கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும்

Page 1
) ( W W
KKKKKKKKKKKKKKK
 


Page 2


Page 3

ஆரியர் ஆதிவரலாறும் LIGILIT(b
வி. சிவசாமி, எம். ஏ. (இலங்கை)
வடமொழித்துறை இலங்கைப் பல்கலைக் கழகம் யாழ்ப்பாண வள்ாகம். திருநெல்வேலி,

Page 4
ஆரியர்
ஆதிவரலாறும் பண்பாடும்
வி. சிவசாமி எம். ஏ. (இலங்கை) வட மொழித்துறை இலங்கைப் பல்கலைக் கழகம் யாழ்ப்பாண வளாகம்
திருநெல்வேலி,
முதற்பதிப்பு 1976 வைகாசி sy Val () JAa: säva ravR syi r s tä யாழ்ப்பாணம், இலங்கை,
விலை:
Aryanв Early History and Culture
V. SVA SAMY B. R. (Coy), B. R. Hons (Lond.), M. A. (Cey.) Pept. of Sanskrit
University of Sri Lanka
jafna Campus
Thirunelvely
Sri Lanka
First Edition, May 1976 Printed at the Kalaivani Printing Works Jaffna, Sri Lanka.
Price:

முன்னுரை
ஆரியரின் ஆதிவரலாறு பற்றிச் சுருக்கமாகவும், தென் ஆசியாவிலே அவர்களின் தொடக்ககால (வேத கால) வரலாறு பற்றிச் சற்று விரிவாகவும் இந் நூலில் எடுத்துரைக்கப்பூடுகிறது. இவர்களைப் பற்றிப் பல நாட்டறிஞர்கள் . வரலாற்ருசிரியர், தொல்லியல் ஆய்வாளர், மானிடநூலாசிரியர் முதலிய பல திறப் பட்டோர் சுருக்கமாகவும், விரிவாகவும் ஆராய்ந்துள் ளனர். இவர்களிலே முக்கியமான பலர் கூறியுள்ளன வற்றைத் தமிழிலே கூறுவதே ஆசிரியரின் பிரதான நோக்கங்களில் ஒன்ருகும். இவர்கள் அனைவருக்கும் நூலாசிரியர் பெரிதும் நன்றியுடையவர்.
உலகிலே நிலவுகின்ற மொழிக் குடும்பங்களிலே, ஆரிய மொழிக்குடும்பம் முக்கியமான இடம் ஒன்றினை வகிக்கின்றது. தமிழுடன் நெடுங்காலமாக நெருங்கிய உறவுகொண்டு விளங்கும் வடமொழி இம் மொழிக் குடும்பத்தினைச் சேர்ந்ததே. ஒரு வகையிலே நூலா சிரியர் 1973-இல் வெளியிட்டுள்ள திராவிடர்-ஆதிவரலாறும் பண்பாடும் என்ற சிறு நூலின் தொடர்ச்சியாக இதனைக் கொள்ளலாம். இந்திய நாகரிகத்தினைக் கட்டியெழுப் பிய இரு பெரும்பண்பாட்டுக் குழுவினரான திராவிட ரையும், ஆரியரையும் பற்றிச் சற்றுவிரிவாக அறிந் திருத்தல் நன்று. திராவிடர், ஆரியர் தொடர்புபற்றி ஆங்காங்கே அந்நூலிற் குறிப்பிடப் பட்டவை விரி வஞ்சி இந்நூலிலே கூருமல் விடப்பட்டுள்ளன. இரண் டினையும் ஒன்றன்பின் ஒன்ருக வாசித்தல் நன்று.
இந்நூலிலே ஆரியரின் ஆதி நாகரிகம், புலப் பெயர்ச்சி, இந்தியாவுக்கு வந்த ஆரியரின்தொடக்க
கால நாகரிக நிலை அதன் வளர்ச்சி முத்லியன எடுத்

Page 5
1 V
துரைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அவர்கள் தனித்து அன்றித் திராவிடர், ஆதி ஒஸ்ரலோயிட் முதலிய பிற மக்களோடும் சேர்ந்துதான் ஆதி இந்திய நாகரிகத் தைக் கட்டியெழுப்பினர். ஆகவே வேதகால நாகரிக மெனக் கூறப்பட்டுள்ளனவை மேற் குறிப்பிட்ட மக்க ளோடும் சேர்ந்து ஏற்பட்டவையே. ஆஞல், இந் நாக ரிகம் பற்றி அறிதற்கான இலக்கிய மூலங்கள் ஆதி வட மொழியிலிருப்பதால் இவ்வர்று இந்நூலிலே கூறப் பட்டுள்ளது.
ஆரியரைப்பற்றி எனது பட்டப்படிப்புகளைவிட, இலங்கைப் பல்கலைக்கழகத்திலும், யாழ்ப்பாணக் கல் லூரிப் பட்டதாரித் திணைக்களத்திலும், யாழ்ப்பாண வளாகத்திலும் கலைமாணி வகுப்பு மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வாய்ப்புகள் கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்டன. இதனுல் இவ்விடயம் பற்றி விரிவாக வாசிக்கவும், சிந்திக்கவும் வேண்டியதாயிற்று. இவ்விட யம் பற்றி எழுதிய அறிஞர் பலரின் கருத்துக்களடங் கிய நூல்கள் தமிழிலே மிகக் குறைவு. எனவே, இத் தகைய முயற்சியிலீடுபட்டு வருகிறேன்.
இது ஒரு சிறு நூலாகக் காணப்படினும், தொடர் கட்டுரையாகவே அமைந்துள்ளது. இதிலே கூறப்பட் டுள்ள பல பிறமொழிச்சொற்களைத் தவிர்க்க முடியாத காரணங்களால் உள்ளவாறே எழுத முடியவில்லை. இதனை அறிஞர் அவ்வளவு பொருட்படுத்த மாட்டார்
56 TT 35
இந்நூலிலுள்ள கருத்துக்களிற் குறிப்பாக உப நிஷததத்துவம் பற்றி என்னுடைய ஆசிரியர் கலாநிதி ம. த. பாலசுப்பிரமணியம் அவர்களிடம் பயின்று ஐயப்பாடுகளிலே தெளிவு பெற்றேன், அவ ருக்கு எனது நன்றி என்றும் உரியது.

W
இதனை எழுதுவதற்கான பல நூல்களையும் கட் டுரைகளையும், பேராதனை வளாக நூலகத்திலும், யாழ்ப் பாணவளாக நூலகத்திலும் பயன்படுத்தியுள்ளேன். குறிப்பாக, பேராதனைவளாக நூலகத்தினைச் சேர்ந்த நண்பர் திரு. எம். துரைசுவாமி அவர்கள் இவ்விடயம் பற்றிய தகவல் தேட்டத்திற்கு அரும்பெரும் உதவி செய்துள்ளார்.
இந்நூலைப் பிரசுரித்தற்கான தாள்களைக் குறை வின்றிப் பெறுவதற்கு அனுமதி வழங்கிய கிழக்கு இலங் கைக் கடதாசிக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு. கே. சி. தங்கராஜா அவர்களும், இதனை அச்சிட்டு உதவிய கலைவாணி அச்சகத்தாரும், குறிப்பாக முன்னின்று முகமலர்ச்சியுடன் உதவிய நண்பர் திரு. க. முருகேசு அவர்களும் நினைவுக்குரியவர்கள்.
நூலாக்கப் பணியின் போது ஊக்கியும், பிரசுரிக்
கும்போது இதன் அமைப்புப் பற்றிய ஆலோசனை களைக் கூறியுமுதவிய நண்பர் திரு. ஆ. சிவநேசச் செல்வன் அவர்களுக்கும், பல வழிகளில் ஊக்கி உதவி செய்த ஏனைய நண்பர் அனைவருக்கும் மனப்பூர்வ மான நன்றி உரியது. −
காய்தலுவத்தலகற்றி யொருபொருட்கண்
ஆய்தலறிவுடையார்க் கண்ணதே.
யாழ்ப்பாண வளாகம் திருநெல்வேலி a. aug 6 வைகாசித் திங்கள், 1978:

Page 6
பொருளடக்கம்
பக்கம்
ஆரியர் » än 8 ஆதி இருப்பிடம் ... 3 இந்தோ - ஆரிய இந்தோ . இரானியத் w தொடர்புகள் ... O இந்தோ ஐரோப்பிய மொழிகள் . . . . . ஆரியரின் ஆதி இருப்பிடம் ஆசியாவிலா
ஐரோப்பாவிலா ? ... 13 ஆரியரின் புலப் பெயர்ச்சிகளும் காலமும் ... 8 இந்தியாவில் ஆரியர் ... 29 வேத இலக்கியம் ... 30 வேதங்களின் άς του αριό வரலாற்றியல்பும் ... 34 வேத காலத்தில் ஆரியர் வாழ்ந்த இடங்களும்
ஜனக் குழுக்களும் ... 37 வேதகால அரசியல் 因&u --. 44 வேதகாலச் சமய தத்துவநிலை ・・・ 52 வேதகாலச் சமூகநிலை ... - 68 வேதகாலப் பொருளாதாரநிஜல ... 82 பிற்காலம் . . . 88 அடிக் குறிப்புகள் 95 ... ۔ உசாத்துணை நூல்கள் 7 0 1 . صم அட்டவணை ... 113
பிழை திருத்தம் 116 .ܝ

ஆரியர்
இந்தியாவிற்குக் குறிப்பிடத்தக்க தொண்டு செய் தோரில் ஆரியர் முக்கியமான இடமொன்றினைப்பெறு கின்றனர். ஆரியர் என்ற பதம் வரையறுக்கப்பட்ட ஓரினத்தையன்றிக் குறிப்பிட்ட மொழி, கலாச்சாரத் தினைக் கொண்ட மக்களையே குறிப்பதாகும். ஆணுல் அறிஞர்களில் ஒருசாரார் இப்பதம் இனத்தினைக் குறிக் கும் எனவும் கொள்வர். எவ்வாருயினும் பிறமக்கள் பலரிலும் பார்க்க இவர்களின் செல்வாக்கு இந்தியா வில் மேம்பட்டுக் காணப்படுகின்றது. இவர்களும் திராவிடரும், ஆதிஒஸ்ரலோயிட் போன்ற பிறரும்? ஒன்றுபட்டு உருவாக்கியதே புகழ்பெற்ற இந்தியப் பண்பாடாகும். இவ் ஆரியர் எங்கிருந்து வந்தாலும் அவர்களின் வீரம், துணிச்சல், நாகரிக வளர்ச்சி ஆகி யன குறிப்பிடத்தக்கன, இந்தியாவிற்கும் பிற இடங் களுக்குமிவர்கள் சென்று அவ்வவ் இடங்களிலே நில விய மேம்பட்ட மேம்படாத கலாச்சாரங்களைச் சில வேளைகளில் அழித்துத் தமது பண்பாட்டினைத் திணித் தனர்; சில வேளைகளிலே தம்மிலும் மேம்பட்ட பண் பாடுள்ள மக்களை வென்றபோது அம் மக்கள் கலாச் சாரத்தினைத் தாம் ஏற்றுக்கொள்ளப் பின்னின்றிலர். தேவையான, தவிர்க்கமுடியாத வேளைகளிலே ஒத்து மேவல் (Compromise) செய்தும் வந்தனர். தம்முடன் உறவாடிய, தொடர்பு கொண்ட பிறமக்களின் பண் பாடுகள் வளர்ச்சியடையவும் பல வேளைகளில் உதவி அளித்தும் வந்தனர். இந்தியாவில் ஆரியமொழியின் முக்கியத்துவத்தினை முதுபெரும் மொழிநூற் பேராசி ரியர் சுநீதிகுமார் சட்டர்ஜி பின்வருமாறு குறிப்பிடு கிறர். "இந்தியாவில் எம்முன்னுேர் விட்டுச் சென்றுள்ள

Page 7
2
மிகப்பெரிய செல்வங்களில் எமது ஆரிய மொழியும் ஒன் ருகும். மேலான ஒழுங்கு முறையுடன், நெக்கிறிற்றே, ஆதி ஒஸ்ரலோயிட் (திராவிட முதலிய) பலவகையான மக்கட் கூட்டங்களை ஒருங்கு இணைத்தவர்கள் ஆரியரே. இவ்வாறு ஏற்பட்ட ஒருமைப்பாட்டிலே சில இடங் களில் இதன் கூறுகள் இரண்டறக் கலந்து விட்டன: சில இடங்களிலே, மேலெழுந்தவாரியாகவே ஒன்று படுத்தப்பட்டுள்ளன. இந்திய மக்களின் வரலாறு, சமயம், தத்துவம் - இந்தியாவின் தனிச்சிறப்பான பண்பாடு ஆகியன உருவாகுவதற்கு மிக முக்கியமான காரணியொன்ருக ஆரியமொழி இலங்கிற்று. ஒஸ்ரிக் மொழிபேசியமக்களும், திராவிடரும் அமைத்த அத்தி வாரத்தின் மேலேதான் ஆரியர் கட்டத் தொடங்கிய கூட்டான பண்பாடு இந்திய மண்ணிலே மலர்ந்தது. இப்பண்பாட்டினை வெளிப்படுத்தும் வாயிலாகவும், இதன் சின்னமாகவும் இவ் ஆரியமொழி விளங்கிற்று. வடமொழி, பாளி, வடமேற்குப் பிராகிருதம், அர்த்த மாகதி, அபப்பிரம்சம் முதலியனவாகவும், பிற்காலத் திலே ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஒரிய, வங்காளி, நேபாளி முதலிய பல மொழிகளாகவும் இவ்ஆரிய மொழி கிளைத்து வளர்ந்தது. இவ்வாருக இம்மொழி வெவ்வேறு காலங்களிலே வெவ்வேறு பிராந்தியங்களில் இந்திய கலாச்சாரத்துடன் அழிக்க முடியாத வகை யில் ஒருங்கு இணைந்து விட்டது.”*
'ஆரிய' என்ற பதம் உயர்குடிச் சேர்ந்த, மிகநேர் மையுள்ள சிறப்பு வாய்ந்த, பெருந்தன்மையுடைய, மிக மரியாதையுள்ள முதலிய பல கருத்துக்கள் கொண்டதாகும்."
ஆரியர் 'நோர்டிக்" எனவும் அழைக்கப்படுவர். தொடக்கத்தில் இவர்கள் உயரமானவர்கள்; வெண்ணிற முடையவர்கள்; மஞ்சள் அல்லது பொன்நிறக்கேசம் உடையவர்கள்; நீலக்கண்கொண்டிருந்தனர். இத்தகை

3
யோராகவே வேத இலக்கியத்தில் இவர்கள் ஓரளவு காட்சியளிக்கின்றனர். ஆணுல் காலப்போக்கிலே புதிய இருப்பிடத்தின் சீதோஷ்ண வேறுபாடு, பிறமக்களுடன் கொண்டிருந்த தொடர்பு முதலியனவற்ருல் நிறம் போன்றவற்றிலே மாற்றங்கள் ஏற்பட்டன. ஆஞல், மேற்குறிப்பிட்ட இயல்பு கொண்டோரை வட இந்தி யாவின் சில பகுதிகளிலும் 'மஹாராஷ்டிரம்" போன்ற இடங்களிலும் காணலாம்.8
ஆதி இருப்பிடம் ஆரியரின் ஆதி இருப்பிடம் எது என்பது பற்றி முற்றிலும் முரண்பட்ட கருத்துக்களும் அறிஞரிடை யிலே நிலவுகின்றன. இவர்கள் இந்தியாவின் பூர்வீக குடிகள் என ஒரு சாராரும், வெளியேயிருந்து வந்த வர்கள் என பிறிதொருசாராரும் கூறுகின்றனர். இவ் விருவகையான கருத்துடையோரிடத்தும் தனிப்பட்ட வகையிலே கருத்து வேறுபாடுகள் உள. இவற்றினைத்
தொகுத்துக் குறிப்பிடலாம்.
ஆரியரின் ஆதி இருப்பிடம் இந்தியாவெனக் கொள்ளு வோரிலே திரு. எம். எம். ஜா. பிரஹமர்ஷி தேசம் என்பர். கலாநிதி டி. எஸ். திரிவேத முல்தானி லூள்ள தேவிகா ஆற்றுப் பிரதேசம் என்பர்; திரு. எஸ். டி. கல்ல காஷ்மீர் ஹிமாலயப் பிரதேசம் என் பர். திரு. ஏ. சி. தாஸ், திரு. கே. எம். முன்ஷி சப்த சிந்து அல்லது பஞ்சாப் என்பர். இவ்வாறு கொள்ளு வோரிற் சிலர் ஆரியர் இந்தியாவிலிருந்து மேற்கே யுள்ள பிற இடங்களுக்கும் சென்றனர் எனக்கூறுவர்".
இவ் அறிஞர்களின் கருத்துப்படி, ஆரியர் வேற்று நாட்டவர் என்பதற்கோ, புலம் பெயர்ந்ததற்கோ தக்க சான்றுகளில. இருக்குவேதகால ஆரியர் சப்த சிந்துப் பகுதியினையே தெய்வத்தால் ஆக்கப்பட்ட தேசமாகவும் தாயகமாகவும் கொண்டனர். புலம்பெயர்ந்து செல்

Page 8
4.
வோர் தமது தாயகத்தினைப் பல நூற்ருண்டுகளின் பின்னரும் நினைவு கூருவர். ஆனல், ஆரியர் இவ் வாறு செய்திலர். ஆதி வடமொழிக்கும், ஆதி இரானிய மொழிக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கு மிடையிற் காணப்படும் ஒற்றுமையியல்புகள் புலப்பெயர்ச்சிக் கான சான்றுகளல்ல. மேலும், வேத இலக்கியம் மிகப் பழமையானது. வெளியிலிருந்து இவர்கள் வந்தவ ரெனின் ஏன் வரும் வழியில் இலக்கியம் இயற்றிலர்? இந்தியாவிற்கு வந்த பின்னரே இவர்கள் பண்பாட்டு மேன்மையடைந்தனர் எனக் கூறமுடியாது. இந்தியா விலிருந்தே இவர்கள் வெளியே சென்றிருப்பர். வேள் விச் சடங்குகள் இருக்குவேதம் தொகுக்கப்படுமுன் னரே இந்தியாவிலேற்பட்டு விட்டன."
ஆணுல் மேற்குறிப்பிட்ட கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது. முதலாவதாக, இந்தி யாவே அவர்களின் ஆதி இருப்பிடமாயின், அது முழு வதையும் ஆரியமயமாக்கிய பின்னரே வடமேற்கு எல்லையினைக் கடந்து இரானிற்கும், பிறமேற்கு ஆசிய நாடுகள்,ஐரோப்பா ஆகிய இடங்களிற்கும் சென்றிருப் பர். வரலாற்றுக்காலத்தில் இத்தகைய மக்கட்புலப் பெயர்ச்சி வடமேற்கு எல்லைக்கு ஊடாக நடைபெற்றி லது. இந்தியாவின் தென்பகுதியிலே திராவிட மொழி கள் பரந்து நிலவுவதே ஆரியர் வெளியே இருந்து வந்தமைக்குத் தக்கசான்று எனலாம். மேலும் வேத இலக்கியம் முழுவதையும் கூர்ந்து கவனிக்கும்போது ஆரியர் படிப்படியாக வடமேற்கு இந்தியாவிலிருந்து கங்கைச் சமவெளிக்கும் பின் தக்கணம், தென் இந் தியா ஆகியனவற்றிற்கும் சென்றமையினை அவதானிக் கலாம். அடுத்தபடியாக, வடமொழியுடன் தொடர் புள்ள பிறமொழிகள் ஐரோப்பாவிலேயே நெருங்கிக் காணப்படுகின்றன. ஆனல், ஆசியாவிலே வடமொழி யுடன் தொடர்புள்ள மொழிகள் சிதறிச் சில இடங்களி

5
லேயே நிலவுகின்றன. மேலும் இந்தியாவின் காலத்தால் முந்திய சிந்துச்மவெளி நாகரிகம் (ஹ்ரப்பாகலாச் சாரம்) ஆரியச் சார்பற்றதெனப் பல அறிஞர் கருது கின்றனர்.9
எனவே, ஆரியரின் ஆதி இருப்பிடம் இந்தியாவிற்கு வெளியே உளது எனலாம். இதனை அறிய இருக்கு வேதம், ஆதிக்கிரேக்கர், ஆதிஇரானியர் போன்ற பிற ஆரியரின் புராதன நூல்கள், தொல்பொருட்கள், ஒப் பியல்மொழிநூல், மானிடவியல்நூல் போன்றவற்றி னையே துணையாகக் கொள்ள வேண்டியுளது. இவற்றி னைத் துணைகொண்டு மிக முற்பட்டகால ஆரியரின் நாகரிகம், நடமாட்டங்கள், புலப்பெயர்ச்சி ஆகியவற் றினை ஒரளவு ஊகிக்கலாம்.
ஐரோப்பாவின் புராதனமொழிகளான கிரேக்கம், லத்தீன் போன்றவற்றினையும், வடமொழியினையும் பயின்ற மேஞட்டறிஞர் பலர் இவற்றிடையே நிலவிய ஒற்றுமையியல்புகளைக் கண்டு வியப்புற்றனர். இவை ஒரே மூலத்திலிருந்து முகிழ்த்திருக்கலாம் என முடிவு கட்டினர். எடுத்துக் காட்டாக, "வட மொழியின் தொன்மை எவ்வாருயினும், அது வியக்கத்தக்க அமைப் புக் கொண்டது; கிரேக்கத்திலும் பார்க்க முழுமையா னது; லத்தீனிலும் பார்க்க வளமுள்ளது. இவ்விருமொழி
களிலும் பார்க்க மிகநேர்த்தியானது; அப்படியாயினும் "
வினையடிச் சொற்கள், இலக்கண வடிவங்கள் ஆகியன வற்றில் இவ்விரண்டினுடன் தற்செயலாக ஏற்பட்டி ருக்க முடியாத நெருங்கிய தொடர்புள்ளதாய்க்கானப் படுகின்றது. இத்தொடர்பு மிகவலுவாகக் காணப்படு தலின், இவற்றை ஆயும் மொழிநூலறிஞன் எவனும் இவை அனைத்தும் ஒரு பொது மூலத்திலிருந்து தோன் றியவை என்பதை நம்பாதுவிடமாட்டான். கோதிக், கெல்ரிக் போன்றவையும் வடமொழி மூலத்தைக் கொண் டவையே. பழையபாரசீக மொழியுமிதே குடும்பத்தைச் சேர்ந்ததே" என்ற கருத்தினைச் சேர்வில்லியம் ஜோன்ஸ்

Page 9
6.
என்பவர் 1786-ல் வங்காளத்திலிருந்த வேத்தியல் ஆசிக் கழகத்தில் நிகழ்த்திய புகழ்பெற்ற விரிவுரையிலே தெரி வித்தார். இம்மூலமொழி இந்தோ-ஐரோப்பிய மொழி யெனப் பெயரிடப்பட்டது. இதனைப் பேசியமக்கள் இந்தோ ஐரோப்பியர் என அழைக்கப்பட்டனர். இதன் விளைவாக ஒப்பியல் மொழிநூல், மொழியியல் ஆகியன வற்றிற்கு வித்திடப்பட்டது. இதன்பின்னர் பேரா சிரியர் மகடிமுல்லரும் இதே கருத்தினைத் தெரிவித்தார். ஆனல், ஆரிய மொழிகளைப் பேசியோர் ஒரே இனத்த வராய் இருந்திருக்கத் தேவையில்லை. சில அறிஞர் இவர்கள் ஒரே இனத்தவர் எனவும் கருதுவர். ஆணுல் அக்கருத்துச் சரியன்று.
வடமொழிக்கும் பிற ஆரியமொழிகளுக்குமிடையில் உள்ள சொல் ஒற்றுமைகளைக் குறிப்பாக, உறவினர், தெய்வம், மிருகங்கள், எண்கள் முதலியனவற்றைக் குறிக்கும் சொற்களிலே காணலாம்.11 எடுத்துக்காட் டாக, சகோதரனைக் குறிக்கும் வடமொழிச் சொல்லான பிராதர் என்பதையும், அதே கருத்தினைக் கிரேக்கமொழி யிற் குறிக்கும் பிராதெர் என்பதையும், லத்தீன் மொழி யில் விரதர்,கெல்ரிக் மொழியில் பிறதிர்தியூத்தோனியக் சார்பான ஆங்கிலத்தில் பிரதர் என்பனவற்றையும் ஒப்பிடலாம்.? இதுபோலவே, தாய், தந்தையைக் குறிக்கும் மாதர், பிதர் ஆகிய வடசொற்கள் முறையே, மேற்ற, பேற்ற எனக் கிரேக்கத்திலும், மாற்ற, பாற்ற என லத்தீனிலும், மதிர், அதிர் எனக் கெல்ரிக்கிலும், மாடர், பாடர் எனத் தோக்கேரியத்திலும் வழங்குவன. தியூத்தோனியத்திலே வதர் எனும் சொல் தந்தையைக் குறிக்கும். தியூத்தோனியத்தைச் சேர்ந்த ஆங்கி லத்திலே வரும் மதர், வாதர் எனும் சொற்களையும் கவ னிக்கலாம். மேலும், தெய்வத்தினைக் குறிக்கும் தேவ என்ற வட சொல். தியுஸ் என லத்தீனிலும் தியளனக் கெல்ரிக்கிலும், திவர் எனத் தியூத்தோனியத்திலும்

7
திவொஸ் என லிதுவானியத்திலும் வழங்கும். இவை போலவே, சகோதரி, குதிரை, ஒன்று, பத்து, நூறு முதலியனவற்றைக் குறிக்கும் பதங்களிலும் ஒற்றுமை ugbT GB. 18
மேலும் ஆரியரின் தேரைக் குறிக்கும் ரத எனும் வடசொல்லினை இதே கருத்தில் லத்தீன் ரொத, கெல்ரிக் கில் ரொத், புராதன ஜேர்மானியத்திலும் லிதுவானியத் திலும் ரதஸ் என வரும் பதங்களுடன் ஒப்பிடலாம். இப் பதம் போலவே, சக்கரம், அச்சு, சில்லுக்குடம், நுகம் முதலியனவற்றைக் குறிக்கும் இந்தோ-ஐரோப்பியப் பதங்களிடையில் ஒற்றுமையுண்டு.14
இப்பெயர்ப்பட்ட பொதுச் சொற்கள், ஒப்பியல் மொழியியல், தொல்லியல், மொழியியற் புதைபடிவ ஆய்வியல் முதலியனவற்றின் துணைகொண்டு ஆதிஆரி யரின் நாகரிக நிலைகளை அறிவதற்கு அறிஞர் முயன்று சில முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர். இவற்றின்படி ஆதி ஆரியர் மிக உன்னதமான நாகரிகச் சிறப்புள்ள் வராய் இருந்திலர். அவர்கள் வியக்கத்தக்க மொழி யொன்றினைப் பேசி வந்தனர். சமூக ரீதியிலவர்கள் தம்மை நன்கு ஒழுங்குபடுத்தியிருந்தனர். மிகமோச மான சூழ்நிலையிற் கூட, அவர்களின் ஜனக்குழு ஒற்றுமை குலையவில்லை. பிற்காலத்தில் இவர்களுடன் தொடர்புற்ற பிறமக்கள் இவ் ஒற்றுமையினைக் கண்டு வியந்தனர். அவர்களின் சமூகம் குடும்பத்தினை அடிப் படையாகக் கொண்டிருந்தது. இக்குடும்பத்திலே தந்தை வழியுரிமையும், ஏகபத்தினி விரதமும் நில வின. தந்தைவழியுரிமையுடைய குடும்பமே இந்தியா விற்கு வந்த ஆரியர் மத்தியிலே கோத்திரம் அல்லது குலம் என அழைக்கப்பட்டது. பொதுவாகத்தலைவனைக் கொண்ட இத்தகைய குலங்களே சமூகத்திலிருந்தன.
இந்தோ ஐரோப்பியர் சிறந்த கற்பனையுடையவர் கள். தாங்கள் சென்ற இடங்களிற் கேற்றவாறு தம்மை

Page 10
8
ஒழுங்குபடுத்திக் கொண்டனர். இவற்ருல் அவர்களைப் பிறர் வெல்லமுடியாதிருந்தனர். ஆண் பெண் ஆகிய இருபாலார் மத்தியிலே நல்லுறவுகள் நிலவின. தாயா கவும், மனைவியாகவும், சகோதரியாகவும், மகளாக வும் பெண்ணினை அவர்கள் நன்கு மதித்தனர்; பெண் னின் பாதுகாவலராகவும் விளங்கினர். தாயாகப் பெண் குறிப்பிட்ட குலத்தின் மதிப்புள்ள ஆலோசக ராகவும் வழிகாட்டியாகவும் விளங்கினுள்.
அவர்களின் சமயத்திலே மனிதனுக்கு அப்பாற் பட்ட சக்திகளின் நன்மை சார்பான அம்சங்களே பிரதானமாக வற்புறுத்தப்பட்டன. தெய்வங்கள் மணி தரைப் போலன்றி மேலேயுள்ள உலகத்திலேதான் வாழ்பவர் என அவர்கள் கருதினர். தெய்வங்கள்ை மனித அம்சங்கள் கொண்டவராக அன்றிப் பெரும் பாலும் சக்திகளாகவே அவர்கள் போற்றினர். மனி. தப் பண்புகளையும் தெய்வங்களிலேற்றிக் கூறினர். ஆனல், இத்தகைய போக்கு மனித இயல்புள்ள தெய் வங்களை வணங்கிய மக்களின் தொடர்பு கொண்ட பின்னரே, அவர்கள் மத்தியிலேற்பட்டது. அவர்கள் வணங்கிய தெய்வங்களில் எடுத்துக் காட்டாக வான மாகிய தந்தை, மாதாவாகிய பூமி, சூரியன், உஷா, காற் றுத் தெய்வம் முதலியோரைக் குறிப்பிடலாம். ஆதி எகிப்தியர், சுமேரியர் வணங்கிய தெய்வங்களைப் போல இவர்கள் வணங்கிலர். மேலும், ஆதி ஆரியரின் அன்ருட வாழ்விலே தீ பெரியதோரிடத்தைப் பெற் றிருந்தது. குளிர்வலய மக்களுக்குத் தீயின் இன்றிய மையாமை வெள்ளிடைமலை. தீ வணக்கமும் பிரதான இடம் பெற்றிருந்தது.
புராதன இந்தோ-ஐரோப்பிய வேர்ச் சொற்கள், அவற்றிலே காலப்போக்கிலேற்பட்ட மாற்றங்கள் முதலியனவற்றினை அடிப்படையாகக்கொண்டு பிரான் டென்ஸ் ரென் என்ற அறிஞர் சில கருத்துக்களை வெளி யிட்டுள்ளார். அதாவது ஆதி ஆரியர் பெரும்பாலும்

9
வரண்டபாறைப் பிரதேசத்தில் வாழ்ந்தனர். அங்கு "வில்லோ" "ஒக்’ பேர்ச்’ பிசினுள்ள மரம் முதலியன வளர்ந்தன. ஆணுல் பெரிய காடுகளில்லை. பழமரங்களு மில்லை. அவர்கள் காட்டுப்பன்றி, ஓநாய், நரி, கரடி" முயல், சுண்டெலி முதலிய காட்டு மிருகங்களையும் பசு, செம்மறியாடு, வெள்ளாடு, குதிரை, நாய், பன்றி முதலிய வீட்டுமிருகங்களையும் அறிந்திருந்தனர். நிலம், நீர் ஆகிய இரண்டிலும் வாழும் மிருகங்களையோ மீனையோ அறிந்திலர். காலம் செல்லத் தொடக்கத்திலி ருந்த இடத்தினை விட்டுத் தாழ்ந்த சதுப்பு நிலமுள்ள பிரதேசத்தையடைந்தனர். அவ்விடத்து, மேலும் புதிய மிருகிங்கள், தாவரங்கள் காணப்பட்டன. யூரல் மலைக் குத் தெற்கேயும் கிழக்கேயுமுள்ள வடக்குக் கேர்க்கிஸ் ஸ்ரெப்பிஸ் (புற்றரைகள்) பகுதியே அவர்களின் புரா தன இருப்பிடமென்பது இந்தோ-ஐரோப்பிய மொழி யின் மிகப்பழைய நிலைபற்றிய ஆய்வினுற் புலப்படும். அத்துடன் அவர்களின் புதியவிருப்பிடம் கார்ப்பேதி யன் தொடக்கம் போல்ரிக் வரையுள்ள சமபூமியே என்பது பிற்பட்ட இந்தோ - ஐரோப்பிய மொழிநிலை பற்றிய ஆய்வினுலறியப்படும்,
இவர்கள் ஓரளவு நாடோடிகளாக மந்தைமேய்த் தும், புராதன விவசாயம் செய்தும் வந்தனர். மந்தை களே இவர்களின் பெருஞ்செல்வமாகும். இதுபற்றிப் பின்னர் கூறப்படும். இவர்கள் குதிரையினைக் குறிப் பாகப் போரிலே நன்கு பயன்படுத்தினர்.18 இவ்வாறு இந்தோ - ஐரோப்பிய நாகரிக நிலையினைப் பல்வேறு ஆய்வுகளின் மூலம் ஓரளவாவது திரும்பவும் அமைத் துக் குறிப்பிடுவர்.
இவர்களின் ஆதி இருப்பிடம் பற்றித் தொடர்ந்து ஆயுமுன் இந்தியர்விற்கு வந்த ஆரியரின் அயலவராக வும், மிகப்பழைய காலத்திலே சகோதரராகவும் விளங் கிய స్టే இர்ானியூருக்கும், இந்த்ோ -ஆரியருக்கு மிடையிலே காணப்படும் ஒற்று மையம் சங்களைக் குறிப்பிடலாம். سی

Page 11
O
இந்தோ - ஆரியஇந்தோ - இரானியத் தொடர்புகள்
இந்தோ-ஆரியரின் ஆதி ஏடு இருக்குவேதம், ஆதி இரானியரின் ஆதி ஏடு அவெஸ்தா. இருக்குவேதம் போலன்றி அவெஸ்தா கி. மு. 7-ம் நூற்றண்டளவிலே தோன்றிய சொருஸ்ரர் எனும் பெரியாரின் சீர்திருத் தங்களால் ஓரளவு மாற்றம் அடைந்துள்ளது. அவ் வாருயினும் அவெஸ்தாவின் மொழிநடை, யாப்பு, பொருள் ஆகியனவற்றிற்கும் இருக்குவேதத்தின் மொழி நடை, யாப்பு பொருள் ஆகியனவற்றிற்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. இதனுலே மொழி நூலறிஞர் சிலர் இருக்குவேத மொழியும், பழைய இரானிய மொழியும் ஒரு மொழியின் பிர தேச வேறுபாடுகள் என்பர். இருக்குவேத ஆரியரும் ஆதி இரானியரும் தம்மை 'ஆரிய', 'ஐர்ய" என ஒரு பொதுப் பெயராலழைத்தனர். ஒருவேளை, பொதுவான ஆற்றுப் பெயர்களையும் அறிந்திருந்தனர் போலும், எடுத்துக்காட்டாக இருக்குவேதத்திலே வரும் சரஸ் வதி, ஹரஉவதிஸ் என அவெஸ்தாவிற் குறிப்பிடப் படுகின்றது. இருசாராரும் பெரும்பாலும் பொதுத் தெய்வங்களை வணங்கினர். உதாரணமாக இருக்கு வேத மித்ர, வருண, சோம. அர்யமன் நாசத்ய போன்ற தெய்வங்கள் முறையே மித்ர, அஹ"ரேமஸ்த, ஹயோம, அர்யமன், நாசத்ய என அவெஸ்தாவில் அழைக்கப்படுகின்றனர். பல சொற்களிலும் நெருங் கிய ஒற்றுமை உண்டு. எனவே, "இருக்குவேதமும், அவெஸ்தாவும் ஒரே ஊற்றிலிருந்து பாயுமிரு நதிகள்’ என ரொத் எனும் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளமை பொருத்தமானது; இருக்குவேத ஆரியரும், ஆதி இரானியரும் முன்னுெரு காலத்தில் ஒரே மக்கட் கூட்டத்தினராய் வாழ்ந்து பின் பிரிந்தனர் போலக் காணப்படுகின்றனர். இவ்வாறு இரு சாராரும் ஒன்ருக வாழ்ந்த காலம் இந்தோ இரானிய காலமெனவும்,

11
(ஒன்ருயிருந்தபோது) இவர்களை இந்தோ - இரானியர் எனவும், அழைக்கலாமென அறிஞர் கருதுவர். ஆரியரின் ஆதியிருப்பிடம் பற்றி ஆயும்போது இந்தோ இரானியகாலம் ஒரு முக்கியமான காலகட்ட மெனலாம். இரானில் ஆரியரின் சுவடுகள் உள்ளன. 17 மேற்குறிப்பிட்ட நெருங்கிய கலாச்சார ஒற்றுமை பிற இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கிடையிலே காணப்பட்டிலது.
ந்தோ - ஐரோப்பிய மொழிகள்
த 원
நூறு எனும் எண்ணைக் குறிக்கும் பதத்தினை அடிப் படையாகக் கொண்டு இந்தோ ஐரோப்பிய மொழி களிலே பெரும்பாலும் ஆசியாவிலுள்ளவை(தோகேரிய மொழிதவிர்த்து) சதம் * எனவும் ஐரோப்பாவி அலுள்ளவை "கென்ரும்" எனவும், அறிஞரால் இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன.** இந்தோ ஐரோப் பிய மொழிக் குடும்பத்திலே முக்கியமாகப் பத்து மொழிகள் உள்ளனவாகப் பேராசிரியர் ரி. பருே குறிப்பிட்டுள்ளார்.19 அவையாவன;
1. ஆரிய அல்லது இந்தோ - இரானியமொழி: இதிலே, புராதன பாரசீகமொழி இந்தியாவிற்கு வந்த ஆதி ஆரியரின் மொழி ஆகியன அடங்குவன. இவற் றுரீள்ளே காலத்தால் முந்திய இலக்கியம் இந்தியாவிற்கு வந்த ஆரியருடைய இருக்குவேதமாகும். இதுவே, இந்து - ஐரோப்பிய மொழிகளில் எழுந்த காலத்தால் முந்திய மிகப் பழைய நூலாகும். ஆதிப்பாரசீகரின் காலத்த்ால் முந்திய நூல் அவெஸ்தா.
2. போல்ரிக்-சிலாவேனிய மொழிகள்: முன்னையதிலே லிதுவானியம், லெற்றிஸ், வழக்கற்ற பிரஸ்ஸிய மொழி ஆகியனவும் பின்னையதிலே, ரூசிய, போலிஸ் செக், புல்கேரிய மொழிகளும் பிற சிலவும் அடங்குவன.

Page 12
12
3. ஆர்மேனியமொழி: இது கி. பி. 5-ம் நூற்ருண்டு தொடக்கம் அறியப்படுகின்றது.
4. அல்பேனிய மொழி: இது தற்காலத்திலே தான் அறியப்படுகின்றது. இதுவரை குறிப்பிட்ட நான்கும் சதம் மொழிகள்.
5. கிரேக்கம் : இதிலே பலகிளை மொழிகள் உள் ளன. கி. மு. 800 அளவிலே வாழ்ந்த ஹோமரின் பாடல்களே காலத்தால் முந்திய கிரேக்க இலக்கிய் மாகும்.
8. லத்தீன் : இதிலிருந்துதான் பி ரா ஞ் சியம், இத்தாலியம், ஸ்பானியம், போர்த்துக்கேயம், ரூமே னியம் முதலியன முகிழ்ந்தன. லத்தீன் இலக்கியம் கி. மு. 200 அளவில் வளரத் தொடங்கியது. இதற்கு முற்பட்ட காலச் சில சாசனங்கள் உள்ளன.
7. கெல்ரிக் இதிலிருந்து ஐரிஸ், வெல்ஸ் முதலி யன வளர்ந்தன. காலத்தால் முந்திய ஐரிஸ் பாடல் கள் கி. பி. 8-ம் நூற்றண்டளவைச் சேர்ந்தவை.
8. ஜேர்மானியம் : இதிலிருந்து வழக் கிற ந் த கோதிக், ஸ்காந்திநேவியன், மேற்கு ஜேர்மானியம் முதலியன தோன்றியன. கடைசியாகக் குறிப்பிட்ட திலிருந்து தற்கால ஜேர்மானியம், ஆங்கிலம் முதலி யன முகிழ்ந்தன, காலத்தால் முந்திய ஜேர்மானிய நூல் கி. பி. 4-ம் நூற்ருண்டில் உல்வில என்பவரால் எழுதப்பட்ட கிறிஸ்தவவேத மொழிபெயர்ப்பாகும்.
9. தோக்கேரியன் : மத்திய ஆசியாவிலே, சீனத் துருக்கிஸ்தானில் கி. பி. 6-10 நூற்ருண்டு காலத் திய பெளத்த ஏட்டுச்சுவடிகளில் இது இக்காலத்திலே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று வழக்கற்ற மொழி யாகும்.

13
10. ஹிற்றைற் - இது மேற் கா சி யா விலே யு ள் ள போகஸ்கோயில் ஆப்பு எழுத்துக்களில் எழுதப்பட் டுள்ள சாசனங்களில் இக்காலத்திலே கண்டுபிடிக் கப்பட்டது. இச்சாசனங்களின் காலம் கி. மு. 19-12 நூற்ருண்டு வரையாகும். இவற்றிலுள்ள மொழி வழக் கற்று விட்டது. பிற்குறிப்பிட்ட ஆறு மொழிகளும் கென்ரும் வகையின.
வேறு எந்த மொழிக்குடும்பத்திலும் பார்க்க இந்தோ-ஐரோப்பிய மொழிகளே உலகின் பலபாகங் களிலும் நிலவுகின்றன. அத்துடன் உலகிலுள்ள இலக்கியவளமுள்ள மொழிகளிற் பலவும் இம்மொழிக் குடும்பத்தனவே, இதனுல், இந்தோ-ஐரோப்பியரின் ஆதி இருப்பிடம் ப்ற்றிப்பல ஆய்வுகள் நடைபெற்ற மையினுலே வியப்பில்லை.
ஆரியரின் ஆதி இருப்பிடம் ஆசியாவிலா, ஐரோப்பாவிலா?
ஆராய்ச்சி நன்கு வளர்ச்சியுருத காலத்திலே, மத்திய ஆசியாவே ஆரியரின் ஆதி இருப்பிடம் எனப் பலர் கருதின்ர். ஆனல் பெரும்பாலான இந்தோ-ஐரோப் பிய மொழிகள் ஐரோப்பாவிலே நிலவுவதால் அங்கேயே அவர்களின் ஆதி இருப்பிடம் இருந்திருக்கவேண்டும் எனவும் ப்லர் பிற்காலத்திலே கொண்டனர். மத்திய ஆசியாவிற்கு நீண்டகாலத்தின் பின்னரே வந்திருப்பர் எனவாதித்து வரலாயினர். ஐரோப்பாவின் தென்பகுதி, மேற்குப் பகுதி ஆகியனவற்றில் ஆரியரின் நடமாட்டங் கள் காலம் செல்ல ஏற்பட்டன. எனவே, ஐரோப்பாவின் மத்திய பகுதி, கிழக்குப்பகுதி, ஆகியன அவர்களின் ஆதிஇருப்பிடம் எனக்கருதப்பட்டது. ஆகவே, மத்திய ஆசியாவின் மேற்குப்பகுதி ஐரோப்பாவின் கிழக்குப் பகுதி ஆகியனவற்றிலேதான் அவர்களின் ஆதி இருப் பிடத்தைத்தேட வேண்டியுள்ளது. h

Page 13
14
ஆரியரின் ஆதி இருப்பிடம் இந்தியாவிற்கு வெளியே ஆசியாவிலுள்ளதென ஒரு சாரரும், ஐரோப்பாவில் உள்ளதெனப் பிறிதொரு சாராரும் கூறுகின்றனர். முதலில் ஆசியாவே அவர்களின் ஆதி இருப்பிடம் எனக் கொள்ளுவோரின் கருத்தினைக் குறிப்பிடலாம். இதிலும் கருத்து வேறுபாடு உள்ளது. மத்திய ஆசி யாவே (பமீர் - பக்ரியப் பகுதிகள்) ஆரியரின் ஆதி இருப்பிடம் எனக் கூறியோரிலே பேராசிரியர் மகஷ் முல்லர் குறிப்பிடற்பாலர்; இவ்வாறு கொள்ளுதற்குச் சில காரணங்கள் உள்ளன. முதலாவதாகச் சதம்', *கென்ரும் பிரிவுகளுக்குத் தகுந்த மையம் மத்திய ஆசியா. ஆதிகால நாகரிக மையங்கள் பல ஆசியா விலேதான் உள்ளன. பிற்காலத்திலே பெருமளவிலே நடைபெற்ற மக்கட் புலப்பெயர்ச்சிகள் மத்திய ஆசி யாவிலிருந்து ஏற்பட்டன. ஆதி ஆரியர் கடலுடன் தொடர்பு கொண்டிருந்தனர் போலும். ஆதி இரானி யரின் வேதமான அவெஸ்தாவின்படி மக்கள் மத்திய ஆசியாவிலே (அர்யானம் வையங்) உண்டாயினர்.
மேலும், அனவ் போன்ற இடங்களிலே காணப் படும் மையூசிய பாத்திரங்களைப் பயன் படுத்திய மக்கள் குதிரைவளர்த்தனர் எனவும், ஒரு சாரார் கூறுவர். மத்திய ஆசியா ஆரியரின் ஆதி இருப்பிடம். (Unheimat) என்ற கருத்தினைப் பேராசிரியர் ஆர். என். தண்டேகர் மீண்டும் வற்புறுத்தியுள்ளார். 90 யூரல் தொடக்கம் வட அல்தாய் வரையுள்ள வடகேர்க்கிஸ் புற்றரைகளே ஆரியரின் ஆதி இருப்பிடமாகும் என் பதே இவரின் கருத்தாகும். இவ்விடத்தில் ஆதி ஆரிய ரின் நாகரிக நிலைகளுக்குத் தக்க சான்றுகள் உள் ளன என இவர் கூறுவர்.
பேராசிரியர் சய்ஸ் அனட்டோலிய பீடபூமியே ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். அண்மைக் காலத் திலே ருெபேட்ஷேவர் என்பவர் திபெத் ஆரியரின் ஆதி

15
இருப்பிடம் எனக் குறிப்பிட்டுள்ளார்.21 இதுபோன்ற கருத்தினை ஏற்கனவே பர்ஜிதர் போன்றேர் கூறியுள் ளனர்:
புகழ்பெற்ற இந்திய தேசிய விடுதலை வீரரான பால கங்காதர் திலக் வடதுருவமே ஆரியரின் ஆதி இருப் பிட்ம் என்பர்.?? இவர் தமது கருத்திற்குச் சான்ருக வேதங்களிலுள்ள வானநூற்குறிப்புகளைக் கொண் டுள்ளார். ஆனல், இவரின் கருத்தினைப் பலர் ஏற்றிலர்.
ஐரோப்பாவே ஆரியரின் ஆதி இருப்பிடம் எனக் கொள்வோரின் கருத்துக்களை கவனிக்கலாம். இதிலும் கருத்து வேறுபாடு உள்ளது. பேராசிரியர் கைல்ஸ் கங்கேரி சமவெளியியே ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். 2* இவர்களை இவ்வறிஞர் "விரொஸ்” என அழைத்துள்ளார். ‘விரொஸ்" விவசாயம் செய்தனர் ; மந்தை மேய்த்தனர், எனக் கூறுவர். ஆணுல் கைல்ஸ் மொழிநூல் வல்லுநர்; தொல்லியலாய்வாளரல்லர்.
வட ஐரோப்பாவே ஆரியரின் ஆதி இருப்பிடம் என பென்கா, லதம் போன்ற ஆய்வாளர் கூறியுள் ளனர். இவர்களின் கருத்துப்படி நோர்டிக் இனத்த வர்கள் நாகரிகமுள்ளவர்கள். பென்கா, கைகர் போன் ருேர் ஜேர்மனியையும், லதம் போன்ருேர் ஸ்காந்தி நேவியாவையும் ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர்.?* பேராசிரியர் ஜே. சி. மையேர்ஸ், ஸ்கிரேடர், கோர்டன் சைல்ட், பி. கே. கோஸ் போன்றேர் தென்ரூசியாவே ஆரியரின் ஆதி இருப்பிடம் என்பர். 28 கஸ்பியன் கடல் தொடக்கம் நீப்பர் வரையுள்ள பிரதேசத்திலே சுருங்கிய எலும்புக் கூடுகள் கொண்டுள்ள கல்லறை கள் உள்ளன. இவை சிவப்புக்களி மண்ணுலே மூடப் பட்டு மேலே மேடொன்று (குர்க்கன்) கொண்டுள் ளன. கல்லறைக்குமேலே, மண்தூவுதல், மேடையைச் சுற்றி மரவேலியிடுதல் ஆகியன இருக்குவேதம் 10-18-4,

Page 14
16
18-3-லே தொனிக்கின்றன. இங்கு வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் உயரமுள்ளவர்கள்; பெரிய மண்டை யோடு உடையவர்கள். இவர்களைப் பொதுவான நோர் டிக் இனத்தவர் எனலாம். இவ்விடத்திலே நிலவிய பண்பாடு ஒரே தன்மையானது. இம்மேடுகளிலே (குர்க்கன்களிலே) செம்மறியாடு, மாடு, குதிரை ஆகி யனவற்றின் எலும்புகள் உள்ளன. எனவே இம்மக்கள் மந்தைமேய்த்த நாடோடிகளா ? சக்கரமுள்ள குதிரை வண்டிக்காரரா ? மேடுகளின் மேற்காணப்படும் தானி யங்கள் விவசாயத்திற்குச் சான்ருகும் எனவும் சிலர் கருதுவர். இக் கல்லறைகளால் அறியப்படும் நாகரி கத்திலே கல், செம்பு, வெண்கலம், முதலியன இடம் பெற்றுள்ளன, கல், செம்பு, " ஆதியனவற்றலான துளையிட்ட கோடரிகள், அம்புகள், ஈட்டிகள் முதலிய கருவிகள் உள்ளன, இத்தகைய சின்னங்கள் ம்ைக் கோப் போன்ற இடங்களிலே கிடைத்தன; மேலும், இப்பிரதேசத்திற்கு வெளியே ரேப்கிஸர், ருறங்ரேப் போன்ற இடங்களிலும், அநட்டோலியாவிலும் உள்ளன.
மேலும், தேன் உற்பத்திக்குத் தேவையான எலு மிச்சைமரம், "பீச் மரம் முதலியனவுமிங்கு வளர்ந் தன. இருக்குவேதத்திற் கூறப்படும் ரசா வொல்கா வின் பழைய பெயரான ரா ஆக இருக்கலாமெனவும் சிலர் கருதுவர். பொதுவாக அறிஞர் பலர் இந்தோஐரோப்பியரின் ஆதி இருப்பிடம், கலாச்சாரம் முத லியனபற்றிக் கூறுவனயாவும் பிறவற்றிலும் பார்க்க மேற்குறிப்பிட்ட கலாச்சாரத்துடன் பெருமளவு ஒத் துக் காணப்படுகின்றன. எனவே, ஆதி ஆரியர் இங் கிருந்து பிற இடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர் என வும் கொள்ளலாம் என்பர். மேலும், நெஹ்றிங் என்ற அறிஞர் ஆதி ஆரியர் ‘ரிப்பொல்ஜி கலாச்சாரத் தினைக் கொண்டிருந்தனர் எனவும், அவர்களினிருப் பிடம் தென்ரூசியாவிலே மட்டுமன்றி மேற்கேயுமிருந்

17
தது என்பர். 29 அண்மைக் காலத்திலே பிரான் டென்ஸ்ரென் என்பவர் சொற்பொருளாராய்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு ஆரியரின் ஆதி இருப்பிடம் மலைத்தொடரின் அடிவாரத்திலுள்ள புற்றரையெனவும் அது யூரல் மலைக்குத் தெற்கேயுள்ள வடமேற்குக் கேர்க்கிஸ் புற்றரைகள் எனவும் கூறுவர். " மேலும், அவரின் கருத்துக்கள் சில குறிப்பிடற்பாலன. மொழி யியற்சான்றினைக் கொண்டு நோக்கும்போது புராதன இந்தோ - ஐரோப்பிய வரலாற்றில் இரு காலப்பகுதி கள் உள்ளன. அவையாவனி
1. காலத்தால் முந்திய பகுதி-அதாவது, இந்தோ - ஐரோப்பியர் யாவரும் ஒன்ருக வாழ்ந்த காலம் அல்லது இந்தோ-ஐரோப்பியர் காலம்.
2. பிரதான மையத்திலிருந்து இந்தோ - இரானியர் பிரிந்து புதிய சுவாத்தியமுள்ள பிறிதோரிடத்திற் குச் சென்றுவிட்ட காலம்.
இந்தோ-இரானியர், ஹிற்றைற் மக்கள் ஆகியோ ரின் முன்னுேர் கோகஸஸைத் தாண்டிச் சின்னுசியா, மெசொப்பொத்தேமியா, இரான் ஆகிய இடங்களுக் கும், பின் இந்தியாவிற்கும் வந்திருப்பர். அல்லது, ஒரு பகுதியினர் பிரதான மையத்திலிருந்து புலம் பெயர்ந்து இரானிய பீடபூமிக்கும் பின் இந்தியாவிற் கும் வந்திருப்பர், பிரதான மையத்திலிருந்து பிறி தொரு பிரிவினர் மேற்கே, போலந்து எனும் புதிய இடத்திற்குச் சென்றிருப்பர். இதைவிட, கார்ப்பேதி யன், கிழக்கு ஐரோப்பா முதலிய பகுதிகளுக்கும் புலம்பெயர்ந்து பரவினர் எனலாம். பிரான்டென்ஸ் ரெனின் கருத்துக்கள் பெருமளவு நியாயமானவை; மிகத்திட்டவட்டமான மொழியியல், தொல்லியற்சான்

Page 15
18
றுகளின் அடிப்படையிலமைந்துள்ளவை. ?? பொதுப் பட நோக்கும்போது, யூரல் மலைக்குத் தெற்கேயுள்ள பரந்த ஆசியச் - ஐரோப்பிய சமவெளியே ஆரியரின் ஆதி இருப்பிடம் என அறிஞரில் ஒரு சாரார் நன்கு எடுத்துக்காட்டியுள்ளனர். 2? ஆரியரின் ஆதி இருப் பிடம் தென்ரூசியா எனப் பேராசிரியர் ரி, பருே சில காலத்திற்குமுன் கூறியிருந்தார். 89 ஆனல், அண்மை யில் இக்கருத்தினை மாற்றியுள்ளார் என்பது பின்னர் கூறப்படும்.
ஆரியரின் புலப்பெயர்ச்சிகளும் காலமும்
ஆரியரின் புலப்பெயர்ச்சிகள் அவற்றின் காலம், இயல்புகள் ஆகியன பற்றிக் கலாநிதி சுப்பராவ் குறிப்பிட்டுள்ளவை கவனித்தற்குரியன. " கி. மு. இரண்டாம் ஆயிரம் ஆண்டின் பிற்பாதியிலே மேற்கு ஆசியா அடங்கலும் மக்களின் கொந்தளிப்புள்ள புலப் பெயர்ச்சிகள், அழிவுகள், புதிய மொழிகள் தோன்றல் முதலியன அநட்டோலியா தொடக்கம் நிலவின. மேற்குறிப்பிட்டவை இந்தோ-ஐரோப்பியரின் வருகை யாலே பலநாடுகளிலே காணப்பட்டன. இவற்றின் தாக்கத்திற்கு இந்தியா தப்பவில்லை. ஆனல் ஒரு முக்கியமான குறிப்பினை நினைவிலிருத்தவேண்டும். வன் செயலில் ஈடுபட்டும், ஓரளவு மந்தை மேய்த்தும் வந்த மக்கள் தாம் வென்று அடிப்படுத்தியோரின் கலாச் சார அம்சங்கள் பலவற்றை மேற்கொண்டனர். இவ் வாறு, பழைய உலகனைத்திலும் ஆரியர் தெளிவற்றும் உறுதியற்றும் காணப்படுகின்றனர். ஆனல், நாகரிக வரலாற்றிற்கு அவர்களின் மொழிகள் முதுசொத்தாகக் கிடைத்துள்ளன.”** இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பர வுதலும் குதிரையினைப்பழக்குதலும்அதைத் தொடர்ந்து ஏற்பட்ட எளிதிற் செல்லும் போர்த்தேர் உபயோகமும் ஒரளவு சமகாலத்தவை. ஆரியரின் நாகரிகத்துடன்

9
தொடர்பான மிருகங்களிலே பசுமட்டுமன்றிக் குதி ரையும் குறிப்பிடற்பாலது. ?? குதிரைகள் காட்டுமிரு கங்களாகத் தென்ரூசிய, உக்றெயின் புற்றரைகளிலே திரிந்தன; பின்னர் மத்திய ஆசியாவுக்கும் கொண்டு ' செல்லப்பட்டன. கி. மு. 2000 அளவிலே மனிதன் இவற்றை நன்கு பயன்படுத்தி வந்தான். வேத இலக் கியத்திலே வரும் குதிரை பற்றிய குறிப்புகள் மத்திய ஆசியப் புற்ற்ரைகளில் (ஸ்ரெப்பிஸில்) வாழ்ந்த வற் றினை நினைவூட்டுவன. ஆரியருக்குப் பெரும்பாலும் குதிரை தேர் இழுக்கும் மிருகமாகவே போருக்கும், சவாரிக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கி. மு. 20001500 அளவிலே தென்ரூசியாவிலே குதிரை வளர்க்கப் பட்டது. காலத்தால் முந்திய மைக்கொப் கல்லறையி லுள்ள வெள்ளிக் கிண்ணத்திலும், அனவ், சியல்க் போன்ற இடங்களிலுள்ள தொல்லியற் சின்னங்களி லும் குதிரையின் வடிவம் காணப்படுகின்றது. ஆரியர் குதிரை உபயோகத்தினைத் தொடக்கி வைத்திலர்; ஆஞல், அதனை விரைவான போக்குவரத்துச் சாதன மாக்கினர் என்று கூறுதலே பொருத்தமானது. மேற் காசியாவிலே சீரியாவிலுள்ள சாசனங்களிலும், கஸ் ஸ்ைற், மித்தானிய மன்னர் சாசனங்களிலும் குதிரை பற்றிய குறிப்புகள் வருகின்றன. ** இந்தோ-ஐரோப் பியர் புலப்பெயர்ச்சி பற்றிய சான்றுகள் திட்டவட்ட மாகக் கிடைத்தில, எனினும், சிலவற்றைக் குறிப்பிட லாம். வடபலுக்கிஸ்தானிலே ரணுகுந்தை, டபர்கொற் முதலிய இடங்களிலே பல குடியிருப்புகள் முற்ருகவே வன்முறைச் செயல்களால் அழிக்கப்பட்டதற்கான சின்னங்கள் உள்ளன. தென்பலுக்கிஸ்தானிலுள்ள சாஹிதும்ப் கல்லறையிலே செப்புத்தகடு முத்திரைகள் (இலச்சனைகள்) செப்பினுற் செய்த துளை யு ள் ள கோடரி, காலுள்ள கிண்ணங்கள் முதலியன கிடைத் துள்ளன. இம்முத்திரைகள் இரானிலுள்ள அனவ் (iii) கிஸார் (it) தாலச்சின்னங்களிற் கிடைத்தவ்ற்றினைப்

Page 16
20
போன்றவை. மேற்குறிப்பிட்ட கோடரிவகை இது வரை இந்தியாவிற் கிடைத்திலது. இது மேற்காசிய வன்கயுடனும், தென் ரூசியாவிலுள்ள மைக்கொப் சார்ஸ்கய போன்ற இடங்களிற் கிடைத்தவற்றுடனும் ஒப்பிடற்பாலது. 54
தென்ரூசியப் புற்றரைகளிலிருந்து ஆதி ஆரியர் மேற்கு, தெற்கு, கிழக்குத் திசைகளை நோக்கிப் புலம் பெயர்ந்திருப்பர்,85 மேற்கே சென்றவர்களும் தெற்கே வந்தவர்களில் ஒரு சாராரும் மேற்கு, தெற்கு ஐரோப் பாவிலே குடியேறியிருப்பர். கிழக்கேயும், தெற்கேயும் சென்ருேர் இரான் அதற்கு மேற்கேயுள்ள மேற்கு ஆசியப் பகுதிகள், Sögust ஆகிய இடங்களை நோக் கினர். கிழக்கு ஐரோப்பாவிலும், மேற்கு ஆசியா விலும் ஆரியரின் நடமாட்டங்களைக் காட்டும் சில சான்றுகள் கிடைத்துள்ளன. கி. (p. 2300 96ts அல்லது அதற்குச் சில நூற்றண்டுகளின் முன் ஆதி ஆரியர் புலம்பெயரத் தொடங்கியிருப்பர். அவர்களில், ஒரு பிரிவினரான ஆதிக்கிரேக்கர் கி. மு. 2300-க்குச் சற்றுப்பின்னரே கிரீசிற்கு வந்தனர். கி. மு. 16-ம் நூற்றண்டளவிலே, ஆரியர் மேற்கு ஆசியாவிலே காணப்பட்டனர். பழைய புகழ்பெற்ற T மெசொப் பொத்தேமிய நாகரிக எல்லையிலும் ஆரியர் சிலர் வாழ்ந்தனர். அங்கிருந்தும் நாகரிக அம்சங்கள் சில வற்றைப் பெற்றனர். கி. மு. 16-ம் நூற்றண்டளவிலே மெசொப்பொத்தேமியாவை ஆண்ட கஸ்ஸைற் மன்னர் இந்தோ - ஐரோப்பியப் பெயர்கள் தரித்திருந்தனர். எடுத்துக்காட்டாக அர்த்தமன்ய, அர்ஸவிய, யஸ்தத, சுத்தர்ன போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.98 இவர்கள் வடக்கே அல்லது வடகிழக்கேயிருந்து வந் திருப்பர். கி. மு. 14-ம், 15-ம் நூற்றண்டுகளில் ஆட்சி புரிந்த மித்தானிய மன்னர் பெயர்களிலே இந்தோஐரோப்பியப் பெயர்கள் பல காணப்படுகின்றன.

2.
எகிப்திலுள்ள எல் அமர்ணுவிற்கும் சின்னுசியாவில் உள்ள ஹிற்றைற் தலைநகரான போகஸ்கோய்க்குமி டையிலே நடைபெற்ற ராஜதந்திரத் தொடர்புகளில் இவற்றைக்காணலாம். ஹிற்றைற் மன்னரான சுபிலு லியுமவிற்கும், மித்தானிய மன்னரான துஸ்ரத்தவின் மகன் மத்தியுசாவிற்குமிடையிலே கி. மு. 1380- லே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை குறிப்பிடப் பாலது. ?" இதிலே, மித்தானிய மன்னன் தான் வழிபட்ட மி-இத்ர (மித்திரன்), உருவன (வருணன்) இந்தர (இந்திரன்), நச. அத்தி இயன்ன (நாசத்ய) ஆகிய தெய்வங்களைச் சாட்சியாக விளித்து வணங்கு கிருன். எனவே, கிழக்கே சென்ற ஆரியரின் தெய்வங் களை மித்தானியரும் வணங்கியிருந்தனர். மேலும், கூடுதலான சான்று ஒன்றினைக் குறிப் பி ட லா ம். போகஸ்கோய் சாசனங்களிலே குதிரைச் சவாரிபற் றிய நூலொன்று அரைகுறையாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடற்பாலது. இது கி. மு. 14-ம் நூற்ருண்டள வைச் சேர்ந்ததாகும். இதனைக் கிக்குலி எனும் மித் தானிய மன்னன் எழுதினுன், இதிலே திருப்புதல் களுக்குப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் வடமொழிச் சொற்களைப்போன்றவை. எடுத்துக்காட்டாக ஐகவர்த் த்ன, தேரவர்த்தன. பஞ்சவர்த்தன என்பன முறையே ஒன்று, மூன்று, ஐந்து திருப்புதல்களுக்குப் பயன் படுத்தப்பட்டன.98 குதிரைச்சவாரியினை ஆதி ஆரியர் இந்தியாவிலும் சிறப்பாக ப் பயன்படுத்தினர். தொல்லியல் ரீதியிலும், மொழியியல் ரீதியிலும் மேற் குறித்த சான்று கி. மு. இரண்டாயிரம் ஆண்டளவில் இந்து-ஐரோப்பிய மொழிகள் பேசியோரை இந்தி யாவுடன் தொடர்புபடுத்தக்கூடிய முக்கியமான ஒன்ரும். எளிதாகவும், மிகவிரைவாகவும் செல்லும் குதிரைகளையும், குதிரைபூட்டிய தேர்களையும் முதன் முதலாக நன்கு பயன்படுத்தி ஆரியர் வெற்றியடைந் தனர். மேற்கு ஆசியாவிலே கி. மு. 1500 அளவில்

Page 17
22
ஆரியரின் நடமாட்டங்களைப் பற்றி ஏற்கனவே குறிப் பிடப்பட்டது.
அண்மையிலே பேராசிரியர் ரி. பருே ஆரியரின் ஆதி இருப்பிடம் மத்திய, கிழக்கு ஐரோப்பாவாக இருந்திருக்கலாம் என்பர்.?? இந்தோ - இரானியருக் கும் சதம் மொழிகளுக்கும் குறிப்பாக போல்ரோசிலாவோனிய மொழிகளுக்கும், வின்னிய உக்ரிய மொழிகளுக்கும், புராதன இந்தோ - ஐரோப்பிய காலத்திலே நிலவிய விசேட தொடர்புகளை நோக் கும்போது மேற்குறிப்பிட்ட கருத்துத் தெளிவாகும் என்பது அவரின் வாதமாகும். மத்திய ரூசியாவி லிருந்து மக்கள் புலப்பெயர்ச்சி கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியுமேற்பட்டது; இதனுல், மத்திய ஆசியா சில காலமாக ஆரியரின் இருப்பிடமாயிற்று. இப்பழையகாலத்தில் இந்தோ - ஆரிய, இரானிய எனும் இரு கிளைகள் ஏற்படத் தொடங்கி விட்ட , மைக்குச் சான்று உள்ளது. இந்தோ - ஆரியர் தான். முதலிலே தெற்கு நோக்கி இரானிற்கும் அங்கிருந்து இந்தியாவிற்கும் மேற்கு இரானிற்கும் சென்றனர். இரண்டாவது அலையாகவே இரானியரின்புலப்பெயர்ச்சி முதலிலே கிழக்கு இரானிலேற்பட்டது. இதன் விளை வாகக் கிழக்கேயும், மேற்கேயும் சென்ற இந்தோ - ஆரியரின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. பின் னர் இரானியர் மேற்கே செல்ல, அங்கு முன்னர் சென்றேரின் செல்வாக்குக் குன்றிற்று, ஆணுல் அவர் கள் அங்குமுன் இருந்தமைக்கு மேற்கு ஆசியாவிலே யுள்ள ஆவணங்கள் சான்றுபகருவன. 40
இந்தியாவிலே ஹரப்பா கலாச்சார முடி வும் (கி. மு. 1500 அளவில்) ஆரியரின் வருகையினலேற் பட்டதெனத் தொல்லியலறிஞரான மார்ட்டிமர் வீலர், ஸ்ருவட் பிகொற் போன்ருேரும், மொழிநூல் விற்பன்

23
னரான பேராசிரியர் பருேவும் வற்புறுத்தியுள்ளனர். எவ்வாறயினும் ஹரப்பா கலாச்சாரம் மங்கிக் கொண் டிருந்த காலத்திலே திடீரென முடிவுற்றது. இக்கலாச் சாரத்தலங்கள் பலவற்றிலே அரண் செய்த நகரங்கள், கோட்டைகள் பல இருந்தன. இருக்கு வேதத்திலே வரும் பிரபல்யமான போர்த் தெய்வமான இந்திரன் கறுத்த நிறமும், தட்டையான மூக்குமுள்ள தாசர், தஸ்யுக்களின் அரணுள்ள நகரங்களைத் தகர்த்து ஆரி யர் வெற்றியினை மேம்படுத்திய வீரனுக, புரந்தரஞக, புரபித் (நகரங்களைத் தகர்த்தவன்) ஆகப் போற்றப் படுகிருன். இக்கோட்டை நகரங்கள் கல்லினுலும், சுடாத செங்கட்டியிஞலும் ஆனவை. சில வேளைக ளிலே தீயினுலும் அழிவுகளை இந்திரன் ஏற்படுத்தி ஞன். சிந்து சமவெளியிலுள்ள மொஹெஞ்சதாரோ, ஹரப்பா முதலிய இடங்களில் நடைபெற்ற அகழ்வாய் வுகளின் விளைவாக, அவ்விடங்களில் அரணுள்ள நக ரங்கள் இருந்தமை நன்கு அறியப்பட்டுள்ளது. ஆரி யர் நகரங்களை அறிந்திலர்; கிராமிய நாகரிகத்தினர். மேற்குறிப்பிட்ட நாகரிகச் சின்னங்கள் ஆரியரின் வருகையினுலே அழிவுற்றன எனவும், சூழ்நிலேக்கேற்ற பொருத்தம் காட்டும் சான்றுகளைக் கொண்டு நோக் கும்போது இந்திரனே இதற்குக் காரணம் எனவும் வீலர் குறிப்பிட்டுள்ளார்.44 மேலும், ஹரப்பா கலாச் சாரம் கி. மு. 2500-1500 வரையெனப் பொதுவாகக் கொள்ளலாம் என்பர். 42 ஆணுல், அண்மைக் காலத் திலே காபன் 14 முறைப்படி இதன் காலம் பொதுவாக கி. மு. 2300-1750 வரையெனக் கணிக்கப்பட்டுள்ளது?
ஹரப்பா கலாச்சாரம் முடிவுற்ற பின், த ரம் குறைந்த ஜ-சகர் கலாச்சாரம், ஜங்கர் கலாச்சாரம் ஒன்றன் பின் ஒன்ருக நிலவின. 44 இவ்விரண்டிலும் ஒன்று அல்லது இரண்டுமே ஆரியர் கலாச்சாரமாயி ருக்கலாமெனச் சில ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளனர்.

Page 18
24
ஹைனேகெல்டேன் 48, வெயர்சேவிஸ்48 ஆகிய இரு அறிஞர்கள் ஜ"0கர் கலாச்சாரமே ஆரியருடைய தென்பர். ஆனல், ஜங்கர் கலாச்சாரம் ஆரியருடையது என்பதைப் பொதுவாக ஏற்றுக்கொள்ளலாம். ஜ கேர் கலாச்சாரம் ஆரியருடையது என்ற கருத்து வலுப் பெறுகிறது. கலாநிதி புசல்கார் *" கலாநிதி ரி. என், ராமச்சந்திரன் 48 முதலியோர் ஹரப்பா கலாச்சாரம். ஆரியருடையதென்பர். கங்கை ஆற்றங்கரையிலுள்ள ஹஸ்தினுடபுரத்தில் நடத்திய அகழ்வாய்வின் விளைவா கக் கங்கைச் சமவெளியிலே சாதாரண மையூசிய Frubusdisp udt"LuftsbTL-fås sår (Painted Grey Ware) பலவற்றைத் திரு. பி. பி. லால் கண்டுபிடித்துள்ளார். ങ്ങഖ கி. மு. இரண்டாவது ஆயிரம் காலத்தன. இவ்ற்றைச் சமகாலத்திய மேற்காசிய, கிழக்கு ஐரோப் பியத் தொல்லியற் சின்னங்களுடன் ஒப்பிட்டு இவர் ஆராய்ந்துள்ளார். இவை போன்றவை கிரீஸ், இரானி லுள்ள ஷாரேப் ஆகிய இடங்களிலும், சில மாற்றங் டன் உர்மியா ஏரிக்குத் தெற்கேயும், கிழக்கே இந்தியாவின் மேற்கு எல்லையிலே, சீஸ்ரனிலும் காணப் படுகின்றன. இச்சின்னங்கள் இவ்வாறு கிரீஸ் தொடக் கம் சீஸ்ரன் வரை இந்தியாவுக்கு வெளியேயும் காணப் படுகின்றன. இதே காலப்பகுதியிலே கி. மு. 1360 ண்டளவைச் சேர்ந்த போகஸ்கோய்ச் சாசனங் களும், மேற்காசியாவில் ஆரியரின் நடமாட்டங்களைக் காட்டுவன, எனவே, மேற் குறிப்பிட்ட சின்னங்கள் பொதுவாக ஆரியரின் புலப்பெயர்ச்சி, நடமாட்டங்கள் ஆகியவற்றைக் காட்டுவன 49, ஏற்கனவே குறிப்பிட்ட மையூசிய சாம்பல் நிற மட்பாண்டகலாச்சாரத்திற்கு முன் கங்கைச் சமவெளியிலே நிலவிய வெண்கலக் கருவிகளின் கலாச்சாரம்யாருடையது என்பது தெரிய வில்லை, இக் கலாச்சாரத்திலே (சிவப்புநிறம் நீரால் கழுவப்பட்டு மங்கி) மஞ்சள் நிறமட்பாண்டங்களும் இடம் பெற்றிருந்தன. 99 வெண்கலக்கருவிகளிலே

25
கோடரி, ஈட்டி, வாள், மனிதவடிவம் போன்ற கருவி முதலியனவும் அடங்கும். மேற்குறிப்பிட்ட பல்வேறு ஆய்வாளரின் கருத்துகளிலே திரு. பி. லால் என்ப வரின் கருத்தே பொருத்த மானதாகத் தெரிகின்றது. ஹரப்பா கலாச்சாரம் ஆரியருக்கு முற்பட்டது; ஆஞல், இதனை ஆரியர்தான் அழித்தனர் என்பதும் அறிஞரின் ஒருமுகமான முடிவன்று.
இந்தியாவிற்கு ஆரியர் படிப்படியாகவே, வட மேற்கு எல்லைப்புறக்கணவாய்கள் ஆற்றேரங்கள் மூல மாக வரலாயினர். இவற்றுள், கிருமு. (குரம்), கோமதி (கோமல்) குபா (கபூல்), சுவாஸ்து (சுவாத்) முதலி யன இருக்குவேதத்திலே குறிப்பிடப்படுகின்றன. ஆரியரின் இந்தியப் புலப்பெயர்ச்சி பல நூற்றண்நி களாக நடைபெற்றது எனலாம். இது குறித்துப் பேரா சிரியர் ரி. பருே பின்வருமாறு குறிப் பி டு கிரு ர். “இந்தோ - ஆரியரின் புலப்பெயர்ச்சி இந்தியாவில் ஒரே இயக்கமாக அன்றிப் பற்பல கட்டங்களாக ஏற்பட்டதற்கு மொழியியற் சான்றும் காணப்படுகின் றது. வடமேற்கு இந்தியாவிலே நிலவிய வேதகால மொழிக்கும் மத்திய தேசத்திலே நிலவிய பிற்பட்ட காலமொழிக்குமிடையிலே கிளை மொழிச் சார்பான வேறுபாடுகள் பல உள்ளன. வேதமொழியிலே ர், ல் வேறுபாடுபெருமளவு பேணப்பட்டுள்ளது. இஃது ஒரு முக்கியமான வேறுபாடாகும். வேத மொழியிலுள்ள இவ்வியல்பு இரானிய மொழிக்குமுள்ள தனியியல் பாகும். மேற்காசியாவிலுள்ள ஆரியமொழிகளிலும் வின்னிய உக்ரிய மொழிகளிலுள்ள ஆரியச் சொற்கள் சிலவற்றிலும் இவ்வியல்பு காணப்படுகின்றது. ** ஆரியரின் புலப்பெயர்ச்சி திட்டவட்டமான தனியான செயலன்று. பல ஜனக்குழுக்களுடன் பல நூற்ருண் டுகளாக நடைபெற்றது. இவ்வாறு வந்த மக்கள் ஒருவேளை ஒரே இனம் ஒரே மொழியினைச் சேர்ந்தவ ராயிருந்திலர். 59

Page 19
26
மேலும், இந்தியாவிற்குவந்த ஆரியர் வருகைபற் றிப் பேராசிரியர் சுநீதிகுமார்சட்டர்ஜி குறிப்பிட்டுள்ள கருத்துக்களும் மனம்கொள்ளத்தக்கன. "இரானிலி ருந்து இந்தியாவிற்கு ஆரிய ஜனக்குழுக்கள் படிப்படி யாகவே புலம்பெயர்ந்தனர். இப்புலப்பெயர்ச்சி பல தலைமுறைகளாக நடைபெற்றிருந்திருப்பன. இப்புலப் பெயர்ச்சிபற்றி இன்று கிடைத்துள்ள வேத இலக்கி யத்திலே குறிப்பு எதுவுமில்லை. ஏனெனில் அவர்கள் தாம் புதிய இடத்திற்குப் புலம்பெயர்ந்தமை பற்றிய நினைவு கொண்டிருந்திலர். பர்சு, மத முதலிய இரா னிய ஜனக்குழுக்களோடு பல நூற்குண்டுகள் வாழ்ந் தனர். இரானிய மேட்டு நிலம் அவர்களின் புலப் பெயர்ச்சியின்போது தங்குமிடமாக அன்றித்தாயக மாகவே விளங்கியது. அங்கு அவர்கள் இந்தோ - இரானிய கலாச்சாரமரபுகள் பலவற்றை உருவாக்கி னர். இவற்றின் தாக்கம் மெசொப்பொத்தேமியாவிலே நன்கு காணப்படுகின்றறு. அவெஸ்தா, இருக்குவேதம் ஆகியவை இப் பெ ா து வா ன மரபுகளைக் கொண்டவை.”*
வரலாற்றுக்காலத்தில் இந்தியாவில் இஸ்லாமியர் வருகையும் ஆதிக்கமேற்படுத்தலும் பல நூற்றண்டு களின் பின்னரே வெற்றிகரமாக முடிந்தன. எனவே ஆரியரின் புலப்பெயர்ச்சியும் இவ்வாறே நெடுங்காலப் பகுதியிலே நடைபெற்றிருக்கலாம். இந்தியாவிற்கு வந்த ஆரியர் நீண்டகாலமாக ஆரியரல்லாத மக்களு டன் போர்செய்தே தமது செல்வாக்கினை நிலைநாட் டினர்.
" ஆரியர் கி. மு. 2000 அளவில் இந்தியாவை நோக்கி வந்திருப்பர், கி. மு. 1400-க்குப்பின் வந்திரார். கி. மு. 1500 அளவிலே வந்திருப்பர் ; ஆணுல் கி. மு. 1800க்குமுன் வந்திரார்,” எனப் பேராசிரியர் ஏ. பி.

27
கீத் ரியரின் இந்திய வருகைபற்றிய காலத்தைக் 54 ஆரியர் கி. மு. 1500 அளவிலே வந்திருப்பர் என மார்ட்டிமர் வீலர் கருதுவர்." மேலும் "ஆரியர் கி. மு. 1700-1400-க்கு மிடையில் இந்திய விற்கு வந்தனர்" எனவும், ‘இருக்குவேதப்பாடல்கள் கி. மு. 1200-1000-க்கு மிடையில் இயற்றப்பட்டன என வும் பேராசிரியர் ரி. பருே கூறியுள்ளார். " இவர்கள் இந்தியாவிற்கு கி. மு. 1750-1300 வரையுள்ள காலப் பகுதியிலே வந்திருப்பர் என டி. எச். கோர்டன் எனும் ஆய்வாளர் கருதுவர். " ஹைனேகெல்டேர்ன்", வெயர் சேவிஸ் 59 ஆகியோர் இவர்கள் 48.. (up. 1200-~-- 1000 வரையில் வந்தனர் என்பர். இவ்விரு ஆய்வாளர் களுடைய முடிபுகளுக்கான தொல்லியற் சின்னங்களை யும் பிறவற்றையும் இந்தியாவில் அண்மையில் அகழ் வாராய்ச்சி நடத்தப்பட்ட நவ்டதோலி (மத்திய இந்தி யாவில்) ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மஹாராஷ்டி ரம், ஆந்திரதேசம் ஆகிய இடங்களிலே கிடைத்துள்ள தொல்லியற் சின்னங்களுடன் நன்கு ஆராய்ந்து பேராசிரியர் எச். டி. சங்காலியா மேற்கு இந்தியா மேற்காசியத் தொடர்புகளுக்கான காலம் கி. மு. 17001500 வரை யென்பர். 80 சேர்லியனுட் வூலி எனும் தொல்லியல் ஆய்வாளர் ஆரியர் கி.மு, 1500 அளவில் இந்தியாவிற்கு வத்தனர் என்பர்.
"இந்தோ - ஐரோப்பிய ஜனக்குழுவினர் ஆயசி 89 GgTT'u juu (Eurasian) ap 6oés&OT 9 g råsar séš Gales ir 67 GB ஏற்படுத்திய புலப்பெயர்ச்சிகளின் காரணங்களை எளி திலே நிர்ணயிக்கமுடியாது. மந்தைகள் பெருகிய தாலே அவற்றின் மேய்ப்பர் புத்தம் புதிய புற்றரை களை நாடவேண்டியவராயினர் என்பர், ஆசிய-ஐரோப் பியப் புற்றரைகளிலே காலத்திற்குக் காலம் ஏற்படும் வரட்சியினுலவர்கள் செழிப்பான புதிய இடங்களைத் தேடிச் சென்றிருப்பர். இத்தகைய நாடோடிக் குதிரை

Page 20
28
வீரர், நிலையான வாழ்க்கை நடத்திவந்த மக்களுக் குப் பேரபாயம் விளைவித்தனர். ஆனல், போரின் விளைவாக முன்னையோர் பின்னையோரிடமிருந்து நாக ரிகக் கலையினைக் கற்றனர். இறுதியிலே வெற்றிபெற் ருேர், வெல்லப்பட்டோருடன் நன்கு ஒன்று சேர்ந்து தமது முன்னைய நிலையினை முற்ருக இழந்துவிட்ட னர்.”** இவ்வாறு இந்தோ-இரானியரின் புலப்பெயர்ச்சி பற்றிப் பேராசிரியர் ஆர். கிர்ஷ்மன் நன்கு ஆய்ந்து கூறியிருப்பது இந்தியாவிற்கு வந்த ஆரியருக்கும் சாலப் பொருந்தும்.
ஆரியரின் இந்தியப் புலப்பெயர்ச்சி ஏற்பட்ட காலம் குறித்துப் பேராசிரியர் சுநீதிகுமார் சட்டர்ஜி வரலாற் றுநோக்கிலே கூறியுள்ளவை மனம்கொளற்பாலன, *ஆதிகாலவரலாற்றில் ஆரியர் இந்தியாவிற்கு வந்தமை யினை ஒப்பியல் ஆய்விலே நோக்கும்போது அது பிந்தியகால நிகழ்ச்சியெனவே தோன்றும். அவர்கள் கி. மு. இரண்டாயிரம் ஆண்டின் நடுப்பகுதிக்குமுன் இந்தியாவிற்கு வந்திரார்; அல்லது அதற்குப் பின்ன ரும் வந்திருப்பர். இந்தியவரலாற்றினை உலகவரலாற் றுடன் குறிப்பாக மேற்கு ஆசிய வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புள்ளதாகவே நோக்குதல் அவசி மாகும். இவ்வாறு நோக்கும் போது, இந்தோ-ஐரோப் பியர் மேம்பாடுள்ள புராதன நாகரிகமுள்ள மக்களு டன் பிந்திய காலத்திலேதான் அதாவது, கி. மு. 2000 அளவிலே தொடர்பு கொள்ளலாயினர். எனவே, ஆரி யரின் இந்திய வருகை மிகப் பழைய காலத்திலேற் பட்டதென மிகைப்படுத்திக் கூறுதல் முற்ருன வர லாற்றுச் சார்பற்ற முடிபாகும். மேலும், அவர்களிலே முதல் வந்தோர் கி. மு. 1500 அளவிலேதான் பஞ்சாப்
பினை அடைந்தனர்.98
பொதுவாகத் தொல்லியல், இலக்கியம், மொழியி யற் சான்றுகள், புராதன வரலாறு முதலியனவற்றை

29
ஒப்பிட்டு நோக்கும்போது ஆரியர் சுமார் கி.மு 2000 தொடக்கம் சில நூற்றண்டுகளாக இந்தியாவை நோக்கி அலை அலையாக வந்துகொண்டிருந்தனர் என sao Th.
இந்தியாவில் ஆரியர்
ஆரியரின் வருகையுடன் இந்தியவரலாற்றிலே புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டது. ஒரு நாட்டின் வரலாற்றுக்காலம் அந்நாட்டின் இலக்கியத்துடனே தான் தொடங்குகிறது எனில், இந்தியாவின் வரலாற் றுக்காலம் ஆரியர் வருகையுடன் ஆரம்பித்தது என லாம். ஹரப்பா கலாச்சாரத்தில் எழுத்துப் பயன் படுத்தப் பட்டதாயினும், அஃது இன்றுவரை செவ் வனே வாசிக்கப்படவில்லை. எனவே ஹரப்பாகலாச்சார காலம் வரலாற்றுத் தொடக்ககாலம் அல்லது வரலாற் றுக்கு முற்பட்ட காலமெனக் கருதப்படுகிறது. அறிஞ ரில் ஒருசாரார் வேதகாலமும் வரலாற்றுத் தொடக்க காலமெனக் கருதுவர். இருக்குவேதமே இந்தியாவிற்கு வந்த ஆரியரின் ஆதி ஏடாகும். அது மட்டுமல்ல ஆரிய உலகில் எழுந்த முதலாவது நூலுமாகும். இவ் வேதமும் ஏனைய வேதங்களும் அவற்றின் சார்புநூல் களும் எழுந்த காலமே வேதகாலமாகும். இந்தியா வில் ஆரியரின் தொடக்க காலவரலாற்றை அறிவதற்கு வேத இலக்கியமே பிரதான மூலமாகும். இதைவிடத் தொல்லியலும், பிற ஆரியரின் பழைய நூல்களும் ஒரளவு உதவியாக உள்ளன. 'இந்தோ - ஆரியர் தமது மொழியுடன் இந்தியாவிற்கு முதலிலே வந்ததற்கும், இருக்குவேதப் பாடல்கள் இயற்றப்ப்ட்டதற்குமிடை யிலே நெடுங்காலம் சென்றுவிட்டது. இதனுலேதான் இருக்குவேதத்தில் ஆரியரின் புலப்பெயர்ச்சி பற்றிய குறிப்புகள், நினைவுகள் காணப்பட்டில. மொழியியற் சான்றுபகருகின்றதான பொதுவான இந்தோ - இரச

Page 21
30
னிய காலத்திலிருந்து வேதகாலத்திற்கு வரப் பல மாற்றங்களேற்பட்டுவிட்டன. எனவே, இரானியரும், இந்தோ - ஆரியரும் முற்ருகப் பிரிந்துவிட்ட பின் னரே, அதாவது பின்னையவர் இந்தியாவிற்கு வந்த பின்னரே மாற்றங்கள் பல ஏற்பட்டன", எனப் பேரா சிரியர் ரி. பருே குறிப்பிட்டுள்ளார். 64 ஆணுல், பொது வாக நோக்கும்போது பாடல்கள் பாடிக்கொண்டும் ஆரியரல்லாத மக்களோடும், தமக்குள்ளேயும் போர் புரிந்து வரும் மக்கட்கூட்டமாகவே முதன் முதலாக ஆரியர் இந்தியாவிலே காட்சியளிக்கின்றனர். இந்தோ ஆரிய மொழி, இலக்கியம் ஆகியவற்றின் வரலாறும் இத்துடன் தொடங்கின.
வேத இலக்கியம்
வேத இலக்கியத்தில், இருக்கு, யஜுர், சாமம், அதர் வம் எனும் நான்கு வேதங்களும், அவற்றின் தொடர் பகுதிகளான பிராஹ்மணங்கள், ஆரண்யகங்கள், உப நிஷதங்கள், சூத்திரங்கள் என்பன அடங்குவன. இவற் றுள், இருக்கு வேதமே முதன்மையானது; காலத்தால் முற்பட்டது. இருவழிகள் பலர் பல நூற்ருண்டுகளில் பல்வேறு தெய்வங்களை விளித்துப்பாடிய துதிப்பாடல் கள் 1028 இதிலிடம் பெற்றுள்ளன. இப்பாடல்களிற் சில இந்தியாவுக்கு வெளியேயும், ஆரியர் வரும் வழி ];• பாடப்பட்டன எனவும் அறிஞர் சிலர் கருது
சாம, யஜுர் வேதங்கள் இருக்கு வே L-isfir நெருங்கிய தொடர்பு ாேண்ட , பெரும்பாலும் இருக்கு வேதப் பாடல்களே பண்ணிற் கேற்ப அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இதனைத் தனிப்பட்ட வேதமெனக் கூறமுடியாதெனினும், இந்திய இசை வரலாற்றிற்கு மிகி முக்கிய நூலாகும்.

31,
யஜுர் எனில், வேள்வி வாய்ப்பாடு எனப் பொருள் படும். எனவே, இவ்வேதம் யாக விதிகளைக் கொண்ட தெனலாம். காலத்தால் முந்திய வடமொழி வசன நடையினை இதிலே காணலாம். இவ்வேதத்திலே ஆரியர் படிப்படியாகக் கிழக்கே செல்லுதலையும், அவர்களின் சமயத்திலேற்பட்ட மாற்றங்கள் சிலவற் றையும் காணலாம். இம்மூன்று வேதங்களும் இவ்வாறு ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை: நெடுங்காலமாக இம்மூன்றுமே வேதங்களாகக் கருதப் աւ: Լ-607.
நான்காவது வேதமான அதர்வ வேதம் (அதர் வாங்கிரசம்) மேற் குறிப்பிட்டவற்றிலிருந்து வேறு பட்டது; 731 சூக்தங்களும், 20 காண்டங்களும் கொண்டது. பாமர மக்களின் சமய நம்பிக்கைகள், சமூக பழக்கவழக்கங்கள் போன்றவற்றினை இதிற் காணலாம். பொருளடக்கத்தில் இது வேறுபட்டதாகை யாலேயே நெடுநாளாக வைதிகர் இதனை ஏற்றுத் கொண்டிலர். “மாந்திரிகம், சமயம் ஆகியனவும், ஒரளவு இறைஞானமும் அதர்வ வேதத்திலே முற்ருக ஒன்றுபடுகின்றன”, எனவும் அதர்வன், சமயகுரு, புரோஹிதர், வைத்தியர், மந்திரவாதி, ஆகியோரின் கடமைகளைத் தமிமிடத்து ஒருங்கே கொண்டிருந்தார் எனவும் ஜே. என். ஷென்டே குறிப்பிட்டுள்ளார். 98
வேதங்களின் தொடர் பகுதியான பிராஹ்மணங் களிலே வேள்வியே பிரதான பொருளாக உள்ளது. இவை பொதுவாக வசனமூபத்தில் எழுதப்பட்டுள்ளன. வேள்வியால் எதையும் சாதிக்கலாம் என்ற கருத்து நிலவி யது. வேள்விக்கு மட்டமற்ற முக்கியத்துவம் அளிக் கப்பட ஒரு சாரார் வெறுப்புற்றுக் காட்டிற்குச் சென்று வேள்விகளின் உட்பொருள் பற்றித் தியானம் செய்து தம்முடிவுகளை வெளியிடலாயினர்; இவ்வாறே

Page 22
32
ஆரண்யகங்கள் தோன்றின. இவற்றினைத் தொடர்ந்து தத்துவ நூல்களான உபநிஷதங்கள் எழுந்தன. “ம்ப நிஷத்’ எனில், ஒருவனின் அண்மையில் இருத்தலா கும். அதாவது, ஞான போதனைக்காக மாணவன் (சிஷ்யன்), ஆசிரியரின் (குருவின்) முன்னிலையில் இருப் பதாம். இப்போதனை பரஞானமாகிய மறை பொருளை மறைவாகத் தகுதியுடையவருக்கே புகட்டப்படுதலால் "ரஹஸ்யம்" எனவும் கூறப்படும். 'உபநிஷத்' என்ற சொல் ரஹஸ்யம்’ எனும் கருத்திலே, "இதம் உபநிஷத்” இதம் ரஹஸ்யம்' என உபநிஷதங்களிலே வருகின் றது. இதனைக்குரு சிஷ்யனுக்கு ஆசார பூர்வமாகப் புகட்டும் ஞானம் எனக் குறிப்பிடலாம். இதனை “அஞ் ஞான இருளைப் போக்கும் பிரமஞானம்’ எனச் சங் கராச்சாரியர் கூறுவர். 8 இந்தியாவின் மிகப் பழைய தத்துவ சிந்தனைகளை இவற்றிலே காணலாம், உப நிஷதங்கள் வேதங்களைக் கண்டித்தாலும் வேதநெறியி லிருந்து பிறழ்ந்தில. எல்லாமாக 108 உபநிஷத்துகள் கூறப்படினும் அவற்றுட் காலத்தால் முந்திய பிருஹ தாரண்யக, சாந்தோக்ய, தைத்திரீய, பிரஸ்ன, ஈச, கட முதலிய 13 உபநிஷதங்கள் பிரதானமானவை. உபநிஷதங்கள் முதலிலே வசனத்திலும், பின் வசனம், செய்யுள் கலந்த நடையிலும் இறுதியிலே செய்யுள் வடிவிலும் எழுதப்பட்டன. இவை வேதகாலத்தின் முடிவிலே தோன்றியதாலும், வேதங்களின் சாரமாக அமைந்துள்ளன எனக் கருதப்படுதலாலும், வைதிகக் கல்வியின் முடிவிலே கற்கப்படுவதாலும் வேதாந்தம் எனக்கூறப்படுவன. வேதநெறிக்குப் புறம்பாகத் தோன்றிய பெளத்தம், சமணம், ஆஜீவிகம் ஆகியன வும் உபநிஷதங்களுடன் ஓரளவு தொடர்புடையன. உபநிஷதங்களை மூலவடிவிலன்றி, அவற்றின் பாரசீக மொழி பெயர்ப்பினைத் தழுவி லத்தீனில் எழுதப்பட்டன வற்றைப் படித்த ஸோப்பநோர் (Schopenhauer) எனும் புகழ் பெற்ற தத்துவஞானி இவை பற்றிக் கூறியுள்

33
ளவை கவனித்தற்குரியன."உபநிஷதங்களைப் போன்று மிக நன்மை பயப்பனவும், உயர்நிலை அளிப்பனவு மானவை வேருென்றும் உலகில் இல்லை. இவையே என்வாழ்விற்குச் சாந்தியளித்து வருபவை; எனது மரணத்திலும் சாந்தியளிப்பவை" என்பதாகும்.
வேதகால முடிவிலே வேதங்களைக் கற்பதற்கு உத வியான வேதாங்கங்கள் எழுந்தன. கல்பம், சிகூை49 வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஸம் என்பனவே வேதாங்கங்களாம் எளிதிலே நினைவிலிருத்தற்காகச் சூத்திர வடிவில் இவை இயற்றப்பட்டன. எனவே, இக் காலம் கி. மு. 6-4ம் bmண்டுவை g sm Golf
i
பிரம சூத்திரங்கள் பாதராயனரால் எழுதப்பட்டன.
வேதங்கள் ஒவ்வொன்றிற்கும் தொடர்பகுதிகளாகப் பிராஹ்மணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷதங்கள் முதலியன உள்ளன. எடுத்துக்காட்டாக, இருக்குவேதத் திற்கு ஐதரேய, கெளசீதகீபிரிாஹ்மணங்கள், ஆரண் யகங்கள் உபநிஷதங்களிருப்பதைக் குறிப்பிடலாம். ஒருபகுதி முடிந்து மற்றையது தொடங்குவதில் வரை யறையில்லை.
வேதம் எனில், "மிகச்சிறந்த அறிவு" எனப்பொருள்
படும். வேதங்கள் யாவும் சுருதி என அழைக்கப் படும். அதாவது, மனிதராலன்றி இறைவனுலருளப் பட்டவை. இறைவன் அருள்புரிய இருவழிகள் கேட்டு அறிந்து எழுதினர். இவை மனிதராலே செய்யப்படா தவை என்ற காரணத்தால் "அபெளருஷேயம்" எனவும் அழைக்கப்படும். மேற்குறிப்பிட்டவாறுதான் வைதிகர் இவற்றை நோக்கினர்.

Page 23
34
வேதங்களின் காலமும் வரலாற்றியல்பும்
வேதங்களின் காலத்தை நிர்ணயிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது யாதெனில், அவை இயற்றப் பட்டகாலம் (மந்திரகாலம்) வேறு, தொகுக்கப்பட்ட காலம் (சம்ஹிதை காலம்) வேறு என்பதே. இச்சம் ஹிதைகள் பல இருவழிகள் குடும்பங்களிலே பேணப் பட்டன. இதனுற் பலசாகைகள் (Recensions) எழுந் தன. வேதங்களில் இடைச் செருகல்கள் ஏற்படா தவாறு வழிவகைகள் கையாளப்பட்டன. இவை தொகுக் கப்பட்டபின் பாடபேதம் ஏற்பட்டிலது எனலாம். பிராஹ்மணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷதங்கள் வெவ்வேறு காலத்தன; சிலபகுதிகள் சமகாலத்தன. காலத்தால் முந்திய இருக்குவேத காலமே முந்திய வேதகாலம் அல்லது வேதகால முற்பகுதியெனவும், ஏனைய வேதங்கள், பிராஹ்மணங்கள், ஆரண்யகங்கள் உபநிஷதங்கள் காலமே பிந்திய வேதகாலம் அல்லது வேதகாலத்தின் பிற்பகுதியெனவும் வரலாற்ருசிரியர் கொள்வர். இவற்றின் காலம் பற்றிக் கருத்துவேறுபாடு கள் உள. புத்தபிரானும், மகாவீரரும் உபநிஷத காலத் தின் பிற்பகுதியிலே கி. மு. 6ம், 5ம் நூற்ருண்டுகளிலே வாழ்ந்தனர். முந்தியகால உபநிஷதங்கள் பிந்திய ஆரண்யக காலங்கள் சமகாலத்தனவாயிருப்பினும் இவ் இலக்கியவகைகள் திடீரென முகிழ்த்திருக்கமாட்டா. இவ் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு பேரா சிரியர் மகூடிமுல்லர் இருக்குவேதப் பாடல்கள் கி. மு. 1200-1000 அளவிலே தோன்றியிருக்கலாமெனவும் பிந் தியவேதங்கள் கி. மு. 1000-800 அளவிலே தோன்றி யிருக்கலாமெனவும் பிராஹ்மணங்களும் முந்திய கால உபநிஷதங்களும் கி.மு. 800-600 வரையில் எழுந் திருக்கலாமெனவும் கூறுவர்.98 ஆணுல், பிந்திய வேதங் கள், பிராஹ்மணங்கள், முந்திய உபநிஷதங்கள் ஆகியனவற்றின் காலம் தனித்தனி 200 ஆண்டுகளெ

35
னக் குறிப்பிட்டதை முற்ருக ஏற்கமுடியாத . அகச் சான்றும் இதற்கு ஆதாரமளிக்கவில்லை. எனவேதான் கலாநிதி எம். வின்ரெர்நிட்ஸ் என்பவர் வேத இலக்கி தின் காலம் பற்றி மகன்டிமுல்லர் கூறியிருப்பதை ஏற் காது இன்னும் அதிகமான காலவரையறையினை எடுத் துரைத்துள்ளார்.68 சமணசமய ஸ்தாபகரான பார்ஷ் வர் கி. மு. 8ம் நூற்ருண்டிலே வாழ்ந்தவர். இதைக் கொண்டு நோக்கிய வின்ரெர் நிட்ஸ் இருக்குவேத காலம் சுமார் 2500 அல்லது 2000 தொடக்கம் 1500 வன்ரயில், ள்ன்பர்; வேதகால முடிவு கி.மு. 750-500 வரையிலேற்பட்டது என்பர்.10 பேராசிரியர் எ. எல். பசாம் இருக்குவேதகாலம் கி. மு. 1500-1000 வரை யெனவும். பிந்திய வேதகாலம் கி. மு. 1000-500 வரை யெனவும் கொள்ளுவர்." தொல்லியலறிஞரான ஸ்ரு வட்பிகொற் என்பவர் மேற்காசியச் சான்றுகளுடன் ஒப்பிட்டு இருக்குவேதம் கி. மு. 1400-1000 வரையில் எழுந்திருக்கலாம் எனவும், அதற்குத் திடமான சான் றுகளில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்."? மொழிநூல் வல்லுனரான பேராசிரியர் ரி. பருே இருக்குவேதப் பாடல்கள் இயற்றப்பட்டுத் தொகுக்கப்பட்ட காலம் கி. மு. 1200-1000 வரையில் என்பர்.79 கி. மு. 12-9ம் நூற்றண்டுவரையிலே கங்கைச்சமவெளியில் ஆரியர் வர்ழ்ந்தமைக்குத் தொல்லியற் சான்றும் உளதெனத் தொல்லியலாய்வாளர் கூறுகின்றனர். சதபத பிராஹ் மணத்திலே பரீகூழித்தின் மகன் ஜனமேஜயனின் தலை நகரான ஆசந்தீவத் கூறப்படுகின்றது. அதுவே நாக சாஹ்வயம் (ஹஸ்தினபுரம்) ஆகும். பரீகூSத்தின் வழித்தோன்றலான நிச கூடி~வெள்ளப் பெருக்கு ஏற்பட கி. மு. 800 அளவில் இதனைக் கைவிட்டான். இதற்குத் தொல்லியற் சான்றுளது.74 எனவே, பொதுவாகக் கூறின், இருக்குவேதகாலம் கி. மு. 1800-1100 வரை யெனவும், பிந்தியவேதகாலம் கி. மு. 1100-500 வரை யெனவும் கொள்ளலாம்.

Page 24
36
"வேதசம்ஹிதைகள் பல்வேறு காலத்திய மனித நினைவுகளையும் ஆவணத் தொகுப்புகளையும் கொண் டவை". இவை திட்டவட்டமான வரலாற்றுநூல்க sts இல்லாவிட்டாலும் வரலாறு சம்பந்தமான பல செய்திகள் இவற்றிலோரளவாவது விரவிக் காணப்படு கின்றன. சமயச்சார்பான செய்திகளே கூடுதலாக இடம் பெற்றலும், சமகால அரசியல், பொருளாதாரம் முசம், கலாச்சாரம் பற்றிய கருத்துக்களும் வெவ் து அளவில் இடம் பெற்றுள்ளன. வேதங்கள் தொகுக்கப்பட்ட பின், நன்கு பேணப்பட்டுவந்தன. எனவே, இவற்றில் இடைச்செருகல் ஏற்பட்டிராது: இதிஹாஸ், பெளராணிக மரபுகளிலும் பார்க்க வேத மரபு மிகக் கவனமாகப் பேணப்பட்டமையினலே அவற் றிலும் பார்க்க இம்மரபிற்கு வரலாற்று ஆசிரியர்களில் இசோரார் கூடுதலான முக்கியத்துவம் அளித்துள்ள னர். இவை காலத்தால் முந்தியனவாயிருப்பதும், இடைச் செருகல்கள், மாற்றங்கள் இவற்றிலேற்படா திருப்பதும், இவற்றின் வரலாற்றியல்பை நன்கு வற் புறுத்துவன: அதிகரிப்பன.78 சமகாலத் தொல்லியற் சான்றுகளும் வேத இலக்கியம் கூறுவதை ஓரளவாவது உறுதிப்படுத்துவது இதன் வரலாற்றியல்பிற்குப் பிறி அம் ஓர் உதாரணமாகும். மேலும், பிந்திய காலச் சமய நூல்கள் சிலவற்றிலுள்ள மிகைபாடுகள், கற்பனைக் கதைகள் போன்றவை வேத இலக்கியத்திலே "குறை வாகவே காணப்படுகின்றன. குரு சிஷ்ய மரபுகள் உபநிஷதகாலத்தில் ஓரளவாவது பேணப்பட்டதற்குப் பிருஹதாரண்யக உபநிஷதத்திலே (2.6,4,6, 6.5) வரும் பெயர்ப் பட்டியல்கள் தக்க சான்றகும். ஆச்சாரியர் பலரின் பெயர்கள் தாயின் பெயர் வழிவந்துள்ளமை கவனித்தற்குரியது. எடுத்துக்காட்டாக, காத்யாயனி புத்ர, கெளதமீபுத்ர போன்றவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய போக்குப் பிள்ளைவளர்ப்பதிலே தாயின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகச் er thesprm'és II fluf

37
குறிப்பிடுவர். ஆனல், தாய்வழி உரிமைச் சமூகத்தவ ரான திராவிடர் போன்ருேரின் தொடர்பாலுமிஃது ஏற்பட்டிருக்கலாம்.
மேற்குறிப்பட்ட நூல்களின் துணைகொண்டு ஏறத் தாழ கி. மு. 1800-500 வரையுள்ள காலப்பகுதியில் இந்தியாவில் ஆரியர் வாழ்ந்த இடங்களையும் அவர்கள் மத்தியிலே நிலவிய ஜனக்குழுக்கள் நாகரிக நிலை ஆகியன பற்றியும் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.
வேதகாலத்தில் ஆரியர் வாழ்ந்த இடங்களும்,
ஜனக்குழுக்களும் இக்காலத்தில் ஆரியரின் குடியிருப்பிடங்களை வரை யறுத்தற்குத் துணையாக இந்நூல்களிலே வரும் மலை கள், ஆறுகள், இடங்கள், ஜனக்குழுக்கள், இராச்சி யங்கள் முதலியன பற்றிய குறிப்புக்களைக் கவனித்தல் அவசியமாகும். இருக்குவேதத்தில் இமயம் குறிப்பி டப்படுகிறது. வேதங்களிலே குறிப்பிடப்பட்டுள்ள 31 ஆறுகளிலே 25 இருக்குவேதத்திலேயே வருகின்றன. புகழ் பெற்ற நதீஸ்துதியிலே (இ. வே. 10.75) பல ஆறு கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றுட்பல சிந்துநதி யினைச் சேர்ந்தவை. இதன் கிளைகளான சுதுத்றி(சட் லஜ்), விபாஸ் (பியஸ்), பருஷ்ணி (ரவி), அசிக்னி (சேணுப்), விதஸ்தா (ஜேலும்) ஆகிய ஐந்தும் சேர்ந்து பஞ்சாப் (ஐந்து ஆறு பாயுமிடம்) என்ற பெயரினை இவை பாயுமிடத்திற்கு அளித்துள்ளன. சிந்துவின் மேற்குக் கிளைநதிகளான குபா (கபூல்), க்ருமு. கோமதி சுசர்து, சுவேத்யா, போன்றன கவனித்தற்பாலன. சிந்து நதிப் பள்ளத்தாக்கிற்கு வெளியே சரஸ்வதி, யமுனை, கங்கை, சரயு என்பன, குறிப்பிடப்படுகின் றன. இக்காலத்திலே மிகச்சிறந்த ஆறு (நதீதம, இ. வே. 2, 41 - 16) சரஸ்வதி ஆகும். இருக்குவேத காலச் சரஸ்வதி பெரிய ஆருகக் கடலிற் சங்கமித்தது;

Page 25
38.
தூய்மையானது (இ. வே.7. 95. 12). சப்தசிந்து எனும், பதம் இருக்குவேதத்திலே வரையறுக்கப்பட்ட ஓரிடத் தினைக் குறித்தது. சிந்துநதியினையும், அதன் கிளைகளை யும், சரஸ்வதியினையும் இது குறிக்கும் என மகங் முல்லர் போன்ருேர் கருதினர். சிலர் சரஸ்வதிக்குப் பதிலாகக் குபா அல்லது ஒகூடிஸ் ஆற்றினைக் கொள் ளுவர். ஆனல் சிந்துவும் அதன்கிளைகளும், சரஸ்வதி யும் எனக் கொள்ளுதலே மிகப் பொருத்தமானதா கும்." இருக்குவேதகால ஆரியர் கடலினை ஒரளவு அறிந்திருந்தனர் போலும்,
இக்காலத்தில் ஆரியர் பல ஜனக்குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தனர். இவர்கள் தமக்குள்ளேயும் ஆரி யரல்லாதோருடனும் போர்புரிந்து வந்தனர். பத்து மன்னரின் போர்பற்றிய பாடல்களிலே பல ஜனக் குழுக்கள் குறிப்பிடப்படுகின்றன. இப்போரிலே, பரத ஜனக்குழுவினணுன சுதாஸ் வசிஷ்டரின் உதவியுடன் பத்து மன்னரை வென்று வாகைசூடினன். இப் போரிலே வெற்றி பரத ஜனக்குழுவிற்கு ஆதிக்க முதன்மையளித்தது. பொதுப்படக்கூறின், வடமேற் கிலே காந்தாரி, பக்த, அலின, பாலனசஸ். விஷா னின் முதலிய ஜனக்குழுவினர் வாழ்ந்தனர். இவர் களுட்சிலர் ஆரியரல்லாதோர் ஆவர். சிந்து, பஞ்சாப் ஆகிய இடங்களிலே சிவ, பர்சு, கேகய, விர்சீவந்த், யது, அனு, துர்வச, துருக்யு போன்ருேர் குடியேறி னர்.
கிழக்கே, மத்திய தேசத்திலே திருத்ஸ்-C, பரத பூரு, சிருஞ்ஜய ஆகியோரும், அதற்கும் கிழக்கே கீகடரும், மல்வா, ராஜ்புத்தானப் பகுதிகளிலே மத் ஸ்யரும், சேதியரும் குடியேறிவாழ்ந்தனர்."? தாஸ், தஸ்யுக்கள் ஆரியரின் எதிரிகளாகவும், நாகரிகமுள்ள வராகவும் கூறப்படுகின்றனர். ஆரியர் ஆரியரல்லாத மக்களுடன் உறவாடத்தொடங்கிவிட்டனர். இவ்வாறு,

39
ஆரியர் இருக்குவேதகாலத்திலே ஆபுகானிஸ்தானம்,
வடஇந்தியாவின் மேற்குப்பகுதி ஆகியனவற்றிலே வாழ்ந்தனர் எனலாம். பஞ்சாபே ஆரியரின் நாகரிக
மையமாக இலங்கியது. பரத ஜனக்குழுவே புகழ்
பெற்ற ஜனக்குழுவாகும். இந்தியாவின் பெயரான பாரதவர்ஷம் இதிலிருந்து வந்ததாகும். சிலர் இப்
பெயர் பரத எனும் மன்னன் பெயரிலிருந்து வந்த தென்பர். பரத ஜனக்குழுவினர் மத்தியிலே நிலவிய
மொழிவழக்கே பாரதீ என்றழைக்கப்பட்டதாகவும்,
அதிலிருந்துதான் இந்தியாவைக் குறிக்கும் பாரத
எனும் பெயர் வந்ததாகவும் ஒருசாரார் கருதுவர்.
ஆரியர் இந்தியாவுக்கு வந்தபோது, இங்குவாழ்ந்த ஆரியரல்லாத மக்களுக்கும், வந்தவர்களுக்குமிடை யிலே கடும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்திர னைப்பற்றியபாட்ல்களிலிவை மிகத்தெளிவாகக் காணப் படுகின்றன. ஆரியரல்லாத மக்கள் தாஸ, தஸ்யுக்கள் என அழைக்கப்பட்டனர். சிலவகையில், ஆரியரிலும் பார்க்க அவர்கள் நாகரிக நிலையிலே மேம்பட்டவர் கள். திராவிடர், ஆதிஒஸ்ரலோயிட் மக்கள் முதலி யோரே ஆரியர் குறிப்பிட்ட தாஸ, தஸ்யுக்கள் எனப் பொதுவாகக் கொள்ளலாம். "பணி" என்போர் செல் வந்தராகவும், வணிகராகவும் ஆரியரல்லாதோராகவும் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களும் மேற்குறிப்பிட் டோர் கூட்டத்தைச் சேர்ந்தோராவர்.
வேதகாலத்தின் பிற்பகுதியில் ஆரியர் பிற இடங் களுக்குப் புலம்பெயர்ந்து செல்வதையும். அவர்களின் ஜனக்குழுக்களில் மாற்றங்களேற்படுதலையும், ஆரிய ரல்லாத மக்களுடன் முன்னையிலும் பார்க்க நெருங் கிய தொடர்பு கொண்டிருப்பதையும் காணலாம்.?? இக்காலத்திலே, பஞ்சாப்பிற்குக் கிழக்கேயுள்ள பகுதி முக்கியத்துவம் பெற்றது. சரஸ்வதி ஆறு குறிப்பி

Page 26
40
டப் படவில்லை. வங்காள விரிகுடாக் கடலையும், அராபி யக் கடலையும் ஆரியர் நன்கு அறிந்துவிட்டனர். எனவே, கடற்கரையினை யடுத்த பிரதேசத்திலுமவர் கள் குடியேறிவிட்டனர் எனலாம். சதபதபிராஹ்மணத் தில் வரும் ரேவோத்தரஸ் நர்மதையெனச் சிலர் கரு துவர். கிரெளஞ்ச என்பது கைலாச மலைப்பகுதியா கும். கெளசீதகீ உபநிஷதத்திலே கூறப்படும் “தெற்கு மலை விந்தியமலையாகும். ஆசந்தீவத் (ஹஸ்தினபுரம்) பரீக்ஷத்தின் மகன் ஜனமேஜயனின் தலைநகராகக் கூறப் படுகின்றது. சதாநீர எனும் ஆறு கோசலம், *விதேஹ' அரசுகளுக்கு எல்லையாகக் குறிப்பிடப்படுகிறது. இக் காலத்தில் ஆரியர் வாழ்ந்த ஐந்து இடங்கள் ஐதரேய பிராஹ்மணத்திலே (8.14) கூறப்படுகின்றன. அவையா வன: (அ) மத்தியதேசம் (ஆ) பிராசீதிஸ் (கிழக்குத் திசையில் உள்ள இடம், (இ) தகூSணுதிஸ் (தெற்கே உள்ள இடம்), (ஈ) பிரதீசீதிஸ் (மேற்கேயுள்ள இடம்) (உ) உதீசீதிஸ் (வடக்கே யுள்ள இடம்) என்பனவாம். இவற்றின் எல்லைகளைத் திட்டவட்டமாக வரையறுக்க முடியாது. இக்காலத்திலும் ஆரியர் பல ஜனக்குழுக் களாகப் பிரிந்து வாழ்ந்தனர். ஆணுல், பழைய ஜனக் குழுக்கள் சில மறைந்தன. அவற்றுட்சில ஒன்றுபட் டுப் புதிய ஜனக்குழுக்களாகமாறின. புத்தம் புதிய ஜனக்குழுக்களும் சில தோன்றின. இருக்குவேத காலத்திலே பஞ்சாபில் பிரதான ஜனக்குழுக்களாக விளங்கிய பூரு, அனு, அதுருக்யு யது, அதுர்வச முதலி யன முக்கியத்துவம் இழந்தன. பூரு பரத ஆகிய இரண்டும் குருஜனக் குழுவுடன் ஒன்றுபட்டனர். இவர் களுடன் பஞ்சாலரும் சேர்ந்து பிரபல்யமாய் விளங் கினர். ஆனல், பரத மன்னரின் புகழ் மங்கவில்லை. பரத தெளவிறசந்தியும், சாத்ருஜித்தும் சிறந்த அரச ராகவும், அஷ்வமேதம் (குதிரை வேள்வி) செய்தோ ராகவும் குறிப்பிடப்படுகின்றனர். அதர்வவேதம் குரு மன்னரான பரீக்ஷத்பற்றியும், அவனின் இராச்சியம்

4.
பற்றியும் குறிப்பிடுகின்றது. குரு-பஞ்சாலரே பிராஹ் மணகாலத்து விளங்கிய மிகப்பிரபல்யமான ஜனக் குழுவாகும். இவர்களுக்கு ஒரு காலத்தில் ஒரே மன் னனுமிருந்தான். குரு-பஞ்சால மன்னர் சிறந்த யாகம் செய்தனர். ஏனைய மன்னருக்கு முன்மாதிரியாக வேள்வி இயற்றினர். திக்குவிஜயம் செய்தனர். குரு. பஞ்சாலப்பகுதியிலே சிறந்த மொழிவழக்கு நிலவிற்று" இப்பகுதியிலேயே வேதசம்ஹிதைகள், பிராஹ்மணங் கள் திட்டவட்டமாக நிலைபெற்றன. காசி, கோசலம் விதேஹம் ஆகிய இராச்சியங்கள் இக்காலத்தின் பிற் பகுதியிலேதான் (உபநிஷதகாலப்பகுதியிலே) பிரபல் யமடைந்தன. எடுத்துக்காட்டாக, விதேஹமன்னரான ஜனகன் தத்துவ ஆசிரியராகவும், தத்துவஞானிகளின் ஆதரவாளஞகவும் விளங்கினன். அங்க, மகத, வங்க ஆகிய இடங்களை ஆரியர் அறிந்திருந்தாலும் இவை முற்றிலும் ஆரிய மயமாகவில்லை. மேற்கிலே, சிந்து பஞ்சாபில், நீச்ய, அபாச்ய, பாஹீக, அம்பஷ்ட ஆகிய ஜனக்குழுக்களும், வடக்கிலே கஷ்மீர், வடமேற்கு எல்லையின் மேற்பகுதியில் உத்தரகுரு, உத்தரமத்ர, மூஜவந்த், மஹாவிர்ஷ, காந்தாரி, பாஹ்லிக, கேசின், GSSuu, காம்போஜ என்போரும் வாழ்ந்தனர்."
ஆரிய தலாச்சாரம் பரவியவாற்றினைச் சதபத பிராஹ்மணத்தாலும் (14.1.10) அறியலாம். விதேஹ அரசஞன விதேஹமாடவன் தன் புரோகிதரான கெளதமராகுகணவொடு சேர்ந்து, சரஸ்வதி ஆற் றங்கரையிலிருந்து வேள்வித் தீயினைக் கிழக்குத்திசை யாகச் சதா நீர நதிக்கு ஊடாகக் கொண்டு சென்று கோசலத்தை அடைந்து அங்கு குடியிருப்பு ஒன்றினை ஏற்படுத்தினன். இதனைத் தனது ஜனக்குழுப் பெய ரால் (விதே ஹ) அழைத்தான். யாதவர் (சத்வந்தி) ஆரிய கலாச்சாரத்தைத் தென்மேற்கிலே, ராஜ்புத் தானம், மல்வா, குஜராத், தக்கணம் முதலிய பல

Page 27
42
இடங்களிலே பரப்பினர்; ஆரியரல்லாத மக்களோடு எளிதில் இணக்கமுற்று ஒன்றுபடலாயினர். இதனுலே பிற்கால நூல்களான இதிஹாஸங்கள், புராணங்கள் இவர்களை அசுரர் என அழைத்தன.
விந்திய மலையினைத் தாண்டித் தெற்கேயும் ஆரியர் இக்காலத்திலே குடியேறினர். சதபத, ஐதரேய பிராஹ்மணங்களிலே ( கி. மு. 1000ம் அளவிலே } சத்வந்த், விதர்ப்ப, நிஷாத, குந்தி என் போர் கூறப் படுகின்றனர். 81 மேலும், ஐதரேய பிராஹ்மணத்திலே ஆரியர், ஆரியரல்லாதார் சேர்க்கையினுல் உண்டான சாதியினரும், மிலேச்சரும் குறிப்பிடப்படுகின்றனர்.** இதிலே, ஆந்திரர், புந்திரர், சபரர், புளிந்தர், மூதிபர் ஆகியோர் தாஸ்யுக்கள் எனவும், ஆரியக் குடியிருப்பு களின் எல்லையிலே வாழ்ந்தனர் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளனர். இவர்கள் விஷ்வாமித்திரரின் முதல் 50 பிள்ளைகளின் வழித்தோன்றல்கள். தகப் ப ஞ ரி ன் சாபத்தினுல் இந்நிலையடைந்தனர். ஆந்திரர் பிற்காலத் திலே, கோதாவரி, கிருஷ்ணு ஆறுகளுக்கு இடைப் பட்ட பகுதியில் வாழ்ந்தனர். ஆளுல் அக்காலத்தில் இப்பகுதியிலோ, இதற்கு வடக்கேயோ வாழ்ந்திருப்பர். புந்திரர் வங்காளத்திலும், சபரர் விசாகபட்டினத்தை " அடுத்துள்ள குன்றுகளிலும் வசித்திருப்பர். புளிந்தர் மல்வாவிற்குத் தென் கிழக்கேயும், மூதிபர், ஹைதரபாத் பகுதியிலும் வாழ்ந்திருப்பர். கி. மு. 6-ம் நூற்றண்டள விலும், அதற்குப் பின்னும் எழுந்த  ைவ திக சூத்திரங்கள்; காலத்தால் முந்திய பெளத்த புனித நூல்கள் (கி.மு. 5-4-ம் நூற்ருண்டளவில்), வடமொழி இதிஹாஸங்கள், புராணங்கள் ஆகியன ஆரியர் படிப் படியாகத் தெற்கே தென்னந்தம் வரை சென்று தமது நாகரிகத்தினைப் பரப்பியவாற்றினை ஒரளவு குறிப்பிடு கின்றன. மேலும், இதிஹாஸங்களிலும், புரிாணங் களிலும், தமிழிலக்கியத்திலும் வரும் அகத்தியர்

43
பற்றிய கதைகள் முக்கியமாகக் குறிப்பிடற்பாலன. அவர் விந்திய மலையினை அடக்கியமை, இல்வலன்,
வாதாபி ஆகிய இரு அசுரரைக் கொன்றமை, கட்ல் நீர் முழுவதையும் குடித்தமை ஆகியன குறிப்பிடற் பாலன. அகத்தியர் ஆரிய நாகரிகத்தின் பிரதிநிதி
யாகவே கொள்ளப்படுகிறர். முன்னிரண்டு கதை
களும் ஆரியர் விந்திய மலையினைக் கடந்து தெற்கே வந்து வெற்றிகரமாகத் தமது நாகரிகத்தினைப் பரப்பு தலையும், மூன்ருவது கதை அவர்கள் பெருங்கடல் களைத் தாண்டி இந்தியாவுக்கு வெளியே ஈழம், தென்
கிழக்காசியா ஆகிய இடங்களுக்குச் சென்று நாகரிகம் பரப்புதலையும் கருவாகக் கொண்டுள்ளன என
வரலாற்ருசிரியர் பொதுவாகக் கொள்ளுவர். ?? இக் க  ைத க ள் பிற்காலத்திலெழுதப்பட்டவையாயினும், முற்பட்ட கால வரலாற்று நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டுள்ளன என்பதே அறிஞர் முடிபு.
எனவே, பிந்திய வேதகாலத்தில், ஆரியர் படிப் படியாக வட இந்தியாவின் மத்திய பகுதிகள், கிழக்குப் பகுதிகள், தென்மேற்குப் பகுதிகள் ஆகியவற்றிற் குடியேறி, ஆரியரல்லாத மக்களுடனும் ஒன்றுபட்டு இந்திய பண்பாட்டினை வளர்க்கத் தொடங்கினர் எனலாம். மேலும், அவர்களிலே, துணிகரமானுேர் ஒரு சாரார் தெற்கே, தக்கணம், தென்னிந்தியா வரை சென்றுவிட்டனர். இக்கால முடிவில் ஒரு சிலர் கடல்கடந்து ஈழத்திற்கும் ஆரிய கலாச்சாரத்தைக் கொண்டு சென்றனர், 84 இக்காலத்தில் ஆரியரின் பிரதான குடியிருப்பிடம் வட இந்தியா. ஆரிய அரசு களின் எல்லைகளில் "ஆரியரல்லாத மக்களின் அரசு களிருந்தன. ஆனல், ஆரியரின் மிகப் பிரதான கலாச் சாரமையமாகிய ஆரியாவர்த்தம் கிழக்கே காலக வனத்தையும், தெற்கே பாரியாத்திராவையும், மேற்கே ஆதர்சவினையும், வடக்கே இமயமலையினையும் எல்லை

Page 28
44
களாகக் கொண்டுள்ளதென (சுமார் கி. மு. 6-5 ம் நூற்
ருண்டுகளைச் சேர்ந்த) பெளதாயண தர்ம சூத்திரம் (1-2-10) கூறுகிறது. இவ்விடத்தில் ஆரியர், ஆரியரல் லாதாரின் குறிப்பாகத் திராவிடரின் கலாச்சார சங்க மத்தினுல் இந்தியப் பண்பாடு உருவாகிப் பிற இடங் களுக்கும் பரவிற்று வைதிகப் பண்பாட்டின் மையம் இதுவேயாம்.
கங்கைச் சமவெளிக்கு ஆரியர் எப்பொழுது வந்தனரோ, அப்போது அவர்கள் இந்திய வரலாற் றிலே நிரந்தரமான பதிவினை ஏற்படுத்துவர் என்பது திண்ணமாயிற்று. இந்தியாவின் மிகப் பிரதான பகுதி யிதுவே. 93 வரலாறு கண்ட அகில இந்தியப் பேரரசு களும் முக்கியமான சமய, பண்பாட்டு இயக்கங்கள் பலவும் இங்கேதான் தோன்றிப் பிற இடங்களுக்குப் பரவின. கங்கை புனித ஆருக விளங்குகிறது. அது பாயும் சமவெளி இந்தியாவின் ஒரு பிரதான அல்லது பிரதான அரசியல், , சமய, பொருளாதாரமைய மாகவும் விளங்கி வந்துள்ளது. அங்கு ஆரியர் வருகையும், ஆதிக்கமேற்படுத்தலும் மேற்குறிப்பிட்ட உண்மையினை வலுப்படுத்துவன.
அரசியல்
இருக்குவேத காலத்திலே, பெரும்பாலும், முடி யாட்சி நிலவிற்று, ஜனக்குழுக்கள் வாழ்ந்த கிராமங்கள். ஒன்று சேர்ந்து சிறு சிறு அரசுகளாயின. அரசின் தலைவனுண மன்னனைக் குறிக்கும் “ராஜன்' என்ற பதம் பல பாடல்களிலே வருகின்றது. பரத மன்ன ஞன சுதாஸிற்கு எதிராகப் பத்து மன்னர் போர் செய்தனர். தானஸ்துதிப் பாடல்களில், பல மன்னர் குறிப்பிடப்படுகின்றனர், ஆரியரல்லாத மக்களிடையி லும், முடியாட்சி நிலவியதை இலிபிச, சுமுறி போன்ற தாஸ் மன்னரைப் பற்றிய குறிப்புகளால் அறியலாம்.

45
ஒவ்வொரு ஜனக்குழுவிற்கும் தனிப்பட்ட மன்னனி ருந்தான். ஆரியரக் காலத்திலே தமக்குள்ளேயும்,
ஆரியரல்லாத மக்களோடும் பல வேளைகளிற் போர் செய்து வந்தனர். போரிற்கு மக்களை அழைத்துச்
செல்லத் தலைவன் தேவை. இத்தலைவனே நாளடை
விலே மன்னனனன். "ஜனக் குழுத்தலைவன் மன்னணு கவும், அரசனுகவும் விளங்குவதற்குப் போரே காரணம்’ என வில்டுரண்ட் என்பவர் கூறியுள்ளது வேதகாலத்
திற்கும் "பொருத்தமானது.
கண, கணபதி போன்ற பதங்கள் இதிலே காணப் படுவதாலே, சிறிதளவு குடியரசுகளும் நிலவின என லாம்.?? இக்கால மன்னன் ஜனக்குழு நிலையிலே தான் காணப்படுகிருன். மன்னனின் பெயருடன் ஜனக் குழுப் பெயரும் வருகின்றது. பேரரசனைக் குறிக்கும் சாம்ராட் எனும்பதமும், உலகம் முழுவதையும் ஆளும் மன்னரைக் குறிக்கும் விஸ்வஸ்ய புவனஸ்ய ராஜா எனும் பதங்களும் வருகின்றன. ஆனல் இருக்குவேத மன்னரைப் பொறுத்த வரையிலிவை எந்த அளவிற்குப் பொருத்தமானவை எனத்திடமாகக் கூறமுடியாது.
பரத ஜனக்குழுவைச் சேர்ந்த திருத்ஸ" மரபில் வந்த சுதாஸ் விஷ்வாமித்திரரின் தூண்டுதலிஞலே, தனக்கு எதிராக வந்த பத்து மன்னர்களை ரவி ஆற் றங்கரையிலே வென்று பெரும் புகழ் பெற்றன். 酱 வே. 7. 18, 33,83), இவ் அரசன் வென்ருேரிலே பூரு, யது, துர்வச, அணு, துருஹ்ய ஆகிய பிரபல்யமான ஜனக் குழுக்களுமிடம் பெற்றிருந்தன. சுதாஸ்தாஸ் மன்னனுன பேத (ன்) தலைமையிலே வந்த அஜஸ், சிக்ருஸ், யக்ஷ"ஸ் ஆகியோரை யமுனை ஆற்றங்கரை யிலே வென்றுவாகை சூடினுன், 87 எனவே, இவனின் வெற்றிகள் முதன்மையான ஆதிக்க நிலையினைச் சம காலத்திலோரளவு ஏற்படுத்தின. இத்தகைய சூழ் நிலையிலே சாம்ருட் எனும் பதம் கவனித்தற்குரியது.

Page 29
46
பத்து மன்னர் (தசராஜ்ஞ) போர் இருக்குவேத - கால ஜனக்குழுக்களின் போராட்டங்களையும் அவற்ருலே மேலாதிபத்யம் குறிப்பிட்ட சில பகுதிகளிலேற் படு தலையும் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
மன்னன் பெருமதிப்பும், மேன்மையும் உள்ளவனுக இலங்கினுன் பாடல்களிலும் சிறப்புப் பெற்றுள்ளான்; பெரியமாள்கைகளிலே வசித்தான் போலும். ஆனல் தெய்விகத் தன்மையுள்ளவனுகக் கருதப்பட்டிலன். திரஸ்தஸ்யு என்பவன் மட்டும் புறநடையாக, அரை குறையான தெய்வமாகக் கருதப்பட்டான்.
அரச உரிமை வழி வழியாகவே, நிலவிற்று. இதனை எடுத்துக்காட்டாக, பூரு ஜனக்குழுவிலே, துர்கஹ, கிரிகூதித், திரஸ்தஸ்யு என்போர் ஒருவர் பின் ஒரு வராக ஆண்டதினுல் அறியலாம். ஆணுலவசியமாயின் குடிகள் அரச குடும்பத்திலிருந்தோ, பிரபுக்கள் குடும் பத்திலிருந்தோ, மன்னனைத் தெரிவு செய்தனர்.
அரசன் மட்டற்ற அதிகாரங்கள் கொண்டவனுக் இருந்திலன். ஜனக் குழுமன்றங்களான சபா சமிதி என்பன அரசியலிலே முக்கிய பங்கு பற்றின. ஆணுலி வற்றின் உறுப்பினர் கடமைகள் பற்றி அதிகம் அறிய முடியாது. இதனுல், அறிஞரிடையிலிவை பற்றிக் கருத்து வேறுபாடு உளது. சபா கிராமமன்றம் எனவும், சமிதி ஜனக்குழுவின் பொது மன்றம் எனவும், சிம்மர் எனும் அறிஞர் கருவதுர். சபா சமூகக் கூட் டங்கள் கூடும் மையமாகமட்டுமன்றி, மன்றம் கூடும். இடமெனவும், சமிதி ஜனக்குழுவின் அலுவல்களைக் கவனிப்பதற்கான மக்கள் மன்றமெனவும் கீத் கூறு கிருர்,88 சமூக, அரசியல் நோக்கங்களுக்காகக் கூடும் கிராமமன்றமே சபா எனவும், சிலவேளைகளிலே சமூகக் கூட்டத்தினைக் குறிப்பிட்டாலும் மத்திய அரசாங் கத்திலிருந்த அரசியல் மன்றமே சமிதி எனவும்

47
ஓர் அறிஞர் கருதுவர்.?? வேதகால ஆரியரின் சிறப்பான பொதுமக்கள் மன்றமே சமிதி எனலாம். சபா மன்னனின் ஆலோசனைக் கழகம் எனவும், வேருெரு அறிஞர் கூறுவர்.96 சமிதியிலே குறிப்பிட்ட ஜனக்குழுவின் பிரமுகர் பலர் இடம் பெற்றனர் என வும், ஹோமரிய மன்றங்கள், ரோமானிய கொமிதிய, சென்சூரிதிய, தியூத்தோனிய மன்றங்கள் போன்று இதுவும் இராணுவ இயல்புடையதெனவும் பி. கே. மஜ"சம்தார் குறிப்பிட்டுள்ளார்.91 எவ்வாருயினும், மன்னரின் சர்வாதிகாரப் போக்கிற்கு இவை தடையாக விளங்கின. மன்னனுக்கும் மன்றங்களுக்குமிடையிலே மட்டுமன்றி மன்ற உறுப்பினர் மத்தியிலும் இணக் கம், ஒற்றுமைநிலவவேண்டுமென வற்புறுத்தப்பட்டது. இருக்குவேத இறுதிப்பாடல் இத்தகைய ஒற்றுமை யினை “ஒன்று கூடுங்கள்; சேர்ந்து பேசுங்கள்; ஏக மனதாயிருங்கள்" என அழகாக எடுத்துக் கூறுகின்
DS- R
மன்னனின் வரம்பற்ற அதிகாரம் புரோஹிதரின் செல்வாக்கு, பெரு மதிப்பு ஆகியனவற்ருலும் குறையும். இவர் மன்னனின் ஆத்மிகவாழ்விற்குத் தேவையான சமயக்கிரியைகள் செய்வதுடன் அவனுக்குப் போரிலே வெற்றிகிடைத்தற்கான கிரியைகள், மாந்திரிகவிதி களையும் செய்வர்; ஓதுவர். அவனுக்கு & ஆலோசனை கூறுவர்.
குடிகளைப்பாதுகாப்பதே அரசனின் புனித கடமை யாகும். அதற்குப் பதிலாக அவன் குடிகளின் ஆதரவு, பற்று முதலியனவற்றினை எதிர்பார்த்தான். பலி எனும் பதம் இருக்குவேதத்திலே வரி அல்லது கடவுளுக்கு அளிக்கும் அமுதுஎனப்பொருள்படும் தொடக்கத்திலே மக்கள் தமக்குப் பாதுகாப்பினை அளிக்கும் வேந்த னுக்குக் கைமாருகத் தாமாகவே கொடை வழங்கினர். இக் கொடை பின்னர் ஒழுங்கான வரியாயிற்று. இக்

Page 30
48
காலத்திலே திட்டவட்டமானவரி முறை நிலவவில்லை. வரியினைப் பொருளாகவே மன்னன் பெற்றன் என லாம். பொதுவாக, நிலங்கள் மன்னனுக்கு உரியன வல்ல.
இக்கால மன்னன் போர்த்தலைவனுகவே விளங் கினன். மன்னன், பிரபுக்கள் தேர்களிலும், பொது மக்கள் நிலத்தினின்றும் போர்புரிந்தனர். போர் அணி வகுப்புகள் பற்றிக் கூறப்படுகின்றது. போர்ப்பறைகள், கொடிகள் இடம் பெற்றன. அம்பு வில்லு, ஈட்டி, கோடரி, வாள், கவண் முதலியன போரிற் பயன் படுத்தப்பட்டன.
குதிரை பூட்டிய தேர்ப்படையும், காலாட்படையும் குறிப்பிடத்தக்கன. நிலையான படை இருந்திலது. ஆரிய ரின் வெற்றிகளுக்கு எளிதாக விரைவிற் செல்லும் குதிரை பூட்டிய தேர்ப்படை, ஒரு முக்கிய காரண மாகும்.82 பிற இடங்களை முற்றுகையிடும் போது தீ வைத்தனர்; பகைவரின் கோட்டைகளைத் தகர்த்தனர். இருக்கு வேதத்தில் வரும் ஹரியூபிய ஹரப்பா என அறிஞர் சிலர் கருதுவர்.
இக்கால நிருவாக அமைப்பிலே, கிராமத்தலை வரான கிராமணி, படைத்தலைவரான சேஞனி, சமய ஆலோசகரான புரோஹிதர் குறிப்பிடத்தக்க அதிகாரி களாவர். ஒற்றர்கள் நாட்டிலே நிகழ்வனவற்றைப் பற்றி மன்னருக்கு அறிவிப்பர். நீதிபரிபாலனம் ஓரளவு நடைபெற்றது. மன்னரே நீதியின் ஊற்று, குற்றவியல், குடியியல் (சிவில்) வழக்குகள் விசாரிக் கப்பட்டுத் தீர்க்கப்பட்டன. --
வேதகாலத்தின் பிற்பகுதியிலே, ஆரியருடைய அரசியல் நிலைகளிலே மாற்றங்களேற்படலாயின. முந் திய வேதகால அரசியல் நிலையின் சில அம்சங்கள் தொடர்ந்து நிலவின. முடியாட்சியே தொடர்ந்து

49
நிலவிற்று. குடிகளின் விருப்பம், தேர்வு, அரசரின் குணுதிசயங்கள் என்பன மன்னரைத் தெரிவுசெய்த லிலே கவனிக்கப்பட்டன. அரசன் தெய்வீகத் தன்மை வாய்ந்தவன் என்ற கருத்துப் பொதுவாக நிலவிற்று. இக்கருத்து ஏற்கனவே இருக்கு வேதத்திலே தொனித் தாலும், இக்காலத்திலே, வாஜபேஜ. ராஜசூய வேள் விகளை வேந்தன் செய்விப்பதால், மன்னன் பிரஜாபதி யுடன் சமமாகக் கருதப்படுகிருன். 'அரசன் பிரஜா பதியின் வடிவமாகக் காட்சியளிக்கிறன். எனவே, அவன் தனியாகவே பலரை ஆளுகிருன்,” எனச் சத பதபிராஹ்மணம் கூறும்.
அரசமுறையிலே, தேர்தல், தெய்வீகத்தன்மை முதலியனவற்றுடன் ஒப்பந்தக் கோட்பாடும் ( Theory of Contract ) ஓரளவு தொனிப்பதாகப் பேராசிரியர் ஆர். சி. மஜ-Cம்தார் குறிப்பிட்டுள்ளார். ?? இக் காலத்திய கோன்மையின் தாராண்மைக் கருத்துக்களை ஓரளவு யஜுர் வேதத்திலே காணலாம். புரோஹிதர் மன்னனுக்கு மகுடாபிஷேகம் நடைபெறும்போது கூறுவதாவது, -
"மன்னராக நீர் இன்று தொடக்கம் வலியோரையும் மெலியோரையும் பாரபட்சமின்றி நடத்து வீராக. மக்களுக்கு நன்மை புரிவதிலேயே மிகவும் முயற்சிப் பீராக. யாவற்றிற்கும் மேலாக நாட்டினைத் துன்பங் களிலிருந்தும் காப்பாற்றுவீராக’ என்பதாம். . இதே, வைபவத்திலே மன்னன் தான் தவறு இழைத்தால் தனக்குப் பிற்சந்ததி அற்றுப் போவதாக எனத்தான் சத்திய்ம் செய்யும்போது கூறுகிறன். ஆகவே, இந்திய மன்னர் முற்ருன கடுங்கோன்மைவாதிகள் அல்லர்” எனப் பேராசிரியர் மஜூம்தார் வற்புறுத்தியுள் srrj. °“

Page 31
50
பிந்திய வேதகாலத்தில் ஆரியர் பல திசைகளிலும் வெற்றிகரமாக முன்னேறினர். பெரிய அரசுகள் தோன்றின. இவற்ருலே, மன்னரின் மாட்சிமை, அதிகாரம் முதலியன அதிகரித்தன. அவர்கள் அஷ்வ மேதம், வாஜபேயம் போன்ற பெருவேள்விகளை நடத் தினர்; ஏகராட், சார் வபெளம போன்ற விருதுப் பெயர் தரித்தனர். சிலர் ஐந்திரமஹாபிஷேகமும்” செய்தனர்.
முடியாட்சி வழிவழியாகவே நிலவி வந்தது. பத்துத் தலைமுறைக்கு (தச - புருஷம் - ராஜ்யம்) ஆளப்பட்டு வந்த இராச்சியம் பற்றியும் குறிப்பு உளது. சில வேளைகளிற் குடிகளே அரசனைத் தெரிவு செய்தனர் (அ. வே. 19-3-4). நாடுகடத்தப்பட்ட こ州アérf திரும்பவும் ஆட்சி புரிந்தமை பற்றிய குறிப்பு உண்டு. அரசர் ஆதிக்கம் வலுப்பெற்றலும், குடிகள் சீறின், பல தலைமுறைகளாக ஆண்டுவந்த மன்னனும் பதவி இழந்தமையின்ைப் பத்துத் தலைமுறையாக ஆண்டு வந்க சிருஞ்ஜய மன்னனுன துஷ்டரீது பவும்சாயன நாடுகடத்தப்பட்டமையினுல் அறியலாம்.
கணராஜ்யங்கள் அல்லது குடியரசுகள் ஆரிய கலாச்சார மையத்தின் எல்லைகளிலே நிலவின. சபா, சமிதி ஆகியன தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வந்தன. அதர்வ வேதத்திலே மன்னன் “பிரஜாபதியின் இரு புத் திரிகளான சபாவும், சமிதியும் எனக்கு இடை விடாது உதவி புரிவீர்களாக" என வேண்டுகின்றன். சபாவிலே நீதி சம்பந்தமான விடயங்களும் கவனிக் கப்பட்டன. “சபா' முதல்வர் சபாபதி என அழைப் கப்பட்டார். சபாவிலே பொதுமக்கள் கூட்டங்கள், களியாட்டங்கள் நடைபெற்றன எனலாம். சமிதியிலே பெரும்பாலும் அரசியற் கொள்கைகள், சட்டங்கள் முதலியன உருவாக்கப்பட்டன.

51
ஆஞல், காலப்போக்கிலே, மன்னனின் அதிகாரம் அதிகரிக்கவே, அலுவலகப் பதவணிக் குழுவினர் தோன்றினர். இதன் விளைவாகப் பொது மக்களின் மன்றங்கள் முக்கியத்துவம் இழந்தன. சமிதி முற்ருக மறைந்தது. சபா அரசனுடைய அவையாக மாறிற்று.
அரசருக்கு உ த வி யா ன அதிகாரிகளிலே, புரோஹிதர், சேணுனி, கிராமணி, பாகதூத (வரி சேகரிப்பவர் அல்லது உணவு விநியோகம் செய்பவர்), சூத (தேர்ச் சாரதி), சங்கிரஹீதிர் (பொருளாளர்), அக்ஷாவாய (சூதாட்ட மேற்பார்வையாளர்), தக்ஷன் (தச்சன்), ரதகார (தேர் செய்பவன்), ஸ்தபதி (நீதிபதி அல்லது தேசாதிபதி) முதலியோரைக் குறிப்பிடலாம். இவர்களிலே, கடைசியாகக் குறிப் பி ட் ட வரைத் தவிர்ந்த ஏனையோர் ரத்னின் என அழைக்கப் பட்டனர். இவர்கள் ராஜகுயத்தில் இடம் பெற்றமை யிலிருந்து, இவர்களின் முக்கியத்துவம் வெள்ளிடை . ע%tp
புரோஹிதர் செல்வாக்கு ஓரளவு மேம்பட்டு நிலவியது. பிருஹதாரண்யக உபநிஷத்திலே (1-4-12) மன்னருடைய அதிகாரமும் பிராமணரிலிருந்து தோ ன் றிய தா க க் கூறப்பட்டுள்ளது, எனினும், மன்னரின் அதிகாரம் அதிகரித்ததேயன்றிக் குறைய வில்லை. அரசன் தொடர்ந்து பலி (வரி) பெற்றுவந் தான் பாக என்ற சொல் பிற்கால இந்திய அரசு களில் சேகரிக்கப்பட்ட வரியினைக் குறிக்கும் சொல் லாகும். இச் சொல், இக்காலத்திலே வழங்கத் தொடங்கி விட்டது. வரிசேகரிப்பவர் (பாக தூத) ஒரு முக்கிய மான அதிகாரியாவர். பொதுவாகப் பிற்காலத்திலே குடிகளின் வருமானத்தில் ஆறிலொரு பகுதி பாக என அழைக்கப்பட்டது. அதன் விகிதம் குறைந்தும், கூடியுமிருந்ததைப் பிற்காலத்திய அர்த்த சாஸ்திரம்" போன்ற நூல்களால் அறியலாம்.

Page 32
52
அரசன் தானே போருக்குத் தலைமைதாங்கி வந்தான். முக்கியமான தண்டனை அதிகாரியாகவும் அரசரே இலங்கினர். அவனுக்கு உதவியாகப் பல அதிகாரிகளிருந்தனர். கிராமத்தில் ஏற்படும் சிறு பூசல்களைக் கிராமியவாதின் தீர்த்து வைப்பார். குற்ற வியல், குடியியல் குற்றங்களுக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. அங்கக் குறைப்பு, கடுந்தேர்வு (Ordea) போன்றனவும் விதிக்கப்பட்டன.
தருமம் நன்கு வற்புறுத்தப்பட்டது. தருமமே. கொடுங்கோல் வேந்தனைத் தண்டிக்கும். "தருமமே கூடித்திரியருக்குப் பலமளிக்கும். எது தர்மமோ அதுவே சத்தியம். அரசருமிதற்கு உட்பட்டவராவர்” எனப் பிருஹதாரண்யக உபநிஷத் கூறும் (1-4-14).
வேதகாலச் சமய தத்துவ நிலை
ஆரியருடைய சமயம் பற்றிய பல அம்சங்களை வேத இலக்கியத்தில் ஒரளவு அறியலாம்.98 கர்ப்பமா கிய காலம் தொட்டு மரணம் வரையும் ஆரியரின் வாழ்க்கையிலே சமயம் முக்கியமான இடம் பெற்றி ருந்தது. இருக்குவேத காலச்சமய நிலைக்கும், பிந்திய வேத காலச் சமயநிலைக்குமிடையிலே வேறுபாடுகளி ருந்தன. பல நூற்ருண்டுகளிலே பாடப்பட்ட பாடல் களின் தொகுப்பாகவே இருக்குவேதம் விளங்குகிறது. இதில் ஆதி மக்களின் சமய நம்பிக்கைகள் காணப் படுவதிலே வியப்பில்லை. ஆதி மனிதனின் சமயம் வளர்ச்சி அடைவதை இங்கும் காணலாம்.
இக்கால ஆரியர் பிரதானமாகத் தேவர்களை (லத் தீன்-தியுஸ் - ஒளியுள்ளவற்றினை) வணங்கினர்.?? இவர் கள் இயற்கையின் பல்வேறு அம்சங்களைக் கண்டுவியப் புற்றனர். உஷா, சூரியன், அக்கினி (தீ) முதலியோர் பற்றிய பாடல்களில், இயற்கையின் நலத்தினை மக்கள்

53
எவ்வாறு ஏற்றுக் கொண்டனர் என்பதை உணரலாம். இத்தெய்வங்களுக்கு மனிதப்பண்புகளேற்றிக் கூறினர். இவர்களுடன் இருவழிகள் நெருங்கிய தொடர்பு கொண் டிருந்தனர். இந்திரன், வருணன் போன்ற தெய்வங் களின் இயற்கை அம்சங்களைத் தெளிவாக அறிய முடியாதுள்ளது. ஒரு தெய்வத்தின் விருதுப் பெயர் அத்தெய்வத்தின் ஓர் அம்சத்தினைக் குறித்துப் பின் நாளடைவிலே தனித் தெய்வத்தினையும் குறித்தது. எடுத்துக்காட்டாக, சவிதிர் சூரியனின் ஒரம்சமான ஊக்குவித்தலைக் குறித்து நாளடைவிலே தனித் தெய்வ மாயிற்று. பல தெய்வ வணக்கம் நிலவிற்று. ஆணுல், மகஷ்முல்லர். இருக்குவேத காலச் சமயத்தினை 'கதனே தீஸம்’ என வர்ணித்துள்ளார். அதாவது , "ஒரு நேரத் தில் ஒரு தெய்வமே பெருந் தெய்வமாகக் கருதப்படும். பிறிதோரிடத்தில், இதே தெய்வத்திலும் பார்க்க வேருெரு தெய்வம் உயர்ந்த நிலையில் உள்ளதாக Shiorris' UGSub (The belief in individual gods alternatively regarded as the highest)”. 6roồ6urgỗ Q]5 tỉ sutải &&m uth ஒன்று சேர்த்து, விஸ்வே தேவா" என வணங்கினர். இருக்குவேதத் தெய்வங்கள் 33 எனக் கூறப்படும். இத் தெய்வங்கள் உலகத்தின் மூன்று பிரிவுகளிலும், உள்ள னர்; பொதுவாக நன்மையே புரிவர். இத்தெய்வங் களை அவர்கள் வீற்றிருக்கும் இடம் நோக்கி யாஸ்கர் (கி. மு. 6-ம் நூ. அளவில்) மூன்று பிரிவாக வகுத் துள்ளார்.
முதலாவதாக, வானம், வருணன், சூரியன், விஷ்ணு உஷா போன்ற விண்ணுலகத் தெய்வங்களைக் குறிப் பிடலாம். இரண்டாவதாக, இந்திரன் , ருத்திரன், மருத்ஸ், பர்ஜன்ய முதலிய வளி மண்டலத் தெய்வங் களையும், இறுதியாகப் பிருதுவீ, அக்கினி, சோம போன்ற பூவுலகத் தெய்வங்களையும் குறிப்பிடலாம். இத்தெய்வங்களில், இந்திரன், அக்கினி, சோம என்

Page 33
54
போரே மிகமுக்கியமானவர். இருக்குவேதத்தில் 25 விகிதப் பாடல்கள். இந்திரனைப் பற்றியவை. போர் புரிந்து வெற்றிகரமாக முன்னேறி வந்த ஆரிய சமு தாயத்திலே போர்த் தெய்வமான இந்திரன் முக்கியத் துவம் அடைந்ததில் வியப்பில்லை. இந்திரனுக்கு அடுத்த படியாக அக்கினியே பிரதான தெய்வமாகும். குளிர் வலயத்தில் வாழ்ந்த மக்களுக்குத் தீயின் முக்கியத்து வம் வெள்ளிடை மலை. வைதிக சமயக்கிரியைகளில் இன்றும் தீவழிபாடு தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றது. தீவணக்கம் இந்தியாவுக்கு வந்த ஆரி யர் மத்தியிலே மட்டுமன்றிப் பழைய இரானியர், கிரேக்கர், உரோமர் முதலிய பிற ஆரியர் மத்தியிலும் நன்கு நிலவியது.
இப்பிரபஞ்சத்திலுள்ள ஒழுங்கு ருத (Rta) என அழைக்கப்பட்டது. சிரத்தா (நம்பிக்கை), மன்யு, (கோபம்) போன்ற பண்புப் பதங்களும் தெய்வீகத் தன்மை பெற்றன. பல தெய்வ வணக்கம் நிலவிய போதிலும் எல்லாம் ஒரே பரம் பொருள் எனும் கருத் தும் நிலவிற்று. இவ் ஏக தெய்வ வணக்கம் நில வியதனை 'ஏகம் ஸத் விப்ரா பஹ தோ வதந்தி (இ. வே. 1. 164, 46) உண்மைப் பொருள் ஒன்றே; ஞானிகள் பலவாறு கூறுகின்றனர். அதாவது, இதனை, அக்கினி, மாதரிஷ்வன் எனக் கூறுவர்” என்பதால் அறியலாம். மேலுமிக் கருத்து ' எங்களின் பிதா, சிருஷ்டிகர்த்தா , விதாதா, (ஒழுங்கு படுத்துபவர்) ஆகிய இறைவன் உலகம் அனைத்திலுமுள்ள நிலைகளையும், பொருட்களை யும் அறிபவர்; அவர் பற்பல தெய்வங்களைத் தாங்கி நிற்கும் ஒரேயொருவர்,” என இருக்குவேதம் (10.82. 3), யஜுர் வேதம் (17-27), அதர்வவேதம் (2. 1. 3) முதலி யன வற்றிலே வருவதும் குறிப்பிடற்பாலன.
காலம் செல்ல, ஆரியர் உலகம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். இருக்குவேத காலத்தின் பிற்பகுதியிலே

55
தோன்றிய சில பாடல்கள் இத்தகைய சிந்தனைகளைப் பிரதிபலிப்பன. எடுத்துக்காட்டாக, உலகச் சிருஷ்டி பற்றிய பாடலில் (10. 129 7) உலகம் தானுகவே முகிழ்த் ததா? அல்லது இறைவனுல் உண்டாக்கப்பட்டதா? என வினவப்படுகிறது. இந்திய தத்துவ ஞான ஊற்றின் தொடக்கமுமிங்கு காணப்படுகின்றது. இதிலே, உல கம் தானுகவே, முகிழ்த்தது எனும் 'பரிணும வளர்ச் சி’க் கருத்தும், கடவுளே இப்பிரபஞ்சத்தைப் படைத் தார், என்ற கருத்தும் தொனிக்கின்றன. இந்தியத் தத்துவத்திலே படைத்தற் கடவுளான பிரமா, ஒழுங்கு படுத்துபவர் எனப் பொருள்படும் விதாதா என அழைக் கப்படுவதும் குறிப்பிடற்பாலது. வேறு சிலவற்றிலே, எத் தெய்வத்திற்கு அவி அளிப்போம்?, எனும் ஐயப் பாடு உளது.
ஆரியரின் சமய வாழ்க்கையிலே வேள்வியே பிர தான இடம் வகித்தது.98 தெய்வங்களுக்குப் பலிய ளித்து வணங்கினர். இக்கால வேள்வி முறை சாதா ரணமானது. பலிகளை வேள்வித் தீயிலிட்டனர். அக் கினியே ஏனைய தெய்வங்களுக்கும், மனிதருக்கும் துாதுவராவர். தெய்வங்களைப் பிரீதிப்படுத்தவும், உலக இன்பங்களைப் பெறவும் வேள்வி இயற்றினர். சாதாரண வீட்டு வேள்விகளுமட்டு மன்றிப் பெரிய வேள்விகளு மியற்றப்பட்டன. சாதாரண வீட்டு வேள்வியினை இல் வாழ்வான் இல்லக் கிழத்தியுடன் இயற்றுவான். இக் 田ro ஆரியர் இவ் உலக இன்பங்களையே பெரிதும் நாடினர். நீண்ட ஆயுள் (100 ஆண்டுகள்), மிகுதியான செல்வம், வீரமைந்தர், முதலியனவற்றையே பெரிதும் விரும்பினர். மறு உலக சிந்தனை பற்றிய ஒரு சில குறிப்புகளே வருகின்றன. இறந்த பின் ஒருவர் இரு வழிகளால், தேவர் உலகத்திற்கும், பிதிரர் உலகத்திற் கும் செல்வர். யமலோகத்தில் யமனும், யமியும் அம ரர்க்குரிய இன் பத்திலே திளைப்பர். இத்தகைய விண்

Page 34
56
ணினை வேள்வி இயற்றுதலால் அடையலாம். பாவம் என்பது பிரபஞ்ச அல்லது உலக ஒழுங்கினை (ருதம்) மீறுதல் அல்லது வேள்வி இயற்ருது விடுதலாகும். இருக்குவேதத்திற் சில பாடல்களிலே தவம் செய்யும் மெளனி முனிவர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படு கின்றன.
வேதகாலத்தின் பிற்பகுதியிலே நிலவிய சமய நிலையினைக் கவனிக்கும்போது அதர்வவேதத்தினை முதலிலே குறிப்பிடலாம். ஏனைய வேதங்களிலே காணப் படாத பாமரமக்களின் நம்பிக்கைகள் இதில் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் இதில் நன்மை அல்லது தீமை விளைவிக்கும் மாந்திரிக விதிகள் உள்ளன. பல காலத்தின் பின்னரே இஃது ஒரு வேதமாகச் சில மாற்றங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. "அசுரர் களைச் சாந்திப் படுத்தலும் நண்பர்களுக்கு நன்மை யேற்படுத்தலும், பகைவர்களைச் சபித்தலும்’ இவ் வேதத்தின் பிரதான நோக்கமாகும்.99 பூமி, வருணன், ருத்திரன் பற்றிய சில பகுதிகள் குறிப்பிடற்பாலன.
தொடக்க காலத்தில் எளிமையாயிருந்த வேள்வி களிலே காலம் செல்லப் பெரிய கிரியைகள் இடம் பெற லாயின. செல்வந்தர், வறியோர் தத்தம் வீடுகளிற் செய்து வந்த வேள்விகள் எளிமையானவை; சில வேள்விகள் நாடோறும் அல்லது சில பருவங்கள் தோறும் செய்யப் பட்டன. அதர்வவேத மந்திரங்கள் பெருமளவு வீட் டுச் சடங்குகளிலேயே பயன் படுத்தப்பட்டன. பிந்திய வேதங்கள், பிராமணங்களிலே பெரிய வேள்விகள் அதிக முக்கியத்துவம் பெற்றன. இவற்றிற் பயன் படுத்தற்காகவே. சாம, யஜுர் வேதங்கள் தொகுக் கப்பட்டன. ஒழுங்கான வேள்வி முறையே பிராஹ் மணங்களின் பொருளாக உள்ளது. ஆஹவனியம், கார்ஹபத்யம், தாகூரினுத்யம் ஆகிய முத்தீ வளர்க்

57
கப்பட்டது. பெரிய பலிபீடங்கள் அமைக்கப்பட்டன? பல, புரோஹிதர் ராஜகுய, வாஜபேய போன்ற பெரிய வேள்விகள் இயற்றுவதில் ஈடுபடுத்தப்பட்டனர். யஜ மானன் (வேள்வி இயற்றுவிப்போன்) பெரிய தகூதிணை (கொடை) கொடுத்தான். சொற்களைச் செவ்வனே உச்சரிப்பதிலே தான் வேள்விகளின் பலன் ஏற்படு மென்பதை உணர்ந்திருந்தனர். வேள்வியினலே தெய் வங்களையும் கட்டுப்படுத்தலாமென்றெண்ணியிருந்த னர். இருக்குவேதத்திலே தெய்வங்களைப் பிரீதிப்படுத்தி. நன்மை பெறுதற்கான கருவியாகவே வேள்வி பயன் படுத்தப்பட்டது. ஆனல் இக்காலத்திலே வேள்வியே யாரையும் கட்டுப்படுத்தவல்ல. எதையும் சாதிக்க வல்ல, கருவியாக மாறிற்று. ஆரிய நாகரிகம் பரவி யிருந்த இடங்களிலே, தீவணக்கமும், அதற்கான கிரி யைகளும் பரவின. ஆரிய நாகரிகச் சின்னமாக இவை இலங்கின.100 இந்திரன் வருணன் முதலிய இருக்கு வேதகாலத்திய பிரதான தெய்வங்கள் முன்னைய முக் கியத்துவத்தினை இழந்தனர். யஜுர் வேதம், பிராஹ் மணங்கள் ஆகியவற்றிலே பிரஜாபதியே பிரதான தெய்வமாகும்.
ருத்திரன் (சிவன்), விஷ்ணு, பிரபல்யமடைந்தனர். யஜுர் வேதத்திலே பிரஜாபதி, ருத்திரன், விஷ்ணு ஆகி யோர் பிரபல்யமடைகின்றமையினைக் காணலாம். புரா -ணங்களிலே நன்கு வளர்ச்சியுற்ற திரிமூர்த்தி (பிரமா, விஷ்ணு, ருத்திரன்) கோட்பாட்டின் ஆரம்பத்தையும் இந்நூலிலே காணலாம் 100 அ ருத்திர்னுடன் அம்பிகா சக்தியாகவன்றிச் சகோதரியாகவே கூறப்பட்டுள் ளார். யஜுர்வேதம் வாஜஸனேயீ சம்ஹிதையிலே (16 லே) வரும் சதருத்திரீயம் குறிப்பிடற்பாலது. இதிலே ருத்திரனின் நூறு நாமாவாளி கூறப்படுகின் றது. இவற்றுள், மஹாதேவ, ஈசான, சங்கர, சிவ பசுபதி, நீலக்கிரீவ, சிதிகண்ட முதலியன குறிப்பிடற்

Page 35
58
பாலன. ஐதரேய, சதபத, கெளசீதகீ, பிராஹ்மணங்க ளிலே ருத்திரன் பிரபல்யமடைவதைக் காணலாம். விஷ் இணுவுமிக்காலத்திலே பிரபல்யமடையத் தொடங்கிவிட் டார். -
இருக்குவேதத்திலே சிவபிரான்,ருத்திரன் எனும் பெய லே சிலபாடல்களிற் குறிப்பிடப்படுகின் ருர், ஓயாது. போர் புரிந்து கொண்டிருந்த ஆரிய சமூகத்திலே போர்த்தெய்வமான இந்திரனுக்கு இருக்குவேதத்திலே முக்கியத்துவமளிக்கப்பட்டதிலிருந்து ருத்திரனே, அல் லது விஷ்ணுவோ பிரபல்யமற்ற தெய்வங்களெனத் திடமாகக் கூறமுடியாது.191 ஆரியரல்லாதோர் குறிப் பாகத் திராவிடர் தொடர்புகள் அதிகரித்தன. இரு சாராரும் பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். சமயத்துறையிலே, முக்கியமாக இருக்குவேத காலத் திற்குப் பிந்திய வேத இலக்கியம், இதிஹாசங்கள், புரா ணங்கள் ஆகியவற்றிலே, உதாரணமாகச் சிவபிரா னைப் பற்றிய கருத்துக்களிலே ஆரியரல்லாதோர் கருத் துக்களே மேலோங்கின எனலாம். ஆரியர், மத்தியிலே தொடக்கத்திலே, பிரபல்யமாகப் பாடல்கள் பலவற் றிலே போற்றப்பட்ட தெய்வங்கள் இந்தியச் சூழ்நிலை மாற்றத்தினுலே பிரபல்யம் குன்றினர். எடுத்துக் காட்டாக வருணன் நீர்த் தெய்வமானுன் . இந்திரன் தேவலோக அரசனுஞன். ஆரியரிலொருபிரிவினரான ஆதிக்கிரேக்கர் எவ்வாறு மைனுேவன், மைசீனியன் நாகரிகங்களிற் காணப்பட்ட மேலான நாகரிக அம் சங்களைப் புறக்கணியாது தமது நோக்கத்திற் கேற் பப் பயன்படுத்தித் தமது நாகரிகத்தினை வளர்த்த னரோ அவ்வாறே இந்தியாவுக்கு வந்த ஆரியரும் ஆரியரல்லாத மக்களிடையே நிலவிய நாகரிக அம்சங் கள் பலவற்றைத் தமதாக்கினர் எனலாம்.
மேலும் உபநிஷதகாலத்திலே முக்கியத்துவம் பெற்ற பிரஹ்மன் - ஆத்மன் கோட்பாடு, கர்மம் பற்

59
றிய கருத்துக்களின் கருவினைப் பிராஹ்மணங்களிலே காணலாம். உலகத் தோற்றம் பற்றிய கதைகள் சில வும் இந்நூல்களில் உள்ளன.
வைதிகக்கல்வி, வேள்வி ஆகியனவற்றிற்கு எதிர்ப் புகள் புராதன காலம் தொட்டு நிலவிவந்தன.101* மண்டூக சூக்தத்திலும் (இ. வே. 7 - 163), ஐதரேய ஆரண்யகத்திலும் (i . 2.6.8), பின் கெளசீதகீ உப நிஷதத்திலும் (2.5) இப்போக்கினைக் காணலாம். எடுத் துக்காட்டாக, “ஏன் வேதங்களை ஓதவேண்டும்? வேள்வி இயற்றவேண்டும் (ஐ. s2. 2. iii. 6. 8), "இப்பாடல் இப்பாடல் எனமக்கள் குறிப்பிடுகின்றனர். ஆனல் இப்பாடலின் கருத்து அவர்களுக்குத் தெரியுமா? (ஐ. ஆ. 2. 1 2. 1) முதலியனவற்றைக் குறிப்பிடலாம்.
இப்பெயர்ப்பட்ட ‘ எதிர்ப்புகள், ஐயப்பாடுகள், வேள்விகளை மிதமிஞ்சி வற்புறுத்திய பிந்திய வேத கால முற்பகுதியிலே தான் நன்கு நிலவியமை தெளிவு. வேள்விச் சடங்குகளில் அதிருப்தியுற்றேரில் ஒரு சாரார் காட்டிற்குச் சென்று வேள்விகளைப் பற்றித் தியானம் செய்து அவற்றின் உட்கருத்துக்களை விளக் கினர். இவ்வாறே ஆரண்யகங்கள் எழுந்தன. இவ் வகையான நூல்களிலே மேற்குறிப்பிட்டவாறு வேள்வி கள் பற்றிய விஞ, ஐயப்பாடு எழுந்தமையிலே வியப் பில்லை. இந்நூல்கள் காட்டிலுள்ள தபோதனர் கற் கக்கூடிய முறையிலமைந்துள்ளன. பின்னர் கூறப்ப டும் நால்வகை ஆச்சிரமங்களிலொன் ருன வானப்பி ரஸ்தர் கற்கும் நூல்களாக ஆரண்யகங்கள் அமைந்துள் ளன. இந்நூல்கள் பிராஹ்மணங்களையும் உபநிஷதங் களையுமிணைத்து வைக்கின்றன. பிராஹ்மணங்கள் கூறும் வேள்விக்கும், உபநிஷத தத்துவத்திற்குமிடை யிலுள்ள இணைப்புப் பந்து தாத்தொடர்பு மூலம் விளங் கப்படுத்தப்படும். 'பிராஹ்மணங்களிலிருந்து உபநிஷ

Page 36
60
தங்களிற்கு இந்திய சிந்தனை வளர்ச்சியடைதல் இந் திய தத்துவ வரலாற்றிலே மிகமுக்கியமான நிகழ்ச்சி யெனலாம்" எனப் பேராசிரியர் டாஸ் குப்த குறிப் பிட்டுள்ளார்.102
*உபநிஷதங்கள் கூறும் பிரதான விடயம் தத்து வம் பற்றிய பிரச்சினையாகும். அதாவது, உண்மை யைத் தேடுவதாகும்.”108 உண்மைப்பொருளை அறியும் ஆவலே உபநிஷதங்களிலே மேலோங்கிக் காணப்படு கின்றது. ‘உபநிஷத ஞானிகள் ஒருவரைச் சத், சித், ஆனந்தமாகிய பரம்பொருள் பாற்படுத்துகின்றனர்.' ஞானத்தை அறிவுறுத்தும் இந்நூல்கள் ஞானகண்டம் எனவும், வேள்வி முதலியவற்றை வற்புறுத்தும் முந்திய நூல்கள் கர்மகாண்டம் எனவும் கூறப்படும்.
உபநிஷதங்கள் கூறும் பரஞானம் பிரமவித்யா அதாவது பரம்பொருள் பற்றிய அறிவு எனப் பொருள் படும். இதனை அறிந்து ஆன்ம ஈடேற்றம் பெறவேண் டும் என்ற வேணவா மிகுத்துக்காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, உபநிஷதங்களிலே வரும் பிரார்த் தனைகளில் ஒன்று குறிப்பிடற்பாலது. அதாவது, * அசத்திலிருந்து (உண்மையற்றபொருள் அல்லது நிலை யிலிருந்து) சத்திற்கு (உண்மையான பொருள் அல் லது நிலைக்கு) க் கொண்டு செல்வீராக. (அஞ்ஞான) இருளிலிருந்து (ஞான) ஒளிக்குள் சேர்ப்பீராக. மர ணத்திலிருந்து (அழியும் நிலையிலிருந்து), , அமிர்தத் திற்குள் (அழியாநிலைக்குள்) செலுத்து வீராக (பிருஹ தாரண்யக உபநிஷத் 1.3.28).”
உபநிஷதங்களிலே கூறப்படும் சமய, தத்துவக் கோட்பாடுகள் வேதசம்ஹிதைகள், பிராஹ்மணங் கள் ஆகியனவற்றிற் கூறப்படுவனவற்றிலிருந்து ஒர ளவு வேறுபட்டன. வேள்விகளாற் பலனில்லையெனப் பிருஹதாரண்யக (1.4.10), முண்டக (1.2.18) முத

6.
லிய உபநிஷத்துகள் வற்புறுத்துவன. 'தத்துவமஸி’. (நீயே அது) அதாவது பரமாத்மனும், ஜீவாத்மனும் ஒரே பொருள் என்பதே உபநிஷத தத்துவத்தின் சாராம்சமாகும். 'இவ் உலகம் முழுவதும் அதை (பிர மத்தை) அடக்கியுள்ளது; அதுவே, உண்மையாகும்" அதுவே ஆத்மா, அது நீயே சுவேதகேது” என உத் தாலகர் சுவேதகேது விற்குச் சாந்தோக்கிய உபநிஷ தத்திலே (6,9,16) விளக்குகிருர். பிருஹதாரண்யக உபநிஷத் (1.4 20) இக்கருத்தினை "எவன் நானே பிர மம் (அஹம் பிரஹ்மா ஸ்மி) என்பதை அறிகிருனே அவன் எல்லாமா கிருன் தேவர்கள் கூட அவன் அவ் வாறு ஆவதைத் தடுக்கமுடியாது. அவன் அவற்றின் ஆத்மாவாகிறன்" எனக் கூறும். இவ் ஐக்கியம் ஏற்க னவே, சதபத பிராஹ்மணத்தில் (10.6.3) 'தினையின் சிறு மணிபோல இதயத்தில் இப்பொன்மயமான புரு ஷன் உள்ளான். அவனே பரமாத்மா, எனது ஆத்மா ; இங்கிருந்து செல்லும்பொழுது அதனை அறிவேன்’ எனவருகின்றது. சாந்தோக்கிய உபநிஷத் (1.14.4) இதனை மேலும் தெளிவாகக் கூறும். அதாவது “இத யத்திலுள்ள ஆத்மா இதுவே; இதுவே பிரமம்; இறந்த பின் இதுவே யாவேணுக, இதனை நம்புவனுக்கு ஐய மொன்றில்லை. இவ்வாறு சாண்டில்யர் கூறுவர்’. சமூ கரீதியிலே வேறுபாடுகள் நிலவினுலும், ஆன்மிகரீதி யிலே ஒருமைப்பாடு - யாவரும் ஒரே பரம்பொருளின் அம்சங்கள்; அதிலிருந்தே தோன்றியவர்கள் என்ப தாலேவற்புறுத்தப்படுதலை அவதானிக்கலாம்.
ஆத்மனின் இயல்புகள் பிருஹதாரண்யக, சாந் தோக்கிய உபநிஷதங்களிலே விரிவாக எடுத்துரைக் கப்படுகின்றன. யாஜ்ஞவல்க்யர் ஆத்மனின் இயல்பை 'இதுவன்று; அதுவன்று" (நேதி, நேதி) என எதிர் மறையிலே பிருஹதாரண்யக உபநிஷதத்திலே குறிப் பிட்டுள்ளார். பரமாத்ம-ஜீவாத்ம ஒருமைப்பாடு, களி

Page 37
62
மண், சிறு பொன் கட்டி, கத்தரிக்கோல், உப்பு முத லிய சாதாரணப் பொருட்களை உவமையர்கக் காட்டித் தெளிவாக உரைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக *களிமண்கட்டி மூலம், களிமண்ணுற் செய்யப்பட்ட யாவற்றினையும் அறிந்து கொள்ளலாம். அவற்றைக் குறிப்பிடும் சொற்களிலேயே மாற்றம் உள்ளது. பிரம வித்தையுமிப்படியே” எனச் சாந்தோக்கியம் (6 - 1 - 4) கூறும். மேலும், பரமாத்மனிலிருந்து உலகம் முகிழ்த் தலைச், ‘சிலந்திவலைகளைத் தன்னிலிருந்து உண்டு பண் ணுகிறது போலவும், நெருப்பிலிருந்து பொ றி உற் பத்தியாகிப் பறப்பது போலவும் ஆத்மனிலிருந்து எல்லாம் முகிழ்க்கின்றன’ எனப் பிருஹதாரண்யக உபநிஷத் (2. 1 , 20) கூறும். பரம்பொருள் ஒன்றே யென்பது மிகத்தெளிவாகச் சாந்தோக்ய உபநிஷத் திலே (8.2.1) ‘சத் என்பதே தொடக்கத்தில் இரண் டாகவன்றி ஒரே பொருளாக விளங்கிற்று” (சத் ஏவ அக்ராசீத் ஏகமேவாத்துவிதீயம்) எனக் கூறப்படுகி றது. பிருஹதாரண்யக உபநிஷத்தும் (1.4.11) பிரமம் ஒன்றே" எனக்கூறும்.
ஆத்மன் கோட்பாட்டுடன் நெருங்கிய தொடர் புள்ள “பிராண" பற்றிய கோட்பாடும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிருஹதாரண்யக, தைத்திரீய உப நிஷதங்களிலே இது பற்றி நன்கு விளக்கப்படுகிறது. பிருஹதாரண்யக உபநிஷத் (4.3.4) ஆத்மனின் பல நிலைகளை மிகச் சிறந்த கவிதை வடிவிலே விவரிக்கின்
g5.
உபநிஷதங்கள் குறிப்பிடும் பரம் பொருளான பிரமம், நிர்குணப்பிரமம் (குணங்களற்ற பிரமம்), சகுணப்பிரமம் (குணங்களோடு கூடிய பிரமம்) என விவரிக்கப்படுகின்றது. சகுணப்பிரமமே, சிவன், சக்தி, விஷ்ணு எனப்பலவாறு அழைக்கப்படும். இத்தகைய

63.
போக்கிலே தான் சுவேஸ்தாஸ்வதார உபநிஷத் ருதி £g&ot (சிவபெருமானை)ப் பரப்பிரமமாகக் கூறுகின்
Dé.
இருக்குவேதத்திலே அம்மன் வணக்கம் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. உஷா. அதிதி போன்ற பெண் தெய்வங்களைப் பற்றிய பாடல்கள் குறிப்பிடத்தக்கன வாயினும், அவற்றில் அம்மன் வழிபாடு பற்றிய முக்கியமான கருத்துக்கள் பல இடம் பெற்றில. இருக்கு வேதத்திற்கு முந்திய ஹரப்பா கலாச்சாரத்திலே தாய்த் தெய்வவழிபாடு நன்கு நில விற்று. குறிப்பாகத்திராவிட இந்தியாவின் பிரதான வழிபாடுகளிலிஃது. ஒன்ரும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலே, பல்வேறு பெயர்களில் அம்மன் இன்றும் வணங்கப்படுகின்ருர், ஆரியர், ஆரியரல்லாதோர் தொடர்புகளதிகரிக்க, ஒத்து மேவல்கள் ஏற்பட அம் மன் வணக்கமும் ஆரியரின் வழிபாட்டு முறையிலே முக்கியத்துவம் பெறலாயிற்று. பூரீ சூக்தம், துர்க்கா சூக்தம், தேவி சூக்தம் மூதலியன குறிப்பிடத்தக்கவை. கேன உபநிஷதத்திலே (3, 12-4-1) 19* பரப்பிரமத்தை அறியாது இந்திரன் முதலிய தேவர்கள் மயங்கினர். அப்போது ஞானத்திருவுருவான உமாதேவி தோன் றிப் பரம் பொருளை அறிவுறுத்தினுர். 98 சக்தியை முழுமுதற் கடவுளாகக் கொண்ட தேவீ உபநிஷதங் கள் - எடுத்துக்காட்டாக, பஹ்வருஷோபநிஷத், திரிபுரோபநிஷத், பாவனுேபநிஷத் முதலியன பிற் காலத்திலே தோன்றின.
கணபதி, ஸ்கந்த ஆகிய தெய்வங்களும் பிரபல்ய மடைந்தன. இருக்கு வேதத்திலேயுள்ள பிரஹ்மண ஸ்பதி பற்றிய திருப்பாடல் (2.23, 1) ஒன்றிலே வ்ரும் கணபதி எனும் பதம் இவரையே கருதுவதாகப்பலர் கருதுகின்றர்கள். இவரைப் பற்றிய காலத்தால் முந் திய குறிப்பு இதுவே. இன்றும், சைவகாமக் கிரியை

Page 38
64
களிலே கணபதியினை ஆவாஹனம் செய்வதற்கு இஃது ஒதப்படுகிறது. பிந்திய கால வேத இலக்கியத்தைச் சேர்ந்த தைத்திரீய ஆரண்யகத்திலே கணபதி பற்றிய காயத்திரீ மந்திரம் ஒன்று வருகின்றது.
இருக்குவேதத்திலே வரும் ஸ்டஸ்பதி எனும்பதம் அக்கினி பற்றிய பாடலிலே காணப்படினும், இது ஸ்கந்தனை (முருகனை)க் குறிக்கும் என ஒரு சாரார் கருதுவர். 19** சதபத பிராஹ்மணம் இவரை ருத்தி ரனின் குமாரன் எனக் குறிப்பிடும். சாந்தோக்ய-உப நிஷத்திலே (7.28.27) சளத்குமார என்பவர் நாரத ருக்கு மனச்சாந்தி அளிப்பதும் மட்டுமன்றி, அவரின் அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தை வழங்கினர். என அறிகிருேம். தைத்திரீய ஆரண்யகத்திலே சண் முக (ன்), ருத்திரன்), தந்தி, பிரமன், விஷ்ணு, ஆதித்ய (ன்) துர்க்கா முதலிய தெய்வங்களுக்கான காயத்திரீ மந்திரங்கள் வருகின்றன.
மைத்திராயணிய உபநிஷத் பிரமா, ருத்திர(ன்), விஷ்ணு முதலிய தெய்வங்கள் மேலான, அழியாத பரப்பிரமனின் வெளிப்பாடாக விளங்குகின்றனர் (4-5.6) எனக்கூறும்.
ஓம் மிகப் புனிதமானது. சாந்தோக்யம் (1, 1), கடோபநிஷத் முதலியனவற்றில் இதன் முக்கியத்துவம் நன்கு கூறப்படுகின்றது. வைதிகக்கல்வி, மந்திரங்கள் முதலியனவற்றின் தொடக்கத்திலும், இறுதியிலும் இஃது ஒதப்படும். "வேதங்கள் தவங்கள், அனுஷ் டானங்கள் ஆகியனவற்றின் சாராம்சமிதுவே"யெனக் கடோபநிஷத் (1, 2, 15) கூறும்.
உபநிஷதங்களிலே துறவறம் சிற்சில இடங்க ளிலே வற்புறுத்தப்படினும், உலக வாழ்க்கையின் முக் கியத்துவமே வலியுறுத்தப்படுகின்றது. இல்வாழ்க்கை

65.
துறவ்றத்திற்கு முன்னேடியாகவே அமையும். இவ் உலக வாழ்க்கையிலே பற்றற்ற நிலையிலிருந்து கொண்டே பரஞானத்தை உணரலாம். மேலும் உப நிஷதங்கள் கூறும் பரம்பொருளான பிரஹ்மம் ஆனந்தமயமானது. அப்பொருள் உணர்த்தும் ஞானக் கண்ணினுலேயே அதனை உணர்ந்து உய்வு பெறலாம் (பிருஹதாரண்யக உபநிஷத் 5).
உபநிஷதங்களை நன்கு ஊன்றிப்பயிலாத சிலர் இவை ஒழுக்கநெறியினை வற்புறுத்தில எனக் குறிப் பிட்டுள்ளனர். ஆணுல் உண்மையான நிலை வேறு. பிருஹதாரண்யக (5.3), தைத்திரீய (1.9.) முதலிய பழைய உபநிஷதங்களிலே தமம் (புலனடக்கம்), தானம் (கொடை), தயா (கருணை), சமம் (சாந்தி) சத்யம் (வாய்மை) முதலியனவும். சாந்தோக்கியத்தில் (8.1.15). இவை சிலவற்றுடன் எல்லா உயிர்களிடத்து அஹிம்ஸையும் (அஹிம்ஸான் ஸர்வபூதானி) நன்கு வற்புறுத்தப்படுகின்றன. ஒருவர் பற்றின்றி உலக இன்பங்களை அனுபவிக்க வேண்டுமெனவும், மற்றவ ரின் பொருளை எவ்வகையினும் விரும்பக்கூடாதென வும், தான் செய்யவேண்டியனவற்றைச் செவ்வனே செய்து நூருண்டு பூரணமாக வாழவிரும்ப வேண் டும் எனவும் ஈசாவாஸ்ய உபநிஷதம் கூறும். இதிலே சில முன்னேற்றமான சமூகவியற் கருத்துக்களும் தெளிவு. பற்றற்ற ஒழுக்க நிலையிலுள்ள வாழ்க்கை யாஜ்ஞவல்க்யருடைய கதையிலும் நன்கு காணப்படு கின்றது. அவர் தாம் இல்வாழ்க்கையிலிருந்து வானப் பிரஸ்த வாழ்க்கைக்குப் போகுமுன் தம்முடைய இரு மனைவியருள் ஒருவரும் பிரமஞானத்தில் ஆவலுள்ள
வளுமான மைத்திரேயிக்கு ஞானம்பற்றி அறிவுறுத்து
கையில் கணவன் மனைவியிடத்நுத் தனக்காக அன் றிப் பரம்பொருளுக்காகவே அன்பு கூரவேண்டுமென

Page 39
66.
வும், மனைவி கணவனிடத்துத் தனக்காக அன்றிப் பரம்பொருளுக்காகவே அன்புகொள்ள வேண்டுமென வும் வற்புறுத்தியுள்ளார் (பிருஹதாரண்யக உபநி ஷத் 4.5). Α
மேலும், துறவறம், யோகம், மறுபிறப்பு. கர்மம் முதலியனபற்றிய கருத்துக்கள் புத்தபிரானுக்கு முந் திய உபநிஷதங்களிலேயே நன்கு விரவிக் காணப்படு கின்றன. வேள்விகள் நன்கு கண்டிக்கப்பட்டாலும், கொல்லாமை குறித்தும் சில புறநடைகள் இருந்தன.
வேள்விகளை வற்புறுத்தியவர் களுக்கும் உண்மை யான பரஞானத்தைத் தேடியோருக்கு மிடையிலிருந்த கருத்து வேறுபாடு கடோபநிஷத்திலே கூறப்ப டும் முதிர்ந்த வைதிக சமயப்பாதுகாவலரான வாஜ சிரவண என்ற பிராமணர், அவரின் மகன் நசிகேதன் பற்றிய கதையிலே உருவகமாக நன்கு பிரதிபலிப்ப தைக் காணலாம். மேலுமிதே உபநிஷத்திலே (1.1.6) "தானியம் வளர்ந்து முதிர்ந்து, விளைந்து, விழுந்து மறுபடியும் பயிராக வளருவது போல மனிதனும் இறந்து மறுபடியும் பிறவியெடுக்கிறன்” என மறு பிறப்புத் தெளிவாக உரைக்கப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட உபநிஷத காலச்சிந்தனைகள் கோட்பாடுகள் முன்னைய காலச் சமயத்திற் பெரும ளவு இடம் பெற்றில. இதனுல் இவை ஆரியருக்கு முற்பட்ட காலத்திய திர்ாவிடரும், பிறரும், ஆரியரும் வேறுபாடின்றி ஒன்றுபட்ட தொடர்பால் ஏற்பட்டிருக் கலாம் என ஒரு சாரார் கருதுவர்.198 வேருெருசா ரார் இவை வேதகாலச் சிந்தனை வளர்ச்சி யென்பர்' இத்தத்துவ ஆய்விலே பிராமணர் மட்டுமன்றிப் பிற. வருணத்தவரும், முக்கியமாக அரசரும் பங்கு பற்றி யமை குறிப்படற்பாலது. மன்னர் சிலர் இவ்வித்தை யிற் சிறந்து விளங்கினர். இது கூடித்திரியவித்யா

67
எனவும் அழைக்கப்பட்டது. காசி அரசகுன அஜாத சத்ரு, கார்க்ய பாலாகி என்ற பிராமணனுக்கு இது பற்றி உபதேசம் செய்தார். இதிலிருந்து பிராமண ரும் மன்னரிடம் சென்று ஞானுேபதேசம் பெற்ற மையினை அறியலாம். ஜனகமன்னனின் தத்துவ அறி வும், ஆதரவும் குறிப்பிடற்பாலதே. மேலும், யாஜ்ஞ வல்க்யர் போன்ற பிராமணரும், கார்க்கீ, மைத்திரேயீ போன்ற பெண்களும், சத்யகாம ஜாபால போன்ற குலம் தெரியாதவர்களும் மேற்குறிப்பிட்ட ஆய்விலீடு பட்டனர்; புகழ்பெற்றனர்.
உபநிஷத தத்துவங்கள் பல்வேறு சிந்தனையாள ரால், பல்வேறு காலங்களில் வேறு வேறு இடங்களில் உரைக்கப்பட்டனவே யன்றி முறையாக ஒழுங்குபடுத் தப்பட்ட தத்துவ ஆய்வுகளாகக் காணப்பட்டில. எவ் வாருயினும், உபநிஷதங்களின் முக்கியத்துவம் பெரி தாகும். இந்தியாவிற் பிற்கால்த்திலே வளர்ச்சியடைந்த வைதிக தத்துவப்பிரிவுகள் இவற்றினை அடிப்படையா கக் கொண்டன. பிந்திய காலத்தில் எழுந்த ஷத்தர் சனங்களின், (ஆறு வகையான தத்துவங்களின்)-சாங்கி யம், யோகம், நியாயம், வைஷேஷிகம், மீமாம்சம், வேதாந்தம் ஆகியவற்றின் ஆசிரியர்களும், இடைக் காலத்தில் அத்துவித தத்துவத்தினை நிலைநாட்டிய சங்கரர், விசிஷ்டாத்துவித தத்துவ ஆசிரியரான ராமா ணுஜர், துவைத தத்துவஆசிரியரான மத்துவர் போன் ருேரும் உபநிஷதங்களை நன்கு பயன்படுத்தித் தத்தம் கருத்துக்களை வகுத்து நிலைநாட்டினர். எனினும், உபநிஷத சிந்தனையாளரின் கட்டுப்பாடற்ற சுதந்திர மும், தனிச்சிறப்பியல்பும் குறிப்பிடற்டாலன. இவர் களின் சுய சிந்தனைத்திறன் குறிப்பிடத்தக்கதே. வைதிக மரபிற்குப் புறம்பாக வளர்ச்சியுற்ற பெளத்தம், சம ணம், ஆஜீவிகம் முதலியனவும் உபநிஷதங்களிற் காணப்படும் சில கருத்துக்களை - மறுபிறப்பு, கர்மம்

Page 40
68
போன்றவற்றினை மேற்கொண்டுள்ளன. மனித சிந்தனை யியல் வரலாற்ருசிரியனுக்கு உபநிஷதங்கள், மேலும், முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘உபநிஷதங்களிலே காணப்படும் மறைஞானக் கோட்பாடுகளின் சாயலை பாரசீககுவியத்தில் (Sufism) உள்ள மறை ஞானம், புதிய பிளேட்டோனியத்தில் (New Platonianics) உள்ள மறைஞானத்திலே காணப்படும் சொல்பற்றிய தத்து வம், எக்காட் (Eckart), டவுலர் (Tauler) முதலியோர் வரையுள்ள அலெக்சாந்திரிய கிறிஸ்தவ ஞானிகளின் போதனைகள், 19 ம் நூற்ருண்டைய தத்துவ மறை ஞானியான ஸோப்பனுேரின் தத்துவம் முதலியன வற்றிலே காணலாம்” என அறிஞர் கருதுவர்.198
வேத காலச் சமூக நிலை இருக்குவேதகாலச் சமூகநிலையிலே தந்தைவழி யுரிமைக்குடும்பமே சமூகவாழ்வின் அடிப்படையாக விளங்கிற்று. தகப்பனே குடும்பத்தின் தலைவன். அவ அக்கு அடுத்தபடியாக, மூத்த மகன் முக்கியத்துவம் பெற்றிருந்தான். பெற்றேர் பிள்ளைகளுக்கிடையிலே பொதுவாக நல்லுறவு நிலவிற்று. திருமணப்பாட லிலே (இ. வே. 1085) புதிதாக மணமகனில்லம் வந்த மணமகள் அவனின் சகோதரர், பெற்றேர்களை மதித்த போதிலும் அவர்களை ஆளுகிருள் எனவும் கூறப்பட் டுள்ளது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை நிலவியதை இதி லிருந்து அறியலாம். கூட்டுக்குடும்பங்கள் சிலவற்றில் இல்லாளின் தாயுமிருந்தாள், விருந்தினரை-அதிதிகளை உபசரித்தல் நன்கு போற்றப்பட்டது.
ஆரியர் இந்தியாவுக்கு வந்த காலத்தில் அவர்களின் ஜனக்குழுஅமைப்பில் ஒருவகையான பிரிவுகள் காணப் பட்டன. இக்காலச் சமூகத்திலே சாதிமுறை எந்த அள விற்கு நிலவியது எனத்திடமாகக் கூறமுடியாது. இதுபற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. கலப்புத் திருமணம், கூட்டுவிருந்து ஆகியன நிகழாமை சாதி

69
முறையிலுள்ள பிரதான அம்சங்களாம். காலத்தால் முந்திய இருக்குவேதப் பாடல்களிலே தனித்தனியா கப் பிராமணர், கூடித்திரியர், வைஷ்யர், சூத்திரர் ஆகிய சாதிகள் குறிப்பிடப்படுகின்றனர். ஆனல் முதன்முறை யாகக் காலத்தாற் பிந்திய புருஷசூக்தத்திலேயே, பிரா மணர், கூடித்திரியர், வைஷ்யர், சூத்திரர் ஆகிய சாதிகள் ஒழுங்காகச் சமய அங்கீகாரத்துடன் கூறப்பட்டுள் ளன; 199 சமய அங்கீகாரத்துடன் இவை நிலைபெற் றன. இதன்படி, பிராமண, கூடித்திரிய, வைஷ்ய, குத் திர எனும் நால்வகை வருணங்களும் முறையே, உல கமுழுவதையுமுள்ளடக்கிய பரம்பொருளின் முகம், புயம், தொடை, பாதம் ஆகியவற்றிலிருந்து தோன் றின. இப்பாடலுக்கு அறிஞர் பலவாறு விளக்கம் திளிப்பர், சமூகத்தின் இன்றியமையாத பிரிவுகள் உரு வகமாகக் கூறப்பட்டுள்ளதெனச் சிலர் கருதுவர். சாதியினைக் குறிக்கும் "வர்ணேம்’ எனும் சொல் நிறத் தினைக் கருதும், வெண்ணிறமுள்ள ஆரியருக்கும், கறுப்புநிற அணுரியருக்குமிடையிலே காணப்பட்ட நிற வேறுபாடு சாதிமுறை தோன்றுதற்கான ஒரு காரண மாகும். இதைவிடத் தொழில்கள், குடும்பக்கட்டுப்பாடு கள், பிறகுழுக்கள் அல்லது மக்கள் தொடர்புகள் முத லியனவற்றினையும் அடிப்படையாகக் கொண்டு சாதி முறை தோன்றியிருக்கலாம். தொடக்கத்திலே மேற் குறிப்பிட்ட அடிப்படைகளிலே தோன்றிய சாதிகள் ஒன்றேடொன்று சேரக்கூடிய நிலைமை காணப்பட்டா லும் காலப்போக்கில் இவை நிரந்தரப் பிரிவுகளாயின எனலாம். பிராமணர் கல்வியினை - வைதிகக் கல்வியி னைப் பேணிவந்தனர்; வளர்த்து வந்தனர். ஏனைய வருணத்தவர்களிலும் பார்க்கக் கல்வியிலும், கேள்வியி லும் சிறந்து விளங்கினர். சமயகுருவாகவும் கடமை யாற்றினர். கூடித்திரியர் நாட்டினைக் காவல்செய்து வந்தனர். வைஷ்யர் விவசாயம், வியாபாரம் செய்து வந்தனர். சூத்திரர், முன்னைய மூவருக்கும் பணி

Page 41
70.
செய்து வந்தனர். பொதுவாக நோக்கும்போது, இருக்குவேத காலத்திலே நிறம், தொழிலடிப்படையிலே வேறுபாடுகளிருந்தாலும் திட்டவட்டமான சாதிப் பாகுபாடுகள் நிலவில எனலாம். ஒருவன் தான் புல வன் என்றும் தந்தை வைத்தியன் என்றும், தாய் தானியமரைப்பவளென்றும் (இ. வே. 9.112) கூறுவதி லிருந்து தொழில்வேறுபாடுகள் அவ்வளவு நிலவவில்லை எனலாம். அத்துடன் ஒருவன் தன்னுடைய மூதாதையர் தொழிலைவிட வேறென்றினை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு நிலவிற்று எனலாம். இத்தகைய சமூகப்பிரி வுகள் ஆதிஇரானிய சமூகத்திலும் நிலவியதை அவெஸ்தாவினுலறியலாம். இரானிய சமூகத்திலே அத்ரவஸ் (குருமார்), ரதேஸ்தஸ் (வீரர்), வாஸ்திரி யஸ் சூயன்த்ஸ் (குடும்பத்தலைவர்), ஹய்திஸ் (பணி யாட்கள்) ஆகிய பிரிவுகள் நிலவின. எனவே பிரிவு கள் உள்ள ஆளுல் பெருமளவு சாதிக்கட்டுப்பாடற்ற சமூகத்தினையே இருக்குவேதத்திற் காணலாம். 'சாதி முறையின் தோற்றத்திற்கான அடிப்படையும் அதன் தொடர்ச்சியும் நான்கு வருணங்களிலன்றித் தொழில் களோடு சம்பந்தமுள்ள பெருந்தொகையான சாதிக் குழுக்களின் அமைப்பிலேயே தங்கியிருந்தன. 12 முதல் மூன்று வருணத்தவருமே வைதிக சமயச்சார்பான சம்ஸ் காரங்கள் (புனிதச் செயல்கள்) இயற்றுதற்கு அருகதையுள்ளவர்கள். கர்ப்பம் தரித்தநாள்முதல் மரணம்வரையும் அவர்கள் பின்பற்றவேண்டிய சம்ஸ் காரங்கள் நாற்பது எனப் பிற்கால நூல்கள் கூறும். * இவற்றுட்பல இக்காலத்திலேயே தொடங்கிவிட்டன. அவற்றுள் ஒன்று உபநயனம் (பூனூல் தரித்தல்). இச் சம்ஸ்காரம் மூலமாக ஒருவனுடைய இரண்டாவது பிறப்பு- ஆத்மிகப்பிறப்பு ஏற்படுகின்றது. புதுவாழ்வு தொடங்குகின்றது. இதனுலே முதன் மூன்று வருணத் தவரும் துவிஜர் அல்லது இருபிறப்பாளர் என அழைக்கப்படுவர்.

7.
இருக்கு வேதகாலச் சமூகத்திலே பெண்கள் நன் னிலையிலே வாழ்ந்தனர். 14 அவர்கள் வீட்டுப் பொறுப் பாளராக மட்டுமன்றி, அலங்காரம் செய்து விழாக் களுக்குச் சென்றனர். வெண்களின் அழகுச் சிறப்பு உஷா பற்றிய பாடல்களிலே நன்கு சித்திரிக்கப்பட் டுள்ளது. மங்களகரமான புன்னகை தவழும் இள நங்கையர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. 'திரு மணம் செய்த தம்பதிகள் பொன் ஆபரணங்களினலே தம்மை அலங்கரித்துக் கொண்டு, ஆண், பெண் பிள்ளைகளைப் பெற்று நூருண்டு வாழ்வார்களாக” என ஓரிடத்திலே குறிப்பு உண்டு (இ. வே. 8. 38. 8). மனைவி கணவனுடன் சரி நிகர் சமானமாகவும் வாழ்ந்தாள். "வீட்டில் ஆட்சி புரிதற்காக வரும் வீட்டுத் தலைவியே உமது வீட்டிற்குள் செல்வீராக” எனக் குறிப்பிடப்படுகின்றது (இ. வே. 10.85). மண மகன் சுமங்கலியான மணப் பெண்ணின் கையினைப் பிடித்துக் கொண்டு ‘நல்ல அதிர்ஷ்டத்திற்காக உனது கையினைப்பிடிக்கிறேன். உன்னுடைய கணவனுன என் னுடன் மூப்புப் பருவம் வரை இருப்பீராக. பக, அர்ய மன், சவிதிர்,புரந்தி, ஆகிய தெய்வங்கள் உன்னை எனக்கு அளித்திருக்கிருர்கள்" எனக் கூறுவது குறிப்பிடற் பாலது. கணவனையும் மனைவியையும் குறிக்கும் ‘தம் பதீ’ எனும் பதம் முதலிலே வீட்டுத் தலைவனைக் குறித் தது. இருவரையும் குறிப்பதற்கு ஒரே சொல் பயன் படுத்தப்பட்டதிலிருந்து சமூகத்திலே, கணவன், மனைவி ஒருமைப்பாடு தெளிவு. "இல்லாளே இல்லம்" (இ. வே. 3, 53, 4), "கண்வனை நேசிக்கும் களங்கமற்ற மனைவி (இ. வே. 1. 73, 3), "வீடு பூமியில் சுவர்க்கம்" (இ. வே. 10. 107. 10) முதலிய குறிப்புகள் கவனித்தற் பாலன. "காதலி காதலனின் காதில் பேசுதல் வில்லின் நாண் ஒலிக்கு உவமிக்கப்படுகின்றது (இ. வே. 6, 75. 3), இதிலே வீரரின் வீரமும், காதலரின் காதலும் ஒருங்கே இணைத்துக் கூறப்படுகின்றன. ஓரிடத்திலே வீட்டிலே

Page 42
72
யா வருக் கும் அணியாகவுள்ள மனைவி போலத் தெய்வத்தை விவரிக்கின்றனர். (இ. வே. 1. 66, 5), பெண்ணினைக் குறிக்கும் சுபகா (தெய்வம்), கல்யாணி (நன்மை பயப்பவள்) முதலிய சொற்களும் மனம் கொளற்பாலன. மனைவி கணவனுடன் வேள்வி செய் தாள். மனைவியின்றி இல்வாழ்வான் வேள்வி இயற்ற Cipt9 ut gl.
சமூகத்திலே பெரும்பாலும் காதல் திருமணமே நடைபெற்றது. திருமணச் சடங்குகள் நடைபெற்றன. உடற் குறையுள்ள பெண்களுக்கு ஸ்திரீதனம் வழங் கப்பட்டது. திருமணத்தின் பிரதான நோக்கம் ஆண் மகப்பேறு. ஓயாது நடை பெற்றபோர்களுக்கும், இறுதியிலே ஈமக்கிரியைகள் செய்தற்கும் ஆண்மகனே விரும்பப்பட்டான் . எனவே, அவர்கள் ஆண்மகவினை விரும்பினர். கணவன் இறந்த பின் மனைவி உடன் கட்டையேறும் வழக்கம் அருகி நிலவிற்று. சிலர் பலபெண்களை மணந்தாலும் பொதுவாக, ஏகபத்தினி விரதமே போற்றப்பட்டது.
அக்காலத்திலே கல்வி பெரும்பாலும் சமயக் கல்வி யாகவே விளங்கிற்று. அதுவும் கேள்விச் செல்வமா கவே போற்றப்பட்டது. ஆசிரியர், மாணவர் ஆகியோ ரின் ஒழுக்கம் கவனிக்கப்பட்டது. கோசா, லோபா, முத்திரா போன்ற பெண்பாற் புலவர்களும் விளங் கினர். கருத்துக்களைப் பிற இடங்களிலிருந்து பெறு தற்கு அவர்கள் தயங்கிலர்: “பல்வேறு திசைகளி லிருந்து நல்ல சிந்தனைகள் பல எமக்கு வருவதாக" என ஒரிடத்திலே கூறப்படுகிறது (இ. வே. 1, 89, 1), மேலும், திருமணம் பற்றிய பாடலிலே (இ. வே. 10.85.7) "சிந்தனை அவளின் (மணமகளின்) தலையணையாகத் திகழ்ந்தது; காட்சி அவளின் கண்களுக்கு மையாகத் திகழ்ந்தது" என வரும் குறிப்பிலும் நாகரிக மேம் பாடு தொனிக்கின்றது. சிறப்பு வாய்ந்த காயத்திரீ

73
மந்திரம் “பூமி, வளிமண்டலம், வானம் ஆகியவற்றி அலுள்ள இறைவனே! சவிதிர் கடவுளிற்குரிய மிகப் பெரிய சிறப்பினை அடைவோமாக. அவர் எம்முடைய நுண்ணறிவைத் தூண்டுவாராக! (இ. வே. 3.62.10)", என அறிவுக்கூர்மையினை வலியுறுத்தலைக்காணலாம். மேலும், தவளைப்பாடலில் (இ. வே. 7. 103) அக்காலத் திய கல்வி முறை ஓரளவு பிரதிபலிக்கின்றது. ஒரு தவளைகத்திய பின் மற்ருென்று சப்தம் செய்வது போன்று ஆசிரியர் முதலிலே வேதம் ஒதிய பின் மாணவர் ஒருங்கு சேர்ந்து ஒதுவர். பின்னர் தவளை கள் யாவும் ஒன்று சேர்ந்து கத்துவது போல ஆசிரி யரும் மாணவரும் ஒருமித்து ஒதுவர் எனக் குறிப் பிடப்படுகின்றது. வேதப் பாடல்களைப் பலவாறு போற்றினர். ஒரு சாரார் இவற்றினைப் பாடிப் பேணி னர்; பிறி தொருசாரர் இவற்றிற்கு இசை அமைத்துப் பாடினர்; வேருெரு சாரார் பிறருக்குப்படித்துக் காட் டினர்; இன்னுெரு சாரார் வேள்விக்கான கிரியைகளை அமைத்தனர் (இ. வே. 10, 71, 11).
ஆடல், பாடல், இன்னிசைக்கருவிகளை இசைத் தல், தேர்ச்சவாரிப்போட்டிகள் முதலியன குறிப்பிடத் தக்க பொழுதுபோக்குகளாகவும் இடம் பெற்றன, நடனம் பற்றிய குறிப்புகள் உஷா (இ. வே. 1. 92, 4), இந்திரன் (6. 29, 37.) முதலியோர் பற்றிய பாடல் களிலே வருகின்றன. பிற்கால இந்தியாவின் புகழ் பெற்ற நடராஜவடிவம், பரதநாட்டியம் முதலியனவற் றின் முன்னுேடிக் கருத்துக்கள் சில இவற்றிலே காணப் படுவதாகவும் அறிஞர் சிலர் கொள்ளுவர்.116 ஆளுல், இவை புராதன நடனம் பற்றியவை எனப் பொதுவாகக் கொள்ளலாம். ஹரப்பாகலாச்சாரத்திலும் நடனம் நிலவியமை மனம் கொளற்பாலது.
கோதுமை, பால், காய்கறிவகை, இறைச்சி முத லியன உணவாகக் கொள்ளப்பட்டன.*பசு போற்றப்

Page 43
74
பட்ட அ. ‘சோம வேள்விகளிலும், "சுரா சாதாரண வேளைகளிலும் அருந்தப்பட்ட பானங்களாம். இருபாலா ரும் மேலாடை, கீழாடை அணிந்தனர். கம்பளியும் அணியப்பட்டது. தலைப்பாகை அணியப்பட்டது. அவர் கள் ஆபரணங்களை விரும்பி அணிந்தனர்.
வேதகாலத்தின் பிற்பகுதியிலே நிலவிய சமூக நிலைமைகளை நோக்கும்போது முற்கால அம்சங்களின் தொடர்ச்சி, விரிவுகள், மாற்றங்கள் முதலியனவற்றை அவதானிக்கலாம். தந்தைவழியுரிமையுள்ள கூட்டுக் குடும்பமே தொடர்ந்து நிலவிற்று. அதிதி நன்கு போற்றப்பட்டான். இல்வாழ்வான் செய்யவேண்டிய ஐந்து வேள்விகளில் அதிதியினைப் போற்றி உபசரித் தல் ஒன்ரும்,
இக்காலத்திலே சாதிமுறை வளர்ச்சியடைந்து சிக்கலுற்றது. முற்காலத்திய நெகிழ்ச்சி பெரும்பாலும் ஏற்பட்டிலது. அப்படியிருந்தும் எல்லாவருணத்தாரும் ஒளி (றுசம்) பெறவேண்டுமென அதர்வவேதம்(18.48) கூறும். சமூக ரீதியிலே வேறுபாடு நிலவிஞலும் ஆன் மிகரீதியிலே சமத்துவம் நிலவியது பற்றி ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
நால்வகை வருணங்களுமிக்காலத்திலே நிலை பெற்றன. ஆரியர் ஆரியரல்லாதோர் தொடர்புகள் முன்னையிலும் நன்கு ஏற்பட்டுவிட்டன. வருணங்களுக் கிடையிலே கலப்புத் திருமணம் பொதுவாக விரும்பப் படவில்லை. அநூலோம திருமணம் ஏற்றுக்கொள்ளப் பட்டது. ஆணுல் பிரதிலோம திருமணம் செய்தல் தடுக்கப்பட்டது; கண்டிக்கப்பட்டது. 11 எனினும் இத்தகைய திருமணங்கள் நடைபெற்றுவந்தன. . நால் வகை வருணத்தவரையும் விளிக்கும் முறையும் அனுசரிக்கப்பட்டது. இக்காலத்திலே, வைஷ்யரும், சூத்திரரும் நன்கு பாதிப்புற்றனர். பிராமணர்,

75
கடித்திரியர் நிலை, குறிப்பாக, முன்னையோரின் நிலை மேலோங்கிற்று. "1" ஆஞல், அருகியாவது சில மாற்றங்களிருந்தன. கல்வியறிவு மூலம் ஒருவர் பிராமணர் ஆகலாம் என்பது ஜனகரின் வரலாற்றி ஞலறியலாம். கல்வியுடையவன் பிரமரிஷி எனத் தைத்திரீய சம்ஹிதை கூறும். உபநிஷதகாலத்தில் ஒருவகையான நெகிழ்ச்சியேற்பட்டது. சமூகத்தின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த அறிஞர், பெண்கள் ஒரு சாரார் தத்துவ விசாரணையில் ஈடுபட்டனர். குறிப்பாக மன்னர் இவ்விசாரணையிலீடுபட்டமையும் உபநிஷதகாலப்பிற் பகுதியிலே வாழ்ந்த புத்தபிரான், மகாவீரர் ஆகியோரும் அரசகுலத்தவர் என்பதும் மனம்கொளற்பாலன. ஆளுல் பிற்கால இந்தியாவின் சமூகக்கேடான தீண்டாமை இன்னும் செவ்வனே தலைகாட்டவில்லை. ஆணு ல், மேற்குறிப்பிட்டவாறு வருண முறை நிலைபெற்றுவிட்டது.
சமூகத்திலே வாழ்ந்த மக்க்ள் எவ்வாறு நான்கு பிரிவுகளாக் வகுக்கப்பட்டனரோ, அதுபோலவே, சமூகத்திலுள்ள தனிமனிதனின் வாழ்நாளும் நான்கு கூறுகளாகப் படிமுறையிலே வகுக்கப்பட்டு ஒவ்வோர் துகுதிக்கும் குறிப்பிட்ட கடமைகள், ஒழுக்கங்கள் வரையறுக்கப்பட்டன. வாழ்க்கையின் தொடக்கப் பகுதி பிரமச்சரியமாகும். இக்காலப் பகுதியிலொருவன் தன் குலக் கல்வியினைப் பயிலுவான். இதன்பின் திருமணம் செய்து இல்வாழ்க்கை நடத்துவான். இது கிருஹஸ்த நிலையாகும். பல ஆண்டுகள் இல்வாழ்க்கை நடத்தியபின் மனைவியுடனுே, தனித்தோ காட்டிற்குச் சென்று பரம்பொருளைத் தியானித்து வாழுவான். இந்நிலை வானப்பிரஸ்தம் எனப்படும். இறுதியான சந்நியாசநிலையிலவன் முற்றும் துறந்த முனிவனுக மிளிருவான். இந்நான்குபடி நிலைகளும் ஆச்சிரமங்கள் எனப்படும். தொடக்கத்திலே முதல் மூன்று ஆச்சிர

Page 44
76
மங்களே நிலவின எனவும், இவை தனித்தனி வாழ்க்கை முறையாகவும் நிலவின எனவும் அறியப்படுகின்றன. பின்னரே இவை படிமுறை நிலைகளாயின. இவற்றுடன் நான்காவதும் சேர்க்கப்பட்டது. வானப்பிரஸ்தன் ஆரண்யகங்களைக் கற்கலாம். இத்தகைய ஒத்து மேவ லால், இல்லறம், துறவறம் ஆகிய இரண்டும் நல்ல முறையில் ஒன்றுபடுத்தப்பட்டன; இணக்கப்படுத்தப் பட்டன. துறவறத்தை மட்டும் வற்புறுத்தியோரின் செல்வாக்குத் தடைப்பட்டது. வைதிக தருமம் நன்கு நிலைபெற்றது. மேற்குறிப்பிட்ட நான்கு வர்ணங்களும் நான்கு ஆச் சிரமங்களும் இக்காலத்திலுருவாகி ஒரு ங் கு இணைக்கப்பட்டு வர்ணுஸ்ரமதர்மமாக
மலர்ந்து இந்து சமுதாயத்தின் பிரதான அம்சமாக
லைபெற்றன.
உலக வாழ்க்கையின் பிரதான குறிக்கோளாக இந்துக்கள் மேற்கொண்ட புருஷார்த்தங்களான அறம், பொருள், இன்பம், வீடு ( தர்மார்த்தகாம மோகூடிம்) ஆகிய நான்கிலும். முதன்மூன்றுமே தொடக்கத்திலே திரிவர்க்கம் (முப்பால்) என நிலவின. நாலாவது மூன்ருவதிலடங்கும். அது பிற்காலத்திலே தான் நான்காவதாகச் சேர்க்கப்பட்டது. gð மூன்றிலும் அர்த்தத்திற்கு (பொருளிற்கு) முக்கிய இடமொன்று அளித்தமையிலிருந்து 'ஆதி கா ல இந்துக்கள் இவ் உலகைப் பற்றிச் சிந்தித்திலர்; மறு வுலகைப் பற்றி மட்டுமே சிந்தித்தனர்”, எனச் சிலர் கொள்ளுதல் தவருன கருத்து என்பது தெளிவு, ಸ್ವೋಖಲೆ ಕೆ.ಹಣೆ கோட்பாடுமிக்காலத்திலிே தொடங்
உலகம் மிக விரும்பத்தக்கது என அதர்வவேதம் (5-30-17) கூறும். மேலும் அதே வேதத்திலும், யஜ-சர் வேதத்திலும் (1-11-17) முழுமையான ஆரோக்கியம், செல்வம், வாழ்க்கை, அறிவொளி முதலியவற்றிற்கான

77
பிரார்த்தனைகளைக் காணலாம். பூமியின் சிறப்புப் பற்றிய அதர்வ வேதப் பாடல் குறிப்பிடற்பாலது. காலம் செல்ல உலகம் துன்பமயமானது. அதிலிருந்து விடுதலையடைய வேண்டுமென்ற கருத்து நிலவிற்று" அதர்வவேத்திலே பொதுமக்களிடையிலே நிலவிய சமய, சமூக நம்பிக்கைகள் காணப்படுதலினுலுமதன் முக்கியத்துவம் கவனித்தற்குரியது.
கணவன், மனைவி ஆகியோருக்கிடையில் நிலவ வேண்டிய மன ஒருமைப்பாடு பற்றி அதர்வ வேதம் குறிப்பிடும். அதாவது, 'நாமிருவரும் ஒருள்ளம் கொண்டவராகிப் பிள்ளைகள் பெற்ருேராவோம்" என்பதாம். "கணவனின் அரைவாசியே மனைவி” எனும் கருத்து பிராஹ்மணங்களிலே ( சதபத பிராஹ்மணம் 5.2.1.10 ) காணப்படுகிறது. மேலும் பிருஹதாரண்யக உபநிஷத் (1-4-3) கூறுவதும் குறிப் பிடற்பாலது. ஆத்மன் (பிரபஞ்சத்தை உள்ளடக்கிய புருஷன் ) தனிமையாயிருந்து மகிழ்ச்சியடைந்திலன். எனவே, தன்னிலிருந்து பெண்ணைத் தோற்றுவித் தான். தனியாக இருந்த ஆத்மனிலிருந்து, ஆடவனின் தோழமைக்காகவே பெண் தோற்றுவிக்கப்பட்டாள். எனவே, பதி (கணவன்) பாதி, பத்ணி (மனைவி) பாதியாயினர். இவ் இருவரின் சேர்க்கையினுல் உலகம் தேர்ன்றிற்று. இதுபோன்ற கருத்து மேற்காசிய நாகரிகங்களிலும் நிலவியதைக் கிறிஸ்தவ வேதம் - பழைய ஏற்பாட்டினுலும் அறியலாம். பிற்கால இந்தியாவிலே, சைவ சமயத்திலே சிவன் பாதி, சக்தி பாதியாகக் கூறப்படும் அர்த்த நாரீஸ்வரக்கோட்பாட்" டிலே முற்குறிப்பிட்ட கருத்து நன்கு நிலவுவதைக் காணலாம். மேலும் பிரஜாபதி பெண்ணைப் படைத்து உபசரித்தார் (உபாஸ்த). எனவே, யாவரும் அவளை உபசரிக்கவேண்டுமெனப் பி ரு ஹ தா ரண் ய க உபநிஷத் (6-4.3) கூறும். படித்த பெண் விரும்பப் பட்டாள் (பி. உ. 6-17). சதபதபிராஹ்மணத்திலே

Page 45
78
(1-2-5-16) வரும் பலிபீடம் பற்றிய வருணனையொன் றிலே ஆதி இந்தியர் கண்ட அழகுராணியின் வடிவம் கூறப்படுகிறது. 'பலிபீடம் மேற்கிலே அகலமாகவும், நடுவிலே சிறுத்தும், கிழக்கிலே மறுபடியும் அகலா மாயுமிருக்கவேண்டும்" என்பதாம். அதாவது, இடை சிறுத்து, அதன்மேல், கீழ்ப் பகுதிகள் அகன்றிருக்க வேண்டுமென்பதே. இக்கருத்துப் பிற்கால இந்திய இலக்கியங்களிலே விபரமாக வருகின்றது. எடுத்துக் காட்டாகக் காளிதாஸர் போன்ற பெரும் புலவர்களின் பாடல்களைக் குறிப்பிடலாம். 118 எனினும், பிந்திய காலத்திலே பெண்ணின் நிலை குறைந்துவிட்டது. துன்பம் தரும் மூலங்களில் ஒன்ருகவும் பெண் கூறப் படுகிருள். ஆனல் இக்கருத்து அருகியே காணப்படு கின்றது. பெண்பிள்ளை விற்றலும் சில வேளைகளிலே நடைபெற்றது. திருமணச் சடங்குகள் முற்காலத்திற் போலவே நடைபெற்ருலும், ஒரு புதிய அம்சமுமிடம் பெற்றது. மணமகன் மணமகளின் கையினைப் பிடிக்கு முன், அவளின் காலினைக் கல்லிலே மிதிக்கச் செய் வான். கணவன் மனைவி உறவு கல்லுப்போன்று உறுதியாக இருக்க வேண்டுமென்பதே இதன் கருத் தாகும். அதர்வ வேதத்திலும் திருமணப் பாடல்கள் சில உள்ளன. ஆண், பெண் இரு பாலாரையும் ஒன்று சேர்க்கவும், பிரிக்கவும் ஒதப்படும் மந்திரங்களும் இவ்வேதத்திலே வருகின்றன. ஓரிடத்திலே தன் கணவன் தன்னுடன் நூருண்டு வாழவேண்டுமென மனைவி விரும்புகிருள் (அ. வே. 14.2-63), பிறிதோ ரிடத்திலே மனைவியை நோக்கி "நான் சாமன்; நீ இருக்கு நான் வானம்; நீ பூமி" (அ. வே. 14-2-7) எனக் கூறுகிறன். இவற்றின் மூலம் கணவன் மனைவி யின் பரஸ்பர அன்பும், பற்றும் தெளிவாகின்றன. உபநிஷத காலத்திலே மைத்திரேயீ, கார்க்கீ போன்ற பெண்கள் சிறந்த ஆய்விலீடுபட்டு அறிஞரையே திகைக்கச் செய்தனர்.

79
பிந்திய வேதகாலத்திலும் கல்வி பெரும்பாலும் சமயக் கல்வியாகவே விளங்கிற்று. கல்வி (வித்யா) இருவகைப்படும் என முண்டக உபநிஷத் கூறும் (1-1-45). அவையாவன: அழியாப் பரம்பொருளை (அக்ஷரம்) அறிதற்கான பராவித்யா. இருக்கு, சாம, 8"ர் அதர்வ வேதங்கள், சிகூடிா, கல்பம், வியா கரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஸம் என்பனவே அபராவித்தியா. சாந்தோக்ய உபநிஷதம் (vi - 2) அக்கால மாணவர்கள் பயின்றவற்றை விவரிக்கின்றது. இவற்றிலே, வேதங்கள். இதிஹாஸ புராணங்கள், இலக்கணம், கணிதம், பிதிரர் பற்றிய அறிவு தருக்கம், ஒழுக்கவியல், காலம், தேவவித்யா, பிரம வித்யா, பூதவித்யா, (உயிர்நூல்), கூடித்திரவித்யா, நக்ஷத்திரவித்யா (வான நூல்), தேவ ஜனவித்யா (நடனம், இசை முதலிய நுண்கலைகள் ) முதலியன கூறப்பட்டுள்ளன. அதர்வவேதத்திலே பல வ ைக மருத்துவ அறிவு வெளிப்படுகின்றது.
வைதிகக் கல்வி பல ஆண்டுகளாகப் பயிலப் படும். பொதுவாக மாணவர் ஆசிரியரின் வீட்டிலே (குருகுலம்) தங்கிக் கல்வி பயின்றனர். அவருக்குப் பல்வேறு பணிவிடைகள் செய்து கல்வி கற்றனர். இக்கல்வி முறையிலே மாணவரின் ஒழுக்கம், உடற் பயிற்சி, தொழிற்பயிற்சி, முதலியனவும் இடம்பெறும். இக்கல்வி வாழ்க்கை நெறிக்கான கல்வியாக இலங் கிற்று. ஒருவர் பிரமச்சரிய ஆச்சிரம காலத்திலே கல்வி பயின்று, பின்னர், இல்வாழ்க்கையினைக் கடைப் பிடிப்பர். கல்வி பல ஆண்டுகள் பயிலப்பட்டது. எடுத்துக்காட்டாக, சுவேதகேது ஆருணி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு (12-24 வயதுவரை)க் கற்றமையினைக் குறிப்பிடலாம் (சா. உ. 6-12) அக்காலக் கல்வியின் இலட்சியங்கள் பலவற்றினைத் தைத்திரீய உபநிஷத் திலே (1-2-1) குரு சிஷ்யனுக்குக் கல்வி முடிவிலே

Page 46
80
கூறும் அறிவுரைகளிலே நன்கு காணலாம். எடுத்துக் காட்டாக,” உண்மை பேசு; தருமம் செய்; கல்வியைப் புறக்கணியாதே. ஆசிரியருக்குப் பிரியமான கொடை யினை வழங்கியபின் சந்ததிக் கயிறு அருது கவனிப் பாயாக. உண்மையிலிருந்து பிறழாதே. தருமத்திை* கைவிடாதே. நன்மை செய். பொருள் வளத்தினைக் கவனிப்பாயாக. கல்வியைக் கற்பதையும், புகட்டு வதையும் புறக்கணிக்க வேண்டாம். தெய்வங்கள் பிதிரர்களுக்குச் செய்யவேண்டியனவற்றைச் செய்அன்னை, தந்தை ஆசிரியன், அதிதி ஆகியோரைத் தெய்வமாகப் பேணுவாயாக." இவை தற்காலப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா உரைகளை நினை வூட்டுகின்றன. கல்வி கற்றவன் தனக்கும் உலகிற்கும் செய்யவேண்டியவை வற்புறுத்தப்படுகின்றன. கல்வி யினடிப்படையிலே ஒழுக்க நெறி இலங்குகின்றது. வாழ்க்கை வாழவேண்டும். அதனுல் மற்றவர்களும் நன்மையடைய வேண்டும் என்ற கருத்தும் தென்படு கின்றது. கல்வி வாழ்நாள் முழுவதும் கற்கவேண்டு Gud sår so Gestr“. Lir Guð (Concept of life long education) இதிலே நன்கு தொனிக்கின்றது.
மாணவன் ஆசிரியருக்கு வழங்கிய தகூFணைகள் (கொடைகள்) சில பற்றிக் குறிப்பிடலாம். எடுத்துக் காட்டாக ஜானஸ்ருதி றைக்வனிடம் சென்று பிரம ஞானம் பற்றியறிவதற்காக 600 பசுக்கள், ஒருபொன் சங்கிலி, கோ வேறுகழுதை இழுக்கும் வண்டியொன்று முதலியவற்றையும் தன் மகளையும் தானமாக வழங் கிணுன் (சா. உ. 4.1.2.). பிறிதோரிடத்திலே 1000 பசுக் களும் ஓர் எருதும் வழங்கப்பட்டன. பி.உ.(4.2.) இதே பகுதியிலே கல்வியினைப் புகட்டாமல் தானம் பெறக் கூடாதென யாஜ்ஞவல்க்யர் குறிப்பிட்டுள்ளார். சாந் தோக்கிய உபநிஷத் முடிவிலும் (8, 15) குருசிஷ்ய னுக்கு அளிக்கும் உபதேசமுள்ளது. கல்விகற்றுப்பின்

8l
இல்வாழ்க்கையிலே நின்று படித்ததைப் படித்து நன் மகப்பேறு பெற்று, புலனடக்கிச் சகல உயிர்களிடத் அதும் அஹிம்சையுடன் நடந்துகொள்பவன் பிரம உல கத்தையடைந்து மீண்டும் திரும்பிவரமாட்டான். (பிறக்கமாட்டான்) என்று கூறப்பட்டுள்ளது. குருவிற் கும் சிஷ்யனுக்குமிடையிலே நல்லுறவு நன்கு நிலவ வேண்டுமென்பது உபநிஷதப் பிரார்த்தனைகளிலே வற் புறுத்தப்படுகின்றது. "நாமிருவர் கற்பது ஒளி பெறுவதாக ; நாம் இருவரும் ஒருவரையொருவர் வெறுக்காது இருப்போமாக ’ என ஆசிரியரும் மாண வரும் ஒருமித்துக் கூறுவது கடோபநிஷதப்பிரார்த் தனையிலே வருகின்றது. கல்வியினைக் கற்கும் தோறும் அறியாமை அகன்று போகும். பிருஹதாரண்யக உபநிஷத் (4.10) ஈசஉபநிஷத் (9) ஆகிய வற்றிலே பிரமஞானத்திலே திளைக்கத்திளைக்க அஞ்ஞா ன ம் அகன்று செல்லுதல் வற்புறுத்தப்படுகின்றது, கல்வி ஆண், பெண் இருபாலாருக்கும் அவசியமாகும். (பி. உ. 6). கல்விகற்ற பெண்பிள்ளை (பண்டிதா) பற் றிய குறிப்பும் உண்டு. எனினும், ஆண்பிள்ளைகளே கல்வியிற் சிறந்து விளங்க வேண்டுமெனப் பலர் விரும்பினர்.
வேள்விகளை ஒட்டிப் புராதன விஞ்ஞான வளர்ச் சியுமோரளவு ஏற்பட்டது. வேள்விகளுக்கான பருவம், நாள் முதலியவற்றை அவதானிக்க வேண்டியதால், வானநூல் வளர்ந்தது. இது விவசாய வளர்ச்சியினை ஒட்டியும் வளர்ந்தது. வேள்விக்கான பலிபீட அமைப் புகளின் தேவைகளாலே கேத்திரகணிதம் வளர்ந்தது. வேள்வியிலிடப்படும் மிருகங்களின் உடற்கூறுகளைப் பற்றிய அறிவும் நன்கு நிலவியது. தத்துவ ஆய்விலே, பரிணுமவளர்ச்சி, மிகமிக நுண்ணிதான அணு முத லியன பற்றிய கருத்துகள் தொனிக்கின்றன.

Page 47
82
ஆரியர் தாம் சென்ற இடங்களிலே நிலவிய சமூக சமய பழக்க வழக்கங்களையும் சூழ்நிலைக்கேற்ற வாறு ஏற்று, அவற்றை வைதிக மரபிற் சேர்த்துக் கொண்டனர். எடுத்துக்காட்டாக, வை தி க ம ர புக் கொள்கைகளுக்கு விரோதமற்ற தேச, ஜாதிதர்மங் கள் பிரமாணம் எனக் கெளதமர் கூறியிருக்க, விசே ஷணத்தை நீக்கித் தேச தர்மங்கள் பிரமாணம் எனக் கொண்டு வடநாட்டார்க்குக் கம்பள வியாபாரம் முத லிய ஐந்து விப்ரதிபத்திகளும், தென்னுட்டாருக்கு உபநயனமாகாதவன், பெண்டிர் இவர்களோடு உண் ஆணுகை, பழைய சோற்றை உண்ணுகை, சகோதரன் சகோதரியின் பிள்ளைகளுக்கிடையில் (மைத்துனன், மைத்துணி) திருமணம் ஆகிய ஐந்துவிப்ரதிபத்திகளு முள எனப் பெளதாயன தர்ம சூத்திரம் கூறும். *** ஆளுல்ை இவை வடநாட்டிலனுமதிக்கப்படாதவை. இந் தியாவில் ஆரியர் பின்பற்றிய இணக்க முறைகளுக்கு இஃதும் ஓர் எடுத்துக்காட்டாம்.
வேதகாலப் பொருளாதார நிலை
இருக்குவேதகால ஆரியர் ஒரளவு விவசாயிகளா கவும், ஒரளவு மந்தைவளர்ப்போராகவும் விளங்கினர். விவசாயத்துடன் மந்தை இணைந்து காணப்படுகிறது. மந்தைகளே இவர்களின் பிரதான செல்வம். தரமான பெறுமதி. மந்தைகள் இந்து - ஐரோப்பியர் சமூகத் திலே பெற்றிருந்த முக்கியத்துவத்தினைப் பின்வருவன வற்ருலு மறியலாம். ஆதிக் கிரேக்கர் காலத்திலேஹோமர்காலத்திலே, மந்தைகள் தரமான பெறுமதி ய்ாகக் கணிக்கப்பட்டன. மந்தை எனப்பொருள்படும் Peous சொல்லடியாகவந்த லத்தீன் பதமான Pecunia என்பதன்வழியாகவே Pecuniary எனும் ஆங்கிலச் சொல்வந்துள்ளது. சைபீரியா, கென்யா, மேற்குஆபி ரிக்கா, கொலம்பியா போன்ற நாடுகளில் அண்மைக் காலம்வரை பழங்குடிகள் மந்தையினைப் பணம்போலப்

83
பயன்படுத்தி வந்தனர். 120 பழந்தமிழிலக்கியத்திலே மந்தையைக் குறிக்கும் மாடு எனும்பதம் செல்வத் தையும் குறித்தது குறிப்பிடற்பாலது. பசு மிகவும் போற்றப்பட்டது. இதனைக் குறிக்கும் சொற்களில் ஒன்ருன " அக்ன்யா " எனும்பதம் * கொல்லக் கூடாது ' எனும் பொருள்படும். இதிலிருந்து இதன் முக்கியத்துவம் வெள்ளிடைமலை. பசுவினுலே பெறப் படும் நன்மைகளைக் கொண்டு அது ஒரு புனிதமிருக மாகக் கருதப்படலாயிற்று.
குதிரையும் நன்கு முக்கியத்துவம் பெற்றது. இது போரிற்கும், பொழுதுபோக்கிற்கான தேர்ச்சவாரிக் கும், அல்லது தனிச்சவாரிக்கும், போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. விவசாயத்தில் எருதுகளின் பயன்பாடு குறிப்பிடற்பாலது. எருதுகள் பூட்டிய கலப்பைகள் கொண்டு விவசாயம் நடைபெற்றது. விவ சாயத்திலே நீர்ப்பாய்ச்சுதலும் இடம்பெற்றது. யவ" முதலிய தானியங்கள் விளைவிக்கப்பட்டன. இருக்கு வேதகாலத்திற்கு முன்பே பஞ்சாப் பகுதியிலே விவ சாயம் நன்கு நடைபெற்றமை ஹரப்பாகலாசாரச் சின்னங்களாலும் அறியப்படுகின்றது"
வியாபாரம் நடைபெற்றது. இது பெரும்பாலும் பண்டமாற்ருகவே நிலவியது. நிஷ்க ’ எனும் பதம் ஒருவகையான நாணயமெனச் சிலர் கருதினுலு மிக் காலத்தில் இஃது ஒர் ஆபரணத்தையே குறித்திருக் கலாம். பணி ' என் போர் பிரபல வியாபாரிகளாகக் கூறப்படுகின்றனர்,
மக்கள் தமக்குப் பெருந்தொகையான செல்வங்கள் தருமாறு தெய்வங்களை விளித்துப் பாடியதிலிருந்து அவர்களின் உலகியற் பற்றுத் தெளிவு.
சமூகத்திலே பல்வேறு தொழில்கள் நிலவின. ஒவ்வொரு சாதியினரும் தத்தம் தொழிலைச் செய்தனர்.

Page 48
84
இக்காலத்தில் ஒருவர் தமது தொழிலை மாற்றலாம்.
பருத்தி பயிரிடப்பட்டது. பருத்திப் புடைவைகள் •
கம்பளிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. நெய்தல்
பற்றிய குறிப்புகள் வருகின்றன. அயஸ்' எனும்
பதம் இரும்பினைக் கருதிற்ரு? கருதவில்லையா? என்பது
குறித்துக் கருத்து வேறுபாடு உளது. எனினும்,
இருக்கு வேதகாலப் பிற்பகுதியிலாவது இரும்பின் உப யோ கம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருத
இடமுண்டு. இரும்பினுடைய உபயோகம் முதலிலே
சின்னசியாவிலே வாழ்ந்த ஹிற்றைற் மக்கள் மத்தியி
லேற்பட்டது. நெடுங்காலத்தின் பின்னரே பிறமக்கள்
இது பற்றி அறிந்தனர். இந்தியாவிற்கு வந்த ஆரியரில்
ஒரு சாரார் இரும்பின் உபயோகத்தினை அறிந்திருந்
தனர் எனலாம். 121 எவ்வாருயினும், ஆரியரின் வருகை
யுடனேதான் இரும்பின் உபயோகமும் இந்தியாவிலேற்
பட்டது என்பதில் ஐயமில்லை. தொல்லியல் ரீதியிலே
இருக்கு வேதகாலத்திய இரும்புப் பொருட்களிதுவரை
கிடைக்கவில்லை. ஆனல் அண்மையில் வடஇந்தியாவின்
மேற்குப் பகுதியிலே கிடைத்துள்ள இரு ம் புப்
பொருட்கள் கி. மு. 12-ம் நூற் றண்ட ள  ைவச்
சேர்ந்தவை என்பது 122 தெளிவாக உறுதிப்படுத்தப்
படின் மேற்குறிப்பிட்ட கருத்து நன்கு வலுப்பெறும்.
ஆனல், செம்பு, பொன், வெண்கலம் போன்ற பிற உலோகங்கள் பயன்படுத்தப்பட்டுவந்தன. "அயஸ்". என்பது செம்பு அல்லது வெண்கலத்தையே இக்
காலத்திலே, குறித்தது என ஒரு சாரார் கருதுவர்.
இருக்குவேதம் 'வெண்கலக்கால நூல்” எனத் திரு.
தீகூழித் கருதினர். **
இக்காலத்திலே மக்கள் பெரும்பாலும், கிராமங் களிலேயே வாழ்ந்தனர். வீடுகள் பெரும்பாலும் மண், மரம் முதலியவற்ருல் அமைக்கப்பட்டிருந்தன. பொது மக்கள் பெரும்பாலும் நடந்து சென்றனர். மன்னரும்,

: 85.
பிற உயர் வர்க்கத்தினரும் தேர், வண் டி கள், குதிரைகள், கழு  ைத கள் முதலியனவற்றினைப் பிரயாணத்திற்குப் பயன்படுத்தினர்.
பிந்திய வேதகாலத்திலே, பொருளாதாரத் துறை யிலே மாற்றங்கள் ஏற்பட்டன. ஆரியர் கங்கைச் சமவெளிக்குச் சென்றபின் விவசாயம் நன்கு வளர்ச்சி யுற்றது. இரும்பினுடைய உபயோகம் யஜுர் வேத காலத்திலே திட்டவட்டமாக ஏற் பட் டு வி ட் ட து விவசாயப் பெருக்கத்திற்கு இரும்பின் உபயோகம் நன்கு உதவிற்று. விவசாயக் கருவிகள் செய்தற்கும், காடுகளை வெட்டி நாடாக்கவுமிது நன்கு துணையா யிருந்தது. பல எருதுகள் பூட்டிய கலப்பை கொண்டு விவசாயம் நடைபெற்றது. அதாவது பெரிய அளவிலே விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. சதபத பிராஹ் மணம் விவசாயத்தின் பல்வேறு நிலைகளைக் குறிப்பிடு கின்றது. நீர்ப்பாய்ச்சுதலும் நடைபெற்றது. கோதுமை யுடன் நெல் நன்கு பயிரிடப்பட்டது. கங்கையாற்றின் மேல் கரையிலுள்ள ஹஸ்தினுடபுரத்திலே நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் விளைவாக கி. மு. 12-ம் நூற் ருண்டளவிலேயே நெற் பயிர்ச் செய்கை, மந்தை வளர்த்தல் முதலியன கங்கைச் சமவெளியின் மேற்குப் பகுதியிலே நிலவியது 124 பற்றி இலக்கிய மூலங்கள் குறிப்பிடுவதை உறுதிப்படுத்தக் கூடியதாயிருக்கிறது. மிக நேர்த்தியான மட்பாண்டங்களும், செம்பினுலான அம்பு நுனிகள், இரும்புத் துண்டுகள், கண்ணுடியா லான காப்புகள், மண்ணுலான எருது உருவங்கள், எலும்பினுலான ஊசிகள், குதிரை, பன்றி, ஆடு, மாடு ஆகியனவற்றின் எலும்புகள், எரிந்த அரிசி முதலியனவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மக்கள் பொருளியலின் முக்கியத்துவத்தை நன்கு
உணர்ந்திருந்தமை உபநிஷதங்களாலும் புலப்படும். இதனை வைதிகக் கல்வி முடிவிலே குரு சிஷ்யனுக்கு

Page 49
86
அளிக்கும் அறிவுரையிலே ‘நன்மையைப் புறக்கணி யாதே. பொருள் வளத்தினை(பூத்யை)ப் புறக்கணி யாதே’ எனக் கூறுவதிலிருந்து (தை. உ. 1-2-4) உணரலாம். மேலுமிதே உபநிஷத்திலே ( 3.7.9 ) உணவினுடைய மு க் கியத் து வம் பற்றி நன்கு வற்புறுத்துகையில் “அன்னத்தை (உணவினை) நிந்திக்க வேண்டாம்; இழித்துக் கூறவேண்டாம்; பெருவாரியாக உணவு உற்பத்தி செய்க (அன்னம் பஹ"குர்வீத) இது விரதம் (கடமை)” என வரும்பகுதிகள் நன்கு குறிப்பிடற்பாலன. மனிதனுக்குத் தேவையான உணவு உற்பத்திப் பெருக்கம் பற்றி வேதகாலத்திலே மக்கள் சிந்தித்திருந்தனர். இதற்கு முற்பட்ட ஹரப்பா கலாச் சாரத்திலேயே தானிய உற்பத்தியும், சேகரிப்பும் நன்கு கவனிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடற்பாலதே.
ஹஸ்தினபுர அகழ்வாராய்ச்சி கி. மு. 1100-800 வரையுள்ள காலப்பகுதியிலும், இதன் பின்பும் கங்கைச் சமவெளியின் மேற்பகுதியிலே வாழ்ந்த மக்களின் பொருளியல் நிலை, உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றியறிய உதவுகின்றன, ஏரிக் கட்டுள்ள எருது, எருமை, செம்மறியாடு. பன்றி முதலியவற்றின் எலும்புகள் எரிந்து கருகிக் காணப்படுகின்றன. இவற்றிலுள்ள வெட்டுக்களை நோக்கும்போது, இவை உணவிற்காகக் கொல்லப்பட்டன என்பது தெளிவு. மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி உண்ணும் பழக்கம் நிலவிப் பின்னர் மறைந்தது. ஏரிக்கட்டுள்ள எருது, எருமை முதலியவற்றின் எலும்புகள் பெருவாரியாகக் கிடைத்துள்ளமையினை நோக்கும் போது, மந்தை வளர்த்தல் ஒரு முக்கியமான தொழிலாக விளங்கியது என்பது புலணுகும். பெருமளவு விவசாயம் நிலவிய சமூ கத்திலே மந்தைகள் முக்கியமான இடம் பெற்றிருத்த லில் வியப்பில்லை. மான் வேட்டையினை மக்கள் நன்கு விரும்பினர். ஏனெனில், இதன் எலும்புகள் எழுத்

87
தாணியும், அலங்கார வேலைப்பாடுள்ள பிற பொருட் களுமி செய்தற்குப் பயன்படுத்தப்பட்டன. 128
மனிதனுக்குத் தேவையான அறம் பொருள், இன்பமாகிய திரிவர்க்கங்களை வகுத்தமையிலே இவற்றின் நடுவணதாகப் பொருளினை வைத்துப் பொருளியலின் முக்கியத்துவத்தினை அக்கால மக்கள் வற்புறுத்தியது குறிப்பிடற்பாலது. “எவருக்கும் இருப் பிடம் அளிக்கவேண்டும். இது விரதம்”, எனத் தைத்திரீய உபநிஷத் (310) கூறும்.
“ஆதிகால இந்துக்கள் மனித வாழ்க்கைக்கும். சமூக இயக்கத்திற்கும் அடிப்படையாகச் சடப் பொருளின் உண்மைக்கு மதிப்பு அளித்தனர். யஜ்ஞமே ஆரிய சமூகக் கூட்டமைப்பின் (Commune) கூட்டான உற்பத்தி முறையினைக் குறிக்கும். தனிச் சொத் துரிமை, வகுப்புகள், அரசு முதலியனவற்றைத் தோற்றுவிக்குமுன் ஆதி ஆரியர் கையாண்ட கூட்டான வழிவகையே யஜ்ஞம்” என எஸ். ஏ. டாங்கே எனும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். 128
இக்காலத்திலே வர்த்தகம் நன்கு வளர்ச்சியுற்றது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வர் த் த கர் நடமாடினர். பணம் மிக்க வைஷ்யரை (செட்டிகளை)ப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ‘நிஷ்க இக்காலத்திலே பெறுமதியுள்ள நாணயமாக இருந்திருக்கலாம். முன் னைய காலத்திற்போலவே மந்தையொரு பெறுமதியுள்ள பொருளாய்க் கணிக்கப்பட்டது. ‘புராண" என்ற நாணய வகையும், வேறுசிலவும். இக்காலத்தின் பிற் பகுதியிலே புழக்கத்திற்கு வந்து விட்டன. பண்ட மாற்றுத் தொடர்ந்து நிலவிற்று. சந்தைகள், வர்த்தகக் குழுக்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. கடல் மார்க்கமான வர்த்தகமும் ஏற்பட்டு விட்டது. இந்தியக் கடற்கரையோரங்களில் மட்டுமன்றி. அப்பாலும், ஈழம்,

Page 50
88
தென்கிழக்காசியா, மேற்காசியா போன்ற இடங்களுக் கும் வர்த்தகர் செல்லத் தொடங்கிவிட்டனர்.
தொழில் அடிப்படையிலான சாதிப் பிரிவுகள் பல நிலவின. சிறு கருவித் தொழில்கள் பல நிலவின. உழவன், தச்சன், கொல்லன், குயவன் முதலியோரைக் குறிப்பிடலாம். விவசாயம், வர்த்தகம் வளர்ச்சியடைய நகரங்களும் இக்காலப் பகுதியிலே தோன்றின. ஹஸ்தினுடபுரம், கம்பில்ய, கெளசாம்பி, பரிச்சக்ர, மிதிலா, சம்பா போன்ற பல நகரங்கள் வட இந்தியா வில் எழுந்தன. "
பிற்காலம்
வேதகாலத்தின் பின் ஆரிய நாகரிகம் தொடர்ந்து பிறவிடங்களுக்குப் பரவிற்று. குறிப்பாக, விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள இந்திய பகுதியிலும், வட கிழக்கு இந்தியாவிலுள்ள வங்காளம், அசாம் பகுதி களிலும் ஆரியர் நாகரிகம் முன்னையிலும் நன்கு பரவலாயிற்று. ஆரியர், ஆரியரல்லாதோர் உறவுகள் மேலுமதிகரித்தன. புதிய கருத்துக்களும் தோன்றின. வேதகால முடிவிலேதான் (கி.மு 6.5ம் நூற்ருண்டுகளில்) ஆரிய நாகரிகமையத்தின் ?? எல்லையிலே பெளத்தம், சமணம், ஆஜீவிகம் முதலியன தோன்றி வடஇந்தியா விலும், பிற இந்தியப் பகுதிகளிலும் பரவின. மேலு மிதே காலத்திலே, (கி. மு. 6.4 ம் நூற்ருண்டுகளில்) ஆரிய நாகரிகம், விந்திய மலைக்குத் தெற்கே பரவிய வாற்றினை ஏற்கனவே குறிப் பி ட் ட வைதிக சூத்திரங்கள், 128 இதிஹாஸங்கள், !?? புராணங்கள் 180 காலத்தால் முந்திய பெளத்த, சமணப் புனித நூல்கள் தொல்லியற் சின்னங்கள் மூலம் ஓரளவு அறியலாம் இதே காலப்பகுதியிலே மகத அரசு வளர்ச்சியுற்றது. மகத மன்னரான நந்தரும் (கி. மு. 4-ம் நூ.). மெளரி யரும் (கி. மு. 4-3 ம் நூ.) தீபகற்ப இந்தியாவின் சிறு

89
பகுதியினையோ, பெரும்பகுதியினையோ தம்பேரரசுடன் இணைத்து ஆட்சி செய்தனர். குறிப்பாக மெளரியர் காலத்திலே மெளரியப் பேரரசு தமிழ் நாட்டின் வட எல்லை வரை விரிவுற்றது. இதன் விளைவாக, ஏற்கனவே சமய பண்பாட்டு ரீதியிலே - வைதிக சமய, பெளத்த, சமண, ஆஜீவிகக் குருமார் மூலமும், பிறர் மூலமும் பரவிவந்த ஆரிய நாகரிகம், அரசியல் ரீதியிலும் தென்னுட்டிலே பரவ மேலும் வாய்ப்புகள் ஏற்பட்டன. ஒரே பேரரசின் பகுதிகளான வடக்குத் தெற்கு இந்தியப் பகுதிகளிலே மக்களின் நடமாட்டங்கள் முன்னையிலும் அதிகரித்தன. மெளரியருக்குப்பின் தக்கணத்திலே பேரரசு அமைத்த சாதவாஹனர் ஆட்சிக்காலத்திலே (கி. மு. 3-கி. பி. 3ம் நூ. வரை) வடநாடு, தென்னுட்டுத் தொடர்புகள் முன்னையிலும் நன்கு ஏற்பட்டன.
ஆரிய நாகரிக மையத்திலிருந்து தெற்கே செல்லச் செல்ல, குறிப்பாகத் தூர தெற்கே வர ஆரிய நாகரிகத் தாக்கம் குறைந்து செல்கின்றது. தென்னிந்தியாவைப் பொறுத்த அளவிலிருவகையான தடைகளிருந்தன. புவியியல் நிலைகளாலேற்பட்ட தடையொன்று, ஆரியர் தெற்கே வந்தபோதும் திராவிடர் நாகரிகம் நன்னிலை யிலிருந்தது. மேலும், வடக்கேயிருந்து வந்த ஆரியர் (இவர்களில் ஆரிய நாகரிகத்தை ஏற்ற ஆரியரல்லா தோருமிருந்தனர்) தொகை தெற்கேயிருந்தவர்களிலும் பார்க்க மிகக் குறைவு. எனவே, இணக்க முறைகள், ஒத்துமேவல்கள் நடைபெற்றன.
தெற்கே ஆரியர் நாகரிகம் பரவினுலுமதிலேற் கனவே, வட இந்தியாவிலிருந்த ஆரியரல்லாதார் நாகரிக அம்சங்களுமிடம்பெற்றிருந்தன. அவற்றுட் சில தென்னகத்திற்கும் பொதுவானவை. போர்வீரர். அரசர், வணிகர், முனிவர், விவசாயிகள், பிராமணர், தொழிலாளிகள், இருவழிகள், பெளத்த, சமண,

Page 51
90
ஆஜீவிகத் துறவிகள் முதலிய பல்வேறு மூலங்களுக்கு ஊடாக ஆரிய நாகரிகம் தெற்கே பரவிற்று. காடுகள் மேலும் அழிக்கப்பட்டு விவசாய விஸ்தரிப்பும், இருப் பிடங்களமைத்தலும் நடைபெற்றன. முன்னை நாள் அரசுகள் வெல்லப்படுதலோடு புதிய அரசுகளும் தோன்றின. இருவழிகள், துறவிகள் இயற்கையளித்த இருப்பிடங்களிலே வாழ்ந்து தத்தம் கருத்துக்களைப் போதித்தனர். ஆரியர், அனுரியர் தொடர்புகள் மேலும் அதிகரித்தன. வடநாட்டுக் கருத்துக்கள் தென்னுட்டி லுள்ள மக்கனைக் கவர்ந்தன; குறிப்பாக, மன்னர் களைக் கவர்ந்தன. இம்முயற்சியிலே பிராமணரும் நன்கு ஈடுபட்டனர். " நாற்பத்தெண்ணுயிரத்தவர்" "எழுநூற்றுவர்" போன்ற பதங்கள் இவர்கள் அலை அலையாகத் தமிழகத்திற்கு வந்தமையினைக் குறிப்பன என அறிஞரில் ஒரு சாரார் கொள்ளுவர்.191
மஹாபாரதம், இராமாயணம் ஆகிய இதிஹாஸங் களிலே குறிப்பிடப்பட்டுள்ள முனிவர், இருவழிகள் ஆச்சிரமங்களும் கவனித்தற்பாலன. எ டு த் து க் காட்டாக, இராமாயணத்திலே வரும் தண்டகாரண்யம். பஞ்சவடி முதலியவற்றிலே வாழ்ந்த வைதிக சமய முனிவர்களைப்போலப் பலர் தெற்கே வந்து தங்கி, ஆச்சிரமங்களமைத்து வைதிக சமயக் கோட்பாடு களைப் பரப்பினர்; வேள்விகளியற்றினர். இவர்களுக்கு அனுரியரின் எதிர்ப்புகளிருந்தமையினை அசு ர ர், இராகூதர் பற்றிய கதைகளால் ஊகிக்கலாம். பெளத்த புனித நூல்களிலொன் ருன சுத்த நிபாதத்திலே வரும் பாவரி என்னும் பிராமண இருவழியின் கதையும் வைதிக சமயிகள் எவ்வாறு தெற்கே சென்று வாழ்ந் தனர் என்பது பற்றி இதிஹாஸங்கள் கூறுவதை உறுதிப்படுத்துகின்றது.
மேலும், அகத்தியர், பராசுராமர் பற்றிய கதை களும் ஆரிய நாகரிகம் தெற்கே பரவியவாற்றினை

9.
உருவகமாகவும், மறைமுகமாகவும் குறிப்பிடுகின்றன. அகத்தியர் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தாலும் அவர் தமிழை வளர்த்தமை, பாண்டியரின் குலகுரு வாக விளங்கியமை பற்றிய கதைகளும் மனம் கொளற் பாலன. ஆரியர் எவ்வாறு ஆரியரல்லாத மக்களை இணக்கப்படுத்த முயன்றனர் என்பதையுமிக்கதைகள் காட்டுகின்றன. மேலும், அகத்தியரின் தொடர்புள்ள இடங்களும் மரபுகளும் இந்தியாவின் பல்வேறு இடங் களிலும், வெளியே இலங்கை, தென்கிழக்காசிய நாடு களிலும் பல அறியப்படுகின்றன. இவற்றின் மூலம் அகத்தியர் எனும் பெயர் ஒரு குடும்பப் பெயராக இருந்திருக்கலாம் அல்லது இப்பெயருள்ள பலர் வாழ்ந்தனர் எனக் கொள்ளலாம். பொதுப்பட நோக்கும்போது அகத்தியர் ஆரிய ந்ாகரிகப் பிரதி நிதியாக மிளிர்வதை அவதானிக்கலாம். பரசுராமர் பற்றிய கதைகளிலொன்று சேர நா ட் டி ன் (தற்போதைய கேரளத்தின்) தோற்றம் பற்றியதாகும். இப்பகுதியில் ஆரியர் நாகரிகம் பரவியதை இதுவும் எடுத்துக்காட்டும். வடஇந்தியாவிற்போன்று ஆரிய நாகரிகத் தாக்கம் தெற்கேயும் பல நூற்ருண்டுகளாக ஏற்பட்டது. ஆணுல் வடஇந்தியாவிற்போன்று இதன் பாதிப்பு இப்பகுதியிலே நன்கு ஏற்படவில்லை.
கி. மு. நாலாம் நூற்ருண்டளவிலே, வாழ்ந்த காத் யாயன என்ற வடமொழி இலக்கண ஆசிரியர் (3зғат, சோழ, பாண்டிய நாடுகளைப்பற்றிக் குறிப்பிடுகிறர்.** மேலும், பெருமளவு இதே காலத்தைச் சேர்ந்த மெகஸ்தெனிஸ் எனும் கிரேக்க ஆசிரியர் பாண்டிநாடு பற்றிக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இக்காலப்பகுதி யளவில் அல்லது இதற்கு முன்னரே ஆரியர் தென் னந்தம் வரையறிந்துவிட்டனர். நந்த (கி.மு. 4-ம்நூ.), மெளரிய (கி. மு. 4-2-ம் நூ. வரை), சாதவாஹன (கி. மு. 3-கி. பி. 3-ம் நூ. வரை)ப் பேரரசுகள் வளர்ச்சி

Page 52
92
யோடு வடஇந்திய, தென்னிந்திய உறவுகள் மேலுமதி கரித்தன. இந்திய ஒருமைப்பாடு குறிப்பாகச் சமய பண்பாட்டு ரீதியிலேற்படலாயிற்று.
வடநாட்டிலும் பார்க்கத் தீபகற்ப இந்தியாவிலே ஆரியர் பலவழிகளில் இணக்கமுறைகளைப் பின்பற்றி யதை நோக்கும்போது தென்னகம் ஆரியமயமானது என்பதிலும் பார்க்க இந்துமயமாயிற்று, ** எனப் பேராசிரியர் ஆர். என். தண்டேகர் கூறியிருப்பது கவனித்தற்பாலது. தென்ன கமக்கள் ஆரியரின் தெய் வங்களிலும் பார்க்கச் சமய சமூக நெறியான வர்ணுஸ் ரமதர்மத்தையே பெரிதும் ஏற்றனர். தெற்கே எதிர்ப் புகள் நிலவிவந்தாலும் அவற்றை ஒழித்திலர். தென் குட்டுப் பழக்கவழக்கங்கள், சமயவழிபாட்டு முறை களை அவர்கள் பொதுவாக அழித்திலர். *** ஆனல வற்றைப் பொதுவாக ஏற்று வைதிகமரபு மெருகிட்டு அவற்றிற்கு வைதிக சமய, சமூகவியல்புகளிலிடமளித் தனர். இருசாராரும் கருத்துக்களைப்பரிமாறிக் கொண் டனர். எடுத்துக்காட்டாகச் சுத்தபக்தி-இறைவனி டத்துக் கொள்ளும் தூய்மையான பற்று இந்தியாவிற் குத் தென்னகம் அளித்த பெரும் கொடைகளில் ஒன் ரும். பக்தி திராவிடநாட்டிலே தோன்றி, மஹாராஷ் டிரத்திற்குப் பரவி, அங்கிருந்து மதுரையை அடுத் துள்ள கங்கை-யமுனைப்பள்ளத்தாக்கிற்குப் பரவிற்று எனப் பத்மபுராணம் கூறும். 185 தென்னிந்தியாவில், ஆரிய நாகரிகத்திற்குப் புறம்பான ஐயனுர், மாரியம் மன் போன்ற பலதெய்வங்கள் பழையமுறைப்படியும், வைதிக சமய மெருகுடனும் இன்றும் வணங்கப்படு கின்றனர். கிராமப்புறங்களிலே வைதிகசமயக் கிரியை களுடன் முற்பட்டகாலச் சடங்குகளும், வாத்தியங் களுமிடம் பெறுகின்றன. எடுத்துக்காட்டாகச் சில வாத்தியங்கள், பொங்கல், வேள்விகள் முதலியன குறிப்பிடற்பாலன. ஆரிய நாகரிகச்சார்பற்ற தைப்

93
பொங்கல், கார்த்திகைத்தீபம் முதலிய விழாக்கள் புது மெருகுடன் தொடர்ந்து நிலவுகின்றன.
பிற்கால வைதிக சமயப் பிரிவுகளான காணபத் யம், கெளமாரம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், செளரம் ஆகியவற்றிலே ஆரியர், ஆரியரல்லாதோர்திராவிடர், ஆதி ஒஸ்ரலோயிட் முதலிய மக்களின் கருத்துக்கள் எந்த அளவிற்குச் சங்கமித்துப் படி ந் துள்ளன என்பதை ஓரளவாவது அறியலாம்.198வைதிக சமயச் செல்வாக்கு வளர்ச்சியடைய, ஆரிய நாகரி கத்திற்குப் புறம்பான அரசமரபுகளிற்பல பிற்காலத் திலே வைதிக இருஷிகள் அல்லது இதிஹாஸ்வீரர் அல்லது சந்திரன், சூரியன், அக்கினி குலங்களிலி ருந்து தாம் தோன்றின எனப் பெருமைப்பட்டன. எடுத்துக்காட்டாகத் தமிழகத்தினை ஆண்ட முடியுடை வேந்தரான பாண்டியர், சோழர், சேரர் ஆகியோ ரைக் குறிப்பிடலாம். தென்னகத்திலேற்கனவே நிலவிய சமூகப்பிரிவுகளும். ஆரியவர்ணப்பிரிவுகளும் ஒன்று சேர்ந்து பிற்காலத் தென்னிந்திய சமூகப்பிரிவுகள் தோன்றக் காரணமாயிருந்திருக்கலாம்.
வேதகால வடமொழி, இதிஹாஸவடமொழி, பிற் காலவடமொழி (Classical Sanskrit) என வடமொழியின் நிலைகளை மூன்ருகப் பிரிக்கலாம். பிற்கால வடமொ ழிக்கே பெரும்பாலும், கி. மு. 6-5-ம் நூற்றண்டள விலே வாழ்ந்த பாணினி இலக்கணம் வகுத்தவர். இம்மொழி தொடர்ந்து தற்காலம்வரை இந்தியாவின் பண்பாட்டுமொழியாகவும், இந்துக்களின் புனிதமொழி யாகவும் இலங்கிவந்துள்ளது. இதனை ஒருகாலத்திலே புறக்கணித்த பெளத்தர், சமணர் கூட இதனைப் பின் னர் பயன்படுத்தினர். இந்தியாவின் எப்பகுதியிலும் வாழ்ந்த மன்னரும் இதற்கு ஆதரவு நல்கினர். இந் தியாவின் இணைப்பு மொழியாக, பொதுமொழியாக, அறிவியல் மொழியாகச் சமீபகாலம்வரை இது நிலவி

Page 53
94.
வந்துள்ளது. மேலும் இந்திய பண்பாடு பரவிய ஈழம், தென்கிழக்குஆசியா, மத்திய ஆசியா முதலிய நாடு களிலும் மதிப்புள்ள இடத்தினை வடமொழி பெற்றி ருந்தது,
* இந்தியாவில் ஆரியரின் மிகக் குறிப்பிடத்தக்க தொண்டுகள் சமூகநிறுவனங்களிலும், சமயத்திலுமே காணப்படுகின்றன. இந்தியர் வாழ்வின் பல்வேறு நிறுவனங்கள்--குறிப்பாக, இந்துசமயத் தொடக்கத் தினைப் பலர் ஆரியர் வருகையிலிருந்துதான் бт(6ф அதுக் கூறுவர். வடமொழி, சாதிமுறையிலமைந்த சமூ கம், சமய வேள்வி, உபநிஷத்தத்துவம் முதலியனவும் ஆரியரின் தொண்டுகள் என்பர் ; விவசாயத்திற்காகப் பெருந்தொகையாகப் பலகாடுகளை அழித்து நிலத் தினைப் பண்படுத்தினர். அவர்களின் தொண்டுகள் தொடர்ந்து வளர்ந்ததாலோ, அவற்றிற்கு எதிராகத் தோன்றிய இயக்கங்களாலோ, மேலும் அபிவிருத்திகள் தோன்றின 187 எனப் பேராசிரியர் ரோமிலாதாபர் ஆரியரின் தொண்டுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆனல், மேற்குறிப்பிட்டனவற்றிற்கு ஆரியர்மட்டுமன் றித் திராவிடரும் பிறரும் நன்கு பணியாற்றியுள்ள னர் என்பதும் மனம்கொள்ளத்தக்கது.
* ஆரியர், ஆரியரல்லாதோர் (திராவிட, ஆதி ஒஸ் ரலோயிட் முதலியபிற) பண்பாட்டுத் தொடர்புகள் பன்னெடுங்காலமாக ஏற்பட்டு, ஒன்றேடொன்று பல வழிகளிலே பின்னிப் பிணைந்துவிட்டன. இதனுல், எவர் எந்த அளவிற்கு இந்தியப் பண்பாட்டிற்கு அருந் தொண்டாற்றினர் என முடிவாகக் கூறுதல் எளி தன்று 138 எனப் பேராசிரியர் கே. கே. பிள்ளை அவர் கள் கூறியிருப்பது குறிப்பிடற்பாலது. அவ்வாருயி னும் இன்றைய நிலையில் ஓரளவு பொதுப்படக் கூற லாம்.

:
அடிக்குறிப்புகள் Basham A. L., Studies on Indian History and Culture, Calcutta, 1964 p. 21.
ஆரியர் வருமுன்னரே திராவிடரும், அவர்களுக்கு முன் ஆதி ஒஸ்ரலோயிட் மக்களும் அவர்களுக்கு முன் நெக்கிற்ருேக்களும் வந்து விட்டனர்.
i. Grierson G. Linguistic Survey of India Vols. i-xi
Calcutta, 1903-1922. ii. Majumdar R. C. (Ed.), The Wedic Age, Bombay,
1965, pp. 146-167. i. Gordon Childe, The Aryans, Kennikat Press, 1970
pp. 208-212.
ii. Kosambi D. D., The Culture and Civilization of Ancient India in Historical Outline, London, 1965, р. 76. Chatterji S.K., Indo-Aryan and Hindi, Culcutta, 1960, pp. 2 - 3. i Monier Williams, Sanskrit - English Dictionary, Oxford, 1951, p. 152. Majumdar R. C. (Ed.) op. cit, p. 145. .
Majumdar R.C. (Ed.), Ibid., pp. 220-221.
爱罗 p. 221. i. Marshall, Sir John, Mohenjodaro and the Indus
Civilization, Vols. i-iii, London, 1931. ii. Wheeler Mortimer, The Indus Civilization, Cam
bridge, 1960, pp. 90 ff. iii . Basham A. L. Wonder that was India, Londono
1954, p. 24.

Page 54
10
12
13
l4
15
6
17
8
19
20
2
22
96.
Burrow, T., The Sanskrit Language, Revised Edition London, 1973. p. 24.
Gordon Childe, op. cit., pp. 13,91-93
92 , p. 91
ps Ibid.
Piggot Stuart, Prehistoric India, Great Britain, 1961, p. 276.
i. Gordon Childe Op. 'oit.
ii. Chatterji, S. K., Indo-Aryan and BHindi, Cal
cutta, 1960, pp, 10 - 15.
Bailey H. W., Veda and Á vesta, U. C. R., XV. 1&2 1957, pp. 23—35. i. Ghosh Nagendra Nath, The Aryan Trail in Iran
and India, Calcutta, 1937. ii. Majumdar. R. C. (Ed.), Op. cit., Ch. xi. பொதுவாக, ‘சதம்' எனும் பதம் ஆசியாவிலுள்ள ஆரிய மொழிகளிலும், "கென்ரும் " எனும் பதம் ஐரோப்பாவிலுள்ள ஆரிய மொழிகளிலும் நூறு என்ற எண்ணினைக் குறிக்கும். " ச ’, ‘க வாக uDT gJs56ü (5 söl'5)L-sbUITGug). Piggot Stuart, Op. cit. pp. 245 ff. Burrow T., Op. cit. p. 7. i. Dandekar R. N. Presidental Address, Proceedings
of the Indian Historical Congress, 1947. ii. Dandekar R. N., U. C. R. XII. i, 1954, pp.14-15 Robert Shafer, Ethnography of Ancient India. Harrasowitz, 1954.
Tilak B. G. The Orion, Bombay, 1893.

23
24
25
26
27
28 29
30
3.
32
33
97
i. Rapson E. J. (Ed.), Cambridge History of India
Vol. I. Cambridge, 1935, pp. 69-70.
ii. Gordon Childe, Op. cit., pp. 138 - 158.
i. Gordon Childe, Ibid., pp. 158-182 li. Majumdar R. C. (Ed.) Op.cit., p. 213 i. Gordon Childe Op. cit, pp. 183-206 ii. Majumdar R. C. (Ed.) Op, cit. p. 27 iii. The Cultural Heritage of India, Vol. i., Calcutta,
1958, p. 143 Majumdar R. C. (Ed.), Op. cit. p. 24 Majumdar R. C. (Ed.) p. 215 Chatterji S. K, Op. cit., pp. 11-14
is . . 曾筠 , 13-14 ii. Baham, A. L., Op. cit, p. 29 Burrow T. Sanskrit Language, Second Impression, London, pp. 30-31 Subbarao B. The Personality of India, Baroda, 1958, pp. 97-98 விவசாய சமூகத்திலே மந்தை முக்கியமான இடம் பெற்றிருந்தது. இந்தோ - ஐரோப்பிய மரபிலே போர்வீரர் குழு எனில் “பசுக்களைத் தேடிச் செல் வோர் கூட்டம் " எனவும், "பாதுகாப்பு அளித்தல்" எனில் பசுக்களைப் பாதுகாத்தல் எனவும் பொருள்படும் பதங்கள் உள்ளன.
| Piggot S., Op. cit, pp. 263-264
i. Piggott S. op, cit, pp. 266-267
ii. Bridget and Raymond Allchin-The Dawn of
Indian Civilization - Great Britain, 1968, pp. 144-45

Page 55
34
35
36
37
38
39
40
4.
42
43
44
45
98
Bridget and Raymond Allchin, Op, cit, p. 145 Piggot Stuart, Op. cit, p. 249
i. ., p. 250
ii. Cultural Heritage of India Vol. 1, Calcutta, 1958,
p 141
i. Piggot Stuart, op. cit. p. 250
ii. Gurney, O. R., The Hittites, Great Britain, 1962,
p. 105 i. Piggot Stuart Op. cit. p. 251 ii. Gordon Childe Op. oit, pp. 18 - 19. (3uD6y 5, மித்தானியர் மத்தியிலே மரியன்ன" எனும் வீரர்கள் இக்காலத்தில் இருந்தனர். இச் சொல் வீரரைக் குறிக்கும் மர்யா " எனும் வடமொ ழிப்பதத்தை நினைவூட்டுகிறது.
iii. Gurney O. R. Op. cit. p. 124-125
Burrow T. Sanskrit Language, London, 1973, p. 4l Burrow T. lbid. Wheeler M. Op. cit. pp. 90-92 Wheeler M. Op. cit. p. 93 Bridget and Raymond Allchin, Op. oit, P. 140 i. Wheeler M., Op. oit, pp. 43-45 ii, Piggot Stuart, Op. oit, pp. 174-175; 226-227
lii. Bridget and Raymond Allchin, Op. oit. p. 145
147 etc.
Hine Geldern R, The Coming of the Aryans and the end of Harappa Civilization, Man, Vol. 56, 1956. pp. 136 - 140

46
47
48
49
5l.
52
53
54
55
56
57
58
59
99.
வெயர் சேர்விஸ், எனும் அறிஞரும் மேற்குறிப் பிட்ட கருத்தினையே கொண்டுள்ளார். Fair Servis, W. A. The Chronology of the Harappan Civilization
and the Aryan Invasions. Man Wol. 56, 1956, pp.
153-156 Majumdar R. C. (Ed.) Op. cit, pp. 197-198
- Subbarao B., Op. cit, p. 98
i. Lal. B. B., Excavation at Hastinapura and other explorations in the upper Ganga and Sutlej basins. Ancient India, No. 10&ll, New Delhi. 1954, p, 147. இவர் இம்மட்பாண்டங்களின்
காலம் கி. மு. 1500-600 வரையென்பர். மேற் LULq. U. 151
ii. Bridget & Raymond Allchin, op. pit, pp. 210-218
i, Lal. B. B., Further Copper boards from the Gan
getic Basin, Ancient lindia, No. 7, 1951
ii, Bridget and Raymond Allchin, Op. cit. pp. 200
206
Burrow, T. Op. cit. p. 32 Basham A. L., Op. cit, pp. 29-30
Chatterji. S. K. Indo-Aryan & Hindi, Calcutta, 1960, p. 17 Keith A. B., Home of the lindo-Europeans, Oriental Studies in honour of Gursetji Erachji Pavry, O.U. P. 1933 a
Wheeler M., Op. oit, p. 92 Burrow T., Op. cit., p. 32
Gordon D. H., Prehistorio background of Indian Culture, Luzac, 1958 v ר
Wide Footnote No. 45
g g 9p 46

Page 56
60
6.
62
63
64
65
66
67
68
69 70
7
72
7ვ
74
75
OO
Sankalia E. D. New Light on the lndo-lranian or Western Asiatic Relations between 1700 B.C. -1200 B. C., Artibus Asiae, xxvi 3/4, MCMIL. xiii, pp. 312322 - Jacquetta Hawkes and Sir Leonard Woolly, Prehistory of Mankind-Culture and Scientific Development Vol. 1. Prehistory and Beginnings of Civilization London, 1963, p. 406 Ghirshman; R. Iran, Great Britain, 1961, p. 76 Chatterji S. K. Op. cit, p. 18-19 Burrow T., Op. cit., p. 33 Shende J. N., Foundation of the Atharvanie Civilization, Poona, 1949 Radhakrishnan S. (Ed. & Tr.) Upanisads London 1953, p. 20
Majumdar R. C., Ancient lndia, Banaras, 1952 pp. 87-88
i. MaxMuller, Bistory of Ancient Sanskrit Liter
ature, 1860
ii. Winternitz M., History of lndian Literature
Vol. 1, Tr. by Mrs. S. Ketkar, Calcutta, 1927, pp. 292 - 293 Winternitz M. lbid, pp. 29 ff. Rapson E. J. (Ed.), Op. oit., p, 1 12 Basham A. L. Op. cit., pp. 31 ff. Piggot Stuart, Op. cit., p, 255 Burrow T. Op. cit, p. 35 Lal B.B., Op. cit. p. 149 Dange S. A , lndia from Primitive Communism to Slavery, Bombay, 1949, p. 48

76
77
78 79
80
8. 82 83
84
85
86
87
101.
Raychaudhuri H. C., Political History of Ancient lndia, Calcutta, p. 1950, p. 9
Majumdar R. C. (Ed.), The Vedic Age, Bombay, 1965 p. 248.
Majumdar R. C., Ibid., p. 254
i. Bhandarkar D. R., a. Aryan Immigration into Eastern India, Annals of the Bhandarkar Oriental Institute, No. 12, 1931, pp. 103-116. b. Lectures on the Ancient History of India
Calcutta, 1919
ii. Raychaudhuri E. C. Studies in Indian Anti
quities, Calcutta, 1932.
iii. Chatterji S. K., place of Assam in the History
and Civilization of lndia, Gauhati, 1955.
Majumdar R. C. (Ed.), Op. cit, pp. 256-266. Majumdar R. C. (Ed.), lbid., pp. 261-266. Aitareya Brahmana wii. 18.
Nilakanta sastri K. A., A History of Southelndia, Oxford, 1966, p. 72
Dipavamsa, Ch. 9 — 1 1 ; Mahavamsa, Ch. 6 — 1 1.
Panikkar K. M., Geographical Factors in lindian Hiss
tory, Bombay, 1955, p. 25.
i. Majumdar R. C., Corporate Eife in Ancient india
Calcutta, 1922, pp. 214-221.
ii. Majumdar R. C. (Ed.), The Wedio Age, Bombay,
1965, p. 355.
a. Majumdar R. C. lbid.
b. Bhargava P. L. lndia in the Wedio Age, Lucknow,
1956, pp. 139 - 140

Page 57
02
88 Rapson E.J. (Bd.) Op. cit. p. 96. 89 Altekar A. S., State and Government in Ancient ln
dia, Delhi, 1962, p. 16.lff. 90 Majumdar R. C. (Ed.), Op. cit., pp. 356-357. 91 Majumdar R. K. Military System in Ancient lndia.
Calcutta, 1956. 92 Singh S. D. Ancient lndian Warfare with special reference to the Wedic period, Leiden, 1965, p. 168.
93 Majumdar R. C., o Ancient lndia, Banaras, 1952,
pp. 76.—77.
94 Majumdar R. C. lbid p. 79.
95 Arthasastra, 2-6 etc.
96 i. Bastings J. (Ed.) Encyclopaedia of Religion and
Ethics, Wol. ii, New York 1909, pp. 12-47.
i. Griswold H. D, Religion of the Weda, London,
1923.
iii. Deshmukh P. S., Origin and Development of Religion in Wedic Literature, Bombay, 1933. iv. Dandekar R. N., Some aspects of the Vedic Mythology, U. C. R. xii-i, 1954, pp. 1-23. 97 Macdonell A. A., Vedic Mythology, Delhi, 1963, p. 22. 98 Thapar R., lndia, Great Britain, 1966, p. 44. 99 Winternitz M., Op. cit., p. 125. 100 Shende N. J., The Mythology of the Yajurveda,
Bombay, 1959. 100 g. Sakuntala Rao Sastri, Aspirations from a fresh World, Bombay, 1954, p. 58. 101 என்னுடைய ஆசிரியப் பெருந்தகையும், ஒரிசாவி லுள்ள கேந்திரிய சமஸ்கிருத வித்தியா பீட இயக்கு நருமான கலாநிதி ம. த. பாலசுப்பிரமணியம் அவர்கள் இக்கருத்தினை நன்கு வற்புறுத்துவர்.

101 102
103
104
05
105
06
107
108
109
10
I
11
12
103
9. Barua B. Pre Buddhist lndian Philosophy, 1921.
Das Gupta S., A History of lindian Philosophy Vol. i., Cambridge, p. 31.
Radhakrishnan S. A History of lndin Philosophy, Vol... i, London, 1941, p. 150.
Radhakrishnan S. bid. கேனஉபநிஷத்திலே, உமா எனும் பதமே வரு
கின்றது: இச்சொல் திராவிடச் சொல்லாகவுே
காணப்படுகிறது. தாய்த் தெய்வத்தினைக் குறிக் கும் அம்மன் (அம்மா) என்ற தமிழ்ச் சொல்லைப் போன்றது. se. Ratna N., Karttikeya, Bombay, 1973, pp. 81-82 Keith A. B. The Religion and Philosophy of the Vedas. and Upanisads, Wol. ii, Oxford, 1925, p. 497. Das Gupta S. Op, oit., pp. 32 — 35. Winternitz M., Op. cit. p. 266. பிராஹ்மனுேஸ்ய முகமாளித் பாஹ" ராஜன்யஹ் கிருதஹ் ஊரூ ததஸ்ய யதீவைஷ்யஹ் பத்ப்யாம் சூத்ரோஜாயத (இ. வே. 10-90) W பிராமணன் அவன் (புருஷன் - சிருஷ்டிகர்த்தா) முகம் , அரசன் புயங்கள் ; வைஷ்யன் தொடை சூத்திரன் அவனுடைய பாதங்களிலிருந்து தோன் றிஞன். - Bose A. C. Call of Vedas, Bombay, 1960, p. 24s. Dutt N. K. Origin and Development of Caste in 1ndia, Vol. i., 1931.
9. Majumdar R.O., Corporate Life in Ancient lndia, Calcutta, 1922, pp. 330-331. Thapar R., Op. cit, p. 40.

Page 58
113
14
15
6
117
18
19
20
12
122
04
M. jamdar R. C. Anoient India, Banaras, 1952 pp. 81 - 86. Shakuntala Rao Sastri, Women in the Vedic Age, Bombay, 1954. Wijesekera O. H. de A., A New linterpretation of the Nataraja Concept, U. C. R. Vol. v. No. 2. 1947, pp. 50 - 55. உயர்ந்த சாதி ஆண்மகன் தன்னிலும் தாழ்ந்த சாதிப் பெண்ணினைத் திருமணம் செய்தல் அநுலோம திருமணம்; உயர்ந்த சாதிப் பெண்ணி னைத் தாழ்ந்ந சாதி ஆண் திருமணம் செய்தல் பிரதிலோம திருமணம்.
Majumdar R. C. Corporate Life in Ancient lndia, Calcutta, 1922, p. 336.
Meghaduta 2. 22.
சுப்பிரமணிய சாஸ்திரி P. S, வடமொழி இலக்கிய வரலாறு. அண்ணுமலை நகர் 1946, ப. 204-205.
விப்ரதிபத்திகள் எனில் ஒன்றற்கொன்று முரணுள் ளவை எனப் பொருள்படும்.
Morgan W., A History of Money, Great Britain, 1964, pp. 175-176.
i. Lal. B. B, , Op. cit, pp. 1 1 - 151
ii. Singh S. D. Op. cit. p. 170 ás. Cup. 1000 s6rsñó
இரும்பின் உபயோகம் ஏற்பட்டது.
iii. Bridget and Raymond Allchin, Op. cit, p, 211.
ஜெய்பூரிலே கி. மு. 1100 அளவைச் சேர்ந்த இரும்பு உருக்குத்தொழில், கொல் வேலை ஆகிய வற்றிற்கான சான்றுகள் அகழ்வாய்வின் போது Qassfishuissor. Madras Hindu, September 13, 1975

23
24
25
26
127
128
129
130
3.
105
i. Diksit S. к. An introduction to Archaeology,
ii. Childe i Gordon, What happened in BHistory,
Great Britain, 1964, pp. 175-176.
Lal B. B. Op. cit., pp. 11 - 151. Lal B. B. Op. cit. p. 14. Dange S. A., Op. cit., Ch. iii-iv.
ஆரியாவர்த்தம் ஆரியரினிருப்பிடம், நாகரிக மையமெனப் பொருள்படும். இப்பதம் ஆரம்பத் திலே கங்கை-யமுனை 'டுவாப் பினையும் பின்னர் பெளதாயண தர்மசூத்திரத்திற் கூறப்பட்டுள்ள வாறு காலகவனம், பாரியாத்திரா, ஆதர்சம், இம யமலை ஆகியனவற்றையும் எல்லைகளாகக் கொண் டிருந்த பிரதேசத்தைக் குறித்தது. மனுஸ்மிருதி காலத்திலே இமயம் தொட்டு விந்திய மலைவரை யுள்ள வடஇந்தியாவைக் குறித்தது.
சிரெளத, கிருஷ்றய, தர்மசூத்திரங்கள் முதலியன வற்றைக் குறிப்பிடலாம். இவற்றிலே வைதிக மரபுகளை யொட்டிய சடங்குகளனைத்தும் சூத்திர வடிவிலே கூறப்படுகின்றன.
udadrustørstb, SNørst udru600rib.
வடமொழியிலே 18 மஹாபுராணங்களும், 18 உப புராணங்களும் உள்ளன. பிரஹ்ம, பத்ம, விஷ்ணு, வாயு, பாகவத, நாரதீய, மார்க்கண்டேய, அக் கினி, பவிஷ்ய, பிரஹ்மவைவர்த்த, வராஹ, லிங்க, ஸ்கந்த, வாமன, கூர்ம, மத்ஸ்ய, கெளட, பிரஹ் மாண்ட புராணங்களே 18 மஹா புராணங்க strub.
Pillay K. R., I. Aryan influence in Tamilaham in
the Sangam Age, Tamil Culture, Wol, 12, No. 2&3, 1966, pp. 159— 169.

Page 59
32
133
34
135
136
37
13s
106
ii. Proceedings of the first linternational Conference Seminar of Tamil Studies, Vol. i., Kualalumpur, 1968, p. 273.
i. Srinivas lyenkar, History of the Tamils, Mad
ras, 1929, p. 136.
ii. Nilakanta Sastri, Op. cit., pp. 69-70.
Contribution of South lindia to the heritage of lndia, Publications Division, Delhi, 1965, 18-19
libid. pp, 8-19. libid., p, 19.
காணபதியம் - கணபதியினை முழுமுதற் கடவு ளாகக் கொண்டுள்ள வழிபாடு. இதுபோலவே முருகப்பெருமான், சிவபிரான், திருமால், சக்தி,
சூரியன் ஆகிய கடவுளாரை முழுமுதற் கடவு
ளாகக் கொண்டுள்ள வழிபாடுகள் முறையே கெளமாரம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், செளரம் எனக்கூறப்படும்.
Thapar R., Op. oit., p. 48.
Contribution of South india to the heritage of lndia Publications Division, Delhi, 1965 p. 39.
சுருக்கங்கள் U. C. R., University of Ceylon Review. O. U. P. Oxford University Press.

3.
5.
7.
உசாத்துணை நூல்கள்
Select Bibliography I. Original Sources
Aitareya Brahmana Text with English Transla
tion A. B. Keith (Ed.), OUP, 1909 Aitareya Brahmana with the Commentary of
Sayanacarya vols. I - IV Pandit Satyavra. ta Samasrami, (Ed.) Calcutta, 1894, 1896, 1897. Atharvaveda Samhita with the Commentary of Sayanacarya vols, I - IV, Sankar Pandur, ang Pandit (Ed.) 1895 > Atharvaveda Samhita, vols. I — II, W. D. whit
ney (Tr) Motilal Banarsidass, Delhi, 1962 Jaiminiya Brahmana Raghuvira and Lokesh
Candra (Ed.), Nagpur, 1954 Kathaka Samhita, Leopold Von Schroeder (Ed. Leipzig, 1900 - 1910 í Maitrayani Samhita vol. 5 Leopold von Scbrve
der (Ed.), Leipzig The Nirukta of Yaska with Nighantu vols. I-II
R. G. Bhandakar (Ed.), Bombay, 1918, 1948 Rgveda Brahmanas: Aitareya and Kausitaki Brahmanas, A. B. Keith (Tr.) HOS, XXV, Cambridge Mas, 1920
10. Rigveda Samhita with the Commentary of Sa
yanaearya, vols, I - IV, Tilak Maharashtra

Page 60
108
University Vaidic Samshodan Mandal, Poo na, 1933 - 1946, R. T. H. Griffith (Tr.) vols I - III, Second edition, Banaras, Lazarus, 1896 ܚ
l l. Satapatha Brahmana vols. I - V, Laxmi Venk
2.
3.
4.
5.
6.
17.
8.
19.
attesvar Steam Press, Bombay, 1940 Julius Eggling (Tr.), SBE Vols. II, IV, XLI, XLIII XLIV, oxford, 1882 - 1900 Taittiriya Aranyaka with the Commentary of Sayanacarya, Rejendra Lala Mitra (Ed.) Calcutta, 1892 Taittiriya Brahmana, Rajendra Lala Mitra (Ed.) Vols. I - III, Bibliotheca Indica series, Culcutta, l859 - 1862 Taittiriya Samhita, E. Roer and E. B. Coweli (Ed.) Vols. I - IV, Bibliotheca Indica series Calcutta, 1860 - 1899 Wajasaneji Samhita, Pandit Ram Sokala Misra (Ed.), Parts I - IV, Banaras, R. T. HI, Grffith (Tr.) Banaras, 1899
Principal Upanisads edited with English Trans
lation by S. Radhaknishnan, London, 1953
The Thirteen Principal Upanisads Tr. by R. E.
Hume, London, 1931
Baudhayana Dhamasutra, E. Hultzoh (Ed.),
Leipzig 1884
Baudhayana Grhyasutra, R. Shama Sastri (Ed.)
Mysore, 1901

4.
109
II. Dictionaries and other Works
Añarasinha Namalinganusasana with Commentary Edited with English Translation by Har Dutt sharma and N. G. Sardesai, Poona, 194
Apte V. S. The Students Sanskrit English Dict ionary, Gopal Narayan and Co. 1902
Bloomfield M. Vedic Coneordance, HOS, Vol.
10, Cambridge Mas... 1905
Bohtlingh Otto, Sanskrit Worterbuch Vol. I - VIII
1906
Keith A, B, & Macdonell A, Vedic Index, Wols.
I - III, - lindian Texts series, 1912
Macdonell A. A Practical English Dictionary
OU P 1924
Monier Williams, A Sanskrit English, Diction
ary, Oxford, 1899
Visvabandhu, Vaidikapadanukramakosa Vo. IX W. W. R. Institute Hoshiapur, 1959 Vol. X V. V. R. Institute Hoshiapur, 1959

Page 61
10
III. Secondary Works
Aiyankar K. V. Rangaswani, Ancient Indian Econo
mic Thought, Banares, 1934
Altekar A. S. i. Education in ancient India, Banares
1944
ii. Position of Women in Hindu Civilization
Banaras, 1956 iii. State and Government in ancient India, Delhi, 1962
Apte V. M. Social and religious life in the Grhyas
utras, Ahmadabad, 1939
Bhargava A. L. India in the Vedic Age, Lucknow 1956
Bhasam A. L. The Wonder that was India, London
1967
Beni Prasad i. The State in ancient India, Allahabad
1928 ii. The Theory of Government in ancient India, Allahabad, 1927
Bloomfield M. The religion of the Veda, New york,
1908
Burrow T. The Sanskrit Language, London, 1973 Childe Gordon, S. The Aryans, London, 1970
Cultural Heritage of India, Vols. I - III, Calcutta,
1958
Das S. K. Economic History of ancient India
Calcutta, 1925

ll 1
Das Gupta History of Indian Philosophy, vol. I,
Calcutta, 1923
Dutt N. K. Origin and Development of Caste in
India, Wol. I, London, 1931
Ghosal U. N. History of Indian Political Ideas,
OUP, 1959
Keith A. B. Religion and Philosophy of tte Vedas
and Upanisads, Cambridge, Mas, 1925
Macdonell A. i. History of Sanskrit Literature,
Delhi, 1961 − ii. Vedic Mythology, Strassburg, 1897
Majumdar R. C. (Ed.) History and Culture of the Indian People, Vol. I The Vedic Age, London, 1951; Vol. II. The age of Imperial Unity, Bombay, 1960
Majumdar R. C. i. Ancient India, Delhi, 1964
ii. Corporate Life inì ancient India, Poona,
1922
Mookerji R. K. i. Hindu Civilization, Vols. I - III,
Bombay, 1957
ii. Fundamental unity of India, Bombay, 1954
iii. Ancient Indian Education, London, 1947
Nilakanta Sasteri K. A. A History of South India
OU P, 1966,
Pandey R. B. Hindu Samskaras, Delhi, 1969

Page 62
12
Pargiter P. E. Ancient Indian Historical Tradition
Delhi, 1962
Pathak V. S. The ancient Historians of India,
London, 1966
Philips P. H. (Ed.) Historians of India Pakistan
and Ceylon, O U P, 1961
Prabhu IP. H. EHindu Social Organization, Bombay,
96.
Rapson E. J. (Ed.) The Cambridge History of India,
Wol. I, Delhi, 1962
Rayohaudhuri H. C. Political History of ancient
India, Calcutta, 1950
Samaddar J. N. Economic Condition of Ancient
India, Calcutta, 1922
Sharma R. S. Aspects of Political Ideas and Insti
tutions in Ancient India, Delhi, 1959
Shakuntala Rao Sastri, Women in the Vedic Age,
Bombay, 1954
Wheeler R. E. Mortimer, The Indus Civilization
London, 1953
Winternitz M. History of Indian Literature, Vol. I
Calcutta, 1927

அட்டவணை
sassaud 42,43, 90 9 அநட்டோலிய 14, 18 அர்யமன் 10 அல்தாய் 14 அனல் 19 அஹ"சரமஸ்த 14 ஆசியா 4,14, 20, 25,82,94 ஆத்மன் 6, 62 ஆந்திரதேசம் 27 ஆந்திரர் 42
fuit 1 - 5, 7, 10, 13, 14,
16-22, 25 - 29, 31 37, 38, 42 - 45, 54, 58.66,
89, 94 2, 4, 9, 18. 20
22, 24 27,92 @並卸ó 21,23,53 54, இந்தோ-ஆரியர் 9, 10,29,30 இந்தோ-இரானியர் 9. 1,17 இந்தோ-ஐரோப்பியர் 6, 7,
13, 17, 19 இரான் 4, 17, 19, 22, 24 இரானியர் 5.9, 14, 17,2228 இலிபிச 44 உக்றெயின் 18 உமாதேவி 63 =-(8grmr pj۴ 54 e j fluu 24 oissy l2 எக்காட் 68
9
எகிப்தியர் 8
எகிப்து 21
எல்அமர்ணு 21
BBC3 yr ar i'r llu Pr4, 5, 13, 14, ll
20, 22, 24
ஒஸ்ரலோயிட் 1, 2, 39, 93
கங்கேரி 15
கங்கை 24
astu 63, 64
கல்ல 3
கஸ்பியன் 15
கஸ்ஸைற் 19
கார்ப்பேதியன் 17
கஷ்மீர் 3
கிக்குலி 21
ãሆsአy 21,24
கிரேக்கர் 5, 10, 20.54, 58,
82
கிர்ஷ்மன் 28
கீத் 27
Gascór uur 82
கே. கே. பிள்ளை 94
@gsfdລນ 14
son assif l5
கைனேகெல்டேர்ண் 24,27
கோர்டன் 27
கோகஸஸ் 17 சங்கராச்சாரியர் 32, 38 சங்காலியா 27 சத்யகாம ஜாபால 87

Page 63
114
s*Luy 42 சரஸ்வதி 37, 39, 41 சாஹிதும்ப் 19 சிந்து 5, 37 சிவபிரான் 58 ઈu6b & 19 சின்னுசியா 17 学历uT19 சீஸ்ரன் 24 சுநீதிகுமார்சட்டர்ஜி 1, 26,
28
சுபிலுலியும 21 சுப்பராவ் 14, 18 சுவேதகேது 79 (s-uf 93 sosofiur 82 சைல்ட் 15 QS-n(Tyssog 10 (GSF er pf 93 டபர்கொற் 19 டவுலர் 68 டாங்கே 87 தண்டேகர் 14, 92 தஸ்யுக்கள் 39 தாஸ் 3 தாஸர் 39 திபெத் 14 திராவிடர் 1, 2, 36, 39, 66,
89, 94 திரிவேத 3 திலக் 15 துஸ்ரத்த 21 (355)lest 3
நசிகேதன் 66 நந்தர் 88 நவ்டதாலி 27 நாசத்ய 10, 21 6u 5 நீப்பர் 15, நெக்கிறிற்ருே 2 நெஹ்றிங் 16 நோர்டிக் 2, 15 பஞ்சாப் 3 Lie-ffib 35 uggg.TLDf 90,91 பரீகதித் 35, 40
பர்ஜிதர் 15
பலுக்கிஸ்தான் 19 பருே 11, 18, 22:23, 35 பாண்டியர் 93 பாவரி 91
பிகொற் 35 பிரஹ்மன் 61 - 62 Lrudar 55, 64 பிரஜாபதி 57 பிரஹ்மர்ஷிதேசம் 3 பிரான்டென்ஸ்ரென் 8, 17 புசல்கார் 24 புத்தபிரான் 34 புந்திரர் 42 புளிந்தர் 42 புரந்தரன் 23 பென்கா 15 போகஸ்கோய் 21, 24 போலந்து 17 udsrsfgsf 34

15
மகஷ்முல்லர் 6, 14, 34,35 வங்காளம் 6 மத்திய ஆசியா 13.14, 18-19 வசிஷ்டர் 38
மத்தியுசாயு 20 மத்திய பிரதேசம் 27 மஜ சம்தார் 49 மஹாராஷ்டிரம் 92 மித்தானிய 20 மித்ரன் 10, 21 முல்தான் 3 முன்ஷி 3 மூதிபர் 42
மெசொப்பொத்தேமியா.
17, 26
வருணன் 10, 21, 53 வாஜசிரவண 68 விரொஸ் 15 விஷ்ணு 57, 64
്ബ് 22, 27 வின்ரெர் நீட்ஸ் 35 விதேஹமாடவன் 41
வெயர் சேவிஸ் 24, 27
வூலி 27 றைக்வன் 80 ருெபெட்ஷேவர் 14
மேற்காசியா 13, 19-21, 24 ஜங்கர் 23, 24
மையேர்ஸ் 15 மைத்திரேயி 67 மொஹெஞ்சதாரோ 23 மெளரியர் 88 ազp&Ծr 45
யாஜ்ஞவல்க்யர் 61, 67, 80
யூரல் 9, 14, 18 ரணுகுந்தை 19 ராகுகண 41 ராமச்சந்திரன் 23 ராஜஸ்தான் 27 ரிப்பொல்ஜி 16 ருத்திரன் 53. 57-58, 64 ருறங்ரேப் 16 ரூசியா 16, 18-20, 22 ரேப்கிஸர் 16 ரொத் 10 Gir trufleor 94 லதம் 14 லால் 24-25
ஜனகன் 67, 75 ஜனமேஜய 35 ஜா 3
ஜான ஸ்ருதி 30 ஜ-சகர் 23, 24
ஜேர்மனி 15 ஸ்கந்த 63, 64 ஸ்கந்திநேவியா 15 ஸ்கிறேடர் 15 ஸ்ரெப்பிஸ் 19 ஸ்டஸ்பதி 63 ஷாரேப் 24 ஷென்டே 31 ஸோப்பனுேர் 32, 68 ஹயோம 10 ஹரப்பா 5, 22, 24, 78 ஹஸ்தினுடபுரம் 84, 85 ஹிற்றைற் 17, 21, 84 ஹோமர் 12, 82

Page 64
ukasüd aust
3
6
18
27
34
35
44
63 64
78
8
27
24
21
21
28
10
பிழை திருத்தம்
பிழை பிரஹமர்ஷி ஆசிக் சிலாவேனிய ஆசியச் ஆயசி ஆரண்யகாலங்கள் இலக்தின் அரசியல் நிலை
அடைந்தன சளத்குமார
அதில
திருத்தம் பிரஹ்மர்ஷி ஆசியக் சிலாவோனிய
ஆசிய ஆசிய ஆரண்யகங்கள் இலக்கியத்தின் வேதகால அரசிய ia அடைந்தனர் சனத்குமார
<号}西6D师


Page 65


Page 66

f 鲁 ۱ء سے بچہ یہ جہتیSY5ھ (8)6 دف |
금 2ns)_o) ۱۵) ها

Page 67
6, S5િ, 6-~ 7. رحیمہ ،^جم؟5 للشیم
ਹਨ । ਪ ਨੇ ਨੇ ਅ, 7 (2 ίνη rNლE/ Af
# tう。 3. fi GP-efY
در هرک صل- گته» ، l ro, .5 سم#
لہلم شم
ԷՀO * リ%。 |3 کہ یہ دیتیم (گ Y r
t “D) Y W
 


Page 68

y 鲁 ལ་སྡེ་ -r Sچا٢٦نى٦|
آ۱۵ومه (CS ךאץ ۔۔۔۔۔۔ &YపేQg -

Page 69


Page 70