கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும்

Page 1


Page 2


Page 3

சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும்
கலாநிதி சி. மெளனகுரு
வி புலம் வெளி யீ டு - 4
VIPULAM PUBLICATION-4

Page 4
Swami Vipulamandar
KALAMIUM KARUTHTHUM
(Collection of Articles on Swami Vipulamandar)
Author S. MAUNAGURU
M. A. Dip. in. Ed. Ph.D.
First
Edition 18th August 1993
Printers : St Sebastian Printers. Batticaloa.
Cover Design : Ilawalagan Pathippagam
Publishers: Vipulam Puplication
7, Gnanasuriyam Square, Batticalioa.
Price : 50
ii |

எழுத்தறிவித்த என் தலைமைத்தமிழாசிரியர்
திரு. நாகமணி
அவர்களின் நினைவாக,
jii

Page 5
சுவாமி விபுலாநந்தர்
காலமும் கருத்தும்
1:
2.
உள்ளே உள்ளவை
வெளியீட்டுரை
as «» s 7. veer V
என்னுரை ---...-. - vi
விபுலாநந்த அடிகளாரின் சமூக கலை இலக்கிய நோக்கு... 01
தமிழ் உணர்வின் வரலாறும்
விபுலாநந்தரின் தமிழுணர்வும் . . 42
விபுலாநந்தர் நயந்த இலக்கிய நாயகர்கள் . 103
iV

வெளியீட்டுரை
விபுலம் தனது 4வது வெளியீடாக சுவாமி விபுலா நந்தரின் சாலமும் கருத்தும் என்னும் இந்நூலை வெளி யிடுகிறது.
இது வரை விபுலம் வெளியிட்ட நூல்களுக்கு ஆதரவு தந்த வாசகர்கட்கு எமது நன்றிகள். t
கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசாரப் பீடாதிப தியாகப் பணிபுரியும் கலாநிதி சி. மெளனகுரு அவர்கள் சுவாமி விபுலாநந்தர் பற்றி எழுதிய கட்டுரைகள் சில வற்றின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. தம் கட்டுரைகளை வெளியிட எமக்கு அனுமதி தந்து ஆலோ சனைகள் வழங்கிய கலாநிதி சி. மெளனகுரு அவர்கட்கு எமது உளம் கனிந்த நன்றிகள்.
1992 ஜ"ன் மாதம் எமது முதல் வெளியீடு வெளியி டப்பட்டது. 1993 செப்டம்பர் மாதத்தில் எமது 4 வது வெளியீடு வெளிவருகிறது. ஒரு வருடத்துள் 4 வெளியீடு கள் என்பது எம்மைப் பொறுத்தவரை குருவிதலையில் பனங்காய் தான். எனினும் வாசகர் தரும் ஆதரவு நம் பிக்கைதருகிறது. மேலும் உங்கள் ஆதரவைக் கோருகி றோம்.
7, ஞானசூரியம் சதுக்கம், விபுலம் மட்டக்களப்பு வெளியிட்டுக்குழுவினர்

Page 6
என்னுரை
சுவாமி விபுலாநந்தரின் நூற்றாண்டு விழா பெரு விழாவாக நடந்து முடிந்துள்ளது. அறிந்தோருக்கு நினைவு கூரலாகவும், அறியாதோருக்கு அறிமுகமாகவும் அவ்விழா அமைந்தது விழா தந்த பயன்கள் பல.
சுவாமிகளின் வெளிவந்த, வராத எழுத்துக்களை மீண்டும் கொணரும் முயற்சி, சுவாமிகள் பற்றிய புதிய தகவல்கள் என்பன அவற்றுட் சில.
நூற்றாண்டு விழாவில் சுவாமிகளை அகவயமாக வும்,(Subjective) புறவயமாகவும் (Objective)நின்று அணு கிய எழுத்துக்களும் வெளியாயின. ஒரு வரலாற்று நாய கரை இவ்வண்ணம் அணுகும் இயல்பை நாம் வரலாற் றிலே காணுகின்றோம். சுவாமியவர்களைப் புறவயமாக அணுக எடுத்த முயற்சிகளின் பயனே இக்கட்டுரைகளா கும்.
ஒருவரது கருத்துக்களை உருவாக்குவதில் அவரது சமூக வாழ்வு மிகப் பிரதானமான பங்கை வகிக்கின்றது. ஒருவர் வாழும் கால கட்டம் அவருடைய கருத்துக்கள் மீது மிகுந்த செல்வாக்கைச் செலுத்தும், காலத்தோடு ஒட்டிச் சிந்திப்பவரும் உண்டு. காலத்தை மீறித் தூர நோக்கோடு சிந்திப்பவரும் உண்டு. முன்னையவர்கள் சிந்தனையாளர்கள்; பின்னையவர்கள் மேதைகள்.
இக்கட்டுரைகள் சுவாமிகளின் சில கருத்துக்களை யும் அக் கருத்துக்களின் உருவாக்கத்தில் அவர் வாழ்ந்த காலம் செலுத்திய செல்வாக்கையும் இன காண முயல் கின்றன. சுவாமிகள் பற்றிப் புறவயமான ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு இவை உதவும் என்று நம்புகிறேன்.
vi

ஒரு வகையில் இக் கட்டுரைகள் சுவாமியவர்களின் நூற்றாண்டு விழாவின் பிரதிபலிப்புகள் எனலாம். இத் தொகுதியின் முதற்கட்டுரையான விபுலாநந்த அடிகளா ரின் சமூக கலை இலக்கிய நோக்கு மட்டக்களப்பு விபுலாநந்த நூற்றாண்டு விழாச் சபை நடத்திய சுவா விபுலாநந்தர் நினைவுச் சொற்பொழிவினை அடிப்படை யாகக் கொண்டது. சிறு பிரசுரமாக அச்சபையால் வெளியிடப்பட்டது. هي
இரண்டாவது கட்டுரையான தமிழுணர்வின் வரலா றும் விபுலாநந்தரின் தமிழுணர்வும் இதே சபை வெளி யிட்ட விழாமலருக்காக எழுதப்பட்ட கட்டுரையாகும். இதன் இன்னொரு பகுதி கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி வெளியிட்ட சுவாமி விபுலாநந்த நூற்றாண்டு விழா மலருக்கு எழுதப்பட்டது.
மூன்றாவது கட்டுரையான சுவாமி விபுலாநந்தர் நயந்த இலக்கிய நாயகர்கள். மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும், கல்முனை கார் மேல் பாத்திமா கல்லூரிலும் நடை பெற்ற விபுலாநந்தர் நூற்றாண்டு நினைவு தினத்தில் ஆற்றிய சிறப்புரைகளின் சுருக்க வடிவமாம். அவ்வுரைகளைச் சுருக்கி வவுனியா கல்வித் திணைக்களம் வெளியிட்ட விபுலாநந்தர் நினைவு மலருக்கு எழுதிய கட்டுரை அது. நூலுருப் பெறுகையில் ஒல திருத்தங்களுக்குள்ளாகியுள்ளது.
சொற்பொழிவுகட்காகவும் கட்டுரைகளை எழுது வதற்காகவும் சுவாமியவர்களின் ஆக் 1ங்களைத் தேடிப் படிக்க வேண்டியிருந்தது. இத்தேடல் ஒரு நல்ல அனுப் பவமாக அமைந்தது. கற்கும் தோறும் சுவாமியவர்களின் ஆக்கங்கள் பெரு வியப்பளித்தன. தன் கால கட்டத்தில் அவர் வாசித்த நூல்கள், சிந்தித்த துறைகள், எழுதிய
Will

Page 7
கட்டுரைகள் பிரமிப்பூட்டின. அவரது ஆக்கங்களைத் தேடும் செயலும், வாசிக்கும் செயலும் இன்றும் தொடர் கிறது. அவரது அகன்ற பார்வையும் தூர நோக்கும், மானிட நேயமும் மனதைக் கவர்கின்றன.
திரு. வ. சிவசுப்பிரமணியம் (மட்/விபுலாநந்த நூற்றாண்டு விழாச்சபை இணைச் செயலாளர்) வித்து வான் சா. இ. கமலநாதன்(மட்/விபுலாநந்த நூற்றாண்டு விழா மலர் ஆசிரியர்) திரு.வ. கனகசிங்கம் (அதிபர், மட்/ அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை) அருட்திரு சகோ தரர் மத்தியூ அடிகளார் (அதிபர், கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி) ஆகியோர் இவ்வேளை ஞாபகத் திற்கு வருகிறார்கள். இவர்கள் இச்சொற்பொழிவுகளை ஒழுங்கு செய்தவர்கள்; கட்டுரைகளை எழுத வைத்தவர் ᏭᏚᎶYᎢ .
ஒருவகையில் இவர்களின் நெருக்குவாரமே என்னை
இக் கட்டுரைகளைச் சீக்கிரமாக எழுத வைத்தது. இவர் கட்கு என்மனமார்ந்த நன்றிகள்.
தமது பிரசுரமாக வந்த இந்நூலிலுள்ள எனது முதற் கட்டுரையை வெளியிட அனுமதி தந்த விபுலாநந்த நூற்றாண்டு விழாச் சபையினருக்கும், இந்நூலை வெளி யிடும் விபுலம் வெளியீட்டுக் குழுவினருக்கும், விடாப் பிடியாக என்னை வேலை வாங்கும் தம்பி க. ஆறுமுகத் திற்கும் என் நன்றிகள்,
கலை கலாசாரபீடம் சி. மெளனகுரு கிழக்குப்பல்கலைக் கழகம்,
மட்டக்களப்பு.
8 - 07 - 93
viii.

விபுலாநந்த அடிகளாரின் சமூக, கலை, இல ஆகிய நோக்கு
முகவுரை:
மனித வரலாறு பல் வேறு முரண்பாடுகளுக்கும், போராட்டங்களுக்கும், மாற்றங்களுக்கும் ம த் தி யி லே சென்று கொண்டிருக்கின்றது. மனிதர்கள் தாம் வாழும் காலத்தில் தம்மைச் சூழ நிகழ்கின்ற நிகழ்வுகளுக்கு எதிர் வினை (react) புரிவர். எதிர்வினை என்றால் பிரச்சினை களை, நிகழ்வுகளை எதிர்த்தல் என்பது பொருளன்று. அந் தப் பிரச்சினையை எதிர் கொள்ளுதல் ஆகும். எ தி ர் கொள்ளுதல் மூன்று நிலைகளில் நடைபெறும்.
ஒன்று, தான் வாழும் காலச் சூழலில் காணப்படுகின்ற சமூக அமைப்பை, முரண்பாட்டை நடைபெறுகின்ற பிரச் சினைகளைக்கண்டு இது இப்படித் தான் என ஏற்றுக் கொண்டு அடங்கிப் போய் அதற்கமைய வாழ்தல். இந் நிலையினைப் பெரும்பாலான பொது மக்கள் மே ற் கொள்வர். .
இரண்டு, அந்தச் சமூக அமைப்பினின்று ஒதுங்கித் தனக் குள்ளே தனித்துப் போதல். சமூகத்தைத் துறந்து போதல், சமூகத்தைத் துறந்து தவம் செய்கின்ற ஞானியர், யோகி யர், சில எழுத்தாளர்கள் இந்நிலையினை மேற் கொள்வரி,
மூன்றாவது, அந்தச் சமூகத்தை, அதன் முரண்பாடு களைப் பிரச்சினைகளை எதிர் கொண்டு அதற்கு முகம் கொடுத்து அதற்கான தீர்வுகளை முன் வைத்து மாற்று வழிகளைக் காண முயற்சி செய்தல். சமூக உணர்வும் அர்ப் பணிப்புப் பண்பும் கொண்ட தனி நபர்கள் சிலர் உள்ள Gori. 9) n of a sir Socially, active individuals 2auri. L15 திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள்,
Ol

Page 8
சமூக சமய சீர்திருத்தவாதிகள் முற்போக்கானவையோ, பிற்போக்கானவையோ சில இயக்கங்களைச் சார்ந்து தொழிற்படுவோர் இவர்களுள் அடங்குவர். இவர்கள் ஒரு நோக்கிற்காக (Cause) செயற்படுவர். இவர்கள் மூன்றாவது வகையினர்.
முதலாவது வகையினர் சாதாரண மக்களானமையி னால் அவர்கள் தனிப்பட்ட கணிப்புப் பெறுவது இல்லை. இரண்டாவது வகையினர் மனித சமூகத்தை விட்டு ஒதுங்கிய, அல்லது மனித நிலை கடந்தவரானமையினால் பூசைக்குரியவர்களாகி விடுகிறார்கள்.
மூன்றாவது வகையினர் பிரச்சினையின் குவி முனைக 5ளில் செயலாற்றுபவர்களாதலால் அவர்களின் சிந்தனைகள் அடுத்த தலைமுறையினரையும் ஈர்ப்பனவாகின்றன. எனவே தான் அடுத்த தலைமுறையினர் அச் சிந்தனையாளர்களைக் கூர்ந்து நோக்குகின்றார்கள்.
அவர்களின் சிந்தனைகளில் கொள்ள வேண்டியவற்றைத் தம் தேவைகளுக்கு இயைய கொள்ள முயல்கிறார்கள். இதனால் அத்தகையோரை நினைவு கூருகிறார்கள். இறந்த ஒரு மனிதரின் பழைய நினைவுகளும், பழைய வாழ்வும் இவ்வர்று தான் இன்றைய நிகழ்வுகளாகின்றன.
விபுலாநந்த அடிகளும் இவ்வாறு தா ன் இன்றைய நிகழ்வாகி விடுகின்றார். இதுமட்டுமல்ல இறந்த மனிதரின் வாழ்வும் நினைவுகளும் இ ன்  ைற யப் பிரச்சினைகளே. :) இயைபுடையனவாகும் போது அவர்களின் நினைவு முக்கியத்துவமுடையதாகின் 1றது. 'ஓ மில்டன் நீ இன்று எம்முடன் இருந்தால் ான்ற ஏக்கமும் எழுகின்றது. சமூகத்தின் மாற்றங்களையும், முரண்பாடுகளையும் இவ்வாறு எதிர் கொள்ளுவோர்களில் முன்னணியில் நிற்பவர்கள் கலைஞர்களே. நுண்ணுணர்வு மிகப் பெற்ற இவர்கள் தான் சமூகத்தின் பிரச்சினைகளை முதலில் உணர்பவர்கள். இப்பிரச்சினைகளை முறைசார் புலமைக்கல்வி பெற்ற, பெறாத அறிஞர்களும் உணர்வர்.
02

பட்டமும், படிப்பும் இப்பிரச்சினைகளை விளங்கும் ஓர் முறையியலை (Methodology) இவர்களுக்குத் தருவதனால், இவர்களின் விளக்கம். முன்னவரிலிருந்து வித்தியாசமாக அமையும்.
துறவியரும் தம் உள்ளுணர்வால் (intution) இதனை உணர்வர் என்று கூறுவர். அதிஷ்டவசமாக விபுலாநந்தர் இம்மூன்றும் இணைந்த ஓர் உருவாக நம்முன் மிளிர்கின் றார். அவர் ஒரு கலைஞர், அறிஞர், துறவி, இக் கலவை மிக முக்கியமான கலவை. எனவே, சமூகம் பற்றிய அவர் கணிப்பு, அக்காலச் சூழலுக்கு அவர் எதிர்வினை புரிந்த விதம், அவரது சிந்தனைகள் என்பன கணிப்பிற்குரியதா கின்றன.
சூழலின் தாக்கம்
இலங்கையிலே பிறந்த விபுலாநந்த அடிகளார் தமிழ் நாட்டிலும் வட இந்தியாவிலும் வாழ்ந்தவர். எனவே இம் மூன்று நாட்டு நிகழ்வுகளும் அவரைப் பாதித்திருக்கும் என் பதில் ஐயமில்லை விபுலாநந்த அடிகள் வாழ்ந்த 55 வருடங் களும் (1892 - 1947) இம் மூன்று நாடுகளிலும் அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகியவற்றில் மிக முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்ற காலங்களாகும்.
வட இற்தியச் சூழல்
இந்திய அரசியலில் வெள்ளையருக்கு எ தி ரா ன போராட்டம் மும்முரமாக நடந்த காலம் இது. காங்கிரஸ் கட்சி உதயமாகி மிதவாதிகள்,தீவிர வாதிகள் போராட்டம் நடைபெற்று பின்னர் காந்தியின் தலைமை ஏற்கப்பட்டு, காங்கிரஸ் மக்கள் மயமாகி தண்டியாத்திரை, உப்புச் சத்தி யாக்கிரகம் என்பன நடைபெற்று, மக்கள் கிளர்ச்சிகள் வெடித்ததுடன் இந்து முஸ்லிம் பிரச்சினைகள் தோன்றி இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு தேசங்களாக நாடு பிரியும் நிலையும் தோன்றிய காலம் இக்காலம்.
03

Page 9
சமூகத்தில் அனைத்து இந்தியரும் ஒருவர் என்ற தேசிய எண்ணம் வலுப் பெற்ற காலம். தீண்டாமைக்கு எதிராக மகாத்மா காந்தி தீவிர குரல் கொடுத்த காலம்
கலை இலக்கியத்தில் ஐரோப்பியக் கலைகளுக்கொப்ப, ஏர்ன் அதற்கும்மேல் இந்தியக்கலைகள் சிறந்தன என்று கிழக்கின் பாரம்பரியத்தை மேற்குக்கு எடுத்துக் கூற இந் திய எழுத்தாளர்களும், அறிஞர்களும் உழைத்த காலம். மாக்ஸ்முல்லர், கலாயோகி ஆனந்த குமாரசாமி போன் றோர் இங்கு குறிப்பிடக்கூடியவர்கள்.
தமிழ் நாட்டுச் சூழல்
இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமும் பரந்து பட்ட தேசிய இயக்கமும் உருவாகிய இச் சூழலில்தான் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஜஸ்டிஸ் கட்சி உருவானது. பிராமணர், பிராமணர் அல்லாதவர் பிரச்சினைகளும் உருவாகின. இதன் வி ைள வா க க் கரந்தைத் தமிழ்ச் சங்கம் டோன்ற சைவ - தமிழ்க் க்ழகங்கள் உ ண் டா யின. தனித் தமிழ் இயக்கம் மறை மலையடிகள் தலைமையில் உண்டானது. கால்டு வெல்லின் கூற்றும் சிந்து வெளி நாகரிகக் கண்டுபிடிப்பும் ஆரிய திராவிட கருத்தைத் தோற்றுவித்தன. தென்னிந்திய மக்கள் திராவிட இனத்தினர் என்ற கருத்துருவாக்கம் உருவானது. இதனால் திராவிடக் கழகத்தை ஈ. வே. ரா. தொடங்கினார். இதன் விளைவாக தமிழ்த் தேசிய வாதம் தமிழ் நாட்டில் உருவானது. இது இலங்கையில் தோன்றிய தமிழ்த் தேசிய வாதத்திலிருந்து வேறானது. இந்தியத் தமிழ் தேசிய உணர்வு பின்வரும் அம்சங்களைக கொண் டிருந்தது.
I) egfiu(5šg5 6T 3J T6575. (Anti Brahmin)
11) சமஸ்கிருதப் பண்பாட்டுக்கு மாறானது. திராவி
டப் பண்பாட்டை வலியுறுத்துவது.
04

III) பிராமணரால் ஒதுக்கப்பட்ட பிராமணர் அல்லா தார் ஆரியருக்கு முற்பட்ட திராவிடர் புகழ் பேசி தம்மைப் பிராமணர் பண்பாட்டு மேலாதிக்க நிலையினின்று விடுவிக்கப் பார்த்த தன்மை கொண்டது. 1 சமூகத்தில் திராவிடக் கழகம் தீண்டாமைக்கு எதிராக சீர் திருத்தக் கருத்துக்களை வைக்க ஆரம்பித்தது இக் காலத்திலேயே.
கலை இலக்கியத்தில் தமிழர் கலைகளை மேன்மைப் படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சதாசிவ பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப்பிள்ளை போன்றோரும், மறைமலையடிகள், கா. சுப்பிரமணிய பிள்ளை போன்றோரும் தமிழ் ஆராய்ச்சியில் இரு துருவங் களாயினும் முன் நின்றனர். மணிக்கொடி, ஆனந்தவிகடன், கலைமகள், தினமணிக்கதிர், கல்கி போன்ற பத்திரிகை கள் தோன்றின.
வெள்ளையருக்கு இந்தியக் கலைகள் உ ண ர் த் த ப் பட்டது போல வடவரான ஆரியருக்குத் தமிழ்க் கலைகள் உணர்த்தப் பட வேண்டும் என்ற தமிழ் உணர்வு பிரதான ஒட்டமாக இருந்தது.
இலங்கைச் சூழல்
தமிழ் நாடு இவ்வாறாக இலங்கையின் சூழல் இன் னொரு விதமாக அமைந்தது.
இலங்கை அரசியலில் மோர்லின் மின்டோ, மனிங் சீர்திருத்தம், டொனமூர் அரசியலமைப்பு, சோல்பரித் திட்டம் அனைத்தும் விபுலாநந்தர் காலத்தில் நடை பெறுகின்றன. மெல்ல மெல்ல இலங்கையர் அரசியலில் பங்கு கொள்ளும் நிலை உருவாகின்றது. பொன்னம்பலம்இராமநாதன், அருணாசலம் போன்ற தமிழ்த் தலைவர்கள் உதயமாகின்றார்கள். 1920 ல் அரசியல் நிலைமைகள் இலங்கையில் வகுப்புவாத உணர்வினை உருவாக்கின.
05

Page 10
இக்காலத்தில் இந்தியாவில் இந்து முஸ்லிம் பிரச்சினை போன்று இலங்கையிலும் தமிழ், சிங்களப் பிரிவினை உருவாகி இருந்தது.
இலங்கையில் தமிழ் தேசிய உணர்வு 1930 ன் பின் முனைப்பு பெறலாயிற்று. இது பின்வரும் அம்சங்களைக் கொண்டதாயிருந்தது. *
கிறிஸ்தவ மதமாற்றத்திற்கு எதிரானது,
2. குறிப்பாகத் தமிழ் மக்களின் சைவத் தனித்துவத்தைப் பாதுகாக்க முனைவதாகவும் ஒரு மத - இலக்கிய இயக் கமாகவும் ஆறுமுக நாவலரால் மேற்கொள் ள ப் Ull-gil.
3. கிறித்தவப் பாதிரிமாரால் சனரஞ்சகப் படுத்தப்பட்ட சமய நடவடிக்கைகளையும் முறைகளையும் இது கையேற்றுக் கொண்டது.
சமூக அமைப்பில் காந்தியத்தின் தாக்கத்தினால் தீண் டாமை ஒழிப்பு சிறிய அளவில் மேற்கொள் ளப் படினும் ஆறுமுகநாவலரின் கோட்பாடுகள் தீண்டாமையை மேலும் வற்புறுத்துவனவாகவே அமைந்தன.
முரண்பாடுகளும் சமரசமும்
கலை இலக்கியத்தைப் பொறுத்தவரை தமிழ்க் கலை கள் பிரதானப் படுத்தப்பட்டன. கலைப் புலவர் நவரட்ணம் போன்றோர் முக்கியமானவர்கள். இலக்கியத்தில் மரபுவழிப் பண்பு பேணப்பட்டது. வித்துவான் கணேசையர், குமார சுவாமிப்புலவர் போன்றோர் பிரதானமானவர்கள். அத் தோடு ஈழகேசரி போன்ற பத்திரிகைகளும், நவீன இலக் கிய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதன் பின்னணியினைச் சுருக்கமாகப் பின்வருமாறு குறிப்பிடலாம்.
06

i) ஐரோப்பிய நாகரிகத்திற்கும் - இந்திய நாகரிகத்
திற்குமிடையே முரண்பாடு. ii) வெள்ளையர் - இந்தியர் முரண்பாடு. i) ஆரியர் - திராவிடர் முரண்பாடு. iW) திராவிடர் - தமிழர் முரண்பாடு. V) பழைய இலக்கியம் - புதிய இலக்கியம் முரண்பாடு wi) கிறித்தவம் - இந்து முரண்பாடு. wi) முஸ்லிம் - இந்து முரண்பாடு, wi) இந்துக்களுள் காணப்பட்ட உயர்ந்தவன் - தாழ்ந்
தவன் முரண்பாடு. ix) சமயச் சார்பு - சமயச் சார்பின்மை. X) துறவுநெறி - உலக வாழ்க்கை நெறி. இத்தகைய பிரச்சினைகளுக்கும், முரண்பாடுகளுக்கும் மத்தியில் விபுலாநந்தர் எவ்வண்ணம் இயங்கினார், இம் முரண்பாடுகளை எவ்வாறு அணுகினார், தீர்த்தார், தீர்க்க முயற்சித்தார் என்பதை ஆராய்வது ஒர் ஆராய்ச்சி மாணாக்கனுக்கு சுவையும், அறிவும் தரும் முயற்சியாகும். விபுலாநந்தரை அறிந்து கொள்ள அவரைப் புரிந்து கொள்ள எம் முன்னுள்ளவை உடனடியாக அவரது எழுத் துக்கள் தாம். இன்னும் அவர் ஆற்றிய சொற் பொழிவு கள், அவரது கடிதங்கள், சிறு குறிப்புக்கள், ஆங்கிலத்தில் அவர் எழுதிய கட்டுரைகள், அவருடன் தொடர்பு கொண்டோர் அவர் பற்றி எழுதிய குறிப்புக்கள் கிடைப் பின் சரியான கணிப்பீடுகளைச் செய்ய முடியும். அவர் எழுதிய கட்டுரைகள் காலவாரியாகத் தொகுக்கப்படாமை யும், அவற்றில் சரியான பி ன் ன னரி அடிக் குறிப்புகள் கொடுக்கப்படாமையும் எமது ஆய்வுக்குத் தடையாக உள்ள சில அம்சங்களாகும். எனினும் கூ டி ய வ  ைர கிடைத்த ஆதாரங்களை ஒழுங்குபடுத்தி இவ்வாய்வினை மேற் கொள்ளுவோம். அவ்வகையில் இக்கட்டுரை ஓர் ஆரம்ப முயற்சியே தவிர முடிந்த முடிவல்ல என்பதையும் கூறவிழைகின்றேன்.
07

Page 11
விபுலாநந்தரின் எழுத்துக்களை வைத்து நோக்கும் பொழுது, 1920 ல், அவரின் எழுத்துக்களுக்கும் 1940 ல் அவரது எழுத்துக்களுக்கும் வேறுபாடுகள் காணப்படு கின்றன. 1920 ல் 28 வயதான விபுலாநந்தர் எழுதிய எழுத் துக்களுக்கும் 1940 ல் 48 வயதான விபுலாநந்தரின் எழுத் துக்களுக்கும் வித்தியாசம் இருப்பது இயல்பே. ஆராய்ச் சியாளர், பெரும் அறிஞர்களை இளவயது - முதிர்வயது என்று பிரித்தாராய்தல் இயல்பு. இளவயதில் உதித்த சில எண்ணக் கருக்கள் முதிர்நிலையில் வளர்ச்சி பெற்றுக் கனிந்தும் வரலாம். சில அழிந்தும் விடலாம். சில மாறு பாடும் அடையலாம். எனவே உதித்தவை எவை? அழிந் தவை எவை? மாறியவை எவை? வளர்ந்தவை எவை? என்ற ஆராய்ச்சி மிக அவசியமாகும். அதை விட்டு அவர் கூறிய அனைத்துக் கருத்துக்களையும் அவரின் முதிர்ந்த கருத்தாக எடுத்துப் பின்பற்ற நினைத்தல் அறிவுடமை யாகாது. அது கால முரணுமாகும். A
ஆரம்பத்தில் சித்தாந்தியாகக் காணப்பட்ட சுவாமி கள் பின்னாளில் பழுத்த வேதாந்தியாகக் காட்சி தருகி றார், மொழி பெயர்ப்புப் பற்றி இறுக்கமான கருத்துக் கள் கொண்டிருந்த சுவாமிகள் பின்னால் நெகிழ்ச்சியான கருத்துக் கொண்டவராயிருக்கிறார். இலக்கிய வரலாறு பற்றி ஆரம்பத்தில் விஞ்ஞான பூர்வமற்ற கருத்துக்கள் கொண்டிருந்த சுவாமிகள் பின்னாளில் அப்படி எழுதினா ரல்லர்.
ஆரம்பத்தில் குமரிக் கண்டத்தையும் தமிழர் பெரு மையும் பெரிதாகப் பேசாத அவர் பின்னர், தமிழர் குமரிக் கண்டத்தில் தோன்றி ஐரோப்பா நோக்கிப் பரவி னர் என்ற கருத்தின் பால் ஈர்க்கப்பட்டார்.
ஆரம்பத்தில் தமிழாராய்ச்சி மேற் கொண்ட அவர் பின்னாளில் இசை ஆராய்ச்சி மாத்திரம் செய்கிறார்.
இவ்வகையில் அவர் எழுத்துக்கள் அவரிடம் காணப் பட்ட முரண்பட்ட சிந்தனைகளையே எமக்குக் காட்டுவன
08

வாயுள்ளன. ஒரு வகையில் அவர் வாழ்வே முரணிலை யிற் காணப்படுகிறது. துறவியான அவர் மிகுந்த தமிழ்ப் பற்றுடையவராயிருந்தார். துறத்தல், பற்று வைத்தல், எதிர் துருவங்களல்லவா?
சித்தாந்தியாக எழுதிய, நடந்த அவர் வேதாந்தக் கருத்துக்களையும் தருகிறார்.
துறவியான அவர் அழகாக உடுத்துப் புறப்படுவதில் ஆர்வமுள்ளவராயிருந்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் போல.
மரபு வழியில் இலக்கியம் பயின்ற அவர் நவீன கருத் துக்களையும் முன் வைக்கிறார்.
செந்தமிழ் மரபே தனி மரபு. பாண்டியன் தமிழே தமிழ் என்றுரைத்த அவர் பேச்சுத் தமிழையும் வரவேற் கிறார். தமிழ் மரபில் வளர்ந்த அவர் ஆங்கில மரபை யும் அரவணைக்கிறார்.
பழமையும் - புதுமையும் அவரில் இணைகின்றன. அ வ ர து சிந்தனைகள், முரண்பாடுகள் போலத் தோற்றமளிப்பினும் முடிவில் அவர் வைக்கின்ற முடிவான கருத்துக்கள் முக்கியமானவை. அவையே நமக்கு அவரை இனம் காட்டுவன. 1943 ல் எழுதிய ஒரு கட்டுரையில் பின்வருமாறு அவர் குறிப்பிடுகின்றார். "பழமையும் புதுமையும், துவைதமும், அத்வைதமும், பெள தீக விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானக் காட்சியும், மேற்றிசைய றிவும், கீழ்த்திசைச் சமயமும், மனமொடுங்கிய தியானநிலை யும், மன்பதைக்குத் தொண்டு புரிதலும் சமரசப்பட வேண் டிய காலம் இது" 3
முரண்களைக் காணுதலும் முரண் வழிச் செல்லாது நல்லவற்றை இணைத்து சமரசம் காணும் நோக்கும் மனித குலத்திற்கு நன்மை புரிதல் வேண்டும் என்ற கருத்தும் விபுலாநந்தரின் கருத்தாகும்:
09

Page 12
தமிழ் இலக்கியத்தை ஆழக்கற்ற விபுலாநந்தர் தம் முன்னோர்களினின்று இக்கருத்தைப் பெற்றிருக்கக் கூடும். உலகை வெறுத்து மறுமை வாழ்வை நோக்கிய சமணம் ஒரு பக்கமாகவும் அகம் புறம் என்ற இம்மை வாழ்க்கை இன்னொரு புறமாகவும் நின்ற சூழலில் இரண்டு போக் கின் நல்ல அம்சங்களையும் இணைத்து இம்மையிற் செம் மையாய் வாழ்ந்து மறுமையையடைய வழி சொன்னவர் வள்ளுவர்.
வடமொழி இலக்கியம் ஒரு புறமும் - தமிழ் இலக்கியம் ஒரு புறமுமாகவும் நின்ற நிலையில் இரண்டினுள்ள நல்ல அம்சங்களைத் தெளிந்து வடமொழி வால்மீகி ராமாய னத்தைத் தமிழ்க் கம்பராமாயணமாக்கியவர் கம்பர். பார தியும் இவ்வாறே பழமை என்று பழமையை தள்ளவும் இல்லை. புதுமை என்று புதுமையை ஏற்கவும் இல்லை. இரண்டில் நல்ல அம்சங்களையும் இணைத்தார்.
பழந்தமிழ் இலக்கியம் பயின்ற அவர் தம்முன்னோரி டம் கற்ற பாடத்தை விவேகானந்தரில் உரசிப் பார்த்து உறுதி செய்து கொண்டார். விவேகானந்தரும் பழமை - புதுமை இணைப்பின் இந்தியக் குறியீடு ஆவார்.
எல்லாச் செயற்பாடுகளும் மன்பதைக்குத் தொண்டு புரிதலே என்ற அவரது கூற்றில் மனிதர் மீது அவர் வைத்த அக்கறை புலப்படுகிறது.
எல்லா அறிவும் இறைவனை அடைவதற்கே என்ற பழைய கூற்றிலிருந்து எல்லா அறிவும் மனிதனுக்குச் சேவை செய்யவே என்ற இவர் கூற்று வித்தியாசப்படுகிறது.
இந்த எண்ணம் சிறு வயதில் அவரிடமிருந்த கருத்தா கும்.இக் கருத்து விரிந்து பெருகையில் இது சேரும் கடலாக இருந்தது இராமகிருஷ்ணமிஷனாகும்.
10

விபுலாநந்தரின் ஆளுமைப்பின்னணி
விபுலாநந்தரினால் ஆளுமையை உருவா ச்கிய முக்கிய பின்னணிகளாக ஐந்தைக் குறிப்பிடலாம். அவையாவன:
மரபு வழித் தமிழ்ச் கல்வி. 2 ஆங்கிலக் கல்வி. 3. விஞ்ஞான கணித அறிவு 4. வடமொழி அறிவு. 5
6
I
இராமகிருஷ்ண மடத்தொடர்பு. பன்மொழி அறிவு.
10ரபு வழித் தமிழ்க் கல்வி
விபுலாநந்தரின் மரபு வழி க் கல்வி காரைதீவிலே ஆரம்பிக்கின்றது. த ந்  ைத யா ரி ன் வழிகாட்டலின் கீழ் அவர் கல்வி பயில ஆரம்பித்தாலும் காரைதீவு வைத்தி லிங்க தேசிகர், தென்கோவை கந்தையா பண்டிதர், கயி லாயபிள்ளை முதலியோரிடம் கற்றார். இவர் 1912 வரை அதாவது 20 வயது வரை தமிழ்க்கல்வி பயின்றார். கயிலாய பிள்ளையிடம் சிலப்பதிகாரம் ப யி ன் றார். இளமையிற் காரைதீவு கண்ணகி கோயிலில் வருடாவருடம் பாடக் கேட்ட கண்ணகி வழக்குரை மீதிருந்த ஆர்வம் சிலப்பதிகாரம் மீது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக் கலாம். இவ் ஆர்வம் அவர் மனதினுள் கிடந்து வளர்ந்த தன் விளைவாகவே அவரது இறுதிக் காலத்தில் யாழ்நூல் உருவாகியிருக்கலாம்.
ஆங்கில அறிவு
கல்முனையில் லீஸ் பாதிரியாரது மெதடிஸ்த பாட சாலையில் ஆங்கிலக் கல்வி கற்ற சுவாமியவர்கள், 1904ல் மட்டக்களப்பு மெதடிஸ்த ஆங்கிலக் கல்லூரியிலும் பின் 1906ல் சென்ற் மைக்கல் கல்லூரியிலும் ஆங்கிலம் பயின் றார். 1906ல் யூனியர் கேம்பிரிஜ் பரீட்சை எழுதினார்.
1

Page 13
1909 - 1910 வரை சென்ற் மைக்கலில் ஆசிரியப் பணி யாற்றினார். 1915ல் கொழும்பில் ஆங்கில ஆசிரியப் பயிற் சிக் கலாசாலையில் கல்விபயின்றார். இந்த ஆங்கில அறிவு தான் அவருக்குப் பரந்த உலகப்பார்வையை அளித்ததுடன், பல்நூற் புலமை பெறும் மனப்பாங்கையுமளித்தது.
விஞ்ஞான கணித அறிவு
1915 ல் Maths இன்டமிடியட் சோதனையும் 1919 ல் லண்டன் பி , எஸ் . ஸி பரீட்சையும் எடுத்தார். அதில் பெளதிகத்தை ஒரு பாடமாக எடுத்துச் சித்தியடைந்தார். இரசாயன ஆசிரியராகப் பணியாற்றியதுடன் யாழ்ப்பா ணம், மானிப்பாய், இந்துக்கல்லூரியில் ஆய்வுக்கூடம் ஒன்றினையும் நிறுவினார்.
வடமொழி அறிவு
வைத்திலிங்கத் தேசிகரிடம் வடமொழிக்கல்வி பயின்ற இவர் யாழ்ப்பாண வாழ்க்கையின் போது அதனை மேலும் வளர்த்திருக்க வேண்டும். ஆரிய திராவிட பாஷாபிவிருத் திச் சங்கம் நிறுவியமை இவரது வடமொழிப் பற்றைக் காட்டுகிறது. இராமகிருஷ்ண மடத் தொடர்பும் இவரது வடமொழி ஆர்வத்திற்கு மேலும் ஊக்கமளித்திருக்கலாம்"
இராமகிருஷ்ணமடத் தொடர்பு
1911 - 1912 காலங்களில் தமது 20 வயதில் கொழும் பில் வாழ்ந்த காலத்தில் இவருக்கு விவேகானந்த சபை உறுப்பினர்கள் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அதில் உறுப்பினருமானார். 1917ல் கொழும்பில் சர்வானந்தா வால் கவரப்பட்டார். இதன் வளர்ச்சியாகத்தான் 1922ல் சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தில் பிர போத சைதன்யராகி 1924ல் சுவாமி விபுலாநந்தர் என்ற துறவுத் திருநாமமும் பெற்றார். இராமகிருஷ்ண மடம்
12

அவருக்கு வேதாந்த அறிவைத் தந்தது. அனைத்து ஆன் மாவையும் சமனாகக் காண்கின்ற போக்கிற்கு ஒரு தத்துவ பலத்தை அத்வைத வேதாந்தம் இவருக்களித்தது.
பன்மொழி அறிவு
விபுலாநந்தருக்குப் பன்பொழி அறிவு இருந்தது. அவருக்கு லத்தின், கிரேக்கம், வங்காளம், பாளி, சிங்களம், அரபு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகள் தெரிந்திருந்தன. இப்பன்மொழி அறிவு அவருக்கு நூல்களை அவற்றின் மூலத்திலேயே படித்தறியும் வாய்ப்பினைக் கொடுத்திருக் கலாம் பன்மொழி அறிவு பரந்துபட்ட பார்வையினையும் இவருக்குக் கொடுத்தது.
மேற்குறிப்பிட்ட பின்னணிகள் அவர் காலத்தில் வாழ்ந்த ஏனைய தமிழறிஞர்கட்கு ஒரு சேரக் கிடைக்கா தவை. அவர் காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்கள் ஒன்றில் மரபு வழி வந்த தமிழறிஞர்களாயிருந்தனர். அன்றேல் சைவ சித்தாந்தக் கூட்டுக்குள் நின்று கொண்டு தமிழை அளந்தனர். அன்றேல் நவீன நோக்கற்றவராயிருந்தனர். பெரும்பாலும் தமிழ் வளர்த்தல் எ ன் பது இவர்கட்கு பழைய இலக்கண இலக்கிய மரபைப் பேணுதல் அல்லது அதன் வழி வளர்த்தல் என்பதாகவே இருந்தது.
விபுலாநந்தர் இவர்களினின்று வேறுபடுகின்றார். ஆங்கிலக் கல்வி அவருக்கு ஆங்கிலக் கலை இலக்கிய ஆராய்வு உலகை அறிமுகம் செய்தது. வடமொழிப் புலமை அவருக்கு வடமொழிக் கலை இலக்கிய உலகைக் காட்டியது.
வேதாந்த நெறி அனைத்தையும் பேதா பேதம் காட் டாது உள்வாங்கும் திறனையும், குணத்தையும் அளித்தது: விஞ்ஞான அறிவு புறநிலைநின்று ஆராயும் பண்பை அவருக்குத் தந்தது.
இவற்றால் தன்கால மரபு வழித் தமிழறிஞர்களிட மிருந்து விபுலாநந்தர் வேறுபடுகின்றார். அவரது சமூக,

Page 14
கலை, இலக்கிய நோக்கினை இவ் ஆறு பின்னணிகளும் நிர்ணயம் செய்வதனைக் காணலாம்,
இந்த அடித்தளத்தில் எழுந்த அவரது சிந்தனைகள் அகண்ட உலக நோக்கையும் - அந்த உலகப் பரப்பில் தமி ழனையும் ஒன்றாகக் காணும் தன்மையையும் தமிழ்ச் சமூகத் தின் தனித்துவத்தை உலக சமூகத்தில் தேடும் பார்வையை யும் அவருக்கு அளித்தன.
சமூக நோக்கு
ஒருவரின் சமூக நோக்கே அவரின் ஏனைய சிந்தனை களுக்கான வாயிலாக அமைகின்றது. ஒருவரின் தத்துவ நோக்கைக் கூட சமூக நோக்கே நிருணயித்து விடுகிறது. சமூகம், ஏற்றத் தாழ்வுகள் மிக்க பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது ஆசியாவில் சாதிகளாகவும், ஐரோப் பாவில் வர்க்கங்களாகவும் உலகப் பரப்பில் இனங்களாக வும், சமூகம் பிளவுண்டு கிடக்கிறது. இதனால் சமமின்மை மன்பதையிடம் நிலவுகிறது. இப் பிரிவுகள் பற்றிச் சாதக மான அல்லது பாதகமான நோக்கு மனிதர் ஒவ்வொரு வரிடமும் உண்டு அந்நோக்கு ஒவ்வொருத்தரினதும் அறிவு, அனுபவம் தத்துவ நோக்கிற்கியைய உருவாகிறது.
விபுலாநந்தரின் இளமைக்கால வாழ்க்கையும், மட்டக் களப்புச் சூழலும், இராமகிருஷ்ண மடத் தொடர்பும், வேதாந்த ஞானமும் அவருக்கு சமூகப் பிரிவினைகளுக்கு எதிரான நோக்கையே கொடுத்தன.
*மனிதன் உடலமைப்பில் ஒரே மாதிரியாக இருந்தா லும், குண வித்தியாசத்தினால் பலவகைப்படுவான்’** என்ற விபுலாநந்தரின் கூற்றில் மனிதனை வித்தியாசப் படுத்துவது குலமல்ல குணம், என்ற தொனி தெறிக்கிறது. உடலமைப்பில் அனைவரும் ஒன்று தான் என்ற இவர் கூற்றில் மனிதர் அனைவரும் பார்வையில் ஒன்று தான்; சமம் தான் என்ற பொருளும் தொனிக்கிறதல்லவா?
14

"மனிதர்கள் இரண்டு விதமாக வகுக்கப்படுவர். ஒரு விதம் பகவானிடத்தில் மனத்தைச் செலுத்தும் பத்தர்கள். மற்றொரு விதம் பொன் மீதும், பெண் மீதும் ஆசை வைத்திருக்கும் மானிடப் பதர்கள் . 8
மனிதனை இரண்டே இரண்டு சாதியாகப் பிரிக்கும் இவர் நோக்கில் ஒளவையாரின் இட்டார் பெரியோர் இடா தார் இழிகுலத்தோர் என்ற தொனியின் சாயல் விழுகிறது. பக்தி உடையோர் இல்லாதோர் என்ற இரண்டு சாதிக ளாகப் பிரிக்கலாமே தவிர வேறு சாதிகளாகப் பிரிக்க முடியாது என்பது அவர் கொள்கை.
பிராமணனுக்கு வியாக்கியானம் தர வந்த விபுலாநந்தர் அந்தணன் அறிஞனாய் இருந்தால் மாத்திரமே அவன் உண்மையான பிராமணன் என்று கூறுகிறார். பிறப்பால் சாதியில்லை. குணத்தால் தான் சாதி என்ற பாரதியின் கூற்று இங்கு பிரதி பலிப்பது போல உள்ளது. இதே கருத்தை என் கடன் பணி செய்து கிடப்பதே எனும் தன் நூலில் திரு. வி. க. வும் இக்கால கட்டத்தில் வெளி யிடுவது குறிப்பிடற்குரியது.
1930 ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமை புரிந்த காலத்தில் திருவேட் களத்தில் ஒதுக்கப்பட்ட ஆதித்திராவிடர்கள் வாழுகின்ற சேரிகளுக்குச் சென்று பாலர்கள் படிக்க பள்ளிகள் ஏற்படுத் தினார். வளர்ந்தோர் படிக்க இரவுப் பள்ளிகள் ஏற்படுத் தினார். இதனால் கல்வி அறிவு பெற வாய்ப்பில்லாது ஒதுக் கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி அறிவு கிடைக்க வழி காட்டினார். அவருச்கு சிதம்பரம்தாலுகா, வேட்களம் ஆதித் திராவிடர்களின் சார்பாக அளிக்கப் பட்ட பிரிவுரை வாழ்த்தில்
**தம் நலம் பேணும் பார்ப்பனர்களால் சண்டாளர் கள் என்றழைக்கப்படும் எங்களை அழைத்துத் தங்கள் வீட்டினுடனிருத்தி விருந்துண்ட காட்சியும், உவகையும் எங்கள் கண்களையும் மனதையும் விட்டு அகலுமோ?.
S

Page 15
எங்கள் முன்னேற்றத்திற்கென தங்களால் தொடங்கப் பட்ட இரவுப்பள்ளி என்றும் வளர்ந்து ஓங்குவதற்குரிய வழியொன்று தாங்கள் தேடுவதோடு,ஈழத்தீவில் தங்களால் நடாத்தப்படும் பள்ளிகளில் எங்குல மாணவர் பலரை சேர்த்துக் கொள்ளும் படியும் வேண்டுகிறோம்." ே
என்று வரும் ஆதி திராவிடர்களின் உளக் குறிப்பு கள் விபுலானந்தர் மனதையும் சேவையையும் எமக்கு உணர்த்துவன. விபுலானந்தரின் சமதர்ம சிந்தனை வாய்ந்த இக் கல்வித் தொண்டு நாவலரின் கல்விப் பணிகளோடு ஒப்புநோக்கற்குரியது. நாவலரின் கல்விப் பணிகளைப் பல மடங்கு விஞ்சியது.
சமூக நோக்குப் பற்றி அவர் நோக்கு மென்மேலும் பரந்து விரிவதை 1942, 43 ல் அவர் எழுதிய தென் னாட்டில் ஊற்றெடுத்த அன்புப் பெருக்கு வட நாட்டில் பரவிய முறை எனும் கட்டுரையில் காணலாம். 7 சாதி பேதம் வர்ண பேதங்களின்றி தொண்டர்கள் யாவ ரும் ஒருங்கு சேர்ந்து இறைபணி செய்தமையை அதில் விரிவாகக் கூறுகிறார். கவுணிய குலத்தவரான சம்பந்தருக் கும் பாணராகிய நீலகண்டருக்கும் உள்ள உறவு, வேளாள அப்பரும், பிராமணரான சம்பந்தரும் கொண்டஉறவு, பாணர்குல திருப்பாணழ்வாரை உலோக சாரங்க முனிவர் தன்தோள்மீது கொண்டு சென்றமை, அரச குலத்தவரான சேரமான் பெருமாள் திருநீற்றுச் செலவினைக் கண்டு வண்ணான் முன்னிலையில் தலை வணங்கியமை நான்காம் குரவரான உமாபதி சிவாச்சாரியார் கொற்றவன் குடியில் வசித்ததுடன் அங்கு பெற்றான் சாம்பான் என்ற புலை யனுக்கு தீட்சை கொடுத்தமை, இராமானுஜர் தீண்ட த் தகாதோருக்கும் இராமநாத மந்திரம் ஒதித் தீட்சை தந் தமை இராமானுஜரின் சீடரான இராமநந்தர் சம்பந்தி போசனம் செய்தமை, இராமநந்தரின் சீடர்களாக சக்கிலி யரான ரவிதாஸரும் நாவிதராகிய சோனரும் உழவராகிய தன்னரும் இஸ்லாமிய நெசவுகாரரான கபீர்தாஸ்ரும்
16

இருந்தமை இங்ங்ணம் எண்ணற்ற உதாரணங்களைப் பழைய நிகழ்ச்சிகளினின்றும் எடுத்துக் காட்டுகிறார்.
குலம் தரு செல்வம் தரும் என்ற திருமங்கையாழ்வார். பாடலுக்கு உரைகண்ட பெரியவர்கள் பண்டைக்குல மொழிந்து தொண்டைக் குலமாதல் என்றுரைத்த உரையை அழுத்திக் கூறுகிறார்.
பிரிவுகள் இல்லாத, சாதி பேதங்கள் இல்லாத வருண பேதங்கள் இல்லாத, இன பேதங்கள் இல்லாத ஒரு மனித குலத்தையே விபுலாநந்தர் கனவு கண்டார் என்பதை அவர் எழுத்துக்கள் காட்டுகின்றன. இத்தகைய ஒரு சமூக நோக்கை அவருக்களித்ததில் வேதாந்த ஞானம் முக்கிய பங்கு வகித் திருக்கலாம். தமிழ் மக்களின் எதிர் கால எழுச்சி மீது நம்பிக்கையும் ஆர்வமும் கொண்ட அடிகளார் தமிழ்ச் சமூகம் தமக்குள் ஏற்றத் தாழ்வு அற்ற ஒரு சமூகமாக உருவாக வேண்டும் என்றே விரும்பி இருப்பார் என்பதில் ஐயமில்லை. இந்தப் பரந்த பார்வை யினையே அவர் கலைகள் மீதும் இலக்கியங்கள் மீதும செலுத்தினார்.
கலை இலக்கியங்கள் சம்பந்தமாக அவர் எழுதிய கட்டுரைகள் தொடக்கம் அவரது ஆராய்வின் கொடுமுடி எனக் கருதப்படும் யாழ்நூல் வரை தொகுத்து நோக்கின் உலகக் கலை இலக்கியங்களைத் தமிழருக்க அறிமுகம் செய்வதும், இரண்டிற்குமிடையே காணப்படுகின்றஅபேதத் தன்மைகளை இனம் காட்டுவதும், உலக கலை இலக்கிய வளர்ச்சியை நோக்கித் தமிழரை முன் தள்ளுவதும், அதே நேரம் தமிழருக்குரிய தனித்துவமான கலை இலக்கிய வளர்ச் சியை உணர்த்துவவதுமே அவர் நோக்கங்களாயுள்ளன'
உலகம்-தமிழ்நாடு என்ற இரு துருவ முரண்பாடுகளை இணைக்க முயன்றவர் விபுலாநந்தர். முரண்பாடுகளில் ஒற்றுமை காணும் அவரது முதுகெலும்பான நோக்கே இங்கு செயற்படுகிறது எனலாம்.
7

Page 16
விபுலாநந்தர் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வாழ்ந்த காலப்பகுதியில் தமிழ்த் தேசிய வாதம் வளர்ந்து வந்தமை முன்னரே குறிப்பிட்ட ஒரு விடயமாகும். தமிழ்த் தேசியம் பேசியோர் இரு நிலைக்குள் அடங்கினர்.
ஒரு சாரார் இந்திய நாகரிகத்தின் ஒரு கூறாகவே தமிழ் நாகரிகத்தைக் கண்டனர். நீலகண்ட சாஸ்திரி வையாபுரிப்பிள்ளை போன்றோர் இவ்வகையினர்.
இன்னொரு சாரார் தமிழர் நாகரிகத்தினையே இந் தியாவின் புராதன நாகரிகமாகக் கொண்டனர். பி. டி. பூஜீனிவாச ஐயங்கர், வி. கனகசபைப்பிள்ளை, ஆபிரகாம் பண்டிதர் போன்றோர் இவ்வகையினர். ஆனால் இரு சாராருமே தம்மால் முடிந்தளவு தமிழ்த் தொண்டு புரிந் தோரே.
தமிழரின் தனித்துவத்தை வெளிக் கொணர மேற் சொன்ன இரு சாராருமே முயன்ற இந்த வேளையிலே ஒவ்வொரு துறையிலும் தமிழ் வளர்ச்சி மேற்கொள்ளப் பட்டது. ஏட்டிலிருந்த பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பதிப் பி க் கும் முயற்சியில் உ வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை ஆகியோரும், தமிழருக்குரிய தத்துவம் எனக் கூறிச் சைவ சித்தாந்தம், அதனோ டு ஒத்த முருக வழிபாடு என்பதை அறிமுகம் செய்வதில் மறைமலை அடிகள், திரு. வி. க. முதலியோரும், தமிழ ருக்குரித்தான நாடகத்தைக் காணுதலில் பேராசிரியர் சுந்தரம்பி, ளை, பம்மல் ச ம் பந்த மு த லி யா ர், திரு. வி. கோ. சூரியநாராயணசாஸ்திரி போன்றோரும், தமிழரின் இசையைக் காண்பதில் ஆபிரகாம் பண்டிதர், அண்ணாமலை செட்டியார் போன்றோரும் ஈடுபட்டனர், ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ஏற்கனவே கால்டுவெல் ஐயர் அவர்கள் தமது திரா விட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை வெளி
18

யிட்டு ஆரிய மொழியினின்று மாறுபட்டதுடன் தனித்து வமுமான அமைப்புடைய திராவிட மொழி என்று கூறத் தொடங்கி விட்டார். இதையொட்டி ஆய்வாளர்கள் திரா விடமொழி, ஆரிய மொழி இனம், செமிட்டிக் மொழி இனம். இரண்டிக்கும் மாறுபட்டது; வேறுபட்டது என நிறுவினர். கில்டர்ட்சிலேட்டர் ஜேம்ஸ் ஹார்னல், பியூரர் கிறிஸ்டோபர், ஹெய்மன் டார்வ், என். லஹோவரி, ஜி. எலியட், ஸ்மித் டாக்டர் H. R. ஹால், R. P. ஹாவல் போன்றோரும் திராவிடத் தனித்தன்மையை சரித்திர ரீதிய7 க வலியுறுத்தினர். திராவிடரின் தனித்தன்மை என் பதற்கு ஆய்வறிவியல் ஏற்புடமை - அந்தஸ்து தேடிக் கொள்ள இவர்கள் முயற்சிகள் உதவின.
இந்தோ - ஆரிய ஐதிகத்தினைத் தோற்றுவிக்க காரண கருத்தாவாக இருந்த மாக்ஸ் முல்லர், (1919) J. M. நல்ல சாமிப்பிள்ளை டோன்றோர் சித்தாந்த தீபிக; Tamil Antiquity போன்ற ஆராய்ச்சிச் சஞ்சிகைகளில் எழுதிய தமிழர் பற்றிய கட்டுரைகளினால் கவரப்பட்டு தனது The Six System in Indian Philosophy at 65769th DIT656) திராவிட மொழி இலக்கிய ஆய்வில் ஈடுபடுவோர் தென் னிந்தியாவிலே தத்துவ இலக்கியமொன்றுள்ளது என்பதை அறிவர் என ஒப்புக் கொள்ளுகிறார்.
இத்தகைய பின்னணியிலே தான் அரங்கிற்கு வருகிறார் விபுலாநந்தர். அவரும் தமிழரின் தனித்துவம் பற்றி தமிழ்க்கலை இலக்கியம் பற்றித் தன் கருத்துக்களை முன் வைக்கிறார். ஒரு வகையில் அவரது கலை இலக்கியப் பணி கள் அன்றைய காலத்தின் தேவையுமாகும். கலை பற்றிய அவரது நோக்கினையும் பணிகளையும் பின்வரும் மூன்று தலையங்கங்களின் கீழ் நோக்குதல் பயனுடையதாம் .
1. கலைகள் பற்றிய அவரது கோட்பாடுகள், 2. இசைக் கலைக்கு அவரது பங்களிப்பு. 3. நாடகக் கலைக்கு அவரது பங்களிப்பு
9

Page 17
கலைகள் பற்றிய கோட்பாடுகள்:
கலைகள் பற்றிய அவரது கோட்பாடுகளை அறிய அவரது பின்வரும் கட்டுரைகள் உதவுகின்றன.
1. நாகரிக வரலாறு.
எகிப்திய நாகரிகம். யவனபுரக்கலைச் செல்வம், மேற்றிசைச் செல்வம். ஐயமும் அழகும். உண்மையும் வடிவும். நிலவும் பொழிலும், மலையும் கடலும், கவியும் சால்பும். நாடும் நகரும்
கலைவரலாறு இன்று பல்கலைக்கழகங்களில் ஒரு பாட நெறியாகியுள்ளது. தமிழர்களின் கலை வரலாறு இன்னும் ஒழுங்காக எழுதப்படவேயில்லை. பூர்வாங்க முயற்சிகள் ஆங்காங்கு நடைபெற்றுள்ளன. பேர்ஸி பிறவுண் , ஸ்டெலா காமேஷ், சிம்மர், ஆனந்தகுமாரசாமி ஆகியோர் இந்தியக். கலை வரலாற்றின் பல அம்சங்களை விரிவாக எழுதியுள் ளனர். இந்நிலையில் தமிழர் கலை வரலாற்றை எழுத முயன்றோருக்கு விபுலானந்த அடிகளார் உலகக் கலை வர லாற்றை நாகரிக வரலாறு எனும் கட்டுரையில், 8 தொட் டுக் காட்டிச் செல்கி ஜ்றார். இன்று கலை வரலாறு, சரித் திரத்திற்கு முந்திய கலைவரலாறு, எகிப்திய கலை வரலாறு, கிரேக்க கலை வரலாறு, றோமானிய கலை வரலாறு, பைசாண்டிய கலை வரலாறு, மத்திய கால கலை வரலாறு, மறுமலர்ச்சிக் கால கலை வரலாறு, நவீன கலை வரலாறு எனப்பாகுபடுத்தி பயிற்றுவிக்கப்படுகிறது. ஏறத் தாழ இதே வரலாற்று அணுகுமுறையைச் சுவாமிகள் கையாளு கிறார்.
20

பண்டைய நாகரிகமான பாரசீகம், அசிரியம், பபி லோனியா ஆகியவற்றின் நாகரிகங்கள், கலைகள் எடுத்துக் கூறப்படுகின்றன. எகிப்திய நாகரிகம் எனும் கட்டுரையில் 9 எகிப்தியரின் பிரமிட்டுக்கள் பற்றிக் கூறுகிறார்.அந்நாகரிக காலத்தை கி.மு. 3335 (கலியுக ஆரம்பத்திற்கு 234 வருடத் திற்குமுன்) எனக் கணிப்பிட்டு அக்காலத்தில் கட்டப்பட்ட Lopero hounit temple at the head of the lake gainer குளத்தலை முற்றத்துக் கோயில் என அழைத்து அக் கோயிலின் அழகை பிரமிட்டுடன் ஒப்பிடுகிறார்.19
மொசப்படோமியாவில்நடைபெற்ற அகழ்வாராய்வின் போது கண்டெடுத்ததும், பாக்தாத் நகரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதுமான யாழ்க்கருவி பற்றிக் குறிப்பிடு கிறார்.11 இக்கருவி பின்னாளில் இவர் தமிழரின் பண்டைய யாழ்களை அமைக்கும் முயற்சிக்கு உந்துதலை அளித் திருக்கலாம். 1922ல் எகிப்தில் துட்டங்கா மனின் பிரமிட் கட்டிடம் கண்டு பிடிக்கப்பட்டமை உலகக் கலை வரலாற் றில் மிக முக்கிய நிகழ்ச்சியாகும். அதனைத் தனது கட்டு ரையிற் குறிப்பிடும் அடிகளார் அங்கு காணப்பட்ட அழகு பொருந்திய கருங்காலிக் கட்டில்களையும் நவமணி இழைத்த ஆபரணங்களையும் பற்றிக் கூறுகிறார்.12
எகிப்தினையடுத்து கிரேக்கின் நாகரிகமும் கலை. வள மும் கூறும் அடிகளார் கிரேக்க நாகரிகத்தின் தொடர்ச்சி யாக உருவான றோம நாகரிகம் பற்றியும் மத்திய கால நாகரிகம் பற்றியும் குறிப்பிடுகிறார்.
இக்கட்டுரைகளில் இரண்டு அமிசங்களைக் காண முடி கிறது. ஒன்று இத்தகைய பழம் பெருமை வாய்ந்த நாகரிகங்களையும் கலைகளையும் தமிழக்கு அறிமுகம் செய் தல். இன்னொன்று பழைய அசிரிய, சுமேரிய, பபிலோனிய மக்களுடன் தமிழ் மக்களையும் இணைதது சுமேரியர், தமிழர் ஒற்றுமையைத் தொட்டுக் காட்டுவதன் மூலம் தமி ழரின் பண்டைய பாரம்பரியத்தைத் தமிழருக்கு உணர்த் ፅዞዳኝé}•
21

Page 18
தமிழர்கள், உலகக் கலை வரலாற்றை, நாகரிகத்தை அறிய வேண்டும், பண்டைய நாகரிகங்களுடன் தாமும் தொடர்பு உடையோர் என்று அறிய வேண்டும்; தமக் கென்று தனித்துவமான ஒரு நாகரிகத்தைக் கொண்டிருந் தனர் என்பதை அறிய வேண்டும் என்ற நோக்கு அவருக்கு 20 களில் அவரது 28 வயதிலேயே ஆரம்பித்துவிட்டது.
இந்த நோக்கு அவரது முதிர்ந்த வயதுகளில் மேலும் வளர்ந்து முதிர்ச்சியுடன் வெளிப்படுகிறது. அம்முதிர்ச்சியின் உதாரணங்களாகத் திகழ்வனவே 1942ல் மதுரையில் இயற் றமிழ் மாநாட்டுக்கு தலைமை தாங்கி, அவர் ஆற்றிய உரையும் 1947ல் அவர் வெளியிட்ட யாழ்நூலும்.
ஆங்கிலராதி மேலை நாட்டவரது செல்வப் பெருக்கத் திற்கான காரணங்களை ஆராய்ந்த விபுலானந்தர் அவர் களது "அரசியன் முறையும் புலனெறி வழக்கமும் கலை பயினிலைமையும், பொருள் செயல் வகையும்"? என்று கூறி அவர்களின் கலை வரலாற்றை, நாகரிகவரலாற்றைத் தமிழருக்குணர்த்துவதன் மூலம் தமிழரையும் முன்னேற்ற லாம் எனக் கருதி இருக்கக் கூடும்.
அந்நிய நாகரிகம் என்று ஐரோப்பியக் கலைகளை ஒதுக் கினாரல்லர் அடிகள். அங்கிருந்து நல்லன பெற்று தமிழர் கலைகள் தளைக்க வேண்டும் என்ற கோட்பாடே விபுலா நந்தரின் கோட்பாடாயிற்று பரந்த உலகப் பின்னணியில் தமிழர் கலைகளை இனம் காண்பதும் அதை வளர்ப்பதும் அவரது பிரதான கலை நோக்கம் எனலாம்.
சிற்பம், ஓவியம், கட்டிடக்கலைகள் பற்றி அவர் கூறிச் செல்லும் கருத்துக்கள் இக்கலைகள் பால் அவருக்கிருந்த அறிவைக் காட்டும். வண்ணமும், வடிவும், ஐயமும, அழகும் என்ற கட்டுரைகள் இதற்குச் சான்றுகளாம். ஒவியத்தை இரசித்தல் பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்.
"நவிலும் தோறும் இனிமை பயக்கும் நூல் நயம் போலவும் பயிலுந்தோறும் இனிமை பயக்கும் பண்புடையா
22

ளர் தொடர்பு போலவும் பார்க்குந்தோறும் அறிவுடை யோனுக்கு உவகையளிக்கும் ஓவியமே அழகிய ஓவியம்'14
வெறும் காட்சியாக மாத்திரம் ஒவியத்தை இரசிக்க முடியுமா? காட்சிக்குப் பின்னாலுள்ள ஓவியனின் உள்ளத் தைக் காண முயல வேண்டுமென்பது ஓவிய ரசிப்பின் இன் றையக் கொள்கையாகும். இதுவே இந்திய மரபின் ரசக் கொள்கையும் ஆகும். ஐயமும் அழகும் என்ற வியாசத்தில் வரும் காட்சியில் ஐயம் மிக்கது ஐ யமே உண்மைப் பொருளை உணர்த்தும் என்ற கூற்றில் கலைரசிப்பின் நவீன நோக்குகள் விபுலாநந்தரில் தொனிப்பதைக் காண முடிகி றது. சித்தன்னவாசல், தஞ்சைப் பெரிய கோயில், சிகிரி யாக் குகை, அமராவதி ஆகிய இடங்களிற் காணப்படும் சிற்பம், ஓவியம் பற்றி அடிகளார் குறித்துச் செல்வது அவரது சிற்ப, ஒவிய ஈடுபாட்டிற்கு உதாரணங்கள் ஆகும். இவ்வகைச் சிற்ப, ஒவியங்களையும். அவற்றை ரசிக்கும் முறையினையும் தமிழ் மக்களுக்கு ஊட்டுதலும் அடிகளா ரின் கலை நோக்கினுள் அடங்கும்.
இசை பற்றிய நோக்கும் பணியும்
விபுலாநந்தர் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலம் தமி ழிசை இயக்கம் வேகம் பெற்ற காலமாகும். தமிழிசை பற்றி நடந்த முக்கிய ஆராய்ச்சிகளின் பெறுபேறுதான் விபுலாநந்தரின் யாழ்நூல். 1929 ல் அண்ணாமலையில் அண்ணாமலைச் செட்டியார் இசைக் கல்லூரியை நிறு வியதிலிருந்து இவ்வியக்கம் வேகம் பெறுகிறது. இதற்கு முன்னரேயே தமிழரின் இசை ஆராய்ச்சி ஆரம்பமாகி விட் டது 1907 ல் கர்ணாமிர்தசாகரத்திரட்டு எனும் நூலை யும் 1917 ல் கர்ணாமிர்த சாகரம் எனும் நூலையும் ஆபி ரகாம் பண்டிதர் வெளியிடுகிறார். இந்த பின்னணியிலே தான் விபுலாநந்தரின் இசை ஆர்வமும் உருவாயிற்று.19
23

Page 19
யாழ்நூலை உருவாக்கு முன்னரேயே அவர் இசை பற் றிச் சிந்திக்க ஆரம்பித்தமையை அவரது இசை பற்றிய கட்டுரைகள் உணர்த்துகின்றன. 1940 லிருந்து அவரது முழு நோக்கும் இசையின் பாற்றிரும்பி இருக்க வேண்டும். வங்கியம் (1942) சங்கீத பாரிஜாதம் (1942) நட்டபாடைப் பண்ணின் எட்டுக் கட்டளைகள் (1942) பாரிஜாத வீணை (1944) நீரரமகளிர் இன்னிசைப்பாடல், பண்ணும் திறனும் குழலும் யாழும், எண்ணும் இசையும், பாலைத்திரிபு. சுருதிவீணை, இயலிசை நாடகம், போன்ற அவரது கட்டு ரைகள் அவர் 1940 லிருந்து இசைபற்றிச் சிந்தித்த மைக்கு உதாரணங்களாகும். இக்கட்டுரைகளினூடாக வளர்ந்து வந்த இசை பற்றிய அவர் க ரு த் தே யாழ் நூலாக முழுமை பெற்றிருக்க வேண்டும்.
யாழ்நூல் பற்றிப் பல அறிஞர்கள் போற்றிப் புகழ்ந் துள்ளனர். எ னினும் முறையான மதிப்பீடு ஒன்றினை யாரும் இதுவரை செய்ய முயன்றாரில்லை. அடிகளார் மீது மற்றோர் கொண்டு இருந்த மதிப்பும், பத்தியும் புற நிலையான ஆய்வுக்குத் தடையாக அமைந்திருக்க லாம். அல்லது இசை ஆய்வு ஒரு துறையாக இன்னும் தமிழரிடை வளராமையும் ஒரு காரணமாயிருக்கலாம்.
யாழ் நூலைப் புரிந்து கொள்ள மூன்று வகை அறிவு தேவைப்படுகிறது.
1. இசை அறிவு.
2. கணித அறிவு.
3. தமிழ் அறிவு.
இசையைக் கணித மொழியில் விளக்க முனை: த
விபுலாநந்த அடிகளார் இசைக்கணிதமே தமிழிசைக்கு அளி த்த பங்களிப்பு எனலாம். இவ் யாழ் நூலில் அடிகளாரின் தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் புலமையும், விஞ்ஞான (கணித) புலமையும், சங்கீதப் புலமையும் சங்கமிப்பதனைக் காணலாம்.
24

யாழ்நூல்
சங்க இலக்கியங்களையும், சிலப்பதிகாரத்தையும், தேவாரங்களையும் ஆதாரமாகக் கொண்டு தமிழரின் இசைப் பாரம்பரியத்தைத் தொடர்ச்சியாக இனம் காண முயலுகிறார் அடிகளார். பாயிரவியல், யாழுறுப்பியல், பாலைத்திரிபியல், பண்ணியல், தேவாரவியல், ஒழிபியல், சேர்க்கை என்ற பகுதிகளாக இந்நூல் வகுக்கப்பட்டுள்ளது. பாயிரவியலில் தன் நோக்கம் கூறிய அடிகளார் யாழுறுப் பியலில் பண்டைத் தமிழில் இலக்கியங்களை ஆதாரமாக வும் தாம் கற்ற மேற்கு நாட்டு வரலாறுகளைத் துணை யாகவும் கொண்டு பண்டைத் தமிழர் மத்தியில் வழக்கி லிருந்த யாழ்களை மீளுருவாக்கம் செய்யும் முயற்சியிலீடு படுகிறார். வில்யாழ், பேரியாழ், மகர யாழ், சீறியாழ் எனப்படும் செங்கோட்டு யாழ், சகோட யாழ் ஆகிய யாழ் வகைகளை வெளிக் கொணர்கிறார். பெளதிக இய லுக்கு ஏற்ப யாழின் நரம்பின் அமைப்புகள் கூறப்பட்டு ஒலிகள் அளக்கப்படுகின்றன. இசை நரம்புகளின் சிற் றெல்லை, பேரெல்லை என்பன கூறப்படுகின்றன.
பாலைத்திரிபியலில் பாலையின் வகைகள் செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற் செம்பாலை என வகுக்கப்பட்டு சகோடயாழுக்கு இசை கூட்டும் முறையும் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையில் யாழாசிரியனது அமைதி கூறிய செய்யுட் பாகத்துக்கு உரை கூறும் முகத்தான் பண்டைய யாழ் பற்றித் தன் கருத்து உரைக்கிறார் அடிகளார்.
பண்ணியல் எனும் அதிகாரத்தில் பண்களைப்பற்றிய தன் கருத்துக்களை முன் வைக்கின்றார். பிங்கலந்தை, சேந்தன் திவாகரம், சூடாமணி நிகண்டு ஆகிய நூல் களினின்று சூத்திரங்கள் காட்டப்படுகின்றன. நூற்று மூன்று பண்களைக் குறிப்பிட்டு அவற்றில் பாலை நிலை
25

Page 20
களைச் சுருதி வீணையிலமைத்துக் காட்டும் முயற்சி இவ் வதிகாரத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வதிகாரத்தில் பழந்தமிழிசை மரபிற்கும் வட நாட்டிசை மரபிற்குமிடையே அமைந்த தொடர்பும் விளக்கப்படுகிறது.
தேவாரவியல் எனும் அதிகாரத்தில் 4ம் திருமுறைக்கு யாப்பமைதி கூறப்படுகிறது. தேவாரப் பண்ணின் உருவங் கள் ஆராயப்படுகின்றன. இந்தளம், காந்தாரபஞ்சமம், நட்டராகம், பஞ்சமம், தக்கராகம், தக்கேசி, கெளசிகம், செவ்வழி, செந்துருத்தி, காந்தாரம், குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி முதலாகிய பண்கள் பற்றிக் கூறப்படுகின்றன5
ஒழிபியலில் கணிதத்திற்கும் இசைக்குமுள்ள தொடர்பு விளக்கப்படுகிறது. இசைக் கணிதம் இதில் வெளிப்படுத் தப்படுகிறது. அத்தோடு இவ்வியலில் குடு மி யா ம  ைல இசைக் கல்வெட்டுப் பற்றி விளக்குவதுடன் தமிழிசையின் சுருக்கமான வரலாறும் உரைக்கப்படுகிறது. குடுமியாமலை இசைக் கல்வெட்டு தமிழிசை பற்றியது என்றுமுதல் விளக்க மளித்தவர் விபுலாநந்த அடிகளே என்று ஞானாகுலேந் திரன் குறிப்பிடுகிறார்.
இறுதியாக, சேர்க்கையில் தேவார இசைத்திரட்டும் இசை நாடகச் சூத்திரங்கள் சிலவும் சேர்க்கப்பட்டுள்ளன. முடிவுரையில் யாழ் நூலின் நோக்கம் கூறப்படுகிறது. சிலப் பதிகார அரங்கேற்றுக் காதையில் யாழ் ஆசிரியன் அமைதி கூறும் இருபத்தைந்து அடிகளுக்கு இயைந்த ஒரு விரிவுரை இந்நூல் என்று கூறுகிறார் அடிகளார்.
1. பண்டைத் தமிழர் இசைக் கருவிகளையும் இசை
யையும் வெளிக் கொணர்வதும். 2. தமிழிசை வரலாற்றை விளக்குவதும் 3. இசை ஆராய்ச்சிக்கு இன்றியமையாத கணக்கு
முறைகளைக் கணித மூலம் விளக்குவதும். இந்நூலின் நோக்கங்கள் என நாம் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
26

தமிழரின் தனித்துவம் பற்றிய நோக்கைக் கொண்டி ருந்த அடிகளார் தமிழரின் தனித்துவம் எனக் கருதப் பட்ட பண்ணிசையை வெளிக் கொணர்ந்தமையும், பழைய இசைக் கருவிகளை இலக்கிய உதவி கொண்டு மீளுருவாக் கம் செய்தமையும் தமிழ் இசைக்குச் செய்த பணிகளாகும்.
நாடகக் கலை பற்றிய நோக்கும் பணிகளும்
18ம், 19ம் நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டிலும் ஈழத் திலும் படித்த மத்திய தர வர்க்கத்தினருக்கு ஊடாக ஐரோப்பிய நாடக மரபு தமிழுக்கு அறிமுகமாகின்றது. ஐரோப்பிய நாடகங்களை நேரடியாகவும் தழுவியும் படித்த வர்கள் அறிமுகம் செய்தனர். விபுலாநந்த அடிகள் சேக்ஸ்பியரை மதங்கசூளாமணி மூலம் 1926ல் அறிமுகம் பண்ணுமுன்னரேயே சேக்ஸ்பியர் தமிழில் மொழி பெயர்க் கப்பட்டோ தழுவப்பட்டோ அறிமுகப்படுத்தப்பட்டு விட் டார். இம் முயற்சிகள் 1880 இ லி ரு ந் து ஆரம்பித்து விட்டன. 1880 ல் 'ரெம்பஸ்ற் காற்றுமழை என்ற பெய ரில் விசுவநாதன்பிள்ளையால் மொழி பெயர்க்கப்படுகிறது.
Antony and Cleopatra, As you Like it, Othello, King Lear, King John, Hamlet, Henry iv, Cymbaline, Julies Ceaser, Twelfth night, Two gentlemen of Verona, Tempest, Taming of the shrew, The Comedy of errors, The winters Tale, Much ado about nothing, Macbeth, Mid summer night dream, Measure for Measure, Richard I Romeo and Juliet.
ஆகிய 21 நாடகங்களையும் த ழு வியோ மொழி பெயர்த்தோ 50 நூல்கள் வெளிவந்து விட்டன என அறி கிறோம்.18 இதனை விட கி ரே க் க நாடகாசிரியரான சோபோக்கிளிஸ், பிரஞ்சு நாடகாசிரியரான மோலியர் ஆகி யோரின் நூல்களும் மொழி பெயர்ச் கப்பட்ரி விட்டன. Lord Lytonair Secret way gas g(upas Guit Sihuit dris Tib
27

Page 21
பிள்ளை மனோன்மணியம் வெளியிட்டு விட்டார். சமஸ் கிருத மொழியிலிருந்து பவபூதியின் உத்தரராம சரிதம், காளிதாசனின் சகுந்தலை, மாளவிகாக்கினிமித்திரம், பாசனின் சொப்பன வாச வதத்தா, தூதகடோத்கசம் பில்கணனின் பில்கணியம், மகேந்திரவர்மனின் மத்தவிலா சம், சூத்திரகனின் மிருச்ச கடிகம் போன்ற நூல்களைப் பலரும் மொழி பெயர்த்து விட்டனர்.
விபுலாநந்தர் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பிய நாடக மரபுக்கியைய நாடகங்களை மேடையிடுவோரில் பம்மல் சம்பந்த முதலியார் முக்கிய மாணவராகத் திகழ்ந்தார். வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், கலாவதி, மான விஜயம் என்னும் நாடகங்களை எழுதியதுடன் நாடக வியல் என்றதொரு நாடக இலக்கண நூலையும் எழுதி
öffs".
இதே காலகட்டத்தில் இலங்கையிலும் தமிழ் ந்ாடகத் துறையில் படித்த மத்திய தரவர்க்கத்தினரின் பங்களிப்பு ஆரம்பமாகி வி டு கிற து. 1913 ல் கொழும்பில் லங்கா சுபோதசபை ஸ்தாபிக்கப்பட்டது. இதன் முக்கியஸ்தர், கலையரசு சொர்ணலிங்கமாவார். பம்மல் சம்பந்த முதலி யார் நாடகங்களை இவர் மேடையிட்டார். அவற்றுட் பல சேக்ஸ்பியரின் நாடகங்களின் தழுவல்களாகும். 1914ல் யாழ்ப்பாணத்தில் சரஸ்வதி சபையும் 1920 ல் மட்டக்க ளப்பில் சுகிர்த விலாச சபையும் ஆரம்பிக்கப்பட்டன.17 மட்டக்களப்புச் சுகிர்த விலாசசபை வித்துவான் சரவண் முத்தன் விபுலானந்தரின் நெருங்கிய நண்பர். ஐரோப்பிய நாடகங்களும், சிறப்பாக சேக்ஸ்பியரின் நாடகங்களும் வடமொழி நாடகங்களும் தமிழுக்கு அறிமுகமான ஒரு பின்னணியில் மத்திய தரவர்க்கத்தவர்களும் கற்றோரும் இப்பணியிலீடுபட்ட காலையில் குறிப்பாக இந்நாடகங்கள் தமிழ் நாட்டில் பம்மல் சம்பந்த முதலியார் போன்றோரா லும் ஈழத்தில் அவரது ஏகலைவச் சீடரான கலையரசு
28

சொர்ணலிங்கம் போன்றோராலும் மேடையிடப்பட்ட காலத்திலே தான் மத்திய தர வகுப்பினரும், ஆங்கில வடமொழி அறிவு பெற்றவருமான விபுலாநந்தர் மதங்க சூளாமணி எழுதுகிறார்.
விபுலாநந்தர் தாம் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற
நாடகம் பற்றிய தமது நோக்கினை மதங்க சூளாமணியின் முகவுரையிற் குறிப்பிடுகிறார்.
"கல்வியறிவில்லாதார் கண்ட கண்டவாறு நாடகங்களை
அமைக்க முற்பட்டு நாடகத்துக்கே ஓர் இழிந்த பெயரை யுண்டாக்கி விட்டனர்." 18
என்று கூறும் அவர் அக் காலத்தில் நாடகம் எழுதிய நாடகமாடிய பலரைப் போலி நாடகக் கவிகள் என்கிறார். போலி நாடகக் கவிகளால் நாட்டுக்கு விளைகின்ற கேடு போலிவைத்தியனால் நாட்டிற்கு விளைகின்ற கேட்டினைப் பார்க்கப் பல்லாயிரம் மடங்கு பெரிது என்று கூறுமவர் நாடகத்தை வெறுத்தொதுக்காது அதனை ஆராய்ந்து நல்ல நாடகங்களை அமைப்பது கற்று வல்லோர் கடமை என்கிறார். மேலும் "புதுநாடகமமைப்பதற்கு முற்படும் கவிஞருக்கு முறையறிந்தமைப்பதற்கு உதவியாகிய கருவி நூலும் இல்லை' 19 என்கிறார்.
எனவே அவர் மதங்க சூளாமணி எழுத நேர்ந்த
மைக்கான காரணங்கள் எமக்குத் தெளிவாகின்றன.
1. போலி நாடகங்களை நீக்கவும். 2. கல்ல நாடகங்களை அமைக்கவும். 3. மக்கள் அதனால் பயன் பெறவும். நினைத்த அடிகள் கற்று வல்லாருக்கு நாடகம் பற்றி அறிவூட்ட எண்ணி இந்நூலை எழுதுகிறார்.
ம ன் ப ைத க் குத் தொண்டு செய்தல் என்ற அவர் நோக்கு இங்கு தெரிகிறது. அ  ைன த் து அறிவும்
29

Page 22
மன்பதைக்குச் சேவை செய்ய வேண்டும் என்று எண்ணிய அவர் இங்கும் நாடகத் துறை மன்பதைக்குச் சேவை செய்ய வேண்டும் என எண்ணுகிறார்.
'நாடகவியலை ஆராய்கின்ற இச்சிற்றாராராய்ச்சி" என்றே தன் நூலைப் பற்றி விபுலாநந்தர் குறிப்பிடுகிறார். *விபுலாநந்தர் கூத்து (நாடக) தமிழில் இறைவாப் புகழ் படைத்த நூல்கள் பல உருவாக்கினார்" என்று பலர் கூறு வதைப் போல அல்லாமல் நாடகத்தை ஆராயவே அவர் நூல் இயற்றினார். அவர் நாடகம் எழுதியவருமன்று; தம் காலத்தில் வாழ்ந்த சம்பந்த முதலியார், சொர்ணலிங்கம் போன்று நாடகம் நடித்தவருமன்று. நாடக ஆராய்ச்சி யாளர் மாத்திரமே. இக்கால நாடகக்காரர்களுடன் நாடக எழுத்தாளர்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் கிடைப்பின் பிரயோசனமாகவிருக்கும்.
மதங்க சூளாமணி
மதங்க சூளாமணி 8 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1. உறுப்பியல். 2. எடுத்துக்காட்டியல். 3. ஒழிபியல். உறுப்பியலில் சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருரை யினால் பெறப்பட்ட அழிந்து போன நாடகத்தமிழ் நூல குத்திரங்கள் சிலவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழ் நாடக இலக்கியத்தை உரைக்கின்றார்.
இவ்வியலில் நாடக உறுப்புக்கள், நாடகத்திற்குரிய கட்டுச் கோப்பு (Structure) என்பவற்றுடன் நாடகத்திற்கான பாத்திரங்கள், நாடகம் தரும் சுவை என்பன பற்றி இந் திய ரசக்கோட்பாட்டினடியாக எடுத்துக் கூறப்படுகிறது. இரண்டாம் இயலான எடுத்துக்காட்டியலில் சேக்ஸ் பியரின் நாடகங்களில்
30

Lovers Labours lost. King Lear. Romeo Juliet. Timon of Athens The Tempest Macbeth. Merchant of Venice. Julias Ceaser. Titus Andronics. As you like it.
The winters Tale. Twelfth night.
ஆகிய 12 நாடகங்களும் உறுப்பியலிற் கூறப்பட்ட தமிழ் நாடக இலக்கணங்களுக்கமைய விளக்கப்படுகின்றன. நாடகத்தின் அமைப்பை முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என விளக்கி அந்த அமைப்பு இந் நாடகங்களில் எவ்வாறு காணப்படுகிறது என்பதனையும் அத்தோடு நாடகம் தரும் வீரம், அச்சம், இளிவரல், அற் புதம், இன்பம், அவலம், நகை, உருத்திரம், நடுவு நிலை யாகிய 9கவைகளையும் தந்து அச்சுவைகளை இந்நாடகங் கள் எவ்வாறு தருகின்றன என்பதனையும் விளக்குகிறார்.
இதற்காக அவர் 12 நாடகங்களையும் முற்றாக மொழி பெயர்த்தார் அல்லர். விபுலாநந்தர் சேஷ்க்ஸ்பியரின் நாட கங்களை மொழி பெயர்த்தார் என்று பலர் தெரியாது மொழிகிறார்கள். இந்நாடகங்களை அறிமுகம் செய்யும் போது தமது ஆராய்வுக்குத் தேவையான பகுதிகளை மாத்திரமே அவர் மொழி பெயர்த்தார் என்பதனை நாம் மனங் கொள்ள வேண்டும்.
இப் 12 நாடகங்களிற் சிலவற்றின் அமைப்பை விஸ் தாரமாகக் காட்டிச் செல்லும் அவர் சிலவற்றின் கதை களை மாத்திரமே கூறிச் செல்கிறார். இது அவரது முதற் கட்டச் சிந்தனைகள் மாத்திரமே போல் தெரிகிறது. இதனை விரிவுற எழுதும் எண்ணம் அவருக்கிருந்தமையை அவரது முன்னுரை காட்டுகிறது.
31

Page 23
ஒழிபியல், தனஞ்சயனார் வடமொழியில் இயற்றிய நாடக இலக்கண நூலான தசரூபகத்தின் முடிபுகளைத் தொகுத்துக் கூறுகிறது . தனஞ்சயனார் பரத நூல், நாட் டிய சாஸ்திரத்தில் பொதிந்து கிடந்த அரிய இலக்கணங் களையெல்லாம் ஆராய்ந்து தொகுத்துச் செய்ததே தச ரூபகம். இதனால் வடமொழி நாடக இலக்கணங்களை ஒழிபியலில் அறிமுகம் செய்ய முயற்சிக்கிறார் எனலாம். இதனைவிட தொல்காப்பியச் சூத்திர உரையினின்று எடுக் கப்பட்ட நாடகத்திற்குரிய அபிநயம் பற்றிய சூத்திரங் களுடன் நடித்தல், நாடகத்திற்கு பாட்டு வகுத்தல், ஆட் டம் அமைத்தல், அரங்கின் அமைதி பற்றிய செய்திகளும் தரப்பட்டுள்ளன.
இந்நூலை அடிப்படையாகக் கொண்டு விபுலாநந்த ரின் நாடகப் பணியை நோக்குவோம்.
1. தமிழில் நல்ல நாடகங்கள் தோன்ற வேண்டுமென் பதே அவரது முக்கிய நோக்கமாகும். அந்நாடகங்கள் நாடக இலக்கணங்கள் அமையப் பெற்றனவாகவும், மேற்கு நாட்டின் மதங்க சூளாமணியான (மதங்கர் - நாடகக்காரர், சூளாமணி - சிறந்தவர்) சேக்ஸ்பியர் நாடகங்கள் போல் அமைய வேண்டும் எனவும் அவர் ஆசையுற்றிருக்க வேண்டும். தம் காலத்தில் நடை பெற்ற அல்லது எழுதப்பட்ட சேக்ஸ்பியரின் நாடகங் களும் சரியானபடி மொழி பெயர்க்கவோ, நடிக்கப் படவோ இல்லை என்பது அவர் அ பி ப் பி ரா யம் போலும். மேற்கு நாட்டு நாடகங்களை - சிறப்பாக சேக்ஸ்பியர் நாடகங்களைத் தமிழ் நாடக - இந்திய நாடக இலக்கண முடிவுகளுக்கமைய ஆராய்ந்தமை சிந்தித்தற்குரியது. ஆராயலாமோ என்பதும் ஆராய் விற்குரியது.
2. தமிழில் நாடகம் சிறப்படைய ஆசையுற்ற விபுலாநந் தர் சேக்ஸ்பியரைச் சரியானபடி அறிமுகம் செய்வது
32

டன் வடமொழி நாடகமரபையும் அறிமுகம் செய்து அதற்கொப்ப தமிழ் நாடகமரபையும் காட்டுகிறார். ஒருவகையில் தமிழர் மத்தியில் நாடகமரபு ஒன்றிருந் ததென்பதை - அதன் தனித்துவத்தைக் காட்டுவதும் அவர் நோக்கமாயிருந்திருக்கலாம், ஆனால் அத் தனித் துவம் வெறும் தனித்துவமாயில்லாது உலகின் வளர்ச் சியினை உள்வாங்கி வளரும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதே அவர் அவா போலும். தமிழ்த் தனித்துவம் - உலகளாவிய சிந்த  ைன என்ற இரு முரண்களையும் இ  ைண த் து ஒன்றிலிருந்து ஒன்று பெற்று, சமரசம் கண்டு வளர வேண்டும் என்ற அவர் எண்ணமும் இங்கு தெரிகிறது. தமிழ் நாடகம் எழுதுவது நடிப்பதை விடத் தமிழ் நாடக ஆராய்ச்சியே அவரது பிரதான நோக்குப் போலும். இன்று பல்கலைக் கழகத்தில் நாடகமும் அரங்கியலும் ஒரு பாடமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடகமரபு, ஆசிய நாடக மரபு பறறி மாணாக்கர் பயில்கின்றனர். இந்நிலையில் இற்றைக்கு 70 வருடங்களுக்கு முன்னரே இது பற்றி சிந்தித்த விபுலாநந்தர் தூர நோக்குடைய மேதையாகக் காட்சி யளிப்பதுடன்; அவர் காலத்தில் நாடகத்துறையில் ஈடுபட்டவர்களிடமிருந்து நாடக ஆராய்ச்சியா ளர் என்ற வகையில் வேறுபட்டும் காணப்படுகிறார்.
சேக்ஸ்பியரை மாத்திரம் அறிமுகப்படுத்தாது கிரேக்க
நாடகங்களையும் ஆட்டுப் பாடலிலிருந்து அது தோன்றிய மையையும் இணைத்து ஆட்டுப்பாடலைத் தமிழரின் பண் டைய வேலனாட்டத்துடன் ஒப்பிடுதல்?! பின்னோக்கிப் பார்க்கையில் நாடக ஆராய்ச்சியில் அவர் கொண்டிருந்த தூரப் பார்வையினைப் புலப்படுத்துகிறது எனினும் கமெடி (Comedy) றஜடி (Tragedy) பற்றிய அவர் கருத்துக்கள், தமிழ் நாடகங்கள் பற்றிய அவர் கருத்துக்கள், இந்திய நாடக மரபின் இலக்கணம் கொண்டு ஐரோப்பிய நாடகங் களை ஆராய முயன்றமை என்பன ஆராய்விற்குரியன.
33

Page 24
தொகுத்துக் கூறின் இசையில் தமிழ்த் தனித்துவம் கண்டது போல நாடகத்திலும் தமிழ்த் தனித் துவ ம் காணல். அதே நேரம் உலக சமஸ்கிருத நாடக வளர்ச் சிக்கியைய எம்மை வளர்த்தல். நாடகத்தை ஆராய்ச்சி ரீதியாகக் கற்றல், நாடக அறிவு பெறல். இந்த அறிவை மன்பதைக்குப் பயன் தரக் கூடிய விதத்தில் பிரயோகித்தல் என்பன நாடகக் கலை பற்றி அவர் கொண்டிருந்த நோக்குகள் ஆகும். இலக்கிய நோக்கும் பணியும்
அவரது கட்டுரைகளும் சொற்பொழிவாற்றிய தலைப் புக்களும், ஆராய்ச்சி நூல்களும் செயற்பாடுகளும் அவரது இலக்கியப்பணிகளின் தன்மை பற்றியும் அதனூடாக எழும் அவர் இலக்கிய நோக்கு பற்றியும் அறிய உதவும் சாதனங் கள் ஆகும். 40 களில் அவரது இலக்கிய நோக்குக்கும் 20 களில் அவர் இலக்கிய நோக்கிற்குமிடையே வேறு பாடுகள் காணப்படுகின்றன.
தமிழ் மக்களுக்கு உலக இலக்கியங்களையும் அவற்றின் செழுமையினையும் அறிமுகம் செய்தல் அவரது இலக்கிய நோக்கினுள் மிக முக்கியமானதாகப்படுகின்றது. சேக்ஸ் பியரையும், தனஞ்செயனாரையும் அறிமுகம் செய்வதன் மூலம் தமிழ் நாடகத்தை தரம் வாய்ந்த நி  ைலக் கு உயர்த்த எண்ணிய அடிகளார் உலக இலக்கியங்களையும் தாகூர் போன்ற வங்காளக் கவிஞர்களையும் அறிமுகம் செய்தல் மூல ம் த மிழ் இலக்கியத்தின் தரத்தையும் உயர்த்த எண்ணியிருப்பார் என்பதில் ஐயமில்லை, கிரேக்க நாடகங்களையும், நாடகாசிரியர்களையும், ஆங்கிலத்தின் சிறந்த புலவர்கள் எனக்கணிக்கப்படும் மில்டன், சேக்ஸ் பியர், வால்டர் ஸ்கொட்ஷெல்லி, டென்னிஸன், றொபர்ட் பிரெளணிங், டைரன், கீட்ஸ் ஆகியோரையும் நோர்வே நாடகாசிரியர் இப்ஸ்னையும், வங்கமொழிக் கவிஞரான ரவீந்திரநாத் தாகூரையும் அறிமுகம் செய்யும் விபுலாநந் தர் சேக்ஸ்பியர், மில்டன், உவேட்ஸ்வர்த், கீட்ஸ், ஷெல்லி
34

டெனிசன் ஆகியோரது கவிதைகள் சிலவற்றையும் மொழி பெயர்த்துத் தந்துள்ளார். தமிழ் மாத்திரம் அறிந்தவர் பிற மொழியிலும் நல்லவையுண்டு எனக்கண்டு அவற்றை அறிந்து தம் மொழியில் அவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்மென்ற சமரசப் போக்கே இதற்குக் காரண மாகும். ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவிப்பதற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டினை ஒருவாறு நிகர்ப்ப ஆரி யமும் தமிழும் வல்ல பண்டிதமணியாருக்கு (பண்டிதமணி கதிரேசன் செட்டியார்) ஆங்கில மொழிக் கவி நயத்தினை ஒரு சிறிது காட்டுதல் கருதி எழுந்த கட்டுரை என்று தமது ஆங்கில வாணிக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.22 மொழி பெயர்க்க அவர் தெரிந்தெடுத்த மேற் குறிப்பிடப்பட்ட கவிஞர்களின் பாடல்கள் விபுலாநந்தரின் நோக்கினைக் காட்டுவன. மானிடப் பெருமித மும் தேசாபிமானமும், உலகவாழ்வும், ஆன் மிக உணர்வும் நிரம்பப் பெற்ற பாடல் கள் அவை. இப்பாடல்களிற் கூட ஆத்மிகமும் - உலோகா யுதமும் இணையும் தன்மையினைக் காணலாம். அடிக ளாரை தமிழியல் ஆராய்வுகளில் ஒப்பியல் கல்விக்கு முக் கிய இடமளித்த முன்னோடிகளுள் ஒருவர் எனக் குறிப் பிடும் கைலாசபதி ஆங்கில இலக்கியத்தை மாத்திரம் கற்பதோடு அமைந்தவர் அல்லர் அடிகள். உலக வரலாறு மானிடவியல், தத்துவம், விஞ்ஞானம், புராதன மொழி கள் முதலியவற்றையும் இடைவிடாது படித்து வந்திருக் கிறார். இவற்றின் விளைவாகவே பரந்த உளப் பாங்கு அவரிடத்தே வளர்வதாயிற்று எ ன் றும் கூறிச் செல்கி றார்.23 இப்பரந்த பார்வையினைத் தமிழ் அறிஞரும் எழுத் தாளரும் பெறின் தமிழ் இலக்கியத் தரம் உயரும் என அடிகளார் எண்ணியிருக்கக் கூடும்.
இலக்கிய விமரிசனத்துறையிலும் அடிகளாரின் பங்கு குறிப்பிடற்குரியது. இந்திய அழகியற் கொள்கையை அடிப் படையாகக் கொண்டே அவர் கவிதைகளை மதிப்பிட் டார் போலத் தெரிகிறது. கவிதை நயத்தலில் இரசிக
35

Page 25
விமரிசனமுறை ஒன்றினையே அவர் செய்துள்ளார். சொற் களின், ஒசையின், கவிதை அமைப்பின் துணை கொண்டு புலவனின் உணர்வையும் பாடல் தரும் சு  ைவ  ைய யு ம் பெறலே இவ்வணுகு முறையின் பிரதான நோக்காகும்.
யாழ்ப்பாணத்திலே வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை போன்றோரால் வளர்க்கப்பட்டு, பண்டிதமணி போன்றோரால் புகழப்பட்ட மரபு இது. விபுலாநந்தர் காலத்தில் தமிழ் நாட்டில் டி. கே. சி. யின் பாடல்களும் தெரிவும் வெறும் ரசனையின் டாற்பட, விபுலாநந்தரின் தெரிவும்,பாடல்களும் ரசனையோடு மன்பதைக்கு ஆண்மை, வீரம், ஞானம், தேசாபிமானம், பத்தி ஊட்டுவனவாயுமுள் ளன. இவ்வகையில் தம் கால ரசிக விமரிசனகாரர்களிலி ருந்து இவர் வேறுபடுவதுடன் இலக்கிய விமரிசனம் கூட மன்பதைக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக் குடையவராயும் காணப்படுகின்றார்.
பழைமை வாதியான இவர் நவீன இலக்கிய வளர்ச் சியில் நாட்டம் கொண்டுருந்தமை அவரின் கால முரணற்ற இலக்கிய பார்வையினை எமக்குக் காட்டுகிறது. மகாகவி பாரதியாரைத் தமிழ் நா ட் டி ல் பிரபல்யப்படுத்திய பெருமை இவருக்குண்டு. தமிழ் நாடு பாரதியின் கவித்திற னையும் கருத்து வல்லமையையும் காணுமுன்னர் கண்டு வெளிக் கொணர்ந்தவர் இவர்.பேராசிரியர் கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் எழுதிய நாடகங்களை 'இது கொடுந்தமிழ் நாடகங்கள்’ என ஒதுக்கினாரல்லர். அவற்றை உவந்தேற்ற விபுலாநந்தர் "மட்டக்களப்பு வழக் குத் தமிழையும் ஓரிரண்டு நாடகங்களிற் படம் பிடித்து வைப்பது நன்று’** - என்று கூறி வாழ்த்துகிறார். பாண் டியன் தமிழே தமிழ் என்று கூறிய பண்டிதர் மயில் வாக னனார், வழக்குத் தமிழின் இயல்பை ஆராய்ந்து எழுதிய சோழமண்டலத் தமிழும் ஈழமண்டலத் தமிழும் என்னும் கட்டுரை முக்கியமானதாகும்.
36

இவர் காலத்தில் மாதவையா போன்றோர் நாவல் எழுத ஆரம்பித்து விட்டனர். மணிக்கொடி தோன்றி விட்டது. வ. வே. சு. ஐயர் ஆகியோர் கதை எழுதுகி றார்கள். கலைமகள், கல்கி, ஈழகேசரி ஆகிய பத்திரி கைகள் நவீன இலக்கியத்திற்கு இடமளிக்க ஆரம்பித்து விட்டன. பேரா சிரி ய ர் க ள ஈ ன வையாபுரிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை தொடக்கம் மு. வரதராசன் வரை இதற்கு உதாரணங்களாகும். எனினும் அடிகள் அம்முயற் சியில் ஈடுபட்டாரல்லர். அடிகள் ஆராய்ச்சியாளனே தவிர வசன ஆக்க இலக்கியகாரர் அல்ல என நாம் அமைதி காணலாம். எனினும் நவீன தமிழ்க் கவிதையின் தாக்கம் அவரிலும் இருந்தது என்பதை அவரது சில கவிதைகள் காட்டி நிற்கின்றன. கடுமையான செய்யுள்களை எழுதிய அடிகளார் எளிமையான கவிதைகளையும் எழுதியுள்ளார். நவீன இலக்கியம் அடிகளாரில் பிரதிபலிப்பதை அவரின் கவிதைகள் மூலம் தான் கண்டு கொள்ளலாம். நவீன இலக்கியத் துறைகளில் கால் வைத்த தாகூரை ஆதார மாகக் கொண்டிருந்த அடிகளார் நவீன இலக்கியம் பற்றி கரிசனை கொண்டிருந்தார் எனக் கொள்வதில் தவறில்லை.
பின்னாளில் அவர் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் மறுமலர்ச்சிக்கழகம் ஒன்றினை ஆரம்பித்து ந ட த் தி ய போது அதிற் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் என்று அறிகிறோம். பழைய இலக்கியப் படிப்பினுடன் புதிய இலக்கியத்தையும் அரவணைத்த அவரது அகண்ட பார்வையினை இது நமக்குப் புலப்படுத்துகிறது.
அனைத்திலும் சமரசம் கண்டு நல்லன கொள்ளும் இவர் போக்கினை இலக்கியத்திலும் காண்கிறோம். மணி தரில் வேற்றுமை காணாதது போல பழைய இலக்கியமே நன்று. புதிய இலக்கியம் இலக்கணத்துள் அடங்காதது எனவே அது தீது என்றோ, செந்தமிழில் எழுதும் இலக் கியமே இலக்கியம் ஏனையவை இலக்கியமல்ல என்றோ ை தமிழ் இலக்கியமே சிறந்தது ஏனையவற்றுள் ஒன்றுமில்லை
37

Page 26
என்றோ இருமுனைச் சிந்தனை கொண்டவரல்லர் அடிக ளார். இரண்டிலுமுள்ள நல்லனவற்றைக் கண்டு அதற் குள் சமரசம் செய்து அதன் மூலம் சிறந்த உணர்ச்சியைக் காட்டியவர் அடிகளார்.
இலக்கிய நோக்கைப் பொறுத்தவரை காலத்தோடு வளர்ந்தவர் அவர். மாறாத உடும்புப்பிடி அவரிடம் இல்லை. மாறுதலிலும் மாற்றத்திலும் நம்பிக்கையுடைய வர். இத்தத்துவத்தில் வைத்த நம்பிக்கையே அவர் எழுத்துக்களுக்கு ஆழமும், அர்த்தமும் கொடுத்தன,
தொகுப்பு
தொகுத்துரைக்குமிடத்து விபுலாநந்தரிடம் மனிதனை யும், சமூகத்தையும் புரிந்து கொள்ளுகின்ற - இயங்கியல் நிலையில் - அதன் சகல முரண்பாடுகளோடும் அதனைக் காணுகின்ற அகண்ட பார்வையும், அ  ைன த் தி லும் தொடர்பைக் காணுகின்ற தத்துவ நோக்கும் காணப் பட்டன. அவருடைய வாழ்க்கைப் பின்னணியும், நுண்மான் நுளைபுல அறிவும் வேதாந்த தத்துவமும் அவருக்கு இந் தப் பார்வையை அளித்திருக்கலாம்.
அவருடைய பிரதான சிந்தனைப் போக்கும் செயற் பாடுகளும் இந்தத் தடத்திலேயே செல்லுகின்றன. இதற்குப் புறனடையாகச் சில கட்டுரைகள் இல்லாமல் இல்லை. ஆனால் பிரதான ஓட்டம் இதுவே.
சகல முரண்பாடுகளையும் இணைத்தலும் சமரசம் காணுதலும் அவரின் பெரு நோக்காயிற்று. விவேகானந்தர் நவீன கால இந்தியாவுக்களித்த சிந்தனைப் போக்கு இது, அவர் வழிவந்த விபுலாநந்தர் இவ் வழிச் சென்றது வியப் Lj667 p.
சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை கண்ட அவர் அத்த கைய பண்புகள் இல்லாத தொண்டர் குலம் போன்ற புதுக்குலம் ஒன்று தமிழர் மத்தியிலே தோன்ற வேண்டும் என்று விரும்பினார்.
38

அத்தகைய சமூகத்திற்கு வேண்டிய மன உரத்தை அச் சமூகத்தின் பாரம்பரியத்தில் இருந்தே எடுத்துக் காட் டினார். இசைக் கலையைப் பொறுத்தவரை தமிழிசை மரபைக் கண்டறிந்தார். மரபைப் பேணினார். பழைய யாழினை மீளுருவாக்கம் செய்தார்.கலைகளைப் பொறுத்த வரை நல்ல கலைகளை ஆழமான கலைகளை அறிந்து உணர்ந்து ரசிக்கும்படி வழி காட்டினார். ஒடும் செம் பொன்னும் ஒக்கவே நோக்கும் நம் வாசகருக்கு ஆழமா னது இது மேலோட்டமானது. இது என்று கற்கும் கலை நயம் கண்டறியும் முறையைக் காட்டினார். இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தினர் ஆரோக்கியமான மனம் பெற விரும்
60frtri.
நாடகங்களைப் பொறுத்தவரை தமிழ் நாடக மர பைத் தமிழரை அறியச் செய்யப் பண்ணியதுடன் மேற்கு நாட்டு நாடகங்களையும், சமஸ்கிருத நாடக மரபினையும் அறிமுகம் செய்து மரபில் நின்று புதியது உருவாக வழி சமைத்தார்.
இலக்கியத்தைப் பொறுத்தவரை மரபு வழித் தமிழை யும், தமிழர் தம் பெருமையையும் உரக்கக் கூறிய போதும் அதன் நவீன வளர்ச்சியிலும் அக்கறை காட்டினார். பிற நாட்டு இலக்கிய மொழி பெயர்ப்பும், பாரதி அறிமுகமும் பேச்சுத் தமிழை ஆதரித்ததும் இதற்குதாரணங்களாகும்.
கூட்டு மொத்தமாகக் குறிப்பிடின் அவர் பழைமை பேணினாரில்லை. பழைமையினின்று புதுமையை அவாவி னார். அப்புதுமை உலகம் தழுவியதாக உலக கலை இலக் கியப் போக்குடன் ஒட்டியதாக அமைய வேண்டும் என அவாவினார் போலும். தமிழை உணர்வு நிலையில் அணு ಹಾಗ೦ಟು அறிவு நிலையில் அணுகமுயன்றார்.
குறுகிய மனப்பாங்கினின்று நம்மை விடுவித்து பரந்த நோக்கில் நம்மை நாம் விளங் கி க் கொள்வதும் நமது
39

Page 27
பாரம் பரியத்திலிருந்து புதுமையைக் கண்டறிந்து வளர்த்
துச்
செல்வதும் சகல முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஒரு
இணைவு கண்டு மன்பதைக்குத் தொண்டு செய்ய முன் வருவதும் இன்றைய தலைமுறை அவரிடமிருந்து சுற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களாகும்.
T
சான்றாதாரங்கள்
2.
3.
சிவத்தம்பி கார்த்திகேசு, தமிழ் இலக்கிய வரலாறு, நியூ சென்சுரி புக் ஹவுஸ் சென்னை, 1988, பக் 87.
மேலது பக் - 87.
செல்வனாயகம், அருள். விபுலானந்த ஆராய்வு கலை மகள் வெளியீடு, சென்னை, 1963, பக் - 140.
செல்வனாயகம் அருள். விபுலாநந்தத்தேன், பாரி நிலையம், சென்னை 1956, பக் - 40,
மேலது பக் - 38,
அடிகளாருக்கு சிதம்பரம் தாலுகா ஆதித்திராவிடர் கள் சார்பில் அளிக்கப்பட்ட வாழ்த்துமடல், 1933.
விபுலாநந்த ஆராப்வு, பக். 121 - 138,
மேலது. பக். 43 - 54.
மேலது. பக். 55 = 63,
மேலது, பக். 80.
இலக்கியக் கட்டுரைகள், உயர் திரு விபுலாநந்த அடி கள், கல்வித் திணைக்களம், 1973, பக், 57
விபுலாநந்த ஆராய்வு பக், 57,
மேலது பக். 34.
40

1哩。
5.
I G.
1 『,
R.
9.
2.
器上。
&器。
骂蔷,
&星。
செல்வனாயசம் அருள். விபுலாநந்தச் செல்வம், கலைமகள் வெளியீடு, சென்னை, 1963 பக் 112. விபரங்களுக்கு பார்க்க. பண்பாடு, பருவ இதழ், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம், இதழ் 3, ஆகஸ்ற் 1991 -
சக்திப்பெருமாள், திருமதி டாக்டர், தமிழ் நாடக வரலாறு, மதுரை 1990 பக் 347 - 351.
சொர்ணலிங்கம் க. நாடகமும் நானும், சுன்னாசம் I968 Lui; - 8 fi. விபுலானந்ந சுவாமிகள் முன்னுரை, மதங்க சூளா மணி என்னும் ஒரு நாடகத் தமிழ் நூல், மறு வெளியீடு, பிரதேச அபிவிருத்தி அமைச்சு, 1987"
மேலது.
மேலது.
விபுலானந்த ஆராய்வு Lis – 75, விபுலானந்தச் செல்வம், Lsji - I 82, கைலாசபதி க. முத்தமிழ் முதல்வரின் ஒப்பியல் நோக்கு" அடிகளார் படிவ மலர் கொழும்பு, 1969 Lř. 78.
இலக்கியக் நட்டுரை நள் பக். 14 .
41

Page 28
தமிழ் உணர்வின் வரலாறும் விபுலாநந்தரின் தமிழ் உணர்வும் (விபுலாநந்தர் எழுத்துக்களின் தமிழ் உணர்வு பற்றி ஒர் ஆய்வு)
1942 ஆம் ஆண்டிலே மதுரையில் நடைபெற்ற இயற்றமிழ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கித் தலை மைப் பேருரை நிகழ்த்திய விபுலாநந்த அடிகளார் பின்வருமாறு கூறினார்.
"இரண்டரைக் கோடியென்னும் எண்ணின ராகிய நம் தமிழ் குலத்தார் அனைவரும் பசியும் பிணியும் பகையும் நீங்கிப் பொருட் செல்வமும், செவிச்செல்வமும், அருட்செல் வமும் ஏற்ற பெற்றியெய் தப் பெற்று மண்ணக
மாந்தர்க்கு அணியெனச் சிறந்து வாழ்வார்களாக.
பந்த பாசங்களைத் துறந்து மனுக்குலத்துக்குச் சேவை செய்ய வந்த விபுலாநந்தர் தமிழ்க் குலத்த வர் பசியும் பிணியும் நீங்கி, பொருட் செல்வம் முத லிய செல்வம் பெற்று வாழ வேண்டுமென்று கருதுவ தும், "நம் தமிழ்க் குலம்' என உளப்பாட்டுத் தன் மைப் பன்மையிற் கூறுவதும், ஏனைய சமூகங்களை விடத் தமிழ்ச் சமூகம் மேலாக வாழவேண்டும் என்று அவாவுவதும் துறவு பூண்ட போதிலும் தமிழையும், தமிழர் சமூகத்தையும் துறக்காத விபுலாநந்தரின் உளப் போக்கையும், தமிழ்ப்பற்றை விடாத மனப்பாங்கையும் காட்டுவனவா புள்ளன.
1948 ஆம் ஆண்டிலே விபுலாநந்தர் மறைவை பொட்டி திரு க. க முருகேசபிள்ளையை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ஈழமணி விபுலாநந்த நினைவு மலரில், விபுலாநந்தர் பற்றிக் கூறவந்த கவியோகி சுத் தானந்த பாரதியார் பின்வருமாறு கூறுகிறார்.
42

சங்கத் தமிழ் கேட்க வேண்டுமானால் இருவரிடம் சேட்க வேண்டும். ஒருவர் பெரும் பேராசிரியர் சாமிநாதர் மற்றொருவர் விபுலாநந்தர். நான் அவர்களைப் பார்த்து இருபத்திரெண்டு ஆண்டுக வாாயின. ஆனால் அக்காலத்தில் அவர் உடல் மெலிந்தே வந்தது. தமிழ்த்துடிப்பு வலுவாய் இருந் தது. அந்தத் துடிப்பு இன்று பல்லாயிரம் தமிழர் நெஞ்சில் முரசடிக்கும். அடிகளார் பலருக்குத் தமிழ் வெறியேற்றினார்கள் .
துறவியான அடிகளார் தமிழ்ப்பற்றும் சமூகப்பற் றும் மிக்கவர் மாத்திரமன்று. தமிழர் நெஞ்சில் முரச டிக்கும் வகையில் தமிழ் வெறியேற்றியவராக சுவியோகி யால் வர்ணிக்கவும் படுகின்றார். துறவுக் கோலம் பூண்ட அடிகளாரைத் தமிழ் பற்றிக் கொண்டது. தமி ழைத் துறக்க முடியாத துறவியானார் விபுலாநந்தர் .
பந்தபா சங்களையும் சொந்தபந்தங்களையும் சுசு போகங்களையும் துறந்தவரால் ஏன் தமிழ் உணர்வை யும், தமிழ்ப்பற்றையும் துறக்க முடியவில்லை? விபுலா நந்தரின் தமிழ்ப்பற்றுக்கான காரணங்கள் என்ன? எவ் வாறு அவர் எழுத்துக்களை இத் தமிழுணர்வு பாதித் தது? என்பன போன்ற வினாக்களுக்கு விடை காணு தல் விபுலாநந்தனரயும், அவர் கருத்துக்களையும் புரிந்து கொள்ள உதவும். அதற்கான ஒரு முயற்சியே இக்கட் டுரையில் மேற்கொள்ளப்படுகிறது.
விரிவாகவும், வரலாற்றுப் பிண்னணியிலும் சுவா மியின் கருத்துக்களை ஆராயும் இக் கட்டுரை மூன்று முக்கிய தலைப்புக்களின் கீழ் அமைந்துள்ளது.
முதலாம் பகுதி யி ல், ஆரம்பத்திலிருந்து 19 ஆம் நூற்றாண்டுவரை தமிழ் உணர்வின் தோற்றமும், அதற் கான காரணங்களும் விளக்கப்படுகின்றன.
43

Page 29
இரண்டாம் பகுதியில் 19 ஆம் நூற்றாண்டின் பின் எழுச்சிபெற்ற தமிழ் உணர்வின் தன்மைகளும் அதற் கான காரணங்களும் விளக்கப்படுகின்றன.
மூன்றாம் பகுதியில் தமிழ் உணர்வின் இந் நீண்ட வரலாற்றுப் பின்னணியில் விபுலாநந்தர் என்ன பங் கினை வகிக்கின்றார் என்பதும், காலம் இவர் கருத்துக் கள் மீது செலுத்திய தாக்கமும் விளக்கப்படுகின்றன.
19 ஆம் நூற்றாண்டுவரை தமிழ் உணர்வின் தோற்றமும் அதற்கான காரணங்களும்
தமிழ் இலக்கிய வரலாற்றையும், தமிழ் இலக்கி யங்களையும் வரன் முறையாகப் பயில்வோர் ஆங்கு, தமிழர், தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழரசர், தமிழ் சமூகம், தமிழர் ஆட்சி பற்றிய உணர்வு தமிழ்ப் புல வர்களாலும், அறிஞர்களாலும் விதந்து ஒதப்பட்டிருப் பதை அவதானிப்பார்கள். காலச் சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு காலப்பகுதியிலும் இவ்வுணர்ச்சியுரைகள் கூடியும், குறைந்தும் ஒலிப்பினும், தமிழ் உணர்ச்சி மங்காமல் இருந்து வந்தமையையும் உணர்வர்.
கி. பி. 450 - 550 க்கிடையில் எழுந்ததாகச் சில ஆராய்ச்சியாளர்களாற் குறிப்பிடப்படும் சிலப்பதிகாரத் திலே தமிழர் பெருமை பேசப்படுகிறது. இமயமலையிற் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் முறையே தமது விற்கொடி, புலிக்கொடி, மீன்கொடி பொறித்தமை யும், சேரன் செங்குட்டுவன் வடக்கே படையெடுத்து கனக விஜயரான வடவரைவென்று கண்ணகிக்குக் கல் கொணர்ந்த மையும் குறிப்பிடப்படுகிறது.
கி. பி. 7 ஆம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கருதப் படும் இறையனார் களவியலுரையில் தமிழ்மொழியின் பெருமை இன்னொரு விதத்திற் சிறப்பிக்கப்படுகிறது.
44

முதற் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் பற்றிய காலப்பிரிவும், கடல்கோளும், அழிந்த நூல்களும் பற்றிக் கூறப்படுவதுடன் மு த ந் சங்கத்தில் சிவபெருமான் இருந்து தமிழ் வளர்த்தார் என்றும், இரண்டாம் சங்கத் தில் முருகக் கடவுள் இருந்து தமிழ் வளர்த்தார் எனவும் சொல்லப்படுகிறது. அத்துடன் அகத்தியர், தொல்காப் பியர் ஆகியோர் சிவனிடம் தமிழ் Gáll- L0 || 6006 பரம்பரையாகக் காட்டப்படுகிறது.
இறையனார் களவியலுரையிற் கையாளப்பட்ட இக் கதை பிற்காலத்தில் தமிழுணர்வு மீதூரப் பெற்றுப் பாடிய பல புலவர்களைப் பெரிதும் பாதித்தது.
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தேவாரம பாடிய சம்பந் தரும், அப்பரும் கி. பி. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகரும் தமிழின் சிறப்பைப் பாடுகின்றனர். சம்பந்தர் அடிக்கடி தன்னை 'நற்றமிழ் ஞான சப பந் தன்" எனத் தமிழோடு தொடர்பு படுத்தியே அழைத் துக் கொள்ளுகிறார். நாவுக்கரசர் சலம்பூவோடு தமி ழோடிசை பாடலையும் மறக்காதவராகத் தன் தமிழ்ப் பற்றை வெளிப்படுத்துகிறார். அத்தோடு ‘ஆரியன் கண் டாய்! தமிழன் கண்டாய்' என விளித்து இறைவனைத் தமிழ்க்கடவுளாகவே காண்கிறார். மாணிக்கவாசகர் இறைவன் புலவர் வேடத்தில் வந்து கருமிக்குப் பொற் கிளி வாங்கித் தந்த கதையை "நற்பாட்டுப் புலவ. னாய்ச் சங்கமேறி நற்கனகக்கிழி தருமிக்கருளினோன்" என்று வெளிப்படுத்துகிறார்.
சங்கத்திலே இருந்து இறைவன் தமிழ் வளர்த்த இறையனார் களவியலுரை கூறும் பெளராணிக மரபு நினைவு இன்னொருவிதத்தில் இங்கு மீட்கப்படுகிறது.
15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களான குமரகுருபரர், சிவப்பிரகாச சுவாமிகள், தமிழ்விடுதூது ஆசிரியர், முதலிய கவிஞர்களது ஆக்கங்களைப் படிப்
45

Page 30
போர் அவற்றில் தமிழுணர்ச்சி இடையிடையே சுழித் துப் பாய்வதனை அவதானிப்பர். 15ஆம் நூற்றாண் டில் வாழ்ந்த பரஞ்சோதியார் தம் திருவிளையாடற் புராணத்தில்,
கண்ணுதற் பெரும் கடவுளும் கழகமோடமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த பழந்தமிழ் என பண்டைய பெளராணிக் கதையினைத்துணைக் கிழுத்துத் தமிழின் பெருமையைக் கூறுவதுடன் இன்னும் ஒரு படி மேற் சென்று
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப்படக் கிடந்ததா? எண்ணவும் படுமோ? என ஏனைய மொழிகள் சிலவற்றைக் குறைத்துத் தமிழின் பெருமையைக் சிலா கிக்கின்றார். பரஞ்சோதி முனிவர் வாழ்ந்த காலம், வடமொழி ஆதிக்கம் தமிழ் மொழி மீது வெகுவாகக் கவிந்த காலம், இலக்கணக் கொத்து என்ற நூலை யாத்த ஈசான தேசிகர் தமிழ், வட மொழியின்றித் தனித்தியங்க முடியாது என்று கூறி
ஐந்தெழுத்தாலொரு பாடையென்று அறையவும் நாணுவோர் அறிவுடையோர் என்று தமிழ் மொழியை நையாண்டி செய்த சூழ் நிலையிலேதான் கீழ்வரும் கூற்று பரஞ்சோதி முனிவ ரின் வாயிலிருந்து பாய்கிறது.
தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததும் முதலை உண்ட பாலனை அழைத்ததும் என்பு பெண்ணுருவாக
46

கண்டதும் மறைக் கதவினைத் திறந்ததும் கன்னித் தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்? பரஞ்சோதியின் மனக் கொதிப்பு பாடலிற் தெரி கிறது. வடமொழியா? தமிழா? சிறந்தது என்ற கேள் வியிலேயே தமிழின் சிறப்பைக் கூறிவிடும் கெட்டித் தனத்தையும் அதற்குத் துணையாக தமிழிசையால், நாயன்மார் புரிந்த அற்புதங்கள் பற்றிய கர்ணபரம்பரைச் செய்திகளை தமிழ்ச் செய்திகளாகக் கொள்வதையும் காணலாம்.
இதனுடைய தர்க்கரீதியான வளர்ச்சியாகத்தான் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் (1855 - 1897) தமிழைப் பரம்பொருளுக்கு ஒப்பிடுவதனைக் காணலாம்.
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள் முன்
இருந்தபடி இருப்பது போல் இருக்கும் தமிழ்மொழி ஆரியம்போல் உலகவழக்கு. அழியாது சீரிளமையோடு இருப்பதாக அவர் கூறுவார் . இதனின்றுதான் தமிழை அன்னையாக அதுவும் கன்னி யாகக் கருதும் கருத்துருவம் உருவாயிற்று.
சுந்தரம்பிள்ளைக்கு இருபத்தி ஏழு வயது நடந்து கொண்டிருக்கையில் பிறந்த சுப்பிரமணியபாரதியார் (1882) தமிழைத் தாயாக வைத்து தமிழ்த்தாய் தமிழ் மக்களைப் பார்த்துப் புதிய சாத்திரம் வேண்டுவதா கப் பாடுகிறார். இதைவிட செந்தமிழ் நாடு, தமிழ், தமிழ்மொழி வாழ்த்து, தமிழ்ச்சாதி, வாழிய செந்தமிழ் என்ற தலைப்புக்களில் தமிழர், தமிழர் சமூகம், தமிழ் மொழி பற்றியும் பாடியுள்ளார்.
கனக சுப்புரத்தினமான பாரதிதாசனில் ( 1891 ) இத்தமிழ் மொழி உணர்வு பிற மொழிப் பழிப்பாக
47

Page 31
வும், தமிழ் இன உணர்வு ஒரு வகையில் தமிழ் வெறி யாகவும் வெளிப்படுகிறது. இன்றைய கவிஞர்கள் சில ரிடம் இப்போக்குகள் இன்றளவும் காணப்படுகின்றன.
பண்டைய தமிழ் மன்னர்களின் பெருமைகளைக் கூறுகின்ற நிலையினின்று, இ  ைற வ னே (ாடு தமிழை இணைத்து இறைவனே தமிழை வளர்த்தான் என்ற கதைக்கூடாக, ஏனைய மொழிகளை விட, தமிழே சிறந் தது என்று அதற்கு உயர்வு கற்பித்து, அதைப்பின்னர் எல்லையறு உயர் பரம்பொருள் நி  ைலக் கு உயர்த்தி, பின்னர் அதனைச் சீரிளமைத் திறம் குன்றாத கன்னி யாக வியந்து, இறுதியில் தமிழ்த் தாயாகப் போற்றி வணங்குகின்ற தன்மை காலப்போக்கில் வளர்ந்து வந்தமையினையே சுருக்கமாக மேலே குறிப்பிட் டோம். தமிழ் நாட்டில் இன்று கடவுள் வாழ்த்து தமிழ் வாழ்த் தாகவே இருப்பதும் இங்கு நினைவு கூரற்குரியது. A.
தமிழ் உணர்விற்கான காரணம்
இத்தகைய தீவிர தமிழ் உணர்ச்சி தமிழ் இனத்திற்கு ஏற்பட்ட காரணம் யாது? தமிழின் பெருமைகளைக் கூறியது மாத்திரமன்றி அதனை ஏனைய மொழிகளை விட உயர்த்தி, தாயாக கருதும் நிலை ஏன் வந்தது? இதறகான காரணத்தைத் தமிழர்களின் வரலாற்றிலே தான் தேட முடியும்.
வேட்டுவ நிலையினின்று, மந்தை மேய்க்கும் நிலை க்கு மாறி, நிலையாக ஓரிடத்திலிருந்து வேளாண்மை செய்து, கடல் கடந்து வாணிபம் செய்யும் நிலைக்கு உயர்ந்த புராதன தமிழரின் வரலாற்று வள ர் ச் சி யி  ைன யே குறிஞ்சி (மலை - வேட்டைக்காலம்) முல்லை (காடு - மந்தை மேய்ப்புக்காலம்) மருதம் (வயல் - வேளா ண்மை செய்த காலம்) நெய்தல் (கடல் - வணிகம் செய்த
48

காலம்) என்ற சங்க கால இலக்கியங்கள் தரும் பொருள் மரபு குறியீடாகக் காட்டி நிற்கிறது.
குன்றுகளிலும், மலைகளிலும் வாழ்ந்த தமிழ் இனம் கடற்கரை நோக்கி வளர்ந்த நாகரிக வ ர ல |ா ற்  ைற குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எ ன் ணக் கரு (Concepa) காட்டி நிற்கின்றது என்பர் கமில்சுவலபில்.
வேட்டுவ நிலையில் குழு க் க ள |ா க வும், மந்தை மேய்க்கும் நிலையில் குலங்களாகவும் வாழ்ந்த தமிழி னம், வேளாண்மை செய்யும் நிலையில் வேந்தர்களை யும், கடல் கடந்து வியாபாரம் செய்யும் நிலையில் முடியுடை மூவேந்தர்களையும். தம் தலைவர்களாகக் கொள்ளும் நிலைக்கு வளர்ந்தது. குலங்களும், குழுக் களும் தம்முட் தாமே பொருதிய நீண்டகால வர லாற்றில் எஞ்சிய மூன்று பெரும் குழுக்கள் தாம், சேர, சோழ, பாண்டியராவர். தமிழ் நாட்டின் வட பகுதிச் சோழரின் கீழும், தென்பகுதி பாண்டியர் கீழும், மேற் குப்பகுதி சேரரின் கீழும் வந்தன.
அதிகாரவலுவும், படைப்பலமும் மிக் க தமிழ் அரசர்கள் அதிகார வலுவும், படைப்பலமும் அற்ற தமிழ் மக்களை ஆளத் தொடங்கினர். ஒரு வகையில் தமிழரைத் தமிழரே ஆண்டனர். இவ்வாட்சி கி. பி. 4ம் நூற்றாண்டு வரை நடைபெற்றது.
கி.பி 436க்குப் பின் களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுகிறது. தமிழகத்தின் இருண்டகாலம் என களப் பிரர் ஆட்சிக் காலம் அழைக்கப்படுகிறது. இவர்கள் ஆட்சி கி.பி6 ஆம் நூற்றாண்டுவரை நிலவுகிறது.
இ. பி 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 10 ஆம்
நூற்றாண்டுவரை தமிழரல்லாதவரும் ப்ராக்ருத மொழிக்காரரும் முன்னாளில் சமணராயிருந்து பின்
49

Page 32
சைவர்களாக மாறியவர்களுமான பல்லவருடைய ஆட்சி நிலவுகிறது (பிற்காலத்தில் பல்லவர்கள் தமிழோடு தம்மை இனைத்துக் கொண்டனர். சாசனங்களைத் தமிழிற் பொறித்தமையும் 3ஆம் நந்திவர்மன் தமிழ் நந்தி என அழைக்கப்பட்டமையும் இதற்குச் சான்றுக ளோம். எனினும் பல்லவர்கள் அன்னியரே") இவ்வகையில் தமிழர்கள் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக 800 ஆண் டுகள் அந்நியராட்சியின் கீழ் இருந்தனர்.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலே தான் தமிழர்களான சோழர்கள் மீண்டும் தமிழரை ஆட்சிபுரிய ஆரம்பிக் கின்றார்கள். இவர்களின் ஆட்சி கி. பி 13 ஆம் நூற் ராண்டுவரை நடைபெறுகிறது. கங்கையும் கடாரமும் கைக்கொண்டு சிங்காசனத்திருந்த செம்பியராகவும் தமிழ் உணர்வு கொண்டவர்களாகவும் அவர்களைப் 1ற்றிய மெய்கீர்த்திகளில் வர்ணிக்கப்படுகின்றார்கள்.
13 ஆம் நூற்றாண்டுடன் சோழப் பேரரசு வீழ்" சியடைய இஸ்லாமியர் ஆட்சியும்,தொடர்ந்து தெலுங்கு மொழிபேசிய நாயக்கரது ஆட்சியும் தமிழ் நாட்டில் தடைபெறுகிறது. நாயக்கர் ஆட்சி 18 ஆம் நூற்றாண்டு வரை தடை பெறுகிறது. அதன் பின்னர் ஆங்கிலேய மொழிபேசிய கிறித்தவரான ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ்த் தமிழர் வருகின்றனர். 1947 வரை தமிழ் நாட்டில் ஆங்கிலேயர்ஆட்சியே நிலவியது.
1917ல் இந் தியா சுதந்திரம் பெறுகிறது. அதன் பின் இந்திய மத்திய அரசின் கீழ் மாநில சுயாட்சி நிலையில் தமிழர் தம்மைத் தாமே இந்திய சட்டநெறி களுக்கியைய ஆளுகின்றார்கள்.
மேற்குறிப்பிட்ட வற்றிலிருந்து கி. பி. நான்காம் நூற்றாண்டுக்கு முன்னரும் கி. பி. 10ம் நூற்றாண்டி விருந்து 13ம் நூற்றாண்டு வரையுமே முன்னர் தமிழர் ஆட்சி தமிழ் நாட்டில் நடைபெற்றது என்பது தெளி வாகின்றது,
5)

கிறிஸ்தாப்தத்திலிருந்து இற்றைவரை ஒரு கணக் கெடுத்துப் பார்ப்பின் கிறிஸ்தாப்தத்தின் ஆரம்பத்தி லிருந்து 400 வருடங்களும் இடையில் கி. பி. 10ம் நூற் றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டுவரை 400 வருடங்க ளுமாக தமிழ் நாட்டில் தமிழர் ஆட்சி சிறப்பாக 800 வருடங்களே நடைபெற்றதெனலாம். ஏனைய 1100 வருடங்களும் அந்நியர் ஆட்சியின் கீழும் குழப்ப நிலை மத்தியிலுமே தமிழ்ச் சமூகம் வாழ்ந்ததெனலாம், தமிழரை களப்பிரர், பல்லவர், நாயக்கர் (தெலுங்கர் மராட்டியர்) இஸ்லாமியர், ஆங்கிலேயர், பிரான்சுக் காரர் போன்ற அந்நிய இனத்தினரே ஆண்டுள்ளனர்:
பல்லவர், நாயக்கர் போன்றோர் தமிழ் மக்களு டன் இரண்டறக் கலந்து தமிழ் மன்னர்களாகக் தோற் றம் காட்டினும் அடிப்படையில் அவர்கள் அந்நியர்களே, இவர்களின் ஆட்சியினால் வடமொழி, தெலுங்கு அரபு, ஆங்கிலம், ஆகிய மொழிகளின் செல்வாக்கும், பெளத்தம், சமணம், வீரசைவம், இஸ்லாம், கிறிஸ்த வம் ஆகிய மதங்களின் செல்வாக்கும் தமிழ்மீது ஏற் பட்டது.
இடையிடையே பாண்டிய மன்னர் எழுச்சி பெற்றுத் தமிழ் ஆட்சி நடத்திய போதும் பெரும் போக்கான ஒட்டம் அந்நியராட்சியே.
அந்நியராட்சியின் கீழ் நீண்ட காலம் வாழும் ஒர் இனம் தன் தனித்துவத்தைக் காப்பாற்ற நினைத்தல் இயல்பு. அந் தப் பாதுகாப்புணர்வின் ஒரு வெளிப்பர்டே தமிழுணர் வாகப் பிரதிபலித்தது எனலாம்.
தமிழுணர்ச்சி கொப்பளித்த பல்லவர் காலம், நாயக்கர் காலங்களில் அந்நியராட்சி மாத்திரமல்ல வட மொழித்தாக்கமும் தமிழிற் பெருமளவு ஏற்பட்டது. Iல்லவர் காலத்தில் தமிழை வளம்படுத்த உதவிய வட மொழி, நாயக்கர் காலத்தில் தமிழை ஒதுக்கி விடுமள
5.

Page 33
வுக்குச் செல்வதனையும், காணலாம். எனவே தான் பல்லவர் காலத்தில் வடமொழி - தமிழ்மொழி சமரச மும், நாயக்கர் காலத்திலும் அதன் பின்னரும் வட மொழி - தமிழ் மொழிச் சண்டையும் தமிழ்ப் புலவர் கரரின் பாக் ஒளில் இடம் பெறலாயின. வடவர் ஆதிக் கம் ஆங்கில மொழி ஆதிக்கம் அபரிதமாககக் கானப் படும் இருபதாம் நூற்றாண்டில் தமிழுணர்ச்சி மேலும் கொப்பளிப்பதை இதன் பின்னணியிற் தான் விளங்கிக் விொள்ள முடியும்.
அரசியல் அதிகாரத்திற்கான போரா. டத்தின் ஒரு
வெளிப்பாடே தமிழ்மொழி' 1ாதுகாப்புப் போரா " . பு:கும் பல்வர் காலத்தில் போராட்டத்தில் முன்
"ேணி வீரர்கள் சம்பந்தரும், அப்பரும் நாயக்கர் காலத் கில் குமா குருபரரும் பரஞ்சோதிமுனிவரும். ஆங்கிலே யர் காலத்தில் சிந்தரம்பிள்ளையும்,பாரதியும்,பாரதிதாச 2றும். இவர்கள் அனைவருமே தமிழ்மொழியை - தமிழ் உணர்வை முன்னிறுத்தி அவ்வுணர்வூக்கத்தில் தமிழர் களை அந்நியத்திற்கு எதிராக அணிதிரட்ட முயன்றனர். அந்நியராக இங்கு வந்தோர் சாதாரண மக்களல்ல. ஆள்ப வமும், அதிகாரபலமும் பணபலமும் மிக்க நிலவுடமை பாளர்களே அவரை எதிர்த்து மக்களின் ஆதரவிடன் தம் அதிகாரம் நிலை நிறுத்த முயன்றோரும் தமிழர் மத்தி பில் இருந்த ஆள் பலமும் அதிகாரபலமும் பெற்ற நில சிடணியாளர்களே. இரு அதிகார வர்க்கத்திற்கிடையே கடைபெற்ற போரில் மக்கரை அணிதிரட்டும் ஆயுத மாய விெமை வாய்ந்த ஆயுதமா சித் தமிழ் நிகழ்ந்தது.
சமூகத்தின் அடிக்கட்டுமானத்தில் (Basic Structure) உள்ள வர்க்கங்களுக்கிடையே அதி காரத்தைக் கைப்பற்ற முனைகின்ற வர்க்கப்போரே வரலாற்றினை இயக்குகி ன்றது என்பது ஒரு கொள்கை. இவ்வர்க்கப் போரில் மேற் கிளம்புகின்ற மேற் கட்டுமானத்தைச் சேர் 岛岛 வையே சன ,ெ இலக்கியம், தித்துவம் என்பன
5.
 

வணிக வர்க்கத்தினரின் சமயமான சமணத்திற்கு எதிராக நிலவுடைமையாளரின் சமயமான சைவத்தை நிலை நிறுத்த எழுந்தபோரே சமண - சைவப்போராக வெளிக்கிளும்பியது. இதில் சைவம் தனக்கு ஆதரவாக தமிழை இணைத்துக் கொள்கிறது.
சமஸ்கிருத நெறியை முன்னெடுத்தவர்களாக நில வுடைமையாளர்களும் தெலுங்கருமான நாயக்க நிலப் பிரபுக்களுக்கு எதிராக தமிழ் நிலப்பிரபுக்கள் தம் மடால பங்களை செல்வாக்கு மிக்கதாக வைக்க எடுத்த முயற்சி யில் நாயக்கர் காலச் சைவ, வைணவ எழுச்சியுடன் தமிழும் இணைந்து கொள்கிறது,
ஆங்கிலேயரான வணிகருக்கு எதிராகவும், அவர் மதமான கிறிஸ்தவத்திற்கெதிராகவும் தமிழ் நிலவுடமை யாளர் தொடுத்த போரில் சைவம் முனைப்பாகச் செயற்பட்டது. சைவத்தோடு தமிழை இணைத்து சைவமும் தமிழும் என்ற கோஷம் முனைப்பாயிற்று:
இந்திய சுதந்திரப் போரும் இவ்வாறே, இந்தி யாவைச் சுரண்ட வந்த அந்நியரான ஆங்கில வணிக ருக்கு எதிராக இந்தியாவின் நிலவுடமையாளரும் வணிகரும் படித்த மத்திய த ர வ ர் க் க த் தி ன ரு ம் இணைந்து நடத்திய யுத்தமே இந்திய சுதந்திரப் போர்,
இந்திய பொதுமக்களை தம்முடன் இணைத்துக் கொள்ள இந்தியத் தேசியம், பாரதத்தாய், வந்தே மாதரம் போன்ற கருத்துக்களையும் இந்தியாவின் பழம் பெருமைகளையும் போராட்டத்தின் முன்னணி வீரர்கள் மக்கள் முன் கொண்டு சென்றனர். (அதிகாரம் கைக்கு வந்ததும் இந்திய முதலாளிகளும் நிலவுடமையாளர்க ளூம் போராட்டத்தின் உந்து சக்திகளாக நின்ற சாதா ரண மக்களைப் பெரிதும் கவனிக்காது விட்டது மாத் திரமன்றி தொடர்ந்து அதே கோஷங்களைக் கூறிச் சுரண்டுவதையும் கானலாம்.)
5
3

Page 34
இத்தகைய அந்நிய எதிர்ப்புப் போர்களில் மொழி யுணர்வு, சமய உணர்வு என்பன பயன்படுத்தப்படும். இத்தன்மை இரண்டு போக்குகளைக் கொண்டதாக அமையும். ஒன்று முற்போக்கு இன்னொன்று பிற்போக்கு. அந்நிய ஆட்சி முறைகளை எதிர்த்துச் சுதேசிய ஆட்சி முறையினை மீண்டும் நிலைநாட்ட எடுக்கும் முயற்சி முற்போக்கு. அம்முயற்சி கைகூடிய பின் அதேமொழி, சமய உணர்வை தம்மோடு சேர்ந்து பாடுபட்ட மக்களை மேலும் சுரண்டப் பயன்படுத்துதல் பிற்போக்கான தாகும். வரலாற்றில் இவ்விரு அம்சங்களுக்கும் சான்று களுண்டு. ஆளுமையும், தூரநோக்கும், சரியான பார் வையும் கொண்ட தலைவர்கள் முற்போக்கான தேசிய உணர்வை மேலும் வளர்த்து முற்போக்கான திசைகளை நோக்கிச் செல்வர்.
தமிழ் உணர்வும் தமிழ்த் துறவிகளும்
இத்தகைய ஒர் அந்நிய எதிர்ப்புப் போரில் துறவி களும் சமயத் தலைவர்களும் முன்னிற்பது வரலாற்றி யற்கை. சிறப்பாக தென்னாசியாவிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலும் மதஸ்தாபனங்களும் அதன் தலைவர்களும் மிக வலிமை வாய்ந்த சக்தியினராவர். ஆத்மீகத்திலிருந்து அரசியல் வரை அவர்கள் செல்வாக்கு அளப்பரியது. தமிழர்களும் இதற்கு விதிவிலக்கன்று.
சமணத் துறவியான இளங்கோவடிகள் தமிழ்ப் பற்று மிக்கவராயிருந்தார். சமயத் தலைவர்களான சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் தமிழ்மீது பற்று மிக்கோரே. குமரகுருபரர், பரஞ்சோதிமுனிவர், போன்ற சமயத் தலைவர்களும் தமிழ்மீது உணர்ச்சி பூர்வமான பற்றுடையோரே. இராமலிங்க சுவாமிகள் சமயப்பற்று மிக்கவராயிருந்தார். "ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந் தாரும் எவரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்" என்று பிரசாரம் செய்தார்.
54

இவர்கள் அனைவருமே ஒருபார்வையில் அனைத் தும் துறந்த துறவிகள். சொத்து, சுகம், பந்தம், பாசம் அனைத்தையும் துறத்தலே துறவின் முதற்படி, பற்றுக் களை அகற்றியவர்கள் இவர்கள் பற்றற்றான் பற்றினைப் பற்ற பற்றுக்களை அகற்றிய இவர்கள். தமிழ்ப்பற்றை யும் மாத்திரமும் அகற்ற முடியாதவரானார்கள். துறத்த லுக்கு மாறா க தமிழ்மீது பாசமிக்கவரானார்கள். தமிழே அவர்களின் சொத்தாயிற்று. எவ்வளவு ஒதுங் இச் சென்றாலும் நிஜ உலகின் யதார்த்த வாழ்வினின்று யாரும் தப்பிச்சென்று விட முடியாது என்பதற்குப் பிண்டப் பிரமாணமான உதாரணங்கள் இவர்கள்.
வாழையடி வாழையென வந்த இத் திருக் கூட்டத் தின் வழியில் துறவியான விபுலாந்தரும் இணைந்து கொண்டார். தமிழைத் துறக்காத துறவியானார். தம் முன்னோர்களின் தமிழுணர்வினின்று விபுலாநந்தர் பல வகைகளில் மாறுபடுகின்றார். விபுலாநந்தரின் தமிழ் உணர்வு பாரம்பரியச் சொத்தாயினும் அவரது காலச் சூழல் அவர் தமிழுணர்வையும், அதன் போக்கையும் நிர்ணயித்த வலுவான காரணிகளுள் ஒன்று. விபுலானந் தரின் காலச் சூழலை அறிதல் மூலம் அவரின் தமிழுணர் வின் மூலவேர்களை அறிந்து கொள்ள முடியும்.
19ம் நூற்றாண்டின் பின் தோற்றம் பெற்ற தமிழ் உணர்வும் அகற்கான காரணங்களும்.
ஆங்கிலேயரது ஆட்சி இலங்கையிலும் இந்தியாவி லும் 19ம் நூற்றாண்டில் ஆங்கிலம் படித்த மத்திய தர வர்க்கத்தினரை உருவாக்கி விட்டது. ஆங்கிலேய ரது முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகள் தமிழ்ச் சமூகத்தின் படிமுறை ஒழுங்கமைப்பை (Hirachy) மெல்ல மெல்ல மாற்றவுமாயின. இதனால் ஆங்கிலங் கற்றவர்களும், நிலவுடமையாளர்களுமான பிராமணர்
55

Page 35
அல்லாதார் ஆதிக்கம் தமிழ் நாட்டில் ஏற்படலாயிற்று. இலங்கையிலும் ஆங்கிலம் கற்ற பிரமணரல்லாத உயர் லகுப்பினரிற் கணிசமானோர் கிறிஸ்தவர்களாயினர் • கல்வி மதம் மாற்றும் கருவியாயிற்று. கல்வியுலகிலும் நிர்வாக உலகிலும் ஆங்கிலம் கற்ற கிறிஸ்தவராதிக்கம் நிலவியது.
ஜஸ்டிஸ் கட்சியின் தேற்றம்
பிராமண ஆதிக்கத்திற்கு எதிராக வேளாள வகுப் பினரின் எழுச்சியின் பிரதிபலிப்பாகவே மறைமலையடி கள் போன்றோரால் சைவசித்தாந்தம் தமிழர் மதமென நிறுவப்படுகிறது. தத்துவ உலகில் தமிழர் மதமாகச் சைவ சித்தாந்தமும் இலக்கிய உலகில் தமிழர் இலக்கி யங்களாக எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, தேவார திருவாசகங்களும் கூறப்பட, அரசியல் உலகில் தமிழர் நலன் காக்கும் அரசியற் கட்சியாக ஜஸ்டிஸ் கட்சி தோற்றம் பெறுகிறது. தமிழர் கட்சி என்பதனைவிடத் திராவிடர் கட்சி என்பதே அதற்குப் பொருந்தும். ஏனெ னில் பிராமணரின் ஆதிக்கத்தின் தாக்கத்திற்குள்ளான தென்னாட்டு முக்கியஸ்தர்கள் பலர் அதனுள் இருந்த னர். இக்கட்சிக்கு ஈ.வெ.ராவின் ஆதரவு இருந்தது.1925 இல் காங்கிரசிலிருந்து பிரிந்து திராவிடக்கழகத்தைத் தொடக்கிய திராவிடர் இயக்கத்தின் தந்தையெனக் கருதப்படும் ஈரோடு வெங்கடப்பன் இராமசாமியான ஈ. வே. ரா. தெலுங்கர் என்பது இங்கு நினனவு கூரற் குரியது.
இலங்கையில் ஆங்கிலக் கிறித்தவர்கட்கு எதிராக ஆறுமுக நாவலர் போன்றோர் சமய இலக்கிய உலகிலும் இராமனாதன் போன்றோர் அரசியல் உலகிலும் செயற் படுகின்றனர்:சைவத்தோடு தமிழை இணைத்துச் சைவ மும் தமிழர் என்ற கோட்பாட்டை நாவலர் முன்வைக் தார். சாதி அமைப்பில் முன்னணியில் நின்ற வேளாளரே
56

இத் தமிழுணர்வை ஆரம்பத்தில் ஈழத்தில் முன்னெடுத் தனர். இவ்வகையில் 20ஆம் நூற்றாண்டின் தமிழ்த் தேசிய வாதம் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் சைவத் தைத் தன்னுடன் இணைத்து சமூகத்தின் உயர் நிலை யில் வாழ்ந்த வேளாளர் நலன் காக்கும் வாதமாக உருக் கொண்டது.
எனினும் தமிழ் நாட்டுத் தமிழ்த் தேசிய வாதத் தில் இன்னொரு பண்புமுண்டு. தமிழ் நாட்டில் வேளா ளர் தவிர்ந்த முதலிமார், நாயுடு, நாடார், வன்னியர் போன்ற வகுப்பினர்கள்-இன்னொருவகையில் தாழ்த்தப் பட்ட வகுப்பினர் இன்னொருவசையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அல்லாதவர்கள் - ஆங்கிலம் கற்றதுடன் ஆங்கிலேயரின் பொருளாதார கொள்கை காரணமாகப் பொருளாதார பலமிக்கவரானமையினால் பிராமண ஆதிக்கத்தினின்று தம்மை விடுவிக்க திராவிடப் பண் பாட்டை பெரிதுபடுத்தினார்கள்
சாராம்சத்தில் தமிழ் நாட்டுத் தேசிய வாதத்தின் ஒரு கிளை பிராமண ஆரிய எதிர்ப்பாகவும், இன்னொரு கிளை பிராமணர், வேளாளர் அல்லாதார் பிராமண ஆதிக்க நிலையினின்று திராவிடப் பண்பர்ட்டுப் பெரு மைபேசி அதனாதிக்கத்திலிருந்து விடுவிக்கப் பிரயத்தனம் செய்யும் முயற்சியாகவும் வளர்ச்சியுற்றது.
இலங்கையில் தமிழ்த் தேசிய வாதம் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானதாகவும், சைவப் பெருமைபேசி, கிறித்தவமதத்திலிருந்தும் அவர்தம் ஆதிக்கத்திலிருந்தும் தம்மை விடுவிக்கும் தன்மை கொண்டதாகவும் வளர்ச்சி பெற்றது.
இவ்வண்ணம் வளர்ச்சி பெற்ற தமிழ்த் தேசியவாதத் தின் தொடர் வளர்ச்சி முக்கியமானது.
தமிழ் நாட்டின் தமிழ்த் தேசிய வாதம் திராவிடர் தனித்துவம் பேசியதிலிருந்து, தமிழர் தனித்துவம் பேசும் தன்மைக்கு மாறி, பின் மாநில சுயாட்சிக்குரிய ஆதி
57

Page 36
கர்ரங்களைப் பெற்று தமிழன் தமிழனை ஆள வேண் டும் என்ற போக்குடையதாக விரிந்தது.
இலங்கையில் தமிழ்த்தேசிய வாதம் பின்னாளில் சிங்கள - பெளத்த எதிர்ப்பியக்கமாக மாறி தமிழர் தமி ழரை ஆழும் தனி நாடுகோரும் போக்குடையதாக விரிந்தது.
தமிழ்த்தேசிய வாதத்தின் மையக் கருதமிழர் தனித் துவத்தையே வலியுறுத்தியது. தமிழர் தத்துவமாக சைவ சித்தாந்தை மறைமலையடிகளும், ஆறுமுகநாவல ரும் கொள்ள, சுயமரியாதைக் கழகத்தினர் திருக்குற ளைக் கொண்டனர். பிராமணரல்லாதாருக்கிடையே நிலவிய உள் முரண்பாடுகளின் வெளிப்பாடே இது. இதுதணியாக ஆராய்வுக்குரியது
தமிழரின் தனித்துவத்தை அரசியல் வடிவமாக ஆக் கும் வளர்ச்சிக்கு 18ம் நூற்றண்டின் ஆரம்பத்திலிருந்தே அடித்தளமிடப்பட்டு விட்டது;
பண்டைய இலக்கியளங்களின் பதிப்புமுயற்சிகள்
பண்டைத் தமிழ் இலக்கியங்களை ஏட்டு வடிவி னின்று எழுத்து வடிவிற்குக் கொணர்ந்த இம் முயற்சி 18ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. சிறப் பாகச் சங்கஇலக்கியப்பதிப்பும் குறிப்பாக ஏனைய இலக்கி யப் பதிப்புகளும் தமிழ்த்தனித்துவத்தை வெளிப்படுத் தும் ஆதார பூர்வமான கருத்துக்களை முன்னணி வீரர் கட்கு அளித்தன. உ. வே. சாமிநாதையர் ( ), சி. வை. தாமோதரம்பிள்ளை ( ) ஆகியோர் முயற் சிகள் இவ்வகையில் விதந்து குறிப்பிடத்தக்கவை. இவர் களுள் தமிழகத்தவரும், ஈழத்தவரும் அடங்குவர். ஈழத் தில் இவ் விலக்கியங்களைக் குறிப்பாகச்சைவ இலக் கியங்களை ஆறுமுக நாவலர் சைவ எழுச்சிக்கு ஒர் ஆயுதமாகப் பாவித்தார், கந்தப்புராணமும் திருவிளை
58

யாடற்புராணமும், பெரியபுராணமும், மக்கள்மயப்படுத் தப்பட்டன. அவையே தமிழ் இலக்கியங்களின் கொடு முடிகளாகக் கணிக்கவும் பட்டன. தமிழ் நாட்டில் சுய மரியாதைக் கழகத்தினர் சங்க இலக்கியங்கள். திருக் குறள் என்பனவற்றைப் பெரிதுபடுத்திப் பேசினர்.
கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம்
தமிழர் தனித்துவம் பேசிய தமிழ் ஆராய்ச்சியாள ருக்கு உற்சாகம் தந்த ஆய்வு ஒன்று 1856 இல் நூலாக வெளிவந்தது. அதுவே கால்டுவெல் பாதிரியார் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative grammer of the Dravidian Languages) 676irp DITarr (5th. தமிழ் ஆராய்ச்சியின் முதல் தலைமுறையின் தனி நபராக விளங்குபவர் இவர் என்று A. V சுப்பிரமணிஐயர் இவரைக் கூறுவர்.8
மாக்ஸ்முல்லர் போன்றோர் திராவிடரின் தனித் தன்மையை கூறியிருப்பினும் முழுமையான ஆராய்ச்சி நோக்குடன் கூறிய முதல் நூல் இதுவே திராவிடமொழி வடமொழியினின்று வேறானது. தனித்து இயங்க வல் லது என்று ஆணித்தரமாக நிறுவிய இவரை திராவிட மொழி அறிஞர் எல்லாக் காலத்திலும் நன்றியுடன் போற்றுவர் என்பர் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளைய வர்கள்,7
"திராவிட மொழிகள் அனைத்திலும் உயர் தனிச் செ ம் மொழியாக நிலை பெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம்பெற் றிருக்கும் சமஸ்கிருதச்சொற்கள்ை அறவே ஒழித்து விட்டு உயிர் வாழ்வதோடு அவற் றின் துணையை "ஒரு சிறிதும் வேண்டாமல் வளம்பெற்று வளர்வதும் இயலும்'8

Page 37
என்பது கால்டுவெல் கூற்று தமிழின் “தனித்துவம்" வேண்டி அதற்கான இயக்கங்களை ஆரம்பித்தோர்க்கு இவ் ஆராய்ச்சி வரப்பிரசாதமாயிற்று. பிற்காலத் தமிழ் ஆராய்ச்சியை கால்டுவெல் கொள்கைகள் வெகுவாச்ப் பாதித்தன.
சிலப்பதிகாரப் பதிப்பு
இத்தமிழ்த்தேசிய உணர்வு என்ற நெருப்புக்கு நெய் யாக அமைந்தவற்றுள் சில்ப்பதிகாரப்பதிப்பும் ஒன்றா யிற்று. 1892 இல் உ. வே. சாமிநாதையரால் சிலப் பதிகாரம் பதிப்பிக்கப்படுகிறது ஐயருக்கு முன்னாலேயே சுப்பராயச் செட் டியாரும் (1872) பூரீனிவாச ராகவாச் சாரியும் (1876) புகார்க் காண்டத்தை மட்டும் முறையே மூலமாகவும் உ  ைர யு டனும் வெளியிட்டிருந்தனர். உ. வே. சாமிநாதையர்தான் நூல் முழுவ்தையும் உரையுடன் பதிப்பித்தார்.
1892 இல் சிலப்பதிகாரம் பதிப்பிக்கப்பட்ட போது அக்காலப்பகுதியில் அது நன்கு அறியப்படவில்லை. பின் னாளில் இது ஆராய்ச்சியாளரைப் பெரிதும் கவர்ந்தது, குறிப்பாக வி. கனகசபைப்பிள்ளை (1855 - 1906) பெ. சுந்தரம்யிள்ளை ஆகியோர் சிலப்பதிகாரத்தை பெருமளவு பயன்படுத்தினர். கனகசபைப்பிள்ளையின் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் தமிழ் உணர்வு மிக்க ஆராய்ச்சியாளருக்கு முன் மாதிரியாயிற்று.
சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிப்பு
கால்டுவெல்லின் ஒப்பிலக்கண ஆராய்ச்சி தந்த திராவிட உணர்வை, சிலப்பதிகாரப் பதிப்பு இன்னும் வேகமூட்டியது. பண்டைத் தமிழ் நூற் பதிபுகள் தமிழு ணர்வுத் தீயை விசிறும் காற்றாடிகளாயின தமிழ்த் தேசிய வாதத்திற்கு இவை ஒர் அறிவியல் பின்னணி யைத் தந்தன. இந்த உணர்வை மேலும் ஆதாரபூர்வ
60

மாக்கியது 1925 இல் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து வெளி நாகரிகம். ஆரியர் வருமுன்னரே இந்தியாவில் ஒரு நாகரிகம் இருந்தது என்றும் அது கி. மு. 3000-1500க்கு மிடைப்பட்ட தென்றும் கூறப்பட்டது. அது திரா விடரின் நாகரிகம் என்ற கருத்தை பாதர் ஹெரஸ் முன்வைத்தார். இந்த புதை பொருட் சான்று தமிழ் ஆராய்ச்சியாளருக்கு மேலும் உற்சாகம் தந்தது. தமிழினம் பண்டைய இனம், தனித்துவமான இனம், ஆரிய இனத்தினின்று மாறுபட்ட இனம் ஆரியர் வரு முன்னரேயே பெருநாகரிகம் பெற்று வாழ்ந்த இனம் என்று சொல்ல தமிழ் ஆராய்ச்சியாளருக்குக் கிடைத்த துருப்புச் சீட்டாகியது சிந்துவெளி நாகரிகக் கண்டு பிடிப்பு.
ஆரிய நாகரிகத்திற்கு மறுதலையாகத் தமிழர் நாக ரிகத்தையும், தமிழர் உயர்வையும் நிறுவ முயன்றனர் தமிழ் அறிஞர் பலர். பூரணலிங்கம்பிள்ளை(1866-1947) கா. சுப்பிரமணியபிள்ளை; ம  ைற ம  ைல யடிளென்ற வேதாசலம்பிள்ளை, கே. என். சிவராஜபிள்ளை,ரா. பி. சேதுப்பிள்ளை, ஒளவை துரைசாமிப்பிள்ளை, சோமசுந் தரம் பி ஸ்  ைள, எஸ். பவானந்தபிள்ளை போன்ற "பிள்ளைமார்’ அளவிலும் வடிவத்திலும் பிராமணத் துவேஷத்தையும் தமிழ்த் தூய்மையையும் பேணினர்.
வி. கே. சூரியநாராயண சாஸ்திரியார் தமிழ் நாட கக் கலை பற்றி நாடகவியல் என்ற பெயரில் சாஸ்திர நூலொன்று யாத்தார்; ஏபிரகாம் பண்டிதர் தமிழிசையை விளக்கி கர்ணமிர்தசாகரம், கர்ணாமிர்த சாகரத் திரட்டு என்ற நூல்களை வெளியிட்டார். சரித்திர ஆசிரியர்களாக இருந்தோர் கூட இத்தகைய பின்னணி களின் செல்வாக்கிற்குள்ளாயினர் என்பதற்கு பின்வரும் கூற்று சான்றாகும்.
தமிழ் நாட்டின் பெருமையே பெருமை .எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு
61

Page 38
முன்னர் தென்னாட்டில் மக்கள் வசித்து வந்தனர். தென்னாட்டிலிருந்து தமிழ் நாகரிகம் உரோமபுரிக்கும், கிரேக்க நாட் டிற்கும் பரவியது. இன்னும் தக்கிணபீட பூமியைச் சேர்ந்த வேட்டுவர் என்ற குறிஞ்சி நில மக்சள் யவன தேசத்திற்குச் சென்று தங்கள் அரசை நிலைநிறுத்தித் தங்கள் பெயரையும் அந்நாட்டிற்குக் கொடுத்தனர்' இந்திய வரலாற்றை மட்டுமன்றி, மேனாட்டு வர வி"ற்றையும் ஒரளவு அறிந்திருந்த, சென்னைப் பல் கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியராயிருந்த வி. ஆர். ஆர் தீஷிதர் கூசாது தமிழ் மக்கள் யவன தேசத்திற்குச் சென்று தங்கள் அரசை நிறுவினர் என்னும் பொழுது ஐரோப்பிய வரலா று அர்த்தமற்றதாகிவிடுகிறது." என்பர் கைலாசபதி,
இத்தகையதொரு தமிழுணர்ச்சி மீதூரப் பெற்ற சூழலில் தமிழ் ஆராய்ச்சியில் மூன்று வித போக்குகள் தலையெடுத்தன.
ஒன்று, தமிழின் பழமையைப் புகழ்ந்துபேசுவதும், சீதன் தனித்துவத்தையும், சிறப்பையும் ஆய்வுகள் மூலம் சிலாதித்து உயர்த்துவதுமான ஒரு போக்கு,
இரண்டு, தமிழ் மொழி வடமொழியினின்று தோன் றியது. அதற்கு அத்தகையதொரு பழ ம் பெருமை யில்லை. வடமொழித்தொடர்பே தமிழ் மொழியை வளம் படுத்தியது என்ற ஒரு போக்கு
மூன்று, இந்த இரண்டு உணர்ச்சி முனைகளுக்கும் இடையில் நிதானமாக அறிவு வழி நின்று தமிழர் வர லாற்றை, இலக்கியங்களை ஆராயும் போக்கு. பேராசி ரியர் வையாபுரிப்பிள்ளை போன்றோர் இதற்கு உதா ரண புருடர்களாவர்.
62

இம் மூன்று போக்குகளுக்குமான சமூகவியற் கார ணங்கள் தனியாக ஆராயப்படவேண்டியவை.
இம் மூன்று போக்குகளிலும் விபுலாநந்தரின் ஆய் வுகள் முதலாவதுபோக்கினைச்சார்ந்தனவாகவே பெரும் பாலும் அமைந்திருந்தன. இப் போக்கில் வரும் ஆய்வு களே பிரபல்லியமாயின. அக்காலகட்டத்தில் தோன்றி வளர்ந்த அக்காலச் சமூக உறவுகளுக்கும், ஆதிக்க சக் திகளுக்கும் அது உவப்பானதாக இருக்கவே அத்தகை யோரே தமிழ் அறிஞர்களாகவும், அத்தகைய ஆய்வு களே தமிழ் ஆராய்ச்சி எனவும் கணிக்கும் ஒரு செல்வாக்குமிக்க போக்கு உருவானது. இந்த அகண்ட பின்னணியில் விபுலாநந்தரைப் பொருத்திப் பார்க்கை யில் அவரின் தமிழுணர்வின் மூலவேர்களையும் தனித் துவத்தினையும் கண்டு கொள்ளலாம்.
வரலாற்றுப் பின்னணியில் விபுலாநந்தர் பங்கும், காலம் அவர் கருத்துக்கள் மீது செலுத்திய தாக்கமும் களவியலுரைகாரர் வழியில் விபுலாநந்தர்
விபுலாநந்தர் தமிழ் மொழியை இறையனார் கள வியலுரைகாரரின் வழியில் நின் றே ஆரம்பத்தில் நோக்குகின்றார்.
“இறையனார் களவியலுரையில் தரப்பட்டுள்ள சங்கம் பற்றிய கட்டு க்க  ைத தமிழை இந்து மயப்படுத்துவதற்கான - முக்கியமாக அதனைச் சைவ மரபின் ஓரங்கமாக ஆக்கு வதற்கான ஒரு முயற்சியாகும்.'" 10. என்பர். கா. சிவத்தம்பி, சமண, பெளத்தமதங்களை சைவ, வைஷ்ணவ மதங்கள் குரோதத்துடன் எதிர்த்துப் போராடிய ஒரு காலத்தில் இக்கதை உருவாகியிருக்க லாம் என்பது ஆராய்வாளர் கருத்து. சமணரின் திரா விட சங்கத்திற்கு மறு தலையாக உருவாக்கப்பட்ட
63

Page 39
கருத்துருவே தமிழ்ச்சங்க ஐதீகம் என்ற கருத்தை எம். சேஷகிரி சாஸ்திரி (1894) தொடக்கம் சோ. கேசவன் வரை (1980) பலர் பல்வேறு ஆதாரம் காட்டி நிறுவி யுள்ளனர். சமணரோடு தொடர்புற்றிருந்த தமிழை ; சைவத்தோடு இணைக்க சைவத்தமிழ் மக்கள் செய்த முயற்சியைப் போலவே தமிழ்நாட்டில் வாழ்ந்த பெளத்த தமிழர்களும் தமிழைத் தம்மதத்தோடு இணைக்க முயன் றுள்ளனர். வீரசோழிய ஆசிரியரான புத்தமித்திரனார் மகாயான பெளத்த பிரிவினைச் சார்ந்தவர். அவர் தமிழை அவலோ கீஸ்வரரே அகத்தியருக்கு உபதேசித் தார் என்கிறார்.
'ஆயும் குணத்து அவலோகிதன்பக்கல் அகத்தியன் கேட்டு ஏயும் புவனிக்கு இயம்பிய தான் தமிழ்'
(வீரசோழியம் - பாயிரம் 11) இதன்படி தமிழருக்கு அகத்தியன் தந்த தமிழ் அவ லோ கீஸ் வரர் தந்ததாகும். அகத்தியனைத் தமிழ் முனி யாகக் காணும் சைவரும், பெளத்தரும் அவருக்குத் தமிழ் உரைத்தவர் யார் என்பதில் தத்தம் வழி நிற்ப தனைக் காணுகிறோம். வீரசோழிய ஆசிரியரின் கூற்று ஒரு வகையில் தமிழைச் சிவனுடன் தொடர்புபடுத்திய தற்கான பதில் குறிப்பாகும்.
தமிழைத்தத்தம் இறைவர்களே வளர்த்தனர் என்ற கருத்து சமயச் சண்டைகள் உக்கிரமாக நடை பெற்ற அக்காலத்தில் இருத்தல் இயல்பே. உண்மையில் மொழி என்பது மனித இனவளர்ச்சியோடு உருவாகிய தாகும். தம் கருத்துக்களைப் புலப்படுத்த, தம் நடை முறைக் கூடாக மனிதன் உருவாக்கிய அற்புதமான சாதனமே மொழி. இம் மொழிக்கண்டுபிடிப்பு மனித வரலாற்றில் ஒரு பாய்ச்சலாகும். வளர்ச்சியூடே அவன் அனுபவம் பெற அவ்வனுபவத்தின் விளைபொருளாகவே இலக்கியங்களும் அதைத் தொடர்ந்து இலக்கணங்களும்
64

உருவாகின. இத்தகைய விஞ்ஞானபூர்வமான சருத்துக் கள் இன்று நிறுவப்பட்டதுடன் அந்த வகையிலேயே ஆராய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் ஆராய்ச்சி குழந்தை நிலையில் இருந்த அக் காலகட்டத் தில் சமயச் சார்பான ஐதீகங்கள் தமிழ் பற்றித் தோற் றுவிக்கப்படுகின்றன. இந்த ஐதீகங்கள் இன்று மிகச் சிலரையே பிடித்திருப்பினும் அன்று பெரும்பாலான தமிழ் அறிஞர்களைப் பிடித்திருந்தது.
1894 இலிருந்து சங்கம் பற்றிய மறுதலையான ஆராய்வுக் கருத்துக்கள் எழலாயின. றொபர்ட் கால்டு வெல் (1856) சி. வை. தாமோதரம்பிள்ளை (1881) வி. கோ, சூரிய நாராயண சாஸ்திரி (1870 - 1902) போன்றோர் வித்தியாசமான கருத்துருவங்களை இலக் கிய வரலாற்றில் வைத்த ஒரு சூழலிலேதான் சபா பதி நாவலரின் திராவிடப் பிரகாசிகை (1899) வெளி வருகிறது தமிழைச் சைவம் சாராத நோக்கில் விளக்கு வதற்குத் தன் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் சபாபதி நாவலர் தமிழ் இலக்கண, இலக்கிய, மெய் யியல் பாரம்பரியங்களை சைவசித்தாந்தியாக நின்று எடுத்து விளக்குகின்றார்.
சபாபதி நாவலரின் கருத்துக்கள் பிற்காலச் சைவத் தமிழ் அறிஞர்களின் கருத்துக்களைப் பெரிதும் பாதித் தன தமிழ் நாட்டில் ஆளும் வர்க்கமாகும் முயற்சியில் வேளாளர் போராடி வந்த இச் சூழலில் தமிழரின் தத்து வமாக சைவமே முன்னிறுத்தப்பட்ட பின்னணியில் சபா பதி நாவலரின் கருத்துக்கள் சமூகச் செல்வாக்குப் பெற் றமை ஆச்சரியமன்று.விபுலாநந்தர், தொடக்கம் பண்டித மணி வரையுள்ள சமயச் சார்புமிக்க அறிஞர் அனை வரும் இக் கருத்துக்களின் செல்வாக்கிற்குட்பட்டவர்களே.
அன்பினைந்திணையுரை என்னும் தன் கட்டுரையில் விபுலாநந்தர், சபாபதி நாவலர் கருத்துக்களை அடி
65

Page 40
யொற்றியே செல்கிறார்.இறையனார் களவியல் என்னும் நூலை இறைவனே செய்தான்; சிவனின் மகனாகப் புரா ணத்திற் கூறப்படும் முருகனே மூங்கைப் பிள்ளையான உருத்திர் சன்மனாக வந்து, தன் மெய்ப்பாட்டினால் நக்கீரர் உரையே சிறந்த உரை எனத் தீர்ப்புக் கூறி னான்; என்பன விபுலாநந்தர் கருத்துகளும் ஆகும். 1
மாணிக்கவாசகப் பெருமான் ஐ ந் தி  ைண க் கோவையை முற்றுவிக்க, அதனைத் திருச்சிற்றம்பலமு டையார் தமது அருமைத் திருக்கரத்தினால் எழுதித் தந்தார் என்ற சமயம் சார் கர்ண பரம்பரைக் கதை யினையும் இக்கட்டுரையினில் விபுலாநந்தர் கூறுகிறார்.?
இங்கு, இறையனார் களவியலுரை ஐதீகத்தினை ஏற்றோர் மரபு நின்று தமிழைச் சிவனுடனும் முருக னுடனும் தொடர்பு படுத்துவோர் கருத்துடன்-ஒரு வகை யில் சைவத் தமிழ் மரபு வழிக்கருத்துடன் விபுலாநந் தர் உடன்படும் பண்பினைக் காணுகின்றோம்.
சங்க இலக்கிய அகப்பொருள் மரபினை  ைசவ தத்துவக் கண்கொண்டு நோக்கும் போக்கும் சபாபதி நாவலரிலிருந்து வேகமாகக் கிளைவிடுகிறது. உலகியற் காதலுக்கு பேரின்ப விளக்கமளிக்கும் இப்போக்கு வர லாற்றுக்கூடாக வளர்ந்து வந்தமைக்கு வலுவான காரணங்களுண்டு. பெளத்த சமணரின் அற ஒழுக்கக் கரு த்துக்கள் சமூகத்தில் மிகச் செல்வாக்குப் பெற, உலகி யல் சார்ந்ததும், பண்டைய நெறிமுறைகளுமான அக , புற வாழ்க்கை முறைகள் இரண்டாம் பட்சமாகக் கரு தப்பட்டன. இந்நிலையில் அவற்றிற்கு ஆன்மீக விளக் கமும், தெய்வத் தன்மையும் ஏற்றுதல் மூலமே அதனை மீண்டும் மக்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ள வைக்கவும் உயர் நிலையில் வைக்கவும் முடியும். தாசிகள் மத்தியில், 19ஆம் நூற்றாண்டில் சீரழிந்து, சதுராட்டம் என்ற பெயர் பெற்று இருந்த பரதநாட்டியத்தை ஆன்மீக
66

நெறி நின்று விளக்கி, இறையனுபவத்துடன் இணைத்து உன்னத கலையாகப் பரவச் செய்த ருக்மணி அருண்டேல் முயற்சிகளோடு ஒப்பிடுகையில் அகப் - புற ஒழுக்கங்கள் ஆத்மீகநெறி விளக்கம் பெறவேண்டியிருந்த அவசியத் தைப் புரிந்து கொள்ளலாம்.
உலகியற் காதலை ஆன்மீகக் காதலாகக் காட்டும் முயற்சிகள் பல்லவர் காலத்திலே நடைபெறுகின்றன. கோவை, உலா, மடல் என்னும் இலக்கிய வடிவங்க ளைக் கையாண்டு, இறைவன் மீது காதல் கொள்ளும் காதலியர்களாகத் தம்மை உருவகித்து ஆழ்வாரும் நாயன்மாரும், பாடல்கள் பாடுகின்றனர். இறைபக்தி யைப்பரப்பப் பண்டைய அகத்திணை ஒழுக்கம் இங்கு கையாளப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே காதல் இறை அனுபூதிக்கூடாக விளக்கமுற்றது. அகத்திணை மர பும் இவ்வாறே விளக்கப்பட்டது. பிற் காலத்தெழுந்த சமய அனுபூதி நெறிகளைக் கொண்டுமுற்காலத்தெழுந்த இலக்கியக் கருத்துக்களை விளக்குதல் வரலாற்று முரணுள் அடங்கம் என்பது ஒரு புறமாக, அவ்வண்ணம் விளக்கு கல் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் ஒரு வரலாற்றுத் தேவையாக அமைந்து விட்டது என்பதனைத்தான் நாம் இங்கு தெளிந்து கொள்ள எேண்டும். வணிக வர்க்கத் தினரான சமணருக்கு எதிராக நிலவுடமையாளரான வேளாளரும், பிராமணரும் முன்னின்று நடத்திய சம பப்போரில் சைவம் புது உருவும், புதுப் பொலிவும் பெற் றது. உலகியலையே ச ம ய த் தின் அத்திவாரமாக்கினர் சைவ நாயன்மார். சமணரால் வெறுக்கப்பட்ட ஆடலும் பாடலும், காதலும், வாழ்க்கையும் சைவரால் ஏற்கப் பட்டன. புது விளக்கம் தரப்பட்டன. இவ் வரலாற்றுத் தேவையினைச் செய்தோர் மர பில் விபுலாநந்தரும் இணைந்து கொள்கிறார்.
தனது பொருணுரற் சிறப்பு என்னும் கட்டுரையில்
தமிழ் அகப்புற இலக்கணத்தைச் சித்தாந்த மரபினின்று அவர் விளக்குவதைக் காணலாம்.
67

Page 41
‘இனி நுண்மதித் தமிழ் மாந்தர் வீட்டியல் கூறிய மரபினை யாராய்வாம். சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய வீடு இலக்கண வகையாற் கூறுந் தரத்ததன்று. வீடு கூறிய ஏனைய மொழி மாந்தரும், அதனைக் காரண வகையாலும் எடுத்துக் காட்டுவகை யாலும்கூறினரேயன்றிச் சொல்லுக் கடங்காப் பேரின்பத்தைக் சொல்லுக்கடக்க முயன்றாரல் லர். காரண வகையாற் கூறுமிடத்து பெருந் திணையானும், காஞ்சித்திணையானும் கூறப் படும். பின் அனுபவவகையாற் கூறுமிடத்து அகத்திணை அன்பு மார்க்கமாகும். புறத் திணை அறிவு மார்க்கமாகும். 13
அகத்திணை புறத்திணை என்ற பொருள் மரபி னைப் பண்டைய புலவர் பாடியது வீட்டின் இயல்பைக் கூறவே என்பது விபுலாநந்தர் கருத்தென்பதற்கு மேற் போந்த வாசகம் சான்றாகும்.
"மனமொழி மெய்களாலறிய ஒண்ணாப் பேரின்பப் பொருளை யாண்டும் வெளிப் படையாகக் கூறுவது இயலாத தொன் றாதலின் ஆசிரியர் குறிப்பாக உணர்த் துவது மர்பாயிற்று'. என்கிறார் விபுலாநந்தர், சமயச்சார்பினை இலக் கியத்தில் ஏற்றியதன் தர்க்க ரீதியான விளைவாகவே தம்மதம் சாராத ஏனைய இலக்கியங்களைப் புறம் தள்ளும் போக்கு பல சைவத்தமிழ் அறிஞர்களிடம் காணப்படலாயிற்று. சைவ இலக்கியங்களை மாத்தி ரமே சிறந்த இலக்கியங்களாகக் கொண்ட ஆறுமுக நாவலர் போன்றோர் சிலப்பதிகாரம், கம்பராமாய ணம், சீவகசிந்தாமணி போன்ற நல்ல இலக்கியங்க ளுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்ட
68

தனையும் இதன் எதிர் விளைவாக பிராமண, புராண எதிர்ப்பியக்கத்தில் முன்னணியில் நின்ற அண்ணாதுரை கருணாநிதி போன்றோர் பெரியபுராணம், கந்தபுராணம் கம்பராமாயணம் ஆகிய காவியங்களை ஆரியர் ஆதிக் கம் கூறும் தமிழர் எதிர்ப்பு நூல்கள் என்று விளக்க மளித்து எரிக்க முயன்றமையையும் நினைவு கூருகையில் தீவிர ஒருபக்கச் சார்பு தமிழுக்கு எத்துணை தீமையை ஏற்படுத்தும் என்பது புலனாகின்றது.
சைவ சித்தாந்த நெறிநின்று தமிழ்மொழியை யும், இலக்கியத்தையும் விளக்கினோரின் செல்வாக்கிற் குள் ஆரம்பகாலத்தில் அடிகளார் உட்பட்டிருந்தார் என்பதனைச் “சிவன் எழுதி வைத்த இறையனார் கள வியலும், மணிவாசகர் கூறச் சிவன் எழுதிய திருக்கோ வையாரும் தமிழரின் வேதங்கள் என்றும் அவை சிறப்பு நூல்களாக நின்று வீட்டியலை விளக்கி நிற்ப"ை என்றும் கூறுவதிலிருந்து தெளிவாகப் புரிந்து கொள் 6m orth.
இக்கட்டுரைகள் அடிகளார் 1920களில் எழுதிய கட்டு ரைகளாகும். அப்போது விபுலாநந்தருக்கு வயது 32. 1899ல் வெளிவந்த சபாபதி நாவலரின் திராவிடப் பிரகாசிகைக் கருத்துக்கள் அக்காலகட்டத்தில் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் வாழ்ந்த சைவத்தமிழ் அறிஞர் கட்கு ஊக்கமும், உற்சாகமும் தருவனவாயிருந்தது டன் அவர்கள் மீது செல்வாக்கும் செலுத்தின இரண்டு நாடுகளிலும் தம் இளமைப் பருவத்தைக் கழித்த விபு லாநந்தர் இக்கருத்துக்களால் பாதிக்கப்பட்டிருத்தல் இயல்பே. மரபு வழியாகவந்த சமயம் சார்ந்த தமிழ் உணர்வுக் கருத்து விபுலாநந்தரின் ஆரம்ப எழுத்துக்க ளிற் காணப்படுகிறது என்பதே நாம் இங்கு மனம் கொள்ளத்தக்கது. Ꭺ
இத்தகைய கருத்துக்கள், அவரது பிற்கால எழுத் துக்களிற் காணப்படாமையும் சித்தாந்தக் கூட்டுக்குள்
69

Page 42
நின்று வெளிப்பட்டு சகல உலக இலக்கியங்களையும் மனித இலக்கியமாகக் கானுகின்ற போக்கு அவரது பிற்காலக் கட்டுரைகளிற் காணப்படுவதையும் காணு இகயில் சபாபதி நாவலர், ஆறுமுக நாவல்ர் பே: றோரின் சைவத் தமிழ் இலக்கிய மரபினின்று விபுலா னந்தர் பிற்காலத்தில் மாறுபட்டுவிட்டமை புவனாவது டன் விபுலானந்தரின் வித்தியாசமான போக்கும் தெரி கிறது.
திராவிடர் நாகரிகத்தைத் தமிழர் நாகரிகமாகக் காணும்
முயற்சி
கால்டுவெல் பாதிரியாரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூல் சமஸ்கிருத மொழியினரின் றும் வேறான ஒரு மொழி இந்தியாவில் ஏற்கனவே வழங்கி வந்தமையை உறுதி செய்தது: ஆரியரிலிருந்து வேறுபட்ட ஒர் இனத்தினர் இந்தியாவில் வாழ்ந்திருக் கலாம் என்ற ஊகத்தை இது தந்தது. இந்த ஊகத்தை மேலும் உறுதிப்படுத்தியது சிந்துவெளி அகழ்வாராய்ச்சி, சிந்து வெளிஅகழ்வாரய்வு கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னர் ஆரியரே இந்தியாவின் பூர்வீக குடிகளென்றும் ஆரிய நாகரிகமே இந்திய நாகரிகம் எனவும் கருதப்ப" டது. ஆனால் சிந்துவெளி அகழ்வாராய்வு இக்கருத்துக் களைக் தகர்க்தெறிந்தது. ஆரியர் வருவதற்குTமு: னர் கி.மு 3500 ஆம் ஆண்டிலேயே வட இந்தியாவில் (இன்றைய பாகிஸ்தான்) ஒரு நகர நாகரிகம் இருந்த தெனவும் அது திராவிடர் எஜம் சாதியாருக்குரியது எனவும் சேர் ஜோன் மார்சல், ஹீராஸ் பாதிரிய ர் ஆகியோர் நிறுவினர் திராவிட மொழிகளிலிருந்து வந்த திருந்திய மொழிகளாக தென்னிந்தியாவில் வழங்கிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற் றைக் கூறி அதனிடையே ஒப்பியல் ஆய்வினை ஏற்க எனவே கால்டுவெல் மேற் கொண்டிருந்தமையினால்
70

சிந்து .ெ எளியில் வாழ்ந்த திராவிடர் இந்தியாவின் தென்னாட்டு மக்களே என்ற கருத்து உருவாயிற்று. அப்படியாயின் தென்னாட்டிலிருந்த மக்கள் முன்னர் எங்கிருந்தனர் என்ற வினாவும் பிறந்தது. வடக்கேயி ருந்து ஆரியரால் கலைக்கப்பட்டு இவர்கள் தென் னாடு வந்தனர் என்ற கருத்து இதிலிருந்து பிறந்தது. இதன் இன்னொரு விளைவாக, தென்னாடு இருந்து வடக்கே சென்று தம் நாகரிகம் நிறுவினர் திராவிடர் என்ற கருத்தும் உருவாயிற்று. இவ்வன் னம் திராவி டர்களின் மூலம் பற்றிய ஆய்வுகள் தொடங்கலாயின. திராவிடரின் மூலத்தை ஆராயப் புகுந்த ஆராய்ச்சியு லகம் இரு பிரிவினரைக் கொண்டதாயிற்று . ஒரு பிரி வினர் மத்திய ஆசியா வினின்று வந்த கூட்டத்தினரே திராவிடர் அவர்கள் தெற்கு நோக்கிப் பயனம் செய்து இந்தியாவில் திராவிட நாகரிகத்தைத் தோற்றுவித்த னர் என்றனர். இன்னொரு பிரிவினர் தென்னிந்தியா வில் வாழ்ந்த இனத்தினரே திராவிடர் ஆவர்களின் வடக்கு நோக்கிப் பயணமே சிந்துவெளி நாகரிகத்தைத் தோற்றுவித்தது என்றனர். இந்த வாதப் பிரதிவாதங் கள் இன்றளவும் உள்ளன.
சிந்துவெளி நாகரிகத்தினைத் திராவிட நாகரிகம் என ஏற்ற H, R 111 அதனைச் சுமேரிய பபிலோனிய நாகரிகத்துடன் ஒப்பிட்டார். Father Heas உம் திரா விட மக்கள் சுமேரிய நாட்டில் குடியேறியிருக்கலாம் GTirgi éji i F G Giotr Story of Chaldea Wedic indi:L எனும் நூல்களை இபற்றிய Rag in எனுமறிஞர் சேமித்தியா வருகையின் முன் பழைய டாபிலோனியா வில் வாழ்ந்த சுமேரி அக்க தியருக்கும் இந்தியாவின் வட மேற் குப் பாகங்களில் வாழ்ந்த திராவிட மக்களுக்கு முள்ள தொடர்பு சிறப்பு வகையானது என்கிறார். சால்டி பாவின் பழைய நகரமாகிய ஊர் என்னு மிடத்திலே கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஒரு மனையினுள்ளே தென்னிந்தியத் தேக்கமரத் துண்டொன்று கண்டெ டுக்கப்பட்டதாக இவர் கூறுகிறார்.
71

Page 43
British Association என்னும் ஆரா ய் ச் சி க் கழகத்தலைவராகிய 8ir John Evan "மனித சாதியா சின் தொட்டில் தென்னிந்தியாவாயிருந்திருக்கலாம்" என்று கூறினார், இவ்வண்ணம் ஆரியருக்கு முந்திய ஒரு நாகரிகம் இந்தியாவில் இருந்தது என்பதைச் சிந்து வெனிக் கண்டுபிடிப்பாளர் நிறுவியதுடன் அதனை மிகப் பண் விடைய நாகரிகங்களான சுமேரிய - பபிலோனிய நாகரிகங்க ருடன் தொடர்புபடுத்தும் முயற்சியும் தென்னிந்திய மக்களுடன் தொடர்புபடுத்தும் முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டன.
தென்னிந்தியாவுடன் இந்நாகரிகத்தைத் தொடர்பு படுத்திய அறிஞர் கருத்து விபுலாநந்தருக்கு உடன்பா -ான கருத்தாகும். தென்னிந்தியத் திராவிட நாகரிகத் *தத் தமிழருடன் தொடர்பு படுத்தும் முயற்சிகளில் விபு லாநந்தர் ஈடுபடுகிறார். விபுலாநந்தர் தமிழ் ஆராய்ச்சி பாளரேயொழிய சரித்திர ஆய்வாளர் அல்ல என்பதை நாம் இங்கு மனம் கொள்ளல் வேண்டும். தம் கருத் துக்களையும் உளகங்களாகவே அவர் முன்வைக்கிறார். இவை ஆராயப்பட வேண்டியவை என்பதை அவரே ஒப்புக் கொள்கிறார். ஆக விபுலாநந்தர் செய்ததெல் லாம் திராவிடர் என்று கூறப்பட்ட இனத்தினை தமிழரு டன் தொடர்புபடுத்தியதும் ஒருபடி மேற்சென்று தமிழரே திராவிடர் எனக்கூறியதுமாகும்.
உல புராணம் எனும் கட்டுரையில் திராவிடரின் பரம்பலைப்பற்றி கல்கத்தாவினின்று வெளிவந்த New Review trial Father Heres 5.5 in Fujig diagnot a fan f படுத்தித்தரும் விபுலாநந்தர் ஓரிடத்தில்
"மேலே நாம் திராவிடர் என வழங்கிய குலத் தினை தமிழர் என்றே சொல்லலாம். கன்ன டம், தெலுங்கு, மலையாள மொழிகளும் அவற்றை வழங்கும் மக்களும் தமிழிலும், தமி
72

ழரிலும் இருந்து தோன்றிய காரணத்தினாலே பண்டைச் சரித்திரத்திலே திராவிடமென்பது தமிழேயாம். ஆரியர் வருமுன் இந்தியா முழு வலு திம் பரவியிருந்தவர் தமிழரே" என்று கூறுகிறார். தமிழின் வேறு பட்ட தாய் அதைக் காட்டிலும் மிக த் தொன்மை வாய்ந்ததாயுள்ள ஒரு பண்டைமொழி இருந்திருக்கவேண்டும் என்ற மொழி நான் முடிவை நோக்கியே கால்டுவெல் பாதிரியாரின் பார்வை இருந்தது. திராவிட மொழிகள் அனைத்திலும் உயர் தனிச் செம்மொழி தமிழ் எனக் கூறிய பாதிரியார் தமிழினின்றுதான் ஏனைய மொழிகள் தோன்றின என் றாரில்லை. பின்னாளில் தமிழில் இருந்துதான் கன்னடம், மலையாளம், தெலுங்கு தோன்றின என்ற கருத்தை உணர்ச்சி மீதுரரப்பாடினார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, அந்தக் கருத்து, காலச் சூழ்நிலை காரணமாகச் செல்வாக்கு மிக்க கருத்தாயிற்று. விபுலாநந்தரும் அக் கருத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.
திராவிடருடன் தமிழரைத் தொடர்பு படுத்துவது மாத்திரமல்ல, தமிழர்தான் திராவிடர் என்ற கருத்தும் விபுலாநந்தருக்கிருந்தது. விபுலாநந்தர் சிவப்பதிகார அடி பார்க்கு நல்லாருரையிலும் இறையனார் சுளவியலுரை பிலும் வரும் சுடல்கோள் கதையினை, சரித்திரத்துடன் இணைத்துப் பார்க்க முனைகிறார்.
"தமிழரது பழைய வரலாற்றினைப் பற்றிய சில முடிபுகள் தொல்காப்பிய எழுத்ததிகா ரம் நச்சினார்க்கினியகுரை, சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லாருரையென்னும் இ ன வ தம்முள்ளே சானப்படுகின்றன. இம் முடிவு கள் வரலாற்று நூலாசிரியர்கள் (Historians) ஆராய்ந்து கண்ட சரித்திர முடிபுகளோடு ஒரு புடை ஒத்திருக்கின்றனவாதலின் உரை
73

Page 44
நூன் முடிபுகள் வெறுங்கதைகள் அல்ல என் பது துணியப்படுகின்றது. 19
என்ற அவர் கூற்றில் இது புலனாகின்றது. குமரி யாற்றுக்குத் தெற்கே பஃறுளியாறு என்று பெயரியல் ஆறு இருந்தமை, கடல் கோள் நடந்தமை, சங்கம் இருந்தமை ஆகியவற்றை விரித்து, தலைச்சங்கத்தின் இறுதிக் கடல் கோள் கி. பி. 5550 இல் நடந்திருக் கலாம் என்று கூறுகிறார். இதன்படி சிந்துவெளி நாக ரிகம் (கி. மு. 3500 ) தோன்ற முன்னர், அதற்கும் 2000 வருடங்கட்கு முன்னர் தமிழர் தென்னிந்தியா வில் குமரிக்கண்டத்தில் நாகரிகம் பெற்று வாழ்ந்த னர் என்று கூற வருகிறார். உலக புராணம் எழுதிய தன் நோக்கம் தமிழர் நாகரிகமே மிகப் பழமை வாய்ந்த நாகரிகம் என்பதை விளக்கவே என்பதை பின் வரும் அவர் கூற்று காட்டும்.
*தமிழரது நாகரிகம் மிகமிகப் பழமைவாய்ந்தது. உலக சரித்திரத்திலே தமிழரே முதன் முதல் நாகரிக வாழ்க்கையெய்திய சாதியாரென்பதற் கும், கடல் கடந்து சென்று தமது நாகரிகத் தைப் பலப்பல நாடுகளிலும் பரப்பினார் என் பதற்கும், வாணிகத் துறையிலும், கணிதநூல், வானநூல் முதலிய நூற்றுறைகளிலும் வல் லுனராயிருந்தார் என்பதற்கும் பல சான் றுகள் கிடைத்திருக்கின்றன. இவைதம்மைச் சுருக்கமாக ஆராய்ந்து கூறுதலே உலக புராணம் என்னும் இப்பொருளுரையின் நோக்கமாகும்.17 உலகபுராணத்திலே ஆரியர் பக்கமோ, திராவிடர் பக்கமோ சாராது பழந்தமிழரது வரலாறு பற்றிக்கூறும் Father HeraS ஐப் பாராட்டும் விபுலாநந்த அடிகளார், மொகஞ்சதாரோ பற்றி HeraS கூறும் கருத்துக்களை முன்வைக்கின்றார். அவர் கருத்துக்களைத் தமிழருடன் இணைக்கிறார்.
74

"முகிஞ்சதராவிலிருந்த பழைய மக்கள் மிதுன ராசியினை “யாழ்' என்னும் பழந்தமிழ்ப் பெயரி னாலேயே வழங்கினார்களென்றும், யாழ் உரு வத்தினாலே குறியிட்டார்களென்றும் ஹீராஸ் சுவாமியார் மற்றோரிடத்திலே குறிப்பிட்டிருக் தின்றார். . முகிஞ்சதாரா நாகரிகம் பழந் தமிழ் நாகரிகத்தோடும் யூபிற்றஸ்-ரைகிறிஸ் நதிக்கரையிலே பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் விளங்கிய சுமேரிய நாகரிகத்தோடும் தொடர் புடையது என்பது அறிஞர்கருத்து, சுமேரியர் தமிழர் வழிவந்தவர்களே என்பதற்குப் பல சான்றுகள் உள' '*
என்பது விபுலாநந்தர் கூற்று. Rigvedic India Grašiv னும் நூலின் ஆசிரியரான Abinash Chandra Das பற் றிக் குறிப்பிட்டு, சோழதேயம் என்ற மொழிச்சிதைவே "சாலதேயம்" (Chaldea ) என்றும் அந்நாட்டிற்குச் சோழகுலத்தார் குடியேறியது இற்றைக்குப் பதினாயி ரம் ஆண்டுகளின் முன்னாகல் வேண்டுமென்றும் அபிநாஸ் சந்திரதாஸ் கூறுவதாகக் கூறுகிறார்.
சால்டியாவில் வாழ்ந்த சாலதேசத்தவர் வான நூலிற் சிறப்புப் பெற்றிருந்ததாக அபிநாஸ் சந்திரதா ஸின் கூற்றை மேலும் குறிப்பிட்டுச் செல்லும் விபுலா நந்தர், சால்டியா தேசத்தவர் ஆயிரத்து நானுாற்று எண்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை சிரியஸ் ( Sirius) விண்மீன் சூரியனோடு ஒருங்குதிப்பதென அறிந்து அக் கால எல்லையினை ஒரு சோதிவட்டமாகக் (Sothie Cycle ) கணிப்பது போலவே தமிழரும் பண்டைக் காலத்திற் காலத்தைக் கணித்தனர் என்பதனைச் சங்க மிருந்த கால எல்லைகள் தமிழ் நூல்களில் வகுக்கப் பட்ட முறைமையினைக் காட்டி நிறுவுகிறார். இதன் மூலம், கால எல்லையினைச் சோதிவட்டமாகக் கணித்
75

Page 45
தறியும் முனறயினனச் சால்டியாவிற் குடியேறிய சோழ குலத்தவரே அங்கு கொண்டு சென்றிருக்க வேண்டுமென்று மறைமுகமாகக் கூற வருகிறார்.அபிநாஸ் =ந்திரதாஸ் போன்றோரின் கூற்றுக்களுக்குத் தமிழ் இலக் கியச் சான்றுகளை ஆதாரமாகத் தரும் விபுலாநந்த ரின் சிந்தனைப் போக்கு இங்கு புலனாகின்றது.
பத்ளி'புராணத்திலே சலப்பிரனயமும் , மதுவரசன் அதனை எதிர்கொண்ட விதமும் கூறப்படுகிறது. மத்ச புராணத்திற் குறிப்பிடப்படும் மதுவரசன் சோழகுலத்து மன்னனே என தமிழ் நூற்சான்று காட்டிக் கூறும் விபுலாநந்தர் மத்ளிபுராணம் கூறும் சலப்பிரளயக் கதை யைத தமிழ் இலக்கியங்க கூறும் கடல் கோளுடன் இணைத்து கடல் கோளாகிய சலப்பிரளயக் கதை தென்னாட்டிலிருந்து வடநாட்டிற்குச் சென்றது என்று கூறுகிறார்." இக்கதை தான் யூபிறந்ந ஸ் - ரைகிறிஸ் நதிக்கரைக்கும் சென்றது என்றுரைக்கிறார். H, R, H3) லுடன் இதில் உடன்படும் விபுலாநந்தர், தொல்காப்பி பத்துக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையிற் கூறப் படும் நிலந்தரு திருவின் நெடியோனா கிய பாண்டியன் மாகீர்த்தியின் ஆட்சியாண்டினை சவப்பிரளயத்திற்கு முன் னிருந்த சுமேரிய மன்னர்களின் ஆட்சியாண்டுடன் ஒப்பிடுகிறார். இதுபற்றி விபுலாநந்தரின் கூற்றுப் பின் வருமாறு
"தொல்காப்பிய உரையிலே ஆசிரியர் நச்சி னார்க்கினியர் கூறிய குறிப்பொன்றினது உனங்கொள்ளுதல் இன்றியமையாததா கும். நிலந்தருதிருவின் நெடியோ னாகிய பாண்டியன் மாகீர்த்தி இருபத்து நாவா யிரம் யாண்டு வீற்றிருந்தானாதலின் ♔ ஒனும் அவன் அவையினுள்ளோரும் அறிவு மிக்கிருத்தலின் "அவர்கள் கேட்டிருப்ப" என் றலின் தமிழ் மன்னனது அவைக்களத்தா
T6

ரின் அறிவு மிகுதி தெளிவாகின்றது: கடல் கோளின் முன்னிருந்த இம்மன்னன் இருபத் தினாலாயிரம் ஆண்டுவீற்றிருந்தானென் பது நமக்கு வியப்பைக் தருகின்றது. சுமே சரித்திரத்திலும் சலப்பிரளயத்திற்கு முன்னிருந்த மன்னர் எண்மருள் ஒவ்வொ ருவரும் 18500 முதல் 43200 வரையுமுள்ள எல்லையினவாகிய ஆண்டுகள் வீற்றிருந் தார்கள் என்னும் செய்தி அகப்படுகின் றது. இரு வரலாற்றுக்கும் தொடர்புண்மை இதனால் புலப்படுகின்றது."
பிறிஸ்தவ வேதநூலான விவிலிய நூலில் வரும் கலப்பிரளயக் கதை தமிழ் நாட்டிலிருந்து சென்றிருக்க ஒவண்டுமென்றும் அதில் வரும் பெரியோனாகிய நோ (நோவா) என்னும் பொருளினதாகிய மாநோ என்னும் பெயர் சமநு" என்பதனை ஒத்திருத்தலை நோக்குக என் கிறார்.21
இவ்வண்ணம் திராவிடர் தென்னகத்தார் என்ற கற்றின் வழிநின்று திராவிடர் தமிழரே என்று நிறுவ தமிழ் நூல்களிலிருந்து உதாரணங்களைத் தருவதையும் இபளராணிகக் கதைகளாகக் கருதப்பட்டவற்றைச் சரித் திரத்துக்கு முற்பட்ட தமிழர் வரலாற்றை அறியப் :படுத்த முயற்சிப்பதையும் விபுலாநந்தரின் எழுத் துக்களிற் கார்னலாம்,
இத்தகைய கருத்துக்களினடியாக தன்னளவில் தமி ழரின் மிகப்புராதன சரித்திரம் பற்றிய கருத்துருவத்தை மெல்லமெல்ல விபுலாநந்தர் உருவாக்கிவைத்திருந்தார். தமிழ் நாட்டில் கடல் கோள் ஏற்படு முன்னர் இருந்த குமரிமுனைக்கும் பஃறுளியாற்றுக்கும் இடையில் 14000 வருடங்கட்கு முன்னர் வாழ்ந்த தமிழ்மக்களே கடல்கோளின்பின் கடல் கடந்து சென்று மத்திய தரைக்
77

Page 46
கடல் நாகரிகங்களைத் தோற்றுவித்திருக்கலாம் என்ப தும், உரோமரும் யவனரும் வருமுன்னர் மத்திய தரைக் கடல் நாடுகளில் வாழ்ந்த பழங்குடியினர் ஏற்கனவே அங்கு சென்ற தமிழ்க் குலத்தினரே என்பதும் விபுலா நந்தர் கருத்து,
1912 இல் தனது 50வது வயதிலே மதுரை இயற் நமிழ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கித் தலைமைப் பேருரை நிகழ்த்திய அடிகளாரின் பேச்சில் தமிழர் சரித்திரம் பற்றிய அவர் பூரண நோக்கு தெரிகிறது. அவர் கருத்தைச் சுருக்கமாக இங்கு தருகிறேன்.
"தமிழ்மக்கள் 14000 ஆண்டுகட்கு முன்னர் குமரி யாற்றுக்கும் பஃறுளியாற்றுக்குமிடையில் சிறப்பாக வாழ் ந்தனர். அக்காலத்தில் அவர்கள் மிகப் பெரும் நாகரிகம் பெற்றவராக வாழ்ந்தனர். கடல் கோளினால் குமரிநாடு அழிய அவர்கள் ஒதக்கோன், உ hனன் என்பேர்ர் தலைமையிற் கப்பலில் தப்பிச் சென்று எகிப்திலும், சிந்து வெளியிலும் குடியேறினர் சுமேரியாவிலே முன்னர் சோழர் குடியேறினர். அதுவே சால்டியா எனப்பட் டது. மத்திய தரைக் கடற்பகுதிகளைக் கிரேக்கரும், யவனரும் கைப்பற்றி நாகரிகம் பரப்பமுன்னர் அப்பகுதி களில் மீனவர், எத்துருஸ்கர், நூமிதியர், பேர்பெரியர், ஐபீரியர் ஆகிய பழங்குடியினர்கள் வாழ்ந்து வந்தன்ர் இவர்கள் ஆரம்பத்தில் இப்பகுதிகளில் குடியேறிய தமி ழர்களேயாம். சேர மன்னர்களும் கப்பலிற சென்று கிரீத் ( Grete ) தீவினைக் கைப்பற்றி ஆட்சிபுரிந்துள்ளனர். தமிழ்க் குலத்தின் இன்னொரு சாரார் பசுபிக் பெருங் கடலினைக் கடந்து சென்று மத்திய அமெரிக்காவிலே குடியேறி மெக்ஸிக்கோ, பீரு புக்காட்டன் முதலிய இடங்களிலே வாழ்ந்து ம 1ா ந , கந் நினைத் தோற் றுவித்தனர். இவ்வண்ணம் தமிழ் நாட்டினின்று புறப் பட்ட பாண்டியர் எகிப்திலும் சிந்துவெளிபிலு 0, சேரர் கள் கிரித்தீவிலும், சோழர்கள் மத்திய தரைக் கடல்
S.

நாடுகளிலும் தமிழர்களில் இன்னொரு சாரார் அமெ ரிக்காவிலும் (மாயா) நாகரிகங்களை உருவாக்கினார் பிள்.
விபுலாநந்தரின் வார்த்தைகளில் இக்கருத்தைச் சுருக் மோகப் பின்வருமாறு கூறலாம்:
இற்றைக்கு ஒன்பதினாயிரம் ஆண்டுகளின் முன் பூவலயத்தின் நடுப்பாகம் முழுவதிலும் தமிழ்க் குலத்தார் சீரும் சிறப்புமுற்று வாழ்ந்தனர் என்பதும் பெறப்படுகின்றன. கடல் கொண்ட அத்திலாந்தின் (Los Atlantic) தெங்கமரமும் யானையுமுடையதாயிருந்ததெனக் கூறப்படு தலின் கடல்கண்ட குமரி நாட்டின் வரலாறே மத்திய அமெரிக்காவினின்று ஐரோப்பாவினை யடைந்த ஞான்று கடல் கொண்ட அத்திலாந் திஸ் வரலாறாக உருத்திரிந்ததெனக் கொள்வ தும் ஒருதலை. *.
பபிலோனிய, சுமேரிய, சிந்துவெளி, மாய நாகரிக ங்களைத் தமிழர் நாகரிகமாகக் கொள்வது ஒரு புதிய கருத்தாகும். கடல் கோளுக்குத் தப்பிய தமிழரில் ஒரு சாரார் குமரிக் கண்டத்தினின்று புறப்பட்டுத் தாம் சென்ற இடங்களில் நாகரிகங்களை நிறுவினர் என்றும், ஏற்கனவே வியாபாரம் நிமித்தமும் போர் நிமித் தமும் சென்ற தமிழர் மத்திய தரைக்கடல் மாயா நாகரிகங்க எளின் அத்திவார இனத்தினர் என்றும் தமிழ் நாட்டின் கடல் கோள் கதையே உலக சலப்பிரளயக் கதைக்கு ஆதாரமென்றும் சில கருது கோள்களினை (Hypothesis) விபுலாநந்தர் வைக்கிறார்.
தமிழ் உணர்ச்சி மீதூரப்பெற்ற விபுலாநந்தர் மேற் குறிப்பிட்ட நாகரிகங்களுக்கிடையே காணப்படும் ஒற்று மைகளைச் சுட்டும் ஆராய்ச்சியாளர் கருத்துகளையும் திராவிடர் பற்றிய ஆராய்வாளர் சிலரின் கருத்துக
79

Page 47
ளையும், தமிழ் இலக்கியங்கள் தரும் கடல் கோள் பற் றிய கர்ணபரம்பரைக் கதைகளையும், தமது தமிழுண ச்சியையும் கலந்து இத்தகைய ஒர் கருது கோளினை முன்வைத்தாா. இது தமிழுணர்வின் பாற் பட்ட கருது கோளாயினும் இவை ஆராயப்பட வேண்டியவை என் பதில் விபுலாநந்தருக்குக் கருத்து மாறுபாடில்லை. விபு லாநந்தர் ஓர் ஆராய்ச்சியாளர் தமிழ் ஆராய்ச்சியா வளர் அறிஞர்; தன் கருத்துக்களைக் கூறிவிட்டு அவர் கூறும் வாக்கியம் நுனித்து நோக்குதற்குரியது .
இவைபோன்ற முடிவுகளையெல்லாம் வரலாற்று நூற்றுறையில் வல்லோராயுள்ளோர் காய்தல் உவத்தல் அக ற் றி நடுவு நிலைமையோடா ராய்ந்து பொருட்டொடர் நிலையினமைந்த நூல் வடிவாக்கித் தருதல் வேண்டும். 23
இவை முடிவுகளேயொழிய முடிந்த முடிவுகள் அல்ல என்பதும், இவை வரலாற்றுத்துறையிலுள்ளோரால் ஆரா பப்பட வேண்டியவை என்பதும் விபுலாநந்தர் கொள் கையாம். தமிழ் உணர்ச்சி ஒரு பக்கம் இழுக்க - அறிவு உலகு மறுபக்கமிழுக்க இடையில் நிற்கும் விபுலாநந்தர் தான் நம்முன் காட்சி தருகிறார். உலக புரானத்தில் "இளமாணக்கருக்குக் கல்வி பயிற்றும் போதகாசிரியர் சுள் தமிழ்க்குலத்தாரின் பழமையையும் செழுமையை பும் ஆராய்ந்துணர்ந்து மாணவர்க்கு அறிவுறுத்துவார் களாக என்று கூறும் விபுலாநந்தர் 1942 இல் ஆற்றிய உரையில் நடுவு நிலைமையோடாராய்ந்து நூல் செய்யு மாறு கூறுகிறார்.
கவியோகி சுத்தானந்தர் கூறுவதுபோல தமிழ்த் துடிப்பு விபுலாநந்தர் உடலெல்லாம் இருந்தது என்ப தற்கு இவை சான்றுகளாகும். பலருக்குத் தமிழ்வெறி ஏற்றினார் என்பதும் இவற்றினின்று புலனாகின்றது. எனினும் இவை ஆராயப்பட வேண்டியவை எ ன் ற கருத்தும் அவரிடம் மதயானையை அடக்கும் அங்குசம்
SO

போல மனதில் இருந்தது என்பதும் புலனாகின்றது. இத் தகைய கருதுகோள்களை (Hypothesis) முன்வைப்பதும் ஆராய்வதும் ஆராய்ச்சியின் போக்கில் அதுமேலும் வளர் வதும், அல்லது மறுக்கப்பட்டு அக்கருத்து அழிவதும் ஆராய்ச்சி உலகில் சகஜம்.
தம் காலத் தமிழுணர்வுச் சூழலுக்கு ஏற்ப விபுலா நந்தர் தமிழர் பூர்வீகம் பற்றிய தன் கருத்துக்களைத் தருவதோடு ஒரு படிமேல் சென்று உலகின் பூர்வீக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடி தமிழர்களே என்றும் கூறினார். இக்கூற்றுகள் தமிழுணர்ச்சி மிக்கோர் மத்தி யில் பெருவரவேற்புப் பெற்றிருக்கும். ஆராய்வாளர் மத்தியில் அதிக வர வே ற் பு ப் பெற்றிராத இக் கூற்றுக்கள் இன்றும் ஆராயப்படுகின்றன பூர்வீக நாகரி கங்களின் முன்னோடி தமிழரே என்பது பற்றி எவரும் இன்னும் கருத்துக்கள் கூறினாரில்லை. விபுலாநந்தரின் அக்கருத்துக்களைத் தொடர்ந்து எடுத்துச் செல்லும் யாரையும் சரித்திர உலகில் கண்டோமில்லை. எனினும் குமரிக்கண்டம் பற்றி அவர் கூறும் கருத்துக்கள் அண் மைக்காலமாக ஏற்கப்படுவதனை அவதானிக்கலாம்: அங்கு மக்கள் இருந்தார்கள், நாகரிகம் இருந்தன பற் பிய கருத்துக்கள் அல்ல அவை, குமரிக்கண்டம் இருந் தது என்ற கருத்தே இன்று நிரூபித்தலுக்கு அண்மை
பில் வருகிறது .
ஆராய்ந்த எழுபதுபேர் கொண்ட இரஷ்யாவின் விஞ் ஞான அறிவுக் குழுவினர் அம் மாகடலின் அடிப்பொ ருளை ஆராய்ந்ததன் பயனாக அங்கே 1000 லட்சம் ஆண்டுகட்கு முன்னர் நிலப்பரப்பு இருந்ததென்றும் இலங்கைக்குத் தென்கிழக்கில் 50 கல் தொலைவில் ஆழ்கடலில் 10,000 அடி உயர மலை உள்ள தென்றும் முடிவு செய்து அந்த உண்மையை உலகுக்கு உணர்த்தி புள்ளனர். அந்த ஆய்வுக் குழுத் தலைவராகிய பேராசிரி
அண்மையில் இந்துமீT பெருங்கடலை ஆழ்ந்து
8.

Page 48
LSLSS SLS LS GtGLSTTTTL SLL S LLCLLLLLSS TTTTTTTT 20 - 2 - 61 இல் இந்த உண்மையை வெளியிட்டார்.24
எதிர்காலத்தில் செய்யப்படப் போகும் ஆய்வுகளே ஃபுலாநந்தரின் தமிழர் பூர்வீகம் பற்றிய கருத்துக்களை எலுவுடையதாக்கும் அல்லது வலுவற்றதாக்கும். எனி ஒனும் விபுலாநந்தரின் காலச் சூழலும், தமிழுணர்ச்சி பும் அவர் ஆராய்ச்சி களைப் பாதித்தன என்பதே நாம் இங்கு மனம் கொள்ளத்தக்கதாகும்.
. ܒ . தமிழ் மொழி இலக்ானம் L I i )Ji) L I 5hi L[5l'II j!j.fg, TT I I t i r r si 3 | Fı I
ஏனைய மாழிகளின் தொடர்பின்றித் தமிழ் தானே இயங்கும் பெற்றியது என்ற கால்டுவெல்லின் கூற்று தனித்தமிழ் இயக்கம் வரை விதையூன்றிவிட்டது. தமிழ் மொழி பழமையானது. தனித்துவமானது, பிறமொழி உறவுகள் அதற்குத் தேவையில்லை என்ற கருத்துகள் இதனால் எழுந்தன. தமிழின் தொன்மைபற்றியும் அதன்
தனித்துவம் பற்றியும் விபுலாநந்தர் கொண்ட கருத்து
களுக்கு கால்டுவெல்லின் கருத்துகளே ஆதாரமாகும். தமிழ்த்தனித்துவம் பற்றிய இவர் கருத்துகள் இவரின் ஆராய்ச்சியையும் தாக்கியுள்ளது.
உலகச் சுருக்கமும் ஏனைய மொழிகளோடு அறாத் தொடர்பினைத் தமிழ்மொழி பெறுதலுமாகிய இக்காலச் குழவில், பிறமொழிச் சொற்கள் தமிழ்மொழியிற் களித்த லும் அவற்றைத் தமிழ்மொழி உள்வாங்குதலும் இயல்பு. பேராசிரியர் சுந்தரம்பிள்ளை சொன்ன தமிழ் அணங்கின் சீரிளமைத் திறத்தினை (தூய தமிழை - பிறமொழிக் கலப்பற்ற தமிழை - முக்கியமாக வடமொழி கலவாத தமிழை-எழுத்து மொழித் தமிழை) செந்தமிழை கையா ளுவதன் மூலமே பேணமுடியும் என்று மறைமலையடிகள் போன்றோர் எண்ணினர். தனித் தமிழியக்கம் இவ்வடிப் 1டையிலேயே உருவானது. அக்காலப் பண்டிதர் அனை
S2

வரும் பேச்சுத் தமிழுக்கு எதிரானோரே, இலக்கணத் தமி ழின் இரட்சகர்களான இவர்கள் செந்தமிழ் பேசுதலே தமிழ் பேசுதல் என்று எண்ணினர். தமிழுக்குப் புரட்சிக் கவிஞராக அறிமுமான பார திதாசன் கூடத் தமது பாட் டொன்றில் காதலி கொச்சைத் தமிழில் பேசிவிட்டாள் என்பதற்காக அவளைக் கைவிட்ட சாதிவின்ை ஆதர்ச (ideal ) , siji. காதலனாகக் காட்டுகையில் பண்டிதர் முதல் புரட்சிப் பாவலர் வரை தமிழ் மரபு பிடித்தாட்டிய
ங் ஒயினைப் புரிந்து கொள்ளலாம்
இச் சூழலிலேதான் தனித் தமிழில் தங்கள் பெயர் சனள மாற்றிக் கொள்ளும் வழக்கம் அக்காலத் தமிழ் அறிஞர்களுடையே உருவாயிற்று சுவாமி வேதாசலம் பிள்ளை என்ற வடமொழிப்பண்பு மிக்க பெயரை (வேதம் - மறை, ஆசலம் - மலை மறை மலையடிகள் என வேதா சலம்பிள்ளையவர்கள் மாற்றியமையும், சூரிய நாராயண சாஸ்திரியார் தன் பெயரை பரிதிமாக்கலைஞன் என மாற்றியமையும், நவநீத கிருஷ்ணன் வெண்ணெய்க் கண் ணனார் என மாற்றியமையும், பிற்காலத்தில் பேரா விரியர் க. கணபதிப்பிள்ளை தன் புனைபெயராக(கனம்குழு, பதி - இறை) குழு உஇறையனார் என மாற்றியமை பம் தனித் தமிழியக்கத்தின் தாக்கமே.
இத்தனித் தமிழியக்கத்தின் தாக்கம் அன்றைய புல வர்களை மாத்திரமன்று நாடகக் கலைஞர்களையும் தாக் கியது என்பதற்கு சேக்ஸ்பியரின் Cymbeline Frhuis 35 முதலியாரால் (1914) சிம்மளநாதன் எனவும், Othell) பி எஸ் துரைசாமி ஐயங்காரால் (1910) யுத்தலோடின் 51 $T & Lb ಛ| மாதவைபரால் (1918) உதயன், କt୍ ଈ||h Hamle" | 7. 4rı i: L'i fi முதலியாரல் (1908) அமலாதித் gjit ST 53 Gayub, Macbeth சம்பந்தமுதலியாரால் (1910) சபதி என ஆக்கப் பட்டமீையும் சர்ன்றுகளாகும். ஆங் லெப் பெயர்கள் தமிழ்ப் ெ பூர்களாக ஆக்கீம் பட்ட மையே இங்கு குறிப்பிடத்தக்கதாகும் .
tril
t". وة ة الألم من في إيه سيد عليهم 3 8 |
.ളു-"

Page 49
விபுலாநந்தருக்கு தனித்தமிழியக்க முன்னோடிக னதும் நீ விர செயற்பாட்டாளர்களினதும் (activist) தொடர்பு இருந்தமைக்குச் சான்றுகளுண்டு. எனவே கரிழ்மொழிப்பற்றும் தீவிர தமிழுணர்ச்சியும் கொ 'ந்த விபுலாநந்த அடிகளார் இத்தகைய ஒரு போர் நீரின் செல்வாக்கிற்கு ட்படுதல் தவிர்க்க (' பாததே.
மதங்க சூளாமணியில் (1921) தன் ஆராய்ச்சிக்கு சேக்ஸ்பியரின் சில நாடகங்களிலிருந்து சில பகுதிகளை மொழிபெயர்த்துத் தரும் விபுலாநந்தர், அந்நாடக ॥ ஆங்கிலப் பெயர்களைத் தமிழில் திரு :பில் தனித்தமிழ் இயக்க முன்னோடிகளை பின்பற்றுவதைக் காணலாம். Macbeth மகபதி < qଦୀ ଜyli) Alonso 2, GRP IT LIIAT, Gör GT 537 ay tři Antonio அனந்தன் எனவும் McCuli) மார்த்தாண்ட சோழன் GT GJIT Gyth Tyball தீவலமல்லன் எனவும் Juliet சுசீலை &Ta:Tah Roleo இரம்மியன் எனவும் அடிகளாரின் நூலில் தமிழ் நாம்ம் பூணுகிறார்கள். இவை தனித் தமிழ்ப் பெயர்களன்று. தமிழ் மயப்படுத்தப்பட்ட பெயர்களாகும்.
இவ்வண்ணம் தமிழைப் பிறமொழி கலவாது எழுத வேண்டும் என்ற எண்ணமும் தனித்தமிழியக்கத்தின் வாடையும் மரபுவழித் தமிழ்ப் பயிற்சியும் விபுலாநந் கனி மரபின் மீது பற்றிறுக்கம் கொள்ளச் செய்கிறது. "தமிழ் மொழியை மரபு தவறாது ஆராய்ந்து கற்றோரும் அவ்வாறு கற்றுத் தேறியவரை வழிபடுவோ ரு மாகிய இரு சாராருமே உண் எனிமித் தமிழ் தொண்டிற்கு உரியோ
г/т, ал гтті. " 25
என்று கூறும் விபுலாநந்தர் மரபை ஆதரிப்பது மாத்திரமன்றி
'முன்னோர் மொழி பொருளையும்
மா' பட்ட இலக்கரை 'ர' வுகளை

பும் ஆராய்ந்தறிந்து கொள்ளாது நெறியலா மக்களை மயக்கி அவர் தம்மை நெறியல்வா நெறியிற் புகுத்தி ஆரவாரிப்போர் செயலானது குரு டனைக் குருடன் வழிநடத்துவது (ITG, T, n. "?
என்று கூறுவது மரபைப் போற்றுவதுடன் இலக் 33 மரபுகள் அறியாது எழுதுவோர் கீரின் க்கப்படத் சுக்கவர் என்ற் அவர் கருத்தையும் காட்டுவதா புள் rது. தமிழ் மொழிப் பழமை துப்மை பற்றி விபுலா நந்தர் கொண்ட கருத்துக்களே தமிழ் மரபு பேனல் அதன் இலக்கண மரபு பேணல் என்ற நிலைக்கு அவ ரைக் கொணர்ந்தது எனலாம்.
மரபு பேணப்பட வேண்டும் என்ற கருத்து உறுதி பானதும் எது மரபு? எது தமிழ்? என்ற வினா எழுதல் இயல்பு. தமிழை மரபு வழித் தமிழ் பண்டிதர்களிடம் அறிந்தது மாத்திரமன்றி தாமாகவே மொழி பற்றிய நவீன கருத்துக்களை அறியும் வாய்ப்பும் அடிகளாருக்கி ருந்தது. மொழியியல் ஆய்வுகள் தமிழிற் பெரு விருத்தி புறாத காலத்தில் அடிகளார் வாழ்ந்திருப்பினும் 1850 லிருந்துகால்டுவெல் தொடக்கி வைத்த மொழியியலாய்வு குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் மொழியியலாய்வு Philology எனக் குறிப்பிடப்பட்டது. கால்டுவெல்லின் குப் பின்னர் திராவிட மொழிகள் அதன் கிளைகள் கொள்கைக் பற்றிய ஆய்வுகள் எழலாயின.இருபல்கலைக் கழகங்களிற் பேராசிரியராகக் கடமை புரிந்த விபுலாநந் தர் மொழியியல் ஆய்வுகள் பற்றியும் அறிந்திருப்பார். மொழியியல் ஆய்வு பற்றிய அறிவு தமிழ், சோழநாட் டுத் தமிழ், ஈழநாட்டுத் தமிழ், பாண்டி நாட்டுத்தமிழ் எனவும் இன்னும் பல உட்கிளைகளாகவும் பிரிந்து கிடப் டணத அடிகளாருக்கு அளித்திருக்கும். சோழமண்டலத்
85

Page 50
தமிழும் ஈழமண்டலத் தமிழும் என்ற ஒரு கட்டுரையில் மரபு வழித்தாக்கமும், தமிழுணர்ச்சியும் பெற்ற விபுலா நந்தர்.
எது தமிழ் என வினவுவார்க்கு டாண்டியன் தமிழே தமிழ் என்போம்
என்கிறார். தராதர ஆங்கிலத்தை-அரசவை சார்ந்த உயர் குழாத்தினரின் ஆங்கிலத்தை வேந்தன் மொழி (King language) என அம்மொழிப்புலவோர் விதந்து கூறு வது போல தமிழினைப் பாண்டியன் தமிழ் என நாம் கூறவேண்டும் என்பது அடி சளார் கருத்து.
இன்றைய மொழியியல் ஆய்வும், வளர்ச்சியும் இவ் வண்னம் கூறாது. மொழியியல், மக்கள் பேசும் தமிழே வாழும் தமிழ் என்று கூறும். ஆனால் விபுலாநந்தர் பாண் டியன் தமிழையே தமிழ் என்கிறார்.ஆமக்கள் பேசும் தமிழை முன்னிறுத்தாது. மன்னரைச்சார்ந்த உயர் குழாத்தினர் பேசும் தமிழை முன்னிறுத்தியமை இலக்கணம் கூறும் முறைக்கியைய ஒரு செயற்கை நடையில் - எழுத்து நடை பயிற் பேசும் - எழுதும் முறையினை மனதிற் கொண்டே பாம்.
தமிழ் உணர்ச்சியும், தமிழின் தொன்மைபற் நிய கருத்துருவமும் விபுலாநந்தருக்கு மொழித் தூய்மை, மரபு பேணும் மனப்பாங்கைக் கொடுத்திருப்பினும், நடை முறை வாழ்வும், அதனாற் பெற்ற அனுபவ அறிவும், அவர் பெற்ற நூலறிவும் இக்கருத்துக்களை விட மாறு பட்ட கருத்துக்களையும் அவருக்குத் தந்தன.
மதங்க சூளாமணியில் ஆங்கிலப் பெயர்களுக்குத் தக தன் முன்னோரை அடியொற்றித் தமிழுருவம் தந்த அபு சனார், அத்தகைய பெயர்கள் சிலவற்றை வட மொழிப் பெயர்களிலும் அமைத்திருப்பதனை அவ YS SLLL LSLLS S LT S T TTTT TTS LLLLLLLLuSS STTTTTTSS
86

மன்னன் எனவும், Foolஐ விதூஷகன் எனவும் பு:ஐ ஜயதேவன் எனவும், Porticஐ, விஜயை எனவும் மாற்றி யிருப்பதைக் காணுகையில் மறைமலையடிகள் போன் றோரைப்போன்று தனித்தமிழ்ப்பற்றுக் கொண்டவராக விபுலாநந்தர் இருக்கவில்லை என்பதும் தெரிகிறது. வட மொழி எதிர்ப்புவெறி தனித்தமிழ் இயக்கக்கொள்கை பினரைப் போல இவரிடம் இருக்கவில்லை என்பதுடன், நிதானமான ஒரு நோக்கு இவருக்கிருந்தது என்பதனைப் பின்வரும் இவரது கூற்றுக் காட்டுகின்றது.
கூட மொழி, தமிழ்மொழியெனுமிருமொழிக் கும் இலக்கணம் ஒன்றேயென்று எண்ணுக" என்னும் கூற்றினை நாம் முற்றிலும் ஒப்புக் கொள்ளாவிடினும் வடமொழிவியிருந்தெடுத்து தமிழான்றோராலே தமிழுருவாக்கி வழங்கப் பட்ட சொற்களைப் பிறமொழிச் சொற்க ளெனக் கடித்தொதுக்குதல் மேற்கொள்ளாது அவைதம்மை ஆக்கத் தமிழ் மொழியாகத் தழுவிக் கொள்வதே முறையாகும்.28
விதுரஷகன் , விஜயை ஜயதேவன், பிரியதர்த்த םTe$ש, ז பெயர்கள் யாவும் வடமொழிப் பெயர்களே. ஆனால் இவை யாவும் தமிழ் ஆன்றோரால் வழங்கப்பட்ட பெயர் கள் என்ற கருத்தே விபுலாநந்தர் கருத்தாகும். இக் கருத்து அன்றைய தீவிரத்தனித் தமிழியக்கத்திலிருந்து இவரை வேறு படுத்தும் கருத்தாகும்.
இவ்வண்ணம் மொழிபற்றிய ஒரு தாராளக்கொள்கை உருவாதற்கு இவருடைய பன்மொழி அறிவுடன், இவர் கலை சொல்லாக்கத்திலீடுட்டிருந்தமையும், பிறமொழிச் சொற்களுக்கு பல புதுத் தமிழ்ச் சொற்களை உருவாக்கிக் கொண்டிருந்தமையும் உலக அறி ன வ தமிழுக்குள் கொணர பண்டைய தமிழ் மாத்திரம் போதாது என்ற உண்மைகளை இவர் நடைமுறையிற் சுண்டு கொண்ட
S7

Page 51
மையும் இவரின் பொழிபற்றிய தாராளக் கொள்தைத் (3,š; J. TJ 5331 či „FG7 T+8: h.
சோழ பண்டலத் தமிழும். ஈழமண்டலத் தமிழும் என்னும் கட்டுரையில் வட நாட்டிலிருந்து வெளிவரும் மாடன் ரிவியூ என்னும் ஆங்கில மாசிகை ஒன்றிலே '', Ali Grit is pair firi (The phonetics of the Tamil Language) என்னும் பொருள் பற்றி எழுதிய தன் வியாசம் பற்றிக் குறிப்பிடுகையில்,
"குறித்த வியாசத்திலே தமிழ் நாட்டு மக்கள் இக்காலத்திலே, திண்ணையிலும், தெருவி லும், கடை வீதியிலும், தொழிற்சாலையி லும் வழங்கம் தமிழ் மொழியின் சிறப்பி பன் புக சிலவற்ற எடுத்துக் கீாட்டினேன். அஃதன்றியும் பு:சீமான், டி. கே. சிதம்பரநாத முதலியாரை உள்ளிட்ட தமிழன்பர்கள் தமிழ் மக்களது வழக்கு மொழியாகிய உயிர்த்தமிழினது அழகினையும் ஆற்றலினை பும் தீர விசாரித்து ஆவன செய்ய வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்." 23
என்கிறார். வழக்குத் தமிழின் சிறப்பியல்புகள் என்று குறிப்பிடுவதும், வழக்குத் தமிழே உயிர்த்தமிழ் என்பதும், அது அழகுடன் ஆற்றலும் வாய்ந்தது என்பதும் ாார் கருத்து,
மரபுவழி - இலக்கணப்படி எழுத வேண்டுமென்று கூறும் அடிகளார் வழக்குத் தமிழே உயிர்த்தமிழ் என்று கூறுவது முரணாகத் தெரியினும் இது முரணன்று.
அறிவும், நடைமுறையும் விபுலாநந்தரை தமிழு ணர்ச்சிச் சுழிக்குள்ளிருந்து நிஜ உலகுக்கு இழுத்து வந்து விட்டது. உணர்ச்சி பாண்டியன் தமிழ் பக்கம் நிற்க அ யி பி சாதாரண மக்கள் தமிழின்பக்கம் நிர்விறது.
SS
 

உணர்ச்சி தூய தமிழ் மொழிப் பிரயோகத்தின்பால் திற்க, அறிவு அது பிழை எனச் சாற்றுகிறது.
தமிழ்மொழி ஆராய்ச்சியிலீடுபாடுடைய விபுலாநந் தர், மொழி காலத்திற்குக் காலம் மாறுகின்றது என் பதையும், அதை மாற்றி வளர்த் தெடுப்போர் சாதார ணமக்களே என்பதையும் அறிந்து வைத்திருந்தார். கம்ப இராமாயண காலத்தில் எல்லோரும் பேசிய தமிழை அறிய இராமாயணத்தைவிட அக்காலக் கல்வெட்டுகள் தான் உதவுகின்றன எனக்கூறும் அடிகளார், கவித் தொகையில் உலக நடையும், வழக்கு மொழியும் வரு வதைக் கூறுகிறார்.
"ஒருவர் பிறந்த தாலுகா, ஜில்லா,அவரது குலம், கோத்திரம், தொழில், பொருணிலை என்னுமி வற்றை அவரது மொழியினின்று அறிந்து கொள் கிறோம். ஆதலினாலே எல்லாரும் எல்லாவிடத் தும் உயர்ந்தோர் வழக்கையே கைக்கொள்ள வேண்டும் என்பது எனது கருத்தன்று, தாம் தாம் வழங்குகின்ற வழக்கு மொழியையே நயம் பட உரைக்கப் பயின்று கொள்ள வேண்டும்."39
பாண்டியன் தமிழே தமிழ். அதுவே நிலைபேறுடை யது. அறிஞர் போற்றற்குரியது என்று கூறிய அதே அடி களார், பின்னால் எல்லாரும் எல்லா இடத்தும் உயர்ந் தோர் வழக்கைக் கைக்கொள்ள வேண்டும் என்பது தன் கருத்தன்று என்பதும் வழக்கு மொழியாகிய உயிர்த்தமிழ் என்பதும் அடிகளார் தமிழ்மொழிபற்றி வைத்திருந்த கருத்துக்களைக் காட்டுவனவாயுள்ளன.
தமிழுணர்ச்சிக்கும், ஆராய்ச்சியறிவுக்குமிடையில் நின்ற அடிகளார் தமிழுணர்ச்சிமீ தூரப் பெற்று மரபை அழுத்தினும், தனித்தமிழை வரவேற்றினும், நடைமுறை யில் அவ்வாறு முடியவில்லை. தமிழுணர்ச்சி அவரை வெகுவாகப் பாதித்தது. அதேநேரம் அறிவு அவரைச்
89 -
T -
. . . . .7
| LL if . f .اقات اها = آرا: ع = 1 = صة || || || ||

Page 52
சதா உறுத்திக்கொண்டே இருந்தது என அமைதி காணுதலே பொருத்தமுடைத்து போலத் தோன்றுகிறது.
மதங்கசூளாமணியின் தமிழுணர்ச்சி
விபுலாநந்தரின் இரண்டு முக்கிய ஆய்வு நூல்கள் மதங்க சூளாமணியும் (1924) யாழ் நூலும் (1943) . தமிழர் பண்டு பெருமையுடன் வாழ்ந்தனர்; அவர்கள் பெரு நாகரிகம் பெற்று வாழ்ந்தனர் எகிப்திய, சுமேரிய, சிந்து நாகரிகங்களுக்கு நாகரிகத்தை வழங்கும் அளவு நாகரிகம் பெற்றிருந்தனர் என்ற கருத்துகளைக் கொண் டிருந்த விபுலாநந்தர், மதங்க சூளாமணியிலும் பண் டைய தமிழர் நாடகத்தையும், யாழ் நூலில் பண்டைய தமிழர் இசையையும் பற்றிக் கூற முனைகிறார்.
உறுப்பியல், எடுத்துக் காட்டியல், ஒழிபியல் என மூன்று இயல்களாக வகுக்கப்பட்டுள்ள மதங்க சூளா மணியில் தமிழுணர்வின் தாக்கம் தெரிகிறது. முன்னு ரையில் அவர் சேக்ஸ்பியர் நாடகம் பற்றிக் கூறுகையில் . "இவர் அமைத்த நாடக நூல்கள் தமிழறிஞர் வகுத்துரைத்த சந்தியும், சுவையும், சத்துவமும், பிறவும் என்னும் நாடக உறுப்புக்களனைத்தும் செவ்விதினமைந்து கிடக்கும் இயல்பின வாத லின் அவற்றை ஆராய்தல் நாடகத் தமிழுராய்ச் சிக்கு இன்றியமையாததாமென எனது உள் ளத்துப் புலப்பட்டது. ’’31 என்கிறார். தமிழறிஞர் ஏற்கனவே வகுத்துரைத்த நாடக உறுப்புக்கள் என்று கூறுகையில் தமிழில் நாடகம் பற்றி ஏற்கனவே கோட்படுகள் வகுக்கப்பட்டுள்ளன என்ற கருத்து விபுலானந்தருக்குண்டு என்பது தெளிவா கின்றது. வகுக்கப்பட்டிருக்குமாயின் அதற்கு ஆதார நூல்கள் வேண்டுமன்றோ? அத்தகைய நூல்கள் இருந் தன, ஆனால் இறந்தன என்ற கூறி அந்நூல்களை
90

அடியார்க்கு நல்லாருரையை ஆதாரம் காட்டி, பரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், குணநூல் என நாடக நூல்களின் பெயர்களைத் தந்து இவை அடியார்க்கு நல்லார் காலத்துக்கு முன்னரே அழிந்து போயின என் கிறார். பின்னர், இசைநுணுக்கம், இந்திரகாளியம்,பஞ்ச மரபு, பரதசேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற நூல்களின் பெயர்கூறி இவற்றினின்று எடுக் கப்பட்ட சில சூத்திரங்கள் அடியார்க்கு நல்லார் உரை யால் அறியக்கிடக்சின்றன என்கிறார்.
இவ்வண்ணம் அடியார்க்கு நல்லார் உரை மூலம் கிடைக்கும் நாடக ஆதாரங்களை ஒன்று திரட்டி அவற் றின் கருத்துக்களையே தமிழ் நாடகமரபாகக் கண்ட விபுலானந்தர் அவற்றை ஆதாரமாகக் கொண்டே சேக்ஸ் பியரின் நாடகங்களை அணுகுகின்றார். அவரது பின் வரும் கூற்று இதனைப்புலப்படுத்தும்:
*சிலப்பதிகார உரையில் ஆங்காங்கு காட்டப் பட்டிருக்கும் நாடக இலக்கண முடிவுகளை ஆதாரமாக நிறுத்தி, செக சிற்பியாருடைய நாடக நூல்களை இலக்கியமாகப் பொருந்த வைத்து ஆராய்வது கருதிற்று இவ்வாராய்ச்சி. 32 இது மதங்க சூளாமணி முன்னுரையில் வரும் விபு லாநந்தர் கூற்றாகும்.
தமிழின் நாடகம் இருந்தது; நாடக இலக்கணம் இருந்தது என்று நிறுவுவதும், அவற்றை அடியாகக் கொண்டு உலக நாடக ஜாம்பாவானான சேக்ஸ்பியரை அளந்தறிவதும் அவர் நோக்கம் என்பதை முன்னுரையில் வரும் கூற்றுக்கள் தெளிவுபடுத்துகின்றன. எடுத்துக் காட்டியலில் இது செய்யவும் படுகிறது. ஒழிபியலில் வட மொழியாசிரியராகிய தன ஞ் செயனாரின் தசருபக (நாடக இலக்கணம்) மொழி பெயர்ப்பாக உள்ளது.
Maceb:lhg? LD5Lug) GT GOTajib, Julretg 5F6FM av GT Gor` வும் தமிழ் மரபுக்குள் தன்வயமாக்கிக் கொண்டதைப்
91

Page 53
போல சேக்ஸ்பியரின் நாடகங்களையும் தமிழ்நாடகமர புக்குள் கொணர முயல்வதை எடுத்துக்காட்டியலில் கான லாம். சந்தியை முகம், பிரதி, முகம், கருப்பம், விளைவு துய்த்தல் என வகுக்கும் அடிகளார் அவ்வடிப் படையி லேயே சேக்ஸ்பியர் நாடகங்களை ஆராய்கிறார். இவை நாடகம் பற்றிய நாட்டிய சாஸ்திர அணுகுமுறையாகும். சிந்தி, பிரதிமுகம், கருப்பம் என்ற சொற்களே வட மொழிச் சொற்களாம். "மேனாட்டாரின் கமெடி(Comedy) பிறஜெடி (tragdேy) என்பதை நாம் வேத்தியல் பொது வியல் எனவும் கூறலாம்" என்று விபுலாநந்தர் சொல் துெ மேனாட்டு நாடகமரனபத் தமிழ் LDTL Joh Jr. LT3, உள்வாங்கும் தன்மையையே காட்டுகிறது.
தமிழருக்கென்று ஒரு நாடகமரபு உண்டா? உண் டாயின் அதுயாது? என்பது இன்று தமிழ் நாடக ஆய் வாளருக்கு சவால் தரும் ஒரு வினாவாகும்.
நாட்டிய சாஸ்திரம் மார்க்க, தேசி என்ற இருவகை பான நாடகபரபுகளைக் கூறுகின்றது. இரண்டும் இந் திய கண்டத்தில் வழக்கிலிருந்த நாடக மரபுகள் தான்.
மார்க்க உயர் செந்நெறி நாடகமரபு. இது பொது, ரபு தேசி அவ்வத்தேசங்களுக்குச் சிறப்பாக உரிய நாடக மரபு. தேசி இடத்துக்கு இடம் தேசத்துக்குத் தகமாறு படும் .
ஆரியமயமாக்கம் காரணமாக இந்தியாவின் சமஸ் கிருத மொழி பல மாநிலங்களுக்குப் பரவியது. சமஸ் கிருதமயமாக்கம் காரணமாக நாட்டிய சாஸ்திரம் கூறிய மார்க்கமரபு சகல பிரதேசங்களிலும் உயர் கலையாகச் செல்வாக்குற்றது. அத்தோடு அவ்வப்பிரதேசத்திற்குரிய தேசிக்கலைகளிலும் இது செல்வாக்கினைச்செலுத்தியது. இதேபோல தேசியின் செல்வாக்கு மார்க்கவிலும் ஏற் பட்டது. இரண்டும் இணைந்ததான ஒரு பொதுமரபே இன்று இந்தியாவின் நாடகமரபாக எண்ணப்படுகிறது
92

எனவே தான் சிற்சில வேறுபாடுகள் காணப்படினும் இந்திய பாரம்பரிய நாடகங்கள் அனைதிலும் அதன் அமைப்பு அவைக் காற்றுமுறைகள் ஆகியவற்றில் பெரு மளவு ஒற்றுமை காணப்படுகின்றன.
கடந்த கால நாடக ஆய்வுகள் இவ்வுண்மைகளை எமக்குத் தருகின்றன. இன்றும் ஒவ்வொரு இந்தியப் பிரதேச மக்களும் - அப்பிரதேச நாடகம் பற்றி ஆராயும் நாடக ஆய்வாளரும் அவ்வப்பிரதேச நாடக மூலங்களை (தேசிநாடகம்) - அதன் தனித்துவங்களைத் தேடமுனை கிறார்கள். கன்னட யக்ஷ கானம், கேரள கதகளி என்பன இவ்வாறு வளர்ச்சி பெற்றனவேயாகும்.
இவ்வகையில் தமிழரின் நாடகமரபைத் தேடிக்கான 60 வருடங்களுக்கு முன்னர் விபுலாநந்தர் முயற்சிகள் மேற் கொண்டமை அவரது நுண்மாண் நுழிை புஸ்தி தையும், தூர நோக்கையும் காட்டுகிறது.
அடியார்க்கு நல்லார் உரையைத் தமிழ் நாடக முடிவுகளாகக் குறிக்கும் அடிகளார், அவர் காட்டும் நூல்களினின்று உரைமுலம் ஆதாரம் தரும் அடிகளார் அவற்றிற்க்ான மூலத்தைக் குறித்தாரில்லை. நாட்டிய சாஸ்திர விதிகளுக்கமையவே இந் நூல்களின் கூற்றுக் களும் காணப்படுகின்றன. நாட்டிய சாஸ்திரத்துடன் இவற்றை இணைத்து அடிகளார் எங்கு ம் குறிப்பிட ல்லை. அவ்வண்ணமாயின் இந் நூல்கள் கூறும் கருத் துக்கள் பற்றி அடிகளாரின் கருத்து என்ன?
ஒன்றில் அவர்கருந்து இக்கருத்துக்கள் தனித்துவ மானவை என்பதாயிருக்களாம். அல்லது தமிழ்க் கருத் துக்களையே நாட்டிய சாஸ்திர ஆசிரியர் கூறியுள்ளார் என்பதாயிருக்கலாம். தமிழரே நாகரிகம் மிகுந்த பண் டைய இனம் உலகுக்கு நாகரிகம் தீத்த இனம் என்ற கருத்துக் கொண்டிருந்த அடிகளார் பின்னைய கருக் தையே கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. எனி
93

Page 54
ணும் இதுபற்றித் திட்ட வட்டமான முடிவு அவருக்கு இன்மையாலேயே அவர் தமிழ் நாடகக் கருத்துக்களை நாட்டிய சாஸ்திரத்துடன் ஒப்பிடவில்லை என்று நாம் அமைதி காணலாம்.
வடமொழி ஆசிரியரான தனஞ் செயனாரின் தச குபகத்தைத் தமிழில் தந்தமை விபுலாநந்தரை மேலும் விளங்கிக் கொள்ள எமக்கு ஒருதிறவு கோலைத் தருகி றது. வடமொழி நாடக மரபு தமிழுக்கும் இயைபுடையது என்ற கருத்து விபுலாநந்தருக்கிருந்தது என்பதனை இது காட்டுகின்றது. எதிலிருந்து எது வந்தது? என்பதுதான் அவருக்குள்ள பிரச்சனையாயிருந்திருக்கலாம்
இப்பிரச்சனைகள் எல்லாம் அவருக்கு இருந்தன என்பதனையே அவர் முன் னுரையில் கூறும்பேனாளில் ஒய்வு ஏற்படுமாயின் வழுக்களைக் களைந்து, புதுக்கி எழுதுவேன் என்ற கூற்று வெளிப்படுத்துகிறது.
இங்கும் அவர் ஆய்வைத் தமிழுணர்ச்சி முன் தள் ளூவதையும், அதேநேரம் அறிவு அதை நிதானப்படுத்து வதையும் காணுகின்றோம்,
யாழ்நூலில் தமிழுணர்ச்சி
விபுலானந்தரின் ஆராய்ச்சிகளுள் கொடுமுடியாக வைத்து எண்ணப்படுவது யாழ் நூல், நாகரிகமும் சிறப் பும்மிக்கு வாழ்ந்தபண்டைய தமிழர்கள் கையாண்ட இசையை வெனிக் கொணர்தலே அவரின் நோக்கமாகும். எகிப்திய யாழினையும் ச ங் சு இலக்கியங்களையும் ஆதாரமாகக் கொண்டு பண்டைத் தமிழர் கையாண்ட யாழ் பற்றியும் அதன் அமைப்புகள் பற்றியும் கூறுகி ார் விபுலாநந்தர். பண்டைய யாழ்களை மீளுருவாக் கியும் காட்டுகின்றார். வில் யாழ், பேரியாழ், சிறியாழ், சகோடயாழ் என யாழ்களின் வகைகளை வகுக்கும் விபுலானந்தர் வில் யாழ் பற்றி அறிமுகம் செய்வது சுவை
94

பாயுள்ளது.தமிழரின் பூர்வீசும்பற்றி அவருடைய கருத்து முன்னரேயே கூறப்பட்டது. இந்தியாவின் தென்பால் பஃறுளி ஆறு இருந்தது; குமரிக்கண்டத்தில் தமிழர் நாக ரிகம் உருவாயிருக்கலாம் என்ற கருத்துக்கள் அடிகளா ரின் கருத்துகளாம். வில்யாழையும் அந்தப் பின்னணியில் தான் அறிமுகம் செய்கிறார். இப்படி ஆரம்பிக்கிறது அக்கட்டுரை
"பழந்தமிழ் நாட்டுப் பஃறுளி ஆற்றங்கரைக்குச் செல்வோமாக. முல்லை நிலம் மரங்களடர்ந்த சோலை, பாங்கர் ஒரு பகிம் புற்றவிர, புற்றனர யிலே பசுக்களும், கன்றுகளும் மேய்கின்றன. சு 1ா ர் கால ம், இடையனொருவன் வருகின் றான்."33 என்று ஆரம்பித்து அவ்விடையன் இ ன - ச் சி கோனார்ந்த கூழினை உண்டபின்னர் குழலை வாசிக் சிறான். பின் வில்வடிவமான கருவியை எடுக்கிறான். அஃது ஒரு வில் யாழ். மரல் நாரினால் கட்டிய ஏழு வில் கள் இருக்கின்றன. அவ்வில்யாழில் குறிஞ்சிப்பண் வாசிக் கின்றான். இவ்வண்ணம் கூறிய விபுலாநந்தர்.
இடையனுடைய வரன் முறை நம் சொந்தக் கனவு அல்ல. தலைச் சங்கித்துக்கு முன்னெடந்த இந் நிகழ்ச்சியினைக் கடைச்சங்க காலத்து புலவராகிய கடியலூர் உருத்திரர் கண்ணனார் கனவு கண்டு தாம் தொண்டைமான் இளந் திரையனைப் பாடிய மெரும்பாாற்றுணப் படை பயில் பொதிந்து வைத்துள்ளார்.** என்று கூறிச் செல்கிறார். இவற்றினின்று விபுலாநந்தர் கூறும் தமிழரின் பாழின் காலம், தலைச்சங்க காலத்துக்கு, பஃறுளிய ற் றங்கரைக்குச் சென்று விடுவதனைக் காணலாம். தமிழு னர்வே அவர் ஆராய்ச்சியைத் தொடங்க உந்து சக்தி 1ாயிற்து என்பதற்கு இது சான்றாகும் .
95

Page 55
தமிழருக்கு ஒரு பெரும் இசை மரபு இருந்திருக்கு மாயின் அது தொடர்ச்சி பெற்றிருக்க வேண்டுமே? ஆம். அதனை ஏனைய இயல்களில் ஆராய்கின்றார். பண்டைத் தமிழர் இசைக் கருவிகளை வெளிக்காட்டுவதுடன், தமி ழரின் இசை வரலாற்றை விளக்குவதும் அடிகளாரின் நோக்கமாகும்.
குடுமியா மலைக் கல்வெட்டுக்கள் தமிழிசைபற்றிக் கூறுவனவே என்ற அடிகளாரின் முடிவு இதன் வெளிப் பாடே அரங்கேற்றுக் காதையில் மாதவியிசைத்த யாழ்க் கருவியின் அமைப்பு, பாடிய அமைப்பு தேவாரகாலத் தில் மூவரருளிய பாடல்களும் பாடப்பட்ட முறை என் பனவற்றைத் தருதல் மூலம் தமிழர் இசையின் அறாத் தொடர்ச்சி விளக்கப்படுகிறது.
இவர் ஆராய்வை இக்காலத்தெழுந்த தமிழிசை இயக்கத்தின் பின்னணியில் நோக்கவேண்டும். 1941ஆம் ஆண்டளவில்தான் தமிழ் நாட்டில் தமிழிசை இயக்சம் தொடங்கியது. தமிழ் இசை வளர்ச்சிக்காக முதன் முத லாக மாநாடு ஒன்று அண்ணாமலை நகரில் கூட்டப் பட்டது. 1943 மே மாதம் தமிழ் சங்கம் றுவப்பட் டது. தமிழிசை இயக்கத்திற்கு ஒர் அரசியல் பின் னணியும் உண்டு என்பர். 1931ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரானதையடுத்து விபு லாநந்த அடிகள் பழந்தமிழ் இசையாராய்ச்சியில் குறிப் பாகக் கவனம் செலுத்தலானார். 1940 சளிலிருந்து தமிழ் இசைபற்றிய கட்டுரைகளை எழுதுகிறார். அதன் முழுமை தான் 1947 இல் யாழ் நூலாக வெளிவருகிறது.
சிலப்பதிகாரமே அடிகளாருக்கு தமிழ் இசை ஆராய்ச் சிக்குத் தூண்டுகோலாயிற்று. தமிழர் பெருமை, தமிழர் நாகரிகத்தை முன்னிறுத்தியோருக்கு க ன க ச  ைபப் பிள்ளை தொடக்கம் கருணாநிதி வரை சிலப்பதிகாரமே ஆத ர மா யி ற் று. அடிகளாரும் சிலப்பதிகாரத்தின்
96

அரங்கேற்றுக் கா  ைத யி ல் யாழாசிரியன் அமைதி கூறும் இருபத்தைந்து அடிகளுக்கு இயைந்ததொரு விரி வுரையாக யாழ்நூல் ஆய்வு எடுத்துக்கொள்ளப்பட்டது 6 763 LusT,
தமிழ் உணர்ச்சியும் அக்காலத் தமிழ் நாட்டுச் சூழ அலும் இவரை தமிழிசை ஆராய்ச்சியை நடத்தத்தூண் டின. அவருடைய அறிவும், ஆராய்ச்சியுணர்வும் தமிழிசை பற்றிய தகவல்களை வெறும் உணர்ச்சிபூர்வமான உரை களாகவன்றி ஆராய்வுபூர்வமான கருத்துக்களாக வெளிப் படுத்தின. தமிழ் உணர்ச்சியும் அறிவின் நிதானமும் இணைந்து செல்வதனை யாழ் நூலிற் காணலாம்.
தமிழ்த்தேசியமும் விபுலாநந்தரும்
விபுலாநந்தர் வாழ்ந்த காலத்திலும், அதற்கு முன் னாலும் தமிழ் தேசிய இயக்கம் ஈழத்திலும் தமிழ் நாட் டிலும் தோன்றியமையும் ஈழத்தில் எழுந்த தமிழ் தேசிய இயக்கம் கிறிஸ்தவ, சிங்கள எதிர்ப்புத் தன்மை கொண் டதாகவும், தமிழ் நாட்டில் எழுந்த தமிழ்த் தேசிய இயக்கம் பிராமண சமஸ்கிருத எதிர்ப்புத் தன்மை கொண்டதாகவும் அமைந்திருந்தன என்பதும் முன்ன ரேயே கூறப்பட்டன.
விபுலாநந்தரின் தமிழுணர்ச்சியில் கிறித் த வ எதிர்ப்போ பிராமண எதிர்ப்போ இருக்காதது இங்கு அழுத்திக் குறிப்பிட வேண்டிய அம்சமாகும். வடமொழி யின் சிறப்பையும் அவ்விலக்கியங்களின் செழுமையை அறிந்தமையும், கிறித்தவ பாடசாலைகளில் கற்று ஆங் கில இலக்கியங்களிற்றிளைத்திருந்தமையும் இவருக்கு கிறித்தவ - பிராமண எதிர்ப்பின்மைப் போக்கினைக் கொடுத்திருக்கலாம்: விபுலாநந்தரின் தமிழுணர்வும், தமிழ்த்தேசியமும் தனித்துவமானது. அது பிறமொழி, பிற இனக்காழ்ப்பற்றது. பண்டைய தமிழர்களின் பெரு
97

Page 56
மைகளை விபுலாநந்தர் உயர்த்திப் பேசினாரேனும் மற்றைய இனங்களை எவ்விடத்தும் தாழ்த்திப்பேசினா ரில்லை. எங்கிருந்தெல்லாம் தமிழர் நல்லன பெற வேண் டுமோ அங்கிருந்தெல்லாம் பெற வேண்டும் என்றும் அவாவினார். தன் காலத்தமிழ் உணர்ச்சிமிக்க பண்டிதர் மாரிடமிருந்தும் தமிழுணர்ச்சி மிக்க அறிஞரிடமிருந்தும் இவ்வாறுதான் அவர் வேறுபடுகிறார். மாறாக பிற மொழி அறியாது தமிழ் மட்டுமே அறிந்தோர் பயன் பெறும் பொருட்டு ஆங்கில இலக்கியங்களைத் தமிழில் பெயர்த்துக் கொடுத்தார். தமிழ் மட்டுமே தெரிந்த பண் டிதமணி கதிரேசச் செட்டியாருக்குப் பயன்படும் வகை யில் ஆங்கிலவாணி கட்டுரையைத் தாம் எழுதியதாகக் கூறுகிறார். அவருடைய ஆங்கிலவானி, மேற்றிசைச் செல்வம் ஆகிய கட்டுரைகள் ஐரோப்பிய மரபுகளையும் வளர்ச்சியையும் தமிழருக்கு அறிவுறுத்த எழுதப்பட்ட கட்டுரைகளாகும். பிறமொழித் தொடர்பு பிற கலாசா ரம் பற்றிய அறிவும் தமிழ்மக்களை ஆரோக்கிய சிந் தனையுள்ளவர்களாக வளர்க்கும் என்பது அவரது எண் பணம் போலும்.
"கால நீரோட்டம் விரைந்து ஓடுகிறது. தமிழர் பழங்காலச் சிறப் பி  ைன மாத்திரம் பறைய றைந்து கொண்டிருப்பர் எனின் நிகழ்காலத்தை யும் எதிர் காலத்தையும், முழுவதையும் இழந்த நீர்மையராதல் கூடும். சென்ற நூற் றாண்டிலே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் விஞ்ஞான நூல் மிகவும் விருத்தியடைந்து விளங்குகின்றது. அறிவுச் செல்வத்தை தமிழ்மொழி பெறுவதற் கான செயல் சிறந்த தமிழ்த் தொண்டாகும்"3"
என்ற விபுலாநந்தர் சுற்றில் தமிழ்த் ਤ என்றால் என்ன? என்பதற்கான விடை கூறப்படுகிறது.
அறிவுச் செல்வத்தை அதிலும் மேற்கு நாட்டில் விருத்தி
98.

படைந்த விஞ்ஞான அறிவை தமிழ்மொழி பெறும் வகை செய்தலே தமிழ்த் தொண்டு என்கிறார். "பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் பேசிவதில் மகிமை இல்லை' என்ற பாரதியின் கூற்றுக்கும் விபுலாநந்தர் கூற்றுக்கும் மிகுந்த ஒற்றுமை காணப்படுகிறது. அறிவு ரீதியான ஆக்கப்பாடான வேலைகளே தமிழ்த் தொண்டு என்பது விபுலாநந்தர் எண்ணம் போலும். உணர்ச்சியை விட அறிவே இங்கு முதன்மை பெறுகிறது.
பிறமொழிகளிலுள்ள சிறந்த கவிதைகளை அவர் தமிழிலே பெயர்த்துள்ளார். தமிழ் இலக்கியம் போல பிறமொழி இலக்கியங்கள் இகுப்பதையும், பிறமொழி இலக்கியங்களிற் காணப்படும் கருத்துக்கள் தமிழில் இருH பதனையும் எடுத்துக்காட்டுவார். தன்னிற் பிறரையும் பிறரில் தன்னையும் காணும் வேதாந்த தத்துவ ஞானம், அவருக்குத் தமிழ் இலக்கியத்தில் பிற இலக்கியத் தன் மைகளையும், பிற இலக்கியங்களில் தமிழ் மொழி இலக் துகளின் தன்மையினையும் காணும் ஒப்பியல் நோக் கைத் தந்திருக்கலாம்.
விபுலாநந்தரின் தமிழ் உணர்வுக்கான காரணங்களை அவரது வாழ்க்சிைப் பின்புலத்தோடும் இணைத்து நோக் குவது அவசியம். அது தனியாக எழுதப்பட வேண்டியது. எனினும், மட்டக்களப்பின் சமூக வாழ்க்கைமுறை, பல இனமக்களோடும் அவர் இளவயதிலிருந்தே பழகியமை, அவர்களது கலாசாரங்களை அறிந்தமை கண்ணகி வழி பாடின் பின்னணியில் வளர்ந்தமை, ஆங்கில பாட சாலைகளில் பாதிரிமாரின் கீழ்க் கல்வி பயின்றமை என் போன்ற பின்னணிகளும் அவரது தமிழ் உணர்வைப் பாதித்த காரணிகளாகும். பிற இன மத காழ்ப்பு அவர் தமிழ் உணர்விற் காணப்படாமைக்கு அவரது வாழ்க் கைப் பின்னணியும் ஒரு காரணமாகும்:
99

Page 57
விவேகானந்தரால் விரிவுபடுத்தப்பட்ட வேதாந்தம் இந்தியாவையும், அதைச் சூழ உள்ள நாடுகளின் கலை சளையும் இந்தியப் பொதுமைக்குள்ளேயே காண முயன் றது. வேதாந்தத்தின் இந்தியப் பொதுமைக்கும் தமிழின் தனிச் சிறப்புக்கும் இவர் அமைதிகாண முனையும் முறைமை முக்கியமானதாகும். இதனால் இவர் தமி ழுணர்வில் நிதானம் காணப்படுவதைக் காணலாம்.
விபுலாநந்தருக்குத் தமிழுணர்ச்சி அதிகமாகவே இருந்தது உண்மைதான். தமிழரின் பெருமைகளை எழு தினார்; பேசினார்; ஆராய்ந்தார்; வெளிக் கொணர்ந் தார். மறைவாகப் பழங்கதைகள் பேசுவதில் அவருக்கு உடன்பாடில்லை. புதிய சவால்களைச் சந்தித்து, முன் னேறி வரும் உலகுடன் ஏற்ப தமிழினம் விழித்தெழுந்து இணைந்து கொள்ள வேண்டும் என எண்ணினார். அவ ரின் மொழிபெயர்ப்பு இதன் வழிப்பாடே.
பிறமொழி, பிற இனக் காழ்ப்பற்ற தமிழ் இ ன உணர்வே விபுலாநந்தரின் தமிழ் உணர்ச்சியாகும். சுத் தானந்த பாரதியார் கூறியது போல அவர் தமிழ்த் துடிப்புப் பல்லாயிரம் நெஞ்சங்களில் முரசடிக்கும். அவர் பல்லாயிரம் மக்கள் மனதில் தமிழ் வெறியேற்றியமை உண்மைதான்.
தமிழரை ஆளுமையுள்ளவர்களாக, பிறருக்கிரங்குப வராக, உலக நாகரிகத்தைத் தம் நாகரிகமாகக் காண் பவராக, சுருங்கச் சொன்னால் உன்னத மனித சமுதா யமாக மாற்ற அவர் வெறி கொண்டிருந்தார். தன்னளவில் அதைச் செய்தும் இருந்தார். விபுலாநந்தர் காலத்தின் விளை பொருள். புதிய காலத்திற்கான வித்துக்களைத் தந்தவர். அவரின் ஒரு பாதி தமிழுணர்ச்சியென்றால் மறுபாதி அறிவு ஆராய்ச்சி.
100

சான்றாதாரங்கள்
10.
11.
12.
3.
ஈழமணி, மலர், 1948 (தடித்த எழுத்துக்கள் எம் மாலிடப்பட்டவை)
மேலது (தடித்த எழுத்துக்கள் எம்மாலிடப்பட்டவை? களவியல் என்னும் இறையனார் அகப் பொருள் மூல மும் நக்கீரனார் உரையும், பவானந்தர் க ழ க சென்னை 1939, பக் 5-7 கைலாசபதி, க, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் (மேலதிக விபரங்களுக்கு இந் நூ லி லு ள் ள நாடும் நாயன்மாரும் எ ன் ற கட்டுரையைப் பார்க்குக) சென்னை 1966 : சிவத்தம்பி, கா, தனித்தமிழியக்கத்தின் அரசியற் பின் ணிை, சென்னை, சுப்பிரமணி ஐயர் A. V, தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி
GoF 67 GOOGST, 1959, Luis XI வையாபுரிப்பிள்ளை, திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, சென்ன்ை 1959, பக் 36-56
கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்(தமி ழில் கா, கோவிந்தன், ஆ: சிங்காரவேலு) சென்னை 1959, Luj 60-61 தீட்சிதர் W. R. R. பண்டைத் தமிழ்ப்பெருமை கதிரே சன் செட்டியார் மணிமலர், 1941, பக் 236-240
சிவத்தம்பி கார்த்திகேசு, தமிழில் இலக்கியவரலாறு,
வரலாறெழுதியல் ஆய்வு சென்னை 1988, பக் 65
அருள் செல்வனாயகம் (தொகுப்பு) விபுலாநந்த ஆராய்வு, சென்னை, 1964, பக் 28-33
முற்குறிப்பிட்ட நூல் பக்-30 மு. கு. நூல், பக் 22
10

Page 58
.
38),
29,
().
II.
( ' ) நூல், பக் 21 !" கு. நூல், பக் 96 மு. கு. நூல், பக் 8 கு. நூல், டக் 8 மு. கு. நூல், பக் 81-82 மு. கு. நூல் பக் 91-92 மு. கு. நூல் பக் 92-93 மு. கு. நூல் பக் 93 உயர்திரு விபுலாநந்த அடிகள் இலக்கியக்கட்டுரைகள் கொழும்பு 1973 பக் 9.70
மு. கு. நூல் பக் 70 வரலாற்றுக்கு முன்வடககும் தெற்கும் உயர் திரு விபுலாநந்த அடிகள், இலக்கியக் கட்டுரை கள் கொழும்பு 19 - 73 பக்.77
மே. கு. நூல் பக் 77 மே. கு. நூல் பக் 77
மே. கு. நூல்
மே. கு. நூல் பக் 113
மே. கு. நூல் பக் 145
விபுலாநந்த சுவாமிகள் முன்னுரை மதங்க சூளாமண்ணி என்னும் ஒரு நாடகத் தமிழ் நூல் மறு வெளியீடு, Galiright | 1987 Li X-XII
|l| T . Iliril Lii XI விபுலாநந்த சுவாமிகள் இயற்றிய யாழ் நூல் என்னும் இசைத்தமிழ் நூல் தஞ்சை, ஆனந்த ஆண்டு, கலி 30 எ4 பக் கய
மே. கு. நூல் பக் நுய-நஉ உயர் திரு விபுலாநந்த அடிகள் இலக்கியக் கட்டுரை கள் கொழும்பு 1973 பக் 76.
()2

சுவாமி விபுலாநந்தர் நயந்த இலக்கிய நாயக்கர்கள்
விபுலாந்த அடிகனாரின் நூற்புலமை மிகப் பரந்தது. அவரது கட்டுரைகளில் அவர் எடுத்தாளும் தகவல்கள் எம்மைப் பிரமிக்க வைக்கின்றன. தத்துவம், சரித்திரம் விஞ்ஞானம், நாடகம், சங்கீதம் கலைகள், தமிழிலக்கி பம், சமஸ்கிருத இலக்கியம், கிரேக்க இலக்கியம், ஆங் கில இலக்கியம் எனப் பல துறைசளிலும் ப ரிச் ச ய முடையவராக அடிகளார் காட்சி தருகின்றார். இன்றை ய ஆய்வு நெறியில் பல்துறை ஆப்வொழுங்குச் சங்கம og U5 p1) { Multy Diciplinary Approch) F.GJIT Făii Ti ப்படுகிறது அம்முறை நின்று ஆய்வோரின் ஆய்வுகள் ஆழமும், சமூகப் பயன்பாடும் மிக்கனவாயிருப்பதுடன் புதிய பார்வைகளையும் தருகின்றன. ஒரு நூற்றாண் டுக்கு முன்பு வாழ்ந்த அடிகளாரிடம் இச்சிந்தனையோட் டம் கானப்படுகிறது.
"முத்தமிழ் முனிவர் விபுலாநந்த அடிகள் பல துறைகளிலே உழைத்துத் தமிழுக்கு உரமூட்டிய arri ’’." என்பர் க சைலா சபதி, சுவாமி விபுலாநந்தர் பற்றி மேலும் அவர் இவ்வாறு கூறுவர்.
"ஆங்கில இலக்கியத்தை மாத்திரம் கற்பதோடு அமைந்தவர் அல்லர் அடிகள் - உலக வரலாறு, மானிடவியல், தத்துவம், விஞ்ஞானம், புராதன மொழிகள் முதலியவற்றையும் இடைவிடாது படித்து வந்திருக்கிறார்".* பல்துறைகளையும் தானாகவே தேடிக்கற்கும் மனப் பாங்குதான் அடிகளாரை பல்துறை ஆய்வொழுங்கிற் சிந்திக்கும் படி செய்தது எனலாம்.
O3

Page 59
அடிகளாரின் காலப்பின்னணி ஏற்கனவே விரித்துரை க்கப்பட்டுள்ளது. தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு, இந்திய மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் பாழ்பட்டு நின்ற காலத்திலே வாழ்ந்த அ டி க ளார், அம்மக்கள் அந்நிய ஆட்சியினின்று விடுதலை பெறு வதுடன், அடிமைப்பட்ட மக்களாக அன்றி, ஆளுமை மிக்க மக்களாக வாழவேண்டும் என்றும் விரும்பினார். அவருடைய செயற்பாடுகள் அவற்றை நோக்கியனவா கவே அமைந்தன:
தன் காலச் சூழலிற் தனக்குக் கிடைத்த அறிவுத் திரட்சியின் பின்னணி பில் அதற்கான வழிமுறைகளை அடிகளார் சிந்தித்தார்; தனி ஆளின் ஆன்ம ஈடேற்றம் என்ற தன்மையைக் கடந்து சமூக விடுதலையை நோக் கமாகக் கொண்டதும், உலகையும் உலக வாழ்க்கையை யும் தள்ளிவிடாது அதனையும் உண்மை என உணர்த் தியதும், அத்வைத வேதாத்தத்தின் தூய்மையிலிருந்து அதனைச் செயல்முறை வேதாந்தமாக வளர்த்தெடுத் ததுமான விவேகானந்தர் தந்த இராமகிருஷ்ண இயக்கத் தில் தன்னை இவர் இணைத்துக்கொண்டமை; தனி ஆளாக அன்றி இயக்க ரீதியான செயற்பாடே உலகை மாற்றுவிக்கும் வழி என்ற இவரது தீர்க்க தரிசன சிந்த னையைக் காட்டுகிறது.
உலகு என்பது இங்கு ஆகுபெயராகும்.உலகை மாற்று வித்தல் என்பது உலக மக்களை மாற்றுவித்தல் ஆகும். உலக மக்களின் மனோபாவத்தில் ஏற்படும் மாற்றம் மனி தனை மனிதனாக்கும் என்று கண்ட அடிகளார் கல்வி நெறிமூலம் அம்மனோபாங்கு மாற்றத்திற்கு முயன்றார். வெறும் வகுப்பறைக் கற்பித்தல் மாத்திரமன்றி மனிதனை மனிதனாக்கும் கல்வியை, ஒழுக் கமும் சீலமும் இளமை முதல் விரவி நின்ற கல்வியில் வழங்கியது அன்னாரது கோட்பாடு: ஆளுமைக் கல்வி ஒழுக்க மேன்மைக்கல்வி.
04

The man Making Character Building Education அடிகளாரது கல்விச் சிந்தனையின் ஒப்பற்ற இலக்குசளாக அமைந்திருந்தன.3 ஆளுமைக்கல்வி என்ற பதம் இங்கு நுனித்து நோக் குதற்குரியது. கல்வி மனிதனின் ஆளுமை விருத்திக்கு உதவி செய்ய வேண்டும்; ஆளுமையை உருவாக்க வேண் டும்; என்பது அடிகளார் கருத்து. கல்வி கற்றல் அரச ஊதியம் பெற என்ற கருத்து முனைப்படைந்து நின்ற அக்காலத்தில் விபுலாநந்தரின் கருத்து. வித்தியாசமாக ஒலிக்கிறது. மனிதனுள் மறைந்து கிடக்கும் மகா சக் தியை அவனுக்குணர்த்துவதே சுவாமி விவேகானந்தர் நோக்கு. சுவாமி விவேகானந்தர் வழிநின்ற சுவாமி விபு லாநந்தர், கல்வி நெறி மனித ஆளுமையை மனிதனுள் மறைந்து கிடக்கும் மகாசக்தியை வெளிக்கொணர வேண் டும் என்றே கருதினர். கல்வி நெறிகளுள் ஒரு பிரிவான இலக்கியக்கல்வியும் இவ்வண்ணமே அமைதல் வேண்டும் என்று விபுலாநந்தர் எண்ணியதில் வியப்பில்லை.
இலக்கியக் கல்வி நெறியிற் கூடுதலான நாட்டமுள்ள அடிகளார் உலக இலக்கியங்களிலும். பாரத இலக்கியங் களிலும் தாம் இரசித்த பகுதிகளைத் தமிழிற் தருகிறார் . அவரது இலக்கிய விமர்சன அணுகுமுறை இரசனை நெறிப்பட்டதாயினும்; அவரது பாடல் தெரிவு வெறும் பொழுதுபோக்கு இரசனையின் பாற்படாது சமூக நல னாட்டம் கொண்டதாயிருந்தது. மக்களுக்கு அறிவூட்டும் தன்மைகளை,மக்களைச் சிந்திக்க வைக்கும் பான்மைகளை அவர் தெரிந்த பாடல்கள் பெரும்பான்மைகொண்டிருந்தன.
காவியம் ஒன்றைக் கற்கும்போது அல்லதுசிறந்த நாட கம் ஒன்றை நயக்கும்போது அதில் வரும் பாத்திரங்கள் சில நம்மோடு நெருங்கி வருகின்றன. சிலவற்றை நயக் கிறோம்; வியக்கிறோம். நயப்பும் வியப்பும் நம்மை நமக்கு இனம் காட்டும்; வெள்ளத்தனைய மலரீட்டம் போல நமது உள்ளத்தின் விசாலத்திற்கமையவே நாம்
05

Page 60
இரசிக்கும் பாத்திரங்களும் அமையும். ஒருவரின் இரச னையைக் கொண்டு அவரின் உள்ள விசாலத்தின் பரப்பை அறிய முடியும்,
விபுலாநந்தரை உண்மை, நேர்மை, அஞ்சாமை, தேடல் போன்ற பண்புகள் வாய்ந்த ஆளுமைமிக்க இலக்கியக் கதாபாத்திரங்கள் கவர்ந்தன. இத்தகைய குனம் மிக்க பாத்திரங்களை அவர் வெகுவாக இரசித் தார். தான் இரசித்தது மாத்திர மன்றி மக்கள் நல னாட்டம் கொண்ட அடிகளார் மக்களுக்கும் அவற்றை அறிமுகம் செய்தார் . அப்டாத்திரங்களின் பண்புகள் சிறிதேனும் தமிழ் மாணாக் சுருக்குச் சுவறப்படின் புநிய தலைமுறை உருவாகக் கூடும் என்ற எண்ணம் அடிகளார் மனதில் இருந்திருக்கவும் கூடும்.
மூன்று கதாபாத்திரங்கள்
அடிகளாரைக் கவர்ந் த மூன்று கதாபாத்திரங்கள் இங்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. முதலாவது பாத் திரம் கர்ணன். இவன் மஹா பாரதத்தின் முக்கிய பாத் திரங்களுள் ஒருவன். வியாசர் தந்த மகாபாரதத்தை தமிழ்ப்படுத்தியவர்களுள் வில்லி புத்துரராழ்வார் முக் கியமான வார். வியாசர் பாரதம் போல வில்லி பாரத மும் பிரசித்தமானது. வில்லி புத்தூராழ்வார் தமது பாரதத்தில் காட்டிய கர்ணனையே அடிகளார் நமக்கு இங்கு அறிமுகம் செய்கிறார். கர்ணனை அடிகளார் கன்னன் எனவே குறிப்பிடுகிறார்
இரண்டாவது பாத்திரம் யூலியஸ்சிசர், றோமராச் சியம் வளர்ந்து வந்த காலத்தில் அதனை வளர்ச்சி நிலைக்கு இட்டுச் சென்ற வீரர்களுள் ஒருவன் யூலியஸ் சீசர். பல மாநிலங்களையும் அண்டைய நாடுகளையும் அவ்விராச்சியத்துடன் இணைத்து அது பேரரசாக வளர அடிக் தளமிட்டோருள் முக்கியமானது வன். அவனைப ப அறி ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் யூலியஸ்சீசர்.
106

ஆண்மையும் அஞ்சாமையும் மிக்க அப்பாத்திரத்தை ஷேக்ஸ்பியரின் நாடகத்திலிருந்து மொழிபெயர்த்து
அறிமுகம் செய்கிறார் விபுலாநந்தர்:
அடுத்த பாத்திரம் யூவிசஸ். கிரேக்க மகாகவியான ஹோமர் படைத்த இலியட் ஒடிசியில் வரும் ஒரு முக் கிய பாத்திரம் யூலிஸஸ். அந்தப் பாத்திரத்தின் வீரச் சொற்களை அமைத்து தெனிசன் என்னும் ஆங்கிலப் புலவர் இயற்றிய கவிதையை மொழிபெயர்த்து அதன் வாயிலாக நேடலும், பிரயாணத்தில் விருப்பமும் கொண்டவனான யூலிஸஸை அறிமுகம் செய்கிறார்.
சன்னன்
1939ம் ஆண்டு கல்முனையில் ஆசிரியர் விடுமுறைக் கழகம் ஒன்று நடந்தது. இக்கழகத்திற்குத் தலைமை தாங்கி இலக்கியச் சுவை பற்றி ஓர் விரிவுரையாற்றும் படி அடிகளைக் கேட்டுக் கொண்டார்கள்.அதற்கினங் கிய அடிகள் இலக்கியம் கற்றலும் இலக்கியச் சுவையிலி டுபடலும் என்ற பொருள் பற்றிச் செந்தமிழ் நடை பிலே ஒரு விரிவுரை ஆற்றினார்." அவ்வுரையிலே கன் னன் பாத்திரம் பற்றி விளக்கியுள்ளார்.
"பாரதத்திற்குக் காப்பியத் தலைவன் யாவன்?' என வினா எழுப்பும் அடிகளார்: "கன்ன பிரான் என்பTரும் அருச்சுனன் என்பாரும், உதிட்டிரன் என் பாரும் சுயோ தனன் என்பாரும் உளர் எனினும் இவர்கள் அனைவ ரையும் தன் அன்பினாற் பிணித்த அங்கர் கோனாகிய கன்னனே காப்பியத்தின் தலைவன்" என்று விடையும் தருகிறார்.
பாண்டவருக்கு அண்னனாக உயர் குடியிற் பிறந் தும், சந்தர்ப்ப வசத்தால் தாழ்குடியில் வந்த தேரோட் டியால் வளர்க்கப்படுகிறான் கன்னன், தாழ் குலத்தில் வளர்ந்தமையால் சுரத்திரியனுக்குரிய உரிமைகள் அவ
O7

Page 61
னுக்கு மறுக்கப்படுகின்றன. வீரமும், ஆண்மையும் புத்தியும் மிக்க அவனை மேல் எழ அன்றைய சமூக நீதி அனுமதிக்கவில்லை. எனினும் தனது கெட்டித் தனத்தாலும் விடாமுயற்சியாலும் அஸ்திரப் பிரயோ கங்களைக் கற்றுத் தேர்ந்ததுடன் அதன் மூலம் தன் திறமையை அவையிற் காட்டி மன்னன் துரியோதன னின் மதிப்பையும் நட்பையும் பெற்றுக் கொள்கிறான் கன்னன்.
போட்டி நடந்த அவையின் மத்தியிலே தன்னை யும் தன் பிறப்பையும் சுட்டிக்காட்டி அவமதித்தோர் நடுவே, தன்னை உயர்த்தி அரசனாக்கி தன் அவமா னம் போக்கிய நண்பனாகிய துரியோதனனை அவன் என்றும் மறக்கவுமில்லை; கைவிடவுமில்லை.
கன்னனை வீழ்த்தி பாண்டவர்கட்கு வெற்றி ஈட் டித்தர கண்ணன்போடும் திட்டங்கள் ஏராளம். கடைசி நேரத்திலே - யுத்தம் தொடங்கு முன்னர் கன்னனின் பிறப்பின் இரகசியத்தை வெளிப்படுத்தி தாயான குந்தி தேவியின் மூலமாகவே அவன் பாண்ட்வர்களின் தமை யன் என்ற உண்மையை கன்னனுக்கு உணர்த்துகிறான் கண்ணன். அப்போதும் கன்னன் அசைந்தானில்லை. செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதே என் பணி; அதுவே தர்மம் என்று கூறி பாண்டவர் பக்கம் சேர மறுத்து விடுகிறான்.
17ஆம் நாள் போர் ஆரம்பமாகிறது. அண்ணனென்று அறியாது காண்டீபம் தூக்கி நின்ற அருச்சுனனோடு தம்பி என்று அவனை அறிந்த கன்னன் பொருதுகிறான். இருவரையும் அறிந்த கண்ணன் அருச்சுனனின் சாரதி யாகத் தேர் நடத்தி கன்னனைக் கொல்லும்படி அருச் சுனனை ஏவுகிறான். அருச்சுனன் அம்புகள் கன்னன் மார்பில் பாய்கின்றன. களத்தில் வீழ்ந்த கன்னனின் உயிர் போகாமல் நிற்கிறது. தர்மதேவதை அவன் உயி ரைக் காப்பதை அறிந்த கண்ணன் வஞ்சவேதியர் வடிவு
08

கொண்டு கன்னனை அடைகிறான். அப்போர்க்களக் காட்சியை அடிகளார் பின்வருமாறு வர்ணிக்கிறார்.
"குருத்கூேடித்திரப் போர்க் களத்தில் போர் தொடங்கிய பதினேழாம் நாளன்று நடந்த இத் தெய்வக் காட்சியை அகக்கண்ணால் நோக்கு வோமாக. பொழுது மேற்றிசையிலே இரண்டு விரற்கிடை தூரத்திலே நிற்கிறது. சூரியனது பொன் போன்ற கிரணங்கள் புதல்வனது ஆகத் தினை மெல்லெனத்தழுவி நிற்கின்றன. அருச் சுனனது ஆயிரம் அம்புகள் துளைத்த துளைகளி னின்றும் பாய்கின்ற செங்குருதிசூரியகுமாரனது உடலத்திலே ஆயிரம் கிரணங்கள் போலத்திகழு கின்றது, இரு பெருவீரர்களின் இரதத்திற் பூட் டியகுதிரைகள் செயலற்று நிற்கின்றன. கண்ண பிரான் விஜயனைச்செருவொழிதி" என க் கையமர்த்தி கன்னனை நோக்கி வருகிறான். 9 வந்த கண்ணன் "வறுமையால் வாடினேன் இக் கணத்து எனக்கு இயைந்ததொன்று அளிப்பாய்" என்று யாசிக்கின்றான். உயிர்போகும் துன்ப நேரத்திலும் அச் சொற்கள் கன்னனுக்கு காதில் அமுதமெனப் பாய்கின் றன. இரதத்தின் மீது விழுந்து கிடக்கும் கன்னன் மகிழ் வோடு தரத்தக்க பொருள் என்ன?" என வினவ "நின் புண் ணியமனைத் தும் உதவுக’ என்கிறான் வேதியனாக
வந்த கண்ணன்.
ஆவியோ நிலையிற் கலங்கியது யாக்கை அகத்ததோ புறத்ததோ அறியேன் பாவியேன் வேண்டும் பொருளெலா நயக்கும் பக்குவம் தன்னில் வந்திலையால் ஒவிலாதியான் செய் புண்ணிய மனைத்தும் உதவினேன் கொள்க நீ, என்று கூறி தன் இதயத்திற் பாய்ந்து கிடந்த அம் பினை வாங்கி அங்கு பாய்ந்த செந்நீரே நீராக தான் புரிந்த புண் ணியமனைத்தினையும் தானம் செய்கிறான்
109

Page 62
பெற்ற சண்ணபிரான் ஆதிய வேதியன் வேண்டிய வரம் கேள்" என்கிறான். இது கேட்ட கன்னன்
"இல்லையென்றிரப் போர்க் கில்லையென்றுரையா இதயம் நீ அருள்" என்கிறான். கருணை வள்ளலாகிய கண்ணபிரான், உளமுருகிக் கண்களினின்று சொரிந்த நீரினாலே கன் னனை நீராட்டித் தனது தெய்வ வடிவோடு அவன் கண் களிக்கக் காட்சியளிக்கின்றான். இரண்டு தெய்வங்கள் சந்திக்கின்றன. ஒன்று தெய்வமான கண்ணன்; மற் றொன்று த ன் குண ந் த ரில் தெய்வம f ன் கன்னன்.
வாழ்ந்த காலத்தில் நன்றி மறவாத நண்பனாக வாழ்ந்த பண்பு; தனக்குச் சுகபோகம் கிடைக்கும் என்று கண்டும் கடைசிவரை அதை ஏற்காது விட்ட தன்னல மறுப்பு. உயிர்பிரியுந் தறுவாயிற் கூடக் கொடையை மறக்காத பண்பு. இறக்கும்போது கேட்கும் வரத்திலும் 'இல்லையென்றிரப்போர்க்கு இல்லையென்றுரையா இத யம்" கேட்கும் உயரிய சால்பு. இவை இன்றைய மனி தர் கன்னனிடமிருந்து கற்கவேண்டிய பண்புகள்.
யூலியஸ்சீசர்
ஆரியமும் தமிழும் வல்ல பண்டிதமணியாருக்கு ஆங் கில மொழிக்கவி நயத்தினை ஒரு சிறிது காட்டுதல் கருதி 1941 இல் எழுதப்பட்ட ஆங்கில வாணி என்ற சட்டுரை 'யில் யூலியஸ் சீசர் பற்றி அடிகளார் எழுதியுள்ளார். அத் தோடு, மதங்க சூளாமணியில் விரிவாக இதுபற்றி எழு தியுள்ளார். யூலியஸ் சீசர் பற்றி அடிகளார் பின்வருமாறு
குறிப்பிடுகிறார்.
**இந்நாடகத் தலைவராகிய யூலியஸ்சீசர் பராக் கிரம சாலியென்றும் சேனைத்தலைவரென்றும் முன்னர் குறிப்பிடப்பட்டார். உரோமபுரியில் வாழ்ந்த காஸியஸ் எனப் பெயரிய சனத்தலை
110.

வனொருவன் கஸ்கா, திரேபோனியஸ், லிகாறி யஸ், டேசியஸ், சின்னா, கிம்பர் என்பாரை யும் நீதிமானும் யூலியஸ் சீசரது நண்பனு மாகிய மார்க்கஸ் புருட்டஸையும் தன்வயப் படுத்தி பங்குனித்திங்களின் நடுநாளில், நண் பகலில், அத்தாணி மண்டபத்தில் யூலியஸ் சீசரது உயிரைக் கவர்வதற்கு ஏற்பாடு செய் தனன். பல்வகை உற்பாதங்கள் தோன்றின.7
யூலியஸ்சீசரின் மனைவி கல்பூர்ணியா தீக்கனாக் காணுகின்றாள். காலைப்பொழுது வந்ததும் சிணவன் முன் சென்று தான் கண்ட கனவைக்கூறி "அகத்திடை, யின் றிருந்திடுக அவை புகுதலொழிக" என்கிறாள், அதற்கு சீசர் தரும் பதிலை அடிகளார் பின்வருமாறு மொழிபெயர்த்து வழங்குகிறார். சீசர் கூறுவதாக இப் பாடல் அமைந்துள்ளது.
அஞ்சினர்க்குச் சதம ரணம் அஞ்சாத செஞ்சத்(து) ஆடவனுக்(கு)ஒரு மரணம் அவனிமிசைப் பிறந்தோர் துஞ்சுவர், என்றறிந்திருந்தும், சாதலுக்கு நடுங்கும் துன்மதி மூடரைக்கண்டால் புன்னகை செய்பவன்
urrest
இன்னலும் யானும் பிறந்ததொரு தினத்தில் அறிவாய் இளம் சிங்கக் குருளைகள் யாம், யான்மூத்தோன் எனது பின்வருவது இன்னல் எனப்பகை மன்னர் அறிவார் பேதுறல் பெண் ண ங் கே யா ன் போய்வருதல் வேண்டும்.8 அஞ்சா நெஞ்சமும் துணிவும் கொண்ட ஒரு மனி தனை இங்கு காண்கிறோம். இறப்புக்கு வீரன் அஞ்சுவ தில்லை. பயந்தோர் பயந்து பயந்து சாவார். பயமில் லாதோர் ஒரு தரம்தான் சாவார். சாதலுக்கு நடுங்கு பவர் மூடர். அவரைக் கண்டால் சிரிப்புத்தான் எனக்கு வரும். என்ற சீசரின்விரக் கூற்றுக்களிலும் இன்னலும்
1

Page 63
யானும் சகோதரர். அதிலும் நான் மூத்தவன் எனவே இன்னல் எனக்கு ஒரு பொருட்டல்ல எனக்கூறும் அவ னது வார்த்தைகளிலும் ஆண்மையை; அஞ்சாமையை, வீறாப்பைக் காணுகிறோம்.
அத்தாணி மண்டபத்திற்குச் சென்ற சீசரை வழியில் சிம்மர் முழந்தாளிட்டு வணங்கி, தன் சகோதரனை மன் னித்து விடும்படி வேண்டுகிறான்.
*மஹெளதாரிய மகா பிரபுவே ஏழையேனது விண் ணப்பத்திற்கிரங்கி ஏழையேனது சகோதரனை மன்னித் தருள வேண்டும்" என்று இரங்கிய அவைைப் பார்த்து சீசர் கூறிய வார்த்தைகளை அடிகளார் பின்வருமாறு மொழி பெயர்த்துள்ளார்.
தாழ்ந்து மென்மொழியுரைத்திபேல் தரணியிற் பணிந்து வீழ்ந்து நைபவர் பொய்யுரைக் கிரங்கிய வீணர் சூழ்ந்து செய்தன துடைத்துப் பின் சோர்வினையடைவார் ஆழ்ந்து செய்வன செய்யும் நான் அவர் நெறியணைடேன்.19 தாழ்பவர், வீழ்ந்து நைபவர், பொய்யுரைக்கிரங் கும் வீணர்கள் பிழையானவர்கள் நான் அவர் பக்கத் திற்குரியவனல்ல என்று சீசர் கூறும் வாசகங்களில் சீசரின் குணாதிசயம் மட்டுமல்ல, மனிதன் மற்றவனுக்குத் தாழ்ந்து விடக்கூடாது; மனிதன் மனிதனாகவே இருக்க வேண்டும் என்ற பண்பும் புலப்படுகிறது.
மார்க்கஸ் புருட்டஸ் சீசரிடம் சிம்பரின் விண்ணப் பத்தைக் கவனிக்கும்படி கேட்கிறான். காசியஸ் சீசரை நோக்கி "மகிமை பொருந்திய சீசரே உம்மிருதாளினையும் பற்றினேன். சிம்பரின் சகோதரனை விடுவிக்க வேண் டும்." என்றனன். சீசர் தம்மைச் சூழ நின்று விண்ணப் பித்தோரை நோக்கி,
12

இரங்குதிர் என்ன இரக்கும் நீர்மையர் தமைப்பிறர் இரக்கிற் தயை காட்டுநரே நும்போல்வேனெவின் நும்மொழிக்கிசைவேன்
என்று தொடங்கி
- புகன்ற மொழியிற்பிரியேன் பழியொடு படரேன் மலைவீழ்வெய்தினும் மனம் வீழ்விலனே."
எனக்கூறுகிறான். இதனை அவனது தற்பெருமை உரையென எண்ணிய அவர்கள் சீசரை உடைவாளினை உருவி வெட்டினார்கள். சீசர் இறந்தது ஒரு புறமாக அவனது மனத்திண்மையும், மலை வீழ்ந்தாலும் தன் மனம் வீழாது என எண்ணிய தன்னைப் பற்றிய பெரு மித உணர்வும், வீரமும், ஆண்மையும் இங்கு கவனிக் கப்பட வேண்டியனவாம்.
அந்நியராம் ஆங்கிலேயரின் காலடி வீழ்ந்து பfைந்து
வாழ்ந்த மக்களுக்கு ‘இரங்குதிர்' என்ன இரக்கும் வீர
ரைப் பார்த்து இகழ்கின்ற, யூலியஸ் சீசர் போன்ற குணாதிசயங்களை அறிமுசம் செய்வது அவசியம் என அடிகளார் எண்ணினார் போலும். அக்காலத்தில் வாழ்ந்த பாரத மக்களைப் பற்றிப் பாரதி பாடுகையில்
'அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே' என்றான். 'அச்சமும் சிறுமதியும், அடிமைத்தனமும் மிக்க அக்கால மக்களுக்கு 'அஞ்சினர்க் குச் சதமரணம் அஞ்சாத நெஞ்சத்து ஆடவர்க்கு ஒரு . மரணம்." எனக்கூறிய யூலியஸ் சீசர் போன்ற அச்ச மில்லா வீரர்களின் அறிமுகம் அவசியமானதே. அடிக ளாரின் இக் கருத்துகள் காலமறிந்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் எனக்கூறுவதிற் தவறில்லை.
யூலிசஸ்
ஹோமர் படைத்த பாத்திரம் யூலிசஸ். இப்பெயரை உலீசன் எனத் தமிழ்ப்படுத்தி அழைக்கிறார் அடிகளார்.
13

Page 64
ஹெலன் எனும் அரச குமாரியை மீட்க 10 ஆண்டுகள் கிரேக்கத்தில் நடைபெற்ற போர் பிரசித்தமானது. கிரேக்க மக்களின் பண்டைய வீரயுக வாழ்வோடு அது சம்பந்தமாக எழுந்த கதைகள் பின்னிப் பிணைந்தவை. பத்து ஆண்டுகள் போரிலும் பத்து ஆண்டுகள் பிரயா ணத்திலும் கழித்தவன் உலிசன். ஓய்வு என்பதே அறி யாதவன், சும்மா இருக்கத் தெரியாதவன். புதிய,புதிய அனுபவங்களைத் தேடுபவன். புதிய, புதிய திசை களை நோக்கிச் செல்ல விரும்புபவன்; தேடல் நோக்கு அவனோடு பிறந்த ஒன்று.
கிழப்பருவமெய்திய உலீசன் நாட்டுக்கு மீள்கிறான். இளமைப் பருவத்தில் துடிதுடிப்போடு ஓடி ஆடித் திரிந் ததைப் போல இப்போது இருக்க அவன்முதுமை உடல் இடம் தருவதாயில்லை, எனினும் நாடுவந்து, ஒய்வு பெற்ற அவனால் எல்லோரையும் போல உண்டு, உடுத் உறங்கி வறிதே இருக்க முடியவில்லை; சுறுசுறுப்பர்ன் அவன் மனம் அதற்கு இடம் தரவில்லை. மற்றவர்கள் "சும்மா' வாழ்வது அவனுக்கு வறிதாகத் தெரிகிறது. தெனிச்ன் பாடிய உலீசனின் பாடலை மொழி பெயர் த்துத் தருவதன் வாயிலாக உலீசனின் குணாதிசயத்தை மக்கள் மனதிற் பதிக்கிறார் அடிகளார். தான் சும்மா இருப்பதை வெறுத்த உலீசன்.
பெறுபயன் சிறிதே, பெறுபயன் சிறிதே வறிதிங்குறையும் மன்னன் யானே" எனத் தன்னைத்தானே விமர்சித்துக் கொள்கிறான். விளைவு குன்றிய களர் நிலமும் புகைபடிந்த சாப்பா டும், மூப்பு வந்து சேர்ந்த மனைவியும் சேர, எதுவும் செய்யாமல் வறிதேயிருப்பது அவனுக்கு வாழ்க்கையில் அலுப்பையே தருகின்றது.
என்னிழல் வாழ்வோர் என்னியல் பறியார் உண்பார், துயில்வார்: ஒண்ணிநி விப்பார்கு செம்மை நலமிலாச் சிறியோர்"
114

எனத் தன்னைச்சூழ சாதாரண வாழ்க்கை வாழும் மக்களைப் பரிதாபத்தோடு நோக்கும் அவன் தான் பிரயாணத்திற் பெற்ற அனுபவங்களை நினைவு கூரு கின்றான்.செழுமையான பயன்மிக்க அந்த நாட்களை கூறுகிறான்.
விழைவுறு மனனோடு அலைவுறு நாளில் அளப்பில கண்டேன் அறிந்தனபலவே எத்தனை நகரம் எத்தனை மக்கள் எத்தனை ஒழுக்கம் எத்தனை அவைக்களம் பெரும் பெயர் நிறுவி அரும்புகழ் படைத்தேன்."
எனத்தான் கண்ட நகரம், மக்கள், ஒழுக்கங்கள் அரசவைகள், அரசியல்கள் அத்தனையும் மகிழ்வோடு நினைவு கூர்வதுடன் தனது சாதனைகளையும் நினைக் கிறான். அந்த அனுபவத்திரட்சியினால் அவன் பெறும் ஞானம் பெரிது. வாழ்க்கை என்பது உண்டு உடுத்து உறங்கி வாழும் சிறிய வட்டமன்று. அது பெரிய வட் டம். சிறிய வட்ட வாழ்க்கைக்கப்பாலும் விடயங்கள் உள்ளன என்பதே அந்த ஞானம்
வாழ்க்கை வட்டத்து எல்லையில் இகந்த வேற்றுப் புலங்கள் மிகப் பல உள; அவை செல்வழிச் செல்வழி சேணிடை அகல்வன்.19 என்கிறான் உலீசன் ஆம் வாழ்க்கையை ஒரு வட்டம் போட்டுக் கொண்டு வாழாமல் தேடல் நோக் கோடு வாழ்க்கையைப் பார்ப்பவன் வேறு பல விடயங் களையும் வாழ்விற் காண்பான். வாழ்வின் அர்த்தத்தை, வாழ்வின் அனுபவங்களைத் தேடிச் செல்லச் செல்ல அவை இன்னும் இன்னும் என அகண்டு கொண்டே இருக் கும். அத்தகைய தேடல் எண்ணமுடையோன் ஓய்வு அறியா உளத்தினன். இத்தகைய உள்ளமுடையோர் சும்மா இருக்க மாட்டார்கள். அப்பொழுதுகள் அவப் பொழுதுகளாகவே அவர்கட்குத் தோன்றும். அவப் பொழுதுகளை அனுபவித்த உலீசன்
115

Page 65
arrarit p i Zi,j, ti i Tij, ai tri ft 3 in T
அறிவு நிறைதலும் அருஞ் செயல்புரிதலும்
ஓரிரு பிறவியில் ஒழியும் நீர்மையவோ 16
என்கிறான்.
பிறவிதோறும் அறிவைத் தேடவேண்டும், பிறவி தோறும் அருஞ்செயல் புரியவேண்டும். இதுவே உnச எனின் நோக்கு. எனினும் அவனுக்கு வயது சென்றுவிட் டது. கிழவனாகி விட்டான். இறப்பதற்கு இன்னும் சில நாட்கள் தான் உண்டு. இறப்பைப் பற்றிக் கவலைப் படவே ண்டிய உலீசன் அதைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாது வாழும் நாளை அர்த்தமுடையதாக்க எண்ணுகிறான்.
யாண்டு பல சுழிந்தன: ஈண்டு இப்பிறவியில் எஞ்சிய நாள் ஒரு சிலவே ஆங்கிவை புதுப் பயன் விளையும் நாளாகுக.'
என்னும் உலீசனின் கூற்றில் எஞ்சிய நாளையும் பயனுடன் கழிக்க வேண்டும் என்ற வாழ்க்கைப் பிடிப் பும் புலனாகின்றது. நரை முதிர்ந்து விட்டது எனினும் அவனது ஆசையைப் பாருங்கள்.
விதிப்பட மக்கள் யாத் த எல்லையினி சுந்து குணகடற் குளிக்கும் வான் மீன்போல அறிவு நிறைதற் கிவ் அலைகடல் கடக்க நரைமுதிர் உள்ளம் நாடி நின்றதுவே 18
முப்பு அவனுக்கு ஒருதடை இல்லை. அறிவுதேடு கலே அவனது வேட்கை; சாதல் வருமுன் இன்னும் இன் ஈறும் எனப் பயன்தரு காரியங்கள் புரிவதே அவன் நோக்கு. தான் மாத்திரம் அப்படிச் செய்வது குறுகிய நோக்கு, ஏனையோரையும் தான் சுண்ட உன்னதவழி அளிப்பது விசாவு நோக்கு, நண்பர்களையும் தன்னு -ன் Wறைக்கிறான் : சீசன்,
| |

வம்மின் நண்பீரி என்னுடன் உழன்றி யானும் நீரு ம் ஆண்டினில் முதிர்ந்தனம் மூப்பினும் வினையுள, ஆக்கமும் உளவே சாதல் எய்துமுன் மேதகவுடைய செயல் சிவ புரிகுவம்.19
என்பது அவன் அழைப்பு. "மூப்பினும் வினையுள' என்ற அடிகள் நயமிக்கவை. மூப்பு அவனைப் பயப் படுத்தவில்லை.
'இரிந்தன பலவெனின் இருப்பவும் பலவே என்கிறான்.20 இவ்வரிகளில் அவன் உலக நோக்கு புலப்படுகிறது. இவ்வுலகத்தை மேலும் மேலும் அறிய, மேலும் மேலும் துய்க்க, வ்யோதிபப் பருவத்திலும் அறிய, மரணம் வரும் வரை அறிய நினைக்கும் உலீசன் விபுலாநந்தரின் குரல் எனலாம் போலத் தோன்றுகிறது.
கர்ணன் இந்தியர் உலகுக்கு அளித்த பாத்திரம்? சீசர் றோமாபுரி உலகுக்கு அளித்த பாத்திரம், பூவிசஸ் கிரேக்கிம் உலகுக்கு அளித்த பாத்திரம். மூன்று நாடுக ளூமே பழம்பெருமையும் கலை கலாசாரச் சிறப்புகளும் பெற்ற நாடுகள். உலகப் பண்பாட்டுக்கு இம் மூன்று நாடுகளதும் பங்களிப்பு அனந்தம், விபுலாநந்தர் காட் டும் கன்னன், வில்லிபுத்தூரார் கண்ட கன்னன். அவர் சாட்டும் சீசரி, சேக்ஸ்பியர் காட்டும் சீசர் அவர் அறி முகம் செய்யும் உலீசன், தெனிசன் காட்டிய யூலியஸ் வில்லிபுத்தூரார். சேக்ஸ்பியர், தெனிசன் மூவரும் மிகப் பெரும் கவிஞர்கள்.
விபுலாநந்தரின் தெரிவுதான் இங்கு முக்கியம். கன் னன். சீசர், யூலிசஸ், சொந்த பந்தங்களுக்காக நாட்டை கைவிடாத இரப்போர்க்கு இல்லையென்னாது ஈயும்பண் பினன் சுன்னன், அஞ்சா நெஞ்சினன் எதிரியும் தாழ்ந்து தலைகுனியும் பண்பைப் பெறக்கூடாது என்ற உளப் பண்பினன் சீசர்வயோதிய நிலையிலும் மேலும் மேலும்
17

Page 66
" i " " д.). சேப்படுபவன் இறக்கும் விெர அர்த்த ' வாழ்வு வாழவேண்டும் என்று நோக்கு கொண் டவன் உலீசன்.
'க்கனை அற்புதமான பாத்திரங்கள் கன்னன் பாத் திரத் ತೌತಿ வில்லிபுத்தூராழ்வாரி r பாடல்களைக் கொண்டு அறிமுகம் செய்த அடிகளார், சீசரையும் உலீ "ச்ைனயும் தனது மொழிபெயர்ப்புக்கூடாக அறிமுகம் செய்கிறார்.
கான் படித்த இலக்கியங்களினின்று எவற்றை ரசிக்க வேண்டும், எவற்றை மக்களுக்குத் தரவேண்டும் என்று அடிகளாரின் நோக்குப் புலனாகி ன்றது.
சிகளார் துறவி, ஆனால் விவேகானந்தர் வழி வந்த இராமகிருஷ்ண மடத்துறவி,வாழ்க்கையை மாயை
' உதறாத துறவி, துறவினால் தன் ஆன்மா மாத், திரம் உயர் நிலையடைய வேண்டும் என்று எண்ணாத
யநலமிலாத்துறவி. மக்களும் தம்மைத் தாமே Garf வேண்டும் என்று மக்களுக்குச் சேவை புரிந்த துறவி ஒருவகையிற் பற்றுவைத்த துறவி.
மற்றயவை மீது வைக்கும் பற்றினால் தன்மீது வைக்கும் பற்றைத் துறக்கலாம். மக்கள் மிதுன்பப்பயனை மாத்திரமல்ல இம்மைப்பயனையும் பெற வேண்டுமெ 3 'து அடிகளார் கருத்து. வேதாந்த ஞானத்தில் ஈடு பாடு மிக்க மகாகவி பாரதியார் கூட "செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சென்றிடலாம் என்போர் பித் தர்' என்று கூறினார். இங்கு இப்பிறவியிலேயே மக்கள் மக்களாக வாழ வேண்டு என்று விரும்பினார்.
கர்ணன் போல மிக விரிந்த மனப்பாங்கு கொண் -வரிகளாக, பூலியஸ் சீசர் போல ஆண்மையும் அஞ்சா மையும் மிக் கவர்களாக, உலீசன் போல் கிரப்பருவ மெய் விய பின்னும் உலக அனுபவங்களை மேலும் மேலும் பெறும் தேடல் நோக்கமுடையவர்களாக மக்கள்
ாவேண்டும் சான் iTTF mrr.
S.

சிருங்கச் சொன்னால் வாழ்க்கையை வறிதே வாழா மல் அர்த்தம் பொதிந்த வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று வழி காட்டுகின்றார் அடிகளார். பாரதி கூறிய,
தேடிச் சோறு நிதமுண்டு - பல சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பம் மிக உழன்று - பிறர் வTடப் பல செயல்கன் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப்போது,21 வாழாமல், அர்ப்பணிப்பும், உண்மையும், ஆண் மையும், நேர்மையும், தேடல் நெஞ்சமும் கொண்ட 'ச்சுளாசத் தமிழ் மக்கள் வாழவேண்டும் என்ற அடி களாரின் ஆசையை அவர் தெரிவு செய்து தருகின்ற உலக இலக்கியப் பாத்திரங்களுக் கூடாகக் காணு கின்றோம். அவர் காட்டும் பாத்திரங்களுக் கூடாக
அடிகளாரின் மனப்பாங்கினையும் அறிந்து கொள்தி றோம்.
சான்றாதாரங்கள்
கைலாசபதி. க. 'முத்தமிழ் முனிவரின் ஒப்பியல்
நோக்கு" அடிகளார் படிவமலர், கொழும்பு 1989
1ே மேவது, பக்: "பு 3) தியாகராஜா. க. "சுவாமி விபுலாநந்தரின் கல்விச்
சிந்தனைகள்' சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு நினைவு மலர், மட்டக்களப்பு. 1992, பக்: 83
செல்வநாயகம் 14. பி. விபுலாநந்த அடிகள் சென்னை 1958 பர் 13
1남

Page 67
5)
6)
7)
8) 9)
0) 11) Is)
3).
14) 15) 16)
17)
18) J.9) E0) 21)
உயர் திரு விபுலாநந்த அடிகளார். இலக்கியக் கட்டுரைகள், கொழும்பு, 1973 பக்: 2
மேலது பக் 3 - 4
மேலது, பக் 86
மேலது. பக். 87
மேலது. பக். 87
மேலது பக் 87
மேலது. பக். 88
மேலது. பக். 104 மேலது பக். 104 மேலது. பக். 104
மேலது, பக்: 104
மேலது, பக் 104 G3 Dav. Luk 105, மேலது, பக் 108 மேலது. பக் 105
மேலது, பக் 105
மகாகவி பாரதியார் கவிதைகள்.


Page 68


Page 69
ஆசிரியரின் பிற நூல்கள்
1 20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்
இணை ஆசிரியர்
நாடகம் நான்கு இணை ஆசிரிய சடங்கிலிருந்து நாடகம் வரை தப்பி வந்த தாடி ஆடு மெளனகுருவின் மூன்று நாடகங்க் பழையதும் புதியதும் ஈழத்துத் தமிழ் நாடக அரங்க வர சங்காரம் - அவைக் காற்றுகையு

இலக்கியம்
லாறு அச்சில்)
ம் தாக்கமும்
அச்சில்

Page 70
130 குருதிமலை
துரை மடுவத்தின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த மேசையில் குட்டிச் சாக்கை வைத்து அதனை அவிழ்த்துப் பணத்தை வெளியே எடுத்தார். பின்னர் அங்கு கூடியிருந்த தொழிலாளர்களை ஒரு தடவை நோட்டம்விட்டார்.
பின்பு நோட்டுக்களைக் கட்டுக் கட்டாக மேசையின் மேல் பரப்பி வைத்துக் கொண்டு சில்லறைகளைக் கண்டக் டரிடம் கொடுத்தார்.
கிளாக்கர் செக்ரோலை மேசையின் மறு முனையில் விரித்து வைத்துக்கொண்டு பெயர்களை வாசிக்கத் தயாரா ஞர்.
துரை அனுமதி கொடுத்ததும் பெயர்களை வாசிக்கத் தொடங்கினர்.
"முதலாம் பிரட்டு தெய்வானை. தெய்வானை."
தலையில் முக்காடு போட்டபடி பெண்ணுெருத்தி அவர் கள் முன்னல் போய் நின்முள். அவளைக் கவனித்த கிளாக் கர், 'அறுபத்தேழு ரூபா முப்பது சதம்" எனக் கூறினுர்.
துரை ரூபாய்களைக் கொடுக்க கண்டக்டர் சதக் கணக் கைக் கொடுத்தார்.
கிளாக்கர் தொட்ர்ந்தும் பெயர்களை வாசித்து சம்ப ளக் கணக்குகளைக் கூறினர். தொழிலாளர்கள் ஒவ்வொரு வராக சம்பளத்தைப் பெறத் தொடங்கினர்.
இப்போது மடுவத்திலே மீண்டும் சத்தம் அதிகமாகத் தொடங்கியது.
‘என்னடா ராமு இப்போதான் வாநியா?" அப் போதுதான் அங்கே வந்துசேர்ந்த ராமு வைப் பார்த்துக் கேட்டான் வீரய்யா.
தலையிலே கட்டியிருந்த லேஞ்சியை அவிழ்த்துக் கையில் வைத்துக்கொண்டு, ' மெல்ாதலயே சம்பளம் போடத்

குருதிமலை 131
தொடங்கிட்டாங்களா?, எங்க பெரட்டு பிந்திப் போயி ருச்சோ என்னமோ தெரியல்ல" எனக் கேட்டான் printCup.
'அவசரப் படாதடா; இப்பதாண்டா தொர வந்தாரு ஒன் சம்பளம் என்ன ஓடியா போயிடும்?' எனக் கூறிவிட் டுச் சிரித்தான் வீரய்யா.
'போன மாசம் இருபத்தி ஆறுநாள் வேலை செஞ்சிருக் கேன். ரேஷன் சாமான், கோப்புறட்டிவ் கடன் எல்லாம் போக எப்பு டியாச்சும் அறுவது ரூபாகிட்ட இருக்கும். போட்டுக்கிறதுக்கு ஒரு நல்ல சேட்டுக் கூட இல்ல. இந் தப் பயணம் நல்ல சேட்டு ஒண்ணு எடுக்கணும்' என்ருன்
.Up)חr
** இன்னும் சம்பளம் வாங்கவே இல்லே. அதுக்குள்ள ஏண்டா இப்புடித் திட்டம் போடுறே. அவுங்க எப்புடி கடன் புடிச்சு, கணக்குப் பாத்து வச்சிருக்காங்களோ தெரி யாது" என்ருன் வீரய்யா.
"இந்தப் பயணம் எல்லாத்துக்கும் நல்ல சம்பளம் இருக்குமுங்க அண்ணே. போன மாசம் எல்லாரும் நல்லா, வேலை செஞ்சாங்க, கவ்வாத்து, மீனு புல்லு வெட்டு. எல்லா வேலையும் கொடுத்தாங்க இல்லியா." என்ருன் பக்கத்தில் நின்ற ஒருவன்.
"இந்தா பாருங்க ஆளுங்களா. தயவுசெஞ்சி கொஞ் சம் சத்தம் போடாம இருங்க. இப்புடி சத்தம் போட்டுக் கிட்டு இருந்தா எப்புடி தொர சம்பளம் போடுவாரு?" என்ருர் மாரிமுத்துத் தலைவர் பலமான குரலில்,
துரை நிமிர்ந்து தலைவரை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் பணத்தை எண்ணத் தொடங்கினர்.

Page 71
132 குருதிமலை
"ஆமா. நீங்க போடுற சத்தத்தினுல கெளாக்கரப்யா பேரு வாசிக்கிறது இங்க வெளங்கல; டேய் இந்த பயலுங்க, எல்லாம் லயத்துக்குப் போங்கடா. சம்பளம் வாங்கிற மாதிரி இந்தச்சின்னப் பயலுக வேற வந்துங்கிருங்க' எனத் தொடர்ந்து கூறிய தலைவர், அங்கு நின்ற சிறுவர்களை விரட்டினர்.
பின்பு பெரியவர்களைப் பார்த்து, "இந்தா பாருங்க. கொஞ்சம் தள்ளி அப்புடியே பின்னுக்குப் போங்க; இப் புடி எல்லாரும் தொரைய சுத்தி அடைஞ்சிக்கிட்டு நின்ஞ எப்புடி அவுங்களுக்கு வெளிச்சம் தெரியும். பின்னுக்குப் போங்க.." எனக் கூறியபடி அங்கிருந்தவர்களைப் பின்னுல் நகர்த்தினர்.
"“கறுப்பையா. கறுப்பையா...'
கிளாக்கர் செக்முேலைப் பார்த்தபடி கூறினர்.
**அந்த ஆளைக் காணுேமுங்க" எனக் கூறியபடி தலைவர் முன்னே வந்தார்.
** அப்போ தலைவர், நீங்க அந்தச் சம்பளத்தை வாங்கி அந்த ஆளுக்குக் கொடுங்க" தலைவரைப் பார்த்துக் கூறி ஞர் கண்டக்டர்.
'எண்பத்தைந்து ரூபா இருபத்தெட்டுச் சதம்' தலை வர், கறுப்பையாவின் சம்பளத்தைப் பெற்றுக்கொண் டார்.
வேறு சிலரும் தமது சம்பளத்தைப் பெற்றுக்கொள்வ தற்கு அங்கு சமுகமளிக்கவில்லை. தலைவர்தான் அவர்களுக் குரிய சம்பளத்தைப் பெற்றுக்கொண்டார்.
பின் வரிசையில் நின்றவர்களிடையே ஏதோ மு முணுப்புச் சத்தம் கேட்டது.

குருதிமலை 133
"என்னடா இது அநியாயமா இருக்கு. கறுப்பையா வவுனியாவுக்குப் போயி ரெண்டு மாசமாகுது. அவன் பேருக்கு சம்பளம் கொடுக்கிருங்க."
**ஆமாங்க நானும் அதுதான் யோசிச்சுக்கிட்டு இருக் கேன்.அவன் சம்சாரம் மட்டுந்தான் வூட்ல இருக்கா. அவ தான் தோட்டத்தில வேலையில்லையே. பேரையும் வெட் டிப்புட்டாங்க."
"என்னமோ தெரியல்ல, அந்தச் சம்பளத்தை நம்ப தலைவருதான் வாங்கிக்கிருரு."
**கண்டக்டரும், தலைவரும் சேர்ந்துகிட்டு தோட்டத் தில இல்லாதவங்களுக்கு பேரு போட்டு சம்பளம் வாங்கிக் கிருங்க போல இருக்கடா' என்ருன் வேருெருவன்.
"என்ன அநியாயமா இருக்கு; போன மாசம் பூரா நான் பேரு போட்டிருந்தேன். எனக்கு சம்பளமே இல் லேங்குருங்க" எனக் கூறிக்கொண்டே வந்தான் குப்பன்.
அவனைப் பார்த்த வீரய்யா, 'இங்க வாங்க குப்பன். சும்மா சத்தம் போடாதீங்க, கோப்புறட்டி கடையில ஏதும் ரொம்ப சாமான் வாங்கியிருப்பீங்க. நீங்க வேலை செஞ்சது ஒங்கவூட்டு ரேசனுக்கும், கோப்புறட்டிவ் கட னுக்கும் சரியாப் போயிருக்கும். அவுங்க கணக்கில பிழை விட மாட்டாங்க" என்ருன் அமைதியாக,
'இல்லீங்க தம்பி. போன மாசம்தான் கோப்புறட் டிக் கடையில சாமான் ஒண்ணும் இல் லியே. நான் சரியாக் கூட சாமான் வாங்கலே. ஒரு நாத்தான் இருபத்தி மூணு ரூபாவுக்கு சாமான் வாங்கியிருந்தேன். போன மாசம் பூரா என் சம்சாரமும் நல்லா வேலை செஞ்சிருந்தா. என்னு கணக்குப் பாத்து வச்சிருக்குகாங்கனு தெரியலே" என் முன் குப்பன் ஆவேசத்துடன்.

Page 72
34 குருதிமலை
"சரிங்க அண்ணே, கொஞ்சம் பொறுங்க. கணக்கு ஏதும் வித்தியாசமா இருக்கும். சம்பளம் போட்டு முடிஞ்ச வொடன கணக்கு கேட்டுக்கிடலாம்" என்ருன் அங்கிருந்த ஒருவன்.
**Մո (լp... ராமு." கிளாக்கர் பலமாகப் பெயரை வாசித்தார். வீரய்யாவுடன் கதைத்துக் கொண்டிருந்த ராமு துரையின் முன்னே ஓடினன்.
**ராமுவுக்கு அறுபது சதம் மட்டுந்தான்." கிளாக்கரையாவின் குரல்கேட்ட ராமுவுக்கு திக் கென்றது.
ஒரு கணம் மலைத்து நின்ற ராமு தன்னைச் சுதாரித் துக்கொண்டு, "நல்லா பாருங்கையா அறுபது ரூபாவா, அறுபது சதமான்னு.'
'எனக்கென்ன கண்ணு தெரியல்ல? அறுபது சதம் மட்டுந்தான்.'
எரிச்சலுடன் கூறினர் கிளாக்கர். "என்னுங்க, நான் போனமாசம் பூராவும் வேலைசெஞ் சேங்க. எனக்கு சம்பளம் அறுபது சதம்மட்டுமெங்கிறீங்க’ எனக் கிளாக்கரைப் பார்த்துக் கேட்டான் ராமு.
**இந்தா,இப்ப ஒண்ணும் அதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கமுடியாது. நாளைக்கு வேணுமுன்ன ஆபிசில வந்து கேளு’ எனக் கூறிய கிளாக்கர், தொடர்ந்து பெயர்களை வாசிக்கத் தொடங்கினர்.
துரைக்கு அவர்களது சம்பாஷணை விளங்கவில்லை’ கிளாக்கரைப் பார்த்தார்.
**இவன் தனக்குச் சம்பளம் குறையுது என்கிருன்" என விளக்கம் கொடுத்தார் கிளாக்கர்,

குருதிமலை 五35
துரை ஏதோ சிந்தித்துவிட்டுத் தலையை ஆட்டியபடி, தொடர்ந்தும் பெயர்களை வாசிக்கும்படி கிளாக்கருக்குக் கட்டளையிட்டார்.
ராமுவைப் போலவே பலர் சம்பளம் குறைவாக இருக் கிறதென்றும், சிலர் தமக்குச் சம்பளமே இல்லையென்றும் குமுறிக்கொண்டனர்.
‘என்ன அநியாயமா இருக்கு. இவ்வளவு நாளா இல் லாம இந்த மாசம் மட்டும் எப்புடி சம்பளம் குறையுது" என்ருன் ஒருவன் ராமுவைப் பார்த்து,
"அதுவும் பாருங்க, ஆம்புளை ஆளுக்கா சம்பளம் கொறையுது. பொதுவா கவ்வாத்து வெட்டின ஆளுங்க ளுக்கு சம்பளமே இல்ல" என்ருன் மற்ருெருவன்.
"இதை இன்னிக்கு சும்மா விடக்கூடாது. சம்பளம் போட்டு முடியட்டும். என்ன சங்கதின்னு கேட்டுப்புடு றேன். சம்பளம் கொறைஞ்ச யாரும் வூட்டுக்குப் போக வேணும்.எல்லோரும் மடுவத்திலயே இருங்க' என அங்கி ருந்தவர்களைப் பார்த்துக் கூறினன் ராமு.
'இந்தா ராமு, நீ மொறட்டுத்தனமா கதைக்காதடா. சம்பளந்தானே கொறையுது?நாளைக்கு ஆபிசில சம்பளக் கணக்குக் கேட்டா சொல்லுவாங்கதானே;அப்ப என்னணு தெரிஞ்சுக்கலாம்" என வீரய்யா அவனைச் சமாதானப் படுத்த முயன்றன்.
*நீ சும்மா இரு வீரய்யா. எனக்கு வவுத்த எரியுது. இன்னிக்கே கேக்காம வுடமாட்டேன்' எனப் பிடிவாதமா கக் கூறினுன் ராமு.
எல்லோருக்கும் சம்பளத்தைக் கொடுத்து முடித்த துரை,தனது காரில் ஏறி பங்களாவுக்குப் புறப்பட்டுச் சென் დფff.

Page 73
36 குருதிமலை
கிளாக்கரும், கண்டக்டரும் ஏதோ கதைத்தவண்ணம் எழுந்து செல்ல முயன்றபோது, ராமு, வீரய்யா உட்பட எல்லோரும் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர்.
மாரிமுத்துத் தலைவர் கண்டக்டரின் பின்னல் தயங் கியபடி நின்றுகொண்டிருந்தார்.
* 'ஐயா,எனக்கு இன்னிக்குக் கணக்கு சொல்லிட்டுத் தான் போகணும்;இல்லாட்டி நான் ஒங்கள போகவுடமாட் டேன்" என்ருன் ராமு கிளாக்கரைப் பார்த்து.
கண்டக்டரும் கிளாக்கரும் திகைத்துப்போய் நின்ற னர்.
**இந்தா ராமு, எல்லாத்துக்கும் நாளைக்குத்தாங் கணக்கு சொல்லுறது.இப்ப கொழப்பம் பண்ணவேணுங். ஒனக்கு மட்டும் இன்னிக்கு கணக்கு சொல்லிக்கிட்டு இருக்க முடியாது" என்ருர் கண்டக்டர்.
**அதெல்லாம் முடியாதுங்க..இன்னிக்கு ஏங் கணக்கு பாக்காம நாங் ஓங்களை வுடமாட்டேன்.கணக்குச் சொல் லியே தீரணும்."
ராமு பிடிவாதமாகக் கூறியதைக் கேட்ட கிளாக்கர், இவனிடமிருந்து தப்பமுடியாதென உணர்ந்து செக்ரோல் புத்தகத்தை விரித்துக்கொண்டே, இந்தா நீ எத்தனை யாம் பெரட்டு. சுறுக்கா சொல்லு. ஒனக்கு மட்டுந்தான் சொல்லுவேன்' என்ருர்,
** எட்டாம் பெரட்டுல பாருங்க." **போன மாசம் பூரா வேலையா நீ?" "ஆமாங்க. இருபத்தாறு நாளு பேர் போட்டிருக் கேன்" என்ருன் ராமு.
இளாக்கர் செக்ரோலைப் பார்த்தபடி, "" நீயென் எனப்பா சொல்லுற,பதினேழு நாள்தான் நீ வேலை செஞ்சி ருக்கே" எனக் கூறினர்.

குருதிமலை i
w
*அப்ப எனக்கு ஒன்பது நாள் பேர் போடயில் லியா? எந்தெந்த நாளுங்க எனக்கு பேரு போடலேனு பாருங்க"
‘'நீ போன மாசத்தில பதிமூணும் தேதி வேலையில்ல.
அப்புறம் பதினறு, பதினேழு,பதினெட்டு. இருபத்திமூணுத் தேதி வரைக்கும் வேலையில்ல."
எனக் கூறிய கிளாக்கர் புத்தகத்தை மூடமுயன்ருர், அப்போது அங்கிருந்த மற்றவர்களும் பிடிவாதமாகக் கணக்குக் கேட்கத் தொடங்கினர். கிளாக்கரால் மறுக்க முடியவில்லை.
நிலைமையைப் புரிந்துகொண்ட கண்டக்டர்.மெதுவாக் அவ்விடத்தைவிட்டு நழுவித் தன் பங்களாவை நோக்கிச் சென்றர்.
கிளாக்கர் எல்லோருக்கும் விபரமாக வேலைக் கணக் கைக் கூறத் தொடங்கினர்.
“என்னுங்க தலைவரு, ஒங்ககிட்டதானே நான் பதின் மூணுந் திகதியில இருந்து கவ்வாத்து வெட்டினேன். எப் படி ஒம்பது நாள் பேரு கொறையும்?' எனப் பலமாகக் கத்தினன் ராமு.
**இந்தா ராமு, சத்தம் போடாத .நான் ஒழுங்காத் தான் பேர் எழுதி ஐயாகிட்ட கொடுத்தேன். இதில ஏதோ தவறு நடந்திருச்சி. ஒனக்கு ஒம்பது நாள் பேருதானே கொறைஞ்சுபோயிருச்சி. பேசாம இரு; நான் ஐயாகிட்ட சொல்லி அந்தப் பேரைப் போடச் சொல்லிப்புடுறேன்" எனக் கூறி அவனைச் சமாதானப்படுத்த முயன்ருர் தலைவர்.
கண்டக்டர் பேர் போடாமல்விட்ட விஷயம் இப் போதுதான் தலைவருக்குப் புரிந்தது.
கவ்வாத்து வேலையெல்லாம் கொன்ருக்கில் போட்டு சல்லி எடுத்ததுமில்லாம, ஆளுகளுக்குப் பேரும் போடாம வுட்டிட்டு,இப்ப பங்களாக்கு வேற போயிட்டாரு. இவங்க

Page 74
遭38 குருதிமலை
ளோட நான்தான் மாட்டிக்கிட்டு கெடக்கிறேன்' தனக் குள் முணுமுணுத்துக்கொண்டார் தலைவர்.
'அதெல்லாம் முடியாது. எப்புடி எல்லாத்துக்கும் பேரு கொறையும்? இந்தா பாருங்க. இவுங்க எல்லாம் ஓங்ககிட்ட போன மாசம் கவ்வாத்து வெட்டினவங்க. இவங்க எல்லாத்துக்குமே பேரு இல்லே. எல்லாத்துக்கும் பேரு வாங்கிக் கொடுக்க முடியுமா?" என்ருன் வீரய்யா அங்கிருந்தவர்களைச் சுட்டிக்காட்டி.
"இந்தா பாரு வீரய்யா, நான் எல்லாருக்கும் ஒழுங் காத்தான் பேரு போட்டேன்.இது நம்ப கண்டக்கையா வோட தவறுதான். இதை எப்புடியாச் சும் அவருகிட்ட சொல்லிக் கேப்போம்.ஏம்மேல ஒண்ணும் குத்தமில்லே." 2 தலைவருக்குக் கண்டக்டரின் மேல் கோபம் கோபமாக வந்தது. தன்னை நடுக் கடலில் தள்ளிவிட்டு,அவர் மட்டும் கரை சேர்ந்துவிட்டார் என்ற உணர்வு அவருக்கு ஆத்தி ரத்தை ஊட்டியது.
**சும்மா மழுப்பாதீங்க; நீங்களும் கண்டக்கையாவும் சேந்து செஞ்ச வேலைதான் இது. இவ்வளவு நாளும் இல் லாம இப்ப எப்புடி புதிசா "கொன்ருக்' வேலை வந்திச்சு? அதுவும் எல்லா "கொன்ருக்' வேலையும் ஒங்க பேருலேயே கண்டக்கையா போடுருரு.தோட்டத்தில நீங்க ஒரு ஆளு மட்டுந்தான் இருக்கிறீங்களா? வேற ஒருத்தரும் இல் லியா?" ராமு ஆவேசமாகக் கத்தினன்.
'ஆமா ஆளுகளுக்குப் பேர் போடாம ஓங்க கொன் ருக் வேலையெல்லாம் செஞ்சு நல்லா சல்லிஅடிச்சிட்டீங்க" என அங்கிருந்த ஒருவன் கூறினன்.
'நீங்க எங்க தலைவரா இருந்துகிட்டே இப்புடி செய்ய லாமா?ஒரு தலைவரே இப்புடி நடந்தா தோட்டம் என்னத் துக்கு உருப்படும்.இப்புடி செய்யிறது உங்களுக்கே நல்லா யிருக்கா?" வீரய்யா ஆத்திரத்தில் குமுறினன்.

குருதிமலை 139
"இன்னும் என்னென்ன நடந்திருக்குமோ தெரியாது: அந்தக் கண்டாக்கு பூனைமாதிரி நடந்துகிட்டு தோட்டத்தில நல்லா வெளையாடுருன்’ குழுமி நின்றவர்களது பக்கத்தி லிருந்து ஒரு குரல் ஒலித்தது.
* வவுனியாவுக்குப் போன ஆளுக்கு செக்ருேல்ல பேரு விழுகுது; அந்தச் சல்லிய நீங்க வாங்கி கண்டக்கையா கையில கொடுப்பீங்க. இங்க தோட்டத்தில கஷ்டப்பட்டு ஒழைக்கிறவங்க பேரை வெட்டிப்புடுறிங்க." f
வீரய்யா ஆவேசமாகக் கத்தினன்.
"நாங்க எல்லாம் தோட்டத்தில தூங்கிக்கிட்டு இருக் கோமுனு நெனைச் சீங்களா? இனிமே சும்மா விடமாட் டோம்;புதிசு புதிசா வேலைக்கு வந்து எல்லாரும் தோட் டத்தை சொறண்டுருனுக. ஏழைங்க வவுத்தில இல் லியா அடிக்கிருங்க."
இன்னெரு குரல் கூறியது.
**இந்த கோப்புறட்டி மனேஜரும் கண்டக்கோட கூட் டாளிதான்; அவன் கோப்புறட்டிக் கடையில இருந்துக் கிட்டு ஆளுங்கலுட்டு அரிசியைக் கொள்ளை அடிக்கிருன். இந்த இரண்டு மூணு மாசமா கோப்புறட்டிக் கடையில ஒரு சாமாங்கூட இல்ல.வர்ற ரேசன் சாமானெல்லாம்எங்க கொண்டுபோய்க் கொடுக்கிருங்களோ..?" குப்பன் குமுறி ஞன.
"அந்த வண்டா மொதலாளிதான் இவுங்களோட சுத் திக்கிட்டுத் திரியிருன். அங்கதான் எல்லா சாமானமும் போயிருக்கும். எல்லாரும் ஒண்ணு வந்து சேர்ந்துக்கிட்டா
னுக.
"இனிமேலும் நம்ப இப்புடி பாத்திக்கிட்டு இருக்கமுடி
யாது. எல்லாத்துக்கும் சுறுக்கா ஒரு முடிவு கட்டணும்.
அதுக்கு மொதல்ல இந்தத் தலைவரையே மாத்தணும்;அப்பு

Page 75
40 குருதிமல்
தான் இந்தத் தோட்டம் உருப்படும்" என்ருன் பக்கத்தில் நின்ற வேருெரு தொழிலாளி.
"இனிமே ஒங்களைத் தலைவரா வைச்சிருந்தா நாங்க எல்லாம் மண்ணுேட அழியவேண்டியதுதான்" ராமு பட படத்தான்.
'நீங்க இன்னையில இருந்து எங்களுக்குத் தலைவரில்ல' குப்பன் ஆத்திரத்துடன் கத்தினன்.
அங்கு நின்ற எல்லோரது குரல்களும் அவ்வாறு மீண் டும் மீண்டும் முழங்கின.
அத்தியாயம் பத்தொன்பது
5@Ġ FITLD வேளை,வெகு நேரமாக நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்த மாரிமுத்துத் தலைவர் ஏதோ முடி வுக்கு வந்தவராக வெளியே புறப்பட ஆயத்தமானர்.
"இந்தா பாருங்க.நான் சொல்லுறேன்னு கோவிச் சுக்கிருதீங்க. நாளைக்கி வேலைக்காட்டுல வச்சி சொல்லிக்கிட லாமுங்க. இந்த நேரத்துல நீங்க மட்டும் எப்புடிங்க ஒத் தையா போவீங்க?" கலக்கத்துடன் கேட்டாள் பூங்கா.
** என்னடி வெளங்காம கதைக்கிற?ஒனக்குக் கொஞ்ச மாவது மூளை இருக்கா? வேலக் காட்டுல வச்சி எப்புடி இந்தவெசயத்த கண்ட க்கையாகிட்ட சொல்லுறது?யாராச் சும் கண்டாங்கன்ன அப்புறம் என்னைய உயிரோடை வைக்கமாட்டானுங்க" மாரிமுத்துத் தலைவரின் பதிலில் சினம் தொனித்தது.

குருதிமலை 14
"அங்க கதைக்கமுடியாட்டி நாளைக்கி கொஞ்சம் வெள் ளனவே கண்டக்கையா வூட்டுக்குப் போகலாந்தானே.இன் னிக்கு ஒரு ரவைக்கு மட்டும் பொறுத்துக்கிட்டு இருங்க. சரியான இருட்டா இருக்குங்க.எனக்கு என்னமோ பயமா) இருக்கு. இந்த நேரத்துல கண்டக்கையா வூட்டுக்குப் போறதை யாரும் கண்டு கிட்டாங்கணு."
"இந்த நேரத்துல யாரு காங்கப் போராங்க?எல்லாந் தான் நல்லா தூங்குருங்களே. இத இன்னிக்கே கண்டக் கையாகிட்ட சொல்லாட்டி அப்புறம் நாம இந்தத் தோட் டத்துலயே இருக்கமுடியாது."
*நான் அப்பவே தலையால அடிச்சிக்கிட்டு இருந் தேனே. கேட்டீங்களா? இந்த கண்டக்கையாவோட கவ னமா இருங்க.இருங்கனு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருந் தேன்.செய்யிறத எல்லாம் செஞ்சிப்புட்டு அவரு சொகமா பங்களாவில இருக்காரு. இங்க ஆளுங்ககிட்ட மாட்டிக் கிட்டு கெடக்கிறது நீங்கதான்" என்ருள் பூங்கா.
"இந்தக் கண்டாக்கு இப்புடியெல்லாஞ் செய்வான்னு யாரு கண்டது? தோட்டத்து வேலைங்களை எல்லாம் சுறுக்கா முடிக்கணுமுணுதானே கவ்வாத்தெல்லாம் ஏம் பேருக்கு கொந்தரப்பு கொடுத்தான்.வேலை செஞ்சவங்க ளுக்கு இப்புடி பேர் போடாம விடுவான்னு எனக்கு அப் பவே தெரிஞ்சிருந்தா,நான் அவேன் பேச்சையே கேட்டுக்க மாட்டேன்" என்ருர் மாரிமுத்துத் தலைவர் கவலையுடன்,
'இவ்வளவு காலமா இல்லாம "இந்தக் கண்டக்கையா பேச்சக் கேட்டு சுத்திக்கிட்டு திரிஞ்சிங்களே;இப்ப பாத்தீங் களா..? இந்தத் தோட்டத்து ஆளுங்க எல்லாத்துகிட்டே யும் கெட்ட பேரு வாங்கியாச்சி."
*அடியே.வாயை மூடு;சும்மா அது இதுனு சொல்லி எனக்குக் கோவத்தக் கிண்டாத, இந்தத் தலைவரு வேலைய நான் பாத்துகிட்டு இருக்கல. ஏதோ கொந்தரப்புக்கு

Page 76
42 குருதிமலை
எடுத்து வேலை செஞ்சா நாமளும் நாலு பணம் தேடிக்கிற லாமுனுதான் செஞ்சேன்.இந்தக் கண்டாக்குபய இவ்வளவு அநியாயம் செய்வான்னு யாரு கண்டாங்க.எல்லாத்துக்கும் சேத்து இப்பவே அவருக்கிட்ட கதைச்சி ஒரு முடிவு கட்டிப் புடுறேன்" எனக் கூறிய தலைவர் லேஞ்சியை எடுத்துத் தலையில் சுற்றிக்கொண்டார்.
* 'இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியாது. இனிமே இந்த கண்டக்கையாவூட்டு சக வாசமே நமக்கு வேணும். நாம பாட்டுக்கு நம்ப வேலைய செஞ்சிக்கிட்டு இருப்போம். இந்தத் தோட்டத்து ஆளுங்க பேசுற பேச்சி எல்லாம் எனக்குக் கேட்டுக்கிட்டு இருக்கமுடியாது' எனக் கூறிய பூங்கா மெதுவாகக் காம்பராவின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
அவசர அவசரமாகக் கோட்டை எடுத்து அணிந்து கொண்ட தலைவர், ‘என்ன பூங்கா. யாராச்சும் இருக் காங்களா?" எனக் கேட்டவாறே அவளின் அருகே சென் ழுர்,
"ஒருத்தருமில்லீங்க. சுறுக்கா போயிட்டு, போன வொடன வந்திடுங்க" எனக் கிசுகிசுத்தாள் பூங்கா.
தலைவர் வெளியே இறங்கி நடக்கத் தொடங்கினர்.
எங்கும் இருள் சூழ்ந்து அமைதியாக இருந்தது. தூரத்து மலைக்குன்றுகள் யாவும் கருமையாகக் காட்சி யளித்தன.எங்கோ நாய் ஊளையிடும் சத்தமும்,இனந் தெரி யாத ஒலிகளும் இரவை மேலும் பயங்கரமாக்கிக்கொண்டி ருந்தன.
கண்டக்டரின் பங்களாவை அடைந்ததும் சுற்றுமுற் றும் பார்த்துவிட்டு, வாசற்படியை நெருங்கி,கண்ணுடியின் ஊடாக உள்ளே பார்த்தார் தலைவர். பின்பு மெதுவாக, 'ஐயா. ஐயா...' எனக் கூப்பிட்டார்.அவரது குரல் அந்த இரவில் சற்றுப் பலமாகவே ஒலித்தது.

குருதிமலை 4.
சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது.
“என்னுங் தலைவர்.என்ன நடந்தது?ஏன் இந்தநேரத் துல வந்தது?உள்ளுக்கு வாங்க."
ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கவேண்டும். அதனுலே தான் தலைவர் அந்த நேரத்தில் அங்கு வந்துள்ளார் என்ப தைக் கண்டக்டர் ஊகித்துக்கொண்டார்.
"என்னுங்கையா, ரொம்ப தர்மசங்கடமாப் போயி ருச்சி; நீங்க செஞ்சது ரொம்பவும் சரியில் லீங்க. தோட் டமே குழம்பிக் கெடக்கு' என்ருர் தலைவர் படபடப்பாக.
"என்னுங் தலைவர் சொல்லுறது? நமக்கு ஒன்னுங் வெளங்க இல்லைத்தானே; இப்போ என்னுதாங் நடந்து போச்சு??? ●
"என்னுங்க அப்புடி கேக்குறீங்க? நீங்க ஆளுங்களுக்கு பேரு போடாம விட்டதுனல சம்பளத்து வாசல்ல வச்சி எல்லாரும் ஏங்கிட்ட கரச்சலுக்கு வந்துட்டானுங்க."
"அப்படியா விஷயங். யார் கரச்சலுக்கு வந்தது?"
"தோட்டத்து ஆளுங்க எல்லாமே ஒன்ன சேந்துகிட் டாங்க;இப்போ கொஞ்ச நேரத்துக்கு முந்தி என்னல வூட் டுல இருக்கமுடியலிங்க.நல்லாக் கள்ளுத் தண்ணிய குடிச் சிப்புட்டு வந்து கண்டக்கையாவுக்கு பந்தக்காரன்.வால் புடிக்கிறவன். அந்த ஆண்டி,இந்த ஆண்டின்னு ஊத்தப் பேச்சில ஏசிப்புட்டாங்க" என்றர் தலைவர்.
**ஆங்,அதிக்கி ஒன்னுங் பயப்புடவேனங் தலைவர். நாங் நாளைக்கே பொலிசுக்கு சொல்லி அவுங்க எல்லாத்துக்குங் செம்மையா ஒதைக்க சொல்லுறேங்" என்ருர் கண்டக்டர் அலட்சியமாக,
‘என்னங்கையா அப்புடி சொல்லுறீங்க. நீங்க பேர் போடாம விட்டதுணுலதானே இப்ப கரச்சலே வந்திருக்கு.

Page 77
144 குருதிமை
இனி பொலிசுக்கு வேற போன என்ன கரச்சு வருமோ தெரியாது.ஒங்கமேல குத் தத்த வச்சிக்கிட்டு என்னங்க ஐயா..இப்புடி பேசிறீங்க."
தலைவர் இப்படிக் கூறியதும் கண்டக்டருக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது.
‘என்னுங் மோடத்தனமா கதைக்கிறது? ஒங்களுக்கு நாங் ஒதவி செஞ்சதுனலைதாங் இப்புடி வந்தது.ஒங்க கொன்றேக்கில வேலை செய்யிறதுக்குதான் நாங் ஆளுங் களை கொடுத்தது.அதிங்ணுலதாங் நாங் அந்த ஆளுங்களுக்கு பேர் போடாமவிட்டது."
'நீங்கதானே சொன்னீங்க.கொன்ருக்கில வேல செய்யுற ஆளுங்களுக்கு செக்குருேலுல வேற வேலையில பேர் போட்டுப்புடுறேன்னு; இப்ப என்னடான பேர் போடாமவுட்டுபுட்டீங்க. இது அநியாயமா இல் லியா இருக்கு" என்ருர் தலைவர்.
"ஓங்களுக்கு அதிங் ஒன்னுங் வெளங்காது தலைவர். இப்ப தோட்டத்தில குடுக்குற "எஸ் டி மே ட் டி ல, தொரைக்கு சரியா வேலைக்கணக்கு காட்டவேனுங். அந்த ஆளுங்களுக்கு சொல்லுங்க, அந்த கொறைஞ்ச பேர் எல் லாங் அடுத்த மாசத்தில நான் போட்டுத்தாரது சொல்லி" என்ருர் கண்டக்டர் தலைவரைச் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன்.
'அது எல்லாம் என்னுல சொல்லமுடியாதுங்க. ஒரே முடிவோடதான் எல்லாரும் இருக்காங்க. ஜில்லாவுக்குப் போய் சொல்லி இதப்பத்தி வெசாரணை வைக்கோனுமுணு சொல்லிப்புட்டாங்க. இப்போ வெசாரணை வச்சாங்கணு ஒங்களுக்குதாங்க பெரிய கரச்ச வரப்போவுது' என்றர் தலைவர்.
** என்னுங் தலைவர் நம்மளை மெரட்டப் பாக்கிறது.

குருதிமலை 145
நானு ஒப்பங் வச்சி சல்லி எடுத்தது?நீங்கதானே ஒப் பங் வச்சி எல்லாத்திக்கும் சல்லி வாங்கினது. நம்பளை யாருங் ஒன்னுங் செய்யமுடியாது" என்ருர் கண்டக்டர் l-J60 LDITd5.
* அப்புடினு, என்னைய மட்டும் மாட்டப்பாக்குறிங்க போல இருக்கு. நான் வாங்கின சல்லி எல்லாங் ஒங்ககிட்ட தானே கொடுத்தேன். நீங்க மட்டும் தப்பிச்சுக்கிறலாமுனு பாக்குறீங்களா?" எனப் படபடத்தார் தலைவர்.
**ஆமாங் தலைவர். நீங்க தப்பிச்சுக்கோனுமுணு ஆளுங்ககிட்ட அது இதுனு சொல்லி ஒருமாதிரி சமாதா னமா கதைச்சி வச்சிக்குங்க. இல்லையன்னு ஒங்களுக்கு மிச் சங் கரச்சல் வாறது; இந்தத் தோட்டத்து ஆளுங்களால நம்மளை ஒண்ணும் செய்யமுடியாது" என்ருர் கண்டக்டர்.
“இப்ப அப்புடித்தாங்க சொல்லுவீங்க.நானுந்தாங்க பத்து வருஷமா தலைவரு வேல செஞ்சிக்கிட்டு வாரேன். ஆணு,இந்த மாதிரி ஒரு நாளும் அவமானப்பட்டது இல் லேங்க. ஏம் பேச்சி கேட்டு நடந்தவங்க எல்லாம் இப்ப என்னைக் கெட்டவனென்னு சொல்லுருங்க. அது மட்டுமா, என்னைய தலைவரு வேலையில இருந்து விலக்கிப்புட்டு அந்த வீரய்யாவ தலைவரா வைக்கப்போருங்களாம்.நீங்க இப்புடி செய்வீங்கனு நான் கொஞ்சங்கூட நினைக்கலிங்க" என்ருர் தலைவர்.
‘இந்தா பாருங் தலைவர். தோட்டத்துல யாரும் புதிசு புதிசா தலைவரா வந்து இங்கே ஒன்னும் செய்யமுடி யாது.நாங் மத்த ஆள் மாதிரி பயந்துகிட்டு இருக்கிற ஆள் இல்ல. தோட்டத்துல யாருங் கொழப்பங் பண்ணி கரச்ச லுக்கு வந்தா அப்புறங் என்னு நடக்குமுனு சொல்லத் தெரியாது."
கண்டக்டரின் வார்த்தைகள் கோபத்தில் தடுமாறின.

Page 78
46 குருதிமலை
"ஓங்க பேச்ச கேட்டு நடந்தேனுங்களே, என்னைத் தாங்க செருப்பாலை அடிக்கனும். நீங்க இப்புடி செய்வீங் கனு எனக்கு முன்னமே தெரிஞ்சிருந்தா நான் இந்த வேலை யில இறங்கியிருக்கமாட்டேங்க. என்னைய தோட்டத்தில தலைகாட்ட முடியாம செஞ்சுப்புட்டீங்க."
"இந்தா.நீங்க கொன்றேக்குல சல்லி வாங்கிறப்போ பேசாம இருந்தது.ஆளுங்க கரச்ச வந்தவொடனதாங் நம் மலை குந்தங் சொல்லுறது."
'இவ்வளவு நாளும் தோட்டத்து சல்லியதான் எடுத் துக்கிட்டிருந்தீங்க.இப்ப ஆளுங்க வவுத்துலேயும் அடிக்கத் தொடங்கிட்டிங்க.இனிமே ஒங்க கூட பேசுறது கண்டாலே ஆளுங்க என்னை உயிரோடை வைக்கமாட்டாங்க. இது எல் லாம் எங்க போய் முடியுமோ தெரியாது' மாரிமுத்துத் தலைவர் குமுறிஞர். ●
* சும்மா வளவளனு கதைக்கவேணுங் தலைவர். நான் ஒங்களுக்கு உதவி செஞ்சிதான் சல்லி எடுத்துக் கொடுத் தது;உங்களுக்கு விருப்பங் இல்லாட்டி விட்டுப்போடுங்க. நமக்கு தூக்கம் வாறது.நாங் படுக்கப் போறது.நீங்க ஒங். களுக்கு முடிஞ்சா எது சரி செய்யுங்க. நம்மளை ஒன்னுங் செய்யமுடியாது" எனக் கூறிக்கொண்டே பெரிய கொட் டாவி விட்டபடி எழுந்திருந்தார் கண்டக்டர்.
கண்டக்டர் இப்படிக் கூறியதும், இனி அவருடன் கதைப்பதில் பிரயோசனமில்லை என நினைத்த தலைவர், கோபத்துடன் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டார்.
"இந்த கண்டாக்கு பயசுட இனிமே சகவாசமே வச்சி ருக்கக்கூடாது;செய்யிறது எல்லாம் செஞ்சிப்புட்டு கடைசி யில நழுவிக்கிற பாக்குருன்’ என எண்ணியபடி வீட்டை நோக்கி நடந்தார் மாரிமுத்துத் தலைவர்.

குருதிமலை 147
அத்தியாயம் இருபது
இஸ்தோப்பில் ஒரு பக்கத்திலே வைத்திருந்த குப்பி லாம்பு ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தது. அதன் அருகே போடப்பட்டிருந்த வாங்கில் அமர்ந்திருந்த வீரய்யா ஏதோ சிந்தனையுடன் தனது நண்பர்களின் வரவுக்காகக் காத்திருந்தான்.
வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. கையில் தீப்பந்தத்துடன் யாரோ வந்து கொண்டிருந்தனர். ,
ராமுவும் செபமாலையுந்தான் வருகிறர்கள் எனப் புரிந்து கொண்ட வீரய்யா இஸ்தோப்பில் நின்றபடி வெளியே எட்டிப் பார்த்தான்.
**இவ்வளவு நேரமா என்னடா செஞ்சிக்கிட்டிருந் தீங்க; நான் வெள்ளணவே வரச் சொல்லியிருந்தேனே' எனக் கேட்ட வீரய்யா கதவைத் திறந்து விட்டான்.
கையில் இருந்த பந்தத்தை ஊதி அணைத்துவிட்டுஉள்ளே நுழைந்த செபமாலை, "இப்போதான் டவுனுல இருந்து வந்தேன்; வூட்டிலை சாமான் இல்லேனு சொல்லிக்கிட்டிருந் தாங்க. வாங்கிக் குடுத்திட்டு வாறதுக்கு கொஞ்சம் சொணங்கிப் போயிடிச்சு" எனக் கூறினன். அவனைத் தொடர்ந்து ராமுவும் வேறு சில இளைஞர்களும் உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் எல்லோரும் சுவர் ஒரமாக வைக்கப்பட் டிருந்த வாங்கில் அமர்ந்து கொண்டனர்.

Page 79
及48 குருதிமலை
‘'இப்போ நம்ப தோட்டம் போய்கிட்டு இருக்கிற போக்கே சரியில்லை; இதப்பத்தி ஓங்களோட கதைக்கலா முனுதான் நான் எல்லாத்தையும் வரச்சொன்னேன்.
வீரய்யா நேரடியாக விஷயத்துக்கு வந்தான். "ஆமா வீரய்யா, தோட்டத்த அரசாங்கம் எடுத்த தில இருந்து எல்லாமே தலைகீழாகத்தான் நடந்துகிட்டு வருது" என்ருன் ராமு.
"அண்ணே. இன்னிக்கு நம்ப தோட்டத்துக்கு ஆறு பேரு சுப்பவைசர் வேலைக்கு வந்திருக்காங்க. நம்ப தோட் டத்தில உள்ள படிச்ச பொடியங்க எல்லாம் வேலைக்கு அப்பிளிக்கேசன்போட்டோம். ஆன ஒருத்தனுக்குக் கூட வேலை கெடைக்கல்ல."
" போட்ட அப்பிளிக்கேசனுக்கு பதில்கூட வரலிங் கண்னே"
** அதுமட்டுமில்லே ராமு, இப்ப வேலைக்கு வந்தவங் களுக்கு வேலையே தெரியாதுடா. இனிமேதான் பழக்கப் போருங்களாம். ஒண்ணுமே தெரியாதவங்களை கொண்டு வந்து போட்டு தோட்டத்தை நாசமாக்கப் போருங்க" என்ருன் வீரய்யா.
"எல்லாரும் வால் புடிச்சு வந்தவங்கபோலத் தெரி யுது. தேயிலை மரத்தையே கண்ணுல காணுதவங்க நம் மஞக்கு வேலை படிச்சுக்கொடுக்க வந்திருக்காங்க" என் முன் செபமாலை.
* தோட்டத்திலையே பொறந்து வ்ளந்து படிச்ச எங் களுக்கு வேலை இல்லேங்குருங்க. எங்கையோ கெடந்த வங்க எல்லாத்துக்கும் வேலை குடுக்கிருங்க"
'அண்ணே. நம்ம ஸ்கூலுக்கு ரெண்டு சிங்கள மாஸ் டர் மார்களை அனுப்பியிருக்காங்க. அந்த வேலைய நம்ம தோட்டத்துல படிச்சிட்டு இருக்கிற பெடியங்களுக்கு

குருதிமலை 49
கொடுத்திருக்கலாந்தானே" என ஆதங்கத்துடன் கூறி ஞன் செபமாலை.
** சிங்கள வாத்தியாருங்களை புடிச்சி அனுப்பியிருக் காங்களே, அவுங்க நம்ப புள்ளைங்களுக்கு என்னத்தைத் தான் படிச்சி கொடுக்கப் போருங்களோ தெரியாது"
"நம்ப புள்ளைங்க படிச்சா என்ன..? கெட்டுப் போனதான் என்ன..? அவுங்களுக்கு அதப்பத்தி கவலை யில்லை. மாஸ்டர் மாருங்களுக்கு சம்பளம் மட்டும்கெடைச் சா சரி’ என்ருன் செபமாலை.
** நம்ம வருங்கால புள்ளைங்கவூட்டு வாழ்க்கையே படிப்பிலதான் இருக்கு. அதையே நாசமாக்குருங்க, இந்த அநியாயத்த பாத்துக்கிட்டு சும்மா இருக்கக்கூடாது" என்ருன் வீரய்யா.
இவர்களது சம்பாஷணையைக் கேட்டவண்ணம் காம் பராவில் இருந்த மீனச்சி, "" என்னங்க தம்பி. தோட்டம் அரசாங்கம் எடுத்த புதிசுல என்னென்னமோ செய்யப் போவுதுனு சொல்லி நீங்கதான் பேசிக்கிட்டீங்க; இப்ப நீங்களே இப்படி கதைக்கிறீங்க. எங்களுக்கு ஒண்ணுமே வெளங்கலே" என்ருள் பலமான குரலில்.
** அப்புடியில்லீங்க அத்தை., அரசாங்கத்தோட கொள்கையெல்லாம் நல்லதுதான்.ஊடையில இருக்கிருங் களே. இந்த வாலு புடிக்கிற பயலுக, அவங்கதான் இந்த மாதிரி வேலையெல்லாம் செஞ்சிகிட்டு வாருங்க" என்ருன் செபமாலை.
'இப்ப பாருங்கண்ணே. நம்ப தோட்டத்துக்கு எத் தினை பேரு வேலைக்கு வந்துட்டாங்க. யாரைப் பாத்தாலும் அவுங்க 'சப்போட்டுல வந்த ஆளுங்களாத்தான் இருக் குருங்க"

Page 80
150 குருதிமலை
"யாரா இருந்தாலும் பரவாயில்லையடா, வர்றவங்க எல்லாம் சொரண்டுற பயலுகளாக இல்லியா இருக்காங்க என்ருன் வீரய்யா.
"ஆமாங்கண்ணே, புதிசா கண்டக்கையா வந்தாரு; ஆறுமாசத்திலேயே தோட்டத்தைக் காடாக்கிட்டாரு. அவரு வந்ததிலயிருந்து தேயிலைக்கு ஒரம் போட்டதையே நாங் காங்கலே. ஒழுங்கா மருந்தடிக்காம தேயிலையெல் லாம் பூச்சி வச்சிக் கெடக்குது. இப்புடியே போயிக்கிட்டு இருந்தா இன்னும் கொஞ்சக் காலத்தில கொழுந்தே வராது" என்ருன் சுவரிலே சாய்ந்தபடி நின்ற இளைஞன்.
"அதுமட்டும் இல்லேடா, நம்ப லயத்து ரோட்டுங் களுக்கெல்லாம் தோட்டக் கணக்கில ஆள் போட்டு துப்புர வாக்குவாங்க; பீலியில தண்ணி வராமப் போன "ரிப்பர்’ பண்ணிக் கொடுப்பாங்க. இந்தக் கண்டக்கையா வந்ததில இருந்து இதெல்லாம் ஒண்ணுமே செய்யல" என்ருன் ராமு.
**ஆமாடா ராமு, இந்த வேலையெல்லாம் செஞ்சு முடிஞ்சதாக் கணக்குக்காட்டி கண்டக்கையா சல்லி அடிச் சிருப்பார். இப்ப புதிசா வந்திருக்கிற பெரிய கிளாக்கரும் அவருடைய கூட்டாளிதானே; ரெண்டுபேருமா சேந்து வெளையாடியிருந்தா யாருக்குத் தெரியப் போவுது?"
"அது எப்பு டிங்கண்ணே, இஷங்களுக்கு சல்லி அடிக்க முடியும்; தொர கண்டுக்கிட மாட்டாரா?"என்ருன் இளைஞ ணுெருவன்.
"அதுதாண்டா வெளங்கல, இப்ப தொரையும் சரியா மலைக்கு வேலை பாக்க வாற தில்லை. எல்லாம் கண்டக் கையா பொறுப்புலேயே நடக்குது. நம்ப மாரிமுத்துத் தலைவரும் ஐயா பின்னுக்கே சுத்திக்கிட்டு திரியிருரு. ஒண்ணுமே புரியமாட்டேங்குது" என்ருன் ராமு சிந்தித்த வாறு.

குருதிமலை
"தோட்டத்தில இப்ப நடந்துகிட்டு வாறதப்பாத்தா நெனச்சது ஒண்ணு நடக்கிறது ஒண்ணு இருக்கு, நாம நல்லா மாட்டிக்கிட்டம் போல தெரியுது" என்ருன் செப ιρπάου.
**இனிமே நாம இப்படியே சும்மா இருந்திடக் கூடாது. இதுங்களுக்கு நடவடிக்கை எடுக்கணும். மொதல் வேலையா யூனியன் மூலமா அரசாங்கத்துக்கு நம்ப எதிர்ப் பைத் தெரிவிக்கோனும்" என்ருன் வீரய்யா.
**ஆமாங்கண்ணே நீங்க சொல்லுறபடி செய்வோம்" என ஆமோதித்தான் செபமாலை.
**அதுமட்டுமில்லே நீங்க எல்லாரும் முக்கியமாக ஞாப கத்துக்கு வச்சிக்கிற வெசயம் என்னடான்ன, இனிமே நாம எல்லாம் பயப்புடாம எதுக்கும் எதிர்த்து போரா டத் தயாரா இருக்கணும்" என்ருன் வீரய்யா ஆவேச
DIT 5
வீரய்யா கூறிய சொற்கள் அங்கிருந்த இளைஞர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தன. அவர்கள் இப்போது எதற்
கும் அஞ்சாதவர்களாக மாறத் தொடங்கினர்.
அவர்களது மனதில் ஆவேசம் துளிர்த்து சுடர்விடத் தொடங்கியது.

Page 81
I52 குருதிமலை
அத்தியாயம் இருபத்தொன்று
செந்தாமரை மகிழ்வுடன், துள்ளிக்குதித்த வண் ணம் பியசேனவின் கொந்தரப்பு மலையை நோக்கி ஓடி வந் தாள்.
அவள் வருவதைக் கவனிக்காத பியசேன, ஏதோ யோச னையுடன் கற்பாறையொன்றின் மேல் அமர்ந்திருந்தான். அருகே நெருங்கிய செந்தாமரை பின்புறமாகச் சென்று குறும்புத்தனமாக அவனது கண்களை திடீரெனப் பொத்தி
ஒரு கணம் திடுக்குற்ற பியசேனு, அவளது கைகளில் பலமாகக் கிள்ளினன்.
**ஆ." எனச் செல்லமாகச் சிணுங்கியபடி கைகளை உதறிக்கொண்டே அவன் முன்னே வந்தாள் செந்தாமரை. ‘என்ன செந்தாமரை..எவ்வளவு நேரமா நான் ஒனக் காக இங்க காத்திருக்கேன் தெரியுமா?" எனக் கேட்டுக் கொண்டே கைகளால் அவளது இடையைச் சுற்றி வளைத் துத் தன்னருகே இழுத்தான் பியசேன.
"இன்னிக்கு எங்க மலைக்கு கண்டக்கையா வந்திட் டாரு; இப்ப கொஞ்ச நேரத்துக்கு முந்தித்தான் மலையை வுட்டுப் போனுரு. அதற்கு அப்புறந்தான் நான் கங்காணிக் கிட்ட சொல்லிப்புட்டு வந்தேன்" எனக் கூறிய செந்தா மரை, அவனது கைகளை மெதுவாக விலக்கிவிட்டு அவ னருகே அமர்ந்து கொண்டாள்.

குருதிமலை 153
“நீ வராமயேதும் இருந்திடுவியோன்னு நான் பயந்தே போயிட்டேன்" எனக் கூறிக் கொண்டே அவள் அருகில் நெருக்கமாக அமர்ந்து கொண்டான் பியசேன.
‘எப்புடீங்க நான் வராம இருப்பேன். நீங்கதான் முக் கியமா ஏதோ கதைக்கணுமுன்னு ஒங்க கூட்டாளிகிட்ட சொல்லியனுப்பியிருந்தீங்களே' எனக் கூறிய செந்தாமரை பியசேனவின் கைகளைத் தனது கைகளோடு கோர்த்துக் கொண்டாள்.
**ஆமாசெந்தாமரை,முக்கியமான விசயந்தான்.எங்க சித்தப்பா எனக்கு வேற கலியாணம் செஞ்சு வைக்கபாக்கி ருரு. எங்கம்மாகிட்ட போன கிழமை வந்து இதைப்பத்திக் கதைச்சாரு" எனக் கவலை தோய்ந்த குரலில் கூறினன் பிய சேஞ.
**இதுதான் ஒங்க முக்கியமான வெசயமா?’ எனச் செந்தாமரை சிறிது எரிச்சலுடன் கேட்டாள்.
‘எங்கம்மாவும் சித்தப்பா பேச்சைக் கேட்டுக்கிட்டு, என்னை வேற கல்யாணஞ் செய்யச் சொல்லி கரச்ச பண் ணிக்கிட்டு இருக்காங்க" எனக் கூறிய பியசேன அவள கைகளை மெதுவாக வருடினன்.
*அப்படீன்னு. இதுவரைக்கும் நம்ப வெசயத்தைப் பத்தி உங்க அம்மாக்கிட்ட சொல்லவே இல் லியா?" எனக் கலக்கத்துடன் கேட்டாள் செந்தாமரை.
"நம்ம வெசயமெல்லாம் அம்மாவுக்கு நல்லாத் தெரி யும் செந்தாமரை.நான் எவ்வளவோ அவுங்ககிட்ட சொல்லிப் பாத்திட்டேன்; ஆன அவுங்களும் பிடிவாதமா இருக்காங்க" எனக் கூறிய பியசேன அவளது கைகளை உற் றுப் பார்த்தான்.
*இதுக்கு நம்ம என்னதான் செய்யலாம்" என யோச னையுடன் கேட்டாள் செந்தாமரை.

Page 82
54 குருதிமலை
**இந்த விசயத்தில நான் எங்க அம்மாவோட மனச கஷ்டப்படுத்த விரும்பல்ல; அவுங்க மட்டுந்தான் எனக்கு இருக்காங்க."
"அப்படின்ன ஒங்கம்மா பேச்சைக் கேட்டுத்தான் நீங்க நடக்கப்போநீங்களா?" என வெடுக்கெனக் கேட் டாள் செந்தாமரை.
"என் நிலைமையில நான் என்னதான் செய்யலாம்; நீயே சொல்லு." எனக் கெஞ்சும் குரலில் கூறினன் பிய சேன.
"நீங்க சொல்லுறதைப் பாத்தா என்னைக் கைவிட்டுப் புடுவீங்க போல இருக்கு" செந்தாமரையின் குரல் கரகரத் தது. அவளது கண்களில் நீர் முட்டியது.
‘எங்கம்மா மட்டுமில்ல.நாட்டில இருக்கிற ஒருத் தருமே நம்ம தொடர்பை விரும்பல்ல செந்தாமரை எல் லோரையுமே பகைச்சுக்கிட்டு இருக்க முடியுமா?"
‘என்னை நீங்க ஏமாத்தப் பாக்குறீங்க; புதிசா கலியா ணம் பேசினவொடன ஓங்க மனசே மாறிப்போச்சு-" எனக் கூறிய செந்தாமரை திடீரென எழுந்தாள். அவளை யும் மீறிக் கொண்டு அவளது கண்களில் நீர் முட்டி வழிந் திதி
பியசேன எழுந்து அவளது கைகளைப் பற்றினன். ‘என்னைத் தொடாதீங்க, வரவர ஓங்க பேச்சே மாறிக் கிட்டு வருது. நான்தான் ஏமாந்திட்டேன்’ எனக் கூறிய செந்தாமரை முகத்தைப் பொத்திக்கொண்டு விம்மினள். "இப்ப என்ன தான் சொல்லிட்டேன். ஏன் இப்புடி அழுறே. நம்ம வெசயத்துக்கு எல்லாரும் எதிர்ப்பா இருக் காங்கன்னுதானே சொன்னேன்’’ என அவளைத் தேற்றும் வண்ணம் கூறினன் பியசேன.
செந்தாமரை தொடர்ந்தும் பெரிதாக விம்மினள். அவள் அப்படி விம்முவதைப் பார்த்த பியசேனவின் உள் ளம் பதறியது.

குருதிமலை 155
"செந்தாமரை, ஒன்னைப் பிரிஞ்சு என்னல இருக்கமுடி யுமுனு நெனைக்கிறியா? அழாத செந்தாமரை...' எனக் கூறிய பியசேன ஆதரவுடன் அவளது கண்ணிரைத் துடைத்து விட்டான்.
"என்னை,நீங்க கைவிட்டுட்டீங்கன்னு அப்புறம் நான் உசி ரோட இருக்கமாட்டேன்" செந்தாமரை விம்மலிடையே
கூறினுள்.
"ஏன் செந்தாமரை. இப்புடி எல்லாம் கதைக்கிறே. நான் ஒன்னை ஒரு நாளும் ஏமாத்தமாட்டேன்’ எனக் கூறிய பியசேன அவளைத் தன்னேடு இறுக அணைத்துக் கொண் டான்.
*சரிங்க.நான் வந்து ரொம்ப நேரமாகுது. வூட்டுக் குப் போகனும்" எனக் கூறிக் கொண்டே அவனது கைகளை மெதுவாக விலக்கி விட்டாள் செந்தாமரை.
**இந்தா பாரு செந்தாமரை.நான் எந்த நேரத்தில வந்து ஒன்ன கூப்பிட்டாலும் நீ என்னுேட வாறதுக்கு ரெடியா இருக்கோனும். நான் எல்லா ஒழுங்குகளையும் செஞ்சிட்டு வந்து ஒன்ன கூப்பிடுவேன்; இத சொல்லத்தான் முக்கியமா ஒன்னை வரச்சொன்னேன்’’ எனக் கூறியபடி அவளது கன்னத்தில் வழிந்திருந்த நீரைத் தனது விரல் களால் துடைத்துவிட்டான் பியசேன.
அவள் அவனது கைகளைப் பற்றித் தன் கண்களில் ஒற் றிக் கொண்டு அவனிடம் விடை பெற்ருள்.
மகிழ்ச்சியுடன் துள்ளியபடி அவள் ஒற்றையடிப் பாதையின் வளைவில் ஏறியபோது அங்கே அவள் கண்ட காட்சி அவளது நெஞ்சை விறைக்க வைத்தது.
அங்கு-கண்டக்டர் சிகரெட் புகைத்த வண்ணம் அவ ளையே உற்று நோக்கியபடி நின்று கொண்டிருந்தார்.

Page 83
156 குருதிமலை
அத்தியாயம் இருபத்திரண்டு
அன்று சனிக்கிழமை, வழமைபோல் அந்தப் பகுதியில் உள்ள தோட்டத் துரைமார்கள் எல்லோரும் கிளப்பில் சந்தித்தார்கள்.
பொதுவாக கிளப்நாள் என்ருல் துரைமார் எல்லோ ருக்கும் சந்தோஷமாக இருக்கும். அன்றுதான் அவர்கள் தங்களது நண்பர்களான மற்றைய தோட்டத்து துரை மார்களைச் சந்தித்து உரையாடுவார்கள்; மது அருந்தி விட்டு ஆடிப்பாடி குதூகலமாகப் பொழுதைக் கழிப்பார் கள்; தமது சொந்தப் பிரச்சினைகளிலிருந்து தோட்டப் பிரச்சினைகள் வரை ஒருவரோடொருவர் கதைத்துப் பரி மாறிக் கொள்வார்கள். “ ‘ஹலோ மிஸ்டர் சில்வா, வாருங்கள் நாம் கரம் விளையாடலாம்."
"பார்' அருகே மது அருந்திக் கொண்டிருந்த ஒருவர் பக்கத்துத் தோட்டத் துரையை அழைத்தார்.
"கம் யூ ஒல்சே ஹாவ் ஏட்றிங்.." எனக் கூறிவிட்டு அவரின் பதிலைக் கேளாமலே பார் கீப்பரிடம் ஆடர் கொடுத்தார் சில்வா துரை.
இருவரும் தனிமையான ஓர் இடத்தில் போய் அமர்ந்து கொண்டனர். ‘பார்கீப்பர்" அவர்களுக்கு மதுவைக் கொண்டு வந்து பரிமாறினன்.
‘எப்படி உங்களது எஸ்டேட் விஷயங்கள் யாவும் ஒழுங்காக நடக்கின்றதா?தேயிலை விலையெல்லாம் எப்படி?"

குருதிமலை 157
எனக் கேட்டவாறு மதுவை கிளாஸில் ஊற்றினர் பக்கத்து தோட்டத் துரை.
அவர்களது உரையாடல் ஆங்கிலத்தில் நடந்தது. "உலகச் சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்ததால் எமது தோட்டத் தேயிலையும் கூடிய விலைக்கே விற்கப்படு கின்றது. உண்மையில் நாம் தயாரிக்கும் தேயிலையின் தரம் மிகவும் குறைந்து விட்டது' என்ருர் மிஸ்டர் சில்வா மதுக் கிண்ணத்திற்குள் உற்றுப் பார்த்தவாறு.
"ஆமாம். தேயிலைத் தோட்டங்களில் ஏற்பட்டிருக்கும் உற்பத்தி வீழ்ச்சியை யாருமே புரிந்து கொள்ளாத வகை யில் அதிர்ஷ்டவசமாக விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது” என்ருர் பக்கத்து தோட்டத் துரை.
**இந்த உற்பத்தி வீழ்ச்சியை இனிமேல் சரிப்படுத்த லாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை-"
"ஏன் திடீரென அப்படிக் கூறிவிட்டீர்கள், இப்போது தோட்டங்களில் மேலும் தேயிலை உற்பத்தியை அதிகரிக்க நிறையப் பணம் அரசாங்கத்தில் ஒதுக்கியிருக்கின்ருர்கள் அல்லவா?"
"ஆமாம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆணுலும் அந்தப் பணத்தை தோட்டத்திற்கு சரியான முறையில் உபயோகிக்க முடியாத நிலை உருவாகிக் கொண்டு வரு கிறது" சில்வா துரையின் பேச்சில் கவலை தொனித்தது.
'இப்போதுள்ள சூழ்நிலையில் நமக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும்--ஏன் இந்த நாட்டுக்குமே பெரிய பாதிப்பு ஏற்படப்போகின்றது. உடனே நாம் இதைப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் போகப்போகஇதைப் புரிந்து கொள்ளலாம்."
"தொழிலாளர்களது யூனியனிலிருந்தும் இது சம்பந்த மாக எனக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்கள்" என்ருர் சில்வாதுரை.

Page 84
158 குருதிமலை
"அப்படியா, அந்தக் கடிதத்தில் என்ன விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள்?"
'தொழிலாளர்களது சலுகைகள் பெரிதும் குறைக்கப் பட்டுவிட்டதென்றும், வழமையாக தோட்ட ங் களி ல் செய்து வந்த வேலைகள் செய்யப்படவில்லை என்றும் குறிப் பிட்டிருந்தார்கள்."
*இதற்கு நீங்கள் என்ன கூறுவதாக உத்தேசித்துள் Gifti g; 6ir?'''
"அதுதான் எனக்கும் புரியவில்லை. தோட்டத்துக் கண் டக்டர், தோட்டத்தில் ஒழுங்காக வேலை செய்யாது தோட் டத்தைச் சுரண்டுகிருர்; அதைப்பற்றி இரகசியமான முறையில் நான் மாவட்டக் காரியாலய மனேஜரிடம் கூறி னேன்.ஆனல், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு எனக்கு அனுமதி தரவில்லை."
**ஆமாம். மாவட்டக் காரியாலயத்தில் இருப்பவர் கள் கூட கட்சி அமைப்பாளரின் ஆட்கள்தானே."
“எனது தோட்ட கோப்பிரட்டிவ் மனேஜர் கூட அரிசியைக் குறைத்து நிறுக்கின்ருர் என்றும், தொழிலா ளர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய ரேஷன் சாமான்களை கள்ள மார்க்கட்டில் விற்று விடுகிருர் என்றும் எனக்குத் தெரிய வந்துள்ளது. நான் யூனியனுக்குச் சென்று இதைப் பற்றி விசாரித்தும் பார்த்தேன். அந்தந்த மாதத்துக்கு வேண்டிய ரேஷன் சாமான்களை அவர்கள் கொடுத்து விட்ட தாக என்னிடம் கூறினர்கள்." -
**ஆமாம். அரசியல் வாதிகள் தங்களது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காக தோட்டங்களில் கூட்டுறவுச் சங்கக் கடைகளை அமைத்து, அதில் தங்களுக்கு சாதகமான ஆட் களையே வேலைக்கு அமர்த்துகின்றனர். ஆனல்,அவர்களோ கடைகளில் உள்ள சாமான்களைச் சுரண்டி தொழிலாளர் களைக் கஷ்டத்துக்குள்ளாக்குகின்றனர்."

குருதிமலை 159.
"இப்படித் தோட்டங்களில் அரசியல் புகுந்து நிர்வா கத்தில் பங்கம் விளைவிப்பதால் தோட்டங்களை நாம் சரி யான பாதையில் கொண்டு நடத்த முடியாமல் இருக் கிறது."
**அது மட்டுமல்ல, இன்னுமொரு முக்கியமான விட யம் யாதெனில், தோட்டங்களில் இப்படி ஊழல் செய்ப வர்களைத் தண்டிக்கவோ அல்லது தடைசெய்யவோ எத்த னிக்கும் போது நாம் எமது தொழிலையே இழக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி விடுகிறது."
** சரியாகக் கூறினீர்கள் மிஸ்டர் சொய்சா, எனது தோட்டத்துக்கு புதிதாக வந்திருக்கும் பெரிய கிளாக்கர் மீதுசுட எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. என்ன செய் வது, ஏதோ ஒருவாறு சமாளித்துத்தான் தோட்டத்தைக் கொண்டு நடத்துகிறேன்' எனக் கூறிய சில்வாத் துரை கிளாஸில் இருந்த மதுவை ஒரே மூச்சில் குடித்துவிட்டு கிளாசைக் கீழே வைத்தார்.
* மிஸ்டர் சில்வா, உங்களுக்கு கோப்புரேட்டிவ் மனே ஜர் எங்கே சாமான்களை விற்கின்றர் என்பது தெரியுமா?" "ஆமாம். தொழிலாளர்கள் எனக்கு அனுப்பியிருந்த கடிதமூலம் தெரிந்து கொண்டேன். பக்கத்துக் கிராமத்தில் உள்ள கடையில் தான் விற்கின்றர்."
"அப்படியானுல் இது விஷயமாக நீங்கள் பொலிசுக்கு அறிவித்தல் கொடுக்கலாமல்லவா."
** பொலிசாரும் எம்மைப்போல் அரசியல்வாதிகளுக்கு பயந்து கொண்டுதானே இருக்கின்றனர்."
சொய்சா சிந்தனையுடன் சிகரெட்டைப் பற்றவைத்து புகையை வெளியே ஊதினர்.
*ஏன் இப்போதுள்ள இன்ஸ்பெக்டர் நமக்குத் தெரிந் தவர்தானே. அவரிடம் இரகசியமாகச் சொல்லி ஏதாவது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம். அவர் எம்மை அரசி

Page 85
60 குருதிமலை
யல் வட்டாரங்களுக்குக் காட்டிக் கொடுக்க மாட்டார்’ எனக் கூறினர் மிஸ்டர் சொய்சா.
臀 சிறிது நேரத்தின் பின்னர் இருவரும் எழுந்து இசைக் கச்சேரி நடக்கும் இடத்துக்குச் சென்றனர்.
இப்போது சில்வா துரைக்கு சிறிது மனப்பாரம் குறைந்திருந்தது.
அத்தியாயம் இருபத்துமூன்று
Pடுவத்தில் தொழிலாளர்கள் நிறைந்திருந்தனர். ஒருபக்கத்தில் கண்டக்டர் அன்று வேலை செய்தவர்களுக்கு பேர் போட்டுக்கொண்டிருந்தார். மறுபக்கத்தில் கொழுந் துக் கணக்கப்பிள்ளை கொழுந்து நிறுத்துக்கொண்டிருந் தார். கொந்தரப்புக் கணக்கப்பிள்ளை கணக்குகளைச் சரி பார்த்துக்கொண்டிருந்தார், மடுவம் ஒரே கலகலப்பாக இருந்தது.
ஆபீஸில் இருந்து “டயறிப் பொடியன்" அப்போது தான் அங்கு வந்து சேர்ந்தான். தினமும் காலையில் அன் றைய வேலைகளைப்பற்றிய விபரத்தை டயறியில் குறித்து, துரையின் பார்வைக்காக கண்டக்டர் அனுப்பிவைப்பார். அதனைப் பார்வையிட்டு, ஒப்பம் வைத்தபின்பு மாலையில் அதனை கண்டக்டருக்கு திருப்பி அனுப்பி வைப்பார் துரை.
டைப் செய்யப்பட்டு துரையின் ஒப்பத்துடன் ஒரு நிரு பமும் அன்று டயறியில் வைத்து அனுப்பப்பட்டிருந்தது.

குருதிம ை 16.1
அதனை வாசித்தபோது கண்டக்டரின் முகத்தில் குழப்ப்ம் காணப்பட்டது.
'நமது தோட்டத்தை நிலமற்றவர்களுக்குப் பகிர்ந் தளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. வெகு விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும். இப்போது தோட்டத்தில் குடியிருப்பவர்கள் எல்லோரும் தோட் டத்தை விட்டு வெளியேறவேண்டும். அதற்குரிய ஒழுங்கு களையும் அரசாங்கம் செய்யும்.'
மேற்கண்டவாறு அந்த நிருபத்தில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. S.
கண்டக்டரின் முகம் மாறியிருப்பதைப் பார்த்த வய தான தொழிலாளி ஒருவர் அருகே வந்து, "என்னங் கையா வேலைஏதும் சரியில்லே ன் று தொர கடுதாசி அனுப்பியிருக்காருங்களா?' எனக் கேட்டார்.
"நம்ப தோட்டத்தை கொலனிக்கு கொடுக்கப் போறது சொல்லி அரசாங்கத்தில இருந்து தொரைக்கு லெட்டர் அனுப்பியிருக்கு" கண்டக்டர். இப்படித் திடீ, ரெனக் கூறியதும் மடுவத்தில் இருந்த எல்லோரும் அவ ரைச் சூழ்ந்துகொண்டனர்.
கண்டக்டர் கூறிய விஷயம் வீரய்யாவுக்கும் பெரும் திகைப்பை ஏற்படுத்தியது.
*தோட்டத்தைவுட்டு ஆளுங்க எல் லா த் தை யும் வெளியே போகவேணுஞ் சொல்லி கடுதாசி வந்திருக்கு. நீங்க எல்லாம் என்ன செய்யப்போறது?’ என அங்கு சூழ்ந்து நின்றவர்களைப் பார்த்துக் கேட்டார் கண்டக்டர். ‘'தோட்டத்தை வுட்டு நாங்கெல்லாம் எங்க ஐயா போறது?" எனக் கலக்கத்துடன் கேட்டான் அங்கு நின்ற குப்பன்.
"அதைப்பற்றி நமக்கு ஒண்ணும் தெரியாது, தோட் டத்தைவுட்டுப் போகச்சொல்லித்தான் கடதாசி வந்தி
ருக்கு."

Page 86
卫6B குருதிமலை
**இது என்னங்க பெரிய அநியாயமா இருக்கு. நாங் கெல்லாம் இந்தத் தோட்டத்திலயே பொறந்து வளந்த வங்க. இதைவுட்டு எங்கை ஐயா போறது?’ எனப் பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன.
*"அரசாங்கத்தில இருந்துதானே கடுதாசி வந்திருக்கு, யாருக்கும் ஒண்ணும் செய்யமுடியாது. நீங்க எல்லாம் போகவேண்டித்தான் வரும்" எனக் கூறினர் கண்டக்டர். கண்டக்டர் இப்படிக் கூறியதும் அங்கு நின்றவர் களின் திகைப்பு மேலும் அதிகமாகியது.
இவர்களது சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டு ' கொழுந்துச் சாக்குகளை எடுத்து அடுக்கியவண்ணம்இருந்த
சுமணபால, கண்டக்டரின் அருகே சென்றன்.
“மொனுவத மாத்தயா கியன்னே; ஒக்கோமத யண்ட ஒனே?' அவனது குரலில் கலக்கம் தொனித்தது.
**ஆமாம், தோட்டத்தைவிட்டு எல்லோருமே போயாக வேண்டும்’ என் முர் கண்டக்டர்.
‘இது பெரிய அநியாயமாக அல்லவா இருக்கிறது?" எனக் கூறினுன் சுமணபால .
*அப்படியல்ல; அரசாங்கம் ஏதோ ஒரு முக்கிய கார ணத்தோடுதான் இதனைச் செய்கிறது? அதற்கு நாமெல் லோரும். உடன்பட்டுத்தான் ஆகவேண்டும்' எனக் கூறிய கண்டக்டர் அவனுடன் மேலும் கதைக்க விரும்பாதவராய் *சரி சரி, நீ போய் உனது வேலையைக் கவனி' எனச் சொல்லி அவனை அனுப்பிவைத்தார்.
சுமணபால கிராமத்திலிருந்து தினமும் வேலைக்கு வருபவன். வேலையில் நிதானமும், பொறுப்புணர்ச்சியும் மிக்கவன். எதையும் சிந்தித்து தெளிவோடுதான் பேசு வான். அதனுலேதான் முன் பிருந்த கண்டக்டர் அவ க்ைகு, "சாக்குக்காரன்’ வேலை வழங்கியிருந்தார்.

குருதிமலை 163
கிராமத்திலிருந்து வேலைக்கு வரும் ஒருவன் தோட் டத் தொழிலாளர்களோடு சேர்ந்துகொண்டு அரசாங்கத் தின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவது கண் டக்டருக்கு எரிச்சலை ஊட்டியது.
‘என்ன வீரய்யா ஒண்ணும் பேசாம இருக்கிற. நாமெல்லாம் போய்த்தான் ஆகணுமா?" ராமு கலக்கத் துடன் கேட்டான்.
"தோட்டத்தைவுட்டு அவுங்க போகச் சொல்லிட்டா அப்புடி ஒடன எல்லோரும் போயிடமுடியாது. நாமெல் லாம் ஒண்ணு சேர்ந்துயோசிச்சுத்தான் இதுக்கு ஒரு முடிவு செய்யணும்" என்ருன் வீரய்யா யோசனையுடன்.
** இன்னிக்கே கூட்டம் போட்டு இதைப்பத்திப் பேசு வோம்’ என்ருன் பக்கத்தில் நின்ற செபமாலை.
**ஆமா அந்திக்கு ஆறுமணிக்கு கூட்டம் வைப்போம். எல்லோரும் வந்திடுங்க" என்ருன் வீரய்யா.
ஒவ்வொருவராகக் கொழுந்துமடுவத்தைவிட்டு சஞ் சலத்துடன் கலைந்துசென்றனர். ஒவ்வொருவருடைய உள் ளத்திலும் பெருந் திகில் ஏற்பட்டிருந்தது.
ஆண்டாண்டு காலமாக, அவர்கள் எல்லோரும் சேர் ந்து ஒரே குடும்பம்போன்று வாழ்ந்துவந்த சமூகப் பிணைப் பிலிருந்து சிதறிப்போவதை எவருமே விரும்பவில்லை.
தோட்டத்தைவிட்டு வெளியேறுவதானல் அவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் சென்று குடியேறிவிடவும் முடியாது. அப்படிக் குடியேறுவதற்கு இந்த நாட்டில் அவர்களுக்கு உரிமையும் இல்லை.
தோட்டத்திலிருந்து சிதறிப்போய், வெவ்வேறு தோட் டங்களில் சேர்ந்து, புதிதாகத் தத்தமது வாழ்க்கையை ஆரம்பிப்பது அவர்களுக்கு ஒரு வேதனை தரும் விஷயமாக இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அது அவர்,

Page 87
64 குருதிமலை
களுடைய பிறந்த மண். சிறுவயதில் அவர்கள் ஓடியாடி விளையாடிய பூமி, ஏறியிறங்கிய மலைகள், குடியிருந்த லயங்கள், இரத்தத்தைப் பிழிந்து உழைத்து வளர்த் தெடுத்த தேயிலைச் செடிகள், இவை எல்லாவற்றையும் இழந்து போவதானல்-ஓ! அது மிகவும் கொடுமையான விஷயந்தான்.
அவர்களுக்கு இந்த உலகத்திலே இருப்பதெல்லாம் அவைகளின்மேல் அவர்கள் வைத்துள்ள பாச உணர்வு ஒன்றுதானே!
எதிர்காலம் எப்படி அமையப்போகிறதோ என்று எதுவுமே தெரியாமல் சூனியப் பெருவெளியாக மனதிலே விரிந்துகிடக்க, எப்படித்தான் அவர்கள் தமது பாசப் பிணைப்புகளை அறுத்துக்கொண்டு வெளியே செல்லமுடி uլւbl
அன்று இரவு மடுவத்திலே நடந்த கூட்டத்தில் பெருந் தொகையான தொழிலாளர்கள் பங்குபற்றினர்.
*தோட்டத்த அரசாங்கம் எடுத்தவொடன நாமெல் லாம் ரெம்ப சந்தோஷப்பட்டோம். அரசாங்கத்திலை நம் மஞக்கு நல்லது செய்வாங்கன்னு எதிர்பார்த்துக் காத் திருந்தோம். ஆன நாம நெனச்சதுக்கு மாருத்தான் எல் லாமே நடந்துக்கிட்டு வருகுது நாமெல்லாம் ஏமாந்திட் டோம்' வீரய்யா உணர்ச்சி ததும்பக் கூறினன்.
‘*தோட்டத்துக்குப் புதிசு புதிசா ஆளுங்க வந்தாங்க. இப்ப தோட்டத்த மூடுற நெலைக்கு கொண்டுவந்திட் டாங்க' என்ருன் ராமு.
'ஆளுகலுட்டு சம்பளத்தை வெட்டிஞங்க, சாப்புடுற சாப்பாட்டை கொள்ளை அடிச்சானுக. நம்ப படிச்ச பொடியன்களுக்கு கெடைக்கிற வேலையளை அவுங்க புடிச்சி கிட்டாங்க. சிங்கள மாஸ்டர்மாரை அனுப்பி எங்க பிள் ளைங்களோட படிப்பையே சுரண்ட ஆரம்பிச்சாங்க.

குருதிமலை 185
இதுக்கெல்லாம் நாம பொறுத்துக்கிட்டிருந்தோம். இப்ப நாங்க இருக்கிற எடத்தை வுட்டே நம்மளே துரத்தப் பாக் கிருங்க. இனியும் நாம பொறுக்கணுமா?’ உணர்ச்சிவேகத் துடன் கூறிவிட்டு எல்லோரையும் ஒரு தடவை பார்த் தான் வீரய்யா.
"முடியாது. முடியாது. இ னி மே லு ம் நாங்க பொறுத்திருக்கக் கூடாது'-பல குரல்கள் ஒரே சமயத் தில் ஒலித்தன.
நாம எதையுமே எதிர்த்துக் கேக்கமாட்டோமுனு நெனச்சுக்கிட்டுத்தான்,அவுங்கநெனைச்சபாட்டுக்கு செஞ்சு கிட்டு வாருனுக.நாம இனிமே சும்மா இருக்கக் கூடாது. நம்ம எதிர்ப்பைக் காட்டணும்."
-வீரய்யா உறுதியுடன் கூறிஞன்.
அங்கிருந்த ஒவ்வொருவரு  ைட ய உள்ளத்திலும் அசைக்கமுடியாத உறுதி கிளர்ந்தெழுந்தது. எவ்வித கஷ்டங்கள் வந்தாலும் எதையும் எதிர்த்துப் போராடக் கூடிய மன வலிமை இப்போது அவர்களிடத்தில் உருவாகி யிருந்தது.

Page 88
it 66 W.L. v.v. wil குருதிமலை
அத்தியாயம் இருபத்துநான்கு
அன்று நாட்டிலுள்ள புத்தவிகாரையில் கூட்ட மொன்று நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.கிராம சேவகர், கூட்டம் நடைபெறுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்னதாகவே பண்டா முதலாளியை அழைத்து வருவ தற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார்.
**வாங்க , வாங்க ஜி. எஸ். மாத்தயா. எப்படி நமது விஷயமெல்லாம், சரிவந்திருக்கிறதா?’ எனக் கேட்டபடி கிராமசேவகரை வரவேற்ருர் பண்டா முதலாளி.
*காரியங்கள் துரிதமாக நடக்கின்றன. நமது மனுக் களை விரைவில் உரிய இடத்திற்கு அனுப்பிவைத்துவிட் டால் எல்லாமே ஒரு கிழமையில் முடிந்துவிடும்' எனக் கூறிவிட்டு கிராமசேவகர் பண்டா முதலாளியின் வீட்டின் முன்புறமாக இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டார்.
*" கூட்டத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறதுதானே. நல்ல சரக்கு இருக்கிறது, அருந்திவிட்டுச் செல்லலாம்' எனக் கூறிய பண்டா முதலாளி கிராமசேவகரின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் ஒரு போத்தல் கள்ளை முட்டியில் இருந்து எடுத்துக்கொண்டு வந்தார். மெனிக்கா கடையிலி ருந்து கிளாஸ் ஒன்றை எடுத்துவந்து மேசையில் வைத் தாள்.
* எப்படி அந்த வயல் விடயமெல்லாம் முடிந்துவிட் டதா, அல்லது ஏதும் பிரச்சினை இன்னும் இருக்கா?’ என

குருதிமலை 67
வினவியபடி கிளாஸில் கள்ளை ஊற்றிக் கிராமசேவகரி டம் கொடுத்தார் பண்டா முதலாளி.
ஒரே மிடறில் கள்ளை உறிஞ்சிக் குடித்துவிட்டு வாயை புறங்கையினல் துடைத்தபடி கிளாசை மேசையில் வைத் தார் கிராமசேவகர்.
'டி. ஆர். ஒ. நமது ஆள்தானே. அதனல் எல்லா விடயமும் சுலபமாக முடிந்துவிட்டது. தரிசாகக் கிடக் கும் நிலங்களையெல்லாம் பண்படுத்தி பயிர் செய்யும்படி தானே அரசாங்கம் கூறியிருக்கிறது.'
"என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்..? அந்த இடத் தில் கறுப்பண்ணன் கங்காணி வெகு காலமாக பயிர் செய்துகொண்டுவருகிருர். அது தரிசு நிலமாகக் கிடக்க வில்லையே’ எனக் கூறியபடி மீண்டும் கிளாஸில் கள்ளை நிரப்பினர் பண்டா முதலாளி.
நீங்கள் கூறுவது உண்மைதான். ஆஞலும் ஒரு விட யத்தை நீங்கள் மறந்துவிட்டீர்கள். இது எங்களுடைய நாடு. இந்த நாட்டின் பிரஜைகளாகிய எங்களுக்குத்தான் முதலில் எல்லா உரிமைகளும் இருக்கவேண்டும். அரசாங் கம் நமக்குச் சலுகை க ளை ச் செய்துகொடுக்கும்போது நாமாகவே அதைப் பயன்படுத்திக்கொள்ள வே ண் டு ம். நமக்கு பயிர் செய்வதற்கு காணி இல்லாதபோது, இந்த நாட்டில் உரிமையற்ற ஒரு வர் அரசாங்கத்துக்குச் சொந்த மான நிலத்தை தனதாக்கிக்கொண்டு பயிர் செய்வது ஓர் அடாத்தான விஷயமல்லவா.
**அது சரி மாத்த யா. அந்த மடுவத்துக்குப் பக்கத் திலும் ஒரு வயல் இருக்கிறதல்லவா? அந்த வயலை நீங்கள் எப்படியாவது எனது பெயருக்கு மாற்றித் தாருங்கள். நான் உங்களைக் கவனித்துக்கொள்கின்றேன்."
'இப்போது யார் அந்த வயலைச் செய்துவருகின்ருர் கள் என்பது தெரியுமா..?" என யோசனையுடன் கேட் டார் கிராமசேவகர்.

Page 89
168 குருதிமக்ல
*" குண்டன் கங்காணி லயத்தில் வசிக்கும் தொழி லாளி ஒருவர்தான் அந்த வயலில் வேலைசெய்துவருகிருர், அந்த வயலுக்கும் நல்ல நீர் வசதி உண்டு."
'இப்போதுள்ள சூழ்நிலையில் அந்த வயலை உங்களுக்கு எடுத்துத் தருவது மிகவும் சுலபம். தோட்டத் தொழிலா ளர்கள் எல்லாரும் இந்த மாத இறுதியில் தோட்டத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும். அந்தத் தோட்டத்தைத் தான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் காணியற்றவர்களுக்கு கொடுக்கப்போவதாக எனக்கு அறிவித்தல் கிடைத்திருக் கிறது. காணிகளைப் பகிர்ந்துகொடுக்கும்போது வயல் உள்ள பகுதியை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள லாம்' என்ருர் கிராமசேவகர்.
அதைக்கேட்டதும் பண்டா முதலாளியின் உள்ளம் மகிழ்ச்சியில் நிரம்பியது. போத்தலில் கள்ளு முடிந்ததைக் கவனித்ததும் அவர் மேலும் ஒரு போத்தல் கள்ளு கொண்டுவரும்படி மெனிக்காவிடம் உத்தரவிடுகிருர்,
‘'வேண்டாம். நாங்கள் இப்போது கூட்டத்திற்குப் போகவ்ேண்டும். அதனல் அதிகம் குடித்துவிட்டால் பின்பு என்னல் எந்த வேலையும் செய்யமுடியாமல் போய்விடும்" என்ருர் கிராமசேவகர் சிரித்தபடி.
*தோட்டத்தில் காணி பகிர்ந்து அளிக்கும்போது எனது பெயரிலும் காணி கொடுக்கமுடியும்தானே." எனக் கண்களைச் சிமிட்டி சிரித்த மெனிக்கா, கிராமசேவ கருக்கு முன்னல் சிகரட்பக்கற் ஒன்றை எடுத்துவைத்தாள்.
'குடும்பத்திற்கு ஒருவருக்குத்தான் முதலில் காணி கொடுப்பதாகத் திட்டம் இருக்கின்றது. ஆனல், உங்க ஆளப்பொறுத்தவரையில் நான் விசேஷ சலுகைசெய்து தானே ஆகவேண்டும்'எனக் கூறிய கிராமசேவகர் சிகரட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்தார்.

குருதிமல் 89
*நமது அண்ணன் மகன் பியசேனவுக்கும், எமக்குக் கிடைக்கப்போகும் காணியின் பக்கத்திலேயே நிலம் கொடுத்து உதவவேண்டும்" என வேண்டினர் பண்டா முதலாளி.
"ஒ. இதெல்லாம் மிகவும் சின்ன விஷயம்; அதை நான் கட்டாயம் செய்துதருகிறேன். எனது சிபார்சின் பேரிலேதான் எல்லோருக்கும் காணி கொடுபடப்போகின் றது"எனக் கூறிய கிராமசேவகர் ஏதோ நினைத்துக் கொண்டவராக, -
"எப்படி அவனது விஷயம் இருக்கின்றது? இப்போ தும் அந்த மாயாண்டியின் மகளுடன் அவன் தொடர்பு வைத்திருக்கின்ருனு?" எனக் கேட்டார்.
"அவர்களது தொடர்பைத் தடை செய்வதற்கு நான் என்னுல் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுத்திருக் கிறேன். நமது கண்டக்டர்கூட இந்த விஷயத்தில் எனக்கு எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்களித்திருக்கின் ღფr#. ''
** அப்படியா? கண்டக்டரின் உதவியிருந்தால் நிச்சய மாக அவர்களைப் பிரித்துவிடலாம். அவர் தனது பதவி யைப் பயன்படுத்தி, மாயாண்டியின் குடும்பத்தினருக்கு தொல்லைகள் கொடுத்தால் எல்லாமே சரியாகிவிடும்?? என்ருர் கிராமசேவகர்.
"அதே நேரத்தில் பியசேனவுக்கும் வேறு ஒரு பெண் ணைக் கல்யாணம் செய்துவைக்கும்படி அவனது தாயைத் தூண்டியிருக்கின்றேன்' என்ருர் பண்டா முதலாளி.
* இப்போது உள்ள சூழ்நிலை உங்களுக்கு சாதகமr கவே அமைந்திருக்கிறது. வெகு விரைவில் தோட்டத் தொழிலாளர்கள் எல்லோரும் தோட்டத்தைவி ட் டு ப் போய்விடுவார்கள். அதன் பின்னர் பியசேனவுக்கு அவ ளைக் சந்திக்கும் வாய்ப்பு இருக்காது' என்ருர் கிராமசேவ
SIt

Page 90
, 0 குருதிமல்
'இன்னும் சிறிது காலத்துக்கு அவன் அவளுடன் தொடர்புகொள்ளாதவாறு நாங்கள் பார்த்துக்கொண் டோமானல், பின்னர் பிரச்சினையே இருக்காது' என்ருள் பக்கத்திலே நின்ற மெனிக்கே.
"நான்கூடப் பியசேனுவைத் தனிப்பட்ட முறையில் எச்சரிக்கை செய்கின்றேன். அந்தப் பெண்ணுடன் இருக் கும் தொடர்பை அவன் நிறுத்திக்கொள்ளாவி ட் ட (ா ல், அவனுக்குக் காணி கிடைக்காதவாறு செய்யப்போவதாக பயமுறுத்திவைக்கிறேன்' என்ருர் கிராமசேவகர்.
"அதுவும் நல்ல யோசனைதான். எல்லோருமே எதிர்ப் பைக் காண்பித்தால் அவன் அவளைக் கைவிட்டுத்தான் ஆக வேண்டும்" என்ருர் பண்டா முதலாளி.
* ‘சரி, சரி நேரமாகிறது, நாங்கள் விகாரைக்குப் புறப் பட்டுப் போவோம். இதுவரையில் மக்கள் எமக்காகக் காத் திருப்பார்கள்" எனக் கூறி எழுந்திருந்தார் கிராம சேவகர்.
பண்டா முதலாளியும் தனது கோட்டை'எடுத்து மாட் டிக்கொண்டு அவருடன் புறப்பட்டார்.
அவர்கள் விகாரையை அடைந்தபோது அங்கு சனக் கூட்டம் நிரம்பிவழிந்தது.
கூட்டத்தில் பேசிய கிராமசேவகர், பக்கத்தில் உள்ள தோட்டம், கிராமத்தில் உள்ளவர்களுக்கு ப் பகிர்ந்து கொடுக்கப்படப் போவதாகவும், அதற்கு வேண்டிய நட வடிக்கைகள் யாவும் துரிதமாக நடக்கிறதெனவும், இவ் வளவு காலமும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த கிராம மக்க ளுக்கு நல்ல ஒளிமயமான எதிர்காலம் ஏற்படப்போகிற தெனவும் விளக்கினர். அத்துடன் காணியற்றவர்கள் தங் களது விபரங்களை மனுப் பத்திரங்களில் நிரப்பித் தன்னி

குருதிமலை i 7I
டம் தந்துவிட்டால், மிக விரைவில் எல்லோருக்கும் காணி பெற்றுத் தருவதாகவும் கூறினர்.
அங்கு நின்றவர்களது முகத்தில் உற்சாகம் தாண்டவ மாடியது. காணியற்றவர்கள் எல்லோருக்கும் இப்படிச் சுலபமாகக் காணி கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் வருமென ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர்களது உள்ளம் கிராமசேவகரையும், இவற்றுக்கெல்லாம் உறுதுணையாக நின்ற பண்டா முதலாளியையும் வாழ்த்தியது.
கூட்டம் முடிவடைந்ததும் கிராமசேவகர் அங்குள்ள மக்களின் சார்பில் தாம்ாகவே மனுப்பத்திரங்களை நிரப்பி அவர்களிடம் ஒப்பம் வாங்கினர். அங்குள்ள கிராம மக்க ளுக்கு சரியான முறையில் மனுப்பத்திரங்களை நிரப்ப வேண்டிய அறிவு இல்லையென்பது அவருக்குத் தெரியும்,
பியசேன தனது மனுப்பத்திரத்தைக் கிராமசேவக ரிடம் கையளித்தபோது, "இது விடயமாக நான் உன்னி டம் தனிப்பட்ட முறையில் சில விடயங்களைப் பின்னர் கதைக்கவேண்டும்" எனக் கூறியவண்ணம் அவனது பத் திரத்தையும் அவர் பெற்றுக்கொண்டார்.
மனுப்பத்திரங்களில் கையொப்பமிட்ட மக்கள் மகிழ்ச் சிப் பிரவாகத்துடன் அவ்விடத்தை விட்டுக் கலைந்தனர்.

Page 91
1 ή Ε குருதிமலை
அத்தியாயம் இருபத்தைந்து
கிராம சேவகர் வயலின் நடுவே குடை பிடித்த படி நின்று வேலை செய்பவர்களைக் கண்காணித்துக் கொண் டிருந்தார். முன்பு கறுப்பண்ணன் கங்காணிக்குச் சொந்த மாயிருந்த வயல் இப்போது அவருக்குச் சொந்தமாகிவிட் டது. கிராமத்திலிருந்து அழைத்து வரப்பட்ட தொழிலா ளர்கள் பலர் இப்போது அந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
சிலர் வரம்புகள் கட்டுவதிலும்; வேறுசிலர் ஏற்கனவே கறுப்பண்ணன் கங்காணி நாற்றுப்போட்டு முளைக்க வைத் திருந்த நெற்பயிர்களைப் பிடுங்கி வயலில் நடுவதிலும் முனைந்திருந்தனர். வயலின் மறுபகுதியில் ஒரு சிலர் விதை நெல்லை விதைத்துக்கொண்டிருந்தனர்,
இஸ்தோப்பில் இருந்தபடியே முன்பு தனக்குச் சொந் தமாக இருந்த வயலில் இப்போது கிராமசேவகர் வேலை செய்விப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த கறுப்பண்ணன் கங்காணிக்கு நெஞ்சுக்குள் ஏதோ அடைப்பதைப் போல இருந்தது. அவரது கண்கள் கலங்கியிருந்தன.
தரிசாகக் கிடந்த நிலத்தை நெற்றி வியர்வை சிந்தி மாடாக உழைத்து வயலாக மாற்றியவர் அவர். பெரும் பணத்தைக் கொட்டி வயலைப் பண்படுத்தியவர் அவர். ஆனல், இன்று வேருெருவன் அடாத்தானமுறையில் அந்த வயலின் நடுவே நின்று வேலை செய்விக்கின் முன், அதனைப்

குருதிமல் 79
பார்க்கும் போது அவரது அங்கங்கள் ஆத்திரத்தால் துடித் தன.
கவ்வாத்துக் கத்தியால் அந்த ஆராய்சியின் கைகளைத் துண்டு துண்டாய் வெட்டி விட்டால் என்ன? அவரது கை கள் துருதுருத்தன. உணர்ச்சிகளை ஒருவாறு அவர் கட்டுப் படுத்திக்கொண்டார்.
அவரது மனைவி முதல்நாள் இரவு அவருடன் சண்டை பிடித்துக் கண்ணீர் சிந்தியதை ஒரு கணம் நினைத்துப் பார்த்தார் கங்காணி.
நிலத்தை உழுது பண்படுத்த வேண்டிய செலவுக்காக மனைவியின் சங்கிலியை வட்டிக் கடையில் அற வட்டிக்கு வைத்துத்தான் அவர் பணம் எடுத்திருந்தார்.அவரது மனை விக்குத் தனது நகை மாண்டுவிடப் போகின்றதே என்ற ஏக் கத்தோடு, வயல் பறிமுதலாகிவிட்டதே என்ற கவலையும் சேர்ந்துகொண்டு அவளைப் பெரிதும் கலக்கியது, அவள் தான் என்ன செய்வாள்? கவலைகள் எல்லாம் கோபமாக மாறி,கணவனுடன் சண்டை பிடித்துத் தீர்த்தாள்.
*" என்னுங்க கங்காணி ஒரே யோசனையா ஒக்காந்திட்டு இருக்கீங்க..இன்னிக்கு வேலைக்குப் போகலியா..?" சுரண் டியைக் கழுத்துக்குப் பின்னுல் தோள்பட்டையின் மேல் வைத்தவாறு உள்ளே நுழைந்த குப்பன், கறுப்பண்ணன் கங்காணியின் அருகில் போய் அமர்ந்துகொண்டான்.
**காலம் போற போக்கப் பாத்தா நாமெல்லாம் இனிமே நல்ல முறையில வாழமுடியாது போலயிருக்கு. இது எங்க போயி முடியுமோ தெரியாது" என்ருர் கறுப் பண்ணன் கங்காணி விரக்தியுடன்.
"என்னுங்க கங்காணி ஒரு மாதிரி சலிப்பா பேசு நீங்கவயல் போனதிலயிருந்து ஆளும் ரெம்ப மோசமாப் போயிட்டிங்க."
"அந்த ஆராச்சிப்பய வயலே எடுத்ததிலயிருந்து எனக்குப் பயித்தியம் புடிச்சமாதிரி போயிருச்சு; சாப்பிடக்

Page 92
174 குருதிமலை
கூட மனசு வரல்ல; தூங்கவும் முடியல்ல. நம்ப ஜில்லா பிரதிநிதியையும் டி. ஆர். ஒ. கிட்ட கூட்டிக்கிட்டுப் போய் கதைச்சுப் பார்த்தேன். அவரு என்னடான்ன ஏதேதோ கேள்வியெல்லாம் கேக்கிருரு."
‘‘அப்புடி என்னதான் கேட்டுப்புட்டாங்க?" குப்பன் மேலும் விபரம் அறிய விரும்பி ஆவலுடன் கறுப்பண்ண னின்முகத்தைப் பார்த்தான்.
'அத ஏங்கேக்கிற குப்பன்! நீ அந்த வயல்ல எவ்வளவு காலமா வேலை செஞ்சு வாற? வயல் வச்சிருக்கிறதுக்கு அர சாங்கத்துக்கு வரி கட்டுறியா. ஒனக்கு பிரஜா உரிமை இருக்கா? ஒன்னுடைய வயலென்னு என்ன ஆதாரம் இருக்கு? அப்புடி இப்புடினு கேள்வி மேல கேள்வி கேக் கத் தொடங்கிட்டான்.
** நம்ப வயலை அவுங்க புடுங்கிக்கிட்டதுமில்லாம, அவங்க கேக்கிற கேள்விக்கும் பதில் சொல்ற காலமிது.-- ம்.’’ எனச் சலிப்போடு கூறினன் குப்பன்.
"நான் எல்லாத்தையும் வெவரமா சொன்னேன். பிரசா உரிமைக்கு இப்போதுதான் மனுப் போட்டிருக் கேன். தொரைதான் என்ன வயல் வெட்டிப் போடச் சொன்னுரு. எவ்வளவு காலம் செய்யுரோமுன்னு நான் எழுதி வைக்கல, ரொம்பப் பணமும் அந்த வயல்ல செலவு செஞ்சேன்னு சொன்னேன்; நம்ப பிரதிநிதியும் கூட எவ் வளவோ சொல்லிப் பாத்தாரு, அவுங்க கேட்டாத்தானே! ஒன க்கு பிரசாவுரிமை இல்லாததினுல் நீ இந்தியாவுக்குப் போற ஆள். இந்த நாட்டிலே ஒனக்கு உரிமை இருந்தால் தானே காணி கொடுக்கலாமுனு சொல்லிப்புட்டாங்க. அப்புறம் என்னதான் செய்யிறது? நான் கவலையோட வூட்டுக்கு வந்து ட்டேன்" என்ருர் கறுப்பண்ணன் கங் காணி கவலை தோய்ந்த குரலில்,
'இது பெரிய அநியாயம்" என்ருன் குப்பன்,

குருதிமலை 17s
"அது மட்டுமில்ல குப்பன், நாங்க கதைச்சிட்டு வந்த வுடன் அந்த ஆராய்ச்சிப்பய ஏதோ புத்தகம் மாதிரி பெரிசா கொண்டுகிட்டு உள்ளுக்குப் போனன். ரெண்டு பேரும் சிங்களத்தில பேசிச் சிரிச்சாங்க, அப்பவே நெனைச் சன் இந்த ஆராய்ச்சிப் பயலும் டி. ஆர். ஒ.வும் ஒரே கூட் டாளின்னு."
அப்போது வெளியே விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவன் அங்கு ஓடி வந்தான்.
“தாத்தா, தாத்தா அங்க பாருங்க, ஒங்க வாழைமரங் களை எல்லாம் வெட்டுராங்க."
‘‘அட அநியாயக்கார பசங்களா. ஏண்டா வாழ மரத்த எல்லாம் வெட்டுறிங்க' எனப் பலமாக கூறிக் கொண்டு வயல் பக்கமாக ஒடிஞர் கறுப்பண்ணன் கங் காணி. அவரைத் தொடர்ந்து குப்பனும் சென்றன்.
'ஐயா இது அநியாயமுங்க. நான் எவ்வளவு கஷ்டப் பட்டு உண்டாக்கினேன் தெரியுமா? வயலைத்தர்ன் புடிங் கிக்கிட்டிங்கன்ன . வாழ மரத்தையும் வெட்டுறீங்களே. அதை வெட்டுரதுக்கு பதிலா என்னைய வெட்டுங்க' என் ருர் கறுப்பண்ணன் கங்காணி ஆக்குரோசத்துடன். அவ ரது ரோமங்கள் சிலிர்த்தன. வார்த்தைகள் தடுமாறின.
‘இந்தா கங்காணி சும்மா சத்தம் போட்டு மெரட்ட வேணும். இந்த வாழ மரங்களால நெல்லுக்கு பூச்சி ரொம்ப வாரது. நீ கொண்டு போய் ஒங்க வீட்டுக்குகிட்ட வச்சுக்கோ’ என்று கறுப்பண்ணன் கங்காணியைப் பார்த்து முறைத்தார் கிராம சேவகர்.
‘நானுந்தாங்க வருசக் கணக்கில வயல் செஞ்சிக்கிட்டு இருந்தேன். பூச்சி யொண்ணும் வரல்ல. இப்பதான் ஒங்
களுக்கு புதுசா பூச்சி வருதா? சும்மா அது இதுன்னு சொல்லி அநியாயமா வாழ மரங்களை வெட்டாதீங்க."

Page 93
፲76 குருதிமலை
"இந்தா அதிங் எல்லாங் எங்கிட்ட பேசவாணுங். இத போயி ஒங்க தொரகிட்ட பேசிக்க. நீ நம்பகிட்ட அடிக்கடி சண்டைக்கி வாரது, இனிமே நம்மளோட கரச்சலுக்கு வந்தா பொலிசில சொல்லி ஒன்னை "ரிமான்ட்" பண்ணு வேன்' எனக் கோபமாக பேசிய கிராமசேவகர், மறுபக் கத்தில் விதைத்த நெல்லை லயத்திலிருந்த கோழிகளில் சில மேய்ந்து கோண்டிருநீததைக் கவனித்தார்.
கிராம சேவகரின் ஆத்திரம் கேர்ழிகளின் மேல் பாய்ந் தது. வரம்பின் மேல் இருந்த கல்லொன்றை எடுத்து மேய்ந்துகொண்டிருந்த கோழிகள் மீது பலமாக வீசினர். கோழியொன்று கல்லடி பட்டு சிறகைப் படபடவென்று அடித்துக்கொண்டு ஒரு சுற்றுச் சுற்றி நிலத்தில் வீழ்ந்தது. கிராம சேவகர் அந்தக் கோழியை எடுத்துக்கொண்டு லயத்துப் பக்கமாக வந்தார். *
மரணப்பிடியில் அகப்பட்டு துடித்துக்கொண்டிருந்த அந்தக் கோழியின் காலில் பிடித்துத் தலைகீழாகத் தூக்கிய படி, "இந்தா பாருங்க, இந்த லயத்து ஆளுங்களுக்கு இது தான் கடசி முறையா நாங் சொல்லுறது, இனிமே யாராச்சுங் ஆடு, மாடு, கோழியெல்லாம் வயல் பக்கம் விட்டா. நாங் இப்புடித்தான் அடிச்சி கொல்லுரது" எனக் கோபத்துடன் கூறினர்.
"நாங்க என்னங்கையா செய்வோம். காலையில கோ ழி யத் தொறந்து வுட்டுட்டு வேலைக்குப் போயிடுரோம். அந் தக் கோழிங்களுக்கு என்னுங்க தெரியும், அது போயிட்டு மேயுது." இப்போது லயத்தில் முன்னுல் கூடிய கூட்டத்தி லிருந்து ஒரு குரல் கேட்டது.
*அதிங் எல்லாம் நமக்கு தெரியாது. நீயெல்லாம் கோழிய அடைச்சு தீனியப் போடு"
'இது நாட்டுக் கோழிங்க, இதை அடைச்சிப்போட்டு வளக்க முடியாதுங்க, நீங்க குருவீங்க வராம எப்புடி ஆள்

குருதிமலை 177
போட்டு வெரட்டுறீங்களோ அதேமாதிரி வயலுக்கும் ஒரு ஆள் போட்டு கோழிங்க வராம பாத்துக் கொள் ளுங்க.." எனச் சூடாக அங்கிருந்த பெண் ஒருத்தி கூறி ஞள்.
"நீங்க எல்லாம் நம்மகிட்ட மிச்சம் பேசவானுங்" இனிமே ஆடு, மாடு, கோழி நம்மவூட்டு வயலுக்கு வந்தா, நா எல்லாத்தையும் புடிச்சுக்கொண்டு போறது" என அதி, காரத்துடன் கூறிய கிராம சேவகர் கையில் பிடித்திருந்த கோழியை சுழற்றி லயத்தின் முன்னுல் வீசிவிட்டு வயல்பக் கமாகச் சென்ருர். W
'இது என்ன பெரிய அநியாயமா இல்ல இருக்கு. வழக்கமா யாரும் வயல்ல காவல் போட்டுத்தான் கோழி குருவி வெரட்டுவாங்க. இந்த ஆராய்ச்சி என்னடான்ன பெரிய சட்டமில்லியா போடுமுன். லயத்திலே இனிமே ஒன்னும் வளக்க முடியாது போல இருக்கு" எனக் கூறிஞர் அப்போதுதான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெண் ஒருத்தி.
‘ஏண்டி க்ம்மா பெரிசா , சட்டம் தெரிஞ்சமாதிரி கதைக்கிறீங்க. இன்னிக்கு கோழிய அடைச்சு வைக்கச் சொல்லுருன். நாளைக்கு ஆளுங்களெல்லாத்தையும் அடைச் சுப் போட்டாலும் ப்ோட்டிடுவான். அதுதாண்டி நமக்கு உள்ள சட்டம்' எனப் பலமாகக் கத்தினர் கறுப்பண்ணன் கங்காணி.
**அண்ணே,ஆத்திரப்படாம இருங்க; அவ்வளவு தூரத் துக்குப் போக நாங்க வுட்டுடுவோமா?’ என கறுப்பண் ணன் கங்காணியைச் சாந்தப்படுத்தினன் குப்பன்.
"நீ ஒன்னும் வெளங்காம ஒளற குப்பன், இந்த நாட் டுல நமக்கு என்ன உரிம இருக்கு?நாமெல்லாம் அடிமைக ளாத்தான் இருக்கோம், இன்னும் கொஞ்சக் காலம் போன நாம செத்தாலும் பொதைக்கக்கூட இஷங்க எடம் குடுக்கமாட்டாங்க" எனக் கூறிக் கண் கலங்கிய

Page 94
178 குருதிமலை
கறுப்பண்ணன் கங்காணி, மறுகணம் ஆவேசம் வந்தவ ராகத் தன் இரு கைகளாலும் தலையில் அடித்தபடி ‘இதெல்லாம் நம்ப தலைவிதியடா.நா மெல்லாம் உரிமை யில்லாத நாய்கதாண்டா" எனக் கூறி விம்மத் தொடங் கினர்.
அவரைப் பார்த்தபோது அங்கு நின்ற அனைவரது கண் களும் கலங்கின.
அத்தியாயம் இருபத்தாறு
Dலை நேரம்,மீனச்சி இரவுச் சாப்பாடு சமைப்பதற் கான ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தாள். அப்போது வெளியே இருந்து வந்த மாயாண்டி கோபத்துடன் வீட்டி னுள்ளே நுழைந்தார்.
"இந்தா பாரு மீனச்சி, எங்க அவள் செந்தாமரை?" மாயாண்டியின் குரல் கடுமையாக ஒலித்தது.
"இப்போதாங்க வேலை முடிஞ்சு வந்தவொடன குளிக் கப் போனு;அதுக்கு ஏன் இப்பு டி சத்தம் போடுறீங்க?" என மீனச்சி குழப்பத்துடன் கேட்டாள்.
‘அடியே இன்னிக்கு கண்டக்கைய்ா ஏங்கிட்ட என்னு சொன்னரு தெரியுமா. இவளும் அந்தப் பியசேனப் பய லும் கதைச் சுக்கிட்டு இருந்ததை அவரு கண்ணுல பாத்தா ராண்டி. மலையில வச்சு அத்தனை பேருக்கும் முன்னல சொன்னர டி. இவளால நம்ப குடும்ப மானமே நாசமாப் போவுது' எனப் பலமாகக் கத்தினர் மாயாண்டி,

குருதிமலை 179
"ஐயையோ, கண்டக்கையா வரைக்கும் தெரிஞ்சு போச்சா?இப்ப என்னங்க செய்யுறது?" எனப் பதறினள் மீனச்சி.
“இப்ப என்னடி செய்யுறது? எல்லாம் ஒன்னலதாண்டி வாறது. வேலைக்குக் கூட்டிப்போறபோது ஒன்கூடவே கூட் டிக்கிட்டுப் போன்னு சொன்னேனே, கொஞ்சமாவது நீ அக்கறைப்பட்டியா?" மீனச்சியை மு  ைறத் தா ர் .-63bf Ljחש זח מL
"நான் என்னங்க செய்யுறது? எம்மேல மொறைக்கி நீங்க. அவள் வேலைக்காட்டுல வச்சு வவுத் துவலி,தலைவலினு கங்காணிகிட்ட சொல் லிப்புட்டு வூட்டுக்கு வாழுப்போல அவனைச் சந்திக்கப் போயிரு; நானும் அவ பின்னலையே என் வேலையை உட்டுப்புட்டு சும்மா ஒடியர முடியுமா?"
"அவளுக்கு எவ்வளவு துணிச்சல் பாத்தியா? நம்ம எவ்வளவு சொல்வியும் கேக்காம அந்தப் பியசேனப் பய லோட போய் ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்திருக்கிரு. இன்னிக்கு அவ வூட்டுக்கு வரட்டும், கவ்வாத்துக்கத்தியால அவளை ரெண்டு துண்டா வெட்டிப் போடுறன்' என கத்தி ஞர் மாயாண்டி.
**இங்க பாருங்க. தயவுசெஞ்சு மெதுவாப் பேசுங்க. இதைக் கேட்டு லயத்தில உள்ளவங்களல்லாம் சிரிப்பாங்க" என அவரைப் பார்த்து கெஞ்சும் குரலில் கூறினுள் மீனுட்சி.
* 'இனி என்னடி சிரிக்க இருக்கு. தோட்டமேதான் சிரிப்பா சிரிக்குதடி அவ வூட்டுக்குள்ள நுழையட்டும் அப் புறம் என்ன நடக்குதுன்னு பாரு.." என்ருர் மாயாண்டி ஆவேசமாக.
'நாம அவளை அடிச்சி ஒதைக்கிறதுனல ஒண்ணும் பெரயோசனமில்லீங்க;இப்புடி நாம அடிக்கடி ஏசிக்கிட்டு இருந்தோமு ன ஒருவேளை அந்தப் பயகூட ஓடினலும் ஓடிப்போயிடுவாளுங்க" என்ருள் மீனச்சி கலக்கத்துடன்

Page 95
Z80 குருதிமை
"அப்புடீன்ன அவளை அவேன் கூடவே சுத்திக்கிட்டு இருக்கச் சொல்லுறியா? இவளை என்னதாண்டி செய்யு றது?"
‘'இப்ப இருக்கிற நெலமையில பேசாம அவளுக்கு ஒரு கலியாணித்தைப் பண்ணி வைக்கிறதுதாங்க புத்தி சாலித்தனம். சும்மா சும்மா வூட்டுல சத்தம் போட்டு கிட்டு இருக்கிறதில வேலையில் லீங்க."
'சரி நீ சொல்லுறபடி பாத்தாலும் இப்ப அவளுக்கு கலியாணம் செஞ்சு வைக்கிறதுக்கு ஒரு நல்ல மாப்பிளை பாக்க வேணுமா? இந்தக் காலத்தில நம்ம தகுதிக்கு ஒரு பையன் கெடைக்க வேனுமே. மாப்புளையென்ன கடை யில காசு குடுத்து வாங்கிற சாமான்னு நெனைச் சுக்கிட் டியா?" எனக் கேட்டார் மாயாண் டி.
"அவ்வளவு தூரத்துக்கு ஏங்க போறிங்க. ராசாத் தோட்டத்திலே இருக்கிற ஒங்க தங்கச்சி மவனுக்குத்தான் நம்ம செந்தாமரையை கட்டித்தாங்கனு அடிக்கடி கேட் டுக்கிட்டு இருங்காங்களே, அந்தப் பொடியனுக்கே கட்டிக் குடுத்திட்டாப் போகுதுங்க."
"நீ லேசா சொல்லிப்புட்டே அந்தப் பயலை இவளுக் குப் புடிக்கவேணுமே. அவனைப் பாத்தா ஒரு மாதிரி மக்குப் பயலா இல் லியா இருக்கான்" என்ருர் மாயாண்டி.
"பயலைப் பத்தி என்னுங்க பாக்கிறது. இவலுட்டு நடத்தையே எனக்குப் புடிக்கல்ல. ஏதாச்சும் வயித்திலே வாயில வந்துருச்சின. அப்புறம் தோட்டமே நம்மளைப் பாத்துத் துப்புமே" என மீனுட்சி கவலையுடன் கூறினுள். அவளது கண்களில் நீர் முட்டியது.
'சரி சரி மீனச்சி நீ சொல்லுறபடியே செய்வோம். நான் வாறகெழம ராசாத் தோட்டத்துக்கு போயி அவுங்க கிட்ட பேசி முடிச்சு கிட்டு வாறேன். சட்டுப்புட்டுனு கல் யாணத்த நடத்திப்புடுவோம்" எனச் சிந்தனையுடன் கூறி ஞர் மாயாண்டி.

குருதிமலை ፲!81
"ஏங்க நான் ஒண்ணு கேக்கிறேன், நீங்க அங்கபோய் கல்யாணத்துக்கு வேண்டிய எல்லா வெசயத்தையும் முடிச் சிட்டு வந்தவொடன, இங்க இவ ஏதும் மறுப்பு தெரிவிச்சு கொழப்பம் பண்ணிப்புட்டாளென்ன என்னங்க செய்யு றது? மாப்பிளை வூட்டுக் காரங்களுக்கு என்னு பதில் சொல் லுறது? அப்புறம் நாம தலைநிமிர்ந்துதான் நடக்க முடி யுமா?" எனக் கவலையுடன் கேட்டாள் மீனச்சி.
"என்ன மீனச்சி வெளங்காம கறைக்கிற. நாம ஏன் இவகிட்ட எல்லா வெசயத்தையும் சொல்லணும். நான் ஒரு நாளைக்கு ராசாத் தோட்டத்துக்குப் போயிர்கசியா கல்யா ணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை முடிச்சுப்புட்டு வந்துடு றேன். சரியா சொன்ன தேதிக்கு அங்க விருந்தாளி போற மாதிரி செந்தாமரையையும் அழைச்சுக்கிட்டுபோவோம்’
"ஆமாங்க மாப்பிளை வூட்டுக்காரங்களும் அங்க ரெடியா இருப்பாங்க; அந்தத் தோட்டத்து மாரியம்மா கோயில்லையே தாலிய கட்டிப்புடலாம்' என்ருள் மீனச்சி.
'ரொம்ப ரகசியமாத்தான் இத நாம செய்யனும், வெளியில யாருக்கும் தெரியக்கூடாது." என மாயாண்டி கூறிய போது வெளியே இஸ்தோப்பில் யாரோ நடந்து வரும் அரவம் கேட்டது.
யன்னல் ஊடாக எட்டிப் பார்த்த மீனச்சி 'செந்தா மர குளிச்சிட்டு வந்துட்டா என மெதுவாகக் கூறிவிட்டு தனது வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினள்.
மாயாண்டி அடுப்பின் அருகே சென்று குளிர் காயத் தொடங்கிஞர்.
வேலை முடிந்து வீடுதிரும்பியிருந்த ராக்கு இவர்களது சம்பாஷணையைத் தனது காம்பராவில் இருந்தபடியே கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது உள்ளம் பெரிதும் கலக்கமடைந்தது. செந்தாமரையிடம் இந்த விஷயத்தைக் கூறி, அவளை எப்படியும் இந்தச் சிக்கலிலிருந்து காப் பாற்றிவிடவேண்டுமென அவள் எண்ணிக்கொண்டர்ள்.

Page 96
182 குருதிமலை
அத்தியாயம் இருபத்தேழு
Dடுவத்தில் தொழிலாளர்கள் நிறைந்திருந்தனர்.
முதலில் கொழுந்து நிறுத்துப் பேர்போட்டு முடிந்த ஒருசில பெண்கள் ஏற்கனவே லயத்துக்குத் திரும்பியிருந்த னர். வேறு சிலர் கொழுந்துகளைக் கயிற்றுச் சாக்குகளில் போட்டுக்கட்டி ஸ்டோருக்கு அனுப்புவதற்குத் தயாராக் கிக் கொண்டிருந்தனர்.
சாக்குக்காரன் சுமணபால, கொழுந்து நிறைந்த சாக்குகளை லொறியில் ஏற்றுவதற்கு வசதியாக மடுவத்து வாசலில் எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தான்.
அப்போது தோட்டத்து லொறி மடுவத்தை வந்த டைந்தது. என்றும் இல்லாதவாறு துரையும் அந்த லொறி யில் வந்திருந்தார். அவர் அங்கு வந்ததும், மடுவத்தில் இவ் வளவு நேரமும் நிறைந்திருந்த இரைச்சல் குறைந்து அமைதி நிலவியது. துரை லொறியை விட்டிறங்கி மடுவத் திற்குள் நுழைந்தபோது அவரது முகத்தில் கலக்கம் குடி கொண்டிருப்பதை சிலர் அவதானிக்கத் தவறவில்லை.
கண்டக்டர் எழுந்து துரைக்கு வணக்கம் தெரிவித் தார். அங்கு நின்ற தொழிலாளர்களும் துரைக்கு சலாம் வைத்து மரியாதை செய்தனர்.
துரை ஒரு கணம் அங்கு நின்றவர்களைக் கவனித்து விட்டு மேசையின் பக்கத்திலிருந்த நாற்காலியில் போய் அமர்ந்துகொண்டார்.

குருதிமை 183
துரை தங்களுக்கு ஏதோ சொல்ல விரும்புகின்ருர் என்பதைப் புரிந்துகொண்ட தொழிலாளர்கள் அவர் முன்னே சென்று அடக்கமாக நின்றனர். வீரய்யாவும் ராமுவும் முன் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.
'இப்ப நாங் ஓங்களுக்கு ஒரு முக்கியமான விஷயங் சொல்லத்தாங் வந்தது. தோட்டத்தை இந்த மாசத்தோட மூடச்சொல்லி அரசாங்கத்திலயிருந்து இன்னிக்கு எனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு. வாற மா சத்திலயிருந்து ஒங்க ளுக்கு இந்தத் தோட்டத்தில வேலையில்லை, வேலை நிப்பாட் டிரது.'
துரை இப்படிக் கூறியதும் எல்லாத் தொழிலாளர் களும் திகைத்துப்போய் நின்றனர்.
துரை கூறிய விஷயம் அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி யைக் கொடுத்தது. தோட்டத்தை கொலனிக்குக் கொடுக் கப்போவதை அவர்கள் அறிந்துதான் இருந்தார்கள். அதற்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் திட்ட மிட்டிருந்தனர். ஆனலும் இப்படித் திடீரென ஒரு மாதத் தவணையில் தோட்டத்தை மூடுவார்களென அவர்கள் சிறி தும் எதிர்பார்க்கவில்லை. தோட்டத்தில் தொடர்ந்தும் வேலை நடந்துகொண்டே இருக்கும். அப்போது சிறிது சிறிதாக தொழிலாளர்களைத் தோட்டத்திலிருந்து வெளி யேற்றுவதற்கு முயற்சிப்பார்கள்; அதே வேளையில் குடி யேற்றமும் நடக்கும் என்று தான் அவர்கள் நினைத்திருந் தனர். தோட்டத்தில் வேலையை நிறுத்துவது அவர்களது காலையே வாரிவிடுவது போன்ற நிகழ்ச்சி. வேலை வழங்கா விட்டால் அவர்களுக்கு சாப்பாட்டுப் பிரச்சினை தலைதூக்கி நிற்கும். எதனையும் எதிர்த்துப் போராடுவதற்கு வேண்டிய சக்தி அவர்களுக்கு இல்லாமல் போய்விடும்.
வீரப்யா தன்னை சுதாகரித்துக்கொண்டு ‘என்னுங்க தொர இப்புடித் திடீருனு வந்து சொல்லுறீங்க. நாங்க

Page 97
184 குருதிமலை
பொறந்து வளந்ததே இந்தத் தோட்டந்தானுங்களே: இந்தத் தோட்டத்த நம்பித்தானுங்களே நாங்க எல்லாம் இங்க வேலை செஞ்சிகிட்டு இருக்கோம், வேலைய நிப்பாட் டின நாங்க எப்புடீங்க தொரை பொழைக்கிறது.?" எனப் பணிவாகக் கேட்டான்.
* 'அதிங் நமக்கும் மிச்சம் மனவருத்தங்தான். இப்படி வாறது சொல்லி நமக்குத் தெரியாது தானே. இது "அர சாங்கத்திலயிருந்து நமக்கு சொல்லி இருக்கு. அதனுலதான் வேலை நிப்பாட்டுறது. நீங்கெல்லாம் வேற தோட்டத்துக்கு போகவேணும்."
"அப்புடி திடீருனு போகமுடியாதுங்க. நாங்கெல் லாம் லயத்தில ஆடு, மாடு, கோழி, மரக்கறித் தோட்ட மெல்லாம் வச்சிருக்கோம். ரொம்பக் கஷ்டப்பட்டுத் தாங்க இதெல்லாம் நாங்க செஞ்சோம். இதெல்லாத்தை யும் வுட்டுப்புட்டு நாங்க எப்புடி போறது" எனக் கூட்டத் தில் இருந்து ஒரு குரல் எழுந்தது.
"எங்க பாட்டன் பூட்டன் காலத்திலயிருந்தே நாங்க மாங்காமரம், பெலாக்கா மரம், பாக்குமரம் இன்னும் நெறைய மரங்களெல்லாத்தையும் வச்சுகிட்டு இருக்கோம். நாங்க போற எடத்துக்கு இது எல்லாம் கொண்டு போக முடியுங்களா தொரை?" என்றது இன்னுெரு குரல்.
"அப்புடி தொர சொல்றமாதிரி போறதுன்ன, நாங்க எல்லாம் எந்த தோட்டத்துக்குத்தான் போறது?" என மூலையிலிருந்து ஒரு குரல் கேட்டது.
இவ்வளவு நேரமும் தொழிலாளர்கள் கூறியதையே கேட்டுக்கொண்டிருந்த துரை கூறினர்.
**ஒ. அதுதான் ரொம்ப தோட்டங் இருக்குத்தானே. இந்தியாவுக்கு இப்ப ரொம்ப ஆள் போயாச்சு. அந்தத் தோட்டங்களுக்கு ஒங்களை எல்லாம் அனுப்பறது; இப்ப

நீங்க இங்க ஆடு, மாடு, கோழி எல்லாங் வளக்கிற மாதிரி அங்கையும் வளக்க முடியும். அங்கேயும் ஒங்களுக்கு அந்த மரங்கள் எல்லாம் இருக்குத்தானே."
"நாங்கெல்லாம் இந்தத் தோட்ட த் தி லே யே பொறந்து வளந்து ஒரு குடும்பம் மாதிரி இருக்குருேமுங்க தொர. நீங்க சொல்லுற மாதிரி நாங்க வேற தோட்டத் துக்குப் போறதாயிருந்தா நீங்க எங்களையெல்லாம் பிரிச்சு பிரிச்சுத்தானே அனுப்புவீங்க. அப்புடி எங்களால போய் இருக்க முடியாதுங்க" என்ருன் வீரய்யா உறுதியான குர 'லில்,
**நீங்க சொல்லுற மாதிரி நான் கேக்க முடியாது. அரசாங்கம் சொல்லுறது தான் நான் செய்யுறது, மாசம் முடிய எல்லாரும் தோட்டத்தவுட்டு போயிடணும், அதிக்கு தோட்டக் கணக்கில லொறி எல்லாங் கொடுக்கிறது’ எனக் கூறினர் துரை சற்று விறைப்பான குரலில்,
அப்போது லொறியில் கொழுந்துச் சாக்குகளை ஏற்றி முடித்துவிட்டு வந்த சுமணபால "அரசாங்கம் எடுத்த தில இருந்து தான் இந்தத் தோட்டமே காடாகிப் போய் விட்டதே, இப்போது தொழிலாளர்களின் சுதந்திரத்தி லும் தலையிட்டு அவர்களையும் நாசமாக்கப் போகின் முர்கள் போலத் தெரிகிறது" எனச் சிங்களத்தில் கூறி
துரை அவனை நிமிர்ந்து பார்த்தார். அவனது உணர்ச் சிகளை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. X
"யாரு என்ன சொன்னலும் தொர, நாங்க இந்தத் தோட்டத்தவுட்டு போகமாட்டோம்" எனக் கூறினன் வீரய்யா திடமான குரலில்,
"ஆமாங்க. நாங்க போகமாட்டோம்." எனக் கூட்டத்திலிருந்து பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித் தன.

Page 98
186 குருதிமலை
துரையின் நிலைமை மிகவும் தர்மசங்கடமாகப் போய் விட்டது. ஆனலும் இந்த விடயத்தில் அரசாங்கத்தின் உத்தரவுக்கு மாருகத் தான் நடந்தாலோ அல்லது தொழி லாளர்களோடு கதைத்தாலோ அது தனது தொழிலுக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதை அவர் நன்கு அறிந் திருந்தார். மேலும் தோட்டத்திலே நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மேலிடத்துக்கு அறிவிப்பதற்கு அங்கு அரசியல் ஆதரவாளர்கள் பலர் இருக்கிருர்களென்பதும் அவருக்கு நன்முகத் தெரிந்திருந்தன.
இந்நிலையில் அரசாங்கத்தின் உத்தரவுக்குக் கட்டுப் பட்டு நடப்பதைத் தவிர வேறு வழியேதும் இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை.
நீங்க எல்லாங் சும்மா அரசாங்கத்தோட எதிர்த்துக் கிட்டு இருக்கிறதுல பொரயோசனம் இல்லை. ஒங்களால ஒன்னுங் செய்ய முடியாது. ஒங்களுக்கு அரசாங்கம் எல்லா வசதியுங் செஞ்சிதானே வேற தோட்டத்திக்கி அனுப்பு றது. அப்போ எல்லாங் போகவேண்டியது தானே" எனக் கூறிஞர் துரை.
"இது நாங்க பொறந்த பூமிங்க. இதை வுட்டிட்டு எங்களால போக முடியாதுங்க. இங்கதாங்க நாங்க பொறந்தோம், வளந்தோம், கஷ்டப்பட்டோம். அந்தக் கஷ்டங்களுக்குள்ளேயே வாழ்ந்தோம். இந்த எடத்தவுட்டு நாங்க போகமாட்டோமுங்க தொரை." இப்படிக் கூறும் பொழுது வீரய்யா சற்று உணர்ச்சிவசப்பட்டான்.
தோட்டத்தை விட்டு தொழிலாளர்கள் வெளியேற மறுப்பதற்குரிய காரணம் இப்போதுதான் துரைக்கு நன்கு விளங்கியது. ஆனலும் அவர் மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர். அவற்றை மீறி அவரால் எதுவும் செய்ய முடியாது. சிந்தனையுடன் எழுந்திருந்த அவர் கண்டக்டரின் பக்கம் திரும்பி

குருதிமலை 87 * - ܝܫܚ-- - ܫ - ܀ -܀ ܪ
**இந்த மாத முடிவில் எஸ்டேட் மூடவிருப்பதால் கூடியவரை செலவினங்களை தவிர்க்கவேண்டும். கொழுந் தெடுக்கும் வேலையைத் தவிர மற்றைய வேலைகள் எல்லா வற்றையும் உடனே நிறுத்திவிடவேண்டும்" என ஆங்கிலத் தில் கூறிவிட்டு விருட்டெனச் சென்று லொறியில் ஏறினர். லொறி ஸ்டோர் பக்கமாகப் புறப்பட்டுச் சென்றது.
துரை ஆங்கிலத்தில் கூறியதை கண்டக்டர் தொழி லாளர்களுக்கு தமிழில் விளக்கிக் கூறினர்.
அங்கு நின்ற தொழிலாளர்களின் உள்ளங்கள் நிம்மதி யற்றுத் தவித்தன. எல்லோருக்கும் ஒரே குழப்பமாக இருந் தது. என்ன செய்வதென்றே புரியவில்லை. எல்லோரும் வீரய்யாவை சூழ்ந்துகொண்டு அவனது கருத்தை அறிய முற்பட்டனர்.
"நீங்க எல்லாரும் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுக் கும் வரவேணும். நாங்க இந்தத் தோட்டத்தை வுட்டுப் போற தில் லேனு முடிவு செஞ்சிட்டோம். அந்த முடிவை எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நாங்க மாத்தப்போறதில்ல. எல்லாரும் ஒத்துமையா இருந்து போராடுவோம். நான் இன்னிக்கே நம்ப ஜில்லாவில போய் எல்லா விபரத்தையும் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்லுறன். இப்ப எல் லாரும் அமைதியா வூட்டுக்குப் போங்க" என வீரய்யா கூறினன்.
வீரய்யாவின் கூற்று அங்கு நின்றவர்களுக்கு சிறிது ஆறுதலைக் கொடுத்தது. ஒவ்வொருவராக அவ்விடத்தை விட்டுக் கலைந்தனர்.
வீரப்யா சிந்தனையுடன் தொழிற்சங்கக் காரியால யத்தை நோக்கிப் புறப்பட்டான்.

Page 99
288 குருதிமை
அத்தியாயம் இருபத்தெட்டு
ஸ்டோருக்கு அருகிலுள்ள மலையில் ஆண்களும் பெண்களுமாகப் பலர் கொழுந்து பறித்த வண்ணமாக இருந்தனர். தோட்டத்தைக் கொலனிக்குக் கொடுக்கப் போவதால் இப்போது ஆண்களுக்குக் கொடுக்கப்படும் சில்லறை வேலைகள் யாவும் நிறுத்தப்பட்டிருந்தன. ஆண் களுக்கும் இப்போது கொழுந்தெடுக்கும் வேலையே வழங்கி ஞர்கள்.
அவர்கள் எல்லோரும் கொழுந்து பறித்துக் கொண்டி ருந்த போதிலும், ஒவ்வொருவரது மனதிலும் கலக்கமும், பெரும் சஞ்சலமுமே குடிகொண்டிருந்தன. இன்னும் சிறிது நாட்களில் தோட்டத்தைவிட்டு எல்லோருமே போய்விடவேண்டுமென்று துரை அறிவித்ததிலிருந்து அவர்கள் எல்லோரது உள்ளத்திலும் தங்களது எதிர் காலத்தைப்பற்றிய தெளிவற்ற நிலை உருவாகியிருந்தது.
வழமைபோல கண்டக்டர், கணக்கப்பிள்ளை போன்ற உத்தியோகத்தர்கள் இப்போது மலைக்கு வந்து அடிக்கடி வேலைகளைக் கவனிப்பதில்லை. கண்டக்டர் காலையிலேயே ஆபிசுப் பக்கம் போய்விட்டார். கணக்கப்பிள்ளை மட்டும் கொழுந்து நிறுப்பதற்காக மடுவத்திற்கு வந்துவிட்டுத் திரும்பினர்; அப்போது மேலோட்டமாகக் கொழுந்தெடுப் பவர்களைக் கவனித்துவிட்டு கங்காணியிடம் ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டுச் சென்ழுர்,

குருதிமலை 189
தோட்டத்தில் இப்போது ஒரு தேக்க நிலை ஏற்பட்டி ருந்தது. எவருமே அக்கறையோடு எந்த வேலையையும் க வனிப்பது கிடையாது. தெ (ா ழி லா ள ர் களும், உத்தியோகத்தர்களும் ஏதோ கடமைக்காகத் தத்தமது வேலைகளைச் செய்தனர்.
மலையிலே கொழுந்து பறித்த ஆண்களும், பெண் களும் வாய் ஓயாமல் தோட்டம் கொலனிக்கு எடுக்கப் போவதைப்பற்றியே கதைத்த வண்ணம் இருந்தனர்.
தொழிலாளர்கள் வேலையில் கவனம் செலுத்தாது கதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த வீரய்யா.
"சும்மா சும்மா . ஏன் இதயத்தியே கதைச்சிக்கிட்டு இருக்கீங்க. நாமெல் லாம் ஒத்துமையா இருந்தா, அவுங்க எப்புடி நம்ம ள வேற தோட்டத்திற்கு அனுப்ப முடியும்? நாங்க ஒருபோதும் இந்தத் தோட்டத்தவுட்டு போகப் போறதில் லேனு முடிவு செஞ்சிருக்கோம். இந்த தோட் டத்துல நம்மளக்கு வேல கொடுக்காமப் பட்டினி கெடந் தாலும், நம்ப உயிரைக் கொடுத்துப் போராடுவோம்? என உறுதியான குரலில் கூறிவிட்டு மட்டத்திற்கு மேல் வளர்ந்துபோய் இருக்கும் தேயிலைச் செடியைத் தனது கையில் இருக்கும் கத்தியினுல் மட்டப்படுத்தினன்.
"யார் வந்து எங்களை வெரட்டினுலும், எவர் வந்து எங்களை தோட்டத்துவுட்டுப் போகச் சொன்னலும், யாரும் தோட்டத்தவுட்டு அசையக்கூடாது" எனக் கண் டிப்பான குரலில் கூறினன் கொழுந்தெடுத்துக்கொண்டி ருந்த ராமு. f
மலையில் கொழுந்தெடுத்தவண்ணம் தொழிலாளர்கள் வெகுதூரம் சென்றபோது, ஜீப் வண்டியொன்று பலத்த உறுமலுடன் ஸ்டோர் முடக்கில் வந்தது. அது ஆபீசுப் பக் கத்திலிருந்து வந்துகொண்டிருப்பதை மலையில் நின்ற படியே வீரய்யா கவனித்தான்.

Page 100
190 குருதிமலை
ஜீப் வண்டியின் உள்ளே, முன் ஆசனத்தில் மூ வர் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் பின்னல் கண்டக்ட ரும், பெரிய கிளாக்கரும் இருந்தனர். 'மடுவத்தின் அருகே ஜீப் வண்டி நிறுத்தப்பட்டதும் அதிலிருந்த கண்டக்டர் முதலில் இறங்கினர்.
தூரத்தே கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் தொழி லாளர்களை அவர் ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தார். பின்னர் குறிப்பாக வீரய்யாவைப் பார்த்து அவனை, அருகே வரும்படி கையசைத்தார். வீரய்யா அவசர அவ சரமாகத் தேயிலைச் செடியைப் பிடித்துக்கொண்டு மலையி லிருந்து இறங்கி வந்தான். ராமு வும் கொழுந்துக் கூடையை மலையிலே எறிந்துவிட்டு அவனைத் தொடர்ந்து ஓடி வந்தான்.
*" வீரய்யா இஷங்க எல்லாங் அரசாங்கத்தில உள்ள வங்க, காணி அளக்கிற " டிப்பாட்மெண்டிலயிருந்து வந்தி ருக்காங்க. நம்ப தோட்டத்த கொலனிக்கு கொடுக்கப் போறதுதானே. அதுணுலதான் காணி எல்லாங் அளந்து கணக்குப் பாக்கப் போருங்க."
கண்டக்டர் இப்படிக் கூறியதும் வீரய்யா ஒரு கணம் திகைத்து நின்றன். அவனல் உடனே எவ்வித பதிலையும் கூற முடியவில்லை.
'நீங்க கொழுந்தெடுக்கிற மலையத்தாங் இப்ப அளக் கப் போறது. அதுணுல நீங்க எல்லாங் முப்பதாம் நம்பர் மலைக்குப் போகவேணுங்' எனத் தொடர்ந்து கூறினர் கண்டக்டர்.
'ஐயா எங்களுக்கு ஒரு முடிவும் தெரிவிக்காம இப்புடி நீங்க திடீரென்னு வந்து இந்தத் தோட்டத்தை கூறு போட்டு, மத்தவங்க கையில கொடுக்க நாங்க அனுமதிக்க முடியாதுங்க, நாங்க இஷங்களை காணி அளக்க விடமாட் டோம்' வீரய்யா தன்னைச் சுதாகரித்தபடி கூறினன்.

குருதிமலை 19
*நாங்க இந்தத் தோட்டத்தவுட்டு போகமாட் டோம். யாரும் காணி அளக்கிறதா நெனச்சி தேயில உள் ளுக்கு கால் வச்சா, அப்புறம் என்ன நடக்குமுனு தெரி யாது' படபடப்புடன் கூறினன் பக்கத்தில் நின்றிருந்த . מr(Lח"פ
கண்டக்டருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அப்போது ஜீப்பினுள் இருந்த பெரிய கிளாக்கர், **இந்தா பாரு, நீயெல்லாங் வெளங்காம கதைக்கிறது. இப்ப அரசாங்கம் சொல்லுறபடிதாங் நாங்க செய்ய வேணுங். நீங்க காணி அளக்க வந்தவங்களுக்கு கரச்சல் கொடுக்க வேணுங்' எனக் கூறிக்கொண்டு ஜீப்பிலிருந்து கீழே இறங்கினர்.
*அப்புடி முடியாதுங்கையா. இங்க இருக்கிற தேயிலையெல்லாம் அரசாங்கம்வந்து நட்டு வைக்கல. நாங்க நட்டுவச்ச தேயிலையுங்க. இதஷட்டு நாங்க செத்தாலும் போகமாட்டோம்" எனக் கூறினர் அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்த கறுப்பண்ணன் கங்காணி. உணர்ச்சியால் அவரது ரோமங்கள் துடித்தன.
பெரிய கிளாக்கரைப் பார்த்து கறுப்பண்ணன் கங் காணி கூறியது, கண்டக்டருக்குப் பெருங் குழப்பமாக இருந்தது. எப்போதும் தனது பேச்சுக்குத் தலையாட்டும் கறுப்பண்ணன் கங்காணிகூட மாறிவிட்டது அவருக்குப் பெரும் வியப்பாக இருந்தது.
மேலும் பல தொழிலாளர்கள் இப்போது ஜீப்பின் அருகே வந்து சேர்ந்தனர்.
‘என்ன மிஸ்டர், இந்தத் தொழிலாளர்கள் எல்லோ ரும் ஏன் சத்தம் போடுகிறர்கள்..? அரசாங்கம் சொன்ன படிதானே நாங்கள் செய்யவேண்டும். நாங்கள் எங்களது கடமையைத்தான் செய்யவந்திருக்கிமுேம், எங்களுக்கு

Page 101
193 குருதிமல்
இடைஞ்சல் கொடுக்க வேண்டாமென்று சொல்லுங்கள்" அளக்க வந்த உத்தியோகத்திர்களில் ஒருவர் பெரிய கிளாக் கரைப் பார்த்து ஆங்கிலத்தில் கூறினர்.
இவர்கள் நமது பேச்சைக் கேட்கமாட்டார்கள் போல் தெரிகிறது. இப்போதே நான் ஆபீசுக்குச் சென்று பொலி சுக்கு டெலிபோன் பண்ணி அவர்களை இங்கு வரவழைக் கின்றேன்" என்ருர் பெரிய கிளாக்கர் ஆத்திரத்துடன்.
இவர்களது சம்பாஷணை வீரய்யாவுக்கும் ஒரளவு புரிந்தது.
'அவசரப்பட்டு அப்படியொன்றும் செய்துவிடாதீர் கள். நியாயமான முறையில் இவர்களுடன் பேசிப்பார்ப் போம்” எனக் கூறியபடி ஜீப்பில் இருந்த ஓர் அதிகாரி கீழே இறங்கினர். *
'ஐயா தயவுசெய்து நீங்கள் இன்று காணி அளக்க வேண்டாம். உங்கள் மேலதிகாரியிடம் சென்று இந்தத் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் எல்லாரும் காணி அளப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிருர்கள் என்று கூறுங் கள்." என அந்த உத்தியோகத்தரைப் பார்த்து மிகப் பணிவுடன் கூறினன் வீரய்யா.
"அதெல்லாம் முடியாது. அரசாங்கக் கடமையைச் செய்ய வந்த எங்களை நீங்கள் தடுப்பது மிகவும் பெரிய குற்றம். உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை நீங்கள் வேண்டுமானல் எமது மேலிடத்திற்குத் தெரியப்படுத்துங் கள். எங்களுக்குக் கரச்சல் கொடுக்கவேண்டாங், நாங் கள் காணியை அளக்கத்தான் போகின்ருேம்’ எனச் சினத் துடன் கூறினர் அந்த அதிகாரி.
அவர்களோடு மேலும் கதைப்பதில் எவ்வித பிரயோ சனமும் இல்லையென வீரய்யா உணர்ந்துகொண்டான்.
*சரி ஐயா, நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங் கள். எங்களுக்கும் சில கடமைகள் இருக்கின்றன, நாங்

குருதிமலை 193
கள் அதனைச் செய்தே தீருவோம். அதனல் உங்களுக்குச் சில வேளை சிரமங்களும் நேரிட்லாம். பின்பு எங்களைக் குறை சொல்லாதீர்கள்" என வீரய்யா அடக்கமாகக் கூறி ஞன்.
பின்பு தொழிலாளர்களைப் பார்த்து, "நீங்கள் எல் லாம் பதட்டப்படாம அமைதியா முப்பதாம் நம்பர் மலை யில போய் கொழுந்தெடுங்க. இவங்களோட இப்ப நாங்க கரச்சலுக்குப் போறது முறையில்லை. இஷங்க மேலதிகாரி யின் சொற்படிதானே நடக்கணும். இது பத்தி நாங்க ஆறு தலா யோசிச்சு ஒரு முடிவுக்கு வருவோம்" எனக் கூறி
தொழிலாளர்கள் யாவரும் முப்பதாம் நம்பர் மலையை நோக்கிச் சென்றனர். நில அளவையாளர்கள் சிறிது நேரம் பெரிய கிளாக்கருடனும், கண்டக்டருட னும் உரையாடிவிட்டு, தாங்கள் கொண்டுவந்த கருவிகளு டன் மலையின் பக்கம் சென்றனர்.
பெரிய கிளாக்கரும், கண்டக்டரும் தங்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்தவண்ணம் ஆபீஸ் பக்கம் சென்றனர்.
秀 繫

Page 102
94 குருதிமலை
அத்தியாயம் இருபத்தொன்பது
கிராமத்தின் ஒரமாக உள்ள தோட்டத்து மலைகளில் * ரவுண்ட்" பிந்தியதால் எங்கும் கொழுந்து நிறைந்து பச்சைப்பசேலென காட்சி அளித்தது.
அதிகாலையிலே கிராமத்தில் உள்ளவர்கள் பலர் சாக்குகளுடன் தோட்டத்தை நோக்கி ஒற்றையடிப் பாதையில் படையெடுத்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் கிராமத்தின் எல்லையிலே உள்ள மலைகளில் ஏறி ஆங் காங்கே நின்று கொழுந்தெடுக்கத் தொடங்கினர்.
கொழுந்தெடுத்து முன்பின் பழக்கமில்லாதவர்கள் வயல் வெட்டும் அரிவாளால் கொழுந்தை அரிந்து தமது சிறிய சாக்குகளுக்குள் நிரப்பத் தொடங்கினர். ஒருசிலர் தாங்கள் அணிந்திருக்கும் சாரத்தை முழங்கால் வரை மடித்துக் கட்டிக்கொண்டு கொழுந்துகளை உருவி, சாரத்துக்குள் திணித்தனர்.
எப்படியாவது பெருந்தொகையான கொழுந்துகளைச் சேர்த்து விடவேண்டும் என்பதிலேயே எல்லோரது குறிக்கோளும் இருந்தது. நேரம் செல்லச் செல்ல கிரா மத்தில் இருந்து மேலும் பலர் வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு மிகவும் குதூகலத்துடன் கொழுந் தெடுத்துக் கொண்டிருந்தனர்.

குருதிமலை 195
* டேய். நாங்கள் இப்படி கள வாகக் கொழுந்தெடுப் பதை யாரும் கண்டால் நமக்கு கரச்சல்தான் வரும். யாராவது பார்க்கிருர்களா என்பதைக் கவனிக்க வேண் டும்" என்ருன் பொடிசிங்கோவுக்கு பக்கத்தில் நின்று கொழுந்தை அரிவாளால் அரிந்து கொண்டிருந்தவன்.
*" என்ன நீ இப்படிப் பயப்புடுமுய். நாங்களெல் லோரும் பட்டப் பகலில் துணிவோடு கொழுந்து எடுத் துக் கொண்டு இருக்கிருேம். எவராலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது" என்ருன் பொடிசிங்கோ அலட்சிய
OTs
*" துரை பொலிசுக்கு தகவல் கொடுத்து விட்டால் என்ன செய்வது?" எனக் கேட்டாள் அங்கு கொழுந் தெடுத்துக் கொண்டிருந்த பெண்ணுெருத்தி,
"அம்மே, நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதீங்க, பொலிசுக்காரன் என்ன தேயிலைத் தூ ரிலையா மறைந் திருந்து எங்களைப் பிடிக்கப் போருன். மேல் ரோட்டில் ஜீப் வரும்போதே நமக்கு தெரிந்து விடும். அப்போது எல்லோரும் நாட்டிற்குள் இறங்கி விடலாம் எனச் சண்டிக் கட்டோடு கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தவன் கூறி ஞன்.
"அப்படிப் பொலிசில் பிடித்தாலும் எங்களை என்ன தான் செய்யப் போகிருர்கள். நமது வாக்குமூலத்தை எடுத்துக்கொண்டு அனுப்பி விடுவார்கள்தானே' என்ருன் சற்றுத் தூரத்தில் கொழுந்து எடுத்துக் கொண்டிருந்த மற்ருெருவன்.
**நாட்டில் இருந்து எல்லோருந்தானே இங்கு வந்து கொழுந்தெடுக்கிருேம். எல்லாரையும் பொலிஸ் பிடித்து விட முடியுமா?" என்ருன் பொடிசிங்கோ.
**நாங்கள் என்ன அநியாயமா செய்கிருேம். இந்தத் தோட்டத்தை நமக்குத்தானே பிரித்து கொடுக்கப்

Page 103
96 குருதிமலை
போகிருர்கள். நமக்கு கிடைக்கப் போகும் காணியில் கொழுந்தெடுப்பதற்கு நாம் ஏன் பயப்பிட வேண்டும்’ என்ருன் அரிவாளால் கொழுந்து அறுப்பவன்.
"இந்த தோட்டத்து ஆட்கள் எல்லோரும் நமக்கு காணி கொடுக்க விடாமல் தடுக்கிருர்கள். நாங்கள் செய் கிற செயலில் இருந்தே அவர்கள் தோட்டத்தை விட்டு ஓடி விடவேண்டும்" என்ருன் பொடிசிங்கோ.
தூரத்தில் தெரியும் லயங்களின் முன்னுல் சிறுவர் களும் பெரியவர்களுமாக பலர் கூடி நின்று இவர்கள் கொழுந்தெடுப்பதையே கவனித்தபடி இருந்தனர்.
அதைக் கவனித்த ஒருத்தி "தோட்டத்து ஆட்களெல் லாம் லயத்திலிருந்து பார்த்துக் கொண்டு இருக்கிருர்கள். அவர்கள் போய் துரையிடம் சொல்லுவார்கள்" எனப் பயந்தபடி கூறினுள்.
"துரை வந்தாலென்ன, யார் வந்தாலென்ன இனி மேல் நாங்கள் கொழுந்தெடுப்பதை நிறுத்தப் போவ தில்லை" என்ருன் பொடிசிங்கோ அலட்சியமாக.
பண்டா முதலாளியின் பேச்சைக்கேட்டு எல்லாரும் கொழுந்தெடுக்கிருேமே. நாங்க கொண்டு போகும் கொழுந்து எல்லாவற்றையும் அவர் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வாரா? எனச் சந்தேகத்துடன் கேட்டான் சண்டிக்கட்டோடு கொழுந்தெடுத்தவன்.
“எவ்வளவு கொழுந்து கொண்டு வந்தாலும் வாங் கிறதாகத்தானே அவர் சொல்லி இருக்கிருர், பின்பு நாம் ஏன் தயங்க வேண்டும். முடிந்தவரை எடுத்துக்கொண்டு போவம்" என்ருன் மூலையில் நின்று கொழுந்தெடுத்த வன்.
அப்போது தோட்டத்தில் முன்பு கங்காணியாக வேலை செய்த முதியான்சே, அவர்கள் கொழுந்தெடுக்கும் இடத் திற்கு வந்து சேர்ந்தார். மேல் ருேட்டில் இருந்தபடியே

குருதிமலை 197
கொழுந்தெடுப்பவர்களை அவர் ஒரு தடவை நோட்டம் விட்டார். அவர்கள் கொழுந்தெடுத்த விதத்தைப் பார்த்ததும் அவரது நெஞ்சு பதறியது.
"என்ன நீங்கள் செய்வது பெரிய அநியாயமாக வல்லவா இருக்கிறது. தேயிலையையே நாசமாக்கிவிடுவீர் கள் போல் தெரிகிறது; இப்படி அரிவாளால் கொழுந்து அரிந்தால் தேயிலைச் செடிகள் என்னத்துக்கு உதவும்?" என உரக்கக் கூறினர் முதியான்சே.
"நீங்கள் எங்களுக்குக் கங்காணி வேலை பார்க்க வர வேண்டாம். உங்களுக்குத்தான் எப்போதோ தோட்டத்தில் பென்ஷன் கொடுத்துவிட்டார்களே. நீங்கள் உங்களது வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள்’’ எனச் சூடா கக் கூறினன் பொடிசிங்கோ.
"நான் ஒன்றும் உங்களுக்கு கங்காணி வேலை பார்க்க வரவில்லை. நீங்கள் இப்படித் தேயிலையை நாசமாக்கு வதை என்னுல் பாத்துக்கொண்டு பேசாமல் இருக்க முடியவில்லை" என்ருர் முதியான் சே.
** பண்டா முதலாளி நாங்கள் கொடுக்கும் கொழுந் திற்கு பணம் தருவார். எங்களது கையில் சிறிது பணம் புழங்குவது உங்களுக்கு பொருமையாக இருக்கின்றதா? நீங்களும் வேண்டுமானல் எங்களுடன் வந்து கொழுந் தெடுங்களேன். யார் தடுக்கப் போகின்றர்கள்' என முதி யான் சேயைப் பார்த்துக் கூறினன் அரிவாளால் கொழுந்து அறுப்பவன்.
* உங்களைப்போல் என்னையும் திருட்டு வேலை செய்யச் சொல்கிறீர்களா? எனக்கு ஒருபோதும் உந்தப் புத்தி வராது" எனக் கோபத்துடன் கூறினர் முதியான்சே,
*" தோட்டத்தைத்தான் விரைவில் மூ டி வி ட ப் போகின்ருர்களே, இனி எப்படி கொழுந்தெடுத்தால்தான் என்ன?" என அலட்சியமாகக் கூறினன் பொடிசிங்கோ.

Page 104
198 குருதிமலை
'நீங்கள் சொல்லுவதுபோல் தோட்டத்தை மூடிவிட் டாலும், பின்னர் இந்தப் பகுதியைத்தானே உங்களுக்கு பிரித்து கொடுக்கப் போகின்ருர்கள். இப்போதே இப் படி மோசமான காரியத்தைச் செய்யும் உங்களுக்கு இந்த தோட்டத்தை பிரித்துக் கொடுத்துவிட்டால் கொஞ்சக் காலத்தில் தேயிலைச் செடிகளையே அழித்துவிடுவீர்கள்" என்ருர் முதியான்சே,
அப்போது சண்டிக்கட்டோடு கொழுந்தெடுப்பவன் கூறினன்: "தோட்டத்தை பிரித்துக் கொடுக்கும்போது, கிராம சேவகரிடம் சொல்லி நமது முதியான்சே தாத்தா விற்கு இந்த மலையை கொடுக்கச் சொல்லுவோம்" எனக் கிண்டலாகக் கூறினன்.
எல்லோரும் கொல்லெனச் சிரித்தனர்.
"என்னமோ. நீங்கள் போகும் போக்கு சரியானதா கத் தெரியவில்லை. இது எங்கே போய் முடியுமோ தெரி யாது" எனக் கூறிய முதியான்சே, மேலும் அவர்களுடன் கதைக்க விரும்பாதவராக அவ்விடத்தை விட்டு அகன்ருர்,
இப்போது பலரது சாக்குகளிலும் கெர்ழுந்து நிறைந் திருந்தது. அவர்கள் ஒவ்வொருவராக நாட்டுக்குத் திரும் பத் தொடங்கினர். 4.
米 掌、
பண்டா முதலாளி தனது கடையின் முன்பக்கத்தில் உள்ள கிராதியொன்றில் கொழுந்து நிறுக்கும் தராசு ஒன்றை மாட்டி வைத்துக்கொண்டு புதிதாக வாங்கிய கொழுந்துச் சாக்குகளுடன் அமர்ந்திருந்தார்.
ஒவ்வொருவராக பண்டாமுதலாளியிடம் தாங்கள் எடுத்துக் கொண்டுவந்த கொழுந்துகளை நிறுத்துக் கொடுத் தனர். பண்டாமுதலாளி ஒரு சிறிய கொப்பியில் கொழுந்து கொண்டு வந்தவர்களின் பெயரையும், அவரவர் கொண்டு

குருதிமலை 199
வந்த கொழுந்தின் நிறையையும் குறித்துக்கொண்டு அவர்களை அனுப்பிவைத்தார். "
பின்னர் அவர் கொழுந்தை சாக்கில் திணித்துக் கட்டி, அதனைக் கிராமத்தின் எல்லையில் இருக்கும் தெரு வுக்கு ஆட்கள்மூலம் அனுப்பிவிட்டு தானும் அவர்களைப் பின்தொடர்ந்தார்.
கிராமத்தின் மறுபக்கத்தில் குறைந்த பரப்பளவு கொண்ட சிறிய தோட்டங்கள் இருக்கின்றன; அவை ஒவ்வொன்றும் தனிப்பட்டவர்களுக்கு சொந்தமான தோட்டங்கள். சிறுதோட்டச் சொந்தக்காரர்கள் தமக் கெனத் தனியாக தொழிற்சாலையை நிறுவி, தேயிலை தயாரிக்க முடியாத காரணத்தினுல், தமது தோட்டங் களில் கிடைக்கும் கொழுந்தை வியாபாரிகளுக்கு விற்றுப் பணமாக்குவது வழக்கம். அக்கொழுந்துகளை வாங்குவதற் கென தனிப்பட்ட வர்த்தகர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்கள் தனியார் தோட்டங்களிலிருந்து தாம் வாங்கும் கொழுந்தை லொறிகளில் ஏற்றிச் சென்று தமக்கு வசதி யாகவுள்ள தேயிலைச் தொழிற்சாலைகளில் பெரும் இலா பத்துடன் விற்று வருவார்கள். இப்படியான வர்த்தகர் ஒருவரிடம், தான் சேகரித்துள்ள கொழுந்துகளை விற்பனை செய்வதற்கு ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்தார் பண்டா முதலாளி. அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் அந்த வர்த் தகர் லொறியுடன் வந்து சேர்ந்தார்.
பண்டாமுதலாளி தான் கொண்டுவந்த கொழுந்து களைச் சாக்குடன் நிறுத்து லொறியில் வந்த வர்த்தகரிடம் கொடுத்துவிட்டு அதற்குரிய பணத்தைப் பெற்றுக் கொண் டார். பின்பு ஒவ்வொருநாளும் லொறியை அங்குகொண்டு வரும்படி அவரிடம் பணித்துவிட்டு அவர் வீடு திரும்பினர். அன்று மாலை பண்டா முதலாளியின் கடை ஒரே கல கலப்பாக இருந்தது. பகலில் கொழுந்தை அவரிடம்

Page 105
200 குருதிமலை
கொடுத்தவர்கள் பணத்தை பெறுவதற்காக அங்கு வந்து குழுமி இருந்தனர். na
பண்டாமுதலாளி நோட்டுக்கட்டுக்களை லாச்சிக்குள் திணித்து வைத்துக் கொண்டு குறிப்புப் புத்தகத்தைப் பார்த்து ஒவ்வொரு பெயராக வாசித்து பணத்தை எண்ணி மெனிக்காவிடம் கொடுத்தார். மெணிக்கா புன்சிரிப்புடன் அதனை வாங்கி மீண்டும் சரியாக இருக்கி றதா எனக் கணக்குப் பார்த்துவிட்டு ஒவ்வொருவருக்கும் பணத்தை கொடுத்தாள்.
அன்று கொழுந்து கொடுத்த எல்லோருக்கும் பத்து முதல் பதினைந்து ரூபா வரை பணம் கிடைத்தது. கொஞ்ச நேரத்திற்குள்ளேயே இவ்வளவு தொகைப் பணம் அவர்களுக்கு கிடைத்துவிடுமென அவர்கள் கனவி லும் நினைத்துப்பார்க்கவில்லை. அவர்கள் எல்லோரது உள் ளங்களிலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. எல்லோருக்கும் பணம் கொடுத்து முடிந்ததும் லாச்சியை இழுத்து மூடிக் கொண்டு எழுந்திருந்தார் பண்டா முதலாளி. பண ம் பெற்றுக் கொண்டவர்கள் அவரது கடையிலேயே தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களையும், பலசரக்குகளையும் வாங்கினர். வேறுசிலர் பின்புறமாகச் சென்று கள் குடித்துவிட்டுச் சென்றனர்.
அன்று பண்டா முதலாளிக்கும், மெனிக்காவுக்கும் வியாபாரத்தை கவனிப்பதற்கு பெரும்பாடாகப் போய் விட்டது. ஆட்கள் எல்லாரும் கடையை விட்டு அகன்றதும், பண்டாமுதலாளி கடையை மூடிவிட்டு மேசை அருகே உட்கார்ந்து, அன்று அவருக்குச் சேர்ந்திருந்த பணத்தை எண்ணத் தொடங்கினர். மெணிக்கா அடுப்படிக்குச் சென்று கோப்பி தயாரித்து வந்து அவருக்குக் கொடுத் தாள.

குருதிமலை 20
பணத்தை எண்ணியபடியே, மெனிக்காவின் பக்கம் திரும்பி, "என்ன மெனிக்கே இன்றைக்கு என்ன விசே ஷம். கோப்பி கொண்டு வந்திருக்கிருய்' எனச் சிரிப் புடன் கேட்டார் பண்டாமுதலாளி,
** நீங்கள் ரெம்ப களைத்துப் போனீர்கள்" எனப் புன்னகைத்தாள் மெணிக்கே.
பண்டா முதலாளி பணத்தை எண்ணிப் பார்த்து விட்டு, அதனை லாச்சியில் வைத்துப் பூட்டினர். அவரது உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்தது.
ஒரே நாளில் அவருக்கு இலாபமாக முந்நூறு ரூபா வுக்கு மேல் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு ருத்தல் கொழுந்திற்கும் இருபது சதம் கமிஷன் வைத்தபடியால் இவ்வளவு பெருந் தொகையான பணத்தை அவர் பெற் றிருக்கிருர், உண்மையில் இவ்வளவு இலாபம் கிடைக்கு மென அவர் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்தும் இந்தக் கொழுந்து வியாபாரத்தை நடத்தினுல் மிக விரைவி லேயே அதிக பணத்தை சுலபமாக சம்பாதித்து விட லாமென எண்ணியபோது அவரது உள்ளம் நிறைந்தது.
"நாம் இப்படிக் களவாகக் கொழுந்தை வாங்கி விற் பதஞல் நமக்கு ஏதும் கரச்சல் ஏற்பட்டு விடாதா? எனச் சிந்தனையுடன் கேட்டாள் பக்கத்தில் நின்றிருந்த மெனிக்கே.
அவள் இப்படித் திடீரெனக் கேட்பதன் காரணத்தை புரிந்துகொண்டு சிரித்த பண்டாமுதலாளி, “நாம் எதற் குமே பயப்படத் தேவையில்லை. இந்த விஷயம் தோட் டத்து கண்டக்டருக்கும் பெரிய கிளாக்கருக்கும் நன்கு தெரியும். ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அவர்கள் உடனே எனக்குக் தகவல் கொடுத்து விடுவார் கள். நாம் ஏற்ற நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள லாம்" எனக் கூறினர்.

Page 106
202 குருதிமலை
"பொலிசாருக்கு ஏதும் தகவல் கிடைத்து திடீரென வந்து உங்களைக் கைது செய்துவிட்டால் நான் என்ன செய்வது"? எனக் கலக்கத்துடன் கேட்டாள் மெனிக்கே.
"என்ன மெனிக்கே இப்படி பயப்படுகிருய்? கட்சி அமைப்பாளர் எமக்குச் சார்பாக இருக்கும்போது, நாம் எதற்குமே பயப்படத் தேவையில்லை. அப்படி ஏதும் கஷ் டம் ஏற்பட்டாலும் அவர் ஒருபோதும் எம்மைக் கைவிட மாட்டார்" எனக் கூறிவிட்டு மகிழ்வுடன் மெனிக்கே கொடுத்த கோப்பியை சுவைக்கத் தொடங்கினர் பண்டா முதலாளி.
மெனிக்கேயும் அவரது சந்தோஷத்தில் கலந்து கொண்டாள்.
அத்தியாயம் முப்பது
பூரணச் சந்திரன் மலைமுகட்டின் பின்னலிருந்து வெளியே எட்டிப் பார்த்தான்.லயங்கள் யாவும் சோபை இழந்துபோய்க் கிடந்தன.ஓரிரு காம்பராக்களில் மட்டும் மினுக் மினுக்கென்று விளக்கு எரிவது தெரிந்தது. மடுவத் தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த அரைச் சுவரில், ராமுவும் செபமாலையும் வேறு இரு இளைஞர்களும் ஏறி அமர்ந்திருந் தனர். மடுவத்திலிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் கண்டக் டரின் பங்களாவிலிருந்து மின்விளக்கின் ஒளிக் கீறல் மடு வத்தின் ஒரு பக்கத்தில் கோடுகள் போல் விழுந்திருந்தது. இளைஞர்கள் மடுவத்தின் இருட்டான பகுதியில் அமர்ந்தி ருந்தனர். சில்லென்று வீசிய குளிர் காற்று அவர்களின் உடலைத் தைத்தது.

குருதிமலை 2O3
*" டேய் செபமாலை, பீடி இருந்தா தாடா..சரியான கூதலா இருக்கு. ஒரு 'தம் அடிச்சாத்தான் நல்லா இருக் கும்." என்ருன் ராமு மெல்லிய குரலில்.
செபமாலை தானணிந்திருந்த சேட் பொக்கட்டைத் துளாவிப் பார்த்தவாறு, ‘‘எங்கிட்ட ஒரு துண்டு பீடி கூட இல் லேடா..எனக்கும் பீடியில்லாம ஒரே பைத்தியமா இருக்கு" என வாயைச் சப்புக்கொட்டிக்கொண்டான்.
'இந்த வீரய்யாவைத்தான் இன்னும் காணுேமே. ஏழு மணிக்கெல்லாம் வந்திருவேனு சொல்லிட்டு ஜில்லா வுக்குப் போனன்.இப்ப மணி எட்டாகுது."
'ஜில்லாப் பெரதிநிதி இருக்காரோ இல் லியோ தெரி யாது. எத்தின மணியா இருந்தாலும் அவரைக் கண்டு கதைச்சிட்டுத்தானே வரணும் .இது முக்கியமான விஷயம் இல் லியா?" என்ருன் இதுவரை நேரமும் மெளனமாக இருந்த இளைஞர்களில் ஒருவன்.
அப்போது மடுவத்தின் முன்பாக ரோட்டில் காரொன்று வரும் வெளிச்சம் தென்பட்டது.
"அடே.தொரவூட்டு கார் சத்தம் மாதிரி கேக்குது. நம்மளைக் கண்டா ஏதும் சந்தேகமா நெனப்பாரு; கீழே இறங்கி சுவருக்குப் பின்னுக்கு மறைஞ்சிக்குங்கடா" என செபமாலை உத்தரவிட்டான்.
எல்லோரும் கீழே குதித்துச் சுவரின் பின்னல் மறைந்து கொண்டனர்.துரையின் கார் மடுவத்தை நெருங்கியதும் ஒருகணம் நின்று, பின்பு அதே வேகத்துடன் புறப்பட்டுச் சென்றது.
இளைஞர்கள் மீண்டும் சுவரின் மேல் தாவி ஏறிக்கொண் டனர்.
** தொர படம் பாக்கவோ,கிளப்புக்கோ போயிட்டுப் போருரு. நம்மதான் தோட்டத்தவுட்டு வெரட்டுருங்க

Page 107
204 குருதிமலை
ளேன்னு கவலைப்பட்டுக்கிட்டு கெடக்குருேம்; தொர ஜாலியா சுத்திட்டுப் போருரு" என்ருன் செபமாலை சலிப்புடன்,
"ஆமாடா. அவருக்கென்ன.இந்தத் தோட்டம் இல் லாட்டி வேற தோட்டத்துக்கு தொரையாப் போவாரு. நம்மஞக்குத்தான் எந்த நாளும் கஷ்டம்" எனக் கூறினன் TITOLp.
கீழே ஒற்றையடிப் பாதையில் யாரோ வருவது நிலவு வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது.இளைஞர்கள் ஒரு கணம் தங்களது சம்பாஷணையை நிறுத்திக்கொண்டனர்.
வீரய்யா அந்த ஒற்றையடிப் பாதையிலிருந்து ஏறிக் கரத்த ருேட்டுக்கு வந்து மடுவத்திற்குள் நுழைந்தான்.
**போன வெசயம் எப்பு டி.சரி வந்துச்சா?ஜில்லா வுல என்ன சொன்னங்க?" என ஆவலுடன் வினவினுன் UnTip.
"இன்னும் ஒன்னும் சரியான முடிவு தெரியல்ல. தோட்டத்த கொலனியாக்குற விஷயமா யூனியனில இருந்து எதிர்ப்பு தெரிவிச்சு கடதாசி எழுதியிருக்காங்க. அதற்கு எந்தவித பதிலும் இன்னும் கெடைக்கலியாம். அது னல ஜில்லா பிரதிநிதியால எந்த முடிவுக்கும் வரமுடி யல்ல.மத்தியக் கமிட்டிய கேட்டுத்தான் சொல்லமுடியும் எங்கிருரு" என்ருன் வீரய்யா.
"மத்தியக் கமிட்டியில இருந்து பதில் வாறதுக்கு இடையில தோட்டமெல்லாம் அளந்து கொலனிக்குக் கொடுத்திடுவாங்க போல இருக்கு.அவ்வளவு சுறுக்கா காணி அளக்கிற வேல நடக்குது" எனப் படபடத்தான் Մո (Մ).
"ராமு.நாங்க இப்புடியே காலத்தைக் கடத்திக் கிட்டே போனு சரிவராது.இப்ப நான் ஒரு நல்ல திட்டத் தோடதான் வந்திருக்கேன்.அதை நாங்க ரொம்ப ரகசிய

குருதிமலை 205
W
மாத்தான் செய்யனும்; வெளியில மத்தவங்களுக்குத் தெரிய வந்திச்சின அது எல்லாத்துக்கும் ஆபத்தா முடி யும்" என்ருன் வீரய்யா மெல்லிய குரலில்.
“என்ன விரய்யா சொல்லுற..அப்புடி என்னு திட்டம் போட்டு வச்சிருக்கிற. சொல்லுறத கொஞ்சம் வெளக் கமா சொல்லேன்" எனக் கேட்டான் இளைஞர்களில் ஒருவன்.
“எல்லாரும் எங்கூட வாங்க;அப்புறம் எல்லாத்தையும் வெபரமா சொல்றேன்" எனக் கூறிய வீரய்யா,மடுவத்தை விட்டுப் புறப்பட்டான். இளைஞர்களும் அவனைப் பின் தொடர்ந்து சென்றனர்.
மடுவத்திற்கு அருகில் உள்ள மலையில் கடந்த இரண்டு நாட்களாக நில அளவைத் திணைக்களத்தினர் அளந்து கூனி அடித்திருந்த பகுதியை அவர்கள் அடைந்தனர். வீரப்யா முதலில் ஒர் கூனியைப் பிடுங்கி கையில் எடுத்தான்.
** என்ன வீரய்யா கூனியப் பிடுங்கிறே?" எனக் கேட்டான் ராமு. A
**காணியளக்கிறவுங்க அடிச்சிருக்கிற கூனியெல்லாம் பிடிங்கி வீசுங்க. மாயம் தெரியாம அழிச்சிப்புடுங்க.அப்பு றம் எப்புடித்தான் காணியைப் பிரிச்சிக் கொடுப்பாங்கனு பார்ப்போம்" வீரய்யாவின் குரல் ஆக்ரோஷமாக ஒலித்தது.
‘என்ன வீரய்யா யோசிக்காம செய்யுற;இன்னிக்குக் கூனியெல்லாம் பிடிங்கி வீசிட்டா, நாளைக்கு நம்மளைப் பொலிசுல புடிச்சி அடைச்சிட்டு, அப்புறம் வந்து புதுக் கூனி அடிப்பானுக" எனக் கூறினன் செபமாலை.
"இந்த விஷயத்துலதான் நாம கவனமா இருக் கோனும்;யாரு கூனியப் புடுங்கினங்கனு ஒருத்தருக்குமே தெரியவரக்கூடாது" என்ருன் வீரய்யா நிதானமாக,

Page 108
206 குருதிமலை
"ஆமா வீரய்யா, நீ சொல்லுறது சரிதான். இந்த நேரத்துல கூனி எல்லாத்தையும் புடிங்கி வீசிட்டா,பு டிங்கி வீசினது யாருன்னு சொல்லமுடியுமா? தோட்டத்து ஆளுங்கதான் புடிங்கி வீசிணுங்கன்னு எல்லாத்தையும் பொலிசில கொண்டுபோய் "ரிமான்ட்" பண்ணமுடியுமா?" எனக் கூறிஞன் ராமு அலட்சியமாக.
அப்போது அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன், ‘இன் னிக்கு நாமெல்லாம் பிடிங்கி வீசிட்டா,நாளைக்குக் காணி யளக்கிறவங்க வந்து திரும்ப கூனி அடிக்காமலா இருக்கப் போருங்க?" எனக் கேட்டான்.
"இனிமே காணி அளக்கிறவுங்கள தோட்டத்தில கால் வைக்க வுடுறது இல்ல" எனக் கூறினன் வீரய்யா. அவனது கூற்றில் உறுதி தொனித்தது.
"அது நம்மளால முடியுமா அண்ணே." தேகத்துடன் கேட்டான் செபமாலை.
எனச் சந்
"ஏன் முடியாது. நம்ம எல்லோருமே சேந்து ஒத்து மையா இருந்தா எதையும் சாதிக்கமுடியும். காணி அளக் கிறவங்க வாறப்போ எல்லோருமா சேந்து வந்து அவுங் கள தோட்டத்துக்குள்ள நுழையாம தடுப்போம்" என் ருன் வீரய்யா.
*காணியளக்கிறவங்க எந்த நேரத்தில வருவாங்க? எப்ப வருவாங்கனு நமக்குத் தெரியவா போவுது. நம்ப கிட்ட சொல்லிக்கிட்டா வாழுனுக?" எனக் கேட்டான் ராமு.
"அதுக்கும் ஒரு திட்டம் வச்சிருக்கேன்,காணியளக்கிற வங்க வாறப்போ, அவுங்களை யார் கண்டாலும் ஒடனே மடுவத்துக்கு வந்து பெரட்டு மணிய அடிக்கோனும். மணிச்சத்தம் கேட்டவொடன லயத்துல இருக்கிறவங்க எல்லாரும் ஓடிவந்து அவுங்களை காணி அளக்கவிடாம தடுக்கனும்" வீரய்யா இப்படிக் கூறியபோது நண்பர்

குருதிமலை 20 7
களது மனதிலும் அவன் கூறிய திட்டம் சரியானதாகவே Lull-gil.
**இது ஒரு நல்ல யோசனைதான். நாளைக்கி காலையில லயத்துல இருக்கிறவங்க எல்லாத்துக்கிட்டேயும் சொல் விடுவோம்" என்ருன் செபமாலை உற்சாகத்துடன்,
** இனிமே நாமெல்லாம் ரொம்ப துணிவோடதான் எல்லா வேலையும் செய்யனும்" எனக் கூறிய ராமு, "மொதல்ல எல்லாரும் இந்தக் கூனி எல்லாத்தையும் பிடுங்கி வீசுங்க" எனக் கூறிவிட்டு, அங்கிருந்த கூனிகளை ஒவ்வொன்முகப் பிடுங்கி எறிந்தான். நண்பர்கள் ஒவ்வொரு வராகக் கூனிகளைப் பிடுங்கி வீசத் தொடங்கினர். இப் போது அவர்களுடைய நெஞ்சில் எதற்குமே அஞ்சாத துணிவு துளிர்விடத் தொடங்கியது.
அத்தியாயம் முப்பத் தொன்று
பெரிய பங்களாவின் பக்கத்திலுள்ள மலையில் ஆண் களும் பெண்களுமாகப் பலர் கொழுந்தெடுத்துக்கொண்டி ருந்தார்கள்.வீரய்யா ஒருபுறமும் கறுப்பண்ணன் கங்காணி மறுபுறமும் வேலையைக் கவனித்துக்கொண்டிருந்தனர்.
இரவிரவாகக் கூனிகள் பிடுங்கப்பட்டுவிட்டதைக் கேள்விப்பட்டதும், கண்டக்டர் துரையின் பங்களாவுக்குச் சென்று அவரிடம் விஷயத்தைக் கூறினர். வீரய்யாவும் ராமுவும் சேர்ந்துதான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும் என்று தனக்கு எழுந்த சந்தேகத்தையும் அவர் துரையிடம் கூறத் தவறவில்லை.

Page 109
208 குருதிமலை
முதன்நாள் இரவு, தான் கிளப்புக்குச் சென்று திரும் பும் வேளையில் யாரோ நாலைந்து பேர் மடுவத்தில் இருந்த தும்,தன்னைக் கண்டு மறைந்துகொண்டதும் துரைக்கு நினை வில் வந்தது.
வீரய்யாவும் ராமுவும் சேர்ந்துதான் இந்த வேலை யைச் செய்திருக்கவேண்டுமென துரைக்கும் சந்தேகம் எழுந்தது.இப்படியான காரியத்தை வேறு எவரும் தோட் டத்தில் துணிந்து செய்யமாட்டார்கள் என்பதும் அவருக் கும் தெரியும்.
இந்த விஷயத்தில் தான் ஏதும் நடவடிக்கை எடுக்கா மல்விட்டால், கட்சி அமைப்பாளரின் சந்தேகத்துக்கு ஆளாகவேண்டிவரும் என அவரது உள்ளம் கூறியது. அவ ரது நண்பரான பக்கத்துத் தோட்டத் துரை, "தற்போ துள்ள சூழ்நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குச் சார்பாகவே கடமை புரிவதுதான் புத்திசாலித்தனமா னது" என அவருக்குப் புத்திமதி கூறியதும் அவரது நினை வில் வந்தது.
துரை, கண்டக்டரைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு மடுவத்தின் அருகே இருக்கும் மலைக்குச் சென்று கவனித் தார்;அதிகாலையில் சிறிது மழை பெய்திருந்ததால் கூனிகள் பிடுங்கப்பட்ட அடையாளங்கள் அழிந்துபோயிருந்தன. துரை காரைத் திருப்பிக்கொண்டு தொழிலாளர்கள் கொழுந்தெடுக்கும் மலையை வந்தடைந்தார்.காரை விட் டிறங்கியதும் ,கண்டக்டரிடம் வீரய்யாவை அருகில் வரும் படி அழைக்கச் சொல்லிப் பணித்தார். கண்டக்டர் அழைப் பதை அறிந்து வீரய்யா ஒன்றும் அறியாத பாவனையில் காரின் அருகே வந்தான்.
* யார் அந்தக் கூனியெல்லாம் பிடுங்கி வீசினது?" துரை விறைப்பான குரலில் கேட்டார்.
'எனக்குத் தெரியாதுங்க தொர, இன்னிக்குக் காலை யிலதான் நானும் அதைப்பத்திக் கேள்விப்பட்டேனுங்க."

குருதிமலை 209
கொழுந்தெடுப்பவர்கள் எல்லோரும் துரை, வீரய்யா வுடன் கண்டிப்பான குரலில் பேசுவதை அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
"பொய் சொல்ல வேணும்; அது நீயெல்லாந்தான் சேந்து செஞ்சிருக்கவேணும்" என்ருர் துரை கோபத் துடன்,
"நான் நேத்து தோட்டத்துக்கு விருந்தாளியா போயி ருந்தேனுங்க.இன்னிக்கு காலையிலதாங்க தொர வந்தேன். தொர அநியாயமா என்னைய சொல்லுறீங்க" என் முன் வீரய்யா ஒன்றும் அறியாதவன் போல.
"எங்கே ஒன் கூட்டாளி ராமு.அவனுந்தானே சேந்து இந்த வேலை செஞ்சது?" Ꮠ
"அவன் இன்னிக்கு வேலைக்கு வரல்லீங்க, அவனுக்கு இந்த ரெண்டு நாளா சரியான வவுத்து வலிங்க.படுத்தி ருக்கானுங்க.." என்ருன் வீரய்யா பணிவான குரலில்,
*நீ மிச்சம் பொய் பேசுறது.இந்தக் கூனியெல்லாம் புடுங்கி வீசிறது மிச்சங் பெரிய குத்தம்; நீதானே இப்ப தோட்டத்தில தலைவரு. ஒன்னைத்தான் பொலீசில புடிச் சுக் கொடுக்கிறது" என்ருர் துரை மிகவும் கோபமாக,
*தோட்டத்தில தலைவரா இருந்தா...நான் செய்யாத குத்தத்துக்கு என்னைப் பொலிசுல புடிச்சுக்குடுக்க முடியுங் களா துரை" - வீரய்யா துரையைப் பார்த்துக் கேட்டான்.
அந்த வேளையில் மடுவத்தின் பக்கமிருந்து 'டாண். டாண்." என பிரட்டு மணியின்ஓசை பலமாக ஒலித்தது.
மறுகணம் வீரய்யா மலையிலே கொழுந்தெடுத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களைப் பார்த்து, ‘எல்லாரும் மடுவத்துக்கு வாங்க" எனப் பலமாகக் கூறிக்கொண்டே மடுவத்துக்கு ஓடினன்.

Page 110
210 குருதிமலை
மலையில் நின்ற தொழிலாளர்கள் எல்லோரும் மந்தி ரத்தால் கட்டுண்டவர்கள் போன்று, வீரய்யாவின் சொல் லுக்குக் கீழ்ப்படிந்து தமது கொழுந்துக் கூடைகளுடன் மடுவத்தை நோக்கி விரைந்தனர்.
துரையும் கண்டக்டரும் திகைத்துப்போய் நின்றனர். "ஏய்.ஏய்.ஏன் எல்லாம் வேலை செய்யிறதை விட் டுட்டு எங்க ஒடுறது? நீங்க நெனைச் சபாட்டுக்கு இப்புடிச் செஞ்சா எல்லோருக்கும் நான் வேலை நிப்பாட்டிறது" துரை தன்னைச் சுதாகரித்துக்கொண்டு பெரிதாகக் கத்தி ஞர். ஆஞல்,எவருமே அதனைக் காதில் வாங்கிக்கொண்ட வர்களாகத் தெரியவில்லை. கோபத்தினுல் துரையின் உட லெல்லாம் நடுங்கியது.
ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து வந்ததுபோல நாலாபுறமும் இருந்து தொழிலாளர்களும் முதியவர்களும் சிறியவர்களும் பெண்களும் மடுவத்தை நோக்கி விரைந்து வந்தனர்.சில நிமிடங்களில் மடுவத்தின் முன்னல் மக்கள் சமுத்திரம் போலக் கூடிவிட்டனர். அதைப் பார்த்த போது வீரய்யாவின் உள்ளம் மகிழ்ச்சியினுல் துள்ளியது. தொழிலாளர்கள் தனக்கு ஒத்துழைப்புத் தருவதற்கு இப் போது தயாராகிவிட்டார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான். அவர்களிடையே இருந்த பய உணர்ச்சி யெல்லாம் மறைந்து இப்போது எதற்கும் துணிந்தவர் களாக மாறிவிட்டதை வீரய்யா கண்டுகொண்டான்.
தூரத்திலே ஸ்டோர்ப் பக்கமாக நில அளவையாள ரின் ஜீப் வந்துகொண்டிருப்பதைக் கண்டதும், செபமாலை பிரட்டு மணியை அடித்து ஓசை எழுப்பியிருந்தான். ஜீப் வண்டி மடுவத்துக்கு வந்து சேருவதற்கு முன்னரே இவ் வளவு தொகையான மக்கள் அங்கு வந்து சேருவார்கள் என்பதை அவன் எதிர்பார்க்கவேயில்லை.
வேகமாக வந்துகொண்டிருந்த ஜீப், மடுவத்தின் ஒர மாகப் பாதையை மறைத்துக்கொண்டிருந்த சனங்களைக்

குருதிமலை 21
கண்டதும் "பிரேக்" போட்டு நிறுத்தப்பட்டது.அதில் இருந் தவர்கள் திகைப்புடன் சனக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது துரையும் கண்டக்டரும் காரில் அந்த இடத்துக்கு வந்துசேர்ந்தனர்.
டிரைவர் ஜீப் வண்டியின் "ஹோணை’ப் பலமாக அழுத்தினன். எவருமே தாங்கள் நின்ற இடத்தைவிட்டு அசையவில்லை.
வீரப்யா முன்னுல் சென்று ஜீப்பில் உட்கார்ந்திருக்கும் உத்தியோகத்தர்களைப் பார்த்து, "நாங்க இனிமே ஒங்களை காணியளக்க விடமாட்டோம்;தயவுசெஞ்சு நீங்கெல்லாம் திரும்பிப் போங்க" எனக் கூறினன்.
துரையும் கண்டக்டரும் காரிலிருந்து இறங்கி ஜீப் நிற் கும் இடத்திற்கு வந்தனர்.
ஜீப்பில் இருந்த ஒருவர். "இவர்கள் எல்லோரையும் எங்களுக்கு வழிவிட்டு விலகச் சொல்லுங்கள். நாங்கள் எங் களது கடமையைச் செய்யவேண்டும்" எனத் துரையிடம் ஆங்கிலத்தில் கூறினர்.
அதைக் கேட்ட துரை, வீரய்யாவின் பக்கம் திரும்பி, "நீங்க இவங்களை எல்லாம் தடுக்கவேணும். அவுங்க வேலை யைச் செய்யட்டும்; கொழப்பம் பண்ணுதீங்க" எனக் கோபத்துடன் கூறினர்.
"நாங்க அவங்களை காணியளக்கவிடமாட்டோம்" எனக் கூறினன் அப்போதுதான் அவ்விடம் வந்துசேர்ந்த թո (լք.
"இப்புடி நீயெல்லாம் கொழப்பம் பண்ணின நான் பொலீசுக்குச் சொல்லி, ஒங்களை எல்லாம் "ரிமாண்ட்" பண் ணுறது" என்ருர் துரை சிடுசிடுப்புடன்.
"ஆமாந் தொர. அப்புடிச் செய்யுங்க. ஒங்களுக்கு முடிஞ்சா தோட்டத்துல இருக்கிற எல்லாரையும்

Page 111
212 குருதிமலை
கொண்டுபோய் "ரிமாண்ட்" பண்ணுங்க" என்ருன் 6 Tuiù unr.
" "எல்லாரையும் பொலிசுல அடைச்சிட்டு வேணு முன்னு இவங்க வந்து காணி அளக்கட்டும்" எனக் கூறி ணுன் பக்கத்தில் நின்ற செபமாலை.
* கடைசியா நான் கேக்கிறது.நீ எல்லாம் இந்த எடத்தைவுட்டிட்டு போறதா இல்லையா?" எனத் துரை அதட்டிக் கேட்டார்.
‘முடியாது’ என்ற பாவனையில் வீரய்யா தலையசைத் தான்.அங்கு நின்ற எல்லோரும் ஒரே குரலில் "நாங்கள் காணியளக்க விடமாட்டோம்" என முழங்கினர். துரைக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. அப்போது ஜிப்பில் உட்கார்ந்திருந்த ஓர் உத்தியோ கத்தர், 'இவர்களோடு கதைப்பதில் பிரயோசனம் இல்லை.நாங்கள் திரும்பிச் செல்கிருேம்.மீண்டும் சில நாட்களில் வேண்டிய ஏற்பாடுகளுடன் வருகிருேம்" எனக் கூறினர்.
சாரதி ஜீப்பை பின்பக்கமாக ரிவேஸில் செலுத்தினன்.
துரை கோபத்துடன் சென்று காரில் ஏறி பலமாகக் கதவைச் சாத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
எல்லாவற்றையும் இதுவரை நேரமும் மெளனமாக நின்று கவனித்துக்கொண்டிருந்த கண்டக்டர், "இவர்க ளுக்கு இவ்வளவு துணிவு ஏற்பட்டுவிட்டதா? இன்றே கட்சி அமைப்பாளரிடம் சென்று நடந்தது எல்லாவற்றை யும் கூறி, இவர்களை மட்டந்தட்டுவதற்கு ஏதாவது ஏற் பாடு செய்யவேண்டும்" என்ற எண்ணத்துடன் அவ் விடத்தைவிட்டு அகன்ருர்.

குருதிமலை 413
அத்தியாயம் முப்பத்திரண்டு
1ண்டா முதலாளியின் வீட்டில் அன்று ஒரு கூட்
டம் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. முதலாளி தான் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். அரசாங்கத் தினுல் இனமாக வழங்கப்படவிருக்கும் காணிக்கு மனுப் போட்டவர்கள் எல்லோரும் கூட்டத்துக்குத் தவருது சமு கம் அளிக்கும்படி அவர் அறிவித்தல் கொடுத்திருந்தார். கூட்டம் மாலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கப்படும் என ஒழுங்கு செய்யப்பட்டிருந்தபோதிலும், குறிப்பிட்ட நேரத் திற்கு முன்பாகவே பலர் முதலாளியின் வீட்டில் வந்து கூடிவிட்டனர். சுமணபாலாவும், பியசேனவும் குறிப் பிட்ட நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர்.
வயலில் நெற்பயிர்களை பூச்சிகள் தாக்கியிருந்ததால், கிராம சேவகர் அவற்றிற்கு தொழிலாளர்களைக்கொண்டு மருந்து அடித்துவிட்டு, நாட்டிலிருக்கும் தனது வீட்டிற் குச் சென்று மனுப்பத்திரங்களின் பிரதிகளை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாகக் கூட்டம் நடக்கும் இடத் திற்கு வந்தார்.
'வாருங்கள் ஜி. எஸ். மாத்தியா. உங்களது வர வைத்தான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிருேம்" எனக் கூறி பண்டா முதலாளி அவரை வரவேற்று அங்கிருந்த கதிரையொன்றில் அமரும்படி கூறினர்.

Page 112
214 குருதிமலை
‘எப்படி எல்லாரும் வந்துவிட்டார்களா?" என க் கேட்டபடி அங்கிருந்தவர்களை ஒரு தடவை நோட்டம் விட்டார் கிராமசேவகர்.
* மனு அனுப்பியவர்களில் ஒரு சில பெண்கள் வர வில்லை. ஆணுலும் அவர்களது சார்பில் அவர்களது குடும் பத்திலிருந்து வேறு ஆட்கள் வந்திருக்கின்றனர்."
'அப்படியானல் நாம் கூட்டத்தை ஆரம்பிக்கலாம்" என்ருர் கிராமசேவகர்.
'நாம் இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்வதற்கு முக் கிய காரணம் என்னவென்முல், அரசாங்கத்திற்கு நாங் கள் மனு அனுப்பியிருந்தபோதிலும் நமக்குக் காணிகிடைப் பதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இது விஷய மாக உங்களிடம் கதைத்து உங்களது அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள விரும்புகின்ருேம்.'
பண்டா முதலாளி இப்படிக் கூறியதும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
"அப்படி என்ன பிரச்சினைதான் இப்பொழுது ஏற் பட்டு இருக்கின்றது?" கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந் ჭნჭნl.
'அதாவது, மேலிடத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற் படவில்லை. அவர்கள் எமக்குக் காணி தருவதற்கு ஏற்ற முயற்சிகள் எடுத்துக்கொண்டு தான் இருக்கின்ருர்கள். ஆனல் தோட்டத் தொழிலாளர்கள்தான் அதற்குத்தடை யாக இருக்கின் ருர்கள்" என்ருர் பண்டா முதலாளி.
"ஆமாம்; நில அளவையாளர் அடித்து வைத்த கூனி களையெல்லாம் அவர்கள் பிடுங்கி வீசிவிட்டார்களாம். நேற்று காணியளப்பதற்கு உத்தியோகத்தர்கள் வந்த போது கூட தொழிலாளர்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவர்களைத் தடுத்துவிட்டார்களாம்" என்ருன் முன் பகுதியில் நின்ற பொடிசிங்கோ.

குருதிமலை 215
** தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டுப் போவதில்லை என்ற தீர்மானத்தில் இருக்கின்றர்கள். நாம் இந்த விஷயத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் எமக்குக் காணி கிடைப்பது சந்தேகந்தான்" என்ருர் கிராமசேவகர்.
"நாங்கள் அதற்கு என்ன செய்யமுடியும்? அரசாங்கம் அல்லவா அதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என் முன் பொடிசிங்கோவின் அருகில் நின்றவன்.
"எல்லாவற்றிற்கும் நாம் அரசாங்கத்தையே எதிர் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இவ்வளவு நாளாகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு இப்போதுதான் காணி கிடைக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அத னைத் தடுப்பவர்களை நாம் சும்மா விட்டுவைக்கக்கூடாது" என்ருன் அருகில் இருந்தவர்களில் ஒருவன்.
"நீங்கள் தோட்டத்தொழிலாளர்களைப் பற்றித் தவரு கப் புரிந்திருக்கிறீர்கள். எமக்குக் காணி கிடைப்பதைத் தடுப்பது அவர்களது நோக்கமல்ல. தங்களைத் தோட்டத்தி லிருந்து வெளியேற்றவேண்டாமென்றுதான் அவர்கள் போராடுகின்றனர்" என்ருன் இதுவரை நேரமும் மெளன மாக நின்ற சுமணபால.
‘'நீ முட்டாள்தனமாய் பேசுகிருய். உனக்கு அனுப வம் போதாது. எமக்குக் காணி கிடைப்பதைத் தடுப்பது அவர்களது நோக்கம் இல்லையென்றல் அவர்கள் ஏன் கூனி களைப் பிடுங்கி வீச வேண்டும்?. காணியளப்பவர்களை ஏன் தடுக்கவேண்டும்?." என்றர் பண்டா முதலாளி பட படப்புடன்.
அப்போது சுமணபாலாவின் அருகே நின்ற பியசே கூறினன்:- *
"நீங்கள் கோபத்தில் உண்மை நிலையைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றீர்கள். ஆண்டாண்டுகால

Page 113
216 Հ குருதிமலை
மாக எங்களோடு ஒற்றுமையாக வாழ்ந்த தொழிலா ளர்கள், இப்போது எங்களுக்குக் காணி கிடைப்பதற்கு ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார்கள். தங்களைத் தோட்டத்தைவிட்டு வெளியேற்றுவதற்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவே அவர்கள் அப்படிக் கூனிகளைப் பிடுங்கி வீசினர்கள். அதனை நீங்கள் தவருகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்' அவனது குரல் கணிரென ஒலித் 占gi。
"தோட்டத்தொழிலாளர்கள் என்ன நோக்கத்தோடு கூனிகளைப் பிடுங்கினர்கள் என்பதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஆனல் அவர்கள் அப்படிச் செய்வதால் எங் களுக்குக் காணி கிடைக்காமல் போய்விடுமல்லவா?" என் முன் பொடிசிங்கோ பலமாக,
"இது எங்களுடைய நாடு. நாமெல்லாம் மதிப்பிற் குரிய பிரஜைகள். எங்களுக்குக் கிடைக்கப்போகும் சலு கைகளுக்கு யார் தடையாக இருந்தாலும் நாம் இலேசில் விட்டுவிடக் கூடாது" என்ருர் பண்டா முதலாளி.
"இது நமது நாடுதான். அதை நான் மறுக்கவில்லை. ஆனலும் காடாகக் கிடந்த மலைகளை வெட்டி, வளம் படுத்தி தேயிலைச் செடிகளை நாட்டி வளர்த்தெடுத்தவர் கள் அந்தத் தோட்டத் தொழிலாளர்கள்தான். அவர் களுக்கும் இந்த மண்ணிலே பற்று இருக்கத்தான் செய் யும். அவர்களை விரட்டிவிட்டுத்தான் நாம் காணி பெற் றுக்கொள்ளவேண்டுமா?" எனக் கேட்டுவிட்டு எல்லோரை யும் ஒரு கணம் பார்த்தான் சுமணபால.
*சுமணபாலா சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது" என்ருர் இதுவரை நேரமும் அமைதியாக நின்று அங்கு நடந்த சம்பாஷணைகளைக் கேட்டுக்கொண்டி ருந்த முதியான்சே,
"தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு கூலி களாகத்தானே கொண்டுவரப்பட்டார்கள். ஊதியம் பெற்

குருதிமலை 217
றுக்கொண்டுதானே அவர்கள் வேலை செய்தார்கள். எப் படி அவர்கள் உரிமைகொண்டாடமுடியும்? இது அநியாய மாகவல்லவா இருக்கிறது" எனப் படபடத்தான் அங்கு நின்ற வேருெருவன்.
‘அவர்கள் இந்த நாட்டுக்கு கூலிகளாக வந்திராவிட் டால் இந்தத் தேயிலைச் செடிகளையே நாம் இங்கு பார்க்க முடியாது. நூறு வருடங்களுக்கு மே லா. க த் தமது உழைப்பை அர்ப்பணித்து, இந்தத் தேயிலைச் செடிகளை வளர்த்தெடுத்த தொழிலாளர்களை இன்னும் நாம் கூலிகள் என்று உதாசீனப்படுத்துவதுதான் மிகப்பெரிய அநியா யம்'என்ருன் பியசேன.
‘எங்களது மூதாதையர்களிடமிருந்து வெள்ளையர் கள் பிடுங்கிக்கொண்ட காணியை இப்போது அரசாங் கம் எமக்குத் திருப்பி அளிக்க முன்வந்துள்ளது. அதனைத் தோட்டத் தொழிலாளர்கள் தடுப்பதில் எவ்வித நியாய மும் இல்லை. இந்தக்கொடுமையை நாம் கண்ணுல் பார்த் துக்கொண்டிருக்கமுடியாது" எனக் கூறினன் பொடி சிங்கோ. அவனது முகத்தில் கோபம் தெறித்தது.
'நமது காணியில், நா ட் டு உரிமையே இல்லாத தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கிறது மல்லாமல் அடாத்தான முறையில் நடக்கவும் தொடங்கிவிட்டார் கள். இதனைப் பார்த்துக்கொண்டு இருக்க நாம் என்ன கோழைகளா..?" மூலையில் நின்ற இளைஞன் கூறினன். அவனது உடல் உணர்ச்சிவசத்தால் நடுங்கியது,
'நீங்கள் எல்லோரும் ஆத்திரத்தில் அறிவை இழக்கின் நீர்கள். சில அரசியல்வாதிகள் தமது செல்வாக்கை அதி கரித்துக்கொள்வதற்காக, பிழையான வழியில் முயற்சி செய்கின்றர்கள். எங்களுக்கு வாக்குரிமை இருப்பதனல் அடுத்த தேர்தலிலும் தமது பதவியைக் காப்பாற்றும் எண் ணத்துடன் எமக்கு சலுகைகள் செய்ய முனைகிருர்கள். நமக்கு இருப்பதுபோல் தொழிலாளர்கள் எல்லோருக்கும் வாக்குரிமை இருந்தால், ஒருபோதும் அவர்களை தோட்

Page 114
218 குருதிமலை
டத்தைவிட்டு விரட்டவேமாட்டார்கள், அவர்களுக்கும் ஏதாவது சலுகை செய்ய முயற்சிப்பார்கள்" என்ருர் முதி யான்சே,
** தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றுவது உங்களுக்கு விருப்பமில்லையென்ருல் நீங்கள் ஏன் காணிக்கு மனுக்கொடுத்தீர்கள்?" என்ருர் கிராமசேவகர்.
** தோட்டத் தொழிலாளர்களை விரட்டிவிட்டுத்தான் காணி தரவேண்டுமா? தரிசாகக் கிடக்கும் காணியை நமக் குத் தரலாமே" என்ருன் பியசேன.
"இவன் எப்பொழுதும் தோட்டத் தொழிலாளர். களின் சார்பாகவே பேசுகிருன். இவன் நமது ஆளாக இருந்துங்கூட, இவனுக்கு இனப்பற்றுக் கொஞ்சங்கூட இல்லை. இவன் நமது சமுதாயத்தைக் காட்டிக்கொடுக்கும் கோடரிக்காம்பாக மாறினுலும் மாறிவிடுவான்' எனக் கூறிவிட்டு பண்டா முதலாளி தனது பற்களைக் கடித்துக் Gosinrør intrř.
"முதலாளி. அவன் அப்படித்தான் கதைப்பான் அவன் அப்படிக் கதைப்பதற்கு வேறு ஏதாவது சொந்தக் காரணம் இருக்கலாம் அல்லவா?" எனக் கிண்டலாகக் கூறிவிட்டுச் சிரித்தான் பொடிசிங்கோ.
"ஆமாம் தோட்டத்தொழிலாளர்கள் போய்விட்டால் அவனுக்கும் சில பாதிப்புகள் ஏற்படலாமல்லவா..? எனக் கூறினன் பொடிசிங்கோவின் அருகில் நின்றவன்.
"எல்லோரும் 'கொல்'லெனச் சிரித்தனர். "அவன் நியாயத்தைக் கூறும்போது, அதனை ஏற்றுக் கொள்ளும் அறிவு உங்களுக்கு இல்லை; குதர்க்கம் பேசத் தான் உங்களுக்கு நன்ருகத் தெரியும்" எனப் படபடப் புடன் கூறினர் முதியான்சே,
"நாங்கள் ஒன்றும் குதர்க்கம் பேசவில்லை. நாங்கள் எல்லோரும் ஒருமுகமாக நிற்கும்போது நீங்கள் தான் குறுக்கே இழுக்கின்றீர்கள்' என்ருர் கிராமசேவகர்.

குருதிமலை 219
**நாங்கள் ஒன்றும் உங்களுக்குக் குறுக்கே நிற்கவில்லை, நியாயத்தைத்தான் கூறினேம்" என்ருன் சுமணபாலா,
"அப்போ நாங்கள் எல்லோரும் நியாயமற்றவர்கள் என்ரு சொல்லுகின்ருய்? உங்களைப்போன்று எமது சமுதா யத்துக்கு மாருக நடக்கும் புல்லுருவிகளல்ல நாங்கள். நீங் கள் பேசுவதை நாங்கள் ஏற்கத் தயாராகவும் இல்லை" என்ருர் பண்டா முதலாளி.
"நீங்கள் என்ன அநியாயத்தையாவது செய்யுங்கள். அதற்கு நாங்கள் உடந்தையாக இருக்கமாட்டோம். இங்கு இனி நாங்கள் நிற்கவும் விரும்பவில்லை" எனக் கூறிய பிய சேன, விருட்டென அவ்விடத்தை விட்டு வெளியேறினன். அவனைத் தொடர்ந்து சுமணபாலாவும் வெளியே சென் முன்.
**அவர்கள் போனல் போகட்டும். நாம் எப்படியும் தோட்டத் தொழிலாளர்களை விரட்டியேதிரவேண்டும்’ என்ருன் பொடிசிங்கோ.
** தோட்டத் தொழிலாளர்களோடு போராடி ஏதா வது குழப்ப நிலை ஏற்பட்டுவிட்டால் பின்பு என்ன நடக் குமோ சொல்லமுடியாது. சில வேளை அரசாங்கம் காணி கொடுப்பதை நிறுத்தினுலும் நிறுத்திவிடவுங்கூடும்"என யோசனையுடன் கூறினர் முதியான்சே.
"நீங்கள் இப்படிப் பயந்து நடுங்கினல் நாமெல்லாம் என்ன செய்வது? நீங்களும் வேண்டுமானல் அவர்களைப் போல் ஒதுங்குங்கள். நாங்கள் போட்ட திட்டத்தை நிறை வேற்றியே தீருவோம்" என்ருர் கிராமசேவகர்.
இப்போது முதியான்சேயும் அவ்விடத்தில் நிற்க விரும் பாதவராக வெளியே சென்ருர்,
அங்குவந்து இருந்தவர்கள் எல்லோரும் தங்களது திட் டத்தை எப்படி நிறைவேற்றவேண்டும் என்பதை வெகு நேரமாகக் கலந்தாலோசித்துவிட்டு, அவ்விடத்தைவிட்டு அகன்றனர்.

Page 115
220 குருதிமலை
அத்தியாயம் முப்பத்துமூன்று
விழுக்கற்பாறை லயத்தின் பக்கமாக உள்ள மலையில் தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்தெடுத்துக் கொண் டிருந்தனர். சிறிது நேரத்தில் கிராமத்திலுள்ளவர்களில் பலர் ஆண்களும், பெண்களுமாகப் பெருங் கூட்டமாகத் தொழிலாளர்கள் கொழுந்தெடுத்துக் கொண்டிருக்கும் மலையை வந்தடைந்தனர்.
களவாகக் கொழுந்தெடுப்பதற்கு எதிராக எவரும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காததினுல் கிராமத்தவர் களுக்கு இப்போது துணிவு அதிகரித்திருந்தது ; அவர்கள் தோட்டத்தின் உள்ளே அதிக தூரம் வந்து கொழுந்துபறிக் கத் தொடங்கியிருந்தனர்.
நாட்டிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் மலையின் மறுபக்கத்திலிருந்து விரைவாகக் கொழுந்து பறிக்கத் தொடங்கினர். அப்படி அவர்கள் கொழுந்தெடுப்பதைப் பார்த்ததும் வீரய்யாவின் உள்ளம் கொதித்தது. கடந்த ஒரு கிழமையாகத் தோட்டத்துக் கொழுந்துகளை அவர்கள் களவாடி வருகிருர்கள். வீரய்யா அதைப்பற்றி ஆரம்பத்தி லேயே துரையிடம் முறையிட்டிருந்தான். துரை அது விஷயமாக மேலிடத்துக்கு அறிவித்தல் கொடுக்கப் போவ தாகக் கூறியிருந்தார். அவர் அறிவித்தல் கொடுத்தாரா இல்லையா என்பது வீரய்யாவுக்குச் சந்தேகமாக இருந் தது.

குருதிமலை 22星
தோட்டத்துக் கொழுந்தைக் கிராமத்தவர்கள் வந்து எடுப்பதால், தோட்டத்தில் உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாகிவிடும். இப்போது நடந்துகொண்டி ருக்கும் விதத்தைப் பார்த்தால் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் கூட தோட்டத்தில் வேலை கிடைக்குமா என்பது வீரப்யாவுக்குச் சந்தேகமாக இருந்தது. தொழிலாளர்களை எப்படியாவது தோட்டத்தைவிட்டுத் துரத்திவிடவேண்டு மென்ற நோக்கத்துடனேயே கிராமத்தில் உள்ளவர்கள் செயலாற்றுகிருர்கள் என்பதை வீரய்யா புரிந்துகொண் டான்.மலையில் எதிர்ப்புறமாக வேகமாகக் கொழுந்தெடுத் துக்கொண்டிருந்தவர்கள், இப்போது தோட்டத் தொழி லாளர்கள் கொழுந்தெடுக்கும் பக்கத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
"ஏய் கங்காணி, நீயெல்லாம் இந்த மலையில கொழுந் தெடுக்க வேணும். நாங்க எடுக்கவேணும். எல்லாம் லயத் துக்கு ஓடிப்போ.." எதிர்ப்புறத்திலிருந்து பொடிசிங்கோ வீரய்யாவைப் பார்த்துப் பலமாகக் கூறினன்.
*நாங்க தோட்டத்து வேலய செய்யுருேம். ஒங்களப் போல கள்ளக் கொழுந்து எடுக்கல்ல. நீங்க எல்லாருந் தான் வூட்டுக்குப் போகணும்" என்ருன் வீரய்யா பொடி சிங்கோவைப் பார்த்து.
*என்ன கங்காணி, எங்களைப் பாத்தா க ள் ள க் கொழுந்து எடுக்குருேமுனு சொல்றது? நாங்க என்ன கள வானியா? இந்தக் காணியெல்லாங் நமக்குக் கொடுக்கப் போறதுதானே; அதனலைதான் நாங்க வந்து கொழுந் தெடுக்கிறது."
"சட்டப்படி இன்னும் ஒங்களுக்கு காணி ஒண்ணும்
குடுக்கல. அதுக்கு முந்தி நீங்க வந்து இப்புடிக் கொழுந் தெடுக்கிறது சரியில்ல" என வீரய்யா கூறினன்.

Page 116
222 குருதிமலை
"எங்களுக்கு காணி கொடுக்கவிடாம நீங்கதான் தடுக் கிறது. அதுணுலதான் நாங்க இப்புடி வந்து கொழுந்தெடுக் கிறது" என்ருன் பொடிசிங்கோ விறைப்பான குரலில்.
'நீங்கள் எங்களைத் தவழு நெனச்சிக்கிட்டீங்க. நாங்க ஒங்களுக்கு காணி ஒன்னும் கொடுக்க வேணுமுனு சொல் லல்ல. நெலம் இல்லாத ஆளுகளுக்கு காணி கொடுக்கத் தான் வேணும்- ஒங்களுக்கெல்லாம் காணி கொடுக்கத் தான் வேணும். ஆன, எங்களை இந்தத்தோட்டத்தவுட்டு போகச் சொல்லவேணுமுணுதான் நாங்க சொல்லுருேம்" என்ருன் வீரய்யா அடக்கமாக.
"ஒங்களை வேறதோட்டத்துக்குப் போகச் சொல்லுறது தானே. இது எங்களுக்குக் கொடுக்கிற தோட்டம். நீங்க எல்லாங் சுறுக்கா போயிடனும்" என்முன் பொடிசிங் கோவுக்குப் பக்கத்தில் நின்றவன்.
"நாங்க இந்த தோட்டத்தில பரம்பரையா இருக் கிருேம். இந்தத் தோட்டத்தவுட்டு நாங்க போகமாட் டோம். நீங்கதான் இப்ப கள்ளக்கொழுந்து எடுக்கிறத வுட்டிட்டு சுறுக்கா இந்த இடத்தை விட்டுப் போயிட னும்" என்ருன் தூரத்தில் கொழுந்தெடுத்துக் கொண்டி ருந்த ராமு.
அதைக் கேட்டதும் பொடிசிங்கோவின் கோபம் அதிக மாகியது.
"ஏய், என்னடா நீ மிச்சங் பேசறது. பேசாம லயத் துக்குப் போடா” எனக் கத்தினன் பொடிசிங்கோ.
‘எங்களை போகச் சொல்லுறதுக்கு நீ யாருடா?? எனப் பலமாகக் கத்தியபடி பொடிசிங்கோவின் பக்கம் பாய்ந்தான் ராமு.
வீரய்யா பாய்ந்து சென்று ராமுவைக் கட்டிப் பிடித்து இழுத்தான்; ‘என்ன ராமு, அவசரப்பட்டு சண் டைக்குப் போறே, நம்ப நெலமைய யோசிக்க வேணுமா"

குருதிமலை 223
கொஞ்சம் நெதானமா இரு" என அவனைச் சாந்தப்படுத் தினன்.
"அட பலப்பாங்கோ மூ அபிட்ட காண்ட எனவா. அபித் நிக்காங் இண்ட பே-எண்ட அபித் காமு." பொடி சிங்கோ ஆத்திரத்தில் அலறிஞன்.
மறு கணம் நாட்டிலிருந்து வந்தவர்கள் தோட்டத் தொழிலாளர்களைத் தாக்கத் தொடங்கினர். கையிலிருந்த ஆயுதங்களாலும், கற்களாலும் மூர்க்கத்தனமாகத் தாக்கி னர். தொழிலாளர்களும் அவர்களை எதிர்க்கத் தொடங்கி னர்.
* டேய், டேய். ஒருத்தரும் நாட்டாளுங்களோட சண்டைக்கி போகாதீங்க. எல்லாரும் லய த் துக் குப் போங்க" எனப் பலமாகக் கத்தினுன் வீரய்யா.
வீரய்யா இப்படிக் கூறியதும் தொழிலாளர்கள் தங்க ளைக் கட்டுப்படுத்திக் கொண்டனர். காரணமில்லாமல் அவன் இப்படிக் கூறமாட்டான் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் வீரய்யாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு லயத்துக்கு விரைந்தனர். தொழிலாளர்கள் லயத்துக்குத் திரும்புவதைக் கண்டதும் கிராமத்தவர்கள் தமது தாக்குதல்களை நிறுத்திக் கொண்டனர்.
அந்தச் சொற்ப நேரத்தில் தொழிலாளர்களில் நான் கைந்து பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுவிட்டன. அவர் களை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வழி செய்துவிட்டு வீரய்யா துரையின் பங்களாவை நோக்கி விரைந்தான்.
தோட்டத் தொழிலாளர்களைத் தான் லயத்துக்குப் போகும்படி கூறியிருக்காவிட்டால் பெரிய பயங்கரம் நிகழ்ந்திருக்கும் என்பதை அவன் எண்ணிப் பார்த்தான். இரு பகுதியினரும் போராடிப் பலத்த காயங்கள் ஏற் பட்டு கொலைகூட விழுந்திருக்கலாம். நல்ல வேளையாக அப்படி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லையென நினைத்து வீரய்யா மனதைத் தேற்றிக்கொண்டான்.

Page 117
224 குருதிமலை
உண்மையில் நாட்டு மக்களுக்கு காணி கொடுக்கப்பட வேண்டும் என்பதை அவன் மனப்பூர்வமாக ஆதரித்தான். அவர்களோடு தோட்டத்து மக்கள் அன்புடனும், அந் நியோன்னியமாகவும் இதுவரை காலமும் இருந்ததைப் போலவே இனிமேலும் இருக்கவேண்டும் என்பதையே அவன் விரும்பினன். நாட்டு மக்கள் தங்களைத் தவருகப் புரிந்துகொண்டு சண்டைக்கு வந்தது அவனது மனதை மிகவும் வேதனையடையச் செய்தது. ܫ
வீரய்யா, துரை பங்களாவை அடைந்தபோது துரை எங்கேயோ போவதற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
** தொர, நம்ம ஆளுங்க கொழுந்து எடுத்துக்கொண். டிருந்த நேரத்தில அந்த நாட்டாளுங்க. வந்து அடிச்சி வெரட்டிப்புட்டாங்க. நாலைஞ்சு பேருக்கு சரயான காய முங்க; நாட்டாளுங்க கள்ளக் கொழுந்தெடுக்கிறதைப் பத்தி முந்தியே தொரகிட்ட சொல்லியிருக்கேன். தொரை இதப்பத்தி கொஞ்சங்கூட கவனிக்காம இருக்கிற்ங்க. அத னல இப்ப பெரிய கரச்சல்தான் வரப்போகுது’ எனக் கூறி ஞன் வீரய்யா.
"ஓ அதிங் நான் அரசாங்கத்துக்கு எழுதிப் போட்டி ருக்கு, அவங்கதான் அதிக்கி நடவடிக்கை எடுக்கவேணும் ச நா ஒன்னும் செய்ய முடியாது. ஒங்களையெல்லாங் , தோட் டத்தைவுட்டு போக சொன்னப் பிறகு, நீங்க எல்லாங் இருக்கிறதினுலதான் இப்புடிக் கரச்சல் வாறது" எனக் கோபத்துடன் சீறிஞர் துரை. * g
“என்னங்க தொர, நம்ம ஆளுங்களுக்கெல்லாம் நாட் டாளுங்க அடிச்சிப்புட்டாங்கண்ணு சொல்லவந்தா, எங் களை தோட்டத்தவுட்டு ஏன் போகல்லேன்னு கேக்கிறீங்க. இது நாயமுங்களா?"
'சரி சரி, நாங் இதுபத்தி அரசாங்கத்துக்கு கடதாசி எழுதி, பொலீசுக்கும் சொல்லுறது. நீங்க எல்லாங் லயத்

குருதிமலை 225。
துக்குப்போய் சத்தம் போடாமல் அமைதியா இருக்கோ ணும்" எனக் கூறிவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டார்.
வீரய்யா நடந்து முடிந்த விஷயங்களைப்பற்றிக் கதைப் பதற்காக தொழிற் சங்கக் காரியாலயத்தை நோக்கி நடந் தான். தோட்டத் தொழிலாளர்களைச் சரியான வழியில் கொண்டு செல்லவேண்டிய பெரும் பொறுப்பு - தலைமைப் பதவி, தன்னிடம் வந்த வேளையில் இப்படியான அசம்பா விதங்கள் நடந்துகொண்டிருக்கின்றனவே என எண்ணிக், கலங்கிய வகை அவன் நடந்துகொண்டிருந்தான்.
நாட்டிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்தும் அதே மலை யில் கொழுந்தெடுத்தவண்ணம் இருந்தனர். தோட்டத் தொழிலாளர்கள் எல்லோரும் தமக்குப் பயந்து லயத் துக்கு ஓடிவிட்டார்கள் என்பதைக் கதைத்த வண்ணம் மிகவும் குதூகலமாக அவர்கள் கொழுந்து பறித்துக்கொண் டிருந்தனர்:
அத்தியாயம் முப்பத்துநான்கு
lairlit முதலாளி கொழுந்துத் தரகராக மாறியதி லிருந்து அதிர்ஷ்ட தேவதையின் பார்வ்ை அவர் பக்கம் திரும்பியிருந்தது. உலகச் சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்ததால் கொழுந்தின் விலையும்’ நாளுக்கு நாள் அதி கரித்துக்கொண்டே வந்தது. கொழுந்தின் விலை உயர்ந்து கொண்டே செல்லச் செல்ல பண்டா முதலாளியின் கமிஷனும் அதிகமாகிக்கொண்டு வந்தது. ஒரு மாத காலத்துக்குள் பண்டா முதலாளிக்கு ஆயிரக் கணக்கில் பணம் சேர்ந்துகொண்டது.
.

Page 118
岛2份 குருதிமல்
கிராமத்தில் வாழும் மக்களுக்கும் கொழுந்தெடுத்து விற்பதால் கிடைக்கும் வருமானமும் கூடிக்கொண்டு வந் தது; அதனுல் அவர்களது வாழ்க்கைத் தரத்திலும் மாற் றம் காணப்பட்டது. மூன்று வேளையும் அவர்கள் வயிருர உணவருந்தினர்கள். தமக்கு வேண்டிய உடைகளை அந்த ஒரு மாத காலத்துக்குள் அவர்கள் வாங்கினர்கள். சிலர் தமது குடிசைகளைத் திருத்தி அமைத்தார்கள். வேறு சிலர் வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வாங் கிக் கொண்டனர். ஒரு மாத காலத்துக்குள் அவர்களு டைய வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருந்தது.
கொழுந்தெடுத்து விற்பதினல், நாளுக்கு நாள் பணம் அதிகமாகக் கிடைத்துக்கொண்டிருக்க மக்களிடையே கொழுந்தெடுக்கும் ஆர்வமும் அதிகரித்துக்கொண்டேவத் தது. அதனுல் அவர்கள் அந்தக் கிராமத்தின் நாலாபுற மும் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து திருட்டுத்தன மாகக் கொழுந்து பறிக்கத் தொடங்கினர்.
முன்பெல்லாம் பண்டா முதலாளி, தான் வாங்கும் கொழுந்தை விற்றபின்னரே ஆட்களுக்குப் பண ம் கொடுப்பார். ஆனல், அவரிடம் இப்போது போதியளவு பணம் சேர்ந்துவிட்டபடியால், கொழுந்து கொண்டு வருப வர்களிடம் கொழுந்தை நிறுத்து உடனுக்குடன் பணத் தைக் கொடுத்தார்.
நாட்டில் உள்ளவர்களுக்குப் பணம் தேவைப்பட் டால், இப்போது அவர்கள் எவ்வித யோசனையுமின்றி எங் காவது சென்று கொழுந்தைப் பறித்துக் கொண்டுவந்து, பண்டா முதலாளியிடம் கொடுத்து உடன் பணம் பெற் றுக் கொள்ளும் நிலைமை உருவாகியிருந்தது. அவசர தேவைகளுக்கெல்லாம் பண்டா முதலாளி இப்போது முற்பணம் கொடுத்து உதவினர். அவருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக அவர் கொழுந்தைத்தான் எதிர்பார்த்தார்,

குருதிமலை 227
பண்டா முதலாளியின் கடையிலும் வியாபாரம் இப் போது பெருகியிருந்தது. அவராலும் மெனிக்காவினலும் வியாபாரத்தைச் சமாளிக்க முடியாததால், எடுபிடி வேலைக்காக ஒரு பையனையும் அமர்த்தியிருந்தார் பண்டா முதலாளி. இப்போது கடையில் பலவகைப் பொருட்கள் நிறைந்திருந்தன. நாட்டிலுள்ளவர்கள் தமக்கு வேண்டிய சகல பொருட்களையும் அவரது கடையிலேயே வாங்கக் கூடியதாக இருந்தது.
அன்று மாலை வழக்கம் போல கொழுந்து நிறைந்த சாக்குகளுடன், தெருவோரமாக லொறியின் வரவை எதிர் பார்த்துக் காத்திருந்தார் பண்டா முதலாளி. அன்று அவ ருக்கு என்றுமில்லாதவாறு பெ ரு ந் தொ  ைக யா ன கொழுந்து கிடைத்திருந்தது. மூவாயிரம் ரூபாவுக்கு மேல் பணத்தைக் கொடுத்து ஆட்களிடம் அவர் கொழுந்தை வாங்கியிருந்தார். அவ்வளவு கொழுந்தையும் லொறிக் காரனுக்கு விற்றுவிட்டால் சுளையாக ஆயிரம் ரூபாவா வது இலாபமாகக் கிடைக்கும் என்பதை எண்ணிப் பார்த்தபோது அவரது உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்தது. வழக்கமாக வரும் நேரத்துக்கு அன்று ஏனே லொறி வர வில்லை. வெகு நேரமாகத் தெருவோரமாக நின்றுகொண் டிருந்தபடியால் அவரது கால்கள் வலித்தன. அருகில் இருந்த கொழுந்துச் சாக்கின் மேல் அமர்ந்து சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டார்.
நேரஞ் செல்லச் செல்ல பண்டா முதலாளிக்கு மன தில் சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. ஒருவேளை இன்று லொறி வராமல் விட்டுவிடுமோ என நினைத்தபோது அவ ருக்குப் பெரும் திகிலாகிப் போய்விட்டது. தற்செயலாக அன்று லொறி வராவிட்டால் கொழுந்தெல்லாம் பதங் கெட்டு வீணுகிவிடும். பின்னர் அந்தக் கொழுந்தை ஒன் றுமே செய்ய முடியாது; வீசவேண்டியதுதான். அப்படி நேர்ந்துவிட்டால் ஒரே நாளில் மூவாயிரம் ரூபாவுக்கு

Page 119
22& குருதிமலை’
குறையாத நட்டம் ஏற்பட்டுவிடும். அதை நினைத்துப் பார்த்தபோது அவருக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது.
எங்கும் நன்ற க இருட்டிவிட்டது. ஒருவேளை லொறி யில் ஏதாவது பழுது ஏற்பட்டிருக்கும். அதனைத் திருத்திக் கொண்டு வருவதற்கு சுணக்கம் ஏற்படலாம் என நினைத்து பண்டா முதலாளி நம்பிக்கையுடன் லொறியை எதிர் பார்த்துக்கொண்டிருந்தார்.
இருட்டிய பின்பு வெகுநேரமாகியும் பண்டா முத லாளி வீட்டிற்குத் திரும்பாததால், அவர் வேலைக்கு அமர்த்தியிருக்கும் பையன் தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு அவரைத் தேடி வந்திருந்தான்.
பண்டா முதலாளி பந்தத்தை வாங்கி நிலத்திலே குத்தி வைத்துவிட்டு, 'லொறி வர நேரம் செல்லும் போல் இருக்கிறது. லொறி வந்தவுடன் கொழுந்தை விற்றுவிட் டுத்தான் வரவேண்டும். நீ போய்க் கடையை கவனித்துக் கொள்' எனக் கூறி அவனைத் திருப்பி அனுப்பிவைத் ğ5 mt rT.
சில்லென்று வீசிய குளிர்காற்று அவரது உடலைத் தைத் தது. உடல் குளிரால் நடுங்கியது. லொறி எப்படியாவது வந்து சேரும் என்ற நம்பிக்கை மட்டும் அவருக்குத் தளர வில்லை.
நேரம் ஒன்பது மணியைத் தாண்டியதுந்தான் இனி லொறி வருவது சந்தேகமென அவர் எண்ணிக்கொண் டார்-ஒன்ரு, இரண்டா மூவாயிரம் ரூபாய் அல்லவா பாழாகப் போகின்றது என எண்ணியபோது அவருக்குத் த%ல சுற்றியது. தலையில் கைவைத்துக்கொண்டு பெருஞ் சோகத்துடன் கொழுந்துச் சாக்கின்மேல் வீற்றிருந்தார் பண்டா முதலாளி,

குருதிமலை 229
லொறிக்காரனை நினைத்தபோது அவருக்குக் கோபம் பொங்கியது. எவ்வளவு பொறுப்பில்லாமல் அவன் நடந் திருக்கிருன். அவனுக்கு வரவசதியில்லையானல் யாரிடமா வது சொல்லியனுப்பியிருக்கலாந்தானே. நான் இப்போது அடைந்த நட்டம் அவனுக்கு எங்கே தெரியப்போகிறது. என்னிடமிருந்து வாங்கும் கொழுந்தை அவன் கொண்டு போய்க் கூடுதலான விலைக்கு, தனக்கு வசதியாகவுள்ள தேயிலைத் தொழிற்சாலையில் விற்றுவிடுவான். அதனல் எனக்குக் கிடைக்கும் இலாபத்தைவிட அவனுக்கு அதிக இலாபம் கிடைத்துக்கொண்டுதானே இருக்கிறது. அவன் லொறியுடன் வந்தால் நிச்சயம் அவனுக்கு இலாபம் கிடைக்கும். வராவிட்டால் அவனுக்கு ஒருபோதும் நட் டம் வராது. இந்த வியாபாரத்தில், நான் வேறு ஒருவனி டம் தங்கியிருப்பதால்தானே எனக்கு இப்படியான நட் டம் ஏற்படுகிறது. நான் எனக்குச் சொந்தமாக ஒரு லொறியை வாங்கிவிட்டால், இவ்வளவு நேரம் காத்தி ருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது; நட்டமும் அடை யத் தேவையில்லை. இலாபமும் இரண்டு மடங்காகக் கிடைக்கும்-இப்படிப் பலவாறக அவரது சிந்தனை ஒ.
ULUg5I.
கடையிலிருந்து மீண்டும் பெடியன் அவரைத் தேடி வந்திருந்தான். மெனிக்கே அவனிடம் சுடுதண்ணிப் போத்தலில் தேநீர் அனுப்பியிருந்தாள். தேநீரைப் பரு கியபோது அவருக்குத் தொண்டைக்குக் கீழே இறங்குவ தற்குச் சிரமமாக இருந்தது.
இனி லொறியை எதிர்பார்த்து நிற்பதில் பிரயோசன மில்லை என அவர் எண்ணிக்கொண்டார். ஆனலும் அவ் வளவு கொழுந்தையும் அங்கு போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பிப் போகவும் அவருக்கு மனம் வரவில்லை. தற்செய லாக லொறி பிந்திவந்தால் அவ்வளவு கொழுந்தையும் பணமாக்கிவிடலாம் என்ற நப்பாசை எழுந்து அவரை வீட்டுக்குப் போகவிடாது தடுத்தது.

Page 120
230 குருதிமல்
இப்போது பெடியனும் அவருடன் இரவிரவாக விழித்திருந்தான்.
மறுநாள் விடிந்ததுந்தான் பண்டா முதலாளி வீட் டுக்குப் புறப்பட்டார். அவரது உடலும், உள்ளமும் பெரி தும் சோர்ந்துபோய் இருந்தன. தள்ளாடியபடியே வீட்டை அடைந்தார் பண்டா முதலாளி.
இரவு லொறி வராததை மெனிக்கேயிடம் சொல்வி விட்டு, ‘இனிமேல் நாம் வேருெருவரின் கையை எதிர் பார்த்து நிற்காமல் எமக்குச் சொந்தமாக ஒரு லொறி வாங்கிவிடவேண்டும்" என அவர் திடசங்கற்பம் செய்து கொண்டார்
மறு நாள் மாலையில் வழக்கமான நேரத்திற்கு லொறி வந்தது. முதல் நாள் லொறி பழுதடைந்தமையால் லொறியைக் கொண்டுவர முடியவில்லையெனக் கூறிய அந் தக் கொழுந்து வியாபாரி, முதல் நாள் பண்டா முதலாளி சேகரித்து வைத்திருந்த கொழுந்தை வாங்குவதற்கு முற் ருக மறுத்துவிட்டான்
மறு வாரத்தில் பண்டா முதலாளிக்குச் சொந்தமான லொறியொன்று அந்த மலைப் பாதையில், அங்குமிங்குமாக ஒடி கொழுந்தை விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தது. கொழுந்துத் தரகராக இருந்த பண்டா முதலாளி இப் போது ஒரு லொறிச் சொந்தக்காரராகிவிட்டார்.

குருதிமலை M 231
அத்தியாயம் முப்பத்தைந்து
அன்று முதியான் சேயைச் சந்திப்பதற்காக அவரது குடிசைக்கு சுமணபாலாவும் பியசேனவும் சென்றிருந்த னர்.
ஏதோ பழைய புத்தகம் ஒன்றை வாசித்துக்கொண்டி ருந்த முதியான்சே அவர்கள் வருவதைக் கண்டதும் புத்த கத்தை மூடி வைத்துவிட்டு தான் அணிந்திருந்த மூக்குக் கண்ணுடியைக் கழற்றினர்.
**வாருங்கள், வாருங்கள். என்ன இருவருமாகச் சேர்ந்து வருகின்றீர்கள். ஏதாவது விசேஷம் உண்டா?"
'விசேஷமாக ஒன்றும் இல்லை. சும்மா உங்களைப் பார்த்துக் கதைத்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்" என்ருன் பியசேன.
இருவரும் அங்கிருந்த வாங்கில் அமர்ந்துகொண்ட 6ör TT,
*" தோட்டத் தொழிலாளர்களோடு கிராமத்து மக் கள் சண்டைக்குப் போய்விட்டார்களாமே ; இதைப்பற்றி தோட்டத்து மக்கள் என்ன அபிப்பிராயப்படுகின்றர்கள்? நீங்கள் தினமும் தோட்டத்துக்கு வேலைக்குப் போகின்றீர் கள் தானே, அதனல் தான் கேக்கிறேன்" என்ருர் முதி யான்சே,
"ஆமாம். கொழுந்து மலையில் சண்டை ஏற்பட்டது உண்மை தான். ஆனலும் தொழிலாளர்களைப் பொறுத்த வரை கிராமத்து மக்களுடன் போராடும் எண்ணம் அவர்

Page 121
23组 குருதிமலை
களுக்குச் சிறிது கூடக் கிடையாது. அவர்கள் எம்முடன் ஒற்றுமையாக வாழ்வதைத் தான் விரும்புகின்றர்கள்" என்ருர் சுமணபால.
"அது எனக்கு நன்முகத் தெரியும். நான் முப்பது வருட காலமாக தோட்டத்தில் வேலைசெய்திருக்கின்றேன்; அவர்களோடு நன்கு பழகியும் இருக்கின்றேன். எப்போ துமே அவர்கள் எம்முடன் ஒற்றுமையாகவே வாழ விரும்பு பவர்கள் தான்" என்ருர் முதியான்சே,
"கிராமசேவகரும் பண்டா முதலாளியுந்தான் இங் குள்ள மக்களைத் தோட்டத்தொழிலாளர்களோடு தூண்டி விட்டுப் போராட வைக்கின்றனர்' என்ருன் சுமணபாலா.
"இவர்கள் இப்படிப் பகைமையை ஏற்படுத்துவதால் என்ன நன்மையைத் தான் பெறப்போகின்ருர்களோ தெரியவில்லை" எனக் கவலையுடன் கூறினன் பியசேன.
"என்ன அப்படிச் சொல்கின் முய்; தோட்டத்து மக் களை வெளியேற்றிவிட்டுத்தான் கிராமத்து மக்களுக்குக் காணி கொடுக்க வேண்டுமென்று சில அரசியல்வாதிகள் கருதுகின்றர்கள். அவர்களது கருத்தை முன்னின்று செயற்படுத்திவிட்டால், இவர்களும் அரசியல் செல்வாக் கைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லவா?" என்ருர் முதி யான்சே,
'அதுமட்டுமல்ல, தோட்டம் கிராமத்து மக்களின் கைக்கு மாறிவிட்டால், பின்னர் அங்கு கிடைக்கும் கொழுந்து முழுவதையுமே பண்டா முதலாளி வாங்கி வியாபாரம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுமல்லவா’ என் முன் சுமண்பால.
அவன் கூறுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண் டிருந்த முதியான்சே, "அவர்கள் நினைப்பது போல் தோட் டத்தைக் கிராமத்து மக்களிடையே பிரித்துக் கொடுத்து

குருதிமலை 233
விட்டால், கொஞ்சக் காலத்திலேயே அந்தப் பகுதி முழு வதும் காடாக மாறிப் போய்விடும்" என்றர்.
"ஆமாம் கங்காணி. நீங்கள் சொல்வது சரிதான். தோட்டம் ஒரு ஸ்தாபனத்தின் கீழ் இயங்கும் போது அதனை நிர்வகிப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்ற வசதி யிருக்கும். ஆனல் தனி மனிதர்களின் கையில் துண்டு துண்டாகப் பகிர்ந்து கொடுத்துவிட்டால் எல்லோருமே சீரான முறையில் அதனைப் பராமரிப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது" என்ருன் சுமணபால,
" தேயிலைச் செடியில் கொழுந்து இருக்கும் வரை அதனை விற்றுப் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள்; ஆனல் செடியைப் பராமரிக்கமாட்டார்கள். கொஞ்சக் காலத்தில் தோட்டமே காடாகிப் போய்விடும்" என் முன் பியசேன.
"கிராமத்து மக்களுக்கு தோட்டத்தில் இப்போதிருக் கும் தொழில் வாய்ப்புக்கூட பின்னர் கிடைக்காது போய் விடும்" என்ருன் சுமணபால.
"எல்லாருமே சுறுக்காகப் பணத்தைச் சம்பாதிக்கத் தான் யோசிக்கின்றர்கள். ஆனல், காலப்போக்கில் ஏற் படப்போகும் பாதிப்பைப்பற்றி எவருமே சிந்திக்கவில்&ல. இதல்ை ஒரு காலகட்டத்தில் எமது நாடே பாதிக்கப்பட லாம்’ என்ருர் முதியான்சே கவலையுடன்.
"நாங்கள் எதைச் சொன்னலும் கிராமத்து மக்கள் புரிந்துகொள்கின்றர்களில்லை. பண்டா முதலாளியின் பேச்சைத் தான் கேட்கின்றர்கள்' என்ற ன் சுமணபால. 'அதுமட்டுமல்ல, அவர்களுக்கு எதிராக நாம் ஏதா வது நியாயத்தைக் கூறிவிட்டால் சண்டைக்கு வரப் பார்க் கிருர்கள்' என்றன் பியசேன.
'பண்டா முதலாளியிடமிருந்து தானே அவர்களுக்கு பணம் கிடைக்கின்றது. பின் ஏன் அவர்கள் எமது பேச்

Page 122
234 குருதிமலை
சைக் கேட்கப்போகின்ருர்கள். அதற்காக நாம் மனம் தளர்ந்துவிடக் கூடாது; சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல் லாம் மக்களுக்கு நியாயத்தை எடுத்துக் கூறத்தான் வேண் டும்" என்ருர் முதியான்சே,
"நீங்கள் சொல்வது சரிதான் கங்காணி. ஆஞலும் அன்று கூட்டத்தில் என்ன நடந்ததென்று எண்ணிப் பாருங்கள். பியசேன நியாயத்தை எடுத்துக் கூறியபோது சொந்தக் காரணத்திற்காக அவன் அப்படிக் கூறுகிரு னென எல்லோரும் கேலிசெய்து அவனை அவமதித்தார்கள் தானே' என்ருன் சுமணபால.
'நியாயமற்றவர்கள் அப்படித்தான் தனி மனிதனைத் தாக்கிப் பேச முனைவார்கள். அதற்காக நாம் கவலைப் படத் தேவையில்லை" எனக் கூறிய முதியான்சே, சிரித்து விட்டு 'அதுசரி பியசேன. நீ அந்த மாயாண்டியின் மகளைக் கூட்டி வரத்தான் போகின் ருயா?" எனப் பிய சேஞவைப் பார்த்துக் கேட்டார்,
முதியான்சே இப்படி திடீரெனக் கேட்டதும் பிய சேஞ சிறிது வெட்கம் அடைந்தான்.
*இதில் வெட்கப்பட என்ன இருக்கின்றது. நான் கூட எனது இளமைக் காலத்தில் ஒருதோட்டத்துப் பெண்ணைக் காதலித்தேன். ஆனல், அவளை எனக்குத் தெரியாமல் அவ ளது தாய்தந்தையர் வேருெருவனுக்கு கலியாணம் செய்து வைத்துவிட்டார்கள். எனக்குக் காதலில் தோல்வி தான் ஏற்பட்டது' எனக் கூறிவிட்டுப் பலமாகச் சிரித்தார் முதியான்சே,
*கங்காணி, உங்களுக்குக் காதல் தோல்வியாக இருந் திருக்கலாம். ஆனல் பியசேனவைப் பொறுத்தமட்டில் அவன் ஒருபோதும் தோல்வியடையமாட்டான்" எனக் கூறிச் சிரித்தான் சுமணபால,
"கிராமத்து மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் பகைமை ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில்,

குருதிம ை -- . . 838
நீ அந்தப் பெண்ணைக் கூட்டி வருவதால் ஏதும் ஆபத்து ஏற்படாதா?’ என யோசனையுடன் கேட்டார் முதி யான்சே,
‘என்னதான் ஆபத்து ஏற்படப்போகின்றது? இது பியசேனவின் சொந்த விடயம். இதில் யாரும் தலையிட முடியாது. இந்த விஷயத்தில் நான் எனது பூரண ஒத்து ழைப்பை அவனுக்குக் கொடுப்பேன்" என்ருன் சுமண பால உறுதியான குரலில்.
முதியான்சே பதில் எதுவும் கூருது சிரித்தார்,
*சரி கங்காணி. நேரமாகிறது, நாங்கள் போய்
வருகின்ருேம்" எனக் கூறி பியசேன எழுந்தான். சுமண பாலாவும் அவனுடன் புறப்பட்டான்.

Page 123
易36 குருதிமலை
அத்தியாயம் முப்பத்தாறு
வியல் லயத்தில் வெகு காலமாக வாழ்ந்து வந்த கங் காணி ஒருவர் இறந்துவிட்டார். அதனல் தோட்டத்தில் இரண்டு மணிக்கே வேலை விட்டிருந்தனர்.
வேலை முடிந்து லயத்துக்குத் திரும்பிய தொழிலாளர் கள் அன்று மாலை நடக்கவிருக்கும் "கேதத்தில் பங்குபற்று வதற்காக வயல் லயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந் தனர். வீரய்யா முன்நின்று மரணச் சடங்குகளுக்கு வேண் டிய ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தான்.
அந்த வேளையில் மடுவத்திலிருந்து திடீரென பிரட்டு மணியின் ஒசை " டாண், டாண்’ என அதிர்ந்தது. திடுக் குற்ற வீரய்யா வெளியே ஓடிவந்து கரத்தை ரோட்டின் பக்கம் பார்த்தான்.
வழக்கமாக வரும் நில அளவைத் திணைக்களத்தினரின் வாகனம் தான் வருகின்றதென்பதை எல்லோரும் புரிந்து கொண்டனர். ஆனல், புதிதாக இன்று வேருெரு வாகன மும் வந்துகொண்டிருந்தது. அது யாருடைய வாகனமாக இருக்குமென எல்லோரது மனதிலும் கேள்வி எழுந்தது.
எல்லோரும் மடுவத்தை நோக்கி விரைந்தனர். அந்த வாகனங்கள் இரண்டும் மடுவத்தை வந்தடையும் முன் னரே குறுக்குப் பாதை வழியாகத் தொழிலாளர்கள் மடு வத்தை வந்தடைந்தனர். வீரய்யா "தொழிலாளர்களின் முன்னல் நின்றுகொண்டிருந்தான். மடுவத்தைப் பிந்தி

குருதிமலை ዷ8 ፖኋ
வந்தடைந்த ராமு பெரும் சிரமத்துடன் அந்தக் கூட்டத் துக்குள் நுழைந்து முன் பகுதிக்கு வந்தான்.
'அடே பொலிசுடா. முன்னுல் வந்துகொண்டிருந்த வானின் உள்ளே கவ னித்த செபமாலை பலமாகக் கூறினன்.
அங்கு நின்றிருந்த சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மனதிலே திகைப்பு இருந்தபோதி லும் வீரய்யாவும் ராமுவும் செபமாலையும் முன்னல் நிற் பது அவர்களுக்குத் தென்பை அளித்தது.
சனக் கூட்டம் ரோட்டை மறித்துக்கொண்டு இருந்த தால் ஜீப் வண்டிகள் இரண்டும் மடுவத்தின் அருகே தெரு வோரமாக நிறுத்தப்பட்டன . பொலிஸ் ஜீப்பில் வந்த வர்கள் வாகனத்தை விட்டு வெளியே குதித்தார்கள்.
இரண்டு பொலிஸ்காரர்கள் குண்டாந்தடியுடன் நடந்து வந்து சனக் கூட்டத்தின் முன்னல் நின்றனர்.
'ஏய். ஏன் நீயெல்லாங் இப்புடி கூட்டமா நிக்கி றது. ரோட்ட மறிக்காம எல்லாம் லயத்துக்கு ஓடிப் போ...' என அவர்களில் ஒருவன் குண்டாந்த டியை ஓங் கியபடி பலமாகக் கூறினன்.
"நாங்க ஒருத்தரும் இந்த எடத்த வுட்டுப் போக மாட்டோம்" என நிதா ன மாக ப் பதிலளித்தான் aýpruiuuunt.
"என்னடா பேசுறது? இப்ப நாங்கபோறதுக்கு இடங் கொடுக்காட்டி எல்லோரையும் அடிச்சு "ரிமாண்டில' கொண்டுபோய் போடுறது" என்ருன் பக்கத்தில் நின்ற பொலிஸ்காரன்.
*நீங்க எதை வேணுமுணுலும் செய்யுங்க, நாங்க இந்த எடத்த வுட்டு அகலமாட்டோம்' எனக் கூறியபடி முன்னே வந்தான் ராமு.

Page 124
$38 குருதிமல்
"ஆமா, நாங்க இந்த எடத்த வுட்டு ஒருத்தரும் போகமாட்டோம்." எனப் பல குரல்கள் ஒரே சமயத் தில் ஒலித்தன.
பொலிஸ்காரருக்கு கோபம் பொங்கியது. திடீரெனக் கையில் இருந்த குண்டாந்த டியால் அவர் ராமுவைத் தாக் கியபடி, "போடா சுறுக்கா" எனக் கத்தினர்.
குண்டாந்த டி ராமுவின் தோள் பட்டையில் தாக்கி யது. ராமு ஆத்திரத்தால் தன்னை மறந்தான். ஆவேசம் வந்தவனுக அந்தப் பொலிஸ்காரன் மீது பாய்ந்து அவர் வைத்திருந்த குண்டாந்த டியை லபக்கெனப் பிடுங்கிக் கொண்டு பொலிஸ்காரரை முறைத்துப் பார்த்தான்.
"ராமு. நெதானத்த இழக்காத டா" என வீரய்யா எச்சரித்தான்.
ராமுவுக்கு அப்போதிருந்த ஆத்திரத்தின் வேகத்தில் அங்கிருந்த பொலிஸ்காரர்களை அடித்து நொறுக்கிவிடு வான் போல் தோன்றியது. வீரய்யா கூறியதுந்தான் ராமு ஒருவாறு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
அப்போது பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பொலிஸ் காரர் கோபத்துடன், "ஏய் நீ எல்லாம் இந்த எடத்த வுட்டு போகவேணும். இல்லாட்டி நான் இந்த ஜீப்பை ஆளுகளுக்கு மேல ஏத்திக்கிட்டு போறது. ஒங்க உயிர் வேணுமுணு எல்லாங் ஒடிப்போ" எனக் கூறிவிட்டு கோபத் துடன் விரைவாகச் சென்று ஜீப்பில் ஏறி "றைவர்' ஆச னத்தில் அமர்ந்துகொண்டு ஜீப்பை "ஸ்ராட் செய்தார்.
சனங்களிடையே அப்போது சலசலப்பு ஏற்பட்டது. பொலிஸ்காரர் கோபத்தில் முரட்டுத்தனமாக ஜீப்பை ஒட்டி வந்து ஆட்களுக்கு மேல் ஏற்றிவிடுவாரோ என அவர் கள் பயந்தார்கள்,

குருதிமலை 839,
பொலிஸ்காரர் ஜீப்பை "ரிவேர்ஸ்" செய்துகொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு மிக வேகமாகச் சனங்களை நோக்கி ஒட்டி வருவதற்கு ஆயத்தமானர்.
* யாரும் பயப்புடாதீங்க - இந்த எடத்த வுட்டு ஒருத்தரும் அசையவேணும்" என வீரய்யா கட்டளை இட் டான்.
ஜீப் கொலை வெறியுடன் சனக்கூட்டத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது.
* சடார்" என வீரய்யா ரோட்டின் குறுக்கே விழுந்து படுத்துக்கொண்டான்.
ஜீப்பின் சக்கரங்களுக்குள் வீரய்யா அகப்பட்டு சின்னு பின்னம் அடையப்போவதைப் பார்க்கச் சகிக்க முடியாத பலர் கண்களை மூடிக்கொண்டனர்.
சற்றுத் தூரத்தில் நின்றுகொண்டிருந்த அவனது தாய் மீனச்சி, "ஐயோ. வீரய்யா." என் அலறிஞள்.
வேகமாக வந்த ஜீப் பயங்கர உறுமலுடன் "பிரேக்" போட்டு நிறுத்தப்பட்டது. அதன் முன் சக்கரங்கள் வீரய் யாவின் உடலை உரசியபடி இருந்தன. ஒரு மயிரிழை தப்பி யிருந்தால் வீரய்யாவின் உடல் அந்தச் சக்கரங்களுக்குள் நசிந்து போய் இருக்கும்.
எல்லோரும் ஒருகணம் திகைத்து நின்றனர். ** இவன் எதற்குமே அஞ்சமாட்டான் போல் இருக் கிறது" என முணுமுணுத்தபடி ஜீப்பில் இருந்து இறங்கிய பொலிஸ்காரர் வீரய்யாவின் தீரத்தை எண்ணி மனதிற் குள் வியந்துகொண்டார்.
அங்கு இனித் தாமதித்தால் நிலைமை வேறுவிதமாக மாறிவிடுமோ எனப் பொலிஸ்காரர்கள் நினைத்துக்கொண் டனர்.
நில அளவையாளர்கள் அங்கு நடந்த எல்லாவற்றை யும் கவனித்துக்கொண்டிருந்தனர்.

Page 125
B40 குருதிமல்
**ஏய் நீ எல்லாங் இந்த எடத்த வுட்டு போறது இல் லைத்தானே. நான் அடுத்த முறை வந்து எல்லாரையும் சுட்டுப்போடுறது" எனக் கோபமாகக் கூறிய பொலிஸ் காரர் மீண்டும் ஜீப்பில் ஏறி "றைவர்"ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். கீழே நின்றுகொண்டிருந்த பொலிஸ்காரர் களும் ஜீப் வண்டியினுள் ஏறிக்கொண்டனர்.
ஜீப் இப்போது "ரிவேர்சி"ல் செலுத்தப்பட்டது.
அப்போதுதான் வீரய்யா மெதுவாக எழுந்திருந் தான்.
பொலிஸ்காரர் ஜீப்பைத் திருப்பிக்கொண்டு நில் அளவையாளர்களையும் அங்கு தாமதிக்க வேண்டாமெனக் கூறிவிட்டு ஜீப்பை வேகமாகச் செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து நில அளவையாளர்களின் வாகனமும் புறப் பட்டது.
வீரய்யாவின் தீரச்செயல் அங்கிருந்த ஒவ்வொரு தொழிலாளர்களின் உள்ளத்திலும் பெரும் வீர உணர்ச்சி யைத் தூண்டிவிட்டிருந்தது. அவர்கள் எது வந்தாலும் உயிரைக் கொடுத்தாவது எதிர்த்துப் போராட இப்போது தயாராகியிருந்தனர்.

குருதிமலை V 24
அத்தியாயம் முப்பத்தேழு
சிதிகாலை நேரம். பனிமூட்டம் இன்னும் அகல, வில்லை. குளிர்காற்று சில்லென வீசிக்கொண்டிருந்தது. தொழிலாளர்கள் எல்லோரும் வேலைக்குப் புறப்பட்டு மடு வத்தை வந்தடைந்தனர். அப்போது, துரை காரில் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் கண்டக்டரும் கணக் குப்பிள்ளையும் அவருக்கு வந்தனம் தெரிவித்தனர்.
** இன்று தொடக்கம் ஒருவருக்கும் வேலை கொடுக்க வேண்டாம். எனக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக் கின்றது" என கண்டக்டரிடம் ஆங்கிலத்தில் கூறினர் - "עיgI60.
பின்பு தொழிலாளர் பக்கம் திரும்பி, "தோட்டத்தில வேலை நிப்பாட்டி இருக்கு இனிமே இங்க ஒருத்தருக்கும் வேலை இல்லே. நீங்க இங்க இருந்து பிரயோசனங்இல்லே, வேற தோட்டத்துக்கு போறதுதான் நல்லது" எனக் கூறி விட்டு அங்கு நின்ற எல்லோரையும் ஒருதடவை பார்த் தார்.
** என்னுங்க தொர, திடீருனு வேல இல்லேனு சொல் லுறிங்க. வேல நிப்பாட்டிட்டா. நாங்க எப்பு டிங்க தொர சாப்புடுறது?" வீரய்யா திகிலுடன் கேட்டான்.
"நான் ஒன்னும் திடீருனு வந்து சொல்லல்ல. ஒரு மாசத்துக்கு முந்தியே நான் எல்லாத்துக்கும் சொல்லி யாச்சு" என்ருர் துரை அலட்சியமாக.
"நாங்க எல்லாம் இந்த தோட்டத்தவுட்டு போறதில் லேனு தொரகிட்ட சொல்லி இருக்கோம் தானுங்களே.

Page 126
242 குருதிமலை
அதுக்கு ஒரு முடிவும் தெரியாம ஏங்க தொர வேல நிப் பாட்டுறீங்க. ஆளுங்க எல்லாம் ரொம்ப் கஷ்டப்பட்டுக் கிட்டு இருக்காங்க. எப்படியாச்சும் வேலை கொடுங்க" என மன்ருட்டமான குரலில் கூறினன் வீரய்யா.
"அது நமக்கு ஒன்னுங் செய்ய முடியாது. வேலை நிப் பாட்ட சொல்லி மாவட்டக் காரியாலயத்தில இருந்து ஒடர் வந்திருக்கு. என்னல ஒன்னுங் செய்ய முடியாது” எனக் கூறி கையை விரித்தார் துரை.
வீரய்யாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வேலை வழங்காமல் விட்டால் தொழிலாளர்கள் எல்லோ ரும் பட்டினி கிடக்க நேரிடும். தொழிலாளர்களை பட்டினி போட்டே தமது காரியத்தைச் சாதிப்பதற்கு மேலிடத் தில் திட்டம் போட்டுவிட்டார்கள் என்பதை வீரய்யா நன்கு உணர்ந்து கொண்டான்.
"நீங்க தொழிலாளிங்களுக்கு வேலை கொடுக்காம இருக்க முடியாதுங்க. வேலை கொடுக்காம இருக்கிறது சட் டப்படி குத்தமுங்க" என்ருன் வீரய்யா.
‘ஓ, அது சரிதாங்; வேலை குடுக்கிறது இல்லைன்னு யாரும் சொல்லேல்ல.ஒங்களுக்கெல்லாம் வேற தோட் டத்தில வேலை குடுக்கிறதுதானே' என்ருர் துரை.
"நாங்க ஏன் வேற தோட்டத்துக்கு போகனுங்க? இந்தத் தோட்டத்திலேயே எப்போதும் வேலை கொடுத்த மாதிரி எங்களுக்கு வேலை கொடுத்தா என்னங்க? நாங்க என்ன குத்தம் செஞ்சோம்?"
** கொம்பனிக் காலம் மாதிரியில்ல இப்ப.தோட்டங் கள எல்லாம் அரசாங்கம் எடுத்திருக்குத்தானே. அதுனல, அரசாங்கத்தில வேலை செய்யிற ஆளுகளுக்கு வேற எடத் துக்கு மாற்றம் வாறமாதிரி, இப்போ உங்களுக்கும் மாற் றம் வந்திருக்கு" என்ருர் துரை முன்னுல் இருந்த மேசை யில் சாய்ந்த படி.

குருதிமலை 罗43
வீரய்யா ஒருகணம் திகைத்து நின்றன். துரை கூறுவ திலும் சட்டரீதியான நியாயம் இருப்பதுபோல் அவனுக் குத் தோன்றியது.
* நீங்க சொல்லுறது சரியுங்க தொர மாற்றம் வாற பொழுது, அதற்கு ஏற்ற காரணம் காட்டி மாற்றத்தை மறுத்துக் கூறவும் எங்களுக்கு உரிமை இருக்குத்தானுங் களே’ என்ருன் வீரய்யா யோசனையுடன்.
அப்போது பக்கத்தில் நின்ற ராமு, "அதுமட்டுங்களா, அரசாங்கம் எங்களுக்கு மாற்றம் கொடுக்கிறதா இருந்தா, எங்க எல்லோரையுமா ஒரே நேரத்தில மாத்திப் போகச் சொல்லுது. எந்த எடத்திலும் எல்லாருக்கும் ஒரே நேரத் தில மாற்றம் வராதுங்க. இந்த தோட்டத்தில தானுங்க இப்புடி வந்திருக்குங்க. இது வேற ஒண்ணும் இல்லீங்க, தொழிலாளிங்க எல்லாத்தையும் தோட்டத்தைவிட்டு வெரட்டிறதுக்கு,போட்ட திட்டமுங்க.." எனக் கூறினன்.
"அப்புடி எல்லாங் நீங்க நெனைக்க வேணுங்.அரசாங் கம், நம்ம நாட்டில காணி இல்லாம கஷ்டப்படுற ஆளு களுக்கு காணி கொடுத்து ஒதவி செய்யிறதுக்குத்தான் இப்புடி செய்யிறது.உங்களை மட்டும் தோட்டத்தைவிட்டு போகச் சொல்லல, நம்மஞக்கும், கண்டக்கையாவுக்கும் எல்லாத்துக்கும்தான் மாற்றம் வந்திருக்கு. நாங்க எல் லாம் வேற தோட்டத்துக்குப் போறதுதானே." எனக் கூறிவிட்டு துரை தனது காரில் ஏறிப் புறப்பட்டார்.
துரை இப்படிக் கூறியது அங்கு நின்றவர்கள் எல்லோ ருக்கும் திகைப்பைக் கொடுத்தது. துரையும் மற்ற உத்தி
யோகத்தர்களும் தோட்டத்தை விட்டுப் போய்விட்டால் பின்பு தொழிலாளர்கள் மட்டும் தோட்டத்தில் இருந்து வேலை செய்ய முடியாது. இப்போது பிரச்சினை புதிய உரு வத்தில் ஏற்பட்டிருக்கிறதென்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டனர்.

Page 127
244 குருதிமலை
அத்தியாயம் முப்பத்தெட்டு
தோட்டத்தில் வேல் நிறுத்தப்பட்டதிலிருந்து தொழிலாளர்கள் எல்லோரும் பெருந் திகிலுடன் இருந் தனர். மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதிலேயே அவர்களது எண்ணம் முழுவதும் லயித்திருந் தது. வீரய்யா தீவிரமாக யோசனையில் ஆழ்ந்திருந்தான். அன்று மாலை ராமு, செபமாலை உட்பட பல இளைஞர் கள் வீரய்யாவின் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.
“வேலையையும் தோட்டத்தில் நிப்பாட்டிப்புட்டாங்க! கண்டக்கையாவுக்கு வேற மாற்றம் வந்திருக்குனு தொர சொல்லுருரு. இனிமே நாம என்னதான் செய்யனும்?" எனக் கவலையுடன் கேட்டான் செபமாலை.
**கண்டாக்கு மாத்தி போனதான் நல்லதாச்சே அவன்தானே எல்லா வெசயத்தையும் அவுங்க ஆளுகளுக்கு சொல்லுறவன். அவன் போனதான் நம்மளோட திட் டத்தை ஒழுங்கா செய்யலாம்” என்ருன் ராமு.
"அவன் போன ஒரு சனியன் தொலைஞ்ச மாதிரியிருக் கும் அப்புறம். கோப்புறட்டி மனேஜர் அவுங்க கூட்டாளி மார் எல்லோருமே போயிடுவாங்க" என்ருள், அடுப்பின் முன்னல் இருந்த மீனச்சி.
இவர்களது சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டு காம் பராவின் உள்ளே இருந்த மாயாண்டி, எழுந்து இஸ்தோப் புக்கு வந்தார்.

குருதிமலை 245
** இப்ப மேற்கொண்டு என்னதான் தம்பி செய்யலா முனு நெனைச்சிகிட்டு இருக்கீங்க?" அங்கிருந்த வாங்கொன் றில் அமர்ந்தவாறு கேட்டார் மாயாண்டி.
“என்னதாங்க மாமேன் செய்யுறது? அதுதான் தோட் டத்தவுட்டே போகச் சொல்லுருங்களே. எண்னைக்கு தோட்டத்த அரசாங்கம் எடுத்திச்சோ , அன்னிக்கே நம்ப தோட்டத்துக்கு சனியன் புடிச்சமாதிரி."
"இந்தா பாருங்க தம்பி. இப்போ எதைப்பத்தியும் பேசி கொறைப்பட்டுக்கிட்டு இருக்கிறதில பொர யோசன மில்லை. நடக்க வேண்டியதை புத்திசாலித்தனமா செய்யி றதுதான் நல்லது. இந்த நிலையில நாம ரெம்பக் கவனமாத் தான் நடக்கணும்" என்ருர் மாயாண்டி.
"இங்க பாருங்க, கொஞ்ச ' நேரம் பேசாம இருங்க. அவுங்கதான் கதைச்சி ஒரு முடிவு காங்கட்டுமே. ஊடையில நீங்க வேற அது இதுனு சொல்லிக்கிட்டு." என இடை மறித்தாள் அங்கே வந்த மீனச்சி.
"நான் பேசுறதுதான் ஒருத்தருக்கும் புடிக்காதே. ஆரம்பத்துல இருந்தெ சொல்லிகிட்டு இருக்கேனே. ஒரு காலமும் இல்லாம தோட்டத்த அரசாங்கத்துக்கு எடுத்து, என்னென்னமோ செஞ்சி, இப்ப எல்லாத்தையும் தோட் டத்த வுட்டே வெரட்டுருங்க. இதுல ஏதோ ஆபத்து வரப் போவுதுனு அப்பவே சொன்னேனே யாராச்சும் கேட்டீங் களா?’ என்ருர் மாயாண்டி, மீனச்சியைப் பார்த்து.
“இப்ப கண்டாக்கும், நாட்டில உள்ள ஆளுங்களும் ஒன்ன சேந்துகிட்டு திட்டம் போட்டுத்தான் வேலை செய்யு ரூனுங்க.எப்படியாச்சும் நம்மளை தோட்டத்த வுட்டு வெரட் டிப்புட்டு,காணி வாங்கலாம் எங்கற நெனைப்போட அவுங்க இருக்காங்க. அதுக்கு தகுந்தாப்போல அரசாங்கம் எல்லா வேலையும் செய்யுது" என்ருன் செபமாலை யோசித்த வண்

Page 128
246 குருதிமலை
“கண்டக்கையா தோட்டத்தவுட்டு போயிட்டாருன்னு அப்புறம் வேர கண்டக்கையா புதுசா வேலைக்கு வரப்போ ருரா? ஒருத்தர் போனவொடனை அப்புறம் தொர, மத்த "ஸ்டாப்பு"மாருங்க எல்லாம் போயிடுவாங்க. கடைசியா தோட்டத்தில நாம மட்டுந்தான் உக்காந்துகிட்டு இருக் கோனும்" என்ருர் மாயாண்டி. ''' W
"யாரு போனதான் என்னுங்க மாமேன், நாம தோட் டத்தவுட்டு போயிடவா போருேம். கடைசிவ்ரைக்கும் போராடித்தான் தீருவோம்" என்ருன் ராமு.
"என்ன ராமு அப்பிடி சொல்லுற, தோட்டத்திலை தான் வேலையை நிப்பாட்டிப்புட்டாங்க. நாம வேலை செய் யாட்டி, எங்கே இருந்து சாப்பாடு வரும்? நாலு நாளைக்கி பட்டினியாக் கெடந்தா நாமளாகவே தோட்டத்தவுட்டு போக வேண்டியதுதான்."
தந்தை கூறுவதில் உண்மை இருக்கிறதென்பதை வீரய்யா நன்கு உணர்ந்து கொண்டான்.
"நீங்க சொல்லுறதும் எனக்குச் சரியாதான் படுது. அப்புடின, இந்த நெலையில நாங்க என்னதான் செய்யு றது?" வீரய்யா தந்தையைப் பார்த்துக் கேட்டான்.
"நம்மஞடைய போராட்டத்தில வெற்றி கிடைக் கணுமென்னு இந்த தோட்டத்தவுட்டு ஒருத்தரையும் வெளியே போகவிடக்கூடாது-இந்தக் கண்டாக்கைக்கூட கண்டிப்பா போகவுடாம நிப்பாட்டணும்" என்ருர் மாயாண்டி உறுதியான குரலில்.
“என்னுங்க மாமேன், இவ்வளவு அநியாயம் செஞ்ச வனையா புடிச்சி வைச்சிக்கிட சொல்லுறீங்க? இந்தக் கண் டாக்கு மாத்திப் போனதான் நமக்கு நல்லது" என்ருன் ராமு.
“எவ்வளவு கெட்டவணு இருந்தாலும் நம்மஞடைய வெசயம் சரிவரனு மென்ன கட்டாயம் யாரையும் வெளி

குருதிமலை 247.
யிலை போகவிடக்கூடாது. அப்படிச் செஞ்சாதான் அவங் களுக்காகவாவது அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக் கும்" என்ருர் மாயாண்டி,
மாயாண்டி கூறியது இப்போதுதான் அங்கிருந்த இளை ஞர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது.
**ஆமா ராமு. அப்பா சொல்லுறதும் சரிதான். நாம இந்தக் கண்டாக்கை போகவுடவே கூடாது" என் முன் வீரய்யா.
‘நான் ஒன்னுமட்டும் சொல்லுரேன் வீரய்யா, இந்தப் போராட்டத்தில நமக்குத்தான் வெற்றி கெடைக்கும்.அப் புறம் இந்தக் கண்டாக்கை நான் ஒதச்சி வெரட்டாம விட மாட்டேன்" என்ருன் ராமு ஆவேசத்துடன்.
**சரி நேரமாகுது. நம்ப தோட்டத்தில உள்ள பொடி யங்களுக்கு இதை இப்பவே சொல்லிப்புடுவோம்’ எனக் கூறிக் கொண்டே எழுந்திருந்தான் செபமாலை. அவனைத் தொடர்ந்து ராமுவும் இளைஞர்களும் எழுந்திருந்தனர்.
இளைஞர்கள் அவ்விடத்தைவிட்டு அகன்றதும்தான் மீனுச்சிக்குச் செந்தாமரையின் நினைவு வந்தது. பீலிக்குச் சென்றவளை வெகுநேரமாகியும் காணவில்லையே என்ற எண்ணத்துடன் அடுப்படிப்பக்கம் சென்ருள். தண்ணிர்க் குடம் அடுப்பின் அருகேயுள்ள திட்டில் இருப்பதைப் பார்த்ததும் அவளது மனதில் சந்தேகம் துளிர்த்தெழுந் தது; பீலிக்குச் சென்று பார்க்கும் எண்ணத்துடன் வெளியே வந்தாள்.
அப்போது குப்பன் மூச்சு இரைக்க இரைக்க அவர் களது இஸ்தோப்பினுள் நுழைந்தான்.
** இங்க பாருங்க அக்கா, நம்ம செந்தாமரைய அந்த பியசேனப் பய நாட்டுப் பக்கமா கூட்டிக்கிட்டுப் போருன்; நான் என் கண்ணுல பாத்தேன். அதுதான் நேரா ஒங்ககிட்ட சொல்லுறதுக்கு ஓடியந்தேன்."

Page 129
248 . குருதிமலை
--குப்பன் கூறியதைக் கேட்டதும், "ஐயோ.வீரய்யா அவள் அந்தப் பயலோட ஒடிப்போயிட்டாளாமே"எனக் கதறியழுதாள் மீனச்சி.
மாயாண்டி அதிர்ச்சியுடன் எழுந்தார்.
ராசாத் தோட்டத்தில் இருக்கும் அவரது தங்கையின் மகனுக்கும் செந்தாமரைக்கும் விரைவில் திருமணம் செய்து வைப்பதற்கு வேண்டிய ஒழுங்குகளை, சென்றகிழமைதான் அவர் இரகசியமாகச் செய்து முடித்திருந்தார். அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிடுமென அவர் எதிர்பார்க் கவே இல்லை.
அவரது தலை சுற்றியது; அந்த லயமே இடிந்து நொருங்கித் தலையில் விழுந்ததுபோல் இருந்தது. மறுகணம் அவர் அப்படியே நிலத்தில் சாய்ந்தார்.
வீரய்யா செய்வதறியாது திகைத்துப்போய் மரமாக நின்றன்.
S.
so
肇 ଖୁଁ

குருதிமலை 249
அத்தியாயம் முப்பத்தொன்பது
கிராமத்து மக்களில் சிலர் தாம் கொண்டுவந்த கொழுந்துகளுடன் பண்டா முதலாளியின் கடையின் முன்னுல் அவரது வரவுக்காகக் காத்திருந்தனர்.
வழக்கமாக நான்கு மணிக்கெல்லாம் கொழுந்து நிறுத்து விடும் முதலாளி, அன்று மந்திரியைச் சந்திக்கச் சென்றிருந்ததால் சற்றுத் தாமதமாகியே வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வந்ததும்  ைக யி ல் கொண்டுவந்த ‘பைலை" கடையின் முன் பக்கத்திலுள்ள மேசையின் மேல் வைத்து விட்டு அவசர அவசரமாகக் கொழுந்து நிறுக்கத் தொடங்கினர்.
வழக்கத்துக்கு மாருக அன்று அநேகர் குறைவா கவே கொழுந்து கொண்டு வந்திருந்தனர். அதனைக் கவ னித்த பண்டா முதலாளி, "என்ன. இன்று மிகவும் கொழுந்து குறைவாக இருக்கிறதே. எ ன் ன கார ணம்?" எனப் பக்கத்தில் நின்ற பொடிசிங்கோவிடம் விசாரித்தார்.
** கிராமத்துப்பக்கமாக இருக்கும் மலைகளில்கொழுந்து முடிந்துவிட்டது. தோட்டத்தின் நடுப் பகுதிக்குப் போய் கொழுந்தெடுப்பதற்கு இப்போது ஒருசிலர் தயங்குகிருர் கள். அதனுலேதான் இன்று கொழுந்து மிகவும் குறைந்து விட்டது" என்ருன் பொடிசிங்கோ.
"ஏன் நீங்கள் தயங்கவேண்டும்? இப்போதுதான் தோட்டத்தில் வேலை நிற்பாட்டிவிட்டார்களே. அதனல்

Page 130
250 குருதிமலை
தொழிலாளர்கள் மலைக்குச் செல்லமாட்டார்கள். எல் லோருமே பயப்படாமல் சென்று கொழுந்தெடுக்கவேண்டி யதுதானே?" என்ருர் பண்டா முதலாளி.
* ‘அப்படியில்லை முதலாளி. இப்போது தொழிலாளர் கள் மிகவும் தீவிரமாக இயங்குகிருர்கள். முன்பு அவர் களுக்குத் தோட்டத்தில் வேலையிருந்தபோது ஒரளவுக்கு நிதானமாக எதையுமே செய்தார்கள். ஆனல் வேலை நிறுத்தப்பட்டபின் அவர்களிடையே போராட்ட உணர்வு அதிகமாகி இருக்கிறது. அதனுலேதான் லயன்களுக்கு அருகே இருக்கும் தேயிலை மலைகளுக்குச் சென்று கொழுந் தெடுப்பதற்கு நம்மில் சிலர் பயப்படுகிருர்கள்" என்முன் பொடிசிங்கோவின் பக்கத்தில் நின்றவன்.
"அதுமட்டுமல்ல முதலாளி; அந்தத் தொழிலாளர் களது போராட்டத்துக்குச் சார்பாக நமது கிராமத்தில் உள்ள ஒரு சிலரும் இப்போது கிளம்பியிருக்கிருர்கள்" என்ருன் அங்கிருந்த வேருெருவன்.
**அதற்கெல்லாம் காரணம் அந்த முதியான்சேயும், சுமணபாலாவுந்தான்."
"அவர்களது ஆதரவிலேதான் உங்கள் பியசேன கூட அந்த மாயாண்டியின் மகளைக் கூட்டிவந்து இங்கே கிராமத்தில் வைத்திருக்கிருன்" என்ருன் பொடிசிங்கோ வின் பக்கத்திலே நின்ற இளைஞன்.
'உங்களது சொந்தக் காணியிலேயே குடியிருந்து கொண்டு, உங்களுக்கு மாருன காரியங்களை அவன் செய் வதை நீங்கள் அனுமதிப்பதுதான் எங்களுக்கு வியப்பாக இருக்கிறது" என் முன் பண்டா முதலாளியின் பக்கத்தில் நின்றவன்.
"அதைமட்டும் சொல்லாதீர்கள். அந்தப் பெண்ணை யும் அவனையும் பிரித்து வைப்பதற்கு நான் எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். ஆனலும் இப்படி அவன் திடீ

குருதிமலை 25
ரென அந்தப் பெண்ணையே நாட்டுக்கு அழைத்து வருவா னென நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை" என்ருர் பண்டா முதலாளி யோசனையுடன்.
** முதலாளி நீங்கள் மட்டும் எனக்கு அனுமதி கொடுங் கள். நான் இன்று இரவே அவனது குடிசைக்கு நெருப்பு வைத்துவிடுகிறேன்" என்ருன் பொடிசிங்கோ. அவனது கண்கள் சிவந்திருந்தன.
"இல்லை. இல்லை அப்படியொன்றும் அவசரப்பட் டுச் செய்துவிடாதே. நான் காரணத்தோடுதான் அவர் களைச் சும்மா விட்டு வைத்திருக்கிறேன். அந்தப் பெண் நமது மத்தியில் இருக்கும்போது அவளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமென்ற எண்ணத்தில் இனி அந்த வீரய்யா விஞல் தீவிரமாகப் போராட முடியாதல்லவா? நமது காரி யம் நிறைவேறிய பின்பு அவளை நானே அடித்து விரட்டி விடுவேன்" என்ருர் பண்டா முதலாளி.
**ஆமாம் முதலாளி, நீங்கள் கூறுவதிலும் விஷயம் இருக்கிறதுதான். அவளை இங்கிருந்து இப்போதே விரட்டி விட்டால் அவள் மீண்டும் தோட்டத்திற்கே போய்விடு வாள். பின்பு அந்த வீரய்யாவுக்கு எந்தவித கவலையும் இருக்காது" என்ருன் வேருெருவன்.
**அந்த வீரய்யா இனிமேல் அதிகமாகத் துள்ளிஞல், இங்கே அவனது தங்கையைக் கொலை செய்யப்போவதாக அவனை நான் பயமுறுத்தப்போகிறேன்" என்ருன் பொடி 6ìải G3%rr.
**அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிடாதே. நமக்குக் காணி கிடைப்பதுதான் முக்கியம். நமது கிராமத் திலேயே ஒரு சிலர் எமக்கு மாருக இயங்குகிறர்கள். அத் தோடு இப்போது தோட்டத் தொழிலாளர்கள் பொலிஸ் காரரையே எதிர்க்குமளவுக்குத் தீவிரமாக இருக்கிருர் கள். அதனுல் நாம் மிகவும் தந்திரமாகவே நடக்கவேண் டும்" என்ருர் பண்டா முதலாளி.

Page 131
252 குருதிமலை
"எனக்கொரு யோசனை தோன்றுகிறது முதலாளி. பொலிஸ்காரர்கள் வரும்போது தோட்டத் தொழிலாளர் கள் அடிக்கும் அந்தப் பிரட்டு மணியைக் கழற்றிவிட்டால் என்ன? பின்னர் அவர்களால் ஜீப் வரும்போது "சிக்னல்" கொடுக்க முடியாதல்லவா?" என்ருன் பொடிசிங்கோவின் பக்கத்தில் நின்ற ஓர் இளைஞன்.
**ஆமாம்! அது நல்ல யோசனைதான். இன்று இரவே நான் அந்த மணியைக் கழற்றி வந்து விடுகிறேன்" என் முன் பொடிசிங்கோ.
"அப்படிச் செய்வதால் நமது திட்டம் வீணுகிவிடும். அந்த மணியை நாம் கழற்றிவிட்டால், அவர்கள் அதற் குப் பதிலாக வேருெரு மணியைக் கட்டிவிடுவார்கள். அத்தோடு அந்த மணியைக் கழற்றுவதால் அவர்களுக்கு எம்மீது சந்தேகமும் ஏற்படலாமல்லவா?" என யோசனை யுடன் கூறினர் பண்டா முதலாளி.
"நீங்கள் இப்படி ஒவ்வொன்றிற்கும் ஏதாவது பதி லைச் சொல்லிக் கொண்டிருந்தால் நாம் எப்படித்தான் அந்தத் தோட்டத் தொழிலாளர்களை மட்டந் தட்டுவது?" எனப் படபடத்தான் பொடிசிங்கோ.
* 'அதற்காகத்தான் அந்த மணியைக் கழற்றவேண்டா மெனச் சொல்கிறேன். அதிலேதான் எனது திட்டமே அடங்கியிருக்கிறது. அந்த மணியை வைத்தே அவர்களைத் தோட்டத்தைவிட்டு விரட்டுகிறேன் பாருங்கள். முதலில் அவர்கள் தோட்டத்தைவிட்டு ஓடவேண்டும். பின்புதான் அந்தப் பியசேன கூட்டிவந்து வைத்திருக்கும் குட்டியை ஓட ஓட விரட்டவேண்டும்" என ஆவேசமாகக் கூறினர் பண்டா முதலாளி.
இப்போது அவரது கண்கள் சிவந்திருந்தன.

குருதிமலை v, 25.3
அத்தியாயம் நாற்பது
அந்தக் குடிசையின் முன் பகுதியில் தொங்க விடப் பட்டிருந்த அரிக்கன் லாந்தர் ஒளி உமிழ்ந்துகொண்டிருந் தது. அதன் ஒளி கண்களைக் குத்தாதவாறு, மறுபுறம் திரும் பிச் சுவர்ப் பக்கம் பார்த்தவாறு படுத்திருந்தாள் பிய சேனவின் தாய் மெரினேன.
செந்தாமரை அடுப்படியிலிருந்து இரவுச் சாப்பாட் டைத் தயாரித்துக்கொண்டிருந்தாள். பியசேனவின் தாய் அவளை மிகவும் அன்புடன் நடத்தினுள். பியசேனவும் எந் நேரமும் அவளைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான். அந்தச் சிறிய குடிசையில் அவளுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. ஆனலும் அவள் மிகவும் வாடிப்போயிருந் தாள்.
வீட்டு நினைவு அடிக்கடி வந்து அவளை அலைக்கழித்த வண்ணம் இருந்தது. தன்னைக் காணுது தாய் துடித்துப் போவாளே என்ற நினைவு அவளை வருத்திக்கொண்டிருந் தது. தோட்டத்தில் மதிப்போடு இதுவரை காலமும் வாழ்ந்துவந்த தந்தை, இப்போது அவமானத்தால் குன் றிப்போய் இருப்பாரே என நினைத்தபோது அவளது நெஞ் சுக்குள் ஏதோ அடைப்பதைப்போல் இருந்தது. தோட் டத்துத் தொழிலாளர்களுக்கே தலைவனன தனது தமைய னுக்குத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டேனே என எண் ணியபோது அவளது கண்கள் கலங்கின.
தாய் தந்தையர் தனக்கு இரகசியமாகத் திருமண ஏற் பாடு செய்வதை ராக்கு மூலம் அறிந்ததும், தன்னை

Page 132
254 குருதிமலை
உடனே வந்து அழைத்துப் போகும்படி அவள் பியசேன விடம் வேண்டியிருந்தாள். அப்போது அவளிடமிருந்த ஆர்வமும் துடிப்பும் இப்போது மிகவும் குன்றிப் போயி ருந்தன.
இதுவரை நேரமும் கு டி  ைசயி ன் பின்புறத்தில் விருந்தையொன்றை அமைப்பதற்கு வேண்டிய மரக் கம்பு களைச் சீவிக்கொண்டிருந்த பியசேன, இப்போது அவள ருகே வந்தான்.
**என்ன செந்தாமரை, ஏதோ யோசிச்சுக்கிட்டு இருக் கிறே?" பியசேனவின் குரல் கேட்டுத் திடுக்குற்று நிமிர்ந் தாள் செந்தாமரை.
"ஒண்ணுமில்லீங்க.." எனக் கூறிய செந்தாமரை, அவனைப் பார்த்துச் சிரிக்க முயன்ருள்.
* இல்ல செந்தாமரை. நீ எதையோ மறைக்கப் பாக் கிற, ஒம் முகத்தைப் பாத்தாலே தெரியுது" எனக் கூறிய பியசேன, அவள் அருகே அமர்ந்துகொண்டான்.
* 'இல்லீங்க நான் எப்பவும் போலத்தான் இருக் கேன்."
‘'நீ பொய் சொல்லுற செந்தாமர. ஒனக்கு ஏதாவது கொறை இருந்தா எங்கிட்ட சொல்லு" என அவளது கைகளைப் பற்றியவாறு கூறினன் பியசேன.
**இங்க எனக்கு ஒரு கொறையுமே இல் வீங்க" எனக் கூறிய செந்தாமரை ஒரு கணம் தயங்கிவிட்டு, "எங்க வூட்டுல அப்பா அம்மா என்னு நெலைமையில இருக்காங் களோ தெரியல்ல. அத நெனைக்கத்தான் எனக்கு கவலை யாக் கெடக்கு" அவளது குரல் கரகரத்தது.
**இதுக்குப் போய் ஏன் செந்தாமர கவலைப்படுற. நீ எங்கூடத்தான் வந்திருப்பேன்னு ஒங் க வூட்டுக்கு தெரிஞ்சிருக்குமே. கொஞ்சநாள் போன எல்லாமே சரியா

குருதிமலை 255
போயிடும்" எனக் கூறி அவளைத் தேற்ற முயன்ருன் பிய சேஞ.
"அதுக்கு சொல்ல வீங்க. இப்போதான் தோட் டத்தைவுட்டு எல்லாரையுமே போகச் சொல்லியிருக்கே. அப்புறம் எங்கம்மா, அப்பாவை இனிமே எப்புடீங்க பாக்கப் போறேன்."
செந்தாமரையின் கண்கள் கலங்கின. "அப்புடியெல்லாம் ஒண்ணுமே நடக்காது செந்தா மரை. தோட்டத்து ஆளுங்க ஒரு நாளும் தோட்டத்தவுட் டுப் போகமாட்டாங்க" பியசேனவின் குரலில் உறுதி தொனித்தது.
"இல்லீங்க. இப்ப நாட்டாளுங்களும் ரொம்ப கொழம்பிக்கிட்டு இருக்காங்க. தோட்டத்து ஆளுங்களும் போக மாட்டேனு பிடிவாதமா இருக்காங்க. இப்புடி இருக்கிறப்போ என்ன நடக்குமோனுதான் எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க" என்ருள் செந்தாமரை.
**இந்தா பாரு செந்தாமரை. நீ ஒண்ணுக்கும் கவ லேப்படாத, ஒனக்கு ஒரு கஷ்டமும் வராம நான் பாத்துக் கிறேன். சும்மா சும்மா மனசுல ஏதாச்சும் நெனைச்சி கவ லைப்பட்டுக்கிட்டு இருக்காத." எனக் கூறிய பியசேன. அவளது கண்ணிரைத் துடைத்துவிட்டான்.
அப்போது முன்புறத்தில் படுத்திருந்த பியசேனவின் தாய் எழுந்து, "மே, பலண்ட புத்தே. மேயிங் கவுதோ எவில இன்னே" எனக் குரல் கொடுத்தாள்.
யார் இந்த நேரத்தில் வந்திருக்கக்கூடும் என எண் னியவாறு வாசலுக்கு வந்தான் பியசேன. அங்கே அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சியடைய வைத்தது.
வீரய்யாவும், ராமுவும் குடிசையின் வாசலில் நின்றி ருந்தனர்.

Page 133
256 குருதிமலை
செந்தாமரையைத் திருப்பியழைத்துச் செல்லும் நோக்கத்துடன் வீரய்யா அங்கு வந்திருந்தான். தோட் டத் தொழிலாளர்களின் மேல் கிராமத்தவர்கள் பகை) கொண்டிருக்கும் இந்த நேரத்தில் செந்தாமரை கிராமத் தில் இருப்பது எந்த நேரமும் அவளுக்கு ஆபத்தை ஏற் படுத்தலாம் என்ற எண்ணம் வீரய்யாவின் மனதைக் கலக்கிக்கொண்டிருந்தது. அவனுல் எதையும் நிம்மதியா கச் சிந்தித்துச் செயலாற்ற முடியவில்லை; பெரிதும் குழம் பிப் போயிருந்தான். தோட்டத் தொழிலாளர்களைச் சரி யான முறையில் வழி நடத்தவேண்டிய பெரும் பொறுப்பு தன் மேல் இருக்கும் இந்த வேளையில் சொந்தப் பிரச்சினை கள் தன்னைப் பாதிப்பதை அவன் விரும்பவில்லை. செந்தா மரையை எப்படியாவது திருப்பி அழைத்து வரும்படி தாய் மீனச்சி வேறு எந்த நேரமும் அவனை நச்சரித்தபடி இருந்தாள். அதனுலேதான் அவன் ராமுவையும் அழைத் துக்கொண்டு அங்கு வந்திருந்தான்.
இந்த நேரத்தில், அதுவும் இப்போதுள்ள குழப்ப மான சூழ்நிலையில் வீரய்யாவும், ராமுவும் அங்கு வந்திருப் பது பியசேனவின் உள்ளத்தில் ஒருவித பய உணர்வை ஏற் படுத்தியது.
‘எங்க செந்தாமர.?" வீரய்யாவின் குரல் நிசப்தத் தைக் கிழித்துக்கொண்டு ஒலித்தது.
உள்ளேயிருந்த செந்தாமரையின் உள்ளம் திக் திக் கென்று அடித்துக் கொண்டது. அவள் பயத்துடன் மெது வாக எழுந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.
‘செந்தாமர எங்கூடத்தான் இருக்கிருள்." பியசேன வின் வார்த்தைகள் தடுமாறின.
'அவளை வெளியே வரச் சொல்லு; அவளைக் கூட்டிக் கிட்டுப் போகத்தான் நாங்க வந்திருக்கோம்" என்ருன் 69lutuit unt.

குருதிமலை 257
'அவளை நான் அனுப்ப முடியாது. இனி இங்கதான் அவள் இருப்பாள்" என் முன் பியசேன திடமான குர
"அதை நான் செந்தாமரகிட்டேயே கேக்கிறேன். அவளை இங்க வரச் சொல்லு." அடுப்படிப்பக்கம் பார்த்த வாறு கூறினன் வீரய்யா.
வீரப்யா இப்படிக் கூறியதும் செந்தாமரை பயத் துடன் வெளியே வந்தாள்.
வீரய்யாவுக்கு அவளைப் பார்த்தபோது எரிச்சலாக இருந்தது. ஆனலும் எப்படியாவது அவளைத் தோட்டத் துக்கு அழைத்துச் சென்றுவிடவேண்டுமென்ற எண்ணத் துடன் அவன் தன்னக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
"என்ன செந்தாமரை? நீ எங்கூட இப்ப வாறியா இல்லியா?" என அதட்டும் குரலில் கேட்டான் வீரய்யா.
செந்தாமரை பதில் எதுவும் கூழுது மெளனமாகத் தலைகுனிந்தபடி நின்ருள்.
"இங்கபாரு செந்தாமர. நீ இங்க வந்ததில இருந்து, அம்மா சாப்பிடவே இல்லை. அழுதுகிட்டே இருக்காங்க. ஒன்னை பாக்காம அவுங்களால ஒண்ணுமே செ ய் ய முடியல."
வீரய்யா இப்படிக் கூறியதும் செந்தாமரை பெரிதாக அழத் தொடங்கினுள்.
'என்னை மன்னிச்சிடுங்க அண்ணு. நான் இனி இங்க தான் இருக்கப் போறன்’ விம்மலுக்கிடையே கூறினுள் செந்தாமரை.
** அப்பா ஒரே பைத்தியம் பிடிச்சமாதிரி இருக்காரு.நீ இப்புடிச் சொன்ன நான் என்னதான் செய்யிறது?" எனக் கூறிக்கொண்டே செந்தாமரையின் அருகில் சென்ருன் வீரய்யா,

Page 134
25g குருதிமலை
"அண்ணு. இனி என்னுல அவரப் பிரிஞ்சி இருக்க முடி யாது. தயவுசெஞ்சி என்னை வற்புறுத்தாதீங்க" எனக் கெஞ்சும் குரலில் கூறிஞள் செந்தாமரை.
இனி அவளைத் தன்னுடன் வரும்படி அழைப்பதில் பிரயோசனமில்லை; அவள் ஒரு போதும் பியசேனுவைப் பிரிந்து வரமாட்டாள் என்பதை வீரய்யா உணர்ந்து கொண்டான்.
**சரி செந்தாமரை. அப்படீன நீங்க ரெண்டு பேருமே தோட்டத்துக்கு வந்திடுங்க."
அப்போது இதுவரை நேரமும் மெளனமாக நின்ற ராமு, "ஆமா பியசேன, நீ செந்தாமரையைக் கூட்டிக் கிட்டு தோட்டத்துக்கு வாறதுதான் நல்லது. செந்தாம ரையைக் காணுட்டி, அவுங்க அம்மா உயிர விட்டாலும் வுட்டுடுவாங்கபோல இருக்கு" எனக் கூறினன்.
பியசேனவுக்கு என்ன பதில் கூறுவதென்றே தெரிய வில்லை. அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. மெளன மாக நின்றன்.
‘செந்தாமரை, நாட்டுல ஒனக்கு ஏதாச்சும் ஆபத்து வந்திடுமோனு நெனச்சு ஒங்க அம்மா எந்த நேரமும் அழுது புலம்பிகிட்டு இருக்காங்க. நீ எப்பு டியாச்சும் பிய சேனவைக் கூட்டிக்கிட்டு தோட்டத்துக்கு வாறதுதான் நல்லது." இப்போது செந்தாமரையின் பக்கம் திரும்பிக் கூறினன் ராமு . பியசேன சிறிது நேரம் யோசித்தான். வீரய்யா மிகவும் நல்வவன். ஒரு போதும் தனக்குத்தீமை செய்யமாட்டான் என்பது அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது. இப்போதுள்ள சூழ்நிலையில் செந்தாமரையோடு கூடச்சென்று தோட்டத் திலே தங்கிவிடுவது ஒரு பாதுகாப்பான செயலாக இருக்கு மென அவன் எண்ணினன்.
"'என்ன பியசேன, ரெம்ப யோசிக்கிறே? நீ ஒண்ணுக் கும் பயப்படத் தேவையில்ல. இப்பலே செந்தாமரையை

குருதிமலை 259
கூட்டிக்கிட்டு எங்க கூட வந்திடு" என பியசேனவின் தோள்களைத் தன் இரு கைகளாலும் பற்றியவாறு கூறி ஞன் வீரய்யா.
பியசேனவால் எவ்வித மறுப்பும் தெரிவிக்க முடிய வில்லை.
"சரி வீரய்யா; நீ சொல்லுறபடி செய்யிறேன்; ஆன. இந்த நேரத்தில அம்மாவைத் தனிய வுட்டுட்டு வர முடி யாது’ என்ருன் பியசேன.
"ஆமா அண்ணு, நாளைக்கி கட்டாயமா ரெண்டு பேருமா அங்க வர்முேம், அம்மா கிட்ட சொல்லுங்க" என் முள் செந்தாமரை.
வீரய்யா சிறிது நேரம் யோசித்தான்.
ஆமா வீரய்யா, நாளைக்கி அவுங்க ரெண்டு பேருமா வரட்டும்; அதுதான் நல்லது. பியசேனவும் அவுங்க அம்மா வுக்கு ஒரு ஒழுங்கு பண்ணிட்டுத்தானே வரணும்' என்ருன் ராமு.
இனிமேலும் அவர்களை வற்புறுத்துவது சரியில்லை என நினைத்த வீரய்யா, 'சரி நாளைக்குக் கட்டாயம் வாங்க; ஒங்களை எதிர்பார்த்துகிட்டு இருப்போம்" எனக் கூறிவிட்டு ராமுவுடன் அங்கிருந்து புறப்பட்டான்.
பியசேனவும், செந்தாமரையும் அவர்கள் இருவரை யும் வாசல்வரை சென்று வழியனுப்பி வைத்தனர்.
மறு நாள் -
வீரய்யாவுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி செந்தா மரையையும் அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்ருன் பியசேன.
செந்தாமரையைக் கண்டதும் மீனுச்சி ஓடிவந்து அவ ளைக் கட்டியணைத்துக்கொண்டு பெரிதாக அழத் தொடங்கி

Page 135
260 குருதிமலை
ஞள். செந்தாமரையால் எதுவுமே பேச முடியவில்லை. தாயின் மார்புக்குள் முகத்தைப் புதைத்தவாறு விம்மி ஞள்.
மாயாண்டி மெளனமாகக் கட்டிலில் படுத்திருந் தார். செந்தாமரையின்மேல் அவருக்கிருந்த கோபம் தணியவேயில்லை. ஆனலும், அவள் கிராமத்திலிருந்து ஏதாவது ஆபத்தில் சிக்கிவிடாமல் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தது, அவரது மனதிற்கு ஓரளவு நிம்மதியைக் கொடுத்தது.
வீரய்யாவின் மனதிலும் பெரும் ஆறுதல்ஏற்பட் டது. இனித் தோட்டத்து விடயங்களை எவ்வித குழப்பமு மின்றிக் கவனிக்கலாம் என எண்ணிக் கொண்டான்.
அத்தியாயம் நாற்பத்தொன்று
Pறு வாரத்தில் ஒரு நாள் மாலை!
கண்டக்டரின் பங்களாவிலிருந்துகரத்தை ரோட்டு வந்து முடியும் குறுக்குப் பாதையில் பண்டா முதலாளி யின் லொறி நின்றுகொண்டிருந்தது. அவரது கையாட் கள் இருவர், கண்டக்டருக்குச் சொந்தமான பொருட் களை லொறியில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.
லொறி அங்கு வந்து நிற்பதையும் பொருட்கள் ஏற்
றப்படுவதையும் அறிந்த தொழிலாளர்கள் கண்டக்டரின் பங்களாவின் முன் கூட்டமாகக் கூடிவிட்டனர்,

குருதிமலை 261
விஷயமறிந்த வீரய்யாவும், ராமுவும், செபமாலையும் அப்போதுதான் அவசர அவசரமாக அங்கு வந்து சேர்ந்த னர்.
பங்களாவின் உள்ளேயிருந்து கண்டக்டரும், பண்டா முதலாளியும் வெளியே வந்தனர். அ வ ர் க ளை த் தொடர்ந்து கண்டக்டரை வழியனுப்ப வந்த பெரிய கிளாக்கரும், கோப்பரட்டிவ் மனேஜரும் ஏதோ கதைத்த வண்ணம் வந்தனர்.
தோட்டத்துக்குரிய தளபாடங்களைத் தவிர மற்றவை யாவும் லொறியில் ஏற்றப்பட்டுவிட்டன.
"என்னுங்க ஐயா? நாங்க போராடிக்கிட்டு இருக்கி றப்போ, நீங்கமட்டும் தோட்டத்தவுட்டுப் போறது சரி யில்லீங்க" என்ருன் வீரய்யா கண்டக்டரைப் பார்த்து.
"எங்களுக்கெல்லாம் செய்யிறத செஞ்சிப்புட்டு தோட் டத்துவுட்டு தப்பிப் போகலாமுனு பாக்கிறீங்களா? நமக்கு ஒரு முடிவு வந்தாத்தான். நீங்க தோட்டத்தவுட் டுப் போகலாம்' என்றன் செபமாலை.
வீரய்யாவும், செபமாலையும் இப்படிக் கூறியதும் கண் டக்டர் ஒருகணம் நிலைதடுமாறிப் போனர்.
பக்கத்தில் நின்ற பண்டா முதலாளிக்கு வீரய்யாவைப் பார்ப்பதற்கே எரிச்சலாக இருந்தது. இவனல்தானே எல் லாக் காரியங்களும் தடைப்படுகின்றன. கிராமத்திலிருந்து தனது தங்கையை அழைத்து வந்ததுமல்லாமல் இப்போது பியசேனவையும் தனது குடும்பத்தில் ஒருவனுகச் சேர்த் துக்கொண்டுவிட்டான். இனி இவன் எதற்குமே பின்நிற்க மாட்டான் என எண்ணியவாறு அவர் மெளனமாக நின் ருர்.
கண்டக்டர் எதுவும் பேசாது அலட்சியமாக முகத்தை வேறு புறம் திருப்பியபடி படியில் இறங்கத் தொடங்கி னர்.

Page 136
262 குருதிமலை
லொறியை அண்மித்ததும், அதனைச் சுற்றிப் பலர் கூட் டமாகக் கூடி நிற்பதைக் கவனித்த எல்லோருக்கும் சிறிது அதிர்ச்சியாக இருந்தது.
"என்னுங்க ஐயா. நாங்க சொல்லுறதுக்கு ஒன்னும் பேசாமப் போlங்க..?" என அவர்களின் பின்னே வந்து கொண்டிருந்த வீரய்யா கேட்டான்.
'இந்தா பாரு. நாங் தோட்டத்தைவிட்டுப் போறது : எங் விருப்பங். ஓங்களுக்கு என்ன? என்னையும் ஓங்க மாதிரி தோட்டத்தில கொழப்பங் பண்னிக்கிட்டு இருக்க சொல்லுறதா?’ என வீரய்யாவைப் பார்த்து முறைத்த படி கூறினர் கண்டக்டர்.
"அப்புடி இல் லீங்க, நீங்க தோ ட் டத் த வுட் டு ப் போயிட்டா, அப்புறம் எங்களால தனிய இருந்து ஒண்னும் செஞ்சிக்கிட முடியாதுங்க. அதனுலதாங்க கேக்கிருேம். நீங்க போக வேணும்' என்ருன் வீரய்யா.
"ஏய், என்ன முட்டாள் மாதிரி பேசுறது; அரசாங்கத் துல இதுந்துதாங் நமக்கு மாத்திப் போகச் சொல்லி உத் தரவு வந்திருக்கு, நாங் வேற தோட்டத்திக்கி போய் வேலைசெய்ய வேணுங். நீ மடையன் மாதிரி கதைக்கிறது. எல்லாங் ஒன்ன சேந்துக்கிட்டு இங்க வந்து கொழப்பம் பண்ணுறது. எல்லாங் ஓடிப்போ' என லொறியின் அருகே வந்த கண்டக்டர் ஆவேசத்துடன் பலமாகக் கத்தி ஞர்.
‘என்னுங்கையா, நாங்க மரியாதையாப் பேசிக்கிட்டு இருக்கோம். நீங்க என்னுடான ரொம்ப மேலை போlங்க. நீங்க போகக்கூடாதுனு போகக்கூடாது" இதுவரை நேர மும் குமுறிக்கொண்டிருந்த ராமு கூறினன். அவனது உடல் வெட வெடத்தது.
'நீங்க மத்தத் தோட்டத்துக்கு மாத்திப்போகத் தேவையில்ல; இதே தோட்டத்திலையே வேலை செய்யலாம்.

குருதிமலை 263
இதுக்குத்தானே நாம இப்ப அரசாங்கத்தோட போரா டிக்கொண்டிருக்கிறேம்; ஒங்களை நாங்க போகவுடமாட் டோம்" என்ருன் வீரய்யா. அவனது முகம் இப்போது வியர்த்திருந்தது.
"இந்தா, சும்மா பேசவாணுங். கண்டக்கையா தோட் துத்துல இருக்கிறப்போ எல்லாங் கரச்சலுக்கு வந்தது. இப்போ அவர் போற நேரங் போகவுடாம கொழப்பங் பண்ணுறது. ஒனக்கு என்னு பைத்தியங் புடிச்சிருக்கா?" பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பெரிய கிளாக்கர் எரிச்சலுடன் கூறினர்.
'எங்களுக்கு ஒண்ணும் பையித்தியம் பிடிக்கலீங்க. எங்களுடைய உரிமைக்காகத்தான் நாங்க போராடிக் கிட்டு இருக்கோம்' என்ருன் ராமு சினத்துடன்,
*தோட்டத்தையே நாசம் பண்ணிப்புட்டு தப்பிச்சு போகலாமுனு நெனைக்கிறீங்களா?' என அங்கிருந்த ஒரு வன் கத்தினன்.
"நீங்க வந்து எங்களுக்கு ஏதும் நல்லது செய்யல்ல; நீங்க நல்லவருனு சொல்லி போகவுடாம தடுக்குருேமுணு நெனச்சிக்கிடாதீங்க. எங்களுடைய பிரச்சினை முடியிற வரைக்கும் நாங்க யாரையும் தோட்டத்த வுட்டுப் போக விடமாட்டோம். நாங்களும் தோட்டத்தவுட்டுப் போக மாட்டோம்" என்ருன் வேருெருவன்.
"எங்களுக்கு ஒரு நல்ல முடிவு வந்தவொடன நீங்க எங்கசரி தொலைஞ்சு போனலும் கவலையில்ல' என் முன் அங்கு நின்ற குப்பன்.
"இந்தாபாரு மனுஷன், இது அரசாங்கத்தோட சட் டம், ஒங்களுக்கு அது பத்தி ஒண்ணும் தெரியாதுதானே. ஓங்க பேச்சைக் கேட்டுக்கிட்டு கண்டக்கையா நடக்க (LP Lգயாது. போராட்டம் போராட்டமுனு சொல்லிகிட்டு இருக்

Page 137
264 குருதிமலை
காம எல்லாந் தோட்டத்தவுட்டுப்போ. அரசாங்கத்தோட எதிர்த்துக்கிட்டு, ஒங்களுக்கு ஒண்ணுங் செய்ய முடியாது" என்ருர் பெரிய கிளாக்கர் பலத்த குரலில்.
கண்டக்டரின் நிலைமை தர்மசங்கடமாகிவிட்டது. இவர்கள் திட்டம் போட்டுத்தான் எல்லாம் செய்கிறர் கள் என அவரது மனம் எண்ணியது.
**அவருகிட்ட என்னு வீரய்யா கதைக்கிறது? வாங் கடா எல்லாம், லொறியில இருக்கிற சமானத்த இறக்கு வோம்" எனப் பலமாகக் கூறிவிட்டு லொறியின் பின்புறத் தில் போய்த் தாவி ஏறினன் ராமு.
அப்போது அங்கே நின்ற பண்டா முதலாளி, "டேய், யாரு சரி நம்ப லொறியிலை ஏறவேணும். லொறியில ஏறின காலை ஒடிச்சுப் போடறது' எனக் கத்தியபடி ராமுவை லொறியிலிருந்து வெளியே இழுப்பதற்காக அவனருகே சென் ருர்.
"என்னு ஓய். பெருசா பேசுற? எங்க யாரு மேல சரி கைவச்சா, அப்புறம் எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கி, இந்த லொறிக்கும் நெருப்பு வச்சிடுவோம்" என ராமு கோபத்துடன் கூறினன்.
அங்கு நின்ற தொழிலாளர்கள் யாவரும் திமுதிமு வென லொறிக்குள் பாய்ந்தனர்.
பண்டா முதலாளி ஒன்றும் செய்வதறியாது திகைத்து நின்ருர்,
இப்போது இவர்கள் இருக்கும் நிலையில் எதைச் செய்வதற்கும் தயங்க மாட்டார்கள் என்பதை அவர் புரிந்துகொண்டார்.
லொறிக்கு ஏதும் சேதம் விளைவித்துவிடாமல் இருக்க வேண்டுமே என அவரது மனம் ஏங்கியது.
லொறிக்குள் பாய்ந்த தொழிலாளர்கள் சில நிமிட நேரத்திற்குள் அதனுள் இருந்த பொருட்கள் எல்லாவற்

குருதிமலை 265
றையும் இறக்கி பங்களாவின் உள்ளே கொண்டு சென்று வைத்தனர்.
'ஏய். லொறியை இங்க நிப்பாட்டாம சுறுக்கா கொண்டுபோ' எனப் பல குரல்கள் ஒரே நேரத்தில் ஒலித்தன.
லொறியில் பண்டா முதலாளி ஏறி உட்கார்ந்து கொண்டார். றைவர் லொறியை "ஸ்ராட்" செய்தான்.
"அடே, நம்மல யாருன்னு நெனச்சது? நம்ப லொறி யவா கொழுத்துறேனு சொன்னது. ஓங்களை எல்லாங் என்ன செய்யுறேன்னு பாரு" எனக் கர்ச்சித்தார் பண்டா முதலாளி.
கூட்டத்திலிருந்து கேலிக் குரல்களும் கூச்சல்களும் பலமாக எழுந்தன. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் விசில் அடித்தனர், லொறி பேரிரைச்சலுடன் உறுமிக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றது.
பண்டா முதலாளி பற்களைக் கறுவிக்கொண்டார்.
கண்டக்டரும், கிளாக்கரும்,மனேஜரும் பெரும் குழப் பத்துடன் பங்களாவினுள்ளே சென்னறர்.

Page 138
286 குருதிமல்
அத்தியாயம் நாற்பத்திரண்டு
பண்டா முதலாளிக்கு இப்போது வியாபாரம் சிறிது குறைந்திருந்தது. ஆனல் அவர் அதைப்பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை. அவருக்குத்தான் முன்பைவிட பலமடங்கு வருமானம் கொழுந்து வியாபாரத்தில் கிடைக் கிறதே! பின்பு ஏன் அவர் அதைப்பற்றிக் கவலைப்படப் போகிருர்,
அன்று மாலை அவரது வீட்டின் பின்புறத்தில் இருக்கும் கள்ளுக்கடையில் நாட்டில் உள்ள பல இளைஞர்களும் முக் கியஸ்தர்களும் கூடியிருந்தார்கள். கிராமசேவகரும் அங்கு வந்திருந்தார்.
கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் முக்கியமானவர் கள் எல்லோரும் அங்கு வந்திருக்கிருர்களா என பண்டா முதலாளி நோட்டம் விட்டு விட்டு கூட்டத்தை ஆரம்பித் தார்.
"நான் உங்களை இங்கு எதற்காக அழைத்தேன் என் முல், நீங்கள் எல்லோரும் உங்களுக்குக் காணி கிடைக்கப் போகிறதென மிக ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டி ருக்கிறீர்கள். ஆனல் இப்போதுள்ள சூழ்நிலையில் உங்க ளுக்கு ஒரு துண்டுக் காணி கூடக் கிடைக்கப்போவதில்லை என்பதைத் தெரிவிப்பதற்குத்தான்."
பண்டா முதலாளி இப்படிக் கூறியதும் அங்கு நின்ற வர்களிடம் சலசலப்புத் தோன்றியது.
'என்ன முதலாளி? நீங்கள் தான்முதலில் எங்களுக்குக் காணி கிடைக்கப் போகிறதெனக் கூறினீர்கள்; இப்போது

குருதிமை ዷ67
இல்லையென்று சொல்லுகிறீர்கள். ஏன் இப்படி எங்களை யெல்லாம் ஏமாற்றுகிறீர்கள்?" எனக் கேட்டான் அங் கிருந்த பொடிசிங்கோ.
* "நான் உங்களை ஏமாற்றவில்லை. எங்களுடைய மந் திரியும் எங்களுக்கு நிலம் கிடைப்பதற்கு ஏற்ற ஒழுங்கு களைச் செய்திருக்கிருர், ஆனல் தோட்டத் தொழிலாளர் கள் தான் எங்களுக்குக் காணி கிடைப்பதற்குத் தடை யாக இருக்கிழுர்கள்."
ஒ. அது எங்களுக்கும் தெரியும். எங்களுக்குக் கிடைக்கப்போகும் காணியை கிடைக்காமல் செய்வதற்கு, எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு அவர்களுக்கு என்ன உரிமை யிருக்கிறது?" என ஆத்திரத்துடன் கேட்டான் ஒரு இளை ஞன்.
'அவர்களுக்கு உரிமையில்லைத்தான். ஆனல் அவர் களிடம் வீரம் இருக்கிறது. எங்களைப் போல அவர்கள் கோழைகளல்ல' என்ருர் பண்டா முதலாளி.
"அப்படிச் சொல்லாதீர்கள் முதலாளி எங்களைக் கோழைகள் என்று மட்டும் நினைக்காதீர்கள்" எனக் கத்தி னன் அங்கிருந்த வேருெருவன்.
**உங்களிடம் என்ன வீரம் இருக்கிறது.? தோட்டத் தொழிலாளர் எல்லோரும் தோட்டத்தை வுட்டுப் போகப் போவதில்லையெனக் கூறிப் போராடுகிருர்கள். ஆனல் உங்களுக்குக் காணி கிடைக்க வேண்டுமென நீங்கள் ஒரு போதும் போராடியதில்லையே' என்ருர் பண்டா முத லாளி.
அப்போது கிராமசேவகர், "காணியளப்பவர்கள் நட்டுவைத்த கூனிகளைத் தோட்டத் தொழிலாளர்கள் பிடுங்கி வீசிணுர்கள். கொழுந்தெடுக்கப் போன உங்களை எதிர்த்து வலியச் சண்டைக்கு வந்தார்கள் பொலிஸ்கார ரையே எதிர்த்து உயிரைக் கூட மதியாமல் ஜீப்பின் முன்

Page 139
·ይ68 குருதிமலை
ஞல் படுத்து,அவர்களை விரட்டித் துரத்தினர்கள்" எனக் கூறினர்.
* அதுமட்டுமா, தோட்டத்திலிருந்து உத்தியோகத் தர் வெளியேறுவதைக் கூட தடுத்து நிறுத்தினர்கள். அன்று கண்டக்டரின் பொருட்களை ஏற்றப்போன என்னையும் அடிக்கவந்து லொறியையும் நெருப்புவைப்பதாகச் சொன் ஞர்கள்" என்ருர் பண்டா முதலாளி.
**அவர்கள் எல்லோரும் இப்படிப் போராடிக்கொண் டிருக்கும் வேளையில் எங்களுக்குக் காணி வேண்டுமென நாங்கள் எப்போதாவது போராடியிருக்கிருேமா?" எனக் கேட்டுவிட்டு எல்லோரையும் ஒரு தடவை பார்த்தார் கிராமசேவகர்.
தோட்டத்தொழிலாளர்கள் எல்லோரும் ஒற்றுமை யாக நின்று போராட்டத்தை நடத்துகின்றர்கள். நம் மிடையே அப்படி ஒரு ஒற்றுமை இருக்கிறதா?முதியான்சே யும் சுமணபாலாவும் நமக்கு எதிராகப் பிரசாரம் செய்வ தால்,இன்று நம்மில் சிலர் தோட்டத் தொழிலாளர்களுக் குச் சார்பாகத் திரும்பி இருக்கின்றர்கள்"என்ருர் பண்டா முதலாளி.
*நம்மோடு நின்று போராடவேண்டிய பியசேன இன்று அந்தத் தோட்டத் தொழிலாளர்களோடு சேர்ந்து கொண்டு நமக்கு எதிரான காரியங்களையும் செய்கிருன்" என்ருர் கிராமசேவகர்.
எல்லோரும் மெளனமாக இருந்தனர். 'நான் உங்கள் எல்லோரையும் கோழைகள் என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?" என பண்டா முதலாளி இப்போது கேட்டார்.
'நாங்கள் ஒருவரும் கோழைகள் அல்ல. நாங்கள் எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கிருேம்." பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன.

குருதிமலை 269 8۔۔۔۔۔۔ ۔
பண்டா முதலாளி சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டார். k
மெனிக்கே, கிராமசேவகருக்கும்,அங்கு நின்ற ஒருசில ருக்கும் சிகரெட் வழங்கினுள்.
"எங்கள் எல்லோருக்கும் காணி கிடைக்கவேண்டு மானுல் அதற்குத் தடையாக இருக்கும் எல்லாச் சக்திகளே யும் முதலில் ஒழிக்கவேண்டும்."
**இது நம் நாடு. நாம் எவருக்கும் பயந்துவாழத் தேவையில்லை" என்ருர் பண்டா முதலாளி.
“எமக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தொழிலாளர் களை அடித்து நொறுக்கிவிடுவோம்" எனக் கத்தினுன் பொடிசிங்கோ.
'இல்லையில்லை. அப்படிச் செய்யும்படி தூண்டுவதற் காக நான் உங்களை இங்கு அழைக்கவில்லை. நாமும் போராடவேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் உங்களை அழைத்தேன்" என்ருர் பண்டா முதலாளி,
‘எங்களுக்குக் காணி கொடுப்பதைத் தடைசெய்ப வர்களை நாங்கள் சும்மா விட்டுவிடப் போவதில்லை. அவர் களின் போராட்டத்தை எப்படியும் தகர்த்துவிடுவோம்" எனப் பலர் ஒரே சமயத்தில் கூறினர். M
'இதுதான் நீங்கள் எடுத்திருக்கும் முடிவா? அவர்களை உங்களால் எதிர்த்து நின்று போராடமுடியுமா?" எனச் சிந்தனையுடன் கேட்டார் பண்டா முதலாளி,
' ஆமாம்,இதுதான் எங்கள் முடிவு. எத்தனை பேர் வந் தாலும், எங்களது உயிரைப் பணயம் வைத்துக்கூடப் போராடி, அவர்களை அடித்து விரட்டுவோம்' என்ருன் அங்கிருந்த மற்ருெருவன்.
பண்டா முதலாளி யோசனையுடன் தலையாட்டிவிட்டு, "அப்படியானல் நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்

Page 140
270 குருதிமல்ை
கள்,எல்லோரும் நான் சொல்வதை மிகவும் இரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும். முக்கியமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் இவ் விஷயம் தெரியக் கூடாது.'
'இங்கு துரோகிகள் எவரும் இல்லையென்பதை நீங் கள் நம்பலாம். நீங்கள் கூறும் விஷயங்களை இங்குள்ள எவ ருமே வெளியிடமாட்டார்கள்" எனக் கூறினன் பொடி சிங்கோ உறுதியான குரலில்,
** மிகவும் நல்லது.எமக்கு எதிராகப் பிரசாரம் செய் பவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.இங் குள்ள எல்லோருமே ஒற்றுமையாக இருந்தால் நாம் எதை யுமே சாதித்துவிடலாம்' எனக் கூறிய பண்டா முதலாளி தனது திட்டத்தை விளக்கத் தொடங்கினர்.அவரது முகம் மிகவும் கொடூரமாக மாறிக்கொண்டு வந்தது.
கடையில் நின்ற பெடியன் அங்கு வந்தவர்கள் எல்லோ ருக்கும் தாராளமாகக் கள்ளை ஊற்றிக் கொடுத்தான். முட்டிகளில் இருந்த கள்ளு முடிந்தபோது முதலாளியிட மிருந்த சாராயப் போத்தல்களும் வெளியே வந்தன.
சிறிது நேரத்தில் அங்கிருந்த எல்லோரும் வெறியர் களாக மாறினர்.

குருதிமலை 971
அத்தியாயம் நாற்பத்துமூன்று
இரவு, நேரம் ஏழு மணி இருக்கும்.
லயத்துக்கு வெளியே எங்கும் ஒரே இருட்டாக இருந் தது. தொழிலாளர்கள் எல்லோரும் தத்தம் காம்பராக் களில் இருந்தபடி, தோட்டத்து நிலைமைகளைப் பற்றிக் கதைத்தவண்ணம் இருந்தனர். பெண்கள் சமையலில் ஈடு பட்டிருந்தனர்.
குண்டன் கங்காணி லயத்தில் பழைய மாரிமுத்துத் தலைவர் "ராஜா தேசிங்கு" கதையை உரத்து, ஒருவித இரா கத்துடன் படித்துக்கொண்டிருந்தார். அந்த லயத்தில் இருக்கும் நான்கைந்து வயதானவர்கள் அவரைச் சுற்றி வட்டமாக அமர்ந்துகொண்டு மிக ரசனையுடன் அந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்தனர். மாரிமுத்துத் தலை வரின் குரல் நிசப்தமான அந்த வேளையில் லயம்முழுவதும் ஒலித்துக்கொண்டிருந்தது.
எங்கோ பூசாரி ஒருவன் உடுக்கடிக்கும் ஓசையும் காற் றிலே கலந்து வந்துகொண்டிருந்தது.
தோட்டத்திலே வேலை நிறுத்தியதைத் தொடர்ந்து, என்ன நடவடிக்கை எடுக்கலாமெனக் கலந்து ஆலோசிக் கும் நோக்கத்துடன் வீரய்யா தனது நண்பர்களைத் தேடிச் சென்றிருந்தான்.
மீனச்சி இரவுச் சாப்பாடு செய்வதில் முனைந்திருந் தாள். செந்தாமரையும் பியசேனவும் இஸ்தோப்பில் இருந்தவாறு எதைப் பற்றியோ சுவாரஷ்யமாகக் கதைத் துக்கொண்டிருந்தனர்.

Page 141
272 குருதிமலை
மாயாண்டி காம்பராவின் உள்ளே கிடந்த கட்டிலில் படுத்தபடி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார்.
வயல் லயத்தில் கறுப்பண்ணன் கங்காணியின் காம்ப ராவிலிருந்து, அவரும் அவரது மனைவியும் பெரிதாகச் சண்டை போடும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கிராமசேவகர் வயலைப் பிடுங்கியதிலிருந்து அடிக்கடி அவர்களிடையே வாக்குவாதம் நடக்கும்.அவரது மனைவி தனது நகை மூழ்கிப்போய்விட்டதை எண்ணிக் கவலை யுடன் அவரோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.
குப்பன் வீட்டில் அவரது மனைவி அடுப்படியில் இருந்து ரொட்டி போட்டுக்கொண்டிருந்தாள்.அவளைச் சுற்றி குப் பனும் அவனது நான்கு பிள்ளைகளும் வட்டமாக அமர்ந்தி ருந்தனர். பிள்ளைகள் அடுப்பில் வெந்துகொண்டிருக்கும் ரொட்டியையே பார்த்துக்கொண்டிருந்தனர்.அரிசி இல் லாத காரணத்தால், கிடந்த இரண்டு சுண்டு மாவைப் பிசைந்து ரொட்டி போட்டுக்கொண்டிருந்தாள் குப்பனின் மனைவி.ரொட்டி வெந்ததும் அவள் அதனைப் பகிர்ந்து எல் லோருக்கும் கொடுக்கிருள். அந்தச் சிறிய துண்டு ரொட் டியைச் சாப்பிட்டுவிட்டு வெறுஞ் சாயத் தண்ணியால் அவர்கள்.வயிற்றை நிரப்பிக்கொள்கின்றனர்.
அந்த வேளையில் மடுவத்தின் பக்கத்திலிருந்து *டாண். டாண்..." என மணியோசை பலமாகக் கேட்டது.
லயத்தில இருக்கும் ஒவ்வொருவரும் திடுக்குற்று எழு கின்றனர். ஒருநாளும் இல்லாதவாறு ஏன் இந்த நேரத்தில் மணியோசை கேட்கிறது? காணி அளப்பவர்கள் இரவு நேரத்திலா வரப்போகின்றனர்?பகலிலே அவர்கள் வருவ தைத் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்துவதால், ஒருவேளை இரவு நேரத்தில் வந்திருப்பார்களோ?அல்லது கண்டக்டர் தான் இரவிரவாகத் தோட்டத்தைவிட்டுப் போக முயற்சி செய்யும்போது அதனைக் கண்டுகொண்ட யாராவது மணி அடித்திருப்பார்களோ?எவருக்கும் ஒன்றுமே புரியவில்லை,

குருதிமலை 273
ஆண்கள் எல்லாரும் மடுவத்தை நோக்கித் தீப்பந்தங் களுடன் விரைந்தனர். செந்தாமரையுடன் கதைத்துக் கொண்டிருந்த பியசேனவும் அவர்களோடு சேர்ந்து மடு வத்துப் பக்கமாக ஓடினன். பெண்களும் வயோதிபர்களும் சிறுவர்களும் லயத்திலே தங்கிவிட்டனர்.
திடீரென லயத்தில் இருந்த நாய்கள் எல்லாம் பலமா கக் குரைக்கத் தொடங்கின.
பலர் திமுதிமுவெனத் தேயிலைப் புதர்களில் இருந்தும் மறைவான இடங்களில் இருந்தும் லயத்துக் காம்பராக் களில் ஒரே சமயத்தில் புகுந்தனர். சிலரது கைகளில் கத்தி யும் கோடரியும் தடிகளும் காணப்பட்டன. ஒருசிலர் பள பளக்கும் வாள்களுடன் பாய்ந்து வந்தனர்.
அவர்கள் எல்லோருமே மதுபோதையில் நிறைந்தி ருந்தனர்.
அவர்களைக் கண்டதும் லயத்திலிருந்த சிறுவர்களும் பெண்களும் பயத்துடனும் பீதியுடனும் கூச்சலிடத் தொடங்கினர்.
'ஏய்; யாருங் சத்தங் போடவேணும்;சத்தம் போட்டா வெட்டிப் போடுவேன்" என அங்கு வந்த குண்டர்களில் ஒருவன் கூறினன்.
எல்லோரும் பயத்துடன் நடுங்கியவாறு வாயடைத்துப் போய் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
குண்டர்கள் காம்பராக்களுக்குள் புகுந்து சூறையா டத் தொடங்கினர். ஒருசில பெண்களின் கழுத்திலும் காது களிலும் இருந்த நகைகளை மூர்க்கத்தனமாகப் பிடுங்கி எடுத்தனர்.எந்தெந்தக் காம்பராக்களில் எல்லாம் தொழி லாளர்களது உடைமைகளைச் சூறையாட முடியுமோ, அவற்றையெல்லாம் சூறையாடினர்.
குண்டன் ஒருவன், கண்களில் தென்பட்ட அழகான, வயதுவந்த பெண் ஒருத்தியைப் பலவந்தமாகப் பிடித்து,

Page 142
274 குருதிமலை
லயத்தின் சற்றுத் தூரத்திலுள்ள இருட்டான பகுதிக்கு இழுத்துச் சென்றன். அவள் எவ்வளவோ கதறியும், அவ னிடமிருந்து விடுபட முயற்சி செய்தபோதும் அவளால் தப்பமுடியவில்லை.அந்தக் கொடியவனின் மிருக இச்சைக்கு அவள் பலியானள்.
ஒருசில வயோதிபர்கள் அந்தக் குண்டர்களை எதிர்க்க முயன்றபோது, அவர்களைக் குண்டர்கள் அடித்துத் துன் புறுத்தினர்.
லயங்களில் இருந்த பொருட்கள் யாவும் சூறையாடப் பட்டதும்,தாங்கள் தயாராகக் கொண்டுவந்திருந்த மண் ணெண்ணெய்,பெற்ருேல் முதலியவற்றை லயத்தின் உள் ளேயும் வெளிப்புறத்திலும் ஊற்றி கையில் இருந்த பந்தத் தால் லயங்களுக்குத் தீ வைத்தனர். சில குண்டர்கள் முன்பே தயாராகக் கொண்டுவந்த பெற்ருேல் குண்டுகளை லயங்களின் கூரைமீது வீசினர். அவை பயங்கரமாக, பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறி தீச்சுவாலைகளை எங்கும் பரவவைத்தன.
பக்கத்திலிருந்த மாரியம்மன் கோயிலை நோக்கி ஒரு குண்டன் தனது கையிலிருந்த குண்டை வீசி அந்தக் கோயிலைத் தகர்த்தெறிந்தான்.
லயங்களில் இருந்த வயோதிபர்களும் பெண்களும் சிறுவர்களும் வீரிட்டு அலறிக்கொண்டு வெளியே ஓடினர். லயங்களில் பற்றிய நெருப்பு இப்போது சுவாலைவிட்டுப் பெரு நெருப்பாக எரிந்துகொண்டிருந்தது.
குறுகிய நேரத்தில் அந்தக் கொடுஞ்செயல்களை நடத்தி முடித்துவிட்டு, தமக்குக் கிடைத்த பொருட்களுடன் குண் டர்கள் அவ்விடத்தைவிட்டு ஓடி மறைந்தனர்.
மடுவத்தைச் சென்றடைந்த ஆண்களுக்கு, அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பது புரிந் தது.யாரோ வேண்டுமென்று மணியை அடித்துத் தங்களை

குருதிமலை 275
மடுவத்திற்கு வரவழைத்திருக்கிருர்கள் என்பதை அவர் கள் புரிந்துகொண்டார்கள்.
லயத்துப் பக்கமிருந்து பெண்களினதும் சிறுவர்களின தும் அவலக்குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன.தீச்சுவாலை கள் கொழுந்துவிட்டு எரிவதை மடுவத்திலிருந்து பார்க் கக்கூடியதாக இருந்தது.இப்போது எல்லோரும் லயத்தை நோக்கி விரைவாக ஓடத் தொடங்கினர்கள்.
லயங்களின் அருகே நெருங்கக் கூட முடியவில்லை. தீப் பிழம்புகள் அனலைக் கக்கிக்கொண்டு இருந்தன. எங்கும் ஒரே புகைமண்டலமாகத் தெரிந்தது,தீப்பொறிகள் வெகு தூரம் வரை பறந்து சென்று பக்கத்திலுள்ள மரஞ் செடி களைத் தாக்கின.
லயத்தை அடுத்துள்ள, மீனுப் புல்லினல் வேயப்பட்டி ருந்த மாட்டுத் தொழுவங்களின் கூரைகளில் தீ பற்றிய போது,அங்கிருந்த பசுமாடுகள் மிகப் பயங்கரமாகக் கத றிக்கொண்டிருந்தன.
கோழிக் கூடாப்பிற்குள் அடைக்கப்பட்டிருந்த கோழி கள் யாவும் தீயின் வாயில் அகப்பட்டு மரண ஒலம் எழுப்பின.
தொழிலாளர்கள் வளர்த்துவந்த நாய்கள் இப்போது தூரத்தே நின்று லயங்கள் எரிவதைப் பார்த்துப் பெரும் சோகமாக ஊளையிட்டுக்கொண்டிருந்தன.
யாராலுமே அருகில் கூட நெருங்கமுடியவில்லை. ஆண் டாண்டு காலமாக அவர்கள் தே டிவைத்திருந்த உடைமை களைப் பறிகொடுத்துவிட்டு, எஞ்சியவையெல்லாம் நெருப் பிலே வெந்து சாம்பலாவதைப் பார்த்துக்கொண்டும், பெருஞ் சோகமாக அழுதுகொண்டும் இருப்பதைத் தவிர அவர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.
வீரய்யாவும் ராமுவும் அவர்களது நண்பர்களும் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர். சனங்களின்

Page 143
276 குருதிமை
கதறல் அவர்களுக்குத் தாங்கமுடியாத வேதனையைக் கொடுத்தது.நாட்டிலிருந்து வந்தவர்கள்தான் திட்டமிட்டு இப்படியொரு கொடுமையைச் செய்துவிட்டு ஓடிவிட்டார் கள் என்பதனை அங்கிருந்தவர்கள் வீரய்யாவிடம் கூறினர். தோட்டத்தை விட்டு வெளியேருத ஒரே காரணத்திற் காக தொழிலாளர்களது உடைமைகளைச் சூறையாடி, இருப்பிடங்களைக் கொளுத்தி நாசம் செய்தால், தொழிலா ளர்களுக்குப் போராடுவதற்குத் தெம்பு இருக்காதென நினைத்துத் திட்டந் தீட்டி இப்படியொரு கொடூரச் செயலை நாட்டில் உள்ளவர்கள் செய்துவிட்டார்கள் என்பதை இப் போது வீரய்யா புரிந்துகொண்டான்.
அங்கிருந்தவர்களுக்கு உண்ண.உணவோ,உடுப்பதற்கு மாற்றுடையோ, வசிப்பதற்கு இடமோ எதுவுமே இல்லை. இப்படியான ஒரு பரிதாப நிலையில் தள்ளப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதற்கும்,மேலும் அசம்பாவிதங்கள் நடவாமல் தடுப்பதற்கும் உரிய பெரும் பொறுப்பு தனக்கு இருக்கிற தென்பதை வீரய்யா உணரத் தொடங்கினன்.
அங்கு நிகழ்ந்து முடிந்துவிட்ட சம்பவங்களையும், இழப் புகளையும் ஒவ்வொருவரும் அவனிடம் கூறியபோது, வீரய் யாவின் நெஞ்சத்தில் உதிரம் கொட்டியது.
சிலமணி நேரத்தின் பின் அங்கு நடந்து முடிந்துவிட்ட கொடுமைகளை அறிந்த பொலிசார் ஜிப்பில் தோட்டத்தை நோக்கி விரைந்து வந்தனர்.
அன்று எல்லோரும் இருப்பதற்கு இடமின்றிப் பக்கத்தி லுள்ள தேயிலைச் செடிகளின் அணைப்பில் அந்தப் பயங்கர மான இரவைக் கழித்தனர்.
率 事 அந்த இரவு நீண்ட இரவாகவே இருந்தது. தொழி லாளர்கள் எல்லோரும் விடிவை நோக்கி காத்திருந்தனர். மறுநாட்காலை நிலம் வெளித்தபோது இரவு நடந்த

குருதிமலை 277
கோரத்தின் சுவடுகள் ஒவ்வொன்முகத் தெரியத் தொடங் கின.
லயங்கள் யாவும் தரைமட்டமாகிப் போயிருந்தன, தீ இன்னும் அணையாமல், தணல்களிலிருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்தது. லயங்களைச் சுற்றியுள்ள பெருவிருட்சங் கள் எல்லாம் கருகிப்போய்க் கிடந்தன. மாமரங்களிலும் பலா மரங்களிலும் காய்கள் வெந்துபோய்த் தொங்கின. பக்கத்தில் இருந்த ஓரிரு மாட்டுத் தொழுவங்களும் தரை மட்டமாகிப் போய்க்கிடந்தன. சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்த பசு மாடுகளும் கன்றுகளும் மிகக் கோரமாய் வெந்துபோய்க் கிடந்தன.
கூரைத் தகரங்களெல்லாம் நெருப்பு வெக்கையில் வளைந்து சுருண்டுபோய் நிலத்தில் விழுந்து கிடந்தன. சுவர்கள் யாவும் கருமை படிந்தும், வெடித்தும் காட்சி யளித்தன. காம்பராவில் கிடந்த ராக்கைகளில் சேர்த்து வைத்திருந்த பொருட்களும் அட்டாளை மரங்களும் எல் லாமே எரிந்து சாம்பலாகிப் போய்க்கிடந்தன.
நெருப்பு ஒரு வாறு அணைந்தபோது,தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது காம்பராக்களுக்குள் சென்று ஏதாவது பொருட்கள் தீயின் பிடியிலிருந்து தப்பியிருக் கிறதா என்ற நப்பாசையோடு ஆராயத் தொடங்கினர் கள்.
வீரய்யாவும் ராமுவும் ஒவ்வொரு லயமாகச் சென்று தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுவிட்ட பெருந் துன்பத்தில் கலந்து கொண்டனர்.
மாயாண்டியும் மீனச்சியும் தலையிலே கைவைத்தபடி காம்பராவின் முன் வெளிவாசலில் அமர்ந்திருந்தனர்.செந் தாமரையினதும் மீனச்சியினதும் கழுத்திலும் காதிலும் இருந்த நகைகளெல்லாம் சூறையாடப்பட்டுவிட்டன. வீரய்யாவின் குடும்பத்தினர் என்ற காரணத்தினலோ

Page 144
278 குருதிமலை
என்னவோ குண்டர்கள் அந்த வீட்டில் தமது கைவரி சையைக் கூடுதலாகக் காட்டியிருந்தனர்.
பியசேனவின் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது, அவன் செந்தாமரையைப் பார்க்கும்போதெல்லாம் அவள் அழுதவண்ணம் இருந்தாள். அங்குள்ள ஒவ்வொருவரும் அவனைப் பார்க்கும் போதும் அவனுள் ஏதோ குற்ற உணர்வு ஏற்படுவதைப் போன்று அவன் உணர்ந்தான் "உனது ஆட்கள்தான் இப்படியொரு கொடுமையை எமக்கு இழைத்துவிட்டார்கள்’-என அவர்கள் குற்றஞ்சாட்டு வதைப் போன்று அவன் உணர்ந்தான். அவனது உள்ளம் பெரிதும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது.
அங்குள்ள பலருக்குச் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டிருந் தன. பலபெண்களின் காதிலிருந்த நகைகளைக் குண்டர்கள் முரட்டுத்தனமாகப் பிடுங்கி எடுத்ததினுல் ஏற்பட்ட காயம் அவர்களுக்கு வேதனையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. வீரய்யா, முதல் வேலையாகத் தோட்டத்து லொறியை வரவழைத்து காயமடைந்த எல்லோரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டிய ஒழுங்குகளைச் செய்தான். பியசேனவும் செபமாலையும் காயமடைந்தவர்களுக்கு வேண்டிய உதவி களைச் செய்து அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்த னர்.
இரவு நடந்த கோரத்தை அறிந்து பக்கத்து தோட்டத் தில் இருக்கும் தொழிலாளர்கள் பெருங்கூட்டமாக அங்கு படையெடுக்கத் தொடங்கினர். டவுணில் உள்ள மக்களும் தொழிற்சங்கவாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் இப் போது தோட்டத்துக்கு வரத்தொடங்கினர். எரிந்து சாம் பலாகிப்போய்க்கிடந்த லயன்களுக்கு பொலிசார் காவல் புரியத் தொடங்கினர். பக்கத்துத் தோட்டத்துரைமார்கள் ஒவ்வொருவராக அங்கு வந்து சேர்ந்தனர்.
முதல்நாள் இரவு எங்கோ லீவில் சென்றிருந்த தோட் டத்துரை சில்வா, தோட்டத்தில் நடந்து முடிந்த கோரத்

குருதிமலை 279
தைக் கேள்விப்பட்டதும் மறுநாள் பதறியடித்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்.
அங்கு வந்து சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் மனம் பதறினர். மனிதாபிமானமற்ற முறையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நடந்த அநியாயத்தைப் பார்த்துக் கொதித்தனர். தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தமக்கு நடந்த கொடுமைகளையும் இழப்புகளையும் பார்வையிட வந்தவர்களிடம் கூறிக் கதறியழுதனர்.
'ஐயா, ஏங் குடும்பத்துக்கு போன கெழமைதான் சேவைகாலப் பணம் வந்திச்சி அந்தப் பணத்தை எம் பொட்டியில வச்சிருந்தேன்; அவ்வளவு பணமும் எரிஞ்சு போச் சுங்க.." எனக் கூறி விம்மினர் ஒரு வயோதிபர்,
“என் மாடெல்லாம் உசிரோட எரிஞ்சு வெந்து போச் சுங்க; அத நம்பித்தான் நான் சீவிச்சுக்கிட்டிருந்தேன்" எனக் கதறினன் ஒரு நொண் டி.
"வாற மாசம் நான் இந்தியாவுக்கு போயாகனும் அதுக் குள்ள இப்புடி ஒரு அநியாயம் நடந்திருச்சுங்க என் பாஸ் போட்டு எல்லாம் எரிஞ்சு சாம்பலாப் போச் சிங்க' எனக் கூறி கண்கலங்கினர் மாரிமுத்துத் தலைவர்.
‘எங்க வூட்டுல ஒண்ணுமே இருக்கல்லீங்க. மாத்திக் கட்டுறதுக்கு மட்டும் ரெண்டு துணி கெடந்திச்சி. அது தானுக எரிஞ்சு போயிருச்சு" எனக் கவலையுடன் கூறினன் குப்பன்.
"ஏங் காதுல கெடந்த நகையைக் கழட்டித் தரச் சொல்லி ஒருத்தன் கேட்டானுங்க, நான் தப்பி ஓடலாமுனு வெளியே ஒடினேன். ஏம்புள்ளையத் தூக்கி வச்சுக்கிட்டு வெட்டப்போறேனு கழுத்தில கத்திய வச்சான்; நான் பத றிப்போய் ஒரு காதுல இருந்த நகையைக் கழட்டப்போ னேன்; அதுக்குள்ள அவேன் மற்றக் காதுல இருந்ததைப் பிச்சு எடுத்துக்கிட்டானுங்க" எனக் கூறியபடி பிரிந்து

Page 145
280 குருதிமலை
போயிருந்த தனது காதைத் காண்பித்துக் கண்கலங்கினுள் பெண்ணுெருத்தி.
"அடுத்த நேரச் சாப்பாட்டுக்கே வழியில்லாம செஞ் சுப்புட்டாங்களே, இந்தப் பாவிக" எனக் கூறி தலையில் கை வைத்தவண்ணம் நிலத்திலே உட்கார்ந்தார் கறுப்பண்ணன் கங்காணி,
"புள்ளைங்க எல்லாம் பசியில கதறுதுங்க,என்ன செய் யிற துன்னே எங்களுக்குப் புரியல் லீங்க" எனக்கூறிக் கண் கலங்கியபடி அருகே நின்ற தன் குழந்தையை வாஞ்சையு டன் தடவினுள் ஒரு தாய்.
"போன கெழமைதாங்க எனக்குப் பெரசாவுரிமை கெடைச்சிச் சு. ரெம்ப கஷ்டப்பட்டுத்தானுங்க அத எடுத் தேன். அதெல்லாம் எரிஞ்சு போச் சுங்க" எனக் கூறிய ஒரு தொழிலாளி விரக்தியோடு சிரித்துவிட்டு, "அந்தக் கட தாசியெல்லாங் வெறுங் கடதாசிதானுங்களே; இந்த நாட் டுல எங்களுக்கு என்னதாங்க உரிமையிருக்கு? நாங்க எப்ப வும் அடிமைதாங்க" எனச் சாகமாகக் கூறினர்.
வயதுபோன பெண்ணுெருத்தி தனது ஒரே மகளைக் காண்பித்து , ஐயோ இந்தப் புள்ளைக்கு நடந்த கொடு மையை எப்புடீங்க என் வாயால சொல்லுவேன்" எனக் கூறிவிட்டுச் சோகம் தாங்காமல் பெரிதாக விம்மினுள். அவளது மகளின் உடைகள் யாவும் கிழிந்துபோய் இருந்தன. முகத்திலும் கைகளிலும் சிறிய காயங்கள் தென் பட்டன. அந்தப்பெண் உடலெல்லாம் குறுகத் தன் இரு கைகளாலும் முகத்தை மூடியபடி விம்மிக்கொண்டிருந் தாள்.
அங்கு நின்ற ஒவ்வொருவருடைய மனதையும் தொழி லாளருக்கு நடந்த துன்பங்கள் பெரிதும் கலக்கின. அத னைக்கண்டு சகிக்க முடியாத பலர் கண்கலங்கினர். ஒரு சிலர் வாய்விட்டுக் கதறினர், டவுனில் உள்ள கடைக்காரர்

குருதிமலை 28
களும் பக்கத்து தோட்டத்துத் தொழிலாளர்களும் தொழிற்சங்கவாதிகளும், ஒருமுகமாகச் சேர்ந்து பாதிக் கப்பட்ட எல்லோருக்கும் உதவிகள் செய்வதற்கு முயன் றனர்.
தம்மால் இயன்ற சிறுதொகைப் பணத்தைச் சிலர் கொடுத்து உதவினர். சிலர் மாற்றுடைகள் கொடுத்து உத வினர், இன்னும் சிலர் ஒருநேர உணவைக் கொடுத்தனர். வேறுசிலர் அரிசி மாவு முதலிய பொருட்களை வழங்கினர். லயங்கள் எரிக்கப்பட்ட செய்தியறிந்ததும் கிராமத்தி லிருந்து முதியான்சேயும் சுமணபாலாவும் தோட்டத்துக்கு வந்து நடந்த கொடுமைகளை பார்வையிட்டனர்.
அங்கு நடந்த கோரத்தைப் பார்த்த முதியான்சேயின் உள்ளம் பதறியது. இப்படியொரு கொடுமையைச் செய்து தான் கிராமத்து மக்கள் காணி பெறவேண்டுமா? அவர் எண்ணி மனம் மறுகினர்.
"இந்தக் கொடுமைகளுக் கெல்லாம் காரணமாக இருந்த பண்டா முதலாளி, கிராம சேவகர், கண்டக்டர் முதலியோரை நான் பொலிசில் காட்டிக் கொடுக்கப் போகிறேன்" என சூளுரைத்தான் சுமணபால.
பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொரு வரையும் அவர்கள் தனித்தனியாகச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர். எதைச் செய்துமென்ன தொழிலாளர்கள் இழந்த எல்லாவற்றையுமே இனி யாரால்தான் திருப்பி கொடுக்க முடியும்,

Page 146
282 குருதிமலை
அத்தியாயம் நாற்பத்துநான்கு
திக்கப்பட்ட மக்களைத் தோட்டத்துரை அடிக் கடி வந்து சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். பிற இடங்களிலி ருந்து பார்வையிட வந்தவர்களும், அயல் தோட்டத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு த ம் மா லியன்ற உதவிகளைச் செய்தனர்.
முன்பு காம்பராக்களில் தனித்தனிக் குடும்பமாக வாழ்ந்த தொழிலாளர்கள் எல்லோருமே இப்போது ஒரே குடும்பம் போன்று கூட்டமாக தோட்டப் பாடசாலைகளி லும், பிள்ளை மடுவத்திலும் தங்கியிருந்தனர். இதனுல் பலர் தம்மிடையே இருந்த சிறு மனவேற்றுமைகளையும் மறந்து மிக அந்நியோன்யமாக ஒருவரோடு ஒருவர் பழ கினர். மாரிமுத்துத் தலைவர், கறுப்பண்ணன் கங்காணி முதலியோர் இப்போது வீரய்யாவுக்குப் பக்கபலமாக நின்று காரியங்களைக் கவனித்தனர்.
பியசேன தன்னைச் சந்திக்கவந்திருந்த முதியான்சே, சுமணபால முதலியோரிடம், இனி தான் நாட்டுக்கு வரப்போவதில்லையெனக் கூறிவிட்டு தோட்டத் தொழி லாளர்களுடனேயே இருந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொடுத்துக்கொண்டிருந்தான்
தோட்டத்துரை அன்று தொழிலாளர்கள் குழுமியி ருந்த இடத்திற்கு வந்தார். அங்கு கூடியிருந்த தொழி லாளர்களைப் பார்த்து அவர் தனது மனதிலே தோன்றிய கருத்துக்களைத் தெரிவித்தார்.

குருதிமலை 283
"இப்ப நீங்க ஓங்களுடைய சாமானங் எல்லாங் பறி கொடுத்து, வூடுங் இல்லாம, சாப்பிடுறதுக்கு சாப்பாடுங் இல்லாம, இனிமே இந்தத் தோட்டத்தில இருக்கிறது, மிச்சங் கஷ்டங்தானே. இனி இங்க இருந்துங் பிரயோ, சனங் இல்ல. அரசாங்கம் சொன்ன மாதிரி, வேற தோட் டத்துக்கு போன ஓங்களுக்கு எல்லா வசதியுங் கெடைக் கும். நீங்க எல்லாங் போறதுதாங் நல்லது."
"தொர எங்களுடைய உடமை எல்லாத்தையும் பறிச்சி, இருக்க எடங்கூட இல்லாம செஞ்சா, நாங்க தோட்டத்தவுட்டு போயிடுவோமென்னு திட்டம் போட் டுத்தான் நாட்டாளுக இப்பு டி செஞ்சிருக்காங்க, ஆன நாங்க ஒரு நாளும் இந்தத் தோட்டத்தவுட்டுப் போக மாட்டோமுங்க" என வீரய்யா கூறினன். அவனது குர லில் உறுதி தொனித்தது.
"நாங்க மட்டும் இல்லீங்க தொர, ஒங்களையுந்தான் இந்தத் தோட்டத்தைவுட்டு போகவுடமாட்டோம். என்ன கஷ்டம் வந்தாலும் நாங்க பயந்துக்கிட்டு மட்டும் தோட் டத்தவுட்டுப் போகமாட்டோம்" எனப் படபடத்தான் ürtÇıp.
"ஏய் நீ ரெண்டு பேருங் மிச்சங் முட்டாள்கதை பேசுறது. ஒங்க பேச்சக் கேட்டுத் தான் இந்த ஆளுங் களுக்கு எல்லாங் இப்புடி வந்தது" எனக் கோபத்துடன் கூறினர் துரை.
"ஓங்க பேச்சக் கேட்டுக்கிட்டு நாங்கெல்லாம் தோட் டத்தவுட்டுப் போகமாட்டோம். சாகிறவரைக்கும் இந் தத் தோட்டத்திலதான் இருப்போம்" என்ருன் ராமு.
*தோட்டம் மூடியாச்சு; நீங்கெல்லாம் இங்க இருந்து என்ன செய்யப் போறது?" எனக் கேட்டார் துரை.
"தோட்டத்த மூட நாங்க வுடமாட்டோங்க தொர. அப்புடி மூடினலும், நாங்க நட்டு வளத்த தேயிலை இருக்கு

Page 147
284 குருதிமலை
மட்டும் நாங்க பொழச்சுக்குவோமுங்க" என்ருர் அங்கே நின்ற கறுப்பண்ணன் கங்காணி நிதானமாக.
"இனிமே நாங்க தோட்டத்தவுட்டுப்போஞ, ஒவ் வொரு தோட்டத்திலும் இருக்கிற தொழிலாளிங்களுக்கும் எங்களுக்கு நடந்தமாதிரித்தான் நடக்கும்" என்ருன் வீரய்யா.
'நீ என்ன மனுசன் கதைக்கிறது? நீங்க எல்லாங் தோட்டத்தவுட்டுப்போன மத்த தோட்டத்து ஆளுங்க ளுக்கு ஏன் கரைச்சல் வாறது?" எனக் குழப்பத்துடன் கேட்டார் துரை.
'இப்ப நாங்கெல்லாம் தோட்டத்தவுட்டுப் போஞ. தோட்டத் தொழிலாளிங்களை பயங்காட்டி வெரட் டிப் புடலாமுனு எல்லாரும் நெனைச்சுக்கிடுவாங்க. அப்புறம் மத்த தோட்டங்களில இருக்கிற தொழிலாளிங்களையும் அநியாயம் செஞ்சி வெரட்டப் பாப்பாங்க. தோட்டத் தொழிலாளிங்க கோழைகள் இல்லேங்கிறதை நாங்க இங்கேயே இருந்து போராடிக் காட்டத்தான் போருேம்" என வீரய்யா விளக்கமாகக் கூறினன்.
" நாங்க, எங்க இனத்தைக் காட்டிக்கொடுக்கமாட் டோமுங்க தொர, உயிரைக் கொடுத்தாவது போரா டியே தீருவோம்" என்ருன் ராமு.
"என்னு மனுசன் போராட்டம், போராட்டமுனு சொல்லி பைத்தியக்காரன் மாதிரி பேசுறது. இப்புடி பேசித்தாங் இன்னிக்கு ஒன்னும் இல்லாம நீங்க எல்லாங் இருக்கிறது" என்ருர் துரை எரிச்சலுடன்.
"எங்ககிட்ட ஒன் னு ம் இல்லைத்தாங்க தொர. நாங்க எல்லாத்தையும் இழந்திட்டோம். எங்க உயிர் தான் மிச்சமா இருக்குங்க. ஆன இது நாங்க பொறந்த மண் எங்கிற உரிமையை நாங்க இன்னும் இழக்கல்லீங்க. அந்த உரிமைக்காக எங்ககிட்ட மிச்சமா இருக்கிற இந்த உயிரக் கொடுத்தாவது போராடத் தா ன் போருேம்"

குருதிமலை 285
என்ருன் வீரய்யா. இதைக் கூறும்போது அவன் உணர்ச்சி வசப்பட்டான்.
"ஆமாங்க. நாங்க இந்த எடத்தவுட்டுப் போகமாட் டோம்." எனப் பல குர ல் க ள் அவனது கூற்றைத் தொடர்ந்து ஒலித்தன.
"ஏய் ஏய், மிச்சங் சத்தங் போடவேணும். நீ ங் க போகாட்டி, நாட்டில இருக்கிற ஆளுங்களுக்கு காணி கிடைக்கிறது இல்லத்தானே. அப்புறங் உங்களுக்கு மிச் சங் கரச்சல்தாங் வாறது" என்ருர் துரை கோபத்துடன். ""நாட்டாளுங்களுக்கு நாங்க காணி கொடுக்கவேணு முனு சொல்லல்ல. அவுங்களுக்கு காணி கொடுக்கிறதுக் காக எங்கள தோட்டத்த வுட்டு வெரட்டவேணுமுன்னு தான் சொல்லுருேம்" என்ருன் வீரய்யா,
"அதிக்கி என்னதாங் செய்ய முடியுங். வேற வழி இல்லத்தானே" என்ருர் துரை.
"எங்களை எல்லாம் அனுப்பிவிட்டுத்தான் காணி குடுக்கோணுமுங்கிறது இ ல் லீ ங் க தொர. எங் களை இப்புடியே வச்சுக்கிட்டு அவுங்களுக்கும் காணி கொடுக்கலாந்தானுங்களே' என்ருன் வீரய்யா.
அவனது கூற்று துரையைச் சிந்திக்கவைத்தது. "ஆமாங்க தொர. ந ம் ம தோட்டத்திலதான் நெறைய எடம் சும்மா கெடக்குங்களே. அந்த இடத்தை யெல்லாம் நாட்டு ஆளுங்களுக்கு பிரிச்சி கொடுக்க முடி யுந்தானுங்களே' என்ருர் மாரிமுத்துத் தலைவர்.
*" ஹோ. அது அப்படி செய்ய முடியுங்தான். ஆன அரசாங்கம் இப்ப வேற மாதிரித்தானே செஞ்சிக்கிட்டு போறது" என்ருர் துரை.
'அப்புடீன தோட்டத் தொழிலாளிங்களோட நாட் டாளுங்களும் ஒரே தோட்டத்துல ஒத்துமையா இருக்கிறத அரசாங்கம் விரும்பலீங்களா?" எனக் கே ட் டா ன் Gruiuuurr.

Page 148
286 குருதிமலை
வீரய்யா இப்படிக் கேட்டதும் துரைக்கு ஒரே குழப்ப மாக இருந்தது.
**இதுபத்தி நாங் ஒன்னுங் சொல்லமுடியாது. இது எல்லாங் அரசாங்கத்தில பேசிதானே செய்யறது. அதி ஞல அவுங்க சொல்லுறபடிதாங் நாங் செய்யவேனுங்" எனக் கூறிவிட்டு அவ்விடத்தை வி ட் டு ப் புறப்பட்டுச் சென்ருர் துரை.
வீரய்யா கூறிய கருத்துக்கள் யாவும் துரையின் மூளை யைப் போட்டுக் குடைந்துகொண்டு இருந்தன.
தோட்டத்தொழிலாளர்களோடு கிராமத்து மக்களை யும் குடியிருத்தி அவர்களது ஒற்றுமையை வலுப்படுத்து வதற்கு ஏற்ற ஒரு நல்ல வழியிருக்கும்போது ஏன் தோட் டத் தொழிலாளர்களை வெளியேற்ற அரசியல்வாதிகள் முனைகிருர்கள்?
தோட்டத் தொழிலாளர்களோடு கிராமத்து மக்கள், ஒன்ருக வாழ்வதை ஏன் இந்த அரசியல்வாதிகள் விரும்ப வில்லை?
"ஏன்? ஏன்? ஏன்?" -துரைக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
அத்தியாயம் நாற்பத்தைந்து
UT 6ðið T.... டாண். மடுவத்திலிருந்து மணியோசை கேட்டுக்கொண்டிருந் தது. தூரத்தே மடுவத்தை நோக்கி மூன்று வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.

குருதிமலை 287
மணியோசை கேட்டதும் தொழிலாளர்கள் எல்லோ ரும் மடுவத்தை நோக்கி விரைந்தனர். முதியவர்களும், இளைஞர்களும், பெண்களும், சிறுவர்களுமாக அணிதிரண்டு மடுவத்தை வந்தடைந்தனர்.
நில அளவையாளர் மீண்டும் அங்கு வரக் கூடும் என் பதை அவர்கள் எல்லோரும் எதிர்பார்த்துத்தான் இருந் தனர். அங்கு வந்து சேர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொரு வரது மனதிலும் விரக்திதான் மிஞ்சியிருந்தது. சகலதை யுமிழந்து நிற்கும் அவர்கள், இப்போது எதையும் ஏற்கத் தயாராக இருந்தனர். எதுவந்தாலும் அதனை எதிர்த்துப் போராடும் மனநிலை அவர்களுக்கு உருவாகியிருந்தது. அவர்கள் எதையும் துச்சமாக மதிக்கத் தொடங்கியிருந்த 6r.
பியசேன அந்தச் சனவெள்ளத்தின் முன்பகுதியில் நின்று கொண்டிருந்தான். தோட்டத் தொழிலாளர்களின் துன்பங்களில் பங்குபற்றிய அவன், இப்போது அவர்களில் ஒருவணுக மாறியிருந்தான்.
மடுவத்தில் மக்கள் வெள்ளம் அலைமோ தி நிற்பதைக் கண்டதும் அந்த மூன்று வாகனங்களும் அங்கு நிறுத்தப் பட்டன. முன்னும் பின்னுமாக நின்ற இரு வாகனங்களி லும் பொலிஸ் படையினர் இருந்தனர். நடுவிவ் உள்ள வாகனத்தில் நில அளவையாளர்கள் காணப்பட்டனர். முன்பு அங்கு வந்தவர்களினல் காரியத்தைச் சாதிக்க முடி யாமல் போய்விட்டதினலோ என்னவோ இப்போது மேலிடத்திலிருந்து புதியவர்கள் அனுப்பப்பட்டிருந்த னர். வாகனத்தில் இருந்த பொலிசார் ஒவ்வொருவராகக் கீழே குதித்தனர். அவர்கள் ஒவ்வொருவரது கைகளிலும் துப்பாக்கிகள் காணப்பட்டன.
தோட்டத் தொழிலாளர்கள் குழப்பம் விளைவித்ததன் காரணத்தினலேதான், அவர்களின் உடைமைகளுக்கும், லயங்களுக்கும் சேதம் ஏற்பட்டது என்ற கருத்தினை

Page 149
288 குருதிமலை
அடிப்படையாகக் கொண்டு, தோட்டத்தில் குழப்பம் விளைவிப்பவர்களை அடக்குவதற்காகவும், நில அளவையா ளரைத் தடுத்து நிறுத்துபவர்களை எதிர்ப்பதற்காகவும் இப்போது பொலிஸ் படையினர் அங்கு வந்திருந்தனர்.
"ஏய் ரோட்டுல மறிச்சுக்கிட்டு நிக்காம எல்லாங் தூரப் போ' எனக் கூறிவிட்டு அங்குநின்றவர்களை விரட்டு வதற்காக துவக்கை ஓங்கினர் இன்ஸ்பெக்டர்.
அங்கு நின்ற எவருமே அவரது மிரட்டலுக்குப் பய படவில்லை,
அணி திரண்டிருந்த தொழிலாளர்கள், 'நாங்க வெலகமாட்டோம்" எனப் பலமாகக் கத்திக்கொண்டே பொலிஸ் படையை நோக்கி முன்னேறினர்.
*"ஏய் இனிமே யாராவது ஒரு அடி முன்னுக்கு வச்சா லும் சுட்டுப் போடுவேன்" எனக் கத்திய இன்ஸ்பெக்டர் ஆகாயத்தை நோக்கி மூன்று முறை சுட்டார். "எங்க எல்லாரையுங் வேணுமுணு சுட்டுக்கொன்னுப்புட்டு எங்க பொணத்துக்கு மேலே ஜீப்ப ஒட்டிக்கிட்டு போங்க" எனக் கூறிய ராமு தனது மார்பைத் திறந்து காட்டிக் கொண்டு முன்னே பாய்ந்தான்.
இன்ஸ்பெக்டர் திடீரென அவனது தலையின் மேல் துவக்குப் பிடியினல் ஓங்கிப் பலமாக அடித்தார். ராமு வின் தலையில் இருந்து குயீரென இரத்தம் பெருகியது. ராமு வெறிகொண்டவன் போல் இன்ஸ்பெக்டரின் மேல் பாய்ந்தான்.
தனது கையிலிருந்த துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் அவனை மாறி மாறிப் பலதடவை தாக்கினர்.
அதைப் பார்த்த வீரய்யா, இன்ஸ்பெக்டர் ராமு வைத் தாக்காமல் தடுப்பதற்காக அவரது கையிலே இருந்த துப்பாக்கியைத் தன் இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக்கொண்டான். இன்ஸ்பெக்டர் அவனது பிடியில்

குருதிமலை 289
இருந்து துப்பாக்கியை இழுத்துப் பறிக்க முயன்ருர்.ஆனல் வீரய்யா தனது அசுரப்பிடியை விடவேயில்லை. இருவரும் துப்பாக்கியைப் பிடித்தபடி போராடிக்கொண்டிருந்தனர்.
ராமு மயக்கமுற்று கீழே சாய்ந்துவிட்டான். வீரய்யா இன்ஸ்பெக்டருடன் போராடுவதைப்பார்த்த பியசேனவும், செபமாலையும் ஆவேசத்துடன் இன்ஸ்பெக் டரை தாக்கும் நோக்கத்துடன் முன்னே பாய்ந்தனர்.
கூட்டத்திலிருந்த பலர் இப்போது வெறிகொண்டவர் களாகப் பொலிசாரை நோக்கிப் பாய்ந்தனர். இன்ஸ்பெக் டர் போராடிக் களைத் துப் போய் துவக்கின் விசையை அழுத்தினர்.
‘டுமீல் என்ற சத்தத்துடன் பக்கத்தில் பாய்ந்து வந்த செபமாலையின் காலில் குண்டு பாய்ந்தது.செபமாலை யும் காலைப் பிடித்தபடி கீழே சாய்ந்தான்.
பியசேன இப்போது வெறிகொண்டவன் போல் இன்ஸ்பெக்டரின் மேல் பாய்ந்து அவரின் முகத்திலே பல மாகத் தாக்கினன். இன்ஸ்பெக்டர் நிலைதடுமாறினர். அவ ரது மூக்கிலிருந்து இரத்தம் வழியத் தொடங்கியது.
பியசேன தொடர்ந்தும் இன்ஸ்பெக்டரின் முகத்தில் தாக்கிய வண்ணம் இருந்தான். VA பக்கத்திலே நின்ற பொலிஸ்காரர் பியசேனவைச் சுட்டு வீழ்த்தும் நோக்கத்துடன் அவனது நெஞ்சைப் பார்த்துக் குறி வைத்தார்.
அதனைக் கவனித்த வீரய்யா அந்தப் பொலிஸ்கார ரின் துப்பாக்கியை தட்டிவிடும் நோக்கத்துடன் குறுக்கே பாய்ந்தான்.
டுமீல்."
பியசேனவின் மேல் பாயவிருந்த குண்டு வீரய்யா வின் மார்பைத் துழைத்தது.

Page 150
29 O குருதிமலை
வீரய்யா அசுர வேகத்துடன் இப்போது பொலிஸ் காரரின் மேல் பாய்ந்தான். டுமீல்- டுமீல்குண்டுகள் மாறி மாறி அவனது நெஞ்சைத் துளைத் தன. மறுகணம் அவனது உடல் தள்ளாடியது. கண்கள் இருண்டு கொண்டு வந்தன, அவன் கீழே சாய்ந்தான்.
வீரப்யா சுடப்பட்டுக் கீழே சாய்ந்ததைப் பார்த்ததும் அங்கு நின்ற தொழிலாளர்களின் உள்ளத்தில் போராட்ட வெறி கிளர்ந்து எழுந்தது. நீட்டப்பட்டிருந்த துப்பாக்கி களின் எதிரே எதற்கும் அஞ்சாதவர்களாக, அவர்கள் வெறிகொண்டவர்கள் போலப் பொலிசாரை நோக்கிப் பாய்ந்தனர். அவர்களிடையே காணப்பட்ட வெறியை யும் வேகத்தையும் ஆயிரமாயிரம் துப்பாக்கிகளால் கூடத் தணிக்க முடியாது என்பதைப் பொலிசார் பார்த்துத் திகைத்தனர்.
நிலைமையை இனி அவர்களால் கட்டுப்படுத்த முடி யாது என்பதனை அவர்கள் உணர்ந்து கொண்டனர். இனிமேலும் அங்கு தாமதித்தால் அந்தச் சண்வெள்ளத் தின் வேகத்துக்கு தாங்களும் பலியாகிவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுமோ என அச்சமுற்றனர். மறுகணம் எல்லோரும் பாய்ந்து தமது வாகனங்களுக்குள் ஏறிக் கொண்டனர்.
கீழே இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த வீரய்யா வின் அருகில் மீனச்சி அமர்ந்து அவனது தலையை மடி யிலே எடுத்து வைத்தாள்.
அவளது கண்களிலிருந்து கண்ணிர் ஆருகப் பெருகி யது. பெருஞ் சோகத்துடன் அவள் விம்மினள்.
வீரய்யாவின் உதடுகள் அசைந்தன. அவன் தாயிடம் ஏதோ கூறுவதற்கு முயன்முன்.
மறுகணம் அவனது தலை, அவளது மடியில் சாய்ந்தது. மீனச்சியின் இதயத்தைப் பிளந்து கொண்டு பெரிதாக விம்மலொன்று வெளிப்பட்டது.

குருதிமலே 291
அப்போது அங்கே ஓடிவந்த செந்தாமரை இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த வீரய்யாவைப் பார்த்ததும் * "ஐயோ அண்ணு." எனக் கதறியபடி அவன் மேல் வீழ்ந்து மூர்ச்சையானள்.
வீரப்யாவின் பாதங்களைப் பிடித்தவாறு மண்டியிட் டிருந்த பியசேனவின் கண்களில் இருந்து கண்ணிர் ஆரு கப் பெருகிக் கொண்டிருந்தது. அவனது நெஞ்சைத் துளைக்க இருந்த குண்டைத் தனது நெஞ்சிலே ஏற்று உயிரை மாய்த்துக் கொண்ட அந்தத் தியாகியின் பாதங் களைக் கண்ணிரால் கழுவத்தான் அவனுல் முடிந்தது.
இப்போது பொலிசாரின் ஜீப் பின்னுேக்கி வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.
சனசமுத்திரம் முன்னுேக்கிப் பாய்ந்து கொண்டிருந் தது - அசுரவேகத்தில் பாய்ந்து கொண்டிருந்தது.
இனி அந்த வெள்ளத்திற்கு யாராலுமே அணை போட (Up) Lq?- tLu FTg5I .
வீரய்யாவின் உயிர்த்தியாகமும், தொழிலாளர்களின் போராட்டம் பத்திரிகை வாயிலாகவும், பார்வையாளர் கள் மூலமாகவும், நாடெங்கும் காட்டுத்தீ போல் பரவி யது. இதனுல் பொதுசன அபிப்பிராயம் அவர்களின் போராட்டத்துக்குச் சாதகமாக அமைந்தது. தொழிலா ளர்களை அகற்றுவதில் தீவிரமாக நின்ற அரசியல்வாதிகள் செயலிழந்தனர். அவர்களுக்கும் மேலான சக்திகள் இப் போது செயல்படத் தொடங்கின. தொழிலாளர்களுக்கு தீங்கு விளைவித்த கண்டக்டர், கிராமசேவகர், பண்டா முதலாளி முதலியோர் சட்டத்தின் பிடியில் சிறைப்பட்
டனர்.
வீரய்யாவின் உடலில் இருந்து வடிந்த குருதியில், தோய்ந்து செழுமையுற்ற அந்த மலைப் பிரதேசத்தில், இப் போது தேயிலைச் செடிகள் புதிதாகத் துளிர்வி. த் தொடங்கின.
★

Page 151
*ழத்தின் தலைசிறந்த எழுத்தாளர் களின் தரமான படைப்புக்கள் மாதா மாதம் வீரகேசரி பிரசுரமாக நூலுரு வில் வெளிவருகின்றன.
தவறமல் இவைகளைப் பெற்று உங் கள் இல்லத்தில் ஒர் ‘குடும்ப நூல் நிலை யத்தை ஆரம்பியுங்கள்.
ஆறு புத்தகங்களை அடுத்து நீங்கள் வாங்கினுல், ஏழாவது புத்தகம் இணு மாக அனுப்பி வைக்கப்படும். இப் பரி சுத் திட்டத்தில் ஏற்கனவே ஆயிரத் துக்கு மேற்பட்ட வாசகர்கள் இணுமாக நூல்களைப் பெற்றுள்ளனர்.
புத்தகங்களைக் கிரமமாகப் பெறுவ தில் சிரமமிருந்தால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய விலாசம்:
விநியோக நிர்வாகி, வீரகேசரி, த. பெ. 160, கொழும்பு.


Page 152


Page 153
( ஆசிரியர் கூறுகின்
மலேயக மக்களி
காலந்தொட்டே சிக்
நிறைந்ததாக இருந்
நியர்களின் ஆதிக்கத் கள் இருந்தபோது அ சிக்கித்தவித்த தோ: தமது விடிவை நோ திருந்த துே?ளயில்ே
அடங்கள் பாவும் தேசி
சரித்திரமுக்கிய நிகழ்ச்சியின் பயணுகத் காலம் ஏற்படப்பே தொழிலாளர்கள் நம் தோட்டங்கரே அண்டி ளும் தமது சுபீட்சமா கத் தஃவப்பட்டனர். வாதிகள் சிஐச் சந்த தமது பதவிகளேத் து தொடங்கினர்.
இதன் கீாரண்ம சார்ந்த மக்களிடைே படத் தொடங்கின. 5 ருந்து தொழிலாளர் முயற்சிகள் மேற்கொ எதிர்த்து நின்ற தே வினருக்குள்ளானுர்கிள் கள் குறைபாடப்பட் தீயில் வேந்து சாம்ப
இவற்றையெல்லா போது எனது நெஞ்: தொழிலாளர்கள் இந் வைத்துள்ள பாசம் தோட்டது. அவர்கள டத்தில் ஒரு தொழிலா ாதார நிருப்திவிர்த்து எனக்கு ஏற்பட்ட உர் வாகவே இந்நாவல் !!!!
வீரகேசரி பி
 

ருர்:
*ன் வாழ்க்கை ஆரம்ப கல்களும் துன்பங்களும் து வந்திருக்கிறது. ரேந் தில் தேயிலேத் தோட்டங் வரிகளின் கெடுபிடிகளில் ட்டத் தொழிலாள்ர்கள் "க்கி ஏக்கத்துடன் காத் நான் தேயிஐத் தோட் யமயமாக்கப்பட்டன.
த்துவம் வாய்ந்த இந்த 1 தமக்கு ஒரு நல்ல எதிர் ாகிறதோ தோட்டத் பினர். அதேசமயத்தில் Lயுள்ள கிராமிப்புற மக்க ஈவாழ்வை எதிர்ப்ார்க் இவ்வேளேயில் அரசியல் ர்ப்பவாதிகளாக மாறித் ஷ் பிரயோகம் செய்யத்
严品 இரு சமூகங்களேச் ய மனக்கிளர்வுகள் ஏற் ஒரு சில தோட்டங்களிலி ளே வெளியேற்றுவதற்கு "ள்ளப்பட்டன. دية وقتr நாழிலாளர்கள் சித்திர
அவர்களது உடைமை ட்டன; இருப்பிடங்கள் గ్రాTT.
"rı நேரில் பார்த்த சு பதறியது. -தோட்டத் நாட்டு மண்ணின் மேல்
எனது இதயத்தைத் rது நீரிமைப் போராட் "ணி வீரமரணம் எய்தியது
வைத்தது. நஜல் ாத்தா 堂 : உருப்பெறத் தொடங்கி
ரசுரம் - EB

Page 154
27O தி. ஞானசேகரன் சிறுகதைகள்
தி. ஞானசேகரன் தமிழ்த் தேசியவுணர்வுக் காலகட்டத்தில் எழுதிய சிறுகதைகளில் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், ராக்கிங், சீட்டரிசி, திருப்புமுனைத் தரிப்புகள், கருவறை எழுதிய தீர்ப்பு, சோதனை ஆகிய சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை. சீட்டரிசி, திருப்புமுனைத் தரிப்புகள் ஆகிய இரு சிறுகதைகளும் ஞானசேகரன் வாழ்கின்ற மலையகப் பெண்களின் உணர்வுகளின் சோகச் சித்திரங்களாம். சோதனை, அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், கருவறை எழுதிய தீர்ப்பு ஆகிய சிறுகதைகள் யுத்தச் சூழலினையும் இனவொடுக்கல் பிரச்சனைகளையும் சித்திரிக்கின்ற சிறுகதைகளாகவுள்ளன. ‘அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் குறியீட்டுச் சிறுகதையாகும். கலாநுட்பமாகவும் கவித்துவமாகவும் படைக்கப்பட்டுள்ளது. வடபகுதி எழுத்தாளர்கள் எழுதுகின்ற யுத்தகாலச் சிறுகதைகளுக்கும் ஏனைய பிரதேச எழுத்தாளர்களின் யுத்தகாலச் சிறுகதைகளுக்குமிடையிலான பெரும்வேறுபாடு மானிடநேய நோக்கிலேயே உள்ளது. முன்னவர்கள் எதிரிகளாகச் சித்தரிக்கும் பாத்திரங்களைப் பின்னவர்கள் மானிடநேயத்துடன் சித்தரிப்பதன் மூலம் சமூகயதார்த்தம் அங்கு பேணப்படுகிறது. முன்னைய சிறுகதைகளிலும் பார்க்க இக்காலகட்டச் சிறுகதைகள் தி. ஞானசேகரனைத் தரமான ஈழத்துச் சிறுகதையாளர் வரிசையில் சேர்க்கின்றன.
செங்கை ஆழியான் ஈழத்துச்சிறுகதை வரலாறு
★女★女★
சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பலதுறைகளில் தடம் பதித்த இலக்கியவாதியான தி. ஞானசேகரனுள் உறைந்து நிற்கும் மருத்துவனை வெளிப்படுத்தும் ஒரு சிறுகதைதான் “கருவறை எழுதிய தீர்ப்பு செயற்கை முறை கருத்தரித்தல் பற்றிய பல அரிய மருத்துவத் தரவுகளை இலாவகமாகவும், கதையோட்டத்திற்கு ஊறு செய்யாமலும், வாசகனை ஆர்வத்தோடு வாசிக்கும் வண்ணம் இக்கதையில் ஞானசேகரன் புகுத்தியுள்ளமை வியந்து பாராட்டத்தக்கது.
இலங்கை இனப்பிரச்சனை பற்றிய சிறந்த சிறுகதைகளில் முக்கியமானதாகக் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் இவரது “அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’ இலங்கை இனப்பிரச்சனையின் ஆணிவேர்வரை ஊடுருவிப் பாயும் கனதியும் வீச்சும் கொண்டது. ஆசிரியர் தென்பகுதியில் வாழ்வதால் பெரும்பான்மை இன மக்களின் உணர்வுகளையும் மனோநிலையையும் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார். அதேநேரம் அடிவாங்கிய போதெல்லாம் தாயக மண்ணில் தஞ்சம் புகுந்த மக்கள் இறுதியில் தம் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக

தி ஞானசேகரன் சிறுகதைகள் பற்றி. 271
ஆக்ரோசமாகக் கிளர்ந்தெழுவதை, தெளிவான, சுருக்கமான, ஆனால் உள்ளர்த்தங்கள் செறிந்த எழுத்தில் வார்த்தெடுத்திருக்கிறார். வெறுமனே ‘நாய் என்று சொல்லாது அல்சேஷன் எனக் குறிப்பிட்டிருப்பது எமது சிந்தனைக்கு விருந்தாகும்.
டாக்டர் எம். கே. முருகானந்தன்
★★女★女
‘கருவறை எழுதிய தீர்ப்பு’ என்ற தலைப்பில் கதாசிரியர் தி. ஞானசேகரன் முற்றிலும் புதுமையானதொரு கதையை அண்மையில் எழுதியிருந்தார். கருத்தரித்தல் பற்றிய சில தகவல்கள் கதையோட்டத்துடன் தரப்படுகின்றன. சிறுகதைக்கேயுரிய பண்புகளைக் கொண்டதாகவும் செட்டாகவும் கதாசிரியர் வடிவமைத்திருக்கிறார். கதைமுடிவும் எதிர்பாராததொன்று. அதேவேளையில் இனவேறுபாடுகளிடையே கூட முரண்படுநிலை இருப்பதையும் காட்டி யுள்ளார். இது ஓர் அருமையான கதை என்பது எனது மதிப்பீடு.
கே. எஸ். சிவகுமாரன் தினக்குரல் 23-05-1999)
★★★★★
இலங்கையின் பிறபாகங்களிற் பொதுவாகவும் கொழும்பிற் குறிப்பாகவும்
இடம்பெறும் தமிழ் மக்களுக்கு எதிரான சோதனைக் கெடுபிடிகளைச்
“சோதனை’என்ற கதை புலப்படுத்துகிறது. இச்சிறுகதையில் குமரேசன் என்ற
பாத்திரத்தைக் கையாளும் திறன் குறிப்பிடத்தக்கது. வெளிப்படையாகவன்றிக்
குறிப்பாக அப்பாத்திரத்தைச் சுட்டி வாசகரே அதன் இயல்பைப்
புரிந்துகொள்ளுமாறு செய்தமை அக்கதைக்குக் கலைச் செழுமையைச் சேர்க்கிறது
கலாநிதி தரை. மனோகரன்
வீரகேசரிவாரமஞ்சரி
女女★女★
தேசியத் தன்மையை பொருண்மரபிலும், உருவ அமைதியிலும் கொண்டியங்கும் சீட்டரிசி நல்லதொரு தமிழ்ச் (ஈழ) சிறுகதைக்கு எடுகோளாக திகழ்கிறது. பார்வதி, சிகப்பாயி, கந்தையா ஆகிய மூன்று பாத்திரங்களும் நடைச்சித்திரங்களாக மாறும் விபத்திலிருந்து நூலிழையில் தப்புவதும் சிறந்த குணாபாத்திரங்களாக மாறுவதும் இலக்கிய அநுபவத்தை ஏற்படுத்துகின்றன. சிறுகதையின் உருவ அமைதி காத்த இறுதி உச்சக்கட்டம்

Page 155
272 தி. ஞானசேகரன் சிறுகதைகள்
பல எதிர்மறைவான உச்சநிலைக்கும் மாறி மாறிப் பயணப்பட்டு இல்லறத்தின்
பண்பாட்டு வேரினை உயர்நிலைப் படுத்தும் வகை ’ கைதேர்ந்த கலைஞனின் கலை வேலை நுணுக்கத்தைக் காட்டி நிற்கிறது.
செம்பியன் செல்வன்
1904.2005
★女女女★
உங்களின் ‘திருப்புமுனைத் தரிப்புக்கள்’ கதையை வாசித்தேன். “தங்கராசு இப்போது வளர்ந்து விட்டான். பிரட்டுக்களத்தில் தொழிலாளர்கள் வரிசையாக நிற்கின்றனர். தங்கராசு ஒரு தொழிலாளியாக கடைசி வரிசையில் நிற்கிறான். என்ற பந்தியை வாசிக்கும் போது. கதையை இவ்வளவு அழகாக ஆழமாக நகர்த்தி வந்து கடைசியில் “சாப்பிட்டு” விட்டாரே என்று மனம் வருந்தினேன். அந்தப் பந்திக்குப் பிறகு வெறுப்போடு மேலும் தொடர்ந்த போது . அது பெருமாளின் கனவாக கண்டபோது மனம் சிரித்தது
தங்கராசின் வைராக்கியம் அருமையான முடிவு. உங்கள் கதாபாத்திரங்களில் பெருமாளும், தங்கராசும் காவிய நாயகர்கள் அவர்களைப் போன்றவர்களை உருவாக்கத் துடிக்கும் உங்கள் வளமான சிந்தனைக்கு எனது வாழ்த்துக்கள். மலையகத்தில் படிக்கத் துடிக்கும் ஒரு லயத்து மாணவனின் சூழலைச் சித்தரித்திருக்கும் பாணி. ஒரு ஆய்வு எனலாம்.
அருமையான கதை
மு. சிவலிங்கம் O3.03.1998
★大女女女
போர்ச் சூழல் காரணமாக அந்நிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள், தமது மொழியையும் பண்பாட்டையும் பேணிக் கொள்வதில் அக்கறை யெடுக்கின்றனர். ஆனால் அவர்களின் புதிய தலைமுறை அந்நியச் சூழலுக்கு எளிதாக ஆட்பட்டு, தலையை மழித்து, காதொன்றைத் துளைத்து வளையத்தை மாட்டிக் கொண்டு .? மகன், மருமகள், பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக 15 வருடங்களுக்குப் பின் இங்கிருந்து சென்ற சிவராசா, பேரன் முருகநேசனின் கோலத்தைக் கண்டு மனக்குமுறல் எய்துவதை வெகு நேர்த்தியாகச் சித்தரிக்கிறது ‘மண்புழு’ ‘இதெல்லாம் இந்த மண் செய்யிற வேலை. மண்ணுக்கும் கலாசாரம் பண்பாடுகளுக்கும் தொடர்பிருக்கு. வேற்று

தி. ஞானசேகரன் faaegaه பற்றி. £a7ያ)
மண்ணில் எங்கட கலாசாரம் வேர் விடுகிறது கஸ்டம் சூழல் விடாது” என்னும் சிவராசாவின் கூற்றில் எத்தனை பெரிய உண்மையிருக்கிறது. யதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறந்த கலைப்படைப்பு
நா. சோமகாந்தன்
★女★女女
தி. ஞானசேகரனது கதைகள் மலையக மக்களது ஒரு காலகட்டத்துக்குரிய வரலாற்றினை ஆவணப்படுத்தி நின்றதோடு, அறிவியல் சார்ந்த அம்சங்களிலும் தலைகாட்ட ஆரம்பித்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. "கருவறை எழுதிய தீர்ப்பு’ எனும் தி. ஞானசேகரனின் கதையே அறிவியலை ஈழத்துச் சிறுகதையில் அறிமுகப்படுத்திய கதையாகும். புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் புதிய சகத்திரப்புலர்வின்முன் ஈழச்சிறுகதைகள் நூலில்
女女女女★
Dear Dr. Gnanasekaran,
had the privilege of reading your short story book titled "Alseshanum Oru poonalikkuddium."
was highly impressed and delighted to read your all eleven short stories. The first and the main story is beyond comments. You had explained the existing ethnic disturbances in an undisputable way. The last story "Kadamai' had touched me deeply. I too had not performed abortions and I totally agree the way you had dealt meena. You are affluent and the flow is very readable. You had exposed the current problems in a formidable and simple way. My sincere wish and prayer that you should continue to write. The Tamil Worldwill always remember you for your enormous contributions.
Dr. M. L. Najimudeen MBBS(Cey) MS(Cey) MRCOG (Gt. Brit) Consultant Obstetrician and Gynaecologist July 27, 1998.
★女女★女

Page 156
274- தி. ஞானசேகரன் சிறுகதைகள்
*கண்ணில் தெரியது வானம்’ தொகுப்பில் உங்களது காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும் . என்ற சிறுகதையைப் படித்தேன். தடைமுகாம் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருத்தி இராணுவத்தினரின் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதையும் அதன் காரணமாக அவள் புத்திபேதலித்த நிலைமையை அடைவதையும் கலாரூபமாகக் கதையில் வடித்துள்ளீர்கள். நமது நாட்டில் மட்டுமல்ல இனவிடுதலைப் போராட்டம் நடக்கும் பல்வேறு நாடுகளிலும் இப்படியான நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இக்கதையின் கரு உலகப் பொதுவானது. பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவேண்டிய கதை இது.
பேராசிரியர் நந்தி 15.04.2002
★★★★★
“ஈழத்தின் சமகால இலக்கியச் செல்நெறிகளை அவதானிக்கும் போது, எழுத்தாளரது படைப்புகளில், பேரினவாத ஒடுக்குமுறைக் கொடுமைகள், போர்க்கால அவலங்கள் என்பன வெறும் பதிவுகளாகவே அமைந்திருப்பது கண்கூடு, எனினும், இதற்கு விதிவிலக்காகவுள்ள மிகச்சில படைப்புகளுள் தி. ஞானசேகரனின் காட்டுப் பூனைகளும் பச்சைக்கிளிகளும்’ விதந் துரைக்கப்பட வேண்டியதொன்று மாணவியொருத்திக்கு நிகழ்ந்துவிட்ட கொடூரம் தரும் அதிர்ச்சி, கதை சொல்லப்படும் முறையிலுள்ள பல்வேறு சிறப்புகளால் வாசகரது மனத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் .
இக்கதை தமிழ்ச்சிறுகதை வரலாற்றிலே இடம் பெறவேண்டிய சிறுகதை.
கலாநிதி செ. யோகராசா
女女女女★ கதை எழுதுவது என்பது இலகுவான செயலல்ல. மக்களுக்கு நலன் செய்யக்கூடிய ஒரு நல்ல கருத்து அதில் இருக்கவேண்டும். அந்தக் கருத்தை விளக்குவதற்கு வேண்டிய நிகழ்வுகளும் கதா பாத்திரங்களும் சிறப்பாக அமையவேண்டும். இவற்றுக்கு மேலாக வசனநடை வாசகரை ஈர்க்கவேண்டும். திரு. ஞானசேகரனின் கதைகளில் இந்த அம்சங்கள் எல்லாம் சிறப்பாக - மிகச் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. நல்ல கதைகளை எழுதவிரும்பும் எழுத்தாளர்கள் ஞானசேகரனின் கதைகளை அவசியம்
வாசிக்க வேண்டும். «ν
d t 6 1. 6 வரதர்
★★★★★

குறிப்புகள்.

Page 157


Page 158


Page 159
சிறுகதை, குறுநாவல், பயண இலக்கியம், நேர்கா இதழியல் ஆகிய துறைகளி யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பிறப்பிடமாகக் கொண்டவர் மருத்துவப்பணிபுரிபவர்க கூட கடந்த நாற்பது பேருட பட்டுவரும் இவரது எட் வந்துள்ளன. இவர் எழுதிய 1973 ஆகிய இரு நாவல்சு பரிசில்களைப் பெற்றன. கு மதுரை அமெரிக்கன் கல்யூ மாணவர்களுக்குப் பாடநூல மொழியாக்கம் பெற்றது. பூனைக்குட்டியும் 1998 எ சிப்பிரகமுவ பல்கலைக்கழக இவர் இலங்கை அரசின் "க: பல்வேறு விருதுகளையும் ெ எழுத்தாளராக விளங்குகிற இலக்கியச் சஞ்சிகையை வருகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாவல் கட்டு: விமர்சனம் ணல், நூல் பதிப்பும் வெளியீடும் ல் ஈடுபட்டுவரும் தி சூானசேகரன்
உள்ள புன்னாE3க்கட்டுவனைப் பிறப்பு:15.04.1941), மலையகத்தில் ாலத்துறையில் பட்டம் பெற்றவருங் பங்களாக இலக்கியத் துறையில் ஈடு டு நூல்கள் இதுவரை வெளி புதிய சுவடுகள் 19' குருதிமலை ரூம் இலங்கை சாகித்திய மண்டலப் ருதிமலை 1992-93 காலப் பகுதியில் பரிபில் முதுகலை பயிலும் (MA) ாக விளங்கியது சிங்கள மொழியில்
தற்போது "அல்சேஷனும் ஒரு ன்ற சிறுகதைத் தொகுதி இலங்கை ந்தில் பாடப்புத்தகமாக விளங்குகிறது. பாபூஷண்ம்' என்ற விருது உட்படப் பற்று இலக்கிய உலகில் புகழ்பெற்ற ர், "ஞானம்' என்ற மாதாந்த கTC) 2000 ஜூன் முதல் வெளியிட்டு
ISBN:-955-8354-12-0

Page 160
As to morphology, the two languages do The grammatical-category-system of Sinhalese sta: a passing remark may be made here of the plural markers added to inanimate nouns in Sinhalese) to the Tamil nominal pluralizer -kalh.
At the level of syntax only some of the app terns of the two languages may be noted here. C clause in both the language by using a verbal adjec (co-) relative pronominal sets. This feature whic is strikingly absent in all the Modern Indo-Arya following instances :-
Tamil : /nhaan patikkita vuththakan nallath Colloquial Sinhalese : mama kiyoona pota
(literally I reading book is gc
The occurrence of this type of “relative-clause' in texts, viz. Dampiyaa ATuvaa GaeTapadaya datec influence was responsible for the innovation of thi old Indo-Aryan rela, ive-clause structure in Sinhale shared in common by Sinhalese and Tamil is th languages take a classifikr af er the numeral. Ir name") and it is used only af er human-nouns, w (literally meaning 'name) used in coun ing mem people') used when counting other living-beings
Tamil : smanithar muuNTu peer/ "three me Sinhalese : Iminissu tun dinaa/ “three men”
|haamudur varu tun na mal three
Also in the formation of higher ordinals in agree in having the noun referring to the '10's 'al
numeral. Compare for instance,
Tamil: siru vaththi naatu (20 --4) twenty-fou Sinhalese : /visi hatara! (20+4)'twenty-four
Hindi: scan bisi (4+20) 'twenty-four'etc.w
A syntactic feature that can be positively sa the alternative construction-type formed by repeat item that is put into alternation. Compare the fo
Tamil: koopi cari theeththaNNicari koN.
Sinhalese : skoopi hari tee vatura hari geenni
The formation of the echo-compounds in point of similarity.

not seem to share much similarity worth-noting nds in sharp contrast to that of Tamil. However
marker -val (which is one of the alternant plura which some scholars have suggested to be related
arent similarities between the constructional patDne such instance is the foi mâtion of the relative tive instead of the "that- who, which “type of h is typical of almost all the D1avidian languages in languages other than Sinhalese. Consider the
μ. hondays. bod)
Sinhalese is attested in one of its earliest literary i around the 10th century A.D. Whether the is syntactic feature which completely replaced the se needs investigation. ... Ancither syntactic feature e type of numeral phrase structure in that both Tamil, the classifier is peer' (literally meaning hile in Sinhalese there are two classifiers, “nama” bers of the clergy, and "denaa' (literally meaning
. Thus, -
n
morks'
volving '10's both Tamil and colloquial Sinhalese ways preceding the noun referring to the lower
there the order of the numerals is just the opposite.
id to have been directly borrowed from Tamil, is
ing the functor “häiri” (

Page 161
The most significant impact of Tamil on S Tamil loans in Sinhalese have been attested sinc Sinhalese can be chronologically arranged consid attempt is not made in this paper. For instance knife' ( 'to throw /vicus > Adjectives :
'common spothus ح 'short Ikutus >
either...or jcari.cari/
These loans in Sinhalese cover a very wide ran classified. Kinship terms such as appa/ 'father ( lakkal), focd-items such as Ihodhi gravy” ( skuu Def
修 lputanawa/
/viisu karanara/
Ipodhus skutu/ b /hari.T, harij functors
ge of semantic categories and can be accordingly-Tamil |appas), fakka/ 'elder-sister' (Tamil |cothil), culinary terms such as snuTTi "cooking its such as moleef 'brain (Tamil finuluhays), architectural terms such as siruppus'a wayoffixing as spaaththil 'vegetable-bed' (Tamil/paaththil). tances for these. A detailed study of these loans t possible within the scope of this paper.

Page 162
Recent Epigraphical Disco Eastern Provinci
By K. NDRAPALA,
The role of epigraphy in archaeological stu particularly the history of our region, that is Sc absence of any historical literature in most parts c this region an importance which similar records do regions of Incia epigraphic records form the only struction of their early history. Fortunately in SI historical writing and the eirgraphic Tecords of cu in that they help to a great extent in supplementil nicles. In a few instances they also help to correc
Sri Lanka is perhaps the only region in Sou other inscripticns for a continuous pericd cf over During the last one hundred years, that is from th (1874), nearly three thousand lithic records have b these, consti, uirg what are called the Brahmi i
There are about one hundred and fifty Tamil inscri century A.D. There is also a handful of Sanski Every year a considerable number of inscriptic ns opening up of jungle areas for colonisation and agi tanks and canals. : ...,
The vast majority of these inscriptics has an abundance of granite and other forms of hard yielded the least number of inscripticnis. Till a perica before the seventeenth century had been c rgarding the other districts ofthe Ncrthern Provir different for the same period. . A number of facto
During the last five years more epigraphic provincas 2. In the Jaffna District nine more insci earlier, came to light. Another seven records fro1 -first ime in 1972.3 Some new inscripticns hav Disilict. As cre who has been going in search ( systematic survey of these provinces is bound to th a thorough survey of all the other provinces is als
Most of the newly discovered inscriptics h; to the histury of these two provinces. The major a peric d for which there are serious gaps in our 1 z century was a period when the Island - was domi behind a large number of Tamil records. More especially in the Northern and Bastern Provinct importance.

veries in the Northern and es of Sri Lanka"
Ph.D. (Lond.)
die s and in the reconstruction of ancient history, uth Asia, can hardly be over-em II ła sized. The f Scuth Asia has given the cigra I.ical ic cords of not enjoy in most parts clf the world. For many scurce cfany reliable irfornia icin for the reccn
i Lanka there has been a very's crg traditic n of ir cocunt y assume a different kinc. cf importarice;
g and in ccircborat irg the evicence of the chro
t the chrcnicles.
th Asia where we get a large number cf lithic and 1wo thcusand years, ficn. 1le hid century B.C. e time the first official ( Iigraphist was app cirted cen discovered in Sri Lanka. M. cre than half of 1scripticns, belong to the earliest period of the third century B.C. and the third century A.D. iptic 11s, all belongirg to the period after the ninth t and Pali inscriptions. The rest are in Sinhala. is brought to light, mainly as the result cf the icultural schemics and of the repairirg of irrigation
been discoverca in those provinces where there is
rock. In this respect, the Northern Province has bcut five years ago, only four inscriptions ofthe
iscove1ed in the Jaffna Cisti ict. The position
ce and thcse cf the Easte in Province was not very
rs contributed to this situation.
records have been brought to light in these two iptions, more than d cuble the nun ber discovered m the Trincomalee District we'e examined for the e also been discovered in 1973 in the Vavuniya of these inscriptic ns, I can confid (rtly say that a row up many more inscriptic rs. For that matter, o bound to yield similar sults.
ave furnished us with valuable information relating ity of the records belongs to the eleventh century, litelay sources. The greater art of the eleventh . nated by the South Indian Colas, who have left and more Cola records are ricw cc ming to light, s. Some of the se are of ccnsiderable historical
54

Page 163
Of these, by far the most interesting and v malee District. This record, which was originall pieces, is in the Sivan Temple at Kantalai. The f slab, is in a good state of preservation while the
This record is significant in many respects. in a regral year of a ruler of Sri Lanka who is not this ruler is given as Sri Sanghavarman Sri Cola record, I was rather puzzled by this unfamiliar na occurring in the inscripticin made it clear to meth yet it was not dated in a regnal year of a Cola emp Lanka. That this unknown kirg was und cubted name Sri Sanghavarman, a variant of the well-knc varman. But, soon I was able to relate it to the in and realise the full significance of the name and Indian records that help us to unravel this myster
We find that early in the eleventh century E of administering his empire, whereby princes of th of authority in the different provinces of the empi to have been assisted by only one such subordinal It is possible that in later years others were sim successors are said, in their inscriptions, to have ( diate successor of Rajendra is stated to have crow on him the title “Ilankaiyar-k-iraiva , the Tamile
Of the many subordinate rulers, those of Cola-Pandya, a combination of their own dynastic over which they now ruled. Similarly, the prince: Kerala and that of the Ganga country was named took the consecration names of the Pandyas. T Cola Lankesvara, which was obviously the name dynastic name and Lankesvara is the name gener. Pandya rulers took the consecraticn names of the of the kings of Sri Lanka. We also kncw frcm rulers enjoyed regal status and were allowed off office.
In the light of these inscriptions we are i Kantalai came to be dated only in a regnal yea: record, therefore, helps us to learn for the first tin Sri Lanka was not different from that adopted in
This inscription is also of interest in other assembly of Kantalai, which place had been rena after Emperor Rajaraja I. Incidentally, this nam galam in the reign of Vijayabahu I, who ruled f inscription also gives the Cola name of the dist Rajendra-cola-valanatu, afir emperor Rajendra also named here as Vikramacolan-vaykkal, pres

luable record comes from Kantalai in the Trincoinscribed on a single slab but is now lying in two st half of the record, inscribed on one piece of the ther half is unfortunately damaged.
What will interest many is the fact that it is dated nown to us from any other source. The name of Lanke svara Devar. When I first deciphércd the mê. The wiirg as well as the Cola place-rames it it was a record cf the pericd of Cola rule. And tror, as in the case of the other Cola records cf Sri y a local rule 1 was evic cnt ficm his consecation wn Sinhala consecuatic n rame Siri SarghabcdhioImation provic (c. by the Scuth Indian epig1aphs of the new inscription. It is actually the Scuth
7. - -o
imperor Rajendra Cola I introduced a new system e imperial 1 cyal family were appc inted to position 'e. In the early years cf his reign Rajend 1a seems e ruler with julisciclic in cver the Pandya country. ilarly reccgnized elsewhere. Three of Rajendra's continued the se arrargements. In fact, the immened a prince as a subordinate ruler, and conferred quivalent of the name Lanke svara.
the Pandya country were known by the name of name with that of the former rulers of the territory app cinted to rule over Kerala was known as ColaCola-Ganga. We also find that the Cola-Pandyas hus, we are in a position to understand the name of the Cola prince installed in Lanka. Cola is his Llly applied to a ruler of Lanka. Just as the Cola Pandyas, this ruler of Lanka took the consecration the South Indian records that these subordinate cially to issue orders dated in their own years of
a positicn to understand how our record from of the subordinate ruler at Polonnaruva. This e that the manner in which the Colas administered the Pandya, Kerala and Ganga countries.
espects. It refers to the deliberations of the local med by the Colas as Rajaraja-caturvedimangalam : was later changed to Vijayaraja-caturvedi-marcm Polonnaruva after defeating the Colas. Our ct in which Kantalai was situated. This name is I. Further, an irrigation channel in that area is mably after Rajendra I, one of whose numerous
55

Page 164
titles was Vikramacolan. It appars that the loc Six 'kacus' or pieces of money for the repair of Vikramacolan-vaykkal. Unfortunately the reco clear.
Another Cola inscription, which may be r Dutch Fort Hammenhi-l in the Kays Harbour. originally set up at Mato tam, in the Mannar Di scribeds one and other bicks from Mato tam t Himmenhil. Although this insc.ip, ion is fragm time the name of the Cola general who led the s' whole of Lanka' under the Cola sway. This gen here as the one who conquered the whole of Lank his treasures'. Our record thus becomes the only Maninda V, king of Lanka at the ime of the Cola with their treasures to Scuth Incia by the Cola Culavansa, the Pali chronicle which gives detailso of Lanka was also taken away as a captive is a fi capture is referred to in some sources.
Of the several other Cola inscriptions disco be mentioned here. These relate to one of the anc forgo ten. Trincomalee is now well-known among that stood there for a long time till it was pulled di But there was also another famous temple, the Mac by the Portuguese. Its memcry is preserved only which were not taken seriously by scholars. Now Trincomalee town establish for the first time the his information relating to it.
Some of the other inscriptions discovered in deserve mention. One is a Brahmi inscription on a archaeologists from the Pennsylvania Universiy M. discovered in Jaffna and the oldest of the inscriptio) discovered in the Jaffna Fort becomes the oldest Ta is also the only Cola inscription originally set up comes from a tea boutique' in Jaffna town. The formed part of one of the buildings erected at Nall destroyed the city of Nallur in the seventeenth cen its present site, where subsequently it was built into record is dated in a regnal year of Parakramabah preserved portion. It is known from the literary sc powerful Kotte kingdom in the reign of Parakram who ruled at Nallur for some time as viceroy. But firmation of Parakramabahu's overlordship of Jaffna of Parakaramabahu VI have been discovered at N Mulnesvaram in the western coast and in Jaffna, a emperor of the Island.
5

assembly of Kan alairret and decided to allocate yme watercourses of the irrigaticn channel named is damaged at this point and the details are not
garded as fairly important, was discovered at the Tne contents of this record indicate that it was trict. It appears that the Dutch removed this inKayts by boat and used them in repaining Fort ntary, the preserved portion gives us for the first ccessful campaign of A.D. 1017 and brought he ral, Jayankonta Cola Muventa Velar, is described a and took away the King cf Lanka, his queen and inscriptic n in Sri Lanka menticnirg, the fact that conquest of 1017, and his queen were taken away ommander. It thus confirms the account of the the Cola conquest. That the consort of the King ct that is not mentioned elsewhere, although her
vered in the Trincomaleedistrict in 1972, iwo may ient Saiva temples cf Tincomalee, now lost and the Hindus for the renowned Konesvaram temple own by the Portuguese in the seventeenth century cayesvaram, which was also presumably destrcyed in some late legendary accounts of Tincc malee an inscription fcm. Nilave li and amicthe fic, m, the tolicily of this venerated shrine and provide some
the Jaffna District within the last few years also potsherd unearthcci at Kantarodai by a team of useum. This is the cnly Brahmiinscription to be is discovercd in that dist1ict. A pillar inscripticn milinscription to come to light in that district. It there to have come to light. A third inscription stone on which it is inscribed appears to have ur in the fifteenth century. The Portuguese who ury were probably responsible for its removal to he floor of the tea "boutique'. This fragmentary L VI of Kotte, whose full titles are given in the rces that the Jaffna kingdom was annexed to the bahu VI by his adopted son Sapumal Kumaraya This is the first time that we get epigraphical conIt is interesting to note that Tamilinscriptions aim mana in the southern end of Sri Lanka, at l of which go to confirm his claim that he was.

Page 165
ΝΟΤ
1. This is the text of a talk broadcast over Broadcasting Corporation on 31st July, 1973.
2. Several of these records were brought to we with my friends. In the Jaffna District I was as Mr. A. Kandiah (Retired Curator, Jaffna Museum), an Assistant Lecturer in the Department of History the Trincomalee District Mr. Gunasingam and Mr. Village Committee) were of immense help to me. inscriptions of this district. Mr. S. Kanagaiyan (' students assisted me in the Vavuniya District. The
3. Three more Tamil inscriptions and a Si, malee District by Mr. Thanbirajah and Mr. Gunasi not yet knat lyn.
*தமிழுக்கென்று உண்மையில் உழைத்தவர்களில் குறிக்கின்றேன். அவர்கள் ஜீமான்களான ஆறுமு தரம்பிள்ளே, கனகசபைப்பிள்ள்ை என்பவராவர். அறத்துறந்து நல்ல பதவி பெறுவதை வெறுத்துத் வதே பிறந்த பயன் எனக்கொண்டு இரவும் ப இடையூறுகளை அவர் பொருட்படுத்த வில்லை. யா சாலையை நிலைநாட்டி அதை நடத்தக் கையி உதவியைக்கொண்டு நடத்தினர். சிதம்பரம் சைவ படி செவ்வனே நடைபெறுகின்றது. இவர் அச்சி தனை? அவர் ஒருவர் முயற்சியால் தமிழ்க்கல்வி
அவதரிக்கச் செய்யவேண்டுமென்று கடவுளைப் சபைப் பிள்ளை இருவரும் உத்தியோகத்திலிருந்த யாவர்? இவர்கள் மேகத்தைப் போல ஒரு வ வார்கள்.
- K, S. பூரீநிவாஸயிள்ளே, தமிழ்வு
5

ES
the English Service (Channel One) of the Sri Lanka
light as a result of systematic surveys conducted by isted by Mr. V. Sivasamy (Lecturer, Jaffna College), ind my former student Mr. S. Gunasingam (formery University of Sri Lanka, Peradeniya Campus). In S. Thambirajah (former Chairman of the Sambaltiyu Credit goes to the latter for having found the new eacher, Vidyananda College, Mulliyavalai) and his Inks are gratefully offered to all of them.
hala inscription were brought to light in the Trncogan in 1973. The contents of these inscriptions are
காலஞ்சென்ற சில பெரியோர் பெயரை சிண்டு கநாவல்ர், பாண்டித்துரைசாமி தேவர், தாமோ .ஆறுமுக நாவலர் பொன் நிலமாதரா சையை * தமிழையும் கடவுளிடத்தன்பையும் பரவச் செய் கலும் உழைத்தனர். தம் முயற்சிக்கு நேரிட்ட வண்ணுர்பண்ணையில் சைவப் பிரகாச வித்தி ) பொருளில்லாமல் அரிசிப் பிகையெடுத்து அதன் ப் பிரகாச வித்தியா, சாலை யாரும் கொண்டாடும் b பதித்து வெளியிட்ட தமிழ்ப் புத்தகங்கள் எத் எவ்வளவு பரவியது? பல ஆறுமுக நாவலர்களை பிராத்திக்கின்றேன். தாமோதரம் பிள்ளை, கனக வராயிருந்தும் தமிழுக்கு உழைத்ததை அறியாதார். கைக் கைமாறும் வேண்டாது உழைத்தவர்களா
ரலாறு, முற்பாகம், 8ம் பதிப்பு, 1960, பக் 49

Page 166
* யாது மூரே யாவரு
தீது நன்றும் பிறர்தர நோதலுந் தணிதலு ட சாதிலும் புதுவ தன்ே
இன்னு தென்றலு மில வானந் தண்டுளி தலைஇ கல்பொரு திரங்கு மல் நீர்வழிப் படூஉம் புனை உறைவழிப் படூஉ மெ.
பெரியோரை வியத்தலு சிறியோரை இகழ்த வ

வ் கேளிர்
6лтДгfr 0வற்ருே ரன்ன ற வாழ்தல் 2 மிலமே முனிவின் GBLD மின்னெடு இ யானது லற பேர்யாற்று ாபோ லாருயிர் ன்பது திறவோர்
மாகவின் மாட்சியிற்
மிலமே தனினு மிலமே 9
" புறநானூறு
及5教

Page 167
With Best
Frc

Compliments
)m
Joseph

Page 168
L0L0L0L0L0L0L0L0L0YL0L0L0L0L0L0L0LL0LYYY000Y0L0L0Y0L
d
; “தாமின் புறுவ து
O O ; காமுறுவா கறறற
争 8 d i The Maharaja Or MAHARAJA EB 8 54, Banksha i COLOM
8
8
i “கேடில் விழுச்செல்வா
மாடல்ல மற்றை யவை
The Cheapside 8 94, 2nd Crocs Street
Colombo
མཁས་མཁས་པ་ཐམས་མཁས་ 3888 88088-0000808 M

030003000800
லகின் புறக்கண்டு
ந்ெதார்”
'ganisation, Ltd.
UILDING ill Street
[BO)- 1
k கல்வி யொருவற்கு
''
L0LYYYLLL00LYYLLLLLL00LLLL0L0LYLLLYYLLLLLL0LLLLL0YYYL0LLLLLLYLYLLL

Page 169
| + +QS 후姆舞 å ●玲品--š历애 = 长儿娜€9院 != }<费红
计|| Q肥。可số ị ><ť () sĩ số能 | 知
々々々々々々々々々々々々eゃ々々々々る*****る々々々*******る々々々々々々々々々々々々る**る****る●●●●●●●●●●●●●●●●る●●●●●●●●●●●●●●●●●●●●●●る*るるる

Compliments
O
HOUSE
Gem Merchants
it, Colombo - 11.
|jල්ඩ් හවුස්
T6) ஹவுஸ்
inteed and genuine
b0000000000000000 peo000000000000000

Page 170
3 a .3,
With The C
O
CEY POLYTHENE |
Manufacturers and RC
Polythene Filu
P. B. Awis Per
Katubedda,
Phone: {72-473
 

ompliments
INDUSTRIES
togravure Printers of
m and Bags
era Mavvata,
Moratuyya
Cable: fyELPAK

Page 171
令令令令令令夺令令令令争夺令A●令令令令争令令令夺夺令令夺令夺夺命令令令
CEYLON THEA
WITH OVRR 45 YEAR
CoNTINUES
THE BEST IN CINEM
8000000000000000049084000800000000
- Specialists in Decca Sa
Manufactured by
Puspha
COLOM
Sole Distributor.
Vilasimi &
148, KEYZER STIRE
PHONE:- 24719, 27196.
8000808888-888-888-888-9899888-8088-88088

TRES LIMITED
IN SHOW BUSINESS
"O PROVIDE
A ENTERTAINMENT
>令令令令争●争令令命令令争夺令令令夺令夺夺*●呼令●令令●●争夺峰é
aree &) Cotton Pyiama
Industries,
IBO-15
Company
l, COLOMBO - 11.
88.888888-888-888-888.8889 00000000-00000

Page 172
TAJMAHAL PRINTING II
PRPINTERS FOR
Lanka Salu
“MULL TAJ” PRI.
''TIPICON PRIN
Names that denote qual
Distributors:-
SAGAR C
105, SECOND C
COLOM
th
Oj
V
المه
95
CC

TEXTILES NDUSTRIES
Sala Limited
WTED SA REES
JTED FABRICS
ity in Printing Textiles
:OMPANY
ROSS STREET, 3O-l.
Vith
le
Best Compliment
f
harges
s 2nd Cross Street,
LOMBO-1 1.

Page 173
S. P. பெரியண்கு
180, இரண்டாம்
கொழு
தொலைபேசி 25738
ஒளிவள நாட்டில் இ வளமிளமையோடு
டொலா கே
14, டாம் வீதி
வrசனைத் திரவி அலுமினிய உ
 

ளிப் பு
ணு பிள்ளை & Co,
குறுக்குத் தெரு
bւկ-11.
ன்று ஆயும் மொழி
என்றும் விளங்குக
ார்ப்பரேஷன்
கொழும்பு-11.
ய விற்பன் னரும்
பத்தி விற்பனையாளரும்.

Page 174
SS L00L0LLL0LYYLL0LLLL0LL0LYL000YYYL0YYYSL00YYYYLY0Y0AYL0
ίδιεh έήe (
AWDAS G. LaMist
Manufacturers of 'WE
Tabl
561 K. K.
U AFF
8000000000000-00-9000988

々●ベ*ゃ々る々*令●●●●●●●●●●●●●*●●●●●●●●*****
***************************} *********る多*今る****るを今るやゆゆき�
**&令&シ***************るゃ&るるるるをやる事ぐを多る**
le
L. BRAND'' Camphor
ets
‘888.809000p8088000-eeee
S. ROAD
cmpt
NA
s
f
RYNGAALS QN'RSD

Page 175
●●●●●令伞令令●令令令令令●令
»r+-0-+00-0-0 ↔
தமிழன்னைக்கு
எங்கள் ஈ
கலந்த
வணக்கம்
தமிழ்த்தாய்
இறும்பூதெய்ய
நடைபெறும்
மாநாடு
சிறப்பு
6.
ரத்தினம்ஸ் 146, 2ஆம் குறுக்குத் தெரு
கொழும்பு-11
தொலைபேசி- 20406.20361
. سمیہ ۔ سہ ۔ & B640000-0000000806000-8-8-0-0-0w)r 8008-0-38&

夺命令争妙令夺今令●夺令中令令令争夺事令夺令令令令夺岭令令令令令令令令
5ன்றி
XK
Maheswari Textile 196, 2nd CROSS STREET COLOMBO-I
多
|A)
ாழ்த்துகிறேம்
|
:
: 3.
W 略 : . . م . . . . . ; ۔ “ . . مغل : ....... : خد::::ح یہ بغیر مت " なぐゆ*や●やぐ*をふややぐふゃゃや****や********やふ , , હરે

Page 176
8000-00--00000000000000000000000000p8. తగ్గి
& :
மாநாடு
சிறப்பாக
நடைபெ ' 薪 : எமது : நல்
i
956) T is
vy 134,
தொலைபேசி எண் : 25250 : wh ¢ LLLLLL LLLLLLLLMLee LLLeeLeLMLeS
நடக்கப்போகும்"
தமிழ் ஆராய்ச்சி
நல்லமுறையில் த
நமது நல்வாழ்த்
லலிதா நகைமாளி
99, 1 0 1, 103, 105
செட்டியார் தெரு, கொழும்பு-11
8.
哆
t
(
ళ
令令必必令令必必必必令令》分令*必令令必必4必必令教郊

LLLLLLLLL0LLL0LL00L0LLLL0LLLLLLL0LLLLL00
வாழ்த்துக்கன்
டிறேடிங் கம்பெனி
இரண்டாம் குறுக்குத் தெரு
கொழும்பு-11
LLLLSLLLSLLLL LLL LLLSLLLeLLMS
தான்காவது
Lofтап (5
டத்தேற
துக்கள்
6
& 令 &
தொலைபேசி 23691 ”、 &
8.
*々々々*****々々々●●●●●●●*************や●●

Page 177
沙令令令令令令*令令●●●●●●●44心必4●●●●●●●●●●●●
960
l
Λ டெக்கா சா
21, 3-ம் குறு
கொழு
‘* தேமதுரத் தமிழே பரவும்வகை செய்
மா. கு. சுப்
ll2, Living
கொழு
8000-0000-00-000000000000000008080 88s

●●●●●●●●● *ふぶ・・・ ふ* や****や●**や●●●●●**●
மக்குத் தெரு,
ம்பு-1.
g 3.
●
*
ாசை உலகமெலாம்
தல் வேண்டும் ?
பிரமணியம்
8000000000000008088-898406-00000080t

Page 178
v-\^^^^^^^^^^^^^^^

Page 179
With the besi
fr
f. S. Salgara
6, WOLFEN D1
COLO TPHONE:- 32221.
* கற்க கசடறக்
னிற்க வதற்கு
RA

Compliments
91ገገ
MBO- I II.
கற்பவை கற்றபி
5 தக 99
M BROS
140, MAIN STREET
pillas Bro.

Page 180
Big or sпаІН we can handle *
ܕ ܬܐ
ALL YOUR
SRI LANKA (CEYLON) TOURS
As one of Sri Lanka's most experienced EXPRESS can organise all your tors, it
We offer a wide and varied range of sp of special INTEREST Tours to suit the p
We hair, the right connections World-wic portation services-Contact our Agents in
FRAJMAL TEEliyalmuth 2131, Power
BAFFINA
GEYLON EXPRES
12 Y. M.
COLO
Теіерһопе 20020. Carlo777 HC.
Grari - EXPRESS - Mr Lavinia.
暫
 

F#557455 ESTABLISHED TO PROMOTE FRIENDSHIP, UNDERSTANDING AND COOPERATION AMONG PEOPLES WARYING AS TO RACE, NATION OR CULTURE.
Travel Agents and Tour Operators CEYLON
matter what size the group.
ecially tailored tours together with a series a late of the most travel-jaded visitor.
le and with all air-lines, hotels and transTaffnq : s
ENTERPRISES, In Malihai,
House Rond,
8
8
پيلي
S - World Trave
B. A. Building MBO