கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி

Page 1

14ஆம் நூற்ருண்டு முதல் 18ஆம் நூற்ருண்டிறுதிவரை
ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி
ass6) Crisia) &g. Gap=, p5 LL yr org' (r
கொழும்புத் தமிழ்ச் சங்க வெளியீடு
1982

Page 2
“ELATTUTTAMILIAKKIYA VALARCCI”, 14th — 18thC. Development Literary Eorms and Traditions in Sri Lanka, 14th-18th c.
By Dr. K. S. Nadarajah, M. A., Ph. D.
First Edition - 1982
Copyright (C)
Published by
The Colombo Tamil Cankam, 7, 57th Lane, Colombo 6, Sri Lanka.
Price Rs. 25-OO
Printed at the Thiru makal Press, Chunnakam, Sri Lanka.

அன்னக்குபயமிது
நல்லானைக் கோட்டு நாயகனேழ் எயில்சூழுந் தொல்லானைக் கோட்டைத் தோன்றல்சின் னத்தம்பி வல்லான் திருமகளாய் வரித்துநா வற்குழியூர்ச் செல்லப்பா மனைவிளக்குஞ் செந்தமிழா சாரநிறை,
என்னன்னை தன்னுற்றல் எல்லாம் எனக்காக்கி அன்னன்ன வாற்ருல் அறிவின் நிறைவெண்ணி என்னென்ன சால்பும் இயல விழைந்திட்ட அன்னம்மா நாமத்தென் அன்னைக் குபயமிது.
-- «s. GF, 5.

Page 3
சொற்சுருக்க விளக்கம்
தொல். சொல்.
எச்ச. பொருள். அகத். புறத். கற். மெய்,
6ીક-tit.
(35
es.
கி. பி.
தொல்காப்பியம் சொல்லதிகாரம் எச்சவியல் பொருளதிகாரம் அகத்திணையியல் புறத்திணையியல் கற்பியல் மெய்ப்பாட்டியல் செய்யுளியல் குத்திரம்
பக்கம் கிறிஸ்துவுக்குப் பின்,

முகவுரை
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றின் முன்னைய காலப்பகுதிகளைச் சுவைபடக் கூறுவது இந்நூல். பதினன்காம் நூற்றண்டிலிருந்து பதினெட்டாம் நூற்ருண்டின் இறுதிவரையான காலப்பகுதியில் ஈழத் தெழுந்த தமிழிலக்கியங்கள் பல கோணங்களிலிருந்து ஆராயப்படு கின்றன. சரசோதி மாலை என்னும் சோதிடநூலின் ஆசிரியராகிய தேனுவரைப் பெருமாளின் காலத்திலிருந்து புலியூரந்தாதியின் ஆசிரிய ராகிய மயில்வாகனப் புலவரின் காலத்தோடு நிறைவு பெறுகிறது இந்நூல். ஈழத் தமிழ் இலக்கியம், ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி, ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி, பிரபந்தவகையுள் அமையாத ஈழத்து இலக்கியங்கள் என்னும் நான்கு தலைப்புக்களில், ஈழநாட்டுத் தமிழிலக்கியங்களை ஆய்வு செய்யும் இந்நூலாசிரியர் வழக்கிலுள்ள இலக்கியங்களைப்பற்றிய செய்திகளை மட்டுமன்றி, வழக்கொழிந்த இலக்கியங்களைப்பற்றி மேலும் மேலும் ஆய்வாளர் தேடி அறிவதற்குத் தூண்டும் செய்திகளையும் விளக்கியுள்ளார். தமிழிலக் கியங்களின் இலக்கணங்களை அறிய விழையும் ஆய்வாளருக்கு இந்நூல் ஒரு கருவூலமாக அமையும்.
இந்நூலின் ஆசிரியர் கலாநிதி க. செ. நடராசா அவர்கள் ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் நடுநிலை நின்று ஆயும் மனப்பான்மையும் உறுதி யாகப் பெற்றவர். இவர் முன்னர் வெளிப்படுத்திய 'வையாபாடல்" என்னும் ஈழத்து வரலாற்று நூலில் இப்பண்புகளைப் பரக்கக் காண லாம். அந்நூலிற் பெறப்பட்ட செய்திகளைத் தீர ஆய முற்பட்டதன் விளைவே ஈழத்து இலக்கிய வளர்ச்சி பற்றிக் கூறும் இந்நூலாக உருப் பெற்றுள்ளது. கொழும்புப் பல்கலைக்கழகத்துக் கலாநிதிப்பட்டத் துக்காகச் சமர்ப்பிக்கப்பட் ஆய்வு நூலின் ஒருபகுதியே இன்று புதிய தோற்றம் பெற்றுத் தனி நூலாகத் தமிழுலகிற்கு அளிக்கப்பட்டுள்

Page 4
vi
ளது. ஆய்வுநூலின் பிற்பகுதியும் இந்நூலைத் தொடர்ந்து வெளிவரும் என எதிர்பார்க்கிருேம். பேரறிஞர் மு. வரதராசனர் அவர்கள் ஆசிரி யரின் ஆழ்ந்த புலமையையும் ஆய்வு வன்மையையும் சிறப்பாகப் பாராட்டியுள்ளார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
இந்நூலின் பயன்பாடுகள் பலவாகும். பல்கலைக்கழகங்களிலே தமி ழைச் சிறப்புப் பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றுப் பாடநூலாகப் பயன்படத்தக்கது இந்நூல். தமிழ்நாட்டுக் கல்வி நிலையங்கள் ஈழத்து இலக்கியங்களைப் பற்றி அறிய வேண்டுமென விழையும் இந்நாளில், தக்க ஆதார பூர்வமான செய்திகளைக் கொண்டுள்ள இந்நூல் மிக்க பயனைத் தரும். ஈழத்துப் புலவர் பரம்பரை, அவர்களின் ஆக்கப் பணிகள், அவர்கள் பாரம்பரியங்கள், சமுதாய உணர்வுகள், கற்பனைகள் என்பனவற்றை வரலாற்றுக் கண்ணுேட்டத்திற் காண விரும்பும் தமிழறிஞர் பலரும் இந்நூலை உவந்தேற்பர் என்பது எமது துணிபு.
ஆ. சதாசிவம் தமிழ்ப் பேராசிரியர் (கலாநிதி ஆ. சதாசிவம், பேர்ாதனைப் பல்கலைக் கழகம் எம். ஏ. டி. ஃபில்.)
பேராதனை, இலங்கை.

அணிந்துரை
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன், எம். ஏ., எம்.லிட்., பிஎச். டி.
தமிழ்த்துறைப் பேராசிரியர் - தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை - 600 005.
ஈழத்து மண்ணில் எழுந்த தமிழ் இலக்கியங்களின் வடிவும் மரபும் எய்திய வளர்ச்சியை ஆராய்கின்றது இந்நூல். கி. பி. 14ஆம் நூற்ருண்டு முதல் கி. பி. 18ஆம் நூற்றண்டின் இறுதிவரை தோன் நிய இலக்கியங்களையே கனகசபை செல்லப்பா நடராசா அவர்கள் வகைப்படுத்தி வழிநடத்திச் செல்கின்ருர், நூல்களைத் தேடித் தொகுப் பதற்கு மட்டும் இரண்டாண்டுகள் செலவிட்டுள்ளார் என்ற குறிப்பால் இவரின் உழைப்பின் அருமையை நாம் உணரலாம்.
இலக்கியம் எழுந்த காலக்கட்டத்தை ஆரியச் சக்கரவர்த்திக் காலம் (கி. பி. 1250 - 1621), போர்த்துக்கேயர் காலம் (கி. பி. 16211658), ஒல்லாந்தர் காலம் (கி. பி. 1658 - 1796) என மூன்ருக வகுத்துக் கொண்டு அவ்வக் காலத்தில் எழுந்த இலக்கியங்களின் வடிவும் மரபும் அரசியற் செல்வாக்கு முதலியவற்ருல் எவ்வாறு வளர்ச்சியுற்று அமைந்தன என்பதனைச் சுவைபட விளக்குவதோடு பல அரிய செய்தி களையும் தருகின்ருர்,
சான்ருக, ஈழத்தில் தமிழ்ச் செய்யுளின் தோற்றம் கி. பி. 14ஆம் நூற்ருண்டின் ஆரம்பத்திலிருந்தே ஆதாரபூர்வமாகக் காணக்கிடைக் கிறது என்று கூறுவதோடு, ஆரியச் சக்கரவர்த்திக் காலத்தில், சிலப்பதி காரக் கதை ஈழத்திற் சில நீக்கங்களுடனும், புதுச்சேர்க்கைகளுடனும் பொதுமக்களுக்கேற்ற வகையிற் புது இலக்கியமாகச் செய்யப்பட்டுள்ளது என்றும், அது ஈழத்துக் கிழக்கு மாகாணத்தில் ‘கண்ணகி வழக்குரை' என்ற பெயரிலும், வடக்கு மாகாணத்தில் “கோவலனர் கதை’ என்ற பெயரிலும், முல்லைத்தீவுப் பகுதியில் "சிலம்புகூறல்" என்ற பெயரிலும் தோன்றி வழங்கி வருகிறது என்றும் இதில் (கோவலனர் கதை) சிலப்பதிகார வஞ்சிக்காண்டப் பகுதி இடம்பெறவில்லை என்றும் குறிப்பிடுகின்றர். இக்குறிப்பு வஞ்சிக்காண்டம் பற்றிய ஆய்வுக்குப் பயன்படும்.

Page 5
viii
மேலும் இரகுவமிசம், வையாபாடல், கோணேசர் கல்வெட்டு, கைலாயமாலை போன்ற வரலாற்று நூல்களும் தோன்றின என்ற குறிப் பைக் காணும்போது பண்டைத் தமிழகத்தின் உண்மை வரலாற்றை யறிய இத்தகைய நூல்கள் கிடைத்திலவே என்ற ஏக்கம் எழுகின்றது.
போர்த்துக்கேயர் என்ற தலைப்பில், முப்பத்தேழு ஆண்டுகளே அவர்களின் முழுமையான ஆட்சி யாழ்ப்பாணத்தில் இருந்தது என்ருலும் இலக்கிய மரபில் மாற்றத்தையும் புது வளர்ச்சியையும் அது உண்டு பண்ணியமைக்குக் காரணம் போர்த்துக்கேயர் தொடர்பு அதற்கு முன்பே இந்நாட்டில் இருந்ததுதான் என்கின்ருர்,
குறிப்பாக, இக்காலக்கட்டத்திற் கத்தோலிக்க கிருத்துவ சமயக் கருத்தைக் கருவாகக்கொண்டு ஞானப்பள்ளும், அர்ச். யாகப்பர் அம் மானை போன்ற நூல்களும் எழுந்தன. பள்ளு இலக்கண மரபையொட் டிப் பாத்திரங்களைப் படைத்துள்ள ஞானப்பள்ளு ஆசிரியர், மூத்த பள்ளி, பள்ளன் இருவரையும் எருசலை நாட்டவராகவும், இளைய பள்ளியை உரோமாபுரி நாட்டவராகவும், பண்ணையாரை எருசலை என்ற பண்ணைக்குத் தலைவனுகவும் அமைத்துள்ளமையைக் குறிப்பிடுவது சுவை யாக உள்ளது.
அடுத்து, ஒல்லாந்தர் காலம் என்ற தலைப்பில், இவர்கள் ஆட்சி 138 ஆண்டுகள் நிகழ்ந்தன என்று காட்டி, சைவ சமயம் புத்துயிர் பெற்றுப் பல சிற்றிலக்கியங்கள், புராணங்கள் எழுந்தன என்ற உண் மையை விளக்குகின்ருர். சிவராத்திரி புராணம், ஏகாதசிப் புராணம், கிள்ளைவிடுதூது, பிள்ளையார் கதை, அமுதாகரம் என்ற விஷவைத்திய நூல், திருச்செல்வர் காவியம், வெருகல் சித்திரவேலாயுதர் காதல், சந்தானதீபிகை, கல்வளையந்தாதி, மறைசையந்தாதி, கரவை வேலன் கோவை, பருளை விநாயகர் பள்ளு, பத்திரகாளியம்மை ஊஞ்சல், பஞ்ச வன்னத் தூது, சிவகாமியம்மை துதி, தண்டிகைக் கனகராயன் பள்ளு, புலியூரந்தாதி, காசியாத்திரை விளக்கம் முதலிய நூல்களின் ஆசிரி யர், அவை எழுந்த சூழல் முதலியவற்றை இனிய எளிய நடையில் விளக்கிச்செல்வதோடு, பெயரளவில் நின்று நூலளவில் தம் கைக்குக் கிட்டாதன எவை என்ற பட்டியலும் தருகின்ருர்,
வடிவும் மரபும் எய்திய வளர்ச்சியை, ஈழத்து அகப்பொருள் வடிவும் மரபும் எய்திய வளர்ச்சி, புறப்பொருள் வடிவும் மரபும் எய்திய வளர்ச்சி எனப் பகுத்து ஆய்கின்ருர். அகப்பொருள் மரபு பற்றிக் கூறும்போது, தூது, உலா, கோவை, பவனிக்காதல் முதலியவற்றில் தலைவன் பெயர் மட்டும் சுட்டப்பட்டுள்ளது; பஞ்சவன்னத் தூது, வெருகல் சித்திர வேலாயுதர் காதல் போன்றவற்றில் தலைவி பெயருங் கூறப்பட்டுள்ளது என்று கூறுவதோடு, ஈழத்துக்கேயுரிய வாண வகைகளும், வாத்திய வகை

iX
களும் இவற்றுள் இடம்பெற்றுள்ளமையும் கூறுகின்ருர், எழுந்த மண்ணின் மணத்தை இலக்கியங்கள் பெறுவதைக் காட்டுகின்ருர்.
இயல் மூன்றில், புறப்பொருள் மரபு பற்றிக் கூறும்போது, ஈழத் துப் பள்ளுப் பிரபந்த மரபு, அந்தாதி இலக்கிய மரபு, ஊஞ்சல், பதிகம் ஆகியவற்றின் மரபு, புராண காப்பிய மரபு முதலிய தலைப்புக்களில், பல அரிய செய்திகள் வழங்கப்படுகின்றன.
ஈழத்தில் எழுந்த முதல் தமிழ் நூல் பண்டித போசராசன் செய்த *சரசோதி மாலை" என்றும், முதற் புராணம் "தட்சிண கைலாய புராணம்’ என்றும், முதற் காப்பியம் ‘கண்ணகி வழக்குரை' என்றும் குறிப்பிடு கின்ருர்,
இயல் நான்கில், மரபு வழியான பிரபந்த வகையுள் அமையாத ஈழத்து இலக்கியங்களைப் பற்றி ஆராய்கின்றர். இத்தலைப்பிற் சோதிட வைத்திய நூல்களும், வரலாற்று நூல்களும், அம்மானை முதலியனவும் இடம்பெறுகின்றன.
சிங்கள மொழியில் தோன்றிய பன்னிரண்டு தூதுக்கள் புறப் பொருள் நெறியில் அமைய, தமிழ் தூது நூல்கள் அகப்பொருளில் அமைந்துள்ளன.
கரவை வேலன் கோவை தஞ்சைவாணன் கோவையைப் பின் பற்றி நானூற்றிருபது துறைகளை ஏற்றுள்ளது. புராணத்தையும், காப்பியத்தையும் ஒருவகைப் பிரபந்தமாகவே பாட்டியல் நூல்கள் கருதினும், ஈழத்தெழுந்த அவ்விருவகை இலக்கியங்களுக்கிடையே அமைப் பிலும் மரபிலும் வேறுபாடு உண்டு என்பன போன்ற கருத்துக்கள் இடம் பெறுகின்றன.
ஆய்வு என்பது தொடரோட்டம் போன்றது என்பர். அவ்வகை யில் மேலும் இத்துறையில் ஆய்பவருக்கு இது வழியாய் அமைகிறது.
பொதுவாக, இந்நூலைப் படித்து முடித்ததும் ஐந்நூறு ஆண்டுக் கால ஈழத்துத் தமிழ் இலக்கியங்களைப் பற்றி அறிந்துகொண்ட மன நிறைவு ஏற்படுகின்றது. தமிழ் இலக்கிய மரபுகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதும், தொல்காப்பியத்தையே இவற்றுக்கெல்லாம் மூல ஊற்ருகக் கொண்டு ஆய்ந்து செல்வதும், ஆசிரியரின் தாய்த்தமிழ் நாட்டுப் பற்றை விளக்குவதோடு நம் நெஞ்சையும் நெகிழச் செய்கின்றது. தமிழா நீ எங்கிருந்தாலும் வாழ்க என இதயம் வாழ்த்துகிறது.
ஆசிரியருக்கு டாக்டர் பட்டத்தைப் பெற்றுத்தந்த இந்நூல் இலக் கிய வரலாற்று நூல்களுட் சிறப்பான இடத்தையும் புகழையும்
தேடித்தரும் என நம்புகின்றேன்.
சி. பாலசுப்பிரமணியன்

Page 6
பதிப்புரை
இலங்கைத் தமிழர்களின் வரலாற்றிலே, அவர்களது இலக்கியப் பணிகளின் வரலாறும் முக்கியமான பங்கினை வகிக்கிற தெனலாம். அது இன்றி இலங்கைவாழ் தமிழர்களின் வரலாற்றைப் பூரணமாகக் காணமுடியாது. அன்றியும், தமிழ் இலக்கிய வரலாற்றிலே ஈழத்துத் தமிழ் இலக்கியங்களுக்கும் ஒரு பெரும் பங்குண்டு. அதனைத் தவிர்த் துத் தமிழ் இலக்கிய வரலாற்றினை முழுமையாகக் காணமுடியாது. தமிழ்மொழி, தமிழ் நாட்டோடு மட்டும் கட்டுப்பட்டு நின்று விடவில்லை; பல நாடுகளிலே பரந்து தமிழ் இலக்கியம் வளர்ச்சியுற்றிருக்கிறது. தமிழ் நாட்டுக்கு அடுத்தபடியாகத் தமிழ் இலக்கியம் ஈழத்திலேதான் சிறந்து வளர்ந்திருக்கிறது. காலத்துக்குக் காலம், இடத்துக்கிடம் தமிழ்க் கலை, கலாசாரம் பெற்ற வளர்ச்சி, மாற்றம் ஆகியன, இத்தைகய இலக்கியங்கள் வாயிலாகவே பிரதிபலிக்கின்றன.
தமிழ் இலக்கிய வரலாற்றிலே ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றி இதுவரை அதிக கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரியவில்லை, தமிழ் இலக்கிய வரலாற்ருசிரியர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறிப்பிட்டிருக்கிருர்களேயன்றி, ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றிய தொடர்பான வரலாற்றினை யாரும் வரைந்திலர். அதனல் இந்நாட்டுத் தமிழ் இலக்கிய வரலாற் றினை ஆரம்பகாலத்திலிருந்து ஆதாரபூர்வமாக ஆராய்ந்தெழுதவேண் டிய தேவையொன்றுண்டென்பதைக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் உணர்ந்தது. இத்தேவையினைப் பூர்த்தி செய்யுமுகமாக, அவ்வரலாற் றின் முதற்கட்டமாகிய கி. பி. 1301 முதல் 1800 வரையான ஐந்நூறு ஆண்டுக்காலப் பகுதிக்குரிய ஈழத்துத் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்த கலாநிதி க. செ. நடராசா அவர்கள் எழுதிய ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி என்ற இந் நூலைப் பதிப்பிப்பதில் எமது சங்கம் பெருமைப் படுகிறது. இந்நாட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றின் முதற்படியாகிய இந்த ஆய்வு நூல், தமிழ் இலக்கிய வரலாற்றிலே இதுவரை இருந்து வந்த இடைவெளி ஒன்றினை நிரப்பப்போகிறது என்ற பூரிப்போடு கொழும்புத் தமிழ்ச் சங்கம் இந்நூலை வெளியிடுகிறது. இதனைத் தொடர்ந்து இவ்வரலாற்றின் ஏனைய படிகளும் விரைவில் அமைய வேண்டு மென்பது சங்கத்தின் அவா.
7, 57ஆவது ஒழுங்கை, க. இ. க. கந்தசுவாமி கொழும்பு 6, பொதுச் செயலாளர்,
இலங்கை. கொழும்புத் தமிழ்ச் சங்கம்,

முன்னுரை
கி. பி. பதினன்காம் நூற்ருண்டுமுதற் பதினெட்டாம் நூற்ருண் டின் இறுதிவரை ஈழநாட்டில் எழுந்த தமிழ்ச் செய்யுள் இலக்கியங்கள் பெற்றுள்ள வடிவங்களையும் அவற்றின் ஈழத்து மரபினையும் ஆராய்ந்து, அவ்வவ்வகையில் இவ்விலக்கியங்கள் அடைந்துள்ள வளர்ச்சியினை அள விடுதலே இந் நூலின் முக்கிய நோக்கமாகும். எனவே அக்காலத்தில் ஈழத்தெழுந்தனவாக அறுதியிடத்தக்க நூல்கள் எவை என்பதனையும் அந்நூல்கள் அக்காலப் பகுதிக்குரியனவாகக் கணிக்கத்தக்க ஆதாரங்க ளெவை என்பதனையும், அவற்றைச் செய்தோர் யார், அவை கூறும் பொருள் எவை என்பன போன்ற விபரங்களையும் முதலில் நிர்ணயப் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒரு காலப்பகுதியில் எழுந்த இலக்கியங்களின் வடிவம், மரபு ஆகியவற்றின் வளர்ச்சியை ஆராயப்புகும் இந்நூலில், அவ்விலக்கியங்கள் எழுந்த காலம்பற்றிய திடமான கருத்து இன்றியமையாததாகும். ஈழத் தமிழ் இலக்கியங்களை முன்னரே பலர் அறிமுகஞ்செய்து வைத்திருந்தபோதும், அவற்றின் காலம் பற்றிய ஆராய்ச்சி இதுவரை மேற்கொள்ளப்படாததால், பதி னெட்டாம் நூற்ருண்டின் இறுதிவரையான ஈழத்தமிழ் இலக்கியங் களின் காலக் கணிப்பினையும் ஈண்டு மேற்கொள்ள வேண்டியுள்ளது.
நூல்கள் எழுந்த காலக் கிரமத்தின்படி அவற்றின் பெயர், பொருள், காலம், கருத்தா ஆகியன நாட்டி அறிமுகஞ் செய்துவைத்துப் பின்னர் அவற்றை வகைப்படுத்தித் தொகுத்து அத்தொகுதி வாரியாக அவற்றின் வடிவமும் மரபும் ஈழத்தடைந்த வளர்ச்சியினை ஆராய்தல் பொருந்தும்.
தமிழ் இலக்கியங்கள் பெற்றுள்ள பல்வேறு வடிவங்களையும் அவற் றின் இலக்கணங்களையும் மனத்துட்கொண்டு, குறித்த காலப்பகுதியில்

Page 7
χii
ஈழத்தெழுந்த தமிழ் இலக்கியங்களை ஊன்றி நோக்கின், அவற்றை மூன்று பெரும் பிரிவுகளில் அடக்கலாமெனத் தோன்றும். அகப்பொருள் சம்பந்தமான நூல்கள் பலவகைப்படினும்,அவை எடுத்தாளும் பொருளில் ஒற்றுமை கருதி அவற்றை அகப்பொருள் இலக்கியங்கள் என்னும் பிரிவில் அடக்கிக் கொள்ளலாம். எஞ்சியுள்ளனவும், பிரபந்த இலக்கண வரம்புக் கமைவனவுமான நூல்கள், புறப்பொருள் இலக்கியங்கள் என்னும் இரண் டாவது பிரிவிலடங்கும். பாட்டியல் நூல்கள் கூறும் பிரபந்த இலக்கண விதிகளுக்கமையாது தனித்து நிற்கும் நூல்கள் மூன்ருவது பிரிவிலடங் கும். இம் மூன்று பிரிவுகளுள் முதல் இரண்டிலும் ஈழத்தே தமிழ் இலக் கிய வடிவங்கள் பெற்ற வளர்ச்சி நிலையும், அவ்விலக்கிய மரபிலேற் பட்ட புதுமைகளும் ஆராய்தல் கூடும். மூன்ருவது பிரிவில் இலக்கிய வடிவங்களின் வளர்ச்சிபற்றிய ஆய்வுக்கு இடமின்மையால், ஈழத்து மரபுகள் அதில் எத்துணை இடம்பெற்றுள்ளன என்பதை மட்டுமே மதிப் பிடலாம். -
இலக்கிய வடிவங்களின் இலக்கணம் இயற்றமிழ் நூல்களுக்கே வகுக்கப்பட்டிருப்பதால், ஈண்டும் அத்தகைய இலக்கியங்களையே கொண்டு, ஏனைய இசை, நாடக நூல்கள் கொள்ளப்படாது விடப்படு கின்றன.
கி. பி. பதினன்காம் நூற்ருண்டுக்கும் பதினெட்டாம் நூற்ருண் டின் இறுதிக்குமிடையே ஈழத்தெழுந்த தமிழ் இலக்கியங்கள் தூது, காதல், கோவை ஆகிய அகப்பொருள் வகையையும், பள்ளு, அந்தாதி, பதிகம், ஊஞ்சல், புராணம், காவியம் ஆகிய புறப்பொருள் வகையை யும், மரபுவழியான இலக்கிய வடிவங்களுள் அமையாத அம்மானை, வைத்திய, சோதிட, வரலாற்று நூல்வகையையும் சார்ந்தவை ஆகை யால், அவ்வகுப்பின் வழியே அவற்றின் வளர்ச்சியினை நோக்கலாம்.
கி. பி. 14ஆம் நூற்ருண்டுமுதல் 18ஆம் நூற்ருண்டின் இறுதிவரை ஈழத்தெழுந்த தமிழ் இலக்கியங்களே இவ்வாய்வுக்குரிய மூலப்பொரு ளாகையால், அவற்றையெல்லாந் தேடித் தொகுப்பதே இதற்கான முதல் முயற்சியாயிற்று. அந்நூல்களிற் பெரும்பாலானவை புத்தகக் கடை களிலோ அன்றிப் பொது நூல்நிலையங்களிலோ பெற முடியாதன வாகையால், ஈழத்தின் பல பாகங்களிலுமுள்ள தமிழறிந்த பெரியார் களின் தொடர்பை ஏற்படுத்தி, அவர்கள் மூலமாய் ஒவ்வோர் பகுதி யில் ஒவ்வொரு நூலாகத் தேடித் தேடிச் சேர்க்கவேண்டியிருந்தது. இம்முயற்சியில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் சென்றமை, அவற் றைத் தேடித் தொகுப்பதில் ஏற்பட்ட இடர்ப்பாட்டை எடுத்துக் காட்டும்.

xiii
கோவலஞர் கதை, கதிரைமலைப் பள்ளு, ஏகாதசிபுராணம், பிள்ளையார் கதை, பருளை விநாயகர் பள்ளு முதலிய சிலநூல்களைத் தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளையவர்கள் தந்துதவினர். வெரு கல் சித்திரவேலாயுதர் காதல், சந்தானதீபிகை, கல்வளையந்தாதி, வட்டுநகர்ப் பிட்டிவயற் பத்திரகாளியம்மை ஊஞ்சல் போன்ற நூல்கள் சில, முதலியார் குல. சபாநாதன் அவர்களிடம் பெற முடிந்தது. தகதிணகைலாசபுராணம், கோனேசர் கல்வெட்டு முதலாய சில நூல்கள் வட்டுக்கோட்டை அருள். 6)uurr3.J.Tdfr அவர்கள் மூலமாகவும், சரசோதிமாலை, கைலாயமாலை, கரவை வேலன் கோவை என்பன போன்ற சில நூல்கள் நாவற்குழியூர்ப் பண்டிதர் சு. வேலுப்பிள்ளை அவர்கள் மூலமாகவும் கிடைத்தன. கோப்பாய்ப் பண்டிதர் ச. பஞ்சாட்சரசர்மா அவர்கள் அமுதாகரம் என்ற நூலையும், குரும்பசிட்டி இரசிகமணி கனக. செந்திநாதன் அவர் கள் திருக்கரைசைப் புராணம் என்ற நூலையும் தந்துதவினர். மன்னர் மாவட்டத்திலிருந்து திருச்செல்வர் காவியம் என்ற நூலைப் பெஞ் சமின் செல்வம் அவர்கள் பெற்றுத்தந்தனர். பேராசிரியர் அ. சின் னத்தம்பி அவர்களிடம் செகராசசேகரம் என்ற நூலையும், "கேணல்" இரா. சபாநாயகம் அவர்களிடம் செகராசசேகர மாலை என்ற நூலை யும் பெற முடிந்தது. நல்லூர்ப் பண்டிதர் இரா. சிவசுப்பிரமணியம் அவர்கள் கிள்ளைவிடு தூது என்ற நூலைப் பெற்றுத்தந்தார். பஞ்ச வன்னத்தூது, சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்கள் இன்னும் ஏட்டுப் பிரதிகளாகவே யிருக்கின்றமையால், அந்நூல்களின் ஆசிரியரான சின்னத்தம்பிப் புலவர் பரம்பரையில் வந்த சுதுமலை மு. அருணுசலம் அவர்களிடம் அவற்றைப் பெற முடிந்தது. யாழ்ப்பாண ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்கள் அர்ச். யாகப்பர் அம் மானை என்ற நூலைத் தந்தனர். வைத்திய நூல்கள் பலவற்றைத் திருநெல்வேலிச் சித்த வைத்தியர் க. இராமசாமி அவர்களிடமும், கொழும்பு ஆயுள்வேத வைத்தியக் கல்லூரி முன்னுள் விரிவுரையா ளர் ஆ. கனகரத்தினம் அவர்களிடமும், இந்நாள் விரிவுரையாளர் கே. குணரத்தினம் அவர்களிடமும் பெற முடிந்தது. இந்நூல்களைத் தேடித் தொகுப்பதில் இவர்கள் அளித்த உதவியே இவ்வாய்வு தொடங்குவதற்கு உறுதுணையாயிற்று. ' உதவி வரைத்தன்று உதவி என்ற உணர்வோடு இவர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியையும் கடப்பாட்டையுந் தெரிவித்துக்கொள்ள விழைகின்றேன்.
ஈழத்தெழுந்த இத்தமிழ் இலக்கியங்களின் வடிவும், மரபும் எய் திய வளர்ச்சியை ஆராயப்புகுந்த இம்முயற்சியினை நெறிப்படுத்தித் தன் அறிவு அனுபவம் ஆகியவற்றை யான் பயன்பெற வழங்கியதோ டமையாது இந்நூலுக்கான முகவுரையையும் தந்துதவிய பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்களுக்கு

Page 8
xiV
எனது நன்றி உரித்தாகும். இதனை ஆற அமரப் படித்து நயந்து ஏற்ற அணிந்துரை அளித்த சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும் என் நன்றி உரியதாகும்.
இவ்வாய்வுக்கு வேண்டிய துணைநூல்கள் பலவற்றைத் தந்து, ஈழத்து இலக்கியங்கள்பற்றிய குறிப்புக்கள் பல உதவி, இயல் இயலாக இந்நூலைப் படித்துப் பார்த்து அவ்வப்போது ஏற்ற அறிவுரை வழங் கிய கலாநிதி பொ. பூலோகசிங்கம் அவர்களுக்கும் நன்றிகூறும் கடப்பா டுடையேன்.
இந்த ஆய்வுக்கு வேண்டிய பிற நூல்களை, நூல் நிலையங்களிலே தேடிக் கண்டு குறிப்பெடுத்துதவியதோடன்றி, இந்நூல் அச்சிடும்போது அச்சுப் பிரதிகளை ஒப்புநோக்கித் தப்புத் தவிர்க்கவும் உதவிய என் வாழ்க்கைத் துணைவியின் சேவையைக் குறிப்பிடாது விடுவது சால் பாகாது.
இந்நூலை வெளியிடுவதற்கு முன்வந்த கொழும்புத் தமிழ்ச் சங் கத்துக்கும், இதனை அழகுற அச்சேற்றித் தந்த சுன்னகம் திருமகள் அழுத்தகத்தாருக்கும் என் நன்றி பெரிதாகும்.
க. செ. த. 8, மும்தாஜ் மகால் வீதி,
கொழும்பு 6.
இலங்கை.

இயல் 1
ஈழத் தமிழ் இலக்கியம்
ஆரியச் சக்கரவர்த்திகளின் காலம் (கி. பி. 1250 - 1621) தம்பதேனியாவில் எழுந்த தமிழ்நூல் . யாழ்ப்பாணத்தில் எழுந்த நூல்கள் . போர்த்துக்கேயர் காலம் (கி. பி. 1621 - 1658) ஒல்லாந்தர் காலம் (6). 9). 1658 — 1796)
இயல் II ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி .
தூதுப் பிரபந்தம் --- பவனிக் காதல் . கோவைப் பிரபந்தம் . ஈழத்து அகப்பொருள் இலக்கிய மரபு .
Muusio III ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி .
ஈழத்துப் பள்ளுப் பிரபந்த மரபு
அந்தாதி இலக்கியங்கள் . ஈழத்து அந்தாதி இலக்கியமரபு . ஊஞ்சலும் பதிகமும் . ஈழத்து ஊஞ்சல், பதிகம் ஆகியவற்றின் மரபு . −
பக்கம்
vii
Χi
Xν
23
28
49
49
56
61
64
67
71
77
82
84
86

Page 9
xvi
பக்கம்
புராண காவியங்கள் -- a to 88 புராணங்கள் . 93 காப்பியங்கள் . 96
ஈழத்துப் புராண காப்பிய மரபு . 98
இயல் IV பிரபந்த வகையுள் அமையாத ஈழத்து இலக்கியங்கள் . 103
சோதிட வைத்திய நூல்கள் . 107 ஈழத்துச் சோதிட நூல்களின் மரபு . 108 ஈழத்து வைத்திய நூல்களின் மரபு . 110 ஈழத்து வரலாற்று நூல்களின் மரபு . 3. அம்மானையின் வடிவம் . 6
முடிவுரை . 123
ஆய்வுக்கு உதவிய தமிழ் நூல்கள் . 127 ஆய்வுக்கு உதவிய ஆங்கில நூல்கள் • • >

Page 10
2 ஈழத் தமிழ் இலக்கியம்
தொகுதியின் பத்தாம் பகுதியில் வெளியாகி, 1922ஆம் ஆண்டு 'ஈழ மண்டலப் புலவர் சரித்திரம்' என்ற சிறு நூலாக உருப் பெற்றது. அது ஒரு சிறிய வெளியீடேயெனினும், ஈழநாட்டுப் புலவர்களை ஒன் முகத் தொகுத்து நோக்க எழுந்த முதல் முயற்சி அதுவேயாகும்.
இவ்வரிசையிற் சி. கணேசையர் “வித்தகம்’ என்ற பத்திரிகையில் ‘ஈழநாடும் தமிழும்” என எழுதிவந்த கட்டுரைகள், ‘ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்’ என்ற நூலாக 1939ஆம் ஆண்டு வெளிவந்தது. அது நூறு புலவர்களின் பெயர்களைக் கொண்டு விளங்கியபோதும், ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் வரிசையைப் பூரணமாக்கத் தவறிற்று. பல புலவர்களின் பெயர்கள் இதில் இடம்பெருது விடுபட்டதோடன்றி, இடம் பெற்ற பல புலவர்கள் பற்றிய விபரங்களுங் காலக் கணிப்பும் ஆய்வாளர் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அமையாதும் போயின.
இந்த நூற்றண்டின் பின்னரையின் முற்கூற்றிலே ஈழத் தமிழ்க் கவிஞர்களைக் காலக் கிரமப்படி ஒழுங்குகண்டு அவர்கள் செய்யுள்களை வகைக்கொன்ருகத் தொகுத்துத் தர எழுந்த முயற்சியே பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்கள் 1966ஆம் ஆண்டு தொகுத்து இலங்கைச் சாகித்திய மண்டல வெளியீடாகத் தந்த ‘ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சிய மாகும். இது 143 ஈழத் தமிழ்ப் புலவர்களின் வரலாற் றையும் அவர்தம் ஆக்கங்களையும் அறிமுகஞ் செய்து வைக்கும். இத் துறையில் எழுந்த முயற்சிகளுள் இது ஒரு சிறந்த ஆக்கமாகும். எனி னும் சில புலவர்களின் காலக் கணிப்பு மேலும் ஆராயப்பட வேண்டி யதாய் விடப்பட்டுள்ளது. இந்நூல் ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பினை அரசியற் காலப் பகுப்புக்கேற்ப யாழ்ப்பாணத் தமிழ் வேந்தர் காலம் (ஆரியச்சக்கரவர்த்திகள் காலம்), போர்த்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம், ஆங்கிலேயர் காலம், தேசிய எழுச்சிக் காலம் என வகுத்துள் ளது. இலக்கிய நெறியும் அரசியல் நெறிக்கேற்ப வேறுபட்டு நடப் பதால், இப்பகுப்பு முறையை ஆதாரமாகக்கொண்டு, ஈண்டு எடுத்துக் கொண்ட காலப்பகுதிக்கான ஈழத் தமிழ் இலக்கியத்தினை மேற்காட்டிய முதல் மூன்று பகுப்புக்களில் ஆராய்வாம்.
ஈழத்திலே தமிழ்ச் செய்யுள் இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சி ஆகியவற்றைக் கி. பி. பதினன்காம் நூற்றண்டின் ஆரம்பத்திலிருந்தே ஆதார பூர்வமாகக் கணக்கிடக்கூடியதாயிருக்கிறது. அதற்கு முன் ஈழத்தே தமிழ் இலக்கியங்கள் இருந்தமைக்குத் தக்க சான்றுகள் இது வரை அகப்படவில்லை. பண்டைய பாண்டிய மன்னர் காலத்தே மதுரையிலிருந்த கடைச்சங்கப் புலவருள் ஒருவரெனக் கூறப்படும்
1, க, ஏகாம்பரப்புலவர் பெயர் இருமுறை இடம் பெற்றிருப்பதால், அந்நூர்
பொருளடக்கத்தில் 101 புலவர்களெனக் காட்டப்பட்டுள்ளது.
 

ஈழத் தமிழ் இலக்கியம் 3
ஈழத்துப் பூதன்றேவனுர் யாத்த செய்யுள்கள் எமக்குப் பெருமை தேடித்தரத் தக்கனவேனும், அவர் இலங்கையிற் பிறந்து வளர்ந்தவர் என்பதை நிரூபிக்கும்வரை, அவர் பாடல்களை ஈழத் தமிழ் இலக்கிய வரிசையில் இணைத்துக்கூற முடியுமா என்பது சந்தேகமே. அப்புலவர் பெயருக்கிட்டுள்ள அடைமொழியாய "ஈழத்து’ என்ற ஒரு சொல்லை மட்டுங் கொண்டு, அவர் இலங்கையர் என்று சாதிப்பது தக்கதெனத் தோன்றவில்லை. ஈழவர் என்ற ஒரு வகுப்பினர் கேரள நாட்டிலும் வாழ்ந்தனர் என அறியப்படுகிறது. அவர் வாழ் பதியும் ஈழமென வழங்கப்பட்டிருத்தல் சாலும்.
பூதன்றேவனர் இலங்கையரா யிருப்பின், அவர் வாழ்ந்த கால மெனக் கருதப்படும் கி. பி. இரண்டாவது நூற்ருண்டுக்கும், கி. பி. பதினன்காம் நூற்ருண்டுக்கு மிடைப்பட்ட காலத்தே ஈழத் தமிழ் இலக்கியமெதுவுந் தோன்ருமற் போனதேன் என்ற கேள்விக்கிடமுண் டாகிறது. அது, கடைச்சங்க காலத்தின் பின் விசயாலயச் சோழன் வழிவந்த சோழப் பேரரசர் காலம்வரை, தமிழைப் பேணும் பெரு மன்னர் ஈழத்திலோ தமிழகத்திலோ இல்லாத காரணத்தினுலா யிருத் தலும் கூடும். அன்றி அவ்விடைப்பட்ட காலத்தெழுந்த நூல்கள், பல காரணங்களினுல் அழிந்தொழிந்து போயுமிருக்கலாம். எவ்வாரு யினும், தமிழ் இலக்கிய மரபு கி. பி. பதினுன்காம் நூற்ருண்டுக்கு முன்னரே ஈழத்தில் உயர்ந்த நிலையில் இருந்தது என்பதனைக் கல்வெட் டுச் செய்யுட் சான்றுகள் காட்டி நிற்கும்.
அநுராதபுரத்தின் வட பாகத்திலே இந்து அழிபாடுகள் என அழைக்கப்பட்ட திராவிடக் கட்டட அழிபாடுகளிடையே கண்டெடுக் கப்பட்ட நாலு நாட்டார் கல்வெட்டு இதனை வலியுறுத்துவதாகும். கி. பி. ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற்ருண்டுக்குரியதெனக் கணிக்கப் பட்டுள்ள அக் கல்வெட்டின் இறுதியிலே காணப்படும்,
* போதி நிழலமர்ந்த புண்ணியன்போ லெவ்வுயிர்க்குந்
தீதி லருள்சுரக்குஞ் சிந்தையா - ஞதி வருதன்மங் குன்ருத மாதவன்மாக் கோதை யொருதர்ம பால னுளன்." எனும் வெண்பா, செய்யுள் யாப்பின் உன்னத நிலையை எடுத்துக் காட்டும். இத்தகைய செய்யுள்வளம் கி. பி. ஒன்பதாம் பத்தாம் நூற்றண்டளவில் ஈழத்தே விருத்தியடைந்திருந்ததென்ருல், அதற்குச் சில நூற்ருண்டுகளின் முன்னரே அங்கு தமிழ் இலக்கிய மரபு மலர்ச்சி 1. கா. இந்திரபாலா, சிந்தனை (சமூக விஞ்ஞானக் காலாண்டுச் சஞ்சிகை), மலர் 1,
இதழ் 4, ஜனவரி, 8ே (கலக் கல்விக் கழகம், பேராதனை), அநுராதபுரத்தி லுள்ள நான்கு நாட்டார் கல்வெட்டு, பக். 31. ネ

Page 11
4 ஈழத் தமிழ் இலக்கியம்
யுற்றிருக்கவேண்டுமென்பது தெளிவு. அவ்வாறே கி. பி. பதினன்காம் நூற்ருண்டில் ஆரியச் சக்கரவர்த்திகளுள் ஒருவன், கேகாலை மாவட்டத்தி லுள்ள கோட்டகம என்னுமிடத்திற் பொறித்த கல்வெட்டாய,
* சேது, கங்கணம்வேற் கண்ணிணையாற் காட்டினர் காமர்வளைப் பங்கயக்கை மேற்றிலதம் பாரித்தார்-பொங்கொலிநீர்ச் சிங்கைநக ராரியனைச் சேரா வனுரேசர் தங்கள் மடமாதர் தாம்’ எனும் வெண்பாவின் சிறப்பும், ஈழத்துத் தமிழ் இலக்கிய மரபின் தொடர்ச்சியான வளர்ச்சியினை நிலைநாட்டும்.
ஒரு குறிப்பிட்ட இடத்திலே பொறிக்கப்படும் கல்வெட்டின் நோக்கம், அவ்விடத்திலே வாழும் மக்களுக்கு அதிலுள்ள செய்தியைத் தெரிவிப்பதேயாகும். ஆகையால் ஆங்காங்கு வாழும் மக்கள் மொழி யிலேயே கல்வெட்டுக்கள் பொறிக்கப்படுகின்றன. எனவே, கி. பி. ஒன் பதாம் பத்தாம் நூற்ருண்டுகளில் அநுராதபுரப் பகுதியிலும், கி. பி. பதினன்காம் நூற்றண்டிற் கேகாலைப் பகுதியிலும் தமிழர்கள் அதிக மாக வாழ்ந்தனர் என்பது போதரும்.
ஆரியச் சக்கரவர்த்திகள் காலம்
(கி. பி. 1250-1621) தம்பதேனியாவில் எழுந்த தமிழ் நூல்
குருநாகற் பகுதியைச் சேர்ந்த தம்பதேனியாவில் நாலாம் பராக்கிரமவாகு,
* மனுநெறி நடாத்தி வாழு மங்கல வாண்டோ ரேழில்
இனியசோ திடநன்னூலைத் தமிழினு லியம்பென்" ருேதிய
ஆணைப்படி, ‘தேனுவரைப் பெருமா ளென்ருேது பண்டித போசராசன் 2 செய்த சரசோதி மாலையே எமக்குக் கிடைத்துள்ள முதல் ஈழத் தமிழ் நூலாகும். சோடசகருமப் படலம், ஏர்மங்கலப் பட்லம், பலகருமப் படலம், அரசியற் படலம், யாத்திரைப் படலம், மனசெயற் படலம், தெய்வவிரதப் படலம், குளுணகுணப் படலம், சுபாசுபப் படலம், நாழிகைப் படலம், சாதகப் படலம், நட்சத்திர தெசைப் படலம் ஆகிய
1. சரசோதி மாலை, பாயிரம், செய்யுள் 7. 2. சரசோதி மாலை, பாயிரம், செய்யுள் 8.

ஈழத் தமிழ் இலக்கியம் 5
பன்னிரு படலங்களைக்கொண்டு விளங்கும் இச் சோதிட நூல், கர வருடம் (1892) பங்குனி மாதம் முதன் முறையாக அச்சிற் பதிப்பிக்கப் பட்டது. அப்பதிப்பின் இறுதியிற் காணப்படும்,
‘உரைத்தசக வருடமுறு மாயிரத் திருநூற்
ருெருநாலெட் டினிலிலகு வசந்தந் தன்னிற் றரித்திடுவை காசிபுதன் பனையி ஞளிற் றம்பைவளர் பராக்கிரம வாகு பூப னிருத்தவையிற் சரசோதி மாலை யீரா - றெயதுபடல நூற்ருென்பான் முப்பா னுன்காம் விருத்தமரங் கேற்றினனுற் போச ராச
விஞ்சைமறை வேதியணும் புலவ ரேறே.
என்ற செய்யுளிலிருந்து, சகவருடம் 1232 வைகாசி மாதம் தம்ப தேனிய மன்னன் பராக்கிரமவாகுவின் அவையிற் சரசோதிமாலை யென்ற நூலைப் போசராசனென்ற வேதியப் புலவன் விருத்தப் பாவாற் பன்னிரு படலமாய்ச் செய்து அரங்கேற்றினன் என்றறிகிருேம். W
சகவருடம் 1232 வைகாசி என்பது கி. பி. 1310க்குச் சரியான தாகும். அப்பொழுது தம்பதேனியாவில் அரசு புரிந்த மன்னன் நாலாம் பராக்கிரமவாகு என்று இலங்கைச் சரித்திரம் கூறும். அம்மன்னன் அவையில் இந்நூல் அரங்கேற்றப்பட்டமையால், அங்கு பல தமிழறிஞர் இருந்தனர் என்பதும், நாலாம் பராக்கிரமவாகு தமிழறிந்த மன்னன் என்பதும், அவன் சோதிடப் பிரியன் என்பதும் போதரும். எனவே, கி. பி. 14ஆம் நூற்ருண்டிலே தம்பதேனியாவிலே தமிழ் பெருமளவில் வழங்கிற்றெனலாம். இந்நூலை இயற்றிய புலவன், தெவிநுவர என் றழைக்கப்படும் ஈழத்துத் தென்முனையிலே உள்ள தேனுவரையில் வாழ்ந் தவன் என்றமையால், அங்கும் அக்காலத்திலே தமிழ்க் குடிகள் இருந் தன என்று தெரியலாம்.
மேலும், சரசோதிமாலை நூற் பாயிரத்திலே, "கதிரவன் மரபில் வந்தோன் பாமாலை சூடு மீளிப் பராக்கிரம வாகு பூபன்'2 என்று சொல்லப்படுவதால், நாலாம் பராக்கிரமவாகு சூரியகுலத் தோன்றல் என்பதும்,
தம்பை காவலன் வாசத்
தாதகி மாலை மார்பன் \ செம்பொன்மால் வரையில் வெற்றிச் சினப்புலி பொறித்த வேந்தன்”*
1. University of Ceylon, History of Ceylon Vol. I, Part II, P. 634. 2. சரசோதி மாலை, பாயிரம், செய்யுள் 1. 8. சரசோதி மாலை, பாயிரம், செய்யுள் 2.

Page 12
6 ஈழத் தமிழ் இலக்கியம்
என்று சொல்லப்படுவதால், அவன் ஆத்தி மாலையும், புலிக் கொடியும் உடையவன் என்பதும் பெறப்படும். இவை அம்மன்னன் அவையிலே கூறி அரங்கேற்றப்பட்ட வார்த்தைகளாகையால், அவன் சோழ மரபினன் என்பதை அவனும் அவனவையோரும் ஏற்றுப் பெருமைப் பட்டனர் என்பது தெளிவாகிறது.
யாழ்ப்பாணத்தில் எழுந்த நூல்கள்
யாழ்ப்பாணத்தில் ஆரியச் சக்கரவர்த்திகள் ஆட்சி கி. பி. 13ஆம் நூற்ருண்டில் ஆரம்பித்ததென்பர் வரலாற்ருசிரியர்கள். அம்மன்னர் செகராசசேகரன், பரராசசேகரன் என்ற பட்டப்பெயர்களை ஒருவர்பின் ஒருவராகச் சூடிக்கொண்டு, சில நூற்ருண்டுகள் சிங்கை நகரிலிருந்தும், பின்னர் நல்லூரிலிருந்தும் அரசு செலுத்தினர். அவர்களுட் சிலர் தமிழ்ப் புலவர்களை ஆதரித்துத் தமிழ் இலக்கியம் வளம்பெறப் பெரிதும் உதவினர். அவர்கள் காலத்திலே திருகோணமலைப் பகுதியிலும், யாழ்ப்பாணத்திலும், தேனுவரை, தம்பதேனியா ஆகிய இடங்களிலும் சிறந்த தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்தனர் என்பது அவர்கள் செய்த நூல்கள் வாயிலாகத் தெரிகிறது. அவற்று ட் செகராசசேகரம், பரராசசேகரம் என்ற வைத்திய நூல்களும் செகராசசேகர மாலை என்ற சோதிட நூலும் ஆரியச் சக்கரவர்த்திகள் பெயர்கொண்டு விளங்கு கின்றன.
செகராசசேகரமாலை
சிங்கைச் செகராசசேகரனற் செய்விக்கப்பட்டதெனக் கருதப்படும் செகராசசேகரமாலை என்ற சோதிட நூல், மகளிர்வினைப் படலம், மைந்தர்வினைப் படலம், மணவினைப் படலம், கூழ்வினைப் படலம், பல வினைப் படலம், வேந்தர்வினைப் படலம், கோசரப் படலம், யாத்திரைப் படலம், மனைவினைப் படலம் என்ற ஒன்பது படலங்களைக் கொண்டு விளங்கும். இந்நூல் இயற்றி அரங்கேற்றப்பட்ட காலத்தைக் குறிக்குஞ் செய்யுள் எதுவும் நூலகத்தே காணப்படாததால், இதன் காலத்தை, இதனை இயற்றுவித்த செகராசசேகர மன்னன் காலத்தைக்கொண்டே நிச்சயிக்கலாம்.
இதன் சிறப்புப் பாயிர இறுதி இரு செய்யுள்கள்,
* கந்தமலை யாரியர்கோன் செகராச சேகரமன்
கங்கை நாடன்”
என்றும்,

ஈழத் தமிழ் இலக்கியம் 7
*தன்கடவுட் சுருதிகளின் மனமெனுஞ்சோ
திடமதனைத் தலத்தின் மீது மின்குலவு தென்கலையாற் றருகவென
வருள்புரிய விருத்தப் பாவாற் பொன்குலவு செகராச சேகரமா
லையைச்செய்தான் பொருந்து மேன்மைத் தொன்குலவு மிராசவிரா மேசனருள்
சோமனெனுஞ் சுருதி யோனே.” என்றுங் கூறுவதிலிருந்து, ஆரியர் கோனன செகராசசேகர மன்னன் ஆணைப்படி இச்சோதிட நூலை அம்மன்னன் பெயரால் இராச பரம்பரை யினனன இராமேசன் மகன் சோமன் எனும் வேதியன் இயற்றினன் என்று தெரிகிறது. இவ்வாசிரியர் பெயர் சோமசன்மா என வழங்கும். இந்நூலின்கண் பதின்மூன்று பாக்களிற் சிங்கைச் செகராசசேகர னின் புகழ் கூறப்படுகிறது. அவற்றுள் நூலின் 36ஆவது செய்யுளில்,
* சீரியவேற் பரநிருப ரிறைஞ்சும் பொற்ருட் செகராச சேகரமன் சிங்கை தங்கு மாரியர்கோ னெனக்குடைக்கீ ழவனி யெல்லா
மடக்கியொரு கோலோச்சி யளிக்கு மாதே? என்றும், 76ஆவது செய்யுளில்,
* சேவணி துவசன் சிங்கையெங் கோமான்,
செயசெக ராசசே கரமன்' என்றும், 86ஆவது செய்யுளில்,
* சேது காவலன் விஞ்ஞை விஞ்சுசெக
ராச சேகரன்' என்றும், 158 ஆவது செய்யுளில்,
* மன்னர் மன்னுசெக ராச சேகரமன்
மணவை யாரியவ ரோதயன் பன்னு செந்தமிழ்வ ளம்பெ றற்குதவு
204ஆவது செய்யுளில்,
* வையமன்று காத்தியா யனகுத் ரத்து
மன்னியகா சிபகோத்ர மருவு கேண்மைச் செய்யசதுர் மறைவாய்மைக் காசி வந்த
செகராச சேகரணு மன்ன குதி அய்யபுகழ்ப் பூசுரமன் னவரை." என்றும்
என்றும்,

Page 13
8 ஈழத் தமிழ் இலக்கியம்
சொல்லப்படுவதால், இந்நூல் இடபக்கொடி உடையவனும், சேதுகா வலனும், காசிப கோத்திரத்துக் காசி மறையோனும், பூசுரமன்னனு மான மணவை ஆரியவரோதய சிங்கைச் செகராசசேகரன் ஆட்சிக் காலத்திற் செய்யப்பட்டதெனத் தெரிகிறது. வரோதய சிங்கையாரி யன் மூன்ரும் செகராசசேகரன் ஆவன் என்பர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்.
ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ்ப்பாண அரசு கைக்கொண்ட கி. பி. 13 ஆம் நூற்ருண்டுக்கும், கோட்டை அரசன் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி ஆழும் செகராசசேகரன் அரசிழந்த கி. பி. 1450ஆம் ஆண் டுக்கு மிடைப்பட்ட காலத்தவனவன் இச் செகராசசேகரன். எனவே, செகராசசேகர மாலையும் அக்காலத்துக்குரியதெனக் கொள்ளலாம்.
செகராசசேகரம்
செகராசசேகரம் என்ற வைத்திய நூல் * செகராசசேகர வைத்தியம்" என்றும் வழங்கும். இதனுசிரியர் யாரென்பது தெரியவில்லை. இது ஆயுள்வேத வைத்திய முறையைத் தழுவிச் செய்யப்பட்டுள்ளதென்பது,
* மணிதங்கு வரையு ளாதி
மன்னுயிர் படைத்த போது பிணிதங்கு வகையு நோயின்
பேருடன் குணமுங் காட்டி அணிதங்கு மருந்துங் காட்டு
மாயிரு வேதந் தன்னைக் கணிதங்கு வகையால் வேதங்
கடந்தமா முனிவன் செய்தான்.” என்ற செகராசசேகர ஆரம்பச் செய்யுளாற் றெரிகிறது. மேலும் * வேதங் கடந்த மாமுனிவன் செய்த ஆயுள்வேத நூலிலிருந்து சில வற்றைத் தேர்ந்தெடுத்து அந்தாதித் தொடைபெற்ற விருத்தமாக இதனுசிரியன் இதனைச் செய்தானென்பதும், அவற்றைக் கொய்தெடுத்த ஒழுங்கிலேயே இதனைக் கோத்தானென்பதும்,
* செய்தவர் தமது நூலும்
தேர்ந்ததோர் தெரிப்பும் பார்க்கிற் பொய்தவம் பயர்ந்த பெளவம்
போலுமிங் கிதனை யாய்ந்து
۔۔۔۔--۔ ۔ ۔۔۔۔ --س۔۔
1. யாழ்ப்பாண வைபவ விமர்சனம், யாழ்ப்பாணம், 1928,

ஈழத் தீமிழ் இலக்கியம் - 9
வெய்தவ நோய்கள் தீர
விருத்தவந் தாதி யாகக் கொய்தவ வொழுங்கி லேதான்
கோப்புறச் செப்ப லுற்ரும்.” என்ற இந்நூற் செய்யுள் காட்டிநிற்கும். அச்சில் வந்த 'செகராச சேகர வைத்தியம் " என்ற நூல் பெரும்பாலும் இவற்றுக்கமையவே யிருப்பினும், பற்பலவிடங்களிலும் அந்தாதித் தொடையற்றிருத்தலைக் காணலாம். இதனல் அச்சேறிய இந் நூற் பிரதிகளிற் பல செய்யுள்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்றே கொள்ளவேண்டியுள்ளது. இந் நூலிற் சில செய்யுள்கள் செகராசசேகரன் புகழ் கூறும். அங்காதிபாதம் பற் றிய செய்யுளில், く
* செயம்பெறு சிங்கை நாடன் செகராச சேக ரன்ருன்’ என்றும்,
முகவாத சன்னிக்கு மருந்து கூறுஞ் செய்யுளில்,
செகராச சேகர னெனும் சிங்கையா ரியனையெதி ரொண்ணுர்த ளென்னவே
திசை கெட் டகன்று விடுமே ’ என்றுஞ் சிங்கைச் செகராசசேகரன் புகழ் பேசப்படுவதைக் காணலாம்.
எனவே, இந்நூல் ஒரு சிங்கைச் செகராசசேகரன் ஆட்சிக்காலத்திற் செய்யப்பட்டதென்று மட்டுமே கூறக்கூடியதாயிருக்கிறது.
இந்நூலிலே வியாதிவரும்வகை, அங்காதி பாதம், சலமலப் பகுப்பு, உணவு வகை, நாடிவிதி, சுரவிதி குணமும் மருந்தும், சன்னிவிதி, சன்னி பதின்மூன்றின் குணமும் மருந்தும், மூலவியாதியின் குணமும் மருந்தும், விக்கலின் குணமும் மருந்தும், விக்கற் சிலேட்டுமக் குணமும் மருந்தும், சுவாதம் பத்தின் குணமும் மருந்தும், வாதத்தின் குணமும் மருந்தும், கசரோகக் குணமும் மருந்தும், காசம், குட்டரோகம், கரப்பனின் குணமும் மருந்தும், வலியின் குணமும் மருந்தும், உதரரோகங்கள், உட்குத்துப் பிறவீச்சுக் குணமும் மருந்தும், நீரிழிவின் குணமும் மருந்தும், முதுகு பிளவையின் குணமும் மருந்தும், பித்தம் 42இன் குணமும் மருந்தும் கூறப்பட்டுள்ளன.
பரராசசேகரம்
பரராசசேகரம் 8000 செய்யுள் கொண்ட ஒரு வைத்திய நூலாக விளங்குகிறது. முதலில் இது 12,000 செய்யுள் கொண்டு விளங்கிய தென்பர். இந்நூல் இப்பொழுது ஏழு பாகமாக அச்சிடப்பட்டுள்ளது,

Page 14
O ஈழத் தமிழ் இலக்கியம்
முதலாம் பாகத்திற் சிரரோக நிதானம் பற்றியும், இரண்டாம் பாகத் திற் கெர்ப்பரோக நிதானம், பாலரோக நிதானம் ஆகியன பற்றியும், மூன்ரும் பாகத்திற் சுரரோக நிதானம், சன்னிரோக நிதானம், வலி ரோக நிதானம், விக்கல்ரோக நிதானம், சத்திரோக நிதானம் ஆகியன பற்றியும், நான்காம் பாகத்தில் வாதரோக நிதானம், பித்தரோக நிதானம், சிலேற்பனரோக நிதானம் ஆகியன பற்றியும், ஐந்தாம் பாகத்தில் மேகரோக நிதானம், பிளவைரோக நிதானம், பவுந்திர ரோக நிதானம், வன்மவிதி, சத்திரவிதி, சிரைவிதி, இரட்சைவிதி ஆகியன பற்றியும், ஆழும் பாகத்தில் உதரரோக நிதானம் பற்றியும், ஏழாம் பாகத்தில் மூலரோக நிதானம், அதிகாரரோக நிதானம், கிரகணிரோக நிதானம், கரப்பன்ரோக நிதானம், கிரந்திரோக நிதா னம், குட்டரோக நிதானம் ஆகியன பற்றியுங் கூறப்பட்டு, அவ் வவற்றின் குணமும் சிகிச்சையுந் தரப்பட்டுள்ளன.
தன்வந்திரி என்பார் வடமொழியிற் செய்த ஆயுள்வேத நூலைத் தழுவியே இது செய்யப்பட்டிருக்கிற தென்பதன் இதன் கடவுள் வணக்கச் செய்யுள்களுளொன்ருய,
* தாரணியோர் மிகப்புகழ்தன் வந்த்ரி செய்த
தகவுடைய சீர்த்திபெறு மாயுள் வேதப் பேரணியும் வாகடத்தைப் பெரிது பேணிப்
பெட்புடைய தமிழ்ப்பாவாற் பேசும் வண்ணம் சீரணியுந் திருமாலு மயனுங் காணுச்
சிவபெருமா னளித்தருளு மொருவெண் கோட்டுக் காரணிமெய் யைங்கரத்து நால்வாய் முக்கட்
கடவுளிரு பதபுயங்கள் கருத்துள் வைப்பாம்.” எனும் விருத்தங் கூறும்.
இதனைத் தமிழிற் செய்தார் யார் என்பதற்கான ஆதார மெதுவுங் கிடைக்கவில்லை. இந்நூல் பரராசசேகர மன்னன் காலத்திற் செய்யப் பட்ட தென்பதனை நூலின்கண் அவன் புகழ் கூறும் செய்யுள்கள் காட்டி நிற்கும். உதாரணமாக, சுரகுலையின் சிகிச்சை பற்றிக் கூறும் செய்யுளில்,
* பாரின் மேவுதிற லரச ஞனபர
ராச சேகரனை யண்டினுேர் சீரின் மேவிவளர் செல்வ மல்கவவ
ரின்மை தீருமது செய்கைபோல்”
என்றும், நயனரோகம் பற்றிக் கூறுஞ் செய்யுளில்,

ஈழத் தமிழ் இலக்கியம் 11
* பார்மேவு மரசர்குல திலக மான
பரராச சேகரன்மால் பருதி யேந்தி
ஏர்மேவு முலகுபுரந் தருளு நாளி
லிசைத்தனனைங் கரத்தரியை யிறைஞ்ச லுற்றே.”
என்றும், திரிபலைக் குழம்பு பற்றிக் கூறும் செய்யுளில்,
* பார்த்திவர்க ளேனுநோய் தொலைக்கு மீதே
பரராச சேகரன்மன் பணித்த செங்கோல் காத்தபுவி யோர்களிரு ணிக்கு மாபோற்
கண்ணிலிரு ணிக்குமிது திண்ணந் தானே.”
என்றுங் காணப்படுவதிலிருந்து, இது பரராசசேகர மன்னன் காலத்திற் செய்யப்பட்ட நூலென்றறியலாம். ஆயின், எப் பரராசசேகரன் காலத்த தென்பதை நிச்சயமாகக் கூற ஆதாரமெதுவு மில்லை. எனவே, இது ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்து நூல் என்று மட்டுமே இப்பொழுது கூறத்தக்கதாயுளது.
இந்நூல் பெரும்பான்மை விருத்தப் பாவாலும், சிறுபான்மை ஆசிரியப்பா, கலிவெண்பா ஆகியவற்ருலும் செய்யப்பட்டுள்ளது. ஆதியிலிருந்த பரராசசேகரம் என்ற நூலின் சில பகுதிகள் கிடையாமை யால், அவை அச்சுப் பதிப்பிற் சேர்த்துக்கொள்ளப்படவில்லை யென அதன் பதிப்பாசிரியர் ஏழாலை ஐ. பொன்னையாபிள்ளை கூறி யுள்ளார்.
தகூஜிண கைலாச புராணம்
தக்ஷிண கைலாச புராணம் திருகோணமலையிற் கோயில்கொண் டெழுந்தருளியிருக்கும் கோணேசர் பெருமானையும் மாதுமையம்மை யாரையும் பற்றிக் கூறுந் தலபுராணமாகும். இத் தலத்தின் தோற்றம், ஆதி வரலாறு ஆகியவற்றையும், அவை பற்றிய வேறு சரிதங்களையும் இது கூறும். வட மொழியிலுள்ள மச்சேந்திய புராணத்தைத் தழு வியே இந் நூல் செய்யப்பட்டுள்ளது என்பதனை மேல்வரும் அதன் பாயிரச் செய்யுள் காட்டும்.
* மீதுயர்ந்த வுருத்திரரும் விரிபதுமப் பெருமலரின் விரிஞ்சர் தாமும் போதுதிரு மாதவரு மாதவர்க்கு
ளொருபெரிய புனித மீனு

Page 15
2 ஈழத் தமிழ் இலக்கியம்
மாதரவி லிறைஞ்சுகதை கயிலாய
புராண மென வறைய லுற்றேன்
மாதுரிய மச்சேந்திய வடபுரா
ணத்தியல்பு மருவத் தானே.”
இச் செய்யுளால், இந்நூற் கிதனுசிரியரிட்ட பெயர் 'கயிலாய புராணம்’ என்றுந் தெரிகிறது.
தக்ஷஷிண கைலாச புராணம் பாயிரம் நீங்கலாக, ஈழமண்டலச் சருக் கம், திருமலைச் சருக்கம், புவனேற்பத்திச் சருக்கம், அர்ச்சணுவிதிச் சருக்கம், மச்சாவதாரச் சருக்கம், தரிசனமுத்திச் சருக்கம், திருநகரச் சருக்கம் என ஏழு சருக்கங்களைக் கொண்டுள்ளது. முதல் ஆறு சருக் கங்களும், திருநகரச் சருக்கத்திலே முதற் பதினேழு செய்யுள் வரையுமே வடமொழிப் புராணத் தழுவலாகுமெனத் திருநகரச் சருக்கத்தின் 17ஆவது செய்யுள் கூறும்.
இந்நூலை 1887ஆம் ஆண்டு கா. சிவசிதம்பர ஐயர் சென்னையில் முதன் முதலாகப் பதிப்பித்தார். பின்னர் 1916ஆம் ஆண்டு பு. பொ. வைத்தியலிங்க தேசிகர் பருத்தித்துறையிற் பதிப்பித்து வெளி யிட்டார். முன்னவர் பதிப்பிலே இந் நூல் யாழ்ப்பாணத்து மஹா வித்துவான் சிங்கைச் செகராசசேகரன் இயற்றியது என்று கூறப்பட் டுள்ளது. பின்னவர் பதிப்பிலே 'பிரம்மபூரீ பண்டித ராச ரருளிச்செய்த பூரீ தகூதிண கைலாசபுராணம் ‘’ என்றுரைக்கப்பட்டுள்ளது. இரு பதிப் பின் பாயிரச் செய்யுள்களும், நூற் செய்யுள்களும் இடையிடை வேறு படுவதால், அவற்றைக்கொண்டு ஆக்கியோன் பெயர் எதுவெனத் தேற லரிதாயிற்று. எவ்வாருயினும் இந்நூல் ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்துக்குரியதாகு மென்பதனைச் சில சான்றுகள் கொண்டு நிறுவலாம். நூலாசிரியரைப் பண்டிதராசர் என்று கூறும் வைத்தியலிங்க தேசிகர் பதிப்பிலே திருநகரச் சருக்கத்து 108ஆவது செய்யுளாய,
* அம்புயத் துதரத் தண்ண லமைந்தவா ரியர்தங் கோமா
னும்பர்வந் திறைஞ்சுஞ் சேது வுயர்கரைக் காவல் வேந்தன் செமீபொன்மா மெளலிச் சென்னிச் செகராச சேக ரேசன் றும்பையஞ்சடையான் சைவந்தோன்றிடத் தோன்றினுணுல்.’
என்ற விருத்தப் பாவிலும், அதனைத் தொடர்ந்து வரும் செய்யுள்கள் சிலவற்றிலும் செகராசசேகரன் சமகாலத்தவனுகப் புகழப்படுகிருன். எனவே, இப் பதிப்பின்படியும், இந்நூல் ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்துக் குரியதாகிறது. அன்றியும் முதற் பதிப்பின்படி இதற்கு நூற்சிறப்புப் பாயிரமளித்த அரசகேசரியும், இரண்டாம் பதிப்பின்படி அந் நூற் சிறப்பும் பாயிரமளித்த கவிவீரராகவனும் இந்நூல் செகராச சேகரன் காலத்திற் செய்யப்பட்டதென்பர்.

ஈழத் தமிழ் இலக்கியம் 13
கண்ணகி வழக்குரை, கோவலனுர் கதை, சிலம்பு கூறல்
இளங்கோவடிகள் செய்த சிலப்பதிகாரமென்ற நூலின் கதை, சில நீக்கங்களுடனும் புதுச் சேர்க்கைகளுடனும், பொதுமக்களுக்கேற்ற வகை யில் ஒரு புது இலக்கியமாகச் செய்யப்பட்டுள்ளது. அது கண்ணகி வழக்குரையென்று ஈழத்துக் கிழக்கு மாகாணத்திலும், கோவலனர் கதையென்று வடக்கு மாகாணத்திலும், சிலம்பு கூறல் என்று முல்லைத் தீவுப் பகுதியிலும் வழங்கி வருகிறது. கண்ணகி வழக்குரையென்ற நூல் வரம்பெறு காதை (கோவலஞர் பிறந்த கதை) (அம்மன் பிறந்த கதை), கப்பல் வைத்த காதை (மீகாமன் கதை) (துரியோட்டு) (கப்பல் வைத்தல்), கடலோட்டு காதை (வெடியரசன் போர்) (நீலகேசி புலம் பலும் வீரநாரணன் கதையும்) (மணிவாங்கின கதை) (விளங்குதேவன் போர்), கலியாணக் காதை, மாதவி அரங்கேற்று காதை, பொன்னுக்கு மறிப்புக் காதை (பொன்னுக்கு மறிப்பு) (இரங்கிய காதல்), வழிநடைக் காதை (வயந்தமாலை தூது) (வழிநடை), அடைக்கலக் காதை, கொலைக் களக் காதை (சிலம்பு கூறல்) (கொலைக்களக் காதை) (அம்மன் கணுக் கண்ட கதை) (உயிர் மீட்புக் கதை), வழக்குரைத்த காதை, குளிர்ச்சிக் காதை (குளிர்ச்சி) (வழக்குரைக் காவியம்) என்ற அதிகாரங்களைக் கொண்டு விளங்குகிறது. கோவலஞர் கதை யீென்ற நூலும் பெரும் பாலும் இதே அதிகாரங்களைக் கொண்டு விளங்கக் காணலாம். சிற்சில அதிகாரப் பெயர்கள் சொல்லளவில் வேறுபட்டிருப்பினும்,பொருளளவில் ஒன்றேயாதல் நோக்கத்தக்கதாகும். இந்நூல் சிலப்பதிகாரக் கதையைப் பெரும்பாலுந் தழுவியுள்ளதேனும், இதன் முதல் மூன்று அதிகாரங் களும் சிலப்பதிகாரத்தில் இல்லாத பகுதிகளாகும். சிலப்பதிகார வஞ்சிக் காண்டப் பகுதியும் இதில் இடம்பெறவில்லை.
கண்ணகி வழக்குரை அரங்கேற்று காதையில் உள்ள
அவனிபுகழ் குடிநயினுப்" பணிக்கனெனு மவன்மிகுந்தோன்" கவளமதக் களிற்றண்ணல் காங்கேசன் தேவையர்கோன் தவமென்ன* விளங்குபுகட் சகவீரன். தாரணியிற் சிவனருளா லிக்கதையைச் செந்தமிழ்ப்பா மாலைசெய்தான். என்னும் செய்யுள், இந்நூலினை இயற்றியவன் சகவீரன் என்றும், அவன் காங்கேசன் என்ற தேவையர்கோன் குலத்தவனென்றும் தெரிவிக்கிறது. தேவையர்கோன் என்பது யாழ்ப்பாணத்திலிருந்து அரசு செலுத்திய ஆரியச் சக்கரவர்த்திகளைக் குறிக்கும் பெயராகும். மேலும் இந்நூலின் கண் ஆரியச் சக்கரவர்த்தியினைப் புகழ்ந்து கூறும்,
கோவலஞர் கதையில் :
1. அவனிபயில், 2. முடிநயிஞர், 3, அவன் மிகுந்த, 4. தவனனென எனக்
stretortuGua,

Page 16
14 ஈழத் தமிழ் இலக்கியம்
*ஆர்த்ததிற லாரியர்கோன் அடலரசர் மணவாளன்
கீர்த்திதனைப் பாடுவார்க்குக் கிலேசமெல்லாம் நீங்குவபோல் ஏத்தரிய சந்திரன்தன் இயல்பினுடன் தானெழவே மிகுந்தபுவி தனிற்பரந்த மிக்கவிருள் நீங்கியதே' என்பது போன்ற செய்யுள்கள் இந்நூல் ஆரியச் சக்கரவர்த்திகள் ஆட்சி புரிந்த காலத்தே செய்யப்பட்ட தென்பதனைக் காட்டும். பெரும்பாலும் தாழிசையாற் செய்யப்பட்ட இந்நூலிற் சிந்தும் வெண்பாவும் அகவலும் இடையிடையே இடம்பெற்றுள்ளன.
இரகுவம்மிசம்
இரகுவம்மிசம் ஈழத்தெழுந்த முதற் காவியநடையமைந்த நூலாகும். வடமொழியிலே காளிதாச மகாகவி இயற்றிய இரகுவம்சம் என்னும் காவியத்தின் தமிழாக்கமே இந்நூல் என்பதனை அதன் பாயிரச் செய்யுளாய,
வன்றி சைக்காளி தாசன் வடமொழி தென்றி சைத்தமி ழானணி செப்புகே னன்றி சைக்கு முரைவழி நன்னெடுங் குன்றி சைப்பது போலுங் குறிப்பரோ. என்ற கலிவிருத்தங் காட்டி நிற்கும். இதனைத் தமிழிற் காவிய மாகச் செய்து தந்தவன் அரசகேசரி என்னும் புலவனுவன். இவன் யாழ்ப்பாணத்திலிருந் தரசோச்சிய ஆரியச் சக்கரவர்த்திகள் குலத்தவ னென யாழ்ப்பாண வைபவ மாலை ஆசிரியர் மயில்வாகனப் புலவரும் சுவாமி ஞானப்பிரகாசரும் கூறுவர்.” கி. பி. 1591 முதல் 1616 வரை யாழ்ப்பாணத்தில் அரசாண்ட எதிர்மன்னசிங்கன் என்ற எட்டாம் பரராசசேகரனின் சகோதரன் என்று போத்துக்கேய சரித்திர ஆசிரியர் குவேருேசும், அம் மன்னனது மருமகன் என்று யாழ்ப்பாண வைபவ மாலை ஆசிரியரும் அரசகேசரியை விவரிப்பர். அம் மன்னன் வேண்டு கோட்படியே அரசகேசரி இந்நூலைச் செய்தானென்பது அதன் பாயிரச் செய்யுளாய,
இன்ன காதையி யன்ற விரும்பொருட் டுன்னு செஞ்சொற் றுகடபு தூயநூல் பன்னு செஞ்சொற் பரராச சேகர மன்ன னின்ப மனங்கொள வாய்ந்ததே, என்பதனலறியலாகும். எனவே இந்நூலின் காலமும் எட்டாம் பரராச சேகரன் காலமெனல் பொருந்தும். 1. கண்ணகி வழக்குரை, வி.சீ. கந்தையா பதிப்பு, 1988, வயந்க மாலே தூது, செய். 11.
2. S. Gnanaprakasar, 'The Kings of Jaffna during the Portuguese Period
of Ceylon History', Jaffna, 1920. Foot note No. 100.

Fುಕಿ தமிழ் இலக்கியம் 15
இந்நூல் பொதுக் காண்டம், சிறப்புக் காண்டம், பொதுச் சிறப்புக் காண்டம் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
பொதுக் காண்டத்தில் ஆற்றுப்படலம், நாட்டுப் படலம், நகரப் படலம், அரசியற் படலம், குறைகூறு படலம், தேனுவந்தனப் படலம், இரகுவுற்பத்திப் படலம், யாகப் படலம், திக்குவிசயப் படலம், அயனுத யப் படலம், அயனெழுச்சிப் படலம், மாலையீட்டுப் படலம், கடிமணப் படலம், மீட்சிப் படலம், இரகு கதியுறு படலம், இந்துமதி பிறப்பு நீங்கு படலம் எனப் பதினறு படலங்களும், சிறப்புக் காண்டத்திலே தசரதன் சாபமேற்ற படலம், திருவவதாரப் படலம், சீதை வனம்புகு படலம், இலவணன் வதைப் படலம், சம்புகன் வதைப் படலம், அவதார நீங்கு படலம் என ஆறு படலங்களும், பொதுச் சிறப் புக் காண்டத்திற் குசன் அயோத்திசெல் படலம், வாகுவலயப் படலம், முடிசூட்டுப் படலம், குலமுறைப் படலம் என நான்கு படலங்களும் உள. குலமுறைப் படலத்தின் இறுதிச் செய்யுளாய
கலைப்படா நின்றவிக்கு வாகுவின் மரபின் காட்சித் தலைப்படா நின்ற வேந்தர் தம்பெருந் தகைய நீதி வலைப்படா னுகி நல்லோ ரறிவெனும் வாய்மை தன்னு னிலைப்படா விவன்றன் வெய்ய நீர்மையை நிகழ்த்து கிற்பாம்.
என்ற விருத்தம் இந்நூல் அவ்வளவில் முற்றுப்பெறவில்லை யென்ப தைக் காட்டிநிற்கும்.
இரகுவம்மிசம் என்ற இந்நூலிலே திலீப மகாராசன் காமதேனுவை வழிபட்டு இரகு என்பவனைப் புத்திரனுகப் பெற்ற கதையும், இரகுவின் கதையும், இரகுவின் மகன் அயன் கதையும், அயன் மகன் தசரதச் சக்கரவர்த்தியின் கதையும், தசரதன் மகன் இராமன் கதையும், இராமன் மகன் குசன் கதையும் சொல்லப்பட்டுள்ளன.
வையா பாடல்
வையா பாடல் என்ற நூல்
* இலங்கை மாநகர் அரசியற்றிடு மரசன்றன்
குலங்க ளானதும், குடிகள் வந்திடு முறைதானும்
கூற எழுந்த ஒன்றென அதன் மூன்ருஞ் செய்யுள் உணர்த்தும், இந்
நூலை யாழ்ப்பாண மன்னர்களுள் ஒருவனன செகராசசேகரனின்
அவைப் புலவர் வையாபுரி ஐயர் இயற்றினர் என்று வையா பாடல்
ஏட்டுப் பிரதிகளும், அச்சுப் பிரதிகளும் குறிக்கும். இதன் ஆசிரியர்பெயர்,

Page 17
i6 ஈழத் தமிழ் இலக்கியம்
* குலம்பெறு ததீசிமா முனிதன் கோத்திரத் திலங்குவை யாவென விசைக்கு நாதனே'
என்று இந்நூல் ஏழாஞ் செய்யுள் தரும். வையாபாடல் என்ற இந் நூல் இலங்கையரசன் குலங்களையும் குடிகள் வந்த முறையினையும் " கூற எழுந்த ஒன்ருகையால், நூலாசிரியன் காலத் தரசாண்ட பரராச சேகரன், செகராசசேகரன் குலத்தைக் காட்டுமுகத்தால் யாழ்ப்பாணத்து முதலரசனுன கூழங்கைச் சக்கரவர்த்தியின் (காலிங்கச் சக்கரவர்த்தி) குலத்தையும், அவன் மைத்துணியாகிய மாருதப்பிரவையின் வரவையும் முதலிற் கூறிப் பின் வன்னியர் குடியேற்றம் பற்றிய செய்திகளையும், அவர்கள் அடங்காப் பற்றில் ஆதிக்குடிகளை அடக்கி ஆண்ட சம்பவங் களையும் விரிக்கும்.
வன்னியர் வரவைத் தொடர்ந்து பல்வேறு குடிகள் இந்தியா, சீனு, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து வந்தமையும், அவர்கள் மூலமாகப் பல்வகைத் தெய்வங்கள் கொண்டுவரப்பட்டமையும் இந்நூலிற் காணலாம். 104 விருத்தப் பாவாலான இதன் அமைப்பையும் பொரு ளையும் நோக்குமிடத்து, இது ஒரு வரலாற்று நூல் என்று தெரிகிறது. * வையாபாடல் ' என்று இந்நூலுக்கு அதன் ஆசிரியர் பெயரிட் டிருப்பாரென்பது சந்தேகமே. ஆக்கியோன் பெயர் கூறுஞ் செய்யுளில் இந்நூல் பற்றிய குறிப்பு, இலங்கையின் மண்டலத்தோர் தங்காதை " என்றிருப்பதால், இந்நூலின் பெயர் இலங்கை மண்டலக் காதை" என்றிருந்ததாகக் கருதலாம். இதற்காதாரமாகக் காப்புச் செய்யுளில், * இலங்கையின் சீரை யோதிட ‘ என்றும், இரண்டாவது செய்யுளில் * நாவிலங்கையின் நன்மொழி யுரைத்திட ‘ என்றுங் கூறியிருப்பதைக் காட்டலாம். காலப்போக்கில் நூலின் பெயர் மறைந்துபோகப் பின்னர் ஆசிரியன் பெயரால் இந்நூல் வழங்கப்பட்டதாதல் கூடும்.
இந்நூலின் காலத்தை அறிவதற்கு இதன் இறுதிச் செய்யுள்கள் சில உதவுகின்றன. தொண்ணுரற் ருென்பதாஞ் செய்யுளாய,
* எந்நாளு மிம்முறையே யாவரையும்
வாழ்வீரென் றிருத்தி யங்கண் மன்னன விளவலெனுஞ் சங்கிலியை
வாவெட்டி சாரச் செய்து முன்னுேர்க்குப் புரிபூசை நிதந்தெரிசித்
தேமுள்ளி வளையா மூரில் மன்னன விரவிகுலப் பரராச
சேகரனும் வாழ்ந்தா னன்றே. என்பதிலிருந்து, இந்நூலியற்றப்பட்டபோது சங்கிலி இளவரசனுக (முல்லைத்தீவைச் சேர்ந்த) வாவெட்டியென்ற இடத்தி லிருந்தானென்று தெரிகிறது. தொண்ணுரற்ருருவது செய்யுளில்,

ஈழத் தமிழ் இலக்கியம் 1.
* அந்தவனை வோர்களையும் மன்னவர்கள் மன்னவர்பார்த் தன்பி னுேடு கந்தமலி தாரிளவல் செகராச
சேகரனைக் கருணை கூர இந்தயாழ்ப் பாணமதி லிருக்கவென்றே
சித்திரவே லரையு மீந்து வந்துமுள்ளி மாநகரிற் கோட்டையும்நற் சினகரமும் வகுப்பித் தானுல்.’ என்று கூறுவதிலிருந்து, இங்கு செகராசசேகரனெனக் கூறப்படுபவன் யாழ்ப்பாணத்திலிருந்தா னெனவும், அவன் முள்ளியவளையிலிருந்த பரராசசேகரனின் இளவலும், சங்கிலியின் சகோதரனுமாவானென
வுந் தெரிகிறது. இந்தயாழ்ப் பாணமதி லிருக்க வென்றே. என்று குறிப்பிடுவதிலிருந்து இந் நூலாசிரியன், யாழ்ப்பாணத்திலே
சங்கிலியின் சகோதரன் ஆட்சி செய்தபோது இந்நூலை அங்கிருந்
தெழுதினனென்று கொள்ள இடமுண்டு. சங்கிலி யாழ்ப்பாண அரச ஞனது கி. பி. 1519ஆம் ஆண்டிலென்பது வரலாற்ருசிரியர்கள் ஏற்றுக்
கொண்ட முடிவாகும். அதுபற்றி இதிற் கூருதமையால் இந்நூல் அதற்குச்
சில ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டிருத்தல் வேண்டும். எவ்வாருயி னும், பறங்கியர் மன்னுர்ப் பகுதியிலிருந்தமைபற்றிய குறிப்பும் இந் நூலிற் காணப்படுவதால் அவர்கள் இலங்கைக்கு வந்த காலமாய கி. பி. 1505ஆம் ஆண்டுக்குப் பிந்தியதே இதன் காலம் எனலாம்,
கோணேசர் கல்வெட்டு
கோணேசர் கல்வெட்டு என்ற நூல் கோணேசர் சாசனம் என்றும் வழங்குகிறது என்பது, அதனைத் தக்ஷண கைலாச புராணத்துடன் இணைத்து வெளியிட்ட வைத்தியலிங்க தேசிகரது பதிப்பின் மூலமாகத் தெரிகிறது. அப் பதிப்பின்படி இதனை இயற்றியவர் கவிராஜராவர். குளக்கோட்டிராமன் என்னும் சோழ மன்னர் கோணேசர் கோட்ட மும், கோபுரமும், மதிலும், மண்டபமும், பாபநாசத் தீர்த்தமும் அமைத்த வரலாறுபற்றிய செய்திகள் சொல்வது இந்நூலென இதன்
காப்புச் செய்யுளைத் தொடர்ந்து வரும்,
*சொல்லுற்ற சீர்குளக் கோட்டுமன் சொற்படி சொல்லெனவே கல்வெட்டுப் பாட்டெனப் பாடின ஞதிக் கதைபொருளா மல்லுற்ற கண்டர்தம் பொற்பாத நெஞ்சி லழுத்தியிகல் வெல்லுற்ற சீர்க்கவி ராசவ ரோதய விற்பன்னனே. "
(1) பாடபேதம் 1. கோட்டுமன் சொல்லிய சொற்படியே’
F一2
is,

Page 18
18 ஈழத் தமிழ் இலக்கியம்
* திருமருவு மனுநீதி கண்ட சோழன்
செகமகிழ வருராம தேவ தேவன்' திருமருவு திரிகயிலைப் பெருமை கேட்டுத்
தானுமவன் வந்ததுவு மவன்சேய் பின்பு மருமருவு மாலயங்கோ புரங்க ளோடு
மணிமதில்சூழ் மண்டபமு மலிநீ ராவி கருமருவு முகினிர்சேர் திருக்கு ளஞ்செய்
கருமமுமோர் கல்வெட்டாக் களறு வாமே." என்ற இரு செய்யுள்கள் குறிக்கும். இவற்ருல் இந்நூலை ஆக்கியோன் பெயரும் இது கல்வெட்டுப் பாட்டாக எழுதப்பட்டதென்பதும் அறிய லாயிற்று. இதுவும் வரலாற்று நூல் என்ற வகையிலேயே அடங்கும்.
ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தியற்றப்பட்ட தகSண கைலாச புராணத்துக்கு நூற்சிறப்புப் பாயிரம் அளித்தவருள் ஒருவர் கவிராஜர். எனவே, கவிராஜர் செய்த இந்நூலும் ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்த தாதல் வேண்டும். மேலும், “கவிராஜர்’ என்பது புலவரின் இயற் பெயராகவன்றிச் சிறப்புப் பெயராகவே தோன்றுகிறது. எனவே, இந்நூலை வேருெரு பெயருள்ள புலவன் இயற்றியிருத்தல் கூடும். அவன் ‘கவிராஜன்’ என்ற விருதை யுடையவனுயிருந்திருக்கலாம்.
கோணேசர் கல்வெட்டின் காப்புச் செய்யுள், இச்சந்தேகத்தினை மேலும் வலுப்பெறச் செய்கிறது. இந்நூலின் காப்புச் செய்யுளும் வையாபாடலின் காப்புச் செய்யுளும் ஒரே செய்யுளின் இரு பிரதி களாய் அமைந்திருப்பதனை நோக்குமிடத்து, அவ்விரு நூல்களையும் ஒரே ஆசிரியர் இயற்றியிருக்கலாமெனத் தோன்றுகிறது. குறித்த காப்புச் செய்யுள்களின் முதலடியிலுள்ள இரண்டாஞ் சொல், ஒன்றில் * கோணை யென்றும், மற்றதில் இலங்கை யென்றும் நூலுக்கேற்ற வாறு மாற்றப்பட்டுள்ளது. மூன்ரு மடியில் மூன்ருஞ் சொல், ஒன்றில் ‘சாமி யென்றும், மற்றதில் இலங்கை யென்றும் மாற்றப்பட்டுள்ளது. மூன்ருமடியில் மூன்ருஞ் சொல் ஒன்றில், “ சாமி " என்றும் மற்றதில் * தயங்கு ’ என்றும் மாறிக் காணப்படுகிறது. இவற்றைவிட அச் செய்யுள் களில் வேறெவ்வித பேதமுமில்லை. இரண்டாமடியில் எவ்வுலகம் யாவையும் ' எனப் பொருள் மயக்குற ஒன்றிலிருப்பது போலவே மற்றதி லும் அமைந்திருக்கிறது. ஒரே உருவும், ஒரே பொருளும் ஒரே வழுவும் ஒரே சொற்களும் கொண்டமைந்த அவ்விரு காப்புச் செய்யுள்களும் இரு வேறு புலவர்களாற் செய்யப்பட்டனவாதல் சாலாது. எனவே, இவ்விரு நூல்களையும் வையாபுரி ஐயரே செய்திருத்தல் கூடும். சமஸ்தான வித்துவானுக விளங்கிய அவருக்கு, வையா பாடல் எழுதியபின் “ கவி
(1) பாடபேதம் 1, 9 செகமகிழு மரபில்வரு ராம தேவன்"

ஈழத் தமிழ் இலக்கியம் 19
ராஜர் ' என்ற விருது அளிக்கப்பட்டிருக்கலாம். ' தானத்தார், வரிப் பத்தார்’ என்ற சொற்பிரயோகங்களும் குளக்கோட்டன்’ என்னுது ' குளக்கோடன்” எனும் வழக்கும் இவ்விரு நூல்களிலுமே காணப் படுதல் இம்முடிவை வலியுறுத்தும். இதனலும் இந் நூல் ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்ததென்பது போதரும்.
Goo5 GOTLLUDTðald
கைலாயமாலை என்ற நூலும் வையாபாடலைப் போல ஒரு வரலாற்று நூலென்றே கணிக்கப்படும். நல்லூரிலே சிங்கையாரியன் கைலாய நாதர் கோயிலைக் கட்டிப் பிரதிட்ட்ைசெய்த வரலாற்றைக் கூறுவ துடன், யாழ்ப்பாணத்தரசர் வரலாற்றையும் இது சுருக்கிக் கூறும். கி. பி. 18ஆம் நூற்ருண்டில் மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதிய யாழ்ப்பாண வைபவ மாலைக்கும், பிற்காலத்தில் யாழ்ப்பாணச் சரித் திர மெழுதிய பலருக்கும் இதுவே முதல் நூலாக அமைந்தது. 310 கண்ணிகளைக்கொண்ட கலிவெண்பாவாலமைந்த இந்நூலின் இறுதியி லுள்ள வெண்பாவாய
* கற்ருேர் புகழக் கயிலாய மாலைதன்னை
நற்றமிழி ணுற்றெடுத்து நாட்டினுன்-சுற்றுறையூர்ச் செந்தியப்பன் றந்தசிறு வன்முத்து ராசனென வந்தகவி ராசமகு டம். என்பதிலிருந்து, இதன் பெயர் கயிலாயமாலை யென்பதும், இதனை யாக்கியோன் முத்துராச கவிராசர் என்பதும் தெளியலாம்.
இந்நூலின்கண் முதற் சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி, * தென்னணிக ரான செகராசன் றென்னிலங்கை
மன்னவனு குஞ்சிங்கை யாரியமால் ’
என்றும், * சீமான் செயவீரன் சித்தசனே ரொத்தமன்னன்
கோமா னெனுஞ்சிங்கை யாரியர் கோன் ’
என்றும், செயசிங்க வாரியனுஞ் செய்யகுல ராசன் ! என்றும் குறிப்பிடப்படுகிறன்.
அவன் மதித்த வளங்கொள் வயல்செறி நல்லூரிற்
கதித்தமனை செய்யக் கருதி' அதனை இராசதானியாக்கினன் என்றும்,
“புவனேக வாகுவென்னும் போரமைச்சன் றன்னை
நலமேவு நல்லூரி னண்ணுவித்தா னென்றும்,

Page 19
20 ஈழத் தமிழ் இலக்கியம்
கைலாயமாலை கூறும். நல்லூர், இராசதானியானது கி. பி. 1450ஆம் ஆண்டின் பின்னரே என்பதும், ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ்ப்பா ணத்தி லரசு தொடங்கியது கி. பி. 13ஆம் நூற்றண்டிலென்பதும் வர லாற்ருசிரியர்கள் முடிவு. ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் இந் நூல் எழுதப்பட்டிருந்தால் இத்துணை முரண்பாடேற்பட்டிருக்கக் காரண மில்லை. ஆரியச் சக்கரவர்த்திகள் ஆட்சி கி. பி. 1621இல் முடிவுற்றது. கைலாய மாலையை ஆதாரமாகக் கொண்டெழுந்த யாழ்ப்பாண வைபவ மாலை கி. பி. 18ஆம் நூற்ருண்டிலெழுதப்பட்டது. எனவே கைலாய மாலை கி. பி. 17ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டிருத்தல் கூடுமெனக் கொள்ளலாம்.
வியாக்கிரபாத புராணம்
வியாக்கிரபாத புராணம் என்ற நூல் வடமொழியிலுள்ள வியாக்கிர மான்மியம் என்ற நூலின் மொழிபெயர்ப்பென்பர். இதனைத் தமிழில் விருத்தப்பாவாற் செய்தவர் அளவெட்டி வைத்தியநாத தம்பிரான் என்று வழங்கப்படும். அவரை வைத்தியநாத முனிவரென்றுமழைப்பர். வியாக்கிரபாத புராணம் ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்து நூலெனக் கூறுவர். அது அச்சிற் பதிக்கப்பட்ட நூலாகத் தெரியவில்லை. அதனல் அது இப்பொழுது கிடைத்தற்கரிதாயிற்று. எனவே அதன் காலத் தைப் பற்றியோ பொருளைப் பற்றியோ எதுவும் சொல்வதற் கியலா துள்ளது.
திருக்கரைசைப் புராணம்
திருக்கரைசைப் புராணம் என்ற நூல் ‘கரைசை' என வழங்கும் பதியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் புகழை விரித்துக் கூறுவ தொன்ருகும். இப்பதி திருகோணமலைப் பகுதியில் மகாவலிகங்கைக் கரையோரத்திலே அமைந்துள்ளது. கரைசையம்பதியை "அகத்தியத் தாபனம் ' எனவும் வழங்குவர். அகத்திய முனிவரே இதனைத் தாபித் தார் என்று இந்நூல் கூறும். இப்புராணம் சூதமுனி யருளிச்செய்த வடமொழிப் புராணத்தினைத் தழுவிச் செய்யப்பட்டது என இப்புராண வரலாறு கூறும் பகுதியிற் சொல்லப்பட்டபோதும், தழுவப்பட்ட முதல்நூலின் பெயர் குறிக்கப்படவில்லை. இந் நூல் செய்த புலவர் பெயர் தெரியாதமையால், அவர் செய்த நூற் பெயர்கொண்டு அவ ரைக் கரைசைப் புலவர் என்ற காரணப் பெயரா லழைப்பர். எனினும், நூலகச் சான்றுகொண்டு அவர் ஈசானச் சிவனைக் குருவாகக்கொண்டவ ரென்றும், "கொற்றங்குடி வாழும் பிரான் சரணத்துறுதி கொண்டவ ரென்றும் தெரிகிறது. இவற்றிற்காதாரமாக, அந்நூற் குருவணக்க
Of

ஈழத் தமிழ் இலக்கியம் 21
அண்டர் பிரா னடமாடுந் தில்லைமணி
மன்றதனி லகலா தென்றும் விண்டசிவ சித்தாந்த வேதாந்தப்
பொருள்விளக்கும் விளக்க மாகித் தொண்டறியா நாயேனுக் கருள்புரிந்து
கிளைமுழுதுந் தொழும்பு கொண்ட எண்டகுசீ ரீசானச் சிவன்மலர்த்தாண்
மறவாதென் னிதயந் தானே. என்ற செய்யுளையும்,
அதன் புராண வரலாறு கூறும் செய்யுள்களில்,
வண்ணமலி வடகைலைக் கொடுமுடியாந்
தென்கைலை மணியார் தன்மைத்
தண்ணமரு மலரிட்டுத் தாடொழுவான்
பொருட்டங்ங்ண் சாரா நின்ற
கண்ணகலுங் கலைஞானத் தெளிவனைத்துங்
கைவந்த கலச யோனி
அண்ணலுமுத் தரமுகமே யாக்கியமா
வலிகங்கை யாடும் போதில்
ஆங்கொருபே ரற்புதமா வசரீரி
வாசகத்தா லண்ண லார்தம்
பாங்கமருந் தென்மலயம் பயின்றதமிழ்க்
குறுமுனிவ பயிலு கின்ற
வீங்கமரு மிக்கங்கை யிரும்பெருமை
யியல்பிவையா மிங்ங் னியு
மோங்கநம்மைத் தாபனஞ்செய் திடுதியென வுவனறிய வுரைத்திட் டாரால்.
அக்கணமே தாபனஞ்செய் தவ்விறைக்குச்
சூதமுனி யருளிச் செய்த மிக்கதிரும் வடபாடைப் புராணத்தைத் தென்கலையின் விருத்தப் பாவாற் றிக்கிசைய வருந்தொண்டர் செய்தியென
வென்னறிவுஞ் சிறிது சேர்த்தி ஒக்கவுரைத் தனன்கொற்றங் குடிவாழும்
பிரான்சரணத் துறுதி கொண்டே,

Page 20
22 ஈழத் தமிழ் இலக்கியம்
ஆகிய விருத்தங்களையும் காட்டலாம். இவ்வாசிரியர் "ஈசானச் சிவ னைத் தன் குருவாகக் கொள்வதிலிருந்தும், கொற்றங்குடி வாழும் பிரான்’ திருவடிகளின் உறுதியைக்கொண்டு இந்நூலை உரைப்பதாகக் கூறுவதிலிருந்துமே இவர் காலத்தைக் கணக்கிடுவர். "ஈசானச் சிவன்", கொற்றங்குடி வாழும் பிரான்’ என்ற பதங்கள் உமாபதி சிவாசாரி யரைக் குறிப்பனவாதலால் இந்நூல் செய்தோர் அவர் சீடர் என்பாரு முளர் ' என்பர் சுன்னகம் குமாரசுவாமிப்புலவர். வேறுசிலர் உமாபதி சிவாசாரியர் பரம்பரையில் உள்ளார் ஒருவர் என்பர் ” எனக் கூறுவர் திருகோணமலை அகிலேசபிள்ளை.2 ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ் சியம், இவர் கி. பி. 14ஆம், 15ஆம் நூற்ருண்டுகளில் வாழ்ந்த புலவ ரெனக் கூறும். உமாபதி சிவாசாரியர் கி. பி. 1304ஆம் ஆண்டிற் கொடிக் கவி என்னும் நூலை இயற்றியமையால் அவர் சீடர் காலமும் அதனை யொட்டியதா யிருக்கவேண்டுமென்பது அதன் வாதம். கரைசைப்
புலவர் உமாபதி சிவாசாரியர் காலத்து வாழ்ந்த சீடர் என்பதற்கு எவ் வித ஆதாரமுமில்லை. அவர் பரம்பரையிலோ அன்றி அவர் சீடர்
பரம்பரையிலோ வந்தவராயிருத்தலும் கூடும். எனவே "ஈசானச் சிவன்’, ‘ கொற்றங் குடி வாழும் பிரான்’ என்ற பதங்களை மட்டுங்
கொண்டு இவ்வாசிரியர் காலத்தை நிர்ணயித்தல் முடியாத காரியமாகி றது. இந்நூல் ஆரியச் சக்கிரவர்த்திகள் காலத்தது என்பதற்கு ஆதார மாக நூலகத்தே எவ்வித குறிப்புங் காணப்படவில்லை. எனவே இதற்கும் ஆரியச் சக்கரவர்த்திகளுக்கும் தொடர்பு காட்டவும் முடியவில்லை.
இந்நூலின் இலங்கைச் சருக்கம் என்ற பகுதியில் வரும் செய்யுள்கள் திருத்தொண்டர் புராண நாட்டு வருணனைச் செய்யுள்களை ஒத் திருத்தலை அவதானிக்கலாம். திருக்கரைசைப் புராண நூலின்கண் கடவுள் வாழ்த்து, குரு வணக்கம், புராண வரலாறு, அவையடக்கம் ஆகியன கொண்ட பாயிரப் பகுதியைவிட இலங்கைச் சருக்கம், கங்கைச் சருக்கம், தாபனச் சருக்கம், பூசைச் சருக்கம் ஆகிய நான்கு சருக்கங்க ளுள. இதனை ஒரு தலபுராணம் என்றே கொள்ளத்தகும்.
கதிரைமலைப் பள்ளு
கதிரைமலைப் பள்ளு என்றும் கதிரையப்பர் பள்ளு என்றும் வழங்கும் இந்நூல் ஈழத்தெழுந்த முதற் பள்ளுப் பிரபந்தமென்பர். இதனைப் பின்பற்றியே ஏனைய பள்ளுப் பிரபந்தங்கள் எழுந்தனவென்று சிலர் கருதுவர். இதனை நிரூபிக்கத்தக்க சான்றுகள் கிடைத்தில. இந்நூல் 130 செய்யுள்களைக் கொண்டு பள்ளுப் பிரபந்தத்தின் இலக்கணம்
1, 3. திருக்காைசைப் புராணம், வே, அகிலேசபிள்ளேயின் பதிப்பு, (1898). திருக்
கரைசைப் புராணம் (முன்னுரை).
3. தொகுப்பாசிரியர் ஆ. சதாசிவம், இலங்தை சாகித்திய மண்டல வெளியீடு, 1986.

ஈழத் தமிழ் இலக்கியம் V 23
அமைந்து விளங்குகிறது. சில ஏட்டுப் பிரதிகளில் மேலதிகமாகவும் பாடபேதமாகவும் உள்ள ஏழு செய்யுள்களை எடுத்துக் காட்டியுள்ளார் இந்நூலை 1935ஆம் ஆண்டு பதிப்பித்த வ. குமாரசுவாமி. இதனை இயற்றிய புலவர் பெயர் புலப்படவில்லை. விருத்தப்பாவுஞ் சந்தப் பாவுமே இந்நூலிற் பெரிதும் கையாளப்பட்டுள்ளன. இதன் செய்யுள் களிற் சிலவற்றின் நடையை அவதானித்து, இது ஆரியச் சக்கரவர்த் திகள் காலத்ததாதல் கூடும் என ஈழத்துக் கவிதைக் களஞ்சியம் கூறும். இதனை நாட்டத்தக்க அகச் சான்றுகளோ புறச்சான்றுகளோ அகப்பட் டில. மூத்த பள்ளி, இளைய பள்ளி, பள்ளன், பண்ணைத் தலைவன் ஆகி யோரே இதில் வரும் பாத்திரங்களாகும். இந்நூலில் அமரர் நாதன் புதல்வன் தர்மநாயகன் என்ருெருவன் ஒரு செய்யுளிற் புகழப்படுகி முன். இவன் யார் என்பது தெரியவில்லை. இதில் தியாகசூரியர் நாடெங்கள் நாடே “ எனக் குறிப்பிடப்படுபவன் முதலாம் இராசசிங்கன் என்பாருமுளர். அதற்கும் ஆதாரங் காணமுடியவில்லை. மேலதிகச் செய்யுள்களிலிருந்து இந்நூல் முல்லைத்தீவுப் பகுதியிலே அதிகமாக வழங்கிவந்ததெனத் தெரிகிறது. இதனை முதலில் 1906ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பித்தவர் முல்லைத்தீவைச் சேர்ந்த தா. கைலாசபிள்ளை என்பவராவர். அவர் பதிப்பிலும், அப்பகுதியிலுள்ள பிற ஏடுகளிலும் இப்பள்ளின் கடவுள் வாழ்த்துப் பாடல் முள்ளியவளை மூத்தநயினுரைக் குறிப்பிடுகிறது என்பது, va
*கந்த மேவு கார்முகத் தோனே
கருணை யாகிய சங்கரி மைந்தா முன்பு போலெனை அன்புவைத் தாளும்
முள்ளிய வளை மூத்த நயிந்தை' எனும் அந்நூற் செய்யுளால் அறியக்கிடக்கிறது.
அகப்பொருட்டுறை கூறும் பாடல்கள் பள்ளில் அமையவேண்டு மென்ற விதிக்கு மாருக அவ்வகைப் பாடல்கள் இதில் இல்லாதிருப்பது, அவ்விதி பரவுவதற்கு முன்னரே இந்நூல் செய்யப்பட்டிருத்தல் கூடும் என்பதற்கு ஆதாரமாகலாம். அதனுல் இது ஏனைய ஈழத்துப் பள்ளு நூல்களிலும் காலத்தால் முந்தியதாகலாம்.
போர்த்துக்கேயர் காலம் (கி.பி. 1621-1658)
போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஈழத்துத் தமிழ்ப் பகுதிகள்மீது பூரண ஆட்சி நடத்தியது கி. பி. 1621 முதல் 1658 வரையான 37 ஆண்டுகள் மட்டுமே யெனினும், அவர்கள் தலையீடு கி. பி. 16ஆம் நூற்ருண்டின் நடுப்பகுதியிலிருந்தே மன்னர், யாழ்ப் பாணம் ஆகிய பகுதிகளிற் பெருமளவிற் பரவத் தொடங்கிவிட்ட தென்பது, சங்கிலி மன்னன் காலத்திலே (கி. பி. 1519-1561) மன்னரிற்

Page 21
24 ஈழத் தமிழ் இலக்கியம்
போர்த்துக்கேயர் சத்திய வேதத்திற் சேர்த்த 600 குடிகளையும் சங்கிலி சங்கரித்த சரித்திரச் சான்றினற் புலனகும். எனவே, ஒரு நூற்ருண்டுக் குச் சிறிது மேற்பட்ட காலம் போர்த்துக்கேயர் தொடர்பு ஏற்பட்டிருந் தமையால், அவர்கள் சமய, சமூகக் கொள்கைகள் அங்கு பரவலாயின.
போர்த்துக்கேயர் இலங்கையை அரசாண்ட காலத்தே இங்கு வந்த குவேருேஸ் என்னும் போர்த்துக்கேய பாதிரியாய சரித்திராசிரியர் எழுதி வைத்த குறிப்பில், யாழ்ப்பாணமும் (Jaffna Patao) போர்த்துக்கேய மன்னர் சொத்தானது; அங்குள்ள மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்க ளானர்கள். பெண்களையும் குழந்தைகளையும் விட 20,000 போர்த்துக்கேய ஆடவர்கள் யாழ்ப்பாணத்தில் அப்பொழுது வாழ்ந்தனர்? என்று கூறி யுள்ளார். சமயப் பொறை போர்த்துக்கேயரிடம் சிறிதளவாவது இல் லாததால், அவர்கள் தம் சத்திய வேதத்துக்குப் புறம்பாக எச்சமய வழிபாட்டையும் பொறுக்கா தொறுத்தனர். அதனல், அவர்கள் ஆட்சிக் காலத்தே ஈழத்தெழுந்த தமிழ் இலக்கியங்கள் எல்லாம் கத்தோலிக்க சமயச் சார்பானவைகளாகவேயிருந்தன.
ஞானப் பள்ளு
ஞானப் பள்ளு என்ற இலக்கியம் இக்காலகட்டத்தே எழுந்தவற்று ளொன்ருகும். இதன் பெயர் " ஞானப் பள்ளு என்பதை, VK
“ஆதி கத்தன்தி ருவேத மாகிய
அருப ஞானத்தை யம்புவி மீதிலே நீதி யுற்றசொ ரூபம தாகிய
நீண்ட ஞானநி றைந்தபள் ளோதிட ? என்ற காப்புச் செய்யுட் பகுதி சுட்டி நிற்கும். கிறிஸ்துநாதரே ஞான வடிவமானவர் என்பதை இதன் ஆசிரியர் பலவிடங்களிற் கூறியுள் ளார். இந்நூலுக்கு, ‘வேதப் பள்ளு ' என்னும் பெயரும் உண்டு என்பது,
‘அறைந்த வேதபள் ளானதி னிக்கதை’ என இதன் நாலாவது செய்யுளிலும்,
‘நிமலன்றிரு வேதபள் Oன்னிசை நெறிகூற’ என ஆருவது செய்யுளிலும்,
“செம்பொன்பத மேவிய வேதபள்ளிசைபாட” என எட்டாவது செய்யுளிலும் கூறப்படுவதாற் புலனுகும்.
1. Fernao de Queyroz, "The Temporal and Spiritual Conquest of
Ceylon, P, 47. 2. Fernao de Queyroz., "The Temporal and Spiritual Conquest of
Ceylon, P. 50.

ஈழத் தமிழ் இலக்கியம் 25
கத்தோலிக்க சமயத்தைப் புகழ்ந்து, இயேசு நாதரைப் பாட் டுடைத் தலைவராகக் கொண்டு, பள்ளுப் பிரபந்தத்தி னிலக்கணமமையச் செய்யப்பட்டுள்ளது இந்நூல். இது கத்தோலிக்க மதப் பற்றை மக்க ளிடையே பெருக்குவதனைக் குறிக்கோளாகக் கொண்டுள்ள தென்பதை,
நூலின் இடையிடையே காணப்படும்,
毒
* வாரிக் கரையில் வளர்வா னுலகமென் மாநிலத்திற் பாரிக்கை யாக அபிராங் கிளைகள் பலுகவைத்த சீருக் குகந்த திரித்துவ ஏகனைச் சிந்திப்பவர் ஆருக்கு முந்திப் பரலோக நன்மை யடைவர்களே’
என்பது போன்ற பள்ளுப்பாட்டு மரபுக்குப் புறம்பான அறிவுறுத்தற் பாடல்கள் காட்டி நிற்கும்.
ஏனைய பள்ளுப் பிரபந்தங்களில் வரும் பாத்திரங்கள் போல இதி லும் மூத்த பள்ளி, இளையூ பள்ளி, பள்ளன், பண்ணைக்காரன் ஆகிய நாலு பாத்திரங்களே இடம் பெறுகின்றன. ஆனல், மூத்த பள்ளி, பள்ளன் ஆகிய இருவரும் கிறிஸ்து நாதரின் பிறப்பிடமாகிய செருசலை (Jerusalem) நாட்டவராகவும், இளைய பள்ளி கத்தோலிக்க திருச்சபை யின் தலைமைப்பீடமான உரோமாபுரி (Rome) நாட்டவளாகவும், பண் ணைக்காரன் உரோமாபுரியென்னும் பண்ணைக்கு உரிமையாளனுகவும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். எனவே, மூத்த பள்ளி செருசலைப் பள்ளி யென வும், இளைய பள்ளி ருேமைப் பள்ளி யெனவும், பள்ளன் தன்மகுணப் பள்ளனெனவும் வழங்கப்பட்டுள்ளனர். நூலின் பெரும்பகுதி கிறிஸ்து நாதரின் புகழைச் செருசலைப் பள்ளி, ருேமைப் பள்ளி ஆகிய இருவரின் வாயிலாகக் கூறும் பாடல்களாக அமைந்துள்ளது.
இந்நூலாசிரியர் யார் என்பது இந்நூல் வாயிலாகவோ பிற சான் றுகள் மூலமாகவோ அறிதற்கில்லை. எனினும், இவர் கத்தோலிக்க சமயத்தவர் என்பதும், யாழ்ப்பாணத்திலே வாழ்ந்தவர் என்பதும் நூலகச் சான்றுகொண்டு அறியலாகும். இதில் வரும் " குயில் கூவல்" என்னும் பகுதியில் இறுதியிலே உள்ள,
தழைவு பெற்ற யாழ்ப்பாண
சத்தியகி றிஸ்துவர்கள் சந்ததமும் வாழவே - கூவாய் குயிலே என்ற சிந்து அவற்றிற்காதாரமாகும்.
1. ஞானப் பள்ளு, ஆ. சதாசிவம் பதிப்பு, 1988, செய்யுள் 78.

Page 22
26 ஈழத் தமிழ் இலக்கியம்
குயில் கூவல் என்னும் பகுதியிலே இந் நூலின் 84ஆவது பாட
லாக வரும்
* பேரான பாராளும்
பிடுத்துக்கால் மனுவென்றன் பிறதானம் வீசவே - கூவாய் குயிலே "
எனுஞ் சிந்து, போர்த்துக்கல் (பிடுத்துக்கால்) மன்னனை வாழ்த்தி நிற்கும். " பாராளும் ' என நிகழ் காலத்தால் மன்னனின் ஆட்சி சுட்டப் படுதலின், இலங்கையிற் போர்த்துக்கேயர் ஆட்சி நிலவிய காலத்தில் இந்நூல் செய்யப்பட்டதெனக் கொள்ளலாம். அவர் 1658 ஆம் ஆண்டு வரை இலங்கையை ஆண்டவர் என வரலாறு கூறும். எனவே அவர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய 1621 ஆம் ஆண்டுக்கும் 1658 ஆம் ஆண்டுக்கு மிடைப்பட்ட காலத்தே இது செய்யப்பட்டிருத்தல் கூடும். நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் ஞானப் பள்ளு எழுந்த காலம் 1642ஆம் ஆண்டெனத் தம் நூல்களிற் குறிப்பிட்டுள்ளார். அதற்கவர் கொண்ட ஆதாரங்க ளெவையெனத் தெரியவில்லை. செபஸ்தியான் பொன்சேகா சுவாமிகளின் வேண்டுகோளுக் கிணங்கவே ஞ்ானப் பள்ளு இயற்றப்பட் டது. யேசு சபையினைச் சேர்ந்த பொன்சேகா சுவாமிகள் 1650ஆம் ஆண்டு தென்னிந்தியாவிலுள்ள கொச்சின் ' என்னுமிடத்திலிருந்த கலாசாலையின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் 1650ஆம் ஆண் டுக்கு முன்பு ஈழத்திலே பணிபுரிந்தார். எனவே ஞானப் பள்ளு 1650 ஆம் ஆண்டுக்கு முன்பு இயற்றப்பட்டதாகலாம்.
அர்ச், யாகப்பர் அம்மானே
சந்தியாகுமையோர் எனப் பெயர் வழங்கும் அர்ச். யாகப்பர் அம்மானை என்ற நூல் செய்தோன்
"ஆரிய கோத்திரத்தோன் அன்புநெறி நீதியுள்ளோன்
சீரிய பேதுரென்போன் ... ...” என்று இதன் பாயிரம் பகரும். இதனல் இப் பேதுருப் புலவர் ஆரியச் சக்கரவர்த்திகள் மரபில் வந்தவராகவோ அன்றிப் பிராமண குலத்தில் உதித்தவராகவோ இருத்தல் கூடும் என்று கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்திற் பச்சிலைப்பள்ளிப் பற்றிலே கிழாலியென்னும் கிரா மத்திலே கோயில்கொண்ட யாக்கோபு என்னும் சந். யேம்ஸ் (St. James) பேரில் எழுந்ததே இந்த அம்மானையாகும். கிழாலியென்ற சிறு கிராமம் சாவகச்சேரியிலிருந்து கிழக்கே ஏழு மைல் ’ தூரத்தில் இருக்கிறது.
1. ஞானப் பள்ளு (செய்யுள் 4). ஆ. சதீாசிவம் பதிப்பு, 1968. 2. "Education in Ceylon', Chapter 29, Page 325, Published by the
Ministry of Education and Cultural Affairs, Ceylon, 1964,

ஈழத் தமிழ் இலக்கியம் 27
இந்த நூல் பொதுப் பாயிரத்தையும் முடிவுரையையும்விட ஐம்பத்தி மூன்று பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் பகுதியின் தொடக் கத்திலும் ஒன்று அல்லது பல விருத்தப் பாக்கள் இடம்பெறுகின்றன. இவ்வம்மானையிற் பொதிந்துள்ள பொருள் சந். யேம்ஸ் வரலாறு பற்றியதாகும். இவரை சந்தியாகு என்றும் யாகப்பர் என்றும் அழைப் பர். இக்கதை புதிய ஏற்பாட்டுக் கருத்தையும் பாரம்பரியக் கதையினை யுங் கொண்டு விளங்குகிறது. இதன் இரண்டாம் பிரிவாக விளங்கும், ஈற்றிலுள்ள பதினன்கு பகுதிகளிலும், சந். யேம்ஸ் புரிந்த அற்புதம் எடுத்துரைக்கப்படுகிறது. இசுப்பானியருக்கும் மூர் சாதியினருக்குமிடை யில் நடந்த பாரிய யுத்தத்திற் சந். யேம்ஸ் வெண்குதிரை வீரராகத் தோன்றி மூர் சாதியினரை முறியடித்த போர்க்கோலத்தை இவ்வதி காரங்களிற் காணலாம். கிழாலியிலுள்ள கோயில் வரலாறு நூலின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் எடுத்துரைக்கப்படுகிறது.
இந்நூல் 1647ஆம் ஆண்டு கார்த்திகை மார்கழி யாகிய மாதங் களிற் செய்யப்பட்டதென்பதனை அதன் பாயிரப் பகுதியாகிய,
* ஆண்டா யிரமு மறுநூறு மாறேழும்
மீண்டுமோ ரஞ்சும் விளங்கவே சென்றவந்நாள் கார்த்திகை மார்கழியாங் காணுமிரு மாதமதிற் கீர்த்தியுள்ள செந்தமிழாற் கிளத்தினு ரிக்கதையை அந்தமுட னிதனை அம்மானைப் பாவனையாய்ச் செந்தமிழி ஞலறியச் செப்பிஞர் யாவருக்கும்’ என்பது குறிக்கும். மேலும் இந்நூல் அம்மானையன்றி அம்மானைப் பாவனையாய்ச் செய்யப்பட்டதொன் றென்பதனையும், இதனைச் செய் வித்தவர் ‘சுவாம், கறுவால் லூயிஸ்’ என்னுங் குரு என்பதனையும் அப்பாயிரமே கூறும்.
ஞானுனங்த புராணம்
ஞானுனந்த புராணம் என்ற நூல் கிறிஸ்தவ மத விளக்கமாக அமைந்துள்ளது. தொம். தியோகு முதலியின் விருப்பப்படி தெல்லிப் பழை வேளாளன் தொம். பிலிப்பு என்ற புலவன் இதனைக் காப்பிய மாகச் செய்துள்ளான். இது 1104 விருத்தப் பாக்களைக் கொண்டுள்ளது. இந்நூலின் காலம் எது என்பதற்குரிய அகச் சான்றுகள் எதுவுமில்லை. எனினும், இந்நூலின் ஆக்கத்திற்குக் காரணராயிருந்த தொம். தியோகு முதலி தனது 92ஆவது வயதிலே 1825ஆம் ஆண்டிற் காலமானர்."
1. ("CIE ill 6i spair uglie' ud. 173) John Martin, Notes on Jaffna, Tellipalai, Jaffna, 1923. P. 173 - Don Diego Warnakulasooriya Arasunilaiyitta Mudaliyar died in his 92nd year in 1825'.

Page 23
28 ஈழத் தமிழ் இலக்கியம்
எனவே இவரது ஆயுட்காலம் 1733 முதல் 1825 வரையாகும். யாழ்ப் பாணத்திற் போர்த்துக்கேயர் ஆட்சி 1658 ஆம் ஆண்டிலும், ஒல் லாந்தர் ஆட்சி 1796 ஆம் ஆண்டிலும் முடிவுற்றன. ஆகையால் இந் நூல் போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்துக்குரியதன்றென்பது ஒருதலை. இக்கணக்கின்படி இது ஒருவேளை ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்திறுதியில் எழுந்திருத்தல் கூடும். எனின், இந்நூலின்கண் குறிப்பிடப்படும் குரு யோ-வப்ரிசு யாழ்ப்பாணத்திலே 1823 ஆம் ஆண்டில் வட்டார மத குருவாக இருந்தார் எனச் சொல்லப்படுகிறது. ஆகையால் இது ஒல் லாந்தர் காலத்தன்றி, ஆங்கிலேயர் காலத்தின் முற்கூற்றிலே செய்யப் பட்டதென்று கொள்வதே பொருந்தும்.
ஒல்லாந்தர் காலம் (1658-1796)
ஒல்லாந்தர் 1602ஆம் ஆண்டிலே இலங்கையிற் காலடி வைக்கத் தொடங்கியபோதும், 1658ஆம் ஆண்டிலேயே யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றி ஆளத் தொடங்கினர். அவர்கள் ஆட்சி அங்கு 138 ஆண்டுகள் நடைபெற்றது. அக்காலத்தில் அவர்கள் நில அளவைப் பகுதியைச் சீர்திருத்தியதுடன், தேசவளமை யெனும் தமிழ் மக்களின் நியாயப் பிரமாணங்களைத் தொகுத்து வெளியிட்டு அதன்படி அம் மக்களுக்கு நியாயம் வழங்கினர். நியாய பரிபாலனத் தைப் பூரணப்படுத்தும் பொருட்டு, இன்றுவரை ஏற்றுக் கொள்ளப் படும் "ருேமன் டச் சட்ட முறையைப் புகுத்தித் தமது ஆட்சியை மேன்மைப் படுத்தினர்.
மேலும், அவர்கள் தமது சமயமான புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவத் தைப் பரப்பிய போதும், போர்த்துக்கேயரைப் போல அட்டூழியங்களைச் செய்து மக்களைத் துன்புறுத்தாதிருந்தனர். அவர்கள் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்திற் சைவ சமயத்தவர்கள் தமது சமய ஆசாரங்களைக் கைக்கொண்டொழுகுவதற்குத் தடைகள் இல்லாதிருந்தன. அதனல் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள், போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்திலிருந் ததைவிடச் சமய, சமூக, கலாசார சுதந்திர முடையவர்களாக விளங் கினர். அச்சூழல் ஆக்க வேலைகளுக்கு உதவிற்றென்பது, அக்காலத் தெழுந்த இலக்கிய வகைகளைக் கண்ணுறும்போது புலனுகிறது. போர்த்துக்கேயர் காலத்தில் அழிக்கப்பட்ட கோயில்களுக்குப் பதிலாக ஒல்லாந்தர் காலத்திற் கட்டி யெழுப்பப்பட்ட ஆலயங்களிற் படித்துப் பயன் சொல்லத்தக்க சைவசமயப் புராணக் கதைகள் செய்யுள் நூல்களாகச் செய்யப்பட்டன. இந்த வகையில் எழுந்தனவே வரத
f, (“CBs ir "6ňu är Lu6ii9" Luš. 172) John Martin. Notes on Jaffna, Tellipalai,
Jaffna, 1923, P. 172 - “The Parish Priest of Jaffna Fr. Joa Baptista referred to in Purana. He was Parish Priest in Jaffna in 1823',

ஈழத் தமிழ் இலக்கியம் V,, 29
பண்டிதர் இயற்றிய சிவராத்திரி புராணம், ஏகாதசிப் புராணம், பிள்ளையார் கதை முதலியன. இவற்றை விடப் புலவர்களின் கற்பனைக் கேற்றவாறு புனையப்பட்ட பல இலக்கியங்களும் இக்காலத் தெழுவதற்கு ஒல்லாந்தர் ஆட்சி உதவிற்றெனலாம்.
சிவராத்திரி புராணம்
சிவராத்திரி புராணம் சிவராத்திரி விரத சரிதையைக் கூறும் நூலா கும். நைமிசாரணியத்தி லுறையும் மாதவர் வேண்டச் சூத முனிவர் கூறுவதாகப் புராணம் இயங்குகிறது. சிவராத்திரி விரதத்தின் தோற் றத்தையும் அதனை நோற்றிடும் வகையினையும் கூறிய சூத முனிவர், தொடர்ந்து சிவராத்திரி விரதத்தாற் பலனடைந்த சுகுமாரன், அங்கு லன், சவுமினி, கன்மாடபாதன், விபரிசன், குபேரன், சாலிகோத்திரன் ஆகியோரின் கதைகளை விரித்துரைக்கும் வகையில் இந்நூல் செய்யப் பட்டுள்ளது. காப்புச் செய்யுள் ஒன்றினையும், கடவுள் வாழ்த்துப் பாக் கள் இருபதினையும், பாயிரச் செய்யுள் மூன்றினையும், சிவராத்திரி யுற்ப வச் சருக்கம் முதலாகச் சாலி கோத்திரச் சருக்க மீருகவுள்ள ஒன்பது சருக்கங்களிலுள்ள 691 பாடல்களையுங் கொண்டு விளங்கும் இச் சிவ ராத்திரி புராணம்.
இந்நூலின் தற்சிறப்புப் பாயிரத்தின்படி, சிதம்பரத்திலுள்ள அறிஞர் பலரின் வேண்டுகோளை நிறைவேற்றும் பொருட்டு இது செய் யப்பட்டதெனத் தெரிகிறது. இதற்கு முன்னரும் பலர் சிவராத்திரி புராணம் செய்திருந்தபோதும், 'ஆகம நூன்மொழி வழாம லிச் சரிதை யமையவேண்டு மென்ற நோக்குடன் இது செய்யப்பட்டதாக இதன் ஆசிரியர் கூறுவர். இதற்குச் சின்னத்தம்பிப்புலவர் தந்த நூற் சிறப்புப் பாயிரத்திலிருந்து, இதனை இயற்றினேன் வரத பண்டித னென்று தெரிகிறது. இவ்வாசிரியன் பெயர் வரதராசன் என்றும் வழங்கும் என்பதை மயில்வாகனப் புலவர் தந்த பாயிரச் செய்யுள் பகரும். இவர் தந்தை பெயர் அரங்கநாதன் என்பது இவரியற்றிய பிள்ளையார் கதைச் சிறப்புப் பாயிரச் செய்யுளால் அறியலாம். இவ ரியற்றிய மற்ருெரு நூலாகிய அமுதாகரத்தின் பாயிரச் செய்யுள், இவரது தந்தையின் தந்தை பெயர் ஜெகநாதன் என்றும் காசியிலிருந்து வந்து சுன்னகத்திற் குடியேறிய வேதியர் குலத்திலுFத்தவர் இதனுசிரி யர் என்றுங் கூறும்.
இவர் வாழ்ந்த காலம்பற்றிப் பலரும் பலவாறு கூறுவர். சைமன் காசிச் செட்டி தன் புலவர்சரித நூலின்கண் வரத கவிராயர் கி. பி. 17ஆம் நூற்ருண்டில் வாழ்ந்தனர் என்பர். பாவலர் சரித்திர தீபக ஆசிரியர் இவர் " கிறிஸ்தாப்தம் 1700 ஆம் ஆண்டு வரையில் இருந்தனர்" என்பர்.2 அ. குமாரசுவாமிப் புலவரும் வித்துவான் சி. கணேசையரும் வரத
, Tamil Plutarch (1859), Lučš. i 1 t.
பாவலர் சரித்திர தீபகம் (1886), பக். 250. தமிழ்ப்புலவர் சரித்திரம் (1918), பக். 188. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரித்திரம் (1989), பக்கம் 19.
:

Page 24
30 ஈழத் தமிழ் இலக்கியம்
பண்டிதர் 18ஆம் நூற்ருண்டில் வாழ்ந்தவர் என்பர். இந்நூலின் காலத்தை யறிவதற்குத் தக்க சான்று நூலகத்தே எதுவுமில்லை. 19ஆம் நூற்ருண்டின் முற்பகுதியில் வாழ்ந்த சைமன் காசிச் செட்டியின் கூற்றி லிருந்து அவர் வாழ்ந்த காலமாகிய 19ஆம் நூற்ருண்டில் இது செய் யப்படவில்லையென்பது தெளிவாகிறது. *17ஆம் நூற்ருண்டில் இந் நூலாசிரியர் வாழ்ந்தனர் என்பர் " என்ற சைமன் காசிச் செட்டியின் கூற்றுக்கு ஆதாரம் எது என்பது புலனகவில்லை.
இந்நூற்குச் சிறப்புப்பாயிரம் வழங்கிய யாழ்ப்பாணம் சின்னத் தம்பிப் புலவர் 18ஆம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்தவர். இதற்குச் சிறப்புப்பாயிரம் வழங்கிய மற்ருெருவராகிய யாழ்ப்பாணம் மயில்வாகனப் புலவர் 18ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்றண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர். இவற்றை முன்வைத்து நோக்குமிடத்து, இந்நூல் 18ஆம் நூற்ருண்டுக்குரிய தென்றே பெறப் படுகிறது. அதனுல் வரதபண்டிதர் அக்காலத்துக்குரியவராகிருர்.
இந்நூலை ச. வயித்தியலிங்கம்பிள்ளை முதலில் 1881ஆம் ஆண்டி லும், பின்னர் 1893ஆம் ஆண்டிலும் அச்சிற் பதிப்பித்து வெளியிட் டார். உடுப்பிட்டி ம. குமாரசூரியப்பிள்ளை தனது பதவுரையுடன் இதனை 1913ஆம் ஆண்டு அச்சிட்டு வெளிப்படுத்தினர். இதன் மறு பதிப்பு 1970ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
ஏகாதசி புராணம்
ஏகாதசி புராணம் ஏகாதசி விரத நிர்ணயத்தையும் மகிமையையும் அவ்விரத மனுஷ்டித்தோர் சரிதங்களையும் கூறுகிறது. உருக்குமாங்கதன், வீமன் ஆகியோர் சரிதங்களை இதிற் காணலாம். சிவ விரதங்களுட் சிறந்ததாகிய சிவராத்திரி விரதத்தைக் குறித்துப் புராணம் பாடியது போலவே அ. வரதபண்டிதர் திருமால் விரதங்களுட் சிறந்ததாகிய ஏகாதசி விரதத்தைக் குறித்து இப்புராணத்தைப் பாடியுள்ளார். ஏகாதசி விரத மேன்மையை வடநூல் சொன்ன வழிகண்டு தண்டமிழால் வகுத்தல் செய்தான் . வரதராச பண்டிதன்" என இதன் பாயிரச் செய்யுள் பகரும். -
இந்நூல் காப்புச்செய்யுள் ஒன்றினையும், கடவுள்வாழ்த்துப் பாக்கள் ஐந்தினையும், அவையடக்கச் செய்யுள் ஒன்றினையும், பாயிரச் செய்யுள் ஒன்றினையும், கால நிர்ணயச் சருக்கம், உருக்குமாங்கதச் சருக்கம், வீமேகாதசிச் சருக்கம் ஆகிய மூன்று சருக்கங்களிலுள்ள 258 பாடல் களையும் கொண்டு விளங்குகிறது. கால நிர்ணயச் சருக்கத்தில், கருட புராணம், சூரிய சித்தாந்த புராணம், பாகவத புராணம், கைவர்த்த புராணம், ஆக்கினேய புராணம், விட்டுணு ரகசிய புராணம், பவிடிய புராணம், பதும புராணம், பிரம புராணம், காந்த புராணம், காளிகா
 

ஈழத் தமிழ் இலக்கியம் 31
புராணம், நாரத புராணம், வராக புராணம், வாயு புராணம், மற்ச புராணம், கூர்ம புராணம் ஆதியன ஏகாதசி விரத நிர்ணயத்துக் காதார மாகக் கொள்ளப்பட்டனவெனக் கூறப்பட்டுள்ளது.
இது வரத பண்டிதர் செய்த நூலாகையால், இதுவும் 18 ஆம் நூற் முண்டுக்குரிய தென்று கொள்ளலாம். இதனை நா. கதிரைவேற்பிள்ளை முதன் முதல் அச்சிட்டு வெளியிட்டார். பின்னர் சுப்பிரமணிய சாஸ் திரிகள் அரும்பதவுரையுடன் அச்சிட்டார். அதைத் தொடர்ந்து ச. சோமசுந்தர ஐயர் 1947 ஆம் ஆண்டிலும், ஆ. வேலுப்பிள்ளை உபாத்தி யாயர் பதவுரை எழுதி 1958 ஆம் ஆண்டிலும் பதிப்பித்தனர்.
கிள்ளே விடு தூது
கிள்ளைவிடு தூது காங்கேயன்துறையைச் சேர்ந்த கண்ணியவளை என்னுமிடத்தி லெழுந்தருளிய குருநாத சுவாமிமீது வரத பண்டிதரால் இயற்றப்பட்டதாகும். இது தூதுப் பிரபந்த இலக்கணத்துக் கமையக் கலி வெண்பாவாற் செய்யப்பட்டுள்ளது. இதன் காப்புச் செய்யுளடிகளாகிய
* கொற்றமிகுந் தெய்வக் குருநாத சாமிதன்மேற்
சொற்றதமிழ்க் கிள்ளைவிடு தூதுரைக்க” என்பன இதன் பெயரை வலியுறுத்தும். 216 தண்ணிகளைக் கொண்ட இத்தூது கண்ணகி யம்மன் கோபத்தாலுண்டாகும் அம்மைநோய் முதலியவற்றை ஆற்றவென உருவெடுத்த குருநாதன் பவனி கண்ட
பெண்ணுெருத்தி, அவன் மேலுற்ற காதலைத் தன் கிளிமூலஞ் சொல்லி
யனுப்பிக் * குருநாதர் மாலைதனை நீ வாங்கிவா ? எனக் கிள்ளையைத் தூதனுப்பிய கதையைக் கூறுமுகத்தாற் குருநாத சுவாமியின் சிறப் பினைச் சொல்வதாயமைந்துள்ளது.
இது வரத பண்டிதராற் செய்யப்பட்டமையின், இதுவும் 18ஆம் நூற்ருண்டுக்குரியதாகும்.
பிள்ளையார் கதை
பிள்ளையார் கதை ஐங்கரற்கு வாய்ந்த நல்விரத மான்மிய முரைப்ப தற்காக எழுந்ததென அதன் சிறப்புப் பாயிரங் கூறும். அகவல் யாப்பி ணுற் செய்யப்பட்ட இந் நூற்கான பொருள்
* செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கவிதையி லுள்ளதுவும் இலிங்க புராணத் திருந்தநற் கதையும் உபதேச காண்டத் துரைத்தநற் கதையும் தேர்த்தெடுத் தொன்ருய்த் திரட்டி’ எடுக்கப்பட்டதெனவும், இதனைச் செய்தோன்

Page 25
32 ஈழத் தமிழ் இலக்கியம்
* துன்னிய வளவயற் சுன்னு கத்தோன்
அரங்க நாத னளித்தருள் புதல்வன் திரம்பெறு முருகனைத் தினந்தொறும் வரம்பெற வணங்கும் வரதபண் டிதன்” எனவும் அச்சிறப்புப்பாயிரத்தினுல் அறியலாம்.
ஆனைமுகன் பிறந்த வரலாறும், அவன் கயமுகாசுரனை அழித்து, மூஷிகத்தை வாகனமாக்கியதும், திருச்செங்காட்டின் சிவனை யர்ச்சித் துக் கணபதீச்சுர மாக்கியதும், ஆவணிச் சதுர்த்தி விரதச் சிறப்பும், மார்கழி விநாயக சஷ்டி விரத மகிமையும், விநாயகனைக் கருமத் தொடக்கத்தில் வணங்கவேண்டிய அவசியமும், சண்முகன் பிறந்த கதை யும், திருமால் பாம்புருவான்தும், கார்த்திகைக்குக் கார்த்திகையாந் திருக்கார்த்திகையின் பின்வரும் விநாயக விரதச் சிறப்பும், அதனைப் பாம்புருவான திருமாலும் இலக்கணசுந்தரி என்பாளும் அனுஷ்டித் துச் சாப விமோசனம் பெற்றதும் இதிற் கூறப்படுகின்றன.
இதனை வரத பண்டிதன் செய்தமையால், இதுவும் 18 ஆம் நூற் முண்டுக்குரியதென்று கொள்ளலாம்.
9(p;5T5JLD
அமுதாகரம் விஷ வைத்திய நூல் என்பதனை அதன் பாயிரப்
Luggu untuLu
* பார்மலி துத்திப் படவிட நாகம்
மண்டலி புடையன் வளர்கரு வளலை எண்டரும் பணிக ளிவைமுத லெவைக்கும் அருந்திடு மருந்தோ டஞ்சனங் குடோரி பொருந்திய நசியம் பூச்சொடு துவாலை முறுக்கிடு மருந்துகள் முறைமுறை குவைத்து வறுத்தெடுத் தொற்றும் மருந்துகள் பலவுந் தேளொடு புலிமுகச் சிலந்திசெவ் வட்டை தாழ்விலா வறண தருநச்சுப் பல்லி கண்டறி வாளை கடியன்கா ஞக்கடி மண்டுகம் பொல்லா வலியுடைக் குளவி புலிகடி நாய்கடி பூனை கடியுடன்
எலிகடி முதலா வியம்பிய வெவைக்கும்
மருந்துட னெண்ணெய் தூள்வகை பலவொற்றுத் திருந்துற வஞ்சினஞ் சிறந்திடு நசியம் ஐயமில் முந்நூற் றிருபத்து மூன்று செய்யதோர் விருத்தந் தெரிந்துரை செய்தான்.”
என்பது காட்டி நிற்கும். இதனை யியற்றியோன்

*ழத் தமிழ் இலக்கியம் 33
* அரங்க நாத னருளிய புதல்வன்
O VN s
ܚ: ܚ.ܚ.ܚ... àܬܛssgܕܣܛܕܕܶܝܿܬܬܡܶܬ݂ܐ...ܕܸܒܼ
fé- 4 - Յ-ւ s سطحgٹع6 .............................................................ہNSFلمملوکچھ.à •sܬܩܛܰܬ݁ܐܚܦ݁ܽܠܬܗ. வரம்பெறு கவிஞன் வரதபண் டிதன்”
என அப்பாயிரங் கூறும். இதன் தற்சிறப்புப் பாயிரத்தில்
* பொங்கரவக் கடலுலகோர் புகழமுதா கரமெனப்பேர் புனைந்து சீற்றந் தங்கரவு முதலியபல் விடந்தீர்க்கும்
மருந்துபல சாற்ற லுற்றேன்’ என்று கூறுமுகத்தால் இதன் பெயர் அமுதாகர மென்பது பெறப் படும். விஷஜந்துக்கள் தீண்டினு லேற்படுங் குணங்களைக் கூறி அவற்றை நிதானித்தறியு முபாயங் காட்டிப் பின் மருந்து கூறுவதே முறையாயி னும், முன்னர் சித்தராருடம் அம்முறையே கூறியிருப்பதால் அவற்றை மீண்டு மெடுத்தியம்பாது மருந்துகளை மட்டு மிதிலே யொன்ருய்த் திரட் டிக் கூறுவதாகத் தற்சிறப்புப் பாயிரத்தின் நாலாவது செய்யுளிற் செப்பு கிரு ரிதனுசிரியர். அவ்வாறே இந்நூலமைந்திருக்கக் காணலாம்.
இதனை வரதபண்டிதர் செய்தாரென்பதால், இதுவும் 18ஆம் நூற் முண்டுக்குரியதெனக் கொள்ள லா ம். இதனைத் திருகோணமலை சு. தம்பையாபிள்ளை 1892ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.
திருச்செல்வர் காவியம்
திருச்செல்வர் காவியம் கிறிஸ்து மதத்தின் உயர்வை எடுத்துக்காட் டுவதற்காக எழுந்த நூலாகும். சிந்து தேசத்திலே கி. பி. எட்டாம் நூற்ருண்டிலே செங்கோல் செலுத்திய " அபினேர் என்னும் அரச னுக்கு மைந்தணுய்ப் பிறந்து இளமையிலே சத்திய வேதத்திற் சேர்ந்து, ஈற்றிலே வனஞ் சென்று தவஞ் செய்து வீட்டின்ப மடைந்த " திருச் செல்வராயன் சரித்திரத்தை அர்ச்சியசிட்ட தமசேனு அருளப்பர் கி. பி. 773ஆம் ஆண்டு எழுதி வைத்தவாறு இது காவியமாகச் செய்யப்பட் டுள்ளது. -
இந்நூலின் காப்புச் செய்யுள் ஒன்றும், கடவுள் வாழ்த்துப்பாக்கள் ஆறும், அவையடக்கச் செய்யுள்கள் பதினென்றும், பாயிரச் செய்யுள்கள் பதினேழும், இருபத்துநான்கு படலங்களில் 1912 பாடல்களுமாக 1947 விருத்தங்களைக்கொண்டு விளங்குகிறது. நாட்டுப் படலம்,
1. முன்னுரையில் கி, பி. 733ஆம் ஆண்டெனத் தீவறுதலாகக் குறிக்கப்பட்டுள்ளது.
செய்யுளின் உரையில் 773ஆம் ஆண்டெனக் காணப்படுகிறது.
F一3

Page 26
34 ஈழத் தமிழ் இலக்கியம்
நகரப் படலம், அரசியற்கைப் படலம், செருச்செய் படலம், மண வினைப் படலம், திருச்செல்வன் உற்பவப் படலம், புத்திரசேமப் பட லம், அருவினேர் திருச்செல்வனைக் கண்ணுறு படலம், வீதிகாண் பட லம், நீர் விளையாட்டுப் படலம், வறலாம் வரவுப் படலம், உபதேசப் படலம், திரு அவதாரப் படலம், ஞானஸ்நானப் படலம், தர்க்க சாஸ்திரப் படலம், நக்கோர் துறவுப் படலம், தேவுதன் சூழ்ச்சிப் படலம், தேவுதன் துறவுப் படலம், முடிசூட்டுப் படலம், அவினேர் மறைதெளி படலம், அவினேர் துறவுப் படலம், திருச்செல்வன் துறவுப் படலம், வறலாங் கதிபெறு படலம், திருச்செல்வன் கதிபெறு படலம் ஆகியன இதில் வரும் படலங்களாகும். இந்நூல் 1896ஆம் ஆண்டு அச்சிற் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தது.
இதனை இயற்றியவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் வசித்த பூலோகசிங்க முதலியாரெனவும், அவர் அருளப்ப நாவலரென்றும் வழங்கப்பட்டாரெனவும் நூலின் முகப்பிற் குறிக்கப்பட்டுள்ளது. திருச்செல்வராசர் காவியத்தினை யியற்றியவர் இவரே யென்பதற்குச் சான்ருக,
ow
* செல்லினருள் பெருகுதவச் செல்வரா
யன்கதையைத் தேர்ந்து நுண்ணுற் றுல்லியமோர்ந் திடும்புலவர் மகிழ்தூங்க
விருத்தத்தாற் சொற்றிட் டாஞல் நல்லிசைநா டகமியலின் றமிழ்தெரிநா
வினன்சதுர நாக ரீகன் தெல்லிநக ரருளப்பன் தென்காரைப்
பூலோக சிங்கன் ருனே. என்னுஞ் செய்யுளை அ. சதாசிவம்பிள்ளை தன் பாவலர் சரித்திர தீப கத்தில் எடுத்துக் காட்டியுள்ளார். இந்நூல் ஆசிரியர் இதனை அம் மானையாகவுஞ் செய்துள்ளார் என்பர். தெல்லிப்பழைப் பூலோகசிங்க முதலியாரின் மகன் பிலிப்பு குமாரவேலன் யாழ்ப்பாண ஆணைப் பகுதிக்கு முதற் சுதேச வைத்தியராக 1756ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 29ஆந் திகதி ஒல்லாந்தர்களால் நியமிக்கப்பட்டவர். எனவே அவர் தந்தை செய்த நூலாய திருச்செல்வர் காவியம் 18ஆம் நூற் ருண்டின் முற்பகுதிக்குரியதெனக் கொள்ளலாம்.
1 John Martin, Notes on Jaffna. Tellipalai, Jaffna, 1923, P. 152. "Poologisinga Modliaar Philippoe Comarewelan of Tellipalai was appointed first native Physician of the Jaffna Commandments on 29th September, 1756.

ஈழத் தமிழ் இலக்கியம் 35
வெருகல் சித்திரவேலாயுதர் காதல்
வெருகல் சித்திரவேலாயுதர் காதல் என்ற நூல், திருகோணமலைக் குத் தென்திசையிலுள்ள வெருகற்பதியி லெழுந்தருளியிருக்கும் சித் திர வேலாயுத சுவாமிமீது பாடப்பட்டதாகும். சித்திர வேலாயுதர் தெருவி லுலாப்போந்ததுவும், அப்போதவரைக் கண்ட சேயிழை மாலானதுவும், வேலாயுதர் அம்மாதை மலர்க்காவின்மிசைக் கூடிய தும், அம்மங்கைக்குக் குறத்தி குறிசொல்லியதும், அவள் தன் வீடு சென்று கிளியைத் தூதனுப்பியதும், சண்முகவேலவர் தொடையலிந் ததுவும், பாவையவள் அதனை வாங்கியதும் 421 கண்ணிகளிற் சொல் லப்பட்டுள்ளன. இவற்றுட் காப்புக் கண்ணிகள் 16, அவையடக்கக் கண்ணிகள் 5, பாயிரக் கண்ணிகள் 9 அடங்கும். இவற்றை விட வெண் பாவினுற் செய்யப்பட்ட காப்பொன்றும் கண்ணிகளின் முன்னிடப் பட்டுள்ளது. இந்நூல் செய்தோன், தம்பலகமத்தில் வேளாண் மரபி லுதித்த ஐயம்பெருமாள் மகன் வீரக்கோன் முதலியெனப் பாயிரக் கண்ணிகள் பகரும் .
பாயிரத்தை யடுத்து நூலின் முதற் பகுதியாய உலாவைக் கூறும் கண்ணிகள், கண்டி நகராளும் இராசசிங்கன் புகழ்பேசியாரம்பிக்கின்றன.
‘எண்டிசையு மேத்து மிரவிகுலத் துதித்தோன் கண்டி நக ராளுங் கவினுலவு ராசசிங்கன் (31) கூரியகை வாளாற் குவலயத்தி லொன்னலரைச் சீருடனே தானரிந்து செங்குருதி யாற்றினிடை (32) செல்ல விடுப்பதுபோற் சீயமொடு தந்திமந்தி m கொல்லும் புலிமுதலாக் கூறும் விலங்கினத்தை (33) தள்ளியுருட் டிக்கொணர்ந்து சாகரத்திற் செல்லவிடும் விள்ளருமா பேரிகங்கை மேவும்வெரு கற்பதியான் (34) என்பன அக்கண்ணிகளாகும். அதேபோல நூலின் இறுதிப் பகுதியிலே கிளியிடந் தூது சொல்லியனுப்புகையில்,
*மெத்து புகழ்வாய்ந்த வெருகற் பதியுறையுஞ் சித்திரவே லாயுதரின் சீரடியி லன்புகொண்டு (372) மானமுடன் மிக்க வயனிலமுந் தோப்புகளும் மானியமா யிந்த மகராச ராசேந்திரன் (373) மாணிக்கம் வைத்திழைத்த வன்னப் பதக்கமுடன் பூணணிக ளிந்த புகழ்படைத்த பூபாலன் (374)
கண்டி நகராளுங் கனகமுடி ராசசிங்கன் தெண்டனிடும் போதெனது சேதியைநீ சொல்லாதை(375)

Page 27
36 ஈழத் தமிழ் இலக்கியம்
என்று கண்டிநகராளும் இராசசிங்கன் புகழும் சைவசமயப் பற்றும் கூறப்படுகின்றன. இவற்றிலிருந்து இந்நூல் கண்டி நகராண்ட இராச சிங்கன் காலத்திற் செய்யப்பட்டதெனத் துணியலாம். இரண்டாம் இராசசிங்கனே (1635 - 1687) கண்டியிலிருந் தரசாண்டவ னெனினும், சீதாவக்கையில் அரசு தொடங்கிய முதலாம் இராசசிங்கனும் (1581 - 1593) கண்டி நகரை 1582ஆம் ஆண்டிற் கைப்பற்றி அதன்மீது ஆணை செலுத்தினன் என்பது வரலாறு.
இரண்டாம் இராசசிங்கன் போர்த்துக்கேயருக் கெதிராகவும், பின்னர் ஒல்லாந்தருக் கெதிராகவும் சண்டை செய்துகொண்டிருக்கவேண்டிய நிலையிலிருந்தான். இதனை அவன் காலத்திலெழுதப்பட்ட * மஹா ஹட்டன" (மகா யுத்தம்) என்ற நூலும், பறங்கி ஹட்டன (பறங் கியர் யுத்தம்) என்ற நூலும், ராஜசிங்ஹ சிரித அல்லது ‘ராஜசிங்ஹ வர்ணன’ (ராஜசிங்க சரிதம் அல்லது ராஜசிங்க வர்ணனை) என்ற தொகைநூலும் எடுத்துக்காட்டும்.
“மஹா ஹட்டன" என்ற நூலிற் போர்த்துக்கேய தளபதியாகிய "கொன்ஸ்ரன்ரீன் டி சா’ என்பவனை இரண்டாம் இராசசிங்கன் தோற் கடித்த கதையும், "ராஜசிங்ஹ சிரித” என்ற நூலில் விந்தனை சாமி என்பார் எழுதிய கவியிற் போர்த்துக்கேயரை இரண்டாம் இராசசிங் கன் "மல்வானை', 'கன்னுெருவ’, ‘மெணிக்கடவர" என்ற இடங்களில் வென்று அவர்கள் கோட்டைகளைக் கைப்பற்றிய சம்பவமும், சப்பிர கமுவ மாகாணத்திற் கிக்கிலியாகம என்ற இடத்திலிருந்த ஒல்லாந்த ரது கோட்டையை 1665ஆம் ஆண்டு செப்ரெம்பர் ஒக்ரோபர் மாதங் களிற் கைப்பற்றிய வரலாறும் சொல்லப்படுவதிலிருந்து, இரண்டாம் இராசசிங்கன் கண்டியிலிருந்து திருகோணமலைக்கயலேயுள்ள வெருகற் பதிக்குச் சென்று வணங்கி வரத்தக்க சூழ்நிலை யிருந்ததென்று கொள் வது பொருத்தமாகத் தெரியவில்லை. அன்றியும், இக் கண்ணிகள் குறிப் பது இரண்டாம் இராசசிங்கனையேயெனின், அவனேடு போர்புரிந்து கொண்டிருந்த போர்த்துக்கேயரைப் பற்றியோ ஒல்லாந்தரைப் பற் றியோ இந்நூலிற் குறிப்பிடாதது வியப்பே. மேலும் இரண்டாம் இராசசிங்கன் சைவ சமயத்தை ஆதரித்தவன் என்பதற்குச் சான்றுகள் தென்படவில்லை. சீதாவக்கையிலிருந்து கண்டி நகரைக் கைப்பற்றி யரசாண்ட முதலாம் இராசசிங்கனே, பெளத்த மதத்தைப் புறக் கணித்துச் சைவசமயத்தைத் தழுவி அதனைப் பெரிதும் ஆதரித்தவன் என்பது வரலாற்றுண்மை. இதனை அவன் காலத்தெழுதப்பட்ட *செவுல் சந்தேச" (சேவல் விடு தூது) எடுத்துக்காட்டும். அன்றியும், "இரவி குலத்துதித்தோன்" எனப் புகழப்படுதலால், இவன் தம்பதே
1. Tikiri Abeyasinghe, Portuguese rule in Ceylon 1594 - 1612", Colombo,
1966, Page 11.

ஈழத் தமிழ் இலக்கியம் 37
னிய மன்னர் பரம்பரையில் வந்தவணுதல் வேண்டும். சரசோதிமாலை செய்வித்த "தம்பை காவல ஞன நாலாம் பாரக்கிரமவாகுவும் சோழ குலத்தவ னென்றே சொல்லப்படுகிருன். முதலாம் இராசசிங்கனும் அவன் பரம்பரையின னுதலால், "இரவி குலத்துதித்தோன்’ என்பது அவனுக்கே பொருந்தும். எனவே, இந்நூலிற் கூறப்பட்டுள்ளவன் முதலாம் இராசசிங்கன் என்று கொள்ளுவதே பெரிதும் பொருந்தும். அவ்வாருனல் இந்நூல் 16ஆம் நூற்ருண்டின் பிற்பகுதிக்குரியதாகும். அன்றி, இரண்டாம் இராசசிங்கனையே இது குறிக்குமெனக் கொள்ளின், இந்நூல் 17ஆம் நூற்றண்டின் நடுப்பகுதிக் குரியதாகக் கருதப்பட வேண்டும். இராசசிங்கன் என்ற பெயருடன் வேறு பலரும் அதன்பின் ஆட்சிக்கு வந்தபோதும், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகு திகள் அவர்கள் காலத்திற் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோர் ஆட்சியில் இருந்தமையால், வெருகற் பகுதிக்குச் சென்று வணங்கத் தக்க சூழ்நிலை அவர்களுக் கிருக்கவில்லை யென்பது தெளிவானதே.
சந்தான தீபிகை
சந்தான தீபிகை 'இல்லறத்தோர்க் கின்றியமையாச் சாதனமாகிய சந்தான பலனை இனிது விளக்கும் வடமொழிச் சந்தான தீபிகையைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடப்பட்ட நூலாகுமென, இதனை 1940ஆம் ஆண்டு பதிப்பித்த கொக்குவில் இ. சி. இரகுநாதையர் நூலாசிரியர் வரலாறு கூறுகையிற் குறிப்பிட்டுள்ளார். அதனை இந்நூற் பாயிரத்து மூன்ரும் நாலாஞ் செய்யுள்கள் செப்பிநிற்கும். மேலும் அச்செய்யுள்கள், ஒருவனுக்குப் புத்திரப் பேறில்லாததும், உளதாதலும், தத்த புத்திரர் கிடைத்தலும், புத்திரர் பிறந்திறத்தலும், அற்ப புத்திரர் பிறத்தலும், வெகுடத்திரர் பிறத்தலும், நோயும், மரணமும், செல் வமும், தரித்திரமும் என்னும் இவைகளைச் சோதிடரீதியாகத் தமிழிற் கூறுவதே இதன் நோக்க மென்பதையுங் குறிக்கும்.
பாயிரத்தின் இரண்டாஞ் செய்யுளாய,
‘நன்னூலாம் வடமொழிச்சந் தான தீ
பிகையதனை நலங்கு லாவு தென்னூலாய் பவர்தாமு மாராய்ந்து
கொண்டாடத் தெரித்தல் செய்தான் மின்னூலா மிடைவாணி மெய்யருளா
னெஞ்சகத்தும் புறத்து மேவு முன்னூலான் சந்திரசே கரன்புதல்வ
னிராமலிங்க முனிவன் ருனே.”
1. C. Sivaratnam - The Tamils in early Ceylon', Colombo, 1968,-Chola line
of Sinhalese kings of Kotte, P. 62,

Page 28
38 ஈழத் தமிழ் இலக்கியம்
என்னும் விருத்தம், இந்நூல் செய்தோன் பெயரையும், இதன் முத னுாலையும், இதனைத் தமிழிற் செய்த நோக்கத்தையுங் கூறியமையும்.
இதன் இறுதியிற் காணப்படும் செய்யுளாய
* சகவருட மீரெண்ணுரற் றெண்ணுன்கு மிரண்டுஞ்
சரிந்ததற்பின் பொருந்திடுநந் தனவருட மதனின் மிகவருடந் திடுமகரத் திங்கடனில் விளங்கி
வியப்புறுமூன் ருந்திகதி வியாழன்பூ சத்திற் செகமகிழுஞ் சந்தான தீபிகையைத் தமிழிற்
செய்யுணுாற் றிருபானுய்ச் சேர்த்துலகில் விளம்பு மிகபரம்வேண் டினர் நாளும் படித்துணர்வார் கேட்பா
ரெனுமாசை தனை மனங்கொண் டிதனையுரைத் தனனே.” என்னும் விருத்தம் இந்நூல் செய்த காலத்தையும், இதிலுள்ள செய்யுட்டொகை 120 என்பதையுங் குறிக்கும். சகவருடம் 1634க்குப் பின் வந்த நந்தன வருடத் தை மாத மூன்ரும் திகதி கிறிஸ்து வருடம் 1-1-1713க்குச் சரியானதாகும். எனவே, இந் நூல் 1713ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செய்யப்பட்டதென்பது பெற்ரும்.
இந்நூல் பன்னிரு பாவங்களுக்குரிய பலனையும் சந்தான சரிதை என்ற பகுதியையும் கொண்டு விளங்குகிறது. இது முதலில் 1868ஆம் ஆண்டு புரசைப்பாக்கத்தில் அச்சிடப்பட்டது, பின்னர் சு. நடேசையரின் பொழிப்புரையுடன் 1901ஆம் ஆண்டும், அதன் இரண்டாம் பதிப்பு 1940ஆம் ஆண்டும் யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
இராமலிங்க முனிவர் 1687ஆம் ஆண்டு பழமொழிப் பிரபந்தம் என்னும் நூலைச் செய்தாரெனச் சொல்லப்படுகிறது. அந் நூல் இப் பொழுது கிடைத்தற்கரிதாயிற்று. 16-5-1667இலே தனது பதினெட்டா வது வயதில் வாக்கிய கணித விதிப்படி இலங்கையில் முதன்முதற் பஞ்சாங்கம் கணித்து வெளிப்படுத்தியவரும் இவரே யென்பர்.
கல்வளையங்தாதி
கல்வளை யந்தாதி யாழ்ப்பாணத்துச் சண்டிருப்பாயிலுள்ள கல்வளைப் பதியில் எழுந்தருளிய விநாயகர்மீது பாடப்பெற்ற அந்தாதி நூலாகும். இது நூற்றந்தாதி இலக்கணத்துக் கமைய நூறு செய்யுள்களைக்கொண்டு விளங்குகிறது. கட்டளைக் கலித்துறை யாப்பிலமைந்துள்ள இச் செய் யுள்கள், யமக அந்தாதியாக விளங்கும். கல்வளைப் பிள்ளையாரை இந் நூல் கற்பகப் பிள்ளையாரென்றும், வலவை (வல்லபாம்பிகை) காந்தன் என்றும், இராமர் வணங்கும் வீரகத்தி விநாயகர் என்றும், பிரமா

ஈழத் தமிழ் இலக்கியம் 39
நந்தப் பிள்ளையா ரென்றுங் குறிப்பிட்டு அவரை வணங்குவோர்க்குத் தீவினையணுகாவென்றும் பிறவித் துயர் போமென்று முரைக்கும். இதிற் பல பாடல்கள் அகப்பொருள் தழுவித் தோழி கூற்ருகவும், செவிலி கூற்ருகவும், தலைவி கூற்ருகவும், பாங்கன் கூற்முகவும், தலைவன் கூற் முகவும் அமைந்துள்ளன.
இவ்வந்தாதியைச் செய்தவர் நல்லூர் சின்னத்தம்பிப் புலவரெனச் செப்புவர். திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1964ஆம் ஆண்டு வெளியிட்ட பதிப்பிற் காணப்படும் சிறப்புப் பாயிரச் செய்யுளாய
* செம்பொற் குவட்டினிற் பாரதந் தீட்டிய கோட்டினன் சீர்க் "கம்பக் கரிமுகன் கல்வளை வாழுங் கணபதிக்கு
நம்பற் கினியமுற் சங்கத்து நூலென நல்லைச்சின்னத் தம்பிப் புலவனல் லந்தாதி மாலையைச் சாற்றினனே.” என்னுங் கட்டளைக் கலித்துறை இதனை வலியுறுத்தும். இச் சிறப்புப் பாயிரஞ் செய்தார் வரதராச கவிராசர்" எனக் கருதப்படுகிறது.
மறைசையந்தாதி
மறைசை யந்தாதி திருமறைக்காடெனப்படும் வேதாரணியத்திற் கோயில்கொண்ட வேதாரணியேசுவரர் மீது நல்லூர் சின்னத்தம்பிப் புலவராற் பாடப்பெற்ற நூற்றந்தாதி நூலாகும். இது கட்டளைக் கலித்துறை யாப்பினுற் செய்யப்பட்ட திரிபந்தாதியாக விளங்குகிறது. திருமறைக்காடரைப் புகழ்ந்தும், அவரை வணங்கி மக்கள் ஈடேற்ற மடையலாம் என்ற பொருளிலும் இதன் செய்யுள்கள் அமைந்துள்ளன. அகப்பொருட்டுறை தழுவித் தலைவி, தோழி, தலைவன் ஆகியோர் கூற் றுக்களாக அமைந்த பாடல்களும் பல உள. இதன் நூற் சிறப்புப் பாயிரமாக அமைந்துள்ள Y
"செந்தா தியன்மணிப் பூண்புலி யூரற்குச் சேர்ந்தளித்துச்
சிந்தாத் தியானஞ்செய் வில்லவ ராயன் றிருப்புதல்வன்
நந்தா வளந்திகழ் நல்லைச்சின் னத்தம்பி நாவலன்சீர்
அந்தாதி மாலையை வேதாட வீசற் கணிந்தனனே.” என்னுஞ் செய்யுள், இதனை ஆக்கியோன் நல்லூர் வில்லவராயன் புதல் வன் சின்னத்தம்பி நாவலன் என்று தெரிவிக்கும். இந் நூற் சிறப்புப் பாயிரமளித்தவர் யாழ்ப்பாணம் வரதராச கவிராசர் என யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையாரின் பதிப்பிற் காணப்படுகிறது.

Page 29
40 ஈழத் தமிழ் இலக்கியம்
கரவை வேலன் கோவை
கரவை வேலன் கோவை கரவெட்டி வேலாயுத பிள்ளையைப் பாட் டுடைத் தலைவனுகக்கொண்டு செய்யப்பட்ட அகப்பொருட்’ கோவை நூலாகும். யாழ்ப்பாண நகரிலிருந்து பருத்தித்துறை செல்லும் வீதி யில் 17 கட்டை தூரத்திலுள்ளது கரவெட்டி என்ற கிராமம். அங்கு வாழ்ந்த பிரபுவாய சேதுநிலையிட்ட மாப்பாண முதலியார் மகன் வேலாயுதபிள்ளையின் புகழ் கூற எழுந்தது இந் நூல். இவர் பெயர் வேலாயுதர் எனவும் வேலாயுத உடையார் எனவும் வழங்கும் என்பது அக்காலக் காணித் தோம்புமூலம் அறியப்படும். இப்பிரபந்தத்தின் ஒன்பதாவது செய்யுளில்
* சேது நிலையிட்ட மாப்பாண னின்றருள் செல்வன்கலை
யோதும் வரிசைக் கரவையில் வேலன் ."
என்று சொல்லப்படுவதால் இவர் தந்தை பெயரும், பதினெராவது செய்யுளில்
* தாரணி மெச்சிய சிற்றம் பலவனைத் தந்ததந்தை
போரணி வாகைக் கரவையில் வேலன்...”
என்று சொல்லப்படுவதால் இவர் மைந்தன் பெயரும் தெரியப்பட்டன. இருபத்துமூன்ருவது செய்யுளில் வேளாளர் வேந்தன் கரவையில் வேலன்" என்பதால் இவர் குலமும் நிலையும் புலப்படும்.
இக்கோவை 425 கட்டளைக் கலித்துறைப் பாக்களைக் கொண்டு விளங்கிற்று. இப்பொழுது அத் தொகையில் 172 பாக்கள் காணப்பட வில்லை. 1935ஆம் ஆண்டு தி. சதாசிவ ஐயர் அச்சிட்டு வெளியிட்ட பதிப்பில் 322ஆம் செய்யுளின்பின் முழுமையாகவுள்ளது இக்கோவை யின் இறுதிப் பாவாய 425ஆம் செய்யுளே. மேலும் 69 செய்யுள்கள் இடையிடையே இல்லா தொழிந்தனவென அப்பதிப்புக் காட்டும். தான் வெளியிட்ட பதிப்பின் முகவுரையிற் சதாசிவ ஐயர்,
* காணித்தோம்பு ஒல்லாந்தராற் கடைமுறையாகத் திருத்தப்பட்ட காலம் கி. பி. 1754ஆம் ஆண்டென்பர். (டாக்டர் போ. பீரிஸ் இயற்றிய ** இலங்கையும் ஒல்லாந்தரும் ' பக்கம் 77. எனினும் நல்லூர்க் குறிச்சித் தோம்பு 1787ஆம் ஆண்டிலும் திருத்தப்பட்ட தென்பது அத்தோம்பிற் குறிக்கப்பட்டிருக்கிறது). இங்ங்னந் திருத்தப்பட்ட ஒல்லாந்தருடைய தோம்பைப் படியெடுத் தெழு திய ஓலைச் சுவடிகள் இப்போதும் யாழ்ப்பாணக் கச்சேரி ஆவணசாலையில் (Records Office) சேமமாக வைக்கப்பட்டிருக் கின்றன. அவற்றுள் கரவெட்டி வென்றிபாகுதேவன் குறிச்சிக் குரிய காணித் தோம்பில் சில நிலங்களின் சொந்தக்காரணுகச்

ஈழத் தமிழ் இலக்கியம் 41
சேதுநிலையிட்ட மாப்பாணமுதலியார் வேலாயுதர் என்னும் பெயர் காணப்படுகிறது. இதுவே இக்கோவைப் பாட்டுடைத் தலைவன் பெயர். இவர் கி. பி. 1754ஆம் ஆண்டுக்கு முன்னமே பிறந்து வளர்ந்து தக்கபிராயம் எய்தியவராதல் வேண்டுமென்பது வெளிப்படையாகும். ஆகவே இவர் பிறந்த காலம் கி.பி. 1730க்கு 5 வருடம் வரை முன்பின்னக இருத்தல் கூடுமென்பது மிகை யாகாது ".
என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இந்நூல் செய்தவர் யாழ்ப்பாணத்து நல்லூர்ச் சின்னத்தம்பிப் புலவரென நூலின் முகப்பிற் குறிக்கப்பட்டுள்ளது. கரவை வேலன் கோவை செய்யப்பட்ட வரலாற்றைச் சதாசிவ ஐயர் பின்வருமாறு தந்துள்ளார் : w
* சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் காலத்தில் இரு மரபுந் துய்ய மாப்பாண முதலியார் என வேறும் ஒரு வேளாள குலப் பிரபு கரவெட்டியில் இருந்தார். இந்த இரு குடும்பத்தவர்க்குட் பகைமையுண்டாகி ஒருவர்க்கொருவர் தீங்கிழைத்து வந்தனர். வேலாயுதபிள்ளை காலத்தில் அவரது எதிரிகள் தங்களுக்குப் புக ழாகவும் அவருக்கு இகழாகவும் கவி பாடுவிக்க எண்ணி அக் காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த நல்லூர்ச் சின்னத்தம்பிப் புல வரை அழைப்பித்தாராக, அதனைக் கேள்வியுற்ற வேலாயுதபிள்ளை புலவர் வரும் வழியில் தாமே முன்னதாகச் சென்று ஒரெல்லை மானப் பந்தல் அமைப்பித்து . அலங்கரிப்பித்து அதிற் புல வரை வரவேற்று . தமக்கு நன்மை பெருகும்படி தம்மேல் ஒரு தமிழ்ப்பிரபந்தம் பாடும்படி வேண்டிக்கொண்டனர். புலவ ரும் பிள்ளையவர்கள் செய்த வரவேற்புபசாரங்களுக்கு மகிழ்ந்து அவர் வேண்டுகோட்கியைந்து இக் கோவைப் பிரபந்தத்தைப் பாடி னர். பாடும்போது ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு வராகன் உட்புதைந்த ஒவ்வொரு தேங்காய் பரிசிலாகப் புலவருக்கு வழங் கப்பட்டது.
இவ்வரலாறு சின்னத்தம்பிப் புலவரே இதனைச் செய்தாரென்பதற்
காதாரமா யமைந்துள்ளது,
"நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் வில்லவராசன் புதல்வன்' என்பது மறைசையந்தாதிக்குச் சொல்லப்பட்ட சிறப்புப்பாயிரத்தாற் றெளிதல் கூடும். கி. பி. 1707இற் கொழும்பிலிருந்த சீமோன் ஸ்ன்னும் ஒல்லாந்த தேசாதிபதியின் கட்டளைப்படி, யாழ்ப்பாணத்தில் திசாவை உத்தியோ கத்திலிருந்த கிளாஸ் ஐசாக்ஸ் என்னும் ஒல்லாந்தனலே தொகுக்கப் பட்ட "தேசவழமை " என்னும் சட்டங்களை ஆராய்ந்து அதிலே

Page 30
42 ஈழத் தமிழ் இலக்கியம்
தொகுக்கப்பட்டுள்ள தமிழர் வழக்கங்கள் நாட்டில் வழங்கிய வண்ணம் உண்மையானவை யெனச் சம்மதங்கொடுத்துக் கைச்சாத்திட்ட பிரபல மான தமிழ் முதலிமார் பன்னிருவருள் முதலாமாளாக ஒப்பமிட்டவர் தொன் பிலிப் வில்லவராச முதலியார் ஆவர். நாலாமாளாக ஒப்ப மிட்டவர் தொன் ஜுவான் சந்திரசேகரமான முதலியார் என்பவர். அக் காலத்தே பதவியிலுள்ளோர்க்கு இயற் பெயருடன் போர்த்துக்கேய அல்லது ஒல்லாந்தப் பெயர்களும் கட்டாயமாகச் சேர்ப்பிக்கப்பட்டன. சின்னத்தம்பிப் புலவர் தாம் இயற்றிய பருளை விநாயகர் பள்ளு என்ற பிரபந்தத்தில்
* நாளுங் கலியைத் துரப்பதே யன்றி
நாளை வாவென் றுரைத்திடான் நம்பி னுேர்க்கருள் தருத யாபரன்
வெம்பி னுேர்க்கரி யேறனுன் வாளின் றடக்கைச் சந்திர சேகர
மானு முதலி வாழவே.
எனச் சந்திரசேகர மான முதலியைப் பாடியிருக்கிருர். எனவே, அவர் காலத்திருந்த தொன் பிலிப் வில்லவராச முதலியாரே சின்னத்தம்பிப் புலவரின் தந்தையென்று கொள்ளலாம். ஆகவே, இப் புலவர் காலம் 18ஆம் நூற்ருண்டின் நடுப்பகுதியென்று கொள்ளுதல் பொருந்தும்.
சிறு பையன யிருக்கும்போதே புலமையுடையவராய் விளங்கியமை யால் இவரைச் சின்னத்தம்பிப் புலவர் என்ற காரணப் பெயரால் மக்கள் அழைத்தனர் என்பர். இவரது இயற்பெயர் செயதுங்க மாப் பாண முதலியார் என்பது இவராற் பாடப்பட்டதாக வழங்கும் ஒரு சீட்டுக் கவியில்
* செகராசன் மதிமந்திரி யானசின் னத்தம்பிச்
செயதுங்க னெழுது மோலை”
என இவர் தம்மைச் சின்னத்தம்பிச் செயதுங்கன் என்று குறிப்பிடுவத ஞலும், இவருக்கும் கொச்சிக் கணேசர் என்ற பிராமணப் பிரபுவாற் பரிசிலளிக்கப்பட்ட பண்டாரக்குளம் என்ற வயல் நிலம், காணித் தோம்பிற் செயதுங்க மாப்பாண முதலியார் தாமோதரம்பிள்ளை பெயரி லிருப்பதாலும் பெறப்படும். தாமோதரம்பிள்ளை யென்பது இவரது மகன் பெயராதல் சாலும்.
ஒல்லாந்தர் நல்லூரிறைக் காணித் தோம்புகளைத் திருத்தியது 1754இல் ஒரு முறையும் 1787இல் மறுமுறையுமென முன்னர் கண் டோம். 1754ஆம் ஆண்டுக்கு முன் இந்நிலம் சின்னத்தம்பிப் புலவ

ஈழத் தமிழ் இலக்கியம் 43
ருக்கு வழங்கப்பட்டிருப்பின் அது அவர் பேரிற் பதிவுசெய்யப்பட்டிருக் கும். 1787ஆம் ஆண்டுக்குப்பின் அவர் வாழ்ந்திருந்தாலும் அந் நிலம் அவர் பேரிற் பதிவு செய்யப்பட்டிருக்கும். எனவே, சின்னத்தம்பிப் புலவர் பரிசில் பெற்றுப் பிரசித்தியுற்றிருந்த காலம் 1754ஆம் ஆண்டுக் கும் 1787ஆம் ஆண்டுக்கு மிடைப்பட்ட காலத்தே யென்று கருதலாம்.
பருளை விகாயகர் பள்ளு
பருளை விநாயகர் பள்ளு நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் செய்த மற் ருெரு நூலாகும். இது சுழிபுரத்திலுள்ள பருளாய் என்னுந் தலத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானப் பாட்டுடைத் தலைவனகக் கொண்டு பாடப்பட்ட பள்ளுப் பிரபந்தமாகும். இத்தகைய நூல்களின் இலக்கணத்துக்கமைய மூத்த பள்ளி, இளைய பள்ளி, பள்ளன், பண்ணைக் காரன் ஆகிய நாலு பாத்திரங்களைக் கொண்டு பருளை விநாயகர் பெருமை தோன்றச் சிந்தும் விருத்தமும் கலிப்பாவும் விரவிச் செய்யப் பட்டுள்ளது. இதில் வரும் மூத்த பள்ளி ஈழமண்டலப் பள்ளியாகவும், இளைய பள்ளி சோழமண்டலப் பள்ளியாகவும் காட்சியளித்து, ஈழநாட் டுப் பெருமையும் சோழநாட்டுப் பெருமையும் முறையே பேசிக்கொள் கிருர்கள்.
இந்நூலிற் காப்புச் செய்யுள் வழக்கத்துக்கு மாருகக் 'கண்ணனே காப்பு’ என்று கண்ணபிரான வேண்டி நிற்கிறது. அதன்பின் விநாயகர், நடேசர், சிவகாமியம்மை துதி இடம் பெறுகின்றன. இவற்றைத் தொடர்ந்து பள்ளியர் தோற்றம், பள்ளியர் வரலாறு கூறல், பள்ளன் தோற்றம், பள்ளியர் தத்தம் நாட்டுவளங் கூறல், குலமுறை கிளத்தல், குயில் கூவுதல், மழைகேட்டல், ஆற்றுவரவு, பண்ணைக்காரன் தோற் றம், ஆண்டையை வணங்கல், விதை வகை கேட்டல், முறைப்பாடு, பள்ளன் மூத்தபள்ளியை வேண்டல், மூத்தபள்ளி ஆண்டையை வேண் டல், பள்ளன் ஆண்டைக்குக் கணக்கொப்பித்தல், முகூர்ந்தங் கேட்டல், மூத்தபள்ளி யிரங்கல், நாற்று நடுதல், அதன் விளைவு ஆகியன சொல் லப்பட்டு, இடையிடையே அகப்பொருட்டுறை விரவிய செய்யுள்கள் இடம்பெற்று விளங்கும். நூலில் எல்லாமாக 130 செய்யுள்கள் காணப் படுகின்றன.
சின்னத்தம்பிப் புலவர் பேரில் இந்நூல் வழங்குவதைத் தவிர இதனை அவர் செய்தா ரென்பதற்கான சான்றெதுவும் நூலகத்தில்லை. தன் தந்தையின் சகபாடியும் தன் காலத்து வாழ்ந்துவருமான சந்திர சேகர மானு முதலியென்ற பிரபுவை இவர் இந்நூலின் 121ஆவது செய்யுளில் வாழ்த்தி யிருப்பது, சின்னத்தம்பிப் புலவர் இந்நூலைச் செய்திருக்கலாமென்ற கருத்துக்குச் சாதகமாயமைந்துள்ளது.

Page 31
44 ஈழத் தமிழ் இலக்கியம் வட்டுக்கோட்டைப் பிட்டியம்பதிப் பத்திரகாளியம்மை ஊஞ்சல்
வட்டுக்கோட்டைப் பிட்டியம்பதிப் பத்திரகாளியம்மை ஊஞ்சல் அவ் வூரைச் சேர்ந்த கணபதி ஐயராற் செய்யப்பட்ட தென்பர். இது எண் சீர் விருத்தப் பாக்கள் பத்துக் கொண்டு விளங்குகிறது. அவற்றுள் முதல் விருத்தங் காப்புச் செய்யுளாகவும், இறுதி விருத்தம் வாழி கூறும் செய்யுளாகவு மமைய, ஏனைய எட்டும் ‘ஆடீ ரூஞ்சல்" எனப் பத்திர காளி யம்மையின் புகழ்கூறி ஊஞ்சலாட்டுவனவாக அமைந்துள்ளன. ஒவ்வொரு விருத்தத்தின் பின்னும் பத்திரகாளியம்மைக்கான வெவ் வேறு நிவேதனப் பொருள்கள் அச்சான பிரதிகளிற் குறிக்கப்பட்டுள்ளன. பிட்டியம்பதியிற் பத்திரகாளியம்மை சமேதராய் வீரபத்திரக் கடவுளும் கோயில்கொண்டெழுந்தருளியுள்ளார். அதனுற் கணபதி ஐயர் அவ் வீரபத்திரர் பேரிலும் பத்திரகாளியம்மை பேரிலும் பதி கங்கள் பாடியுள்ளாரென்பர். அவை யிப்பொழுது சிதைந்துபோய், இர்ண்டொரு பாடல்களே கிடைக்கக்கூடியனவா யிருக்கின்றன. அப் பாடல்களும் அப்பதிகங்களுக்குரியன வெனத் தெளிதற்கில்லை.
கணபதி ஐயர் வண்ணை வைத்தியலிங்கக் குறவஞ்சி, வாளபிமன் நாடகம் ஆகியனவு மியற்றியுள்ளா ரென்பர். அந்நூல்கள் இப் பொழுது கிடைத்தில. வாளபிமன் நாடகம் வேறு சிலராலும் செய்யப் பட்டுள்ளது. இப்பொழுது கிடைக்கும் வாளபிமன் நாடகம் இவ ரெழுதியதன்றென்பது அறிஞர் கருத்து. இவர் வேறு நாடகங்களு மெழுதியுள்ளா ரென்பர்.
கணபதி ஐயர் 1803ஆம் ஆண்டுவரை வாழ்ந்தாரெனச் சைமன் காசிச்செட்டி தன் நூலிற் கூறியுள்ளார். இவரெழுதிய வண்ணை வைத் தியலிங்கக் குறவஞ்சி "வண்ணுர்பண்ணை வயித்தீஸ்பரர் மேலது’ எனப் பாவலர் சரித்திர தீபகம் கூறும். வண்ணை வைத்தீஸ்வரர் கோயில் 1787ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1791ஆம் ஆண்டு திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. எனவே, 1791ஆம் ஆண்டுக்கும் 1803ஆம் ஆண்டுக்கு மிடைப்பட்ட காலத்திலேயே அவர் வைத்தியலிங்கக் குறவஞ்சியைப் பாடியிருக்கலாம். அக்காலத்தோ அல்லது அதற்குச் சிறிது முன்னரோ இவர் பத்திரகாளியம்மை ஊஞ்சலைப் பாடியிருத்தல் கூடும். எவ்வாறயினும், இவ்வூஞ்சல் 18ஆம் நூற்ருண்டின் பின்னரைப் பகுதிக்குரியதென்று கொள்வது பொருந்தும்.
பஞ்சவன்னத் தூது
பஞ்சவன்னத் தூது இணுவைச் சின்னத்தம்பிப் புலவரால் இயற்றப்
பட்டதென்பர். இது இயற்றமிழ்ப் பாங்கும் நாடகத் தமிழ் முறையும் விரவச் செய்யப்பட்டிருக்கிறது. பிள்ளையார், சிவகாமியம்மை, சுப்பிர

ஈழத் தமிழ் இலக்கியம் 45
மணியக்கடவுள், வயிரவக் கடவுள், பத்திரை ஆகியோருக்கு வணக்கங் கூறித் தருவும் விருத்தமுங் கொண்டு நடக்கிறது. இடையிடையே கொச்சகக் கலிப்பாவும், இறுதியில் அகவலும் இடம் பெறுகின்றன.
காலிங்கராயனருள் பாலன் கயிலாயநாதன் இணுவையில் வீதி உலா வந்ததும், சந்திரமோகினி என்ற பெண் அவனைக் கண்டு காதல் கொண்டதும், அவள் வெண்ணிலாவையும், தென்றலையும், கிளியை யும், அன்னத்தையும், தோழியையுந் தூதனுப்பியதும், கயிலாயநாதன் அவளை மணந்துகொள்ளச் சம்மதித்ததாகத் தோழியிடஞ் சொல்லி யனுப்பியதும் இதிற் கூறப்பட்டுள்ளன.
கயிலாயநாதனுக்கு இளந்தாரி யென்ற பெயருங் கூறப்பட்டுள்ளது. அவ் விளந்தாரி தென்னினுவையூரை யென்றுங் காப்பவனுகக் காட் டப்பட்டிருக்கிறது. இணுவிலில் இளந்தாரி கோயில் உளது. அங்கு எழுந்தருளியிருக்கும் இளந்தாரி யென்ற கைலாயநாதன் மீதே இத் தூது பாடப்பட்டிருக்கிற தென்பது, இன்றும் அங்கு விழாக் காலங் களில் இப்பாடல் பாடப்படுவதிலிருந்தறியலாம். இளந்தாரி கோயில் இணுவிலுக்கு மட்டுஞ் சிறப்பாக உரியதொன்ருகும்.
‘நதிக்குலத்தி லுதித்திடுகா லிங்க மன்னன்
நற்றவத்தாற் பெற்றசுதன் நவகண் டங்கள் துதிக்குமிளந் தாரிகயி லாய நாத
துரை’ என இந்நூலிற் காணப்படுவதால், இக்கயிலாயநாதன் கங்கைகுலத் துதித்த காலிங்கன் ஒருவனது சந்ததியினனெனத் தெரிகிறது. மாகன் காலந் தொட்டுக் காலிங்க மன்னர்கள் யாழ்ப்பாணத்தி லரசுநடாத் தியவர்களாகையால், அவர்கள் சந்ததியிலுள்ள வீரனெருவனுக் கெழுந் ததா யிருக்கலா மிவ்விளந்தாரி கோயில். இதனைச் " சிங்கை யாரியர் போற்றிளந் தாரி கயிலாயன் எனக் கிளியைத் தூதுவிடும் பகுதி யில் வரும் அடி வலியுறுத்தும்.
சிவகாமியம்மை துதி
சிவகாமியம்மை துதி பத்துச் செய்யுள் கொண்ட பதிகமாகும். செய் யுள் ஒவ்வொன்றும் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமா யமைந்துள்ளன. இணுவிலிலே எழுந்தருளியிருக்கும் சிவகாமியம்மை மீது இப்பதிகம் பாடப்பட்டதாகத் தெரிகிறது. இதனைச் சிவகாமி யம்மை பிள்ளைத் தமிழ் என்று கூறுவாருமுளர். இப் பாடல்களிற் பிள்ளைத் தமிழின் அமைப்பெதுவும் இல்லாமையால் அது பொருந்தாது என்பது தெளிவு. இப்பதிகத்தை இணுவைச் சின்னத்தம்பிப் புலவ ரியற்றினரென்பர். இவரியற்றியதாகக் கருதப்படும் 'கயிலாயநாதர் தோத்திரம் பதினெரு விருத்தப் பாக்களைக் கொண்டுள்ளது. இதுவும்

Page 32
46 ஈழத் தமிழ் இலக்கியம்
இணுவிலிற் கோயில்கொண்டுள்ள கயிலாயநாதர் என்ற இளந்தாரிமீது பாடப்பட்டதாம். இப் புலவர் ஒரு சமயம் தன் பகைவரால் மறியலி லிருத்தப்பட்டாரெனத் தெரிகிறது. அப்பொழுது சிறைச்சாலையி லிருந்து வீடு பெறப் பாடிய " சிவகாமியம்மைபதிகம் ', கொச்சகக் கலிப்பாவினல் அமைந்துள்ளது. இதன் 7ஆவது செய்யுளாய
* துப்பூட்டு மென்றெனது துன்னுர் சிறைப்படுத்தும்
அப்பூட்டுத் தீய அரியசிறை வீட்டிருக்கும் இப்பூட்டு நிர்ப்பூட்டா யென்சிறையை நீக்கியருள்
செப்பூட்டும் பொற்ருட் சிவகாம சுந்தரியே.
என்ற கொச்சகத்தைப் பாடியதும் சிறைக் கதவு திறக்கப்பட்டதென இப்பதிக ஏட்டுப் பிரதிகளிற் குறிக்கப்பட்டிருக்கக் காணலாம், இச் சம்பவத்துக்குச் சான்று பகர்வதுபோல இப் பதிகத்தின் ஒன்பதாவது செய்யுளின் இறுதி யடியாய
துன்னிச் சிறைதீர்த்த சிவகாம சுந்தரியே’ என்ப தமைந்திருத்தல் கவனிக்கத் தக்கதே.
இவற்றைவிட, நொண்டி நாடகம், கோவலன் நாடகம், அனுவுருத் திர நாடகம் முதலாய நாடகங்களும் இவர் எழுதியுள்ளாரெனத் தெரிகி றது. இவரது பட்டப்பெயர் 'கதிர்காம சேகர மானு முதலியார்” என வும், இவர் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத் திறுதியில் வாழ்ந்தவரெனவும் "ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’ கூறும்.
தண்டிகைக் கனகராயன் பள்ளு
தண்டிகைக் கனகராயன் பள்ளு தெல்லிப்பழையிலே செல்வந்தராய் விளங்கிய கனகராய முதலியாரின் இல்லத்துப் புலவராய் விளங்கிய மாவிட்டபுரம் சின்னக்குட்டிப் புலவராற் செய்யப்பட்ட பள்ளுப் பிரபந்த மாம். கனகநாயக முதலியாரின் முற் சந்ததியினரும், காரைக்காட்டி லிருந்து வந்து தெல்லிப்பழையிற் குடியேறிய வேளாளருள் முதன்மை யானவருமான கனகராயன் என்பவரைப் பாட்டுடைத் தலைவனுகக் கொண்டு இந்நூல் செய்யப்பட்டுள்ளது. கனகராயன் ஆரியச் சக்கர வர்த்திகள் காலத்திற் குடியேறியவராகையால், அம் மன்னர் அவருக் குத் தண்டிகைகள் வழங்கிக் கெளரவித்தனர். அதனல் அவர் தண்டிகைக் கனகராயன் என வழங்கப்படலாயினர். இந்நூலிலே தண்டிகைக் கண்க ராயனும், அந்த வழிவந்த கனகநாயக முதலியார், அவரது சகோதரர், மாமன், மைத்துனர் ஆகிய நெருங்கிய உறவினரும், அவர் கிளையிலே, பிரபல்யமுற்று விளங்கிய சிலரும் புகழ்ந்துரைக்கப்படுகிருர்கள். அவர்கள் சுற்றமித்திரராயுள்ளோர் வாழும் தெல்லிப்பழை, மயிலிட்டி, இருபாலை ஆகிய இடங்களிலுள்ள பல பிரமுகர்களும் புகழப்படுகிருர்கள். காரைக்காட்டு வேளாளர் வளமும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

ஈழத் தமிழ் இலக்கியம் 47
ஏனைய பள்ளுக்களிற் போல இதிலும் மூத்த பள்ளி, இளைய பள்ளி, பள்ளன், பண்ணைக்காரன் ஆகிய பாத்திரங்களே தோற்றுவரெனினும், பள்ளிகள் வடகாரைப் பள்ளியாகவும் தென்காரைப் பள்ளியாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். நாட்டு வளங் கூறும் பகுதியில் அவர்கள் வட காரை வளமுந் தென்காரை வளமுமே கூறுவர்.
இந்நூல் விநாயகர் காப்புச் செய்யுளும், சுப்பிரமணியர் காப்புச் செய்யுளுங் கொண்டு, விநாயகர், நடேசர், கதிரையாண்டவர், திருமால், சரஸ்வதி ஆகியோர் துதிகூறிப் பள்ளியர் தோற்றத்துட னரம்பிக்கிறது. இதிலிருந்து நாற்றுநடுகையீருக 153 செய்யுள்கள் கிடைக்கப்பெற்று, யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கப் பிரசுரமாக 1932 ஆம் ஆண்டு வெளிவந்தது. அவற்றுள்ளும் சில செய்யுள்கள் முழு மையாகக் கிடைத்தில.
நூலின் இறுதியிலே, தண்டிகைக் கனகநாயக முதலியாரின் புதல்வனுன கந்தப்பனது திருமண வாழ்த்துப்பா இடம் பெறுகிறது. அத்திருமணம் பரிதாவி வருடம் ஆணித்திங்கள் இருபத்துமூன்ருந் திகதி நடைபெற்றதாக அதிற் குறிக்கப்பட்டுள்ளது. இப் பரிதாவி ஆண்டு கி.பி. 1792 என வ. குமாரசாமி கணக்கிட்டுக் காட்டியுள்ளார். தன் மகனுடைய விவாகத்தின் பின் ஒரு வருடத்துக்குள்ளே கனகநாயக முதலியார் இறந்துவிட்டாராகையால், இந் நூல் 1792க்குச் சில ஆண்டுகள் முன்னர் எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று துணியலாம்.
புலியூரங்தாதி
புலியூரந்தாதி சிதம்பரத்தி லெழுந்தருளியிருக்கும் சிவபிரானைப் போற்றிப் பாடப்பட்ட நூலாகும். இது கடவுள் வாழ்த்து நீங்கலாக நூறு கட்டளைக் கலித்துறைகளைக் கொண்டு நூற்றந்தாதியாகவும் யமக அந்தாதியாகவும் விளங்குகிறது. இதில் வரும் பல செய்யுள்கள் அகப் பொருட்டுறை தழுவியனவா யமைந்துள்ளன.
இதன் சிறப்புப்பாயிரமாய * நெய்யார்ந்த வாட்கைச் செகராச சேகரப் பேர்நிறுவி மெய்யாக விண்ணெண் கலைதமி ழாக விரித்துரைத்த வையாவின் கோத்திரத் தான்மயில் வாகனன் மாதவங்கள் பொய்யாத வாய்மைப் புலியூரந் தாதி புகன்றனனே.” என்ற செய்யுள், புலியூரந்தாதியின் ஆசிரியர் மயில்வாகனப் புலவர் என்பதைக் காட்டி நிற்கும்.
1. தண்டி கைக் கனகராயன் பள்ளு, யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்
சங்கப் பிரசுரம், இல, 2, சென்&ன, 1982, பக். 67, 68.

Page 33
48 ஈழத் தமிழ் இலக்கியம்
மயில்வாகனப் புலவரும் வண்ணை வைத்தியலிங்கச் செட்டியாரும் கூழங்கைத் தம்பிரானிடம் ஒருங்கு கல்வி பயின்றவர்கள். வண்ணை வைத் தீஸ்வர சுவாமி கோயில் 1787இற் கட்ட ஆரம்பித்து 1791இல் முடிவுற் றது. 1805இல் வைத்தியலிங்கச் செட்டியார் தம் ஆஸ்திகளைப் பற்றிய மரணசாதனப் பத்திரம் பிறப்பித்தார் என்பது அப்பத்திர வாயி லாகவே இன்றும் நாமறியலாம். அங்ங்ணம் பத்திரம் பிறப்பித்தபின் செட்டியார் மயில்வாகனப் புலவரையும் அழைத்துக்கொண்டு காசிக்குப் பிரயாணமானுர் என்பது வரலாறு. காசி யாத்திரையின் பின் இதனை அவர் எழுதியிருப்பின், இது 19ஆம் நூற்ருண்டுக்குரிய நூலென்று கருதப்பட வேண்டும். அதற்கு முன் எழுதப்பட்ட நூலானல், 19ஆம் நூற்ருண்டின் ஆரம்பத்திலோ அன்றி 18ஆம் நூற்ருண்டின் இறுதி யிலோ செய்யப்பட்டிருத்தல் வேண்டும். இதனைத் திண்ணமாகக் கணிக் கத்தக்க ஆதாரமெதுவும் நூலகத்தில்லை.
காசி யாத்திரை விளக்கம்
காசி யாத்திரை விளக்கம் என்ருெரு நூலையும் மயில்வாகனப் புலவர் எழுதினர் என்பர். அந்நூல் இப்பொழுது அகப்படாமையால், அது பற்றி ஆராய முடியவில்லை. எவ்வாருயினும், தான் மேற்கொண்ட காசி யாத்திரையின் அநுபவத்தைக் கொண்டே இந்நூலை மயில்வாகனப் புலவர் எழுதியிருக்க வேண்டுமென அனுமானிக்கலாம். அவ்வாருஞல், அது 1805ஆம் ஆண்டுக்குப் பிந்தியே செய்யப்பட்டிருக்கு மென்பது தெளிவு. எனவே, அது 19ஆம் நூற்ருண்டுக்குரிய நூலாகிறது.
ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்து நூல்களாகக் கருதப்படும் "இராச முறை” என்ற நூலும், ‘பரராசசேகரன் உலா' என்ற நூலும் மாதகல் மயில்வாகனப் புலவர் காலத்தின் பின் மறைந்தன. இவற்றைவிடத் திருச்செல்வராசர் காவியம் செய்த பூலோகசிங்க முதலியார் திருச் செல்வராசர் அம்மானை* ஒன்றுஞ் செய்துள்ளார். அந்நூல் எமக்குக் கிடைத்திலது. வட்டுக்கோட்டைப் பிட்டியம்பதி பத்திரகாளியம்மை ஊஞ்சல் யாத்த கணபதி ஐயர் அதே பத்திரகாளியம்மை பேரிற் பதிக மொன்றும், வண்ணை வைத்தியலிங்கக் குறவஞ்சி என்ற நூலுஞ் செய் துள்ளாரெனக் கூறுவர். அந் நூல்களும் இப்போது கிடைத்தில. கூழங் கைத் தம்பிரான் என்று பெயர் வழங்கும் புலவர் செய்த நூல்கள் யோசேப்புப் புராணம், நல்லைக் கலிவெண்பா, கூழங்கையர் வண்ணம். சித்தி விநாயகர் திருவிரட்டைமணிமாலை என்பர். அந் நூல்களும் மறைந்தொழிந்தன. முத்துக்குமாரர் என்பார் கஞ்சன் காவியம் என்ற நூலையும், வலைவீசுபுராணம் என்ற நூலையும் இயற்றினர் என்பர். அந்நூல்களும், பிரான்சிசுப்பிள்ளை இயற்றியனவாகச் சொல்லப்படும் இரட்சப் பதிகம், பச்சாத்தாபப் பதிகம், கீர்த்தனத்திரட்டு,* திருவா சகம், தசவாக்கிய விளக்கப் பதிகம், பிள்ளைக்கவி* ஆகிய நூல்களும் கிட்டாதாயின. எனவே, அவற்றை ஈண்டு ஆய்வுக்கு எடுத்துக்கொள் ளாது விடுத்தனம்.
*இவை ஒருமுறை அச்சில் வெளிவந்தனவென்பர்.

ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி
இயல் - II
கி. பி. பத்தொன்பதாம் நூற்ருண்டின் முன் ஈழத்தெழுந்த அகப் பொருள் இலக்கியங்களுள் எமக்குக் கிடைக்கத்தக்கனவாய் உள்ளன குருநாத சுவாமி கிள்ளைவிடு தூது, பஞ்சவன்னத் தூது, வெருகல் சித்திரவேலாயுதர் காதல், கரவை வேலன் கோன்வ ஆகிய நாலுமேயாம். இவற்றுள் முதற்கண் கூறப்பட்ட தூது இலக்கியங்கள் இரண்டும் கி. பி. பதினெட்டாம் நூற்றண்டுக்கு உரியனவேனும், தூதுப் பிரபந் தத்தின் இலக்கணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவ்விரண்டுக்கு மிடையே பல வேற்றுமைகள் இருக்கக் காணலாம். எனவே, முதலில் தூதுப் பிரபந்தத்தின் இலக்கணத்தையும் அதன் வடிவ வளர்ச்சியினை யும் நோக்குவோம்.
தூது எனும் பிரபந்தம் கி. பி. பதினன்காம் நூற்ருண்டளவிலேயே முழுப் பொலிவு பெற்றிருப்பினும், அதன் தோற்றத்தை முதலிலே தொல்காப்பிய அகத்திணை யியலிற் காண்கிருேம். களவொழுக்கத்தின் போது வரைவிடை வைத்துப் பொருள்வயின் நிகழும் பிரிவு, கற்புக் காலத்தில் ஒதல், பகை, தூது ஆகியவற்றிற்காக நிகழுமெனவும், ஆங்கு
* ஒதல் பகையே தூதிவை பிரிவே" எனவும்
*அவற்றுள் ஒதலும் தூதும் உயர்ந்தோர் மேன’’ எனவும் கூறியவற்றிலிருந்து, அந்தணர், அரசர் ஆயினேர் புறப் பொருள் சார்ந்த தூது செல்லும் வழக்கம் அன்றிருந்ததெனத் தெரி கிறது. அன்றியும்,
1. தொல். அகத், சூ. 25. 2. தொல், அகத். கு. 28.
F一4

Page 34
50 ஈழ்த்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி
* தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி யிளையவர் விருந்தினர்
கூத்தர் விறலிய ரறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப '' என்னும் தொல்காப்பியக் கற்பியற் சூத்திரம், தோழி, தாய், பார்ப் பான், பாங்கன், பாணன், பாடினி, இளையவர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் ஆகியோர் தலைவன் தலைவியருக் கிடையேயுள்ள பிரிவைப் போக்க அகப்பொருள் சார்ந்த தூது செல் லும் வாயில்களாவர் என்பதைக் கூறும்.
உயர்திணைக் குரியாரையே யன்றி அஃறிணைப் பொருள்களையுந் தூது விடும் இலக்கிய மரபு அன்றிருந்ததென்பது,
* வாரா மரபின வரக்கூ றுதலும்
என்னு மரபின எனக்கூ றுதலும் அன்னவை யெல்லா மவற்றவற் றியல்பான் இன்ன என்னுங் குறிப்புரை யாகும் ’’ எனும் தொல்காப்பியச் சொல்லதிகாரச் சூத்திர உரையில் இளம் பூரணர்,
* விலங்கும் மானும் புள்ளும் உள்ளநோய் உற்ருர்க்கு மனக்குறைக்கு மறுதலை மாற்றம் கூறுவனபோலுங் குறிப்பினவாகப் புலப்படுதலால் இதுசொல்லப்பட்டது"
என விளக்குவதாலும்,
*முட்டுவயிற் கழறன் முனிவுமெய்ந் நிறுத்த
லச்சத்தி னகற லவன்புணர்வு மறுத்த றுாதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல் காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென் ருயிரு நான்கே யழிவில் கூட்டம் ”* என்ற மெய்ப்பாட்டியற் சூத்திரத்தில், தூது முனிவின்மை என்றதற் குப் பேராசிரியர்,
"புள்ளும் மேகமும் போல்வன கண்டு சொல்லுமின் அவர்க்கென்று துரதிரந்து பன்முறை யாலுஞ் சொல்லுதலும்’
1. தொல், சுற். கு, 52. 2. கொல். சொல். எச்ச. கு. 25. 3. தொல், பொருள். மெய். கு. 28.

ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி 51
என உரை கண்டிருத்தலாலும் பெறப்படும். இவ்வாறே புறப்பொருள் சார்பான தூதும் அஃறிணைப் பொருள்கள் மூலம் அனுப்பும் மரபு முண்டு. இவற்றுக்கான இலக்கியங்களைச் சங்க நூல்களிற் காணலாம். அகப்பொருள் சான்ற தூதுக்குச் சான்ருக, அகநானூற்றில் நண்டு (170), நற்றிணையில் நாரை (54), (70), கிளி (102), வண்டு (277) ஆகியவற்றைத் தலைவி தலைவன்பாற் றுாதாயனுப்புஞ் செய்யுள்களையும், புறப்பொருள் சான்ற தூதுக்குச் சான்ருகப் புறநானூற்றில் அன்னச் சேவலைப் பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனிடந் தூதாயனுப்புஞ் செய்யுளையும் (67) எடுத்துக் காட்டலாம்.
இனிப் பாட்டியல் நூல்கள் தூதுப் பிரபந்தம் பற்றிக் கூறும் இலக் கணத்தை நோக்குவாம்.
* பயிறருங் கலிவெண் பாவி ஞலே
யுயர்திணைப் பொருளையு மஃறிணைப் பொருளையுஞ் சந்தியின் விடுத்தன் முந்துறு தூதெனப் பாட்டியற் புலவர் நாட்டினர் தெரிந்தே. ” என்பது இலக்கண விளக்கப் பாட்டியற் சூத்திரம். இங்கே சந்து செய் யும் நோக்கத்திற்காக உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளை யும் தூதுவிடும் இலக்கியம் கலிவெண்பாவினுற் செய்யப்படுமென்று சொல்லப்பட்டிருப்பதிலிருந்து, தொல்காப்பியனர் தூதுபற்றிக் குறித்த கருத்துச் செறிந்திருப்பதனை இதிற் காணலாம். அதே கருத்தினையே சிதம்பரப்பாட்டியலும், "இருதிணையை விடல் தூது’ என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறியுள்ளது. நவநீதப் பாட்டியல் * கலிவெண்பா தூது ' என்று மட்டுங் கூறி அமையும். தூது இலக்கியம் கலிவெண்பாவினுற் செய்யப்படவேண்டுமென்ற விதி பாட்டியலார் காலத்துப் பயின்ற பிரபந்த வகையையொட்டிப் புதிதாக எழுந்த ஒன்ருகும்.
தொல்காப்பியனர் காலந்தொட்டுத் தனிப் பாடல்களில் இடம் பெற்றுவந்த தூதுவிடும் மரபு, படிப்படியாக வளர்ந்து நாயன்மார் பதிகங்களிலும் ஆழ்வார் பாசுரங்களிலும் காப்பியங்களிலும் இடம் பெற்றுக் காலப்போக்கிலே தனியொருவகைச் சிற்றிலக்கியத்தைப் பிறப் பித்தது. அவ்வாறு தூதுவிடும் முறையில் எழுந்த முதற் சிற்றிலக்கியம் கி. பி. பதினன்காம் நூற்ருண்டின் முற்பகுதியில் வாழ்ந்த உமாபதி சிவாசாரியர் செய்த "நெஞ்சுவிடு தூது" என்பர். முதல் எழுந்த தூதுச் சிற்றிலக்கியம் பெற்றிருந்த அமைப்பினைச் சிறிது கவனிப்போம்.
நெஞ்சுவிடு தூது காப்புச் செய்யுளாக வெண்பா ஒன்றினையும் நூற்றிருபத்தொன்பது கண்ணிகளையுங் கொண்டு விளங்குகிறது. நூலின் முதற் பகுதியிற் சிவபெருமானைப்பற்றிய செய்திகள் கூறப்படு

Page 35
52 ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி
கின்றன. இப் பகுதியிற் பூமேவும் உந்திப் புயல் வண்ணனும் நாமே வும் மாதுபுணர் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய் உருவெடுத் துச் சென்று தேடியும் அறியா இயல்பினன் சிவனெனக் கூறிச் சிவபெரு மானின் பரம்பொருள் உண்மை விளக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சைவசித்தாந்தக் கருத்துக்கள் எளிமையாகக் கூறப்படுகின்றன. பின் னர் பாட்டுடைத் தலைவனகிய மறைஞான சம்பந்தரின் பெருமைக் குரிய செய்திகள் பேசப்படுகின்றன. இத் தூதின் இறுதிப்பகுதி, பாட் டுடைத் தலைவனைப் பவனியிற் கண்டு மையலுற்ற மங்கை யொருத்தி தன் விரக வேதனையை விரித்துரைப்பதாகவும், நெஞ்சைத் தூதாகச் சென்று பூங்கொன்றை வாங்கிவருமாறு விடுப்பதாகவும் அமைகிறது.
நெஞ்சம் தூது செல்லவேண்டிய முறைகளைப்பற்றிக் கூறும்போது, புறச்சமய வாதிகளின் கொள்கைகள் நன்கு விளக்கி மறுக்கப்படுகின் றன. பெண்கள்தம் கலவியாசையில் ஈடுபட்டுத் திளைத்து அதுவே முத்தியென்று கூறும் உலோகாயதர் பக்கம் சாராதே என்றும், "நான் பிரமம் " எனக் கூறும் மாயாவாதிகள் பக்கம் போகாதே என்றும், தன்னுடலை வளர்க்கப் பிற பிராணிகளை வதைப்பது கொலையாகாது எனக் கூறி அறமே தெய்வமெனப் பகரும் புத்த மதத்தினர் பக்கம் சாராதே என்றும், புறத் தூய்மை செய்யாது அகமும் புறமும் அழுக் கடையவிட்டுத் தம் மேனி உரோமங்களைப் பிடுங்கி உயிர்க்கொலை தவிர்த்து உடைநீத்துச் சீவரந் தாங்கிப் பிறப்புக்கேதுவாகிய பஞ்சகந்தங் கெட இருப்பது முத்தி என்றுரைக்கும் சமணர் பக்கம் செல்லாதே என்றும், ஆதிமறை ஒதி அதன் பயன் ஒன்றும் அறியாத வைதிகர் சொல்லை நம்பி அவர் பக்கஞ் சாராதே என்றும், திருநீறணியாது சிவாலயமுஞ் செல்லாத புலையர் பக்கம் செல்லாதே என்றும், தவவேடம் பூண்ட ஞானமில்லா மூடரிடஞ் சென்று நில்லாதே என்றும், உலகை அழித்துங் காத்துஞ் செய்யும் திருவிளையாடலை அறியாது அரனைப் பழித்துத் திரிபவரைப் பாராதே என்றுங் கூறித் தலைவி தன் நெஞ் சத்துக்கு அறிவுறுத்துகின்ருள்.
சிவனுகவே விளங்கும் ஞானக் குரவரைத் தலைவராகவும், தம்மையே தலைவியாகவும் உருவகித்துப் பதியைச் சேரப் பற்றுக்கொண்ட ஒர் உயி ரின் பேரின்ப அனுபவத்தைக் கூறும் நூல் இது. எனவே இது தத்து வச் சாயல் பெற்ற தூது நூலாக விளங்குகிறது. பிற தூது நூல்களிலே தலைவி தலைவனைச் சந்தித்தபின் தன் விரக வேதனை பொழுது புலம்புவ தாகக் கூறப்பட்டிருக்கும். இந் நூலில் விளக்கப்படுவது பேரின்பப் பொருளாதலால், அதற்கேற்பத் தலைவியின் அனுபவமும் பேரின்பப் பொருளோடு பிணைந்து நிற்கிறது.

ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி 53
இதனைத் தொடர்ந்தெழுந்த தூது நூல்கள் பெரும்பாலும் சிற் றின்பப் பொருளே பொதிந்து அகத்திணை தழுவிய அஃறிணையைத் தூது விடுப்பனவாகவும் தலைவியராலே தூதாக விடுக்கப்படுவனவாக வும் அமைந்து விளங்குகின்றன. உதாரணமாக கச்சி ஆனந்த ருத்தி ரேசர் வண்டுவிடு தூது, திருநாரையூர் நம்பி மேகவிடு தூது, பத்மகிரி நாதர் தென்றல்விடு தூது, அழகர் கிள்ளைவிடு தூது, மான்விடு தூது ஆகிய நூல்களைக் கூறலாம். இவை யனைத்தும் முதலிலே தூது செல் லும் பொருளைச் சிறப்பித்துக் கூறி, முன் தூது சென்ருேர் பெயர் களையும் தூதாகச் செல்லத்தக்கனவற்றையுங் கூறி, அவற்றுள்ளே அந் நூலில் எடுத்துக்கொள்ளப்பட்ட தூதன் மாண்பு கூறிப் பின் தலைவன் சிறப்பும் அவன் உலா வருணனையும் கூறி, அவன் அழகு கண்ட பெண் ஒருத்தியின் விரகவேதனை சொல்லித் தூதனிடம் தூது சொல்லும் வழி, முறை, தூதுப் பொருள் ஆகியன கூறித் தலைவனிடம் மாலை வாங்கி வருமாறு உரைக்கும். கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது, பணவிடு தூது, போன்ற சில தூது நூல்கள் இம்முறைக்கு மாருகத் தலைவன் தலைவியிடத்துத் தூது விடுப்பனவாகச் செய்யப்பட்டனவாயும் உள. அவற்றிலும் ஏனைய பகுதிகள் பெரும்பாலும் முன்னைய நூல்களின் அமைப்பைப் போலவே இருக்குமெனினும், மாலை வாங்கிவா என அவை
இறுவதில்லை.
தூது விடுப்பதற்குரியன அன்னம், மயில், கிள்ளை, மேகம், நாகண வாய்ப்புள், குயில், நெஞ்சு, தென்றல், வண்டு என்னும் அஃறிணைப் பொருள்களும், உயர்திணையிற் பாங்கியும் எனப் பாட்டியல் நூல்கள் காட்டும். இவ்வரையறை கடந்து பணம், தமிழ், மான், வனசம், சவ் வாது, நெல், புகையிலை, விறலி, துகில், காக்கை முதலிய பொருள்க ளையும் தூது விட்டுப் பாடப்பட்ட நூல்கள் உள. ஒருவரைப் புகழ் வதற்கண்றி இகழ்வதற்கும் தூதுப்பிரபந்தம் கையாளப்பட்டுக் கழுதை, செருப்புப் போன்ற பொருள்கள் தூது விடுக்கப்பட்டுள்ளன.
தூது நூல்களை அகப்பொருள் சார்ந்தவை புறப்பொருள் சார்ந் தவை என்றும், தலைவியர் விடுத்த தூது தலைவர் விடுத்த தூது என்றும், அஃறிணைத் தூது உயர்திணைத் தூது என்றும், புகழ்த் தூது வசைத் தூது என்றும் பகுத்துக் கூறலாம்.
இந்தப் பின்னணியில் ஈழத் தெழுந்த குருநாதசுவாமி கிள்ளைவிடு தூதும், பஞ்சவன்னத் தூதும் எவ்வாறு அமைகின்றன வெனப் பார்ப் போம். இவ்விரு நூல்களும் கி. பி. பதினெட்டாம் நூற்ருண்டுக்குரியன வேனும், அவற்றிற் கிடையே பல வேற்றுமைகள் காணப்படுகின்றன. குருநாதசுவாமி கிள்ளைவிடு தூது மரபுவழியாக ஏற்றுக்கொள்ளப் பட்ட தூதுப்பொருள்களுள் ஒன்ருகிய கிளியினைத் தூதுவிடுவதாலும், கலிவெண்பாவினுற் செய்யப்பட்டிருப்பதாலும், உலாவிற் கண்ட

Page 36
54 ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி
தலைவன்பாற் றலைவி மையலுற்றுத் தூது விடுப்பதாலும், இது மரபு வழியான இலக்கணத்துக்கமைந்த தூது எனலாம்.
இத்தூதிலே தலைவி தான் வளர்த்த கிளியை முதலிற் பலபடப் புகழ்ந்துரைத்து, முன்னர் சுந்தரர்க்காய்ச் சிவனும், பாண்டவர்க் காய்த் திருமாலும், இராமனுக்காய் அநுமானும், இந்திரனுக்காய் நளனும் தூது சென்றனர் எனச் சுட்டிக்காட்டி, அக்கிளியினைத் தனக்கா கத் தூது செல்லுமாறு வேண்டித் தனக்குக் குருநாதசுவாமி மீது ஏற் பட்ட காதலையும் அதனலுண்டான விரக வேதனையையும் விரித்துக் கூறுகிருள். கண்ணியவளை என்ற பதியில் எழுந்தருளியிருக்கும் குரு நாத சுவாமி இவ்விடத்திற் பலவாறு புகழப்பட்டு, அவர் பவனி சிறப் புற வருணிக்கப்படுகின்றது. இறுதியாக, அத்தலைவன் பவனிக்கோலங் கண்டு தனக்கேற்பட்ட விபரீதத்தைக் கூறித் தனக்கு அன்றிலும், மாலை யும், தென்றலும், தெண்டிரையும், அநங்கனும், குயிலும் பகைவராக மாறிவிட்டமையாற் கிளியே தனக்காகத் தலைவனிடந் தூது @#ဓါႀ) வேண்டுமென இரந்து, வழியிலே அங்கிங்கு பார்த்துப் பஞ்சபுலன் வழி சென்று தங்கிவிடாதேயெனக் கூறித் தூதுரைக்கும் முறையும் வேளையும் பகர்ந்து, தனது நிலையை எடுத்துக் கூறி மாலை வாங்கி வா என்று கிளிக்குச் சொல்லி அனுப்புகிருள்.
அகப்பொருள் சார்பான தூதிலக்கியங்கள் பெரும்பாலும் இவ் வமைப்பினையே கொண்டு விளங்குகின்றன. அத்துடன், இவ்வகை இலக் கியங்களில் அஃறிணைப் பொருள்களைத் தூது விடும் வழக்கமே பெரிதும் காணப்படுகின்றது. அத்தகைய நூல்களின் பெயர்கள் தூது விடப்படும் பொருள்களின் பெயரால் அமைவதே மரபாகி வந்துள்ளது. அவ்வழியே கிள்ளைவிடு தூதும் அமைகிறது. &
யாழ்ப்பாணம் காங்கேயன்துறையைச் சேர்ந்த கண்ணியவளை என்னு மிடத்தி லெழுந்தருளியுள்ள குருநாதசுவாமிமீது செய்யப்பட்ட நூலாகை யால், அத்தலத்தைச் சுற்றியுள்ள தெல்லிநகர், மாவையூர், பழை, வீமன்காமம், காங்கேயன்துறை, கட்டுவன், மயிலை, வயாவிளான், பலாலி, வறுத்தலை, தையிட்டி, கோயிற்கடவை, ஊர்காவில், கரண்டாக்குளம், பிடாரத்தனை, கன்னுர்க்குளம், முலவை, மாம்பிராய் ஆகிய ஊர்களின் பெயர்கள் இந்நூலிற் கூறப்பட்டுள்ளன. குருநாத சுவாமியென்ற பெயர், கண்ணகியின் கோபத்தாற் பரவும் வெங்குரு நோய் தீர்க்கும் காரணத்தா லவனுக்கேற்பட்டதாக ஒரு புதுக் கருத்து இதிற் காட்டப்பட்டுள்ளது.
பஞ்சவன்னத் தூதிலே முதலிற் கைலாயநாதன் என்ற பாட்
டுடைத்தலைவனின் உலா வருணிக்கப்படுகிறது. அதன்பின் சந்திரமோகினி என்ற தலைவி காட்சி அளிக்கிருள், அதன்மேல் அத்தலைவி காமவேளை

ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி 55
நோக்கித் தனக்குக் கைலாயநாதன் மீது ஏற்பட்ட காதலைக் கூறித் தன்னை வருத்த வேண்டாமென இரக்கிருள். அதைத் தொடர்ந்து வெண்ணிலாவைப் புகழ்ந்து கூறித் தன்னை வருத்தாது தலைவன்பாற் தூது சென்று தம் காதலுரைத்து அவன் மாலை வாங்கி வருமாறு வேண்டுகிருள். பின் தென்றலையும் அவ்விதமே புகழ்ந்து, தன்னை வருத் தாது தலைவனிடந் தூது சென்று தன் மயல்கூறி அவன் தொடையல் வாங்கிவரக் கோருகிருள். அதன்மேற் கிளியினையும், அன்னத்தினையும் அவ்வாறே தூதாக அனுப்புகிருள். இறுதியாகத் தன் பாங்கியைப் புகழ்ந்துரைத்து வீதியிற் பவனிவந்த கைலாயநாதன்மேற் றனக்கேற் பட்ட காதலைக் கூறி, அவன் புகழ் விரித்து, மதியம், தென்றல், தத்தை, அன்னம் ஆகியவற்றைத் தான் தூது விடுத்தும் அவை கைலாயநாத னது மாலை வாங்கி வரவில்லையெனக் கூறித் தன் சகியைத் தூது போய் அவன் மாலை வாங்கி வருமாறு கேட்கிருள்.
பாங்கி தலைவனிடஞ் சென்று, அவனைப் புகழ்ந்துரைத்துச் சந்திர மோகினிப் பெண்ணைப்பற்றிக் கூறி அவள் அவன்மீது கொண்ட மய வினை எடுத்துக் கூறுகிருள். அதன்மேற் பாங்கி தலைவியிடந் திரும்பிச் சென்று அவனை வியந்துரைத்துத் தலைவன் அத்தலைவியின் காதலை ஏற்ற செய்தி கூறி, அவன் அவளை மணந்துகொள்வதற்கு விரைவிலே வருவான் என்றுந் தெரிவிக்கிருள்.
பிற தூது இலக்கியங்களுடன் ஒத்துப் பார்க்கும்போது, பஞ்ச வன்னத் தூது எல்லா வகையிலும் வேறுபாடுடையதாகக் காணப் படுகின்றது. முதலாவதாக, இத்தூது கலிவெண்பாவினுற் செய்யப் படாது அகவல், விருத்தப்பா, கலிப்பா, சந்தப்பா ஆகியவற்ருற் செய் யப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, ஒரு நூலில் ஒரு பொருளைத் தூதாய் அனுப்புதலே மரபாயிருக்க, இந்நூலில் ஐந்து பொருள்கள் தூதாக அனுப்பப்படுகின்றன. மூன்ருவதாக, வழக்கத்துக்கு மாருக உயர்திணைப் பொருளும் அஃறிணைப் பொருளும் கலந்து தூது அனுப்பப் படுகின்றன. நாலாவதாக, ஏனைய அகப்பொருள் சார்ந்த தூது நூல் கள் தலைவன் பெயர் சுட்டினுந் தலைவி பெயர் சுட்டாதிருக்க, இது தலைவன் பெயருந் தலைவி பெயருஞ் சுட்டியுரைக்கும். ஐந்தாவதாக, அகப்பொருள் சார்ந்த தூது நூல்கள், தலைவியின் காதலைத் தலைவ னுக்குக் கூறி அவனது மாலையை வாங்கி வருமாறு தலைவி தூதனுப் புவதுடன் முடிவடைவது வழக்கமாயிருக்க, இந் நூலிலே தூது செல் லுந் தோழி தலைவனைக் கண்டு அவனைப் புகழ்ந்து பேசித் தலைவியின் தூதினைச் சொல்லுமுகமாக அவளின் விரகதாபத்தை அவனுக் கெடுத்துரைத்து, அவன் அவளை மணக்கச் சம்மதித்ததைத் தலைவியி டம் மீண்டும் சென்றுரைத்து அவளை ஆற்றுகிருள். இவ்வைந்து வகையிலும் பஞ்சவன்னத் தூது மரபுக்குமாருக நடந்து, ஒரு புது வகையான தூதிலக்கியத்தைத் தோற்றுவித்துள்ளது,

Page 37
56 ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி
தூது இலக்கியங்கள் ஈழநாட்டிற் சிங்கள மொழியிலும் பல எழுந்தன. 14ஆம் நூற்ருண்டுக்கும் 18ஆம் நூற்ருண்டிறுதிக்குமிடையே 12 தூது நூல்கள் வரை சிங்களத்திற் செய்யப்பட்டிருக்கின்றன. "மயூர சந்தேசய' (மயில் விடுதூது, 14ஆம் நூற்ருண்டு), "திசற சந்தேசய’ (அன்னம் விடு தூது 14ஆம் நூற்ருண்டு), "ஹன்சசந்தேசய’ (அன்னம் விடு தூது, 15ஆம் நூற்ருண்டு), "பரவி சந்தேசய’ (புரு விடு தூது, 15ஆம் நூற்றண்டு), "சலலிஹினி சந்தேசய, (பூவை விடு தூது, 15ஆம் நூற்ருண்டு), "கிரு சந்தேசய’ (கிளி விடு தூது, 15ஆம் நூற்ருண்டு), கோகில சந் தேசய” (குயில் விடு தூது, 15ஆம் தூற்ருண்டு), " சவுல் சந்தேசய" (சேவல் விடு தூது, 16ஆம் நூற்ருண்டு), "கஹகுருலு சத்தேசய (மஞ்சட்குருவி விடு தூது, 18ஆம் நூற்ருண்டு), "நீலகொவோ சந் தேசய" (நீலப்புரு விடு தூது, 18ஆம் நூற்றண்டு) என்பன அவற்றுட் சிலவாகும். இத்தூது நூல்கள் ஒவ்வென்றிலும் ஒவ்வொரு அஃறிணைப் பொருள் தூதா யனுப்பப்படுகின்றது. இவை யனைத்துமே புறப்பொருள் சம்பந்தமான துரதிலக்கியங்களாம்.
சிங்கள மொழித் துரதிலக்கியங்கள் வடமொழியிலுள்ள தூது நூல் களைத் தழுவி யெழுந்துள்ளன. வடமொழித் தூதிலக்கிய மரபின் வழியே சிங்கள மொழித் தூதிலக்கியங்களும் தூதாயனுப்பப்படும் பொருளை முதலில் வாழ்த்தி, வருணித்துப் பின்னர் குறித்த தூதினைக் கொண்டு செல்லுமாறு அதனைப் பணிக்கும். அதன்மேல், அத்தூது சொல்லியனுப்புபவரின் இடத்தினை வருணிக்கும். அதிலிருந்து தூதன் செல்லும் வழியிற் காணப்படும் ஊர்கள், பொருள்கள் ஆகியனவற்றை விரிவாக வருணிக்கும். இறுதியாகத் தூது கொண்டு செல்லப்பட வேண்டிய இடத்தினை வருணித்துத் தூதினை யுரைக்கும். எனவே, ஈழத் தெழுந்த தமிழ்த் தூதிலக்கியமும் சிங்களத் துரதிலக்கியமும் வெவ் வேறு திசையிற் செல்கின்றன. ஒன்றையொன்று எவ்வகையிலும் பாதித்ததாகத் தெரியவில்லை.
காதல் இலக்கியங்களுள் வெருகல் சித்திரவேலாயுதர் காதல் ஒன்றே ஈழத் தெழுந்த நூலாகும். தமிழகத்திலே எழுந்த நூல்களுட் சுப்பிர தீபக் கவிராயர் இயற்றிய கூளப்பநாயக்கன் காதலும், இராமநாதபுர சமஸ்தானத்து இராமசாமிக் கவிராயர் மதுரைப்பிள்ளை என்பவர் மீது இயற்றிய மதுரைக்காதல் என்ற நூலும் இவ்வகையைச் சேர்ந்தன வாம். பிரபந்த வகைகளுள்ளே "காதல்’ என்றவகை தனியாகக் கூறப் படவில்லை யேனும், "பவனிக் காதல்’ என்ற பிரபந்தவகை கூறப்படு கிறது. அது "உலா" என்ற பிரபந்தத்தின் புறத்துப் பிறந்த வொன் றென்பது, அதற்குச் சதுரகராதி தரும் விளக்கத்தாற் பெறப்படும். எனவே உலாவின் இலக்கணத்தையும், அதன் வழிவந்த பவனிக் காத லின் இலக்கணத்தையும், அப்பிரபந்தங்களின் வடிவ வளர்ச்சியினையும் ஈண்டு ஆராய்தல் அவசியமாகிறது,

ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி 57.
உலா எனும் பிரபந்த வகையின் இலக்கணத்தை எல்லாப் பாட் டியல் நூல்களும் கூறுமெனினும், பன்னிருபாட்டியலிலேயே அதனை மிக விரிவாகக் காணலாம். முதலில் அது,
* முதனிலை பின்னெழு நிலையுலா வெண்கலி" என முன்னர் முதல்எழு நிலையும் பின்னழு நிலையும் அமைந்து வெண் கலிப்பாவாற் பாடப்பெறுமென் றிசைத்து,
* பேதை முதலா எழுவகை மகளிர்கண்
டோங்கிய வகைநிலைக் குரியான் ஒருவனைக் காதல்செய் தலின்வரும் கலிவெண் பாட்டே ’ என, உயர்ந்த நிலைமையினை உடைய ஒருவன ஏழுபருவ மகளிர் கண்டு காதல் செய்வதாகக் கலிவெண்பாட்டிற் செய்யப்படுமென்றும்,
* குடிநெறி மரபு கொளல்கொடை விடியல்
நன்னி ராடல் நல்லணி அணிதல் தொன்னகர் எதிர்கொளல் நன்னெடு வீதியின் மதகளி நூர்தல் முதனிலை யாகும்’
என, முதல்நிலைக்கண் அமைவன இவை யெனவும்,
*ஆதி நிலையே குழாங்கொளல் என்றெடுத்து
ஒதிய புலவரும் உளரென மொழிப* என, முதனிலை யென்பது குழுஉக்கொளல் ஆகும் என்ற பிறர் கருத் துங் கூறி,
* ஏழு நிலையும் இயம்புங் காலை
பேதை பெதும்பை மங்கை மட ந்தை அரிவை தெரிவை பேரிளம் பெண்எனப் பாற்படு மகளிர் பருவத் தாதல் நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே ? என எழு நிலைகளிலும் அவ்வவற்றிற்குரிய தன்மைகளை நோக்கிக் கூறுதல் வேண்டுமென்றும்,
நீடிய நாற்பத் தெட்டின் அளவும் ஆடவர்க் குலாப்புறம் உரித்தென மொழிப' என, உலாப்புறம் (பதினருண்டு முதல்) நாற்பத்தெட்டாண்டு வரை யான ஆடவர்க்கே உரியதாகு மென்றும் அந்நூல் வரையறுக்கும். மேலும், ஏழு பருவ மங்கையர்க்கும் ஒரு சிறப்பு விதியாக,

Page 38
.58 ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி
‘சிற்றில் பாவை கழந்தகம் மனையே
பொற்புறு மூசல் பைங்கிழி யாழே பைம்புன லாட்டே பொழில்விளை யாட்டே நன்மது நுகர்தல் இன்ன பிறவும் அவரவர்க் குரிய ஆகும் என்ப"
என, இவையும் இவைபோன்ற பிறவும் பருவத்துக்கேற்றபடி உலா வில் அமைத்துப் பாடுதற்குரிய வென்றும்,
*வேந்தர் கடவுளர் விதிநூல் வழிஉணர்
மாந்தர் கலிவெண் பாவிற் குரியார்’
என, உலாப்பாட்டுப் பெறுதற்குரியார் எத்தகையோர் என்பதையும் கூறியமையு மப்பாட்டியல் நூல்.
வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டி யல், இலக்கணவிளக்கப் பாட்டியல், பிரபந்த தீபிகை முதலியனவும் உலா இலக்கணங் கூறுவன. உலாபற்றிப் பாட்டியல் நூல்கள் அனைத் தும் கூறும் இலக்கண விதிகளைத் தொகுத்து நோக்குகையில், வீதியில் உலாவரும் தலைவன்மேல் ஏழு பருவப் பெண்களும் காதல்கொள்ளும் செய்தியைக் கலிவெண்பாவாற் கூறுவது உலா வென்பதனை எல்லாப் பாட்டியல் நூல்களும் ஏற்றுக்கொள்கின்றன. உலாவிற் குரியார் (பதினுறு முதல்) நாற்பத்தெட்டு வயதுவரையான வேந்தர், கடவுள், விதிநூல் உணர்ந்தோர் என்பதைப் பன்னிருபாட்டியல் விசேடமாகச் சொல்லும். மேலும் தலைவனின் குடி, நெறி, மரபு முதலாய உயர்பண்பு களையும் அவனைக்கண்டு காதல் கொள்ளும் பெண்களின் பருவங்களுக் கேற்ற செயல்களையும் கூறுதல் வேண்டுமென்றும் பன்னிரு பாட்டியல் தெளிவாகக் கூறும். சிதம்பரப் பாட்டியலும் இலக்கண விளக்கப் பாட்டியலும் ஏழு பருவ மகளிரின் வயதெல்லையையும் கூறுவன.
இக்கருத்துக்களைக் கொண்டமைந்த ஆதி உலா இலக்கியம், கி. பி. எட்டாம் நூற்ருண்டில் வாழ்ந்த சேரமான்பெருமாள்நாயனர் செய்த திருக்கைலாய ஞானஉலா என்பர். உலகியற் கருத்தமைத்துப் பாடப் பயன்படுமுன் ஒரு இலக்கியவகை ஞானக் கருத்தமைத்துப் பாடப்பட்டிருக்குமென நம்ப முடியாது. எனவே, அதற்கு முந்திய தாக உலகியற் கருத்தமைந்த உலா இலக்கியம் இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியத்தில் உலா இலக்கியம் பற்றிய குறிப்புக்கள் எதுவும் வெளிப்படையாக இல்லையேனும்,

ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி 59
* ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப"
வழக்கொடு சிவணிய வகைமை யான” என்ற சூத்திரங்களுக்கு உரையாசிரியர்கள் விதித்துள்ள உரைகளி லிருந்து, தொல்காப்பியனருக்கு அத்தகைய இலக்கியம் பற்றிய ஒரு குறிப்பு இருந்திருக்கலாமெனத் தோன்றுகிறது. இவ்விரு சூத்திரங்க ளையும் ஒன்ருக்கி உரைகூறும் இளம்பூரணர்,
* ஊரின்கண் காமப்பகுதி நிகழ்த்தலும் உரித்து என்று சொல்வர் புலவர், அது நிகழுங்காலத்து வழக்கொடு பொருந்தி நடக்கும் வகைமையின்கண்‘ என்று கூறி, மேலும், ஊரொடு தோற்றமும் " என்பது பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈருக வருவது. வழக்கு" என்பது சொல்லுதற்கு ஏற்ற நிலைமை. "வகை என்பது அவரவர் பருவத்திற்கு ஏற்கக் கூறும் வகைச்செய்யுள் என்று விளக்கியுள்ளார்.
இவற்றுள் முதற் சூத்திரத்திற்கு நச்சினக்கினியர் உரை கூறுகையில், * பக்கு நின்ற காமம் ஊரிற் பொது மகளிரொடு கூடிவந்த விளக் கமும் பாடாண்டிணைக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர் " என் றிசைத்து, மேலும், " தோற்றமென்றது அக்காமந் தேவரிடத்தும் மக்களிடத்தும் விளங்கும் விளக்கத்தை. அது பின்னுள்ளோர் ஏழு பருவமாகப் பகுத்துக் கலிவெண் பாட்டாகச் செய்கின்ற உலாச் செய்யுளாம் ' என்று விளக்கியுள்ளார்.
இவ்வுரை விளக்கங்கள் பின்னெழுந்த உலா இலக்கியத்தை நோக்கி விதிக்கப்பட்டனவாதல் கூடும். எனினும், " ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப என்ற சூத்திரத்திற்குத் ‘தலைவர் பிறந்த ஊரும் அவர் பிறப்பு மென்று பொருள் கூறின் மரபியற்கண்ணே * ஊரும் பெயரும் ' (629) என்னுஞ் சூத்திரத்து ஊர் பெறுதலா னும், முன்னர் "வண்ணப்பகுதி ' (82) என்பதனுற் பிறப்புப் பெறுத லானும் இது கூறியது கூறலா மென்றுணர்க ’’ என்று நச்சிஞர்க் கினியர் எடுத்துக்காட்டி, அதற்கு வேறுரை விரிக்க முடியாத இடர்ப் பாட்டைக் குறிக்கும்பொழுது, உலா இலக்கியக் குறிப்பு அச்சூத்திரத் திற் ருெனிக்கிறதெனக் கொள்ளாமல் விடுதல் அசாத்தியமாகத் தோன்றினும், மரபியலின்கண் மரபுணர்த்தவென வெழுந்த சூத்திர மும் (629), வழக்குஞ் செய்யுளுமென்ற இரு கூற்றினுள் வழக்கினை விளக்க வந்த சூத்திரங்களு ளொன்ருய ஊரொடு தோற்றம்' (புறத். 30) என்ற சூத்திரமும் ஒரு கருத்தின வெனல் பொருந்தாமை யால், நச்சினுர்க்கினியர் கருத்து வலியுருமற்போக, * ஊரொடு
1. தொல் புறத். - 30 2. தொல், புறத் 31

Page 39
60 ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி
தோற்றத்தில் உலாவின் குறிப்புண்டெனலும் உறுதியற்று நிற் கிறது. எவ்வாருயினும், தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண் டெழுந்த புறப்பொருள் வெண்பா மாலையின் " ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி ", "நீங்காக் காதல் மைந்தரும் மகளிரும் பாங்குறக் கூடும் பதியுரைத்தலால், உலாவுடன் ஒரளவு இயைபு காட்டுகிறதெனக் கொள்ளலாம்.
இனிப் பவனிக் காதல் என்ருெரு பிரபந்த வகை சதுரகராதியிற் சொல்லப்படுகிறது. அதனை வீரமாமுனிவர், " உலாக் காட்சியாலெய் திய காமமிகுதியாலவை பிறரொடு முரைத்து வருந்துவது என்று விளக்கியுள்ளதை விட வேறு விளக்கமெதுவு மதற்கில்லை. பிரபந்த தீபிகையின் அப்பகுதி இப்பொழுது கிடைக்காமையால் அதனை எடுத் துக்காட்டல் இயலாதாயினும், அப்பாட்டியல் நூலின் போக்கிற் கமைய அதுவும் இக் கருத்தினையே தெரிவித்திருக்குமென நம்பலாம்.
நவநீதப் பாட்டியலின் ராவ்சாகிப் எஸ். வையாபுரிப்பிள்ளை பதிப் பிற் காணப்படும் மிகைச் செய்யுள்களுள் ஒன்று " செயன்மீறச் சீரைப் பிறர்க்குரைத்தாற் பவனிக்காதல் தேமொழியே என்று கூறும். சதுரக ராதி தரும் விளக்கத்துக்கு மேலாக இதிலிருந்து எதுவுந் தெரிவதற்கில்லை. இவ்விரு விளக்கங்களும் இப்பிரபந்தம் உலாப்புறத்துப் பிறந்த ஒன்று என்பதைக் காட்டி நிற்கும். ஏழு பருவப் பெண்கள் ஒருவனைக் கண்டு காதலிப்பதாக உலா அமைய, உலாவிடைக் கண்ட ஒருவனை ஒருத்தி காதலித்து வருந்துவதாகப் பவனிக்காதல் அமைவது அதனை வலி யுறுத்தும்.
பவனிக்காதலின் வரைவிலக்கணத்துக்கமைந்த இலக்கியங்கள் இப் பொழுது கிடைத்திலவேனும், அதிலிருந்து வளர்ச்சியெய்திய இலக்கி யங்களாய கூளப்பநாயக்கன் காதல் ", "மதுரைக் காதல் ", "வெருகல் சித்திரவேலாயுதர் காதல் ஆகிய நூல்கள் இதனைச் சார்ந்தவையெனக் கொள்ளலாம். ' உலாக் காட்சியாலெய்திய காம மிகுதியா லவை பிற ரொடு முரைத்து வருந்துவது பவனிக் காதல் என்பதாற் கூளப்ப நாயக்கன் காதல் அவ்வகை இலக்கியத்திலடங்குமோவெனின், அவ் வரைவிலக்கணத்துக்கு மேலாக இந்நூலிலே தலைவன் தலைவியைச் சந்திப்பதும், புணர்ச்சி நிகழ்தலும், அன்னை அறிந்து அவஸ்தைப்படு வதும் இடம் பெறுவதால் அது சாலாதென்றே கொள்ளவேண்டும். எனவே "காதல் இலக்கியம் பவனிக் காதல் இலக்கியத்தின் வேருன தென்பதும், அதிலிருந்து ஒருபடி வளர்ச்சியுற்ற தென்பதும் தெளிவா கிறது.
1, நவநீதப் பாட்டியல் எஸ். வையாபுரிப்பிள் ஃள பதிப்பு, மயிலைத் தமிழ்ச் சங்கர்,
சென்னை, 1943, மிகைச்செய்யுள் - 10.

ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி 6
வெருகல் சித்திரவேலாயுதர் காதலிற் சித்திர வேலாயுதரின் உலாவை யும், உலாவுடன் சம்பந்தப்பட்ட வருணனைகளையும், அவ்வுலாவி லவ னைக்கண்ட மாதர் சிலரது விரகதாபத்தையும், அவருளொருத்தியான வாலமுத்துமோகனப்பெண் கொண்ட மையலையும்விட, அவள் மலர் வனஞ் சென்றதும், அங்கு தோழியரைப் பிரிந்து தனியே நின்றதும், சித்திரவேலர் அவளைக் கண்டதும், காதல் கொண்டதும், கூடிமகிழ்ந்த தும், விட்டுப் பிரிந்ததும், அவள் துயருழன்றதும், தோழியர் கண்டு கவன்றதும், அன்னைக் குரைத்ததும், அன்னை அவளை ஏசிக் கலைத்ததும், அவள் காவிலிருந்து கந்தனை நொந்ததும், குறத்தி வந்து நற்குறி சொன்னதும், கிளியைத் தூதனுப்பியதும், அது வேளையறிந்து தூது சொல்லி மாலை வாங்கி வந்ததும். அவளது பெற்று மகிழ்ந்ததும் மேலதிகமாகக் கூறப்பட்டுள்ளன. இம் மேலதிகப் பகுதிகள் பவனிக் காதல் இலக்கண வரம்புக் கப்பாற்பட்டன. கூளப்பநாயக்கன் காத லில் இடம்பெற்ற அம்சங்களுக்கு மேலாகக் குறத்தி குறி சொல்லும் பகுதியும், கிளி தூது செல்லும் பகுதியும் இதிலமைந்துள்ளன. எனவே, கூளப்பநாயக்கன் காதல் பவனிக் காதல் நிலையிலிருந்து பெற்ற வளர்ச்சியைவிட, வெருகல் சித்திரவேலாயுதர் காதல் மேலும் ஒரு படி கூடுதலான வளர்ச்சியைப் பெற்று விளங்குகிற தெனலாம்.
அகப்பொருள் இலக்கிய வரிசையில் அடுத்து நிற்பது கரவை வேலன் கோவையாகும். அதன் அமைப்பையும் வளர்ச்சியையும் ஆராய்வதன் முன், கோவைப் பிரபந்தத்தின் இலக்கணத்தையும் அதன் வடிவ வளர்ச்சியினையும் பார்ப்போம். தொல்காப்பியனர் கூறிப்போந்த அகத்திணைகளும் அகப்பொருட் கிளவிகளும் சில பிரபந்த வகைகளாக உருப்பெற்றுள்ளன. அவற்றுள் அகப்பொருட் கோவையென்பது ஒன்று. அதனைப் பன்னிருபாட்டியல், கோவையென்று பெயரிட்டுக்
* கோவை யென்பது கூறுங் காலை மேவிய களவு கற்பெனுங் கிளவி ஐந்திணை திரியா அகப்பெர்ருள் தழிஇ முந்திய கலித்துறை நானூ றென்ப" என்று அதனிலக்கணத்தைக் கூறும். வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல் ஆகியன பன்னிரு பாட்டியலின் கூற்றினைச் சுருக்கித் தருகின்றன. இலக்கண விளக்கப்பாட்டியல்,
* முதற்பொருள் கருப்பொருளுரிப்பொருள் முகந்து
களவு கற்பெனும் வரைவுடைத் தாகி நலனுறு கலித்துறை நானுா ருக வாறிரண் டுறுப்பு மூறின்றி விளங்கக் கூறுவ தகப்பொருட் கோவை யாகும். என முன்னசிரியர்கள் கூறியவற்றையெல்லாந் தொகுத்து விரிவாகக் கூறி, அதனுரையை

Page 40
62 ஈழத்து அக்ப்பொருள் இலக்கிய வளர்ச்சி
"இருவகைப் பட்ட முதற்பொருளும் பதினன்கு வகைப்பட்ட கருப்பொருளும் பத்துவகைப்பட்ட உரிப்பொருளும் பொருந்திக் கைக்கிளை முதலுற்ற அன்புடைக் காமப் பகுதியவாங் களவொழுக்கத் தினையும் கற்பொழுக்கத்தினையுங் கூறுதலே எல்லையாகக் கொண்டு, நன்மையுற்ற கட்டளைக் கலித்துறை நானூருகத் திணை முதலா கத் துறை ஈருகக் கூறப்பட்ட பன்னிரண்டு அகப்பாட்டுறுப்பும் வழுவின்றித் தோன்றப் பாடுவது அகப்பொருட் கோவையாம்'
என வகுத்துக் காட்டும். இவ்வுரையினயே தன் செய்யுளுக்கு முதலாகக் கொண்டு பிரபந்த தீபிகை,
* இருவகைப் பட்டமுற் பொருளுடன் பன்னுன்
கெனுங்கருப் பொருளுமதுவும் ஈரைந் துரிப்பொருள் பொருந்துகைக் கிளையாதி
யியைவுற்ற வன்புடைத்தாய்ப் பெருகுகா மப்பகுதி யாங்கள வொழுக்கமும்
பெண்கற் பொழுக்கத்தினும் பேதமன் றிக்கட் டளைக்கலித் துறையினைப்
பெறுமொர்நா னுாற்ருற்றிணை யுரியகைக் கிளைமுதற் றுறையிறுதி யாமொழி
யுற்றவீ ராறகப்பாட் டுறுப்பும்வழு வின்றிச் சிறப்புட னுேதவு முறுமகப் பொருட்கோவையாம்
எனச் சகல விபரங்களைய் முள்ளடக்கித் தெளிவு படுத்தும். இவற்றி லிருந்து, அகப்பொருட் கோவை என்பது, தொல்லாசிரியர் வகுத்த அகத் திணை வழியே கோக்கப்பட்ட பிரபந்த வகையா மென்பது பாட்டியலார் அனைவர்க்கும் ஒப்ப முடிந்த முடிவாகும் என்பது பெறப்படும். பாண்டிக் கோவை, திருச்சிற்றம்பலக் கோவை ஆகியவற்றை இதற்
குதாரணமாகக் காட்டலாம்.
கரவை வேலன் கோவை அகப்பொருட் கிளவிகள் அனேத்தும் உள் ளடக்கும் நூலாகச் செய்யப்பட்டிருக்கின்ற தென்பது, சதாசிவஐயர் 1935ஆம் ஆண்டு வெளியிட்ட அந்நூற் பதிப்பாற் றெரிகிறது. நூலி னிடையே 172 செய்யுள்கள் காணப்படாதபோதும், கிடைத்த செய்யுள் கள் எவ்வெக் கிளவிக் குரியனவெனச் சதாசிவஐயர் வகுத்திருப்பதால், எவ்வெக் கிளவிக்குரிய செய்யுள்கள் சிதைந்தொழிந்தனவெனக் கண்டு கொள்ள முடிகிறது. இந்நூல் பூரணமாகச் செய்யப்பட்டிருந்தது என்

ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி 63
பதற்குச் சான்ருகக் கற்பியலிற் பொருள்வயிற் பிரிவு என்ற இறுதிக் கிளவிக்குரிய கடைசித் துறையாய தலைமகளோடிருந்த தலைமகன் கார்ப்பருவங் கண்டு மகிழ்ந்து சொல்லல்’ என்பதற்கான செய்யுள் இப் பதிப்பிற் காணப்படுகிறது.
கைக்கிளையோ டாரம்பிக்கு மிக்கோவை களவியற்குரிய கிளவித்
தொகை பதினேழும் வரைவியற்குரிய கிளவித்தொகை எட்டும், கற்பியற்குரிய கிளவித்தொகை யேழும்" பொருந்தி 425 துறைகளுக் கான கட்டளைக் கலித்துறைச் செய்யுள்கள் கொண்டு செய்யப்பட்டிருக் கிறது. களவு, கற்புக்காய கிளவித்தொகை யனைத்துமடக்க நடத்தலால் இது அகப்பொருட் கோவை இலக்கணத்துக் கமையச் செய்யப்பட் டிருக்கிறதெனலாம். ஆயின், திருச்சிற்றம்பலக் கோவைபோன்ற முன்னைய அகப்பொருட் கோவை நூல்கள், இயற்கைப் புணர்ச்சி முதல் வரைபொருட் பிரிதல் வரையான களவியற் கிளவித்தொகை பதினெட்டும், மணஞ்சிறப்புரைத்தல் முதற் பரத்தையிற் பிரிவுவரை யான கற்பியற் கிளவித்தொகை ஏழுங் கொண்டு 400 கட்டளைக் கலித் துறைச் செய்யுள்களால் நடக்க, நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கத்தின்பின் அதனைத் தழுவி 13ஆம் நூற்ருண்டிலெழுந்த தஞ்சை வாணன் கோவை போன்ற பின்னைய அகப்பொருட் கோவை இலக் கியங்கள், இயற்கைப் புணர்ச்சிமுதல் வரைவிடைவைத்துப் பொருள் வயிற் பிரிதல்வரையான களவியற் கிளவித்தொகை பதினேழும், வரைவு மலிவுமுதல் மீட்சிவரையான கிளவித்தொகை ஐந்தும், வரைவுக்குமுரிய கிளவிகள் மூன்றும், இல்வாழ்க்கை முதற் பரத்தையிற் பிரிவுவகையான கற்பியற் கிளவித்தொகை ஏழுங் கொண்டு 425 கட்ட ளைக் கலித்துறைச் செய்யுள்களால் நடக்கும். இவ்வகையினைச் சேர்ந்த இலக்கியமே கரவைவேலன் கோவையாகும். எனவே, இது எல்லா வகையிலும் அகப்பொருட் கோவை இலக்கணத்துக் கமையினும், செய்யுள்கள் நானுாறுக்கு மேற்படக்கொண்டொழுகுவதால் முன்னைய கோவை இலக்கியங்களிலிருந்து சிறிது வேறுபடுகிறதெனலாம். இவ் வேறுபாடே கோவைஇலக்கியம் 13ஆம் நூற்ருண்டிலிருந்து பெற்றுள்ள வளர்ச்சி நிலையைக் காட்டுவதாகும்.
நாற்கவிராச நம்பி. "அகப்பொருள் விளக்கம், கு. 122. கு. அம்பலவான பிள்களபின் இரண்டாம் பதிப்பு, சுன்னகம் தனலக்குமி புத்தகசாலை, 1932. பக், 45,
2. நாற்கவிராச நம்பி, "அகப்பொருள் விளக்கம் , சூ. 171, 179, 191. கு. அம்
பலவாணபிள்ளையின் இரண்டாம் பதிப்பு , சுன்னகம் தனலக்குமி புத்தகசாலை,
1982, பக். 129, 138, 155. 3. நாற்கவிராச நம்பி, " அகப்பொருள் விளக்கம்", கு. 200 , கு. அம்பலவாண
பிள்ளேயின் இரண்டாம் பதிப்பு, சுன் னுகம் தனலக்குமி புத்தகசா?ல, 1932,
Lješ. 682

Page 41
64 ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி
இந்நூலெழுந்த வகையே விசித்திரமானது. யாழ்ப்பாணத்திலுள்ள கரவெட்டியென்னும் ஊரில் வாழ்ந்த சேதுநிலையிட்ட மாப்பாண முதலியார் குடும்பத்துக்கும் இருமரபுந்துய்ய மாப்பாண முதலியார் என்ற மற்ருேர் வேளாண்குலப் பிரபுக் குடும்பத்துக்கும் பகைமை யுண்டாகி ஒன்றிற்கொன்று தீங்கிழைத்து வந்தது. சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் மகன் வேலாயுத பிள்ளையின் காலத்தில் அவரது எதிரிகள் தங்களுக்குப் புகழாகவும் அவருக்கு இகழாகவும் கவிபாடுவிக் கும்பொருட்டு அக்காலத்திற் பிரசித்திபெற்றிருந்த நல்லூர்ச் சின்னத் தம்பிப் புலவரை அழைப்பித்தாராக, அதனைக் கேள்வியுற்ற வேலாயுத பிள்ளை தாமே முன்னர் சென்று புலவர் வரும்வழியிற் பந்தலமைப்பித் துப் புலவரை உபசரித்துத் தமக்குப் புகழ் வருமாறு இப் பிரபந்தத் தைப் பாடுவித்தனர். அதனல் இந்நூல் ஒரூரிலேயே ஒரு சாராரால் விரும்பப்பட்டும் மற்ருெருசாராரால் வெறுக்கப்பட்டும் வந்ததெனலாம். அக்காரணத்தால் இந்நூல் அவ்வூரிலேயே எங்கும் பரவுவது கடினமா யிற்று. ஒருவாறு பரவிய ஏட்டுப் பிரதிகளும் மாற்ருர் கைப்பட்டு வேலாயுதபிள்ளையின் குடும்பப் புகழ்கூறும் பாடல்களும் எதிரிகளின் இகழ் கூறும் பாடல்களும் நீக்கம் பெற்றிருத்தல் வேண்டும். அன்றேல் நூலின் இடையிடையே ஒவ்வொருபாடல் இல்லாதிருக்கக் காரணமில்லை. கற்பொடு புணர்ந்த கவ்வை என்ற கிளவிமுதற் பொருள்வயிற் பிரிவு வரையான இறுதிப் பதினெரு கிளவிகளுக்குரிய செய்யுள்களுள் ஒன் றைத் தவிர ஏனையன சிதைவுற்றமை செல்லாலும் ஏட்டின் சிதை வாலும் என்று கொள்ளினும், 66ஆம், 83ஆம், 86ஆம், 99ஆம், 127ஆம் செய்யுள்கள் போன்ற இடைச் செய்யுள்கள் இல்லாமற் போனமை அக்காரணத்தாலென்று கொள்ளுதல் அரிதாகும்.
ஈழத்து அகப்பொருள் இலக்கிய மரபு
குறித்த காலப்பகுதியில் ஈழத்தெழுந்த அகப்பொருள் புறப்பொருள் இலக்கியங்களுட் பல, கண்ணகி வழக்குரை கதையின் சிற்சில பகுதிகளை யோ, இராமாயணக் கதையின் சிற்சில பகுதிகளையோ கொண்டியங்கி வந்தன. அகப்பொருள் இலக்கியங்களாய கிள்ளைவிடு தூது, வெருகல் சித்திரவேலாயுதர் காதல் ஆகியவற்றிலும் அவ்வியல்புகளைக் காணலாம். *சொக்கனுறை கூடற்றிருப்பதியிற் பண்டு படிபுரந்த பாண்டியன் தொண்டுபுரி நாளில் அங்கயற்கண் அம்மையின் அழகினைக் கண்டு மனம் இச்சையுற்றதால், அவள் கண்ணிலிருந்து பறந்த கோபாக்கிணிப் பொறி “மாவின் வன்னி வடுத் தங்கியிருந்து முற்றிப் பின் பெண் குழவியாய்த் தோன்ற, அதனை அவன் பேழையில் வைத்து வேலை யில் விட, அது காவிரிப்பூம் பட்டினத்தே மாநாகனென்னும் வணிகன் "பாலடைந்து கண்ணகியாய் வளர்ந்து, பின்னர் மதுரையை அழித்தது வரையான கதையினைக் கிள்ளைவிடு தூது கூறும். வெருகல் சித்திர

ஈழத்து அகப்பொருள் இலக்கிய 6J 67 i å gå 65
வேலாயுதர் காதல் கடவுள் வணக்கத்திலும் 309ஆவது கண்ணியிலும் பத்தினி வழிபாடு கூறும். கரவை வேலன் கோவையின் கைக்கிளைப் பகுதியிற் பாட்டுடைத் தலைவனைப் ‘பூவென்ற மாவிலங் கேசனை நாளைக்குப் போர்புரிய வாவென்ற வீரனும் இராமனுகக் கூறப்படுகி றது. இராமாயணக் கதையும் கண்ணகி கதையும் ஈழத்தோடு தொடர்பு படுத்தித் கூறப்பட்டிருப்பதால் அக்கதைகள் ஈழத்து இலக்கியங்களில் இடையிடையே புகுதல் இயல்பானதே.
அகப்பொருள் இலக்கியங்களிலே தலைவன் தலைவி பெயர்கள் சுட்டி யுரைப்பது தமிழ் இலக்கிய மரபன்ருயினும், தூது, கோவை, உலா, பவனிக்காதல் போன்ற இலக்கியங்களிலே பாட்டுடைத் தலைவன் பெயர் மட்டுங் கூறப்பட்டுத் தலைவிபெயர் கூருதொழிவது வழக்காருகி வந்தது. ஆஞற் பஞ்சவன்னத் தூது, வெருகல் சித்திரவேலாயுதர் காதல் ஆகிய அகப்பொருட் சம்பவம் கூறும் நூல்களிலே தலைவன் பெய ரோடு தலைவி பெயருங் கூறப்படுகிறது. அதனுல் இவை அகப்பொரு ளிலக்கிய மரபுக்கு மாருக நடந்து அப்பண்பினையே இழந்துவிடுகின்றன. எனவே, இவ்விரு நூல்களும் பொருளளவில் அதற்கப்பாற்பட்டு நிற்கின்றன.
இவ்வகப்பொருள் இலக்கியங்கள் பலவற்றிலுந் தலைவிக்குத் தலைவன்மேலுண்டாகும் மோகத்தினு லேற்படும் மன வேறுபாட்டைப் "பேய்க்குறை'யினு லேற்பட்டதாகக் கருதுவது ஒரு பொதுப் பண் பாகத் தெரிகிறது. தலைவிக்கேற்பட்ட மோக மயக்கத்தைக் கிள்ளைவிடு தூதிலே “சன்னியோ பேய்க்குறையோ தானேதோ வென்றுசில கன்னி யர்க ளெல்லாங் கவலையுற்ற தாகக் கூறப்படுகிறது. சித்திரவேலாயு தர் காதலில் மட்டவிழும் பூவெடுக்க மாதுதணித் தேகியதால் துட் டப் பசாசின் முன்தோற்றி”* அம்மாற்ற மேற்பட்டதெனச் சொல்லப் படுகிறது. பஞ்சவன்னத் தூதிலே " மந்திர மோகினிக் குறையோ' வெனப் பாங்கி கவல்கின்ருள். இவற்றிலிருந்து, தனித்திருக்கும் கன்னி யரைப் பேய் பற்றும் என்ற கொள்கை ஈழத் தமிழரிடையே பரவி யிருந்த தென்பது தெரிகிறது.
ஈழத்துக்கே விசேடமாகவுள்ள சில சம்பவங்களையும் சொற்பிரயோ கங்களையும் இந்நூல்கள் பிரதிபலிக்கின்றன. கிள்ளைவிடுதூதிற் குரு நாத சுவாமி உலா வரும்போது அவருக்கான சோடனைகளும், வாகன
1. வரத பண்டிதர், குருநாதசுவாமி கிள்ளேவிடு தூது, ச, இ. சிவராமலிங்கையர்
பதிப்பு கொக்குவில் (யாழ்ப்பாணம்), 1921, கண்ணி 188.
2. ஜ. வீரக்கோன் முதலியார், வெருகல் சித்திரவேலாயுதிர் காதல்', வே. அகிலேச
பிள்&ள பதிப்பு, 1908, கண்ணி 808.
3. சின்னத்தம்பிப் புலவர், பஞ்சவன்னத் தூது", பாங்கி விருத்தம் (iš Frassrsg.),
FF - 5 V

Page 42
66 ஈழத்து அகப்பொருள் இலக்கிய வளர்ச்சி
அலங்காரமும், வாத்திய வகையும், குடை கொடி ஆலவட்ட வரிசை யும் கூறுமிடத்து, யாழ்ப்பாணத்திலே திருவிழாக்காலங்களிற் சுவாமி வெளிவீதி வருகையில் நிகழும் வாண வேடிக்கைச் சம்பவத்தை யொத்த நிகழ்ச்சியும் கூறப்படுகிறது. அதில் 'நீண்ட விறிசு", "நீலப் பூவிறிசு “கடல் விறிசு “ஆகாயவாணம்’ ‘தோட்டாகாய வாணம்’, ‘சக்கர வாணம்’, ‘வெண்சாமரை வாணம்’, ‘கக்கரிப்பூ வாணம்’, ‘தாமரைப்பூ வாணம்’, 'காயாம்பூ வாணம்’, ‘கொத்தலரி வாணம்’, ‘படைவாணம்", “பூ சக்கர வாணம்’ ஆகிய வாண வகைகள் சொல்லப்படுகின்றன.
இந்நூலிற் குருநாத சுவாமியைச் சேவிக்கும் பல்வேறு சாதியின ரையும் கூறுமிடத்து,
* வெற்றி விடைக்கொடியார் மேலா ரியர்குலத்தி
னுற்ற மடப்பளியி னுள்ளோரும்” எனக் காணப்படுகிறது.
இம்மடப்பளியார் ஈழத்துக்கே சிறப்பாக உள்ள ஒரு சாதியினர் என்பதும், அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந் தரசாண்ட ஆரியச் சக் கரவர்த்திகளின் மரபினரென்பதும் மேற்காட்டிய அடிகளாற் பெறப் படும்.
வாத்திய வகையிற் சித்திரவேலாயுதர் காதலிலே சங்கு, தவில் பம்பை, தடாரி, சின்னம் ஆகியன கூறப்படுகையிற் கிள்ளைவிடு தூதிலே அவற்றுடன் தம்பட்டம், முரசு, தாளம், தொண்டகம், மொந்தை, துடி, ஆகுதி (ஆகுளி), தபலை, இரலை, பேரிகை, தாரை, நாகசுரம், ருத்திர வீணை, சுருதி, மணியாழ், கின்னரம் ஆகிய வாத்தியங்கள் எடுத்துச் சொல்லப்படுகின்றன. இதேபோல அக்காலத் துக்குரிய ஆடையாபரண அலங்காரங்கள், வீதி அலங்காரம், வாகனச் சிறப்பு, பவனி முறை ஆகியனவும் இந்நூல்கள் மூலம் அறிய முடிகின் றன. ஈழத்தின் கிழக்கு மாகாணத்துக்கே விசேடமாக உரிய வசந்தன் விளையாட்டு, வெருகல் சித்திரவேலாயுதர் உலாவரும்போது ஆடப்படு வதாகப் பேசப்படுகிறது. இந்நூலிற் பேச்சுவழக்குச் சொற்பிரயோ
கங்களாக, "அவதிப்படாதை", "போகாதை", "சொல்லாதை’, ‘கொள் ளாதை’, ‘மாபேலிகங்கை’ (மாவலிகங்கை) என்பன இடம்பெறு கின்றன.
1. வரதீபண்டிதர், "குருநாதசுவாமி கிள்ளேவிடுதூது", ச. இ. சிவராமலிங்கையர் பதிப்பு,
கொக்குவில் (யாழ்ப்பாணம்), 1921, கண்ணி 153,

ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
இயல் - 111
கி. பி. பதினன்காம் நூற்ருண்டுக்கும் பதினெட்டாம் நூற்ருண் டின் இறுதிக்குமிடையே ஈழத்தெழுந்த புறப்பொருள் இலக்கியங்க ளுள் இப்பொழுது எமக்குக் கிடைக்கக்கூடியன பள்ளு, அந்தாதி, பதிகம், ஊஞ்சல், புராணம், காவியம் ஆகிய வகைகளைச் சேர்ந்த நூல்களாகக் காணப்படுகின்றன. பள்ளுப் பிரபந்தத்தில் ஞானப்பள்ளு, கதிரைமலைப்பள்ளு, பருளை விநாயகர் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு ஆகியனவும், அந்தாதி வகையில் மறைசைஅந்தாதி, கல்வளை அந்தாதி, புலியூர்அந்தாதி ஆகியனவும், மற்றும் வட்டுக்கோட்டைப் பிட்டியம்பதிப் பத்திரகாளியம்மை ஊஞ்சல், சிவகாமியம்மைபதிகம் ஆகியனவும், மற்றும் புராணகாவியங்களுமே இப்பொழுது கிடைக்கும் புறப்பொருள் இலக்கியங்களாம். இவற்றுள் முதற்கண் கூறப்பட்ட பள்ளுப் பிரபந்தத்தின் இலக்கணத்தையும் அதன் வடிவ வளர்ச்சியை யும் ஆராய்வாம். இதனை உழத்திப்பாட்டு என்றே பாட்டியல் நூல்கள் பகரும். அதன் இலக்கணத்தைப் பன்னிருபாட்டியல்,
* புரவலர் கூறி அவன்வா ழியவென்
றகல்வயற் ருெழிலை ஒருமை உணர்ந்தனன் எனவரும் ஈரைந் துழத்திப் பாட்டே."
என்று கூறும். அதன் உரைகாரர்.
*உழத்திப் பாட்டுச் செங்கோல் அரசனை முதலிற் கூறி, அவன் வாழ்க என்று வாழ்த்தி, உழத்தி அகன்ற வயல்களின் தொழில் களை ஒப்பற உணர்ந்து கொண்டாள் என்று பத்துப் பாட் டாற் பாடப்படும்" என்று பொருள் வகுத்துள்ளார். ஏனைய

Page 43
6S ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்ச
பாட்டியலார் இது பற்றிக் கூருது விட்டார். பிரபந்த தீபிகையில் இப்பகுதி இல்லாததால் அதன் கருத்தும் அறிதற்கில்லை. ஆயினும், சதுரகராதியின் கருத்தாய,
* கடவுள் வணக்கம், முறையே மூத்த பள்ளி, இளையபள்ளி, குடும் பன் வரவோ டவன்பெருமை கூறல், முறையே யவர் வரலாறு, நாட்டுவளன், குயிற் கூக்கேட்டல், மழை வேண்டிக் கடவுட் பரவல், மழைக்குறியோர்தல், ஆற்றின் வரவு, அதன் சிறப்புக் காண்டல், இவற்றிற்கிடையகப் பொருட்டுறையுங் கூறிப் பண்ணைத் தலைவன் வரவு, பள்ளிகளிருவர் முறையீடு, இளையாளை யவனுரப்பல், பள்ளன் வெளிப்படல், பண்ணைச் செயல் வினவல், அவனது கூறல், ஆயரை வருவித்தல், அவர் வரல், அவர் பெருமை கூறல், மூத்த பள்ளி முறையீடு, குடும்பன் கிடையிருந்தான்போல். வரல், அவ னைத் தொழுவின் மாட்டல், அவன் புலம்பல், மூத்தபள்ளி யடிசிற் கொடுவரல், அவனவளோடு கூறல், அவனவளை மன்னித்தல் கேட்க வேண்டல், அவள் மறுத்தல், அவன் சூளுறல், அவளவனை மீட்கவேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல், விதை முதலிய வளங் கூறல், உழவருழல், காளை வெருளல், அது பள்ளனைப் பாய்தல், பள்ளிகள் புலம்பல், அவனெழுந்துவித்தல், அதைப் பண்ணைத் தலைவற் கறிவித்தல், நாற்று நடல், விளைந்தபிற் செப்பஞ் செயல், நெல்லளத்தல், மூத்தபள்ளி முறையீடு, பள்ளிகளு ளொருவர்க் கொருவ ரேசலென விவ்வுறுப்புக்களுறப் பாட்டுடைத் தலைவன் பெருமை யாங்காங்கு தோன்றச் சிந்தும் விருத்தமும் விரவிவர விவற்ருற் பாடுவது உழத்திப் பாட்டு
என்பதனைக் கொண்டு, பிரபந்த தீபிகையின் கருத்தும் அதுவாகவே யிருந்திருக்குமெனக் கொள்ளலாம், சதுரகராதி தரும் பிரபந்தங்களின் வரைவிலக்கணம் அனைத்தும் பிரபந்த தீபிகையைத் தழுவியனவாகவே அமைந்திருப்பனவாகையால்.
இதற்கமையச் செய்யப்பட்ட இலக்கியமே கி. பி. பதினரும் நூற் முண்டிலிருந்து பள்ளு என வழங்கி வருகிறது. திருவாரூர்ப் பள்ளு இவ்விலக்கணத்துக் கிலக்கியமாய முதற் பள்ளுப் பிரபந்தமெனக் கரு தப்படுகின்றது. ஆயினும், சதுரகராதி அதனைப் பன்னிரு பாட்டியல் வழி ' உழத்திப் பாட் டென்றே கூறும். இவ்விரு நூல் இலக்கணத் தையும் ஒப்பிட்டுப் பார்க்கையிற் பள்ளுப் பிரபந்தம் உழத்திப் பாட்டு வழிவந்த ஒன்ருயிருப்பினும், உழத்திப் பாட்டு வேறு, பள்ளுப் பிரபந்தம் வேறு என்பது புலனுகிறது. பன்னிரு பாட்டியலுக்கும் சதுரகராதிக்கும் இடைப்பட்டகாலப் பாட்டியல் நூல்கள் உழத்திப்பாட்டுப் பற்றியோ பள்ளுப் பாட்டுப் பற்றியோ கூருது விட்டமை, பன்னிருபாட்டியற் காலத்துக்குப் பின் உழத்திப்பாட்டிலக்கியம் அருகிக் கி. பி. பதின ரும் நூற்ருண்டிலிருந்து பள்ளுப்பிரபந்தம் மலரத் தொடங்கியமையா லென்று கொள்ளலாம். பள்ளு இலக்கியங்கள் 17ஆம் நூற்ருண்டு,

ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி 69
18ஆம் நூற்ருண்டு ஆகிய இரு நூற்றண்டுகளுக்குரியனவேனும், அவற் றின் அமைப்பிலே வேறுபாடுகள் அதிகம் காணப்படவில்லை. மூத்த பள்ளி, இளைய பள்ளி, பள்ளன், பண்ணையார் ஆகிய பாத்திரங்க ளைக் கொண்ட கிராமிய இசைநாடகம் போலவே இப்பள்ளு நூல்க ளெல்லாம் அமைந்திருக்கின்றன. இவ்வகை இலக்கியும் 16ஆம் நூற் ருண்டிலே ஆரம்பித்ததெனினும், அடுத்த நூற்ருண்டுகளிலே ஈழத்தில் அவ்வகை இலக்கியம் செய்தோர் அதன் இலக்கணத்தை நன்கறிந்தே அவற்றைச் செய்தனர் என்பதை அவ்விலக்கியங்களின் அமைப்புக் காட்டிநிற்கும்.
கதிரைமலைப்பள்ளு, ஞானப்பள்ளு, பழுளை விநாயகர் பள்ளு, தண் டிகைக் கனகராயன் புள்ளு ஆகிய நான்கும் கடவுள் வணக்கத்துடன் ஆரம்பித்துப் பள்ளின் முக்கிய அம்சங்களாய "மூத்தபள்ளி, இளையபள்ளி, குடும்பன் வரவோடு அவர் பெருமை கூறல்", "நாட்டுவளம்கூறல்", ‘குயிற் கூக் கேட்டல்’, ‘மழைபெய்ய வரம் கேட்டல்’, ‘மழை பெய்தல்", "ஆற் றில் வெள்ளம் வருதல்","பண்ணைத் தலைவன் வரவு', 'பள்ளிகள் பண்ணைத் தலைவனிடம் முறையிடுதல்", "பள்ளனைப் பண்ணைத் தலைவன் பண்ணைச் செயல் வினவல்’, 'பள்ளன் அவை கூறல்", "மூத்த பள்ளி முறையீடு", “பள்ளன் தண்டிக்கப்படல்", "அவள் அவனை மீட்க வேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல்", "பள்ளன் விதை முதலிய வளங் கூறல்’, ‘நெல் விதைத்தல்", "பள்ளியர் புலம்பல்", "பள்ளன் எழுந்திருத்தல்", "நாற்று நடல் "அருவி வெட்டுதல்", "சூட்டுக்குப் பொலி குவித்துப் பொலி காணல்", "பள்ளிகள் ஒருவரையொருவர் ஏசல்"ஆகியபகுதிகளைக்கொண்டு நடக்கும். அதனல் இந்நூல்கள் பள்ளின் இலக்கணம் அமைந்து விளங்கு கின்றன வெனக் கொள்ளலாம். ஆயின் "இவற்றிற்கிடையே அகப் பொருட்டுறை கூறி வருஞ் செய்யுள்களிடம்பெறுமெனப் பள்ளின் இலக் கணங் கூறினும், கதிரைமலைப் பள்ளிலே அவ்வித செய்யுள்கள் எதுவும் இடம்பெருதொழிந்தன. பருளை விநாயகர் பள்ளிலும், கனகராயன் பள்ளிலும் அகப்பொருட்டுறைச் செய்யுள்கள் இடையிடையே காணப் படுகின்றன.
கழிக்கரைப் புலம்பலாகச் செய்யப்பட்ட ஆசிரிய விருத்தமொன் றும், தலைவன் பொருள்வயிற் பிரிந்துழித் தலைவி வருத்தம் பாங்கி கூற லாக அமைந்துள்ள கட்டளைக் கலித்துறை ஒன்றும், நற்ருயிரங்கலாக அமைந்துள்ள ஆசிரியவிருத்தமொன்றும், இவ்வகைச் செய்யுள்களாகப் பருளை விநாயகர் பள்ளில் எமக்குக் கிடைத்த முதல் 126 செய்யுள்க ளுள் இடம்பெற்றுள்ளன. இவற்றைவிடப் பருளை விநாயகர் துதியாக நூலினிடையே வெண்பா ஒன்றும் காணப்படுகிறது. கனகராயன் பள்ளில் எமக்குக் கிடைத்துள்ள 153 செய்யுள்களுள் 19 செய்யுள்கள் அகப் பொருள் தழுவியனவாக விளங்குகின்றன. இவ்வகப்பொருட் செய் யுள்கள் பாட்டுடைத் தலைவன் புகழ் கூறுவதற்காக ஆங்காங்கிடப்பட் டிருக்கின்றனவேயன்றி, நூலின் கதைப்போக்கிற்கு அவை இன்றியமை

Page 44
70 ஈழத்து ப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
யாதனவாய் விளங்கவில்லை. அவ்வாறே 257 செய்யுள்களைக்கொண்ட ஞானப்பள்ளிலும் அகப்பொருட்டுறைச் செய்யுள்களுக்குப் பதிலாக 29 "அறிவுறுத்தற் செய்யுள்கள்" இடம் பெறுகின்றன. கிறிஸ்தவ நூலாகிய ஞானப்பள்ளின் போக்கிற்கேற்ப இவ்வறிவுறுத்தற் செய்யுள் கள் கிறிஸ்தவ போதனைகளைப் புகட்டி நிற்கும். அகப்பொருட்டுறைச் செய்யுள்கள் இடையிடையேயமைந்து வரவேண்டு மென்பதே விதியாயிருந்தும், அது தவிர்த்து அறிவுறுத்தற் செய்யுள்களைப் புதி தாகப் புகுத்திச் செய்யப்பட்ட பள்ளு நூல் இதுவொன்றே யெனலாம். இதற்கினையாகத் திருமலை முருகன் பள்ளினைக் காட்டலாம். அந்நூலில் அகத்துறைப் பாடல்களுக்குப் பதிலாக இறைவனைப் போற்றும் துதிப் பாடல்கள் இடம்பெறுகின்றன.
இவ்வகை அகப்பொருட் செய்யுள்களும் அறிவுறுத்தற் செய்யுள் களும் நூலின்கண் வைக்கப்பட்டிருக்கும் இடங்களை மாற்றி வேறிடங் களில் வைக்கப்படினும், அவை நூலின் எவ்வித மாற்றத்தையும் உண்டு பண்ணமாட்டா. உண்மையில் அப்பாடல்கள் நூலின் கதையோட் டத்தைத் தடைசெய்கின்றனவேயன்றி அதன் சிறப்புக்குதவுகின்றன வெனச் சொல்லமுடியாது. எனினும், பாட்டுடைத் தலைவனைச் சிறப் பிக்கும் ஒரே நோக்கத்திற்காக அப்பாடல்கள் இந்நூல்களில் வலிந்து புகுத்தப்பட்டுள்ளன. காலத்தால் முந்திய பள்ளு நூல்களில் அவ்வித மான செய்யுள்கள் அற்றும் அருகியும் காணப்பட்டன. பிந்திய நூல் களில் அவை எட்டில் ஒரு பங்கை அகப்படுத்திக்கொள்ளுமளவிற்கு வளர்ச்சியடைந்துவிட்டன என்பதை ஞானப்பள்ளு, தண்டிகைக் கண்க ராயன் பள்ளு ஆகியன காட்டி நிற்கும். அதே வேளையில், "மழைக் குறியோர்தல்", "ஆயரை வருவித்தல், "அவர் பெருமை கூறல்”* "குடும்பன் கிடையிருந்தான்போல வரல்" என்பனபோன்ற பள்ளின் இலக்கணத்துக்கமைந்த சில அம்சங்கள் ஈழத்துப் பள்ளுகளில் இடம் பெருதொழிந்தன. அவற்றிற்கான செய்யுள்கள் இல்லாமலே அவை கூறத்தக்க பொருளை முன்பின் உள்ள செய்யுள்கள் உணர்த்தி நிற்கும் என்பதனலோ, அன்றி அவை ஈழத்துக் கமக்காரர் வழக்கில் இல்லை என்பதனுலோ அத்தலைப்புக்களிற் செய்யுள்கள் செய்யப்படா தொழிந்தன.
பன்னிருபாட்டியல் போன்ற பாட்டியல் நூல்கள் பள்ளு என்னும் பிரபந்தம் பற்றி யாதும் பகர்ந்தில. நவநீதப்பாட்டியலிற் காணப்படும் மிகைச் செய்யுள்கள் நான்குமட்டும் உழத்திப்பாட்டின் இலக்கணங்கூறி அதனைப் 'பள்ளு மென்பர்’ எனக் கூறி முடிக்கும். 14ஆம் நூற்ருண்டி லெழுந்த நவநீதப்பாட்டியல் 16ஆம் நூற்ருண்டிலெழுந்த பள்ளின் இலக்கணத்தைக் கூறிவைத்திருந்த தென்பது அசாத்தியமாகையால் அதன் மிகைச் செய்யுள்கள் பிற்காலத்தனவென்றே கொள்ளல் வேண்டும், ஏனைய பாட்டியல் நூல்கள் இதன் இலக்கணங் கூருதொழியச்

ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி 71
சதுரகராதி மட்டும் அதனை உழத்திப் பாட்டென்றே கூறிப் பள்ளுப் பாட்டின் இலக்கணத்தைப் பகரும். உழத்திப் பாட்டுத் தோன்றிய காலத்திலே, புரவலனை வாழ்த்துதல், வயற்ருெழிலை வருவித்தல், உழத்தி யெனும் பெண்பாற் கூற்ருய் அமைதல், பத்துப் பாடல்கள் கொண்டிருத் தல் ஆகிய பண்புகளைக் கொண்டிருந்த தென்பதனைப் பன்னிருபாட்டியற் சூத்திரம் காட்டி நிற்கும். இவ்விலக்கணத்தை ஆராய்ந்து, “சோழர் காலத்துக் காவியமரபுக்கேற்பப் பழைய உழத்திப்பாட்டு அலங்கார நடைபெற்றுச் சிற்றிலக்கியம் அல்லது காவியமாக மாறிற்றெனலாம். பல்லவர் காலத்திற் பத்துப் பாடல்கள் கொண்ட பதிகங்களே பெரு வழக்கு, இதனற் பல்லவர் காலத்திற் ருேற்றமெடுத்த உழத்திப் பாட் டானது பன்னிருபாட்டியல் கூறும் இலக்கணத்திற்கேற்பப் பத்துப் பாடலாக அமைவதாயிற்று. பல்லவர் காலத்திற் புரவலனைக் கூறிய உழத்திப்பாட்டு சோழர் காலத்திற் பாட்டுடைத் தலைவன் பெருமை யாங்காங்கு கூறும் காவிய இலக்கணத்தைப் பெறுவதாயிற்று. பெண் பாற் பெயராற் பெயர்கொண்ட "பாட்டு சோழர் காலத்திற் பள்ளு" என்னும் சாதியின் பெயரைப் பெறுவதாயிற்று' என்பர் ஆ. சதாசிவம் (பேராசிரியர்).
பள்ளு இலக்கியங்கள் பிற்காலத்தில் எழுந்தவையெனினும், அவற்றின் எழுச்சிக்கான தோற்றுவாயினைத் தொல்காப்பியனர் காட்டிவைத்திருக்கிருர் எனலாம். நூல்களுக்குரிய வனப்பு அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்ற எட்டுமாமெனக் கூறிய அவர், புலன் என்பதன் விளக்கத்தைச் செப்புகையில்,
*சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப புலனுணர்ந் தோரே? என்பர். இதற்கு இளம்பூரணர், "வழக்கச் சொல்லினலே தொடுக்கப் பட்டு ஆராயவேண்டாமற் பொருள் தோன்றுவது புலனென்னுஞ் செய்யுளாம்’ என உரை வகுத்துள்ளார். பள்ளு இலக்கியங்கள் இவ் வகையான இலக்கணம் பொருந்தியமைவதால், அவை 'புலன்' என்னும் வனப்புடையன எனக் கொள்ளலாம். ஈழத்துப் பள்ளுகளின் சேரி மொழிக்குதாரணமாகக் கதிரைமலைப் பள்ளில்
*இப்படிக் கொத்த நாடங்கப் பள்ளணுக் கெப்படிக் கஞ்சி காச்சுவே ஞண்டே" -(67) *போன மாடுங் கலப்பை நுகமும் பொதுக்கில் லாமலே நானுெப்புத் தாறேன்"-(80) என்பனவற்றையும், ஞானப்பள்ளில், 1. ஞானப்பள்ளு, ஆ. சதாசிவம் பதிப்பு, கொழும்பு, 1968 பக்கம் ! 11. ஐ. தொல், செய், கு. 233 (இளம்),

Page 45
* 72 ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
*கல்லி லும்முள்ளி லும்வழி மீதிலும் காட்டி லுமீவிழுந் தேபோச் சனேகம்
நல்ல தானநி லத்தில் விழுந்ததை நானின் னஞ்சொல்லி ஒப்புத் தருவேன்" -(126)
‘சூழ்ச்சி யாகவெ டுத்தல்லோ கொண்டார் -(135) ‘எங்கே தான்வைத்திருக்குதோ வென்று'-(139) என்பனவற்றையும், பருளை விநாயகர் பள்ளில்,
*பண்பு நீதி யறியாத தூக்குணிப்
பள்ளன் செய்கரு மங்களைக் கேளும்’-(93)
*. இசைப் பாட்டிலே தலை யாட்டி ருனடி பள்ளிரே” - (119)
என்பனவற்றையும், தண்டிகைக் கனகராயன் பள்ளில்,
‘உன்னை நீயறி யாமற் பிலுக்காய்
உரைக்கி ருயிந்த வூரறி யாதோ' -(117) ‘பாலனுமென் பஞ்சானுங் குஞ்சுநின் றிரங்கப் பார்த்தி ராத தென்ன பாவமோர் - (142)
என்பனவற்றையுங் காட்டலாம்.
ஈழத்துப் பள்ளுப் பிரபந்த மரபு
கதிரைமலைப் பள்ளு, ஞானப்பள்ளு, பருளை விநாயகர் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு ஆகிய நாலு நூல்களிலும் பள்ளணின் இரண்டாம் மனைவியாகிய இளைய பள்ளி பிறநாட்டவளாகவே சித்திரிக்கப் பட்டுள்ளாள். ஞானப்பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு ஆகிய இரண்டிலும் மூத்த பள்ளியும் பிறநாட்டவளாகவே சித்திரிக்கப்பட்டுள் ளாள். மூத்த பள்ளி எந்த ஊரவளோ, அந்த ஊரவராகவே பள்ளனும் பண்ணைக்காரனு மிருப்பர். எனவே, ஞானப்பள்ளும் தண்டிகைக் கண்க ராயன் பள்ளும் பிறநாட்டுப் பள்ளர் பள்ளியர் பண்ணைக்காரரைப் பாத்தி ரங்களாகக் கொண்டு விளங்குகின்றன என்பதைக் காணலாம். எனினும் தண்டிகைக் கனகராயன் பள்ளு தமிழ் நாட்டிலுள்ள காரைக்காடு என்ற ஊரை நிலைக்களமாக வைத்துச் செய்யப்பட்டிருப்பதால், அந்நூல் தமிழ் மரபுக்கு இயல்பாகவே இயைந்து நடக்கிறது. ஞானப்பள்ளோ "செருசலை” (Jerusalem) நாட்டையும் ருேமானுபுரி (Rome) நாட்டை யும் களமாகக் கொண்டியல்வதால், பள்ளன் பள்ளியர் பண்ணைக்காரன்
ஆகியோர் பண்புகளை ஆங்கு வலிந்து ஏற்றியிருப்பது தெரிகிறது.

ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய லளர்ச்சி 73
உதாரணமாக:
“இருபத்தாறு சங்கீதத் தொனியோ
டுளமுருகும் படிக்கு நடமுற்று நடத்திப் பவனங் கதித்த வேதம் பரித்தநீதி
பழகுஞ் செருசலை நாட்டுப் பள்ளியின்' தோற்றத்தினை எடுத்துக்கூறுகையில்,
“அழகாய் முடிதிருத்தி யதனில் மலரிருத்தி யாலோ நிகரெனவே திலதம் பொருத்தி' யவளாகக்
காட்டப்படுகிருள். மேலும் அதம், ஏவை, அபிராம், இஸ்பிரீத்து, சுவானி என்பன போன்ற வேற்று மொழிப் பெயர்களும் பிற மதச் சொற்களும் சம்பவங்களும் இதில் அதிகமாக இடம்பெறுவதால், செயற்கைப் பண் புகளே இப்பள்ளில் மிகுதியாகக் காணப்படுகின்றன எனலாம்.
பொதுவாகப் பள்ளு நூல்களில் இளைய பள்ளி மட்டும் வேற்று ஊரவளாகவோ வேற்று மதத்தினளாகவோ இருப்பதும், பண்ணைக்காரன் அவலட்சணமான தோற்றம் உடையவனுக அமைவதும் வழக்கமா யிருக்க, ஞானப்பள்ளில் மூத்த பள்ளி பண்ணைக்கு வேற்றுாராளாகவும், பண்ணைக்காரன் இளைய பள்ளியின் ஊரவ்னகவும், மதித்தற்குரிய தோற் றம் வாய்ந்தவனுகவும் சித்திரிக்கப்பட்டிருப்பது பள்ளுப் பிரபந்த மரபில் ஏற்பட்ட ஒரு மாற்றமாகும், மேலும் இங்கு கூறப்பட்டிருக்கும்
16ramat,
*ருேமை நகராளும் பாப்பு(Pope) சொல்லுக்கிணங்கும்
பழுதில்லாத் தன்மகுணப் பள்ளன்’ ‘ என்று வருணிக்கப்படுகிருன். எனவே பண்ணைக்காரன் பாப்பு ஆகவும் பள்ளன் பாப்புவின்கீழ்க் கடமையாற்றும் ஒரு குருவாகவும் இருத்தல் வேண்டும். அதனுலேதான் பள்ளன் தோற்றத்தை
இடையினிலே கயிறுகட்டி இந்திரிய மொடுக்கி இதமாக எரிசுடரை யிருகரத்தி லேந்தி’* என்று வருணித்த ஆசிரியர் பண்ணைக்காரன் தோற்றத்தையும்,
இடைதனிற் கயிறுகட்டி இந்திரியங்க ளொடுக்கி எரிகின்ற தீபமதை யிருகரத்தி லேந்தி " என்ற கத்தோலிக்க குருவின் பாவனை தோன்ற வருணிக்கின்ருர், பள்ளு நூல்களிற் பள்ளனுக்கும் பண்ணைக்காரனுக்கு மிடையிலுள்ள இருதுருவம் போன்ற வேறுபாடுகள் இதிலில்லை. கத்தோலிக்க சமயத் தின் பிறந்தகமான ஜெருசல நாட்டுக் கிறிஸ்துகாலப் பண்பும், அது 1. ஞானப்பள்ளு, ஆ. சதாசிவம் பதிப்பு கொழும்பு, 1968, பக்கம் 9, செய்யுள் 18, 2. ஞானப்பள்ளு. ஆ. சதாசிவம் பதிப்பு, 1968, பக், 11, செய்யுள் 17. 3. ஞானப்பள்ளு, ஆ. சதாசிவம் பதிப்பு, 1968, பக். 44, செய்யுள் 114,

Page 46
74 ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
புக்ககமான உருேம் நாட்டுக் கத்தோலிக்க சமயப் பண்புமே முறையே மூத்த பள்ளியும் இளைய பள்ளியுமாக உருவகிக்கப்பட்டுள்ளன. எனவே, உருவகக் கதையின் பண்புகளைக் கொண்டு விளங்கும் இப்பிரபந்தத்தினை உருவகப் பள்ளு எனக் கூறலாம். பள்ளுப் பிரபந்தங்களுள் உருவக அமைப்புப் பெற்றது இது ஒன்றேயாகும். இவ்வுருவக அமைப்புப் பிழையாது நிலைநாட்டப்படவேண்டு மென்ற குறிக்கோளையே இத னசிரியர் முக்கியமாகக் கருதியமையாற்போலும், பள்ளுப் பிரபந்த மரபில் மேற்காட்டிய மாற்றங்களைச்செய்யவேண்டி நேர்ந்தது. அவ்வித மரபு மாற்றங்கள் செய்தும், உருவக அமைப்பில் ஆசிரியர் பூரண வெற்றி எய்தவில்லை என்பதற்கு உதாரணமாக நூலிற் காணப்படும் அசம்பாவிதமான சம்பவமொன்றினை எடுத்துக் காட்டலாம். மூத்த பள்ளி பண்ணைக்காரனிடம் முறையிடுகையில்,
‘நீதமற என்னைவிட்டு ருேமா புரியில்
நித்தியமும் பள்ளியுட னேசமே யானுன்’ என்று இளைய பள்ளியைக் குறை கூறுகிருள். இதன் உருவகத்தை விரித்துப் பார்த்தால், கத்தோலிக்க குரு ருேமன் கத்தோலிக்க சமயத்தை நாடித் திரிகிருர் என அதன் பாதுகாவலராகிய பாப் பாண்டவரிடம் முறைப்பாடு செய்யப்படுகிறது. இது புத்திக்குப் பொருந்தாத அர்த்தமற்ற முறைப்பாடாகுமென்பதை ஆருமறிவர். எனவே, இங்கு உருவகப் பண்பிற் குறைபாடு ஏற்படுகிறது. அதனல் உருவகப்பள்ளு இயற்றும் முதல் முயற்சியில், ஆசிரியர் பள்ளின் மரபை மாற்றியதோடன்றி உருவகப் பண்பையும் பூரணமாக எய்தவில்லை என்றே சொல்லவேண்டும்.
மழை பொழிந்து ஆற்றில் வெள்ளம் ஒடுவதை வருணிக்கையில் அவ்வெள்ளமானது முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களுக்கூடாகப் பாய்வதாகக் கூறுவதே மரபாயிருக்க, ஞானப்பள்ளிற் பாலை நிலங் கூறப்படாது ஏனைய நால்வகை நிலங்களுக்கூடாக ஆறு பாய்வதாகவே வருணிக்கப்பட்டுள் ளது. உருேம் நாட்டிற் பாலைநிலம் இருக்க முடியாதென்பது ஆசிரியர் கருத்துப் போலும். அதேபோலப் பள்ளன் தொழுவில் மாட்டப்படு தலுக்குப் பதிலாக இங்கு குட்டையில் அடைக்கப்படுகிறன். உருேம் நாட்டிலே தொழுவில் மாட்டும் வழக்கம் இருக்க முடியாதென்பது அவர் கருத்தாதல் கூடும். கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பீடமான உருேமுக்கு இவ்வித இழிந்த பண்புகளை ஏற்ற மனம் ஒவ்வாதமையாற் போலும் மரபுக்கு மாருன இம்மாற்றங்களைச் செய்ய நேர்ந்தது.
1. ஞானப்பள்ளு, ஆ. சதாசிவம் பதிப்பு: 1988. பக், 45, செய்யுள் 116

ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி 够 75
காயல் என வழங்கும் காரைக்காட்டைக் களமாகக் கொண்டு விளங்கும் தண்டிகைக் கனகராயன் பள்ளு, ஈழத்துக்குப் புறத்தேயுள்ள பள்ளன் பள்ளியர் பண்ணைக்காரன் ஆகியோரைப் பாத்திரங்களாகக் கொண்ட மற்ருெரு பள்ளுப் பிரபந்தமாகும். இது தமிழ் நாட்டோடு நெருங்கிய தொடர்புடையதாகையாலும், குறித்த பள்ளுகளுட் காலத் தாற் பிந்தியதாகையாலும், பள்ளுப் பிரபந்த மரபினைப் பலவகையில் அனுசரித்தே நடந்துள்ளதெனினும், சில முக்கிய அம்சங்களிற் புரட்சி கரமான மாற்றங்களைக் கைக்கொண்டுள்ளது. பள்ளு நூல்களிற் பாட் டுடைத் தலைவனின் இயற்பெயரன்றிப் பாத்திரங்களின் இயற் பெயர் கூறுதல் மரபன்றெனினும், இந்நூலின் 111ஆவது செய்யுளிலே மூத்த பள்ளி முறையிடுகையில்,
‘எந்தனில்லி லொருநாள்வந் தெட்டிப் பாரான்-நாகன்
இட்டமாய்க் கலப்பையும்மண் வெட்டியுந் தாரான்” என்று பள்ளன அவன் இயற்பெயராய நாகன் என்ற நாமத்தாற் சுட்டிக் காட்டுகிருள். இது பள்ளுப் பிரபந்த மரபில் ஏற்பட்ட ஒரு பெரு மாற்றமாகும்.
பள்ளுப் பிரபந்தங்கள் பொதுவாகப் பாட்டுடைத் தலைவன் பெய ராலோ அன்றி அவன் வாழ்பதியாலோ பண்பாலோ வழங்குவதே மரபாயிருக்க, இந்நூல் பாட்டுடைத் தலைவனுன கனகநாயக முதலியின் முற்சந்ததியினனை கனகராயன் பெயரால் விளங்குகிறது. காரைக் காட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு ஆரியச் சக்கரவர்த்திகளாலே தெல்லிப்பழையிற் குடியிருத்தப்பட்ட கனகராயன் சந்ததியினர் இப் பள்ளிற் புகழப்படுதலால் அப்பெயர் சூட்டப்பட்டதாகக் கருதலாம். இந்நூலின் 11ஆம் செய்யுளில் "கனகராயன் வழிவரு தண்டிகைக் கனகநாயகன்" என்றும், 28ஆம் செய்யுளிற் கனகராயன் கிளைக்கோர் விளக்கமாந் தண்டிகைக் கனகநாயகன்" என்றும் கூறப்படுதல் இதற்கு ஆதாரமாகும்.
பள்ளின் மரபுக்கு மாருக இந்நூலில் நாட்டு வளங்கூறலைத் தொடர்ந்து கிளைவளங் கூறவெனப் பிரபஞ்ச உற்பத்தி, வருண உற் பத்தி, கனகராயன் கிளை ஆகியனவும், குயில் கூவலைத் தொடர்ந்து தெல்லிப்பழையார் வாழ்த்து, மயிலிட்டியார் வாழ்த்து, இருபாலையார் வாழ்த்து, என்பனவும் கூறப்படுகின்றன. இப்பகுதியிற் கனகராயன் Gr யினராகக் குறித்த மூன்றுார்களிலும் வாழும் முப்பத்துநால்வர் புகழ்ந்துரைக்கப்படுகின்றர்கள். பாட்டுடைத் தலைவனையும் அவன் குடும்பத்தவரையும் தவிர ஏனையோரைப் புகழ்ந்துரைத்தல் பள்ளுப் பிரபந்த மரபன்முக, இந்நூலிற் பாட்டுடைத் தலைவனது உற்ருர் உறவினர் ஆகிய பலரும் புகழப்பட்டுப் பள்ளுப் பிரபந்தத்துக்கோர் புதுமை கூட்டப்பட்டுள்ளது.
1. முத்துராச கவிராசர், கைலாயமாலே, சே. வெ. ஜம்புலிங்கம்பிள்ளே பதிப்பு,
கண்ணி 168- 170 m

Page 47
76 ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
ஈழத்தெழுந்த பள்ளுகளுட் காலத்தால் முந்தியதாகக் கருதப்படும் கதிரைமலைப்பள்ளு அவ்வகைப் பிரபந்த இலக்கண நெறி வழுவாது செய்யப்பட்டிருப்பினும், இடையிடை அகப்பொருட்டுறை கூறப்பட வேண்டுமென்ற அதன் இலக்கணத்தைக் கைக்கொள்ளாது விட்டது, பள்ளின் கதை நிகழ்ச்சிக்கு அத்தகைய அகப்பொருட்டுறைப் பாடல் கள் எவ்விதத்திலும் துணைபுரியாது தனிப்பாடல்களாக அமைவதால். அவை புலவனின் ஆற்றலைக் காட்டுவதற்காகப் பிற்காலப் பள்ளுகளிற் புனைந்து புகுத்தப்பட்டனவாதல் வ்ேண்டும். அன்றேல், மற்றெல்லா வகையிலும் பள்ளின் இலக்கணத்தைத் தழுவிய இவ்வாசிரியர் இதனை நீக்கியிருக்கக் காரணமில்லை. கதிரமலைப்பள்ளு, காலத்தால் முந்திய தென்பதற்கு இதுவும் ஒரு சான்ருகலாம்.
கதிரைமலை, மாவலிகங்கை என்ற ஈழத்துச் சூழலிலே அமைக்கப் பட்ட நூலாகையால், இதிலே தோற்றும் மாவலிகங்கைவயற் பள்ளி வாயிலாக ஈழத்துச் சிறப்புக்கள் பல கூறப்படுகின்றன. அழகான பெண்கள், மழைமுகில் சூழ்ந்த மலைகள், தென்கைலாசமான திரு கோணமலை, அதனைச் சூழும் மாவலிகங்கை, கேது பூசித்த திருக் கேதீஸ்வரம், கதிரையில் வேலன், இரத்தினக்கற்கள், மாணிக்கக்கற்கள், பொழில், மயில், தானம், தவம் ஆகியன விளங்கும் நாடாக ஈழம் வருணிக்கப்படுகிறது. இதில் இளைய பள்ளியாகத் தோன்றும் பகீரதா கங்கைவயற் பள்ளி வாயிலாகப் பாரத நாட்டின் வளத்துக்குப் பதிலாகப் புராணக் கதைகளைத் தழுவி அதன் மான்மியம் கூறப்படுகிறது. பாரத நாட்டின் வளத்தை நேராகக்கண்டு துய்த்த அனுபவமின்மையாலோ, அன்றி ஈழம் வளம் மிகுந்த நாடாக வாசகருக்குத் தோன்றவேண்டு மென்ற எண்ணத்தாலோ இந்த யுத்தியை ஆசிரியர் கையாண்டுள்ளார்.
ஈழடே. ததை விதந்து கூறும் மற்ற நூல் பருளை விநாயகர் பள்ளு ஆகும். இதில் ஈழமண்டலப் பள்ளி ஈழநாட்டையும் சோழமண்டலப் பள்ளி சோழநாட்டையும் புகழ்ந்து கூறுவர். ஈழமண்டலப் பள்ளி மிக்க வருணனை நயத்துடன் தன்னுடாகிய ஈழத்தை வருணிக்கையில் அங்குள்ள நீர்வளம், நிலவளம், வனவளம். மலைவளம், கடல்வளம், தமிழ்வளம் ஆகியனவற்றைப் பலபடக் கூறுவள். மேலும், "கண்டி மன்னன் வரராசசிங்கன் இயல்புடன் திருச்செங்கோனடாத்திய" நாடென்று ஈழத்தைப் புகழ்ந்து, அவனுக்குப் பிற்பட்ட அந்நியரான, போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சி போற்றுந் தரத்ததன்றெனப் புலவன் குறிப்பாகக் கூறிவிடுகிருன். இதில் வரும் சோழ மண்டலப் பள்ளியும் ஏட்டிக்குப் போட்டியாகச் சோழமண்டலச் சிறப்பெல்லாம் பாட்டுக்குப் பாட்டுத் தோல்வி போகாது சொல்லிவிடுகிருள். சிந்தும் விருத்தமுமே பள்ளில் விரவிவரும் என்பது இலக்கணமாயினும், ஈழத் துப் பள்ளுகளிற் சிந்து, விருத்தம், வெண்பா, கலிப்பா, தரு ஆகிய பாடல் வகைகள் பயின்று வருதலைக் காணலாம். இவற்றுட் சிந்து,

*ழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி 77
தரு ஆகிய இரண்டும் இசைப்பாட்டுக்களாம். சோழப்பேரரசர் காலத்தின் பின் இவை பொதுமக்கள் இலக்கியங்களிற் பெரிதும் பயன் படுத்தப்பட்ட பாட்டு வகைகளாகும். பள்ளானது பொதுமக்கள் இலக் கியமாகச் செய்யப்படுவதே மரபாகையால், இத்தகைய இலகுவான பாட்டு வகைகளையும் சேரி மொழியினையும் புலவர்கள் அதற்கெனக் கையாண்டனர். ஆயின், ஈழத்திற் செய்யப்பட்ட பள்ளுகளிற் சேரி மொழி மிகவும் அருகியே காணப்படுகிறது. பள்ளு இலக்கியம் கிராமிய இசை நாடக அமைப்புடையதென முன்னர் கூறப்பட்டது. அதனல் அது இசைத்தமிழின் சந்தமும், நாடகத் தமிழின் உரையாடும் பான்மை யும் தோன்றச் செய்யப்படுகிறது. எனினும், இவ்வகை இலக்கியங்கள் "மனுேன்மணியம்’ என்ற நாடக அமைப்பான இலக்கியம்போல நாடகமாக நடிப்பதற்கண்றி இலக்கியமாகப் படிக்கவும் பாடிச் சுவைக் கவுமே செய்யப்பட்டனவாகத் தோன்றுகிறது. எனினும் சில பள்ளுகள் நாடகமாக ஆடப்பட்டனவுமுண்டு, வயல் வேலைகளின்போது உழவர் உழத்தியராற் பாடப்பட்டனவுமுண்டு.
அந்தாதி இலக்கியங்கள்
சங்க இலக்கியங்களிலே காணப்பட்ட அந்தாதிச் செய்யுள்களை விடத் தனி இலக்கியமாகுந் தன்மையை அந்தாதி கி. பி. ஐந்தாம் நூற் முண்டிலே அடைந்துவிட்ட போதும், கி. பி. 18ஆம் நூற்றண்டு வரை ஈழத்திலே அந்தாதி இலக்கியம் தோன்றவில்லை. எனினும், ஈழத்தில் எழுந்த முதற் புராணகாவிய நூல்கள் அந்தாதித் தொடைச் செய்யுள்களைக் கொண்டிருந்தன என்பதைப் பின்னர் காண்போம். காலப்போக்கில் அந்தாதி இலக்கியம் பல்சந்தமாலை, ஒலியலந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி எனப் பல வடிவங்களில் வளரலா யிற்று. இவற்றைவிடக் கலியந்தாதி, சிலேடையந்தாதி, திரிபந் தாதி, யமகஅந்தாதி, நிரோட்டக யமக அந்தாதி என்ற வடிவங்களும் அந்தாதி வகையில் எழுந்தன. இவையனைத்தும் அந்தாதி முறையில் அமைந்த செய்யுள்களைக் கொண்ட இலக்கியங்களாகையால் அந்தாதிப் பெயர் பெற்றனவாகும். ஆயின், அந்தாதி முறையிற் செய்யுள்களைக் கொண்டு ஒழுகியபோதும், வெவ்வேறு பொருளமைதி காரணமாக வெவ்வேறு பெயர்களால் வழங்கப்படும் இலக்கியங்களும் உள. அவை அட்டமங்கலம், இரட்டை மணிமாலை, இணைமணிமாலை, நவமணிமாலை, நான்மணிமாலை, மும்மணிமாலை, மும்மணிக் கோவை, ஒருபா ஒருபது, இருபா இருபது, அலங்கார பஞ்சகம் முதலாய பல்வேறு வகையினவாம். இவற்றுள் ஈழத்தெழுந்த அந்தாதி இலக்கியங்களுக்கு இனமாய பதிற் றந்தாதி, நூற்றந்தாதி, ஒலியலந்தாதி, பல்சந்தமாலை (பதிற்றுப்பத்தந் தாதி) ஆகியவற்றின் இலக்கணத்தையும் அவற்றின் வடிவ வளர்ச்சியினை யும் நோக்குவாம்.

Page 48
78 ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
பதிற்றந்தாதி என்ற பிரபந்தவகை பற்றிப் பன்னிரு பாட்டியல் முதற் சிதம்பரப் பாட்டியல் வரை ஏதுங் கூருதொழிந்தன. இலக்கண விளக்கப் பாட்டியலே முதன் முதலாக அதன் இலக்கணத்தைக் கூறவந்து,
*வெண்பாப் பத்துக் கலித்துறை பத்துப்
பண்புற மொழிதல் பதிற்றந் தாதி”
என்றுரைத்தது. அதன் பின்னெழுந்த பிரபந்த தீபிகை,
"பத்துவெண் பாக்கலித் துறைபத் துடன்பொருள்
பற்றிடுந் தன்மை தோன்றப் பலசிறப் புற்றவந் தாதியாய்ப் பாடுவது
பண்பதிற் றந்தாதியாம்’ என இலக்கண விளக்கப் பாட்டியலைப் பின்பற்றி யுரைக்கும். அக்கருத் தினையமைத்தே சதுரகராதியும்,
* பத்து வெண்பா பத்துக் கலித்துறைப் பொருட்டன்மை தோன்ற வந்தாதித்துப் பாடுவது பதிற்றந்தாதி
என்று கூறும். w
இவற்றிலிருந்து பத்து வெண்பா அல்லது பத்துக் கலித்துறை அந்தாதித்து வருவது பதிற்றந்தாதியா அல்லது முதலிற் பத்து வெண் பாவும் அதனையடுத்துப் பத்துக் கலித்துறையும் அந்தாதித்து வருவது பதிற்றந்தாதியா என்பது தெளிவாயில்லை. பிரபந்த தீபிகை, "பத்து வெண்பாக் கலித்துறை பத்துடன்’ என்று கூறுவதிலிருந்து இரண்டு வகைச் செய்யுளும் இணைந்து வருதலே முறையெனக் கொள்ளத் தோன் றுகிறது. எனின், நூற்றந்தாதி அவ்வாறன்றி அவற்றுள் ஒரு வகைச் செய்யுள் நூருலாதலின், இதுவும் அதற்கிணங்கப் பத்து வெண்பா அல்லது கலித்துறை பத்து அந்தாதித்து வருதலே தகுமெனக் கொள்ளல் பொருந்தும். சிதம்பரப்பாட்டியல் செய்யப்பட்ட கி.பி. பதினரும் நூற்ருண்டுவரை இது ஒரு பிரபந்த வகையாகப் பேணப்படாதிருந்தது போலும்.
நூற்றந்தாதி என்ற பெயர் இலக்கண விளக்கப் பாட்டியலாருக்கு முன் வழக்கிலிருந்ததாகத் தெரியவில்லை. எனினும், அந்தாதி என்ற பெயரில் அவர்க்கு முன்னிருந்த பாட்டியலார் அதனைக் கையாண்டிருக் கின்றனர். பன்னிருபாட்டியல்,
*வெண்பாக் கலித்துறை வேண்டிய பொருளிற் பண்பா யுரைப்பதந் தாதித் தொகையே’
என்று செய்யுள் வகை செப்பி எல்லை கூருது விட்டது. இது அவ் வகைச் செய்யுள் பத்து, நூறு ஆகிய தொகையினவற்றை மட்டுமன்றிப்

ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி 分).
பிற தொகையினவற்றையு முள்ளடக்கத்தக்க தொன்ருகும். வெண் பாப் பாட்டியல்,
* ஒத்தாய வெண்பா வொருநூரு-ஒத்தசிர்
அந்தாதி யாகுங் கலித்துறையு மவ்வகையே வந்தா லதன்பே ரவை’ என்று செய்யுள் வகையும் எல்லையுங் கூறிற்று. நவநீதப் பாட்டியலும், அக்கருத்தைத் தழுவி அந்தாதி யென்றே கூறும். சிதம்பரப் பாட்டியலும்,
* வெள்ளை நூறு கலித்துறை நூருதல் நன்குறிலந் தாதி” என்றே கூறும். இலக்கண விளக்கப் பாட்டியல்,
*நூறு வெண்பா நூறு கலித்துறை
கூறுதல் நூற்றந் தாதிக் கோளே” எனச் செய்யுள் வகையோடு எல்லையுங் கூறி நூற்றந்தாதி யென்ற பெயரும் வழங்கிற்று. பிரபந்த தீபிகையும்,
* வெற்றிவெண் பாநூறி ஞலுங் கலித்துறையின்
விண்டுவந் நூறதேனும்
வினவியந் தாதித் துரைத்தல்நூற் றந்தாதி ‘ என நூற்றந்தாதிப் பெயரி லோதி, வெண்பா அல்லது கலித்துறை நூறு அந்தாதித்து வருமென விளக்கிற்று. இவற்றிலிருந்து, இப்பிரபந்தம் கி.பி. பதினரும் நூற்றண்டுக்கு முன் அந்தாதி யென்றே வழங்கிற் றெனவும், அதன் பின்னரே நூற்றந்தாதியென்ற பெயர் பெற்ற தெனவுந் தெரிகிறது.
ஒலியலந்தாதி எனப் பிரபந்த தீபிகையும் சதுரகராதியுங் குறிப் பிடும் இப்பிரபந்த வகையை ஏனைய நூல்கள் ஒலியந்தாதியென வழங்கும். அதனைப் பன்னிரு பாட்டியல்,
*தத்தம் இனத்தில் ஒப்புமுறை பிறழாது
நாலடி ஈரெண் கலையொரு முப்பது
கோலிய தொலியந் தாதி யாகும்’ - என நாலடி பதினறுகலை வண்ணப்பா முப்பது அந்தாதித்து வருவது ஒலியந்தாதி என்ருேதும். வெண்பாப் பாட்டியலும், நவநீதப் பாட் டியலும், இலக்கண விளக்கப் பாட்டியலும் முன்னைய கருத்தினையே கூறுவன. சிதம்பரப் பாட்டியல்,
* வகுப்பு முப்பான் சூழொலியந் தாதி”
எனக் கலையைக் குறிக்காது கூறும். பிரபந்த தீபிகை,

Page 49
80 ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
"முறையினி ரெண் கலையையு முடியவோ ரடியதா யிங்ங்ன நாலடியின்
முடிதலெண் ணெண்கலையதா யடிகள்பல சந்தமாய் வண்ணமுங் கலைவைப்பு
மந்தாதி தவருமலே யலகுமுப் பதுசெய்யுட் பாடுதுஞ் சிறுபான்மை
யாகுமெட் டுக்கலையெனுந் தொடர்புறு மன்றிவெண் பாவகவ லுங்கலித்
துறையான விம்மூன்றையும் சோர்வில்பப் பத்தாக வந்தாதி யாகவுஞ்
சொல்லொலிய லந்தாதியே’ என்று கூறுவதன் பொருளைச் சதுரகராதி,
"பதினறு கலை யோரடியாக வைத்திங்ங்ண் நாலடிக் கறுபத்து நாலு கலை வகுத்துப் பல சந்தமாக வண்ணமுங் கலை வைப்புந் தவரும லந்தாதித்து முப்பது செய்யுட் பாடுவது, சிறுபான்மை யெட்டுக் கலையானும் வரப்பெறும், அன்றியும் வெண்பா வகவல் கலித்துறை யாகிய விம்மூன்றையும் பப்பத்தாக வந்தாதித்துப் பாடுவதுமாம்"
என்று மூன்றுவகை ஒலியந்தாதி செப்பும்.
பல்சந்தமாலையின் இலக்கணத்தைப் பன்னிருபாட்டியல்,
* சொன்ன கலம்பக உறுப்புவகை நீக்கி
மன்னிய பத்து முதல்நூ றளவா வந்த மரபின் வரூஉஞ்செய்யுள் முதலா வந்தது பல்சந்த மாலை யாகும்." எனக் கலம்பக உறுப்புகளை விட்டு, முன்னேர் பாடிவந்த முறையான் வருஞ் செய்யுளை முதலாகக் கொண்டு, பத்து முதல் நூறு அமையப் பாடுவது பல்சந்த மாலை யென்றுரைக்கும்.
வெண்பாப் பாட்டியல், 'பத்தாதி நூறந்தம் பல்சந்த மாலையாம்" எனப் பத்து முதலாக நூறீருக நின்ற விகற்பத்தது பல்சந்தமாலை விகற்பம் என்றுரைக்கும். நவநீதப் பாட்டியல்,
"பத்தாதி நூறந்தம் பல்சந்த மாலை" என்ருேதி, "பல்சந்தங்களும் பத்து முதல் நூறளவும் வருவது பல்சந்த மாலையாம் என்று விரிக்கும்.

ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி 8
சிதம்பரப் பாட்டியல்,
‘அகவல் விருத்தம் வகுப்பாதல் பத்தாதி யந்தநூ ருகும்பல் சந்தமாலை” என, அகவல், விருத்தம், வகுப்பு ஆகியவற்ருன் பத்து முதல் நூறு வரையான செய்யுள் வருவது பல்சந்த மாலை என்றுரைக்கும்.
இலக்கண விளக்கப் பாட்டியல்,
*பத்து முதலாப் பப்பத் தீரு வைத்த வண்ண வகைபத் தாகப் பல்சந்த மாலை பகரப் படுமே.” О. எனப் 'பத்துக் கவி முதலாக நூறுகவி ஈருக வைக்கப்பட்ட சந்தம் பத்துப் பத்தாகப் பல்சந்த மாலை கூறப்படும்" என்றுரைக்கும்.
பிரபந்த தீபிகை,
“மகிழ்வுறுஞ் செய்யுள்பப் பத்தாக வொவ்வொரு
வகைக்குமோர் சந்தமாகி வரருாறு செய்யுளாய்ச் சொல்வதே பலசந்த
மாலையாய்ச் சொல்வார்களே. எனப் பத்துப் பத்துச் செய்யுளுக்கு ஒரு சந்தமாக நூறு செய்யுட் கூறுவது பல சந்தமாலையாகு மென்னும். இதனைப் பதிற்றுப்பத்தந்தாதி யென் றும் வழங்குவர். W
இதனைப் பலரும் பல்வேறு விதமாகக் கூறினும், பல்சந்தமாலை என்பது கலம்பகத்துக்குப் புறம்பான ஒன்று என்பதும், அது பத்து முதல் நூறு செய்யுள்களைக் கொண்டதென்பதும், அவை பல சந்தங் களில் வரும் என்பதும் பலருக்குமொத்த கருத்தாகத் தெரிகிறது. இத னைச் சிலர் 'பலசந்த மாலை யென்றும், பலர் "பல்சந்த மாலை யென் றும் பெயரிட்டுரைப்பர். அவ்விரண்டு மொன்றினையே குறிக்குமென் பது தெளிவு.
சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய மறைசை அந்தாதி திரிபு என் னுஞ் சொல்லணியமைந்த நூற்றந்தாதி வகையினதாம். அவர் இயற்றிய கல்வளை அந்தாதியும், மயில்வாகனப் புலவர் இயற்றிய புலியூர் அந் தாதியும் யமகம் என்னும் சொல்லணி அமைந்த நூற்றந்தாதி வகையின. யமகம் அல்லது மடக்கு என்பது ஒரு கவியின் நான்கடியிலும் முன் னுள்ள சொற்ருெடர் எத்துணை எழுத்தாயினும் அத்துணையும் அடிதோ றும் ஒன்றுபட்டிருப்பது. திரிபு என்பது கவியின் நான்கடியிலும் முன் னுள்ள சொற்ருெடரின் முதலெழுத்து நீங்க மற்றை யெழுத்துக்கள்
FF - 6

Page 50
諡 ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
அத்தனையும் அடிதோறும் ஒன்றுபட்டிருப்பது. இவ்விரு வகையிலும் எழுத்துக்கள் ஒன்றுபட்டிருப்பினும், சொல் ஒன்றுபட்டிருப்பினும் அடி தோறும் பொருள் வேறுபட்டிருக்கும். நூற்றந்தாதியானது வெண்பா அந்தாதி, கலித்துறை அந்தாதியென இருவகையாய் அமையும். அவற்றுள் ஈழத்து நூற்றந்தாதிகள் நூறு கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் அந்தாதித் தொடையமையச் செய்யப்பட்ட கலித்துறை அந்தாதியாக அமைந்துள்ளன.
ஈழத்து அந்தாதி இலக்கிய மரபு
அந்தாதி இலக்கியம் பொருட்சிறப்பினை விட யாப்புச் சிறப்பே மிகுதியாக உடையதாகும். அதனுல் இதனை யாப்பமைப்பாற் பெயர் பெற்ற இலக்கிய மெனலாம் ! என்பது கற்ருேர் கருத்து. செய்யுள் வடிவாக அமைந்த இலக்கிய வகைகள் பொருட் டொடர்நிலைச் செய்யு ளென்றும் சொற்ருெடர்நிலைச் செய்யுளென்றும் இருவகைப்படும். இவற்றுட் பொருளமைதி தொடர்ச்சியாக வந்து, சொன்னயம் பொரு ணயம் ஆகியன பெற்று நாற்பொருள் பயக்கும் நெறித்தாகித் தன் னேரில்லாத் தலைவனை உடைத்தாய் இயங்குவது பொருட்டொடர் நிலைச் செய்யுளாம். காப்பியங்கள் இவ்வகையினைச் சேர்ந்தவை யெனக் கொள்வர். கதைப்போக்கு நூல்முழுவதுந் தொடர்ந்து வராது, செய்யுள் கள் ஆங்காங்கே பொருள் முடிவு பெற்றனவாய்ப் பொருளாலன்றிச் சொற்ருெடரால் ஒன்ருேடொன்று இணைந்து முழுநூலாக வருவது சொற்ருெடர்நிலைச் செய்யுளாம். அந்தாதி இலக்கியங்கள் இவ்வகையி னைச் சேர்ந்தவையாகும். இவ்வகைச் சொற்ருெடர்நிலைச் செய்யுள் இலக் கியமாய அந்தாதிகளிற் பெரும்பாலும் ஒரே பொருளமைப்பே இடம் பெற்றிருக்கக் காணலாம். இறைவனையோ இறைவியையோ பாட்டுடைத் தலைவராகக்கொண்டு, அவரைத் துதித்துப் போற்றுதலே இவ்வந்தாதி இலக்கியங்களின் பொதுவான பொருளாகும்.
ஈழத்தெழுந்த அந்தாதி இலக்கியங்களும் இப்பொதுவிதிகளுக் கமையவே நடக்கின்றன. இவற்றில் வரும் செய்யுள்கள் பல அகப் பொருட்டுறைகள் தழுவியனவாய் அமைந்துள்ளன. உதாரணமாக மறைசையந்தாதியில்,
‘கருங்கலை மானுமென் சித்தா சனம்புகுங் கண்ணுதலோ னருங்கலை மானுறை வேதா ரணிய னணிவரைமேல் மருங்கலை மாநுதிக் கண்முலை யீருங்கள் வார்தடங்கண் பொருங்கலை மானென்று வந்ததுண் டாயிற் புகன்றிடுமே.”
1. ந. வீ. செயராமன், சிற்றிலக்கியச் செல்வங்கள்', சிதம்பரம், 1967, பக்கம் 46.

ஈழத்த்ப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி 83
எனக் கலைமான் வினதலாக வந்த செய்யுள் போலப் பல்வேறு அகப் பொருட்டுறைச் செய்யுள்களை இந்நூல்களில் இடையிடையே காணலாம். மறைசையந்தாதி திருமறைக்காடென்ற வேதாரணிய ஈஸ்வரர்மிதும் புலியூரந்தாதி சிதம்பர நடராஜர்மீதும் பாடப்பெற்றமையால், அச் செய்யுள்கள் ஈழத்தோடு தொடர்பு காட்டுவனவாக அமையவில்லை. கல் வளையந்தாதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கல்வளைப்பதியில் எழுந்தருளி யிருக்கும் விநாயகர் மீது பாடப்பட்டதாகையால் அதில்வரும் கல்வளைப் பதி சம்பந்தமான சில வருணனைகள் யாழ்ப்பாணச் சூழலைக் காட்டு வனவா யமைந்துள்ளன. ‘வானரம் பைங்கதலிக் கணி சிந்திடுங் கல்வளை’ என்றும், "தாழை நீழலிற் சங்கீனுங் கல்வளை’ என்றும், "நெல்விளை பணைக் கல்வளை’ என்றும், "கத்து அமர்அணி வாழ்சோலைக் கல்வளை’ என்றும், "கரும்பு வனம் புயல் அளக்குங் கல்வளை’ என்றும், "தடப் பங்கயமாலை அலர் கல்வளை' என்றும், "மள்ளர் ஆர்த்துக் களைந்த செந்நெற் கதிரைக் கடைசியர் போர் ஏற்று கல்வளை’ என்றுங் கூறி மருதநிலப் பண்பினைக் கல்வளை கொண்டு விளங்குவதாகக் காட்டப் படுகிறது.
இவ்வகை அந்தாதிகளில் அவ்வத் தலச் சிறப்புகளும், மூர்த்தி மகிமையும், அவற்றை வலியுறுத்தும் புராணக்கதைக் குறிப்புகளுமே முக்கிய அம்சங்களாக இடம்பெறும். அதற்கிணங்க மறைசை யந்தாதி யிலே திருமறைக்காடென்ற வேதாரணியம் பற்றிய வருணனைகளும், அத்தலம், மூர்த்தி ஆகியவற்றின் சிறப்புகளும், புலியூரந்தாதி, கல்வளை யந்தாதி ஆகியவற்றில் அவ்வந் நூல்கள் போற்றுந் தலம், மூர்த்தி ஆகியனவற்றின் சிறப்புகளும் வருணனைகளும் நயம்படக் கூறப்பட்டுள் ளனவேனும், இவ்வந்தாதிகளிற் கையாளப்பட்ட யமகம், திரிபு ஆகிய அணிகளாற் பெறப்படும் இலக்கியச் சுவையே கற்ருேர் மனத்தைப் பெரிதுங் கவர்வனவாயுள்ளன. இச்செய்யுள்களைப் படிக்குந்தோறும், அவற்றைப் புனைந்த புலவனுக்கும் பொருள் பிரித்தறிய முயலும் புல னுடையார்க்கு மிடையே நிகழும் புலமைப் போரை உய்த்துணர முடிகிறது. கற்ருேரன்றி மற்ருேரைப் பொறுத்த வரையில், இத்திரிபு யமகம் ஆகிய “தில்லு முல்லுக்களே இந்நூல்கள் ஜனரஞ்சகமானவையா யில்லாமற் போனமைக்கான காரணங்க ளென்றுங் காணலாம். உதாரண மாகப் புலியூரந்தாதியின் நாலாவது செய்யுளின் நான்கடிகளும் யமக அணிக்கேற்பப் பாயசங் கண்டு" என்று ஆரம்பிக்கின்றன. ஆனல் முதல் அடியில் அவற்றைப் "பாய் அசம் கண்டு" என்றும், இரண்டாமடியிற் "பாயசம் (கற்) கண்டு என்றும், மூன்ருமடியில் (இரண்டாமடியின் இறுதியிலுள்ள, 'உ'வைச் சேர்த்து) "உபாய சங்கு அண்டு’ என்றும், நாலாமடியில் (மூன்ருமடியின் இறுதியிலுள்ள 'உப்பு’ என்பதைச் சேர்த்து) "உப்பாய சங்கண்‘ என்றும் பிரித்துக் கருத்துரைப்பது நுண் மாண் நுழைபுலம் ஆயினும், சாதாரண வாசகரின் மனத்தைக் களைக்க

Page 51
84 ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
வைக்கும் முயற்சியாகவே தோன்றும். இவ்வாறே இவற்றின் ஒவ்வொரு செய்யுளும் அமைந்திருக்கக் காணலாம். அதுவே இந்நூல்களின் நிறையும் குறையும் எனலாம்.
ஊஞ்சலும் பதிகமும்
இப்பொழுது கிடைக்கத்தக்கனவாயுள்ள ஊஞ்சல் (ஊசல்), பதிகம் ஆகிய இலக்கியங்களுள்ளே 18ஆம் நூற்றண்டினிறுதிக்கு முற்பட்டன முறையே வட்டுக்கோட்டைப் பிட்டியம்பதிப் பத்திரகாளியம்மை ஊஞ்சலும் சிவகாமியம்மை பதிகமுமே எனினும், இவற்றிற்கு முற்பட வேறு ஊசல்களோ பதிகங்களோ ஈழத்தெழவில்லையென நிச்சயமாகக் கூறிவிட முடியாது. கிடைத்த இவ்விரு நூல்களின் தரத்தினைக் கொண்டு மதிப்பிடும் போது, இவற்றிற்கு முன்னும் ஈழத்தில் இவ்வகை இலக் கியங்கள் பயின்றிருத்தல் கூடுமென ஊகிக்கலாம். ஊஞ்சல், பதிகம் ஆகிய இலக்கிய வடிவங்களின் இலக்கணம், இவற்றில் எவ்வாறு அமைந் திருக்கின்றன என்பதை அறிய அவற்றின் இலக்கணத்தை முதலிற் காண்போம்.
ஊசல் ஆசிரிய விருத்தத்தாலாதல், கலித்தாழிசையாலாதல், சுற்றத்தளவாய்த் தொகையாகப் பாடப்படும் என்ற பொருளில்,
*ஆங்கவிருத் தத்தா லறைந்தகலித் தாழிசையால் ஓங்கியசுற் றத்தளவா யூசலாம் என வெண்பாப் பாட்டியல் ஒதும். அக்கருத்துக் கியையவே சிதம்பரப் பாட்டியலும் இலக்கண விளக்கப் பாட்டியலுங் கூறுவன. சதுரகராதி,
"ஆசிரிய விருத்தத்தாளுதல், கலித்தாழிசையானதல் சுற்றத்தோடும் பொலிவதாக, ஆடீரூசல், ஆடாமோவூச லென்றிடக் கூறுவது
என வுரைக்கும்.
அதற்கான பிரபந்த தீபிகையின் செய்யுள் இல்லாது போயிற் றெனினும், இக்கருத்தினையே அதுவும் தெரிவித்திருக்குமென்று துணி யலாம். எனவே, ஊசல் பற்றிக் கூறிய பாட்டியலார் அனைவரும் ஒத்த கருத்தினையே தெரிவித்தனரெனினும், "ஆடீரூசல்", "ஆடாமோ வூசல், எனவச்செய்யுள்கள் கூறும் என்பதைச் சதுரகராதி (பிரபந்த தீபிகை) எடுத்துக் காட்டியமை, பிற்காலத் தெழுந்த ஊசற் செய்யுள் அனைத்தும் அவ்வாறே முடிவுற்றமையாற் போலும்.
பதிகம் ஒரு பழைய இலக்கிய வடிவமாக இருந்த போதும். பாட் டியல் நூல்களுட் பன்னிரு பாட்டியல் மட்டுமே அதன் இலக்கணத்தைக் ծռ0յմ):

ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி 85
‘ஆசிரி யத்துறை அதனது விருத்தம் கலியின் விருத்தம் அவற்றின் நான்கடி எட்டின் காறும் உயர்ந்த வெண்பா மிசைவைத் தீரைந்து நாலைந் தென்னப் பாட்டுவரத் தொடுப்பது பதிகம் ஆகும்."
என்பது பன்னிரு பாட்டியல், “ஆசிரியத்துறையும், ஆசிரிய விருத்தமும், கலிவிருத்தமும் ஆகிய அவற்றின்மிசை நான்கடி முதல் எட்டடிகாறும் உயர்ந்த வெண்பாவை வைத்துப் பத்தினல் ஆனது, இருபதினல் ஆனது என்று சொல்லும்படி பாட்டுக்கள் அமையப் பாடப்படுவது பதிகம் ஆகும்’ என்பது அதன் பொருள். வீரமாமுனிவர் தன் சதுரகராதியிற் பதிகம் என்பதற்கு, ‘ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்யுளராற் கூறுவது' என்று விளக்கந் தந்துள்ளார். இதனை அவர் பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் ஆகியன அல்லாத வேருெரு பாட்டியல் நூலை ஆதாரமாக வைத்தே பெற்றிருக்க வேண்டும். பிரபந்த தீபிகைக்கு மிதற்குமுள்ள தொடர்பினை, இப்பிரபந்தம் பற்றிய தீபிகை விளக்கப் பாடல் கிடையாத அளவில் எதுவும் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. பன்னிரு பாட்டியலிற் கூறப்பட்ட பதிகம் என்ற இலக்கிய வகை, பிற்காலப் பாட்டியல் நூல்களிற் கூறப்படாமை, அது வேறு இலக்கிய வகைகளோடு இணைந்து அவற்றின் பகுதியாகித் தன் தனித்தன்மையை இழந்து விட்டமையாற் போலும்.
வட்டுக்கோட்டைப் பிட்டியம்பதிப் பத்திரகாளியம்மை ஊஞ்சல், எண்சீர் ஆசிரிய விருத்தத்தாலியன்று, செய்யுள்தோறும் ‘ஆடீரூஞ்சல்” என்னுமிறுதி கொண்டு பத்திரகாளியம்மையின் சுற்றமாய கங்காதேவி, இந்திராணி, காளி, சன்மினி, தேவமங்கையர், பூசுரர், முனிவர், யானே முகன், வயிரவசுவாமி, வீரபத்திரர், அமரர், அரன், மாயன், பிரமன் ஆகியோர் சூழ்வதாகக் கூறிப் பத்துப்பாடல்களிற் காப்புச் செய்யுள் முதலிலும் வாழி கூறும் செய்யுள் இறுதியிலுங் கொண்டியன்று, ஊசல் இலக்கிய வடிவத்தின் இலக்கணம் பொருந்தி நடக்கும். ஆசிரிய விருத் தமும், ஆடீரூசல் என்ற முடிவும் சுற்றத்தோடு பொலிவதுமே அவ் விலக்கணத்திற்குப் போதுமாயிருக்க, அவ்வூஞ்சற் பாட்டு மேலதிகமான சில சிறப்பியல்புகளைக் கொண்டு விளங்குகிறது.
ஊஞ்சற் பாடல்களுக்குச் செய்யுள் வரையறை கூறப்படாதிருக்க, அக்காலத்தில் அவ்வித இலக்கியஞ் செய்தார் பலரும் அவற்றைப் பத்துச் செய்யுள்களாற் செய்ததற் கிணங்க, இவ்வாசிரியரும் இதனைப் பத்துப் பாடல்கள் கொண்ட பதிகமாக்கினர். ஊஞ்சற் பாடல் காப்புச் செய்யுளும் மங்கல வாழ்த்தும் முறையே முதலிலுங் கடையிலுங்

Page 52
86 ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
கொண்டியல வேண்டிய நியதி யின்றேனும், இது அவ்வகைச் செய்யுள் களைக் கொண்டிருத்தல், இவ்வூஞ்சற் பதிகம் ஒரு தனி இலக்கியமாந் தன்மையைப் பெற உதவுகிறது.
ஊஞ்சற் பாடல்கள் பதிகமாக அமையவேண்டுமென்ற நியதியில்லை. ஆயின் பதிகம் என்ற பெயர் கொண்டன பொதுவாகப் பத்துப் பாட் டுக்கள் கொண்டே அமைந்திருக்கும். அதற்கிணங்க இணுவை சின்னத் தம்பிப் புலவர் இயற்றிய சிவகாமியம்மை பதிகம் பத்துச் செய்யுள்கள் கொண்டு விளங்கக் காணலாம். பதிகம் என்ற பெயர் கொண்டு விளங்குஞ் சில பாடற் ருெகுதிகள் பதினெரு செய்யுள்கள் கொண்டு அமைதலு முண்டு. உதாரணமாகத் திருஞானசம்பந்தநாயனர் தேவாரப் பதிகங்கள் ஒவ்வொன்றும் பதினெரு பாடல்கள் கொண்டு விளங்குவன. அதே போலச் சின்னத்தம்பிப் புலவர் செய்த கயிலாயநாதன் தோத்திரமும் பதினுெரு விருத்தங்கள் கொண்டு விளங்குகிறது. இது பதிகம் பெற்ற வளர்ச்சியாகக் கணிக்கலாம் போலும். பதிகம் என்று பெயர் கொள் ளாமலும் பத்துப் பாட்டுக்கள் கொண்டு விளங்கும் பதிகங்களும் உள. அவ்வகையைச் சேர்ந்ததே சின்னத்தம்பிப் புலவர் செய்த சிவகாமியம்மை துதி ஆகும். எனவே இவையனைத்தும் ஒவ்வொரு வகையிற் பதிகங்க ளாகவே விளங்குகின்றனவெனக் கொள்ளலாம். இப்பதிகங்கள் ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம் ஆகிய பாவினங்களாற் செய்யப்பட்டிருப்பது, பன்னிரு பாட்டியற் பதிக இலக்கணத்தைத் தழுவியே இவை செய்யப் பட்டிருக்கின்றன என்பதைக் காட்டும்.
ஈழத்து ஊஞ்சல், பதிகம் ஆகியவற்றின் மரபு
கணபதிஐயர் செய்த பத்திரகாளி ஊஞ்சல் உருவகச் சிறப்பும் வருணனைநயமும் கொண்டு விளங்குகிறது. இதில் ‘மாமலி மாணிக்க ரத்நத் தூண் நாட்டி' என்றும், ‘பூமலி சந்திர கிரண வடங்கள் கோத்து' என்றும் ஊஞ்சலின் பகுதிகளை உருவகித்துக் கூறியிருப்பதைக் காணலாம். இத்தகைய உருவகப்பாணியில் ஊஞ்சற் பாடல் செய்வது அக்கால மரபாயிற்று. பிற ஊஞ்சற் பாட்டுக்களிலும் இவ்வித உருவக முறை அமைந்திருக்கக் காணலாம். ஆனல் வருணனைச் சிறப்பைப் பொறுத்த வரையில்,
*குளக்கரையி னிழற்கமுகிற் ருவி வாளை
குடித்தமிர்த மெனச்சொரிந்து குளிர்ந்த தேன்கள் வளப்பழனத் தி டைபெருகப் பயிருண் டாகும்
வட்டுநகர்ப் பிட்டி’ என இவ்வூஞ்சலிற் சிறப்புற அமைந்திருப்பது போல வேறு ஊஞ்சற் பாடல்களிற் காண்பதரிது. அன்றியும் இவ்வூஞ்சலிற் காணப்படுவது

ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி 87
போல, “உசிதமது ரத்தமிழி லூஞ்சல் பாட என்றும், "வருங்கவிஞர் மதுரசுவைக் கவிகள் பாட என்றும், 'மதுரகவிப் புலவரிசைத் தமிழைப் பாட என்றும், தமிழ் மொழியைச் சிறப்பித்துக் கூறியிருப்பதனைப் பிற ஊஞ்சற் பாக்களிற் காண்பது மரிதே. எனவே, இவை இவ்வூஞ்ச லுக்குரிய விசேட பண்புகளெனலாம்.
பதிகமாக அமைந்துள்ளவற்றுட் சிவகாமியம்மை துதி பத்துப் பாடல்களைக் கொண்டிருந்த போதும், பல்வேறு சந்தங்கள் கொண்ட ஆசிரிய விருத்தப் பாக்களாற் செய்யப்பட்டிருப்பது இவ்வகை இலக்கிய மரபுக்கு மாறுபட்டதாகும். இதன்மூலம் எட்டுச் செய்யுள்களும் பன் னிருசீர் ஆசிரிய விருத்தப் பாவாலும், இறுதி இரண்டு செய்யுள்களும் எழுசீர் ஆசிரிய விருத்தப் பாவாலுஞ் செய்யப்பட்டுள்ளன. அன்றியும், பன்னிருசீர் ஆசிரிய விருத்தத்தாற் செய்யப்பட்ட எட்டுச் செய்யுள் களுள் முதல் ஏழும் ஒரு வகைச் சந்தமும், எட்டாவது செய்யுள் மற்ருெருவகைச் சந்தமும் பெற்று விளங்குகின்றன. இவை பதிக இலக் கியத்திற் புகுத்தப்பட்ட புதுமைகளென்றே கொள்ளவேண்டும்.
சிவகாமியம்மை பதிகம் பத்துப் பாடலும் மரபுவழி நின்ற கலி விருத்தத்தாற் செய்யப்பட்டுள்ள வெனினும், சிறையகத்திருந்து பாடப் பட்ட ஈழத்திலக்கியம் இதுவொன்றே என்ற வகையில் அதில் ஒரு தனித்தன்மையைக் காணலாம். அநியாயமாகத் தான் சிறையில் வைக்கப் பட்டான் என்பதைப் புலவன் வார்த்தைகளாற் கூருமலே அதனை நாம் உணர்ந்துகொள்ளும்படி தன் உணர்ச்சியைக் கொட்டிக் குழைத் துக் கவிதை செய்திருக்கின்ருன். இப்படியான உணர்ச்சிக் கவிதை அப்படியான நெருக்கடி நிலையிலேதான் பிறக்கும் என்பதை இது காட்டி நிற்கும்,
ஈழத்திற் பதிகம் பெற்ற வளர்ச்சி நிலையைக் காட்டுவதாற் கயிலாய நாதன் தோத்திரம் முக்கிய இடம் பெறுவதுபோல, அது கூறும் பொருளாலும் தனிச்சிறப்பெய்துகிறது. இப்பதிகம் சிறப்பித்துக் கூறும் கயிலாயநாதன் ஈழத்துக்கே - அதுவும் இணுவிலுக்கே - சிறப்பாக உரி யவன் என்பதால், இச்செய்யுள் ஈழத்து இலக்கிய வரிசையிலே தனி யிடம் பெறத்தக்கதாகும். இது கூறும் கயிலாயநாதன், "கங்கை வம்மி சத்தான்', 'காலிங்கராயன் குமாரன்", "இணுவையைக் காக்க வந்து பிறந்த குபேந்திரன்’ என இத்தோத்திரப் பதிகங் கூறும். இப்புலவர் வாழ்ந்த ஒல்லாந்தர் காலத்தின் முன் இணுவிலிலிருந்து ஆதிக்கஞ் செலுத் திய கங்கைகுலக் காலிங்கன் மகன் கயிலாயநாதன் காலமானதுங் காக்குந் தெய்வமாகக் கணிக்கப்பட்டு இணுவிலில் வழிபாடாற்றி வந்தனர். அது அவ்வூருக்கே விசேஷமாக உரிய வழக்கமாகும். கயிலாயநாதனை இளந் தாரி யென்றும் அழைப்பர். இளந்தாரிக்குக் கோயில் இணுவிலிலேயே உண்டு. எனவேதான் இளந்தாரி யென்ற கீயிலாயநாதன் தோத்திரம் ஈழத்தில் இணுவிலில் மட்டும் வழங்கும் பதிகமாய் விளங்குகிறது.

Page 53
38 ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
இப்பதிகங்களில் வரும் சொற்பிரயோகங்களில் " பவிசு", "குபேந் திரன்" என்பன புதுமையானவை, “ பவிசு " என்ற சொல்லைப் போர்த்துக் கேய ஒல்லாந்தர்கால ஈழத் தமிழ் இலக்கியங்களில் ஆங்காங்கு காணலாம். இது பிறமொழிச் சொல்லின் திரிபாதல் கூடும். குபேரன் என்ற பதமும் இந்திரன் என்ற பதமுஞ் சேர்ந்து குபேந்திரன் எனப் புணர்வது விசித் திரமானதே. எனினும் ஈழத்தமிழரிடையே இச்சொற் பிரயோகம் இருந்து வருகிறது.
புராண காவியங்கள்
தமிழ் இலக்கிய வடிவ வகுப்பிலே புராணங்களும் காவியங்களும் ஒன்ருகக் கருதப்படுவதற்கான காரணம், தமிழில் எழுந்த பெரியபுரா ணம், கந்தபுராணம் போன்ற நூல்கள் காவிய முறையில் எழுதப்பட் டிருத்தலாலெனக் கருதலாம். வடமொழியாளர் அவற்றை இருவேறு இலக்கிய வடிவங்களாகவே கொள்வர். அவர் மத்ஸ்ய புராணம், அக்கினி புராணம், பாகவத புராணம் முதலிய பதினெண் புராணங் களையே ஆதியிற் புராணங்களாகக் கொண்டனர். வடமொழிப் புராண அமைப்பைத் தழுவியே தமிழிலும் புராணங்கள் எழுந்தன. ஆயின் வெண்பாப் பாட்டியலும் சிதம்பரப் பாட்டியலும் புராணத்தையும் காப்பியத்தையு மொருவகை இலக்கியமாகவே கணிக்கின்றன. எனினும், பெரும்பான்மையான புராணங்களினமைப்பும் காப்பியங்களினமைப்பும் வேறு வேருகவே இருக்கக் காண்கிருேம். எனவே, புராணங்களையும் காப்பியங்களையும் ஒருவகை இலக்கியமாகக் கொள்வது பொருந்துமா என் பதை அறிய அப்பிரபந்தங்களின் இலக்கணத்தையும் அவற்றின் வளர்ச் சியினையுங் காண்போம்.
பெருங்காப்பியம், காப்பியம் என்ற இருவகைப் பிரபந்தங்கள் பற்றி வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், தண்டியலங்காரம், இலக்கணவிளக்கப் பாட்டியல், சதுரகராதி ஆகிய நூல்கள் கூறும். பன்னிரு பாட்டியல் அதனைத் தொடர்நிலைச் செய்யுள் என்று கூறி,
‘வித்தெண் டுளிகொடி தலைவணுெடு மேவி ஒத்த வெள்ளை விருத்தம் அகவல் வைத்த ஒருதொடை கொச்சக உறுப்பு நடைபெற வருவது தொடர்நிலை என்ப.” என வுரைப்பதன் பொருளை அதன் உரையாசிரியர்,
*வித்தும் எண்டுளியும் கொடியும் போல்வனவாகிய வரலா றுகள் தலைவனைப் பொருந்திவர (எல்லாப் பொருட்கும்) இயைந்ததாகிய வெண்பாவும், விருத்தமும், ஆசிரியப்பாவும், ஒரு தொடையான் அமைக்கப்பெற்ற கொச்சக உறுப்பும் ஆகிய செய்யுட்களால் அவ்விரலாறுகள் (தன்கண்) நடத்தப்படுதலைப் பெறப் பாடப்படுவது பொருட்டொடர்நிலைச் செய்யுளாம்."

ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி 89
என விரிப்பர். இது, காப்பியம் என்ற சொல்லாட்சி பெற்றுத் தமிழிலே வழங்குவதற்கு முன்னர், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தொடர் நிலைச் செய்யுள் இலக்கியத்தை நோக்கி யெழுந்த சூத்திரமாகத் தோன் றுகிறது. பெருங்காப்பியம், காப்பியம் என இரு கூருகத் தொடர்நிலைச் செய்யுள் வகுக்கப்பட்டு வழங்கிற் றென்பதை வெண்பாப்பாட்டியல் நூல் அவ்வாறு பகுத்துச் சூத்திரஞ் செய்திருப்பதைக் கொண்டறியலாம். பெருங்காப்பியத்தி னிலக்கணத்தை அது,
*புகரில் வணக்கம் பொருப்பறமே யாதி பகர்தல் கடல்கோள் பருவம் - நிகரில்
தலைவனைக் கூறல் தபனனிந்து தோற்றம்
சிலைமணந்தோர் போரின் செயல்.’
*செயலார் முடிசூடல் சீர்ப்புதல்வர்ட் பேருே டயலார் பொழில்புனல்புக் காடல் - இயலுமூண் மந்திரத்து தாடல் வருமிகல் விக்கிரமம் சந்துசெல வும்பிறவுஞ் சார்ந்து.'
*சார்சுவையே பாவம் விளக்கி யின்த்தொடுபாக் கூருரையே பாடையே கொண்டிலம்பம் - நேர்சருக்கம் நீப்பில் பரிச்சேதம் நேர்ந்துவரு மேற்பெருங் காப்பியமா மென்று கருது.”
என்று கூறும்.
இதன் பொருளை விரித்து இலக்கண விளக்கம் அதன் அணியியலில்,
*பெருங்காப் பியநிலை பேசுங் காலை வாழ்த்து வணக்கம் வருபொரு விரிவற்றினென் றேற்புடைத் தாக முன்வர வியன்று நாற்பொருள் பயக்கு நடைநெறித் தாகித் தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய் மலைகட ஞடு வளநகர் பருவ மிருசுடர்த் தோற்றமென் றினையன புனைந்து நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழி னுகர்தல் புனல்விளையாட றேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென்

Page 54
90 ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
றின்னன புனைந்த நன்னடைத் தாகி மந்திரத் தூது செலவிகல் வென்றி சந்தியிற் ருெடர்ந்து சருக்க மிலம்பகம் பரிச்சேத மென்னும் பான்மையின் விளங்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றேர் புனையும் பெற்றிய தென்ப என்றியம்பி, இவற்றுள் நாற்பொருளிற் குறையாது வேறு உறுப்புக்கள் குறைந்து வரினும் பெருங்காப்பியமாம் எனப் புறனடையுந் தண்டி யலங்காரத்தோ டொத்திசைக்கும். நவநீதப் பாட்டியலும் இக்கருத் தினையே யமைத்து,
“முன்னம் வணக்க மறமுத னுன்கின் திறமுரைத்தல் தன்னிக ரில்லாத் தலைவனைக் கூறல் தசாங்கங்களை வன்னித்தல் வாய்ந்த பருவ மிருசுடர்த் தோற்றங்கடாம் இன்னன கூறல் பெருங்காப் பியத்துக் கிலக்கணமே
என்றும்,
*பொன்முடி சூடல் பொழில்விளை யாடல் புனலாடுதல் நன்மணஞ் செய்தல் நறவூண்களிப்புக் கலவிதுனி மன்னும் புதல்வர்ப் பெறுதனன் மந்திரந் தூதுசெல்லல் இன்னிகல் வென்றி வகைசந்தி கூறலிக் காப்பியமே”
என்றும்,
‘விருப்பந் தருஞ்சுவை பாவ விகற்ப மிருபாக்களால்
உரைத்த வினத்தா லுரையோ டுடன்பட மெல்லவந்து சருக்க மிலம்பக மாம்பரிச் சேதமென் னும்பெயரே தெரித்து வருவது செப்பிய காவியந் தேமொழியே’ என்று முரைக்கும்.
சிதம்பரப் பாட்டியல் இக்கருத்தினைச் சுருக்கி,
‘பாடுநெறி வணக்கம்வாழ்த் தொன்று நாலாய்ப்
பகர்பொருள்முன் வரலிறைவன் வெற்பு வேலை நாடுநகர் பொருள்பருவ மிருசுடர்பெண் வேட்டல்
நண்ணன்முடி பொழில்புனலா டல்கள் ஞண்டல் கூடுமகிழ் வூடறுணி புதல்வர்ப் பேறு
கூறிடுமந் திரந்தூது செலல்போர் வென்றி நீடுசந்தித் தொடர்ச்சிசுவை பாவந் தோன்ற
நிகழ்த்தியம்பன் முதற்பெருங்காப்பியத்துக் கம்மா”

ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி 9
எனவிசைக்கும். சதுரகராதி இலக்கண விளக்கச் செய்யுளை முற்றுந் தழுவி யுரைக்கும். இவற்றிலிருந்து, வெண்பாப் பாட்டியல் முதல் சதுரகராதி வரை ஒரே கருத்தினையே தெரிவிக்கின்றன வென்றும், அவை சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களை நோக்கியே தம்மிலக்கணத்தை வகுத்துள்ளன வென்றுந் தெரியலாயிற்று.
காப்பியம், புராணம் என்பன பெருங்காப்பிய இலக்கணம் JT600TL Drt யமையாது ஓரளவு அமைந்திருக்கும் தொடர்நிலைச் செய்யுளென்ற பொருளில் வெண்பாப் பாட்டியல் முதலாய பாட்டியல் நூல்கள் கூறும். ஆயின், பன்னிரு பாட்டியல், தொடர்நிலைச் செய்யுளைத் தலை இடை கடை யென மூன்ருக வகுத்து,
*அவற்றுள், தலைஎனப் படுபவை மலைவின் ருகி அறம்பொருள் இன்பம் வீடெனும் இவற்றின் திறந்தெரி மரபின் நீங்கா தாகி வென்றிகொள் இருக்கை என்றிவை அனைத்தும் சந்தி யாகத் தந்துநிலை பெறுமே” எனத் தலையான தொடர்நிலைச் செய்யுள் வழக்கொடு மாறுபடாது, நால்வகைப் பொருட்பிறழாது, வெற்றியும் தொடர்ச்சியும் அமைய வருவதா மென்று கூறுமுகத்தால், அவற்றின் சில குறைவன இடை யானவை யெனவும், பல குறைவன கடையானவை யெனவும் கருதப் படும். இவ்விருவகையைச் சேர்ந்த தொடர்நிலைச் செய்யுளே பன்னிரு பாட்டியற் காலத்தின் பின் காப்பியம் அல்லது சிறு காப்பியம் என வழங்கின என்று கொள்ளலாம். பெருங்காப்பிய இலக்கணத்தின் பின் காப்பிய இலக்கணங் கூற வந்த வெண்பாப் பாட்டியல்,
*கருதுசில குன்றினுமக் காப்பியமா மென்பர் பெரிதறமே யாதி பிழைத்து - வருவதுதான் காப்பிய மாகுங் குலவரவு காரிகை யாப்பிற் புராணமே யாம்' எனத் தர்மார்த்த காம முத்தி என்பவற்றுட் சில் குறைந்து வந்தால் அது காப்பியமாகுமென் றிசைக்கும். குலவரவு முதலியன காட்டுவது புராணம் என்பதும் சொல்லப்பட்டது. எனவே புராணமும் காப்பியத் தோடு ஒட்டி நிற்கிறதெனத் தெரிகிறது.
நவநீதப் பாட்டியலும்,
*நெறியறிந் தவ்வா றியற்றிய வாறு நிலைநிற்றலும் பெறும்பெய ரென்பது பேசு மறமுதல் நான்கினுந்தாம் குறைய வரினுமுன் கூறிய காவியம்

Page 55
92 ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
எனப் பெருங்காப்பிய இலக்கணத்தின் பின் கூறி, நாற்பொருளி லொன்றேனுங் குறைவுபட்டு வரின் அது காப்பியமாமெனும்.
சிதம்பரப் பாட்டியலும், பெருங்காப்பிய இலக்கணத்தின் பின்,
‘அறையுமிதிற் சிலகுறைபா டெனினும் குன்ரு
தறம்பொருளின் பம்வீட்டிற் குறைபா டாகப் பெறுவதுகாப் பியமாகும் புராண மாகும்’
எனக் கூறி அதே கருத்தைக் காட்டிப் புராணத்தையுங் காப்பியத்தோ டிணைத்து நிற்கும். இலக்கண விளக்கமும் பெருங்காப்பிய விதியை அடுத்து,
*அறமுத னுன்கிற் குறைபா டுடையது காப்பிய மென்று கருதப் படுமே.”
என முன்னையோர் கருத்தையே மொழிந்து நின்றது. சதுரகராதியின் கருத்து மதுவேயாகும். எனவே, காப்பியத்தி னிலக்கணம் பலரு மொப்ப முடிந்த வொன்முக விளங்குகிற தெனினும், அது கி. பி. பன் னிரண்டாம் நூற்ருண்டின் பின்னரே தமிழில் இடம் பெற்றிருக்கிற தென்பது, பன்னிரு பாட்டியல் அதனைக் காவியமென்று கூருது எதிர் மறையாக அதன் இல்க்கணத்தைக் கூறுவதா லறியலாம். மேலும், புராணத்துக்கும் காவியத்துக்கு மதிக வேறுபாடு காட்டப்படவில்லை யென்பதும் மேற்போந்த சூத்திரங்களா லறியக்கிடக்கிறது.
மேற்கூறப்பட்டன (தொண்ணுாற்ருறும்) பிரபந்தங்க ளென முன்னை யோர் வழங்கினர். பிரபந்த மென்பது 'நன்கு கட்டப்பட்டது” என் பதற்கான வடமொழிச் சொல். அது நன்கு செய்யப்பட்ட இலக்கி யத்தைச் சுட்டி நிற்கிறது. பிரபந்தங்களிற் சிறியனவற்றைச் சிறு பிர பந்தங்கள் என்றும், சில்லறைப் பிரபந்தங்க ளென்றும் வழங்கி, இப் பொழுது பிரபந்தங்களெல்லாமே சிற்றிலக்கியங்கள் என வழங்கப்பட்டு வருகின்றன. தமிழில் எழுந்த இலக்கியங்கள் அனைத்தையும் வகைப் படுத்து முகமாகவே பிரபந்த வகுப்புகள் ஏற்பட்டன வென்பது, மேற் காட்டியுள்ள பாகுபாடுகளை நோக்கிற் புலணுகும். எனவே, அவையனைத் துமே சிற்றிலக்கியங்கள் என்று கூறிவிட முடியாது. காப்பியம், பெருங் காப்பியம் போன்ற பேரிலக்கியங்களு மவற்று ஞண்டு. தொண்ணுரற்ருறு வகையான இலக்கியங்கள் தமிழில் உள என்பதையும் அவற்றின் இலக் கணத்தையும் இப்பிரபந்த வகுப்பு எடுத்துக் காட்டுவதே யன்றிப் பிறி தில்லை. வளருந் தமிழ் இலக்கியம் தொண்ணுரற்ருறு என்ற வரையறை யுள் நின்றுவிடாது, மேலும் வளர்ந்து விரிந்துகொண்டே செல்கிறது. முற்சொன்ன பாட்டியல் நூல்களிலேயே தொண்ணுாற்ருறுக்குப் புறம் பாக இருபதுக்கு மேற்பட்ட பிரபந்தங்களின் பெயர்கள் காணப்படு

ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி 93
கின்றன. அவற்றுள் அம்மானை, கலிவெண்பா ஆகியன ஈழத்தமிழ் இலக்கிய வகைகளுட் காணப்படும் பிரபந்தங்களாகையால் அவற்றின் இலக்கணத்தையும் ஈண்டு நோக்குவோம்.
வடமொழி வழிவந்த புராணங்களைத் தொடர்ந்து தமிழிலே தல மகிமை, அடியார்கள் சரித்திரம், விரத மகிமை ஆகியன கூறும் நூல் களும் புராணங்களாகவே வழங்கப்பட்டன. வடமொழியில் அணியிலக் கணம் அக்கினி புராணத்தின் ஒரு பகுதியாக அமைந்திருப்பதை மேற் கொண்டுபோலும், தமிழிலும் மாபுரர்ணம், பூதபுராணம்என்ற இலக்கண நூல்கள் புராணங்கள் என்ற பெயர் பெற்றன. படிப்படியாகப் பழமை யான சம்பவங்களைக் கூறும் நூல்கள் பல, புராணங்களென வழங்கப்பட லாயின. சிவபுராணம் என்பதற்கு ‘சிவனது அநாதி முறைமையான பழைமை" என்று பொருள் கூறப்படுவதிலிருந்து, புராணம் என்பது பழைமையானதென்ற பொருளிலே தமிழில் வழங்கிவருதல் தெரிகிறது.
தலபுராணங்கள் வடமொழியி லெழுந்த புராணங்களைப் பின்தொ டர்ந் தெழுந்தனவேனும், அவை பதினெண் புராணங்களின் அமைப் புக்கு வேருகக் காவியங்களின் அமைப்பை ஓரளவு பெற்று, நாட்டுப் படலம், நகரப் படலம் ஆகியன கொண்டு விளங்கத் தலைப்பட்டன. காலத்துக்கும் இடத்துக்கு மேற்றவாறு தலபுராணங்களின் அமைப்பும் வேறுபட்டு வந்தன. அவ்வகையிலே விரதங்களின் மகிமைகூறும் நூல் களும் புராணம் என்ற பெயரிலும் கதை என்ற பெயரிலும் எழலாயின. அவை காவியப் பண்பு குன்றிப் புராணப் பண்புமின்றித் தலபுராணங் களின் புறத்துத் தோன்றிய நூல்களாக விளங்கின.
புராணங்கள்
வடமொழி நூலார் புராணம் "பஞ்சல கூடிணம்’ என்பர். அவர் கூறும் ஐந்துலட்சணங்களாவன சர்க்கம், பிரதிசர்க்கம், வம்சம், மந்வந் தரம், வம்சாநுசரிதம் என்பனவாம். சர்க்கம் என்பது உலகத்தின் தோற் றம். பிரதிசர்க்கம் உயிர்த் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் குறிக்கும். வம்சம் மன்னர் பரம்பரையைக் கூறுவது, மந்வந்தரம் காலவரையறை யினையும் மநுக்களது ஆட்சிக்காலங்களையும் எடுத்துரைப்பது. வம்சாநு சரிதம் மன்னர் பரம்பரையோடு தொடர்புடைய கிளைக்கதைகளைக் கூறுவதாம். இதனையே வெண்பாப் பாட்டியற் சூத்திரமாய ‘குலவரவு காரிகை யாப்பிற் புராணமேயாம் என்பதற் குரைகாரர், ‘குலவரவு முதலாயினவற்றை என்றதனல் உலகத் தோற்ற ஒடுக்கங்களும், மநு வந்தரமும், முனிவர் வரலாறும், அரசர்மரபும் அவர் சரிதமுங் கொள்க’ என்று கூறியுள்ளார். இவ்வம்சங்களிற் சிலவற்றையேனுங் கொண்டே தமிழிற் புராணங்களெழத் தலைப்பட்டன.

Page 56
94 ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
பேரிலக்கியங்களின் செல்வாக்கோங்கிய சோழர்காலப் பிரிவி லேயே தமிழிற் புராணங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. பதினன்காம் நூற்ருண்டு முதலாகத் தமிழகத்திற் புராணங்கள் பெரு மளவிலே தோன்றின என்பது தமிழிலக்கிய வரலாறுடையோர் பலர் கருத்து, அதே காலத்தில் உமாபதிசிவம் என்பவர் பாடிய கோயிற் புராணத்தைத் தொடர்ந்து பல தலபுராணங்கள் எழுந்தன என்றும், தமிழ்நாட்டிலே தலபுராணங்கள் எழுந்த காலத்தில் இலங்கையிலும் அத் தகைய புராணங்களாய தக்கிண கைலாச புராணம் முதலாயின பல பெறப்பட்டன என்றுங் கூறுவர். இன்று கிடைக்கும் ஈழத்துப் புராணங் களில் முன்தோன்றியதும் அத் தக்ஷிணகைலாச புராணமேயாம்.
தகழிண கைலாச புராணம்: இந்நூல் "மச்சேந்திய வட புராணத் தியல்பு மருவச் செய்யப்பட்டதெனச் சொல்லப்படுவதால் இது வட மொழிப் புராண நூலின் தழுவலென்பதும் அதனியல்பமையச் செய்யப் பட்டதென்பதும் பெறப்படும். இதிற் காணப்படும் புவனுேற்பத்திச் சருக்கம், மச்சாவதாரச் சருக்கம் ஆகியன வடமொழிப் புராணச் சாயலைக் காட்டும். எனினும் பெருங்காப்பிய இலக்கணப் பண்புகளாய வாழ்த்து, வணக்கம். வருபொருள் ஆகிய பயின்று, நாற்பொருளிற் சில குன்றித் தன்னிகரில்லாத் தலைவனும், மலை கடல் நாடு நகர் வர்ணனைகளும் கொண்டு, ஏனையவாய நன்மணம் புணர்தல், பொன்முடி கவித்தல், பொழில் நுகர்தல், புனல் விளையாடல், சிறுவரைப் பெறுதல், புலவி, கலவி, மந்திரம், தூது, செலவு, இகல், வென்றி, சந்தி எதுவு மின்றிக் காவிய இயல்பு ஓரளவு பெற்று விளங்குவதால் இதனைப் புராண மெனல் ஒரோவழி இயையும். ஒரு தலத்தின் வரலாறு கூறுவதால், இதனைத் தலபுராணம் என்று சொல்லுவதே பொருத்தமாகும்.
காவிய, புராண மரபுக்கு மாறக இந்நூலின்கண் திருநகர்ச் சருக் கம் இறுதியிலே வைக்கப்பட்டிருக்கிறது. வடமொழிநூலின் தழுவலாக இதெழுந்தமையால் நூலின் ஆரம்பப் பகுதியில் அதற் கிடமிருக்க வில்லைப் போலும். திருநகர்ச் சருக்க மென்ற பெயர் கொண்டிருப்பினும், இது நகரவர்ணனையாக அமையாது, இராமவிராவண யுத்தத்தின் பின் இராமபிரான் இலங்கை நகராட்சியை விபீஷணற் கீந்து, இராவணனைக் கொன்ற பிரமகத்திதோஷம் நீங்கத் தென்கயிலையை வணங்கி, அங்கே கோயிலமைத்த கதையும், சோழவரசனுன வரராம தேவன் என்பான் புராணங் கேட்கு நாளில் இத்தல வரலாறு கேட்டு அங்கு பெரும் பொருளொடு சென்று அதனைத் திருத்தி யமைத்த வரலாறும், எஞ்சிய பொன்னைக் கிணற்றிலிட்டுக் காவல் வைத்துச் செல்ல, அவன் புதல்வ ஞன குளக்கோட்டன் அது கேட்டு மேலும் பொருள் கூட்டிக் கோயிலைப் 1. மு. வரதராசன், தீமிழ் இலக்கிய வரலாறு', சாகித்திய அக்காதெமி, புது தில்வி,
1978, Lé. 187, 885.

ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி 9s
பெருப்பித்துக் குளங்கட்டிய கதையும், அவன்மரபில் வந்த கயவாகு வென்னு மரசன் பெளத்தணுய்ச் சிறிசங்கபோதி யென்னும் பெயருடன் அநுராதபுரியிலிருந் தரசோச்சிப் பின்னர் தென்கயிலைநாதருக்குத் திருப்பணி செய்ததும், அதன்பின் ஆரியச் சக்கரவர்த்தியாம் செகராச சேகரன் சைவம் வளர்த்த செய்தியும் சொல்வதாயமைந்துள்ளது.
இந்நூலின் முதற்கண் ணமைந்துள்ள "இலங்கை மண்டலச் சருக்கம்" ஈழநாட்டின் வளங்கூறுவதா யமைந்துள்ளது. இப்புராணச் செய்யுள்கள் அந்தாதித்தொடைகொண் டமைந்திருப்பது இதற்கான தனிச் சிறப் பாகும். Š፦
சிவராத்திரி புராணம் கடவுள் வாழ்த்து, தற்சிறப்புப் பாயிரம் ஆகியவற்றுட னரம்பித்துச் சிவராத்திரி உற்பவச் சருக்கம், சிவராத்திரி மான்மியச் சருக்கம், சுகுமாரச் சருக்கம், அங்குலச் சருக்கம், செளமினிச் சருக்கம், கன்மாடபாதச் சருக்கம், விபரிசச் சருக்கம், குபேரச் சருக்கம், சாலிகோத்திரச் சருக்கம் என்பனகொண்டமைகிறது. கடவுள் வாழ்த்து, தற்சிறப்புப் பாயிரம் ஆகியன புராண அமைப்புக்குப் பொருந்துவன வேனும், சிவராத்திரி உற்பவச் சருக்கம், சிவராத்திரி மான்மியம் முத லாயின புராணத்துக்குரிய அம்சங்கள் மேவாதனவாயுள்ளன.
சிவராத்திரி உற்பவச் சருக்கம் 'சிவநிசி விரதத் தோற்றமும் நோற் றிடு மியல்பும் மட்டுமே கூறும். சிவராத்திரி மான்மியச் சருக்கம் பொதுவாகச் சிவநிசி விரத மகிமையைக் கூறும். ஏனைய சுகுமாரச் சருக்கம், அங்குலச் சருக்கம் முதலாயன சிவராத்திரி விரதச் சிறப்பை யெடுத்து விளக்கத்தக்க கதைகளைக் கூறுவனவேனும், அக்கதைகளின் தலைவன் தலைவியர் ஒப்பாரும் மிக்காரு மில்லாதவர்களாகச் சித்திரிக் கப்படாது, பஞ்சமா பாதகச் செயல்கள் செய்பவர்களாகக் காட்டப்பட் டுள்ளனர். அதனுல் அவை காப்பிய இயல்போ புராணப் பண்போ பெறத் தவறிவிடுகின்றன. அன்றியும் சருக்கந்தோறும் வெவ்வேறு தலை வர்கள் தோன்றி மறைகின்றனர். எனவே, சிவராத்திரி புராணம் என்ற நூல் எவ்வகையாலும் புராணம் என்ற வகுப்பில் அடங்காததாகும். பழமையான கதை என்ற பொருளிலேயே அது புராணம் எனப்படு கிறது போலும்.
ஏகாதசி புராணம் கடவுள் வாழ்த்து, பாயிரம் ஆகியவற்றை யடுத்துக் காலநிர்ணயச் சருக்கம், உருக்குமாங்கதச் சருக்கம், விமேகாதசிச் சருக் கம் என்பன கொண்டமைந்துள்ளது. காலநிர்ணயச் சருக்கத்தில் ஏகா தசியினைக் கணிக்கும் முறைகளும், அவ்விரதத்தை அனுஷ்டிக்கும் விதி களுமே கூறப்பட்டுள்ளன.

Page 57
96 ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
உருக்குமாங்கதச் சருக்கத்தில், உருக்குமாங்கத னென்னு மரசன் நந்தவனஞ் சமைத்ததும், ஆங்கு மலர்ந்த மலர்களை அரமகளிர் கவர்ந்து சென்றதும், கொம்மடிச் செடி வளர்த்து அவருள் ஒருத்தியை அவனகப் படுத்தியதும், அவள் வாயிலாக ஏகாதசி விரத மகிமையை உணர்ந்து தானும் தன் குடிமக்களு மவ்விரத மனுஷ்டித்ததும், அதனல் அவ்விராச் சிய மக்கள் இறக்கும்போது வைகுண்ட பதம் பெற்றதும், யமராச னதுகண்டு வருந்தி ஈசற்கும் வைகுண்டவாசற்கும் முறையிட்டதும், அவர் 'உருப்பசியை விடுத்தவன்ற னுள்ளத் துண்மை சோதிக்க எண் ணியதும், அவள் அவ்வரசன் மனைவியாகித் தாம்பூல மருத்தி யவன் ஏகாதசி விரதத்தைக் கெடுக்க முயன்றதும், அதிலவள் தோற்றதும், அதனுல் உருக்குமாங்கதனும் அவன் குடிமக்களும் வைகுண்ட பதவி பெற்றதும் சொல்லப்படுகின்றன. வீமேகாதசிச் சருக்கத்திற் பாண்டு புத்திரனன வீமன் ஏகாதசி விரத மனுஷ்டித்த வகையும் அதனுலவன் பெற்ற பேறும் விபரிக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் உருக்குமாங்கதச் சருக்கத்தைவிட, ஏனையவற்றிற் புரா ணப் பண்புகள் சிறிதேனும் காணப்படவில்லை. உருக்குமாங்கதச் சருக் கத்திற் காப்பிய அல்லது புராணப் பண்புகள் ஒரளவு அமைந்திருப்பினும், அக்கதைக்கென உரித்தான வாழ்த்து, வணக்கம், வருபொருள் கூறும் பகுதிகள் அமைக்கப்படவில்லை. அன்றியும் இந்நூலின் ஒருபகுதியாகவே அச்சரிதம் அமைந்துள்ள்து. எனவே அச்சரிதத்தை மட்டுந் தனியே கணித் தல் சாத்திய மாகாது. அதனுல் ஏகாதசி புராணம் என்ற நூல் புராண இலக்கணம் பொருந்திய வொன்றன்று என்றே கொள்ளவேண்டும்.
பிள்ளையார் கதை, புராணம் என்ற பெயர்கொண்டு விளங்கவில்லை யேனும் விநாயக விரத மகிமை கூறும் நூலாக அமைந்திருப்பதால், இதனையும் விரத மகிமை கூறும் ஏனைய நூல்களாய சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம் ஆகியவற்றுடனேயே வைத்தெண்ண வேண்டியுள்ளது. இதன் சிறப்புப் பாயிரந் தரும் விபரத்திலிருந்து இது புராணங்களின் பேருக விளைந்த ஒன்று என்பது போதரும். இந்நூல் அகவற் பாவினுற் செய்யப்பட்டுக் காப்புச் செய்யுளும், விநாயகர் துதியும், சப்பாணியும், சரஸ்வதி துதியுந் தலைக்கொண்டு, போற்றித் திருவக வல், வருக்கக்கோவை, தத்துவஞானத் திருவகவல், நூற்பயன் ஆகியன கடைக்கொண்டு விளங்குகிறது. இவற்றுட் சரஸ்வதி துதியினைவிட ஏனைய அனைத்தும் விநாயகர் சிறப்புக் கூறுவனவாகவே விளங்கும். இந்நூலிற் புராண வடிவத்தையோ காவிய உருவத்தையோ காண முடியா விட்டாலும், தலபுராணத்தின் தன்மைகள் சில பெற்ற விரத மகிமை கூறும் புராண இயல்பினைக் காணலாம்.
காப்பியங்கள்
இக்காலப் பகுதியில் ஈழத்தெழுந்த காப்பியங்கள், புராணங்களைப் போலப் பிற நூல்களின் தழுவல்களாகவே அமைந்துள்ளன என்பதை

ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி 97
முன்னர் கண்டோம். கண்ணகி வழக்குரை அல்லது கோவலஞர் கதை அல்லது சிலம்பு கூறல் என்ற நூல் சிலப்பதிகாரத்தின் தழுவல்போல் அமைந்தமையால், அதனைப் போலவே இதுவுங் காப்பிய அமைப்புப் பெற்று விளங்குகிறது. சிலப்பதிகாரத்தைக் காப்பியமென வழங்குவதற் குரிய காரணங்கள் இதற்குமமையும். வாழ்த்து, வணக்கம் ஆகியவற் றுடன் அறம், பொருள், இன்பம் விரவித் தன்னிகரில்லாத் தலைவியும் பல வர்ணனைகளுங் கொண்டு, நன்மணம் புணர்தல், புலவி, கலவி, தூது, செலவு, இகல், வென்றி ஆகியன உள்ளடக்கி விளங்குவதாற் கண்ணகி வழக்குரையினைக் காப்பியமெனல் பொருந்தும்.
இரகுவம்சம் என்ற நூல் அப்பெயர் கொண்ட வடமொழிக் காப்பி யத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாயமைந்திருப்பதால், அதன் காப்பியப் பண்பு இதிலும் பிரதிபலித்திருக்கக் காணலாம். காப்பு, பாயிரம் ஆகிய வற்றைத் தொடர்ந்து ஆற்றுப்படலம், நாட்டுப்படலம் என்பன கொண்டு நாற்பொருள் பயின்று, தன்னிகரில்லாத் தலைவரை உடைத்தாய், நன் மணம் புணர்தல், பொன்முடி கவித்தல், சிறுவரைப் பெறுதல், செலவு, இகல், வென்றி என்பன உற்று விளங்குவதால் இது பெருங்காப்பிய அமைதி பெறுகிறதெனினும், குறித்த ஒரு தலைவனின் சம்பவங்களன்றிப் பல தலைவர்களது செய்திகள் கூறப்படுதலின், அதனைப் பெருங்காப்பியம் என்று கொள்ளுமாறில்லை. காப்பியமென்று கொள்ளுவதற்கும் அதே காரணம் இடையூறயுள்ளது. எனினும், திருத்தொண்டர் புராணம், எவ்வாறு தனியொரு புராணமாகக் கொள்ளப்படுகிறதோ, அவ்வாறே இதுவுங் காப்பியமாகக் கருதப்பட்டு வருகிறதெனலாம்.
திருச்செல்வர் காவியம் சிந்துதேசக் கதையொன்றின் தமிழாக்க மெனினும், தமிழ் மரபோடு ஒத்து நடக்கத்தக்க தொன்ருகையால், அது தமிழ்க்காவியமாய் அமைதற்குப் பொருந்தமுடையதாய் விளங்கு கிறது. ‘வாழ்த்து, வணக்கம், வருபொருள்' என்ற வகையின், காப்பு, கடவுள் வாழ்த்து, பாயிரம் என்பன முன்வந்து, "நாற்பொருள் பயக் கும் நெறிகாட்டும் வகையில் அபினேர் அரசியற்கைப் படலம், செருச் செய் படலம், மணவினைப் படலம், துறவுப்படலம் என்பன அமைந்து, 'தன்னிகரில்லாத் தலைவனுகத் திருச்செல்வன் விளங்கி "நாட்டுவளம், நகர்வளம் கூறும் நாட்டுப்படலம், நகரப்படலம் என்பன பெற்று, 'நன்மணம் புணர்தல், பொன்முடி கவித்தல், புனல்விளையாடல், சிறுவ ரைப் பெறுதல்” என்பன நாட்டும் மணவினைப் படலம், முடிசூட்டுப் படலம், நீர்விளையாட்டுப்படலம், திருச்செல்வன் உற்பவப் படலம், புத்திரசேமப்படலம் ஆகியன கூட்டி இது பெருங்காப்பிய இலக்கணம் பெற்று விளங்குவது போலத் தோன்றினும், அபினேர் என்ற அரசன் அஞ்ஞானியாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதால், அவனை இந்நூலின் "தன் ணிகரில்லாத் தலைவனுகக் கொள்ளுதல் அசாத்தியமாகிறது. அவன்
−V - 7 سے FF *

Page 58
98 ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
மகனகிய திருச்செல்வனுக்கத்தகைமை உளதேனும், அவனுக்கில்லற வாழ்வு கிட்டாமையால் அவன் கதையும் பெருங்காப்பிய நிலை பெறத் தக்கதாயில்லை. எனவே, இதனைக் காப்பியமென்றே கருதல் வேண்டும். இந் நூலாசிரியர் காவிய இலக்கணத்தை உணர்ந்து, அதன்வழி ஒரு காவியஞ் செய்யவெண்டுமென்றெண்ணியே இதனைச் செய்யமுனைந்தா ரென்பதனை,
*அத்தகைத் தாக நானுங் காவிய மறைய வெண்ணி முத்தமிழ்க் கலைஞர் சொற்ற முறைமையைத் தொடர்ந்? தென்றும்,
“காவிய மதனைச் செப்பின் கடவுள் வாழ்த் தவைய டக்கந் தாவுபா யிரநா டாதி தகுமிகு செயல்கள் மற்றும் மேவறம் பொருளோ டின்பம் வீடிவை விளங்கக் கற்றேர் நாவிசை சித்தி ரங்கள் தம்மையு நவிற்று வாரால்
என்றும் பாயிரத்தின்கண் கூறியிருப்பதாற் புலணுகும்.
ஈழத்துப் புராண காப்பிய மரபு
குறித்த காலப்பகுதியில் ஈழத்தெழுந்த புராணங்களுள் மேற்கூறப் பட்ட நான்கும், காப்பியங்களுள் மேற்குறித்த மூன்றுமே இப்பொழுது கிடைக்கத்தக்கனவாயுள்ளன. அவை பிற நூல்களின் தழுவல்களாகவே அமைந்துள்ளன. இந்நூல்களெழுந்த காலகட்டத்தில் வடமொழி நூல்களையோ அன்றிப் பிறநூல்களையோ தழுவி எழுதும் மரபே ஈழத் திலும் தமிழகத்திலும் பெருவழக்காயிருந்த தென்பதனை அக்காலப் பகுதியிலும் அதற்குச் சிறிது முன்னருந் தமிழகத்தெழுந்த கம்பராமா யணம், கந்தபுராணம், பாகவதம், பாரதம், நளவெண்பா, நைடதம், கூர்மபுராணம் இலிங்கபுராணம், விநாயகபுராணம், அரிச்சந்திரபுரா ணம், மச்சபுராணம், பூரீபுராணம் என்பன போன்ற நூல்களும் ஈழத்திற் சிங்களத்திலெழுந்த "அமாவதுர' (அமிர்த வெள்ளம், 13ஆம் நூற்றண்டு),மேகதூத சன்னய'(மேகதூத விளக்கம்,13ஆம் நூற்றண்டு), "ஜானகீ, ஹரன" (13ஆம் நூற்றண்டு), “சத்தர்ம ரத்னுவலிய" (நீதி மாலை, 13ஆம் நூற்ருண்டு), "கவ் சிலுமின' (கவிச்சிரோமணி, 13ஆம் நூற்ருண்டு), ‘சத்தர்மாலங்காரய" (நீதியணி, 14ஆம் நூற்ருண்டு), “காவிய சேகரய" (காவிய சேகரம், 15ஆம் நூற்ருண்டு) என்பன போன்ற நூல்களும், பல ஜாதகக் கதைகளும் காட்டி நிற்கும்.
முதற் குலோத்துங்க சோழனது ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த வீரைத் தலைவன் பரசமய கோளரி அஷ்டாதச புராணம், கன்னிவன

ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி 99
புராணம் என்னும் புராணங்களைப் பாடினுனெனச் சாசனங்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. அதன்பின் 14ஆம் நூற்ருண்டுவரை புராணங்கள் எழுந்த செய்தி எதுவும் அகப்படவில்லை. 14ஆம் நூற் ருண்டில் உமாபதிசிவம் என்பார் கோயிற் புராணம் பாடியதைத் தொடர்ந்து தமிழகத்திற் பற்பல தலபுராணங்க ளெழுந்தன. உதாரண மாகத் திருப்பரங்கிரிப் புராணம், சேதுபுராணம், திருவொற்றியூர்ப் புராணம், திருமழபாடிப் புராணம், காசிகண்டம், சிதம்பர புராணம், தணிகைப் புராணம் ஆகியவற்றையும், திருவாரூர், திருவெண்காடு, திருவண்ணுமலை, திருச்செங்கோடு, விரிஞ்சீபுரம், வேதாரணியம், கும்ப கோணம், திருச்செங்காட்டங்குடி, திருவெண்காடு, தீர்த்தகிரி, திரு வொற்றியூர், திருவாரூர் ஆகிய ஊர்கள்பற்றிய தல புராணங்களையுங் காட்டலாம். இவ்வகையில் ஈழத்தெழுந்ததுவே தகFணகைலாச புராண மென்ற நூலாகும். இந்நூல் பெரும்பாலும் விருத்தப் பாவாற் செய் யப்பட்ட ஏழு சருக்கங்களைக் கொண்டு, தலபுராணப் பண்புடன் விளங்கு கிறது. இதன் முதலாவது அத்தியாயமாய இலங்கை மண்டலச் சருக் கம், வர்ணனை வளம் நிறைந்த நாட்டுப் படலமாக அமைந்து, ஈழத் தின் வனப்பை எடுத்துக்காட்டி நிற்கும்.
*வரையெலா மாரம் ஆரம் வனமெலா நன்கார் நன்கார் நிரையெலாஞ் சாலி சாலி நிரையெலாங் கன்னல் கன்னல் தரையெலா நீல நீலந் தடமெலா நாறு நாறுங் கரையெலா மன்ன மன்னங் கடலெலா மீழ மீழம்'
என்ற இலங்கை மண்டலச் சருக்கச் செய்யுளை அதற்கு உதாரணமாகக் காட்டலாம். இந்நூலின் இரண்டரம் அத்தியாயமாய திருமலைச் சருக் கம், இதன் நகரப் படலம்போல அமைந்து, நூலின் பிரதான இட மாகிய திருமலை-தகSணகைலாசம்-கைலாச மலையின் திரிகூட சிகரமா யிருந்து, வாயு தேவனுற் கொண்டுவரப்பட்டு ஈழத்தின் வடகரை யிலே வைத்த கதையும் அவற்றின் வருணனைகளும் கூறும். இவ்விரு சருக்கங்களும் காவியப் பண்பு கொண்டமைய, ஏனைய சருக்கங்கள் புராணப் பண்புகொண்டியலும். ஆயின், இறுதி அத்தியாயமாய திரு நகரச் சருக்கம் நகரப் படலமாக அமையாது, திருக்கோணேஸ்வரத்தின் வரலாறு கூறும் பகுதியாக அமைந்துள்ளது. இவை இந்நூலின் தனிப் பண்புகளெனலாம்.
கொடியவர்களும், அதிகாரச் செருக்கு மிகுந்தவர்களும், துன்பமுற்று மனம் திருந்திக் கோயில்களுக்கு வந்து வழிபட்டு நல்லவர்களாக மாறிய
1. மு. இராகவையங்கார், சாஸனத் தமிழ்க்கவி சரிதம்', மூன்ரும் பதிப்பு, 1961,
பக்கம் 82.

Page 59
100 #ழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
தாகத் தலபுராணங்கள் கதைகள் கூறுவது வழக்கம். இக்கருத்தினை ஆதாரமாகக் கொண்டு சமய விரதானுஷ்டானங்களை நிலைநிறுத்தத் தலபுராணங்களைத் தழுவி யெழுந்தனவே சிவராத்திரிபுராணம், ஏகாதசி புராணம் ஆகியன. இவ்வகையான விரதானுஷ்டானங்களை மட்டுங் கூறும் புராண நூல்கள் ஈழத்திலேயே முதலில் எழுந்தன. இவற்றைத் தொடர்ந்து, நெல்லைநாதர் இயற்றிய சிவராத்திரி புராணம் தமிழகத்தே உருவாயிற்று. அதனைச் ‘சில பிரதிரூபங்களைக்கொண்டு திருத்தி அதிரி கித்து' யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை நா. சிவசுப்பிரமணிய ஐயர் (சிவாசாரியர்) தாமே சிவராத்திரி புராணம் ஒன்றினை 19ஆம் நூற் ருண்டின் பிற்பகுதியிற் செய்துள்ளார். சைவக் கோயில்களையும் சமயா சாரங்களையுந் தகர்த்தெறிவதிற் பெருமுயற்சி செய்துவந்த போர்த்துக் கேயர் ஆட்சியின் பின், மக்கள் சமயானுஷ்டானங்களிற் காட்டிவந்த ஆர்வமே இவ்வித புராணங்கள் ஈழத்தெழுவதற்குக் காரணமாயிற் றெனலாம். வரதபண்டிதரியற்றிய பிள்ளையார்கதை யென்ற நூலையும் இவ்வகையிற் சேர்க்கலாம். இது 745 அடிகளைக் கொண்ட அகவற் பாவால் இலகுவான நடையில் எளிய சொற்களாற் செய்யப்பட்டுள்ளது. கல்வியறிவு குறைந்தோரும் இலகுவில் விளங்கிக்கொள்ளத்தக்க வகை யில் இவ்வகவற்பா அமைந்திருப்பதே இதன் சிறப்பியல்பென்று கொள்
@TG)TTLD.
காப்பிய நூல்களுள் இரகுவம்மிசமும் திருச்செல்வர் காவியமும் கம்பராமாயணத்தின் நடையை ஒத்து இயங்குவனவேனும், திருச்செல் வர் காவியத்தின் தர்க்க சாஸ்திரப் படலம் மணிமேகலையின் ‘சமயக் கணக்கர்தந் திறங்கேட்ட காதை" யினை நினைவுபடுத்துவதா யுள்ளது. திருத்தக்கதேவர் சீவகசிந்தாமணியைச் செய்தபின், தமிழகத்தெழுந்த புராணங்கள் காப்பியங்க ளனைத்துமே விருத்தப் பாக்களாற்ரு னமைய வேண்டுமென்ற நியதி பெற்றனபோல உருப்பெற்றன. அவற்றைப் பின்பற்றி ஈழத்தெழுந்த புராண காப்பியங்களும் விருத்தப் பாக்களா லேயே பெரும்பாலுஞ் செய்யப்பட்டன. ஆயின் கண்ணகி வழக்குரை மட்டும் ‘தலமுழுதுங் கொண்டாடத் தாளிசையாய்ப் பாடினனே "2 என்று அதிற் சொல்லியுள்ளவாறு செய்யப்பட்டிருக்கிறது.
கண்ணகி வழக்குரையிற் கம்ப ராமாயாணத்தின் சாயலோ அன்றி அக்காலத்தெழுந்த பிற நூல்களின் சாயலோ இல்லாதிருப்பது, அவற்றி ஞதிக்கம் ஈழத்திற் பரவ முன்னர் இந்நூல் எழுந்திருக்கலா மென்பதற் கோர் சான்ருகும். இது சிலப்பதிகாரக் கதையின் தழுவலெனப் பொது வாகச் சொல்லப்படினும், அந்நூலிற் காணப்படாத "வரம்பெறு காதை, 1. மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அக்காதெமி, புதுதில்லி,
1972, uáš. 188.
2. கண்ணகி வழக்குரை. இரங்கிய காதல், மூன்ருஞ் செய்யுள், வி. சீ. கந்தையா
பதிப்பு 1968, பக்கம் 219.

ஈழத்துப் புற்ப்பொருள் இலக்கிய வளர்ச்சி 101
‘கப்பல்வைத்த காதை’, ‘கடலோட்டு காதை", "பொன்னுக்கு மறிப் புக் காதை", "வழிநடைக் காதை’ ஆகியன புதிதாக, இதிலிடம் பெறு கின்றன. இவற்றுட் "கப்பல் வைத்த காதை" யின் பகுதியாய 'தூரி யோட்டு" என்ற அதிகாரம் ஈழத்துடன் நெருங்கிய தொடர்புடைய தாகக் காணப்படுகிறது. இதிலே கண்ணகியின் காற்சிலம்பினுக்கு நாக மணி கொள்ளத் தென்திசைத் தீவுக்குச் செல்வதற்குக் கப்பல் கட்டுவ தற்காகப் பலகை பெறக் கட்டுமரங்களில் மீகாமன் முதலியோர் ஈழத் தைச் சுற்றிவருங் காட்சி வருணிக்கப்படுகிறது. அதிலே திருக்கோணமலை, மாவலிகங்கை, கெவுளியா முனை, ஈச்சுரம்பத்தை, பன்றித்தீவு, சல்லித் தீவு, பாசிக்குடா, ஏருவூர், புளியந்துறை, மட்டக்களப்பு, கண்டபாணம் (திருக்கோவில்), உப்பளம், தேனுவரை, வலிகாமம், காலி, கொழும்புத் துறை (காலிப்பக்கத்துள்ளது), அலுக்காமத்துறை, மக்கூனை, களுத் துறை, உளுத்தபள்ளம், கொழும்பு, வத்தாலை, நீர்கொழும்பு, மாரு விடம், சிலாபம், குதிரைமலை. காரைதீவு ஆகிய ஈழத்துக் கரையோரப் பகுதிகள் கூறப்படுகின்றன. அதை அடுத்துவரும் "கடலோட்டு காதை யின் பகுதியாய வெடியரசன் போர்" என்ற அத்தியாயமும் ஈழத்தின் வடகரையிலுள்ள கீரிமலைப் பகுதியோடு தொடர்புட்ைடயதா யமைக்கப் பட்டிருக்கிறது. எனவே, சிலப்பதிகாரக் கதையைவிடக் கண்ணகி வழக்குரை கதை ஈழத்தோடு நெருங்கிய தொடர்புடையதெனலாம்.
இளங்கோ செய்த சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்துடன் முடி வடைகிறது என்ற ஒரு சாரார் வாதத்துக் காதாரமளிப்பது போலக் கண்ணகி வழக்குரை என்ற நூல், வழக்குரைத்த காதையுடன் முற் றுப் பெறுகிறது. அன்றியுஞ் சிலப்பதிகாரத்துப் புகார்க் காண்டத்தி லுள்ள "அந்திமாலை சிறப்புச்செய் காதை", "இந்திர விழவூ ரெடுத்த காதை’, ‘கடலாடு காதை', 'கானல்வரி", "வேனிற்காதை", "நாடுகாண் காதை" ஆகியனவும், மதுரைக் காண்டத்திலுள்ள "காடுகாண் காதை", *வேட்டுவ வரி', 'புறஞ்சேரியிறுத்த காதை’, ‘ஊர்காண் காதை’, ‘ஆய்ச் சியர் குரவை", "துன்பமாலை”, “ஊர் சூழ் வரி’, ‘வஞ்சின மாலை”, “அழற் படு காதை’, ‘கட்டுரை காதை" ஆகியனவும் கண்ணகி வழக்குரையி லிடம்பெறவில்லை. இதனற் சிலப்பதிகாரத்தி லிருந்துதான் கண் ணகி வழக்குரை யென்ற நூல் உருவானதென்ற கருத்து வலுப்பெரு தொழிகிறது. கர்ண பரம்பரைக் கதைக்கு இளங்கோ தன் கற்பனையைச் சேர்த்துக் கற்ருேர்மெச்சுங் காவியமாகச் சிலப்பதிகாரஞ் செய்தது போலவே, சகவீரனுந் தன் கற்பனையைக் கூட்டிப் பொதுமக்கள் காவிய மாகக் கண்ணகி வழக்குரை செய்திருக்கலாம். அது கல்வியறிவு குறைந்த பொதுமக்களுக்காகச் செய்யப்பட்ட நூலென்பதற்குச் சான்ருக வழக் குரைத்த காதையிலிருந்து,

Page 60
102 ஈழத்துப் புறப்பொருள் இலக்கிய வளர்ச்சி
“பாண்டியனைப் பழிகேட்டுப் பைந்தொடியாள் நிற்பளவில் தாண்டுபரி மீனவன்முன் தட்டானு மேதுசொல்வான் ஈண்டபெரும் புகழ்புனையும் இராசர்தங்கள் பெருமானே ஆண்டவனே திருவுளத்தில் அலைச்சல்வந்த தேதோதான்."
என்ற செய்யுளை எடுத்துக் காட்டலாம்.
சிலப்பதிகாரக் கதையின் இறுதிப் பகுதியிற் கண்ணகி தெய்வ மாவதும் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுப்பதுங் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தின்படி கண்ணகி என்ற மானிடப் பெண் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்ததனல் வானுறையுந் தெய்வத்துள் வைத்து வணங்கப்படுகிருள் என்ற பொருள் தொனிக்கிறது. சிலம்பு கூறல், கோவலனர் கதை, கண்ணகி வழக்குரை என்பனவற்றிற்கு இக்கருத்து ஏற்புடையதாக இருக்கவில்லை. கற்புக்கடம் பூண்ட பொற் புடைச் செல்வியைச் சைவசமயத்தவர் தம் கடவுளாக ஏற்றுக்கொள்ள மாட்டார். எனவே இக்கதையிற் கண்ணகி உமாதேவியின் அவதார மாகக் காட்டப்படுகிருள். அதனலேயே கண்ணகி வணக்கம் ஈழத்துச் சைவமக்களிடையே அம்மன் வணக்கமாகப் பரவிற்றெனலாம்.
ஈழத்தெழுந்த நூல்களுள் முதற் புராணமாய தக்ஷஷிணகைலாச புராணமும், முதற் க்ாப்பியமாய கண்ணகி வழக்குரையும் அந்தாதித் தொடை கொண்டு யாக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கதே. வேறு புராணங்களுக்கோ காப்பியங்களுக்கோ அமையாத இச்சிறப்பினை, ஈழத் தெழுந்த இவ்விரு இலக்கியங்களும் எய்தியிருப்பதால், அக்கால ஈழத் திலக்கியப் பண்புகளுள் அதுவுமொன்றெனக் கொள்ளலாம். −

பிரபந்த வகையுள் அமையாத ஈழத்து இலக்கியங்கள்
g) uusio — IV
ஈழத்தெழுந்த தமிழ் நூல்களுட் பலசோதிட நூல்களும், வைத் திய நூல்களும், வரலாற்று நூல்களும் கி. பி. பதினெட்டாம் நூற்ருண் டின் இறுதிக்கு முன் தோன்றினவென முன்னர் கண்டோம். சோதிட நூல்கள் சாதகம் என்ற பிரபந்த வகையைச் சேர்ந்தவையாயிருத்தல் கூடுமாகையாலும், வைத்திய நூல்களும், வரலாற்று நூல்களும் பிரபந்த வகைகளுட் காப்பிய வகுப்பையோ தொகைநிலைச் செய்யுள் வகுப்பையோ சேரத்தக்கனவெனக் கருதக்கூடியவை ஆகையாலும், அவற்றின் இலக் கணத்தை நோக்கித் தெளிவாம்.
சாதகம் என்ற சொல்லாட்சி சங்ககாலத்திருந்ததாகத் தெரிய வில்லை. அது பிரபந்த வகைகளில் ஒன்ருகக் கருதப்பட்ட பிற்காலத் திற் சாதகம் என்பது என்ன பொருளில் உபயோகிகப்பட்ட தென் பதை விளக்கும் வகையில்,
"திதிநிலை, வாரநிலை, நாண்மீனிலை, யோகநிலை, கரணநிலை, ஒரைநிலை, கிரகநிலை, இவ்வேழ்வகை யுறுப்புக்க ணலையையுஞ் சோதிட நூலா னன்குணர்ந்தவற்றை யமைத்தவற்ருற் றலைவர்க் குறுவன கூறுவது; மற்றும் யுகாதியாண்டு முதலியவுங் கொள்க’ என்று சதுரகராதி கூறும்,

Page 61
104 பிரபந்த வகையுள் அமையாத ஈழத்து இலக்கியங்கள் பன்னிரு பாட்டியல் அதனே, 4y
* தோற்றிய சாதகம் சாற்றுங் காலைப்
பற்றிய கலியுகத் துற்ற யாண்டில் திருந்திய சகாத்தமும் ஆண்டும் பொருந்திய ஞாயிறும் பக்கமும் மேய் வாரமும் இராசியும் மன்னுற மொழிதற் குரிய ’
என்று விவரிக்கும். அதன் உரைகாரர்,
‘மகவு தோன்றியதைப் பற்றிய சாதகம் என்னும் நூலைப் பாடும் போது மகவு தோன்றிய அப்பொழுது பொருந்திய கலியுகத்தில் அமைந்துள்ள ஆண்டில் செவ்விதின் விளங்கும் சகாப்தமும், அச் சகாப்தத்துள் அப்பொழுது நிகழும் ஆண்டும், அச்சமையத்துப் பொருந்திய உதயாதி நாழிகையும், பூர்வபக்கம் அமரபக்கம் என்பவற்றுள் அப்பொழுதுள்ள பக்கமும், அன்றைக் கிழமையும், மேட முதலியனவாகிய பன்னிரண்டு இராசிகளும், அப்பொழுது பொருந்திய இராசியும் அதிற் பொருந்தப் பாடுவதற்கு உரியன வாம்" என்று விளக்குவர். இவற்றுடன் முக்கியமாக இராசிப் பலனைக் கூறும் நூல் என்ற கருத்திலேயே சாதகம் என்ற சொல் இக்காலத்தில் வழங்கி வருகிறது.
இராசிகளைப் பற்றிப் பன்னிருபாட்டியலார் குறிப்பிட்டதிலிருந்து அவற்றின் பலன் விரிக்கும் வழக்கமும் இருந்திருக்கவேண்டுமென ஊகிக்கலாம். அன்றேல், மகவு தோன்றியபோதுள்ள பன்னிரண்டு இராசிகளின் நிலை குறிப்பதால் ஆவதொன்றில்லை யெனலாம். பிரபந்ததீபிகை,
*அலகுறு சகாப்த மாண்டு தேதியுடு வோரையுந் திங்களுஞ் சாதகன்
றிசைசித்ர மபகாரமுந் திரமான கிரகநிலை யறிந்துசொல் சாதகம்’ என்ற கிரகநிலை யறிந்து சொல்லுதலை விசேடமாகக் கூறும். நிமித் தமும் காலமும் பார்த்துப் பலன் சொல்லும் வழக்கம் தொல்காப் பியனர் காலத்திலே ஒருவகையிலிருந்தது என்பதனை,
'படையியங் கரவம் பாக்கத்து விரிச்சி’ எனவும்,
(g 嫩 ר ? குடையும் வாளு நாள்கோ ளன்றி எனவும்,
1. தொல், பொருள். புறக். கு. 8. 2. தொல், பொருள். புறத் கு. 18,

பிரபந்த வகையுள் அமையாக ஈழத்து இலக்கியங்கள் 105
‘அச்சமும் உவகையும் எச்ச மின்றி
நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமுங் காலங் கண்ணிய வோம்படை யுளப்பட' எனவும் தொல்காப்பியம் குறிப்பதிலிருந்து தெரிகிறது. "பாக்கத்து விரிச்சி" என்பது
"நிரை கோடற்கு எழுந்தோர் போந்து விட்ட பாக்கத்துக் கங்குலில் நல்வாய்ப்புக் கேட்டலும், நிரை மீட்டற்கு எழுந்தோர் இடைப்புலத்துப் புறம் போந்தோர் கூறியவற்றை வாய்ப்புள் ளாகக் கேட்டலும்" என்ற உரையிலிருந்து, சகுனம் பார்த்துக் கருமந் தொடங்கும் வழக் கத்தையும்,
' குடையும் வாளும் நாள்கோள்” என்பதற்குத் 'தன் ஆக்கம் கரு திக் குடிபுறங்காத்து ஒம்பற் கெடுத்த குடை நாட்கொள்ளுதலும் அன்றிப் பிறன் கேடுகருதி வாள் நாட்கொள்ளுதலும் என்ற உரையிலிருந்து, நாட்பார்த்துக் கருமந் தொடங்கும் வழக் கத்தையும்,
‘அச்சமு முவகையும் மெச்ச மின்றி, நாளும் புள்ளும் பிறவற்றி நிமித்தமும், காலங் கண்ணிய ஒம்படை என்பதற்கு "நாள் நிமித் தத்தாலும் புள் நிமித்தத்தாலும், பிறவற்றின் நிமித்தத்தாலும் பாடாண் தலைவர்க்குத் தோன்றிய தீங்கு கண்டு அஞ்சிய அச்சமும் அது பிறத்தற்குக் காரணமாகிய அன்பும் ஒழிவின்றிப் பரிசிலர்க்கு நிகழ்தலின் அவர் தலைவர் உயிர்வாழுங் காலத்தைக் கருதிய பாதுகாவல்" என்ற உரையிலிருந்து இருவகை வழக்கத்தையுங் காண்கிருேம். இவற்றிலிருந்து வளர்ந்துவந்த ஒன்றே உதயாதி நாழிகை, சந்திர பக்கம், இராசி ஆகியன கணித்துப் பலன் கூறும் வழக்கமெனக் கொள்ளலாம். எனவே, தொல்காப்பியனர் காலத்தில் "நாளும் புள்ளும் நிமித்தமு மாக ஊற்றெடுத்த வழக்கம், பன்னிரு பாட்டி யலார் காலத்திற் சாதகமாகப் பரிணமித்துளதெனலாம்.
பன்னிரு பாட்டியலுக்குப் பின் பிரபந்த தீபிகையைத் தவிர ஏனைய பாட்டியல் நூல்கள் இப்பிரபந்தம் பற்றிப் பேசாதொழிந் தமை, காலப் போக்கில் இது தலைவன் சிறப்பைக் கூறுவதோடமை யாது சோதிட பலாபலன்களைக் கூறி இலக்கியச் சிறப்பியல்புகளை இழந்துவிட்டமையாற் போலும். அதனுற் பல பாட்டியல் ஆசிரியர் கள் அதனைப் பிரபந்த வகையிற் சேராது விட்டனர் எனலாம்.
1. தொல், பொருள். புறத். சூ. 36,

Page 62
106 பிரபந்த வகையுள் அமையாத ஈழத்து இலக்கியங்கள்
தொகைநிலைச் செய்யுள் என்ற தொடர் பல பாக்களின் தொகுப்பு என்பதைக் குறிக்கும். அதன் இலக்கணத்தை முதலில் நவநீதப் பாட்டியலிலேயே காண்கிருேம். *பாட்டுப் பொருளிடங் காலந் தொழில்பாட் டளவினெண்ணின் நாட்டித் தொகுத்தவன் செய்தவன் செய்வித் தவன்றம்பேர் மூட்டித் தொகுத்தவு மாகி முதனுள் மொழிந்தநெறி கேட்டுத் தெளிந்துகொள் கிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழியே’ என்ற நவநீதப் பாட்டியற் செய்யுளின் பழைய உரை,
‘பாட்டின் பொருளால் இடத்தால் காலத்தால் தொழிலால் வருவனவும், பாட்டினது அளவால் எண்ணுல் வருவனவும், செய் தவன் பெயரை நாட்டித் தொகுவனவும், செய்வித்தவன் பெயரை நாட்டித் தொகுவனவும் ஆம், முன்புள்ளாரால் சொல் லப்பட்ட இலக்கண நெறியானே புணர்த்தல்’ என்று கூறி, *பாட்டாற் ருெக்கது. குறுந்தொகை; எண்ணுற் ருெக்கன பன்னிரு படலமும் பதிற்றுப்பத்தும்; செய்தான் பேர் பெற்றது திருவள்ளுவப் பயன்; செய்வித்தானுற் பேர் பெற்றன பிங்கல சரிதை, வாமன சரிதை; இவற்றுள் முற்பட்டவை ஒருவராலும் பலராலும் உரைக்கப்படும்; ஒருவரால் உரைக்கப்பட்டது நான் மணிக்கடிகை, பலரால் உரைக்கப்பட்து அகநானூறு' என்று உதாரணங் காட்டும். அடுத்து இலக்கணவிளக்கப் பாட்டியல் அதனை,
* தொகைநிலைச் செய்யு டோன்றக் கூறி
ணுெருவ னுரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும் பொருளிடங் காலந் தொழிலென நான்கிலும் பாட்டினு மளவினுங் கூட்டிய தாகும்’ என அணியியலிற் செப்பியதைத் தொடர்ந்து,
* நெடுந்தொகை குறுந்தொகை கலித்தொகை யென்னப்
படுந்தொகைச் செய்யுள் பற்பல வாகும்’ என்று கூறி அளவான் வருவனவும் பாட்டான் வருவனவும் காட்டும். பிரபந்ததீபிகை,
‘நெடிலடிச் செய்யுட் டொகுத்தது நெடுந்தொகையு
நேர்குறிலடிச் செய்யுளால் நிரலித் தொகுத்தது குறுந்தொகை கலிப்பாவி
னேர் தொகுத் தொகையுமாய் முடிவதே போல்வன தொகைநிலைச் செய்யுளாம்"
என்று சொல்வதன் பொருள் அமையச் சதுரகராதி,

பிரபந்த "வகையுள் அமையாத ஈழத்து இலக்கியங்கள் 107
"நெடிலடிச் செய்யுளாற் ருெகுத்தது நெடுந்தொகையும், குறிலடிச்
செய்யுளாற் ருெகுத்தது குறுந்தொகையும், கலிப்பாவாற் ருெகுத்
தது கலித்தொகையும் போல்வன தொகைநிலைச் செய்யுள்." என்றுரைக்கும்.
இவை யனைத்தும் சங்க இலக்கியங்களாய எட்டுத்தொகை நூல் கள் போல்வனவற்றை நோக்கி எழுந்த விதிகள் என்பது புலனுகிறது. அவற்றைத் தவிர இவ்விதிகட்கமையப் புதுநூல் செய்தாரிலர், தொகுத் தற்கன்றி நூல் யாத்தற்கிவை இயையாவாகலின். பன்னிரு பாட்டி யல் இதனைக் கணக்கு என்ற தலைப்பில்,
*மேல்கீழ்க் கணக்கென இருவகைக் கணக்கே’
என்றும்,
‘அகவலும் கலிப்பா வும்பரி பாடலும்
பதிற்றைந் தாதி பதிற்றைம்ப தீரு
மிகுத்துடன் தொகுப்பன மேற்கணக் கெனவும்
வெள்ளைத் தொகையும் அவ்வகை எண்பெறின்
எள்ள நு கீழ்க்கணக் கெனவும் கொளலே’ என எட்டுத்தொகை நூல்களையும் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களை யும் நோக்கிக் கூறிற்றெனலாம், பத்துப்பாட்டை அது வேறு கூறின மையின்,
சோதிட நூல்கள் மேற்குறித்த சாதகம் என்ற பிரபந்த வகையில் அடங்காவோவெனின், அவை சதுரகராதி விதிப்படி, "தலைவர்க்குறுவன" கூருமையாலும், பன்னிரு பாட்டியலின்படி தனியொரு "மகவு தோன் றியதைப் பற்றிய அல்லவாகையாலும், அவ்வாருகா வென்பது பெறப் படும். அவ்வாறே வைத்திய நூல்களையும் வரலாற்று நூல்களையும் காப்பிய வகையிலோ பிற வகுப்பிலோ அடக்க முடியாதெனக் காண லாம். தொகைநிலைச் செய்யுளில் இவற்றை அடக்கலாமெனின், இவை தொகுக்கப்பட்ட செய்யுள்களன்றித் தொடர்நிலைச் செய்யுள்களாகை யால் அதுவுமாகாது. எனவே, இவற்றை வழமையான இலக்கிய வடி வங்களுள் அமையாத நூல்கள் என்றே சொல்ல வேண்டும்.
சோதிட வைதிய நூல்கள்
இவ்வகை நூல்களுட் காலத்தால் முந்தியன சோதிட நூல்களாகும். அக்காலச் சோதிட நூல்களுட் சரசோதிமாலை, செகராசசேகர மாலை, சந்தான தீபிகை ஆகியன அடங்கும். அவற்றைத் தொடர்ந்து வைத்திய நூல்கள் எழுந்தன. செகராசசேகரம், பரராசசேகரம், அமு

Page 63
08 பிரபந்த வகையுள் அமையாக ஈழத்து இலக்கியங்கள்
தாகரம் ஆகியன வைத்திய நூல்வகையைச் சேர்ந்தன. இவையனைத் தும் பிற மூல நூல்களின் வழிநூல்களாக அமைந்தவை. கி. பி. 14ஆம் நூற்றண்டளவில் ஈழத்தெழுந்த நூல்கள் பெரும்பாலும் மொழி பெயர்ப்பு நூல்களாகவோ தழுவல் நூல்களாகவோ அமைந்தனவாகவே காணப்படுகின்றன. ஆயின் அவற்றின் இலக்கியத் தரம், அவற்றிற்கு முன்னரே ஈழத்திற் றமிழ் இலக்கிய பாரம்பரிய மரபு விளங்கிய தென்பதற்குச் சான்று பகரும்.
"13ஆம் நூற்ருண்டிற்குப் பிறகு தமிழ் நாட்டில் சேக்கிழார் கம்பர் போன்ற பெரும் புலவர்களும் பெரிய இலக்கியங்களும் தோன்ற முடிய வில்லை". அதனல் அங்கு சிற்றிலக்கியங்களே தோன்றின. அவற்றுட் சோதிட நூல்களும் வைத்திய நூல்களும் இடம்பெற்றன. சித்தர்கள் பலர் மருத்துவ நூல்கள் இயற்றினர். இவர்கள் வழியில் வளர்ந்த தமிழ் மருத்துவக் கலை சித்த மருத்துவம் எனப் பெயர் பெற்றது. இவர்கள் பழைய தமிழ் இலக்கண மரபுகளை அவ்வளவாகப் பொருட் படுத்தவில்லை.
ஈழத்தில் இரண்டாம் பராக்கிரமவாகுவின் காலத்தே (1236-1271) சங்கராஜ அநோமதசி என்பார் ‘தைவஞ்ஞ காமதேனு என்ற சோதிட நூலை வடமொழிச் செய்யுள்நடையிற் செய்தார். அதே காலத்திற் "பூஜாவளிய' என்ற பெளத்த நூலை இயற்றிய மயூரபாத தேர, சிங்கள மொழியில் இரு வைத்திய நூல்களைத் தொகுத்தார். பஞ்சமூல தேர பேசஜ்ஜமஞ்ஜ"சா’ என்ற வைத்திய நூலைப் பாளி மொழியில் எழுதினர். இவ்வாறு தமிழகத்திலும் ஈழத்திலும் தமிழ், சிங்களம், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலே சோதிட நூல்களும் வைத் திய நூல்களும் கி. பி. 13ஆம் 14ஆம் நூற்ருண்டுகளில் எழுந்தன. அக்கால மரபைப் பின்பற்றி ஈழத்தெழுந்தனவே சரசோதி மாலை, செகராசசேகர மாலை, சந்தான தீபிகை ஆகிய சோதிட நூல்களும், செகராசசேகரம், பரராசசேகரம், அமுதாகரம் ஆகிய வைத்திய நூல் களுமாம்.
ஈழத்துச் சோதிட நூல்களின் மரபு
சரசோதிமாலையின் அவையடக்கப் பகுதியிற் காணப்படும்,
‘முன்னூ லுணர்ந்த முனிவோர்கள்
முதலோர் மொழிந்த சோதிடமாம் பன்னூல் விளங்கும் பொருளதனைப் பார்மே ணிகழும் படியாக
1. மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அக்காதெமி, புது தில்லி, 1972
ušasuh 178. 3. C. E. Godakumbura Sinha lese Literature. Colombo, 1955, Page. 6.

பிரபந்த வகையுள் அமையாத ஈழத்து இலக்கியங்கள் 109
அன்னூ லுரைத்த நெறிவழுவா
தாராய்ந் தூசி நுழைவழியின் மென்னூல் செல்லுஞ் செயல்போலத்
தமிழ்நூ லிதனை விளம்பலுற்றேன். என்ற செய்யுளால் அது பிற நூல்களைத் தழுவியோ மொழி பெயர்த்தோ செய்யப்பட்டதென்பது பெறப்படும். அதுபோலவே இதனைத் தொடர்ந்தெழுந்த செகராசசேகர மாலையும் வடமொழி நூலின் வழிவந்ததே யென்பது,
*தன்கடவுட் சுருதிகளின் மனமெனுஞ்சோ
திடமதனைத் தலத்தின் மீது மின்குலவு தென்கலையாற் றருகவென வருள்புரிய
என்ற அதன் சிறப்புப்பாயிரச் செய்யுட் பகுதியால் அறியலாகும். சரசோதிமாலையின் உள்ளீட்டிற் பெரும்பகுதி செகராசசேகரமாலை யிலுங் காணப்படுகிறது. ஆயின் சரசோதிமாலையிற் சுருக்கமாகக் கூறப்பட்ட பல விடயங்கள் செகராசசேகரமாலையில் விரிவாகக் கூறப் பட்டிருப்பதாலும், அதிற் கூறப்படாத சில விடயங்கள் இதிற் புதி தாகச் சேர்க்கப்பட்டிருப்பதாலும், சரசோதிமாலையைப் பார்த்த பின் னர் அதனிலுஞ் சிறப்பாகச் சோதிட நூலொன்று செய்யவேண்டும் என்னும் நோக்கத்துடனேயே செகராசசேகரமாலை செய்யப்பட்டிருக்க வேண்டுமென ஊகிக்கலாம். சரசோதிமாலையில் மனைசெயற் படலம் 72 செய்யுள் கொண்டு விரிவா யமைந்திருக்க, செகராசசேகரமாலை அப்படலத்தை 9 செய்யுட்களுடன் முடித்து, அப்படலத்துக்கு இன்றி யமையாது வேண்டப்படும் மனைமுகூர்த்தம் முதலிய பல விடயங்கள் சொல்லா தொழிந்தது. மேலும், சரசோதிமாலையிற் கூறப்பட்ட தெய்வ விரதப் படலம், குளுகுணப் படலம், சுபாசுபப் படலத்திற் கோசர பலனெழிந்த எஞ்சிய விடயங்கள் ஆகியவை சங்கிதை நூல்களுக்கு இன்றியமையாதனவா யிருப்பவும், அவை செகராசசேகரமாலையிற் சேர்க்கப்படாது போயின. இவற்றிலிருந்து, செகராசசேகரமாலை பூர்த் தியாவதற்கு முன்னரே இடையூறுகள் ஏற்பட்டு நூல் முற்றுப்பெருது போயிருத்தல் கூடுமெனத் தோன்றுகிறது. அதனற்போலும் சரசோதி மாலையில் நூல் அரங்கேற்றிய காலங் கூறப்பட்டிருப்பது போலச் செக ராசசேகரமாலையிற் கூறப்படவில்லை.
சந்தான தீபிகை வடமொழி நூலின் மொழிபெயர்ப்பென்பது முன்னரே கூறப்பட்டது. ஏனைய இரு சோதிட நூல்களும் மக்களுக்கு வேண்டிய நற்கருமங்கள் ஆற்றும் நாளுங் கோளும் பலனுங் கூறுகை யிற் சந்தானதீபிகை சந்தானவிருத்திக்கேற்ற சோதிட விடயங்களை மட்டுங் கூறும். இவையனைத்துங் காவிய நடையைத் தழுவிய விருத்தப்

Page 64
10 பிரபந்த வகையுள் அமையர்த ஈழத்து இலக்கியங்கள்
பாக்களாற் செய்யப்பட்டிருப்பது, காவிய மரபைக் கொள்ளத்தக்க வகையிற் கைக்கொண்டு இலக்கியஞ் செய்ய முனையும் அக்காலப் பண் பினைக் காட்டுகிறதெனலாம். அத்துடன் சோடச கருமத்திலே பஞ்சா யுதந் தரித்தல், கன்னவேதனம், அரைஞாண் ஆடை தரித்தல், செளள கருமம், வித்தியாரம்பம் என்பன போன்றனவும், ஏர்மங்கலப் பகுதியில் நெல் விதைத்தல், குடில் வைத்தல், வெருளி கட்டல், வயற்காவல் என்பன போன்றனவும், பலகருமப் படலத்திற் பசுவாணிகம், எருமை கொள்ளல், ஆடு கொள்ளல், ஆபரணம் பூணல் என்பன போன்றன வும் பிறவும் அக்காலச் சோதிடக் கொள்கைகளை மட்டுமன்றி, ஈழத்து அன்றைய சமுதாய நிலையினையும் எடுத்துக் காட்டி நிற்பனவாகும்.
நூலுக்குப் பெயரிடும் முறை, செய்தோனல், செய்வித்தோணுல், பொருளால், இடத்தால், காலத்தால், செய்யுளால், செய்யுட்டொகை யால் அமையும் என்ற மரபுக்கிணங்கச் செகராசசேகரமாலை, செய்வித் தோன் பெயராலும், சந்தானதீபிகை மூலநூற் பொருள் காரணமாக வும் பெயர்பெறச் சரசோதிமாலை ஒரு புதிய முறையிலே பெயர்பெற்று விளங்குகிறது. சரசோதிமாலையின் பாயிரத்திலே எட்டாஞ் செய்யுளில் ஆசிரியன் ‘புண்டரீகத்தார் மார்பன் புகழ்ச்சர சோதி மைந்தன்” என் றும், அதன் சாதகப் படலத்தின் இரண்டாஞ் செய்யுளிற் ‘புந்தியிற் றெளிந்த கல்விச் சரசோதி போச ராசன் என்றுந் தன்னைத்தான் கூறிக் கொள்வதிலிருந்து, நூலாசிரியனுன போசராசனுக்குத் தந்தை சரசோதி யென்று தெளியலாம். எனவே இந்நூல், செய்தோன் பெயரோ செய்வித்தோன் பெயரோ கொள்ளாது, செய்தோன் தந்தையின் பெயர் கொண்டு விளங்குகிறது, இவ்வாறு ஒருவன் செய்த நூல் அவன் தந்தை பெயரால் வழங்குவது மரபன்ருயினும், இந்நூலாசிரியன் அவ்வாறு செய்து நூலுக்குப் பெயரிடும் முறையில் ஒரு புதுமை கூட்டியுள்ளான்.
ஈழத்து வைத்திய நூல்களின் மரபு
செகராசசேகரம், பரராசசேகரம் ஆகிய இரு மருத்துவ நூல்களும் ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தனவெனப் பொதுவாகக் கூறினும், பரராசசேகரத்தை விடச் செகராசசேகரம் காலத்தாற் சிறிது முற்பட்ட தென்பதற்குச் சில ஆதாரங்களைக் காட்டலாம். செகராசசேகரத்தோடு நோக்குமிடத்துப் பரராசசேகரம் பாரிய நூலாகும். செகராசசேகரத்திற் சொல்லப்பட்டனவும் சொல்லப்படாத பலவும் பரராசசேகரத்திற் சொல்லப்படுகின்றன. செகராசசேகரம் செய்யப்பட்ட பின்னர் அதனைக் கண்ணுற்ற ஒருவரே செகராசசேகரத்தின் குறைபாடுபாடுகளை நோக்கிப் பரராசசேகரத்தைச் செய்திருக்கவேண்டும். செகராசசேகரம் சுருக்கமான மருத்துவ நூலென்றும் பரராசசேகரம் விரிவான மருத்துவ நூலென் றுஞ் சொல்லலாம்,

பிரபந்த வகையுள் அமையாத ஈழத்து இலக்கியங்கள் ill
இவ்விரு நூல்களும் வடமொழியிலுள்ள ஆயுள்வேத நூல்களைத் தழுவிச் செய்யப்பட்டன என்பதிலிருந்து, இவைசெய்யப்பட்ட காலத் திலே ஈழத்திற் சித்த மருத்துவம் பரவவில்லை என்று தெரிகிறது. இந் நூல்களின் காலத்துக்குச் சிறிது முன்னரே சித்த மருத்துவம் தமிழ் நாட்டில் ஆரம்பித்ததாகையால், அது ஆரியச்சக்கரவர்த்திகள் காலத் தில் ஈழத்திலே கையாளப்படவில்லை. ஆயின், அதையடுத்த போர்த் துக்கேயர் காலத்தின்பின் சித்த வைத்திய முறை ஈழத்திற் கைக் கொள்ளப்பட்டு வந்ததென்பதற்கு அமுதாகரம் சான்று பகரும்.
ஆயுள்வேத வைத்திய முறையைத் தழுவிய செகராசசேகரம் பர ராசசேகரம் ஆகிய நூல்கள் விஷ வைத்தியம் பற்றி எதுவுங் கூரு மையால், அதுபற்றிக் கூறும் நூலொன்றின் அவசிய தேவை 18ஆம் நூற்ருண்டில் உணரப்பட்டது. அதனுற் சித்தர் ஆரூடத்தை முதனுர லாகக் கொண்டு, அதிற் கூறப்பட்ட “ஊரும் உரகஞ் சிலந்தி தீண்டினல் வந்துறு குணப்பண்பு உரைத்து அதனை ஓர்ந்த தேர்ந்து நேரு மருந்துகள்" " கூறும் நூலாக அமுதாகரம் எழுந்தது. இதனை யடுத்து ஈழத் தமிழரிடையே சித்த மருத்துவம் பரவத் தொடங்கிற்றெனலாம்.
சித்த மருத்துவத்தைப் பொதுவாக அகத்தியனரோடு தொடர்பு படுத்திக் கூறும் வழக்கம் இருந்து வருகிறது. ஆயின், சித்த மருத்துவம் பற்றி 12ஆம் நூற்றண்டுக்கு முன் பேசப்படாமையாலும், அதுபற்றிய பழந்தமிழ் இலக்கியச் சான்றுகள் எதுவும் இன்மையாலும், சித்த மருத் துவம் செய்தாருள் ஒருவராகக் கருதப்படும் சித்தரான அகத்தியர் வேறு, தமிழ் இலக்கணம் வகுத்த முதற்சங்கப் புலவராகக் கொள்ளப் படும் அகத்தியர் வேறு என்றே அறிஞர் கொள்வர்." சித்த மருத்துவ நூற் செய்யுள்களின் இலக்கணநெறி குன்றிய தன்மை இதனை வலியுறுத் தும்.
ஈழத்து மருத்துவ நூல்கள் பெரும்பாலும் விருத்தப் பாக்களாற் செய்யப்பட்டிருப்பினும், பரராசசேகரத்திற் சிறுபான்மை ஆசிரியப்பா வும் கலிவெண்பாவும் இடம்பெற்றிருப்பது போலச் செகராசசேகர வைத்திய நூலிற் சிறுபான்மை வெண்பாவும் இடம்பெறக் காணலாம். இவையனைத்தும் யாப்பமைதி பெற்ற இனிய செய்யுள்களாக அமைந்து விளங்குகின்றன. ஈழத்துச் சோதிட நூல்களின் யாப்பழகு போல இவ்வைத்திய நூல்களின் யாப்பழகும் ஈழத்தில் விளங்கிய பழமையான செய்யுள் இலக்கிய பாரம்பரியத்தைச் சுட்டி நிற்கிற தெனலாம்.
1. அ. வரதீபண்டிதர், அமுதாகரம், சு. தம்பையபிள்ளை பதிப்பு, சென்னை, 1892. தற
சிறப்புப்புாயிரம், செய்யுள் 4.
2. மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அக்காதெமி, புது தில்லி,
1972. Lăsă 180.

Page 65
11塞 பிரபந்த வகையுள் அமையாத ஈழத்து ர்லக்கியங்கள்
இந் நூல்களிற். குறிக்கப்பட்டுள்ள நோய்களையும் அவற்றின் நிதா னம், மருந்து ஆகியவற்றையும் அவதானிக்குமிடத்து, ஆரியச்சக்கரவர்த் திகள் காலத்தில் உடல்நோய் பலவற்றிற்கும் ஈழத்தில் வைத்தியம் நடைபெற்றிருக்கிறதெனக் காணலாம். சத்திர வைத்தியம் புண்களைப் பொறுத்தமட்டில் அக்காலத்தில் நடைபெற்றிருப்பதாகப் பரராசசேகரம் சான்று பகரும். சுரத்தில் 64 வகைக்கும், சன்னியில் 40 வகைக்கும், சுவாதத்தில் 10 வகைக்கும், வாதத்தில் 80 வகைக்கும், பித்த ரோகத் தில் 40 வகைக்கும், சிலேற்பன ரோகத்தில் 96 வகைக்கும், மேகரோகத் தில் 40 வகைக்கும், உதர ரோகத்தில் 108 வகைக்கும், மூலரோகத்தில் 13 வகைக்கும், ஏனைய நீரிழிவு, பிளவை, கரப்பன், கிரந்தி, குட்டம், வலி, விக்கல், கசம், காசம், சத்தி ஆகிய ரோகங்களுக்கும் வைத் தியம் நடந்த அக்காலத்தில், மனநோய், எலும்புமுறிவு, பல்நோய், இரத்தக்கொதிப்பு, இருதய ரோகம் என்பனவற்றிற்கு வைத்தியம் நடந்த சான்றுகள் தென்படவில்லை. விஷ வைத்தியம் பின்னர் விருத்தி கடைந்தது போல, ஈழத்தில் இவற்றிற்கான வைத்தியமும் ஒல்லாந் தர் காலத்தின் பின் வளர்ந்திருக்கலாம். அக்காலத்திற் கண்டி மன்னன் மனைவிக்கு ஏற்பட்ட வயிற்று நோயை அங்குள்ள வைத்தியர்களாலே தீர்க்கமுடியாது போக, ஆரியச் சக்கரவர்த்திகள் குலத்தவனுன பரநிருப சிங்கன அழைத்து அரசியின் நோய் தீர்ப்பித்த சரித்திர சம்பவம், அக்கால ஈழத் தமிழரிடையே வைத்தியம் சிறப்புற்று விளங்கிற்று என்பதற்குத் தக்க சான்ருகும்.
செகராசசேகரம் சுரத்தில் 15 வகையே கூறுகையில் பரராசசேகரம் அதில் 64 வகைபற்றிக் கூறும். அதே போலச் சன்னியில் 13 வகை பற்றிச் செகராசசேகரம் கூறப் பரராசசேகரம் 40 வகைபற்றிக் கூறும். ஆனல் வாதம் பற்றிப் பரராசசேகரம் 80 வகை கூறுகையிற் செகராச சேகரம் 85 வகை கூறும். அதேபோல மூலம் பற்றிக் கூறுகையிற் பரராசசேகரம் 13 வகை கூறச் செகராசசேகரம் 21 வகை கூறும். இவ்வாறே ஒன்றற்கொன்று நோய்களின் எண்ணிக்கையில் வேறுபடும். அன்றியும் நோய்க்கு மருந்து கூறுமிடங்களிலும் ஒன்றற்கொன்று வேறு படக் காணலாம். ஆயுள்வேத வைத்திய முறையைப் பின்பற்றியே இரு நூல்களு மெழுந்தபோதும், அவற்றுள்ளும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இரு நூலாசிரியர்களும் வெவ்வேறு பரம்பரை வாக டங்களைப் பின்பற்றியதால் இவ்வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆயுள் வேத வைத்திய முறை வடமொழி வழிவந்ததேயெனினும், அதனைக் கையாண்ட வைத்தியர்களின் அனுபவங்களுக்கேற்ப, அது காலத்துக்குக் காலம் மாற்றமும் வளர்ச்சியும் பெற்று வந்திருக்கிறதென்பதை இவ் வேறுபாடுக்ள் காட்டி நிற்கும்.
1. மாதகல் மயில்வாகனப்புலவர், யாழ்ப்பாண வைபவ மாலை குல. சபாநாதன்
பதிப்பு, கொழும்பு, 1953, பக்கம் 57,

பிரபந்த வகையுள் அமையாத *ழத்து இலக்கியங்கள் 113
ஈழத்து வரலாற்று நூல்களின் மரபு
கி. பி. 18ஆம் நூற்ருண்டின் இறுதிக்கு முன் ஈழத்திலே தோன் றிய நூல்களுள் வையாபாடல், கோணேசர் கல்வெட்டு, கைலாய மாலை ஆகியன வரலாற்று நூல்களாகக் கருதத்தக்கனவெனக் கண்டோம். இக்கால வரலாற்றுத்துறை அறிவுக்கண் கொண்டு பார்க்கையில் அவை பல குறைபடுகள் உடையனவாகத் தோன்றினும் வரலாறு என்ற வகையில் ஈழத்தில் முதல் எழுந்த தமிழ் நூல்கள் இவை என்பதை மனத்துட் கொண்டு நோக்கின் அவற்றின் சிறப்பியல்புகள் புலணுகும். வரலாற்று நூல் அமைப்புப் பற்றிய அறிவும், அத்துறையில் முன்னேடி களின் அனுபவமும் இல்லாது எழுந்த இவ்வரலாற்று நூல்கள் ஈழத் தில் வடமாகாணத்துச் சரித்திரத்தை வகுப்பதற்கு உறுதுணையாய் அமைவன. இந்நூல்களும், மறைந்துபோன "இராசமுறை’, ‘பரராச சேகரன் உலா ஆகியனவுந் தோன்றியிராவிட்டால் யாழ்ப்பாணச் சரித் திரமே மறைந்திருக்கலாம். வரலாற்று நூல்களுக்கான மரபென ஒன்று இந்நூல்களுக்கு முன் தமிழில் இல்லாததால், இவற்றின் மரபு வளர்ச்சிபற்றிக் கூறுவது சாலாதெனினும், அவ்வித மரபை வளர்ப் பதில் இவற்றின் பங்கென்ன என்பதை மட்டும் நோக்கலாம்.
வையாபாடல் இலங்கையை அரசாண்ட மன்னர் குலங்கள் பற்றி யும், இலங்கைக்குப் பிறவிடங்களிலிருந்து குடிகள் வந்தேறிய முறை பற்றியும் கூற எழுந்த நூல் எனினும், அது முக்கியமாக ஈழத்தில் வன் னியர் குடியேற்றம் பற்றிய செய்திகளையே விரிவாகக் கூறும். கோணே சர் கல்வெட்டிலும் அவ்வகைக் குறிப்புகளை அதிகமாகக் காணலாம். தன் காலத்தில் இலங்கையை அரசாண்ட மன்னனது குலங்களைப்பற்றி விரித்துக் கூறுவது வையாவின் முதல் நோக்கமாகக் குறிக்கப்பட்டுள் ளது. எமது வையாபாடற் பதிப்பில், இதனுசிரியரான வையாபுரி ஐயர் ஏழாம் செகராசசேகரன் காலத்தில் வாழ்ந்தவரெனக் காட்டி யுள்ளோம். அவ்வரசன் இலங்கை முழுவதனையும் அரசாண்டவன் என் பதற்கு ஆதாரமில்லை. அவனைச் சிறப்பித்துக் கூறுவதற்காக ஆசிரியர் இலங்கை மாநகர் அரசியற்றிடு மரசன்? என்று சொல்லியிருக்கலாம். அவனது குலத்தை எடுத்துக்காட்டுவதற்காக, ஆதியில் யாழ்ப்பாணத்தை அரசாண்ட அவன் மூதாதையரான கோளுறு கரத்துக் குரிசில் (கூழங்கைச் சக்கரவர்த்தி)" கோத்திரத்தை மட்டும் விரித்துரைக்கிறர். கூழங்கைச் சக்கரவர்த்திக்கும் ஆரும் பரராசசேகரனுக்கும் இடைப் பட்ட மன்னர் பற்றி ஆசிரியர் குறிப்பிடவில்லை. கூழங்கைச் சக்கரவர்த்தி காலந்தொட்டு இந்தியாவிலிருந்து குடிகள் வடஇலங்கையிற் குடியேறிய வரலாறு பின்னர் விரித்துரைக்கப்படுகிறது.
1. வையாபாடல், கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியிடு, 1980. 8 வையாபாடல், செய்யுள் 3, 3. இது "காலிங்கச் சக்கரவர்த்தி' யின் திரிபென்பர், சுவாமி ஞானப்பிரகாசர், யாழ்ப்
பாண வைபவ விமர்சனம், 1928,
F一8

Page 66
i4 பிரபந்த வகையுள் அமையாக ஈழத்து இலக்கியங்கள்
இதன்படி, மதுராபுரியிலிருந்து அறுபது வன்னியர்கள், மாருதப் பிரவையின் மகன் சிங்கமன்னவனுக்கு விவாகஞ் செய்துவைக்கப் பெண் கொண்டு இலங்கை வந்தனர். விவாகத்தின்பின் அந்த அறுபது வன்னி யரும் அடங்காப்பதிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுள் ஒரு வன்னியன் கண்டி நகரில் திசை (Disawa) ஆக அமர்த்தப்பட்டான். இவனே சிங்கள மக்களுள் வன்னிய குலம் வளர்வதற்குக் காரணனயிருந்திருக்கலாம். இவ்வன்னியர்கள் அடங்காப்பதியில் மேலும் குடியேற்றஞ் செய்ய விரும்பி, மதுரை, மருங்கூர், திருச்சினப்பள்ளி, மலையாளம், துளுவம், தொண்டைமண்டலம் ஆகிய இடங்களிலிருந்து பதினெண்சாதி மக் களையும் வரவழைத்து முள்ளிமாநகரிற் குடியேற்றினர்.
இவ்வாறு நூலின்கண் தான் சொல்லும் வரலாற்றிற்கு அகத்திய முனிவரின் பேரனன சுபதிட்டு முனிவர் சொல்லிவைத்த கதையே ஆதாரம் என்கிருர் ஆசிரியர். இவ்வரலாறு தொடர்பாகக் கூறப்படாது பல இடையீடுகளுடன் சொல்லப்படுகிறது. இதிற் காலவரையறைக் கணிப்புச் சரியாக உள்ளதெனக் கூறமுடியவில்லை. முன்பின் கேள்விப் படாத சுபதிட்டு முனிவரை ஆதாரங் காட்டுவது தக்க சான்றெனக் கூறுவதற்கில்லை. எனவே, வரலாற்று நெறிமுறையின்றியே வையா பாடல் அமைந்திருக்கிறது. எனினும், அதிற் கூறப்பட்ட செய்திகள் வரலாற்றுக்கு உதவுவனவாகும்.
கோணேசர் கல்வெட்டு, குளக்கோட்டிராமன் என்னும் சோழ மன் னன் கோணேசர் கோட்டமும், கோபுரமும், மதிலும், மண்டப மும், பாபநாசத் தீர்த்தமும் அமைந்த வரலாறு பற்றிய செய் திகள் கூற எழுந்த நூலெனினும், அது திருகோணமலையில் வரிப்பத் தார், தானத்தார், வன்னியர் ஆகியோர் குடியேற்றம் பற்றியுங் கூறும். கோணேசர் ஆலயத்திலே தொழும்பு செய்ய மருங்கூரிலிருந்து முப்பது குடிகளைக் குளக்கோட்டன் கொண்டுவந்தான் என்றும், அவர்கள் ஆலயத்துக்குச் செய்யவேண்டிய கடமைகள் என்னென்ன வென்றும், அவர்கள் தானத்தார் என வழங்கப்பட்டனர் என்றும், இறைவன் தொழும்புக்கு ஆட்கள் போதாமையால் மேலும் குளக்கோட்டன் காரைவளநாடு சென்று சிலரை வரிபிடித்து வந்து திருகோணமலையிற் குடியேற்றினன் என்றும், அவர்கள் வரிப்பத்தார் எனப்பட்டனர் என்றும், அவர்கள் ஆலயக் கடமைகள் என்னென்னவென்றும் இந் நூலிற் கூறப்பட்டுள்ளன. தானத்தாருக்கும் வரிப்பத்தாருக்கு மிடையில் நீதியும் ஒழுங்கும் நிலைநாட்டத் தனியுண்ணுப்பூபாலனையும், கோயி லுக்குப் பூசகர்களாகப் பாசுபதர்களையும் குடியேற்றினன் என்பதும் இந்நூல் வாயிலாக அறியக்கிடக்கிறது. இவை கோணேசர் கோயில் சம்பந்தமான வரலாறே யெனினும், அவை திருகோணமலைப் பகுதியின் ஆரம்ப வரலாருகவும் உள.

பிரபந்த வகையுள் அமையாத ஈழத்து இலக்கியங்கள் iš
இந்நூலிற் கூறப்பட்டுள்ள காலக்கணிப்பும் சம்பவங்களும் சரியா னவையெனக் கொள்ள இயலாதெனினும், இதிற் கூறப்படுவனவற்றில் உண்மையில்லையெனத் தள்ளிவிடவும் முடியாது. எனவே, வரலாற் றுக்கு வேண்டிய சில அம்சங்கள் இதில் இருக்கக் காணலாம். திரு கோணமலைப் பகுதி வரலாறமைவதற்கு இந்நூல் விபரங்கள் முன்னேடி யாக உள்ளனவெனலாம்.
கைலாயமாலை யாழ்ப்பாணத்து நல்லூரிற் பிரபலமுற்றிருந்ததும், பிற்காலத்திற் பறங்கியரால் இடிக்கப்பட்டு முற்ருய் ஒழிக்கப்பட்டது மான கைலாயநாதர் கோயிலைச் சிங்கையாரியன் என்னும் மன்னன் கட்டிப் பிரதிட்டை செய்த வரலாற்றைக் கூறுவதாகும், அவ்வரலாற்றில் ‘மடங்கன் முகத்து நராகத் தடலேறு கதிரைமலையை இராசதானியாகக் கொண்டு அரசாண்டதும், கீரிமலையிலே தீர்த்தமாட வந்த சோழன் மகளை மணந்ததும், அவர்களுக்கு நரசிங்கன் என்று ஒரு ஆண் மகவும் பெண் மகவும் பிறக்க, அவர்களை மணமுடித்து வைத்து, நரசிங்கனுக் குப் பட்டங்கட்டி அரசனுக்கியதும், யாழ்ப்பாடி ஒருவன் அவன் முன் கவிபாடிப் பரிசாகப் பெற்ற ஊருக்கு யாழ்ப்பாணமெனப் பெயரிட்டு அரசாண்டதும், அவன் இறந்தபின், அங்கு குடியேறியிருந்த பாண்டி மழவன் மதுரை சென்று செகராசன் என்னும் சிங்கையாரியனை அழைத்து வர, அவன் நல்லூரை இராசதானியாக்கி அங்கிருந்து யாழ்ப்பாணத்தை அரசாண்டதும், மதுரையிலிருந்து புகனேகவாகு என்பவனை யழைத்துத் தன் மந்திரியாக்கியதும் மற்றும் உயர்குலக் குடிகளை இந்தியாவிலிருந்து வரவழைத்து யாழ்ப்பாணத்தில் ஒவ்வோரூரிற் குடியிருத்தியதும் கூறப் படுகின்றன.
இவ்வரலாற்றிற் கதிரைமலையை யாழ்ப்பாணத்திலுள்ள கந்த ரோடையெனப் பின்னுள்ளோர் கண்டவாறு கொள்ளாது தென் னிலங்கையிலுள்ள கதிர்காமமெனக் கொண்டதும், யாழ்ப்பாடி அரசாண் டானென்பதும், சிங்கையாரியன் நல்லூரை முதலில் இராசதானி யாக்கினன் என்பதும், உயர்குலக் குடிகளை ஆங்காங்கு குடியேற்றிய தாகச் சொன்ன கதைகளும், காலக் கணிப்பும் இக்காலச் சரித்திர ஆராய்வுக்குப் பொருந்துவனவாயில்லையெனப் பல அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். எனவே, கைலாயமாலையும் வரலாற்று நெறிமுறையின்றியே அமைந்திருக்கின்றதெனக் காணலாம். எனினும், நெறிமுறைப்பட வரலாறு வகுத்தவர்கள் இதிலிருந்து பல குறிப்புகளை ஏற்றிருப்பதும் அறிந்ததே.
இவற்றிலிருந்து, தமிழில் ஈழத்தே முதலில் எழுந்த இவ்வரலாற்று
நூல்கள் சரித்திர முரண்பாடுகள் கொண்டவையாயும், வரலாற்று
1. கைலாயமாலை, சே. வெ. ஜம்புலிங்கம்பிள்ளே பதிப்பு, சென்னை, 1939, செ. இராச
நாயகம் எழுதிய ஆராய்ச்சி முன்னுரை,

Page 67
16 பிரபந்த வகிையுள் அமையாத ஈழத்து இலக்கியங்கள்
நெறிமுறை பேணுதவையாயும் அமைந்துள்ளனவெனக் காண்கிருேம். வரலாற்று மரபினை வளர்ப்பதற்கு இவை நேர்முகமாக உதவின வென்று கொள்ள முடியாவிட்டாலும், அவ்வகையில் இவை மறைமுக மாக உதவினவெனக் கொள்ளலாம். இவற்றிலுள்ள வரலாற்று நெறிமுறையின்மையே அந்நெறிமுறையின் அவசியத்தைப் பின் னெழுந்த வரலாற்று நூல்களில் வலியுறுத்தி நின்றதெனலாம், இதற் காதாரமாக, முதலியார் செ. இராசநாயகத்தின் கூற்முய,
*சரித்திர மாறுபாடு கொண்டதாய ஒரு நூல் வெளிவரினும் அந்துரல் தன்னகத்துக் காணப்படாத உண்மைகளை வெளிப்படுத்து தற்குச் சிறந்த கருவியாவதில் தவறமாட்டாது. இத்தகைய நூல்க ளாற்ருன் இன்றைய சரித்திரவுலகம் வினைமாண்பு சான்று பெருக்க மடைந்து சிறப்புற்றிருக்கின்றது !
என்னும் கைலாயமாலையின் ஆராய்ச்சி முன்னுரை இறுதிப் பகுதி விளங்குவதாகும்.
இவற்றைவிட அம்மானை என்ற இலக்கிய வடிவமும் மரபுவழி யான பிரபந்த வகையுள் அமையாத ஒன்ருகும். சில பிரபந்தங்களின் உள்ளுறுப்பாக விளங்கிய அம்மானை, காலப்போக்கிலே தனிப் பிரபந்த மாந் தன்மை பெற்றது. குறித்த காலப்பகுதியில் ஈழத்திலே அம் மானை இலக்கியமும் இடம்பெறுவதால் அதன் வடிவ வளர்ச்சியினை உற்று நோக்குவாம்.
அம்மானையின் வடிவம்
அம்மானை என்ற பாவகையைத் தமிழ் இலக்கியப் பரப்பிலே முதலிற் சிலப்பதிகாரத்திலேதான் காண்கிருேம். அதன் வாழ்த்துக் காதையிற் பெண்கள் அம்மானை ஆடிச் சோழன் புகழைப் பாடுவதாக நான்கு அம்மானை வரிப்பாட்டுக்கள் இடம்பெறுகின்றன. மூன்று பெண்கள் சேர்ந்து ஆடிப்பாடும் பாடல்களாக அவை அமைந் துள்ளன,
பிரபந்த வகையுள் ஒன்ருகிய கலம்பகத்தில் அம்மானை என்பது ஒரு பகுதியாகும். அதுவும் மூன்று பெண்கள் பாடுவதாகவே அமை யும். ஒரு பெண் ஒரு செய்தியைக் கூற, மற்ருெருத்தி அதிலோர் ஆசங்கை எழுப்ப, மூன்ருமவள் அதற்கு விவேகமான விடையிறுப் பாள். இப்பாடல்கள் சிலேடை நயம் பொருந்தியவையாயமையும்.
1. கைலாயமா%, சே. வெ. ஐம்புலிங்கம்பிள்ளை பதிப்பு, சென்னை, 1939,

பிரபந்த வகையுள் அமையாத ஈழத்து இலக்கியங்கள் 17
கொச்சக ஒருபோகுணர்த்தத் தொல்காப்பியனர் செய்யுளியலிற் சொல்லிய 149ஆம் சூத்திரத்திற்குத் தாமெழுதிய உரையிற் பேராசி ரியர், அம்மானைப் பாட்டு நான்கு அடியில் இகந்து வரும் கொச்சக ஒருபோகு ஆகுமெனக் கூறுவர். இவற்றில் இருந்து அம்மானைப் பாட்டின் வடிவத்தை உணரக்கூடியதாயிருக்கிறது. மூன்று பெண்கள் ஒருவர் மாறி யொருவர் கூறுவது போலக் கொச்சக ஒருபோகினுல் நாலடி யிகந்து செய்யப்படுவது அம்மானைப் பாடலாகுமென அதற்கிலக்கணங் கூறலாம்.
பிள்ளைக்கவிப் பிரபந்தத்தில் வரும் பருவங்களில் ஒன்று அம்மானைப் பருவம். பாட்டுடைத் தலைவியைத் தாய்மாரும் செவிலியரும் அம்மானை ஆடும்படி சொல்லுவதாக இவ்வம்மானைப் பாடல்கள் அமையும். இவை விருத்தமாகவும், கட்டளைக் கலிப்பாவாகவும் செய்யப்படும்.
சோழப் பேரரசர் காலம் வரை தொடர்நிலைச் செய்யுள்களிலும் பிரபந்தங்களிலும் ஒர் உறுப்பாக அமைந்த அம்மானைப் பாடல்கள், பின்னர் நெடும் பாடல்களாகவும், தனிப் பிரபந்தங்களாகவும் உருப் பெற்றன. இவை கொச்சக ஒருபோகின் யாப்புடையனவாக அமைந்து அடிவரையறை யற்றனவாய் விளங்குகின்றன. இத்தகைய அம்மானைப் பிரபந்தங்கள் கிராமியப் பாடல்களின் பண்புகளோடு பேச்சுவழக்கு மொழிநடை கூட்டி, எளிதில் விளங்கும் உவமைகள் தாங்கி, ஒரு செய்தியைத் திரும்பத் திரும்பச் சொல்லுதலுற்றுக் காணப்படும். இதற் குதாரணமாகக் கஞ்சன் அம்மானை, திருச்செல்வர் அம்மானை, அர்ச். யாகப்பர் அம்மானை ஆகியவற்றைக் காட்டலாம். இவை இலக்கியப் பயிற்சியில்லாத பொதுமக்களும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையிற் செய்யப்பட்டுள்ளன. இப்பண்புகளே தனிப் பிரபந்தங்களாக விளங்கும் அம்மானைப் பாடல்களின் இலக்கணங்களாகுமெனலாம்.
'அம்மானை என்பது தாய் என்ற பொருளை உடையது என்றும், பெண்களை அம்மா என்று அழைப்பது போல் அம்மானை என்றழைப் பது இலக்கிய மரபென்றும், பாட்டின் இறுதியிற் பெண்ணை விளிக்கும் விளியாக அம்மானை என்பது அமைந்ததென்றும், அவ்வாறு அம்மானை இறுதியுடன் வரும் பாட்டுக்களே அம்மானை என்று பெயர் பெற்றன என்றும் சிலர் கொள்வர். கஞ்சன் அம்மானை, அர்ச், யாகப்பர் அம் மானை ஆகிய நூல்களில், அம்மானை என்ற சொல் பல தாழிசை அடிகளுக்குப் பின் ஏதாவது ஒரடியின் முடிவிற் செய்யுளின் இடை யிலோ முடிவிலோ காணப்படுகின்றது. அது ஒன்றே இந்நூல்களை அம்மானை என்றழைக்க வைக்கிறதன்றி வேறில்லை. கஞ்சன் அம்மானை யின் காலமோ, அது செய்யப்பட்ட இடமோ, அதன் ஆசிரியர் பெயரோ
1. கஞ்சன் அம்மானே, சு. வித்தியானந்தன் பதிப்பு, பேராத&ன, 1970, பக்கம் 6,

Page 68
18 பிரபந்த வகையுள் அமையாக ஈழத்து இலக்கியங்கள்
திட்டவட்டமாகத் தெரியாத அளவில், ஈழத்தெழுந்த அம்மானைப் பிரபந்தங்களுட் காலத்தால் முந்தியது அர்ச். யாகப்பர் அம்மானை யெனலாம். இவ்வகையான அம்மானைப் பிரபந்தம் மரபுவழிவந்த தொண்ணுாற்ருறு வகைப் பிரபந்தங்களுக்குப் புறம்பானதே.
அர்ச், யாகப்பர் அம்மானை
அர்ச். யாகப்பர் அம்மானை இரு பிரிவுகளாகச் செய்யப்பட்டுள்ள தென முன்னர் கண்டோம். முதலாம் பிரிவில் "நாடுநகரச் சிறப்பு" என்ற பகுதிக்கு முன், பொதுப் பாயிரம், காப்பு, சிறப்புப் பாயிரம், கதையின் வரலாறு, அவையடக்கம் என்ற பகுதிகளும், அதன் பின் கதையின் அம்சங்களாய அர்ச். யாகப்பர் பெற்றேரின் நிலைமை, கருத்தரித்தல், அர்ச், யாகப்பரின் ஜெனனம், திருநாமத் தரித்தல், தொட்டிலேற்றம், பாலிய விளையாட்டு ஆகியனவும், அதன் பின் வரும் பகுதிகளுள் முக்கியமாக இரட்சகர் அழைத்தல், எரிமோசு பசாசுகளை ஏவல், ஏரோதையின் அரசியல், யாகப்பரைப் பிடித்து ஏரோதையிடங் கொண்டு செல்லல், திருமரணமடைதல், உடலடக்க லோப்பாலிடம் அனுமதி பெற்றது, எஸ்பாஞ அரசனின் சீற்றம், அரசன் திருமறையை அனுசரிக்க விரும்பல், திருவுடலை அடக்கல் என்பன போன்றனவும் இடம் பெற்றுள்ளன.
இந்நூல் அம்மானையாக அமைந்திருந்தபோதும், இதனைக் காவிய மாகப் பாடவே இதன் ஆசிரியர் விளைந்தார் என்பதை இதன் சிறப்புப் பாயிர அடிகளாய,
‘நன்தங்கை யானமின்னுள் நற்சலோமை மைந்தனுக்கு தூயதமி ழாற்றெரிந்து தொல்காவி யம்பாட தாயாந் திருமரியே தயவாக முன்னடவாய்”
என்பன காட்டி நிற்கும். அந்நோக்கத்துடனேயே இந்நூலின் பகுதி களை மேற்காட்டியவாறு ஆசிரியர் அமைத்துள்ளார் என்று தெரியலாம். கஞ்சன் அம்மானையும் இதே அமைப்பையே பெரிதும் பெற்றிருந்த போதும், அதில் இல்லாத நாட்டு நகர வர்ணனை அர்ச், யாகப்பர் அம்மானையில் இடம்பெற்றுள்ளது. இதன் இரண்டாம் பிரிவிலும், பாயிரத்தைத் தொடர்ந்து நகரச் சிறப்பு என்ற பகுதி இடம் பெறு கிறது. முதலாம் பிரிவிற் கலிலை நாடும் கலிலை நகரும் சிறப்பித்துக் கூறப்படுகையில், இரண்டாம் பிரிவில் எஸ்.பாஞ நகரின் சிறப்புக் கூறப் படுகிறது. ஏனைய அம்மானைப் பாடல்களில் இல்லாத இப்பகுதி, இந் நூலைக் காவியமாகக் காட்டவேண்டுமென்ற எண்ணத்துடனேயே இதிற் புகுத்தப்பட்டிருக்கிறது. ஒரு நூலின் இரண்டாம் பிரிவுக்குப் புறம்பான பாயிரமும் மற்ருெரு நகரவர்ணனையும் வேண்டாதிருக்க,

பிரபந்த வகையுள் அமையாத ஈழத்து இலக்கியங்கள் 119
அர்ச், யாகப்பர் அம்மானை அவ்வாறு கொண்டிருப்பது, அப்பிரிவினைப் புறம்பான ஒரு நூலாகக் கொண்டமையாற் போலும். எவ்வாருயினும், இந்நூலின் இருபிரிவிலும் நாற்பொருளில் அறம், வீடு ஆகியவை மட்டுமே பேசப்படுவதால் இது பெருங்காப்பியமாகாது சிறு காப்பிய மாகலாமெனின், நன்மணம் புணர்தல், பொன்முடி கவித்தல், பூம் பொழில் நுகர்தல் முதலாயின எதுவும் தலைவற்கு நிகழாமையின் அதுவும் சாலாதாயிற்று.
கலிலை நகரை வருணிக்கையில், "இருமூன்று சாடிதண்ணிர் கர்த்தன் மதுவாக்கும் கருணையுள்ள பட்டணமாம்” என்றும், 'பொங்கிக் கடல் குமுற ஏகனதை யமர்த்தும் இனிமையுள்ள பட்டணமாம்" என்றும், குருடும் செவிடும் ஊமையும் சப்பாணியும் ஊனம் நீங்கிய பட்டண மென்றும், ஐந்து அப்பம் கொண்டு ஐயாயிரம் பேருக்குப் போசன மீந்த நகர் என்றும் இன்னுேரன்ன கிறிஸ்து மதப் புதிய ஏற்பாட்டுக் கதைக ளுடன் தொடர்புபடுத்திக் கூறும் ஆசிரியர், எஸ்.பாஞ நகரை வருணிக் கையில்,
*உற்ற மனுநீதி யோது திருநகராம்’ என்றும், ‘மந்திரிமா ருள்ளநகர் வன்னியர்க ளுள்ளநகர்" என்றும், ‘மந்தாரம் பிச்சி மயிலை மருக்கொழுந்து நந்தா வனங்கள் நறைவீசும் பூஞ்சோலை’ உள்ள நகர்
என்றும், "அன்னம் விளையாட அஞ்சுவண்ணப் புள்ளாட வண்ணப் பசுந்தோகை மயிலினங்கள் தானுட கொஞ்சு பசுங்கிளியும் கோகிலமுந் தானுட பஞ்சவர்ணச் சேவல் பகர்பூவை தானுட’ என்றும் தமிழ் நாட்டுச் சம்பவங்களையும் காட்சிகளையும் கூட்டி எஸ்பாளு நகரை ஒரு தமிழ்ப் பிரதேசமாகக் காட்டுகிருர், அவ்வாறே யாகப்பருக்குத் "திருநாமந் தரித்தல்’ என்ற பகுதியிலும்,
*பொட்டிட்டுக் குங்குமத்தாற் போந்தநல்ல கோலமிட்டு’ என்றும், *கூறுங் கருவியுடன் கொம்பு தவில் முழங்க” என்றும், சோனகப் படையைச் சொல்லுகையில்,
"ஆலை குதிரை அடர்பரிதேர் காலாட்கள்
கொம்பு தவிலுங் குழலுங் கொடிபடையும் பம்பையுஞ் சூழப் பவளமணித் தேரேறி ' என்றும்,

Page 69
20 பிரபந்த வகையுள் அமையாக ஈழத்து இலக்கியங்கள்
தமிழர் பண்பு தொனிக்கக் கூறுகிருர். இவ்வித முரணன வருணனை இவ்வாசிரியருக்கு எ ஸ் பா ஞ நகரைப்பற்றியோ சோனகப்படை இயங்கும் முறை பற்றியோ தெரியாமையாற் செய்யப்பட்டிருக் கலாம். ஆனல் "பிலேத்து மனத் தெளிவுறல்’ என்ற பகுதியில் சந்தியாகு நன்றுன் தெய்வச்சீர் நவில் என்று எரிமோசின் சீடனன பிலேத்து என்பானுக்குக் கூற,
*அப்போ பிலேத்துவந்தான் அஞ்ஞானத் தங்கள் தெய்வம் இப்பரி சென்று இயம்பினது மல்லாமல் நாரணனும் நான்முகனும் நல்ல வுருத்திரனும் பேர் மூன்றுந் தெய்வமெனப் பேசுவா ரோர்சாரார் மாலுந்தி வந்து மகள்மா னெடுபுணர்ந்தோன் ஆலிலையிற் பள்ளிகொள்வோன் ஆட்டிடைய ஞமிவர்கள் மாலழிப் பான்மான் மைந்த னதைப்படைப்பான் ஈச னதைக்காப்பா ரென்றுசொல்வா ரங்கவர்கள், செத்தாரி னுேடேந்தித் தின்று அரவணிந்து பித்த னெனவெவரும் பேசப்பே யோடாடி மானைக் கரத்தேந்தி மானுர் தமைச்சுமந்து ஆனைமுக மோர்புதல்வன் ஆறுமுக மோர்புதல்வன் ஆகப் பயின்று அடலை தனைப்பூசி வாகென வேசடைகள் மரும மதிலசையக் காலிற் சிலம்பலம்பக் கனநடனந் தானுடி
o a s a a s
மாயன் பலபடைப்பாய் மண்ணிற் பிறந்தானும் பாயாய்ச் சமுத்திரத்திற் படுத்துக் கிடந்தானும் பன்றியாய் மீனுய்ப் பலவுருவந் தானெடுத்த தன்றியும் பெண்கள்பதி ஞரு யிரம்பேரைச் சேரப் புரிந்த திருவிளையாட் டென்றுசொல்லி ஊருக்கு மெங்களுக்கு மோதினுர் எங்கள்குரு எங்கள்தெய் வங்களுமஷ் விதத்திலே சேர்ந்ததுதான்’ என்று செருசலைப் பகுதியைச் சேர்ந்த பிலேத்து என்பான் கூறியதாக இந்நூல் ஆசிரியர் சொல்லியிருப்பது, அப்பகுதியில் வாழ்ந்த யூதர்க ளது சமயக்கொள்கையை அறியாத காரணத்தாலன்றி, நூலாசிரியர் வாழ்ந்த யாழ்ப்பாணப் பகுதியிற் பண்டுதொட்டுப் பரவியிருந்த சைவ சமயக் கொள்கைகளை இழித்துரைக்கும் நோக்கத்தாலென்றே கொள்ள

பிரபந்த வகையுள் அமையாத ஈழத்து இலக்கியங்கள் 2
வேண்டும். அன்றியும் யூதனன "எரிமோசு பசாசுகளே ஏவல் என்ற பகுதியில்,
* அன்றவனும் வித்தையினல் ஆனவஞ்சப் பேய்களெல்லாம்
ஒன்று படவழைத்து ஒதுவன்கா ணம்மானை நன்றி யறிந்துவந்து நாளு முதவுகின்ற நாரா யணக்கணமே நமனே நமதிடத்தில் வாராய் வயிரவனே மாகாளி மார்த்தாண்டா
... . . சீரான கண்ணகையும்
சத்தி யொடுகறுப்பன் சாமுண்டி சண்டிகையும் பத்தினி மைக்காளி படர்ந்ததுர்க்கை காடேறி
எல்லை யறவழைத்த எப்பேய்க் கணங்களெல்லாம் ஒல்லைப் பொழுதினிலே ஒருகூட்ட மாய்ச்சேர்ந்து’
என்று சைவசமயத்திற் பேசப்படுந் தெய்வங்களைப் பசாசுகளெனக் கூறுவதும் அதேநோக்கத்தினுலன்றிப் பிறிதில்லையெனக் காணலாம். எனினும், இவற்றின் மூலம் இந்நூலின்கண் இதனுசிரியர் தமிழ்நாட் டுச் சாயலை ஏற்றியிருக்கிருர் என்பது தெளிவு.
"தூய தமிழாற் றெரிந்து இந்நூலைச் செய்யப்போவதாகச் சிறப்புப் பாயிரத்தில் உரைக்கும் இவ்வாசிரியர், 'ஈங்கிஷைகள்’ என்றும், ‘மாணுக்கர்கள்’ என்றும், "ஆசரியன்’ என்றும், "பவுள்சு’ என்றும் கூறுவது எதனுலெனத் தெரியவில்லை. இவ்வாசிரியருக்கு முன்னரும் இக்கதை தமிழிற் பாடப்பட்டிருக்கிறதென்பது, இதன் சிறப்புப் பாயிரத்தில்,
‘பாண்டிக் கரையதனிற் பரதர்கள் கோத்திரத்தோர்
வேண்டுசந்தி யோகுகதை விருத்தப்பா வாயுரைத்தார்? என இந்நூலாசிரியரே கூறுவதனுற் புலணுகும்.
கற்ருேர் படித்து மகிழத் தமிழ் நாட்டிற் பாண்டிக் கரையிலே முன்னர் விருத்தப் பாவாற் செய்யப்பட்ட இக்கதையினை, ஈழத்திலே பேதுருப்புலவன் பொதுமக்கள் கற்றுங் கேட்டும் இலகுவில் விளங்கிக் கொள்ளத் தக்கதாய் அம்மானை வடிவிற் செய்தான் என்று கொள்ள லாம். இதற்கிணங்கவே கஞ்சன் காவியம் எழுந்தபின் கஞ்சன் அம் மானை என்ற நூலும், திருச்செல்வர் காவியம் எழுந்தபின் திருச்

Page 70
122 பிரபந்த வகையுள் அமையாத ஈழத்து இலக்கியங்கள்
செல்வர் அம்மானை என்ற நூலும் எழுந்தன. காவிய வடிவிற் செய் யப்படும் நூல்கள் கற்ருேருக்காயின், அம்மானை வடிவிற் செய்யப்படும் நூல்கள் மற்ருேருக்கென்பது திருச்செல்வர் கதையை ஒருவரே காவிய மாகவும் அம்மானையாகவும் செய்திருப்பதால் அறியலாம். அம்மானைப் பாட்டிற் சொல்லப்படும் கதையினை ஒருவர் உரத்துப் படிக்கும்போதே அதனைக் கேட்போர் இலகுவில் விளங்கிக் கொள்வர். இதற்கு அர்ச். யாகப்பர் அம்மானையையே உதாரணமாகக் காட்டலாம். இதிற் கொண்டுகூட்டிக் கருத்தறிய வேண்டிய செய்யுள்களோ, பிரித்துக் கருத்தறிய முடியாத கடினமான பதங்களோ, வழக்கிலிலாத சொற் களோ, விளங்குவதற்குக் கடிமான செய்யுள் அலங்காரங்களோ, சிக்க லான இலக்கணப் புணர்ச்சிகளோ இடம்பெறுவதில்லை. இவையே அம்மானைக்குரிய அரிய சிறப்புகளாகும். அச்சிறப்புகள் அத்தனையும் அர்ச். யாகப்பர் அம்மானையிற் பொதிந்துள்ளன.
இந்நூல் எழுந்த காலத்தில் யாழ்ப்பாணத்தெழுந்த ஞானப்பள் ளின் ஆசிரியர் யாரென்று தெரியாததால், இந்நூலாசிரியராய பேதுருப் புலவரே அதனையுஞ் செய்திருக்கலாமெனச் சிலர் கருதுவர். அவ்வாரு யின் அர்ச். யாகப்பர் அம்மானையிற் போர்த்துக்கல் நாட்டைப் ‘போர்த்துக்கால்' என்றும், பிரதானம் என்பதை அவ்வாறே "பிர தானம்’2 என்றும் வழங்கும் ஆசிரியர், ஞானப்பள்ளில் முறையே "பிடுத்துக்கால்’ என்றும், "பிறதானம்' என்றும் வழங்கியிருப்பதற்குக் காரணங் காட்ட முடியாது. இவ்வாறே வேறு பல சொல்லாட்சியிலும் வேற்றுமை காட்டலாம். எனவே, இரு நூல்களும் வெவ்வேறு ஆசிரி யர்களாற் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்றே கொள்ளத் தகும்.
1. பேதுருப் புலவர், அர்ச், பாகப்பர் அம்மானை. பாழ்ப்பாணம், மூன்ரும் பகிப்பு,
1980, Lužasti 78.
2. பேதுருப் புலவர், அர்ச். யாகப்பர் அம்மானை, யாழ்ப்பாணம், மூன்ரும் பதிப்பு,
1980, ušati, 50.
8. ஞானப்பள்ளு, ஆ, சதாசிவம் பதிப்பு, கொழும்பு, 1968, பக்கம் 34. செய்யுள் 84,

முடிவுரை
பதினலாம் நூற்ருண்டின் ஆரம்பத்திலிருந்து பதினெட்டாம் நூற்றண்டின் இறுதிவரை ஈழத்திலே எழுந்த தமிழ் இலக்கியங்கள் பற்றி முன் இயல்களில் ஆராய்ந்தோம். இந்த ஆய்வு, பல அம்சங்களைத் தழுவிய முறையிலே செய்யப்பட்டிருத்தல் அவதானிக்கத்தக்கதாகும். குறித்த ஐந்து நூற்றண்டுக் காலப்பகுதியிலே ஈழத்தெழுந்த இலக் கியங்களின் கால நிர்ணயத்தையும் வரலாற்றையும் எடுத்துக் காட்டுவ தோடமையாது, அவ்விலக்கியங்களின் வடிவமும், அவற்றின் மரபும் எத்தகையன என்பதையும், அவை ஈழத்திலே வளர்ந்தபோது எவ் வெவ் வகையான மாற்றங்களையும் புதுமைகளையும் காட்டி நின்றன என்பதையும், சமகாலத்திலே ஈழத்தெழுந்த சிங்கள இலக்கியங்களின் போக்கும் தாக்கமும் எத்தகையனவாய் அமைந்திருந்தன என்பதையும், அரசியற் சூழல் அக்கால இலக்கியங்களிலே ஏற்படுத்திய பாதிப்பு எவ்வளவின தென்பதையும் இணைத்து ஆராய்ந்தோம். இவ்வாறு இலக்கிய ஆராய்வை விரிவுபடுத்தியது ஒரு புது முயற்சி யென்றலும், குறித்த காலப்பகுதிக்குரிய ஈழத்தமிழ் இலக்கிய வரலாருகவும் இது அமைகிறதெனக் கொள்ளலாம். தமிழ் இலக்கிய வரலாறு களை எழுதியோர் பலர், ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றை முறை யாக எழுதாமையால், அத்தகைய முயற்சிக்கு இது முதற்படியாக அமையுமெனக் கருதலாம். ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே முதல் ஐந்து நூற்றண்டுக் காலப்பகுதிக்குரிய இலக்கியங்களைத் தேடித் தொகுப்பதே அதிசிரமமான காரியமாயிருக்கும். தொடர்ந்து வரும் பத்தொன்பதாம், இருபதாம் நூற்ருண்டுத் தமிழ் இலக்கிய ஆக்கங்கள் எண்ணிக்கையில் அதிகமாயிருந்தாலும், அவற்றைத் தேடிப் பெறுவதில் அவ்வளவு சிரமமிருக்காது. எனவே, இதனைத் தொடர்ந்து பத்தொன் பதாம் இருபதாம் நூற்ருண்டு ஈழத் தமிழ் இலக்கிய வடிவும் மரபும் எய்திய வளர்ச்சியினை ஆய்வு செய்தாற்ருன், ஈழத் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் வரலாறு நிறைவு பெறும்.
14ஆம் நூற்ருண்டுக்கு முன் ஈழத்திலே தமிழ் இலக்கியம் தோன்ற வில்லை யென்றே, 18ஆம் நூற்ருண்டின் இறுதிவரை ஈழத்திலே தோன் றிய இலக்கியங்கள் அனைத்தும் ஆராயப்பட்டுவிட்டன என்ருே கருதி விட முடியாது. பல இலக்கியங்கள் தோன்றிய இடங்களிலேயே மறைந்து மிருக்கலாம். ஆய்வுக்கெடுத்துக்கொண்ட ஐந்து நூற்ருண்டுக் காலப் பகுதியிலே தோன்றிய சில இலக்கியங்கள் இப்பொழுது பெயரளவில்

Page 71
24 (nடிவுரை
மட்டும் நிலைத்திருக்கின்றனவேயன்றி நூலுருவில் அகப்படாமற் போயின வென முன்னர் கண்டோம். அதே போல, 1310ஆம் ஆண்டுக்கு முன் தோன்றிய இலக்கியங்களும் அழிந்தொழிந்திருக்கலாம். 13ஆம் நூற் ருண்டின் பின்னர்தான் தமிழ் இலக்கியங்களுக்கு ஈழத்திலே அரச ஆதரவு கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. அதனுற்ருன் 13ஆம் நூற் முண்டுக்குப் பிற்பட்ட தமிழ் நூல்கள் ஈழத்திலே பேணிப் பாதுகாக் கப்பட்டு வந்திருக்கின்றன.
பதினன்காம் நூற்ருண்டின் ஆரம்பத்திலிருந்து செய்யப்பட்டுவந்த சரசோதிமாலை முதலாய நூல்களின் நடையையும், செய்யுள்வகையை யும், பொருட் செறிவையும், சொல்லாட்சி நயத்தையும் நோக்கு மிடத்து, அப்பொழுதுதான் நூலாக்கும் ஆற்றல் ஈழத்தமிழரிடையே ஆரம்பமாகியிருந்திருக்கிறது என்று கொள்ளமுடியாது. அக்கால நூல் கள், இலக்கிய நெறிப் பயிற்சியும் செய்யுள் அனுபவ முதிர்ச்சியுங் கொண்ட புலவர்கள் அப்பொழுது ஈழத்தே வாழ்ந்திருக்கிருர்கள் என்பதைக் காட்டி நிற்கின்றன. அதனுல், இலக்கியப் புலமை ஈழத்திலே அதற்குப் பல நூற்ருண்டுகளுக்கு முன்பிருந்தே வளர்ந்து வந்திருக்கிற தெனக் கொள்ள இடமேற்படுகிறது. உறுதியும் நிலைபேறுங் கொண்ட தமிழ் மன்னர்களின் ஆதரவு அதற்கு முன் ஈழத்துப் புலவர்களுக்கு இருக் காததால், நற்றமிழ்ப் புலமையும் சொற்றமிழ் ஆக்கங்களும் சிறந்து வளர்வதற்குச் சந்தர்ப்பங்கள் ஏற்படாமற் போயிருக்கலாம். அதனல் அக்காலப் புலவர்கள் தமது வித்துவத் திறமையை அயல் நாடாகிய தமிழ்நாடு சென்று நிறுவியுமிருக்கலாம். அத்தகைய முயற்சிகள் பல பத்தொன்பதாம் நூற்ருண்டில் யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலர் முதல், இருபதாம் நூற்ருண்டில் மட்டக்களப்பு விபுலானந்த அடிகள்வரை அநேக ஈழத் தமிழ் அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டிருப்பதனை நோக்குமிடத்து, அது போன்ற சாதனைகள் அதற்கு முற்பட்ட நூற் முண்டுகளில் நிகழ்ந்திருக்க முடியா என்று தள்ளிவிடுவதற்குமில்லை.
தமிழ் நாட்டுக்கும் ஈழத்துக்கும் பல கால உறவும் பன்னுரற்ருண்டுத் தொடர்பும் இருந்து வந்தமையால், அங்கு காலத்துக்குக் காலம் ஏற் பட்ட சமூக, கலாசார, அரசியற்ருக்கங்கள் அனைத்தும் ஈழத்திலும் அவ்வப்போது பாதிப்பை ஏற்படுத்தி வந்திருக்கின்றன. 14ஆம் நூற் முண்டிலிருந்து ஈழத்திலே தோன்றிய இலக்கியங்களின் அமைப்பையும் போக்கையும் அவதானித்துப் பார்த்தால், அவை பெரும்பாலும் தமிழ் நாட்டிலே சம காலத்தில் ஏற்பட்ட பிரபந்த வகைகளின் தாக்கங் கொண்டனவாகவே விளங்குகின்றன என்று கொள்ளலாம். அகப் பொருட் புறப்பொருட் பிரபந்த வகைகளைப் பொறுத்த அளவில் அது உண்மையாயினும், மரபுமுறையான பிரபந்த வகைகளுள் அடங்காத சோதிட, வைத்திய, வரலாற்று நூல்களைப் பொறுத்த அளவில் ஈழத்து இலக்கியங்கள் ஒரு தனித்தன்மை வகிக்கின்றன என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆரம்பகால ஈழத் தமிழ் இலக்கியங்களை நோக்குமிடத்து, அவை வடக்குத் தெற்கு என்ற பாகுபாடின்றி, ஆங்காங்குள்ள அரசர்களின் ஆதரவிலேயே வளர்ந்திருக்கின்றன என்று காணலாம். அத்தகைய நூல்கள் சில அவற்றைச் செய்வித்த அரசர் பெயராலே வழங்கி வருவதும் அதற்குச் சான்ருகும். அக்கால இலங்கை அரசர்கள் சோதிடத்திலும் வைத்தியத்திலும் முக்கிய கவனம் செலுத்தியிருக்கிருர்கள் என்பது அவர்கள் செய்வித்த ஆதி நூல்களைக்கொண்டு அறியலாம். அதற்கடுத்த படியாக அவர்கள் கவனம் சமயத்திலும் சரித்திரத்திலும் சென்றிருக் கிறது என்பது, அவர்கள் ஆதரவிற் பிறந்த ஏனைய நூல்களைப் பார்த் துத் தெரிந்துகொள்ளலாம். இலக்கியச் சுவையை நயப்பதற்கென்று செய்யப்பட்ட நூல்கள் அருகியே காணப்பட்டன. அப்பொழுதிருந்த நிலைபேறற்ற அரசியல் நிலைமை அதற்குக் காரணமாயிருந்திருக்கலாம். எவ்வாருயினும், சோதிடத்திலே ஈழத்தமிழ் மன்னர்க்கும் சிங்கள அரசர்களுக்கும் 14ஆம் நூற்ருண்டில் ஏற்பட்டிருந்த பெருநம்பிக்கையை அவர்கள் செய்வித்த சோதிட நூல்கள் பிரதிபலிக்கின்றன. அக்காலத் திலே சித்த வைத்தியம் பரவுவதற்குமுன், ஆயுள்வேத வைத்திய முறையே ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆதரவைப் பெற்றிருந்தது என் பதைத் தன்வந்திரியின் ஆயுள்வேத நூலைத் தழுவிச் செய்யப்பட்ட வைத்திய நூல்கள் எடுத்துக் காட்டும்.
வடமொழி நூல்களை மொழிபெயர்த்து, வைத்திய நூல்களும் இலக்கிய நூல்களும் செய்த ஈழத்துப் புலவர்கள், தமிழ் இலக்கண இலக்கியப் புலமை மட்டுமன்றி வடமொழி ஆற்றலும் கொண்டவர் களாய் விளங்கியிருக்கிருர்கள் என்பது தெளிவு. அன்றியும், வரலாற்று நோக்கு வளர்ச்சியடையாதிருந்த அக்காலத்தில், வரலாற்றுத் தொடர் புடைய நூல்கள் சில எழுந்தமை, ஈழத்தெழுந்த ஒரு புது முனைப் பென்று கொள்ளலாம்.
14ஆம் நூற்ருண்டின் ஆரம்பத்துடன் ஈழத்திற் பரிணமித்த இலக் கிய எழுச்சி, 17ஆம் 18ஆம் நூற்றண்டுகளிலே அந்நியர் ஆட்சி மேலோங்கி நின்றபோதுகூட மங்கிவிடவில்லை. அந்நியர் ஆட்சிக்காலப் பகுதியிலே தனிப்பட்ட புலவர்களின் முயற்சியால் மேலும் வளர்ந்து வந்த தமிழ் இலக்கியம், புதிய திருப்பு முனைகளைக்கொண்டு மலர்ந்தன. அகச்சமயப் புறச்சமயத் தாக்கங்களும், பிரபந்தவகையான அமைப்பும் அக்கால இலக்கியங்கள் பெற்று விளங்கின. ஆரியச் சக்கரவர்த்திகள் கால இலக்கியங்கள் பெரும்பாலும் பிரபந்த இலக்கணங்களுக்கமையா தனவாயிருக்க, அந்நியர் ஆட்சிக்கால இலக்கியங்கள் பெரும்பாலும் பிரபந்த வகைக்குட்பட்டனவாகவே அமைந்து விளங்கின.

Page 72
126 முடிவுரை
நூல்களின் பிரபந்த முறையான அமைப்பினை இனங்கண்டு வகுப் பதற்கும், ஒரே வகையான பிரபந்தங்களில் ஏற்படும் வேறுபாடுகளைத் தெரிந்துகொள்வதற்கும், காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றவகையில் ஒரே இனப் பிரபந்தங்களில் ஏற்பட்ட மாறுபாடுகளை அறிந்துகொள் வதற்கும், வெவ்வேறு பிரபந்தங்களுக்கிடையில் உள்ள வித்தியாசங்களை விளங்கிக்கொள்வதற்கும், பிரபந்தங்களின் இலக்கணங்களையும் அவற்றின் தோற்றம் வளர்ச்சிபற்றிய வரலாற்றினையும் தெரிந்துகொள்ளவேண் டியது அவசியமாகும். நூல்களைப் பிரபந்தவாரியாக ஆராயும்போது, பிரபந்த இலக்கண வரம்புகளுக்குள் நின்று அவற்றை நோக்கினலும், அவ்வரம்புகள் நெறிமுறைப்பட்டனவாயில்லாத விடத்து, இடர்ப்பாடு ஏற்படுதல் இயல்பே. அதனல் இவ்வாய்வோடு தொடர்புபட்ட பகுதி யாகத் தமிழ் இலக்கிய வடிவங்களையும் ஆராய வேண்டியிருந்தது. எனவே, தொண்ணுரற்ருறு வகைப் பிரபந்தங்களின் இலக்கணங்களை ஆராயப் புகுந்தபோது, நூற்றிருபது வகைகளுக்கு மேற்பட்ட பிரபந் தங்களின் இலக்கணங்கள் தென்பட்டன. அப்பிரபந்த இலக்கணங் களிலே பல முரண்பாடுகளும் சில குறைபாடுகளும் இருக்கக் காணப்பட் டன. ஆதலாற் பிரபந்த இலக்கணங்களுக்குள்ளே எவை கொள்ளத்தக்கன எவை தள்ளவேண்டியன என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பும் ஏற்பட்டது.
பிரபந்தங்களின் தோற்றத்தை ஆராயத் தலைப்பட்டபோது, முப் பத்தைந்து பிரபந்த வகைகளே தொல்காப்பிய அகப்பொருள் புறப் பொருள் மரபுக்கமைந்தனவாகக் காணப்பட்டன. ஏனையன, தொல் காப்பிய இலக்கணத்துக்கமைந்த செய்யுள் வகைகளையும், இலக்கியங் களையும் ஆதாரமாகக் கொண்டெழுந்த பிரபந்தங்களாகத் தென்பட் டன. பிரபந்தங்களின் வளர்ச்சியை நிர்ணயிக்க முனைகையில் அவ்வப் பிரபந்தங்கள் தோன்றிய காலகட்டங்களும் தீர்மானிக்கப்பட வேண்டி யாயிற்று. அவற்றையெல்லாம் ஆராய்ந்து சென்றபோது, வீரமா முனிவரின் சதுரகராதியிலும், ஏனைய பல தமிழ் அகராதிகளிலும் தரப் பட்டிருக்கும் பிரபந்தங்களின் வரைவிலக்கணங்களிலே பல முரண்பாடு களும் தவறுகளும் தென்பட்டன. பாட்டியல் நூல்களும் பல பிரபந் தங்கள் பற்றி ஒரேமுகப்பட்ட கருத்துக்களைத் தெரிவிப்பனவாயில்லை. அதனல் அவ்வாய்வு நீண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே, இதனேடு தொடர்புற்ற பகுதியாயினும், அதனை மற்ருெரு நூலாக வெளியிட வேண்டிய நிலைமை உருவாயிற்று. தமிழ் இலக்கிய வடிவங்கள் என்ற பெயரில் வெளிவரவிருக்கும் அவ்வாய்வை இதனேடு இணைத்து நோக்குதல் பொருத்தமாயிருக்கும்.

ஆய்வுக்கு உதவிய தமிழ் நூல்கள்
அகநானூறு : அமிர்தசாகரர் :
அரசகேசரி :
இந்திரபாலா, கா. :
இந்திரபாலா, கா. :
இராகவஐயங்கார், ரா.:
இராகவஐயங்கார். மு. :
*இராசநாயகம், செ. :
இராமலிங்கமுனிவர் :
இளங்கோவடிகள் :
ஐங்குறுநூறு :
ஐயனரிதனுர் :
ஒட்டக்கூத்தர் :
கஞ்சன் அம்மானை :
கண்ணகி வழக்குரை :
கணபதி ஐயர் :
கணபதிப்பிள்ளை, மு. :
கணேசையர். சி. :
எஸ். ராஜம் பதிப்பு, சென்னை, 1958.
அ. குமாரசுவாமிப் 3ஆம் பதிப்பு,
யாப்பருங்கலக்காரிகை, புலவர் உரை, யாழ்ப்பாணம்,
1938. இரகுவம்மிசம், சி. கணேசையர் பதிப்பு, யாழ்ப் Lust 600T lb, 1932. அனுராதபுரத்திலுள்ள நான்கு நாட்டார் கல் வெட்டு, சிந்தன, மலர் 1, இதழ் 4, பேராதனை,
1968. ஈழநாட்டுத் தமிழ்க் கல்வெட்டுக்கள், கதிர், பேராதனை, 1958. தமிழ் வரலாறு, அண்ணுமலைப் பல்கலைக் கழகம்,
1941. சாஸனத் தமிழ்க்கவி சரிதம், 3ஆம் பதிப்பு, 1961.
யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாணம், 1933.
இளங்
மானுமதுரை,
சந்தான தீபிகை, யாழ்ப்பாணம், 2ஆம் பதிப்பு, I940. சிலப்பதிகாரம், பதிப்பு, சென்னை,
எஸ். கலியாணசுந்தரையர்
4ஆம் பதிப்பு, 1944,
தி. சதாசிவஐயர் பதிப்பு, யாழ்ப்பாணம், 1943, புறப்பெருள் வெண்பாமாலை, சைவசித்தாந்த
நூற் பதிப்புக் கழகம், 2ஆம் பதிப்பு, 1959. மூவருலா, எஸ். கலியாணசுந்தரையர் பதிப்பு, சென்னை, 1946. சு. வித்தியானந்தன் பதிப்பு, பேராதனை, 1970. வி. சீ. கந்தையா பதிப்பு, யாழ்ப்பாணம், 1968. வட்டுக்கோட்டைப் பிட்டியம்பதி பத்திரகாளி யம்மை ஊஞ்சல், யாழ்ப்பாணம், 1939. ஈழநாட்டின் தமிழ்ச்சுடர் மணிகள், சென்னை, 1967. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், சுன்னகம், 1939.

Page 73
128 ஆய்வுக்கு உதவிய தமிழ் நூல்கள்
கதிரமலைப் பள்ளு : வ. குமாரசுவாமி பதிப்பு, சென்னை, 1935. கத்தையா, வி. சீ. : மட்டக்களப்புத் தமிழகம், யாழ்ப்பாணம்,1964. கலித்தொகை : வெ. பெரி. பழ. மு. காசி விசுவநாதன் செட்டி
யார் வெளியீடு, சென்னை, 1938. கவிராசர் : கோணேசர் கல்வெட்டு, வை. சோமாஸ்கந்தர்
பதிப்பு, திருகோணமலை, 1968. குணவீர பண்டிதன் ; வெண்பாப் பாட்டியல், சைவசித்தாந்த நூற்
பதிப்புக் கழக வெளியீடு, சென்னை, 1964. குமாரசுவாமிப் புலவர், அ. தமிழ்ப் புலவர் சரித்திரம், சுன்னகம்,
2ஆம் பதிப்பு, 1951.
குறுந்தொகை : உ. வே. சாமிநாதையர் பதிப்பு, சென்னை,
1937.
கோவலஞர் கதை : மா. சே. செல்லையா பதிப்பு, யாழ்ப்பாணம்,
1962.
சதாசிவ பண்டாரத்தார். T. W. பிற்காலச் சோழர் சரித்திரம். அண்ணு
மலைப் பல்கலைக் கழகம், 1961. சதாசிவ பண்டாரத்தார், T. W. பாண்டியர் வரலாறு, சென்னை, 1956,
சதாசிவம், ஆ. : ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், யாழ்ப்
LIFT 600TLib, 1966.
சதாசிவம்பிள்ளை, அ. : பாவலர் சரித்திர தீபகம், யாழ்ப்பாணம்,
1886.
சயங்கொண்டான் : கலிங்கத்துப்பரணி, ஆ. வீ. கன்னையநாயுடு
பதிப்பு, சென்னை, 1941.
சிவசிதம்பரம், தா. : வன்னிமாவீரன் பண்டார வன்னியன்,
கொழும்பு, 1961. சிவசுப்பிரமணிய சிவாசாரியர், நா. சிவராத்திரி புராணம், வே. சதா சிவம்பிள்ளை பதிப்பு, யாழ்ப்பாணம், 1910. சின்னக்குட்டிப் புலவர் : தண்டிகைக் கனகராயன் பள்ளு, வ. குமார
சுவாமி பதிப்பு, சென்னை, 1932. சின்னத்தம்பிப் புலவர் (இணுவை): பஞ்சவன்னத் தூது, ஏட்டுப்
பிரதி, சின்னத்தம்பிப் புலவர் (இணுவை) சிவகாமியம்மை துதி, ஏட்டுப்
பிரதி. சின்னத்தம்பிப் புலவர் (நல்லூர்) : கல்வளை அந்தாதி, ம. வே. திரு ஞானசம்பந்தப்பிள்ளை பதிப்பு, யாழ்ப்பாணம், 1934,

ஆய்வுக்கு உதவிய தமிழ் நூல்கள் 129
சின்னத்தம்பிப் புலவர் (நல்லூர்) : கல்வளை அந்தாதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, சென்னை, 1964. சின்னத்தம்பிப் புலவர் (நல்லூர்): கரவைவேலன் கோவை, தி. சதாசிவ
ஐயர் பதிப்பு, யாழ்ப்பாணம், 1935. சின்னத்தம்பிப் புலவர் (நல்லூர்) : பருளை விநாயகர் பள்ளு, சே. வெ. ஜம்புலிங்கம்பிள்ளை பதிப்பு, சென்னை, 1956. சின்னத்தம்பிப் புலவர் (நல்லூர்) : மறைசை அந்தாதி, அ. சிவசம்புப்
புலவர் பதிப்பு, யாழ்ப்பாணம், 1939. சிற்றிலக்கண நூற்றிரட்டு : சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
சென்னை, 1964, சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள் (நான்காவது மாநாடு) : சைவசித் தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1961. சீத்தலைச் சாத்தனர் (கூலவாணிகன்) : மணிமேகலை, உ. வே. சாமி
நாதையர் பதிப்பு, சென்னை, 1931. சீனி வேங்கடசாமி, மயிலை : மறைந்துபோன தமிழ் நூல்கள், சென்னை, 2ஆம் பதிப்பு, 1967. சுப்பிரதீபக் கவிராயர் : கூளப்ப நாயக்கன் காதல், சிரஞ்சீவி பதிப்பு,
சென்னை, 1958. சுப்பிரதீபக் கவிராயர் : கூளப்ப நாயக்கன் விறலிவிடு தூது, சிரஞ்சீவி
பதிப்பு, சென்னை, 1958. m சுப்பிரமணியம்பிள்ளை, கா. இலக்கியவரலாறு, சென்னை, 1930.
செகராசசேகரம் : ஐ, பொன்னையா பதிப்பு, மல்லாகம் (யாழ்ப்
பாணம்).
செகராசசேகர மாலை : இ. சி. இரகுநாதையர் பதிப்பு, யாழ்ப்பாணம்,
1942.
செகந்நாதன், பொ. அடியார்க்கு நல்லார் வரலாற்று ஆராய்ச்சி,
மதுரை, 1944.
செந்தமிழ் : தொகுதி 12, பகுதி 10, ஆனந்த வருடம். செந்தமிழ் : தொகுதி 17, பகுதி 3, காலயுக்தி வருடம். செயராமன், ந. வீ. அந்தாதி இலக்கியங்கள், சிதம்பரம், 1967.
செயராமன், ந. உலா இலக்கியங்கள், சிதம்பரம், 1966.
வீ
செயராமன், ந. வீ சதக இலக்கியங்கள், சிதம்பரம், 1966. செயராமன், ந. வீ. சிற்றிலக்கியச் செல்வங்கள், சிதம்பரம், 1967. செயராமன், ந. வீ தூது இலக்கியங்கள், சிதம்பரம், 1965. செல்வநாயகம், வி. : தமிழ் இலக்கிய வரலாறு, பேராதனை, 1951. ஞானப்பள்ளு : ஆ. சதாசிவம் பதிப்பு, கொழும்பு, 1968.
际一9

Page 74
130 ஆய்வுக்கு உதவிய தமிழ் நூல்கள்
தகதிணகைலாச புராணம் : கா. சிவசிதம்பர ஐயர் பதிப்பு, சென்னை,
1887.
தகதிணகைலாச புராணம் : பு. பொ. வைத்தியலிங்க தேசிகர் பதிப்பு, யாழ்ப்பாணம், 1916.
தஞ்சைவாணன் கோவை: மே. வீ. வேணுகோபாலபிள்ளை பதிப்பு,
சென்னை, 1951.
தண்டியலங்காரம் : கு. அம்பலவாணபிள்ளை பதிப்பு, சென்னை,
1926.
தமிழ்மொழியகராதி : பி. வி. நமசிவாய முதலியார் பதிப்பு, சென்னை,
1911.
தியாகராச தேசிகர் : இலக்கணவிளக்கப் பாட்டியல் (இலக்கணவிளக்
கப் பகுதி), சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பு, சென்னை, விரோதி வருடம் (1889). திருக்கரைசைப் புராணம் : வே. அகிலேசபிள்ளை பதிப்பு, யாழ்ப்பாணம்,
விகிர்தி வருடம் (1890). திருத்தக்க தேவர் : சீவகசிந்தாமணி, எஸ். கலியாணசுந்தரையர்
பதிப்பு, சென்னை, 1942. திவ்வியப் பிரபந்த அகராதி: தேவஸ்தான பத்திரிகை வெளியீடு,
திருச்சி, 1963. துரைசாமிப்பிள்ளை, ஜி. எஸ். தமிழ் இலக்கியம், கல்கத்தா, 1915. தொல்காப்பியனர் : தொல்காப்பியப் பொருளதிகார முதற்பாகம்
(நச்சினர்க்கினியம்),எஸ். கனகசபாபதிப்பிள்ளை பதிப்பு, சென்னை, 1934.
தொல்காப்பியனர் : தொல்காப்பியப் பொருளதிகார இரண்டாம் பாகம், பேராசிரியர், எஸ். கனகசபாபதிப் பிள்ளை பதிப்பு, சென்னை, 1934.
தொல்காப்பியனர் : தொல்காப்பியப் பொருளதிகாரம் (இளம் பூரணம்), சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 3ஆம் பதிப்பு, சென்னை, 1961.
pluntafit, F. X. C. : ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு, கொழும்பு,
1970.
நவநீதநடனர் : நவநீதப்பாட்டியல், சென்னை, 1944,
நற்றிணை நானூறு : சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு,
சென்னை, 1962.
நாலாயிரத் திவ்விய பிரபந்தம் : பி. எஸ். அருணுசல முதலியார் வெளி
யீடு, சென்னை.
நாற்கவிராச நம்பி : அகப்பொருள் விளக்கம், கு. அம்பலவாண
பிள்ளை பதிப்பு, யாழ்ப்பாணம், 1932.
பத்மநாதன், சி. : வன்னியர், பேராதனை, 1970,

ஆய்வுக்கு உதவிய தமிழ் நூல்கள்
பத்துப்பாட்டு : பதிற்றுப்பத்து :
பரஞ்சோதி முனிவர் :
பரராசசேகரம் :
பரிபாடல் :
பன்னிரு பாட்டியல் :
பிரபந்த மரபியல் :
புறநானுfறு : புறத்திரட்டு :
பூலோகசிங்கம், பொ. :
பூலோசிங்க முதலியார்:
பேதுருப்புலவர் :
Gollu urtuta Opé95u urtri :
போசராச பண்டிதர் :
31
உ. வே. சாமிநாதையர் பதிப்பு,சென்னை, 1931. உ. வே. சாமிநாதையர் பதிப்பு, சென்னை. 3ஆம் பதிப்பு, 1941. திருவிளையாடற் புராணம், சென்னை, சுக்கில வருடம். ஐ. பொன்னையா பதிப்பு, பாகங்கள் 1 - 7, மல்லாகம் (யாழ்ப்பாணம்), 1931-1936. உ. வே. சாமிநாதையர் பதிப்பு, சென்னை, 2ஆம் பதிப்பு, 1935. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு. சென்னை, 1963. ஏட்டுப்பிரதி, அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை. உ.வே. சாமிநாதையர் பதிப்பு, சென்னை. 1935,
எஸ். வையாபுரிப்பிள்ளை பதிப்பு,சென்னை, 1938, தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெரு முயற்சிகள், யாழ்ப்பாணம், 1970. திருச்செல்வர் காவியம், ச. தம்பிமுத்துப்பிள்ளை பதிப்பு, அச்சுவேலி, 1896. அர்ச், யாகப்பர் அம்மானை, 3ஆம் பதிப்பு, 1930. களவழி நாற்பது, சைவசித்தாந்த நூற்பதிப் புக் கழக வெளியீடு, சென்னை, 1949. சரசோதி மாலை, சந். இரகுநாதையர், சு. நடே சையர் பதிப்பு, யாழ்ப்பாணம், கரவருடம் (1892).
யாழ்ப்பாணம்,
மட்டக்களப்பு மான்மியம்: F. X. C. நடராசா பதிப்பு, கொழும்பு, 1962.
மதுரைத் தமிழ்ப் பேரகராதி :
இ. மா. கோபாலகிருஷ்ணக்கோன் பதிப்பு, மதுரை, 1937.
மயில்வாகனப் புலவர் (மாதகல்): புலியூரந்தாதி, வே. மாணிக்கவாசகர்
பதிப்பு, யாழ்ப்பாணம், 1970.
மயில்வாகனப் புலவர் (மாதகல்) : யாழ்ப்பாண வைபவமாலை, குல. சபா
முக்கூடற் பள்ளு :
நாதன் பதிப்பு, கொழும்பு, 1953. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, சென்னை, 1963.
முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. தென்மொழி வரலாறு, யாழ்ப்பாணம், 1920,

Page 75
132 ஆய்வுக்கு உதவிய தமிழ் நூல்கள்
முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ, ! ஈழமண்டலப்புலவர் சரித்திரம், யாழ்ப்
பாணம், 1922.
முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாணம்,
1933.
முத்துராச கவிராயர் கைலாயமாலை, சே. வெ. ஜம்புலிங்கம்பிள்ளை
பதிப்பு, சென்னை, 1939.
முத்துவேங்கட சுப்பையர் : பிரபந்ததீபிகை, செந்தமிழ், தொகுதி 17, பகுதி 3, 1919, −
வடமலையப்பபிள்ளை மச்சபுராணம், கந்தசாமி முதலியார் பதிப்பு,
1900.
வரத பண்டிதர் : அமுதாகரம், சு. தம்பையாபிள்ளை பதிப்பு,
சென்னை, 1892,
வரத பண்டிதர் : குருநாத சுவாமி கிள்ளைவிடு தூது, வ. மு. இரத்திநேசுவரையர் பதிப்பு, யாழ்ப்பாணம், 1921.
வரத பண்டிதர் : பிள்ளையார் கதை, கா. மகேஸ்வரக் குருக்கள்
பதிப்பு, யாழ்ப்பாணம், 1966. வரதராச கவிராசர் : சிவராத்திரி புராணம், மு. கணபதிப்பிள்ளை
பதிப்பு, யாழ்ப்பாணம், 1970. வரதராச பண்டிதர் : ஏகாதசி புராணம், ஆ. வேலுப்பிள்ளை பதிப்பு, யாழ்ப்பாணம், 1958. வரதராசன், மு. : தமிழ் இலக்கிய வரலாறு, புதுதில்லி, 1972. வீரக்கோன் முதலியார், ஐ. சித்திரவேலாயுதர் காதல், வே. அகிலேச
பிள்ளை பதிப்பு, சென்னை, 1906.
வீரமாமுனிவர் : சதுரகராதி, மதுரை, 1928.
வேலுப்பிள்ளை, ஆ. : தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்,
சென்னை, 1969.
வேலுப்பிள்ளை, க. : யாழ்ப்பாண வைபவ கெளமுதி, GITT
GGMTIT 6ör, 1918. வைத்தியநாத தேசிகர் : இலக்கண விளக்கம், சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, சென்னை, விரோதிடு) (1889).
வையாபுரி ஐயர் : வையா பாடல், ஜே. டபிள்யூ. அருட்பிரகாசம்
பதிப்பு, யாழ்ப்பாணம், 1921.
வையாபுரி ஐயர் : வையா பாடல், இ. து. சிவானந்தன் பதிப்பு,
பினுங்கு, 1922.
வையாபுரி ஐயர் : GopaluulunT untL-Gi), 35. GoIF. p5LUTnrFIT பதிப்பு,
கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியீடு, 1980. வையாபுரிப்பிள்ளை, எஸ். காவிய காலம், சென்னை, 1926.
\

ஆய்வுக்கு உதவிய ஆங்கில நூல்கள்
Abeysinghe, Tikiri : Portuguese Rule in Ceylon 1594-1612, Colombo, 1966.
An Anthology of Sinhalese Literature up to 1815, selected by UNESCO National Commission of Ceylon, 1970.
Arasaratnam, Sinnappah: The Dutch Power in Ceylon 1658-1687
Amsterdam, 1958.
Casie Chitty, Simon: On the History of Jaffna from the
earliest period to the Dutch conquest, Journal of the Royal Asiatic Society Ceylon Branch, (3) 1847-1848, pp. 69-79.
Casie Chitty, Simon: The Tamil Plutarch, Colombo, 2nd
Edition, 1946.
Ceylon National Museums manuscripts series Vol. V. Sinhala Verse (Kavi) Ethnology Vol. 2. collected by the late Hugh Nevill, F. Z. S., (1869 to 1886) Edited by P. E. P. Deraniyagala, Ceylon National Museums Dept., 1954 - 1955.
Ceylon Tamil Inscription : Edited by A. Velupillai, Peradeniya,
Part I 1971, Part II 1972.
Codrington H. W.: A short History of Ceylon, London
revised edition, 1939.
Dikshidar, V. R. R. : Studies in Tamil Literature and History,
Madras, 1936.
Fernao de Queyroz: The Temporal and Spiritual Conquest, of Ceylon, translated into English by S. G. Perera, Colombo, 1930.
Gnanaprakasar, Fr. S.: The kings of Jaffna during the Portu
guese period of Ceylon History, Jaffna, 1920.

Page 76
134
(Godakumbura, C. E.;
Godakumbura, C. E. :
Goonewardena, K. W. :
James de Alwis :
ஆய்வுக்கு உதவிய ஆங்கில நூல்கள்
Sinhalese Literature, Colombo, 1955.
The Literature of Ceylon, Colombo, 1963.
The foundation of Dutch Power in Ceylon
1638-1658, Amsterdam, 1958.
A survey of Sinhala Literature, Colombo, 966.
Jesudasan, C. and Jesudasan, H. : A history of Tamil Literature,
Joao Ribeiro, Captain :
Meemakshisundaran, T. P.:
Calcutta, 196.
The Historic Tragedy of the Island of Ceilao-translated from Portuguese by P. E. Pieris, 3rd Edition, Colombo, 1925.
A History of Tamil Literature, Annamalai University, 1965.
Memoir of Hendrick Zwaardecroon, Commander of Jaffnapatnam
Nadarajah, K. S. :
Navaratnam, K. :
Newton Pinto :
Notes on Jaffna :
Paranavitana, S. :
1697 translated by Sophia Peters with an introduction note by the York Archivist, Colombo, H. C. Cottle, Govt. Printer, 1911.
"A critical study of Tamil documents pertaining to the History of Jaffna', Proceedings of the First International Conference of Tamil Studies, Kuala Lumpur, 1966. Tamil Elements in Ceylon culture, Tellipalai, Ceylon, 1959. A short History of Sinhalese Literature, Colombo, 1954.
Compiled by John Martin, American Ceylon Press, Jaffna, 1923.
The Arya Kingdom in North Ceylon, Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society New Series Vol. 7, part 2, 1961.

ஆய்வுக்கு உதவிய ஆங்கில நூல்கள் 135
Perera, Fr. S. G. : A History of Ceylon for Schools, part , Colombo, 1949. Pieris, P. E. : Ceylon - The Portuguese era, being a
history of the Island for the period 15051658, Colombo,Vol. II (193),Vol. II (1914).
Puranalingam Pillai, M. S.: Tamil Literature, Tinnevelly, South
India, 1929.
Ragavan, M. D. : Tamil Culture in Ceylon, Colombo (no
date).
Rasanayagam, C. : Ancient Jaffna, Everyman's Publishers, Madras, 1926.
Sesha yengar : Dravidian India, Madras, 2nd Edition, 1933
Singaravelu, S. : Social life of the Tamils (The classical
period), Kuala Lumpur, 1966.
Sinnatamby, J. R. : Ceylon in Ptolemy's Geography, Colombo,
1968.
University of Ceylon, History of Ceylon, Colombo, 1960.
Uwise, M. M. : Muslim contribution to Tamil Literature,
Kandy, 1953.
Vaiyapuri Pillai, S. : History of Tamil Language and Liter
ature, Madras, 1956.

Page 77
சொற்ருெகை வகுப்பு
ஆய்வுக்காலப் பகுதிக்குரிய (கி.பி. 1301-1800) ஈழத்துத் தமிழ் இலக்கியப் பெயர் அட்டவணை
(எண் - பக்க எண்)
அமுதாகரம் 29,32,33, 107, 108.111 அர்ச்யாகப்பர் அம்மாஜன 28,118,19,122
இரகுவம்(மி)சம் 14, 15, 97, 100 இரட்சப்பதிகம் 48 இராசமுறை 48, 112
ஏகாதசிபுராணம் 29, 30, 95, 96, 100 கஞ்சன் காவியம் (முத்துக்குமாரர்) 48 கண்ணகி வழக்குரை, கோவலனர் கதை, சிலம்பு கூறல் 13,64,97,100
VK. 101, 102 கதிரைமலைப் (கதிரையப்பர்) பள்ளு 22, 67, 69, 7 II, 72, 76 கரவைவேலன் கோவை 40, 49, 61 62, 63, 65 கல்வளையந்தாதி 38, 67, ஐ, ஐ காசியாத்திரை விளக்கம் 48 கிள்ளைவிடுதூது, குருநாதசுவாமி 31 49, 53, 54, 64, 65, 66 கூழங்கையர் வண்ணம் 4& கைலாய (கயிலாய)மாலை 19,20,118 கோணேசர் கல்வெட்டு/சாசனம், கல் வெட்டுப்பாட்டு 17, 18, 113, 114 சந்தான தீபிகை 37,88,07,109.09 சரசோதிமாலே 4.5,37.107, 108, 109,110 சித்திவிநாயகர் திருவிரட்டை மணிமாலை 4& சிவகாமியம்மை துதி 45, 87 சிவராத்திரி புராணம் 29, 95, 96,100 செகராசசேகரம் 6, 8. 107,108. 10, 11 t செகராசசேகரமாஆல 6 107, 108, 109, 110 ஞானப்பள்ளு, வேதப்பள்ளு 24, 26
ஞானனந்த புராணம் 27 தசவாக்கிய விளக்கப் பதிகம் 48 தண்டிகைக் கனகராயன் பள்ளு 46
67, 69, 70, 72, 75
தகதிண/தக்கிண கைலாச புராணம்
of 11, J2, 17, 18, 94, 99, 102 திருக்கரைசைப் புராணம் 20, 22 திருச்செல்வர் காவியம் 33, 97, 100, 12 திருச்செல்வ(ர்)ராசர் அம்மா ஆன 48, t t 7, 122
திருவாசகம் 48 நல்லைக் கலிவெண்பா 48 பச்சாத்தாபப் பதிகம் 48
பஞ்சவன்னத் தூது 44,49,53,54.55,65 பரராசசேகரம் 6, 9, 107, 108, 110
III, 112, 113 பரராசசேகரன் உலா 48
பருளை விநாயகர் பள்ளு 42, 43, 67 69, 72, 76 பிள்ளைக் கவி 48, 117
பிள்ளையார் கதை 29, 31, 96, 100 புலியூரந்தாதி 47, 67, 81, 83 மறைசையந்தாதி 39, 41, 67, 81, 83 யோசேப்புப் புராணம் 48 வட்டுக்கோட்டைப் பிட்டியம்பதிப் பத்திரகாளியம்மைஊஞ்சல் 44,67 வட்டுக்கோட்டைப் பிட்டியம்பதிப் பத்திரகாளியம்மை பதிகம் 48
வண்ணை வைத்தியலிங்கக் குறவஞ்சி 48 வலைவீசு புராணம் 48 வியாக்கிரபாத புராணம் 20
வெருகல் சித்திரவேலாயுதர் காதல் 35, 49, 56,60, 61, 64, 65, 66
67, 69, 70, 71, 72, 73, 74, 122|வையாபாடல் 15, 16, 18, 19,113,114

சொற்ருெகை வகுப்பு
37
பிறநூற் பெயர் அட்டிவணை
அகநானூறு 51, 106 அகப்பொருள் விளக்கம் 63 அக்கினி (அக்கினேய புராணம், 80, 88, 98
அமாவதுர 98 அரிச்சந்திரபுராணம் 98 அழகர் கிள்ளைவிடு துரது 53 அஷ்டாதச புராணம் 98
ஆயுள்வேதம், ஆயிருவேதம் 8, 10 இராமாயணக் கதை 64, 65 இலக்கண விளக்கப்பாட்டியல் 51,58 61,78,79,84,85,88,89,91,92, 106 இலங்கையும் ஒல்லாந்தரும் 40 இலிங்க புராணம் 31, 98 ஈழத்துத் தமிழ்க் கவிதைக்களஞ்சியம் 2, 22, 23, 46 ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம் 2
ஈழநாடும் தமிழும் 2 ஈழமண்டலப் புலவர் I ஈழமண்டலப் புலவர் சரித்திரம் 2 எட்டுத்தொகை 107 கச்சிஆனந்தருத்திரேசர்வண்டுவிடு
S/ISI 53 கஞ்சன் அம்மானை 118, 121 கஞ்சன் காவியம் 121
கண்ணகி கதை 65 கந்தபுராணம் 31 , 88 , 98 கம்பராமாயணம் 88, 98, 100 கயிலாய புராணம் I2 கயிலாயநாதர் / நாதன் தோத்திரம்
45。&5 கருடபுராணம் 30 கலித்தொகை 107 கல்வெட்டு 3, 4 கவ்சிலுமின 98 கன்னிவன புராணம் 98
56
99
கஹகுருலு சந்தேசய காசிகண்டம் காசியாத்திரை விளக்கம்
48
காந்த புராணம் 30 கார்த்தியாயன சூத்ரம் 7 காவிய சேகரய 98 காளிகா புராணம் 30 கிரு சந்தேசய 56 குறுந்தொகை 106, 107 கூர்மபுராணம் 31, 98 கூளப்பநாயக்கன் காதல் 56, 60, 61 கைவர்த்த புராணம் 30 கொடிக்கவி 22 கோகில சந்தேசய 56 கோயிற் புராணம் 94, 99 கோவலன் நாடகம் 46 சத்தர்ம ரத்னுவலிய 98 சத்தர்மாலங்காரய 98 சதுரகராதி 56, 60, 68, 71, 78, 80
84, 85, 88, 91, 92, 103, 106, 107 சலலிஹினி சந்தேசய 56 சவுல் சந்தேசய 56
சித்தாரூடம்,சித்தர்ஆரூடம் 33,111 சிதம்பரப் பாட்டியல் 51, 58, 61
78, 79, 84, 85, 88, 90, 92 சிதம்பர புராணம் 99 சிலப்பதிகாரம் 13, ! 9, 97, 100. 101, 10 சிவகாமியம்மை பதிகம் 46.67,84, 67
சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் 45 சிவபுராணம் 93 சீவகசிந்தாமணி 88, 100 சூரிய சித்தாந்த புராணம் 30 செந்தமிழ் I செவுல்சந்தேசய 36 சேதுபுராணம் 99 தஞ்சைவாணன் கோவை 63 தண்டியலங்காரம் 88, 90 தணிகைப் புராணம் 99 தமிழ்ப் புலவர் சரித்திரம்
தமிழ் புளூராக் திசற சந்தேசய 56

Page 78
138
97
99
70
99
திருத்தொண்டர் புராணம் திருப்பரங்கிரிப் புராணம் திருமலை முருகன் பள்ளு திருமழபாடிப் புராணம்
திருவள்ளுவப் பயன் 106 திருவாரூர்ப் பள்ளு 68 திருவொற்றியூர்ப் புராணம் 99 திருவேதம் 24
திருச்சிற்றம்பலக் கோவை 62, 63 தொல்காப்பியம் 49, 50, 58, 60, 105 தைவஞ்ஞ காமதேனு 108 நவநீதப் பாட்டியல் 51, 58, 60, 6
70, 79, 80, 85, 88, 90, 91, 106
நளவெண்பா 98 நற்றிணை 5互 நாரத புராணம் நான்மணிக் கடிகை 106 நீலகொவோ 56 நெஞ்சுவிடு தூது 51 நெடுந்தொகை 107 நைடதம் 98 நொண்டி நாடகம் 46
பஞ்சாங்கம் 38 பணவிடு தூது 53 பத்திரகாளியம்மை ஊஞ்சல் 84, 85 பத்துப் பாட்டு 107 பத்மகிரிநாதர் தென்றல்விடுதூது 53 பதிற்றுப் பத்து O6 பதும புராணம் BO பரவி சந்தேசய 56 பவிடிய புராணம் 30 பறங்கி ஹட்டன 36 பன்னிருபடலம் 106 பன்னிரு பாட்டியல் 57, 58, 61, 67 68, 70, 71, 78, 79, 80, 84, 85 88, 91, 103, 105, 107
பாகவதம் 98 பாகவத புராணம் 30, 88 பாண்டிக்கோவை 62 பாரதம் 39, 98
பாவலர் சரித்திர தீபகம் 1, 29, 34, 44
சொற்ருெகை வகுப்பு
பிங்கல சரிதை 106 பிரபந்த தீபிகை 58, 60, 62, 68
78, 79, 84, 85, 103,105, 106 பிரம புராணம் 30 புலவர் சரிதம் 29 புறப்பொருள் வெண்பா மாலை 60
பூதபுராணம் 93 பூஜாவளிய 108 பெரிய புராணம் 88
108
பேசஜ்ஜ மஞ்ஜ"சா மச்சேந்திய(வட)புராணம் 11, 12,94
மணிமேகலை 88, 100 மத்ஸ்ய புராணம் 88 மதுரைக் காதல் 56., 60 மயூர சந்தேசய 56 மற்ச (மச்ச) புராணம் 31, 98 மனேன்மணியம் 76 மஹா ஹட்டன 36 மாபுராணம் 93 மான்விடுதூது 53 மேகதூத சன்னய 98 மேக விடுதூது (திருநாரையூர் ເ6) 5g
107
மேற்கணக்கு யாழ்ப்பாண வைபவ Drak) 14, 19.20
ராஜசிங்க சிரித 36 ராஜசிங்க வர்ணணு 36 வசந்தன் விளையாட்டு 66 வண்ணை வைத்தியலிங்கக் குறவஞ்சி 44 வராக புராணம் 31 வாமண சரிதை 106 வாயு புராணம் 3. வாளபிமன் நாடகம் 44 விட்டுணு ரகசிய புராணம் 30 வித்தகம் 2 விநாயக புராணம் 98 வியாக்கிர மான்மியம் 20 விறலிவிடு தூது (கூளப்ப நாயக்கன்) 53
வெண்பாப் பாட்டியல் 58, 61, 79 80, 85, 88, 89, 91, 93
ஹன்ச சந்தேசய 56 ஜாதகக் கதை 98 ஜானகி ஹரண 9S பூரீ புராணம் 98

சொற்ருெகை வகுப்பு
139
மக்கட்பெயர் அட்டவணை
அகத்திய (முனிவர்) ர் 20, 111, 114 அகிலேசபிள்ளை 22
அங்குலன் 29 அதம் 73 (அநுமான்) 54 அபிநேர், அபினேர் 33, 97 அபிராம் 25, 73 அமரர்நாதன் 23 அயன் 5 அர்ச்சியசிட்ட தமசேனு அருளப்பர் 3 அரங்கநாதன் 29, 32, 33 அரசகேசரி 14 அருவினேர் 34 அருளப்ப நாவலர் 34 ஆரியர் கோன் 14
ஆரியச் சக்கரவர்த்திகள் 2,4,6, 8, 11 12, 13, 14, 18, 19, 20, 22, 23 26, 46, 48, 66, 75, 95, 111, 112
இக்குவாகு 15 இந்துமதி இரகு 15
இரகுநாதையர், இ. சி. 37 இராசசிங்கன், ராசேந்திரன் 23, 35, 38,37
இராசநாயகம்,செ. (முதலியார்)116 இராமசாமிக் கவிராயர் 56 இராமலிங்க முனிவர் 37, 38
கங்கைவம்மிசத்தான் 87 கண்ணகி 54, 64 கணபதி ஐயர் 44 கணேசையர், சி. 2, 29 கதிர்காமசேகர மானமுதலியார் 46 கதிரைவேற்பிள்ளை, நா. கந்தப்பன் 47 கம்பர் 108
கயவாகு 95 கயிலாய (கைலாயர் நாதன்/ர் நாத
துரை 45, 46, 54, 55, 87, 115 கரைசைப் புலவர் 20, 22
கவிராய (ஜ) ர், கவிராசவரோதயன்
1, 17, 18 கவிவீரராகவன் 2 கன்மாடபாதன் 29
கனகநாயக முதலியார், தண்டிகை 46,47,75 கனகராய முதலியார்) ன், தண்டிகை 48, 75
காங்கேயன் 13 காலிங்க(ராயன்) ன்/மன்னன் 45, 87 காளிதாசன் (மகாகவி) l4 கிளாஸ் ஐசாக்ஸ் 4l கீத்தாம்பிள்ளை I குகன் 15 குமாரசுவாமி. வ. 23, 47
குமாரசுவாமிப் புலவர், அ. 1, 22,29
இராம(பிரான்)ர்/ன் 15, 38,54, 65,94 குமாரசூரியப்பிள்ளை, s). 30 இராவணன், இலங்கேசன் 65,94|குலோத்துங்க சோழன் 98 இலக்கண சுந்தரி 32|குவேறேஸ் 14, 24 இலவணன் 15|குளக்கோட் (டுமன்) (டன்)டிராமன், இளங்கோவடிகள் 13| குளக்கோடன்,ராமதேவதேவன், இளந்தாரி 45, 46, ஒ7| வரராமதேவன் 17, 18, 19,94, 114 இளம்பூரணர் 59, 71 குறுமுனி 2. ஈசானச் சிவன் 21, 22|கூழங்கைச் (காலிங்க) சக்கரவர்த்தி, உமாபதி (சிவம்) சிவாசாரியர், 22:51,94,99 கோளுருகரத்துக்குரிசில் 16, 113 உருக்குமாங்கதன் 30, 96|கூழங்கைத் தம்பிரான் 48 ஐயம்பெருமாள் 35| கைலாசபிள்ளை, தா. 23 எதிர்மன்னசிங்கன் 14| கொச்சிக் கனேசர் 42 ஏவை 73|கொன்ஸ்ரன்ரீன் டி சா 36

Page 79
40
சொற்ருெகை வகுப்பு
கோப்பெருஞ் சோழன் 51 செயவீரன் I9 சகவீரன் 13, 101 சேக்கிழார் 108 சங்கராஜ அநோமதசி 108 சேரமான் பெருமாள் நாயனர் 58 சங்கிலி 17, 23, 24|சேரன் செங்குட்டுவன் 102 சதாசிவம், ஆ. 2, 71|சைமன் காசிச்செட்டி 1, 29, 30, 44 சதாசிவ ஐயர், தி. 40, 41, 62|சோமசன்மா, சோமன் 1, 7 சதாசிவம்பிள்ளை, அ. 1, 34|சோமசுந்தர ஐயர் 3. சந்தியாகு மையோர் 26, 27 சோழப் பேரரசர் 76 சந்திரசேகரபண்டிதர், நா. 1 தசரதன் I5 சந்திரசேகரமானமுதலி, செயதுங்கததிசிமாமுனி 16 மாப்பாணமுதலியார், சின்னத் தம்பையாபிள்ளை, சு. 33 தம்பிச் செயதுங்கன் 42, 43 தர்மநாயகன் 23 சந்திரசேகரன் 37|தர்மபாலன் 3. சந்திரமோகினி 45, 54, 55|தன்மகுணப் பள்ளன் 73 சந். யேம்ஸ் 26, 27 தன்வந்திரி 10 சம்புகன் 15|தனியுண்ணுப் பூபாலன் 114 சவுமினி 29 தாமோதரம்பிள்ளை 42 சாலிகோத்திரன் 29|தியாகசூரியர் 23 சிங்கமன்னவன் 114|திருச்செல்வ (ராயன்) ராசர், திருச் சிங்கையாரியர் 45|செல்வன்/ர், செல்வராயன் 33,34,97,98 சிவசிதம்பர ஐயர், கா. 12|திருத்தக்கதேவர் OO சிவசுப்பிரமணிய ஐயர், நா. 100|திலீபமகாராசன் 5 சிறிசங்கபோதி 95|தேவுதன் 34 சிற்றம்பலவன் 40 தேனு சின்னக்குட்டிப்புலவர் 46i தொல்காப்பியனர் 51, 59, 61, 71 சின்னத்தம்பி(ப் புலவர்) நாவலன் (நல்லூர்) 103, 105, 117 29, 30, 41, 42, 43, 64, 81. தொம். தியோகு முதலி 27 சின்னத்த பிப்புலவர் (இணுவை) 44, 45 தொம் பிலிப்பு 27 சீதை 15 தொன். பிலிப் வில்லவராச முதலியார் 42 இசீமோன் 41 தொன் ஜுவான் சந்திரசேகர மான சுகுமாரன் 29 முதலியார் 42 சுந்தரர் 54|நக்கோர் 34 சுப்பிரதீபக் கவிராயர் 56 நச்சினர்க்கினிபர் 59 சுப்பிரமணிய சாஸ்திரிகள் ஐ|நடேசையர், சு. 38 சுபதிட்டு முனிவர் 114|நயினப்பணிக்கன் 3. சுவாமி கறுவால் லூயிஸ் 27|நரசிங்கன் 115 சூதமுனி 20, 21, 29 நளன் 54 செகராசசேகரன் 6, 8, 15, 16, 17|நாகன் 75 19, 47, 95, 113, 115 நாற்கவிராசநம்பி 63
செகராசன் 42 நெல்லைநாதர் 100 செபஸ்தியான் பொன்சேகா, சுவாமி 36 பஞ்சமூலதேர 108

சொற்ருெகை வகுப்பு 141
பண்டிதராசர் 1, 12 யோ-வப்ரிசு 28 பரநிருபசிங்கன் 112 வயந்த மாலை 3. பரராசசேகரன் 6, 14, 16, 17, 113 வயித்தியலிங்கச் செட்டியார் 全& பராக்கிரமவாகு 4, 5, 37, 108 வயித்தியலிங்கம்பிள்ளை 30 பாண்டவர் 54 வரதபண்டிதர் (ன்), வரத (ராசன்) பாண்டிமழவன் 115 கவிராயர், வரதராச (பண்டிதன்) பாண்டியன் 64 கவிராசர் 28, 29, 30, 31, 32, 33
O 39, 100 பாபபு 73 சிங்கன் 76 பிசிராந்தையார் 51 47 d ரியன், ெ பிலிப்பு குமாரவேலன் |வரோதயன், சிங்கை ஆரியன், செய
சிங்கவாரியன் 7, 8, 19, 115 பீரிஸ், போ. டாக்டர் 40
- வறலாம 34
புவனேகவாகு 夏3 e
ன்றேவனர் (ஈழத்து) |வாலமுதது மோகனப்பெண் 61 பூதன\றே էք ',|விசயாலயச் சோழன் 3
பூலோகசிங்க (முதலியார்)ன் 34
பேதுரு, பேதுருப்புலவர் 26, 122 விசுவநாதபிள்ளை (ஹலக்) I பேராசிரியர் 50, III 7 விந்தனை சாமி 36 G I, 4, 5, II 0 விபரிசன் 29
шптағлтптағбот y is ty
· AA · விபீஷணன் 94 மதுரைப்பிள்ளை 56 வில் மயில்வாகன(ன்) ப் புலவர், 14, 19 லலவராயன (நல்லூர்) 39, 41 29,30, 47, 48, 81|வீமன் 30, 96 மயூரபாத தேர 108 வீரக்கோன் முதலியார், ஐ. 1, 35 மறைஞான சம்பந்தர் 52 வீரமாமுனிவர் 60 மனுநீதிகண்ட சோழன் g|வீரைத் தலைவன் 98 மாக்கோதை ஐ வெடியரசன் 13 Lorr#56ör |வென்றிபாகு தேவன் 40 LDIT56 ஒவேலாயுதபிள்ளே, வேலாயுதர், வேலாயுத மாநாகன் உடையார், கரவையில் வேலன் 40, 41, 64 மாப்பாணன் வேலுப்பிள்ளை உபாத்தியாயர், ஆ. 31 மாப்பாண முதலியார் வைத்தியநாத தம்பிரான் 20 மாப்பாண முதலியார், இரு மரபுந் தூய 64i வைத்தியநாதமுனிவர் 20
மாப்பாண முதலியார், சேது நிஜலயிட்ட 64 வைத் தியலிங்க கேசிகர், பு. பொ. 12, 17
மாருதப்பிரவை 16 114 வையா, வையாபுரி ஐயர், வையா முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. I நாதன் 1, 15, 16, 18, 47, 113 முத்துராசன் (செந்தியப்பன்) 191வையாபுரிப்பிள்ளை, எஸ். 60 யாக்கோபு, யாகப்பர் 26, 27|ஜெகநாதன் 29
இடிப்பெயர் அட்டவணை
அகத்தியத்தாபனம் 20. |அலுக்காமத்துறை 101 அடங்காப் (பதி) பற்று 14, 16|இணுவில், இணுவை 45, 46, 87 அநுராதபுரம், அநுராதபுரி 3, 951இந்தியா, தென் 16, 26

Page 80
142
இராமநாதபுரம் 56 இருபாலை 46, 75 இலங்கை 3, 16, 17, 19, 28,24, 26, 38 ஈச்சுரம்பத்தை 101
ஈழம் 2, 3, 4, 8, 13, 14, 22, 23, 24 26, 49,56, 64, 65, 66, 67, 69, 70 71, 72, 75, 76, 77, 84, 88, 99
100, 10 II, 102, 103, 108
ஈழநாடு, ஈழமண்டலம் 43,76 உடுப்பிட்டி 30 உப்பளம் Ol உரோ(ருே)மாபுரி, உழுே(ம்)மை
25, 72, 73 உளுத்த பள்ளம் IOI ஊர்காவில் 54 ஏருவூர் Ol கங்கை 6, 21 கச்சி 53 கச்சேரி 40 கட்டுவன் 54; கண்ணியவளை 31. 54 கண்டபாணம் (திருக்கோயில்) 101 கண்டி 35, 36, 76 கணபதீச்சுரம் 32 கதிர்காமம் 15 கதிரைமலை 76, 115 கந்தமலை 6 கந்தரோடை 5 கரண்டாக்குளம் 54 கரவெட்டி 40, 41, 64 கரைசை, கரைசையம்பதி 20 கல்வளை, கல்வளைப்பதி 38, 83 களுத்துறை 101 கன்னுர்க்குளம் 54 கன்னுெருவ 36 காங்கேயன்துறை 54 காசி 7, 8, 29, 48 காயல் 75 காரை(க்காடு)வளநாடு 46,72,75,114 காரைதீவு 0. காலி 101 காவிரிப்பூம்பட்டினம் 64
சொற்ருெகை வகுப்பு
கிழாலி 26, 27 இரிமலை 101, 115 குதிரைமலை 101 கும்பகோணம் 99 குருநாகல் 4 கெவுளியா முனை O கேகாலை 4 கேரளம் 3. கைலாசமலை, கைலாயமலை 99, 115 கொக்குவில் 37 கொச்சின் 26 கொழும்பு IOI கொழும்புத்துறை 101 கொற்றங்குடி 20, 21 கோட்டகம 4 கோயிற்கடவை 54 சண்டிருப்பாய் 38 சப்பிரகமுவ 36 சல்லித்தீவு IOI சாவகச்சேரி 26 சிக்கிலியாகம 36 சிங்கை 6, 8 சிதம்பரம் 29, 47 சிந்துதேசம் 33, 97 சிலாபம் . I0. சீதாவக்கை 36 சீனு 16 சுழிபுரம் 43 சுன்னுகம் 29, 32
செருசலை (ஜெருசலம்) 25,72,73,120
சென்னை I2; சோழநாடு 43 சோழமண்டலம் 76 தம்பதேனியா, தம்பை 4,5,6, 36, 37 தம்பலகமம் 35 தமிழகம் 108 தகSண கைலாசம் 99 திரிகயிலை 8 திரிகூடசிகரம் 99 திருக்கேதீஸ்வரம் 76

சொற்ருெகை வகுப்பு 143
திருகோணமலை, திருக்கோணுமலை, பாசிக்குடா 10 I திரிகோணமலை 6, 20, 33,35, 36, 37 பாண்டிக்கரை 12I 76, 101, 114, 115|பாரதநாடு 76 திருக்கோணேஸ்வரம் 99|பிட்டிய்ம்பதி 44, 84, 85 திருச்சினப்பள்ளி 114|பிடாரத்தனை 54 திருச்செங்காட்டங்குடி 99 புலியூர் 39 திருச்செங்காடு * 32|புளியந்துறை 101 திருச்செங்கோடு , 99|போர்த்துக்(கல்) கால், பிடுத்துக்கால் 36, 12 திருநாரையூர் 53 மக்கூனை O திருமலை gg|மட்டக்களப்பு 37. Oil திருமறைக்காடு 39, 83| மணவை 7, 8 திருவண்ணுமலை 99 மதுரை 9, 64, 114, திருவாரூர் gg|மயிலிட்டி, மயிலை 46。54。75 திருவெண்காடு 99 மருங்கூர் II 4 திருவொற்றியூர் gg|மல்வானை 36 தில்லை 21|மலையாளம் 114 தீர்த்தகிரி 99 மன்னர் 17, 23 துருக்கி 16 மாம்பிராய் 54 துளுவம் 14 மாருவிடம் KO ar O தெல்லிப்பழை) நகர் 27,3446,5475 மாவ(மாபேரி கங்கை 20, 21.35:16, 10 தென்காரை 34, |மாவிட்டபுரம், 6 46, 54 ைொசம் 76 முல்லைத்தீவு 13, 16, 23 தென்கைலை முலவை 54 * முள்ளி(யவளே) மாநகர் 16, 17, 23, 114 தென்மலயம் 2. மெனிக்கடவர 36 தென்னினுவையூர் * யாழ்ப்பாணம் 2, 6, 13, 14, 15, 16 தேனுவரை, தெவினுவர 4,5,6,101 1779, 20'29.24, 25 26, 23 30 தையிட்டி 5434, 38, 39, 40, 54,64,66, 83,100,115 தொண்டைமண்டலம் 114|வட்டுக்கோட்டை 44, 84, 85, 100 நல்லூர் 6, 19,20, 26, 40, 41, 42, 115| வடகாரை 47 நீர்கொழும்பு 101| வடகைலை 2I நைமிசாரணியம் 29|வண்ணுர்பண்ணை, வண்ணை 44, 48 பகீரதா கங்கை 76 வத்தாலை IOI பச்சிலைப்பள்ளி 26 வயாவிளான் 54 பண்டாரக்குளம் 42| வலிகாமம் IOI பத்மகிரி 53|வறுத்தலை 54 பருத்தித்துறை 12, 40 வாவெட்டி 6 பலாலி 54|விரிஞ்சீபுரம் 99 பழை 54| வீமன்காமம் 54 பழுளாய் 43|வெருகல் 35, 36, 37 பன்றித் தீவு 101 {வேதாரணியம் 39, 83, 99

Page 81
J44 சொற்ருெகை வகுப்பு தெய்வப்பெயர் அட்டவணை
அங்கயற்கண் அம்மை 64| சித் திர(வேலர்) வேலாயுதர் 17, 35, 61 அநங்கன் 54|சிதம்புர நடராஜர் 8B அம்மன் 13 சிலுகாமசுந்தரி 46 அமரர் சி54ஒவகாமியீம்ற்ம 43. 44, 45 அரன் 52, 85ஒருவ பெருமான் 18,3847,53,54 அல்லுற்ற கண்டர் 'சுப்பிரமணிய(ர்)க் கடவுள் 44, 47 ஆதிகத்தன் 24 சுவானி 73 ஆனைமுகன், யானைமுகன் 32, 85 சொக்கன் 64 இந்திரன் * 'திரித்துவ ஏகன் 25 இந்திராணி தாததுவ ஏகன இஸ்பிரீத்து 73 திருமறைக்காடர் 39 ஈசன் g|திருமால் 32, 47, 54 உமாதேவி 102|தென்கயிலைநாதர் 95 ஐங்கரன் 31 தேவமங்கையர் 85 கங்காதேவி 85 பத்திரகாளியம்மை 44, 35 கண்ணகி அம்மன், கண்ணகி 31, 102 பத்திரை 45 கண்ணன், கண்ணபிரான் 4引 பத்தினி 65 கணபதி 39 கதிரையாண்டவர் 47 பருளை விநாயகர் 43 கதிரையில் வேலன் |பிரமன் 85 கரிமுகன் ஐg|பிள்ளையார் (பிரமானந்தப்) 38, 44 கற்பகப்பிள்ளை 38|மந்திரமோகினி 65 கார்முகத்தோன் 23|மாதுமையம்மை 11 காளி 85' மாயன் 85 கிறிஸ்துநாதர், இயேசுநாதர் 24, 25 முருகன் 32 குபேந்திரன், குபேரன் 29, 87, 88 மூத்தநயிந்தை, மூத்தநயினர் 23 குருநாத (சுவாமி) சாமி, குருநாதன்|யமராசன் 96
31, 54, 65, 66|வயிரவ(க் கடவுள்) சுவாமி 45, 8 கேது 76 வாயுதேவன் 9 கைலாயநாதர் 19 விநாயகர்/ன்) ப்பெருமான்32,38,43,47,83,9 கோணேசர் 11, 17, 114| வீரகத்தி விநாயகர் 3 சங்கரி மைந்தன் 231 வீரபத்திர(ர்)க் கடவுள் 44,8 சண்முகன் 32|வேதாடவீசர் 3. சரஸ்வதி 47, 96|வேதாரணியேசுவரர் 3. சன்மினி 85|வைகுண்டவாசன் 9
வைத்தீஸ்வர(ர்)சுவாமி 81,96,44,
சித்தசன் 19