கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி

Page 1
Sess முல்லை மாவட்டம் முள்ளியவளையைச் சார்ந்த நா.சுப்பிரமணியன் அவர்கள் (58) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகததின் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகத திகழ்பவர் துறைத் தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர்
ஈழததுத்தமிழ்நாவல்கள் என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முதுகலை (M.A) பட்டமும் தமிழ்யாப்பு வளர்சசி" என்ற தலைப்பில் ஆய்வுசெய்து கலாநிதி (Ph.D) பட்டமும் பெற்றவர் தமிழின் மரபுநிலைப்பட்ட அறிவுத்துறைகளோடு நவீன இலக்கியத்துறையிலும் ஆழ்ந்த ஈடுபாடும் புலமையும் உடையவர் வடமொழியிலும் பயிற்சியுடையவர் ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கியம் (1378) என்ற நூலின் ஆசிரியர் இந்தியச் சிந்தனை மரபு (1993,1995) நூலின் இணையாசிரியர் 50-க்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ள இவர் அனைத்துலக மட்டத்திலான ஆய்வரங்குகள் ப8வற்றில் பங்குகொண்டவர் இலக்கியம், சமய-தத்துவம் என்பன தொடர்பான்திறனாய்வுகளில் தனி ஈடுபாடுகாட்டி வருபவர்.
காலஞ்சென்ற பேராசிரியர் கலாநிதிக்கைலாசபதியவர்களிடம் பயின்ற முதல்வரிசை மாணாக்கர்களில் ஒருவரான இவர் தமது சிந்தனை விரிவுக்கு வழிகாட்டிநின்ற அவரைப்பற்றிய கணிப்புகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார்
 
 
 

தமிழ் ஆய்வியலில்
கலாநிதி கைலாசபதி
கலாநிதிநா.சுப்பிரமணியன்

Page 2

தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
பேராசிரியர் கலாநிதி நா. குப்பிரமணியன் தலைவ்ர் தமிழ்த்துறிை யாழ்ப்பானப் பல்கலைக் கழகம் யாழ்ப்பாணம் இலங்கை
SOUTH VISION
V/
சவுத் விஷன்

Page 3
Tamil Aayviyalit Kalanithi. K. Kailasapathy (Kailasapathy in Tamilology - A Study)
Prof. Dr. N. Subramanian O: Mrs Kawsalya Subramanian,
Thileepan, Bharati, Sharmila First Published: March 1999 Published in Association with
National Association for Art and Literature
Vyf
SOUTH VISION 6, Thayar Sahib Lane Chennai 600 002.
Published and Distributed in Sri Lanka by Vasantham (Pvt.) Ltd. South Asian Books 44, 3rd Floor, CCSM Complex, Colombo - 11. Te: 335844 Fax: 00941-333279
தேசிய கலை இலக்கியப் பேரவையின் 25வது ஆண்டு நிறைவு வெளியீட்டு வரிசையில் பன்னிரண்டாவது நூல்
RS. 50.00
தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன் முதற் பதிப்பு : மார்ச் 1999
Pirg தி.தாயா சாகிப் 2வது சந்து, QFair di 002.
அச்சாக்கம் : மணி ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 600 005. லேசர் அச்சு: லேசர் சிஸ்டம் சென்னை - 600 04 அட்டை அச்சு பிரிண்ட் ஸ்பெஷாலிடி, சென்னை - 600 014. பஅட்டை அமைப்பு : ஏஞ்சலோ கிராபிக்ஸ்
 
 
 
 
 

படையல் :
தமிழ் ஆய்வுலகில் என் கால்களை ஆழமாகப் பதிப்பதற்குத் துணை நின்ற பேராசான் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி சு. வித்தியாநந்தன் அவர்களின் நினைவுக்கு.
- நா. சு.

Page 4

முன்னுரை
தமிழ் ஆய்வுலகில் 1950-60 களில் முனைப்புறத் தொடங்கிய மார்க்சிய அணுகுமுறையை முன்னெடுத்த முன்னணித் தளகர்த்தர்களுள் ஒருவர் என்ற வகையில் தமிழ் ஆய்வியல் வரலாற்றில் தனிச்சுவடு பதித்தவர் கலாநிதி க. கைலாசபதி அவர்கள் (1933-1982), பல்கலைக் கழகப் பணியிலே தமிழ்ப் பேராசிரியர், க்லைப் பீடாதிபதி, வளாகத் தலைவர் ஆகிய உயர்பதவிகள் வகித்த அவர் சமகாலத் தமிழ் ஆய்வுலகில் திசையறிகருவியாகவும் நட்சத்திர அந்தஸ்து (Star Value) பெற்ற திறனாய்வான்ராகவும் கணிக்கப்பட்டவர். தமிழரின் கலை, இலக்கியம், சமூக-பண்பாட்டு வரலாறு, அரசியல் என்பன தொடர்பாக (1950களின் நடுப்பகுதியிலிருந்து 1982இல் இயற்கை எய்தும் வரை தொடர்ச்சியாகச் சிந்தித்தும் எழுதியும் உரையாற்றியும் வந்த அவர் தம்மைப் பின் தொடரும் ஒரு மாணவ மரபை நிறுவிச் சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் ஆய்வுலகில் 'கைலாசபதி என்பது ஒரு மந்திரச் சொல் ஆக நிலைத்து விட்டது எனின் அது மிகையாகாது.
கைலாசபதி அவர்கள் மறைந்து பதினாறாண்டுகள் ஆகிவிட்டன. அவரைப் பற்றிப் பல கட்டுரைகளும் நூல்களும் எழுதப்பட்டுள்ளன; சிறப்பு மலர்களும் வெளிவந்துள்ளன. அவரது எழுத்துக்கள் உயர்நிலைப் பட்டங்களுக்கான ஆய்வுப் பொருள்களாகக் கணிப்பெய்தியுள்ளன. அவரைப் பற்றிய விமர்சனங்கள் பல்வேறு தளங்களிலிருந்தும் எழத் தொடங்கியுள்ளன. இச்சூழலில் தமிழ் ஆய்வியலில் அவரது ‘வரலாற்றுப் பாத்திரம்' உரியவாறு இனங் காணப்பட வேண்டிய ஒன்றாகின்றது. இத்தகு ஆர்வத்தின் வெளிப்பாடு இந்நூல்.
கைலாசபதி அவர்களின் மாணவன் என்ற வகையிலும் அவர் தலைமையில் பல்கலைக்கழக ஆசிரியனாகப் பணியாற்ற வாய்ப்புப் பெற்றவன் என்ற வகையிலும் அவரது ஆளுமையை அருகிருந்து தரிசித்து வியந்துள்ளேன். அவரது மறைவு தமிழ் ஆய்வுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதை உணர்ந்துள்ளேன். அவரைப்பற்றி ஒரு நூல் எழுதவேண்டுமென்ற எண்ணம் கடந்த பத்தாண்டுகளாக என் உள்ளத்திற் கருக்கொண்டிருந்தது. இக்கரு நூலுருப் பெறுவதற்குத் துணை நின்றவர்கள் மூவர். அவர்கள் : பா. வீரமணி, தேவகாந்தன், எம். பாலாஜி.
ஆய்வாளர் திரு. வீரமணி அவர்களின் விருப்பப்படி சென்னை இராயபுரம் 'அன்னை கலை இலக்கிய நற்பணி மன்றத்தில் 1996 ஏப்ரலில் என்னால்

Page 5
நிகழ்த்தப்பட்ட "தமிழ் ஆய்வியல் வரலாற்றில் பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதி" என்ற ஆய்வுரையே இந்த நூலாக்கத்தின் முதல் முளை ஆயிற்று.
எழுத்தாளரும் இலக்கு காலாண்டிதழின் ஆசிரியருமான தேவகாந்தன் அவர்கள் இலக்கு இதழ்கள் சிலவற்றைக் 'கலாநிதி கைலாசபதி நினைவு மலர் களாகத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார். அதற்கு அவர் கைலாசபதி பற்றிக் கட்டுரை கேட்டபோது யான் மேற்குறித்த ஆய்வுரையைக் கட்டுரையாக வடிவமைத்துக் கொடுத்தேன். அக்கட்டுரையின் பெரும்பகுதி இலக்கு 7, 8, 9 இதழ்களில் அச்சேறியது. எஞ்சியபகுதி இலக்கு 10வது இதழில் அச்சேறிக் கொண்டிருக்கிறது. இக்கட்டுரைத் தொடர் நூல்வடிவம் பெற வேண்டும் என்ற ஆர்வத்தை வெளியிட்டு என்னை அவர் பலமுறை தூண்டி நின்றார்.
இலக்கு இதழில் என் கட்டுரைத் தொடர் வெளி வந்து கொண்டிருந்த காலப் பகுதியில் (22-10-1997 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கலைப்பீட ஆய்வரங்கிலே, "கலாநிதி க. கைலாசபதியின் ஆய்வு நோக்கு" என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையொன்றைப் படித்தேன். அது தொடர்பாக நிகழ்ந்த கலந்துரையாடலும் எனது இந்நூலாக்க முயற்சிக்கு உந்து சக்தியாயிற்று.
சென்னை சவுத்விஷன் அதிபர் எம். பாலாஜி அவர்கள் எனது ஆய்வு முயற்சிகளுக்கு நண்பனாய், மந்திரியாய் நின்று வழிகாட்டும் துணைவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் நானும் என் துணைவியும் இணைந்தெழுதிய இந்தியச் சிந்தனை மரபு என்ற நூலை வெளியிட்டுத் தமிழக வாசகருக்கு எம்மை அறிமுகம் செய்தவர். அவர் கைலாசபதி பற்றிய நூல்கள் சிலவற்றை வெளியிட்டு அவற்றின் மூலம் கைலாசபதி பற்றிய சிந்தனை தமிழகத்தில் பரவச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் பலமுறை தந்துள்ள தூண்டுதலும் கைலாசபதி பற்றிய எனது இந்நூல் உருப்பெற முக்கிய காரணி ஆயிற்று.
மேற்சுட்டிய இலக்கு கட்டுரைத் தொடர், ஆய்வுக் கட்டுரை என்பனவற்றிற் கூறப்பட்ட விடயங்களை உள்ளடக்கி, அவற்றின்பின் கைலாசபதி பற்றி ஆய்வுலகில் முன் வைக்கப்பட்ட கருத்துக்கள், மதிப்பீடுகள் என்பனவற்றையும் கவனத்திற்கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
இந்நூலுருவாகத் துணை நின்ற மேற்குறித்த மூவருக்கும் என நன்றி உரியது. இந்நூலுருவாகும் வேளை தேவைப்பட்ட முக்கிய நூல்கள் சிலவற்றைத் தந்துதவிய கவிஞர் டாக்டர் ஈரோடு தமிழன்பன், டாக்டர் வீ. அரசு. டாக்டர். மேது ராசுகுமார், திரு. எம். ரவிச்சந்திரன் ஆகியோர் என்றும் என் நினைவில் நிற்பர். நான் இந்நூலை எழுதி முடிக்க என்னை ஊக்குவித்து நின்ற என் துணைவி கௌசல்யாவுக்கு என் நன்றி வார்த்தைகளில் அமையாது. இந்நூலை ஒளி அச்சுக்கோர்வை செய்துதவிய லேசர் சிஸ்டத்திற்கும் அச்சேற்றியுதவிய மணி ஆப்செட் பிரிண்டர்ஸுக்கும் என் நன்றிகள்
சென்னை - நா. சு. டிசம்பர் 1998

இயல் ஒன்று
இயல் இரண்டு
இயல் மூன்று
இயல் நான்கு
இயல் ஐந்து
இயல் ஆறு
இயல் ஏழு
ஆய்வுத் துணை :
உள்ளுறை
அறிமுகம்
ஆய்வுச்சூழல், பார்வை,
அணுகுமுறை
சமுதாயமும் இலக்கியமும்
பாரதி பற்றி. . .
திறனாய்வியற் சிந்தனைகள்
திறனாய்வுப் பார்வைகள்
வரலாற்றில் கைலாசபதி
நிறைவுரை
நூல்கள், இதழ்கள், ஆய்வேடுகள்
இணைப்பு
15
25
39
49
60
86
103
104
107

Page 6

1. அறிமுகம்
கி. கைலாசபதி அவர்களின் வாழ்க்கைச் சூழல், ஆளுமையின் உருவாக்கம், எழுத்தாக்கங்கள் என்பன தொடர்பான அறிமுகக் குறிப்பாக இவ்வியல் அமைகின்றது.
யாழ்ப்பாணத்தின் நடுத்தரவர்க்க குடும்பமொன்றைச் சார்ந்தவரான திரு. கனகசபாபதி கைலாசபதி அவர்கள் மலேசியாவின் முன்னாள் மலாயாவின் கோலாலம்பூர் நகரில் 5-4-1933 இல் பிறந்தவர்; தொடக்க நிலைக் கல்வியைக் கோலாலம்பூரிலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர்தர வகுப்புக் கல்வியைக் கொழும்பு ரோயல் கல்லூரியிலும் பெற்றவர், இலங்கைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலையில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று B.A. (Hons) முதல் தர மாணவனாகச் சித்தியெய்தியவர். பின்னர் இங்கிலாந்து சென்று பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கலாநிதி (Ph.D)ப் பட்டம் பெற்றவர்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றிருந்த அவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் பயின்ற காலத்தில் அங்கு ஆசிரியப் பணிபுரிந்த திரு. மு. கார்த்திகேசன் அவர்களிடம் மார்க்சிய போதம் பெற்றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்திற் பயின்ற காலப்பகுதியில் பேராசிரியர்கள் கலாநிதி க. கணபதிப்பிள்ளை, திரு. வி. செல்வநாயகம், கலாநிதி சு. வித்தியாநந்தன் முதலியவர்களின் வழிகாட்டல்களைப் பெற்றவர். குறிப்பாக வி. செல்வநாயகமவர்கள் இலக்கியத் திறனாய்வு இலக்கிய வரலாறு என்பவற்றுக்கான அடிப்படைகளைக் கற்பித்தார். ஏனைய இருவரும் மொழி-பண்பாடு சார் கல்வியை வழங்கினர்; அத்துடன் கல்வியாளனொருவன் சமூகத்துடன் நேரடித் தொடர்பு கொண்டு செயற்படுவதற்கான பயிற்சியையும் கைலாசபதிக்கு அவர்கள் நல்கினர்

Page 7
10 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
இலங்கைப் பல்கலைக் கழகத்திலே தமிழுடன் துணைப்பாடமாக மேலைத் தேய வரலாற்றைக் கைலாசபதி கற்றார். இந்த மேலைத்தேய வரலாற்றுக் கல்வியானது சமுதாய வரலாற்றின் இயங்குதளம், அதன் செல்நெறி என்பன பற்றிய தெளிவை அவர் பெறத் துணைபுரிந்தது.
இளங்கலைப் பட்டத்தின் பின் சில ஆண்டுகள் (1957-61) தினகரன் இதழின் ஆசிரிய பீடத்திற் பணிபுரிந்த கைலாசபதியவர்கள் 1961 இல் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பதவியேற்றார். அப்பணியில் இருந்தவாறே உயர்கல்விக்கான விடுப்புப் பெற்று பர்மிங்ஹாம் சென்று கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொண்டார். அங்கு அவருக்கு வழிகாட்டியாக அமைந்தவர் மார்க்சியப் பேரறிஞர் ஜோர்ஜ் தொம்ஸன் அவர்கள். அவரது நெறிப்படுத்தலில் கைலாசபதி மேற்கொண்டTamilHeroic Poetry தமிழ் வீரயுகக் கவிதை) என்ற ஆய்வானது கலாநிதிப் பட்டத்தை ஈட்டித் தந்ததோடு அமையாமல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் நூல்வடிவம் எய்தும் தகுதியையும் பெற்றது.
கலாநிதிப் பட்டத்தை ஈட்டிக் கொண்டு இலங்கைக்கு மீண்ட கைலாசபதி அவர்கள் இலங்கைப் பல்கலைக் கழகத்திலே தனது ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார். அப்பணியிலிருந்தவாறே பல உயரிய பதவிப் பொறுப்புக்களை ஏற்றார். இலங்கைப் பல்கலைக் கழக வித்தியாலங்கார வளாகத்தில் தமிழ்-இந்து நாகரிகத் துறைகளின் தலைவராக 1974 அவர் பொறுப்பேற்றார். அதே ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழக யாழ்ப்பாண வளாகம் உதயமானபோது அதன் முதலாவது தலைவர் (President) பொறுப்பு அவரைத் தேடி வந்தது. அப்பொறுப்பை ஏற்ற அவர் அவ்வளாகத்தின் தமிழ்ப் பேராசிரியரும் ஆனார். பின்னர் அங்கு கலைப்பீடத்தின் பீடாதிபதி (Dean) ஆகவும் பதவி வகித்தார்.
பல்கலைக்கழகத் தமிழாசிரியர் என்ற வகையில் கலாநிதி க. கைலாசபதி தாம் எடுத்துக் கொண்ட பாடப் பகுதியின் பொருண்மைக்கு ஏற்ற வகையில் தகவல்களைத் திரட்டவும் அவற்றினூடாகக் கருத்துக்களை கட்டியமைக்கவும் அவற்றைக் கேட்டார்ப் பிணிக்கும் வகையிலே எடுத்துரைக்கவும் வல்லவராகத் திகழ்ந்தார், தர்க்கரீதியாகக் கட்டுரைகளை எழுதும் பயிற்சியையும் வளர்த்துக் கொண்டார். மேலும் கைலாசபதி மிகத் திட்டமிட்டுத் தகவல்களைப் பேணிக் கொள்ளும் Fing (கோப்பு) முறைமையைக் கடைப்பிடித்தார்.
இவ்வாறான அடிப்படைத் தகுதிகளோடு மட்டும் அமையாமல், தாம் வகிக்கும் பதவிநிலை, அதன் அதிகார வாய்ப்புகள், செல்வாக்கு முதலி

அறிமுகம் 11
யவற்றை மிக அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான துணிவும், தன்னம்பிக்கையும் உடையவராகவும் அவர் திகழ்ந்தார். இதனால் தமிழ் ஆய்வியல் தொடர்பாக அனைத்துலக மட்டத்தில் நிகழ்வனவற்றை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் அவரால் முடிந்தது. அவற்றை உடனடியாகப் பயன்படுத்தி, தம் ஆளுமையின் வளர்ச்சியை உடனுக்குடன் பதிவு செய்து கொள்ளும் மதி நுட்பமும் செயல்வேகமும் அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தன.
இவ்வாறாக ஒரு ஆய்வாளன் என்ற நிலையில் கைலாசபதி அவர்கள் தம்மை நாளுக்கு நாள் புதுப்பித்துக் கொள்ளும் - வளர்த்துக் கொள்ளும் - திறனுடன் திகழ்ந்தமையால் சமகாலத்தில் ஈழத்திலும் தமிழகத்திலும் அனைத்துலக மட்டத்திலும் ஒரு பெரும் ஆய்வாளர் - ஆய்வுமாணவர் வட்டம் இவரது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்க ஆவலுடன் காத்திருந்தது. இவரது அபிப்பிராயங்கள், விமர்சனங்கள் என்பவற்றை வேதவாக்காக ஏற்கும் நிலை சமகால ஆய்வாளர் பலரிடம் நிலவியது. இவரிடம் தம் படைப்புக்களுக்கும் ஆய்வுகளுக்கும் முன்னுரை, அணிந்துரை, மதிப்புரை என்பவன பெறுவதற்கும் படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் பேராவல் கொண்டிருந்தனர். இந்தியப் பல்கலைக் கழகங்கள், மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் என்பனவும் அனைத்துலக மட்டத்தில் அயோவாப் பல்கலைக்கழகம், கலிபோர்னியாப் பல்கலைக்கழகம் முதலியனவும் இவரது ஆளுமையை மதித்து வரவேற்றுக் கெளரவித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வகையில் சமகாலத் தமிழ்ப் பேரறிஞர்கள், பேராசிரியர்கள் ஆகியோருட் பலருக்குக் கிட்டாத ஒரு உயர் தனிக் கணிப்பை இவர் எய்தியிருந்தார். இவ்வகையில் இவருக்கு இணையான இத்தகு கணிப்பைப் பெற்றவராக நம் மத்தியில் இன்று திகழ்ந்து வருபவர் முதுபெரும் பேராசிரியர் கலாநிதி கா. சிவத்தம்பி அவர்களாவர். இவரும் கைலாசபதியைப் போல ஜோர்ஜ் தொம்ஸனது வழி காட்டலில் கலாநிதிப் பட்ட ஆய்வு மேற்கொண்டவர் என்பதும் மார்க்சிய நோக்கிலான ஆய்வை முன்னெடுப்பதில் கைலாசபதியுடன் இணைந்து செயற்பட்டு நின்றவர் என்பதும் (கைலாசபதிக்குப் பின் இப்பொழுதும் செயற்பட்டு வரும்லூர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. iyo:
கைலாசபதியவர்கள் தினகரனில் ஆசிரியப் பணிபுரிந்த காலத்திலும் பின்னர் பல்கலைக் கழக மட்டத்தில் பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளு காலப் பகுதிகளிலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தேசிய் கலை இலக்கியப் பேரவை முதலிய முற்போக்குச் சிந்தனைத் தளங்களில்

Page 8
12 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
இணைந்து செயற்பட்டவர்; அவை சார்ந்த இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தவர். குறிப்பாக மல்லிகை, தாயகம் ஆகிய இதழ்கள் இவரது சிந்தனைத் தெறிப்புக்களின் உடனடிப் பதிவுக் களங்களாக அமைந்தவையாகும். தமிழகத்திலும் சாந்தி, சரஸ்வதி, தாமரை முதலிய இதழ்களுடன் இவர் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். இவற்றில் இவரது எழுத்துக்கள் பிரசுரமாயின. சொந்தப் பெயரில் மட்டுமன்றி அபேதன், அம்பலத்தான், உதயன், பரமன், ஜனமகன் ஆகிய புனைபெயர்களில் இவர் அரசியல், கலை, இலக்கியம் என்பனசார் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். கற்பகம், சமர், செம்பதாகை, தொழிலாளி, புதுமை இலக்கியம், வசந்தம், ஜனவேகம் முதலிய இதழ்களில் இவ்வகை எழுத்துக்கள் பலவும் பதிவாகியுள்ளன.
கைலாசபதி அவர்கள் தம் பதவிநிலைச் செயற்பாடுகளோடு மேலதிக கெளரவங்களாக யுனெஸ்கோவுக்கான இலங்கைத் தேசிய ஆணைக் குழு (1970), இலங்கைப் பாடநூல் ஆலோசனைச் சபை (1970), இலங்கைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு ஆய்வுக் கழகம் (1971-74), இலங்கை வானொலித் தமிழ் நிகழ்ச்சி ஆலோசனைக் குழு (1973) என்பவற்றிலும் நியமனம் பெற்றுப் பணியாற்றியவர். இலங்கைக் கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியக்குழு' நாட்டியக்குழு' என்பவற்றுக்குத் தலைமை வகித்து (1972-1976) வழி நடத்தியவர் என்ற பெருமையும் இவருக்கு உரியது.
தமிழ் விரிவுரையாளர் - பேராசிரியர் - என்ற வகையிலே தமிழரின் மொழி, இலக்கியம், ஏனைய பண்பாட்டுக் கூறுகள் என்பன தொடர்பான பல்வேறு ஆக்கங்களையும் தரிசிக்க வேண்டிய கடமை அவர் முன் நின்றது. அக்கடமையே அவருடைய ஆளுமை வெளிப்பாட்டுக்கான ஒரு சிறந்த வாய்ப்பாகவும் அமைந்தது. தமிழ் மொழி - இலக்கியப் பரப்பின் அனைத்துப் பகுதிகளிலும் அவர் கவனம் செலுத்தினார். எழுத்திற் பேணப்பட்டவற்றை மட்டுமல்லாமல் வாய்மொழி மரபுகளையும் அவர் கருத்திற் கொண்டார். மேலும் இசை, நடனம், நாடகம், திரைப்படம் மற்றும் பல்வேறு பொதுத் தொடர்பு ஊடகங்களும் அவரது பார்வைப் பரப்புக்கு உட்பட்டன. ஆங்கிலம் முதலிய பிறமொழிகளின் கலை இலக்கியங்கள், திறனாய்வு முறைமைகள் என்பவைப் பற்றிய அறிவு அவருக்கு வாய்த்திருந்தமையால் தமிழின் மேற்படி கூறுகளை அவரால் மேற்சுட்டிய பிறமொழி சார்கூறுகளுடன் ஒப்பிட்டு நோக்க முடிந்தது. கலை, இலக்கியம் ஆகிய எல்லைகளுக்கு அப்பால் அனைத்துலக அரசியலிலும் அவர் கவனம் செலுத்தி வந்துள்ளமையும் இத்தொடர்பிற் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக அவர் புலப்படுத்தி நின்ற பன்முகப் பார்வையின் செழுமையை அவரது எழுத்துக்கள் நமக்குத் தெளிவாக இனங்காட்டி நிற்கின்றன.

அறிமுகம்
13
கைலாசபதியின் ஆக்கங்கள் என்ற வகையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல் வடிவம் பெற்றவை 20. இவற்றுள் இரு நூல்களுக்கு அவர் இணையாசிரியர்.
த
Lé
s
ல்
10.
11.
12.
13.
14.
15.
16.
நூல்கள் - ஆண்டு வரிசைப்படி:
இரு மகாகவிகள் (1962) பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் (1966) தமிழ் நாவல் இலக்கியம் (1968)
ஒப்பியல் இலக்கியம் (1969)
அடியும் முடியும் (1970) கவிதை நயம் (1970) இ. முருகையனுடன் இணைந்து எழுதியது) இலக்கியமும் திறனாய்வும் (1972) பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும் (1973) மக்கள் சீனம் காட்சியும் கருத்தும் (1979) (மனைவி சர்வமங்களம் அவர்களுடன் இணைந்து எழுதியது) சமூகவியலும் இலக்கியமும் (1979) திறனாய்வுப் பிரச்சினைகள் (1980) நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் (1980) இலக்கியச் சிந்தனைகள் (1983)
பாரதி ஆய்வுகள் (1984) ஈழத்து இலக்கிய முன்னோடிகள் (1986) சர்வதேச அரசியல் நிகழ்வுகள் 1979-1982 (1992)
ஆங்கிலத்தில் :
1. Tamil Heroic Poetry (1968) 2. The Relation of Tamil and Western Literature (1984) 3. On Art and Literature (1986) 4. On Bharathi (1987) கைலாசபதியவர்கள் ஆய்வுக்கட்டுரைகள், கட்டுரைகள், வானொலி உரை என்ற வகைகளில் தமிழிலும், ஆங்கிலத்திலுமாக எழுதியவை இருநூறுக்கு மேல், நூல்களுக்கு முன்னுரை, அணிந்துரை, மதிப்புரை,

Page 9
14 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
வாழ்த்துரை முதலிய வகைகளில் எழுதியவை நாற்பத்து நாலு" இவ்வாறான ஆய்வுக் கட்டுரைகள், கட்டுரைகள், முன்னுரை முதலியவற்றிற் சில மேலே நாம் நோக்கிய நூல்கள் பலவற்றுள் தொகுக்கப்பட்டுள்ளன. பெருந்தொகையான இவ்வகையாக்கங்கள் நூலுருப் பெறவில்லை.
மேற்குறித்தவாறான அவரது ஆய்வுப்பரப்பிலே மக்கள் சீனம் - காட்சியும் கருத்தும், சர்வதேச அரசியல் நிகழ்வுக்ள் ஆகிய நூல்களும் சில கட்டுரைகளும் தவிர ஏனை பெரும்பகுதி தமிழ் ஆய்வியல் சார்ந்தன. இவையே இவ்வாய்வில் கவனத்திற் கொள்ளப்படுகின்றன.
"... /Z%ھAg& 4 விபரத்திற்கு ட/7க்க இந்நூலின் 4260777/
6ീഗ്ഗീ/് ക്, കെ.ബഗ്ഗിങ് ஆக்கங்கள் தேர்த்த நூல் விபரப்பட்டியல்
தொகு என் செல்வர7ஜ7 புறப்பிரதி சைவாசபதி நினைவேதி பேர7சிரியர் T TLTTTTA ATTALLLLLL 00AA AAAAL 0A0A S0S

2 ஆய்வுச் சூழல், பார்வை,
அணுகுமுறை .
கெலாசபதியவர்களின் ஆய்வுச் செயற்பாடுகளுக்குப் பகைப்புலமாக அமைந்திருந்த தமிழாய்வுச் சூழல், அதில் அவர் சார்ந்து நின்ற தளம், அவர் புலப்படுத்தி நின்ற பார்வை மற்றும் அணுகுமுறை என்பன இவ்வியலில் நோக்கப்படுகின்றன. இவ்வகையில் முதற்கண் கைலாசபதி காலம் வரையான தமிழாய்வுச் சூழல் இங்கு நமது கவனத்துக்குரியதாகிறது. 21 கைலாசபதி காலம் வரை . . . .
கலை, இலக்கியம், மொழி ஆகிய பண்பாட்டுத் துறைகளிலே ஆய்வு என்பது மூலாதாரங்களையும் தகவல்களையும் தேடித் திரட்டித் தொகுத்துப் பேணுதல், அவ்வாறு பேணப்பட்டவற்றின் பொதுக் கூறுகளை இனங்காணல், அவற்றின் உள்ளார்ந்த உயிரோட்டமான பண்புகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தல் முதலிய முயற்சிகளை உள்ளடக்கிய ஒரு தொடர் செயற்பாடு ஆகும். ஆய்வின் ஒரு சிறப்புநிலை எனத்தக்கது திறனாய்வு இது குறிப்பாகக் கலை, இலக்கியம் என்பவற்றின் ஆக்கக்கூறுகளை இனங்கண்டு தெளியும் முயற்சியாகும். இதில் பகுத்தாராய்தல், ஒப்பிடுதல், மதிப்பிடுதல், விளக்கியுரைத்தல் ஆகிய செயற்பாடுகள் அமையும். இவ்வாறான (பொதுநிலை ஆய்வு திறனாய்வு என்பன தற்சார்பு அற்ற நிலையில் புறநிலை (Objective) ஆக மேற்கொள்ளப்பட வேண்டியன. ஈடுபடுபவர்களின் அநுபவம், அறிவாற்றல், முயல்திறன் என்பனவற்றுக் கேற்ப இவை சிறப்புறும்.

Page 10
16 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
தமிழிலே பண்டைக்காலம் முதலே மூலாதாரங்களைத் தொகுத்துப் பேணுதல் அவற்றின் உள்ளார்ந்த கூறுகளை விளக்கியுரைத்தல் மற்றும் மதிப்பிடுதல் முதலிய செயற்பாடுகள் நிலவி வந்துள்ளன. அன்றியும் திறனாய்வின் முக்கியக் கூறுகளில் ஒன்றான இலக்கியக் கொள்கைசார் சிந்தனைகளுக்கு தமிழில் தொல்காப்பியப் பொருளதிகாரம் முதல் நீண்ட வரலாறு உள்ளது. ஆயினும் இன்று நாம் ஆய்வு திறனாய்வு என்பனவாகச் சுட்டும் செயற்பாங்குகளுக்குரிய முழுப்பொருண்மையில் பண்டு அவை உருப்பெற்றிருக்கவில்லை என்பதே பொதுவாக ஆய்வுலகில் ஒப்ப முடிந்த கருத்தாகும். ஆளும் வர்க்கங்களின் அதிகாரச் சார்பு, சமயச் சார்பு, மரபு பேணும் ஆர்வம் முதலியவற்றால் வழிநடத்தப்பட்ட அகநிலை (Subjective) சார்ந்த ஆர்வச் செயற்பாடுகளாகவே அவை அமைந்திருந்தன என்பது மணங் கொள்ளத்தக்கது.
இவ்வகையில் நோக்கும்போது தமிழில் 'ஆய்வு' என்பதற்கான முழுப்பொருண்மையுடனான தொடக்கநிலை முயற்சிகள் கி.பி. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் பின்னரே கருக் கொள்ளத் தொடங்குவதையும், அதேபோல் தமிழில் இன்று திறனாய்வு எனச்சுட்டும் பொருண்மையிலான தொடக்கநிலை முயற்சிகள் இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதலே உருப்பெறத் தொடங்குவதையும் வரலாறு உணர்த்துகின்றது.
கடந்த நூற்றாண்டிலே சி.வை. தாமோதரம்பிள்ளை, உ.வே. சாமிநாதையர் முதலியவர்கள் மேற்கொண்ட பதிப்பு முயற்சிகள் தமிழ் ஆய்வின் முதற்கட்டப் பணிகளாக அமைந்தன. மூலபாடங்களை இனங்காண்பதில் இவர்கள் புலப்படுத்திய ஈடுபாடு இவர்களின் முயற்சிகளை ஆய்வுத்தரமுடையனவாக்கியது. தமிழ் ஆய்வியலுக்கான இலக்கிய-இலக்கணப் பரப்பை அடையாளங்காட்டிய வகையில் இவை முன்னோடி முயற்சிகளாகக் கணிப்பெய்தின. இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலே வாழ்ந்தவர்களான திருமணம் செல்வக் கேசவராய முதலியார், வவேசு ஐயர் ஆகியோரின் எழுத்துக்களில் தமிழின் இன்றைய திறனாய்வியலின் தொடக்க நிலைப் பண்புகளைக் கண்டுணர முடிகின்றது. இலக்கியத்தின் இயல்பு உருவாக்கம், கற்பனை, சுவை முதலியன பற்றி இருவரும் சிந்தித்துள்ளனர். அத்துடன் கம்பராமாயணம் முதலிய இலக்கிய ஆக்கங்களைத் திறனாய்வு செய்யும் செயன்முறையிலும் இவர்கள் ஈடுபட்டனர்.
இவ்வாறாக, முறையே கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்தும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தும் உருப்பெற்ற தமிழ் ஆய்வு திறனாய்வு என்பன கைலாசபதி இத்துறைகளில் அடிபதிக்கும் வரை - 1960

ஆய்வுச் சூழல், பார்வை, அணுகுமுறை. 17
வரை - பலரால் தொடரப்பட்டன. தமிழரின் பண்பாட்டு வரலாற்றைக் கண்டறியும் நோக்கிலும் கால ஆராய்ச்சியை முதன்மைப்படுத்தியும் இலக்கியங்களைச் சுவைத்தல், மதிப்பிடுதல் ஆகிய வகைகளிலும் பெருந்தொகையான நூல்களும் கட்டுரைகளும் எழுதப்படலாயின. இவற்றுள் தமிழ் ஆய்வு என்ற பொதுநிலையில் நிகழ்ந்தவற்றை வழிநடத்துவதில் இரு உணர்வு நிலைகள் முக்கிய உந்துசக்திகளாக அமைந்திருந்தன. ஒன்று தமிழ் இன உணர்வு இன்னொன்று இந்தியப் பண்பாட்டுணர்வு கடந்த நூற்றாண்டில் வண கால்டுவெல் அவர்கள் மேற்கொண்ட திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வில் முன் வைக்கப்பட்ட முடிவுகள் தமிழின் தனித்தன்மை, அதன் தொன்மை என்பனசார் பெருமித உணர்வுகளுக்கான அடித்தளத்தை இட்டிருந்தது. இந்திய மண்ணின் விடுதலைப் போராட்டச் சூழல் அதன் பாரம்பரியப் பெருமைப் பற்றிய உணர்வுத் தளத்தை அமைத்திருந்தது. தமிழ் ஆய்வில் ஈடுபட்டோரில் மிகப் பெரும்பாலோர் மேற்படி இரண்டு உணர்வுத் தளங்களில் ஒன்றைச் சார்ந்தோராகவே செயற்பட்டனர். தமிழ் இன உணர்வுந்துதல் பெற்றவர்கள் என்ற வகையில் பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை முதல் பேராசிரியர் மு. வரதராசன் வரை பலரைச் சுட்டலாம். இந்தியப் பாரம்பரியப் பண்பாட்டுணர்வுத் தளத்தில் நின்று செயற்பட்டோரில் பேராசிரியர்கள் எஸ். வையாபுரிப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் மற்றும் சாமி சிதம்பரனார் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழ் இன உணர்வு சார்ந்து ஆய்வில் ஈடுபட்டவர்கள் ஆர்வம் காரணமாக அதீத மதிப்பீடுகளையும் ஊகங்களையும் முன் வைக்க முயன்றனர். உலகின் முதல் மொழி தமிழ் மொழியே என்றும் தமிழர் பண்பாட்டில் சங்க இலக்கிய காலம் பொற்காலம்' என்றும் பேசுவதில் மனநிறைவைக் காணவிழைந்தவர்களின் சமகால அரசியல்-சனரஞ்சக தேவைகளை இவ்வகையினரின் ஆய்வுகள் நிறைவு செய்ய முயன்றன. இவர்களுடன் ஒப்பிடும் பொழுது இந்தியப் பண்பாட்டுத் தளத்தில் நின்ற ஆய்வாளர்கள் அறிவுசார் பார்வையுடையோராகவும் தர்க்கரீதியான முடிவுகளை மேற்கொள்பவர்களாகவும் திகழ்ந்தனர். இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமுள்ள உறவுபற்றி நிதானமாகச் சிந்திக்கும் பண்பும் இவர்களிடம் காணப்பட்டது. தெ.பொ.மீயின் ஆய்வுகளில் மொழியியல் முதலிய பல்வேறு ஆய்வறிவுத் துறைகளும் சங்கமிக்கத் தொடங்கின.
இவ்வாறு தமிழகத்திலே தமிழாய்வானது இருநிலைப்பிஜிக் உணர்வுந்துதல்களுடாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் தமிழகத்துக்கு வெளியே குறிப்பாக ஈழத்திலிருந்தும் மேலை jpf(ရှ်ခေါ်ဂီနီ

Page 11
18 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
லிருந்தும் தமிழ் ஆய்விலே புதிய ஒளிகள் பரவத் தொடங்கின. ஈழத்தறிஞரான பேராசிரியர் கலாநிதி க. கணபதிப்பிள்ளையவர்கள் சாசனவியல், மொழியியல் முதலிய பல்துறைசார் பார்வைகளால் தமிழாய்வுக்கு வளம் சேர்க்க முனைந்தார். மேனாட்டினரான டி பறோ (T. Burrow), GTưb.FF, QLDGEGOTIT (M.E. Emeneau), ஜோன் ஆர். மார் (John R. Marr), 6LSai) 5 QJQLSa) (Kamil Zvelebit) முதலியோர் திராவிட மொழியியல், தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு என்பன தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். இவ்வாறான அனைத்துலக மட்டத்திலான கவனிப்பு தமிழ் ஆய்வுத் தரத்தை மேலும் அறிவுசார் உயர் நிலைக்கு இட்டுச் செல்வதற்கான சிந்தனைச் சூழலை உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாக 1960 களின் நடுப்பகுதியில் (7-1-1964) அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பு உருவாகியது.
செல்வக்கேசவராயர், வ.வே.சு. ஐயர் ஆகியவர்களின் தொடக்கநிலை முயற்சிகளுக்குப் பின் கைலாசபதி காலம் வரை நிகழ்ந்த திறனாய்வுச் செயற்பாடுகளில் தமிழ்த் திறனாய்வியல் செயன் முறையிலும் சிந்தனை கொள்கை நிலையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எய்தியிருந்தது. செயன் முறை என்ற வகையில் இலக்கியங்களை நயம்பட விரித்துரைத்தல், மதிப்பீடுகளை முன்வைத்தல் முதலியன பல்வேறு தரங்களிலும் தளங்களிலும் நிகழ்ந்தன. சங்க இலக்கியப் பரப்பை மறைமலையடிகள் முதலியோர் ஆராய்ந்து சுவை நுகர்ந்தனர். கம்பராமாயணம் முதலியவற்றின் ரஸனை' யில் டி.கே. சிதம்பரநாத முதலியாரும் அவரது ரஸிக வட்டத்தினரும் ஈடுபட்டனர். பாரதியின் இலக்கிய பீடம் பற்றி கு.ப. ராஜகோபாலன், பெ. கோ. சுந்தரராஜன் முதலியோர் விரிவான விவாதம் நிகழ்த்தினர். பல்வகை இலக்கிய ஆக்கங்களிலும் இலக்கியத்தரம் காணும் முயற்சியில் கநா. சுப்பிரமணியன் கவனம் செலுத்தினார். இவரது இத்தரம் காணும் முயற்சி சி.சு. செல்லப்பா அவர்களால் பகுப்பாய்வு நிலையில் திட்டப்பாங்குடன் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு செயன்முறைத் திறனாய்வு வளர்ச்சியுற்றுவரும் சூழலில் 1941 ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் பாடத் திட்டத்தில் பி.ஓ.எல் (ஆனர்சு) பட்டப்படிப்பிற்கான ஒரு பாடமாக இலக்கியத் திறனாய்வு அறிமுகமாகிறது. மு. வரதராசன், அ.ச. ஞானசம்பந்தன் முதலியோர் இதனைக் கற்பித்தனர். இவ்வாறு கற்பிப்பதற்கு இவர்கள் தயாரித்த விரிவுரைக் குறிப்புக்கள் பின்நாளில் முறையே இலக்கியத்திறன், இலக்கியக் கலை ஆகிய நூல்களாக உருப்பெற்றன. இவற்றைத் தொடர்ந்து திறனாய்வு தொடர்பான கொள்கைவிளக்க நூல்கள் சில வெளிவரத் தொடங்கின. இக்காலப்பகுதியில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வி. செல்வநாயகமவர்கள் இலக்கியத் திறனாய்வு இலக்கிய வரலாறு என்பவற்றைக் கற்பிக்கலானார்.

ஆய்வுச் சூழல், பார்வை, அணுகுமுறை. 19
இவ்வாறு செயன்முறை, சிந்தனை ஆகிய இருவகையிலும் தமிழ் இலக்கிய உலகில் கவனத்தைப் பெற்று வந்த திறனாய்வியலானது இலக்கியத்தை ஒரு கலையாக்கம் என்ற வகையில் மட்டும் கண்டு அதன் அழகியற் கூறுகள், அவை வாசகருள்ளத்தில் நிகழ்த்தவல்ல அநுபவம் என்பவற்றைப் பற்றிப் பேசும் ஒன்றாகவே அமைந்திருந்தது. குறிப்பாக தொனி கற்பனை, உத்தி, நடை கட்டமைப்பு இலக்கிய வகைமைகள் எனபன பற்றிப் பேசுவதே திறனாய்வின் முக்கிய செயற்பாங்கு என்ற எண்ணத்தை மேற்படி காலகட்டம் வரையான தமிழ்ச் சூழலின் திறனாய்வுக் கல்வி விளைவித்திருந்தது.
கைலாசபதி தமிழ் ஆய்வுலகில் கால் பதிக்கத் தொடங்கும்வரை - ஏறத்தாழ 1960 வரை - தமிழ் ஆய்வியலிலும் திறனாய்வியலிலும் முனைப்பாகப் புலப்பட்டு நின்ற வரலாற்றுச் செல்நெறிகள் இவைதான். இவ்வாறான சூழலில் தமிழ் ஆய்வியலை அனைத்துலக மட்டத்தில் வளர்ந்து வரும் புதிய அறிவியற் பார்வைகளுடன் இணைத்து வளர்த்தெடுக்க வேண்டுமென்ற எண்ணம் தமிழ் ஆய்வறிஞர் மத்தியில் உருவாகத் தொடங்கியிருந்தது. தமிழ்த் திறனாய்வியலில் அழகியலுக்கு நிகராக அரசியலுக்கு - உள்ளடக்கத்தின் சமூகப் பெறுமதிக்கு - முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற எண்ணமும் கருக்கொண்டிருந்தது. அக்காலப் பகுதியில் தமிழர் மத்தியில் அறிமுகமாகத் தொடங்கியிருந்த மார்க்சியத் தத்துவம் இவ்வாறான எண்ணக் கருக்களை உருக்கொடுத்து வளர்த்தெடுக்கவல்ல அறிவுசார் சிந்தனையாக அமைந்திருந்தது. இத்தகைய மார்க்சிய அறிவுடன் தமிழ் ஆய்விலும் திறனாய்விலும் கால்பதிக்க முற்பட்ட இலக்கியவாதிகள் பலருள் ஒருவராகவே கைலாசபதி தமிழ் ஆய்வுலகில் 1950 களின் நடுப்பகுதியில் அறிமுகமாகிறார்.
மார்க்சியத் தத்துவம் நாம் வாழும் இந்த உலகைப் புறநிலை மெய்மையாக ஏற்றுக் கொள்வது: உலகின் இயக்கம் சமுதாயக் கூட்டமைப்புக்கள் என்பவற்றை அறிவியல் அடிப்படையில் விளக்கி நிற்பது சமுதாய வரலாற்றை வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகத் தரிசிப்பது கலை இலக்கியம் என்பவற்றை அழகியல் வெளிப்பாடுகள் என்ற வகையில் மட்டும் நோக்காது சமுதாயப் பிரச்சினைகளின் பதிவுகளாகவும் அவ்வகையில் சமூகவர்க்கங்களின் குரல்களாகவும் காண்பது இவ்வாறான பார்வைகளூடாக அத்தத்துவம் சமுதாயத்தை மாற்றியமைக்க வழிகாட்டுவது.
மார்க்சியத்தின் ஆய்வியல் அணுகுமுறை இயங்கியல் எனப்படும். எந்த ஒரு பொருளையும் - பிரச்னையையும் - தற்சார்பின்றிப் புறநிலையாக அணுகுதல், அதனைச் சமுதாய வரலாற்றுப் பகைப்புலத்தில் பொருத்தி

Page 12
20 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
நோக்குதல், அவற்றின் உள்ளார்ந்த முரண்நிலைக் கூறுகளையும் அவை இயங்குநிலையில் எய்தும் பண்புநிலை மாற்றங்களையும் தெரிந்து தெளிதல் என்பன இயங்கியலின் பொது விதிகளாகும்.
இந்திய மண்ணிலே மார்க்சிய சிந்தனை 1920-30 களில் அறிமுகமானதைத் தொடர்ந்து தமிழகத்தில் 1930-50 காலப்பகுதியில் அது இலக்கியத்தளத்தில் கால்பதிக்க முற்பட்டது. ஏறத்தாழ சமகாலத்தில் ஈழத்திலும் அது அறிமுகமாகியது.
தமிழகத்தில் மார்க்சியத்தை அறிமுகம் செய்து அதனூடாக கலை இலக்கியங்களையும் 'சமூக பண்பாட்டு வரலாற்றையும் தரிசிக்க முற்பட்டவர்களுள் ம. சிங்கார வேலர், ப. ஜீவானந்தம் ஆகியோர் முக்கியமானவர்கள். தொ. மு. சி. ரகுநாதன், ஆர்.கே. கண்ணன், தி.க. சிவசங்கரன் முதலியவர்கள் இலக்கியத் துறையில் இச்சிந்தனை வளர்வதற்கு முக்கிய பங்களிப்புச் செய்து நின்றனர். ஈழத்தில் மு. கார்த்திகேயன், கே. கணேஷ், கே. ராமநாதன், அ.ந. கந்தசாமி முதலியவர்கள் மார்க்சியப் பார்வைக்கு வித்திட்டு வளர்த்தனர். இத்தகையவர்களின் முயற்சிகளால் தமிழகத்திலும் ஈழத்திலும் மார்க்சியத் தளத்தில் நின்று இலக்கியப் படைப்பு ஆய்வு, திறனாய்வு ஆகிய முயற்சிகளில் ஈடுபடும் இலக்கியவாதிகள் முற்போக்கு எழுத்தாளிர் சங்கம் என்ற பெயரிலும், அத்தொனிப் பொருள் கொண்ட வேறு பெயர்களிலும் அமைப்பு நிலையில் இணைந்து செயற்பட்டனர். இவ்வாறான இயக்கநிலைப் பின்புலத்துடன் உயர்பட்டங்கள் பெற்ற ஆய்வறிஞன் - Scholar- ஆக தமிழ் ஆய்வுலகில் ஆழமாக அடிபதிக்கிறார் கைலாசபதி இவருக்குச் சிறிது முன்பும் ஏறத்தாழச் சமகாலத்திலும்) இவ்வாறான புலமைத் தகுதிகளுடனும் மார்க்சிய சார்புடனும் தமிழ் ஆய்வுலகில் அடிபதித்த மூவரை இங்கு சுட்டுவது அவசியம். அவர்கள் : தமிழகத்தில் எஸ். இராமகிருஷ்ணன், நா. வானமாமலை, ஈழத்தில் கா. சிவத்தம்பி 2.2. கைலாசபதியின் ஆய்வு நோக்கும் அணுகுமுறைகளும்
கைலாசபதியின் ஆய்வுச் செயற்பாடுகள் அனைத்திலும் அடிநாதமாக அமைந்திருந்த முக்கிய உணர்வு நிலைகளை இருவகைப்படுத்தலாம். (அ) தமிழரின் சமூக பண்பாட்டு வரலாற்றுச் செல்நெறியை அறிவு நிலைக்குப் பொருந்தும் வகையில் இனங்கண்டு காட்டுதல், (ஆ) கலை, இலக்கியச் செயற்பாடுகளை மதிப்பிட்டு அவற்றை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுத்தல்.
இவற்றுள் முதலாவது உணர்வுநிலை அவர் சார்ந்திருந்த பல்கலைக்கழகப் பணியுடன் தொடர்பானது நூற்றுக்கணக்கான பல்கலைக்

ஆய்வுச் சூழல், பார்வை, அணுகுமுறை. 21
கழக மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு என்பவற்றைத் திட்டமிட்டுக் கற்பிக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு இருந்தது. இவ்வகையில் சமகாலத்தில் தமிழ், தமிழ் இனம் என்பன தொடர்பாக ஆர்வ நிலையில் ஊகங்களாக முன் வைக்கப்பட்ட பொற்கால சிந்தனைகளை மறுதலித்து அறிவாராய்ச்சிக்கு ஒத்தவகையிலான முடிவுகளையும் பார்வைகளையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கடமை அவரை வழிநடத்தியது. இம் முயற்சியை ஏலவே தொடங்கியிருந்த பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், க. கணபதிப் பிள்ளை முதலியவர்களின் அறிவுசார் பார்வைகள், தர்க்கரீதியான அணுகுமுறைகள் என்பவற்றை மேலும் அகலப்படுத்தவும் ஆழப்படுத்தவும் கைலாசபதி முயன்றார். இம்முயற்சிக்கு அவரது மார்க்சிய தத்துவச் சார்பு துணை நின்றது. சமுதாய வரலாற்றின் இயங்குதிசையை அவர் தெளிந்து கொள்ள அது உதவியது.
"புராதன காலத்திலிருந்து தமது காலம் வரை, மனிதகுலம் வளர்ந்து வந்த வரலாற்றை, அரசியல் பொருளாதாரச் சமூகத் துறைகளின் அடிப்படையில் ஆராய்ந்து மனித வரலாற்றை இயக்கும் மூலச்சக்தியையும் காரணியையும் கண்டறிந்தார் மாக்ஸ். அதன் விளைவாக மனிதவாழ்வு முழுவதையும் தழுவி நிற்கும் பூரணமான சோஷலிஸத்தை வகுத்தளித்தார். ?
என்ற கைலாசபதியின் கூற்று மார்க்சிய மூலவரான கார்ல் மார்க்சின் சாதனை பற்றிய அவரது புரிதலை உணர்த்தும். மார்க்சியத்தின் இன்னொரு மூலவரான பிரடெரிக் ஏங்கல்ஸ் எழுதிய குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலின் கருத்துக்கள் கைலாசபதியின் ஆய்வுச் செயற்பாடுகளுக்கு கைவிளக்கு ஆகத் துணை நின்றன.
கைலாசபதி ஒரு ஆய்வாளன் என்ற நிலையில் மட்டும் மார்க்சீயத்தைத் துணைக் கொண்டவர் அல்லர். அவர் பொதுவுடைமைக் கட்சிச் சார்பாக - குறிப்பாக அதன் சீனச்சார்புத் தளத்தில் மார்க்சிய லெனினிய வாதியாக- நின்று செயற்பட்ட வருமாவார். கலை, இலக்கியம் என்பவற்றின் சமுதாய உறவுநிலை, சமுதாய வரலாற்றியக்கத்தில் அவற்றின் பங்கு, படைப்பாளிகளின் வரலாற்றுப் பாத்திரம் என்பன தொடர்பாக அவர் ஆழமாகச் சிந்திப்பதற்கு அவரது இவ்வாறான சமகால அரசியற்சார்பு முக்கிய அடிப்படை ஆயிற்று. கலை, இலக்கியச் செயற்பாடுகளை மதிப்பிடுதல், அவற்றை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுத்தல் என்றவாறான மேற்சுட்டிய இரண்டாவது வகை உணர்வுநிலைக்கான தளம் இதுதான். இந்த

Page 13
22 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
உணர்வு நிலையே அவரை ஒரு திறனாய்வாளனாகப் பரிணமிக்கச் செய்தது. திறனாய்வு தொடர்பான கோட்பாடுகளை விரித்துரைத்தல், முற்கால, சமகாலப் படைப்பாளிகள் மற்றும் திறனாய்வாளர்கள் பற்றியும் படைப்புக்கள் பற்றியுமான மதிப்பீடுகளை முன் வைத்தல் மற்றும் மதிப்புரை, அணிந்துரைகள் அளித்தல் என்பனவாக அவரது இத்திறனாய்வுச் செயற்பாடு விரிவு பெற்றது. சமகால இலக்கிய உலகோடு கைலாசபதிக்கு இருந்த நெருக்கமான உறவும் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் திறனாய்வியல் பெற்றுவந்த முக்கியத்துவமும் அவரது இவ்வகைச் செயற்பாடுகள் ஆழமும் வலுவும் பெற வாய்ப்புக்களாக அமைந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்கண்டவாறு ஆய்வாளராகவும் திறனாய்வாளராகவும் இருதளங்களிற் செயற்பட்டு நின்ற கைலாசபதி அவற்றுக்குச் சமகால அறிவுத்துறைகள் பலவற்றின் பங்களிப்பு அவசியம் எனக்கருதியவர். பல்வகை அறிவுத் துறைகளும் இணைந்த கூட்டுமுயற்சியே பயன்தரவல்லது எனத் திடமாக நம்பியவர். இதனை அவரது பின்வரும் கூற்று தெளிவுறுத்தும்.
"மனிதப் பண்பியல் துறைகளான வரலாற்றியல், தொல் பொருளியல், மெய்யியல், அரசியல், மொழியியல் முதலி யவற்றுடன் சமூக விஞ்ஞானத் துறைகளான மானிடவியல், சமூகவியல், உளவியல், அரசியல், பொருளியல் மக்கள் பண்பாட்டியல் என்பனவும் இலக்கிய ஆய்வுக்கு இன்று இன்றியமையாதன. தனித்தும் சார்ந்தும் இயங்கும் இப்பண்பே நவீன இலக்கியத் திறனாய்வை முற்கால இலக்கிய ஆய்வுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது" இலக்கியத் திறனாய்வை மையப்படுத்தி அவர் இக்கருத்தை முன்வைத்திருப்பினும் அவரது ஆய்வுச் செயற்பாடுகள் அனைத்திலும் விரவிக் காணப்படும் முக்கிய பண்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல்துறை அறிவுச்சார்புடன் ஆய்வு, திறனர்ய்வு என்பவற்றில் ஈடுபட்ட கைலாசபதி அவற்றில் இருவகை முக்கிய அணுகுமுறைகளைக் கை கொண்டார். அவை : (அ) சமூகவியல் (ஆ) ஒப்பியல்
சமூக விஞ்ஞானத் துறைகள் பலவற்றுள்ளும் இலக்கியத்துடனும் மிக நெருக்கமான தொடர்புடையதாகத் திகழ்வது சமூகவியல். தனிமனிதருடைய நடத்தை, அவர் சமூகத்துடன் கொள்ளும் உறவுநிலை என்பன பற்றி ஆராய்வதன் மூலம் அது கலை, இலக்கியம் என்பவற்றுடன்

ஆய்வுச் சூழல், பார்வை, அணுகுமுறை. 23
நெருங்கிய தொடர்பு பெறுகிறது. கலையும் இலக்கியமும் சமூகமாந்தரின் அநுபவங்களில் ஊற்றெடுப்பவை. அவற்றின் ஊற்றுக்கண்களை உரியவாறு இனங்காண்பதற்கும் மதிப்பிடுவதற்கும் சமூகவியல் சார் அணுகுமுறை அவசியமாகிறது.
மார்க்சியத்தின் மீது கைலாசபதிக்கு ஏற்பட்ட பற்றுறுதி அவரை சமூகவியலில் ஈடுபடுத்தியது. இதனை அவரே,
"மார்க்சீயத்தைத் தழுவிக் கொண்ட நாள் முதலாக அதன் முனைப்பான கூறுகளில் ஒன்றாகிய சமூகவியலை எனது பல்வேறு ஆய்வுகளுக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வந்துள்ளேன்." எனக் கூறியுள்ளமை தெளிவுறுத்தும் சமூகவியலுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள உறவுநிலைபற்றி சமூகவியலும் இலக்கியமும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை அவர் எழுதியுள்ளார். இதில் அவர் சமூகவியலின் இருவகையாகக் குறிப்பிடுகிறார். அவை :
(அ) சோஷலிஸக் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவானவை. (ஆ) சோஷலிஸ விரோத நெறியில் வளர்ந்தவை இவ்விரண்டில் முதலாவது வகையே பேணிக் கொள்ளத்தக்கது என்பதை அவர் தெளிவுறுத்துகிறார்
இவ்வாறான சமூகவியல் அணுகுமுறையை இலக்கியத் திறனாய்வில் பயன்படுத்தல் தொடர்பாக கைலாசபதி தரும் விளக்கம் இங்கு சுட்டத்தக்கது.
"இலக்கியத்தை அடிப்படையில் சமூக விளை பொருளாகக் கொண்டு, அதனை உரிய வரலாற்றுச் சூழலில் வைத்து நோக்கி, அதன் உயிராற்றல் காலத்துக்குக் கட்டுப்பட்டும் காலத்தை வென்றும் நிற்கும் தன்மையை விளக்குவதே சமூகவியல் அணுகுமுறையின் பிரதான அம்சங்களாகும்" ஒப்பியல் என்பது வேறுபட்ட பல பொருள்களிடையிற் காணப்படும் பொதுமைக் கூறுகளை இனங்காணும் ஆய்வு முறைமையாகும். இது கலை இலக்கியம் ஆகிய துறைகளின் அனைத்துலகப் பொதுமையை இனங்காணும் ஒரு ஆய்வுநெறியாக வளர்ந்து வந்துள்ளது. நாடு, இனம், மொழி, காலம் முதலியவற்றில் வேறுபட்ட சூழல்களில் உருவாகும் கலை, இலக்கியம் ஆகியவற்றில் காணப்படக்கூடிய பொதுமைக் கூறுகளை இனங்கண்டு அவ்வாறான பொதுமைக்குரிய காரணிகளை ஆராய்ந்தறியும் செயற்பாங்காக இது திகழ்கிறது. ஒன்றோடொன்றை ஒப்பிடும் முறைமையால் இது 'ஒப்பியல்' எனப் பெயர் பெறுகிறது.

Page 14
24 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
கைலாசபதி சமூகவியலில் கொண்டிருந்த ஈடுபாட்டால் ஒப்பியலில் அடிபதித்தவர். இதனை,
"சமூகவியலில் உண்டாகிய ஈடுபாடே ஒப்பியல் ஆய்வுக்கு என்னை
இட்டுச் சென்றது"
என்ற அவர் கூற்று உணர்த்தும். இந்திய மண்ணில் - குறிப்பாகத் தமிழ் இலக்கிய உலகிலே - ஒப்பியல் பார்வை வண. ஜி.யு போப் முதல் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் வரை பலரால் எண்ணக்கரு நிலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார், எஸ். வையாபுரிப் பிள்ளை, வண. தனிநாயக அடிகளார் முதலிய பலரும் இத்துறையில் கவனம் செலுத்தியுள்ளனர். ஒப்பியல் அணுகுமுறையை உணர்வுபூர்வமாகத் தன் ஆய்வுகள் பலவற்றில் முதலில் திட்டப்பாங்குடன் மேற்கொண்டவர் என்ற சிறப்பு கைலாசபதிக்கு உரியது. அவரது முதல் நூலான இரு மகாகவிகள், கலாநிதிப் பட்ட ஆய்வேடான Tamil Heroic Poetry ஆகியவற்றிலும் பல்வேறு கட்டுரைகளிலும் ஒப்பியல் அணுகுமுறை சிறப்புறப் பயின்றுள்ளது. ஒப்பியல் இலக்கியம் என்ற தலைப்பில் அவரது நூலொன்று - கட்டுரைத் தொகுப்பு - அமைந்துள்ளமையும் இங்கு சுட்டத்தக்கது.
குறிப்புகள் 2 தகவல் க பஞ்ச7ங்கம் தமிழ் இலக்கியத் திறன7யவு வரலாறு வெனி/%
4%/வதி புதுச்சே7 1992 பக் 76
2 க கைலாசபதி சமுகவியலும் இலக்கியமும், நியூ செஞ்ச74 ஹவுஸ் சென்னை
Æ92Zóo2 A Azići 433
Vii تھرے ہ%2%Zڑیختہ 26 ,%//ثربڑھ GżgzóL42, Løé V விளக்கத்திற்கு ட7க்க மேற்படி நூல் பக் 534
க கைவசதி இலக்கியச் சித்தனைகள் விஜயலட்சுமி புத்தகசாவை கொழும்பு/ £ Z£ 27,
る
சு கைலாசபதி சமுகவியலும் சிலக்கியமும் முன்னுரை, டக் V

3 தமிழர் சமுதாயமும் இலக்கியமும்
தமிழிலக்கியப் பரப்பின் பெரும் பகுதியை - ஏறத்தாழ எல்லாக் காலகட்ட இலக்கிய ஆக்கங்களையுமே - கருத்திற் கொண்டு ஆய்வில் ஈடுபட்டவர் கைலாசபதி, குறிப்பிடத்தக்க வரலாற்று முக்கியத்துவமுடைய இலக்கிய ஆக்கங்கள் மற்றும் இலக்கிய வகைகள் என்பவற்றின் இயல்பு அவற்றின் தோற்றத்துக்குக் களமாகத் திகழ்ந்திருக்கக் கூடிய சமுதாயச் சூழல்கள் என்பன தொடர்பாக அவர் நுனித்து நோக்கியுள்ளார். இவ்வகையில் அவர் புலப்படுத்தி நின்ற பார்வைகள், முன் வைத்துள்ள முக்கிய முடிவுகள் என்பன இவ்வியலில் நோக்கப்படுகின்றன.
தமிழிலக்கியங்களையும் அவற்றுக்குத் தளங்களாகத் திகழ்ந்திருக்கக்கூடிய சமுதாய வரலாற்றுச் சூழல்களையும் காலகட்டங்களாக வகைப்படுத்துவதில் கைலாசபதி தமது காலத்துக்கு முற்பட்ட மற்றும் சமகால ஆய்வாளர் பலரிலிருந்தும் வேறுபட்டார். பொதுவாக இலக்கிய கர்த்தாக்களையும் இலக்கிய வகைகளையும் மையப்படுத்தியும், நூற்றாண்டுகளின் அடிப்படையிலும், ஆதிக்கம் பெற்றிருந்த அரசமரபு மற்றும் பண்பாட்டுக் கருத்தியல்கள் என்பவற்றைக் கருத்திற் கொண்டும் காலகட்டங்களை வகுப்பதே கைலாசபதி காலம் வரை நிலவி வந்துள்ள அணுகுமுறைகளாகும். சங்க காலம், சங்கமருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இருபதாம் நூற்றாண்டு என்பனவாக வி. செல்வநாயகம் மேற்கொண்ட இலக்கிய வரலாற்றுக் காலப் பகுப்பே கைலாசபதி காலத்தில் ஆய்வாளர் பலராலும் பொதுவாக ஏற்கப்பட்டிருந்தது. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தமிழறிஞருள் ஒருவரான கே.என். சிவராஜபிள்ளை தமிழிலக்கியப் பரப்பை இயற்கைநெறிக் காலம், அறநெறிக்காலம், சமயநெறிக் காலம் எனப்

Page 15
26 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
பண்பாட்டுக் கருத்தியல்களினடிப்படையில் வகைப்படுத்தலாம் என்ற எண்ணத்தை முன் வைத்திருந்தார். இதனை, கைலாசபதியின் சமகாலத்தவரும் உடன் பணியாற்றியவருமான ஆ. வேலுப்பிள்ளை தமது தமிழ் இலக்கியத்திற் காலமும் கருத்தும் என்ற நூலில் செயற்படுத்தினார். இவ்வாறான சூழலில் கைலாசபதி மேற்படி பார்வைகளிலிருந்து வேறுபட்டு, தாம் சார்ந்திருந்த மார்க்சியப் பார்வையினடிப்படையில் புதிய பகுப்புமுறையை மேற்கொண்டார். தொன்மையான இனக்குழு, பழம் பொதுமைச் சமூகம், அடிமைச் சமூகம், நிலவுடைமைச் சமூகம், முதலாளியச் சமூகம் என்பனவாகத் தமிழர் சமூக வரலாற்றுக் கட்டங்களை நோக்கும் முறைமையை அவரது ஆய்வுகளில் கண்டுணரலாம்.
இவ்வாறான பார்வையின் ஊடாக அவர் தமிழரின் சங்க இலக்கியக் காலப்பகுதியை, பழம்பொதுமை நிலையிலிருந்து உடமை நிலைக்கு மாறிக் கொண்டிருக்கும் காலகட்டமாகவும் அவ்வகையில் அதனை ஒரு வீரயுகம் ஆகவும் (Heroic Age) கண்டார். திருக்குறள், சிலப்பதிகாரம் என்பன எழுந்த வரலாற்றுச்சூழலை வணிகவர்க்கத்தின் எழுச்சிக்காலமாகத் தரிசித்தார் பக்தி இலக்கியச் சூழலையும் சோழப் பெருமன்னர் ஆட்சிக் காலத்தையும் நிலவுடைமைசார் வேளாள வார்க்கத்தினரின் எழுச்சிக்காலமாக இனங்காட்டினார், ஐரோப்பியர் காலத்தை நிலவுடைமைவர்க்கம் தளர்வடைந்து முதலாளியம் உருப்பெறத் தொடங்கிய காலப் பகுதியாக விளக்கினார்.
இவ்வாறு நோக்கப்பட்ட காலப்பகுதிகளின் சமூக வர்க்கச் சூழ்நிலைகளுக்கும் அவ்வக்கால இலக்கிய வகைகள் என்பவற்றுக்குமான உறவு நிலைகளைத் தர்க்கரீதியாக விளக்கும் முயற்சியில் அவர் கூடிய கவனம் செலுத்தியுள்ளார். 31. சங்கப் பாடல்களும் வீரயுகமும்
சங்கப் பாடல்கள் பற்றியும் அது எழுந்த சமுதாயச்சூழல் பற்றியும் கைலாசபதி புலப்படுத்தியுள்ள பார்வைக்கு முக்கிய சான்றாக அமைவது அவரின் கலாநிதிப் பட்ட ஆய்வானTamil Heroic Poetry. இத்தொடர்பில் சில கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். இவற்றில் அவர் சங்கப் பாடல்களைப் பண்டைய கிரேக்க இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கியுள்ளார். இந்த ஒப்பு நோக்கின் ஊடாக சங்கப் பாடல்கள் எழுந்த காலப் பகுதியைத் தமிழரின் வீரயுகம் என்றும் அப்பாடல்கள் வாய்மொழிப் பாடல்களாக உருவானவை என்றும் முடிவு செய்துள்ளார்.
சங்க இலக்கியங்கள் பண்டைய கிரேக்க மற்றும் மேலைத் தேய இலக்கியங்களுடன் ஒப்புநோக்கத்தக்கன என்ற எண்ணக்கரு

தமிழர் சமுதாயமும் இலக்கியமும் 27
வண. ஜி.யு போப், என். கே. சித்தாந்தா, எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், எஸ். வையாபுரிப் பிள்ளை முதலியோரால் முன்னரே உருவான ஒன்றாகும். இந்த எண்ணக்கருவுக்கு ஆய்வுநிலையில் வடிவம் தந்த வகையில் கைலாசபதியின் மேற்குறித்த ஆய்வேடு வரலாற்று முக்கியத்துவமுடையது. சி.எம். பெளரா, சாட்விக் தம்பதியர் மற்றும் மில்மன்பரி ஆகிய மேனாட்டு ஆய்வாளர்களின் கோட்பாடுகள் கைலாசபதியின் இந்த ஒப்பியல் ஆய்வுக்குப் பெரிதும் துணை புரிந்துள்ளன.
'வீரயுகம்' என்பது சமுதாய வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைக் குறிப்பது. சமுதாய நிலையிலும் இலக்கியப் பாடுபொருள் நிலையிலும் உடல் வீரம் தனிக் கணிப்பைப் பெறும் காலகட்டம் இது. பண்டைய பழம் பொதுமை நிலையிலிருந்து உடைமையுணர்வை நோக்கிய வரலாற்றுச் செல்நெறியில் தனி மனிதக் கொள்கை, அரசு நிறுவனம் என்பன உருவாகும் சூழலில் இவ்வாறு உடல்வீரம் தனிக் கணிப்பைப் பெறும். இவ்வீரத்தைப் போற்றும் கலை இலக்கியச் செயற்பாடுகளும் உருப்பெறும். இவ்வாறான ஒரு 'சமூக-கலை இலக்கிய வரலாற்றுச் செல்நெறியை மேற்சுட்டிய மேற்றிசை ஆய்வாளர்கள் மேலைத் தேய வரலாற்றில் கண்டுகாட்டினர். இவற்றைக் கவனத்திற் கொண்ட கைலாசபதி தமிழின் பண்டைய இலக்கியப் பரப்பை இத்தகு பார்வைக்கு உட்படுத்தினார். 'வீரயுகம் தொடர்பான கைலாசபதியின் மனப் பதிவு வருமாறு:
"அநாகரிக நிலையிலிருந்து நாகரிக நிலைக்குச் சமுதாயம் மாறும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் குழுக்களாகவும் குலங்களாகவும் இருந்த வாழ்க்கை அமைப்பைத் தனி மனிதக் கொள்கை உடைத்தெறிந்து வலுக்கொள்கையின் அடிப்படையில் அரசுகளை நிறுவும் சண்டைகள் நிறைந்த வரலாற்று நிலையை வீரயுகம் என்றழைப்பர்?
தமிழரின் சங்கப்பாடல்கள் கால சமுதாயத்தை இத்தகு ஒரு வரலாற்றுக்
கட்டமாகவே கைலாசபதி காண்கிறார்.
"புராதன வாழ்க்கையிலே முதலில் தோன்றிய குலங்கள், அவற்றின் விரிவாக அமைந்த குடிகள், அத்தகைய குடிகள் சில சேர்ந்த இணைப்புக் குலங்கள் ஆகியன முட்டி மோதிப் பொருந்திய நிலையிலே, அளவு மாறுபாடு குணமாறுபாடாக மாறியதே சங்ககால அரசியல் நிறுவனமாகும்."
எனச் சங்கப் பாடற்கால சமூக - அரசியற் பகைப்புலத்தை அவர் இனங்காட்டுகிறார்.

Page 16
28 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
இவ்வாறு சங்ககால வரலாற்றுப் போக்கை இனங்காட்டிய அவர் சங்கப் பாடல்களிற் பெரும்பான்மையானவை மேற்படி வரலாற்றுச் சூழலில் வாய்மொழிப் பாடல்களாக உருவானவை என்ற கருத்தை முன் வைத்தார். *
வாய்மொழி இலக்கியம் என்பது குறித்த ஒரு காலகட்டத்தில் குறித்த ஒரு புலவராற் படைக்கப்படாதது; மக்களின் அநுபவங்களினடியாக உருவாகிச் செவிவழியாகப் பேணப்படுவது. குறித்த சிலவகை 9.455(555,55Git (Themes), espfata) First singlesgir(Situational Aspects), வாக்கியத் தொடர்கள், தொடர்களின் பகுதிகள் என்பன மீட்டும் மீட்டும் பயில்வது வாய்மொழி இலக்கியப் பொதுப்பண்பாகும். சங்கப் பாடல்களில் இவ்வாறான பொதுப்பண்புகள் பயின்றுள்ளமை கைலாசபதியின் மேற்படி கருதுகோளுக்கு - சங்கப் பாடல்கள் பல வாய்மொழிப் பாடல்களாக உருவானவை என்ற கணிப்பிற்கு - அடிப்படையாயிற்று.
சங்கப் பாடல்களைப் பண்டைய கிரேக்க இலக்கியங்களோடு ஒப்பிடும் கைலாசபதியின் பார்வை, அணுகுமுறை என்பன தமிழ் ஆய்வுலகில் பலராலும் மதித்து வரவேற்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து சிலர் இவ்வகையில் ஆராய முற்பட்டனர். கதிர். மகாதேவனின் ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம் என்ற ஆய்வு இவ்வகையிற் குறிப்பிடத்தக்கது. *
இவ்வாறு கைலாசபதியின் ஒப்பியல் நோக்கு, அணுகுமுறை என்பன மதிக்கப்பட்டாலும் சங்கப் பாடல்களை வாய்மொழிப் பாடல்களாகக் காணும் அவரது கருதுகோள் அறிஞருலகால் முழுநிலையில் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்பதை இங்கு சுட்டுவது அவசியம். சங்கப் பாடல்களில் வாய்மொழி இலக்கியப் பண்புகள் பயின்றுள்ளன. எனினும் அவை எழுத்திலக்கியங்களாக உருவானவை என்பதே அறிஞர் பலராலும் ஒப்ப முடிந்த கருத்தாகும். சங்கப் பாடல்களின் தோற்றத்துக்கு முன் வாய்மொழிப் பாடல் மரபு நிலவி வந்துள்ளது. அம்மரபினடியாக உருவாகி எழுத்திலக்கியமாக வரி வடிவம் பெற்றவையே இன்று எமக்குக் கிடைக்கும் சங்கப் பாடல்கள். இதுவே ஆய்வாளர்களின் பொதுவான கருத்துநிலை
சங்கப் பாடல்களின் உருவாக்கம் தொடர்பாக நிலவி வருகின்ற மேற்படி கருத்து நிலைகள் தொடர்பாக ஒரு குறிப்பை இங்கு முன் வைப்பது அவசியமாகிறது.
கைலாசபதியவர்களும் அவரை அடியொற்றிய பிற ஆய்வாளர்களும் எடுத்துக் காட்டியுள்ளவாறு சங்கப் பாடல்களில் வாய்

தமிழர் சமுதாயமும் இலக்கியமும் 29
மொழி இலக்கியப் பண்புகள் பயின்றுள்ளமை தெளிவு. மேலும் வீரயுகத்தின் பொதுப் பண்பு என்றவரையில் பாணர், கூத்தர், பொருநர், விறலி முதலி யவர்கள் தலைவன் புகழை வாய்மொழியாகப் புகழ்ந்தேத்தும் இயல்பிலான பாடல்கள் சங்கப் பாடற்பரப்பில் உள்ளன என்பதையும் அறிவோம். சங்கப் பாடல்கள் வாய்மொழிப் பாடல்களாக உருவானவை என்ற கருதுகோளுக்கு இவையே அடிப்படை,
வாய்மொழிப் பாடல்கள் எனப்படுபவை பொதுவாக ஆசிரியர் பெயர் அறியப்படாதவை. ஆனால் சங்கப் பாடல்கள் ஆசிரியர் பெயர் அறியப்பட்டவை. 473 புலவர்களால் பாடப்பட்ட 2381 பாடல்கள் கொண்ட இலக்கியப் பரப்பு அது. புலவர்கள் எனப்படுபவர்கள் மேற்சுட்டிய பாணர், கூத்தர் முதலியவர்களிலிருந்து வேறுபட்டவர்கள். பாணர் முதலி யவர்களுக்கு அரசர்கள், வீரர்கள் என்போரின் செயல்வீரமே முக்கிய பாடுபொருள். போர்க்களத்திலும், அரசவைகளிலும் இசைப் பண்புடன் பாடுவது இவர்களது பாணி. ஆனால் புலவர்கள் அறம்-ஒழுக்கம், சமய உணர்வு என்பவற்றினடிப்படையில் சிந்தித்து இலக்கியம் படைப்பவர்கள். இவர்களின் படைப்பில் இசைப் பண்பை விடச் சொற்களின் பொருட் செறிவும் திட்டப்பாங்கும் முதன்மை வகிக்கும். வரலாற்று நிலையில் நோக்கினால் பாணர் முதலியோர் வீரயுகத்திற்கும் புலவர்கள் வீரயுகத்தின் பிற்பகுதிக்கும் உரியவர்களாகக் கருதப்படுகின்றனர். சங்கப் பாடல்களாக அறியப்படுபவை மேற்சுட்டியவாறு புலவர் பாடல்களாகவே எமக்குக் கிட்டியுள்ளன. எனவே இவை எழுத்திலக்கியங்களாக வரி வடிவம் எய்தியவை என்பது உய்த்துணரத்தக்கது.
இவ்வாறு இலக்கியம் படைத்த புலவர்கள் தமக்கு முற்பட்ட பாணர், கூத்தர் முதலியவர்களின் மரபை அடியொற்றிக் கற்பித நிலையில் நின்றும் பாடல் புனைந்துள்ளனர். குறிப்பாக, புறநானூறு 60ம் பாடல் விறலியைக் குறிப்பதால் பாணன் பாடுவதாகக் கொள்ளலாம். ஆனால் இந்தப் பாடல் உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியதாகப் பிற்குறிப்பு கூறுகிறது. எனவே பாணர் மரபை ஒட்டிப் புலவர் பாடியதாக இது கருதப்பட வேண்டும் என்பர் ஜார்ஜ் எல். ஹார்ட் மேலும் ஒளவையார் கோவூர்க்கிழார் பாடல்கள் சிலவும் இசைக் கலைஞர்கள் பாடுவது போலப் பாடப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே சங்கப் பாடல்களில் பாணர், கூத்தர் முதலிய கலைஞர்களின் பாடல்களாக உள்ளன அவ்வக் கலைஞர்களின் மரபை அடியொற்றிய புலவர்களின் ஆக்கங்கள் என்பது உய்த்துணரத் தககது.

Page 17
30 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
இவ்வாறு புலவர்கள் தமக்கு முற்பட்ட பாணர், கூத்தர் முதலியோரின் மரபைப் பின்பற்றி நின்ற படைப்பாக்க நெறியினைக் கைலாசபதியவர்களும் உணர்ந்திருந்தார் என டாக்டர் செ.வை. சண்முகம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்.
புலவர்கள் பின் வீரயுக காலத்தில் சமய உணர்வோடு சிந்தனை மேம்பாட்டை தத்துவ விசாரணை) சிறப்பாகக் கருதினார்கள். இந்தக் காலத்தில் தான் வடமொழிக் கலப்பு ஏற்பட்டது. பிறகு பிராமணர்களும், புலவர்களுமாக இடம் பெற்றார்கள். இவர்கள் பொருநர், கூத்தர் போன்ற கலைஞர்களின் சில மரபினைப் பின்பற்றினார்கள் என்பது அவருடைய (கைலாசபதியவர்களுடைய கருத்தின் சாரம். அதாவது, புலவர்கள் பாணர்களாக, கூத்தர்களாகச் செய்யுள்களைப்பாடி மகிழ்வித்திருக்க வேண்டும். எனவே கைலாசபதியும் இலக்கியச் செய்யுள்கள் புலவர்களால் இயற்றப்பட்டவை என்ற கருத்து உடையவர் என்று கூறலாம். . .
சங்க இலக்கியச் செய்யுட்கள் வாய்மொழிப்
பாடல்கள் அல்ல என்பதைக் கைலாசபதி
உணர்ந்திருந்தார் என்பதே முக்கியம். *
என்பது அவர் தரும் விளக்கம். இவ்விளக்கம் ஏற்புடையதாகவே தெரிகிறது. எவ்வாறாயினும் சங்கப் பாடல்களைச் சமுதாய வரலாற்றடிப் படையில் அணுகி, வாய்மொழி மரபுடன் தொடர்புபடுத்திச் சிந்திக்கும் முயற்சிகளுக்கு முதல் வடிவம் தந்து முன்னோடியாகத் திகழ்ந்தவர் என்ற சிறப்பு கைலாசபதி அவர்களுக்கு உரியதென்பது குறிப்பிடத்தக்கது.
3.2. முதற் காப்பியங்கள் தொடர்பாக . . .
சங்கப் பாடல்கள் எழுந்த காலப் பகுதியை - ஏறத்தாழ கி.பி. 250 வரையான காலப்பகுதியை - அடுத்து மூன்று நூற்றாண்டுக்காலம் பொதுவாக சங்கமருவிய காலம் எனவும் அறிநெறிக் காலம் எனவும் சுட்டப்படும். சமணம், பெளத்தம் ஆகிய மதங்கள் செல்வாக்கும் பெற்றிருந்ததாகக் கருதப்படும். இக்காலப் பகுதியிலேயே திருக்குறள், நாலடியார் முதலிய அறநூல்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய முதற் காப்பியங்களும் எழுந்தன. சமுதாய வரலாற்று நோக்கில் இக்காலப் பகுதியை - குறிப்பாக முதற் காப்பியங்களின் காலப் பகுதியை - வணிக வர்க்க எழுச்சிக்காலமாக கைலாசபதி காண்கிறார். அரச அதிகாரத்தைக்

தமிழர் சமுதாயமும் இலக்கியமும் 31
கூடக் கண்டிக்குமளவு வலுப்பெற்றிருந்த வணிகவர்க்கத்தின் வர்த்தகக் களத்தின் விரிநிலையைப் புலப்படுத்துவனவாகவே சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் அவர் கணிப்பிடுகிறார். இதனை,
"வணிக வர்க்கத்தினர் தமது வியாபாரத் தொழிலுக்குப் பரந்த சந்தையை விரும்புவர். உள் நாட்டு வணிகமும் பிற நாட்டு வணிகமும் அக்காலத்தில் சிறந்திருந்தன எனக் கண்டோம். அதனுடைய பிரதிபலிப்பே மூவேந்தரையும் இணைக்கும்
காப்பிய முயற்சிகளாம்"
எனவும்
"மன்னனை முதலாகக் கொண்டு அதன் மூலமாகத் தமது வர்த்தகச் செயற்பாட்டை நடத்துவரேனும் மன்னனைக் கட்டுப்படுத்தவும் கண்டிக்கவும் தயங்கமாட்டார் என்பதை இரு நூல்களும் காட்டும். சுருங்கக் கூறுவதாயின் அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்' என்னும் கோஷத்திற்குப் பின்னால் வணிகரின் வலிய கரங்களைக் காணலாம்"
எனவும் அவர் தரும் விளக்கங்கள் தெளிவுறுத்துவன. இவ்விளக்கங்கள் சமுதாய இயங்கியல் சார்பானவை.
கைலாசபதி இவ்வாறான கருத்துக்களை முன்வைத்த காலப் பகுதியில் சிலப்பதிகாரத்தைப் பல கோணங்களிலும் நயந்து விதந்து பேசும் அணுகுமுறையே முனைப்பாக நிலவியது. முத்தமிழ்க்காப்பியம், தமிழர் வடவரை வென்ற வரலாற்றுக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், புரட்சிக்காப்பியம், பெண்மையின் பெருமை பேசும் காப்பியம் என்றெல்லாம் ஆய்வாளர்களும் இலக்கியவாதிகளும் எழுதியும் பேசியும் வந்தனர். இவ்வாறான பார்வைகள் சமகால அரசியல் சார்புடைய தற்குறிப்பேற்றத்
தன்மை வாய்ந்தன என்பது கைலாசபதியின் விமர்சனம்"
3.3. பக்தி இயக்கம், சித்தாந்தம், சித்தர் சிந்தனைகள்.
பல்லவர் காலப் பக்தி இயக்க சூழல் தொடர்பாக, கைலாசபதி காலம் வரை இரு முக்கிய கருத்து நிலைகளே நிலவிவந்தன. ஒன்று, தொல் தமிழரின் தூய - தனித்தன்மை வாய்ந்த - பண்பாட்டுக் கூறுகளில் ஆரியச் செல்வாக்கு வலுவாகப் படியத் தொடங்கி விட்ட காலச் சூழலாக அதனைக் கொள்வது. இது திராவிட - தமிழ் இன - உணர்வெழுச்சிக் கூடான தரிசனம் ஆகும். இன்னொன்று, சமணர், பெளத்தர் ஆகியோரின் செல்வாக்கைச் சைவமும், வைணவமும், வீழ்த்தி வென்றதாகக் காணும் நிலை. இது

Page 18
32 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
வைதிக - பெளராணிக மரபுசார் தரிசனம் ஆகும். மேற்படி இரு நிலைப் பார்வைகளும் பக்தி இயக்கத்தின் புறநிலைத் தோற்றத்தைக் கருத்திற் கொண்டவையாகும். கைலாசபதி அவர்கள் மேற்படி இயக்கத்தின் அகநிலையை நுனித்து நோக்கியவர். அவ்வகையில் அவரது பார்வை பக்தி இயக்கத்தை - வணிக வர்க்கத்தின் உயர் நிலைக்கு எதிரான நிலவுடைமை வர்க்கத்தின் எழுச்சியாகக் கண்டது. பெரிதும் சமணச் சார்புடையதாகத் திகழ்ந்த வணிக வர்க்கத்தினருக்கு எதிராக, சிவ வழிபாட்டை முன்னிறுத்தி வேளாளர்களும் பிராமணர்களும் மற்றும் பல்வேறு சாதிப்பிரிவுகளைச் சார்ந்தோரும் மேற்கொண்ட செயற்பாடுகளையே நாயன்மார் பற்றிய வரலாற்றுக் கதைகள் குறித்து நிற்பதாக அவர் கருதினார். அவரது "நாடும் நாயன்மாரும்" என்ற கட்டுரை நூல் : பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்) இதனைத் தெளிவுபடுத்தும்.
மேலும் மேற்படி பக்தி இயக்கத்தை வழிநடத்துவதில் தத்துவ நிலை, மொழியுணர்வு என்பன வகித்த பங்கையும் அவர் தெளிவாக இனங்காட்டியுள்ளார். குறிப்பாக வினைப் பயன் தொடர்பாகச் சமணம் பேணி நின்ற சிந்தனைக்கும் 'சைவ-வைணவ பக்தி மரபில் நிலவிய சிந்தனைக்குமிடையிலான வேறுபாட்டை எடுத்துக் காட்டி, பின்னைய சிந்தனை பக்தி இயக்க எழுச்சிக்குத் துணை நின்றவற்றைத் தெளிவுறுத்தியுள்ளார். சமணத்திலே வினைப் பயன் அனுபவித்துக் கழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும் ஒருவர் செய்யும் வினையில் அவரது மனம் ஈடுபடாதிருப்பினும் அவ்வினைப் பயன் அவரை வந்தடையும் என்பது சமணரின் நிலைப்பாடு. சைவம், வைணவம் என்பன முன் வைத்த பக்தி மரபுகளில் இக்கருத்துநிலைகள் மறுக்கப்படுகின்றன. வினைப் பயனுக்கு மேம்பட்டதாக இறையருளை இவை முன் வைக்கின்றன. எத்தகு கொடுஞ்செயல் புரிந்தாலும் இறைவனிடம் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குவதன் மூலம் உயர்நிலை எய்தலாம் என இவை பேசுகின்றன. மேலும் ஒருவன் செய்யும் வினையில் அவனது மனம் ஈடுபட்டிராவிட்டால் அதன்பயன் அவனைப் பாதிக்காது என்ற கருத்தையும் இவை முன் வைத்துள்ளன. பக்தியுணர்வு மக்களியக்கமாக வடிவம் கொள்வதற்கு உந்து சக்தியாயமைந்த முக்கிய கூறுகளாக இக்கருத்து நிலைகள் அமைந்தன. கைலாசபதி இவற்றை தெளிவாக எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். *
மேற்படி பக்தி இயக்கச் செயற்பாட்டிலே தமிழோடிசை பாடல்' என்ற வகையில் தமிழுணர்வும் முக்கிய பங்கு வகித்துள்ளது. இது தொடர்பாக்க் கைலாசபதியவர்கள் தரும் விளக்கம் வருமாறு :
"புறச் சமயத்தவருக்கு எதிராகக் கலகக் கொடியை உயர்த்திப் பிரச்சார முழக்கஞ்செய்த அரனடியாரும், ஆழ்வாரும்

தமிழர் சமுதாயமும் இலக்கியமும் 33
தமிழகமெங்கும். தமிழுணர்ச்சியையும் தமிழ் நிலப்பற்றையும் பெருக்கினர். தமிழரல்லரான பல்லவர் ஆட்சி புரிந்ததுவும் வடமொழி, பிராகிருதம் முதலிய பிறமொழிகள் அம்மன்னரால் உயர்த்தப்பட்டதுவும் பல்லவர் காலத்திலே தமிழ் நாட்டிலே ஒருவிதமான தேசிய உணர்வு தோன்றக்
காரணமாக இருந்தன எனக் கொள்ளலாம்"
இவ்வாறு பல்லவர் காலப் பக்தி இயக்கச் சூழலை விளக்கிச் செல்லும் கைலாசபதியவர்கள், அடுத்து அமைந்த சோழப் பெரு மன்னர் காலத்தை வேளாள வர்க்கம் உயர்நிலை எய்தியிருந்த காலமாகக் காண்கிறார். அக்காலப் பகுதியில் தமிழிலே நிறைவடிவம் எய்தியிருந்த சைவ சித்தாந்தத் தத்துவத்தைச் சோழப் பேரரசின் சமூக-அரசியல் கட்டமைப்புடன் தொடர்பு படுத்தி நோக்கி இரண்டின் பொதுமைகளை இனங்காட்ட முற்படுகிறார். இதனூடாக சமூக-அரசியல் கட்டமைப்புக்கும் கருத்தியலுக்கும் உள்ள உறவைத் தெளிவுறுத்துகிறார். அவரது "பேரரசும் பெருந்தத்துவமும்" என்ற கட்டுரையில் நூல் : பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்) இவற்றை நோக்கலாம்.
"சோழர் காலத்திலே காணப்பட்ட சமுதாய அமைப்பும் அரசியல் முறையும் வாழ்க்கை ஒழுங்கும் சிந்தாந்தம் காட்டும் இறைவனில் -சிவனில் - பதியில் - தமது சாயலைப் பொறித்துள்ளன என்று நாம் நிரூபிக்க முடியுமாயின் பேரரசுக்கும் பெருந்தத்துவத்திற்குமுள்ள தொடர்பு மேலும் தெளிவாகும்" " எனக் கூறும் அவர் அவ்வாறான நிரூபணத்திற்காக சான்றாதாரங்களை முன் வைக்கிறார், குறிப்பாக மக்கள் தலைவனாக அன்றைய பேரரசன் திகழ்ந்த நிலைக்கும் ஆன்மாக்களின் தலைவனாக - பதியாக - சிவன் சிந்தாந்தத்தில் பேசப்படும் நிலைக்குமான பொதுமையைச் சுட்டி, பேரரசனுக்கு அத்தத்துவம் துணை நின்றவற்றை உணர்த்துகிறார்.
"தலைவனுடைய இயல்பே உடைமையும்ஆற்றலும் அறிவும் இன்பமும் உடையவனாயிருத்தல் என்று சித்தாந்த சாத்திரங்கள் விதிக்கும் பொழுது தலைமைப் பதவியிலிருந்து சமயச் சார்புடன் ஆட்சி புரிந்தவர்களுக்கு அச்சாத்திரத் தத்துவங்கள் தோன்றாத் துணையாக இருந்தன" 15 என்பது அவர் தரும் விளக்கம்.
இவ்வாறாக பக்தி இயக்கம் பற்றியும் சைவ சிந்தாந்தத்திற்கும் சோழப் பேரரசுக்கும் இருந்த உறவுநிலை பற்றியும் அவர் முன்வைத்த சிந்தனைகள்

Page 19
34 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
மேற்படி கட்டுரைகள் எழுதப்பட்ட காலத்தில் - 1960களில் - முற்றிலும் புரட்சிகரமானவையாக அமைந்தன. குறிப்பாகச் 8F) உணர்வுடையவர்களால் இலகுவில் ஏற்றுக் கொள்ள முடியாதனவாகவும் இருந்தன. ஆனால் கடந்த முப்பதாண்டுக் காலப் பகுதியில் இவ்வாறான பார்வை ஆய்வுலகில் வலுப்பெற்று நிலை பெற்று விட்டது. சைவ சித்தாந்தத்தைச் சோழப் பேரரசின் 'சமூக-அரசியல் கட்டமைப்புடன் தொடர்புறுத்தி நோக்கும் அவரது அணுகுமுறையானது அத்தத்துவம் சோழர் காலத்தில் நிறை நிலை எய்தியது என்ற வகையில் நிலவிவந்த பொதுக் கருத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். ஆனால் இன்றைய ஆய்வியல் வளர்ச்சியில் மேற்படி தத்துவம் அக்காலப் பகுதிக்கு முன்பே, கி.பி. 8-9-ம் நூற்றாண்டுகளில் தனக்குரிய அமைப்பை எய்திவிட்டது. என்பது தெரிய வருகிறது. கி.பி. 8-9-ம் நூற்றாண்டினரான சத்திய ஜோதி சிவாசாரியாரின் வடமொழி நூலாக்கங்களில் சைவ சிந்தாந்தத்தின் அமைப்பு புலப்பட்டு நிற்பதை சோ. கிருஷ்ணராஜா அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார். “ எனவே அத்தத்துவத்தைச் சோழப் பேரரசுக் கால சமூக - அரசியல் கட்டமைப்புடன் மட்டும் பொருத்தி நோக்கும் தேவை இன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,
"சைவ சித்தாந்தம் ஓர் அரசு தத்துவம் ஒரு வர்க்கத்தின் மேலாதிக்கக் கருவி என்பன மட்டுமல்ல, அது ஓர் உயராதிக்க சாதியின் தத்துவமும் ஆகும்" " என கோ. கேசவன் தந்துள்ள கணிப்பு சைவ சித்தாந்தம் பற்றிய பார்வை இன்னும் விரிவான தளத்தில் அமைய வேண்டிய ஒன்று என்பதை உணர்த்தும்.
தமிழிலக்கியப் பரப்பிலே ஒரு குறிப்பிட்ட பகுதி சித்தர் பாடல்கள். சிவவாக்கியர், பட்டிணத்தார் முதலிய பலரின் பாடல்களின் தொகுப்பு நிலை இது. சித்தர்களைப் பொதுவாக ஆன்மீகவாதிகளாகவும் சடங்காசாரங்களை எதிர்க்கும் சீர்திருத்த சிந்தனையாளர்களாகவுமே பார்க்கும் மனப்பாங்கே கைலாசபதி காலம்வரை நிலவி வந்தது. கைலாசபதி தமது சமூகவியல் மற்றும் ஒப்பியல் அணுகுமுறைகளினூடாக சித்தர்களின் சிந்தனைகளுக்குப் புதிய விளக்கம் தந்தார். தமிழில் மரபாகப் பேணப்பட்டு வரும் எண்ணப்பாங்குகளுக்கு எதிர்நிலையில் சிந்திப்பவர்களாக - எதிர் மரபுச் சிந்தனையாளர்களாக -அவர்களை இனங்கண்டார். பண்டைய தமிழரின் - இந்தியரின் - அறிவியல் சார் பார்வைகள் மற்றும் பொருள் முதல்வாத உணர்வோட்டங்கள் அவர்களிடம் பயின்றுள்ளன என்பதைக் கண்டுகாட்டினார். மேலும் இச் சித்தர் சிந்தனைகளைச் சீனாவின் தாஒ

தமிழர் சமுதாயமும் இலக்கியமும் 35
யிசத்துடன் ஒப்பிட்டார். இவ்வாறாக சித்தர்கள் பற்றி அவர் முன்வைத்துள்ள கருத்துக்களைச் 'சித்தர் தத்துவம்" என்ற கட்டுரை நூல் : ஒப்பியல் இலக்கியம்) யில் கண்டு தெளியலாம். 3.4 சமுதாய மாற்றமும் நவீன இலக்கியச் சூழலும்
கைலாசபதியின் ஆய்வுச் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க பெரும்பகுதியின நவீன இலக்கியம் சார்ந்தவையாகும். இவ்வகையில் தமிழில் நவீனத்துவத்துக்கு வழிசமைத்த மகாகவி பாரதி பற்றியும் நவீன தமிழிலக்கிய வகைகளின் இயல்பு தகுதி என்பன பற்றியும் கைலாசபதி கொண்டிருந்த கருத்துக்கள் அடுத்து வரும் இயல்களில் நோக்கப்பட வுள்ளன. இங்கு, நவீன தமிழிலக்கியத்தின் தோற்றத்திற்கு அடிப்படையாகச் சமுதாய நிலையில் நிகழ்ந்துவந்த மாற்றம் தொடர்பாகக் கைலாசபதி முன் வைத்துள்ள கருத்துக்கள் மட்டும் நமது கவனத்துக்குரியனவாகின்றன.
இலக்கிய வரலாற்று நிலையில் நவீன தமிழிலக்கியம் பற்றிப் பேசுபவர்கள் அவ்வகை இலக்கிய வடிவங்களின் இயல்புகளைச் சுட்டி, அவற்றுட் சிறந்தவை எனக் கருதும் படைப்புக்களின் தரங்களை நயந்துரைப்பதே கைலாசபதி காலம் வரை நிலவி வந்த பொதுவான ஆய்வு நெறியாகும். கைலாசபதி இந்தப் பொதுப்போக்கினின்று விலகி அவ்விலக்கிய வடிவங்கள் தமிழில் அறிமுகமாவதற்கு அல்லது தோற்றம் பெறுவதற்குச் சாதகமாக அமைந்திருந்த சமுதாய வரலாற்றுச் சூழலை இனங்காட்ட முற்பட்டுள்ளார்.
18,19-ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர் - குறிப்பாக ஆங்கிலேயர்இந்திய மண்ணில் ஆதிக்கம் செலுத்திய சூழலில் அம்மண்ணின் பாரம்பரியமான நிலவுடைமைச் சமூக அமைப்பு தளர்வடையத் தொடங்கியது முதலாளியம், நடுத்தரவர்க்கம் என்பன உருப்பெற்றன. இவ்வாறான சமூக மாற்றமே நவீன தமிழிலக்கியங்கள் தோன்றி வளர்வதற்கான அடிப்படைக் காரணி என்பது கைலாசபதியின் கருத்தாகும்.
"இருவகையில் ஆங்கிலேயராட்சி புதியதொரு சமூகம் தோன்றக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தியது. ஒன்று, ஆங்கிலக் கல்வியின் பயனாய் உடலுழைப்பற்ற மதிப்பான துரைத்தன உத்தியோகம் பெற்று வசதியுடன் வாழும் வாய்ப்பு சில இந்தியருக்கு கிட்டியது. இரண்டாவது, ஆங்கிலேயரது "பொருளாதாரச் சுரண்டல் முறையைப் பின்பற்றிச் சில இந்தியர்கள் முற்றிலும் புதிய வகையான உழைப்புக்குத் தம்மைத் தகுதியாக்கியும் தேவையான பொறியியல்

Page 20
36 W தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
அறிவைப் பெற்றும் கைத் தொழில் முறையில் முன்னேறும் வாய்ப்பைக் கண்டனர். இவ்விரண்டு வகைப் போக்கின் தருக்கரீதியான வளர்ச்சியே இந்தியப் புத்தி ஜீவிகளும் இந்தியப் பூர்ஷ்வாக்களுமாவர்" ? இவ்வாறான சூழலிலே பாரம்பரியமான மனித உறவு முறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன. கூட்டுக் குடும்ப முறைமை சிதைவுறத் தொடங்கியது. தனி மனிதன், பொதுசனம் முதலிய கருத்தாக்கங்கள் உருவாயின. பொது சனத் தொடர்பு சாதனங்கள் புதுவகை உறவுகளையும் தொடர்புகளையும் உருவாக்கின. மேலைப்புலக் கல்வித் தொடர்பால் அறிமுகமான பார்வைகள் இந்திய மண்ணின் சிந்தனை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை விளைவித்தன. பழைமை பேணுதல், புதுமை தழுவுதல், சமரசங்காணல் என்பனவாக பலநிலை உணர்வோட்டங்கள் முகிழ்த்தன. 18-19 ஆம் நூற்றாண்டுகளில் இந்திய மண்ணில் நிகழ்ந்து வந்த இத்தகு சமூக உறவு நிலை மாற்றங்கள் மற்றும் புதிய உணர்வுநிலைகள் என்பவற்றின் தொடர் விளைவாகவே நவீன இலக்கிய வகைகளின் தோற்றத்தை கைலாசபதி இனங் காண்கிறார். அவரது தமிழ் நாவல் இலக்கியம் மற்றும் பல கட்டுரைகள் என்பவற்றில் அவர் புலப்படுத்தியுள்ள கருத்துக்களின் சாராம்சம் இதுதான்.
இவ்வாறு நவீன இலக்கியங்கள் தமிழில் உருவான சூழல் பற்றி விளக்கம் தந்து நின்ற கைலாசபதி குறிப்பாக நாவலின் சமூகத் தளம் தொடர்பாக முன் வைத்துள்ள கருத்தொன்றை இங்கு கவனத்திற் கொள்வது பொருத்தமாக அமையும். நாவலை அதன் நடை - உரைநடை - யை மட்டும் கருத்திற் கொண்டு ‘வசன காவியம்' எனச் சுட்டும் மரபொன்று நிலவி வந்தது. தமிழின் முதல் நாவலாசிரியராகக் கொள்ளப்படும் மாயூரம் ச. வேதநாயகம் பிள்ளை அவர்கள் தமது கதாபாத்திரமான ஞானாம்பாள் கூற்றாக,
"நம்முடைய சுயபாஷைகளில் வசனகாவியங்கள் இல்லாமலி ருக்கிறவரையில் இத்தேசம் சரியான சீர்திருத்தம் அடையாதென்பது நிச்சயம்" " என ‘வசன காவியம்' என்ற தொடரைப் பயன்படுத்தியுள்ளமை இத்தொடர்பில் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நாவலை வசனகாவியமாகப் பார்க்கும் முறைமையைக் கைலாசபதி ஒப்புக் கொள்ளவில்லை. நாவலைக் காவியத்தினின்று வேறுபடுத்துவது அதன் நடை மட்டுமல்ல என்றும் உள்ளடக்கம், சமூகத்தனம் ஆகிய நிலைகளிலும் நாவல் காவியத்தினின்னும் வேறுபடுகின்றது என்றும் அவர் கூறுகிறார்.

தமிழர் சமுதாயமும் இலக்கியமும் 37
காவியத்தையும் நாவலையும் வேறுபடுத்துவது உரைநடை ஒன்று மட்டுமே என்பது எவ்வாற்றானும் ஏற்படைத்தன்று" * “காவியம் நாவலில்நின்றும் வேறுபடுவது பொருளடக்கத்தாலும் ஆகும். பொருள் வேறுபாடே முக்கியமானது என்று கூடக் கூறுதல் ஏற்புடைத்தாகும் . . காவியம் தோன்றும் சமுதாயச் சூழலமைவு வேறு நாவல் தோன்றும் சமுதாய அமைப்பு வேறு"*"
இவ்வாறு குறிப்பிட்டுச் செல்லும் அவர் காவியத்தை நிலவுடைமைச்
சமுதாயத்தின் கருத்தியல்தளம் சார்ந்ததாகவும் நாவலை முதலாளியச் சமுதாயத்தின் யதார்த்தத் தளத்தின் பிரசவமாகவும் இனங்காட்டுகிறார். தமிழ் நாவல் இலக்கியம் நூலின் முதலாம் இயலான "காவியமும் நாவலும்" உணர்த்தும் தொனிப்பொருள் இது.
குறிப்புகள்
Α
2
、矛
தகவல் - திசு நடராசன் திறனாய்வுச்சலை, நியூ செஞ்சரி புச் ஹவுள்
4 %es) , 6%réz76zr 6296 Z á Z
கைவசதி திட்/பியன் இலக்கியம் ப7Aவைடம் சென்னை 1962 பர் 4
MTcLcLATS ELTTLATTT TAAATLTS MLATLTALA MATATALALATTS ASAT TMML0AAAAS
മില്ക്കു7 % Zക്സ്. 90-9Z
K. Kailasapathy. Tamil Heroic Poetry, Clarendon Press, Oxford
1968. pp. 26-27, 31-34, 135-186
கதிர் மகாதேவன், திப்பிலக்கிய ரோச்சின் சங்க சாலம் 2ம் பதி
மதுரை காமர7ச7 பல்கலைக்கழகம் மதுரை 197
செவை சண்முகம் மொழி வளர்ச்சியும் மொழி உணர்வும் சங்க
ക7യമ) മണ്ണി/കff Zക്രി//&4, 6ിഞ്ഞ്ഞബ് 1999 Zക. 70-72 @žø7ø76 av ØE. 67762/. Førgøászó gye/7 Føř Kamil V. Zvelebil, George, L. Hart lll, 62s. Øy. V7. zářewzza#7 ažøøvø777, S7, #ayøeszóz TM2 தாசெமர7மன் ஆகிய ஆய்வான7களின் கருத்துக்களைச் கவனத்திற் கொண்டு மேற்படி கருத்து நிலையை விளக்கியுள்ள7ர்
7 تر نیو برz Zھz Aن22zھ ۔۔ کینیجو 4/77
کوثر نمبر4 م%//ثربڑھ
க கைவசதி பண்டைத் தமிழர் வழிவும் வழிபாதிம் பக் 45-46
A Løé Z4ڑچڑھتی
க. சைவ/சடதி "சிவட்டதிகாரச் செய்திகள்" அடியும் முடியும் ப77 திவைமம்
ിബ് ബ0
க கைலாசபதி பண்டைத்தமிழர் வழிவும் வழிபாதிக் பக் 7-22
7 نومبر 4 ,2%// زبر z2
کی تھیٹر / ہ///تھZZ2
மேற்படி பக் 793

Page 21
38 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
கிருஷ்ணராஜ7 ‘ീമZകബ്z- சாஸ்திரங்களுக்கு முற்பட்ட //توبر 2/
കെഖകീഴ്ക്/മീഴ്ത്ത4 - ക്ര4 ജൂ/ക്രി കിഖ///ിഞ്ഞ് 2 ഒൿ ര7്ക്ര’ ‘’ பண்டிதமண? ஞாபகார்த்தச் சொர்பொழிவு, யாழ்ப்பாணம் 1793
/Z -۶۶z٪ Ag 7یی
7 கோகேசவன் பாரதிமுதல் கைலாசபதிவரை அகரம் கும்பகோணம் 1998 டக் 96
% F. Gmasav,7FZ462 Z/zveo ஆ4வுசன் 2ம் ட்தி நியூ செஞ்சரி புச் ஹவுன்
4ിമ്ന/' ബി.). ിമ്ന ിZ Zക്സ് 2്
19 ச. வேதநாயகம் பின்னை பிரதாப முதலியார் சரித்திரம், சக்தி
6ിഖണുീ% 6ിബ് അീ Zക്സ് 7
2 க. கைலாசபதி தமிழ் சாவன் சிலச்சியம், ப77 நிலையம், சென்னை
8966? ZA ŽŽ
2ീ ീഗ്ഗ Zക്സ് 7ീ

4 பாரதி பற்றி . . .
விெ கிலாசபதியின் ஆய்வுகளில் ஒரு முக்கிய பகுதியாக அமைபவை வரலாற்றை வழிநடத்திய சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் மற்றும் ஆய்வாளக்ாள் ஆகியோர் மீது அவர் முன்வைத்த மதிப்பீடுகளாகும். பூநீலபூரீ ஆறுமுக நாவலர், பெ. சுந்தரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணி பாரதி, மறைமலையடிகள், க.நா. சுப்பிரமணியம் முதலிய பலர் கைலாசபதியின் மதிப்பீடுகளுக்கு உட்பட்டனர். கைலாசபதி தமது சமகாலப் படைப்பாளிகள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு வழங்கியுள்ள முன்னுரை, அணிந்துரை முதலியவற்றிலும் அவரது மதிப்பீட்டுப் பண்பையும் பார்வையையும் கண்டுணரலாம்.
மேற்குறித்த பலரில் கைலாசபதியின் பார்வையில் தனிக் கவனத்தைப் பெற்றவர் என்ற சிறப்பு மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு உரியது. பாரதி பற்றிக் கைலாசபதி தனது ஆய்வுக்காலம் முழுவதும் கவனம் செலுத்தி வந்துள்ளார். பாரதி பற்றிய சிந்தனை வளர்ச்சிக்கு கைலாசபதியின் எழுத்துக்கள் மிக முக்கிய பங்களிப்புச் செய்துள்ளன. பாரதியின் வரலாற்றுப் பாத்திரத்தை மாக்சிய அறிஞர் பிளகானவ் குறிப்பிடும் "மகாபுருஷ' இலக்கணத்துடன் பொருத்திக் காட்டியவர் கைலாசபதி என்பது இத்தொடர்பில் நாம் மனங்கொள்ள வேண்டிய ஒன்றாகும். இவ்வகையில் பாரதி பற்றிக் கைலாசபதி அவர்கள் மேற்கொண்ட ஆய்வுச் செயற்பாடுகள் அனைத்தையும் தொகுத்து நோக்குவதாக இவ்வியல் அமைகின்றது.
பாரதி பற்றிக் கைலாசபதி முன் வைத்த பார்வையை நோக்குக் 烹 முதற்கண் பாரதி பற்றிய பார்வையில் தமிழகம்-இந்தியா-சார்ந்தோருக்ழ் ஈழத்தவர்க்கும் இடையிலான முக்கிய வேறுபாடெர்ன்ல்ற

Page 22
40 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
இனங்காட்டுவதோடு பாரதி தொடர்பான முழுநிலை ஆய்வில் அணுகுமுறைக்கு ஈழம் முன்னோடியாகத் திகழ்ந்து வந்துள்ளமை பற்றிய வரலாற்றுக் குறிப்பொன்றை முன்வைப்பதும் அவசியமாகிறது.
41. பாரதி பற்றிய பார்வையில் ஈழம்
பாரதி பற்றிய தமிழகத்தவர் - இந்தியர் - பார்வையிலே, அவர் ஒரு பார்ப்பனர் என்பது கவனத்துக்குரிய அம்சமாகத் திகழ்ந்து வந்துள்ளது. இந்நிலை ஈழத்தில் இல்லை. ஈழத்தவர் பார்வையில் அவர் ஒரு பார்ப்பனராக அல்லாமல் இலக்கியப் படைப்பாளியாக மட்டுமே தெரிகிறார். இதனைக் கைலாசபதியவர்கள் தமது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பாரதி தொடர்பான ஆய்வுச் சிந்தனைகள் அவரது சமகாலத்திலேயே தமிழகத்தில் உருவாகத் தொடங்கி விட்டன. வ.வே.சு. ஐயர், ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் முறையே சுதேசமித்திரன், நியூ இந்தியா இதழ்களில் எழுதிய கட்டுரைகள் * இவ்வகையில் வரலாற்று முக்கியத்துவமுடையவை. இவர்களது பார்வையில் பாரதியின் ஆளுமையின் நவீனத்துவ சார்பு தேசிய உணர்வோட்டம் என்பனவே கவனத்திற் கொள்ளப்பட்டன. பாரதிப் பாடல்களை முழுமையாக நோக்கி, தமிழிலக்கிய மரபு, இந்து மதபாரம்பரியம் என்பவற்றின் பகைப்புலத்தில் அவற்றை மதிப்பிடும் முயற்சியை முதன் முதலில் மேற்கொண்டவர் என்ற சிறப்பு ஈழத்தவரான சுவாமி விபுலா நந்தருக்கு உரியது. விவேகானந்தன் என்ற இதழில் 1925-26 காலப் பகுதியில் இவர் பாரதி பற்றி எழுதியவை 3 இவ்வகையில் வரலாற்று முக்கியத்துவமுடையனவாகும்.
விபுலாநந்தர் பாரதி சிந்தனைகளைப் பலநிலைகளிற் பரப்பியவர்: தாம் பேராசிரியராகப் பணிபுரிந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ust DS spasib (Bharathi Study Circle) GT6örp 960LDJGou 1932-6) தோற்றுவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விபுலாநந்தரால் முன்னெடுக்கப்பட்ட பாரதி ஆய்வுச்சிந்தனைகளை, அவரது மாணவ மரபினரும் அடுத்த தலைமுறை சார்ந்தவருமான கைலாசபதியவர்கள் தமது காலச் சிந்தனைச் சூழலுக்கு ஏற்ப புதியதொரு பரிமாணத்துக்கு இட்டு வந்தார்.
4.2. பாரதியியலும் கைலாசபதியும்
கைலாசபதியவர்கள் தாம் 1950களில் பல்கலைக்கழக மாணவனாகப் பயின்ற காலம் முதல் 1982 டிசம்பரில் இறுதி மூச்சுவிடும் காலம் வரை பாரதி பற்றிச் சிந்தித்தும் உரையாற்றியும் எழுதியும் வந்துள்ளார். இவ்வகையில் அவரது முதலாவது எழுத்தாக்கம் "பாரதியார் பழைமையும்

பாரதி பற்றி - 41
g560LDub" GT6örp g5606) LL6T (Ceylon University Magazine, Sept. 1955) செப்டம்பர் 1955 பருவ இதழில் வெளியாயிற்று. 1982-ல் எஸ். திருச்செல்வம் என்பார் எழுதிய மகாகவி பாரதி என்ற சிறு நூலுக்கு மரணப் படுக்கையிலி ருந்தவாறே அளித்த முன்னுரையுடன் அவரது பாரதி சிந்தனை நிறைவு பெற்றது. இந்த இடைப்பட்டகாலப்பகுதியில் ஏறத்தாழ 30 கட்டுரைகள் வரை இவரால் பாரதி தொடர்பாக எழுதப்பட்டுள்ளன. இரு மகாகவிகள் என்பது தனி நூலாக எழுதப்பட்டதாகும். கட்டுரைகளிற் பெரும்பாலானவை ஒப்பியல் இலக்கியம், பாரதி ஆய்வுகள் ஆகிய நூல்களில் தொகுப்பு நிலை எய்தியுள்ளன.
இவற்றை ஆதாரமாகக் கொண்டு "பாரதியியலுக்குக் கைலாசபதியின் பங்களிப்பு" என்ற தலைப்பிலே ஆய்வொன்றும் நிகழ்ந்துள்ளது. இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. செ. யோகராசா அவர்களால் எழுதப்பட்ட இந்த ஆய்வுக்கட்டுரை பாரதியார் தொடர்பாக கைலாசபதி காலம் வரை தமிழகத்தில் நிலவி வந்த சிந்தனைகளை வகைப்படுத்தி நோக்கி, அவற்றினின்று கைலாசபதியவர்களின் பார்வை, அணுகுமுறை என்பன எவ்வெவ் வகைகளில் ஆழமும் அகலமும் கொண்டதாயிற்று என்பதைத் தெளிவுறுத்துவதாக அமைந்துள்ளது. கைலாசபதி நோக்கில் பாரதிய்ைத் தரிசிக்க விழைவோர்க்கு மிகு பயன் தரவல்ல ஆக்கம் இது.
பாரதி தொடர்பாக, கைலாசபதி காலம் வரை நிகழ்ந்துள்ள பார்வைகள் பாரதியை மட்டும் மையப்படுத்தி அவரது தத்துவ நிலை, சமூகப் பார்வை, கவித்திறன் என்பவற்றை இனங்காணும் முயற்சிகளாக அமைந்தன. இதனை செ. யோகராசா அவர்கள் பின் வருமாறு வகைப்படுத்துவர். *
அ. வேதாந்த நெறிக்கு அழுத்தம் கொடுத்தல் ஆ தேசிய நோக்குக்கு அழுத்தம் கொடுத்தல் இ. சமூக சீர்திருத்த நோக்குக்கு அழுத்தம் கொடுத்தல் ஈ. பொதுவுடைமைக் கருத்துக்களுக்கு அழுத்தம் கொடுத்தல் உ. மகாகவி' யாகக் காணல் ஊ. கவிதை ரசனைக்கு முதன்மை கொடுத்தல் இவ்வாறான பார்வைகளிலிருந்து கைலாசபதியவர்கள் வேறுபட்டு நிற்பது, பாரதியை அவரது வரலாற்றுச் சூழலுடன் தொடர்புபடுத்தி நோக்கி அவரது ஆளுமையின் தனித் தன்மைகளை இனங்கண்டு காட்டும் பார்வையினாலாகும். பாரதியை அவரது வரலாற்றுச் சூழலில் வைத்து மார்க்சிய அணுகுமுறையுடன் ஆராய வேண்டும் என்பதை அவர்

Page 23
42 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
குறிக்கோளாகவே கொண்டிருந்தார். இவ்வகையில் கைலாசபதியவர்களின் பார்வைத் தடங்களை யோகராசா அவர்கள் பின் வருமாறு இனங்காண்கிறார்.
அ. பாரதியின் ஊற்றுக்களை நோக்குதல்
ஆ. பாரதி பாடல்களிலும் சிந்தனைகளிலும் புலப்படும் வளர்ச்சி, மாற்றம் என்பவற்றை ஆராய்தல்
இ. பாரதியின் தனித்தன்மை மேதாவிலாசம் என்பவற்றை
ஆராய்தல்
ஈ. கவிதையுலகில் பாரதி நிகழ்த்தியுள்ள -தாக்கங்களை
இனங்கானல். '
பாரதியின் ஊற்றுக்கண்களைத் தேடும் முயற்சியில், கைலாசபதி பாரதியின் சமகாலத்திலும் அதற்கு முன்பும் தமிழகம், இந்தியா, மேற்குலக நாடுகள் ஆகியவற்றில் வாழ்ந்த அறிஞர்கள், சிந்தனையாளர்கள், கவிஞர்கள் ஆகியவர்களின் எண்ணம், செயல் என்பன பாரதியின் ஆளுமையுருவாக்கத்தில் எத்தகு பங்கு வகித்தன என்பதை இனங்கண்டு காட்ட முற்பட்டார்; ஒப்புநோக்கிலே பாரதி அவர்கள் மேற்குறித்தவர்களிலி ருந்து எவ்வெவ் அம்சங்களில் வேறுபட்டு நின்றார் என்பதையும் எடுத்துக் காட்டவும் முனைந்தார். இவ்வகையில் தஞ்சை வேதநாயக சாஸ்திரியார், கோபாலகிருஷ்ண பாரதியார், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார், இராமலிங்க சுவாமிகள், பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை, பங்கிம் சந்திரர், இரவீந்தரநாத தாகூர், வால்ட் விட்மன், ஷெல்லி, பைரன் முதலியவர்களுடன் பாரதி ஒப்பு நோக்கப்பட்டுள்ளார்.
சிந்துக்குத் தந்தை ° பாரதியின் கண்ணன் பாட்டு * பாரதிக்கு முன், “ பாரதியும் மேனாட்டுக் கவிஞரும் " முதலிய கட்டுரைகளும் இரு மகாகவிகள் என்ற நூலும் மேற்படி ஊற்றுக்கண் நாடும் முயற்சியின் முக்கிய வெளிப்பாடுகளாகும். பாரதியை வங்கக் கவிஞர் இரவீந்திரநாத தாகூருடன் ஒப்பு நோக்கி அமைந்ததான இரு மகாகவிகள் நூல் இவ்வகையில் குறிப்பிடத்தக்க தனி முதன்மையுடையது. இதில் அனைத்திந்திய அரசியல், சமூகம், பொருளியல், சமயம் முதலிய தளங்களில் மேற்படி இரு மகா கவிகளும் பொருத்தி நோக்கப்பட்டனர். இவ்வகையில் இந்நூல் முதல் முயற்சி என்ற பெருமைக்கு உரியது. 1962-ல் வெளி வந்த இந்த நூலுக்கு பின்னரே (1966-ல் தமிழகத்தில் தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் கங்கையும் காவிரியும் என்ற தாகூர் -பாரதி ஒப்புநோக்கு நூலை வெளியிட்டார் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

பாரதி பற்றி . . . 43
பாரதியின் ஊற்றுக்கண்களைத் தேடும் முயற்சியில் மற்றொரு நோக்கு நிலையாக கைலாசபதியவர்களின் பாரதியும் வேதமரபும்' என்ற கட்டுரை அமைந்துள்ளது. நவீன இந்து மத இயக்கங்களான பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் என்பன எந்த அளவுக்கு பாரதியின் மீது செல்வாக்குச் செலுத்தியுள்ளனவென்பதை இது ஆராய்கிறது. ஆரிய சமாஜத்தின் செல்வாக்கே பாரதியிடம் மிகுந்து காணப்படுகின்றதென்பது கைலாசபதியவர்களால் முன் வைக்கப்பட்ட முடிவாகும். இக்கருத்தை பின் நாளில் பாரதி ஆய்வாளர் பெசுமணி அவர்கள் மறுத்துள்ளார்? இங்கு குறிப்பிடத்தக்கது. பாரதி காலத்தில் பிற நவீன இயக்கங்கள் அளவுக்கு ஆரிய சமாஜம் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை என்பதும் ஆரிய சமாஜம் பிறமதங்கள் தொடர்பாகக் கொண்டிருந்த நோக்கு, அணுகுமுறை என்பன பாரதிக்கு உடன்பாடானவை அல்ல என்பதும் பெ.சு.மணி அவர்களின் மறுப்புரையின் உட்கிடையாகும்.
என்பதும்
'பாரதியார் பழமையும் புதுமையும்," "பாரதி வகுத்த தனிப் பாதை 18 ஆகிய கட்டுரைகளிலே பாரதியாரின் சிந்தனைகளிலும் படைப்பாற்றலிலும் நிகழ்ந்துள்ள வளர்ச்சி, மாற்றம் என்பன கைலாச பதியவர்களால் நுனித்து நோக்கப்பட்டுள்ளன. தொடக்கத்திலே ஆங்கில சொனற் பாவகையைத் தமிழிலே மரபு சார்ந்த அகவற்பாவில் கையாண்ட பாரதி விரைவிலே மக்கட் சார்புடைய சிந்துயாப்புக்கு எவ்வாறு மாறினார் என்பதை மேற்படி இரண்டாவது கட்டுரை விளக்கியுள்ளது.
பாரதியின் தனித்தன்மை, மேதாவிலாசம் என்பன தொடர்பாகக் கைலாசபதி சிந்தித்தவற்றை, 'பாரதியும் யுக மாற்றமும்', 'பாரதி செய்த புரட்சி '. 'பாரதி கண்ட இயக்கவியல் 18 ஆகிய கட்டுரைகளில் கண்டு தெளியலாம். பழைமை, புதுமை ஆகிய இரண்டிலும் நல்லனவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றைச் சாத்தியமாக்க வேண்டும் என்ற வகையில் பாரதி கொண்டிருந்த உணர்வே அவரது மேதாவிலாசத்தின் முக்கிய அடிப்படை என்பதை இக்கட்டுரைகளில் கைலாசபதி தெளிவுபடுத்தியுள்ளார்.
பாரதி கவிதையுலகில் நிகழ்த்தியுள்ள தாக்கம் தொடர்பாகக் கைலாசபதி சிந்தித்தவற்றை, இலங்கை கண்ட பாரதி “ ஈழத்துத் தமிழ்க் கவிதையில் பாரதியின் தாக்கம் * ஆகிய கட்டுரைகளில் நோக்கலாம். குறிப்பாக, ஈழத்துத் தமிழ்ப் புலவர் மரபு பண்டைய 'பிரபந்தநெறி யினின்று விடுபடுவதற்கு பாரதி எந்த அளவுக்குக் காரணமாயினார் என்பதை மேற்படி இரண்டாவது கட்டுரை சுட்டியுணர்த்துகிறது.

Page 24
44 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
4.2.1. "மகாபுருஷனாக பாரதி
மேலே நோக்கியவாறான கைலாசபதியின், பாரதி தொடர்பான எழுத்தாக்கங்களின் பரப்பைத் தொகுத்து நோக்கும்போது பாரதியின் வரலாற்றுப் பாத்திரத்தை உரியவாறு இனங் காண்பதில் ஏறத்தாழக் கால் நூற்றாண்டுக்கு மேலாகக் கைலாசபதியவர்கள் காட்டி வந்துள்ள பேரார்வம் தெளிவாகப் புலப்படுகின்றது. இவ்வகையிலே அவர் தம் வாழ்வின் இறுதிக் காலத்தில் - 1980களின் தொடக்க ஆண்டுகளில் - பாரதியின் வரலாற்றுப் பாத்திரம் தொடர்பாகக் கொண்டிருந்த கணிப்பை நாம் மேலே நோக்கிய அவரது 'பாரதி கண்ட இயக்கவியல்' என்ற கட்டுரை சிறப்பாகத் தெளிவுறுத்தி நிற்கிறது. அதிலே, ‘வரலாற்றில் தனிநபர் வசிக்கும் பாத்திரம் தொடர்பாக மார்க்சிய அறிஞர் பிளெகானவ் அவர்கள் முன் வைத்த சிந்தனைகளைச் சுட்டி விளக்கிய கைலாசபதியவர்கள், பிளெகானவ்வால் 'மகாபுருஷன்' பற்றி முன் வைக்கப்பட்ட வரை விலக்கணங்களுக்கு பாரதியின் பண்புகள் பொருந்தியமைறமாற்றைச் சுட்டியுணர்த்துகிறார்.
"கறாராகச் சொன்னால் மகாபுருஷன் எனப்படுபவன் துவக்கி வைப்பவன்தான். ஏனெனில் மற்றவர்களைவிடஅவன் அதிகதூரம் பார்க்கிறான். மற்றவர்களைவிட அவன் விஷயங்களை அதிக ஆர்வத்துடன் விரும்புகிறான். சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியின் முந்திய நோக்கினால் முன் வைக்கப்படுகிற விஞ்ஞானப் பிரச்சினைகளுக்கு அவன் விடையளிக்கிறான். சமுதாய உறவுகளின் முந்திய வளர்ச்சியால் சிருஷ்டிக்கப்பட்ட புதிய சமுதாயத் தேவைகளை அவன் சுட்டிக் காட்டுகிறான் . . "' பிளெகானவ் கருத்தாக கைலாசபதி எடுத்துக்காட்டும் முக்கிய மேற்கோள் இவ்வாறு செல்கிறது. இதனோடு பாரதியைப் பொருத்தி நோக்கிக் கைலாசபதி முன் வைக்கும் மதிப்பீடு வருமாறு :
"பாரதியைப் பொறுத்த வரையில் இது சிறப்பாகப் பொருந்தும். பொதுவில் தேசிய முதலாளித்துவ வளர்ச்சியையே அவன் தவிர்க்க முடியாதபடி பிரதிபலிக்கிறான். சுரேந்திரநாத் பானர்ஜி, திலகர் முதலிய அவனது வழிகாட்டிகள் அதனையே பிரதிபலித்தனர், செயல்பட்டனர். ஆனால் மற்றவர்களைவிட அதிக தூரம் பார்க்கிறவன் என்ற வகையில் முதலாளித்துவத்திற்கும் அப்பால் சோசலிச புரட்சியையும், வரலாற்றைப் ப.ை க்கம் பிரம்மாக்களான தொழிலாளர்

பாரதி பற்றி . . 45
களையும் இனங்கண்டு பாட அவனால் முடிந்தது. செல்வத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க முடிந்தது. முதலாளித்துவத்தையே மறுதலிக்கும் எதிர்ச்சக்தியையும் ஓரளவிற்கு எண்ணிப் பார்க்க முடிந்தது. அதைப்போலவே ராம்மோகன் ராயர், விவேகானந்தர், திலகர், அரவிந்தர், காந்தியடிகள் முதலியோரையெல்லாம் விமர்சிக்கும் திறனையும் துணிவையும் பெற்றிருந்தான். சீர்திருத்தங் களையும் சமூக மாற்றங்களையும், மற்றவர்களை விட அதிக ஆர்வத்துடன் விரும்பியவர் என்ற வகையில் தனது வழி காட்டிகளாகவும், முன்னோடிகளாகவும், மூத்தசகபாடி களாகவும் விளங்கியவர்கள் தயங்கி நின்ற படிகளைத் தாண்டி அவன் அடியெடுத்து வைத்தான். அதைப் போலவே பழைய பண்டிதர்களின் தமிழிலக்கிய இலக்கண அறிவைப் போற்றித் தலை வணங்கிய அதேவேளையில், 'அன்மொழித் தொகை பற்றிய வாதப் பிரதிவாதங்களிலும் பார்க்க நெல் விளைச்சல் பற்றிய ஆராய்ச்சி அதிக பயனுடையது' என்று அடக்கத்துடன் அறிவுரை கூற அவனால் முடிந்தது, 22
இவ்வாறு பாரதியை, பிளெகானவ் சுட்டும் "மகா புருஷ" னாக இனங்கண்டு காட்டியுள்ள கைலாசபதி, அத்தகு தகுதிப்பாடு பாரதியிடம் அமைந்திருந்தமைக்கான முக்கிய காரணி, வரலாற்று ஓட்டத்தைப் பற்றி அவருக்கு இருந்த ஞானம்' என்கிறார்.
"காலத்தின் தேவைகளை அறிவாலும் உள்ளுணர்வாலும் தனதாக்கிக் கொண்டமையே இவரின் வெற்றிக்குக்
காரணம்" 23
என்பது கைலாசபதியின் கணிப்பு 42.2. பாரதி பற்றிய பார்வையில் புதிய பரிமாணம்
மேலே நோக்கியவாறாக, பாரதி பற்றிக் கைலாசபதி செலுத்தி நின்ற பார்வை, மேற்கொண்ட அணுகுமுறை, முன் வைத்துள்ள மதிப்பீடுகள் என்பன பாரதி ஆய்விலே புதிய பரிமாணங்கள் ஏற்பட வழி வகுத்தன; பாரதியின் ஆளுமை தொடர்பான புதிய தரிசனங்களுக்கு வழி அமைத்தன. இது தொடர்பாக தமிழக ஆய்வுலகம் கொண்டிருந்த கணிப்புக்கும் சான்றாக டாக்டர் பா. ஆனந்தகுமார் என்பாரின் பின்வரும் கூற்றை நோக்கலாம்.
"மார்க்சியத் திறனாய்வு அடிப்படையில் வரலாறு, சமூகவியல், உளவியல், அழகியல், தத்துவம் முதலிய துறைகளின்

Page 25
46 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
துணைகொண்டு நின்று பாரதியைத் தமிழ் ஆராய்ச்சியுலகிற்கு அறிமுகப்படுத்தியதில் கைலாசபதிக்குக் கணிசமான பங்குண்டு. தமிழகத்தின் இடதுசாரி இலக்கிய முகாமினர் ஜீவா முதல் நவபாரதி வரை பாரதியை இலக்கிய இயக்க ரீதியாக மனிதநேய மிக்க மகாகவியாக நிறுவி வந்தனர். இவர்களது பங்களிப்பை ஆய்வுலகில் அறிவியல் பூர்வமான இலக்கியக் கொள்கை அடிப்படையில் செய்தவர் கைலாசபதி. இவருக்கு முந்திய பாரதி ஆய்வுகள், விவாதங்கள் பெரும்பாலும் உள்முரண்பாடு கொண்டவராகப் பாரதியைக் கண்டன. அதாவது பாரதியின் கவிதைகளில் விஞ்சி நிற்பது ‘தேசியமே-தெய்வீகமே, பழமையே-புதுமையே' எனப் பட்டிமன்றத் தலைப்புக்கள் போலப் பாரதியின் கருத்துக்களைப் பிரித்துக் கண்டன. வேறுபட்ட அந்த அம்சங்களில் உட்தொடர்புகளை ஆழமாகக் காணவில்லை. கைலாசபதி பாரதியைச் சரித்திரச் சூழலில் வைத்து அவரிடம் காணப்படும் முரண்பட்ட அம்சங்களுக்கிடையிலான ஒருமையைக் கண்டறிந்துள்ளார்”* பாரதி பற்றிய ஆய்விலே கைலாசபதி மேற்கொண்ட முக்கிய செயற்பாடுகளில் அடுத்துக் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான ஒன்று அவர் பாரதியியல் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பங்களிப்பாகும். (பாரதி தொடர்பான ஆய்வுகளைப் பாரதியியல் என்ற தொடராற் சுட்டும் முறைமை கைலாசபதியாலேயே முதல் முதலில் கையாளப்பட்டது என்ற கருத்து ஆய்வுலகில் நிலவுகிறது* என்பது இத்தொடர்பில் நமது கவனத்துக் குரியது). பாரதி ஆக்கங்களுக்கு செப்பமான - மூலபாடத்திறனாய்வு முறைமையில் அமைந்த பதிப்புக்கள் வெளிக் கொணரப்பட வேண்டும் என விழைந்தவர் அவர். இதற்கு அடியெடுத்துக் கொடுக்கும் வகையில் அவரால் எழுதப்பட்டதே பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும் என்ற சிறுநூல்.
கைலாசபதியவர்கள் தம் இறுதி நாட்களில் பாரதி தொடர்பாக மூன்று முக்கிய ஆய்வுரைகளை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்தார் அவை :
அ. பாரதி - ஊற்றுக்களும் ஓட்டங்களும் ஆ. பாரதி - தாக்கங்களும் தரிசனங்களும் இ. பாரதியும் மறுமலர்ச்சிக் கோட்பாடும் - மறுமதிப்பீடு ?? இவற்றுள் முதலாவது ஆய்வுரை மட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 1982 பிப்ரவரியில் நிகழ்த்தப்பட்டது. இதற்கு நூல் வடிவம்

பாரதி பற்றி . . . 47 தருவதற்கும் ஏனைய இரு உரைகளையும் நிகழ்த்துவதற்கும் முன்பாக அவரைக் காலம் பறித்துக் கொண்டது.
கைலாசபதியின் பாரதி ஆய்வுகள் பாரதி பற்றிய புதிய தரிசனங்களைத் தந்ததோடமையாமல் பாரதி காலச் சூழலின் குறிப்பாக 20-ம் நூற்றாண்டுத் தொடக்கச் சூழலின் - இலக்கிய வரலாற்றின் மீது புதிய ஒளி பாய்ச்சுவனவாகவும் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. له
குறிப்புகள் 2 க கைலாசபதி பாரதி ஆய்வுசன் 2ம் பதிநி/ செஞ்சுரி புச் ஹவுஸ் பிரைவேட் வி
Zി z). 6ിജ്ഞങ്ങ് ീ Zക്സ് ♫ 2 வவேசு ஐயர் தமிழ்" சதேசமித்தின் 92-94 2றுமவர்ச்சி"சதேசமித்திரன்
அநுபந்தம் 94 பக் 24 67.62 afz 22/zoaw?z/ gu/7 "National Songs of Subramanya Bharati" Ne W lIndia 1919. (G6%sø67 Øszfaluz/azý7ezóevev/ z'/zz67 %2'si7z7z Vareør இவ்விருவரின் மேற்படி கட்டுரைகள் பற்றிய தகவல்களைத் தந்தவர் அறிஞர் டெசு மண?அவர்கள் வி/வாதத்தர் "ஆசிரியர் உள்ளக்கிடக்கை" விவேகானந்தன் نوe//zzجی جی 25 ஆவண7 இதழ் (கொமும்/ இதில் பாரதியின் இந்து மதம் பற்றிய //7வை கவனத்தைப் பெற்றது 7/திாடல்" விவேகானந்தன் 26ஆன? புரட்டாசி - ஐப்பசி இத்ழ் கொமும்/இதில் தமிழ் மர7%னுடாக ட/தி அணுகப்பட்டுள்ள7ர் 4 செ. யோகராச7 //தியியலுக்கு கைலாசபதியின் பங்கனி/” /ன்முச ஆய்வில் சைலாசபதி இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் 4/க்ஸ் வெளியீடு 6ിബീബ് 1992 Zā; /-ീ
قبر7 تھیA 4 ,%2//تھzثر بھی 2 கைவசடதி பாரதி ஆய்வுரை பக் 192 7 செ மே/கர7ச7 மேற்குறித்த கட்டுரை மேதூ டக் /4 சி-2இக்கட்டுரைகள் கை/ைசடதியின் பாரதி ஆய்வுகள் நூலில் இடம் 2ெற்றுள்ளன 00S AT TSALATS TATTAA 0LAMMALAT AAALLAAAAA AALLAAAALATATTAS ATTMT00 0A ATATS
ിബ് ബ്ലേ Zā 2ീ2%8 42இக்கட்டுரைகள் கைலாசபதியின் பாரதி ஆய்வுகள் நூலில் இடம் பெற்றுன்னன کیسے ترمیم کے نیو برZ // زبروڑ) کیلئے 2 மேற்படி, பக் 297 23 மேற்படி, பக் 22 24 ட/ ஆனந்தகும7ர் கைலாசடதி //7வையில் பாரதி” தாமரை, டபிடம் 1992 சென்னை
z Aes 63-62
25 க கைவசடதியின் பாரதி ஆ47வுகள் நூலின் பதி/ரை பக் 4

Page 26
48 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
2 இவற்றுள் முதல7வது ஆய்வுரையை நேரடியாகவே செவியுறும் வரம்பு எனக்குச் கிட்டியது 2வது ஆய்வுரைத்திட்டம் பற்றிய தகவல் /ெக மணியவர்களின் மேற்குறித்த நூலின் 2972 ஆம் பக்கங்களில் இடம் பெற்றுள்ளது 3வது ஆயவுரைத் திட்டம் பற்றிய தகவல் செ பேரகர7சாவின் மேற்குறித்த கட்டுரையில் (பன்முக ஆய்வின் கைலாசபதிநூலின் பக் 29இல் இடம் பெற்றுள்ளது

5
திறனாய்வியற் சிந்தனைகள்
கைலாசபதியின் ஆளுமையின் முக்கிய கூறு அவருடைய திறனாய்வுப் புலமையாகும். நவீன தமிழிலக்கிய உலகிலே ஒரு திறனாய்வாளர் என்ற நிலையிலேயே அவர் பெரிதும் கணிக்கப்பட்டுள்ளார். அவருடைய பல்வகை ஆய்வுச் செயற்பாடுகளிலும் முனைப்பாகப் புலப்பட்டு நின்றது அவருடைய திறனாய்வுக் கண்ணோட்டமாகும். அவர் தாம் சார்ந்து நின்ற மார்க்சியத் தளம், அதன் சமூகவியல்சார் திறனாய்வு அணுகுமுறை என்பவற்றினூடாகத் தமிழிலக்கியப் பரப்பு முழுவதையும் தரிசித்து ஆய்வு முடிபுகளை முன் வைத்தார் என்பதனை முன்னைய இயல்களில் நோக்கியுள்ளோம். இவ்வாறாக, தமது ஆய்வுகளில் திறனாய்வுப் புலமையைப் புலப்படுத்தி நின்ற அவர் திறனாய்வியல் சார்ந்த - கொள்கை விளக்க நிலையிலான இரு நூல்களை - (கவிதை நயம், இலக்கியமும் திறனாய்வும்) எழுதியவர்; மேலும் சமகால இலக்கியச் செல்நெறி, இலக்கிய வகைகள் மற்றும் இலக்கியப் பிரச்சினைகள் என்பன தொடர்பாக திறனாய்வுக் குறிப்புக்கள், கோட்பாட்டு விளக்கங்கள், மதிப்பீடுகள் முதலி யவற்றைத் தம் கட்டுரைகள் பலவற்றில் முன் வைத்தவர். சமகாலப் படைப்பாளிகள் பலருக்கு அவர் வழங்கிய முன்னுரை, அணிந்துரை முதலி யவற்றில் அவருடைய திறனாய்வுச் செயன்முறையின் முக்கிய பண்புகளை இனங்காணலாம். இவ்வாறு பல்வகை எழுத்துக்களூடாகவும் அவர் புலப்படுத்தி நின்ற திறனாய்வுச் சிந்தனைகள் தொகுத்து நோக்கப்பட வேண்டியன. இவ்வகையில் அவர் தம் திறனாய்வியல் நூல்களில் புலப்படுத்தியுள்ள சிந்தனைகள் இவ்வியலில் நமது கவனத்துக் குரியவாகின்றன.

Page 27
50 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
51. கவிதை நயம்
கைலாசபதி, இ. முருகையனோடு இணைந்து எழுதிய கவிதை நயம் (1970) என்ற நூல் இலக்கியப் பரப்பிலே கவிதை என்ற குறித்த ஒரு வகையை மட்டும் மையப்படுத்தி அமைந்ததாகும். கவிதை பற்றிப் பேசுபவர்கள் பொதுவாக அதன் வடிவநிலை - வெளிப்பாட்டு நிலை - பற்றியும் அதனால் வாசகனில் நிகழும் உணர்வுத் தாக்கம் பற்றியும் விரித்துரைப்பதே வழக்கமாகும். கவிதையின் உயிர்நாடியான கூறு அதன் உணர்ச்சி என்பதே, பொதுவாக நிலவி வந்துள்ள கருத்தாகும். 'உணர்ச்சிக்கு மட்டுமல்ல அறிவுக்கும் கவிதையில் இடம் உளது என்பது இந்நூலில் கைலாசபதி, முருகையன் இருவராலும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த கவிதையில் உணர்ச்சி, அறிவு ஆகிய இரண்டும் முரண்பாடின்றி ஒருங்கிணைந்திருக்கும் என்பது இவர்களது கருத்தாகும். கவிதைக்கு ஒலி நயம் முக்கியம் என்பதும் இந்நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கவிதையை அதன் வடிவநிலையைக் கருத்திற்கொண்டு மதிப்பிடுவது தொடக்கநிலை மதிப்பீடே என்றும் முதிர்நிலை மதிப்பீட்டிலே வடிவநிலை, உரிப்பொருளான உள்ளடக்கம் ஆகிய இரண்டுமே திறனாய்வுக்குரியனவாகின்றன என்றும் இந்நூல் கூறுகின்றது. "கவிதையின் கருத்துக்களை மதிப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு, ஆழ்ந்த அறிவும் அனுபவமும் சிந்தனைத் தெளிவும் வேண்டும். கவிதை நயப்பு என்று பொதுவாகக் கூறும்போது, கருத்துத் தவிர்ந்த பிற அம்சங்களின் மதிப்பீடே அநேகமாக இடம் பெறுகின்றது. ஆரம்ப நிலையிலே அது அப்படியும் தான் அமைதல் வேண்டும்.
முதிர்ந்த நிலையில் கவிதையின் வடிவமைப்பும் உரிப்பொருளும் ஒருங்கே திறனாய்வுக்கு உரியனவே. கவிதையின் வடிவமைப்பு அதன் உடல் ஆயின் உரிப்பெருளே அதன் உயிர் உயிரில்லாத உடல் பிரேதம் உடல் இல்லாத உயிர் பிசாசு கவிதை பிரேதமும் அன்று: பிசாசும் அன்று. ஆரோக்கியமாக உயிருடன் நடமாடும் அவயவி, கவிதை. அந்த அவயவியின் மகோன்னதத்தைக் கண்டுணர்வதே திறனாய்வின் தேறிய நற்பலனாம்" கவிதைநயம் நூலின் தேறலாக அமைந்த கருத்து இது எனலாம். 52. இலக்கியமும் திறனாய்வும்
இலக்கியமும் திறனாய்வும் (1972) என்ற நூல் கைலாசபதி நிகழ்த்திய கருத்தரங்க உரைகளின் தொகுப்பாகும். ஆசிரிய கலாசாலை மாணவர்களை முன்னிலைப்படுத்தி அமைந்த இக்கருத்தரங்க உரைகள் மொழியும்

திறனாய்வியற் சிந்தனைகள் 51
இலக்கியமும், இலக்கியமும் கோட்பாடுகளும், திறனாய்வுக் கொள்கைகள் ஆகிய மூன்று தலைப்புக்களில் நிகழ்த்தப்பட்டவையாகும். வரதர் வெளியீடாக யாழ்ப்பாணத்தில் முதலில் நூலுருப்பெற்ற இவ்வாக்கம் பின்நாளில் தமிழகப் பதிப்புக்களில் தற்காலத் தமிழிலக்கியத் திறனாய்வுப் போக்குகள் பற்றிப் பேசுவதாகவும் விரிவு பெற்றது.
இலக்கியக் கல்வியானது அகநிலை சார்ந்த "தூய" இரசனையாகவோ அன்றேல் பதவுரை, பொழிப்புரை, கதைக் குறிப்பு விளக்கம் முதலிய நிலைகளிலான போதனையாகவோ மட்டும் நிறைவு பெறுவதில்லை. அது மொழித்திறனோடமைந்த முறையான பயிற்சியின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு செயன் முறையும் ஆகும் என்பது இந்நூலின் முதலாமியல் வலியுறுத்தும் முக்கிய செய்தி. மொழித் திறன் தொடர்பான அறிவு, இன்பநுகர்ச்சி, வாழ்க்கை பற்றியும் உலகு பற்றியும் ஏற்படும் புதுவிளக்கம் முதலிய பயன்பாடுகள் இலக்கியக் கல்வியின் பெறுபேறுகள் என்பதும் இதில் சுட்டப்படுகின்றது. மேலும், சூழல் சார் காரணிகளுக்கும் இலக்கியப் படைப்புக்கும் உள்ள உறவுநிலை அறிவுபூர்வமாக நோக்கப்பட வேண்டும். எனவும் நவீன அறிவியலுக்கு முரணற்ற வகையில் இலக்கியக் கல்வி வளர்த்தெடுக்கப்பட வேண்டும் எனவும் இவ்வியல் பேசுகின்றது. s
5.2.1. புதுத்திறனாய்வின் வழி . . .
இவ்வாறு இலக்கியக் கல்வியானது முறையான பயிற்சியுடனும் அறிவுபூர்வமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற இக்கருத்துநிலை யானது மேலைத் தேய புதுத் திறனாய்வு (New Criticism) க் கோட்பாடுகள் வழிவந்த ஒரு சிந்தனையாகும். இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் - 1920, 30 களில் - பிரித்தானியாவில் தோற்றம் பெற்றுப் பின்னர் அமெரிக்காவில் பெருவளர்ச்சி எய்திய புதுத்திறனாய்வுக் கோட்பாடுகள் இலக்கியப் படைப்பை முற்றிலும் தன்னிறைவான ஒரு மொழிசார் கட்டமைப்பாகக் கொள்வன ஆசிரியனது நோக்கம் மற்றும் வாழ்வியல் அநுபவங்கள, வாசகனிடத்து நிகழக் கூடிய உணர்வு நிலைத் தாக்கங்கள் ஆகிய சார்புநிலைகளூடாக இலக்கியப் படைப்பு தரிசிக்கப்படும் முறைமைகளை மறுத்து, அப்படைப்பானது தன்னளவிலேயே தன்னியக்கமுள்ளதாக - தானே தன் பொருள் விளக்கத்தைத் தந்து நிற்பதாகத் தரிசிப்பது புதுத் திறனாய்வுக் கோட்பாடுகள் பலவற்றின் பொது நிலையாகும். இவ்வாறு தன்னளவில் முழுமையான இலக்கியம்' பற்றிய ஆய்வில், ஊகங்கள், அனுமானங்கள் என்பவற்றை விடுத்து அறிவுபூர்வமான அணுகு முறைகளை மேற்கொள்வதே பொருத்தமான செயன்முறை என அவை

Page 28
52 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
சுட்டுகின்றன? ரி.எஸ். எலியட், ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ், ஜான் குரோ ரான்சம், கிளெந்த் புரூக்ஸ், ஆஸ்டின் வாரன், விம்ஸாற். ரெனி வெல்லாக் முதலிய பலரின் சிந்தனைகளில் முகிழ்த்து, பல கிளைகளாக விரிவு பெற்ற மேற்படி புதுத்திறனாய்வுச் சிந்தனைகளைக் கற்றறிந்த கைலாசபதி அவற்றின் தளத்தில் நின்றே இலக்கியக் கல்வியில் அறிவுபூர்வமான அணுகுமுறை குறித்துத் தமிழிற் பேசுகிறார்.
கைலாசபதிக்கு முன்பே புதுத் திறனாய்வாளர்களின் சிந்தனைகள் தமிழில் அறிமுகமாகத் தொடங்கி விட்டன. மு. வரதராசன், அச ஞானசம்பந்தன் ஆகியோரின் இலக்கியத் திறன், இலக்கியக் கலை ஆகியனவும் இவ்வகையில் வெளிவந்த வேறு சில நூல்களும் ரி.எஸ். எலியட், ஐஏ. ரிச்சர்ட்ஸ் முதலிய புதுத் திறனாய்வாளர்களின் சிந்தனைகளை மேற்கோள்களாகத் தாங்கி உருப்பெற்றவையாகும். புதுத் திறனாய்வாளர் களான ரெனிவெல்லாக், ஆஸ்டின் வாரன் ஆகியோரின் Theory of Literature என்ற ஆங்கில நூல் இலக்கியக் கொள்கை என்ற தலைப்பில் தமிழாக்கமாக 1967 இல் வெளிவந்தமையும் இத்தொடர்பில் நமது கவனத்துக் குரியது.
புதுத் திறனாய்வுச் சிந்தனைகள் மு. வரதராசன், அச. ஞானசம்பந்தன் முதலியவர்களின் நூலாக்கங்களில் பதிவாகியுள்ள முறைமைக்கும் கைலாசபதி இலக்கியமும் திறனாய்வும் நூலில் அவற்றைப் பேச வந்துள்ள முறைமைக்கும் வேறுபாடுகள் உள. முன்னையவற்றில் இலக்கியத்தின் இயல்பு, கட்டமைப்பு, சுவை முதலியன தொடர்பாகப் பொதுநிலையில் விளக்கம் தரும் நோக்கில் அவை பயன்பட்டன. தமிழாக்க நூலான இலக்கியக் கொள்கையும் இப்பணியையே சிறப்புற நிகழ்த்தியது. கைலாசபதி மேற்படி பொதுநிலை விளக்க முயற்சிக்கு அப்பால் தமிழிலக்கியப் பரப்பு முழுவதையும் கொள்கைநிலையில் வகைப்படுத்தி நோக்கமுற்பட்டவர். ஒவ்வொருவகை ஆக்கங்களுக்கும் உரிய இலக்கியக் கொள்கை, திறனாய்வுக் கொள்கை என்பவற்றை இனங்கண்டு காட்டுவது அவரது நோக்காக அமைந்தது. அதற்கு ஏற்றவகையில் புதுத்திறனாய்வுச் சிந்தனைகளில் பொருத்தமானவற்றை எடுத்து, அவற்றைத் தமிழிலக்கியப் பரப்பிற் பொருத்திக்காட்ட அவர் முயன்றுள்ளார். இதனை இந்நூலின் இரண்டாம் மூன்றாம் இயல்கள் உறுதி செய்கின்றன.
5.2.2. இலக்கியக் கொள்கைகள்
இந்நூலின் இரண்டாம் இயல் இலக்கியக் கொள்கைகள் பற்றிப் பேசுவது அவற்றைப் பற்றிப் பேசுவதற்கு முதற்கண் சமகாலத்தில் வழக்கி லிருந்து வரும் பொருந்தாப் பார்வைகள் மறுக்கப்படுகின்றன. விம்ஸாற்.

திறனாய்வியற் சிந்தனைகள் 53
ரெனி வெல்லாக் ஆகியவர்கள் இம்மறுப்புக்குத் துணை கொள்ளப்படுகிறார்கள். ஒரு படைப்பை அதைப் படைத்த ஆசிரியனது நோக்கத்தை முன்வைத்து அணுகமுற்படுவது உள்நோக்கப் போலி நியாயம் (intentional Falacy) எனவும் அப்படைப்பு வாசகனில் நிகழ்த்தக்கூடிய உணர்வுத் தாக்கத்தைக் கருத்திற் கொண்டு அணுக முற்படுதல் மகிழ்ச்சி தருகின்ற போலி நியாயம் (Affective Falacy) எனவும் சுட்டப்பட்டு அவற்றின் பொருந்தாமை தெளிவுறுத்தப்படுகின்றது. இவற்றுள் முதலாவது அணுகுமுறை இலக்கியத்தின் காரணிகளை ஆராய்கிறது. பின்னது அதன் விளைவை ஆராய்கிறது. ஆனால் இரண்டுமே நேரடியாக இலக்கியத்தை மையப்படுத்திக் கவனம் செலுத்தத் தடையாகி விடுகின்றன என்பதே இங்கு முன் வைக்கப்படும் வாதமாகும்.
இவ்வாறு விளக்கிச் செல்லும் இவ்வியல், அடுத்து இலக்கியங்களை விதிமுறைப்பயிற்சி, உளப் பயிற்சி என்பவற்றோடு அணுக வேண்டும் எனவும் வெவ்வேறு இலக்கிய வகைகளை - குறிப்பாகக் கவிதை வகைகளை - அவ்வவற்றின் சிறப்புக் கூறுகளினடிப்படையில், குழந்தைப் பாடல், நாட்டுப் பாடல், கதைப் பாடல், தனிப்பாடல், காவியம் முதலியனவாக வகைப்படுத்தி நோக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறது. அடுத்து, ஆய்வுலகில் வழக்கிலுள்ள இலக்கியக் கொள்கைகளனைத்தையும் ஐந்து முக்கிய வகைகளில் அடக்கலாம் எனச்சுட்டி, அவற்றை அறிமுகம் செய்வதோடு தமிழிலக்கிய வரலாற்றுக் கட்டங்களோடு அவற்றைப் பொருத்திக் காட்டுகிறது. அவை !
அ. அவயவிக் கொள்கை
ஆ. அறவியற் கொள்கை
இ. உணர்ச்சிக் கொள்கை
ஈ. அழகியற் கொள்கை
உ. சமுதாயக் கொள்கை
அவயவிக் கொள்கை என்பது ஒரு இலக்கிய ஆக்கமானது பல்வேறு கூறுகளின்-அவயவங்களின்-முரணற்ற கூட்டுருவாக்கம் எனச் சுட்டுவது. பாடுவோர்-கேட்போர், பொருள்-வடிவம், அறிவு உணர்ச்சி, அழகு-பயன்பாடு, இலட்சியம்-நடைமுறை, உண்மை-கற்பனை முதலி யவற்றுக்கிடையில் முரண்பாடற்ற நிலையே இதன் சிறப்பியல்பாகும். தமிழ் மரபில், தொல்காப்பியச் செய்யுளியல் முதல் நூற்பாவுக்கு பேராசிரியர் தரும் உரை விளக்கம் அவயவிக் கொள்கையின் சாரமாக உள்ளதாக கைலாசபதி கருதுகிறார். சங்கச் சான்றோர் செய்யுள்களில் இக்கொள்கையின் முழுமையான செயற்பாட்டைக் காணலாம் என்வும் அவர் குறிப்பிடுவர்.

Page 29
54 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
அறவியற் கொள்கை இலக்கிய ஆக்கத்தில் அதன் உள்ளடக்கமாகிய
பொருளை - பொருள் புலப்படுத்தி நிற்கும் செய்தியை - முதன்மைபு. படுத்துவது. இதில், குறித்த ஒரு கருத்தை - அறத்தை - ப் போதிப்பதே
இலக்கியத்தின் நோக்கமாக அமைகின்றது. தமிழில் சங்கச் செய்யுட்களை அடுத்து எழுந்த பதினென் கீழ்க்கணக்கு நூல்களிற் பெரும்பாலானவை இக்கொள்கை சார்ந்தன எனக் கைலாசபதி குறிப்பிடுகிறார்.
உணர்ச்சிக் கொள்கை என்பது இலக்கியத்தின் பொருளிலும் பார்க்க அது தொடர்பான உணர்ச்சிக்கு முதன்மை அளிப்பது. பல்லவர் காலம், சோழர் காலம் ஆகியவற்றில் எழுந்த பக்தி இலக்கியங்களை இக்கொள்கை சார்ந்தவனவாகச் சுட்டும் கைலாசபதியவர்கள் இக்கொள்கை சில நூற்றாண்டுகள் அடங்கியிருந்து பின்னர் இந்த 20-ந் நூற்றாண்டில் மீண்டும் செல்வாக்குச் செலுத்த தொடங்கியுள்ளது என்கிறார்.
உணர்ச்சிக் கொள்கையுடன் நெருங்கிய தொடர்புடையதான அழகியற் கொள்கை இலக்கிய ஆக்கத்தில் உருவத்துக்கு முக்கியத்துவமளிப்பது அவ்வகையில் 'கலை கலைக்காகவே என்ற கருத்து நிலையின் அடித்தளமாக அமைவது அழகியற்கொள்கை. தமிழிலே காவியங்கள் உருவாகத் தொடங்கிய கால முதல் - குறிப்பாக அலங்காரம் இலக்கிய ஆக்கத்திற் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கிய கால முதல் - இக்கொள்கை வெவ்வேறு வகையிலும் அளவிலும் செயற்பட்டு வந்துள்ளது என்பர் கைலாசபதி,
சமுதாயக் கொள்கை என்பது சமுதாயத்தை அதன் மெய்ம்மை குன்றாமல் இலக்கியத்தில் படைத்துக் காட்டுதல் என்ற நோக்குடையது. அறம், உணர்ச்சி, அழகு என்னும் கூறுகளாக மனித அனுபவத்தைப் பாகுபடுத்தாமல் சமுதாயத்தை அதன் முழு நிலையில் தரிசிக்க வைப்பதாக இலக்கியம் அமைய வேண்டும் என்பது இதன் அடிப்படை தமிழ் மரபிலே, சங்க காலத்தின் பின்னர் - அவயவிக் கொள்கை வழக்கிழந்த பின்னர் - தமிழர் சமுதாயமும் சமுதாய உணர்வும் உருச் சிதைந்த நிலையிலேயே இலக்கியங்களில் இடம் பெற்றன எனக்கூறும் கைலாசபதியவர்கள், அவ்வாறு இழந்த மெய்ம்மையை மீட்டெடுப்பதே சமுதாயக் கொள்கையின் குறிக்கோள் என்கிறார். இக்கொள்கை கலை இலக்கியங்களில் வெளிப்படும் நிலையே யதார்த்த வாதம் என வழங்கப்படும் என்றும் அவர் சுட்டுகிறார். கடந்த நூற்றாண்டின் இறுதியில் தமிழில் உருவாகத் தொடங்கிய நாவலிலக்கியம் மற்றும் இந்த நூற்றாண்டின் தமிழ்ச் சிறு கதைகள், பாரதியின் கவிதை முதலியவற்றில் சமுதாயக் கொள்கையின் செல்வாக்கையும் பொருள் விளக்கத்தையும் கண்டுணரலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

திறனாய்வியற் சிந்தனைகள் 55
5:23,திறனாய்வுக் கொள்கைகள்
திறனாய்வுக் கொள்கைகள் என்ற தலைப்பில் அமைந்த உரைப்
பகுதியிலே, மேனாட்டுத் திறனாய்வு வரலாற்றாசிரியர்கள் - குறிப்பாக மேயர் ஏபிரம்ஸ் (Meyer Abrams)- கருத்தை அடியொற்றி நால்வகைத் திறனாய்வு அணுகுமுறைகள் பற்றிக் கைலாசபதி பேசுகிறார். அவை :
அ. அநுகரணக் கொள்கை
ஆ பயன்வழிக் கொள்கை
இ. வெளிப்பாட்டுக் கொள்கை
ஈ. புறநிலைக் கொள்கை
அநுகரணம் என்பது போலச் செய்வது எனப் பொருள்படும். வாழ்க்கையின் பிரதிபலிப்பாக - சமூக மெய்ம்மையின் பிரதிபலிப்பாக இலக்கியம் அமைந்துள்ளதா என்பதை நோக்கி மதிப்பிடும் அணுகு முறை இது படைப்புக்கும் அதற்குக் களமாகவுள்ள புறவுலகுக்குமான தொடர்பைக் கவனத்திற் கொள்ளும் முறைமை இது.
படைப்பை அதன் பயன்பாடு கருதி மதிப்பிடும் முறைமை பயன்வழிக் கொள்கை எனப்படுகிறது. இதிலே படைப்பின் அழகியற் கூறுகள் பின்தள்ளப்படுகின்றன. படைப்பினால் வாசகன் - சுவைஞன் - எய்தும் பயனே இதில் கவனத்திற் கொள்ளப்படுகிறது.
படைப்புக்கும் அதைப் படைத்தவனுக்குமுள்ள தொடர்பு பற்றியதாக அமைவது வெளிப்பாட்டுக் கொள்கை. படைப்பாளியின் புனைதிறன் வெளிப்பட்டுள்ள நிலை - படைப்பாளியின் ஆளுமை - கவனத்தைப் பெறுகிறது.
புறநிலைக் கொள்கையானது படைப்பையே மையப்படுத்தி ஆயும் அணுகுமுறையாகும். இக்கொள்கை தொடர்பாக கிளெந்த் புறுக்ஸ் (Cleanth Brooks) என்பாரின் துணைக் கொண்டு சில விளக்கங்களைக் கைலாசபதி தருகிறார்.
எடுத்துக் கொண்ட பொருள் விளக்கியுரைத்து மதிப்பிடப்பட வேண்டும். படைப்பில் முழுமை - உறுப்புக்களின் ஒருங்கிசைவு - கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். வடிவமும் பொருளும் பிரிக்க முடியாதலுை இலக்கியம் உருவகமாகவும் குறியீடாகவும் அமைவது அது சமயத்துக்கோ அறத்துக்கோ துணைக் கருவியாக அமைவதல்ல . . .

Page 30
56 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி,
இவ்வாறு அவ்விளக்கம் செல்கிறது. இலக்கியத்தின் கூட்டமைப்பு படிமும், குறியீடு முதலியனபற்றி இக்கொள்கையாளர் - கிளெந்த் புறுக்ஸ் குழுவினர் - வடிவக் கோட்பாட்டாளர் என வழங்கப்படுவர் என்கிறார் கைலாசபதி,
மேற்படி நால்வகைக்கொள்கைகளில் தமக்கு உடன்பாடானது எது என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் நான்காவதான புறநிலைக் கொள்கையே மாணவர்களுக்கு வகுப்பறைகளிற் கற்பிப்பதற்குச் சாதகமானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்திறனாய்வு முறைமைகள் பற்றிக் கூறுமிடத்து,
". இவற்றுள் ஒன்றை மாத்திரம் ஏற்புடைத்தாய்க் கொண்டு நூல்களைத் திறனாய்வார் இல்லையென்றே கூறலாம். ஒகொனர் என்பார் கூறுவது போல, தடித்த வடிவக் கொள்கைத் திறனாய்வாளன் கூடப் பிரபஞ்சத்தையோ, நூலாசிரியனையோ, வாசகர் கூட்டத்தையோ அலட்சியம் செய்தல் இயலாது. அதைப்போலவே மகிழ்ச்சி தருகின்ற போலி நியாயம் என்று திறனாய்வாளர் கேலியாகப் பேசலாம். ஆனால் தன் உள்ளத்தைத் தொடாத நூலை வாசகன் நெடிது நாள் இனிது போற்றப் போவதில்லை."
என அவர் குறிப்பிடுகிறார். எனவே ஒரு திறனாய்விலோ மேற்படி நான்கு முறைமைகளுமே வெவ்வேறு விகிதங்களில் அமைவன என்பது அவரது கருத்து எனத் தெரிகிறது. மேற்படி விளக்கங்களை அடுத்து அவர் இலக்கியத் திறனாய்வில் கவனத்துக்குரிய ஒரு முக்கிய கூறான நடை(Stye) தொடர்பான விளக்கங்களைத் தருகிறார். இந்நூலின் பின்னைய பதிப்பிலே தமிழின் சமகாலத் திறனாய்வுப் போக்குகள் சிலவற்றைப் பகுப்பு முறைத் திறனாய்வு பண்டிதத் திறனாய்வு என்பனவாக வகைப்படுத்திச் சுட்டியுள்ளார்.
இந்நூல் தொடர்பாக நமது கவனத்துக்குரிய முக்கிய அம்சம் இலக்கியம் கற்பிக்கும் ஆசிரிய மாணவர்களை முன்னிலைப்படுத்தி இது அமைந்தது என்பது. எனவே கைலாசபதியவர்கள் ஒரு கல்வியாளனுக்குரிய அணுகு முறையிலே தன் கவனத்திற்குட்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் தொகை வகை செய்து எடுத்துரைக்க முற்பட்டுள்ளார். இவ்வாறு உரைத்துள்ள முறைமையிலே சிறப்பாகச் சுட்டக் கூடிய முக்கிய அம்சங்கள் இரண்டு. ஒன்று, இலக்கியக் கோட்பாடுகளைத் தமிழிலக்கிய வரலாற்றுச் செல்நெறியோடு பொருத்தி இனங்காட்டிய முறைமையாகும். குறிப்பாக, அவயவிக் கொள்கையைச் சங்க இலக்கியத்தோடும் உணர்ச்சிக் கொள்கையைப் பக்தி இலக்கியத்தோடும் சமுதாயக் கொள்கையை நவீன இலக்கியத்தோடும் பொருத்தமுற இணைத்து இனங்காணும் முறைமை

திறனாய்வியற் சிந்தனைகள் 57
கைலாசபதியவர்களின் சிந்தனையூடாகவே தமிழ் ஆய்வுலகில் முழு நிலையில் முதல் முதலில் அறிமுகம் பெறுகிறது.
இந்நூலில் சிறப்பாகச் சுட்டக் கூடிய இன்னொரு அம்சம், தமிழர் சமூகத்துக்கும் அதன் இலக்கியப் பரப்புக்கும் உள்ள உறவை வரலாற்றடிப்படையில் நுட்பமாக உணர்த்தியுள்ளமையாகும். அதாவது, அவயவிக் கொள்கை நிலவிய சங்க காலத்தின் பின்னர் சமுதாயக் கொள்கை உருவான நவீன காலம் வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் தமிழர் சமுதாயமும் சமுதாய உணர்வும் உருச்சிதைவுற்றே, தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றன என்பது. இதை மேலும் விளக்கமாகக் கூறுவதானால், அறவியற் கொள்கை, உணர்ச்சிக் கொள்கை, அழகியற் கொள்கை என்பவற்றினடியாக உருவான இலக்கியங்களில் தமிழர் சமுதாயமும் அதன் சமுதாய உணர்வும் உரியவாறு வெளிப்படவில்லை என்பதே கைலாசபதியவர்களின் கருத்தாகும்.
52.4. சமுதாயக் கொள்கையும் யதார்த்தவாதமும்
மேற்படி நூலிலே சமுதாயக் கொள்கை பற்றிப் பேசுமிடத்து, அக்கொள்கை மீது அவர் கொண்டிருந்த ஈடுபாடு நன்கு புலனாகிறது. அக்கொள்கை கலை இலக்கியங்களில் வெளிப்படும் நிலையில் யதார்த்த வாதம்' என வழங்கப்படும் என்று சுட்டும் அவர் யதார்த்தவாதம் தொடர்பாகத் தனிக் கவனம் செலுத்தியவர் என்பதை ஆய்வுலகம் அறியும். இவ்வகையில் அவரது காலப் பகுதியில் - குறிப்பாக 1960-70 களில் யதார்த்தவாதம் தொடர்பாக நிலவிய பொதுவான கருத்தோட்டம், அதுபற்றி அவர் கொண்டிருந்த விளக்கம் என்பன தொடர்பான அவரது கருத்துக்களை இவ்விடத்தில் தெடர்புபடுத்திச் சிந்திப்பது பொருத்தமாக அமையும்.
யதார்த்தம் என்ற வடசொல் ஆங்கிலத்தில் Reality என்பதற்கு நேர்ப் பொருளில் தமிழில் பயில்வது உண்மை நிலை. இதனடியாக உருவான யதார்த்தவாதம் (Realism) என்ற கலை இலக்கியக் கோட்பாடானது சமுதாயத்தை அதன் இயல்பு நிலையிற் பிரதிபலித்தல் என்ற பொருளிற் பயில்வது. இதனை நடப்பியல் எனவும் வழங்குவர் நடைமுறை வாழ்வியல் உண்மைகளுக்கும் அறிவுசார் சிந்தனைகளுக்கும் தொடர்பற்ற கற்பனைகளின் தளத்தில் கலை இலக்கியங்களைப் படைத்தும் சுவைத்தும் நின்றவர்களைச் சமுதாய உண்மைகளை நோக்கித் திசை திருப்பும் வகையில் உருவான கோட்பாடு இது என்பது வரலாறு. சமுதாயத்தின் புவிச் சூழல், பண்பாட்டுக் கோலங்கள், சமூக-பொருளியல் உறவு நிலை, அதன் அசைவியக்கம் சார்ந்த உணர் வோட்டங்கள் என்பவற்றை இயல்புகடவாது பிரதிபலிக்கும் நிலையிலேயே ஒரு கலை இலக்கியப் படைப்பு யதார்த்த

Page 31
58 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
சித்திரமாகக் கருதப்படும். இவற்றுள் சூழல், பண்பாட்டுக் கோலங்கள் என்பன சார்ந்த நுணுக்க விவரங்கள் அழுத்தம் பெற்று ஏனையவை கவனத்தைப் பெறத் தவறினால் அது நிறைவு பெற்ற யதார்த்தப் படைப்பு ஆவதில்லை. அத்தகைய சித்திரிப்புக்கள் இயற்பண்பு (Naturalism) சார்ந்தவையாகக் கொள்ளப்படுவன. இவ்வாறான இயற்பண்பு வாதம்' 'யதார்த்த வாதம்' என்பவற்றுக்கிடையிலான வேறுபாட்டைப் பற்றிய சிந்தனைத் தெளிவு 1960 களில் தமிழ்ப் படைப்பிலக்கியக்காரரிடமும் திறனாய்வாளர், வாசகர் என்போரிடமும் பொதுவாக உருவாகியிருக்க வில்லை. இயற்பண்பு சார்ந்த படைப்புகளையே யதார்த்தப் படைப்பாக மயங்கும் நிலை பொதுவாக நிலவியது. அச்சூழ்நிலையில் மேற்படி இரண்டினதும் வேறுபாட்டின் அடிப்படையைத் தெளிவுறுத்தியவர் என்ற பெருமை கைலாசபதி அவர்களுக்கு உரியது. அவரது தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலில் இதனை நோக்கலாம்.
"நுணுக்க விவரங்கள் படம் பார்ப்பது போன்ற தத்ரூபமாக இருப்பினும் யதார்த்த இலக்கியத்தின் பாற்படா, உள்ளதை உள்ளவாறே காட்ட முயலும் இவ்வுக்தி அல்லது நோக்கு Naturalism எனப்படும் இயற்பண்புவாதமாகும் . . சமுதாய இயக்க விதிகளையும் எதிர் கால சமுதாய வளர்ச்சியையும் நன்கு விளங்கிக் கொண்டு அவ்வுணர்வுடன் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை மெய்ம்மையுடன் சித்திரிப்பவனே யதார்த்தவாதி. சமுதாயத்தின் இயக்கத்தையும் வளர்ச்சி முறையையும் விளக்கவல்ல 'வகை மாதிரிக்குப் பொருத்தமான பாத்திரங்களை அவன் முழு உணர்வுடன் திட்டப்படி தேர்ந்தெடுக்கிறான். பொதுப்படையாகக் கூறுமிடத்து இயற்பண்பு நெறியும் யதார்த்தவாதமும் முதலாளித்துவ சமுதாயத்திற் பிறப்பனவே. முன்னது ‘வாழ்க்கை முட்களில் விழுந்து இரத்தம் கக்கும் சோக உள்ளங்களின் துன்ப இயற்கைக் கோட்பாடு. பின்னது f(pg|Tuu முரண்பாடுகளும் அவற்றிற்குக் காரணமான பெளதீக நிலைமைகளுமே வாழ்க்கையின் தன்மைக்குக் காரணமெனக்கண்டு, துன்பமே இயற்கையென்னும் சொல்லை மாற்ற முயலும் உள்ளங்களின் நம்பிக்கைக் குரல்" " இவ்விளக்கம் யதார்த்தவாதத்தை ஒரு சமுதாய ஆய்வுநெறியாக உணர்த்தி நிற்பது; சமுதாய வர்க்க குணாம்சங்களின் வரலாற்று அசைவியக்கத்தைக் கண்டுபிடித்து வழிநடத்தும் பண்பும் கடப்பாடும் அதற்கு உரியது என்பதையும் உணர்த்துவது.

திறனாய்வியற் சிந்தனைகள் 59
கைலாசபதி தமது திறனாய்வியல் சார் நூல்களில் புலப்படுத்தியுள்ள சிந்தனைகளும் அவற்றோடு தொடர்புடைய முக்கிய கூறுகளும் மேலே நோக்கப்பட்டன. இனி அவர் தமது பெரும்பாலான கட்டுரைகளிலும் முன்னுரை, அணிந்துரை முதலியவற்றிலும் புலப்படுத்தியுள்ள திறனாய்வுப் பார்வைகளை அடுத்த இயலில் நோக்கலாம்.
குறிப்புகள்
7 க. கைலாசபதி, இ முருகையன் சவிதை நயம், விஜயலட்சுமி
ہی تھی تھی / 4 ?ثرتری / / تz/67/72 762 762 جو ہی یہی بر4
2 விணக்கத்திற்கு, பார்க்க அ.அ. மணவாளன், இருபதாம் நூற்றாண்டின் திலச்சியச் சோட்ப/நிசன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 6ിബ്നു ി Z് 40-Z
3 க. கைலாசபதி சிலச்சியமும் திறனாய்வும், வரதர் வெளியீடு
بہتر برتر تھوبر 4 بہتریگر تawzzیخ///ثر/ن/4
پیش کے نتخبرA2, Z/ ترچھی
7 نومبر 4 ,2ھZ// تھ%22
. گ77 ن/4 ,%///ژZZ
க கைவசடதி தமிழ்நாவல் இலக்கியம் பக் 29 22

Page 32
6
திறனாய்வுப் பார்வைகள்
61. திறனாய்வு ஒரு அறிவாயுதமாக . . .
கிெலாசபதி ஒரு திறனாய்வாளர் என்ற வகையில் அனைத்துலக இலக்கியங்கள் முதல் தமிழரின் பிரதேச மண்வாசனை இலக்கியங்கள் வரை அனைத்து இலக்கியப் பரப்பையும் கருத்திற்கொண்ட சிந்தனையாளராவார். அவர் ஒரு மார்க்சிய சமூகவியற் சிந்தனையாளர் என்ற வகையிலே ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்கான போராட்டத்தில் கலை, இலக்கியம் என்பன ஆற்றக்கூடிய பங்களிப்பில் திடமான நம்பிக்கை கொண்டவர். இவ்வாறு பரந்துபட்ட தளத்தில் நின்று நம்பிக்கையுடன் செயற்பட்ட அவர் திறனாய்வை ஒரு அறிவாயுதமாகக் கருதியவர்.
விமர்சனம் என்பது உலகை விவரிப்பது மாத்திரமன்று. அது உலகத்தை மாற்றியமைப்பதற்கு உழைக்கும் வர்க்கமும் அதன் நேசசக்திகளும் ஓயாது பயன்படுத்தும் அறிவாயுதமாகவும் இருத்தல் வேண்டும்"
என்பது அவருடைய கருத்துநிலை. இதுவே அவரது சமகால இலக்கிய தொடர்பான பார்வைகள், அபிப்பிராயங்கள், மதிப்பீடுகள் ஆகிய அனைத்திலும் அடிநாதமாக ஒலித்து நின்ற உணர்வோட்டமாகும். இந்த உணர்வுத்தளத்தில் நின்றே அவர் அனைத்துலக இலக்கியங்களையும் தமிழ் இலக்கியங்களையும் தரிசித்தார் நவீன தமிழிலக்கியத்தின் அடிப்படைகளை இனங்காட்டினார், சமகால இலக்கிய வகைகளின் தகுதியை மதிப்பிட்டார். ஈழத்தின் தேசிய இலக்கியம் பற்றிப் பேசினார், இலக்கியங்களிற் பேசப்பட்ட சமூகப் பிரச்சினைகளுக்கான விமர்சனங்களை முன் வைத்தார்.

திறனாய்வுப் பார்வைகள் 61
இவ்வாறு மார்க்சிய சார்பான சமூகப் பார்வையுடன் திறனாய்வை ஒரு அறிவாயுதமாக அவர் பயன்படுத்திய சூழலில் அதற்கு எதிர்நிலையில் நிலவிய சிந்தைைனகளையும் எதிர்ப்புக் குரல்களையும் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டியது அவரது வரலாற்றுக் கடமையாயிற்று. க.நா. சுப்பிரமணியம் குழுவினர், மு. தளையசிங்கம் முதலியவர்கள் பற்றிய விமர்சனங்களாகவும் முற்போக்கு இலக்கியத்தின் அரசியல் பிரச்சினை பற்றிய வாதங்களாகவும் அது வெளிப்பட்டது.
62. உலகு தழுவிய பார்வை
கைலாசபதியின் அனைத்துலகு தழுவிய இலக்கியப் பார்வையை மக்கள் இலக்கியப் பண்பு, ஒரே உலகம் ஆகிய கட்டுரைகள் நூல் : இலக்கியச் சிந்தனைகள்) சிறப்பாகப் புலப்படுத்தி நிற்கின்றன. மார்க்சிய மூலவர்களான மார்க்ஸ் - ஏங்கல்ஸ் ஆகியோர் 1872 இல் வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையின் பின்வரும் பகுதியைச் சான்றுகாட்டி அவர் தமது உலகுதழுவிய பார்வையை உணர்த்துகிறார்.
தேசங்கள் உலகரீதியாக ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. பெளதிகப் பொருளுற்பத்தியைப் போலவே, அறிவுப் பொருளுற்பத்தியிலும் இதே நிலைமை, தனிப்பட்ட நாடுகளின் அறிவுப் படைப்புகள் பொதுச் சொத்தாகின்றன.
ஒருதலைப்பட்சமான தேசியப் பார்வையும் குறுகிய மனப்பான்மையும் மென்மேலும் அசாத்தியமாகின்றன. மிகப்பல தேசிய இலக்கியங்களிலிருந்தும் தல இலக்கியங்களிலிருந்தும் ஓர் உலக இலக்கியம் உதயமாகிறது. *
இவ்வாறு மார்க்சிய மூலவர்களைச் சான்றுகாட்டி ஓர் உலக இலக்கியம் பற்றிப் பேசும் அவர் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் எழுத்தாளன் ஒவ்வொருவனும் மார்க்ஸிம் கோர்க்கி, மாயாகோவ்ஸ்கி முதலிய உலக இலக்கியப் போராளிகளின் மரபுக்கு உரிமை பூண்டவன் என உணர்த்துகிறார். அனைத்துலக இலக்கியங்கள் - குறிப்பாக ரஷ்யா, சீனா முதலிய மார்க்சிய சார்பான நாடுகளின் இலக்கியங்கள் - தமிழாக்கம் எய்தித் தமிழ் வாசகர்களின் கவனத்தைப் பெற்று வந்த சூழலில் கைலாசபதி புலப்படுத்தி நின்ற இந்த ஓர் உலக இலக்கிய நோக்கானது தமிழ் மார்க்சிய எழுத்தாளர்களுக்கு உந்து சக்தியாகவும் நம்பிக்கைக் குரலாகவும் அமைந்ததெனலாம்.

Page 33
62 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
63.தமிழில் நவீன இலக்கிய அடிப்படைகள்
தமிழின் நவீன இலக்கியம் தொடர்பாக கைலாசபதி தனிக்கவனம் செலுத்தி நின்றவர் என்பதறிவோம். தமிழ் நாவல் இலக்கியம், பாரதி தொடர்பான ஆய்வுகள் மற்றும் பல கட்டுரைகள், முன்னுரைகள், அணிந்துரைகள் ஆகியவற்றில் நவீன இலக்கியம் தொடர்பான அவரது சிந்தனைகள் பதிவாகியுள்ளன. நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்" என்ற தலைப்பிலேயே ஒரு தனிக் கட்டுரை அவரால் எழுதப்பட்டுள்ளது என்பதும் நமது கவனத்துக்குரியது நூல் நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்)
நவீன தமிழிலக்கியத்தின் அடிப்படைகளாக அவர் சுட்டுவனவற்றுள் முதன்மையானது 'வரலாற்று வாய்மை யாகும். வரலாற்றைத் தீர்மானிக்கும் சக்தியாகக் காலம் அமைகிறது என்பதை உணர்வுபூர்வமாக ஒப்புக்கொள்ளும் நிலை இது. இதற்கு அடுத்ததாக அவர் சுட்டுவது புதுமை, மாற்றம் என்பவற்றை ஏற்கும் பண்பு ஆகும். இது காலம் பற்றிய உணர்வின் தொடர்நிலையாகும். இவை தவிர, பரந்துபட்ட வாசகர் வட்டத்தை நோக்கி எழுதுதல், சமயநெறியிலிருந்து விடுபட்டு சமுதாய நெறி நிற்றல் ஆகியனவும் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய அடிப்படைகளாக அவரால் பேசப்படுகின்றன.
மேலும் அந்நியராட்சியின் விளைவாகத் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட முக்கிய போக்குகளை அவர் மூவகைப்படுத்துகிறார். அவை புதுமைகளை ஏற்றல், பழைமையை மட்டும் பேணல், புதுமை பழைமை ஆகிய இரண்டிலும் சமரசம் காணல் என்பனவாகும். இம்மூன்று போக்குகளில் ஏதாவது ஒன்றை மட்டும் பற்றி நிற்றல் மூலம் படைப்பிற் சாதனை புரிவது சாத்தியமில்லை என்பது அவரது கருத்து. இம்மூன்று போக்குகளினின்றும் விடுபட்டு வரலாற்றுணர்வுடனும் மார்க்சிய இயங்கியல் சார்புடனும் செயற்படும் முறைமையொன்று வளர்ந்து வருகின்றதென்றும் அதுவே வளர்த்தெடுக்கப்பட வேண்டியதென்றும் அவர் சுட்டி யுணர்த்துகிறார். *
இவ்வாறு தமிழின் நவீன இலக்கியம் தொடர்பாகக் கோட்பாட்டு முறைமையிற் பொதுநிலையில் அவர் புலப்படுத்திய சிந்தனைகள் நவீன தமிழிலக்கிய வகைகள் பற்றிய அவரது திறனாய்வுக் குறிப்புக்களிலும் அணிந்துரை முதலியவற்றிலும் மேலும் விளக்கம் பெறுகின்றன. குறிப்பாக இறுதியாகச் சுட்டியதான வரலாற்றுணர்வும் மார்க்சிய இயங்கியல் அடிப்படையும் கொண்ட போக்கை விவரிப்பதும் வலியுறுத்துவதும் இவரது இவ்வகை எழுத்துக்களின் பொதுப் பண்புகளாகும். நாவலிலக்கியம் பற்றிய இவரது எழுத்துக்களில் இவற்றைச் சிறப்பாக நோக்க முடிகிறது.

திறனாய்வுப் பார்வைகள் 63
6.4. நாவலிலக்கியம்
நவீன தமிழிலக்கிய வகைகளிலே நாவல் மீது கைலாசபதி தனிக் கவனம் செலுத்தியவர் என்பதறிவோம். தமிழ் நாவல் இலக்கியம் என்ற நூலில் 1968 வரையான தமிழ் நாவல்கள் தொடர்பான அவரது கணிப்பு பதிவாகியுள்ளது. பின்னர் எழுதியவற்றுள் "தமிழ் நாவல்களில் மனித உரிமைகளும் மக்கள் போராட்டங்களும்" என்ற கட்டுரை நூல் : இலக்கியச் சிந்தனைகள் குறிப்பிடத்தக்கது.
மேற்படி எழுத்துக்களில் தம் காலப்பகுதி வரையான தமிழ் நாவல் பரப்பைக் கவனத்திற்கொண்ட அவர் அப்படைப்புக்களின் தகுதிபற்றிய மதிப்பீட்டில், அவை எந்த அளவுக்கு 'சமூக-வர்க்கப் பிரச்சினைகளைப் பேசுகின்றன என்பதை முக்கிய அளவுகோலாகக் கொண்டுள்ளார். அவ்வகையில் அவரது கணிப்பின்படி தமிழ் நாவல்களுட் பெரும் பாலானவை தனி மனிதர்களின் பிரச்சினைகளைப் பேசுவனவாகவும் குடும்ப-சமூக உறவுகளில் நிகழும் உணர்வுப் போராட்டங்களை மையப்படுத்தியனவாகவும் அமைந்தனவாகும். சமூகம், அரசியல் என்பன சார் பிரச்சினைகளை மையப்படுத்தி அமைந்தவற்றிற் கூடப் பெரும்பாலானவை இலட்சிய வாழ்க்கையைக் குறிக்கோளாகக் கொண்டும் ஆன்மிகத்துக்கு அழுத்தம் கொடுத்தும் படைக்கப்பட்டமையால் பிரச்சினைகளுக்கான நடைமுறைத் தீர்வை முன்வைப்பதில் தவறி விடுகின்றன என்பது அவரது விமர்சனம். சூழல் மாற்றம், தலைமுறை வேறுபாடு, புதிய அநுபவங்கள் என்பவற்றை உள்ளடக்கமாகக் கொண்டமையும் படைப்புக்கள் அவ்வவ்வகைமைகளில் கவனிப்புக்குரியன என்ற அளவில் மட்டுமே அவரால் கணிக்கப்பட்டன. ܙܝ
' இவ்வாறாக, தொடக்ககால நாவலாசிரியர்களான மாயூரம் ச. வேதநாயகம் பிள்ளை, பி.ஆர். ராஜமையர், அ. மாதவையா முதல் சமகாலப் படைப்பாளிகளான ஜெயகாந்தன் இந்திராபார்த்தசாரதி, நீல. பத்மநாபன், ராஜம் கிருஷ்ணன் எம்.எஸ். கல்யாண சுந்தரம் உட்படப் பலரின் படைப்புக்கள் கைலாசபதியின் விமர்சனத்துக்குள்ளாயின. *
இத்தகு படைப்பாளிகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு வேறுபட்டவர்களாக தொ.மு.சி. ரகுநாதன் முதல் கு. சின்னப்ப பாரதி வரை சிலரைக் கைலாசபதி இனங்காட்டுகிறார். ரகுநாதனின் பஞ்சம் பசியும், டி செல்வராஜின் மலரும் சருகும், தேனீர், செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம், சடங்கு, செவ்வானம், பொன்னீலனின் கரிசல், டானியலின் பஞ்சமர், கு. சின்னப்பபாரதியின் தாகம் முதலிய படைப்புக்கள் அவற்றின் பொருண்மை காரணமாக முற்சுட்டியவர்களின் படைப்புக்களினின்று

Page 34
64 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
வேறுபட்டு நிற்பன என்பது கைலாசபதியின் கணிப்பாகும். வர்க்க அடிப்படையிற் சுரண்டப்படும் மக்களுட் சிலர் தம் அடிப்படை உரிமைகளை உணர்ந்து அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காகப் போராட முனைவதும் போராடுவதுமே இவற்றின் பொருண்மை. இவ்வகையில் இப்படைப்புக்கள் விதந்துரைக்கத் தக்கன என்பது அவரது கருத்தாகும். * 6.5 சிறுகதைகள் தொடர்பாக . . .
கைலாசபதி தமிழ்ச் சிறுகதைத் தொகுதிகள் சிலவற்றக்கு முன்னுரை, அணிந்துரை என்பன வழங்கியுள்ளார். ஈழத்தின் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக் கட்டங்களைக் கட்டுரைகளில் இனங்காட்டியுள்ளார். எனினும் நாவலி லக்கியத்திற் புலப்படுத்திய அளவு சிறுகதையிலக்கியத்திற் தனிக் கவனத்தை அவர் புலப்படுத்தவில்லை. சிறுகதையை நாவலுடன் ஒப்பு நோக்கும் நிலையில் கைலாசபதி தமிழ் நாவல் இலக்கியம் நூலின் ஐந்தாம் இயலில், முன் வைத்துள்ள ஒரு கருத்து விவாதத்துக்குரியது. 'சிறுகதை தேய்கின்றது. நாவல் வளர்கின்றது' என்பதே அக்கருத்து. தனிமனித சோகங்களையும் மன விகாரங்களையுமே சிறுகதை பெரிதும் பேசுகின்றது என்பதே சிறுகதை தேய்ந்து செல்வதாகக் கைலாசபதி கருதியதற்கான காரணம். இக்கருத்து ஆய்வுலகில் ஏற்கப்பட்டதாகத் தெரியவில்லை. கைலாசபதியே மேற்படி நூலுக்குப் பின்னர் (1968 இன் பின்னர் இக்கருத்தை வலியுறுத்திப் பேசியதாகவும் தெரியவில்லை. தமிழ்ச் சிறுகதை பல சோதனைகளையும் சாதனைகளையும் செய்து வளர்ந்து வருவதாக திறனாய்வாளர் தி.சு. நடராசன் முன் வைத்துள்ள கணிப்பே " ஏற்புடையது.
6.6. புதுக்கவிதை
புதுக்கவிதை என்ற இலக்கிய வகையைக் கைலாசபதி முதலில் ஏற்கவில்லை; பின் நாளில் ஏற்றார். தமிழ்த் திறனாய்வுலகம் அறிந்த செய்தி இது. இதற்கான காரணங்கள் வெளிப்படை தொடக்க காலப் புதுக் கவிதைகள் - மணிக்கொடிக் கால வசன கவிதைகள் மற்றும் எழுத்துக் காலப் புதுக்கவிதைகள் - கொள்கைத் தெளிவுடனோ அன்றேல் பொருட் சிறப்புடனோ உருவானவையல்ல என்பது கைலாசபதியின் கருத்து. குறிப்பாக எழுத்துக் கவிதைகள் பொருட் சிறப்பற்றவை என்பது மட்டுமன்றிப் பாலியல் மனப்பிறழ்வு, நம்பிக்கை வறட்சி, போலித்தன்மை, முதலியவற்றின் வெளிப்பாடுகளாக அமைந்தன என்பதும் அர்த்தமற்ற புதிர்த் தன்மை கொண்டன என்பதும் கைலாசபதியின் விமர்சனம். பின் நாளில் உருவான வானம்பாடிக் குழுவினரின் புதுக்கவிதைகள் இவற்றுக்கு நேர்மாறாக, கொள்கைத் தெளிவு, சமுதாய நேயம், பொறுப்புணர்வு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை, எளிமை முதலிய பண்புகள் கொண்டன

திறனாய்வுப் பார்வைகள் 65
என்பது அவரது கணிப்பு. கவிஞர் தமிழன்பனின் தோணி வருகிறது (1973) கவிதைத் தொகுதிக்கு கைலாசபதி எழுதிய முன்னுரையில் மேற்படி முன்னைய - பின்னைய புதுக்கவிதைகளின் பண்புநிலை வேறுபாடுகள் பேசப்பட்டுள்ளன. "
எனவே புதுக்கவிதையைக் கைலாசபதி முதலில் ஏற்காமைக்கும் பின்நாளில் ஏற்றமைக்குமான முக்கிய அடிப்படை அவ்வக்காலப் புதுக்கவிதைகளின் 'உள்ளடக்கம்' என்பது தெளிவாகின்றது. புதுக் கவிதையை ஒரு இலக்கிய வகையாக ஏற்கும் நிலையிலே, அவற்றை அவர் நவீன தமிழிலக்கியத்தின் தன்னுணர்ச்சிப் பண்பின் தர்க்கரீதியான வளர்ச்சியாக இனங்காண்கிறார். ° எழுத்து வட்டத்தினர் ஏறத்தாழ எல்லாருமே வடிவ அமைதியும் உணர்வுச் செறியும் பொருந்திய தன்னுணர்ச்சிப் பாடல்களை எழுத இயலாதவர்களாயிருந்தனர் எனவும் ஆனால் வானம்பாடி மற்றும் புதிய தலைமுறை, தாமரை, செம்மலர் முதலிய சிற்றேடுகளால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில் தத்துவவீச்சும் தமிழ்த்திறனும் தனித்துவமும் பொருள் தெளிவும் கருத்து அழுத்தமும் வாய்க்கப் பெற்ற புதுக்கவிதைகள் பல தோன்றின எனவும் அவர் கூறுகிறார். " புதுக்கவிதையை ஏற்றுக் கொண்டமையை நியாயப்படுத்தும் முயற்சியாக இவ்விளக்கம் அமைகின்றது எனலாம்.
எழுத்துக் காலகட்டப் புதுக்கவிதைகள் பற்றிக் கைலாசபதி முன் வைத்த விமர்சனங்கள் பொதுவாக மார்க்சிய இலக்கியவாதிகள் பலருக்கும் ஒப்ப முடிந்த ஒன்று தான். குறிப்பாக நா. வானமாமலையவர்கள் புதுக்கவிதையின் முற்போக்கும் பிற்போக்கும் என்ற தலைப்பில் எழுதிய சிறு நூலில் இத்தகு விமர்சனம் அமைந்துள்ளமை நமது கவனத்துக்குரியது.
புதுக்கவிதை தொடர்பாகக் கைலாசபதி புலப்படுத்தி நின்ற பார்வை, அணுகுமுறை என்பன தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களையும் இத்த்ொடர்பில் கவனத்திற் கொள்வது அவசியமாகிறது. "கைலாசபதி புதுக் கவிதையைக் கவனிக்காமல் விட்டு விட்டார்" என்கிறார் திசு. நடராசன். ' "தொடக்க காலத்திய ஆக்கங்களைப் புதுக்கவிதை என்ற இலக்கிய வகையாக அங்கீகரிப்பதே இலக்கிய சனநாயகம்" என்றும் ஆனால் அத்தகைய சனநாயகம் கைலாசபதியால் அளிக்கப்படவில்லை" என்றும் கோ. கேசவன் விமர்சித்துள்ளார். *
தி. சு. நடராசன் கூறுவது போல கைலாசபதி புதுக் கவிதையைக் கவனிக்காமல் விட்டு விட்டார் என்பதை முழுமையாக ஒப்புக் கொள்ள

Page 35
66 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
முடியாது. முற்சுட்டிய தமிழன்பனின் தோணி வருகிறது மற்றும் மு. கனகராசனின் முட்கள் முதலிய புதுக்கவிதைத் தொகுதிகளுக்கு அவர் வழங்கியுள்ள முன்னுரைகளிலும் "தன்னுணர்ச்சிப் பாடல்களும் தனிமனிதவாதமும்" நூல் : சமூகவியலும் இலக்கியமும்), "கவிதையும் தத்துவமும்" நூல் : இலக்கியச் சிந்தனைகள் முதலிய கட்டுரைகளிலும் கைலாசபதி புதுக்கவிதை மீதான தனது கவனத்தைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் அவர் புதுக்கவிதையின் வரலாற்றுப் போக்கைத் தெளிவாக இனங்காண முற்பட்டுள்ளமையும் தெரிகிறது. ஆயினும் நாவலுக்கு அவர் அளித்த முக்கியத்துவத்தை - புலப்படுத்தியுள்ள விரிவான கவனத்தைப் புதுக்கவிதைக்கு (சிறுகதைக்கும் கூட) அவர் அளிக்கவில்லை என்று மட்டும் கூறலாம்.
கைலாசபதி இலக்கிய சனநாயகப் பண்பைப் புலப்படுத்தவில்லை என்ற கேசவனின் விமர்சனத்தை ஒப்புக் கொள்வதில் தடையில்லை. ஆயினும் இது ஒரு இலக்கிய வகையை ஏற்பது அல்லது மறுப்பது (புறக்கணிப்பது ஆகியவற்றுக்கான அடிப்படை யாது? என்ற வினாவுக்கு நம்மை இட்டுச் செல்வதாகும். இது ஈற்றில் 'பொருளா? வடிவமா? (உள்ளடக்கமா? உருவமா? என்ற விவாதத்தில் நம்மை ஆழ்த்திவிடும் என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டியது அவசியம். இத்தொடர்பிலே கைலாசபதி எத்தகு மனப்பாங்கைப் புலப்படுத்தினார் என்பதை அவர் எழுத்துப் புதுக்கவிதைகளுக்கு விளக்கம் தந்து நின்றோர் மீது வைத்த பின்வரும் விமர்சனக் குறிப்பு மூலம் தெளிந்து கொள்ளலாம்.
எழுத்து வட்டத்துடன் முதலில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சிலர், ஆங்கிலச் சொற்கள் இடையிடையிட்ட தரைகுறைத் தமிழில் மேலை நாட்டுப் புதுக்கவிதைகள் சிலவற்றை எதிரொலிக்கத் தொடங்கினர். . . மனமுறிவு, பாலி யல் தடுமாற்றம், நோய்மை, அந்நியப்படல் என்றெல்லாம் (சி. கனகசபாபதி போன்றோர். இவர்களது கவிப்பொருளுக்கு விவரணமும் விளக்கமும் கூறுவது கூட, சருகுக்குள் கிடப்பவற்றை மெத்தையிலே தூக்கி வைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது." “
கைலாசபதியின் மேற்படி கூற்று விவாதத்துக்குரியது. ஆயினும் தகுதியற்றவற்றைக் கணிப்புக்கு இட்டுவரக் கூடாது என்ற தமது எண்ணப்பங்கை அவர் இதிற் புலப்படுத்தியுள்ளார். விமர்சனத்தை ஒரு அறிவாயுதமாகப் பயன்படுத்தும் நிலையில் சமகாலப் படைப்புக்கள் தொடர்பாக இவ்வாறான கறாரான நிலைப்பாடுகளை மேற்கொள்வது

திறனாய்வுப் பார்வைகள் 67
தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பின்நாளில் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது மேற்படி கறாரான நிலைப்பாடு சனநாயக விரோதமாகத் தெரிவது இயல்பே.கைலாசபதி பற்றிய கேசவனது மேற்படி விமர்சனத்தை இவ்வாறுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 67. குழந்தை இலக்கியம்
சமகால இலக்கிய வகைகளில் கைலாசபதியின் கவனத்தைப் பெற்றவை என்ற வகையில் குழந்தை இலக்கியம், நாடகம் என்பனவும் அடங்கும். குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உளப்பண்புகளை மையப்படுத்தியும் அவர்களையே வாசகர்களாகக் கொண்டும் படைக்கப்படும் ஆக்கங்கள் குழந்தை இலக்கியம்', 'சிறுவர் இலக்கியம் என்பனவாகச் சுட்டப்படுவன. இந்த நூற்றாண்டில் தமிழில் தனிக் கணிப்பை பெற்று வளர்ந்து வரும் இவ்விலக்கிய வகைகள் இலக்கியம் என்ற எல்லை கடந்து கல்வியியலிலும் கவனிப்பைப் பெற்றுள்ளவையாகும். "தமிழில் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் கைலாசபதி எழுதியுள்ள கட்டுரையிலே நூல் : இலக்கியச் சிந்தனைகள்) தமிழின் இவ்வகை இலக்கிய முயற்சிகள், அவை தொடர்பான விமர்சனங்கள் என்பன பற்றிய அவரது கணிப்புக்கள் பதிவாகியுள்ளன.
குழந்தை இலக்கியங்கள் குழந்தைகளின் வயது, மூளை வளர்ச்சி, மொழித்திறன், ஆற்றல், ஏற்புடைமை இவற்றையெல்லாம் கவனத்திற் கொண்டு எழுதப்பட வேண்டியன. தமிழில் இவ்வாறு எழுதியோர் பொதுவில் குறைவு என்பது கைலாசபதியின் கணிப்பாகும். பாரதிதாசன் முதல் தமிழண்ணல் வரையான பலரின் குழந்தை இலக்கிய - சிறுவர் இலக்கிய - முயற்சிகளுட் பல, ஆசைபற்றி இயற்றப்பட்டவை என அவர் அமைதி காண்கிறார் " குழந்தை இலக்கியம், சிறுவர் இலக்கியம் என்பன பற்றிய ஆய்வுகளும் விமர்சனங்களும் முனைப்புற்று வருவதைச் சுட்டிய அவர் அவை அகலமும் ஆழமும் பெற வேண்டியன என்பதையும் உணர்த்துகின்றார்.
6.8. நாடகம்
நாடகம் ஒரு அரங்கக்கலை, கதையம்சம், எழுத்துப் பிரதி ஆகிய நிலைகளில் அது இலக்கியமும் ஆகிறது. தமிழ் நாடகம் இலக்கிய நிலையிலும் அரங்க நிலையிலும் முக்கிய மாற்றம் எய்திக் கொண்டிருந்த வரலாற்றுச் சூழலில் வாழ்ந்தவர் கைலாசபதி, அந்நியவரவான டிராமா முறையையே தமிழ் நாடக மரபு என நம்பிக் கொண்டிருந்த நிலை மாற்றமடைய வேண்டும் என்ற ஆர்வம் தலைதூக்கத் தொடங்கிய காலம்

Page 36
68 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
அது பாரம்பரிய கூத்து மரபுகளை நவீன மேடைக்கு அறிமுகம் செய்வதும், புதிய பரிசோதனைகளை மேற்கொள்வதும், மேலைப்புல நாடகங்களை மொழி பெயர்த்து மேடையேற்றுவதுமான செயற்பாடுகள் பல மட்டங்களில் நிகழ்ந்து கொண்டிருந்தன. இவ்வாறான சூழலில் வாழ்ந்த கைலாசபதி தமிழ் நாடகம் உயிராற்றல் கொண்ட வளர்ச்சியை எய்தவேண்டுமென விரும்பியவர். பழைய கூத்து மற்றும் நாட்டார்கலை வடிவங்கள்ைத் தூசுதட்டி மேடையேற்றுவதாலோ அன்றேல் மொழிபெயர்ப்பு நிலையிலான நாடக முயற்சிகளாலோ இத்தகு பயன் விளையும் என அவர் நம்பவில்லை. பல மரபுகளையும் இணைத்து மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மூலம் தான் இத்தகு வளர்ச்சியை நாடமுடியும் என்பது அவரது கருத்தாகும். அதற்கான தீவிர பரிசோதனை முயற்சிகளை அவர் தூண்டினார். அத்தகு முயற்சிகளில் ஈடுபடுவோரை வரவேற்றார். நாடக நூல்கள் சிலவற்றுக்கு அவர் அளித்துள்ள அறிமுகவுரை, முன்னுரை மற்றும் நாடகம் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் என்பவற்றில் இவற்றை நாம் கண்டு தெளியலாம். அவரது பின்வரும் கூற்று அவரின் நிலைப்பாட்டைத் தெளிவுறுத்தும்.
"ஆங்கிலேயர் மூலம் வந்த இயற்கை நவிற்சி நாடக முறையை மாத்திரமன்றி உலகின் ஏனைய நாடுகளிலிருந்தும் இன்று பயனுள்ள வகையில் பெற்றுக் கொள்ளக் கூடிய நாடக உத்திகளையும் நமது பாரம்பரியத்திலிருந்து தேர்ந்தெடுத்து நவீனப்படுத்தக்கூடிய கூறுகளையும் ஒன்றிணைத்து உருவத்திலும் உள்ளடக்கத்திலும் பரிசோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுதல் அத்தியாவசியமாகும். மஹாகவியின் 'கோடை", "புதியதொருவீடு முருகையனின் "கடுழியம்", சுந்தலிங்கத்தின் "விழிப்பு மெளனகுருவின் 'சங்காரம்" முதலியன இத்துறையில் நம்மவர் செய்துள்ள ஆரம்பப் பரிசோதனைகளுக்கு எடுத்துக் காட்டுக்கள். பாலேந்திரா, சுஹைர் ஹமீட், இ.சிவானந்தன் முதலியோர் நெறியாள்கையில் தமது ஆற்றலைப் புலப்படுத்தி வருகின்றனர்" இவ்வாறு தமிழ் நாடக உலகில் - குறிப்பாக ஈழத்தில் - நிகழ்ந்து வரும் மாற்றம் பற்றிய தம் மனப்பதிவைப் புலப்படுத்திய அவர் சமகால தமிழகத்தில் பரீக்ஷா முதலிய குழுவினரின் செயற்பாடுகளையும் கவனத்திற் கொண்டுள்ளார். அத்தகு முயற்சிகள் பயன்தரவல்லன என்ற எண்ணத்தையும் புலப்படுத்தியுள்ளார். 16

திறனாய்வுப் பார்வைகள் 69
69. ஈழத்துத் தேசிய இலக்கியமும் நாவலரும்
சமகால இலக்கியச் செல்நெறியில் கோட்பாட்டு நிலையிலே கைலாசபதி கருத்தூன்றிச் செயற்பட்ட தளங்களிலொன்று 'ஈழத்துத் தேசிய இலக்கியம் ஆகும். முன்னர் நோக்கியவாறு அனைத்துலகம் தழுவிய, ஓர் உலக இலக்கியம்' பற்றிய பார்வையைப் புலப்படுத்திய அவர் அந்தப் பார்வைக்கு முரணாகாதவகையில் ஈழத்துத் தமிழிலக்கியம் தன் மண்வாசனையுடன் அமைய வேண்டும் என்ற எண்ணத்தையும் தெளிவாக முன் வைத்தவர் ஆவார்.
தேசியம் என்ற அரசியற் கலைச்சொல் அந்நிய ஆதிக்க எதிர்ப்பு சுய (தேச பண்பாட்டு விருப்பு ஆகிய உணர்வுநிலைகள் இணைந்த பொருண்மையுடையது. இதன் இலக்கிய நிலைப்பட்ட செயற்பாங்கு தேசிய இலக்கியம்' எனப்படுகின்றது. ஈழத்திலே 1950களில் முனைப்புறத் தொடங்கிய முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக ஈழத்துத் தமிழ்த் தேசிய இலக்கியம் என்ற கருத்துநிலை திகழ்ந்தது. தமிழ் இலக்கியம் என்ற பொதுப் பரப்பில் ஈழத்துத் தமிழ் இலக்கியம் தனக்கெனத் தனியான அடையாளத்தை உடையதாக இனங்காணப் படுவதற்கு வகை செய்ய வேண்டும் என்பதே மேற்படி கருத்து நிலையின் தெளிபொருள். ஈழத்தமிழர் தமிழகத்தமிழருடன் பல கூறுகளில் பொதுமையும் வரலாற்றுரீதியான பிணைப்பும் கொண்டவர்கள். எனினும் தாம் வாழும் புவிச்சூழலுக்கு ஏற்பத் தனித்தன்மைகளும் உடையவர்கள் என்ற உணர்வுநிலையே மேற்படி ‘தேசியக் கருத்து நிலையின் அடிப்படையாகும்.
பூரீலபூரீ ஆறுமுக நாவலர் (1822-79) காலம் முதல் மேற்படி உணர்வுசார் தேசிய எண்ணக்கரு பல படிநிலைகளில் வளர்ச்சி எய்தி வந்துள்ளது படைப்பு நிலையிலும் ஆய்வு நிலையிலும் இவ்வாறான வளர்ச்சியின் வரலாற்றைக் கண்டுணரமுடியும். இவ்வாறு வளர்ந்து வந்த இவ்வெண்ணக்கரு 1950-60 களில் முனைப்புற்றது. தமிழகத்து வணிக எழுத்துக்கள் மீது ஈழத்தவருக்கிருந்த நாட்டத்தைக் கட்டுப்படுத்தி, சொந்த மண்ணின் சமூக வாழ்க்கையை நோக்கி அவர்களது கவனத்தைத் திருப்பும் முயற்சியாகவும் மேற்படி தேசிய எண்ணக்கரு பரிணாமம் எய்தியது. இதனை முன்னெடுத்த வகையில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் வரலாற்று முக்கியத்துவமான பணியை அன்று புரிந்தனர். இவ்வாறு முற்போக்கு இயக்கத்தினர் அன்று மேற்கொண்டிருந்த ‘ஈழத்துத் தமிழ்த் தேசிய எண்ணக்கருவுக்கு கைலாசபதி தெளிவான விளக்கம் தந்துள்ளார். தேசிய இலக்கியம் என்பது சொந்த நாட்டு மக்கள் வாழ்க்கையை அதற்குரிய மண்வாசனையுடன் சித்திரிப்பது மட்டுமன்று அவ்வாழ்க்கையை

Page 37
70 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
முன்னேற்றுதல், சமுதாய மாற்றத்துக்கு வழிசமைத்தல் ஆகிய இலட்சியங் களையும் உள்ளடக்கியதாகும் என்பது அவரது கருத்து. இக்கருத்தைத் தெளிவுறுத்தும் வகையில் தேசிய இலக்கியம்' என்பதன் பொருள் விளக்கத்தில் ஐந்து முக்கிய பண்புகளை அவர் சுட்டியுள்ளார். அவை :
(அ) விதேசிய எதிர்ப்பு (ஆ) சுதேசிய விருப்பு இ சமுதாய நோக்கு
(ஈ) ஜனநாயக நாட்டம், (உ) மனிதாபிமானம் "
இவ்வைந்தும் தேசிய இலக்கியத்தின் உருவாக்கத்தில் வெவ்வேறு அளவிலும் வகையிலும் ஆதாரமாக அமைவன என அவர் கூறுகிறார். இவ்வகையில் தேசிய இலக்கிய முயற்சியானது சமகால சனநாயக, முற்போக்கு சக்திகளுடன் இணைந்த ஒரு செயற்பாங்கு என்பது அவர் தரும் விளக்கம்.
"தேசிய இலக்கியம் என்பது கேவலம், நம்மைச் சுற்றி இருப்பவற்றையெல்லாம் அபேத உணர்வுடன் ஏற்றுக்கொண்டு படைக்கப்படுவது ஒன்று அன்று. அது சமூகத்தை மாற்றி புதியதாய் அமைக்க வேண்டும் என்னும் இலட்சியத்தைக் கொண்டதாயும் உள்ளது. சமுதாய மாற்றத்துக்குப் பாடுபடும் பணியிலேயே சகலவிதமான ஜனநாயக இயக்கங்களுடனும், போராட்டங்களுடனும் அது தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறது. சாதிப் போராட்டத்தி லிருந்து கிராமியக் கலைகளின் மறுமலர்ச்சி - புத்துயிர்ப்பு - வரையிலான எண்ணற்ற செயல்களுடன் தேசிய இலக்கியம் நெருங்கிய உறவு கொண்டிருக்கிறது" °
கைலாசபதி தந்துள்ள இவ்விளக்கம் தேசிய இலக்கியத்தை முற்போக்கு இலக்கியத்தின் ஒரு கூறாக இனங்காட்டி நிற்பது என்பது மனங்கொள்ளத் தக்கது. சமகால ஈழத்தில் மண்வாசனை மற்றும் பொதுவான சமூகக் காட்சிகளைப் பிரதிபலித்து நின்ற படைப்புக்கள் மீதான அவரது விமர்சனமாகவும் மேற்படி கூற்று அமைகின்றது எனலாம்.
தேசிய இலக்கியத்திற்கு மேற்கண்டவாறு படைப்பு நிலையில் கோட்பாட்டு விளக்கம் தந்துநின்ற கைலாசபதி ஈழத்துத் தமிழ்த் தேசிய இலக்கியத்தின் வரலாற்றைக் கட்டியமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டவர் என்பது இத்தொடர்பில் குறிப்பிடத்தக்கது. அவர் சார்ந்திருந்த பல்கலைக்கழக ஆசிரியப் பணியின் கடமைகளுள் ஒன்றாகவும் அம்முயற்சி அமைந்தது. இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் ஈழத்துத் தமிழிலக்கியம் முக்கிய பாடநெறியாக அறிமுகமாகத் தொடங்கிய

திறனாய்வுப் பார்வைகள் 71
பொழுது - 1960-70களில் - அம்முயற்சியை முன்னெடுத்தவர்களுள் ஒருவர் கைலாசபதி என்பது நாம் நினைவிற்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
இவ்வாறான முயற்சியில் 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகள் சார்ந்த ஈழத்துத் தமிழறிஞர் பலரின் செயற்பாடுகள் அவரது மதிப்பீட்டுக்குட்பட்டன. ஈழத்து இலக்கிய முன்னோடிகள் (1986) என்ற நூலும் ஈழத்துத் தமிழறிஞர் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளும் அவரது மேற்படி முயற்சியின் பெறுபேறுகளாகும். இவ்வாறான எழுத்துக்களில் அவரது தனிக்கவனத்தைப் பெற்றவர்கள் என்ற வகையில் பூரீலபூரீ ஆறுமுகனாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை ஆகியோர் முக்கியமானவர்கள்.
நாவலரை, அவர் கடந்த நூற்றாண்டில் மேற்கொண்ட 'சைவக்காவற் பணி காரணமாக ஒரு சமய குரவராகக் காணும் நிலையே 1960கள் வரை பொதுவாக நிலவியது. அந்நிலையினின்று அவரை விடுவித்து ஒரு தேசிய வீரராகக் கணிப்பிடும் முயற்சி 1950-60 களில் உருவாகியது. இவ்வெண்ணக் கருவை முன்னெடுத்தவர்கள் முற்போக்கு இயக்கத்தினர் ஆவர். கடந்த நூற்றாண்டில் அந்நியப் பண்பாட்டுப் படர்ச்சிக்கு எதிராகத் தேசிய பண்பாட்டுப் பாதுகாவலராக நாவலர் திகழ்ந்தார் என்பதே அவர் தேசிய வீரராகக் கணிக்கப்பட்டதன் அடிப்படையாகும்.
இவ்வாறு தேசிய வீரராகக் கணிக்கப்பட்ட நாவலரிடம் ஈழத்தின் தேசியத் தமிழிலக்கியத்துக்கான முன்னோடிப் பண்புகள் எவ்வகையில் அமைந்திருந்தன என்பதை இனங்கண்டு காட்டும் முயற்சிகளாகக் கைலாசபதியின் நாவலர் பற்றிய மதிப்பீடுகள் அமைந்தன. இவ்வகையில் மூன்று முக்கிய பண்புகளை நாவலரிடம் அவர் இனங் க்ாண்கிறார்.
அ) ஒருமுகப்படுத்தப்பட்ட இலக்கிய நோக்கு ஆ) மக்கட் சார்பு
இ நாட்டு நல நாட்டம் ۔۔۔۔۔۔۔۔۔ـــــــــ தீவிர சைவப் பற்றாளராகவும் பிரசாரகராகவும் திகழ்ந்த நாவலர் இலக்கியம் என்ற வகையில் சமண சமய சார்பான சீவகசிந்தாமணி முதலி யவற்றையும் பதிப்பிக்க எண்ணியிருந்தவர் என்பது முதலான செய்திகள் நாவலரின் ஒருமுகப்படுத்தப்பட்ட இலக்கிய நோக்குக்குச் சான்றுகளாகக் காட்டப்பட்டுள்ளன. நாவலரின் மதிப்பு முயற்சிகள், பாடநூல் முயற்சிகள் பிரசங்க முறை மற்றும் அவர் கையாண்ட உரைநடை முதலியன அவரது மக்கட் சார்பின் சான்றுகளாகச் சுட்டப்படுகின்றன. சமூகத்தின் பொது விடயங்களில் சமய, எல்லைக்கப்பால் பிறமதத்தினருடனும் தோளோடு தோள்' சேர்ந்து நின்று செயற்பட்டமை நாவலரின் நாட்டு நல நாட்டத்தின்

Page 38
72 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
சான்றாக கருதப்படுகின்றன. இவ்வாறான இனங்காணும் முயற்சிகளுடாக நாவலரை (மகாகவி பாரதியைப் போலவே ஒரு மகாபுருஷராக கைலாசபதி கணிக்க முற்பட்டுள்ளார். *
சி.வை.தாமோதரம் பிள்ளை பற்றிய கைலாசபதியின் மதிப்பீட்டிலே அழுத்தம் பெறும் அம்சம் பிள்ளையவர்களின் மூலபாடத் திறனாய்வு நுட்பமாகும். தாம் பதிப்பித்த நூல்களுக்கு தாமோதரம்பிள்ளை எழுதியுள்ள நீண்ட பதிப்புரைகள் பதிப்புக்கலை நுட்பங்கள் பற்றிய அவரது சிந்தனைத் திறனைப் புலப்படுத்துவன என்பது கைலாசபதியின் கணிப்பு இவ்வகையில் ஒப்பீட்டு நிலையிலே தமிழகத்தின் பதிப்புப் பேரறிஞரான உ.வே. சாமிநாதையரைவிட தாமோதரம் பிள்ளையவர்கள் எந்த அளவுக்குத் தகுதிமிக்கவராகத் திகழ்ந்துள்ளார் என்பதைக் கைலாசபதி விதந்துரைத்துள்ளார். *
610 சாதியம், பெண்ணடிமை நிலை,மொழியுணர்வு
கைலாசபதியின் திறனாய்வுப் பார்வை பதிந்த இலக்கிய (சமுதாயப் பிரச்சினைத் தளங்கள் என்ற வகையில் சாதியம், பெண்ணடிமை நிலை மற்றும் தமிழ்மொழியுணர்வு என்பன குறிப்பிடத்தக்கன. இவை தொடர்பாக அவர் புலப்படுத்தி நின்ற பார்வைகள் இங்கு நமது கவனத்துக் குரியனவாகின்றன.
மேற்சுட்டியவற்றுள் முதல் இரண்டும் தமிழர் சமுதாயத்தை - இந்திய சமுதாயத்தை - நீண்ட நெடுங்காலமாகப் பாதித்து வந்துள்ள கொடு நோய்களாகும். காலந்தோறும் இவை இலக்கிய ஆக்கங்களில் பிரதி பலித்துள்ளன. பண்டைய புராண மரபு முதல் சமகால புனைகதை, கவிதை, நாடகம் என்பன வரை மேற்படி பிரச்சினைகளைப் பாடுபொருள்களாகக் கொண்டு எழுந்துள்ள ஆக்கங்கள் பல. இவற்றில் இப்பிரச்சினைகள் எடுத்தாளப்பட்ட காலச் சூழல்களுக்கேற்ப வெவ்வேறு பரிமாணங்களை எய்தி வந்துள்ளன.
இவ்வகையில் இரு கதை மரபுகள் முக்கியமானவை. ஒன்று நந்தன் கதை மற்றது அகலிகை கதை, பிறந்த சாதியின் தாழ்நிலை காரணமாக சமய அனுபவ நிலையில் ஒருவன் எதிர்கொள்ளும் அக்கினிப் பிரவேசம் நந்தனுடைய கதை. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன்னை இழந்த பெண்ணொருத்தியின் கண்ணீர்க் காவியம் அகலிகை கதை. வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு இலக்கிய வகைகளில் இக்கதைகள் உருப்பெறும் போது கதையம்சம், பாத்திரப் பண்பு நிலை, அழுத்தம் பெறும் உணர்வுநிலை என்பவற்றில் வேறுபட்டு வந்துள்ளன. இவ்வாறு இக்கதை

திறனாய்வுப் பார்வைகள் 73
மரபுகளில் நிகழ்ந்து வந்துள்ள வேறுபாடுகளை நுனித்து நோக்கிய கைலாசபதி, சமகாலத்தில் இவை எவ்வாறு நோக்கப்பட வேண்டும் என்ற தம் எண்ணப் பாங்கையும் தமது எழுத்துக்களில் பதிவு செய்துள்ளார். இவ்வகையில் அவரது இருகட்டுரைகள் நமது கவனத்துக்குரியவாகின்றன. அவை அ) "புலைப்பாடியும் கோபுரவாசலும்" ஆ "அகலிகையும் கற்பு நெறியும்" நூல் : அடியும் முடியும்.
மேற்படி முதலாவது கட்டுரையிலே நந்தன் வரலாறு காலம் தோறும் எய்திய பரிணாமம் 'சமூக-பொருளியல் பகைப்புலங்களூடாக இனங்காட்டப்படுகின்றது. பக்தி இலக்கியச் சூழலில் சுந்தரரால் 'செம்மை என்ற பண்புநிலை அடைமொழியால் மட்டும் சுட்டப்படும் திருநாளைப் போவார் நந்தன் சோழப் பெருமன்னர் கால நிலவுடைமை - மத அதிகார சூழலில் குறித்த ஒரு சாதிக் கட்டமைப்புக்குள் நிற்பவராகவும் தமது இழிபிறப்பு தம் ஈடேற்றத்துக்குத் தடையாயிருப்பதை உணர்ந்து எரிமூழ்கித் தம் உடலைப் புனிதப்படுத்திக் கொள்பவராகவும் காட்டப்படுகிறார். சேக்கிழார் தரும் இக்காட்சியில் சாதிக் கொடுமைக்கெதிரான உணர்வெழுச்சியோ அன்றேல் முரண்நிலைப் பாத்திரப் புனைவுகளே இடம் பெறவில்லை. 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயராட்சிப் பின்னணியில் தஞ்சாவூரில் ஆதிக்கநிலை பெற்றிருந்த பிராமணர் சூழலில் நந்தன் சரித்திரக் கீர்த்தனைப் பாடிய கோபால கிருஷ்ண பாரதியார் எதிர்நிலைப் பாத்திரங்களைப் படைப்பதோடு நந்தனது சொற்களில் சாதிக் கொடுமைக்கெதிரான மனக் கொதிப்பையும் வெளிப்படுத்துகிறார். இந்த நூற்றாண்டில் ஈழத்தின் தீண்டாமை ஒழிப்பு சூழலில் இ. முருகையனது கோபுரவாசல் நாடகத்தில் நந்தனின் 'ஆன்மசொரூப விகசிப்பு காட்சிப்படுத்தப்படுகின்றது. பெளதிக நெருப்பு நெஞ்சக் கனலாக உருவக மாற்றம் எய்துகின்றது.
இவ்வாறு நந்தன் கதை எய்தி வந்துள்ள வேறுபாடுகளை 'சமூக-பொருளியல் வரலாற்றுத் தளங்களில் பொருத்திக் காட்டி விளக்கம் தந்த கைலாசபதி இவ்வாறான படைப்பு முயற்சிகள் சாதிப் பிரச்சினையைச் சமயம் என்ற எல்லைக்குள் மட்டும் வைத்து நோக்குகின்றன என விமர்சிக்கிறார். அவரது பார்வையில் இது பொதுவான தேசப் பிரச்சினையும் சிறப்பாக வர்க்கப் பிரச்சினையும் ஆகும்.
"இதைத் தனித்தெடுத்துச் சாதிப்பிரச்சினையாகவும் சமயப் பிரச்சினையாகவும் மாத்திரம் கருதாமல் பொதுவான தேசப் பிரச்சினையாகவும் சிறப்பாக வர்க்கப் பிரச்சினையாகவும் கருதிச் செயலாற்றும் நிலைமை தோன்றியுள்ளது. பல்வேறு

Page 39
74 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
வகைகளிலும் பல்வேறு நிலைகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களது அடிப்படை உரிமைகளுக்காகக் கிளர்ந்து எரியும் போராட்டங்களில் இதுவும் ஒன்று" *
என அவர் கூறுகிறார். இவ்வாறு சாதிப் பிரச்சினையைச் சிறப்பாக வர்க்கப் பிரச்சினையாகக் காண்பதற்கு அடிப்படை அவரது மார்க்சிய நிலைப்பட்ட சமூகவியற் பார்வை என்பது வெளிப்படை அவரால் விதந்துரைக்கப்படும் நாவல்களான முன்னரே சுட்டப்பட்ட) கணேசலிங்கனின் நீண்டப் பயணம், சட்ங்கு, டானியலின் பஞ்சமர், டி செல்வராஜின் மலரும் சருகும், கு. சின்னப்ப பாரதியின் தாகம் முதலியன மேற்குறித்தவாறு சாதிப் பிரச்சினையை வர்க்கப் பிரச்சினையாகக் கண்டவை என்பது இத்தொடர்பில் ' நமது கவனத்துக்குரியது.
சாதிப் பிரச்சினையைப் போலவே பெண்ணடிமைத் தனமும் வர்க்கநிலைப்படுத்தி நோக்கப்பட வேண்டியது என்பதே கைலாசபதியின் கருத்து. "அகலிகையும் கற்பு நெறியும்" என்ற கட்டுரை அவரது இந்தக் கருத்து நிலையை இலக்காகக் கொண்டே வளர்த்துச் செல்லப்படுகின்றது. அகலிகை கதைக்கு முழு வடிவம் தந்த முதல்வரான வால்மீகி முனிவர் முதல் சமகாலத்தில் அகலிகை பற்றிச் சிறுகதை, கவிதை என்பன எழுதியவர்கள் வரை பலரும் அகலிகையை உளவியல் நோக்கில் தான் சித்திரித்து வந்துள்ளனர் என்பதே மேற்படி கட்டுரையில் அழுத்திப் பேசப்படும் விடயம் ஆகும். வால்மீகி, கம்பர். வெ.ப. சுப்பிரமணிய முதலியார், புதுமைப்பித்தன், சதுசு, யோகியார் முதலிய பலரும் தத்தம் அறிவு, அநுபவம், பார்வை என்பவற்றுக்கேற்ப அகலிகைக்குப் பல்வேறு உளவியற் பரிமாணங்களைத் தருகின்றனர். சாபம், சாபவிமோசனம் என்பவற்றுக்கு வெவ்வேறு நிலைப்பட்ட விளக்கங்களும் இவர்களுட் சிலரால் தரப்படுகின்றன. ஆயினும் தொன்மம் என்ற தளத்திலிலேயே கதை நிகழ்கிறது. இதிலிருந்து வேறுபட்டு சமகால சமூகத் தளத்திற்கு அகலி கையை இட்டு வந்தவர் 'விந்தன் ஆவர்
விந்தனுடைய பாலும் பாவையும் நாவலில் இராமாயண அகலிகையை நினைவூட்டத்தக்க வகையில் அகல்யா என்ற பெண் முக்கிய பாத்திரமாக அமைகின்றாள். வழுக்கி விழுந்த அவள் தசரத குமாரன் என்பவன் தனக்கு வாழ்வளிப்பான் என்ற நம்பிக்கையுடன் அவனோடு செல்கிறாள். தயங்கித் தயங்கி அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் அவன் மனம் மாறித் துரத்தி விடுகிறான்.
வால்மீகி முதல் விந்தன் வரை அகலிகைகளின் பிரச்சினை பேசப்பட்டுள்ள முறைமை இதுதான். கைலாசபதி இவற்றை விரிவாக

திறனாய்வுப் பார்வைகள் 75.
எடுத்துக் காட்டுகிறார். அகலிகைகளின் பிரச்சினை - வஞ்சிக்கப்பட்ட அல்லது வழுக்கி விழுந்த பெண்களின் பிரச்சினை - பலவாறு பேசப்பட்டு வந்துள்ளதெனினும் உரிய தீர்வைப் பெறவில்லை என்பதையே கைலாசபதி உணர்த்துகிறார்.
இப்பிரச்சினை பெண்களின் பிற பிரச்சினைகளிலிருந்து தனித்ததொரு பிரச்சினையாக வேறுபடுத்தி நோக்கப்படக் கூடியதல்ல என்பது அவரது கருத்து வரலாற்றில் வர்க்க சமுதாயம் தோன்றிய காலத்திலி ருந்தே பெண்ணினம் தனது சம அந்தஸ்தை இழந்து வந்துள்ளதென்பதை அவர் மார்க்சிய மூலவருள் ஒருவரான ஏங்கல்ஸின் கருத்துக்களின் துணைகொண்டு தெளிவுபடுத்துகிறார். * இவ்விழப்பை வென்றெடுப்பதற்கு ஆண்-பெண் இருபாலரும் இணைந்த நிலையில் மேற்கொள்ளும் போராட்டத்தின் மூலம் நிகழக்கூடிய சமுதாய மாற்றமே வழிவகுக்கும் என்பது அவரது முடிபு.
"கடந்த பல நூற்றாண்டு காலமாக அரசியல் அதிகாரம், வம்ச (குல அதிகாரம், மத அதிகாரம், ஆண் (கணவன்) அதிகாரம் ஆகிய நான்கு வகையான அதிகாரங்களுக்கும் ஆட்பட்டவர்களாய்ப் பெண்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவற்றில் சில நவீன காலத்தில் பலவீனமுற்றிருக்கின்றன. எனினும் பெளதிக முறையிலும், கருத்து முறையிலும் நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ சித்தாந்தங்கள் இவற்றை ஆதரிக்கவே செய்கின்றன. மேற்கூறிய அதிகாரங்களிற் சில ஆண்களையும் உட்படுத்துகின்றன. எனவே ஆணும் பெண்ணும் யாவரும் சேர்ந்து இவ்வதிகாரங்களுக்கு ஆதாரமான சமுதாய அமைப்பைத் தகர்தெறியும் போதுதான் பெண் விடுதலையும் கிடைக்கும். அது வாய்ப் பேச்சாலன்றிப் போராட்டத்தினாலேயே வருவதாகும்" *
இவ்வாறு கூறும் கைலாசபதி “பொருளாதார விடுதலையே பெண்களின் விடுதலையுமாகும்" என்று தொடங்கும் ந.சி. கந்தையா பிள்ளையினுடைய முன்னுரைக் குறிப்பொன்றைத் தமது கருத்துக்கு அரண்சேர்க்கும் வகையில் சான்று காட்டுகிறார். *
மொழியுணர்வு என்பது மொழியின் தனித்தன்மை அதன் ஆற்றல் என்பன குறித்து திட நம்பிக்கை சார்ந்தது. ஒரு மொழிசார் பண்பாட்டினரை இயக்கநிலையில் ஒன்றிணைக்கும் உணர்வுத் தளம் அது. தமிழகத்தில் பல்லவர் காலப் பக்திச் சூழலில் தமிழுணர்வெழுச்சி ஒருவித தேசியத் தன்மையுடன் வெளிப்பட்டது என்பதனை முன்னர் நோக்கியுள்ளோம்.

Page 40
76 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
பின்னர் இடைக்காலத்தில் அவ்வப்போது பலரது எழுத்துக்களில் இவ்வுணர்வு புலப்பட்டு வந்துள்ள தெனினும் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்தே இது ஒரு இயக்க சக்தியாக வெளிப்படத் தொடங்கி இன்றளவும் தொடர்கின்றது.
கி.பி. 13ஆம் நூற்றாண்டின் பின் பல நூறாண்டுகள் தமிழரல்லாதோரின் மேலாதிக்கத்துக்குட்பட்டிருந்த தமிழகம் 19ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேயராட்சிச் சூழலில் கிடைத்த கல்வி வாய்ப்புக்களால் தன் பண்டைப் பெருமையை உணரத்தலைப்பட்டது. இம்முயற்சி மொழிசார் பண்பாட்டுத் தேடலாக வெளிப்படத் தொடங்கியது. வண. கால்டுவெல் 1856 இல் வெளியிட்ட திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் மேற்படி முயற்சிக்கு உந்து சக்தியாக அமைந்தது. திராவிட மொழிக் குடும்பம் பற்றியும் அதில் தமிழின் தலைமை நிலை பற்றியும் வடமொழியின் துணை வேண்டாது தனித்தியங்க வல்லதாகத் தமிழ் திகழ்கின்றமை பற்றியும் கால்டு வெல் எடுத்துரைத்தவை தமிழ்மொழிசார் உணர்வெழுச்சிக்கு இயக்க வடிவம் நல்கவல்ல மூலக் கூறுகளாக அமைந்தன. தனித்தமிழ் இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் முதலியனவாக இவை பாரிணாமம் எய்தின. தமிழகத்தின் இந்த நூற்றாண்டின் வரலாற்றை வழிநடத்தும் முக்கிய இயக்குவிசைகளாக இவை செயற்பட்டு வந்துள்ளன. செயற்பட்டு வருகின்றன.
இவ்வாறான வரலாற்றுப் போக்கை நுனித்து நோக்கிய கைலாசபதி இவற்றின் அடிப்படைகளின் தகுதிப்பாட்டை விமர்சிக்க முற்பட்டுள்ளார். குறிப்பாகத் தனித் தமிழியக்கம் உருவாவதற்கு அடிப்படையான காரணிகளும் அதற்குத் தோற்றுவாய் செய்தவர்கள் முன்னெடுத்தவர்கள் என்போரின் சிந்தனை, செயல்முறை என்பனவும் அவரால் விமர்சிக்கப் பட்டுள்ளன.
தமிழ் பிறமொழிகளிலிருந்து - குறிப்பாக வடமொழியிலிருந்து - தன்னை வேறுபடுத்தித் தன் தனித்தன்மைகளைப் பேணிக் கொள்ள முயல்வதற்கு வலுவான காரணிகள் உள. சுப்பிரமணிய தீட்சிதர், சாமிநாத தேசிகர் முதலிய சிலர் தமிழும் வடமொழியும் ஒரே இலக்கண அடிப்படை கொண்டன எனக் கருதியமை, வடமொழியை உயர்த்திப் பேசித் தமிழைத் தாழ்த்தியும் பேசி வந்தமை, மற்றும் மணிப்பிரவாள நடை உருவானமை முதலியனவாக இக்காரணிகளை நாம் இனங்காணலாம். கைலாசபதி இக்காரணிகளுட் சிலவற்றை எடுத்துக் காட்டியுள்ளார். * ஆயினும், தனித்தமிழ் பற்றிய சிந்தனைக்குத் தோற்றுவாய் செய்த கால்டுவெல், மற்றும் பெ.சுந்தரம்பிள்ளை அதனை இயக்கநிலையில் முன்னெடுத்த மறைமலையடிகள் ஆகியோரின் ஆய்வுநேர்மை, சிந்தனைக்கும்

திறனாய்வுப் பார்வைகள 77
செயன் முறைக்குமுள்ள முரண் முதலியவற்றை அவர் விமர்சிக்கிறார். கால்டுவெல்லின் தமிழ்த் தனித் தன்மை பற்றிய ஆய்விலே பார்ப்பன எதிர்ப்புணர்வும் கலந்திருந்தது. இதனை,
"மொழியியற் கருத்துக்களூடே அவற்றுக்குப் புறம்பான சமூகக் கருத்துக்களும் பாதிரியாராற் கூறப்பட்டன. அவற்றுள் ஒன்று. பார்ப்பனர்பால் காழ்ப்பு ஆகும். இது ஊன்றிக் கவனிக்க வேண்டியது. "விஞ்ஞான" அடிப்படையில் அமைந்த பல கூற்றுக்கள் எளிமை நயமுடைய வகையிலே, தீமை விளைவிக்கத்தக்க கருத்துக்களையும் கலந்தூட்டி விடுகின்றன என்பதற்கு கால்டுவெல் நூல் சிறந்த எடுத்துக் காட்டு" ? என்ற கைலாசபதியின் கூற்று தெளிவுறுத்தும். இவ்வாறு கால்டுவெல்லின் ஆய்வு நேர்மையை விமர்சிக்கும் கைலாசபதி பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தின் ஒரு உத்தியாகவே கால்டுவெல்லின் ஆய்வுச் செயற்பாடு அமைந்திருக்கலாம் என்ற ஊக்கத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறார். *
தனித் தமிழியக்கத்தைத் தோற்றுவித்த மறைமலையடிகளும் அவருக்கு அவ்வகையில் "ஞானகுருவாகத் திகழ்ந்த சுந்தரம் பிள்ளையும் ஆங்கில ஆட்சியின் ஆதரவாளர் மற்றும் பழைமைப் பற்றாளர்கள் என்பன கைலாசபதியின் மதிப்பீடுகள். * மறைமலையடிகள் பழங்காலத் தமிழ்மொழியைப் பயன்படுத்த வேண்டும் எனவும் வடமொழியைத் தவிர்க்க வேண்டும் எனவும் கூறுவது வரலாற்றைப் பின்னோக்கித் தள்ளும் முயற்சிகள் என அவர் கருதுகிறார்.
"பழம்புகழ் தமிழைக் காப்பதோடு தமிழை வடமொழிக் கலப்பில்லாததாகவும் ஆக்க வேண்டும் என்ற வேதாசலத்தின் முயற்சி இரட்டைப் பிற்போக்குத்தனமானதாகும்" * என்ற கைலாசபதியின் கூற்றில் அவர் தனித்தமிழ் இலக்கியம் பற்றிக் கொண்டிருந்த கணிப்பு தெளிவாகின்றது. பார்ப்பனர் அல்லாதாரின் இயக்கத்துக்குப் பயன்படும் நிலையில் செயற்பட்ட தனித்தமிழியக்கம் காலகதியில் பின்னடைந்து விட்டதென்ற முடிவுக்கே கைலாசபதி வந்துள்ளார். கைலாசபதியின் இவ்வாறான, கருத்து நிலையைக் கேசவன் விமர்சித்துள்ளார். அவ்விமர்சனம் :
தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றம் சமகாலப் பொருத்தம் உடையதா. தனித்தமிழ் தேவையா என்பன பற்றிய மதிப்பீடுகளைக் கைலாசபதி வழங்கவில்லை. . .

Page 41
78 v தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
மறைமலை குறித்த கைலாசபதியின் மதிப்பீடுகளையும் பழைமை பற்றிய கற்பனாவாதத் தன்மையிலான நிலைபாடு குறித்த அவரது விமரிசனத்தையும் நாம் உண்மைகளென ஏற்கும் அதே நேரத்தில், தனித்தமிழ் மொழிக் கோட்பாடு என்பதன் தேவையை மறுத்துரைக்க முடியாது. அதற்கான அகக் காரணங்கள் இங்கு வரலாறு தொட்டு மலிந்திரு கின்றன". "
இவ்விமர்சனத்தின் பொருத்தப்பாடு விவாதத்திற்குரியது. 6.11 தமிழிலக்கியத் திறனாய்வு : வரலாறும் பிரச்சினைகளும்
சமகாலத் தமிழிலக்கியப் பரப்பு, இலக்கிய வகைகள் மற்றும் இலக்கியம் தொடர்பான பிரச்சினைகள் முதலியவற்றில் தனது திறனாய்வுப் பார்வையைப் புலப்படுத்தி நின்ற கைலாசபதி தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு பற்றியும் சிந்தித்துள்ளார். அவ்வரலாற்றில் தாம் சார்ந்து நின்ற தளம் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார். தமது தளநிலைக்கு முரண்பட்டவர்களை விமர்சிப்பதிலும் தனி ஈடுபாடு காட்டியுள்ளார். இவை தொடர்பான சில முக்கிய குறிப்புக்களை மட்டும் சுருக்கமாக இங்கே நோக்கலாம்.
தமிழில் திறனாய்வு என நாம் சுட்டும் துறை (விமர்சன இலக்கியம் என்ற துறை நாவல், சிறுகதை முதலியவற்றைப் போல புது வரவான ஒரு துறை என்பதே ஆய்வாளர்களின் பொதுவான கருத்துநிலையாகும். கைலாசபதியும் இக்கருத்தினரே. ஆயினும் திறனாய்வை ஒரு அணுகுமுறை என்ற வகையில் நோக்கினால் பண்டைத் தமிழ் நூல்களில் அவ்வாறான அணுகுமுறைக்கான சான்றுகளை இனங்காண முடியும் என்பதே அவரது கருத்தாகும். * இவ்வகையில் நக்கீரர் நிகழ்த்திய சம்வாதம் மற்றும் உரையாசிரியர்களது விளக்க முறைகள் முதலியன அவரது கவனத்துக்கு வந்துள்ளன. இலக்கண-இலக்கிய உரைகளைப் பார்க்கிலும் சமயதத்துவ சாத்திர நூல்களுக்கு மேற்கொள்ளப்பட்ட உரை முயற்சிகளிலேயே விமர்சனக் குறிப்புகள் கூடுதலாக உள்ளன என அவர் கருதுகிறார். இத்தொடர்பிலே, வைதிக மரபுகளுக்கு எதிராகப் பண்டைக்காலத்தில் தமிழிலும் வடமொழியிலும் திகழ்ந்திருக்கக் கூடிய வலுமிக்க விமர்சன மரபு பற்றிய ஊகத்தையும் முன் வைக்கிறார்.
"தமிழிலும் வடமொழியிலும் வைதிகக் கருத்துக்களை மறுத்து உலகாயதச் சிந்தனைகளை எடுத்துரைத்தோர் உரமிக்க விமர்சகர்களாய் இருந்திருத்தல் வேண்டுமென்பது

திறனாய்வுப் பார்வைகள் 79
அவர்களைக் கண்டித்தும் தூற்றியும் இழித்துரைத்தும் எழுதப்பெற்ற உரைகளிலிலிருந்து ஊகிக்கத்தக்கதாகும். பண்டைக் கருத்து முதல் வாதத்தைக் கடுமையாக விமர்சித்து நெஞ்சுரத்துடன் நூல்கள் இயற்றிய நாத்திகர்களும் வைதிக மறுப்பாளர்களும் இடைக் காலத்தில் சைவ-வைணவ நிறுவனங்களினால் மறைக்கப்பட்டாலும் அவர்களது எதிர்மரபு இன்றும் தத்துவப் போராளிகளுக்குப் பல வழிகளில் ஆதர்சமாய் இருக்கிறது" * பண்டைய உரையாசிரியர்கள் தொடர்பான கணிப்பில் கைலாசபதி நமது கவனத்துக்கு முன் வைக்கும் அவதானிப்புக்கள் (Observations) வருமாறு :
(அ) அவர்கள் விமர்சனத்தைத் தனித்ததொரு துறையாகக்
கருதவில்லை என்பது. (ஆ) பழைய பனுவல்களையும் பிரபந்தங்களையும் பேணிப் பாதுகாப்பதும் அதன் பயனாகத் தமது காலத்து நிலவிய சமுதாய அமைப்பினைக் கட்டிக் காப்பதும் அவர்களது பிரதான நோக்கங்கள் என்பது. *
இவ்வாறு பழைய விமர்சன மரபு பற்றிய தன் கணிப்புக்களை முன் வைக்கும் கைலாசபதி அம்மரபு அநுபவத்திலும் பார்க்க பிரமாணமே சிறந்தது என்ற அடிப்படையான நம்பிக்கையில் இயங்கியது என்பர். *
மேற்கண்டவாறு பண்டைய தமிழ்த் திறனாய்வு மரபுகள் பற்றி மதிப்பிட்டுள்ள கைலாசபதி நவீன திறனாய்வு முறைமை உருவாகி வளர்ந்தமைக்கு அடிப்படையாக அமைந்த மூன்று அம்சங்களைச் சுட்டுவர்.
அ ஆய்வறிவு முறை
ஆ) மரபு எதிர்ப்புணர்வு
இ) புதிது புனையும் ஆர்வம் ° மேற்படி மூன்று அம்சங்கள் கடந்த நூற்றாண்டிலிருந்து தமிழில் தொழிற்பட்டு வந்த முறைமை, அவற்றினடியாகத் தமிழிலக்கியத் திறனாய்வு எய்திய புதிய பரிமாணங்கள் என்பவற்றை நோக்கிய அவர் தமது சமீப காலம் வரையான திறனாய்வு வரலாற்றை மூன்று முக்கிய செல்நெறிகளாக இனங்காண்கிறார். அவை :
அ பழைமைவாதம்
ஆ புதுமை மோகம்
இ) சமூகவியல் அணுகுமுறை *

Page 42
8O தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசப்தி
பழைமைவாதம் என்பது பழைய நூல்களைப் பாராட்டி, அவற்றின் தொன்மை, தனித்தன்மை, சிறப்பு என்பவற்றைப் பேசுதல் ஆகும். இவற்றை மட்டுமே பேசுகின்றவர்களை அதீத பழைமைவாதிகளாகக் கைலாசபதி காண்கிறார். தி. செல்வக்கேசவராயர் முதல் அ.ச. ஞானசம்பந்தன் வரை - மறைமலையடிகளிலிருந்து மார்க்கபந்து சர்மா வரையானவர்கள் உள்ளடங்கலாக - பலர் இவ்வகையினர் என்பது கைலாசபதியின் கணிப்பு 38 பழைய நூல்களை அவை எழுந்த காலம், சூழ்நிலை, சமுதாய அமைப்பு முதலியவற்றின் தொடர்பு நோக்காது அவற்றின் 'காலங்கடந்த தன்மையையும் ஈடிணையற்ற' ஏற்றத்தையும் போற்றுதல் இத்தகையவர்களின் செயன் முறை என அவர் காண்கிறார். அவர் இதனை ஒருவகையான பண்டிதத் திறனாய்வு எனவும் கருதுவர்.
புதுமை மோகம் என்பது புதிய படைப்புக்களை மட்டும் கவனத்திற் கொள்ளுதல், நவீனத்துவம் என்ற சொல்லை மந்திரம்போல உச்சரித்தல், இலக்கியம், தத்துவம் முதலியன வரலாற்று நிகழ்வுகளுக்கு ஏற்பக் காலந்தோறும் மாறுவன என்பதை உணராமல் அண்மைக்கால ஆக்கங்களே விமர்சனத்துக்கு உரியன என நம்புதல் முதலிய குணாம்சங்களாக கைலாசபதியால் உணர்த்தப்படுகின்றன. இவ்வகைச் செயற்பாட்டினராக கநா. சுப்பிரமணியம், வெங்கட் சாமிநாதன் முதலியோர் அவரால் சுட்டப்படுகின்றனர். * இவர்கள் காலதேசவர்த்தமானங்களைக் கடந்த அழகியல் பற்றிப் பேசுகிறார்கள் என்பது அவரது முக்கிய விமர்சனம் ஆகும்.
இவ்வாறான இருமுனைப்பட்ட அணுகுமுறைகளிலிருந்து வேறுபட்டதாக அமைந்ததே சமூகவியல் அணுகுமுறை. அது இலக்கியத்தைச் சமூகத்தின் விளைபொருளாகக் காண்பது அதனை வரலாற்றில் வைத்து நோக்குவது. இதுபற்றி இந்நூலின் இரண்டாம் இயலில் நோக்கியுள்ளோம்" இந்த அணுகுமுறை கணிசமான அளவுக்கு மார்க்சியத்தால் நெறிப்படுத்தப்படுவது என்றும் தமிழில் விஞ்ஞான சோஷலிஸக் கருத்துக்கள் வேரூன்றிச் சுவறத் தொடங்கிய பின்னரே குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் வளரலாயிற்று என்றும் கைலாசபதி குறிப்பிடுகிறார்." இத்தகு அணுகுமுறையைக் கைக்கொள்பவர்களாக அவர் தன்னையும் உளப்படுத்தி கா. சிவத்தம்பி, இ. முருகையன், தொ.மு.சி. ரகுநாதன், நா. வானமாமலை, கே. முத்தையா, தி.க, சிவசங்கரன், ஆர்.கே. கண்ணன், கே. பாலதண்டாயுதம், ச. செந்தில்நாதன், அருணன் முதலியோரைச் சுட்டுவர். இவ்வணுகுமுறையில் ஆழமான பார்வையையும் நுட்பமான திறன்முறைகளையும் புகுத்தியவர்களாக எஸ். தோதாத்திரி,

திறனாய்வுப் பார்வைகள் 8.
கோ. கேசவன், து. மூர்த்தி, சு. அரங்சராசன், பொன்னீலன், கே. சண்முக லிங்கம், என். சண்முகரத்தினம், எம்.ஏ. நுஃமான், சி. மெனளகுரு, இளையபத்மநாதன் என்போர் அவரால் குறிப்பிடப்படுகின்றனர்.
இவ்வாறு தமிழிலக்கியத் திறனாய்வின் வரலாற்றுச் செல் நெறியைத் தனது நோக்கில் இனங்காட்டி நிற்கும் கைலாசபதி தம் தளநிலைக்கு எதிர்நிலையினர் என்ற வகையில் க. நா. சு. வையும் அவர் சார் குழுவினரையும் திட்டமிட்டு விமர்சித்துள்ளார். ܀
க.நா.சு. குழு பற்றிய கைலாசபதியின் விமர்சனம் முதலில் மல்லிகை இதழில் தொடராக வெளிவந்து பின்னர் திறனாய்வுப் பிரச்சினைகள் (1980) என்ற சிறுநூலாக உருப்பெற்றது. இதில் விமர்சிக்கப்படும் முக்கிய விடயங்கள் இருவகையின. ஒன்று தனி மனிதவாதம்; இன்னொன்று உருவவாதம்'
தனி மனிதவாதம் என்பது சமூகம் என்ற கட்டமைப்பில் தனிமனிதன் தன் தனித்தன்மையையும் தன் நலனையும் பேணிக் கொள்வதை நோக்காகக் கொண்ட உணர்வு நிலையாகும். அடிமைக்காலமுதல் நிலவுடைமைக் காலம் வரை தனிமனிதன் சுதந்திரம் இன்றிக் கட்டுப்பட்டிருந்த நிலையை முதலாளியம் முதன்முறையாக (உறவுத் தளைகளிலிருந்து விடுவித்தது. இதுவே தனிமனித வாதத்தின் தோற்றுவாய். இவ்வாறு தனிமனிதன் கட்டுக்களிலிருந்து விடுபட்டு நிற்கும் நிலையானது சமுதாயத்தினின்று விலகி நிற்பது என்பதை நோக்கமாகக் கொண்டது அன்று. மாறாக நான் என்னும் சிறுபகுதியைச் சமுதாயம் என்ற பெரும் பகுதியோடு பொருத்தமுற இணைத்துக் கொண்டு முழுமையை நாடுவதை நோக்காகக் கொண்டதாகும். வரலாற்றடிப்படையிலும் சமூகவியலடிப்படையிலும் தனிமனித வாதத்தின் சாராம்சம் இதுவே என்பது கைலாசபதி தரும் விளக்கம் *
கநா.சு.வின் தனிமனிதவாதம் இத்தகு "தனிமனித - சமூக இணைப்பு நிலையைப் பேசுவதாக அன்றி முரண்நிலைக்கு முதன்மை தருவாக - முரண்பாடுகளே நியதி எனக் கூறுவதாக - உள்ளது என்பதே கைலாசபதி சுட்டும் குறைபாடு ஆகும். சுருங்கக் கூறின் 'க.நா.சு கலைஞனையும் மக்களையும் வேறுபடுத்துகிறார் என்கிறார் கைலாசபதி,
"கலைஞனை ஒரு கோடியிலும் பரந்துபட்ட மக்கள் தொகுதியை மறுகோடியிலும் காண்கிறார் க.நா.சு. இவையிரண்டும் என்றுமே இணைய இயலாது என்பது அவர்வாதம். . . கலைஞன் - எழுத்தாளன் - தனிப்பிறவி என்றும் சமுதாயத்திலிருந்து விலகி நிற்பதே அவனது இலக்கணம் என்றும் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார் .

Page 43
82 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
கலைஞனது தனித்துவத்தையும் மகத்துவத்தையும் எந்த அளவுக்கு அவர் உயர்வாகப் பேசுகின்றாரோ, அந்த அளவுக்குப் பொதுமக்களையும் (பரந்துபட்ட வாசகர் களையும்) இகழ்ந்து பேசுகிறார். ஆரம்பத்திலிருந்தே எஸ்ராபவுண்ட் முதலிய தனிமனிதவாதிகளைக் குருநாதர்களாகக் கொண்ட நாள் முதலாக - இந்தப் போக்கைக் க.நா.சு.விடம் நாம் காணக் கூடியதாக உள்ளது." 43
என்பது கைலாசபதியின் விளக்கம். இவ்வாறான க.நா.சு.வின் தனி மனிதவாதம் அவரையும் அவரது குழுவினரையும் இலக்கியத்தரமற்ற தர்க்கவாதங்களில் ஈடுபடுத்தி விட்டது என்பதும் அதனால் சமூகத்தை முற்றாகவே புறக்கணிக்கும் அதீத தனி மனிதவாதத்துக்கு இட்டுச் சென்று விட்டது என்பதும் கைலாசபதியின் கணிப்பு ஆகும். *
உருவவாதம் என்பது இலக்கியம் அல்லது கலைப் படைப்பின் உருவத்துக்கு - வடிவ நிலைக்கு முதன்மை தரும் நோக்கு நிலை ஆகும். க.நா.சு.வின் எழுத்துக்கள் பலவற்றில் அவர் தனது இந்த நோக்கைப் புலப்படுத்தியுள்ளார்.
"நான் ஒரு நூலையோ, சிறுகதையையோ இலக்கியம் என்று ஏற்றுக் கொள்ளும்போது அதை அதன் 'விஷயத்தைப் பொறுத்து இலக்கியம் என்று சொல்வதில்லை. ஏனென்றால் 'விஷயம்' என்பது இருக்கிறதே. அது வாழ்வுக்கும் இலக்கியம் எது எனத் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் இலக்கிய விமர்சகனாக நான் இலக்கியத்தை அணுகி அலசிப் பார்க்கும் போது உருவத்துக்குப் பிரதான்யம் தந்தே அலசிப் பார்க்கிறேன்." * *...
இது கநாசுவின் ஒப்புதல் வாக்குமூலம்.
க.நா.சு.வின் இக்கூற்று உள்ளடக்கத்தை - விஷயத்தை மறுக்க வில்லை. ஆனால் அதனை வாழ்க்கையுடன் பொதுமைப்படுத்துகிறது. வாழ்க்கையிலிருந்து இலக்கியத்துக்கான உள்ளடக்கம் எவ்வாறு தோற்றம் கொள்கிறது என்பதை நோக்க க.நா.சு. முற்படவில்லை என்பது இக்கூற்றில் புலனாகின்றது. 'படைப்பாளியொருவன் தன் படைப்புக்கான பொருளைத் தேர்ந்து கொள்ளும் செயற்பாடு அவன் அறியாத வகையில் கூட நிகழலாம்' என்று கருதும் அளவுக்கு க.நா.சு.வின் சிந்தனை
சென்றுள்ளமையை கைலாசபதி சுட்டிக் காட்டுகிறார். *

திறனாய்வுப் பார்வைகள் 83
மேலும், இலக்கியத்தில் புதுவிஷயம் பெரும்பாலும் சாத்தியமில்லை என்ற கநா.சு.வின் கருத்து நிலையைச் சுட்டிக் காட்டியுள்ள கைலாசபதி, கநாசுவின் இந்த நிலைப்பாடு இந்தியத் தத்துவ மரபின் எதிரொலி என இனங்காண்கிறார். இவ்வகையில் க.நா.சு.வை அவர் ஒரு ‘வேதாந்த விமர்சகராக மதிப்பிடுகிறார். *
இலக்கியத்தில் விடயத்துக்குரிய முக்கியத்துவத்தைப் புறக்கணித்த நிலையானது கநா.சுவை விமர்சனத்திலேயே நம்பிக்கையற்ற நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டது என்பது கைலாசபதியின் கணிப்பு *
"வேதாந்தத்தில் புகலிடம் தேடியபின்னர் விமர்சனம் அவரைப் பொறுத்தவரையில் செத்துவிட்டது என்றே கூறவேண்டும் . . . கலை கலைக்காகவே என்னும் பூர்ஷ்வா சித்தாந்தத்தை, இந்திய வேதாந்த மரபுடன் இணைத்துத் தமிழில் வெற்றிகரமாகப் பரப்பி வந்த விமர்சகர் க.நா.சு, என்பதில் எவருக்கும் ஐயமிருக்காது என எண்ணுகிறோம்" *
என்ற தீர்ப்புடன் அமைகிறது அவரது கநா.சு. குழு பற்றி விமர்சனம்
கநா.சு. குழுவினரைத் தவிர கைலாசபதியால் விமர்சிக்கப்பட்ட மற்றொரு முக்கிய இலக்கியவாதி மு. தளையசிங்கம் ஆவார். இவர் மார்க்சிய சிந்தனைகளையும் இந்திய ஆன்மீகத்தையும் இணைத்து, கைலாசபதி காலத்தில் ஒரு மாற்றுப் பார்வையை முன் வைத்தவர் என்ற வகையில் வரலாற்று முக்கியத்துவமுடையவர். பிரபஞ்ச யதார்த்தம்' என்ற பெயரில் இவரது தத்துவப் பார்வை அமைந்தது. (போர்ப்பறை, மெய்யுள் ஆகிய அவரது நூல்களில் இத்தத்துவ நிலை பேசப்பட்டுள்ளது. கைலாசபதி இவ்வாறான - மார்க்சிய - ஆன்மீக இணைப்புத் - தத்துவப் பார்வையை மறுக்கிறார். மு. தளைய சிங்கத்தின் இவ்வாறான பார்வை, புதுமை செய்வதாகக் கூறிக் கொண்டு பழைமையைப் பற்றி நிற்கும் ஒரு செயற்பாடேயாகும் என்பதே கைலாசபதியின் கணிப்பாகும். °
6.12 மேலும் பல . . .
மேலே நோக்கப்பட்டவற்றில் மட்டுமின்றி வேறு பல விடயப் பரப்புக்களிலும் கைலாசபதியின் திறனாய்வுப் பார்வை பதிந்துள்ளது. நாட்டார் வழக்காற்றியல், இசைத்தமிழ், சமயம், கல்வி முதலான பல்வூேறு துறைகளிலும் அவர் எழுதியுள்ளார். அவை விரிவஞ்சி இங்ஆ. தவிர்க்கப்பட்டன. அவரது திறனாய்வுப் பார்வை எவ்வாறு அமைந்தது"
జ్ఞా ,

Page 44
84
தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
என்பதை இனங்காட்டப் போதுமான அளவு விடயங்களில் மட்டுமே இவ்வியலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
2Z
&系
24
al
2.
a2
a
குறிப்புகள் :
க கைவசடதி இலச்சியச் சித்தனைசன் பக் 24 மேற்படி டக் சி0 மேற்படி, பக் சி/
விளக்கத்திற்கு பார்ச்சு , க. கைலாசபதி நவீன இலச்சியத்தின்
அடிப்படைசன் மக்கள் வெணியிடு சென்னை - 1942 பக் 9 - 35
விளக்கத்திற்கு ப7க்க :
க கைலாசபதி,தமிழ் நாவல் இலக்கியம் க. கைலாசபதி தமிழ் நாவல்சனின் மனித உரிமைகளும் மக்கள் பே7ட்டங்களும்”இலக்கியச் சித்தனைசன் பக் 24-76
க சைவசதி இலக்கியச் சித்தனைசன் டக் 73
திக நடராசன் கவதி கைவசடதி. மீண்டும் ஒரு தேவை"இலக்கு
கரவாண்டிதழ் (ஆசிரியர், தேவகரத்தன்/ சென்னை மவர் 7 ம7ழி 1992 பக் 72
சு கைMைசடதிதமிழன்டனின் தோணி வருகிறது கவிதைத் தொகுதியின் முன்னுரை
مجZZ لیبر 4 کیلیئم-27 76ھیڑیے ہوتی ہZقبر یثربڑ کی 4 تح7/7/چ/ تzz
க கைவசடதி சமுகவியலும் இலக்கியமும் பக் 24
மேற்படி டக் 2ே
தி க நடராசன் முகு கட்டுரை முகு,இதழர் பக் 72
கோ கேசவன் பாரதி முதன் சைலாசபதி வரை பக் 23
க. கைலாசபதி தமிழன்பனின் தோணி வருகிறது முன்னுரை பக். 73
தடி// எ74முடையது
விளக்கத்திற்கு ட7க்க க கைவசடதி இலக்கியச் சித்தனைசன் பக் 73-72
بیشتر 77 نمبر4 مربA%)
%2رسایی (iz2%A% 4Aی
மேற்படி, பக் 2
ہے ۔ 7ھ مجھےبر 4 ,%z Aثربڑھ
க. கைலாசபதி ஈழத்து இலச்சிய முன்னோடிசன், மக்கள் வெளியீடு
6ിമ്ന് 7% Zā 4ീ-ി
விளக்கத்திற்கு ட/7க்க க கைவசடதி டாரதியும் நாவலரும் "இலக்கு
காலாண்டிஆர் ஆகி%ய7, தேவகரத்தன்/ சென்னை மலர்9 ஏட்ரல் 1999 جری محترمجبر نجی رZ க கைவாசடதி ஈழத்து இலக்கிய முன்னோடிசன் பக் 242 க கைவசடதி அடியும் முடி4 பக் 2723 மேற்படி, டக் 47-483
بہمنیA نومبر 4- ,%ZZZZA //7க்க இந்நூல் இயன் , 3 2 க கை/ைசடதி அடி4 முடியும் பக் 29
کی۔میری تھیA%, /A/ترھوڑ2z 6Ž2zi z. z. až 96

திறனாய்வுப் பார்வைகள் 85.
a2
32
42
4ሪ%
42
ッ2
விளக்கத்திற்கு ப7க்க
TS MTcALALATT SA0TTGAL TTAMMMMALSLA S T0AM இலச்சியம் ட/7 திலையம், சென்னை - 7969 பச் சீ9-703 ھلبر7-ایچھے ننھیار / ’’قz/4ھ صدی تZ/4ھyوۓ 7ھ ////ئع کیے627 چھے K. Kailasapathy "The Tamil Purist Movement. A. reevaluation.' The Sri Lanka Journal of South Asian Studies university of Jaffna, Jaffna. August 1969. PP
34-63. Reprint Social Scientist Monthly Publication of
Indian School of Social Sciences, No.82, May 1979. PP 23-51.
K. Kailasapathy, Social Scientist, May 1979. P33.
கோ கேசவன் பாரதி முதன் கைலாசபதி வரை, பக் 25
க கைவசடதி தமி%மும் விமர்சான இலக்கியமும் "இலக்கியச் சிந்தனைசன் பக் 25
705 عالي %لقوى
ع%للأولى
على :
یشیئر نیچےبر 24%A /ثر22zھ ീഗ്ഗz/g, Zക് 92 ஹேர்ட்டி பர் 1922
ترشے نجومبر 4 ,%A/ثر%ZZ2) ?
ட47க்க இந்நூல் இயன் , 2 டக் 4-6 க கைவசடதி இலக்கியச் சித்தனைசன் டக் 272
க கைவசதி திறனாப்வுட் பிரச்சினைசன் 2ம் பதிவு சென்னை புக்ண் சென்னை
A2 aa 32-12.
7 مجھ نہی// ,%ر تھوڑی
மேற்படி, டக் 7
க. த/ சட்டபிரமணியம் எழுத்து ஏப்ரல் 7959 இது கைலாசபதியின்
மேற்படி நூலில் மேற்கோணக எடுத்துச் காட்டப்பட்டுள்ளது பக் 72
க கைவசதி மேற்படி பக் 37
مجھتی ہتھیار / ,%// تھوڑZ
மேற்படி, டக் 2
کی نمبر4 م%//ثر%بربری
க கைவசடதிநவீன திலக்கியத்தின் அடிப்படைசன் பக் 26-2

Page 45
7 வரலாற்றில் கைலாசபதி
தமிழ் ஆய்வியலில் கைலாசபதியின் செயற்பாடுகளை வகைப்படுத்தி இனங்காணும் முயற்சி கடந்த ஆறு இயல்களில் மேற்கொள்ளப்பட்டது. அவரை இன்றைய தலைமுறையினர் - குறிப்பாக இலக்கியவாதிகள், தமிழியல் மாணவர்கள் - உரியவாறு புரிந்து கொள்வதற்குத் தேவையான அளவு முக்கிய அம்சங்களே மேற்படி இயல்களில் எடுத்துப் பேசப்பட்டுள்ளன; அவை தொடர்பான பிறரது (பிற்காலக் கருத்து நிலைகளும் பொருத்தமான இடங்களில் சுருக்கமாக இணைத்து நோக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கடந்து ஆறு இயல்களில் நோக்கப்பட்டவற்றின் தொடர்ச்சியாக தமிழ் ஆய்வியலில் கைலாசபதியின் இடம் தொடர்பாகச் சில திறனாய்வுக் குறிப்புக்களை மட்டும் முன் வைப்பதாக இவ்வியல் அமைகின்றது. கைலாசபதி பற்றி அண்மைக் காலம் வரை மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய கணிப்புக்கள் இங்கு கவனத்தில் கொள்ளப்படுகின்றன. 71. வரலாற்றுப் பாத்திரமாக . . .
கைலாசபதியின் வரலாற்றுப் பாத்திரம் பற்றிய கணிப்பிலே முதற்கவனத்தைப் பெறும் அம்சம் சகலவற்றையும் வரலாற்றுச் சூழலில் பொருத்தி நோக்கும் அவரது ஆய்வு நெறியாகும். ஆய்வறிஞர் ஞானி அவர்கள் பொருத்தமாகச் சுட்டியுள்ளது போல', 'கடவுளாயினும் சரி வேறு எத்தகைய மொழி அல்லது இலக்கியப் போக்காயினும் சரி- எல்லாமே வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சூழலில் தோன்றுகின்றன என்ற மார்க்சியக் கருத்தை ஆய்வு நெறியாக முன் வைத்தவர் அவர். இவ்வாறு நோக்குவது இன்றைய - அமைப்பியல், பின் - அமைப்பியல், பின்-ந்வினத்துவ சிந்தனைச் சூழலில் புதுமையாக நமக்குத் தோன்றாது. ஆனால் 1950-60

வரலாற்றில் கைலாசபதி / 87
களில் தமிழ்மொழி, தமிழ் இனம் என்பன தொடர்பாக அதீதமதிப்பீடுகள் - உலகில் தமிழ் இனமே முன் தோன்றி மூத்தகுடி என்ற வகையிலான எண்ணப்பாங்குகள் - நிலவி வந்த சூழலில் * இவ்வாறான பார்வை ஒரு திருப்புமுனையாகவும் தமிழ் ஆய்வியலில் ஒரு சிந்தனை மாற்றத்தை முன்மொழிவதாகவும் அமைந்தது என்பது நமது கவனத்திற்குரியது.
மேற்படி தமிழ்மொழி, தமிழ் இனம் என்பன தொடர்பான அதீத மதிப்பீடுகளுக்கு எதிராக அறிவுபூர்வமான மதிப்பீடுகளை முன் வைக்கும் முயற்சிகள் கைலாசபதிக்கு முன்பே எஸ். வையாபுரிப் பிள்ளை, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் முதலியவர்களால் தொடங்கப்பட்டு விட்டன. எனினும் k அவர்களிடம் கைலாசபதியிடம் அமைந்திருந்த 'மார்க்சிய வரலாற்றுப் பார்வை போன்ற சமூகவரலாற்றை இனங்காட்டவல்ல ஒரு தத்துவப் பார்வை அமைந்திருக்கவில்லை என்பதையும் இங்கு நாம் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே மேற்சுட்டியவர்கள் தொடங்கி வைத்த அறிவுசார் அணுகுமுறையை, சமூக வரலாற்றைத் தெளிவுபடுத்தக்கூடிய ஒரு தத்துவப் பரிமாணத்துடன் அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுப்பதாகக் கைலாசபதியின் ஆய்வுநெறி அமைந்தது என்பது மனங்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
தமிழில் மார்க்சிய அடிப்படையிலான சமுதாய வரலாற்றுப் பார்வை கைலாசபதியின் எழுத்துக்களுக்கு முன்னரே அறிமுகமாகி விட்ட ஒன்றாகும். ப. ஜீவானந்தம், இஸ்மத் பாஷா, எஸ். இராமகிருஷ்ணன் முதலிய சிலர் இவ்வகையில் சிந்தித்தும் எழுதியும் வந்துள்ளனர். ஆயினும் இவ்வாறான சிந்தனையை ஒரு திட்டப்பாங்கான முறையில், தமிழ் நூற்பரப்பு முழுவதையும் கருத்திற்கொண்டு கட்டமைத்து வெளியிட முற்பட்டவர்களுள் முதல்வர் என்பதே கைலாசபதிக்குரிய வரலாற்று முக்கியத்துவம் ஆகும். ப. ஜீவானந்தத்தின் சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள், இஸ்மத் பாஷாவின் கற்காலத் தமிழர்கள், கற்காலம் முதல் தற்காலம் வரை ஆகிய நூல்களை பொருள் முதல்வாத நோக்கிலான முதற்கட்ட முயற்சிகளாகச் சுட்டும் கோ. கேசவன், அவை பருண்மையான 6ئناتتھے(; வெளிப்பாடுகளாக அமையாமல் மார்க்சியம் கண்டறிந்த வரலாற்றுக் கட்டங்களைக் கோட்பாடு அளவில் சூக்குமமாக சுட்டுவனவாகவே அமைந்துவிட்டன எனவும், 'மார்க்சிய லெனினியத்தைப் பருண்மையாகப் பயன்படுத்துதல் என்பது தமிழாய்வில் கைலாசபதியிடம்தான் முதலில் ஒரு திடமான உருவம் கொண்டது எனவும் தந்துள்ள கணிப்பு கைலாசபதியின் மேற்படி வரலாற்று முக்கியத்துவத்தை உறுதி செய்வதாகும்.

Page 46
88 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
கைலாசபதியின் வரலாற்றுப் பாத்திரம் என்ற வகையில் அடுத்து நமது கவனத்துக்கு வரும் அம்சம் அவர் ஆய்வு, திறனாய்வு ஆகிய இரண்டையும் இணைத்துச் செயற்பட்டு நின்ற முறைமை ஆகும். அவரது ஆய்வுகளில் திறனாய்வு நோக்கு அடிநாதமாக அமைந்திருந்தது: திறனாய்வுகளில் ஆய்வுக்குரிய தரவுகள், தர்க்கரீதியான விளக்கங்கள், கட்டமைப்பு முறைமை என்பன திட்டப்பாங்குடன் அமைந்தன. இவ்வாறான இருமை இணைநிலை காரணமாக திறனாய்வாளர் மத்தியில் அவர் ஒரு ஆய்வு-விமர்சகர் (Scholar-Critic) என்ற கணிப்பை எய்தியுள்ளார்.
"அவர் ஒரு விமரிசகராக திறனாய்வாளராக அதற்குரிய நெருக்கமான பொருளில் - விளங்குகிறார் என்பதைவிடச் சான்றாதாரங்கள், அவற்றை மையமிட்ட விவாதங்கள், ஒரு முறையியலுக்குட்பட்ட அணுகுமுறையுடன் கூடிய கட்டுரைக் கட்டுமானங்கள் முதலியவற்றைத் தீர்க்கமாகப் பின்பற்றுகின்றவர் ஏன்ற முறையில் அவர் ஒரு ஆய்வு-விமரிசகராக (Scholar-Critic) விளங்குகிறார் என்று சொல்ல வேண்டும்." என்பர் தி.சு. நடராசன்
72. கைலாசபதி மீதான விமர்சனங்கள்
கைலாசபதி முன்வைத்த ஆய்வு முடிவுகள், புலப்படுத்தி நின்ற திறனாய்வுப் பார்வைகள் என்பன தொடர்பான மாற்றுக் கருத்துக்கள், திறனாய்வுக் குறிப்புக்கள் ஆகியன முன்னைய இயல்களில் பொருத்தமான இடங்களில் பொருத்தி நோக்கப்பட்டுள்ளன. அவ்வியல்களில் கவனத்திற் கொள்ளப்படாதனவும் கைலாசபதி பற்றிய முழுநிலை மதிப்பீட்டிற் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியனவுமான முக்கிய விமர்சனங்கள் இங்கு நோக்கப்படுகின்றன.
கைலாசபதி பற்றிய விமர்சனங்களிலே ஒருவகையின அவரது ஆய்வுமுறைமையின் அடிப்படையையே-மார்க்சிய முறையியலையே நிராகரிக்கும் தளத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டவை. இவ்வகையில் முக்கியமானது வெட்கட்சாமிநாதனின் "மார்க்சின் கல்லறையிலிருந்து ஒரு குரல்" என்ற கட்டுரை நடை 1970). இன்னொருவகை விமர்சனங்கள் மாக்சியத்தளத்திலிருந்தும் பின்நாளைய சிந்தனைப் பரிமானங்களாகிய அமைப்பியல், பின் நவீனத்துவம் முதலியவற்றின் தளங்களிலிருந்து உருவானவை. ஞானி, எம்.ஏ. நுஃமான், கோ. கேசவன், தமிழவன், அ. மார்க்ஸ் முதலியவர்களின் விமர்சனங்கள் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கன.

வரலாற்றில் கைலாசபதி 89
வெங்கட் சாமிநாதனுடைய மேற்சுட்டிய கட்டுரை கைலாசபதி யினுடைய தமிழ்நாவல் இலக்கியம் (1968 பற்றிய விமர்சனம் ஆகும். இது மார்க்சியத்தைக் காலாவதியாகிப்போன, வளர்ச்சி மறுக்கப்பட்ட ஒரு தத்துவமாகக் காண்பது இவ்வாறு கல்லறைக்குப் போய்விட்ட தத்துவத்தின் தளத்தில் நின்று கைலாசபதி பேசும் வார்த்தைகள் உள் முரண்பாடுடையவை எனவும் பொருத்தமற்றவை என்றும் விமர்சிக்கிறார் சாமிநாதன். இவ்வாறு இவர் முன்வைத்த விமரிசனங்களை எம்.ஏ. நுஃமான் மறுத்துள்ளார். மல்லிகை (1974 அக். 1975 செப்) இதழ்களில் வெளிவந்த இம்மறுப்புரை * திருத்தம் பெற்ற நிலையில் அவரது மார்க்சியமும் இலக்கியத்
திறனாய்வும் (1987) நூலில் இடம் பெற்றுள்ளது.
சாமிநாதன் சார்ந்துள்ள கருத்து முதல்வாதத் தளத்தை.இனங்கண்டு விமர்சித்துள்ள நுஃமான் கைலாசபதியின் நூலில் சாமிநாதன் காணும். குறைபாடுகள் சாமிநாதனின் புரிதலில் உள்ள குறைபாடுகளே என்ற கருத்தை முன்வைத்துள்ளார். இதன்பின் இவ்விவாதம் தொடர்ந்ததாகத் தெரியவில்லை.
மார்க்சியத் தளத்தில் நின்று கைலாசபதியை விமர்சித்தவர்கள் என்ற வகையில் ஞானி, நுஃமான், கேசவன் ஆகியோரது கருத்துக்கள் இங்கு நமது முக்கிய கவனத்துக்குரியன. இவர்களுள் கேசவன் எழுதிய "கைலாசபதியின் ஆய்வுப் பங்களிப்பு - ஒரு மறுமதிப்பீடு" என்ற தலைப்பிலான நீண்ட கட்டுரை கைலாசபதி பற்றிய ஆய்விலே வரலாற்று முக்கியத்துவமுடையது. கைலாசபதி பற்றிய ஆழமான முழுநிலை மதிப்பீடான இது இலக்கு 7ம், 8ம் இதழ்களில் வெளிவந்து பின்னர் அவரது பாரதி முதல் கைலாசபதி வரை (1998) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.
மேற்குறித்தவாறு மார்க்சியத் தளத்தில் நின்று கைலாசபதியை விமரிசித்தவர்கள் கவனத்திற் கொண்டுள்ள முக்கிய அம்சங்கள் மூவகைப்படும்.
(அ) அழகியல் நோக்கு (ஆ) தமிழ்த் தேசிய இன உணர்வு பற்றிய பார்வை இ) வரலாற்று மாந்தர் பற்றிய கணிப்பு கைலாசபதி தனது எழுத்துக்களில் இலக்கியத்தின் அழகியல் அம்சத்துக்கு உரிய இடம் வழங்கவில்லை என்பது நுஃமான், கேசவன் ஆகிய இருவரதும் கணிப்பாகும்.
"இலக்கியத்தின் சமூகவியல் அம்சங்கள் பற்றியே பெரிதும் அக்கறை செலுத்தியவர் அவர். அதன் அழகியல் பற்றிய அவரது எழுத்துக்கள் மிகவும் குறைவு" ?

Page 47
90 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
ஏன்பர் நுஃமான். முற்போக்கு இலக்கியத்தின் அழகியல் பற்றி எழுத வந்த கட்டுரையிலே கூட அதனை ஆராயாமல் பழைய வாதங்களை மட்டுமே கைலாசபதி முன்வைத்துள்ளார் என்பது நுஃமானின் விமர்சனம் ". கைலாசபதியின் மொத்தப் படைப்புக்களைப் படிக்கும் போது நுஃமானின்
கூற்று நியாயமானதாகவே தெரிகிறது என வழிமொழிகிறார் கேசவன்'
"கைலாசபதிக்கு முன்னும் அவரது காலத்திலும் மார்க்சிய அளவில் அழகியல் பிரச்சினைகள் குறித்து நடந்த விவாதங்களை அவர்தம் படைப்புக்களில் குறிக்கவும் இல்லை, பயன்படுத்திப் படைப்புக்களை விளக்கவும் இல்லை. அவரது கட்டுரைகளில் இதற்கான வாய்ப்புக்கள் நேரும் பொழுதும்கூட அவர் இதைச் செய்யவில்லை?
எனக் கூறும் கேசவன், 'கைலாசபதியின் அழகியல் முற்போக்கு இலக்கியத்தின் தற்காப்பு அரசியலாக - சமுதாயச் சார்பற்றவற்றை எதிர்க்கும் அழகியலாக மட்டும் அமைந்ததேயன்றி, முற்போக்குப் படைப்பாளி களுக்குத் தேவைப்படும் கோட்பாடுகளைப் பரிந்துரைக்கும் பணியை ஆற்றுவதாக அமையவில்லை' என்ற மதிப்பீட்டையும் முன் வைக்கிறார்
தமிழரின் சமுதாய வரலாறு பற்றிய ஆய்வை அறிவியல் முறையில் கறாராக மேற்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்த கைலாசபதி, தமது சமகாலத்தில் தமிழர் மத்தியில் உருவாகியிருந்த தமிழ்த் தேசிய இனம் என்ற கருத்துநிலையை உரியவாறு தெரிந்து தெளிந்து கொள்ளத் தவறிவிட்டார் என்பதும் அது அவரது ஆய்வுச் செயற்பாட்டைப் பாதித்துள்ளது என்பதும் ஞானி, கேசவன் ஆகியோரின் கருத்தாகும். கைலாசபதியின் அடியும் முடியும் நூலில் அமைந்த "சிலப்பதிகாரச் செய்திகள்" என்ற கட்டுரையில் அவர் முன்வைத்த கணிப்புக்களை மையப்படுத்திய இவர்களின் மதிப்பீடு இது. கேசவன், இத்தொடரில் ஈழத்தமிழரின் தேசிய இன விடுதலைப் போராட்ட சூழலில் கைலாசபதி புலப்படுத்தி நின்ற பார்வையையும் கவனத்திற் கொண்டுள்ளார்.
சிலப்பதிகாரத்தை முத்தமிழ்க் காப்பியம், ஆரியரைத் தமிழர் வென்ற கதையைக் குறிப்பிடும் வரலாற்றுக் காப்பியம்', 'குடிமக்கள் காப்பியம்' புரட்சிக் காப்பியம், பெண்ணுரிமைக் காப்பியம்' எனப் பலவாறாக வாசிக்கும் முறைமைகள் கைலாசபதியின் சமகாலத்தில் நிலவிவந்தன. இவை சமகால திராவிட-தமிழ் இன-அரசியல் உணர்வெழுச்சி மற்றும் சனநாயக அரசியல் வேட்கைச் சூழல்களில் உருவான வாசிப்பு முறைகள் ஆகும். இவ்வாறு நிகழ்கால அரசியல் சூழல்சார் நோக்கில் பண்டைய இலக்கியங்களைப் பார்ப்பது தவிர்க்க இயலாதது என்பதை ஒப்புக் கொள்ளும் கைலாசபதி

வரலாற்றில் கைலாசபதி 91
அவ்வாறான பார்வை இலக்கிய ஆசிரியன் அடிப்படையாகக் கருதியவற்றை அலட்சியம் செய்து தற்குறிப்பேற்றம் செய்வதாக அமையக் கூடாது என்று கருதினர். "
இந்த அடிப்படையில் மேற்கூறியவாறு சிலப்பதிகாரததைப் பல்வேறு நிலைகளில் வாசிக்கும் முறைமைகட்குப் பின்னால் உள்ளனவாகத் தாம் கருதும் அரசியல் அம்சங்களை அவர் விமர்சித்துள்ளார்; நிராகரித்தும் உள்ளார். கைலாசபதியின் இவ்வாறான நிராகரிப்புக்களே ஞானி, கேசவன் ஆகியோரின் மேற்குறித்தவாறான மதிப்பீட்டின் முக்கிய அடிப்படைகள்.
"ஆரிய திராவிட முரண் என்பது பழங்காலம் முதற்கொண்டு இன்றுவரை மறுக்கக் கூடியதாக இல்லை. இந்தச் சூழலில் செங்குட்டுவனின் வடநாட்டு வெற்றி முதலிய கற்பனைகளை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்திய தேசியம் என்ற ஆதிக்கக் கருத்தியல் தமிழ்த் தேசியத்தை அடக்க அல்லது ஒதுக்க முனைந்த நிலையில் தமிழின் தொன்மை பற்றிய பேருணர்வுகள் எழத் தான் செய்யும். இயற்பியல் ஆய்வில் அறிவியலின் செயற்பாடும் சமூகவியல் ஆய்வில் அறிவியல் நோக்கும் ஒன்றாக இருக்க முடியாது. எத்தகைய கறாரான அறிவியலின் ஆய்வு முறையும் கருத்தியலை வெளியேற்றிவிட முடியாது"
இது ஞானியின் கருத்து.
"பல தேசிய இனக் கட்டமைப்பில் உள்ள இன்றைய இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் பிரதேச வாதம் என்பதும் தேசிய இனவிடுதலை என்பதும் அரசியலில் இரண்டு எதிரெதிர் பரிமாணங்கள் ஆகும். தமிழரசு கோரும் அரசியல் சிந்தனையாளர்களின் வாசிப்பை நிராகரிக்கக் கூடிய உரிமையை நாம் கைலாசபதியிடமிருந்து பறிக்க இயலாதெனினும், சிலம்பில் புதைந்துள்ள தேசிய இனப் புவியியல் பார்வையை கைலாசபதி மறுப்பதை நம்மால் ஒப்புக் கொள்ள இயலாது. இங்கு தற்சார்பு அரசியல் நிலைப்பாட்டிலேயே கைலாசபதியின் மதிப்பீடு அமைகிறது?
என்கிறார் கேசவன்.
இவ்விரு கூற்றுக்களும் சிலப்பதிகாரத்தில் உள்ளடங்கியுள்ள தமிழ்த் தேசிய இன-புவியியல் சார் உணர்வோட்டங்களைக் கைலாசபதி

Page 48
92 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
இனங்காணத் தவறிவிட்டார் என்பதை உணர்த்துவன. சமூகவியல் ஆய்வில் அறிவியல் பயன்படுத்தப்பட வேண்டிய முறைமையைக் கைலாசபதி உரியவாறு தெரிந்து கொண்டிருக்கவில்லை என்ற கணிப்பும் ஞானி கூற்றில் புலனாகிறது. ஞானியின் மேற்குறித்தவாறான கருத்துக்கள் கைலாசபதியை உள்ளடக்கி, தமிழ்த் தேசிய இன உணர்வைப் புரிந்து கொள்ள மறுத்த மார்க்சியர் பலரையும் நோக்கி முன் வைக்கப்பட்டன என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
கைலாசபதியை ஈழத்துத் தமிழ் தேசிய இன விடுதலைச் சூழலுடன் தொடர்புபடுத்தி நோக்கும் கேசவன் அவர் முன்வைத்த தேசிய இலக்கியம் என்ற கோட்பாட்டில் சமூக நோக்கு, சனநாயக நாட்டம் முதலியவற்றுடன் தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு என்ற அம்சம் குறிப்பிடப்படாமையைச் சுட்டிக் காட்டுகிறார். “ மேலும் "தமிழரிடையே மொழி, பண்பாடு பற்றிய உணர்வு" (1979) என்ற கட்டுரையிலே கைலாசபதி, ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனத்தின் நலன்களை ஒ(திங்கிய இன நலன்சன்என அடையாளம் காண்பது தவறான அடையாளமாகவேயுள்ளது என்றும் கேசவன் குறிப்பிடுகிறார்."
"கைலாசபதியின் தேசியம் தமிழீழத் தேசியமாக அன்றைக்கே இருந்திருக்க வேண்டும் என்பதல்ல நமது வாதம்; ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தமிழ்த் தேசிய இனத்தின் நலன்களை உள்ளடக்கியதும் தேசிய இனங்களுக்கிடையில் சமத்துவ நிலைக்கான போராட்டங்களை அங்கீகரித்ததுமான அம்சங்களைக் கொண்ட இலங்கைத் தேசியமாகக்கூட அன்றைக்கு இருந்திருந்தால் பொருத்தமாக அமைந்திருக்கும் என்பதே நமது வாதம்" " என இத்தொடர்பில் தனது நிலைப்பாட்டைக் கேசவன் தெளிவுறுத்துகிறார். வரலாற்று மாந்தர் பற்றிய கணிப்பிலே குறித்த சிலரைப் பொறுத்தவரை கைலாசபதி கறாரான புறநிலைப் பார்வையுடன் செயற்படவில்லை என்ற விமர்சனம் கேசவனால் முன் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாரதி, ஆறுமுகநாவலர் ஆகியோருடைய வரலாற்றுப் பாத்திரம் பற்றிய கைலாசபதியின் கணிப்புகளே இவ்வாறு விமர்சிக்கப்பட்டுள்ளன.
'கைலாசபதி பாரதியின் வரலாற்றுச் சாதகங்களையும் வரம்புகளையும் குறிப்பிட்டாலும், அவரின் வரலாற்றுச் சாதகங்களுக்கு மிகை அழுத்தம் கொடுப்பதாகவே தெரிகிறது' என்றும் 'பாரதியின் கருத்து முதல்வாத நிலைப்பாட்டைக் குறித்துக் கைலாசபதி மிகக் குறைந்த அழுத்தத்துடன் குறிப்பிடுகிறார் என்றும் கேசவன் குறிப்பிடுகிறார். "

வரலாற்றில் கைலாசபதி 93
"பாரதி குறித்த கைலாசபதியின் மதிப்பீடு, பாரதிக்கு உரிய இடத்தைவிட சற்று கூடுதலான இடத்தை வழங்கும் ஆய்வுத் தாராள மனோபாவம் கொண்டதாகவுள்ளது. பாரதியைப் பற்றி கைலாசபதி ஓரிடத்தில் இப்படிச் சொல்லியுள்ளார். இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது பாரதி இன்னும் சிறிது தீவிரவாதியாக இருந்திருந்தால் கூடிய நலன் விளைந்திருக்கும் எனத் தோன்றுகிறது. (பாரதி ஆய்வுகள் ப. 108) இன்று பின்னோக்கிக் காணும்பொழுது பாரதியைப் பற்றிய கைலாசபதியின் மதிப்பீடுகள் இன்னும் சிறிது செறிவாக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது."
எனத் தன் மதிப்பீட்டைக் கேசவன் முன் வைக்கிறார். பாரதி பற்றிய கைலாசபதியின் இவ்வாறான மிகை மதிப்பீட்டிற்கு அவர் பாரதியின் கவிதைகளை மட்டுமே பெரும்பாலும் ஆதாரமாகக் கொண்டமையே காரணமாகலாம் என்றும் பாரதியின் உரைநடைப் பகுதிகளையும் கருத்திற் கொண்டிருப்பின் பாரதியிடம் குடிகொண்டிருந்த முரண் கொண்ட இயக்கவியல் பார்வையையும் புறநிலைக் கருத்து முதல் வாதத்தையும் கைலாசபதி விளங்கிக் கொண்டிருக்க முடியும் என்றும் கேசவன் ஊகிக்கிறார்.
ஆறுமுக நாவலர் பற்றிய மதிப்பீட்டிலே, நாவலரின் ஒருமுகப்பட்ட இலக்கிய நோக்கு, மக்கட் சார்பு நாட்டு நலநாட்டம் முதலியவற்றைச் சிறப்பித்துப் பேசி, அவரை மகத்தான பங்களிப்பு ஆற்றியவராகக் காட்டும் கைலாசபதி, அவரது அரசியல், சாதியாசார தத்துவம் என்பவற்றைக் குறிப்பிடவோ விமர்சிக்கவோ முற்படவில்லை என்பது கேசவனது விமர்சனம். ? இவ்விடயங்களில் ஆய்வுத் தகவல் மெளனம், ஆய்வுத் தயக்கம், கருத்துக்களைத் தேவையற்ற விதத்தில் அமுக்குதல் முதலிய குறைபாடுகள் உள்ளன என்பது அவரது கணிப்பு ?
அமைப்பியல்வாதியான தமிழவன் "கைலாசபதியின் மார்க்சியமும் பாசிட்டிலிச பட்டுக் குஞ்சமும்' என்ற கட்டுரையிலே (நூல் : அமைப்பியல்வாதமும் தமிழ் இலக்கியமும்) கைலாசபதியின் அணுகுமுறைகளின் அறிவியற்சார்புகளை விமர்சனத்துக்குட்படுத்தி யுள்ளார். கைலாசபதியின் ஒப்பியல் அணுகுமுறை Empiricism (அநுபவ வாதம்) சார்ந்தது என்றும் அவரது அறிவியற் பார்வை Positivism (பொருண்மைவாதம் சார்ந்தது என்றும் தமிழவன் கூறுவர். மார்க்சியத்தைக் கண்ணற்ற வெறும் விஞ்ஞானமயவாதமாகக் காணும் தவறைக் கைலாசபதி புரிந்துள்ளார் என்று தமிழவன் கருதுகிறார். * மற்றும் கநா.சு, பற்றிய கைலாசபதியின் பார்வையும் தமிழவனால் விமர்சிக்கப்பட்டுள்ளன.

Page 49
94 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
கநா.சுவிடம் நிலவிய கும்பல் கலாசாரத்துக்கு எதிரான பார்வையைக் கைலாசபதி கணக்கில் எடுக்கத் தவறிவிட்டார் என்பது தமிழவனின் வாதமாகும்.
நவீனத்துவம், பின்-நவீனத்துவம் என்பன பற்றிப் பேசும் சமகால விமர்சகரான அ. மார்க்ஸ் அவர்கள் கைலாசபதி மீது வைக்கும் முக்கிய விமர்சனங்களிலொன்று, அவர் பெட்ரோல்ட் பிரக்ட் என்பாரின் அரசியல் கோட்பாடுகள் பற்றி அறிமுகப்படுத்தவில்லை என்பது இன்னொன்று பாரதி பற்றிய அதீத மதிப்பீட்டை முன் வைத்துள்ளார் என்பது. *
மேற்குறித்தவை தவிர, கைலாசபதியின் கட்டுரைகளின் கட்டமைதி தொடர்பாகவும் சமகாலத் தமிழிலக்கியவாதிகளிற் சிலர் அவரது கணிப்புக்கு உட்படுத்தப்படாமை தொடர்பாகவும் ஆய்வாளர் சிலர் தம் மனநிறைவின்மையை வெளிப்படுத்தியுள்ளனர். ஞானி கைலாசபதியின் தொடக்க காலப் படைப்புக்களில் மேற்கோள்கள் அதிகம் இடம் பெற்றதாகச் சுட்டித் தம் மனநிறைவின்மையை வெளியிட்டு, கைலாசபதியின் புனைகதை ஆய்வுகளில் இயந்திரப் பாங்கான தன்மை உண்டு என விமர்சித் துள்ளார். * இக்கருத்தை வழிமொழியும் வகையில் நுஃமானின் " இயந்திரப் பாங்கான மார்க்சிய விமர்சகர்கள் தோன்றுவதற்கு கைலாசபதியும் ஒருவகையில் காரணமாக அமைந்திருக்கிறார் என்பது என் அபிப்பிராயம்* என்ற கூற்று அமைந்துள்ளது.
கைலாசபதி தமது சமகால ஈழத்து இலக்கியவாதிகளும் படைப்பாளிகளுமான மு. தளையசிங்கம், மஹாகவி, எஸ். பொன்னுத்துரை ஆகியோரைக் கணிக்கத் தவறிவிட்டார் என்ற ஒரு கருத்து தமிழ்த் திறனாய்வுலகில் நிலவி வருகின்றது. இவர்களைக் கைலாசபதி ஏன் கண்டு கொள்ளாதது மாதிரி விட்டு விடுகிறார்? என்ற வினாவை திசு. நடராசன் எழுப்பியுள்ளார். * இவர்கள் குறிப்பிட்ட சில சிந்தனைப் போக்குகளின் பிரநிதிகளாச்சே என்பது அவரது வாதம். தளைய சிங்கத்தைக் கைலாசபதி கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார் என்பது பொருந்தாது. அவரது கருத்தியலைக் கைலாசபதி விமர்சித்துள்ளமையை முன்னரே ஆறாம் இயலில் நோக்கியுள்ளோம். மஹாகவியைக் கைலாசபதி கண்டு கொள்ளாமை தவறு என்பதைப் பலரும் பேசியுள்ளனர். இத்தொடர்பில் விமர்சகர் சி. சிவசேகரம் முன் வைத்துள்ள ஒரு கருத்தை இங்கு சுட்டுவது பொருத்தமாகும்.
"கைலாசபதியின் முக்கியமான ஒரு தவறு, மஹாகவி பற்றிய அவரது மதிப்பீடு தொடர்பானது. மஹாகவியின் அரசியற் பார்வையின் போதாமையை 1960 களின் அரசியற் சூழல்

வரலாற்றில் கைலாசபதி 95
மிகைப்படுத்தியதன் விளைவாகவே, கைலாசபதி மஹாகவியின் முக்கியத்துவத்தைத் தவறவிட்டு விட்டார் என நினைக்கிறேன். இத்தவறு பற்றிக் கைலாசபதியை இன்று விமர்சிப்போர் சிலர் கைலாசபதி இருந்த காலத்தில் அதைத் திருத்துவிக்க வாய்ப்பிருந்தும் ஏன் முயலவில்லையோ தெரியாது? கைலாசபதி மீதான மேற்படி விமர்சனங்கள் தமிழரின் கடந்த நாற்பதாண்டுச் சமூக-அரசியல் வரலாறு, 'கலை-பண்பாட்டு வரலாறு, சிந்தனை மரபு என்பவற்றோடு பின்னிப் பிணைந்தவை. எனவே இவ்விமரிசனங்களின் பொருத்தப்பாடுகள் எதிர்காலத்தில் பல நிலை விவாதங்களின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டியன. எனவே மேற்படி விமர்சனங்களுக்கு உடனடி விடை அல்லது அமைதி காண்பது இங்கு சாத்தியமில்லை. மேலும் கைலாசபதி மீதான விமர்சனங்கள் கைலாசபதி என்ற தனிமனிதரின் ஆளுமை (விருப்பு, வெறுப்பு, தகைமை என்பன சார்ந்தவையாக மட்டும் கருதப்படக் கூடியனவல்ல. அவரது நிறுவனச் சார்பையும் உள்ளடக்கியனவாகும். இத்தொடர்பில் சி.கா. செந்திவேல் சுட்டும் ஒரு கருத்து நம் கவனத்துக்குரியது.
"கைலாசபதி தமது வாழ்நாளில் தனித்து நின்ற ஒருவர் அல்லர். இலக்கியத்திலும் அரசியலிலும் ஸ்தாபன ரீதியாக இணைந்து நின்று கூட்டு முடிவுகளும் தனி நபர் பொறுப்பும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வந்த ஒருவர் என்பதைக் கவனத்திற் கொள்வது முக்கியமானதாகும். இதனால் அவர் மீது சுமத்தக்கூடிய குற்றச்சாட்டுக்களுக்கு தனியே கைலாசபதி மட்டும் பொறுப்புதாரியாக மாட்டார் என்பதும் கவனத்துக் குரியதாகும். எனவே கைலாசபதியின் மீது குற்றம் குறை காண முற்படுவோர் அவர் வாழ்ந்த சமூகச் சூழலையும் அக்காலத்து இலக்கிய அரசியல் ஸ்தாபனங்களின் செயற்பாடுகள் முடிவுகளையும் முழுமையாக மனதிற் கொண்டே நோக்குதல் வேண்டும்.”*
இதனைக் கருத்திற் கொண்டு மேற்படி விமர்சனங்களை நோக்கலாம்.
கைலாசபதியின் அழகியல் கேசவன் கூறுவது போலத் தற்காப்பு அழகியலாக - சமுதாயச் சார்பற்றவற்றை எதிர்க்கும் அழகியலாக - மட்டும் அமைந்தது எனக் கொள்வது தவறாகாது. ஆயினும் 'கைலாசபதி காலத்தில் (1982 இன் முன் தமிழில் மார்க்சியர் மத்தியில் கேசவன் எதிர்பார்ப்பதைப் போல முற்போக்குப் படைப்பாளிகளுக்குத் தேவைப்படும் கோட்

Page 50
96 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
பாடுகளைப் பரிந்துரைக்கும் அழகியற் பார்வை எந்த அளவுக்கு உருவாகி - அல்லது அறிமுகமாகி - யிருந்தது? என்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியம்.
"முற்போக்கு இலக்கியத்தின் அழகியற் பிரச்சினைகள்' எனக் கைலாசபதி எழுதிய கட்டுரையாக நுஃமான் சுட்டுவது சமர்-2 (1979 ஜூலை). இதழில், "முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும்" என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையையே என ஊகிக்க முடிகிறது. இக்கட்டுரையில் கைலாசபதி, இலக்கியத்தின் கலையழகு பற்றிப் பேசுவோர் சமுதாய மாற்ற சிந்தனைக்கு எதிரானவர்கள் எனப் பொருள்படும் நிலையில் தம் வாதங்களை முன்வைத்துள்ளமை தெரிகிறது.
"ஆழமாக நோக்கினால் கலைவாதிகள் அறிந்தோ அறியாமலோ சமுதாய மாற்றத்துக்காகப் பாடுபடும் எழுத்தாளரின் ஆக்கங்களையே அழகியலின் பெயரில் நிராகரிக்கின்றனர். இது தற்செயல் நிகழ்ச்சியல்ல. வர்க்க முரண்பாட்டின் பிரதிபலிப்பாகவே உள்ளது" *
என்பது அவரது கூற்று இவ்வாறானவற்றையே நுஃமான் பழைய வாதங்கள் எனக் குறிப்பிடுகிறார் என ஊகிக்க முடிகின்றது. இக்கட்டுரை வெளிவந்த பின்னர் ஏறத்தாழ, மூன்று ஆண்டுக்காலம் உயிர்வாழ்ந்தவர் கைலாசபதி, நுஃமான் அவரோடு (ஒரே துறையில் பணியாற்றியவர் என்ற வகையில் இதுபற்றி அவரிடம் நேரடியாக விவாதங்கள் மேற்கொண்டிருக்கச் சாத்தியமுண்டு. அவ்வாறு விவாதித்திருப்பின் அவற்றை நுஃமான் வெளியிட்டால் கைலாசபதியின் அழகியல்சார் நிலைப்பாட்டை மேலும் தெளிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
கைலாசபதியின் மேற்படி கட்டுரை வெளிவந்த சமர் - 2 (1979) இதழிலேயே மெள. சித்திரலேகா இவரும் கைலாசபதியுடன் ஒரே துறையில் பணியாற்றியவர்" "ஈழத்து இலக்கியமும் இடதுசாரி அழகியலும் சில குறிப்புகள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இதில் "சுத்த கலைவாதிகளே அழகியல் பற்றிப் பேசுபவர்கள்" என்ற வகையில் நிலவி வரும் கருத்தால் இளம் எழுத்தாளர்களும் இலக்கிய மாணவர்களும் தெளிவான பின்னணியில் காலூன்ற முடியாத நிலை உள்து என்ற கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.* இது கைலாசபதியின் மேற்சுட்டிய வாதத்துக்கு விமர்சனமாக உள்ளமை தெளிவு
இவ்வாறாக தமது சமகாலத்திலும் முன்னரும் அழகியல் குறித்து எழுந்த விமர்சனங்கள் விவாதங்கள் என்பவற்றை கைலாசபதியால்

வரலாற்றில் கைலாசபதி 97
கவனத்திற் கொள்ளவில்லை என்பதே கேசவன் சுட்டும் குறைபாடு. கேசவனும் நுஃமான் போல கைலாசபதியுடன் இத்தொடர்பில் விவாதங்கள் நடத்தியிருக்கக் கூடியவர். தமிழகத்தில் இருந்தாலும் கேசவனுக்கும் கைலாசபதிக்கும் ஆய்வுநிலையிலான தொடர்புநிலவியுள்ளது. கேசவனின் மண்ணும் மனித உறவுகளும் (1979 நூலுக்குக் கைலாசபதி முன்னுரை வழங்கியவர். எனவே 'மார்க்சிய அழகியல் தொடர்பான கைலாசபதியின் நிலைப்பாட்டைப் பற்றி நுஃமானைப் போலவே கேசவனும் கைலாசபதியுடன் விவாதித்திருக்கக் கூடிய சாத்தியம் உண்டு. அவ்வாறு நிகழ்ந்திருப்பின் அவற்றைக் கேசவன் வெளிப்படுத்துவாராயின் கைலாசபதி பற்றிய எதிர்கால ஆய்வுகளுக்கு அவை துணை புரியலாம். *
கைலாசபதியின் அழகியல் பற்றிய விமர்சனம் எதிர்காலத்தில் தனிக் கவனத்தைப் பெறும்போது கைலாசபதியின் தலைமுறையினரான கா.சிவத்தம்பி, நா.வானமாமலை மற்றும் தொ.மு.சி. ரகுநாதன் முதலியோர் 1982 வரையான காலப் பகுதியில் புலப்படுத்தியிருக்கக் கூடிய அழகியல் பார்வைகளும் ஒப்பீட்டு நிலையில் நுனித்து நோக்கப்பட வேண்டியனவாகும் என்பது கவனத்துக்குரியது.
கைலாசபதி 'தமிழ்த் தேசிய இனம்' என்ற கருத்து நிலையை உரியவாறு தெரிந்து கொள்ளத் தவறிவிட்டார் என்ற விமர்சனம் அவர் சார்ந்து நின்ற மார்க்சியத்தனம் சார்ந்ததாகும். திராவிட இயக்கம், தமிழ்த் தேசிய உணர்வெழுச்சி மற்றும் இவற்றுடன் தொடர்பான இயக்கச் செயற்பாடுகள் என்பவற்றை மார்க்சியர் கடந்த ஏறத்தாழ அறுபதாண்டுகளில் எவ்வாறு தரிசித்து வந்தனர் என்பதையும் அதில் காலந்தோறும் நிகழ்ந்து வந்த மாற்றங்களையும் கருத்திற் கொள்ளாமல் இவ்விடயத்தில் விமர்சனங்களை - முடிந்த முடிபாக - முன் வைப்பது சாத்தியமில்லை.
திராவிட இயக்கம், தமிழ்த் தேசிய இனம் என்பன தொடர்பாக 1960-70கள் வரை மார்க்சியர் புலப்படுத்தி நின்ற கணிப்புக்கும் 1980-90களில் புலப்படுத்தும் பார்வைகளுக்கும் வேறுபாடுகள் உள. இவை இரு பக்கத்திலும் நிகழ்ந்து வந்த இயங்கியல் நிலையிலான மாற்றங்கள் எனலாம். எனவே, 1970களில் கைலாசபதி எழுதியவற்றை1990 களில் மீளப்பார்க்கும் போது இவ்வாறான விமர்சனங்களுக்கு அவை உட்படுத்தப்படுவது இயல்பான ஒன்றே.
ஈழத்தின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான மார்க்சியரின் நிலைப்பாட்டுக்கும் இது பொருந்தும். அப்பிரச்சினை 1977 இனக் கொலைச்
* இப்பகுதி அச்சாகிக் கொண்டிருக்கும்போது கேசவன் மறுைத்துவிட்டார் என்ற துயரச
செய்தி வந்து

Page 51
98 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
சூழல் வரை அடைந்து வந்த பரிமாணங்களுக்கும் அதன்பின் எய்திய பரிமாணங்களுக்கும் வேறுபாடு உளது. அவை பற்றி ஈழத்து மார்க்சியரிடையே படிப்படியாக ஏற்பட்டு வந்த மாற்றங்களுக்குத் தனி வரலாறு உளது. மார்க்சியரில் வெவ்வேறு கோட்பாட்டுப் பிரிவு சார்ந்தோர் இப்பிரச்சினை தொடர்பாகப் புலப்படுத்திய பார்வை, அணுகுமுறை என்பன விவாதத்துக்கு உரியன. அவற்றின் பொருத்தப்பாடுகளை இங்கு விவாதிப்பதற்குக் காலம் கனியவில்லை. கைலாசபதி தான் சார்ந்து நின்ற மார்க்சிய லெனினிய தளநிலைக்கு இயைய தமிழர் தனித்துவம் பற்றிச் சிந்தித்தும் செயற்பட்டும் வந்துள்ளார் என்பதே அத்தளம் சார்ந்தோரின் கணிப்பாகும்.
"அவர் (கைலாசபதி) ஈழத் தமிழர்களின் தனித்துவத்தையும் தன்னடையாளங்களையும் தமது இடையறாத இலக்கிய முன் முயற்சிகளினூடே நிலை நிறுத்திக் காட்டியவர். எனவே அவர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், பொருளாதாரம், கல்வி, மொழி, வேலைவாய்ப்பு போன்றவற்றிலும் அத்தகைய தனித்துவங்களும் வளர்ச்சிகளும் வென்றெடுக்கப்படுவதற்குச் சரியான போராட்டம் தேவை என்பதை ஏற்றுக் கொண்டவராக இருந்தார். . . தமிழ் பேசும் மக்கள் மீதான பாகுபாடு, புறக்கணிப்பு அடக்குமுறை என்பவற்றை எதிர்த்து நின்ற அதேசமயம் தமிழரின் தேசியப் போராட்டத்தின் அவசியத்தையும் அதன் திசையையும் சுட்டிக்காட்டினார். 1956 இல் பல்கலைக்கழக மாணவனாக இருந்தபோது கைலாசபதி முருகையனுக்கு எழுதிய கடிதம் ஒன்றிலே இவ்வாறு எழுதினார். "இனி ஏதாவது எழுத வேண்டியதுதான். எனினும் தமிழரின் தேசியப் போராட்டம் பற்றி எழுதவும் ஆசை எழுத்தாளன் தனித்து வாழ முடியாது என்பது எனது அடிப்படை நம்பிக்கை. எனவே 'சும்மா இலக்கியம் தற்சமயம் படைக்க இயலாதல்லவா?" இவ்வாறு தமிழ7 தேசியப் பே7ட்டம்'டற்றி எழுத ஆவண்பட்ட கைலாசட்தி அவ்வறு தனிக்கட்டுரை எழுதவில்லையாயினும் அவ்வப்போது எழுதியவற்றிவே தமிழர் தேசியம் புற்றிய கருத்துக்களைக் கூறத் தவறவில்லை"*
என சி.கா. செந்திவேல் குறிப்பிடுவது இத்தொடர்பில் நமது கவனத்துக்குரியதாகும். கேசவன், கைலாசபதியின் ஈழத்துத் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினை தொடர்பான பார்வை பற்றி முன்வைத்த விமர்சனத்துக்கு

வரலாற்றில் கைலாசபதி 99
செந்திவேலின் மேற்படி குறிப்பு மட்டுமே தற்பொழுது பதிலாக அமையக் கூடியது. எதிர்காலத்தில் இத்தொடர்பில் விவாதங்கள் தொடரலாம். −
வரலாற்று மாந்தர் பற்றிய கணிப்புக்கள் முக்கியமான இரண்டு நோக்கங்களினடிப்படையில் நிகழ்வன. ஒன்று வரலாற்று ஓட்டத்தில் முற்போக்கான அம்சங்களை இனங்கண்டு பேணிக் கொள்ளும் நோக்கில் அமையும் கணிப்பு: இன்னொன்று வரலாற்றுச் சூழலில் ஒருவரைப் பொருத்தி நோக்கி அவரது பலம்-பலவீனம்' ஆகிய இரண்டையும் முழுமையாக நுனித்து நோக்கும் வகையிலான கணிப்பு முதலாவதில் வரலாற்றின் சாதகமான கூறுகள் மட்டுமே கவனத்தைப் பெறுவது தவிர்க்க முடியாதது. இரண்டாவதில் ஆய்வுத் தகவல்களின் முழுமை, நுண்ணோக்கு என்பன அவசியமாகின்றன. பாரதி, ஆறுமுக நாவலர் ஆகியோர் பற்றிய கைலாசபதியின் பார்வை மேற்சுட்டிய முதல்வகை சார்ந்தது என்றே நாம் கொள்ள வேண்டும். கேசவன் எதிர்பார்த்தது இரண்டாவது வகையை என்பது தெரிகிறது. இந்த இரண்டாவது வகை ஒரு சமூக வரலாற்று ஆய்வாளனுக்கு அவசியம் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் கைலாசபதி சமூகவியல் வரலாற்றியல் ஆய்வு நோக்குகளை முன் வைத்து மேற்படி வரலாற்று மாந்தரை நுண்ணாய்வு செய்ய முற்பட்டவரல்ல கலை இலக்கியச் சிந்தனைகளை முன்னெடுக்கும் நோக்கில் சமூகவியல் வரலாற்றியல் பார்வைகளைப் பயன்படுத்தியவர். அவ்வகையில் பாரதி, நாவலர் போன்றோரின் மறுபக்கங்கள் அவருக்கு அவசியமில்லாதனவாகக் கூட இருந்திருக்கலாம்.
பாரதியின் வரவறு திட்டம் புற்றிய ஞானம் 'கைலாசபதியை மிகவும் கவர்ந்திருக்கிறது. அந்த ஒன்றை மையப்படுத்தியே பாரதியின் வரலாற்று வடிவத்தை அவர் கட்டமைத்துக் கொண்டார். அவ்வகையில் அவர் செய்தது மிகை மதிப்பீடா என்பதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.
கைலாசபதியின் சமகால தேசிய இலக்கிய உணர்வுச் சூழலிலும் சாதிப் போராட்ட இயக்கச் சூழலிலும் நாவலரின் சாதியாசாரம், அரசியல் என்பன பற்றிய விவரங்களை எடுத்துப் பேச வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனெனில் நாவலர் பெயரைச் சுட்டி எவரும் சமகால சாதிவெறியைத் தூண்டிவிடவில்லை. நாவலர் ஆங்கில ஏகாதிபத்தியத்தை ஆதரித்தமை சரியா? தவறா? என்ற விவாதங்களும் நிகழவில்லை. நாவலர் ஒரு சமய குரவராக - குரு பூசைக்குரியவராக - உயர் சாதியினரால் மதிக்கப்பட்டு வந்தார். முற்போக்குச் சிந்தனையாளர்கள் அந்தச் சமய குரவரைப் பண்பாட்டுப் பேணல் நோக்கில் ஒரு தேசிய வீரராகக் காண

Page 52
100 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
முற்பட்டனர். இச்சூழலில் நாவலரிடம் காணப்பட்ட முற்போக்கான கூறுகளை இனங்கண்டு காட்ட முற்பட்டார் கைலாசபதி, சமகால வரலாற்றுக்கு எது தேவையோ அதை மட்டும் கைலாசபதி பேசினார். இது எப்படி ஆய்வுத் தகவல் மெளனம், ஆய்வுத் தயக்கம், கருத்துக்களைத் தேவையற்ற விதத்தில் அமுக்குதல் ஆகிய குறைபாடுகளாகக் கருதப்பட முடியும்? எனவே கேசவன்து மேற்படி விமர்சனம் மீளாய்வுக்குரியது என்பது எனது கருத்து. அதேவேளை நாவலரை ஒரு மகாபுருஷராகவோ அன்றேல் மகத்தான பங்களிப்புச் செய்தவராகவோ கைலாசபதி கருதுவதை எம்மால் முழுநிலையில் ஒப்புக் கொள்ள முடியவில்லை என்பதையும் இங்கு சுட்டுவது அவசியமாகிறது.
தமிழவன் கைலாசபதியின் அணுகுமுறை தொடர்பாக முன் வைத்துள்ள விமர்சனங்களுக்கு கேசவன், சிவசேகரம் ஆகிய இருவரும் தக்க விடை கொடுத்துள்ளனர்.
"கைலாசபதி குறிப்பிடும் அறிவியல் அனுபவவாதத் தன்மை கொண்டது அல்ல; அது சமூக நடைமுறைத் தன்மை கொண்டது?
என்பர் கேசவன்
"கைலாசபதி Positivism என்கிற பொருண்மைவாதத்தாலேயே வழி நடத்தப்பட்டார் என்று மிகவும் சிரமப்பட்டு விளக்க முயல்கிற தமிழவன் அதற்குப் புற நடையாகக் கைலாசபதியின் ஆய்வுகள் அமையும்போது அதற்கு வேறு விளக்கங்களைத் தந்து கொண்டு போகிறார்" என்கிறார் சிவசேகரம். கநா.சு வைக் கைலாசபதி விமர்சித்துள்ளமையைக் குறைகாணும் தமிழவன், 'கநா.சு.வின் வாரிசுகள் எத்திசையிற் செல்கிறார்கள் என்பதிற் சிறிது கூடிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும்' என்றும் சிவசேகரம் குறிப்பிடுகிறார். *
கைலாசபதியின் கட்டுரைக் கட்டமைப்பில் காணப்படுவதாகக் கூறப்படும் நீண்ட மேற்கோள்கள் மற்றும் இயந்திரப்பாங்கான தன்மை என்பன பற்றிய விமர்சனம் தக்க ஆதாரங்களுடன் எடுத்துப் பேசப்பட்டனவல்ல. கேசவன் கூறுவது போல ° கைலாசபதியின் தொடக்க கால எழுத்துக்களில் நீண்ட மேற்கோள்கள் இன்றியமையாதவையாகி யிருக்கலாம். முந்தைய மார்க்சிய விமர்சகர்கள் சூக்குமமாகச் சொன்ன்தைப் பருண்மையாக விளக்க இவை பயன்பட்டன எனக் கொள்ளலாம். பின் நாளில் இப்படி இல்லை எனக் கேசவன் கூறியுள்ளதும் ஒப்பத்தக்கதே.

வரலாற்றில் கைலாசபதி 101 .
இயந்திரப் பாங்கு என்று எதனைச் சுட்டுகிறார்கள் என்பதைச் சான்றுகளைக் கொண்டே தீர்மானிக்க முடியும்.
கைலாசபதி சிலவற்றைக் கூறாமல் விட்டுவிட்டார் எனவும் எஸ். பொன்னுத்துரை முதலிய சிலரைக் கணிக்காமல் விட்டு விட்டார் எனவும் அமைந்துள்ள விமர்சனங்களுக்கான விடைகளை அவரது காலச் சூழல், அதில் அவர் சார்ந்து நின்ற அரசியல் தளம் என்பவற்றிலேயே தேட வேண்டும். க.நா.சு. மு. தளையசிங்கம் ஆகியவர்கள் மீது அவர் வைத்த விமர்சனங்களுக்கும் மேற்படி அம்சங்களிலேயே நாம் விடை நாட வேண்டும். கைலாசபதி அரசியலில் ஆழமாகக் காலூன்றி நின்று கொண்டு கலை இலக்கியக் கவனத்திற் செயற்பட்டவர் என்பதைத் தெளிந்து கொண்டால் அவரைப் பற்றிய விமர்சனங்களுக்கு விடை கிடைத்துவிடும். சுருங்கக் கூறுவதானால் முற்போக்கு இலக்கியத்தை முன்னெடுக்கும் சூழலில், தான் வரித்துக் கொண்ட மார்க்சிய லெனினிய அரசியல் தளத்துக்கு முரணாத வகையில் அவர் திட்டமிட்டுச் செயற்பட்டார் என்பதே பொருத்தமான விமர்சனம் ஆகலாம். கைலாசபதியின் விமர்சனப் பார்வையில் அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுடன் தொழிற்பட்டன என்ற கருத்தும் இலக்கிய உலகில் நிலவுகின்றது. தக்கச் சான்றுகள் தரப்பட்ட பின்னரே பரிசீலிப்பது சாத்தியம்.
கைலாசபதி பற்றிய விமர்சனங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு சி. சிவசேகரம் தரும் பொருத்தமான குறிப்பைச் சுட்டி இவ்வியலை நிறைவு செய்கிறேன்.
"கைலாசபதி பற்றிச் செய்யப்படும் மதிப்பீடுகள் கைலாசபதியின் ஒட்டு மொத்தமான பங்களிப்பை முதன்மைப்படுத்துவது நியாயமானது. கைலாசபதியின் விமர்சனங்களில் உள்ள குறைபாடுகள் அவை செய்யப்பட்ட சூழலின் அடிப்படையிற் கருதப்படுவதும் அவசியம்" *
குறிப்புகள் S T ATT00 0A A0A0A S T0 TTTAA SMTT TAMMA AL 2 இவ்வாறான குழல் பற்றிய தெளிவிற்கு பார்க்க , க. கைலாசபதி
அடியும் முடி4 நூலின் முதற் கட்டுரை
3 கோ கேசவன் பாரதி முதன் சைவசதி வரை டக் சிதி 43
4 திக நடர7சன் கவதி கைலாசபதி, மீண்டும் ஒரு தேவை"இலக்கு
Zയെന്ന് Z ZÀ് ീ
5 எம்.ஏ. நுமே7ன் மார்ச்சியமும் சிலச்சியத் திறனாய்வும் அன்னர் .
4ി ബി , കികളില്ക്ക് 97 Zā; &2 علي%20 م

Page 53
102 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
A2
ή
及
る委
A.
友
A.
ZZ
必
A2
22
af
al
2a
2.
472
a2
22
22
.死2
37
J2
J系廷
a.
(7 (ഖബ ഗ്രബ്രിട്ട് മറ്റ്രി Z" ീ
zل2ZZم
மேற்படி பக் 29-434
க கைவசதி அடியும் முடியும் பக் 237 இதுபற்றி இந்நூலின் முன்றாம்
இயலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது
ஞானி முகு கட்டுரை முகு, இதழ் பக் 33தடி// எம்முடையது
கோ கேசவன் முகு நூல் பக் 2தடிட/ எ74முடையது
تھیٹر / مجبرZ ,ھzz/Aڑ6
GżgøóL4, Løé 772
وللأقوى
மேற்படி, பக் 73
774 ZA ,222/42ی
மேற்படி, பக் 78-79
மேற்படி, பக் 78-79 23
தமிழவன் அமைப்பிz/ன் வாதமும் தமிழ் இலச்சியமும், காஷ்ம/7
வெனிம% 2ெ/ங்களுர் 1997 பக் 25-45
அ மார்க்ண் மார்ச்சியமும் திலக்கியத்தில் நவீனத்துவமும் பக் 4 157இத்தகவன்
கோ கேசவனின் டிேர்கட்டிய நூலின் டக்736 வி%தத்து எடுத்தானப்படுகின்றது
ஞானி மார்ச்சியமும் தமிழிலக்கியமும் நூலில் இடம் பெற்ற இவ்விமர்சனம் கோ. கேசவனின் மேற்சட்டிய நூலின் பக். 736 இவ%தத்து எடுத்தாளப்படுகிறது
எம்ஏ நுகமேசன் முற்குறித்த நூல் பக் 2
திசு நடர7சன் முகு, கட்டுரை இலக்கு மவர் 7 பக் 72
கிசிவசேகரம் கைவசதி-முழுமையும் பகுதியும் "பன்முக ஆ4ம்வின் சைவசதி தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏகியன் புக்கம் 6ിയ്ക്കബ് 1992 Z് 4
சிகா த்ெதிவேன் சைலாசபதியின் சமூச நோக்கும் பங்சனிப்புத்
சவுத் ஏசியன் புசின் தேசிய சுவை இவக்கியப் பேரவை சென்னை 22 டக் 7
கைவசதி இலக்கியச் சிந்தனைசன் பக் 24
மென. சித்திரலேகா, 'ஈழத்து இலக்கியமும் இடதுச77 அழகியலும்"
சமர் 2 ஜூலை 49% ம/ழர்/னர் பக் 7-19
சி கா த்ெதிவேன் முற்குறித்த நூல் பக் 2 இம்மேற்கோனில் 47 என
இடம் பெற்ற அடிக்குறிப்புத் தகவல்க கைவசதி 7-6-52தில்
முதகையனுக்கு எழுதிய கடிதம் எம்முடையது
கோ கேசவன் முற்குறித்த நூல் பக் 232
சி சிவசேகரம், விமர்சனங்சன் தேசிய கலை இலக்கியப் பேரவை &
சவுத் ஏகியன் புக்ஸ் சென்னை 1994 டக் 75
மேற்படி, பக் 7
கோ கேசவன் முடிற்குறித்த நூல் பக் 39
சி சிவசேகரம் முற்குறித்த கட்டுரை முற்குறித்த நூல் பக் 42


Page 54
ஆய்வுத் துணை
1. கேசவன், கோ.
பாரதி முதல் கைலாசபதி வரை. அகரம் வெளியீடு, கும்பகோணம், 1998.
2. சண்முகம், செ.வை.
மொழி வளர்ச்சியும் மொழி உணர்வும் (சங்க காலம்). மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 1989.
3. சிவசேகரம், சி.
விமர்சனங்கள். தேசிய கலை இலக்கியப் பேரவை & சவுத் ஏசியன் புக்ஸ். சென்னை. 1995
4. செந்திவேல், சிகா.
கைலாசபதியின் சமூக நோக்கும் பங்களிப்பும் சவுத் ஏசியன் புக்ஸ் & தேசிய கலை இலக்கியப் பேரவை, சென்னை. 1992
5. தமிழன்பன், ஈரோடு.
தோணி வருகிறது. பூம்புகார் பதிப்பகம். சென்னை. 1993.
6. நடராசன், தி.சு.
திறனாய்வுக்கலை. நியூ செஞ்சுளி புக் ஹவுஸ். சென்னை. 1996
7. நுஃமான், எம்.ஏ.
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும். அன்னம் வெளியீடு. சிவகங்கை, 1987
8. பஞ்சாங்கம், க.
தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு. வெளியீடு ப. பிரபாவதி. புதுவை. 1990
9. பன்முக ஆய்வில் கைலாசபதி, தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து
சவுத் ஏசியன் புக்ஸ். சென்னை, 1992

ஆய்வுத் துணை 105
10. மகாதேவன், கதிர்
ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம். 2ம் பதி. மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம், மதுரை. 1977
11. மணவாளன், அ.அ.
இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். சென்னை. 1995
12 மணி, பெ.சு.
தமிழ்ப் புலவர் மரபும் பாரதியும். பூங்கொடிப் பதிப்பகம். சென்னை. 1995.
13. வேதநாயகம் பிள்ளை, மாயூரம், ச.
பிரதாப முதலியார் சரித்திரம். சக்தி வெளியிடு, சென்னை. 1957.
ஆ. இதழ்கள்.
14. இலக்கு காலாண்டிதழ், ஆசிரியர் : தேவகாந்தன், சூளைமேடு, சென்னை.
மலர்கள் 7, 8, 9 மே 96, மார்ச் 97 ஏப்ரல் 98
15. சமர். ஆசிரியர் : டானியல் அன்ரனி, யாழ்ப்பாணம். 1969 ஜூலை.
16. சுதேசமித்திரன் - சென்னை, 1914,
17. சுதேசமித்திரன் அனுபந்தம். சென்னை - 1918,
18. தாமரை. ஜனசக்தி அச்சகம். சென்னை, பெப். 1990.
19. விவேகானந்தன் கொழும்பு 1925 ஆவணி இதழ்
1926 ஆனி புரட்டாசி - ஐப்பசி இதழ்
20. Social Scientist Indian School of Social Scientists No. 1979
21. The Sri Lanka Journal of South Asian Studies,
University of Jaffna, Jaffna. August. 1979
இ. ஆய்வேடுகள்
22. அரணமுறுவல், ந.
"தமிழியல் ஆய்வுக்கு பேராசிரியர் க. கைலாசபதியின் பங்களிப்பு" முனைவர் (Ph.D) பட்ட ஆய்வேடு, சென்னைப் பல்கலைக் கழகம். 1991
23. சுப்புலட்சுமி, எம்.
"தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு டாக்டர் க. கைலாசபதியின் பங்களிப்பு" முனைவர் பட்ட ஆய்வேடு, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம், மதுரை. 1992
24. ஜயந்தி, தி. கோ.
"தமிழில் கலைச் சொல்லாக்கம் - கைலாசபதி, சிவத்தம்பி நூல்வழிக் கலைச் சொல்லாக்கம்' ஆய்வியல் நிறைஞர்

Page 55
106 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
(M.Phi) பட்ட ஆய்வேடு. சென்னைப் பல்கலைக் கழகம்,
சென்னை. 1989.
ஈ. கட்டுரை
25. கிருஷ்ணராஜா. சோ.
"மெய்கண்ட சாஸ்திரங்களுக்கு முற்பட்ட சைவ சித்தாந்தம் - சத்யஜோதி சிவாசாரியாரின் உலக நோக்கு" பண்டிதமணி ஞாபகார்த்தச் சொற்பொழிவு யாழ்ப்பாணம் 1993 (தட்டச்சுப்படி)
இந்நூலின் மூலாதாரங்களான கைலாசபதியின் ஆக்கங்கள் பற்றிய விபரங்கள் அடுத்துவரும்
பக்கங்களில் இணைப்பு ஆகத் தரப்பட்டுள்ளன.

இணைப்பு 107
இணைப்பு
பேராசிரியர் க. கைலாசபதியின் ஆக்கங்கள் தேர்ந்த நூல் விபரப் பட்டியல்
தொகுத்தவர் என். செல்வராஜா, புறப்பிரதி, கைலாசபதி நினைவேடு, பேராசிரியர் க. கைலாசபதி நினைவுக்குழு, யாழ்ப்பாணம், 1988, பக். 26-232 இப்பட்டியவில் கைலாசபதியின்நூல்கள் கட்டுரைகள் என்பன ஆண்டு வரிசைப்படி தரப்பட்டுள்ளன. நூல்கள் பற்றிய தனிப்பட்டியல் இந்நூலின் முதலாவது இயவில் இடம் 2ெற்றுள்ளது - நூலாசிரிய7)
1953 a.
1. இலக்கியம் வேண்டுமா? சுரபி, 1431953. பக்கம் 13.
1955 2. ஈழத்துத் தமிழ் இலக்கியம், சாந்தி, டிசம்பர் 1955 பக்கம் 92-96 3. LTy;5urf - up60LDub Liga Loub, Ceylon University by Magazine,
Sept. 1955.
1956
4. தமிழர் அரசியல் வளர்ச்சி - இலக்கியம் காட்டும் இனப்பற்று. ஈழகேசரி,
26.8.1956 பக்கம் 3, 10, 5. தேசிய இயக்கங்களும் இலக்கியமும், மணிக்கொடி, ஆவணி 1956, பக்கம்
仔一20,

Page 56
108
10.
11.
12.
18.
19.
2O.
21.
22.
23.
24.
தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
1957
ஒவியமும் ஊசியும், யாழ்ப்பாணம் கலை கைப்பணி விழாமலர், 1956, பக்கம் 7-8.
1958
ஆறுமுக நாவலர், சரஸ்வதி, நான்காவது ஆண்டு மலர், ஜனவரி 1958, பக்கம் 134-137
1959 வானத்து மீனும் காற்றும் மண்ணுலகத்து நல்லோசைகளும், இளந்தென்றல், 1958-59.
1960
உலக இலக்கியத்தில் பங்கேற்க ஏதுவாய், பார்க்க, இல. 193. ஏன் இந்தத் தமிழ் உணர்ச்சி, தினகரன் தமிழ் விழாச் சிறப்பு மலர், சித்திரை 1960 பக்கம் 123-126. V− கவிதை நாடகங்கள், தினகரன் நாடக விழா மலர், 1960 பக்கம் 17-19. தமிழகத்து இயக்கங்களும் ஈழத்து அறிஞர்களும் சரஸ்வதி, அக்டோபர் 1960 பக்கம் 9-10.
1961
அயரா உழைப்பாளி - இலங்கையர்கோன், புதுமை இலக்கியம், 3-12-1961 பக்கம் 4. உரையும் விமர்சனமும், கலைப்பூங்கா, மலர் 40 : 1961 பக்கம் 15-17 தேசிய இலக்கியம், எழுத்து, இல. 33 : செப்டெம்பர் 1961 பக்கம் 199-200 பழந்தமிழர் கண்ட நீதி, தினகரன், 18-10-1961 பொருள் மரபும் விமர்சனக் குரல்களும், எழுத்து, இல. 36 டிசம்பர் 1961 பக்கம் 255.256,
1962
இரு மகாகவிகள். சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1962, ussuf 110
ஈழத்தில் சிறுகதை வளர்ச்சி, இளங்கதிர், 1962 ஈழத்தில் தமிழ் இலக்கிய மரபு, புதுமை இலக்கியம், அகில இலங்கை தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர், 1962 பக்கம் 62-64 ஈழநாட்டுச் சிறுகதை ஆசிரியர், இளங்கதிர், மலர் 14 1961-62. பக்கம் 104-11 சிறுகதை, புதுமை இலக்கியம், 1962, பக்கம் 3-8. நாடும் நாயன்மாரும் : பல்லவர் கால இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி. இளங்கதிர், மலர் 14 : 1961-62. பக்கம் 143-173. பதிப்பாசிரியர் நாவலர், மரகதம், மலர் 14, 1 ஜனவரி 1962 பக்கம் 17-19

இணைப்பு 109
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
34.
35.
36.
37.
38. 39.
40.
41, .
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
1963
இலக்கியத் திறனாய்வு, கல்வி, சித்திரை 1963, பக்கம் 45-49, ஈழத்து இலக்கியமும் இன்றைய விமர்சனமும், தேனருவி, ஜனவரி 1963 ! Lásub 47-51: Qu'uyauf 1963 : Luišssib : 57-60. ofTifės 1963., 57-60. சிகிரி ஒரு வரலாற்றுக் குறிப்பு அனுபந்தம்), சிங்ககிரிக் காவலன்! சொக்கன், யாழ்ப்பாணம், கலைவாணி புத்தக நிலையம். 1963. 95 பக்கம். (பக்கம் 79-95), பேரரசும் பெருந் தத்துவமும், இந்து தர்மம், 1962-63. பக்கம் 59-84. மரபு இளங்கதிர், 1962-63, பக்கம் 105-11 வெள்ளிப்பாதசரம் - இலங்கையர்கோன், கலைச்செல்வி, பொங்கல் மலர், தை 1963, பக்கம் 79-86. அழிவும் ஆக்கமும், இளங்கதிர், மலர் 16 1 1964-65 பக்கம் 32-38, பழமையும் புதுமையும், வசந்தம், செப்டெம்பர் 1965. பக்கம் 9-16.
1966
உருவத்தைப் பற்றி, வசந்தம், செப்டெம்பர் 1966 பக்கம் 17-20. ஒப்பியல் இலக்கிய வளர்ச்சி, தினகரன், 4-11-66, ஓரங்க நாடகம், தினகரன். 26-11-66, சித்தர் வளர்த்த விஞ்ஞானம், அறிவொளி, தொகுதி 31 : 1966, Lj55Lb 336-538. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும். சென்னை பாரி நிலையம், 1966) 204 Légio. பாரதியும் யுக மாற்றமும், வீரகேசரி, 1-11-66, மரபும் தனித் திறமையும், தினகரன், 10-12-66,
1967 ஆங்கிலக் கலை இலக்கிய விமர்சனத் துறையில் சில புதிய நெறிகள், தினகரன், 23-5-67. ஆங்கிலக் கிராமியக் கலைகளில் பழமையும் புதுமையும், தினகரன், 1-5-67 உரைநடையும் புனைகதையும், தினகரன், 10-1-67. கலையும் விலையும். வசந்தம், பொங்கல் மலர், தை 1967 பக்கம் 9-17 சிந்துக்குத் தந்தை, தினகரன், 5-8-67 சிறுகதையின் தேய்வும் நாவலின் வளர்ச்சியும் தினகரன், 14-4-67. சேரமான் பெருமான் செந்தமிழ் மாலை, இந்து தர்மம், 1966-67 Լ}&&tb 31-38, தமிழில் கலைச்சொற்கள். தினகரன், 21-9-67 நாட்டுப் பாடல்கள். சிந்தனை, மலர் 11, ஏப்ரல் 1967 பக்கம் 45.48, நாண் பழி புகழ், தினகரன், 14-1-67 பக்கம் 7 W நாவல் இலக்கியமும் தனிமனிதக் கொள்கையும் இளங்கதிர், 1966-67 Lisb 21-26.

Page 57
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
75.
தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
பாரதியும் சுந்தரம்பிள்ளையும், தினகரன், 11-9-67, 18-9-67, 26-9-67. பின்னுரை (பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும் பற்றி திருவாளர்கள் மஃரூப், அருமை நாயகம், முருகையன் ஆகியோரின் விமர்சனங்களுக்குப் பின்னுரை) சிந்தனை, மலர் 13) 1 ஒக்டோபர் 1967 பக்கம் 64-65. மறைமலையடிகளின் இரு நாவல்கள், சிந்தனை, மலர் 13 ஒக்டோபர் 1967, பக்கம் 14-22. மொழி பெயர்ப்பு நாடகங்கள், தினகரன், 11-10-67வள்ளிக் குறத்தி, வீரகேசரி, 14-1-67, பக்கம் 6.
1968
ஆசிய ஜோதி, இலங்கை வானொலி, 13-3-68. ஒப்பியல் ஆய்வும் உலக நோக்கும், வீரகேசரி, 13-3-68. காதலும் கட்டுப்பாடும். இளங்கதிர், 1967-68 பக்கம் 32-35 காலமும் கடமையும், நீதிமுரசு, 1968, பக்கம் 23-27 சந்திப்பு-கலாநிதி க. கைலாசபதி, இரசிகமணி கனக செந்திநாதன், நுட்பம், 1968. Lé5lb 21-26. 碧 சிந்தையில் தங்கும் கதிரவேற்பிள்ளை. தினகரன். 25-3-68. தமிழ் நாவல் இலக்கியம், சென்னை, பாரி நிலையம், 1968, 28 பக்கம். (மறுபதிப்பு : 1984 தேசிக விநாயகம்பிள்ளை. இலங்கை வானொலி, 13-3-68,
நாகநாட்டரசி குமுதவல்லி, இலங்கை வானொலி, 28-3-68.
போதி மாதவன் தோத்திரப் பாக்கள், தினகரன், வெசாக் மலர், 1968, வாரா உலகமும் வல்ஹல்லாவும், தினகரன், 13-4-68, பக்கம் 3. விஞ்ஞானக் கல்வியில் ஆங்கிலத்தின் இடம், அறிவொளி, மலர் 51 : 1968. பக்கம் 21-24. விமர்சனம் - கடலின் அக்கரை போவோர், காட்டு மிராண்டிகள், தினகரன், 16-6-68, Tamil Heroic Poetry : A Comparative study Proceedings of the Second international Conference Seminar of Tamil Studies, Vol. II, pp. 152-157. * . 、 Tamil Heroic Poetry, Oxford: Clarendon Press, 1968, 282 p.
1969
அடிகளாரின் வாழ்க்கைக்குப் பகைப்புலமாக அமைந்த குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சிகள் சில, அடிகளார் படிவமலர், பக்கம் 275-284. இன்றைய தமிழ் இலக்கியம் - புதிய போக்குகள், தமிழ் வட்டம், 2 ஆவது ஆண்டு மலர், 1-4-69. பக்கம் 121-124. ஒப்பியல் இலக்கியம், சென்னை, பாரி நிலையம், 1969, 323 பக்கம். சிலப்பதிகாரச் செய்திகள், இளங்கதிர், மலர் 20 1968-69, பக்கம் 38-45. நாவலர் வகுத்த தனிப்பாதை, நாவலர் மாநாடு விழா மலர், 1969, பக்கம் 19-22.

இணைப்பு 111 - -: –. ר -ר
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
94,
95.
96.
97.
பாரதி வகுத்த தனிப்பாதை, தினகரன், 29-6-69. போராட்டமும் வரலாறும், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மாநாட்டுச் சிறப்புமலர், 17-1-69, பக்கம் 17-19 முத்தமிழ் முனிவரின் ஒப்பியல் நோக்கு, அடிகளார் படிவமலர், LЈš8b 77-79. விஞ்ஞானக் கல்வியும் ஆங்கிலமும், இளந்தென்றல், 1968-69, பக்கம் 39-42.
1970
அடியும் முடியும், சென்னை பாரி நிலையம், 1970, 368 பக்கம். அடியும் முடியும். இளந்தென்றல், 1969-70 பக்கம் 61-62. இலக்கியமும் தத்துவமும், நீதிமுரசு, 1970 பக்கம் 61-62. கவிதை நயம், இணை இ. முருகையன். கொழும்பு, விஜயலட்சுமி புத்தகசாலை, 1970, 97 பக்கம். கொள்கையும் செயலும். தமிழருவி, 1969-70 பக்கம் 29-32 தமிழகத்தின் விழா - நோக்கமும் பயனும், அகில இலங்கை தமிழகத்தின் விழா, ஆகஸ்ட் 1970 பக்கம் 15. பரிதிமாற் கலைஞர் - மறு மதிப்பீடு. பரிதிமாற் கலைஞர் நூற்றாண்டு விழாமலர், 1970, பக்கம் 49-55. மறு பிரசுரம் : இளங்கதிர் : 21 ஆவது ஆண்டு மலர், 1969-70 பக்கம் 96-103. மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சிக் கருத்தரங்கு, வீரகேசரி, 6-3-1970.
1971 இரு நியாயப் போலிகள், கலா விருட்சம், மலர். 21 : 1971, பக்கம் 1-5. ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற் காட்சி 1947-1970. தேர்ந்த நூற் பட்டியல். இணை : எஸ். எம். கமாலுத்தின், கொழும்பு : அனைத்துலகத் தமிழாராய்ச்சிக் கழகம், கொழும்புக் கிளை, 1971, 55 பக்கம். தமிழ் இலக்கிய மரபில் வளர்ந்த பொதுமைச் சிந்தனைகள், கற்பகம், மார்ச் - ஏப்பிரல் 1971 பக்கம் 5-12, தமிழ் நாவல் வரலாறு - சில குறிப்புகள். வெள்ளி விழா மலர், தில்லித் தமிழ்ச் சங்கம், 1971 பக்கம் 137-140. தமிழ் மொழியும் இலக்கியம் கற்பித்தலும், கலைச்சுடர், மலர் 20 1971 பக்கம் 54-80.
தமிழில் குழந்தைக் கவிதைகள், கலாமதி, ஆண்டு மலர், 1971, பக்கம் 6-12 தற்காலத் தமிழ் நாடகங்கள். அகில இலங்கைத் தமிழ்த்தின திருகோணமலை விழா மலர், 1971, பக்கம் 34-36. நாவலரும் இந்துமத மறுமலர்ச்சியும், அஞ்சலி, செப்டெம்பர் 1971, பக்கம் 53-55, பாரதிக்கு முன், Hearty College Miscelany 1971, பக்கம் 6-9. பாரதியும் வேத மரபும். யாழ் நாயன்மார்கட்கு பூரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கும்பாபிஷேக மலர், 1971, பக்கம் 57-58.

Page 58
12
98.
99.
100.
101.
O2.
103.
104.
105.
106.
107.
108.
109.
110.
111.
112.
13.
இணைப்பு
பாரதியைக் கற்க வேண்டிய நெறி, இந்து மாணவன், நவராத்திரிச் சிறப்பிதழ். 1971
1972
இலக்கியமும் திறனாய்வும், சென்னை பாட்டாளிகள் வெளியீடு, 1972 167 பக்கம். ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி, தமிழ் இலக்கிய விழா மலர், 16-1-1972 பக்கம் 19-27. ஈழத்தில் தமிழிலக்கியத் திறனாய்வு முயற்சிகள், தமிழ் இலக்கிய விழா
மலர், 16.1-1972, பக்கம் 41-45,
ஈழத்து இலக்கிய முன்னோடி நவீனத்துவத்தின் விடிவெள்ளி, யாவர் துரையப்பாபிள்ளை), வீரகேசரி, 13-3-1972 கனவும் நனவும் காட்டும் கவிதை, இலக்கிய வழியில் இனிய நறுமலர், 1972 பக்கம் 3-5. & : தமிழிலே தன்னுணர்ச்சிப் பாடல்கள், இனந்தென்றல், 1971-72 பக்கம் 775 துரையப்பா பிள்ளையும் தேசியப் பின்னணியும், பாவலர் துறையப்பா பிள்ளை நூற்றாண்டு விழா மலர், 1972 பக்கம் 37-43, \ நாவலர் வழி வரும் இலக்கிய மரபு நாவலர் பெருமான் 150 ஆவது ஜயந்தி விழா மலர், 1972 பக்கம் 39-47 பஞ்சப்பட்ட மக்களின் வாழ்வைச் சித்தரிக்கும் பேரோவியம் (கே. டானியலின் பஞ்சமர் நாவல் மதிப்பீடு. தினகரன், 22-10-1972 பிரயாண இலக்கியத் துறையில் அசீசுக்கு இணை அவரே தான், வீரகேசரி, ፲7-5-1972. மண்ணகத்து ஓசைகள் வெள்ளி, ஜனவரி 1972 : பக்கம் 4-6 மார்ச் 1972 பக்கம் 16-18; யூன் 15, 1972 : பக்கம் 1-13; யூலை 15, 1972 : பக்கம் 4-5; செப்டெம்பர் 15, 1972 : பக்கம் 16-17
1973
கல்வி, சமுதாயம், சோஷலிசம், அடைக்கலம், நூற்றாண்டு விழாச் சிறப்பு மலர். 1873-1973, பக்கம் 21-23. கல்வெட்டாராய்ச்சி அறிஞர் திநா. சுப்பிரமணியம். பூர்வகலா, மலர் 11 : 1973, பக்கம் 20-22. சிறு சஞ்சிகைகள் வரிசையில் மறுமலர்ச்சி மறுமலர்ச்சிக் காலம், இலக்கியச் சிறீப்பிதழ், 1973. . - தற்காலத் தமிழ் இலக்கியத் திறனாய்வுப் போக்குகள், வெள்ளிவிழா மலர், சிவகங்கை, மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரி 1972-73, பக்கம் 16-22 மறு பிரசுரம் தாமரை, ஆகஸ்ட் 1973, பக்கம் 1-21 நவீன இலக்கியத் திறனாய்வில் கநா.சு. சுப்பிரமணியன்) வின் பாத்திரம். மல்லிகை, யூன் 1973 : பக்கம் 9-15 ஆகஸ்ட் 1973 பக்கம் 17-24 செப்டெம்பர் 1973 பக்கம் 9-15; ஒக்டோபர் 1973 :பக்கம் 22-28, நவம்பர் 1973; qasubur 1973.

தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி 113
115.
116.
117.
118.
119.
120.
121.
122.
123.
124.
125.
126.
127.
128.
129.
130.
13.
132.
133.
முதன் முதலில் சந்தித்தேன். இளங்கீரன்). மல்லிகை, நவம்பர் 1973, பக்கம் 8. w A Century of Tamil Poetry in Sri Lanka. Radio Times, Vol. 25 (27) : October 8-21, 1973, p. 1, 2 & 4.
1974
இங்கிருந்து எங்கே, தாயகம், சித்திரை 1974, பக்கம் 17-21, மறு பிரசுரம் : செம்பதாகை, மலர் 51 : தை 1973, பக்கம் 4. இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழிலக்கியம் - சில குறிப்புகள், வெள்ளி விழா மலர், யாழ். மாநகராட்சி மன்றம், 1974 பக்கம் 40-43, ஈழத்தில் தேசிய இலக்கியம், கலைக்கண், 1974 கோயில் தத்துவமும் சமூக வாழ்க்கையும், செல்வி தங்கம்மா அப்பாக்குட் பாராட்டு விழா மலர், 1974 பக்கம் 50-55, தற்காலத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படைகள் வானொலி மஞ்சரி, மலர் 26 (4) : பெப்ரவரி 11-24, 1974, பக்கம் 21-22. தேசிய இலக்கியத்தின் சிறப்பியல்புகள், கலைச் சுடர், மலர் 23 - 1974 பக்கம் 1-4. நவீன இலக்கியத் திறனாய்வில் கநா.சுப்பிரமணியன் வின் பாத்திரம். மல்லிகை, ஜனவரி 1974 பக்கம் 31-36 : பெப்ரவரி 1974 பக்கம் 32-38, நாவலர் அடிச்சுவட்டில் தேசியம், புதுமை இலக்கியம், இல, 16 : ஜனவரி 1974, பக்கம் 12-19. பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும், மல்லிகை, மார்ச் 1974, u&sub 44-45. - பாரதியாரின் கண்ணன் பாட்டு - ஒரு வினாக் குறிப்பு, வளர்மதி, மலர் 1):
ஆடி 1974 பக்கம் 26-27
முழுமை பெறும் இலக்கிய இயக்கம், மல்லிகை, 10ஆவது ஆண்டு மலர், ஆகஸ்ட் 1974, பக்கம் 94-99, வடக்கில் ஒரு பல்கலைக்கழகம், தாயகம், யூன் 1974, மறு பிரசுரம் தாயகம், இல6 : பெப்ரவரி-மார்ச், 1984, பக்கம் 53-55.
1975
அல்பெர்ட் சுவைட்சர் - சில குறிப்புகள், மல்லிகை, அக்டோபர் 1975. பக்கம் 24-28. இலக்கியம் காட்டும் தேசிய ஒருமைப்பாடு, புதுமை இலக்கியம், தேசிய ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மாநாட்டு மலர், மே 1975, பக்கம் 53-58, சிறிய நாடும் சிறந்த இலக்கியங்களும், மல்லிகை, ஆகஸ்ட் 1975 பக்கம் 75-79. சுவாமி ஞானப்பிரகாசர் நூற்றாண்டு விழாச் சிந்தனைகள், மல்லிகை, செப்டெம்பர் 1975 பக்கம் 4-8, செயல்வீரர், அஞ்சலிமலர், அமரர் அத. துரையப்பா, ஆகஸ்ட் 1975 பக்கம் 19,

Page 59
114
54.
135.
தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகள், தமிழ் சாகித்திய விழா மலர், 1975 பக்கம் 13-17
Campus planning in Sri Lanka : With special reference to the Colombo and Jaffna Campuses of the University of Sri Lanka. Jt. Auth. DPP Samarasekera, B. Damiecki. Bangkok: UNESCO Regional
office for Education in Asia, 1975. 33p.
136.
137.
138.
139.
140.
141.
142.
144.
145.
146.
147.
-149.
150.
A Century of Tamil Poetry in Sri Lanka, an introduction. James Thevathasan Rutnam Felicitation Volume, 1975. pp. 70-75. The Hindu Approach, Religion and human development in Sri Lanka, Ed. P. Ganewatte, 1975. pp. 42-50.
1976
இலக்கியக் கவனிப்புகள், மல்லிகை, ஜனவரி 1976, பக்கம் 39-40. இலக்கியத் திறனாய்வும் உணர்வு நலனும், சிந்தனை, மலர் 12. சித்திரை 1976 பக்கம் 1-10, கல்வியும் கலைகளும், கலைச்செல்வி, 1976 பக்கம் 9-11 சமகாலத் தமிழ் இலக்கியத்தின் வர்க்க வேர்கள், (கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை இணை சித்திரலேகா மெளனகுரு, ஒடநாடி, மலர் 27-8) : டிசம்பர் 1976. தற்காலத் தமிழ் நாடகங்கள், விவசாயக் கைத் தொழிற் கலாச்சாரப் பொருட்காட்சி மலர். 1976 பக்கம் 13-17 Contemporary Tamil literature - A Critique homage to a Historian : Festschrift, 1976. pp. 155-166. National Languages of Sri Lanka: Part II, Tamil Jt. Auth. A. Shanmugadas. Colombo: Dept. of Cultural affairs, 1976. 33p. (The culture of Sri Lanka Series No. 2).
1977 ஆக்க இலக்கியமும் சமூகவியலும், ஆக்க இலக்கியமும் அறிவியலும், 1977, பக்கம் 29-50, ஆனந்தக்குமாரசுவாமி நூற்றாண்டு நினைவுக் கண்ணோட்டம், கலாயோகி ஆனந்தக் குமார சுவாமி நூற்றாண்டு விழா, 1977, பக்கம் 7-14 இசைத் தமிழ் வளர்ச்சியில் நாட்டார் பாடல்களின் பங்கு, வைரவிழா மலர் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம், 1977, பக்கம் 42-46. சந்திப்புகளும் சர்ச்சைகளும், மல்லிகை, பெப்ரவரி 1977 பக்கம் 18-24 மார்ச் 1977, பக்கம் 34-40, ஏப்ரல் 1977, பக்கம் 25-32 மே 1977, பக்கம் 33-42. சமகாலத் தமிழ் நாடகங்கள் - சில குறிப்புகள், பொன் விழா மலர், ஞானோதய வித்தியாலயம், 1977 நாவலும் ஆய்வறிவு வளர்ச்சியும், வயல், 1977, பக்கம் 614.

இணைப்பு 115
151.
152.
153.
154.
155.
156.
岱7
158.
159.
160.
16怯
162。
163.
64.
165
166.
167.
168.
பேராசிரியர் பேரம்பலம் கனகசபாபதியின் மறைவு இலங்கைக்கு ஓர் பேரிழப்பு பேராசிரியர் பே. கனகசபாபதி ஞாபகமலர், 1977, uáish 22-23. Nallur Kandasamy Temple:Past and Present, The 15th Annual Jaffna Sports Gala and Thinakaran Festival, 1977. Tamil Studies in Sri Lanka. Newsletter of the Society for South India Studies, Vol. 10(1): November 1977, p. 4-7.
1978
இயக்கவியலும் அறிவுக் கொள்கையும், எழில், நவம்பர் 1978, பக்கம் 38-42 ஈழத்தில் இலக்கியத் திறனாய்வு சுடர் : கடல் கடந்த தமிழ் மலர், இதழ் 23 1978 பக்கம் 93-101. A Century of Tamil Poetry in Sri Lanka. Silver Jubilee Number, Tamil Manram, 1978, pp. 41-51.
1979
ஆறுமுக நாவலரும் சபாபதி நாவலரும், நாவலர் நூற்றாண்டு விழா மலர், 1979, பக்கம் 159-167, உலக அரங்கில் அங்கும் இங்கும், செம்பதாகை, மலர் 16 யூன் 1979 பக்கம் 5, 17 : யூலை 1979 பக்கம் 5, ஆகஸ்ட் 1979 பக்கம் 3, 10 : ஒக்டோபர் 1979, பக்கம் 7, 11: நவம்பர் 1979, பக்கம் 3, 112 : டிசம்பர் 1979. பக்கம் 5, மேலும் பார்க்க - இல. 174, 192, 22). ஓரங்க நாடகங்கள், வானொலி மஞ்சரி, யூன் 1979, பக்கம் 9-10. கருத்தும் கண்ணோட்டமும், செம்பதாகை, மலர் 17, யூலை 1979, பக்கம் 2 ‘ 19. செப்டெம்பர் 1979, பக்கம் 2, 102 : டிசம்பர் 1979, பக்கம் 2. (மேலும் Luwråkas - Qao. 175, 196, 213)
கல்வியில் சமூகவியல், கலாவதி, 1979. • கிறீஸ்தவ கலாச்சாரம், இறையியல் மலர், மலர் 62 : ஏப்ரல் - யூன் 1979. பக்கம் 5-9, சிரித்துச் சிந்திக்க வைத்தவர், வானொலி மஞ்சுரி, யூன் 1979, பக்கம் 3, சீனாவில் வரலாற்று ஆராய்ச்சி, வர்க்கப் போராட்டங்களை எடுத்துக் காட்டுகிறது. செம்பதாகை, சீனமக்கள் குடியரசின் 30ஆவது ஆண்டு நிறைவு மலர், மலர் 17 ஆடி 1979, பக்கம் l-V. நாவலர் இலக்கிய நோக்கும் பணியும், நாவலர் நூற்றாண்டு மலர், 1979, பக்கம் 48-59. நாவலர் நூற்றாண்டு மலர் 1979, (பதிப்பாசிரியர்) கொழும்பு : பூரீலபூரீ ஆறுமுக நாவலர் சபை, 1979, 336 பக்கம். நாவலாசிரியர் நாகமுத்து இடைக்காடர், மல்லிகை, ஆகஸ்ட் 1979. பக்கம் 39-45. மக்கள் சீனம் காட்சியும் கருத்தும் இணை சர்வமங்களம் கைலாசபதி, சென்னை பாட்டாளிகள் வெளியீடு, 1979, 240 பக்கம்.

Page 60
116
169.
170.
171.
172.
174.
175.
176.
177.
178.
179,
180.
181.
182.
183.
184,
தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும், சமர், யூலை 1979 பக்கம் 1-5. Arumuga Navalar: The Central Years 1834-1848, The Central, Vol. L : 1979, PP. VII-XI. The Tamil Purish Movement. A re-evaluation. The Sri Lanka Journal of South Asian Studies, August 1979. PP. 34-63, Reprint : Social Scientist, No. 83 : 1979 PP 23-51.
1980" இலங்கையில் சைவ சமயமும் நவீன மயமாக்கமும், கும்பாபிஷேக மலர், நெட்டிலைப்பாய் பிள்ளையார் கோவில், ஆவணி 1980 பக்கம் 21-26. இலங்கையில் தமிழ் நாட்டார் வழக்கியல் ஆய்வுகள், வந்தவையும் வரவேண்டியவையும், இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல், 1980. பக்கம் 1-30. உலக அரங்கில் அங்கும் இங்கும், செம்பதாகை, மலர் 20: ஜனவரி 1980, பக்கம் 5; 22 : பெப்ரவரி 1980. பக்கம் 3; 2(4-5) ஏப்ரல் - மே 1980, பக்கம் 5; 27 - யூலை 1980 பக்கம் 5, 28-9) ஆகஸ்ட்-செப்டெம்பர் 1980, பக்கம் 5; 2t) : நவம்பர் 1980, பக்கம் 5. கருத்தும் கண்ணோட்டமும், செம்பதாகை, மலர் 20 : ஜனவரி 1980, 22 : பெப்ரவரி 1980; 24-5) 1 ஏப்ரல்-மே 1980; 27) யூலை 1980; 28-9) ஓகஸ்ட் - செப்டெம்பர் 1980, 2010 : அக்டோபர் 1980; 2i : நவம்பர் 1980 சகல இதழ்களிலும் பக்கம் 2இல் இக்கட்டுரைகள் காணப்படுகின்றன) கவிதையும் தத்துவமும், மல்லிகை, ஆகஸ்ட் 1980 பக்கம் 31-35. கூட்டுறவு இயக்கம்-சில பிரச்சினைகள். கூட்டுறவாளர் தினவிழா சிறப்பு Locust, 1980. சங்கம் முதல் இன்று வரை, தீக்கதிர், உலகத் தமிழ் மாநாடு சிறப்பு மலர், 1980. பக்கம் 40-43, மறுபிரசுரம், தாயகம், சித்திரை 1983, பக்கம் 28-34. தமிழ் நாவல்களில் மனித உரிமைகளும் மக்கள் போராட்டங்களும், s Lor, ஜனவரி 1980 பக்கம் 8-14
தமிழில் குழந்தை இலக்கியம் - சில குறிப்புகள், மல்லிகை, டிசம்பர் 1980,
பக்கம் 48-52. திறனாய்வுப் பிரச்சினைகள், க.நா. சுப்பிரமணியம் குழு பற்றிய ஓர் ஆய்வு, சென்னை : சென்னை புக் ஹவுஸ், 1980, 83 பக்கம். நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், சென்னை : மக்கள் வெளியீடு, 1980, 132 பக்கம் பட்டுக்கோட்டை ஆய்வு வளர்ச்சி - ஒரு குறிப்பு மல்லிகை, ஏப்ரல் 1980 பக்கம் 13-16. பாரதி நூல்களும் பாட பேத ஆராய்ச்சியும் - சில குறிப்புகள், சென்னை இலக்கியச் சிந்தனை, 1980, 36 பக்கம்.

இணைப்பு 17
185.
186.
187.
188.
189,
90.
191.
192.
193.
194.
195.
196.
197.
198.
199.
200.
201.
202.
2O3.
பொதுசனத் தொடர்புச் சாதனங்கள் : ஆக்கபூர்வமான பாதையிலா அழிவுப் பாதையிலா-மனித சமுதாயத்தை வழி நடத்திச் செல்லப் போகின்றன? மாணவர் குரல், மலர் 12 : ஆகஸ்ட்-செப்டெம்பர் 1980, பக்கம் 1 வள்ளுவரும் சமுதாயப் பிரச்சனைகளும், வள்ளுவர் விழா மலர், 24-05-1980. வாங்கலாம் பாளையம் செல்லப்பக் கவுண்டர் குழந்தைசாமி, Convocation for conferment of Degree 1980. PP. 35-36. GgubGio G56ugirs61 9ygg6Tub, Convocation for conferment of Degrees, 1980. RP 35-36. The Humanities in the University, Ootru, September 1980, PP. 5-9. The impact of Swami Vivekananda on Hinduism in Sri Lanka, Golden Jubilee of the Ramakrishna Mission, 1930-1980, PP 1-5.
1981
அபிவிருத்திக் கோட்பாடு - ஒரு கண்ணோட்டம், நுட்பம், 1981, பக்கம் 31-36. உலக அரங்கில் அங்கும். இங்கும், செம்பதாகை, மலர் 30, தை 1981, பக்கம் 7; 32 : மாசி 1981 பக்கம் 7; 33-4) பங்குனி-சித்திரை 1981 பக்கம் 7, 35 வைகாசி 1981 பக்கம் 5; 36-7) ஆனி-ஆடி 1981 பக்கம் 5: 38) ஆவணி 1981 பக்கம் 7: 3(i): கார்த்திகை 1981 பக்கம் 5. உலக இலக்கியத்தில் பங்கேற்க ஏதுவாய் புதுமை இலக்கியம் பாரதி நூற்றாண்டு முன்னோடி மலர், 1981 பக்கம் 31-33. இக்கட்டுரை 1960 ஆம் ஆண்டு எழுதப்பட்டது) எமது கவிஞர்கள் 1 சமூகத் தொண்டன், இதழ் 3 1 1981 பக்கம் 2-5. ஒரே உலகம், கிருதயுகம், பங்குனி-சித்திரை 1981 பக்கம் 2-3. கருத்தும் கண்ணோட்டமும், செம்பதாகை, மலர் 30 : தை 81; 32; மாசி 81, 33-4). பங்குனி-சித்திரை 81, 3(i): கார்த்திகை 81, 312: மார்கழி 81; (சகல இதழ்களிலும் பக்கம் 2 இல் இக்கட்டுரைகள் காணப்படுகின்றன) கிருதயுகமும் கேடில்லா வாழ்வும் கிருதயுகம், வைகாசி- ஆனி 1981 பக்கம் 4-6. தமிழ் இலக்கியத்தில் ஆங்கிலத்தின் பிரதிபலிப்பு, தமிழ் மலர்ச்சி, 1981 பக்கம் 59-62. தமிழில் ஒப்பியல் ஆய்வு-சில குறிப்புகள், தனி நாயகம் அடிகளார் நினைவு. மலர், ஜனவரி 10, 1981 பக்கம் 41-46, தமிழில் திறனாய்வுக் கலை, 5ஆம் உலகத் தமிழ் மாநாடு மலர், மதுரை 1981 பக்கம் 146-151 தமிழும் விமர்சன இலக்கியமும், செம்மலர், ஆகஸ்ட் 1981 பக்கம் 49-53. நவீன உலகும் இலக்கிய உணர்வும் கிருதயுகம் ஆடி - ஆவணி 1981 பக்கம் 5-7 பாரதி ஆய்வுகள்-வளர்ச்சியும் வக்கிரங்களும், மல்லிகை, ஆகஸ்ட் 1981 பக்கம் 49-53. •

Page 61
118
204.
205.
206.
207.
208.
209.
210,
2.
212.
213.
214.
2岱
216.
217.
218.
219.
220.
221.
223.
தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
பாரதி நூற்பதிப்புகள், தாமரை, டிசம்பர் 1981 பக்கம் 12-16. பாரதி நூற்றாண்டை நோக்கி செய்ய வேண்டியவை, செய்யக் கூடியவை, வசந்தம், ஜனவரி-பெப்ரவரி 1981 பக்கம் 2-8. மரபு வழித் தமிழ்க் கல்வியும் சுவாமி ஞானப் பிரகாசரும், சுவாமி ஞானப்பிரகாசர் சிந்தனையும் பணியும் 1981 பக்கம் 9-19. வெள்ளிப் பாதசரம், விமர்சனக் கட்டுரை, கிருதயுகம், டிசம்பர் 1981, பக்கம் 17-22. ܚ Some aspects of our past : Arnold Sathasivampillai and the Tamil Renaissance, Jaffna College Miscellany, Centenary Publication, 1981, P. 81-87.
1982
இலங்கை கண்ட பாரதி, மல்லிகை, மே 1982, பக்கம் 19-26. ஈழத்துத் தமிழ்க் கவிதையில் பாரதியின் தாக்கம், தாமரை, ஆகஸ்ட் 1982 பக்கம் 8-15. ஈழத்துத் தமிழ்க் கவிதையில் பாரதியின் தாக்கம்-சில குறிப்புகள், ஞான பண்டிதம், 1982, பக்கம் 16-21 உலக அரங்கில் அங்கும் இங்கும், செம்பதாகை மலர் 42-3). 1982 பக்கம் 7. கருத்தும் கண்ணோட்டமும், செம்பதாகை, மலர் 40 : தை 82; 42-3) : மாசி - பங்குனி 82, 44 : சித்திரை 82, 45 : 1982 4(6): 1982 47-8) : 1982 49 ; 1982 40: 1982 41 : 1982 (சகல இதழ்களிலும் பக்கம் 2இல் இக்கட்டுரைகள் காணப்படுகின்றன) சிதம்பர ரகுநாதன், மல்லிகை, யூலை 1982, பக்கம் 5-8. சிறு சஞ்சிகைகளில் பாரதி ஆய்வுகள், மல்லிகை, யூலை 1982, பக்கம் 49-51. சோவியத் பிடியில் இருந்து விலக இந்தியா விரும்புகிறது. செம்பதாகை, மலர் 4t) : நவம்பர் 1982, பக்கம் 5, பாரதி கண்ட இயக்கவியல், தீக்கதிர், பாரதி நூற்றாண்டு விழா சிறப்பு மலர், 1982, பக்கம் 30-34.
பாரதி கண்ட புரட்சி, வீரகேசரி, 245-1982 பாரதியார் கவிதையும் தமிழ்ப் புலமையும், மல்லிகை, ஜனவரி 1982 பக்கம் 49-51 பாரதியியலுக்கு ஒரு பங்களிப்பு மல்லிகை, நவம்பர் 1982 பக்கம் 17-21 பாரதியின் சமகாலத்தவரும் பாரதி பரம்பரையினரும், மல்லிகை,மார்ச்-ஏப்ரல் 1982 பக்கம் 22-25, பாரதியின் புரட்சி, பல்கலை நோக்கில் பாரதி, 1982, பக்கம் 10-18. மக்கள் இலக்கியப் பண்பு இலக்கியச் சிந்தனைகள் 1982, பார்க்க இல, 230.

இணைப்பு 119
224.
225.
226.
227.
228.
229.
230.
231.
232.
2S3.
234.
மறு பதிப்புகளும் வைப்பு நூலகங்களும், மல்லிகை ஆகஸ்ட் 1982 பக்கம் 91-95 மறுபிரசுரம் நூலகவியல், மலர் 12: டிசம்பர் 1985 பக்கம் 1. மானுடம் தழுவிய கவிஞர்கள், 22வது திருக்குறள் மாநாட்டுச் சிறப்பு மலர், 1982 பக்கம் 30-32 முற்போக்காளரின் பாரதி ஆய்வுகள், மல்லிகை, ஒக்டோபர் 1982, பக்கம் 34-39. வன்னிப் பிரதேசமும் நாட்டார் பண்பாட்டியலும், பண்டார வன்னியன் விழா மலர், ஆடி 1982, பக்கம் 1-4 The Cultural and linguistic consciousness of the Tamil Community in Sri Lanka. Punithavathy Thiruchelvam Memorial Lecture, 1982 Tamil Womens' Union, Kalalaya. 24p. European influences on Modern Tamil Poetry-Bharatiand the European Poets, The Sri Lanka Journal of South Asian Studies, December 1982, p. 1-17. இலக்கியச் சிந்தனைகள் (பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் கட்டுரைகளின் தொகுப்பு, கொழுப்பு 4: திருமதி சர்வமங்களம் கைலாசபதி, 1985, 144 u&sub.
1984
பாரதி ஆய்வுகள், சென்னை நியூ செஞ்சரி புக் ஹவுஸ், 1984, 280 பக்கம், Cultural and linguistic consciousness of Tamil Community, Ethnicity and Social changes in Sri Lanka, 1984, p. 107-120. The Relation offamil and Western literature, Decennium Endowment lectres in English, Madurai: Kamaraj University, 1984, 61p.
1985
தமிழரிடையே மொழி பண்பாடு பற்றிய உணர்வு, இலங்கையில் இனத்துவமும் சமூக மாற்றமும், 1985, பக்கம் 181-195, இக்கட்டுரை பதிவு இலக்கம் 232 இல் உள்ள கட்டுரையின் தமிழாக்கமாகும்)
ஆண்டு விபரம் அறியமுடியாத கட்டுரைகள் :
235.
236.
237.
தெய்வம் என்பதோர் சித்தமுண்டாகி, பல்கலைக் கழக இந்து மாணவர் சங்க மலர், பக்கம் 41-51, பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழிலக்கணம், இலக்கியம்?). வெள்ளிவிழா மலர், புனித பெனடிக்ற் கல்லூரி, கொழும்பு பக்கம் 55-58, விஞ்ஞானமும் இலக்கியமும், போக்குவரத்துச் செய்தி, மலர் 69) : பக்கம் 3-5.

Page 62
120 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
238. வெற்றியின் இரகசியம், மலாயாவில் புதுமைப்பித்தன் நினைவு மலர்,
பக்கம் 67-68.
1992
239. சர்வதேச அரசியல் நிகழ்வுகள் 1979-1982, புதியயூமி வெளியீட்டகத்துடன்
இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை 1992, 195 பக்கம்.
2
நூல்களுக்கு வழங்கிய உரைகள் (அடைப்புக் குறிக்குள் உள்ளவை உரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ள நூல்களின் பக்கங்களாகும்)
அணிந்துரைகள்
அக்கா, அ. முத்துலிங்கம், சென்னை பாரி நிலையம், 1964, 154 பக்கம்,
(பக்கம் 5-10) ஆக்க இலக்கியமும் அறிவியலும் பதிப்பு அ. சண்முகதாஸ், ஆக்க இலக்கியமும் பிற சமூக அறிவியல் துறைகளும் பற்றிய கருத்தரங்கிற் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள். யாழ்ப்பாணம் : யாழ். வளாகத் தமிழ்த்துறை வெளியீடு, 1977 195 பக்கம் (பக்கம் I–IV) கலையருவி கணபதிப்பிள்ளை - சில நினைவுகள் த. சண்முக சுந்தரம். தெல்லிப்பழை கலைப்பெருமன்றம், 1974, 68 பக்கம் (பக்கம் V-VI) கோணேஸ்வரம் / செ. குணசிங்கம் பேராதனை, 1973, 124 (பக்கம் V-VI) சோ. பொன்னம்பலம் இராமநாதன் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் / சொக்கன், திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரி இயக்குனர் சபை வெளியீடு, 1976, 76 (பக்கம் IVV) தமிழியற் கட்டுரைகள்/தொகுப்பு, எஸ். சிவலிங்கராஜா, மயிலங்கூடலூர்
பி. நடராசன், யாழ்ப்பாணம் 1982, 183 பக்கம். (பக்கம் l-VI) நீதியே நீ கேள் / இளங்கீரன், சென்னை பாரி நிலையம் 1962 472
(šas Lb VXIV) பட்டுக்கோட்டையின் பாட்டுத் திறம் - ஒப்பாய்வு / கி. செம்பியன், மாயூரம்
வட்டம் திங்கள் பதிப்பகம், 1981 208 பக்கம். (பக்கம் VFXI) பைந்தமிழ் வளர்த்த பதின்மர் 1 சொக்கன், யாழ்ப்பாணம், 1972 94, பக்கம்
(ušsub VI-X)

இணைப்பு 121
அறிமுக உரைகள்
கந்தன் கருணை / அம்பலத்தடிகள், மூலம், எஸ்.கே. ரகுநாதன், யாழ்ப்பாணம்,
1973, 48 பக்கம். (பக்கம் VI-X)
Contemporary Tamil Writings in Sri Lanka/K.S. Sivakumaran,
Colombo 6; Vijayaluxmy Book Depot. 1974. 64 P (pp. IV-V)
மதிப்புரை
யுகப் பிரசவம் / புலோலியூர் க. சதாசிவம், நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர்
சங்கம், 1973, 152 பக்கம் (பக்கம் XXIV)
முகவுரைகள்
எண்ணக் கோலம் - கவிதைத் தொகுப்பு 1 க. கணேசலிங்கம், யாழ்ப்பாணம்,
1974, 72 பக்கம் (பக்கம் xy-xiv) சிலந்தி வயல் - சிறுகதைத் தொகுப்பு 1 முத்து இராசரத்தினம், யாழ்ப்பாணம்
பீஷ்மன் பதிப்பகம், 1976, 108 பக்கம் (பக்கம் 3-5). தமிழ்ப் பா வடிவங்கள் ! அ. சண்முகதாஸ், யாழ்ப்பாணம் : பல்கலைக்கழகத்
தமிழ்த்துறை வெளியீடு, 1982, 137 பக்கம் (பக்கம் i-iv). திருக்கேதீச்சரத்துக் கெளரிநாயகி பிள்ளைத்தமிழ் சி.இ. சதாசிவம்பிள்ளை. புங்குடுதீவு பழைய மாணவர் குழு, 1976, 78 பக்கம் (பக்கம் i-iv)
முன்னுரைகள்
இயக்கமும் இலக்கியப் போக்குகளும் 1 கோ. கேசவன், சென்னை : சென்னை
புக் ஹவுஸ், 1982 182 பக்கம் (பக்கம் V-xxi) ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிறாள் / நெல்லை. க. பேரன், யாழ்ப்பாணம்
சட்டக் கல்வி நிலைய மன்றம், 1975, 98 பக்கம். (பக்கம் w-ix) ஒளி நமக்கு வேண்டும் ! செ. யோகநாதன், யாழ்ப்பாணம், 1978, 82 பக்கம்
(பக்கம் ixi) கண்டறியாதது / இ. சிவானந்தன். யாழ்ப்பாணம் வட இலங்கைத் தமிழ்
நூற்பதிப்பகம், 1969, 84 பக்கம் (பக்கம் 1-5) கதைப் பூங்கா / தொகுப்பு. க. குணராசா, க. நவசோதி, பேராதனை பல்கலை
வெளியீடு, 1962, 11 பக்கம் (பக்கம் ii) காகித உறவு / சு. சமுத்திரம், சென்னை : மணி வாசகர் நூலகம், 1979, 124 பக்கம்,
(பக்கம் i-iv) கால தரிசனம் 1 தி. ஞானசேகரன், புன்னாலைக்கட்டுவன் கணேச சமூக நிலையம்,
1973.
கொட்டும் பனி 1 செ. கதிர்காமநாதன். கொழும்பு 1968, 158 பக்கம்
(பக்கம் ii).

Page 63
122 தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி
சிரமம் குறைகிறது ! கல்வயல் கே. குமாரசாமி, சாவகச்சேரி, அறிவழகு
பதிப்பகம், 1980, 96 பக்கம் (பக்கம் vixv). செவ்வானம் 1 செ. கணேசலிங்கன், சென்னை பாரதி நிலையம், 1967, 806 பக்கம்
(பக்கம் 7-48), தமிழில் இயங்கியல் - ஒரு பார்வை / புலவர் ஆதி, சிவகங்கை : அன்னம்,
1983, 95 பக்கம் (பக்கம் 5-11). “இம்முன்னுரை 13-8-81 இல் எழுதப்பட்டது. தமிழ் நாவல்களில் மனித உரிமைகளும் மக்கள் போராட்டமும், 1980,
பக்கம் 1-21) தூவுதும் மலரே ! ஈழத்துக் குழு இறையனார், பருத்தித் துறை, 1962, 104 பக்கம்,
பக்கம் 1. தோட்டக் காட்டினிலே 1 மலரன்பன், மாத்தளை, தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்,
1980, 98 பக்கம் பக்கம் 5-10). தோணி வருகிறது! தமிழன்பன், சென்னைபூம்புகார் பதிப்பகம் 1993, 127 பக்கம்.
(பக்கம் 5-11) நாடகம் நான்கு சி. மெளனகுரு . . . et al. கொழும்பு நடிகர் ஒன்றியம், 1980
175 பக்கம் (பக்கம் ixxxiv). நாணலின் கீதை செம்பியன் செல்வன், யாழ்ப்பாணம், அபிராமி பதிப்பகம்,
1982 42 பக்கம். (பக்கம் ix) நான் சாக மாட்டேன் 1 செ. கதிர்காமநாதன், கொழும்பு : வீரகேசரி, 1972, 13
பக்கம் (பக்கம் iv-b) நெடும் பகல் 1 இ. முருகையன், சென்னை : அமுத நிலையம், 1967
15 பக்கம் (பக்கம் iv-b) *இதன் இரண்டாம் பதிப்பு புதுக்கிய முன்னுரையுடன் 1981 இல் வெளி வந்தது. வெளியீடு சாவகச்சேரி, அறிவழகுப் பதிப்பகம். புரட்சிக் கமால் கவிதைகள் ! கவிஞர் புரட்சிக் கமால். கண்டி : இக்பால்
பதிப்பகம், 1962 மகாகவி பாரதி / எஸ். திருச்செல்வம். கொழும்பு : கலை இலக்கிய பத்திரிகை
நண்பர்கள், 1982, 24 பக்கம். * 22-12-82 அன்று எழுதப்பட்ட இந்த முன்னுரை பேராசிரியர் க. கைலாசபதியின் இறுதி முன்னுரையாகும். மண்ணும் மனித உறவுகளும் / கேசவன், சென்னை புக் ஹவுஸ், 1979, 196
பக்கம். (பக்கம் vo) மலைநாட்டு மக்கள் பாடல்கள் / சி. வேலுப்பிள்ளை, சென்னை கலைஞன்
பதிப்பகம், 1983, 104 பக்கம். (பக்கம் 3-14) முட்கள் / மு. கனகராஜன், யாழ்ப்பாணம் : குருஷேத்திர வெளியீடு, 1975, 19
பக்கம். பக்கம் 3-24) யுகப் பிரசவம் ! காவலூர் எஸ். ஜெகநாதன், சென்னை நர்மதா பதிப்பகம்,
1981, 210 பக்கம். (பக்கம் y-w)

இணைப்பு
123
வாழ்த்துரைகள்
கலாசுரபி / மனிதப் பண்பியற் பீட மாணவர் சங்கம், யாழ் வளாகம்,
திருநெல்வேலி, 1976. செந்தழல் / தமிழ் மன்றம், யாழ் வளாகம், திருநெல்வேலி, 1977 வன்னி வள நாட்டுப்பாடல்கள் தொகுப்பு செ. மெற்றாஸ் மயில், ஒட்டிசுட்டான்.
முல்லை இலக்கிய வட்டம், 1980, 130 பக்கம். (பக்கம் xyxvi)
இப்பட்டியவில் சர்வதேச அரசியன் நிகழ்வுசன் 199-129 தோனி வருகிறது நூலின் முன்னுரை ஆகியன டஜ்றிய தகவல்சன் இந்நூ/ைகி%ர7ன் சேர்க்கப்பட்டவை
. புதிய தகவல். கவிஞர் அக்கின%த்திரனின் கவிதைத் தொகுப்புக்கென கைலாசபதி தரு விரிவான முன்னுரை எழுதியுள்னர் அக்கவிதைத் தொகுப்பு இன்னும் வெளி வரவில்லை தகவல் கோ கேசவன் பாரதிமுதன் சைலாசபதி வரை ட/ 2