கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மதங்க சூளாமணி

Page 1


Page 2


Page 3

மதங்கசூளாமணி
என்னும் ஒரு
நாடகத்தமிழ் நூல்
இது.
மதுரைத்தமிழ்ச்சங்கத்துப் பண்டிதரும், லண்டன்மாநகர்ப் பல்கலைக்கழகத்துப் பெளதிகசாஸ்திர விற்பன்னருமாகிய
விபுலானந்த சுவாமிகள்
இயற்றியது.
செந்தமிழ்ப்பிரசுரம்-டு"
மதுரை: தமிழ்ச்சங்க முத்திராசாலையிற் பதிப்பிக்கப்பட்டது. 1926

Page 4
மறு வெளியீடு : பிரதேச அபிவிருத்தி அமைச்சு
1987 ජූමර්කා 19
அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்

ī
பிரதேச அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு செல்லையா இராசதுரை அவர்கள் வழங்கும் அணிந்துரை
அருள் திரு விபுலானந்த அடிகள் முத்தமிழ் வித்தகர். காலத்தால் மூத்த உலக மொழிகளில் இமயம் போல் நிமிர்ந்து நிலைத்து நிற்கும் தமிழ் மொழியை, இலக்கியச் சிறப்பு வாய்ந்த இன்பத் தமிழ் மொழியை, இயல், இசை, கூத்து என மூவகையாகப் பிரித்து வளர்த்துப் பெருமை கூட்டிய தமிழ் மொழியை, சங்கத்திலே ஆராயப்பட்ட ஒரே மொழியான தங்கத் தமிழ் மொழியை பல் கோணங்களில் ஆய்ந்த துறவி விபுலானந்த அடிகள்,
இயல் தமிழில் ஈடும், எடுப்புமற்றவராக விளங்கினர். இசைத் தமிழில் எவரும் நினைத்துப் பார்க்க முடியாத ஆராய்ச்சி நடாத்தினர்.
கூத்துத் (நாடகத்) தமிழில் இறவாப் புகழ் படைத்த நூல்கள் பல உருவாக்கினர்.
இசைத்தமிழ் நாடகத் தமிழ் ஆராய்ச்சிக்கு அடியெடுத்துக் கொடுத்த மூலவர் அருள் திரு விபுலானந்த அடிகள்.
நாடக இலக்கண நூல்களில் மதங்கசூளாமணி நாகரத்தின மகுடம் போன்றது. நவரெத்தின ஒளிவீசும் அற்புதப் படைப்பு. நாடகத் தமிழில் கற்பனைக்கெட்டாத ஆய்வுகளை மதங்கசூளாமணியில் தந்து நம்மை அதிசயிக்க வைக்கின்ருர்,
மதங்கர் என்பவர் கூத்தர். உலகம் ஒரு நாடக மேடை. உலக மக்கள் அனைவரும் நாடகத்தில் பல்வேறு பாத்திரங்கள். 'நானிலம் யாவுமோர் நாடக மேடையே
ஆண் பெண் அனைவரும் அதில் நடிப்பவர் தாம்' என ஆங்கிலக் கவிஞர்கள் மட்டுமல்ல, தமிழ்க் கவிஞர்களும், அறி ஞர்களும் சொல்லிச் சென்றிருக்கிருர்கள்.
கம்பரது கவிகள், நயங்கள் அனைத்தும் கொண்டவை. அவரது பாடல்கள், ஒவ்வொன்றும், முத்திரை பதிக்கப்பட்டவை. முதன்மை பெற்று விளங்குபவை. அது போல சேக்ஸ்பியரது நாடகங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. கம்பர் கவிச்சக்கரவர்த்தியாக விளங்குவதுபோல்

Page 5
IV
சேக்ஸ்பியர் நாடகச் சக்கரவர்த்தி என்று அடிகள் பாராட்டியுள்ளார். நாடகங்களை எழுதியதோடு மாத்திரம் நின்று விடாமல் அவற்றில் நடித்தும், தம்மால் உருவாக்கப்பட்ட கதா பாத்திரங்களுக்கு உயி ரூட்டியவர் சேக்ஸ்பியர். சேக்ஸ்பியர் என்ற ஆங்கிலப் பெயரை செகசிற்பியர்என்று தமிழுக்குக் கொண்டு வந்தவர் அடிகள். சேக்ஸ் பியர் மீதும் அவரது நாடகங்கள் மீதும் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர் அடிகள். அவரை நாடகக் கவி என்று போற்றிப் புகழ்வதுடன், 'மதங்க சூளாமணி" என்னும் மங்களப் பெயர் சூட்டியும், பெருமைப்படுத்தி யிருக்கிறார். என்ருல் சேக்ஸ்பியரது நாடகங்களில் அவருக்கிருந்த ஈடுபாடு எளிதிற் புலனுகின்றது.
நாடகப் பாத்திரங்கள், சம்பவங்கள், எவ்வாறு அமைய வேண்டும் என்பதையெல்லாம் மிக நுணுக்கமாக ஆராய்ந்து அடிகள் மதங்க சூளாமணியில் வெளியிட்டிருக்கிருர்,
தமிழ் அறிஞர்கள் வகுத்துரைத்த நாடக உறுப்புகள் அனைத்தும் செகசிற்பியரது நாடகங்களில் செறிந்து, நிறைந்திருப்பதை அடிகள் கண்டு அனுபவித்து தமிழ் உலகிற்கு அள்ளி வழங்கியுள்ளார். “L00e's Labour Lost” என்னும் ஆங்கில நாடகத்தை ‘காதல் கைம்மிக்க காவலன் சரிதை' என்றும், "king Lear" என்னும் ஆங்கில நாட கத்தை 'ஆகுல ராஜன் சரிதை' என்றும், "Romeo and Juliet” என்னும் ஆங்கில நாடகத்தை 'இரடமியன் சுசீலை சரிதை' என்றும், "The TempeSt” என்னும் ஆங்கில நாடகத்தை 'பெரும் புயற் சரிதை' என்றும், “Macbeth” என்னும் ஆங்கில நாடகத்தை “மகபதி சரிதை' என்றும் “Merchant of Venice” என்னும் ஆங்கில நாடகத்தை 'வணிக தேய வர்த்தகன் சரிதை' என்றும், “As You Like t” என்னும் ஆங்கில நாடகத்தை "வேனிற் காதை’ என்றும், "The Winter's Tale” என்னும் ஆங்கில நாடகத்தை 'கூதிர்க்காதை" என்றும், “Twefth Night or What You Wir என்னும் ஆங்கில நாடகத்தை 'கருதியது எய்திய காதலர் சரிதை' என்றும் மூல ஆசிரியரான செகசிற்பியரே அதிசயிக் கும் வண்ணம் அழகு தமிழில் பெயர்களைச் சூட்டினர் அடிகள். அடி களாரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் பல இடங்களில் மூலத்தையே கவித்துவத்தில் விஞ்சி நிற்பதை தமிழ் அறிஞர்கள் விதந்து பாராட்டி யுள்ளார்கள்.
கதை தழுவி வரும் கூத்து நாடகம் orgsopif நூலாசிரியர். நாட கத்தின் பிரிவுகளையும் பக்குவ நிலைகளையும் அற்புதமாக ஆராய்ந்து நாடகங்களை ஆக்குபவர்களுக்கு நல்வழி அமைத்துக் கொடுத்தார்.
மதங்கசூளாமணி அருள் திரு விபுலானந்த அடிகளின் மனதிற்கு மிகவும் பிடித்த ஒரு படைப்பு.

ʻ V
இளைய தலைமுறையினருக்கு இந்நூல் படிக்கக் கிடைக்காமல் இருந் தது ஒரு பெருங்குறை. தமிழ் அறிஞர் வித்துவான் எவ்.எக்ஸ்.சி. நடராசா அவர்கள் அருள் திரு விபுலானந்த அடிகள் மீதும் அவரது படைப்புக்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மதங்கசூளா மணியை மறுபதிப்புச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை என் மனதில் ஊட்டியவர் அவரே.
தமிழ் கூறும் நல்லுலகம் காலத்தால் மறக்கவொண்ணு தமிழ் அறிஞர் அருள் திரு விபுலானந்த அடிகள். வரலாறு என்றும் சொல் லும் அழியாத கலைக் கூடமாக அவரது பெயரால் விபுலானந்தர் இசை, நடனக் கல்லூரி அமைக்கும் வாய்ப்பினை திருவருள் எனக்குக் கூட்டிவைத்திருந்தது. அப்பெருமகளுருக்கு ஞாபகார்த்த முத்திரை வெளியிடும் வாய்ப்பினையும் இறைவன் எனக்கு அருளினன். மேலும் மதங்கசூளாமணி என்னும் அவரது நாடகத் தமிழ் ஆய்வு நூலை மறுபதிப்புச் செய்து வெளியிடும் பெருவாய்ப்பினையும் இறைவன் எனக்குத் தந்துள்ளான். திருவருளின் திறத்தை என்னென்று வாழ்த் துவது !
தமிழ் கூறும் நல்லுலகம் இந்நூலை இருகரம் கூப்பி ஏற்று மதிப் பளிக்கும் என நம்புகின்றேன்.
நன்றி
செ. இராசதுரை, பிரதேச அபிவிருத்தி அமைச்சர்

Page 6

VII
Sì
முன்னுரை
வடமொழியாசிரியராகிய தனஞ்சயனரும் ஆங் கிலமகாகவியாகிய செகசிற்பியாரும் செவ்விதினுரைத்த நுண்பொருண்முடிவுகளை நிரைபடவகுத்து முறைபெறக் கூறுவதற்கு முயன்றேனயினும், ஆங்கம் முயற்சிக்கு வேண்டிய ஒய்வு ஏற்படாமையினுல் இந்நூல் இவ்வுரு வத்தில் முடிவுபெறநேரிட்டது. மேனளில் ஒய்வு ஏற்படு மாயின் வழுக்களைந்து புதுக்கி, விரிவுறவெழுதி யுலகுக் களித்தல் என்கடனகும். தசரூபகத்தைத் தனிநூலாகத் தரல்வேண்டுமென்றும், செகசிற்பியாரது நாடகங்களை விரிவுறமொழிபெயர்த்து வெளியிடல்வேண்டுமென்றும், இந்நூல்இளமாணவரும் எளிதினுணர்ந்துகொள்ளத்தக்க நடையில் முடியவேண்டுமென்றும், நண்பர் பலர் கூறிய ஊக்கவுரைகள் என்னுள்ளத்திற் பதிந்துகிடக்கின்றன; காலம்வாய்ப்பின் இயன்றவைபுரியப்பின்னில்லேன்.
விபுலாநந்தர்

Page 7

IX
6.
முகவுரை
அந்தணர் வேள்வியொ டருமறை முற்றுக வேந்தன் வேள்வியொ டியாண்டுபல வாழ்க வாணிக ரிருநெறி நீணிதி தழைக்க பதினெண் கூலமு முழவர்க்கு மிகுக அரங்கியற் பொருளுரை நிரம்பிவினை முடிக வாழ்க நெடுமுடி கூர்கநம் வாய்மொழி' என யாம், மங்கல நல்லுரை வழிமுறை யியம்புதும் திங்களங் குழவி சேர்த்திய திருமுடி ஐங்கரன் சித்தி விநாயகன் செங்கதிர் புரைகழற் சேவடி தொழுதே."
மதங்கர்-கூத்தர்; அன்னுருக்கு ஒரு சிரோரத்தினம்போன்ருரை
மதங்கசூளாமணியெனல் பொருத்தமாகும். உலகனைத்தும் ஒரு "டக மேடையாமெனவும், ஆடவரும் பெண்டிரும் அந் நாடகமேடையினுட் புகுந்து நடிக்கின்ற கூத்தருங்கூத்தியருமாவரெனவுங்கூறிய ஓர் ஆங் கிலக் கவிவாணர் உளர். சிறந்த நாடகக்கவியாகிய இப்பெருந்தகை யார் உலக வாழ்க்கையனைத்தையுமே ஒரு நாடகமாகக் கற்பித்து அதனை மதலைப் பருவம், பாலப்பருவம், யெளவனப்பருவம், வீரப் பருவம், நீதிப்பருவம், வயோதிகப்பருவம், இறுதிப்பருவம் என ஏழங்கமாக்கிக்கூறியது சாலவுஞ்சிறப்புடைத்து. அக்கூற்று வருமாறு:- "அங்கணுல கனத்தினையும் ஆடரங்க மெனலாகு மவனி வாழும்
மங்கையரை யாடவரை தடம்புரியு மக்களென மதித்தல் வேண்டும்
இங்கிவர்தாம் பலகோல ம்ெய்திநின்ற நாடகத்தி னியல்பு கூறிற்
பொங்குமங்க மேழாகிப் போக்குவர விருக்கையொடு பொருந்து மன்றே.
முதலங்கத் தியல்புரைப்பின் முலையருந்தி மணியிதழ்வாய் முகிழ்திறந்து குதலைச்சின் மொழிமொழிந்து செவிலித்தாய் கரதலத்திற் கூத்து மாடித் திதலைப்பொன் செறிதனத்தார் சேர்த்தணைக்கச் சிறுநகையிற்
சிறப்புக் காட்டும் மதலைச்செம் பருவத்தின் வனப்பனைத்தும் விளங்கநின்ற மார்க்க மாகும்.
மணிமருள்வா யிளஞ்செவ்வி மதலையென நடித்தமகன் வதன நோக்கம் அணிநிறையு மோரைந்தாண் டடைதலுமே கணக்காய ரகத்தை நோக்கி இணைபிரிந்த விளஞ்சிந்தை பின்னீர்க்க முன்னேகி யிளஞாயிற்றின் குணநிறைந்த சிறுபொழுதிற் குறுகிநடந் துறுகின்ற குறிப்பி ரண்டே.
எல்லேவந்த மூன்ருகு மங்கத்தின் குறிப்புரைப்பி னேருஞ் சீரும் புல்லநின்ற யெளவனமாம் பருவமுற வேனில்வேள் பொருபோர் வேட்டு மெல்லிநல்லார் தமைநாடி கவர்தங் கட்புருவம் வியந்து பாடிச் சொல்லரிய காமவன லுளம்வெதுப்ப நெடிதுயிர்க்குந் தோற்ற மாகும்.

Page 8
X
அடலரியே றெனவார்த்துப் புலிமுகத்த னிவனென்ன வருபோர் வேட்டுப் படுகளத்தி லதிரிடிபோற் படிந்துறுமும் பீரங்கிப்படைமுன் னுக மிடல்சிறப்பப் பொருதெனினும் புகழ்பெறுவன் யானென்ன வீர மேவல் தொடர்புடைய நான்காகு மங்கத்தின் குறிப்பென்னச் சொல்ல லாமே.
வட்டவுரு வெய்துதரம் வடிவினிற்சற் றகன்றுநிற்ப மனத்தி னிர்மை திட்டமுற நயனத்திற் சினக்குறிப்பு மருட்குறிப்புஞ் சேர்ந்து நிற்பச் சட்டமுறை யறிந்தெவர்க்குஞ் சமனிலையாய் நீதிசொலும் சார்பின் மேவி இட்டமுறும் பெருமகன்ற னியனிலையை யைந்தென்ன வியம்ப லாமே.
முதுமையுற வுடறளர்ந்து முகஞ்சுருங்கி யுருக்குலைந்து மூப்பின் ருேற்றம் இதுவெனக்கண் டுளமெலிய விணைவிழியிற் படிகக்கண் ணியைந்து நிற்பக் கதுமெனவே யிருமல்வரக் காறளர்ந்து தள்ளாடிக் கருத்து மாறித் குதலைமொழிச் சிறுவருரை குலவுகின்ற கிழப்பருவங் கூறி ஞறே.
பண்ணியையு மென்மொழிசேர் பாலரொக்குங் கிழப்பவரும் பயின்ற பின்னர் கண்ணிணைகள் நோக்கொழியப் பல்லொழியச் சுவையொழியக் கருத்து நீங் உண்ணுமுணவொழித்தனத்துமொழிந்துமறைந்துயிர்வாழ்க்கை w யொருவுந் தோற்றம் எண்ணுமிந்த நாடகத்தி னிறுதியென யாமெடுத்திங்கியம்புவாமே.'
இவ்வாறு உலகவாழ்க்கையை நாடகமாகக் கற்பித்துக்கூறிய இக் கவிவாணர் வனப்பின்மிக்க நாடகநூல்கள் பலவற்றை உலகுக்கு அளித். துள்ளார். அஃதன்றி, அரங்கினுட்புகுந்து தாமும் கூத்தருள் ஒருவ ராக நின்று நடித்துள்ளார். நாடகக்கவிகளுள் இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் பிறரிலர். ஆதலால் ஷேக்ஸ்பியர் என்னும் இயற்பெயர் பூண்ட இக் கவிவாணரை யாம் மதங்கசூளாமணி யென வழங்குவாம். இவரது நாடகங்களுள் அமைந்துகிடந்த வனப்பினுட் சிலவற்றை யாராயப்புகுந்த விவ்வுரைத்தொடரும் மதங்கசூளாமணியென வழங் கப்பெறும்.
கவிவாணர் இயற்பெயரைத் தமிழ்மொழியாக்கிச் செகசிற்பியார் என வழங்குதலும் பொருத்தமாகும். என்ன? நலனில்லாச் சிலையுருவை உளியாற் செதுக்கி நலனிறைந்த திருவுருவமாக்குவோன் கைவல்ல சிற்பியெனப்படுவானன்ருே? அங்ங்னமாதலின், அயன்படைத்த படைப்பினும்பார்க்க நயன்படைத்த மெல்லிநல்லாரையும் ஆடவரை யும் உருப்படுத்தியுதவும் நாடகக்கவியை யென்னென்று புகழ்ந்தேத் துவதென உன்னுமிடத்துச் "செகசிற்பியா"ரெனப் புகழ்ந்து போற்று தல் சிறப்புடைத்தாமெனப் புலப்படுகின்றது.
கம்பநாட்டாழ்வார் அகலக்கவிகளுள் முதன்மைபெற்றுவிளங்குவது போலச் செகசிற்பியார் நாடகக்கவிகளுள் முதன்மைபெற்றுவிளங்கு கின்ருர், இவர் அமைத்த நாடகநூல்கள் தமிழறிஞர் வகுத்துரைத்த சந்தியுஞ் சுவையுஞ் சத்துவமும் பிறவு மென்னும் நாடகவுறுப்புக்க ளனத்தும் செவ்விதி னமைந்துகிடக்கு மியல்பினவாதலின், அவற்றை

ΧΙ
யாராய்தல் நாடகத்தமிழாராய்ச்சிக்கு இன்றியமையாததாமென எனது உள்ளத்துப் புலப்பட்டது. அஃதன்றியும், "வடவேங்கடந் தென்குமரி யென வெல்லைவகுத்தது எழுத்திலக்கணத்துக்குஞ் சொல் லிலக்கணத்துக்கும் மாத்திரந்தானே. 'இமையோர்தேஎத்து மெறி கடல்வரைப்பினு-மவையில் கால மின்மை யான' வென்றமையால் அறம் பொருள் இன்பமும் அவற்றினது நுகர்ச்சியும், அவற்றைக்கூறும் பொருணுரலும் நாடகநூலும் என்னும் இவை யாண்டும் ஒப்பமுடிந் தனவாம். ஆதலால், பிறமொழியாளர் வகுத்துரைத்த நாடகநூலுள் ஏற்பனவற்றைக் கொள்ளுதலால் எய்துவதோர் இழுக்கில்லை.
‘இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாரதன்செய்த பஞ்சபாரதீய முதலாயுள்ள தொன்னூல் களும் இறந்தன. நாடகத்தமிழ் நூலாகிய பரதம் அகத்திய முதலா யுள்ள தொன்னூல்களு மிறந்தன. பின்னும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றியம் என்பனவற்றுள்ளும் ஒரு சாரார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு விறுதி காணுமையின் அவையு மிறந்தன போலும்' என ஆசிரியர் அடியார்க்குநல்லார் கூறினராதலின், தொன்மைவளஞ்சான்ற நாடகப்பெருநூல்கள் அவர் காலத்துக்கு முன்பே யழிந்து போயின. அவர்காலத் திருந்தநூல்களும் பின்ன ரழிந் தொழிந்தன அடியார்க்குநல்லார் இயற்றியருளிய சிலப்பதிகாரவுரை யில் ஆங்காங்குக் காட்டப்பட்டிருக்கும் நாடகவிலக்கணமுடிபுகளை ய்ாதாரமாக நிறுத்திச் செகசிற்பியாருடைய நாடகநூல்களை இலக்கிய மாகப் பொருந்தவைத்து ஆராய்வதுகருதிற்று இவ்வாராய்ச்சி. அடி யார்க்குநல்லார்காலத்திருந்து பின்ன ரிறந்துபோன இசைநாடகநூல் களாவன:+ ‘'தேவவிருடியாகிய குறுமுனிபாற்கேட்ட மாணுக்கர் பன்னிருவருட் சிகண்டியென்னும் அருந்தவமுனி, இடைச்சங்கத்து அநாகுலனென்னுந் , தெய்வப்பாண்டியன் தேரொடு விசும்பு செல்வோன் திலோத்தமையென்னுந் தெய்வமகளைக் கண்டு தேரிற் கூடினவிடத்துச் சனித்தானைத் தேவரும் முனிவரும் சரியாநிற்கத் தோன்றின்மையிற் சாரகுமாரனென. அப்பெயர்பெற்ற குமரன் இசை யறிதற்குச்செய்த இசைநுணுக்கமும், பாரசவ முனிவரில் யாமளேந் திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனர் செய்த பஞ்சமரபும், ஆதிவாயில்ார்செய்த பரதசேனுபதீயமும், கடைச்சங்கமிரீஇய பாண் டியருட்கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனர்செய்த முதனூல் களிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்தியன்ற மதி வாணர் நாடகத்தமிழ்நூலும்' என்பன.
மேலைப்பிரிவினுட் குறிப்பிட்ட நூல்களினின்றும் எடுக்கப்பட்ட குத்திரங்கள்சில அடியார்க்குநல்லாருரையால் அறியக்கிடக்கின்றன. அவற்ருலுணரப்படும் இலக்கணமரபுக்கு இலக்கியமாகிய நாடகங்கள் இறந்தொழிந்தன. பிற்காலத்துத்தோன்றிய நாடகங்கள் சந்தி, சுவை, பொருளொருமை யென்னு மிவற்றைத் தெளிவுறக்காட்டாது விரவி

Page 9
XII
நடந்த காரணத்தால் அவற்றை இலக்கணமமைந்தநாடகங்களெனச சொல்லுதற்கு இடமில்லை. இனிப் புதுநாடகமமைப்பதற்கு முற்படும் கவிஞருக்கு முறையறிந்தமைப்பற்கு உதவியாகிய கருவிநூலு மில்லை. செஞ்சொற்புலவர் செவ்விநிறைந்த நாடகங்களை யமைத்துதவாத் காரணத்தினலே கல்வியறிவில்லாதார் கண்டகண்டவாறு நாடகங் களை யமைக்கமுற்பட்டு நாடகத்துக்கே ஓர் இழிந்த பெயரையுண் டாக்கிவிட்டனர். உயிர்க்குறுதிபயக்கு மருந்தினை உண்ணவிரும்பாத ஒரு மகனுக்குச் சர்க்கரையினுள் அம்மருந்தினைப் பொதிந்துவைத்து உதவுகின்ற அன்புடையாளன்போல, உயிர்க்குறுதிபயக்கும் உண்மை யினை நவரசங்களுட் செறித்துவைத்து உதவும்நீர்மையது நாடகம். நாடகக்கவி தன்னை யோர்வைத்தியனென அறிதல்வேண்டும். நோயாளியிடத்துப் பொருளினைப்பெறுதல்கருதிப் " டத்தை மருந்தெனக்கொடுக்கும் வைத்தியனுளனயின் அவனல் விளை யுங் கேட்டுக்கோர் அளவில்லை. காமக்கனலை மூட்டுதற்கெண்ணிச் சிற்றின்பச்சரிதைகளை நாடகமாக்கியுதவும் போலிநாடக்க்கவிகளால் நாட்டுக்கு விளைகின்ற க்ேடு மேற்குறித்த போலிவைத்தியனுல் விளை கின்ற கேட்டினைப்பார்க்கினும் பல்லாயிரமடங்கு பெரிது. முத்தமி ழினு ளொன்ருகிய நாடகத்தை வெறுத்தொதுக்காது அதனை யாராய்ந்து சீர்ப்படுத்தி நல்ல நாடகங்களையமைப்பது கற்றுவல்லோர் கடனுகும். |
நாடகவியலினை யாராயப்புகுந்த இச்சிற்ருராய்ச்சியிற் கண்ட முடிபு களனைத்தும் பலநாளாக என் னுள்ளத்தினுட் பயின்றுகிடந்தன. மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் இருபத்துமூன்ரும்வருடோத்ஸ்வத்துக்குச் சென்றிருந்தபோது அவற்றினத் தொகுத்துத் தமிழ்நாட்டுப்பெரும் புலவர் குழுமியிருந்த வித்துவக்கழகத்திற் பெரும்புலவருட் பெரும் புலவராகிய மஹாமஹோபாத்தியாய சாமிநாதையரவர்களது தலை மையின்கீழ் இயன்றவரை விரித்துக்கூறினேன். இவ்வாராய்ச்சி பய்ன் றரத்தக்கதென மஹர்மஹோபாத்தியாயரவர்களும் ஏனையபுலவர் களும் பாராட்டினர்களாதலாலும் சங்கத்துக் கெளரவகாரியதரிசியா ராகவிருந்து தமிழபிவிருத்திக்காகப் பல்லாற்ருனும் முயற்சித்துத் தமது கைப்பொருளையும் நேரத்தையுஞ் செலவிட்டுவருபவரும் எனது நண்பருமாகிய மதுரை ஹைக்கோர்ட்வக்கீல் பூரீமாந்'IC.பூரீநிவாஸை யங்காரவர்கள் இவ்வாராய்ச்சியை விரிவுற எழுதி வெளியிடவேண்டு மென்று பலமுறை கூறி ஊக்கப்படுத்தினர்களாதலினலும், இதனை எழுதி வெளியிடத் துணிந்தேன். சங்கப்புலவர் வீற்றிருந்து தமி ழாராய்ந்த நான்மாடக் கூடலிலிருந்து இவ்வாராய்ச்சியை எழுதப் பெற்ற பெரும்பேற்றினை நினைக்கும்போது என்னுள்ளம் உருகுகின்றது. சிறியேனுகியயாள் எடுத்துக்கொண்ட இக்கருமம் இனிதுநிறைவுறும் பொருட்டு உலக மாதாவாகிய மீனுகரியம்மையாரும் சோமசுந்தரக் கடவுளும் திருவருள் பாலிப்பாராக.

XIII
உள்ளுறுபொருள்வகை
பக்கம் பொருள் பக்கம்
xi. xii. விருத்திநான்கு: சாத்து 1.-- 07 வதி, ஆரபடி, கைசிகி,
1 - 16 பாரதி 3.
(கக) பதினுேராடல்: கடை (உ) நாடகத்தின் வரைவிலக் யம், மரக்கால், குடை,
1 துடி, அல்லியம், மல், சாந்திக்கூத்தின்வகை ۴- لایه கும்பம், பேடு, பாவை,
ழ்த்தன்மை 2 - 1 பாண்டரங்கம், கொடு
2 கொட்டி 3. 3-2 (கஉ) சொல்மூன்று: உட்
4. சொல், புறச்சொல், (டு) சுவை, குறிப்பு, சத்து ஆகாயச்சொல் 5
வம், அவிநயம் 7-4 சொல்வகைநான்கு: (க)வேத்தியல், பொதுவியல் 5 சுண்ணம், சுரிதகம், (எ) சுவைக்குரிய இருவகைநிலம் 6 வண்ணம், வரிதகம் 15 7 வண்ணம் இருபது 5 கச்சுவை 8 வரிப்பாடல் 16 இளிவிரற்சுவை 8 வரிக்கூத்து 6 கைச்சுவை 8 விலக்குறுப்புப்பதினன்கு 46 - 9 எடுத்துக்காட்டியல் I 7-76 பெருமிதச்சுவை 9 (க) செகசிற்பியார்வரலாறு 17 ச்சுவை 10 நகைச்சுவைக்கிலக்கிய உவகைச்சுவை 10 மாகிய காதல்கைம் நடுவுநிலைச்சுவை 10 மிக்க காவலன்சரிதை
முகம் 8 (கO) பொருள்நான்கு: அறம், பிரதிமுகம் 20 பொருள், இன்பம், வீடு 12 iii கருப்பம் 2. சாதிந்ான்கு நாடகம், v விளைவு 22 பிரகரணப்பிரகரணம், v துய்த்தல் 26 பிரகரணம், அங்கம் ፱ 8 (உ) அவலச்சுவைக்கு மிளி யோனிநான்கு உள் வரற்சுவைக்குமிலக்கிய ளோற்குள்ளது, உள் மாகிய ஆகுலராஜன் ளோற்கில்லது, இல் சரிதை. லோற்குள்ளது, இல் i.iமுகமும் பிரதிமுகமும் 28
கில்லது 13 i. கருப்பம் 30

Page 10
XIV
1335 tè.
37
பொருள்
ip விளைவு 3 ፲ துய்த்தல் 32 இந்நாடகம் புறத்திணைப் பாலதென்பது 33 கதைக்குங் கிளைக்கதைக் குமுள்ள தொடர்பு 33 (ந) அவலச் சுவைக்கும்
உவகைச்சுவைக்கும் இலக்கியமாகிய இரம் மியன் சுசீலை சரிதை முகம் " 33 i. பிரதிமுகம் 34 i. கருப்பம் it". விளைவு 38 துய்த்தல் 39 (ச) அவலச் சுவைக்கும் வெகு
ளிச் சுவைக்கும் இலக் கியமாகிய தீநட்பஞ்சிய தீமோன்சரிதை 40 மருட்கைச்சுவைக்கும் உவகைச் சுவைக்கும் இலக்கியமாகிய பெரும்புயற்சரிதை (முகம் 40 பிரதிமுகம் 44 iii - 35(5' Lulub 44 i y விளைவு 45 v துய்த்தல் 45 (டு) அச்சச்சுவைக்கு இலக்
கியமாகிய மகபதிசரிதை முகம் 46 பிரதிமுகம் 48 கருப்பம் 49 i v on 6 49 y துய்த்தல் 49
(சு) பெருமிதச் சுவைக்கும்
பிறகவைக்கும் இலக் கியமாகிய வணிக தேய வர்த்தகன் சரிதை
பொருள்
முகம் ii பிரதிமுகம் கருப்பம் iy 626tay
v துய்த்தல் (எ) பெருமிதச்சுவைக்கிலக்
கியமாகிய யூலியசீசர் சரிதை (அ) வெகுளிச்சுவைக்கிலக்
கியமாகிய சேனபதி சரிதை
(சு) உவகைச்சுவைக்கிலக்
கியமாகிய வேனிற் காதை (க 02 வகைச்சுவைக் கிலக் கியமாகிய கூதிர்க் க! தை (கக) உவகைச்சுவைக்கும்
நகைச் சுவைக்கு லக் கியமாகிப் கருதய தெய்திய காதலர் சரிதை (கஉ) சுவையமைதி
தலைவியர் வகை தலைவர்வகை
ஒழிபியல்
(க) தசரூபகவரலாறு
தெய்வவணக்கமும், செயப்படுபொருளும் நாட்டியத்தின் f வரைவிலக்கணம் நாட்டியவகைபத்து:- நாடகம், பிரகரணம், பாணம், பிரகசன்ம், டிமம், வியாயோகம்,
பக்கம்
50
52
53
55
57
57
60
6.3
69
 

XV
ーャー
பொருள் பக்கம்
s
மவகாரம், வீதி அங்
ம், ஈஹாமிருகம் 77
தேசி, மார்க்கம் 78
இலாசியம், தாண்டவம்
அக்மார்க்கம் புறமார்க்கம் 78 பென்ருள் (வஸ்து).
தலைவன் (நேதா ),
சு4ை (ரசம்) 78
பொருளினுட்பிரிவுகள் இரண்டு. முதற் பொருள் (ஆதிகாரிகம்), சார்புப்பொருள் (பிரா
சங்கிக்ம்) 78 י கிளைக்கதை (பதாகை) வழிநிகழ்ச்சி (பிரகரி) 78
பழங்கதை (பிரக்கியா தம்) கற்பனைக்கதை (உற்பத்தி), கலப்புக்
(பீஜம்), விரி
கதை (பதாகை), வழி நிகழ்ச்சி (பிரகt), பொருண்முடிபு (காரி
78
(நியத்ாப்தி), பேறு (பலயோகம்) 79 சந்தி|ஐந்து: முளை (ழகம்), நாற்று (பிரதி ழகம்), கருப்பம், விளைவு (அவமர் சம்), துய்த்தல் (உபசங்கி
(மிச்சிரம்) 78
பொருள் பக்கம்
முதற்சந்தியின் உட்பிரி வுகள் பன்னிரண்டு: உபகேஷ்பம், பரிக் கிரியை, பரிந்யாசம், விலோ பனம், யுக்தி, பிராப்தி, சமாதானம், விதானம், பரிபாவனை, உற்பேதம், கரணம், வேதை 79 இரண்டாஞ்சந்தியின் உட்பிரிவுகள் பதின் மூன்று விலாசம், பரி சர்ப்பம், விதூதம், சமம், நருமம், நருமத் யுதி, பிரகமனம், நிரோதம், பரியுபாச னம், புஷ்பம், உபந் நியாசம், வச்சிரம், வருணசம்மா ரம் 80 மூன்ருஞ்சந்தியின் உட் பிரிவுகள் பன்னிரண்டு:
அபூதாஹரணம், மார்க்
கம், ரூபம், உதா கிருதி, கிரமம், சங்கிரகம், அநு மானம், அதிபலம், தோடகம், உத்வேகம், சம்பிரமை, ஆக்ஷேபம். 80 நான்காஞ்சந்தியின் உட் பிரிவுகள் பதின்மூன்று: அபவாதம், சம்பேடம், வித்திரவம், திரவம், சக்தி, தியுதி, பிரசங்
கம் சலனம், வியவ
2 17 u tii , aiG3 u fir Job ui பிரரோ சஃன, விசலனம் ஆதானம் 8
ஐந்தாஞ்சந்தியின் உட் பிரிவுகள் பதினன்கு: சந்தி, விபோ த்ம், கிர -
ருதி = நிர்வாஹணம்) 79
لہ

Page 11
பொருள்
(a)-
பாஷிதம்
)
XVI
பக்கம் தனம், நிர்ண்யம், பரி பாகூடிணம், பிரசாதம், ஆநந்தம், சமயம், கிருதி, பாஷணம், பூர் வபாவம், உபகூகனம், காவ்யசம்மா ரம், பிரசஷ்டி இடைப்படுகாட்சி (அர்த்தோ பக்ஷேபகம்) ஐந்து: விஷ்கம்பம், சூலிகை, அங்காசியம் அங்காவதாரம், பிரவேசிகம்
81
82
சொல் ஐந்து பிரகாசம், சுவா கதம், ஜநாந்திகம், அபவாசிதம், ஆகாய
தசரூபகம்; இரண்டாம
திகாரம் (யோனி, விருத்தி
யுணர்த்துவது) 82 ---87 س
தலைவர் நால்வகையர் :
உவகைமேவியதலைவன் (தீரலலிதன்), அறிவு மேவியதலைவன் (தீர சாந்தன்), மேன்மை மேவியதலைவன் (தீரோ தாத்தன்), தறுகண்மே வியதலைவன் (தீரோத் ததன்) இன்பவொழுக்கத்துக் குரிய தலைவர் நால்வர் : த*Sணன், சட ன் , திருஷ்டன், அநுகூலன் உபதலைவன் (பீடமர்த் தன்)
83
83 தலைவனுக்குரிய எண் வகைக்குணங்கள்: சோபை, விலாசம், மாதுரியம் காம்பீரியம்,
82
83 . .
பொருள்
தைரியம், தேஜசு, லலிதம், ஒளதாரியம் தலைவியர் எண்வகை சுவாதீனப்பர் த்ருகை வாசகசஜ்ஜை, வீர ஹோற்கண்டிதை கண்டிதை, கலகா தரிதை, விப்பிரல தை, பிரோ சிதப்பிரிை / அபிசாரிகை
தலைவிக்குத்தூதி
σ π6ιμιτ Π. தலைமகனுக்கு உத்வி חזחנה6 חuש விருத்திநான்கு கைசிகி, சாத்துவதி, ஆரபடி,
நருமஸ்பூர் ஜம், போடம், நரும கர்ப்பம்.
பக்கம்
83
84
84
84
84
. 85
சாத்துவதி விருத்தியின்
அங்கங்கள்: சம்லாபகம்
உத்தாபகம், சங் காட்டியம், பரிவத் தகம் ஆரபடிவிருத்தியில் அங்கங்கள சது திகம், சம்பேடம் வஸ் துத்தாபனம், அவபாதனம் மொழியமைதி (ந) தசரூபகம்; மூன்ருமதி
காரம் (சாதி, சேதம் ' உணர்த்துவது)
பூர்வரங்கம். நாந்தி பாரதிவிருத்தியின் வகை நான்கு: பிரரோசனை,
لسط
87
85
86
86
94
87
 
 
 
 
 
 
 
 
 
 

XVI
பொருள்
காரம், மிருததம். 88 நாடகலக்கணம் 09 பிரகரணத்தினிலக்க ணம் 90 நாடிகையினிலக்கணம் 90 பாணத்தினிலக்கணம் 9. பிரகசனத்தினிலக்கணம் 92 இடிமத்தினிலக்கணம் 92 வியாயோகத்தினிலக் கணம் 92 சமவகாரத்தினிலக் கண்ம் 93 வீதியினிலக்கணம் 93 உத்சிருஷ்டிகாங்கத்தி னிலக்கணம் 93 ஈஹாமிருகத்தினிலக்க கணம் 93
(க)
l lăsub வீதி, பிரகசனம், ஆமுகம் 88 பிரரோசனையின் . இலக்கணம் 88 ஆமுகத்தினிலக்கணம் ஆமுகத்தினுட்பிரிவு
கள்: கதோற்காதம், பிரவிருத்தகம், பிர ய்ோகாதிசயம் 88 வீதியின் உட்பிரிவுகள்: உற்காத்யகம், அவல கிதம், பிரபஞ்சம், திரி கடம், சலம், வாக் கெலி, அதிபலம், கண்டம், அவசியந்திதம் நாளிகை, அசற்பிரலாபம். வியா
தச ரூபகம் நான்காமதி காரம் (சுவை, குறிப்பு சத்துவம், அவிநயம், உணர்த்துவது) 94 - 107
சுவைப்பொருள்வகை:
ஆலம்பன விபாவம்,
உத்தீபனவிபாவ்ம் 94.
பொருள்
பக்கம்
குறிப்பு (அநுபாவம்) 94 விறல் (சத்துவபாவம்) எட்டு: ஸ்தம்பம், பிர லயம், ரோமாஞ்சம், ஸ்வேதம், வைவர் ணியம், வேபது,
அஸ்று, வைஸ்வர்யம் 95 வழிநிலையவிநயங்கள் முப்பத்துமூன்று: உயிர்ப்பு (நிர்வேதை), சோர்வு (கிலானி), கலக் கம் (சங்கை), இளைப்பு (சிரமம்), உடைமை (திருதி), கையாறு (ஜடதை), இன்புறல் (ஹர்ஷம்), இடுக்கண் (தைந்யம்), நலிதல் (உக்கிரதை), ஒருதலை யுள்ளுதல் (சிந்தனை), வெரூஉதல் (திரா சம்). பொருமை (அசூயை). முனிதல் (அமர்ஷம்), * மிகை (கர்வம்), நினை தல் (ஸ்மிருதி), சாக் கர்டு (மரணம்), களி (மதம்), கனவு (சுப்தம்), துஞ்சல் (நித்திரை), இன்றுயிலுணர்தல் (விபோதம்), நாணு தல் (வீரீடை), ஞஞ் ஞையுறுதல் (அபஸ் மாரம்), ஐயம் (மோகம்), ஆராய்ச்சி (மதி), மடிமை (ஆல சியம்), நடுக்கம் (ஆவேகம்), கருதல் (தர்க்கம்), மறைத் தல் (அவகித்தை), நோயுறல் (வியாதி), மயக்கம் (உன்மத்தம்),

Page 12
XVIII
பொருள்
நயம் (பயம்), அவலச் சுவையவிநயம் (ச்ோகம்) 99 சுவையெட்டு: உவகை (சிருங்காரம்), பெரூ மிதம் (வீரம்), இளி வரல் (பீபற்சம்), வெகுளி (உருத்திரம்), நகை (ஹாஸ்யம்), மருட்கை (அற்புதம்), அச்சம் (பயோற்கர் ஷம்), அவலம் (கருணை) 99
சுவைபிறக்கும்முறை 100
உவகைச்சுவையினிலக் கணம் 100
நால்வகைச் செய்யுளியக் கம்: முதனடை, வாரம், கூடை, திரள் (சு) இசைநூன்மரபு (எ) அரங்கினமைதி
பிண்டி, பிணையல் அகக்கூத்திற்குரிய வாடல், புறக்கூத்திற் குரிய வாடல் (கூ) இயற்றமிழகத்திணை
புறத்திணை யொழுக்கங் கள் நாடகவழக்குக்கும் ஏற்புடைத்தாமாறு செய்யுண்முதற்குறிப் பகராதி முதலியன
பக்கம்
பக்கம் பொருள்
மனம்புழுங்குதல் பெருமிதச்சுவையி (விஷாதம்), பரபரப்பு னிலக்கணம் 101 (உற்சுகம்), சுழற்சி இளிவரற்சுவையி (சபலம்) 96 னிலக்கணம் 01
வெகளிச் யி சுவைநிலையவிநயங்கள் சசுவை
Θ} 395 3.565 εδ. Ο 01 எட்டு: இன்பச்சுவைய கைச்சுவையி விநயம் (இரதி), வீரச் நகைசசுவை
னிலக்கணம் 02 சுவையவிநயம் (உற்சா மருட்கைச்சுவையி கம்), இழிப்புச்சுவைய னிலக்கணம் 102 விநயம் (ஜ 'குப்ஸை), *சச் யி வெகுளிச்சுவையவி அசச சுவை
ம் (குரோதம்) னிலக்கணம் 102 fbut D (கு ராதம), அவலச்சுவையி நகைச்சுவையவிநயம்
o னிலக்கணம் 02 (ஹாசம்), வியப்புச் - - சுவையவிநயம் (ஸ்ம (டு) குரவைக்கூத்து. வரிக் யம்), அச்சச்சுவையவி கூத்து 103
04
104
105
06
06

XIX
6
அபிதான விளக்கம்
காதல்கைம்மிக்க காவலன்சரிதை
LOVE'S LABOUR'S LOST
Britain
பிரியதத்தமன்னன் Ferdinand | மட்டி Dull வீரன் Biron ; இருளப்பன் Costard இலாவணன் Longaville | 691 lqâi) Moth G& TLDs, air Dumain i au GOTF LT Gör Forester அபயன் Boyet " நாகநாட்டு The Princess மரகதன் Mercade ராஜகுமாரி of France அதிசூரன் Don Adriano de Ta56of Rosaline Armado LDIT65lash Maria நாதன் Sir Nathaniel 555 (5 Katharine ஒலிவாணன் Holofernes || 3smt (GSF&T Jaquenetta
ST6.55TG) Navarre
-g(g) slo Tg5örgfsong, KING LEAR.
ஆகுலராஜன் Lear LD560T air Edmund மணிபுரத்தரசன் King of France காசியபன் Oswald வீரவர்மன் Duke of Cornwall agitasair Fool அரிவர்மன் Duke of Albany lost goofidisldita Goneril கெளதமன் Earl of Kent 3,60T,LDIT2a) Regan குணதரன் Earl of Gloucester goorldsta Cordelia
வரதன் Edgar
சிங்கபுரம்

Page 13
XX .
SJDLBusiT 3rg2sugfangs ROMEO AND JULIET
கிள்ளிவளவன் Escalus Lotriš தாண்டசோழன் Mercutio பாற்கரசோழன் Paris! வண்கைமலையன் Benvolio மலையன் Montague Saval D6) avair Tybalt பண்ணன் Capulet || D. Gavrir s DiTunt avsör Friar Lawrence இரம்மியன் Romeo fight) Juliet
D 600 foglif Verona. Cypri Mantua.
GoLu(5úDL quib3FfîsMn5 THE TEMPEST
அலாயுதன் Alonso வலிமுகன் Caliban சங்கவர்னன் Sebastian SfaLair Trinculo பிரபாகரன் Prospero stoog Drtagir Stephano அநாகுலன் Antonio || Lorroavg Miranda கெளசிகன் GonZalo பவனவேகன் Ariel பிரியவிரதன் Ferdinand
சீயதேசம் Naples. மைலம்
Mian மணிபல்லவம் Island
LD5ugs 3 floong, MACBETH.
மகபதி Macbeth இடங்கராஜன் Duncan மங்கலவர்மன் Malcolm அனலவர்மன் Donalbain தனபதி Banquo
gyrisp st(G) Scotland.
மாதவன் Macduff வளைவணன் Fleance மகபதிப்ரியை I ady Macbeth மாதவப்ரியை Lady Macduff இடாகினிமாதர் Witches
565rispitG England.

XXI
வணிகதேய வர்த்தகன்சரிதை THE MERCHANT OF VENICE.
வணிகதேயத்து The Duke of Frtgg, Lort gait Salarino மன்னன் Venice sojeopas Tair Gratiano குறும்பொறை The Prince of || qu "sav6ör Lorenzo நாடன் Morocco & Tuapair Shylock காணகநாடன் The Prince of gySessarair Launcelot Gobbo Arragon || 690555687 Old Gobbo அநந்தன் Antonio. || 6ógGOulu Portia வாசவன் Bassanio | spyršu352a87 Nerissa சலசலோசனன் Salanio Lugi60)D Jessica
LogoOros, Belmont. வணிகதேயம் Venice
வேனிற் காதை AS YOU LIKE IT.
குலசேகர Duke Senior Faijaunt Luair Touchstone பாண்டியன் LDgu pitsoir Sir Oliver Martext வீரேந்திரபாண்டியன் Frederick 1 சீதரன் Silvins அமலதேவன் Amiens || 35q-avait Corin ஜயதேவன் Jaques | 6i6i6a)66ir William சார்த்தூல்ன் Charles l கோகிலவல்லி Rosalind நீலாம்பரன் Oliver l கேகயவல்லி Celia இரதிகாந்தன் Orlando Luntapal Phebe ஆதன் Adam 4,560ps Audrey
பாண்டிநாட்டுக்கணித்தாகிய T6aohub The Forest of Arden

Page 14
கூதிர்க்காை த THE WINTER'S TALE
ஆகண்டலன் Leontes 15sts, girGyui. The Shepherd's Son ஜயந்தன் Mamilius அட்டோலிக்கன் Antolycus கமலவதனன் Camillo || 9yulur rT Goof? Hermione அந்தணன் Antigonus | Luiuana Perdita பதுமநாபன் Polixenes gyrub60) u Paulina வசந்தன் Florizel வெள்ளை An Old Shepherd
நாகன
உஞ்சையம்பதி Sicily Gustaau3, Bohemia
கருதியது எய்திய காதலர்சரிதை TWELFTH NIGHT OR, WHAT YOU WILL
மாசேனன் Orsino | கோலாகலன் Malvolio சுதாகரன் Sebastian || LD/76oravóór Clown ஆதவன் Antonio | G3ls:Fau6ör Cesario. 5 Taiwllaig Turf Sir Toby Belch 5LD2h) Olivia/ சுந்தரராயர் Sir Andrew 6Sipak) Viola
Aguecheek urt u6767f7 Maria
Fgplb' Illyria
தீநட்பஞ்சிய தீமோன்சரிதை, யூலியசீசர் சரிதை, சேனதிபதி சரிதை யென்னும் மூன்றினுள்ளும் ஆங்கிலப்பெயர்களையே தமிழிலும் வழங்கினமாதலினலே அவற்றை யீண்டு அட்டவணைப்படுத்தா தொழிந்தனம்.

மதங்கசூளாமணி
உறுப்பியல் க. திருமலியுலகினிற் புலவராற் பாடுதற்கமைந்த இருவகை வழக் கினுள்ளே நாடகவழக்கினை யாராயப்புகுந்த இவ்வாராய்ச்சியை உறுப் பியல், எடுத்துக்காட்டியல், ஒழிபியல் என மூன்று இயலாக வகுத்துக் கொள்வாம். முதனின்ற உறுப்பியலுள் நாடகவுறுப்புக்கள் இவை யென ஆராய்ந்துணர்வாம். எடுத்துக்காட்டியலினுள், செகசிற்பியார் இயற்றிய நாடகங்கள் பன்னிரண்டினைச் சந்தியும் சுவையும்நோக்கி யாராய்வாம்; ஒழிபியலுள் எஞ்சிய நாடகவிலக்கணமுடிபுகளை இயன்ற வரை யாராய்ந்துணர்வாம். " .م
உ. நாடகம் - கதை தழுவிவருங்கூத்து. சாந்திக்கூத்தின்வகை நான்கினுள் இஃது ஒன்று என்ப. 'சாந்திக் கூத்தே தலைவ னவிநய, மேந்திநின் முடிய வீரிரு நடமவை, சொக்க மெய்யே யவிநய நாடக, மென்றிப் பாற்படு மென்மஞர் புலவர்' என்றமையாற் சாந்திக் கூத்து, நால்வகைப்படுமெனவும், அவ்வகைதாம் சொக்கம், மெய்க் கூத்து அவிநயக்கூத்து, நாடகம் என்பனவாமெனவும் அறிகின்ரும். இவற்றுள், சொக்கமென்பது சுத்தநிருத்தம். மெய்க்கூத்து அகச் சுவைபற்றியெடுத்தலின் அகமார்க்கமெனப்படும். அவிநயக் கூத்தாவது நிருத்தக்கை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கைகாட்டி வல்லபஞ்செய்யும் பலவகைக்கூத்து. இவற்றின் விரிவைப் பின்னர் ஒழிபியலுட் கூறுவாம். சாந்திக்கூத்து என்னும் பெயர்க்கார ணத்தை நோக்கும்போது நாயகன் சாந்தமாக ஆடிய கூத்து ஆதலின் சாந்திக்கூத்தெனுங் குறியீடுபெற்றது என அறிகின்ருேம். சாந்தமாக ஆடிய கூத்தை ஒருவகைப்படுத்துக்கூறலின், சாந்தமின்றியாடிய கூத் தும் உளவோவென ஆராய்த லொருதலை. கொற்றவைநிலை, காந்தள், வள்ளிக்கூத்து, கழனிலைக்கூத்து, பிள்ளையாட்டு, ஆர்மலைந்தாடிய கூத்து எனப் புறத்திணையுட் கூறப்பட்ட பல்வகைக்கூத்தும், 'மாற்ரு னெடுக்கமும் மன்ன னுயர்ச்சியும் - மேற்ப்டக் கூறும் வென்றிக் கூத்து'ம், பல்வகையுருவமும் பழித்துக்காட்டவல்லவனெருவன் பிறர் இழுக்கத்தைப் புலப்படுத்தும்பொருட்டுப் பழித்துக்காட்டும் வசைக் கூத்தும், மறியறுத்துக் குருதிப்பலிசெலுத்திவேலனைவழுத்திநின்ருடும் வெறியாடலும், குரவைக்கூத்து கழாய்க்கூத்து, குடக்கூத்து, காணக் கூத்து, நோக்குக்கூத்து, தோற்பாவைக்கூத்து என அறுவகைப்பட்டு நின்ற விநோதக்கூத்தும் பிறவும் சாந்தநிலைதவறியநீர்மையவாதலின் சாந்திக் கூத்தின் வேருயின.
க. சாந்திக்கூத்தின்வகை நான்கினுள் ஈற்றில்நின்ற நாடகம் பல் லாற்ருனும் சிறப்புடையது. உள்ளத்து நிகழ்ந்த நிகழ்ச்சியைப் பிறர்க்

Page 15
2 மதங்கசூளாமணி
குப் புலப்படுத்துவதற்கு அவிநயம், இசை, மொழிப்பொருள் என் னும் மூன்றும் பயன்படுவன. இம்மூன்றினையும் தழுவிநின்றமையால் நாடகஞ் சிறந்தது. மொழிக்கு இயற்கையாகவமைந்த பொருள் கருவி யாக உள்ளத்து நிகழ்ந்த மனக்குறிப்பினைப் பிறர்க்குப் புலப்படுத்துவது இயற்றமிழின்றன்மை, மொழிப்பொருளோடு இசையுஞ்சேர்ந்துநிற்க மனக்குறிப்பினை வெளிப்படுத்துவது இசைத்தமிழின்றன்மை. மொழிப் பொருள், இசையென்னும் இரண்டினேடு அவிநயமுஞ் சத்துவமுஞ் சேரவைத்து உள்ளத்தெழுந்த மனக்குறிப்பினைப் பிறருக்குப் புலப் படுத்துவது நாடகத்தமிழின்றன்மை. அங்ங்னமாதலின், குறிப்பு, சத்துவம், அவிநயம் என்னும் இவற்ருேடுகூடிநின்ற ஒன்பது வகைச் சுவையும் நாடகத்துக்கே சிறப்பியல்பாக வுரியனவென்பது பெறப்படு கின்றது. இவற்றினை நாடகத்தினுள் அமைக்குமிடத்துச் சாந்தநெறி தவருதநீர்மையவாக அமைத்தல்வேண்டும். அங்ங்ணம் அமைததற் குரிய மார்க்கத்தை எடுத்துக்காட்டியலினுள் விரித்துவிளக்குவாம். இயற்றமிழுக்கு அணியெனவமைந்து நின்ற ஒன்பதுவகைச்சுவையும் நரிடகத்தமிழுக்கு இன்றியமையா உறுப்புக்களென நின்றனவாதலால் அவற்றினை இவ்வாராய்ச்சியினுள் விரிவுற வாராய்தலும்வேண்டும்.
ச. மேற்கூறியபடி சுவை, குறிப்பு, சத்துவம், அவிநயம் என்னும் நான்கும் நாடகவுறுப்புக்களாம்; இவை யொருபாலாக இவற்ருெடு பொருள், சாதி, யோனி, விருத்தி யென நான்கும்,சொல், சொல்வகை, வண்ணம், வரி யென நான்கும், சந்தி, சேதம் என விரண்டும்கூடிய பதினன்கும் நாடகவுறுப்புக்களாம். இவற்றினுட் சந்தியென்னுமிலக் கணம் நாடகத்தினது அமைப்பினைக் காட்டும் நீர்மையதாதலின் முதலில் அதனையாராய்ந்து அப்பாற்செல்வாம். ‘சந்தியிற் ருெடர்ந்து சருக்கமிலம்பகம் பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி’ எனத் தண்டியாசிரியர் காப்பியவிலக்கணங் கூறினராதலினல், சந்தியென் னும் இலக்கணம் காப்பியத்துக்கு முரியது. கத்தியரூபமாகமுடிந்த கதைகளுக்குமுரியது. சந்தி ஐந்து வகைப்படும். அவை முகம், பிரதி முகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என விவை. இவற்றை ஒரு உதா ரணத்தினுல் விளக்குவாம். கீழ்மக்களது தீநட்பினை எய்துதலினும் பார்க்க எய்தாமை நன்று என்னும் உண்மையை அறிவுறுத்துதற்கு ஒருபுலவன் ஒருந்ாடகம் அமைக்கப்போகின்றனென்று வைத்துக் கொள்ளுவோம்.
"செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று." (செய்துவைத்தாலும் அரணுகாத கீழ்மக்களது தீநட்பு ஒருவர்க் குண்டாதலின் இல்லையாதல் நன்று.)
"உறின் நட்டு அறின்ஒருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்"

மதங்கசூளாமணி 3
(தமக்குப் பயனுள்வழி நட்புச்செய்து அஃதில்வழி ஒழியும் ஒப் பிலாரது நட்பினைப் பெற்ருல் ஆக்கம்யாது? இழந்தாற் கேடியாது?)
‘கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை
யுள்ளினு முள்ளஞ் சுடும்" (ஒருவன் கெடுங்காலத்து அவனைவிட்டுநீங்குவார் முன் அவனேடு செய்தநட்புத் தன்னைக் கூற்றடுங்காலத்து ஒருவனினைப்பினும் அந் நினைத்த உள்ளத்தைச் சுடும்.)
மேற்காட்டிய மூன்று திருக்குறட் பாக்களும் அமைக்கப்புகுந்த நாடகத்துக்கு ‘வித்து' என்னும் நீர்மைய, வித்தினையெடுத்து உழவி ஞற் சமைக்கப்பட்ட புழுதியினுள்ளே விதைத்தால் அதுமுளைத்து, நாற்ருகிக், கருப்பமுற்றி, விரிந்து, கதிர்திரண்டிட்டுக் காய்தாழ்ந்து முற்றிவிளைய, விளையப்பட்டபொருளை அப்பொருளுக்குரியோர் அறுத் துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலிசெய்து கொண்டுபோய் உண்டு மகிழ்வார். இம்மரபே நாட்டியக்கட்டுரையும் ஐவகைப்படும். ‘‘முகமாவது எழுவகைப்பட்ட உழவினுற் சமைக்கப்பட்ட பூழியுளிட்ட வித்துப் பருவஞ்செய்து முளைத்துமுடிவதுபோல்வது. பிரதிமுகமாவது அங்ங்ணம் முளைத்தல்முதலாய் இலைதோன்றி நாற்ருய்முடிவது போல் வது. கருப்பமாவது அந்நாற்று முதலாய்க் கருவிருந்து பெருகித் தன்னுட்பொதிந்து கருப்பமுற்றிநிற்பதுபோல்வது. விளைவாவது கருப் பமுதலாய் விரிந்து கதிர்திரண்டிட்டுக் காய்தாழ்ந்து முற்றி விளைந்து முடிவதுபோல்வது. துய்த்தலாவது விளையப்பட்ட பொருளை அறுத் துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலிசெய்து கொண்டு போய் உண்டு மகிழ்வதுபோல்வது". இங்ங்னம் ஐந்து சந்தியாகப் பகுத்துக்கொண்ட முறையினையே செகசிற்பியாரும் மாழுது கைக் கொண்டார். முளையினைக் கண்டோர் விளைவு இதுவென ஊகித் தறிந்துகொள்ளுதல்போல நாடகத்தின் முகத்தினைப் படித்தமாத் திரத்தே விளைவு இதுவாகும் என ஊகித்தறிந்துகொள்ளத்தக்கதாக முதற்சந்தியர்கிய முகம் அமைக்கப்பட்டிருத்தல்வேண்டும். முதற் சந்தியாகிய முகத்தில் கட்டியக்காரன், விதூஷகன், சூத்திரதாரன், அரசன், மந்திரியென்னும் இவரைமாத்திரம் வருவித்து நிறுத்தி அரசன் நாட்டுவளம் விசாரிப்பதோடு முடித்துவிட்டால், பார்ப் போருடைய உள்ளம் ஒரு வழிப்படாது பலவழியிலுஞ்சென்று மேல் நடப்பது இதுவாமோ அதுவாமோ வென ஐயப்பாடுற்று அலையும். ஆதலினல் முதற்சந்தியாகிய முகத்திலேயே விளைவு ஒருவகையாகக் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். கீழ்மக்களது தீநட்பினையெய்து தலினும் பார்க்க எய்தாமை நன்று என்னும் உண்மையை யறிவுறுத் துதற்கு எழுந்தநாடகத்துக்கு நாடகபாத்திரராவார் யாவராகவிருத் தல்வேண்டுமெனின், கதாநாயகனக ஒரு செல்வப்பிரபு வேண்டும்; அவரது செல்வத்தையுண்டு அநுபவித்துப் பின்னர் வறுமைவந்துற்ற

Page 16
4. தங்கசூளாமணி
காலத்து அவரைவிட்டுப் பிரிந்து அவரை இகழ்ந்தவமதிக்கின்ற, பொய்ந்நண்பர் ஒருவரோ பலரோ விருத்தல்வேண்டும்; பிரபுவுக்கு வேண்டியவிடத்து இடித்துரைகூறும் அறிவுடையோன் ஒருவன் இருத் தல்வேண்டும்; உண்மையுள்ள ஒரு வேலைக்காரன் இருத்தல்வேண் டும்; இச்சகம்பேசுவார் பல ரிருத்தல்வேண்டும் என்பது. செல்வப் பிரபுவானவர் நட்பாராயாது பலரையும் நட்புச்செய்தாரென்றும், இச்சகம்பேசுவோருக்குத் தமது பொருளெல்லாமளித்த காரணத் தினலே யவருக்கு வறுமைவந்துற்றது எனவும், தான் நட்பாளராகக் கருதியவரிடத்துச் சிற்றளவு உதவிபெறுதற்கு முயன்ருரெனவும், அன் னேர் மறுத்தாரெனவும், பிரபுவை யிழித்துரைத்தாரெனவும், பிரபு அன்னேர் கண்முன் னிருக்காது காட்டிற்கேகினரெனவும், ஆங்கு ஒரு ப்ொற்குவை யகப்பட்டது எனவும், அவர் பொன்னல் விளையும் கேட்டை யனுபவித்தவராதலினல், பொற்குவியலைக் கருதிற்றிலரென வும், அவ்வழி ஒரு சேனைத்தலைவன்சென்ருனெனவும், அவன் அப் பிரபுவின் பக்கலிருந்த பொற்குவியலைக்கண்டு விழைந்துநின்றனென வும், அவனை அக்குவியலையெடுத்துக்க்ொள்ளும்படி பிரபு அநுமதி கொடுத்தாரெனவும், அதனைப் பெற்ற போர்வீரன். நன்றியறிதலுக்கு அறிகுறியாகப் பிரபுவின்நாட்டினைத் தாக்கித் தீநட்பாளரை யழித்தா னெனவும், இவ்வாறே பிறவாருே பொருளை வகைசெய்து நாடகக் கட்டுரை வகுத்துக்கொண்டபின்பு ஏற்றபெற்றியறிந்து ஐந்துசந்தி யாகப் பகுத்துக்கொள்ளலாம். செகசிற்பியார் இத்துறைமேல் "தீநட் பஞ்சிய தீமோன்சரிதை” எனப் பெயரிய ஒரு நாடகஞ் செய்திருக் கின்றர். அதன் சந்திமுதலியவற்றை எடுத்துக்காட்டியலினுட் கூறு. வாம். சேதம் என்பது கதையை நாடகத்துக்கொப்பச் சேதித்திடுவது. பாதுகாபட்டாபிஷேகம், வாலிமோக்ஷம், குசலவசரிதை என்னும் நாடகங்கள் இராமவதாரப் பெருங்காப்பியத்தின் பாகங்களாயின மையை நோக்குக.
டு, இனிச், சுவை குறிப்பு சத்துவம் அவிநயம் என்னும் நான்கு உறுப்புக்களையும் ஆராய்ந்துணர்வாம். ஒன்பது சுவையாவன: வீரச் சுவை, அச்சச்சுவை, இழிப்புச்சுவை, அற்புதச்சுவை, இன்பச்சுவை, "அவலச்சுவை, நகைச்சுவை, நடுவுநிலைச்சுவை, உருத்திரச்சுவை யென் பன. இவற்றினுள் நடுவுநிலை ஐம்புலமடங்கிய அறிவர்பால் நிகழ்வது. இவர் காமம் வெகுளி மயக்கத்தினின்று நீங்கியவராதலால், யாவருங் கண்டஞ்சும் யமனுக்கும் அஞ்சார்; எத்துணை இளிவரல்காணினும் இழித்துக்கூருர், கல்வி நிறைந்திருந்தும் அதனைப் பொருளெனக் கொள்ளாக் காரணத்தினுற் பெருமிதங் காட்டார்; புதுமை, பெருமை, சிறுமை, ஆக்க மென்பன நிலையில்பொருள்களென அறிவாராதலி னல், அவற்றினைக்கண்டு வியப்புருர்; துன்பம் வந்தெய்தாத் தூய வுள்ளத்தையுடையாராகிய இவர் இன்பத்தை விழையார், நகை யாடார்; வெகுளார். ஆதலினுற் சமநிலை யெனப்படும் நடுவுநிலை

மதங்கசூளாமணி 5
பொருந்திநிற்கும் நல்லோரிடத்து "நகையே யழுகை யிளிவரன் மருட்கை, யச்சம் பெருமிதம் வெகுளி யுவகையென், றப்பாலெட்டே மெய்ப்பா டென்ப' எனத் தொல்லாசிரியர் வகுத்துக்கூறிய எண் வகைமெய்ப்பாடும் நிகழாவாம். ஒரோவழி நிகழுமிடத்துக் காமம் பற்றுக்கோடாக நிகழாது அருள் பற்றுக்கோடாக நிகழுமென்பது. இக்காரணத்தினற்ருன் ‘பண்ணைத் தோன்றிய வெண்ணன்கு பொரு ளுங், கண்ணிய புறனே நானன் கென்ப" என முடியுடைவேந்தருங் குறுநிலமன்னரு முதலாயினேர் நாடகமகளிர் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டும் காமநுகரும் இன்பவிளையாட்டினுட் டோன்றிய மெய்ப்பாட்டுவகையை யுணர்த்தப்புகுந்த ஆசிரியர் தொல்காப்பிய ஞர் நடுவுநிலையை ஒன்ருகவைத்து ஒதாராயினர். ‘ஆங்கவையொ ருபா லாக வொருபால், உடைமை யின்புற னடுவுநிலை யருளல்' என்னுஞ் சூத்திரத்துள் நடுவுநிலை கூறப்பட்டது. ஒன்பது சுவையினுள் நடுவுநிலை கூறப்பட்டது. ஒன்பது சுவையினுள் ஒன்ருகிய நடுவுநிலை யொழித்து ஒழிந்தனவற்றைக் கூறுதலின் மெய்ப்பாடு எட்டாயின. சு. இவற்றினுள் இன்பம் (உவகை), நகை, வியப்பு (மருட்கை) என்னும் மூன்றும் ஒருபாலாகி யகத்திணையைச் சார்ந்து நின்றன. வீரம், வெகுளி (உருத்திரம்), அவலம் (அழுகை), அச்சம், இளிவரல் என்னும் ஐந்தும் ஒருபாலாகிப் புறத்திணையைச் சார்ந்துநின்றன. அகத்திணையினுள் வீரமுதலிய ஐந்தும் புறத்திணையினுள் இன்பமுத லிய மூன்றும் ஒரோவழித் தோற்றுவவெனினும் பெருவரவுபற்றி இவ் வாறு வகுத்துக் கொள்ளுதலால் எயதியதோர் இழுக்கில்லை. அகத் திணையைச் சார்ந்து இன்பம், நகை, வியப்பு என்னும் மூன்று மெய்ப் பாடும் தோற்றநின்ற நாடகங்களை மேனட்டார் கமிடி (comedy) யென்பர்; புறத்திணையைச் சார்ந்து வீரமுதலிய வைந்தும் விளங்க நின்ற நாடகங்களை மேனுட்டார் ரிருஜெடி (tragedy) யென்பர். இவற்றை நாம் முறையே வேத்தியல் பொதுவிய லென வழங்க லாகும். ‘காடுகெழுசெல்விக்குப் பரவுக்கடன் கொடுக்குங்கால் அவ ளது நிலைமையைச் சிறப்புறக்கூறி வழுத்திநின்ருடும் கொற்றவை நிலையாகிய பொதுவியற்கூத்தும், வெறியாட்டயர்ந்த வெங்களத்துக் குருதிப்பலிசெலுத்தி வேலனை வழுத்திநின்ருடும் காந்தளாகிய பொது வியற்கூத்தும் ஒருபுடை யொப்பெனற்குரிய பொதுவியற்கூத்தே பண்டை யவனபுரத்தில் ரிருஜெடி என்னும் பெயரால் வழங்கப் பட்டது; ரிருஜெடி யென்னுஞ் சொல்லுக்குப் பொருள் ‘ஆட்டு மறிக் கவிதை' யென்பது; உண்டாட்டுத்தெய்வமாகிய தயணிச (Dionysus) னுக்கு வேனில்விழாக் கொண்டாடுங்காலத்து, ஒரு ஆட்டுக்கடாவைப் பலிசெலுத்தி அத்தெய்வத்தினது மெய்க்கீர்த்தி யையும் அவனைப் பரவும் வீரரதுயுகழையும் கூறுவதே ரிருஜெடிக்கு உரியபொருளாயிருந்தது எனவும், வேனில்வேள் ஆகிய தயனிசன் என்னுந் தெய்வத்துக்கு விழாக் கொண்டாடுங்காலம் மாவும் புள்ளுந்

Page 17
6 மதங்கசூளாமணி
துணையொடுவதியும் வசந்தகாலமாதலினல் அக்காலத்து உண்டாட் டினுற் களிதியங்கினேரும் யாறுங் குளனுங் காவு மாடிப் பதியிகந்து காமநுகர்வோருமாகிய இளையாருடைய உள்ளத்தில் உவகையும் நகை யும் தோற்றுவது இயல்பேயாம்; நகைச்சுவையும் உவகைச்சுவையும் நிறைந்த நாடகங்கள் கமிடி எனப் படுவன; இச்சொல்லுக்குப்பொருள் சிறுகுடிப்பாட்டு, பண்ணைப்பாட்டு என்று கொள்ள்லாகும்." எனவும் யாம் மேற்றிசைச் செல்வம் என்னும் தொடர்நிலையுரையினுட் கூறி யன ஈண்டு ஆராயத் தக்கன.
எ. சுவையை யாராயுமிடத்துச் “சுவைக்கப்படும் பொருளும், அதனை நுகர்ந்த பொறியுணர்வும், அது மனத்துப்பட்டவழி உள்ளத்து நிகழுங் குறிப்பும், குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தாற் கண்ணிரரும்பலும் மெய்ம்மயிர்சிலிர்த்தலு முதலாக உடம்பின்கண்வரும் வேறுபாடா கிய சத்துவங்களுமென நான்காக்கி, அச்சுவை யெட்டோடுங்கூட்டி, ஒன்று நான்கு செய்து உறழ முப்பத்திரண்டாம்,' எனப் பொருளதி காரவுரையாசிரியர் கூறினர். சுவைக்கப்படும்பொருளையும் சுவையு ணர்வையும் இருவேறுநிலஞகவைத்து ஆராய்ந்தமைக்கு அவர் கூறிய காரணங்களைத் தருவாம். "நகையும் அச்சமு முதலாகிய உணர்வு முற்காலத்து உலகியலான் அறிவானெருவன் அவற்றுக்கு ஏதுவாகிய பொருள் பிறகண்டவழித் தோன்றிய பொறியுணர்வுகள் அவ்வச்சுவை யெனப்படும். வேம்பென்னும்பொருளும், நாவென்னும்பொறியும் தலைப்பெய்தவழியல்லது கைப்புச்சுவை பிறவாததுபோல், அப் பொருள் கண்டவழியல்லது நகையும் அச்சமுந் தோன்ரு. ஒழிந்த காமமுதலியனவும் அன்ன. இக்கருத்தேபற்றிப் பிற்காலத்து நாடக நூல்செய்த ஆசிரியரும் இருவகை நிலத்தி னியல்வது சுவையே’ என்ருரென்பது. இனி இருவகைநிலனென்பன உய்ப்போன்செய்தது காண்போர்க்கெய்துதலன்ருேவெனின், சுவையென்பது ஒப்பினனுய பெயராகலான் வேம்புசுவைத்தவன் அறிந்த கைப்பறிவினை நாவு ணர்வினுற் பிறனுணரான், இவன் கைப்புச்சுவைத்தானெனக் கண் ணுணர்வினன் அறிவதன்றி; அதுபோல அச்சத்துக்கு ஏதுவாகிய ஒரு பொருள் கண்டு அஞ்சி ஓடிவருகின்ருஞெருவனை மற்ருெருவன் கண்ட வழி இவன் வள்ளெயிற்றரிமா முதலாயினகண்டு அஞ்சின னென்றறி வதல்லது வள்ளெயிற்றரிமாவினைத் தான் காண்டல் வேண்டுவதன்று; தான்கண்டாணுயின் அதுவுஞ் சுவையெனவேபடும். ஆகவே அஞ் சினனேக் கண்டு நகுதலுங் கருணைசெய்தலுங் கண்டோர்க்குப் பிறப்ப தன்றி அச்சம் பிறவாதாகலான் உய்ப்போன் செய்தது காண்போ னுய்த்த அறிவின்பெற்றியாற் செல்லாதாகலின் இருவகை நிலமெனப் படுவன சுவைப்பொருளுஞ் சுவைத்தோனுமென இருநிலத்தும் நிகழு மென்பதே பொருளாதல்வேண்டுமென்பது." சுவைக்கப்படும் பொரு ளும் சுவையுணர்வுங் கூடியவழிச் சுவைபிறக்குமென அறிந்தாம்; குறிப்பு என்பது இவற்றின் வேறுபட்டதோவெனின், 'குறிப்பென்

மதங்கசூளாமணி 7
பது, கைப்பின் சுவையுணர்வுபிறந்தவழி வெறுப்புமுதலாயின உள்ள நிகழ்ச்சிபோல அஞ்சுதக்கனகண்டவழி அவற்றை நோக்காது வெறுக் கும் உள்ள நிகழ்ச்சி' யாதலினுல் இது சுவைக்கப்படும்பொருள் சுவையுணர்வு என்னும் இரண்டினும் வேரு யது என்று அறிதல் வேண்டும். சத்துவம் என்பது, அவ்வுள்ளநிகழ்ச்சிபிறந்தவழி வேம்பு தின்ருர்க்குத் தலைநடுங்குவதுபோலத் தாமே தோன்றும் நடுக்கமுத லாயின. அங்ங்ணந் தோன்றிய சத்துவத்தைப் பிறருக்கறிவுறுத்தும் பொருட்டுப் பாவகப்ப்டுத்துஞ்செய்கை அவிநயம் எனப்ப்டும். இவற்றை யின்னும் தெளிவுறவிளக்கும்பொருட்டு மனநூன் (Psychology) முடிபு சிலவற்றைத் தருவாம். காட்டிற்சென்ற ஒரும்கன் ஒரு வேங்கைப்புலியைக் கண்டான். கண்டமாத்திரத்தி லவனுள் ளத்தே யச்சவுணர்வு தோன்றிற்று. அவ்வரிவேங்கை தன்னுயிரை வெளவுமேயென்று அவன் எண்ணியவழி அச்சக்குறிப்புத் தோன் றிற்று: அச்சக்குறிப்புத்தோன்ற உடல் நடுக்கமாகிய சத்துவந்தோன் றிற்று. இங்ஙனம் அஞ்சிய மகன் பின்னளில் நாடகவரங்கத்து முன் னர்த் தான் அநுபவித்த சுவையுணர்வைப் பிறர்க்குப் புலப்படுத்த முயன்றவெல்லையிற் பாவகமாகிய அவிநயம் பிறக்கும். ஆசிரியர் செயிற்றியனர் சுவையுணர்வையுஞ் சுவைப்பொருளையும் ஒன்ருக அடக் கிச் சுவை, குறிப்பு, சத்துவம் என மூன்ருக்குவர்; அவிநயத்தைத் தனித்துக்கூறுவர். குறிப்புஞ் சத்துவமும் சுவையினுள்ளடங்க " "எண் ணுன்குபொருளும்’ எட்டாய்முடிவனவாதலின், ‘நாலிரண்டாகும் பாலுமா ருண்டே' என ஆசிரியர் தொல்காப்பியனுர் கூறினர்.
அவர் சமநிலைகூருமைக்குப் பொருளதிகாரவுரையாசிரியர் காட் டிய காரண மெதுவெனின் ‘சமநிலைக்கு ஒர்விகாரமின்மையின் ஈண் டுக் கூறிய்தில னென்பது; அதற்கு விகாரமுண்டெனின் முன்னையெட்ட னுள்ளுஞ் சார்த்திக் கொள்ளப்படும். அஃதல்லதூஉம் அஃதுலகியல் நீங்கினர்பெற்றியாகலின், ஈண்டு உலகவழக்கினுட் சொல்லியதில னென்பது. ஒழிந்த எட்டும் உலகியலாகலிற் கூறினன்' என்பது.
அ. சுவை, குறிப்பு, சத்துவம், அவிநயம் என்னும் இவற்றினது இலக்கண்த்தை இப்பிரிவினுள் தொகுத்துக்கூறுவாம்; மேல் எடுத்துக் காட்டியலினுள் இலக்கியங்காட்டி விரித்துவிளக்குவாம்.
நகை :-"எள்ள விளமை பேதைமை மடனென்
றுள்ளப் பட்ட நகைநான் கென்ப"
எள்ளல் என்பது இகழ்ச்சி. தான் பிறரையெள்ளிநகுதல், பிறரால் எள்ளப்பட்டவழித் தான் நகுதல், இளமையாற் பிறரை நகுதல், பிற ரிளமைகண்டு தான் நகுதல், தன்பேதைமையாற் பிறரை நகுதல், பிறர் பேதைமைபொருளாக நகைதோன்றுதல், தன்மடத்தால் நகை தோன்றுதல், பிறர்மடம் பொருளாக நகை தோன்றுதல் என நகைக் குறிப்பு எட்டாகும்.

Page 18
8 மதங்கசூளாமணி
'நகையினவிநய நாட்டுங் காலை
மிகைபடு நகையது பிறர்நகை யுடையது கோட்டிய முகத்தது . . . . . . . . . " o a விட்டுமுரி புருவமொடு விலாவுறுப் புடையது செய்வது பிறிதாய் வேறுசே திப்பதென் றையமில் புலவ ராய்ந்தன வென்ப.' அழுகை:-"இளிவே யிழவே யசைவே வறுமையென
விளிவில் கொள்கை யழுகை நான்கே’’
இளிவென்பது பிறரான் இகழப்பட்டு எளியணுதல். இழவென்பது தந்தையுந் தாயு முதலாகிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலாயவற்றையும் இழத்தல், அசைவென்பது பண்டை நிலைமை கெட்டு வேருெருவாருகி வருந்துதல். வறுமையென்பது போகந்துய்ப்பப்பெழுத பற்றுள்ளம். இவை நான்குந் தன்கட்டோன் றினும் பிறன்கட்டோன்றினும் அவலமாமென்பது.
"அவலத் தவிநய மறிவரக் கிளப்பிற்
கவலையொடு புணர்ந்த கண்ணிர் மாரியும் வாடிய நீர்மையும் வருந்திய செலவும் பீடழி யிடும்பையும் பிதற்றிய சொல்லும் நிறைகை யழிதலும் நீர்மையில் கிளவியும் பொறையின் முகலும் புணர்த்தினர் புலவர்
இளிவரல்:- "மூப்பே பிணியே வருத்த மென்மையோ
டியாப்புற வந்த விளிவர ஞன்கே'
மூப்பு, பிணி, வருத்தம், மென்ம்ை யென நான்கு பொருள்பற்றிப் பிறக்கும் இளிவரல். இவை முன்னையபோலத் தன்கட் டோன்றுவன வும் பிறன்கட்டோன்றுவனவும்பற்றி எட்டாதலுடைய.
* இழிப்பி னவிநய மியம்புங் காலை
யிடுங்கிய கண்ணு மெயிறுபுறம் போதலு மொடுங்கிய முகமு முஞற்ருக் காலுஞ் சோர்ந்த வாக்கையுஞ் சொன்னிரம் பாமையு நேர்ந்தன வென்ப நெறியறிந் தோரே.'
மருட்கை :- "புதுமை பெருமை சிறுமை யாக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே'
புதிதாகக் கண்டனவும், கழியப் பெரியவாயினவும், இறப்பச் சிறியனவும், ஒன்று ஒன்ருய்த் திரிந்தனவுமென நான்கும்பற்றி வியப் புத்தோன்றும். இவையும் தன்கட் டோன்றினவும் பிறன்கட் டோன் றினவுமென எட்டாதலுடைய.

'மதங்கசூளாமணி 9
"அற்புத வவிநய மறிவரக் கிளப்பிற்
சொற்சோர் வுடையது சோர்ந்த கையது மெய்ம்மயிர் குளிர்ப்பது வியத்தக வுடைய தெய்திய விமைத்தலும் விழித்தலு மிகந்ததென் றையமில் புலவரறைந்தன ரென்ப்."
அச்சம்:- "அணங்கே விலங்கே கள்வர்தமிறையெனப்
பிணங்கல் சாலா வச்ச நான்கே'
‘அணங்கென்பன பேயும் பூதமும் பாம்பும் ஈருகிய பதினெண்கண னும் நிரNப் பாலரும் பிறரும் அணங்குதற்ருெழிலராகிய சவந்தின் பெண்டிர் முதலாயினரும் உருமிசைத்தொடக்கத்தனவு மெனப்படும். விலங்கென்பன அரிமாமுதலாகிய அஞ்சுதக்கன. கள்வரென்பார்தீத் தொழில் புரிவார். இறையெனப்படுவார் தந்தையரும், ஆசிரியரும் அரசரும் முதலாயினர். பிணங்கல் சாலா அச்சமென்றதனுல் முன்னைய போல விவைதன்கட் டோன்றலும் பிறன்கட் டோன்றலுமென்னுந் தடுமாற்றமின்றிப் பிறிதுபொருள்பற்றியே வருமென்பது. ’’
'அச்ச வவிநய மாயுங் காலை
யொடுங்கிய வுடம்பு நடுங்கிய நிலையு மலங்கிய கண்ணுங் கலங்கிய வுளணுங் கரந்துவர லுடைமையுங் கையெதிர் மறுத்தலும் பரந்த நோக்கமு மிசைபண் பினவே.'
பெருமிதம்:- "கல்வி தறுகண் ணிசைமை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமித நான்கே'
'கல்வியும் தறுகண்மையும் புகழுங் கொடையும் என்னும் நான் கும் பற்றி வீரம் பிறக்கும். இச்சூத்திரத்துள் வீரத்தினைப் பெருமித மென்றெண்ணினன்; என்னை ? எல்லாரொடும் ஒப்பநில்லாது பேரெல் லையாக நிற்றல் பெருமித மெனப்படும் என்றற் கென்பது. கல்வி யென் பது தவமுதலாகிய வித்தை, தறுகணென்பது அஞ்சுதக்கன கண்ட விடத்து அஞ்சாமை. இசைமை யென்பது இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடுவருவனசெய்யாமை. கொடையென் பது உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப்பொருளுங் கொடுத்தல்'. இது தன்கட்டோன்றிய பொருள்பற்றி வரும். மேற் கூறிய நான்கனுள் அஞ்சுதக்கன் கண்டவிடத்து அஞ்சாமையாகிய தறுகண்மை அடுகளத்து முன்னணியினிற்கும் போர்வீரனது பெரு மிதத்தைக் குறிப்பது. இதனியல்பைப் பின்வருஞ் சூத்திரங் கூறு கின்றது.

Page 19
10 மதங்கசூளாமணி
“வீரச்சுவை யவிநயம் விளம்புங் காலை முரிந்த புருவமுஞ் சிவந்த கண்ணும் பிடித்த வாளுங் கடித்த வெயிறும் மடித்தவுதடுஞ் சுருட்டிய நுத லும் திண்ணென வுற்ற சொல்லும் பகைவரை யெண்ணல் செல்லா விகழ்ச்சியும் பிறவும் நண்ணு மென்ப நன்குணர்ந்தோரே."
வெகுளி:- ""உறுப்பறை குடிகோ ளலைகொலை யென்ற
வெறுப்ப வந்த வெகுளி நான்கே."
உறுப்பறையென்பது, கைகுறைத்தலும் கண்குறைத்தலும் முத லாயின; குடிகோளென்பது, தாரமும் சுற்றமும் குடிப்பிறப்பும் முத லாயவற்றுக்கட் கேடுகுழ்தல்; அலையென்பது, கோல்கொண்டலைத் தன் முதலாயின; கொலையென்பது அறிவும் புகழும் முதலாயின வற்றைக் கொன்றுரைத்தல். இது பிறன்கட் டோன்றியபொருள் பற்றிவரும். −
‘வெகுண்டோ னவிநயம் விளம்புங் காலை
மடித்த வாயு டிலர்ந்த மார்புந் துடித்த புருவமுஞ் சுட்டிய விரலும் கன்றின வுள்ளமொடு கைபுடைத் திடுதலும் அன்ன நோக்கமொ டாய்ந்தனர் கொளலே."
உவகை:- "செல்வம் புலனே புணர்வு விளையாட்டென் றல்ல னித்த வுவகை நான்கே'
செல்வம் என்பது நுகர்ச்சி. புலனென்பது கல்விப்பயணுக அறி வுடைமை. புணர்வு காதலிருவர் கருத்தொத்தல். விளையாட்டு யாறுங் குளனுங் காவு மாடிப் பதியிகந்துவருதல். தன்கட்டோன்றியபொருள் பற்றியும் பிறன் கட்டோன்றிய இன்பம்பற்றியும் உவகை பிறக்கும்.
'காம வவிநயங் கருதுங் காலைத்
தூவுள் ளுறுத்த வடிவுந் தொழிலும் காரிகை கலந்த கடைக்கணுங் கவின்பெறு மூரன் முறுவல் சிறுநிலா வரும்பலு மலர்ந்த முகனு மிரந்தமென் கிளவியுங் கலந்தன பிறவுங் கடைப்பிடித் தாரே." நடுவுநிலை:-"செஞ்சாந் தெறியினுஞ் செத்தினும் போழினும் நெஞ்சஞ்சோர்ந் தோடாநிலை"
இது நாம் முற்கூறியவாறே காம வெகுளி மயக்க நீங்கினர் கண்ணே நிகழ்வது.

மதங்கசூளாமணி 11
'நாட்டுங் கால நடுவுநிலை யவிநயங்
கோட்பா டறியாக் கொள்கையு மாட்சியும் அறந்தரு நெஞ்சமும் ஆறிய விழியும் பிறழ்ந்த காட்சி நீங்கிய நிலையுங் குறிப்பின் ருகலுங் துணுக்க மில்லாத் தகைமிக வுடைமையுந் தண்ண்ென வுடைமையும் அளத்தற் கருமையும் அன்பொடு புணர்தலும் கலக்கமொடு புணர்ந்த நோக்குங் கதிர்ப்பும் விலக்கா ரென்ப வேண்டுமொழிப் புலவர்."
கூ. எள்ளல்முதலாக விளையாட்டு இறுதியாகச் சொல்லப்பட்ட முப் பத்திரண்டும் ஒருபாலாக உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு, கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், நினைதல், வெரூஉதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொருமை, வியர்த்தல், ஐயம், மிகை நடுக்கம் என்னும் இவையும் மெய்ப்பாடாம் மேற்கூறியவற்றின் பொருண்மையவல்லாதவிடத்து. இவற்றினுட் சிலவற்றுக்கு முந்தை யோர் கூறிய இலக்கணத்தை எடுத்து மொழிவாம்.
இன்புறல்:-‘இன்பமொடு புணர்ந்தோ னவிநய மியம்பிற்
றுன்ப நீங்கித் துவர்த்த யாக்கையும் தயங்கித் தாழ்ந்த பெருமகிழ் வுடைமையு மயங்கி வந்த செலவுநனி யுடைமையும் அழகுள் ளுறுத்த சொற்பொலி வுடைமையும் எழிலொடு புணர்ந்த நறுமலருடைமையும் கலங்கள்சேர்ந் தகன்ற தோண்மார் புடைமையு நலங்கெழு புலவர் நாடின ரென்ப."
இதனெடு தொடர்புடைய உவந்தோனவிநயம் வருமாறு:-
"உவந்தோ னவிநய முரைக்குங் காலே
நிவந்திணி தாகிய கண்மல ருடைமையு மினிதி னியன்ற வுள்ள முடைமையு முனிவி னகன்ற முறுவனகை யுடைமையு மிருக்கையுஞ் சேறலுங் கானமும் பிறவும் ஒருங்குட னமைந்த குறிப்பிற் றன்றே."
அன்பு:- "அன்புக்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்
புன்கணிர் பூச றரும்." அடக்கம்:-"ஒருமையு ளாமைபோலந்தடக்கல்."
"கதங்காத்துக் கற்றடங்கல்."
தன்மை:-"உலகத்தோ டொட்டவொழுகல்."

Page 20
12 மதங்கசூளாமணி
ஐயம்: 'பொய்யில் காட்சிப் புலவோ ராய்ந்த
ஐய முற்றே னவிநய முரைப்பின் வாடிய வுறுப்பு மயங்கிய நோக்கமும் பீடழி புலனும் பேசா திருத்தலும் பிறழ்ந்த செய்கையும் வான்றிசை நோக்கலும் அறைந்தனர் பிறவு மறிந்திசி னுேரே.”* அழுக்காருமை:-"அழுக்கா றுடையோ னவிநய முரைப்பி
னிழுக்கொடு புணர்ந்த விசைபொருளுடைமையுங் கூம்பிய வாயுங் கோடிய வுரையும் ஒம்பாது விதிர்க்குங் கைவகை யுடைமையு மாரணங் காகிய வெகுளி யுடைமையுங் காரண மின்றி மெலிந்தமுக முடைமையு மெலிவொடு புணர்ந்த விடும்பையு மேவாப் பொலிவு மென்ப பொருந்துமொழிப் புலவர்." துஞ்சல்:-"துஞ்சா நின்ருே னவிநயுந் துணியி
னெஞ்சுத லின்றி யிருபுடை மருங்கு மலர்ந்துங் கவிழ்ந்தும் வருபடை யியற்றியும் அலந்துயிர்ப் புடைய வாற்றலு மாகும்.”* மடிமை:-"மடியி னவிநயம் வகுக்குங் காலை
நொடியொடு பலகொட் டாவிடமிக வுடைமையு மூரி நிமிர்த்தலு முனிவொடு புணர்தலுங் காரண மின்றி யாழ்ந்துமடிந் திருத்தலும் பிணியுமின்றிச் சோர்ந்த செலவோ டணிதரு புலவ ராய்ந்தன ரென்ப."
மேற்கூறியவற்றுள் வெகுண்டோ னவிநயம், ஐயமுற்றேனவிநயம், மடியினவிநயம், அழுக்காறுடையோனவிநயம், இன்பமொடுபுணர்ந் தானவிநயம், உவந்தோனவிநயம், துஞ்சாநின்ருனவிநயம் என்பன வற்ருேடு களித்தோனவிநயம், தெய்வமுற்றேனவிநயம், ஞஞ்ஞை யுற்றேனவிநயம், சிந்தையுடம் பட்டோனவிநயம், இன்றுயிலுணர்ந் தோனவிநயம், செத்தோனவிநயம், மழைபெய்யப்பட்டோனவிநயம், பனித்தலைப்பட்டோனவிநயம், வெயிற்றலைப்பட்டோனவிநயம், நாண முற்ருேனவிநயம், வருத்தமுற்ருேனவிநயம், கண்ணுேவுற்றேனவிந யம், தலைநோவுற்ருேனவிநயம், அழற்றிறப் பட்டோனவிநயம், சீத முற்ருேனவிநயம், வெப்பமுற்ருேனவிநயம், நஞ்சுண்டோனவிநயம் என்னும் இவற்றையும் ஒருபடியாகவைத்து ஒதுவர் நாடகநூலாசிரி யர். எஞ்சியவற்றின் இலக்கணத்தை ஒழிபியலுட்டருவாம்.
க0. இனிப் பொருள், சாதி, யோனி, விருத்தி என்னும் நான் யும் ஆராய்வாம். அவற்றுள், பொருளாவது நான்குவகைப்படும். என்ன? 'அறம்பொருளின்பம் வீடென நான்கும் - திறம்படு பொரு னெனச் செப்பினர் புலவர்."

மதங்கசூளாமணி 13
சாதி நான்குவகைப்படும். 'அறமுத னன்கு மொன்பான் சுவையு, முறைமுன் னடக முன்னே குைம்’ என ஆசிரியர் செயிற்றியனர் கூறினராதலினல் அறமுத னுற்பொருளும் ஒன்பதுவகைச்சுவையும் பெற்றுவருவது அந்தணர் சாதி. 'அறம் பொரு வின்பம் அரசர் சாதி' 'அறம்பொருள் வாணிகர் சாதியென் றறைப. 'அறமேற் சூத்திர ரங்கமாகும்" என ஆசிரியர் செயிற்றியஞர் கூறியவாற்ருல் ஏனைய மூன்று சாதியும் அறிந்துகொள்க. இவை நான்கும் நாடக மேயாம். வடமொழி வழக்குப்பற்றி நாடகம் பிரகரணப்பிரகரணம், பிரகரணம், அங்க மெனப் பெயரிட்டுவழங்குதலும் பொருந்தும். "அவைதாம், நாடகம் பிரகரணப் பிரகரணம், ஆடிய பிரகரண மங்க மென்றே, யோதுப நன்னூ லுணர்ந்திசி னுேரே" என்ருர் ஆசிரியர் மதிவாணனர்.
யோனி நான்குவகைப்படும். உள்ளோன் தலைவனுக உள்ளதோர் பொருண்மேற் செய்தலும், இல்லோன் றலைவனுக உள்ளதோர் பொருண்மேற் செய்தலும், உள்ளோன் தலைவனுக இல்லதோர் பொருண்மேற் செய்தலும், இல்லோன் தலைவனுக இல்லதோர் பொருண்மேற்செய்தலு மெனவிவை; என்ன? 'உள்ளோற் குள்ளது மில்லோற் குள்ளது, முள்ளோற் கில்லது மில்லோற் கில்லது, மெள்ளா துரைத்தல் யோனியாகும்" என்ருராகலின்.
விருத்தி நான்குவகைப்படும். அவை சாத்துவதி, ஆரபடி, கைசிகி; பாரதி யென விவை. இவற்றுள், சாத்துவதியாவது அறம் பொரு ளாகத் தெய்வ மானிடர் தலைவராக வருவது. ஆரபடியாவது பொருள் பொருளாக வீரராகிய மானிடர் தலைவராக வருவது. கைசிகியாவது காமம் பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வருவது. பாரதி விருத்தியாவது அசுரரைக்கொல்ல அமரராடின பதினுேராட லும் பிறவும். இது தெய்வவிருத்தியெனவும்படும்.
கக. பதினே ராடலாவன:-
"கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்
குடைதுடிமா லல்லியமற் கும்பஞ் - சுடர்விழியாற் பட்டமதன் பேடுதிருப் பவையரன் பாண்டரங்கங் கொட்டியிவை காண்பதினேர் கூத்து.' இவற்றி னிலக்கணஞ் சிலப்பதிகாரத்துக் கடலாடுகாதையினுட் கூறப்பட்டிருக்கிறது. அதனை ஈண்டுத்தருவாம்.
"மாயோன் பாணியும் வருணப் பூதர்
நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை வானூர் மதியமும் பாடிப் பின்னர்ச் சீரியல் பொலிய நீரல நீங்கப் பாரதி யாடிய பாரதி யரங்கத்துத் திரிபுர மெரியத் தேவர் வேண்ட

Page 21
4 மதங்கசூளாமணி
வெரிமுகப் பேரம் பேவல் கேட்ப வுமையவ ளொருதிற ஞக வோங்கிய விமையவ ளுடிய கொடுகொட்டி யாடலும் தேர்மு னின்ற திசைமுகன் காணப் பாரதி யாடிய வியன்பாண் டரங்கமும் கஞ்சன் வஞ்சங் கடத்தற் காக அஞ்சன வண்ண ஞடிய வாடலு ளல்லியத் தொகுதியு மவுணற் கடந்த மல்லி ஞடலு மாக்கட னடுவ ணிர்த்திரை யரங்கத்து நிகர்த்து முன் னின்ற சூர்த்திறங் கடந்தோ ஞடிய துடியும் படைவீழ்த் தவுனர் பையு ளெய்தக் குடைவீழ்த் தவர்மு னடிய குடையும் வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணில மளந்தோணுடிய குடமு மாண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக் காம ஞடிய பேடி யாடலும் காய்சின வவுணர் கடுந்தொழில் பொரு அண் மாயவ ளாடிய மரக்கா லாடலுடு செருவெங் கோல மவுணர் நீங்கத் திருவின் செய்யோ ளாடிய பாவையும் வயலுழை நின்று வடக்கு வாயிலு ளயிராணி மடந்தை யாடிய கடையமு மவரவ ரணியுட னவரவர் கொள்கையி னிலையும் படிதமு நீங்கா மரபிற் பதினுேராடலும்.""
அநிருந்த நாடகத்தினுள்ளே மேற்கூறிய பதினுேராடலுள் நான்கு ஆடல் காணப்படுகின்றன. காமன்மகன் அநிருத்தனைத் தன்மகள் உழை காரணமாக வாணுசுரன் சிறைவைத்தான். அநிருத்தனது சிறையை மீட்கக்கருதி அவனது சோ என்னும் நகரவீதியிற்சென்று நிலங்கடந்த நெடுமுடியண்ணல் பஞ்சலோகங்களாலும் மண்ணுலும் செய்த குடங்கொண்டாடியகூத்துக் குடக்கூத்து. வாணனுடைய பெரிய நகரின் வடக்குவாயிற்கண் உளதாகிய வாயிலிடத்தே நின்று அயிராணி மடந்தை உழத்தியர்கோலத்தோடு ஆடியசுத்துக் கடைய மெனப்படுவது. அஞ்சனவண்ணணுகிய கண்ணன் மல்லர்கோலமாகச் சென்று வாணனை உயிர்போக நெரித்துத் தொலைத்த கூத்து மல் எனப்படுவது. தனது மகன் அநிருத்தனைச் சிறைமீட்டுக் காமன் ஆண் மைதிரிந்த பெண்மைக் கோலத்தோடு சோநகரவீதியி லாடியகூத்துப் பேடு எனப்படுவது. அஞ்சனவண்ணளுடிய ஆடல் பத்துள், கஞ்சன் வஞ்சத்தின்வந்த யானையின்கோட்டை ஒசித்தற்கு நின்ருடிய கூத்து அல்லியத்தொகுதி யென்பது. கொடுகொட்டியும் பாண்டரங்கமும் திரிபுரமெரித்தகாலத்திலே இறைவனடிய கூத்து. ‘தேவர் திரிபுர

மதங்கசூளாமணி 15
மெரியவேண்டுதலால் வடவையெரியைத் தலையிலேயுடைய பெரிய வம்பு ஏவல்கேட்டவளவிலே அப்புரத்தில் அவுணர் வெந்துவிழுந்த வெண்பலிக்குவையாகிய பாரதியரங்கத்திலே (பாரதி - பைரவி, அவளரங்கம் - சுடுகாடு) உமையவள் ஒருகூற்றினளாய்நின்று பாணி தூக்குச் சீ ரென்னுந் தாளங்களைச் செலுத்தத் தேவர்யாவரினு முயர்ந்த இறைவன் ஜயஆனந்தத்தாற் கைகொட்டிநின்று ஆடியது கொடுகொட்டி யென்பது. தேவரானமைந்த தேரின்முன் சாரதி யாகிய திசைமுகன் காணும்படி பாரதிவடிவாகிய இறைவன் வெண் ணிற்றையணிந் தாடியகூத்துப் பாண்டரங்கம் எனப்படும். சூரபத்மன் மாமரமாகிக் கருங்கடலினடுவுநிற்க அவனது வேற்றுருவாகிய வஞ் சத்தை யறிந்த முருகக்கடவுள், கடலிண்டுவே திரையே அரங்கமாக நின்று துடிகொட்டியாடிய கூத்துத் துடிக்கூத்து. அவுணர் தாம் போர் செய்தற்கெடுத்த படைக்கலங்களைப் போரிற்காற்ருது போகட்டு வருத்தமுற்றவளவிலே முருகக்கடவுளானவர் தமது குடையை முன்னேசாய்த்து அதுவே ஒருமுகவெழினியாக நின்ருடிய கூத்துக் குடைக்கூத்து. காயுஞ்சினத்தையுடைய அவுணர் வஞ்சத்தாற் செய் யுங் கொடுந்தொழிலைப் பொருளாய்த் துர்க்காதேவி ஆடிய கூத்து மரக்கால் என்னும் பெயரையுடையது. அவுணர் வஞ்சனையினுற் பாம்பு தேள் முதலியவாகப் புகுதல்கண்டு அம்மை அவற்றை உழக்கிக் களைதற்கு மரக்கால்கொண்டு ஆடினளாதலினல் மரக்காலாடலா யிற்று. அவுணர் போர்செய்தற்குச் சமைந்த போர்க்கோலத்தோடு மோகித்து வீழும்படி செய்யோளாகிய திருமகள் கொல்லிப்பாவை வடிவாய்நின்று ஆடிய கூத்துப் பாவை யென்னு மடலாகும். "மாயோன் பாணியும் வருணப்பூதர், நால்வகைப்பாணியு நலம் பெறு கொள்கை, வானூர் மதியமும் பாடி' என்பதனை ஒழிபியலுள் ஆராய்வாம்.
கஉ. இனி எஞ்சிநின்ற சொல், சொல்வகை, வண்ணம் , வரி யென்னும் நான்கினையும் ஆராய்வ்ாம். சொல் மூன்று வகைப்படும்; உட்சொல், புறச்சொல், ஆகாயச்சொல்லென; அவை முறையே நெஞ்சொடுகூறல், கேட்போர்க்குரைத்தல், தானேசுறல் என விவை. 'நெஞ்சொடு கூறல் கேட்போர்க் குரைத்தல், தஞ்சம் வரவறிவு தானே கூறலென், றம்மூன் றென்ப செம்மைச் சொல்லே’.
சொல்வகை நான்குவகைப்படும்; சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகமென. கண்ணம் நான்கடியான்வருவது; சுரிதகம் எட்டடி யான் வருவது; வண்ணம் நாஞன்கடியான்வருவது; வரிதகம் முப்பத் திரண்டடியான்வருவது.
"வண்ணந் தானே நாலைந் தென்ப" "அவைதாம்,
Luntegy av6wGurub Snray avsikramurub

Page 22
16
வல்லிசை வண்ண மெல்லிசை வண்ணம் இயைபு வண்ண மளபெடை வண்ண நெடுஞ்சீர் வண்ணங் குறுஞ்சீர் வண்ணம் சித்திர வண்ண நலிபு வண்ண மகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம் மொழுகு வண்ண மொரூஉ வண்ணம் எண்ணு வண்ண மகைப்பு வண்ணந் தூங்கல் வண்ண மேந்தல் வண்ண முருட்டு வண்ண முடுகு வண்ணமென் ருங்கன மறிப வறிந்திசி ஞேரே' யென்பதனல் வண்ணம் அறிக. பெருவண்ணம், இடைவண்ணம், வனப்புவண்ண மென வகுத்தும், நூறுவண்ணமாக விரித்துங் காட்டு வாருமுளர்.
வரிப்பாடலாவது: "பண்ணுந் திறனும் செயலும் பாணியும் ஒரு நெறியன்றி, மயங்கச்சொல்லப்பட்ட எட்டனியல்பும் ஆறனியல்பும் பெற்றுத் தன் முதலும் இறுதியுங் கெட்டு இயல்பும் முடமுமாக முடிந்து கருதப்பட்ட சந்தியுஞ் சார்த்தும் பெற்றும் பெருதும் வரும்." அது தேவபாணியாகவும், மக்களைப்போற்றும்பொருண்மைத்தாகவும் வரும். திணைநிலைவரி இணைநிலைவரி யென இருவகையாகவும், கண் கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சி வரி, எடுத்துக்கோள்வரி யென எட்டுவகையாகவும் வரிக்கூத்து ஆரா யப்படும். இவற்றின் விரிவை ஒழிபியலுட் கூறுவாம்.
‘விலக்குறுப் பென்பது விரிக்குங் காலப்
பொருளும் யோனியும் விருத்தியுஞ் சந்தியும் சுவையுஞ் சாதியுங் குறிப்புஞ் சத்துவமு மவிநயஞ் சொல்லே சொல்வகை வண்ணமும் வரியுஞ் சேதமு முளப்படத் தொகைஇ யிசைய வெண்ணி னிரே முறுப்பே' என வகுத்து, பதினன்குவிலக்குறுப்பினிலக்கணத்தைஉறுப்பியலாகிய இம் முதலியலுட் கூறினும், கூத்தின்வகை, அகநாடகங்களுக்கும் புற நாடகங்களுக்கு முரிய உருக்கள், கூத்துவிகற்பங்களுக்கமைந்த வாச்சி யக்கூறுகள், அகக்கூத்துக்கும் புறக்கூத்துக்குமுரிய ஆடல்கள், பாடல், பாணி, தூக்கு, பிண்டி பிணையல், குரவை, வரி, அரங்கினமைதி என்னு மிவற்றையெல்லாம் ஒழிபியலுட் கூறுவாம்.

எடுத்துக்காட்டியல்
க. மதங்கசூளாமணியாகிய செகசிற்பியார், இற்றைக்கு முந் நூற்றறுபது வருடங்களுக்குமுன்னே (கி.பி. 1564), ஆங்கில நாட்டின் நடுப்பாகத்திலுள்ள ஸ்ரிருற்போர்ட்-ஒண்-அவொண் (Straford-onАроп) என்னும் நகரத்திலே உற்பவித்தார். இவர் தந்தையார் பெயர் ஜோண் ஷேக்ஸ்பியர் என்பது. அக்காலத்தில் ஆங்கிலநாட்டிற் செங்கோலோச்சிய அரசியின்பெயர் எலிசபெத் ராணி யென்பது. எலிசபெத் ராணியின் காலத்தில் ஆங்கிலநாட்டிற் செல்வமுங் கல்வி யும் பெரிதும் விருத்தியெய்தின. செகசிற்பியார் தமது இருபத் தேழாம்வயதுமுதல் நூலியற்றிவந்தாரெனவும் ஐம்பத்துமூன்ரும்வய தில் உலகவாழ்வையொருவினுரெனவும் அறிகின்ருேம். இப்புலவர் கோமகன் முதன்முதலெழுதிய நாடகம் காதல் கைம்மிக்க காவலன் சரிதை (Love's Labour's Lost) யென ஆராய்ச்சியாளர் கூறுவர். செகசிற்பியார் இயற்றிய மொத்தநூல்களின் ருெகை நாற்பத்தைந்து என்ப. இவற்றினுள் ஒருசில பிற்காலத்தார் இவர் பெயரால் இயற்றிய நூல்களென ஒருசாரார் கூறுவர். அவையனைத்தினையும் ஆராயப் புகின், ஆராய்ச்சி பல்கி வரம்பினுட்படாது இகந்துவிடுமென அஞ்சி, நகைச்சுவையுணர்த்தும் காதல் கைம்மிக்க காவலன்சரிதை (Lope's Labour’s LoS) என்னும் ஒன்றும், அவலமும் இளிவரலு முணர்த் தும் ஆகுலராஜன்சரிதை (King Lear) என்னும் ஒன்றும், அவல மும் உவகையு முணர்த்தும் இரம்மியன் சுசீலை சரிதை(Romeo and Juliet) என்னும் ஒன்றும், அவலமும் வெகுளியும் உணர்த்தும் தீநட் பஞ்சிய தீமோன்சரிதை (Timon of Athens) என்னும் ஒன்றும், மருட்கையு முவகையுமுணர்த்தும் பெரும்புயற்சரிதை (The Tempes) என்னும் ஒன்றும், அச்சமுணர்த்தும் மகபதிசரிதை (Macbeth) என்னும் ஒன்றும், பெருமிதமுணர்த்தும் வணிகதேயவர்த்தகன்சரிதை (The Merchant of Venice), யூலியசீசர்சரிதை (Julius Caesar) என்னும் இரண்டும், வெகுளியுணர்த்தும் சேனதிபதிசரிதை (Tius Andronicus) என்னும் ஒன்றும், உவகையுணர்த்தும் வேனிற் காதை (As You Like It) sin Sri šisnt Goog5 (The Winter’s Tale) GTGOT இரண்டும், உவகையு நகையு முணர்த்தும் கருதியது எய்திய காதலர் d that).5 (Twelfth Night or What You Will) 67.66 g/lb pair tollb -g,5u பன்னிரண்டு நாடகங்களையும் ஆராய்தற் கெடுத்துக்கொண்டோம். இவற்றை ஒரு சுவை, இருசுவையோடு சார்த்திக்கூறினமையின் இவை பிறகவை பெருவோவெனின், அங்ங்னமன்று, பெருவரவிற்ருகிய சுனவயொடு சார்த்திக்கூறினம்; இவை பிறகவையும் நிறைந்துவருவன வென்பது.
கவிச்சுவை நிறைந்தபாகங்களை இயன்றவரை செய்யுளுருவமாக மொழிபெயர்த்துத் தருவாம். வேண்டியவிடத்துச் செகசிற்பியார் வழங்கிய ஊர்ப்பெயர், மக்கட்பெயர், தெய்வப்பெயரென் றின்ன

Page 23
18 மதங்கசூளாமணி
வற்றைத் தமிழ்மொழிமரபுக்கியைய, வேற்றுமைப்படுத்தி வழங்கு வாம். இருமொழிவழக்கையும் நிரனிறுத்துக்காட்டும் ஓர் அட்ட வணையை வியாசமுடிவிற் றருவாம். இனி நிறுத்தமுறையே காதல் கைம்மிக்க காவலன் சரிதையை யாராயப்புகுவாம். நாடகத்துக்கு இன்றியமையாச் சிறப்பினதாகிய சந்தியென்னும் உறுப்பு இச்சரிதை யினுள் இன்னவாறு அமைந்துநின்றது என்பதைக் காட்டும்பொருட்டுச் சந்தியின் உட்பிரிவாகிய காட்சிகள் ஒவ்வொன்றினது சாரததையும் தனித்தனியாகத் தருவாம். வடநூலார் நாடகத்தின் பெரும்பிரிவை அங்கமென வழங்குவார். தமிழில் நாடகமெழுதினேர் அங்கத்தின் உட்பிரிவைக் காட்சியென வழங்கினர். யாமும் அவ்வழக்கைத் தழுவுவாம்.
1,முகம்
முதற்காட்சி:- சாவகதேசத்தரசனுகிய பிரியதத்தமன்னன் தனது உயிர்த்தோழராகிய வீரன், இலாவணன், சோமகன் என்னும் மூவரை யும் விளித்துப் பின்வருமாறு கூறுகிருன். அரசனுரை: வாரீர்நண்பரே! “தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார், தோன்றலிற் ருேன்ருமை நன்று' என்றபடி இவ்வுலகி லுதித்த யாம் புகழினைத் தேடவேண்டும். காலமென்னுங் கழுகானது நம் வாழ்நாளை உண்டு தொலைத்துவிட, மரணம் என்னும் இளிவரல் வந்தெய்துமன்ருே? அங்ங்ணம் வந்தெய்துதற்கு முன்னமே மாருத புகழினைச் சம்பாதிக்கவேண்டும். பூதவுடம்பு கழிந்தபின்பும் நமது புகழுடம்பு எக்காலத்தும் நிலைபெற்றிருத்தல்வேண்டும். ஆதலால், ஆசையென்னு மிருட்சேனையை யடர்ந்தெதிர்ந்து வெல்லவேண்டும். தன்னைத் தான் வென்ற வீரனிலும் பார்க்கப் பெரியவீரன் ஒருவன் உளனே? அத்தகைய வீரராகிய என்நண்பரீர் ! நீவிர் மூன்ருண்டுக்கு என்ஞ்ேடு வாழவேண்டும்; யாம் நால்வரும் சிற்றின்பங்களனைத்தின் யும் வெறுத்துக் கல்வியே கருத்தாக இரவு பகல் சிந்தைவேறற்றுக் கல்வி யில் முழுகியிருத்தல்வேண்டும். நமது அரமனை யொரு கல்விநிலய மாதல்வேண்டும். சாவகநாடு கண்டோருங் கேட்டோரும் அதிசயிக் கும் கல்விக்களஞ்சியமாதல்வேண்டும். நாம் எவ்விதமாக வாழவேண் டும் என்பதைப்பற்றி விரிவாக ஒரு பத்திர மெழுதிவைத்திருக்கி றேன்; அப்பத்திரத்தில் எனது நண்பராகிய நீவிர் கைச்சாத்திடல் வேண்டும்.
இங்ங்ணம் அரசன் கூற இலாவணனும் சோமகனும் உடன்பட்டுக் கைச்சாத்திட்டனர். வீரன் பத்திரத்தைவாசித்துப், பெண்களைக் கண்ணினலும் பார்த்தல்கூடாது என்ற வாக்கியம் ஆங்கு எழுதப்பட் டிருப்பதைப் பார்த்து, அரசனைநோக்கி, ‘அரசே! நாகநாட்டரசன் புதல்வி தோழியர்மூவரோடும் பிற பரிசனர்களோடும் இங்கு வந்திருக் கிருள். r

மதங்கசூளாமணி 19
அரசிளங்குமரியை வரவேற்று உபசரிப்பது தேவரீருடைய கடமை யாயிற்று; ஆதலால் இந்தக்கட்டளையைத் தலைவராகிய தேவரீரே மீறிநடக்கப்போகின்றீர்' என்ருன். அரசனுரை. ஆம், ஆம், இவ்விஷயத்தைப்பற்றி நான் பராமுகமா யிருந்துவிட்டேன். அரசிளங்குமரியை வரவேற்றல் அவசியமான காரி யபேp; ஆதலால் இந்த ஒருசட்டத்தை மீறிநடக்கத்தான் வேண்டும். வீரனுரை, அரசே! அவசியமேற்படும்போது சட்டத்தை மீறிநடப்பது சத்தியத்துக்குவிரோதமில்லையென்பதை நேரிற் கண்டுகொண்டேன்; கைச்சாத்திடுகிறேன்; இந்த மூன்றுவருஷத்துக்குள்ளே மூவாயிரம் அவசியம் ஏற்படுதல்கூடும். அரசனுரை, அன்பரீர் ! நமதுபொழுது சந்தோஷமாகக்கழியும் என் பதற்குச் சந்தேகமில்லை. பலதேசங்களிலும் யாத்திரைசெய்து அநுபவ மடைந்த அதிசூரன் என்னும் அறிஞனெருவன் நமது ஓய்வுநேரங் களில் நமக்கு நல்விஷயங்களைக்கூறி உவகையளிப்பான்.
(இத்தருணத்தில் மட்டி யென்னும் ஒருசேவகன் இருளப்பனென் னும் ஒரு நாட்டுப்புறத்தானையிட்டுக்கொண்டு ராஜசமுகத்துக்குவந்து அரசன் நமஸ்கரித்து ஒரு பத்திரத்தை யளித்தான்.) அப்பத்திரத்தின் சாரம் வருமாறு:-
"என்னுயிர்க்குத் தெய்வமே ! என் உடலைக்காக்கும் எஜமானே ! ஏகசக்கிராதிபதியாகச் சாவகமுற்றையும் காப்பாற்றிவரும் பெருந்த காய் ! பறவை குடம்பையடையும் மாலைப்பொழுதில் எனதுஉடலி லுற்ற சிரமத்தைநீக்கும்பொருட்டு உவவனத்துக்கு உலாவச்சென்றி ருந்தேன். அங்கு நான்கண்ட அருவருப்புக்குரிய செய்தியை யென் னென் றெடுத்துரைப்பேன். கீழ்மகளுகிய இருளப்பன் தேவரீருடைய கட்டளைக்கு மாருக ஒரு பெண்பாலோடு வார்த்தையாடிக்கொண்டிருந் தான். அவனைப் பிடித்துத் தேவரீருடைய சமுகத்துக்கு அனுப்பு கிறேன். பெண்பாவின் பெயர் காஞ்சன; தேவரீருடைய கட்டளை பிறக்கும்வரையும் அவளை என்னிடத்தில் நிறுத்திவைத்திருக்கிறேன்"
இங்ங்ணம், மாரு அடிமைபூண்டஊழியன், அதிசூரன். அரசன் வழக்கை விசாரித்து இருளப்பன் உப்புக்கஞ்சியுணவோடு ஒருவாரஞ் சிறைச்சாலையிலிருக்கவேண்டுமென்று தீர்ப்பிட்டான்.
இரண்டாம்காட்சி:- அதிசூரன் விட்டில் என்னும் சிறுவனேடு வார்த்தையாடிக்கொண்டிருக்கிருன்.
(இச்சம்பாஷணையில் எள்ளலும் இளமையும்பற்றிய நகைச்சுவை தோன்றுகிறது; விரிவஞ்சி மொழிபெயர்க்காது விடுகின்ரும்)

Page 24
20 மதங்கசூளாமணி
இத்தருணத்தில் மட்டியும், இருளப்பனும், காஞ்சனேயும் வரு கிருர்கள். அதிசூரன் காஞ்சனையைநோக்கிச் சோலையிலுள்ள ஒரு வீட்டினைக் காட்டி "அதோபார்; உனது சிறைவீடு; நீ அங்குப் போயிரு; நானே அவ்விடம் வந்து உன்னைத் தண்டிக்கிறேன்' என்று சொல்லுகிருன். அனைவரும் போயினபின்னர் அதிசூரன் தனியே யிருந்து மன்மதபாணத்தின் வலிமையைப் பற்றித் தன்னுள்ளே யாலோசிக்கிருன்.
(இதனேடு முதற்சந்தியாகிய முகம் முடிகின்றது.)
II, பிரதிமுகம்
முதற்காட்சி:- நாகநாட்டு ராஜகுமாரியும், அவளது தோழிய ராகிய சாலினி, மாலினி, கத்துரு என்னும் நாககன்னியரும் அபய னென்னும் நாகநாட்டு மந்திரியும் தோற்றுகின்றனர். சாவகதேசத் தரசன் கைக்கொண்டிருக்கிற மூன்றுவருடவிரதத்தைப்பற்றியும் அரச னது தோழராகிய வீர லாவண சோமகரைப்பற்றியும் நாககன்னியர் தம்முள்ளே பலவாருக வார்த்தையாடுகின்றனர். அரசன் |தனது விருந்தினராகிய நாககன்னியருக்கு நகர்க்குப்புறத்தே விடுதியேற்படுத் தியிருப்பதாக அபயன் சொல்லுகிருன்.
(இத்தருணத்தில் அரசனும் மூன்றுதோழரும் பரிசனரும் வரு கின்றனர்.)
இராஜகுமாரியை அரமனைக்கு அழைப்பது விரதபங்கமாகுமேயென் னும் எண்ணம் ஒருபக்கம் இழுக்க, நகர்ப்புறத்தே விட்டுச்செல்வது மரபாகாதே யென்னும் எண்ணம் மற்ருெ?ருபக்கம் இழுக்க அரசன் செய்வதென்னவென்றறியாது தியங்குகின்ருன். ராஜகுமாரியின் எண் ணம் மெல்லமெல்லப் பிரியதத்தமன்னனுடைய உள்ளத்தைப் பற்று கிறது. வீரன் சாலினியை முன்பு கண்டறிந்தவன்; தன்னை மறந்து அவளோடு பலவாருக வார்த்தையாடுகின்ருன். சோமகன்: (அபயனைநோக்கி) ஐய! ஒருவார்த்தை; அதோநிற்கும்
இளம்பெண்ணின்பெயரென்ன? அபயன்: அவள் எம்மூர்ப் பிரபு ஒருவரது புதல்வி; பெயர் கத்துரு
வாகும். இலாவணன்: (அபயனைநோக்கி) ஐய! ஒருவார்த்தை; தூய வெள்ளை
வஸ்திரந்தரித்துக்கொண்டு அதோ தோன்றும் நல்லாள் யாரோ ? அபயன்: அவள் ஒருபெண். இலாவணன்: அவள் பெயரை விரும்புகிறேன். அபயன்: அவளுக்கு உள்ளது ஒருபெயர். அதனை நீர் விரும்புவது
வெட்கமாகும். இலாவணன்: அவள் யாருடையபுதல்வியென்று தெரிவிப்பீரையா.

மதங்ககுனாமணி 21
அபயன்: அவளை ஈன்றுளது புதல்வியென்று அறிந்துகொள்வீராக.
இலாவணன்: நரைமுதிர்ந்த நுமதுதாடியை இறைவன் என்றுங்
காப்பாற்றுவாராக.
rr • f o a Jell 16ðJ: 9uuu ! கோபித்துக்கொள்ளாதீர்; அம்மடவரலநாகநாட்டுப்
ரை நிலைச் சபை, (அரசனும் தோழர் பரிசனர்களும் போய்விடுகின்றனர்)
1910 5 .16 • لهته{8 إه 36 அயன் இராஜகுமாரின்யநோக்கிச் சா த்துழன்னன் மீது அடங்காக்காதல்கொண் : தான் அதனைக் பினுல் உணர்ந்துகொண் தாகவூஸ்சசுஇகிருன். 6. 1868
(இதனேடு இரண்டாஞ்ச்ந்தியாகிய பிரதிமுகம் முடிகின்றது. ருஞ்சந்தியாகிய கருப்பத்தினதுசஈசத்தைக் கூறுவதற்குமுன் முதலி ரண்டுசந்திகளினது அமைப்பைப்பற்றிச் சிலகுறிப்புக்கள் கூறுவாம். முகமும் பிரதிமுகமும் முறையே முளையும் நாற்றும் போல்வனவென
பிரமசரியநோக்கமும் அதன் பொருந்தாமையும், பொருந் தாச் சட்டத்தைப் பிறப்பித்தோர் தாமே யதற்கு மாறுகொள்வா
சனது தோழ்ர் மூவரும் இராஜகுமாரியினது தோழியர்மூவரையும் நின்றமையும் கூறப்பட்டதாதலின் முதற்சந்தியினுள்
III, கருப்பம்
நகர்ப்புறத்தேயிருந்த பூஞ்சோலையின் ஒருபக்கத்திலே அதிசூரனும் விட்டிலும் தோற்றுகின்றனர். அதிசூரன் தனதுமணம் காதலால் அலைவுற்றிருப்பதைப் பற்றிச் சிலவார்த்தைகள் கூறியபின், விட்டிலை நோக்கிச் சிறைச்சாலையிலிருக்கும் இருளப்பனை அழைத்துவரும்படி

Page 25
22 மதங்கசூளாமணி
கட்டளையிடுகிறன். விட்டில் இருளப்பனையழைத்துவர அதிசூரன் இரு ளப்பனநோக்கித் தான் அவனதுசிறையை நீக்கிவிடுவதாகவும் தான் கொடுக்கும் ஒருகடிதத்தைக் காஞ்சனையிடத்துக் கொடுத்துவிட வேண்டுமென்பதாகவுஞ் சொல்லுகிருன். இருளப்பன் அதற்குச் சம் மதித்துக் கடிதத்தைப்பெற்றுக்கொண்டு புறத்தே போகும்போது அரசனதுதோழருளொருவணுகிய வீரனைச் சந்திக்கிருன். வீரன்: (இருளப்பனைநோக்கி)
""மாலைவந் தடையு முன்னர் மன்னவன் மகளோ டிந்த
சோலையுட் பூக்கள் கொய்யத் தோழியர் மூவர் சார்வுார் சாலினி யென்னு நாமந் தரித்தமெல்லியல்பா லிந்த ஒலையைக் கொடுத்து மீள்த லுன்பெருங் கடமை
956 cilo T Ll-rru i
நிலைகுலைக்க முற்பட்ட சாலினியைப்பற்றியும் தனுள்ளே ெ நெடுமூச்செறிகிருன்; இதனேடு மூன்ருஞ்சந்தியாகிய கருப்ப கின்றது. அதிசூரனும் வீரனும் கொடுத்த கடிதங்களை இரு மாறிக்கொடுத்துவிடுவதையும் அதனுல் நேர்ந்த விளைவினையும் நான் காஞ்சந்தியாகிய விளைவினுட் காணலாகும்)
IV. 66 MT6
முதற்காட்சி:- நகர்ப்புறத்தேயுள்ள பூஞ்சோலையின் ஒருபுக்கத்தில் இராஜகுமாரி, சாலினி, மாலினி, கத்துரு, அபயன் ஆகிய ரும் பரி சனரும் ஒரு வனசரனும் வருகின்றனர். இராஜகுமாரி: செங்குத்தான மலைச்சாரலிலே மிக விரைவாகக் குதிரை
யைச் செலுத்திக்கொண்டு அதோ போகின்றவர் சாவகநாட்டர சரா ?
அபயன்: அரசரல்லவென் றெண்ணுகிறேன். இராஜகுமாரி: யாராயினும் சரி; இன்று நாம் அரசரிடம் விடைபெற் றுக்கொண்டு வருகிற சீனிவாரம் நாகநாட்டுக்குப் போகவேண்டும். (வனசரணைநோக்கி) ஏ வனசரா ! பூஞ்சோலையைப் பார்க்கப்போகும் பொழுது குற்றமற்றமிருகமாகிய மானை அம்பினுல் எய்துவிழுத்து
 
 
 
 
 

மதங்கசூளாமணி 23
தும் மரபாயிற்று; எந்தப் புதர்மறைவிலிருந்து யான் கொலைத் தாழில்புரியவேண்டுமெனக் காட்டுவாய். (இவ்வண்ணம் வேட்டையைப்பற்றி இராஜகுமாரி பேசிக்கொண் டிருக்கிற தருணத்தில் இருளப்பன் வருகிருன்.)
ருளப்பன் தான் கொண்டுவந்த கடிதத்தி லொன்றை இராஜ குமாரியின் கையிற்கொடுத்துச் சாலினியென்னும்பெருமாட்டிக்கு வீரன் என்னும் பிரபு எழுதிய கடிதம் இது என்ருன். இராஜகுமாரி கடிதத்தை அபயன்கையிற் கொடுத்தனள், காஞ்சனையென மேல் விலாச மிடப்பட்டிருக்கின்றதெனினும் பிரித்துப் படித்தலாற் குற்ற மில்லையென நிச்சயித்து, அபயன் கடிதத்தை அனைவர்க்குங் கேட்கும் படியாகப் படித்தனன். அக்கடிதத்தின் சாரம் வருமாறு:-
முன்னுளில் ஓர் அரசன் இரந்துண்ணும் ஒரு பிச்சைக்காரப்பெண் மேல் இச்சைவைத்தான்; யானும் உன்னை இச்சித்தேன். யான்சிங்கம்; நீ ஆட்டுக்குட்டி என் காலடிக்கு வந்துவிடுவாயாயின் அன்புகாட்டி விளையுாடுவேன், மறுப்பாயேல் என் கோபத்துக்கிரையாவாய். உன் அன்புக்குழைக்கும்,
'அதிசூரன். *
(அனைவரும் நகைத்து இக்கடிதம் பிறர்க்குரியதென்றுசொல்லி இரு ளப்பனை அனுப்பிவிடுகின்றனர். யாவரும் போனபின் இருளப்பன் தன்னுள்ளே நகைத்து அதிசூரனுக்குத் தான் இடறுகட்டையாயின மைய்ைப்பற்றிச் சந்தோஷித்துக்கொண்டு போகிருன்.)
இரண்டாங்காட்சி:- பூஞ்சோலையின் மற்ருெருபக்கத்தில் ஒலிவான னென்னு மோர் சட்டாம்பிள்ளையும், நாதனென்னும் போதகரும், மட்டியென்னுஞ் சேவகனும் வருகின்றனர்.
(சட்டாம்பிள்ளை தமதுகல்வியை விரித்துக்கூறும் தடயுடலான வாச கங்களெல்லாம் நகைக்கிடமாவன; விரிவஞ்சியவற்றை மொழிபெயர்க் காதுவிடுகின்ரும். இராஜகுமாரி மானை யெய்துவிழுத்தினசெய்தியைப் பொருளாகக்கொண்டு தாம் எழுதிய செய்யுளைச் சட்டாம்பிள்ளை படித்துக்க்ாட்டிக்கொண்டிருக்கிறதருணத்தில் இருளப்பனும் காஞ் சனையும் ஷ்ருகின்றனர்.) காஞ்சனை: ஐயா ! போதகரே! இந்தக்கடிதத்தைத் தயைசெய்து அடியாளுக்குப் படித்துக்காட்டவேண்டும்.
(காஞ்சனைகொடுத்த நிருபத்தைப் படிக்கிருன்) புளங்கவர ஆணையினைக்கடந்தேன்யான் அன்பாலன்புக் கின்பமிகும்ாணையிட்டேன் எழிலணங்கேநினதுவிழியிரண்டினுள்ளே மன்பதையோர்தேடுகின்றஞானமுற்றும்யான்கண்டேன்மருட்கைகொண்டேன் நின்படிவம்புகழ்ந்துரைக்கும்நாவேநாதிண்பறியும்நெஞ்சேதஞ்சம்.

Page 26
24 மதங்கசூளாமணி
வேலோன்கைப்படையேபோலிணைவிழிகளெனவருத்தும்வெகுளின்மின்னே மேலோங்குமிடியொலியாய்மென்மொழியுமிடர்விளைக்கும்விழுமியோய்நின் பாலாயவனப்பனைத்துந்தேவகுருவகுத்துரைத்தல்பான்மையாமென் போலேயோரறிவில்லானுரைப்பதற்குத்துணிந்தமையைப்பொறுப்பாய்நீயே.
ஒலிவாணன்: (பிறர்பாற் குற்றங்காண்பதே தன்னைக் கல்விமான்ென உலகத்தார் மதிக்கும்படிசெய்வதற்குத் தகுந்தவழி யென்ற்ெண் ணிச் சொல்லுகிருன்.) - அசையைச் சரியா யசைக்கவில்லை; ஆதலால் இசையைத்
விட்டுவிட்டீர். அலகும் அடிக்கணக்கும் தவறில்லாமற்ருன்
கின்றன. என்ருலும், இக்காலத்துப்பாட்டும் ஒருபாட்டா ?
இப்பத்திரத்தை உனக்கு அனுப்பியவன் யாவன்? காஞ்சனை: வீரனென்னும் பிரபுவென்று கேள்வியுற்றேன், ஐய ஒலிவாணன்: **வனப்புமிக்க சாலினியென்னுஞ் சீமாட்டியின
கமலங்களுக்கு, தாசனகிய வீரன் எழுதியது.'
இராஜசமுகத்துக்கு இதனை அனுப்பிவிடுதல்வேண்டும். ஹே ! கையே! சீக்கிரம் ராஜசமுகத்துக்குப் போ.
(அனைவரும் போகின்றனர்) மூன்றங்காட்சி:- பூஞ்சோலையின் மற்ருெருபக்கத்தில் வீரன்கையி லொரு பத்திரத்தோடு வந்து தன் காதலைக்குறித்துத் தன்னுள்ளத் தோடு சம்பாஷித்துக்கொண்டு நிற்கிறதருணத்தில், பிரியதத்த மன்னன் ஒரு பத்திரத்தோடு வருவதைக்கண்டு ஒரு மரத்தின்மேலேறி மறைந்து கொள்ளுகிருன். அரசன்: (தன் கைப்பத்திரத்தைப் படிக்கின்றன்).
அரவிந்தமெல்லிதழினருகணைந்தபணித்துளியையருக்கன்போக்கும் மரபுன்றன்கண்ணுெளியென்முகம்படிந்தகண்ணிரைமாற்றுங்கண்டாய் வருமந்திவேளையினிற்கடலெழுந்தமதியமெனவயங்குஞ்சோதி தருமுன்றன்முகமதியமெனதுகண்ணிராழியினுட்டங்குங்கண்டாய்.
புன்கண்ணிர்த்துளியினுள்ளேநின்படிவந்தோற்றுதலாற்பொருவிலா! என்கண்ணீர்த்துளியனைத்துந்தேராகவெல்போருக்கேகாநின்ருய் வன்கண்மைநினதன்ருலென்கண்முன்வந்துநின்ருேர் மாற்றஞ்செப்பர்ய் மின்கண்ணேவிளங்குகின்றமெல்லிடையாய்நின்னெழிலைவிளம்பற்பாற்
 
 
 
 
 
 
 
 
 

மதங்கசூளாமணி 25
என்மனத்தை வருத்துகின்ற இன்னலை யான் காதலித்த பெண்ணரசி எங்ங்ணம் அறியப்போகின்ருள்; இப்பத்திரத்தை இவ்விடம் போடு கின்றேன்; இனிய தழைகளே என் பேதைமையை மறைப்பீராக. யாரோ வருகின்ருர்கள்.
(அரசன் ஒரு செடிமறைவில் அகன்று நிற்கின்ருன்) இலாவணன் தன்கையி லொருபத்திரத்தோடுவந்து மாலினிபால் தனக்குண்டாகிய அடங்காக்காதலை யெடுத்தியம்பித் தானியற்றிய செய்யுளைப் படித்துக்கொண்டிருக்கும் எல்லையிற் சோமகன் ஒரு பத்தி ரத்தோடு சோலையினுள்ளேவர, இலாவணன் ஒரு மரத்தின்பின்னே மறைந்துகொள்ளுகிருன். வீரன் மரத்தின்மேலிருந்து இவரனைவரு டைய மனநிலையையும்நோக்கிப் பரிகசித்துக்கொண்டிருக்கிருன். சோம கன் தானியற்றிய காதற்செய்யுளைப் படித்தபின் நெடுமுச்செறிந்து அரசன், வீரன், இலாவணன் ஆகிய தோழர்மூவரும் தன்னைப்போல மன்மதபாணத்துக் கிலக்காகுவாரெனின், தன்பாலெய்திய குற்றம் தனிக்குற்றமாகாதெனச் சொல்லிக்கொண்டு நின்ருன். இலாவணன்: (மரமறைவிலிருந்து வெளியேவந்து) ஏது? சோமகா ! உனதுகாதல் வரம்புகடந்ததாகவிருக்கிறது. நீ செல்லும்வழியிற் பிறருஞ்செல்லவேண்டுமென்பது நினதுவிருப்பமாயினும் அதனைப் புறத்தே சொல்லுவது தகுதியாகுமா? அரசன்: (வெளிப்பட்டு) இலாவணு சோமகன்மேல்மாத்திரங் குற் றமோ ? நீ மாலினியைக் காதலித்தெழுதியசெய்யுள் பிறர் செவிக் கும் எட்டிவிட்டதென அறிவாயாக. நான் இச்செடிமறைவிலிருந்து உங்களிருவருடைய முகவேறுபாட்டையும் கூர்ந்து நோக்கிக்கொண் டிருந்தேன். உங்களது நெடுமூச்சும் காதற்செய்யுளும் என்செவி யிற்பட்டன. உங்கள் செய்கையை நமது தோழனுகிய வீரன் கேள்வியுற்ருல் நகையாடுவானன்முே ? வீரன்: (மரத்திலிருந்து இறங்கிவந்து) அரசே! அடியேனை மன்னிக்க வேண்டும். நான் இந்த மரத்தின்மீது நெடுநேரமாக விருக்கின் றேன். எனது அரசர் இராஜகுமாரி ஒருத்திமீதுகொண்ட காத லினுற் பட்டபாட்டை நான் என் கண்ணுரக்கண்டேன். 'கண் ணிர்த்துளி தேராகக் காதன்மடந்தை போர்க்குச் சென்ருள்” எனக் கற்பித்துப் பாடியசெய்யுள் என் செவியிற்பட்டது. சோமகலா வணரைக் குற்றஞ்சொல்லுவதா லென்னபயன்? (என் றிவ்வாறு வார்த்தையாடிக்கொண்டிருக்கிறசமயத்திற் காஞ் சனையும் இருளப்பனும் வருகின்ருர்கள்.) காஞ்சனை: அரசர் பெருமான் நீடுவாழ்க. அரசன்: அதென்ன உன்கையிலிருப்பது? இருளப்பன்: அரசே! இது இராஜத்துரோகம்.

Page 27
26 மதங்கசூளாமணி
காஞ்சன: அரசே! இப்பத்திரத்தைப் படித்தருளவேண்டும். svg
இராஜத்துரோகம் அடங்கியதெனப் போதககுரு கூறினர். அரசன்: இப்பத்திரத்தை உனக்குத் தந்தவன் யாவன்? காஞ்சனே: இருளப்பன். இருளப்பன்: எனக்கு அதிசூரர் தந்தார். அரசன்: (பத்திரத்தை வீரன்கையிற்கொடுத்து) வீரா ! @a.
படிப்பாயாக. (வீரன் பத்திரத்தைப்பார்த்துவிட்டுக் கிழித்தெறிகிருன்). அரசன். ஏதேது? பத்திரத்தை யேன் கிழித்தாய்? இலாவணன்: அரசே! வீரன்முகத்திற் கோபக்குறியைக் கண்ே ன் ;
ஆதலால், பத்திரத்தை நாம் அனைவரும் பார்க்கவேண்டும். சோமகன்: (பத்திரத்தின் துண்டுகளை நிலத்திலிருந்து கையிலெடுத்துக் கொண்டு) அரசே! இப்பத்திரம் நமது தோழனுகிய வீரனுடைய கையினல் எழுதப்பட்டிருக்கிறது. வீரன்: (இருளப்பனை நோக்கி) மூடப்பயலே எனக்கு வெட்கத்தைக் கூட்டிவைக்கவா நீ பிறந்தாய்? (அரசனை நோக்கி) அரச்ேயான் தவறிழைத்துவிட்டேன். அடியேனை மன்னிக்கவேண்டும்.
(இருளப்பனும் காஞ்சனையும் போய்விடுகின்றனர். நண்பர் 4 வார்த்தையாடி வீரன் சாலினிமேற் காதல்கொண்டிருப்பதை அறிந்து கொள்கின்றனர்.)
வீரனுடைய காதலியாகிய சாலினி நிறத்தில் அடுப்புக்கரியைப் போன்றவளெனக்கூறித் தோழர் மூவரும் வீரனைப் பரிகசிக்கின்றனர். வீரன் காதற்சிறப்பைப்பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றன். நாக கன்னியருடைய அன்பைப் பெறுவதற்குவேண்டிய சூழ்ச்சிசெய்ய வேண்டுமென்று அனைவருங்கூடி ஆலோசிக்கின்றனர். இதனேடு நான் காஞ் சந்தியாகிய விளைவு முடிகின்றது.
V, துய்த்தல்
முதற்காட்சி:- ஒளிவாணனும், நாதனும், மட்டியும், விட்டிலும், இருளப்பனும், அதிசூரனும் ஒன்றுசேர்ந்து வாணுசுரநாடகத்தை இராஜசமுகத்திலே நடிக்கவேண்டுமென்று ஏற்பாடுசெய்கின்றனர்.
இரண்டாங்காட்சி:- இராஜகுமாரி, சாலினி, மாலினி, கத்துரு வாகிய நால்வரும் தமது காதலர் நால்வரைப்பற்றியும் அவரனுப்பிய முத்துமாலை முதலிய கையுறைகளைப்பற்றியுங் கலந்து வார்த்தையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் அபயன் உட்புகுந்து அரசனும் தோழரும் ஆயர்வேஷம் அணிந்துகொண்டு இராஜகுமாரியிருக்கும் விடுதியை நோக்கிவருவதாகத் தெரிவிக்கிருன். உடனே நாககன்னியுர் நால்
 

மதங்கசூளாமணி 27
வரும் முகமறைய வர்ணந்தீட்டி ஆய்ச்சியர்வேஷம் அணிந்துகொண்டு நின்றனர். அரசனும், தோழரும், யாழோன், குழலோன், தண்ணுமை யோன் முதலிய வாத்தியக்காரரும் உட்புகுந்தனர். வந்த ஆயர் நால் வரும் குரவைக் கூத்தாடும்நோக்கமாக ஆய்ச்சியர் நால்வருடைய கையையும் பற்றப்போக ஆய்ச்சியர் மறுதலித்துநின்றனர். பலவாரு கப் பரிந்துவேண்டக் குரவையாடுதற்கு உடம்படேமென்ற கன்னியர் ஆயர்வேடத்தோடுவந்த நால்வருக்கும் தமது கையைத்தொட்டு உட னிருந்து வார்த்தையாடுவதற்கு உத்தரவளித்தனர். யாழ் முதலிய வாத்தியங்கள் முழங்கின. முகம் மறைக்கப்பட்டிருந்தமையால் இன்னு ளென்றறியாதகாரணத்தினுல் அரசன் சாலினியினது கரத்தைப்பற்றி மருங்கிருந்து தனது காதன்மிகுதியை யுரைத்தான், வீரன் இராஜ கும்ாரியினது கரத்தையும், சோமகன் மாலினியதுகரத்தையும், இலா வணன் கத்துருவினதுகரத்தையும்பற்றித் தமது காதன்மிகுதியைப் பெருகவுரைத்தனர். சிறிதுநேரத்தில் அரசனுந் தோழரும் அகன்றனர். நாககன்னியர் வேடிக்கையாகத் தங்காதலர் நால்வருடைய காதன் "மொழியைப்பற்றியும் வார்த்தையாடிக்கொண்டிருந்து பின்பு சோலை
யைவிட்டு விடுதியினுட்புகுந்தனர். அரசனும் தோழரும் சொந்த உடை , நாககன்னியர் நால்வரும் சொந்த உடையணிந்து சோலையினுள் வந்தனர். எண்மரும் கலந்து வார்த்தையாடுங்கால், கன்னியர்நால் வரும் தம்பாற் காதலுற்ருேரைநோக்கி விரதபங்கஞ்செய்வது தகாத செய்கையெனவும், காதற்கிடங்கொடுத்த நெஞ்சத்தை நிலைநிறுத்த வேண்டுமென்றும் பரிகசித்துக்கூறி வற்புறுத்தினர். இத்தருணத்தில் இருளப்பனும், ஒலிவாணனும், மட்டியும், விட்டிலும், நாதனும், அதிசூரனும் ஒருவர் பின்னுெருவராக வந்து அரசன் முதலிய எண் மருங் கூடியிருக்கின்ற சபையின் முன்னிலையில் வாணுசுரநாடகத்தை நடிக்கவாரம்பித்தனர்.
(இவ்வங்கத்தினுள்ளே பேதைமைபற்றிய நகைச்சுவை நிரம்பத் தோற்றும்)
வாணுசுரநாடகம் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, அரசனும் தோழரும் காதல்கைம்மிக்க தமது நிலையை யெடுத்துக்கூறிக் கிருபை செய்யவேண்டுமென நாககன்னியரைக் குறையிரந்து வேண்டினர். இத் தருணத்தில் நாகநாட்டிலிருந்து மரகதனென்னும் மந்திரி வந்து நாகநாட்டரசன் இறந்துபோய்விட்டசெய்தியைத் தெரிவித்தான். கன் னியர் அரசனையும் தோழரையும் நோக்கி ஒருவருஷத்தில் மீள்வதாகச் சொல்லிப் போய்விடுகின்றனர். மணந்தார்க்கு இன்பினையளிக்கும் வேனிற்கால வருணனையாகவுந் தணந்தார்க்குத் துன்பினையளிக்குங் கூதிர்க்கால வருணனையாகவும் உள்ள இரண்டுபாடல்களை அரங்கிலுள்ளோர் சிலர் பாடுவதோடு நாடகம் முடிகின்றது. இந் நாடகத்துக்கு ஆக்கியோரிட்ட பெயரை நேராக மொழிபெயர்த்துச்

Page 28
28 LD5tessary of
சொல்லுவதாயின் ‘காதன்முயற்சிக்கிடையீடு" என்று சொல்லலாம். மிகவும் எளிதான ஒரு பொருண்முடிபின்மேல் எழுந்த இந்த நாடகத்தி னமைப்பை அவதானித்து அறிந்துகொள்ளுதல் ஏனைய நாடகங்களி னமைப்பைக் கிரகித்துக்கொள்ளுவதற்குச் சிறந்த சாதனமாகும்.
இந் நாடகத்தினுள் இகழ்ச்சி, இளமை, பேதைமை, மடன் என்
னும் நான்குபொருட்பகுதியும்பற்றிப் பிறந்த நகைச்சுவை தோற்றி னமை காண்க. நகைச்சுவைக்கு நேர்விரோதமானது அவலச்சுவை (அழுகை). இது இளிவு, இழவு, அசைவு, வறுமையென்னும் நான்கு பொருட்பகுதியும்பற்றிப் பிறக்கும். மூப்பு, பிணி, வருத்தம், மென்மை யென்னும் நான்கும்பற்றித் தோன்றுவது இளிவரற்சுவை. மூப்பு முத லியவற்ருற் றுன்புறுவோன் பிறரால் இகழப்பட்டு எளியணுகியவழி அவனிடத்து அவலந்தோன்றுமாதலால், அவலமும் இளிவரலும் ஒரே நாடகத்தினுட் பொருத்திவருத லியல்பாகும்.
உ. அவலச்சுவை இளிவரற்சுவைக்கு இலக்கியமாக யாம் எடுத்துக் கொண்ட ஆகுலராஜன்சரிதையினதுகதைச்சுருக்கம் வருமாறு;-
சிங்கபுரத்துமன்னனுகிய ஆகுலவர்ம்மன் தனதுபுதல்வியராகிய மாணிக்கமாலை, கனகமாலை, குணமாலை யென்னும் மூவரையும் அழைத்து, "மூப்புவந்துற்றமையினல் யான் அரசியற்கடமைகளி லிருந்திளைப்பாறப்போகின்றேன்; இராஜ்யம் இனி நுமக்குரியதாகும்: எனதுபுதல்வியராகிய நும்முள் எவள் என்மீது நிறைந்த அன்பு
உடையவளாக இருக்கின்ருளோ அவளுக்கு நிறைந்தபாகத்தைக். கொடுப்பேன்’ என்றன். மாணிக்கமாலையும், கனகமாலையும் வயோ திகளுகிய ஆகுலவர்ம்மனுடையசெவிக் கின்பம்பயக்கும் இச்சகமொழி
களை யுரைத்துத் தாம் தம் உயிரினும்பார்க்கத் தந்தையை நேசிப்ப தாகச் சொன்னர்கள். குணமாலை ஒன்றும்பேசாது மெளனமாயிருந் தாள். அரசன் வற்புறுத்திக்கேட்கக் குணமாலை சொல்லுவாள்; ‘அரசே! தேவரீர் என்னைப் பெற்று வளர்த்த பிதா, அங்ங்னமாயினும் எனது முழு அன்பும் தேவரீருக்குரியதென்றுசொல்ல அடியாளுக்கு உரிமையில்லை. நான் ஒருநாயகரை அடையப்போகின்றேன்; எனது அன்பிற் சரிபாதி அவருக்கு உரியதாகுமல்லவா? எனதுசகோதரிகள் விவாகம் முடித்தவர்களாயிருந்தும் தங்களது அன்புமுற்றும் தேவரி ருக்கு என்ருர்களே தங்கள் நாயகருக்கு மிச்சம்வைத்திருக்கிருர்களோ, அறியேன்!” இவ்வாசகத்தைக்கேட்ட அரசன் சினந்து தனதுநாட்டை இரண்டுகூறுசெய்து மாணிக்கமாலையினுடையநாயகனுகிய அரிவர்ம் மன்வசம் ஒரு பாகத்தையும் கனகமாலையின்கணவனகிய வீரவர்ம்மன் வசம் மற்ருெரு பாகத்தையும் ஒப்புவித்துவிட்டான். இச்சகம்பேசாது உண்மைகூறப்புகுந்த குணமாலைக்கு ஒரு செப்புக்காசுங் கிடைக்க வில்லை. இத்தருணத்திற் கெளதமன் என்னும் அமைச்சன் முற்பட்டு அரசனுக்குப் பலவாருகிய நீதிவாக்கியங்களையும் எடுத்தியம்பிக் 'கைப்பொருளைக் கொடுத்துவிடுவது தவறு" எனக் கூறினன். அரசன்

மதங்கசூளாமணி 29
சினங்கொண்டு அந் நன்மதியமைச்சனை நாட்டிலிருந்து துரத்திவிட் டான். சீதனமில்லாத குணமாலையை அவளது குணநலத்துக்காக விரும்பி மணிபுரத்தரசன் மணமுடித்துத் தன்னுரர்க்குத் கொண்டு சென்றனன். ஆகுலவர்ம்மன் தனதுபொருளனைத்தையும் புதல்வியர் கையிற் கொடுத்துவிட்டமையினுல், மாணிக்கமாலையுடையவீட்டில் ஆறுமாதமும் கனகமாலையுடைய வீட்டில் ஆறுமாதமுமாக ஒவ்வோர் ஆண்டினையுங் கழிப்பதற்கு ஏற்பாடுசெய்தான். மூத்தபுதல்விவீட்டிற் போயிறங்கிச் சிலநாட்கள் ஆவதற்கு முன் அவள் வயோதிகளுகிய ஆகுலவர்ம்மனைப் பலவாருக அவமதித்து நடத்தத்தொடங்கினுள் கெளதமனென்னும் அமைச்சன் அரசனைப் பிரிந்திருத்தலாற்ருது மாறு வேடம்பூண்டு ஆகுலவர்ம்மனிடம்வந்து ஒருவேலைக்காரணுக அமர்ந் திருந்தான். மாணிக்கமாலையுடைய தலைமைச் சேவகளுகிய காசிபன் எஜமானியினுடைய கட்டளைப்படி வயோதிக அரசனை அவமதிக்க அதனைப் பொறுக்கமாட்டாது கெளதமன் காசிபனையுதைத்தான்; மாணிக்கமாலை புறத்தேவந்து தனது தந்தையையிகழ்ந்து வார்த்தை பாட அதனைக் கேட்ட ஆகுலன் கைப்பொருளையிழந்த தனது மதி யீனத்தை நினைத்து அவலித்துக் கனகமாலையினுடைய வீட்டை நோக்கி நடந்தான். வயோதிகராஜனை அடுத்து ஆதரிக்கவேண்டாமென்பதாக மாணிக்கமாலை தனது சகோதரிக்கு ஒரு நிருப மெழுதி அதனைக் காசிபன்கையிற் கொடுத்து அனுப்பினள். விரைந்துபோன காசி பனைக் கனகமாலையினது தலைவாயிற்கடையிற் கெளதமன் சந்தித் தான். இருவருக்கு மிடையிற் சில வேறுபாடுகள் நிகழக் கெளதமன் காசிபனை யுதைத்தான். கனகமாலை கெளதமனைத் தனது தந்தை யினது சேவகனென்று சிறிதேனும் மதியாது அவனுக்குக் கால்விலங் கிட்டுக் கடைவாயிலில் இருத்தினுள். ஆகுலன் கனகமாலையுடைய வாயிலைக்கிட்டிக் கெளதமன் கால்விலங்கோடிருப்பதைக் கண்டு கோபா வேசங்கொண்டு, அங்ங்னம்செய்தார் யாவரோவென்று விசாரித்துக் கொண்டிருக்கும்போது கனகமாலையும் வீரவர்ம்மனும் வந்துசேர்ந் தனர். கனகமாலை தந்தையை நோக்கி, "அக்காள்வீட்டிற்குப்போய் இரண்டுவார்ந்தான்ஆயிற்றே; இதற்கிடையில் இங்கு வந்துவிட்டீர்; உம்மை உபசரிப்பதற்கு இங்கு ஒரு ஏற்பாடுமில்லை;' என் றிவ்வாருக வைதுகூறினுள். இத்தருணத்தில் மாணிக்கமாலையும் தங்கைவிட்டுக்கு வந்துவிட்டாள். இருவருமாகத் தந்தையை வைதார்கள். ஆகுலன் மனம்பொறுக்காது நன்றிகெட்ட தனது புதல்விய ரிருவரையுஞ் சபித்துவிட்டுக் கால்விலங்கு நீக்கப்பட்டுநின்ற கெளதமனேடும் தன்னை யகலாது என்று முடன்றிரிகின்ற விதூஷகனேடும் நகர்ப்புறத்தை நோக்கி நடந்தான். குணதரன் என்னும் பிரபு முற்பட்டுப் பலவாரு கிய சமாதானஞ்சொல்லியும் ஆகுலன் கேட்கவில்லை. இந்தக் குண தரனுக்கு இருவர்மக்க ளுளர். மூத்தவனகிய மதனன் ஒரு விபசார புத்திரன் இளையவனகிய வரதன் சொந்த மனைவி வயிற்றிற் பிறந்த வன். மத்னன் வஞ்சனையினலே வரதனுக்குத் தந்தைக்கும் பகையுண்

Page 29
30 மதங்கசூளாமணி
டாக்கிப் பிரித்துவிட்டுத் தானே அன்புள்ளபத்திரன் என்று தந்தை நினைக்கும்படியாக நடந்துவருகிருன். வரதன் குற்றவாளியாகச் சாட் டப்பட்டமையால், அவனைப் பிடித்துவரும்படி இராஜகட்டளை பிறந் திருந்தது. மதனன் தந்தைக்குச் சூதுசெய்வான் என்பதை யறிந்த வரதன் பிச்சைக்காரன்போல வேஷம்பூண்டு நகரத் தெருவிலேயே மறைந்து திரிகிருன்.
இவ்வளவோடு முகமும் பிரதிமுகமும் முடிகின்றன. விரிவஞ்சித் தனித்தனி அங்கங்களுக்குச் சாரங்கூருது அனைத்தினையும் ஒன்ருகத் தொகுத்துக் கூறினும். இனி, கருப்பம் விளைவு துய்த்தல் ஆகிய மூன்று சந்திகளினுடைய சாரத்தையுந் தருவாம்.
மின்னலும் பேரிடியும் பெருமழையும் நிறைந்த இராப்பொழு திலே ஆகுலவர்ம்மன் ஒதுங்கிநிற்பதற்கு இடமின்றி, வெட்டவெளி யில் அலைகிருன் கெளதமன் ஒரு சிறு குடிசையைக்காட்டி அதனுள் நுழைந்து சற்று ஆறியிருக்கும்படி வேண்ட, ‘நன்றிகெட்ட புதல்வி யருடைய நிந்தைமொழிகளினும்பார்க்க இவ்விடிமுழக்கம் கொடி யதோ' என்று சொல்லிக்கொண்டு ஆகுலவர்ம்மன் உட்புகுந்தான். அக்குடிசையினுள்ளே பிச்சைக்காரவேஷம்பூண்ட வரதன் படுத்திருந் தான். அவனைக்கண்ட ஆகுலன், 'ஏதப்பா ! கந்தைத் துணியுமின்றி இந்தக் குடிசையினுள் இருக்கிருய், நீயும் இரண்டுபுதல்வியருக்குக் கைப்பொருளைக்கொடுத்துவிட்டு இக்கதியை அடைந்தனையோ?" என் ருன். மனக்கவலையினலும், வாடைக்காற்றினலும் அல்லலுற்ற ஆகு லன் தன் சுயபுத்தியிழந்து பைத்தியக்காரனனன். இஃதிவ்வாறிருக் கத் தேசத்துச் சனங்கள் தமது வயோதிக அரசனை மீட்டுஞ் சிங்காச னத்திலேற்றவேண்டுமென்று அதற்காகவேண்டிய சூழ்ச்சி செய்திருந் தார்கள். இதனையறிந்த புதல்வியரிருவரும் தந்தையைக் கொன்று விட்டாற்ருன் தமக்கு அரசியல் நிலைக்குமென்று நினைத்துத் தமது வஞ்சக்கருத்தை நிறைவேற்றுவதற்கு வழி தேடிக்கொண்டிருந்தார் கள். ஜனங்களுடைய வேண்டுகோளின்படி மணிபுரத்தரசன் சிங்க புரத்தின்மீது படையெடுத்துச்செல்வதற்கு எற்பாடுசெய்திருந்தான். இவற்றையெல்லா மறிந்த குணதரனென்னும் பிரபு அரசனைப் பாது காக்கநினைத்துப் புறத்தேபோதற்கெண்ணித் தன்மகன் மதனன நோக்கி, ‘வாராய் மதனு! எனது அரசருடையகாரியமாக ஒரு நிருபம் வந்திருக்கிறது. நான் புறத்தே போய்வருகிறேன்; இவ் விஷயத்தை யார்க்குஞ் சொல்லாதே’ என்று சொல்லிவிட்டு அப் பெருமழையிலே நகர்ப்புறத்துக்குப் போய்க் கெளதமனைக் கண்டு ஆகுலராஜனை மணிபுரத்தெல்லைக்கு அனுப்பிவைப்பதற்கு ஆகவேண் டிய ஏற்பாடுகள் செய்துவிட்டுவந்தான். வஞ்சகளுகிய மதனன் தந்தை போயினபின்னர்க் குறிப்பிட்ட கடிதத்தைத் தேடியெடுத்துத் தந்தை கொலைக்களத்துக்கு ஆளானலும் தான் வாழவேண்டுமென்னும் நோக் கத்தோடு கடிதத்தைக் கொண்டுபோய் வீரவர்ம்மன்கையிற் கொடுத்

மதங்கசூளாமணி 31
துவிட்டான். குணதரன் திரும்பிவர வீரவர்ம்மனுடைய சேவகர் களுள் ஒருவன் அவனைப் பிடித்துத் தூணுேடுகட்டினன். கனகமாலை நெருங்கிவந்து, ‘மூடா ! உன் துரோகச் செயலையெல்லாம் அறிந்து கொண்டோம். வயோதிகராஜன் எங்கே?' என்று வினவினுள். ஆகுல ராஜன் உயிர்தப்பியிருக்கும்வரையும் தங்களுக்கு இராஜ்யம் நிலை யில்லையென்பதை யுணர்ந்தாளாதலினல், இந்தவிஷயத்தை மிகுந்த ஆத்திரத்தோடு வினவினுள். அரசனை மணிபுரத்துக்கு அனுப்பிவிட்ட தாகக் குணதரன் கூறக் கனகமாலை கோபாவேசங்கொண்டு அவனது நரைத்ததாடிமயிரைப் பற்றிப் பிடுங்கியெறிந்தாள். வீரவர்ம்மன் நெருங்கித் "துரோகி உன்கண்ணை மிதிக்கிறேன் பார்’ என்று குண தரனுடைய ஒருகண்ணேப் பிடுங்கி நிலத்திற்போட்டு மிதித்தான். மற்றக்கண்ணையும் பிடுங்குகிற தருணத்தில் அருகில்நின்ற சேவக ஞெருவன் இக் கொடுஞ்செயலைக் கண்டு மனஞ்சகிக்காது வாளையுருவி வீரவர்ம்மனைக் குத்தினன். கனகமாலை ஓடோடியும் வந்து அச் சேவகனைக் குத்திக் கொன்றுவிட்டாள். காயப்பட்ட வீரவர்ம்மனை உள்ளே தூக்கிச்சென்ருர்கள். இரண்டுகண்ணுமிழந்த குணதரன், "ஐயோ! என்னன்புள்ள மகனே! மதன! நீ எங்குற்ருய், என்று அழுதான்.' கனகமாலை நகைத்து, ‘‘ஏடா! மூடா! உன்மகன் மதனன் உள்ளதையுரைத்து உனக்கு இத்தனை கேட்டையும் வரப் பண்ணினுன். அவன் உனக்கு இரங்குவானென்று நினைக்கிருயா?* வெளியே பிடித்துத்தள்ளிவிடும்படி கட்ட்ளையிட்டாள்.
(இவ்வளவோடு மூன்ருஞ்சந்தியாகிய கருப்பம் முடிகின்றது.)
கண்ணிரண்டு மிழந்து வழிதடுமாறி அலைவுற்றுவந்த தந்தையை வரதன் சந்தித்துத் தன்னை இன்னுனென்றறிவியாது அன்பினேடு தந்தையினுடைய கரத்தைப்பற்றி ஆறுதல்வார்த்தைகூறி, மணிபுரத் தினெல்லையை நோக்கி அழைத்துச் சென்ருன். இ8 திவ்வாருக மணி புரத்துச் சைனியங்கள் சிங்கபுரத்துச் சைனியங்களை யெதிர்த்துக் கடும்சமர்புரிந்தன. சேவகஞற் குத்துண்ட வீரவர்ம்மன் முன்னமே யுயிர்துறந்தானதலினல், கனகமாலை மதனனையழைத்துத் தனது சேனைக்குச் சேனபதியாகவும் தனக்கு நாயகனுகவும் இருக்கும்படி வேண்டினுள். தங்கையுடைய சேனைகளுக்கு மதனன் சேனைத் தலைவ ஞகச் செல்லுகிருன் என்பதைக் கேள்வியுற்ற மாணிக்கமாலை தனது கணவன் அரிவர்ம்மன் உயிரோடிருக்கவும் மதனன்மீது பொருந்தாக் காதல்கொண்டிருந்தாளாதலினல், தங்கையினின்றுபிரித்து மதனனைத் தான் கைப்பற்றவேண்டுமென்றெண்ணி மதனனுக்கு ஒரு நிருபமெழுதிக் காசிபன்கையிற் கொடுத்தனுப்பினுள். காசிபன் வழி யிற்செல்லும்போது குணதரனைக் கண்டு அவனைக் கைதியாக்குவதற்கு நெருங்க, வரதன் எதிர்த்துவந்து தன் கைவாளினுற் காசிபனை வெட்டி

Page 30
32 மதங்கசூளாமணி
ஞன். காசிபனுடைய அங்கியினுள்ளிருந்த பொருள்களைச் சோதித்துப் பார்க்கும்போது, மாணிக்கமாலை மதனனுக்கு எழுதிய கடிதம் அகப் பட்டது. அதன் உள்ளுறை வருமாறு:-
‘நாம் ஒருவருக்கொருவர் செய்துகொண்ட சத்தியத்தை நினைவு கூருவீராக. நமது பகைவனை முடித்துவிடுவதற்குப் பல வசதிகளேற் படும்; மனமுண்டாஞற் காலமு மிடமும் செளகரியப்படாமற் போக மாட்டா. அவன் வெற்றிபெற்றுவந்தால் என்பாடு சிறைச்சாலை தான். அவனுடைய சயனமாகிய சிறைச்சாலையிலிருந்து என்னை விடு வித்து உம்முடைய கஷ்டத்துக்குக் கூலியாக உம்முடைய மாற்ருனது இடத்தை உமதிடமாக்கிக்கொள்ளும்!"
இங்ங்னம், உம்மை நாயகனென்றழைக்கவிரும்பிய, உமது அன்புள்ள அடியாள் மா னிக்க மாலை.
இந்நிருபத்தை வரதன் கொண்டுசென்று மாணிக்கமாலையின் நாயக ஞகிய அரிவர்ம்மன்கையிற் கொடுத்தான். இந்நிகழ்ச்சிக ளிவ்வாருக, மணிபுரத்தெல்லையையடைந்து குணதரன் ஆகுலராஜனைத் தழுவி
விதியை நொந்து துன்புற்று அழுகிருன். தீயபுதல்வனகிய மதன
னுடைய சூழ்ச்சியினுற் குணதரன் கண்ணிரண்டு மிழந்தான். தீய புதல்வியரிருவருடைய வஞ்சனையினல் ஆகுலன் அனைத்தையு மிழந் தான். நற்குணசீலையும் மணிபுரத்தரசன் மனைவியும் ஆகுலராஜனது மகளுமாகிய குணமாலை தந்தைக்கு நேர்ந்த இன்னலனைத்தினையுங் கேள்வியுற்று அரமனைவைத்தியனையும் அழைத்துக்கொண்டு விரைந்து வந்து தந்தையைச் சந்திக்கிருள். குணமாலை மனமுருகிக் கண்ணிர் சொரிவதும் தந்தை தன் குற்றத்தை மன்னிக்கும்படி மகளை வேண்டிக் கொள்வதும், இவற்றைக்கண்ட கெள்தமன் முதலினேர் அவலக் கண்ணிர்சொரிவதும் நான்காஞ்சந்தியாகிய விளைவின் ஈற்றுப்பாகங்
S56TIT6AJGT.
மதனன் யுத்தத்தில் வெற்றிபெற்றுவருகிருன் .சிங்கபுரத்துச் சேனை கள் மணிபுரத்துச்சேனைகளை வென்றமையால், ஆகுலராஜனும் குண மாலையும் யுத்தக்கைதிகளாகிச் சிறைச்சாலையி லடைபட்டார்கள்.
மதனன்மேல் அடங்காக்காதல்கொண்ட பாணிக்கமாலை தனது தங்கை கனகமாலையைத்தொலைத்துவிட்டால், மதனன் தனக்காவா னென்றெண்ணித் தங்கைக்கு நஞ்சூட்டி விடுகிருள். அரிவர்ம்மன் மதனனையணுகி அவனது வஞ்சச்செயலையுணர்த்தி, ‘'இப்படுபாவி யோடு முனைந்து சண்டையிடுவதற்கு இவ்விராஜ்யத்தி லொரு வீர னில்லையோ' என அழைக்க, வரதன் தோற்றி, மதனனேடு வாள் யுத்தஞ்செய்து, தன் கைவாளினல் மதனனைக் குத்திவிழுத்துகிருன்.

மதங்கசூளாமணி 33
மதனன் விழுந்ததையும், தனது பொருந்தாக்காமம் வெளியாயின தையும் அறிந்த மாணிக்கமாலை வாளையெடுத்து நெஞ்சிற்பாய்ச்சி உயிர்துறக்கிருள். மதனன் உயிர்துறக்குந்தருணத்தில் தன்பக்கம்நின் ருேரையழைத்துத் தான் மாணிக்கமாலையின் விருப்பப்படி குணமால் யைத் தூக்கிலிட்டுக்கொல்லும்படி கட்டளை பிறப்பித்ததாகவும், விரைந்துசென்ருல் அக்கட்டளையை நீக்கிவிடலாமென்பதாகவுஞ் சொல்லுகிருன். அதற்குமுன் கட்டளை நிறைவேறிற்று. குணமாகில யின் உயிர்துறந்தஉடலத்தைக் கையிலேந்திக்கொண்டுவந்த ஆகுல ராஜன் அடங்காத்துயரினலே மூர்ச்சித்து உயிர்துறக்கிருன். இச் செயலனைத்தையுங் கண்ணுற்ற அரிவர்ம்மன் முதலிய அனைவரும் அவலக்கண்ணிர் சொரிகின்றனர். இவ்வளவோடு நாடகம் முடி கின்றது.
இந்நாடகம் முழுதும் அவலச்சுவையும், இளிவரற்சுவையும்பெற்று வருதலையும் பிறகவை பெருதுவருதலையும் நோக்குக. புறத்திணைப் பாலதாகிய இதனுள், பிறகவை கலந்துவரின் மாறுபட்ட சுவைகள், ஒன்றினையொன் றழித்து நாடகத்தினியல்பையே வேறுபடுத்திவிடு வனவாதலால், இங்ங்ணம் அமைத்தது சிறப்பாயிற்று. கதையினுள் ஒரு கிளைக்கதை தோற்றுவதையும், கதையும் கிளைக்கதையும் பொருளே யும் பிரதி விம்பத்தையும் போல ஒன்றினையொன்று நிகர்த் திருப்பதை யும் நோக்குக. ஆகுலராஜனைப் போலவே குணதரனும் துன்புறு கின்ருன். மாணிக்கமாலை கனகமாலையைப்போல, மதனன் தந்தைக் குத் தீங்கிழைக்கிருன். தந்தையரால் வெறுத்தொதுக்கப்பட்ட குண மாலையும் வரதனும் தந்தையர்க்கு நன்மைபுரிகின்றனர்.
க. இனி, இரம்மியன் சுசீலை சரிதையை யாராயப்புகுவாம். இந் நாடகத்தினுள் அவலமும் உவகையும் நிரம்பிவருகின்றன. அன்புடை யாரோடுகூடி யின்பநுகர்ச்சியெய்தினேர் அவ்வன்புடையாரைப் பிரிந்தஞான்று துன்புற்றவலிப்பாராதலினுல் ஒரே நாடகத்தினுள்ளே அவலமும் உவகையும் ஒருங்குதோற்றுவது மியல்பாயிற்று. கதைச் சுருக்கத்தையும் சுவைநிறைந்த சிற்சில பாகங்களின் மொழிபெயர்ப் பையுந் தருவாம். சோழன்கிள்ளிவளவன் நீதிநெறிதவழுது அரசு புரிந்து வருகின்ற காலத்திலே, மன்னஞல்மதிப்புப்பெற்ற பழங்குடி களுட் டலைமையெய்தினேராகிய பண்ணன்குடியாரும் மலையன்குடி யாரும் இராஜதானியாகிய உறையூரிலே வசித்துவந்தார்கள். இவ்விரு குடியாருக்கு மிடையில் நெடுநாளாகப் பகைமை யேற்பட்டிருந்தது. பண்ணனைச் சேர்ந்தோரும் மலையனைச் சேர்ந்தோரும் ஒருவர் மற் ருெருவரைக் கண்டாற் காரணமின்றி வாளையுருவிச் சண்டையிடுவர். அரசன் இவ்விருகுடியாருடைய பகைமையையுங் கண்டு அது தன்னர சியலுக்கே கேட்டை விளைவிப்பதென வெண்ணி அப்பகைமையை நீக்கிவிடுவதற்குத் தன்ன லியன்ற முயற்சி செய்தும் வாய்க்கவில்லை.

Page 31
34 மதங்கசூளாமணி
பண்ணனுக்குப் பலவகைவணப்புக்களும் நிறைந்த ஒரு புதல்வி யிருந்தாள்; அவள்பெயர் சுசீலை. மலையனுக்கு ஒரே புதல்வனிருந் தான்; அவன்பெயர் இரம்மியமலையன். இரம்மிய ஞெருநாள் தனது இனத்தாணுகிய வண்கைமலையனேடும் நண்பனுகிய மார்த்தாண்ட சோழனுேடும் நகரவீதியிற் போகும்போது, ஏவலாளணுெருவன் ஒரு பத்திரத்தைக் கொடுத்து அதனை வாசித்து விளக்கும்படி கேட்டான். இரம்மியன் பத்திரத்தைப் படித்துப்பார்த்தபோது அன்றிரவு பண் ணன்மனையில் ஒரு விருந்து நடக்கப்போவதாகவும் அதற்குப் பண்ணனுடைய இனத்தார் பலர் அழைக்கப்பட்டிருப்பதாகவும் அறிந் தான். யாதுவரினுந் தானு மவ்விருந்துக்குப் போகவேண்டுமென்று மனத்தில் நிச்சயித்த இரம்மியன் தன்கருத்தை உடன்வந்த இரு வருக்குந் தெரிவித்தான்; அன்னரும் போதற் குடன்பட்டனர். இரவு வருதலும் மூவர் நண்பரும் பண்ணன்வீட்டை யடைந்தனர். ஆங்கு இரம்மியனைக் கண்டமாத்திரத்தே பண்ணனது மைத்துனனுகிய தீவல மல்லனென்பான் வாளையுருவிக்கொண்டு எதிர்த்துச்சென்ருன். ‘விருந் தாக வந்தவரை எதிர்த்தலாகாது’ என்று பண்ணன் தடுத்தனன். பண்ணனுடைய புதல்வியாகிய சுசீலையை இரம்மியன்கண்டு அவளழகி லீடுபட்டுக் காதல்கொண்டு யாருமில்லாநேரம்பார்த்து அவளருகிற் சென்று இரண்டொரு வார்த்தை கூறுகிருன். அவளு மிவன்மேற் காதல்கொண்டு விருந்தினர் போகும்போது செவிலித்தாயை யணுகி இரம்மியனைச் சுட்டிக்காட்டி, "இவ்வாண்மகன் ய்ாருடைய புதல் வன்' என விசாரித்தனள். 'நமது குடியாருக்கு ஜன்மப்பகைவனன மலயன்மகன்; பெயர் இரம்மியமலையன்" எனச் செவிலி கூறினள். இவ்வளவோடு முதற்சந்தியாகிய முகம் முடிகின்றது.
இரம்மியன் தன் நண்பரிருவருக்கும் பின்னக நடந்துசென்றவன் அன்னர்கண்காணுது பண்ணனுடைய திருமனையின் அந்தப்புரத்துப் பூஞ்சோலையைச் சூழ்ந்திருந்த மதிற்கவரொன்றின்மேலேறிச் சோலை யினுள்ளே குதித்தான். வண்கைமலையனும் மார்த்தாண்டசோழனும் யாண்டுந் தேடிப்பார்த்துவிட்டுத் தம் மனயைநோக்கிப் போயினர். சோலையினுள் மறைந்திருந்த இரம்மியன் சாளரவாயிலிலேதோற்றிய சுசீலையின் முகத்தைக் கண்டு பரவசப்பட்டுநிற்கிருன். அவள் தன் னெஞ்சொடுகூறிய சிலவார்த்தைகள் இவன்செவியிற்பட, சுசீலைதன் மேற் காதலுற்றிருக்கிரு ளென்பதை இரம்மிய னறிந்து வெளிப்பட் டுத் தன்னையின்னனென்று தெரிவித்து அவளோடு வார்த்தையாடி மறுநாட்காலை ஏழரை நாழிகைக்குச் செவிலியைத் தன்னிடம் அனுப் பும்படி சொல்லி விடைபெற்றுக்கொண்டு வைகறைப்பொழுதிலே உலோகமாபாலனென்னும் புரோகிதனிடஞ் செல்லுகிருன் புரோ கிதனேக்கண்ட இரம்மியன் தனக்கும் சுசீலைக்கும் இடையில் ஏற்பட் டிருக்கும் அன்பினைத் தெரிவித்து மறுநாட் பிற்பகல் தனக்குச் சுசீலையை விதிப்படி மணமுடித்து வைக்கும்படியாகப் புரோகிதனே வேண்டு

மதங்கசூளாமணி 35
கிருன். புரோகிதன் அதற்கு இசைகிருன். மறுநாள் இரம்மியன் தனது நண்பரிருவரோடும் வார்த்தையாடிக்கொண்டிருக்கும்போது சுசீலை யின் செவிலித்தாய் வருகிருள். நண்பரை யனுப்பிவிட்டு இரம்மியன் செவிலிக்குத் தன்னுடைய எண்ணத்தைத் தெரிவித்துப் பிற்பகலிற் சுசீலையை யழைத்துக்கொண்டு உலோகமாபாலனுடைய வீட்டுக்கு வரும்படி சொல்லுகிருன். ஆங்குக் காதலரிருவருஞ் சந்தித்து முறைப் படி மணமுடித்துக்கொள்ளுகிருர்கள். இவ்வளவோடு இரண்டாஞ் சந்தி முடிகிறது.
(செகசிற்பியாரது கவிநயத்தையும் இயன்றவரை விளக்கிக்காட்டு தல் இன்றியமையாதாதலின், இச்சந்தியினுள்ளேவந்த உவகைச்சுவை நிறைந்த ஒருபாகத்தினது மொழிபெயர்ப்பைத் தருகின்ரும்.) காலம் யாமப்பொழுது. களம்: பூஞ்சோலை. இரம்மியன் (நெஞ்சொடு மொழிகின்ருன்)
வாட்புண் பட்ட வடுவநி கில்லார் நாட்புண் கண்டு நகைப்பினு நகைப்பர். (வேனில்வே ளைங்கண்ே மேவுரு மனத்தர் சோமனு ரிழைக்குத் துயரினே யறியார். } சுசீலை சாளரவாயிலில் தோற்றுகிருள்.
நெஞ்சே! பொறுபொறு; நீள்குண திசையில் அஞ்செஞ் சோதி யலர்கதிர் பரப்பிப் பேரொளி யொன்றுநன் னிர்மையி னெழுந்தது; அதுவே, w ஆரெழிற் பரிதி பேரோ சுசீலை இகனிறை மதிதரு மின்னலை யொழிக்கப் பகலவன் வந்த பான்மையை யுணர்ந்தேன். வாராய் நிறையெழில் வயங்கிய சுடரே ! நேரா ரியல்பினெ னெஞ்சினை வாட்டிய விண்மதி நின்னெழில் விளக்கங் கண்டு, தன்னுெளி மழுங்கித் தாழ்ந்துநின் றனஞ்றல்; நீயே,
இந்துவை வென்ற சுந்தர வதனச் செந்திரு வாயினே சிறைசெயுங் கன்னி மாடத் திருத்தன் மரபோ வுரையாய்? காதன் மடந்தாய் ஆ! என் னன்பே ! சிறியேனுளநிறை கழிபெருங் காதலை அறியாய் ஐயோ! பொறுபொறு மனனே! அணியெழிற் பாவை மணியிதழ் விரித்து மொழிசொல முன்னியும் மொழியா தமர்ந்தனள் வாக்கெழு காற்றம் வழங்கில ளெனினும் நோக்கெழு மாற்றம் நோக்கா லுணர்ந்தனன். பேதையேற் கன்றம் மாதர்கண்ணுேக்க்ம் விண்மீ ஞெளியென மெல்லொளி பரப்பும்

Page 32
36 மதங்கசூளாமணி
நோக்கிணை மருவின ராக்கமெய் தினரே செம்மலர் முகத்திற் சேர்ந்தன மெல்விரல் மெல்விரன் மேலதோர் வியன்பூம் பட்டுடை பட்டுடை செய்தவம் யான்செய் திலனே.
சுசீல்: ஆ! ஆ1 ஐயோ!
இரம்மியன்: மாதோ? அணங்கோ ?
அகல்வா னெழுந்து முகிலிடைப் படர்ந்து கண்டோர் வியக்குங் காமரு காட்சிய தணங்கே யாத லிணங்குமெல் லணங்கே விண்ணவ ரமிழ்தினை வென்றநி னின்மொழி உண்ணுதற் கையோ வுருகுமென் னுள்ளம்.
சுசீலை; (இரம்மியன் சோலையுண்ணிற்பதை யறியாது தன் காதலை வெளியிட்டுக்
சொல்லுகிருள்.)
இரம்மிய மலைய இரம்மிய மலைய! தந்தையை மறந்து தனிப்பெயர் துறந்திங் கென்பால் வருதி யென்னுள நிறைந்த காதலை யுணர்ந்தெனைக் கைப்பிடிப் பர்யேற் பண்ணன் மகளெனும் பண்டைத் தொடர்பினை
நீக்கிநின் னுடனுறை வாழ்க்கைமே வுவனே.
இரம்மியன்; (தன்னுள்ளே) இவ்வளவு அமிர்தம் என் செவிவழிநிறைந்
தது போதுமோ? அன்றேல் இன்னுந் தாமதித்து நிற்றல் நன்ருே? சுசீலை; மலையன் என்னும் பெயரன்ருே, எங்கோத்திரத்தாருக்கு வன் கண்விளைக்கின்ற பெயராயிற்று. என்னன்பனே! நீ நின்பெயரல்லை. நீ வேறு; நின்பெயர் வேறு. மலையனென்ருலென்ன ! கையா? காலா? புயமா? முகமா? பிற உடலுறுப்பா? சண்பகமலருக்கு வேறு பெயரிட்டழைத்தாலும் வாசனை வேருமா? இரம்மியமலையன் என் னும் பெயரை நீக்கிவிட்டு வேறு பெயரிட்டழைத்தால் என்னன்ப னுடைய புயவலியும் நிறையெழிலும் அணுவளவேனும் குறைவு படுமா? என் உள்ளத்துறைவோய்! நீ நின்பெயரை விட்டொழிதி. சொல்லளவாகியபெயரை நீக்கிவிட்டு அதற்குப்பதிலாக அடியாளை முழுதும் எடுத்துக்கொள்வாயாக. இரம்மியன்: இன்மொழிநங்காய்! நின் எண்ணம் நிறைவேறுக. ஏழை யேனை அன்பனென்று இன்னுெருமுறை யழைப்பாயேல் என் பெயரை நீக்கிவிட்டு நீ விரும்பும்பெயரைக் கொள்ளுகிறேன். சுசீலை: இந்த நடுநிசியில் என்வாக்குக்கு எதிர்வாக்குரைக்கின்ற ஆடவ ஞகிய நீ யாரோ? ベ இரம்மியன்: என்கண்ணே! என்ன பெயரினல் யான் இன்னனென் றென்னை உணர்த்துவனே அறியேன், யான் கொண்டிருக்கும் பெயர் நின் செவிக்கு அல்லல் விளைக்கும் பகைமைப்பெயர். அது

மதங்கசூளாமணி 37
எழுதப்பட்டிருக்குந் தாளைத்தானும் யான் கிழித்தெறிந்துவிடு வேன். சுசீலை: நின் இன்மொழிநாவினுரை என்செவியில் இதற்குமுன்னும் பட்டிருக்கிறது. நீ மலையர்குலத்துதித்த இரம்மியகுமார னல்
Guirr? இரம்மியன் அணங்கே! இப்பெயரிரண்டும் நினக்கு இணங்காவாயின்,
நான் இரம்மியனுமல்லன், மலையனுமல்லன் என்பேன். சுசீலை: நீ எவ்வாறு இச்சோலையினுள் வந்தனை? மதிற்கவரோ மிக உயர்ந்துளது; என்னினத்தார் நின்னைக் காணிற் கழிபேரின்னல் விளைப்பார்; காவலைக் கடந்து எங்ங்ணம் உட்புகுந்தனை? இரம்மியன்: காதற்கு வரம்புமுண்டோ? கற்சுவரொருதடையாமோ? காதற்சிறகைக்கொண்டு மதிலைத் தாண்டிப் பறந்துவந்தேன். சுசீலை என் சுற்றத்தார் நின்னைக் காணிற் கொன்றுவிடுவாரென் றஞ்சு
கிறேன். இரம்மியன்: கோதாய்! நின் இணைவிழிகள் கூற்றத்தையும் வேலையும் ஒத்தன. நின் சுற்றத்தாரது வாட்படையினும்பார்க்க நான் நினது கண்ணுகிய வேற்படையை யஞ்சுகின்றேன். (என் றிவ்வாறு இவ் விரு காதலரும் தம் முளநிறையன்பு வெளிப் படுமாறு உரையாடுகின்றனர். இந்நாடகத்தின் முற்பாகம் உவகைச் சுவை ததும்புவது; பிற்பாகம் அவலச்சுவை நிறைந்தது. இனிக் கதைச் சுருக்கத்தைத் தொடர்ந்து சொல்லுவாம்.)
இரம்மியனும் நண்பரும் வீதியிற் போகும்போது வழியிற்கண்ட தீவலமல்லன் வாளையுருவிப் போருக்கழைக்கிருன். தனதுநாயகியினது நல்லம்மானென்றெண்ணி இரம்மியன் அவனை எதிர்க்காது பின் வாங்குகிருன், இரம்மியனைத் தீவலமல்லன் தூவிப்பதைக் கண்ட அவனது நண்பன் மார்த்தாண்டசோழன் மனம்பொருது வாளையுரு வித் தீவலனையெதிர்க்கிருன். தீவலன் மார்த்தாண்டனைக் கொன்றுவிட அதுகண்டு மனம்பொருத இரம்மியன் தீவலனை யெதிர்த்து அவனைக் கொல்லுகிருன், சோழன் கிள்ளிவளவன் நடந்த காரியங்களை விசா ரித்து, இரம்மியன் உறையூர் எல்லையினுட் புகுதல் கூடாதென்று கட்டளை பிறப்பித்தான். இந்நிகழ்ச்சிகளைக் கேள்வியுற்ற சுசீலை நல்லம்மா னிறந்த துய ரொரு புறமும் மணநாளிலேகணவனைப்பிரிந்ததுய ரொருபுறமுமாகத் துன் புறுகிருள். சுசீலை மணமுடித்துக்கொண்ட செய்தியைச் செவிலித் தாயும் புரோகிதனும் அறிவாரேயன்றிச் சுற்றத்தார் பிறரெவரும் அறிந்திலர்,
இரம்மியன் உறையூரைவிட்டு வெளிச்செல்ல மனமியையாதவனுய் உலோகமாபாலனையணுகிச் செய்வதென்னவென்று விசாரித்தான். இராஜகட்டளையைத் தவறிநடத்தல் சரியல்லவென்றும், ஆமுருக்குப்

Page 33
38 மதங்கசூளாமணி
போய் மறைந்திருந்தால், தான் ஆகவேண்டிய காரியங்களை முடித்துப் பின்பு தெரிவிப்பதாகவும் உலோகமாபாலன் உரைத்தான். இரம் மியன் செவிலியைக் கண்டு அவள் வாயிலாகச் சுசீலையினது துன்ப நிலையை யுணர்ந்து, சுசீலைக்கு ஆறுதல் உரைத்தபின்பன்றி உறையூரை விடுத்து வெளியேபோவதில்லையென்று நிச்சயங்கொண்டு இராப் பொழுதாயினபின்னர்க் கயிற்ருலாகிய ஓர் ஏணியைச் சுசீலையினது சாளரத்திலிருந்து தொங்கவிடும்படி செவிலியைக் கேட்டான்; அவளும் அதற்கியைந்தாள். இரவுவருதலும் இரம்மியன் சுவரைத்தாண்டிச் சோலையினுட்புகுந்து கயிற்றேணிவழியாகச் சாளரத்தினுட் புகுந்து சுசீலையின்சயனசாலையை யட்ைந்தான். அன்றிரவுமுழுவதை யும் அவளோடுகழித்துச் சூரியோதயத்துக்குமுன் பிரிவாற்ருது பிரிந்த இரம்மியன் துன்பம்நிறைந்த மனத்தினேடு ஆமூரைநோக்கி நடந் தான். இஃதிவ்வாருகச் சோழன் கிள்ளிவளவன் தனது நண்பனுகிய பண்ணனையழைத்துத் தனது தம்பி பாற்கரசோழனுக்கும் பண்ணனது புதல்வியாகிய சுசீலைக்கும் முணமுடித்து வைக்கவேண்டுமென்னுங் கருத்துத் தனக்கு நெடுநாளாக உண்டு என்று தெரிவித்தான். பண்ண னும் அம்மணவினக் கியைந்து அரசனுடைய விருப்பத்தைத் தனது மனைவிக்குத் தெரிவிக்க, அவளுஞ் செவிலியைவிளித்துச் சுசீலைக்கு இச்சந்தோஷகரமானசெய்தியைத் தெரிவித்து அவளுடைய விருப் பத்தை யறிந்துகொண்டுவரும்படி யனுப்பினுள். சுசீலை யிவ்விஷயத் தைக் கேள்வியுற்றுச் செய்வ தென்னவென்றறியாது தியங்கி உலோக மாபாலனிடம் புத்திகேட்க நிச்சயிக்கிருள். இவ்வளவோடு மூன்ருஞ் சந்தியாகிய கருப்பம் முடிகின்றது.
பாற்கரசோழன் உலோகமாபாலனுடைய மனைக்குவந்து தனக்கும் சுசீலைக்கும் எதிர்த்துவருகிற குருவாரத்தன்று திருமணம் நடக்கப் போகின்றதெனச் சொல்லிக்கொண்டிருக்கிறதருணத்திற் புரோகிதன் மனைக்குச் சுசீலையும் வந்தனள். பாற்கரனுக்குஞ் சுசீலைக்கு மிடையிற் சில கூற்றும் மாற்றமும் நிகழுகின்றன. பாற்கரன் போயினபின்னர்ச் சுசீலை தன்னிலையைப், புரோகிதனுக்குரைத்து இனிமேல் நடந்து கொள்ள வேண்டியமுறை யென்னவென்று விசாரித்தாள். அவன் அவள்கையில் ஒரு திராவகத்தைத் கொடுத்து, 'அம்மா! நீ நின் வீட்டுக்குப்போய்ப் பாற்கரனை மணமுடிப்பதற்குச் சம்மதித்ததாகச் சொல்லிவிட்டுச் சந்தோஷமாயிரு நாளை புதன்கிழமை; நாளையிர வைக்கு உன் சயனஅறையிற் செவிலியோ, பிறரோ இருத்தல் கூடாது; சயனத்திற் ப்டுத்துக்கொண்டு இப்புட்டியினுள்ளிருக்குந் திராவகத் தைக் குடித்துவிடு; உடனே உன்னுடல் இறந்தாருடலத்தைப்போல அசைவற்று விறைத்துப்போம்; நீ இறந்துவிட்டனையென்றெண்ணி உன்னை ஈமப்புறங்காட்டுக்குக் கொண்டுசென்று தாழியிற்புதைத்து விடுவார்கள்; சரியாக நூற்றெட்டுநாழிகைசென்றபின்பு, நீ மீட்டும் உயிர்பெற்றெழுவாய்; அதற்கு முன் இரம்மியன் வந்து உன்னைத் தாழியினின் றெடுத்து ஆமூருக்குக் கொண்டுபோய்விடுவான்' என் முன். சுசீலை மகிழ்ந்து தன்மனைக்குச் சென்று, உலோகமாபால னுரைத்

மதங்கசூளாமணி 39
தவண்ணமே அனைத்தினையுஞ் செய்து முடித்தாள். மறுநாள், பாற் கரசோழனுடைய மணத்துக்குக் குறிக்கப்பட்டதினம். சுசீலையினு டைய சயனஅறைக்குட்சென்று செவிலி பார்த்தபோது மணமகள் சயனத்தின்மேலே யிறந்துகிடப்பதாகக் கண்டாள். நற்ருய், செவிலி, சுற்றத்தார் முதலிய அனைவரும் ஐயோ! முறையோவென் றழுது துன்புறுகின்றனர். இவ்வளவோடு நான்காஞ் சந்தி முடிகின்றது.
உலோகமாபாலன் இரம்மியனுக்கு ஒரு செய்தி யனுப்புகிருன்; அச்செய்தி இரம்மியனுக்குச் சென்றுசேரவில்லை. சுசீலை யிறந்துவிட்டா ளென்னுஞ்செய்தி இரம்மியனுக்கு எட்டுகிறது. அவன் துன்புற்று வருந்தி, அவளோடு உடனிறப்பதற்கு நிச்சயித்து, ஒளஷதம்விற்போ னெருவனிடம்போய்க் கொடியநஞ் சொன்று வாங்கிக்கொண்டு, கையில் ஒரு மண்வெட்டியோடு ஈமப்புறங்காட்டுக்குச் செல்லுகிருன். ஆங்குச் சுசீலையின் உடலம் புதைக்கப்பட்டிருந்த குழியைத் தோண் டித் தாழியைக் கண்டான். அத்தருணத்திற் பாற்கரசோழன் முற் பட்டு எதிரியாகிய இரம்மியமலையன், சுசீலையின் உடலத்தை யெடுத் தலைக் கண்டு வாளையுருவிக்கொண்டு சண்டைக்குப்போய் இரம்மிய னுடைய கைவாளா லிறக்கிருன், இரம்மியன் தனது மனைவியாகிய சுசீலையினுடைய உடலத்தைக் கண்டு ஆருத்துயர்கொண்டு, அழுது பிரலாபித்துத் தான் கொண்டுவந்த நஞ்சை யுண்டு, கீழேவிழுந்து இறந்து விடுகிருன். உலோகமாபாலன் தானனுப்பிய செய்தி இரம்மிய னுக்குச் சென்று சேரவில்லை யென்பதை யறிந்தவுடனே யாதுவிளைந்து விடுமோ வென்றஞ்சி, விரைந்து ஈமப்புறங்காட்டுக்குச் சென்று பாற் கரசோழனும் இரம்மியனும் உயிர்துறந்துகிடப்பதைக் காணுகிருன். சுசீலை குறிப்பிட்ட நேரம்வருமுன்னரே மருந்தினுலாகிய மயக்கந் தெளிந்தெழுந்து உலோகமாபலனைக் கண்டு, "எங்கே யென்கணவன்" என்கின்ருள். புரோகிதன் பலவாருகச் சமாதானஞ்சொல்லச் சுசீலை, ** என்கண்முன் நில்லாதே, போ' என்று சொல்லிவிட்டுப் பலதிசை யும் நோக்கித் தனது நாயகனுடைய உடலத்தைக் கண்டு அவன் முகத்தில் முத்தமிட்டு, அவன்கையில் எஞ்சியிருந்த நஞ்சினையுண்டு, அவனுடைய உடைவாளை உறையினின்று கழற்றி, "இதுவே உனக்கு உரிய உறை" யென்று தனது மார்பினுட் பாய்ச்சி விழுந்து இறக்கின் ள். பாற்கரனுக்கும் இரம்மியனுக்குஞ் சண்டைநடக்கும்போதே அதனைக் கண்ட காவலாளர் ஓடோடியும்போய் அரசனுக்கும் நகர மாக்களுக்குந் தெரிவித்தனர். அரசன், பண்ணன், மலையன், பரிசனர் முதலிஞேர் பலரும் ஈமப்புறங்காட்டுக்கு வந்து ஆற்ருெணுத்துன்புற்று, உலோகமாபாலன்வாயினல் நடந்த நிகழ்ச்சியனைத்தினையும் அறிகின் றனர். அரசன் பண்ணனையும் மலையனையும்விளித்துப் 'பார்த்தீரா நுமதுபகைமையா லெய்தியபயன’’ எனக் காட்டினன். அன்றுமுதல் அவ்விருவரும் மாருநட்புப்பூண்டனர். இவ்வளவோடு நாடகம் முடி கின்றது.

Page 34
40 மதங்கசூனாமணி
ச. அவலச் சுவையை "ஆகுலராஜன் சரிதை'யி னுள்ளும் "இரம் மியன் சுசீலை சரிதை'யினுள்ளுங் காட்டினும்; வெகுளிச்சுவையை மேல்வரும் "சேனதிபதிசரிதை'யினுட் காட்டுவாமாதலினல் அவல மும் வெகுளியுமுணர்த்துவமிதன யாம் எடுத்துக்கொண்ட * தீ நட் பஞ்சியதிமோன்சரிதை" யைச் சுவைபற்றி யாராயும் அவசிய மில்லை. இதனது வித்து, முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என்னுஞ் சந்தியுறுப்புக்களை உறுப்பியலினுட் டொகுத்துக் கூறினம். நாடகபாத்திரருக்குப் பெயர்கொள்ளாது சந்தியுறுப்புக் களினமைப்பை வகுத்துக்காட்டி யப்பாற்செல்வாம். கதாநாயகனுகிய செவ்வப்பிரபு பலருக்கு விருந்தளித்தலும், அன்னர் உண்டு களி யாடலும், புலவர் ஒவியர் மணிகுயிற்றுநர் சூதர் மாகதர் என் றின்னேர் அவனிடம் பரிசில்பெற்று அவனைப் போற்றிநிற்றலும் முகத்தினுள் வருவன. பிரபு கடன்பட்டுக் கலங்குதலும், தன்து பழைய நண்பர் தனக்கு உதவார் என்னும் முழுநம்பிக்கையோடிருத்தலும், அவர் உதவுவார் என்றுகூறிய அறிஞனை வெகுண்டு நோக்குதலும் பிரதிமுகமாவன. பிரபுவினுடைய கருமகாரன் அவரது நண்பர்பல ரிடம் போய் அவர் கடனல் வருந்துவதைத் தெரிவித்து உதவிபெற முயலுதலும், அன்னர் மறுத்தலும், பிரபு ஒருசூழ்ச்சியினல், பழைய நண்பரனவரையும் விருந்துக்கழைப்பதுபோ லழைத்து அவர்முன் அழுக்கு நீர்நிரம்பிய கலங்களை வைத்து,'நன்றிகெட்டநாய்களே! இது தான் நான் இன்று உங்களுக்குத் தருகின்றவிருந்து” என்று அவர்கள் மேற்கலங்களை யெறிவதும் அன்னேர் அல்லோலகல்லோலப்பட்டோடு தலும் கருப்பத்தினுள் வருவன. கதாநாயகன் காட்டிற்சென்றுவசிப்ப தும், கிழங்குபெறுவதற்காக நிலத்தினைத் தோண்டும்போது ஒரு பொற் குவையைக்கண்டு அதனை இழித்துக்கூறுவதும் அவ்வழிச்சென்ற ஒரு சேனைத்தலைவனும் அவனது காதற்கிழத்திய ரிருவரும் கதாநாயகனை யணுகுதலும், அவன் அன்னேர் முகத்திற் பொற்காசுகளையெறி தலும், அவர்கள் காசுகளையெடுத்துக்கொண்டு நன்றிகூறிச்செல்வ தும் கள்வர் சிலர் வருதலும் விளைவினுள் வருவன. கதாநாயகன கிய தீமோனிடம் பொற்குவை யகப்பட்டிருக்கிறதெனக் கேள்வி யுற்றுப் புலவர் ஓவியரென் றின்னேர் அவனை நாடிச் செல்வதும், அன் னுேரையும் மனிதவர்க்கத்தையுந் தீமோன் இழித்துக் கூறுவதும், சேனைத்தலைவன் தீமோனுடையபகைவரை யெதிர்த்து வெற்றிபெற் றுத் தீமோனை நகருக்கழைத்துச் செல்வதற்குக் காட்டினுட் சென்று தேடுவதும் தீமோன் இறந்துகிடக்கக் காண்பதும் ஐந்தாஞ் சந்தியாகிய துய்த்தலினுள் வருவன. இனி மருட்கையு முவகையு முணர்த்தும் பெரும்புயற்சரிதையை யாராயப்புகுந்து முதலிற் கதைச் சுருக்கத் தைத் தருகின்ருேம்.
பலவளம்நிறைந்த சீயதேசத்தை அலாயுதனென்னுமன்னன் அரசு புரிந்துவருகின்றகாலத்தில், பிரபாகரன் என்னும் பெயரினையுடைய

மதங்கசூளாமணி 41
சிற்றரசன் சீயநாட்டின் ஒருபாகமாகிய மைலம் என்னுந் தேயத்தை யாண்டுவந்தான். அவன்தம்பி அநாகுலன் வஞ்சனேயினுல் தனது தமையனையும் அவனது மூன்றுவயதுக்குழந்தையாகிய மாலதியையும் சுக்கானில்லாத ஒருபடவிலேற்றிக் கடலிற் றள்ளிவிட்டுத் தமையன் ஆண்டுவந்த தேயத்தைத் தா னண்டுவந்தனன். அநாகுலனுடைய வஞ்சனையை ஒரு சிறிதறிந்திருந்த கெளசிகனென்னும் பிரபு பட வினுள்ளே உணவுப் பொருள்கள் சிலவற்றையும், புத்தகங்கள் சில வற்றையும் அநாகுலன் அறியாவண்ணம் மறைத்துவைத்தனன். படவு கடலலையால் மொத்துண்டு, அலைவுற்றுச் சிலநாட்களுக்குப்பின் மணி பல்லவம் என்னுந் தீவை வந்தணுகியது. கெளசிகன் மறைத்துவைத்த உணவுப்பொருள்கள் பிரபாகரனுக்குப் பேருதவிபுரிந்தன. மணிபல்ல வத்துக் கரையையடைந்த பிரபாகரன், மானிடசஞ்சாரமில்லாத அத் தீவிற் குடிசையொன்றமைத்துக்கொண்டு காலங்கழித்துவருகின்ற நாளிற் புதல்வியாகிய மாலதி நாளொருவண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ச்சியெய்தினுள். பிரபாகரன் படவினுள்ளிருந்த புத்தகங்களையெடுத்தாராயும்போது அவற்றினுள் ளொரு மாந்திரீக நூல் இருந்தது. அதனையெடுத்துக் கற்ற பிரபாகரன் மந்திரசக்தியின் வலிமையினலே பவனவேகன் என்னும் வித்தியாதரனையும், வலி முகன் என்னும் இயக்கனையுந் தனக்கு அடிமைகளாக்கிக்கொண்டான். பவனவேகன் ஆகாயமார்க்கமாகச் சஞ்சரிப்பவன்; வேண்டும்போது வேண்டியஉருக்கொள்ளவும், தனதுஎஜமானுகிய பிரபாகரனுக்கன் றிப் பிறருக்குத் தோற்ருத மாயவுருக்கொள்ளவும், செயற்கருஞ் செயல்கள் பலவற்றைச் செய்யவும் வல்லவன். வலிமுகன் முசுமுகி யென்னும் இயக்கியின்புதல்வன்; தாயிறந்துவிட ஆதரிப்பாரின்றி மணிபல்லவத்தில் அலறித் திரிந்தான். மேல்முழுதும் நிறைந்த செம் பட்டைமயிருங் கோரளுபமுமுடைய இவனைப் பிரபாகரன் பிடித்துக் கட்டிக்கொண்டுவந்து மக்கள்மொழியை இயன்றவரைகற்பித்து விறகு பிளத்தல் முதலிய முரட்டுவேலைகள் செய்வதற்கு ஆளாக வைத்திருந் தான். அடிமைகள் இருவரையும் பெற்றபின்பு பிரபாகரனுக்குச் சிறிது ஆறுதலுண்டு; ஒய்வுநேரம்முழுவதிலும் தனது புதல்விக்குப் பாடஞ்சொல்லிவைத்து அவளைப் பலகலையுங்கற்ற பண்டிதையாக் கினன். மாலதிக்கு வயது பதினைந்தாயிற்று; அதாவது பிரபாகரனும் புதல்வியும் மணிபல்லவத்துக்குவந்து பன்னிரண்டு ஆண்டுகளாயின. இவ்வெல்லையில், காத்திராப்பிரகாரமாகப் பிரபாகரன் தனது இராஜ் யத்தைத் திரும்பவும் பெற்றுக்கொள்ளுவதும் மாலதி பல சுகுணங் களும் நிறைந்த பிரியவிரதன் என்னும் அரசிளங்குமரனை நாயகனுகப் பெறுவதுமே நாம் எடுத்துக்கொண்டசரிதையின் உள்ளுறையாவன.
கப்பலொன்று பெரியதொரு புயலிற்பட்டு அக்கப்பாடுறுவதோடு நாடகம் அரம்பமாகின்றது. மணிபல்லவத்துக் கடலருகில் நின்ற மாலதி கப்பல் அலைவுறுவகைக் கண்டு அதனுள்ளிருக்கும் மானிட

Page 35
42 மதங்கசூளாமணி
ருயிருக்கு இன்னல் வந்துவிடுமோ வென்றஞ்சித் தனது தந்தையை நோக்கி அவனது மந்திரசக்தியினலே புயலை நிறுத்திவிடும்படி, அவ னைக் குறையிரந்து வேண்டிக்கொள்ளுகிருள். பிரபாகரன் கப்பலில் உள்ளோரது உயிருக்குச் சேதம்வராதென்று கூறியதோடு தனது மந்திர வலிமையினுல் தானே புயலை உண்டுபண்ணியதாகவும் அதனுற் பெருநன்மை விளையப்போகிறதென்றுங் கூறித் தனது வரலாற்றையுந் தெரிவித்துத் தனது மந்திரவலிமையினலே மகளை அயர்ந்து நித் திரை யாகும்படி பண்ணுகிருன். இங்ங்னஞ் செய்தபின் பிரபாகரன் பவனவேகனை அழைத்துத் தனது கட்டளைப்படி எல்லாம் ஆயிற்ரு என்று விசாரித்தான். புயலை யுண்டாக்கியபின்னர்க் கப்பலிலிருந் தோரனைவரையும் உயிர்ச்சேதமின்றிக் கரைசேர்த்திருப்பதாகவும், கப்பலைச் சிறிதேனும் பழுதுபடாமல் ஒரு துறை சேர்த்திருப்பதாக வும் பவனவேகன் தெரிவித்தான். பிரபாகரனும், 'நன்று; கப்பலி லிருந்தோருள் இராஜகுமாரனை இவ்விடம் அழைத்துவா" என்றனன். இவ்விராஜகுமாரன் சீயதேசத்தரசன் அலாயுதனதுபுத்திரன் பிரிய விரதன். அலாயுதனும் அவனது தம்பி சங்கவர்ணனும், புதல்வன் பிரியவிரதனும், அநாகுலனும், கெளசிகனும் பிற பிரபுக்களும் சமுத் திரயாத்திரைசெய்யும்போது அன்னர் ஏறிச்சென்ற கப்பல் மணி பல்லவத்துக் கரையோரமாகச் சென்றது. இதனைத் தனது மந்திரக் காட்சியினுற் கண்ட பிரபாகரன் புயலை யுண்டாக்கிக் கப்பலிலிருந் தோரனைவரையும் கப்பலையும் சேதமின்றிக் கரைசேரும்படி செய் தனன். அங்ங்னமாயினும் அரசன் தன் புதல்வன் கடலிலமிழ்ந்து விட்டானெனனும், இராஜகுமாரன் தன் தந்தை யுயிர் துறந்து விட்டானெனவும், அனைவரும் கப்பல் மூழ்கிவிட்டதெனவும், தம் முள்ளேயெண்ணித் துன்புற்றுத் தீவகத்தின் பற்பலபாகங்களிலும் ஒருவரையொருவர் தேடி அலைந்து திரிகின்றனர். இவ்வெல்லையிற் பவனவேகன் உருத்தோற்ருவண்ணம் இராஜகுமாரனது முன்னிலை யிற்போய் நின்று,
'மஞ்சட் பரந்தவிந்த மணன்மீதி லென்னுடனே கொஞ்சிக் குலாவிவிளை யாடுதற்கு வாரீரோ வாரீரோ நடமிடுவோம் வெளவெளவென நாய்குரைக்கச் சீராகக் குக்கூவென்னுஞ் சேவலொலி கேட்குதையோ"
என்று பாடினன்.
பிரியவிரதன் (அதிசயமுற்று)
"வானகத்ததோமண்ணகத்ததோமனநிறைக்குமிவ்வினியநல்லிசை கோனையெண்ணியேசிந்தைநைந்தியான்குரைகடற்கரைப்புறமிருக்கையிற் றேனேயொத்தவில்விசைதொடர்ந்தெனைச்சிறைசெய்கின்றதாலுறுவதோர்கிலே யானகத்துளோரெண்ணமின்றியேயிசைவருந்திசைக்கேகுவேனரோ' (ன்
(புதுமைப்ற்றிய மருட்கைச்சுவை:

43
என்று இசைவருந் திசையைநோக்கிச் சென்றன். நித்திரைநீங்கி யெழுந்திருந்த மாலதி பிரியவிரதனைக் கண்டமாத்திரத்தே (அது வரையும் அழகுநிறைந்த ஆடவரைக் காணுதவளாதலினலே புதுமை பற்றிய மருட்கையுற்று) தன் தந்தையைநோக்கி, ‘ஐய! அதோ தோற்றுகின்ற எழிலுருவத்தையுடையோன் தேவன? மனிதனு?’’ என்றனள். −
பிரபாகரன் நம்மைப்ப்ோலவே அவனும் பசிவரும்வேளையில் உண வுட்கொண்டு துயில்வருநேரத்திற் றுயிலுகின்ற மனிதவகுப்புக்கு உரியோன்தான். கப்பலிலிருந்து பிரிந்த தனது நண்பரைத் தேடி யலைகின்றன். கவலையினல் அவன்முகம் வாடியிருக்கின்றது. மாலதி: இத்தனையழகன "நா னுெருபோதுங் கண்டதில்லை; இவன்
தெய்வத்தன்மையுடையவனென்றே சொல்லவேண்டும். பிரியவிரதன். (அணுகிவந்து) இன்னிசைக்குத் தலைவியேயிமையவரும் பணிந்தேத்து மெழி லணங்கே பொன்னுலகத் திருந்திவணி புகுந்தனையென் றென்னிதயம் புகலா நிற்கும் மன்னுமிந்தத் தீவகத்தி லுறைதியோ வழியெனக்கு வழுத்த வாயோ கன்னிகையோ பிறன்மண்யாங் காரிகையோ வெனவிரைவிற் கழறு வாயே. மாலதி: ஐய! அதிசயம்வேண்டாம். நான் கன்னிகையே!
பிரியவிரதன் ஆ! ஆ! இம் மடமொழி என்மொழியில் உரையாடு கின்ருள். இச் செம்மொழியைப் பேசுவோருள் யானே தலைவன். இம் மொழிவழங்கும்நாட்டில் யான் இருந்தாலோ ! பிரபாகரன்: சீயதேசத்துமன்னன் இருக்கும்போது நீ தலைவனவ
தெப்படி? (தன் மகளுக்கும் பிரியவிரதனுக்கு மிடையிலுள்ள காதலின் அள வைச் சோதிக்கவிரும்பிய பிரபாகரன் பிரியவிரதனைநோக்கிப் பின் வரும் கடுமொழிகளையுங் கூறுகின்றன்.)
இராஜத்துரோகம் பேசுகின்ற தூர்த்தா ! இங்கு வா; உன்கையை யுங் காலையும் விலங்கிடுகிறேன்; உலர்ந்தகிழங்கும் உப்புத்தண்ணிரு மன்றிப் பிறவுணவு தராது உன்னைச் சிறையில் வைக்கிறேன். பிரியவிரதன்: "இதற்கு நான் ஒருப்படேன்’ என்று வாளையுருவு கிருன்.
(பிரபாகரனுடைய மந்திரவலிமையினலே பிரியவிரதனுடைய வா ளேந்திய கை ஸ்தம்பித்து நின்றுவிட்டது.) A. மாலதி பலவாருகப் பரிந்துபேசியுங் கேளாது பிரபாகரன் பிரிய
விரதனே அழைத்துச்செல்லுகிருன்.
(இவ்வளவோடு முகம் முடிகின்றது.)

Page 36
44 மதங்கசூளாமணி
தீவின் ஒருபக்கத்தில் அலாயுதனும் அவன்தம்பி சங்கவருணனும் அநாகுலனும் கெளசிகனும் பிறரும் வருகின்றனர். பவனவேகன் உரு வெளிபபடாதுநின்று இன்னிசைக்கீதங்களைப் பாட அநாகுலனும் சங்க வருணனும் ஒழிந்த அனைவரும் துயில்கின்றனர். சகோதரத்துரோகி யாகிய அநாகுலன் சங்கவருணனை நோக்கி அலாயுத மன்னனைக் கொன்றுவிட்டுச் சீயதேசத்துமன்னவனகும்படி சொல்லி அவனைத் தன் துர்ப்புத்திக்கு ஆளாக்குகிருன், துயின்றுகொண்டிருக்கிற கெளசி கனையும் அலாயுதமன்னனையும் கொல்லும்படி அநாகுலனும் சங்க வருணனும் கையில் வாளெடுத்துக்கொண்டுவரப் பவனவேகன் கெளசி கனுடையகாதில் ஒரு பாடலைப் பாடி யவனத் துயிலினின்று எழுப்ப அவன் அலாயுதமன்னனை யெழுப்புகிருன். துயிலினின்றெழுந்த இரு வரும் அநாகுல சங்கவருணருடையதுர்நினேவைக் குறிப்பினுலுணர்ந்து கொண்டு பிரியவிரதனைத் தேடிச் செல்கின்றனர். தீவின் மற்ருெரு பக்கத்தில் இடிமுழக்கத்தினிடையே வலிமுகன் ஒரு விறகுக்கட்டோடு வருகிருன். அவனைத் திரிகூடன் என்னுங் கப்பற்சேவகன் கண்டு மற்சமோ மனிதனேவென ஐயுற்று மறைந்திருக்கின்றதருணத்திற் சுரைநாவன் என்னும் மற்ருெருசேவகன் கள் நிறைந்த ஒரு புட்டி யோடு வருகின்ருன். இருவரும் வலிமுகனை யணுகி யவனது வர லாற்றை வினவினர்கள். வலிமுகன் தன் அன்னை முசுமுகி அத்தீவுக்கு அரசியாயிருந்ததாகவும், தான் பிரபாகரனுடைய மந்திரவலிமை யின லவனுக்கு அடிமைப்பட்டுத் துன்புறுவதாகவும், திரிகூடனும் சுரைநாவனும் ஏதாவது ஒரு சூழ்ச்சியினுற் பிரபாகரனைக் கொன்று விட்டாற் முன் அவர்களுக்குப் பணிவிடைசெய்துகொண்டு வாழ்தற் கொருப்படுவதாகவும் கூறினன். இதனைக் கேட்ட சேவகரிருவரும் அவ்வண்ணமே செய்வதாக வாக்களித்து வலிமுகனே யழைத்துக் கொண்டு செல்கின்றனர்.
(இவ்வளவோடு பிரதிமுகம் முடிகின்றது)
பிரபாகரனுடைய கட்டளைப்படி பிரியவிரதன் மரக்கட்டைகளை நிரையாக அடுக்கிக்கொண்டு நிற்கிருன், மாலதி யவன்பக்கத்திற் பலவாழுகிய இன்பமொழிகளைக் கூறிக்கொண்டு நிற்கிருள். இவரிரு வரையும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தபிரபாகரன் உள்ளம் மகிழ்ந்து இவரது நன்மைக்காகச் செய்யவேண்டிய செயல் கள் இன்னுஞ் சிலவுள என்று தனக்குள்ளேசொல்லிக்கொண்டு புறத் தேபோய்த் தனது மந்திரவலிமையினலே ஆகாயமார்க்கமாகச் சென்று அலாயுதமன்னனும் பிறரும் நிற்கின்ற இடத்தை யடைகி முன். பிரபாகரனுடைய கட்டளைப்படி பவனவேகன் பல மாயரூபங் களைப் படைத்துவிட அவை சென்று அலாயுதமன்னன் முதலியோ ரைச் சூழ்ந்துநின்று நடிக்கின்றன. இவற்றைக் கண்டு அதிசய முற்றிருந்த மன்னணுதியோர் முன்னிலையில் அம்மாயாரூபங்கள் பல தட்டுக்களிற் பழம் பலகாரம் முதலியவைகளைவைக்கப் பசியினுல்

மதங்கசூளாமணி 45
வருந்தியிருந்த மன்னனும் பிறரும் அவ்வுணவினை யுண்ணப்புகுந் தனர். அத்தருணத்திற் பவனவேகன் மாயத்தினுற் பழம் பலகாரம் முதலியவற்றை மறையும்படிசெய்துவிட்டு ஒரு பெரிய பருந்து ரூப மாகத் தோற்றிக் குழுமியிருந்த அலாயுதமன்ன குதியோரைப் பார்த்து, "நீவிர் கொடுந் தொழிலாளர்; மக்களிடையே வசித்தற்கு அருகரல்லாதவரானபடியாற் கடல் நுமமை மனிதசஞ்சாரமில்லாத இத்தீவில் உமிழ்ந்துவிட்டது; நான் நுமது அறிவினைமயக்கி நும்மை உன்மத்தராக்கியிருக்கிறேன்' என்ருன். இதைக்கேட்ட மன்னனதி யோர் உடை வாளையுருவிப் பருந்தாகவந்த பவனவேகனை வெட்டு தற்கு முயன்றனர். அன்னரதுகைகள் ஸ்தம்பித்துநின்றுவிட்டன. பவனவேகன் நகைத்து "மூடர்களே! நானும் என் பரிசனரும் விதி யின்செயலை முற்றுவிக்குங் கருவிகள், நுமது ஆயுதங்கள் எம்மைத் தீண்டா. மைலத்து மன்னனுகிய பிரபாகரனையும் அவனது மூன்று வயதுக் குழந்தையையும் ஆதரவின்றி யலைகடலில்விட்ட துஷ்ட ராகிய நுமக்கு இரங்குவாருமுளரோ" என்றனன். மாயாரூபங்கள் மீட்டுந் தோற்றி மன்னனுதியோரைப் பரிகசித்து நடித்தன. அன்னர் பிரபாகரனுக்குத் தாம் விளைத்த தீமையை நினைந்து துன்புற்றிருப்ப தோடு கருப்பம் முடிகின்றது.
பிரபாகரன் தனது மந்திரசக்தியினல் தேவமாதர் பலரைப் படைத் துப் பிரியவிரதனும் மாலதியுங் கண்டு களிகூரும்படி தான் படைத்த தேவமாதரைக்கொண்டு நடனஞ்செய்விப்பதும், வேட்டைநாய்களைப் படைத்து வலிமுகன், திரிகூடன், சுரைநாவன் என்னும் மூவரையுந் துன்புறுத்துவதும் விளைவினுள் வருவன.
பவனவேகன் பிரபாகரனுடைய கட்டளைப்படி அலாயுதன் சங்க வருணன் அநாகுலன் கெளசிகன் முதலியோரைக் கொண்டுவந்து நிறுத்தலும், அலாயுதன் தன்மைந்தன் பிரியவிரதன் மாலதியோடு விளையாட்டயர்ந்துகொண்டிருப்பதைக் காண்பதும், இளையாரிருவரு டைய மணவினைக்கு இயைவதும், பிரபாகரனை அழைத்துச்சென்று மைலத்துக்கு மன்னனுக்க ஒருப்படுவதும், பிரபாகரன் பவனவேகனை விடுதலையாக்கிவிட்டுத் தனது மந்திரநூல்களைக் கடலினுள் எறிந்து விடுவதும் அனைவரும் சீயதேசத்துக்குப் போகக் கப்பலேறுவதும் துய்த் தல் என்னும் ஐந்தாஞ்சந்தியினுள் வருவன.
வலிமுகன், சங்கவருணன், அநாகுலன் என்போரது சிறுமை வெளிப் ப்டுமிடத்துச் சிறுமைபற்றிய மருட்கைச் சுவையும், பிரபாகரனது பெருந்தன்மை வெளிப்படுமிடத்துப் பெருமை பற்றிய மருட்கைச் சுவையும், பிரபுாகானது மந்திரவலிமையினலே பழம் முதலியவை தோற்றி மறைவதைக்கண் டதிசயிக்கும்போது ஆக்கம்பற்றிய மருட் கைச்சுவையுந் தோற்றுவன. பெருமை சிறுமையென்புழி அளவுமாத் திரமல்ல, அத்தன்மையுங் கொள்ளப்படும். ‘புதுமை பெருமை சிறுமை யாக்கமொடு, மதிமை சாலா மருட்கை நான்கே’’ எனத்

Page 37
46 மதங்கசூளாமணி
தொல்லாசிரியர் வகுத்துக்கூறிய மருட்கைச்சுவைக்கு இந்நாடகம் இலக்கியமாயினமை காண்க.
டு. அச்சமுணர்த்தும் மகபதிசரிதையை யாராயப்புகுவாம்.
சுடுகாட்டிலே காரிருளிலே இடிமுழக்கமும் மின்னலுந் தோற்ற அவற்றிடையே சவந்தின்பெண்டிராகிய மூன்று இடாகினிமாதர் தோற்றிச் சிறிதுநேரம் வார்த்தையாடி மறைகின்றனர்.
(இது முதலங்கத்தின் முதற்காட்சியாகும்).
அங்கதேயத்து மன்னணுகிய இடங்கராஜன் தனது புதல்வராகிய மங்கலவர்ம்மன் அனலவர்ம்மனுேடும் பரிசனரோடும் தோற்றி மகபதி யென்னுஞ் சேனைத்தலைவனுடைய இராஜபத்தியையும் வீரச்செயலை யுங் கேள்வியுற்று அவனைத் தனது அரசியலின்கீழுள்ள கூடர்நாட் டுக்கு அதிபதியாக்கும்படி மந்திரிமாருக்குக் கட்டளையிடுகிருன்.
(இது முதலங்கத்தின் இரண்டாங் காட்சி).
சுடுகாட்டிலே முன்போலக் காரிருளிலே இடாகினிமாதர்மூவருந் தோற்றித் தாம்விளைத்த தீச்செயல்களைக் கணக்கிட்டுக்கொண்டிருக் கும் சமயத்தில் அவ்வழியே சேனைத்தலைவராகிய மகபதியும் தனபதி யும் வருகின்றனர். தனபதி: (இடாகினிமாதரைக் கண்டு) ஈதென்ன? வற்றிக்காய்ந்த உட லும்கோரரூபமுமாகத்தோற்றுகிற இவை இவ்வுலகில் வாழ்வனவா? நீவிர் உயிருள்ள தோற்றங்களா? மனிதர்வினவுக்கு விடையளிப் பீரா? வற்றிக் காய்ந்த உதட்டிலே நீவிர் விரலைவைத்திருப்பதைப் பார்க்கும்போது எனது வார்த்தை நுமக்குப் புலப்படுகிறதென் றெண்ணவேண்டியிருக்கிறது. நீவிர் பெண்பாலாராகத் தோற்று கிறீர்; நுமக்குத் தாடிமயிரிருக்கின்றபடியாற் பெண்பாலரென்று சொல்லவும் இடமில்லை. மகபதி, நீவிர் யாவர்? வார்த்தைபேச இயலுமானல் என் கேள்விக்கு
மறுமொழி கூறுவீர். முதல் இடாகினி: மகபதியே வாழ்க! கலாபநாட்டுக்கு அதிபதியே
வாழ்க! இரண்டாம் இடாகினி: மகபதி வாழ்க! கூடரநாட்டுக்கு அதிபதியே
வாழ்க! மூன்றம் இடாகினி: மகபதியே வாழ்க! முடிமன்னனவோனே வாழ்க! தனபதி: (இடாகினிகளை நோக்கி) காலத்தின் விளைவினைக் கருதி யுரைக்கக்கூடிய வன்மை நுமக்கு உளதாயின் எந்தத்தானியம் வளருமென்பதை யாராய்ந்து சொல்லுவீராக. நான் அஞ்சவும் மாட்டேன்; நும்மை யிரந்துநிற்கவும் மாட்டேன்; நுமது தய வையோ வெறுப்பையோ நான் பொருட்படுத்தவில்லை.

மதங்கசூளாமணி 47
முதல் இடாகினி. வாழ்க!
இரண்டாம் இடாகினி: வாழ்க!
மூன்றம் இடாகினி: வாழ்க!
முதல் இடாகினி: மகபதியிற் ருழ்ந்தாய், மகபதியி லுயர்ந்தாய்.
இரண்டாம் இடாகினி. அத்தனை பாக்கிய மில்லை, என்ருலும் பாக்கிய
வானே.
மூன்றம் இடாகினி. நீ மன்னனகமாட்டாய், மன்னர்க்குத் தந்தை
யாவாய், மகபதியே தனபதியே நீவிர் வாழ்க.
மகபதி: நீவிர் சொன்னதை விளக்கமாகச் சொல்லுவீர். நான் கலாப நாட்டுக்கு அதிபன் என்பதை யறிவேன்; கூடரநாட்டதிபன் உயி ரோடிருக்கும்போது நீவிர் என்னைக் கூடரநாட்டதிபனென்றுவாழ்த் திய தென்ன? நான் மன்னனுவதும் ஆகாதகாரியமே. (இடாகினிகள் மறைந்விடுகிருர்கள்.)
இடங்கராஜனது மந்திரிமார் வந்து மன்னன் மகபதியைக் கூடர நாட்டுக்கு அதிபனுக்கியிருப்பதாகக் கூறுகின்றர்கள். அவர் வார்த்தை யைக் கேட்ட மகபதி இரண்டாம் இடாகினியுடையவார்த்தை நிறை வேறியதைக் கண்டு அகமகிழ்ந்து தான் மன்னனுவதும் நிச்சயமென்று தன்னுள்ளே நினைத்து மகிழுகிருன்.
(இந்நிகழ்ச்சிகள் முதலங்கம் மூன்ருங் காட்சி.)
மகபதி தனபதியாகிய சேனைத்தலைவ ரிருவரும் அரமனைக்குப்போய் இடங்கராஜனைப் பணிந்துநின்றனர். மன்னன் அவரோடு கலந் துரை யாடியதன்பின் தானுந் தன்புதல்வ ரிருவரும் சிறிதுதூரத்திலுள்ள ஒரு நகரிக்குப் போக எண்ணியிருப்பதாகச் சொல்லுகிருன். வழியிற் றன்மனையிற் றங்கியிருந்துபோகவேண்டு மென்று மகபதி குறையிரந்து கேட்க மன்ன ஞெருப்படுகிருன்.
(இவை முதலங்கம் நான்காங்காட்சி.)
மகபதிமனைவியாகிய மகபதிப்பிரியை தனது நாயக னெழுதிய கடிதத்தைப் படித்து இடாகிணிக ஞரைத்த வாழ்த்துரையைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில் ஒரு சேவகன் வந்து இடங்கராஜனும் பரிசனரும் மகபதியினுடையமனையில் இராத்தங்கிப்போவதற்கு வருவ தாக உரைக்கின்றன். சிறிதுநேரத்தில் மகபதியும் வந்து அந்தச் செய்தியையே தெரிவிக்கின்றன். மகபதி: ) என் பிரியநாயகியே! இடங்கராஜன் இன்றிரவு இங்கு
வருகின்ருர் . மகபதிப்பிரியை: அவர் இங்கிருந்து என்று போகின்ருர்? மகபதி: ஒருவேளை நாளை யிவ்விடமிருந்து புறப்படலாம்.

Page 38
48 மதங்கசூளாமணி
மகபதிப்பிரியை. அந்த நாளை ஒருநாளும் வரப்போவதில்லை. என் கணவா! நினது முகக்குறி திறந்தபுத்தகம்போல அகத்தேயுள்ள எண்ணங்களையெல்லாம் எனக்குப் புலப்படுத்துகின்றது. தீங்கற்ற புஷ்பம்போல நின்முகங் காணப்படினும் பூவினுள்ளிருக்கின்ற புழு என் கண்ணுக்கு நன்கு தோற்றுகிறது. வருகிற அதிதியை நான் உபசரிக்கிறேன். இன்றிரவைக்கு நீர் செய்யவேண்டிய பெருங் காரியத்தைச் செய்துமுடிப்பீராயின் இனி வருகின்ற இரவு பக லெல்லாம் நாம் முதன்மையுற்றிருப்போம். மகபதி: இவ்விஷயத்தை இன்னும் ஆலோசிக்கவேண்டும். மகபதிப்பிரியை: எடுத்தகாரியம் முடியுமுன் கலக்கமுற்றேன் அஞ் சினவனுவான்; ஆகவேண்டியவற்றை யான் பார்த்துக்கொள்ளு கிறேன். - (இவை முதலங்கம் ஐந்தாங்காட்சி.) அரசனும் மங்கலவர்ம்மனும் அன்லவர்ம்மனும் தனபதியும் மாதவ னென்னும் மந்திரியும் பிற பரிசனரும் தீவட்டிவெளிச்சங்களோடு மகபதியின் வீட்டுக்கு வருகிருரர்கள். அரசன் மகபதியின்மனை யழ கானது என்று சொல்லிக்கொண்டிருக்கிறவெல்லையில் மகபதிப்பிரியை வந்து இனிய மொழிகள்கூறி மனையினுள் ளழைத்துச் செல்லுகிருள்.
(இவை முதலங்கம் ஆருங்காட்சி.) மகபதி தனியிடத்தில் நின்று பலவாருகச் சிந்தித்துக்கொண்டிருக் கும்போது அவன்மனைவி வந்து ஆசைவார்த்தைகூறி இடங்கராஜனைக் கொன்றுவிடும்படி தூண்டுகிருள். (இது முதலங்கம் ஏழாங்காட்சி. இவ்வளவோடு முகம் முடிகின்றது.)
துயிலுகின்ற இடங்கராஜனைக் கொல்லநினைத்து இராஜனுடைய படுக்கையறையைநோக்கிப் போகும்போது மகபதியின் கண்முன்னே இரத்தந்தோய்ந்த ஈட்டி யொன்று உருவெளித்தோற்றமாகக் காணப் படுவதும், அவன் அஞ்சிப் பின்வாங்குவதும், மகபதிப்பிரியை வந்து ஆசைவார்த்தை கூறி ஊக்கப்படுத்துவதும்; அவன் முற்பட்டுச்செல்வ தும், இரத்தந்தோய்ந்தகையோடு வருவதும், மறுநாட்காலையில் மாத வனும் பிறரும்வந்து இடங்கராஜனுடைய உடலத்தைக் காண்பதும், மகபதியும் மகபதிப்பிரியையுந் துன்புற்ருர் போலப் பிரலாபிப்பதும், அரசனுடைய சயனக்கிருஹத்தைக் காத்திருந்த காவலாளர் கள்ளினை நிறையவுண்டமையிரூலே மயக்கமேலிட்டு அரசனைக் கொன்றுவிட்டா ரென்று அவர்மேற் குற்றஞ்சாட்டுவதும், அதற்குச் சான்ருக அன்ன ருடைய முகத்தினுங் கத்தியினும் இரத்தக்கறை படிந்திருப்பதைக் காட்டுவதும், காவலாள ரிருவரையும் மகபதி கொன்றுவிடுவதும், மகபதியினுடையகுறிப்பினை யறிந்த மங்கலவர்ம்மனும் அனலவர்ம் மனும் தம்முயிர்க்குச் சேதம் வந்துவிடுமோ வென் றஞ்சிக் கலிங்க நாட்டுக்கு ஓடிவிடுவதும், நாட்டைவிட்டோடிய மங்கலவர்ம்ம அனல

மதங்கசூளாமணி s 49
வர்ம்மரே தந்தையைக் கொன்ரு ரென்று மந்திரி பிரதானியர் நிச்ச யிப்பதும், காலஞ்சென்ற அரசனுக்கு நெருங்கியசுற்றத்தானும் வலிமை பொருந்திய சேனைத்தலைவனுமாகிய மகபதியே மன்னணுதற் குத்தக்கவனென்று அனைவரும் நிச்சயித்து மகபதிக்கு மணிமுடிசூட்டு தலும் பிரதிமுகமாவன.
இடாகினிகள் தனபதியை, ‘‘மன்னர்க்குத் தந்தையாவாய்' என்று வாழ்த்திய வாழ்த்துரையை நினைத்து மகபதி துன்புறுவதும், கொடிய பாவச்செயலினலே தான் பெற்றுக்கொண்ட இராஜ்யந் தனக்குப்பின் தன் சந்ததியாருக்குப் போகாது மாற்ருஞகிய தனபதி சந்ததியா ருக்குப் போகப்போகின்றதே யென்று ஏக்கமுற்ற மகபதி கொலைத் தொழின்மாக்களை யழைத்துத் தனபதியையும் அவனதுடிதல்வன் வளை வணனையும் கொன்றுவிடும்படி கட்டளையிடுவதும், அன்னர் நள்ளிரு ளில், தனபதியைக் கொன்றுவிடுவதும், வளைவணன் தப்பியோடு வதும், மகபதி மந்திரி பிரதானியருக்கும் பிறருக்கும் பெரியதொரு விருந்தளிப்பதும், அரசனுகிய மகபதிக்கென் றிடப்பட்ட ஆசனத்தில் தனபதியின் பிரேதரூபந்தோற்றி யுட்கார்ந்திருப்பதும், அதனைப் பிறர் காணுதிருக்க மகபதிமாத்திரங் கண்டு அஞ்சுவதும், ஜனங்கள் மகபதி யினுடையசெயலைக் கண்டு ஐயுறுவதும், மாதவனென்னும் மந்திரி கலிங்கநாட்டுக்கு ஓடிவிடுவதும் கருப்பம் ஆவன.
இடாகினிமாதர் தோற்றி நாய்நாக்கு, பல்லியின்கால், ஆந்தைச் சிறகு, வெளவாற்றேல், குழந்தை கைவிரல் என்றின்னனவற்றை யிட்டு உதிரநிணத்தைப் பெய்து கூழடுவதும், மகபதி வந்து மேல் நடக்கப் போவனவற்றைத் தெரிவிக்கும்படி இடாகினிகளை வினவு வதும், கூழடுகின்ற பானையினின்று ஆயுதமணிந்த ஒரு தலை தோற்றி, 'மகபதியே மாதவனைப்பற்றிக் கவனமாயிரு’ என்று சொல்லி மறை யச் சிறிது நேரத்துக்குள் இரத்தம்போல் மேனியையுடைய ஒரு சிறு குழந்தை தோற்றி ‘மகபதியே யஞ்சாதிரு, ஸ்த்ரீ பெற்ற மைந்தனல் உனக்குத் தீங்கு விளையாது' என்ன அதன்பின்னர் முடிசூடிய ஒரு பாலன்வடிவம் கையி லொரு சிறு மரத்தைத் தாங்கி யெழுந்து * மகபதியே சிங்கம்போல் அச்சமற்றிரு, வர்ணுரணியம் நின் நகரிக்கு வந்தாலன்றி நீ தோல்வியடையப்போவதில்லை" யென்று சொல்லு வதும், மகபதியின்கண்முன்னே தனபதியும் அரசர் எண்மருந் தோற்று வதும், இடாகினிகள் மறைந்து விடுவதும், மகபதி மாதவன்மனைக்குக் கொலைத்தொழின்மாக்களை யனுப்பி மாதவனது மனைவியையும் புதல் வனையும் கொல்விப்பதும்,_மாதவனும் மங்கலவர்ம்மனும் இவற்றை யெல்லாங் கேள்வியுற்றுக் கலிங்க நாட்டுச் சேனைகளோடு அங்க நாட்டை யெதிர்க்க நிச்சயிப்பதும் விளைவு ஆவன.
மகபதிப்பிரியை வியாதியினல் துன்புறும்போது தன்னை மறந்து தன் மனத்திற் கிடந்த இரகசியங்களை வெளியிடுவதும், அதனைக் கேட்டு நின்றவைத்தியன் முதலியோர் இடங்கராஜனைக் கொன்றவர்

Page 39
50 மதங்கசூளாமணி
யாரென அறிந்துகொள்வதும், மங்கலவர்ம்மனுஞ் சேனைகளும் வர்ணு ரணியத்துக் கூடாக வரும்போது ஒவ்வொரு மரக்கிளையைவெட்டிக் கையி லேந்திக்கொண்டுவருவதும், காவலாள ஞெருவன் வர்ணு ரணியம் நகரியை நோக்கி வருகின்றதென மகபதிக்கு உரைப்பதும், மகபதி யச்சமுற்றுப் பின்பு போர்க்கோலங்கொண்டு வெளிச்செல் வதும், மாதவனும் மகபதியுந் தணியமர்புரிவதும், ஸ்த்ரீபெற்ற மைந் தனற் றனக்கு அழிவில்லையென்று மகபதி யுரைப்பதும், அன்னை யிறந்த பின் அவள் வயிற்றைக் கீறி மருத்துவர் தன்னை யெடுத்தமையினல் தான் ஸ்த்ரீபெற்ற மைந்தனில்லை யென்று மாதவனுரைப்பதும், மாதவன் கைவாளால் மகபதியிறப்பதும் மங்கலவர்ம்மன் அரசன வதும் துய்த்தல் என்னும் ஐந்தாஞ் சந்தியாவன.
‘அணங்கே விலங்கே கள்வர்த மிறையெனப், பிணங்கல் சாலா வச்ச நான்கே' யென்புழிக் கூறிய நால்வகை யச்சத்தினுள் அணங்கி ஞலும், அரசனலும் எய்திய அச்சச்சுவை இந்நாடகத்தினுள் நிரம்ப வந்தமை காண்க. 'அணங்கென்பன பேயும் பூதமும் பாம்பும் ஈருகிய பதினெண்கணனும் நிரயப்பாலரும் பிறரும் அணங்குதற் ருெழில ராகிய சவந்தின்பெண்டிர் முதலாயினரும் உருமிசைத்தொடக்கத் தனவு' மென உறுப்பியலுட் கூறினம். பெரும்புயற்சரிதையினுட் டோற்றுகின்ற மாயரூபங்கள் அச்சத்தை விளைக்காது மருட்கையை விளைப்பதும், இந்நாடகத்தினுட் டோற்றுகின்ற இடாகினிகள் மருட் கையொழித்து அச்சத்தை விளைப்பதும் நுணுகி ஆராயற்பாலன. தலைவனது மரணத்தை யரங்கத்திற் காட்டுதல் கூடாதென வட மொழி நூல்கள் கூறுவன. இடங்கராஜனதுமரணசம் வெளிப்படை யாகக் காட்டப்படாது குறிப்பினலுணர்த்தப்பட்டதை நோக்குக.
சு. பெருமிதமும் பிறகவையு முணர்த்தும் வணிகதேயவர்த்தகன் சரிதையை யாராயப்புகுவாம். *
மணலிநகரத்தில் வசித்த ஒரு செல்வப்பிரபு ஆண்மக்களில்லாமை யினலே தனது போருள்முழுவதையும் தன் மகள் விஜயைக்கு உரிமை யாக்கிப் பொன்னிஞலும், வெள்ளியினலும், ஈயத்தினலும் மூன்று பேழைகளைச்செய்து, அவற்றினுள் ஒன்றினுள்ளே விஜயையினுடைய சாயலெழுதிய சித்திரத்தை வைத்து, யாவனுெருவன் சித்திரம்வைக் கப்பட்டிருக்கின்ற பேழை யிதுவென்று நிச்சயித்துச் சொல்லுகிருனே அவனுக்கே விஜயை மனைவியாகவேண்டுமென்று ஏற்பாடுசெய்து இவ் வுலகவாழ்வை நீத்தனன்.
(நாடகத்துக்குப் புறம்பாகிய இவ்விஷயத்தைக் கதைத்தொடர்பை யறிந்துகொள்வதற்காக ஈண்டுத் தந்தனம்.)
விஜயையைப் பெறவிரும்பிய வாசவனென்னும் வணிகதேயத்து வணிகன் தனது நண்பனுகிய அநந்தனென்னும் வணிகனயடைந்து தான் மணலிநகருக்குச் சிறப்பாகப் போவதற்கு மூவாயிரம்பொன்

மதங்கசூளாமணி 51
கடன் கொடுக்கும்படி கேட்டனன். அநந்தன் தன்னிடங் கைக்காசில் லாதிருந்தமையினுல், சாபலனென்னுங் கோமுட்டிச்செட்டியிடம் மூவாயிரம் பொன் கடன்வாங்கிக் கொடுத்தனன். சாபலன் கடு வட்டி வாங்குகிற கொடியவனனமையினுல், வட்டியின்றிப் பணங் கொடுத்துதவும் அநந்தன்மீது நிறைந்த அழுக்காறுடையவன யிருந் தான். அநந்தன் மூவாயிரம்பொன் கடன்கேட்டதும், தருணம்வாய்த் ததென்று தன்னுள்ளே நினைத்து மகிழ்ந்த சாபலன் புறத்தே நகை முகங் காட்டிப் பொன்னைக் கொடுத்துவிட்டு, மூன்றுமாதத்துக்குள் திருப்பிக்கொடுக்காவிட்டால் அநந்தனுடைய உடலிலிருந்து நாற்பது ரூபா எடையளவாகிய இறைச்சியை வெட்டிக்கொள்வதற்குத் தனக்கு உரிமையுண்டென்று ஒரு சீட்டெழுதுவித்துக்கொண்டான். மூன்று மாதத்திற்குள் தன்னுடைய கப்பல்கள் வந்துவிடுவன வென் றெண் ணிய அநந்தன் சீட்டுக்குக் கைச்சாத்திட்டான். கப்பல்கள் வரவில்லை. சாபலன் நீதிமன்றுக்குப் போய் வழக்குத் தொடுத்தான் வாசவன் ஆருயிரம்பொன் கொடுப்பதாகக் கூறியும் சாபலன் ஒருப்படாது சீட்டில் விதித்தபடி இறைச்சியே வேண்டுமென்றுநின்றன். வாச வனுக்கு மனைவியாகிய விஜயை நாயகனும் பிறரு மறியாதவண்ணம் நியாயதுரந்தரவேடத்தோடு வந்து மன்றிலிருந்தோருக்குச் சட்டத்தை யெடுத்துக்காட்டி அநந்தனைக் காப்பாற்றிச் சாபலனைத் தோல்வி படையப்பண்ணுகிருள். இதுவே கதையின் சுருக்கம். மேற்குறிப்பிட்ட நாடகபாத்திரரோடு வணிகதேயத்து மன்னன், விஜயையைப்பெற விரும்பியகுறும்பொறைநாடன், கானகநாடன் என்னும் குறுநிலமன்ன ரிருவர், அநந்த வாசவருக்கு நண்பராகிய கருணகரன் சலச லோசனன் சாரகுமார னென்னும் மூவர், சாபலனது நண்பனுகிய தூவல னென்னுங் கோமுட்டிச்செட்டி, சாபலனது வேலைக்காரணுகிய அகிஞ்சன னென்னும் விதூஷகன், அகிஞ்சனன் தந்தையாகிய விருத் தன், விஜயையினது தோழியாகிய அங்கனை, சாபலன் புதல்வியாகிய பதுமை, பதுமைமேற் காதல்கொண்ட புட்கலன், வேலைக்காரர் என் றின்னேர் இந்நாடகத்தினுட் டோற்றுவர். இனி, நாடகத்தி னமைப் பைக் காட்டுவாம்.
(அங்கங்களை 1.1, II, IV, V, என்னும் இலக்கங்களாலும், அங் கத்தின் உட்பிரிவுகளாகிய காட்சிகளை 1,2, என் றித்தகைய இலக்கங் களாலும் குறியீடுசெய்வோம். உதாரணமாக 11:3' இரண்டாம் அங்கத்தின் மூன்ருவது காட்சி என்பதைக் குறிக்கும்.)
1. 1 நாடகபாத்திரர்: அநந்தன், சலசலோசனன், சாரகுமாரன்,
வாசவன், புட்கலன், கருணுகரன்.
நிகழ்ச்சி: அநந்தன் மனச்சோர்வுற்றுத் தனது சோகத்துக்குக் காரண மெதுவென நண்பரை விசாரித்துக்கொண்டிருப்பதும் வாசவன் வந்து தான் மணலிக்குப் போக நினைத்திருக்கும் எண்ணத்தைக் கூறி மூவா யிரம்பொன் கடன் கேட்பதும்.

Page 40
52 மதங்கசூளாமணி
1. 2. நா. பா. விஜயை, அங்கனை. நி. விஜயை தன்னை நாடிவந்து துன்புற்றுப்போனஅரசிளங்குமர ரையும் பிறரையும்பற்றித் தோழியோடு வார்த்தையாடுதல்.
1. 3. நா. பா. அநந்தன், வாசவன், சாபலன் : நி, சீட்டுக் கொடுத்து மூவாயிரம்பொன் கடன்வாங்குதல்.
11. 1. நா. பா. குறும்பொறைநாடன்,விஜயை அங்கனை, பரிசனர்.
நி. விஜயை தன்னைவிரும்பிவந்த குறும்பொறைநாடனைநோக்கி, ‘‘மன்ன! இப்பேழைகளுள் ஒன்றி லென் னுருவ முண்டு அதனை நீர் தெரிந்தெடுப்பீராயின் நான் உமக்கு மனைவியாகவேண்டும், தெரிந் தெடுக்கத் தவறுவீராயின் பேழையின் மர்ம்மத்தைப் பிறருக்குத் தெரிவியாதிருப்பதோடு நீர் சீவியகாலம் முழுதும் பிரமசாரியா யிருக்க வேண்டும்; இது என் தந்தையின்கட்டளை, இதற்கு உடம்படுவீ ராயின் கோயிலிற் சென்று சத்தியஞ்செய்து வருவீர்; பேழையிருக்கு மிடத்துக்கு நும்மை யழைத்துச்செல்வேன்' என்று கூறுதல்; குறும் பொறைநாடன் உடன்பட்டுச் சத்தியஞ்செய்யப்போதல்.
11. 2. நா. ப்ா: அகிஞ்சனன், விருத்தன், வாசவன், கருணுகரன்.
நி. அகிஞ்சனன் சாபலனுடைய சேவகத்தை விட்டு ஒட நினைத்து வீதியிற் செல்லும்போது தனது தந்தையாகிய விருத்தனைக் கண்டு அவனையும் அழைத்துச் சென்று வாசவனிடத்துச் சேவகளுக அமர்தல்.
(விருத்தணுகிய தந்தை கண்ணுெளி யிழந்திருந்தமையினல் ஒன் றினையொன்ருக மாற்றிச்சொல்லி அவனேடு பலவாருக வார்த்தை யாடும் அகிஞ்சனனுடைய கூற்றுக்கள் நகைச்சுவை நிரம்பியன.)
11. 3. நா. பா. பதுமை, அகிஞ்சனன்.
நி. அகிஞ்சனன் பதுமையிடம் விடைபெறச் செல்லுதல்; அவள் புட்கலனிடங் கொடுத்துவிடும்படி அகிஞ்சனன்கையில் ஒரு கடிதத் தைக் கொடுத்தல்.
11. 4. நா. பா. கருணுகரன், புட்கலன், சலசலோசனன், சார குமாரன், அகிஞ்சனன்.
'நி. அகிஞ்சனன் பதுமையினது நிருபத்தைப் புட்கலனிடங் கொடுத் தல். பதுமை ஆண்பிள்ளைவேடத்தோடு தந்தைவீட்டைவிட்டுத் தன் னேடு உடன்வருதற் கிசைந்திருப்பதைப் புட்கலப் தனது நண்பருக்குத் தெரிவித்தல்.
I. 5. நா. பா: சாபலன், அகிஞ்சனன், பதுமை.

மதங்கசூளாமணி 53
நி.: சாபலன் தான் புறத்தே விருந்துண்ணப் போவதாகவும் வீட் டினைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படியும் பதுமைக்குச் சொல் லுதல்.
II. 6. நா. பா. கருணுகரன், சாரகுமாரன், புட்கலன், பதுமை.
நி. புட்கலன் பதுமையை யுடன்கொண்டேகல்.
(பின் அநந்தன் வந்து கருணுகரனைக் கண்டு வாசவனேடு மணலிக் குப் போகும்படி அனுப்புதல்.)
11. . 7. நா. பா. விஜயை, குறும்பொறைநாடன், பரிசனர். நி. குறும்பொறைநாடன் பொற்பேழையைத் திறந்து அதனுள் ஒரு தலையோடும் ஒரு பத்திரமு மிருக்கக்கண்டு பத்திரத்தைப் படித் தல்.
அப் பத்திரத்தில்,
'மின்னுவ வெல்லாம் பொன்ன காவெனு நன்மொழி பன்முறை நவிலக் கேட்டனை யென்மேற் புறத்தி னெழிலினை நோக்கி யின்னுயி ரீந்தோ ரியம்பிடிற் பலரே பிணம்பொதி தாழி யரும்பொன தெனினு நிணங்கொளும் புழுவுண் ணிறைதலு மியல்பே ஆண்மையொ டறிவு கேண்மையுற் றிருப்பின் விடைபெரு திவணி மேவுதல் சாலும் இளையோய் மதியின் முதியையு மல்லை களைக ஆணுற்றநின் காதலும் வறிதே போதி யென்னப் புகல்வதென் கடனே." என் றெழுதியிருப்பதைக் கண்டு குறும்பொறைநாடன் மனத்துயருற் றுப் போய்விடுதல். -
II. 8. நா. பா.: சலசலோசனன், சாரகுமாரன்.
நி. பதுமை வீட்டைவிட்டோடியபின்பு சாபலன் வந்து தன் மகள் பொன்முடிப்புகள் பலவற்றைக் கொண்டு புட்கலனேடு ஓடிவிட் டாள் என்பதை யறிந்து துயருற்றசெய்தியைச் சலசலோசனன் சார குமாரனுக்கு அறிவித்தல்.
11. . 9. நா. பா.: விஜயை, அங்கன, கானகநாடன், ஒரு தூதுவன்.
நி. கானகநாடன் பேழைகள் மூன்றினையும் பார்வையிடல். பொற் பேழையின்மேல், ‘என்னைத் தெரிந்தோர் பலரும் விரும்புவதைப் பெறுவார்' எனவும், வெள்ளிப் பேழையின்மேல், ‘என்னைத்தெரிந் தோர் தமது தகுதிக்கேற்றதைப் பெறுவார்.’’ எனவும், ஈயப்பேழை யின்மேல், "என்னைத் தெரிந்தோர் தமக்கென்றிருக்கும் பொருளனைத் தினையும் ஈந்திழப்பார்" எனவும் எழுதப்பட்டிருப்பதைக் கண்ட

Page 41
54 மதங்கசூளாமணி
கானகநாடன் வெள்ளிப்பேழையைத் திறக்கிருன். அதனுள்ளே மூடன் தலை யெழுதப்பட்ட் ஒரு சித்திரம் இருக்கக்கண்ட கானகநாடன் இது தானே என்தகுதிக் கேற்றதெனக் கூறி யவலித்து ஆங்கிருந்த ஒரு பத்திரத்தையெடுத்துப் படிக்கிருன்.
ஆங்கு,
‘'எழுமுறை யெரியிதன் றிண்மை சோதித்த
தெழுமுறை யாய்ந்தோர் பிழைபட விலரே விழைபொருள் நிழலெணி னுவகையு மதுவே நிழலினை யனையு நீர்மைய ருளரே வெள்ளிப் பூச்சொடு விளங்கிய மூடர் உள்ளார் காணிங் குள்ளது மதுவே மெல்லணை மேலெம் மெல்லிய லுறினும் நல்லோய் நாணின் றலையா குவனே. ஆதலின் விரைந்து போதனின் கடனே." என எழுதப்பட்டிருப்பதைப் படித்துக் கானகநாடன் போய்விடு கிருன்.
11. . 1. நா. பா.: சலசலோசனன், சாரகுமாரன், சாயலன் தூவலன்.
நி. அநந்தனுடைய கப்பல் வந்துசேரவில்லை யென்னும் செய்தி யெங்கும் பரவுகின்றது. அந்தன்மேற் பழிவாங்கலா மென்னு மெண் ணத்தினுற் சந்தோஷமும் மகள் பொன்முடிப்போடு ஓடிவிட்டா ளென்னு மெண்ணத்தினுற் றுன்பமு முற்ற சாபலன் ஈற்றிற் சந் தோஷத்தோடு அகலுகிருன். W
11. 2. நா. பா. வாசவன், கருணுகரன், விஜயை, அங்கனை, புட்கலன், பதுமை, சலசலோசனன், பரிசனர்.
நி. வாசவன் பலமுறை ஆராய்ந்து நோக்கி ஈயப்பேழையைத் திறந்து, அதனுள்ளே விஜயையின் சாய லெழுதிய சித்திர மிருக்கக் கண்டு,
'யாதிங் குள்ளதென் னிறைகவ ரணங்களை விஜயை
மாதின் சாயலோ வாள்விழி யசைந்தன மலர்ந்த போது போன்றன மெல்லித ழுளம்பிணித் திடுமோர் சூதின் சூழ்ச்சியே சுரிகுழல் சொல்லவேறுளதோ'
எனக் கூறிப் பேழையினுள் மீட்டும் பார்க்கும்போது ஒரு பத்திர மிருக்கக்கண் டெடுத்து அதனைப் படிக்கிருன்.
அப்பத்திரத்தில்,
**மையல்தீர் காட்சியை யாதவி னேய
பொய்யா நீர்மை பொருந்தப் பெற்றனே பிறிதுவிழை யாதிப் பெரும்பொருள் பேணும்

மதங்கசூளாமணி 55
உறுதியை யாயினிற் குரியா டன்னக் கைப்பிடித் தென்றுங் காத்தனின் கடனே"
என எழுதியிருப்பதைப் படித்து விஜயையினுடைய கையைப் பற்றி மகிழ்ச்சியடைகிருன். கருணுகரன் அங்கனையை மனைவியாகப் பெறுகி ருன். இத்தருணத்திற் சலசலோசனன் அநந்தன் கொடுத்த ஒரு நிருபத்தை வாசவன்கையிற் கொடுக்க அதன்மூலமாக வாசவன் தன் நண்பன் அநந்தனுக்கு விளைந்திருக்கிற துன்பத்தையுணர்ந்து விரைந்து புறப்பட்டு வணிகதேயத்துக்குப் போகருன.
III. . 3. 5fT. LumT. : 8FfTLu6)6söT, சாரகுமாரன், அநந்தன், சிறைச் சாலைத்தலைவன். w
நி. சாபலன் சிறைச்சாலைத்தலைவனிடம் அநந்தனை யொப்புவித் தல்.
III. . 4. நா.பா.: விஜயை, அங்கனை, புட்கலன், பதுமை, வேலைக்காரன்.
நி. விஜயை புட்கலனையும் பதுமையையும் வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுத் தனது அத்தை மகளுகிய ஒரு நியாய துரந்தரனுடைய ஆலோசனைப்படி அந்த நியாயதுரந்தரனுடைய உடைகளை யணிந்துகொண்டு, தோழியாகிய அங்கனை எழுத்தாள னுடையணிந்துகொண்டு உடன்வர வணிகதேயத்துக்குப் போதல்.
III. 5. நா. பா: அகிஞ்சனன், பதுமை, புட்கலன் நி. உவகைக்குறிப்பு நகைக்குறிப்புத் தோன்ற உரையாடுதல்.
IV. 1. வணிகதேயத்து நீதிமன்றம். நா. பா. வணிகதேயத்துமன்னன், சாபலன், அநந்தன், வாசவன், கருணுகரன், சலசலோசனன், சாரகுமாரன், நியாயதுரந்தரவேடம் பூண்ட விஜயை, அங்கனே, மன்றத்திருந்த பிறர்.
நி. சீட்டினின்று அசையமாட்டேன் என்ற கோமுட்டிச்ச்ெட்டி யாகிய சாபலனை நோக்கி விஜயை அன்பின்பால்தாகிய இரக்கத்தின் உயர்வை யெடுத்துக் கூறுதல்,-
'வன்பொறை மருவா மரபின தாகி
வானின் றிழியும் மழைத்துளி போலக் கொடுப்போ ரெடுப்போ ரெனுமிரு வோரையும் அடுத்துக் காப்ப தன்புசா ரிரக்கம் வலிதினும் வலிதிது மணிமுடி சூடி யுலகு புரக்கு முரவோற் குரைப்பின் இலகொளி முடியினு விரக்கம் பெரிதே அங்கையிற் பொருந்தி யச்சம் விளேக்குஞ் செங்கோல் புறத்தது சிந்தைய திரக்கம் மன்னவர் மனமெனு மணியணி பீடத் தரசுவீற் றிருக்கு முரைசா லன்பு

Page 42
56 மதங்கசூளாமணி
தேவ தேவன் றிருக்குணத் தொன்றே நீதியொ டன்பு நிலைபெறினிதி ஆதியங் கடவுளருளென நிலவும் இறைபே ரருளிங் கெமக்கிலை யாயின் நெறிநின் றியாரோ நீடுவாழ் வெய்துநர் அருளினை விழைந்தே மருட்செயல் புரிதன் மரபே யாக மதித்தலுங் கடனே"
எனப் பலவாருகக் கூறியும் சாபலன் சீட்டினின்று அணுவளவேனும் விலகமாட்டேனெனச் சாதித்துநின்றனன். விஜயை; சாபலா 1 சீட்டின்படி அதோ நிற்கும் வணிகனுடைய இறைச் சியில் நாற்பதுகுபா எடை யுனக்குரியது. சட்டம் உனக்கு அதை யளிக்கிறது : நீதியும் அதுவேயாகும். சாபலன்: ஆ! நேர்மையுள்ள நீதிபதியே! விஜயை: சொல்லப்பட்ட நாற்பதுருபா எடை இறைச்சியை நீ இவ் வணிகனுடைய மார்பிலிருந்து வெட்டிக்கொள்ளலாம் ; இதற்குச் சட்டம் இடங்கொடுக்கிறது; மன்றத்தாரும் இதனை நீதியெனக் கொள்கின்றனர். சாபலன்: கல்வியில்வல்ல நீதிபதியே! தீர்ப்புச்சொல்லிவிடுக. விஜயை: பொறு, பொறு, சாபலா! அவசரப்படாதே, இறைச்சி யுனக்குரியதென்று இச்சீட்டுச் சொல்லுகிறது. அவ்விறைச்சியை வெட்டும்போது ஒரு துளி யிரத்தஞ் சிந்தினுலும் அல்லது குறிக்கப் பட்ட எடையினின்று ஒரு அணுவளவேனும் ஏறக்குறைய வெட்டின லும், நீ நின்உயிரையும் பொருள்முழுவதையும் இழந்து விட வேண்டும், இதுவே இந்நாட்டுச் சட்டம். சாபலன்: நான் வழக்கை விட்டுவிடுகிறேன்; என் முதலைத் தந்து
என்னைப் போகவிடுங்கள். வாசவன்: இதோ எடுத்துக்கொள். விஜயை மன்றத்தின்முன்னிலையிற் பொன் வேண்டாமென்றன; சட் டப்படியுள்ள நீதியே யுனக்குரியது. ஒரு மனிதனுடைய உயிரைக் கவர நினைந்தாயாதலினல் உன்னைக் கொலைக்களத்துக்கு அனுப்புவ தற்கு இந்நாட்டு மன்னருக் குரிமையுண்டு. உனது பொருளிற் பாதி யரசபொக்கிஷத்துக்குப்போகும்.மற்ருெருபாதி நீ யெவனது உயி ரைக் கவரநினைத்தாயோ அவனுக்குரியது. (அரசன் சாபலனுயிரை மன்னித்து ஒருதொகைப் பணத்தை இராஜ பொக்கிஷத்துக்குக் கொடுக்கும்படி தண்டனை விதிக்கிருன், அநந்தன் தனக்கென்று மன்றத்தார் விதித்த பாகத்தைப் புட்கலனுக்கும் பது மைக்குங் கொடுக்கும்படி சொல்லுகிருன். அரசன் வாசவனையும் அநந்தனையும்நோக்கிச் சட்டமுறையை எடுத்துக்காட்டி அநந்தனுயி ரைத் தப்புவித்த நியாயதுரந்தரனுக்குத் தக்க பரிசில்கொடுக்கும்

மதங்கசூளாமணி 57
ւյւգ- சொல்லுகிறன். நியாயதுரந்தரஞகிய விஜயை வாசவன் கைக் கணையாழியைத் தரும்படி கேட்டுப் பெற்றுக்கொள்ளுகிருள்.)
IV 2. நா. பா. விஜயை, அங்கனை, கருணுகரன்.
நி. எழுத்தாளன் வேடத்தோடுநின்ற அங்கன, கருணுகரனுடைய கைவிரலி லணிந்திருந்த மோதிரத்தைப் பெற்றுக்கொள்ளுகிருள்.
V 1. நா. பா.: பதுமை, புட்கலன், அகிஞ்சனன், அங்கனை, கரு ஞகரன், வாசவன், அநந்தன், விஜயை.
நி. பதுமையும் "புட்கலனும் சந்திரனுடைய தண்ணிய கிரணங்கள் பரம்பிய உய்யானத்தினுள்ளிருந்து வார்த்தையாடிக்கொண்டிருக்கும் போது அகிஞ்சணன்வந்து விஜயையும் அங்கனையும் வருவதாகக் கூறு கிருன். அன்ன ரிருவரும் வந்து சிறிதுநேரத்துக்குள் அநந்தனும் வாசவனும் கருணுகரனும் வருகின்றனர். அங்கனை, கருணுகரனை நோக்கி மணநாளிலே தான் கொடுத்த மோதிர மெங்கேயென்று விசாரித்தாள்; அவன் எழுத்தாளனுக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்லுகிருன்; அவள் புலவியால் வாடியதுபோ லபிநயித்து இதோ இந்த மோதிரத்தை வைத்திரும் என்று கொடுக்கிருள். விஜயையும் தான் கொடுத்த கணையாழியை விசாரித்துப் பின்பு கொடுக்க நியா யதுரந்தரனுக வந்தது விஜயையே யென்பதை அவளது நாயகனும் நண்பரும் அறிகின்றனர். இவ்வளவோடு நாடகம் முடிகின்றது.
இந்நாடகத்தினுள், "அநந்த சாபல சரிதம்." ‘விஜயை வாசவ சரிதம், 'பதுமைபுட்கலசரிதம்.’’ எனஒன்றினேடொன்று தொடர் புடைய மூன்று சரிதங்கள் ஒருங்கு பிணைந்திருக்கின்ற தன்மையை நோக்குக.
Syp5 jö35 FTL Gay Ff5th I. 1 , 3, II , 2, 8, III , l., 2, 3, 4, 1W 1, ஆகிய உட்பிரிவுகளினுட் கூறப்பட்டது; விஜயை வாசவ சரிதம் 1, 2, 11 1,2,7,9, III 2, 4, IV 1 , 2, V. I. Gulu உட்பிரிவுகளினுட் கூறப்பட்டது; பதுமை புட்கலசரிதம் 11. 3,4,5, 6, 8, III. I, 4, 5, IV. 1, V 1, 5,66uu D.L * Sifflay5@f Spy" Sinspiù பட்டது. பெருமிதச் சுவையின்பாலதாகிய யூலியசீசர் சரிதையின் கதைச்சுருக்கத்தைத் தந்த பின்பு பெருமிதச் சுவையினியல்பை விளக்கு Gnurrb.
எ. மேலைநாட்டிற் ருேன்றிய தலைவர்களுள்ளே தனிப்பெருந் தலைமைவாய்ந்த வீரராகிய யூலியசீசருடைய ஆற்றலும் ஆண்மையும் மேல்புலரத்தாரது இதிகாசதுரலகளினுள்ளே சிறப்புறக் கூறப்படுவன. கல்வியினுலும், அஞ்சுதக்கன கண்டவிட அஞ்சாமையாகிய தறு கண்மையினலும், இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழி யொடுவருவன செய்யாமையாகிய இசைமையினுலும், உயிரும் உடம் பும் உறுப்பும் முதலாகிய எல்லாப்பொருளுங் கொடுத்தலாகிய கொடையினலும் மிகச் சிறந்துவிளங்கியவராகிய யூலியசீசர் பெரு

Page 43
58 மதங்கசூளாமணி
மிதமேயுருவெடுத்த தன்மை வாய்ந்தவர். வணிகதேயவர்த்தகஞகிய அநந்தனிடத்து இசைமை கொடை யாகிய இரண்டும்பற்றியபெரு மிதங் காணப்பட்டது. யூலியசீசரிடத்து எஞ்சியவிரண்டுஞ் சிறப்புறக் காணப்படுவன. இவரைக் கதாநாயகனுகக்கொண்டெழுந்த நாட கத்தினது கதைச் சுருக்கத்தையும் பெருமிதச்சுவை தோற்றுகிற சிற்சில பாகங்களினது மொழிபெயர்ப்பையுந் தருவாம். விரிவஞ்சிச் சந்தி பிரிக்காது கதைச் சுருக்கத்தைத் தொகுத்தெழுதுவாம். மேற் போந்த ஏழு சரிதைகளினுட் சந்தியமைப்பை நுணுக ஆராய்ந்தோமாதலினல் இதனுள்ளும் மேல் வருஞ் சரிதைகளினுள்ளும் சந்தியமைப்பை யாரா யாதுவிடுத்துச் சுவையையும் தலைமக்களியல்பையும் பெருக ஆராய் வாம். இச்சரிதையும் இதற்கடுத்த சரிதையும் இதிகாசத்தின்பாற் பட்டன வாதலின் இவற்றினுள் வருகின்ற சிறப்புப்பெயர்களை வேறு படுத்தாது முதனூல் வழக்குப்படியே வழங்குவாம்.
இற்றைக்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு மேலைத் தேயம் முழுவதுக்கும் ரோமாபுரி தலைநகராக விளங்கியது. சிறந்த சேனைத்தலைவராகிய யூலியசீசர் ரோமாபுரிக்குத் தென்மேற்குப்பாகத் திலுள்ள தேசங்களையெல்லாம் வெற்றிகொண்டு ரோமாபுரியிற்றமக்கு மாறுகொண்டெழுந்த சேனைத்தலைவர்களையும் மேற்கொண்டு தனி பரசு புரிந்துவந்தனர். பெருமிதம்நிறைந்த இவரது ஆட்சியைப் பொதுஜனங்கள் பெரிதும் விரும்பினர். ஜனத்தலைவருட் சிலர் அழுக் காற்றினலும் பிற காரணங்களினலும் இவர்மேல் வெறுப்புற்று இவ ருயிர்க்கு இன்னல் விளைப்பதற்குத் தருணந் தேடிக்கொண்டிருந் தனர்.
(இதுவரையுங் கதைத்தொடர்பை யுணர்த்தும்பொருட்டு 15ft Lகத்துக்குப் புறம்பான நிகழ்ச்சிகள் சிலவற்றைக் கூறினுேம்; இனி நாடகத்தினுள் எடுத்துரைக்கப்பட்ட நிகழ்ச்சிகளைக கூறுவாம்.)
காஷியஸ் எனப் பெயரிய ஜனத்தலைவ ஞெருவன் கஸ்கா, திரே போணியஸ், லிகாறியஸ், டேசியஸ், சின்னு, சிம்பர் என்போரையும் நீதிமானும் யூலியசீசரது நண்பனுமாகிய மார்க்கஸ் புரூட்டஸையும் தன்வயப்படுத்திப் பங்குனித்திங்களின் நடுநாளில் நண்பகலில் அத் தாணி மண்டபத்தில் யூலியசீசரது உயிரைக் கவர்வதற்கு ஏற்ப்பாடு செய்தனன். குறித்த தினத்துக்கு முன்னுளிரவில் விண்வீழ்கொள்ளி களும், தூமகேதுக்களும் பலவகை யுற்பாதங்களும் நிகழ்ந்தன. யூலிய சீசரின் மனைவியாகிய கல்பூர்ணியா தீக்களுக் கண்டு நள்ளிரவில் அச்ச முற்றெழுந்து புறத்தே நிகழுகின்ற உற்பாதங்களினல் உள்ளம் அவ லித்துத் துயிலொழித்திருந்து காலைப்பொழுதுவந்ததும் கணவனது முன்னிலையை யடைந்து,
'பேரிரவில் நடந்தவெலாம் பீழையினை விளைக்கப்
பேதலிக்கு முளச்சிறியேன் பேசுகின்ற மொழிகள்

மதங்கசூளாமணி m 59
ஆருயிர்க்குத் தலைவனின் தருட்செவியில் வீழ்க
அகத்திடையின் றிருந்திடுக அவைபுகுத லொழிக’ எனக் குறையிரந்து வேண்டிநின்றனள்,
அதனைக் கேட்ட சீசர் புன்னகை புரிந்து,
'அஞ்சினர்க்குச் சதமரண மஞ்சாத நெஞ்சத்
தாடவனுக் கொருமரண மவனிமிசைப் பிறந்தோர் துஞ்சுவரென்றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்குந்
துன்மதிமூ டரைக்கண்டாற் புன்னகைசெய்பவன்
turreir இன்னலும்யா னும்பிறந்த தொருதினத்தி லறிவாய்
இளஞ்சிங்கக் குருளைகள்யாம் யான்மூத்தோ னெனது பின்வருவதின்னலெனப் பகைமன்ன ரறிவார்
பேதுறல்பெண் ணணங்கேயான் போய்வருதல்
வேண்டும்.”*
எனக் கூறினர்.
இத்தருணத்தில் டேசியஸ் என்பவன் வந்து அத்தாணிமண்டபத் திற் குழுமியிருந்த முதியோர் சீசரை அழைத்துவரும்படி சொல்லிய தாகத் தெரிவித்தான். சீசர் முன்பு மறுத்துப் பின்பு இயைந்து உடன் போயினர். வழியில் ஒருசேவகன் ஒருநிருபத்தைக் கொண்டுவந்து கொடுத்து "இது சீசருடைய சுகத்தைக் கோரியது, இதனை யுடனே படித்தருளவேண்டும்’ எனச் சீசர்கையிற் கொடுத்தனன். 'நல்லது நண்ப! ஜனங்களுடைய சுகத்தைக் கோரிய நிருபங்களைப் படித்த பின்பு இதனைப் படிக்கிறேன்’ என்று கூறிவிட்டுச் சீசர் அத்தாணி மண்டபத்தை நோக்கிநடந்தனர். ஆங்கு, சிம்பர் என்பவன் முற் பட்டுவந்து முழந்தாட்படியிட்டுநின்று, ‘‘மஹெளதாரிய மஹாப் பிரபுவே ஏழையேனது விண்ணப்பத்துக்கிரங்கி ஏழையேனது சகோ தரனை மன்னித்தருளவேண்டும்’ என வேண்டிநின்றனன்.
gigeri:
"தாழ்ந்து மென்மொழி யுரைத்திடேல் தரணியிற் பணிந்து
வீழ்ந்து நைபவர் பொய்யுரைக் கிரங்கிய வீணர் சூழ்ந்து செய்தன துடைத்துப்பின் சோர்வினை யடைவார் ஆழந்து செய்வன செய்யும்யா னவர்நெறியணையேன்." ‘அண்ண னிர்மையேன் பிழைசெயே னணுவள வேனும்
நண்ணு நீதியிற் பிரிந்திடேன் நாயெனக் கதறிக் கண்ணி னிர்மிக நிலத்தினிற் புரள்வதாற் கருதும் எண்ண முற்றுறு மென்னநீ யெண்ணுவ திழிவே."
எனக் கூறச் சார்ந்து நின்ற மார்க்கஸ்புரூட்டஸ் சீசரை நோக்கி, ‘ஐய! நான் இச்சகம்பேசுவோனல்லேன் தேவரீரது திருக்கரத்தை

Page 44
60 மதங்கசூளாமணி
முத்தமிட்டேன், சிம்பரின் விண்ணப்பத்துக் கிரங்கி அவனது சகோ தரனை விடுதலைசெய்தல்வேண்டும்' என்றனன்; சமீபத்தில் நின்ற காஷியஸ் சீசரை நோக்கி, "மகிமை பொருந்திய சீசரே ! மன்னிக்க வேண்டும்! உம்மிரு தாளினையும் பற்றினேன். சிம்பரின் சகோதரனை மன்னிக்கவேண்டுமென்றனன். சீசர் தம்மைச் சூழ்ந்துநின்று விண் ணப்பித்தோரை நோக்கி,
‘இரங்குதி ரென்ன விரக்கு நீர்மையர்
தமைப்பிற ரிரக்கிற் றயைகாட் டுநரே நும்போல் வேனெனினும்மொழிக் கிசைவேன் வானக மிளிரு மீனின மக்னத்துத் தற்சூழ்ந் தசையத் தானசை வின்றி நிலைபெறு துருவ னிலைமைகண் டிலிரோ வான்மீ னனேயர் மாநில மாந்தர் துருவ னனைய ஞெருவனிண் டுளனல் அவன்ருன் யானென வறிகுவிர் புகன்ற மொழியிற் பிரியேன் பழியொடு படரேன் மலைவீழ் வெய்தினு மனம்விழ் விலனே."
எனக் கூறினர். இதனக்கேட்ட புரூட்டஸ்ஆதியோர் சீசரது பெருமித வுரையைத் தற்பெருமையுரை யென வெண்ணி உடைவாளைக் கழற்றி அனைவரும் ஏகோபித்துச் சீசரை வெட்டினர்கள்; "நீயுமா புரூட்டஸ்?" என்னு முரையோடு சீசர் வீழ்ந்து மரணித்தனர். சீசரினது மரணங் காரணமாக ரோமாபுரியிற் கலக மேற்பட்டதும், புரூட்டஸின் முன் னிலையிற் சீசருடைய ஆவி தோற்றிப் 'பிலிப்பி நகரில் நின்னைப் பின்பும் சந்திப்பேன்" என்று சொல்லுவதும், சீசரது நண்பனுகிய மார்க்அந் தனியும் மருமகளுகிய ஒக்டேவியசும் படையெடுத்துவருவதும், அன் ஞர் காஷியஸ் முதலினுேரை எதிர்த்துக் கொல்லுவதும், புரூட்டஸ் சீசரைக் கொன்றது தவறென அறிந்து தற்கொலைசெய்துகொள்வதும் பிறவும் வந்து சரிதை முடிவுறும்.
அ. ரோமாபுரியில் நடந்த மற்ருெருசரிதையாகிய சேனபதிசரிதை வெகுளிச்சுவைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துநின்றது. ரோமா புரியை யரசாண்ட சக்கரவர்த்தி யிறந்துபோக அவனது புதல்வராகிய சற்றேணினஸ், பசியானஸ் என்போர் தம்முண் முரணிச் சண்டையிட் டுக்கொண்டுநின்றனர். தைதஸ் அண்டிரணிக்கஸ் என்னுஞ் சேனைத் தலைவன் சக்கரவர்த்தியின்புதல்வரிருவருள் மூத்தோணுகிய சற்றேணி னசுக்கே பட்டம் உரியதெனத் தீர்ப்பிட்டனன். சேனைத்தலைவனுகிய தைதஸ் (அண்டிரணிக்கஸ்) பல தேயங்களை வெற்றிபெற்றுவந்தவனத லால் அவனுக்கு நிறைந்த செல்வாக்கிருந்தது. ஆதலினல் அவன் சொல்லுக் கியைந்து ஜனங்கள் சற்றேணினஸைச் சக்கரவர்த்தியாக் கினர். தைதஸ் பிற தேயங்களிலிருந்து கொண்டுவந்த சிறைகளுள் தமோரா எனப் பெயரிய வேற்றுநாட்டரசியொருத்தி யிருந்தனள்,

மதங்கசூளாமணி 61
சற்றேணினஸ்மன்னன் இவளது அழகி லீடுபட்டு இவளைத் தனது காதற்கிழத்தியாக்குதற்கு மனம்வைத்திருந்தனன். தமோரா தனது ஏவலாளனுகிய ஆரோன்மீது பொருந்தாக்காதல் வைத்திருந்தாள்; இதனைப் பிறரறியார். தமோராவைக் காதற்கிழத்தியாகவும் சேனைத் தலைவனது புதல்வியாகிய லவீனியாவைப் பட்டத்தரசியாகவும் ஆக்கு தற்கு விரும்பிய சற்றேணினஸ்மன்னன் தைதஸை அழைத்து அவனது விருப்பத்தை விசாரித்தான். தைதஸ் அரசர்வாக்குக்கு எதிர்வாக் கில்லையெனக் கூறி யுடன்பட்டான். தைதஸினுடைய புதல்வருள் ஒருவணுகிய மூதியஸ் என்பவன் முற்பட்டு லவீனியாவை இளமன்ன ஞகிய பசியானசுக்குக் கொடுப்பதாக முன்னமே வாக்குப்பண்ணியபடி யால், சற்றேணினசுக்குக் கொடுக்கநினைப்பது தவறென்று தடுத்து நின்றனன். “மன்னன்வாக்குக்கு எதிர்வாக்குக் கூறிய பேதாய் ! உன்னை வாளினல் மாய்க்கிறே' னென்று கூறித் தைதஸ் தனது மைந்த ணுகிய மூதியஸை வாளினுல் எறிந்து வீழ்த்திஞன். சற்றேணினஸ் இதுவே தருண மென் றெண்ணித் தைதஸை நோக்கி “நீ நின்மகளைப் பசியானசுக்குக் கொடுத்து அதனுல் வருகின்ற நன்மையைப் பெறுதி; நான் தமோராவைப் பட்டத்தரசியாக்குகிறேன்’’ என்று கூறித் தமோராவைப் பட்டத்தரசியாக்கினன். தமோரா தன் மைந்தராகிய டெமத்திரியஸ், கிரன் என்பாரையுந் தன்னையுஞ் சிறைப்படுத்திவந்த தைதஸின்மேல் இயல்பாகவே வன்மங்கொண்டிருந்தாளாதலினல் பழிவாங்குவதற்கு எப்பொழுது தருணம்வாய்க்கு மென்று காத்துக் கொண்டிருந்தனள். ஒருநாள் உபவனத்திலே தமோராவும் ஆரோ னும் இன்புற்றிருக்கும்போது அவ்வழியே லவீனியாவும் அவளது நாய கணுகிய பசியானசும் வந்தனர். அவரைக் கண்டமாத்திரத்தே ஆரோன் அகன்றுவிட்டான். தாங் கண்ட செய்தியை மன்னனுக்குரைப்ப தாகச் சொல்லி லவீனியாவும் பசியானசும் அகன்றுவிடச் சிறிது நேரத்துக்குள் தமோராவின் புதல்வரிருவரும் அவ்வழியே வந்து தமது தாய் சஞ்சலித்திருப்பதைக்கண்டு எய்திய தென்னவென விசாரித் தனர். தமோரா பசியானஸ் தன்னை இகழ்ந்ததாகக் கூறி அவனைக் கொன்றுவிடும்படி புதல்வரை வேவினள். தமோராவின் புதல்வர் ஆயுதமில்லாதுநின்ற பசியானஸைக் கொன்று ஒரு குப்பைக்கிடங்கி னுட் போட்டுவிட்டு லவீனினாவை வலிதிற் கற்பழித்துக் காரியம் வெளிப்பட்டுவிடு மென்றஞ்சி அவளது நாவையும் கைகளையும் வெட்டி விட்டுப்போயினர். ஆரோன் ஒரு பொய்ந்நிருபத்தை யெழுதிப் பசி யானஸின் உடல் கிடந்த கிடங்கினுட் போட்டனன். இதனைக் கண் டெடுத்த மன்னன் நிருபத்திலெழுதியிருந்த வாசகங்களை நம்பித் தைத ஸினுடைய புதல்வராகிய குவிந்தஸ், மார்ஷியஸ் என்போர் இள மன்னனைக் கொன்றனரென நிச்சயித்து அவரிருவரையுஞ் சிறைச் சாலையிலிடுவித்தான். தனது புதல்வரிருவரையுஞ் சிறையினின்று நீக்கு வதற்குப் பெரிதும் முயன்றுகொண்டிருந்த லுததஸினிடம் ஆரோன் வந்து மைந்த ரிருவருடைய உயிருக்கும் பதிலாகத் தந்தையினுடைய

Page 45
62 மதங்கசூளாமணி
வலக்கரத்தைக்கொடுத்தால் மன்னன் மைந்தரிருவரையும் விடுதலை யாக்கிவிட் வாக்குப்பண்ணியிருப்பதாகப் பொய்ம்மொழி கூறினன். தைதஸ் இயைந்து தன் வலக்கரத்தைநீட்ட ஆரோன் அதனை வெட்டி யெடுத்துக்கொண்டேகினன். லவீனியாவைக் காட்டிற் கண்ட அவ ளது சிறியதந்தையாகிய மார்க்கஸ் அவளது வேறுபாட்டைப் பார்த்து அவலித்து அதனைச் செய்தார் யாவரென விசாரித்தனன். நாவெட்டுண் டிருந்த லவீனியா வாயில் ஒரு எழுதுகோலைப் பற்றி நடந்த செய்தி களை எழுதிக்காட்டினள். இதனை யறிந்த தைதஸ் அடங்கா வெகுளி கொண்டு தனது வலக்கரம்போயினமைக்காக அவலித்தானுயினும் மன்னனையும் தமோராவையும் அவளுடைய புதல்வரிருவரையும் அதஞ் செய்கின்றேனென் ருர்ப்பரித்தெழுந்தனன். அவனது மூத்தபுதல்வ ஞகிய லூசியஸ் தந்தையை யமர்த்தி வேண்டியவற்றைத் தான் செய்து முடிப்பதாகக்கூறி வேற்றுநாட்டுக்குச்சென்று சேனைதிரட்டிக் கொண்டுவந்து ரோமாபுரியை முற்றுகையிட்டான். சற்றேணினஸ் அவனைப் பேதித்துவெல்லுதல்கூடாதெனவறிந்து சாமோபாயத்தினுல் வெல்லக்கருதித் தான் விருந்துண்ணவருவதாகவும் லூசியஸையும் விருந்துண்ண அழைக்கும்படியாகவும் தைதசுக்குச் செய்தியனுப்பி ஞன். இச் செய்திகொண்டுவந்த தமோராவின்புதல்வ ரிருவரையும் தைதஸ் தன திடக்கையிலேந்திய வாளுக்கிரையாக்கி அவருடலத்தை மறைத்து வைத்துவிட்டு மன்னனையும் தமோரான்வயும் விருந்துண்ண அழைத்து வரும்படி ஆளனுப்பினன். தமோரா ஒரு மகவினை யீன்று அது ஆரோனைப்போலக் கறுத்தமேனியோடிருந்தமையினுல் மகவைப் பிறர்காணில் ஐயுறுவாரென் றஞ்சி ஒரு சேடிகைக்கொடுத்து அதனைக் கொன்றெறிந்து விடும்படி யனுப்பினுள். ஆரோன் இதனை யறிந்து சேடியைக் கொன்றுவிட்டுச் சிசுவைக் கையிலெடுத்துக்கொண்டுபோம் பொழுது லூசியஸினுடைய போர்வீரர் சிலர் அவனை யெதிர்த்துக் கைதியாக்கினர். அவன் வாய்மொழியினின்று அனைத்தினையும் அறிந்த லூசியஸ் தமோராவினுடைய சிசுவையும் எடுத்துக்கொண்டு தந்தை யினுடைய மனைக்கு வந்தனன். ஆங்கு முன்னமே விருந்துண்ணவந்த தமோராவின்முன் தைதஸ் அவளது புதல்வரது தசையைச் சமைத்த ஊனுணவை வைத்தான். அவள் உண்டுகொண்டிருக்கும்போது லூசி யஸ் சிசுவோடு வந்துசேர்ந்தனன். தைதஸ் பெருவெகுளியோடுவந்து நடந்த விருத்தாந்தங்களையெல்லாஞ் சொல்லி மானமிழந்தபின்பு தன்மகள் லவீனியா உயிர்வாழ்தல் தகுதியன்றென அவளைத் தன் கைவாளுக் கிரையாக்கி இவற்றுக்கெல்லாங் காரணமாகிய தமோரா வையும் கொன்றுவிட்டான். அரசன் வெகுண்டெழுந்து தைதஸைக் கொல்லப் பக்கத்தில்நின்ற லூசியஸ் மன்னனுயிரைத் தன் கைவாளுக் கிரையாக்கினன். நடந்த வர்த்தமானங்களையெல்லாம் ஜனங்களுக் குத் தெளிவுறக்கூற ஜனங்கள் திரண்டு ஆரோன் என்னுங் கொடி யோனைப் பிடித்து அவனது தலை புறத்தேயிருக்கும்படி நிலத்திற் புதைத்து உணவின்றி யிறக்கும்படிவிடுவதோடு சரிதை முடிகின்றது.

மதங்கசூளாமணி 63
இச்சரிதையினுள் உறுப்பறை, குடிகோள், அலை, கொலை யென்னும் நான்கும்பற்றியெழுந்த வெறுப்பொடுகூடிய வெகுளிச் சுவை தோன் றினமை காண்க.
கூ. இனி, உவகைச்சுவைக்கு இலக்கியமாகிய வேனிற்காதையை ஆராயப்புகுவாம். செகசிற்பியார் இந்நாடகத்தை யெழுதிமுடிக்க அதனைப் படித்த அவரது நண்பர், 'ஐய! இந்நாடகத்துக்குப் பெய ரென்ன !' என விசாரித்தனர். ‘நீவிர் விரும்பியபடி யெனக் கவிவாணர் விடையளித்தனர். அவ்வுரைத்தொடரே பெயராக இந் நாடகம் வழங்குவதாயிற்று. இது பதியிகந்து வனத்தில் வதிந்த இளையோர் வேனிலான்வயப்பட்டுப் பிரிவாற்ருமையாற்றுன்புறுவதை யும் பின்னர்க் கூட்டத்தினுல் இன்புறுவதையும் நிகழ்ச்சியாகக் கொண்டதாதலின் இதனை யாம் வேனிற்காதை யென வழங்குவாம். பலவளம் நிறைந்த பாண்டி நாட்டினையும் அதற்கணித்தாகிய ஆரண் யத்தையும் கதை நிகழ்ந்த இடங்களாகக் கொள்வாம்.
நீதிநெறி தவருது அரசுபுரிந்த குலசேகரபாண்டியனை அவனது இளவலாகிய வீரேந்திரபாண்டியன் வஞ்சனையினுற் காட்டுக்குத் துரத்திவிட்டு அவனது இராஜ்யத்தைக் கைப்பற்றி அரசுபுரிந்துவந் தனன். அரசிழந்த குலசேகரனும் ஜயதேவன் அமலதேவனென்னும் பிரபுக்களும் பிறரும் ஆரணியத்திற்சென்று லெளகிகக்கவலையற்றுச் சந்தோஷமாகத் தமது வாழ்நாட்களைக் கழித்து வருவாராயினர். குல சேகரனதுபுதல்வி கோகிலவல்லியும் வீரேந்திரனதுபுதல்வி கேகயவல் லியும் உடன்பிறந்து உடன்வளர்ந்தவராதலினுல் நட்புமிக்கிருந்தனர். கோகிலவல்லியினது பிரிவைத் தன்மகள் சகிக்கலாற்ருது துன்புறு வாளென அறிந்த வீரேந்திரன் தமையன்புதல்வியை யவளது தந்தை யொடு போகவொட்டாது தடுத்து அரமனையி லிருத்திவைத்திருந் தான். יא
ஒருநாள் வீரேந்திரனும் சுற்றத்தாரும் மந்திரி பிரதானியருங் குழுமியிருந்த பேரவையிலே யொரு மற்போர் நிகழ்ந்தது. சமஸ்தா னத்துமல்லணுகிய சார்த்துரலன் என்பான் புயங்களைத் தட்டி யார்ப் பரித்துத் தன்னுேடு பொரவல்லார் யாவரேனு முளரோவென அறை கூவி நின்றதருணத்தில், வயதில் இளையோனும் திடகாத்திரதேக முடையோனுமாகிய இரதிகாந்த னென்னும் வாலிபன் முற்பட்டு வந்து மற்போர்புரிந்து சார்த்தூலனை விழுத்தினன். வீரேந்திரன் தனது மல்லனைத் தோற்கச்செய்த வாலிபனேநோக்கி 'இளையோய்!
്.. என வினவினன்.
இரதிகாந்தன் ஐய! நான் இராகவதேவன் என்னும் பிரபுவின் புதல்
வன்; என்பெயர் இரதிகாந்தன்.
வீரேந்திரன் வேறு யாவருக்கேனும் நீ புதல்வனுயிருந்திருந்தால் நன்ருயிருக்கும். இராகவதேவரை உலகம் புகழ்ந்துரைக்கின்றதெனி

Page 46
64 மதங்கசூளாமணி
னும் எனக்கும் அவருக்கும் நீங்காப்பகைமை யுண்டு. வலிமையின் மிக்க வாலிபனே! போய்வருவாயாக; நீ வேறு யாரையாவது நினது தந்தையென வுரைத்திருப்பாயாயின் என் உள்ளம் மகிழ் வெய்தியிருக்கும். (வீரேந்திரனும் பரிசனரும் போய்விடுகின்றனர்.)
கேகயவல்லி கோகிலா! எந்தையினுடையஸ்தானத்தில் நான் இருந்
திருப்பின் இவ்வண்ணம் செய்வேனு? இரதிகாந்தன் நான் இராகவதேவனது கனிஷ்டபுத்திரனுயிருப்பதைப் பெறற்கரும் பெருமையாகக் கொள்ளுகிறேன். வீரேந்திரனது பட் டத்தைப் பெறுவதெனினும் பிறிதொருதந்தையை விரும்பேன். கோகிலவல்லி: இராவக தேவர் எனது தந்தைக்கு நண்பர். இந்த இள வீரர் அவரது புதல்வரென்பதை நான் முன்னமே யறிந்திருந்தே ஞயின் என் கண்ணிர் இவரை மற்போர்புரியவொட்டாது தடுத் திருக்கும். கேகயவல்லி வாராய் கோகிலா! நாம் இவ்வீரரையணுகி யாறுதல் வார்த்தை கூறுவோம். எந்தையினுடைய கொடுஞ்செயல் என் உள்ளத்திற் றைக்கிறது. (இருவரும் இரதிகாந்தனை யணுகுகின்றனர்.)
ஐய! நீர் வெற்றியுடையீர்; தகவுடையீர்; இன்றுபோலவே என் றும் நிலையிற்பிரியாதிருப்பீராயின் நீர்'மணமுடிக்குங் காதலி மனப் பாக்கியமுடையவளே. கோகிலவல்லி (தன் கழுத்திற்கிடந்த முத்துமாலையைக் கழற்றி இரதி காந்தன்கையிற் கொடுத்து) ஐய! என்பொருட்டு இதனை யணிந்து கொள்வீராக. இதனினும்பார்க்கப் பெரியதொரு வெகுமதியைக் கொடுக்க என்னுள்ளம் விரும்புகிறது: கையிலோ பிறிதொன்றில்லை. கேகயா ! நாம் போய்வருவோமா?
(பெண்க ளிருவரும் போய்விடுகின்றனர்.)
இரதிகாந்தன்; (தன்னுள்ளே) ஏதேது! ஒருவார்த்தை மொழியவும் நாவெழவில்லையே; இரதிகாந்தா! சார்த்தூலனை வென்றேனெனப் பெருமிதங்கொள்ளாதே; ஒரு மடவரலது கண்ணிணைக்கு நீ தோற்றுவிட்டன.
(இரதிகாந்தன் கோகிலவல்லிமீது காதல்கொண்டானென்பதை நாம் சொல்லவேண்டுவதில்லை.)
கோகிலவல்லி முத்தாரங் கொடுத்த செய்தியைக் கேள்வியுற்ற வீரேந்திரன் அவள்மேற் சினந்து, "தந்தையிருக்குமிடந்தேடிப்போ' எனக் கூறி அவளை அரமனையிலிருந்து துரத்திவிட்டான். அவளது பிரி வைச் சகிக்கலாற்ருத கேகயவல்லி தந்தையறியாவண்ணம் சல்லாப

மதங்கசூளாமணி 65
னென்னும் ஒரு சேவகனையு மழைத்துக்கொண்டு கோகிலவல்லியுடன் போயினள். வாயில்காப்பாளர் முதலியோர் காணின் ஏதம்வருமென் றஞ்சிக் கோகிலவல்லி ஆண்பிள்ளைவேடந் தரித்துக்கொள்ளக் கேகய வல்லி ஆயர் மகளாக வேற்றுருக்கொண்டு குலசேகரன் வசிக்கும் ஆரண் யத்தை யடைந்து ஆங்கு ஒரு குடிசையை யமைத்துக்கொண்டு வாழ்ந்துவந்தனர். இரதிகாந்தனுடைய வீரச்செயலைக் கேள்வியுற்ற அவனது மூத்தோணுகிய நீலாம்பரன் அழுக்காறுற்று இரதிகாந்தனுக் குக் கேடுசெய்ய எண்ணமுற்றிருந்தனன். இதனையறிந்த ஆதன் என் னும் வயோதிக வேலைக்காரன் இரதிகாந்தனுக்குத் தெரிவிக்க அவ னும் தமையனது கண்முன்னின்று அகன்றுவிடக் கருதிக் குலசேகரன் வசிக்கும் ஆரண்யத்தைநோக்கி நடந்தனன்; ஆதனும் உடன்சென் றனன். இருவரும் ஆரண்யத்தையடைந்தனர். பசி தாகத்தினுற்களைப் படைந்த ஆதன் சோர்ந்துவிழ இரதிகாந்தன் அவனுக்கு உணவுதேடி வரும்பொருட்டாக ஆரண்யத்தினுள் அலைவுற்றுவரும்போது உண்ணு தற்கு ஆயத்தஞ் செய்துகொண்டிருந்த குலசேகரனையும் நண்பரையுங் கண்டனன். இரதிகாந்தன் உடைவாளை யுருவி, அன்னரை நோக்கி 'உண்ணன்மின்; உணவின்றித் தவிக்கின்ற எனது நண்பஞெருவனு ளன், அவனதுபசிதீர்த்த பின்பன்றி நீவிர் உண்ணுதல் கூடாது' என்றனன். குலசேகர ணுதியோர் நகைத்து ‘இங்கு உனக்கும் உனது நண்பனுக்கும் வேண்டியஅளவு உணவு உண்டு; வாளை யுறையிற் போடுதி' என்றனர். இரதிகாந்தன் ஆதனை யழைத்துவந்து உண வூட்டியபின் ஒருவரையொருவர் விசாரித்தறிந்து அனைவரும் அள வளாவி யின்புற்றனர். குலசேகரன் நிகழ்ந்தன வெல்லாவற்றையுஞ் சிந்தித்து, ஜயதேவனை நோக்கி, ‘இவ்வுலகம் நாடகவரங்குபோன்ற தன்றே! நாம் நடிக்கும்பாகத்தினும்பார்க்கத் துன்பம் மிக்க பாகத்தை நடிப்பார் பிறருளரல்லவோ?’ என்றனன்.
F (ஜயதேவன் இதற்கு மறுமொழியாக ‘அங்கணுலகனைத்தினையும்" எனத் தொடங்கிக் கூறிய செய்யுட்களை முகவுரையினுட் டந்தனம்; ஆண்டுக் காண்க)
இரதிகாந்தன் குலசேகரனதியோரோடு வனத்தில் வசிக்கின்றநாட்
களில் இளவேனிற்காலம் வருதலும் கோகிலவல்லியை நினைத்துத் துன் புற்று அவள்மேல் ஒரு பாசுரத்தை யெழுதி மரத்திற் ருெங்கவிட் டான். அவ்வழியே வந்த கோகிலவல்லி பாசுரத்தைத் கண்டெடுத்து ஆலோசனையுற்றிருக்கும்போது அவளது சேவகனும் விதூஷகனுமாகிய சல்லாபன் எதிர்ப்பட்டுப் பல நகைக்குறிப்புமொழிகளைக் கூறுகிருன். அவளை போய்விட இரதிகாந்தன் அவ்வழியே வருகிருன். கோகில வல்லி ஆண்பிள்ளைவேடத்தோ டிருந்தாளாதலினல் இரதிகாந்தன் அவனை இன்னுரென்றறிந்துகொள்ளவில்லை. கோகிலவல்லியோ அவனை இன்னுனென்று உடனே யறிந்துகொண்டு அவனைநோக்கி 'வனசரா !
நாழிகையென்ன" என்றனள்.

Page 47
66 மதங்கசூளாமணி
இரதிகாந்தன் நேர மென்னவென்றுகேட்டல் மரபாகும்; வனத்தில் நாழிகைவட்டியிருப்பினன்ருே நாழிகை யெதுவென்று கேட்டல் பொருத்தமான கேள்வியாகும்.
கோகிலவல்லி. அங்ங்னமாயின் வனத்தில் உண்மைக்காதலரு மிலர். விநாடிதோறும் நெடுமூச்செறிந்து நாழிகைதோறும் ஏக்கமுற்றி ரங்குவது காதலர்க்கு இயல்பாதலின் அன்னர் நாழிகைவட்டி யின் உதவியின்றியை மெல்லென்றசையும் நேரத்தின்கதியைச் செவ் வனே யுணர்ந்துகொள்வர்.
(நேரத்தின்கதியைப்பற்றி இருவருஞ் சிறிதுநேரஞ் சம்பாஷிக்கின்
றனர்.)
இர எழிலின்மிக்க இளைஞனே! நீ வசிக்குமிட மெதுவோ? கோகி; எனது தங்கையாகிய இவ்வாயர்மகளும் யானும் இவ்வாரண்
யத்தின்சாரலிற்ருன் வசிக்கின்ருேம். இர: நீவிர் இவ்விடத்துக்கே உரியவரா? கோகி; அதோ நிற்கும் குறுமுயல் தான் தோன்றியவிடத்து வசிப்பது
போல நாங்களும் இங்கு வசிக்கின்ருேம். இர நினது செம்மொழியும் உரைவன்மையும் இக் காட்டுப்புறத்திற்
குரியனவல்ல. கோகி: இங்ங்ணம் பலர்சொல்லக் கேட்டிருக்கின்றேன். என் சிறிய தந்தை, யொருவ ருளர்; அவர் இராஜமாநகரத்திற் பலகாலம் வசித்தவர். அவர் எனக்குப் பலவிஷயங்களைத் தெரிவித்திருக்கிருர், அம்மம்ம! நகரத்துப் பெண்களைப்பற்றி யவர் சொன்ன குறிப்பை யெல்லாங் கேட்டேன். பெண்ஜன்மம் எவ்வளவு சீர்கெட்டஜன் மம்; என்னைப் பெண்ணுகப் படைக்காதுவிட்டமைக்காக நான் ஈசுவரனுக்குத் துதிசெலுத்துகின்றேன். இர: பெண்கள்பால் அவர் சார்த்திக்கூறிய பிரதானகுற்றங்கள் நினைவி
லிருப்பவாயின், தயைசெய்து தெரிவிப்பாய். கோகி: பிரதானகுற்றமென் ருென் றில்லை; ஒன்றினைப்போலவே மற் றதுவும்; ஒன்றினைப் பெரிதென்று சிந்தித்துக்கொண்டிருக்குங்கால், அதன்பின் வருவது அதனினும் பெரிதாகக் தோற்றக் கண்டேன். இர: அவற்றினுட் சிலவற்றைச் சொல்லுவாயாக. கோகி; வியாதியில்லாதவரிடத்து நான் மருந்தை வீணுக்கப்போவ தில்லை, இவ்வாரண்யத்தில் யாரோ ஒரு மனிதன் இளமரங்கள் பலவற்றிற் 'கோகிலவல்லி" யென்னும் பெயரைப் பொறித்து அம்மரங்களைக் கெடுத்தும், பாசுரங்களை யெழுதிக் கொடிகளிலும், செடிகளிலும் தொங்கவிட்டுந் திரிகின்றன். இம் மனிதனை யான் காண்பேனுயின், பெண்களியல்பைப்பற்றி யவனுக்குச் சில கூறிச் சிறிது நற்புத்தி புகட்டுவேன்.

மதங்கசூளாமணி 67
இர: காதலால் அலைகின்ற அம்மனிதன் நானே. தயைசெய்து நினது
மருந்தை யளிப்பாய். கோகி; என் சிறியதந்தை காதலா லலவோருக்கு உரியவென எடுத் துக் கூறிய அடையாளங்க ளொன்றேனும் உம்மிடத்திற் காணப் படவில்லை; ஆதலால் நீர் அக்கூட்டில் அடைபட்டவரல்லர். இர: அவ்வடையாளங்கள்தாம் யாவையோ ? கோகி: மெலிந்தமுகம், அஃது உம்மிடத்தி லில்லை; உட்குழிந்து நிறம் வேறுபட்ட கண், அஃது உம்மிடத்தி லில்லை; சோர்ந்துபட்ட மன நிலை, அஃது உம்மிடத்தி லில்லை. (இன்னும் பலவற்றைக் கூறுகிருள்.)
இர அழகின்மிக்க இளைஞனே! நீ என்வார்த்தையை நம்பவேண்டு
மென்று விரும்புகிறேன்.
கோகி நம்புவதாவது? தயைசெய்து உண்மையைக்கூறுவீர். 'கோகில
வல்லி'யை வியந்துகூறும் பாசுரங்களை யியற்றிக்கொண்டுதிரிபவர் நீர்தானு?
இர: ஆம்; நான்தான்.
கோகி: நுமதுசந்தப்பாக்களி லெழுதப்பட்டிருக்கின்ற அவ்வளவு ஆழ
மானதா நும்முடைய காதல்!
இர: எனதுகாதல் சந்தத்துக்கு மெட்டாதது, சிந்தித்தற்கு மெட்
-Tg5gil.
கோகி நல்லது நான் மருந்துசொல்லுகிறேன் கேட்பீராக; நீர் என் னைக் கோகிலவல்லியென்று எண்ணிக்கொள்ளவேண்டும் அவ ளோடு வார்த்தையாடுவதுபோல என்னுேடுவார்த்தையாட வேண் டும். (இன்னும் பலவாருகச் சொல்லி இரதிகாந்தனை தன்னிருப்பிடத்
துக்கு அழைத்துச்சென்றனள். அன்றுமுதல் இரதிகாந்தன் கோகில
வல்லியைத் தினந்தோறும் போய்ப்பார்த்து அவளோடு வார்த்தை
யாடிவிட்டுவருவா னெனினும், அவளை இன்னளென் றறிந்து கொள்
ளாது, காந்தம னெனப் பெயரிய இளைஞனெனவே யெண்ணியிருந்
தான்.)
கோகிலவல்லி வசித்த குடிசைக்குச் சமீபத்திலே பாவையென்பாள் ஒரு இடையர்குலத்து இளமங்கை வசித்தாள். சீதரனென்பா ஞெரு ஆயர்மகன் அவளைக் காதலித்து கடைக்கணுேக்கம் வைக்கும்படி குறையிரந்துவேண்டிக்கொண்டு திரிந்தான். பாவை கோகிலவல்லி யைக் கண்டநாள்முதல் ஆண்பிள்ளையெனநினைத்துக் காந்தமனைக் கண்ட கண் பிறரொருவரையும் பாராதெனக் கூறிச் சீதரன வெறுத் தொதுக்கிவிட்டாள். இதனை யறிந்த கோகிலவல்லி பாவைபொருட் டாகவும் இரதிகாந்தன்பொருட்டாகவும் தனது உண்மைக்கோலத்தை

Page 48
68 மதங்கசூளாமணி
வெளிப்படுத்துதற் குரிய தினம் என்று வருமென்று மனத்திற் சிந் தித்துப் பாவையைநோக்கி "ஏடி மூடமதி யுடையவளே! நான் உன்னை மணக்கப்போவதில்லை; உன் வீணெண்ணங்களை விட்டுவிட்டு உன்னைக் காதலிக்கின்ற ஆயர் மகனை மணந்துகொள்' எனக் கூறினள்.
இந்நிகழ்ச்சிகள் இவ்வாருக, இராஜமாநகரத்திலே வீரேந்திரன் நீலாம்பரனே யழைத்து, நினதுதம்பி இரதிகாந்தனை என்முன்னிலைக்கு வருவிப்பாயாக’’ என்று கட்டளையிட்டனன். நீலாம்பரன், என் தம்பி யிருக்குமிடத்தை நா னறியே’’ னென்றனன். நீலாம்பரன் இரதிகாந்தனை மறைவிடத்திருத்திவிட்டுப் பொய்ம்மொழி கூறுகிரு னென் றெண்ணிய வீரேந்திரன், அவனை நோக்கி, ‘இன்றே என் நாட்டைவிட்டுப் போய்விடுதி, ஒராண்டெல்லையினுள் நினது தம்பி யொடு வாராதுபோவாயேல் நீ இவ்விடந் திரும்பிவரவேண்டிய தில்லை; உன்பொருளெல்லாம் என் பொக்கிஷத்தைச் சேரு மென் றனன். நீலாம்பரன் துன்புற்றுக் குலசேகரன் வசிக்கும் ஆரண்யத்தை நோக்கி நடந்தனன். ஆங்குச் சென்ற நீலாம்பரன் வழிநடையினுற் சோர்ந்து ஒரு மரநிழலி லுறங்கும்போது அவன்பக்கம் ஒரு விஷசர்ப் பம் படமெடுத்துக் கொண்டுநின்றது; ஒரு பெண்சிங்கம் அவன் துயி லொழித் தெழும்வேளை யிது வென்று பார்த்துக்கொண்டிருந்தது; அவ்வழி வந்த இரதிகாந்தன், தமையன் தனக்குக் கேடுசூழ்ந்தா னென்பதையும் நினையாது தன் னுயிரையும் பொருட்படுத்தாது சிங் கத்தோடு பொருது நீலாம்பரனது உயிரைக் காப்பாற்றினன். துயி லொழிந் தெழுந்த நீலாம்பரன் தன் தம்பியினது பெருந்தகைமையை யுணர்ந்து அளவளாவி முன்னுளில் தான் அவனுக்குக் கேடுகுழ்ந்த மையைப் பொறுத்தருளும்படி வேண்டினன். சிங்கத்தின் நகம் பட்ட காயத்தினுற் சிறிது துன்புற்ற இரதிகாந்தன் அன்று கோகிலவல்லி யின்மனைக்குத் தான் போகக்கூடாமையினுல், செய்தி தெரிவித்துக் வரும்படி தமையனுகிய நீலாம்பரனே யனுப்பினன். நிகழ்ந்தவற்றை யெல்லாம் நீலாம்பரன் உரைக்க அவன்மொழியைக் கேட்டுக்கொண் டிருந்த கேகயவல்லி அவன்பாற் காதலுற்றனள். சல்லாப னென்னும் விதூஷகன் ஆயர்மகளாகிய ஆதிரையைக் காதலித்தனன். ஒரு சுப தினத்திலே நீலாம்பரனுக்கும் கேகயவல்லிக்கும், சீதரனுக்கும் பாவைக் கும், சல்லாபனுக்கும் ஆதிரைக்கும் மணவினைநடத்துவதாக நிச்சயஞ் செய்யப்பட்டது. காந்தமன்வேடத்தோடிருந்த கோகிலவல்லி இரதி காந்தனை நோக்கி, “நாளைத்தினத்தில் மணமுடிப்பதற்கு நீயும் ஆயத்த மாயிரு, உனதுகாதலியை இவ்விடம் வரப்பண்ணுகிறே" னென் றனள். மறுநாள் အံ?ခံရ၍ီ சொந்த உடையணிந்துவந்து தந்தை யாகிய குலசேகரன வணங்கிநின்றனள். அவனும் மனமகிழ்ந்து அவள் கையைப் பற்றி இரதிகாந்தனதுகையில் வைத்தனன். நான்கு மணச் சடங்குகளும் நிறைவேறி அனைவரும் இன்புற்றிருக்கும்போது வீரேந் திரன் ஒரு சந்நியாசியாரின் நற்போதனையிஞற் றுறவுபூண்டுவிட்டா

மதங்கசூளாமணி 69
னெனவும், இராஜ்யம் குலசேகரனுக்காயிற்று எனவும் ஒரு செய்தி வந்தது. அனைவரும் மகிழ்ச்சியெய்தினர்; ஜயதேவன்மாத்திரம் ஆரண் யத்தைவிட் டகலும்விருப்பம் அற்றவனுயிருந்தான்.
(இவ்வளவோடு சரிதம் முடிகின்றது.)
க0. கூதிர்க்காதையினது கதைச்சுருக்கம் வருமாறு:- உஞ்சையம்பதியை யரசுபுரிந்துவந்த ஆகண்டல னென்னும் மன்ன னும் போகவதிக்கு இறையாகிய பதுமநாப னென்னும் மன்னனும் சிறுவயதுதொடக்கம் இணையில்லாநட்புப்பூண்டிருந்தனர். கேண்மை யினுல் உளங் கவர்வுற்று உஞ்சையம்பதிக்கு வந்த பதுமநாபன் தனது ராஜ்யத்தை மறந்து ஒன்பதுமாதம் உஞ்சையிலே நின்றுவிட்டான். நாள் பல கழிந்ததென வுணர்ந்த பதுமநாபன் போகவதிக்குப் போக நினைக்க, ஆகண்டலன் முற்பட்டு இன்னும் ஒருவாரம் நின்று போக லாமே யென்றனன். பதுமநாபன் இயையவில்லை. பின்பு ஆகண்டல னுடைய மனைவி அயிராணி பரிந்துவேண்டப் பதுமநாபன் பின்னும் ஒருவாரம் நிற்பதற்கு இயைந்தனன். அயிராணி மகிழ்ந்து பதுமநாப னதுகையைப்பற்றி அவனை உவவனத்துக்கு அழைத்துச்சென்றனள். இதனைக் கண்ட ஆகண்ட்லன் மனைவி மேல் ஐயப்பாடுற்றுப் பதுமநாபன் ஒன்பது மாதம் தரித்துநின்றது அயிராணிபொருட்டே யென்று தன்மனத்தினுள்ளே நினைத்தனன். சந்தேகம் என்னும் விஷசர்ப்பம் புகுந்தமையிஞலே ஆகண்டலனுடைய உள்ளம் நிலைகலங்கிற்று; கமலவதன னென்னும் மந்திரியை யழைத் துப் போகவதிமன்னனைக் கொன்றுவிடும்படியாக ஆகண்டலன் தெரி வித்தான். பலவாருகப் புத்திகூறியும் மன்னன் கேளாமையினுற் கமல வதன னென்னும் மந்திரி பதுமநாபன யடைந்து நடந்ததைக் கூறிப் போகவதிக்குப் புறப்படும்படிசெய்து தானும் உடன் சென்றனன். பதுமநாபனும் கமலவதனனும் போய்விட்டார்களென்றறிந்தவுடனே ஆகண்டலனுடைய உள்ளத்தி லெழுந்த சந்தேகம் உறுதியாக நிலை பெற்றுவிட்டது. அயிராணி அந்தப்புரத்திற் பாங்கியர் சூழவிருந்து தனது இளமைந்தணுகிய ஜயந்தனை நோக்கி 'வாராய்மகனே! ஒரு கதைசொல்’’ என்றனள். உஜயந்தன் சந்தோஷமானகதை சொல்லவா சோகமானகதை
சொல்லவா ? அயிராணி, கூடியஅளவு சந்தோஷகரமாயிருக்கட்டும். ஜயந்தன். இப்பொழுது கூதிர்க்காலமானபடியால், சோகம்நிறைந்த கதைதான் சொல்லவேண்டும். \ அயிராணி நல்லது ஐய! இவ்விடத்தில் என்பக்கம் வந்திருந்து கதை
யைச் சொல்வாயாக. (இத்தருணத்தில் அரசன் மந்திரி பிரதானியரோடு அந்தப்புரத் துக்குவந்து குற்றமற்ற அயிராணியைப் பலவாருக நிந்தித்து அவள்

Page 49
70 மதங்கசூளாமணி
பதுமநாபனேடு தொடர்புவைத்திருந்தாளென்றும், அவள்வயிற்றி லிருக்குஞ் சிசு பதுமநாபனுக்குரியதென்றும் கூறி அயிராணியைச் சிறையிலிடும்படி கட்டளையிட்டான்.)
சிறைச்சாலையில் அயிராணி ஒரு பெண்மகவை யீன்றனள். அரம்பை யென்னுஞ் சேடி சிசுவை யெடுத்துக்கொண்டு சென்று ஆகண்டலன் முன்னிலையிற் கிடத்த, அவன் சீறி, ‘'இச்சிசு பதுமநாபனுக்குரியது; இதனைக் கொண்டுபோய் மக்கட்சஞ்சாரமில்லாதவிடத்திலெறிந்து விட்டுவருவாயாக’ என்று அந்தணன் என்னும் மந்திரிக்குக் கட்டளை யிட்டான்; பின்பு தன் மனைவியை இராஜசபைக்கு அழைத்து நிறுத்தி அங்கிருந்த முதியோரை நோக்கி அவளுக்குத் தண்டனை விதிக்கும்படி கேட்டனன். அத்தருணத்தில், சாத்தன்கோயிலினின்று தெய்வமு ரைத்த கட்டுரை யெழுதப்பட்ட ஒரு பத்திரத்தை இருவர் சேவகர் கொண்டுவந்து அரசன்முன்னிலையில் வைத்தனர். அப்பத்திரத்தில் 'அயிராணி கற்புநெறி தவருதவள்; பதுமநாபன் குற்றமற்றவன்; கமலநாதன் உண்மையூழியன்; ஆகண்டலன் கொடுங்கோலன்; சிசு அவனுக்கே யுரியது; இழந்துபோனது திரும்பிவராவிடின் ஆகண்டல னுக்குச் சந்ததியில்லை’’யென எழுதப்பட்டிருந்தது. அரசன், சபை யோரைநோக்கி, ‘கட்டுரை பொய், எடுத்தகருமம் நிறைவேறட்டும்' என்றன். அத்தருணத்தில் ஒரு சேவகன் ஓடோடியும்வந்து இராஜ குமாரணுகிய ஜயந்தன், சடுதியிற் சுரங்கண்டு இறந்துவிட்டதாகத் தெரிவித்தான்; இச்சொற் கேட்டவுடனே அயிராணி துன்பத்தினுல் மூர்ச்சித்துவிழுந்தனள். மன்னன் பதறி யழுது தன்மனைவி யிறந்து விட்டதாக நினைத்துத் துன்பத்தி லமிழ்ந்தி ஈமக்கிரியைகளை நடத்து DinTg) சொல்லிவிட்டுத் தானுந் தன் கவலையுமாக இருந்துவிட்டான். அயிராணி சிறிதுநேரத்தி லெழுந்து நடந்தகாரியங்களை யறிந்து கொண்டு அரசன் முதலினுேர் தான் இறந்துபோய்விட்டதாகவே நினைக்குமாறு சூழ்ச்சி செய்துவிட்டுத் தன் னுயிர்ப்பாங்கியாகிய அரம்பை யொருத்தியன்றிப் பிறரறியாவண்ணம் ஒரு தனிமனையில் வசித்துவந்தனள். சிசுவைக்கொண்டு சென்ற அந்தண னென்னும் மந்திரி கப்பலேறிப்போய்ப் போகவதிநாட்டைச் சேர்ந்து ஒரு காட்டுச் சார்பிலே சிசுவையும் அதன் வரலாறெழுதிய பத்திரத்தையும் ஒரு பொன்முடிப்பையும் வைத்துவிட்டுப் போகிறவழியில் அவனை ஒரு கரடி தாக்கிக் கொன்றுவிட்டது; அவன் ஏறிவந்த கப்பலும் பாறை யில் மோதுண்டு உடைந்துபோயிற்று. அந்தக் காட்டுச்சார்பில் ஆடு மேய்த்துக்கொண்டுநின்ற வெள்ளைந்ாகன் என்னுமிடையன் இவற்றை யெல்லாம் தூரத்தில்நின்று கண்டு ஓடோடியும்போய்ச் சிசுவையும் பொன்முடியையும் பத்திரத்தையு மெடுத்துத் தன்மகன் நாகன்சேய் என்பவனையும் உடனழைத்துக்கொண்டு வீடுபோய்ச் சேர்ந்தனன். "அன்னை பரிபவமுற்றகாலத்தில் இம்மகவு பிறந்ததாதலின் இதற்குப் பரிபவை யென்று பெயரிடுக’ எனப் பத்திரத்தி லெழுதப்பட்டிருந்த

மதங்கசூளாமணி 71
படி வெள்ளைநாகன் தான் கண்டெடுத்த குழந்தைக்குப் பெயரிட்டு வளர்த்துவந்தனன்.
(முகம், பிரதிமுகம், கருப்பமாகிய மூன்றுசந்திகள் இவ்வளவோடு முடிகின்றன.) -
மேலே சொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்து பதினைந்து ஆண்டு களாயின. பதுமநாபன்புதல்வனகிய வசந்தனென்னு மரசிளங்குமரன் வேட்டம்போய் விளையாடும்போது அவன் வளர்த்த இராஜாளிப் பறவையொன்று வெள்ளைநாகன்வீட்டுமுற்றத்திற்போ யிறங்கிற்று. பறவையைத் தேடிச்சென்ற வசந்தன் பரிபவையைக் கண்டு பரவசப் பட்டு அன்றுமுதல் வெள்ளைநாகன்வீட்டுக்கு வருவதும் போவது மாக இருந்தான். ஒருநாள் கார்விழாக் கொண்டாட்டதினத்தில் வசந்தன் வெள்ளை நாகன்வீட்டுக்குப்போய் ஆங்குப் பரிபவையோடு காதன்மொழியுரைத்துச் சல்லாபித்துக்கொண்டிருக்கும்போது பதும நாபனும் கமலநாதனும் வேற்றுருவோடு பின்சென்று இளவரசனு டைய களவொழுக்கத்தைக் கண்டுகொண்டார்கள். அரசனுடைய சீற்றத்துக் கஞ்சிச் செய்வதென்னவென்றறியாது வசந்தன் திகைப்பக் கமலநாதன் அவனை இரகசியமாக அழைத்து, 'உன் காதலியையுங்கொண்டு உஞ்சையம்பதிக்குச் செல்லுதி, இந்நிருபத்தை அந்நாட்டு அரசர்வசம் கொடுப்பாயாயின் அவர் உனக்கு ஆகவேண்டு வன செய்வ' ரென்றனன். அரசிளங்குமரன் அட்டோலிக்கன் என்னு மொரு வழிப்போக்கனிடம் தா னணிந்திருந்த ஆடையாபரணங் களைக் கொடுத்துவிட்டு அவனது ஆடையைவாங்கி யணிந்துகொண்டு பரிபவையையு மழைத்துக்கொண்டு கையிற் கொஞ்சப்பொருளோடு இரகசியமாகக் கப்பலேறிப்போய் உஞ்சையம்பதியை யடைந்தனன் கமலநாதன் இராஜகுமாரனை உஞ்சைக்கனுப்பியது தான் உஞ்சைக் குப்போவதற்கு O5 வசதியேற்படுத்திக்கொள்ளுவதற்காகவேயன்றிப் பிறிதொன்றிற்கல்லவாதலால் விரைந்து அரசனுக்குக் கருமத்தைத் தெரிவித்து உஞ்சைக்குத் தானும் அரசனும் போவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்தனன். அரசிளங்குமரனுடைய ஆடை முதலியவற்றை வைத்திருந்த அட்டோலிக்கனைக் காவலாளர் பிடித்துவந்து அரசன் சமுகத்தில் விட அவன் வெள்ளைநாகன்மேலும் நாகன்சேய் மேலுங் குற்றஞ்சுமத்தினன். அரசிளங்குமரனைத் தேடிப்போதற்குப் புறப் பட்ட மன்னனும் கமலநாதனும் அட்டோலிக்கன், வெள்ளைநரகன், நாகன்சேய் ஆகிய மூவரும் தம்முயற்சிக்குப் பயன்படுவாரென வெண்ணி அன்னேரையுங் கப்பலிலேற்றிக்கொண்டு உஞ்சைக்கு வந் தனர்: ஆங்கு ஆகண்டலனது அரமனையிற் றன்மகனையும் பரிபவை யையும் போகவதி மன்னன் கண்டனன். வெள்ளைநாகன் தம்மேற் குற்றஞ்சாராது தப்பிக்கொள்ளும்பொருட்டுப் பரிபவையுடன் கண் டெடுத்த பத்திரத்தைக் கொடுக்க அரசரிருவரும் அதனைப் படித்த வுடனே பரிபவையினுடைய வரலாற்றை யறிந்து உவகைக்கண்ணிர் சொரிந்து வசந்தனுக்கும் பரிபவைக்கும் மணமுடித்துவைக்கவும்,

Page 50
72 மதங்கசூளாமணி
இரண்டு ராஜ்யத்தையும் வசந்தனுக்கே யுரிமையாக்கவும் நிச்சயித் தனர். இன்பத்தினிடையே ஆகண்டலன் துன்புற்றுத் தனது மனைவி யாகிய அயிராணியை நினைத்துப் புலம்பினன். அரம்பை யென்னுஞ் சேடி முற்பட்டு "ஐயா ! என் வீட்டில் அயிராணியைப்போல ஒரு 9あn) செய்வித்துவைத்திருக்கிறேன்; வந்து பார்ப்பீர்களாக' என்று அனைவரையும் அழைத்துச் சென்றனள். ஆங்கு அரம்பை யொரு திரையை நீக்குதலும் பீடத்தின்மேலே தூய வெள்ளைவஸ்திரந் தரித்து நின்ற ஓர் உருவத்தைக் கண்டார்கள். ஆகண்டலன் தன் துன்மதியை நினைத்து இரங்கி 'ஓவியமே ! உயிர்பெற்றுவாராயோ’’ என்ற அள வில் அயிராணி பீடத்தினின்று இறங்கிவந்து அரசனைத் தழுவிக்கொள் ளுகிருள். நடந்த வர்த்தமானங்களையெல்லாம் அரம்பை யெடுக்துக் கூற அனைவரும் அளவளாவியின்புற்றனர்.
(இவ்வளவோடு நாடகம் முடிகின்றது.)
இதற்கடுத்த சரிதையினது கதைச்சுருக்கத்தையுந் தந்தபின்பு உவ கைச்சுவையினியல்பை ஆராய்வாம்.
கக. கருதியது எய்திய காதலர்சரிதையை யாராயப்புகுவாம். இதற்கு ஆக்கியோரிட்ட பெயரினை மொழிபெயர்த்துக்கூறின் 'பன் னிரண்டாம் இரவு' என்பதாகும். ஒரு விழாக்கொண்டாட்டத்தின் பன்னிரண்டாம் இரவிலே இது முதன்முத லரங்கேற்றப்பட்ட தாத லின் இப்பெயரினை யெய்திற்று. கதைச்சுருக்கம் வருமாறு:- மகத தேசத்திலிருந்து புறப்பட்ட ஒரு கப்பலில், சுதாகரனும் விமலையும் பிரயாணஞ் செய்தனர். இவரிருவரும் அன்னவயிற்றில் ஒருங்கு தங்கியிருந்து பிறந்த இரட்டைப்பிள்ளைகள். மொழி, உருவம், உயரம் முதலியவற்ருல் ஒருவரையொருவர் முற்றும் நிகர்த்தவர். கப்பல் ஈழநாட்டுக்கரைக்குச் சமீபமாகச் சேதப்பட்டுப்போயிற்று. ஒரு மாலு மியினது உதவியாற் கரைசேர்ந்த விமலை தன்னைக் காப்பாற்றிய மாலுமியை நோக்கி, "நண்பா ! இஃதென்னநாடு" என்றனள். மாலுமி அம்மணி ! இது ஈழநாடு. விமலை: என் னண்ணன் பொன்னுட்டுக்குப் போய்விட்டனர்; எனக்கு ஈழநாட்டி லென்ன வேலை? ஒருவேளை நீரிலமிழ்ந்தாது தப்பியிருக்க வுங்கூடும். மாலுமி, அம்மணி! தாங்கள் தப்பியதே பேரதிர்ஷ்டம். விமல்: இந்நாட்டினை அரசுபுரிகின்ற மன்னன்பெய ரென்ன? மாலுமி. மாசேனன். விமலை: அவர் பெயரை யென் தந்தை குறிப்பிடக் கேள்வியுற்றிருக் கிறேன்; அவர் அக்காலத்தில் விவாகமாகாதவராக இருந்தார். மாலுமி, ஆம், அவருக்கு இன்னும் விவாக மாகவில்லை. ஒருமாதத் துக்குமுன்பு இவ்விடமிருந்து நான் போனபொழுது இந்த வூரி

மதங்கசூளாமணி 73
லுள்ள பெரியார் புதல்வியாகிய கமலை யென்னுஞ் சீமாட்டிமீது மன்னன் காதலுற்றிருப்பதாக நகரத்து ஜனங்கள் பேசிக்கொண் டார்கள். விமலை: இந்தப் பெருமாட்டி எப்படிப்பட்டவள்? மாலுமி. மிக நல்லொழுக்கம்வாய்ந்தவள். இவளது தந்தை யிறந்து இன்னும் ஒரு ஆண்டு நிறையவில்லை; இதற்கிடையிற் றமையனு மிறந்துபோயினன். இந்நிகழ்ச்சிகளினல் மனமறுகித் துன்புற்று ஆடவர்முகத்தையே பார்ப்பதில்லை யென்னும் விரதத்தோடிருக் கின்ருள். விமலை: இந்தச் சீமாட்டியிடம் நான் வேலைக்கமருதல் கூடாதா? ம்ாலுமி துன்பத்தினுல் வருந்துகிற அந்தச் சீமாட்டி யாரையும்
அடுப்பதில்லையென்று தெரிகிறது. விமலை: நல்லது மாலுமி! நீ யெனக்கு ஒரு உதவிசெய்யவேண்டும் ; யான் ஆண்பிள்ளைவேடத்தோடுபோய் மாசேனமன்னனுடைய சேவகத்தி லமரக் கருதுகிறேன்; என்னுடைய சகோதரனுடைய உடைகளைப்போன்ற உடைகள் சில நீ தயாரித்துக்கொண்டுவரு தல்வேண்டும். விமலை ஆண்பிள்ளையுடைதரித்துக் கேசவன் எனப் பெயரிட்டுக் கொண்டு மன்னனுடைய சமஸ்தானத்துக்குப்போய் அவனிடத்தில் வேலைக்கு அமர்ந்தனள். மூன்றுநாட்கள் கழிந்தபின்பு மன்னன் கேச வனே (விமலையை) யழைத்துக் 'கேசவா ! என் இருதயத்திலுள்ள மர் மத்தையெல்லாம் உனக்குத் தெரிவித்திருக்கிறேன்; நீ கமலை யென் னுஞ் சீமாட்டியினிடத்துப் போய் அவளுக்கு என் காதலைத் தெரிவித்து அவள்மனத்தை என்பாற் றிருப்பவேண்டும்" என்றனன் விமலை மன் னன்மீதுதான் காதலுற்றிருந்தாளாதலினுல் இச்சொற்கள் அவள் செவிக்கு நாராசமாயின. அங்கனமாயினும், எஜமானனுடைய சேவையை இயன்றவரை செய்துமுடித்தல் மரபென்றெண்ணிக் கமலை வீட்டுக்குப்போய் வாயில்காப்பாளன் உட்போகவிடாது தடுக்கத் 'திரும்பிப்போகேன்; இவ்வாயிலிலேயேயிருப்பே னென்று உன் சீமாட் டிக்குச்சொல்’’ லென்று சொல்லிவிட்டு அங்கே யிருந்தாள்; கமலை அழைத்து வரச்சொல்லுதலும் உட்புகுந்து பலவாருக அவளோடு வார்த்தையாடி அவளது மனத்தினைக் கவர்ந்தனள். கமலை மாசேனனை மறந்து மாசேனனுப்பிய இளமையும் எழிலும் வாய்ந்த தூதன் மீது காதலுற்றனள். விமலை போயினபின்னர்க் கமலை தனது சேவகளுகிய கோலாகலனை யழைத்து, "இதோ, இந்தக் கணையாழி; மன்னனிட மிருந்துவந்த தூதுவன் இதனை யிங்கு வைத்துவிட்டுப்போயிருக்க வேண்டும்; இதனை யெடுத்துச்சென்று உரியவரிடஞ் சேர்த்துவிடு' என்றனள். கோலாகலன் கொண்டுசென்று கொடுக்க, விமலை தான் கணையாழியை வைத்துவிட்டதில்லையென்றனள்; ‘அம்மாள் உன்

Page 51
74 மதங்கசூளாமணி
னிடந்தான் கொடுக்கும்படி சொன்னுள்' என்று கூறிக் கணையாழியை யெறிந்துவிட்டுக் கோலாகலன் போய்விட்டான். விமலை கணையாழி யைக் கையிலெடுத்து அதனை யனுப்பிய கமலையினதுகுறிப்பைப் யுணர்ந்து, "ஐயோ! பாவம்! இந்தச் சீமாட்டி எனது ஆண்பிள்ளை வேடத்தைக் கண்டு மயங்கி யென்னேக் காதலிக்கிருள்; எனது எஜ மாண்ணுகிய மன்னன் அவளைக் காதலிக்கிருன்; நானுே மன்னனைக் காதலிக்கிறேன். இக்காதலெல்லாம் எவ்வாறு முடியுமோ அறியே’’ னென்று தன்னுள்ளே யெண்ணிக்கொண்டு வீதிவழியே போயினள்.
விமலையை மாசேனன் மற்ருெருமுறை கமலைவீட்டுக்குப் போகும் படி யனுப்பினன். உவந்து வரவேற்ற கமலை தன்னுள்ளத்தைத் திறந்து 'கேசவ ! நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று வெளிப்படையாகக் கூறினள். விமலை செய்வ தென்னவென் றறியாது விரைந்து விடை பெற்றுக்கொண்டு மாசேனனுடைய மாளிகையைநோக்கி நடந்தனள், கமலைமீது விருப்பம்வைத்திருந்த சுந்தரராயன் என்னும் பிரபு விம லையை ஆடவனென்றும் கமலையினுள்ளத்தைக் கவர்ந்தவனென்றும் எண்ணி வாளை யுருவிக்கொண்டு சண்டைக்குப்போயினன். விமலை அஞ்சிப் பின்வாங்க அந்நியனெருவன் இடைவந்து சுந்தரராயனைப் பொரப்போகின்றதருணத்தில் மன்னனுடைய காவலாளர் வந்து "நீ ஆதவனெனப் பெயரிய கப்பற்றலைவனல்லையோ? மன்னர்பெயரால் உன்னைக் கைதியாக்கியிருக்கிருேம்; எங்கள் பின்னே வா' என்று அவனது கையைப்பற்றி யிழுத்தனர். ஆதவன் விமலையை நோக்கி, *சுதாகரா ! உன்னுல் எனக்கு இந்த இடர் வந்தது; நான்தந்த பணப் பையை என்கையிற் ரு' என்றனன். விமலை நடந்தசெய்தியை ஊகித்துநோக்கி, இந்தக் கப்பற்றலைவன் தனது தமையனுகிய சுதா கரனுக்கு நண்பனுயிருக்கவேண்டுமென்றும், உருவபேத மில்லாதிருத் தலினுலே விமலையாகிய தன்னைச் சுதாகரனென நினைத்துக்கொண்டா னெனவும் அறிந்தனள். நடந்த உண்மையு மதுவேயாகும். விமலை போயினபின் அவ்வழியே சுதாகரன்வந்தான். சுந்தரராயன், வந்து, "அப்போது பிறனுடைய உதவியினுற் றப்பிப்போயினுயல்லவா; இந் தாபிடி' யென்று தடியினு லோங்கி யடித்தான். சுதாகரன் |அந்த அடியைத் தட்டிவிட்டுச் சுந்தரராயனுக்கு உறைப்பாக நான்கு ஐந்து அடி கொடுத்தான். சுந்தரராயன் திகைத்துநிற்க வீட்டினுள் விருந்த கமலை விரைந்துவந்து "சண்டைவேண்டாம், இங்கேவாரும்' என் றழைத்துச் சென்று அருகிருத்திக் காதன்மொழிகளைக் கூறினுள். சுதா கரனுக்கு ஒன்றும் புலப்படவில்லை;
(கமலை சுதாகரனை மன்னனது தூதஞகிய கேசவன் என் றெண்ணி ஞள் என்பதை நாம் சொல்லவேண்டியதில்லை.)
கமலை சுதாகரனைநோக்கி, ‘என்னை மணந்துகொள்ளுகிறீரா" ன்ன, அவனும் அதற் குடம்பட்டான். அவளும் தருணம்வாய்த்த தன வெண்ணி அருகிலிருந்த புரோகிதரை யழைப்பித்து விரைவில்

மதங்கசூளாமணி 75
மணவினையை நிறைவேற்றுவித்தனள். அது முடிந்ததும் சுதாகரன் புறத்தேபோய்த் தனது நண்பனைப் பார்த்துவிட்டுவருவதாகச் சொல்லி விட்டுப் போய்விட்டான். சிறிதுநேரத்துக்குள் மாசேனமன் னனும் (விமலையாகிய) கேசவனும் பரிசனரும் கமலையினுடைமனைக்கு வந்தனர். மாசேனன் தன் காதலை யுரைத்துநிற்கக் கமலை விமலை யைச் சுட்டிக்காட்டி, “அதோ என்கணவன்' என்றனள். மன்னன் வெகுண்டு நோக்க, விமலை, ‘நான் ஒன்று மறியேன்' என்றனள். இத்தருணத்தில் சுதாகரன் வந்தனன். கேசவனக நின்ற விமலையையும் சுதாகரனையும் ஒருங்குபார்த்தவர்கள் பிரமித்து ‘ஒரேமுகம், ஒரே மொழி, ஒரே உரு, இது என்ன அதிசயம்' என்றனர். விமலை வர்த்த மான மனத்தினையுங் கூறிக் கேசவனகிய ஆண்பிள்ளைவேடத்துக்குரிய உடைகளை நீக்கிவிட்டுச் சொந்தஉடை தரித்துக்கொண்டுவந்துநின் றனள். மாசேனன் அவளதுகையைப்பற்றி ‘'எனது கேசவா ! நீ யென்னை நேசித்ததாகப் பலமுறை கூறியதுண்டு. இன்றுமுத லெனது பட்டத்தரசியாயிரு’ என்றனன். அனைவரும் இன்புற்று வாழ்ந்தனர். யாமினி யென்னுஞ் சேடிப்பெண்ணும், கமலையினுடைய நல்லம்மாளு கிய தாண்டவராயனும், மானவனென்னும் விதூஷகனும் ஒருங்கு சேர்ந்து கோலாகலன் என்னும் சேவகனைப் பரிகசிப்பதனைக் கூறும் ஒரு கிளைக்கதை இந்நாடகத்தினுள் வருகின்றது; இக் கிளைக்கதை நகைச்சுவை நிறைந்தது.
உவகைச்சுவையானது செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு என்னும் நான்கும்பற்றி யெழுவது. ‘செல்வம் என்பது நுகர்ச்சி, புலனென்பது கல்விப்பயனக அறிவுடைமை, புணர்வு காதலிருவர் கருத்தொத்தல், விளையாட்டு யாறுங் குளனுங் காவு மாடிப் பதி யிகந்து வருதல்’’ என உறுப்பியலுட் கூறினும். இரதிகாந்தன் கோகில வல்லி, நீலாம்பரன் கேகயவல்லி, சீதரன் பாவை, சல்லாபன் ஆதிரை, வசந்தன் பரிபவை, மாசேனன் விமலை, சுதாகரன் கமலை யென்னும் ஏழிரண்டு காதலரிடத்தே ‘காதலிருவர் கருத்தொத்த’ உவகைச் சுவைதோன்றிற்று. கோகிலவல்லி விம்லை யாகிய இருவரிடத்தும் அறிவுடைமைபற்றிய உவகைச்சுவை தோன்றிற்று. கமலையிடத்துச் செல்வம்பற்றிய உவகைச்சுவை தோன்றிற்று. இரதிகாந்தன்கோகில வல்வியிடத்து விளையாட்டுப்பற்றிய உவகைச்சுவை தோன்றிற்று.
கஉ. பெருமிதச்சுவையையாவது உவகைச்சுவையையாவது கெவ் விதிற் றெரிவித்து ஏனைய சுவைகளையுந் தழுவிநடப்பது நாடக லக்ஷண மாமென வடமொழி தமிழ்மொழிப் பெரியோர் கூறுபவாகலின் நாம் மேலேகாட்டியசரிதைகளுள் இரம்மியன்சுசீலைசரிதை, பெரும் புயற்சரிதை, வணிகதேயவர்த்தகன்சரிதை, யூலியசீசர் சரிதை, வேனிற்காதை, கூதிர்க்காதை, கருதியது எய்திய காதலர் சரிதை யென்னும் ஏழுமே நாடகமாவன. ஒழிந்த ஐந்தினையும் பிரகரணம், நாடிகையென்னும் வகைகளுள்ளடக்கிக்கொள்க. இவ்வேழனுள்ளும்

Page 52
76 மதங்கசூளாமணி
சுசீலை, மாலதி, விஜயை பதுமை, கல்பூர்ணியா, கோகிலவல்லி, அயிராணி, பரிபவை, விமலை, கமலை யாகிய தலைவியர் பதின்மரை யெடுத்துக்காட்டினம். வடமொழி நூலார் தலைவியரை வகுத்துக் கொண்ட எண்வகைவகுப்பினுள்ளே குறியிடத்துத் தலைவன் முற் படாதொழிய மனமலைந்தநிலையிற் சுசீலை விப்பிரலப்தையாவாள்; நாயகர் அண்மையிலிருந்து குற்றவல்புரிய உவகையுற்றிருந்தோ ராகிய மாலதியும் பரிபவையும் சுவாதீனபர்த்ருகை யாவார்; கணவன் முன் கொடுத்த மோதிரத்தைப் பிறளொருத்திக்குக் கொடுத்துவிட்டா னெனக் கூறி வெகுளிக்குறிகாட்டியநிலையில் விஜயை கண்டிதையா வாள்; அணிகல னணிந்து புட்கலனதுவரவுகாத்திருந்த பதுமை வாச கசஜ்ஜையாவாள்; தலைவனது பிரிவாற்ருது துன்புற்ற கல்பூர்ணியா வீரஹோற்கண்டிதையாவாள்; கேசவனிடத்து வெகுளிக் குறிகாட்டி அவன் பிரிந்தபின்பு துன்புற்றிரங்கியநிலையிற் கமலை கலகாந்தரிதை யாவாள்; குறியிடத்துத் தலைவனை நாடிச் சென்ற கோகிலவல்லி அபிசாரிகையாவாள்; தலைவனை நெடுநாட் பிரிந்திருந்தநிலையில் அயி ராணி பிரோசிதப்பிரியை யாவாள்; மாசேனன்பாற் காதற்குறி காட்டியநிலையில் விமலையும் அபிசாரிகையாவாள். எண்வகைத் தலைவி யரி னிலக்கணங்களை ஒழிபியல் இரண்டாம்பிரிவினுட் காண்க. மேலே காட்டிய பதின்மரும் சுகுணையும் சாந்தையு மாவர். மகபதிப்பிரியை, மாணிக்கமாலை, தமோரா வாகிய மூவரும் காமினியும் அரக்கியு மாவர். தலைமக்களை வடமொழி நூலார் நால்வகைப்படுத்துக்கூறுவர். வசந்தனும் பிரியதத்தனும் தீரலலிதர்; மாசேனனும் அநந்தனும் தீரசாந்தர்; இரம்மியனும் இரதிகாந்தனும் தீரோதாத்தர், மகபதி யும் சாபலனும் தீரோத்ததர்; தலைமக்க ளிலக்கணத்தை ஒழிபிய லிரண்டாம்பிரிவினுட் காண்க. செகசிற்பியாரியற்றிய நாற்பத் தைந்து தனிநூல்களுட் சிறப்புடைய பன்னிரண்டினத் தெரிந்து அவற்றது வனப்பையும் அமைப்பையும் தொகுத்தும் விரித்தும் இயன்ற வரை விளக்கினும். தமிழறிஞரியற்றிய செகசிற்பியார்நாடகமொழி பெயர்ப்புக்களுஞ் சிலவுள. அவற்றையு மாராய்தல் நன்றெனக்கூறி யில் எடுத்துக்காட்டியலைமுடிக்கின்ரும்.

ஒழியியல்
க. முஞ்சராஜனது ஸ்மஸ்தானவித்வானுகவிளங்கிய தனஞ்சயன் என்னும் வடமொழிப்புலவர் பண்டையோர் செய்தளித்த பரத நூல், நாட்டியசாஸ்திரம் என்னும் இவற்றிற் பொதிந்துகிடந்த அரிய இலக்கணங்களையெல்லாம் ஆராய்ந்து தொகுத்துச் சுருக்கமும் தெளி வும் பொருந்திய தசரூபம் என்னும் நாடகலக்கணநூலைச் செய்தனர். இந்நூற்பெயர் தசரூபகமெனவும் வழங்கப்படும். இது நான்கு அதி காரங்களால் நடந்து விலக்குறுப்புப் பதினன்கனுள் யாப்பிய விசை யியற்பாலவாகிய சொல்வகை, வண்ணம், வரி யெனும் மூன்று மொழித்து ஒழிந்த பதினென்றினையும் தெளிவுற விளக்குவது. இந் நூன்முடிபுகளைத் தொகுத்து இவ்வியலின் முதனன்குபிரிவுகளாகக் கூறி யப்பாற் செல்வாம். வடமொழிக்குறியீடுகளின் சுத்தவுருவத்தை யறியவேண்டியவிடத்து மொழிபெயர்ப்பினேடு முதனுரற்சூத்திரங் களையுந் தருவாம்; நூற்பொருளுக்குப் புறம்பாய குறிப்புக்களை இ தலைப்பகரத்தினுட்டருவாம்.
முதலத்திகாரம் பொருள், சந்தி, சொல் லென்னும் மூன்றுறுப் புணர்த்துதனுதலிற்று. முத லாறுசூத்திரங்களும் தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளும் கூறுதலால் தற்சிறப்புப்பாயிர மாவன. ஏழு முதற் பதினென்றுவரையு முள்ள சூத்திரங்கள் நாட்டியத்தின் பொது வியல் புணர்த்துவன. பன்னிரண்டுமுதல் இருபதுவரையுமுள்ள சூத் திரங்கள் பொருளுறுப்பு உணர்த்துவன. இருபத்தொன்றுமுதல் ஐம் பத்தாறுவரையுமுள்ள சூத்திரங்கள் சந்தியுறுப்புணர்த்துவன. ஐம்பத் தேழுமுதல் அறுபதுவரையு முள்ள சூத்திரங்கள் சொல்லுறுப்புணர்த் துவன.
1-6. தெய்வவணக்கமும் செயப்படுபொருளும்.
7. நடிப்பினுல் நிகழ்ச்சிகளை உணர்த்துவது நாட்டியம்; இது காணப் படுவதாதலின் உருவம் (ரூபம்) எனவும், நடிப்போர் பிறருருக் கொள்வராதலினல் உருக்கோடல் (ரூபகம்) எனவும்பட்டுச் சுவையை (ரசத்தை) ஆதாரமாகக்கொண்டு பத்துவகையாக நடக்கும்.
8. நாட்டியவகை பத்தாவன:-
நாடிகoவvஆகாண లైTaరాశిత్ర ஹவu_நoலிே வாயொதவ08வஸ்ாரெளவீ ుృGజ్ఞమిDrళిரமாஉகி
நாடகம், பிரகரணம், பாணம், பிரகசனம், இடிமம், வியா
யோகம், சமவகாரம், வீதி, அங்கம், ஈகாமிருகம் என்பனவாம்.
9. உள்ளக்குறிப்பை (ப்ாவத்தை) ஆதாரமாகக்கொண்ட அவி நயக்கூத்தும் (நிர்த்யமும்), தாளலயத்தை ஆதாரமாகக்கொண்ட

Page 53
78 மதங்கசூளாமணி
சுத்தநிருத்தமும் (நிர்த்தமும்) நாட்டியத்தின் வேருவன; முன்னையது மார்க்கமெனப்படும்; பின்னையது தேசி எனப்படும்.
10, இவை இலாசியம் (மென்னிர் மையதாகிய கூத்து; அகமார்க் கம்), தாண்டவம் (வன்னீர் மையதாகிய கூத்து; புறமார்க்கம்), என இருவகைப்பட்டு நாடகமுதலிய பத்தையும் சார்ந்துநிற்பன.
(பதினேராடலுள் வீழ்ந்தாடலாகிய ஐந்தினையும் இலாசியமென வும், நின்ருடலாகிய ஆறினையும் தாண்டவ மெனவும் கொள்ள லாகும். 'துடிகடையம் பேடு மரக்காலே பாவை, வடிவுடன் வீழ்ந் தாடலைந்து'. 'அல்லியங் கொட்டி குடைகுடம் பாண்டரங்க, மல்லுடனின்ருட லாறு. ')
11. பொருள் (வஸ்து), தலைவன் (நேதா), சுவை (ரசம்) என்னும் மூன்றும்பற்றி நாட்டியக்கட்டுரையை வகுத்துக்கொள்ளலாகும்.
11-13. பொருளின் உட்பிரிவுகள் இரண்டு. தலைமக (அதிகாரி) னேடு நேராகத் தொடர்புற்ற நிகழ்ச்சிகளை யடக்கியது தலைமைப் பொருள் (ஆதிகாரிகம). தலைமகனுக்குப் பயனைத் தருவனவாகிய பிறரது நிகழ்ச்சிகளை யடக்கியது சார்புப்பொருள் (பிராசங்கிகம்); இது தொடர்ந்து நீண்டுவருமாயின், கிளைக்கதை (பதாகை) யெனப் படும்; குறுகியதெனின் வழிநிகழ்ச்சி (பிரகரீ) யெனப்படும்.
14. (பதாகைநிலையின் இலக்கணம்) 15. பொருளைப் பழங்கதை (பிரக்கியாதம்), புலவனுற் கற்பிக்கப் பட்டகதை (உற்பத்தி), மேலையிருவகையினதுகலப்பு (மிச்சிரம்) என மூவகையாகவும் வகுக்கலாம். − -
16. அறம், பொருள், இன்பம் என்னும் இம்மூன்றினுள் ஒன்ருே பலவோ, நாடகத்தின் பொருண்முடிபாக (காரியமாக) வருதல் வேண்டும். சிறிதாகத் தோன்றிப் பலபட விரிவெய்தி நடக்கும் நாட கக்கருத்து விதை (பீஜம்) எனப்படும். நாடகக்கருத்துக்குச் சார்பாக நின்ற பொருள் (அவாந்தரார்த்தம்) இடையிற் கண்டப்படின், அதனை யெடுத்துக் கூட்டுதற்கு உபயோகமாகநின்ற காரணம் (அச்சேத காரணம்) விரிநிலை (விந்து) எனப்படும்.
y வீஜவிஜுவதாகாவyவூ கரீகாய-லுகூடிணாே
சுU-வூகர-தயவேஊ தாவன தாவோசிகீதி-தோே
விதை (பீஜம்), விரிநிலை (விந்து), கிளைக்கதை (பதாகை), வழி
கழ்ச்சி (பிரகரீ), பொருண்முடிபு (காரியம்) என்னும் ஐந்தும் பாருண் மூலம் (அர்த்தப்பிரகிருதி) எனப்படுவன.

மதங்கசூளாமணி 79
கவவுரவேலுநகாய-வேyவூ ாாஷவyவமஞாயி-ஹிே3 சூா இயஆவூ ாவூாU0ாநியதா வழிவமஞாமாே? 18-20 ப்யனைப் பெறுவதற்குவிரும்பித் தொடங்கும் தொடக்கம் (ஆரம்பம்), அதற்காக முயலுகின்ற முயற்சி (பிரயத்தனம்), பயனை யெதிர்பார்க்கின்ற பயன்விழைவு (பிராப்தியாசை), பயன்பெறுவே னென்னும் உளப்பாடு (நியதாப்தி), பயன்முழுதும் பெற்றபேறு (பல யோகம்) ஆகிய ஐந்தும் நாட்டியநிகழ்ச்சி (அவஸ்தை) எனப்படுவன.
21. பொருண்மூலம் ஐந்தும் நாட்டியநிகழ்ச்சி ஐந்தும் சார்பாக எழுவன ஐவகைச்சந்திகள்.
22. ஒரேநிகழ்ச்சித்தொடர்புபற்றி ஒரு பொருளினேடு மற்ருெரு பொருளை யினைத்துநிற்பது சந்தி.
திமேவெமஹ-வேலாவ8பெ0-ாேவவலoஹ திே =&624ס־%
ஐவகைச்சந்திகளாவன:- முளை (முகம்), நாற்று (பிரதிமுகம்), கருப்பம், விளைவு (அவமர்சம்), துய்த்தல் (உபசங்கிருதி = நிர்வாஹ ணம்) என்பன.
23. (ஆரம்பம்) தொடக்கத்தோடும் (பீஜம்) விதையினுேடும் தொடர்புடைய முகமானது பலவகைப்பொருளுக்குஞ் சுவைக்கும் முதலாகிநிற்றலாலும், பீஜத்தினின்று தோற்றினமையாலும் முளை போல்வது.
24, உவகூெடிவவேரிகாவோசிநாவொலிஜொஹந:
ዘ.J`tu கிவூே ாவழிவேல8ாயாநoவியாநஆரிஹாவ.நா ଅ_ର ஐடிஹெடிகான ாநஆய9-ாேநy9லுகூடிண?
24- 27. விதையினவிதைத்தல் உபகூேடிபம்; அதன் அகற்சி (பரி கரம்) பரிக்கிரியை; அதன் நிலைபேறு பரிந்யாசம், நற்குணங்களை யெடுத்தியம்பியுள்ளத்தைக்கவர்தல் விலோபனம் ; இது செய்வாமென நிச்சயித்தல் யுக்தி; சுகத்தினையடைதல் பிராப்தி; நாடகக்கருத்தாகிய விதை நிலைபெற்றுத்தோற்றுதல் சமாதானம்; இன்பமும் துன்பமும் காரியப்படுதல் விதானம்; வியப்புற்றுநோக்குதல் பரிபாவனை மறைந் தன வெளிப்படல் உற்பேதம்; கருதியபொருளின்தொடக்கம் கர ணம்; மேல் நோக்கும் இயக்கம் வேதை. இவை பன்னிரண்டும் முதற் சந்தியாகிய முகத்தின் உட்பிரிவுகளாம். (தமிழ்மரபுபற்றி இவற் றினைத் துறையென்னலாம். இவற்றுள் உபக்ஷேபம், பரிக்கிரியை, பரிந்யாசம், யுக்தி, உற்பேதம், கரணம் என்னும் ஆறும் இன்றியமை யாதனர்.
28. (பிரயத்தனம்) முயற்சியோடும், (விந்து) விரிநிலையோடும் தொடர்புடைய பிரதிமுகமானது தோற்றமும் மறைவும் (லகூதியா லகரியம்) உளதாதலின் நாற்றுப்போல்வது. (இலை முதலியன தோற் நிறம். அரும்பு, மலர், காய் முதலியன மறைவு.)

Page 54
80 மதங்கசூளாமணி
விலாவவோரிவvவ-பேgவிய அதoப08_ந8-ணி _B8–శ్ళీగా తీపిబ్రyఅరి நo_நிரொயவே பய-பேவபாவல_நடி
2 ఏుబ్రిగారి ఏ.நாவெலாவண-வேoஹாால கவS
29-32 இன்பப்பொருளை விழைதல் விலாசம், கண்டுபின்பிழந்த பொருளைக் காதலித்துத்தேடுதல் பரிசர்ப்பம்; பிரிவுகாரணமாக இன்ப நுகர்ச்சியெய்தப்பெரு திருத்தல் விதுரதம்; பிரிவினுல்வந்த ஆற்ருமை யையொருவாறு ஆற்றிக்கொள்ளுதல் சமம், நகைக்கூற்று நருமம்; நகைக் கூற்றினலின்புறுதல் நருமத்யுதி; மறுமொழிபெறுதல் பிர கமனம்; நன்மைபயத்தற்கேதுவாகிய இடையீடு நிரோதம்; நய மொழி பரியுபாசனம்; நன்னயக்குறிப்பு புஷ்பம்; சூழ்ச்சியுணர்த்து தல் உபந்நியாசம், கடுஞ்சொற்கூறுதல் வச்சிரம்; நால்வகை வரு ணத்தாரும் ஒரிடத்தில் ஒருங்குகூடுதல் வருணசம்மாரம். இவை பதின் மூன்றும் இரண்டாஞ் சந்தியாகிய பிரதிமுகத்தின் உட்பிரிவுகளாம். (இவற்றுள் பரிசர்ப்பம், பிரகமனம், புஷ்பம், வச்சிரம், உபந்நியாசம் என்னும் ஆறும் இன்றியமையாச்சிறப்பின.)
33. கருப்பத்தினுட் பயன்விழைவு (பிராப்தியாசை) வரிள், கிளைக் கதை (பதாகை) வருதல்வேண்டும்.
34 சுஹூ தாஹாணஜாறெ ாோ-அவொடிாஹாணெசூ88
வvoஅஹgாந08ாநoஉதொடிகாயிலறுெ தயா
ఒఏజ్ఞఅమ్యాrఏమి லுக்ஷணoஉவூ ணியதெ
34-38 வஞ்சித்துமொழிதல் அபூதாகரணம்; உண்மைக்கருத்தினைக் குறிப்பிடல் மார்க்கம்; தன்கருத்தையுரைத்தல் ரூபம்; வரம்பு கடந்து பெருக்கிக்கூறுதல் உதாகிருதி, நீடுநினைந்தபொருளினைப்பெறுதல் கிர மம்; (கிரமம் பிறரது உள்ளக்கருத்தினை உணர்தல் என்பார் ஒரு சர்ரார்), கையுறைகொடுத்து நட்புப்பெறுதல் சங்கிரகம்; குறிப்பா ணர்தல் அநுமானம்; வஞ்சனையால் வெல்லுதல் அதிபலம்; வெகுண் ரகூறல் தோடகம்; பகைவனைக்கண்டஞ்சுதல் உத்வேகம், பயந்து நடுங்குதல் சம்பிரமை; விதை கருப்பமாகி முடிகின்றநிறைவு ஆக்ஷே ம். இவை பன்னிரண்டும் கருப்பத்தின் உட்பிரிவுகள். இவற்றுள் அபூ ாகரணம், மார்க்கம், தோடகம், அதிபலம், ஆக்ஷேபம் என்னும் ஆறும் இன்றியமையிாச்சிறப்பின.
39. கோபத்தினலோ, விசனத்தினல்ோ, பிற உள்ள நெகிழ்ச்சி யினலோ அலைவுற்ருஞெருவன் மனத்தை நிலைப்படுத்தி உண்ணுேக்கு கின்ற தன்மையைக் காட்டுவது நான்காஞ்சந்தியாகிய விளைவு (அவ மர்சம்) :

மதங்கசூளாமணி 81
40, தகுாவவாடிவ8ெடிெளவிஆவஐவUஇதயே
ஒ9திவூேவ0ஆgஉந0வyவவாயொலிரொய வூரொதுநாவினுற ந8ாஜா நoஉகுயொடிU0
40 - 43 பிறர் குற்றம் இயம்பல் அபவாதம்; அபிமானத்தாற் கோபித்துரைத்தல் சம்பேடம்; கொல்லுதல் கட்டுதல் செய் தல் வித்திரவம்; பெரியோரை மதியாதுநடத்தல் திரவம், விரோதத் தைச் சமப்படுத்துதல் சக்தி; பிறருள்ளத்துக்குத் துன்பமுண்டாக்கும் வெஞ்சொற்கூறல் தியுதி; பெரியோரைப் போற்றுதல் பிரசங்கம்; எள்ளல் சலனம்; தனது வல்லமையைக் குறிப்பிட்டுரைத்தல் வியவ சாயம்; கோபத்தினுற் றன்னிலையிழந்தோன் தனதுவல்லமையை யெடுத்துக்கூறுதல் விரோதனம்; நன்மைப்பேறு வருமென்னுந் துணி விஞல் மேல் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளை நோக்குதல் பிரரோசனை: தற்புகழ்தல் விசலனம்; கருமத்தை மீட்டுந் தொடங்குதல் ஆதானம்; இவை பதின்மூன்றும் நான்சாஞ்சந்தியாகிய விளைவின் உட்பிரிவுகள். (இவற்றுள் அபவாதம், சக்தி, வியவசாயம், பிரரோசனம், ஆதானம் என்னும் ஐந்தும் இன்றியமையாச்சிறப்பின.)
44. பீஜத்தினின்றுந் தோற்றி விரிவுற்று முகமுதலிய நான்கு சந்தி களினும் பரந்துநின்ற பொருள் முற்றுப்பெறுகின்ற ஐந்தாஞ்சந்தி நிர்வாஹணம் (உபசங்கிருதி; துய்த்தல்) எனப்படும்.
45, வcயிலி-வொயொஆயநeநிண-யவேரிஹாஷண:
வூவலாடிாநஐவயோசுேருதிஹாஷொவம9ஹ_ந8 வ-Gவ-ஹோவொவவலoஹாரெளவ ப0வழிபgவத".
VU" g-Buлог
45-48. பீஜம் மீட்டுந்தோற்றுதல் சந்தி: கரும (கார்ய) முடிப் பைத் தேடுதல் விபோதம்; கருதிய பொருளைப் பெற்றுவிட்டதுபோலு ரைத்தல் கிரதனம்; அநுபவத்தையுரைத்தல் நிர்ணயம்; கலந்துரை யாடல் பரிபாஷணம்; நன்முகங்காட்டல் பிரசாதம்; விழைபொருள் பெற்று மகிழ்வுறுதல் ஆநந்தம்; துன்பத்தினின்று விடுபடுதல் சமயம்; நன்மைப்பேற்றில் நிலைபெறுதல் கிருதி, கருதியதுபெற்று அடைந்த மகிழ்ச்சியை எடுத்துக்கூறல் பாஷணம்; கருமமுடிபை எதிர்நோக்கு தல் பூர்வபாவம்; காத்திராப்பிரகாரமாக வந்தடைந்த நிகழ்ச்சி யினுல் வியப்புறுதல் உபகூகனம்; வரம்பெறுதல் காவ்யசம்மாரம்; ஆசி மொழிபிரசஷ்டி, \
49. அறுபத்துநான்கு சந்தியுட்பிரிவுகள் (துறை) கூறினும். அவற் றின் உபயோகம் அறுவகைப்படும். அவையாவன: எடுத்துக் கொண்ட பொருளை நிரைப்படுத்துதல், மறைக்கவேண்டியவற்றை மறைத் தல், வெளிப்படுத்தவேண்டியவற்றை வெளிப்படுத்தல், விழைவு

Page 55
82 மதங்கசூளாமணி
(ராகம) உண்டாக்கல்; வியப்பு (ஆச்சர்யம்) உண்டாக்கல்; கதை நிகழ்ச்சியை (விருத்தாந்தத்தை)க் கேட்பதற்கு ஆவலுண்டாகும்படி செய்தல் என்பனவாம்.
50-51 சுவைகுறைவுபட்டனவும் சிறப்பில்லாதனவுமாகிய பொருண்முடிபுகளைச் சொல்லினல் மாத்திரம் உணர்த்தினற் போதும். சுவைநிறைந்து சிறந்தபாகங்களைக் காட்சியாலும் உணர்த்தவேண்டும். 52. சொல்லினல்மாத்திரம் உணர்த்தும் பாகங்களை விஷ்கம்பம், சூலிகை, அங்காசியம், அங்காவதாரம், பிரவேசிகம், என்னும் ஐந்து இடைப்படுகாட்சி (அர்த்தோபக்ஷேபகம்) களாலும் காட்டலாம்.
53. நடுத்தரமான நாடகபாத்திரர்தோற்றிச் சரிதையின் சில பாகங்களைச் சுருக்கிக்கூறுவதும், நடந்தேறியவற்றையோ, நடக்கப் போவனவற்றையோ தெரிவிப்பதும் விஷ்கம்பம் எனப்படும். ஒரே வகுப்பான ஒருவரோ பலரோ நாடகபாத்திரராயின் அது சுத்தம் எனப்படும்; நடுத்தரமானவர்களும் கடைப்பட்டவர்களும் உடன் தோற்றுவது சங்கீரண விஷ்கம்பமாகும்.
54. இரண்டு அங்கங்களுக்கிடையே விடுபட்ட விஷயங்களைக் கீழ்த் தரமான பாத்திரர் தோற்றி விளக்குவது பிரவேசிகம் எனப்படும்; இது விஷ்கம்பத்தை நிகர்த்தது.
55. எழினி (திரை) யின்பின்னிற்போர் சிலவிஷயங்களை விளங்கக் கூறுவது சூலிகை யெனப்படும்; ஒரு அங்கத்தின் முடிபில் நாடக பாத்திரர் வரப்போகிற அங்கத்தின் பொருளைக் குறிப்பாகக் கூறு தல் அங்காசியம் எனப்படும்.
58. ஒரு அங்கத்தில் வந்த நாடகபாத்திரரோ பிரிவின்றி அடுத்து வரு அங்கத்திலும் நடிக்க இவ்விரு அங்கங்களுக்கு மிடையே சொல்லாலுணர்த்தவேண்டியவற்றைச் சொல்லுதல் அங்காவதாரம் எனப்படும்.
57-60 யாருக்குங்கேட்கவுரைப்பது பிரகாசம், புறத்தேயுரைப்பது சுவாகதம்; மூன்றுவிரலைக்காட்டிப் பிறரைக் காதுகொடாவண்ணம் அகற்றிவிட்டு இருவர் கலந்துரையாடுவது ஜநாந்திகம்; ஒருவரை நோக் கித் திரும்பி இரகசியமொழிகூறுவது அபவாரிதம்; ஏதோ செவியிற் பட்டதாகக் குறிப்பிட்டு ஆகாயத்தைநோக்கி வார்த்தையாடுவது
காயபாஷிதம்.
61. இத்யாதி இலக்கணங்களையும் மேல்வருவனவற்றையும் இரா ாயணம் பிருகத்கதை முதலிய நூல்களையும் ஆராய்ந்து தக்க தலைவனை ம் சுவையையும் தேர்ந்தெடுத்துப் பொருத்தமான இனிய மொழி கேளாற் சரிதையை யமைத்துக்கொள்ளவேண்டும்.
உ. இரண்டாமதிகாரம் யோனி விருத்தி யென்னும் இரண்டுறுப்
புணர்த்துதனுதலிற்று. முதல் நாற்பத்துமூன்று சூத்திரங்களும் தலை வர், தலைவியர், முதல் கடை இடையென மூவகைப்பட்ட நாடக

மதங்கசூளாமணி 83
பாத்திரரென் றின்னேரது இலக்கணங்கூறியவாகலின் யோனியுறுப் பின் பால. ஒழிந்த சூத்திரங்கள் விருத்தியிலக்கணமும், விருத்தி யோடு தொடர்புற்றுநின்ற வழக்குமொழியிலக்கணமுங் கூறுவன.
1-5. தலைவர் நால்வகையர்; பெருமையும் உரனும் நால்வகை யோருக்கு முரிய, ஆடல் பாடலி லீடுபட்டு இன்புற்றிருக்கும் மென் னிர்மையான் உவகைமேவிய தலைவன் (தீரலலிதன்), பொறையும் அடக்கமும் நற்குணமனைத்தும் பொருந்திய இருபிறப்பாளன் அறிவு மேவிய தலைவன் (தீரசாந்தன்) (அந்தண்மைபொருந்திய பிறரும் இவ் வகையினர் . ந 35-38ஐ நோக்குக), மேன்மையும் பொறையும் கருதியது முடிக்கும் ஆற்றலுமுடையோன் மேன்மைமேவிய தலைவன் (தீரோ தாத்தன்), வெகுளியும் பொருமையும் மேவித் தற்புகழ்ந்து மந்திர தந்திரங்களில் வல்லவன யகங்காரம் மேற்கொண்டிருப்போன் தறுகண்மேவிய தலைவன் (தீரோத்ததன்).
6. பிறளிடத்து உள்ளஞ்சேன்றும் தன்மனையாள்பால் அன்பு பாராட்டுவோன் தகூFணன்; தனது பொருந்தாவொழுக்கத்தை மறைப்போன் சடன்; நாணின்றி உடலிலுள்ள விகாரத்தைக்காட்டு வோன் திருஷ்டன். இவர் மூவரும், தன்பனேவியையன்றிப் பிறரை நினையாத அநுகூலனுமென இன்பவொழுக்கத்தில் நால்வர் தலை வருளர்.
7. தலைவனுக்கு நண்பனுய்க் கிளைக்கதையினுட்டோற்றும் உப தலை வன் பீடமர்த்தன் எனப்படுவான்.
8. விடனும் விதூஷகனும் தலைவனுக்கு நண்பர்; தலைவனது பகை வன் தீரோத்ததகுணமுடையோன்.
9-13. வறியோர்க்கிரங்கலும் வீரமும் தீரமும் சோபை கண் ணுேட்டமும் இனிய புன்னகையும் விலாசம், அசைவுபுறந்தோற்ரு இனியநிலை மாதுரியம்; கடைப்பிடியும் வலிமையும் மேவிய கலக்க மற்றநிலை காம்பீரியம்; தடைபலவரினும் தளராமனிற்றல் தைரியம்; உயிர்போயினும் மானத்தைக் கைவிடாமை தேஜசு, இன்பநிறை விஞற் புறத்தே தோற்றும் இனிமை லவிதம்; நல்லோரைப் பாது காத்தற்காகத் தன்னுயிரையுங் கொடுத்தல் ஒளதாரியம். இவை தலை வனிடங் காணப்படும் எண்வகைக்குணங்கள்.
14. நாடகத்தலைவியர் தன்மனைவி, அந்நியஸ்திரீ, பொதுமகள் என மூவகையர்.
14-21. (முவகைத்தலைவியரது இலக்கணம்) 22-26 தலைவரோடுற்ற தொடர்பினை நோக்கத் தலைவியர் 6fண் வகைப்படுவர். நாயகன் அண்மையிலிருந்து குற்றேவல்புரிய உவகை யுற்றிருப்பவள் சுவாதீனபர்த்ருகை அணிகலனணிந்து தலைவன வரவையெதிர்பார்த்திருப்பவள் வாசகசஜ்ஜை, தலைவனது பிரிவார் ருது துன்புறுபவள் வீரஹோற்கண்டிதை (உற்கை, உற்கண்டி4ை

Page 56
84 மதங்கசூளாமணி
யெனலுமாம்); தன்னுயகனுடலத்திற் பிறள்கலவியா லெய்திய குறி கண்டு வெகுளியுற்றிருப்பவள் கணடிதை; ஊடலிற் றலைவனச் சினந்து அவன் பிரிந்த பின்னர் அவனே நினைத்துத் துன்புற்றிரங்குபவள் கல காந்தரிதை; குறியிடத்துத் தலைவன்முற்படாதொழிய மனமலைபவள் விப்பிரலப்தை; தலைவன் வேற்றுநாட்டுக்குச் சென்றமையால் அவனைப் பிரிந்திருப்பவள் பிரோசிதப்பிரியை குறியிடத்துக்குத் தலைவனைநாடிச் செல்பவள் அபிசாரிகை. முதலிருவரும் மேனிமினுக்கி யுவகையுற் றிருப்பர். ஏனஅறுவரும் அணிகலனின்றித் துன்புற்று நெடுமூச் செறிந்து ஒளிகுன்றியிருப்பர்.
27. வேலைக்காரி; தோழி, ஏவற்பெண், சுற்றத்தாருள் இளையாள், அயலாள், தவமூதாட்டி, கம்மாளப்பெண், தான் என்னும் இவர் தலைவிக்குத் தூதியராவர்.
28-39. (தலைமகளின் இலக்கணங்கள். இலக்கியநூல்களிற் கண்டு கொள்க).
40. லலிதன் தன் அரசியற் கடமைகளை மந்திரிகள்வசம் விட்டு விடுவான். ஏனை மூவகைத் தலைவரும் மந்திரியரோடு தாமுங் கூடி அரசியற்கடமைகளைச் செய்வார்.
41. குலகுரு, புரோகிதன், தவத்தோன், பிரமவாதி என்னும் இவரைச்சார்ந்து அரசன் அறநிலையில் நிற்பான்; நண்பர், குமாரர், வனங்காப்போர், தண்டத்தலைவர், போர்வீர ரென் றின்னுேர் பொரு ணிலைக்கு உதவியாவார்.
42. குறளர், ஆயர், குறவர், யவனர், பாணர், சகாரர் முதலி னேர் இன்பநிலைக்கு உதவியாவார்.
43. நாடகபாத்திரர் முதல், இடை, கடை யென மூவகைப்படு வார்.
(இனி, ஆசிரியர் நால்வகை விருத்தியின் இலக்கணங்கூறுதற்கு எடுத்துக்கொண்டார். சுவையை யாதாரமாகக்கொண்டெழுவது விருத்தியாதலின், ஒன்பதுவகைச்சுவையினைப்பற்றி ஒருசில குறிப்புக் கள் கூறுவது இன்றியமையாததாயிற்று. சிருங்காரம் (உவகை), வீரம் (பெருமிதம்), பீபற்சம் (இளிவரல்), ரெளத்திரம் (வெகுளி), ஹாஸ் யம் (நகை), அற்புதம் (மருட்கை), பயோற்கர்ஷம் (அச்சம்), கருணை (அவலம்), சமப்ரகர்ஷம் (நடுவுநிலை) என ஒன்பது சுவைகள் உள. உறுப்பியலுட் காட்டியபடி ஈற்றில் நின்ற நடுவுநிலை உலகியல் நீங் கினர் பெற்றியதாகலின் எஞ்சிய எட்டுமே உலகவழக்கினுட் கூறப் புடுவன. அவற்றினுள் உவகையினின்றுநகையும், பெருமிதத்தினின்று bருட்கையும், இளிவரலினின்று அச்சமும், வெகுளியினின்று அவல |଼ தோற்றுவவாகலின் உவகை, பெருமிதம், இளிவரல், வெகுளி யென்னும் நான்கும் சிறப்புடையவாயின. மேல்வரும் 57-ம் குத் திரத்துப்பொருளை ஈண்டுத் தருவாம். கைசிகிவிருத்தி உவகைச்சுவை

மதங்கசூளாமணி 85
பற்றி வரும். சாத்துவதி பெருமிதச்சுவைபற்றி வரும்; ஆரபடி இளி வரலும் வெகுளியும்பற்றி வரும்; பாரதிவிருத்தியாண்டும் வரும்)
44. தலைமகனது தன்மைவேறுபாட்டினல் வேறுபட்ட நால்வகை விருத்திகள் உள. ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டும் காமநுகரும் இன்ப விளையாட்டினை விரித்துக்கூறுவது கைசிகிவிருத்தி. இது நருமம், நருமஸ்பூர்ஜம், நருமஸ்போடம், நருமகர்ப்பம் என்னும் நான்கு அங்கங்களையுடையது.
45-46. தலைமகளது ஊடல்தவிர்க்கும்பொருட்டு (அன்புடைபா ரைச் சாந்தப்படுத்தும்பொருட்டு) வெளிப்படும் நகைக்குறிப்பு நருமம் எனப்படும். அது நகைபற்றியும் உவகைபற்றியும் அச்சம் பற்றி யும் வரும். உவகைபற்றிய நகைக்குறிப்புத் தன்னை நோக்கியும், கூடல் விழைவு நோக்கியும், மானத்தை நோக்கியும் வருதலின் முத்திறப் பட்டது. அச்சம்பற்றிய நகைக்குறிப்புச் சுத்தமாயும் பிறசவைகளோடு சேர்ந்தும் வருதலின் இருதிறப்பட்டது. நகைபற்றிய நகைக்குறிப் பொன்றும், உவகைபற்றிய நகைக்குறிப்பு மூன்றும், அச்சம்பற்றிய நகைக்குறிப் பிரண்டும் ஆகிய ஆறும் மொழி (வாக்கு), வேடம் (வேஷம்), செயல் (சேஷ்டை) என ஒவ்வொன்றும் மும்மூன்றிடம் பற்றி வருதலின் நகைக்குறிப்புப் பதினெண்வகைப்பட்டன .
47. அன்புடையாரிருவர் முதன்முதலாக ஒருவரையொருவர் காண் பது நருமஸ்பூர்ஜம் எனப்படும். இது உவகையொடு தொடங்கி அச்சத்தில் முடிவுறும். (கைக்கிளைத்திணையினது காட்சித்துறையும் ஐயத்துறையும் இதன்பாற்படுவன). உள்ளத்திலுள்ள அன்பினைச் சிறிதாக வெளியே தோற்றுவித்தல் நருமஸ்போடம் எனப்படும்; (கைக்கிளைத்திணையினது துணிவு, குறிப்பறிதல் என்னும் இரண்டு துறையும் இதன்பாற்படுவன).
48. அன்பு வெளிப்படுதல் நருமகர்ப்பம் ஆகும்; (களவியல் வகை யனைத்தும் இதன்பாற்படுவன .)
49. துன்பம்பற்ருது நற்குணம், ஆண்மை, தனக்கெனவாழாப் பெருந்தகைமை, இரக்கம், நேர்மை யென்னும் இவற்றேடு பொருந்தி நடக்கும் சாத்துவதிவிருத்தி சம்லாபகம், உத்தாபகம், சங்காட்டியம், பரிவர்த்தகம் என நாற்பாற்படும்.
50-51. பலவகைச்சுவையும் பொருந்த மேலான பொருளைப்பற்றி இருவர் கலந்துரையாடுவது சம்லாபகமாகும்; (பாடாண்டிணையிதன் பாற்படும்). போருக்கு அழைப்பது உத்தாபகமாகும். மந்திரத் தலை வரது உரை கேட்டோ, பொருள்கருதியோ , தெய்வச்செயலாலோ பிறைேடுள்ள நட்புத்தொடர்பினை யறுப்பது சங்காட்டியமாகும்; (வெட்சித்திணையும் கரந்தைத்திணையும் இவற்றின்பாற்படுவன) தொடங்கிய செயல் முடிவுபெறுமுன் மற்ருென்றினுட்புகுதல் பரி வர்த்தகமாகும். (இவ்விருத்தி நாற்பொருளினுள் அறத்தைச் சிறப்

Page 57
86 மதங்கசூளாமணி
பாகக்கொண்டு வருதலை நோக்குக. சிறுபான்மை பொருள் பொரு ளாக வருகின்றதெனினும், அப்பொருள் அறத்தின்வழுவாப்பொரு ளாதலின் அதுவும் அறத்தினு ளடங்குமென்க. மேல்வரும் ஆரபடி விருத்தி அறத்தின்வழுவிய பொருண்மேலும்வருதல் காண்க.)
52. மந்திரம், தந்திரம், மாயம், வஞ்சனை, அடுதல், வெகுளியென் நின்னவற்றின்மேல்வருகின்ற ஆர படிவிருத்தி சங்கழிப்திகம், சம் பேடம், வஸ்துத்தாபனம், அவபாதனம் என நால்வகைப்படும்.
53. சங்கதிப்தி (இச்சூத்திரத்தின்பொருள் தெளிவாகப் புலப்பட வில்லை; எந்திரம் முதலிய சூழ்ச்சிகளினல் உட்பொருளைப் பாதுகாப் பது என்றுகொண்டால் இதனுற் குறிக்கப்படும் ஒழுக்கம் உழிஞைத் திணையையும் நொச்சித்திணையையும் சார்ந்துநிற்கும்). M
54. வெகுண்டார் இருவர் அடல்குறித்து ஒருவ ரொருவர்மேற் செல்லுதல் சம்பேடமாகும்; (வஞ்சித்திணை இதன்பாற்படும்). மாயத் தினுல் ஒருபொருளை யுண்டுபண்ணுதல் வஸ்துத்தாபனமாகும். உட் புகுதலும் அஞ்சியோடுதலும் வெகுண்டுமலைதலு மாகிய இவை அவ பாதமாகும்; (தும்பைத்திணை யிதன்பாற்படும்).
55-56. பாரதிவிருத்தியென மற்ருெருவிருத்தி யுளது; அதனை நாடக லக்கணங்கூறுமிடத்துக் கூறுவாம். உத்படரென்னும் ஆசிரிய ரின்வழிநிற்போர் இவற்றின் வேருய ஐந்தாவதுவிருத்தியொன்று உள தென்பர்.
57. (நால்வகைவிருத்திக்குஞ் சுவை வகுத்துக்கூறும் இச்சூத்திரத் தின்பொருளை 44 ஆஞ் சூத்திரத்துக்குமுன்னின்ற குறிப்பினுட்டந் தாம்; அதனை ஆண்டுக் காண்க).
58. உலகவழக்கினை நுணுக வாராய்ந்துணர்ந்து, நாடகக்கட்டுரை நடந்தேறிய தேசத்தாருக்குரிய பாஷை வேஷம் கிரியை யென்னும் இவற்றை மாறுபாடின்றி வழங்கவேண்டும்.
59-66 (மொழியமைதி கூறுகின்ருர் . தமிழ் வழக்கறிந்து ஏற் பனவற்றை ஏற்குமாறமைத்துக்கொள்க). ஸம்ஸ்கிருதம் ஆடவருள் உயர்ந்தோராலும், தவத்தராலும், ஒரோவழித் தவமூதாட்டியரா லும், பட்டத்தரசியாலும், மந்திரிபுதல்வியராலும், கணிகைமாத * பேசுதற்குரியது. பிராகிருதம் பெண்பாலருக் குரியது. செளர சே ஆடவருட் கீழாயினருக்குரியது. பைசாசம் கடையாயினருக் குரியது. மாகதியினியல்பு மதுவே. பலதேயமாக்களுக்கும் அவ்வத்தேய வழக்குமொழி யுரியது. உயர்ந்தோர் பிறமொழியையுங் கொள்ள லாம். வித்வாம்சரையும் தேவரிஷிகளையும் அறிவரையும் முன்னிலைப் படுத்துங்காற் ‘பகவன்' என அழைத்தல்வேண்டும். விப்பிரரையும், மந்திரிமாரையும், அண்ணன்மாரையும் ‘ஆர்ய' என முன்னிலைப் படுத்தவேண்டும். சூத்திரதாரனும் நடியும் ஒருவரை யொருவர் முன் ன்ரிலைப்படுத்தும் மொழியும் இதுவே. சாரகி தன் எஜமானனை 'ஆயுஷ்

மதங்கசூளாமணி 87
மன்’ என முன்னிலைப்படுத்தவேண்டும். சிஷ்யன், குமரன், இளை யோன் என்றின்னுேரை வயதின் முதிர்ந்த பெரியோர் 'வத்ஸ்’’ (குழந்தாய்) என அழைப்பார். இளையோர் முதியோரை 'தாத" (எந்தாய்), 'சுகிர்தாபித" (திருவணைந்த பெயருடையோய்) என்பர். சூத்திரதாரன் தன்னுடன் செல்வோனை 'மர்ஷ’ (பிரியநண்ப) என்பான்; அவன் சூத்திரதாரனை 'பாவ* (பெரியோய்) என்பான். அரச்னை அவன் பரிசனர் ‘'தேவ', 'சுவாமி” என்பர்; இழிந் தோர் ‘பட்ட' என்பர். கணவனுடைய தரத்துக்கேற்ப மனைவிக்கு உயர்வுண்டு. பெண்கள் ஒத்ததரத்துப்பெண்களை ‘ஹலா' (எல்லா) என்பர்; வேலைக்காரியை ""ஹஞ்ஜே' என்பர். கணிகையை "அஜ் ஜூகா' என யாவரும் அழைப்பார்; அவளது ஏவலாளர் 'அம்பா" என்பர். குலப்பெண்களாகிய நரைமூதாட்டியரை அனைவரும் 'அம்பா" என்பர். விதூஷகன் தலைவியையும் சேடியையும் ‘பவதீ" என அழைப்பான்.
67. செயல், குணம், மொழியென் றின்னவற்றின் வேறுபாடுகளை யும் நால்வகைத்தலைவர், அறுவகைத்தலைவிய ரென் றின்னரோடு மருவி நின்ற சத்துவவேறுபாடுகளையும் பூரணமாக ஆராய்ந்துரைக்க வல்லார் சந்திரசேகரமூர்த்தியாகிய சிவபெருமானும் பரதனும் அல் லாற் பிறருளரோ?
க. மூன்ருமதிகாரம், சாதி (நாடகவகை) சேதம் என்னும் இரண் டுறுப்புணர்த்துதணுதலிற்று. இருபதுமுத லிருபத்தாறுவரையுமுள்ள சூத்திரங்கள் சேதமுணர்த்துவன. ஒழிந்த சூத்திரங்கள் சாதியுணர்த் துவன. w
1. முதன்மைபற்றியும், எல்லாச்சுவைகளையுந் தழுவி நிறைந்த இலக்கணத்ததாகிய தலைமைபற்றியும் நாடகத்தை முதலிற் கூறுவாம். 2. சூத்திரதாரன் ஆரம்பத்திற் செய்யவேண்டிய கருமங்களை (பூர்வ ரங்கத்தை)ச் செய்துமுடித்துப்போயினபின்னர்க் கூத்த ஞெருவன் அவ்வண்ணமே (சூத்திரதாரனைப்போலவே) உட்புகுந்து நாடகத் துக்குத் தோற்றுவாய்கூறுவான். இவன் ஸ்தாபக னெனப்படுவான். (பூர்வரங்கம் என்பன மாயோனை வாழ்த்துதலும், வருணப்பூதரை வாழ்த்துதலும் இன்னன பிறவும்)
3-4. தேவர், மானிடர் நாடகபாத்திரராயின் அவ்வவ்வுருவத் தோடும், இருசாராருங் கலந்துவரும் (மிச்சிர) சரிதையெனின் ஒரு சாரார் உருவத்தோடும் ஸ்தாபகன் தோன்றிப் பொருள், பீஜம, முகம் என்னும் இவற்றினுள் ஒன்றினைக் குறித்தோ, நாடகபாத்திர ருள் ஒருவரைக் குறிப்பாலுணர்த்தியோ, இன்னிசையான கீதம் பாடி அரங்கத்தை (அரங்கம்; நாடகம் பார்ப்போரைக் குறிக்கும்.) மகிழ் வித்தபின், பாரதிவிருத்தியினல் அறுவகைப் பெரும்பொழுது (இருது; கார், கூதிர், முன்பணி, பின்பணி, இளவேனில், முதுவேனில்)களுள்

Page 58
88 மதங்கசூளாமணி
ஒன்றினை வருணிப்பான். (ஸ்தாபகன் ஆரம்பத்திற் பாடுகிற பாட்டு நாந்தியெனப்படும்; இதனை அவையடக்கியல் என்பது தமிழ்வழக்கு. ஸ்தாபகன் தமிழ்வழக்கிற் கட்டியக்காரனை நிகர்ப்பான்.)
5. செம்மொழி பெரும்பான்மையும் மேவப்பெற்று நடர் பொரு ᎧTᎥᎢᏯ5 (நபு-ாருய8) வருஞ் சொல்வழக்கு (வாக்வியாபாரம்) பாரதி விருத்தி யெனப்படும். இது பிரரோசனை, வீதி, பிரகசனம், ஆமுகம் என நால்வகைப்படும். (நால்வகைக்கு முரிய இலக்கணத்தை நுணுக நோக்குவார்க்குப் பாரதிவிருத்தியின் ஆட்சியுங் குணமும் நன்கு புலப் படுவனவாம். சூத்திரத்தில் "ஸம்ஸ்க்ருதம்' என நின்ற பதத்தைப் பொதுவியல்புநோக்கிச் 'செம்மொழி யென மொழிபெயர்த்தாம். தமிழ் நாடகமரபுக்குச் ‘செம்மொழி செந்தமிழாகும்.)
6. சபையோரின் உள்ளத்தில் மேல்வருவனவற்றைப் பார்ப்பதற்கு அவாவுண்டாகும்படி எடுத்துக்கொண்டபொருளைப் புகழ்ந்து கூறு தல் பிரரோசனை’யெனப்படும்.
7. வீதி 62-ம் 63-ம் சூத்திரங்களுள்ளும், பிரகசனம் 49-50-ம் சூத்திரங்களுள்ளுங் கூறப்படுவன. வீதியின் உட்பிரிவுகள் ஆமுகத் தின் உட்பிரிவுகளை நிகர்த்தனவாதலின் ஒன்றின்பின்னென்ருக இவற் றின் இலக்கணத்தை ஈண்டுத் தருவாம்; முதலில் ஆமுகத்தை யெடுத் துக்கொள்வாம். •
8-10. சூத்திரதாரன் ‘நடி'யையோ, 'மர்ஷ’னையோ, 'விதூ ஷக'னையோ விளித்துத் தனதுகருமம் ஏதோ பேசுவதுபோலச் சொல் வன்மையினல் நாடகத்துப் பொருளைக் குறிப்பாகவுணர்த்துவது e2(P 95 மாகும். இது பிரஸ்தாவன யெனவும்படும். சூத்திரதாரனது சொல்லொ, குறிப்போ காரணமாக நாடகபாத்திரருள் ஒருவன் தோற்றுவது கதோற்காதம்; காலவியல்பினை வருணித்துரைத்தல் கேட்டு ஆங்குக் கூறப்பட்ட குறிப்புக் கியைய நாடகபாத்திரன் தோற்றுவது பிரவிருத்தகம்; சூத்திரதாரன் ஒரு நாடகபாத்திரனைக் குறிப்பிட்டு, "இதோவருகின்ருன்' என் அவன் தோற்றுவது பிர யோகாதிசயம். இவைமுன்றும் பிரஸ்தாவனையின்வகைகள். வீதியின் உட்பிரிவுகள் பதின்மூன்று.
11-18 கூற்றும் மாற்றமுமாக இருவர் கலந்து வார்த்தையாடு வது உற்காத்யகம்; கூடார்த்தமாகிய மறைபொருண்மொழிகளை யொன்றின்பின்னென்ருகத் தொடுத்துக்கூறுவதும் இதுவே: தொடர் பில்லா இரு நிகழ்ச்சிகள் ஒரேகாலத்தில் நிகழ ஒன்றினைப்பற்றி யுரை யாடினேன் அதனை விடுத்து மற்றதனைப்பற்றி யுரையாடுதல் அவல கிதம்; சபையார் நகைக்கும்படி இருவர் (ஒருவர் மற்றவரை) பொய்ம் மொழிகறிப் புகழ்ந்துரைத்தல் பிரபஞ்சம்; மூவர் நின்று வார்த்தை பாடும்போது சிலேடை மொழியின் உபயோகத்தினுல் ஒருவர் மற்றிரு வருக்கும் இருவேறு கருத்துப்படும்படி யுரைத்தல் திரிகடம்; நட்பு

மதங்கசூளாமணி 89
மொழிபோற்ருேன்றும் வஞ்சனைமொழியினல் ஒருவனைத் தீயநெறி யிற் செலுத்துதல் சலம்; விஞவெதிர் மறுத்தல் வாக்கெலி: ஒருவ ரொருவரை வெல்லும்படியாகச் செய்கின்ற வாக்குவாதம் அதிபலம்; நடந்துகொண்டிருக்கிற சம்பாஷணையோடு ஒருவகைத் தொடர் புடைய வேற்றுப்பொருளொன்றினைச் சட்டெனக்கூறுவது கண்டம்; சுவைபயக்கச் சொல்லிய சொற்களுக்கு மற்ருெருவகையாகவும் பொரு ளுரைத்துக்காட்டுதல் அவசியந்திதம்; நகைபயக்கும் மறைபொருண் மொழி நாளிகை; தொடர்பற்றவாக்கியங்களால் உரையாடுவது அசற் பிரலாபம்; பிறன்பொருட்டு நகையும் அவாவும் விளைக்க வுரைப்பது வியாகாரம். குணங்களைக் குற்றங்களாகவும் குற்றங்களைக் குணங் களாகவுங் கொள்ளுதல் மிருதவம்; இவை வீதியின் உட்பிரிவுகள்.
19. மேற்காட்டியவற்றுள் ஒன்றின்மூலமாகச் சூத்திரதாரன் நாட கக்கருத்து நாடகபாத்திரம் என்னும் இவற்றைக் குறிப்பிட்டுப் பிரஸ்
தாவனை முடிவிற் போய்விடநாடகம் ஆரம்பமாகும்.
20-21. சகல நற்குணங்களும் நிறைந்த தீரோதாத்தனுய்க் கீர்த்தி மானுய்க் கீர்த்தியை விரும்பினவனுய், வல்லமைசாலியாய், வேதங் கள்மூன்றையுங் காப்பாற்றுபவனய், உலகாள்பவனுய், தேவர்வழி யிலோ ரிஷிகள்வழியிலோ உதித்தவன யுள்ள தலைவன் ருேன்றுகிற நாடகத்தில் அவனது நிகழ்ச்சிகளுள், பெருங்கீர்த்திவாய்ந்த நிகழ்ச்சி யொன்றினையே தலைமைப்பொருள் (ஆதிகாரிகம்) ஆகக் கொள்ளுதல் வேண்டும்.
22. தலைவனது தலைமைக்குணத்தோடு மாறுபட்ட நிகழ்ச்சிகளிருப் பின் அவற்றைத் தவிர்த்துவிடவேண்டும்; அன்றேல் ஒருவகையாக வேறுபடுத்தியுரைத்தல்வேண்டும்.
23. சரித்திர நிகழ்ச்சியின் தொடக்கத்தையும் முடிபையும் நிச்ச யித்தபின்பு அதனை முறையறிந்து ஐந்துசந்திகளாகப் பகுத்துக்கொள் ளல்வேண்டும்.
24. பின்னர் அறுபத்துநான்குசந்தியுட்பிரிவுகளாகப் பகுத்துக் கொள்ளலாம், கிளைக்கதை (பதாகை)யுளதாயின் அதனையும் அது சந்திகளாகப் பகுத்துக்கொள்ளல்வேண்டும். அநுசந்தியின் ருெகை ஐந்திற் குறையவிருத்தல்வேண்டும். வழிநிகழ்ச்சி (பிரகரீ)யைச் சந்தி வகுத்தல் கூடாது.
25. ஏற்புடையதாயின் முதலங்கத்துக்கு முன்னே ஒரு முன்னுரைக் காட்சியை (விஷ்கம்பத்தை) வைக்கலாம். நாடகக்கட்டுரையைச் சீர்ப் படுத்தும்போது சிற்சிலபாகங்கள் சுன்வபயவாநீர்மையவெனினும் பின்வரும் நிகழ்ச்சிகளை விளங்கப்படுத்துவதற்கு இன்றியமையாதன வெனக் காணப்படின் அவற்றைத் தொகுத்து ஒரு முன்னுரைக்காட்சி யாக அமைக்கவேண்டும்.

Page 59
90 மதங்கசூளாமணி
26. ஆரம்பந் தொட்டு அனைத்துநிகழ்ச்சிகளும் சுவைதரும் நீர் மையவாயின் முன்னுரைக்காட்சியை யொழித்து முதலங்கத்தினுள்ளே ஆமுகத்திற் கூறப்பட்ட குறிப்புக்கள் தோன்றுமாறு அமைத்துக் கொள்ளுதல்வேண்டும்.
27. அங்கமானது விரிநிலை (விந்து) செறிந்ததுவாய்ப் பலவாய கொள்கைகளையுஞ் சுவைகளையுந் தன்னுள் ளடக்கிக் கதாநாயக னுடைய நிகழ்ச்சிகளைக் காட்டுவது. (33-ம் 34-ம் சூத்திரங்களையும் நோக்குக)
28. அங்கத்தினுட் டலைமைபற்றியசுவைக்கு ஆதாரமாகச் சுவைப் பொருள் குறிப்பு என்னும் இவற்றையும் சுவைநிலையவிநயம் வழி நிலையவிநயங்களையும் ஆராய்ந்தமைக்கவேண்டும். (இவற்றின் இலக்கணங்களை மேல்வரும் அதிகாரத்தினுட் காண்க.)
29. சுவையைப் பெரிதும் நோக்கி நாட்கக்கட்டுரையினது தொடர் பினைக் கண்டப்படுத்துவதும், நிகழ்ச்சித்தொடர்புக்குரியவிஷயங்களைப் பெருகத்தருவதனற் சுவையைக்குறைவுபடுத்துவதும் நன்றல்ல.
30. வீரச்சுவையையோ இன்பச்சுவையையோ நாடகத்துக்குத் தலைமைபற்றிய சுவையாகக் கொள்ளவேண்டும். ஏனையசுவைகள் தலைமைபற்றியசுவைக்குச் சார்பாகநிற்றல்வேண்டும். மருட்கைச்சுவை இறுதியில் மாத்திரம் வருதல் வேண்டும். V
31-32. நெடும்பயணம், கொலை, போர், அரசியலுக்கெதிராகிய கலகம், நாட்டை முற்றுகையிடுதல், உண்ணல், நீராடல், காமக் கலவி, எண்ணெயிடல், உடையணிதல் என்னும் இவற்றையும் இவை போல்வனவற்றையும் அரங்கத்திற் பிரத்தியகூஷமாகக்காட்டுதல் கூடாது. தலைவனது மரணத்தைக் காட்டுதல் கூடாது; இன்றியமை யாதுவரிற்றவிர்த்த லியலாது. ܫ
33. ஒரேநாளில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளாய் ஒரேமுடிபுகருதினவாய்த் தலைவனையும் மூவர் நால்வர் நாடகபாத்திரர்களையும் உடையனவாய், முடிவில் அனைவரும் போய்விடும் நீர்மையவாய் அமைந்த நிகழ்ச்சி களையே ஒரங்கமாகத் தொகுத்தல்வேண்டும்.
*、 விரிநிலை, பீஜம், வழிநிலைக்குறிப்பு (பதாகாஸ்தாநாகம்) என் னும் இவற்றையும் முன்னுரைக்கர்ட்சியையும் ஆராய்ந்து அங்கங் களைச் செவ்விதி னமைக்கவேண்டும். நாடகத்தில் ஐந்து அங்கம் வரு தல் வேண்டும்; மகாநாடகத்திற் புத்து அங்கம் வருதல்வேண்டும்.
#5-38. (இனிப் பிரகரணத்தின் இலக்கணம் கூறுகின்ருர்) பிர் கரங்ணத்தின்கதை கவியினுற் கற்பிக்கப்பட்டகதையா யிருத்தல் வேண் டும். நிகழ்ச்சி பூவுலகத்தில் நடக்கவேண்டும். தலைவன் அமாத்தி யன் (மந்திரி), விப்பிரன், வணிகன் என்னும் வகையில் ஒருவனுய்த் தீரசாந்தனய், அபாயமுற்றவனுய்த் தருமார்த்தகாமம் மூன்றினை யும் கருதியபொருளாகக்கொண்டவனுய் வருதல்வேண்டும். சந்தி,

மதங்கசூளாமணி 91
விஷ்கம்பம், சுவை யென்னு மிவற்றை நாடகத்துக் கொண்டவாறு கொள்க. தலைமகள் தலைமகனதுமனைவியாகிய குலமகளாகவாவது விலைமகளாகவாவது இருக்கலாம். குலமகள் மனையில் இருத்தல்வேண் டும். விலைமகள் புறத்தேயிருக்கவேண்டும். குலமகள் தலைவியாயின் சுத்தமெனவும், விலைமகள் தலைவியாயின் விகிர்தமெனவும், இரு வரும்வரின் சங்கீர்ணமெனவும் பிரகரணம் மூவகைப்படும். சங்கீர்ணப் பிரகரணத்தில் தூர்த்தர் பலர் தோற்றுவர்.
39-43. (நாடிகையினிலக்கணம்.) நாட்டியவகை பலவற்றின் கலப் பாக நடக்கின்ற நாடிகையின் இலக்கணத்தை யாராய்வாம். பொருள் பிரகரணத்துக்குக் கூறப்பட்ட பொருளாகும். தலைவன் தீரலலித வகையைச் சேர்ந்த கீர்த்திமா ஞகிய அரசன். சுவை உவகைச்சுவை. நாடிகைச்சரிதை பெண்கள்பலர் வரப்பெற்று நான்கங்கங்களால் முடியுமெனப் பிறர்கூறினரெனினும் இரண்டு மூன்று அங்கங்களால் முடிவதுமுண்டு. தலைவனுக்கு நாயகிமார் பலரெனின், அவருள் வய தின்மூத்தாள் பட்டத்தரசியாயிருத்தல்வேண்டும். தலைவன் அவள் விருப்பத்திற்கியையவே பிறர்பாற்செல்லுதல்வேண்டும். நாடகத் தலைவி தலைவனைக் கண்டுங் கேட்டும் கருதிய காரணத்தினுல் அவன் மேற் காதல்கொண்டவளாயிருத்தல்வேண்டும். தலைவன் பட்டத்தர சிக்கு அஞ்சிநடக்குமியல்பு தோற்றவேண்டும். நாடிகை நான்கங்கங் களால் நடக்கும்பொழுது, அங்கங்கள் நான்கும் கைசிகிவிருத்தியின் வகை நான்கினையும் முறையே பெற்றுவருவன. (தமிழ்வழக்கிலுள்ள விலாசங்கள் இவ்வகைய)
44-46. (பாணம் என்னும் நாட்டியவகையினிலக்கணம்.) பாண் டித்தியமுடையோனும் நிபுணனுமாகிய விடனெருவன் தோன்றித் தன்னுடைய அநுபவத்திலோ, பிறருடைய அநுபவத்திலோ, நடந் ததாக ஒரு தூர்த்தசரிதத்தை யெடுத்துச் சொல்வது பாணத்துக் குரிய பொருளாகும். இச்சரிதம் கவியினுற் கற்பிக்கப்பட்டதாகி ஒரங் கத்தில் முடியவேண்டும். விடன் ஒருவனைத்தவிரப் பிறரெவருந் தோற்றுதல் கூடாது. பிறர் தோற்ருரெனினுந் தோற்றிநிற்பது போலக் கற்பித்து ஆகாயபாஷிதமாக விஞவையும் விடையையுந் தானே கூறி விடன் சம்பாஷிப்பது மரபாகும். அழகையும் ஆற்றலையும் வருணித்துக் கூறும் மார்க்கத்தாற் பாணமானது இன்பச்சுவையும் வீரச்சுவையும் நிரம்பியதாதல்வேண்டும். பாணத்தில் முகம் உபசங் கிருதி (துய்த்தல்) ஆகிய இரண்டுசந்திகளும் பத்துவகை இலாசியாங் கமும் வருவன.
47-48. இலாசியாங்கம் பத்தாவன:-
లినీశించి త్రిrంృతిrఎన్పీర్థిగా జ్ఞఅజ్ఞాar
இடது ଘର ஆசிகஜி மG)%9oனுெெவல మిreృంట్టి లి"లిజఊt; உத8ொதுகேoெெவவஉதவூக)"த8ெவது உாவெyடிU0வியoஹெ}தடிஜமிடிெ-பே0க 岛J、

Page 60
92 மதங்கசூளாமணி
கேயபதம், ஸ்திதபாட்டியம், ஆசீனபாட்டியம், புஷ்பகண்டிகை, பிரச்சேதகம், திரிகூடம், சைந்தவம், துவிசுடம், உத்தமோத்தமகம், உக்தப்பிரதியுக்தம் என்பன. (இவற்றின் இலக்கணத்தை ஆசிரியர் கூறவில்லை. பாரதீயநாட்டியசாஸ்திரம் முதலிய முடிந்தநூலிற் கண்டு கொள்க என உரையாசிரியர் கூறிச்செல்வார்.)
49-50. (பிரகசனம் என்னும் நாட்டியவகையினிலக்கணம்.) பல திறத்தாலும் பாணத்தையொத்த பிரகசனம் சுத்தம், விகிர்தம், சங்கீர்ணம் என மூவகைப்படும். சுத்தப்பிரகசனத்திற் பாசண்டர், விப்பிரர், சேடன், சேடி யென் றின்ஞேர் தோற்றிப் பொருத்தமான வேஷமும் பாஷையுந் தோன்ற நகையைவிளேக்கும் நகைக்குறிப்பு மொழிகளைக் கூறி நடிப்பர். காமுகராதியோர் தோற்றிக் காமக்குறிப் புத் தோன்றநடிப்பது விகிர்தப்பிரகசனம். தூர்த்தர் பலர்தோற்ற அறுவகை நகைக்குறிப்பும் வீதியினிலக்கணமும் பெற்றுவருவது சங் கீர்ணப் பிரகசனம்; (பாரதிவிருத்தியின்வகைகளாகிய பிரரோசனை, வீதி, பிரகசனம், ஆமுகம் என்னும் நான்கினது இலக்கணமுங் கூறி ஞம். பாரதிவிருத்தியென அடியார்க்குநல்லார்கூறிய பதினுேராட் லும் இவற்றினேயொத்தும் ஒவ்வாதும் நிற்கின்ற மற்ருெருவகையாதல் காண்க. அவையடக்கியலுக்கும் நாடகக் கட்டுரையின் ருெடக்கத்துக்கு மிடையிற் பாரதிவிருத்தியின்வகையொன்று தோற்றுவது மரபென. முன்னர்க் காட்டிஞம். மாயோன்வாழ்த்தும், வருணப்பூதர்வாழ்த் தும், திங்கள் வாழ்த்தும், அவையடக்கியலு மாயினபின்னர்ப் பதி னுேராடலினுள் ஒன்றையோ பலவற்றையோ அரங்கிற் காட்டியதன் பின்னர் நாடகக் கட்டுரையைத் தொடங்குவது தமிழ்நாடகவழக்கு என எண்ண இடமுண்டு. பாரதியரங்கத்திலாடிய கொடுகொட்டி முதலிய பாரதிவிருத்தி தெய்வவிருத்தியென்னுங் குறியீட்டுக் குரியன இவைபோன்ற பிறவும் பாரதிவிருத்தியாயின.)
51-53. (இடிமம் என்னும் நாடகவகையினிலக்கணம். தரிபுரதக னம் இதற்குச் சிறந்தபொருளென மேலோர்கூறுவர்.)
பொருள் பிரசித்தமாக யாவரும் அறிந்த பொருளாதல்வேண்டும். விருத்தி கைசிகியொழிந்தமூன்றும்; தலைவர் தீரோத்ததராய தேவர். கந்தருவர், இயக்கர், இராகழ்சர், பூதர், பிரேதர், பைசாசர் என்றின் னேர்; சுவை நகையும் உவகையும் ஒழிந்த ஆறுசுவைகளும்; வெகுளிச் சுவை பெருவரவிற்ருகும். இந்திரசாலம், மாயை, போர், கலாம், சூரியசந்திரக்ரகணம் என் றின்னன வருதல்வேண்டும். விளைவு (அவ மர்சம்) என்னும் நான்காஞ்சந்தியொழிந்த நான்கு சந்திகளும் வந்து இடிமம் நான்கு அங்கங்களால் முடியும். நாடகபாத்திரர் பதினறுபேர். 54-55. (வியாயோகத்தின் இலக்கணம்) கருப்பம் விளைவு என்னும் இரண்டொழிந்த மூன்றுசந்திகள்பெற்று ஓரங்கத்தினல் ஒருநாளில் நடந்த நிகழ்ச்சிகளைக் காட்டும் வியாயோகமானது பல ஆண்பால் நாடக பாத்திரர்களைக் கொண்டு இடிமத்துக்குக் கூறிய சுவைகளை

மதங்கசூளாமணி 93
யெய்திய பெண்கள் காரணமல்லாத பிறகாரணங்களால் விளைந்த ஒரு போரை நடித்துக்காட்டுவதாக வரும்.
56-61. (சமவகாரத்தினிலக்கணம்) நாடகத்துக்குப்போல ஆமு கம்வருதல்வேண்டும். பொருள் தேவாசுரரோடுதொடர்புடைய பிர சித்தசரிதை. சந்தி விளைவு ஒழிந்த நான்கும். விருத்தி நால்வகை விருத்தியும் (கைசிகிவிருத்தி சிறுபான்மை, ஏனைய பெரும்பான்மை;). நடர் பன்னிருவர், தீரோதாத்தவகையினராகிய தேவாசுரர், சுவை கள்: சமுத்திரமதன (பாற்கடல்கடைந்த) சரிதையினுட்போல வீரச் சுவை. பெரும்பான்மையாகவும் ஏனைய சிறுபான்மையாகவும் வருதல் வேண்டும். மூன்று அங்கங்களாகி மூவகை வஞ்சனை (கபடம்), மூவகை யுவகை (சிருங்காரம்), மூவகைக் கலக்கம் (வித்திரவம்) என்னும் இவை வந்து முடியவேண்டும். முதலங்கம் இரண்டுசந்திகளைக்கொண்டு பன் னிரண்டு நாழிகைப்பொழுதினுள் நடந்தநிகழ்ச்சிகளைக் கொள்ள வேண்டும். இரண்டாம் மூன்ரும் அங்கங்களின் வரையறை முறையே நான்கு, இரண்டு நாழிகைகளாகும். சமவகாரத்தில் விரிநிலையும் (விந்துவும்) முன்னுரைக் காட்சியும் (விஷ்கம்பமும்) வாரா. வீதியின் உட்பிரிவுகளைப் பிரகசனத்தினுட்போலவே இதனுள்ளும்உபயோகிக்க கலாம். மூவகை வஞ்சனேயாவன, சரிதத்தின் இயல்பானதன்மையினு லும், தெய்வச்செயலாலும், பகைவராலுந் தோற்றுவன. மூவகைக் கலக்கமாவன; நகரத்தை முற்றுகையிடுதலினலும், போரினலும் புய லினலும் பெருநெருப்பினலும் ஏற்ப்டுவன.
62-63 (வீதியின் இலக்கணம்). வீதி உத்காத்தியகம் முதலாகக் கூறப்பட்ட பதின்மூன்று உட் பிரிவுகளை யுடையது. ஒருவரோ இருவரோ நாடகபாத்திரராக வரல் வேண்டும். நாட்டியவகையாகத் தனித்துவருமடத்துக் கைசிகிவிருத்தி யால் நடந்து பாணத்தைப்போல் அங்கமுஞ் சந்தியுமுடையதாய் உவகை (சிருங்காரச்)ச்சுவை பெரும்பான்மையாகவும் மற் றியா தாயினுமொரு சுவை சிறுபான்மையாகவும் வரப்பெற்றுமுடியும்.
64-65. (உத்சிருஷ்டிகாங்கத்தி னிலக்கணம். நாடகத்தினுட்பிரி வாகிய அங்கத்தினின்று வேறுபடுத்திக் காட்டும்பொருட்டு வாளா அங்கமென்னது, உத்சிருஷ்டிகாகங்மெனக் குறியீடுசெய்தார்) பிரக் கியாதமான பழங்கதையைக் கற்பனையால் விரித்துக்கூறும் உத்சிருஷ்டி காங்கமானது அவல(கருணை)ச்சுவைமேவிச் சாதாரணமனுஷரைத் தலைவராகக்கொண்டு, யாணத்தைப் போன்று சந்தியும் விருத்தியும் பெற்று மகளிர் பிரலாபம் வந்து முடியவேண்டும். போர்நிகழ்ச்சி, வெற்றி, தோல்விகளைச் சொற்களிஞல் விரித்துரைக்கவேண்டும். நிகழ்ச்சியினுற் காட்டுதல் கூடாது.
66-68. (ஈஹாமிருகத்தின் இலக்கணம் மிருகம்-மான். நாணி யோடுகின்ற இளமான்போன்ற பெறுதற்கரியாளைத் தலைவன்

Page 61
94 மதங்கசூளாமணி
ருெடர்ந்து செல்லுமியல்பினைக் கூறுதலின் ஈஹாமிருக மெனப்பட் டது). இது பழங்கதையும் கற்பனைக்கதையுங் கலந்துவந்து மூன்று சந்திகளடங்கிய நான்கங்கங்களால் முடிவது. தலைவனும் தலைவனது பகைவனும் தீரோத்ததவகையினராய தேவராகவோ மானிடரா கவோ இருக்கலாம். ஒரு தெய்வப்பெண்ணை அவள்மனவிருப்பத்துக்கு மாருக ஒருவன் காதலித்து அவளைப் பற்றுதற்குப் பலகுழ்ச்சிகளுஞ் செய்ததாகக் காட்டவேண்டும். போர் தலைவனது மரணம் என்னும் இவற்றை வெளிப்படுத்திக்காட்டுதல் கூடாது.
69. ஈண்டுக் குறிக்கப்பட்டிருக்கும் பத்துவகைநாட்டியங்களின் (தச ரூபகத்தின்) இலக்கணத்தையும், உத்தமக்கவிகளியற்றிய பிரபந்தங் களையும் ஆராய்ந்துணர்ந்தோர் தாங் கருதியபொருளின்மேலே விழு மிய மொழியும் ஒழுகிய ஓசையும் நிரம்பப் பலவகை யலங்காரங் களோடுங் கூடிய பிரபந்தங்களைள்ளிதி னமைப்பர். (நாடகம் என்னும் மொழி சிறப்பியல்பாகச் சகல லக்ஷணங்களும்பொருந்திய நாட்டிய வகையைக் குறிக்குமெனவும் பொதுவியல்பாக நாட்டியவகையனைத் தினையுங் குறிக்குமெனவும் உலகவழக்காலும் ஆன்ருேர்வழக்காலும் அறிகின்ருேம்.)
ச. நான்காமதிகாரம், சுவை குறிப்பு, சத்துவம், அவிநயம் என் னும் நான்குறுப்புணர்த்துத னுதலிற்று.
(உறுப்பியலினுட் சுவையை யாராயும்போது "ஆசிரியர் செயிற் றியனர் சுவையுணர்வையுஞ் சுவைப்பொருளையும் ஒன்ருக அடக்கிச் சுவை, குறிப்பு, சத்துவம் என மூன்ருக்குவர்; அவிநயத்தைத் தனித் துக் கூறுவர்" என்ரும். தசரூபநுாலாசிரியர்கொள்கையும் அதுவே யாம். சூத்திரப்பொருளைத் தெளிவுபடுத்துவதற்கு யாம் உபயோகிக் கப் போகின்ற சில தமிழ்நூற்பதங்களையும் அவற்ருேடு ஒத்தபொரு ளினவாகிய வடநூற்பதங்களையுந் தந்து அப்பாற் செல்வாம். சுவைப் பொருள் விபாவம்; குறிப்பு அநுபாவம்; மெய்ப்பாடு பாவம்; விறல் சத்துவம், சத்துவபாவம்; வழிநிலையவிநயம் வியபிசாரிபாவம்; சுவை நிலையவிநயம் ஸ்தாயிபாவம்; சுவை ரசம்.)
1. சுவைப்பொருளுங் குறிப்பும் விறலும் வழிநிலையவிநயமுங் காரணமாகச் சுவைநிலையவிநயந் தோன்ற அதனினின்றுஞ் சுவை பிறக்கும். −
2. எதனையுணர்வதனற் சுவை யுணரப்படுகின்றதோ, அதுவே சுவைப்பொருள் (விபாவம்) எனப்படும். அது ஆலம்பனவிபாவம் (தலைவன் முதலிய நாடகபாத்திரர்), உத்தீபனவிபாவம் (காலம் களம் முதலியன) என இருவகைப்படும்.
3. சுவைப்பொருள் மனத்துப்பட்டவழி உள்ளத்து நிகழுங் குறிப்பு அநுபாவம். விபாவமும் அநுபாவமுங் காரணகாரியசம்பந்தமுடை யன; இவற்றைக் காரியப்படுத்துவதஞல் இவற்றின்றன்மையை யுணர லாகும.

மதங்கசூளாமணி 95
4. உள்ளத்து நிகழ்ந்த இன்பத் துன்ப நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்த வாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்ருன் வெளிப்படுவது மெய்ப் பாடு. குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தினின்று உடம்பின்கண் தானே தோன்றும் வேறுபாடு விறல் (சத்துவபாவம்). V
5. அசைவற்றிருத்தல் (ஸ்தம்பம்), சோர்ந்துவிழுதல் (பிரலயம்), மெய்ம்மயிர்சிலிர்த்தல் (ரோமாஞ்சம்), வேர்த்தல் (ஸ்வேதம்), நிறம் வேறுபடுதல் (வைவர்ணியம்), உடல் நடுங்குதல் (வேபது), கண் ணிர்வார்தல் (அஸ்று), நாக்குளறுதல் (வைஸ்வர்யம்) என விறல் எண்வகைப்படும்.
6. சுவைநிலையவிநயத்தோடு உடன்ருேன்றிக் கடலிலுதித்த அலை கடலினுள்ளே மடிந்து மறைந்துபோவதுபோலச் சுவைநிலையவிநயத் தோடு வேறுபாடற்று மறைந்துபோகும் நீர்மையவாகிய வழிநிலைய விநயங்கள்.முப்பத்துமூன்று உள.
நிவெ-டிஜா.நிப0ஜாரு, ரதிஜ?) தா
ஹஷ-ெேடிெநெyளஅவிழாவல் குாவெலஷy-ாே8ஷ- மவ-ாேவுே శీerణాreఖrశి
வUTவுநிஆாவிலெவாயா? - வீராலாவவு ார்8ொஹா? வல8 திாலுவலதா
வெம.தக-ாேவஹிஜா வாயy-ஜாடிெளவிஷாடிொ ஆகஉவலுய உதா
ஜிரouoடிெதெகுய It
7.31. (ஆசிரியர் விரித்துக்கூறிய இலக்கணத்தை இயன்றவரை தொகுத்துத்தருவாம்).
மெய்யுணர்வினுலோ, பொருமை துன்ப முதலியவற்றினலோ தன் னிலையழிந்து நெட்டுயிர்ப்பெறிந்து துயருறுதல உயிர்ப்பு (நிர்வேதை); பசிதாகங்களாற் றுன்புற்று உடல்வாடித் தளர்ச்சியடைதல் சோர்வு (கிலானி);எதிர்வருந்துன்பத்தை நினைத்து நடுங்கி நாவறண்டு நிற்றல் கலக்கம் (சங்கை); வழிநடைமுதலியவற்ருல் உடல்வாடுதல் இளைப்பு (சிரமம்); அறிவு வலிமை முதலியவற்றையுடைமையின லெழுகின்ற மனமகிழ்ச்சி உடைமை (திருதி); துன்பங்கண்டவழியும் துன்புதரு செய்தியைக் கேட்டபொழுதும வினையொழிந்தயர்தல் கையாறு (ஜடதை); இன்பந்தருபொருளை நினையுந்தோறும் உவகைக்கண்ணி ரோடு இடையிட்டுத்தோன்றும் மனமகிழ்ச்சி இன்புறல் (ஹர்ஷம்); மலர்ந்தநோக்கமின்றி மையனுேக்கம்படவரும இரக்கம் இடுக்கண் (தைந்யம்); பிறர்க்கு இன்னுசெய்து வெகுண்டெழுதல் நலிதல் (உக்

Page 62
96 மதங்கசூளர்மணி
கிரதை); கருதியதுபெருமையினுல் அதனை யெண்ணியெண்ணி மனம் புண்ணுதல் ஒருதலையுள்ளுதல் (சிந்தனை); இடியேறுபோல்வனவற் முல் வெருவிநிகழும் உள்ள நிகழ்ச்சி வெரூஉதல் (திராசம்); பிறர் செல்வங்கண்டவழி மனம்பொருது அலைவுறுதல் பொருமை (அசூயை); நிந்தைச்சொல் முதலியவற்ருல் முனிவுறுதல் முனிதல் (அமர்ஷம்); குலப்பெருமை, கல்லாமை, இளமைமுதலியவற்ருல் எய்தும் உள்ள மிகுதி மிகை (கர்வம்); முன்னறிந்தபொருளை விருப்புற்று உள்ளுதல் நினைதல் (ஸ்மிருதி); சாக்காடு (மரணம்) (வெளிப்படையாதலின் இதற்கு வரைவிலக்கணம் வேண்டியதில்லையென ஆசிரியர் கூறிச் செல்வார்); கள்ளுண்டோனது நகையுங் களியாட்டும் களி (மதம்); நித்திரையில் வாய்வெருவுதல் கனவு (சுப்தம்); கண்மூடி உடல் நிமிர்த்தி அயர்ந்து உறங்குதல் துஞ்சல்(நித்திரை ), கண்களைக் கசக்கிக் கொட்டாவிவிட்டுத் தூக்கத்திலிருந்து எழுதல் இன்றுயிலுணர்தல் (விபோதம்); தீயவொழுக்கம் முதலியவற்ருல் நாணிய வுள் வம் பிறர்க்கு வெளிப்பட நிகழும் நிகழ்ச்சி நாணுதல் (விரீடை) உணர் விழந்து வாயினின்றும் நுரைசேர்ந்து கூம்ப நடுக்குற்று நிலத்தில் விழுந்துபுரளுதல் ஞஞ்ஞையுறுதல் (அபஸ்மாரம்); அச்சம் முதலிய வற்ருற் கலக்கமுற்று ஒரு பொருண்மேல் இருபொருட்டன்மைகருதி வரும் மனந்தடுமாற்றம் ஐயம் (மோகம்); கலைநூல்முதலியவற்ருல் ஐயந்திரிபற உண்மையையுணர்ந்து பிறர்க்குரைத்தல் :::Z44%2, (மதி): இளைப்பினலோ வயிற்றிற் சூன்முதிர்ச்சி முதலிய ஏதுக்க ளாலோ தோன்றுகின்ற சோம்பு மடிமை (ஆலசியம்); அன்பும் அச்ச மும் முதலாக உடம்பிற் புலப்படுமாற்ருன் உள்ளநடுங்குதல் நடுக்கம் (ஆவேகம்); நிச்சயபுத்தியின்மையினலே பன்முறையும் ஆலோசித்தல் கருதல் (தர்க்கம்); நாணுதல்முதலியவற்ருல் உடலிற்ருேன்றிய வேறு பாட்டைப் பிறர் காணுதபடிமறைத்தற்கு முயற்சித்தல் மறைத்தல் (அவகித்தை); வியாதியால்வருந்துதல் நோயுறல் (வியாதி), பைத்திய நோயினுற் காரணமின்றி அழுதல், சிரித்தல் வார்த்தையாடல் மயக்கம் (உன்மத்தம்); இடர், பொருமை முதலியவற்ருல் மனம்புழுங்குதல் (விஷாதம்); காலதாமதமாவதை நினைத்துக் கலக்கமுற்று நெஞ்சு துடித்து அவசரப்படுதல் பரபரப்பு (உற்சுகம்); காமம் வெகுளி மயக்க முதலியவற்ருல் மனந்தடுமாறல் சுழற்சி (சபலம்);
(வழிநிலையவிநயங்களைக் குறிப்பதற்கு யாம் மேலே வழங்கிய தமிழ்ப் பதங்களுட் பெரும்பாலன தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் கஉ -ம் சூத்திரத்து உரையினின்றும் எடுக்கப்பட்டன.) (‘களித்தோ னவிநயங் கழறுங் காலை
யொளித்தவை யொளியா னுரைத்த லின்மையுங் கவிழ்ந்துஞ் சோர்ந்துந் தாழ்ந்துந் தளர்ந்தும் வீழ்ந்த சொல்லொடு மிழற்றிச் சாய்தலும் களிகைக் கவர்ந்த கடைக்கணுேக் குடைமையும் பேரிசை யாளர் பேணினர் கொளலே;

மதங்கசூளாமணி 97
தெய்வ் முற்றே னவிநயஞ் செப்பிற்
கைவிட் டெறிந்த கலக்க முடைமையும் மடித்தெயிறு கெளவிய வாய்த்தொழி லுடைமையும் துடித்த புருவமுந் துளங்கிய நிலையும் செய்ய முகமுஞ் சேர்ந்த செருக்கும் எய்து மென்ப வியல்புணர்ந் தோரே; ஞஞ்ஞை யுற்றே னவிநய நாடிற்
பன்மென் றிறுகிய நாவழி வுடைமையும் நுரைசேர்ந்து கூம்பும் வாயு நோக்கினர்க் குரைப்பான் போல வுணர்வி லாமையும் விழிப்போன் போல விழியா திருத்தலும் விழுத்தக வுடைமையு மொழுக்கி லாமையும் வயங்கிய திருமுக மழுங்கலும் பிறவும் மேவிய தென்ப விளங்குமொழிப் புலவர்; சிந்தையுடம் பட்டோ னவிநயந் தெரியின் முந்தை யாயினு முனரா நிலைமையும் பிடித்த கைம்மே லடைத்த கவினு முடித்த லுருத கரும நிலைமையும் சொல்லுவது யாது முனரா நிலைமையும் புல்லு மென்ப பொருந்துமொழிப் புலவர்; இன்றுயி லுணர்ந்தோ னவிநய மியம்பி
லொன்றிய குறுங்கொட் டாவியு முயிர்ப்புந் தூங்கிய முகமுந் துளங்கிய வுடம்பும் ஓங்கிய திரிபு மொழிந்தவுங் கொளலே; செத்தோ னவிநயஞ் செப்புங் காலை
யத்தக வச்சமு மழிப்பு மாக்கலுங் கடித்த நிரைப்பலின் வெடித்துப் பொடித்துப் போந்ததுணி வுடைமையும் வலித்த வுறுப்பும் மெலிந்த வகடு மென்மைமிக வுடைமையும் வெண்மணி தோன்றக் கருமணி கரத்தலு முண்மையிற் புலவருணர்ந்த வாறே; மழைபெய்யப் பட்டோ னவிநயம் வகுக்கில்
இழிதக வுடைய வியல்புநணி யுடைமையும் மெய்கூர் நடுக்கமும் பிணித்தலும் படாத்தை மெய்பூண் டொடுக்கிய முகத்தொடு புணர்தலு
மாளிப்படு மனணி லுலறிய கண்ணும் ளியினுந் துளியினு மடிந்தசெவி யுடைமையும் கொடுகிவிட் டெறிந்த குளிர்மிக வுடைமையும் நடுங்கு பல்லொலி யுடைமையு முடியக் கனவுகண் டாற்ரு னெழுதலு முண்டே,

Page 63
98 மதங்கசூளாமணி
பனித்தலைப் பட்டோ னவிநயம் பகரி
னடுக்க முடைமையு நகைபடு நிலைமையுஞ் சொற்றளர்ந் திசைத்தலு மற்றமிலவதியும் போர்வை விழைதலும் புந்திநோ வுடைமையும் நீரும் விழியுஞ் சேறு முனிதலு w மின்னவை பிறவு மிசைந்தனர் கொளலே;
உச்சிப் பொழுதின் வந்தோ னவிநயம்
எச்ச மின்றியியம்புங் காலைச் சொரியா நின்ற பெருந்துய ருழந்து தெரியா நின்ற வுடம்பெரி யென்னச் சிவந்த கண்ணு மயர்ந்த நோக்கமும் பயந்த தென்ப பண்புணர்ந் தோரே;
நாண முற்றே னவிநய நாடின்
இறைஞ்சிய தலையும் மறைந்த செய்கையும் வாடிய முகமுங் கோடிய வுடம்புங் கெட்ட வொளியுங் கீழ்க்க னேக்கமும் ஒட்டின தென்ப வுணர்ந்திசி னேரே,
வருத்த முற்றே னவிநயம் வகுப்பிற்
பொருத்த மில்லாப் புன்கணுடைமையுஞ் சோர்ந்த யாக்கையுஞ் சோர்ந்த முடியுங் கூர்ந்த வியர்வுங் குறும்பல் லுயர்வும் வற்றிய வாயும் வணங்கிய வுறுப்பு முற்ற தென்ப வுணர்ந்திசி னேரே!
கண்ணுே வுற்றே னவிநயங் காட்டின்
நண்ணிய கண்ணீர்த் துளிவிரற் றெறித்தலும் வளைந்தபுரு வத்தொடு வாடிய முகமும் வெள்ளிடை நோக்கின் விழிதரு மச்சமுந் தெள்ளிதிற் புலவர் தெளிந்தனர் கொளலே;
தலைநோ வுற்றே னவிநயஞ் சாற்றி Ο
னிலைமை யின்றித் தலையாட் டுடைமையுங் கோடிய விருக்கையுந் தளர்ந்த வேரொடு பெருவிர லிடுக்கிய நுதலும் வருந்தி யொடுங்கிய கண்ணுெடு பிறவுந் திருந்து மென்ப செந்நெறிப் புலவர்; அழற்றிறம் பட்டோ னவிநய முரைப்பின்
நிழற்றிறம் வேண்டு நெறிமையின் விருப்பும் அழலும் வெயிலுஞ் சுடரு மஞ்சலும் நிழலு நீருஞ் சேறு முவத்தலும் பணிநீ ருவப்பும் பாதிரித் தொடையலும் நுனிவிர வீர மருநெறி யாக்கலும் புக்க துன்பொடு புலர்ந்த யாக்கையுந் தொக்க தென்பதுணிவறிந்தோரே

மதங்கசூளாமணி 99
சித முற்முே னவிநயஞ் செப்பின்
ஒதிய பருவர லுள்ளமோ டுழத்தலும் ஈர் மாகிய போர்வை யுறுத்தலும் ஆர வெயிலுழந் தழலும் வேண்டலும் உரசியும் உரன்றும் உயிர்த்தும் உரைத்தலும் தக்கன பிறவுஞ் சாற்றினர் புலவர்;
னவிநயம் விரிக்குங் காலைத் مهم
தப்பில் கடைப்பிடித் தன்மையுந் தாகமும் எரியி னன்ன வெம்மையொ டியைவும் வெருவரு மியக்கமும் வெம்பிய விழியும் நீருண் வேட்கையு நிரம்பா வலியும் ஒருங் காலை யுணர்ந்தனர் கொளலே; கொஞ்சிய மொழியிற் கூரெயிறு மடித்தலும் பஞ்சியின் வாயிற் பணிநுரை கூம்பலும் தஞ்க மாந்தர் தம்முக நோக்கியோ ரின்சொலியம்புவான் போலியம் பாமையும் நஞ்சுண் டோன்ற னவிநா மென்க."
என; அடியார்க்குநல்லார் காட்டியவற்றையும் உறுப்பியல் கூ-ம்பிரிவி னுள் வந்தவற்றையும் ஈண்டு ஆராய்க.)
32-37 நிர்வேதைமுதலிய வழிநிலையவிநயங்கள் தாமாக நிலை பெற்றுநிற்கும் ஆற்றவில்லாதனவாதலின், நிலைபெற்றுநின்று சுவையையளிக்கும் சுவைநிலையவிநயங்களைச் சார்ந்து அவற்றுண் மறைந்துநிற்குமியல்பின. வினைமொழியுங் காரகபதமுஞ் சேர்ந்து வாக்கியத்தொடராமாறுபோலச் சுவைநிலையவிநயங்களோடு வழிநி நிலையவிநயங்களும் பிறவுஞ் சேர்ந்து நாட்டியச்சுவையைப் பிறப் பிக்கின்றன. இன்பச்சுவையவிநயம் (இரதி), வீரச்சுவையவிநயம் (உற் சாகம்), இழிப்புச்சுவையவிநயம் (ஜுகுப்ஸை), வெகுளிச்சுவையவி நயம் (குரோதம்), நகைச்சுவையவிநயம் (ஹாசம்), வியப்புச்சுவையவி நயம் (ஸ்மயம்), அச்சச்சுவையவிநயம் (பயம்), அவலச்சுவையவி நயம் (சோகம்) எனச் சுன்வநிலையவிநயம் எண்வகைய. நடுவுநிலைய விநயத்தையுஞ் (சமநிலையவிநயத்தையுஞ்) சிலர் கொள்வார். இது நாடகவழக்கினுள் வருவதில்லை. உலகவாழ்க்கையில் மனதுக்கினியா ளோடு (ரமணியோடு) கூடியிருக்குங்கால் உள்ளத்திற் சுனிவ தோற்று வதுபோல நாடகச்சுவையை யனுபவிக்கும் ஆற்றலுடைய ர ஸி கனுக்கு எண்வகைச்சுவைநிலையவிநயங்களுஞ் சுவையைப் பயப்பன. 38-40. (காவியார்த்தத்தை யுணர்ந்து நடிப்போர் தாமும் சுவை யயநுபவிப்பாரென்பது.)
41-42. காவியார்த்தத்தை யுணரும்போது மனத்தில் எழும் உணர்ச்சி நால்வகைத்து. அவையாவன: மலர்ச்சி, உயர்ச்சி, அசைவு,

Page 64
100 மதங்கசூளாமணி
கலக்கம் என்பன. உவகை (சிருங்காரம்), பெருமிதம் (வீரம்), இளி வரல் (பீபற்சம்), வெகுளி (உருத்திரம்) என்னும் நான்குசுவையும் குறித்த நால்வகையுணர்ச்சிகளையும் முறையே தருவன. நகை (ஹர்ஸ் யம்), மருட்கை (அற்புதம்), அச்சம் (பயோற்க்ர்ஷம்), அவலம் (கருணை) என்னும் நான்கும் குறித்த நான்கு உணர்ச்சிகளையுே முறையே தருவனவாதலின் உவகையினின்று நகையும், பெருமிதத் னின்று மருட்கையும், இளிவரலினின்று அச்சமும், வெகுளியினின் அவலமும் தோன்றினவென்பது பொருத்தமாகும்.
43-44. சுவைப்பொருள் (விபாவம்) முதலியன ஒன்ருந்தன் u பற்றிச் சுவையும் (ரசமும்) சுவைநிலையவிநயமும் (ஸ்தாயிபாவமும் ஒரேயிலக்கணத்தையுடையன. சந்திரிகை (இளந்தென்றல்) ஆதி சுவைப்பொருளும், மெய்ம்மயிர்சிலிர்த்தல் (ரோமாஞ்சம்) ஆதி சத்துவபாவமும், நிர்வேதை முதலிய வழிநிலையவிநயமும் கார மாகத் தோன்றும் சுவைநிலையவிநயத்தினின்று சுவை பிறக்கும்.
45. மனத்துக்கு ரம்மியத்தைத்தரும் தேசம், கலே, காலம், வேஷம் போகம் என்பவற்றினின்று உவகை பிறக்கும். இளமைச் செவ்வி வாய்ந்த ஓர் ஆடவனுஞ் சேயிழையும் ஒருவர்மேலொருவர் வைத்த உளம்நிறைந்தகாதலை மெல்லென்ற குறிப்பினுல் வெளிப்படுத்திக் காட்டுமிடத்து உவகை (சிருங்கார)ச் சுவை பிறக்கும்.
46. இதனை விரித்து நாட்டியக்கட்டுரையியற்றுமிடத்து எண்வகை விறலும் எண்வகைச் சுவைநிலையவிநயமும் முப்பத்துமூன்றுவகை வழி நிலையவிநயமும் என்பனவற்றை நுண்ணுணர்வால் ஆராய்ந்து நெறி தவரு தமைக்கவேண்டும். மடிமை (ஆலசியம்), நலிதல் (உக்கிரதை), சாக்காடு (மரணம்), இளிவரல் (ஜுகுப்ஸை) என்னும் இவை ஒரே (கைசிகி) விருத்தியையுடைய உவகைச்சுவை நாட்டியக்கட்டுரை யினுள் வருதல்கூடாது.
47. உள்ளப்புணர்ச்சி (அயோகம்), பிரிவு (விப்பிரயோகம்) கூட் டம் (சம்போகம்) என்னும் மூன்றும் நிலைக்களஞக உவகைச்சுவை பிறக்கும். உளம்நிறைந்தகாதல ரிருவர் தெய்வச்செயலினலோ, பிற ரிடைநிற்பதனுலோ கூட்டம் எய்தப்பெருராய் ஒருவரையொருவர் நினைந்து உருகுவது உள்ளப்புணர்ச்சி (அயோகம்) ஆகும்.
48-52. இது பத்து நிலைகளையுடையது. (ஆசிரியர் தொல்காப் பியனர் ஒன்பது கூறினர். இவ்வாசிரியர் உடலிற் சுரநோயுறுதல் (சஞ்சுவரம்) என்னும் ஒன்று சேர்த்துப் ப்த்தாக்கினர்.) "வேட்கை யொருதலை யுள்ளுதன் மெலிதல்
ஆக்கஞ் செப்பல் நாணுவரை யிறத்தல் நோக்குவ வெல்லா மவையே போறல் மறத்தல் மயக்கஞ் சாக்கா டென்றச் சிறப்புண்ட மாபினவை களவென மொழிப'
(தொல். பொருள்.களவியல் சு)

மதங்கசூளாமணி 101
காதலுக்குரியாரது எழில்நிறைந்த அவயவநலனைக் கண்ணினற் கண்டோ, கனவினற் கண்டோ, ஒவியத்திற் கண்டோ, பாணன் தோழி முதலினுேர் சொல்லக்கேட்டோ காதலாற் கூட்டம்விழைதல் 6ჯა(ib லைவேட்கை (அபிலாஷம்), இடைவிடாது ஒருவரையொருவர் சிந்தித்தல் ஒருதலையுள்ளுதல் (சிந்தனை) . உள்ளுங்காரணத்த, ஸ் வட்டமடைதல் மெலிதல் (உத்வேகம்), காதலனது அல்லது காத லிபது நற்குணங்களை யொவ்வொன்ரு யெடுத்துக்கூறுவது ஆக்கஞ் சிெப்பல் (குணகதா); ஆற்றுந் துணையும் நாணி அல்லாதவழி வரை ந்து அரற்றுதல் நாணுவரையிறத்தல் (பிரலாபம்), விளையாட்டு வியவற்றை மறந்து வினையொழிந்தயர்தல் மறத்தல் (ஜடதை }, ய்திறனறியாது கையற்றுப் புள்ளும் மாவும் முதலியவற்றேடு றல் மயக்கம் (உன்மாதம்), மடலேறுதலும் வரை பாய்தலும்போல்
கூறல் சாக்காடு (மரணம்). − (ஆசிரியர் அபிலாஷம், சிந்தனை யென்னும் இரண்டினுக்கும் இலக் f ங்கூறி ஏனையவற்றை யுய்த்துணருமாறு விடுத்தார். யாம் மேலே றிய இலக்கணங்கள் பொருளதிகாரவுரையினின்று மெடுக்கப் பட்டன. அயோகம் மெய்யுறுபுணர்ச்சியாகிய கூட்டம் இன்மை. கூட்டமின்மையென மொழிபெயர்க்கின் உள்ளப்புணர்ச்சியும் விலக் குண்ணு மாதலானும் இது உள்ளப்புணர்ச்சிக்குரிய இலக்கணமனைத் தும் பெற்றுவரலானுமிதனை உள்ளப்புணர்ச்சியெனக் குறியீடுசெய் தது பொருந்துமாறறிக.) g
53-65. (ஊடலும், கூடலும், பிரிவும் என்னும் இவற்ரு லெழும் ஐந்திணையின்பத்தைப் பதின்மூன்றுசூத்திரங்களாற் கூறுகின்றர். தொல்காப்பியம், அன்பினைந்திணை, நம்பியகப்பொருள், வீரசோழி யம், இலக்கணவிளக்கம் என்னுந் தமிழ்நூல்களுள் இப்பொருள் விரிவாகக் கூறப்பட்டிருத்தலால் இச்சூத்திரங்களை மொழிபெயர்க் காது விடுகின்ரும். } .
66. (வீரம், நன்னடை, விநயம், மலர்ச்சி, வலிமை யென் றின்ன வற்றைச் சுவைப்பொருளாகவும், தயைக்குறிப்பு, போர்க்குறிப்பு, கொடைக்குறிப்பு என்றின்னவற்றைக் குறிப்பாகவும், ஆராய்ச்சி, மிகை, உடைமை, இன்புறல் என் றின்னவற்றை வழிநிலையவிநயமாக வுங் கொண்டு பெருமிதச்சுவை தோற்றும்.
67. இழிவுகாரணமாக இளிவரல் தோற்றும். கீடம், கிருமி, மலம், என்பு, மச்சையென்பன இளிவரம்சுவைப் பொருட்களாம்; துறந் தார்க்கு மகளிரது தனம் சகனம் முதலிய உறுப்புக்களும் இளிவரற் பொருள்களாம். மூக்கினைச்சுழித்தல்போன்ற குறிப்புக்களும் நடுக்கம், கலக்கம், நோயுறல்போன்ற வழி நிலையவிநயங்களும் இளிவரலைச் சார்ந்து நிற்பன.
68. கோபம், வெறுப்பு என்பனவற்றைச் சுவைப்பொருளாக வும், பற்கடித்தல், உடனடுங்குதல், கண்சுழித்தல், வேர்த்தல், முகஞ்

Page 65
102 மதங்கசூளாமணி
சிவத்தல், ஆயுதமெடுத்தல், தோள்தட்டுதல், பூமியையறைதல், வஞ் சினங்கூறல் என்னு மிவற்றைக் குறிப்பாகவும்; முனிதல், நினைதல், மனந்தடுமாறல், ஆற்ருமை, நலிதல், நடுக்கம் என் றின்னவற்றை வழிநிலையவிநயமாகவும் கொண்டு வெகுளிச்சுவை தோற்றும்.
69-71, நகைக்குறிப்போடுமருவிய உரை, செயல், வேடம் எ றின்னவற்றைப் பொருளாகக்கொண்டுதோன்றும் நகையானது மு வல் (ஸ்மிதம்), புன்னகை (ஹசிதம்), மெல்லச்சிரித்தல் (விஹசிதம்), அளவேசிரித்தல் (உபஹசிதம்), பெருகச்சிரித்தல் (அபஹசிதம்), ஆர் பொடுFரித்தல் (அதிஹசிதம்) என அறுவகைப்பட்டு நித்திரை, மடிமை, இளைப்பு, களைப்பு, அயர்ச்சி யென்னும் வழி நிலையவிநயங் களோடு நடக்கும். அறுவகைநகையினுண் முதலிரண்டும் தலையாயின ருக்கும், நடுவிரண்டும் இடையாயினருககும்; இறுதியிரண்டும் கடை யாயினருக்கு முரியன. y
72-73. இயற்கைக்கு மாறுபட்டபொருட்களைச் சுவைப்பொருளா கவும்; அதிசயக்குறிப்பு, கண்ணீர்வார்தல், நாத்தடுமாறல் என்னு மிவற்றைக் குறிப்பாகவும்; இன்புறல், உடைமை, நடுக்கம் என்னு மிவற்றை வழிநிலையவிநயமாகவுங் கொண்டு மருட்கைச்சுவை நடக் நடக்கும்.
74. அஞ்சுதக்கனபொருளாகக் குரல்வேறுபடுதல், உடல் சோர் தல், வினையொழிந்தயர்தல் என்னு மிவை குறிப்பாக இடுக்கண், நடுக்கம், ஐயம், வெரூஉதல் என்னும் வழிநிலையவிநயங்களோடு அச் சச்சுவை தோற்றும்.
75-76. காதலித்தபொருளை யிழத்தலும் வேண்டாததனைப் பெறு தலும் சுவைப்பொருளாக நெட்டுயிர்ப்பெறிதல், கண்ணிர்வார்தல், செயலற்றிருத்தல், அழுதல் குறிப்பாக, துஞ்சல், இடுக்கண், நோயு றல், சாக்காடு, மடிமை, நடுக்கம், வியர்த்தல், கையாறு, மயக்கம் ஒருதலையுள்ளுதல், என்னுமிவை வழிநிலையவிநயங்களாக அவலச்சுவை தோற்றும். 7
71. நட்பு பக்தி என் றின்னவற்றையும் சூதாடல், வேட்டை யாடல்போன்றவற்றையும் இந்நூலினுட் கூறினுேமல்லேமாயினும் அவை இன்புறல் பெருமிதம் என் றின்னவற்றுள் அடங்கிவருதல் காண்க.
78. பூஷணுதி சாம பேத தான தண்ட முதலியன, சந்தி யந்த ரம், அலங்காரம் என் றின்னவற்றை அடங்கும்வழியறிந் தடக்கிக் கொள்க.
79. உவகைப்பொருளோ, இளிவரற்பொருளோ, உயர்ந்த பொருளோ, தாழ்ந்தபொருளோ, வன்கண்ணதோ, அருட்பாலதோ, பழங்கதையோ, கற்பனைக்கதையோ, எதனையும் மானிடர்க்குச் சுவை பயக்கும்படி நாட்டியக்கட்டுரையினுள் அமைத்துக் கூறுதல் கூடும்.
 
 

மதங்கசூளாமணி 103
80. விஷ்ணுவின் புதல்வனுகிய தனஞ்சயன், முஞ்சமகிபதியோடு கலந்து வார்த்தையாடிய காரணத்தின லட்ைந்த புத்திக்கூர்மை யைக் கொண்டு, வித்துவான்களது உள்ளத்தைக்கவரும் (நாட்டியக் கட்டுரை) நூல்கள் பிறப்பதற்கு ஏதுவாகிய தசரூபம் என்னு மிந் நூலினையியற்றி யுலகுக்கு அளித்தான்.
டு. ஆங்கிலமகாகவியாகிய செகசிற்பியா ரியற்றிய நாடகங்களுள் ளும், வடநூற் பெரும்புலவராகிய தனஞ்சயனர் இயற்றிய தசரூபத் துள்ளும் பொதிந்துகிடந்த நாடகலக்ஷணங்களையியன்றவரை யாராய்ந் துணர்ந்தனம். இனி, நிறைவுநோக்கி அருந்தமிழ்நூல்களுட் பரந்து கிடக்கும் இசைநாடகமுடிபுகளுள் இயற்றமிழாராய்ச்சிக்கு இன்றி யமையாதனவற்றை நான்குபிரிவாகத் தொகுத்துக்கூறுவாம்.
யாப்பியற்பாலவாகிய சொல்வகையும் வண்ணமும் உறுப்பியலுட் கூறப்பட்டன. இயலிசைநாடகப்பொருட்டொடர்நிலைச்செய்யுளாகிய சிலப்பதிகாரத்தினுள் கானல்வரி, வேட்டுவரி, ஊர்சூழ்வரி என மூன்று வரிப்பாடலும், ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை எனவிரண்டு குர வைப் பாடலும் வருகின்றன. இவ்வைந்தும் முறையே நெய்தல், பாலே, மருதம், முல்லை, குறிஞ்சி யென்னும் ஐவகைநிலனையும் சார்ந்து நிற்றலை நோக்குக. "குரவை யென்பது கூறுங் காலைச், செய்தோர் செய்த காமமும் விறலும், எய்த வுரைக்கு மியல்பிற் றென்ப" எனவும் “வரியெனப் படுவது வகுக்குங் காலைப், பிறந்த நிலனுஞ் சிறந்த தொழிலும், அறியக் கூறி யாற்றுN வழங்கல்' எனவும் கூறினராக லின், இவை தம்முள்ளே வேறுபட்டமை காண்க. மேற்கூறியபடி வரியாவது அவரவர்பிறந்த நிலத்தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழிற் றன்மையுந் தோன்ற நடித்தல். ஒருவர்கூட்டவன்றித் தானேவந்து நிற்கும்நிலைமை கண்கூடுவரி; வந்தபின்னர் மனமகிழ்வுறுவனவற்றைத் தந்து நீங்குகின்றதன்மை காண்வரி; அரசர் பிறருருவங்கொண்டு ஆடுதலும், தலைமகளொருத்தி தனது சிலதியர்கோலத்தைக்கொண்டு தான் தனித்து வந்துநின்று நடிப்பதும் உள்வரி; தலைவன் முன்னிலை யில்வாராது புறம்பேநின்று நடித்த நடிப்பு புறவரி; நடுநின்ருர் இருவருக்குஞ் சந்து சொல்லக்கேட்டுநிற்பது கிளர்வரி; நாயகனது சுற்றத்தினருக்குத் தன்றுன்பங்களைத் தேடித்தேடிச்சொல்லுதல் தேர்ச்சிவரி; தனதுவருத்தத்தைப் பலருங் காணும்படி நடித்தல் காட்சி வரி; தான் கையறவெய்தி வீழ்ந்தாளாக வீழ்ந்து பிறர் எடுத்துக் கொள்ளும்படி நடித்தல் எடுத்துக்கோள்வரி; இவையனைத்தும் தனித் தொருவர் நடித்தநடிப்பாகக் கூறப்பட்டிருக்கின்றமை காண்க. குர வைக் கூத்துக் காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச்செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனுங் கைபி ணைத்தாடுவது. குரவைக்கூத்துக்குக் குரவைச் செய்யுள் பாட்டா யினவாறுபோல வரிக்கூத்துக்குப் பாட்டாகவருவது வரிப்பாடல். இது அறுவகைப்பாவினுட் கலிப்பாவின்பாற்படும். யாப்பியல்

Page 66
104 மதங்கசூளாமணி
வல்லார் இதனை முகமுடைவரி, முகமில்வரி, படைப்புவரி யென மூவகைப்படுத்தும் பிறவாற்ருனும் ஆராய்வர். பொருணுேக்கி யாரா யுங்கால் திணைக்குரிப் பொருளைச் சார்ந்து நிற்கும் திணைநிலைவரியும் கருப்பொருட்பாலவாகிய ஆறு, பாட்டுடைத்தலைவன்பதி யென்றின் னவற்றைச்சார்ந்து நிற்கும் இணைநிலைவரியு மென இருவகையவாம். செந்துறை, வெண்டுறை, பெருந்தேவபாணி, சிறுதேவபா னி, முத் தகம், பெருவண்ணம், ஆற்றுவரி, கானல்வரி, விரிமுரண், தலைபோகு மண்டிலம் என வந்த பத்துவகையிசைப்பாக்களுள் ஆற்றுவரியுங் கானல்வரியும் வருதல் காண்க, ۰ محصر
நாடகங்களுக்குப் பாட்டுவகுக்குங்கால் அகநாடகங்களுக்குரிய உரு கந்த முதலாகப் பிரபந்தமீருக இருபத்தெட்டு எனவும், புறநாட கங்களுக்குரிய உரு தேவபாணி முதலாக அரங்கொழிசெய்யு ளிழுகச் செந்துறைவிகற்பங்களெல்லா மெனவுங் கூறுப; இவையெல்லாம் இசைத் தமிழ்ப்பால. தாழ்ந்துசெல்லும் இயக்கத்தையுடைய முத னடை, சொல்லொழுக்கமும் இசையொழுக்கமுமுடைய வார் ம், சொற் செறிவும் இசைச்செறிவுமுடைய கூடை, முடுகியசெலவினை யுடைய திரள் என்னும் நால்வகைச்செய்யுளியக்கமும் இசைத்தமிழின் பால.
சு. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தார்ம் என நின்று முறையே நான்கு, நான்கு, மூன்று, இரண்டு, நான்கு, மூன்று, இரண்டு என்னும் மாத்திரையளவுகள் பெற்றுவரும் ஏழிசைகளும், இவற்றினுள் ஒன்றினை மற்றென்ருகத் திரிக்கும் மரபும், தாரத்து உழைதோன்றப் பாலையாழ் ஆவதும், உழையினுட் குரல்தோன்றக் குறிஞ்சியாழ் ஆவதும், இளி குரலிற்ருேன்ற மருதயாழ் ஆவதும், துத்தம் இளியிற்பிறக்க நெய்தல்யாழ் (செவ்வழியாழ்) ஆவதும், பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி யென்னும் நான்கு யாழ்களினது அகநிலை பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி யென்னும் பண்களாவ தும், இவற்றது புறநிலை தேவாளி, செந்து, ஆகரி, வேளாவளி என் னும் பண்களாவதும், இவற்றது அருகியல் சீர்கோடிகம், மண்டிலம், சாயவேளர் கொல்லி, சீராகம் என்னும் பண்களாவதும், இவற்றது பெருகியல் நாகராகம், அரி, கின்னர் ம், சந்தி யென்னும் பண்களா வதும், குரல்குரலாகிய செம்பாலை துத்தங்குரலாகிய படுமலைப்பாலை கைக்கிளைகுரலாகிய செவ்வழிப்பாலை உழைகுரலாகிய அரும்பாலை இளிகுரலாகிய கொடிப்பாலை விளரிகுரலாகிய விளரிப்பாலை தாரம் குரலாகிய மேற்செம்பாலை யென்னும் எழு வகைப்பாலையும், ஆயப் பாலை சதுரப்பாலை திரிகோணப் பாலை வட்டப்பாலை யென்னும் நால் வகைப் பாலையும், கொட்டு மசையுந் தூக்கு மளவு மொட்டப் புணர்க்கும் பாணியும், செந்தூக்கு (ஒருசீர்,) மதலைத்தூக்கு (இரு சீர்), துணிபுத்தூக்கு (முச்சீர்), கோயிற்றுாக்கு (நாற்சீர்), நிவப்புத் தூக்கு (ஐஞ்சீர்), கழாற்றுக்கு (அறுசீர்), நெடுந்தூக்கு (எழுசீர்)

மதங்கசூளாமணி 105.
என்னும் எழுவகைத்தூக்கும், இணை கிளை பகை நட்பு என்னும் நரம்பி னியல்பும், யாழ் குழல் சீர் மிடறு என்னும் நான்கினியல்பும், செம் பகை ஆர்ப்பு அதிர்வு கூடம் என்னும் நால்வகைக்குற்றமும், பண் ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் செலவு விளையாட்டு கையூழ் குறும்போக்கு என்னும் எண்வகைக் கலைத்தொழிலும் பிறவும் இசை நூலிற் கூறியிருக்கும் மரபறிந்து அமைத்துக்கொள்க.
எ. அரங்கினமைதியை யாராய்வாம். அரங்கிற்கு நிலம்வகுத்துக் கொள்ளுமிடத்துத் "தெய்வத்தானமும் பள்ளியும் அந்தணரிருக்கை யும் கூபமும் குளனும் காவு முதலாக வுடையன அழியாத இயல்பினை யுடைத்தாய் நிறுக்க்ப்பட்ட குழிப்பூழி குழிக்கொத்துக் கல்லப்பட்ட மண் நாற்றமும் மதுர நாறி இரதமும் மதுரமாகித் தானுந் திண்ணி தாய் என்பும் உமியும் கல்லும் பரலுஞ் சேர்ந்த நிலம் களித்தரை உவர்த்தரை ஈரத்தரை பொல்லாச் சாம்பற்றரை பொடித்தரை யென்று சொல்லப்பட்டன வொழிந்து ஊரின் நடுவண்த கித தேரோடும் வீதிகளெதிர் முகமாக்கிக்கொள்ளல்வேண்டுமென்க. அரங்கினளவு ஏழுகோலகலமும் எட்டுக்கோல்நீளமும் மூன்றுகோல் உயரமு. மிருத்தல்வேண்டுமெனவும் (கோல்-இருபத்துநான்கு அங் குலம்), அரங்கின்மேலிட்ட பலகைக்கும் அரங்கத்தூண்மேலமைத்த உத்தரப்பலகைக்கும் இடைவெளித்தூரம் நான்குகோலிருக்கவேண்டு மெனவும், இடத்தூணிலையிடத்தே உருவுதிரையாய் ஒருமுகவெழி னியும், இரண்டுவலத்தூணிடத்தும் உருவுதிரையாய்ப் பொருமுக வெழினியும் மேற்கட்டுத்திரையாகக் கரந்துவரலெழினியுங் கட்டப் படவேண்டுமெனவும் பண்டையோர் கூறுவர். பண்டைக்காலத்து அரங்கத்தில், பிரம கூடித்திரிய வைசிய சூத்திரர் என்னும் நால்வகை வருணத்தாரது தொழில் உருவம் என்னும் இவற்றைக் குறிப்பிட வச்சிரதேகன், வச்சிரதந்தன், வருணன், இரத்தகேசுவரன் என் னும் நால்வகை வருணப்பூதருடைய உருவங்கள் எழுதி வைக்கப்பட் டிருந்தன; அாண்களின்நிழல் நாயகப்பத்தியின்கண்ணும் அவையின் கண்ணும் படாதபடி மாட்சிமைப்பட்ட நிலைவிளக்குகள் நிறுத்தப் பட்டிருந்தன. ஈண்டுக்கூறிய அளவு எழினி முதலியன நாடகக் கணிகை யாடுதற்குரிய அரங்கத்துக்காகும். இத்தகைய அரங்கத் தினுள் நலந்தருநாளில் வலக்கான் முன்மிதித்தேறி வலத்தூண் சேர்ந்து நிற்றல் அரங்கேறுகின்ற நாடகக்கணிகைக்கு வழக்கு எனப் பண்டை யோர் கூறுவர். அவிநயத்தோடு நாட்டிச்செய்யும் கையினது இலக் கணத்தையும் ஈண்டுக் கூறுவாம். இணையாவிணக்கையாகிய பிண்டி, இணைக்கையாகிய பிணையல் என்னும் இரண்டினுள், பிண்டி முப் பத்து மூன்றுவகைப்படும். அவையாவன:- பதாகை, திரிபதாகை, கத்தரிகை, தூபம், அராளம், இளம்பிறை, சுகதுண்டம், முட்டி, கடகம், சூசி, கமலகோசிகம், காங்கூலம், கபித்தம், விற்பிடி, குடங்கை, அலாபத்திரம், பிரமரம், தாம்பிரசூடம், பசாசம், குமுளம், பிண்டி,

Page 67
106 மதங்கசூளாமணி
தெரிநிலை, மெய்ந்நிலை, உன்னம், மண்டலம், சதுரம், மான்றலை, சங்கு, வண்டு, இலதை, கபோதம், மகரமுகம், வலம்புரி என்பனவாம். பிணையல் பதினைந்து வகைப்படும். அவையாவன:- அஞ்சலி, புட் பாஞ்சலி, பதுமாஞ்சலி, கபோதம், கற்கடகம், சுவத்திகம், கடகா வருத்தம், நிடதம், தோரம், உற்சங்கம், புட்பபுடம், மகரம், சயந் தம், அபயவத்தம், வருத்தமானம் என்பனவாம்.
ஒற்றுமைபற்றி அகக்கூத்துக்குரிய ஆடல்களையும் புறக்கூத்துக்குரிய ஆடல்களையும் ஈண்டுத் தருவாம். கீற்று, கடிசரி, மண்டலம், வர்த் தன, கரணம், ஆலீடம், குஞ்சிப்பு, கட்டுப்புரியம், களியம், உள் ளாளம், கட்டுதல், கம்பித்தல், ஊர்தல், நடுங்கல், வாங்குதல், அப் புதல், அனுக்குதல், வாசிப்பு, குத்துதல், நெளிதல், மாறுகால், இட்டுப்புகுதல், சுற்றிவாங்குதல், உடற்புரிவு என்னுந் தேசிக்குரிய கால்கள் இருபத்து நான்கும்; சுற்றுதல், எறிதல், உடைத்தல், ஒட்டு தல், கட்டுதல், வெட்டுதல், போக்கல், நீக்கல், முறுக்கல், அனுக்கல், வீசல், குடுப்புக்கால், கத்தரிகைக்கால், கூட்டுதல் என்னும் வடுறெ குரிய கால்கள் பதினன்கும்; மெய்சாய்த்தல், இடைநெரித்தல், சுழித தல், அணைத்தல், அாங்குதல், அசைத்தல், பற்றல், விரித்தல், குவித தல் என்னும் உடலவர்த்தனைகள் ஒன்பதும் அகக்கூத்துக்குரிய ஆடல. களாம். புறக்கூத்துக்குரிய ஆடல்களாவன:- பதினேராடலும், பெரு நடை சரியை பிரமரி முதலாயினவுமாம்.
அ. 'நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் பாட் சான்ற புலனெறி வழக்கம்' என்ருராகலின், பொருளதிகாரத்தினுள் வகுத் துக் கூறிய புறத்திணை ஒழுக்கங்களும், முல்லை குறிஞ்சி மருதம் நெய் தல் என்னும் நால்வகை நிலனும் பெரும்பொழுதாறும் சிறுபொழு தாறும், களவு கற்பு என்னுங் கைகோளிரண்டும், பார்ப்பான் பாங் கன் தோழி செவிலி தலைமகன் தலைமகள் எனக் களவினுட் கிளவிக் குரியார் அறுவரும், பார்ப்பார்முதலிய அறுவரோடு பாணன் கூக் தன் விறலி பரத்தை அறிவர் கண்டோர் என நின்ற கற்பினுட் கிளவிக்குரியார் பன்னிருவரும், இயற்கைப்புணர்ச்சி பாங்கற்கூட் டம் இடந்தலைப்பாடு மதியுடம்படுத்தல். இருவருமுள்வழியவன்வரவு ண்ர்தல் முன்னுறவுணர்தல் குறையுறவுணர்தல் நாணநாட்டம் நடுங்க நாட்டம் மடற்றுறை குறை நயப்புத்துறை சேட்படை பகற்குறி இரவுக்குறி ஒருவழித்தணத்தல் உடன்போக்கு வரைவுமுடுக்கம் வரை பொருட்பிரிவு மணஞ்சிறப்புரைத்தல் கல்வியிற்பிரிவு காவற்பிரிவு பகைதனிவித்தல் உற்றுNப்பிரிவு பொருட்பிரிவு பரத்தையிற்பிரிதல் என்னும் அகவொழுக்கங்களும் பிறவும் நாடகவழக்குக்கும் ஏற்பும்டை öİ İ6Ör.
அரங்கத்திலே புகுந்து நடிக்கின்ற கூத்தற்கு உருவும் உறுப்பும் கரணமும் பயனும் தொழிலும் அமைந்தவாறே, அசித்துப்பிரபஞ் சம் நூலவுருவமாகவும், சித்துப்பிரபஞ்சம் உறுப்புக்களாகவும்,

மதங்கசூளாமணி 107
இச்சை ஞானக்கிரியைகள் கரணமாகவும், உயிர்கட்கு அறிவினை யாக்கிவைத்தல் பயணுகவும், பஞ்சகிருத்தியவிரிவே தொழிலாகவும் அமைந்துநின்று சிதாகாசமாகிய அரங்கத்து நடிக்கும் பரமநாடக ஞகிய முதல்வனை மனமொழி மெய்யிஞற் சிந்தித்துத் துதித்து வணங்கி இவ்வாராய்ச்சியை முடிக்கின்ருேம்.
*காரணிகற்பகங்கற்றவர்நற்றுனைபாணரொககல்
சீரணிசிந்தாமணியனிதில்லைச்சிவனடிக்குத் தாரணிகொன்றையன்றக்கோர்தஞ்சங்கநிதிவிதிசே ரூருணியுற்றவர்க்கூரன்மற்றியாவர்க்குமூதியமே.”*

Page 68
செய்யுண் முதற்குறிப்பகராதி
(எண்கள் பக்கங்களைக் குறிப்பன.)
அகல்வானெ 36 அங்கணுல X அச்சவவி 9 அஞ்சினர்க்கு 59. அடலரியே х அண்ணனிர் 59 அணங்க்ேவிலங் 9 அந்தணர் வேள்வி ΙΧ அரவிந்தமெல் 24 அவலத்தவிநய 8 அவைதாம், நாடக 13 அழற்றிறம்பட்டோ 98 அழுக்காறுடை 2 அற்புதவுவி 9 அறம்புொருள்வா ፲ ፵ அறம்பொருளின்பம் 13 அறம்வ்ொருளின்பம்வீ 2 அறமுதனன்கு 13 அறமேற் 13 அன்புக் ll அன்புநிலை 23 ஆங்கவையொருபா
இடையோர்தேள த்து x இரங்குதிரென்ன 60 இரம்மிய 36 இருவகைநிலத்தி 6 இழிப்பினவி 8 இளிவே 8 இன்பமொடு இன்றுயிலுணர்ந் 97 இன்னலும்யா 59 இன்னிசைக்கு 4、 உச்சிப்பொழு 98 உலகத்தோ உவந்தோ,
உள்ளோர்க் 3 உறினட் 2 உறுப்பறை 1 0 எல்லேவந்த IX எழுமுறையெரி 54 எள்ளலிளமை 7 ஒருமையுளா கடையமuபிராணி 3. கண்ணுேவுற்ருே 98 கதங்காத்து . கல்விதறுகண் 9 களித்தோனவி 96 காமவவிநய 0
காரணிகற்பகம் 07
குரவையென்ப்து 103
கெடுங்காலே 3. கொஞ்சியமொழி 99 சந்தியிற்ருெடர்ந் 2
சாந்திக்கூத்தே 1 சிந்தையுடம்பட்டோ 97 சீதமுற்றே 99 செஞ்சாந்தெ 0 செத்தோனவி 97 செய்தேமஞ் 2 செல்வம்புல 10 ஞஞ்ஞையுற்ருே 97 தலைநோவுற் 98 தாழ்ந்துமென் 59 துஞ்சாநின் I 2 தெய்வத்தானமு 105 தெய்வமுற்றே 97 நகையினவி 8 நகையேயழுகை 5 நாட்டுங்காலை
நாடகவழக்கினு I 06
நாணமுற்றேனவி 98 நாவிரண்டாகும் 7 பண்ணியையு X பண்ணைத்தோன்றிய 5 பணித்தலைப்பட்டோ 98
புதுமை பெருமை 8 புன்கண்ணிர் 24 பேரிரவில் 58 பொய்யில் 2 மஞ்சட் 42 மடியினவி s மணிமருள்வாய் X மழைபெய்யப்பட் 97 மாயோன் பாணியு 13 områkvedu iš 560- 22 மாற்ருனெடுக்க மின்னுவவெல் 53 முதலங்க X முதுமையுற மூப்பே பிணி 8 மையநீர் 54 யாதிங்குள்ள 54 வட்டவுரு х வடவேங்கடந் Xi வண்ணந்தானே 6 வரியெனப்படு 05 வருத்தமுற்ருேனவி 98 வன்பொறை S5 வாட்புண், 35 லானகத்ததோ விலக்குறுப்பு 6 வீர ச்சுவையவி 0 வெகுண்டோனவி 8 வெப்பினவிநயம் 99
வேட்கையொருதலை 1 oo வேலோன்கை 24

6.
அரும்பதமுதலியவற்றினகராதி
அகக்கூத்துக்குரிய
ஆடல் 06 அகத்திணை 5 அகத்தியம் X அகநிலை 104
அகப்பாட்டுவண்ணம் 16 அகவொழுக்கங்கள் நாடக
வழக்கிற்கும்
ஏற்புடையன 106 அகிஞ்சனன் 51,55 அங்கம் 18, 77,90 அங்கனை 51, 52 அங்கர்சியம் 82 அங்காவதாரம் 82 அச்சச்சுவை 4, 9 அச்சச்சுவை உற்பத்தி 102 அச்சம் 5, 1 7 அச்சவவிநயம் 9. அச்சேதகாரணம் 78 அசற்பிரலாபம் 89 அசைவு அட' டோலிக்கன் 7
அடியார்க்குநல்லார் X
அதிசூரன் 19 அதிபலம் 80, 89 அந்தணர் சாதி ፲ 8 அந்தணன் 70 அநந்தசாபலசரிதம் 57 அநந்தன் 50 அநலவர்மன் 46 அநாகுலன் , 41 'அநிருத்தன் Xi li, i ! அநுபாவம் 94 அநுமானம் 80 அபயன் 20, 21, 22 அபவாதம் 8. அபஸ்மாரம் 96 அபவாரிதம் 82 அபிசாரிகை 76, 84
அபிலாஷம் 101
அபூதாகரணம் 80 அம்பா 87 அமர்ஷம் 96 அமலதேவன் 63 அயிராணி 69 அயோகம் 100 அர்த்தப்பிரகிருதி 78 அர்த்தோபஷேபகம் 82 அரங்கினமைதி 105 அரங்கினளவு 05 அரசர்சாதி 3. அரசன் 3. அரம்பை அரமனை 18 அரற்று அரன் 3 அரி 04 அரிவர்மன் 28 அருகியல் 04 அரும்பாலை 104 அருளல் அல்லியம் 3 அலாயுதன் 40 அவகித்தை 96 அவபாதனம் 86 அவமர்சம் 79 அவலச்சுவை 4, 8, 28, 33 அவலச்சுவைஉற்பத்தி 102 அவலத்தவிநயம் 8 அவல்ம் 7,33 அலஸ்தை 79 அவாந்தரார்த்தம் 78 அவிநயம் 2, 4, 7, 16 அவிநயக்கூத்து 77 அவையடக்கியல் 88 அழற்றிறப்பட்டோ
னவிநயம் 2 அழுக்காருமை Η 2. அழுக்காறுடையோ
னவிநயம் 12 அழுகை 5, 8
அளபெடைவண்ணம் 16
அற்புதம் 84 அற்புதச்சுவை 4. அற்புதவவிநயம் 9 அறிவஞர் 1 அன்பினைந்திணை 0. அஜ்ஜ "கா 87 அஸ்ரு 95 அஸ் இயை 96 ஆக்கம் *45 ஆகண்டலன் 69 ஆகரி 104 ஆகாயச்சொல் 15 ஆகாயபாஷிதம் 82 ஆகுலராசன்
சரிதை 】7 ஆகுலவர்ம்மன் 28 ஆசீனபாட்டியம் 92 ஆதவன் 74 ஆதன் 65 ஆதிகாரிகம் 78 ஆதிரை 68 ஆதிவாயிலார் ஆமுகம் 88 ஆமூர் 37 ஆய்ச்சியர்குரவை 109 ஆயப்பாலை 04 ஆயர் 84 ஆயுஷ்மன் 86 ஆர் மலைந்தாடிய
கூத்து ஆர்ய 86 sed tug- 85 ஆரம்பம் 9 ஆராய்ச்சி 6 ஆரோன் 62 ஆலசியம் 96 ஆலம்பனவிபாவம் 94 ஆவேசம் 96 ஆற்றுவரி 04 இகழ்ச்சி 28
i i

Page 69
தோனவிநயம்
ஊர்சூழ்வரி 03
110 அரும்பதமுதலியவற்றினகராதி
இசை 105 இன்புறல் ஊர்ப்பெயர் 7, 9 இசைத்தமிழின்றன்மை 2 இன்றுயிலுணர்தல் 96 எடுத்துக்காட்டியல் 17 இசைநுணுக்கம் XI இன்றுயிலுணர்ந்தோ எடுத்துக்கோள் 103 இடங்கராஜன் 46 னவிநயம் 2 எண்ணுவண்ணம் 16 இடாகினிமாதர் 46 ஈஹாமிருகம் 77 எண்வகைக்கலைத் இடிமம் 77 ஈழநாடு 72 தொழில் I O2 இடுக்கண் 95 உக்கிரதை 95 எல்லா 87 இடைவண்ணம் 1Ꮾ உக்தப்பிரதியுத்தம் 92. எலிசபெத்திராணி 19 இணை 5 உஞ்சையம்பதி 69 எழினி 82 இணைநிலைவரி 18 உட்சொல் s எழினியமைப்பு 06 இந்திரகாளியம் XI உட்பிரிவு 8 ஏந்தல்வண்ணம் இயற்றமிழின்றன்மை 2 உடைம்ை 2ub 11, 2,96 இயைபுவண்ணம் 16 உடைமை ஐயமுற்ருேனவிநயம் 12 இரதிகாந்தன் 63 உத்தமோத்தமகம் 92 ஒக்டேவியஸ் 60 இரம்மியன் சுசீலை உத்தாபகம் 85 ஒருசுவை 7 சரிதை 17,33, 75 உத்தீபனவிபாவம் 94 ஒருதலையுள்ளுதல் 96 இரம்மியமலையன் 34 உத்படர் 86 ஒரூஉவண்ணம் 6 இராகவதேவன் 3ே உத்வேகம் 80 ஒலிவாணன் 94 இராமாவ நாரப்பெருங் உதாகிருதி 80 ஒழிபியல் 77 காப்பிய்ம் 4 உபசங்கிருதி 79 ஒழுகுவண்ணம் 6 இராமாயணம் 82 உபகூகனம் 8 Ι ஒவியர் இராஜமாநகரம் 68 உபந்நியாசம் 80 ஒளதாரியம் 83 இருசுவை 17 உபக்ஷேபம் 79 கஞ்சன் 4 இருட்சேன்ை 8 உயிர்ப்பு 95 கட்டியக்காரன் 3. இருமொழிவழக்கு 2 உருக்கோடல் 77 கடாற்றுக்கு 89 இருவகைநிலன் 6 உருட்டுவண்ணம் 6 கடையம் 14 இருவகைவழக்கு 1 உருத்திரச்சுவை 4. கண்கூடுவரி, 6,103 இருளப்பன் 19 உருவம் 77 கண்டம் 89 இலக்கணவிளக்கம் 101 உலோகமாபாலன் 39 கண்டிதை 76, 84 இலாசியம் 78 உவகை . 17,33 கண்ணுேவுற்ருே இலாவணன் 18 உவகைச்சுவ்ை I 0. னவிநயம் 2 உவந்தோனவிநயம் கத்தியரூபம் 2 இழவு . 28 உழிஞைத்திணை 86 கத்துரு 20 இழிப்பின்விநயம் 8. உள்வரி 16, 103 கதாநாயகன் 3. இழிப்புச் சுவ்ை 4 உள்ளப்புணர்ச்சி 00 கதோற்காதம் 88 இளமை 28 உளப்பாடு 79 கந்தன் 球岛 இளி 104 உற்காத்யகம் 88 கம்பநாட்டாழ்வார் X இளிவரல் 17 உற்சுகம் V 96 கம்மாளப்பெண் 84 உற்பத்தி 78 கமலவதனன் 69 இளிவர்ற்சுவை 101 உற்பேதம் 79 கமலை 73 உற்பத்தி உறுப்பறை 63 கமிடி 5 இளைப்பு 95 உறுப்பியல் கரணக்கூத்து இன்பச்சுவை 4 உறுப்பு i8 கரணம் 79 இன்பம் 9 உறையூர் 33 கரந்தைத்திணை 85 இன்பநெறிபுணர்ந் உன்மத்தம் 96 கருளுகரன் 57 1, 12 கருதல் 1,96

அரும்பதமுலியவற்றினகராதி 1 11
கருதியதெய்திய காதலர் கிளர்வரி 16,103 கோலாகலன் 74 சரிதை 17,88,72,75 இ2 105. கெளசிகன் 42 கருப்பம் 3,2,30,31,7g கிளைக்கதை 78 கௌதமன் 30 கல்பூர்ணியா 58 குசலவசரிதை 4 சக்தி * 81 கல்வி 18 குடக்கூத்து சங்கவர்ணன் 42 கல்விக்களஞ்சியம் 18 குடிகோள் சங்காட்டியம் 85 கலக்கம் 95 குடை சங்கிரகம் 80 கலகாந்தரிதை 76,84 குடைக்கூத்து சங்கை 95 கலப்புக்கதை 78 குணகதா 10 சங்கரிப்திகம் 86 கலாபநாட்டதிபன் 47 குளுதரன் 2g. சடதை 95, 101 கலிங்கநாடு 48 குணமாலை 29 i afl.--6ôr 83 கவிச்சுவை, 17 கும்பம் சத்துவம் 2, XI , 4 கழனிலேக்கூத்து ਲr 104 சத்துவபாவம்6,7,16,94 *prrätåAdg குரவை 16, 103 சதுரப்பா% 104 86tafiudy 85 குரவை இலக்கணம் 103 '***** களவு ! குரவைக்கூத்து 1,103 சந்தியினுட்பிரிவு 18 களி 98 குலகுரு சந்திரசேகரமூர்த்தி 37 களித்தோனவிநயம் 12 குலசேகரபாண்டியன் சபலம் . , 96 கற்பனைக்கதை,13,18.78 குவிந்தஸ் 61 . சம்பிரமை 80 sarmy 9 குறவர் சம்பேடம் 81, 86 Ssst sou taw 29 குறளர் 84 சம்போகம் I oo ésTv Aw 20 22 குறிஞ்சியாழ் 104 சமலாபகம் 85 காட்டு குறிப்பு 2. சமநில் 4.7 காட்வெரி 1 6 , ፲ 03 குறுஞ்சீர்வண்ணம் 16 சமப்பிரகர்ஷம் 84 காடுகெழுசெல்வி 5 குறும்பொறைநாடன் ・ 5 I சமம் 80 dirtov as Ꮧ 6 , 108 குறுமுயல் , சமவகாரம் 78 காதல்ககைம்மிக்க காவலன் குன்றக்குரவை 103 சமாதானம் 79 7 கூட்டம் ና IOO சாக்காடு 96 காதன்முயற்சிக் கூடரநாட்டதிபன் சாத்தன்கோயில் 70 கிடையீடு கூடை சாத்துவதி 13, 85 diti 186 inski 67 கூதிர்க்காதை 17.75 சாதி 2,1,16 , 87 காப்பியலக்கணம் கேகயவல்லி 64 சாந்திக்கூத்து 1. őn bi faflub 83 கேசவன் 73 சாபலன் 5 I காமவவிரயம் 10 கேயபதம் 93 சாயவேளர் கொல்லி 04 காமன் * கைக்கிளை 104,85 சார்த்தூலன் 63 85 n7 riadsuomr 71 கைச்சாத்து 18 ; சார்புப்பொருள் 78 78 கைசிகி 184, 85 சாரகுமாரன் X1,51 8፲ 699, if S frtruð 8 காளிதாசன் . 24 ேொக - சாலினி 20 காணகநாடன் 5 I கொடுகொட்டி - 14, 15 சாவகதேசத்தரசன் கால்வரி 103, 104 .ெ. 5 சாவகநாடு 18 distrapuh) 98 கொல சிகண்டி xi கிரமம் 80 கொற்றவைநில இங்கபுரம் 28 கிரன் 61 கோகிலவல்லி 63 சிங்கம் 6S கிலாளி 99 கோதமன் ” சித்திரவண்ணம் 6 கிள்ளிவளவன் 38 . . கோயிற்றுாக்கு 104 சிதாகாசமாகிய
s$f{I Eisti 07
—

Page 70
செய்வழிப்பாலை 04
1 12 அரும்பதமுயலியவற்றினகராதி
சிந்தனை 96. செவ்வழியாழ் r 04 திரிகோணப்பாஇ 104 சிந்தையுடம்பட்டோ சேதம் 2 .8 7 திருதி 95 னவிநயம் 夏2 சேஞயதிசரிதை 7, 60 திருஷ்டன் 83 சிம்பர் 58 சைந்தவம் 92 திரேபோணியல் 5尋 சிரமம் 愛5 சொக்கம் திலோத்தமை சிருங்காரம் 教伞 சொல் 77,2, 5 தீநட்பஞ்சிய தீமோன் சிரோரத்தினம் சோநகரம் A சரிதை 1740 சில்ப்பதிகாரம் XI , 3 சோபை 3 தீரசாந்தன் 83,76 சிற்றின்பம் * சோமகன் 18,19 தீரலலிதன் 83, 76 சிறுகுடிப்பாட்டு 6 சோர்வு 6 தீரோத்ததன் 母3,76 சிறுதேவபாணி 94 செளரசெனி 86. தீரோதாத்தன் 83,76 சிறுமை 44 ஜயதேவன் 63 தீவலமல்லன் , 34 சீதமுற்றேனவிநயம் 12 ஜயந்தன் 练8票 துஞ்சல் 9Ꮾ, 1 1 , 12 சீதரன் 7 ஜனந்திகம் 82 துஞ்சாநின்ருே சீயதேசம் சி0 ஞஞ்ஞையுற்ருே னவிநயம் 丑2° சீர்கோடிசும் 置伊4 விைநயம் 12 துடி 球、 சீராகம் 104. டேஸியஸ் 58 துடிக்கூத்து 5 சுகிர்தாபி 87 டேமத்திரியஸ் 61 துணிபுத்தூக்கு 104 சுசீலை : 34 தசரூபகம் 77 துத்தம் 104. சுண்ணம் I5 தசரூபம் 7 7 தும்பைத்திணை 86 சுத்தநிரூத்தம் 1,78 தண்டத்தலைவர் 84 துய்த்தல் 26,30,50,79 சுதாகரன் 72, 74 தமிழ்மொழிமரபு 18 துர்க்காதேவி s சுந்தரராபன் 74 தமோரா 6, 62 துவிசுடம் 92 சுப்தம் 9:6 தயநிசன் 5 தூக்கு l6 சுரிதகம் தர்க்கம் 96 தூங்கல்வண்ணம் 18 சுரை நாவன் 44 தலைநோவுற்ருே தூவலன் 51 சுவாகதம் 82 னவிநயம் Η 2. தெய்வப்பெயர் 7 சுவாதீனபர்த்ருகை 76,83 தலைவன் 78 தெய்வமுற்ருே சுவாமி 87. தவமூதாட்டி 84 னவிநயம் 12 AG OG X, 14, 77,94 தற்சிறப்புப்பாயிரம் 77 தெய்வவணக்கம் 77 சுவைக்கப்படும்பொருள் 6 தன்மை 1,12 தேசி 78 சுழற்சி 96 தனஞ்சயன் 77,103 தேசிக்குரியகால்கள் 198 * தனபதி 46 தேர்ச்சிவரி 103, 16 சூத்திரர்சாதி ፲ 8 தகரினன் 83 தேவபாணி 6 சூதர் 39 தாஅவண்ணம் 6 தேவாளி 04 சூலி 82 தாண்டவம் 78 தைதஸ் அண்டிரணிக் செகசிற்பியார் 17 தாண்டவராயன் 75 கஸ் 60 செத்தானவிநயம் 12 தாத 87 தைந்யம் 95 : 04 தாரம் 1 04 தைரியம் 84 செந்துறை திணைநிலவரி 104 தொடக்கம் 73 செந்தூக்கு 194 தியுதி 81 தொல்காப்பியம் 101 செம்பாலை 04 திரவம் 8. தொல்காப்பியனூர் 5 செய்யுளுருவம் 18 திரள் 04 தோடகம் 80 செயப்படுபொருள் 77
திராசம் 96 தோற்பாவைக்கூத்து 1 செயிற்றியம் XI 8 5 செயிற்றியஞர் திரிகடம் 8 நகை
திரிகூடம் 92 நகைக்குறிப்பு 7,102

அரும்பதமுதலியவற்றினகராதி 1 13
நகைக்குறிப்புமொழி 65 நியதாப்தி 79 பரியுபாஷணம் 80 தகைச்சுவை 4,丑7,28 நிர்ணயம் 8. பரிவர்த்தகம் 85 நகைச்சுவை நிர்த்தம் 78 பலயோகம் 79 உற்பத்தி 02 நிர்த்தியம் 77. பவதீ 87 நகையின்வகை 2 நிர்வாஹனம் 79 பயன்விழைவு 79. நகையினவிநயம் 8 நிர்வேதை 95 கவனவேகன் 41 நஞ்சுண்டோனவிநயம் 12 நிரோதம் 80 பழங்கதை 78 நட்பு நிவப்புத்தூக்கு 0. பன்னிரண்டு நடுக்கம் 96 நினைதல் 96 நாடகங்கள் 17 நடுவுநிலைச்சுவை 4,11,12 நீலாம்பரன் பணித்தலைப்பட்டோ நடுவுநிலையவிநயம் 1 நெடுஞ்சீர்வண்ணம் 16 னவிநயம் 12 நம்பியகப்பொருள் 101 நெடுந்தூக்கு 04 Lin'Struð * 65 நரம்பினியல்பு 05 நெடுமுடியண்ணல் 丑4 பாடாண்டினை &5 நருமகர்ப்பம் 8& நெய்தல்யாழ் பாண்டரங்கன் 2, 14 நருமத்யுதி 80 நேதா 7s Lifrøörug- 16 நருமம் 80 நொச்சித்திணே 86 பாண்டியன் நருமஸ்பூர்ஜம் 85 1566 8命 (மதிவாணஞர்) நருமஸ்போடம் 85 if6R)€55 型的5 பாணம் 77 தலிதல் பசியானஸ் பாணர் 8. நலிபுவண்ணம் 最枪 பஞ்சபாரதீயம் ፲፪ பாணி 7, 104 நாகன்சேப் 70 பஞ்சமரபு பாதுகாபட்டாபி நாகநாட்டரசன் ، سالارا 용 7 ஷேகம்
புதல்வி 8 படிதம் 置登 பாரசவமுனிவர் நாகராகம் 04 படுமலைப்பாலை 04 பாரதி 羅葛 நாட்டியக்கட்டுரை 3,63 படைப்புவரி பாரதியரங்கம் s நாட்டியக்கட்டுரைக் பண்ணன்குடியார் 33 பாரதிவிருத்தி 87 குரிய சுவைகள் 103 பண்ணைப்பாட்டு 6 பாலப்பருவம் ΙΧ நாட்டியசாஸ்திரம் 77 பதாகை , பால்யாழ் 04 நாட்டியநிகழ்ச்சி 79 பதினுேராடல் 13,78 Life 87 நாட்டியம் 77 பதுமதாபன் 69 TGALAD 94, 77 நாடகத்தமிழ் XII L1560up 52 TCC 3, 14,67 நாடகத்தமிழின்தன்மை 2 பதுமைபுட்கலசரிதை 57 பாஷணம் 8. நாடகபாத்திரர் 3 பயன்விளைவு 79 பிண்டி 105. நாடகம் 76 பயோற்கர்ஷம் 84 பிணையல் நாணமுற்ருே பரதசேஞபதீயம் XI பிரக்கியாதம் 78 னவிநயம் 2 பரதநூல் 77 பிரகசனம், 88, 77 நாணுதல் 96 பரதம் பிரகமனம் 80 நாதன் 23 பரிக்கிரியை 79 பிரகரணம் 13, 77 நாந்தி 88 u_urflasdrub 79 பிரகரணப்பிரகரணம் 14 நாரதன் X பரிசர்ப்பம் பிரகரி 78 நால்வகைக்குற்றம் பரிசனர் 8 பிரகாசம் 82 நாழிகை 89 பரிந்யாசம் 79 பிரச்சேதம் 92 நாழிகைவட்டி 66 பரிபவை 70 பிரசங்கம் 8 1 நான்மாடக்கூடல் பரிபாவனை 79 பிரசஷ்டி 81 நித்திரை 96 பரிபாஷணம் 8. பிரசாதம் 8 .
பிரதிமுகம் 2,3,2,30, 79

Page 71
མ་བPཐམ་པ་ཕ་ ፲ 04
114 அரும்பதமுதலியவற்றினகராதி
பிரபஞ்சம் 88 பெருநாரை மயிலம் At பிரபாகரன் 42,4霹 பெரும்புயற்சரிதை 17,40 மர்ஷ g7 பிரமவாதி 84 56,75 மரக்கால் 5, 6 பிரயத்தனம் 79 பெருமிதச்சுவை 9. மரகதம் 2 7 பிரயோகாதிசயம் 88 பெருமிதச்சுவை உற் மரகதர் பிரரோசன் 88 பத்தி மரணமென்னு பிரலயம் 95 பெருமிதம் 7 மிளிவரல் பிரலாபம் - 0. பெருமை 45 மரணம் 96 பிரவிருத்தகம் 88 பெருவண்ணம் 6 மருட்கை 4, 17 பிரவேசிகம் 82 பேடு 3 மருட்கைச்சுவை 7,45 பிரஸ்தாவனை 88 பேதைமை 28 மருட்கைச்சுவை பிராகிருதம்: 86 guy its to 86 உற்பத்தி O2 பிராசங்கிக 78 பொச்சாப்பு மருதயாழ் 04 பிராப்தி 2 பொருண்முடிபு 78 மல் 14 பிராப்தியாசை 79 பொருண்மூலம் 78 மலையன்குடியார் 34. பிரியதத்தமின்னன் 18 பொருள் 2, 3, 77,78 மழைபெய்யப்பட்டோ பிரியவிரதள் 41 GourT(?GMLD 1,95 னவிநயம் 12 பிரிவு 00 போகவதி 69 மனநூல் 7 பிருகத்கை 82 மக்கட்பேர் 7 மனம்புழுங்குதல் 96 பிரோசிதப்பிரியை76,84 மகததேசம் 72 மாசேனன் 73 பிலிப்பிநகர் 60 மகபதி 46 மாணிக்கமால் 28 பிள்ளையாட்டு மகபதிசரிதை 17,46 மாதவன் 49 பிறகவை 7 மகபதிப்பிரியை 48 மாதுரியம் 83 பீடமர்த்தன் 83 மங்கலவர்ம்மன் 48 மாயவன் Η ό பீஜம் 78 மட்டி 19 மாய்ாரூபங்கள் 44 பீபற்சம் ! 83 LDL-6ör 28 மாயோன் பாணி 3 புகழ்க்கூத்து IX மடிமை 11,96 மார்க்கம் 78, 80 புட்கலன் 5. மடியினவிநயம் 2 மார்த்தாண்ட புதுமை 42 மண்டிலம் 04 சோழன் 34 புரோகிதர் 35, 74 மணலிநகரம் 50 மார்ஷியஸ் 6. புலவர் 40 மணிகுயிற்றுநர் 39 மால் 4. புறக்கூத் ற்குரிய மணிபல்லவம் 4. மாலதி 4. <翌一 06 மணிபுரத்தரசன் 29 மாலினி 20 புறச்சொல் ፲ ö மதங்கசூளாமணி 1, 17 மாலுமி 72 புறத்தி+ண 1,5 மதம் 96 LDT Granu Gör 96 புறநிலை 04 மதலைத்தூக்கு 04 Lóleons 96 புறப்ப ட்டுவண்ணம் Η 6 மதலைப்பருவம் LÉlá6Fguib 78 புறவரி I 6, 103 மதன் 3 மிருதவம் புஷ்பகண்டிகை 92 மதனன் 29 முகம், 3, 21, 30, 79 E. 80 மதி 96 முகமில்வரி '04 பூர்வபாவம் 8. மதிவாணனர் 13 முகமுடைவரி 04 பூர்வரங்கம் 87 மதிவாணனுர்நாடகத் முசுமுகி 41. பெருகியல் 104 தமிழ்நூல் முஞ்சமகிபதி 103 பெருங்குருகு XH மந்திரி 03 முடுகுவண்ணம் 16 LbuJéiés lib 96 முத்தகம் 04
 

அரும்பதமுதலியவற்றினகராதி 5
முதல்நூல்கள் X | வயோதிகப்பருவம் Χ விநோதக்கூத்து 罗 முதனடை 04 வர்ணுரணியம் , 49 விப்பிரலப்தை 76, 84 முயற்சி 9. வரதன் 29 விபாவம் t 94 முறுவல் வரி 2, 677 விபோதம் 1, 96 முன்னுரைக்காட்சி 89 வரிக்கூத்து ፲ 03 விமல் 73 முனிதல் வரிதகம் 15 வியப்பு மூதியஸ் 6. வரிப்பாடல் 6, 103 வியபிசாரிபாவம் 94 மூப்பு 28 வரியிலக்கணம் வியர்த்தல் மெய்க்கூத்து வருணசம்மாரம் 80 வியவசாயம் 8 1 , மெய்ப்பாடு 5 வருணப்பூதர் 105 வியாசம் 8 மெல்லிசைவண்ணம் 16 வருத்தம் 28 வியாதி 96 மென்மை 28 வருத்தமுற்ருேனவிநயம் வியாயோகம் 77 மேற்செம்பாலை 04 வரைதல் 2 விரிநிலை 78 யவனர் 84 வல்லிசைவண்ணம் 6 விரிமுரண் 04 யாமளேந்திரர் வலிமுகம் 41 விரிடை 96 யாமினி 7. வழிநிகழ்ச்சி 78 விருத்தாந்தம் 82 யூலியசீசர் சரிதை17,57, 75 வள்ளிக்கூத்து விருத்தி 2, 12, 13,16, 82 யோனி 2, 12, 16 வள்ளெயிற்றரிமா 6 விரைவு யெளவனப்பருவம் ዘX வளைவணன் 4s விரோதனம் 81 ரஸம் 77 வறுமை 28 விலாசம் 80 ராகம் 82 வனங்காப்போர் 84 விலோபனம் 79, ராஜாளிப்பறவை 7. வனப்புவண்ணம் 6 விழா 5 ரிருஜெடி s வஸ்து 78 aíamrf 104 ரூபகம் 7 7 வஸ்துத்தாபனம் 86 விளரிப்டாலை 04 ரூபம் 77, 80 வாக்கெலி 89 விளைவு 22,26,30,49, ரோமாஞ்சம் 95 வாசகஸஜ்ஜை 76, 83 விஷ்கம்பம் 82 ரோமாபுரி 58 வாசவன் 50 வீதி 77, 88 ரெளத்திரம் 84 வாணுசுர நாடகம் 27 வீரச்சுவை 4. லலிதம் R3 வாணிகர் சாதி 13 வீரச்சுவையவிநயம் 10 லவீனியர் 6. வாலிமோகூடிம் 4. வீரசோழியம் 0. விகாரியஸ் 58 விசலனம் 8. வீரப்பருவம் IX லூஸியஸ் 62 விஜயை - 50 வீரம் 84 வச்சிரம் 80 விஜயைவாசவசரிதம் 57 வீரவர்மன் 28 வசந்தகாலம் 6 விட்டில் 19, 21 வீரன் 18, 8, 20, 22 வசந்தன் 7 விடன் 83 வீரஹோற்கண்டிதை வசைக்கூத்து வித்தியாதரன் 4. 76,83 வஞ்சித்திணை வித்திரவம் 8. வீரேந்திரபாண்டியன் 63 வட்டப்பர்லே 04 வித்து 3 வெகுண்டோன வடநூலார் 8 விதானம் 79 விநயம் 10, 12 வடுகிற்குரியஆால்கள் 106 விதூதம் 80 வெகுளி 5, 17,62 a 6760s, Lotuu air 34 விதூஷகன் 3,29,5I வெகுளிச்சுவை 0 Glucia gös lib 2, 16, 16,77 65,83 வெகுளிச்சுவைட வணிகதேயவர்த்தகன் ற்பத்தி 02 சரிதை 7,50, 75 விந்து 78 வெட்சித்தினை 85. வத்ஸ் 87 விந்தை 3. வெண்டுறை 4

Page 72
116 அரும்பதமுதலியவற்றினகராதி
வெப்பமுற்ருே
னவிநயம் 2 வெயிற்றலைப்பட்டோ
னவிநயம் 2 வெரூஉதல் 1,96 வெள்ளைநாகன் 7. வெறியாடல்
வேட்டுவவரி 103
வேத்தியல் வேதை வேளாவளி வேனில்வேள் வேனிற்காதை
வைவர்ணியம் வைஸ்வர்யம்
78, 79 104
17
95
95
ஹர்ஷம் ஹாஸ்யம் ஸ்தம்பம் ஸ்தாயிபாவம் ஸ்திதபாட்டியம் ஸ்மிருதி ஸ்வேதம்
95
84
95
94.
92
96
95


Page 73


Page 74


Page 75
அரசாங்க அச்சகக்

கூட்டுத்தாபனம் இலங்கை