழத்தில் நாகர் கோவில், நாகவிகாரை,
இக்கோவில்கள் நாகபாம்பு வழிபாட்டையே வி
தமிழர்கள் பசு, பாம்பு ஆகியவற்றை பட்டு வருகின்றனர் என்பதையும் குறிப்பிடலா கினர். ஆசிய நாடுகள் சிலவற்றிலுள்ள இதிகாச கின்றது. தூர கிழக்குத் தேசத்திலுள்ள இதிகா குறிப்புக்கள் இந்திய இதிகாசங்களிலிருந்து ெ "தீயவையை பாராதே" "தீயவையைக் கேள
ரைகள் குரங்குகளின் உருவங்களைத் துணையாகச்
இராம தூதனுக அனுமன் இருந்ததினுல், தொடர்பிருந்தது. அனுமன் ஒரு சிறந்த இரா மரை வழிபடுபவர்கள் அனுமனையும் வழிபட்ட சந்ததிய்ாகவே கருதி, அவற்றையும் வழிபடத் இராமருக்குக் கோவில் கட்டப்பட்டபோது, இர கோவில் அமைக்கப்பட்டது.
4

iரிய ஒரு மிருகமாகக் கருதுகின்றனர் எனலாம். பெயர் தொன்றுதொட்டு வழங்கி வருவது
க்கம் நிலை பெற்றிருக்கின்றது. 19ம் நூற்ருண் ல் அதிக இடங்களில் இருந்ததாகப் புள்ளிவிவ ஆற்றலுக்கு மேற்பட்டவையெனக் கருதி ஆபி கிருர்கள். இவ்வழக்கம் இந்தோனேசியாவிலும் து இருந்து வருகின்றது. மத்திய அமெரிக்கா லும் பாம்பு ஒரு முக்கிய இடம் பெற்றிருந் புகள் தெய்வீகமாகக் கணிக்கப்பட்டு வந்தன.
புராணங்களிலும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள எடே பாம்புகளை வணங்கினர்கள் எனலாம். ஆபரணமாகத் திகழ்கின்றது; "விஷ்ணு பெரு பில்கொண்டும், அதன் தலையில் நின்று நர்த்தன ர்**: **தேவர்கள் மேருமலையை மத்தாகவும், திருப்பாற்கடலைக் கடைந்தபோது, பாம்பிலி ான் உண்டதிஞல் கழுத்தில் நீலநிறம் படிந்தி களின்-குறிப்பாக இந்துக்களின் மனதில் நிலை பை வணங்குகின்ருர்கள் என்பதாகக் கருதலாம்.
நாகதீபம் போன்ற கோவில்கள் இருக்கின்றன.
சேடமாகக் கொண்டு அமைந்துள்ளன.
மட்டுமில்லாமல் குரங்கையும் தெய்வமாக வழி ம், ஆதிகால எகிப்தியரும் குரங்குகளை வணங் :ங்களில் குரங்கு ஒரு முக்கிய சிறப்பிடம் பெறு சங்களில் காணப்படும் தெய்வீக குரங்குகளின் பறப்பட்டவையாகும். யப்பான் தேசத்தில், ாதே’, தீயவையை பேசாதே" என்ற அறிவு
கொண்டே விளக்கப்படுகின்றன.
இராமருக்கும் அனுமனுக்கும் ஒரு கிட்டிய ம பக்தன். இதனைக் கருத்திற் கொண்டு இரா னர். காலகதியிற் குரங்குகளையும் அனுமனின் தொடங்கினர். இதன் காரணமாகவேதான்
ாமருக்கு உறுதுணையாக இருந்த அனுமனுக்கும்

Page 157
சைவர்கள் எக்காரியம் செய்யினும், வி றனர். அவருக்கு யானை முகம் இருப்பதினுல், வருகின்றது. யானை ஒரு மிக வலிமை மிக்க ஒரு அறிவுள்ள மிருகம். அத்துடன், அது ஒரு அது ஒரு தாவரபட்சிணியாகும். எல்லாவித யானை இருக்கின்றது.
சில மிருகங்கள் இறைவனது வாகனங் னுக்கு எருது பிள்ளையாருக்கு-எலி, முருகனு சிங்கம்; ஐயப்பருக்கு-புலி. இப்படியெல்லாம் கின்ருேம். தெய்வங்களுக்கும் அவற்றுக்கான வ ஒரு வகைத் தொடர்பிருக்க வேண்டுமென்பது கின்றதென்பதையும், எவ்வாறு இத்தொடர்
ஆராய்ச்சிகள் அவசியமாகின்றன.
சீர்மேவி யாழ்ப்பான திருநெ செய்தவ மெளுவுதித் சிந்தும் பழிக்குவெந் துய தேயமக லுஞ்சிந்தை ஏர்மேவு யெளவளத் தெரிகுல னேந்திழையை யுங்க டெய்திச் சிதம்பரத் திறை ரேழேழு நாளுபவசித் தூர்மேவு கெளடத்தெ முமை வுற்ரு ரியக்கடல்கட தும்பர்குரு வின்மகா பணி
முற்றபய னுறவுமை சார்மேவு சைவத் தனித்துறவி
சாந்தநா பகிசமேத சந்த்ரமெள வீசனே பை சந்த்ரபுர தலவாச6ே

க்கினங் களையும் விக்கினேஸ்வரரை வணங்குகின்
யானையும் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டு மிருகம், வேலைகள் செய்தற்குப் பழக்கப்படும் ஞாபக சக்தியுடைய மிருகமுமாகும். மேலும் த்திலும் வணங்குவதற்குரியதொரு மிருகமாக
களாகக் கருதப்பட்டு வருகின்றன. சிவபெருமா க்கு-மயில்; வயிரவருக்கு-நாய்; காளிக்குதெய்வங்களுக்கு வாகனங்கள் இருக்கக் காண் ாகனங்களாகக் கருதப்படும் மிருகங்களுக்கும் தெளிவாகின்றது. எப்படியான தொடர்பிருக் பு ஏற்பட்டதென்பதையும் பற்றி மேலும்
ல்வே வியிலியாஞ் தான் குழந் தஞ்சிநத்
TT
ரிக் குங்கற்பி
தறவிட்
யிறைவி தாள்புக்கொ 5
பம்மை பருளுந்த
ண்டிதனு மாய்ச்சனன பருட்
îl ura?696ăr
ந்தொழில் விலாசனே
- சந்திர மெளலீசர் சதகம்

Page 158
“தொட்டினைத் தூறு மணற்
கற்றனைத் தூறு மறிவு”
57, RAM
W
Bright

In Institute

Page 159
Tamil influence on the str
By W. S. KARUN
Sinhalese, the mother-tongue of the majo] Indo-Aryan languages which has been complete languages for the last several centuries becau documents area couple of stome-inscriptions wł on epigrapical and linguistic grouncs. We h peric d upon the present day. Mcdern Sinhales the culloquial. The scurce-language of Sinhale there had been several secondary linguistic traci on the development of Sinhalese. Of these Tam believe that in the past, the study of Tamil lang scholars. Sinhalese poets of the 15th/16th centl the most important li erary languages cf the da quainted with these three languages. Even th Sinhalese free from Sanskrit tatsama-words' scen ezhuthu to wri e” (cf. ezhuththu “lettes” etc.). T the aspects of Tamil influence on the structure
The impact of Tamil, unlike that of the
back to the earlist stages in the development o
areas of the language that have been afficted by logy, syntax and lexicon.
As far as the phonemic systems are conc halese and Tamil is the absence of the aspiratethe rest of the modern Indo-Aryan languages. aspirates with the corresponding un-aspirate stop some scholars have considered Tamil interferen innovation in Sinhalese. Except for this, the p distinct. However, there are specific instances creating new canonical shapes, as well as in wid halese. An example for a canonical share thu structure of a considerable number of morphem example, Tamil Musettu joint-Sinhalese ma paaththi.
Considering, the phonological changes tha nical shape must be assumed to have gained e. The freuqency of occurrence of the vowels "u, i, retroflex stops "T" and 'D' has been greatly in Around the 8th century A.D. 'c' (coming from and in gemination, whereas inits intervocalic sing Indo-Aryan jih) merged with 'd' in all of its oc palatal stops in Sinhalese. The re-entry of 'c' this change has been due to borrowings from ol sources, and in this regard the impact of Tamil is

ucture of Sinhalese Language ATILLAKE, Ph.D. (Cornel)
ity of the people of SriLanka is one of the Modern ly cut-off from the rest of the Modern Indo-Aryan se cf it's geographical location. It's oldest extant ich are dated as early as the 3rd century B.C. both ave continuous records of the language from this e is found in two distinct varieties, the literally and se is old Indo-Aryan (Sanskrit), apart from which iors that have exerted varying degrees of influence il is ore of the most important. There is reason to. uage and literature was cherished by the Sinhaleseries included Tamil along with Sanskrit and Pali as y and considered them ignorant who were not ace term "elhu referring to the "written variety of is to be etymclogically connected to the Tamil word he purpose of this paper is to, investigate some oi ; of the Sirhalese language.
other secondary linguistic traditions can be traced f Sinhalese. For descriptive convenierce, the major Tamil are classified here under phonology, morphol
erned a significant point of similarity between Sinstors which puts Sinhalese into sharp contast with
The unconditional merger of the old Indo-Aryan is is attested in the earliest Sinhalese documents, and ce to be responsible for this significant phonological honemic systems of the two languages are quite of Tamil lcan-words that have been operative in ening the distributicn cf certain phone mes in Sinnewly created in Sinhalese is the (CW C1 C1 W) es. The firal “V” here is primarily “u” or “i”. For 1uttu ; Tamil paaththi ”vegetable-bed”–Sinhalese
it Sinhalese has undergone, the above type of canotry into Sinhalese only after the 8th century A.D. 2, ee', specially in the word-final position and of the creased through Tamil borrowings into Sinhalese. ld Indo-Aryan c/ch) merged with 's' word-initially le occurrence it merged with 'd', 'i' (coming from old surrences which resulted in the complete loss of the ind j';into the phonemic system of Sinhalese after d and Middle Indo-Aryan as well as from Dravidic
very significant.
151

Page 160
As to morphology, the two languages do The grammatical-category-system of Sinhalese sta: a passing remark may be made here of the plural markers added to inanimate nouns in Sinhalese) to the Tamil nominal pluralizer -kalh.
At the level of syntax only some of the app terns of the two languages may be noted here. C clause in both the language by using a verbal adjec (co-) relative pronominal sets. This feature whic is strikingly absent in all the Modern Indo-Arya following instances :-
Tamil : /nhaan patikkita vuththakan nallath Colloquial Sinhalese : mama kiyoona pota
(literally I reading book is gc
The occurrence of this type of “relative-clause' in texts, viz. Dampiyaa ATuvaa GaeTapadaya datec influence was responsible for the innovation of thi old Indo-Aryan rela, ive-clause structure in Sinhale shared in common by Sinhalese and Tamil is th languages take a classifikr af er the numeral. Ir name") and it is used only af er human-nouns, w (literally meaning 'name) used in coun ing mem people') used when counting other living-beings
Tamil : smanithar muuNTu peer/ "three me Sinhalese : Iminissu tun dinaa/ “three men”
|haamudur varu tun na mal three
Also in the formation of higher ordinals in agree in having the noun referring to the '10's 'al
numeral. Compare for instance,
Tamil: siru vaththi naatu (20 --4) twenty-fou Sinhalese : /visi hatara! (20+4)'twenty-four
Hindi: scan bisi (4+20) 'twenty-four'etc.w
A syntactic feature that can be positively sa the alternative construction-type formed by repeat item that is put into alternation. Compare the fo
Tamil: koopi cari theeththaNNicari koN.
Sinhalese : skoopi hari tee vatura hari geenni
The formation of the echo-compounds in point of similarity.

not seem to share much similarity worth-noting nds in sharp contrast to that of Tamil. However
marker -val (which is one of the alternant plura which some scholars have suggested to be related
arent similarities between the constructional patDne such instance is the foi mâtion of the relative tive instead of the "that- who, which “type of h is typical of almost all the D1avidian languages in languages other than Sinhalese. Consider the
μ. hondays. bod)
Sinhalese is attested in one of its earliest literary i around the 10th century A.D. Whether the is syntactic feature which completely replaced the se needs investigation. ... Ancither syntactic feature e type of numeral phrase structure in that both Tamil, the classifier is peer' (literally meaning hile in Sinhalese there are two classifiers, “nama” bers of the clergy, and "denaa' (literally meaning
. Thus, -
n
morks'
volving '10's both Tamil and colloquial Sinhalese ways preceding the noun referring to the lower
there the order of the numerals is just the opposite.
id to have been directly borrowed from Tamil, is
ing the functor “häiri” (

Page 161
The most significant impact of Tamil on S Tamil loans in Sinhalese have been attested sinc Sinhalese can be chronologically arranged consid attempt is not made in this paper. For instance knife' ( 'to throw /vicus > Adjectives :
'common spothus ح 'short Ikutus >
either...or jcari.cari/
These loans in Sinhalese cover a very wide ran classified. Kinship terms such as appa/ 'father ( lakkal), focd-items such as Ihodhi gravy” ( skuu Def
修 lputanawa/
/viisu karanara/
Ipodhus skutu/ b /hari.T, harij functors
ge of semantic categories and can be accordingly-Tamil |appas), fakka/ 'elder-sister' (Tamil |cothil), culinary terms such as snuTTi "cooking its such as moleef 'brain (Tamil finuluhays), architectural terms such as siruppus'a wayoffixing as spaaththil 'vegetable-bed' (Tamil/paaththil). tances for these. A detailed study of these loans t possible within the scope of this paper.

Page 162
Recent Epigraphical Disco Eastern Provinci
By K. NDRAPALA,
The role of epigraphy in archaeological stu particularly the history of our region, that is Sc absence of any historical literature in most parts c this region an importance which similar records do regions of Incia epigraphic records form the only struction of their early history. Fortunately in SI historical writing and the eirgraphic Tecords of cu in that they help to a great extent in supplementil nicles. In a few instances they also help to correc
Sri Lanka is perhaps the only region in Sou other inscripticns for a continuous pericd cf over During the last one hundred years, that is from th (1874), nearly three thousand lithic records have b these, consti, uirg what are called the Brahmi i
There are about one hundred and fifty Tamil inscri century A.D. There is also a handful of Sanski Every year a considerable number of inscriptic ns opening up of jungle areas for colonisation and agi tanks and canals. : ...,
The vast majority of these inscriptics has an abundance of granite and other forms of hard yielded the least number of inscripticnis. Till a perica before the seventeenth century had been c rgarding the other districts ofthe Ncrthern Provir different for the same period. . A number of facto
During the last five years more epigraphic provincas 2. In the Jaffna District nine more insci earlier, came to light. Another seven records fro1 -first ime in 1972.3 Some new inscripticns hav Disilict. As cre who has been going in search ( systematic survey of these provinces is bound to th a thorough survey of all the other provinces is als
Most of the newly discovered inscriptics h; to the histury of these two provinces. The major a peric d for which there are serious gaps in our 1 z century was a period when the Island - was domi behind a large number of Tamil records. More especially in the Northern and Bastern Provinct importance.

veries in the Northern and es of Sri Lanka"
Ph.D. (Lond.)
die s and in the reconstruction of ancient history, uth Asia, can hardly be over-em II ła sized. The f Scuth Asia has given the cigra I.ical ic cords of not enjoy in most parts clf the world. For many scurce cfany reliable irfornia icin for the reccn
i Lanka there has been a very's crg traditic n of ir cocunt y assume a different kinc. cf importarice;
g and in ccircborat irg the evicence of the chro
t the chrcnicles.
th Asia where we get a large number cf lithic and 1wo thcusand years, ficn. 1le hid century B.C. e time the first official ( Iigraphist was app cirted cen discovered in Sri Lanka. M. cre than half of 1scripticns, belong to the earliest period of the third century B.C. and the third century A.D. iptic 11s, all belongirg to the period after the ninth t and Pali inscriptions. The rest are in Sinhala. is brought to light, mainly as the result cf the icultural schemics and of the repairirg of irrigation
been discoverca in those provinces where there is
rock. In this respect, the Northern Province has bcut five years ago, only four inscriptions ofthe
iscove1ed in the Jaffna Cisti ict. The position
ce and thcse cf the Easte in Province was not very
rs contributed to this situation.
records have been brought to light in these two iptions, more than d cuble the nun ber discovered m the Trincomalee District we'e examined for the e also been discovered in 1973 in the Vavuniya of these inscriptic ns, I can confid (rtly say that a row up many more inscriptic rs. For that matter, o bound to yield similar sults.
ave furnished us with valuable information relating ity of the records belongs to the eleventh century, litelay sources. The greater art of the eleventh . nated by the South Indian Colas, who have left and more Cola records are ricw cc ming to light, s. Some of the se are of ccnsiderable historical
54

Page 163
Of these, by far the most interesting and v malee District. This record, which was originall pieces, is in the Sivan Temple at Kantalai. The f slab, is in a good state of preservation while the
This record is significant in many respects. in a regral year of a ruler of Sri Lanka who is not this ruler is given as Sri Sanghavarman Sri Cola record, I was rather puzzled by this unfamiliar na occurring in the inscripticin made it clear to meth yet it was not dated in a regnal year of a Cola emp Lanka. That this unknown kirg was und cubted name Sri Sanghavarman, a variant of the well-knc varman. But, soon I was able to relate it to the in and realise the full significance of the name and Indian records that help us to unravel this myster
We find that early in the eleventh century E of administering his empire, whereby princes of th of authority in the different provinces of the empi to have been assisted by only one such subordinal It is possible that in later years others were sim successors are said, in their inscriptions, to have ( diate successor of Rajendra is stated to have crow on him the title “Ilankaiyar-k-iraiva , the Tamile
Of the many subordinate rulers, those of Cola-Pandya, a combination of their own dynastic over which they now ruled. Similarly, the prince: Kerala and that of the Ganga country was named took the consecration names of the Pandyas. T Cola Lankesvara, which was obviously the name dynastic name and Lankesvara is the name gener. Pandya rulers took the consecraticn names of the of the kings of Sri Lanka. We also kncw frcm rulers enjoyed regal status and were allowed off office.
In the light of these inscriptions we are i Kantalai came to be dated only in a regnal yea: record, therefore, helps us to learn for the first tin Sri Lanka was not different from that adopted in
This inscription is also of interest in other assembly of Kantalai, which place had been rena after Emperor Rajaraja I. Incidentally, this nam galam in the reign of Vijayabahu I, who ruled f inscription also gives the Cola name of the dist Rajendra-cola-valanatu, afir emperor Rajendra also named here as Vikramacolan-vaykkal, pres

luable record comes from Kantalai in the Trincoinscribed on a single slab but is now lying in two st half of the record, inscribed on one piece of the ther half is unfortunately damaged.
What will interest many is the fact that it is dated nown to us from any other source. The name of Lanke svara Devar. When I first deciphércd the mê. The wiirg as well as the Cola place-rames it it was a record cf the pericd of Cola rule. And tror, as in the case of the other Cola records cf Sri y a local rule 1 was evic cnt ficm his consecation wn Sinhala consecuatic n rame Siri SarghabcdhioImation provic (c. by the Scuth Indian epig1aphs of the new inscription. It is actually the Scuth
7. - -o
imperor Rajendra Cola I introduced a new system e imperial 1 cyal family were appc inted to position 'e. In the early years cf his reign Rajend 1a seems e ruler with julisciclic in cver the Pandya country. ilarly reccgnized elsewhere. Three of Rajendra's continued the se arrargements. In fact, the immened a prince as a subordinate ruler, and conferred quivalent of the name Lanke svara.
the Pandya country were known by the name of name with that of the former rulers of the territory app cinted to rule over Kerala was known as ColaCola-Ganga. We also find that the Cola-Pandyas hus, we are in a position to understand the name of the Cola prince installed in Lanka. Cola is his Llly applied to a ruler of Lanka. Just as the Cola Pandyas, this ruler of Lanka took the consecration the South Indian records that these subordinate cially to issue orders dated in their own years of
a positicn to understand how our record from of the subordinate ruler at Polonnaruva. This e that the manner in which the Colas administered the Pandya, Kerala and Ganga countries.
espects. It refers to the deliberations of the local med by the Colas as Rajaraja-caturvedimangalam : was later changed to Vijayaraja-caturvedi-marcm Polonnaruva after defeating the Colas. Our ct in which Kantalai was situated. This name is I. Further, an irrigation channel in that area is mably after Rajendra I, one of whose numerous
55

Page 164
titles was Vikramacolan. It appars that the loc Six 'kacus' or pieces of money for the repair of Vikramacolan-vaykkal. Unfortunately the reco clear.
Another Cola inscription, which may be r Dutch Fort Hammenhi-l in the Kays Harbour. originally set up at Mato tam, in the Mannar Di scribeds one and other bicks from Mato tam t Himmenhil. Although this insc.ip, ion is fragm time the name of the Cola general who led the s' whole of Lanka' under the Cola sway. This gen here as the one who conquered the whole of Lank his treasures'. Our record thus becomes the only Maninda V, king of Lanka at the ime of the Cola with their treasures to Scuth Incia by the Cola Culavansa, the Pali chronicle which gives detailso of Lanka was also taken away as a captive is a fi capture is referred to in some sources.
Of the several other Cola inscriptions disco be mentioned here. These relate to one of the anc forgo ten. Trincomalee is now well-known among that stood there for a long time till it was pulled di But there was also another famous temple, the Mac by the Portuguese. Its memcry is preserved only which were not taken seriously by scholars. Now Trincomalee town establish for the first time the his information relating to it.
Some of the other inscriptions discovered in deserve mention. One is a Brahmi inscription on a archaeologists from the Pennsylvania Universiy M. discovered in Jaffna and the oldest of the inscriptio) discovered in the Jaffna Fort becomes the oldest Ta is also the only Cola inscription originally set up comes from a tea boutique' in Jaffna town. The formed part of one of the buildings erected at Nall destroyed the city of Nallur in the seventeenth cen its present site, where subsequently it was built into record is dated in a regnal year of Parakramabah preserved portion. It is known from the literary sc powerful Kotte kingdom in the reign of Parakram who ruled at Nallur for some time as viceroy. But firmation of Parakramabahu's overlordship of Jaffna of Parakaramabahu VI have been discovered at N Mulnesvaram in the western coast and in Jaffna, a emperor of the Island.
5

assembly of Kan alairret and decided to allocate yme watercourses of the irrigaticn channel named is damaged at this point and the details are not
garded as fairly important, was discovered at the Tne contents of this record indicate that it was trict. It appears that the Dutch removed this inKayts by boat and used them in repaining Fort ntary, the preserved portion gives us for the first ccessful campaign of A.D. 1017 and brought he ral, Jayankonta Cola Muventa Velar, is described a and took away the King cf Lanka, his queen and inscriptic n in Sri Lanka menticnirg, the fact that conquest of 1017, and his queen were taken away ommander. It thus confirms the account of the the Cola conquest. That the consort of the King ct that is not mentioned elsewhere, although her
vered in the Trincomaleedistrict in 1972, iwo may ient Saiva temples cf Tincomalee, now lost and the Hindus for the renowned Konesvaram temple own by the Portuguese in the seventeenth century cayesvaram, which was also presumably destrcyed in some late legendary accounts of Tincc malee an inscription fcm. Nilave li and amicthe fic, m, the tolicily of this venerated shrine and provide some
the Jaffna District within the last few years also potsherd unearthcci at Kantarodai by a team of useum. This is the cnly Brahmiinscription to be is discovercd in that dist1ict. A pillar inscripticn milinscription to come to light in that district. It there to have come to light. A third inscription stone on which it is inscribed appears to have ur in the fifteenth century. The Portuguese who ury were probably responsible for its removal to he floor of the tea "boutique'. This fragmentary L VI of Kotte, whose full titles are given in the rces that the Jaffna kingdom was annexed to the bahu VI by his adopted son Sapumal Kumaraya This is the first time that we get epigraphical conIt is interesting to note that Tamilinscriptions aim mana in the southern end of Sri Lanka, at l of which go to confirm his claim that he was.

Page 165
ΝΟΤ
1. This is the text of a talk broadcast over Broadcasting Corporation on 31st July, 1973.
2. Several of these records were brought to we with my friends. In the Jaffna District I was as Mr. A. Kandiah (Retired Curator, Jaffna Museum), an Assistant Lecturer in the Department of History the Trincomalee District Mr. Gunasingam and Mr. Village Committee) were of immense help to me. inscriptions of this district. Mr. S. Kanagaiyan (' students assisted me in the Vavuniya District. The
3. Three more Tamil inscriptions and a Si, malee District by Mr. Thanbirajah and Mr. Gunasi not yet knat lyn.
*தமிழுக்கென்று உண்மையில் உழைத்தவர்களில் குறிக்கின்றேன். அவர்கள் ஜீமான்களான ஆறுமு தரம்பிள்ளே, கனகசபைப்பிள்ள்ை என்பவராவர். அறத்துறந்து நல்ல பதவி பெறுவதை வெறுத்துத் வதே பிறந்த பயன் எனக்கொண்டு இரவும் ப இடையூறுகளை அவர் பொருட்படுத்த வில்லை. யா சாலையை நிலைநாட்டி அதை நடத்தக் கையி உதவியைக்கொண்டு நடத்தினர். சிதம்பரம் சைவ படி செவ்வனே நடைபெறுகின்றது. இவர் அச்சி தனை? அவர் ஒருவர் முயற்சியால் தமிழ்க்கல்வி
அவதரிக்கச் செய்யவேண்டுமென்று கடவுளைப் சபைப் பிள்ளை இருவரும் உத்தியோகத்திலிருந்த யாவர்? இவர்கள் மேகத்தைப் போல ஒரு வ வார்கள்.
- K, S. பூரீநிவாஸயிள்ளே, தமிழ்வு
5

ES
the English Service (Channel One) of the Sri Lanka
light as a result of systematic surveys conducted by isted by Mr. V. Sivasamy (Lecturer, Jaffna College), ind my former student Mr. S. Gunasingam (formery University of Sri Lanka, Peradeniya Campus). In S. Thambirajah (former Chairman of the Sambaltiyu Credit goes to the latter for having found the new eacher, Vidyananda College, Mulliyavalai) and his Inks are gratefully offered to all of them.
hala inscription were brought to light in the Trncogan in 1973. The contents of these inscriptions are
காலஞ்சென்ற சில பெரியோர் பெயரை சிண்டு கநாவல்ர், பாண்டித்துரைசாமி தேவர், தாமோ .ஆறுமுக நாவலர் பொன் நிலமாதரா சையை * தமிழையும் கடவுளிடத்தன்பையும் பரவச் செய் கலும் உழைத்தனர். தம் முயற்சிக்கு நேரிட்ட வண்ணுர்பண்ணையில் சைவப் பிரகாச வித்தி ) பொருளில்லாமல் அரிசிப் பிகையெடுத்து அதன் ப் பிரகாச வித்தியா, சாலை யாரும் கொண்டாடும் b பதித்து வெளியிட்ட தமிழ்ப் புத்தகங்கள் எத் எவ்வளவு பரவியது? பல ஆறுமுக நாவலர்களை பிராத்திக்கின்றேன். தாமோதரம் பிள்ளை, கனக வராயிருந்தும் தமிழுக்கு உழைத்ததை அறியாதார். கைக் கைமாறும் வேண்டாது உழைத்தவர்களா
ரலாறு, முற்பாகம், 8ம் பதிப்பு, 1960, பக் 49

Page 166
* யாது மூரே யாவரு
தீது நன்றும் பிறர்தர நோதலுந் தணிதலு ட சாதிலும் புதுவ தன்ே
இன்னு தென்றலு மில வானந் தண்டுளி தலைஇ கல்பொரு திரங்கு மல் நீர்வழிப் படூஉம் புனை உறைவழிப் படூஉ மெ.
பெரியோரை வியத்தலு சிறியோரை இகழ்த வ

வ் கேளிர்
6лтДгfr 0வற்ருே ரன்ன ற வாழ்தல் 2 மிலமே முனிவின் GBLD மின்னெடு இ யானது லற பேர்யாற்று ாபோ லாருயிர் ன்பது திறவோர்
மாகவின் மாட்சியிற்
மிலமே தனினு மிலமே 9
" புறநானூறு
及5教

Page 167
With Best
Frc

Compliments
)m
Joseph

Page 168
L0L0L0L0L0L0L0L0L0YL0L0L0L0L0L0L0LL0LYYY000Y0L0L0Y0L
d
; “தாமின் புறுவ து
O O ; காமுறுவா கறறற
争 8 d i The Maharaja Or MAHARAJA EB 8 54, Banksha i COLOM
8
8
i “கேடில் விழுச்செல்வா
மாடல்ல மற்றை யவை
The Cheapside 8 94, 2nd Crocs Street
Colombo
མཁས་མཁས་པ་ཐམས་མཁས་ 3888 88088-0000808 M

030003000800
லகின் புறக்கண்டு
ந்ெதார்”
'ganisation, Ltd.
UILDING ill Street
[BO)- 1
k கல்வி யொருவற்கு
''
L0LYYYLLL00LYYLLLLLL00LLLL0L0LYLLLYYLLLLLL0LLLLL0YYYL0LLLLLLYLYLLL

Page 169
| + +QS 후姆舞 å ●玲品--š历애 = 长儿娜€9院 != }<费红
计|| Q肥。可số ị ><ť () sĩ số能 | 知
々々々々々々々々々々々々eゃ々々々々る*****る々々々*******る々々々々々々々々々々々々る**る****る●●●●●●●●●●●●●●●●る●●●●●●●●●●●●●●●●●●●●●●る*るるる

Compliments
O
HOUSE
Gem Merchants
it, Colombo - 11.
|jල්ඩ් හවුස්
T6) ஹவுஸ்
inteed and genuine
b0000000000000000 peo000000000000000

Page 170
3 a .3,
With The C
O
CEY POLYTHENE |
Manufacturers and RC
Polythene Filu
P. B. Awis Per
Katubedda,
Phone: {72-473
 

ompliments
INDUSTRIES
togravure Printers of
m and Bags
era Mavvata,
Moratuyya
Cable: fyELPAK

Page 171
令令令令令令夺令令令令争夺令A●令令令令争令令令夺夺令令夺令夺夺命令令令
CEYLON THEA
WITH OVRR 45 YEAR
CoNTINUES
THE BEST IN CINEM
8000000000000000049084000800000000
- Specialists in Decca Sa
Manufactured by
Puspha
COLOM
Sole Distributor.
Vilasimi &
148, KEYZER STIRE
PHONE:- 24719, 27196.
8000808888-888-888-888-9899888-8088-88088

TRES LIMITED
IN SHOW BUSINESS
"O PROVIDE
A ENTERTAINMENT
>令令令令争●争令令命令令争夺令令令夺令夺夺*●呼令●令令●●争夺峰é
aree &) Cotton Pyiama
Industries,
IBO-15
Company
l, COLOMBO - 11.
88.888888-888-888-888.8889 00000000-00000

Page 172
TAJMAHAL PRINTING II
PRPINTERS FOR
Lanka Salu
“MULL TAJ” PRI.
''TIPICON PRIN
Names that denote qual
Distributors:-
SAGAR C
105, SECOND C
COLOM
th
Oj
V
المه
95
CC

TEXTILES NDUSTRIES
Sala Limited
WTED SA REES
JTED FABRICS
ity in Printing Textiles
:OMPANY
ROSS STREET, 3O-l.
Vith
le
Best Compliment
f
harges
s 2nd Cross Street,
LOMBO-1 1.

Page 173
S. P. பெரியண்கு
180, இரண்டாம்
கொழு
தொலைபேசி 25738
ஒளிவள நாட்டில் இ வளமிளமையோடு
டொலா கே
14, டாம் வீதி
வrசனைத் திரவி அலுமினிய உ
 

ளிப் பு
ணு பிள்ளை & Co,
குறுக்குத் தெரு
bւկ-11.
ன்று ஆயும் மொழி
என்றும் விளங்குக
ார்ப்பரேஷன்
கொழும்பு-11.
ய விற்பன் னரும்
பத்தி விற்பனையாளரும்.

Page 174
SS L00L0LLL0LYYLL0LLLL0LL0LYL000YYYL0YYYSL00YYYYLY0Y0AYL0
ίδιεh έήe (
AWDAS G. LaMist
Manufacturers of 'WE
Tabl
561 K. K.
U AFF
8000000000000-00-9000988

々●ベ*ゃ々る々*令●●●●●●●●●●●●●*●●●●●●●●*****
***************************} *********る多*今る****るを今るやゆゆき�
**&令&シ***************るゃ&るるるるをやる事ぐを多る**
le
L. BRAND'' Camphor
ets
‘888.809000p8088000-eeee
S. ROAD
cmpt
NA
s
f
RYNGAALS QN'RSD

Page 175
●●●●●令伞令令●令令令令令●令
»r+-0-+00-0-0 ↔
தமிழன்னைக்கு
எங்கள் ஈ
கலந்த
வணக்கம்
தமிழ்த்தாய்
இறும்பூதெய்ய
நடைபெறும்
மாநாடு
சிறப்பு
6.
ரத்தினம்ஸ் 146, 2ஆம் குறுக்குத் தெரு
கொழும்பு-11
தொலைபேசி- 20406.20361
. سمیہ ۔ سہ ۔ & B640000-0000000806000-8-8-0-0-0w)r 8008-0-38&

夺命令争妙令夺今令●夺令中令令令争夺事令夺令令令令夺岭令令令令令令令令
5ன்றி
XK
Maheswari Textile 196, 2nd CROSS STREET COLOMBO-I
多
|A)
ாழ்த்துகிறேம்
|
:
: 3.
W 略 : . . م . . . . . ; ۔ “ . . مغل : ....... : خد::::ح یہ بغیر مت " なぐゆ*や●やぐ*をふややぐふゃゃや****や********やふ , , હરે

Page 176
8000-00--00000000000000000000000000p8. తగ్గి
& :
மாநாடு
சிறப்பாக
நடைபெ ' 薪 : எமது : நல்
i
956) T is
vy 134,
தொலைபேசி எண் : 25250 : wh ¢ LLLLLL LLLLLLLLMLee LLLeeLeLMLeS
நடக்கப்போகும்"
தமிழ் ஆராய்ச்சி
நல்லமுறையில் த
நமது நல்வாழ்த்
லலிதா நகைமாளி
99, 1 0 1, 103, 105
செட்டியார் தெரு, கொழும்பு-11
8.
哆
t
(
ళ
令令必必令令必必必必令令》分令*必令令必必4必必令教郊

LLLLLLLLL0LLL0LL00L0LLLL0LLLLLLL0LLLLL00
வாழ்த்துக்கன்
டிறேடிங் கம்பெனி
இரண்டாம் குறுக்குத் தெரு
கொழும்பு-11
LLLLSLLLSLLLL LLL LLLSLLLeLLMS
தான்காவது
Lofтап (5
டத்தேற
துக்கள்
6
& 令 &
தொலைபேசி 23691 ”、 &
8.
*々々々*****々々々●●●●●●●*************や●●

Page 177
沙令令令令令令*令令●●●●●●●44心必4●●●●●●●●●●●●
960
l
Λ டெக்கா சா
21, 3-ம் குறு
கொழு
‘* தேமதுரத் தமிழே பரவும்வகை செய்
மா. கு. சுப்
ll2, Living
கொழு
8000-0000-00-000000000000000008080 88s

●●●●●●●●● *ふぶ・・・ ふ* や****や●**や●●●●●**●
மக்குத் தெரு,
ம்பு-1.
g 3.
●
*
ாசை உலகமெலாம்
தல் வேண்டும் ?
பிரமணியம்
8000000000000008088-898406-00000080t

Page 178
v-\^^^^^^^^^^^^^^^

Page 179
With the besi
fr
f. S. Salgara
6, WOLFEN D1
COLO TPHONE:- 32221.
* கற்க கசடறக்
னிற்க வதற்கு
RA

Compliments
91ገገ
MBO- I II.
கற்பவை கற்றபி
5 தக 99
M BROS
140, MAIN STREET
pillas Bro.

Page 180
Big or sпаІН we can handle *
ܕ ܬܐ
ALL YOUR
SRI LANKA (CEYLON) TOURS
As one of Sri Lanka's most experienced EXPRESS can organise all your tors, it
We offer a wide and varied range of sp of special INTEREST Tours to suit the p
We hair, the right connections World-wic portation services-Contact our Agents in
FRAJMAL TEEliyalmuth 2131, Power
BAFFINA
GEYLON EXPRES
12 Y. M.
COLO
Теіерһопе 20020. Carlo777 HC.
Grari - EXPRESS - Mr Lavinia.
暫
 

F#557455 ESTABLISHED TO PROMOTE FRIENDSHIP, UNDERSTANDING AND COOPERATION AMONG PEOPLES WARYING AS TO RACE, NATION OR CULTURE.
Travel Agents and Tour Operators CEYLON
matter what size the group.
ecially tailored tours together with a series a late of the most travel-jaded visitor.
le and with all air-lines, hotels and transTaffnq : s
ENTERPRISES, In Malihai,
House Rond,
8
8
پيلي
S - World Trave
B. A. Building MBO