கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய சுவடுகள்

Page 1


Page 2


Page 3

வீரகேசரி பிரசுரம்: 68
குருதி மலை
தி. ஞானசேகரன்
Ax த.பெட்டி 469 கொழும்பு,

Page 4
KURUTHIM A LA I
Written by: T. Gnanasegaran
'Rajasthani", Punnalaikadduvan South.
PRICE Rs. 6-50
Published by
V RAKE SAR P.O. Box 160, COLOMBO.
Sole Distributors:
FIRST EDITION
JULY - 1979
COPYRIGHTS
RESERVED WITH THE PUBLISHERS
VRAKESART 6 8 PIRASURAM
êxpress "lewspapers (0eylon) A2ld.
185, GRANDPASS ROAD, CC)LOMBO - 14.

ஆசிரியர் உரை
Uழ்ப்பாணப் பிர தேசத்தைப் ப ைகப் புல மாகக் கொண்டு எழுதப் பட்ட "புதிய சுவடுகள்" என்ற எனது முதல் நா வ லுக்கு வாசகர்கள் தந்த பேரா த ர வின் இ னிய நினைவுகள் என் நெஞ்சிலி ருந்து மங்குவதற்கு முன் னரே எனது மலையக நாவ லான ' குருதிமலை " யும் வெளிவருவது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரு கிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தொழில் நிமித் தம் மலையகத்தில் வாழ்ந்து மலையக மக்களின் இன்ப துன் பங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டிய தால் அவர்களது பிரச்சினைகளை, உணர்வுகளை, வாழ்க்கை முறைகளை நன்கு புரிந்துகொண்டு இந்நாவலைப் படைத் திருக்கிறேன்.
மலையக மக்களின் வாழ்க்கை ஆரம்பகாலந்தொட்டே சிக்கல்களும் துன்பங்களும் நிறைந்ததாக இருந்து வந்தி ருக்கிறது. அந்நியர்களின் ஆதிக்கத்தில் தேயிலைத் தோட் டங்கள் இருந்தபோது அவர்களின் கெடுபிடிகளில் சிக் கித் தவித்த தோட்டத் தொழிலாளர்கள் தமது விடிவை நோக்கி ஏக்கத்துடன் காத்திருந்த வேளையிலேதான் தேயிலைத் தோட்டங்கள் யாவும் தேசியமயமாக்கப்பட் L-6ð -
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியின் பயனகத் தமக்கு ஒரு நல்ல எதிர்காலம் ஏற்படப்போகிற தென தோட்டத் தொழிலாளர்கள் நம்பினர். அதே சம யத்தில் தோட்டங்களை அண்டியுள்ள கிராமப்புற மக்க ளும் தமது சுபீட்சமான வாழ்வை எதிர்பார்க்கத் தலைப்

Page 5
பட்டனர். இவ்வேளையில் அரசியல்வாதிகள் சிலர் சந் தர்ப்பவாதிகளாக மாறித் தமது பதவிகளைத் துஷ்ப்பிர யோகம் செய்யத் தொடங்கினர்.
இதன் காரணமாக இரு சமூகங்களைச் சார்ந்த மக்க ளிடையே மனக்கிளர்வுகள் ஏற்படத் தொடங்கின. ஒரு சில தோட்டங்களிலிருந்து தொழிலாளர்களை வெளி யேற்றுவதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன, இதனை எதிர்த்து நின்ற தொழிலாளர்கள் சித்திரவதைக் குள்ளானர்கள். அவர்களது உடமைகள் குறையாடப் பட்டன; இருப்பிடங்கள் தீயில் வெந்து சாம்பராகின.
இவற்றையெல்லாம் நேரில் பார்த்தபோது எனது நெஞ்சு பதறியது. தோட்டத் தொழிலாளர்கள் இந் நாட்டு மண்ணின் மேல் வைத்துள்ள பாசம் எனது இதயத் தைத் தொட்டது. அவர்களது உரிமைப் போராட்டத் தில் ஒரு தொழிலாளி வீரமரணம் எய்தியது என்னை மெய் சிலிர்க்க வைத்தது. இதனுல் எனக்கு ஏற்பட்ட உளத் தாக்கங்களின் விளைவாகவே இந்நாவல் உருப்பெறத் தொடங்கியது.
நான் இந்த நாவலை எழுதுவதற்கு முன்னர் மலையகத் திலுள்ள சில கிராமங்களுக்கும் தோட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு, அங்குள்ள மக்களு டன் அளவளாவி ஒரு சில விஷயங்களில் தெளிவு பெற வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் என்கூடவே வந்து இந்நாவலின் ஆக்கத்திற்கு ஊக்கமூட்டிய நண்பர் திரு. எஸ். வி. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது முதல் நாவலை வெளியிட்ட சிறிது காலத்தி லேயே இந்த நாவலையும் வெளியிட முன்வந்துள்ள “வீர கேசரி ஸ்தாபனத்தினருக்கும், குறிப்பாக புத்தக வெளி யீட்டு இலாகா நிர்வாகியும் எனது மதிப்புக்கும் பேரன் புக்கும் உரிய வருமான திரு. சி. பாலச்சந்திரன் அவர் களுக்கும் எனது இதயபூர்வமான நன்றி என்றும் உரியது.
*ராஜஸ்தானி", தி. ஞானசேகரன் புன்ஞலக்கட்டுவன் தெற்கு,
6-7. 1979,

குருதி மலை
அத்தியாயம் ஒன்று
பனிமூட்டத்திற்குள் அமிழ்ந்துகிடந்த அந்த மலைப் பிரதேசத்தில், காலைக்கதிரவனின் ஒளிக்கீறல்கள் தூரத்தே தெரிந்த மலையுச்சியின் பின்னலிருந்து பரவத்தொடங்கின. பஞ்சுக் கூட்டங்கள் போல் எங்கும் பரவியிருந்த பனிப் புகார்கள் சிறிது சிறிதாக விலகத் தொடங்கின.
கொழுந்து மடுவத்தை நோக்கி வீரய்யா நடந்து கொண்டிருந்தான். முதன்நாள் இரவு அவனும் அவனது நண்பர்களுமாகச் சேர்ந்து மடுவத்தின் முன்னுல் அமைத்த அலங்காரப் பந்தல் இப்போது அழகாகக் காட்சியளித் துக்கொண்டிருந்தது. பந்தலின் முகப்பில் கட்டியிருந்த வாழை மரங்களும், வண்ணக் கடதாசிகளும், கரத்தை ருேட்டுவரை தொங்கவிடப்பட்டிருந்த தோரணங்களும், அந்த அதிகாலைப் பொழுதின் இளங்காற்றில் அசைந் தாடிக்கொண்டிருந்தன.
மடுவத்தை வந்தடைந்த வீரய்யா கையிலே கட்டி யிருந்த கடிகாரத்தை ஒரு தடவை திரும்பிப் பார்த்தான், “ரொம்ப நேரமாச்சு, இன் னு ம் ஒருத்தனையும் காணுேம்'-முணுமுணுத்துக்கொண்டே தான் கொண்டு வந்த பூக்களை மடுவத்தின் அரைச் சுவரின்மேல் வைத்து விட்டு காரத்தே தெரிந்த, லயங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினன். خشس۔

Page 6
8 குருதிமலை
சில இளைஞர்களும், சிறுவர்களும் மடுவத்தை நோக்கி ஒற்றையடிப் பாதையில் வருவது பனிமூட்டத்தினுாடே மங்கலாகத் தெரிந்தது.
இன்னும் சிறிது நேரத்தில் செய்துமுடிக்கவேண்டிய வேலைகள் யாவும் அவன் மனக் கண்முன் ஒன்றன்பின் ஒன் ருகத் தோன்றின.
இளைஞர்கள் இப்போது மடுவத்தை வந்தடைந்தனர் ‘என்ன வீரய்யா, மொதல்லயே வந்திட்டியா? நான் போயி ஆளுங்கெல்லாத்தையும் கூட்டிக்கிட்டு வர நேரமா யிருச்சு' என முன்னல் வந்த இளைஞன் அசட்டுச் சிரிப் புடன் கூறினுன்,
"'என்னடா ராமு, நீயே இப்புடிச் சொனங்கிவந்தா எத்தினை மணிக்குத்தாண்டா இந்த வேலையெல்லாஞ் செஞ்சு முடிக்கிறது?. ரொம்ப வேலை கெடக்கு. கண்டக் கையா பங்களாவிலையிருந்து நாக்காலி எடுத்துவரணும் , கடைக் குப்போய் சோடாப் போத்தல் கொண்டுவரணும். இந்த எடமெல்லாங் கூட்டித் துப்புரவாக்கணும்.' என்ருன் வீரப்யா .
'அவசரப்படாதே வீரய்யா. ஐஞ்சு நிமிசத்தில எல்லா வேலையும் செ ஞ் சு முடிச்சுப்புடலாம். நான் இப்பவே போயி நாக்காலி கொண்டு வர் ரேன்' எனக் கூறிய ராமு தனது நண்பர்களில் இரு வரை அழைத்துக் கொண்டு கண்டக்டரின் பங்களாவை நோக்கிப் புறப்பட் LT 65T.
பந்தலின் நடுவே போடப்பட்டிருந்த மேசையின்மேல் வெள்ளைத் துணியொன்றை விரித்து அதன் மத்தியில் பூக் கள் நிரம்பி 1 செம்பொன்றை எடுத்து வைத்தான் அங்கு நின்ற ஓர் இளைஞன்.
சிறிது நேரத்தில் ஆண்களும், பெண்களும், சிறுவர்களு மாக அநேகர் அந்த மண்டபத்தில் வந்து கூடினர். சிறு வர்கள் ஒடியாடுவதும், கூச்சல் போடுவதுமாக இருந்த னர். ஆண்களும் பெண்களும் கூட்டங் கூட்டமாக நின்று

குருதிமலை 3.
எதைப்பற்றியெல்லாமோ வாயோயாமல் கதைத்தனர். அவர்கள் எல்லோரது முகங்களிலும் மகிழ்ச்சிநிறைந்திருந்
திது.
வீரய்யாவின் தங்கை செந்தாமரை அப்போது ஆரத் தித் தட்டுடன் மேசையருகே வந்தாள். செந்தாமரைக்குப் பதினேழு அல்லது பதினெட்டு வயதுதாணிருக்கும். தோட் டத்திலிருக்கும் பெண்களில் அவள்தான் அதிக அழகுள்ள வள் என்ற காரணத்தினல், விழாவுக்கு வரும் பிரமுகர் களுக்கு ஆரத்தி எடுப்பதற்கு அவளை ஒழுங்கு செய்திருந் தனர். கொழுந்து நிறைந்த தேயிலைச் செடியைப்போன்று தளதளப்புடன் காணப்பட்ட அவளது வாளிப்பான உட லில் ஒரு வகை பூரிப்பு நிறைந்திருந்தது. அவள் தன்னே அலங்கரித்த விதம் அவளது அழகுக்கு மேலும் அழகைக் கொடுத்தது. அங்கு நின்ற இளைஞர்கள் பலரின் கண்கள் அவளது அழகை அடிக்கடி இரசித்துக்கொண்டிருந்தன. ** என்ன வீரய்யா! எல்லா வேலையளும் செஞ்சு முடிச் சிட்டீங்களா?' எனக் கேட்டபடி அங்கு வந்த மாரிமுத் துத் தலைவர் பந்தலை ஒரு தடவை சுற்றுமுற்றும் பார்த் தார்.
"என்னங்க தலைவரே, நீங்கதானே மொதல்ல இங்கை வந்து நின்னு எல்லாத்தையும் கவ னி க் க லு ம். நீங் களே பிந்தி வந் தா எப்புடி?’’எனக் கேட்கவேண்டும்போல் வீரய்யாவுக்குத் தோன்றியது. ஆனலும் அவன் எதுவுமே கூருது த" வரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தான். நடுவிலே போடப்பட்டிருந்தமேசையைக் கவனித்த தலைவர், 'என்ன வீரய்யா இன்னும் மாலையெல்லாம் கொண்டு வரல்லியா?" என யோசனையுடன் கேட்டார்.
'இப்பத்தாங்க பண்டாரம் மாலையைக் கட்டிமுடிச் சாரு. கட்டிமுடிச்சவுடனயேநேரா எடுத்துக்கிட்டு வர் ரேன்’ எனக் கூறியபடி கையிலே கொண்டுவந்த மாலை

Page 7
4. குருதிமலை
களை மேசையின்மேல் இருந்த தட்டில் வைத்தான் அப் போதுதான் அங்கு வந்த செபமாலை,
‘'எத்தினை மாலை கொண்டுவந்திருக்கே?' எனக்கேட்ட படி மாலைகளைக் கையிலே எடுத்துப்பார்த்தார் தலைவர்.
*" மூணு மாலேங்க. ஒரு மாலை தேயிலைக் கொழுந்தி லேயே கட்டியிருக்குங்க.." என்ருன் செபமாலை.
அப்போது தலைவரின் அருகே வந்த கறுப்பண்ணன் கங்காணி, ‘என்னங்க தலைவரண்ணே, மூணு மாலை போதுங்களா?. தொரைக்கு ஒரு மாலை போடணும். அப்புறமீ கண்டக்கையா வருவாரு. அவருக்கு ஒண்ணுஇனி வர்றவங்களுக்கு வேறு மாலை வேணும்." எனக் கூறியபடி மாலைகளை உற்றுப் பார்த்தார்.
கறுப்பண்ணன் கங்காணிக்குத் தலைவரையொத்த வயதுதான் மதிக்கலாம். ஆனுலும் தலையில் வழுக்கை விழாததால் அவர் தலைவரை விட சற்று இளமையான வர் போலத் தோற்றமளித்தார்.
'நீங்க கொஞ்சம் சும்மா இருங்க கங்காணி. இன் னிக்கு  ெத ரா ரை, கண்டாக்கையாவுக்கெல்லாம் மாலை யில்ல; கூட்டத்துக்கு வர்றது நம்ப மந்திரி தானே- அவ ருக்குப் போடத்தான் மாலைகட்டியிருக்கு’ எனச் சற்றுக் கண்டிப்பான குரலில் கூறினன் வீரய்யா.
"அப்புடியா வெசயம்! இது என்ன கொழுந்திலை கட்டியிருக்கிற மாலை. ஆள் ஒசரத்துக்கு இருக்கும்போல தெரியுது. இந்த மாலையை யாரு மந்திரிக்குப் போடுவாரு?" எனக் கேட்டபடி பெரிதாக இருந்த மாலையைக் கையில் எடுத்து உயர்த்திப் பிடித்தவாறு ஆச்சரியம் ததும்பக் கண்களை அகல விரித்தபடி கேட்டார் கங்காணி.
'அந்த மாலையை நம்ப தலைவர்தான் மந்திரிக்குப் போடணும். தொழிலாளர்கள் சார்பா தலைவரு போடுற தாலேதான் அந்த மா?லயைக் கொழுந்தாலேயே கட்டி

குருதிமலை 历
யிருக்கோம்' எனக் கூறிவிட்டு புன்னகை செய்தான் வீரப்யா.
பக்கத்தில் நின்றிருந்த தலைவர் அதைக் கேட்டுத் தலையை ஆட்டியபடி அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த் தார். அவரது பற்கள் வெற்றிலைக் காவி படிந்து கருமை யாகத் தேரிந்தன.
வீரய்யா ஒலிபெருக்கி சம்பந்தப்பட்ட வேலைகள் யாவும் முடிந்துவிட்டதா எனக் கவனிக்க மடுவத்தின் உள்ளே சென்ருன், அவனைத் தொடர்ந்து ராமுவும் செப மாலையும் சென்றனர்.
தோட்டத்து கண்டக்டர் அப்போது மேடையை வற் தடைந்தார்.
"சலாங்கையா" எனப் பணிவுடன் வணக்கம் தெரி வித்த கறுப்பண்ணன் கங்காணி, கண்டக்டர் அமருவதற் காக கதிரை ஒன்றை எடுத்துவந்து போட்டார்.
மூக்குக் கண்ணுடியைக் கழற்றி சேட் பொக்கட்டுக்குள் திணித்துக்கொண்டே கதிரையில் அமர்ந்தார் கண்டக் டர். பின்னர் தா னணிந்திருந்த தொப்பியை எடுத்து மேசையில் வைத்துவிட்டு, தனது நரைத்த தலைமயிரைத் தடவியவாறு அங்கு குழுமியிருந்தவர்களேக் கண்ணுேட்டம் விட்டார்.
"என்னுங்கையா தொரையை இன்னும் காணுேங் களே?" தலையைச் சொறிந்தவண்ணம் கண்டக்டரைப் பார்த்துக் கேட்டார் தலைவர்.
** இப்பதான் தொரை எனக்கு டெலிபோன் பண்ணி ஞரு. இன்னும் கொஞ்சநேரத்திலே வந்திடுவாரு" என் ருர் கண்டக்டர். -
**நல்லதுங்க! எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிருக் கோமுங்க. மந்திரிமாருங்க தோட்டத்துக்கு வர்ரது இது தாங்க மொதல் தடவை. தோட்டங்களேயெல்லாம் இண்ணை

Page 8
6 V, குருதிமலை
யிலையிருந்து அரசாங்கம் எடுத்திருச்சு. இனிமே நம்மஞக் கெல்லாம்விடுதலை கெடச்சமாதிரித்தாங்க’ எனக்குழைந்து கொண்டார் தலைவர்.
வெளியே நின்றிருந்த ஒரு சிறுவன் அங்கு ஓடி வந்து, 'ஐயா ஐயா நாட்டிலருந்து கூட்டமா ஆளுங்க வர் ருங்க' எனத் தலைவரைப் பார்த்துக் கூறினன்.
எல்லோரும் வெளியே எட்டிப் பார்த்தனர். மேடையருகே நின்ற செந்தாமரையும் ஆவலுடன் வெளியே பார்த்தாள்.
கிராமத்திலிருந்து தோட்டத்துக்கு வரும் ஒற்றையடிப் பாதையில் ஒருவர் பின் ஒருவராக பலர் வந்துகொண்டிருப் பது தெரிந்தது.
**ரெம்பப்பேர் வர்ருங்க. இங்கதான் வ1 முங்க போலையிருக்கு' என ஆச்சரியத்துடன் கூறினர் தலைவர்.
செந்தாமரையின் உள்ளம் ஒரு கணம் குதூகலத்தில் நிறைந்தது.
"இப்பவே மடுவத்திலே ஆள் நெறைஞ்சு போச்சு. அவங்களும் வந்துட்டாங்கன்ன நிக்கிறதுக்கே எடம் கெடையாது" என்ருர் கறுப்பண்ணன் கங்காணி வியப் புடன்.
சிறிது நேரத்தில் கிராமத்திலிருந்து வந்தவர்கள் மடு வத்தை வந்தடைந்தனர். அநேகர் மடுவத்தினுள்ளே நுழைய முடியாமல் வெளியிலேயே நின்றனர். பார்த்த இடமெல்லாம் தலைகள்தான் தெரிந்தன.
செந்தாமரையின் கண்கள் சனக் கூட்டத்தைத் துழா வின. ஆவலுடன் அவளது கண்கள் சுழன்று வந்தன.
கிராமத்திலிருந்து சற்றுப் பருமனன தோற்றமுடைய ஒருவர் முண்டியடித்துக்கொண்டு மேடையருகே வந்தார். அவரைப் பார்த்ததும், ** அட, நம்ப பண்டா மாத்தியா

குருதிமலை * 7 -
கூட கூட்டத்துக்கு வந்திருக்காரு. மந்திரி வாருருன்னு நாங்க ஓங்களுக்கு சொல்லக்கூட இல் லியே." என வியப் புடன் கூறினர் தலைவர்.
"ஏங் தலைவர், நீங்க எங்களுக்கு சொல்லாட்டி நாங்க கூட்டத்துக்கு வரக்கூடாதா?’ என அசட்டுச் சிரிப்புடன் கேட்டார் வந்தவர்.
‘அப்பிடியில் லீங்க மாத்தியா, மந்திரி நம்ப தோட் டத்துக்குத் தானே வாருரு; நாங்க தானே கூட்டத்துக்கு ஒழுங்கு செஞ்சிருக்கோம். அதனல தாங்க கேட்டேன்.""
** அப்புடி சொல்லவேணுங் தலைவர். இப்ப தோட்ட மெல்லாம் அரசாங்கம் எடுத்திருக்குத்தானே. இப்ப நீங்க நாங்க எல்லாங் அரசாங்கத்து ஆள்தானே. நம்ப எல்லாத்துக்கும் ஒரே மந்திரிதாங். நம்ப மந்திரி வந்தா நாங்க எல்லாங் வரத்தானே வேணுங்.'
பண்டா முதலாளியைத் தொடர்ந்து அந்த இடத் துக்கு வந்து சேர்ந்த கிராமசேவகர் தனக்குத் தெரிந்த தமிழில் கூறிவிட்டுச் சிரித்தார்.
அப்போது தோட்டத்துரையின் கார் விரைந்து வந்து மடுவத்தின் முன்னல் நின்றது. கூட்டத்தில் இப் போது சற்று அமைதி நிலவியது.
கண்டக்டர் எழுந்து காரின் அருகே சென்று "குட் மோனிங்" எனத் துரைக்கு வந்தனம் தெரிவித்தார்.
‘மந்திரி இன்னும் வரவில்லையா?" என ஆங்கிலத் தில் கேட்டபடி காரிலிருந்து இறங்கினர் துரை.
‘இன்னும் வரவில்லை சார். அடுத்த தோட்டத்தில் நடைபெறும் கூட்டத்திலே பங்கு பற்றிக்கொண்டிருக்கிரு ரென இங்கு வந்தவர்கள் கூறினர்கள். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவாரென நினைக்கிறேன்’ எனக் கூறிய கண்டக்டர் துரையைப் பந்தலுக்கு அழைத்துச் சென்ருர்,

Page 9
8 குருதிமலை
துரை அங்கு குழுமியிருந்த சனக் கூட்டத்தைப் பார்வையிட்டவாறு நடந்து சென்று கதிரையில் அமர்ந் தார்.
சிறிது நேரத்தின் பின்னர் ஒரு காரும் அதனைத் தொடர்ந்து 'ஜீப்" வண்டியொன்றும் ஒன்றன்பின் ஒன்ருக மடுவத்தின் அருகே வந்து சேர்ந்தன.
மாரிமுத்துத் தலைவர் அவசர அவசரமாக பந்தலின் நடுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மைக்கின் முன்னல் சென்று, "அமைதி அமைதி, மந்திரி வந்துவிட்டார். எல் லோரும் அமைதியாக இருங்கள்" எனப் பதட்டத்துடன் கூறினர்.
பட்டாசு வெடிகள் பலத்த சத்தத்துடன் முழங்கின. துரையும் கண்டக்டரும் அங்கு குழுமியிருந்தவர்களும் மந் திரியை எதிர்கொண்டு அழைப்பதற்காக காரின் அருகே சென்றனர்.
கறுப்பண்ணன் கங்காணி பெருமிதத்துடன் மாலைத் தட்டை ஏந்தியவாறு முன்னே சென் ருர்,
துரை முதலில் மந்திரியின் கையைப் பிடித்துக் குலுக்கி அவரை வரவேற்றுவிட்டு, தட்டில் தயாராக வைக் கப்பட்டிருந்த மாலை ஒன்றை எடுத்து மந்திரிக்குச் சூட்டி ஞர். அப்போது பலத்த கைதட்டலும் ‘மந்திரி வாழ்க’ என்ற வாழ்த்தொலியும் வானைப் பிளந்தன.
அடுத்து கண்டக்டர் சென்று மாலை அணிவித்து விட்டு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். மீண்டும் கர கோஷமும் "மந்திரி வாழ்க" என்ற ஒலியும் பலமாக ஒலித் தன. s
மக்கள் ஒருவரோடொருவர் முண்டிய டி த் து க் கொண்டுஎப்படியாவது மந்திரியைப் பார்த்துவிடவேண்டு மென்ற ஆர்வத்துடன் முன்னே சென்றனர். மந்திரி எல்

குருதிமல் 9
லோரையும் பார்த்துக் கரங்கூப்பி வணக்கம் தெரிவித் தார். பண்டா முதலாளி அவரது கண்ணில் பட்டபோது மந்திரி அவரைப் பார்த்து அறிமுகச் சிரிப்பொன்றை உதிர்த்தார்.
ஒலிபெருக்கியில் பேசிவிட்டு மேடையிலிரு ந் து இறங்கி வந்த மாரிமுத்துத் தலைவர், மந்திரிக்கு மாலை அணிவிப்பதற்காக முன்னே வருவதற்கு எத்தனித்து, சனக்கூட்டத்தின் மத்தியில் அகப்பட்டு முண்டியடித்துக் கொண்டிருந்தார்.
தலைவரைக் காணுத கறுப்பண்ணன் கங்காணி கையில் இருந்த மாலேத் தட்டுடன் அங்குமிங்குமாக அலை மோதிய வண்ணம் இருந்தார்.
அதனைப் பார்த்த செந்தாமரை தன்னை மறந்து களுக்கென்று சிரித்தாள்.
தட்டுடன் மாலையை வைத்துக்கொண்டு அதனை மந்திரிக்கு அணியாது தடுமாறிக்கொண்டிருந்த கறுப் பண்ணனைப் பார்த்ததும் பண்டா முதலாளிக்கு ஒரு யோசனை தோன்றிய்து. திடீரெனத் தட்டிலிருந்த மாலையை எடுத்து மந்திரியின் கழுத்தில் அணிந்து விட்டு பலத்த குரலில், "அபே மந்திரி துமாட்ட ஜயவேவா" எனத் தன்னிரு கைகளையும் உயரத் தூக்கிக் கோஷமிட் t-fl fT -
அவரைத் தொடர்ந்து அவருடன் வந்த கிராம மக் களும் பலத்த குரலில் 'ஜயவேவா" என ஒலியெழுப்பி னர்,
மாரிமுத்துத் தலைவர் திகைத்துப்போய் நின்றர்.
தான் மந்திரிக்கு அணிவிக்கவிருந்த மாலையை பண்டா முதலாளி மந்திரிக்குச் சூடிவிட்டு வெற்றிக் களிப் புக் கொண்டாடுவதைப் பார்த்ததும் அவருக்கு ஆத்திர மும் அவமானமும் பொங்கி வந்தன.

Page 10
td. ఆguలిడీని
மிகப்பெரிய கொழுந்து மாலையைத் தனக்குச் சூடிய பண்டா முதலாளியின் முதுகில் நன்றி தெரிவிக்கும் முக மாக அன்புடன் தட்டிய மந்திரி மடையை நோக்கி மெது வாக நடந்தார்.
மேடையருகே தயாராக இருந்த செந்தாமரை மந் திரிக்கு ஆரத்தி எடுத்தாள்.
வீரய்யா அவரது நெற்றியில் சந்தனத் திலகமிட்டு அவரை வரவேற்ருன். *
மந்திரியின் பேச்சைக் கேட்பதற்காக மக்கள் ஆவ லுடன் மேடையருகே நெருங்கினர். வேறு தோட்டங்களுக் கும் செல்ல வேண்டி இருந்ததால் மந்திரி காலந்தாழ்த் தாது உரை நிகழ்ந்தத் தொடங்கினர். சிங்கள மொழியில் அவரது உரை நிகழ்ந்தது.
** இங்கு குழுமியிருக்கும் தோட்ட உத்தியோகத்தர் களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிராமத்தில் இருந்து வந்த ஆதரவாளர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தை முதற்கண் தெரிவிக்கிறேன். இன்று முதல் எமது நாட்டில் இருக்கும் தேயிலைத் தோட்டங்கள் யாவும் அரசுட்மை ஆக்கப்பட்டுவிட்டன. நூறு வருடங்களுக்கு மேல் அந்நியர்களின் கையில் இருந்த எமது செல்வங்கள் இன்று எமது கைகளுக்குக் கிடைத்திருக்கின்றன. இதனல் எமது நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்க வாய்ப்பு ஏற் பட்டிருக்கிறது. முக்கியமாக தோட்டங்கள் அரசுடமை யானதினுல் தோட்டத் தொழிலாளர்கள் தான் முதலில் விமோசனம் அடையப் போகின் முர்கள். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும். தொழிலாளர்களுக்குச் சம்பளம் அதிகரித்துக் கொடுக்கப்படுவதோடு அவர்களது தொழி லுக்கும் பாதுகாப்பு - விக்கப்படும். இங்கிருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வசதி செய் வோம். தோட்டத்தில் பெறப்படும் இலாபத்தின் ஒரு

குருதிமலை Η
பகுதி தொழிலாளர்களிடையே பகிர்ந்து அளிக்கப்படுவ தோடு நிலமற்றவர்களுக்கும் காணி வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்."
மந்திரியின் பேச்சின் சுருக்கத்தைத் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினர் மந்திரியுடன் கூட வந்த அரசியல் அமைப்பாளர். கரகோஷம் வான முட்டியது.
"மந்திரி வாழ்க" எனத் தொழிலாளர்கள் வாழ்த்தி
அதனை அடுத்து வீரய்யா மேடைக்குச் சென்று மந் திரிக்கும் அவருடன் கூட வந்தவர்களுக்கும் தொழிலாளர் கள் சார்பில் நன்றியுரை கூறினன்.
வேறு தோட்டங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட் டங்களில் மந்திரி பங்குபற்ற வேண்டியிருந்ததால் அவர் அவசர அவசரமாகப் புறப்பட்டார். முக்கியமாக துரை, கண்டக்டர், வீரய்யா முதலியோரது கைகளை அன்புடன் பற்றி தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் பண்டா முதலாளியின் முதுகில் அன்புடன் தட்டிப் புன்னகை செய்த படி காரிலே சென்று ஏறினர் மந்திரி.
*ஜயவே வா' முட்டி மோதியது.
மந்திரியின் கார் புறப்பட்டுச் சென்றதும் துரையும்
தனது காரில் ஏறிப் புறப்பட்டார்.
என்ற கோஷம் இப்போது வான்ை
மந்திரி எப்போது அங்கிருந்து புறப்படுவார், கூட் டம் எப்போது முடிவடையுமென எதிர்பார்த்துக் கொண் டிருந்த மாரிமுத்துத் தலைவர் சினத்துடன் பண்டா முத லாளியின் அருகே சென்றர்.
என்னங்க மாத்தயா, நீங்க என்னு நினைச்சுக்கிட்டு அந்த மாலையை எடுத்து மத்திரிக்குப் போட்டீங்க? இந்தத் தோட்டத்தில நான் பத்து வருஷமா தலைவரு வேலை செஞ்

Page 11
2 குருதிமலை
சிக்கிட்டு வாரேன்; என்னே யாரும் இந்த மாதிரி அவமா னப்படுத்தல்ல. நான் தலைவரா. இல்ல நீங்க தலைவரா?"
மாரிமுத்துத் தலைவரின் குரல் ஆத்திரத்தில் தடு மாறியது.
பண்டா முதலாளி தலைவரின் அருகே நெருங்கி, அவரது தோளில் தனது கையால் மெதுவாகத் தட்டிச் சிரித்துவிட்டு,
** என்னுங் தலைவர் மிச்சங் கோபப்படுநீங்க. நம்ப மந்திரிக்கு மாலை போடுற நேரத்திலை நீங்க அங்கினைக்கி இல்லைதானே. அதுதாங் நாங் போட்டது. நாங் மாலை போட்டாலும், தோட்டத்து ஆளுங்க தான் கூட்டம் வச் சது சொல்லி மந்திரிக்குத் தெரியுங் தானே. தோட்டத்து ஆளுங்களுக்குத் தானே இனிமே மந்திரி ஒதவி செய்யப் போறது. தம்மளுக்கு இல்லைத்தானே. இதுக்கிபோய் பெரிசா கோபப்படாதீங்க' எனச் சமாதானப்படுத்த முயன்ருர்,
அப்போது அவர்களது சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த ராமு, "அப்புடிச் சொல்லாதீங்க, மாத் தியா, எங்க தலைவரு போட இருந்த மாலைய நீங்க போட் டது சரியில்லை’ எனப் படபடத்தான்.
‘எங்க தோட்டத்து ஆளுங்களையே அவமதிக்கிற மாதிரி செஞ்சுப்புட்டீங்க' எனக் குமுறிஞன் பக்கத்தில் நின்ற செபமாலை.
இப்போது பண்டா முதலாளியையும் தலைவரையும் பலர் சூழ்ந்துகொண்டனர். வாக்குவாதம் முற்றி ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடவுங் கூடுமென நினைத்த வீரய்யா நிதானமாக, i
'முடிஞ்சுபோன வெசயத்தைப் பற்றி இனிக் கதைச்சு என்னு பெரயோசனம். நடந்தது நடந்து முடிஞ்

குருதிமலை
சிச்சு. சும்மா பேசிகிட்டு இருக்காம நடக்க வேண்டிய தைக் கவனியுங்க.." எனக் கூறிவிட்டு ராமுவின் கைகளைப் பற்றி, "இங்கபாரு ராமு அந்த ஸ்பீக்கர்காறங்களை அனுப் பணும். செபமாலையைக் கூட்டிக்கிட்டுப் போயி ஸ்பீக்கர் எல்லாம் அவுத்து அவுங்கள அனுப்புறதுக்கு வேண்டிய தைக் கவனி" எனக் கூறினன்.
பண்டா முதலாளியுடன் கூட வந்திருந்த கிராம சேவகர் அவரை அவசரமாக அழைத்தார்.
பண்டா முதலாளி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மெதுவாக அவ்விடத்தை விட்டு நழுவினர்.
கூட்டம் சிறிது சிறிதாகக் கலையத் தொடங்கியது.
நாட்டிலிருந்து வந்திருந்த ஓர் இளைஞனின் கண்கள் மேசையருகே நின்றிருந்த செந்தாமரையையே ஏக்கத் துடன் பார்த்த வண்ணம் இருந்தன. அப்போது செந்தா மரையின் பார்வை அவனது பக்கம் திரும்பியது. அவன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான். செந்தாமரை நாணத்துடன் குனிந்துகொண்டாள். அவளது இதழ்களி லிருந்தும் மெல்லிதாக ஒரு புன்னகை மலர்ந்தது. புறப் படவேண்டிய நேரம் நெருங்கியதும் அவன் அவளிடம் கண்களால் விடைபெற்றுக் கொண்டான். அவள் ஏக்கத் துடன் அவனேயே பார்த்த வண்ணம் இருந்தாள்.

Page 12
14 குருதிமலை
அத்தியாயம் இரண்டு
அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் தோட்டத்தில் வேலை கொடுக்கப்படவில்லை. தொழிலாளர்கள் தத்தமது சொந்த வேலைகளைக் கவனிப்பதில் ஈடுபட்டிருந்தனர். பெண்களில் சிலர் தமது வீட்டைப் பெருக்குவதில் முனைந்தி ருந்தனர். சிலர் பீலிக்குச் சென்று வீட்டுப் பாத்திரங்களைத் துலக்குவதிலும் ஆடைகளைத் துவைத்துக் குளிப்பதுமாக இருந்தனர். வீட்டில் வேலையில்லாதவர்கள் "மிலார்’ பொறுக்குவதற்காக மலைக்குச் சென்றிருந்தனர்.ஆண்களில் பலர் தமது மரக்கறித் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
வழுக்கற் பாறை லயத்தின் தொங்கல் காம்பராவின் முன்புறத்திலுள்ள இஸ் தோப்பில் அன்றைய தினசரியை வாசித்துக்கொண்டிருந்தான் வீரய்யா. அவனது தாய் மீனுச்சி காம்பராவின் உள்ளே சாணியால் நிலத்தை மெழு கிக்கொண்டிருந்தாள்.
“என்ன வீரய்யா இன்னைய பேப்பரா? இன்னிக்குப் பேப்பரிலை நம்ப தோட்டத்து வெசயமா ஏதும் போட்டி ருக்காங்களா?' எனக் கேட்டபடி உள்ளே துழைந்தான் Մո"(Մ).
பத்திரிகை வாசிப்பதில் மூழ்கியிருந்த வீரய்யா ராமு வின் குரல் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தான். அப்போது தான் செபமாலையும் ராமுவின் பின்னல் வருவது தெரிந் திதி

குருதிமலை 5
இருவரும் இஸ்தோப்பில் இருந்த வாங்கிலில் அமர்ந்து கொண்டனர்.
"தோட்டத் தொரைமாருக்கெல்லாம் நேற்று மாவட் டக் காரியாலயத்தில மீட்டிங் இருந்திச் சில்லையா...அதில நம்ப மந்திரி பேசியிருந்ததை விசேசமா போட்டிருக் காங்க" எனக் கூறிக்கொண்டே டித்திரிகையை செபமாலை யிடம் கொடுத்தான் வீரய்யா.
** தொரமாருக்கெல்லாம் என்னதான் மந்திரி சொல்லி யிருக்காரு?" என ஆவலுடன் கேட்டான் ராமு.
“மொதலாவதா தோட்டத்திலை இருந்து இனிமே உத்தியோகத்தர்களையோ தோட்டத் தொழிலாளர் களையோ தொரை மார் வெளியே போடமுடியாது."
"அபு டியா ரொம்ப நல்லது:இனிமே இந்த தொரை மாருங்க ஆட்டமெல்லாம் நின்னு போயிடும். அவுங்க நெனச்சபடி தோட்டத்திலே எதுவுமே செய்யமுடியாது" என் முன் ராமு.
“அதுமட்டு ல்ெல, தொரமா ருங்க இஷ்டத்துக்கு தோட் டத்திலை யாரையும் வேலைக்கும் சேர்க்கமுடியாதாம்;அர சாங்கத்திலை இருந்து அனுப்புற ஆளுங்களை மட்டுந்தான் வேலைக்கு சேத்துக்கிறனுமாம்" எனத் தொடர்ந்து கூறி ஞன் வீரய்யா.
"ஆமா ஆமா, இவ்வளவு நாளா தொரைமாருங்க வூட்டு ஆளுங்களையும் ஸ்டாப்புமாருங்க வுட்டு ஆளுங்களை யுந்தானே தோட்டத்திலே உத்தியோகங்களுக்கு சேத்துக் கிட்டு வந்தாங்க, யாரைப் பாத்தாலும் அவுங்க அவுங்க அண்ணன்-தம்பி, மச்சான்-மாமனுகவே இருக்காங்க. இனிமே அதெல்லாம் நடக்காது."
இதுவரை நேரமும் மரக்கறித் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த வீரய்யாவின் தந்தை மாயாண்டி

Page 13
16 குருதிமலை
அப்போது இஸ்தோப்பின் உள்ளே நுழைந்தார். தோட் டத்திலிருந்து கொண்டுவந்த மரக்கறிகளை சுவர் ஒரமாக இருக்கும் செலவுப் பெட்டியின் மேல் வைத்துவிட்டு, நெற்றியிலே படிந்திருந்த வியர்வையை ஒரு துண்டினல் துடைத்துக்கொண்டார்.
"இனிமே தொரைமாருங்க நெனைச்சபடி தோட் டத்தை நடத்தமுடியாது. ஒவ்வொரு தோட்டத்திலையும் தோட்ட நிர்வாகக் கமிட்டின்னு ஒண்ணு அமைக்கப் போருங்களாம்.அதிலை தோட்டத் தொழிலாளர்கள் சார் பிலும் உத்தியோகத்தர் சார்பிலும் பிரதிநிதிங்க இருப் பாங்க;அவங்களோட கலந்து ஆலோசிச் சுத்தான் தொரை தோட்டத்திலை எதையும் செய்யமுடியும்’ எனப் பத்திரி கையை வாசித்துக்கொண்டிருந்த செபமாலை கூறினன்.
‘என்னதான் இருந்தாலுந் தம்பி தோட்டங்களைக் கொம்பனிக் காலத்திலை நடத்தினமாதிரி அரசாங்கத்திலை நடத்துவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை' என அலட் சியமாகக் கூறிக்கொண்டே, காதிலே செருகிவைத்திருந்த குறைச் சுருட்டை எடுத்து வாயில் பொருத்தி அதனைப் பற்றவைத்தார் மாயாண்டி,
அவர் அப்படிக் கூறியது அங்கிருந்த எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
"என்னங்க மாமேன், அப்புடிச் சொல் லிப்புட்டீங்க! இப்ப தோட்ட்த்தை அரசாங்கம் எடுத்ததினுல ஆளுங் கெல்லாம் எவ்வளவு சந்தோஷப்படுருங்கன்னு தெரியுமா? நீங்க மட்டும் ஏன் இப்புடிச் சொல்லு:ங்க?" என வியப்பு டன் கேட்டான் ராமு. -
*தோட்டத்தை அரசாங்கம் எடுத்ததை நீங்க என் னமோ சாதாரணமாக நெனைச் சுப்புட்டீங்க போலையி ருக்கு; இனிமேதான் நம்மஞக்கு எவ்வளவோ ஒதவி கெ.ைக்கப் போவுது. இவ்வளவு காலமும் கொம்பணித்

குருதிமலே 17
காரங்களுக்கும் தோட்டச் சொந்தக்காரங்களுக்கும் நாம அடிமையா இருந்தோம்;அவங்க நெனச் சமாதிரி நம்மளை ஆட்டிப் படைச்சுக்கிட்டு இருந்தாங்க. இனிமே இந்த நாட்டிலை இருக்கிற மத்தவங்கமாதிரி நாமளும் தலை நிமிர்ந்து நடக்கலாம்" என விபரமாகக் கூறினன் செப ւքո 350.
** என்னங்க தம்பி எனக்குத் தெரியாத வெசயமா. இந்தத் தேயிலையை இங்க கொண்டாந்து உண்டாக்கி னதே அந்த வெள்ளைக்காரங்கதானே.அவுங்க தோட் டத்தை நடத்தினதை விடவா அரசாங்கத்திலே பெரிசா நடத்திப்புடப் போருங்க?' எனக் கேட்ட மாயாண்டி, அலட்சியமாகப் புகையை வெளியே ஊதினர்.
‘‘அப்புடி இல்லீங்க மாமேன். நீங்க கொம்பனிக் காலத்து நெனப்புலேயே இப்பவும் இருக்கிறீங்க. இப்ப காலம் மாறிக்கிட்டே போவுது. நிச்சயமா தோட்டத்து ஆளுங்களுக்கு இனிமேதான் நல்லது கெடைக்கப்போவுது’’
இதுவரை நேரமும் வீட்டை மெழுகிக்கொண்டு இவர் களது சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்த மீனச்சி வெளியே எழுந்து வந்தாள்.
‘இவரு எப்பவும் இப்புடித்தான் செப்மாலை, ஏடக் குறுக்க ஏதாச் சும் வெளங்காம பேசிக்கிட்டு இருப்பாரு; அதை வுட்டுட்டு வேற என்ன தம்பி போட்டிருக்கு, அதைச் சொல்லுங்க” எனக் கூறியபடி அவள் வாசலுக்குச் சென்று சாணிக் கையைக் கழுவினுள்.
‘மந்திரி வேற ஒரு வெசயத்தையும் தொரைமாருக்கு சொல்லியிருக்காரு; இனிமே தொரைமாருங்க எல்லாரும் கட்டாயமா தோட்டத்து ஆளுங்களோட நல்ல மொறை யில நடந்துக்கணுமாம். முந்தி மாதிரி தொரைத்தனமா நடந்துக்காம ஆளுங்களோட அன்பாப் பழகனுமாம்’ என் முன் செபமாலை.

Page 14
18 குருதிமலை
அப்போது செந்தாமரை தண்ணிர்க் குடத்துடன் வீட் டினுள் நுழைந்தாள்.
"இவ்வளவு நேரமா பீலியிலை என்ன செஞ்சு கிட்டு இருந்தே? அங்க போய் என்ன தான் செய்வியோ தெரி யாது. இவுங்கெல்லாம் வந்து எவ்வளவு நேரமாச்சு? இன் னும் தேத்தண்ணிகூட கொடுக்கல. வெரசா தண்ணி சுட வச்சி தேத்தண்ணி ஊத்து’ எனச் செந்தாமரையிடம் கூறிய மீனச்சி செலவுப் பெட்டியின் மேல் வைக்கப்பட்டி ருந்த மரக்கறிகளை எடுத்து நறுக்கத் தொடங்கினுள்.
செந்தாமரை எதுவுமே பேசாது புன்னகை செய்தவண் ணம் அடுப்படிப் பக்கஞ் சென்ருள்.
**ஏங்க தம்பி, நான் ஒண்ணு கேக்கிறேன்,தோட்டத்து ஆளுங்களோட தொரை மாருங்க கூட்டாளித்தனமா நடந்துகிட்டா தோட்ட வேலைங்கெல்லாம் எப்புடி ஒழுங்கா நடக்கும்? தொரை, ஆளுங்களோட கண்டிப்பர் நடந்துகிட்டாதானே ஆளுங்க பயந்து ஒழுங்கா வேலை யைச் செய்வாங்க. அரசாங்கம் சொல்லுறபடி பாத்தா தோட்டத்தைச் சுறுக்கா மூடிடுவாங்க போலையிருக்கே" என்ருர் மாயாண்டி சிந்தனையுடன்.
"அப்படியில்லேப்பா, தோட்டத்து ஆளுங்கள்ை அடி மையா நடத்த வேணுமுணுதான் அரசாங்கம் சொல்லுது அதோட தொழிலாளர்களும் தோட்ட நிர்வாகத்தில அக் கறை காட்டுறதால, தோட்டம் ஒரு நாளும் நஷ்டத்தில போகாது" என்ருன் வீரய்யா விபரமாக,
"அதெல்லாஞ்சரி, தொரைமாருங்களுக்கு அரசாங்கம் சொல்லியிருக்கிற மாதிரி அவுங்க கேட்டு நடப்பாங்கனு எப்பு டி சொல்லமுடியும்?' எனக் கேட்டார் மாயாண்டி சிந்தனையுடன்.
'அரசாங்கம் சொல்லுறபடிதான் தொரைமாருங்க தோட்டத்தை நடத்தணும். இல்லேன்ன அவுங்க வேலைய

குருதிமலை 9
பறிகொடுக்க வேண்டியதுதான். இல்லாட்டி தோட் டத்தைவுட்டு வேறை தோட்டத்துக்கு மாத்திப்போடு வாங்க" என்ருன் ராமு.
"ஏங்க தம்பி, இப்ப நாம வேலைக்குப் போனத்தான் பேரு போடுவாங்க. இனிமேலாவது மத்தவங்களுக்கு மாதிரி நம்மஞக்கும் மாதச் சம்பளம் கொடுப்பாங்களா?" மீனுச்சி ஆவலுடன் கேட்டாள்.
** மாதச் சம்பளத்தைப் பற்றி இனிமேதான் பேசப் போருங்க. மத்த வங்களுக்கு மாதச் சம்பளம் கொடுக்கிற மாதிரி நம்மஞக்கும் கொடுக்கத்தான் செய்வாங்க; அதோட நம்ப தோட்டத்து புள்ளைகளுக்கு படிக்கிறதுக்கு வேண்டிய வசதியும் செஞ்சு கொடுப்பாங்க. ஸ்கூலையும் அரசாங்கத்துக்கு எடுத்து தோட்டப் புள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் குடுக்க புதுசா மாஸ்டர்மாரையும் அனுப்பிவைப்பாங்க."
"அப்புடின்ஞ இனிமே நம்மஞக்கெல்லாம் நல்ல காலமுன்னு சொல்லுங்க தம்பி" என மகிழ்வுடன் கூறி ஞள் மீனச்சி.
*நீங்க செர்ல்லுறது எல்லாஞ் சரிதான். நம்ப பாட் டன் பூட்டன்/காலத்திலை இருந்தே நாம கஷ்டப்பட்டுக்
க் கொஞ்சமாவது யோசிச்சுப் பாத்தீங்களா?" விட்டு வாயிலே ஊறிய சுருட்டுச் சாரத்தை ப்பினர் மாயாண்டி. வ்வளவு காலமும் தேயிலைத் தோட்டங்களெல் வள்ளைக்காரங்களுக்குச் சொந்தமா இருந்திச்சி. ஆதாழிமெல்லாம் அவுங்க நாட்டுக்குப் போய்க்கிட்டு இருந் திச்சி/ஆன இப்ப தோட்டங்களை அரசாங்கம் எடுத்ததினுல ஆதரியமெல்லாம் நம்ப நாட்டுக்கு கெடைக்கப்போவுது.

Page 15
20 குருதிமலை
அது நம்மஞக்கும் நல்லது. நம்ப நாட்டுக்கும் நல்லது.” வீரப்யா விளக்கம் கொடுத்தான்.
'நீங்கதான் என்னென்னமோ பெரிசா பேசிக்கிறீங்க. இனிமே போகப் போகத்தான் எல்லாந் தெரியப்போவுது" என்ருர் மாயாண்டி வெளியே பார்த்தபடி,
செந்தாமரை எல்லோருக்கும் தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள்.
எல்லோரும் தேநீர் அருந்தத் தொடங்கினர்.
சிறிது நேரம் நண்பர்களது சம்பாஷணை தோட்ட விஷ யங்களைப் பற்றியே சுற்றிச் சுற்றி வந்தது.
*சரி வீரய்யா, நான் வரட்டுமா?வூட்டுல கொஞ்சம்
வேலையிருககு' எனக் கூறியபடி எழுந்திருந்தான் ராமு. அவனைத் தொடர்ந்து செபமாலையும் எழுந்தான்.
இருவரும் புறப்பட்டுச் சென்றதும் வீரய்யா மீண்டும் பத்திரிகையை எடுத்து வாசிக்கத் தொடங்கினன்.அவனது உள்ளத்தில் தொழிலாளர்களின் எதிர்காலம் ஒளிமய மாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தது.
ଝ2, 2S

குருதிமலை 2丑
அத்தியாயம் மூன்று
கிடந்த நான்கு நாட்களாக பண்டா முதலாளியின் உள்ளம் குதூகலத்தில் ஆழ்ந்திருந்தது. பக்கத்துத் தோட் டத்தில் நடந்த கூட்டத்தின் போது மந்திரி அவரைப் பார்த்து அறிமுகச் சிரிப்பை உதிர்த்ததும் எதிர்பாராத விதமாக அவர் மந்திரிக்கு மாலை அணிந்து தன் ஆதர வைக் காட்டிய நிகழ்ச்சியும், அவரது மனதில் அடிக்கடி வந்துகொண்டிருந்தன.
வீட்டின் பின்புறமாக இருந்த சிறிய கொட்டிலில் போடப்பட்டிருந்த கதிரையொன்றில் சாய்ந்தவாறு அவர் சுருட்டு ஒன்றைப் புகைத்துக் கொண்டிருந்தார்.
சற்று நேரத்திற்கு முன்னர் பக்கத்துத் தோட்டத் திலிருந்து வந்த ஒரு தொழிலாளியிடம் இரண்டு போத் தல் கள்ளுக்குரிய பணத்தைக் குறைத்து வாங்கிவிட்டது அப்போதுதான் அவரது நினைவில் வந்தது.
நிலத்திலே சிந்தியிருந்த கள்ளின் நெடி ஒரு கணம் அவ்விடத்தில் வீசியது.
தோட்டங்களில் சம்பளம் போடுவதற்கு இன்னும் ஒரு கிழமையிருந்ததினல் அவருக்கு வியாபாரம் இப்போது கம்மியாகவே இருந்தது. இதுவரை ஐந்தாறு பேர்தான் கள்ளுக் குடித்துவிட்டுத் திரும்பியிருந்தனர். மூலையிலி ருந்த முட்டியில் அரைவாசிக்கு மேல் கள்ளு அப்படியே கிடந்தது.
முற்றத்தில் படுத்திருந்த அவரது நாய் ஒரு கணம் தலையை நிமிர்த்திக் குரைத்துவிட்டு, வருபவர் வாடிக்கை

Page 16
22 குருதிமலை
யாளர் என்பதைப் புரிந்து கொண்டதினலோ என்னவோ மீண்டும் சுருண்டு படுத்துக்கொண்டது.
பண்டா முதலாளி வெளியே எட்டிப் பார்த்தார்; அங்கு கறுப்பண்ணன் கங்காணி வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்தபோது மந்திரி வந்தன்று மாலைத் தட்டு டன் கறுப்பண்ணன் கங்காணி அங்குமிங்கும் ஒடித்திரிந்த காட்சி அவரது நினைவில் வந்தது. தன்னையும் மீறிக் கொண்டு அவர் வாய்விட்டுச் சிரித்தார்.
பண்டா முதலாளி எட்டிப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டதும் வாயிலே நிரம்பியிருந்த வெற்றிலைத் துப்பலை வேலியோரமாக நின்ற கித்துள் மரத்தடியில் எட்டி உமிழ்ந்துவிட்டு சிரிப்பை வரவழைத்துக் கொண்டார் கறுப்பண்ணன் கங்காணி.
*ஏங் கங்காணி, இந்த நாலு நாளா இங்க வரேல்லைத் தானே' எனக் கேட்டுக்கொண்டே கறுப்பண்ணனை வர வேற்ருர் பண்டா முதலாளி.
"நம்ப வயல்லை கொஞ்சம் வேலையிருந்திச்சுங்க, அது ஞலே வரமுடியாம போயிருச் சுங்க. இன்னிக்குத்தாங்க கொஞ்ச நேரங் கெடச்சிச் சு" எனக் கூறியபடி கொட்டி லினுள்ளே நுழைந்து அங்கே கிடந்த வாங்கில் அமர்ந் தார் கறுப்பண்ணன் கங்காணி.
"அப்புடியா. நம்ப தலைவரையும் இந்தப் பக்கம் காங்கேல்ல. நம்பமேலே கோபப்பட்டது சொல்லி நான் நெனைச் சது.”*
"அப்படி நெனைக்க வேணுங்க மாத்தியா, ஒங்க மேல எங்களுக்கு அப்படியேதுங் கோபமில்லீங்க. நம்ப தலை வருக்கு ரெண்டு நாளா சொகமில்லீங்க. அதுதாங்க." என இழுத்தார் கங்காணி.
பண்டா முதலாளி சிரட்டையில் கள்ளை வார்த்துக் கொண்டு வந்து கங்காணியிடம் கொடுத்தார். இரு கை

குருதிமலை 23
களினலும் அதனை வாங்கித் தனது வாயில் வைத்து ஓர் உறிஞ்சு உறிஞ்சிவிட்டு வாயைச் சப்புக் கொட்டிக்கொண் டார் கங்காணி.
“என்னங்க மாத்தியா இன்னிக்கு கள்ளு ரெம்பப் புளிப்பா இருக்கே, பழைய கள்ளை ஏதும் கலந்துப்புட் u(ofi 356MTnT?””
*ச்சா, என்னுங் கங்காணி அப்புடிச் சொல்லுறது. ஒங்களுக்கு நாங் அப்படி செய்யிறதா? இன்னிக்குத்தான் மரத்திலை இருந்து எறக்கினது" எனக் கூறிவிட்டு வீட்டின் முன் பக்கத்தில் இருந்த தனது மனைவிக்குக் கேட்கும்படி யாக, ** மெனிக்கே. மே கங்காணிட்ட சுட்டக் அள கெயின்ட' எனக் கூறினர்.
வீட்டின் முன்புறமாகவுள்ள விருந்தையில் பலசரக் குக் கடையொன்றையும் பண்டா முதலாளி வைத்திருக் கின்றர். அந்தப் பகுதியில் வேறு கடைகள் ஏதும் இல்லாத தால் அவருக்குப் பலசரக்குக் கடையிலிருந்தும் கணிச மான வருமானம் கிடைத்தது. அந்தக் கடையை அவரது மனைவி மெனிக்காதான் கவனித்துக் கொள் வாள்.
பக்கத்துத் தோட்டங்களிலிருந்து அவரிடம் கள்ளுக் குடிக்க வருபவர்களும், அந்தக் கிராம மக்களும் அவரது கடையிலேதான் அன்ருட தேவைகளுக்கு வேண்டிய சாமான்களை வாங்கிச் செல்வார்கள்.
கள்ளுக் கு டி ப் ப வர் க ள் சுவைப்பதற்கென்றே தயாரித்து வைத்திருந்த மரவள்ளிக் கிழங்குக் கூட்டை சேம்பு இலையொன்றில் எடுத்துவந்து கங்காணியின் முன் ஞல் வைத்தாள் மெனிக்கே.
கறுப்பண்ணன் கங்காணி அதில் ஒரு துண்டை எடுத் துக் கடித்துவிட்டு மீண்டும் கள்ளை உறிஞ்சினர்.
பலசரக்குக் கடையில் சாமான் வாங்குவதற்காக யாரோ வந்தார்கள். மெனிக்கே வியாபாரத்தைக் கவ னிப்பதற்காக முன்னே சென்ருள்.

Page 17
24 குருதிமலை
‘மே மாயாண்டி என வா' முன் பக்கத்தில் வியாபா ரத்தைக் கவனித்தவாறே பண்டா முதலாளிக்குக் கேட் கும்படியாகக் கூறினுள் மெனிக்கே.
வழுவியிருந்த சாரத்தை ஒரு தடவை தனது பருத்த தொந்தியில் வரிந்து கட்டிவிட்டு 'ஆ' என்ட மாயாண்டி. எப்புடி? ஏங் இன்னிக்கி மிச்சங் சொணங்கி வந்தாச்சு...' எனக் கேட்டபடி அவரை வரவேற்ருர் பண்டா முதலாளி.
"நம்ப கண்டக்கையா ஒரு வெசயமா வங்களாவுக்கு வரச் சொல்லியிருந்தாரு. அதுதாங்க போயிட்டு வரக் கொஞ்சம் சொனங்கிப் போச் சு’’ எனக் கூறியபடி கறுப்பண்ணன் கங்காணியருகே அமர்ந்து கொண்டார் மாயாண் டி.
கறுப்பண்ணன் கங்காணி மாயாண்டியைப் பார்த் துச் சிரித்துவிட்டு, மீண்டும் சிரட்டையுடன் கள்ளை உறிஞ் சத் தொடங்கினர்.
பண்டா முதலாளி வேருெரு சிரட்டையில் கள்ளை வார்த்து வந்து மாயாண்டியிடம் கொடுத்தார். பின்பு வெளியே சென்று வாயில் நிறைந்திருந்த வெற்றிலைத் துப்பலை உமிழ்ந்துவிட்டுவந்து,
*அதிங்சரி மாயாண்டி, வீரய்யா சொல்லி சொல்றது ஒங்க மவன்தானே. அன்னிக்கி நம்ப மந்திரி கூட்டத்துக்கு வாறப்போ அந்தப் பெ டியன்தாங் எல்லா வேலையும் செஞ் சது. நமக்கு மிச்சங் சந்தோஷம்" எனக் கூறிவிட்டுச் சிரித்தார்.
"ஆமாங்க மாத்தியா, தோட்டத்திலே எந்த ஒரு வெசயத்துக்கும் அவன்தாங்க முன்னுக்கு நிப்பான். நம்ப தோட்டத்து ஆளுங்ககூட அவன்மேல ரெம்பப் பிரிய முங்க" எனத் தட்டுத் தடுமாறியபடி கூறினர் கறுப்பண் னேன் கங்காணி.

குருதிமலை 25
பண்டா முதலாளியும் கறுப்பண்ணன் கங்காணியும் கூறிய வார்த்தைகள் மாயாண்டிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன.
*" என்னமோ, நீங்கதான் அவனைப்பற்றிப் பெரிசா பேசிக்கிறீங்க. எந்த நேரம் பார்த்தாலும் தோட்ட வெசயமுன்னு சொல்லிக்கிட்டு பயலுங்களோட சேந்து சுத்திக்கிட்டு திரியிருன். அவனுக்கு வூட்டு வெசயத்தில கொஞ்சங்கூட அக்கறையிருக்கிறதாத் தெரியல்ல" எனப் பொய்யாகக் குறைப்பட்டுக் கொண்டே தனது கற்றை மீசையில் படிந்திருந்த கள்ளைப் புறங்கையால் துடைத்துக் கொண்டார் மாயாண்டி,
* 'மாத்தியா எனக்கு இன்னெரு போத்தல் கள்ளுத் தாங்க, அப்புடியே நம்ப மாயாண்டிக்கும் ஒரு போத்தல் என் கணக்கில குடுங்க" எனத் தடுமாறியபடி கூறினர் கறுப்பண்ணன் கங்காணி.
பண்டா முதலாளி மேலும் இரண்டு போத்தல் கள்ளை வார்த்துவந்து அவர்களது சிரட்டைகளில் நிரப்பினர்.
வெளியே இருள் குழத் தொடங்கியது.
முற்றத்தில் காய்வதற்காகப் பரவியிருந்த கராம்பு களைப் பாயுடன் சுருட்டி எடுத்துக்கொண்டு வந்தாள் மெனிக்கே.
பண்டா முதலாளியின் தோட்டத்தில் நிறைய கராம் புச் செடிகளும், ஏலச் செடிகளும் இருக்கின்றன. அவற்றி லிருந்தும் பண்டா முதலாளிக்குக் கணிசமான வருமானம் கிடைக்கிறது.
மெனிக்கே கராம்பை உள்ளே கொண்டு வருவதைப் பார்த்ததும், நேரமாகிவிட்டதை உணர்ந்து கொண்டார் முதலாளி.

Page 18
26 குருதிமலை
"சரிங் கங்காணி நேரமாச்சு.நாங்களும் கடையைப் பூட்டவேணுந்தானே. நீங்களும் ரொம்பத் தூரங் போக வேணுங்’ எனக் கூறியபடி மெனிக்கே கொண்டுவந்த கராம்பை வாங்கி உள்ளே வைத்தார் பண்டா முதலாளி.
கறுப்பண்ணன் கங்காணியும், மாயாண்டியும் புறப் படுவதற்கு ஆயத்தமானர்கள்.
"அப்ப நாங்க வர் ரோமுங்க மாத்தியா" எனக் கூறிய படி எழுந்த கறுப்பண்ணன் கங்காணி சுருட்டொன்றை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு மாயாண்டியிடமும் ஒரு சுருட்டைக் கொடுத்தார்.
இருவரும் புறப்பட்டுத் தோட்டத்தை நோக்கி ஒற்றை யடிப் பாதையில் நடக்கத் தொடங்கினர்.
*கங்காணி, இந்த எடங் கொஞ்சம் வரக்கட்டா இருக்கு. விழுந்திடாம பாத்து நடந்து வாங்க" எனக் கூறியபடி முன்னுல் நடந்தான் மாயாண்டி.
‘என்ன மாயாண்டி அப்புடிச் சொல்லிப்புட்டே, இது நம்மஞக்கு பழக்கப்பட்ட பாதை தானே. இந்தக் குறுக்கில எந்த எடத்தில வரக்கட்டு இருக்கு, எந்த எடத் தில மொடக்கிருக்குன்னு எனக்கு நல்லா நெதானம் இருக்கு' எனக் கூறிய கறுப்பண்ணன் கங்காணி கால் தடு மாறிக் கீழே விழப்போனர். உடனே மாயாண்டி அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார்.
"பாரு மாயாண்டி, அன்னிக்கி நாம மந்திரிக்குப்
போட வச்சிருந்த மாலையை இந்த வண்டாப் பயல் எடுத் துப் போட்டிட்டான்; அவன் ராங்கியை பாக்தியா?. முந்
தின காலத்தில அவன் லயத்துக்கு லயம் பாக்குத் தூக்கி வித்துக்கிட்டு திரிஞ்சது நமக்குக் கெரியாதா..? இப்ப என்
னடான்ன பெரிய மனுசன் மா கிரி மந்திரிக்கு மாலை
போட வந்திட்டான்' எனக் கறுவிக் கொண்டார் கறுப்
பண்ணன் கங்காணி.

குருதிமலை 27
"ஆமாங்க கங்காணி, கையில கொஞ்சம் பணம் சேர்ந்திட்டா இன்னிக்கி எல்லாரும் பெரிய மனுசன் தான். தோட்டத்து ஆளுங்க எல்லாம் இன்னிக்கி இவன் கிட்டத்தானே கள்ளுக் குடிக்கப் போருங்க. அப்ப இவங் கிட்ட சல்லி சேராம வேற எங்க போகும்?"
"அதிலையும் பாரு மாயாண்டி இந்த வண்டாப்பய ஒரு நாளைக்கு நல்ல கள்ளு வைச்சிருக்கான்; ஒரு நாளைக்கு மொட்டப் பச்சத்தண்ணியா ஊத்திருன்’ என்ருர் கறுப் பண்ணன் கங்காணி
ஆற்றிலே தண்ணிர் ஓடும் சல சலப்புக் கேட்டது. தோட்டத்து எல்லையைத் தாண்டிவிட்டதை இருவரும் ஊகித்துக் கொண்டனர். ஏற்றத்திலே ஏறிவந்ததால் இரு வருக்கும் மூச்சு வாங்கியது. களைப்புத்தீர இருவரும் சிறிது நேரம் அந்த இடத்தில் தரித்து நின்றனர். அவர்கள் நின்ற இடத்திலிருந்து பார்க்கும்போது தூரத்தே ஆங்காங்கே சிறிய வெளிச்சங்கள் நட்சத்திரங்களைப்போல மின்னின. எங்கோ தொலைவில் நாய் குரைக்கும் சத்தங் கேட்டுக் கொண்டிருந்தது.
**இந்தா பாருங்க கங்காணி, நம்ப தோட்டத்தை அரசாங்கம் எடுத்ததைப்பத்தி பயலுக பெரிசா பீத்திக் கிருனுக. எனக்கு என்னவோ இதெல்லாம் நல்லதா தெரி யல்லே" என்ருர் மாயாண்டி,
“என்ன மாயாண்டி திடுதிப்புன்னு இப்புடிச் சொல் லுறே; அரசாங்கம் எடுத்ததினுல நமக்கு என்ன குறைஞ் சிடப் போவுது."
*அண்ணைக்கு மந்திரி வந்தப்போ, இந்த நாட்டாளுக எல்லாம் தோட்டத்துக்குள்ள நொழைஞ்சி அவுங்களும் கூட்டத்தில பங்கு பத்தினங்க, கொம்பனிக் காலமென்னு அப்படிச் செய்ய முடியுமா?"

Page 19
28 குருதிமலை
‘'நீ சொல்றதிலும் ஞாயம் இருக்குத்தான் மாயாண்டி ஆனலும் அரசாங்கத்தில நல்லது செய்யப் போறதா தானே மந்திரி சொன்னுரு.'
**மந்திரி சொன்ன மாதிரியே எல்லாம் நடந்திச்சின்னு நல்லதுதான். இவ்வளவு காலமும் தோட்டத்தில நாமெல் லாம் ஒரு குடும்பம்போல ஒண்ணு இருந்துக்கிட்டிருந் தோம். வெளி ஆளுங்க ஊடையில பூந்து யாரும் நம்ப வெசயத்தில தலையிடல. இப்ப அப்படியில்ல கங்காணி, எல்லாமே மாறிப் போச்சு.'
எதிரே யாரோ சிலர் தீப்பந்தத்துடன் வந்துகொண் டிருந்தனர். நாட்டில் வாழும் யாரோ டவுணுக்குச் சென்றுவிட்டு இப்போதுதான் திரும்பிச் செல்கிருர்கள் என்பதை அறிந்த இருவரும், தமது பேச்சை நிறுத்திக் கொண்டனர்.
தீப்பந்தத்துடன் வந்தவர்கள் அவர்களைத் தாண் டிச் சென்றதும் மீண்டும் இருவரும் தோட்டத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
** மாயாண்டி. ஓங்கிட்ட ஒரு முக்கியமான வெசயம் சொல்லணும்; சொன் ஞ கோவிச்சுக்கிடுவியோன்னு பயமா இருக்கு."
‘அப்பிடி என்னங்க கங்காணி வெசயம். ஏங்கிட்ட சொல்றதுக்கு ஏன் பயப்படனும்?"
'தப்பா ஏதும் நெனைச்சுக்கிடாத மாயாண்டி. ஒம் மக இருக்காளே செந்தாமரை. அவளைப்பத்தி தோட்டத் தில ஒரு மாதிரியா கதைச் சிக்கிருங்க."
கறுப்பண்ணன் கங்காணி இப்படிக் கூறியபோது மாயாண்டியின் நெஞ்சு பகீர் என்றது. செந்தாமரை யைப் பற்றி கங்காணி தவருக ஏதும் கூறிவிடக் கூடாது என அவரது உள்ளம் வேண்டியது. அந்தக் கடும் குளிரி

குருதிமலை 29
லும் அவரது உடல் குப்பென்று வியர்த்துவிட்டது. ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாதவராய்த் தடுமாறினர்.
"என்ன கங்காணி சொல்றீங்க. எனக்கு ஒண்ணுமே வெளங்க மாட்டேங்குது. கொஞ்சம் வெளக்கமா சொல் லுங்க.
'இல்லை மாயாண்டி. இந்த நாட்டிலயிருந்து நம்ப தோட்டத்துக்கு வேலைக்கு வாரு னே பியசேன.'
*" என்னுங்க கங்காணி, தயக்கித் தயங்கி சொல்றீங்க. சொல்லுறதக் கொஞ்சம் வெரசா சொல்லுங்க’’ என்ருர் மாயாண்டி படபடப்புடன்.
"அதுதான் நம்ப பண்டா முதலாளியோட அண்ணன் மகன் இருக்கானே பியசேன. அவனும் ஒம் மகள் செந் தாமரையும் கூட்டா இருக்காங்கனு தோட்டத்தில எல் லாரும் பேசிக்கிருங்க."
மாயாண்டிக்கு தலை சுற்றுவதுபோல் இருந்தது. கறுப் பண்ணன் கங்காணி கூறியதை அவரால் நம்பவே முடிய வில்லை. அவரது உடல் இலேசாக நடுங்கியது.
**இந்தா பாருங்க கங்காணி. என் குடும்பத்த பத்தி இவ்வளவு காலமா யாரும் கேவலமாப் பேசல்ல. நீங்க சொல்லுற இந்த விஷயம் மட்டும் பொய்யா இருந்தா, அப் புறம் என்ன நடக்குமுனு தெரியாது" மாயாண்டியின் குரல் கடுமையாக ஒலித்தது.
"நானென்ன ஒங்க கிட்ட பொய்யா சொ ல் ல ப் போறேன். நான் கேள்விப்பட்டதைத்தானே சொன் னேன்’’ என்ருர் கறுப்பண்ணன் கங்காணி.
மாயாண்டி பதில் ஏதும் சொல்லாது விருட்டென நடக்கத் தொடங்கினர்.

Page 20
30 குருதிமலை
கறுப்பண்ணன் கங்காணி குழப்பமடைந்தவராக அவ ரைப் பின் தொடர்ந்தார்.
இருவரும் பிரிந்து செல்லவேண்டிய இடம் சமீபித்த தும், ‘இங்க பாரு மாயாண் டி. வூட்ல போய் செந் தாமரைகிட்ட ஏதும் சண்டைக்குப் போகாத, நான் சொன்னதை மனசில வச்சு கவனிச்சுப்பாரு' என்ருர் கறுப்பண்ணன் கங்காணி.
மாயாண்டி பதில் ஏதும் கூற மல், தனது லயத்துக்குச் செல்லும் பாதையில் இறங்கி நடக்கத் தொடங்கினர்.
கறுப்பண்ணன் கங்காணியின் குழப்பம் மேலும் அதிக மாகியது.
தான் ஏதும் தவருக மாயாண்டியிடம் கூறிவிட் டோமோ என எண்ணிய படி தனது லயத்தை நோக்கி
நடந்தார்.
率 米
மூலையில் இருந்த குப்பி விளக்கு ஒளி உமிழ்ந்துகொண் டிருந்தது.
இரவுச் சாப்பாட்டைத் தயாரிப்பதில் மீனுச்சியும் செந்தாமரையும் முனைந்திருந்தனர். அடுப்பிலிருந்து கிளம்பிய புகை காம்பராவில் நிறைந்தது.
**இந்தா பாரு செந்தாமர. இந்த அடுப்பு எரிஞ்சி தொலையமாட்டேங்குது. ஒரே பச்சை வெறகாக் கொண்டு வந்து போட்டுக்கிட்டு அக்கப்போர் அடிக்க வேண்டியதா இருக்கு; நாளேக்கி நீ வூட்ல இருந்து கொஞ்சம் வெறகு பார்த்துக் கொண்டுவந்து போடு" எனக் கூறிவிட்டு, குனிந்து அடுப்பைப் பலமாக ஊதினுள் மீனுச்சி.
ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தபடி அம்மியில் மிளகாயை அரைத்துக் கொண்டிருந்த செந்தாமரை தாயின் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

குருதிமலை 31
*" எனக்கு முடியாதம்மா. நாளைக்கி பத்தாம் நம்பர் மலையில கொழுந்து எடுக்கப் போருேம். நல்ல கொழுந்து இருக்கு; அதுவும் மட்டக் கொழுந்து மலை. ஒரு நாளைக்கி வேலைக்கி போகாட்டி அப்புறம் என் நெரைய மாத்திப் போடுவாங்க" எனக் கூறிவிட்டு மீண்டும் அம்மியில் இருந்த மிளகாயை அரைக்கத் தொடங்கினுள் செந்தாமரை.
* மாடசாமி கோவிலுக்குக்கிட்ட கவ்வாத்து வெட்டி நல்ல மெலாரு கிடக்குதானே, வேலை முடிஞ்சி வாறப்போ ஒரு கட்டு கொண்டுவாப்பான்னு வீரய்யாகிட்ட சொன் னேன்; அவன் கேட்டாத்தானே. கொஞ்சமாவது வூட்டு வெசயத்தில அக்கறையே இல்ல" எனக் கூறிவிட்டு அடுப் பில் இருந்த சோற்றுப் பானையைக் கிளறி வி ட் டா ள் மீனச்சி.
திடீரென ஸ்தோப்பின் கதவு திறந்து கொண்டது. குப்பென்று வீசிய குளிர்காற்று மூலையிலிருந்த குப்பி விளக்கின் சுடரைத் துடிக்க வைத்தது.
உள்ளே வந்த மாயாண்டி கதவைப் பலமாக அடித் துச் சாத்தினர். பின்னர் வீட்டினுள்ளே ஒரு தடவை நோட்டம்விட்டார்.
** எங்கே அவன் வீரய்யா?" மாயாண்டியின் குரல் கடுமையாக ஒலித்தது.
‘ என்னமோ அந்த ராமுவோட வெ விரி யி ல போனன். ஏதாச் சும் தோட்ட வெசயமாப் போயிருப் பாங்க. அவன் எங்க போனனென்னு நான பாத்துக்கிட்டு இருக்கேன்?"
"ஒம் மகன் இந்தத் தோட்டத்து ரவுடிப் பயங்க ளோட சேர்ந்துகிட்டு லயம் சுத்திறதுக்கு மட்டும் நல்லாப் படிச்சிருக்கான். இங்க வூட்ல நடக்கிற வெசயம் ஒன்னும் அவனுக்குத் தெரியாது; என்னல வெளியில தலை காட்ட முடியல."

Page 21
@2 குருதிமலை
"அப்புடி என்ன வெசயம் நம்மவூட்ல நடந்துபோச்சு? ஏன் வந்ததும் வராததுமா ஒரே ஆட்டம் போடுறீங்க? குடிச்சுப்புட்டுவந்தா பேசாம தின்னுப்புட்டு படுங்க. * சூர்ல’ வந்து சும்மா உளருதீங்க" என அலட்சிய மாகக் கூறினள் மீனுச்சி.
‘நான் ஒண்ணும் ஒளறல்லையடி. அந்தப் பியசேன பயலோட இவளுக்கு என்ன கதை வேண்டிக்கெடக்கு. தோட்டமே சிரிப்பா சிரிக்குதடி" எனப் பலமாகக் கத்திய மாயாண்டி, செந்தாமரையை முறைத்துப் பார்த்தார்.
திடீரெனத் தந்தை இப்படிக் கூறியதைக் கேட்ட செந்தாமரை திகைத்துப்போய், பயத்துடன் அவரை நோக்கினுள்.
மீனுச்சிக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ** என்ன சொல்லுறிங்க. சொல்லுறதைக் கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க."
** நான் என்னடி சொல்லவேண்டியிருக்கு. ஒம் மக ளையே கேளு. இவள் அந்தப் பியசேன பயலோட சேர்ந்து கிட்டு ஆட்டம் போடுருளா இல்லையான்னு!"
செந்தாமரை நடுங்கியவண்ணம் நின்றுகொண்டிருந் தாள்.
மாயாண்டி கூறியவை யாவும் மீனுச்சியின் நெஞ் சைக் கலக்கின.
அப்போது வீரய்யா ஸ்தோப்பின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
அவனது முகத்தில் கலக்கம் குடிகொண்டிருந்தது. மாயாண்டி அவனை முறைத்துப் பார்த்தார். "ஏன் அப்பா இப்புடி பெரிசா சத்தம் போடுறீங்க? நீங்க போடுற சத்தம் இந்த லயமே கேட்கும் போல இருக்கு."

குருதிமலை 33
**ஆமா ஆமா, இப்போதான் தொர ஞாயம் பேச வந் திருக்காரு. நீ ஒழுங்கா இருந்தா ஏண்டா இப்புடியெல் லாம் வரப்போகுது?" எனக் கோபத்துடன் கத்தினர் மாயாண் டி.
** அப்புடியில்லப்பா இப்பு டி நீங்க பெரிசா சத்தம் போட்டா, இந்த வெசயம் லயத்தில உள்ள எல்லாருக்கும் தான் கேக்கும். நமக்குத்தானே வெக்கம். கொஞ்சம் மெதுவா பேசுங்கப்பா" எனக் கெஞ்சும் குரலில் கூறி ஞன் வீரய்யா.
வீரய்யா இதுவரை நேரமும் வெளியே நின்று எல்லா வற்றையும் கேட்டுக்கொண்டிருந்திருக்கிருன் என்பதை மாயாண்டி உணர்ந்துகொண்டார்.
‘ஆமா, நான் சத்தம் போடுறதாலதான் மத்தவங் களுக்குத் தெரியப் போகுதா? இந்த வெசயந்தான் தோட் டமே தெரிஞ்சு கிடக்குதே" என முணுமுணுத்தபடி அந்த இடத்தில் நிற்க விரும்பாதவராய் காம்பராவின் உள்ளே கிடந்த கட்டிவில் போய்ச் சரிந்தார் மாயாண்டி.
மீனச்சி பெரிதாக விம்மத் தொடங்கினுள்.
"இங்கே பாரம்மா. இனிமே செந்தாமரைய வெளியே எங்கேயும் தனியா அனுப்பாதீங்க, வேலைக்கு போறப்போ ஒங்க கூடவே கூட்டிப் போங்க. தனியா
அனுப்புறதாலதான் இதெல்லாம் வருது' எனத் தேற் றும் குரலில் கூறினன் வீரய்யா.
அன்று இரவு அவர்களது வீட்டில் யாருமே உணவு அருந்தவில்லை.
செந்தாமரை வெகு நேரம்வரை தூக்கம் வராது படுக் கையில் புரண்டுகொண்டிருந்தாள்.

Page 22
34 குருதிமலை
அத்தியாயம் நான்கு
DfT 2 நேரம், கொழுந்து மடுவம் கலகலப்பாக இருந் தது. மூலையில் போடப்பட்டிருந்த மேசையின் மேல் "செக் ருேல் புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு அன்று வேலைக்கு வந்த தொழிலாளர்களுக்குப் "பேர்’ போட்டுக் கொண்டிருந்தார் கண்டக்டர். கங்காணிமார்கள் சிலர் அன்று வேலை செய்தவர்களின் பெயர்களை அவரிடங் கூறிக் கொண்டிருந்தனர். அன்றைய தபாலில் தமக்கு ஏதாவது கடிதங்கள் வந்திருக்கிறதா என அறிவதற்காகவும் சிலர் அங்கு வந்திருந்தனர்.
ஆபீஸிலிருந்து பெட்டிக்காரன் அப்போதுதான் மடு வத்தை வந்தடைந்தான். எல்லோரும் கூட்டமாகக் கண் டக்டரைச் சூழ்ந்து கொண்டனர். கண்டக்டர் செக்ருேலை முடித்துவிட்டு, பெட்டியைத் திறந்து அன்றைய தபாலில் வந்திருந்த கடிதங்களை ஒவ்வொன்ருக எடுத்து முகவரிகளை வாசித்து உரியவர்களிடம் கொடுத்தார். பின்பு டயரி யைப் புரட்டி துரையிடமிருந்து ஏதாவது நிருபங்கள் வந்திருக்கிறதா எனக் கவனித்தார்.
கொழுந்தெடுக்கும் பெண்களைக் கூட்டிக்கொண்டு கறுப் பண்ணன் கங்காணி அப்போதுதான் அங்கு வந்து சேர்ந் தார். அவரைத் தொடர்ந்து வீரய்யாவும் கொழுந்தெடுப் பவர்களுடன் மடுவத்தை வந்தடைந்தான். கணக்கப் பிள்ளை அவர்கள் கொண்டுவந்த கொழுந்துகளை நிறுக்கத் தொடங்கினர்.

குருதிமலை 35
கையிலிருந்த நிருபத்தை வாசித்துவிட்டு, மூக்குக் கண் னடியைக் கழற்றினர் கண்டக்டர்.
"என்னங்கையா 'சேக்குலர்" ஏதோ வந்திருக்குப் போலயிருக்கே. தொரை என்னங்க எழுதியிருக்காரு' எனக் கேட்டுக்கொண்டே கண்டக்டரின் அருகில் சென்ருர் மாரிமுத்துத் தலைவர்.
'நம்ப தோட்டத்துக்கு புதிசா ? சுப்பவைசர் வேலைக்கு ஆளுங்களை எடுக்கப் போருங்களாம். அதுணுல விரும்பின வங்களை மனுப் போடச் சொல்லி மாவட்டக் காரியால யத்திலிருந்து தொரைக்குக் கடிதம் வந்திருக்கு. அதைத் தொரை நமக்கு அனுப்பியிருக்காரு" எனக் கூறிய கண்டக் டர் மீண்டும் மூக்குக் கண்ணுடியை அணிந்துகொண்டார். *அப்புடீங்களா, நம்ப தோட்டத்துக்கு வேலை பாக்க இனிமே ரொம்பப் பேரு வருவாங்க போலையிருக்கே" என மகிழ்ச்சியுடன் கூறிவிட்டுத் தலையாட்டினர் தலைவர்.
அப்போது வீரய்யா, கண்டக்டரின் அருகே வந் தான்.
'ஐயா நம்ப தோட்டத்திலயும் படிச்ச பொடியங்கள் இருக்கிருங்க. அவுங்களும் சுப்பவைசர் வேலைக்கு "அப்பி ளிக்கேசன்’ போடலாமுங்களா?" எனக் கேட்டுவிட்டு
கண்டக்டரின் முகத்தைப் பார்த்தான்.
"ஆமா வீரய்யா, அரசாங்க வேலையின் னு படிச்சவங்க எல்லாருந்தான் ‘அப்ளிக்கேசன்’ போடலாம்” என்ருர் கண்டக்டர் சிந்தனையுடன்.
‘என்ன வீரய்யா, அப்படிக் கேக்கிறே. நம்ப தோட் டத்தில உள்ள பொடியன்கள் மனுப் போட்டா அரசாங் கத்தில வேலை கொடுப்பாங்களா?" எனக் கேட்டுவிட்டு ஏளனமாகச் சிரித்தார் தலைவர்.

Page 23
36 குருதிமலை
"தோட்டத்து ஆளுங்களுக்கு ச லு  ைக செஞ்சு கொடுக்கணுமென்னுதானே அரசாங்கத்தில சொல்லி யிருக்கிருங்க. அதுணுல கட்டாயம் தோட்டத்தில இருக் கிற படிச்ச பொடியங்களுக்கு வேலை கொடுப்பாங்க. எல்லாரையும் அப்பிளிக்கேசன் போடச் சொல்லுங்க” என உறுதியான குரலில் கூறிய கண்டக்டர் தனது வேலை யில் கவனஞ் செலுத்தத் தொடங்கினர்.
கொழுந்து நிறுத்து முடித்த பெண்கள் ஒவ்வொரு வராக வந்து பேர் போடத் தொடங்கினர்.
** அப்புடீன ரெம்ப நல்லதுங்கையா. நம்ப பொடி யங்களே நம்ப தோட்டத்தில வேலை பாக்கிறதுன்னு, நாமெல்லாம் சந்தோஷப்படவேண்டிய  ெவ ச ய ம் தானுங்க" எனக் கூறிவிட்டுத் தனது காவிபடிந்த பற் களைக் காட்டிச் சிரித்தார் கறுப்பண்ணன் கங்காணி.
**ஆயா கறுப்பண்ணன், நம்ப பொடியங்களுக்குத் தான் நம்பவுட்டு கஷ்ட நஷ்டமெல்லாம் வெளங்கும். அவுங்க வேலை பாத்தா நமக்கு எப்படியும் கொஞ்சம் சலுகை கொடுப்பாங்க" - பக்கத்தில் நின்றிருந்த வய தான தொழிலாளி ஒருவர் கூறிஞர்.
**ஆமா ஆமா, நம்ப தோட்டத்திலேயே ஏழெட்டு படிச்ச பொடியங்க இருக்காங்க. அவுங்கள எல்லாம் இந்த வேலைக்கு மனுப் போடச் சொல்லி சொல்லணும்' என்ருர் வேருெரு தொழிலாளி.
**நம்ப வீரய்யாதான் இந்த மாதிரி வேலைங்களுக்கு முன்னுக்கு நிண்டு செய்வானே. இந்தா பாரு வீரய்யா! நீதான் படிச்ச பொடியங்ககிட்ட சொல்லி மனுப் போடச் செய்யணும்' என வீரய்யாவின் பக்கம் திரும்பிக் கூறி
ஞர் கறுப்பண்ணன் கங்காணி.
வீரய்யா புன்னகையுடன் தலையாட்டினன்.

குருதிமலை 37
அங்கு குடியிருந்த ஒரு சிலரது உள்ளங்களில் தங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தோட்டத்தில் ஏதாவது சிறிய உத்தி யோகமாவது கிடைக்காதா என்ற ஆவல் இப்போது தோன்றியிருந்தது. சிலர் தங்களைச் சேர்ந்த, படித்த இளை ஞர்களை ஒரு தடவை எண்ணிப் பார்த்தார்கள். அவ்விளை ஞர்களுக்குத் தோட்டத்திலே உத்தியோகம் கிடைப்பதற்கு ஏற்ற சந்தர்ப்பம் தோன்றியிருப்பதை நினைத்தபோது அவர்களது உள்ளத்தில் ஆர்வம் பொங்கியது.
துரையின் கார் அப்போது மடுவத்திற்கு முன்னல் வந்து நின்றது. இதுவரை நேரமும் இரைச்சல் நிறைந் திருந்த அந்த இடத்தில் இப்போது அமைதி நிலவியது. துரை காரிலிருந்து இறங்கி மடுவத்துள் நுழைந்தார்.
"குட் ஈவினிங் சேர்’-கண்டக்டர், துரைக்கு வந்த னம் தெரிவித்தார்.
"குட் ஈவினிங் மிஸ்டர் இராமசாமி" என பதில் வந் தனம் கூறிய துரை அங்கிருந்த கதிரையில் போய் அமர்ந் தார்.
தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் துரைக்கு சலாம் வைத்து வந்தனம் செய்தனர்.
துரை மேசையில் விரித்திருந்த செக்ருேலை ஒரு தடவை புரட்டிப் பார்த்தார். பின்னர் கண்டக்டரைப் பார்த்து, "உம்மிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும். அதைப்பற்றிக் கூறுவதற்குத்தான் நான் இப் போது வந்தேன். ஐம்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட வர்கள் இனிமேல் தோட்டத்தில் உத்தியோகம் பார்க்க முடியாதென எனக்கு அரசாங்கத்திலிருந்து அறிவித்தல் வந் திருக்கிறது. அதனல் நீங்களும் கட்டாயம் ஒய்வுபெற வேண்டித்தான் வரும். இதன் விபரம் உங்களுக்கு நான் உத்தியோக ரீதியாக நாளை கடிதமூலம் தெரிவிப்பேன்."

Page 24
38 குருதிமலை
இதனை ஆங்கிலத்தில் கூறினர் துரை.
கண்டக்டருக்குப் பெரும் திகைப்பாக இருந்தது.
‘என்ன துரை திடீரென இப்படிக் கூறுகிறீர்கள்? நான் எனது உத்தியோகத்திலிருந்து இப்போது ஓய்வு பெற்ருல் எனது குடும்ப நிலை மிகவும் மோசமாகிவிடும்" தன்னைச் சுதாகரித்துக்கொண்டு கூறினர் கண்டக்டர்.
“இது அரசாங்க உத்தரவு. என்னுல் ஒன்றுமே செய்ய முடியாது. நீங்கள் ஒய்வுபெற்றுத்தான் ஆகவேண்டி வரும்.’’
*" எனது மகன் படித்துவிட்டு வீட்டில் இருக்கிருன். அவனுக்கு வேலை கிடைக்கும் வரையாவது நான் வேலை செய்துதான் ஆகவேண்டும். இல்லாவிடில் எனது குடும் பம் கஷ்டத்திற்குள்ளாகிவிடும்."
'உமது நிலை எனக்கு நன்ருகப் புரிகிறது. கொம்பனிக் காலமாக இருந்தால் நானே உமது மகனுக்கு ஒரு வேலை கொடுத்து உதவியிருப்பேன். இப்போது என்னல் எது வுமே செய்ய முடியாது' எனக் கூறி கையை விரித்தார் துரை. w
கண்டக்டரின் கண்கள் கலங்கிவிட்டன. 'இப்போதுதான் தோட்டத்திற்கு உத்தியோகத்தர் களை எடுக்கப் போகின் ருர்களே. உமது மகனையும் மனுப் போடச் சொல்லுங்கள். அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்க லாமல்லவா?’ எனக் கூறிய துரை காரை நோக்கிச் சென் ருர். துரையின் கார் புறப்பட்டுச் சென்று வெகு நேரமா கிய பின்னரும் கண்டக்டர் சிலையாக நின்ருர்,

குருதிமலை 39
அத்தியாயம் ஐந்து
பியசேன தனது "கொந்தரப்பு’ மலையில் புல்வெட்டிக் கொண்டிருந்தான். வழக்கமாகப் பத்தாந் திகதிக்கு முன்பே கொந்தரப்பை முடித்துக் கணக்கப்பிள்ளையிடம் பாரம் கொடுத்துவிடும் அவனுக்கு இம்முறை ஏனே துரித மாக வேலை செய்ய முடியவில்லை.பதினைந்தாம் திகதியா கியபோதிலும் அரைவாசி மலை கூட புல்லுவெட்டி முடிந்தி ருக்கவில்லை. அவனது உடலும் உள்ளமும் மிகவும் சோர்ந்து போய் இருந்தன. செந்தாமரையின் நினைவுகள் அடிக்கடி வந்து அவனை அலைக்கழித்தவண்ணம் இருந்தன.கிழமையில் எப்படியும் இரண்டு மூன்று தடவையாவது அவனைத் தேடி வரும் செந்தாமரை கடந்த சில வாரங்களாக அவனிடம் வராதது அவனுக்குப் பெரிதும் வேதனையைக் கொடுத்தது.
அவளை எப்படியாவது தனியாகச் சந்தித்துவிடவேண்டு மென்ற எண்ணத்துடன் அவன் பல தடவை முயற்சித்த போதும் அவனல் அது முடியவில்லை. அவள் வேலைக்குப் போகும்போதும் திரும்பி வரும்போதும் அவளது தாய் மீனுச்சி அவளுடன் கூடவே செல்வாள். அதைப் பார்த்து விட்டு அவன் ஏக்கத்துடன் வீட்டுக்குத் திரும்புவான்.
வெயில் சுரீரென முதுகில் உறைத்தது.தலையில் கட்டியி ருந்த துண்டை அவிழ்த்து வியர்வையைத் துடைத்துவிட்டு அவன் சற்று ஒய்வெடுத்தான். காலையிலிருந்து இதுவரை நேரமும் செய்துமுடித்த வேலை அவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை.எப்படியும் இன்னும் சில நாட்களில் கொந்

Page 25
40 குருதிமலை
தரப்பை முடித்துக் கொடுத்துவிடவேண்டும் என்ற எண் ணத்துடன் மீண்டும் புல்வெட்டத் தொடங்கினன்.
அப்போது அவனது முதுகில் கல்லொன்று பட்டென்று வந்து விழுந்தது. அவன் நிமிர்ந்து சுற்றுமுற்றும் பார்த் தான்.எ வருமே அங்கு தென்படவில்லை.
மீண்டும் அவன் குனிந்து புல்வெட்டத் தொடங்கினன்.
திரும்பவும் ஒரு சிறிய கல் அவனது முதுகில் பட்டுத் தெறித்தது.திடீரென அவன் நிமிர்ந்தான்.
ஒற்றையடிப் பாதையின் வளைவில் செந்தாமரை குறும்பாகச் சிரித்தவண்ணம் நின்றுகொண்டிருந்தாள்.
கையில் இருந்த சுரண்டியை வீசிவிட்டு ஒடிச்சென்று அவளை அப்படியே கட்டியணைக்கவேண்டும்போல் அவனது உள்ளம் துருதுருத்தது.ஒருகணம் தன்னை மறந்து நின்ற பியசேன தன்னைச் சுதாகரித்துக்கொண்டு முகத்தில் பொய்க் கோபத்தை வரவழைத்த வண்ணம் மீண்டும் குனிந்து புல்வெட்டத் தொடங்கினன்.
செந்தாமரை அவன் அருகில் துள்ளிக் குதித்து ஓடிவந் தாள்.வெடுக்கென அவனது கையிலிருந்த சுரண்டியைப் பறித்துத் தூர வீசிவிட்டு அவனது கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டாள்.
* என்னங்க என் மேல கோபமா?'-அவளது கண்கள் அவனிடம் கேட்டன.
பொங்கி வந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத வணுய் பியசேன அவளைத் தன் இரு கைகளாலும் நெஞ் சோடு அணைத்துக்கொண்டான்.
அவள் அவனது கழுத்தில் தன் இரு கைகளையும் கோர்த்தபடி "ஐயையோ.என்னை விட்டிடுங்க.மேல் ரோட்டுல யாரும் வந்தாங்கன்னு கண்டுக்கிடுவாங்க" எனக் கெஞ்சினுள்.

குருதிமலை 41
**இன்னிக்கு நாங் ஒன்னை விடமாட்டேன்" எனக் கூறியபடி அவளை அருகிலிருந்த நெற்றிக் கானுக்கு இழுத் துச் சென்றன் பியசேன.
அது ஒரு மறைவான இடம். யாருமே அவர்கள் அங்கி ருப்பதைப் பார்த்துவிடமுடியாது.
**ஏன் செந்தாமர இவ்வளவு நாளா என்னைச் சந்திக்க வரேல்ல?" அவனது முகம் அவளது வதனத்தை நோக்கிக் குனிந்தது.
"நம்ம வெசயம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சு போச் சுங்க, யாரோ எங்கப்பாக்கிட்ட சொல்லி வீட்டுல பெரிய கரச் ச லாப் போச் சு. நா எங்கேயும் தனியா வெளிய போகக் கூடாதுன்னு கண்டிப்பு பண்ணிப்புட்டாங்க." செந்தா மரை கவலையுடன் கூறினுள்.
** அப்போ இன்னிக்கு மட்டும் எப்புடி வந்தே?' 'வேலக்காட்டுல,எனக்கு வயித்து வலின்னு கங்காணி கிட்ட பொய் சொல்லிப்புட்டு வந்திட்டேன்" எனக் கூறிய படி செந்தாமரை அவனது நெஞ்சிலே விரல்களால் ஏதோ கோலம் கீறினுள்.
‘சரியான தந்திரசாலிதான்" எனக் கூறிய பியசேன அவளது கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினுன்.
**நான் சுறுக்கா போகவேனுங்க."
*" என்ன செந்தாமர வந்தவொடனயே போகணுமுணு சொல்லுறியே.நா ஒன்னை இவ்வளவு நாளா காணும எவ் வளவு துடிச்சுப் பொனேன் தெரியுமா?"
"நா மட்டும் என்ன சந்தோஷமாவா இருந்தேன். எந்த நேரமும் ஒங்க நெனைவுதான். சாப்பிடக் கூட மனசு வரல்ல.இரவுக்குப் படுத்தேன்னு துரக்கங்கூட வராது" எனக் கூறிய செந்தாமரை அவனது நெஞ்சுக்குள் தனது முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

Page 26
42 குருதிமலை
"இனிமே ஒன்னை ஒரு நாள் கூட பாக்காம என்னுல இருக்கமுடியாது செந்தாமரை." அவனது குரல் கம்மி Ա.151.
'எனக்கு என்னமோ பயமா இருக்குங்க. இனிமே நாங்க இப்புடி தனியாச் சந்திக்கமுடியாது. எப்புடியாச் சும் ஓங்ககூட என்னைக் கூட்டிக்கிட்டு போயிடுங்க. செந் தாமரையின் கண்கள் கலங்கின.
**இந்தா பாரு செந்தாமரை..இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கநான் எப்புடியும் ஒன்னை நிச்சயமா கூட்டிக் கிட்டு போவேன்."
*நா ஓங்ககூட வந்தா என்னைய ஓங்க வூட்டுல ஏத்துக் கிடுவாங்களா?" ஏக்கத்துடன் அவனது கண்களை உற்று நோக்கியபடி கேட்டாள் செந்தாமரை.
'ஏன் செந்தாமர இதுக்குப் போய் கவலைப்படுற.எங்க வூட்டுல அம்மா மட்டுந்தான் இருக்காங்க. ஒன்னைப் பாத் தாங்கண்ணு அவுங்க ஒண்ணுமே சொல்லமாட்டாங்க" எனக் கூறிய பியசேன அவளது வதனத்தைத் தன் இரு கைகளாலும் வருடினன்.
அவள் அவனது கைகளை மெதுவாக விலக்கியபடி, நா வந்து ரொம்ப நேரமாச்சுங்க; ஆளுங்க பகல் சாப் பாட்டுக்கு வந்திடுவாங்க. எங்கம்மா வாறதுக்குள்ள நான் வூட்டுக்கு போயிடணும்' எனக் கூறியபடி எழுந்திருந் தாள்.
"இனி எப்ப செந்தாமர என்னைச் சந்திக்க வருவே?* அவன் ஆவலுடன் அவளது கண்களை உற்று நோக்கியபடி கேட்டான்.
'வசதி கிடைக்கிற நேரமெல்லாம் ஒங்ககிட்ட நான், கட்டாயம் வருவேன்" எனக் கூறிய செந்தாமரை அவனைப், பிரிந்துசெல்ல மனமின்றி மெதுவாக நடந்தாள்.

குருதிமலை 49
அவளது உருவம் மறையும்வரை அவளையே பார்த்துக் கொண்டு நின்ற பியசேன மீண்டும் தனது வேலையைக் கவ னிக்கத் தொடங்கினன்.
இப்போது அவனது உள்ளம் ஓரளவு நிறைவுபெற்றி ருந்தது.
அத்தியாயம் ஆறு
DTதங்கள் சில உருண்டோடின. மழைகாலம் ஆரம்ப மாகி இருந்தது.
தோட்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்றதினுல் தங் களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகளை எதிர்பார்த்த வண்ணம் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் நாட்களைக் கழித்தனர். படித்த இளைஞர்கள் தங்களுக்குக் கிடைக்கப் போகும் வேலைவாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். கன்டக்டர் ராமசாமி கட்டாய ஒய்வு பெற்றுத் தோட்டத்தைவிட்டுப் போய்விட்டார். மேலும் சில மாதங் கள் தன்னைத் தோட்டத்தில் வேலை செய்வதற்கு அனுமதிக் கும்படி அவர் கோரிய விண்ணப்பம் அரசாங்கத்தால் நிரா கரிக்கப்பட்டுவிட்டது.
அவரது இடத்துக்குப் புதிதாக வேலைக்கு வந்த கண்டக் டர் இப்போது தோட்டத்தில் வேலைசெய்து வருகிருர்,
டந்த இரண்டு நாட்களாகக் காலநிலை மிக மோச மாகி இருந்தது.இடையிடையே பலத்த காற்றுடன் மின் னலும் இடியுமாக மழை பெய்துகொண்டிருந்தது.

Page 27
44 குருதிமலை
புதிய கண்டக்டர் பங்களாவில் இருந்து மடுவத்தை நோக்கிப் படிக்கட்டில் இறங்கி வந்துகொண்டிருந்தார். கையிலிருந்த குடையைப் பிடுங்கி எறிந்துவிடுவதுபோல் காற்றுப் பலமாக வீசியது. மழைச்சாரல் முகத்தில் தெறிக் காமல் இருப்பதற்காக அவர் குடையை முன்பக்கம் சரித் துப் பிடித்தபடி மடுவத்தை நெருங்கினர்.
எதிரே சற்றுத் தூரத்தில் வீரய்யாவும் கொழுந்தெடுக் கும் பெண்களும் வருவது, மலைகளைத் தழுவியிருக்கும் முகிற் கூட்டங்களினூடே மங்கலாகத் தெரிந்தது.
கண்டக்டர் தனது கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தார்.அவரது புருவங்கள் நெளிந்தன. மடுவத்தின் உள்ளே சென்று குடையைச் சுருக்கி ஒரு மூலையில் வைத்து விட்டு, தான் அணிந்திருந்த மழைக் கோட்டைக் கழற்றி ணுர்.
வீரய்யாவும் பெண்களும் மடுவத்தின் உள்ளே நுழைந் தனர்.
‘என்ன மனுசன், கொழுந்து நெறுக்க மிச்சங் நேர மிருக்குத் தானே. நீ ஏன் இப்பவே ஆளுங்களைக் கூட்டிக் கிட்டு வந்தது?" கோபத்துடன் வீரய்யாவைப் பார்த்து வினவினர் கண்டக்டர்.
'நீங்களே பாருங்கையா, இப்புடி ஊத்துற மல்ழையில நின்னு கொழுந்தெடுக்க முடியுங்களா?அதுதானுங்க." வீரப்பா கண்டக்டருக்கு விளக்கம் கூறமுயன் முன்.
"என்ன மனுசன் நீ பேசுறது; 'றவுண்" பிந்திப்போச்சு சொல்லி நான் ஒனக்கு பெரட்டுல வச்சு சொன்னது தானே. ஒன்னை யாரு வெள்ளன வரச் சொன்னது?"
**இந்த ஆளுங்களைப் பாருங்க, நனைஞ்சி வெரச்சுப் போயிட்டாங்க, அவுங்களால மழையில நின்னு கொழுந் தெடுக்க முடியல் லிங்க.அதுதாங்க வெள்ளணு கூட்டிக்கிட்டு வந்திட்டேனுங்க" வீரய்யா பணிவான குரலில் கூறினன்.

குருதிமலை 45
"மிச்சங் பேசவேணுங் மனுசன், நான் சொல்லுறது ஒண்ணு, நீ செய்யிறது ஒண்ணு.மத்தக் கங்காணியெல்லாம் பாரு.இப்பவும் மலையில நின்னு வேலை செய்யுறது.நீ மட் டுந்தான் குழப்பங் பண்ணுறது" கண்டக்டரின் வார்த்தை கள் கோபத்தினுல் தடுமாறின.
"அந்த மலை வழுக்கப்பாறைத் துண்டுங்க.போன வரு ஷமும் இப்புடித்தாங்க சரியான மழையுங்க, ஒரு பொம் புளை ஆளு அந்த மலையில விழுந்து ரொம்ப ஆபத்தாப் போச்சுங்க." -
அங்கு நின்ற பெண்கள் குளிரில் நடுங்கியவாறு, வீரய் யாவைக் கண்டக்டர் கோபித்துப் பேசுவதை பீதியுடன் கவனித்துக்கொண்டிருந்தனர்.மூலையில் நின்றிருந்த ராக்கு தனது தலையில் இருந்த கொங்காணியைக் கையில் எடுத்து பிழிந்துகொண்டே,
"என்னுப்பா,இந்த ஐயா கொஞ்சங்கூட எரக்கமில்லா தவரு போலத் தெரியுது.இப்புடி ஊத்திற மழையில யாரு தான் கொழுந்தெடுப்பா" என முணுமுணுத்தாள்.
பக்கத்தில் நின்ற பெண்களும் ராக்கு கூறியதை ஆமோ திப்பதுபோல ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
"என்னு அங்க சத்தங் போடுறது? எல்லாங் வாயை மூடிக்கிட்டு நில்லு.இன்னிக்கு அரைப் பேருதான் எல்லாத் துக்கும் போடுறது' எனப் பலமாகக் கத்தினர் கண்டக் L-rf.
எல்லோரும் திகைத்துப்போய் நின்றனர். அரைமணி நேரம் முந்தி வந்ததற்காக அரை நாட் சம்பளத்தையே வெட்டிவிடப் போவதாகக் கண்டக்டர் கூறியது அவர் களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
"ஐயா, அப்புடியெல்லாம் செஞ்சுப்புடாதீங்க. நாளைக்கு வேணுமுன்னு கொஞ்சங் கூடநேரம் மலையில

Page 28
46 குருதிமலை
நின்னு, பிந்தின 'றவுணை" எடுத்துத் தர்ரோமுங்க" என் ருன் வீரய்யா.
‘'நீ மிச்சங் பேச வேணுங் மனுசன்.நாளைக்கு மழை பெஞ்சா நீ இப்புடித்தான் நாளைக்கும் ஆளுங்களை கூட்டிக் கிட்டு வாறது. நீ நம்மளை என்ன நெனச்சது?" கோபத் துடன் தனது சப்பாத்துக் காலை நிலத்திலே உதைத்தார் கண்டக்டர்.
வீரய்யா மெளனமாக நின்றன். "இந்தா பாரு கங்காணி, ஒனக்கு இன்னிக்கு பத்து ரூபா தெண்டம்; இனிமே இப்புடி ஏதும் செஞ்சா ஒனக்கு கங்காணி வேலை நிப்பாட்டுறது. இதைப் பத்தி நான்' தொரைக்கும் சொல்லுறது."
அப்போது கொழுந்துக் கணக்கப்பிள்ளை செக்ருேல் புத்தகத்துடன் மடுவத்திற்கு வந்து சேர்ந்தார். அவரிடம் கொழுந்தை நிறுக்கச் சொல்லிவிட்டு, செக்ருே லைப் புரட்டி ஞர் கண்டக்டர்.
கண்டக்டர் ஏதோ கோபமாக இருக்கிறர் என்பதைப் புரிந்துகொண்ட கணக்கப்பிள்ளை, மெளனமாக க் கொழுந்தை நிறுக்கத் தொடங்கினர்.
வேறு மலையில் கொழுந்தெடுத்துக்கொண்டிருந்த பெண்களும் கறுப்பண்ணன் கங்காணியும் சிறிதுநேரத்தின் பின்னர் மடுவத்தை வந்தடைந்தனர்.
கணக்கப்பிள்ளை தொடர்ந்தும் கொழுந்தை நிறுத்துக் கொண்டிருந்தார். கொழுந்து நிறுத்துமுடித்த பெண்கள் கண்டக்டரின் அருகே சென்று பேர் போட்டுவிட்டுச் சென்றனர்.
பேர் போட்டு முடிந்ததும் சிகரட் ஒன்றை எடுத்து வாயில் பொருத்திவிட்டுத் தனது காற்சட்டைப் பொக்கட் டுக்குள் கையைவிட்டுத் துளாவினர் கண்டக்டர்.

குருதிமலை 47.
** என்னங்கையா, நெருப்பெட்டியேதும் பாக்குறிங் களா? ஏங்கிட்ட இருக்குங்க" எனக் குழைந்தபடி தன்னிடம் இருந்த தீப்பெட்டியை எடுத்து மரியாதையுடன் கொடுத் தார் கறுப்பண்ணன் கங்காணி.
சிகரட்டைப் பற்றவைத்து,ஒருமுறை புகையை ஊதித் தள்ளிய கண்டக்டர், கறுப்பண்ணன் பக்கம் திரும்பி, *கங்காணி, ஒங்க மலை இன்னிக்கு கொழுந்தெடுத்து முடிச் சதா?" எனக் கேட்டார்.
"ஆமாங்க,ஐயா சொன்னமாதிரியே அந்த மலையை இன்னையோட முடிச்சிட்டேனுங்க. றவுண் பிந்திப்போயி ருக்குத் தானுங்களே. அதுணுல ஆளுங்களைக் கொஞ்ச நேரம் கூடவே மலையில நிப்பாட்டி அந்த "றவுணை முடிச் சுட்டேனுங்க" எனக் கூறிய கறுப்பண்ணன் குழைந்தபடி சிரித்தார்.
உண்மையில் அவர் கூறியதுபோல் அந்த மலை வேலை முடிந்திருக்கவில்லை.ஆனலும், கண்டக்டரிடம் பொய்யைக் கூறியாவது அவரின் நன்மதிப்பைப் பெற்றுவிடவேண்டும் என்பதிலேயே கருத்தாக இருந்தார் கறுப்பண்ணன் கங் காணி.
**ஆங் சரி, மிச்சங் நல்லங். அப்புடித்தாங் நம்ப கிட்ட வேலை செய்யவேணுங்' எனக் கூறிய கண்டக்டர்,கறுப் பண்ணன் கங்காணியிடம் தீப்பெட்டியைத் திருப்பிக் கொடுத்தார்.
பின்னர் கணக்கப்பிள்ளையை அழைத்து, "நீங்கள் இன் றைய கொழுந்துக் கணக்குகளை முடித்துக்கொண்டு எனது பங்களாவுக்கு வாருங்கள். தோட்டத்து விடயமாக உங்களி டம் கதைக்கவேண்டும்" என ஆங்கிலத்தில் கூறிவிட்டு, மேசையில் இருந்த செக்ருேலைக் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
'ஐயா,செக்ருேலை நான் கொண்டுவந்து தர்றேங்க. எங்கமாதிரி ஆளுங்க இருக்கிறப்போ, ஐயா புத்தகத்தைத்

Page 29
48 குருதிமலை
துரக்கலாமுங்களா?" எனக் கூறிய கறுப்பண்ணன் கங் காணி, செக்ருேலைக் கையில் வாங்கிக்கொண்டார்.
வெளியே இப்போது மழை ஒய்ந்திருந்தது. மூலையில் சரித்துவைக்கப்பட்டிருந்த குடையை மறு கையில் எடுத் துக்கொண்டு, கண்டக்டரைப் பின் தொடர்ந்தார் கருப் பண்ணன் கங்காணி.
புதிய கண்டக்டரின் பின்னல் அவரது பங்களா படிக் கட்டுகளில், ஏறுவது கறுப்பண்ணன் கங்காணியின் உள் ளத்திலே மகிழ்ச்சியைக் கொடுத்தது. எப்படியாவது கண் டக்டரின் தயவைப் பெற்றுவிடவேண்டும் என்பதிலேயே இப்போது கறுப்பண்ணன் கங்காணியின் சிந்தனை முழு வதும் லயித்திருந்தது.
இதுவரை நேரமும் குழம்பிய மனதுடன் நின்று கொண்டிருந்த வீரய்யா இப்போது ஏதோ முடிவுக்கு வந்த வணுக மாரிமுத்துத் தலைவரின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினுன்,

குருதிமை 49
அத்தியாயம் ஏழு
ண்ேடக்டரின் ஆபீஸ் அறையில் விளக்கு வெளிச் சம் தெரிந்தது. செக்ருேல் செய்வதில் மூழ்கியிருந்தார் கண்டக்டர். அன்று வேலை செய்த ஆட்களின் தொகைக் கும் முடிந்திருந்த வேலைக்கும் சரிப்பட்டு வராததால் எப் படியும் அதனைச் சரிக்கட்டி விடவேண்டும் என்ற எண்ணத் துடன் அவர் மூளையைப்போட்டுக் குடைந்துகொண்டிருந் தார்.
முன் வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. சமையல் அறையில் வேலையில் ஈடுபட்டிருந்த வேலைக் காரப் பையன், கதவின் அருகே சென்று திரையை நீக்கி, கண்ணுடியின் ஊடாக வெளியே பார்த்தான். இருட்டில் யாரோ நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.
**ஆங் மல்லி, அபே கொந்தஸ்தர் மாத்தயா இன்ன வாத?" வெளியே நின்றவர் பையன் பார்ப்பதைக் கவ னித்துவிட்டு உரத்த குரலில் கேட்டார்.
பெடியன் அவசர அவசரமாக தாழ்ப்பாளை நீக்கி, கத வைத் திறந்துகொண்டே, 'ஐயா செக்ரோல் செஞ்சுக் கிட்டு இருக்காங்க. நீங்க யாருங்க?" என வினவினன்.
*"நாங் பக்கத்து நாட்டுல இருந்து வந்திருக்கு. ஐயா வைப் பாக்கவேனுங்."
வந்தவரை ஏற இறங்கக் கவனித்த பெடியன், அவரை உள்ளே வந்து கதிரையில் உட்காரச் சொல்லலாமா,

Page 30
50 குருதிமலை
கூடாதா என ஒருகணம் யோசித்தான். பின்பு ஏதோ முடி வுக்கு வந்தவனுக 'கொஞ்சம் நில்லுங்க; நான் ஐயா கிட்ட சொல்லுறேன்" எனக் கூறிக்கொண்டே ஆபீஸ் அறைப்பக்கம் சென்ருன்.
சிறிது நேரங்கழித்து கண்டக்டர் முன் வாசலுக்கு வந்து வெளியே எட்டிப் பார்த்தார்.
'ஆயுபோங் மாத்தியா' எனக் கைகூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு, ‘மங் கமே இந்தலா ஆவா; மாத்தியா அம்புவேண்ட தமாய் ஆவே' எனக் கூறியபடி குழைந்து கொண்டு சிரித்தார் வெளியே நின்றவர்.
பதிலுக்கு வணக்கம்தெரிவித்த கண்டக்டர், 'உள்ளே வாருங்கள்' எனச் சிங்களத்தில் கூறி அவரை நடுக் காம் பராவுக்கு அழைத்துச் சென்ருர்,
இருவரும் தமது ம்ொழியில் உரையாடத் தொடங்கி னர்.
*எனது பெயர் டிங்கிரி பண்டா; பண்டா முதலாளி என்ருல் எல்லோருக்கும் தெரியும். நீங்கள் இந்தத் தோட் டத்துக்குப் புதிதாக வேலைக்கு வந்திருப்பதை அறிந்தேன். உங்களைச் சந்தித்து உரையாடலாம் என்ற எண்ணத் துடன் வந்தேன்' எனக் கூறிக்கொண்டே சோபாவில் அமர்ந்தார் வந்தவர்.
** ஹோ அப்படியா! மிகவும் சந்தோஷம். உங்கள் கிராமத்தில் இருந்துகூட பலர் இங்கே வேலைக்கு வருகிறர் கள்" எனக் கூறியபடி கண்டக்டரும் எதிரே அமர்ந்து Gorgini.
"ஆமாம், எனது அண்ணன் மகன் ஒருவன்கூட இங்கே வேலைக்கு வருகிருன். அவனது பெயர் பியசேன. அவனை உங்களுக்குத் தெரியுமென நினைக்கின்றேன்."
கண்டக்டர் சிந்தனையுடன், "அவனை எனக்கு நன்ரு கத் தெரியாது. நான் தோட்டத்துக்கு வந்து சிறிது காலந்

குருதிமலை 5 I
தானே ஆகின்றது. ஆனலும் பியசேனவின் பெயரில் கொந்தரப்பு இருக்கிறதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது" எனக் கூறிய கண்டக்டர், தொடர்ந்து பலமாக இரண்டு தடவை இருமிஞர்.
“உங்களுக்கு உடம்பு சரியில்லைப்போல் தெரிகிறது. அதிகமாக இருமுகிறீர்கள்" என்ருர் பண்டா முதலாளி.
"நேற்றிலிருந்து சிறிது சுகமில்லை" எனக் கூறிய கண் டக்டர்,தொடர்ந்தும் பலமாக இருமினர்.
"நீங்கள் இந்தப் பகுதிக்குப் புதிதுதானே, அதனுலே தான் சுவாத்திய நிலை உங்களு க் கு ப் பிடிக்கவில்லைப் போலும், போகப் போக எல்லாம் சரியாகிவிடும்" எனக் கூறிய பண்டா முதலாளி சிறிது தயங்கிவிட்டு, ‘நேற்று நான் மந்திரியிடம் ஒரு விடயமாகச் சென்றிருந்தேன். அப்போது அவர் உங்களைப்பற்றி பெரிதும் விசாரித்தார்" எனக் கூறிவிட்டு கண்டக்டரை உற்று நோக்கினர்.
*அப்படியா மந்திரி முக்கியமான விஷயம் ஏதும் கூறினுரா?" என ஆவலுடன் கேட்டார் கண்டக்டர்.
"எமது கிராமத்துக்கு மந்திரியை அழைத்து ஒரு கூட் டம் வைக்க ஒழுங்கு செய்துள்ளோம். அது விஷயமாகத் தான் நான் அவரிடம் சென்றிருந்தேன். அப்போதுதான் அவர் உங்களைப் பற்றிக் கூறினர்."
"ஆமாம், மந்திரி எனக்கு மிகவும் வேண்டியவர். நான் அவரது ஊரைச் சேர்ந்தவன்" என்ருர் கண்டக்டர்.
"கடந்த தேர்தலின் போது கூட அவருக்காக நீங்கள் கடுமையாக உழைத்தீர்களென மந்திரி என்னிடம் கூறி ஞர். எமது கிராமத்து மக்களும் மந்திரியின் வெற்றிக்காக பெரிதும் பாடுபட்டவர்கள்தான்" என்ருர் பண்டா முத லாளி சிரித்தவண்ணம்.
"அப்படியா ரெம்பச் சந்தோஷம்" எனக் கூறிய கண்டக்டர், சமையலறைப் பக்கம் திரும்பி 'இந்தா

Page 31
52 குருதிமலை
பொடியன், மொதலாளிக்கு தேத்தண்ணி கொண்டுவா" என உத்தரவிட்டார்.
"மந்திரி எமது நாட்டுக்கு வரும்போது நீங்களும் கட் டாயம் அங்கு வரவேண்டும். இதை உங்களுக்குக் கூறுவதற் காகவே நான் இங்கு வந்தேன்."
*ஒ. அது எனது கடமையல்லவா, மந்திரி வருவ தாகக் கேள்விப்பட்டால் நானகவே அங்கு வருவேன்' எனக் கூறிவிட்டுச் சிரித்தார் கண்டக்டர். :
குசினிப்புறக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. குசினியில் வேலை செய்துகொண்டிருந்த பொடியன் கத வைத் திறந்துவிட்டான்.
கறுப்பண்ணன் கங்காணி மெதுவாக உள்ளே நுழைந் தார், கையில் கொண்டுவந்த பார்சலை அம்மியின்மேல் வைத்துவிட்டு, நடுக்காம்பராவில் யார் இருந்து கதைத்துக் கொண்டிருக்கிருர்கள் என ஆவலுடன் எட்டிப்பார்த் தார்.
கறுப்பண்ணன் எட்டிப் பார்ப்பதைக் கவ னி த் த பண்டா முதலாளி, சிரிப்புடன் அவரைப் பார்த்துத் தலையை ஆட்டினர்.
*அட, நம்ப பண் டா மொதலாளியா? நான் யாரோன்னு நெனச்சேன்" எனத் தனது காவி படிந்த பற்களைக் காட்டிச் சிரித்தபடி பண்டா முதலாளியின் அருகே சென்ழுர் கறுப்பண்ணன்.
**ஆமாங் கங்காணி நம்ப கண்டக்கையாவை பாத் திட்டுப் போகலாமுனு நாங் வந்தது' எனக் கூறிவிட்டு மீண்டும் சிரித்தார் பண்டா முதலாளி.
"நானும் ஐயாவுக்கு ஒரு சாமான் வாங்க டவுனுக் குப் போயிட்டு இப்பதாங்க வாரேன்" எனக் கூறிவிட்டு பக்கத்தில் இருந்த சுவரில் சாய்ந்தபடி நின்றர் கறுப்பண் ᎧᏈᏡᎳ ᏣᏈᎳ ,

குருதிமலை 53
வேலைக்காரப் பெடியன் கொண்டுவந்த தேநீரை கண் டக்டரும் பண்டா முதலாளியும் அருந்தத் தொடங்கினர். கறுப்பண்ணன் கங்காணி இப்போது கண்டக்டரின் பக்கம் திரும்பி, "நம்ப பண்டா மொதலாளிய எனக்கு ரொம்ப நாளாதெரியுமுங்க. நாட்டுல இருக்காருங்க. இவரு கடைகூட வச்சு நடத்துமுருங்க" என அசட்டுச் சிரிப்பு டன் கூறிஞர்.
தேநீரை அருந்திவிட்டு கோப்பையைக் கீழே வைத்த பண்டா முதலாளி, "நான் போகவேணும். பின்பு ஆறுத லாக உங்களைச் சந்திக்கிறேன்" எனக் கூறிவிட்டு எழுந் திருந்தார்.
கண்டக்டரும் எழுந்து பண்டா முதலாளியுடன் வாசல் வரை சென்ருர்.
வாசலில் சிறிது தரித்து நின்ற பண்டா முதலாளி,கண், டக்டரைப் பார்த்து, "நீங்கள் லீவு இருக்கும்போது ஒரு முறை எங்களது வீட்டுக்கு வாருங்களேன்' என வேண்டி ஞர். Ꮬ அவர்கள் கதைப்பதைப் புரிந்துகொண்ட கருப்பண் ணன் கங்காணி,கண்டக்டரின் பக்கந் திரும்பி, "நாட்டுக்கு ரொம்ப தூரமில்லீங்க. கிட்டத்தாங்க. பதினைஞ்சாம் நம் பர் மலையில இருக்கிற மாடசாமி கோயிலுகிட்ட இருந்து பாத்தா இஷங்க நாடேதெரியுமுங்க, அங்க இருந்துபோற குறுக்குப் பாதை வழிய நேராப் போனு அவுங்க நாட் டுக்கே போயிடலாமுங்க” எனக் கூறினர்.
"ஆமாம், எனக்கும் உங்களது கிராமத்தைப் பார்ப் பதற்கு ஆசையாகத்தான் இருக்கிறது. கட்டாயம் வரு கிறேன்' என பண்டா முதலாளியிடம் கூறிவிட்டுச் சிரித் தார் கண்டக்டர்,
"ஐயா, என்ணிக்கு போறிங்கன்னு ஏங்கிட்ட சொல் விட்டீங்களு போதும். நானே ஒங்களைக் கூட்டிக்கிட்டு போறேனுங்க" எனக் கூறிஞர் கறுப்பண்ணன்.

Page 32
54 குருதிமலை
வாசல்வரை சென்று பண்டா முதலாளியை அனுப்பி விட்டுக் கண்டக்டர் திரும்பியபோது, கோட் டு க் குள் மறைத்துவைத்திருந்த சாராயப் போத்தலை மெதுவாக வெளியே எடுத்து மேசையின்மேல் வைத்தார் கங்காணி.
அத்தியாயம் எட்டு
தோட்டத்து ஆபீஸ் அன்று துரிதமாக இயங்கிக் கொண்டிருந்தது. தோட்டத் தொழிலாளர்களுக்கு சம் பளம் போட இன்னும் நான்கு நாட்களே இருந்தன. அத ஞல் செக்ருேல் செய்யும் கிளாக்கர் சுறுசுறுப்பாக வேலை யில் ஈடுபட்டிருந்தார்.
பெரிய கிளாக்கர் அவரது அறையிலிருந்து ஏதோ கணக்குப் புத்தகம் ஒன்றைச் சரிபார்த்துக்கொண்டிருந் தார். இரண்டாவது கிளாக்கரின் அறையிலிருந்து டைப் அடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. டிவிசனிலி ருந்துவந்த பெட்டிக்காரன் துரையின் அறையைத் துடைத் துத் துப்புரவாக்கிக்கொண்டிருந்தான்.
துரையின் கார் வேகமாக வந்து ஆபீஸ் வாசலில் நின் Digil.
காரை விட்டிறங்கிய துரை தனது அறைக்குச் சென்று ஆசனத்தில் அமர்ந்துகொண்டு மேசையிலிருந்த மணியை அழுத்தினர்.
துரையின் கார் வரும் சத்தத்தைக் கேட்டபோதே தான் சரிபார்த்துக்கொண்டிருந்த கணக்குப் புத்தகத்தை மூடிவைத்துவிட்டுத் தயார் நிலையிலிருந்த பெரிய கிளாக்

குருதிமலை 55
கர் மணிச்சத்தம் கேட்டதும் துரையின் அறைக்குள் புகுந் தார்.
"குட் மோனிங் சார்." **எஸ் குட் மோனிங் மிஸ்டர் சுப்பிரமணியம். ஏதா வது முக்கியமான வேலை இருக்கிறதா?"
"ஆமாம் சார்! நமது எஸ்டேட் சப்பிளையர் வந்திருக் கிருர், சில பில்களுக்குரிய பணத்தைக் கொடுக்கவேண் டும்."
*எப்படி. இந்த ரசீதுகளைச் சரிபார்த்து விட்டீரா?" "ஆமாம், எல்லாமே சரியாக இருக்கின்றன. அதற் குரிய செக்கையும் எழுதி வைத்திருக்கின்றேன். நீங்கள் ஒப்பம் போடவேண்டியது மட்டும்தான்' எனக் கூறிய பெரிய கிளாக்கர் "செக்" புத்தகத்தை துரையின் முன்னுல் வைத்தார்.
பெரிய கிளாக்கர் எல்லாவற்றையுமே சரியாகத்தான் செய்வார் என்ற நம்பிக்கை துரைக்கு இருந்தது. ஆத லால் செக்கில் கையொப்பத்தைப் போட்டுவிட்டு அதனை
மீண்டும் பெரிய கிளாக்கரிடமே கொடுத்தார்.
*" வேறு ஏதாவது வேலை இருக்கின்றதா? நான் அவ சரமாக வெளியே போகவேண்டியிருக்கிறது’ துரை நாற் காலியின் பின்னுல் சாய்ந்தபடி கேட்டார்.
** வேறென்றும் இல்லை சார். இன்று தபாலில் வந்த
கடிதங்கள் இருக்கின்றன. அவற்றை மட்டும்தான் நீங்கள் பார்வையிடவேண்டும்."
“ ” -9|ւնւսւգաn!'' மேசையின் ஒரு மூலையில் இருந்த கடிதங்களே எடுத்து துரையின் முன்பாக வைத்தார் பெரிய கிளாக்கர்.
* சரி, உங்களுக்கு வேறு வேலை ஏதாவது இருந்தால் கவனியுங்கள். தேவைப்படும்போது நான் கூப்பிடுகிறேன்"

Page 33
56 குருதிமல்
எனக் கூறிய துரை பெரிய கிளாக்கரை அனுப்பிவிட்டு ஒவ் வொரு தபாலாக எடுத்துப் பார்வையிடத் தொடங்கி ஞர். சிறிது நேரத்தின் பின் துரையின் மேசையில் வைக் கப்பட்டிருக்கும் மணி மீண்டும் ஒலித்தது.
பெரியகிளாக்கர் அவசரமாக எழுந்து சென்றர். ""மிஸ்டர் சுப்பிரமணியம். உங்களுக்கு வேறு தோட் டத்திற்கு மாற்றம் வந்திருக்கிறது" எனக் கூறியபடி துரை தனது கையில் வைத்திருந்த ஒரு கடிதத்தை பெரிய கிளாக்கரிடம் கொடுத்தார்.
துரை கூறியதைக் கேட்டுத் திகைப்படைந்த பெரிய கிளாக்கர் கடிதத்தைத் தடுமாற்றத்துடன் வாசித்தார்.
'றப்பர் தோட்டமொன்றுக்கு என்னை மாற்றம் செய் திருக்கிருர்கள். இந்த மாற்றத்தை நான் ஏற்றுக்கொள் ளப்போவதில்லை . எவ்வித காரணமுமின்றி ஏன் என்னை றப்பர் தோட்டத்துக்கு மாற்றவேண்டும்" எனப் பதட் டத்துடன் கூறினர் பெரிய கிளாக்கர்,
'மிஸ்டர் சுப்பிரமணியம், அவசரப்படாதீர்கள். உங் களுக்கு மாற்றம் வந்திருப்பது எனக்கும் அதிர்ச்சியாகத் தான் இருக்கின்றது. ஆணுலும் என்னுல் கூட இந்த மாற் றத்தைத் தடை செய்யமுடியாது. நீங்கள் மாற்றலாகிப் போவதைத் தவிர வேறு வழியே இல்லை."
**ஆரம்பத்திலிருந்தே தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த எனக்கு இப்போது றப்பர் தோட்டத்துக்கு மாற் றம் கொடுத்திருப்பது அநியாயமல்லவா?"
"அப்படியல்ல, அரசாங்க உத்தியோகம் என்றல் மாற்றம் கொடுக்கத்தான் செய்வார்கள். ஆனலும், உங் களுக்கு இந்த மாற்றம் ஏற்பட்டதற்கான அடிப்படைக் காரணத்தை நீங்கள் இன்னமும் உணரவில்லை என நான் நினைக்கிறேன்" என்ருர் துரை.

குருதிமலை} 67
** என்ன சார் சொல்லுகிறீர்கள்; எனக்கொன்றும் புரியவில்லையே" எனக் குழப்பத்துடன் கேட்டார் பெரிய கிளாக்கர்.
**இந்த மாற்றத்திற்கு அரசியல் பழிவாங்கல்தான் காரணம் என நான் நினைக்கின்றேன். இப்போதுள்ள சில அரசியல் தலைவர்களுக்கு எதிராக நீங்கள் முன்னர் தேர் தலின்போது பிரசாரம் செய்தீர்களல்லவா! மேடைகளில் கூட ஏறிப் பேசினீர்கள். அதனுலேதான் இப்போது நீங் கள் பழிவாங்கப்படுகின்றீர்கள்" என்ருர் துரை யோசனை պւ-6ճr.
"ஆமாம் இப்போதுதான் எனக்குப் புரிகின்றது. அர சியல் காரணங்களுக்காக என்னைப் பழிவாங்கி மட்டந்தட் டப் பார்க்கிருர்கள். நான் இதற்கு ஒருபோதும் அடி பணிந்துவிடமாட்டேன். அந்த றப்பர்த் தோட்டத்திற்கு நான் ஏன் போகவேண்டும்? இந்தக் கிளாக்கர் வேலை யொன்றும் எனக்குப் பெரிதில்லை. இந்த வேலையை ராஜி ஞமாச் செய்யக்கூட நான் தயாராக இருக்கின்றேன்."
* மிஸ்டர் சுப்பிரமணியம், உணர்ச்சிவசப்பட்டு எதை யும் செய்துவிடாதீர்கள். நீங்கள் உங்களதுவேலையை ராஜி ணுமாச் செய்தால் உங்களது அரசியல் எதிரிகளுக்கு பெரும் மகிழ்ச்சிதான் ஏற்படும். பொறுமையாக இருந்து வேறு வழியில் மாற்றத்தைத் தடைசெய்வதுதான் புத்தி சாலித்தனமானது."
**இந்த மாற்றம் ரத்தாகுமென்பது எனக்கு நம்பிக்கை யில்லை சார். ஏனென்ருல் எனது இடமாற்றத்துக்குக் காரணமாக இருப்பவர்கள் தமது ஆதரவாளர்களில் ஒரு வரை இப் பதவிக்கு இதுவரையில் தெரிவுசெய்துவைத் திருப்பார்கள்" என்ருர் பெரிய கிளாக்கர்.
சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்த துரை, **ஆமாம், நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரிதான். மனம்திறந்து உண்மையைச் சொல்லப்போனல் நான்,

Page 34
防?” م.:... " : : م. - ت ،. - ... ، ...:-:۳: :هٔ ...": " : குருதிமலை
கூட அந்த அரசியல்வாதிகள் சொல்வதற்கெல்லாம் தலை யசைக்கவேண்டிய நிலையிலேதான் இருக்கின்றேன். அவர் களைத் திருப்தி பண்ணி நடக்காவிட்டால் எனது வேலைக் குக்கூட ஆபத்து ஏற்படலாம்' என பெரிய கிளாக்கரைப் பார்த்துத் தலையாட்டியபடி கூறினர்.
**ஆமாம் சார், நீங்கள் கூறுவதும் சரிதான். இன் றைய காலகட்டத்தில் அவர்கள் கையிலேதான் அதி காரம் இருக்கின்றது. நாம் எதுவுமே செய்யமுடியாது தான். ஆனலும் எங்களுக்கும் ஒரு காலம் வரத்தான் போகிறது. அதுவரை நாம் பொறுமையாகத்தான் இருக்கவேண்டும்."
** இப்போது புதிதாக வந்திருக்கும் கண்டக்டர் கூட அவர்களது சிபார்சில் வந்தவர்தான். முன்பு வேறு ஒரு தோட்டத்தில் திருட்டுக் குற்றத்திற்காக வேலை இழந்த வருக்கு மீண்டும் இங்கே வேலை கிடைத்திருக்கிறது."
**ஆமாம் சார், நானும் அதைப்பற்றிக் கேள்விப்பட் டேன்" என ஆமோதித்தார் கிளாக்கர்.
*இனிமேல் உமது இடத்திற்கு வேருெருவர் வந்தால், அவர் எப்படிப்பட்டவராக இருப்பாரோ தெரியவில்லை" எனக் கவலையுடன் கூறினர் துரை.
** தோட்ட நிர்வாகத்தில் அரசியல் புகுந்தால் தோட் மடம் ஒழுங்காக நடைபெறுமா என்பது சந்தேகந்தான்."
"மிஸ்டர் சுப்பிரமணியம், இப்படி நான் உங்களு டன் கதைத்த விடயங்களே வேறு எவருக்குமே கூறிவிடா தீர்கள். எனக்கு நீர் எப்போதுமே உண்மையானவராகக் கடமைபுரிந்துவருகிறீர். அதனலேதான் நான் இந்த விட யங்களை உம்முடன் கதைத்தேன்.'
"நான் ஒருபோதும் உங்களைக் கஷ்டத்திலே மாட்டி விடமாட்டேன் சார்' என்ருர் பெரிய கிளாக்கர்.
"சரி மிஸ்டர் சுப்பிரமணியம், நீங்கள் மனதைத் தளரவிடாமல் உங்களது வேலையைக் கவனியுங்கள். மேவி

குருதிமலை 59
டத்தில் உங்களுக்குத் தெரிந்த யாராவது இருந்தால் அவர் மூலமாக இந்த மாற்றத்தைத் தடைசெய்யப் பாருங்கள்" எனக் கூறிய துரை எழுந்திருந்தார்.
"சரி சார், ஏதோ நடப்பது நடக்கட்டும். இந்த மாற் தத்தை ரத்துச் செய்ய முடியுமென நான் நினைக்கவில்லை" எனக் கூறிய பெரிய கிளாக்கர் தடுமாற்றத்துடன் தனது அறையை நோக்கி நடந்தார்.
அத்தியாயம் ஒன்பது
சின்று லீவு நாள். கறுப்பண்ணன் கங்காணியை
அழைத்துக் கொண்டு நாட்டிற்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தார் கண்டக்டர்.
பாதையின் இரு மருங்கிலும் ஆள் உயரத்துக்குப் புல் பூண்டுகள் வளர்ந்திருந்தன. எங்கு பார்த்தாலும் பெரு விருட்சங்கள் நிறைந்த அந்தப் பிரதேசம் ஒரே காடாகக் காட்சியளித்தது.
விலங்குகளின் ஒசைகளும், பறவைகளின் கீதங்களும் இடையிடையே ஒலித்துக் கொண்டிருந்தன. இவற்றை யெல்லாம் இரசித்த வண்ணம் கண்டக்டர் நடந்து கொண் டிருந்தார், கறுப்பண்ணன் கங்காணி அப்பிரதேசத்தைப் பற்றி கண்டக்டருக்கு விளக்கம் கொடுத்த வண்ணம் பின்' தொடர்ந்து கொண்டிருந்தார்.
* "ஐயா, இந்த எடத்தில ரெம்ப சகதியா கெடக் குங்க, சப்பாத்துக்காலை கொஞ்சம் பாத்து வச்சு நடந்து Guties!'

Page 35
60 \, குருதிமலை
ஓங்கி வளர்ந்திருந்த செண்பக மரமொன்றில் வாலைக் கிளப்பிக் கொண்டு தாவி ஏறிய குரங்கொன்றைக் கவனித்த வண்ணம் நடந்து கொண்டிருந்த கண்டக்டரிடம் கங்காணி கூறினர்.
கண்டக்டர் கீழே குனிந்து பார்த்தார்.
அந்த ஒற்றையடிப் பாதையின் குழிவான பகுதியில் ஐந்தாறு அடி தூரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் அந்த இடம் சேறும் சகதியுமாகக் காட்சியளித்தது.
**நாட்டு ஆளுங்க இந்த ரோட்டுலதானே நம்ம தோட் டத்துக்கு வேலைக்கு வாரது; அவுங்க இந்த பாதைய கொஞ் சம் வெட்டி சரிப்பண்ணி வச்சா மிச்சங் நல்லதுதானே" எனக் கூறியபடி கண்டக்டர் தயங்கி நின்றர்.
"அங்க பாருங்க ஐயா, மேல புதிசா ஒரு பாதை வச் சிருக்காங்க, அப்புடியே சுத்திப் போங்க" எனக் கூறிய கங் காணி தண்ணிர் தேங்கி நின்ற இடத்திலிருந்து சற்று மேற் புறமாக புதிதாக ஏற்பட்டிருந்த பாதையைக் காண்பித் தார்;
கண்டக்டர் தனது கையில் வைத்திருந்த கைத்தடியால் ஓங்கி வளர்ந்திருந்த புற்களை விலக்கிக் கொண்டு அந்தப் பாதையில் நடக்கத் தொடங்கினர்.
பாதையின் குறுக்காக கீரியொன்று பாய்ந்து சென்று மாளுச் செடிக்குள் மறைந்தது.
**இந்தப் பாதை முந்தி ரொம்ப நல்லா இருந்திச் சுங்க. இப்போதாங்க காடுமண்டிப் போச்சி. நானும் நம்ம மாயாண்டியும் அடிக்கடி இந்தப் பாதையாலதாங்க நாட் டுக்குப் போவோம்."
* யாரு அந்த மாயாண்டி சொல்லி சொல்லுறது,
வீரய்யா கங்காணியோட அப்பாதானே, நீங்க சொல்லுற ஆள்' எனக் கேட்டார் கண்டக்டர்.

குருதிமலை 6
"ஆமாங்க, அவரே தாங்க" கறுப்பண்ணன் கங்காணி தனது காவிபடிந்த பற்கள் தெரியப் பலமாகச் சிரித்தபடி கூறினர்.
**ஆங் அதுசரி கங்காணி; ஒங்ககிட்ட முக்கியமான சங் கதி ஒண்ணு கேக்கணும்.அந்த வீரய்யா கங்காணிக்கு ஒரு தங்கச்சி இருக்குதானே?"
"அந்த மட்டக் கொழுந்து மலையில கொழுந்தெடுக்கு மில் வீங்களா ஒரு செவத்தப் புள்ளை, அதுதாங்க. பேரு செந்தாமரைங்க" என்ருர் கங்காணி.
"அதுபத்தி நாங் ஒரு வெசயங் கேள்விப்பட்டது.அந் தப் புள்ளை எப்புடி கங்காணி?"
** அது ஒரு மாதிரிதாங்க. தோட்டத்து குட்டிங்களி லேயே அவ ரொம்ப அழகுங்க. ஆணு கொஞ்சம் பல்லுக் காட்டுற புத்தியிருக்குங்க" என்ருர் கறுப்பண்ணன் கங் காணி.
"அந்தப் புள்ளை, இந்த நாட்டுலஇருக்கிற யார் கூடவோ கூட்டாளி சொல்லி நாங் கேள்விப்பட்டது' என்ருர் கண் டக்டர்.
'அப்புடீங்களா வெசயம்.நான் வேற என்னமோ நெனைச்சுப்புட்டேங்க" என அசட்டுச் சிரிப்புடன் சிரித்த கறுப்பண்ணன் கங்காணி, "நம்ம பண்டா முதலாளி இருக் காங்களே.அவரோட அண்ணன் மகன் பியசேன தாங்க அந்தப் புள்ளையோட கூட்டா இருக்கான். இந்த வெசயம் எனக்கு முந்தியே தெரியுமுங்க' எனத் தொடர்ந்து கூறி ஞா.
**இந்தா பாருங்க கங்காணி.நாங் கேக்குறேனு வேற ஏதுங் நெனைக்க வாணுங். இந்தப் பியசேன சிங்கள ஆள் தானே, அந்தப் புள்ளை தமுழ் ஆள்; அந்தப் புள்ளைய அவன் கல்யாணம் கட்டுறதா?’ எனக் கேட்டார் கண்டக்டர்.
"அங்கதானுங்களே சங்கதியேஇருக்கு, எப்படீங்கையா அவேன் அந்தக் குட்டியை கல்யாணம் கட்ட முடியும்.

Page 36
62 குருதிமலை
ரெண்டு பக்கத்து வூட்டுக்காரங்களும் சும்மா வுட்டுப்புடு வாங்களா?" என்ருர் கறுப்பண்ணன் கங்காணி.
'அதிங்தான் கங்காணி நாங் யோசிச்சுப் பாத்தது. அப்புடீன.அந்தப் புள்ளைக்கு வயித்துல கொழந்தை ஏதுங் வந்தா ஒன்னுங் செய்ய முடியாதுதானே. அந்த பியசேனதானே கல்யாணம் செய்யவேனுங்' என யோச னையுடன் கேட்டார் கண்டக்டர்.
"இல்லீங்கையா. அந்தக் குட்டிக்கு கொழந்தையே பொறந்தாலும் ரெண்டு பேரும் ஒன்னு சேரமுடியாதுங்க; வெசயம் பெரிசாப் போன வேற தோட்டத்துல ஒரு மக் குப் பயலாப்பாத்து அவளுக்கு கல்யாணம் செஞ்சி வச்சிட வேண்டியதுதாங்க' எனக் கூறிச் சிரித்தார் கங்காணி.
‘அப்புடிச் செய்ய முடியுமா கங்காணி?" என ஆச்சரி யத்துடன் கேட்டார் கண்டக்டர்.
"இப்புடி எத்தினையோ சங்கதிங்களை நான் செஞ்சு வச் சிருக்கேங்க. இந்தப் பியசேனப் பயலோட மச்சினன் ஒருத்தன் இருக்காங்க..அவன் உப்புடித்தாங்க நம்ம தலைவ ரோட தங்கச்சி மகளே கெடுத்துப்புட்டாங்க. அப்புறம் அவளை நாங்க வேற தோட்டத்தில ஒருத்தனுக்கு கட்டிக் கொடுத்திட்டோமுங்க" எனக் கூறிய கங்காணி பெருமை யுடன் சிரித்தார்.
**ஏங் கங்காணி நம்ம தோட்டத்திலேயும் சில சிங்கள ஆளுங்க தமுழ் பொம்புளைங்களை கல்யாணஞ் செஞ்சிருக் குத்தானே. நீங்க என்ன இப்புடி சொல்லுறீங்க?" எனக் கேட்டார் கண்டக்டர்.
**ஆமாங்க, சில ஆளுங்க கட்டிக்கிட்டு இருக்காங்க தாங்க.ஆன இந்தப் பியசேனப் பயல நம்பவே முடியா துங்க. நீங்க வேணுமுணு இருந்து பாருங்க. அந்தப் பயல் அந்தக் குட்டியை கல்யாணஞ் செய்யவே மாட்டானுங்க" கறுப்பண்ணன் கங்காணியின் குரலில் உறுதி தொனித்தது.

குருதிமலை 63
கண்டக்டர் சிந்தனையுடன் நடந்தார். இருவரும் இப்போது பண்டா முதலாளியின் வீட்டை அடைந்தனர்.
கடையில் இருந்தவாறே இருவரும் வருவதைக் கண்ட மெனிக்கே முகத்தில் சந்தோஷத்தை வரவழைத்துக் கொண்டு, "எண்ட மாத்தியா எண்ட' என கண்டக்டரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்ருள். கண்டக்டர் அங்கேயிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டார்.
கறுப்பண்ணன் சுவர் ஒரமாக சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தார். y s
'கோ முதலாளி? கொஹேத கீயே?’ மெனிக்கேயிடம் கேட்டார் கண்டக்டர்.
"தெங் தமாய் மாத்தியா எயா எலியட்டகீயா" எனக் கூறிக் கொண்டே வெற்றிலைத் தட்டைக் கொண்டு வந்து அவர் முன்னுல் வைத்துவிட்டு, 'மென்ன மாத்தியா புலத்' என உபசரித்தாள் மெனிக் கே.
பக்கத்தில் நின்றிருந்த கறுப்பண்ணன் கங்காணி தட்டில் இருந்த பாக்கொன்றைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தார். பின்னர் தனது கோட்டுப் பைக்குள் கையைவிட்டு சாவிக்கோர்வையுடன் தொங்கிய மடக்கத்தியை எடுத்துப் பாக்கை நறுக்கத் தொடங்கினர்.
**மே புவாக் மொணவத, ஹரிம லொக்குவா" என மெனிக்கேயிடம் விணுவினர் கண்டக்டர்.
*ஒவ் மாத்தியா, ஏக்க றட்டபுவாக்கியலா கியனவா’ எனக் கூறிய மெனிக்கே வெளியே நின்ற சில கமுகு மரங் களை ஜன்னலின் ஊடாகக் காண்பித்தாள். அந்த மரங் களில் குலக்குக் குலக்காக பாக்குகள் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.
அவர்கள் கதைப்பதைப் புரிந்து கொண்ட கறுப்பண் ணன், 'இதுங்களா, இதுதாங்க.குமரிப் பாக்குணு சொல்

Page 37
64 குருதிமை
லுறது, ரெம்ப ருசியா இருக்குமுங்க" எனக் கூறிவிட்டு, சீவிய பாக்கை வெற்றிலைத் தட்டில் வைத்தார்.
கண்டக்டர் வெற்றிலை போடுவதில்லை. ஆனலும் மரி யாதைக்காக ஒரு வாய்க்கு வெற்றிலை போட்டுக்கொண்டு வெற்றிலைத் தட்டை கறுப்பண்ணனிடம் கொடுத்தார்.
முதலாளி எண்ட வெலாவ யனவாத? எனக் கேட்டுக் கொண்டே கைக்கடிகாரத்தைப் பார்த்தார் கண்டக்டர். ‘நே மாத்தியா, தெங் எய்" எனக் கூறிக் கொண்டே தீப்பெட்டியுட்ன் சிகரட் பெட்டியையும் எடுத்து வைத் தாள் மெனிக்கே,
கண்டக்டர் சிகரட்டைப் பற்ற வைத்த சிறிதுநேரத் தில் பண்டா முதலாளி அங்கு வந்து சேர்ந்தார்.
**ஆங் எண்ட மாத்தியா எண்ட, தெந்த ஆவே?" எனக் கேட்டுக் கொண்டே கையில் கொண்டு வந்த சில சுாகிதத் துண்டுகளை சுவர் ஒரமாக இருந்த அலுமாரியில் வைத்து விட்டு திரும்பினர் பண்டா முதலாளி.
'டிங்கக் வெலாவ இஸ் சரதமாய் ஆவா" என்ருர் கண்டக்டர் பண்டா முதலாளியைப் பார்த்து.
*" ஹோ எத்தத.போமஹொந்தாய்.மட்ட உங்காக் வெட மாத்தியா. லபன மா சேங் அபே மந்திரிதுமா மேங் எனவாநே. ஏநிசா ஹரிம வெட" எனக் கூறிவிட்டு கண் டக்டரின் எதிரே கிடந்த கதிரையில் அமர்ந்து கொண் டார் முதலாளி.
இருவரும் தங்களது மொழியில் உரையாடினர். **ஆம், கூட்டம் வைப்பதென்றல் அதிக வேலையிருக் கத்தான் செய்யும். எப்போது மந்திரி வருவதாக்க கூறி யிருக்கின்ருர்?"
"இன்னமும் அதுபற்றி தீர்மானிக்கப்படவில்லை. ஆன லும் மிக விரைவில் கடிதம் மூலமாக மந்திரியின் காரிய தரிசி எமக்கு அறிவிப்பார்."

குருதிமலை
‘மந்திரி வாருங்களா? எதுக்காக வரவழைக்கிறீங்க மாத்தியா?" என வாய்க்குள் அதக்கி வைத்திருந்த வெற் றிலைத் துப்பலை யன்னலின் ஊடாக வெளியே துப்பிவிட் டுக் கேட்டார் கறுப்பண்ணன் கங்காணி.
"நாட்டுல நம்ம ஆளுங்களுக்கு மிச்சங் கஷ்டந்தானே ரெம்ப ஆளுங்களுக்கு சொந்த காணியில்லை தானே கவுண்மெண்டில காணி தாரது சொல்லி சொல்லியிருக்கு. அது பத்தி பேசத்தாங் மந்திரி வாறது" என்ருர் பண்டா முதலாளி.
மெனிக்கே கண்டக்டருக்கு தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
‘இன்று உங்களுக்கு லீவு நாள் தானே. நம்மோடு இருந்து பகல் போசனத்தை அருந்திவிட்டு ஆறுதலாகச் செல்லலாம்" என பண்டா முதலாளி அன்புடன் வேண்டி
**இல்லையில்லை, எனக்கு கொஞ்சம் வேலையிருக்கிறது. நான் இன்னுெரு நாளைக்கு ஆறுதலாக வருகின்றேன்" என முர் கண்டக்டர்.
*அப்படியானல் கொஞ்சம் இருங்கள்" எனக் கூறிய பண்டா முதலாளி உள்ளே சென்று சாராயப் போத்தல் ஒன்றை கிளாசுடன் கொண்டு வந்து வைத்தார்.
‘இதெல்லாம் எதற்கு, நான் சும்மா உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்றல்லவா வந்தேன்' எனக் கூறியபோது கண்டக்டரின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. ** இன்றுதானே எங்களது வீட்டிற்கு முதன்முதலில் வந்திருக்கின்றீர்கள். உங்களுக்கு எதுவுமே கொடுக்கா மல் எப்படி சும்மா அனுப்புவது?" எனக் கூறிச் சிரித் தாள் பக்கத்தில் நின்ற மெனிக்கே.
கண்டக்டரும் பதிலுக்கு சிரித்தார். பண்டா முதலாளி கிளாசில் சாராயத்தை ஊற்றி கண்டக்டரின் கையிலே கொடுத்தார்.

Page 38
66 குருதிமலை
பின்பு கறுப்பண்ணன் கங்காணியை நெருங்கி இரகசி யமான குரலில், ‘இந்தா கங்காணி, உங்களுக்கு இரண்டு போத்தல் கள்ளு நாங் எடுத்தி வைச்சிருக்கிறது. பின்னுக் குப் போங்க" எனக் கூறினர்.
அதனை எதிர்பார்த்திருந்தவர் போல் கங்காணி அந்த இடத்தை விட்டு நழுவியபோது மீண்டும் ஒருதடவை கிளாசை நிரப்பினர் பண்டா முதலாளி.
கண்டக்டருக்கு சிறிது சிறிதாக போதை ஏறிக் கொண்டு வந்தது.
“முதலாளி உங்களுக்கு எது வேண்டுமானலும் தயங் காமல் சொல்லுங்கள். நான் மந்திரியிடம் கூறி வேண்டிய உதவிகளைச்செய்து தருகிறேன். நான் சொன்னல் அதற்கு மந்திரி ஒரு போதும் மறுக்கமாட்டார்" சிகரட்டை பற்ற வைத்தபடி கூறினர் கண்டக்டர்.
"ரெம்ப சந்தோஷம் எனக்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்.’’ எனக் கூறிய பண்டா முதலாளி தொடர்ந்தும் ஏதோ கூறும் பாவனையில் தயங்கியபடி தலை யைச் சொறிந்தார்.
"என்ன முதலாளி தயங்குகிறீர்கள் சொல்லுங்கள்" பண்டா முதலாளி மேலும் கிளாஸில் சாராயத்தை ஊற்றியபடி, "எனது வயலுக்கு கொஞ்சம் உரம் தேவைப் படுகிறது. டவுனிலிருந்து எங்கள் கிராமத்திற்கு அதைக் கொண்டுவந்து சேர்ப்பது மிகவும் சிரமமான காரியம், அதுதான்."
**அதற்கு நான் எப்படி உதவி செய்ய முடியுமெனக் கூறுங்கள். கட்டாயம் நான் செய்கிறேன். டவு னிலிருந்து உரம் கொண்டுவருவதற்கு நான் ஏதாவது வகையில் உதவி செய்ய வேண்டுமா?"
"அப்படியில்லை மாத்தியா. உங்களிடம் தோட்டத் திற்குரிய உரம் ஸ்டொக்கில் இருக்குமல்லவா. அதில் கொஞ்சம் தந்தால் உதவியாக இருக்கும். அதனை நான்

குருதிமலை - 67
தோட்டத்திலிருந்து நாட்டிற்கு சுலபமாக கொண்டுவந்து விடுவேன்."
கண்டக்டர் ஒருதடவை பண்டாமுதலாளியை உற்றுப் பார்த்தார்.
ஒரு கணம் தடுமாறிய பண்டா முதலாளி, 'அதற் குரிய பணத்தை நான் உங்களிடமே தந்து விடுகிறேன் நீங் கள் வேண்டுமானல் அந்தப் பணத்தை தோட்டத்திற்கு வரும் லொறிக்காரர்களிடம் கொடுத்து உரத்தை வாங்ங் மீண்டும் ஸ்டொக்கில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா?" எனக் கூறினர்.
கண்டக்டர் ஒருகணம் ஆழமாக யோசித்தார். பண்டா' முதலாளி கூறுவது அவருக்கு இலேசாகப் புரிந்தது.
**நான் உங்களுக்கு உரம் தருவதை மற்றவர்கள் தவ முகப் புரிந்து கொண்டால் என்ன செய்வது?" என யோச னையுடன் கேட்டார் கண்டக்டர்.
** அதற்கு நீங்கள் ஒன்றும் பயப்படதேவையில்லை. மற்றவர்களுக்கு தெரியாதமுறையில் நான் உரத்தைப் பெற்றுக் கொள்வேன்."
கறுப்பண்ணன் இப்போது பின்புறத்தேயிருந்து உள்ளே வந்தார். அதனைக் கவனித்த பண்டா முதலாளி, *சரி மாத்தியா நான் உங்களிடம் தனியாக வந்து இதைப் பற்றி பேசிக் கொள்கின்றேன்" எனக்கூறி சம்பாஷணையை முடித்துக் கொண்டார்.
"ஐயா, அப்ப போவோங்களா? இல்லாட்டி என்ன மாதிரிங்க..?" எனத் தயங்கியபடி கேட்டார் கறுப்பண் ணன் கங்காணி.
"இல்லை, நான் போக வேண்டும். எனக்கு கொஞ்ச புஸ்தக வேலையிருக்கின்றது" எனக் கூறியவாறு எழுந்திருந் தார் கண்டக்டர்.
அப்போது அங்கே வந்த மெணிக்கே, "மாத்தியா அடிக்கடி இங்கே வந்து போங்கள். அடுத்தமுறை வரும்

Page 39
68 குருதிமலை
போது கட்டாயம் உணவருந்திவிட்டு செல்ல வேண்டும்' எனப் புன்னகைத்தபடி கூறினுள்.
"நேரம் இருக்கும்போது கட்டாயம் வருகின்றேன்" எனக் கூறிய கண்டக்டர் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கறுப்பண்ணன் கங்காணியுடன் புறப்பட்டார்.
வழியில் கறுப்பண்ணன் வாயோயாமல் எதையோ கூறிய வண்ணம் வந்தார். ஆணுல், அவர் கூறிய எதுவுமே கண்டக்டரின் மனதில் பதியவில்லை. அவரது சிந்தனை முழு வதும் இப்போது வேறு பாதையில் விரிந்து கொண்டு சென்றது.
அத்தியாயம் பத்து
சின்று மாலை மடுவத்திலிருந்து வந்த மாரிமுத்துத்
தலைவர், மனைவி பூங்கா கொடுத்த தேநீரை அருந்திய வண்ணம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.
அப்போது ஸ்தோப்பில் யாரோ நுழைவது தெரிந் தது. காம்பராவின் உள்ளேயிருந்த தலைவர் யன்னல் வழி யாக எட்டிப் பார்த்தார்.
கறுப்பண்ணன் கங்காணி இஸ் தோப்பில் ஒருகணம் தரித்து நின்று, வாயில் நிரம்பியிருந்த வெற்றிலைத் துப் பலைத் தனது இரு விரல்களை வாயிலே பொருத்தி கானுக் குள் எத்தி உமிழ்வது தெரிந்தது. கானுக்குள் தேங்கி நின்ற அழுக்கு நீரில் மொய்த் திருந்த ஈக்கள் ஒருகணம் கலைந்து மீண்டும் அமர்ந்துகொண்டன.

குருதிமலை 69
** என்ன கறுப்பண்ணேன், மடுவத்தில இருந்து இப்ப தான் வாறியா?" என உள்ளேயிருந்தபடி உரத்த குரலில் கேட்டார் தலைவர்.
* "ஆமாங்கண்ணே. நேரா மடுவத்தில இருந்துதான் வாறேன்; நீங்கதான் பேருபோட்டு முடியிறதுக்கு முன் னேயே ஒடியாந்துட்டீங்களே. கண்டாக்கையா ஓங்க கிட்ட என்னவோ கதைக்கிறதுக்கு இருந்தாராம். அதுக் குள்ள வந்துட்டீங்க" என்ருர் கறுப்பண்ணன் கங்காணி இஸ்தோப்பில் நின்றபடி,
"அப்புடியா, என்ன வெசயமா ஐயா எங்கிட்ட கதைக்கணுமுன்னு சொன்னுரு?"
"அதென்னமோ எனக்குத் தெரியாது. ஒடனே பங்க ளாவுக்கு வருவீங்களாம், அதைச் சொல்லிட்டுப் போகலா முனுதான் இப்புடியே வந்தேன்’ என்ருர் கறுப்பண்ணன். தலைவர் சிறிது நேரம் எதையோ யோசித்தவண்ணம் இருந்தார்.
"என்னங்கண்ணே யோசிக்கிறீங்க, ஏதாச் சும் தோட்டத்து வெசயமா கதைக்க வேண்டியிருக்கும். தோட் டத்துக்கு தலைவர் எங்கிற மொறையில ஒங்களோடை கதைக்க விரும்புருரு போல தெரியுது; போயி கதைச் சிட்டு வாங்களேன்’ எனக் கூறிவிட்டு கறுப்பண்ணன் கங் காணி திரும்பிப் போக முனைந்தார். V
"இருங்க கங்காணி தேத்தண்ணி குடிச்சிட்டுப் போக 6)nrib. ””
தலைவரின் ம%னவி பூங்கா காம்பராவின் உள்ளே யிருந்து குரல் கொடுத்தாள்.
"இல்லை. வேணும் பூங்கா, இன்னும் காலுகையி கூட கழுவல்ல, நேரமாச்சு. நான் போகணும்" எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்ருர் கறுப்பண் ண ன் கங்காணி, -

Page 40
70 குருதிமலை
தலைவரின் உள்ளம் பலமாகச் சிந்திக்கத் தொடங்கி யது. பின்னர் ஏதோ முடிவுக்கு வந்தவராக தனது கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு அங்கு மிங் கும் எதையோ தேடினர்.
"அந்த லேஞ்சித்துண்டை எங்க காணுேம்? இந்த வூட்டில ஒரு சாமானத்தை ஒரு எடத்தில வைச்சா திரும்ப அந்த எடத்தில எடுத்துக்கிட முடியாது." தலைவரின் குரலில் சினம் தொனித்தது.
** என்ன கண்டக்கையா வரச்சொன்னவொடன இப்புடித் தடுமாறுறிங்க? லேஞ்சிய போட்ட எடத்தில தேடி எடுக்க வேண்டியதுதானே" எனக் கூறிக்கொண்டே இஸ்தோப்புக் கதவின் மேல் கிடந்த லேஞ்சித் துண்டை எடுத்துக் கணவரிடம் கொடுத்தாள் பூங்கா.
'நான் ஒண்ணும் தடுமாறல்லடி, நான் என்னு கண் டக்கையாவுக்கு பயந்துக்கிட்டு இருக்கேனு நெனச்சுக்கிட் டியா? எப்படியாப்பட்ட வெள்ளைக்காரத் தொரைங்ககிட் டேயே எதிர்த்துப் பேசினவனடி நான். என் வாயைத் தொறந்தேன்ன இவருக்குப் பதில் சொல்ல முடியாம போயிடும். என்னமோ புதிசா வந்தவராச்சேனு பாக்கி றேன்" எனக் கூறியபடி தலைவர் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்ருர்,
*என்னங்க கொடைய மறந்திட்டு போlங்க. வெளியே மழை தூறிறது தெரியல் லியா. நல்லாத்தான் போங்க" எனக் கூறிய பூங்கா குடையை எடுத்து வந்து தலைவரின் கையிலே கொடுத்தாள்.
தலைவர் கண்டக்டரின் பங்களாவை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
கண்டக்டர் பங்களாவின் முன் வராந்தாவில் எரியும் மின் விளக்கின் ஒளி, முன்பகுதி எங்கும் பரவியிருந்தது.

குருதிமலை 7፱
பங்களாவை நோக்கிப் போகும் படிக்கட்டில் தட்டுத்தடு மாறி ஏறினர் தலைவர்.
**ஆங் தலைவரா ஒங்களைத்தாங் நான் பார்த்துக் கிட்டு இருந்தது. வாங்க.“ ஆபிஸ் அறையில் இருந்த வாறு எட்டிப் பார்த்த கண்டக்டர் தலைவரை வரவேற்ருர்.
வாசல் வரை வந்த தலைவர் சற்றுத் தயங்கினர்.
"சும்மா பயப்புடாம வாங்க தலைவர்" எனக் கூறிக்கொண்டே எழுந்திருந்த கண்டக்டர் நடுக் காம்பரா வின் பக்கம் சென்ருர்,
தலைவர் தன்னைச் சுதாரித்துக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்தார்.
உள்ளே சென்ற கண்டக்டர் அங்கே போடப்பட்டி ருந்த கதிரையொன்றில் அமர்ந்துகொண்டு "என்னங் தலைவர், நாங் பேர் போட்டு முடிஞ்சவொடன ஓங்க கிட்ட பேசறதிக்கி இருந்தது. நீங்க சுறுக்காப் போயாச்சி' தானே" எனக் கூறிவிட்டுச் சிரித்தார்.
"வூட்டுல கொஞ்சம் வேலை இருந்துதுங்க. அது தாங்க போனேன்" எனக் குழைந்தபடி கூறினர் தலைவர்.
**ஆங் அதுசரி. நாங் ஏங் வரசொன்னது சொன்ன இந்த தோட்டத்தில ஆளுங்க எல்லாங் ஒழுங்கா வேலை செய்யிறதில்லே, மிச்சங் மோசங்; காலையில நேரத்திக்கி வராம பிந்திதாங் வாரது. "ரவுண்’ எல்லாங் ரெம்ப பிந்தி போயிருக்கு. அதுணுல இந்த ஆளுங்களை இனிமே கொஞ்சங் வெள்ளன வேலைக்கு வர சொல்ல வேணுங்."
"ஆமாங்க, ரவுண் பிந்திப்போய் இருக்கிறது எனக் கும் தெரியுமுங்க. இனிமே ஆளுங்களை பிந்திவராம கொஞ்

Page 41
72 குருதிமலை
சம் வெள்ளன வந்து ரவுணை எடுத்துக் கொடுத்துட சொல் லிப்புடுறேங்க' என்ருர் தலைவர் கைகளைப் பிசைந்தவாறு.
**அப்புடி இல்லே தலைவர், இனிமே யாராச்சும் பிந்தி வந்தா ஒடனே நாங் வெரட்டிப் போடுறது. அப் புறம் நம்மகிட்ட பிரச்சினை பேச வரக்கூடாது. அது சொல்லதாங் நாங் இப்ப வரச்சொன்னது" என்ருர் கண் டக்டர் கண்டிப்புடன்.
"ஐயாவைப்பத்தி இன்னமும் ஆளுங்களுக்குத் தெரி யாதுதானுங்களே. ஐயா ரெம்ப கண்டிப்பானவருனு ஆளுங்களுக்குச் சொல் லிவச்சுப்புடுறேங்க."
"அன்னிக்கு பாருங்க தலைவர், அந்த வீரய்யாக் கங் காணி ஆளுங்களை நாலு மணிக்கே மடுவத்துக்கு கூட்டிக் கிட்டு வந்தது.' "
"ஆமாங்கையா நானுங் கேள்விப்பட்டேனுங்க. ஐயா கூட அவனிக்கு பத்து ரூபா தெண்டம் போட்டுட் டீங்களாமே. அன்னிக்கே அவனும் அந்த ராமுப் பயலும் வந்து ஏங்கிட்ட ஒரே கரச்ச பண்ணிட்டானுக. அநியா யமா தெண்டம்போட்டுட்டீங்கன்னு சொல்லிக்கிட்டுஇருந் தானுக" என்ருர் தலைவர்.
"ஆமா தலைவர், அப்பு டி மோடத்தனமான வேலை செஞ்சா தெண்டம் போடத்தானே வேணுங்’ எனக்கூறிய கண்டக்டர் சிகரட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார்.
'அன்னிக்கு சரியான மழைதானுங்களே. வருசா வருசம் இப்புடித்தாங்க. மழை பெஞ்சா அந்த மலையில கொழுந்தே எடுக்க முடியாதுங்க, ஒரே வழுக்கப்பாறை துண்டுங்க. அதுதாங்க அவேன் ஆளுங்களை கூட்டிக்கிட்டு வந்துட்டானுங்க."

குருதிமலை 73
* அப்படி சொல்ல வேணுங் தலைவர். கங்காணி நெனைச்ச மாதிரி மலையில இருந்து ஆளுங்களை கூட்டிக் கிட்டு வரக்கூடாது தானே. நம்பகிட்ட சொல்லித்தானே செய்யவேணுங்."
**இவ்வளவு நாளும் தோட்டத்தில செஞ்சுவந்த மாதிரி தாங்க அவேன் செஞ்சுப்புட்டான். இனிமே ஐயா சொல்லாம அந்த மாதிரி நடந்துகிட வேணுமுனு சொல் லிப்புடுறேங்க. இந்தத் தடவை மட்டும் மன்னிச்சிடுங்க. அவனுக்கு அந்தத் தெண்டத்தை மட்டும் போட்டுப்புடா தீங்க" என தலைவர் தலையைச் சொறிந்த வண்ணம் கூறி ஞர்.
‘நான் தெண்டம் போட்டா போட்டதுதாங். அப் புறம் மாத்திறநில்லே" எனக் கூறிய கண்டக்டர் ஒரு கணம் தாமதித்து சிகரட்டைப் பலமாக உறிஞ்சிவிட்டு புகையை வெளியே ஊதினர். பின்னர் 'ஆனலுங் தலைவர் நீங்க கேக்கிறதினுல அந்த தெண்டத்தை நான் நிப்பாட்டு றது. வேற ஆள் வந்து கேட்டா நான் இது செய்யிறது இல்லே’ எனக் கூறினர்.
*ரெம்ப நல்லதுங்க. போன கண்டக்கையாவும் ஒங்க மாதிரிதாங்க. மிச்சம் நல்லவருங்க. நான் எது கேட்டாலும் மறுக்காம செஞ்சிடுவாருங்க" எனக் குழைந் தார் தலைவர்.
** நாங் இங்க வந்தது ஆளுங்களுக்கு கெட்டது செய் யிற துக்கு இல்லே. நல்லது தாங் செய்யிறது. நாங் சொன்னபடி ஆளுங்க நடந்தா நான் மிச்சங் ஒதவி செய்யிறது" என்ருர் கண்டக்டர்.
**ரெம்ப நல்லதுங்க. ஐயா கூடக் கேள்விப்பட்டிருப் பீங்க; நான் இந்தத் தோட்டத்தில பத்து வருஷமா தலை வரா இருக்கிறேனுங்க. ஒரு காலத்திலையும் நான் ஐயா மாருங்க பேச்சை மீறி நடக்கல்லீங்க. சும்மா சொல்லப் புடாதுங்க. ஐயாமாருங்களும் எனக்கு ரொம்ப ஒதவி செஞ்

Page 42
74 குருதிமலை
சிருக்காங்க. போன ஐயா கூட என் சம்சாரம் சொகமில் லாம வூட்டில இருந்திட்டாளுன்ன அவர் கிட்ட ஒரு வார்த்தைதாங்க சொல்லணும். அவ வேலைக்கு வர்ற வரைக் கும் பேரு போட்டு ஒதவி செய்வாருங்க. அவர மறக்கவே முடியாதுங்க" எனக் கூறிய தலைவர், கண்டக்டரைப் பார்த்து அசட்டுத்தனமாகச் சிரித்தார்.
*அதிங் எல்லாங் சரி தலைவர். நாங் வேற ஒரு விசயங் ஓங்ககிட்ட, கதைக்க வேணுங். இந்த மாசம் முடியிற துக்கு முந்தி அந்த ஒன்பதாங் நம்பர் மலைக்கும் பத்தாங் நம்பர் மலைக்கும் ஒரம் போட்டுமுடிய வேணுங், அதுளுல அந்த வேலைய நாங் ‘கொன்றேக் கொடுக்கிறது. தலைவருக்கு அந்த "கொன்றேக் எடுத்து செய்ய முடியுமா?’ எனக் கேட்ட கண்டக்டர் தலைவரை உற்றுப் பார்த்தார்.
தலைவர் சற்று யோசித்து விட்டு "ஒரம் போடுறதுக்கு வழக்கமா பெரட்டுல தானே ஆள் போடுவாங்க, இந்தப் பயணம் என்னுங்கையா கொந்தரப்பு குடுக்குறிங்க." எனக் கேட்டார்.
"ஆமாங் தலைவர், அது நமக்குங் தெரியும். இந்த மாசம் தோட்டத்தில மிச்சங் வேலை இருக்கி. அதனுலதான்
"கொன்றேக் குடுக்கிறது. நீங்க எந்த நாளும் அந்த .
வேலைய அந்திக்கு ஆள் வச்சி செய்ய முடியுங்தானே" எனக் கூறினர் கண்டக்டர்.
தலைவரின் மூளை துரிதமாக இயங்கியது. அந்த வேலை யைக் "கொன்றேக்’ எடுத்தால் குறைந்த ஆட்களைக் கொண்டு கூடிய வேலையைச் செய்வித்து இலாபம் பெற லாம் போல அவருக்குத் தோன்றியது.
"ஐயா சொன்னிங்கன்ன நான் மறுத்துப் பேசப் போறேனுங்களா? என் பேருலேயே அந்த கொந்தரப்பை போட்டிடுங்க" என்ருர் தலைவர் சிரித்தபடி,

குருதிமலை ፖ5
"அப்ப சரிங் தலைவர். நாங் ஓங்க பேருக்குத் தான் "கொன்றேக் கொடுக்கிறது. இதுபத்தி தொரகிட்ட கதைச்சி அப்புறங் நாங் ஒங்களுக்கு சொல்லுறேங். அது வரைக்கும் நீங்க இதபத்தி யாருகிட்டேயும் சொல்ல வேணுங். அப்புறம் எல்லாங் நம்பகிட்ட வந்து கொன்றேக் தரச்சொல்லி கரச்சல் பண்ணுவாங் தானே' என்ருர் கண் டக்டர், சிகரட் துண்டை நிலத்திலே போட்டு சப்பாத்துக் காலால் மிதித்தபடி,
“எனக்குத் தெரியாதுங்களா. இந்த மாதிரி வெசயங் களைப் போய் மத்தவங்ககிட்ட கதைக்கலாமுங்களா? மூச்சு விட மாட்டேனுங்க” என்ருர் தலைவர் கையை வாயில் வைத்தபடி.
**சரி தலைவர் நேரமாச்சி, இதைப்பத்தி நாம அப்புறங் கதைப்பங். இப்ப எனக்கு கொஞ்ச வேலையிருக்கு’ எனக் கூறியவாறு கதிரையைவிட்டு எழுந்திருந்தார் கண்டக்டர்.
கண்டக்டர் எழுந்ததைப் பார்த்த தலைவர், "அப்ப சரிங்க, நான் போயிட்டு வாறேனுங்க' எனக் கூறி கண் டக்டரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
**நம்ப கண்டக்கையாவப் பத்தி என்னென்னவோ நெனைச்சுப் பயந்துகிட்டு இருந்தேன். இப்பதான் அவரைப் பத் தி தெரியுது" என முணுமுணுத்தபடி லயத்தை ாேக் நகி நடக்கத் தொடங்கினர் மாரிமுத்துத் தலைவர்.

Page 43
76 குருதிமலை
அத்தியாயம் பதினுென்று
கிராமத்து மக்கள் அன்று மகிழ்ச்சியில் திளைத்திருந்த னர்.மந்திரி உட்பட அரசியல் பிரமுகர்கள் சிலர் அன்று கிராமத்துக்கு வந்திருந்தார்கள். கிராமசேவகர் தலைமை யில் மந்திரிக்கும், அவருடன் கூடவந்த பிரமுகர்களுக்கும் ஒரு வரவேற்பு உபசாரக் கூட்டம், அங்குள்ள புத்தவிகா ரையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கிராமசேவகரும்,பண்டா முதலாளியும் நாட்டிலுள்ள ஒருசில முக்கியஸ்தர்களுமாக மந்திரிக்கும் பிரமுகர்களுக் கும் மாலையணிவித்து அவர்களை அந்த ஒற்றையடிப் பாதை யில் ஊர்வலமாக அழைத்துவந்தனர்.
மந்திரி வருவதற்காகக் கிராமத்து மக்கள் அனைவருமா கச் சிரமதானமூலம் அந்தப் பாதையைத் துப்புரவு செய்தி ருந்தார்கள்.
மந்திரியும் பிரமுகர்களும் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர்,கிராமத்திலுள்ள சில வீடுகளுக்கு விஜயம்செய்து அவர்களுடைய வாழ்க்கை முறையை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினர். பண்டா முதலாளிதான் ஒவ்வொருவ ரையும் மந்திரிக்கு அறிமுகம் செய்துவைத்தார்.அவர்கள் தங்களது தாய்மொழியில் உரையாடினர்கள்.
முதலில் அவர்கள் ஒரு விவசாயியைச் சந்தித்தார்கள். "எப்படி உங்களது விவசாயம் நடக்கிறது? உங்களது சீவியத்திற்குப் போதுமானதாக இருக்கிறதா?" என மந் திரி அந்த விவசாயியிடம் கேட்டார்.

7
குருதிமலை
"எங்களது பாட்டனர் காலத்திலிருந்தே நாங்கள் விவ சாயந்தான் செய்துவருகிருேம். எனது பாட்டனருக்குச் சொந்தமாக இருந்த இரண்டு ஏக்கர் காணிக்கு இப்போது நாங்கள் பதின்மூன்று பேர் வாரிசாக இருக்கிருேம்.அத ஞல் எங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வருமானம் மிகவும் சொற்பமாகவே இருக்கிறது" என்ருர் அந்த விவ g fru).
‘அப்படியா, இது இந்த நாட்டிலுள்ள ஒரு சிக்கலான பிரச்சினை. சிலரிடம் அதிகமாகக் காணி இருக்கிறது.ஆனல், பாடுபட்டு உழைக்கும் பலரிடம் போதியளவு காணிகள் இருப்பதில்லை..உங்களது குடும்பத்தில் உள்ள அனைவரது பெயர்களையும் குறித்துத் தாருங்கள். உங்களுக்கு ஏற்ற உதவிகளை நாங்கள் செய்து தருகிருேம்" என்ருர் மந்திரி. அப்போது பக்கத்தில் நின்ற பண்டா முதலாளி கூறி னர்: "இந்தக் கிராமத்தில் பொதுவாக் எல்லோரது நிலை மையும் இப்படியாகத்தான் இருக்கிறது. பலருக்கு வசிப்ப தற்குக் கூட இடமில்லாமல் இருக்கிறது. சிறிய வீடுகளில் நெருக்கமாகக் குடியிருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடு கின்றது."
"அப்படியா.இது மிகவும் வருந்தக்கூடிய விசயம்" என்ருர் மந்திரி.
பக்கத்தில் நின்ற செண்பக மரமொன்றில் ஏதோ சல சலப்புச் சத்தம் கேட்டது. அவர்களைக் கண்ட குரங் கொன்று வெருட்சியுற்று வேருெரு மரத்துக்குத் தாவி ஒடியது.
அனைவரும் அடுத்து வேருெரு விவசாயியின் வீட்டுக் குச் சென்றனர். அந்த விவசாயி தனது கஷ்டங்களை விளக் கினர்.
“எனது குடும்பத்துக்குச் சொந்தமாக ஒரு சிறிய வயல் இருக்கிறது.ஆனல்,இந்த வயலில் இருந்து எந்தக் காலத்தி

Page 44
78 குருதிமலை
லும் நாங்கள் பூரணமான பலனைப் பெற்றுக்கொள்ள முடி வதில்லை. விலங்குகளின் தொல்லை அதிகமாக இருக்கின் றது."
பக்கத்தில் அவர்களுடன் வந்துகொண்டிருந்த பொடி சிங்கோ என்ற இளைஞன் கூறினன். ' காட்டுப் பன்றிகள் இங்கு வந்து வயலில் இருக்கும் வரம்புகளை அழித்துச் சேதப்படுத்திவிடுகின்றன. குரங்குகள் கதிர்களை உருவி நாசப்படுத்திவிடுகின்றன."
"அப்படியானல் வேறு ஏதாவது உணவுப் பயிர்களைச் செய்துபார்த்திருக்கலாமே?’ எனக் கேட்டார் மந்திரி.
‘எந்தப் பயிர்களைச் செய்வதற்கும் இந்தக் குரங்குக ளும் பன்றிகளும் விடுவதில்லை" என்ருன் பொடிசிங்கோ.
*சென்ற வருடம் நான் எனது தோட்டத்தில் பெரு வாரியாகக் கிழங்குகளை நாட்டியிருந்தேன். ஆணுல்,பன்றி கள் இரவிரவாக எல்லாவற்றையுமே நாசமாக்கிவிட்டன’
'இந்த விலங்குகள் உங்கள் பயிர்களை அழிக்கமுடியா மல் எந்த முறையிலும் தடை செய்யமுடியாதா?’ எனக் கேட்டார் மந்திரி.
"நாங்கள் வயல்களிலே இரவிரவாக விழித்திருந்து காவல் காப்போம். ஆணுலும் அவை கூட்டங் கூட்டமாக வரும்போது எம்மால் ஒன்றும் செய்யமுடிவதில்லை . எப்படி யும் எங்களது காவலை மீறிக்கொண்டு அவை பயிர்களைச் சேதமாக்கிவிடுகின்றன" என்ருர் அந்த விவசாயி.
அப்போது பக்கத்தில் வந்துகொண்டிருந்த கிராம சேவகர் கூறினர்; "முந்தின காலத்தில் "நாட்டை அடுத் துள்ள பகுதிகள் பெருங் காடாக இருந்தன. அவற்றையெல் லாம் தோட்டத் துரைமார்கள் அழித்து "ஸ்டோர் அடுப்பு களுக்கு விறகாக எரித்துவிட்டனர்.அதனல் இப்போது அந்

குருதிமலை 79
தக் காட்டுக்குள் இருந்த விலங்குகள் அங்கு வசிக்கமுடியா மல் நாட்டுக்குள் புகுந்துவிட்டன.'
'இது நாடு இல்லை. எங்களது நாடு இப்போது காடாக மாறிவிட்டது.நாங்கள் காட்டிலேதான் வசிக்கிருேம்' என் முன் பக்கத்தில் நின்ற பொடிசிங்கோ.
அந்த இளைஞனின் உணர்ச்சிகளை மந்திரியால் நன்முக உணரமுடிந்தது.
பின்பு எல்லோரும் அடுத்துள்ள குடிசைக்குச் சென்ற னர்.அந்தக் குடிசையைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கமுக மரங்கள் சோலையாகக் காட்சியளித்தன. அந்தக் கமுக மரங்களில் குலக்குக் குலக்காகப் பாக்குகள் காய்த்துக் குலுங்கின.
“ஒ.இவருக்கு இந்தக் கமுக மரங்களில் இருந்து நல்ல வருமானம் கிடைக்குமல்லவா?" எனக் கூறி அந்தக் கமுக மரங்களைப் பார்த்து வியந்தார் மந்திரி.
“ஐயா,இந்தப் பாக்குகளை நாங்கள் அறுவடை செய் யும் காலத்தில் இங்கு தண்ணிருக்குப் பெரும் பஞ்சம் ஏற் பட்டுவிடுகின்றது.சென்ற வருஷம் நான் சுமார் ஐம்பதின யிரம் பாக்குகளை அறுவடை செய்து,நிலத்திலே குழி வெட்டி அதற்குள் போட்டு நீர் ஊற்றி ஊறவிட்டிருந் தேன்.அந்தப் பாக்குகள் சரியான பதத்தை அடையுமுன் னர் இந்தப் பகுதியில் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. அதனல் ஊறப்போட்ட பாக்குகள் அனைத்தும் முளை கொண்டுவிட்டன. என்னல் அதனை ஒன்றும் செய்யமுடிய வில்லை.செம்பால் அடித்த காசுகூட எனக்குக் கிடைக்க வில்லை" என வருத்தத்தோடு கூறினர் அந்த விவசாயி.
* அப்படியானல் வரட்சியான காலத்தில் நீங்கள் வேறெங்காவது இருந்து தண்ணிர் பெற்று, பலனை எடுக்க லாந்தானே?" என யோசனையுடன் கேட்டார் மந்திரி.

Page 45
80 குருதிமலை
**அது எங்களால் முடியாத காரியம். மேலே அருவிகளி லிருந்து ஒடிவரும் நீரை வரட்சியான காலங்களில் அணை கட்டி மறித்து, தேயிலைத் தோட்டத்தில் இருக்கும் தேயி லைத் தொழிற்சாலைகளுக்கு எடுத்துக்கொள்கிருர்கள்."
'இங்கு நாங்கள் குடிப்பதற்குத் தண்ணிர் இல்லாமல் இருக்கும்போது, அங்கே அந்தப் பெரிய இயந்திரங்கள் எமக்குக் கிடைக்கும் நீரைக் குடித்துவிடுகின்றன" என இடைமறித்துக் கூறினன் பொடிசிங்கோ.
'இது பெரும் அநியாயமான செயல்" என மந்திரி பதறிஞர். 1A
‘அப்படியானல் இந்தப் பாக்குகளையெல்லாம் பதனி டாமல் பச்சையாகவே விற்றுவிடலாமே" எனக் கேட் டார் மந்திரியுடன் கூடவந்த பிரமுகர்.
*அப்படித்தான் நாங்கள் இப்போது செய்துவருகி ருேம். அதனல் நாங்கள் பெறக்கூடிய உண்மையான வரு மானத்தில் பத்தில் ஒன்றுகூட எங்களால் பெறமுடிய வில்லை. பச்சைப் பாக்கு ஒன்றின் விலை ஒரு சதந்தான்."
அதன் பின்பு எல்லோரும் பண்டா முதலாளியின் கடைக்கு வந்தனர்.மந்திரி வருவதனல் பண்டா முதலாளி தற்காலிகமாகக் கள்ளுக் கடையை மூடியிருந்தார். மந்திரி முன்புறத்தில் உள்ள பலசரக்குக் கடையைப் பார்வையிட் L-IT it.
‘இந்தப் பகுதியில் எனது கடையொன்று மட்டுந்தான் இருக்கின்றது.ஆனலும் போக்குவரத்து வசதி குறைவாக இருப்பதால் இங்குள்ள மக்களுக்குத் தேவையான பொருட்களை என்னல் கொண்டுவந்து கொடுக்க முடிவ தில்லை.இந்தக் கடையில் கிடைக்கும் வருமானம் எனக்குச் சீவியம் நடத்தவே போதாமல் இருக்கின்றது. இங்குள்ள மக்களுக்கு இந்தக் கடையாவது பயன்படட்டுமே என்று

குருதிமலை 8.
தான் நான் இந்தக் கடையை நடத்தி வருகின்றேன்" என்ருர் பண்டா முதலாளி. ۔۔۔۔
வெளியே உள்ள கித்துள் மரங்களைக் கவனித்தார்
மந்திரி. - 4.
** ஹோ.உங்களுக்குத்தான் இந்தக் கித்துள் மரங்களி லிருந்து நிறைய வருமானம் கிடைக்குமே.கள்ளும் உற் பத்தி செய்யலாமல்லவா’ எனக் கூறிவிட்டுச் சிரித்தார் மந்திரி,
'இல்லை இல்லை.நாங்கள் மரத்தில் பாளை சீவி,மருந்து கட்டி, முட்டி கட்டிவைத்தால் குரங்குகள் பதனீரைக் குடித்துவிட்டு முட்டிகளை உடைத்துச் சேதம் விளைவிக்கின் றன.'
* அப்படியானல் நீங்கள் இந்த மரங்களிலிருந்து சிறி தளவாவது பலன் பெறுவதில்லையா?" எனக் கேட்டார் மந்திரி.
*ஏதோ சிறிது பதனீர் கிடைக்கின்றது.அதிலிருந்து நாங்கள் கருப்பட்டி காய்ச்சுகிருேம். அது எமது வீட்டுத் தேவைக்குத்தான் போதுமானதாக இருக்கின்றது' என் ருர் பண்டா முதலாளி.
தோட்டத்தைச் சுற்றிப் பார்த்த மந்திரி, 'ஹோ. இங்கு ஏலம், கராம்பு முதலிய செடிகளும் இருக்கின் றனவே" எனக் கூறினர். v
* குறிப்பிட்ட ஒருசில காலங்களில் மட்டுமே இதில் பலன் கிடைக்கிறது.ஆனலும் இந்தக் கிராமத்தில் இருந்து கொண்டு நல்ல முறையில் இவற்றைச் சந்தைப்படுத்த எம்மால் முடிவதில்லை" எனக் கூறினர் பண்டா முத்லாளி.
ஆனலும் பண்டா முதலாளி சிறிது வ்சதியுள்ளவர் என்பதை மந்திரியால் ஊகித்துக்கொள்ளமுடிந்தது. அவர் தன்னிடம் கூறிய யாவும் உண்மையானதல்ல என்பதை மந்திரி உணர்ந்துகொண்டார்.

Page 46
82 குருதிமல்
பொதுவாக இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் ஓரிரு வரைத் தவிர பலர் பெரிதும் கஷ்டப்படுகிறர்கள் என் பதை அவரால் நன்கு அறிந்துகொள்ளமுடிந்தது.
பின்னர் பண்டா முதலாளியின் வீட்டை அடுத்துள்ள குடிசைகள் நிறைந்த பகுதிக்குச் சென்று அங்குள்ளவர்களு டன் அளவளாவினர் மந்திரி.
முதலில் அவர்கள் பியசேனவின் குடிசைக்குச் சென்ற 6Tri.
மந்திரியும் அவரது குழுவினரும் தனது வீட்டுக்கு வரு வதைப் பார்த்த பியசேனு, அவர்களுக்கு வணக்கம் தெரி வித்து உள்ளே அழைத்துச் சென்றன். வீட்டினுள்ளே இருந்த அவனது தாய் மேரி நோனு மேதுவாக எழுந்து, **ஆயுபோங் மாத்தயா' என மந்திரிக்கு வணக்கம் தெரி வித்தாள்.
'நீங்கள் குடியிருக்கும் இந்தக் காணி உங்களுக்குச் சொந்தமானதா?’ எனக் கேட்டவாறு மந்திரி அவ்விடத் தின் சுற்றுப்புறங்களை நோட்டம் விட்டார்.
*இல்லை ஐயா, இது எங்களது சிறிய தகப்பணுருக்குச் சொந்தமான காணி. அவரது உதவியாலேதான் நாங்கள் இந்தக் குடிசையை அமைத்துக்கொண்டு இங்கு இருக்கி ருேம்" எனப் பணிவாகக் கூறினன் பியசேன.
**ஆமாம் இவர்களுக்குச் சொந்தமாகக் காணியேதும் இல்லை.இவன் இங்குள்ள இளைஞர்களில் ஓரளவு படித்த வன்.பக்கத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கொந்த ரப்பு வேலை செய்துவருகிருன்' என்ருர் அருகே நின்ற பண்டா முதலாளி.
'ஏன் தோட்டத்தில் உங்களுக்கு நிரந்தரமாக வேலை கிடைக்காதா?கொந்தரப்பு மட்டுந்தான் கிடைக்குமா?" எனப் பியசேனுவைப் பார்த்துக் கேட்டார் மந்திரி,

குருதிமலை 83.
*எனது தாயாரின் பெயரில் முன்பு கொடுக்கப்பட்டி ருந்த கொந்தரப்பை, இப்போது தொடர்ந்து நான் செய்து வருகிறேன். சில்லறை வேலைகளைப் பொறுத்த வரையில் தோட்டங்களில் பதிவானவர்களுக்குத்தான் போதிய வேலைகள் கொடுக்கப்படுகின்றன. தோட்டத்தில் கூடுதலான வேலைகள் இருக்கும்போதுதான் கிராமத்தில் உள்ளவர்களுக்கு வேலை கொடுப்பார்கள்' என்ருன் பிய சேஞ.
"ஏன் நாட்டில் இருந்து செல்லும் தொழிலாளர்களைத் தோட்டத்தில் நிரந்தரமான தொழிலாளர்களாக ஏற்றுக் கொள்ளமாட்டார்களா?" என யோசனையுடன் கேட்டார் மந்திரி.
"மிகக் குறைந்த பகுதியினரே தோட்டத்தில் பெயர் பதிந்து வேலை செய்கின்றனர். மற்றவர்கள் தற்காலிகத் தொழிலாளிகளாகத்தான் அவ்வப்போது வேலை செய்கின் றனர்" என்ருன் பியசேன.
மந்திரி யோசனையுடன் தலையாட்டியபடி அடுத்துள்ள குடிசைக்குள் சென்ருர்,
அக்குடிசையின் முன்புறத்தில் நடுத்தர வயதுடைய ஒருவர் அமர்ந்திருந்தார். மந்திரியும் ஏனையோரும் அங்கு வருவதைக் கண்டதும் அவர் எழுந்து வணக்கம் தெரிவித் தார்.
"இவர் பெயர் முதியான்சேபக்கத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில் முன்பு கங்காணி வேலை பார்த்தவர்.இப் பொழுது ஒய்வுபெற்று வீட்டில் இருக்கிருர்.எங்கள் கிரா மத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளை இவரோடு கலந்தா லோசித்துத்தான் செய்வது வழக்கம்" என பண்டா முத லாளி அவரை அறிமுகப்படுத்தினர்.
"அப்படியா, தோட்டத்து வேலையிலிருந்து ஒய்வு பெற்ற பின்பு எப்படி உங்களது சீவியம் நடக்கிறது?" என மந்திரி அவரிடம் வினவினர்.

Page 47
84 குருதிமலை
**எனது மகன் ஒருவன் கொழும்பில் வேலை செய்கி முன். அவன் அனுப்பும் பணத்தைக் கொண்டு நானும் எனது மனைவியும் சீவியம் நடத்துகிருேம்" என்ருர் முதியான்சே,
" சரி. மிகவும் நல்லது; நான் உங்கள் கிராமத்து மக்க ளின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிய விரும்புகிறேன். இதைப் பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்? என மந்திரி அவரிடம் கேட்டார்.
"" நமது கிராமம் நாலு புறமும் தோட்டங்களினல் சூழப்பட்டு இருப்பதால் விரிவுபடமுடியாத நிலையில் இருக் கின்றது. ஆணுல், மக்கள் தொகையோ நாளுக்குநாள் பெரு கிக்கொண்டே வருகின்றது. இதனுல் இங்குள்ள எல்லோ ருக்கும் விவசாயம் செய்வதற்கு இப்போது போதிய நிலம் இல்லாமல் போய்விட்டது. இங்குள் ள வர் களுக்குப் போதிய வேலைவாய்ப்பும், இருப்பிட வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தால்தான் இந்தக் கிராமம் முன்னேற்றமடைய வாய்ப்புஏற்படும்" என யோசனையுடன் கூறிஞர் முதி யான்சே,
‘இவர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாமென நீங்கள் கருதுகின்றீர்கள்?"
** இப்போதுதான் தேயிலைத் தோட்டங்கள் யாவும் அரசாங்கத்திற்குச் சொந்தமாகிவிட்டதே. கிராமத்து மக் களுக்கு அங்கு போதியளவு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளலாமல்லவா?"
'நீங்கள் கூறுவதும் சரிதான். இது விஷயமாக வேறு என்ன கூற விரும்புகின்றீர்கள்?" என மந்திரி ஆவலுடன் கேட்டார்.
** தோட்டத் தொழிலாளர்கள் பலர் இப்போது இந்தி யாவிற்குத் திரும்பிக்கொண்டு இருக்கிருர்கள். அவர்களது இடத்தைக் கிராமத்து மக்களைக் கொண்டு நிரவலாம். இத ஞல் தோட்டத் தொழிலாளர்களோடு சேர்ந்து கிராமத்து

குருதிமலை 85
மக்களும் தேயிலைத் தோட்டங்களை அபிவிருத்தியடையச் செய்ய வாய்ப்பு ஏற்படும்" என்றர் முதியான்சே,
முதியான்சே கூறிய கருத்துக்கள் மந்திரியைச் சிந்திக்க வைத்தன.
மந்திரி அடுத்துள்ள குடிசைகளுக்கும் சென்று அங்குள் ளவர்களுடன் அளவளாவினர். அவர்களது நிலைமையை அறிந்துகொண்ட பின்னர், கூட்டம் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட புத்த விகாரைக்கு எல்லோரும் சென்றனர். அவர்கள் அங்கு செல்வதற்கு முன்பாகவே கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக சில தொழிலாளர்களையும் அழைத் துக்கொண்டு கண்டக்டர் அங்கு வந்து காத்திருந்தார்.
மந்திரி மேடையில் ஏறியதும், தயாராகக் கொண்டு வந்திருந்த மாலையை மந்திரியின் கழுத்தில் அணிவித்தார் கண்டக்டர்.அப்போது அங்கிருந்த அனைவரும் கரகோஷம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பலர் மந்திரிக்கும் அங்கு வந்த ஏனைய பிரமுகர்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சிறிது நேரத்தில் கூட்டம் ஆரம்பமாகியது. தனது பேச்சில் முக்கியமாகப் பின்வரும் கருத்தினை மந்திரி வலி யுறுத்திப் பேசினர்:
"இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் மிகவும் வறுமையான நிலையிலேயே இருக்கின்றனர். அதற்கு அடிப் படையான காரணம் இங்குள்ளவர்களுக்குக் குடியிருப்ப தற்கோ விவசாயம் செய்வதற்கோ ஏற்ற நிலம் இல்லை என் பதை நான் உணருகிறேன். ஒரு சிலருக்கு நிலம் இருந்த போதிலும் அதில் இருந்து பலன் பெறமுடியாமல் பல பிரச்சினைகள் அவர்களைப் பாதிப்பதை நான் அறிகிறேன். எங்களது மூதாதையர்களின் நிலங்களையெல்லாம் வெள்ளையர்கள் வந்து கைப்பற்றி, அவற்றைத் தேயிலைத்

Page 48
86 குருதிமலை
தோட்டங்களாக மாற்றி,அதிலிருந்து பெரும் வருமானத் தைத் தங்களது நாட்டிற்கு எடுத்துச் சென்ருர்கள். ஆனல், இப்போது நிலைமை மாறிவிட்டது.வெள்ளையர்கள் வசமி ருந்த தேயிலைத் தோட்டங்கள் யாவும் இப்போது அர சாங்க உடைமையாகிவிட்டன. உண்மையில் இவை யாவும் உங்களது மூதாதையர்களின் சொத்துத்தான்.
இன்று நிலமற்றவர்களாகவோ,அல்லது வசதி குறைந் தவர்களாகவோ இருக்கும் உங்களுக்கு, உங்களுடைய மூதாதையர்களுடைய சொத்தைத் தருவதற்கு ஏற்ற நட வடிக்கைகளை நாம் செய்துகொண்டு இருக்கின்ருேம்.நீங் கள் எல்லோரும் இந்த நாட்டின் மதிப்புக்குரிய பிரஜை கள்,நீங்கள் கஷ்டப்படுவதைப் பார்த்துக்கொண்டு எவ ருமே சும்மா இருக்கமுடியாது.
இந்தக் கணத்திலிருந்தே நீங்கள் எல்லோரும் சுபீட்ச மான ஓர் எதிர்காலத்தை நோக்கி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறீர்களென்பதை நான் உறுதியாகக் கூறுகி றேன்.உங்கள் எல்லோருக்கும் நிச்சயமாகப் போதியளவு காணி கிடைப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்."
"ஜயவேவா." **அப்பே மந்திரி துமாட்ட ஜயவேவா." கூட்டத்திலிருந்து பல குரல்கள் வானத்தைப் பிளந்து ஒலித்தன.
அன்று கூட்டம் முடிந்து வீட்டிற்குத் திரும்பிய மக்க ளின் உள்ளங்களில் மகிழ்ச்சி பிரவாகித்துக்கொண்டிருந் திதி
கூட்டம் முடிந்தபின்னர் மந்திரிக்கும்,அவருடன் கூட வந்தவர்களுக்கும் கிராமசேவகரின் இல்லத்தில் ஒரு தேநீர் விருந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தோட்டத்தில் இருந்து வந்த கண்டக்டர் உட்பட பண்டா முதலாளியும், வேறு சிலரும் அந்த விருந்தில் கலந்துகொண்டனர்.

குருதிமலை 87
மந்திரி கண்டக்டரின் அருகே நெருங்கி, ‘எப்படி உங்களது புதிய வேலை. தோட்டத்தில் எல்லா வசதியும் உங்களுக்கு இருக்கிறதா?’ என வினவினுர்.
'உங்களது தய வால் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்' எனப் பணிவுடன் கூறினர் கண்டக்டர்.
"மிகவும் சந்தோஷம். உங்களது தோட்டத்தில் விரைவில் ஒரு கூட்டுறவுச்சங்கக் கடை அமைப்பதற்கு ஏற் பாடுகள் செய்துகொண்டிருக்கிறேன்" எனக் கூறினர்.
"மிகவும் நல்லது. இப்போது தொழிலாளர்கள் தமக்கு வேண்டிய பொருட்களைப் பெறுவதில் பெருங் கஷ் டப்படுகிறர்கள். கூட்டுறவுச் சங்கக்கடை வந்தால் அவர் களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்" எனக் கூறிவிட் டுச் சிரித்தார் கண்டக்டர்.
அப்போது அங்கிருந்த கிராமசேவகர் மந்திரியின் அருகே வந்து, அவருக்கு மூன்று இளைஞர்களை அறிமுகம் படுத்தினர்.
"இவர்கள் இந்தக் கிராமத்தில் உள்ள படித்த இளை ஞர்கள்; வேலைவாய்ப்பின்றி இருக்கிருர்கள்.அது விஷயமா கத் தங்களுடன் கதைக்க விரும்புகிறர்கள்."
**ஆமாம்,எங்களது கிராமத்தில் பள்ளிக்கூடம் இல் லாததால் இவர்கள் எல்லோரும் வெகுதூரம் நடந்து சென்று சிரமப்பட்டு 'டவுனில் உள்ள பாடசாலையில் படித்தவர்கள். கடந்த பொதுத் தேர்தலின்போது இவர் கள் தங்களது வெற்றிக்காகப் பெரிதும் உழைத்தவர்கள்' எனப் பக்கத்தில் நின்ற பண்டா முதலாளி கூறினர்.
"அப்படியா, நீங்கள் இதுவரை காலமும் ஏதாவது தொழில் பெறுவதற்கு முயற்சி செய்யவில்லையா?" என அந்த இளைஞர்களைப் பார்த்துக் கேட்டார் மந்திரி.

Page 49
88 Ᏹ குருதிமலை
"நாங்கள் பல இடங்களில் வேலை தேடி அலைந்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை" என அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
"தற்பொழுது படித்த இளைஞர்களுக்கும், யுவதிகளுக் கும் நாங்கள் தேயிலைத் தோட்டங்களில் வேலை கொடுக்க எண்ணியுள்ளோம். வேலையில்லாத இளைஞர்களை மனுப் போடச் சொல்லியும் அறிவித்திருந்தோம். நீங்கள் ஏதா வது வேலைகளுக்கு மனுப் போடவில்லையா?" என மந்திரி அவர்களிடம் வினவினர்.
**ஆம், நாங்கள் ஆரம்பத்திலேயே விண்ணப்பம் போட்டோம். இதுவரையிலும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. உங்களது சிபார்சு இருந்தால் ஏதாவது வேலையைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது' என்ருன் அந்த இளைஞர்களில் ஒருவன்.
"ஆம், உங்களைப் போல பிரச்சினையுள்ள இளைஞர்கள் எமது பகுதியில் நிறையப் பேர் இருக்கிருர்கள். நீங்கள்,உங் களது மனுவின் பிரதியொன்றை எடுத்துக்கொண்டு என்னை வந்து சந்தியுங்கள்;என்னல் முடிந்த உதவியைக் கட்டாயம் செய்வேன்" என்ருர் மந்திரி யோசனையுடன்.
அவரது பேச்சில் தொனித்த உறுதி அந்த இளைஞர் களுக்கு நம்பிக்கையை அளித்தது.
அன்று மந்திரி விருந்து முடிந்து தமது இல்லத்துக்குத் திரும்பியபோது, அவரது உள்ளம் பூரித்திருந்தது. கிரா மத்து மக்களிடம் தமக்கு இருக்கும் ஆதரவை எண்ணி அவர் பெரிதும் மகிழ்வடைந்தார்.

குருதிமலை éö
அத்தியாயம் பன்னிரண்டு
பெரிய கிளாக்கர் சுப்பிரமணியத்தினல் அவரது இடமாற்றத்தை எவ்வகையிலும் தடுத்துநிறுத்த முடிய வில்லை. அவர் இப்போது றப்பர் தோட்டத்துக்கு வேலை ஏற்றுச் சென்றுவிட்டார். கடந்த ஒரு கிழமையாக புதிய பெரிய கிளாக்கர் தோட்டத்து ஆபீஸில் வேலை செய்து கொண்டிருக்கிருர்,
அன்று வந்த கடிதங்களைப் பார்வையிட்டுக்கொண் டிருந்த துரை "கோலிங் பெல்லை அமுக்கினர். தனது அறையில் இருந்த பெரிய கிளாக்கர் எழுந்து துரையின் அறையின் உள்ளே நுழைந்தபோது, மேசையிலிருந்த டெலிபோன் அலறியது. அதை எடுத்துக் கதைத்துவிட்டு போன கீழே வைத்தார் துரை. பின்னர் பெரிய கிளாக் கரைப் பார்த்துக் கூறிஞர்:
"மிஸ்டர் பெரேரா, நமது தோட்டத்துக்கு புதிதாக ஆறு ‘சுப்பவைசர்கள் வர இருக்கின்ருர்கள். எனக்கு மாவட்டக் காரியாலயத்திலிருந்து அறிவித்தல் வந்திருக் கிறது."
* எப்போது வருகிருர்கள் சார்?" என்ருர் பெரிய கிளாக்கர் ஆவலுடன்,
"எதிர் வரும் முதலாம் திகதியே அவர்கள் வேலைக்கு வரவிருக்கின்றர்கள். தோட்டங்களில் அவர்களுக்கு வேலை

Page 50
bo குருதிமல்ை
செய்து எவ்வித அனுபவமும் இல்லை. இங்கு வந்தபின்பு தான் அவர்கள் வேலை பழகவேண்டும்."
"சரி சார், இது சம்பந்தமாக நான் ஏதாவது செய்ய வேண்டுமா?
சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்த துரை பெரிய கிளாக்கரின் பக்கம் திரும்பி, "உண்மையில் இந்தத்தோட் டத்தில் சுப்பவைசர் வேலை எதுவும் காலியாக இல்லை.ஆன லும் அரசாங்கம் அனுப்பும்போது நாம் ஏற்கத்தான் வேண்டும். அவர்கள் வந்தவுடன் அவர்களுக்குரிய இருப் பிட வசதிகளை நீர்தான் செய்யவேண்டும்' என்றர்.
"மிகவும் நல்லது சார், அதைப்பற்றி நான் கவனித் துக்கொள்கிறேன்."
துரை அது சம்பந்தமான கடிதத்தை பெரிய கிளாக் கரிடம் கொடுத்தார்.
கடிதத்தைப் பெற்ற கிளாக்கர் சற்றுத் தயங்கியபடி, **சார், உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப்பற்றிக் கூறவேண்டும்; இப்போது அநேகமான கடிதங்கள் சிங் கள மொழியில்தான் எமக்கு வருகின்றன. இங்கு எனக்குக் கீழே கடமைபுரியும் ஒருவருக்கும் அந்த மொழி தெரியாது. அதனல் இந்த ஆபீஸில் பலவேலைகள் தாமதமாகிக்கொண் டிருக்கின்றன" எனக் கூறினர்.
** நாங்கள் இந்த ஆபீஸில் ஆங்கில மொழியிலேதான் கடிதத் தொடர்பு வைத்திருப்பது வழக்கம்.அதையே நாம் தொடர்ந்து செய்வோம்" என்ருர் துரை.
"நீங்கள் சொல்வது சரி சார். ஆனல், நமக்கு வரும் கடிதங்கள் யாவும் சிங்கள மொழியிலேயே வருகின்றன,

குருதிமலை, Y 9岛
அந்த மொழியிலே தேர்ச்சியுள்ள ஒருவர் இங்கிருந் தால் நல்லதென நினைக்கின்றேன்.'
"ஏன் உமக்கு நன்முகச் சிங்களம் தெரியும்தானே. நீரே அந்தக் கடிதங்களை மொழி பெயர்த்துக் கொடுக்கலா மல்லவா?*
**ஆமாம் சார், ஆனலும் எனக்கு வேலைகள் அதிக மாக இருக்கும்போதோ, அல்லது நான் எப்போதாவது லீவில் செல்லும்போதோ, சிங்கள மொழி தெரிந்தவர் ஒருவர் இருந்தால் உதவியாக இருக்கும் என்பது எனது
அபிப்பிராயம்."
துரை பதில் ஏதும் கூருமல் சிறிது நேரம் மெளன மாக இருந்தார்.
** இங்கே பாருங்கள் சார், சுப்பவைசர்களாக வரப் போகும் ஆறு பேரும் சிங்கள இளைஞர்கள்தான் என இந் தப் பெயர்களிலிருந்து நாம் ஊகிக்கமுடிகிறதல்லவா?வரு கின்ற எல்லோருக்குமே ஆங்கிலம் தெரியுமென நாம் எதிர் பார்க்கமுடியாது. இவர்கள் சிங்கள மொழியிலேதான் தங் களது கடமையைச் செய்யப்போகின்றர்கள். இனி வருங் காலத்திலும் சிங்கள மொழி மட்டும் தெரிந்தவர்கள்ே இங்கு வேலைக்கு வரவும் கூடும். அதனுலேதான் நாங்கள் சிங்கள மொழி தெரிந்த ஒருவரை டைப்பிஸ்டாக வைத் துக்கொள்வது நல்லது என எண்ணுகிறேன்."
"நீர் சொல்வது சரிதான். நமக்கு சிங்கள மொழி தெரிந்த "டைப்பிஸ்ட்" தேவையென நமது மாவட்டக் காரியாலயத்திற்கு தெரிவிப்போம்" என்ருர் துரை சிகரட் ஒன்றைப் பற்றவைத்தபடி.
*எனது அபிப்பிராயமும் இதுதான் சார், இது சம் பந்தமான கடிதத்தை டைப் பண்ணிக்கொண்டுவந்து தரு

Page 51
92 குருதிமலை
கிறேன்" எனக் கூறிவிட்டு பெரிய கிளாக்கர் தனது அறைக்குச் சென்ருர்,
துரை சிங்களவராக இருந்தபோதிலும் அவருக்கு அம்மொழி நன்முகத் தெரியாது. அவர் ஆங்கிலத்திலே தான் கல்வி பயின்றவர், அதனுல் பெரிய கிளாக்கர் கூறி விட்டுப்போன செய்தி அவருக்கு குழப்பத்தை உண்டு பண்ணி இருந்தது. தனது ஆசனத்தில் அமர்ந்தவாறு ஏதோ சிந்தித்தவண்ணம் அவர் சிகரட் புகையை ஊதிக் கொண்டிருந்தார்.
பெரிய கிளாக்கர் பெரேர்ா தனது அறையில் இருந்த படியே கடிதம் ஒன்றை எழுதித் தயாரித்துக்கொண்டிருந் தார்.
அவரது மருமகள் முறையிலான பெண்ணுெருத்தி சிங் களத்தில் தட்டச்சுப் படித்துவிட்டு வேலை தேடிக்கொண் டிருந்தாள். புதிதாக தோற்றுவிக்கப்படும்வேலையில் அவளை எப்படியாவது நுழைத்துவிடலாம் என்ற நம்பிக்கை பெரிய கிளாக்கருக்கு இப்போது ஏற்பட்டிருந்தது.
எப்படியாவது கட்சி அமைப்பாளரைச் சந்தித்து ஏற்ற ஒழுங்குகளைச் செய்துவிடவேண்டும் என்ற சிந்தனை யுடன் அவர் கடிதத்தை டைப் அடிக்கத் தொடங்கினர்.

குருதிமலை 93.
அத்தியாயம் பதின்மூன்று
தொழிலாளர்களின் நன்மை கருதி தோட்டத்தில் புதிதாகச்சங்கக்கடை திறந்திருந்தார்கள். கடையில் அன்று மாலை ஒரே கூட்டமாக இருந்தது. சிறுவர்கள் கூச்சலிட்டுக் கொண்டு அங்குமிங்குமாக ஒடித்திரிந்தனர். பொருட்கள் வாங்குவதற்கு அதிகமானேர் வந்திருந்தபடியால் எல்லோ ரும் ஒருவருக்குப் பின் ஒருவராக "கியூவில்" நின்றிருந்த னர். கரத்தை ருேட்டு வரைக்கும் கியூவரிசை நீண்டிருந் திது.
மனேஜர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு கைப் பணத்திற்கு சாமான் வாங்குபவர்களுக்கு ரசீதை எழுதிக் கொடுத்து, பணத்தை வாங்கி லாச்சியில் போட்டுக் கொண் டிருந்தார். அவருக்கு உதவியாக இருக்கும் பில்கிளாக்கர்" கடனுக்குச் சாமான் வாங்குபவர்களுக்கு வேகமாக பில் களை எழுதிக் தள்ளிஞர்.
சாமான்களை நிறுத்துக் கொடுப்பதற்காக ஒருவர் தரா சின் அருகிலும் வேருெருவர் அவருக்கு உதவியாக சாமான் கள் எடுத்து கொடுத்துக் கொண்டும் இருந்தார். சாமான் களை நிறுப்பவரது கை துரிதமாக இயங்கிக் கெண்டிருந்தது.
"அட யாருடா அங்க சத்தம் போட்டுக்கிட்டிருக்கிறது. ஒழுங்கா நின்று சாமானத்த வாங்கி கிட்டு போங்களேன். மாடு மாதிரி அடிச்சிக்கிட்டு கெடக்குருனுக" கறுப்பண் னன் கங்காணி உரத்த குரலில் கூறினர்,

Page 52
94 குருதிமலை
அவரது கையில் பெரிய உறை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.
'ஏய் யாருடா அங்க ஊடையில் பூர்றது. கங்காணி கங்காணி, அங்க பாருங்க ஊடையில பூர்ருனுங்க. அப்ப நாங்க எப்புடீங்க சாமான் வாங்கிறது?" வரிசையில் நின்றிருந்த ஒருவன் கத்தினன்.
"இப்ப யாராச்சும் போலிங்கிலை பூந்திங்களு கொழப் பந்தான் வரும், இன்னிக்கு சாமான் வாங்காட்டியும் பர வாயில்ல' வரிசையில் பின்னல் நின்றிருந்த வேருெருவன் கத்தினன். : 'அட ஏம்பா இந்த ஆம்புளை ஆளுங்க எல்லாம் இப் புடி சத்தம் போடுருங்களோ தெரியாது; பொம்புளை ஆளுங்க நிக்கிருேமுனு கொஞ்சமாவுது எடங் கொடுக்கிருங் களா? மிச்சமோசம்’ என முணுமுணுத்தாள் அங்கே நின்ற பெண்களில் ஒருத்தி.
**இந்தா பாருங்க, இந்த பொம்பளை ஆளுங்களுக்கு கொஞ்சம் எடங் கொடுங்க அவுங்க சாமான் வாங்கிட்டு போனுப்புறம் நாம வாங்கலாம். ஏன்தான் இப்புடி அடிச் சிக்கிருங்களோ தெரியாது. கோப்புரெட்டி கடை என்ன ஒடியா போவப் போவது? சத்தம் போடாம நின்னு சாமான் வாங்குங்களேன்" என்ருர் கறுப்பண்ணன் கங் காணி பலமாக.
அப்போது அங்கே வந்த வீரய்யா, என்னுங்க கங் காணி சத்தம் போட்டுகிட்டு இருக்கீங்க" எனக் கேட்ட படி கறுப்பண்ணன் அருகிலே சென்ருன். .
"இந்தப் பயலுகளோட இன்னிக்கு சாமான் வாங்க முடியாது. கோச்சிக்கி போறமாதிரி அடிச்சிக்கிருங்க. கட னுக்குனு சொன்ன போதும் ஆடிக்கிட்டு சாமானுங்களை அள்ளுவாங்க, அப்புறம் செக்குருேலுல கடன் வந்த வொடன ஆட்ட மெல்லாம் அடங்கிப் போயிடும்" கறுப்

குருதிமல் Ds
பண்ணன் கங்காணி வீரய்யாவிடம் கூறிவிட்டு ஒரு வாய்க்கு வெற்றிலை போட்டுக் கொண்டார்.
வாசல் வழியாக கடைக்குள் எட்டிப் பார்த்த வீரப்யா, இன்னிக்கு கோப்புறட்டில ரெம்ப சாமான் வந் திருக்குப் போல இருக்கே. துணியெல்லாம் வந்திருக்கே. அப்புறம் என்ன? தோட்ட ஆளுங்கள இனி கையில புடிக்க ஏலாது" எனக் கூறிவிட்டுச் சிரித்தான்.
**ஆமா வீரய்யா, காலையிலை யூனியனில இருந்து நெறைய சாமான் வந்திச்சாம். நல்ல கருவாடெல்லாம் வந்திருக்கு. ஒரு ஆளுக்கு அரை ருத்தல்படி கொடுக்குருங் களாம்" என்ருர் கறுப்பண்ணன், வாயின் ஒரு பக்கமாக வெற்றிலையை அதக்கிக் கொண்டு.
"அப்ப நல்லதுதான். டவுனுல ஒரு ருத்தல் கருவாடு ஆறு ரூபா; அதும், அந்த வெலை கொடுத்து வாங்கிறதுக்கு சமான் தட்டுப்பாடா இருக்கு, இங்க'என்ன வெலை போடு ருங்களாம்? அருகே நின்ற ராமு காதிலே செருகிவைத் திருந்த பீடியை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு கேட்
T657.
அப்போது கடைவாசலில்; வாங்கிய பொருட்களை உறையிலே போட்டுக்கொண்டிருந்த ராக்கு ஏதோ சிந் தித்துவிட்டு கடையிலே கொடுத்த பில்லை எடுத்துப் பார்த் தாள்.
*" வீரய்யா, கொஞ்சம் இங்க வாப்பா, எந்தெந்த சாமானுக்கு என்ன வெலை போட்டிருக்காங்கன்னு கொஞ் சம் வாசிச்சு சொல்லிப்புடு"
ராக்கு வீரய்யாவை அழைத்தாள்.
"என்னக்கா நீங்க ஒன்னு. எல்லாம் சரியாத்தான் போட்டிருப்பாங்க. டவுண் கடையிலமாதிரி நெனச் சுக் கிட்டீங்களா. இது கோப்புரட்டிகடை "எனக் கூறிக் கொண்டே பில்லை வாங்கினுன் வீரய்யா. பின் அதனை உற்

Page 53
நிதி புதிய சுவடுகள்
வெட்டவேண்டும், எங்கே வரம்பு கட்டவேண்டும் சான் நெல்வனம் மாணிக்கம் சிந்தித்தான். தனது திட்டங்களே எல்லாம் பார்வதியிடம் கூறிஞன். அன்ை கூறுவதையெல் வாம் பார்வதியும் ஆர்வத்துடன் கேட்டாள். சிலவேளே அனில் கா ரிக்கமும் பார் வதியும் செங்கமலத்துக்கு உதவி பாகக் கத்தசாமியின் தோட்டத்தில் வேலே செய்தார்கள்,
சந்தசாமி வேள்வி முடிந்தவுடன் ஊரிலிருந்து திரும்பி வரவதாக மாணிக்கத்திடம் கூறியிருந்தான். ஆணுலும் அவன் இதுவரை திரும்பி வராதது மாணிக்கத்துக்குப் பெரும் யோசனையாக இருந்தது. பார்வதியும் மாணிக்க மும் ஊரைவிட்டு ஓடிவரும்பொழுது கந்தசாமியும் "an Lisa சுந்தால் ஊரில் இருப்பவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு தேராது முந்தையன் கட்டுக்குத் தேடிவந்துவிடுவார்கள் என்று காரணத்தினுலேதான் கந்தசாமி ஊரில் தங்கி விட் " டான். அத்தோடு பார்வதியும் மாணிக்கமும் ஊரைவிட் டுப் புறப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நடக்கும் விஷயங் சுளேக் கத்தசாமி அறிந்து வருவதற்தும் வசதியாக இருக்கு மென எண்ணி நண்பர்கள் இருவரும் கிட்டமிட்டு, சுந்த சாமிக்கட்டும் ஊரில் தங்கிவிட்டான்.
மாணிக்கத்துக்கு அடிக்கடி தாய் தந்தையரைப்பற்றிய எண்ணம் மனதில் எழுந்துகொண்டிருந்தது. அவர்கள் தன் சீனக் காணுததால் மனந்துடித்துப் போவார்களே என நிாேத்து அவன் கங்ஃபடைந்தான். பார்வதியைக் கூட்டி கந்ததால் தனது தாய் தந்தையர்க்கும், இனத்தவருக்கும் ாமக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து தீங்கு இழைத்து விடு வார்களோ எனவும் இப்போது மாணிக்கத்தின் மனம் திகி வடைந்தது. கந்தசாமி ஊரிலிருந்து திரும்புவதற்கு சால தாமதம் ஏற்படுவது அவனுக்கு மேலும் அச்சத்தைக் கொடுத்தது.
பார்வதியின் மனதிலும் தனது விட்டைப்பற்றிய நினே ஆகள் அடிக்கடி எழுந்த வண்ணம் இருந்தன. தன்ஃன்க் ஆr ஒது தனது தாய் தந்தையர்கள் எவ்வாறெல்லாம் ஏங்

". ーゴ .. "##سهولن نظ أن مجاني لي
புதிய சுவடுகள் = =, सि= 轟
星岛
குவார் ளோ என அவளது மனம் சுவஃயடைந்தது. தான் மானிக்கத்துடன் ஒடிவந்ததனுல் தாய்தந்தையரும் இனத் தவர்களும் அவமானமடைந்து என்னவெல்லாம் செய்வார் களோ என அவள் ஏங்கிளுள். தானும் மாணிக்கமும் முத் தேயன் கட்டில் இருப்பதை ஊரிலுள்ளவர்கள் அறிந்தாஸ் என்ன நேருமோ என அவளுக்குப் பயமாகவும் இருந்தது. ஆணு அலும், தான் மாணிக்கத்துடன் ஓடி வந்தது சரியான முடிவுதான் என அவளது மனம் திடமாக நம்பியது.
முத்தையன்கட்டுக்குப் புறப்படுவதற்கு முன் கிணற்தடி பில் மாணிக்கம் அவளேச்சந்தித்த போது அவளிடம் தனது தீர்மானத்தைக் கூறிய நிகழ்ச்சி பார்வதியின் நினேவில் it i ti J.I.
அப்போது அவள் கிணற்றடியில் உடுப்புத் தோய்க்கும் கல்வில் அமர்ந்தவாறு சிந்தனேயில் ஆழ்ந்திருந்தாள்.
அவள் அங்கிருப்பதைக் கண்ட மாணிக்கம் அவளருகில் வந்தான். அவன் தன்னே நோக்கி வருவதைப் பார்த்ததும் பார்வதி கோபத்துடன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள்.
"பார்வதி."
i.
. . . . . . . . .
என்ன என்னுேடை கோபமோ? "என்ரை கோவம் உன்னேபொண்டும் செய்யாது" "ஏன் பார்வதி உப்பிடிச் சொல்லுறியள்? நான் கிணத் துக்குள்ளேயிருந்து உங்கன்த் தூக்கினது பிழைபெண்டால் ான்ஃன மன்னிச்சுக்கொள்ளுங்கோ "
"நான் அதைப் பிழைபெண்டு சொல்ல்ேஃ. இவ் வளவு காலமும் என்னுேடை பழகிப்போட்டுத் திடிரெண்டு என் இங்கை வராம விருப்பான்? நான் நா லேஞ்சு நாளாப் நடக்கமுடியாமல் படுத்திருந்தன். ஒரு நாளெண்டாலும் வந்து பாக்க உனக்கு மனம் வரேல் ஃபயோ?"
இப்படிக் கூறும்போது பார்வதியின் கண்கள் கிரிங்கிஇ , சின் சே கத்தின் சாயல் இழையோடிது.

Page 54
98 ----- ۶۔ குருதிமலை
னுக்கு ரெண்டா வெலை போடுவாங்க தோட்டத்த அரசாங் கம் எடுத்தாப் பொறகு, இப்ப ஆளுங்களுக்கு ரெம்ப வசதி செஞ்சி கொடுக்கிருப்போலதான் தெரியுது" என் முன் வீரய்யா!
“என்னங்க கங்காணி, சாமான் வாங்கிட்டீங்கபோலை தெரியுது. மாசியெல்லாம் வாங்கியிருப்பீங்க. கொஞ்சம் தாங்க?" என கறுப்பண்ணன் கங்காணியின்பக் கம்திரும்பிக் கேட்டான் ராமு. W
*" என்ன ராமு, ஒரு ஆளுக்கு ரெண்டு அவுன்சுதான் ரேசனுக்கு கொடுக்குருங்க. நல்ல மாசிக் கருவாடு இருக்கு, நீ இன்னும் வாங்கல்லியா?"
"இல் லீங்க கங்காணி, இந்த கூட்டத்துல எப்படி எழுதுறது. அப்புறமேல மெல்ல ள்முதி வாங்குவோம்' என்ருன் ராமு சாவதானமாக,
"அந்த பில் கெளாக்கரையாவுக்கு என்னுத்தம்பி ஒன் னும் வெளங்கல நாம ஒன்னு சொன்னுேமுணு அவரு ஒன்னு எழுதுருரு.தமிழே தெரியாது போல இருக்கு. நான் உப்பு ஐஞ்சிருத்தல் எழுதச் சொன் னேன். அவரு என்னடான்ன வெங்காயத்த புடிச்சி ஐஞ்சி முத்தல் எழுதி வச்சிருக் காரு. உப்பு இல்லாம இதைக்கொண்டே என்ன செய்யு றது" என்ருர் கறுப்பண்ணன் கங்காணி வெறுப்பாக.
‘அது சரிங்க கங்காணி அவருமேல ஒன்றும் குத்த மில்ல. உப்புக்கும்," வெங்காயத்துக்கும் "லுனு’ லூாணு? என்னுதாங் சிங்களத்துல சொல்லுறது. நீங்க உப்பு எழுத சொன்னதுக்கு அவரு வெங்காயத்தை எழுதிப்புட்டாரு' என்றன் அவர்களது சம்பாஷணையை கேட்டுக் கொண்டி ருந்த செபமாலை. ふ
‘என்னமோ தம்பி நீங்கதான் எல்லாம் படிச்சிருக் கீங்க. எங்க வூட்டில இருக்கிறதே ரெண்டு பேருதான். ரெண்டு பேத்துக்கு ஐஞ்சிருத்த வெங்காயம் என்னுத்
$ló©ኝ

குருதிமலை ** 99
*"சரிங்க கங்காணி கொண்டு போயிட்டு நல்லா ரெண்டு மாசத்துக்கு வெங்காயச் சட்டினி வச்சி சாப் புடுங்க. நல்லாயிருக்கும்" என்ருன் ராமு சிரிப்பை அடக் Թաւյւգ,
"எல்லாரும் இந்த மாசம் கடனுக்கு சாமான்களை வாங்குருங்க. சம்பளத்து வாசல் லதான் தெரியப் போவுது. அப்புறம் தலையில கைவச்சிக்கிட்டு போக வேண்டியது தான்" என்ருன் ராமு அங்கே கிடந்த மண்ணெண்ணெய் பரல்மேல் அமர்ந்து கொண்டு.
"இனிமே ரேசன் அரிசியெல்லாம் ஒவ்வொரு செல் வாக் கெழம அன்னிக்குத்தான் கொடுப்பாங்களாம். முந்தி மாதிரி அரிசி புடிக்க மடுவத்துல போய் காத்துக்கிட்டு இருக்கத் தேவயில்ல. வேண்டிய நேரத்துல இங்கயே வாங் கிக்கிறலாம்" என்ருன்செபமாலை ராமுவின் பக்கம் போய் அமர்ந்து கொண்டு.
* பொதுவா இந்தத் தோட்டத்து ஆளுங்களுக்கு அடிக்கடி சாப்பாட்டு சாமான்தான் தட்டுப்பாடா இருக்கும். அந்த மொறையில இப்புடி ஒரு கோப்பு றேட்டு கடை போட்டு ஆளுங்களுக்கு சாமானுகளை இங்கேயே கொண்டு வந்து கொடுக்கிறது.பத்தி சந்தோஷப்படவேண்டிய விசயந்தான்" என்ருன் வீரைய்யா.
அவனது முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

Page 55
Od குருதிமல்
அத்தியாயம் பதின்னுன்கு
நாட்கள் சில கழிந்தன.
கண்டக்டரின் பங்களாவுக்குப் புறப்பட்டுக் கொண்டி ருந்தார் மாரிமுத்துத் தலைவர்.
"என்னங்க இந்த நேரத்தில எங்க பொறப்படு றிங்க?" இஸ்தோப்பில், அடுப்புக்கு முன்னுல் இருந்து ரொட்டி சுட்டுக்கொண்டிருந்த பூங்கா அவரிடம் வினவி ஞள்.
'நம்ப கண்டக்கையா வூடுவரைக்கும் போயிட்டு வரி ணும்' என்ருர் தலைவர் கோர்ட்டை அணிந்துகொண்டு.
**கண்டக்கையாகிட்ட கதைக்கணும்னு நாளைக்கு காலையில கதைக்கலாமே நேத்து ராவெல்லாம் இருமிக் கிட்டுக் கெடந்தீங்க; சொகமில்லாததோட ஏன்தான் இந்த பணியில போகணும்?"
‘இவ ஒருத்தி, பெரிய மனுஷங்கிட்ட கதைக்கிறதுக்கு பொறப்படுற நேரத்திலயே ஏதாச்சும் தடுத்துத்தான் பேசிக்கிட்டு இருப்பா. எனக்கும் அவருக்கும் எத்த னையோ ரகசியங்க இருக்கும். மலையில வைச்சு அத்தனை ஆளுங்களுக்கு முன்னுக்கு எப்புடி டி கதைப்பாரு" எனக் கூறிக்கொண்டே சுருட்டொன்றை எடுத்துப் பற்றவைத் தார் தலைவர்.
"நானு ஒண்ணும் தடுத்துப் பேசலீங்க. இந்தாங்க சரியான பணி கொட்டுது. இந்த லேஞ்சிய தலையில சுத்திக்

குருதிமலை 10.
கிட்டு போங்க" எனக் கூறிய பூங்கா, லேஞ்சித் துண்டை, எடுத்துத் தலைவரிடங் கொடுத்தாள்.
அதனை வாங்கித் தலையிலே கட்டிக்கொண்ட தலைவர், கண்டக்டர் வீட்டை நோக்கி வேகமாக நடக்கத் தொடங் கினர்.
கண்டக்டர் பங்களாவை நெருங்கியதும் புகைத்துக் கொண்டுவந்த சுருட்டை அணைத்துத் தனது கோர்ட்டுப் பைக்குள் திணித்துக்கொண்டே, பின்புறமாகச் சென்று சமையலறைக்குள் நுழைந்தார் தலைவர்.
அங்கு சமையல் செய்துகொண்டிருந்த பெடியன், அவரைக் கண்டதும், 'ஐயா டவுணுக்குப் போயிருக் காரு, ஒங்களை வந்தா இருக்கச் சொன்னரு" எனக் கூறி ஞன்.
**ஐயாவர நேரமாகுமாடா? மொதல்லேயே போயிட் Lmgfr?“
** மடுவத்திலயிருந்து வந்தவொடனேயேஉடுப்ப மாத் திக்கிட்டு போயிட்டாரு. இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவாரு."
தலைவர் கோர்ட்டுப் பைக்குள் வைத்திருந்த குறைச் சுருட்டை மீண்டும் எடுத்து வாயில் பொருத்தி, அடுப்புக் குள் இருந்த கொள்ளிக் கட்டை ஒன்றை எடுத்துச் சுருட் டைப் பற்ற வைத்துக்கொண்டார்.
சுருட்டுப் புகை தொண்டையை அருவியபோது அவ ருக்கு இருமல் பற்றிக்கொண்டது. பலமாக இருமித் தொண்டைக்குள் புரண்டுவந்த சளியைக் காறி, பின் பக் கக் கதவு வழியாக வெளியே எட்டித் துப்பினர்.
கண்டக்டர் கையில் ஏதோ பார்சலுடன் முன்புறக் கதவால் உள்ளே நுழைநதாா,

Page 56
02 குருதிமல்
கண்டக்டர் வருவதைக் கண்ட தலைவர் கையிலே இருந்த சுருட்டை வீசிவிட்டு மெதுவாக நடுக் காம்பரா வுக்கு வந்தார்.
"சலாமுங்க!"
பதிலுக்கு அவரைப் பார்த்து வணக்கம் தெரிவித்த கண்டக்டர், பார்சலை மேசையின் மேல் வைத்துவிட்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து சோம்பல் முறித்துக் Goffrir Garunt rii.
பின்னர் தலைவரைப் பார்த்து, "ஓங்ககிட்ட ஒரு முக் கியமான வெசயங் கதைக்கத்தாங் நாங் வரச் சொன் னது. அந்த ஒரம் பே ா டு ற து க் கு ஒங்களுக்கு 'கொன்ருக்’ தாரது சொல்லி சொன்னது தானே?"
"ஆமாங்க! அதைப்பத்திதான் அன்னிக்கி சொன் னிங்க. அப்புறம் ஒரு வார்த்தை கூட கதைக்கவே இல்லீங்களே' எனக் கூறிய தலைவர், பலமாக இருமினர்.
"என்னுங் தலைவர் ஒடம்புக்கு சரியில்லையா? ரொம்ப இருமுறதுதானே. அதை நீங்க கவனிக்க வேணுங்."
**ஆமாங்கையா இந்த ரெண்டு நாளா ஒரே தடிமல், இருமலுங்க, ஒண்ணுமே செய்ய முடியலிங்க."
"அப்புடியா, அப்போ கொஞ்சங் சாராயங் அடிச்சா எல்லாங் சரியாப் போறதுதானே" எனக் கூறிய கண்டக் டர், குசினிப் பக்கம் திரும்பி பொடியனிடம், "இந்தா பொடியன் நம்ப தலைவருக்கு கொஞ்சங் சாராயங் ஊத் திக்குடு" எனக் கட்டளையிட்டார்,
தலைவர் தயங்கியபடி, "அதெல்லாம் என்னுத்துங்க. ஐயா முன்னுக்கு அதெல்லாம் குடிக்கலாமுங்களா? எனக்கு வேணுமு:த' எனக் கூறினர்.

குருதிமலை 103
"சும்மா வெட்கப்பட வேணுங் தலைவர். குசினிக்குப் போய் குடிங்க. நாங் உடுப்பு மாத்திக்கிட்டு வாறது" எனக் கூறிவிட்டு அறைக்குள் எழுந்து சென்ருர் கண்டக்டர்.
குசினிப் பக்கம் தலைவரை அழைத்துச் சென்ற பெடி யன், ஒரு கிளாஸில் சாராயத்தை ஊற்றி அவரிடம் கொடுத்தான். V
அதனை வாங்கி ஒரே மிடறில் குடித்து முடித்த தலைவர், ** இன்னும் கொஞ்சம் ஊத்துடா" எனக் கூறியபடி பெடி யனிடம் இருந்த போத்தலைப் பிடுங்கி கிளாஸில் மீண்டும் சாராயத்தை நிரப்பி அதனையும் குடித்து முடித்தார்.
‘என்னங் தலைவர் அடிச்சதா? இப்போ எப்படி இருக்கு.? தடிமல் எல்லாங் சரியாப்போங்" எனக் கூறிக் கொண்டே அறையிலே இருந்து வெளியே வந்த கண்டக் டர், சாரத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு நாற்காலி , யில் அமர்ந்தார்.
"கொஞ்சந்தாங்க குடிச்சேன். நான் இதெல்லாம் ரொம்ப பாவிக்கிறது இல்லேங்க" எனக் குழைந்தபடி குசினியிலிருந்த தலைவர், கண்டக்டரின் முன்னுல் வந் தார்.
நாற்காலியில் உட்கார்ந்தபடி சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்ட கண்டக்டர் ஏதோ சிந் தித்தவாறு, "தலைவர், நான் ஒரு முக்கியமான விசயம் சொல்றது; யாருக்குங் தெரியக் கூடாது' எனக் கூறி விட்டு தலைவரை உற்றுப் பார்த்தார். メ
‘என்னங்க ஐயா அப்புடி சொல்லுறீங்க; நம்ப ரெண்டு பேத்துக்குமுள்ள ரகசியம் எப்புடீங்க மத்தவங் களுக்கு தெரியப்போவுது?’ என்ருர் தலைவர் அசட்டுச் சிரிப்புடன்,

Page 57
104 குருதிமை
'நம்ப ஒரக் காம்பராவில ஓரங் கொஞ்சங் குறை யுது. யாருங் களவெடுத்ததா சொல்லத் தெரியாது. நான் இன்னிக்குத்தாங் கவனிச்சது."
'அப்புடீங்களா இது தொரைக்கு தெரிஞ்சா ரொம்ப கரச்சலுங்களே' எனப் பதட்டத்துடன் கூறினர் தலைவர்.
*"ஆமா தலைவர்; அதிங்தான் நான் ரொம்ப யோசிக் கிறது. தொரை இப்போ லீவுலை போயிருக்குத்தானே. அவரு வந்தா, என்னுங் சொல்லுறது சொல்லித்தாங் நான் பயப்புடுறது. யாருங் களவெடுத்ததோ, இல் லாட்டி அன்னிக்கி ஒரங் கொண்டுவந்த லொறிக்காரன் ஏதுங் குறைச்சு இறக்கிப் போட்டதோ தெரியாது; இந்தத் தோட்டத்தில யாருங் களவாணி இருக்கிறதா?"
கண்டக்டரின் முகத்தில் கலக்கம் தெரிந்தது.
*தோட்டத்தில அப்புடி யாரும் களவாணி இல்லீங்க; இதுவரைக்கும் நம்ம தோட்டத்தில இப்புடி ஒரு சங்கதி நடக்கலிங்க" என யோசனையுடன் கூறிய தலைவர், 'ஐயா ஒரக் காம்பராவை ஒடச்சா எடுத்திருக்காங்க?" எனக் கண்டக்டரைப் பார்த்துக் கேட்டார்.
*அதிங்தாங் இல்லே தலைவர். காம்பராவிலே ஒரு எடத்
திலேகூட ஒடச்சிருக்கிறதா தெரியல்ல. அதுதான் எனக்கு மிச்சங் குழப்பமாயிருக்கு."
* 'ஐயா, அப்புடீன்ன சந்தேகமே இல்லீங்க, அந்த லொறிக்காறன்தாங்க கொறைச்சு இறக்கிப் போட்டு கனக்குக் காட்டிட்டுப் போயிட்டான்' என்ருர் தலைவர் முடிவாக,
"ஆமாங், ஆமாங் த லை வர். அதிங்தான் நானும் நெனைச்சது.அன்னிக்கி லொறியிலஇருந்து ஒரம் இறக்கி

குருதிமல் 05
னப்போ நாங் தேத்தண்ணி குடிக்க பங்களாவுக்கு வந் தது. அப்புறங் போய் நாங் * செக்' பண்ணி பாக்க இல்லே. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அந்த நேரத்திலதாங் இது நடந்திருக்கு" எனக் கூறிவிட்டுத் தலையாட்டினர் கண் டக்டர்.
“காம்பரா ஒடைக்காம இருக்கிறப்போ வேறு யாரும் களவெடுத்திருக்க முடியாதுங்க. அந்த லொறிக்காரன் தாங்க ஒங்களை ஏச்சுப்பிட்டான்' என்ருர் தலைவர் தலையை
94 - 4- UL u tqil.
**ஆமாங் தலைவர்; நம்ப தொர லீவு முடிஞ்சு வாற துக்கு முந்தி நாம தொரைக்கு தெரியாம எப்புடியாச் சுங் சமாளிக்க வேணுங். அதுக்கு நீங்கதாங் ஒதவி செய்ய வேணுங்."
**நானுங்களா? நான் எப்புடீங்க இந்த வெசயத்தில ஒதவி செய்யிறது.? தொரை ஏதுங் கண்டுக்கிட்டாருன்ன அப்புறம் என்னை தோட்டத்தைவுட்டே வெரட்டிப்புடு வாருங்களே" எனக் கூறினுர் தலைவர் கலக்கத்துடன்.
**அதப்பத்தி பயப்புட வேணுங் தலைவர்; அதுக்குத் தாங் நாங் ஒரு ஐடியா நெனைக்சு வ ச் சி ரு க் கி ற து. நாளைக்கு நாங் கொஞ்சங் ஒரங் தாறது. நீங்க ஆளுங்களை வச்சி ரோட்டு பக்கமா இருக்கிற மலைக்கு அந்த ஒரத்தை போடுங்க; தொர வந்து கேட்டா நாங் எல்லா மலைக்கும் ஒரம் போட்டு முடிஞ்சது சொல்லிசொல்லுறேங். ஒங்க கிட்ட கேட்டாலுங் அப்டிபுயே சொல்லவேணுங்."
* ஐயோ எப்புடீங்க நான் திடீருனு அபாண்டமா பொய் சொல்லுறது? என் வாயில பொய்யே வராதுங் களே' என்ருர் தலைவர் குழப்பத்துடன்.
** சும்மா பயப்புடாம, நாங் சொல்லுறத கொஞ்சங் கேளுங்க தலைவர், ஒங்க பேருக்கு ஒரம் போடுறதிக்கு

Page 58
106 குருதிமலை
*கொன்ருக் கொடுத்திருக்கு சொல்லி நாங் தொரை கிட்ட சொல்லியிருக்குத்தானே. நீங்க ஆபீசுக்குப் போய், ஒரங் போட்டதுக்கு சம்பளங் வாங்கி வாறது மட்டுந் தாங். ஒப்பம் வச்சு சல்லி வாங்கிட்டு வாங்க, அந்த சல்லிய நாங் ஓங்களுக்குத் தாறது."
‘தொர வந்து ஒரம் போட்டிருக்கானு மலையில எறங்கி பாத்தாருணு என்னங்க செய்யிறது?" ν
**ஒரம் போட்டது சொல்லி நாங் சொன்ன தொர அதெல்லாம்பார்க்கிறதில் லே இந்த ரெண்டு மூண்டு நாளர் மழை பெஞ்சிருக்குத்தானே; அவரு பாத்தாலுங் ஒண்ணும் தெரியாது. ஒங்ககிட்ட கேட்டா எல்லா மலைக்கும் போட் டது சொல்லி சொல்லுங்க."
“எனக்கு என்னமோ பயமாயிருக்குங்க."
* "ஒண்ணும் பயப்புடவேணுங் தலைவர், புல்லு வெட்டு றது, மீன எடுக்கிற வேலையெல்லாங் இன்னும் இருக்குத் தானே, அது எல்லாம் ஒங்களுக்குத்தான் நான்" கொன்ருக்" தாறது.'
'ஆபீசிலே பெரிய கிளாக்கரையா ஏதுங் கேட்டுப்புட் டாருன்னு என்னுங்க செய்யிறது?"
'பெரிய கிளாக்கர் நமக்கு தெரிஞ்ச ஆள்தானே தலை வர். அவருகிட்ட நாங் எல்லாங் கதைச்சிருக்கு. பேசாம நீங்க ஒப்பங் வச்சவொடன அவரு சல்லி தாறது, ஒண்ணுக் கும் பயப்புட வேணுங்' என்ருர் கண்டக்டர், தலைவரைப் பார்த்துச் சிரித்தபடி.
**அப்புடீங்களா வெசயம்; அப்ப பயப்புட தேவை யில்லீங்க.." என அசட்டுச் சிரிப்புடன் கூறிய தலைவர், ஏதோ யோசித்துவிட்டு, * 'இன்னும் தோட்டத்துக்கு
மருந்து அடிக்க லீங்க; வழக்கமா மருந்தடிக்கிறது நம்ப

குருதிமலை 107
பொடியங்கதாங்க. அவுங்களையே இந்தப் பயணமும் மருந் தடிக்கப் போட்டிடுங்க" என்ருர் பிடரியைச் சொறிந்து கொண்டே.
'அதிங் எல்லாங் மருந்து அடிக்கத் தேவயில்லை தலை வர். தொர லீவில போற நேரங் பாத்து மருந்து அடிச்சது சொல்லி நம்ப சொல்லிப்புடுவம்' என்ருர் கண்டக்டர் அலட்சியமாக.
** அப்புடியெல்லாம் செஞ்சிங்கன்ன, தேயிலை ரொம்ப மோசமா போயிடுமுங்க, பூச்சி வச்சு, கொழுந்தே வரா துங்க. அப்புறம் தோட்டம் மோசமா போயிருச்சினு ஐயாவுக்குத்தானுங்களே கெட்ட பேருவரும்" என்ருர் தலைவர் பதட்டத்துடன்.
** அதி நம்மட சொத்து இல்லைத்தானே தலேவர்.இன் னிக்கி தேயிலை எல்லாங் அரசாங்கத்துக்குத் தாங் சொந் தம். அரசாங்கத்தில இன்னிக்கி பெரிய பெரிய ஆள் எல் லாங் என்னென்னமோ செய்யறது. நம்ப என்னுங் அப் புடியா செய்யறது.? இல்லைதானே. ஓங்களுக்குங் ஒதவி செய்யறது. நாங்களும் அதில இருந்து ஒதவி எடுக்கிறது."
தலைவர் குழப்பத்துடன் மெளனமாக நின்ருர்,
**இந்தப் பயணங் கவ்வாத்து வெட்டிறதுக்குங் நான் ஒங்களுக்குத்தாங் ‘கொன்ருக்’ தாறது தலைவர். அதிலையும் உங்களுக்கு மிச்சங் சல்லி வாறதுதானே; அதுங்குங் நான் ஒதவி செய்யிறது" எனக் கூறிவிட்டு தலைவரை உற்று நோக்கினர் கண்டக்டர்.
*அப்ப ஐயா சொல்லுறபடியே செய்யுறேங்க; என் னைய ஏதும் தொர கிட்ட காட்டிக் கொடுத்திடாதீங்க" என் முர் தலைவர் தயக்கத்துடன்.
**ச்சா அப்புடி பயப்புட வேணுங், நான் ஒங்களுக்கு வேண்டிய ஒதவி செய்யுறது. நாளைக்கு தொர லீவு

Page 59
108 குருதிமல்
முடிஞ்சு வாறதுதானே. நான் டயறியில எல்லாங் எழுதி யனுப்புறது" எனக் கூறிக்கொண்டே எழுந்திருந்தார் கண்டக்டர்.
‘சரிங்க ஐயா, அப்ப நான் போயிட்டு வாறேங்க; நாளைக்கு அந்திக்கு வந்து ஓங்களை சந்திக்கிறேங்க" எனக் கூறிய தலைவர், கண்டக்டரிடம் விடை பெற்றுக்கொண்டு லயத்துக்குப் புறப்பட்டார்.
அவரது மனதில் இப்போது பலவிதமான கற்பனைகள் விரியத்தொடங்கின.
அத்தியாயம் பதினைந்து
1ண்டா முதலாளி, கண்டக்டரைச் சந்திப்பதற் காக அவரது பங்களாவை நோக்கிப் போய்க்கொண்டிருந் தார்.
மடுவத்தைச் சமீபித்த போது அங்கே சில தொழிலா ளர்களும், கண்டக்டரும் இருப்பதை அவர் கவனித்தார். மடுவத்தின் வாசலில் நின்றபடியே கண்டக்டருக்குக் கேட் கும்படியாக, "ஆயூபோங் மாத்தியா' என அவருக்கு வணக்கம் தெரிவித்தார் முதலாளி.
நிமிர்ந்து பார்த்த கண்டக்டர் பண்டா முதலாளியைக் கண்டதும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, "எனது பங்களாவில் போய் இருங்கள். இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன்" எனக் கூறினர்.
பண்டா முதலால்" கண்டக்டரின் பங்களாவிற்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்தார். சில நிமிட நேரத்

குருதிமக் 109
தில் கண்டக்டர் பங்களாவை வந்தடைந்தார். அவரைப் பின்தொடர்ந்து கறுப்பண்ணன் கங்காணியும் "செக்ருேல்" புத்தகத்தைத்தூக்கிக்கொண்டுஉள்ளே.வந்தார்.
தனது,தொப்பியைக் கழட்டி ஸ்டாண்டில் மா ட்டிய கல்பாடக்டர்.."முதலாளி, நீங்கள் கொஞ்சம் தாமதித்துப் போகலாம்தானே. அவசர வேலையொன்றும் இல்லையே? எனக் கேட்டுவிட்டுச் சிரித்தார்.
**இல்லை மாத்தியா, அப்படி ஒன்றும் இல்லை. உங் களுக்கு ஏதும் வேலை இருக்குமல்லவா. என்னல் உங்களுக்கு
சிரமம் இல்லாமல் இருந்தால் சரிதான்."
""நாளைக்கு போயா தினமாக இருப்பதால் தோட்டத் தில் வேலையில்லை. அதனுல் இன்று இரவு நான் செக்ருேல் செய்ய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் என்னுடன் இர வுச் சாப்பாடு காப்பிட்டுவிட்டுப் போகலாம்" என மகிழ் வுடன் கூறிவிட்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டார் கண்டக்டர்.
'ஏன் உங்களுக்கு வீண் சிரமம். இன்ணுெரு முறை அறிவித்துவிட்டு வந்து ஆறுதலாக இருந்து விட்டுப் போகி றேன்" என்ருர் பண்டா முதலாளி அசட்டுச் சிரிப்பை உதிர்த்தபடி.
** அப்படி எனக்கு எவ்வித சிரமமும் இல்லை,கட்டாயம் இன்று என்னேடு இருந்து சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும்" எனக் கண்டிப்பாக கூறிய கண்டக்டர், பின்பு ஏதோ சிந்தித்துவிட்டு, கறுப்பண்ணன் கங்காணியின் பக் கந்திருப்பி, "இந்தா கறுப்பண்ணன் டவுணுக்குப் போய் போத்தல் ஒன்னு கொண்டுவரனுங், சுறுக்கா வரவேனுங்" எனக் கூறிக் கொண்டே தனது அறைக்குச் சென்று இரண்டு பத்து ரூபா நோட்டுக்களை எடுத்துவந்து, கறுப்பண்ணன் கங்காணியிடம் கொடுத்தார்.

Page 60
110 குருதிமை
** வேற ஏதும் வாங்கிட்டு வரணுமுங்களா? சிகரட்டு முட்டை ஏதும் வாங்கனுமுணு." என மெதுவாகக் கேட் டார் கறுப்பண்ணன் கங்காணி.
"ஆங், கங்காணி சிகரட் ஒரு பக்கெட் வாங்கி வர வேணுங். அந்த சமையல் பொடியங்கிட்ட முட்டை இருக் கான்னு கேளுங்க. இல்லாட்டி முட்டையும் வாங்கி வரோ னுங்' எனக் கூறிவிட்டு பண்டா முதலாளியின் எதிரே, போய் அமர்ந்தார் கண்டக்டர்.
பண்டா முதலாளி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு,தான் அணிந்திருந்த கோட்டின் உள்ளே கையை நுழைத்து நோட்டுக்கள் அடங்கிய ஒரு கட்டுப்பணத்தை எடுத்து கண்டக்டரிடம் கொடுத்தார்.
**இந்தாருங்கள்; இதில் எழுநூறு ரூபா இருக்கின்றது. வைத்துக்கொள்ளுங்கள். ஏதும் குறையாக இருந்தால் சொல்லுங்கள் அதை நான் தந்துவிடுகிறேன்."
'இல்லையில்லை, இது போதுமானது" எனக் கூறிவிட் டுச் சிரித்தார் கண்டக்டர்.
'உங்களது மனத்திருப்திதான் எனக்கு முக்கியம். இனி மேலும் நமக்குள்ள தொடர்பு நீடிக்க வேண்டுமல்லவா" எனக் கூறிவிட்டுப் பலமாகச் சிரித்தார் பண்டா முதலாளி. **இதில் என்ன கணக்குப் பார்க்க இருக்கின்றது. கூடக் குறைவாக இருந்துவிட்டால் மறுமுறை உரம் தரும்போது அதை ஈடு செய்யலாம் அல்லவா, '
"அதெல்லாம் சரி. உங்களது தொழிலுக்கு ஏதும் பங் கம் ஏற்படாத வகையில் நீங்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வே ஃாடும். அதுதான் முக்கியம்' என்ருர் பண்டா முதலாளி.
*தோட்டத்து தலைவரையே என்வசமாக்கியுள்ளேன். அதனல் எதையும் சமாளித்து விடலாம்’ இப்படிக் கூறி விட்டு கண்டக்டர் பலமாகச் சிரித்தார்.

குருதிமல் 1
R
"பிறகென்ன. நீங்கள் மிகவும் சாமர்த்தியசாலி தான்' எனக்கூறிச் சிரித்தார்:பண்டா முதலாளி. T
"அது சரி முதலாளி இன்னும் சிறிது நேரத்தில் கோப் பரேட்டிவ் மனேஜர் இங்கு வந்து விடுவார். அதற்குமுன்பு நாம் கதைக்க வேண்டியதை கதைத்துவிட வேண்டும்.'
"அவர் ஏன் இந்த வேளையில் இங்கு வருகிருர்?" என யோசனையுடன் கேட்ட பண்டா முதலாளி, தான் அப் படிக் கேட்டதை கண்டக்டர் தவருகப் புரிந்து கொள் வாரோ என நினைத்து ஒரு கணம் மெளனமானுர்,
"தற்காலிகமாக அவர் எனது பங்களாவிலேதான் உணவருந்தி வருகிருர், நல்ல வசதியான வீடு கிடைத்த பிறகுதான் குடும்பத்தோடு வருவதாகத் தீர்மானித்துள் ளார். அது வரைக்கும் கடையின் பின் காம்பராவில் தங் கிக்கொண்டு இங்கு வந்து உணவருந்திச் செல்கிருர்."
‘ஹா அப்படியா." எனக் கூறிய பண்டா முதலாளி சற்றுத் தயங்கி விட்டு 'மற்றுமொரு விஷயம் உங்களிடம் கதைக்க வேண்டும். இது எனது குடும்ப விஷயம். இதில் உங்கள் உதவி எனக்குப் பெரிதும் தேவைப்படுகிறது" எனக் கூறிஞர்.
* அப்படி என்ன பிரச்சினை உங்களுக்கு? ஏன் என் னிடம் சொல்லத் தயங்குகின்றீர்கள்?தாராளமாகச்சொல் லுங்கள். என்னல் முடிந்த உதவியைச் செய்கிறேன்" என் ருர் கண்டக்டர்.
**எனது அண்ணன் மகன் ஒருவன் இங்கு வேலைக்கு வருகிறன். உங்களுக்கு அவனை இப்போது நன்முகத் தெரிந் திருக்குமென நினைக்கிறேன்."
"ஆமாம். பியசேனவைத்தானே சொல்கிறீர்கள்.?"
"அவனேதான். அவன் இங்குள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பாக இருக்கிருளும்."

Page 61
118 குருதிமலை
"இதை நானும் கேள்விப்பட்டேன். இங்கு தோட்டத் திலும் ஒரே பரபரப்பாகத்தான் எல்லோரும் கதைத்துக் கொள்கிறர்கள்" என்ருர் கண்டக்டர்.
**விஷயம் முத்திப்போயிருக்கிறது. இதற்கு நீங்கள் தான் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்ப மானமே இதிலேதான் தங்கியிருக்கிறது. அவன் வேருெரு இனத்தைச் சேர்ந்த பெண்ணைக் கலியாணம் செய்வதால் எம்மைத் தாழ்வாகத்தானே எல்லோரும் நினைப்பார்கள். கிராமத்திலேயே நான் சிறிது அந்தஸ் தோடு இருக்கிறேன். அதனை இவன் கெடுத்துவிடுவான் போலத் தெரிகிறது."
"நீங்கள் சொல்வது எனக்கு நன்முகப் புரிகிறது.இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு எப்படித்தான் உதவிசெய்ய முடியும்?' எனக் கேட்டார் கண்டக்டர்.
"பியசேன இந்தத் தோட்டத்துக்கு வேலைக்கு வரு வதை நீங்கள் எப்படியாவது நிறுத்திவிட வேண்டும்."
கண்டக்டர் சிறிது நேரம் யோசித்தார். 'நீங்கள் சொல்வது போல் இலேசில் செய்துவிட முடி யாது. பியசேனவும் விஷயம் தெரிந்தவன் போலத் தெரி கிறது. திடீரென அவனது வேலையை நிற்பாட்டினல் அவன் வேறு வழிகளில் எனக்குத் தொந்தரவு கொடுக்கவும் கூடு மல்லவா."
'அப்படியென்ருல் இதற்கு என்னதான்செய்யலாம்?" என பண்டா முதலாளி கேட்டார்.
"ஏன் அந்தப் பெண்ணின் தந்தை மாயாண்டியிடமே இதைப்பற்றிக் கதைத்து ஏதாவது நடவடிக்கை எடுக்க லாமல்லவா’ என்ருர் கண்டக்டர்.
"எப்படி ஒரு சாதாரண தொழிலாளியிடம் இதைப் பற்றிக் கதைப்பது? எனக்கு அவமானமாக இருக்கிறது.

நீங்கள் தோட்டத்துக் கண்டக்டர் என்ற முறையில் மாயாண்டியைக் கூப்பிட்டு அவரிடம் விஷயத்தைக் கூறி தொடர்ந்தும் அவரது மகள் பண்பு குறைவாக நடந்தால் குடும்பத்துக்கே வேலை நிற்பாட்டப் போவதாகப் பய முறுத்தலாமல்லவா? இந்த உதவியை நீங்கள் கட்டாயம். எனக்காகச் செய்துதான் ஆகவேண்டும்" என வேண்டினர் பண்டா முதலாளி.
கண்டக்டர் மீண்டும் சிறிது நேரம் யோசித்தார்.
*"நீங்கள் கேட்கும் போது நான் எப்படி மறுப்பது? விரைவில் மாயாண்டியை அழைத்து இது விடயமாக எச் சரிக்கை செய்கிறேன். எப்படியும் அவர்களது தொடர்பை துண்டித்துவிடவேண்டும்.அவ்வளவுதானே. உங்களுக்காக அதனை நான் கட்டாயம் செய்கிறேன்" எனக் கூறிவிட்டுச் சிரித்தார்.
அப்போது முன் வாசற் கதவு தட்டப்படும் சத்தங் கேட்டது. கண்டக்டர் எழுந்து சென்று கதவைத் திறந்
தார்.
"ஆயூபோங்" கண்டக்டரைப் பார்த்து வணக்கம் தெரிவித்த வண்ணம் கோப்பறேட்டிவ் மனேஜர் உள்ே வந்தார்.
கண்டக்டர் பதிலுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு "இவர்தான் கோப்பரேட்டிவ் மனேஜர்" என பண்டாமுத லாளிக்கு அவரை அறிமுகப்படுத்தினர்.
**ஆயூபோங்" என அவரைப் பார்த்துக் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார் பண்டா முதலாளி.
பதிலுக்கு வணக்கம் தெரிவித்த மனேஜர், "உங்களைப் பற்றிக் கண்டக்டர் என்னிடம் கூறியிருக்கிருர். நான் உங் களை எங்கேயோ பார்த்த ஞாபகமும் இருக்கின்றது" எனக் கூறிஞர்.

Page 62
及卫4 குருதிமலை
பண்டா முதலாளி சிரித்துவிட்டு, "ஏதாவது அரசி யல் கூட்டங்களில் என்னை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்" என்றர்.
அப்போது பக்கத்திலிருந்த கண்டக்டர், ‘சென்ற மாதங்கூட இவர் நமது மந்திரியை கிராமத்துக்கு அழைத் திருந்தார். கிராமத்தில் இவர் ஒரு பெரும்புள்ளி" என மனேஜரிடம் கூறினர்.
"அப்படியா மிகவும் சந்தோசம்’ எனக்கூறி சிகரட் பக்கெட்டை எடுத்து பண்டா முதலாளியிடம் நீட்டிஞர் மனேஜர்.
'நன்றி, நான் சுருட்டுத்தான் பாவிப்பது வழக்கம்" எனக் கூறிப் பண்டா முதலாளி குழைந்து கொண்டார்.
கண்டக்டரும் மனேஜரும் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டனர்.
அப்போது கறுப்பண்ணன் கங்காணி சாராயப் போத் தலுடன் அங்கு வந்து சேர்ந்தார்.
கண்டக்டர் போத்தலைத் திறந்து மேசையிலிருந்த கிளாஸ்களில் சாராயத்தை நிரப்பிர்ை. பின் பண்டா முத லாளியைப் பார்த்து, "முதலாளி பொண்ட" எனக் கூறி விட்டு மனேஜரைப் பார்த்து கண்களைச் சிமிட்டினர்.
மூவரும் சாராயத்தை அருந்தத் தொடங்கினர்.
ஒரு தடவை சாராயத்தை அருந்திவிட்டு மேசையில் வைத்த மனேஜர், 'உங்களது . கிராமத்திலிருந்துதானே நமது கோப்புரட்டிவ் கடையில் "சேல்ஸ்மென்" ஆக வேலை செய்யும் ரஞ்சித்தும் சோமபாலாவும் வருகிருர்கள். அவர் களை உங்களுக்குத் தெரியுமா?" எனக் கேட்டார்.
"ஆமாம். அவர்களை எனக்கு நன்குதெரியும்.உங்களைப் பற்றிக்கூட அவர்கள் என்னுடன் அடிக்கடி கதைப்பார்

குருதிமலை II 5
கள். அது சரி எப்படி உங்களது கோப்புரட்டிவ் கடை நடக்கிறது? எல்லாப் பொருட்களுமே கிடைக்கிறதா?" எனக் கேட்டார் பண்டா முதலாளி.
"ஆமாம். எல்லாப் பொருட்களுமே கிடைக்கின்றன. நல்ல வியாபாரமும் நடக்கிறது" எனக் கூறிய மனேஜர் கிளாஸை மேசையில் வைத்தார். பின்னர் எதையோ நினைத்துக்கொண்டவர் போல், "நீங்கள் கூட கிராமத்தில் கடை வைத்திருப்பதாக அறிந்தேன், உங்களது வியாபா ரம் எப்படி? எங்கே பொருட்களை கொள்வனவு செய்கிறீர் கள்?' எனக் கேட்டார்.
"அந்தப் பகுதியில் என்னுடைய கடை மாத்திரம் தான் இருக்கிறபடியால் வியாபாரம் பரவாயில்லை. முக்கிய மாகப் பங்கீட்டுப் பொருட்களைப் பெறுவதுதான் சிரம மாக இருக்கிறது."
"ஏன் பங்கீட்டுப் பொருட்களைப் பெறுவதில் என்ன கஷ்டம் இருக்கிறது?" எனக் கேட்டார் மனேஜர்.
"அப்படியான பொருட்களைக் கறுப்புச் சந்தையில் அதிக பணம் கொடுத்து வாங்கித்தான் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது. இதனுல் எனக்கு சொற்ப இலாபமே கிடைக்கிறது."
"ஏன் மிஸ்டர் ரணசிங்க, நீங்கள் ஏதாவது வகையில் முதலாளிக்கு உதவ முடியுமா?" எனக் கேட்ட கண்டக்டர் மனேஜரை பார்த்துச் சிரித்தார்.
“என்ன சொல்லுகிறீர்கள்? எனக்கொன்றும் விளங்க வில்லையே" என நெற்றியை சுருக்கிக் கொண்டு கேட்டார் மனேஜர் ரணசிங்க.
*" அதாவது நமது கோப்பரேட்டிவ் கடைக்கு வேண் டிய பொருட்களை நீங்கள் மாவட்ட யூனியனில்தானே

Page 63
6 குருதிமலை
வாங்குகின்றீர்கள்? அதனுல் அங்கிருப்பவர்களை உங்களுக்கு நன்ருகத் தெரிந்திருக்கும். அவர்கள் மூலமாக நமது முத லாளிக்கும் சாமான்கள் கொஞ்சம் எடுத்துக் கொடுக்க முடியுந்தானே?"
மனேஜர் சிறிது யோசனையில் ஆழ்ந்தார்.
"என்ன யோசிக்கிறீர்கள் முதலாளியும்ன்ங்களுடைய ஆள்தானே. அவருக்கு நாங்கள் உதவி செய்யத்தான் வேண்டும்" என்ருர் கண்டக்டர்.
**அதற்கில்லை, யூனியனில் இருப்பவர்களுக்கு ஏதா வது ‘சம்திங்" கொடுத்தால்தானே அவர்களிடமிருந்து பொருட்களை வாங்கலாம். இந்தக் காலத்தில் யாரிடமிருந் தும் ஏதும் பெறவேண்டுமென்ருல் அதைத்தானே எதிர் பார்க்கிருர்கள்" எனக் கூறிவிட்டு பெடியன் கொண்டு வந்து வைத்த முட்டைப் பொரியலில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டார் மனேஜர்.
"அது எனக்குத் தெரியாதா மாத்தியா, அதற்கு வேண்டியதை நான் கொடுத்து விடுகிறேன்" என்ருர் பண்டா முதலாளி அசட்டுச் சிரிப்புடன்,
"மிஸ்டர் ரணசிங்கா, அடுத்த முறை நீங்கள் யூனிய னுக்குச் செல்லும் பொழுது முதலாளியையும் அழைத்துச் செல்லுங்கள். அவருக்கு நாங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்" எனக் கூறிய கண்டக்டர் மெதுவாக குசினிப் பக்கம் எழுந்து சென்று சாப்பாடெல்லாம் தயாராக இருக் கின்றதா எனக் கவனித்தார்.
அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பண்டா முத லாளி தான் இருந்த கதிரையை நகர்த்தி மனேஜரின் அரு கில் போட்டுவிட்டு இரகசியமான குரலில் **றேசன் அரிசி ஏதும் மீதிப்பட்டால் கூறுங்கள். நான் அதற்குரிய பணத்

குருதிமலை 17.
தைத் தந்துவிட்டு பெற்றுக்கொள்ளுகிறேன்" எனக் கூறிக் கொண்டே மனேஜரின் வெற்றுக் கிளாசில் சாராயத்தை ஊற்றினர்.
மனேஜருக்கு போதை ஏறியிருந்தது. 'இம்மாதக் கடைசியில் இதைப் பற்றி நான் தெரிவிக் கின்றேன்" என அவர் பண்டா முதலாளியின் காதில் கிசு கிசுத்தார்.
‘வாருங்கள் உணவருந்தலாம்" என அவர்கள் இரு வரையும் குசினியில் இருந்தபடியே அழைத்தார் கண்டக் L-ril
இருவரும் தள்ளாடியபடியே எழுந்து சாப்பாட்டு மேஜையருகே சென்றனர்.
கண்டக்டர் கறுப்பண்ணனை அழைத்து, "கங்காணி அந்த பொத்தல் எல்லாங் எடுத்து வைச்சிட்டு, அதில
கொஞ்சங் சாரா யங் இருக்கி. அத எடுத்து அடிச்சிடுங்க" எனக் கூறிவிட்டு சாப்பாட்டு மேசையருகே சென்ருர்,
அன்று இரவு வெகுநேரம் வரை அவர்களது விருந்து நடந்து கொண்டிருந்தது.

Page 64
118 குருதிமலை
அத்தியாயம் பதிஞறு
அன்று கறுப்பண்ணன் கங்காணி வேலைக்குப் போக வில்லை; அவருடைய வயலில் நாற்று நடும் வேலை நடந்து கொண்டிருந்தது. ஐந்தாறு பெண்கள் அந்தச் சிறிய வய லில் வேலை செய்துகொண்டிருந்தனர். கண்டக்டரின் தயவி னல் கங்காணிக்கும் அங்கு வேலை செய்துகொண்டிருக்கும் பெண்களுக்கும் எப்படியும் அன்று செக்ருேலில் பெயர் விழுந்துவிடும்.
வயலில் துரிதமாக வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது நாட்டிலுள்ள முக்கிய பிரமுகரான கிராம சேவ கர் அவ்விடத்துக்கு வந்துசேர்ந்தார். அவரைக் கண்டதும் வயலுக்குள் நின்று கொண்டிருந்த கறுப்பண்ணன் அவர ருகே சென்று, "சலாங்க மாத்தியா; என்ன இந்தப் பக் கமா வந்திருக்கீங்க?" என வினயமாக வினவினர்.
**இந்த வயல்ல ஏன் நீங்க வேலை செய்யுறது?" கிராம சேவகர் கறுப்பண்ணன் கங்காணியைப் பார்த்து சிறிது அதட்டலாகக் கேட்டார்.
** என்னங்கையா அப்புடி கேக்கிறீங்க; இந்த வயலை எங்க பாட்டன் காலத்தில இருந்தே நான் தாங்கையா செஞ்சுக்கிட்டு வர்ரேனுங்க. தொரைக்கும் இது தெரியு முங்க" என்ருர் கறுப்பண்ணன் கங்காணி குழப்பத்துடன், **ஆங், அது நமக்குங் தெரியும். இப்ப தோட்டத்த அரசாங்கம் எடுத்ததினுல இந்த வயல் எல்லாங் நமக்குத் தான் பொறுப்பா கொடுத்திருக்கு. இனிமே நாங் சொல் லாம இந்த வயலில யாருங் வேலைசெய்ய முடியாது" என் முர் கிராமசேவகர் சற்றுப் பலமான குரலில்.

குருதிமலை 119.
கறுப்பண்ணன் கங்காணி வெல வெலத்துப் போளுர்,
சிறிது காலத்துக்கு முன்னர் கிராம சேவகர் அங்கு வந்து வயலைப் பார்த்துவிட்டுச் சென்றதும், அந்த வயல், தோட்டத்தில் எந்தப் பகுதியில் இருக்கிறதென்பதைக் குறிப்பெடுப்பதற்காகப் பக்கத்திலுள்ள தேயிலை மலை களின் இலக்கங்களைக் கேட்டறிந்ததும், வயலுக்குத் தண் aர் வசதி இருக்கிறதா என்பதை வினவியதும் கறுப் பண்ணனுக்கு இப்போது நினைவில் வந்தது.
** இது என்னங்கையா அநியாயமா இருக்கு? நான் வேலை செஞ்சுகிட்டு இருக்கிற வயலையா அரசாங்கம் ஒங் களுக்கு கொடுத்திருக்கு? தோட்டத்தில் எத்தனையோ வய லுக சும்மா கெடுக்கு; அதைப் போயி வெட்டுங்க."
"அந்தக் கதையெல்லாங் நமக்குத் தேவையில்லை. இந்த வயலைத்தான் நமக்கு வேலை செய்யச் சொல்லி டி. ஆர். ஒ. சொல்லியிருக்கு."
*ஒருத்தன் வேலை செஞ்சுகிட்டு இருக்கிற வயலைப் புடுங்கி, அடுத்தாளுக்கு கொடுத்துப்புடனுமென்னு அர' சாங்கம் ஒண்ணும் சொல்லலை; என்னேட வயலை நான் கொடுக்கமாட்டேன்’ கறுப்பண்ணன் கங்காணி சற்று விறைப்பாகக் கூறினர்.
**இந்தா, நீ மிச்சங் பேசவேணுங். நீ இந்த வயலை வுட்டு இப்பவே போகவேணுங்1 இல்லாட்டி நாங் பொலிஸ் கொண்டு வாறது."
கிராம சேவகர் இப்படிக் கூறியபோது கறுப்பண் ணன் கங்காணி மிரண்டு போனர்.
** என்னங்கையா அப்பு டி சொல்லுறிங்க. இந்த வய லுக்கு நான் எவ்வளவோ செலவழிச்சு வேலை செஞ்சு கிட்டு இருக்கேன்; எப்புடீங்கையா எனக்குக் கொடுக்க மனம் வரும்" கறுப்பண்ணன் கங்காணி கலக்கத்துடன்
கூறினர்.

Page 65
120 குருதிமலை
"அது எல்லாங் நமக்குத் தெரியாது. இனிமே இந்த வயல் பக்கம் யாருங் வரக் கூடாது. அப்புடி நம்ம பேச்சு மீறின,பொலிசுக்குத்தான் நான் சொல்லுறது" எனக்கூறிய கிராம சேவகர், மேலும் கறுப்பண்ணன் கங்காணியிடம் கதைக்க விரும்பாதவர்போல் விர்ரென்று திரும்பிப் போய் விட்டார்.
கறுப்பண்ணன் கங்காணிக்கு தொடர்ந்தும் வயலில் நின்று வேலை செய்வதற்கு முடியவில்லை. மனது ஒரே குழப்ப மாக இருந்தது. கண்டக்டரைச் சந்தித்து அவரிடம் ஏதா வது ஆலோசனை கேட்கலாம் என்ற எண்ணத்துடன் கண் டக்டரைத் தேடிப் புறப்பட்டார் கங்காணி.
, பதினன்காம் நம்பர் மலையில் தொழிலாளர்கள் கவ் வாத்து வெட்டிக்கொண்டிருந்தனர். கண்டக்டர் அதனை மேற்பார்வை பார்த்த வண்ணமிருந்தார்.
கறுப்பண்ணன் கங்காணி கலக்கத்துடன் வருவதைக் கண்டதும், "ஏங் கங்காணி. ஏன் வந்தது? ஏதும் அவ சரமா?" எனக் கேட்டார் கண்டக்டர்.
** ஐயா, என்வூட்டு வயலை இந்த "ஆராச்சி வந்து வேலை ஒண்ணும் செய்யவேணுமென்கிருரு. வயல் அவ ருக்குத்தான் சொந்தம் என்கிருரு. இது என்னங்கையா பெரிய அநியாயமா இருக்கு. தொரைக்குதான் தெரியுமே, நான் இந்த வயல்ல மிச்ச நாளா வேல செஞ்சிக்கிட்டு வாறேனு. எப்புடியாச்சும் ஆராச்சிக்கிட்டசொல்லிநம்ப வயல்ல எடுக்க வேணுமுன்னு சொல்லுங்க" எனக் கெஞ் சும் குரலில் கூறினர் கங்காணி.
கண்டக்டர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, "என் னங். ஆராச்சியா சொன்னது? அவர் வேற ஏதுங் சொன் னதா?" எனக் கேட்டார்.

குருதிமலை 121
*" வயலக் கொடுத்துப்புடாட்டி பொலிசை கூட்டி வாறதுன்னு சொல்லுருங்க" கறுப்பண்ணன் கங்காணி யின் குரலில் கலக்கம் தொனித்தது.
"அப்புடியா அந்த ஆராச்சி சொன்னது? அப்ப நாங் ஒண்ணும் செய்ய முடியாதுதானே. பொலிஸ் வந்தா கரச் சல்தானே" எனக் கூறி கையை விரித்தார் கண்டக்டர்.
"ஓங்களுக்கு அந்த ஆராச்சி நல்ல பழக்கந்தானுங் களே. அவருகிட்ட சொல்லி வயலை எடுக்க வேணுமுணு சொல்லுங்கையா?" என மன்ருட்டமாகக் கூறினர் கங் காணி.
"அப்புடியில்ல கங்காணி, அரசாங்கத்தில சொல் லாம, ஆராச்சி அப்பு டி செய்யிறதில்லதானே; நீங்க வேணு முன்னு இதைப்பத்தி தொரைகிட்ட பேசிப்பாருங்க" என் ருர் கண்டக்டர் யோசனையுடன்,
"என்னங்கையா நீங்களே இப்புடி சொல்லிபுட்டா நான் யாருகிட்டதாங்க போவேன்?" எனப் பதறியவாறு கேட்டார் கறுப்பண்ணன் கங்காணி.
"நமக்கு முடிஞ்சா நான் ஒங்களுக்கு ஒதவி செய்யிறது தானே கங்காணி. எதுக்கும் நான் அந்த ஆராச்சிகிட்ட பேசிப் பாக்கிறன்."
கண்டக்டரின் பேச்சு கங்காணிக்கு நம்பிக்கையை இழக்கச் செய்தது. வயலை இழந்துவிட அவரது மனம் சிறி தும் ஒப்பவில்லை.
வேறு எவ்வித வழியும் தெரியாததால் அவர் துரை யிடமே சென்று இதைப்பற்றி முறையிட்டு ஏதாவது நட வடிக்கை எடுக்கலாம் என்ற எண்ணத்துடன் கண்டக்ட ரிடம் விடைபெற்றுக் கொண்டு தோட்டத்து ஆபீசை நோக்கி கலவரத்துடன் நடந்தார்.

Page 66
I22 குருதிமலை
கறுப்பண்ணன் தோட்டத்து ஆபீசை அடைந்தவேளை
யில் துரை அங்கு இருக்கவில்லை.
பெரிய கிளாக்கர்தான் அவருடன் கதைத்தார்.
** சலாங்கையா...'
*ம். சலாம்; என்ன மனுஷன் இந்த நேரம் இங்க வந்தது?" புதிய பெரிய கிளாக்கர் வினவினர்.
** தொரை இல் வீங்களா? அவருகிட்ட ஒரு முக்கிய மான வெசயம் கதைக்கணுமுங்க.."
"தொரைகிட்ட நீ நெனச்ச நேரம் கதைக்க வாறதா.
போ. போ., போயிட்டு வெள்ளிக்கெழமைதான் ஆபிஸ் நாள்; அன்னிக்கி வா."
"என்னப்யா, நாயை வெரட்டின மாதிரி வெரட்டு நீங்க? அவசரமான வெசயம் எங்கிறபடியாலதானே நான் இந்த நேரத்தில வந்தேன்" எனக் கறுப்பண்ணன் கங் காணி கடுகடுப்புடன் கூறினர்.
கங்காணியின் சினம் பெரிய கிளாக்கரைக் குழப்பத் தில் ஆழ்த்தியது.
' என்ன, ஒனக்கு அப்புடி அவசரமான வெசயம். நம்பகிட்ட சொல்லு. நான் தொரைக்கு சொல்லுறது."
* 'இல்லீங்கய்யா. எங்க லயத்துக்கிட்ட எனக்கு ஒரு வயல் இருக்குங்க. பரம்பரையா நான்தாங்க அந்த வயலை செஞ்சுகிட்டு வாறேனுங்க. தொரைக்கும் இது தெரியு முங்க. இன்னிக்கி அந்த ஆராச்சி மாத்தியா வந்து நம்ப வயலை வேலை செய்யவேணுமுன்னு சொல்லுருரு."
கங்காணி சொன்ன விஷயம் பெரிய கிளாக்கருக்கு ஒர ளவு புரிந்தது.

குருதிமலை 123
இரண்டு நாட்களுக்கு முன் துரைக்கும் அந்த வயல் சம் பந்தமாக ஒரு கடிதம் வந்திருந்தது அவருக்கு இப்போது ஞாபகத்தில் வந்தது. கிராம சேவகர்தான் அந்தக் கடி தத்தை எழுதியிருந்தார்.
தான் அந்த வயலில் வேலை செய்யப் போவதாகவும், அதற்கு டி. ஆர். ஒ.வினல் தனக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட பத்திரத்தின் பிரதி யொன்றையும் அந்தக் கடிதத்துடன் அவர் இணைத்து அனுப்பியிருந்தார்.
"ஓ, அது தொரைக்கு ஒண்டும் செய்ய முடியாது. டி. ஆர்.ஒ.தான் அந்த ஆராச்சிக்கு வயலை கொடுத்துப் போட் டாச் சு. தொரைக்கும் லெட்டர் வந்திருக்கு."
"பெரிய கிளாக்கர் இப்படிக் கூறியது கறுப்பண்ணன் கங்காணிக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவ ருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
'ஆராச்சிகிட்ட கரச்சலுக்குப் போகாம அந்த வயலை விட்டுப் போடுறதுதாங் நல்லது."
இப்படிக் கூறிய பெரிய கிளாக்கர் தொடர்ந்தும் கங் காணியிடம் கதைக்க விரும்பாதவராய் ஏதோ புத்தக வேலையில் கவனஞ் செலுத்தத் தொடங்கினர்.
கங்காணிக்கு தலை சுற்றுவதுபோல் இருந்தது. தள்ளா டியபடியே ஆபிஸில் இருந்து திரும்பி நடக்கத் தொடங்கி ஞர். . .
தலைவரிடம் சென்று இதைப்பற்றிக் கூறி யூனியன் மூல மாக ஏதாவது நடவடிக்கை எடுக்கலாமென்ற எண்ணம் இப்போது அவருக்குத் தோன்றியது. அவர் தலைவரின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

Page 67
124 குருதிமலை
அத்தியாயம் பதினேழு
இஸ்தோப்பில் அடுப்புக்கு முன்ன லிருந்து ருெட் டிக்கு மாவு பிணைந்துகொண்டிருந்தாள் ராக்கு. அவளது கடைசிக் குழந்தை வாயோயாமல் அழுது அவளின் பொறுமையைச் சோதித்தது.
"இந்தா வாயை மூடு மூச்சு விட்டியன கொன்னுப்புடு வேன்" எனக் கூறியபடி கண்களை உருட்டிக் குழந்தையை முறைத்துப் பார்த்த ராக்கு, “பொத் தென அதன் முது கிலே எட்டி அடித்தாள். குழந்தை மீண்டும் வீரிட்டுப் பல மாக அழுதது.
வெளியே முற்றத்தில் இருந்தவாறு செந்தாமரையின் தலையில் பேன் பார்த்துக்கொண்டிருந்த மீனச்சி, "ஏன் ராக்கு கொழந்தைய இப்புடிப் போட்டு அடிக்கிற?" என உரத்த குரலில் கேட்டாள்.
** என்னக்கா வேலைவுட்டு வந்ததிலயிருந்து கொஞ்ச நேரமாவது இந்தப் புள்ள சும்மா இருக்க வுடமாட்டேங் குது; காக்கா மாதிரி கரஞ்சுக்கிட்டே இருக்குது" எனச் சலிப்புடன் கூறினள் ராக்கு.
* புள்ளைக்குப் பசிக்கும் போலயிருக்கு. மாவு ஏதும் இருந்தா கொஞ்சம் கலக்கிக் குடுத்துப்புட்டா போவுது; அது பாட்டுக்குக் குடிச்சுப்புட்டு வெளையாடிக்கிட்டு இருக் கும். பசிக்கிற புள்ளைய அடிச்சுக்கிட்டு இருந்தா எப்புடி?"

குருதிமலை I25
** மாவு டின்னு முடிஞ்சுதான் ரெண்டு கெழமையா வுது. ரொட்டித் துண்டு குடுத்தா திங்க மாட்டேங்குது. பால் வேணுமுணு அடம்புடிச்சு அழுவுது."
**ஏன் "லக்ஸ்பிரே மாவு முடிஞ்சுபோயிருச்சா? முடி யிறதுக்கு முன்னம் ஒவ்வொரு டின்னு வாங்கி வச்சுக்கிறது நல்லதுதானே. நம்ம கோப்புறட்டிலைதான் கெடைக் குமே" எனக் கூறிய மீனச்சி, கையில் அகப்பட்ட பேன் ஒன்றை எடுத்து நகங்களினூடே வைத்து நசித்தாள்.
"தெனம் கோப்புறட்டி கடைக்கு அலைஞ்சுக்கிட்டுத் தான் இருக்கேன். போனகிழம போய் கேக்கிறப்போ மாவு டின்னு இன்னும் வரலேன்னு சொன்னங்க. இந்த கெழம போய் கேக்கிறப்போ முடிஞ்சு போச்சினு சொல் லுருங்க. கடை போட்ட புதிசில வேண்டிய சாமான் இருந்துச்சு. போகப்போக என்னுடான்னு அது இல்லே, இது இல்லேனு சொல்லுருங்க" என்ருள் ராக்கு.
*கோப்புறட்டிவ் கடையில மாவு டின்னு இல்லாட்டி புள்ளையப் பட்டினியா போட முடியுங்களா அக்கா; டவு னிலயாவது வாங்கி கொடுத்திருக்கலாந்தானே' எனக் கேட்டாள் செந்தாமரை.
* டவுனுல பழைய கடன் பாக்கி அப்புடியே நிக்குது செந்தாமரை. இந்த கோப்புறட்டிக் கடை போட்டதில யிருந்து அந்தப் பக்கமே போகல்ல. இப்ப போய்க் கேட்டா சாமான் கொடுப்பாங்களா?"
**ஏன் ராக்கு, ஒவ்வொரு மாசச் சம்பளத்திலேயும் கொஞ்சங் கொஞ்சமா அந்தக் கடனை கட்டியிருக்கலாந் தானே. சம்பளத்து சல்லியெல்லாம் என்ன செஞ்ச?"
‘என்னு அக்கா அப்புடிக் கேக்குறிங்க, நான் ஒருத்தி வேலை செஞ்சுதான் ஏம்புள்ளைகளை காப்பாத்த வேண்டி

Page 68
126 குருதிமலை
யதா இருக்கு. கோப்பு றேட்டிவ் கடையிலபோய் சாமான் வாங்கிறதுஞல அந்தக் கணக்கு எல்லாத்தையும் ஏஞ்சம்ப ளத்தில புடிச்சுப்புடுருங்க. சம்பள வாசலுக்குப் போன எனக்குக் கடன்தான்னு வாசிக்கிருங்க" எனச் சலிப்புடன் கூறினள் ராக்கு.
இதுவரை நேரமும் அவர்களது சம்பாஷணையைக் கேட்டபடி உள்ளே படுத்திருந்த மாயாண்டி ஒருமுறை இருமிவிட்டு
‘என்னு மாவுடின்னு இல்லேனு பேசுக்கிறீங்க. நாட் டுல பண்டா முதலாளி கடையிலதான் நெறைய அடுக்கிவச் சிருக்கானே, வேணுமுணு சொல்லு நான் வாங்கியந்து தாறன்’ எனக் கூறினர்.
‘என்னுங்க அண்ணே அந்த நாட்டுக் கடையில இப்ப மாவுடின்னு எல்லாம் விக்கிருங்களா? முந்தி பீடி, சிகரட் இல் லியா வித்துக்கிட்டு இருந்தாங்க" எனக் கேட்டாள் ராக்கு.
"என்னு ராக்கு அப்புடிச் சொல் லிப்புட்டே டவுனுல இல்லாத சாமாங் கூட இப்ப அங்க இருக்கு. அன்னிக்கு நான் போயிருந்தப்போ பாத்தேன்; டவுனுல மீன் டின் இல்லாம அங்க வந்துதான் வாங்கிட்டுப் போருங்க. நெறைய சாமாங்க அடிக்கி வச்சிருக்காங்க’ என்ருர் Loftu urr6öT Lq-.
'ஏன் நம்ம கோப்புரேட்டிவ் கடை போட்ட புதிசுல கூட எல்லாச் சாமானுந்தான் இருந்திச்சு, இப்போது தான் கடைய மொட்டையா வச்சிருக்காங்க" என்ருள் மீனச்சி.
இஸ்தோப்பில் கோழி கொக்கரிக்கும் சத்தம் கேட் டது. மாயாண்டி நிமிர்ந்துபார்த்தார். அடுப்பின் முன்னல் சுளகிலிருந்த அரிசியைக் கோழிகள் இரண்டு கொத்தித் தின்றுகொண்டிருந்தன.

குருதிமலை 127
"இந்தா பாரு மீனச்சி, அரிசிய பொடைச்ச்வாக்கில அப்புடியே வச்சிட்டு போயிட்டே. அதெல்லாத்தையும் நல்லா கோழி திங்குது. இப்பு டிதான் இருக்கும் ஒம்புத்தி' எனக் கூறிக்கொண்டே படங்குக் கட்டிலில் இ ரு ந் த மாயாண்டி கோழிகளை 'சூ.கு." என விரட்டினர்.
‘ஐயையோ, மறந்தே போயிட்டேன்’ எனக் கூறிக் கொண்டே உள்ளே ஓடிவந்தாள் மீனுச்சி. அவளை உரசிய படியே இரண்டு கோழிகளும் வெளியே பறந்து போயின.
சுளகுடன் அரிசியைக் கையில் எடுத்த மீனுச்சி, திடீ ரென ஏதோ நினைவுக்கு வந்தவளாக, **ஏன் ராக்கு, இந் தப் பயணம் கொடுத்த அரிசிய அளந்து பாத்தியா? எங்க ளுக்கு எப்போதும் மீன் சுண்டால இருபது சுண்டு அரிசி இருக்கும்; இந்தப் பயணம் நாலு சுண்டு குறையுது’’ எனக் கூறினுள்.
**ஆமாங்க அக்கா, எங்க வூட்டுலேயும் அப்புடித்தான் போலையிருக்கு. வழமையா அ ரி சி போட்டா நாலு நாளைக்கு ஒப்பேத்திக்கிடுவோம். இந்த ரெண்டு கெழ மையா மூணு நாளையிலேயே அரிசி முடிஞ்சு போயிருச் சு. என் மகதான் கூடக் கூட அரிசியப் போட்டு ஆக்கிப்புடு துனு நெனச் சிக்கிட்டு இருந்தேன்" எனச் சிந்தனையுடன் கூறினுள் ராக்கு.
* அது எப்புடி எல்லா வூட்டுக்கும் அரிசி கொறை யுது.? நிறுத்துப் போடுறவங்கதான் ஏதோ "திருக்கீசு பண்ணுருங்க போல தெரியுது" என்ருர் மாயாண்டி.
*கோப்புரட்டி கடை வந்தா நல்லதுன்னு நம்பிக்கிட் டிருந்தோம். இப்போ என்னடான்ன நம்ப வயித்தில அடிக்கிற மாதிரியில்லையா தெரியுது" எனக் கூறினுள் மீனுச்சி.

Page 69
128 V குருதிமலை
* 'இதை இப்புடியே சும்மா வுட்டிடக்கூடாது; இதப் பத்தி நம்ப வீரய்யா தம்பிகிட்ட சொல்லி கவனிக்க சொல்லோனும்" என்ருள் ராக்கு.
இவர்களின் பே ச் சை க் கேட்டுக் கொண்டிருந்த் மாயாண்டியின் மனதில் பலவாருன சந்தேகங்கள் துளிர்த்து எழத் தொடங்கின. கடைசியில் அவரது சிந் தனை முழுவதும் பண்டா முதலாளியின் கடையையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
கடந்த சில வாரங்களாக பண்டா முதலாளியின் வீட் டிற்கு கோப்பறேட்டிவ் மனேஜர் அடிக்கடி செல்வதை அவர் கவனித்திருந்தார். மனேஜர் யூனியனுக்கு பொருட் கள் வாங்கச் செல்லும் போதெல்லாம் பண்டா முதலாளி யும் கூடவே செல்வதும் மாயாண்டியின் நினைவில் வந்தது.
தோட்டத்து ஆளுகளுக்கு ரேசனுக்குக் கொடுக்கப் படும் அதே வகையான அரிசி, வார இறுதியில் பண்டா முதலாளியின் கடையில் விற்பனைக்கு இருப்பதும், கோப்ப றேட்டிவ் கடையில் மட்டுமே கிடைக்கக் கூடிய பங்கீட்டுப் பொருட்கள் இப்போது அங்கு கிடைக்காததும், அதே வேளையில் பண்டா முதலாளியின் கடையில் தாராளமா கக் கிடைப்பதும் அவரது சந்தேகத்தை மேலும் அதிகரிக் கச் செய்தன.

குருதிமலை 129
அத்தியாயம் பதினெட்டு
அன்று சம்பள நாள். மடுவத்தில் தொழிலாளர் கள் நிறைந்திருந்தனர். முதல் மாதத்தில் தொழிலாளர் கள் செய்த வேலைக்குரிய சம்பளத்தைக் கணக்குப் பார்த்து ரேஷன் அரிசி, கோப்பரேட்டிவ் கடையில் சாமான் வாங் கிய கணக்கு, "புறவிடன்ட் பணம்', டோபி - பாபர் பணம் முதலிய கணக்குகளைச் சம்பளத்தில் பிடித்துக் கொண்டு மிகுதிப் பணத்தை மறு மாதத்தின் முதற் கிழமையில் கொடுப்பது வழக்கம்,
தொழிலாளர்கள் மகிழ்வுடன் தங்களுக்குள் ஏதேதோ கதைத்தவண்ணம் துரையின் வரவுக்காகக் காத்திருந்தார்
5GYT。
சிறு வியாபாரிகள் தீன்பண்டங்கள், றப்பர் சீட், மரக் கறி, பழவகைகள் முதலிய பொருட்களை மடுவத்தின் முன்னுல் பரப்பி வைத்துக்கொண்டு வியாபாரத்துக்குத் தயாராக இருந்தனர்.
துரை மடுவத்தின் முன்னே காரை நிறுத்திவிட்டு சிறிய குட்டிச் சாக்குடன் பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மடுவத்திற்குள் நுழைந்தார். சம்பளம் வாசிக் கும் கிளாக்கர் அவரைத் தொடர்ந்து உள்ளே சென்ருர்,
இதுவரை நேரமும் வாயோயாமல் கதைத்துக் கொண் டிருந்த அத்தனை பேரும் இப்போது மெளனமாகினர்.

Page 70
130 குருதிமலை
துரை மடுவத்தின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த மேசையில் குட்டிச் சாக்கை வைத்து அதனை அவிழ்த்துப் பணத்தை வெளியே எடுத்தார். பின்னர் அங்கு கூடியிருந்த தொழிலாளர்களை ஒரு தடவை நோட்டம்விட்டார்.
பின்பு நோட்டுக்களைக் கட்டுக் கட்டாக மேசையின் மேல் பரப்பி வைத்துக் கொண்டு சில்லறைகளைக் கண்டக் டரிடம் கொடுத்தார்.
கிளாக்கர் செக்ரோலை மேசையின் மறு முனையில் விரித்து வைத்துக்கொண்டு பெயர்களை வாசிக்கத் தயாரா ஞர்.
துரை அனுமதி கொடுத்ததும் பெயர்களை வாசிக்கத் தொடங்கினர்.
"முதலாம் பிரட்டு தெய்வானை. தெய்வானை."
தலையில் முக்காடு போட்டபடி பெண்ணுெருத்தி அவர் கள் முன்னல் போய் நின்முள். அவளைக் கவனித்த கிளாக் கர், 'அறுபத்தேழு ரூபா முப்பது சதம்" எனக் கூறினுர்.
துரை ரூபாய்களைக் கொடுக்க கண்டக்டர் சதக் கணக் கைக் கொடுத்தார்.
கிளாக்கர் தொட்ர்ந்தும் பெயர்களை வாசித்து சம்ப ளக் கணக்குகளைக் கூறினர். தொழிலாளர்கள் ஒவ்வொரு வராக சம்பளத்தைப் பெறத் தொடங்கினர்.
இப்போது மடுவத்திலே மீண்டும் சத்தம் அதிகமாகத் தொடங்கியது.
‘என்னடா ராமு இப்போதான் வாநியா?" அப் போதுதான் அங்கே வந்துசேர்ந்த ராமு வைப் பார்த்துக் கேட்டான் வீரய்யா.
தலையிலே கட்டியிருந்த லேஞ்சியை அவிழ்த்துக் கையில் வைத்துக்கொண்டு, ' மெல்ாதலயே சம்பளம் போடத்

குருதிமலை 131
தொடங்கிட்டாங்களா?, எங்க பெரட்டு பிந்திப் போயி ருச்சோ என்னமோ தெரியல்ல" எனக் கேட்டான் printCup.
'அவசரப் படாதடா; இப்பதாண்டா தொர வந்தாரு ஒன் சம்பளம் என்ன ஓடியா போயிடும்?' எனக் கூறிவிட் டுச் சிரித்தான் வீரய்யா.
'போன மாசம் இருபத்தி ஆறுநாள் வேலை செஞ்சிருக் கேன். ரேஷன் சாமான், கோப்புறட்டிவ் கடன் எல்லாம் போக எப்பு டியாச்சும் அறுவது ரூபாகிட்ட இருக்கும். போட்டுக்கிறதுக்கு ஒரு நல்ல சேட்டுக் கூட இல்ல. இந் தப் பயணம் நல்ல சேட்டு ஒண்ணு எடுக்கணும்' என்ருன்
.Up)חr
** இன்னும் சம்பளம் வாங்கவே இல்லே. அதுக்குள்ள ஏண்டா இப்புடித் திட்டம் போடுறே. அவுங்க எப்புடி கடன் புடிச்சு, கணக்குப் பாத்து வச்சிருக்காங்களோ தெரி யாது" என்ருன் வீரய்யா.
"இந்தப் பயணம் எல்லாத்துக்கும் நல்ல சம்பளம் இருக்குமுங்க அண்ணே. போன மாசம் எல்லாரும் நல்லா, வேலை செஞ்சாங்க, கவ்வாத்து, மீனு புல்லு வெட்டு. எல்லா வேலையும் கொடுத்தாங்க இல்லியா." என்ருன் பக்கத்தில் நின்ற ஒருவன்.
"இந்தா பாருங்க ஆளுங்களா. தயவுசெஞ்சி கொஞ் சம் சத்தம் போடாம இருங்க. இப்புடி சத்தம் போட்டுக் கிட்டு இருந்தா எப்புடி தொர சம்பளம் போடுவாரு?" என்ருர் மாரிமுத்துத் தலைவர் பலமான குரலில்,
துரை நிமிர்ந்து தலைவரை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் பணத்தை எண்ணத் தொடங்கினர்.

Page 71
132 குருதிமலை
"ஆமா. நீங்க போடுற சத்தத்தினுல கெளாக்கரப்யா பேரு வாசிக்கிறது இங்க வெளங்கல; டேய் இந்த பயலுங்க, எல்லாம் லயத்துக்குப் போங்கடா. சம்பளம் வாங்கிற மாதிரி இந்தச்சின்னப் பயலுக வேற வந்துங்கிருங்க' எனத் தொடர்ந்து கூறிய தலைவர், அங்கு நின்ற சிறுவர்களை விரட்டினர்.
பின்பு பெரியவர்களைப் பார்த்து, "இந்தா பாருங்க. கொஞ்சம் தள்ளி அப்புடியே பின்னுக்குப் போங்க; இப் புடி எல்லாரும் தொரைய சுத்தி அடைஞ்சிக்கிட்டு நின்ஞ எப்புடி அவுங்களுக்கு வெளிச்சம் தெரியும். பின்னுக்குப் போங்க.." எனக் கூறியபடி அங்கிருந்தவர்களைப் பின்னுல் நகர்த்தினர்.
"“கறுப்பையா. கறுப்பையா...'
கிளாக்கர் செக்முேலைப் பார்த்தபடி கூறினர்.
**அந்த ஆளைக் காணுேமுங்க" எனக் கூறியபடி தலைவர் முன்னே வந்தார்.
** அப்போ தலைவர், நீங்க அந்தச் சம்பளத்தை வாங்கி அந்த ஆளுக்குக் கொடுங்க" தலைவரைப் பார்த்துக் கூறி ஞர் கண்டக்டர்.
'எண்பத்தைந்து ரூபா இருபத்தெட்டுச் சதம்' தலை வர், கறுப்பையாவின் சம்பளத்தைப் பெற்றுக்கொண் டார்.
வேறு சிலரும் தமது சம்பளத்தைப் பெற்றுக்கொள்வ தற்கு அங்கு சமுகமளிக்கவில்லை. தலைவர்தான் அவர்களுக் குரிய சம்பளத்தைப் பெற்றுக்கொண்டார்.
பின் வரிசையில் நின்றவர்களிடையே ஏதோ மு முணுப்புச் சத்தம் கேட்டது.

குருதிமலை 133
"என்னடா இது அநியாயமா இருக்கு. கறுப்பையா வவுனியாவுக்குப் போயி ரெண்டு மாசமாகுது. அவன் பேருக்கு சம்பளம் கொடுக்கிருங்க."
**ஆமாங்க நானும் அதுதான் யோசிச்சுக்கிட்டு இருக் கேன்.அவன் சம்சாரம் மட்டுந்தான் வூட்ல இருக்கா. அவ தான் தோட்டத்தில வேலையில்லையே. பேரையும் வெட் டிப்புட்டாங்க."
"என்னமோ தெரியல்ல, அந்தச் சம்பளத்தை நம்ப தலைவருதான் வாங்கிக்கிருரு."
**கண்டக்டரும், தலைவரும் சேர்ந்துகிட்டு தோட்டத் தில இல்லாதவங்களுக்கு பேரு போட்டு சம்பளம் வாங்கிக் கிருங்க போல இருக்கடா' என்ருன் வேருெருவன்.
"என்ன அநியாயமா இருக்கு; போன மாசம் பூரா நான் பேரு போட்டிருந்தேன். எனக்கு சம்பளமே இல் லேங்குருங்க" எனக் கூறிக்கொண்டே வந்தான் குப்பன்.
அவனைப் பார்த்த வீரய்யா, 'இங்க வாங்க குப்பன். சும்மா சத்தம் போடாதீங்க, கோப்புறட்டி கடையில ஏதும் ரொம்ப சாமான் வாங்கியிருப்பீங்க. நீங்க வேலை செஞ்சது ஒங்கவூட்டு ரேசனுக்கும், கோப்புறட்டிவ் கட னுக்கும் சரியாப் போயிருக்கும். அவுங்க கணக்கில பிழை விட மாட்டாங்க" என்ருன் அமைதியாக,
'இல்லீங்க தம்பி. போன மாசம்தான் கோப்புறட் டிக் கடையில சாமான் ஒண்ணும் இல் லியே. நான் சரியாக் கூட சாமான் வாங்கலே. ஒரு நாத்தான் இருபத்தி மூணு ரூபாவுக்கு சாமான் வாங்கியிருந்தேன். போன மாசம் பூரா என் சம்சாரமும் நல்லா வேலை செஞ்சிருந்தா. என்னு கணக்குப் பாத்து வச்சிருக்குகாங்கனு தெரியலே" என் முன் குப்பன் ஆவேசத்துடன்.

Page 72
34 குருதிமலை
"சரிங்க அண்ணே, கொஞ்சம் பொறுங்க. கணக்கு ஏதும் வித்தியாசமா இருக்கும். சம்பளம் போட்டு முடிஞ்ச வொடன கணக்கு கேட்டுக்கிடலாம்" என்ருன் அங்கிருந்த ஒருவன்.
**Մո (լp... ராமு." கிளாக்கர் பலமாகப் பெயரை வாசித்தார். வீரய்யாவுடன் கதைத்துக் கொண்டிருந்த ராமு துரையின் முன்னே ஓடினன்.
**ராமுவுக்கு அறுபது சதம் மட்டுந்தான்." கிளாக்கரையாவின் குரல்கேட்ட ராமுவுக்கு திக் கென்றது.
ஒரு கணம் மலைத்து நின்ற ராமு தன்னைச் சுதாரித் துக்கொண்டு, "நல்லா பாருங்கையா அறுபது ரூபாவா, அறுபது சதமான்னு.'
'எனக்கென்ன கண்ணு தெரியல்ல? அறுபது சதம் மட்டுந்தான்.'
எரிச்சலுடன் கூறினர் கிளாக்கர். "என்னுங்க, நான் போனமாசம் பூராவும் வேலைசெஞ் சேங்க. எனக்கு சம்பளம் அறுபது சதம்மட்டுமெங்கிறீங்க’ எனக் கிளாக்கரைப் பார்த்துக் கேட்டான் ராமு.
**இந்தா,இப்ப ஒண்ணும் அதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கமுடியாது. நாளைக்கு வேணுமுன்ன ஆபிசில வந்து கேளு’ எனக் கூறிய கிளாக்கர், தொடர்ந்து பெயர்களை வாசிக்கத் தொடங்கினர்.
துரைக்கு அவர்களது சம்பாஷணை விளங்கவில்லை’ கிளாக்கரைப் பார்த்தார்.
**இவன் தனக்குச் சம்பளம் குறையுது என்கிருன்" என விளக்கம் கொடுத்தார் கிளாக்கர்,

குருதிமலை 五35
துரை ஏதோ சிந்தித்துவிட்டுத் தலையை ஆட்டியபடி, தொடர்ந்தும் பெயர்களை வாசிக்கும்படி கிளாக்கருக்குக் கட்டளையிட்டார்.
ராமுவைப் போலவே பலர் சம்பளம் குறைவாக இருக் கிறதென்றும், சிலர் தமக்குச் சம்பளமே இல்லையென்றும் குமுறிக்கொண்டனர்.
‘என்ன அநியாயமா இருக்கு. இவ்வளவு நாளா இல் லாம இந்த மாசம் மட்டும் எப்புடி சம்பளம் குறையுது" என்ருன் ஒருவன் ராமுவைப் பார்த்து,
"அதுவும் பாருங்க, ஆம்புளை ஆளுக்கா சம்பளம் கொறையுது. பொதுவா கவ்வாத்து வெட்டின ஆளுங்க ளுக்கு சம்பளமே இல்ல" என்ருன் மற்ருெருவன்.
"இதை இன்னிக்கு சும்மா விடக்கூடாது. சம்பளம் போட்டு முடியட்டும். என்ன சங்கதின்னு கேட்டுப்புடு றேன். சம்பளம் கொறைஞ்ச யாரும் வூட்டுக்குப் போக வேணும்.எல்லோரும் மடுவத்திலயே இருங்க' என அங்கி ருந்தவர்களைப் பார்த்துக் கூறினன் ராமு.
'இந்தா ராமு, நீ மொறட்டுத்தனமா கதைக்காதடா. சம்பளந்தானே கொறையுது?நாளைக்கு ஆபிசில சம்பளக் கணக்குக் கேட்டா சொல்லுவாங்கதானே;அப்ப என்னணு தெரிஞ்சுக்கலாம்" என வீரய்யா அவனைச் சமாதானப் படுத்த முயன்றன்.
*நீ சும்மா இரு வீரய்யா. எனக்கு வவுத்த எரியுது. இன்னிக்கே கேக்காம வுடமாட்டேன்' எனப் பிடிவாதமா கக் கூறினுன் ராமு.
எல்லோருக்கும் சம்பளத்தைக் கொடுத்து முடித்த துரை,தனது காரில் ஏறி பங்களாவுக்குப் புறப்பட்டுச் சென் დფff.

Page 73
36 குருதிமலை
கிளாக்கரும், கண்டக்டரும் ஏதோ கதைத்தவண்ணம் எழுந்து செல்ல முயன்றபோது, ராமு, வீரய்யா உட்பட எல்லோரும் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர்.
மாரிமுத்துத் தலைவர் கண்டக்டரின் பின்னல் தயங் கியபடி நின்றுகொண்டிருந்தார்.
* 'ஐயா,எனக்கு இன்னிக்குக் கணக்கு சொல்லிட்டுத் தான் போகணும்;இல்லாட்டி நான் ஒங்கள போகவுடமாட் டேன்" என்ருன் ராமு கிளாக்கரைப் பார்த்து.
கண்டக்டரும் கிளாக்கரும் திகைத்துப்போய் நின்ற னர்.
**இந்தா ராமு, எல்லாத்துக்கும் நாளைக்குத்தாங் கணக்கு சொல்லுறது.இப்ப கொழப்பம் பண்ணவேணுங். ஒனக்கு மட்டும் இன்னிக்கு கணக்கு சொல்லிக்கிட்டு இருக்க முடியாது" என்ருர் கண்டக்டர்.
**அதெல்லாம் முடியாதுங்க..இன்னிக்கு ஏங் கணக்கு பாக்காம நாங் ஓங்களை வுடமாட்டேன்.கணக்குச் சொல் லியே தீரணும்."
ராமு பிடிவாதமாகக் கூறியதைக் கேட்ட கிளாக்கர், இவனிடமிருந்து தப்பமுடியாதென உணர்ந்து செக்ரோல் புத்தகத்தை விரித்துக்கொண்டே, இந்தா நீ எத்தனை யாம் பெரட்டு. சுறுக்கா சொல்லு. ஒனக்கு மட்டுந்தான் சொல்லுவேன்' என்ருர்,
** எட்டாம் பெரட்டுல பாருங்க." **போன மாசம் பூரா வேலையா நீ?" "ஆமாங்க. இருபத்தாறு நாளு பேர் போட்டிருக் கேன்" என்ருன் ராமு.
இளாக்கர் செக்ரோலைப் பார்த்தபடி, "" நீயென் எனப்பா சொல்லுற,பதினேழு நாள்தான் நீ வேலை செஞ்சி ருக்கே" எனக் கூறினர்.

குருதிமலை i
w
*அப்ப எனக்கு ஒன்பது நாள் பேர் போடயில் லியா? எந்தெந்த நாளுங்க எனக்கு பேரு போடலேனு பாருங்க"
‘'நீ போன மாசத்தில பதிமூணும் தேதி வேலையில்ல.
அப்புறம் பதினறு, பதினேழு,பதினெட்டு. இருபத்திமூணுத் தேதி வரைக்கும் வேலையில்ல."
எனக் கூறிய கிளாக்கர் புத்தகத்தை மூடமுயன்ருர், அப்போது அங்கிருந்த மற்றவர்களும் பிடிவாதமாகக் கணக்குக் கேட்கத் தொடங்கினர். கிளாக்கரால் மறுக்க முடியவில்லை.
நிலைமையைப் புரிந்துகொண்ட கண்டக்டர்.மெதுவாக் அவ்விடத்தைவிட்டு நழுவித் தன் பங்களாவை நோக்கிச் சென்றர்.
கிளாக்கர் எல்லோருக்கும் விபரமாக வேலைக் கணக் கைக் கூறத் தொடங்கினர்.
“என்னுங்க தலைவரு, ஒங்ககிட்டதானே நான் பதின் மூணுந் திகதியில இருந்து கவ்வாத்து வெட்டினேன். எப் படி ஒம்பது நாள் பேரு கொறையும்?' எனப் பலமாகக் கத்தினன் ராமு.
**இந்தா ராமு, சத்தம் போடாத .நான் ஒழுங்காத் தான் பேர் எழுதி ஐயாகிட்ட கொடுத்தேன். இதில ஏதோ தவறு நடந்திருச்சி. ஒனக்கு ஒம்பது நாள் பேருதானே கொறைஞ்சுபோயிருச்சி. பேசாம இரு; நான் ஐயாகிட்ட சொல்லி அந்தப் பேரைப் போடச் சொல்லிப்புடுறேன்" எனக் கூறி அவனைச் சமாதானப்படுத்த முயன்ருர் தலைவர்.
கண்டக்டர் பேர் போடாமல்விட்ட விஷயம் இப் போதுதான் தலைவருக்குப் புரிந்தது.
கவ்வாத்து வேலையெல்லாம் கொன்ருக்கில் போட்டு சல்லி எடுத்ததுமில்லாம, ஆளுகளுக்குப் பேரும் போடாம வுட்டிட்டு,இப்ப பங்களாக்கு வேற போயிட்டாரு. இவங்க

Page 74
遭38 குருதிமலை
ளோட நான்தான் மாட்டிக்கிட்டு கெடக்கிறேன்' தனக் குள் முணுமுணுத்துக்கொண்டார் தலைவர்.
'அதெல்லாம் முடியாது. எப்புடி எல்லாத்துக்கும் பேரு கொறையும்? இந்தா பாருங்க. இவுங்க எல்லாம் ஓங்ககிட்ட போன மாசம் கவ்வாத்து வெட்டினவங்க. இவங்க எல்லாத்துக்குமே பேரு இல்லே. எல்லாத்துக்கும் பேரு வாங்கிக் கொடுக்க முடியுமா?" என்ருன் வீரய்யா அங்கிருந்தவர்களைச் சுட்டிக்காட்டி.
"இந்தா பாரு வீரய்யா, நான் எல்லாருக்கும் ஒழுங் காத்தான் பேரு போட்டேன்.இது நம்ப கண்டக்கையா வோட தவறுதான். இதை எப்புடியாச் சும் அவருகிட்ட சொல்லிக் கேப்போம்.ஏம்மேல ஒண்ணும் குத்தமில்லே." 2 தலைவருக்குக் கண்டக்டரின் மேல் கோபம் கோபமாக வந்தது. தன்னை நடுக் கடலில் தள்ளிவிட்டு,அவர் மட்டும் கரை சேர்ந்துவிட்டார் என்ற உணர்வு அவருக்கு ஆத்தி ரத்தை ஊட்டியது.
**சும்மா மழுப்பாதீங்க; நீங்களும் கண்டக்கையாவும் சேந்து செஞ்ச வேலைதான் இது. இவ்வளவு நாளும் இல் லாம இப்ப எப்புடி புதிசா "கொன்ருக்' வேலை வந்திச்சு? அதுவும் எல்லா "கொன்ருக்' வேலையும் ஒங்க பேருலேயே கண்டக்கையா போடுருரு.தோட்டத்தில நீங்க ஒரு ஆளு மட்டுந்தான் இருக்கிறீங்களா? வேற ஒருத்தரும் இல் லியா?" ராமு ஆவேசமாகக் கத்தினன்.
'ஆமா ஆளுகளுக்குப் பேர் போடாம ஓங்க கொன் ருக் வேலையெல்லாம் செஞ்சு நல்லா சல்லிஅடிச்சிட்டீங்க" என அங்கிருந்த ஒருவன் கூறினன்.
'நீங்க எங்க தலைவரா இருந்துகிட்டே இப்புடி செய்ய லாமா?ஒரு தலைவரே இப்புடி நடந்தா தோட்டம் என்னத் துக்கு உருப்படும்.இப்புடி செய்யிறது உங்களுக்கே நல்லா யிருக்கா?" வீரய்யா ஆத்திரத்தில் குமுறினன்.

குருதிமலை 139
"இன்னும் என்னென்ன நடந்திருக்குமோ தெரியாது: அந்தக் கண்டாக்கு பூனைமாதிரி நடந்துகிட்டு தோட்டத்தில நல்லா வெளையாடுருன்’ குழுமி நின்றவர்களது பக்கத்தி லிருந்து ஒரு குரல் ஒலித்தது.
* வவுனியாவுக்குப் போன ஆளுக்கு செக்ருேல்ல பேரு விழுகுது; அந்தச் சல்லிய நீங்க வாங்கி கண்டக்கையா கையில கொடுப்பீங்க. இங்க தோட்டத்தில கஷ்டப்பட்டு ஒழைக்கிறவங்க பேரை வெட்டிப்புடுறிங்க." f
வீரய்யா ஆவேசமாகக் கத்தினன்.
"நாங்க எல்லாம் தோட்டத்தில தூங்கிக்கிட்டு இருக் கோமுனு நெனைச் சீங்களா? இனிமே சும்மா விடமாட் டோம்;புதிசு புதிசா வேலைக்கு வந்து எல்லாரும் தோட் டத்தை சொறண்டுருனுக. ஏழைங்க வவுத்தில இல் லியா அடிக்கிருங்க."
இன்னெரு குரல் கூறியது.
**இந்த கோப்புறட்டி மனேஜரும் கண்டக்கோட கூட் டாளிதான்; அவன் கோப்புறட்டிக் கடையில இருந்துக் கிட்டு ஆளுங்கலுட்டு அரிசியைக் கொள்ளை அடிக்கிருன். இந்த இரண்டு மூணு மாசமா கோப்புறட்டிக் கடையில ஒரு சாமாங்கூட இல்ல.வர்ற ரேசன் சாமானெல்லாம்எங்க கொண்டுபோய்க் கொடுக்கிருங்களோ..?" குப்பன் குமுறி ஞன.
"அந்த வண்டா மொதலாளிதான் இவுங்களோட சுத் திக்கிட்டுத் திரியிருன். அங்கதான் எல்லா சாமானமும் போயிருக்கும். எல்லாரும் ஒண்ணு வந்து சேர்ந்துக்கிட்டா
னுக.
"இனிமேலும் நம்ப இப்புடி பாத்திக்கிட்டு இருக்கமுடி
யாது. எல்லாத்துக்கும் சுறுக்கா ஒரு முடிவு கட்டணும்.
அதுக்கு மொதல்ல இந்தத் தலைவரையே மாத்தணும்;அப்பு

Page 75
40 குருதிமல்
தான் இந்தத் தோட்டம் உருப்படும்" என்ருன் பக்கத்தில் நின்ற வேருெரு தொழிலாளி.
"இனிமே ஒங்களைத் தலைவரா வைச்சிருந்தா நாங்க எல்லாம் மண்ணுேட அழியவேண்டியதுதான்" ராமு பட படத்தான்.
'நீங்க இன்னையில இருந்து எங்களுக்குத் தலைவரில்ல' குப்பன் ஆத்திரத்துடன் கத்தினன்.
அங்கு நின்ற எல்லோரது குரல்களும் அவ்வாறு மீண் டும் மீண்டும் முழங்கின.
அத்தியாயம் பத்தொன்பது
5@Ġ FITLD வேளை,வெகு நேரமாக நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்த மாரிமுத்துத் தலைவர் ஏதோ முடி வுக்கு வந்தவராக வெளியே புறப்பட ஆயத்தமானர்.
"இந்தா பாருங்க.நான் சொல்லுறேன்னு கோவிச் சுக்கிருதீங்க. நாளைக்கி வேலைக்காட்டுல வச்சி சொல்லிக்கிட லாமுங்க. இந்த நேரத்துல நீங்க மட்டும் எப்புடிங்க ஒத் தையா போவீங்க?" கலக்கத்துடன் கேட்டாள் பூங்கா.
** என்னடி வெளங்காம கதைக்கிற?ஒனக்குக் கொஞ்ச மாவது மூளை இருக்கா? வேலக் காட்டுல வச்சி எப்புடி இந்தவெசயத்த கண்ட க்கையாகிட்ட சொல்லுறது?யாராச் சும் கண்டாங்கன்ன அப்புறம் என்னைய உயிரோடை வைக்கமாட்டானுங்க" மாரிமுத்துத் தலைவரின் பதிலில் சினம் தொனித்தது.

குருதிமலை 14
"அங்க கதைக்கமுடியாட்டி நாளைக்கி கொஞ்சம் வெள் ளனவே கண்டக்கையா வூட்டுக்குப் போகலாந்தானே.இன் னிக்கு ஒரு ரவைக்கு மட்டும் பொறுத்துக்கிட்டு இருங்க. சரியான இருட்டா இருக்குங்க.எனக்கு என்னமோ பயமா) இருக்கு. இந்த நேரத்துல கண்டக்கையா வூட்டுக்குப் போறதை யாரும் கண்டு கிட்டாங்கணு."
"இந்த நேரத்துல யாரு காங்கப் போராங்க?எல்லாந் தான் நல்லா தூங்குருங்களே. இத இன்னிக்கே கண்டக் கையாகிட்ட சொல்லாட்டி அப்புறம் நாம இந்தத் தோட் டத்துலயே இருக்கமுடியாது."
*நான் அப்பவே தலையால அடிச்சிக்கிட்டு இருந் தேனே. கேட்டீங்களா? இந்த கண்டக்கையாவோட கவ னமா இருங்க.இருங்கனு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருந் தேன்.செய்யிறத எல்லாம் செஞ்சிப்புட்டு அவரு சொகமா பங்களாவில இருக்காரு. இங்க ஆளுங்ககிட்ட மாட்டிக் கிட்டு கெடக்கிறது நீங்கதான்" என்ருள் பூங்கா.
"இந்தக் கண்டாக்கு இப்புடியெல்லாஞ் செய்வான்னு யாரு கண்டது? தோட்டத்து வேலைங்களை எல்லாம் சுறுக்கா முடிக்கணுமுணுதானே கவ்வாத்தெல்லாம் ஏம் பேருக்கு கொந்தரப்பு கொடுத்தான்.வேலை செஞ்சவங்க ளுக்கு இப்புடி பேர் போடாம விடுவான்னு எனக்கு அப் பவே தெரிஞ்சிருந்தா,நான் அவேன் பேச்சையே கேட்டுக்க மாட்டேன்" என்ருர் மாரிமுத்துத் தலைவர் கவலையுடன்,
'இவ்வளவு காலமா இல்லாம "இந்தக் கண்டக்கையா பேச்சக் கேட்டு சுத்திக்கிட்டு திரிஞ்சிங்களே;இப்ப பாத்தீங் களா..? இந்தத் தோட்டத்து ஆளுங்க எல்லாத்துகிட்டே யும் கெட்ட பேரு வாங்கியாச்சி."
*அடியே.வாயை மூடு;சும்மா அது இதுனு சொல்லி எனக்குக் கோவத்தக் கிண்டாத, இந்தத் தலைவரு வேலைய நான் பாத்துகிட்டு இருக்கல. ஏதோ கொந்தரப்புக்கு

Page 76
42 குருதிமலை
எடுத்து வேலை செஞ்சா நாமளும் நாலு பணம் தேடிக்கிற லாமுனுதான் செஞ்சேன்.இந்தக் கண்டாக்குபய இவ்வளவு அநியாயம் செய்வான்னு யாரு கண்டாங்க.எல்லாத்துக்கும் சேத்து இப்பவே அவருக்கிட்ட கதைச்சி ஒரு முடிவு கட்டிப் புடுறேன்" எனக் கூறிய தலைவர் லேஞ்சியை எடுத்துத் தலையில் சுற்றிக்கொண்டார்.
* 'இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியாது. இனிமே இந்த கண்டக்கையாவூட்டு சக வாசமே நமக்கு வேணும். நாம பாட்டுக்கு நம்ப வேலைய செஞ்சிக்கிட்டு இருப்போம். இந்தத் தோட்டத்து ஆளுங்க பேசுற பேச்சி எல்லாம் எனக்குக் கேட்டுக்கிட்டு இருக்கமுடியாது' எனக் கூறிய பூங்கா மெதுவாகக் காம்பராவின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
அவசர அவசரமாகக் கோட்டை எடுத்து அணிந்து கொண்ட தலைவர், ‘என்ன பூங்கா. யாராச்சும் இருக் காங்களா?" எனக் கேட்டவாறே அவளின் அருகே சென் ழுர்,
"ஒருத்தருமில்லீங்க. சுறுக்கா போயிட்டு, போன வொடன வந்திடுங்க" எனக் கிசுகிசுத்தாள் பூங்கா.
தலைவர் வெளியே இறங்கி நடக்கத் தொடங்கினர்.
எங்கும் இருள் சூழ்ந்து அமைதியாக இருந்தது. தூரத்து மலைக்குன்றுகள் யாவும் கருமையாகக் காட்சி யளித்தன.எங்கோ நாய் ஊளையிடும் சத்தமும்,இனந் தெரி யாத ஒலிகளும் இரவை மேலும் பயங்கரமாக்கிக்கொண்டி ருந்தன.
கண்டக்டரின் பங்களாவை அடைந்ததும் சுற்றுமுற் றும் பார்த்துவிட்டு, வாசற்படியை நெருங்கி,கண்ணுடியின் ஊடாக உள்ளே பார்த்தார் தலைவர். பின்பு மெதுவாக, 'ஐயா. ஐயா...' எனக் கூப்பிட்டார்.அவரது குரல் அந்த இரவில் சற்றுப் பலமாகவே ஒலித்தது.

குருதிமலை 4.
சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது.
“என்னுங் தலைவர்.என்ன நடந்தது?ஏன் இந்தநேரத் துல வந்தது?உள்ளுக்கு வாங்க."
ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கவேண்டும். அதனுலே தான் தலைவர் அந்த நேரத்தில் அங்கு வந்துள்ளார் என்ப தைக் கண்டக்டர் ஊகித்துக்கொண்டார்.
"என்னுங்கையா, ரொம்ப தர்மசங்கடமாப் போயி ருச்சி; நீங்க செஞ்சது ரொம்பவும் சரியில் லீங்க. தோட் டமே குழம்பிக் கெடக்கு' என்ருர் தலைவர் படபடப்பாக.
"என்னுங் தலைவர் சொல்லுறது? நமக்கு ஒன்னுங் வெளங்க இல்லைத்தானே; இப்போ என்னுதாங் நடந்து போச்சு??? ●
"என்னுங்க அப்புடி கேக்குறீங்க? நீங்க ஆளுங்களுக்கு பேரு போடாம விட்டதுனல சம்பளத்து வாசல்ல வச்சி எல்லாரும் ஏங்கிட்ட கரச்சலுக்கு வந்துட்டானுங்க."
"அப்படியா விஷயங். யார் கரச்சலுக்கு வந்தது?"
"தோட்டத்து ஆளுங்க எல்லாமே ஒன்ன சேந்துகிட் டாங்க;இப்போ கொஞ்ச நேரத்துக்கு முந்தி என்னல வூட் டுல இருக்கமுடியலிங்க.நல்லாக் கள்ளுத் தண்ணிய குடிச் சிப்புட்டு வந்து கண்டக்கையாவுக்கு பந்தக்காரன்.வால் புடிக்கிறவன். அந்த ஆண்டி,இந்த ஆண்டின்னு ஊத்தப் பேச்சில ஏசிப்புட்டாங்க" என்றர் தலைவர்.
**ஆங்,அதிக்கி ஒன்னுங் பயப்புடவேனங் தலைவர். நாங் நாளைக்கே பொலிசுக்கு சொல்லி அவுங்க எல்லாத்துக்குங் செம்மையா ஒதைக்க சொல்லுறேங்" என்ருர் கண்டக்டர் அலட்சியமாக,
‘என்னங்கையா அப்புடி சொல்லுறீங்க. நீங்க பேர் போடாம விட்டதுணுலதானே இப்ப கரச்சலே வந்திருக்கு.

Page 77
144 குருதிமை
இனி பொலிசுக்கு வேற போன என்ன கரச்சு வருமோ தெரியாது.ஒங்கமேல குத் தத்த வச்சிக்கிட்டு என்னங்க ஐயா..இப்புடி பேசிறீங்க."
தலைவர் இப்படிக் கூறியதும் கண்டக்டருக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது.
‘என்னுங் மோடத்தனமா கதைக்கிறது? ஒங்களுக்கு நாங் ஒதவி செஞ்சதுனலைதாங் இப்புடி வந்தது.ஒங்க கொன்றேக்கில வேலை செய்யிறதுக்குதான் நாங் ஆளுங் களை கொடுத்தது.அதிங்ணுலதாங் நாங் அந்த ஆளுங்களுக்கு பேர் போடாமவிட்டது."
'நீங்கதானே சொன்னீங்க.கொன்ருக்கில வேல செய்யுற ஆளுங்களுக்கு செக்குருேலுல வேற வேலையில பேர் போட்டுப்புடுறேன்னு; இப்ப என்னடான பேர் போடாமவுட்டுபுட்டீங்க. இது அநியாயமா இல் லியா இருக்கு" என்ருர் தலைவர்.
"ஓங்களுக்கு அதிங் ஒன்னுங் வெளங்காது தலைவர். இப்ப தோட்டத்தில குடுக்குற "எஸ் டி மே ட் டி ல, தொரைக்கு சரியா வேலைக்கணக்கு காட்டவேனுங். அந்த ஆளுங்களுக்கு சொல்லுங்க, அந்த கொறைஞ்ச பேர் எல் லாங் அடுத்த மாசத்தில நான் போட்டுத்தாரது சொல்லி" என்ருர் கண்டக்டர் தலைவரைச் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன்.
'அது எல்லாம் என்னுல சொல்லமுடியாதுங்க. ஒரே முடிவோடதான் எல்லாரும் இருக்காங்க. ஜில்லாவுக்குப் போய் சொல்லி இதப்பத்தி வெசாரணை வைக்கோனுமுணு சொல்லிப்புட்டாங்க. இப்போ வெசாரணை வச்சாங்கணு ஒங்களுக்குதாங்க பெரிய கரச்ச வரப்போவுது' என்றர் தலைவர்.
** என்னுங் தலைவர் நம்மளை மெரட்டப் பாக்கிறது.

குருதிமலை 145
நானு ஒப்பங் வச்சி சல்லி எடுத்தது?நீங்கதானே ஒப் பங் வச்சி எல்லாத்திக்கும் சல்லி வாங்கினது. நம்பளை யாருங் ஒன்னுங் செய்யமுடியாது" என்ருர் கண்டக்டர் l-J60 LDITd5.
* அப்புடினு, என்னைய மட்டும் மாட்டப்பாக்குறிங்க போல இருக்கு. நான் வாங்கின சல்லி எல்லாங் ஒங்ககிட்ட தானே கொடுத்தேன். நீங்க மட்டும் தப்பிச்சுக்கிறலாமுனு பாக்குறீங்களா?" எனப் படபடத்தார் தலைவர்.
**ஆமாங் தலைவர். நீங்க தப்பிச்சுக்கோனுமுணு ஆளுங்ககிட்ட அது இதுனு சொல்லி ஒருமாதிரி சமாதா னமா கதைச்சி வச்சிக்குங்க. இல்லையன்னு ஒங்களுக்கு மிச் சங் கரச்சல் வாறது; இந்தத் தோட்டத்து ஆளுங்களால நம்மளை ஒண்ணும் செய்யமுடியாது" என்ருர் கண்டக்டர்.
“இப்ப அப்புடித்தாங்க சொல்லுவீங்க.நானுந்தாங்க பத்து வருஷமா தலைவரு வேல செஞ்சிக்கிட்டு வாரேன். ஆணு,இந்த மாதிரி ஒரு நாளும் அவமானப்பட்டது இல் லேங்க. ஏம் பேச்சி கேட்டு நடந்தவங்க எல்லாம் இப்ப என்னைக் கெட்டவனென்னு சொல்லுருங்க. அது மட்டுமா, என்னைய தலைவரு வேலையில இருந்து விலக்கிப்புட்டு அந்த வீரய்யாவ தலைவரா வைக்கப்போருங்களாம்.நீங்க இப்புடி செய்வீங்கனு நான் கொஞ்சங்கூட நினைக்கலிங்க" என்ருர் தலைவர்.
‘இந்தா பாருங் தலைவர். தோட்டத்துல யாரும் புதிசு புதிசா தலைவரா வந்து இங்கே ஒன்னும் செய்யமுடி யாது.நாங் மத்த ஆள் மாதிரி பயந்துகிட்டு இருக்கிற ஆள் இல்ல. தோட்டத்துல யாருங் கொழப்பங் பண்ணி கரச்ச லுக்கு வந்தா அப்புறங் என்னு நடக்குமுனு சொல்லத் தெரியாது."
கண்டக்டரின் வார்த்தைகள் கோபத்தில் தடுமாறின.

Page 78
46 குருதிமலை
"ஓங்க பேச்ச கேட்டு நடந்தேனுங்களே, என்னைத் தாங்க செருப்பாலை அடிக்கனும். நீங்க இப்புடி செய்வீங் கனு எனக்கு முன்னமே தெரிஞ்சிருந்தா நான் இந்த வேலை யில இறங்கியிருக்கமாட்டேங்க. என்னைய தோட்டத்தில தலைகாட்ட முடியாம செஞ்சுப்புட்டீங்க."
"இந்தா.நீங்க கொன்றேக்குல சல்லி வாங்கிறப்போ பேசாம இருந்தது.ஆளுங்க கரச்ச வந்தவொடனதாங் நம் மலை குந்தங் சொல்லுறது."
'இவ்வளவு நாளும் தோட்டத்து சல்லியதான் எடுத் துக்கிட்டிருந்தீங்க.இப்ப ஆளுங்க வவுத்துலேயும் அடிக்கத் தொடங்கிட்டிங்க.இனிமே ஒங்க கூட பேசுறது கண்டாலே ஆளுங்க என்னை உயிரோடை வைக்கமாட்டாங்க. இது எல் லாம் எங்க போய் முடியுமோ தெரியாது' மாரிமுத்துத் தலைவர் குமுறிஞர். ●
* சும்மா வளவளனு கதைக்கவேணுங் தலைவர். நான் ஒங்களுக்கு உதவி செஞ்சிதான் சல்லி எடுத்துக் கொடுத் தது;உங்களுக்கு விருப்பங் இல்லாட்டி விட்டுப்போடுங்க. நமக்கு தூக்கம் வாறது.நாங் படுக்கப் போறது.நீங்க ஒங். களுக்கு முடிஞ்சா எது சரி செய்யுங்க. நம்மளை ஒன்னுங் செய்யமுடியாது" எனக் கூறிக்கொண்டே பெரிய கொட் டாவி விட்டபடி எழுந்திருந்தார் கண்டக்டர்.
கண்டக்டர் இப்படிக் கூறியதும், இனி அவருடன் கதைப்பதில் பிரயோசனமில்லை என நினைத்த தலைவர், கோபத்துடன் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டார்.
"இந்த கண்டாக்கு பயசுட இனிமே சகவாசமே வச்சி ருக்கக்கூடாது;செய்யிறது எல்லாம் செஞ்சிப்புட்டு கடைசி யில நழுவிக்கிற பாக்குருன்’ என எண்ணியபடி வீட்டை நோக்கி நடந்தார் மாரிமுத்துத் தலைவர்.

குருதிமலை 147
அத்தியாயம் இருபது
இஸ்தோப்பில் ஒரு பக்கத்திலே வைத்திருந்த குப்பி லாம்பு ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தது. அதன் அருகே போடப்பட்டிருந்த வாங்கில் அமர்ந்திருந்த வீரய்யா ஏதோ சிந்தனையுடன் தனது நண்பர்களின் வரவுக்காகக் காத்திருந்தான்.
வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. கையில் தீப்பந்தத்துடன் யாரோ வந்து கொண்டிருந்தனர். ,
ராமுவும் செபமாலையுந்தான் வருகிறர்கள் எனப் புரிந்து கொண்ட வீரய்யா இஸ்தோப்பில் நின்றபடி வெளியே எட்டிப் பார்த்தான்.
**இவ்வளவு நேரமா என்னடா செஞ்சிக்கிட்டிருந் தீங்க; நான் வெள்ளணவே வரச் சொல்லியிருந்தேனே' எனக் கேட்ட வீரய்யா கதவைத் திறந்து விட்டான்.
கையில் இருந்த பந்தத்தை ஊதி அணைத்துவிட்டுஉள்ளே நுழைந்த செபமாலை, "இப்போதான் டவுனுல இருந்து வந்தேன்; வூட்டிலை சாமான் இல்லேனு சொல்லிக்கிட்டிருந் தாங்க. வாங்கிக் குடுத்திட்டு வாறதுக்கு கொஞ்சம் சொணங்கிப் போயிடிச்சு" எனக் கூறினன். அவனைத் தொடர்ந்து ராமுவும் வேறு சில இளைஞர்களும் உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் எல்லோரும் சுவர் ஒரமாக வைக்கப்பட் டிருந்த வாங்கில் அமர்ந்து கொண்டனர்.

Page 79
及48 குருதிமலை
‘'இப்போ நம்ப தோட்டம் போய்கிட்டு இருக்கிற போக்கே சரியில்லை; இதப்பத்தி ஓங்களோட கதைக்கலா முனுதான் நான் எல்லாத்தையும் வரச்சொன்னேன்.
வீரய்யா நேரடியாக விஷயத்துக்கு வந்தான். "ஆமா வீரய்யா, தோட்டத்த அரசாங்கம் எடுத்த தில இருந்து எல்லாமே தலைகீழாகத்தான் நடந்துகிட்டு வருது" என்ருன் ராமு.
"அண்ணே. இன்னிக்கு நம்ப தோட்டத்துக்கு ஆறு பேரு சுப்பவைசர் வேலைக்கு வந்திருக்காங்க. நம்ப தோட் டத்தில உள்ள படிச்ச பொடியங்க எல்லாம் வேலைக்கு அப்பிளிக்கேசன்போட்டோம். ஆன ஒருத்தனுக்குக் கூட வேலை கெடைக்கல்ல."
" போட்ட அப்பிளிக்கேசனுக்கு பதில்கூட வரலிங் கண்னே"
** அதுமட்டுமில்லே ராமு, இப்ப வேலைக்கு வந்தவங் களுக்கு வேலையே தெரியாதுடா. இனிமேதான் பழக்கப் போருங்களாம். ஒண்ணுமே தெரியாதவங்களை கொண்டு வந்து போட்டு தோட்டத்தை நாசமாக்கப் போருங்க" என்ருன் வீரய்யா.
"எல்லாரும் வால் புடிச்சு வந்தவங்கபோலத் தெரி யுது. தேயிலை மரத்தையே கண்ணுல காணுதவங்க நம் மஞக்கு வேலை படிச்சுக்கொடுக்க வந்திருக்காங்க" என் முன் செபமாலை.
* தோட்டத்திலையே பொறந்து வ்ளந்து படிச்ச எங் களுக்கு வேலை இல்லேங்குருங்க. எங்கையோ கெடந்த வங்க எல்லாத்துக்கும் வேலை குடுக்கிருங்க"
'அண்ணே. நம்ம ஸ்கூலுக்கு ரெண்டு சிங்கள மாஸ் டர் மார்களை அனுப்பியிருக்காங்க. அந்த வேலைய நம்ம தோட்டத்துல படிச்சிட்டு இருக்கிற பெடியங்களுக்கு

குருதிமலை 49
கொடுத்திருக்கலாந்தானே" என ஆதங்கத்துடன் கூறி ஞன் செபமாலை.
** சிங்கள வாத்தியாருங்களை புடிச்சி அனுப்பியிருக் காங்களே, அவுங்க நம்ப புள்ளைங்களுக்கு என்னத்தைத் தான் படிச்சி கொடுக்கப் போருங்களோ தெரியாது"
"நம்ப புள்ளைங்க படிச்சா என்ன..? கெட்டுப் போனதான் என்ன..? அவுங்களுக்கு அதப்பத்தி கவலை யில்லை. மாஸ்டர் மாருங்களுக்கு சம்பளம் மட்டும்கெடைச் சா சரி’ என்ருன் செபமாலை.
** நம்ம வருங்கால புள்ளைங்கவூட்டு வாழ்க்கையே படிப்பிலதான் இருக்கு. அதையே நாசமாக்குருங்க, இந்த அநியாயத்த பாத்துக்கிட்டு சும்மா இருக்கக்கூடாது" என்ருன் வீரய்யா.
இவர்களது சம்பாஷணையைக் கேட்டவண்ணம் காம் பராவில் இருந்த மீனச்சி, "" என்னங்க தம்பி. தோட்டம் அரசாங்கம் எடுத்த புதிசுல என்னென்னமோ செய்யப் போவுதுனு சொல்லி நீங்கதான் பேசிக்கிட்டீங்க; இப்ப நீங்களே இப்படி கதைக்கிறீங்க. எங்களுக்கு ஒண்ணுமே வெளங்கலே" என்ருள் பலமான குரலில்.
** அப்புடியில்லீங்க அத்தை., அரசாங்கத்தோட கொள்கையெல்லாம் நல்லதுதான்.ஊடையில இருக்கிருங் களே. இந்த வாலு புடிக்கிற பயலுக, அவங்கதான் இந்த மாதிரி வேலையெல்லாம் செஞ்சிகிட்டு வாருங்க" என்ருன் செபமாலை.
'இப்ப பாருங்கண்ணே. நம்ப தோட்டத்துக்கு எத் தினை பேரு வேலைக்கு வந்துட்டாங்க. யாரைப் பாத்தாலும் அவுங்க 'சப்போட்டுல வந்த ஆளுங்களாத்தான் இருக் குருங்க"

Page 80
150 குருதிமலை
"யாரா இருந்தாலும் பரவாயில்லையடா, வர்றவங்க எல்லாம் சொரண்டுற பயலுகளாக இல்லியா இருக்காங்க என்ருன் வீரய்யா.
"ஆமாங்கண்ணே, புதிசா கண்டக்கையா வந்தாரு; ஆறுமாசத்திலேயே தோட்டத்தைக் காடாக்கிட்டாரு. அவரு வந்ததிலயிருந்து தேயிலைக்கு ஒரம் போட்டதையே நாங் காங்கலே. ஒழுங்கா மருந்தடிக்காம தேயிலையெல் லாம் பூச்சி வச்சிக் கெடக்குது. இப்புடியே போயிக்கிட்டு இருந்தா இன்னும் கொஞ்சக் காலத்தில கொழுந்தே வராது" என்ருன் சுவரிலே சாய்ந்தபடி நின்ற இளைஞன்.
"அதுமட்டும் இல்லேடா, நம்ப லயத்து ரோட்டுங் களுக்கெல்லாம் தோட்டக் கணக்கில ஆள் போட்டு துப்புர வாக்குவாங்க; பீலியில தண்ணி வராமப் போன "ரிப்பர்’ பண்ணிக் கொடுப்பாங்க. இந்தக் கண்டக்கையா வந்ததில இருந்து இதெல்லாம் ஒண்ணுமே செய்யல" என்ருன் ராமு.
**ஆமாடா ராமு, இந்த வேலையெல்லாம் செஞ்சு முடிஞ்சதாக் கணக்குக்காட்டி கண்டக்கையா சல்லி அடிச் சிருப்பார். இப்ப புதிசா வந்திருக்கிற பெரிய கிளாக்கரும் அவருடைய கூட்டாளிதானே; ரெண்டுபேருமா சேந்து வெளையாடியிருந்தா யாருக்குத் தெரியப் போவுது?"
"அது எப்பு டிங்கண்ணே, இஷங்களுக்கு சல்லி அடிக்க முடியும்; தொர கண்டுக்கிட மாட்டாரா?"என்ருன் இளைஞ ணுெருவன்.
"அதுதாண்டா வெளங்கல, இப்ப தொரையும் சரியா மலைக்கு வேலை பாக்க வாற தில்லை. எல்லாம் கண்டக் கையா பொறுப்புலேயே நடக்குது. நம்ப மாரிமுத்துத் தலைவரும் ஐயா பின்னுக்கே சுத்திக்கிட்டு திரியிருரு. ஒண்ணுமே புரியமாட்டேங்குது" என்ருன் ராமு சிந்தித்த வாறு.

குருதிமலை
"தோட்டத்தில இப்ப நடந்துகிட்டு வாறதப்பாத்தா நெனச்சது ஒண்ணு நடக்கிறது ஒண்ணு இருக்கு, நாம நல்லா மாட்டிக்கிட்டம் போல தெரியுது" என்ருன் செப ιρπάου.
**இனிமே நாம இப்படியே சும்மா இருந்திடக் கூடாது. இதுங்களுக்கு நடவடிக்கை எடுக்கணும். மொதல் வேலையா யூனியன் மூலமா அரசாங்கத்துக்கு நம்ப எதிர்ப் பைத் தெரிவிக்கோனும்" என்ருன் வீரய்யா.
**ஆமாங்கண்ணே நீங்க சொல்லுறபடி செய்வோம்" என ஆமோதித்தான் செபமாலை.
**அதுமட்டுமில்லே நீங்க எல்லாரும் முக்கியமாக ஞாப கத்துக்கு வச்சிக்கிற வெசயம் என்னடான்ன, இனிமே நாம எல்லாம் பயப்புடாம எதுக்கும் எதிர்த்து போரா டத் தயாரா இருக்கணும்" என்ருன் வீரய்யா ஆவேச
DIT 5
வீரய்யா கூறிய சொற்கள் அங்கிருந்த இளைஞர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தன. அவர்கள் இப்போது எதற்
கும் அஞ்சாதவர்களாக மாறத் தொடங்கினர்.
அவர்களது மனதில் ஆவேசம் துளிர்த்து சுடர்விடத் தொடங்கியது.

Page 81
I52 குருதிமலை
அத்தியாயம் இருபத்தொன்று
செந்தாமரை மகிழ்வுடன், துள்ளிக்குதித்த வண் ணம் பியசேனவின் கொந்தரப்பு மலையை நோக்கி ஓடி வந் தாள்.
அவள் வருவதைக் கவனிக்காத பியசேன, ஏதோ யோச னையுடன் கற்பாறையொன்றின் மேல் அமர்ந்திருந்தான். அருகே நெருங்கிய செந்தாமரை பின்புறமாகச் சென்று குறும்புத்தனமாக அவனது கண்களை திடீரெனப் பொத்தி
ஒரு கணம் திடுக்குற்ற பியசேனு, அவளது கைகளில் பலமாகக் கிள்ளினன்.
**ஆ." எனச் செல்லமாகச் சிணுங்கியபடி கைகளை உதறிக்கொண்டே அவன் முன்னே வந்தாள் செந்தாமரை. ‘என்ன செந்தாமரை..எவ்வளவு நேரமா நான் ஒனக் காக இங்க காத்திருக்கேன் தெரியுமா?" எனக் கேட்டுக் கொண்டே கைகளால் அவளது இடையைச் சுற்றி வளைத் துத் தன்னருகே இழுத்தான் பியசேன.
"இன்னிக்கு எங்க மலைக்கு கண்டக்கையா வந்திட் டாரு; இப்ப கொஞ்ச நேரத்துக்கு முந்தித்தான் மலையை வுட்டுப் போனுரு. அதற்கு அப்புறந்தான் நான் கங்காணிக் கிட்ட சொல்லிப்புட்டு வந்தேன்" எனக் கூறிய செந்தா மரை, அவனது கைகளை மெதுவாக விலக்கிவிட்டு அவ னருகே அமர்ந்து கொண்டாள்.

குருதிமலை 153
“நீ வராமயேதும் இருந்திடுவியோன்னு நான் பயந்தே போயிட்டேன்" எனக் கூறிக் கொண்டே அவள் அருகில் நெருக்கமாக அமர்ந்து கொண்டான் பியசேன.
‘எப்புடீங்க நான் வராம இருப்பேன். நீங்கதான் முக் கியமா ஏதோ கதைக்கணுமுன்னு ஒங்க கூட்டாளிகிட்ட சொல்லியனுப்பியிருந்தீங்களே' எனக் கூறிய செந்தாமரை பியசேனவின் கைகளைத் தனது கைகளோடு கோர்த்துக் கொண்டாள்.
**ஆமாசெந்தாமரை,முக்கியமான விசயந்தான்.எங்க சித்தப்பா எனக்கு வேற கலியாணம் செஞ்சு வைக்கபாக்கி ருரு. எங்கம்மாகிட்ட போன கிழமை வந்து இதைப்பத்திக் கதைச்சாரு" எனக் கவலை தோய்ந்த குரலில் கூறினன் பிய சேஞ.
**இதுதான் ஒங்க முக்கியமான வெசயமா?’ எனச் செந்தாமரை சிறிது எரிச்சலுடன் கேட்டாள்.
‘எங்கம்மாவும் சித்தப்பா பேச்சைக் கேட்டுக்கிட்டு, என்னை வேற கல்யாணஞ் செய்யச் சொல்லி கரச்ச பண் ணிக்கிட்டு இருக்காங்க" எனக் கூறிய பியசேன அவள கைகளை மெதுவாக வருடினன்.
*அப்படீன்னு. இதுவரைக்கும் நம்ப வெசயத்தைப் பத்தி உங்க அம்மாக்கிட்ட சொல்லவே இல் லியா?" எனக் கலக்கத்துடன் கேட்டாள் செந்தாமரை.
"நம்ம வெசயமெல்லாம் அம்மாவுக்கு நல்லாத் தெரி யும் செந்தாமரை.நான் எவ்வளவோ அவுங்ககிட்ட சொல்லிப் பாத்திட்டேன்; ஆன அவுங்களும் பிடிவாதமா இருக்காங்க" எனக் கூறிய பியசேன அவளது கைகளை உற் றுப் பார்த்தான்.
*இதுக்கு நம்ம என்னதான் செய்யலாம்" என யோச னையுடன் கேட்டாள் செந்தாமரை.

Page 82
54 குருதிமலை
**இந்த விசயத்தில நான் எங்க அம்மாவோட மனச கஷ்டப்படுத்த விரும்பல்ல; அவுங்க மட்டுந்தான் எனக்கு இருக்காங்க."
"அப்படின்ன ஒங்கம்மா பேச்சைக் கேட்டுத்தான் நீங்க நடக்கப்போநீங்களா?" என வெடுக்கெனக் கேட் டாள் செந்தாமரை.
"என் நிலைமையில நான் என்னதான் செய்யலாம்; நீயே சொல்லு." எனக் கெஞ்சும் குரலில் கூறினன் பிய சேன.
"நீங்க சொல்லுறதைப் பாத்தா என்னைக் கைவிட்டுப் புடுவீங்க போல இருக்கு" செந்தாமரையின் குரல் கரகரத் தது. அவளது கண்களில் நீர் முட்டியது.
‘எங்கம்மா மட்டுமில்ல.நாட்டில இருக்கிற ஒருத் தருமே நம்ம தொடர்பை விரும்பல்ல செந்தாமரை எல் லோரையுமே பகைச்சுக்கிட்டு இருக்க முடியுமா?"
‘என்னை நீங்க ஏமாத்தப் பாக்குறீங்க; புதிசா கலியா ணம் பேசினவொடன ஓங்க மனசே மாறிப்போச்சு-" எனக் கூறிய செந்தாமரை திடீரென எழுந்தாள். அவளை யும் மீறிக் கொண்டு அவளது கண்களில் நீர் முட்டி வழிந் திதி
பியசேன எழுந்து அவளது கைகளைப் பற்றினன். ‘என்னைத் தொடாதீங்க, வரவர ஓங்க பேச்சே மாறிக் கிட்டு வருது. நான்தான் ஏமாந்திட்டேன்’ எனக் கூறிய செந்தாமரை முகத்தைப் பொத்திக்கொண்டு விம்மினள். "இப்ப என்ன தான் சொல்லிட்டேன். ஏன் இப்புடி அழுறே. நம்ம வெசயத்துக்கு எல்லாரும் எதிர்ப்பா இருக் காங்கன்னுதானே சொன்னேன்’’ என அவளைத் தேற்றும் வண்ணம் கூறினன் பியசேன.
செந்தாமரை தொடர்ந்தும் பெரிதாக விம்மினள். அவள் அப்படி விம்முவதைப் பார்த்த பியசேனவின் உள் ளம் பதறியது.

குருதிமலை 155
"செந்தாமரை, ஒன்னைப் பிரிஞ்சு என்னல இருக்கமுடி யுமுனு நெனைக்கிறியா? அழாத செந்தாமரை...' எனக் கூறிய பியசேன ஆதரவுடன் அவளது கண்ணிரைத் துடைத்து விட்டான்.
"என்னை,நீங்க கைவிட்டுட்டீங்கன்னு அப்புறம் நான் உசி ரோட இருக்கமாட்டேன்" செந்தாமரை விம்மலிடையே
கூறினுள்.
"ஏன் செந்தாமரை. இப்புடி எல்லாம் கதைக்கிறே. நான் ஒன்னை ஒரு நாளும் ஏமாத்தமாட்டேன்’ எனக் கூறிய பியசேன அவளைத் தன்னேடு இறுக அணைத்துக் கொண் டான்.
*சரிங்க.நான் வந்து ரொம்ப நேரமாகுது. வூட்டுக் குப் போகனும்" எனக் கூறிக் கொண்டே அவனது கைகளை மெதுவாக விலக்கி விட்டாள் செந்தாமரை.
**இந்தா பாரு செந்தாமரை.நான் எந்த நேரத்தில வந்து ஒன்ன கூப்பிட்டாலும் நீ என்னுேட வாறதுக்கு ரெடியா இருக்கோனும். நான் எல்லா ஒழுங்குகளையும் செஞ்சிட்டு வந்து ஒன்ன கூப்பிடுவேன்; இத சொல்லத்தான் முக்கியமா ஒன்னை வரச்சொன்னேன்’’ எனக் கூறியபடி அவளது கன்னத்தில் வழிந்திருந்த நீரைத் தனது விரல் களால் துடைத்துவிட்டான் பியசேன.
அவள் அவனது கைகளைப் பற்றித் தன் கண்களில் ஒற் றிக் கொண்டு அவனிடம் விடை பெற்ருள்.
மகிழ்ச்சியுடன் துள்ளியபடி அவள் ஒற்றையடிப் பாதையின் வளைவில் ஏறியபோது அங்கே அவள் கண்ட காட்சி அவளது நெஞ்சை விறைக்க வைத்தது.
அங்கு-கண்டக்டர் சிகரெட் புகைத்த வண்ணம் அவ ளையே உற்று நோக்கியபடி நின்று கொண்டிருந்தார்.

Page 83
156 குருதிமலை
அத்தியாயம் இருபத்திரண்டு
அன்று சனிக்கிழமை, வழமைபோல் அந்தப் பகுதியில் உள்ள தோட்டத் துரைமார்கள் எல்லோரும் கிளப்பில் சந்தித்தார்கள்.
பொதுவாக கிளப்நாள் என்ருல் துரைமார் எல்லோ ருக்கும் சந்தோஷமாக இருக்கும். அன்றுதான் அவர்கள் தங்களது நண்பர்களான மற்றைய தோட்டத்து துரை மார்களைச் சந்தித்து உரையாடுவார்கள்; மது அருந்தி விட்டு ஆடிப்பாடி குதூகலமாகப் பொழுதைக் கழிப்பார் கள்; தமது சொந்தப் பிரச்சினைகளிலிருந்து தோட்டப் பிரச்சினைகள் வரை ஒருவரோடொருவர் கதைத்துப் பரி மாறிக் கொள்வார்கள். “ ‘ஹலோ மிஸ்டர் சில்வா, வாருங்கள் நாம் கரம் விளையாடலாம்."
"பார்' அருகே மது அருந்திக் கொண்டிருந்த ஒருவர் பக்கத்துத் தோட்டத் துரையை அழைத்தார்.
"கம் யூ ஒல்சே ஹாவ் ஏட்றிங்.." எனக் கூறிவிட்டு அவரின் பதிலைக் கேளாமலே பார் கீப்பரிடம் ஆடர் கொடுத்தார் சில்வா துரை.
இருவரும் தனிமையான ஓர் இடத்தில் போய் அமர்ந்து கொண்டனர். ‘பார்கீப்பர்" அவர்களுக்கு மதுவைக் கொண்டு வந்து பரிமாறினன்.
‘எப்படி உங்களது எஸ்டேட் விஷயங்கள் யாவும் ஒழுங்காக நடக்கின்றதா?தேயிலை விலையெல்லாம் எப்படி?"

குருதிமலை 157
எனக் கேட்டவாறு மதுவை கிளாஸில் ஊற்றினர் பக்கத்து தோட்டத் துரை.
அவர்களது உரையாடல் ஆங்கிலத்தில் நடந்தது. "உலகச் சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்ததால் எமது தோட்டத் தேயிலையும் கூடிய விலைக்கே விற்கப்படு கின்றது. உண்மையில் நாம் தயாரிக்கும் தேயிலையின் தரம் மிகவும் குறைந்து விட்டது' என்ருர் மிஸ்டர் சில்வா மதுக் கிண்ணத்திற்குள் உற்றுப் பார்த்தவாறு.
"ஆமாம். தேயிலைத் தோட்டங்களில் ஏற்பட்டிருக்கும் உற்பத்தி வீழ்ச்சியை யாருமே புரிந்து கொள்ளாத வகை யில் அதிர்ஷ்டவசமாக விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது” என்ருர் பக்கத்து தோட்டத் துரை.
**இந்த உற்பத்தி வீழ்ச்சியை இனிமேல் சரிப்படுத்த லாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை-"
"ஏன் திடீரென அப்படிக் கூறிவிட்டீர்கள், இப்போது தோட்டங்களில் மேலும் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க நிறையப் பணம் அரசாங்கத்தில் ஒதுக்கியிருக்கின்ருர்கள் அல்லவா?"
"ஆமாம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆணுலும் அந்தப் பணத்தை தோட்டத்திற்கு சரியான முறையில் உபயோகிக்க முடியாத நிலை உருவாகிக் கொண்டு வரு கிறது" சில்வா துரையின் பேச்சில் கவலை தொனித்தது.
'இப்போதுள்ள சூழ்நிலையில் நமக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும்--ஏன் இந்த நாட்டுக்குமே பெரிய பாதிப்பு ஏற்படப்போகின்றது. உடனே நாம் இதைப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் போகப்போகஇதைப் புரிந்து கொள்ளலாம்."
"தொழிலாளர்களது யூனியனிலிருந்தும் இது சம்பந்த மாக எனக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்கள்" என்ருர் சில்வாதுரை.

Page 84
158 குருதிமலை
"அப்படியா, அந்தக் கடிதத்தில் என்ன விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள்?"
'தொழிலாளர்களது சலுகைகள் பெரிதும் குறைக்கப் பட்டுவிட்டதென்றும், வழமையாக தோட்ட ங் களி ல் செய்து வந்த வேலைகள் செய்யப்படவில்லை என்றும் குறிப் பிட்டிருந்தார்கள்."
*இதற்கு நீங்கள் என்ன கூறுவதாக உத்தேசித்துள் Gifti g; 6ir?'''
"அதுதான் எனக்கும் புரியவில்லை. தோட்டத்துக் கண் டக்டர், தோட்டத்தில் ஒழுங்காக வேலை செய்யாது தோட் டத்தைச் சுரண்டுகிருர்; அதைப்பற்றி இரகசியமான முறையில் நான் மாவட்டக் காரியாலய மனேஜரிடம் கூறி னேன்.ஆனல், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு எனக்கு அனுமதி தரவில்லை."
**ஆமாம். மாவட்டக் காரியாலயத்தில் இருப்பவர் கள் கூட கட்சி அமைப்பாளரின் ஆட்கள்தானே."
“எனது தோட்ட கோப்பிரட்டிவ் மனேஜர் கூட அரிசியைக் குறைத்து நிறுக்கின்ருர் என்றும், தொழிலா ளர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய ரேஷன் சாமான்களை கள்ள மார்க்கட்டில் விற்று விடுகிருர் என்றும் எனக்குத் தெரிய வந்துள்ளது. நான் யூனியனுக்குச் சென்று இதைப் பற்றி விசாரித்தும் பார்த்தேன். அந்தந்த மாதத்துக்கு வேண்டிய ரேஷன் சாமான்களை அவர்கள் கொடுத்து விட்ட தாக என்னிடம் கூறினர்கள்." -
**ஆமாம். அரசியல் வாதிகள் தங்களது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காக தோட்டங்களில் கூட்டுறவுச் சங்கக் கடைகளை அமைத்து, அதில் தங்களுக்கு சாதகமான ஆட் களையே வேலைக்கு அமர்த்துகின்றனர். ஆனல்,அவர்களோ கடைகளில் உள்ள சாமான்களைச் சுரண்டி தொழிலாளர் களைக் கஷ்டத்துக்குள்ளாக்குகின்றனர்."

குருதிமலை 159.
"இப்படித் தோட்டங்களில் அரசியல் புகுந்து நிர்வா கத்தில் பங்கம் விளைவிப்பதால் தோட்டங்களை நாம் சரி யான பாதையில் கொண்டு நடத்த முடியாமல் இருக் கிறது."
**அது மட்டுமல்ல, இன்னுமொரு முக்கியமான விட யம் யாதெனில், தோட்டங்களில் இப்படி ஊழல் செய்ப வர்களைத் தண்டிக்கவோ அல்லது தடைசெய்யவோ எத்த னிக்கும் போது நாம் எமது தொழிலையே இழக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி விடுகிறது."
** சரியாகக் கூறினீர்கள் மிஸ்டர் சொய்சா, எனது தோட்டத்துக்கு புதிதாக வந்திருக்கும் பெரிய கிளாக்கர் மீதுசுட எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. என்ன செய் வது, ஏதோ ஒருவாறு சமாளித்துத்தான் தோட்டத்தைக் கொண்டு நடத்துகிறேன்' எனக் கூறிய சில்வாத் துரை கிளாஸில் இருந்த மதுவை ஒரே மூச்சில் குடித்துவிட்டு கிளாசைக் கீழே வைத்தார்.
* மிஸ்டர் சில்வா, உங்களுக்கு கோப்புரேட்டிவ் மனே ஜர் எங்கே சாமான்களை விற்கின்றர் என்பது தெரியுமா?" "ஆமாம். தொழிலாளர்கள் எனக்கு அனுப்பியிருந்த கடிதமூலம் தெரிந்து கொண்டேன். பக்கத்துக் கிராமத்தில் உள்ள கடையில் தான் விற்கின்றர்."
"அப்படியானுல் இது விஷயமாக நீங்கள் பொலிசுக்கு அறிவித்தல் கொடுக்கலாமல்லவா."
** பொலிசாரும் எம்மைப்போல் அரசியல்வாதிகளுக்கு பயந்து கொண்டுதானே இருக்கின்றனர்."
சொய்சா சிந்தனையுடன் சிகரெட்டைப் பற்றவைத்து புகையை வெளியே ஊதினர்.
*ஏன் இப்போதுள்ள இன்ஸ்பெக்டர் நமக்குத் தெரிந் தவர்தானே. அவரிடம் இரகசியமாகச் சொல்லி ஏதாவது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம். அவர் எம்மை அரசி

Page 85
60 குருதிமலை
யல் வட்டாரங்களுக்குக் காட்டிக் கொடுக்க மாட்டார்’ எனக் கூறினர் மிஸ்டர் சொய்சா.
臀 சிறிது நேரத்தின் பின்னர் இருவரும் எழுந்து இசைக் கச்சேரி நடக்கும் இடத்துக்குச் சென்றனர்.
இப்போது சில்வா துரைக்கு சிறிது மனப்பாரம் குறைந்திருந்தது.
அத்தியாயம் இருபத்துமூன்று
Pடுவத்தில் தொழிலாளர்கள் நிறைந்திருந்தனர். ஒருபக்கத்தில் கண்டக்டர் அன்று வேலை செய்தவர்களுக்கு பேர் போட்டுக்கொண்டிருந்தார். மறுபக்கத்தில் கொழுந் துக் கணக்கப்பிள்ளை கொழுந்து நிறுத்துக்கொண்டிருந் தார். கொந்தரப்புக் கணக்கப்பிள்ளை கணக்குகளைச் சரி பார்த்துக்கொண்டிருந்தார், மடுவம் ஒரே கலகலப்பாக இருந்தது.
ஆபீஸில் இருந்து “டயறிப் பொடியன்" அப்போது தான் அங்கு வந்து சேர்ந்தான். தினமும் காலையில் அன் றைய வேலைகளைப்பற்றிய விபரத்தை டயறியில் குறித்து, துரையின் பார்வைக்காக கண்டக்டர் அனுப்பிவைப்பார். அதனைப் பார்வையிட்டு, ஒப்பம் வைத்தபின்பு மாலையில் அதனை கண்டக்டருக்கு திருப்பி அனுப்பி வைப்பார் துரை.
டைப் செய்யப்பட்டு துரையின் ஒப்பத்துடன் ஒரு நிரு பமும் அன்று டயறியில் வைத்து அனுப்பப்பட்டிருந்தது.

குருதிம ை 16.1
அதனை வாசித்தபோது கண்டக்டரின் முகத்தில் குழப்ப்ம் காணப்பட்டது.
'நமது தோட்டத்தை நிலமற்றவர்களுக்குப் பகிர்ந் தளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. வெகு விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும். இப்போது தோட்டத்தில் குடியிருப்பவர்கள் எல்லோரும் தோட் டத்தை விட்டு வெளியேறவேண்டும். அதற்குரிய ஒழுங்கு களையும் அரசாங்கம் செய்யும்.'
மேற்கண்டவாறு அந்த நிருபத்தில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. S.
கண்டக்டரின் முகம் மாறியிருப்பதைப் பார்த்த வய தான தொழிலாளி ஒருவர் அருகே வந்து, "என்னங் கையா வேலைஏதும் சரியில்லே ன் று தொர கடுதாசி அனுப்பியிருக்காருங்களா?' எனக் கேட்டார்.
"நம்ப தோட்டத்தை கொலனிக்கு கொடுக்கப் போறது சொல்லி அரசாங்கத்தில இருந்து தொரைக்கு லெட்டர் அனுப்பியிருக்கு" கண்டக்டர். இப்படித் திடீ, ரெனக் கூறியதும் மடுவத்தில் இருந்த எல்லோரும் அவ ரைச் சூழ்ந்துகொண்டனர்.
கண்டக்டர் கூறிய விஷயம் வீரய்யாவுக்கும் பெரும் திகைப்பை ஏற்படுத்தியது.
*தோட்டத்தைவுட்டு ஆளுங்க எல் லா த் தை யும் வெளியே போகவேணுஞ் சொல்லி கடுதாசி வந்திருக்கு. நீங்க எல்லாம் என்ன செய்யப்போறது?’ என அங்கு சூழ்ந்து நின்றவர்களைப் பார்த்துக் கேட்டார் கண்டக்டர். ‘'தோட்டத்தை வுட்டு நாங்கெல்லாம் எங்க ஐயா போறது?" எனக் கலக்கத்துடன் கேட்டான் அங்கு நின்ற குப்பன்.
"அதைப்பற்றி நமக்கு ஒண்ணும் தெரியாது, தோட் டத்தைவுட்டுப் போகச்சொல்லித்தான் கடதாசி வந்தி
ருக்கு."

Page 86
卫6B குருதிமலை
**இது என்னங்க பெரிய அநியாயமா இருக்கு. நாங் கெல்லாம் இந்தத் தோட்டத்திலயே பொறந்து வளந்த வங்க. இதைவுட்டு எங்கை ஐயா போறது?’ எனப் பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன.
*"அரசாங்கத்தில இருந்துதானே கடுதாசி வந்திருக்கு, யாருக்கும் ஒண்ணும் செய்யமுடியாது. நீங்க எல்லாம் போகவேண்டித்தான் வரும்" எனக் கூறினர் கண்டக்டர். கண்டக்டர் இப்படிக் கூறியதும் அங்கு நின்றவர் களின் திகைப்பு மேலும் அதிகமாகியது.
இவர்களது சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டு ' கொழுந்துச் சாக்குகளை எடுத்து அடுக்கியவண்ணம்இருந்த
சுமணபால, கண்டக்டரின் அருகே சென்றன்.
“மொனுவத மாத்தயா கியன்னே; ஒக்கோமத யண்ட ஒனே?' அவனது குரலில் கலக்கம் தொனித்தது.
**ஆமாம், தோட்டத்தைவிட்டு எல்லோருமே போயாக வேண்டும்’ என் முர் கண்டக்டர்.
‘இது பெரிய அநியாயமாக அல்லவா இருக்கிறது?" எனக் கூறினுன் சுமணபால .
*அப்படியல்ல; அரசாங்கம் ஏதோ ஒரு முக்கிய கார ணத்தோடுதான் இதனைச் செய்கிறது? அதற்கு நாமெல் லோரும். உடன்பட்டுத்தான் ஆகவேண்டும்' எனக் கூறிய கண்டக்டர் அவனுடன் மேலும் கதைக்க விரும்பாதவராய் *சரி சரி, நீ போய் உனது வேலையைக் கவனி' எனச் சொல்லி அவனை அனுப்பிவைத்தார்.
சுமணபால கிராமத்திலிருந்து தினமும் வேலைக்கு வருபவன். வேலையில் நிதானமும், பொறுப்புணர்ச்சியும் மிக்கவன். எதையும் சிந்தித்து தெளிவோடுதான் பேசு வான். அதனுலேதான் முன் பிருந்த கண்டக்டர் அவ க்ைகு, "சாக்குக்காரன்’ வேலை வழங்கியிருந்தார்.

குருதிமலை 163
கிராமத்திலிருந்து வேலைக்கு வரும் ஒருவன் தோட் டத் தொழிலாளர்களோடு சேர்ந்துகொண்டு அரசாங்கத் தின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவது கண் டக்டருக்கு எரிச்சலை ஊட்டியது.
‘என்ன வீரய்யா ஒண்ணும் பேசாம இருக்கிற. நாமெல்லாம் போய்த்தான் ஆகணுமா?" ராமு கலக்கத் துடன் கேட்டான்.
"தோட்டத்தைவுட்டு அவுங்க போகச் சொல்லிட்டா அப்புடி ஒடன எல்லோரும் போயிடமுடியாது. நாமெல் லாம் ஒண்ணு சேர்ந்துயோசிச்சுத்தான் இதுக்கு ஒரு முடிவு செய்யணும்" என்ருன் வீரய்யா யோசனையுடன்.
** இன்னிக்கே கூட்டம் போட்டு இதைப்பத்திப் பேசு வோம்’ என்ருன் பக்கத்தில் நின்ற செபமாலை.
**ஆமா அந்திக்கு ஆறுமணிக்கு கூட்டம் வைப்போம். எல்லோரும் வந்திடுங்க" என்ருன் வீரய்யா.
ஒவ்வொருவராகக் கொழுந்துமடுவத்தைவிட்டு சஞ் சலத்துடன் கலைந்துசென்றனர். ஒவ்வொருவருடைய உள் ளத்திலும் பெருந் திகில் ஏற்பட்டிருந்தது.
ஆண்டாண்டு காலமாக, அவர்கள் எல்லோரும் சேர் ந்து ஒரே குடும்பம்போன்று வாழ்ந்துவந்த சமூகப் பிணைப் பிலிருந்து சிதறிப்போவதை எவருமே விரும்பவில்லை.
தோட்டத்தைவிட்டு வெளியேறுவதானல் அவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் சென்று குடியேறிவிடவும் முடியாது. அப்படிக் குடியேறுவதற்கு இந்த நாட்டில் அவர்களுக்கு உரிமையும் இல்லை.
தோட்டத்திலிருந்து சிதறிப்போய், வெவ்வேறு தோட் டங்களில் சேர்ந்து, புதிதாகத் தத்தமது வாழ்க்கையை ஆரம்பிப்பது அவர்களுக்கு ஒரு வேதனை தரும் விஷயமாக இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அது அவர்,

Page 87
64 குருதிமலை
களுடைய பிறந்த மண். சிறுவயதில் அவர்கள் ஓடியாடி விளையாடிய பூமி, ஏறியிறங்கிய மலைகள், குடியிருந்த லயங்கள், இரத்தத்தைப் பிழிந்து உழைத்து வளர்த் தெடுத்த தேயிலைச் செடிகள், இவை எல்லாவற்றையும் இழந்து போவதானல்-ஓ! அது மிகவும் கொடுமையான விஷயந்தான்.
அவர்களுக்கு இந்த உலகத்திலே இருப்பதெல்லாம் அவைகளின்மேல் அவர்கள் வைத்துள்ள பாச உணர்வு ஒன்றுதானே!
எதிர்காலம் எப்படி அமையப்போகிறதோ என்று எதுவுமே தெரியாமல் சூனியப் பெருவெளியாக மனதிலே விரிந்துகிடக்க, எப்படித்தான் அவர்கள் தமது பாசப் பிணைப்புகளை அறுத்துக்கொண்டு வெளியே செல்லமுடி uլւbl
அன்று இரவு மடுவத்திலே நடந்த கூட்டத்தில் பெருந் தொகையான தொழிலாளர்கள் பங்குபற்றினர்.
*தோட்டத்த அரசாங்கம் எடுத்தவொடன நாமெல் லாம் ரெம்ப சந்தோஷப்பட்டோம். அரசாங்கத்திலை நம் மஞக்கு நல்லது செய்வாங்கன்னு எதிர்பார்த்துக் காத் திருந்தோம். ஆன நாம நெனச்சதுக்கு மாருத்தான் எல் லாமே நடந்துக்கிட்டு வருகுது நாமெல்லாம் ஏமாந்திட் டோம்' வீரய்யா உணர்ச்சி ததும்பக் கூறினன்.
‘*தோட்டத்துக்குப் புதிசு புதிசா ஆளுங்க வந்தாங்க. இப்ப தோட்டத்த மூடுற நெலைக்கு கொண்டுவந்திட் டாங்க' என்ருன் ராமு.
'ஆளுகலுட்டு சம்பளத்தை வெட்டிஞங்க, சாப்புடுற சாப்பாட்டை கொள்ளை அடிச்சானுக. நம்ப படிச்ச பொடியன்களுக்கு கெடைக்கிற வேலையளை அவுங்க புடிச்சி கிட்டாங்க. சிங்கள மாஸ்டர்மாரை அனுப்பி எங்க பிள் ளைங்களோட படிப்பையே சுரண்ட ஆரம்பிச்சாங்க.

குருதிமலை 185
இதுக்கெல்லாம் நாம பொறுத்துக்கிட்டிருந்தோம். இப்ப நாங்க இருக்கிற எடத்தை வுட்டே நம்மளே துரத்தப் பாக் கிருங்க. இனியும் நாம பொறுக்கணுமா?’ உணர்ச்சிவேகத் துடன் கூறிவிட்டு எல்லோரையும் ஒரு தடவை பார்த் தான் வீரய்யா.
"முடியாது. முடியாது. இ னி மே லு ம் நாங்க பொறுத்திருக்கக் கூடாது'-பல குரல்கள் ஒரே சமயத் தில் ஒலித்தன.
நாம எதையுமே எதிர்த்துக் கேக்கமாட்டோமுனு நெனச்சுக்கிட்டுத்தான்,அவுங்கநெனைச்சபாட்டுக்கு செஞ்சு கிட்டு வாருனுக.நாம இனிமே சும்மா இருக்கக் கூடாது. நம்ம எதிர்ப்பைக் காட்டணும்."
-வீரய்யா உறுதியுடன் கூறிஞன்.
அங்கிருந்த ஒவ்வொருவரு  ைட ய உள்ளத்திலும் அசைக்கமுடியாத உறுதி கிளர்ந்தெழுந்தது. எவ்வித கஷ்டங்கள் வந்தாலும் எதையும் எதிர்த்துப் போராடக் கூடிய மன வலிமை இப்போது அவர்களிடத்தில் உருவாகி யிருந்தது.

Page 88
it 66 W.L. v.v. wil குருதிமலை
அத்தியாயம் இருபத்துநான்கு
அன்று நாட்டிலுள்ள புத்தவிகாரையில் கூட்ட மொன்று நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.கிராம சேவகர், கூட்டம் நடைபெறுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னதாகவே பண்டா முதலாளியை அழைத்து வருவ தற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார்.
**வாங்க , வாங்க ஜி. எஸ். மாத்தயா. எப்படி நமது விஷயமெல்லாம், சரிவந்திருக்கிறதா?’ எனக் கேட்டபடி கிராமசேவகரை வரவேற்ருர் பண்டா முதலாளி.
*காரியங்கள் துரிதமாக நடக்கின்றன. நமது மனுக் களை விரைவில் உரிய இடத்திற்கு அனுப்பிவைத்துவிட் டால் எல்லாமே ஒரு கிழமையில் முடிந்துவிடும்' எனக் கூறிவிட்டு கிராமசேவகர் பண்டா முதலாளியின் வீட்டின் முன்புறமாக இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டார்.
*" கூட்டத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறதுதானே. நல்ல சரக்கு இருக்கிறது, அருந்திவிட்டுச் செல்லலாம்' எனக் கூறிய பண்டா முதலாளி கிராமசேவகரின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் ஒரு போத்தல் கள்ளை முட்டியில் இருந்து எடுத்துக்கொண்டு வந்தார். மெனிக்கா கடையிலி ருந்து கிளாஸ் ஒன்றை எடுத்துவந்து மேசையில் வைத் தாள்.
* எப்படி அந்த வயல் விடயமெல்லாம் முடிந்துவிட் டதா, அல்லது ஏதும் பிரச்சினை இன்னும் இருக்கா?’ என

குருதிமலை 67
வினவியபடி கிளாஸில் கள்ளை ஊற்றிக் கிராமசேவகரி டம் கொடுத்தார் பண்டா முதலாளி.
ஒரே மிடறில் கள்ளை உறிஞ்சிக் குடித்துவிட்டு வாயை புறங்கையினல் துடைத்தபடி கிளாசை மேசையில் வைத் தார் கிராமசேவகர்.
'டி. ஆர். ஒ. நமது ஆள்தானே. அதனல் எல்லா விடயமும் சுலபமாக முடிந்துவிட்டது. தரிசாகக் கிடக் கும் நிலங்களையெல்லாம் பண்படுத்தி பயிர் செய்யும்படி தானே அரசாங்கம் கூறியிருக்கிறது.'
"என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்..? அந்த இடத் தில் கறுப்பண்ணன் கங்காணி வெகு காலமாக பயிர் செய்துகொண்டுவருகிருர். அது தரிசு நிலமாகக் கிடக்க வில்லையே’ எனக் கூறியபடி மீண்டும் கிளாஸில் கள்ளை நிரப்பினர் பண்டா முதலாளி.
நீங்கள் கூறுவது உண்மைதான். ஆஞலும் ஒரு விட யத்தை நீங்கள் மறந்துவிட்டீர்கள். இது எங்களுடைய நாடு. இந்த நாட்டின் பிரஜைகளாகிய எங்களுக்குத்தான் முதலில் எல்லா உரிமைகளும் இருக்கவேண்டும். அரசாங் கம் நமக்குச் சலுகை க ளை ச் செய்துகொடுக்கும்போது நாமாகவே அதைப் பயன்படுத்திக்கொள்ள வே ண் டு ம். நமக்கு பயிர் செய்வதற்கு காணி இல்லாதபோது, இந்த நாட்டில் உரிமையற்ற ஒரு வர் அரசாங்கத்துக்குச் சொந்த மான நிலத்தை தனதாக்கிக்கொண்டு பயிர் செய்வது ஓர் அடாத்தான விஷயமல்லவா.
**அது சரி மாத்த யா. அந்த மடுவத்துக்குப் பக்கத் திலும் ஒரு வயல் இருக்கிறதல்லவா? அந்த வயலை நீங்கள் எப்படியாவது எனது பெயருக்கு மாற்றித் தாருங்கள். நான் உங்களைக் கவனித்துக்கொள்கின்றேன்."
'இப்போது யார் அந்த வயலைச் செய்துவருகின்ருர் கள் என்பது தெரியுமா..?" என யோசனையுடன் கேட் டார் கிராமசேவகர்.

Page 89
168 குருதிமக்ல
*" குண்டன் கங்காணி லயத்தில் வசிக்கும் தொழி லாளி ஒருவர்தான் அந்த வயலில் வேலைசெய்துவருகிருர், அந்த வயலுக்கும் நல்ல நீர் வசதி உண்டு."
'இப்போதுள்ள சூழ்நிலையில் அந்த வயலை உங்களுக்கு எடுத்துத் தருவது மிகவும் சுலபம். தோட்டத் தொழிலா ளர்கள் எல்லாரும் இந்த மாத இறுதியில் தோட்டத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும். அந்தத் தோட்டத்தைத் தான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் காணியற்றவர்களுக்கு கொடுக்கப்போவதாக எனக்கு அறிவித்தல் கிடைத்திருக் கிறது. காணிகளைப் பகிர்ந்துகொடுக்கும்போது வயல் உள்ள பகுதியை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள லாம்' என்ருர் கிராமசேவகர்.
அதைக்கேட்டதும் பண்டா முதலாளியின் உள்ளம் மகிழ்ச்சியில் நிரம்பியது. போத்தலில் கள்ளு முடிந்ததைக் கவனித்ததும் அவர் மேலும் ஒரு போத்தல் கள்ளு கொண்டுவரும்படி மெனிக்காவிடம் உத்தரவிடுகிருர்,
‘'வேண்டாம். நாங்கள் இப்போது கூட்டத்திற்குப் போகவ்ேண்டும். அதனல் அதிகம் குடித்துவிட்டால் பின்பு என்னல் எந்த வேலையும் செய்யமுடியாமல் போய்விடும்" என்ருர் கிராமசேவகர் சிரித்தபடி.
*தோட்டத்தில் காணி பகிர்ந்து அளிக்கும்போது எனது பெயரிலும் காணி கொடுக்கமுடியும்தானே." எனக் கண்களைச் சிமிட்டி சிரித்த மெனிக்கா, கிராமசேவ கருக்கு முன்னல் சிகரட்பக்கற் ஒன்றை எடுத்துவைத்தாள்.
'குடும்பத்திற்கு ஒருவருக்குத்தான் முதலில் காணி கொடுப்பதாகத் திட்டம் இருக்கின்றது. ஆனல், உங்க ஆளப்பொறுத்தவரையில் நான் விசேஷ சலுகைசெய்து தானே ஆகவேண்டும்'எனக் கூறிய கிராமசேவகர் சிகரட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்தார்.

குருதிமல் 89
*நமது அண்ணன் மகன் பியசேனவுக்கும், எமக்குக் கிடைக்கப்போகும் காணியின் பக்கத்திலேயே நிலம் கொடுத்து உதவவேண்டும்" என வேண்டினர் பண்டா முதலாளி.
"ஒ. இதெல்லாம் மிகவும் சின்ன விஷயம்; அதை நான் கட்டாயம் செய்துதருகிறேன். எனது சிபார்சின் பேரிலேதான் எல்லோருக்கும் காணி கொடுபடப்போகின் றது"எனக் கூறிய கிராமசேவகர் ஏதோ நினைத்துக் கொண்டவராக, -
"எப்படி அவனது விஷயம் இருக்கின்றது? இப்போ தும் அந்த மாயாண்டியின் மகளுடன் அவன் தொடர்பு வைத்திருக்கின்ருனு?" எனக் கேட்டார்.
"அவர்களது தொடர்பைத் தடை செய்வதற்கு நான் என்னுல் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுத்திருக் கிறேன். நமது கண்டக்டர்கூட இந்த விஷயத்தில் எனக்கு எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்களித்திருக்கின் ღფr#. ''
** அப்படியா? கண்டக்டரின் உதவியிருந்தால் நிச்சய மாக அவர்களைப் பிரித்துவிடலாம். அவர் தனது பதவி யைப் பயன்படுத்தி, மாயாண்டியின் குடும்பத்தினருக்கு தொல்லைகள் கொடுத்தால் எல்லாமே சரியாகிவிடும்?? என்ருர் கிராமசேவகர்.
"அதே நேரத்தில் பியசேனவுக்கும் வேறு ஒரு பெண் ணைக் கல்யாணம் செய்துவைக்கும்படி அவனது தாயைத் தூண்டியிருக்கின்றேன்' என்ருர் பண்டா முதலாளி.
* இப்போது உள்ள சூழ்நிலை உங்களுக்கு சாதகமr கவே அமைந்திருக்கிறது. வெகு விரைவில் தோட்டத் தொழிலாளர்கள் எல்லோரும் தோட்டத்தைவி ட் டு ப் போய்விடுவார்கள். அதன் பின்னர் பியசேனவுக்கு அவ ளைக் சந்திக்கும் வாய்ப்பு இருக்காது' என்ருர் கிராமசேவ
SIt

Page 90
, 0 குருதிமல்
'இன்னும் சிறிது காலத்துக்கு அவன் அவளுடன் தொடர்புகொள்ளாதவாறு நாங்கள் பார்த்துக்கொண் டோமானல், பின்னர் பிரச்சினையே இருக்காது' என்ருள் பக்கத்திலே நின்ற மெனிக்கே.
"நான்கூடப் பியசேனுவைத் தனிப்பட்ட முறையில் எச்சரிக்கை செய்கின்றேன். அந்தப் பெண்ணுடன் இருக் கும் தொடர்பை அவன் நிறுத்திக்கொள்ளாவி ட் ட (ா ல், அவனுக்குக் காணி கிடைக்காதவாறு செய்யப்போவதாக பயமுறுத்திவைக்கிறேன்' என்ருர் கிராமசேவகர்.
"அதுவும் நல்ல யோசனைதான். எல்லோருமே எதிர்ப் பைக் காண்பித்தால் அவன் அவளைக் கைவிட்டுத்தான் ஆக வேண்டும்" என்ருர் பண்டா முதலாளி.
* ‘சரி, சரி நேரமாகிறது, நாங்கள் விகாரைக்குப் புறப் பட்டுப் போவோம். இதுவரையில் மக்கள் எமக்காகக் காத் திருப்பார்கள்" எனக் கூறி எழுந்திருந்தார் கிராம சேவகர்.
பண்டா முதலாளியும் தனது கோட்டை'எடுத்து மாட் டிக்கொண்டு அவருடன் புறப்பட்டார்.
அவர்கள் விகாரையை அடைந்தபோது அங்கு சனக் கூட்டம் நிரம்பிவழிந்தது.
கூட்டத்தில் பேசிய கிராமசேவகர், பக்கத்தில் உள்ள தோட்டம், கிராமத்தில் உள்ளவர்களுக்கு ப் பகிர்ந்து கொடுக்கப்படப் போவதாகவும், அதற்கு வேண்டிய நட வடிக்கைகள் யாவும் துரிதமாக நடக்கிறதெனவும், இவ் வளவு காலமும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த கிராம மக்க ளுக்கு நல்ல ஒளிமயமான எதிர்காலம் ஏற்படப்போகிற தெனவும் விளக்கினர். அத்துடன் காணியற்றவர்கள் தங் களது விபரங்களை மனுப் பத்திரங்களில் நிரப்பித் தன்னி

குருதிமலை i 7I
டம் தந்துவிட்டால், மிக விரைவில் எல்லோருக்கும் காணி பெற்றுத் தருவதாகவும் கூறினர்.
அங்கு நின்றவர்களது முகத்தில் உற்சாகம் தாண்டவ மாடியது. காணியற்றவர்கள் எல்லோருக்கும் இப்படிச் சுலபமாகக் காணி கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் வருமென ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர்களது உள்ளம் கிராமசேவகரையும், இவற்றுக்கெல்லாம் உறுதுணையாக நின்ற பண்டா முதலாளியையும் வாழ்த்தியது.
கூட்டம் முடிவடைந்ததும் கிராமசேவகர் அங்குள்ள மக்களின் சார்பில் தாம்ாகவே மனுப்பத்திரங்களை நிரப்பி அவர்களிடம் ஒப்பம் வாங்கினர். அங்குள்ள கிராம மக்க ளுக்கு சரியான முறையில் மனுப்பத்திரங்களை நிரப்ப வேண்டிய அறிவு இல்லையென்பது அவருக்குத் தெரியும்,
பியசேன தனது மனுப்பத்திரத்தைக் கிராமசேவக ரிடம் கையளித்தபோது, "இது விடயமாக நான் உன்னி டம் தனிப்பட்ட முறையில் சில விடயங்களைப் பின்னர் கதைக்கவேண்டும்" எனக் கூறியவண்ணம் அவனது பத் திரத்தையும் அவர் பெற்றுக்கொண்டார்.
மனுப்பத்திரங்களில் கையொப்பமிட்ட மக்கள் மகிழ்ச் சிப் பிரவாகத்துடன் அவ்விடத்தை விட்டுக் கலைந்தனர்.

Page 91
1 ή Ε குருதிமலை
அத்தியாயம் இருபத்தைந்து
கிராம சேவகர் வயலின் நடுவே குடை பிடித்த படி நின்று வேலை செய்பவர்களைக் கண்காணித்துக் கொண் டிருந்தார். முன்பு கறுப்பண்ணன் கங்காணிக்குச் சொந்த மாயிருந்த வயல் இப்போது அவருக்குச் சொந்தமாகிவிட் டது. கிராமத்திலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலா ளர்கள் பலர் இப்போது அந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
சிலர் வரம்புகள் கட்டுவதிலும்; வேறுசிலர் ஏற்கனவே கறுப்பண்ணன் கங்காணி நாற்றுப்போட்டு முளைக்க வைத் திருந்த நெற்பயிர்களைப் பிடுங்கி வயலில் நடுவதிலும் முனைந்திருந்தனர். வயலின் மறுபகுதியில் ஒரு சிலர் விதை நெல்லை விதைத்துக்கொண்டிருந்தனர்,
இஸ்தோப்பில் இருந்தபடியே முன்பு தனக்குச் சொந் தமாக இருந்த வயலில் இப்போது கிராமசேவகர் வேலை செய்விப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த கறுப்பண்ணன் கங்காணிக்கு நெஞ்சுக்குள் ஏதோ அடைப்பதைப் போல இருந்தது. அவரது கண்கள் கலங்கியிருந்தன.
தரிசாகக் கிடந்த நிலத்தை நெற்றி வியர்வை சிந்தி மாடாக உழைத்து வயலாக மாற்றியவர் அவர். பெரும் பணத்தைக் கொட்டி வயலைப் பண்படுத்தியவர் அவர். ஆனல், இன்று வேருெருவன் அடாத்தானமுறையில் அந்த வயலின் நடுவே நின்று வேலை செய்விக்கின் முன், அதனைப்

குருதிமல் 79
பார்க்கும் போது அவரது அங்கங்கள் ஆத்திரத்தால் துடித் தன.
கவ்வாத்துக் கத்தியால் அந்த ஆராய்சியின் கைகளைத் துண்டு துண்டாய் வெட்டி விட்டால் என்ன? அவரது கை கள் துருதுருத்தன. உணர்ச்சிகளை ஒருவாறு அவர் கட்டுப் படுத்திக்கொண்டார்.
அவரது மனைவி முதல்நாள் இரவு அவருடன் சண்டை பிடித்துக் கண்ணீர் சிந்தியதை ஒரு கணம் நினைத்துப் பார்த்தார் கங்காணி.
நிலத்தை உழுது பண்படுத்த வேண்டிய செலவுக்காக மனைவியின் சங்கிலியை வட்டிக் கடையில் அற வட்டிக்கு வைத்துத்தான் அவர் பணம் எடுத்திருந்தார்.அவரது மனை விக்குத் தனது நகை மாண்டுவிடப் போகின்றதே என்ற ஏக் கத்தோடு, வயல் பறிமுதலாகிவிட்டதே என்ற கவலையும் சேர்ந்துகொண்டு அவளைப் பெரிதும் கலக்கியது, அவள் தான் என்ன செய்வாள்? கவலைகள் எல்லாம் கோபமாக மாறி,கணவனுடன் சண்டை பிடித்துத் தீர்த்தாள்.
*" என்னுங்க கங்காணி ஒரே யோசனையா ஒக்காந்திட்டு இருக்கீங்க..இன்னிக்கு வேலைக்குப் போகலியா..?" சுரண் டியைக் கழுத்துக்குப் பின்னுல் தோள்பட்டையின் மேல் வைத்தவாறு உள்ளே நுழைந்த குப்பன், கறுப்பண்ணன் கங்காணியின் அருகில் போய் அமர்ந்துகொண்டான்.
**காலம் போற போக்கப் பாத்தா நாமெல்லாம் இனிமே நல்ல முறையில வாழமுடியாது போலயிருக்கு. இது எங்க போயி முடியுமோ தெரியாது" என்ருர் கறுப் பண்ணன் கங்காணி விரக்தியுடன்.
"என்னுங்க கங்காணி ஒரு மாதிரி சலிப்பா பேசு நீங்கவயல் போனதிலயிருந்து ஆளும் ரெம்ப மோசமாப் போயிட்டிங்க."
"அந்த ஆராச்சிப்பய வயலே எடுத்ததிலயிருந்து எனக்குப் பயித்தியம் புடிச்சமாதிரி போயிருச்சு; சாப்பிடக்

Page 92
174 குருதிமலை
கூட மனசு வரல்ல; தூங்கவும் முடியல்ல. நம்ப ஜில்லா பிரதிநிதியையும் டி. ஆர். ஒ. கிட்ட கூட்டிக்கிட்டுப் போய் கதைச்சுப் பார்த்தேன். அவரு என்னடான்ன ஏதேதோ கேள்வியெல்லாம் கேக்கிருரு."
‘‘அப்புடி என்னதான் கேட்டுப்புட்டாங்க?" குப்பன் மேலும் விபரம் அறிய விரும்பி ஆவலுடன் கறுப்பண்ண னின்முகத்தைப் பார்த்தான்.
'அத ஏங்கேக்கிற குப்பன்! நீ அந்த வயல்ல எவ்வளவு காலமா வேலை செஞ்சு வாற? வயல் வச்சிருக்கிறதுக்கு அர சாங்கத்துக்கு வரி கட்டுறியா. ஒனக்கு பிரஜா உரிமை இருக்கா? ஒன்னுடைய வயலென்னு என்ன ஆதாரம் இருக்கு? அப்புடி இப்புடினு கேள்வி மேல கேள்வி கேக் கத் தொடங்கிட்டான்.
** நம்ப வயலை அவுங்க புடுங்கிக்கிட்டதுமில்லாம, அவங்க கேக்கிற கேள்விக்கும் பதில் சொல்ற காலமிது.-- ம்.’’ எனச் சலிப்போடு கூறினன் குப்பன்.
"நான் எல்லாத்தையும் வெவரமா சொன்னேன். பிரசா உரிமைக்கு இப்போதுதான் மனுப் போட்டிருக் கேன். தொரைதான் என்ன வயல் வெட்டிப் போடச் சொன்னுரு. எவ்வளவு காலம் செய்யுரோமுன்னு நான் எழுதி வைக்கல, ரொம்பப் பணமும் அந்த வயல்ல செலவு செஞ்சேன்னு சொன்னேன்; நம்ப பிரதிநிதியும் கூட எவ் வளவோ சொல்லிப் பாத்தாரு, அவுங்க கேட்டாத்தானே! ஒன க்கு பிரசாவுரிமை இல்லாததினுல் நீ இந்தியாவுக்குப் போற ஆள். இந்த நாட்டிலே ஒனக்கு உரிமை இருந்தால் தானே காணி கொடுக்கலாமுனு சொல்லிப்புட்டாங்க. அப்புறம் என்னதான் செய்யிறது? நான் கவலையோட வூட்டுக்கு வந்து ட்டேன்" என்ருர் கறுப்பண்ணன் கங் காணி கவலை தோய்ந்த குரலில்,
'இது பெரிய அநியாயம்" என்ருன் குப்பன்,

குருதிமலை 17s
"அது மட்டுமில்ல குப்பன், நாங்க கதைச்சிட்டு வந்த வுடன் அந்த ஆராய்ச்சிப்பய ஏதோ புத்தகம் மாதிரி பெரிசா கொண்டுகிட்டு உள்ளுக்குப் போனன். ரெண்டு பேரும் சிங்களத்தில பேசிச் சிரிச்சாங்க, அப்பவே நெனைச் சன் இந்த ஆராய்ச்சிப் பயலும் டி. ஆர். ஒ.வும் ஒரே கூட் டாளின்னு."
அப்போது வெளியே விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவன் அங்கு ஓடி வந்தான்.
“தாத்தா, தாத்தா அங்க பாருங்க, ஒங்க வாழைமரங் களை எல்லாம் வெட்டுராங்க."
‘‘அட அநியாயக்கார பசங்களா. ஏண்டா வாழ மரத்த எல்லாம் வெட்டுறிங்க' எனப் பலமாக கூறிக் கொண்டு வயல் பக்கமாக ஒடிஞர் கறுப்பண்ணன் கங் காணி. அவரைத் தொடர்ந்து குப்பனும் சென்றன்.
'ஐயா இது அநியாயமுங்க. நான் எவ்வளவு கஷ்டப் பட்டு உண்டாக்கினேன் தெரியுமா? வயலைத்தர்ன் புடிங் கிக்கிட்டிங்கன்ன . வாழ மரத்தையும் வெட்டுறீங்களே. அதை வெட்டுரதுக்கு பதிலா என்னைய வெட்டுங்க' என் ருர் கறுப்பண்ணன் கங்காணி ஆக்குரோசத்துடன். அவ ரது ரோமங்கள் சிலிர்த்தன. வார்த்தைகள் தடுமாறின.
‘இந்தா கங்காணி சும்மா சத்தம் போட்டு மெரட்ட வேணும். இந்த வாழ மரங்களால நெல்லுக்கு பூச்சி ரொம்ப வாரது. நீ கொண்டு போய் ஒங்க வீட்டுக்குகிட்ட வச்சுக்கோ’ என்று கறுப்பண்ணன் கங்காணியைப் பார்த்து முறைத்தார் கிராம சேவகர்.
‘நானுந்தாங்க வருசக் கணக்கில வயல் செஞ்சிக்கிட்டு இருந்தேன். பூச்சி யொண்ணும் வரல்ல. இப்பதான் ஒங்
களுக்கு புதுசா பூச்சி வருதா? சும்மா அது இதுன்னு சொல்லி அநியாயமா வாழ மரங்களை வெட்டாதீங்க."

Page 93
፲76 குருதிமலை
"இந்தா அதிங் எல்லாங் எங்கிட்ட பேசவாணுங். இத போயி ஒங்க தொரகிட்ட பேசிக்க. நீ நம்பகிட்ட அடிக்கடி சண்டைக்கி வாரது, இனிமே நம்மளோட கரச்சலுக்கு வந்தா பொலிசில சொல்லி ஒன்னை "ரிமான்ட்" பண்ணு வேன்' எனக் கோபமாக பேசிய கிராமசேவகர், மறுபக் கத்தில் விதைத்த நெல்லை லயத்திலிருந்த கோழிகளில் சில மேய்ந்து கோண்டிருநீததைக் கவனித்தார்.
கிராம சேவகரின் ஆத்திரம் கேர்ழிகளின் மேல் பாய்ந் தது. வரம்பின் மேல் இருந்த கல்லொன்றை எடுத்து மேய்ந்துகொண்டிருந்த கோழிகள் மீது பலமாக வீசினர். கோழியொன்று கல்லடி பட்டு சிறகைப் படபடவென்று அடித்துக்கொண்டு ஒரு சுற்றுச் சுற்றி நிலத்தில் வீழ்ந்தது. கிராம சேவகர் அந்தக் கோழியை எடுத்துக்கொண்டு லயத்துப் பக்கமாக வந்தார். *
மரணப்பிடியில் அகப்பட்டு துடித்துக்கொண்டிருந்த அந்தக் கோழியின் காலில் பிடித்துத் தலைகீழாகத் தூக்கிய படி, "இந்தா பாருங்க, இந்த லயத்து ஆளுங்களுக்கு இது தான் கடசி முறையா நாங் சொல்லுறது, இனிமே யாராச்சுங் ஆடு, மாடு, கோழியெல்லாம் வயல் பக்கம் விட்டா. நாங் இப்புடித்தான் அடிச்சி கொல்லுரது" எனக் கோபத்துடன் கூறினர்.
"நாங்க என்னங்கையா செய்வோம். காலையில கோ ழி யத் தொறந்து வுட்டுட்டு வேலைக்குப் போயிடுரோம். அந் தக் கோழிங்களுக்கு என்னுங்க தெரியும், அது போயிட்டு மேயுது." இப்போது லயத்தில் முன்னுல் கூடிய கூட்டத்தி லிருந்து ஒரு குரல் கேட்டது.
*அதிங் எல்லாம் நமக்கு தெரியாது. நீயெல்லாம் கோழிய அடைச்சு தீனியப் போடு"
'இது நாட்டுக் கோழிங்க, இதை அடைச்சிப்போட்டு வளக்க முடியாதுங்க, நீங்க குருவீங்க வராம எப்புடி ஆள்

குருதிமலை 177
போட்டு வெரட்டுறீங்களோ அதேமாதிரி வயலுக்கும் ஒரு ஆள் போட்டு கோழிங்க வராம பாத்துக் கொள் ளுங்க.." எனச் சூடாக அங்கிருந்த பெண் ஒருத்தி கூறி ஞள்.
"நீங்க எல்லாம் நம்மகிட்ட மிச்சம் பேசவானுங்" இனிமே ஆடு, மாடு, கோழி நம்மவூட்டு வயலுக்கு வந்தா, நா எல்லாத்தையும் புடிச்சுக்கொண்டு போறது" என அதி, காரத்துடன் கூறிய கிராம சேவகர் கையில் பிடித்திருந்த கோழியை சுழற்றி லயத்தின் முன்னுல் வீசிவிட்டு வயல்பக் கமாகச் சென்ருர். W
'இது என்ன பெரிய அநியாயமா இல்ல இருக்கு. வழக்கமா யாரும் வயல்ல காவல் போட்டுத்தான் கோழி குருவி வெரட்டுவாங்க. இந்த ஆராய்ச்சி என்னடான்ன பெரிய சட்டமில்லியா போடுமுன். லயத்திலே இனிமே ஒன்னும் வளக்க முடியாது போல இருக்கு" எனக் கூறிஞர் அப்போதுதான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெண் ஒருத்தி.
‘ஏண்டி க்ம்மா பெரிசா , சட்டம் தெரிஞ்சமாதிரி கதைக்கிறீங்க. இன்னிக்கு கோழிய அடைச்சு வைக்கச் சொல்லுருன். நாளைக்கு ஆளுங்களெல்லாத்தையும் அடைச் சுப் போட்டாலும் ப்ோட்டிடுவான். அதுதாண்டி நமக்கு உள்ள சட்டம்' எனப் பலமாகக் கத்தினர் கறுப்பண்ணன் கங்காணி.
**அண்ணே,ஆத்திரப்படாம இருங்க; அவ்வளவு தூரத் துக்குப் போக நாங்க வுட்டுடுவோமா?’ என கறுப்பண் ணன் கங்காணியைச் சாந்தப்படுத்தினன் குப்பன்.
"நீ ஒன்னும் வெளங்காம ஒளற குப்பன், இந்த நாட் டுல நமக்கு என்ன உரிம இருக்கு?நாமெல்லாம் அடிமைக ளாத்தான் இருக்கோம், இன்னும் கொஞ்சக் காலம் போன நாம செத்தாலும் பொதைக்கக்கூட இஷங்க எடம் குடுக்கமாட்டாங்க" எனக் கூறிக் கண் கலங்கிய

Page 94
178 குருதிமலை
கறுப்பண்ணன் கங்காணி, மறுகணம் ஆவேசம் வந்தவ ராகத் தன் இரு கைகளாலும் தலையில் அடித்தபடி ‘இதெல்லாம் நம்ப தலைவிதியடா.நா மெல்லாம் உரிமை யில்லாத நாய்கதாண்டா" எனக் கூறி விம்மத் தொடங் கினர்.
அவரைப் பார்த்தபோது அங்கு நின்ற அனைவரது கண் களும் கலங்கின.
அத்தியாயம் இருபத்தாறு
Dலை நேரம்,மீனச்சி இரவுச் சாப்பாடு சமைப்பதற் கான ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தாள். அப்போது வெளியே இருந்து வந்த மாயாண்டி கோபத்துடன் வீட்டி னுள்ளே நுழைந்தார்.
"இந்தா பாரு மீனச்சி, எங்க அவள் செந்தாமரை?" மாயாண்டியின் குரல் கடுமையாக ஒலித்தது.
"இப்போதாங்க வேலை முடிஞ்சு வந்தவொடன குளிக் கப் போனு;அதுக்கு ஏன் இப்பு டி சத்தம் போடுறீங்க?" என மீனச்சி குழப்பத்துடன் கேட்டாள்.
‘அடியே இன்னிக்கு கண்டக்கைய்ா ஏங்கிட்ட என்னு சொன்னரு தெரியுமா. இவளும் அந்தப் பியசேனப் பய லும் கதைச் சுக்கிட்டு இருந்ததை அவரு கண்ணுல பாத்தா ராண்டி. மலையில வச்சு அத்தனை பேருக்கும் முன்னல சொன்னர டி. இவளால நம்ப குடும்ப மானமே நாசமாப் போவுது' எனப் பலமாகக் கத்தினர் மாயாண்டி,

குருதிமலை 179
"ஐயையோ, கண்டக்கையா வரைக்கும் தெரிஞ்சு போச்சா?இப்ப என்னங்க செய்யுறது?" எனப் பதறினள் மீனச்சி.
“இப்ப என்னடி செய்யுறது? எல்லாம் ஒன்னலதாண்டி வாறது. வேலைக்குக் கூட்டிப்போறபோது ஒன்கூடவே கூட் டிக்கிட்டுப் போன்னு சொன்னேனே, கொஞ்சமாவது நீ அக்கறைப்பட்டியா?" மீனச்சியை மு  ைறத் தா ர் .-63bf Ljחש זח מL
"நான் என்னங்க செய்யுறது? எம்மேல மொறைக்கி நீங்க. அவள் வேலைக்காட்டுல வச்சு வவுத் துவலி,தலைவலினு கங்காணிகிட்ட சொல் லிப்புட்டு வூட்டுக்கு வாழுப்போல அவனைச் சந்திக்கப் போயிரு; நானும் அவ பின்னலையே என் வேலையை உட்டுப்புட்டு சும்மா ஒடியர முடியுமா?"
"அவளுக்கு எவ்வளவு துணிச்சல் பாத்தியா? நம்ம எவ்வளவு சொல்வியும் கேக்காம அந்தப் பியசேனப் பய லோட போய் ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்திருக்கிரு. இன்னிக்கு அவ வூட்டுக்கு வரட்டும், கவ்வாத்துக்கத்தியால அவளை ரெண்டு துண்டா வெட்டிப் போடுறன்' என கத்தி ஞர் மாயாண்டி.
**இங்க பாருங்க. தயவுசெஞ்சு மெதுவாப் பேசுங்க. இதைக் கேட்டு லயத்தில உள்ளவங்களல்லாம் சிரிப்பாங்க" என அவரைப் பார்த்து கெஞ்சும் குரலில் கூறினுள் மீனுட்சி.
* 'இனி என்னடி சிரிக்க இருக்கு. தோட்டமேதான் சிரிப்பா சிரிக்குதடி அவ வூட்டுக்குள்ள நுழையட்டும் அப் புறம் என்ன நடக்குதுன்னு பாரு.." என்ருர் மாயாண்டி ஆவேசமாக.
'நாம அவளை அடிச்சி ஒதைக்கிறதுனல ஒண்ணும் பெரயோசனமில்லீங்க;இப்புடி நாம அடிக்கடி ஏசிக்கிட்டு இருந்தோமு ன ஒருவேளை அந்தப் பயகூட ஓடினலும் ஓடிப்போயிடுவாளுங்க" என்ருள் மீனச்சி கலக்கத்துடன்

Page 95
Z80 குருதிமை
"அப்புடீன்ன அவளை அவேன் கூடவே சுத்திக்கிட்டு இருக்கச் சொல்லுறியா? இவளை என்னதாண்டி செய்யு றது?"
‘'இப்ப இருக்கிற நெலமையில பேசாம அவளுக்கு ஒரு கலியாணித்தைப் பண்ணி வைக்கிறதுதாங்க புத்தி சாலித்தனம். சும்மா சும்மா வூட்டுல சத்தம் போட்டு கிட்டு இருக்கிறதில வேலையில் லீங்க."
'சரி நீ சொல்லுறபடி பாத்தாலும் இப்ப அவளுக்கு கலியாணம் செஞ்சு வைக்கிறதுக்கு ஒரு நல்ல மாப்பிளை பாக்க வேணுமா? இந்தக் காலத்தில நம்ம தகுதிக்கு ஒரு பையன் கெடைக்க வேனுமே. மாப்புளையென்ன கடை யில காசு குடுத்து வாங்கிற சாமான்னு நெனைச் சுக்கிட் டியா?" எனக் கேட்டார் மாயாண் டி.
"அவ்வளவு தூரத்துக்கு ஏங்க போறிங்க. ராசாத் தோட்டத்திலே இருக்கிற ஒங்க தங்கச்சி மவனுக்குத்தான் நம்ம செந்தாமரையை கட்டித்தாங்கனு அடிக்கடி கேட் டுக்கிட்டு இருங்காங்களே, அந்தப் பொடியனுக்கே கட்டிக் குடுத்திட்டாப் போகுதுங்க."
"நீ லேசா சொல்லிப்புட்டே அந்தப் பயலை இவளுக் குப் புடிக்கவேணுமே. அவனைப் பாத்தா ஒரு மாதிரி மக்குப் பயலா இல் லியா இருக்கான்" என்ருர் மாயாண்டி.
"பயலைப் பத்தி என்னுங்க பாக்கிறது. இவலுட்டு நடத்தையே எனக்குப் புடிக்கல்ல. ஏதாச்சும் வயித்திலே வாயில வந்துருச்சின. அப்புறம் தோட்டமே நம்மளைப் பாத்துத் துப்புமே" என மீனுட்சி கவலையுடன் கூறினுள். அவளது கண்களில் நீர் முட்டியது.
'சரி சரி மீனச்சி நீ சொல்லுறபடியே செய்வோம். நான் வாறகெழம ராசாத் தோட்டத்துக்கு போயி அவுங்க கிட்ட பேசி முடிச்சு கிட்டு வாறேன். சட்டுப்புட்டுனு கல் யாணத்த நடத்திப்புடுவோம்" எனச் சிந்தனையுடன் கூறி ஞர் மாயாண்டி.

குருதிமலை ፲!81
"ஏங்க நான் ஒண்ணு கேக்கிறேன், நீங்க அங்கபோய் கல்யாணத்துக்கு வேண்டிய எல்லா வெசயத்தையும் முடிச் சிட்டு வந்தவொடன, இங்க இவ ஏதும் மறுப்பு தெரிவிச்சு கொழப்பம் பண்ணிப்புட்டாளென்ன என்னங்க செய்யு றது? மாப்பிளை வூட்டுக் காரங்களுக்கு என்னு பதில் சொல் லுறது? அப்புறம் நாம தலைநிமிர்ந்துதான் நடக்க முடி யுமா?" எனக் கவலையுடன் கேட்டாள் மீனச்சி.
"என்ன மீனச்சி வெளங்காம கறைக்கிற. நாம ஏன் இவகிட்ட எல்லா வெசயத்தையும் சொல்லணும். நான் ஒரு நாளைக்கு ராசாத் தோட்டத்துக்குப் போயிர்கசியா கல்யா ணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை முடிச்சுப்புட்டு வந்துடு றேன். சரியா சொன்ன தேதிக்கு அங்க விருந்தாளி போற மாதிரி செந்தாமரையையும் அழைச்சுக்கிட்டுபோவோம்’
"ஆமாங்க மாப்பிளை வூட்டுக்காரங்களும் அங்க ரெடியா இருப்பாங்க; அந்தத் தோட்டத்து மாரியம்மா கோயில்லையே தாலிய கட்டிப்புடலாம்' என்ருள் மீனச்சி.
'ரொம்ப ரகசியமாத்தான் இத நாம செய்யனும், வெளியில யாருக்கும் தெரியக்கூடாது." என மாயாண்டி கூறிய போது வெளியே இஸ்தோப்பில் யாரோ நடந்து வரும் அரவம் கேட்டது.
யன்னல் ஊடாக எட்டிப் பார்த்த மீனச்சி 'செந்தா மர குளிச்சிட்டு வந்துட்டா என மெதுவாகக் கூறிவிட்டு தனது வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினள்.
மாயாண்டி அடுப்பின் அருகே சென்று குளிர் காயத் தொடங்கிஞர்.
வேலை முடிந்து வீடுதிரும்பியிருந்த ராக்கு இவர்களது சம்பாஷணையைத் தனது காம்பராவில் இருந்தபடியே கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது உள்ளம் பெரிதும் கலக்கமடைந்தது. செந்தாமரையிடம் இந்த விஷயத்தைக் கூறி, அவளை எப்படியும் இந்தச் சிக்கலிலிருந்து காப் பாற்றிவிடவேண்டுமென அவள் எண்ணிக்கொண்டர்ள்.

Page 96
182 குருதிமலை
அத்தியாயம் இருபத்தேழு
Dடுவத்தில் தொழிலாளர்கள் நிறைந்திருந்தனர்.
முதலில் கொழுந்து நிறுத்துப் பேர்போட்டு முடிந்த ஒருசில பெண்கள் ஏற்கனவே லயத்துக்குத் திரும்பியிருந்த னர். வேறு சிலர் கொழுந்துகளைக் கயிற்றுச் சாக்குகளில் போட்டுக்கட்டி ஸ்டோருக்கு அனுப்புவதற்குத் தயாராக் கிக் கொண்டிருந்தனர்.
சாக்குக்காரன் சுமணபால, கொழுந்து நிறைந்த சாக்குகளை லொறியில் ஏற்றுவதற்கு வசதியாக மடுவத்து வாசலில் எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தான்.
அப்போது தோட்டத்து லொறி மடுவத்தை வந்த டைந்தது. என்றும் இல்லாதவாறு துரையும் அந்த லொறி யில் வந்திருந்தார். அவர் அங்கு வந்ததும், மடுவத்தில் இவ் வளவு நேரமும் நிறைந்திருந்த இரைச்சல் குறைந்து அமைதி நிலவியது. துரை லொறியை விட்டிறங்கி மடுவத் திற்குள் நுழைந்தபோது அவரது முகத்தில் கலக்கம் குடி கொண்டிருப்பதை சிலர் அவதானிக்கத் தவறவில்லை.
கண்டக்டர் எழுந்து துரைக்கு வணக்கம் தெரிவித் தார். அங்கு நின்ற தொழிலாளர்களும் துரைக்கு சலாம் வைத்து மரியாதை செய்தனர்.
துரை ஒரு கணம் அங்கு நின்றவர்களைக் கவனித்து விட்டு மேசையின் பக்கத்திலிருந்த நாற்காலியில் போய் அமர்ந்துகொண்டார்.

குருதிமை 183
துரை தங்களுக்கு ஏதோ சொல்ல விரும்புகின்ருர் என்பதைப் புரிந்துகொண்ட தொழிலாளர்கள் அவர் முன்னே சென்று அடக்கமாக நின்றனர். வீரய்யாவும் ராமுவும் முன் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.
'இப்ப நாங் ஓங்களுக்கு ஒரு முக்கியமான விஷயங் சொல்லத்தாங் வந்தது. தோட்டத்தை இந்த மாசத்தோட மூடச்சொல்லி அரசாங்கத்திலயிருந்து இன்னிக்கு எனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு. வாற மா சத்திலயிருந்து ஒங்க ளுக்கு இந்தத் தோட்டத்தில வேலையில்லை, வேலை நிப்பாட் டிரது.'
துரை இப்படிக் கூறியதும் எல்லாத் தொழிலாளர் களும் திகைத்துப்போய் நின்றனர்.
துரை கூறிய விஷயம் அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி யைக் கொடுத்தது. தோட்டத்தை கொலனிக்குக் கொடுக் கப்போவதை அவர்கள் அறிந்துதான் இருந்தார்கள். அதற்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் திட்ட மிட்டிருந்தனர். ஆனலும் இப்படித் திடீரென ஒரு மாதத் தவணையில் தோட்டத்தை மூடுவார்களென அவர்கள் சிறி தும் எதிர்பார்க்கவில்லை. தோட்டத்தில் தொடர்ந்தும் வேலை நடந்துகொண்டே இருக்கும். அப்போது சிறிது சிறிதாக தொழிலாளர்களைத் தோட்டத்திலிருந்து வெளி யேற்றுவதற்கு முயற்சிப்பார்கள்; அதே வேளையில் குடி யேற்றமும் நடக்கும் என்று தான் அவர்கள் நினைத்திருந் தனர். தோட்டத்தில் வேலையை நிறுத்துவது அவர்களது காலையே வாரிவிடுவது போன்ற நிகழ்ச்சி. வேலை வழங்கா விட்டால் அவர்களுக்கு சாப்பாட்டுப் பிரச்சினை தலைதூக்கி நிற்கும். எதனையும் எதிர்த்துப் போராடுவதற்கு வேண்டிய சக்தி அவர்களுக்கு இல்லாமல் போய்விடும்.
வீரப்யா தன்னை சுதாகரித்துக்கொண்டு ‘என்னுங்க தொர இப்புடித் திடீருனு வந்து சொல்லுறீங்க. நாங்க

Page 97
184 குருதிமலை
பொறந்து வளந்ததே இந்தத் தோட்டந்தானுங்களே: இந்தத் தோட்டத்த நம்பித்தானுங்களே நாங்க எல்லாம் இங்க வேலை செஞ்சிகிட்டு இருக்கோம், வேலைய நிப்பாட் டின நாங்க எப்புடீங்க தொரை பொழைக்கிறது.?" எனப் பணிவாகக் கேட்டான்.
* 'அதிங் நமக்கும் மிச்சம் மனவருத்தங்தான். இப்படி வாறது சொல்லி நமக்குத் தெரியாது தானே. இது "அர சாங்கத்திலயிருந்து நமக்கு சொல்லி இருக்கு. அதனுலதான் வேலை நிப்பாட்டுறது. நீங்கெல்லாம் வேற தோட்டத்துக்கு போகவேணும்."
"அப்புடி திடீருனு போகமுடியாதுங்க. நாங்கெல் லாம் லயத்தில ஆடு, மாடு, கோழி, மரக்கறித் தோட்ட மெல்லாம் வச்சிருக்கோம். ரொம்பக் கஷ்டப்பட்டுத் தாங்க இதெல்லாம் நாங்க செஞ்சோம். இதெல்லாத்தை யும் வுட்டுப்புட்டு நாங்க எப்புடி போறது" எனக் கூட்டத் தில் இருந்து ஒரு குரல் எழுந்தது.
"எங்க பாட்டன் பூட்டன் காலத்திலயிருந்தே நாங்க மாங்காமரம், பெலாக்கா மரம், பாக்குமரம் இன்னும் நெறைய மரங்களெல்லாத்தையும் வச்சுகிட்டு இருக்கோம். நாங்க போற எடத்துக்கு இது எல்லாம் கொண்டு போக முடியுங்களா தொரை?" என்றது இன்னுெரு குரல்.
"அப்புடி தொர சொல்றமாதிரி போறதுன்ன, நாங்க எல்லாம் எந்த தோட்டத்துக்குத்தான் போறது?" என மூலையிலிருந்து ஒரு குரல் கேட்டது.
இவ்வளவு நேரமும் தொழிலாளர்கள் கூறியதையே கேட்டுக்கொண்டிருந்த துரை கூறினர்.
**ஒ. அதுதான் ரொம்ப தோட்டங் இருக்குத்தானே. இந்தியாவுக்கு இப்ப ரொம்ப ஆள் போயாச்சு. அந்தத் தோட்டங்களுக்கு ஒங்களை எல்லாம் அனுப்பறது; இப்ப

நீங்க இங்க ஆடு, மாடு, கோழி எல்லாங் வளக்கிற மாதிரி அங்கையும் வளக்க முடியும். அங்கேயும் ஒங்களுக்கு அந்த மரங்கள் எல்லாம் இருக்குத்தானே."
"நாங்கெல்லாம் இந்தத் தோட்ட த் தி லே யே பொறந்து வளந்து ஒரு குடும்பம் மாதிரி இருக்குருேமுங்க தொர. நீங்க சொல்லுற மாதிரி நாங்க வேற தோட்டத் துக்குப் போறதாயிருந்தா நீங்க எங்களையெல்லாம் பிரிச்சு பிரிச்சுத்தானே அனுப்புவீங்க. அப்புடி எங்களால போய் இருக்க முடியாதுங்க" என்ருன் வீரய்யா உறுதியான குர 'லில்,
**நீங்க சொல்லுற மாதிரி நான் கேக்க முடியாது. அரசாங்கம் சொல்லுறது தான் நான் செய்யுறது, மாசம் முடிய எல்லாரும் தோட்டத்தவுட்டு போயிடணும், அதிக்கு தோட்டக் கணக்கில லொறி எல்லாங் கொடுக்கிறது’ எனக் கூறினர் துரை சற்று விறைப்பான குரலில்,
அப்போது லொறியில் கொழுந்துச் சாக்குகளை ஏற்றி முடித்துவிட்டு வந்த சுமணபால "அரசாங்கம் எடுத்த தில இருந்து தான் இந்தத் தோட்டமே காடாகிப் போய் விட்டதே, இப்போது தொழிலாளர்களின் சுதந்திரத்தி லும் தலையிட்டு அவர்களையும் நாசமாக்கப் போகின் முர்கள் போலத் தெரிகிறது" எனச் சிங்களத்தில் கூறி
துரை அவனை நிமிர்ந்து பார்த்தார். அவனது உணர்ச் சிகளை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. X
"யாரு என்ன சொன்னலும் தொர, நாங்க இந்தத் தோட்டத்தவுட்டு போகமாட்டோம்" எனக் கூறினன் வீரய்யா திடமான குரலில்,
"ஆமாங்க. நாங்க போகமாட்டோம்." எனக் கூட்டத்திலிருந்து பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித் தன.

Page 98
186 குருதிமலை
துரையின் நிலைமை மிகவும் தர்மசங்கடமாகப் போய் விட்டது. ஆனலும் இந்த விடயத்தில் அரசாங்கத்தின் உத்தரவுக்கு மாருகத் தான் நடந்தாலோ அல்லது தொழி லாளர்களோடு கதைத்தாலோ அது தனது தொழிலுக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதை அவர் நன்கு அறிந் திருந்தார். மேலும் தோட்டத்திலே நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மேலிடத்துக்கு அறிவிப்பதற்கு அங்கு அரசியல் ஆதரவாளர்கள் பலர் இருக்கிருர்களென்பதும் அவருக்கு நன்முகத் தெரிந்திருந்தன.
இந்நிலையில் அரசாங்கத்தின் உத்தரவுக்குக் கட்டுப் பட்டு நடப்பதைத் தவிர வேறு வழியேதும் இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை.
நீங்க எல்லாங் சும்மா அரசாங்கத்தோட எதிர்த்துக் கிட்டு இருக்கிறதுல பொரயோசனம் இல்லை. ஒங்களால ஒன்னுங் செய்ய முடியாது. ஒங்களுக்கு அரசாங்கம் எல்லா வசதியுங் செஞ்சிதானே வேற தோட்டத்திக்கி அனுப்பு றது. அப்போ எல்லாங் போகவேண்டியது தானே" எனக் கூறிஞர் துரை.
"இது நாங்க பொறந்த பூமிங்க. இதை வுட்டிட்டு எங்களால போக முடியாதுங்க. இங்கதாங்க நாங்க பொறந்தோம், வளந்தோம், கஷ்டப்பட்டோம். அந்தக் கஷ்டங்களுக்குள்ளேயே வாழ்ந்தோம். இந்த எடத்தவுட்டு நாங்க போகமாட்டோமுங்க தொரை." இப்படிக் கூறும் பொழுது வீரய்யா சற்று உணர்ச்சிவசப்பட்டான்.
தோட்டத்தை விட்டு தொழிலாளர்கள் வெளியேற மறுப்பதற்குரிய காரணம் இப்போதுதான் துரைக்கு நன்கு விளங்கியது. ஆனலும் அவர் மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர். அவற்றை மீறி அவரால் எதுவும் செய்ய முடியாது. சிந்தனையுடன் எழுந்திருந்த அவர் கண்டக்டரின் பக்கம் திரும்பி

குருதிமலை 87 * - ܝܫܚ-- - ܫ - ܀ -܀ ܪ
**இந்த மாத முடிவில் எஸ்டேட் மூடவிருப்பதால் கூடியவரை செலவினங்களை தவிர்க்கவேண்டும். கொழுந் தெடுக்கும் வேலையைத் தவிர மற்றைய வேலைகள் எல்லா வற்றையும் உடனே நிறுத்திவிடவேண்டும்" என ஆங்கிலத் தில் கூறிவிட்டு விருட்டெனச் சென்று லொறியில் ஏறினர். லொறி ஸ்டோர் பக்கமாகப் புறப்பட்டுச் சென்றது.
துரை ஆங்கிலத்தில் கூறியதை கண்டக்டர் தொழி லாளர்களுக்கு தமிழில் விளக்கிக் கூறினர்.
அங்கு நின்ற தொழிலாளர்களின் உள்ளங்கள் நிம்மதி யற்றுத் தவித்தன. எல்லோருக்கும் ஒரே குழப்பமாக இருந் தது. என்ன செய்வதென்றே புரியவில்லை. எல்லோரும் வீரய்யாவை சூழ்ந்துகொண்டு அவனது கருத்தை அறிய முற்பட்டனர்.
"நீங்க எல்லாரும் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுக் கும் வரவேணும். நாங்க இந்தத் தோட்டத்தை வுட்டுப் போற தில் லேனு முடிவு செஞ்சிட்டோம். அந்த முடிவை எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நாங்க மாத்தப்போறதில்ல. எல்லாரும் ஒத்துமையா இருந்து போராடுவோம். நான் இன்னிக்கே நம்ப ஜில்லாவில போய் எல்லா விபரத்தையும் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்லுறன். இப்ப எல் லாரும் அமைதியா வூட்டுக்குப் போங்க" என வீரய்யா கூறினன்.
வீரய்யாவின் கூற்று அங்கு நின்றவர்களுக்கு சிறிது ஆறுதலைக் கொடுத்தது. ஒவ்வொருவராக அவ்விடத்தை விட்டுக் கலைந்தனர்.
வீரப்யா சிந்தனையுடன் தொழிற்சங்கக் காரியால யத்தை நோக்கிப் புறப்பட்டான்.

Page 99
288 குருதிமை
அத்தியாயம் இருபத்தெட்டு
ஸ்டோருக்கு அருகிலுள்ள மலையில் ஆண்களும் பெண்களுமாகப் பலர் கொழுந்து பறித்த வண்ணமாக இருந்தனர். தோட்டத்தைக் கொலனிக்குக் கொடுக்கப் போவதால் இப்போது ஆண்களுக்குக் கொடுக்கப்படும் சில்லறை வேலைகள் யாவும் நிறுத்தப்பட்டிருந்தன. ஆண் களுக்கும் இப்போது கொழுந்தெடுக்கும் வேலையே வழங்கி ஞர்கள்.
அவர்கள் எல்லோரும் கொழுந்து பறித்துக் கொண்டி ருந்த போதிலும், ஒவ்வொருவரது மனதிலும் கலக்கமும், பெரும் சஞ்சலமுமே குடிகொண்டிருந்தன. இன்னும் சிறிது நாட்களில் தோட்டத்தைவிட்டு எல்லோருமே போய்விடவேண்டுமென்று துரை அறிவித்ததிலிருந்து அவர்கள் எல்லோரது உள்ளத்திலும் தங்களது எதிர் காலத்தைப்பற்றிய தெளிவற்ற நிலை உருவாகியிருந்தது.
வழமைபோல கண்டக்டர், கணக்கப்பிள்ளை போன்ற உத்தியோகத்தர்கள் இப்போது மலைக்கு வந்து அடிக்கடி வேலைகளைக் கவனிப்பதில்லை. கண்டக்டர் காலையிலேயே ஆபிசுப் பக்கம் போய்விட்டார். கணக்கப்பிள்ளை மட்டும் கொழுந்து நிறுப்பதற்காக மடுவத்திற்கு வந்துவிட்டுத் திரும்பினர்; அப்போது மேலோட்டமாகக் கொழுந்தெடுப் பவர்களைக் கவனித்துவிட்டு கங்காணியிடம் ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டுச் சென்ழுர்,

குருதிமலை 189
தோட்டத்தில் இப்போது ஒரு தேக்க நிலை ஏற்பட்டி ருந்தது. எவருமே அக்கறையோடு எந்த வேலையையும் க வனிப்பது கிடையாது. தெ (ா ழி லா ள ர் களும், உத்தியோகத்தர்களும் ஏதோ கடமைக்காகத் தத்தமது வேலைகளைச் செய்தனர்.
மலையிலே கொழுந்து பறித்த ஆண்களும், பெண் களும் வாய் ஓயாமல் தோட்டம் கொலனிக்கு எடுக்கப் போவதைப்பற்றியே கதைத்த வண்ணம் இருந்தனர்.
தொழிலாளர்கள் வேலையில் கவனம் செலுத்தாது கதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த வீரய்யா.
"சும்மா சும்மா . ஏன் இதயத்தியே கதைச்சிக்கிட்டு இருக்கீங்க. நாமெல் லாம் ஒத்துமையா இருந்தா, அவுங்க எப்புடி நம்ம ள வேற தோட்டத்திற்கு அனுப்ப முடியும்? நாங்க ஒருபோதும் இந்தத் தோட்டத்தவுட்டு போகப் போறதில் லேனு முடிவு செஞ்சிருக்கோம். இந்த தோட் டத்துல நம்மளக்கு வேல கொடுக்காமப் பட்டினி கெடந் தாலும், நம்ப உயிரைக் கொடுத்துப் போராடுவோம்? என உறுதியான குரலில் கூறிவிட்டு மட்டத்திற்கு மேல் வளர்ந்துபோய் இருக்கும் தேயிலைச் செடியைத் தனது கையில் இருக்கும் கத்தியினுல் மட்டப்படுத்தினன்.
"யார் வந்து எங்களை வெரட்டினுலும், எவர் வந்து எங்களை தோட்டத்துவுட்டுப் போகச் சொன்னலும், யாரும் தோட்டத்தவுட்டு அசையக்கூடாது" எனக் கண் டிப்பான குரலில் கூறினன் கொழுந்தெடுத்துக்கொண்டி ருந்த ராமு. f
மலையில் கொழுந்தெடுத்தவண்ணம் தொழிலாளர்கள் வெகுதூரம் சென்றபோது, ஜீப் வண்டியொன்று பலத்த உறுமலுடன் ஸ்டோர் முடக்கில் வந்தது. அது ஆபீசுப் பக் கத்திலிருந்து வந்துகொண்டிருப்பதை மலையில் நின்ற படியே வீரய்யா கவனித்தான்.

Page 100
190 குருதிமலை
ஜீப் வண்டியின் உள்ளே, முன் ஆசனத்தில் மூ வர் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் பின்னல் கண்டக்ட ரும், பெரிய கிளாக்கரும் இருந்தனர். 'மடுவத்தின் அருகே ஜீப் வண்டி நிறுத்தப்பட்டதும் அதிலிருந்த கண்டக்டர் முதலில் இறங்கினர்.
தூரத்தே கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் தொழி லாளர்களை அவர் ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தார். பின்னர் குறிப்பாக வீரய்யாவைப் பார்த்து அவனை, அருகே வரும்படி கையசைத்தார். வீரய்யா அவசர அவ சரமாகத் தேயிலைச் செடியைப் பிடித்துக்கொண்டு மலையி லிருந்து இறங்கி வந்தான். ராமு வும் கொழுந்துக் கூடையை மலையிலே எறிந்துவிட்டு அவனைத் தொடர்ந்து ஓடி வந்தான்.
*" வீரய்யா இஷங்க எல்லாங் அரசாங்கத்தில உள்ள வங்க, காணி அளக்கிற " டிப்பாட்மெண்டிலயிருந்து வந்தி ருக்காங்க. நம்ப தோட்டத்த கொலனிக்கு கொடுக்கப் போறதுதானே. அதுணுலதான் காணி எல்லாங் அளந்து கணக்குப் பாக்கப் போருங்க."
கண்டக்டர் இப்படிக் கூறியதும் வீரய்யா ஒரு கணம் திகைத்து நின்றன். அவனல் உடனே எவ்வித பதிலையும் கூற முடியவில்லை.
'நீங்க கொழுந்தெடுக்கிற மலையத்தாங் இப்ப அளக் கப் போறது. அதுணுல நீங்க எல்லாங் முப்பதாம் நம்பர் மலைக்குப் போகவேணுங்' எனத் தொடர்ந்து கூறினர் கண்டக்டர்.
'ஐயா எங்களுக்கு ஒரு முடிவும் தெரிவிக்காம இப்புடி நீங்க திடீரென்னு வந்து இந்தத் தோட்டத்தை கூறு போட்டு, மத்தவங்க கையில கொடுக்க நாங்க அனுமதிக்க முடியாதுங்க, நாங்க இஷங்களை காணி அளக்க விடமாட் டோம்' வீரய்யா தன்னைச் சுதாகரித்தபடி கூறினன்.

குருதிமலை 19
*நாங்க இந்தத் தோட்டத்தவுட்டு போகமாட் டோம். யாரும் காணி அளக்கிறதா நெனச்சி தேயில உள் ளுக்கு கால் வச்சா, அப்புறம் என்ன நடக்குமுனு தெரி யாது' படபடப்புடன் கூறினன் பக்கத்தில் நின்றிருந்த . מr(Lח"פ
கண்டக்டருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அப்போது ஜீப்பினுள் இருந்த பெரிய கிளாக்கர், **இந்தா பாரு, நீயெல்லாங் வெளங்காம கதைக்கிறது. இப்ப அரசாங்கம் சொல்லுறபடிதாங் நாங்க செய்ய வேணுங். நீங்க காணி அளக்க வந்தவங்களுக்கு கரச்சல் கொடுக்க வேணுங்' எனக் கூறிக்கொண்டு ஜீப்பிலிருந்து கீழே இறங்கினர்.
*அப்புடி முடியாதுங்கையா. இங்க இருக்கிற தேயிலையெல்லாம் அரசாங்கம்வந்து நட்டு வைக்கல. நாங்க நட்டுவச்ச தேயிலையுங்க. இதஷட்டு நாங்க செத்தாலும் போகமாட்டோம்" எனக் கூறினர் அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்த கறுப்பண்ணன் கங்காணி. உணர்ச்சியால் அவரது ரோமங்கள் துடித்தன.
பெரிய கிளாக்கரைப் பார்த்து கறுப்பண்ணன் கங் காணி கூறியது, கண்டக்டருக்குப் பெருங் குழப்பமாக இருந்தது. எப்போதும் தனது பேச்சுக்குத் தலையாட்டும் கறுப்பண்ணன் கங்காணிகூட மாறிவிட்டது அவருக்குப் பெரும் வியப்பாக இருந்தது.
மேலும் பல தொழிலாளர்கள் இப்போது ஜீப்பின் அருகே வந்து சேர்ந்தனர்.
‘என்ன மிஸ்டர், இந்தத் தொழிலாளர்கள் எல்லோ ரும் ஏன் சத்தம் போடுகிறர்கள்..? அரசாங்கம் சொன்ன படிதானே நாங்கள் செய்யவேண்டும். நாங்கள் எங்களது கடமையைத்தான் செய்யவந்திருக்கிமுேம், எங்களுக்கு

Page 101
193 குருதிமல்
இடைஞ்சல் கொடுக்க வேண்டாமென்று சொல்லுங்கள்" அளக்க வந்த உத்தியோகத்திர்களில் ஒருவர் பெரிய கிளாக் கரைப் பார்த்து ஆங்கிலத்தில் கூறினர்.
இவர்கள் நமது பேச்சைக் கேட்கமாட்டார்கள் போல் தெரிகிறது. இப்போதே நான் ஆபீசுக்குச் சென்று பொலி சுக்கு டெலிபோன் பண்ணி அவர்களை இங்கு வரவழைக் கின்றேன்" என்ருர் பெரிய கிளாக்கர் ஆத்திரத்துடன்.
இவர்களது சம்பாஷணை வீரய்யாவுக்கும் ஒரளவு புரிந்தது.
'அவசரப்பட்டு அப்படியொன்றும் செய்துவிடாதீர் கள். நியாயமான முறையில் இவர்களுடன் பேசிப்பார்ப் போம்” எனக் கூறியபடி ஜீப்பில் இருந்த ஓர் அதிகாரி கீழே இறங்கினர். *
'ஐயா தயவுசெய்து நீங்கள் இன்று காணி அளக்க வேண்டாம். உங்கள் மேலதிகாரியிடம் சென்று இந்தத் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் எல்லாரும் காணி அளப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிருர்கள் என்று கூறுங் கள்." என அந்த உத்தியோகத்தரைப் பார்த்து மிகப் பணிவுடன் கூறினன் வீரய்யா.
"அதெல்லாம் முடியாது. அரசாங்கக் கடமையைச் செய்ய வந்த எங்களை நீங்கள் தடுப்பது மிகவும் பெரிய குற்றம். உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை நீங்கள் வேண்டுமானல் எமது மேலிடத்திற்குத் தெரியப்படுத்துங் கள். எங்களுக்குக் கரச்சல் கொடுக்கவேண்டாங், நாங் கள் காணியை அளக்கத்தான் போகின்ருேம்’ எனச் சினத் துடன் கூறினர் அந்த அதிகாரி.
அவர்களோடு மேலும் கதைப்பதில் எவ்வித பிரயோ சனமும் இல்லையென வீரய்யா உணர்ந்துகொண்டான்.
*சரி ஐயா, நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங் கள். எங்களுக்கும் சில கடமைகள் இருக்கின்றன, நாங்

குருதிமலை 193
கள் அதனைச் செய்தே தீருவோம். அதனல் உங்களுக்குச் சில வேளை சிரமங்களும் நேரிட்லாம். பின்பு எங்களைக் குறை சொல்லாதீர்கள்" என வீரய்யா அடக்கமாகக் கூறி ஞன்.
பின்பு தொழிலாளர்களைப் பார்த்து, "நீங்கள் எல் லாம் பதட்டப்படாம அமைதியா முப்பதாம் நம்பர் மலை யில போய் கொழுந்தெடுங்க. இவங்களோட இப்ப நாங்க கரச்சலுக்குப் போறது முறையில்லை. இஷங்க மேலதிகாரி யின் சொற்படிதானே நடக்கணும். இது பத்தி நாங்க ஆறு தலா யோசிச்சு ஒரு முடிவுக்கு வருவோம்" எனக் கூறி
தொழிலாளர்கள் யாவரும் முப்பதாம் நம்பர் மலையை நோக்கிச் சென்றனர். நில அளவையாளர்கள் சிறிது நேரம் பெரிய கிளாக்கருடனும், கண்டக்டருட னும் உரையாடிவிட்டு, தாங்கள் கொண்டுவந்த கருவிகளு டன் மலையின் பக்கம் சென்றனர்.
பெரிய கிளாக்கரும், கண்டக்டரும் தங்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்தவண்ணம் ஆபீஸ் பக்கம் சென்றனர்.
秀 繫

Page 102
94 குருதிமலை
அத்தியாயம் இருபத்தொன்பது
கிராமத்தின் ஒரமாக உள்ள தோட்டத்து மலைகளில் * ரவுண்ட்" பிந்தியதால் எங்கும் கொழுந்து நிறைந்து பச்சைப்பசேலென காட்சி அளித்தது.
அதிகாலையிலே கிராமத்தில் உள்ளவர்கள் பலர் சாக்குகளுடன் தோட்டத்தை நோக்கி ஒற்றையடிப் பாதையில் படையெடுத்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் கிராமத்தின் எல்லையிலே உள்ள மலைகளில் ஏறி ஆங் காங்கே நின்று கொழுந்தெடுக்கத் தொடங்கினர்.
கொழுந்தெடுத்து முன்பின் பழக்கமில்லாதவர்கள் வயல் வெட்டும் அரிவாளால் கொழுந்தை அரிந்து தமது சிறிய சாக்குகளுக்குள் நிரப்பத் தொடங்கினர். ஒருசிலர் தாங்கள் அணிந்திருக்கும் சாரத்தை முழங்கால் வரை மடித்துக் கட்டிக்கொண்டு கொழுந்துகளை உருவி, சாரத்துக்குள் திணித்தனர்.
எப்படியாவது பெருந்தொகையான கொழுந்துகளைச் சேர்த்து விடவேண்டும் என்பதிலேயே எல்லோரது குறிக்கோளும் இருந்தது. நேரம் செல்லச் செல்ல கிரா மத்தில் இருந்து மேலும் பலர் வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு மிகவும் குதூகலத்துடன் கொழுந் தெடுத்துக் கொண்டிருந்தனர்.

குருதிமலை 195
* டேய். நாங்கள் இப்படி கள வாகக் கொழுந்தெடுப் பதை யாரும் கண்டால் நமக்கு கரச்சல்தான் வரும். யாராவது பார்க்கிருர்களா என்பதைக் கவனிக்க வேண் டும்" என்ருன் பொடிசிங்கோவுக்கு பக்கத்தில் நின்று கொழுந்தை அரிவாளால் அரிந்து கொண்டிருந்தவன்.
*" என்ன நீ இப்படிப் பயப்புடுமுய். நாங்களெல் லோரும் பட்டப் பகலில் துணிவோடு கொழுந்து எடுத் துக் கொண்டு இருக்கிருேம். எவராலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது" என்ருன் பொடிசிங்கோ அலட்சிய
OTs
*" துரை பொலிசுக்கு தகவல் கொடுத்து விட்டால் என்ன செய்வது?" எனக் கேட்டாள் அங்கு கொழுந் தெடுத்துக் கொண்டிருந்த பெண்ணுெருத்தி,
"அம்மே, நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதீங்க, பொலிசுக்காரன் என்ன தேயிலைத் தூ ரிலையா மறைந் திருந்து எங்களைப் பிடிக்கப் போருன். மேல் ரோட்டில் ஜீப் வரும்போதே நமக்கு தெரிந்து விடும். அப்போது எல்லோரும் நாட்டிற்குள் இறங்கி விடலாம் எனச் சண்டிக் கட்டோடு கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தவன் கூறி ஞன்.
"அப்படிப் பொலிசில் பிடித்தாலும் எங்களை என்ன தான் செய்யப் போகிருர்கள். நமது வாக்குமூலத்தை எடுத்துக்கொண்டு அனுப்பி விடுவார்கள்தானே' என்ருன் சற்றுத் தூரத்தில் கொழுந்து எடுத்துக் கொண்டிருந்த மற்ருெருவன்.
**நாட்டில் இருந்து எல்லோருந்தானே இங்கு வந்து கொழுந்தெடுக்கிருேம். எல்லாரையும் பொலிஸ் பிடித்து விட முடியுமா?" என்ருன் பொடிசிங்கோ.
**நாங்கள் என்ன அநியாயமா செய்கிருேம். இந்தத் தோட்டத்தை நமக்குத்தானே பிரித்து கொடுக்கப்

Page 103
96 குருதிமலை
போகிருர்கள். நமக்கு கிடைக்கப் போகும் காணியில் கொழுந்தெடுப்பதற்கு நாம் ஏன் பயப்பிட வேண்டும்’ என்ருன் அரிவாளால் கொழுந்து அறுப்பவன்.
"இந்த தோட்டத்து ஆட்கள் எல்லோரும் நமக்கு காணி கொடுக்க விடாமல் தடுக்கிருர்கள். நாங்கள் செய் கிற செயலில் இருந்தே அவர்கள் தோட்டத்தை விட்டு ஓடி விடவேண்டும்" என்ருன் பொடிசிங்கோ.
தூரத்தில் தெரியும் லயங்களின் முன்னுல் சிறுவர் களும் பெரியவர்களுமாக பலர் கூடி நின்று இவர்கள் கொழுந்தெடுப்பதையே கவனித்தபடி இருந்தனர்.
அதைக் கவனித்த ஒருத்தி "தோட்டத்து ஆட்களெல் லாம் லயத்திலிருந்து பார்த்துக் கொண்டு இருக்கிருர்கள். அவர்கள் போய் துரையிடம் சொல்லுவார்கள்" எனப் பயந்தபடி கூறினுள்.
"துரை வந்தாலென்ன, யார் வந்தாலென்ன இனி மேல் நாங்கள் கொழுந்தெடுப்பதை நிறுத்தப் போவ தில்லை" என்ருன் பொடிசிங்கோ அலட்சியமாக.
பண்டா முதலாளியின் பேச்சைக்கேட்டு எல்லாரும் கொழுந்தெடுக்கிருேமே. நாங்க கொண்டு போகும் கொழுந்து எல்லாவற்றையும் அவர் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வாரா? எனச் சந்தேகத்துடன் கேட்டான் சண்டிக்கட்டோடு கொழுந்தெடுத்தவன்.
“எவ்வளவு கொழுந்து கொண்டு வந்தாலும் வாங் கிறதாகத்தானே அவர் சொல்லி இருக்கிருர், பின்பு நாம் ஏன் தயங்க வேண்டும். முடிந்தவரை எடுத்துக்கொண்டு போவம்" என்ருன் மூலையில் நின்று கொழுந்தெடுத்த வன்.
அப்போது தோட்டத்தில் முன்பு கங்காணியாக வேலை செய்த முதியான்சே, அவர்கள் கொழுந்தெடுக்கும் இடத் திற்கு வந்து சேர்ந்தார். மேல் ருேட்டில் இருந்தபடியே

குருதிமலை 197
கொழுந்தெடுப்பவர்களை அவர் ஒரு தடவை நோட்டம் விட்டார். அவர்கள் கொழுந்தெடுத்த விதத்தைப் பார்த்ததும் அவரது நெஞ்சு பதறியது.
"என்ன நீங்கள் செய்வது பெரிய அநியாயமாக வல்லவா இருக்கிறது. தேயிலையையே நாசமாக்கிவிடுவீர் கள் போல் தெரிகிறது; இப்படி அரிவாளால் கொழுந்து அரிந்தால் தேயிலைச் செடிகள் என்னத்துக்கு உதவும்?" என உரக்கக் கூறினர் முதியான்சே.
"நீங்கள் எங்களுக்குக் கங்காணி வேலை பார்க்க வர வேண்டாம். உங்களுக்குத்தான் எப்போதோ தோட்டத்தில் பென்ஷன் கொடுத்துவிட்டார்களே. நீங்கள் உங்களது வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள்’’ எனச் சூடா கக் கூறினன் பொடிசிங்கோ.
"நான் ஒன்றும் உங்களுக்கு கங்காணி வேலை பார்க்க வரவில்லை. நீங்கள் இப்படித் தேயிலையை நாசமாக்கு வதை என்னுல் பாத்துக்கொண்டு பேசாமல் இருக்க முடியவில்லை" என்ருர் முதியான் சே.
** பண்டா முதலாளி நாங்கள் கொடுக்கும் கொழுந் திற்கு பணம் தருவார். எங்களது கையில் சிறிது பணம் புழங்குவது உங்களுக்கு பொருமையாக இருக்கின்றதா? நீங்களும் வேண்டுமானல் எங்களுடன் வந்து கொழுந் தெடுங்களேன். யார் தடுக்கப் போகின்றர்கள்' என முதி யான் சேயைப் பார்த்துக் கூறினன் அரிவாளால் கொழுந்து அறுப்பவன்.
* உங்களைப்போல் என்னையும் திருட்டு வேலை செய்யச் சொல்கிறீர்களா? எனக்கு ஒருபோதும் உந்தப் புத்தி வராது" எனக் கோபத்துடன் கூறினர் முதியான்சே,
*" தோட்டத்தைத்தான் விரைவில் மூ டி வி ட ப் போகின்ருர்களே, இனி எப்படி கொழுந்தெடுத்தால்தான் என்ன?" என அலட்சியமாகக் கூறினன் பொடிசிங்கோ.

Page 104
198 குருதிமலை
'நீங்கள் சொல்லுவதுபோல் தோட்டத்தை மூடிவிட் டாலும், பின்னர் இந்தப் பகுதியைத்தானே உங்களுக்கு பிரித்து கொடுக்கப் போகின்ருர்கள். இப்போதே இப் படி மோசமான காரியத்தைச் செய்யும் உங்களுக்கு இந்த தோட்டத்தை பிரித்துக் கொடுத்துவிட்டால் கொஞ்சக் காலத்தில் தேயிலைச் செடிகளையே அழித்துவிடுவீர்கள்" என்ருர் முதியான்சே,
அப்போது சண்டிக்கட்டோடு கொழுந்தெடுப்பவன் கூறினன்: "தோட்டத்தை பிரித்துக் கொடுக்கும்போது, கிராம சேவகரிடம் சொல்லி நமது முதியான்சே தாத்தா விற்கு இந்த மலையை கொடுக்கச் சொல்லுவோம்" எனக் கிண்டலாகக் கூறினன்.
எல்லோரும் கொல்லெனச் சிரித்தனர்.
"என்னமோ. நீங்கள் போகும் போக்கு சரியானதா கத் தெரியவில்லை. இது எங்கே போய் முடியுமோ தெரி யாது" எனக் கூறிய முதியான்சே, மேலும் அவர்களுடன் கதைக்க விரும்பாதவராக அவ்விடத்தை விட்டு அகன்ருர்,
இப்போது பலரது சாக்குகளிலும் கெர்ழுந்து நிறைந் திருந்தது. அவர்கள் ஒவ்வொருவராக நாட்டுக்குத் திரும் பத் தொடங்கினர். 4.
米 掌、
பண்டா முதலாளி தனது கடையின் முன்பக்கத்தில் உள்ள கிராதியொன்றில் கொழுந்து நிறுக்கும் தராசு ஒன்றை மாட்டி வைத்துக்கொண்டு புதிதாக வாங்கிய கொழுந்துச் சாக்குகளுடன் அமர்ந்திருந்தார்.
ஒவ்வொருவராக பண்டாமுதலாளியிடம் தாங்கள் எடுத்துக் கொண்டுவந்த கொழுந்துகளை நிறுத்துக் கொடுத் தனர். பண்டாமுதலாளி ஒரு சிறிய கொப்பியில் கொழுந்து கொண்டு வந்தவர்களின் பெயரையும், அவரவர் கொண்டு

குருதிமலை 199
வந்த கொழுந்தின் நிறையையும் குறித்துக்கொண்டு அவர்களை அனுப்பிவைத்தார். "
பின்னர் அவர் கொழுந்தை சாக்கில் திணித்துக் கட்டி, அதனைக் கிராமத்தின் எல்லையில் இருக்கும் தெரு வுக்கு ஆட்கள்மூலம் அனுப்பிவிட்டு தானும் அவர்களைப் பின்தொடர்ந்தார்.
கிராமத்தின் மறுபக்கத்தில் குறைந்த பரப்பளவு கொண்ட சிறிய தோட்டங்கள் இருக்கின்றன; அவை ஒவ்வொன்றும் தனிப்பட்டவர்களுக்கு சொந்தமான தோட்டங்கள். சிறுதோட்டச் சொந்தக்காரர்கள் தமக் கெனத் தனியாக தொழிற்சாலையை நிறுவி, தேயிலை தயாரிக்க முடியாத காரணத்தினுல், தமது தோட்டங் களில் கிடைக்கும் கொழுந்தை வியாபாரிகளுக்கு விற்றுப் பணமாக்குவது வழக்கம். அக்கொழுந்துகளை வாங்குவதற் கென தனிப்பட்ட வர்த்தகர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்கள் தனியார் தோட்டங்களிலிருந்து தாம் வாங்கும் கொழுந்தை லொறிகளில் ஏற்றிச் சென்று தமக்கு வசதி யாகவுள்ள தேயிலைச் தொழிற்சாலைகளில் பெரும் இலா பத்துடன் விற்று வருவார்கள். இப்படியான வர்த்தகர் ஒருவரிடம், தான் சேகரித்துள்ள கொழுந்துகளை விற்பனை செய்வதற்கு ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்தார் பண்டா முதலாளி. அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் அந்த வர்த் தகர் லொறியுடன் வந்து சேர்ந்தார்.
பண்டாமுதலாளி தான் கொண்டுவந்த கொழுந்து களைச் சாக்குடன் நிறுத்து லொறியில் வந்த வர்த்தகரிடம் கொடுத்துவிட்டு அதற்குரிய பணத்தைப் பெற்றுக் கொண் டார். பின்பு ஒவ்வொருநாளும் லொறியை அங்குகொண்டு வரும்படி அவரிடம் பணித்துவிட்டு அவர் வீடு திரும்பினர். அன்று மாலை பண்டா முதலாளியின் கடை ஒரே கல கலப்பாக இருந்தது. பகலில் கொழுந்தை அவரிடம்

Page 105
200 குருதிமலை
கொடுத்தவர்கள் பணத்தை பெறுவதற்காக அங்கு வந்து குழுமி இருந்தனர். na
பண்டாமுதலாளி நோட்டுக்கட்டுக்களை லாச்சிக்குள் திணித்து வைத்துக் கொண்டு குறிப்புப் புத்தகத்தைப் பார்த்து ஒவ்வொரு பெயராக வாசித்து பணத்தை எண்ணி மெனிக்காவிடம் கொடுத்தார். மெணிக்கா புன்சிரிப்புடன் அதனை வாங்கி மீண்டும் சரியாக இருக்கி றதா எனக் கணக்குப் பார்த்துவிட்டு ஒவ்வொருவருக்கும் பணத்தை கொடுத்தாள்.
அன்று கொழுந்து கொடுத்த எல்லோருக்கும் பத்து முதல் பதினைந்து ரூபா வரை பணம் கிடைத்தது. கொஞ்ச நேரத்திற்குள்ளேயே இவ்வளவு தொகைப் பணம் அவர்களுக்கு கிடைத்துவிடுமென அவர்கள் கனவி லும் நினைத்துப்பார்க்கவில்லை. அவர்கள் எல்லோரது உள் ளங்களிலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. எல்லோருக்கும் பணம் கொடுத்து முடிந்ததும் லாச்சியை இழுத்து மூடிக் கொண்டு எழுந்திருந்தார் பண்டா முதலாளி. பண ம் பெற்றுக் கொண்டவர்கள் அவரது கடையிலேயே தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களையும், பலசரக்குகளையும் வாங்கினர். வேறுசிலர் பின்புறமாகச் சென்று கள் குடித்துவிட்டுச் சென்றனர்.
அன்று பண்டா முதலாளிக்கும், மெனிக்காவுக்கும் வியாபாரத்தை கவனிப்பதற்கு பெரும்பாடாகப் போய் விட்டது. ஆட்கள் எல்லாரும் கடையை விட்டு அகன்றதும், பண்டாமுதலாளி கடையை மூடிவிட்டு மேசை அருகே உட்கார்ந்து, அன்று அவருக்குச் சேர்ந்திருந்த பணத்தை எண்ணத் தொடங்கினர். மெணிக்கா அடுப்படிக்குச் சென்று கோப்பி தயாரித்து வந்து அவருக்குக் கொடுத் தாள.

குருதிமலை 20
பணத்தை எண்ணியபடியே, மெனிக்காவின் பக்கம் திரும்பி, "என்ன மெனிக்கே இன்றைக்கு என்ன விசே ஷம். கோப்பி கொண்டு வந்திருக்கிருய்' எனச் சிரிப் புடன் கேட்டார் பண்டாமுதலாளி,
** நீங்கள் ரெம்ப களைத்துப் போனீர்கள்" எனப் புன்னகைத்தாள் மெணிக்கே.
பண்டா முதலாளி பணத்தை எண்ணிப் பார்த்து விட்டு, அதனை லாச்சியில் வைத்துப் பூட்டினர். அவரது உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்தது.
ஒரே நாளில் அவருக்கு இலாபமாக முந்நூறு ரூபா வுக்கு மேல் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு ருத்தல் கொழுந்திற்கும் இருபது சதம் கமிஷன் வைத்தபடியால் இவ்வளவு பெருந் தொகையான பணத்தை அவர் பெற் றிருக்கிருர், உண்மையில் இவ்வளவு இலாபம் கிடைக்கு மென அவர் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்தும் இந்தக் கொழுந்து வியாபாரத்தை நடத்தினுல் மிக விரைவி லேயே அதிக பணத்தை சுலபமாக சம்பாதித்து விட லாமென எண்ணியபோது அவரது உள்ளம் நிறைந்தது.
"நாம் இப்படிக் களவாகக் கொழுந்தை வாங்கி விற் பதஞல் நமக்கு ஏதும் கரச்சல் ஏற்பட்டு விடாதா? எனச் சிந்தனையுடன் கேட்டாள் பக்கத்தில் நின்றிருந்த மெனிக்கே.
அவள் இப்படித் திடீரெனக் கேட்பதன் காரணத்தை புரிந்துகொண்டு சிரித்த பண்டாமுதலாளி, “நாம் எதற் குமே பயப்படத் தேவையில்லை. இந்த விஷயம் தோட் டத்து கண்டக்டருக்கும் பெரிய கிளாக்கருக்கும் நன்கு தெரியும். ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அவர்கள் உடனே எனக்குக் தகவல் கொடுத்து விடுவார் கள். நாம் ஏற்ற நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள லாம்" எனக் கூறினர்.

Page 106
202 குருதிமலை
"பொலிசாருக்கு ஏதும் தகவல் கிடைத்து திடீரென வந்து உங்களைக் கைது செய்துவிட்டால் நான் என்ன செய்வது"? எனக் கலக்கத்துடன் கேட்டாள் மெனிக்கே.
"என்ன மெனிக்கே இப்படி பயப்படுகிருய்? கட்சி அமைப்பாளர் எமக்குச் சார்பாக இருக்கும்போது, நாம் எதற்குமே பயப்படத் தேவையில்லை. அப்படி ஏதும் கஷ் டம் ஏற்பட்டாலும் அவர் ஒருபோதும் எம்மைக் கைவிட மாட்டார்" எனக் கூறிவிட்டு மகிழ்வுடன் மெனிக்கே கொடுத்த கோப்பியை சுவைக்கத் தொடங்கினர் பண்டா முதலாளி.
மெனிக்கேயும் அவரது சந்தோஷத்தில் கலந்து கொண்டாள்.
அத்தியாயம் முப்பது
பூரணச் சந்திரன் மலைமுகட்டின் பின்னலிருந்து வெளியே எட்டிப் பார்த்தான்.லயங்கள் யாவும் சோபை இழந்துபோய்க் கிடந்தன.ஓரிரு காம்பராக்களில் மட்டும் மினுக் மினுக்கென்று விளக்கு எரிவது தெரிந்தது. மடுவத் தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த அரைச் சுவரில், ராமுவும் செபமாலையும் வேறு இரு இளைஞர்களும் ஏறி அமர்ந்திருந் தனர். மடுவத்திலிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் கண்டக் டரின் பங்களாவிலிருந்து மின்விளக்கின் ஒளிக் கீறல் மடு வத்தின் ஒரு பக்கத்தில் கோடுகள் போல் விழுந்திருந்தது. இளைஞர்கள் மடுவத்தின் இருட்டான பகுதியில் அமர்ந்தி ருந்தனர். சில்லென்று வீசிய குளிர் காற்று அவர்களின் உடலைத் தைத்தது.

குருதிமலை 2O3
*" டேய் செபமாலை, பீடி இருந்தா தாடா..சரியான கூதலா இருக்கு. ஒரு 'தம் அடிச்சாத்தான் நல்லா இருக் கும்." என்ருன் ராமு மெல்லிய குரலில்.
செபமாலை தானணிந்திருந்த சேட் பொக்கட்டைத் துளாவிப் பார்த்தவாறு, ‘‘எங்கிட்ட ஒரு துண்டு பீடி கூட இல் லேடா..எனக்கும் பீடியில்லாம ஒரே பைத்தியமா இருக்கு" என வாயைச் சப்புக்கொட்டிக்கொண்டான்.
'இந்த வீரய்யாவைத்தான் இன்னும் காணுேமே. ஏழு மணிக்கெல்லாம் வந்திருவேனு சொல்லிட்டு ஜில்லா வுக்குப் போனன்.இப்ப மணி எட்டாகுது."
'ஜில்லாப் பெரதிநிதி இருக்காரோ இல் லியோ தெரி யாது. எத்தின மணியா இருந்தாலும் அவரைக் கண்டு கதைச்சிட்டுத்தானே வரணும் .இது முக்கியமான விஷயம் இல் லியா?" என்ருன் இதுவரை நேரமும் மெளனமாக இருந்த இளைஞர்களில் ஒருவன்.
அப்போது மடுவத்தின் முன்பாக ரோட்டில் காரொன்று வரும் வெளிச்சம் தென்பட்டது.
"அடே.தொரவூட்டு கார் சத்தம் மாதிரி கேக்குது. நம்மளைக் கண்டா ஏதும் சந்தேகமா நெனப்பாரு; கீழே இறங்கி சுவருக்குப் பின்னுக்கு மறைஞ்சிக்குங்கடா" என செபமாலை உத்தரவிட்டான்.
எல்லோரும் கீழே குதித்துச் சுவரின் பின்னல் மறைந்து கொண்டனர்.துரையின் கார் மடுவத்தை நெருங்கியதும் ஒருகணம் நின்று, பின்பு அதே வேகத்துடன் புறப்பட்டுச் சென்றது.
இளைஞர்கள் மீண்டும் சுவரின் மேல் தாவி ஏறிக்கொண் டனர்.
** தொர படம் பாக்கவோ,கிளப்புக்கோ போயிட்டுப் போருரு. நம்மதான் தோட்டத்தவுட்டு வெரட்டுருங்க

Page 107
204 குருதிமலை
ளேன்னு கவலைப்பட்டுக்கிட்டு கெடக்குருேம்; தொர ஜாலியா சுத்திட்டுப் போருரு" என்ருன் செபமாலை சலிப்புடன்,
"ஆமாடா. அவருக்கென்ன.இந்தத் தோட்டம் இல் லாட்டி வேற தோட்டத்துக்கு தொரையாப் போவாரு. நம்மஞக்குத்தான் எந்த நாளும் கஷ்டம்" எனக் கூறினன் TITOLp.
கீழே ஒற்றையடிப் பாதையில் யாரோ வருவது நிலவு வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது.இளைஞர்கள் ஒரு கணம் தங்களது சம்பாஷணையை நிறுத்திக்கொண்டனர்.
வீரய்யா அந்த ஒற்றையடிப் பாதையிலிருந்து ஏறிக் கரத்த ருேட்டுக்கு வந்து மடுவத்திற்குள் நுழைந்தான்.
**போன வெசயம் எப்பு டி.சரி வந்துச்சா?ஜில்லா வுல என்ன சொன்னங்க?" என ஆவலுடன் வினவினுன் UnTip.
"இன்னும் ஒன்னும் சரியான முடிவு தெரியல்ல. தோட்டத்த கொலனியாக்குற விஷயமா யூனியனில இருந்து எதிர்ப்பு தெரிவிச்சு கடதாசி எழுதியிருக்காங்க. அதற்கு எந்தவித பதிலும் இன்னும் கெடைக்கலியாம். அது னல ஜில்லா பிரதிநிதியால எந்த முடிவுக்கும் வரமுடி யல்ல.மத்தியக் கமிட்டிய கேட்டுத்தான் சொல்லமுடியும் எங்கிருரு" என்ருன் வீரய்யா.
"மத்தியக் கமிட்டியில இருந்து பதில் வாறதுக்கு இடையில தோட்டமெல்லாம் அளந்து கொலனிக்குக் கொடுத்திடுவாங்க போல இருக்கு.அவ்வளவு சுறுக்கா காணி அளக்கிற வேல நடக்குது" எனப் படபடத்தான் Մո (Մ).
"ராமு.நாங்க இப்புடியே காலத்தைக் கடத்திக் கிட்டே போனு சரிவராது.இப்ப நான் ஒரு நல்ல திட்டத் தோடதான் வந்திருக்கேன்.அதை நாங்க ரொம்ப ரகசிய

குருதிமலை 205
W
மாத்தான் செய்யனும்; வெளியில மத்தவங்களுக்குத் தெரிய வந்திச்சின அது எல்லாத்துக்கும் ஆபத்தா முடி யும்" என்ருன் வீரய்யா மெல்லிய குரலில்.
“என்ன விரய்யா சொல்லுற..அப்புடி என்னு திட்டம் போட்டு வச்சிருக்கிற. சொல்லுறத கொஞ்சம் வெளக் கமா சொல்லேன்" எனக் கேட்டான் இளைஞர்களில் ஒருவன்.
“எல்லாரும் எங்கூட வாங்க;அப்புறம் எல்லாத்தையும் வெபரமா சொல்றேன்" எனக் கூறிய வீரய்யா,மடுவத்தை விட்டுப் புறப்பட்டான். இளைஞர்களும் அவனைப் பின் தொடர்ந்து சென்றனர்.
மடுவத்திற்கு அருகில் உள்ள மலையில் கடந்த இரண்டு நாட்களாக நில அளவைத் திணைக்களத்தினர் அளந்து கூனி அடித்திருந்த பகுதியை அவர்கள் அடைந்தனர். வீரப்யா முதலில் ஒர் கூனியைப் பிடுங்கி கையில் எடுத்தான்.
** என்ன வீரய்யா கூனியப் பிடுங்கிறே?" எனக் கேட்டான் ராமு. A
**காணியளக்கிறவுங்க அடிச்சிருக்கிற கூனியெல்லாம் பிடிங்கி வீசுங்க. மாயம் தெரியாம அழிச்சிப்புடுங்க.அப்பு றம் எப்புடித்தான் காணியைப் பிரிச்சிக் கொடுப்பாங்கனு பார்ப்போம்" வீரய்யாவின் குரல் ஆக்ரோஷமாக ஒலித்தது.
‘என்ன வீரய்யா யோசிக்காம செய்யுற;இன்னிக்குக் கூனியெல்லாம் பிடிங்கி வீசிட்டா, நாளைக்கு நம்மளைப் பொலிசுல புடிச்சி அடைச்சிட்டு, அப்புறம் வந்து புதுக் கூனி அடிப்பானுக" எனக் கூறினன் செபமாலை.
"இந்த விஷயத்துலதான் நாம கவனமா இருக் கோனும்;யாரு கூனியப் புடுங்கினங்கனு ஒருத்தருக்குமே தெரியவரக்கூடாது" என்ருன் வீரய்யா நிதானமாக,

Page 108
206 குருதிமலை
"ஆமா வீரய்யா, நீ சொல்லுறது சரிதான். இந்த நேரத்துல கூனி எல்லாத்தையும் புடிங்கி வீசிட்டா,பு டிங்கி வீசினது யாருன்னு சொல்லமுடியுமா? தோட்டத்து ஆளுங்கதான் புடிங்கி வீசிணுங்கன்னு எல்லாத்தையும் பொலிசில கொண்டுபோய் "ரிமான்ட்" பண்ணமுடியுமா?" எனக் கூறிஞன் ராமு அலட்சியமாக.
அப்போது அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன், ‘இன் னிக்கு நாமெல்லாம் பிடிங்கி வீசிட்டா,நாளைக்குக் காணி யளக்கிறவங்க வந்து திரும்ப கூனி அடிக்காமலா இருக்கப் போருங்க?" எனக் கேட்டான்.
"இனிமே காணி அளக்கிறவுங்கள தோட்டத்தில கால் வைக்க வுடுறது இல்ல" எனக் கூறினன் வீரய்யா. அவனது கூற்றில் உறுதி தொனித்தது.
"அது நம்மளால முடியுமா அண்ணே." தேகத்துடன் கேட்டான் செபமாலை.
எனச் சந்
"ஏன் முடியாது. நம்ம எல்லோருமே சேந்து ஒத்து மையா இருந்தா எதையும் சாதிக்கமுடியும். காணி அளக் கிறவங்க வாறப்போ எல்லோருமா சேந்து வந்து அவுங் கள தோட்டத்துக்குள்ள நுழையாம தடுப்போம்" என் ருன் வீரய்யா.
*காணியளக்கிறவங்க எந்த நேரத்தில வருவாங்க? எப்ப வருவாங்கனு நமக்குத் தெரியவா போவுது. நம்ப கிட்ட சொல்லிக்கிட்டா வாழுனுக?" எனக் கேட்டான் ராமு.
"அதுக்கும் ஒரு திட்டம் வச்சிருக்கேன்,காணியளக்கிற வங்க வாறப்போ, அவுங்களை யார் கண்டாலும் ஒடனே மடுவத்துக்கு வந்து பெரட்டு மணிய அடிக்கோனும். மணிச்சத்தம் கேட்டவொடன லயத்துல இருக்கிறவங்க எல்லாரும் ஓடிவந்து அவுங்களை காணி அளக்கவிடாம தடுக்கனும்" வீரய்யா இப்படிக் கூறியபோது நண்பர்

குருதிமலை 20 7
களது மனதிலும் அவன் கூறிய திட்டம் சரியானதாகவே Lull-gil.
**இது ஒரு நல்ல யோசனைதான். நாளைக்கி காலையில லயத்துல இருக்கிறவங்க எல்லாத்துக்கிட்டேயும் சொல் விடுவோம்" என்ருன் செபமாலை உற்சாகத்துடன்,
** இனிமே நாமெல்லாம் ரொம்ப துணிவோடதான் எல்லா வேலையும் செய்யனும்" எனக் கூறிய ராமு, "மொதல்ல எல்லாரும் இந்தக் கூனி எல்லாத்தையும் பிடுங்கி வீசுங்க" எனக் கூறிவிட்டு, அங்கிருந்த கூனிகளை ஒவ்வொன்முகப் பிடுங்கி எறிந்தான். நண்பர்கள் ஒவ்வொரு வராகக் கூனிகளைப் பிடுங்கி வீசத் தொடங்கினர். இப் போது அவர்களுடைய நெஞ்சில் எதற்குமே அஞ்சாத துணிவு துளிர்விடத் தொடங்கியது.
அத்தியாயம் முப்பத் தொன்று
பெரிய பங்களாவின் பக்கத்திலுள்ள மலையில் ஆண் களும் பெண்களுமாகப் பலர் கொழுந்தெடுத்துக்கொண்டி ருந்தார்கள்.வீரய்யா ஒருபுறமும் கறுப்பண்ணன் கங்காணி மறுபுறமும் வேலையைக் கவனித்துக்கொண்டிருந்தனர்.
இரவிரவாகக் கூனிகள் பிடுங்கப்பட்டுவிட்டதைக் கேள்விப்பட்டதும், கண்டக்டர் துரையின் பங்களாவுக்குச் சென்று அவரிடம் விஷயத்தைக் கூறினர். வீரய்யாவும் ராமுவும் சேர்ந்துதான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும் என்று தனக்கு எழுந்த சந்தேகத்தையும் அவர் துரையிடம் கூறத் தவறவில்லை.

Page 109
208 குருதிமலை
முதன்நாள் இரவு, தான் கிளப்புக்குச் சென்று திரும் பும் வேளையில் யாரோ நாலைந்து பேர் மடுவத்தில் இருந்த தும்,தன்னைக் கண்டு மறைந்துகொண்டதும் துரைக்கு நினை வில் வந்தது.
வீரய்யாவும் ராமுவும் சேர்ந்துதான் இந்த வேலை யைச் செய்திருக்கவேண்டுமென துரைக்கும் சந்தேகம் எழுந்தது.இப்படியான காரியத்தை வேறு எவரும் தோட் டத்தில் துணிந்து செய்யமாட்டார்கள் என்பதும் அவருக் கும் தெரியும்.
இந்த விஷயத்தில் தான் ஏதும் நடவடிக்கை எடுக்கா மல்விட்டால், கட்சி அமைப்பாளரின் சந்தேகத்துக்கு ஆளாகவேண்டிவரும் என அவரது உள்ளம் கூறியது. அவ ரது நண்பரான பக்கத்துத் தோட்டத் துரை, "தற்போ துள்ள சூழ்நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குச் சார்பாகவே கடமை புரிவதுதான் புத்திசாலித்தனமா னது" என அவருக்குப் புத்திமதி கூறியதும் அவரது நினை வில் வந்தது.
துரை, கண்டக்டரைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு மடுவத்தின் அருகே இருக்கும் மலைக்குச் சென்று கவனித் தார்;அதிகாலையில் சிறிது மழை பெய்திருந்ததால் கூனிகள் பிடுங்கப்பட்ட அடையாளங்கள் அழிந்துபோயிருந்தன. துரை காரைத் திருப்பிக்கொண்டு தொழிலாளர்கள் கொழுந்தெடுக்கும் மலையை வந்தடைந்தார்.காரை விட் டிறங்கியதும் ,கண்டக்டரிடம் வீரய்யாவை அருகில் வரும் படி அழைக்கச் சொல்லிப் பணித்தார். கண்டக்டர் அழைப் பதை அறிந்து வீரய்யா ஒன்றும் அறியாத பாவனையில் காரின் அருகே வந்தான்.
* யார் அந்தக் கூனியெல்லாம் பிடுங்கி வீசினது?" துரை விறைப்பான குரலில் கேட்டார்.
'எனக்குத் தெரியாதுங்க தொர, இன்னிக்குக் காலை யிலதான் நானும் அதைப்பத்திக் கேள்விப்பட்டேனுங்க."

குருதிமலை 209
கொழுந்தெடுப்பவர்கள் எல்லோரும் துரை, வீரய்யா வுடன் கண்டிப்பான குரலில் பேசுவதை அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
"பொய் சொல்ல வேணும்; அது நீயெல்லாந்தான் சேந்து செஞ்சிருக்கவேணும்" என்ருர் துரை கோபத் துடன்,
"நான் நேத்து தோட்டத்துக்கு விருந்தாளியா போயி ருந்தேனுங்க.இன்னிக்கு காலையிலதாங்க தொர வந்தேன். தொர அநியாயமா என்னைய சொல்லுறீங்க" என் முன் வீரய்யா ஒன்றும் அறியாதவன் போல.
"எங்கே ஒன் கூட்டாளி ராமு.அவனுந்தானே சேந்து இந்த வேலை செஞ்சது?" Ꮠ
"அவன் இன்னிக்கு வேலைக்கு வரல்லீங்க, அவனுக்கு இந்த ரெண்டு நாளா சரியான வவுத்து வலிங்க.படுத்தி ருக்கானுங்க.." என்ருன் வீரய்யா பணிவான குரலில்,
*நீ மிச்சம் பொய் பேசுறது.இந்தக் கூனியெல்லாம் புடுங்கி வீசிறது மிச்சங் பெரிய குத்தம்; நீதானே இப்ப தோட்டத்தில தலைவரு. ஒன்னைத்தான் பொலீசில புடிச் சுக் கொடுக்கிறது" என்ருர் துரை மிகவும் கோபமாக,
*தோட்டத்தில தலைவரா இருந்தா...நான் செய்யாத குத்தத்துக்கு என்னைப் பொலிசுல புடிச்சுக்குடுக்க முடியுங் களா துரை" - வீரய்யா துரையைப் பார்த்துக் கேட்டான்.
அந்த வேளையில் மடுவத்தின் பக்கமிருந்து 'டாண். டாண்." என பிரட்டு மணியின்ஓசை பலமாக ஒலித்தது.
மறுகணம் வீரய்யா மலையிலே கொழுந்தெடுத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களைப் பார்த்து, ‘எல்லாரும் மடுவத்துக்கு வாங்க" எனப் பலமாகக் கூறிக்கொண்டே மடுவத்துக்கு ஓடினன்.

Page 110
210 குருதிமலை
மலையில் நின்ற தொழிலாளர்கள் எல்லோரும் மந்தி ரத்தால் கட்டுண்டவர்கள் போன்று, வீரய்யாவின் சொல் லுக்குக் கீழ்ப்படிந்து தமது கொழுந்துக் கூடைகளுடன் மடுவத்தை நோக்கி விரைந்தனர்.
துரையும் கண்டக்டரும் திகைத்துப்போய் நின்றனர். "ஏய்.ஏய்.ஏன் எல்லாம் வேலை செய்யிறதை விட் டுட்டு எங்க ஒடுறது? நீங்க நெனைச் சபாட்டுக்கு இப்புடிச் செஞ்சா எல்லோருக்கும் நான் வேலை நிப்பாட்டிறது" துரை தன்னைச் சுதாகரித்துக்கொண்டு பெரிதாகக் கத்தி ஞர். ஆஞல்,எவருமே அதனைக் காதில் வாங்கிக்கொண்ட வர்களாகத் தெரியவில்லை. கோபத்தினுல் துரையின் உட லெல்லாம் நடுங்கியது.
ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததுபோல நாலாபுறமும் இருந்து தொழிலாளர்களும் முதியவர்களும் சிறியவர்களும் பெண்களும் மடுவத்தை நோக்கி விரைந்து வந்தனர்.சில நிமிடங்களில் மடுவத்தின் முன்னல் மக்கள் சமுத்திரம் போலக் கூடிவிட்டனர். அதைப் பார்த்த போது வீரய்யாவின் உள்ளம் மகிழ்ச்சியினுல் துள்ளியது. தொழிலாளர்கள் தனக்கு ஒத்துழைப்புத் தருவதற்கு இப் போது தயாராகிவிட்டார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான். அவர்களிடையே இருந்த பய உணர்ச்சி யெல்லாம் மறைந்து இப்போது எதற்கும் துணிந்தவர் களாக மாறிவிட்டதை வீரய்யா கண்டுகொண்டான்.
தூரத்திலே ஸ்டோர்ப் பக்கமாக நில அளவையாள ரின் ஜீப் வந்துகொண்டிருப்பதைக் கண்டதும், செபமாலை பிரட்டு மணியை அடித்து ஓசை எழுப்பியிருந்தான். ஜீப் வண்டி மடுவத்துக்கு வந்து சேருவதற்கு முன்னரே இவ் வளவு தொகையான மக்கள் அங்கு வந்து சேருவார்கள் என்பதை அவன் எதிர்பார்க்கவேயில்லை.
வேகமாக வந்துகொண்டிருந்த ஜீப், மடுவத்தின் ஒர மாகப் பாதையை மறைத்துக்கொண்டிருந்த சனங்களைக்

குருதிமலை 21
கண்டதும் "பிரேக்" போட்டு நிறுத்தப்பட்டது.அதில் இருந் தவர்கள் திகைப்புடன் சனக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது துரையும் கண்டக்டரும் காரில் அந்த இடத்துக்கு வந்துசேர்ந்தனர்.
டிரைவர் ஜீப் வண்டியின் "ஹோணை’ப் பலமாக அழுத்தினன். எவருமே தாங்கள் நின்ற இடத்தைவிட்டு அசையவில்லை.
வீரப்யா முன்னுல் சென்று ஜீப்பில் உட்கார்ந்திருக்கும் உத்தியோகத்தர்களைப் பார்த்து, "நாங்க இனிமே ஒங்களை காணியளக்க விடமாட்டோம்;தயவுசெஞ்சு நீங்கெல்லாம் திரும்பிப் போங்க" எனக் கூறினன்.
துரையும் கண்டக்டரும் காரிலிருந்து இறங்கி ஜீப் நிற் கும் இடத்திற்கு வந்தனர்.
ஜீப்பில் இருந்த ஒருவர். "இவர்கள் எல்லோரையும் எங்களுக்கு வழிவிட்டு விலகச் சொல்லுங்கள். நாங்கள் எங் களது கடமையைச் செய்யவேண்டும்" எனத் துரையிடம் ஆங்கிலத்தில் கூறினர்.
அதைக் கேட்ட துரை, வீரய்யாவின் பக்கம் திரும்பி, "நீங்க இவங்களை எல்லாம் தடுக்கவேணும். அவுங்க வேலை யைச் செய்யட்டும்; கொழப்பம் பண்ணுதீங்க" எனக் கோபத்துடன் கூறினர்.
"நாங்க அவங்களை காணியளக்கவிடமாட்டோம்" எனக் கூறினன் அப்போதுதான் அவ்விடம் வந்துசேர்ந்த թո (լք.
"இப்புடி நீயெல்லாம் கொழப்பம் பண்ணின நான் பொலீசுக்குச் சொல்லி, ஒங்களை எல்லாம் "ரிமாண்ட்" பண் ணுறது" என்ருர் துரை சிடுசிடுப்புடன்.
"ஆமாந் தொர. அப்புடிச் செய்யுங்க. ஒங்களுக்கு முடிஞ்சா தோட்டத்துல இருக்கிற எல்லாரையும்

Page 111
212 குருதிமலை
கொண்டுபோய் "ரிமாண்ட்" பண்ணுங்க" என்ருன் 6 Tuiù unr.
" "எல்லாரையும் பொலிசுல அடைச்சிட்டு வேணு முன்னு இவங்க வந்து காணி அளக்கட்டும்" எனக் கூறி ணுன் பக்கத்தில் நின்ற செபமாலை.
* கடைசியா நான் கேக்கிறது.நீ எல்லாம் இந்த எடத்தைவுட்டிட்டு போறதா இல்லையா?" எனத் துரை அதட்டிக் கேட்டார்.
‘முடியாது’ என்ற பாவனையில் வீரய்யா தலையசைத் தான்.அங்கு நின்ற எல்லோரும் ஒரே குரலில் "நாங்கள் காணியளக்க விடமாட்டோம்" என முழங்கினர். துரைக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. அப்போது ஜிப்பில் உட்கார்ந்திருந்த ஓர் உத்தியோ கத்தர், 'இவர்களோடு கதைப்பதில் பிரயோசனம் இல்லை.நாங்கள் திரும்பிச் செல்கிருேம்.மீண்டும் சில நாட்களில் வேண்டிய ஏற்பாடுகளுடன் வருகிருேம்" எனக் கூறினர்.
சாரதி ஜீப்பை பின்பக்கமாக ரிவேஸில் செலுத்தினன்.
துரை கோபத்துடன் சென்று காரில் ஏறி பலமாகக் கதவைச் சாத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
எல்லாவற்றையும் இதுவரை நேரமும் மெளனமாக நின்று கவனித்துக்கொண்டிருந்த கண்டக்டர், "இவர்க ளுக்கு இவ்வளவு துணிவு ஏற்பட்டுவிட்டதா? இன்றே கட்சி அமைப்பாளரிடம் சென்று நடந்தது எல்லாவற்றை யும் கூறி, இவர்களை மட்டந்தட்டுவதற்கு ஏதாவது ஏற் பாடு செய்யவேண்டும்" என்ற எண்ணத்துடன் அவ் விடத்தைவிட்டு அகன்ருர்.

குருதிமலை 413
அத்தியாயம் முப்பத்திரண்டு
1ண்டா முதலாளியின் வீட்டில் அன்று ஒரு கூட்
டம் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. முதலாளி தான் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். அரசாங்கத் தினுல் இனமாக வழங்கப்படவிருக்கும் காணிக்கு மனுப் போட்டவர்கள் எல்லோரும் கூட்டத்துக்குத் தவருது சமு கம் அளிக்கும்படி அவர் அறிவித்தல் கொடுத்திருந்தார். கூட்டம் மாலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கப்படும் என ஒழுங்கு செய்யப்பட்டிருந்தபோதிலும், குறிப்பிட்ட நேரத் திற்கு முன்பாகவே பலர் முதலாளியின் வீட்டில் வந்து கூடிவிட்டனர். சுமணபாலாவும், பியசேனவும் குறிப் பிட்ட நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர்.
வயலில் நெற்பயிர்களை பூச்சிகள் தாக்கியிருந்ததால், கிராம சேவகர் அவற்றிற்கு தொழிலாளர்களைக்கொண்டு மருந்து அடித்துவிட்டு, நாட்டிலிருக்கும் தனது வீட்டிற் குச் சென்று மனுப்பத்திரங்களின் பிரதிகளை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாகக் கூட்டம் நடக்கும் இடத் திற்கு வந்தார்.
'வாருங்கள் ஜி. எஸ். மாத்தியா. உங்களது வர வைத்தான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிருேம்" எனக் கூறி பண்டா முதலாளி அவரை வரவேற்று அங்கிருந்த கதிரையொன்றில் அமரும்படி கூறினர்.

Page 112
214 குருதிமலை
‘எப்படி எல்லாரும் வந்துவிட்டார்களா?" என க் கேட்டபடி அங்கிருந்தவர்களை ஒரு தடவை நோட்டம் விட்டார் கிராமசேவகர்.
* மனு அனுப்பியவர்களில் ஒரு சில பெண்கள் வர வில்லை. ஆணுலும் அவர்களது சார்பில் அவர்களது குடும் பத்திலிருந்து வேறு ஆட்கள் வந்திருக்கின்றனர்."
'அப்படியானல் நாம் கூட்டத்தை ஆரம்பிக்கலாம்" என்ருர் கிராமசேவகர்.
'நாம் இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்வதற்கு முக் கிய காரணம் என்னவென்முல், அரசாங்கத்திற்கு நாங் கள் மனு அனுப்பியிருந்தபோதிலும் நமக்குக் காணிகிடைப் பதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இது விஷய மாக உங்களிடம் கதைத்து உங்களது அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள விரும்புகின்ருேம்.'
பண்டா முதலாளி இப்படிக் கூறியதும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
"அப்படி என்ன பிரச்சினைதான் இப்பொழுது ஏற் பட்டு இருக்கின்றது?" கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந் ჭნჭნl.
'அதாவது, மேலிடத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற் படவில்லை. அவர்கள் எமக்குக் காணி தருவதற்கு ஏற்ற முயற்சிகள் எடுத்துக்கொண்டு தான் இருக்கின்ருர்கள். ஆனல் தோட்டத் தொழிலாளர்கள்தான் அதற்குத்தடை யாக இருக்கின் ருர்கள்" என்ருர் பண்டா முதலாளி.
"ஆமாம்; நில அளவையாளர் அடித்து வைத்த கூனி களையெல்லாம் அவர்கள் பிடுங்கி வீசிவிட்டார்களாம். நேற்று காணியளப்பதற்கு உத்தியோகத்தர்கள் வந்த போது கூட தொழிலாளர்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவர்களைத் தடுத்துவிட்டார்களாம்" என்ருன் முன் பகுதியில் நின்ற பொடிசிங்கோ.

குருதிமலை 215
** தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டுப் போவதில்லை என்ற தீர்மானத்தில் இருக்கின்றர்கள். நாம் இந்த விஷயத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் எமக்குக் காணி கிடைப்பது சந்தேகந்தான்" என்ருர் கிராமசேவகர்.
"நாங்கள் அதற்கு என்ன செய்யமுடியும்? அரசாங்கம் அல்லவா அதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என் முன் பொடிசிங்கோவின் அருகில் நின்றவன்.
"எல்லாவற்றிற்கும் நாம் அரசாங்கத்தையே எதிர் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இவ்வளவு நாளாகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு இப்போதுதான் காணி கிடைக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அத னைத் தடுப்பவர்களை நாம் சும்மா விட்டுவைக்கக்கூடாது" என்ருன் அருகில் இருந்தவர்களில் ஒருவன்.
"நீங்கள் தோட்டத்தொழிலாளர்களைப் பற்றித் தவரு கப் புரிந்திருக்கிறீர்கள். எமக்குக் காணி கிடைப்பதைத் தடுப்பது அவர்களது நோக்கமல்ல. தங்களைத் தோட்டத்தி லிருந்து வெளியேற்றவேண்டாமென்றுதான் அவர்கள் போராடுகின்றனர்" என்ருன் இதுவரை நேரமும் மெளன மாக நின்ற சுமணபால.
‘'நீ முட்டாள்தனமாய் பேசுகிருய். உனக்கு அனுப வம் போதாது. எமக்குக் காணி கிடைப்பதைத் தடுப்பது அவர்களது நோக்கம் இல்லையென்றல் அவர்கள் ஏன் கூனி களைப் பிடுங்கி வீச வேண்டும்?. காணியளப்பவர்களை ஏன் தடுக்கவேண்டும்?." என்றர் பண்டா முதலாளி பட படப்புடன்.
அப்போது சுமணபாலாவின் அருகே நின்ற பியசே கூறினன்:- *
"நீங்கள் கோபத்தில் உண்மை நிலையைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றீர்கள். ஆண்டாண்டுகால

Page 113
216 Հ குருதிமலை
மாக எங்களோடு ஒற்றுமையாக வாழ்ந்த தொழிலா ளர்கள், இப்போது எங்களுக்குக் காணி கிடைப்பதற்கு ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார்கள். தங்களைத் தோட்டத்தைவிட்டு வெளியேற்றுவதற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவே அவர்கள் அப்படிக் கூனிகளைப் பிடுங்கி வீசினர்கள். அதனை நீங்கள் தவருகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்' அவனது குரல் கணிரென ஒலித் 占gi。
"தோட்டத்தொழிலாளர்கள் என்ன நோக்கத்தோடு கூனிகளைப் பிடுங்கினர்கள் என்பதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனல் அவர்கள் அப்படிச் செய்வதால் எங் களுக்குக் காணி கிடைக்காமல் போய்விடுமல்லவா?" என் முன் பொடிசிங்கோ பலமாக,
"இது எங்களுடைய நாடு. நாமெல்லாம் மதிப்பிற் குரிய பிரஜைகள். எங்களுக்குக் கிடைக்கப்போகும் சலு கைகளுக்கு யார் தடையாக இருந்தாலும் நாம் இலேசில் விட்டுவிடக் கூடாது" என்ருர் பண்டா முதலாளி.
"இது நமது நாடுதான். அதை நான் மறுக்கவில்லை. ஆனலும் காடாகக் கிடந்த மலைகளை வெட்டி, வளம் படுத்தி தேயிலைச் செடிகளை நாட்டி வளர்த்தெடுத்தவர் கள் அந்தத் தோட்டத் தொழிலாளர்கள்தான். அவர் களுக்கும் இந்த மண்ணிலே பற்று இருக்கத்தான் செய் யும். அவர்களை விரட்டிவிட்டுத்தான் நாம் காணி பெற் றுக்கொள்ளவேண்டுமா?" எனக் கேட்டுவிட்டு எல்லோரை யும் ஒரு கணம் பார்த்தான் சுமணபால.
*சுமணபாலா சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது" என்ருர் இதுவரை நேரமும் அமைதியாக நின்று அங்கு நடந்த சம்பாஷணைகளைக் கேட்டுக்கொண்டி ருந்த முதியான்சே,
"தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு கூலி களாகத்தானே கொண்டுவரப்பட்டார்கள். ஊதியம் பெற்

குருதிமலை 217
றுக்கொண்டுதானே அவர்கள் வேலை செய்தார்கள். எப் படி அவர்கள் உரிமைகொண்டாடமுடியும்? இது அநியாய மாகவல்லவா இருக்கிறது" எனப் படபடத்தான் அங்கு நின்ற வேருெருவன்.
‘அவர்கள் இந்த நாட்டுக்கு கூலிகளாக வந்திராவிட் டால் இந்தத் தேயிலைச் செடிகளையே நாம் இங்கு பார்க்க முடியாது. நூறு வருடங்களுக்கு மே லா. க த் தமது உழைப்பை அர்ப்பணித்து, இந்தத் தேயிலைச் செடிகளை வளர்த்தெடுத்த தொழிலாளர்களை இன்னும் நாம் கூலிகள் என்று உதாசீனப்படுத்துவதுதான் மிகப்பெரிய அநியா யம்'என்ருன் பியசேன.
‘எங்களது மூதாதையர்களிடமிருந்து வெள்ளையர் கள் பிடுங்கிக்கொண்ட காணியை இப்போது அரசாங் கம் எமக்குத் திருப்பி அளிக்க முன்வந்துள்ளது. அதனைத் தோட்டத் தொழிலாளர்கள் தடுப்பதில் எவ்வித நியாய மும் இல்லை. இந்தக்கொடுமையை நாம் கண்ணுல் பார்த் துக்கொண்டிருக்கமுடியாது" எனக் கூறினன் பொடி சிங்கோ. அவனது முகத்தில் கோபம் தெறித்தது.
'நமது காணியில், நா ட் டு உரிமையே இல்லாத தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கிறது மல்லாமல் அடாத்தான முறையில் நடக்கவும் தொடங்கிவிட்டார் கள். இதனைப் பார்த்துக்கொண்டு இருக்க நாம் என்ன கோழைகளா..?" மூலையில் நின்ற இளைஞன் கூறினன். அவனது உடல் உணர்ச்சிவசத்தால் நடுங்கியது,
'நீங்கள் எல்லோரும் ஆத்திரத்தில் அறிவை இழக்கின் நீர்கள். சில அரசியல்வாதிகள் தமது செல்வாக்கை அதி கரித்துக்கொள்வதற்காக, பிழையான வழியில் முயற்சி செய்கின்றர்கள். எங்களுக்கு வாக்குரிமை இருப்பதனல் அடுத்த தேர்தலிலும் தமது பதவியைக் காப்பாற்றும் எண் ணத்துடன் எமக்கு சலுகைகள் செய்ய முனைகிருர்கள். நமக்கு இருப்பதுபோல் தொழிலாளர்கள் எல்லோருக்கும் வாக்குரிமை இருந்தால், ஒருபோதும் அவர்களை தோட்

Page 114
218 குருதிமலை
டத்தைவிட்டு விரட்டவேமாட்டார்கள், அவர்களுக்கும் ஏதாவது சலுகை செய்ய முயற்சிப்பார்கள்" என்ருர் முதி யான்சே,
** தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றுவது உங்களுக்கு விருப்பமில்லையென்ருல் நீங்கள் ஏன் காணிக்கு மனுக்கொடுத்தீர்கள்?" என்ருர் கிராமசேவகர்.
** தோட்டத் தொழிலாளர்களை விரட்டிவிட்டுத்தான் காணி தரவேண்டுமா? தரிசாகக் கிடக்கும் காணியை நமக் குத் தரலாமே" என்ருன் பியசேன.
"இவன் எப்பொழுதும் தோட்டத் தொழிலாளர். களின் சார்பாகவே பேசுகிருன். இவன் நமது ஆளாக இருந்துங்கூட, இவனுக்கு இனப்பற்றுக் கொஞ்சங்கூட இல்லை. இவன் நமது சமுதாயத்தைக் காட்டிக்கொடுக்கும் கோடரிக்காம்பாக மாறினுலும் மாறிவிடுவான்' எனக் கூறிவிட்டு பண்டா முதலாளி தனது பற்களைக் கடித்துக் Gosinrør intrř.
"முதலாளி. அவன் அப்படித்தான் கதைப்பான் அவன் அப்படிக் கதைப்பதற்கு வேறு ஏதாவது சொந்தக் காரணம் இருக்கலாம் அல்லவா?" எனக் கிண்டலாகக் கூறிவிட்டுச் சிரித்தான் பொடிசிங்கோ.
"ஆமாம் தோட்டத்தொழிலாளர்கள் போய்விட்டால் அவனுக்கும் சில பாதிப்புகள் ஏற்படலாமல்லவா..? எனக் கூறினன் பொடிசிங்கோவின் அருகில் நின்றவன்.
"எல்லோரும் 'கொல்'லெனச் சிரித்தனர். "அவன் நியாயத்தைக் கூறும்போது, அதனை ஏற்றுக் கொள்ளும் அறிவு உங்களுக்கு இல்லை; குதர்க்கம் பேசத் தான் உங்களுக்கு நன்ருகத் தெரியும்" எனப் படபடப் புடன் கூறினர் முதியான்சே,
"நாங்கள் ஒன்றும் குதர்க்கம் பேசவில்லை. நாங்கள் எல்லோரும் ஒருமுகமாக நிற்கும்போது நீங்கள் தான் குறுக்கே இழுக்கின்றீர்கள்' என்ருர் கிராமசேவகர்.

குருதிமலை 219
**நாங்கள் ஒன்றும் உங்களுக்குக் குறுக்கே நிற்கவில்லை, நியாயத்தைத்தான் கூறினேம்" என்ருன் சுமணபாலா,
"அப்போ நாங்கள் எல்லோரும் நியாயமற்றவர்கள் என்ரு சொல்லுகின்ருய்? உங்களைப்போன்று எமது சமுதா யத்துக்கு மாருக நடக்கும் புல்லுருவிகளல்ல நாங்கள். நீங் கள் பேசுவதை நாங்கள் ஏற்கத் தயாராகவும் இல்லை" என்ருர் பண்டா முதலாளி.
"நீங்கள் என்ன அநியாயத்தையாவது செய்யுங்கள். அதற்கு நாங்கள் உடந்தையாக இருக்கமாட்டோம். இங்கு இனி நாங்கள் நிற்கவும் விரும்பவில்லை" எனக் கூறிய பிய சேன, விருட்டென அவ்விடத்தை விட்டு வெளியேறினன். அவனைத் தொடர்ந்து சுமணபாலாவும் வெளியே சென் முன்.
**அவர்கள் போனல் போகட்டும். நாம் எப்படியும் தோட்டத் தொழிலாளர்களை விரட்டியேதிரவேண்டும்’ என்ருன் பொடிசிங்கோ.
** தோட்டத் தொழிலாளர்களோடு போராடி ஏதா வது குழப்ப நிலை ஏற்பட்டுவிட்டால் பின்பு என்ன நடக் குமோ சொல்லமுடியாது. சில வேளை அரசாங்கம் காணி கொடுப்பதை நிறுத்தினுலும் நிறுத்திவிடவுங்கூடும்"என யோசனையுடன் கூறினர் முதியான்சே.
"நீங்கள் இப்படிப் பயந்து நடுங்கினல் நாமெல்லாம் என்ன செய்வது? நீங்களும் வேண்டுமானல் அவர்களைப் போல் ஒதுங்குங்கள். நாங்கள் போட்ட திட்டத்தை நிறை வேற்றியே தீருவோம்" என்ருர் கிராமசேவகர்.
இப்போது முதியான்சேயும் அவ்விடத்தில் நிற்க விரும் பாதவராக வெளியே சென்ருர்,
அங்குவந்து இருந்தவர்கள் எல்லோரும் தங்களது திட் டத்தை எப்படி நிறைவேற்றவேண்டும் என்பதை வெகு நேரமாகக் கலந்தாலோசித்துவிட்டு, அவ்விடத்தைவிட்டு அகன்றனர்.

Page 115
220 குருதிமலை
அத்தியாயம் முப்பத்துமூன்று
விழுக்கற்பாறை லயத்தின் பக்கமாக உள்ள மலையில் தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்தெடுத்துக் கொண் டிருந்தனர். சிறிது நேரத்தில் கிராமத்திலுள்ளவர்களில் பலர் ஆண்களும், பெண்களுமாகப் பெருங் கூட்டமாகத் தொழிலாளர்கள் கொழுந்தெடுத்துக் கொண்டிருக்கும் மலையை வந்தடைந்தனர்.
களவாகக் கொழுந்தெடுப்பதற்கு எதிராக எவரும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காததினுல் கிராமத்தவர் களுக்கு இப்போது துணிவு அதிகரித்திருந்தது ; அவர்கள் தோட்டத்தின் உள்ளே அதிக தூரம் வந்து கொழுந்துபறிக் கத் தொடங்கியிருந்தனர்.
நாட்டிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் மலையின் மறுபக்கத்திலிருந்து விரைவாகக் கொழுந்து பறிக்கத் தொடங்கினர். அப்படி அவர்கள் கொழுந்தெடுப்பதைப் பார்த்ததும் வீரய்யாவின் உள்ளம் கொதித்தது. கடந்த ஒரு கிழமையாகத் தோட்டத்துக் கொழுந்துகளை அவர்கள் களவாடி வருகிருர்கள். வீரய்யா அதைப்பற்றி ஆரம்பத்தி லேயே துரையிடம் முறையிட்டிருந்தான். துரை அது விஷயமாக மேலிடத்துக்கு அறிவித்தல் கொடுக்கப் போவ தாகக் கூறியிருந்தார். அவர் அறிவித்தல் கொடுத்தாரா இல்லையா என்பது வீரய்யாவுக்குச் சந்தேகமாக இருந் தது.

குருதிமலை 22星
தோட்டத்துக் கொழுந்தைக் கிராமத்தவர்கள் வந்து எடுப்பதால், தோட்டத்தில் உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாகிவிடும். இப்போது நடந்துகொண்டி ருக்கும் விதத்தைப் பார்த்தால் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் கூட தோட்டத்தில் வேலை கிடைக்குமா என்பது வீரப்யாவுக்குச் சந்தேகமாக இருந்தது. தொழிலாளர்களை எப்படியாவது தோட்டத்தைவிட்டுத் துரத்திவிடவேண்டு மென்ற நோக்கத்துடனேயே கிராமத்தில் உள்ளவர்கள் செயலாற்றுகிருர்கள் என்பதை வீரய்யா புரிந்துகொண் டான்.மலையில் எதிர்ப்புறமாக வேகமாகக் கொழுந்தெடுத் துக்கொண்டிருந்தவர்கள், இப்போது தோட்டத் தொழி லாளர்கள் கொழுந்தெடுக்கும் பக்கத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
"ஏய் கங்காணி, நீயெல்லாம் இந்த மலையில கொழுந் தெடுக்க வேணும். நாங்க எடுக்கவேணும். எல்லாம் லயத் துக்கு ஓடிப்போ.." எதிர்ப்புறத்திலிருந்து பொடிசிங்கோ வீரய்யாவைப் பார்த்துப் பலமாகக் கூறினன்.
*நாங்க தோட்டத்து வேலய செய்யுருேம். ஒங்களப் போல கள்ளக் கொழுந்து எடுக்கல்ல. நீங்க எல்லாருந் தான் வூட்டுக்குப் போகணும்" என்ருன் வீரய்யா பொடி சிங்கோவைப் பார்த்து.
*என்ன கங்காணி, எங்களைப் பாத்தா க ள் ள க் கொழுந்து எடுக்குருேமுனு சொல்றது? நாங்க என்ன கள வானியா? இந்தக் காணியெல்லாங் நமக்குக் கொடுக்கப் போறதுதானே; அதனலைதான் நாங்க வந்து கொழுந் தெடுக்கிறது."
"சட்டப்படி இன்னும் ஒங்களுக்கு காணி ஒண்ணும்
குடுக்கல. அதுக்கு முந்தி நீங்க வந்து இப்புடிக் கொழுந் தெடுக்கிறது சரியில்ல" என வீரய்யா கூறினன்.

Page 116
222 குருதிமலை
"எங்களுக்கு காணி கொடுக்கவிடாம நீங்கதான் தடுக் கிறது. அதுணுலதான் நாங்க இப்புடி வந்து கொழுந்தெடுக் கிறது" என்ருன் பொடிசிங்கோ விறைப்பான குரலில்.
'நீங்கள் எங்களைத் தவழு நெனச்சிக்கிட்டீங்க. நாங்க ஒங்களுக்கு காணி ஒன்னும் கொடுக்க வேணுமுனு சொல் லல்ல. நெலம் இல்லாத ஆளுகளுக்கு காணி கொடுக்கத் தான் வேணும்- ஒங்களுக்கெல்லாம் காணி கொடுக்கத் தான் வேணும். ஆன, எங்களை இந்தத்தோட்டத்தவுட்டு போகச் சொல்லவேணுமுணுதான் நாங்க சொல்லுருேம்" என்ருன் வீரய்யா அடக்கமாக.
"ஒங்களை வேறதோட்டத்துக்குப் போகச் சொல்லுறது தானே. இது எங்களுக்குக் கொடுக்கிற தோட்டம். நீங்க எல்லாங் சுறுக்கா போயிடனும்" என்முன் பொடிசிங் கோவுக்குப் பக்கத்தில் நின்றவன்.
"நாங்க இந்த தோட்டத்தில பரம்பரையா இருக் கிருேம். இந்தத் தோட்டத்தவுட்டு நாங்க போகமாட் டோம். நீங்கதான் இப்ப கள்ளக்கொழுந்து எடுக்கிறத வுட்டிட்டு சுறுக்கா இந்த இடத்தை விட்டுப் போயிட னும்" என்ருன் தூரத்தில் கொழுந்தெடுத்துக் கொண்டி ருந்த ராமு.
அதைக் கேட்டதும் பொடிசிங்கோவின் கோபம் அதிக மாகியது.
"ஏய், என்னடா நீ மிச்சங் பேசறது. பேசாம லயத் துக்குப் போடா” எனக் கத்தினன் பொடிசிங்கோ.
‘எங்களை போகச் சொல்லுறதுக்கு நீ யாருடா?? எனப் பலமாகக் கத்தியபடி பொடிசிங்கோவின் பக்கம் பாய்ந்தான் ராமு.
வீரய்யா பாய்ந்து சென்று ராமுவைக் கட்டிப் பிடித்து இழுத்தான்; ‘என்ன ராமு, அவசரப்பட்டு சண் டைக்குப் போறே, நம்ப நெலமைய யோசிக்க வேணுமா"

குருதிமலை 223
கொஞ்சம் நெதானமா இரு" என அவனைச் சாந்தப்படுத் தினன்.
"அட பலப்பாங்கோ மூ அபிட்ட காண்ட எனவா. அபித் நிக்காங் இண்ட பே-எண்ட அபித் காமு." பொடி சிங்கோ ஆத்திரத்தில் அலறிஞன்.
மறு கணம் நாட்டிலிருந்து வந்தவர்கள் தோட்டத் தொழிலாளர்களைத் தாக்கத் தொடங்கினர். கையிலிருந்த ஆயுதங்களாலும், கற்களாலும் மூர்க்கத்தனமாகத் தாக்கி னர். தொழிலாளர்களும் அவர்களை எதிர்க்கத் தொடங்கி னர்.
* டேய், டேய். ஒருத்தரும் நாட்டாளுங்களோட சண்டைக்கி போகாதீங்க. எல்லாரும் லய த் துக் குப் போங்க" எனப் பலமாகக் கத்தினுன் வீரய்யா.
வீரய்யா இப்படிக் கூறியதும் தொழிலாளர்கள் தங்க ளைக் கட்டுப்படுத்திக் கொண்டனர். காரணமில்லாமல் அவன் இப்படிக் கூறமாட்டான் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் வீரய்யாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு லயத்துக்கு விரைந்தனர். தொழிலாளர்கள் லயத்துக்குத் திரும்புவதைக் கண்டதும் கிராமத்தவர்கள் தமது தாக்குதல்களை நிறுத்திக் கொண்டனர்.
அந்தச் சொற்ப நேரத்தில் தொழிலாளர்களில் நான் கைந்து பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுவிட்டன. அவர் களை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வழி செய்துவிட்டு வீரய்யா துரையின் பங்களாவை நோக்கி விரைந்தான்.
தோட்டத் தொழிலாளர்களைத் தான் லயத்துக்குப் போகும்படி கூறியிருக்காவிட்டால் பெரிய பயங்கரம் நிகழ்ந்திருக்கும் என்பதை அவன் எண்ணிப் பார்த்தான். இரு பகுதியினரும் போராடிப் பலத்த காயங்கள் ஏற் பட்டு கொலைகூட விழுந்திருக்கலாம். நல்ல வேளையாக அப்படி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லையென நினைத்து வீரய்யா மனதைத் தேற்றிக்கொண்டான்.

Page 117
224 குருதிமலை
உண்மையில் நாட்டு மக்களுக்கு காணி கொடுக்கப்பட வேண்டும் என்பதை அவன் மனப்பூர்வமாக ஆதரித்தான். அவர்களோடு தோட்டத்து மக்கள் அன்புடனும், அந் நியோன்னியமாகவும் இதுவரை காலமும் இருந்ததைப் போலவே இனிமேலும் இருக்கவேண்டும் என்பதையே அவன் விரும்பினன். நாட்டு மக்கள் தங்களைத் தவருகப் புரிந்துகொண்டு சண்டைக்கு வந்தது அவனது மனதை மிகவும் வேதனையடையச் செய்தது. ܫ
வீரய்யா, துரை பங்களாவை அடைந்தபோது துரை எங்கேயோ போவதற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
** தொர, நம்ம ஆளுங்க கொழுந்து எடுத்துக்கொண். டிருந்த நேரத்தில அந்த நாட்டாளுங்க. வந்து அடிச்சி வெரட்டிப்புட்டாங்க. நாலைஞ்சு பேருக்கு சரயான காய முங்க; நாட்டாளுங்க கள்ளக் கொழுந்தெடுக்கிறதைப் பத்தி முந்தியே தொரகிட்ட சொல்லியிருக்கேன். தொரை இதப்பத்தி கொஞ்சங்கூட கவனிக்காம இருக்கிற்ங்க. அத னல இப்ப பெரிய கரச்சல்தான் வரப்போகுது’ எனக் கூறி ஞன் வீரய்யா.
"ஓ அதிங் நான் அரசாங்கத்துக்கு எழுதிப் போட்டி ருக்கு, அவங்கதான் அதிக்கி நடவடிக்கை எடுக்கவேணும் ச நா ஒன்னும் செய்ய முடியாது. ஒங்களையெல்லாங் , தோட் டத்தைவுட்டு போக சொன்னப் பிறகு, நீங்க எல்லாங் இருக்கிறதினுலதான் இப்புடிக் கரச்சல் வாறது" எனக் கோபத்துடன் சீறிஞர் துரை. * g
“என்னங்க தொர, நம்ம ஆளுங்களுக்கெல்லாம் நாட் டாளுங்க அடிச்சிப்புட்டாங்கண்ணு சொல்லவந்தா, எங் களை தோட்டத்தவுட்டு ஏன் போகல்லேன்னு கேக்கிறீங்க. இது நாயமுங்களா?"
'சரி சரி, நாங் இதுபத்தி அரசாங்கத்துக்கு கடதாசி எழுதி, பொலீசுக்கும் சொல்லுறது. நீங்க எல்லாங் லயத்

குருதிமலை 225。
துக்குப்போய் சத்தம் போடாமல் அமைதியா இருக்கோ ணும்" எனக் கூறிவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டார்.
வீரய்யா நடந்து முடிந்த விஷயங்களைப்பற்றிக் கதைப் பதற்காக தொழிற் சங்கக் காரியாலயத்தை நோக்கி நடந் தான். தோட்டத் தொழிலாளர்களைச் சரியான வழியில் கொண்டு செல்லவேண்டிய பெரும் பொறுப்பு - தலைமைப் பதவி, தன்னிடம் வந்த வேளையில் இப்படியான அசம்பா விதங்கள் நடந்துகொண்டிருக்கின்றனவே என எண்ணிக், கலங்கிய வகை அவன் நடந்துகொண்டிருந்தான்.
நாட்டிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்தும் அதே மலை யில் கொழுந்தெடுத்தவண்ணம் இருந்தனர். தோட்டத் தொழிலாளர்கள் எல்லோரும் தமக்குப் பயந்து லயத் துக்கு ஓடிவிட்டார்கள் என்பதைக் கதைத்த வண்ணம் மிகவும் குதூகலமாக அவர்கள் கொழுந்து பறித்துக்கொண் டிருந்தனர்:
அத்தியாயம் முப்பத்துநான்கு
lairlit முதலாளி கொழுந்துத் தரகராக மாறியதி லிருந்து அதிர்ஷ்ட தேவதையின் பார்வ்ை அவர் பக்கம் திரும்பியிருந்தது. உலகச் சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்ததால் கொழுந்தின் விலையும்’ நாளுக்கு நாள் அதி கரித்துக்கொண்டே வந்தது. கொழுந்தின் விலை உயர்ந்து கொண்டே செல்லச் செல்ல பண்டா முதலாளியின் கமிஷனும் அதிகமாகிக்கொண்டு வந்தது. ஒரு மாத காலத்துக்குள் பண்டா முதலாளிக்கு ஆயிரக் கணக்கில் பணம் சேர்ந்துகொண்டது.
.

Page 118
岛2份 குருதிமல்
கிராமத்தில் வாழும் மக்களுக்கும் கொழுந்தெடுத்து விற்பதால் கிடைக்கும் வருமானமும் கூடிக்கொண்டு வந் தது; அதனுல் அவர்களது வாழ்க்கைத் தரத்திலும் மாற் றம் காணப்பட்டது. மூன்று வேளையும் அவர்கள் வயிருர உணவருந்தினர்கள். தமக்கு வேண்டிய உடைகளை அந்த ஒரு மாத காலத்துக்குள் அவர்கள் வாங்கினர்கள். சிலர் தமது குடிசைகளைத் திருத்தி அமைத்தார்கள். வேறு சிலர் வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வாங் கிக் கொண்டனர். ஒரு மாத காலத்துக்குள் அவர்களு டைய வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருந்தது.
கொழுந்தெடுத்து விற்பதினல், நாளுக்கு நாள் பணம் அதிகமாகக் கிடைத்துக்கொண்டிருக்க மக்களிடையே கொழுந்தெடுக்கும் ஆர்வமும் அதிகரித்துக்கொண்டேவத் தது. அதனுல் அவர்கள் அந்தக் கிராமத்தின் நாலாபுற மும் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து திருட்டுத்தன மாகக் கொழுந்து பறிக்கத் தொடங்கினர்.
முன்பெல்லாம் பண்டா முதலாளி, தான் வாங்கும் கொழுந்தை விற்றபின்னரே ஆட்களுக்குப் பண ம் கொடுப்பார். ஆனல், அவரிடம் இப்போது போதியளவு பணம் சேர்ந்துவிட்டபடியால், கொழுந்து கொண்டு வருப வர்களிடம் கொழுந்தை நிறுத்து உடனுக்குடன் பணத் தைக் கொடுத்தார்.
நாட்டில் உள்ளவர்களுக்குப் பணம் தேவைப்பட் டால், இப்போது அவர்கள் எவ்வித யோசனையுமின்றி எங் காவது சென்று கொழுந்தைப் பறித்துக் கொண்டுவந்து, பண்டா முதலாளியிடம் கொடுத்து உடன் பணம் பெற் றுக் கொள்ளும் நிலைமை உருவாகியிருந்தது. அவசர தேவைகளுக்கெல்லாம் பண்டா முதலாளி இப்போது முற்பணம் கொடுத்து உதவினர். அவருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக அவர் கொழுந்தைத்தான் எதிர்பார்த்தார்,

குருதிமலை 227
பண்டா முதலாளியின் கடையிலும் வியாபாரம் இப் போது பெருகியிருந்தது. அவராலும் மெனிக்காவினலும் வியாபாரத்தைச் சமாளிக்க முடியாததால், எடுபிடி வேலைக்காக ஒரு பையனையும் அமர்த்தியிருந்தார் பண்டா முதலாளி. இப்போது கடையில் பலவகைப் பொருட்கள் நிறைந்திருந்தன. நாட்டிலுள்ளவர்கள் தமக்கு வேண்டிய சகல பொருட்களையும் அவரது கடையிலேயே வாங்கக் கூடியதாக இருந்தது.
அன்று மாலை வழக்கம் போல கொழுந்து நிறைந்த சாக்குகளுடன், தெருவோரமாக லொறியின் வரவை எதிர் பார்த்துக் காத்திருந்தார் பண்டா முதலாளி. அன்று அவ ருக்கு என்றுமில்லாதவாறு பெ ரு ந் தொ  ைக யா ன கொழுந்து கிடைத்திருந்தது. மூவாயிரம் ரூபாவுக்கு மேல் பணத்தைக் கொடுத்து ஆட்களிடம் அவர் கொழுந்தை வாங்கியிருந்தார். அவ்வளவு கொழுந்தையும் லொறிக் காரனுக்கு விற்றுவிட்டால் சுளையாக ஆயிரம் ரூபாவா வது இலாபமாகக் கிடைக்கும் என்பதை எண்ணிப் பார்த்தபோது அவரது உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்தது. வழக்கமாக வரும் நேரத்துக்கு அன்று ஏனே லொறி வர வில்லை. வெகு நேரமாகத் தெருவோரமாக நின்றுகொண் டிருந்தபடியால் அவரது கால்கள் வலித்தன. அருகில் இருந்த கொழுந்துச் சாக்கின் மேல் அமர்ந்து சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டார்.
நேரஞ் செல்லச் செல்ல பண்டா முதலாளிக்கு மன தில் சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. ஒருவேளை இன்று லொறி வராமல் விட்டுவிடுமோ என நினைத்தபோது அவ ருக்குப் பெரும் திகிலாகிப் போய்விட்டது. தற்செயலாக அன்று லொறி வராவிட்டால் கொழுந்தெல்லாம் பதங் கெட்டு வீணுகிவிடும். பின்னர் அந்தக் கொழுந்தை ஒன் றுமே செய்ய முடியாது; வீசவேண்டியதுதான். அப்படி நேர்ந்துவிட்டால் ஒரே நாளில் மூவாயிரம் ரூபாவுக்கு

Page 119
22& குருதிமலை’
குறையாத நட்டம் ஏற்பட்டுவிடும். அதை நினைத்துப் பார்த்தபோது அவருக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது.
எங்கும் நன்ற க இருட்டிவிட்டது. ஒருவேளை லொறி யில் ஏதாவது பழுது ஏற்பட்டிருக்கும். அதனைத் திருத்திக் கொண்டு வருவதற்கு சுணக்கம் ஏற்படலாம் என நினைத்து பண்டா முதலாளி நம்பிக்கையுடன் லொறியை எதிர் பார்த்துக்கொண்டிருந்தார்.
இருட்டிய பின்பு வெகுநேரமாகியும் பண்டா முத லாளி வீட்டிற்குத் திரும்பாததால், அவர் வேலைக்கு அமர்த்தியிருக்கும் பையன் தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு அவரைத் தேடி வந்திருந்தான்.
பண்டா முதலாளி பந்தத்தை வாங்கி நிலத்திலே குத்தி வைத்துவிட்டு, 'லொறி வர நேரம் செல்லும் போல் இருக்கிறது. லொறி வந்தவுடன் கொழுந்தை விற்றுவிட் டுத்தான் வரவேண்டும். நீ போய்க் கடையை கவனித்துக் கொள்' எனக் கூறி அவனைத் திருப்பி அனுப்பிவைத் ğ5 mt rT.
சில்லென்று வீசிய குளிர்காற்று அவரது உடலைத் தைத் தது. உடல் குளிரால் நடுங்கியது. லொறி எப்படியாவது வந்து சேரும் என்ற நம்பிக்கை மட்டும் அவருக்குத் தளர வில்லை.
நேரம் ஒன்பது மணியைத் தாண்டியதுந்தான் இனி லொறி வருவது சந்தேகமென அவர் எண்ணிக்கொண் டார்-ஒன்ரு, இரண்டா மூவாயிரம் ரூபாய் அல்லவா பாழாகப் போகின்றது என எண்ணியபோது அவருக்குத் த%ல சுற்றியது. தலையில் கைவைத்துக்கொண்டு பெருஞ் சோகத்துடன் கொழுந்துச் சாக்கின்மேல் வீற்றிருந்தார் பண்டா முதலாளி,

குருதிமலை 229
லொறிக்காரனை நினைத்தபோது அவருக்குக் கோபம் பொங்கியது. எவ்வளவு பொறுப்பில்லாமல் அவன் நடந் திருக்கிருன். அவனுக்கு வரவசதியில்லையானல் யாரிடமா வது சொல்லியனுப்பியிருக்கலாந்தானே. நான் இப்போது அடைந்த நட்டம் அவனுக்கு எங்கே தெரியப்போகிறது. என்னிடமிருந்து வாங்கும் கொழுந்தை அவன் கொண்டு போய்க் கூடுதலான விலைக்கு, தனக்கு வசதியாகவுள்ள தேயிலைத் தொழிற்சாலையில் விற்றுவிடுவான். அதனல் எனக்குக் கிடைக்கும் இலாபத்தைவிட அவனுக்கு அதிக இலாபம் கிடைத்துக்கொண்டுதானே இருக்கிறது. அவன் லொறியுடன் வந்தால் நிச்சயம் அவனுக்கு இலாபம் கிடைக்கும். வராவிட்டால் அவனுக்கு ஒருபோதும் நட் டம் வராது. இந்த வியாபாரத்தில், நான் வேறு ஒருவனி டம் தங்கியிருப்பதால்தானே எனக்கு இப்படியான நட் டம் ஏற்படுகிறது. நான் எனக்குச் சொந்தமாக ஒரு லொறியை வாங்கிவிட்டால், இவ்வளவு நேரம் காத்தி ருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது; நட்டமும் அடை யத் தேவையில்லை. இலாபமும் இரண்டு மடங்காகக் கிடைக்கும்-இப்படிப் பலவாறக அவரது சிந்தனை ஒ.
ULUg5I.
கடையிலிருந்து மீண்டும் பெடியன் அவரைத் தேடி வந்திருந்தான். மெனிக்கே அவனிடம் சுடுதண்ணிப் போத்தலில் தேநீர் அனுப்பியிருந்தாள். தேநீரைப் பரு கியபோது அவருக்குத் தொண்டைக்குக் கீழே இறங்குவ தற்குச் சிரமமாக இருந்தது.
இனி லொறியை எதிர்பார்த்து நிற்பதில் பிரயோசன மில்லை என அவர் எண்ணிக்கொண்டார். ஆனலும் அவ் வளவு கொழுந்தையும் அங்கு போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போகவும் அவருக்கு மனம் வரவில்லை. தற்செய லாக லொறி பிந்திவந்தால் அவ்வளவு கொழுந்தையும் பணமாக்கிவிடலாம் என்ற நப்பாசை எழுந்து அவரை வீட்டுக்குப் போகவிடாது தடுத்தது.

Page 120
230 குருதிமல்
இப்போது பெடியனும் அவருடன் இரவிரவாக விழித்திருந்தான்.
மறுநாள் விடிந்ததுந்தான் பண்டா முதலாளி வீட் டுக்குப் புறப்பட்டார். அவரது உடலும், உள்ளமும் பெரி தும் சோர்ந்துபோய் இருந்தன. தள்ளாடியபடியே வீட்டை அடைந்தார் பண்டா முதலாளி.
இரவு லொறி வராததை மெனிக்கேயிடம் சொல்வி விட்டு, ‘இனிமேல் நாம் வேருெருவரின் கையை எதிர் பார்த்து நிற்காமல் எமக்குச் சொந்தமாக ஒரு லொறி வாங்கிவிடவேண்டும்" என அவர் திடசங்கற்பம் செய்து கொண்டார்
மறு நாள் மாலையில் வழக்கமான நேரத்திற்கு லொறி வந்தது. முதல் நாள் லொறி பழுதடைந்தமையால் லொறியைக் கொண்டுவர முடியவில்லையெனக் கூறிய அந் தக் கொழுந்து வியாபாரி, முதல் நாள் பண்டா முதலாளி சேகரித்து வைத்திருந்த கொழுந்தை வாங்குவதற்கு முற் ருக மறுத்துவிட்டான்
மறு வாரத்தில் பண்டா முதலாளிக்குச் சொந்தமான லொறியொன்று அந்த மலைப் பாதையில், அங்குமிங்குமாக ஒடி கொழுந்தை விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தது. கொழுந்துத் தரகராக இருந்த பண்டா முதலாளி இப் போது ஒரு லொறிச் சொந்தக்காரராகிவிட்டார்.

குருதிமலை M 231
அத்தியாயம் முப்பத்தைந்து
அன்று முதியான் சேயைச் சந்திப்பதற்காக அவரது குடிசைக்கு சுமணபாலாவும் பியசேனவும் சென்றிருந்த னர்.
ஏதோ பழைய புத்தகம் ஒன்றை வாசித்துக்கொண்டி ருந்த முதியான்சே அவர்கள் வருவதைக் கண்டதும் புத்த கத்தை மூடி வைத்துவிட்டு தான் அணிந்திருந்த மூக்குக் கண்ணுடியைக் கழற்றினர்.
**வாருங்கள், வாருங்கள். என்ன இருவருமாகச் சேர்ந்து வருகின்றீர்கள். ஏதாவது விசேஷம் உண்டா?"
'விசேஷமாக ஒன்றும் இல்லை. சும்மா உங்களைப் பார்த்துக் கதைத்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்" என்ருன் பியசேன.
இருவரும் அங்கிருந்த வாங்கில் அமர்ந்துகொண்ட 6ör TT,
*" தோட்டத் தொழிலாளர்களோடு கிராமத்து மக் கள் சண்டைக்குப் போய்விட்டார்களாமே ; இதைப்பற்றி தோட்டத்து மக்கள் என்ன அபிப்பிராயப்படுகின்றர்கள்? நீங்கள் தினமும் தோட்டத்துக்கு வேலைக்குப் போகின்றீர் கள் தானே, அதனல் தான் கேக்கிறேன்" என்ருர் முதி யான்சே,
"ஆமாம். கொழுந்து மலையில் சண்டை ஏற்பட்டது உண்மை தான். ஆனலும் தொழிலாளர்களைப் பொறுத்த வரை கிராமத்து மக்களுடன் போராடும் எண்ணம் அவர்

Page 121
23组 குருதிமலை
களுக்குச் சிறிது கூடக் கிடையாது. அவர்கள் எம்முடன் ஒற்றுமையாக வாழ்வதைத் தான் விரும்புகின்றர்கள்" என்ருர் சுமணபால.
"அது எனக்கு நன்முகத் தெரியும். நான் முப்பது வருட காலமாக தோட்டத்தில் வேலைசெய்திருக்கின்றேன்; அவர்களோடு நன்கு பழகியும் இருக்கின்றேன். எப்போ துமே அவர்கள் எம்முடன் ஒற்றுமையாகவே வாழ விரும்பு பவர்கள் தான்" என்ருர் முதியான்சே,
"கிராமசேவகரும் பண்டா முதலாளியுந்தான் இங் குள்ள மக்களைத் தோட்டத்தொழிலாளர்களோடு தூண்டி விட்டுப் போராட வைக்கின்றனர்' என்ருன் சுமணபாலா.
"இவர்கள் இப்படிப் பகைமையை ஏற்படுத்துவதால் என்ன நன்மையைத் தான் பெறப்போகின்ருர்களோ தெரியவில்லை" எனக் கவலையுடன் கூறினன் பியசேன.
"என்ன அப்படிச் சொல்கின் முய்; தோட்டத்து மக் களை வெளியேற்றிவிட்டுத்தான் கிராமத்து மக்களுக்குக் காணி கொடுக்க வேண்டுமென்று சில அரசியல்வாதிகள் கருதுகின்றர்கள். அவர்களது கருத்தை முன்னின்று செயற்படுத்திவிட்டால், இவர்களும் அரசியல் செல்வாக் கைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லவா?" என்ருர் முதி யான்சே,
'அதுமட்டுமல்ல, தோட்டம் கிராமத்து மக்களின் கைக்கு மாறிவிட்டால், பின்னர் அங்கு கிடைக்கும் கொழுந்து முழுவதையுமே பண்டா முதலாளி வாங்கி வியாபாரம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுமல்லவா’ என் முன் சுமண்பால.
அவன் கூறுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண் டிருந்த முதியான்சே, "அவர்கள் நினைப்பது போல் தோட் டத்தைக் கிராமத்து மக்களிடையே பிரித்துக் கொடுத்து

குருதிமலை 233
விட்டால், கொஞ்சக் காலத்திலேயே அந்தப் பகுதி முழு வதும் காடாக மாறிப் போய்விடும்" என்றர்.
"ஆமாம் கங்காணி. நீங்கள் சொல்வது சரிதான். தோட்டம் ஒரு ஸ்தாபனத்தின் கீழ் இயங்கும் போது அதனை நிர்வகிப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்ற வசதி யிருக்கும். ஆனல் தனி மனிதர்களின் கையில் துண்டு துண்டாகப் பகிர்ந்து கொடுத்துவிட்டால் எல்லோருமே சீரான முறையில் அதனைப் பராமரிப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது" என்ருன் சுமணபால,
" தேயிலைச் செடியில் கொழுந்து இருக்கும் வரை அதனை விற்றுப் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள்; ஆனல் செடியைப் பராமரிக்கமாட்டார்கள். கொஞ்சக் காலத்தில் தோட்டமே காடாகிப் போய்விடும்" என் முன் பியசேன.
"கிராமத்து மக்களுக்கு தோட்டத்தில் இப்போதிருக் கும் தொழில் வாய்ப்புக்கூட பின்னர் கிடைக்காது போய் விடும்" என்ருன் சுமணபால.
"எல்லாருமே சுறுக்காகப் பணத்தைச் சம்பாதிக்கத் தான் யோசிக்கின்றர்கள். ஆனல், காலப்போக்கில் ஏற் படப்போகும் பாதிப்பைப்பற்றி எவருமே சிந்திக்கவில்&ல. இதல்ை ஒரு காலகட்டத்தில் எமது நாடே பாதிக்கப்பட லாம்’ என்ருர் முதியான்சே கவலையுடன்.
"நாங்கள் எதைச் சொன்னலும் கிராமத்து மக்கள் புரிந்துகொள்கின்றர்களில்லை. பண்டா முதலாளியின் பேச்சைத் தான் கேட்கின்றர்கள்' என்ற ன் சுமணபால. 'அதுமட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக நாம் ஏதா வது நியாயத்தைக் கூறிவிட்டால் சண்டைக்கு வரப் பார்க் கிருர்கள்' என்றன் பியசேன.
'பண்டா முதலாளியிடமிருந்து தானே அவர்களுக்கு பணம் கிடைக்கின்றது. பின் ஏன் அவர்கள் எமது பேச்

Page 122
234 குருதிமலை
சைக் கேட்கப்போகின்ருர்கள். அதற்காக நாம் மனம் தளர்ந்துவிடக் கூடாது; சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல் லாம் மக்களுக்கு நியாயத்தை எடுத்துக் கூறத்தான் வேண் டும்" என்ருர் முதியான்சே,
"நீங்கள் சொல்வது சரிதான் கங்காணி. ஆஞலும் அன்று கூட்டத்தில் என்ன நடந்ததென்று எண்ணிப் பாருங்கள். பியசேன நியாயத்தை எடுத்துக் கூறியபோது சொந்தக் காரணத்திற்காக அவன் அப்படிக் கூறுகிரு னென எல்லோரும் கேலிசெய்து அவனை அவமதித்தார்கள் தானே' என்ருன் சுமணபால.
'நியாயமற்றவர்கள் அப்படித்தான் தனி மனிதனைத் தாக்கிப் பேச முனைவார்கள். அதற்காக நாம் கவலைப் படத் தேவையில்லை" எனக் கூறிய முதியான்சே, சிரித்து விட்டு 'அதுசரி பியசேன. நீ அந்த மாயாண்டியின் மகளைக் கூட்டி வரத்தான் போகின் ருயா?" எனப் பிய சேஞவைப் பார்த்துக் கேட்டார்,
முதியான்சே இப்படி திடீரெனக் கேட்டதும் பிய சேஞ சிறிது வெட்கம் அடைந்தான்.
*இதில் வெட்கப்பட என்ன இருக்கின்றது. நான் கூட எனது இளமைக் காலத்தில் ஒருதோட்டத்துப் பெண்ணைக் காதலித்தேன். ஆனல், அவளை எனக்குத் தெரியாமல் அவ ளது தாய்தந்தையர் வேருெருவனுக்கு கலியாணம் செய்து வைத்துவிட்டார்கள். எனக்குக் காதலில் தோல்வி தான் ஏற்பட்டது' எனக் கூறிவிட்டுப் பலமாகச் சிரித்தார் முதியான்சே,
*கங்காணி, உங்களுக்குக் காதல் தோல்வியாக இருந் திருக்கலாம். ஆனல் பியசேனவைப் பொறுத்தமட்டில் அவன் ஒருபோதும் தோல்வியடையமாட்டான்" எனக் கூறிச் சிரித்தான் சுமணபால,
"கிராமத்து மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் பகைமை ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில்,

குருதிம ை -- . . 838
நீ அந்தப் பெண்ணைக் கூட்டி வருவதால் ஏதும் ஆபத்து ஏற்படாதா?’ என யோசனையுடன் கேட்டார் முதி யான்சே,
‘என்னதான் ஆபத்து ஏற்படப்போகின்றது? இது பியசேனவின் சொந்த விடயம். இதில் யாரும் தலையிட முடியாது. இந்த விஷயத்தில் நான் எனது பூரண ஒத்து ழைப்பை அவனுக்குக் கொடுப்பேன்" என்ருன் சுமண பால உறுதியான குரலில்.
முதியான்சே பதில் எதுவும் கூருது சிரித்தார்,
*சரி கங்காணி. நேரமாகிறது, நாங்கள் போய்
வருகின்ருேம்" எனக் கூறி பியசேன எழுந்தான். சுமண பாலாவும் அவனுடன் புறப்பட்டான்.

Page 123
易36 குருதிமலை
அத்தியாயம் முப்பத்தாறு
வியல் லயத்தில் வெகு காலமாக வாழ்ந்து வந்த கங் காணி ஒருவர் இறந்துவிட்டார். அதனல் தோட்டத்தில் இரண்டு மணிக்கே வேலை விட்டிருந்தனர்.
வேலை முடிந்து லயத்துக்குத் திரும்பிய தொழிலாளர் கள் அன்று மாலை நடக்கவிருக்கும் "கேதத்தில் பங்குபற்று வதற்காக வயல் லயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந் தனர். வீரய்யா முன்நின்று மரணச் சடங்குகளுக்கு வேண் டிய ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தான்.
அந்த வேளையில் மடுவத்திலிருந்து திடீரென பிரட்டு மணியின் ஒசை " டாண், டாண்’ என அதிர்ந்தது. திடுக் குற்ற வீரய்யா வெளியே ஓடிவந்து கரத்தை ரோட்டின் பக்கம் பார்த்தான்.
வழக்கமாக வரும் நில அளவைத் திணைக்களத்தினரின் வாகனம் தான் வருகின்றதென்பதை எல்லோரும் புரிந்து கொண்டனர். ஆனல், புதிதாக இன்று வேருெரு வாகன மும் வந்துகொண்டிருந்தது. அது யாருடைய வாகனமாக இருக்குமென எல்லோரது மனதிலும் கேள்வி எழுந்தது.
எல்லோரும் மடுவத்தை நோக்கி விரைந்தனர். அந்த வாகனங்கள் இரண்டும் மடுவத்தை வந்தடையும் முன் னரே குறுக்குப் பாதை வழியாகத் தொழிலாளர்கள் மடு வத்தை வந்தடைந்தனர். வீரய்யா "தொழிலாளர்களின் முன்னல் நின்றுகொண்டிருந்தான். மடுவத்தைப் பிந்தி

குருதிமலை ዷ8 ፖኋ
வந்தடைந்த ராமு பெரும் சிரமத்துடன் அந்தக் கூட்டத் துக்குள் நுழைந்து முன் பகுதிக்கு வந்தான்.
'அடே பொலிசுடா. முன்னுல் வந்துகொண்டிருந்த வானின் உள்ளே கவ னித்த செபமாலை பலமாகக் கூறினன்.
அங்கு நின்றிருந்த சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மனதிலே திகைப்பு இருந்தபோதி லும் வீரய்யாவும் ராமுவும் செபமாலையும் முன்னல் நிற் பது அவர்களுக்குத் தென்பை அளித்தது.
சனக் கூட்டம் ரோட்டை மறித்துக்கொண்டு இருந்த தால் ஜீப் வண்டிகள் இரண்டும் மடுவத்தின் அருகே தெரு வோரமாக நிறுத்தப்பட்டன . பொலிஸ் ஜீப்பில் வந்த வர்கள் வாகனத்தை விட்டு வெளியே குதித்தார்கள்.
இரண்டு பொலிஸ்காரர்கள் குண்டாந்தடியுடன் நடந்து வந்து சனக் கூட்டத்தின் முன்னல் நின்றனர்.
'ஏய். ஏன் நீயெல்லாங் இப்புடி கூட்டமா நிக்கி றது. ரோட்ட மறிக்காம எல்லாம் லயத்துக்கு ஓடிப் போ...' என அவர்களில் ஒருவன் குண்டாந்த டியை ஓங் கியபடி பலமாகக் கூறினன்.
"நாங்க ஒருத்தரும் இந்த எடத்த வுட்டுப் போக மாட்டோம்" என நிதா ன மாக ப் பதிலளித்தான் aýpruiuuunt.
"என்னடா பேசுறது? இப்ப நாங்கபோறதுக்கு இடங் கொடுக்காட்டி எல்லோரையும் அடிச்சு "ரிமாண்டில' கொண்டுபோய் போடுறது" என்ருன் பக்கத்தில் நின்ற பொலிஸ்காரன்.
*நீங்க எதை வேணுமுணுலும் செய்யுங்க, நாங்க இந்த எடத்த வுட்டு அகலமாட்டோம்' எனக் கூறியபடி முன்னே வந்தான் ராமு.

Page 124
$38 குருதிமல்
"ஆமா, நாங்க இந்த எடத்த வுட்டு ஒருத்தரும் போகமாட்டோம்." எனப் பல குரல்கள் ஒரே சமயத் தில் ஒலித்தன.
பொலிஸ்காரருக்கு கோபம் பொங்கியது. திடீரெனக் கையில் இருந்த குண்டாந்த டியால் அவர் ராமுவைத் தாக் கியபடி, "போடா சுறுக்கா" எனக் கத்தினர்.
குண்டாந்த டி ராமுவின் தோள் பட்டையில் தாக்கி யது. ராமு ஆத்திரத்தால் தன்னை மறந்தான். ஆவேசம் வந்தவனுக அந்தப் பொலிஸ்காரன் மீது பாய்ந்து அவர் வைத்திருந்த குண்டாந்த டியை லபக்கெனப் பிடுங்கிக் கொண்டு பொலிஸ்காரரை முறைத்துப் பார்த்தான்.
"ராமு. நெதானத்த இழக்காத டா" என வீரய்யா எச்சரித்தான்.
ராமுவுக்கு அப்போதிருந்த ஆத்திரத்தின் வேகத்தில் அங்கிருந்த பொலிஸ்காரர்களை அடித்து நொறுக்கிவிடு வான் போல் தோன்றியது. வீரய்யா கூறியதுந்தான் ராமு ஒருவாறு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
அப்போது பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பொலிஸ் காரர் கோபத்துடன், "ஏய் நீ எல்லாம் இந்த எடத்த வுட்டு போகவேணும். இல்லாட்டி நான் இந்த ஜீப்பை ஆளுகளுக்கு மேல ஏத்திக்கிட்டு போறது. ஒங்க உயிர் வேணுமுணு எல்லாங் ஒடிப்போ" எனக் கூறிவிட்டு கோபத் துடன் விரைவாகச் சென்று ஜீப்பில் ஏறி "றைவர்' ஆச னத்தில் அமர்ந்துகொண்டு ஜீப்பை "ஸ்ராட் செய்தார்.
சனங்களிடையே அப்போது சலசலப்பு ஏற்பட்டது. பொலிஸ்காரர் கோபத்தில் முரட்டுத்தனமாக ஜீப்பை ஒட்டி வந்து ஆட்களுக்கு மேல் ஏற்றிவிடுவாரோ என அவர் கள் பயந்தார்கள்,

குருதிமலை 839,
பொலிஸ்காரர் ஜீப்பை "ரிவேர்ஸ்" செய்துகொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு மிக வேகமாகச் சனங்களை நோக்கி ஒட்டி வருவதற்கு ஆயத்தமானர்.
* யாரும் பயப்புடாதீங்க - இந்த எடத்த வுட்டு ஒருத்தரும் அசையவேணும்" என வீரய்யா கட்டளை இட் டான்.
ஜீப் கொலை வெறியுடன் சனக்கூட்டத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது.
* சடார்" என வீரய்யா ரோட்டின் குறுக்கே விழுந்து படுத்துக்கொண்டான்.
ஜீப்பின் சக்கரங்களுக்குள் வீரய்யா அகப்பட்டு சின்னு பின்னம் அடையப்போவதைப் பார்க்கச் சகிக்க முடியாத பலர் கண்களை மூடிக்கொண்டனர்.
சற்றுத் தூரத்தில் நின்றுகொண்டிருந்த அவனது தாய் மீனச்சி, "ஐயோ. வீரய்யா." என் அலறிஞள்.
வேகமாக வந்த ஜீப் பயங்கர உறுமலுடன் "பிரேக்" போட்டு நிறுத்தப்பட்டது. அதன் முன் சக்கரங்கள் வீரய் யாவின் உடலை உரசியபடி இருந்தன. ஒரு மயிரிழை தப்பி யிருந்தால் வீரய்யாவின் உடல் அந்தச் சக்கரங்களுக்குள் நசிந்து போய் இருக்கும்.
எல்லோரும் ஒருகணம் திகைத்து நின்றனர். ** இவன் எதற்குமே அஞ்சமாட்டான் போல் இருக் கிறது" என முணுமுணுத்தபடி ஜீப்பில் இருந்து இறங்கிய பொலிஸ்காரர் வீரய்யாவின் தீரத்தை எண்ணி மனதிற் குள் வியந்துகொண்டார்.
அங்கு இனித் தாமதித்தால் நிலைமை வேறுவிதமாக மாறிவிடுமோ எனப் பொலிஸ்காரர்கள் நினைத்துக்கொண் டனர்.
நில அளவையாளர்கள் அங்கு நடந்த எல்லாவற்றை யும் கவனித்துக்கொண்டிருந்தனர்.

Page 125
B40 குருதிமல்
**ஏய் நீ எல்லாங் இந்த எடத்த வுட்டு போறது இல் லைத்தானே. நான் அடுத்த முறை வந்து எல்லாரையும் சுட்டுப்போடுறது" எனக் கோபமாகக் கூறிய பொலிஸ் காரர் மீண்டும் ஜீப்பில் ஏறி "றைவர்"ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். கீழே நின்றுகொண்டிருந்த பொலிஸ்காரர் களும் ஜீப் வண்டியினுள் ஏறிக்கொண்டனர்.
ஜீப் இப்போது "ரிவேர்சி"ல் செலுத்தப்பட்டது.
அப்போதுதான் வீரய்யா மெதுவாக எழுந்திருந் தான்.
பொலிஸ்காரர் ஜீப்பைத் திருப்பிக்கொண்டு நில் அளவையாளர்களையும் அங்கு தாமதிக்க வேண்டாமெனக் கூறிவிட்டு ஜீப்பை வேகமாகச் செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து நில அளவையாளர்களின் வாகனமும் புறப் பட்டது.
வீரய்யாவின் தீரச்செயல் அங்கிருந்த ஒவ்வொரு தொழிலாளர்களின் உள்ளத்திலும் பெரும் வீர உணர்ச்சி யைத் தூண்டிவிட்டிருந்தது. அவர்கள் எது வந்தாலும் உயிரைக் கொடுத்தாவது எதிர்த்துப் போராட இப்போது தயாராகியிருந்தனர்.

குருதிமலை V 24
அத்தியாயம் முப்பத்தேழு
சிதிகாலை நேரம். பனிமூட்டம் இன்னும் அகல, வில்லை. குளிர்காற்று சில்லென வீசிக்கொண்டிருந்தது. தொழிலாளர்கள் எல்லோரும் வேலைக்குப் புறப்பட்டு மடு வத்தை வந்தடைந்தனர். அப்போது, துரை காரில் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் கண்டக்டரும் கணக் குப்பிள்ளையும் அவருக்கு வந்தனம் தெரிவித்தனர்.
** இன்று தொடக்கம் ஒருவருக்கும் வேலை கொடுக்க வேண்டாம். எனக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக் கின்றது" என கண்டக்டரிடம் ஆங்கிலத்தில் கூறினர் - "עיgI60.
பின்பு தொழிலாளர் பக்கம் திரும்பி, "தோட்டத்தில வேலை நிப்பாட்டி இருக்கு இனிமே இங்க ஒருத்தருக்கும் வேலை இல்லே. நீங்க இங்க இருந்து பிரயோசனங்இல்லே, வேற தோட்டத்துக்கு போறதுதான் நல்லது" எனக் கூறி விட்டு அங்கு நின்ற எல்லோரையும் ஒருதடவை பார்த் தார்.
** என்னுங்க தொர, திடீருனு வேல இல்லேனு சொல் லுறிங்க. வேல நிப்பாட்டிட்டா. நாங்க எப்பு டிங்க தொர சாப்புடுறது?" வீரய்யா திகிலுடன் கேட்டான்.
"நான் ஒன்னும் திடீருனு வந்து சொல்லல்ல. ஒரு மாசத்துக்கு முந்தியே நான் எல்லாத்துக்கும் சொல்லி யாச்சு" என்ருர் துரை அலட்சியமாக.
"நாங்க எல்லாம் இந்த தோட்டத்தவுட்டு போறதில் லேனு தொரகிட்ட சொல்லி இருக்கோம் தானுங்களே.

Page 126
242 குருதிமலை
அதுக்கு ஒரு முடிவும் தெரியாம ஏங்க தொர வேல நிப் பாட்டுறீங்க. ஆளுங்க எல்லாம் ரொம்ப் கஷ்டப்பட்டுக் கிட்டு இருக்காங்க. எப்படியாச்சும் வேலை கொடுங்க" என மன்ருட்டமான குரலில் கூறினன் வீரய்யா.
"அது நமக்கு ஒன்னுங் செய்ய முடியாது. வேலை நிப் பாட்ட சொல்லி மாவட்டக் காரியாலயத்தில இருந்து ஒடர் வந்திருக்கு. என்னல ஒன்னுங் செய்ய முடியாது” எனக் கூறி கையை விரித்தார் துரை.
வீரய்யாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வேலை வழங்காமல் விட்டால் தொழிலாளர்கள் எல்லோ ரும் பட்டினி கிடக்க நேரிடும். தொழிலாளர்களை பட்டினி போட்டே தமது காரியத்தைச் சாதிப்பதற்கு மேலிடத் தில் திட்டம் போட்டுவிட்டார்கள் என்பதை வீரய்யா நன்கு உணர்ந்து கொண்டான்.
"நீங்க தொழிலாளிங்களுக்கு வேலை கொடுக்காம இருக்க முடியாதுங்க. வேலை கொடுக்காம இருக்கிறது சட் டப்படி குத்தமுங்க" என்ருன் வீரய்யா.
‘ஓ, அது சரிதாங்; வேலை குடுக்கிறது இல்லைன்னு யாரும் சொல்லேல்ல.ஒங்களுக்கெல்லாம் வேற தோட் டத்தில வேலை குடுக்கிறதுதானே' என்ருர் துரை.
"நாங்க ஏன் வேற தோட்டத்துக்கு போகனுங்க? இந்தத் தோட்டத்திலேயே எப்போதும் வேலை கொடுத்த மாதிரி எங்களுக்கு வேலை கொடுத்தா என்னங்க? நாங்க என்ன குத்தம் செஞ்சோம்?"
** கொம்பனிக் காலம் மாதிரியில்ல இப்ப.தோட்டங் கள எல்லாம் அரசாங்கம் எடுத்திருக்குத்தானே. அதுனல, அரசாங்கத்தில வேலை செய்யிற ஆளுகளுக்கு வேற எடத் துக்கு மாற்றம் வாறமாதிரி, இப்போ உங்களுக்கும் மாற் றம் வந்திருக்கு" என்ருர் துரை முன்னுல் இருந்த மேசை யில் சாய்ந்த படி.

குருதிமலை 罗43
வீரய்யா ஒருகணம் திகைத்து நின்றன். துரை கூறுவ திலும் சட்டரீதியான நியாயம் இருப்பதுபோல் அவனுக் குத் தோன்றியது.
* நீங்க சொல்லுறது சரியுங்க தொர மாற்றம் வாற பொழுது, அதற்கு ஏற்ற காரணம் காட்டி மாற்றத்தை மறுத்துக் கூறவும் எங்களுக்கு உரிமை இருக்குத்தானுங் களே’ என்ருன் வீரய்யா யோசனையுடன்.
அப்போது பக்கத்தில் நின்ற ராமு, "அதுமட்டுங்களா, அரசாங்கம் எங்களுக்கு மாற்றம் கொடுக்கிறதா இருந்தா, எங்க எல்லோரையுமா ஒரே நேரத்தில மாத்திப் போகச் சொல்லுது. எந்த எடத்திலும் எல்லாருக்கும் ஒரே நேரத் தில மாற்றம் வராதுங்க. இந்த தோட்டத்தில தானுங்க இப்புடி வந்திருக்குங்க. இது வேற ஒண்ணும் இல்லீங்க, தொழிலாளிங்க எல்லாத்தையும் தோட்டத்தைவிட்டு வெரட்டிறதுக்கு,போட்ட திட்டமுங்க.." எனக் கூறினன்.
"அப்புடி எல்லாங் நீங்க நெனைக்க வேணுங்.அரசாங் கம், நம்ம நாட்டில காணி இல்லாம கஷ்டப்படுற ஆளு களுக்கு காணி கொடுத்து ஒதவி செய்யிறதுக்குத்தான் இப்புடி செய்யிறது.உங்களை மட்டும் தோட்டத்தைவிட்டு போகச் சொல்லல, நம்மஞக்கும், கண்டக்கையாவுக்கும் எல்லாத்துக்கும்தான் மாற்றம் வந்திருக்கு. நாங்க எல் லாம் வேற தோட்டத்துக்குப் போறதுதானே." எனக் கூறிவிட்டு துரை தனது காரில் ஏறிப் புறப்பட்டார்.
துரை இப்படிக் கூறியது அங்கு நின்றவர்கள் எல்லோ ருக்கும் திகைப்பைக் கொடுத்தது. துரையும் மற்ற உத்தி
யோகத்தர்களும் தோட்டத்தை விட்டுப் போய்விட்டால் பின்பு தொழிலாளர்கள் மட்டும் தோட்டத்தில் இருந்து வேலை செய்ய முடியாது. இப்போது பிரச்சினை புதிய உரு வத்தில் ஏற்பட்டிருக்கிறதென்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டனர்.

Page 127
244 குருதிமலை
அத்தியாயம் முப்பத்தெட்டு
தோட்டத்தில் வேல் நிறுத்தப்பட்டதிலிருந்து தொழிலாளர்கள் எல்லோரும் பெருந் திகிலுடன் இருந் தனர். மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதிலேயே அவர்களது எண்ணம் முழுவதும் லயித்திருந் தது. வீரய்யா தீவிரமாக யோசனையில் ஆழ்ந்திருந்தான். அன்று மாலை ராமு, செபமாலை உட்பட பல இளைஞர் கள் வீரய்யாவின் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.
“வேலையையும் தோட்டத்தில் நிப்பாட்டிப்புட்டாங்க! கண்டக்கையாவுக்கு வேற மாற்றம் வந்திருக்குனு தொர சொல்லுருரு. இனிமே நாம என்னதான் செய்யனும்?" எனக் கவலையுடன் கேட்டான் செபமாலை.
**கண்டாக்கு மாத்தி போனதான் நல்லதாச்சே அவன்தானே எல்லா வெசயத்தையும் அவுங்க ஆளுகளுக்கு சொல்லுறவன். அவன் போனதான் நம்மளோட திட் டத்தை ஒழுங்கா செய்யலாம்” என்ருன் ராமு.
"அவன் போன ஒரு சனியன் தொலைஞ்ச மாதிரியிருக் கும் அப்புறம். கோப்புறட்டி மனேஜர் அவுங்க கூட்டாளி மார் எல்லோருமே போயிடுவாங்க" என்ருள், அடுப்பின் முன்னல் இருந்த மீனச்சி.
இவர்களது சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டு காம் பராவின் உள்ளே இருந்த மாயாண்டி, எழுந்து இஸ்தோப் புக்கு வந்தார்.

குருதிமலை 245
** இப்ப மேற்கொண்டு என்னதான் தம்பி செய்யலா முனு நெனைச்சிகிட்டு இருக்கீங்க?" அங்கிருந்த வாங்கொன் றில் அமர்ந்தவாறு கேட்டார் மாயாண்டி.
“என்னதாங்க மாமேன் செய்யுறது? அதுதான் தோட் டத்தவுட்டே போகச் சொல்லுருங்களே. எண்னைக்கு தோட்டத்த அரசாங்கம் எடுத்திச்சோ , அன்னிக்கே நம்ப தோட்டத்துக்கு சனியன் புடிச்சமாதிரி."
"இந்தா பாருங்க தம்பி. இப்போ எதைப்பத்தியும் பேசி கொறைப்பட்டுக்கிட்டு இருக்கிறதில பொர யோசன மில்லை. நடக்க வேண்டியதை புத்திசாலித்தனமா செய்யி றதுதான் நல்லது. இந்த நிலையில நாம ரெம்பக் கவனமாத் தான் நடக்கணும்" என்ருர் மாயாண்டி.
"இங்க பாருங்க, கொஞ்ச ' நேரம் பேசாம இருங்க. அவுங்கதான் கதைச்சி ஒரு முடிவு காங்கட்டுமே. ஊடையில நீங்க வேற அது இதுனு சொல்லிக்கிட்டு." என இடை மறித்தாள் அங்கே வந்த மீனச்சி.
"நான் பேசுறதுதான் ஒருத்தருக்கும் புடிக்காதே. ஆரம்பத்துல இருந்தெ சொல்லிகிட்டு இருக்கேனே. ஒரு காலமும் இல்லாம தோட்டத்த அரசாங்கத்துக்கு எடுத்து, என்னென்னமோ செஞ்சி, இப்ப எல்லாத்தையும் தோட் டத்த வுட்டே வெரட்டுருங்க. இதுல ஏதோ ஆபத்து வரப் போவுதுனு அப்பவே சொன்னேனே யாராச்சும் கேட்டீங் களா?’ என்ருர் மாயாண்டி, மீனச்சியைப் பார்த்து.
“இப்ப கண்டாக்கும், நாட்டில உள்ள ஆளுங்களும் ஒன்ன சேந்துகிட்டு திட்டம் போட்டுத்தான் வேலை செய்யு ரூனுங்க.எப்படியாச்சும் நம்மளை தோட்டத்த வுட்டு வெரட் டிப்புட்டு,காணி வாங்கலாம் எங்கற நெனைப்போட அவுங்க இருக்காங்க. அதுக்கு தகுந்தாப்போல அரசாங்கம் எல்லா வேலையும் செய்யுது" என்ருன் செபமாலை யோசித்த வண்

Page 128
246 குருதிமலை
“கண்டக்கையா தோட்டத்தவுட்டு போயிட்டாருன்னு அப்புறம் வேர கண்டக்கையா புதுசா வேலைக்கு வரப்போ ருரா? ஒருத்தர் போனவொடனை அப்புறம் தொர, மத்த "ஸ்டாப்பு"மாருங்க எல்லாம் போயிடுவாங்க. கடைசியா தோட்டத்தில நாம மட்டுந்தான் உக்காந்துகிட்டு இருக் கோனும்" என்ருர் மாயாண்டி. ''' W
"யாரு போனதான் என்னுங்க மாமேன், நாம தோட் டத்தவுட்டு போயிடவா போருேம். கடைசிவ்ரைக்கும் போராடித்தான் தீருவோம்" என்ருன் ராமு.
"என்ன ராமு அப்பிடி சொல்லுற, தோட்டத்திலை தான் வேலையை நிப்பாட்டிப்புட்டாங்க. நாம வேலை செய் யாட்டி, எங்கே இருந்து சாப்பாடு வரும்? நாலு நாளைக்கி பட்டினியாக் கெடந்தா நாமளாகவே தோட்டத்தவுட்டு போக வேண்டியதுதான்."
தந்தை கூறுவதில் உண்மை இருக்கிறதென்பதை வீரய்யா நன்கு உணர்ந்து கொண்டான்.
"நீங்க சொல்லுறதும் எனக்குச் சரியாதான் படுது. அப்புடின, இந்த நெலையில நாங்க என்னதான் செய்யு றது?" வீரய்யா தந்தையைப் பார்த்துக் கேட்டான்.
"நம்மஞடைய போராட்டத்தில வெற்றி கிடைக் கணுமென்னு இந்த தோட்டத்தவுட்டு ஒருத்தரையும் வெளியே போகவிடக்கூடாது-இந்தக் கண்டாக்கைக்கூட கண்டிப்பா போகவுடாம நிப்பாட்டணும்" என்ருர் மாயாண்டி உறுதியான குரலில்.
“என்னுங்க மாமேன், இவ்வளவு அநியாயம் செஞ்ச வனையா புடிச்சி வைச்சிக்கிட சொல்லுறீங்க? இந்தக் கண் டாக்கு மாத்திப் போனதான் நமக்கு நல்லது" என்ருன் ராமு.
“எவ்வளவு கெட்டவணு இருந்தாலும் நம்மஞடைய வெசயம் சரிவரனு மென்ன கட்டாயம் யாரையும் வெளி

குருதிமலை 247.
யிலை போகவிடக்கூடாது. அப்படிச் செஞ்சாதான் அவங் களுக்காகவாவது அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக் கும்" என்ருர் மாயாண்டி,
மாயாண்டி கூறியது இப்போதுதான் அங்கிருந்த இளை ஞர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது.
**ஆமா ராமு. அப்பா சொல்லுறதும் சரிதான். நாம இந்தக் கண்டாக்கை போகவுடவே கூடாது" என் முன் வீரய்யா.
‘நான் ஒன்னுமட்டும் சொல்லுரேன் வீரய்யா, இந்தப் போராட்டத்தில நமக்குத்தான் வெற்றி கெடைக்கும்.அப் புறம் இந்தக் கண்டாக்கை நான் ஒதச்சி வெரட்டாம விட மாட்டேன்" என்ருன் ராமு ஆவேசத்துடன்.
**சரி நேரமாகுது. நம்ப தோட்டத்தில உள்ள பொடி யங்களுக்கு இதை இப்பவே சொல்லிப்புடுவோம்’ எனக் கூறிக் கொண்டே எழுந்திருந்தான் செபமாலை. அவனைத் தொடர்ந்து ராமுவும் இளைஞர்களும் எழுந்திருந்தனர்.
இளைஞர்கள் அவ்விடத்தைவிட்டு அகன்றதும்தான் மீனுச்சிக்குச் செந்தாமரையின் நினைவு வந்தது. பீலிக்குச் சென்றவளை வெகுநேரமாகியும் காணவில்லையே என்ற எண்ணத்துடன் அடுப்படிப்பக்கம் சென்ருள். தண்ணிர்க் குடம் அடுப்பின் அருகேயுள்ள திட்டில் இருப்பதைப் பார்த்ததும் அவளது மனதில் சந்தேகம் துளிர்த்தெழுந் தது; பீலிக்குச் சென்று பார்க்கும் எண்ணத்துடன் வெளியே வந்தாள்.
அப்போது குப்பன் மூச்சு இரைக்க இரைக்க அவர் களது இஸ்தோப்பினுள் நுழைந்தான்.
** இங்க பாருங்க அக்கா, நம்ம செந்தாமரைய அந்த பியசேனப் பய நாட்டுப் பக்கமா கூட்டிக்கிட்டுப் போருன்; நான் என் கண்ணுல பாத்தேன். அதுதான் நேரா ஒங்ககிட்ட சொல்லுறதுக்கு ஓடியந்தேன்."

Page 129
248 . குருதிமலை
--குப்பன் கூறியதைக் கேட்டதும், "ஐயோ.வீரய்யா அவள் அந்தப் பயலோட ஒடிப்போயிட்டாளாமே"எனக் கதறியழுதாள் மீனச்சி.
மாயாண்டி அதிர்ச்சியுடன் எழுந்தார்.
ராசாத் தோட்டத்தில் இருக்கும் அவரது தங்கையின் மகனுக்கும் செந்தாமரைக்கும் விரைவில் திருமணம் செய்து வைப்பதற்கு வேண்டிய ஒழுங்குகளை, சென்றகிழமைதான் அவர் இரகசியமாகச் செய்து முடித்திருந்தார். அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிடுமென அவர் எதிர்பார்க் கவே இல்லை.
அவரது தலை சுற்றியது; அந்த லயமே இடிந்து நொருங்கித் தலையில் விழுந்ததுபோல் இருந்தது. மறுகணம் அவர் அப்படியே நிலத்தில் சாய்ந்தார்.
வீரய்யா செய்வதறியாது திகைத்துப்போய் மரமாக நின்றன்.
S.
so
肇 ଖୁଁ

குருதிமலை 249
அத்தியாயம் முப்பத்தொன்பது
கிராமத்து மக்களில் சிலர் தாம் கொண்டுவந்த கொழுந்துகளுடன் பண்டா முதலாளியின் கடையின் முன்னுல் அவரது வரவுக்காகக் காத்திருந்தனர்.
வழக்கமாக நான்கு மணிக்கெல்லாம் கொழுந்து நிறுத்து விடும் முதலாளி, அன்று மந்திரியைச் சந்திக்கச் சென்றிருந்ததால் சற்றுத் தாமதமாகியே வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வந்ததும்  ைக யி ல் கொண்டுவந்த ‘பைலை" கடையின் முன் பக்கத்திலுள்ள மேசையின் மேல் வைத்து விட்டு அவசர அவசரமாகக் கொழுந்து நிறுக்கத் தொடங்கினர்.
வழக்கத்துக்கு மாருக அன்று அநேகர் குறைவா கவே கொழுந்து கொண்டு வந்திருந்தனர். அதனைக் கவ னித்த பண்டா முதலாளி, "என்ன. இன்று மிகவும் கொழுந்து குறைவாக இருக்கிறதே. எ ன் ன கார ணம்?" எனப் பக்கத்தில் நின்ற பொடிசிங்கோவிடம் விசாரித்தார்.
** கிராமத்துப்பக்கமாக இருக்கும் மலைகளில்கொழுந்து முடிந்துவிட்டது. தோட்டத்தின் நடுப் பகுதிக்குப் போய் கொழுந்தெடுப்பதற்கு இப்போது ஒருசிலர் தயங்குகிருர் கள். அதனுலேதான் இன்று கொழுந்து மிகவும் குறைந்து விட்டது" என்ருன் பொடிசிங்கோ.
"ஏன் நீங்கள் தயங்கவேண்டும்? இப்போதுதான் தோட்டத்தில் வேலை நிற்பாட்டிவிட்டார்களே. அதனல்

Page 130
250 குருதிமலை
தொழிலாளர்கள் மலைக்குச் செல்லமாட்டார்கள். எல் லோருமே பயப்படாமல் சென்று கொழுந்தெடுக்கவேண்டி யதுதானே?" என்ருர் பண்டா முதலாளி.
* ‘அப்படியில்லை முதலாளி. இப்போது தொழிலாளர் கள் மிகவும் தீவிரமாக இயங்குகிருர்கள். முன்பு அவர் களுக்குத் தோட்டத்தில் வேலையிருந்தபோது ஒரளவுக்கு நிதானமாக எதையுமே செய்தார்கள். ஆனல் வேலை நிறுத்தப்பட்டபின் அவர்களிடையே போராட்ட உணர்வு அதிகமாகி இருக்கிறது. அதனுலேதான் லயன்களுக்கு அருகே இருக்கும் தேயிலை மலைகளுக்குச் சென்று கொழுந் தெடுப்பதற்கு நம்மில் சிலர் பயப்படுகிருர்கள்" என்முன் பொடிசிங்கோவின் பக்கத்தில் நின்றவன்.
"அதுமட்டுமல்ல முதலாளி; அந்தத் தொழிலாளர் களது போராட்டத்துக்குச் சார்பாக நமது கிராமத்தில் உள்ள ஒரு சிலரும் இப்போது கிளம்பியிருக்கிருர்கள்" என்ருன் அங்கிருந்த வேருெருவன்.
**அதற்கெல்லாம் காரணம் அந்த முதியான்சேயும், சுமணபாலாவுந்தான்."
"அவர்களது ஆதரவிலேதான் உங்கள் பியசேன கூட அந்த மாயாண்டியின் மகளைக் கூட்டிவந்து இங்கே கிராமத்தில் வைத்திருக்கிருன்" என்ருன் பொடிசிங்கோ வின் பக்கத்திலே நின்ற இளைஞன்.
'உங்களது சொந்தக் காணியிலேயே குடியிருந்து கொண்டு, உங்களுக்கு மாருன காரியங்களை அவன் செய் வதை நீங்கள் அனுமதிப்பதுதான் எங்களுக்கு வியப்பாக இருக்கிறது" என் முன் பண்டா முதலாளியின் பக்கத்தில் நின்றவன்.
"அதைமட்டும் சொல்லாதீர்கள். அந்தப் பெண்ணை யும் அவனையும் பிரித்து வைப்பதற்கு நான் எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். ஆனலும் இப்படி அவன் திடீ

குருதிமலை 25
ரென அந்தப் பெண்ணையே நாட்டுக்கு அழைத்து வருவா னென நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை" என்ருர் பண்டா முதலாளி யோசனையுடன்.
** முதலாளி நீங்கள் மட்டும் எனக்கு அனுமதி கொடுங் கள். நான் இன்று இரவே அவனது குடிசைக்கு நெருப்பு வைத்துவிடுகிறேன்" என்ருன் பொடிசிங்கோ. அவனது கண்கள் சிவந்திருந்தன.
"இல்லை. இல்லை அப்படியொன்றும் அவசரப்பட் டுச் செய்துவிடாதே. நான் காரணத்தோடுதான் அவர் களைச் சும்மா விட்டு வைத்திருக்கிறேன். அந்தப் பெண் நமது மத்தியில் இருக்கும்போது அவளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமென்ற எண்ணத்தில் இனி அந்த வீரய்யா விஞல் தீவிரமாகப் போராட முடியாதல்லவா? நமது காரி யம் நிறைவேறிய பின்பு அவளை நானே அடித்து விரட்டி விடுவேன்" என்ருர் பண்டா முதலாளி.
**ஆமாம் முதலாளி, நீங்கள் கூறுவதிலும் விஷயம் இருக்கிறதுதான். அவளை இங்கிருந்து இப்போதே விரட்டி விட்டால் அவள் மீண்டும் தோட்டத்திற்கே போய்விடு வாள். பின்பு அந்த வீரய்யாவுக்கு எந்தவித கவலையும் இருக்காது" என்ருன் வேருெருவன்.
**அந்த வீரய்யா இனிமேல் அதிகமாகத் துள்ளிஞல், இங்கே அவனது தங்கையைக் கொலை செய்யப்போவதாக அவனை நான் பயமுறுத்தப்போகிறேன்" என்ருன் பொடி 6ìải G3%rr.
**அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிடாதே. நமக்குக் காணி கிடைப்பதுதான் முக்கியம். நமது கிராமத் திலேயே ஒரு சிலர் எமக்கு மாருக இயங்குகிறர்கள். அத் தோடு இப்போது தோட்டத் தொழிலாளர்கள் பொலிஸ் காரரையே எதிர்க்குமளவுக்குத் தீவிரமாக இருக்கிருர் கள். அதனுல் நாம் மிகவும் தந்திரமாகவே நடக்கவேண் டும்" என்ருர் பண்டா முதலாளி.

Page 131
252 குருதிமலை
"எனக்கொரு யோசனை தோன்றுகிறது முதலாளி. பொலிஸ்காரர்கள் வரும்போது தோட்டத் தொழிலாளர் கள் அடிக்கும் அந்தப் பிரட்டு மணியைக் கழற்றிவிட்டால் என்ன? பின்னர் அவர்களால் ஜீப் வரும்போது "சிக்னல்" கொடுக்க முடியாதல்லவா?" என்ருன் பொடிசிங்கோவின் பக்கத்தில் நின்ற ஓர் இளைஞன்.
**ஆமாம்! அது நல்ல யோசனைதான். இன்று இரவே நான் அந்த மணியைக் கழற்றி வந்து விடுகிறேன்" என் முன் பொடிசிங்கோ.
"அப்படிச் செய்வதால் நமது திட்டம் வீணுகிவிடும். அந்த மணியை நாம் கழற்றிவிட்டால், அவர்கள் அதற் குப் பதிலாக வேருெரு மணியைக் கட்டிவிடுவார்கள். அத்தோடு அந்த மணியைக் கழற்றுவதால் அவர்களுக்கு எம்மீது சந்தேகமும் ஏற்படலாமல்லவா?" என யோசனை யுடன் கூறினர் பண்டா முதலாளி.
"நீங்கள் இப்படி ஒவ்வொன்றிற்கும் ஏதாவது பதி லைச் சொல்லிக் கொண்டிருந்தால் நாம் எப்படித்தான் அந்தத் தோட்டத் தொழிலாளர்களை மட்டந் தட்டுவது?" எனப் படபடத்தான் பொடிசிங்கோ.
* 'அதற்காகத்தான் அந்த மணியைக் கழற்றவேண்டா மெனச் சொல்கிறேன். அதிலேதான் எனது திட்டமே அடங்கியிருக்கிறது. அந்த மணியை வைத்தே அவர்களைத் தோட்டத்தைவிட்டு விரட்டுகிறேன் பாருங்கள். முதலில் அவர்கள் தோட்டத்தைவிட்டு ஓடவேண்டும். பின்புதான் அந்தப் பியசேன கூட்டிவந்து வைத்திருக்கும் குட்டியை ஓட ஓட விரட்டவேண்டும்" என ஆவேசமாகக் கூறினர் பண்டா முதலாளி.
இப்போது அவரது கண்கள் சிவந்திருந்தன.

குருதிமலை v, 25.3
அத்தியாயம் நாற்பது
அந்தக் குடிசையின் முன் பகுதியில் தொங்க விடப் பட்டிருந்த அரிக்கன் லாந்தர் ஒளி உமிழ்ந்துகொண்டிருந் தது. அதன் ஒளி கண்களைக் குத்தாதவாறு, மறுபுறம் திரும் பிச் சுவர்ப் பக்கம் பார்த்தவாறு படுத்திருந்தாள் பிய சேனவின் தாய் மெரினேன.
செந்தாமரை அடுப்படியிலிருந்து இரவுச் சாப்பாட் டைத் தயாரித்துக்கொண்டிருந்தாள். பியசேனவின் தாய் அவளை மிகவும் அன்புடன் நடத்தினுள். பியசேனவும் எந் நேரமும் அவளைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான். அந்தச் சிறிய குடிசையில் அவளுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. ஆனலும் அவள் மிகவும் வாடிப்போயிருந் தாள்.
வீட்டு நினைவு அடிக்கடி வந்து அவளை அலைக்கழித்த வண்ணம் இருந்தது. தன்னைக் காணுது தாய் துடித்துப் போவாளே என்ற நினைவு அவளை வருத்திக்கொண்டிருந் தது. தோட்டத்தில் மதிப்போடு இதுவரை காலமும் வாழ்ந்துவந்த தந்தை, இப்போது அவமானத்தால் குன் றிப்போய் இருப்பாரே என நினைத்தபோது அவளது நெஞ் சுக்குள் ஏதோ அடைப்பதைப்போல் இருந்தது. தோட் டத்துத் தொழிலாளர்களுக்கே தலைவனன தனது தமைய னுக்குத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டேனே என எண் ணியபோது அவளது கண்கள் கலங்கின.
தாய் தந்தையர் தனக்கு இரகசியமாகத் திருமண ஏற் பாடு செய்வதை ராக்கு மூலம் அறிந்ததும், தன்னை

Page 132
254 குருதிமலை
உடனே வந்து அழைத்துப் போகும்படி அவள் பியசேன விடம் வேண்டியிருந்தாள். அப்போது அவளிடமிருந்த ஆர்வமும் துடிப்பும் இப்போது மிகவும் குன்றிப் போயி ருந்தன.
இதுவரை நேரமும் கு டி  ைசயி ன் பின்புறத்தில் விருந்தையொன்றை அமைப்பதற்கு வேண்டிய மரக் கம்பு களைச் சீவிக்கொண்டிருந்த பியசேன, இப்போது அவள ருகே வந்தான்.
**என்ன செந்தாமரை, ஏதோ யோசிச்சுக்கிட்டு இருக் கிறே?" பியசேனவின் குரல் கேட்டுத் திடுக்குற்று நிமிர்ந் தாள் செந்தாமரை.
"ஒண்ணுமில்லீங்க.." எனக் கூறிய செந்தாமரை, அவனைப் பார்த்துச் சிரிக்க முயன்ருள்.
* இல்ல செந்தாமரை. நீ எதையோ மறைக்கப் பாக் கிற, ஒம் முகத்தைப் பாத்தாலே தெரியுது" எனக் கூறிய பியசேன, அவள் அருகே அமர்ந்துகொண்டான்.
* 'இல்லீங்க நான் எப்பவும் போலத்தான் இருக் கேன்."
‘'நீ பொய் சொல்லுற செந்தாமர. ஒனக்கு ஏதாவது கொறை இருந்தா எங்கிட்ட சொல்லு" என அவளது கைகளைப் பற்றியவாறு கூறினன் பியசேன.
**இங்க எனக்கு ஒரு கொறையுமே இல் வீங்க" எனக் கூறிய செந்தாமரை ஒரு கணம் தயங்கிவிட்டு, "எங்க வூட்டுல அப்பா அம்மா என்னு நெலைமையில இருக்காங் களோ தெரியல்ல. அத நெனைக்கத்தான் எனக்கு கவலை யாக் கெடக்கு" அவளது குரல் கரகரத்தது.
**இதுக்குப் போய் ஏன் செந்தாமர கவலைப்படுற. நீ எங்கூடத்தான் வந்திருப்பேன்னு ஒங் க வூட்டுக்கு தெரிஞ்சிருக்குமே. கொஞ்சநாள் போன எல்லாமே சரியா

குருதிமலை 255
போயிடும்" எனக் கூறி அவளைத் தேற்ற முயன்ருன் பிய சேஞ.
"அதுக்கு சொல்ல வீங்க. இப்போதான் தோட் டத்தைவுட்டு எல்லாரையுமே போகச் சொல்லியிருக்கே. அப்புறம் எங்கம்மா, அப்பாவை இனிமே எப்புடீங்க பாக்கப் போறேன்."
செந்தாமரையின் கண்கள் கலங்கின. "அப்புடியெல்லாம் ஒண்ணுமே நடக்காது செந்தா மரை. தோட்டத்து ஆளுங்க ஒரு நாளும் தோட்டத்தவுட் டுப் போகமாட்டாங்க" பியசேனவின் குரலில் உறுதி தொனித்தது.
"இல்லீங்க. இப்ப நாட்டாளுங்களும் ரொம்ப கொழம்பிக்கிட்டு இருக்காங்க. தோட்டத்து ஆளுங்களும் போக மாட்டேனு பிடிவாதமா இருக்காங்க. இப்புடி இருக்கிறப்போ என்ன நடக்குமோனுதான் எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க" என்ருள் செந்தாமரை.
**இந்தா பாரு செந்தாமரை. நீ ஒண்ணுக்கும் கவ லேப்படாத, ஒனக்கு ஒரு கஷ்டமும் வராம நான் பாத்துக் கிறேன். சும்மா சும்மா மனசுல ஏதாச்சும் நெனைச்சி கவ லைப்பட்டுக்கிட்டு இருக்காத." எனக் கூறிய பியசேன. அவளது கண்ணிரைத் துடைத்துவிட்டான்.
அப்போது முன்புறத்தில் படுத்திருந்த பியசேனவின் தாய் எழுந்து, "மே, பலண்ட புத்தே. மேயிங் கவுதோ எவில இன்னே" எனக் குரல் கொடுத்தாள்.
யார் இந்த நேரத்தில் வந்திருக்கக்கூடும் என எண் னியவாறு வாசலுக்கு வந்தான் பியசேன. அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியடைய வைத்தது.
வீரய்யாவும், ராமுவும் குடிசையின் வாசலில் நின்றி ருந்தனர்.

Page 133
256 குருதிமலை
செந்தாமரையைத் திருப்பியழைத்துச் செல்லும் நோக்கத்துடன் வீரய்யா அங்கு வந்திருந்தான். தோட் டத் தொழிலாளர்களின் மேல் கிராமத்தவர்கள் பகை) கொண்டிருக்கும் இந்த நேரத்தில் செந்தாமரை கிராமத் தில் இருப்பது எந்த நேரமும் அவளுக்கு ஆபத்தை ஏற் படுத்தலாம் என்ற எண்ணம் வீரய்யாவின் மனதைக் கலக்கிக்கொண்டிருந்தது. அவனுல் எதையும் நிம்மதியா கச் சிந்தித்துச் செயலாற்ற முடியவில்லை; பெரிதும் குழம் பிப் போயிருந்தான். தோட்டத் தொழிலாளர்களைச் சரி யான முறையில் வழி நடத்தவேண்டிய பெரும் பொறுப்பு தன் மேல் இருக்கும் இந்த வேளையில் சொந்தப் பிரச்சினை கள் தன்னைப் பாதிப்பதை அவன் விரும்பவில்லை. செந்தா மரையை எப்படியாவது திருப்பி அழைத்து வரும்படி தாய் மீனச்சி வேறு எந்த நேரமும் அவனை நச்சரித்தபடி இருந்தாள். அதனுலேதான் அவன் ராமுவையும் அழைத் துக்கொண்டு அங்கு வந்திருந்தான்.
இந்த நேரத்தில், அதுவும் இப்போதுள்ள குழப்ப மான சூழ்நிலையில் வீரய்யாவும், ராமுவும் அங்கு வந்திருப் பது பியசேனவின் உள்ளத்தில் ஒருவித பய உணர்வை ஏற் படுத்தியது.
‘எங்க செந்தாமர.?" வீரய்யாவின் குரல் நிசப்தத் தைக் கிழித்துக்கொண்டு ஒலித்தது.
உள்ளேயிருந்த செந்தாமரையின் உள்ளம் திக் திக் கென்று அடித்துக் கொண்டது. அவள் பயத்துடன் மெது வாக எழுந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.
‘செந்தாமர எங்கூடத்தான் இருக்கிருள்." பியசேன வின் வார்த்தைகள் தடுமாறின.
'அவளை வெளியே வரச் சொல்லு; அவளைக் கூட்டிக் கிட்டுப் போகத்தான் நாங்க வந்திருக்கோம்" என்ருன் 69lutuit unt.

குருதிமலை 257
'அவளை நான் அனுப்ப முடியாது. இனி இங்கதான் அவள் இருப்பாள்" என் முன் பியசேன திடமான குர
"அதை நான் செந்தாமரகிட்டேயே கேக்கிறேன். அவளை இங்க வரச் சொல்லு." அடுப்படிப்பக்கம் பார்த்த வாறு கூறினன் வீரய்யா.
வீரப்யா இப்படிக் கூறியதும் செந்தாமரை பயத் துடன் வெளியே வந்தாள்.
வீரய்யாவுக்கு அவளைப் பார்த்தபோது எரிச்சலாக இருந்தது. ஆனலும் எப்படியாவது அவளைத் தோட்டத் துக்கு அழைத்துச் சென்றுவிடவேண்டுமென்ற எண்ணத் துடன் அவன் தன்னக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
"என்ன செந்தாமரை? நீ எங்கூட இப்ப வாறியா இல்லியா?" என அதட்டும் குரலில் கேட்டான் வீரய்யா.
செந்தாமரை பதில் எதுவும் கூழுது மெளனமாகத் தலைகுனிந்தபடி நின்ருள்.
"இங்கபாரு செந்தாமர. நீ இங்க வந்ததில இருந்து, அம்மா சாப்பிடவே இல்லை. அழுதுகிட்டே இருக்காங்க. ஒன்னை பாக்காம அவுங்களால ஒண்ணுமே செ ய் ய முடியல."
வீரய்யா இப்படிக் கூறியதும் செந்தாமரை பெரிதாக அழத் தொடங்கினுள்.
'என்னை மன்னிச்சிடுங்க அண்ணு. நான் இனி இங்க தான் இருக்கப் போறன்’ விம்மலுக்கிடையே கூறினுள் செந்தாமரை.
** அப்பா ஒரே பைத்தியம் பிடிச்சமாதிரி இருக்காரு.நீ இப்புடிச் சொன்ன நான் என்னதான் செய்யிறது?" எனக் கூறிக்கொண்டே செந்தாமரையின் அருகில் சென்ருன் வீரய்யா,

Page 134
25g குருதிமலை
"அண்ணு. இனி என்னுல அவரப் பிரிஞ்சி இருக்க முடி யாது. தயவுசெஞ்சி என்னை வற்புறுத்தாதீங்க" எனக் கெஞ்சும் குரலில் கூறிஞள் செந்தாமரை.
இனி அவளைத் தன்னுடன் வரும்படி அழைப்பதில் பிரயோசனமில்லை; அவள் ஒரு போதும் பியசேனுவைப் பிரிந்து வரமாட்டாள் என்பதை வீரய்யா உணர்ந்து கொண்டான்.
**சரி செந்தாமரை. அப்படீன நீங்க ரெண்டு பேருமே தோட்டத்துக்கு வந்திடுங்க."
அப்போது இதுவரை நேரமும் மெளனமாக நின்ற ராமு, "ஆமா பியசேன, நீ செந்தாமரையைக் கூட்டிக் கிட்டு தோட்டத்துக்கு வாறதுதான் நல்லது. செந்தாம ரையைக் காணுட்டி, அவுங்க அம்மா உயிர விட்டாலும் வுட்டுடுவாங்கபோல இருக்கு" எனக் கூறினன்.
பியசேனவுக்கு என்ன பதில் கூறுவதென்றே தெரிய வில்லை. அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. மெளன மாக நின்றன்.
‘செந்தாமரை, நாட்டுல ஒனக்கு ஏதாச்சும் ஆபத்து வந்திடுமோனு நெனச்சு ஒங்க அம்மா எந்த நேரமும் அழுது புலம்பிகிட்டு இருக்காங்க. நீ எப்பு டியாச்சும் பிய சேனவைக் கூட்டிக்கிட்டு தோட்டத்துக்கு வாறதுதான் நல்லது." இப்போது செந்தாமரையின் பக்கம் திரும்பிக் கூறினன் ராமு . பியசேன சிறிது நேரம் யோசித்தான். வீரய்யா மிகவும் நல்வவன். ஒரு போதும் தனக்குத்தீமை செய்யமாட்டான் என்பது அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது. இப்போதுள்ள சூழ்நிலையில் செந்தாமரையோடு கூடச்சென்று தோட்டத் திலே தங்கிவிடுவது ஒரு பாதுகாப்பான செயலாக இருக்கு மென அவன் எண்ணினன்.
"'என்ன பியசேன, ரெம்ப யோசிக்கிறே? நீ ஒண்ணுக் கும் பயப்படத் தேவையில்ல. இப்பலே செந்தாமரையை

குருதிமலை 259
கூட்டிக்கிட்டு எங்க கூட வந்திடு" என பியசேனவின் தோள்களைத் தன் இரு கைகளாலும் பற்றியவாறு கூறி ஞன் வீரய்யா.
பியசேனவால் எவ்வித மறுப்பும் தெரிவிக்க முடிய வில்லை.
"சரி வீரய்யா; நீ சொல்லுறபடி செய்யிறேன்; ஆன. இந்த நேரத்தில அம்மாவைத் தனிய வுட்டுட்டு வர முடி யாது’ என்ருன் பியசேன.
"ஆமா அண்ணு, நாளைக்கி கட்டாயமா ரெண்டு பேருமா அங்க வர்முேம், அம்மா கிட்ட சொல்லுங்க" என் முள் செந்தாமரை.
வீரய்யா சிறிது நேரம் யோசித்தான்.
ஆமா வீரய்யா, நாளைக்கி அவுங்க ரெண்டு பேருமா வரட்டும்; அதுதான் நல்லது. பியசேனவும் அவுங்க அம்மா வுக்கு ஒரு ஒழுங்கு பண்ணிட்டுத்தானே வரணும்' என்ருன் ராமு.
இனிமேலும் அவர்களை வற்புறுத்துவது சரியில்லை என நினைத்த வீரய்யா, 'சரி நாளைக்குக் கட்டாயம் வாங்க; ஒங்களை எதிர்பார்த்துகிட்டு இருப்போம்" எனக் கூறிவிட்டு ராமுவுடன் அங்கிருந்து புறப்பட்டான்.
பியசேனவும், செந்தாமரையும் அவர்கள் இருவரை யும் வாசல்வரை சென்று வழியனுப்பி வைத்தனர்.
மறு நாள் -
வீரய்யாவுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி செந்தா மரையையும் அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்ருன் பியசேன.
செந்தாமரையைக் கண்டதும் மீனுச்சி ஓடிவந்து அவ ளைக் கட்டியணைத்துக்கொண்டு பெரிதாக அழத் தொடங்கி

Page 135
260 குருதிமலை
ஞள். செந்தாமரையால் எதுவுமே பேச முடியவில்லை. தாயின் மார்புக்குள் முகத்தைப் புதைத்தவாறு விம்மி ஞள்.
மாயாண்டி மெளனமாகக் கட்டிலில் படுத்திருந் தார். செந்தாமரையின்மேல் அவருக்கிருந்த கோபம் தணியவேயில்லை. ஆனலும், அவள் கிராமத்திலிருந்து ஏதாவது ஆபத்தில் சிக்கிவிடாமல் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தது, அவரது மனதிற்கு ஓரளவு நிம்மதியைக் கொடுத்தது.
வீரய்யாவின் மனதிலும் பெரும் ஆறுதல்ஏற்பட் டது. இனித் தோட்டத்து விடயங்களை எவ்வித குழப்பமு மின்றிக் கவனிக்கலாம் என எண்ணிக் கொண்டான்.
அத்தியாயம் நாற்பத்தொன்று
Pறு வாரத்தில் ஒரு நாள் மாலை!
கண்டக்டரின் பங்களாவிலிருந்துகரத்தை ரோட்டு வந்து முடியும் குறுக்குப் பாதையில் பண்டா முதலாளி யின் லொறி நின்றுகொண்டிருந்தது. அவரது கையாட் கள் இருவர், கண்டக்டருக்குச் சொந்தமான பொருட் களை லொறியில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.
லொறி அங்கு வந்து நிற்பதையும் பொருட்கள் ஏற்
றப்படுவதையும் அறிந்த தொழிலாளர்கள் கண்டக்டரின் பங்களாவின் முன் கூட்டமாகக் கூடிவிட்டனர்,

குருதிமலை 261
விஷயமறிந்த வீரய்யாவும், ராமுவும், செபமாலையும் அப்போதுதான் அவசர அவசரமாக அங்கு வந்து சேர்ந்த னர்.
பங்களாவின் உள்ளேயிருந்து கண்டக்டரும், பண்டா முதலாளியும் வெளியே வந்தனர். அ வ ர் க ளை த் தொடர்ந்து கண்டக்டரை வழியனுப்ப வந்த பெரிய கிளாக்கரும், கோப்பரட்டிவ் மனேஜரும் ஏதோ கதைத்த வண்ணம் வந்தனர்.
தோட்டத்துக்குரிய தளபாடங்களைத் தவிர மற்றவை யாவும் லொறியில் ஏற்றப்பட்டுவிட்டன.
"என்னுங்க ஐயா? நாங்க போராடிக்கிட்டு இருக்கி றப்போ, நீங்கமட்டும் தோட்டத்தவுட்டுப் போறது சரி யில்லீங்க" என்ருன் வீரய்யா கண்டக்டரைப் பார்த்து.
"எங்களுக்கெல்லாம் செய்யிறத செஞ்சிப்புட்டு தோட் டத்துவுட்டு தப்பிப் போகலாமுனு பாக்கிறீங்களா? நமக்கு ஒரு முடிவு வந்தாத்தான். நீங்க தோட்டத்தவுட் டுப் போகலாம்' என்றன் செபமாலை.
வீரய்யாவும், செபமாலையும் இப்படிக் கூறியதும் கண் டக்டர் ஒருகணம் நிலைதடுமாறிப் போனர்.
பக்கத்தில் நின்ற பண்டா முதலாளிக்கு வீரய்யாவைப் பார்ப்பதற்கே எரிச்சலாக இருந்தது. இவனல்தானே எல் லாக் காரியங்களும் தடைப்படுகின்றன. கிராமத்திலிருந்து தனது தங்கையை அழைத்து வந்ததுமல்லாமல் இப்போது பியசேனவையும் தனது குடும்பத்தில் ஒருவனுகச் சேர்த் துக்கொண்டுவிட்டான். இனி இவன் எதற்குமே பின்நிற்க மாட்டான் என எண்ணியவாறு அவர் மெளனமாக நின் ருர்.
கண்டக்டர் எதுவும் பேசாது அலட்சியமாக முகத்தை வேறு புறம் திருப்பியபடி படியில் இறங்கத் தொடங்கி னர்.

Page 136
262 குருதிமலை
லொறியை அண்மித்ததும், அதனைச் சுற்றிப் பலர் கூட் டமாகக் கூடி நிற்பதைக் கவனித்த எல்லோருக்கும் சிறிது அதிர்ச்சியாக இருந்தது.
"என்னுங்க ஐயா. நாங்க சொல்லுறதுக்கு ஒன்னும் பேசாமப் போlங்க..?" என அவர்களின் பின்னே வந்து கொண்டிருந்த வீரய்யா கேட்டான்.
'இந்தா பாரு. நாங் தோட்டத்தைவிட்டுப் போறது : எங் விருப்பங். ஓங்களுக்கு என்ன? என்னையும் ஓங்க மாதிரி தோட்டத்தில கொழப்பங் பண்னிக்கிட்டு இருக்க சொல்லுறதா?’ என வீரய்யாவைப் பார்த்து முறைத்த படி கூறினர் கண்டக்டர்.
"அப்புடி இல் லீங்க, நீங்க தோ ட் டத் த வுட் டு ப் போயிட்டா, அப்புறம் எங்களால தனிய இருந்து ஒண்னும் செஞ்சிக்கிட முடியாதுங்க. அதனுலதாங்க கேக்கிருேம். நீங்க போக வேணும்' என்ருன் வீரய்யா.
"ஏய், என்ன முட்டாள் மாதிரி பேசுறது; அரசாங்கத் துல இதுந்துதாங் நமக்கு மாத்திப் போகச் சொல்லி உத் தரவு வந்திருக்கு, நாங் வேற தோட்டத்திக்கி போய் வேலைசெய்ய வேணுங். நீ மடையன் மாதிரி கதைக்கிறது. எல்லாங் ஒன்ன சேந்துக்கிட்டு இங்க வந்து கொழப்பம் பண்ணுறது. எல்லாங் ஓடிப்போ' என லொறியின் அருகே வந்த கண்டக்டர் ஆவேசத்துடன் பலமாகக் கத்தி ஞர்.
‘என்னுங்கையா, நாங்க மரியாதையாப் பேசிக்கிட்டு இருக்கோம். நீங்க என்னுடான ரொம்ப மேலை போlங்க. நீங்க போகக்கூடாதுனு போகக்கூடாது" இதுவரை நேர மும் குமுறிக்கொண்டிருந்த ராமு கூறினன். அவனது உடல் வெட வெடத்தது.
'நீங்க மத்தத் தோட்டத்துக்கு மாத்திப்போகத் தேவையில்ல; இதே தோட்டத்திலையே வேலை செய்யலாம்.

குருதிமலை 263
இதுக்குத்தானே நாம இப்ப அரசாங்கத்தோட போரா டிக்கொண்டிருக்கிறேம்; ஒங்களை நாங்க போகவுடமாட் டோம்" என்ருன் வீரய்யா. அவனது முகம் இப்போது வியர்த்திருந்தது.
"இந்தா, சும்மா பேசவாணுங். கண்டக்கையா தோட் துத்துல இருக்கிறப்போ எல்லாங் கரச்சலுக்கு வந்தது. இப்போ அவர் போற நேரங் போகவுடாம கொழப்பங் பண்ணுறது. ஒனக்கு என்னு பைத்தியங் புடிச்சிருக்கா?" பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பெரிய கிளாக்கர் எரிச்சலுடன் கூறினர்.
'எங்களுக்கு ஒண்ணும் பையித்தியம் பிடிக்கலீங்க. எங்களுடைய உரிமைக்காகத்தான் நாங்க போராடிக் கிட்டு இருக்கோம்' என்ருன் ராமு சினத்துடன்,
*தோட்டத்தையே நாசம் பண்ணிப்புட்டு தப்பிச்சு போகலாமுனு நெனைக்கிறீங்களா?' என அங்கிருந்த ஒரு வன் கத்தினன்.
"நீங்க வந்து எங்களுக்கு ஏதும் நல்லது செய்யல்ல; நீங்க நல்லவருனு சொல்லி போகவுடாம தடுக்குருேமுணு நெனச்சிக்கிடாதீங்க. எங்களுடைய பிரச்சினை முடியிற வரைக்கும் நாங்க யாரையும் தோட்டத்த வுட்டுப் போக விடமாட்டோம். நாங்களும் தோட்டத்தவுட்டுப் போக மாட்டோம்" என்ருன் வேருெருவன்.
"எங்களுக்கு ஒரு நல்ல முடிவு வந்தவொடன நீங்க எங்கசரி தொலைஞ்சு போனலும் கவலையில்ல' என் முன் அங்கு நின்ற குப்பன்.
"இந்தாபாரு மனுஷன், இது அரசாங்கத்தோட சட் டம், ஒங்களுக்கு அது பத்தி ஒண்ணும் தெரியாதுதானே. ஓங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு கண்டக்கையா நடக்க (LP Lգயாது. போராட்டம் போராட்டமுனு சொல்லிகிட்டு இருக்

Page 137
264 குருதிமலை
காம எல்லாந் தோட்டத்தவுட்டுப்போ. அரசாங்கத்தோட எதிர்த்துக்கிட்டு, ஒங்களுக்கு ஒண்ணுங் செய்ய முடியாது" என்ருர் பெரிய கிளாக்கர் பலத்த குரலில்.
கண்டக்டரின் நிலைமை தர்மசங்கடமாகிவிட்டது. இவர்கள் திட்டம் போட்டுத்தான் எல்லாம் செய்கிறர் கள் என அவரது மனம் எண்ணியது.
**அவருகிட்ட என்னு வீரய்யா கதைக்கிறது? வாங் கடா எல்லாம், லொறியில இருக்கிற சமானத்த இறக்கு வோம்" எனப் பலமாகக் கூறிவிட்டு லொறியின் பின்புறத் தில் போய்த் தாவி ஏறினன் ராமு.
அப்போது அங்கே நின்ற பண்டா முதலாளி, "டேய், யாரு சரி நம்ப லொறியிலை ஏறவேணும். லொறியில ஏறின காலை ஒடிச்சுப் போடறது' எனக் கத்தியபடி ராமுவை லொறியிலிருந்து வெளியே இழுப்பதற்காக அவனருகே சென் ருர்.
"என்னு ஓய். பெருசா பேசுற? எங்க யாரு மேல சரி கைவச்சா, அப்புறம் எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கி, இந்த லொறிக்கும் நெருப்பு வச்சிடுவோம்" என ராமு கோபத்துடன் கூறினன்.
அங்கு நின்ற தொழிலாளர்கள் யாவரும் திமுதிமு வென லொறிக்குள் பாய்ந்தனர்.
பண்டா முதலாளி ஒன்றும் செய்வதறியாது திகைத்து நின்ருர்,
இப்போது இவர்கள் இருக்கும் நிலையில் எதைச் செய்வதற்கும் தயங்க மாட்டார்கள் என்பதை அவர் புரிந்துகொண்டார்.
லொறிக்கு ஏதும் சேதம் விளைவித்துவிடாமல் இருக்க வேண்டுமே என அவரது மனம் ஏங்கியது.
லொறிக்குள் பாய்ந்த தொழிலாளர்கள் சில நிமிட நேரத்திற்குள் அதனுள் இருந்த பொருட்கள் எல்லாவற்

குருதிமலை 265
றையும் இறக்கி பங்களாவின் உள்ளே கொண்டு சென்று வைத்தனர்.
'ஏய். லொறியை இங்க நிப்பாட்டாம சுறுக்கா கொண்டுபோ' எனப் பல குரல்கள் ஒரே நேரத்தில் ஒலித்தன.
லொறியில் பண்டா முதலாளி ஏறி உட்கார்ந்து கொண்டார். றைவர் லொறியை "ஸ்ராட்" செய்தான்.
"அடே, நம்மல யாருன்னு நெனச்சது? நம்ப லொறி யவா கொழுத்துறேனு சொன்னது. ஓங்களை எல்லாங் என்ன செய்யுறேன்னு பாரு" எனக் கர்ச்சித்தார் பண்டா முதலாளி.
கூட்டத்திலிருந்து கேலிக் குரல்களும் கூச்சல்களும் பலமாக எழுந்தன. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் விசில் அடித்தனர், லொறி பேரிரைச்சலுடன் உறுமிக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றது.
பண்டா முதலாளி பற்களைக் கறுவிக்கொண்டார்.
கண்டக்டரும், கிளாக்கரும்,மனேஜரும் பெரும் குழப் பத்துடன் பங்களாவினுள்ளே சென்னறர்.

Page 138
286 குருதிமல்
அத்தியாயம் நாற்பத்திரண்டு
பண்டா முதலாளிக்கு இப்போது வியாபாரம் சிறிது குறைந்திருந்தது. ஆனல் அவர் அதைப்பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை. அவருக்குத்தான் முன்பைவிட பலமடங்கு வருமானம் கொழுந்து வியாபாரத்தில் கிடைக் கிறதே! பின்பு ஏன் அவர் அதைப்பற்றிக் கவலைப்படப் போகிருர்,
அன்று மாலை அவரது வீட்டின் பின்புறத்தில் இருக்கும் கள்ளுக்கடையில் நாட்டில் உள்ள பல இளைஞர்களும் முக் கியஸ்தர்களும் கூடியிருந்தார்கள். கிராமசேவகரும் அங்கு வந்திருந்தார்.
கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் முக்கியமானவர் கள் எல்லோரும் அங்கு வந்திருக்கிருர்களா என பண்டா முதலாளி நோட்டம் விட்டு விட்டு கூட்டத்தை ஆரம்பித் தார்.
"நான் உங்களை இங்கு எதற்காக அழைத்தேன் என் முல், நீங்கள் எல்லோரும் உங்களுக்குக் காணி கிடைக்கப் போகிறதென மிக ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டி ருக்கிறீர்கள். ஆனல் இப்போதுள்ள சூழ்நிலையில் உங்க ளுக்கு ஒரு துண்டுக் காணி கூடக் கிடைக்கப்போவதில்லை என்பதைத் தெரிவிப்பதற்குத்தான்."
பண்டா முதலாளி இப்படிக் கூறியதும் அங்கு நின்ற வர்களிடம் சலசலப்புத் தோன்றியது.
'என்ன முதலாளி? நீங்கள் தான்முதலில் எங்களுக்குக் காணி கிடைக்கப் போகிறதெனக் கூறினீர்கள்; இப்போது

குருதிமை ዷ67
இல்லையென்று சொல்லுகிறீர்கள். ஏன் இப்படி எங்களை யெல்லாம் ஏமாற்றுகிறீர்கள்?" எனக் கேட்டான் அங் கிருந்த பொடிசிங்கோ.
* "நான் உங்களை ஏமாற்றவில்லை. எங்களுடைய மந் திரியும் எங்களுக்கு நிலம் கிடைப்பதற்கு ஏற்ற ஒழுங்கு களைச் செய்திருக்கிருர், ஆனல் தோட்டத் தொழிலாளர் கள் தான் எங்களுக்குக் காணி கிடைப்பதற்குத் தடை யாக இருக்கிழுர்கள்."
ஒ. அது எங்களுக்கும் தெரியும். எங்களுக்குக் கிடைக்கப்போகும் காணியை கிடைக்காமல் செய்வதற்கு, எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு அவர்களுக்கு என்ன உரிமை யிருக்கிறது?" என ஆத்திரத்துடன் கேட்டான் ஒரு இளை ஞன்.
'அவர்களுக்கு உரிமையில்லைத்தான். ஆனல் அவர் களிடம் வீரம் இருக்கிறது. எங்களைப் போல அவர்கள் கோழைகளல்ல' என்ருர் பண்டா முதலாளி.
"அப்படிச் சொல்லாதீர்கள் முதலாளி எங்களைக் கோழைகள் என்று மட்டும் நினைக்காதீர்கள்" எனக் கத்தி னன் அங்கிருந்த வேருெருவன்.
**உங்களிடம் என்ன வீரம் இருக்கிறது.? தோட்டத் தொழிலாளர் எல்லோரும் தோட்டத்தை வுட்டுப் போகப் போவதில்லையெனக் கூறிப் போராடுகிருர்கள். ஆனல் உங்களுக்குக் காணி கிடைக்க வேண்டுமென நீங்கள் ஒரு போதும் போராடியதில்லையே' என்ருர் பண்டா முத லாளி.
அப்போது கிராமசேவகர், "காணியளப்பவர்கள் நட்டுவைத்த கூனிகளைத் தோட்டத் தொழிலாளர்கள் பிடுங்கி வீசிணுர்கள். கொழுந்தெடுக்கப் போன உங்களை எதிர்த்து வலியச் சண்டைக்கு வந்தார்கள் பொலிஸ்கார ரையே எதிர்த்து உயிரைக் கூட மதியாமல் ஜீப்பின் முன்

Page 139
·ይ68 குருதிமலை
ஞல் படுத்து,அவர்களை விரட்டித் துரத்தினர்கள்" எனக் கூறினர்.
* அதுமட்டுமா, தோட்டத்திலிருந்து உத்தியோகத் தர் வெளியேறுவதைக் கூட தடுத்து நிறுத்தினர்கள். அன்று கண்டக்டரின் பொருட்களை ஏற்றப்போன என்னையும் அடிக்கவந்து லொறியையும் நெருப்புவைப்பதாகச் சொன் ஞர்கள்" என்ருர் பண்டா முதலாளி.
**அவர்கள் எல்லோரும் இப்படிப் போராடிக்கொண் டிருக்கும் வேளையில் எங்களுக்குக் காணி வேண்டுமென நாங்கள் எப்போதாவது போராடியிருக்கிருேமா?" எனக் கேட்டுவிட்டு எல்லோரையும் ஒரு தடவை பார்த்தார் கிராமசேவகர்.
தோட்டத்தொழிலாளர்கள் எல்லோரும் ஒற்றுமை யாக நின்று போராட்டத்தை நடத்துகின்றர்கள். நம் மிடையே அப்படி ஒரு ஒற்றுமை இருக்கிறதா?முதியான்சே யும் சுமணபாலாவும் நமக்கு எதிராகப் பிரசாரம் செய்வ தால்,இன்று நம்மில் சிலர் தோட்டத் தொழிலாளர்களுக் குச் சார்பாகத் திரும்பி இருக்கின்றர்கள்"என்ருர் பண்டா முதலாளி.
*நம்மோடு நின்று போராடவேண்டிய பியசேன இன்று அந்தத் தோட்டத் தொழிலாளர்களோடு சேர்ந்து கொண்டு நமக்கு எதிரான காரியங்களையும் செய்கிருன்" என்ருர் கிராமசேவகர்.
எல்லோரும் மெளனமாக இருந்தனர். 'நான் உங்கள் எல்லோரையும் கோழைகள் என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?" என பண்டா முதலாளி இப்போது கேட்டார்.
'நாங்கள் ஒருவரும் கோழைகள் அல்ல. நாங்கள் எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கிருேம்." பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன.

குருதிமலை 269 8۔۔۔۔۔۔ ۔
பண்டா முதலாளி சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டார். k
மெனிக்கே, கிராமசேவகருக்கும்,அங்கு நின்ற ஒருசில ருக்கும் சிகரெட் வழங்கினுள்.
"எங்கள் எல்லோருக்கும் காணி கிடைக்கவேண்டு மானுல் அதற்குத் தடையாக இருக்கும் எல்லாச் சக்திகளே யும் முதலில் ஒழிக்கவேண்டும்."
**இது நம் நாடு. நாம் எவருக்கும் பயந்துவாழத் தேவையில்லை" என்ருர் பண்டா முதலாளி.
“எமக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தொழிலாளர் களை அடித்து நொறுக்கிவிடுவோம்" எனக் கத்தினுன் பொடிசிங்கோ.
'இல்லையில்லை. அப்படிச் செய்யும்படி தூண்டுவதற் காக நான் உங்களை இங்கு அழைக்கவில்லை. நாமும் போராடவேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் உங்களை அழைத்தேன்" என்ருர் பண்டா முதலாளி,
‘எங்களுக்குக் காணி கொடுப்பதைத் தடைசெய்ப வர்களை நாங்கள் சும்மா விட்டுவிடப் போவதில்லை. அவர் களின் போராட்டத்தை எப்படியும் தகர்த்துவிடுவோம்" எனப் பலர் ஒரே சமயத்தில் கூறினர். M
'இதுதான் நீங்கள் எடுத்திருக்கும் முடிவா? அவர்களை உங்களால் எதிர்த்து நின்று போராடமுடியுமா?" எனச் சிந்தனையுடன் கேட்டார் பண்டா முதலாளி,
' ஆமாம்,இதுதான் எங்கள் முடிவு. எத்தனை பேர் வந் தாலும், எங்களது உயிரைப் பணயம் வைத்துக்கூடப் போராடி, அவர்களை அடித்து விரட்டுவோம்' என்ருன் அங்கிருந்த மற்ருெருவன்.
பண்டா முதலாளி யோசனையுடன் தலையாட்டிவிட்டு, "அப்படியானல் நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்

Page 140
270 குருதிமல்ை
கள்,எல்லோரும் நான் சொல்வதை மிகவும் இரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும். முக்கியமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் இவ் விஷயம் தெரியக் கூடாது.'
'இங்கு துரோகிகள் எவரும் இல்லையென்பதை நீங் கள் நம்பலாம். நீங்கள் கூறும் விஷயங்களை இங்குள்ள எவ ருமே வெளியிடமாட்டார்கள்" எனக் கூறினன் பொடி சிங்கோ உறுதியான குரலில்,
** மிகவும் நல்லது.எமக்கு எதிராகப் பிரசாரம் செய் பவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.இங் குள்ள எல்லோருமே ஒற்றுமையாக இருந்தால் நாம் எதை யுமே சாதித்துவிடலாம்' எனக் கூறிய பண்டா முதலாளி தனது திட்டத்தை விளக்கத் தொடங்கினர்.அவரது முகம் மிகவும் கொடூரமாக மாறிக்கொண்டு வந்தது.
கடையில் நின்ற பெடியன் அங்கு வந்தவர்கள் எல்லோ ருக்கும் தாராளமாகக் கள்ளை ஊற்றிக் கொடுத்தான். முட்டிகளில் இருந்த கள்ளு முடிந்தபோது முதலாளியிட மிருந்த சாராயப் போத்தல்களும் வெளியே வந்தன.
சிறிது நேரத்தில் அங்கிருந்த எல்லோரும் வெறியர் களாக மாறினர்.

குருதிமலை 971
அத்தியாயம் நாற்பத்துமூன்று
இரவு, நேரம் ஏழு மணி இருக்கும்.
லயத்துக்கு வெளியே எங்கும் ஒரே இருட்டாக இருந் தது. தொழிலாளர்கள் எல்லோரும் தத்தம் காம்பராக் களில் இருந்தபடி, தோட்டத்து நிலைமைகளைப் பற்றிக் கதைத்தவண்ணம் இருந்தனர். பெண்கள் சமையலில் ஈடு பட்டிருந்தனர்.
குண்டன் கங்காணி லயத்தில் பழைய மாரிமுத்துத் தலைவர் "ராஜா தேசிங்கு" கதையை உரத்து, ஒருவித இரா கத்துடன் படித்துக்கொண்டிருந்தார். அந்த லயத்தில் இருக்கும் நான்கைந்து வயதானவர்கள் அவரைச் சுற்றி வட்டமாக அமர்ந்துகொண்டு மிக ரசனையுடன் அந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்தனர். மாரிமுத்துத் தலை வரின் குரல் நிசப்தமான அந்த வேளையில் லயம்முழுவதும் ஒலித்துக்கொண்டிருந்தது.
எங்கோ பூசாரி ஒருவன் உடுக்கடிக்கும் ஓசையும் காற் றிலே கலந்து வந்துகொண்டிருந்தது.
தோட்டத்திலே வேலை நிறுத்தியதைத் தொடர்ந்து, என்ன நடவடிக்கை எடுக்கலாமெனக் கலந்து ஆலோசிக் கும் நோக்கத்துடன் வீரய்யா தனது நண்பர்களைத் தேடிச் சென்றிருந்தான்.
மீனச்சி இரவுச் சாப்பாடு செய்வதில் முனைந்திருந் தாள். செந்தாமரையும் பியசேனவும் இஸ்தோப்பில் இருந்தவாறு எதைப் பற்றியோ சுவாரஷ்யமாகக் கதைத் துக்கொண்டிருந்தனர்.

Page 141
272 குருதிமலை
மாயாண்டி காம்பராவின் உள்ளே கிடந்த கட்டிலில் படுத்தபடி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார்.
வயல் லயத்தில் கறுப்பண்ணன் கங்காணியின் காம்ப ராவிலிருந்து, அவரும் அவரது மனைவியும் பெரிதாகச் சண்டை போடும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கிராமசேவகர் வயலைப் பிடுங்கியதிலிருந்து அடிக்கடி அவர்களிடையே வாக்குவாதம் நடக்கும்.அவரது மனைவி தனது நகை மூழ்கிப்போய்விட்டதை எண்ணிக் கவலை யுடன் அவரோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.
குப்பன் வீட்டில் அவரது மனைவி அடுப்படியில் இருந்து ரொட்டி போட்டுக்கொண்டிருந்தாள்.அவளைச் சுற்றி குப் பனும் அவனது நான்கு பிள்ளைகளும் வட்டமாக அமர்ந்தி ருந்தனர். பிள்ளைகள் அடுப்பில் வெந்துகொண்டிருக்கும் ரொட்டியையே பார்த்துக்கொண்டிருந்தனர்.அரிசி இல் லாத காரணத்தால், கிடந்த இரண்டு சுண்டு மாவைப் பிசைந்து ரொட்டி போட்டுக்கொண்டிருந்தாள் குப்பனின் மனைவி.ரொட்டி வெந்ததும் அவள் அதனைப் பகிர்ந்து எல் லோருக்கும் கொடுக்கிருள். அந்தச் சிறிய துண்டு ரொட் டியைச் சாப்பிட்டுவிட்டு வெறுஞ் சாயத் தண்ணியால் அவர்கள்.வயிற்றை நிரப்பிக்கொள்கின்றனர்.
அந்த வேளையில் மடுவத்தின் பக்கத்திலிருந்து *டாண். டாண்..." என மணியோசை பலமாகக் கேட்டது.
லயத்தில இருக்கும் ஒவ்வொருவரும் திடுக்குற்று எழு கின்றனர். ஒருநாளும் இல்லாதவாறு ஏன் இந்த நேரத்தில் மணியோசை கேட்கிறது? காணி அளப்பவர்கள் இரவு நேரத்திலா வரப்போகின்றனர்?பகலிலே அவர்கள் வருவ தைத் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்துவதால், ஒருவேளை இரவு நேரத்தில் வந்திருப்பார்களோ?அல்லது கண்டக்டர் தான் இரவிரவாகத் தோட்டத்தைவிட்டுப் போக முயற்சி செய்யும்போது அதனைக் கண்டுகொண்ட யாராவது மணி அடித்திருப்பார்களோ?எவருக்கும் ஒன்றுமே புரியவில்லை,

குருதிமலை 273
ஆண்கள் எல்லாரும் மடுவத்தை நோக்கித் தீப்பந்தங் களுடன் விரைந்தனர். செந்தாமரையுடன் கதைத்துக் கொண்டிருந்த பியசேனவும் அவர்களோடு சேர்ந்து மடு வத்துப் பக்கமாக ஓடினன். பெண்களும் வயோதிபர்களும் சிறுவர்களும் லயத்திலே தங்கிவிட்டனர்.
திடீரென லயத்தில் இருந்த நாய்கள் எல்லாம் பலமா கக் குரைக்கத் தொடங்கின.
பலர் திமுதிமுவெனத் தேயிலைப் புதர்களில் இருந்தும் மறைவான இடங்களில் இருந்தும் லயத்துக் காம்பராக் களில் ஒரே சமயத்தில் புகுந்தனர். சிலரது கைகளில் கத்தி யும் கோடரியும் தடிகளும் காணப்பட்டன. ஒருசிலர் பள பளக்கும் வாள்களுடன் பாய்ந்து வந்தனர்.
அவர்கள் எல்லோருமே மதுபோதையில் நிறைந்தி ருந்தனர்.
அவர்களைக் கண்டதும் லயத்திலிருந்த சிறுவர்களும் பெண்களும் பயத்துடனும் பீதியுடனும் கூச்சலிடத் தொடங்கினர்.
'ஏய்; யாருங் சத்தங் போடவேணும்;சத்தம் போட்டா வெட்டிப் போடுவேன்" என அங்கு வந்த குண்டர்களில் ஒருவன் கூறினன்.
எல்லோரும் பயத்துடன் நடுங்கியவாறு வாயடைத்துப் போய் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
குண்டர்கள் காம்பராக்களுக்குள் புகுந்து சூறையா டத் தொடங்கினர். ஒருசில பெண்களின் கழுத்திலும் காது களிலும் இருந்த நகைகளை மூர்க்கத்தனமாகப் பிடுங்கி எடுத்தனர்.எந்தெந்தக் காம்பராக்களில் எல்லாம் தொழி லாளர்களது உடைமைகளைச் சூறையாட முடியுமோ, அவற்றையெல்லாம் சூறையாடினர்.
குண்டன் ஒருவன், கண்களில் தென்பட்ட அழகான, வயதுவந்த பெண் ஒருத்தியைப் பலவந்தமாகப் பிடித்து,

Page 142
274 குருதிமலை
லயத்தின் சற்றுத் தூரத்திலுள்ள இருட்டான பகுதிக்கு இழுத்துச் சென்றன். அவள் எவ்வளவோ கதறியும், அவ னிடமிருந்து விடுபட முயற்சி செய்தபோதும் அவளால் தப்பமுடியவில்லை.அந்தக் கொடியவனின் மிருக இச்சைக்கு அவள் பலியானள்.
ஒருசில வயோதிபர்கள் அந்தக் குண்டர்களை எதிர்க்க முயன்றபோது, அவர்களைக் குண்டர்கள் அடித்துத் துன் புறுத்தினர்.
லயங்களில் இருந்த பொருட்கள் யாவும் சூறையாடப் பட்டதும்,தாங்கள் தயாராகக் கொண்டுவந்திருந்த மண் ணெண்ணெய்,பெற்ருேல் முதலியவற்றை லயத்தின் உள் ளேயும் வெளிப்புறத்திலும் ஊற்றி கையில் இருந்த பந்தத் தால் லயங்களுக்குத் தீ வைத்தனர். சில குண்டர்கள் முன்பே தயாராகக் கொண்டுவந்த பெற்ருேல் குண்டுகளை லயங்களின் கூரைமீது வீசினர். அவை பயங்கரமாக, பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறி தீச்சுவாலைகளை எங்கும் பரவவைத்தன.
பக்கத்திலிருந்த மாரியம்மன் கோயிலை நோக்கி ஒரு குண்டன் தனது கையிலிருந்த குண்டை வீசி அந்தக் கோயிலைத் தகர்த்தெறிந்தான்.
லயங்களில் இருந்த வயோதிபர்களும் பெண்களும் சிறுவர்களும் வீரிட்டு அலறிக்கொண்டு வெளியே ஓடினர். லயங்களில் பற்றிய நெருப்பு இப்போது சுவாலைவிட்டுப் பெரு நெருப்பாக எரிந்துகொண்டிருந்தது.
குறுகிய நேரத்தில் அந்தக் கொடுஞ்செயல்களை நடத்தி முடித்துவிட்டு, தமக்குக் கிடைத்த பொருட்களுடன் குண் டர்கள் அவ்விடத்தைவிட்டு ஓடி மறைந்தனர்.
மடுவத்தைச் சென்றடைந்த ஆண்களுக்கு, அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது புரிந் தது.யாரோ வேண்டுமென்று மணியை அடித்துத் தங்களை

குருதிமலை 275
மடுவத்திற்கு வரவழைத்திருக்கிருர்கள் என்பதை அவர் கள் புரிந்துகொண்டார்கள்.
லயத்துப் பக்கமிருந்து பெண்களினதும் சிறுவர்களின தும் அவலக்குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன.தீச்சுவாலை கள் கொழுந்துவிட்டு எரிவதை மடுவத்திலிருந்து பார்க் கக்கூடியதாக இருந்தது.இப்போது எல்லோரும் லயத்தை நோக்கி விரைவாக ஓடத் தொடங்கினர்கள்.
லயங்களின் அருகே நெருங்கக் கூட முடியவில்லை. தீப் பிழம்புகள் அனலைக் கக்கிக்கொண்டு இருந்தன. எங்கும் ஒரே புகைமண்டலமாகத் தெரிந்தது,தீப்பொறிகள் வெகு தூரம் வரை பறந்து சென்று பக்கத்திலுள்ள மரஞ் செடி களைத் தாக்கின.
லயத்தை அடுத்துள்ள, மீனுப் புல்லினல் வேயப்பட்டி ருந்த மாட்டுத் தொழுவங்களின் கூரைகளில் தீ பற்றிய போது,அங்கிருந்த பசுமாடுகள் மிகப் பயங்கரமாகக் கத றிக்கொண்டிருந்தன.
கோழிக் கூடாப்பிற்குள் அடைக்கப்பட்டிருந்த கோழி கள் யாவும் தீயின் வாயில் அகப்பட்டு மரண ஒலம் எழுப்பின.
தொழிலாளர்கள் வளர்த்துவந்த நாய்கள் இப்போது தூரத்தே நின்று லயங்கள் எரிவதைப் பார்த்துப் பெரும் சோகமாக ஊளையிட்டுக்கொண்டிருந்தன.
யாராலுமே அருகில் கூட நெருங்கமுடியவில்லை. ஆண் டாண்டு காலமாக அவர்கள் தே டிவைத்திருந்த உடைமை களைப் பறிகொடுத்துவிட்டு, எஞ்சியவையெல்லாம் நெருப் பிலே வெந்து சாம்பலாவதைப் பார்த்துக்கொண்டும், பெருஞ் சோகமாக அழுதுகொண்டும் இருப்பதைத் தவிர அவர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.
வீரய்யாவும் ராமுவும் அவர்களது நண்பர்களும் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர். சனங்களின்

Page 143
276 குருதிமை
கதறல் அவர்களுக்குத் தாங்கமுடியாத வேதனையைக் கொடுத்தது.நாட்டிலிருந்து வந்தவர்கள்தான் திட்டமிட்டு இப்படியொரு கொடுமையைச் செய்துவிட்டு ஓடிவிட்டார் கள் என்பதனை அங்கிருந்தவர்கள் வீரய்யாவிடம் கூறினர். தோட்டத்தை விட்டு வெளியேருத ஒரே காரணத்திற் காக தொழிலாளர்களது உடைமைகளைச் சூறையாடி, இருப்பிடங்களைக் கொளுத்தி நாசம் செய்தால், தொழிலா ளர்களுக்குப் போராடுவதற்குத் தெம்பு இருக்காதென நினைத்துத் திட்டந் தீட்டி இப்படியொரு கொடூரச் செயலை நாட்டில் உள்ளவர்கள் செய்துவிட்டார்கள் என்பதை இப் போது வீரய்யா புரிந்துகொண்டான்.
அங்கிருந்தவர்களுக்கு உண்ண.உணவோ,உடுப்பதற்கு மாற்றுடையோ, வசிப்பதற்கு இடமோ எதுவுமே இல்லை. இப்படியான ஒரு பரிதாப நிலையில் தள்ளப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதற்கும்,மேலும் அசம்பாவிதங்கள் நடவாமல் தடுப்பதற்கும் உரிய பெரும் பொறுப்பு தனக்கு இருக்கிற தென்பதை வீரய்யா உணரத் தொடங்கினன்.
அங்கு நிகழ்ந்து முடிந்துவிட்ட சம்பவங்களையும், இழப் புகளையும் ஒவ்வொருவரும் அவனிடம் கூறியபோது, வீரய் யாவின் நெஞ்சத்தில் உதிரம் கொட்டியது.
சிலமணி நேரத்தின் பின் அங்கு நடந்து முடிந்துவிட்ட கொடுமைகளை அறிந்த பொலிசார் ஜிப்பில் தோட்டத்தை நோக்கி விரைந்து வந்தனர்.
அன்று எல்லோரும் இருப்பதற்கு இடமின்றிப் பக்கத்தி லுள்ள தேயிலைச் செடிகளின் அணைப்பில் அந்தப் பயங்கர மான இரவைக் கழித்தனர்.
率 事 அந்த இரவு நீண்ட இரவாகவே இருந்தது. தொழி லாளர்கள் எல்லோரும் விடிவை நோக்கி காத்திருந்தனர். மறுநாட்காலை நிலம் வெளித்தபோது இரவு நடந்த

குருதிமலை 277
கோரத்தின் சுவடுகள் ஒவ்வொன்முகத் தெரியத் தொடங் கின.
லயங்கள் யாவும் தரைமட்டமாகிப் போயிருந்தன, தீ இன்னும் அணையாமல், தணல்களிலிருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்தது. லயங்களைச் சுற்றியுள்ள பெருவிருட்சங் கள் எல்லாம் கருகிப்போய்க் கிடந்தன. மாமரங்களிலும் பலா மரங்களிலும் காய்கள் வெந்துபோய்த் தொங்கின. பக்கத்தில் இருந்த ஓரிரு மாட்டுத் தொழுவங்களும் தரை மட்டமாகிப் போய்க்கிடந்தன. சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்த பசு மாடுகளும் கன்றுகளும் மிகக் கோரமாய் வெந்துபோய்க் கிடந்தன.
கூரைத் தகரங்களெல்லாம் நெருப்பு வெக்கையில் வளைந்து சுருண்டுபோய் நிலத்தில் விழுந்து கிடந்தன. சுவர்கள் யாவும் கருமை படிந்தும், வெடித்தும் காட்சி யளித்தன. காம்பராவில் கிடந்த ராக்கைகளில் சேர்த்து வைத்திருந்த பொருட்களும் அட்டாளை மரங்களும் எல் லாமே எரிந்து சாம்பலாகிப் போய்க்கிடந்தன.
நெருப்பு ஒரு வாறு அணைந்தபோது,தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது காம்பராக்களுக்குள் சென்று ஏதாவது பொருட்கள் தீயின் பிடியிலிருந்து தப்பியிருக் கிறதா என்ற நப்பாசையோடு ஆராயத் தொடங்கினர் கள்.
வீரய்யாவும் ராமுவும் ஒவ்வொரு லயமாகச் சென்று தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுவிட்ட பெருந் துன்பத்தில் கலந்து கொண்டனர்.
மாயாண்டியும் மீனச்சியும் தலையிலே கைவைத்தபடி காம்பராவின் முன் வெளிவாசலில் அமர்ந்திருந்தனர்.செந் தாமரையினதும் மீனச்சியினதும் கழுத்திலும் காதிலும் இருந்த நகைகளெல்லாம் சூறையாடப்பட்டுவிட்டன. வீரய்யாவின் குடும்பத்தினர் என்ற காரணத்தினலோ

Page 144
278 குருதிமலை
என்னவோ குண்டர்கள் அந்த வீட்டில் தமது கைவரி சையைக் கூடுதலாகக் காட்டியிருந்தனர்.
பியசேனவின் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது, அவன் செந்தாமரையைப் பார்க்கும்போதெல்லாம் அவள் அழுதவண்ணம் இருந்தாள். அங்குள்ள ஒவ்வொருவரும் அவனைப் பார்க்கும் போதும் அவனுள் ஏதோ குற்ற உணர்வு ஏற்படுவதைப் போன்று அவன் உணர்ந்தான் "உனது ஆட்கள்தான் இப்படியொரு கொடுமையை எமக்கு இழைத்துவிட்டார்கள்’-என அவர்கள் குற்றஞ்சாட்டு வதைப் போன்று அவன் உணர்ந்தான். அவனது உள்ளம் பெரிதும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது.
அங்குள்ள பலருக்குச் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டிருந் தன. பலபெண்களின் காதிலிருந்த நகைகளைக் குண்டர்கள் முரட்டுத்தனமாகப் பிடுங்கி எடுத்ததினுல் ஏற்பட்ட காயம் அவர்களுக்கு வேதனையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. வீரய்யா, முதல் வேலையாகத் தோட்டத்து லொறியை வரவழைத்து காயமடைந்த எல்லோரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டிய ஒழுங்குகளைச் செய்தான். பியசேனவும் செபமாலையும் காயமடைந்தவர்களுக்கு வேண்டிய உதவி களைச் செய்து அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்த னர்.
இரவு நடந்த கோரத்தை அறிந்து பக்கத்து தோட்டத் தில் இருக்கும் தொழிலாளர்கள் பெருங்கூட்டமாக அங்கு படையெடுக்கத் தொடங்கினர். டவுணில் உள்ள மக்களும் தொழிற்சங்கவாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் இப் போது தோட்டத்துக்கு வரத்தொடங்கினர். எரிந்து சாம் பலாகிப்போய்க்கிடந்த லயன்களுக்கு பொலிசார் காவல் புரியத் தொடங்கினர். பக்கத்துத் தோட்டத்துரைமார்கள் ஒவ்வொருவராக அங்கு வந்து சேர்ந்தனர்.
முதல்நாள் இரவு எங்கோ லீவில் சென்றிருந்த தோட் டத்துரை சில்வா, தோட்டத்தில் நடந்து முடிந்த கோரத்

குருதிமலை 279
தைக் கேள்விப்பட்டதும் மறுநாள் பதறியடித்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்.
அங்கு வந்து சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் மனம் பதறினர். மனிதாபிமானமற்ற முறையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நடந்த அநியாயத்தைப் பார்த்துக் கொதித்தனர். தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தமக்கு நடந்த கொடுமைகளையும் இழப்புகளையும் பார்வையிட வந்தவர்களிடம் கூறிக் கதறியழுதனர்.
'ஐயா, ஏங் குடும்பத்துக்கு போன கெழமைதான் சேவைகாலப் பணம் வந்திச்சி அந்தப் பணத்தை எம் பொட்டியில வச்சிருந்தேன்; அவ்வளவு பணமும் எரிஞ்சு போச் சுங்க.." எனக் கூறி விம்மினர் ஒரு வயோதிபர்,
“என் மாடெல்லாம் உசிரோட எரிஞ்சு வெந்து போச் சுங்க; அத நம்பித்தான் நான் சீவிச்சுக்கிட்டிருந்தேன்" எனக் கதறினன் ஒரு நொண் டி.
"வாற மாசம் நான் இந்தியாவுக்கு போயாகனும் அதுக் குள்ள இப்புடி ஒரு அநியாயம் நடந்திருச்சுங்க என் பாஸ் போட்டு எல்லாம் எரிஞ்சு சாம்பலாப் போச் சிங்க' எனக் கூறி கண்கலங்கினர் மாரிமுத்துத் தலைவர்.
‘எங்க வூட்டுல ஒண்ணுமே இருக்கல்லீங்க. மாத்திக் கட்டுறதுக்கு மட்டும் ரெண்டு துணி கெடந்திச்சி. அது தானுக எரிஞ்சு போயிருச்சு" எனக் கவலையுடன் கூறினன் குப்பன்.
"ஏங் காதுல கெடந்த நகையைக் கழட்டித் தரச் சொல்லி ஒருத்தன் கேட்டானுங்க, நான் தப்பி ஓடலாமுனு வெளியே ஒடினேன். ஏம்புள்ளையத் தூக்கி வச்சுக்கிட்டு வெட்டப்போறேனு கழுத்தில கத்திய வச்சான்; நான் பத றிப்போய் ஒரு காதுல இருந்த நகையைக் கழட்டப்போ னேன்; அதுக்குள்ள அவேன் மற்றக் காதுல இருந்ததைப் பிச்சு எடுத்துக்கிட்டானுங்க" எனக் கூறியபடி பிரிந்து

Page 145
280 குருதிமலை
போயிருந்த தனது காதைத் காண்பித்துக் கண்கலங்கினுள் பெண்ணுெருத்தி.
"அடுத்த நேரச் சாப்பாட்டுக்கே வழியில்லாம செஞ் சுப்புட்டாங்களே, இந்தப் பாவிக" எனக் கூறி தலையில் கை வைத்தவண்ணம் நிலத்திலே உட்கார்ந்தார் கறுப்பண்ணன் கங்காணி,
"புள்ளைங்க எல்லாம் பசியில கதறுதுங்க,என்ன செய் யிற துன்னே எங்களுக்குப் புரியல் லீங்க" எனக்கூறிக் கண் கலங்கியபடி அருகே நின்ற தன் குழந்தையை வாஞ்சையு டன் தடவினுள் ஒரு தாய்.
"போன கெழமைதாங்க எனக்குப் பெரசாவுரிமை கெடைச்சிச் சு. ரெம்ப கஷ்டப்பட்டுத்தானுங்க அத எடுத் தேன். அதெல்லாம் எரிஞ்சு போச் சுங்க" எனக் கூறிய ஒரு தொழிலாளி விரக்தியோடு சிரித்துவிட்டு, "அந்தக் கட தாசியெல்லாங் வெறுங் கடதாசிதானுங்களே; இந்த நாட் டுல எங்களுக்கு என்னதாங்க உரிமையிருக்கு? நாங்க எப்ப வும் அடிமைதாங்க" எனச் சாகமாகக் கூறினர்.
வயதுபோன பெண்ணுெருத்தி தனது ஒரே மகளைக் காண்பித்து , ஐயோ இந்தப் புள்ளைக்கு நடந்த கொடு மையை எப்புடீங்க என் வாயால சொல்லுவேன்" எனக் கூறிவிட்டுச் சோகம் தாங்காமல் பெரிதாக விம்மினுள். அவளது மகளின் உடைகள் யாவும் கிழிந்துபோய் இருந்தன. முகத்திலும் கைகளிலும் சிறிய காயங்கள் தென் பட்டன. அந்தப்பெண் உடலெல்லாம் குறுகத் தன் இரு கைகளாலும் முகத்தை மூடியபடி விம்மிக்கொண்டிருந் தாள்.
அங்கு நின்ற ஒவ்வொருவருடைய மனதையும் தொழி லாளருக்கு நடந்த துன்பங்கள் பெரிதும் கலக்கின. அத னைக்கண்டு சகிக்க முடியாத பலர் கண்கலங்கினர். ஒரு சிலர் வாய்விட்டுக் கதறினர், டவுனில் உள்ள கடைக்காரர்

குருதிமலை 28
களும் பக்கத்து தோட்டத்துத் தொழிலாளர்களும் தொழிற்சங்கவாதிகளும், ஒருமுகமாகச் சேர்ந்து பாதிக் கப்பட்ட எல்லோருக்கும் உதவிகள் செய்வதற்கு முயன் றனர்.
தம்மால் இயன்ற சிறுதொகைப் பணத்தைச் சிலர் கொடுத்து உதவினர். சிலர் மாற்றுடைகள் கொடுத்து உத வினர், இன்னும் சிலர் ஒருநேர உணவைக் கொடுத்தனர். வேறுசிலர் அரிசி மாவு முதலிய பொருட்களை வழங்கினர். லயங்கள் எரிக்கப்பட்ட செய்தியறிந்ததும் கிராமத்தி லிருந்து முதியான்சேயும் சுமணபாலாவும் தோட்டத்துக்கு வந்து நடந்த கொடுமைகளை பார்வையிட்டனர்.
அங்கு நடந்த கோரத்தைப் பார்த்த முதியான்சேயின் உள்ளம் பதறியது. இப்படியொரு கொடுமையைச் செய்து தான் கிராமத்து மக்கள் காணி பெறவேண்டுமா? அவர் எண்ணி மனம் மறுகினர்.
"இந்தக் கொடுமைகளுக் கெல்லாம் காரணமாக இருந்த பண்டா முதலாளி, கிராம சேவகர், கண்டக்டர் முதலியோரை நான் பொலிசில் காட்டிக் கொடுக்கப் போகிறேன்" என சூளுரைத்தான் சுமணபால.
பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொரு வரையும் அவர்கள் தனித்தனியாகச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர். எதைச் செய்துமென்ன தொழிலாளர்கள் இழந்த எல்லாவற்றையுமே இனி யாரால்தான் திருப்பி கொடுக்க முடியும்,

Page 146
282 குருதிமலை
அத்தியாயம் நாற்பத்துநான்கு
திக்கப்பட்ட மக்களைத் தோட்டத்துரை அடிக் கடி வந்து சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். பிற இடங்களிலி ருந்து பார்வையிட வந்தவர்களும், அயல் தோட்டத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு த ம் மா லியன்ற உதவிகளைச் செய்தனர்.
முன்பு காம்பராக்களில் தனித்தனிக் குடும்பமாக வாழ்ந்த தொழிலாளர்கள் எல்லோருமே இப்போது ஒரே குடும்பம் போன்று கூட்டமாக தோட்டப் பாடசாலைகளி லும், பிள்ளை மடுவத்திலும் தங்கியிருந்தனர். இதனுல் பலர் தம்மிடையே இருந்த சிறு மனவேற்றுமைகளையும் மறந்து மிக அந்நியோன்யமாக ஒருவரோடு ஒருவர் பழ கினர். மாரிமுத்துத் தலைவர், கறுப்பண்ணன் கங்காணி முதலியோர் இப்போது வீரய்யாவுக்குப் பக்கபலமாக நின்று காரியங்களைக் கவனித்தனர்.
பியசேன தன்னைச் சந்திக்கவந்திருந்த முதியான்சே, சுமணபால முதலியோரிடம், இனி தான் நாட்டுக்கு வரப்போவதில்லையெனக் கூறிவிட்டு தோட்டத் தொழி லாளர்களுடனேயே இருந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொடுத்துக்கொண்டிருந்தான்
தோட்டத்துரை அன்று தொழிலாளர்கள் குழுமியி ருந்த இடத்திற்கு வந்தார். அங்கு கூடியிருந்த தொழி லாளர்களைப் பார்த்து அவர் தனது மனதிலே தோன்றிய கருத்துக்களைத் தெரிவித்தார்.

குருதிமலை 283
"இப்ப நீங்க ஓங்களுடைய சாமானங் எல்லாங் பறி கொடுத்து, வூடுங் இல்லாம, சாப்பிடுறதுக்கு சாப்பாடுங் இல்லாம, இனிமே இந்தத் தோட்டத்தில இருக்கிறது, மிச்சங் கஷ்டங்தானே. இனி இங்க இருந்துங் பிரயோ, சனங் இல்ல. அரசாங்கம் சொன்ன மாதிரி, வேற தோட் டத்துக்கு போன ஓங்களுக்கு எல்லா வசதியுங் கெடைக் கும். நீங்க எல்லாங் போறதுதாங் நல்லது."
"தொர எங்களுடைய உடமை எல்லாத்தையும் பறிச்சி, இருக்க எடங்கூட இல்லாம செஞ்சா, நாங்க தோட்டத்தவுட்டு போயிடுவோமென்னு திட்டம் போட் டுத்தான் நாட்டாளுக இப்பு டி செஞ்சிருக்காங்க, ஆன நாங்க ஒரு நாளும் இந்தத் தோட்டத்தவுட்டுப் போக மாட்டோமுங்க" என வீரய்யா கூறினன். அவனது குர லில் உறுதி தொனித்தது.
"நாங்க மட்டும் இல்லீங்க தொர, ஒங்களையுந்தான் இந்தத் தோட்டத்தைவுட்டு போகவுடமாட்டோம். என்ன கஷ்டம் வந்தாலும் நாங்க பயந்துக்கிட்டு மட்டும் தோட் டத்தவுட்டுப் போகமாட்டோம்" எனப் படபடத்தான் ürtÇıp.
"ஏய் நீ ரெண்டு பேருங் மிச்சங் முட்டாள்கதை பேசுறது. ஒங்க பேச்சக் கேட்டுத் தான் இந்த ஆளுங் களுக்கு எல்லாங் இப்புடி வந்தது" எனக் கோபத்துடன் கூறினர் துரை.
"ஓங்க பேச்சக் கேட்டுக்கிட்டு நாங்கெல்லாம் தோட் டத்தவுட்டுப் போகமாட்டோம். சாகிறவரைக்கும் இந் தத் தோட்டத்திலதான் இருப்போம்" என்ருன் ராமு.
*தோட்டம் மூடியாச்சு; நீங்கெல்லாம் இங்க இருந்து என்ன செய்யப் போறது?" எனக் கேட்டார் துரை.
"தோட்டத்த மூட நாங்க வுடமாட்டோங்க தொர. அப்புடி மூடினலும், நாங்க நட்டு வளத்த தேயிலை இருக்கு

Page 147
284 குருதிமலை
மட்டும் நாங்க பொழச்சுக்குவோமுங்க" என்ருர் அங்கே நின்ற கறுப்பண்ணன் கங்காணி நிதானமாக.
"இனிமே நாங்க தோட்டத்தவுட்டுப்போஞ, ஒவ் வொரு தோட்டத்திலும் இருக்கிற தொழிலாளிங்களுக்கும் எங்களுக்கு நடந்தமாதிரித்தான் நடக்கும்" என்ருன் வீரய்யா.
'நீ என்ன மனுசன் கதைக்கிறது? நீங்க எல்லாங் தோட்டத்தவுட்டுப்போன மத்த தோட்டத்து ஆளுங்க ளுக்கு ஏன் கரைச்சல் வாறது?" எனக் குழப்பத்துடன் கேட்டார் துரை.
'இப்ப நாங்கெல்லாம் தோட்டத்தவுட்டுப் போஞ. தோட்டத் தொழிலாளிங்களை பயங்காட்டி வெரட் டிப் புடலாமுனு எல்லாரும் நெனைச்சுக்கிடுவாங்க. அப்புறம் மத்த தோட்டங்களில இருக்கிற தொழிலாளிங்களையும் அநியாயம் செஞ்சி வெரட்டப் பாப்பாங்க. தோட்டத் தொழிலாளிங்க கோழைகள் இல்லேங்கிறதை நாங்க இங்கேயே இருந்து போராடிக் காட்டத்தான் போருேம்" என வீரய்யா விளக்கமாகக் கூறினன்.
" நாங்க, எங்க இனத்தைக் காட்டிக்கொடுக்கமாட் டோமுங்க தொர, உயிரைக் கொடுத்தாவது போரா டியே தீருவோம்" என்ருன் ராமு.
"என்னு மனுசன் போராட்டம், போராட்டமுனு சொல்லி பைத்தியக்காரன் மாதிரி பேசுறது. இப்புடி பேசித்தாங் இன்னிக்கு ஒன்னும் இல்லாம நீங்க எல்லாங் இருக்கிறது" என்ருர் துரை எரிச்சலுடன்.
"எங்ககிட்ட ஒன் னு ம் இல்லைத்தாங்க தொர. நாங்க எல்லாத்தையும் இழந்திட்டோம். எங்க உயிர் தான் மிச்சமா இருக்குங்க. ஆன இது நாங்க பொறந்த மண் எங்கிற உரிமையை நாங்க இன்னும் இழக்கல்லீங்க. அந்த உரிமைக்காக எங்ககிட்ட மிச்சமா இருக்கிற இந்த உயிரக் கொடுத்தாவது போராடத் தா ன் போருேம்"

குருதிமலை 285
என்ருன் வீரய்யா. இதைக் கூறும்போது அவன் உணர்ச்சி வசப்பட்டான்.
"ஆமாங்க. நாங்க இந்த எடத்தவுட்டுப் போகமாட் டோம்." எனப் பல குர ல் க ள் அவனது கூற்றைத் தொடர்ந்து ஒலித்தன.
"ஏய் ஏய், மிச்சங் சத்தங் போடவேணும். நீ ங் க போகாட்டி, நாட்டில இருக்கிற ஆளுங்களுக்கு காணி கிடைக்கிறது இல்லத்தானே. அப்புறங் உங்களுக்கு மிச் சங் கரச்சல்தாங் வாறது" என்ருர் துரை கோபத்துடன். ""நாட்டாளுங்களுக்கு நாங்க காணி கொடுக்கவேணு முனு சொல்லல்ல. அவுங்களுக்கு காணி கொடுக்கிறதுக் காக எங்கள தோட்டத்த வுட்டு வெரட்டவேணுமுன்னு தான் சொல்லுருேம்" என்ருன் வீரய்யா,
"அதிக்கி என்னதாங் செய்ய முடியுங். வேற வழி இல்லத்தானே" என்ருர் துரை.
"எங்களை எல்லாம் அனுப்பிவிட்டுத்தான் காணி குடுக்கோணுமுங்கிறது இ ல் லீ ங் க தொர. எங் களை இப்புடியே வச்சுக்கிட்டு அவுங்களுக்கும் காணி கொடுக்கலாந்தானுங்களே' என்ருன் வீரய்யா.
அவனது கூற்று துரையைச் சிந்திக்கவைத்தது. "ஆமாங்க தொர. ந ம் ம தோட்டத்திலதான் நெறைய எடம் சும்மா கெடக்குங்களே. அந்த இடத்தை யெல்லாம் நாட்டு ஆளுங்களுக்கு பிரிச்சி கொடுக்க முடி யுந்தானுங்களே' என்ருர் மாரிமுத்துத் தலைவர்.
*" ஹோ. அது அப்படி செய்ய முடியுங்தான். ஆன அரசாங்கம் இப்ப வேற மாதிரித்தானே செஞ்சிக்கிட்டு போறது" என்ருர் துரை.
'அப்புடீன தோட்டத் தொழிலாளிங்களோட நாட் டாளுங்களும் ஒரே தோட்டத்துல ஒத்துமையா இருக்கிறத அரசாங்கம் விரும்பலீங்களா?" எனக் கே ட் டா ன் Gruiuuurr.

Page 148
286 குருதிமலை
வீரய்யா இப்படிக் கேட்டதும் துரைக்கு ஒரே குழப்ப மாக இருந்தது.
**இதுபத்தி நாங் ஒன்னுங் சொல்லமுடியாது. இது எல்லாங் அரசாங்கத்தில பேசிதானே செய்யறது. அதி ஞல அவுங்க சொல்லுறபடிதாங் நாங் செய்யவேனுங்" எனக் கூறிவிட்டு அவ்விடத்தை வி ட் டு ப் புறப்பட்டுச் சென்ருர் துரை.
வீரய்யா கூறிய கருத்துக்கள் யாவும் துரையின் மூளை யைப் போட்டுக் குடைந்துகொண்டு இருந்தன.
தோட்டத்தொழிலாளர்களோடு கிராமத்து மக்களை யும் குடியிருத்தி அவர்களது ஒற்றுமையை வலுப்படுத்து வதற்கு ஏற்ற ஒரு நல்ல வழியிருக்கும்போது ஏன் தோட் டத் தொழிலாளர்களை வெளியேற்ற அரசியல்வாதிகள் முனைகிருர்கள்?
தோட்டத் தொழிலாளர்களோடு கிராமத்து மக்கள், ஒன்ருக வாழ்வதை ஏன் இந்த அரசியல்வாதிகள் விரும்ப வில்லை?
"ஏன்? ஏன்? ஏன்?" -துரைக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
அத்தியாயம் நாற்பத்தைந்து
UT 6ðið T.... டாண். மடுவத்திலிருந்து மணியோசை கேட்டுக்கொண்டிருந் தது. தூரத்தே மடுவத்தை நோக்கி மூன்று வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.

குருதிமலை 287
மணியோசை கேட்டதும் தொழிலாளர்கள் எல்லோ ரும் மடுவத்தை நோக்கி விரைந்தனர். முதியவர்களும், இளைஞர்களும், பெண்களும், சிறுவர்களுமாக அணிதிரண்டு மடுவத்தை வந்தடைந்தனர்.
நில அளவையாளர் மீண்டும் அங்கு வரக் கூடும் என் பதை அவர்கள் எல்லோரும் எதிர்பார்த்துத்தான் இருந் தனர். அங்கு வந்து சேர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொரு வரது மனதிலும் விரக்திதான் மிஞ்சியிருந்தது. சகலதை யுமிழந்து நிற்கும் அவர்கள், இப்போது எதையும் ஏற்கத் தயாராக இருந்தனர். எதுவந்தாலும் அதனை எதிர்த்துப் போராடும் மனநிலை அவர்களுக்கு உருவாகியிருந்தது. அவர்கள் எதையும் துச்சமாக மதிக்கத் தொடங்கியிருந்த 6r.
பியசேன அந்தச் சனவெள்ளத்தின் முன்பகுதியில் நின்று கொண்டிருந்தான். தோட்டத் தொழிலாளர்களின் துன்பங்களில் பங்குபற்றிய அவன், இப்போது அவர்களில் ஒருவணுக மாறியிருந்தான்.
மடுவத்தில் மக்கள் வெள்ளம் அலைமோ தி நிற்பதைக் கண்டதும் அந்த மூன்று வாகனங்களும் அங்கு நிறுத்தப் பட்டன. முன்னும் பின்னுமாக நின்ற இரு வாகனங்களி லும் பொலிஸ் படையினர் இருந்தனர். நடுவிவ் உள்ள வாகனத்தில் நில அளவையாளர்கள் காணப்பட்டனர். முன்பு அங்கு வந்தவர்களினல் காரியத்தைச் சாதிக்க முடி யாமல் போய்விட்டதினலோ என்னவோ இப்போது மேலிடத்திலிருந்து புதியவர்கள் அனுப்பப்பட்டிருந்த னர். வாகனத்தில் இருந்த பொலிசார் ஒவ்வொருவராகக் கீழே குதித்தனர். அவர்கள் ஒவ்வொருவரது கைகளிலும் துப்பாக்கிகள் காணப்பட்டன.
தோட்டத் தொழிலாளர்கள் குழப்பம் விளைவித்ததன் காரணத்தினலேதான், அவர்களின் உடைமைகளுக்கும், லயங்களுக்கும் சேதம் ஏற்பட்டது என்ற கருத்தினை

Page 149
288 குருதிமலை
அடிப்படையாகக் கொண்டு, தோட்டத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை அடக்குவதற்காகவும், நில அளவையா ளரைத் தடுத்து நிறுத்துபவர்களை எதிர்ப்பதற்காகவும் இப்போது பொலிஸ் படையினர் அங்கு வந்திருந்தனர்.
"ஏய் ரோட்டுல மறிச்சுக்கிட்டு நிக்காம எல்லாங் தூரப் போ' எனக் கூறிவிட்டு அங்குநின்றவர்களை விரட்டு வதற்காக துவக்கை ஓங்கினர் இன்ஸ்பெக்டர்.
அங்கு நின்ற எவருமே அவரது மிரட்டலுக்குப் பய படவில்லை,
அணி திரண்டிருந்த தொழிலாளர்கள், 'நாங்க வெலகமாட்டோம்" எனப் பலமாகக் கத்திக்கொண்டே பொலிஸ் படையை நோக்கி முன்னேறினர்.
*"ஏய் இனிமே யாராவது ஒரு அடி முன்னுக்கு வச்சா லும் சுட்டுப் போடுவேன்" எனக் கத்திய இன்ஸ்பெக்டர் ஆகாயத்தை நோக்கி மூன்று முறை சுட்டார். "எங்க எல்லாரையுங் வேணுமுணு சுட்டுக்கொன்னுப்புட்டு எங்க பொணத்துக்கு மேலே ஜீப்ப ஒட்டிக்கிட்டு போங்க" எனக் கூறிய ராமு தனது மார்பைத் திறந்து காட்டிக் கொண்டு முன்னே பாய்ந்தான்.
இன்ஸ்பெக்டர் திடீரென அவனது தலையின் மேல் துவக்குப் பிடியினல் ஓங்கிப் பலமாக அடித்தார். ராமு வின் தலையில் இருந்து குயீரென இரத்தம் பெருகியது. ராமு வெறிகொண்டவன் போல் இன்ஸ்பெக்டரின் மேல் பாய்ந்தான்.
தனது கையிலிருந்த துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் அவனை மாறி மாறிப் பலதடவை தாக்கினர்.
அதைப் பார்த்த வீரய்யா, இன்ஸ்பெக்டர் ராமு வைத் தாக்காமல் தடுப்பதற்காக அவரது கையிலே இருந்த துப்பாக்கியைத் தன் இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக்கொண்டான். இன்ஸ்பெக்டர் அவனது பிடியில்

குருதிமலை 289
இருந்து துப்பாக்கியை இழுத்துப் பறிக்க முயன்ருர்.ஆனல் வீரய்யா தனது அசுரப்பிடியை விடவேயில்லை. இருவரும் துப்பாக்கியைப் பிடித்தபடி போராடிக்கொண்டிருந்தனர்.
ராமு மயக்கமுற்று கீழே சாய்ந்துவிட்டான். வீரய்யா இன்ஸ்பெக்டருடன் போராடுவதைப்பார்த்த பியசேனவும், செபமாலையும் ஆவேசத்துடன் இன்ஸ்பெக் டரை தாக்கும் நோக்கத்துடன் முன்னே பாய்ந்தனர்.
கூட்டத்திலிருந்த பலர் இப்போது வெறிகொண்டவர் களாகப் பொலிசாரை நோக்கிப் பாய்ந்தனர். இன்ஸ்பெக் டர் போராடிக் களைத் துப் போய் துவக்கின் விசையை அழுத்தினர்.
‘டுமீல் என்ற சத்தத்துடன் பக்கத்தில் பாய்ந்து வந்த செபமாலையின் காலில் குண்டு பாய்ந்தது.செபமாலை யும் காலைப் பிடித்தபடி கீழே சாய்ந்தான்.
பியசேன இப்போது வெறிகொண்டவன் போல் இன்ஸ்பெக்டரின் மேல் பாய்ந்து அவரின் முகத்திலே பல மாகத் தாக்கினன். இன்ஸ்பெக்டர் நிலைதடுமாறினர். அவ ரது மூக்கிலிருந்து இரத்தம் வழியத் தொடங்கியது.
பியசேன தொடர்ந்தும் இன்ஸ்பெக்டரின் முகத்தில் தாக்கிய வண்ணம் இருந்தான். VA பக்கத்திலே நின்ற பொலிஸ்காரர் பியசேனவைச் சுட்டு வீழ்த்தும் நோக்கத்துடன் அவனது நெஞ்சைப் பார்த்துக் குறி வைத்தார்.
அதனைக் கவனித்த வீரய்யா அந்தப் பொலிஸ்கார ரின் துப்பாக்கியை தட்டிவிடும் நோக்கத்துடன் குறுக்கே பாய்ந்தான்.
டுமீல்."
பியசேனவின் மேல் பாயவிருந்த குண்டு வீரய்யா வின் மார்பைத் துழைத்தது.

Page 150
29 O குருதிமலை
வீரய்யா அசுர வேகத்துடன் இப்போது பொலிஸ் காரரின் மேல் பாய்ந்தான். டுமீல்- டுமீல்குண்டுகள் மாறி மாறி அவனது நெஞ்சைத் துளைத் தன. மறுகணம் அவனது உடல் தள்ளாடியது. கண்கள் இருண்டு கொண்டு வந்தன, அவன் கீழே சாய்ந்தான்.
வீரப்யா சுடப்பட்டுக் கீழே சாய்ந்ததைப் பார்த்ததும் அங்கு நின்ற தொழிலாளர்களின் உள்ளத்தில் போராட்ட வெறி கிளர்ந்து எழுந்தது. நீட்டப்பட்டிருந்த துப்பாக்கி களின் எதிரே எதற்கும் அஞ்சாதவர்களாக, அவர்கள் வெறிகொண்டவர்கள் போலப் பொலிசாரை நோக்கிப் பாய்ந்தனர். அவர்களிடையே காணப்பட்ட வெறியை யும் வேகத்தையும் ஆயிரமாயிரம் துப்பாக்கிகளால் கூடத் தணிக்க முடியாது என்பதைப் பொலிசார் பார்த்துத் திகைத்தனர்.
நிலைமையை இனி அவர்களால் கட்டுப்படுத்த முடி யாது என்பதனை அவர்கள் உணர்ந்து கொண்டனர். இனிமேலும் அங்கு தாமதித்தால் அந்தச் சண்வெள்ளத் தின் வேகத்துக்கு தாங்களும் பலியாகிவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுமோ என அச்சமுற்றனர். மறுகணம் எல்லோரும் பாய்ந்து தமது வாகனங்களுக்குள் ஏறிக் கொண்டனர்.
கீழே இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த வீரய்யா வின் அருகில் மீனச்சி அமர்ந்து அவனது தலையை மடி யிலே எடுத்து வைத்தாள்.
அவளது கண்களிலிருந்து கண்ணிர் ஆருகப் பெருகி யது. பெருஞ் சோகத்துடன் அவள் விம்மினள்.
வீரய்யாவின் உதடுகள் அசைந்தன. அவன் தாயிடம் ஏதோ கூறுவதற்கு முயன்முன்.
மறுகணம் அவனது தலை, அவளது மடியில் சாய்ந்தது. மீனச்சியின் இதயத்தைப் பிளந்து கொண்டு பெரிதாக விம்மலொன்று வெளிப்பட்டது.

குருதிமலே 291
அப்போது அங்கே ஓடிவந்த செந்தாமரை இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த வீரய்யாவைப் பார்த்ததும் * "ஐயோ அண்ணு." எனக் கதறியபடி அவன் மேல் வீழ்ந்து மூர்ச்சையானள்.
வீரப்யாவின் பாதங்களைப் பிடித்தவாறு மண்டியிட் டிருந்த பியசேனவின் கண்களில் இருந்து கண்ணிர் ஆரு கப் பெருகிக் கொண்டிருந்தது. அவனது நெஞ்சைத் துளைக்க இருந்த குண்டைத் தனது நெஞ்சிலே ஏற்று உயிரை மாய்த்துக் கொண்ட அந்தத் தியாகியின் பாதங் களைக் கண்ணிரால் கழுவத்தான் அவனுல் முடிந்தது.
இப்போது பொலிசாரின் ஜீப் பின்னுேக்கி வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.
சனசமுத்திரம் முன்னுேக்கிப் பாய்ந்து கொண்டிருந் தது - அசுரவேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தது.
இனி அந்த வெள்ளத்திற்கு யாராலுமே அணை போட (Up) Lq?- tLu FTg5I .
வீரய்யாவின் உயிர்த்தியாகமும், தொழிலாளர்களின் போராட்டம் பத்திரிகை வாயிலாகவும், பார்வையாளர் கள் மூலமாகவும், நாடெங்கும் காட்டுத்தீ போல் பரவி யது. இதனுல் பொதுசன அபிப்பிராயம் அவர்களின் போராட்டத்துக்குச் சாதகமாக அமைந்தது. தொழிலா ளர்களை அகற்றுவதில் தீவிரமாக நின்ற அரசியல்வாதிகள் செயலிழந்தனர். அவர்களுக்கும் மேலான சக்திகள் இப் போது செயல்படத் தொடங்கின. தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவித்த கண்டக்டர், கிராமசேவகர், பண்டா முதலாளி முதலியோர் சட்டத்தின் பிடியில் சிறைப்பட்
டனர்.
வீரய்யாவின் உடலில் இருந்து வடிந்த குருதியில், தோய்ந்து செழுமையுற்ற அந்த மலைப் பிரதேசத்தில், இப் போது தேயிலைச் செடிகள் புதிதாகத் துளிர்வி. த் தொடங்கின.
★

Page 151
*ழத்தின் தலைசிறந்த எழுத்தாளர் களின் தரமான படைப்புக்கள் மாதா மாதம் வீரகேசரி பிரசுரமாக நூலுரு வில் வெளிவருகின்றன.
தவறமல் இவைகளைப் பெற்று உங் கள் இல்லத்தில் ஒர் ‘குடும்ப நூல் நிலை யத்தை ஆரம்பியுங்கள்.
ஆறு புத்தகங்களை அடுத்து நீங்கள் வாங்கினுல், ஏழாவது புத்தகம் இணு மாக அனுப்பி வைக்கப்படும். இப் பரி சுத் திட்டத்தில் ஏற்கனவே ஆயிரத் துக்கு மேற்பட்ட வாசகர்கள் இணுமாக நூல்களைப் பெற்றுள்ளனர்.
புத்தகங்களைக் கிரமமாகப் பெறுவ தில் சிரமமிருந்தால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய விலாசம்:
விநியோக நிர்வாகி, வீரகேசரி, த. பெ. 160, கொழும்பு.


Page 152


Page 153
( ஆசிரியர் கூறுகின்
மலேயக மக்களி
காலந்தொட்டே சிக்
நிறைந்ததாக இருந்
நியர்களின் ஆதிக்கத் கள் இருந்தபோது அ சிக்கித்தவித்த தோ: தமது விடிவை நோ திருந்த துே?ளயில்ே
அடங்கள் பாவும் தேசி
சரித்திரமுக்கிய நிகழ்ச்சியின் பயணுகத் காலம் ஏற்படப்பே தொழிலாளர்கள் நம் தோட்டங்கரே அண்டி ளும் தமது சுபீட்சமா கத் தஃவப்பட்டனர். வாதிகள் சிஐச் சந்த தமது பதவிகளேத் து தொடங்கினர்.
இதன் கீாரண்ம சார்ந்த மக்களிடைே படத் தொடங்கின. 5 ருந்து தொழிலாளர் முயற்சிகள் மேற்கொ எதிர்த்து நின்ற தே வினருக்குள்ளானுர்கிள் கள் குறைபாடப்பட் தீயில் வேந்து சாம்ப
இவற்றையெல்லா போது எனது நெஞ்: தொழிலாளர்கள் இந் வைத்துள்ள பாசம் தோட்டது. அவர்கள டத்தில் ஒரு தொழிலா ாதார நிருப்திவிர்த்து எனக்கு ஏற்பட்ட உர் வாகவே இந்நாவல் !!!!
வீரகேசரி பி
 

ருர்:
*ன் வாழ்க்கை ஆரம்ப கல்களும் துன்பங்களும் து வந்திருக்கிறது. ரேந் தில் தேயிலேத் தோட்டங் வரிகளின் கெடுபிடிகளில் ட்டத் தொழிலாள்ர்கள் "க்கி ஏக்கத்துடன் காத் நான் தேயிஐத் தோட் யமயமாக்கப்பட்டன.
த்துவம் வாய்ந்த இந்த 1 தமக்கு ஒரு நல்ல எதிர் ாகிறதோ தோட்டத் பினர். அதேசமயத்தில் Lயுள்ள கிராமிப்புற மக்க ஈவாழ்வை எதிர்ப்ார்க் இவ்வேளேயில் அரசியல் ர்ப்பவாதிகளாக மாறித் ஷ் பிரயோகம் செய்யத்
严品 இரு சமூகங்களேச் ய மனக்கிளர்வுகள் ஏற் ஒரு சில தோட்டங்களிலி ளே வெளியேற்றுவதற்கு "ள்ளப்பட்டன. دية وقتr நாழிலாளர்கள் சித்திர
அவர்களது உடைமை ட்டன; இருப்பிடங்கள் గ్రాTT.
"rı நேரில் பார்த்த சு பதறியது. -தோட்டத் நாட்டு மண்ணின் மேல்
எனது இதயத்தைத் rது நீரிமைப் போராட் "ணி வீரமரணம் எய்தியது
வைத்தது. நஜல் ாத்தா 堂 : உருப்பெறத் தொடங்கி
ரசுரம் - EB

Page 154
27O தி. ஞானசேகரன் சிறுகதைகள்
தி. ஞானசேகரன் தமிழ்த் தேசியவுணர்வுக் காலகட்டத்தில் எழுதிய சிறுகதைகளில் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், ராக்கிங், சீட்டரிசி, திருப்புமுனைத் தரிப்புகள், கருவறை எழுதிய தீர்ப்பு, சோதனை ஆகிய சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை. சீட்டரிசி, திருப்புமுனைத் தரிப்புகள் ஆகிய இரு சிறுகதைகளும் ஞானசேகரன் வாழ்கின்ற மலையகப் பெண்களின் உணர்வுகளின் சோகச் சித்திரங்களாம். சோதனை, அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், கருவறை எழுதிய தீர்ப்பு ஆகிய சிறுகதைகள் யுத்தச் சூழலினையும் இனவொடுக்கல் பிரச்சனைகளையும் சித்திரிக்கின்ற சிறுகதைகளாகவுள்ளன. ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் குறியீட்டுச் சிறுகதையாகும். கலாநுட்பமாகவும் கவித்துவமாகவும் படைக்கப்பட்டுள்ளது. வடபகுதி எழுத்தாளர்கள் எழுதுகின்ற யுத்தகாலச் சிறுகதைகளுக்கும் ஏனைய பிரதேச எழுத்தாளர்களின் யுத்தகாலச் சிறுகதைகளுக்குமிடையிலான பெரும்வேறுபாடு மானிடநேய நோக்கிலேயே உள்ளது. முன்னவர்கள் எதிரிகளாகச் சித்தரிக்கும் பாத்திரங்களைப் பின்னவர்கள் மானிடநேயத்துடன் சித்தரிப்பதன் மூலம் சமூகயதார்த்தம் அங்கு பேணப்படுகிறது. முன்னைய சிறுகதைகளிலும் பார்க்க இக்காலகட்டச் சிறுகதைகள் தி. ஞானசேகரனைத் தரமான ஈழத்துச் சிறுகதையாளர் வரிசையில் சேர்க்கின்றன.
செங்கை ஆழியான் ஈழத்துச்சிறுகதை வரலாறு
★女★女★
சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பலதுறைகளில் தடம் பதித்த இலக்கியவாதியான தி. ஞானசேகரனுள் உறைந்து நிற்கும் மருத்துவனை வெளிப்படுத்தும் ஒரு சிறுகதைதான் “கருவறை எழுதிய தீர்ப்பு செயற்கை முறை கருத்தரித்தல் பற்றிய பல அரிய மருத்துவத் தரவுகளை இலாவகமாகவும், கதையோட்டத்திற்கு ஊறு செய்யாமலும், வாசகனை ஆர்வத்தோடு வாசிக்கும் வண்ணம் இக்கதையில் ஞானசேகரன் புகுத்தியுள்ளமை வியந்து பாராட்டத்தக்கது.
இலங்கை இனப்பிரச்சனை பற்றிய சிறந்த சிறுகதைகளில் முக்கியமானதாகக் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் இவரது “அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’ இலங்கை இனப்பிரச்சனையின் ஆணிவேர்வரை ஊடுருவிப் பாயும் கனதியும் வீச்சும் கொண்டது. ஆசிரியர் தென்பகுதியில் வாழ்வதால் பெரும்பான்மை இன மக்களின் உணர்வுகளையும் மனோநிலையையும் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார். அதேநேரம் அடிவாங்கிய போதெல்லாம் தாயக மண்ணில் தஞ்சம் புகுந்த மக்கள் இறுதியில் தம் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக

தி ஞானசேகரன் சிறுகதைகள் பற்றி. 271
ஆக்ரோசமாகக் கிளர்ந்தெழுவதை, தெளிவான, சுருக்கமான, ஆனால் உள்ளர்த்தங்கள் செறிந்த எழுத்தில் வார்த்தெடுத்திருக்கிறார். வெறுமனே ‘நாய் என்று சொல்லாது அல்சேஷன் எனக் குறிப்பிட்டிருப்பது எமது சிந்தனைக்கு விருந்தாகும்.
டாக்டர் எம். கே. முருகானந்தன்
★★女★女
‘கருவறை எழுதிய தீர்ப்பு’ என்ற தலைப்பில் கதாசிரியர் தி. ஞானசேகரன் முற்றிலும் புதுமையானதொரு கதையை அண்மையில் எழுதியிருந்தார். கருத்தரித்தல் பற்றிய சில தகவல்கள் கதையோட்டத்துடன் தரப்படுகின்றன. சிறுகதைக்கேயுரிய பண்புகளைக் கொண்டதாகவும் செட்டாகவும் கதாசிரியர் வடிவமைத்திருக்கிறார். கதைமுடிவும் எதிர்பாராததொன்று. அதேவேளையில் இனவேறுபாடுகளிடையே கூட முரண்படுநிலை இருப்பதையும் காட்டி யுள்ளார். இது ஓர் அருமையான கதை என்பது எனது மதிப்பீடு.
கே. எஸ். சிவகுமாரன் தினக்குரல் 23-05-1999)
★★★★★
இலங்கையின் பிறபாகங்களிற் பொதுவாகவும் கொழும்பிற் குறிப்பாகவும்
இடம்பெறும் தமிழ் மக்களுக்கு எதிரான சோதனைக் கெடுபிடிகளைச்
“சோதனை’என்ற கதை புலப்படுத்துகிறது. இச்சிறுகதையில் குமரேசன் என்ற
பாத்திரத்தைக் கையாளும் திறன் குறிப்பிடத்தக்கது. வெளிப்படையாகவன்றிக்
குறிப்பாக அப்பாத்திரத்தைச் சுட்டி வாசகரே அதன் இயல்பைப்
புரிந்துகொள்ளுமாறு செய்தமை அக்கதைக்குக் கலைச் செழுமையைச் சேர்க்கிறது
கலாநிதி தரை. மனோகரன்
வீரகேசரிவாரமஞ்சரி
女女★女★
தேசியத் தன்மையை பொருண்மரபிலும், உருவ அமைதியிலும் கொண்டியங்கும் சீட்டரிசி நல்லதொரு தமிழ்ச் (ஈழ) சிறுகதைக்கு எடுகோளாக திகழ்கிறது. பார்வதி, சிகப்பாயி, கந்தையா ஆகிய மூன்று பாத்திரங்களும் நடைச்சித்திரங்களாக மாறும் விபத்திலிருந்து நூலிழையில் தப்புவதும் சிறந்த குணாபாத்திரங்களாக மாறுவதும் இலக்கிய அநுபவத்தை ஏற்படுத்துகின்றன. சிறுகதையின் உருவ அமைதி காத்த இறுதி உச்சக்கட்டம்

Page 155
272 தி. ஞானசேகரன் சிறுகதைகள்
பல எதிர்மறைவான உச்சநிலைக்கும் மாறி மாறிப் பயணப்பட்டு இல்லறத்தின்
பண்பாட்டு வேரினை உயர்நிலைப் படுத்தும் வகை ’ கைதேர்ந்த கலைஞனின் கலை வேலை நுணுக்கத்தைக் காட்டி நிற்கிறது.
செம்பியன் செல்வன்
1904.2005
★女女女★
உங்களின் ‘திருப்புமுனைத் தரிப்புக்கள்’ கதையை வாசித்தேன். “தங்கராசு இப்போது வளர்ந்து விட்டான். பிரட்டுக்களத்தில் தொழிலாளர்கள் வரிசையாக நிற்கின்றனர். தங்கராசு ஒரு தொழிலாளியாக கடைசி வரிசையில் நிற்கிறான். என்ற பந்தியை வாசிக்கும் போது. கதையை இவ்வளவு அழகாக ஆழமாக நகர்த்தி வந்து கடைசியில் “சாப்பிட்டு” விட்டாரே என்று மனம் வருந்தினேன். அந்தப் பந்திக்குப் பிறகு வெறுப்போடு மேலும் தொடர்ந்த போது . அது பெருமாளின் கனவாக கண்டபோது மனம் சிரித்தது
தங்கராசின் வைராக்கியம் அருமையான முடிவு. உங்கள் கதாபாத்திரங்களில் பெருமாளும், தங்கராசும் காவிய நாயகர்கள் அவர்களைப் போன்றவர்களை உருவாக்கத் துடிக்கும் உங்கள் வளமான சிந்தனைக்கு எனது வாழ்த்துக்கள். மலையகத்தில் படிக்கத் துடிக்கும் ஒரு லயத்து மாணவனின் சூழலைச் சித்தரித்திருக்கும் பாணி. ஒரு ஆய்வு எனலாம்.
அருமையான கதை
மு. சிவலிங்கம் O3.03.1998
★大女女女
போர்ச் சூழல் காரணமாக அந்நிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள், தமது மொழியையும் பண்பாட்டையும் பேணிக் கொள்வதில் அக்கறை யெடுக்கின்றனர். ஆனால் அவர்களின் புதிய தலைமுறை அந்நியச் சூழலுக்கு எளிதாக ஆட்பட்டு, தலையை மழித்து, காதொன்றைத் துளைத்து வளையத்தை மாட்டிக் கொண்டு .? மகன், மருமகள், பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக 15 வருடங்களுக்குப் பின் இங்கிருந்து சென்ற சிவராசா, பேரன் முருகநேசனின் கோலத்தைக் கண்டு மனக்குமுறல் எய்துவதை வெகு நேர்த்தியாகச் சித்தரிக்கிறது ‘மண்புழு’ ‘இதெல்லாம் இந்த மண் செய்யிற வேலை. மண்ணுக்கும் கலாசாரம் பண்பாடுகளுக்கும் தொடர்பிருக்கு. வேற்று

தி. ஞானசேகரன் faaegaه பற்றி. £a7ያ)
மண்ணில் எங்கட கலாசாரம் வேர் விடுகிறது கஸ்டம் சூழல் விடாது” என்னும் சிவராசாவின் கூற்றில் எத்தனை பெரிய உண்மையிருக்கிறது. யதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறந்த கலைப்படைப்பு
நா. சோமகாந்தன்
★女★女女
தி. ஞானசேகரனது கதைகள் மலையக மக்களது ஒரு காலகட்டத்துக்குரிய வரலாற்றினை ஆவணப்படுத்தி நின்றதோடு, அறிவியல் சார்ந்த அம்சங்களிலும் தலைகாட்ட ஆரம்பித்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. "கருவறை எழுதிய தீர்ப்பு’ எனும் தி. ஞானசேகரனின் கதையே அறிவியலை ஈழத்துச் சிறுகதையில் அறிமுகப்படுத்திய கதையாகும். புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் புதிய சகத்திரப்புலர்வின்முன் ஈழச்சிறுகதைகள் நூலில்
女女女女★
Dear Dr. Gnanasekaran,
had the privilege of reading your short story book titled "Alseshanum Oru poonalikkuddium."
was highly impressed and delighted to read your all eleven short stories. The first and the main story is beyond comments. You had explained the existing ethnic disturbances in an undisputable way. The last story "Kadamai' had touched me deeply. I too had not performed abortions and I totally agree the way you had dealt meena. You are affluent and the flow is very readable. You had exposed the current problems in a formidable and simple way. My sincere wish and prayer that you should continue to write. The Tamil Worldwill always remember you for your enormous contributions.
Dr. M. L. Najimudeen MBBS(Cey) MS(Cey) MRCOG (Gt. Brit) Consultant Obstetrician and Gynaecologist July 27, 1998.
★女女★女

Page 156
274- தி. ஞானசேகரன் சிறுகதைகள்
*கண்ணில் தெரியது வானம்’ தொகுப்பில் உங்களது காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும் . என்ற சிறுகதையைப் படித்தேன். தடைமுகாம் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருத்தி இராணுவத்தினரின் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதையும் அதன் காரணமாக அவள் புத்திபேதலித்த நிலைமையை அடைவதையும் கலாரூபமாகக் கதையில் வடித்துள்ளீர்கள். நமது நாட்டில் மட்டுமல்ல இனவிடுதலைப் போராட்டம் நடக்கும் பல்வேறு நாடுகளிலும் இப்படியான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இக்கதையின் கரு உலகப் பொதுவானது. பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவேண்டிய கதை இது.
பேராசிரியர் நந்தி 15.04.2002
★★★★★
“ஈழத்தின் சமகால இலக்கியச் செல்நெறிகளை அவதானிக்கும் போது, எழுத்தாளரது படைப்புகளில், பேரினவாத ஒடுக்குமுறைக் கொடுமைகள், போர்க்கால அவலங்கள் என்பன வெறும் பதிவுகளாகவே அமைந்திருப்பது கண்கூடு, எனினும், இதற்கு விதிவிலக்காகவுள்ள மிகச்சில படைப்புகளுள் தி. ஞானசேகரனின் காட்டுப் பூனைகளும் பச்சைக்கிளிகளும்’ விதந் துரைக்கப்பட வேண்டியதொன்று மாணவியொருத்திக்கு நிகழ்ந்துவிட்ட கொடூரம் தரும் அதிர்ச்சி, கதை சொல்லப்படும் முறையிலுள்ள பல்வேறு சிறப்புகளால் வாசகரது மனத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் .
இக்கதை தமிழ்ச்சிறுகதை வரலாற்றிலே இடம் பெறவேண்டிய சிறுகதை.
கலாநிதி செ. யோகராசா
女女女女★ கதை எழுதுவது என்பது இலகுவான செயலல்ல. மக்களுக்கு நலன் செய்யக்கூடிய ஒரு நல்ல கருத்து அதில் இருக்கவேண்டும். அந்தக் கருத்தை விளக்குவதற்கு வேண்டிய நிகழ்வுகளும் கதா பாத்திரங்களும் சிறப்பாக அமையவேண்டும். இவற்றுக்கு மேலாக வசனநடை வாசகரை ஈர்க்கவேண்டும். திரு. ஞானசேகரனின் கதைகளில் இந்த அம்சங்கள் எல்லாம் சிறப்பாக - மிகச் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. நல்ல கதைகளை எழுதவிரும்பும் எழுத்தாளர்கள் ஞானசேகரனின் கதைகளை அவசியம்
வாசிக்க வேண்டும். «ν
d t 6 1. 6 வரதர்
★★★★★

குறிப்புகள்.

Page 157


Page 158


Page 159
சிறுகதை, குறுநாவல், பயண இலக்கியம், நேர்கா இதழியல் ஆகிய துறைகளி யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பிறப்பிடமாகக் கொண்டவர் மருத்துவப்பணிபுரிபவர்க கூட கடந்த நாற்பது பேருட பட்டுவரும் இவரது எட் வந்துள்ளன. இவர் எழுதிய 1973 ஆகிய இரு நாவல்சு பரிசில்களைப் பெற்றன. கு மதுரை அமெரிக்கன் கல்யூ மாணவர்களுக்குப் பாடநூல மொழியாக்கம் பெற்றது. பூனைக்குட்டியும் 1998 எ சிப்பிரகமுவ பல்கலைக்கழக இவர் இலங்கை அரசின் "க: பல்வேறு விருதுகளையும் ெ எழுத்தாளராக விளங்குகிற இலக்கியச் சஞ்சிகையை வருகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாவல் கட்டு: விமர்சனம் ணல், நூல் பதிப்பும் வெளியீடும் ல் ஈடுபட்டுவரும் தி சூானசேகரன்
உள்ள புன்னாE3க்கட்டுவனைப் பிறப்பு:15.04.1941), மலையகத்தில் ாலத்துறையில் பட்டம் பெற்றவருங் பங்களாக இலக்கியத் துறையில் ஈடு டு நூல்கள் இதுவரை வெளி புதிய சுவடுகள் 19' குருதிமலை ரூம் இலங்கை சாகித்திய மண்டலப் ருதிமலை 1992-93 காலப் பகுதியில் பரிபில் முதுகலை பயிலும் (MA) ாக விளங்கியது சிங்கள மொழியில்
தற்போது "அல்சேஷனும் ஒரு ன்ற சிறுகதைத் தொகுதி இலங்கை ந்தில் பாடப்புத்தகமாக விளங்குகிறது. பாபூஷண்ம்' என்ற விருது உட்படப் பற்று இலக்கிய உலகில் புகழ்பெற்ற ர், "ஞானம்' என்ற மாதாந்த கTC) 2000 ஜூன் முதல் வெளியிட்டு
ISBN:-955-8354-12-0

Page 160
As to morphology, the two languages do The grammatical-category-system of Sinhalese sta: a passing remark may be made here of the plural markers added to inanimate nouns in Sinhalese) to the Tamil nominal pluralizer -kalh.
At the level of syntax only some of the app terns of the two languages may be noted here. C clause in both the language by using a verbal adjec (co-) relative pronominal sets. This feature whic is strikingly absent in all the Modern Indo-Arya following instances :-
Tamil : /nhaan patikkita vuththakan nallath Colloquial Sinhalese : mama kiyoona pota
(literally I reading book is gc
The occurrence of this type of “relative-clause' in texts, viz. Dampiyaa ATuvaa GaeTapadaya datec influence was responsible for the innovation of thi old Indo-Aryan rela, ive-clause structure in Sinhale shared in common by Sinhalese and Tamil is th languages take a classifikr af er the numeral. Ir name") and it is used only af er human-nouns, w (literally meaning 'name) used in coun ing mem people') used when counting other living-beings
Tamil : smanithar muuNTu peer/ "three me Sinhalese : Iminissu tun dinaa/ “three men”
|haamudur varu tun na mal three
Also in the formation of higher ordinals in agree in having the noun referring to the '10's 'al
numeral. Compare for instance,
Tamil: siru vaththi naatu (20 --4) twenty-fou Sinhalese : /visi hatara! (20+4)'twenty-four
Hindi: scan bisi (4+20) 'twenty-four'etc.w
A syntactic feature that can be positively sa the alternative construction-type formed by repeat item that is put into alternation. Compare the fo
Tamil: koopi cari theeththaNNicari koN.
Sinhalese : skoopi hari tee vatura hari geenni
The formation of the echo-compounds in point of similarity.

not seem to share much similarity worth-noting nds in sharp contrast to that of Tamil. However
marker -val (which is one of the alternant plura which some scholars have suggested to be related
arent similarities between the constructional patDne such instance is the foi mâtion of the relative tive instead of the "that- who, which “type of h is typical of almost all the D1avidian languages in languages other than Sinhalese. Consider the
μ. hondays. bod)
Sinhalese is attested in one of its earliest literary i around the 10th century A.D. Whether the is syntactic feature which completely replaced the se needs investigation. ... Ancither syntactic feature e type of numeral phrase structure in that both Tamil, the classifier is peer' (literally meaning hile in Sinhalese there are two classifiers, “nama” bers of the clergy, and "denaa' (literally meaning
. Thus, -
n
morks'
volving '10's both Tamil and colloquial Sinhalese ways preceding the noun referring to the lower
there the order of the numerals is just the opposite.
id to have been directly borrowed from Tamil, is
ing the functor “häiri” (

Page 161
The most significant impact of Tamil on S Tamil loans in Sinhalese have been attested sinc Sinhalese can be chronologically arranged consid attempt is not made in this paper. For instance knife' ( 'to throw /vicus > Adjectives :
'common spothus ح 'short Ikutus >
either...or jcari.cari/
These loans in Sinhalese cover a very wide ran classified. Kinship terms such as appa/ 'father ( lakkal), focd-items such as Ihodhi gravy” ( skuu Def
修 lputanawa/
/viisu karanara/
Ipodhus skutu/ b /hari.T, harij functors
ge of semantic categories and can be accordingly-Tamil |appas), fakka/ 'elder-sister' (Tamil |cothil), culinary terms such as snuTTi "cooking its such as moleef 'brain (Tamil finuluhays), architectural terms such as siruppus'a wayoffixing as spaaththil 'vegetable-bed' (Tamil/paaththil). tances for these. A detailed study of these loans t possible within the scope of this paper.

Page 162
Recent Epigraphical Disco Eastern Provinci
By K. NDRAPALA,
The role of epigraphy in archaeological stu particularly the history of our region, that is Sc absence of any historical literature in most parts c this region an importance which similar records do regions of Incia epigraphic records form the only struction of their early history. Fortunately in SI historical writing and the eirgraphic Tecords of cu in that they help to a great extent in supplementil nicles. In a few instances they also help to correc
Sri Lanka is perhaps the only region in Sou other inscripticns for a continuous pericd cf over During the last one hundred years, that is from th (1874), nearly three thousand lithic records have b these, consti, uirg what are called the Brahmi i
There are about one hundred and fifty Tamil inscri century A.D. There is also a handful of Sanski Every year a considerable number of inscriptic ns opening up of jungle areas for colonisation and agi tanks and canals. : ...,
The vast majority of these inscriptics has an abundance of granite and other forms of hard yielded the least number of inscripticnis. Till a perica before the seventeenth century had been c rgarding the other districts ofthe Ncrthern Provir different for the same period. . A number of facto
During the last five years more epigraphic provincas 2. In the Jaffna District nine more insci earlier, came to light. Another seven records fro1 -first ime in 1972.3 Some new inscripticns hav Disilict. As cre who has been going in search ( systematic survey of these provinces is bound to th a thorough survey of all the other provinces is als
Most of the newly discovered inscriptics h; to the histury of these two provinces. The major a peric d for which there are serious gaps in our 1 z century was a period when the Island - was domi behind a large number of Tamil records. More especially in the Northern and Bastern Provinct importance.

veries in the Northern and es of Sri Lanka"
Ph.D. (Lond.)
die s and in the reconstruction of ancient history, uth Asia, can hardly be over-em II ła sized. The f Scuth Asia has given the cigra I.ical ic cords of not enjoy in most parts clf the world. For many scurce cfany reliable irfornia icin for the reccn
i Lanka there has been a very's crg traditic n of ir cocunt y assume a different kinc. cf importarice;
g and in ccircborat irg the evicence of the chro
t the chrcnicles.
th Asia where we get a large number cf lithic and 1wo thcusand years, ficn. 1le hid century B.C. e time the first official ( Iigraphist was app cirted cen discovered in Sri Lanka. M. cre than half of 1scripticns, belong to the earliest period of the third century B.C. and the third century A.D. iptic 11s, all belongirg to the period after the ninth t and Pali inscriptions. The rest are in Sinhala. is brought to light, mainly as the result cf the icultural schemics and of the repairirg of irrigation
been discoverca in those provinces where there is
rock. In this respect, the Northern Province has bcut five years ago, only four inscriptions ofthe
iscove1ed in the Jaffna Cisti ict. The position
ce and thcse cf the Easte in Province was not very
rs contributed to this situation.
records have been brought to light in these two iptions, more than d cuble the nun ber discovered m the Trincomalee District we'e examined for the e also been discovered in 1973 in the Vavuniya of these inscriptic ns, I can confid (rtly say that a row up many more inscriptic rs. For that matter, o bound to yield similar sults.
ave furnished us with valuable information relating ity of the records belongs to the eleventh century, litelay sources. The greater art of the eleventh . nated by the South Indian Colas, who have left and more Cola records are ricw cc ming to light, s. Some of the se are of ccnsiderable historical
54

Page 163
Of these, by far the most interesting and v malee District. This record, which was originall pieces, is in the Sivan Temple at Kantalai. The f slab, is in a good state of preservation while the
This record is significant in many respects. in a regral year of a ruler of Sri Lanka who is not this ruler is given as Sri Sanghavarman Sri Cola record, I was rather puzzled by this unfamiliar na occurring in the inscripticin made it clear to meth yet it was not dated in a regnal year of a Cola emp Lanka. That this unknown kirg was und cubted name Sri Sanghavarman, a variant of the well-knc varman. But, soon I was able to relate it to the in and realise the full significance of the name and Indian records that help us to unravel this myster
We find that early in the eleventh century E of administering his empire, whereby princes of th of authority in the different provinces of the empi to have been assisted by only one such subordinal It is possible that in later years others were sim successors are said, in their inscriptions, to have ( diate successor of Rajendra is stated to have crow on him the title “Ilankaiyar-k-iraiva , the Tamile
Of the many subordinate rulers, those of Cola-Pandya, a combination of their own dynastic over which they now ruled. Similarly, the prince: Kerala and that of the Ganga country was named took the consecration names of the Pandyas. T Cola Lankesvara, which was obviously the name dynastic name and Lankesvara is the name gener. Pandya rulers took the consecraticn names of the of the kings of Sri Lanka. We also kncw frcm rulers enjoyed regal status and were allowed off office.
In the light of these inscriptions we are i Kantalai came to be dated only in a regnal yea: record, therefore, helps us to learn for the first tin Sri Lanka was not different from that adopted in
This inscription is also of interest in other assembly of Kantalai, which place had been rena after Emperor Rajaraja I. Incidentally, this nam galam in the reign of Vijayabahu I, who ruled f inscription also gives the Cola name of the dist Rajendra-cola-valanatu, afir emperor Rajendra also named here as Vikramacolan-vaykkal, pres

luable record comes from Kantalai in the Trincoinscribed on a single slab but is now lying in two st half of the record, inscribed on one piece of the ther half is unfortunately damaged.
What will interest many is the fact that it is dated nown to us from any other source. The name of Lanke svara Devar. When I first deciphércd the mê. The wiirg as well as the Cola place-rames it it was a record cf the pericd of Cola rule. And tror, as in the case of the other Cola records cf Sri y a local rule 1 was evic cnt ficm his consecation wn Sinhala consecuatic n rame Siri SarghabcdhioImation provic (c. by the Scuth Indian epig1aphs of the new inscription. It is actually the Scuth
7. - -o
imperor Rajendra Cola I introduced a new system e imperial 1 cyal family were appc inted to position 'e. In the early years cf his reign Rajend 1a seems e ruler with julisciclic in cver the Pandya country. ilarly reccgnized elsewhere. Three of Rajendra's continued the se arrargements. In fact, the immened a prince as a subordinate ruler, and conferred quivalent of the name Lanke svara.
the Pandya country were known by the name of name with that of the former rulers of the territory app cinted to rule over Kerala was known as ColaCola-Ganga. We also find that the Cola-Pandyas hus, we are in a position to understand the name of the Cola prince installed in Lanka. Cola is his Llly applied to a ruler of Lanka. Just as the Cola Pandyas, this ruler of Lanka took the consecration the South Indian records that these subordinate cially to issue orders dated in their own years of
a positicn to understand how our record from of the subordinate ruler at Polonnaruva. This e that the manner in which the Colas administered the Pandya, Kerala and Ganga countries.
espects. It refers to the deliberations of the local med by the Colas as Rajaraja-caturvedimangalam : was later changed to Vijayaraja-caturvedi-marcm Polonnaruva after defeating the Colas. Our ct in which Kantalai was situated. This name is I. Further, an irrigation channel in that area is mably after Rajendra I, one of whose numerous
55

Page 164
titles was Vikramacolan. It appars that the loc Six 'kacus' or pieces of money for the repair of Vikramacolan-vaykkal. Unfortunately the reco clear.
Another Cola inscription, which may be r Dutch Fort Hammenhi-l in the Kays Harbour. originally set up at Mato tam, in the Mannar Di scribeds one and other bicks from Mato tam t Himmenhil. Although this insc.ip, ion is fragm time the name of the Cola general who led the s' whole of Lanka' under the Cola sway. This gen here as the one who conquered the whole of Lank his treasures'. Our record thus becomes the only Maninda V, king of Lanka at the ime of the Cola with their treasures to Scuth Incia by the Cola Culavansa, the Pali chronicle which gives detailso of Lanka was also taken away as a captive is a fi capture is referred to in some sources.
Of the several other Cola inscriptions disco be mentioned here. These relate to one of the anc forgo ten. Trincomalee is now well-known among that stood there for a long time till it was pulled di But there was also another famous temple, the Mac by the Portuguese. Its memcry is preserved only which were not taken seriously by scholars. Now Trincomalee town establish for the first time the his information relating to it.
Some of the other inscriptions discovered in deserve mention. One is a Brahmi inscription on a archaeologists from the Pennsylvania Universiy M. discovered in Jaffna and the oldest of the inscriptio) discovered in the Jaffna Fort becomes the oldest Ta is also the only Cola inscription originally set up comes from a tea boutique' in Jaffna town. The formed part of one of the buildings erected at Nall destroyed the city of Nallur in the seventeenth cen its present site, where subsequently it was built into record is dated in a regnal year of Parakramabah preserved portion. It is known from the literary sc powerful Kotte kingdom in the reign of Parakram who ruled at Nallur for some time as viceroy. But firmation of Parakramabahu's overlordship of Jaffna of Parakaramabahu VI have been discovered at N Mulnesvaram in the western coast and in Jaffna, a emperor of the Island.
5

assembly of Kan alairret and decided to allocate yme watercourses of the irrigaticn channel named is damaged at this point and the details are not
garded as fairly important, was discovered at the Tne contents of this record indicate that it was trict. It appears that the Dutch removed this inKayts by boat and used them in repaining Fort ntary, the preserved portion gives us for the first ccessful campaign of A.D. 1017 and brought he ral, Jayankonta Cola Muventa Velar, is described a and took away the King cf Lanka, his queen and inscriptic n in Sri Lanka menticnirg, the fact that conquest of 1017, and his queen were taken away ommander. It thus confirms the account of the the Cola conquest. That the consort of the King ct that is not mentioned elsewhere, although her
vered in the Trincomaleedistrict in 1972, iwo may ient Saiva temples cf Tincomalee, now lost and the Hindus for the renowned Konesvaram temple own by the Portuguese in the seventeenth century cayesvaram, which was also presumably destrcyed in some late legendary accounts of Tincc malee an inscription fcm. Nilave li and amicthe fic, m, the tolicily of this venerated shrine and provide some
the Jaffna District within the last few years also potsherd unearthcci at Kantarodai by a team of useum. This is the cnly Brahmiinscription to be is discovercd in that dist1ict. A pillar inscripticn milinscription to come to light in that district. It there to have come to light. A third inscription stone on which it is inscribed appears to have ur in the fifteenth century. The Portuguese who ury were probably responsible for its removal to he floor of the tea "boutique'. This fragmentary L VI of Kotte, whose full titles are given in the rces that the Jaffna kingdom was annexed to the bahu VI by his adopted son Sapumal Kumaraya This is the first time that we get epigraphical conIt is interesting to note that Tamilinscriptions aim mana in the southern end of Sri Lanka, at l of which go to confirm his claim that he was.

Page 165
ΝΟΤ
1. This is the text of a talk broadcast over Broadcasting Corporation on 31st July, 1973.
2. Several of these records were brought to we with my friends. In the Jaffna District I was as Mr. A. Kandiah (Retired Curator, Jaffna Museum), an Assistant Lecturer in the Department of History the Trincomalee District Mr. Gunasingam and Mr. Village Committee) were of immense help to me. inscriptions of this district. Mr. S. Kanagaiyan (' students assisted me in the Vavuniya District. The
3. Three more Tamil inscriptions and a Si, malee District by Mr. Thanbirajah and Mr. Gunasi not yet knat lyn.
*தமிழுக்கென்று உண்மையில் உழைத்தவர்களில் குறிக்கின்றேன். அவர்கள் ஜீமான்களான ஆறுமு தரம்பிள்ளே, கனகசபைப்பிள்ள்ை என்பவராவர். அறத்துறந்து நல்ல பதவி பெறுவதை வெறுத்துத் வதே பிறந்த பயன் எனக்கொண்டு இரவும் ப இடையூறுகளை அவர் பொருட்படுத்த வில்லை. யா சாலையை நிலைநாட்டி அதை நடத்தக் கையி உதவியைக்கொண்டு நடத்தினர். சிதம்பரம் சைவ படி செவ்வனே நடைபெறுகின்றது. இவர் அச்சி தனை? அவர் ஒருவர் முயற்சியால் தமிழ்க்கல்வி
அவதரிக்கச் செய்யவேண்டுமென்று கடவுளைப் சபைப் பிள்ளை இருவரும் உத்தியோகத்திலிருந்த யாவர்? இவர்கள் மேகத்தைப் போல ஒரு வ வார்கள்.
- K, S. பூரீநிவாஸயிள்ளே, தமிழ்வு
5

ES
the English Service (Channel One) of the Sri Lanka
light as a result of systematic surveys conducted by isted by Mr. V. Sivasamy (Lecturer, Jaffna College), ind my former student Mr. S. Gunasingam (formery University of Sri Lanka, Peradeniya Campus). In S. Thambirajah (former Chairman of the Sambaltiyu Credit goes to the latter for having found the new eacher, Vidyananda College, Mulliyavalai) and his Inks are gratefully offered to all of them.
hala inscription were brought to light in the Trncogan in 1973. The contents of these inscriptions are
காலஞ்சென்ற சில பெரியோர் பெயரை சிண்டு கநாவல்ர், பாண்டித்துரைசாமி தேவர், தாமோ .ஆறுமுக நாவலர் பொன் நிலமாதரா சையை * தமிழையும் கடவுளிடத்தன்பையும் பரவச் செய் கலும் உழைத்தனர். தம் முயற்சிக்கு நேரிட்ட வண்ணுர்பண்ணையில் சைவப் பிரகாச வித்தி ) பொருளில்லாமல் அரிசிப் பிகையெடுத்து அதன் ப் பிரகாச வித்தியா, சாலை யாரும் கொண்டாடும் b பதித்து வெளியிட்ட தமிழ்ப் புத்தகங்கள் எத் எவ்வளவு பரவியது? பல ஆறுமுக நாவலர்களை பிராத்திக்கின்றேன். தாமோதரம் பிள்ளை, கனக வராயிருந்தும் தமிழுக்கு உழைத்ததை அறியாதார். கைக் கைமாறும் வேண்டாது உழைத்தவர்களா
ரலாறு, முற்பாகம், 8ம் பதிப்பு, 1960, பக் 49

Page 166
* யாது மூரே யாவரு
தீது நன்றும் பிறர்தர நோதலுந் தணிதலு ட சாதிலும் புதுவ தன்ே
இன்னு தென்றலு மில வானந் தண்டுளி தலைஇ கல்பொரு திரங்கு மல் நீர்வழிப் படூஉம் புனை உறைவழிப் படூஉ மெ.
பெரியோரை வியத்தலு சிறியோரை இகழ்த வ

வ் கேளிர்
6лтДгfr 0வற்ருே ரன்ன ற வாழ்தல் 2 மிலமே முனிவின் GBLD மின்னெடு இ யானது லற பேர்யாற்று ாபோ லாருயிர் ன்பது திறவோர்
மாகவின் மாட்சியிற்
மிலமே தனினு மிலமே 9
" புறநானூறு
及5教

Page 167
With Best
Frc

Compliments
)m
Joseph

Page 168
L0L0L0L0L0L0L0L0L0YL0L0L0L0L0L0L0LL0LYYY000Y0L0L0Y0L
d
; “தாமின் புறுவ து
O O ; காமுறுவா கறறற
争 8 d i The Maharaja Or MAHARAJA EB 8 54, Banksha i COLOM
8
8
i “கேடில் விழுச்செல்வா
மாடல்ல மற்றை யவை
The Cheapside 8 94, 2nd Crocs Street
Colombo
མཁས་མཁས་པ་ཐམས་མཁས་ 3888 88088-0000808 M

030003000800
லகின் புறக்கண்டு
ந்ெதார்”
'ganisation, Ltd.
UILDING ill Street
[BO)- 1
k கல்வி யொருவற்கு
''
L0LYYYLLL00LYYLLLLLL00LLLL0L0LYLLLYYLLLLLL0LLLLL0YYYL0LLLLLLYLYLLL

Page 169
| + +QS 후姆舞 å ●玲品--š历애 = 长儿娜€9院 != }<费红
计|| Q肥。可số ị ><ť () sĩ số能 | 知
々々々々々々々々々々々々eゃ々々々々る*****る々々々*******る々々々々々々々々々々々々る**る****る●●●●●●●●●●●●●●●●る●●●●●●●●●●●●●●●●●●●●●●る*るるる

Compliments
O
HOUSE
Gem Merchants
it, Colombo - 11.
|jල්ඩ් හවුස්
T6) ஹவுஸ்
inteed and genuine
b0000000000000000 peo000000000000000

Page 170
3 a .3,
With The C
O
CEY POLYTHENE |
Manufacturers and RC
Polythene Filu
P. B. Awis Per
Katubedda,
Phone: {72-473
 

ompliments
INDUSTRIES
togravure Printers of
m and Bags
era Mavvata,
Moratuyya
Cable: fyELPAK

Page 171
令令令令令令夺令令令令争夺令A●令令令令争令令令夺夺令令夺令夺夺命令令令
CEYLON THEA
WITH OVRR 45 YEAR
CoNTINUES
THE BEST IN CINEM
8000000000000000049084000800000000
- Specialists in Decca Sa
Manufactured by
Puspha
COLOM
Sole Distributor.
Vilasimi &
148, KEYZER STIRE
PHONE:- 24719, 27196.
8000808888-888-888-888-9899888-8088-88088

TRES LIMITED
IN SHOW BUSINESS
"O PROVIDE
A ENTERTAINMENT
>令令令令争●争令令命令令争夺令令令夺令夺夺*●呼令●令令●●争夺峰é
aree &) Cotton Pyiama
Industries,
IBO-15
Company
l, COLOMBO - 11.
88.888888-888-888-888.8889 00000000-00000

Page 172
TAJMAHAL PRINTING II
PRPINTERS FOR
Lanka Salu
“MULL TAJ” PRI.
''TIPICON PRIN
Names that denote qual
Distributors:-
SAGAR C
105, SECOND C
COLOM
th
Oj
V
المه
95
CC

TEXTILES NDUSTRIES
Sala Limited
WTED SA REES
JTED FABRICS
ity in Printing Textiles
:OMPANY
ROSS STREET, 3O-l.
Vith
le
Best Compliment
f
harges
s 2nd Cross Street,
LOMBO-1 1.

Page 173
S. P. பெரியண்கு
180, இரண்டாம்
கொழு
தொலைபேசி 25738
ஒளிவள நாட்டில் இ வளமிளமையோடு
டொலா கே
14, டாம் வீதி
வrசனைத் திரவி அலுமினிய உ
 

ளிப் பு
ணு பிள்ளை & Co,
குறுக்குத் தெரு
bւկ-11.
ன்று ஆயும் மொழி
என்றும் விளங்குக
ார்ப்பரேஷன்
கொழும்பு-11.
ய விற்பன் னரும்
பத்தி விற்பனையாளரும்.

Page 174
SS L00L0LLL0LYYLL0LLLL0LL0LYL000YYYL0YYYSL00YYYYLY0Y0AYL0
ίδιεh έήe (
AWDAS G. LaMist
Manufacturers of 'WE
Tabl
561 K. K.
U AFF
8000000000000-00-9000988

々●ベ*ゃ々る々*令●●●●●●●●●●●●●*●●●●●●●●*****
***************************} *********る多*今る****るを今るやゆゆき�
**&令&シ***************るゃ&るるるるをやる事ぐを多る**
le
L. BRAND'' Camphor
ets
‘888.809000p8088000-eeee
S. ROAD
cmpt
NA
s
f
RYNGAALS QN'RSD

Page 175
●●●●●令伞令令●令令令令令●令
»r+-0-+00-0-0 ↔
தமிழன்னைக்கு
எங்கள் ஈ
கலந்த
வணக்கம்
தமிழ்த்தாய்
இறும்பூதெய்ய
நடைபெறும்
மாநாடு
சிறப்பு
6.
ரத்தினம்ஸ் 146, 2ஆம் குறுக்குத் தெரு
கொழும்பு-11
தொலைபேசி- 20406.20361
. سمیہ ۔ سہ ۔ & B640000-0000000806000-8-8-0-0-0w)r 8008-0-38&

夺命令争妙令夺今令●夺令中令令令争夺事令夺令令令令夺岭令令令令令令令令
5ன்றி
XK
Maheswari Textile 196, 2nd CROSS STREET COLOMBO-I
多
|A)
ாழ்த்துகிறேம்
|
:
: 3.
W 略 : . . م . . . . . ; ۔ “ . . مغل : ....... : خد::::ح یہ بغیر مت " なぐゆ*や●やぐ*をふややぐふゃゃや****や********やふ , , હરે

Page 176
8000-00--00000000000000000000000000p8. తగ్గి
& :
மாநாடு
சிறப்பாக
நடைபெ ' 薪 : எமது : நல்
i
956) T is
vy 134,
தொலைபேசி எண் : 25250 : wh ¢ LLLLLL LLLLLLLLMLee LLLeeLeLMLeS
நடக்கப்போகும்"
தமிழ் ஆராய்ச்சி
நல்லமுறையில் த
நமது நல்வாழ்த்
லலிதா நகைமாளி
99, 1 0 1, 103, 105
செட்டியார் தெரு, கொழும்பு-11
8.
哆
t
(
ళ
令令必必令令必必必必令令》分令*必令令必必4必必令教郊

LLLLLLLLL0LLL0LL00L0LLLL0LLLLLLL0LLLLL00
வாழ்த்துக்கன்
டிறேடிங் கம்பெனி
இரண்டாம் குறுக்குத் தெரு
கொழும்பு-11
LLLLSLLLSLLLL LLL LLLSLLLeLLMS
தான்காவது
Lofтап (5
டத்தேற
துக்கள்
6
& 令 &
தொலைபேசி 23691 ”、 &
8.
*々々々*****々々々●●●●●●●*************や●●

Page 177
沙令令令令令令*令令●●●●●●●44心必4●●●●●●●●●●●●
960
l
Λ டெக்கா சா
21, 3-ம் குறு
கொழு
‘* தேமதுரத் தமிழே பரவும்வகை செய்
மா. கு. சுப்
ll2, Living
கொழு
8000-0000-00-000000000000000008080 88s

●●●●●●●●● *ふぶ・・・ ふ* や****や●**や●●●●●**●
மக்குத் தெரு,
ம்பு-1.
g 3.
●
*
ாசை உலகமெலாம்
தல் வேண்டும் ?
பிரமணியம்
8000000000000008088-898406-00000080t

Page 178
v-\^^^^^^^^^^^^^^^

Page 179
With the besi
fr
f. S. Salgara
6, WOLFEN D1
COLO TPHONE:- 32221.
* கற்க கசடறக்
னிற்க வதற்கு
RA

Compliments
91ገገ
MBO- I II.
கற்பவை கற்றபி
5 தக 99
M BROS
140, MAIN STREET
pillas Bro.

Page 180
Big or sпаІН we can handle *
ܕ ܬܐ
ALL YOUR
SRI LANKA (CEYLON) TOURS
As one of Sri Lanka's most experienced EXPRESS can organise all your tors, it
We offer a wide and varied range of sp of special INTEREST Tours to suit the p
We hair, the right connections World-wic portation services-Contact our Agents in
FRAJMAL TEEliyalmuth 2131, Power
BAFFINA
GEYLON EXPRES
12 Y. M.
COLO
Теіерһопе 20020. Carlo777 HC.
Grari - EXPRESS - Mr Lavinia.
暫
 

F#557455 ESTABLISHED TO PROMOTE FRIENDSHIP, UNDERSTANDING AND COOPERATION AMONG PEOPLES WARYING AS TO RACE, NATION OR CULTURE.
Travel Agents and Tour Operators CEYLON
matter what size the group.
ecially tailored tours together with a series a late of the most travel-jaded visitor.
le and with all air-lines, hotels and transTaffnq : s
ENTERPRISES, In Malihai,
House Rond,
8
8
پيلي
S - World Trave
B. A. Building MBO