கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை நாட்டு தெனாலிராமன் கதைகள்

Page 1

சீைபுத்தகtஜலய

Page 2


Page 3

இலங்கை நாட்டு தெனுலிராமன் கதைகள்
தமிழில்: மாத்தளை சோமு
لیکن
மீனுட்சி புத்தக நிலையம் 60, மேலக் கோபுரத் தெரு
மதுரை-625 001

Page 4
முதற் பதிப்பு: டிசம்பர், 1984 இரண்டாம் பதிப்பு: நவம்பர். 1988 மீனுட்சி: 209
உரிமை பதிவு
விலை ரூ. 6-00
ILANGA NATTU TENALIRAMAN KATHAGAL children stories second edition: November, 1988 12 pt. Letters
1 8X12-5 cms 10.9 kg. DJC white Printing 76 Pages Box board binding
Printed by: POON CHOLA ACHAGAM MADRAS-5
MEENAKSHI PUTHAKA NILAYÀM 60, West Tower street MADURA-625001

முன்னுரை
தெனலி ராமனையும் அவனுடைய வேடிக்கைக் கதை களையும் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தெணுலிராமன் ஒரு விகடகவி, அரசவைக் கோமாளி. அவனைப் போல வேறு நாடுகளில் அரசவைக் கோமாளிகள் இருந்திருக்கிருர்கள். அந்தக் கோமாளிகளின் கதைகள் தெனலிராமன் கதையைப்போலவே வேடிக்கையானது, வினுேதமானது.
இலங்கையில் சிங்கள மன்னர்கள் ஆண்ட காலத்தில் இலங்கையின் தென்பகுதியில் இருந்த கீர்த்தி பூணூரீ ராஜசிங்க மன்னரின் ஆட்சி இருந்தது. அவரின் ஆட்சிக்குட்பட்ட *மாத்தறை” என்ற ஊருக்கு பக்கத்திலுள்ள 'திக் வெல்ல" என்ற இடத்தில் "அந்தரே வாழ்ந்தான். அவன் தெனுலி ராமனைப் போல் வேடிக்கையானவன். தன் வேடிக்கைத் தனத்தால் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவன். அதே நேரத் தில் சிந்திக்கவும் வைத்தவன். நினைத்த நேரத்தில் நகைச் சுவைப் பாடல் பாடக் கூடிய கற்பனை வளம் பொருந்தியவன். ܖ
இவனுடைய கதைகளை இலங்கையில் சிங்கள, தமிழ் ஆங்கிலப் பாடப்புத்தங்களில் பாடமாகச் சேர்த்திருக்கிருர்கள். "அந்தரே சம்பந்தப்பட்ட ஏராளமான கதைகள் இருக்கின் றன. அவைகளில் என் கைக்கு அகப்பட்டதை தமிழில் தந் திருக்கிறேன். இவற்றில் சில கதைகளும் எங்கோ படித்தவை போலவோ தெனுலிராமன் கதைகள் போலவோ இருக்கலாம். அதற்கு நான் பொறுப்பலல. உலகம் முழுவதும் உள்ள

Page 5
4.
கோமாளிகளின் கதைகளில் பல கதைகள் இப்படித்தான் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளதாகவே இருக்கின்றன. அந்த ரீதியில் இதில் தொகுத்துள்ள சில கதைகள் அவ்வாறு தொடர்புள்ளதாக இருக்கலாம்.
இதில் உள்ள பல கதைகள் "தினமணிகதிர்" வார இதழில் தொடர்ச்சியாக "சிங்கள நாட்டு தெனுலிராமன்" என்ற பெயரில் பிரசுரமாகின. மேலும் சில கதைகள் "ரத்ன பாலா’ என்ற மாத இதழில் பிரசுரமாகியிருக்குன்றன.
தினமணி கதிர்".*ரத்னபாலா" ஆகிய இதழ்களில் பிர சுரித்த மதிப்புக்குரிய திரு கே. ஆர். வாசுதேவன் அவர் களுக்கும் இதை ஒரு புத்தகமாக வெளியிட முன்வந்த மீனுட்சி புத்தகநிலையம் உரிமையாளர் அவர்களுக்கும் எனது அன்பு கலந்து நன்றிகள் உரித்தாகட்டும்.
இவ்வண்ணம்
அன்புடன்
மாத்தளைசோமு

1.
இளமைப் பருவத்திலே.
அந்தரேயின் தருமம்
அந்தரே அப்போது சின்னப் பையன் ஒரு நாள் அவனுயை அம்மா இனிப்புப் பலகாரங்களைச் சுட்டுக் கொண்டிருந்தாள். அந்தரேக்கு வாயில் எச்சில் ஊறியது. அம்மாவுக்குத் தெரியாமல் ஒரு பலகாரத்தைத் திருடலாமென்று முயற்சி செய் தான். முடியவில்லை. அம்மாவிடம் கேட்டுப் பார்த் தான். அப்போதும் கிடைக்கவில்லை.
கவ&லயுடன் அந்தரே இருந்தான். அந்தரே யின் அம்மா பலகாரம் சுட்டு முடித்ததும் அதை எண்ணி வைத்துவிட்டு வெளியே போனள். அது வரை பேசாமல் இருந்த அந்தரே ஆசை தீர ஏழெட்டுப் பலகாரத்தை எடுத்துச் சாப்பிட்டான்.
அந்தரேயின் அம்மா திரும்பி வந்தாள். வந்ததும் முதல் வேலையாக பலகாரத்தை எண்ணிப் பார்த்தாள். குறைந்திருந்தது. இது அந்தரேயின் வேலையாகத்தான் இருக்கும் என்று முடிவுக்கு வந்த அவள் அவனிடம் பலகாரம் குறைகிறதே! எடுத்துச் சாப்பிட்டாயா??? என்று கேட்டாள்.

Page 6
6 இலங்கை நாட்டு
அந்தரே தடுமாற்றம் இல்லாமல் பதில் சொன்னன். பேசியென்று வந்தவருக்கு நான் தான் பலகாரத்தைத் தருமம் செய்தேன்...”*
அந்த ரேயின் அம்மா, தென் மகன் இந்த வயதிலேயே தருமம் செய்ய நல்ல வழியிலே நடக்க ஆரம்பித்து விட்டானே!? என்று வியந் தாள்.
கடைசியாக அவனிடம் கேட்டாள்: 'நம் வீட்டிற்கு யாரும் தருமம் கேட்டு வரவில்லையே? வந்தது யார்? உனக்குத் தெரியுமா???
பேசியென்று வந்து சாப்பிட்டது வேறு யாரு மில்லை. நான்தான். என்னுடைய பசியைத் தீர்ப்பதும் ஒருவகைத் தருமம்தான்...??
அந்தரேயின் அம்மாவிற்கு அப்போதுதான் அந்தரே பலகாரம் கேட்டுக் கொடுக்காதது நினை வுக்கு வந்தது.
கட்டி வைக்காத மாடு
அந்தரேயின் அம்மா ஒரு கல்யாண வீட்டிற்
குப் புறப்பட்டாள். அப்போது சின்னப் பையனுக இருந்த அந்தரே நானும் வருகிறேன் என்று

தெளுலிராமன் கதைகள் 7
அடம் பிடித்தான். தொந்தரவு பொறுக்கமுடியாத அந்த ரேயின் அம்மாவும் அந்தரேயைக் கல்யாண வீட்டிற்குக் கூட்டிப்போனள்.
கல்யாண வீட்டிக்குப் போனதும் அந்தரேயை பெண்கள் கூட்டமாக இருந்த முன் வாசலிலேயே உட்கார வைத்துவிட்டு அவர்களிடம் அவனைப் பார்த்துக் கொள்ளுமாறு சொன்னுள். பிறகு அந்த ரேயிடம் எதிர்புறத்தில் ஒரு வீட்டின் முன்னே கட்டியிருந்த ஒரு மாட்டைக் காட்டி, *ஆடு மாடுக்கு உள்ள அறிவுகூட உனக்குக் கிடை யாது. அதோ பார் அந்த மாடு எவ்வளவு அமைதி யாக இருக்கிறது. அதைப்போல் இரு.?? என்று சொல்லிவிட்டுக் கல்யாண வீட்டின் உள்ளே போனுள்.
அந்தரே அந்த மாட்டையே பார்த்துக் கொண் டிருந்தான். அது அமைதியாக இருந்தது. அந்தரே யும் அமைதியாக இருந்தான். அடிக்கடி அம்மா சொன்னது நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது.
திடீரென்று எதிர் வீட்டு மாடு வீதி வழியே போன ஒருத்தனைக் கண்டு மிரண்டு அவனை முட்டித் தள்ளியது. இதனைப் பார்த்த அந்தரே அம்மா சொன்னது நினைவுக்கு வரவே பக்கத்தில் இருந்தவர்களை மாடுபோல் முட்டித் தள்ளினுன் பெண்கள் எல்லோரும் சத்தம் போட்டார்கள். ஒரு சிலர் அந்த ரேக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று சந்தேகப்பட்டார்கள்.

Page 7
8 இலங்கை நாட்டு
அந்தரேயின் திடீர் செய்கையினல் கல்யாண வீட்டில் பெரும் ரகளை உண்டாகியது. நடந்த தைக் கேள்விப்பட்டு அந்தரேயின் அம்மா ஓடி வந்தாள்.
அந்தரேயின் காதைப் பிடித்துத் திருகிய வாறி மிரட்டினுள். 68ஏண்டா முட்டித்தள்ளினய்??? அந்தரே அழுது கொண்டே சொன்னுன் 'நீதானே எதிர்வீட்டு மாடு போல் இரு என்ருய். நானும் அப்படியே நடந்தேன். அந்த மாடு அமைதியாக இருந்தபோது அமைதியாக இருந் தேன். ஒரு ஆளை முட்டித் தள்ளவும் நானும் அதைப்போல் செய்தேன்.??
'ஒகோ! அப்படியா. நான்தான் தவறு செய்துவிட்டேன். மாட்டைக் கட்டாமல் வைத்தது தவறுதானே..99 என்று சொன்ன அந்தரேயின் அம்மா உடனே ஒரு நீண்ட கயிற்றைக் கொண்டு வந்து அந்தரே யை ஒரு தூணில் கட்டிவைத்து விட்டுப் போனுள் . அந்தரே அசைய முடியாமல் அப்படியே இருந்தான்.
O
3 மூன்று கொழுக்கட்டை
அந்தரேயின் அம்மா ஒருதட்டில் மூன்று கொழுக் கட்டையை வைத்துவிட்டு வெளியே போனள்.

தெகுலிராமன் கதைகள் 9'
அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று காத்திருந்த அந்தரே அந்தத் தட்டில் இருந்து ஒரே ஒரு கொழுக் கட்டையை திருடிச் சாப்பிட்டான். வெளியே போயிருந்த அந்தரேயின் அம்மா திரும்பி வந்து பார்த்தபோது ஒரு கொழுக்கட்டை குறைந் திருந்தது.
இது அந்தரேயின் வேலையாகத்தான் இருக் கும்? என்று நினைத்த அந்த ரேயின் அம்மா அந்த ரேயைக் கூப்பிட்டுக் கேட்டாள்:
66 மூன்று கொழுக்கட்டை வைத்திருந்தேன். இரண்டுதான் இருக்கிறது. நீ எடுத்தாயா???
அந்தரே அந்தத் தட்டை உற்றுப் பார்த்து விட்டு, 6 மூேன்று கொழுக்கட்டையா? இதில்தான் மூன்று கொழுக்கட்டை இருக்கிறதே!?? என்று சொன்னன்.
66 என்ன, விளையாடுகிருயா? இதில் மூன்று கொழுக்கட்டை இருக்கிறதா? எங்கே காட்டு?? என்ருள் கோபத்துடன் அந்தரேயின் அம்மா.
அந்தரே சிரித்துவிட்டு தட்டில் இருந்த கொழுக் கட்டையை எடுத்து, ‘ஒன்று இரண்டு ஆக மொத்தம் மூன்று?? என்று எண்ணி இரண்டு கொழுக்கட்டையை மூன்று கொழுக்கட்டையாகக் கணக்குச் சொன்னன்.
(ஓகோ அப்படியா உன் கணக்கு.?? என்று சொன்ன அந்தரேயின் அம்மா தட்டில் இருந்த இரண்டு கொழுக்கட்டையை, 'ஒன்று. இரண்டு??

Page 8
'10 இலங்கை நாட்டு
என்று எண்ணியவாறு எடுத்தாள், பிறகு சொன் ஞள். இந்த இரண்டு கொழுக்கட்டையும் எனக் கும் உன் அப்பாவுக்கும்.??
அந்தரே கேட்டான். எனக்குக் கொழுக் கட்டை??
'உனக்கா? நீதான் ஒன்று இரண்டு, ஆக மொத்தம் மூன்று கொழுக்கட்டை என்று கணக்கு சொன்னயே! நீ மூன் ருவது கொழுக்கட்டையை எடுத்துக்கொள்.99 அந்தரே திரு திரு? வென்று முழித்தான். அதன் போட்ட கணக்கு அவனையே வாரிவிட்டது.
4
தங்கமாலை
ஒரு முறை ஊரில் பெரும் பஞ்சம் ஏற்பட்டி ருந்தது. இதனுல் உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏழைகள் சாப்பிட எது வுமே கிடைக்காமல் பட்டினியாக இருந்தார்கள்.
அப்போது வயதில் சிறியவனன அந்தரே இதைப் பார்த்துக் கவலைப்பட்டான். அரசரிடம் போய்ச் சொன்னுல் இதற்கு ஒரு முடிவு கிட்டும் என்ற நம்பிக்கை அவனுக்கு வந்தது. தன் வய

தெனலி ராமன் கதைகள் 11
தொத்தவர்களே தன்னேடு அரண்மனைக்குப் போகக் கூப்பிட்டான். அவர்கள், 86அரண் மனைக்கா? நாங்கள் வரவில்லை. நீ போ...?? என்று சொல்லிவிட்டார்கள்.
கடைசியில் அந்தரே தன்னந்தனியாக அரண் மனைக்குப் போனன். ஆனல் அவனைக் காவலாளிகள் தடுத்தார்கள். அந்தரே கோபத் துடன் சத்தம் போட்டுக் கத்தினன்: 66 சாப்பிட எதுவுமில்லை. சாப்பிடக் கொடுங்கள். இதைச் சொல்லக் கூட விடமாட்டேன் என்கிறீர்களே192
அரண்மனை வாசலில் அந்தரே சத்தம்போடு வதை ஒரு காவலாளி அரசரிடம் சொன்னன். அரசர் வந்தார். அந்த ரேயைப் பார்த்தார். சிென் னப் பையன் ஏன் இங்கே வந்து சத்தம் போடு கிருன்?92
அந்தரேயிடம் விசாரித்தார் அரசர்.
அந்தரே சொன்னன். 'அரசே! நாட்டில் பஞ்சம் ஏற்பட்டிருப்பதால் ஏழைகள் பட்டினியில் தவிக்கிறர்கள். இதை யாரும் கவனிக்கவில்லை. இதை உங்களிடம் எடுத்துச் சொல்ல வந்தேன். ஆனல் என்னை உள்ளே விடமறுத்துவிட்டார்கள். இது அநியாயம். ??
அரசர் உடனே, * உனக்கு ஒரு மூட்டை அரிசி தந்தால் போதுமா??? எனக் கேட்டார்.
அந்தரே அதற்குச் சொன்னன். 'என் பசி யைத் தீர்த்தால் போதுமா? என் போன்றவர்கள்

Page 9
2 இலங்கை நாட்டு
நிறைய இருக்கிருர்கள். அவர்களின் பசியைத் தீர்க்க வேண்டும். அதற்காகத்தான் வந்தேன்.?? அரசர் அந்தரேயின் பொதுநலத்தைப் பாராட்டி, ேேசின்ன வயதிலேயே பொதுநல உணர்வோடு இருக்கிருயே. அதைப் பாராட்டு கிறேன்99 என்று சொல்லி விட்டு அந்தரேயிடம் தங்க மாலையைக் கொடுத்தார். அடுத்த கணம் அதிகாரிகளை ஏழைமக்களுக்கு உணவுப் பொருட் கள் வழங்குமாறு உத்தரவிட்டார்.
தங்கமாலையை வாங்கிக் கொண்ட அந்தரே அரசர் அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டதும் அந்தத் தங்க மாலையைத் திருப்பி அரசரிடமே கொடுத்துவிட்டுச் சொன்னன். ‘அரசே! அனை வருக்கும் உணவு வழங்க உத்தரவு போட்டதே போதும். தங்க மாலை வேண்டாம். நான் மட்டும் தங்கமாலை போட்டுக் கொண்டால் போதுமா? என்னைப் போன்ற சிறுவர்கள் நிறைய இருக்கிறர் களே! அவர்களுக்கு யார் தங்கமாலை கொடுப்பார் 56fr???

தெனுலிராமன் கதைகள் 13
5 கிணற்றில் விழுந்தது யார்?
அன்று பெளர்ணமி தினம். வெளியே விளை யாடப்போன அந்தரே இருட்டி வெகு நேர மாகியும் வரவே இல்லை.அந்தரேயை தாய். தேடவே இல்லை, ஊர் சுற்றிவிட்டு வருவான் என்று இருந்தாள் அவள்.
அந்தரே தினமும் அப்படித்தான் விளையாடப் போவான். இருட்டிய பின் தான் திரும்பிவருவான். அவனுக்குப் புத் தி சொல்லிச் சொல்லி அவளுக்கு அலுத்துவிட்டது.
இன்று வரட்டும். அவனுக்கு ஒரு பாடம் படித்துக் கொடுக்கிறேன்? என்று மனதில் கறுவிக் கொண்டாள் அவள்.
அவள் தூங்கும் வரை அந்தரே வரவில்லை. அந்தரே வந்து போது அவள் தூங்கிக்கொண்டி ருந்தாள். メ வீட்டுக்கதவைத் தட்டித் தட்டிப் பார்த்தான். திறக்கவே இல்லை. சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட அவள் கதவைத் திறக்க விரும்பவே இல்லை.
வெகுநேரம் கழித்து திடீரென்று யாரோ கிணற்றில் குதிக்கும் சத்தமும் அப்படியே *ஐயோ. அம்மா?? என்று அலறும் சத்தமும் கேட்டது. அந்தக் குரல் அந்தரேயின் குரல்தான். சந்தேகமே இல்லை.

Page 10
14 இலங்கை நாட்டு அத்தரேயின் தாய் பதறித் துடித்துக்கொண்டு கிணற்றருகே ஓடினள். பெளர்ணமி நிலவின் வெளிச்சத்தில் கிணற்றைப் பார்த்தாள். எதுவும் தெரியவில்லை. . வீட்டில் இருக்கும் விளக்கைக் கொண்டு வந்து பார்ப்பதற்காக வீட்டிற்குப் போளுள். .
வீட்டில் அந்தரே தூங்கிக் கொண்டிருந்தான். அவனை எழுப்பினுள் . . .
ேேஎப்படி வந்தாய்?..?? அந்தரே திருப்பிக் கேட்டான். ேேநான்தான் எப்போதோ வந்து விட் CBL-C86OT...?
*அப்படியானுல் கிணற்றில் விழுந்தது 山T片?...°”
யோரும் விழவில்லை. அப்படி விழுந்த சத்த மும் கேட்கவில்லையே. ஒருவேளை நீங்கள் கனவு கண்டீர்களோ என்னவோ??? அவள் பேசவில்லை. கிணற்றில் விழும் சத்தமும் அந்தரேயின் குரலும் கேட்டது. கிணற்றையும் போய்ப் பார்த்தாள். இவையெல்லாம் கனவா?. பேசாமல் படுக்கையில் விழுந்தாள் அவள். அந்தரே தனக்குள் சிரித்துக்கொண்டிருந் தான்.
கிணற்றில் கல்லப் போட்டு "ஐயோ.அம்மா? என்று கத்தியது அவன்தான். அப்படிச் செய்த தால்தான் கதவு அம்மாவால் திறக்கப்பட்டது.

தெனுலிராமன் கதைகள் 15
இல்லையென்றல் திறக்கமாட்டாள். கதவு திறந்த தும் அந்தரே உள்ளே போய்படுத்துக்கொண்டான். கெட்டிக்காரன் அந்தரே!
6
அந்தரே அரசவைக் கோமாளியான கதை
அரண்மனைக்குள்ளே ஒரு பெரிய குளம் இருந் தது. அந்தக் குளத்திற்குப் பக்கத்தில் அரசரின் படுக்கையறை கொண்ட மாளிகை இருந்தது. இரவில் அந்த மாளிகையைச் சுற்றிப் பெருத்த சத்தம் கிளம்பிக்கொண்டே இருந்தது. இதனுல் அரசரால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று கண்டு பிடிக்குமாறு அரண்மனைக் காவலர்களுக்கு அரசர் கட்டளை போட்டார். அரண்மனைக் காவலர்கள் அரண்மனைக்குப் பக்கத்திலுள்ள குளத்திலிருந்து தான் அந்த சத்தம் வருகிறது என்பதைக் கண்டு பிடித்தார்கள்.
அரசர் மத்திரிமார்களைக் கலந்து யோசித்தார். இந்தச் சத்தத்தை இல்லாமல் செய்ய என்ன வழி என்று அவர்களிடம் கேட்டார். யாரும் எந்த

Page 11
16 இலங்கை நாட்டு
வழியும் சொல்லவில்லை. கடைசியில் அரசர் முரசு அறிவிக்க உத்தரவிட்டார்.
நாடெங்கும் முரசு அறிவிப்பவன், யார் இந்தச் சத்தத்தை இல்லாமல் செய்கிறர்களோ அவர்களுக்குப் பரிசு? என்று அறிவித்தான். இதைக்கேட்டு நாடெங்கும் உள்ள பெரிய வீராதி வீரர்களும் அரண்மனைக்கு வந்து இரவில் கிளம்பு கின்ற சத்தத்தை அகற்றும் முயற்சியில் முயன்று தோல்விதான் கண்டார்கள்.
அரசருக்குக் கவலை தலைதூக்கியது.
இரவில் சத்தம் வந்து கொண்டே இருந்தது. அந்த ரேக்கு இது தெரியவந்தது. அப்போது அவன் ஒரு சாதாரண மனிதன். ஆனல் அவனு டைய சொந்தக் கிராமத்தில் புகழ்பெற்றவன்.
அரண்மனைக்கு வந்தான். இரவில் அந்தச் சத்தத்தைக் கேட்டான். பகலில் குளத்திற்குப் போனன். குளக்கரையில் உள்ள தவளைகளையும் தவளைக் குஞ்சுகளையும் பிடித்துக் கொன்றான். அவனுடைய இந்த வேலை சில நட்கள் நீடித்தன.
ஒருநாள் அரசரிடம் இனி சத்தம் வராது? என்று சொன்னன் அந்த ரே.
அன்று இரவு அரசர் பார்த்தார். சத்தமே கேட்கவில்லை; நிம்மதியாகத் தூங்கினர் அரசர்.
மறுநாள் அரசர் அந்த ரே யை அரண்மனைக்கு வரச் சொல்லி பாராட்டி ஏராளமான பரிசில்களை

தெனுலிராமன் கதைகள் 17
கொடுத்து அனுப்பினன். அதன் பின்னர் அந்தரே அரசரைப் பார்க்க வருவான். சிலநாட்கள் அரண் மனையில் இருப்பான். பிறகு போவான்.
அந்தரே அரண்மனையில் இருக்கும் போதெல் லாம் அரசர் அவனுடைய கோமாளித்தனங்களில் சிரித்து மகிழ்வார். கவலையாக இருக்கும் போதெல் லாம் அரசர் அந்தரேயைக் கூப்பிடுவார். அப் படியே அந்தரேயை அரசவைக் கோமாளியாக் கினர் அரசர்.
அன்று முதல் அரண்மனையில் அந்தரேக்கு வேலை கிடைத்தது.
அதன் பின்னர் அந்தரே அரசரைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு பாட்டுப் பாடிக் கொண்டே இருந்தான். அந்தப் பாடல் இதுதான் .
'யந்திரத்தாலே நூல் நூற்கலாம் மந்திரத்தாலே ஜெபம் செய்யலாம் அக்கினியிலே குளிர் காய்கலாம் அந்தரேயாலே சிரித்துப் பார்க்கலாம்.22
சிறிது காலம் இந்தப்பாடலைப் பாடிகொண்டே இருந்தான் அந்தரே.
இ-2

Page 12
18 இலங்கை நாட்டு
7.
வாயில்மண். வாயில்மண்.
ஒரு தடவை அரசருடைய மாளிகையின் முன்னல் வெள்ளைச் சர்க்கரையை (இலங்கையில் அதைச் சீேனி யென்று சொல்வார்கள்) ஒரு பெரிய பாயில் காயப் போட்டிருந்தார்கள். அரச ரைப் பார்க்க மாளிகைக்குப் போன அந்தரே மன் னரிடம், வாசலில் என்ன காயப் போட்டிருக் கிறீர்கள்??? என்று கேட்டான். அரசர் இவன் எங்கே அள்ளிச் சாப்பிட்டு விடுவானே என்ற பயத்தில் 66ஆற்றில் இருந்து எடுத்து வந்த புது வகையான மணல். காயப் போட்டிருக்கிறேன். 99 என்றர்.
அந்த ரேக்கு அரசர் சொல்வது பொய்யென்று புரிந்தது. தன் வீட்டிற்குப் போய் தன் மகனைக் கூப்பிட்டான். அவனிடம் 'நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் அரசரின் மாளிகையின் முன்னல் நிற்பேன். நீ அந்த நேரத்தில் அம்மா செத்து விட்டாள் என்று சொல்லி அழு!?? என்று சொன்னுன்
அந்த ரே மாளிகையின் வாசலுக்குப் போனன். அரசர் சர்க்கரை காயப்போட்டிருந்த இடத்தைச் சுற்றிக் காவல் போட்டிருந்தார். இதையெல்லாம் கவனித்த அந்தரே அரசரோடு பேசிக் கொண் டிருந்தான்.

தெளுலிராமன் கதைகள் 19
அந்தரேயின் மகன் ஓடிவந்தான். அப்பா. நம்ம அம்மா திடீரென்று செத்துப்போயிட் டாங்க..?? என்று அவன் சத்தம் போட்டு அழு தான். அவ்வளவு தான். அந்தரே தளையில் அடித் துக்கொண்டு விட்டு சர்க்கரையின் மீது உருண் டான். இனி எப்படி வாழ்வேன்? அடக்கடவுளே! இப்படித் திடீரென்று போய் விட்டாளே! என் வாழ்க்கையே முடிந்து விட்டதே. வாயில் மண். வாயில் மண் ?? என்று சொல்லியவாறு வெள்ளேச் சர்க்கரையை அள்ளி அள்ளி வாயில் போட்டான்.
அந்தரேயின் தந்திரம் அரசருக்குப் புரிந்து விட்டது. ஆனல் அவரால் ஒன்றும் செய்யமுடிய வில்லை. அவர் வெள்ளைச் சர்க்கரையை மணல் என்று அல்லவா சொல்லியிருந்தார்.
அரசர் தன் மந்திரியை அழைத்து அந்தரேக்கு ஒரு மூட்டை வெள்ளைச் சர்க்கரை கொடுக்கச் சொன்னுர்.
O
8
யார் செவிடு?
அந்தரேக்கு திருமணமான புதிது. தன் மனை வியை அரண்மனைக்கு அழைத்துப் போகவே இல்லை. ஒருநாள் அரசரின் மனைவி அந்த ரேயைக் கூப்பிட்டு, உன் மனைவியை அரன்மனைக்குக் கூட்டிக்கொண்டு வாவேன்.92 என்ருள்.

Page 13
20 இலங்கை நாட்டு
அதற்கு அந்தரே, என் மனைவி ஒரு செவிடு. அவளோடு உங்களால் பேச முடியாது?? என்றன்.
நோன் உரத்துப் பேசிக்கொள்கிறேன். கூட் டிக் கொண்டு வா..?? என்ருள் அரசரின் மனைவி.
அந்தரே தன் மனைவியைக் கூட்டிவரச் சம்ம தித்தான். அதன் படி ஒருநாள் தன் மனைவியை அரண் மனைக்குக் கூட்டிப் போனன். அரசியைச் சந்திக்க வைத்து விட்டு அந்தரே நழுவி விட் liroir.
அந்தரேயின் மனைவியோடு அரசி சத்தம் போட்டுப் பேசினுள். அந்தரேயின் மனைவியும் அரசியோடு சத்தம் போட்டுப் பேசினள்.
அரசி நினைத்தாள்- *செவிடு சத்தம் போட்டுத் தான் பேசும் போலும்? என்று.
இருவரும் சத்தம் போட்டே பேசினர்கள். சிறிது நேரத்தில் மாளிகையின் வெளியே பெரிய கூட்டம் கூடிவிட்டது. உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவிலலை. அரசருக்கு இந்தத் தகவல் எட்டியது. தன் மனைவியிடம், 'ஏன் சத்தம் போட்டுப் பேசுகிருய்??? என்று கேட்டார் அவர். அரசி உடனே சொன்னுள், 6 அந்தரே தான் சொன்னுன் தன் மனைவி செவிடு என்று. அதனல் தான் சத்தம் போட்டுப் பேசினேன்.??

தெனுலிராமன் கதைகள் 21
அந்தரேயின் மனைவிக்கு கோபம் வந்தது 'நானு செவிடு? நீங்கள்தான் செவிடு என்று என் கணவர் சொன்னுர், அதனுல் தான் சத்தம் போட்டுப் பேசினேன்.99 என்ருள் அவள். அரசர் நடந்ததை நினைத்து வாய்விட்டுச் சிரித்தார்.
O
9
தூக்கமுடியாத கல்
ஒரு ஊரில் ஒரு வயலின் நடுவில் பெரிய கல் ஒன்று கிடந்தது. இதனுல் விவசாயம் செய்ய முடியாமல் இருந்தது. விவசாயிகள் அந்தக் கல்லைத் தூக்குபவர்களுக்குப் பரிசு தருவதாக அறி வித்தார்கள். இந்தகச் செய்தி அந்தரேக்கு எட்டி யது. அந்தரே அந்த ஊருக்குப் போனன். விவ சாயிகளிடம், 68 கல்லை நான் தூக்குகிறேன். ஆனல் ஒரு மாதத்திற்குக் கோழிக்கறியோடு சாப்பாடு போடவேண்டும். முடியுமா??? என்று கேட்டான். அவர்கள் அதற்குச் சம்மதித்தார்கள். ஒரு மாதம் அந்தரேக்கு கோழிக்கறியோடு? விருந்து நடந்தது. ܢ
ஒருமாதம் ஓடியது. கல் தூக்க வேண்டிய நாளும் வந்தது. அன்று ஊரே திரண்டு வந்திருந்

Page 14
22 இலங்கை நாட்டு
தது. யானை தூக்க முடியாத கல்லை இந்த அந்தரே தூக்கப் போகிறனே..!
அந்தரே ஒரு பயில்வானைப் போல் கால், கைகளை நீட்டி, மடக்கி விட்டு தோள் பட்டையில் ஒரு சாக்கை மடித்து வைத்தவாறு, 'ஊம். எல்லோரும் சேர்ந்து கல்லைத் தூக்கித் தோளில் வையுங்கள். தூக்குகிறேன்" என்றன். ஒருத் தரும் பேசவில்&ல. கல்லைத் தூக்குகிறேன் என்று தானே சொன்னன். தூக்கி வைத்தால் தானே தூக்குவான்?
10
பசி தீர்த்த பழம்
அந்தரேக்கு ரொம்பப் பசி. அவன் மனைவியும் ஊருக்குப் போயிருந்தாள், கையில் காசு மில்லை. எப்படிச் சாப்பிடுவது?? என்று சிந்தித்துக் கொண்டே அந்தரே வீதி வழியே போய்க்கொண் டிருந்தான். வழியில் ஒருத்தன், பலாப்பழம் விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் அந்தரே, பலாப்பழம் என்ன விலை??? என்று கேட்டான். *ஒருபழம் ஐம்பது காசு' என்று பதில்வந்தது.

தெளுலிராமன் கதைகள் 28
தன்னிடம் ஒரு காசுகூட? இல்லையென்று உணர்ந்த அந்தரே, பலாப்பழக் கொட்டையை என்ன விலைக்கு எடுக்கிருய்??? என்று கேட்டான்.
வியாபாரி, 'ஒரு கொட்டையை ஒரு காசுக்கு வாங்கிக் கொள்கிறேன்?? என்று சொன்னன்.
அந்தரே உடனே ஒரு முழுப் பலாப்பழத்தை வெட்டித்தரச் சொல்லி அங்கேயே பலாச்சுளையை உரித்துச் சாப்பிடத் தொடங்கினுன். எல்லாச் சுளையையும் சாப்பிட்ட பின்னர் பலாக் கொட் டையை எண்ணிப்பார்த்தான். சரியாக ஐம்பது பலாக்கொட்டைகள் இருந்தன. அதை அப்படியே அந்த வியாபாரியிடம் கொடுத்தான்.
அவன் ஒன்றும் புரியாமல், 'இது எதற்கு? ஐம்பது காசு கொடு??? என்று கேட்டான்.
அந்தரே, 'நீ தானே ஒரு பலாக் கொட் டையை ஒரு காசுக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னுய்? இங்கே ஐம்பது பலாக் கொட்டை இருக்கிறது. அதற்கு நீ காசு தரவேண் டாம். நான் பலாப்பழத்திற்குத் தரவேண்டியதற் காக வைத்துக் கொள்?? என்று சொல்லி விட்டுப் போனன்.

Page 15
24 இலங்கை நாட்டு
கழுதையும் குதிரையும்
ஒரு அப்பாவி கிராமத்தானிடம் 65(60356Opu is குதிரை என்று சொல்லி விற்றன் அந்தரே. உண்மையைத் தெரிந்து கொண்ட கிராமத்தான் அரசரிடம் நீதி கேட்கப் போனுன், அரசர் அந்தரேயை விசாரித்தார்.
ஏன் கழுதையைக் குதிரை என்று சொல்லி விற்ருய்?99
*அரசே! நான் குதிரை என்றுதான் சொல்லி விற்றேன். வேண்டுமென்ருல் கேட்டுப்பாருங்
56.9
அரசர் அந்தக் கிராமத்தானிடம் கேட்டார். அவன் சொன்னன்; எகுதிரை என்று தான் சொன்னன். நம்பினேன். ஆனல் இப்போது குதிரைக்குப் பதில் கழுதை நிற்கிறதே?99
அந்தரே சொன்னன்; நானும் அப்படியே நம்பி வாங்கினேன். விற்றேன். திடீரென்று கழுதையானதற்கு நான் என்ன செய்ய முடி யும்?.என்னிடம் இருக்கும்வரை அது குதிரை யாகத்தான் இருந்தது.”*
கடைசியாக அவன் சொன்னன்:

தெளுலிராமன் கதைகள் 25
கெழுதைக்கும் குதிரைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எதற்குக் குதிரை வாங்க வேண் Gh?
அரசர் சிரித்துக் கொண்டே கழுதையை வாங்கிக் கொண்டு கிராமத்தானுக்குப் பொருள் கொடுத்து அனுப்பினுர்,
O
12
கால் வைக்காதே.
ஒரு தடவை அந்தரே அரண்மனையில் செய்த வேடிக்கைத்தனத்தால் கோபமடைந்த அரசர் அந்தரேயை, 'இனிமேல் அரண்மனையில் கால் வைக்காதே.99 என்று சொல்லி விட்டார்.
அந்தரே அரசரிடம் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தான். அரசரின் மனம் மாற வில்லை. சில நாட்கள் ஓடின. அந்தரேக்கு அரச ரைப் பார்க்க முடியாமல் என்ன வோபோல் இருந் தது. இதே உணர்வு அரசருக்கும் இருந்தது. ஆஞல் அதை வெளிக்காட்டவில்லை அவர்.
அந்தரே அரண்மனையில் உள்ள ஒருவர் மூல மாக அரசரிடம் அரண்மனைக்கு வர விரும்புவ தாகச் சொல்லிப் பார்த்தான். அரசர் அப்போதும் அசைய வில்லை. அந்தரே அரண்மனையில் கால்

Page 16
26 இலங்கை நாட்டு
வைத்தால் மரண தண்டனை கொடுப்பேன் என்று சொல்லி விட்டார்.
அடுத்த நாள் அரசவை கூடியது. அந்தரே யின் இடம் காலியாக இருந்தது. அரண்மனையில் இருந்தவர்கள் அந்தரேயின் இடத்தைப் பார்த்த வாறு இருந்தார்கள். அந்தரே இல்லாமல் என்னவோ போலிருந்தது. அந்தரே இருந்தால் கலகலப்பு நிச்சயம் இருக்குமே!
அரசர் அரண்மனைக்குள் வந்தார். அவர் வந்த கொஞ்ச நேரத்திற் கெல்லாம் அந்தரே அரண் மனைக் குள்ளே வந்தான். ஆனல் அவன் நடந்து வரவில்லை. அவனைச் சுமந்து வந்தான் ஒருவன். அந்தரே அவனுடைய இடது கைப்பக்கம் ஒரு காலையும் வலது கைப்பக்கம் ஒரு காலையும் தொங்க விட்டவாறு கழுத்தில் உட்கார்ந்து கொண் டிருந்தான். அரசர் கோபத்துடன் அந்தரேயைப் பார்த்தார். அந்தரே சொன்னன்.
அரசே! நீங்கள் சொன்னபடி நான் வந் திருக்கிறேன். என் கrல் உங்கள் அரண்மனையில் படவே இல்லையே! நீங்களும் என் கால் அரண் மனையில் படக் கூடாது என்றுதானே சொன்னீர் 56fr???
அரசருக்கு அப்போதுதான் அந்தரேயின் தந் திரம் புரிந்தது. தன்னை மறந்து சிரித்தார். எப் படியோ அரண்மனைக்குள் வந்த அந்தரேயைப்

தெளுவிராமன் கதைகள் 27
பாராட்டினர். பிறகு அந்தரேயை இனி சொந்தக் காலில் நடந்து வரச்சொன்னர் அவர்.
O
13
குதிரையின் பலம்
அரசர் ஒருநாள் தன் அரண்மனையில் உள்ள குதிரை லாயத்தைப் பார்க்கப் போயிருந்தார் அங்கே இருந்த குதிரைகள் அத்தனையும் மெலிந்து போயிருந்தன. அது பற்றி விசாரித்ததில் குதிரை களைப் பார்க்க ஒழுங்கான ஆள் இல்லை என்பது அரசருக்குத் தெரியவந்தது.அரசர் மந்திரிகளுடன் குதிரை லாயத்தைப் பார்க்க யாரைப் போடுவது என்று யோசித்தார். அங்கே இருந்த பலரின் நினை வும் அந்தரேயின் மீது சென்றது. உடனே மந்தி ரியும் அந்த ரேயைப் போடலாம் என்று சொன்னர். அரசரும் அதற்குச் சம்மதித்தார். அந்த ரேயை வழவழைத்தார்கள். அந்தரே ஒடிவந்தான். அர சர் அவனை குதிரை வளர்ப்பில் ஈடுபடச் சொன்னர் அந்தரே தலையாட்டினன். அதன் பின்னர் அந் தரே குதிரை வளர்ப்பில் ஈடுபட்டான். முதல் நாள் குதிரைகளை ஒழுங்காகக் கவனித்தான். பிறகு தன் இஷ்டம் போல் ஊரைச் சுற்ற ஆரம்பித்

Page 17
28 இலங்கை நாட்டு
தான். சில மாதங்கள் ஓடின. அரசர் ஒருநாள் ஆசையோடு குதிரைகளைப் பார்க்கலாயத்திற்கு வந்தார். குதிரைகளைப் பார்க்கவே முடியவில்லை. குதிரைலாயம் நாலு பக்கமும் அடைக்கப் பட்டி ருந்தது. அந்தரேயையும் காணவில்லை. அரசர் லாயத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார்.
லாயத்தில் ஒர் இடத்தில் தலை நுழையக்கூடிய ஓர் ஓட்டை இருந்தது. அந்த ஓட்டை வழியாகத் தான் அந்தரே எப்போதாவது குதிரைகளுக்கு உணவு கொடுப்பது வழக்கமாம். அரசர் குதிரை களைப் பார்ப்பதற்காக அந்த ஓட்டை வழியே தன் நீண்ட தாடிகொண்ட தலையை விட்டுப் பார்த்தார். அவ்வளவுதான். உள்ளே பசியால் வாடிக்கிடந்த குதிரை பழுப்பு நிறத் தாடியை என்னவோ என்று நினைத்துக் கடித்து இழுத்தது. அரசர் சத்தம் போட ஆரம்பித்தார்.
அந்தரே எங்கிருந்தோ ஒடி வந்தான். அதற் குள் அரசரின் பாதித்தாடி அறுந்து கீழே விழுந்து கிடந்தது.
அந்தரே அப்போது சொன்னன். **அரசே! உங்களை யார் ஓட்டைக்குள் தலையை விடச்சொன் னது? குதிரைகள் எல்லாம் நல்ல பலத்தோடு இருக்கின்றன. உங்கள் தாடி அறுந்ததில் இருந்து அதைப் புரிந்து கொண்டிருப்பீர்களே!??
அரசர் அந்தரே குதிரைகளை நல்ல பலத் துடன் வைத்திருப்பதாக நினைத்துப் போய்விட்
டார்.
O

தெனுலிராமன் கதைகள் 29
14
அந்தரேயின் குதிரைப்படைகள்
பக்கத்து நாட்டு அரசன் பெரும்படையுடன் வரப்போகிறன் என்பதை தெரிந்துகொண்ட அரசர் ரொம்பவும் கவலைப்பட்டார். அந்தப் படை யெடுப்பை எவ்வாறு எதிர் நோக்குவதென்று தன் படைத் தளபதியுடன் தீவிர ஆலோசனை செய் தார். படைத்தளபதி படைபலம் குறைவாக இருப் பதாகச் சொல்லி வேறு நாட்டு உதவியை தேடிக் கொள்ள வேண்டுமென்று ஆலோசனை சொன்னன். ஆனல் அரசருக்கு அந்த ஆலோசனை பிடிக்கவே இல்லை. மந்திரிமார்களும் வேறு வேறு ஆலோ சனைகளை அரசரிடம் சொன்னர்கள். அரசருக்கோ எந்த ஆலோசனையும் பிடிக்கவே இல்லை. ஆலோசனையில் கலந்து கொண்டவர்கள் யாருமே அரசருக்குப் பிடித்தமான ஆலோசனையை சொல்ல வில்லை. இதனுல் அரசர் கவலைப்பட்டார். கடைசி யில் அந்தரேயின் ஆலோசனையைக் கேட்கலாம். அவனுல் தான் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்று அனைவருமே வந்தார்கள்.
அரசரும் அதற்கு உடன்பட்டார். அந்தரேயை வரவழைக்க உத்தரவிட்டார். அந்த ரே ஓடி வந்தான். அவனிடம் படையெடுப்பைப் பற்றி அரசர் சொன்னுர்,
அந்தரே யோசித்தான். பிறகு அரசரிடம் சொன்னுன்

Page 18
30 இலங்கை நாட்டு
அரசே! என்ன்ரிடம் ஒரு திட்டம் இருக்கிறது. தாங்கள் அதற்கு அனுமதி தந்தால் அதை வெற்றி கரமாக நிறைவேற்றுகிறேன். அதன் மூலம் எதிரியை ஓட ஓட விரட்டுகிறேன். ஆனல் இப்போது யாரிடமும் அந்தத் திட்டம் என்ன என்று சொல்லமாட்டேன்.??
அரசர் எப்படியோ எதிரியை விரட்டினல் போதுமென்ற எண்ணத்தில் உடன்பட்டார்.
மறுகணம் அந்தரே உத்தரவுகள் போட்டான். நூற்றுக்கணக்கான குயவர்கள் வரவழைக்கப் பட்டார்கள். அவர்களிடம் நூற்றுக்கணக்கான மண் குதிரைகளைச் செய்யும்படி அந்தரே உத்திர விட்டான்.
குயவர்கள் ஒரு பெரிய மைதானத்தில் துரித மாக குதிரைகளை உருவாக்க செயல்பட்டார்கள்.
அரசருக்கும் மற்றவர்களுக்கும் நடப்பது என்ன என்று தெரியவே இல்லை.
சில நாட்கள் 3t-60. . .
ஒரு நாள் அந்தரே அரசரிடம் வந்தான். யுத்தத்திற்கு வர இருந்த அரசனுக்கு தைரியமாக, நாங்கள் போருக்கு தயார்? என்று செய்தி அனுப்புச் சொன்னன். அரசர் அவனையே தூதுவ ஞகப் போகச் சொல்லிவிட்டார்.
அந்தரே பக்கத்து நாட்டிற்கு தூதுவனக வேடமணிந்து போனன்.அந்தநாட்டு அரசனிடம் *6யுத்தத்திற்குத் தயார் படையெடுக்கிறீர்களா?22

தெனுலிராமன் கதைகள் 31
என்று சொன்னன். அந்த நாட்டு அரசனுக்குத் திடீரென்று யுத்தத்திற்கு தயார் என்று சொன்ன தைக் கேட்டதும் சந்தேகம் தட்டியது. அந்தரே யைக் கெளரவித்து அனுப்பிவிட்டு அவன் பின்ன லேயே ஒரு ஒற்றனை உளவு பார்க்க அனுப்பினன்.
ஒற்றன் வருவதைத் தெரிந்து கொண்ட அந்தரே அந்த ஒற்றனேடு பேச்சுக் கொடுத்து தன்னேடு அழைத்துப் போனன். தன் நாட்டிற் குப் போனதும் படை பலத்தைக் காட்டுவதற்காக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றன். அங்கிருந்து குதிரைப்படைகளைக் காட்டினன், ஒற்றன் தூரத்தில் தெரிந்த குதிரைப் படைகளைப் பார்த்து பயந்துவிட்டான். தன் நாட்டின் குதிரைப்படை அந்தக் குதிரைப் படைக்கு முன்னல் நிற்கமுடியமா? அதைவைத்துக்கொண்டு இந்தக் குதிரைப்படையை வெல்ல முடியுமா?
அந்தரே மேலும் பயமுறுத்தினன். “இன்னும் நூற்றுக்கணக்கான குதிரைகள் தயாராகி வரு கின்றன. இந்தக் குதிரைப்படைக்கு முன்னல் உங்கள் அரசனின் குதிரைப்படை தாக்குப் பிடிக்குமா???
ஒற்றன் பதிலே பேசாமல் தன் நாட்டிற்கு ஓடினன். அரசனிடம் குதிரைப்படையைப் பற்றிச் சொன்னன். அரசன் பயந்து அந்தரேயின் நாட்டு அரசரோடு சமாதானம் செய்து கொள்வதாச் செய்தி அனுப்பினன்,

Page 19
92 இலங்கை நாட்டு
அந்தரேயை அரசர் உள்பட அனைவரும் பாராட்டினர்கள். அரசருக்கோ இன்னமும் அந்த ரேயின் திட்டம் என்ன என்று புரியவே இல்லை. அந்தரேயிடம் ரகசியமாக அவர் அதைப்பற்றிக் கேட்டார். அந்தரே சொன்னன்.
எேன்ன அரசே! இது தெரியவில்லையா? வாருங்கள் நம் குதிரைப் படையைப் பார்ப் (3 Luth...’’
இருவரும் குதிரைப்படையைப் பார்க்கப் போனர்கள், குதிரைப்படையைப் பார்த்து அரசர் வியந்து விட்டார். இவ்வளவு குதிரைகள் நம்மிடம் இல்லையே! இவைகள் எப்படி இங்கே வந்தன?
அந்தரே உடனே சொன்னன். இங்கே இருக்கிற குதிரைகளில் கால்வா சி குதிரைகள் தான் நிஜக்குதிரைகள். மற்ற குதிரைகள் எல்லாம் மண்ணுல் செய்யப்பட்ட குதிரைகள். பல மண் குதிரைகளுக்கு இடையிலே ஒரு நிஜக்குதிரையை நிறுத்தி வைத்திருக்கிறேன். குதிரைக்காரர்களாக நிஜ மனிதர்களையே நிறுத்தி வைத்தேன். இதை தூரத்தில் இருந்து பார்த்தால் எல்லாமே நிஜக் குதிரைகளாகத் தெரியும். உளவு பார்க்க வந்த அந்த ஒற்றணும் இதைத் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டுப் பயந்து ஓடியே விட்டான். அவன் தன் அரசனிடம் குதிரைப்படையைப் பற்றிப் பயங்கரமாகச் சொல்லியிருப்பான். அதனுல்தான் அந்த அரசனும் உங்களோடு சமா தானம் செய்து கொண்டான். படையெடுப்பும்

தெனுலிராமன் கதைகள் 33
நின்று போய்விட்டது. இப்போது புரிகிறதா என் திட்டம் என்ன என்று???
அரசர் அந்த ரேயைக் கட்டிப் பிடித்து *உன்னுடைய தந்திரத்தால்தான் நாட்டின் கெளரவம் காப்பாற்றப் பட்டது. நாட்டின் சார்பாக உனக்கு நன்றி சொல்லுகிறேன்?? என்று பாராட்டி பரிசில்களை வழங்கினர்.
அந்தரே நோனும் இந்த நாட்டைச் சேர்ந் தவன். என்னுடைய நாட்டின் கெளரவத்தைக் காப்பாற்றுவது என் கடமை. கடமையைத்தான் செய்தேன்.99 என்று சொல்லிவிட்டுப் பரிசில் களைத் திருப்பி அரசரிடமே கொடுத்தான்.
15
அரசரை மலையேற்றிய அந்தரே
அரசருக்குத் திடீரென்று ஒருநாள் மலையுச் சியை ஏறிப்பார்க்க வேண்டும் என்று ஆசை வந் தது. அதுபற்றி மந்திரிகளிடம் சொன்ன போது அவர்கள் அரசே! உங்களுக்கு வயதாகிவிட்டது. இந்த தள்ளாத வயதில் இது போன்ற விபரீத ஆசையெல்லாம் வேண்டாம்...?? என்று தடுத்து
இ-3

Page 20
84 இலங்கை நாட்டு
விட்டார்கள். ஆனல் அரசர் கேட்கவில்லை. எப்படி யாவது மலேயுச்சிக்குப் போக வேண்டும் என்று சொல்லி விட்டார். அதைக் கேட்டு மந்திரிமார்கள் தவித்தார்கள். உடனே அவர்கள் பல்லக்கில் அமர்ந்து போகலாமே என்று ஆலோசனை சொன் ஞர்கள். ஆனல் அரசர், 'நடந்தே போக ஆசைப் படுகிறேன். உங்களால் முடியுமானல் நடத்திக் கூட்டிப்போங்கள்...?? என்று சொல்லி விட்டார்.
மந்திரிமார்கள் தள்ளாத வயதில் அரசரை எப்படி நடத்திக் கூட்டிப் போவது?? என்று யோசித்துத் தங்கள் மூளையைக் குழப்பிக் கொண் டார்கள்.
அரசர் அந்தரேயை வரவழைத்தார். தன் ஆசையை அவனிடம் சொன்னர். அதைக் கேட்ட அந்தரே, ஓ.. இதென்ன பிரமாதம், நான் உங் களை மலை உச்சிக்கே கொண்டு போகிறேன். பயப் படாதீர்கள்..?? என்றன்.
அரசர் அந்தரேயிடம், மேலேயுச்சிக்கு நான் பல்லக்கிலோ குதிரையிலோ வரப் போவதில்லை ?? என்று சொல்லிவிட்டார். அந்தரே அதைக் கேட்டு, *உங்களுக்கு ஏன் வீண் கவலை? நான் உங்களை மலேயுச்சிக்கே கொண்டுபோகிறேன்.?? என்று சொன்னன்.
அரசர் கேட்டார். **ஆமாம், நீ எப்படி என்னை மலையுச்சிக்குக் கொண்டு போவாய்? மந்திரிமார்களாலேயே முடியவில்லை.??

தெனுலிராமன் கதைகள் 35
மெளனமாக என்னேடு வாருங்கள்.?? என்ருன் அந்தரே.
இருவரும் அப்போதே புறப்பட்டார்கள். மலை அடிவாரத்திற்கே வந்தார்கள். அரசர் மலையை அண்ணுந்து பார்த்துவிட்டுத் தயங்கினர். அந்தரே யின் முகத்தை முகத்தைப் பார்த்தார்.
அந்தரே மெளனமாக முன்னே நடந்தான். அரசர் பின்னே நடந்தார். சிறிது தூரம் தான் அவர் நடத்திருப்பார். அவருக்கு மூச்சு இஆளத் தது. அந்தரே?? என்ருர்,
அந்தரே சிரித்தான். ஏன் சிரிக்கிருய்?92
*உங்களைப் போல் சோம்பேறி அரசனை நான் எங்கும் பார்க்கவே இல்லை. அதையெண்ணித்தான் சிரித்தேன். பக்கத்து ஊரில் உள்ள அரசன் கெட் டிக்காரன். திறமைசாலி. அவன் திறமை உங் களுக்குத் தலைகீழாக நின்றலும் வரவே 6لهTT 93... لكن அந்தரேதான் சொன்னன்.
அரசருக்குக் கோபம் வந்தது. * திடீரென்று அந்தரே இப்படிப் பேசுவான் என்று அவர் எதிர் பார்க்கவே இல்லை.9
*அந்தரே! நீ தான் இப்படிப் பேசுகிருயா? அல்லது.??

Page 21
86 இலங்கை நாட்டு
*நான் தான் அந்தரே பேசுகிறேன் அரசே! உள்ளதைத்தான் சொல்கிறேன். நீங்கள் கோழை! அரசரே...??
அரசருக்குக் கோபம் வெடித்தது. வாளை உறு வினுர்.
என்னிடம் இருந்து கொண்டு என்னுடைய உப்பையே சாப்பிட்டுக் கொண்டு என்ஜனயே கேவலப்படுத்துகிறயே. உன்னை உயிரோடு வைக்கக்கூடாது.?? என்று கத்தினர் அரசர்.
ந்தரே ஓடினன். ஓடிக்கொண்டே சொன்
குறன.
**இந்த வீரக் கத்தலுக்கு மட்டும் குறைச் சலில்லை. ஆனல் காரியத்தில் ஒன்றும் இல்லை.??
அரசருக்குக் கோபம் மேலும் கூடியது. எங் கிருந்து தான் ஒரு வேகம் அவருக்கு வந்ததோ தெரியவில்லை. அந்தரேயை விரட்டத் தொடங் கினர். அந்தரேயும் ஓடினன்.
இருவரும் ஒருவரை ஒருவர் விரட்டிக் கொண்டு மலையுச்சிக்கே வந்து விட்டார்கள். திடீரென்று அந்தரே அரசரின் காலில் சடாரென்று விழுந் தான்.
அெரசே! என்னை மன்னித்து விடுங்கள். உங் களை எப்படியாவது மலையுச்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் இப்படித் திட்டி னேன். இப்படித் திட்டியதால்தான் நீங்கள் உங் கள் தள்ளாமையை மறந்து என்னைத் துரத்திப் பிடிக்க மலையுச்சிக்கே வந்துவிட்டீர்கள். என்னை மன்னித்து விடுங்கள். உங்களைக் கேவலமாகத் திட்டி விட்டேன்.?

தெளுலிராமன் கதைகள் 37.
அரசருக்கு குேபீ2ரென்று சிரிப்பு வந்தது. சிரித்து விட்டார். எப்படியோ யாரின் உதவியும் இல்லாமல் மலையுச்சிக்கே வரச் செய்து விட்டானே! அந்தரே கெட்டிக்காரன் தான்
C.
16
சேவல் முட்டை போடுமா?
அந்தரேயின் புகழ் வெகுவாகப் பரவியதைக் கண்டு பொருமை கொண்ட சிலர் அவனை , எப்படியாவது மடக்கவேண்டும் என்று திட் டம் போட்டார்கள். ஒருநாள் அவர்கள் அந்தரே யைத் தாங்களாகவே சவால்விட்டு குளக்கரைக்கு அழைத்துச் சென்றர்கள்.
குளக்கரையில் அந்தரேயிடம் அவர்கள். 'இப்போது, உன் கண் முன்னல் குளத்தில் மூழ்கி முட்டை எடுப்போம். அது போல் நீயும் குளத்தில் மூழ்கி முட்டை எடுத்துக் காட்டுகிருயா?99 என்று சவால் விட்டார்கள்
அந்தரே யோசித்தான். பிறகு அவன், இன்று இவர்களிடம் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண் டோம்? என்று நினைத்துக் கொண்டான், m

Page 22
88: இலங்கை நாட்டு
என்ன யோசிக்கிருய்? உன்னல் முடியுமா? முடியாதா?. முடியா தென்ருல் சொல்லிவிடு. ஏமாற்றப் பார்க்காதே!22
அந்தரேயைக் கிண்டல் செய்தார்கள். பிறகு என்ன நினைத்தானே அந்தரே அ. ர்களின் சவாலை ஏற்றுக் கொண்டான்.
அடுத்த நிமிடம் அந்தரேயிடம் சவால் விட்ட வர்கள் அத்தனை பேரும் குளத்தில் மூழ்கி அந்தரே வருவதற்கு முன்னேயே அந்தக் குளத்தில் மறைத்து வைத்திருந்த கோழி முட்டைகளை வெளியே எடுத்து அந்தரேயிடம் காட்டினர்கள். அதைப் பார்த்து அந்தரே வியப்படைந்து, ஏதோ ஒரு சூழ்ச்சியுடன் தான் சவால் விட்டிருக் கிறர்கள்? என்று நினைத்துக் கொண்டே குளத்தில் மூழ்கினன். எங்காவது முட்டை கிடைக்குமா என்று குளத்தின் உள்ளே தேடிப்பார்த்தான். ஒன்றும் கிடைக்கவில்லை.
வெகு நேரம் குளத்தில் தேடிக் கொண்டிருந்த அந்தரே திடீரென்று வெளியே வந்தான். வெளியே வந்ததும் சேவல் சிறகடிப்பதுபோல் தன் இரு கை களே அசைத்து, ேெகொக்கரக்கோ. கொக் கரக்கோ..?? என்று கூவிவிட்டு சொன்னன்: 'நீங் கள் கோழிகள். முட்டை எடுத்தீர்கள். நான் சேவல். எப்படி முட்டை எடுப்பேன்???

தெணுலிராமன் கதைகள் S 9
அந்தரே மறுபடியும் சேவலைப் போல் கூவின்ை. அவனை மடக்கத் திட்டம்போட்டு வந்த வர்கள் கையில் கோழி முட்டையுடன் முழித்துக் கொண்டிருந்தார்கள்.
ロ
1.
அந்தரே மகனின் திருட்டு
அந்தரேயின் மகன் ஒரு மாந்தோப்பில் திருட்டுத்தனமாக நுழைந்து ஒரு மாமரத்தில் ஏறி பழுத்த மாம்பழங்களைப் பறித்துச் சாப்பிட்டான். பிறகு ஏழெட்டு மாம்பழங்களைப் பறித்துத் தன் வீட்டிற்குக் கொண்டுபோக முயன்றன்.
அப்போது வெளியே போயிருந்த காவலாளி மாந்தோப்புக்கு வந்தான். அந்தரேயின் மகனை விரட்டிப் பிடிக்க வேகமாக ஒடின்ை. அந்தரேயின் மகனே மாம்பழங்களைப் போட்டு விட்டு ஒடின்ை. இருவரும் ஓடினர்கள். கடைசியில் அந்தரேயின் மகனை காவலாளி பிடித்துக் கொண்டான். பிறகு அப்போதே அரசர் முன்னே மாம்பழங்களுடன் அந்தரேயின் மகனை நிறுத்தினுன்.
அரசர் உடனே அந்தரேயை அழைத்தான். அந்தரே நடந்ததைத் தெரிந்து கொண்டு அரச

Page 23
40 இலங்கை நாட்டு
ரிடம் தேன் மகன் திருடவே இல்லை. இது யாரோ செய்த சதி. இதை நாளை அம்பலப்படுகிறேன்? என்று சொன்னன்.
அரசர் யோசித்துவிட்டு மறுநாள் அவ்வழக்கில் தீர்ப்பு சொல்வதாக உத்தரவிட்டார்.
அந்தரே அரசரின் அனுமதியோடு தன் மகனை வீட்டிற்கு அழைத்துப் போனன்.
மறுநாள் வழக்கு விசாரணை ஆரம்பமாகியது. மாந்தோப்புக் காவலாளி அந்தரேயின் மகன் மீது குற்றம் சாட்டின்ை. இவன் மாம்பழம் திருடி யதை என் கண்ணுல் பார்த்தேன். இவன்தான் திருடினுன் ??
அந்தரே மறுத்தான். அவன் திருடவில்லை. அவன் நீ சொல்லும் நேரத்தில் அங்கேயே இருக்க வில்லை.??
காவலாளி, 'அது பொய்..?? என்று மறுத் தான்.
அப்போது திடீரென்று ஒரு குரல், 'பொய். பொய். அவன் நேற்று என்னுடைய மாந்தோப்பில் தான் இருந்தான். இதோ ஆதாரம் அவன் விட்டுப் போன செருப்பு.?? என்றது.
குரலுக்குரியவன் செருப்பைக் காட்டினன். அரசர் திகைத்தார்: திடீரென்று வழக்கில் ஏற்பட்ட மாற்றத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தார். புதிதாக வந்தவன் காட்டிய செருப்பை

தெனுலிராமன் கதைகள் 41
போட்டுப் பார்க்கும்படி அந்தரேயின் மகனுக்கு அவர் உத்தரவு போட்டார். அவனும் அதன் படி செய்து பார்த்தான். அந்த செருப்பு பொருத்தமாக இருந்தது. அப்படியென்றல் அந்தரேயின் மகன் திருடவில்லையா?
அரசருக்கே எதுவுமே புரியவில்லை.
தீ அப்போது அந்தரே சொன்னுன், போர்த்
ர்களா, அரசே!
*ஒருத்தன் என்னுடைய மாந்தோப்பில் இருந் தான் என்கின்றன். மற்றவன் தன்னுடைய மாந் தோப்பில் இருந்தான் என்கின்றன். இதில் எது ???... מ60bT60) L- 29
அரசன் உடனே வழக்கைத் தள்ளுபடி செய்து அந்தரேயின் மகனை குற்றவாளியாக்கிளுர்,
எல்லோரும் அரண்மனையை விட்டு வெளியே வந்தார்கள். அப்போது திடீரென்று அந்தரே மாந்தோப்புக் காவலாளியைக் கூப்பிட்டு, 'என்' மகன் உன் மாந்தோப்பில் நுழைந்து திருடியது உண்மைதான். ஆனல் இது அரசரின் முன்னே நீரூபிக்கப்பட்டால் என் குடும்பத்திற்கே அவ மானம் அதல்ை தான் ஒரு நாடகம் ஆடினேன். உனக்கு எதிராக சாட்சி சொன்ன மாந்தோப்புக் காவலாளி நான் அழைத்து வந்தவன். இந்த நாடகத்தால் என் குடும்ப கெளரவம் தப்பியது. ஆணுல் என் மகனுக்குக் கொடுக்க வேண்டிய

Page 24
42 இலங்கை நாட்டு
தண்டனையைக் கொடுத்து விட்டேன். இதோ பார். அவன் முதுகை ..?? என்று சொல்லிவிட்டுத் தன் மகனிடம் முதுகைக் காட்டச் சொன்னன்.
அந்தரேயின் மகன் முதுகைக் காட்டின்ை. அவன் முதுகை அந்த மாந்தோப்புக் காவலாளி பார்த்தான். அந்த முதுகில் நீளமாக ஆழமாக சவுக்கடியின் அடையாளம் பதிந்திருந்தது.
()
8
கோழி முட்டையும் சேவலும்
அந்தரே கோழிகளை வளர்த்து வந்தான். ஒரு தடவை அந்தக் கோழிகளில் ஒன்று பக்கத்துத் தோட்டத்திற்குள் முட்டை இட்டு வந்து விட்டது. இதைத் தெரிந்து கொண்ட அந்தரே பக்கத்துத் தோட்டக்காரனிடம் போய்க் கேட்டான்.
என் கோழி. உன் தோட்டத்தில் முட்டை யிட்டு விட்டது. அதைத் தருகிருயா?*
"என் தோட்டத்தில் எது இருந்தாலும் அது எனக்குத்தான் சொந்தம், தரமுடியாது.??

தெனுலிராமன் கதைகள் 48
அந்தரே ஒன்றுமே மேசாமல் வீட்டிற்கு வந் தான். பக்கத்துத் தோட்டக்காரனுக்குப் புத்தி படித்துக் கொடுக்க வேண்டும் என்ற யோசனையில் இருந்தான். அவனுடைய நேரி மூளைக்கு? ஒரு யோசனை தென் பட்டது. அதன்படி மறுநாள் பக் கத்துத் தோட்டக்காரன் இல்லாத நேரத்தில் கையில் அரிசியை வைத்துக் கொண்டு கோழி களைக் கூப்பிட்டான்.
அப்போது பக்கத்துத் தோட்டக்காரனுடைய சேவல் ஒன்று ஓடிவந்தது, அரிசியைக் கீழே போட்ட அந்தரே லபக்கென்று அந்தச் சேவலைப் பிடித்துக் கட்டிப் போட்டான்.
சேவலைக் காணுத பக்கத்துத் தோட்டக்காரன் தேடிப்பார்த்தான். அந்தரேயின் வீட்டில் தன் சேவலைக் கண்டதும் அவன் அந்தரேயிடம் வந்தான்.
மேரியாதையாக என் சேவலைத் தந்துவிடு!??
அந்தரே சொன்னன். 'உன் தோட்டத்தில் என் கோழி போட்ட முட்டையைக் கேட்டதற்கு என் தோட்டத்தில் எது இருந்தாலும் அது எனக்கே சொந்தம் என்ருய். அதுபோல்தான் உன் சேவல் என் தோட்டத்திற்கு வந்தது, இப்போது அது நீ சொன்னபடி எனக்குத்தான் சொந்தம்.9
பக்கத்து தோட்டக்காரன் பதறிஞன். ஒரு கோழி முட்டையை சொந்தம் என்று சொன்ன தற்கு சேவலையை சொந்தம் என்கிருனே!?

Page 25
d இலங்கை நாட்டு
தன் சேவலைப் பெறுவதற்காகப் பல்லைக் காட்டிக் கெஞ்சினன் பக்கத்து தோட்டக்காரன். *முட்டையைத் தருகிறேன். சேவலைத் தரு dfiguur?...??
எத்தனை முட்டை?.??
*ஒரு முட்டை.?
*ஒரு முட்டையா? யார் சொன்னது? பத்து முட்டை தந்தால் தான் சேவலைத் தருவேன்.??
'அநியாயம். உன் கோழி ஒரு முட்டை தானே போட்டது. ஏன் பத்து முட்டை கேட் கிருய்?99
எனக்குத் தெரிய ஒரு முட்டை தான் என் கோழி போட்டிருக்கிறது. ஆனல் எனக்குத் தெரி யாமல் எத்தனை முட்டை போட்டதோ? எனவே பத்துமுட்டை கொடுத்து விடு. 99
**அநியாயம். அநியாயம்?? பக்கத்துத் தோட்டக்காரன் சத்தம் போட்டான்.
அந்தரே எதிர் சத்தம் போட்டான். எேது அநியாயம்? கோழி முட்டையை அன்றே நான் கேட்டபோது தந்திருந்தால் இது நடக்குமா???
பக்கத்து தோட்டக்காரன் வேறு வழியில்லா மல் பத்து கோழி முட்டைகளை அந்தரேயிடம் கொடுத்து விட்டு சேவலை வாங்கினன்.
பத்து முட்டையை வாங்கிக் கொண்ட அந்தரே சொன்னன். என்னுடைய முட்டை ஒரு நாள்

தெளுலிராமன் கதைகள் 45
உன்னிடம் இருந்ததற்குதான் வட்டி ஒன்பது முட்டைகள் சரியா.’
மெளனமாக சேவலுடன் பக்கத்துத் தோட்டக் காரன் போனன்.
19
விசித்திரமான வழக்கு
ஊரில் பெரிய கூத்துக்குழு முகாமிட்டிருந்தது. தினமும் இரவில் விதவிதமான கூத்துக்களை காசு வசூலித்துக் கொண்டு காட்டினர்கள்
அந்தரேக்கு கூத்துப் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது ஆனல் தன் சுயரூபத்துடன் போக அஞ்சினன். அப்படியே போனல் கூத்துப் பார்க்க வந்திருப்பவர்கள் அவனைச் சூழ்ந்து கொள்வார் கள். அதனுல் அவன் மாறு வேடம் போட்டு ஒரு நாள் கூத்துப் பார்க்கப் போனன். கூத்துக் கொட்டகை முன்னே ஒரு அறிவிப்பு இருந்தது அந்தரே அதை உற்றுப் பார்த்தாள். தேரை 25 காசு, ஒரு இருக்கை 50 காசு.?
அந்தரே புன்சிரிப்புடன் 50 காசு கொடுத்து ஒரு இருக்கையில் இருந்தான். கூத்து நடந்தது.

Page 26
46 இலங்கை நாட்டு அந்தரே தலையாட்டி தலையாட்டி அந்தக் கூத்தை ரசித்தான். கூத்துமுடிந்ததும் தான் இருந்த இருக் கையை தூக்கிக் கொண்டு வேகமாக நடந்தான். கூத்துக் கொட்டகைக்காரர்கள் அவனைத் தடுத்து நிறுத்தினர்கள். இருக்கையை வைத்து விட்டுப் போகச் சொன்னுர்கள்.
அந்தரே சொன்னன். 'இருக்கைக்கு தான் 50 காசு கொடுத்திருக்கிறேன். ஏன் வைக்க வேண்டும்???
இரு தரப்புக்கும் தகராறு உச்சகட்டத்தில் நடந்தது. இருதரப்பையும் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிட்டது. அந்தக் கூட்டத்தினர் இரு பிரிவாகப் பிரிந்து அந்தரேயையும் கூத்துக் கொட்டகைக் காரரையும் ஆதரித்தார்கள்.
கடைசியில் விவகாரம் அரசனிடம் சென்றது. மாறு வேடத்தில் இருந்த அந்தரே வாதாடினன்.
'அரசே! நான் தவறு செய்யவே இல்லை. ஒரு இருக்கை 50 காசு என்று அவர்கள் தான் அறிவித் திருந்தார்கள். அதன்படியே இருக்கையை அதுவும் ஒரே RC5 இருக்கையையே கொண்டு போகிறேன்...??
அரசர் கூத்துக் கொட்டகைக் காரரிடம் விசாரித்தார். அணிகளும் ஒரு இருக்கை 50 காசு என்று தான் அறிவித்திருக்கிருேம் என்று ஒப்புக் கொண்டார்கள்
அரசர் தன் தீர்ப்பைக் கூறினர்.

தெகுலிராமன் கதைகள் A.
*உங்கள் அறிவிப்புப்படியே ஒரு இருக்கைக்கு காசு கொடுத்திருக்கிருன். நீங்கள் அதைத் தடுக்க முடியாது. இனிமேலாவது இது போன்று நடக் காமல் இருக்க அறிவிப்பை மாற்றுங்கள்..??
கூத்துக் கொட்டகைக் காரர்களும் கவலையு டன் திரும்பினர்கள் மாறு வேடத்தில் இருந்த அந்தரே, உடனே அவர்களைக் கூப்பிட்டு இருக் கையைக் கொடுத்து விட்டு, 'உங்கள் இருக்கை மேல் எனக்கு ஆசையில்லை. ஆனல் உங்கள் அறி விப்பு தவறு என்பதைக் காட்டவே இதைச் செய் தேன்.?? என்று சொல்லி விட்டு தன் வேடத்தைக் கலைத்தான். அங்கே அந்தரே நின்று கொண்டிருந் தான . . .
அனைவரும் வியந்து போய் நின்றர்கள்.
அரசர் உடனே சொன்னர். 'நான் முதலி லேயே சந்தேகப்பட்டேன். இது போன்ற விசித் திரமான வழக்குகளை இந்த சபைக்குக் கொண்டு வர அந்தரேயால் தான் முடியும் என்று. அது சரியாகிவிட்டது.??

Page 27
48 இலங்கை நாட்டு
20
திருடனை விரட்டிய நகைப்பெட்டி
அடிக்கடி ஊரில் திருட்டுகள் நடந்து கொண் டிருந்தன. எல்லோரும் தங்கள் வீடுகளேப் பாது காப்பதில் மும்முரமாக இருந்தார்கள். அந்தரே தன் மனைவியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண் டும் என்று சொன்னுன், ஆணுல் இரவில் அவனுே குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பித்து விடுவான். இதனல் அவன் மனேவி பெரிதும் கவ&லயடைந் தாள். அந்தரேயை இரவில், 'குறட்டை விட்டுத் தூங்குகிறீர்கள். திருடர்களேப் பிடிக்கும் லட்சணமா இது? என்று அடிக்கடிக் கேட்டு அவன் தூக் கத்தை கலேப்பாள். இதனுல் கோபம் கொள்ளும் அந்தரே, 'என் வீட்டில் திருட எவனுக்கும் யோக் கியதை கிடையாது. திருட வரட்டுமே. ஒரு கை பார்க்கிறேன்.?? என்று சவால் விட்டவாறு தூங்க ஆரம்பித்து விடுவான். அதன் பின்னர் அந்தரே யின் மனேவிதான் தூங்குவதும் விழிப்பதுமாக நாட் களேக் கடத்தினுள்.
ஒரு நாள் இரவு அந்தரேயும் அவன் மனேவி யும் தூங்கிக் கொண்டிருக்கும் போது பக்கத்து அறையிலிருந்து சத்தம் கேட்டது. யாரோ பேசுவ தும் கேட்டது. அந்தரேயின் மனேவி பயந்து அந்த ரேயை எழுப்பி, *திருடன் வீட்டில் நுழைந்து
 

தெனுவிராமன் கதைகள்
விட்டான், இன்னும் தூங்கு கிறீர்களே!" என்று ரகசியமாகச் சொன்னுள் .
அந்தரே திடுக்கிட்டான். மறுகணம் தன்னே சுதாகரித்துக் கொண்டு சற்று நேரம் காது கொடுத் துக் கேட்டான். பக்கத்து அறையிலிருந்து, நகை. பெட்டி..?? போன்ற வார்த்தைகள் மட் டும் கேட்டது. அந்த ரேக்குப் புரிந்தது. பக்கத்து அறையிலிருந்து நகைப் பெட்டியைத் திருடவே திருடர்கள் திட்டம் போடுகிறர்கள்."
அந்தரேயின் நேரிமூ&ள* வேலே செய்தது. மறுகணம் தன் மனேவியிடம், 'நீ ஏன் இப்படி பயப்படுகிருய்? உன் நகையை திருடுவார்கள் என்று தானே! நகைகள் உள்ள பெட்டியைத்தான் பத்திரமாக நமது தோட்டத்தில் உள்ள கிணற்றில் வைத் திருக்கிறேனே! இனி ஏன் பயப்பட வேண் டும்??" என்று சத்தம் போட்டுச் சொன்னுன், இது பக்கத்து அறைகளில் இருந்த திருடர்கள் காதில் விழுந்தது. மறுகணம் அந்தத் திருடர்கள் அந்த அறையை விட்டு வெளியேறினூர்கள்.
திருடர்கள் வெளியே போய் விட்டதைத் தெரிந்து கொண்ட அந்தரேயும் அவன் மனேவியும் தூங்கினுர்கள்.
அந்தரே கிணற்றை நோக்கி ஓடினுன்.
அங்கே யாரும் இல்லே. ஆணுல் அந்தத் தோட்ட
மெல்லாம் தண்ணிர் நிறைந்திருந்தது.
இ-4

Page 28
50 இலங்கை ந ாட்டு
அந்தரேயின் மனைவி ஓடிவந்தாள். தோட்டத் தில் தேங்கி நிற்கும் தண்ணிரைப் பார்த்து ஆச்சரி ப் பட்டு, யோர் இவ்வளவு தண்ணிரை இறைத் தது?" என்று கேட்டாள். அந்தரே சிரித்துவிட்டு சொன்னன்.
வேறு யார்; நம் நண்பர்கள்தான். புரிய வில் ஐயா? நேற்று இரவு நம் வீட்டிற்கு வந்தார் களே, அவர்கள்தான். "நான் கிணற்றில் நகைப் பெட்டி இருப்பதாக சொன்னதை நிஜமென்று நம்பி விடிய தண்ணீர் இறைத்துப் பார்த் திருக் கிருர்கள். நம் தோட்டத்தில் தண்ணிர் நிறைந் ததுதான் மிச்சம். நகைப் பெட்டி பத்திரமாக வீட் டில் இருக்கிறதே??
அந்தரேயின் மனைவி மெளனமாக நின்ருள்.
அப்போது அந்தரே சொன்னுன்.
'இப்போது பார்த்தாயா என் திறமையை, திருடனையும் விரட்டினேன். நகைப்பெட்டியையும் காப்பாற்றினேன். வறண்டு கிடந்த தோட்டத்திற்கு அந்தத் திருடர்களே வைத்து தண்ணிரும் இறைக்க வைத்தேன்1 என்னிடம் யாரும் வாலா ட்ட முடியுமா..??
 
 
 
 
 
 

தெணுலிராமன் கதைகள் 51
21 .
இளவரசியின் படகுச் சவாரி
அரசரின் மகளுக்கு நதிக்கரையில் படகுச் சவாரி செய்து பொழுது போக்கவேண்டுமென்று ஆசை வந்தது. உடனே அவள் அரசரிடம் பட கும் படகு ஒட்டியும் ஏற்பாடு செய்யச் சொன்னுள். அரசர் படகை ஏற்பாடு செய்தார். ஆணுல் நம்பிக் கையான படகு ஒட்டி கிடைக்காமல் தவித்தார். படகு ஒட்டியாக யாரைப் போடலாம் என்று யோசித்தார். அப்போது தான் வேலே இல்லாமல் சுற்றித்திரியும் அந்தரேயின் நினைவு அவருக்கு வந்தது. உடனே அந்தரேயை வரச்சொல்லி, *தினமும் மகளுக்காக படகுச் சவாரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அந்தரே வேண்டாவெறுப்பாக ஒப்புக் கொண்டான். அதன்படி தினமும் மாலேநேரம் முழுவதும் இளவரசியைப் படகில் வைத்து ஒட்டி குனூன், கொஞ்ச நாட்கள் தான் படகு ஓட்டவேண்டி வரும் என்று நினைத் திருந்தான் அவன். ஆனல் எதிர்பார்த்ததற்கு மாருக நடந்தது.
தினமும் மாலேநேரம் இளவரசியைப் படகில் வைத்து கைவலிக்கத் துடுப்பு போட்டுப் படகை ஒட்டினன். இளவரசியும் படகில் சவாரி செய்து கொண்டே இருந்தார்கள்,

Page 29
52 இலங்கை நாட்டு
இப்படியே நாட்கள் ஓடின. அந்தரே தின மும் கஷ்டப்பட்டான். அரசரோ இதைக் கவனிப்ப பதாகத் தெரியவில்லை.
ஒருநாள் படகை நதியில் ஒட்டும்போது அந் தரே திடீரென்று நதியில் குதித்தான். இளவரசி பயந்தாள். படகு தள்ளாடத் தொடங்கியது. நீரின் வேகத்திற்கு அது ஓட ஆரம்பித்தது. எதுவும் செய்வதறியாமல் தவித்தாள் இளவரசி.
அப்போது அந்தரே நீந்திக் கொண்டே ெேமன்னித்து விடுங்கள் இளவரசியாரே! திடீரென்று வந்த ஒரு ஆசையால் நதியில் குதித்தேன். ஆனல் குதித்த வேகத்தில் இடுப்பில் இருந்த துணி ஆற்றேடு போய்விட்டது. மேலே வரமுடியவில்லை. எனவே நீங்கள் படகை ஒட்டுங்கள். படகில் துடுப் பிருக்கிறது. துடுப்பால் வலித்துப் பாருங்கள். தன் னிச்சைபடி ஓடாது.?? என்ருன். இளவரசியும் அந்தரே சொன்னபடியே துடுப்பைப் போட்டு வலிக்க ஆரம்பித்தாள். அவளால் முடியவில்லை. ஆனலும் விடாமல் துடுப்பு போட்டுப் பார்த்தாள். அவள் கைகள் சோர்ந்ததுதான் மிச்சம்.
இளவரசி துடுப்புப் போடுவதை நிறுத்தி விட் டுக் கத்தினள். ܝ ܀
"ஐயோ! ஏன்னல் துடுப்பு போட முடியாது என்ன செய்வேன்? கைவலிக்கிறதே??
அப்போது அந்தரே சொன்னன்"

தெனுலிராமன் கதைகள் 53 கொஞ்ச நேரத்திற்குத் துடுப்புப் போட கைவலிக்கிறது என்கின்றீர்ளே! நான் இத்தனை நாட்களும் துடுப்புப் போட்டேனே. எனக்குக் கைவலிக்காதா? இப்போதாவது என் கஷ்டத்தை நினைத்துப் பார்த்தீர்களா???
இளவரசி கத்தினுள். உங்கள் கஷ்டத்தை நான் உணர்ந்து பார்க்கிறேன. இனி இந்தப் படகுச் சவாரியே வேண்டாம்.??
அப்படிச் சொல்லுங்கள். இளவரசியே! அதுவே எனக்கு போதும் 99 என்று சொன்ன அந்தரே படகை நெருங்கி வந்து படகில் ஏறப் போனன். இளவரசி தன்னுடை கண்களை மூடிக் கொண்டாள். இடுப்பில் துணியே இல்லையென் கின்றனே, எந்தக் கோலத்தில் இருக்கிருனுே?..?
அந்தரே சொன்னுன்.
இயவரசியே! கண்களைத் திறவுங்கள். நான் முன்னர் உடுத்திய துணியோடுதான் இருக் கிறேன். 92
இளவரசி கண்களை திறந்து பார்த்தாள். அந்தரே துணியோடுதான் இருந்தான்.
*தினமும் படகு ஒட்டியதால் கைகள் வலி யெடுத்தன. ஆனல் அதை உங்களிடம் நேரிடை யாக சொல்ல முடியவில்லை. எனவே தான் அதை உங்களுக்கு மறைமுகமாக உணர்த்தவே ஆற்றில் குதித்து ஒரு நாடகம் ஆடினேன். என்னை

Page 30
54 இலங்கை நாட்டு
மன்னித்து விடுங்கள் இளவரசியாரே!." அந்தரே தான் சொன்னன்.
நோன்தான் தவறு செய்துவிட்டேன். தினமும் படகுச் சவாரி போவதால் உங்களுக்கு வரும் கஷ்டத்தை உணராமல் இருந்தேன். இப்போது உணர்ந்து விட்டேன்.?
மறுநாள் இளவரசி அரசரிடம், ‘இனி படகு சவாரியே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.
அரசர் ஏன்?? என்று கேட்டார். இளவரசி அதற்கு ஒரே வரியில் செலித்து விட்டது. என்று பதில் சொன்னுள். அப்போது அந்தரே அரசரின் பக்கத்தில்தான் இருந்தான்.
O
22
வாக்குவாதம்
ஒருதடவை அரசருக்கும் அந்தரேக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது அரசர் அந்த ரே யிடம் சவால் விட்டார்.
*உன்னுல் ஊரையே திரட்டி வைக்கக் கூடிய அளவுற்கு ஒரு காரியத்தைச் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு செய்யாமல் இருக்க முடியுமா?99

தெணுலிராமன் கதைகள் 55
அந்தரே தலையாட்டினுன்
அப்படியால்ை 6aftig dist (6...’ அந்தரே உடனே ஒரு முரசு அறிவிப்பவனை வரவழைத்து அவனிடம் ஏதோ சொன்னுன் , மறுகணம் அவன் வீதி வீதியாக, அந்தரே பெளர்ணமி தினத்தன்று அரண்மனைக் கோபுரத் தில் இருந்து குதிக்கப் போகிருன். இது உண்மை இது உண்மை!99 என்று சொல்லிக்கொண்டே போஞன்.
பெளர்ணமி தினத்தன்று ஊரே அரண்மனைக் கோபுரத்தின் கீழே திரண்டு விட்டது. அந்தரே கோபுரத்தில் இருந்தான்.
அரசன் அரண்மனையில் இருந்து நடப்பதைப் பார்த்தான்
அந்தரே கோபுரத்தில் இருந்து கத்தினன். *நான் குதிக்கப்போகிறேன். நான் குதிக்கப் போகிறேன்123 S.
அப்போது திடீரென்று ஒரு குரல் கீழே இருந்து கேட்டது. “அப்பா அப்பா..??
அந்தரேயின் மகன்தான் ஓடிவந்தான். *அப்பா குதிக்காதே. நீ ஆசையாக சாப்பிடும் இனிப்பு பலகாரம் கொண்டு வந்திருக்கிறேன். JFTü9 (9.33
அந்தரே கீழே இறங்கிவந்தான். கீழே கூடி யிருந்த கூட்டத்தைப் பார்த்துச் சொன்னன்:

Page 31
56 இலங்கை நாட்டு
இனிப்புப் பலகாரம் என்ருல் எனக்குக் கொள் ஆள ஆசை. எனவே அதைச் சாப்பிட்டுவிட்டுக் குதிக் கிறேன்.23
கூட்டத்தினர் ஆமோதித்தார்கள். அந்தரே இனிப்பு பலகாரத்தைச் FMT பிட்டான். அது சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவன் அப்படியே மயங்கி விழுந்தான். கூட்டத்தில் பெருக்த சலசலப்பு ஏற்பட்டது. அவனை எழுப்ப முயன்றர்கள். முடியவில்லை.
அந்தரேயின் நண்பர்கள் உடனே அந்தரே யைத் தூக்கிக் கொண்டு போனர்கள். கூட்டமும் கலைந்தது.
மறுநாள் அந்தரே அரசரிடம் வந்தான்.
*அரசே! நீங்கள் சொன்னது போல் செய் தேன். பார்த்தீர்களா? கோபுரத்தில் இருந்து குதிப் பதாகச் சொல்லி ஊரையே கூட்டினேன். அந்தக் கூட்டத்தின் முன்னேயே மயங்கி விழுந்து சொன்னதை செய்யாமல் விட்டேன்.??
அரசர் சொன்னர்.
'இனிப்பு பலகாரம் வராமல் இருந்திருந்தால் நீ செத்திருப்பாயே!99
அந்தரே சிரித்தான்
ெேஏன் சிரிக்கிருய்?92
ெேசிரிக்காமல் என்ன செய்வது? இனிப்புப் பலகாரத்தில் மயக்க மருந்து வைத்துக்கொண்டு

தெணுலிராமன் கதைகள் 5?
* வேரச் சொன்னதே நான் தானே! அதனுல் தான் சிரித்தேன்.??
எப்படியோ வென்றுவிட்டாய் உன்னை வெற்றி பெறவே முடியாது?? என்ற அரசன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
O
23
நிழலைச் சாப்பிடு
அரண்மனைக்கு ஒரு தடவை பெரிய கெட்டிக் காரன் ஒருவன் வந்திருந்தான். தன்னல் எதை யும் செய்ய முடியுமென்று சவால் விட்டான். அவைேடு போட்டி போட்டுப் பலரும் தோல்வி கண்டார்கள்.
அரசருக்குக் கவலை ஏற்பட்டது. தன்னுடைய நாட்டில் எங்கிருந்தோ வந்திருக்கும் ஒருவ்னை வெற்றி கொள்ள திறமைசாலி இல் ஜலயே என்று வருத்தப்பட்டார். அரண்மனைக்கு வரும்போதெல் லாம் சோகமாக இருந்தார். அந்தரேயோடு கூடப் பேசுவதே இல்லை. அந்தரேக்கும் கவலையாக இருந்தது. அரண்மனையில் அரசரது விருந்தாளி யாக இருந்த கெட்டிக்காரன் கர்வத்துடன் இருந் தான். அடிக்கடி சவால் விட்டான். ஆல்ை அவனேடு போட்டி போட யாருமே வரவில்லை.

Page 32
58 இலங்கை நாட்டு
அந்தரே யோசித்து நாட்டின் மானத்தைக் காப்பாற்ற ஒரு வழி கண்டு சவால் விட்டான்.
ஒரு நாள் அரண்மனையில் பெரிய கூட்டம். அந்தரே சவால் விட்டான்.
*என்னுல் எதையும் செய்ய முடியும் என்று சொன்னயே! அப்படியென்ருல் நான் தரும் இனிப்புப் பலகாரத்தையும் சாப்பிட வேண்டும். அதன் நிழலையும் சாப்பிட வேண்டும். முடியுமா???
கெட்டிக்காரன் விழித்தான். தவித்தான். அப்போது அந்தரே கேட்டான்.
எேன்னுல் முடியும் நான் செய்து காட்டு கிறேன். அதை நீ தெரிந்துகொண்ட பின் இந்த நாட்டை விட்டு ஓடிவிட வேண்டும், சரியா???
கெட்டிகாரன் மறுநாள் வருவதாகச் சொல்லி விட்டான். ஆஞல் அன்றிரவே அவன் ஓடிவிட் டான். பலகாரத்தையும் சாப்பிட்டு அதன் நிழலை யும் சாப்பிட வேண்டுமாமே! யாரால் முடியம்?
கெட்டிக்காரன் ஒடிப்போனது அரசருக்குத் தெரிந்து அந்த ரேயைக் கூப்பிட்டார். செரி. நீ நிழலைச் சாப்பிட்டுக் காட்டு193 என்ருர்,
அந்தரே சிரித்துக் கொண்டே ஒரு விளக்கைக் கொண்டுவரச் சொன்னன். விளக்கு வந்தது! விளக்கின் அருகில் உட்கார்ந்தான். இப்போது அதன் நிழல் பூமியில் விழுந்தது. அந்தரே கூறிஞன்

தெளுலிராமன் கதைகள் 59 (அரசே என்னைப் பார்க்காதீர்கள் என் நிழ8லப் பாருங்கள்; pિá) * சாப்பிடுவது தெரியும்.23
அரசர் நிழலேயே பார்த்தார். அந்தரே பல காரத்தை வாயில் வைத்துச் சாப்பிட்டான். நிழலும் கூடவே சாப்பிட்டது.
6 போர்த்தீர்களா அரசே? இங்கே நான் பலகாரத்தைச் சாப்பிடுகிறேன். அங்கே பலகாரத் தின் நிழலையும் சாப்பிடுகிறேன். இதுகூட அந்தக் கெட்டிக்காரனுக்குத் தெரியவில்லையே?? என்ருன் அந்தரே.
அரசர் சிரித்து விட்டுச் சொன்னன். ேெஎனக்குத் தெரியவில்லையே!29
O
24
அந்தரேயின் தொப்பி
அந்தரே பட்டுத்துணியில் தயாரான தொப்பி அணிய ஆரம்பித்தான். அது அவனுக்கு அழகாக இருந்தது.
அரசர் அந்தத் தொப்பியைப் பார்த்தார் அவருக்கு அந்தத் தொப்பி மீது ஆசை பிறந்தது.

Page 33
60 இலங்கை நாட்டு
'இந்தத் தொப்பி எங்கே வாங்கிய்ை? அழகாக இருக்கிறதே.99 என்று கேட்டார் அரசர்.
**இது பக்கத்து நாட்டில் வாங்கினேன்.?? என்ருன் அந்தரே.
அதை எனக்குத் தருகிருயா??? அரசர் கேட்டார். அந்தரேக்கு தர்மசங்கடமாகப்போய்விட்டது. *அரசர் நினைத்தால் புதுத் தொப்பியே வாங் கலாம். இதைப் போய் கேட்கிருரே!?
தொப்பியைத் தந்தால் என்ன தருவீர் Š6ff ? ኃ ኃ
அந்தரே தான் கேட்டான். *6என்ன கேட்டாலும் தருகிறேன்.? * அப்படியானுல் உங்கள் தலையில் உள்ள மகுடத்தைத் தாங்களேன்..??
அரசர் திடுக்கிட்டார். பிறகு கேட்டார். எேன்ன விளையாடுகிருயா?99 அந்தரே???
நோன் விளையாடவில்லை. நீங்கள்தான் விளையாடுகிறீர்கள். ஏழையான என்னுடைய தொப்பி உங்கள் தலையில் உள்ள மணி மகுடத் திற்கு சமமானது. என்னிடம் ஒரு தொப்பி தான் உள்ளது. உங்களிடமும் ஒரு மகுடம்தான் இருக் கிறது. உங்களைப் போன்ற அரசர் என்னைப் போன்ற ஏழையின் தொப்பிக்கு ஆசைப் LL-6)ruar???

தெனுலிராமன் கதைகள் 61.
அரசர் ஒன்றுமே பேசவில்லை. அதன் பின் னர்.தொப்பியைப் பற்றி அவர் பேசவே இல்லை. அடுத்த நாள் அந்தரே வந்தான். ஆனல் அவன் தலையில் பட்டுத் தொப்பியைக் காண வில்லை.
அரசர் கேட்டார். 'எங்கே உன் தொப்பி??? அந்தரே சொன்னன்: மேற்றவர்கள் ஆசைப்படும் பொருட்களை வீசி விட வேண்டும் என்று ஒரு முனிவர் சொன்னர், அதன்படித் தொப்பியை வி சிவிட்டேன்..??
அரசர் முகத்தில் ஈயாடவில்லை. மற்றவர் ஆசைப்படும் பொருள் வைத்திருக் கக் கூடாது என்ருல் மடகுத்தின் மீது அந் தரேக்கு ஆசை இருக்கிறதே! அதை வீச வேண்டுமே!. வீசமுடியுமா?
O
25
யானையும் அந்தரேயும் பக்கத்து நாட்டிலிருந்து அழகான வெள்ளே யானை ஒன்று அசரருக்கு அன்பளிப்பாக வந்தது.
அரசர் அந்த யானையை அரண்மனை வாசலில் பொதுமக்கள் பார்வைக்காகக் கட்டிவைத்தார்.

Page 34
62 இலங்கை நாட்டு
கறுப்புநிற யானையையே பார்த்திருந்த பொது மக்கள் வெள்ளே யானையைப் பார்க்கக் போட்டி போட்டார்கள். தினமும் அரண்மனை வாசலில் எக் கச்சக்கமாகக் கூடினர்கள். இதனுல் அரண்மனை யின் அன்ருட அலுவல்கள்(பாதிக்கப்பட்டன. இது பற்றி அரசு அதிகாரிகள் அரசரிடம் முறையிட் டார்கள். அரசர் என்ன செய்வதென்று தெரியா மல் தவித்தார்.அந்தரே ஒருயோசனை சொன்னன். அரசர் அதற்கு உடன்பட்டார்.
அன்றிரவு முழுவதும் வெள்ளையானையை கறுப்பு நிற யானையாக்க அந்தரே யானையின்மீது கறுப்பு வர்ணம் பூசினன். யானை கறுப்பாகிவிட் டால் அதைப் பார்க்கக் கூட்டம் இருக்காதே!.
விடிந்தது. அரண்மனை வாசலில் வெள்ளை யானைக்குப் பதிலாக கறுப்புயான நின்றது. வழக் கம் போல் வெள்ளையானையைப் பார்க்க வந்தவர் கள் கறுப்புநிற யானையைப் பார்த்துவிட்டு அதி சயப் பட்டார்கள். இந்த யானையிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கவேண்டும். அதனுல்தான் தன் நிறத் தையே மாற்றுகிறது? என்று நினைத்தார்கள்.
இதனிடையே வெள்ளேயான கறுப்பு:யானை யான சேதி நாடெங்கும் பரவியது. அந்த யானை யைப் பார்க்கப் பொது மக்கள் ஏராளமாக வரத் தொடங்கினர்கள். யானை நிறம் மாறியது ஒரு புராணக்கதைபோல் பரபரப்புடன் பரவத் தொடங்கியது. இதனுல் அரண்மனை வாசலில் முன்

தெணுலிராமன் கதைகள் V 63
பிருந்ததைவிடப் பெரிய கூட்டம் கூடத் தொடங் கியது. அரண்மனை அலுவல்கள் பாதிக்கப்பட்டன. அரசருக்கு நடந்ததை அறிவித்தார்கள். அர சர் அந்தரேயைக் கூப்பிட்டார். அவன் வந்ததும் அவஜனத் திட்டினர். 'உன் பேச்சைக் கேட்டு நான் முட்டாளாகி விட்டேன். யானை வெள்ளை யாக இருந்திருந்தால் பிரச்னையே இருக்காது. இப்போது பார்த்தாயா? யானையைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாக மக்கள் வருகிறர்கள்..??
அந்தரே அரசரிடம் சொன்னன்; ேெஅரசே! யானையை மறுபடி வெள்ளை யானையாக்கி விட் டால் பிரச்சினை தீர்ந்து விடும்.
அப்படியே செய்...?? அரசர் உத்தரவிட் டார். அந்தரே அடுத்தாள் அதிகாலை அந்த யானையை நதிக்கரைக்குக் கூட்டிப்போய் ஒரு வகை மருந்துத் தண்ணிராலும் நதியில் ஒடும் தண்ணீராலும் கழுவிக் கழுவி யானையை வெள்ளை யானையாக்கினன். அதன் பின்னர் அந்த யாஜனயை அரண்மனை வாசலில் கட்டிப் போட் டான்.
அன்று கறுப்பு யானையைப் பார்க்க வந்த பொது மக்கள் கறுப்பு:யானைக்குப் பதிலாக வெள்ளை யானை இருப்பதைப் பார்த்து விட்டு ஆச்சரியப் பட்டார்கள். இந்த யானையிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது? என்று எண்ணி அவர்கள் அந்த யானையை விழுந்து வணங்க ஆரம்பித்தார்கள்.

Page 35
64 இலங்கை நாட்டு
யானை மறுபடியும் வெள்ளை யானையானது. சேதி நாடெங்கும் பரவியது. யானையைப் பார்க்க பெருந் தொகையான மக்கள் படையெடுத்தார் கள். அரசருக்கு மீண்டும் தலையிடி ஆரம்பமா கியது. என்ன செய்வ தென்று யோசித்தார். அப் போது அந்தரே ஒரு யோசனை சொல்ல வாயைத் திறந்தான். அவ்வளவு தான்.
அரசர் அவன் மீது சீறிப் பாய்ந்தார். நீ ஒரு யோசனையும் சொல்ல வேண்டாம். பேசாமல் இருந்தால் போதும். அது மட்டுமல்ல. தப்பித் தவறி நீ யான இருக்கும் போகக்கூடாது.23
அந்தரே மெளனமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினுன்.
26
பறக்கும் குதிரை
ஒருநாள் அந்தரே வீதியில் நின்று வானத் தையே பார்த்தான். அப்படியே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் வானத் தையே பார்ப்பதைப் பார்த்த சிலர் அவன் அருகே வந்து அவனைப் போலவே வானத்தைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

தெனுலிராமன் கதைகள் 65
வெகு நேரத்திற்குப் பின்னர் பெரிய கூட்டம் அந்தரேயின் பின் பக்கம் கூடியது. வானத்தையே பார்த்துக் கொண்டிருந்த அந்தரேக்கு இது தெரி யாது. திரும்பிப் பார்த்தபோது வியப்படைந்தான்.
* என்ன கூட்டம்??? என்று அந்தரே கேட் lfror.
'நீங்கள் ஏதோ வானத்தில் பார்த்தீர்கள். நாங்களும் பார்த்தோம்.??
*அப்படியா நன்ருகப் பாருங்கள். ஒரு குதிரை இப்படியே தான் பறந்து போனது.??
அந்தரே (விறு.விறு வென்று அந்த இடத்தை விட்டுப் போனன்.
அந்தக் கூட்டமோ அற்கேயே நின்று வானத் தைப் பார்த்தது. குதிரையைக் காணவே இல்லை.
இதனிடையே அந்தரே சிறிது தூரம் சென்று
அங்கே நின்று மறுபடி வானத்தைப் பார்த்தான் அதைக் கண்ட அந்தக் கூட்டம் அவனிடம் வரத் தொடங்கியது.
அந்தரே அதைக் கண்டான் ேேவாருங்கள். பறந்து போன குதிரை இந்த இடத்தின் வழியாக வந்து கொண்டிருக்கிறது. பாருங்கள்192
எல்லோரும் வானத்தையே பார்த்தார்கள். வானத்தில் ஒன்றுமே தெரியவில்லை.
இ-5

Page 36
66 இலங்கை நாட்டு
ஒருத்தன் கேட்டான். குேதிரை பறந்து வருகிறது என்றீர்கள். ஒன்றையும் காணுேமே!99
அேதற்கு நான் என்ன செய்ய??? என்று அந்தரே கேட்டான்.
நோங்களும் பார்க்கவேண்டும். அதற்கு வழி சொல்லுங்கள்99 என்று சொன்னர்கள் அவர்கள்.
ஒே. அதுவா..? அதோ தெரிகிறதே!. அந்த கிணற்றில் குளித்துவிட்டுப் பாருங்கள். தெரியும். நான் அப்படித்தான் செய்தேன்..?? என்று அந்தரே ஒரு கிணற்றைச் சுட்டிக்காட்டி ஞன். அவ்வளவுதான். அடுத்தடுத்து பலரும் அந்தக் கிணற்றில் விழுந்தார்கள்.
ைேபத்தியக்கார மனிதர்கள்! வேடிக்கையாக வானத்தைப் பார்த்தேன். ஆனல் அதற்கு ஒரு கதை கட்டிக் கொண்டு வந்து சேர்ந்து பார்த்தார் களே! - சரியான பைத்தியக்காரர்கள்! இல்லா விட்டால் கிணற்றில் விழுவார்களா? கிணற்றில் விழுவதற்கு முன்னர் குதிரை பறந்து போகுமா என்று சிந்தித்துப் பார்த்திருக்கலாமே!?? என்று அந்தரே சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டுப் போனன்.
கிணற்றில் விழுந்தவர்கள் வெளியே வந்து நனைந்த கோலத்தோடு வானத்தையே பார்த்தார் கள். ஒன்றுமே தெரியவில்லை.

தெனுலிராமன் கதைகள் 67
2
தூங்க ஒருமரம்
அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மாமரத் தில் மாம்பழங்களைத் திருடுவதற்காக ஏறினன் அந்தரே. இதைப் பார்த்த அரண்மனைக் காவ லாளிகள் இருவர் அந்த மாமரத்தருகே வந்து சத் தம் போட்டார்கள்.
ஏன் மரத்தில் ஏறினுய்??? ஒரு காவலாளி கேட்டான். அந்தரே சொன்னன். 'தூங்குவதற் காக ஏறினேன்..??
என்ன, தூங்குவதற்காக மரத்தில் ஏறி ஞயா? தூங்க வேறு இடமே உனக்குக் கிடைக்க 6.6%) uT? விளையாடாதே. மரியாதையாக இறங்கு. மரத்தில் தூங்க முடியுமா?? என்று கேட்டான் மற்ற காவலாளி.
'அதுதான் ரகசியம். வேண்டுமானுல் நீங்கள் இருவரும் மரத்தில் ஏறிப்பாருங்கள் எப்படித் தூக்கம் வருகிறது என்று.??
அந்தரே மரத்திலிருந்து கீழே இறங்கினன், காவலாளிகள் இருவரும் அந்தரே சொன்னதைப் பரிட்சித்துப் பார்க்க மரத்தில் ஏறினர்கள்.
அந்தரே இதுதான் சந்தர்ப்பம் என்று ஓடி குன்,

Page 37
68 இலங்கை நாட்டு
காவலாளிகள் அப்போதுதான் அந்தரேயின் தந்திரத்தை உணர்ந்தார்கள். காவலாளிகளிடம் அந்தரே பிடிபட்டிருந்தால் சவுக்கடிதான் கிடைக் கும்.
ם
28
அந்தரேயும் முட்டாளும்
அந்தரே வீதி வழியே போய்க் கொண்டிருந் தான். அப்போது வீதியோரத்தில் உள்ள 'ஒரு மரத்தை யாரோ வெட்டுகிற சத்தம் கேட்டது. அந்தரே அந்த மரத்தைப் பார்த்தான். அங்கே மரத்தின் ஒரு கிளையில் இருந்தவாறு ஒருத்தன் அந்தக் கிளையையே வெட்டிக் கொண்டிருந்தான்.
அந்தரேக்கு சிரிப்பு வந்தது. அப்படியே வெட்டிக் கொண்டு போல்ை அவன் இன்னும் சிறிது நேரத்தில் கீழே விழுந்து விடுவான். அது தெரியாமல் வெட்டித் தள்ளுகிருனே முட்டாள்.
அந்தரே சத்தம் போட்டான்.
*ஏய் நிறுத்து இப்படியே வெட்டிக் கொண்டு போனுல் நீ கீழே விழுந்து விடுவாய். முட்டாளே! வேறு கிளையில் இருந்து கொண்டு அந்தக் கிளையை வெட்டு.99

தெனலிராமன் கதைகள் 69
அவன் கேட்கவில்லை. *எல்லாம் எனக்குத் தெரியும். நீ ஜாக்கிரதை யாகப் போ! உன் தலையில் மரக்கிளை விழுந்தாலும் விழும்.23
அந்தரே (முட்டாளுக்கு நம்மால் புத்தி சொல்ல முடியாது? என்று நினைத்துக் கொண்டு நடந்தான்.
சிறிது நேரத்தில் மரக்கிளை முறிந்து விழும் சத் தம் கேட்டது. அப்படியே அவனுடைய அலறலும், கேட்டது. 'அய்யோ! அம்மா." என்னைக் காப் பாற்றுங்கள்.??
அந்தரே திரும்பிப் பார்த்தான். கீழே விழுந்து கிடந்தவன் கையெடுத்துக் கும்பிட்டான். 'என்னை மன்னித்து விடுங்கள்! உங்கள் பேச்சைக் கேட்டிருந்தால் எனக்கு இந்த கதி ஏற்பட்டிருக்காது. என்னை மன்னித்து விடுங்
sor...??
அவன் எழுந்து நிற்க முயன்று தோல்விய டைந்தான். 'ஐயோ! என்னல் எழுந்து நிற்க முடியவில்லை. கொஞ்சம் உதவி செய்யுங்கள்.?? அந்தரே அவன் அருகே வந்து சொன்னன். உேதவியா? என்ல்ை முடியாது. நான் சொன்னபடி வேறு கிளையில் இருந்து கிளையை வெட்டியிருந்தால் நீ கீழே விழுந்திருக்கமாட்டாய். என்னுல் முடிந்த உதவிதான் எச்சரிக்கை செய் வது. அதைத்தான் முன் கூட்டியே செய்தேனே. இப்போது என்னல் உதவி செய்ய முடியாது.??
`ጵr

Page 38
70 இலங்கை நாட்டு
29
கிணத்தை இழுத்த கதை
அந்தரே வீட்டுக்கு ஒருத்தன் வந்தான். அவன் பேராசை பிடித்தவன். எதைக் கண்டாலும் அவனுக்கு ஆசை வரும்.
அவனுக்குத் தாகம் வந்தது. அந்தரேயிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டான்.
அந்தரே இவனுக்கு ஒரு பாடம் படித்துக் கொடுக்க வேண்டும்? என்று மனதில் கெறுவி?க் கொண்டு தண்ணீருக்குப் பதிலாக கள்ளுத் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தான்.
கள்ளைத் தண்ணீராக நினைத்துக் குடித்த அவன், தண்ணீர் புது விதமான ருசியுடன் இருப் பதைக் கண்டு அதிசயப்பட்டான்.
அந்தரேயிடம் கேட்டான்.
'நீங்கள் கொடுத்த தண்ணீர் நன்றக இருக் கிறதே! உங்களுக்கு ஏது இந்தத் தண்ணிர்?..??
*ஒ. அதுவா? அந்தத் தண்ணீர் என் வீட் டுக் கிணற்றில் அள்ளியது ??
அப்படியா?.??

தெனுலிராமன் கதைகள் 71.
அவனுக்குத் தினமும் அந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டுமென்று ஆசை வந்தது. உடனே அவன் கேட்டான். 'அந்தக் கிணற்றை எனக்குத் தருகிருயா???
* கிணற்றையா? என்னல் தரமுடியாது. முடியுமானல் நீயே எடுத்துக்கொள்..??
அவன் அப்போதே தன் வீட்டுக்குப் போனுன் ஐந்தாறு பேர்களோடு திரும்பி வந்தான். அவர்கள் அந்தக் கிணற்றைச் சுற்றிக் கயிற்றைக் கட்டினர் கள். பிறகு இழுத்துப் பார்த்தார்கள்.
அந்தரே அப்போது கேட்டான்:
 ேேஎன்ன செய்கிறீர்கள்.??
6 கிேணற்றைக் கட்டி இழுத்துக் கொண்டு போகப் போகிருேம். நீங்கள் தானே கொண்டு போகச் சொன்னீர்கள்.?? -
ஆமாமாம்.நான் தான் கிணற்றைக் கொண்டு போகச்சொன்னேன்.??
அவர்கள் கிணற்றைக் கொண்டு போக இழுத் துக் கொண்டே இருந்தார்கள்.
அந்தரே வீட்டின் உள்ளே போய் விழுந்து விழுந்து சிரித்தான்.

Page 39
72 இலங்கை நாட்டு
30
சொல்வது அப்படி செய்வது இப்படி
இலங்கையில் அந்தக்காலத்திலிருந்து இந்தக் காலம் வரை தேங்காய் மூடி போன்ற அமைப்பில் ஆனல் குழிஇல்லாமல் நிறைக்கப்பட்ட கட்டிச் சர்க்கரையை சிங்களக் கிராமங்களில் செய்வார் கள். இதற்கு “முல் அக்குரு? என்று சிங்களத்திலும் கறுப்பட்டி? என்று தமிழிலும் பெயர் உண்டு. இது கிராமியத் தொழிலில் உருவாவதாகும். இனி கதையைப் பார்ப்போம்.
ஒரு தடவை அரண்மனைக்கு அந்தரே இரண்டு தேங்காய் மூடி போன்ற அமைப்பு கொண்ட கறுப் பட்டியைக் கொண்டுவந்தான். அரசர் அந்தரே கையிலுள்ள கறுப்பட்டியைப்பார்த்ததும் அதைப் பற்றி விசாரித்தார்.
அந்தரே சொன்னன். இேது அதிசய கறுப்பட்டி" யாருக்கும் கிடைக்காது.??
‘அப்படியா. எங்கே எனக்கு சிறு துண்டு கொடு; சாப்பிட்டுப் பார்க்கிறேன்.??
அந்தரே கஷ்டப்பட்டு கறுப்பட்டியிலிருந்து ஒரு சிறு துண்டை உடைத்து அரசரிடம்

தெனுலிராமன் கதைகள் 78
கொடுத்தான் அதை வாங்கி வாயில் போட்டுப் பார்த்தார் அரசர். தேனக இனித்தது.
'இது எங்கே செய்கிறர்கள்?.?? அரசர் கேட்டார்.
**இந்த ஊரில்தான் செய்கிறர்கள். 99
66எப்படிச் செய்கிறர்கள்.?99
தேங்கச் சரிகை பின்னப்பட்ட துணி உடுத் திய ஒருத்தர் தங்கச்சட்டியில் காய்ச்சும் கறும்புச் சாறை தங்கக் கரண்டியால் அள்ளி (கரண்டிஅகப்பை) தங்கத்தால் செய்யப்பட்ட அச்சில் ஊற்றி ஊற்றித் தான் கறுப்பட்டி செய்வார்கள்.??
அரசருக்கு ஆச்சரியம். தங்கச்சட்டி. தங்கக் கரண்டி. கறுப்பட்டி செய்பவன் பெரிய பணக் காரன் தான் என்று முடிவு கட்டினர் அவர்
அரசருக்கு அப்போதே கறுப்பட்டி செய்யும் இடத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை பிறந் தது. அதை அந்தரேயிடம் சொன்னர். அவனும் அப்போதே அரசரை கறுப்பட்டி செய்யும் இடத் திற்குக் கூட்டிப் போனுன்.
இருவரும் கறுப்பட்டி செய்யும் இடத்திற்குப் போனர்கள். அரசர் வருவதைக் கண்ட கறுப்பட்டி செய்பவர்கள் அதிசயத்துப் போஞர்கள். அவரை விழுந்து வணங்கினர்கள்.

Page 40
*4、 இலங்கை நாட்டு
அரசர் கறுப்பட்டி செய்யும் விதத்தைப் பார்க்க வேண்டுமென்றர். அவர்கள் கறுப்பட்டி காய்ச்சும் இடத்திற்குக் கூட்டிப் போனர்கள் அர 伊6○阿..,
ஒரு சின்னக் குடிசையில் நாலுபக்கமும் கிழிந்த துணியால் மறைக்கப்பட்ட இடத்தில் கண்ணங்கரே லென்ற உருவத்துடன் வியர்வை வடிய வடிய அழுக்குப் படிந்த துணியை இடுப்பில் கட்டிக்கொண்டிருந்த ஒருத்தர் சாதாரண チLlqயில் சாதாரண கரண்டியில் சாதாரண அச்சில் கறுப்பட்டி செய்து கொண்டிருந்தார். அதையெல் லாம் அரசர் பார்த்தார். அங்கே தங்கச் சட்டியும் தங்கக்கரண்டியும், தங்க அச்சும், தங்கச்சரிகை பின்னப்பட்ட துணியும் காணவே இல்லை.
அந்தரே தன்னை ஏமாற்றி விட்டான் என்று e Tザf உணர்ந்தார். அவருக்குக் கோபம் வந்தது*
அந்த ரேயைக் கூப்பிட்டுக் கேட்டார். தங் கச் சட்டி, தங்கக்கரண்டி என்றயே, எங்கே???
ஓே! அதுவா செல்லும் போது அப்படித் தான் அரசே! செய்யும் போது தான் இப்படி’ என்று இழுத்தான் அந்தரே.
அரசர் கோபமாக இருந்தார்.
அந்தரே சொன்னன். ‘அரசே! உள்ளதைச் சொல்லியிருந்தால் நீங்கள் இங்கே வந்திருப்பீர் களா? தங்கக் கரண்டி, தங்கச்சட்டி, தங்க அச்சு என்றதும் ஓடிவந்து விட்டீர்கள். இப்போது பார்க்

தெனுலிராமன் கதைகள் 75
தீர்களா..? எத்தனைக் கஷ்டத்தின் மத்தியில் இனிப் பைத் தருகிறர்கள் இவர்கள்!-??
அரசர் கோபத்தை மறந்து சிரித்தார்.
31
இருந்தும் சிரிக்கவைத்தான் இறந்தும் சிரிக்கவைத்தான்
அந்தரே கிழவனகிவிட்டான். தள்ளாமை காரணமாக வீட்டிலேயே இருந்தான். திடீரென்று அவனுக்குச் சொந்த ஊருக்குப் போகும் ஆசை வந்தது. கிராமத்தை நோக்கித் தனியாகப் புறப் பட்டான். பலர் தனியாகப் போகவேண்டாம் என்று சொல்லியும் அவன் கேட்கவில்லை.
கொஞ்ச தூரம் போனதும் அந்தரே நடக்க முடியாமல் வழியில் இருந்த ஒரு சத்திரத்தில் தங்கினன். சில நாட்கள் அங்கேயே இருக்க முடிவு செய்தான். அப்படி இருக்கும் போது அவன் நோய் வாய்ப்பட்டான். திடீரென்று ஒரு நாள் இறந்து போனன். இந்தச் செய்தி அரசருக்கு எட்டியது. அரசர் ஓடோடி வந்தார். அவர் மனம் அந்தரே இறந்ததை நம்பவில்லை.

Page 41
ሃ6 இலங்கை நாட்டு தெளுலிராமன் கதைகள்
சத்திரத்தில் அந்தரேயைப் பார்த்தார். அந்தரே தன் கால்களையும் கைகளையும் விரித்து வைத்தவாறு படுத்துக்கிடந்தார். அரசர் வாய் விட்டுச் சிரித்தார். அவன் கிடப்பதைப் பார்த்தால் யாரும் சிரிக்கத்தான் செய்வார்கள். சாகும் போது கூட இப்படி ஒரு யோசனை வந்து அதன்படி செய்திருக்கிருன் கடைசியில் அரசர் இருக்கும் போது சிரிக்க வைத்த அந்தரே செத்தும் சிரிக்க வைத்தானே! இனி அவனை என்று காண்பேனே?92 என்று சொல்லி அழுதார்.


Page 42


Page 43