கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வடமொழி இலக்கிய வரலாறு

Page 1
Lists
är säsonaggi
──
 
 

●-邯

Page 2

வடமொழி இலக்கிய வரலாறு
இலங்கை சாகித்ய அகாடமியின் பரிசு பெற்றது
LTo Lff
கா. கைலாசநாதக் குருக்கள் சம்ஸ்கிருத பேராசிரியர், இலங்கைப் பல்கலைக் கழகம்
நர்மதா பதிப்பகம் நல்ல நூல் வெளியீட்டாளர்கள்
1, வியாசராவ் தெரு, தி. நகர் சென்னை-600 011

Page 3
விரைவில் வெளிவர இருக்கும் ஆசிரியாது மற்ருெரு அரிய நூல்
"சைவத் திருக்கோயிற் கிரியை நெறி"
Price Rs. 12-OO
Pages XW | +- 208
WADAMOZH LAKKIA WARALARU". (A History of Sanskrit Literature-Wadi Porod) by Doctor K. KALASA NATHA KURUKKAL o o First Edition : ( in Srila nka 1962) in India December 1981 Published by T. S. RAAMALING AM, NAR MADHA PATHIPPA KAM, T" Nagar, Madras-GOOO 17. O Printed at: Ms PRABHU PRINTING HOUSE, Madras-BU0 017.

பேராசிரியர் கா. கைலாசநாதக் குருக்கன்
சம்ஸ்கிருதக் கல்வியில் கடந்த நாற்பதாண்டு காலமாக ஈடுபட்டுவருகிற இவர் சம்ஸ்கிருதத்தில் மட்டுமின்றித் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், பாளி ஆகிய மொழிகளிலும் பயிற்சி பெற்றவர். சம்ஸ்கிருதத்தைச் சிறப்புப் பாடமாகக்கொண்டு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் 1947-ம் ஆண்டு பி. ஏ. பட்டத்தையும் 1950ல் எம். ஏ. பட்டத்தையும் பெற்ருர்,
இந்தியாவில் பூணுப் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதத் துறையில் இரண்டு ஆண்டுகள் இதிகாச புராணங்கள் காட்டும் சைவம்பற்றித் தென் பாரதத்திலும் இலங்கையிலும் நிலவி வரும் சைவக் கிரியை மரபுகளுடன் தொடர்புபடுத்தி இவர் நிகழ்த்திய ஆராய்ச்சிக்காக 1961ம் ஆண்டில் பூணுப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கிற்று.
1947ம் ஆண்டு முதல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத விரிவுரையாளராகக் கடமையாற்றி வந்த பேரா சிரியர் 1975ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பான வளாகத்தில் இந்து நாகரிகப் பேராசிரியராகவும் ( Professor of Hindu civilisation ) Hj. 2 s fsj, genph தலைவராகவும் நியமனம் பெற்ருர்,
பாரத நாட்டிலும் காணற்கரியவாறு இந்து நாகரீகப் பேராசிரியரையும் இந்து நாகரிகத்துறையையும் எம். ஏ , Ph D. முதலிய பயிற்சி நெறிகளுட்பட்ட உயர்மட்டத்தில் வளர்த்துவரும் தனிச் சிறப்பு வாய்ந்த யாழ்ப்பாணப் பல் கலேக் கழகத்திலேயே இவர் தொடர்ந்து பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் கடமையாற்றி வருகிருர்,
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமாக விளங் கும் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியின் ( Ramanathan College of Fino Arts) scal Taub 1976 ஆண்டு முதல் பணியாற்றி வருகிருர்,

Page 4
Prof. K. KALASANATHA KURUKKAlM. A. (Ceylon) Ph. D. (India) Head of the Department Department of Hindu Civilization University of Jaffna, Thirunakvely, JAFFNA,
வடமொழி இலக்கிய வரலாறு சம்ஸ்கிருதம் கற்கும் மாணவர்களின் தேவை கருதி உருவாயிற்று. இனிய தமிழ் நடையில் தானே அமைந்த கார ணத்தாலும் வேத இலக்கியம் பற்றித் தெளிவாக அறியத்தரும் நூலாக விளங்குவதனலும் மாணவர் கள் மட்டுமின்றி வைதிக இலக்கியம் பற்றி அறிய விழையும் இரசிகர்களும் சுவைத்துப் படிக்கும் சூழ் நிலை ஏற்பட்டதை உணரலானேன்.
இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவருவதை அறிந்து மட்டிலா மகிழ்ச்சி யடைகிறேன். இந் நூலின் தேவையை நன்குணர்ந்து இரண்டாம் பதிப்பை வெளியிட முன் வந்த நர்மதா பதிப்பக உரிமையாளர் திரு டி. எஸ் இராமலிங்கம் அவர் களுக்கும் இதற்காக பெரிதும் துணை நின்ற திரு ஆர். பத்மனப ஐயர் அவர்களுக்கும் என் நன்றி கலந்த பாராட்டுக்கள் உரித்தாகுக.
7— 3 — 198l யாழ்ப்பாணம். * கைலாசநாதக் குருக்கள்

മിങ്വേ
வடமொழி இலக்கிய வரலாறு பற்றி நூலொன்றைத் தமிழில் எழுதும்படி என் நண்பர்கள் பலர் என்னை ஊக்கு வித்து இப் பணியில் ஈடுபடச் செய்தனர். சூழ்நிலையும் இதற் குப் பெரிதும் உதவிற்று.
இலண்டன் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலும் இலங்கைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டத்திலும் சம்ஸ்கிரு தம் முக்கிய பாடங்களி லொன்ருக இருந்து வருகின்றது. இப் பல்கலைக் கழகத் தேர்வுகளுக்காகப் படிப்பவர்களின் தேவைக்கேற்ற நூல்கள் பல ஆங்கிலத்தில் இருக்கின்றன. தமிழிலும் சிங்களத்திலும் அறிவுறுத்தும் முறையை இலங் கைப் பல்கலைக் கழகம் சென்ற இரண்டு ஆண்டுகளாக மேற் கொள்ளலாயிற்று. தமிழில் உயர்தரக் கல்வி கற்பிக்கும் இச் சூழ்நிலை தோன்றியதன் பின் பல்கலைக் கழகத் தொடக்கத் தேர்வை நாடி நிற்பவர்களுக்கும் பல்கலைக் கழகத்திற் கற் போருக்கும் இன்றியமையாத நூல்கள் பல தமிழில் வெளி யாக வேண்டிய நிலை ஏற்பட்டது.
இச் சூழ்நிலையில் இவ்வரலாற்று நூலை நான் எழுதத் தொடங்கிய பொழுது, இது சம்ஸ்கிருதம் கற்கும் மாணவர் களுக்கு மட்டுமின்றி இம் மொழியையும் இதன் இலக்கியச் சிறப்பினையும்பற்றி அறிய அவாவும் ஏன்யோருக்கும் பயன் படும் வகை அமைதல் சாலச் சிறந்தது என்னும் எண்ணம் உண்டாயிற்று. எனவே, Lorr6007 auqsh ஏனையோரும் சுவைத்து வாசிக்கும் வண்ணம் இவ்வரலாற்றை உருவாக்க முனைந்தேன். இந்நூலில் சம்ஸ்கிருதச் சொற்களெல்லாம் தமிழெழுத்திலேயே காணப்படுகின்றன. ஆகவே, சம்ஸ்கிரு தம் சிறிதும் அறியாத வாசகர்களும் இடர்ப்பாடெதுவும் இன்றி இந்நூலைத் தொடர்ச்சியாக வாசிக்கலாம்.

Page 5
vi
இந்நூல் உருவாகும் பொழுது மாணவர்களின் நலங் சருதி ஒவ்வொரு பக்கத்தின் அடியிலும் விளக்கக் குறிப்புக் களத் தந்து விஷயங்களை விரிவாகவும் தெளிவாகவும் எடுத் துக் கூற எண்ணியிருந்தேன். இவ்வடிக் குறிப்புக்களில் மட் டும் நாகரி எழுத்து இன்றியமையாது இடம்பெற நேரிட் டது. நாகரியை அச்சிடும் வசதி இங்கு கிடையாமையால் குறிப்பெழுதும் நோக்கம் கைவிடப்பட்டது. அச்சிடும் வசதி பின்னெருகால் நேரிடின் இக்குறிப்புக்களைபும் சேர்த்து வெளியிடலாம் என எண்ணுகிறேன். 'சம்ஸ்கிருதச் சொற் களைத் தமிழில் எழுதும் பொழுதும், தமிழில் வழங்கி வரும் சம்ஸ்கிருதச் சொற்களை நாகரியில் எழுதும் பொழுதும் மாணவர்கள் பெருங் கஷ்டத்திற்குள்ளாகின்றனர். இதை நீக்க, இந்நூலில் காணப்படும் முக்கியமான தமிழ்ச் சொற் களுக்கு நேரிடையான சம்ஸ்கிருதச் சொற்களை அகர வசைப்படுத்தி ஈற்றில் இணைக்க எண்ணி இருந்தேன். இதுவும் அச்சடிக்கும் வசதி இன்மையால் இங்கு இடம் பெறவில்லை. அகர வரிசைப்படுத்தப்பட்ட பொருளகராதி மட்டும் ஈற்றில் சேர்க்கப்பெற்றுள்ளது.
இப்புத்தகம் இலங்கைப் பல்கலைக் கழகம் நடத்தும் GsT - šis ši G35rfašisuh (University Entrance and H. S. C. ] பொதுக் கலைத் தகுதித் தேர்வுக்கும், (General Arts Ouali. fying Examination ] sãavuorit 6:sfiš (35rfayi.g5 tib, B. A. Genera சம்ஸ்கிருதத்தை ஒரு பாடமாகக் கொண்டு பரீட்சை எழுது, பவர்சளுக்குப் பயன்படும். w
யாழ்ப்பாணம், பரமேஸ்வரக் கல்லூரியின் தலைமை தாங்கி அதிபராகக் கடமையாற்றிய பொழுது அங்கு கல்வி கற்ற எனக்குப் பிற்கால "உயர்தரக் கல்விக்கு அடிப்பட்ை யாய் வேண்டிய அறிவு புகட்டிய பேராசிரியரும்,முன்னைநாள் தபால் ஒலிபரப்பு மந்திரியாக விளங்கியவருமான உயர்திரு சு. நடேச பிள்ளை, B.A., B.L., F.R. E.S.) அவர்கள் அணிந் துரை நல்கி இந் நூலைப் பெருமைப்படுத்தியுள்ளார்கள்.

vii
அதற்காக அவருக்கு நான் செய்யக்கூடிய கைம்மாறு யாது உளது?
இந் நூலை உருவாக்கத் துணை புரிந்தோர் பலர். இவர்க்கு என் நன்றி என்றும் உரியது. என்னுடன் பல்கலைக் கழகத் தில் சம்ஸ்கிருதத் துறையில் விரிவுரையாளராய்க் கடமை ஆற்றிவரும் G. சுந்தரமூர்த்தி எம். ஏ. அவர்கள், நான் இந் நூலை உருவா கும் வேளை உடனிருந்து பல திருத்தங்களைச் செய்யும் பேருதவி புரிந்தார். அச்சேறும் வேளை பிழைகளைக் களைய அவர் மேற்கொண்ட முயற்சி இந்நூல் இவ்வாறு உரு வாக இன்றியமையாததாயிற்று இலங்கைப் பல்கலைக் கழ கத்தின் நூல் நிலையத்தில் துணை அதி ராகக் கடமையாற்றும் சி. முருகவேள் (B. A. Hons, அவர்கள் இந்நூல் முழுவதை யும் நமக்கு வாசித்துப் பல திருத்தங்களைச் செய்வதற்குச் சிர மம் சிறிதும் பாராது தம் ஓய்வு நேரம் முழுவதையும் பல நாட்களாகச் செலவிட்டார். குறிப்பகராதியைத் தாமே உரு வாக்கப் பெரிதும் விரும்பியும், உயர்தரப் பயிற்சிக்காக மேல் நாடு செல்ல நேரிட்டதால், அது முடியாதுபோயிற்று. நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ள பொருளகராதியைத் தொகுத் தும், அச்சாகும் வேளை அச்சு நிலையத்தியேயே பெரும் பொழு தைச் செலவிட்டுப் புரூப்” பார்த்தும், புத்தகத்தை உருவாக் கியவரான என் மருகர் ப. சர்வேஸ்வர ஐயர் (B. A. Hons, என் பாராட்டிற்குரியவர். என்னிடம் சம்ஸ்கிருதம் பயின்று வரும் ஆசிரியர் ஆ நவரத்தினம் அவர்கள் கையெழுத்துப் பிரதியை அழகாக எழுதியும், "புரூப்” பார்த்தும் பெரிதும் உதவிஞர். இவர்களனைவருக்கும் மிகவும் கடப்பாடுடை Gausår. ' '
நூல்களை உருவாக்குவதிலும் அவற்றை வெளியிடுதலே அரும் பெருங் கைங்கரியம் பலனெதையும் எதிர்பாராது அறிவைப் பரப்புதல் ஒன்றையே தனி நோக்காகக் கொண்டு, மட்டக்களப்பு மான்மியம் விபுலானந்த அமுதம், சம்ஸ் கிருத இலகு போதம் திருமுருகாற்றுப்படை சுப்பிரமணிய

Page 6
Viii
பராக்கிரமம் முதலிய நூல்களையும், இன்னும் எண்ணிறந்த நூல்களையும் தரங்குன்ருது அச்சிட்டு வெளிபிட்டு அறிவொளி பரப்பி வரும் கலா நிலையத்தின் சேவை என்றென்றும் மறக் கற் பாற்றன்று
மெய்கண்டான் அச்சக நிலையத்தில் அதிக வேலையுள்ள இச்சமயத்திலும், இந்நூலை மிகக் குறுகிய ஒருமாத காலத் துள் அழகுற அச்சிட்டுதவ முன்வந்த மெய்கண்டான் அதிபர் திரு என். இரத்தினசபாபதி அவர்களது பரோபகாரமும்,இந் நூலின் அச்சு வேலையை நேரே முன்னின்று ஊக்குவித்த மெய்கண்டான் மானேஜர் திரு. ந. நமசிவாயம் அவர்களது சேவையும், வெகுவிரைவில் இந்நூல் முற்றுப் பெற ஒத்துழைத்த மெய்கண்டான் அச்சுயந்திரத் தொழிலாளரது சேவையும் மிகவும் பாராட்டற்குரியன.
இதைத் தொடர்ந்து, இதிகாசம், புராணங்கள் ஆகிய இரண்டினையும் பற்றிய வரலாற்றை இவ் வடமொழி வர லாற்று வரிசையில் இரண்டாவது நூலாகவும் சம்ஸ்கிருத காவியங்களின் வரலாற்றை மூன்ருவது நாலாகவும் நாடகங் களின் வரலாற்றை நான்காவது நூலாகவும் எழுதி உரு வாக்கலாம் என எண்ணி இருக்கிறேன்.
அறிஞருலகம் இதனை மனமுவந்து ஏற்று. இந்நூலிற் காணப்படும் குறைகளனைத்தையுங் களைந்து,இந்நூலைப்பயன் படுத்துவது மட்டுமன்றி அக்குற்றங்களை எனக்கு எடுத்துக் காட்டி அடுத்த பதிப்பில் அவற்றை நீக்க வழி செய்து நான் இப்பணியைத் தளராது தொடர்ந்து செய்துவரும் வண்ணம் ஊக்கம் அளிக்கும் என்பது எனது முழு நம்பிக்கை.
இலங்கைப் பல்கலைக் கழகம் பேராதனை. கா. கைலாசநாதக் குருக்கள்
(முதற்பதிப்புக்குரிய முன்னுரை)

அணிந்துரை
Sot5. 6f. (5C3l—8F u’bu96itäbT , B.A., B. L., F. R . E.S. அவர்கள் அளித்தது
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வடமொழி யுடன் தொடர்புகொண்ட தமிழில் வடமொழி இலக்கிய வரலாற்றைப்பற்றி அறிந்துகொள்வதற்கு நூல்கள் இல்லாதிருப்பது பெருங் குறையாகும். சில ஆண்டுகளுக்கு முன் அண்ணுமலைப் பல்கலைக் கழகத் தினின்று வடமொழி வரலாறு? என்ற பெயருடன் ஒரு நூல் வெளிவந்தது. அதன் பிரதிகள் இப் பொழுது கிடைப்பதில்லை. இந்நிலையில் திரு. கா. கைலாசநாதக் குருக்கள், வடமொழி இலக்கிய வரலாறு? என்ற நூலை இயற்றி வெளியிடுவது பாராட்டத்தக்க செயலாகும். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் வடமொழி விரிவுரையாளராகக் கடமை யாற்றும் இவர்கள் வடமொழியில் சிறந்த விற்பத்தி யுள்ளவர்கள் பூணுப் பல்கலைக் கழகத்தின் வட மொழி ஆராய்ச்சித்துறையில் பயின்று கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள்; தமிழ் மொழியிலும் பாண் டித்தியம் படைத்தவர்கள். இவர்கள் வடமொழி வரலாற்றைப்பற்றி எழுதியுள்ள நூல் மிகவும் பயன ளிக்கும் முறையில் அமைந்திருக்கிறது.
இந்நூலின் முதற்பாகம் இப்பொழுது வெளி யிடப்படுகின்றது. இப்பகுதி வைதிக இலக்கியத் தைப் பற்றியதாகும். பாணினி முனிவர் வட மொழி இலக்கணத்தை வரையறுப்பதற்கு முன் தோன்றிய வைதிக இலக்கியத்துக்கும், அம்முனிவர் காலத்துக்குப் பின் தோன்றிய வடமொழி இலக்கி யத்துக்கும் இலக்கண அமைப்பில் சில வேறுபாடு கள் உண்டு. இங்கு வைதிக இலக்கியம் என்பது வேதங்களையும், அவற்றின் வழிவந்த பிராமணங் களையும், ஆரணியகங்களையும், வேதங்களின் முடி

Page 7
ΣΚ.
யாக அமைந்த உபநிடதங்களையும், வேதங்களைச் சார்ந்த ஆறங்கங்களையும் குறிப்பிடுகின்றது. இவ் விலக்கியத்தின் அகன்ற பரப்பைத் திரு. கைலாச நாதக் குருக்களின் நூல், ஒரு பெரிய உருவத்தின் பிரதிபிம்பத்தைச் சிறிய அளவில் ஒரு கண்ணுடி காட்டுவதுபோல் சுருக்கமாக விளக்கிக் காட்டுகின் நறது. இவ்விலக்கியத்தைப்பற்றி மாணவர்கள் முக் கியமாக அறிய வேண்டுவனவற்றை இந்நூல் திரட்டித் தருகிறது. வேதங்களைப்பற்றி மேற்றிசை நாட்டறிஞர்கள் கொண்ட கருத்துக்களும் இந் நூலில் இடம் பெறுகின்றன. வேதகாலத்தைப் பற்றி இவ்வாராய்ச்சியாளர் கூறும் முடிபுகளும் இந்திய நாட்டு விற்பன்னர்களாகிய பாலகங்காதர திலகர் முதலியோரின் கொள்கைகளும் இதில் விளக் கப்பட்டுள்ளன
வேதங்கள் பல தெய்வங்களைப் புகழ்ந்து பாடு வதால், அவற்றின் அந்தரங்கக் கருத்தை அறியாது சில ஆராய்ச்சியாளர்கள் இடர்ப்படுகின்றனர். * Ir தெய்வம் ஒன்றே" என்பது வேதங்களின் Qpig-ut கும். ஏகம் சத்: விப்ரா பகுதா வதந்தி’ என்ற வேத வாக்கியம் இவ்வுண்மையை உணர்த்துகின் றது. அக்கினி, வாயு, இந்திரன் முதலிய தெய்வங் களை வேதங்கள் போற்றும்போது, அவற்றின் வழி யாக அப்பர தெய்வமே அருள்புரிகின்ற படியால் அதன் புகழை அத்தெய்வங்களின்மீது வேதமந்திரங் கள் ஏற்றித் துதிக்கின்றன என்ற கருத்தை இற் நூலாசிரியர் விளக்கியிருப்பது குறிப்பிடத் தக்க தாகும்.
இந்நூலின் தூய தமிழ்நடை இதற்கு ஒரு தனிச் ஒறப்பை அளிக்கின்றது.
இராமநாதன் கல்லூரி
sub. 4 - 10-63 • க. நடேச பிள்ளைنچتی ہے

இந்நூலின் முதற் பதிப்பிற்கான சில மதிப்புரைகள்
9 தமிழில் ஸம்ஸ்கிருத வரலாற்றைப் பற்றிய நூல் வெளிவராத நிலையைக் கவனித்து இவ்வாசிரி யர் இந்நூலை வெளியிட்டுள்ளார். இம்முயற்சி புகழ்ச்சிக்குரியதாகும். வேத இலக்கியத்தைப் பற்றிய இந்நூலில் நான்கு வேதங்கள், பிராம்மணங் கள் ஆரண்யகங்கள், உபநிஷதங்கள், குத்திரங்கள் ஆகியவற்றைப் பற்றிய வரலாறு விவரமாகத் தரப் பட்டுள்ளது.
ஆசிரியர் இலங்கைப் பல்கலைக்கழக ஸம்ஸ்கிருத விரிவுரையாளர்; ஆராய்ச்சியில் பட்டம் பெற்றவர். ஆகவே தக்க முறையில் இதை எழுதியுள்ளார். நல்ல தாளில் அழகாக அச்சிட்டுள்ள இப்புத்தகம் நன்கு வரவேற்கத் தக்கது.
எஸ். என். பூரீ ராமதேசிகன், சுதேசமித்திரன், சென்னை
ruptib 7, 1968
0 திரு. கைலாசநாதக் குருக்களின் ஆழ்ந்த அறிவையும், புலமையையும் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் காணக் கூடியதாக இருக்கிறது.

Page 8
xii
வேத நூல்களைப் பற்றி விரிவாகவும், இனிய எளிய நடையிலும் வடமொழி அறியாதவர்கள் கூட படித்துப் பயன் பெறும் முறையிலும் திரு. கைலாச நாதக் குருக்கள் இயற்றியுள்ள இந்நூல் மதிப்பு மிக்கதொரு இலக்கியப் பொக்கிஷம்.
ரஜனி, வீரகேசரி, இலங்கை 4-11-1962
O நூலாசிரியர் பண்டிதரும் பாமரரும் படித் தின்புற சரளமானஇனியநடையில் புதுமைநலமெரு கிட்டு, தான் பெற்ற இன்பம் இவ்வையகமெல்லாம் பெறவேண்டும் என்ற பெருநோக்கால் தமிழுலகுக்கு அளித்துள்ளார். நூலில் தொட்ட தொட்ட இட மெல்லாம் கலை ஞாயிறு கதிர் வீசுகிறது. புலமை யுள்ளம் நிழலாடுகிறது. செந்தமிழ்ப் பெருமக்கள் ஒவ்வொருவரும் படித்தின்புற வேண்டிய நூல்.
செ. தனபாலசிங்கன், தினகரன், இலங்கை 9 - 12 - 1962

0.
.
2.
பொருளடக்கம்
முன்னுரை, அணிந்துரை
சில மதிப்புரைகள்
முகவுரை
வேத இலக்கியம்
இருக்கு வேதம்
அதர்வ வேதம்
யசுர் வேதம்
சாம வேதம்
பிராமணங்கள்
ஆரணியகங்கள்
உபநிடதங்கள்
சூத்திரங்கள்
பொருளகராதி
இந் நூலிற் குறிப்பிடப்பட்டுள்ள மேனட்டு ஆராய்ச்சியாளர்கள்
X
17
27
93
19
3.
39
55
6.
177
95
20 7

Page 9


Page 10


Page 11

வடமொழி இலக்கிய வரலாறு
உலக மொழிகள் பலவற்றுள், இலத்தின், கிரேக்கம், இரேபியம் சம்ஸ்கிருதம் என்பனவும், ஜர்மனியம், பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் என்பவையும் முக்கியமானவை களாம். இம்மொழிகளுள் ஒன்முகிய சம்ஸ்கிருத மொழியின் இலக்கியத்தைப் "யே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
சம்ஸ்கிருதம் , எனினும் வடமொழி எனினும் அமையும். சம்ஸ்கிருதத்தை வடமொழி என்று குறிப்பிடும் மரபு தென் ணுட்டில் உண்டு. வடமொழி என்னும் இச்சொல் எதைக் குறிப்பாக உணர்த்துகின்றது என்பதைச் சிறிது பின்னர் கவனிப்போம்.
வட மொழி பல வளங்களைப் பெற்றுள்ளது; சமயக் கருத்துக்கள் நிரம்பிய நூல்கள் விரவப்பெற்று விளங்குவது. இது பற்றி உலகெங்கணும் அறிஞர் இதனைப் பெரிதும் விருப்புடன் படிக்கின்றனர். இம்மொழியுடன் தொடர்பு படாத பகுதி உலகில் பெரும்பாலும் இல்லையெனவே கூற லாம். ஒருகாலத்தில் இது கிழக்கே சீனுவரை சென்று ஜப் பானையும் எட்டிற்று. வட மொழியிற் காணப்படும் மகாயா னப் பெளத்த நூல்கள் ஒரு கால் சீன மொழியிற் பெயர்த் தெழுதப்பட்டன. வடக்கே திபெத்தியரும் இவ்வழியே தம் மொழியில் நூல்கள் பல இயற்றினர். மேலும் ருஷிபர் இன்றுவரை வடமொழி மீது காட்டி வரும் ஆர்வம் குறிப் பிடத்தக்கது. தெற்கே யாவா, சுமத்திரா பாலித்தீவுகள் முதலிய இடங்களில் வடமொழி நூற் கருத்துக்களின் சாயல் களை அந்நாட்டில் விளங்கும் ஒவியங்களிலும் சிற்பங்களிலும் காணலாம். ஐரோப்பாவில் இங்கிலாந்து, ஜர்மனி முதலிய நாடுகள் உட்படப் பல இடங்களிலும், அமெரிக்காவிலும் இம் மொழி விழைந்து கற்கப்படுகின்றது. இவ்வுண்மையை அவ் வத் தேயத்தில் உள்ள சிறந்த கல்வி நிலையங்களான பல்கலைக்

Page 12
வடமொழி இலக்கிய வரலாறு | 4
கழகங்களில் சம்ஸ்கிருதம் போதிக்கப்படும் வகையினை உற்று நோக்கின் எளிதில் அறியலாம். தனிச் சிறப்பு வாய்ந்தும், பலவகை விஷயங்களைத் தன்னகத்தே கொண்டும் விரிந்து விளங்கும் இம்மொழி உலகிற் பல இடங்களில் பரந்து காணப்படுவதில் வியப்பொன்றுமில்.ை
இம் மொழியை இவ்வாறு உலகிற் பல இடங்களில் ஏன் விரும்பிக் கற்று வருகிருர்கள்? இதற்குப் பல காரண்ங்கள் உளவெனினும் இதன் பழமையே முதற் காரணம் என்பர். உலகிற் கிடைக்கக்கூடிய நூல்கள் யாவற்றுள்ளும் வேதங் களே பழமை மிக்கவை. இவற்றுள்ளும் மிகப் பழமை சான் றது இருக்கு வேதம்? என ஆராய்ச்சி வல்லவர்கள் ஒரு முக மாகத் துணிந்து முடிவு கூறியுள்ளார்கள், எழுத்துக் கலை தோன்றுவதற்குப் பன்னெடுங் காலத்திற்கு முந்தியது வேத காலம். இருக்கு வேதத்தின் அமைப்பு முறையும் பிற்கால இலக்கியங்களில் சிறிது சிறிதாக அருகி ஈற்றில் அறவே மறைந்து போன பல உருவங்களும், எடுத்தல், படுத்தல், நலிதல் என்ற முறையைப் பெரிதும் நிகர்த்து அமைந்து காணப்படும் ஒலி வேறுபாடுகளும், இம் மொழியின் தொன்மையையே பெரிதும் எடுத்துக்காட்டுகின்றன.
வடமொழியின் தொன்மையை இன்னெரு வழியாகவும்: குறிப்பாக உணரலாம். வேதங்கள் தெய்விகம் வாய்ந்தவை. இவற்றிற்கு?அபெளருஷேயங்கள்” என்னும் அடைமொழியை ஈந்து வேதநூல்கள் மக்களால் ஆக்கப்படாத தெய்விக நூல் கள் என ஆஸ்திகர்கள் போற்றுவார்கள்.இதுபற்றியே இன்று வரை சமய நூல்கள் எல்லாம் வேதங்களை முதல் நூலாகக் கொள்ளுகின்றன. சாங்கியம், யோகம், நியாயம்,வைசேஷி யம், பூர்வமீமாம்சை, உத்தரமீமாம்சை எனப்படும ஆறு தரி சனங்களுக்கும் வேதங்களே பிரமாண நூல்கள். காணபத்தி யம், செளரவம், கெளமாரம், வைணவம், சாக்தம், சைவம் முதலிய ஆறு மதங்களுக்கும் வேதங்கள் முதல் நூல்களாக விளங்குகின்றன. வடமொழியின் தோற்றுவாயைக் கூறும் வரலாறென்று இம்மொழியின் தெய்விகத் தன்மையை மேலும் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது. அது பின் வருமாறு:

5/கா. கைலாசநாதக் குருக்கள்
ஒருகால் கூத்தப் பிராணனன சிவப்பெருமான் கூத்தாடினன். கத்தின் இறுதியில் அவன் தன் வலக்கையில் விளங்கும் உடுக்கை அசைத்தான். அவ்வசைவு ஒலித் திரள்களைத் தோற்றுவித்தது. பதினன்கு அசைவுகளிளுல் வெளிப்போந்த அவ்வொலி அலைகள் பதினன்கு குத்திரங்களாக அமைந்தன. மகேஸ்வரன் என ஏத்தி வணங்கப்படும் சிவபெருமான் இவ் வாறு இச் சூத்திரங்கள் தோன்றுவதற்குக் காரணமாய்இருந் தமைபற்றி இச் சூத்திரங்கள் *மகேஸ்வர சூத்திரங்கள்? எனப் பெயர் பெற்றன. இப்பதினன்கு குத்திரங்களிலேயே சம்ஸ்கிருத மொழிக்கு இன்றியமையாது வேண்டப்படும் எழுத்துக்கள்எல்லாவற்றையும் காண்கிருேம்.இவ்வெழுத்துக் களின் மேற்கூறிய வரலாறு இம் மொழி இறைவனைத் தோற்றுவாயாகக் கொண்டமைந்து தெய்வீக மொழியாய்த் திகழுகின்றதென்பதையே தெளிவாக்குகின்றது.
வடமொழியை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். காலத்தி னல் மிகவும் முற்பட்ட வைதிகமொழி ஒன்று, பாணினி ஆசி ரியர் காலத்தையடுத்து அவராலே மிகவுஞ் செப்பனிடப்பட் டதாய்த் தோன்றி விளங்கும் சம்ஸ்கிருதமொழி மற்றென்று. பாணினியின் கைவண்ணத்தாலேயே சம்ஸ்கிருதம் மெரு கிடப்பட்டது என்ற உண்மையைச் சுட்டிக்காட்டிய மேளும் டறிஞர்கள் கூடப் பாணினிசம்ஸ்கிருதத்தின் தந்தைஎனக் கூறியுள்ளார்கள். பிராகிருதம் முந்தியது; இதனைச்சீர்படுத்தி அமைத்ததின் விளைவே சமஸ்கிருதம், பண்படுத்தப்பட்ட மொழி, செம்மொழி என்னுங் கருத்துக்களை உணர்த்தும் சம்ஸ்கிருதம் பாணினிக்குப் பிந்தி விளங்கிய மொழியையே குறிக்கும் என மேனுட்டு மொழி வல்லுனர் குறிப்பிட்டுள் ளனர். மேலும், ஸ்வரங்களை அமைத்து உச்சரிக்கும் முறை வேதங்களுக்கே சிறப்பாக உடையது. இது ஏற்கனவே கூறியபடி அருகி அருகி உபநிமிடதங்களிற் பெரும்பாலும் மறைந்து சம்ஸ்கிருதத்தில் அறவே ஒழிந்து விடுகின்றது. மொழி வளமும், கருத்து வளமும் உச்சரிப்பதில் தமக்கென ஒரு தனி முறையினையுடையவையுமான வேதநூல்கள் இவ் வியல்புகளிஞலேயே பழமை மிக்கவை எனச் சுட்டிக் காட்

Page 13
வடமொழி இலக்கிய வரலாறு / 6
டப்படுகின்றன. இங்கு காணப்படுவது போன்று ஸ்வரங்களை ஏற்றவாறு அமைத்து ஒலிக்கும் முறை கிரேக்க மொழியிலும் காணப்படுகின்றது. வைதிக இலக்கியம் பெரும்பாலும் சம யத் தொடர்பு உள்ளது. சம்ஸ்கிருதமோ முற்றிலும் அங் ங்ணமன்று. சமயத் தொடர்பற்றவையும் உலகத் தொடர்பு மட்டும் கொண்டுள்ளவையுமான நூல்கள் பல சமஸ்கிருத இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.
பெரும்பாலான இந்திய தூல்களெல்லாவற்றிற்கும் அடிப்படையாகவிளங்கும் வடமொழியில் இதுவரை இயற்றப் பட்ட நூல்களின் பரப்பை இன்னும் ஒருவரும் சரிவர மட்டிட்டுக் கூறவில்லை. அச்சில் வராது,ஏட்டுச்சுவடி வடிவில் கீழ்நாட்டிலும் மேல்நாட்டிலும் உள்ள புத்தக நிலையங்களில் இன்றுங் காணப்படும் நூல்கள் எண்ணிலடங்கா. முக்கிய மான வடமொழி நூல்களின் பரப்பை ஆராயும்போது இந்நூல்கள் பல்வேறு துறைகளைப் பற்றியவையாய்ப் பல் வகைப் பண்பு வாய்ந்தவையாய் விளங்குவதாகக் காண்கின் ருேம். இவற்றுள் சமய அடிப்படையில் எழுந்த நூல்களே எண்ணில்லாதவை. வேத மந்திரங்கள், ஆக்கவும் அழிக்க வும் ஆற்றல் வாய்ந்த அதர்வ மந்திரங்கள், சமய அறிவை யூட்டும் வரலாறுகள், கதைகள் சமய விரிவுரைகள், கிரியை கள் இயற்ற வேண்டும் முறையினை விரிக்கும் விளக்கங்கள் எல்லாம் வடமொழியில் விரிந்தது போன்றுவேருெரு மொழி யிலும் விரிந்து காணப்படுவதில்லை என்பதைத் திடமாகக் கூறலாம். வீரச் சுவை செறிந்து பல்வேறு பண்புகளை ஒருங்கு பெற்று விளங்கும் பாரதமும், இலக்கியம் அமைய வேண்டும் வழியை வகுத்துக்காட்டும் இராமாயணமும் உலகிலே தலை சிறந்த இரு இதிகாச நூல்கள். உலகிலுள்ள இதிகாசங்களி லெல்லாம் மிகப் பெரியதாகக் கருதப்படுவது மகாபாரதமே. இவ்விதிகாசங்களை அடிப்படையாகக் கொண்டெழுந்த காப் பியங்கள் பலப்பல அவ்வக்காலங்களில் எழுதப்பட்டுவந்தன. பெரும்பாலும் இவை செய்யுளுருவத்தில் உருபெற்றுள்ளன. உரைநடையில் எழுதப்பட்ட நூல்களும் காவியப் பண்புகளை ஏற்றுத் தாமும் காவியங்களாகத் திகழுகின்றன.

7 / கா. கைலாசநாதக் குருக்கள்
*காவியங்கள் செய்யுள் வடிவத்தில்தான் அமைய வேண்டுவ தில்லை; உரை நடையிலும் அமையலாம்?" என்ற கருத்து வட மொழியிலுள்ள அலங்கார நூல்களில் தான் முதன் முதலில் தோன்றியது எனத் துணிவாக கூறலாம். உரையுஞ் செய் யுளுங் கலந்த நடையும் காவியங்கள் சிலவற்றிற் பயின்று வற் திருப்பதையும் காணக் கூடியதாக இருக்கின்றது. இவை *சம்பூகாவியங்கள்? எனப் பெயர் பெறும். இச்சம்பூ காவியங் கள் நூற்றுக்கணக்காக வடமொழி நூல்களுள் விரவிக்கிடக் கின்றன. வடமொழியில் நாடகங்களும் பல இருக்கின்றன. இங்கு நாடகக் கலை மிகவும் சிறந்தோங்கி வளர்ந்து வந்திருக் கின்றது. மேலும், புனைகதைகள், நீதிபுகட்டுங் கதைகள் எனக் கதைஇலக்கியம் வடமொழியிற் பரந்து விரிந்துள்ளது. உலகில் ஏனைய மொழிகளில் கதையிலக்கியங்களுக்கு வழி காட்டியாக அமைந்துள்ளது பாரதத்தில் தோன்றிய கதை யமைக்குங் கலையுணர்வே என ஆராய்ச்சியாளர் கூறுவர். செய்யுள் வடிவிலேயே சிறந்த நூல்களமைதல் வேண்டும் என்னுங் கருத்து மனத்தில் ஆழப்பதிந்தமையாற் போலும் அக்காலத்து நூலாசிரியர்கள் படிப்போர் மனத்தில் எளிதிற் பதியவைத்தல் ஒன்றையே குறிக் கோளாகக் கொண்டு எளி தில் மட்டிட்டு அளவு கூற முடியாதவாறு பல நூல்கன்ச் செய்யுள் வடிவில் யாத்தனர். இது பற்றியே வைத்தியம், வானசாத்திரம், சிற்பம், அறநூல், இலக்கண நூல், அகராதி நூல், தத்துவநூல், அணிநூல், அரசியல்நூல் கணிதநூல் சோதிட நூல், சங்கீததுரல், நாட்டியநூல், நாடகக்கலைதுால் மந்திர நூல் எனப் பலவகைப்பட்ட நூல்களெல்லாம் வர்ை வின்றிப் பெருவாரியாக எழுந்தன. இவற்றுட் சில சூத்திரங் களாலமைந்துள்ளன. இவை படிப்போர் மனத்திற் பசு மரத்தாணி போல் இலகுவாகவும் ஆழமாகவும் பதிய வல் லவை. இனிமேற் சுருக்கிக் கூறமுடியாத அளவிற்குச் சுருக் கம் பெறும் சூத்திரங்களை அமைத்த ஆசிரியர்கள், தம் ஆற் றலையிட்டுப் பெருமை எய்தினர். ஓர் இலக்கண நூலாசிரிய ரொருவரை அணுகி, "நீங்கள் அமைத்த சூத்திரத்தை இன் னும் அரை மாத்திரை குறுக்கி அமைக்கலாமே. அவ்விதம் அமைப்பினும் அதன் கருத்துச் சிறிதும் வேறுபடாது அப்படி

Page 14
வடமொழி இலக்கிய வரலாறு / 8
யேதான் அமையுமே? எனக் கூறி அவ்வாறே அமைத்துக் காட்டுவோமேயாயின் அவ்வாசிரியர் ஆண் மகவு பிறந்தால் எழும் மகிழ்வை எய்துவர். இக்கருத்தைக் கூறும் பழமொழி ஒன்று வடமொழி வல்லுநரிடை இன்றும் வழங்கி வரக் காண்கின்ருேம். சூத்திரங்களின் சிறந்த அமைப்பு முறைக் குப் பாணினியின் இலக்கண நூலே உயரிய எடுத்துக் காட்டு. இதுமட்டுமா? வடமொழி இலக்கியத்தில் தனி இடம்பெற்ற காமநூல் கூட குத்திரங்களாலமைந்துள்ளது. **இத் துறை பில் இன்று முறைப்படி எழுதப்பட்டு வரும் தலைசிறந்த நூல் களை இயற்றிய மேனுட்டவர்கள் கூட வியந்து போற்றும் வண்ணம் வாத்சாயனர் இயற்றிய காம சூத்திரம் வட மொழிக் காவியங்களின் கருத்துக்களை மிக வளம்படச் செய் துள்ளது?? என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. சரித்திர இலக் கியம், இந்தியாவில், வடமொழியுட்பட எந்தமொழியிலும் பூரணமாக வளர்ச்சி அடையாதிருப்பினும் இவ்வகை நூல் சமஸ்கிருதத்தில் இல்லாமல் அறவே அற்றுப் போக வில்லை. காலவரையறைவை ஏற்றவாறேமைத்து வ ர லா ற் று நூல்களை அமைக்கும் முறை மேனுட்டவரிடை ஓங்கி வளர்ந் தவாறு வடமொழியில் அமையாத இடத்தும் சரித்திர இலக் கியங்கள் என ஒரளவுக்குக் குறிப்பிடக் கூடிய நூல்கள் சில வற்றை இவ்விலக்கியப் பரப்பிற் காண்கிருேம் இந் நூலை ஆக்கியோர் கவிளானமையால் இவர் நூல்களில் சரித்திர நூலுக்கு ஏற்ற பண்புகளைக் காட்டிலும் கற்பனைக்கும் வரு நூனைக்கும் முதலிடம் அளிக்கப்பட்டிருக்கின்றது, இத் தவிமை வாய்ந்த இதிகாசங்களும் புராணங்களும்ராஜ தரங் கிணி போன்ற வரலாற்று நூல்களும் வடமொழி இலக்கியப் பரப்பின் பெரும்பகுதியைத் தமவாக்கிக் கொண்டன. உரை நூல்கள் வடமொழி இலக்கியத்தைப் பெரிதும் வளப்படுத்து கின்றன. வடமொழியில் உரைநடை கையாளப்பட்ட வகையே தனிப்பட்டது. உரைநடையிலமைந்த காவியங் களைத் தவிர ஏனைய உரைநடை நூல்களெல்லாம் உரைநூல் களே. இவை ஏற்கனவே செய்யுளாகவோ, சூத்திரங்களாக வோ அமைந்த மூலநூல்களின் புலப்படாத நுண்ணிய கருத் துக்களை எடுத்துரைப்பன. இவற்றை வடமொழியாளர்

9 கா. கைலாசநாதக் குருக்கள்
வியாக்கியானங்கள் என்பர். சாயனர், மல்லிநாதர், சங்கரர் இராமானுஜர்முதலியோர் அறிஞருலகம் போற்றும் அறிவிற் சிறந்த உரையாசிரியர்கள். இவர்களின் உரைகள், இவ்வுரை களை விளக்கும் உரைகள் இவ்வுரைகளை விளக்க மேலும் எழுந்த உரைகள் என வரைவில்லாது வளர்ந்து வந்த உர்ை நூல்களும் வடமொழிஇலக்கியத்தின் பெரும்பகுதியையுடை யவை. அன்று வழக்கொழிந்ததாகக் கூறப்படும் வடமொழி இன்று வளர்ந்து உலகெங்கணும் படர்ந்து பரவிநிற்கும் ஆங் கில மொழியை இத்தன்மைகளில் நிகர்த்து விளங்குகின்றது. இரு மொழிகளிலும் பெருகி காணப்படும். நூல்கள் எண் னரிறந்தவை. இரு மொழிகளிலும் எழுதப்படாத விஷயங் களும் அநேகமாகக் கிடையா எனலாம். வடமொழி வழக் கில் இன்று இருந்திருந்தால் அதன் பரப்பு இன்னும் அகன்று இன்றைய விஞ்ஞான அறிவு நூல்களையும் தன்னகத்தே கொண்டு, எல்லாவகையாலும் ஆங்கிலத்தை விஞ்சியிருக்கும் என்பது தெளிவாகப் புலனுகின்றது.
தொன்மை பற்றியும்,இதன் பரந்த இயல்பு காரணமாக வும் இது பல வளங்கள் வாய்க்கப் பெற்றதனுலும், அழகுக் கலையுணர்வு மிகுந்து விளங்குவதனலும், வடமொழி மனித சமூகத்தின் பண்பாட்டு வரலாற்றைத் தொகுத்தமைப் தற்கு வேண்டிய ஆதாரங்களைத் தரவல்ல அடிப்படைக் கருவூலமாகத் திகழ்கின்றது. மனிதனது மண்டையோடுகள், எலும்புகள் ஆகியவற்றையும் அவன் உபயோகித்த மட்கலங் கள் கற் கருவிகள் முதலியவற்றையும் துணைக்கொண்டே அவனுடைய பழைய வரலாற்றைச் சித்திரிக்க வல்ல இன் றைய அறிஞர்க்கு மனிதனுடைய நடையுடை, பாவனைகளைக் கூருமற் கூறும் இலக்கியங்கள் இவ்வரலாற்றினைக் கோத்து வரைதற்கு எத்துணைப் பயனுள்ளதாயிருக்கும்! இதனுலேயே மேனுட்டவர் இம்மொழி கற்பதில் விசேட ஆர்வம் காட்டி வந்தனர். இவர்களிற் தலைசிறந்தவர் ஜர்மனியர்கள். இம் மொழியில் அமைந்துள்ள நூல்களைப் பல கோணங்களிலி ருந்து துருவித் துருவி ஆராய முற்பட்ட இவ்வறிஞர்கள் மொழிகளின் ஒப்பியல் கண்டு, இத்தோயூரோபிய மொழிஎன்

Page 15
வடமொழி இலக்கிய வரலாறு / 10
ருெரு மொழி தொடக்கத்தில் இருந்திருத்தல் கூடும் என்றும் அதிலிருந்தே வடமொழியும், அதன் சாயல் பதிந்துள்ள ஏனைய கிரேக்க இலத்தின், ஜர்மானியம், முதலிய மொழி களும் தோன்றி இருக்கலாம் என்றும் துணிந்தனர். இவ்வாதி மொழியை இந்தோ ஜர்மனியமொழி என முதலிற் பெயரிட் டழைத்தனர். மொழிகளை ஒப்பு முறை பற்றி ஆராய்ந்து கூறும் மொழி இயல் நூல்கள் முதலில் வெளிவந்தன. இதைத் தொடர்ந்து இம்முறையினைக் கொண்டே பழைய வரலாறு கள், சமய நிலைசள் முதலியன ஒப்பிட்டு ஆராயப்பட்டன. ஒரே தன்மைத்தான பல அம்சங்களைக் கொண்டிருப்பதனல் இவை ஆதியில் ஒரே தோற்றுவாயைக் கொண்டிருந்திருக்க
லாம் என ஊகிக்கின்றனர்.
இந்திய மொழிகளுட் சில வடக்கே வழங்கி வருவன. இந்தி, மராட்டி, குஜராத்தி, அஸ்ஸாமி, ஒரியா, காஷ்மீரி பஞ்சாபி, வங்காளி, முதலிய இம்மொழிகளில் வடமொழிச் சாயல் பெரிதுங் காணப்படுகின்றது. வடவேங்கடத்தை எல்லையாகக் கொண்டு பாரதத்தின் தெற்கே பெரும்பாலும் பயின்று வருவது தமிழ். இதன் இனத்தைச் சார்ந்தவை கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என்பன. இந் நான்கு மொழிசளும் பல பொதுத் தன்மைகளைக் கொண்டு ஒரே இன மொழிகளாக இன்றும் விளங்குகின்றன. எனினும் இவை வடமொழித் தொடர்பின் விளைவாக அதன் தன்மை களை வரைவின்றி ஏற்று, 'இவை தமிழினம் சார்ந்த மொழி கள் தாமோ?" என ஐயுறும் வண்ணம் மாற்றங்கள் பெற் துள்ளன. எப்பொழுதும் தானே தனித்தியங்கவல்ல தமி ழும் இதே வடமொழித்தொடர்பின் விளைவால் மாற்றங்கள் பலவற்றைப் பலவாறு ஏற்று வடமொழிக் கலப்பை மிகவும் பெற்றுக் காணப்படுகிறது. இந் நிலையைச் சங்க காலத்துக் குப் பின் எழுந்த நூல்களிற் பெரிதுங் காணலாம். இதிலி ருந்து இந்தியமொழிகள் எல்லாவற்றிலும் வடமொழியின் சாயல் வெவ்வேறளவில் பதிந்திருக்கிறதென்னும் உண் மையை ஓரளவிற்கு உணரலாம். மேலும், வடமொழி ஒரு காலத்தில் பாரததேசம் முழுவதற்கும் பொது மொழியாக

11 / கா. கைலாசநாதக் குருக்கள்
விளங்கியதாலும்,தெய்விக மொழியாகிச் சமயநூல்களை மிகு தியாகக் கொண்டமைந்திருப்பதனலும், அரசியலில் ஒரு காலத்தில் முக்கியத்துவம் பெற்றுச் சிலாசாசனங்கள் அமைக் கவும் எடுத்தாளப்பட்டதாலும், இத்துறைகளிலெல்லாம் வடமொழித் தொடர்பு மற்றைய மொழிகளுக்குப் பெரிதும் வேண்டப்படலாயிற்று.
இனி எழுத்துக் கலை இம்மொழி வல்லுனர் நடுவில் எவ் வாறு உருவெடுத்து வளர்ந்தது என்பதைக் கவனிப்போம். கற்றறிந்த பண்டிதனைக் கல்வி கேள்விகளிற் சிறந்தவனெனக் குறிப்பிடும் வழக்கம் இன்றும் இருந்து வருகின்றது. கேள்வி முறைக்குக் கல்வித் துறையில் நெடுங்காலமாகத் தனி இடம் உண்டு. நன்கு கற்றறிந்தவனை வடமொழியில் "பஹ"சுருத* என்று குறிப்பிடுவர். இது நன்கு கேட்டவன் எனக் கருத் துப்படும். எனவே கேட்டல் அறிவைக் கொடுக்கின்றது என் பதும், கேட்டல், அறிதல் எல்லாம் ஒன்றையே குறித்து நிற் பன என்பதும், கல்வியறிவென்பது கேள்வியினல் ஏற்படும். அறிவென்பதும், தெளிவாகின்றன. வேதங்களுக்கு வேருெரு பெயரான சுருதி” என்பதும் கேட்டல் என்னுங் கருத்தையே சுட்டுகின்றது. காதாற் கேட்டு ஒத வேண்டிய நூல்களே அன்றிக் கண்களால் பார்த்துப் படிக்க வேண்டிய பனுவல்களல்ல வேதங்கள் என்பது இதனுற் பெறப்படுகின் றது. இக் கருத்தினை வற்புறுத்தியும், எழுத்துக்களைப் பற்றி எதுவும் தெளிவாகக் கூறப்படாமையைச் சுட்டியும், வேத காலத்தில் எழுதும் முறை? பயிலவில்லை என அறிஞர் ஊகித். துக் கூறுவர்.
*வசிஷ்ட தர்ம சூத்திரத்திலே? தான் வடமொழி எழுத். துக்களைப் பற்றிய தெளிவான குறிப்புக்கள் முதன் முதலிற் காணப்படுகின்றன. இந்நூல் கி. பி. எட்டாம் நூற்ருண் டில் எழுந்ததாகப் பீலர் என்னும் அறிஞர் காட்டியுள்ளார். சிலர், இது கி. மு. நான்காம் நூற்ருண்டில் தோன்றியதென் பர். பாணினியின் “அஷ்டாத்தியாயியில் லிபிகார என்னும் சொல் எழுத்தையே குறிக்கும் வகையில் அமைந்திருப்பதைக்

Page 16
வடமொழி இலக்கிய வரலாறு | 12
கவனித்தல் வேண்டும். பாணினியின் காலம் கி. மு. எட் டாம் நூற்ருண்டு என்பது கோல்ட்ஸ்டுக்கர் என்பவரது கருத்து. பெரும்பாலான ஆராய்ச்சியாளர் இவர் கி. மு. நான்காம் நூற்ருண்டைச் சார்ந்தவர் எனக் கொள்வர். அக்ஷர, காண்ட, படல, கிரந்த என்னும் சொற்கள் பிற்கால வேதங்களில் வருவதனல் அக்காலத்திலேயே எழுத்து முறை வழக்கிலிருந்த தென்பர் ஒரு சாரார். இதை முற்றிலும் மறுத்துக் கூறுவர் இன்னெரு சாரார். இதிகாசங்கள், புரா -ணங்கள், காவியங்கள் முதலியன கூறுவதிலிருந்து இந்தியா வில் எழுத்துக் கலை வளர்ந்த வரலாற்றைக் கால வரையறை யுடன் உறுதியாகக் கூறுதல் முடியாது. இவற்றுள் இதிகாசங் கள் பழையவை.இந்நூல்களில் அவ்வக் காலங்களிற் புகுத்தப் பட்ட இடைச்செருல்கள் உள்ளமையினல் இங்கு கால வரையறைவுக்கு இடமில்லாமற் போய்விட்டது. லேகன, லேகக முதலிய சொற்கள் இங்கு காணப்படுகின்றன. இருந்தும் இவை வடமொழியிற் புகுத்தப்பட்ட சொற்கள் என்பது சிலரது கருத்து.எனினும் இதனல் இதிகாசகாலத்தில் எழுத்து முறை நன்கு பயிற்சியிலிருந்த தென்ற உண்மை தெளிவாகின்றது.
பெளத்த நூல்களில் எழுத்துக் கலையைப்பற்றி நேரடி யான குறிப்புக்களெதுவும் இல்லை. கேட்டலும் கேட்டதை மனனம் பண்ணுதலுமே வழக்கிலிருந்து வந்ததாக அறியக் கிடக்கின்றது. கி. மு. 240 வரை எழுத்தைப்பற்றி இந் நூல்களில் தெளிவான குறிப்புக்கள் எதுவும் இல்லை. அறி குறிகளை மட்டும் அங்கும் இங்கும் காண்கின்ருேம்.
லேக, லேகக என்ற பதங்கள் பிக்கு பாசியத்திலும், பிக்குணி பாசியத்திலும் வருவதாகச் சுட்டிக்காட்டப்படு கின்றன. பிக்கு பாசித்தியம் எழுத்தைப் போற்றிக் கூறுகின் றது. ஜாதகக் கதைகளிலும் எழுத்தைப் பற்றி அடிக்கடி குறிப்புக்கள் வருகின்றன. புத்த பிக்குக்கள், அக்ஷரிகா என் ஆறும் விளையாட்டில் பங்குபற்றக் கூடாதென்று இங்கு விவா திக்கப்பட்டிருக்கின்றது. இது எழுத்துக்களை ஊகித்துக் கூறும் ஒருவகை விளையாட்டாக இருந்திருக்கலாம். மேலும்,

13 / கா. கைலாசநாதக் குருக்கள்
ஒருவன் குற்றவாளியாகக் காணப்பட்டு அரசனுடைய ஆசார வாயிலில் அவனது பெயர் எழுதப்பட்டிருப்பின் அவன் புத்த பிக்குவாகச் சங்கத்திற் சேரமுடியாதென்று கூறப்பட்டிருக்கின்றது. எழுதுவது ஒரு முக்கிய தொழிலாக இந்நூல்கள் குறிப்பிட்டுள்ளன. இவை எல்லாம், எழுத்துக் கலை புத்தர் காலத்துக்கு முன்னரே உருவெடுத்துவிட்ட தென்ற கொள்கையை உறுதிப்படுத்துகின்றன. அசோகர் காலத்துக்கு அரை நூற்ருண்டு முத்திய சோகளரா செப்புப் பட்டயமும், அசோக மன்னனது சாசனங்களும், நாசிக் என்னுமிடத்தில் காணப்பட்ட நஹபாணனின் சாஸனமும், காலமுறை பற்றி அப்படியே வரிசையாக வைத்துக் கணக் கிடப்படலாம்.
எழுத்தின் அமைப்பையும் சிறிது கவனிப்போம் எழுத்து பிராமி, கரோஷ்டி என இரு வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இவற்றுள் கரோஷ்டி பினீஷியர்களது எழுத்து முறையைப் பின்பற்றி எழுத்தது. இது பீலர் என்னும் ஆராய்ச்சி நிபுணர் கருத்து. இது பாரசீகம் மூலம் இந்தியா வந்தது. பாரசீகரது ஆட்சி நிகழ்ந்த கி.மு. ஆரும் நூற்ருண் டில் வழங்கிய நாணயங்களிலும், சிலா சாசனங்களிலும் இவ் வகை எழுத்துக்களே காணப்படுவன. கரோஷ்டி வகை எழுத்துக்கள் அது உணர்த்தும் கருத்திற்கேற்பக் கழுதையின் உதடுகள் போன்ற அமைப்புள்ள எழுத்துக்களை அடிப்படை யாகக் கொண்டு தோன்றின என்று ஒரு சிலர் கூறுவர். மத் திய ஆசியாவிலிருந்த கரோஷ்டர் என்பவராலே உருவாக்கப் பட்ட இவ்வெழுத்துக்களுக்கு அவர்களுடைய பெயரே சூட் டப்பட்டதென்பர் இன்னுெரு சாரார்.
பிராமி எழுத்தின் தோற்றத்தைப் பற்றிப் பல அபிப் பிராயங்கள் நிலவுகின்றன. டாக்டர் டயிலர் என்னுமறி ஞரும் அவரைச் சார்ந்த ஒரு சிலரும் பிராமி தெற்கு அராபி யரிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறுவர். இக்கொள்கை அவ்வளவு பிரபலமடையவில்லை. டாக்டர் விபரும் பின்னர் பீலரும் விரித்துக்கூறிய கொள்கையையே பொதுவாக எல்

Page 17
வடமொழி இலக்கிய வரலாறு / 14
லோரும் இன்று ஏற்றுக் கொள்ளுகிருர்கள். அசீரியாவில் காணப்பட்ட கல்வெட்டுக்களிற் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் இந்திய எழுத்துக்களுடன் ஒற்றுமையுடை யவை என்ற உண்மையை முதன் முதலில் எடுத்துக்காட்டிய பெருமை வீபர் என்னும் அறிஞரைச் சாரும். டாக்டர் பீலர் இந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பல உண் மைகளை வெளிப்படுத்தினர். இந்திய வணிகர்கள்-சிறப்பா கத் தமிழர்கள்-பபிலோனியர்களுடன் கி. மு. எட்டாம் ஏழாம் நூற்ருண்டுகளில் தொடர்பு பூண்டு அதன் விளைவாக அசீரியர்களது-எழுத்து முறையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். இது இந்தியாவின் தேவைக்கேற்ப மாற்றி அமைக் கப்பட்டது.பல ஆண்டுகளுக்குப் பின் இது பிராமி எழுத்தாக உருவெடுத்தது. தொடக்கத்தில் எழுத்துக்கள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டன. இவ்வுண்மையை நாணயங்களில் காணப்படும் எழுத்து முறை நிரூபிக்கின்றது. வலம் வரு தலையே சீரிய முறையாகக் கருதும் பண்பாடு மிக்க பாரத நாட்டில் நாளடைவில் எழுத்துக்கள் இடமிருந்து வலமாக எழுதப்படத் தொடங்கின.
ரிஸ்டேவிட்ஸ் என்பவருடைய கருத்து இயூபிரேறிஸ் பள் ளத்தாக்கு நாகரிகத்திலிருந்து எழுத்து முறை இந்தியாவிற்கு வந்ததென்பதாம். ஹிபரகிளி பிக் முறை இந்தியாவிலேயே தோன்றி வளர்ந்திருக்கலாம் என்பது கன்னிங்காம் என்பவ ரின் அபிப்பிராயம். இவை இரண்டையும் இற்றைய அறிஞர் கள் ஏற்றுக்கொள்ளுகின்ருர்களில்லை.
உலகில் உள்ள மொழிகளுள் சிறந்த மேனுட்டு மொழி களில் அமைந்து விளங்கும் இலக்கியங்களுக்கு வரலாற்று நூல்கள் பல இதுவரை வெளிவந்திருக்கின்றன. இவ்வழி யைப் பின்பற்றி வடமொழி இலக்கிய வரலாற்று நூல்களும் எழுதப்பட்டுள்ளன. வேத இலக்கிய வரலாற்று நூல்களும் எழுதப்பட்டுள்ளன. வேத இலக்கிய வரலாற்றை வேருகவும் சம்ஸ்கிருத இலக்கிய வரலாற்றை வேருகவும் வெவ் வேரு சிரி யர்கள் தனித்தனி எழுதியிருக்கிருர்கள். சிலர் ஒரே நூலில் இவ்விரு வரலாறுகளையும் இணைததுத் தொடர்ச்சியாக எழுதி

15 / கா. கைலாசநாதக் குருக்கள்
யிருக்கிருர்கள். இலக்கிய வரலாற்று நூல்களெல்லாம் கவி களைப் பற்றியும்,அவர்கள் எழுதிய காவியங்களின் நயங்களைப் பற்றியும், அவர்கள் வாழ்ந்த கால ஒழுங்கிற் கேற்ப வரிசைப்படுத்தித் தொடர்ச்சியான வரலாருக அமைத்துத் தருவன. மேனுட்டிலேயே இவ்வகையாக வரலாற்று நூல மைக்கும் முறை எழுந்தது. இம்முறையினைக் கடைப்பிடித்து ஏனையோரும் தத்தம் மொழிகளில் இலக்கிய வரலாற்று நூல் கள் எழுதி வந்துள்ளார்கள். நூல்களை அவ்வவற்றின் கால ஒழுங்கிற் கேற்ப வரிசைப்படுத்தி வைத்துத் தொடர்ச்சி யாக அவதானித்து வந்தால் மொழியின் வளர்ச்சியையும், நடை கவிநயம், முதலியன எப்படிக் காலம் செல்லச் செல்ல மாற்றம் பெற்றன என்பதையும் நுணுகிக் கவனிக்கப் பெரி தும் பயன்படும். வடமொழியைப் பற்றியும், இம்மொழிநூல் வரலாற்றினையும் அலசி ஆராய்ந்து அழகிய வரலாற்று நூல் களை அமைத்து நமக்கு வழங்கியவர்கள் ஜர்மானியர்கள். காலங்களை உறுதியாகத் துணிந்து நிறுவுவதில் இவர்கள் ஈடு இணையற்றவர்கள். இவர்கள் இத்துரையில் ஆற்றிய தொண்டு மட்டிடற்கரியது. மேனுட்டு மொழிகளில் எண் ணிறந்த வடமொழி இலக்கிய வரலாற்று நூல்கள் வெளி வந்துள்ளன. முன்னுளில் அண்ணு மலைப் பல்கலைக் கழகப் பேராசிரியராயிருந்த பிரம்ம பூரீP. S. சுப்பிரமண்ய சாஸ்திரி அவர்கள் எழுதிய வடமொழி வரலாறே முதன் முதலில் தமிழில் எழுதப்பட்ட வடமொழி வரலாற்று நூலாகும்.

Page 18


Page 19

வேதங்கள் அறிவின் இருப்பிடம். அறிதல் என்னும் கருத்தை உணர்த்தும் வித் என்னும் வினையடியில் பிறந்ததே வேத என்னும் சொல். வேத இலக்கியம் மிகவும் அகன்ற பரப்பினை உடைய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சங்கிதைகள், பிராமணங்கள், ஆரணியகங்கள், உபநிடதங் கள் என்னும் பகுதிகளால் அமைந்து விளங்கும் வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என நான்கு பிரிவுகளையுடை யன. மொழியமைப்பைப் பற்றிய அளவில் வேதங்கள் பாணினி ஆசிரியர் கூறும் சம்ஸ்கிருதத்தின் நின்றும் வேரு யது. வேதம், சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் உள்ளி இலக்கியங்களின் ஒற்றுமை வேற்றுமைகளை இந்நூலின் இடையிடையே எடுத்துக்காட்டுவதற்கு அடிக்கடி இருவகை மொழிகளையும் வெவ்வேருகத் தனித் தனிப் பெயரிட்டு அழைக்க நேரிடுகின்றது. இதுபற்றி வேதங்களின் மொழியை வைதிக மொழி என்றும், பாணினியின் இலக்கண விதிகளாற் செப்பனிடப்பட்ட மொழியைச் சம்ஸ்கிருத மொழி என்றும், தனித்தனியாகக் குறிப்பிட்டு வேறுபடுத்திக் கூறுவோம். வேதங்கள் சம்ஸ்கிருத நூல்கள் எனப்படுவதில்லை. வேதங் களுக்குப் பின் பாணினி தோற்றுவித்த மொழியில் இயற்றப் பட்டெழுந்த நூல்கள்தாம் சம்ஸ்கிருத நூல்களென்று பெயர் பெற்றுள்ளன.இவ்வாறு பிரித்துக் கூறும் மரபு பாணி னியின் காலத்திலேயே தோன்றி வளர்ந்து நாளடைவில் ஆங்கிலத்தில் வெளிவந்த இலக்கிய வரலாற்று நூல்களிலும் வேரூன்றிவிட்டது. எனவே இவ்விருவகை நூல்களை வைதித நூல்கள், சம்ஸ்கிருத நூல்கள் எனப் பெயரிட்டு இங்கு கூறு வதிற் தவருென்றுமில்லை.
வேத மொ ழி சம்ஸ்கிருதத்தின் நின்றும் எவ்வாறு வேறு படுகின்றது? இவ்வினுவுக்குத் தொடக்கத்திலேயே விடை

Page 20
வடமொழி இலக்கிய வரலாறு / 20
விரித்துக் கூறுதல் அவசியம்.பாணினி சூத்திரங்களில்,வேதம் சம்ஸ்கிருதம் எனப் பிரித்துத் தனித்தனி சுட்டும் முறையே இவையிரண்டும் வேருணவை என்பதை உணர்த்துகின்றது. இவ்விரண்டும் இவ்வாறு வெவ்வேருண தன்மைகளை ஏற்று ஒன்றிலிருந்து மற்றது வேருயிருப்பினும், இரண்டுக்கும் பொதுவான சில பண்புகள் தெளிவாகத் தெரிகின்றன. இவை, வேதம் சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டும் ஒரே அடிப் படையில் தோன்றி வளரும் பொழுது காணப்படும் ஒரே மொழி படிப்படியாகத் திரிந்து தோன்றியபொழுது எய்திய இரு நிலைகளே என்பதைச் சுட்டி நிற்கின்றன. இதை ஓர் உவ மை கூறி விளக்கலாம். தமிழிற் சங்க நூல்கள் இருக்கின்றன. பிற்காலத்தில் தோன்றி இன்றுவரை விரிந்து வளர்ந்து வரும் வேறு நூல்களும் உள்ளன. இவ்விருவகை நூல்களையும் ஒப் பிட்டு நோக்கி மொழியமைப்பில் இவை இரண்டும் தம்முள் வேறுபட்டுக் காணப்படுவதை உணர்கின்ருேமல்லவா? பிற் காலத் தமிழில் நல்ல பயிற்சியுடையவர்கள் எல்லோரும் இப் பயிற்சியின் விளைவாகத் தாம் பெற்றுள்ள ஆற்றலை மட்டும் கொண்டு சங்க நூல்களை விளங்குதல் எளிதன்று.இதேபோன் றது தான் சம்ஸ்கிருத நூற்பயிற்சி மட்டும் உள்ளவர்களின் நிலையும். சம்ஸ்கிருத நூல்களை விளங்குவதற்கு இவர்களுக்கி ருக்கும் ஆற்றல் வைதிக நூல்களை விளங்கப் பயன்படாது. சங்கத் தமிழுக்கும் பிற்காலத் தமிழுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் போன்றதுதான் வேதத்திற்கும் சம்ஸ்கிரு தத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு. வைதிக நூல்களிற் காணப்படும் சொற்கள் பல வழக்கிறந்து சம்ஸ்கிருதத்தில் இடம்பெருமலே மறைந்துவிட்டன. இதைவிட வேதத்தில் இடம்பெருத பல புதுச் சொற்கள் சம்ஸ்கிருதத்தில் மட்டும் காணப்படுபவன. மேலும், சம்ஸ்கிருதத்தில் வருஞ் சில சொற்கள் வேதத்தில் தாம் உணர்த்திய கருத்திற்கு நேர்மா முன கருத்தை உணர்த்துகின்றன. அசுர? என்னுஞ் சொல்லை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இது சம்ஸ் இருதத்தில் தேவர்களின் பகைவரான அரக்கர்களைக் குறிக் கும். வேதத்திலோ இதே சொல் தெய்வத்தன்மை வாய்ந்த என்னும் கருத்தை உணர்த்தி அடைமொழியாக அமைந்து

21 / கா. கைலாசநாதக் குருக்கள்
சம்ஸ்கிருதங் குறிக்கும் கருத்துக்கு நேர் முரணுன பொருளைக் காட்டி நிற்கும். இவ்வேறுபாடும் வைதிக மொழியின் தொன் மையையே சுட்டுமென்பர்.
வேதங்களில் எடுத்தாளப்பட்டுள்ள வினையுருவங்கள், பெயருருவங்கள், வினையடினின்றும் பிரித்துத் தனிச் சொற் களாக அமைக்கப்பட்டுள்ள உபசர்க்கங்கள் எல்லாம் இதே பழைமையை மேலும் வலியுறுத்துகின்றன. வினையுருவங்கள் வேதத்தில் விரிந்து பெருகியமாதிரி வேறெந்த மொழியிலும் விரிந்ததில்லை என்பது மொழிநூலில் புலமை மிக்கவர்கள் எடுத்துக் கூறிய முடிபு. நாளடைவில் இவ்வுருவங்கள் பல மறைந்துவிட்டன; சில சிறிது மாற்றங்களைப் பெற்றன. இதைத் தொடர்ந்து சம்ஸ்கிருத மொழி சிறிது சிறிதாக இற் றைய உருப்பெறலாயிற்று. இவ்வுண்மையை மொழியமைப் பில் அங்கங்கே காணப்படும் சான்றுகளை எடுத்துக்காட்டி முறையாக விளக்குதல் மொழிவல்லுநர்க்கு மட்டுமே முடி யும். இவ் விளக்கம் மொழிநூல் விரித்தெழுதப்படும் பொழுது விளக்க வேண்டுவதொன்ருகும். இலக்கிய வர லாற்றினைச் சரிவர அறிதற்கு இதுபற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை மட்டும் பின்னர் சம்ஸ்கிருத மொழி யின் எழுச்சியும் வளர்ச்சியும் பற்றிக் கூறும்பொழுது விரிவா கக் கவனிப்போம். வைதிக நூல்கள், சம்ஸ்கிருத நூல்கள் என்னும் இருவகை நூல்கள் உள. இவை வெவ்வேருன மொழியமைப்பையுடையவை என்பதே இச் சந்தர்ப்பத்தில் நாம் தெளிவாக மனதிற் பதிக்க வேண்டுவது. இரண்டும் ஒரே அடிப்படையில் அமைந்துள்ளவை. ஒரு மொழியின் வளர்ச்சி நிகழும் பொழுது காணப்படும் இருதனி நிலைகளே வைதிக மொழியினதும் சம்ஸ்கிருத மொழியினதும் நிலைகள் என்னும் கருத்தே இங்கு திரும்பவும் வற்புறுத்தப்படுகின்ற றது. வைதிக சம்ஸ்கிருத மொழிகள் தமக்குள் வேறுபட்டு நிற்கும் நிலையை இன்னுெரு வகையாகவும் உணரலாம். சம்ஸ்கிருதம் ஒரே குரலிற் படிக்கப்படுவது. வேதங்களோ வெனில் படிக்கும் பொழுது குரலை உரியவாறு உயர்த்தியும் தாழ்த்தியும் சமநிலைப்படுத்தியும் ஒதப்படுவன. மேலும்,

Page 21
வடமொழி இலக்கிய வரலாறு / 22
வைதிக சம்ஸ்கிருத மொழிகளிடையே காணப்படும் வேறு பாட்டை இன்னெரு வகையாகச் சிலர் விளக்குவர். பாணினி ஆசிரியர் கூறும் இலக்கண அறிவும், சிறிது சம்ஸ்கிருத இலக் கியப் பயிற்சியும் உடைய ஒருவரிடம் அவர் வாசித்தறியாத சம்ஸ்கிருத நூலொன்றைக் கொடுத்தால், அவர் சிறிது முயன்று அதை வாசித்து விளங்கிக் கொள்ளுவார். ஆனல் இதே ஆற்றலைக் கொண்டு வேதங்களில் உள்ள ஒரு பாடலை யேனும் தானே வாசித்து உரியவாறு நன்கு விளங்க வகை யறியாது திகைப்புறுவர்.
இதுவரை உலகில் தோன்றிக் காணப்படும் நூல்களெல் லாவற்றுள்ளும் வேதங்கள் காலத்தால் முந்தியவை. இது ஆராய்ச்சியாளர் ஆய்ந்து கொண்ட (Մ)ւգ-ւI. இந்திய இலக்கியங்களுள் பழமை சான்றவை வேதங்கள் இக் கருத்தை அகச் சான்றுகள் காட்டி விளக்கலாம். இந்தியா வில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் வேதங்களைக் குறிப்பிடு கின்றன. வேதங்களோவெனின், இதர இலக்கியங்களைப் பற்றி ஒன்றுமே கூரு திருக்கின்றன. இதே வேதங்கள் பழை மையானவை என்னுங் கருத்தை வலியுறுத்தும்.
வேதங்களே ப்பற்றிய அறிவு எல்லோர்க்கும் இன்றியமை யாது வேண்டப்படும் என அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள் ளார்கள். ஏனெனில் இந்தியாவில் வழக்கில் இருந்துவரும் மதங்கள் எல்லாவற்றையும் நன்கு விளங்குவதற்கு வேதங் களின் அறிவு மிகவும் பயன்படும். வேதங்களைப் போற்ருதது மட்டுமின்றி அவை கூறும் கருத்துக்களைக் கண்டிக்கவும் முற் பட்ட புத்த மதத்தினரும், ஜைன மதத்தினரான சமணரும் தத்தம் மதங்களை ஆழ்ந்து அறிய விரும்பினல் முதலில் வேதங்களை நன்கு கற்றல் வேண்டும்.
வேதங்கள் ஒரு தனிக் கவியின் ஆக்கமன்று இவை வெவ் வேறு காலங்களில் கவிகள் பலரால் பல்வேறு குழ்நிலைகளில் இயற்றப்படடு நெடுங்காலம் வழங்கிவரும் பொழுது, ஒரு கால் ஒன்று சேர்த்துப் பிரிவு பிரிவுகளாகத் தொகுத்து

23 கா. கைலாசநாதக் குருக்கள்
அமைக்கப்பட்டன. பல நூற்ருண்டுகளாக வளர்ந்த பின் னரே வேத இலக்கியம் இன்று காணப்படும் உருவைப் பெற் றிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. இவ்வேத இலக்கி யத்தைக் குறிக்க வரும் பெயர்களுள் திரயீவித்யா" என்பது ஒன்று. இது வேதங்களின் அமைப்பைச் சுட்டுகின்றது. மூவகை வித்தை என்பது இதன் பொருள். இருக்கு, யசுர் சாமம் என்பவையே இவ்வித்தையின் முப் பெரும் பிரிவுகள். நான்காம் வேதமான அதர்வம் நெடுங்காலத்துக்குப் பின் னரே வேத இலக்கியத்தில் இடம் பெற்றமையால் இது இங்கு வேதங்களுள் ஒன்முகக் கூறப்படாதிருக்கக் காண்கிருேம். நாளடைவில் அதர்வவேதம் எவ்வாறு வேதங்களுடன் இணைந்து நான்காம் வேதம் ஆயிற்று என்பதைப் பின்னர் கவனிப்போம். இந் நால்வகை வேதங்களும், தனித்தனி நான்கு பிரிவுகளாக வகுக்கப்பட்டன. இவற்றுள் முதற் பிரிவு சங்கிதை" என்றும், இரண்டாவது பிேராமணங்கள்? என்றும் மூன்ரும் தான்காம் பிரிவுகள் முறையே ஆரணியகங் கள், "உபநிடதங்கள்?என்றும், பெயர் பெறுகின்றன.எனவே வேதங்களின் பகுதிகளைக் குறிப்பிடும் பொழுது, இப்பகுதி களைச் சுட்டி இது இருக்குவேத சங்கிதை: இது இருக்குவேத பிராமணம்; இது இருக்குவேத ஆரணியகம்; இது இருக்கு வேத உபநிடதம் என்றெல்லாம் குறிப்பிடுவது வழக்கம், இப்படியே ஏனைய வேதங்களின் பிரிவுகளையும் தனித்தனி குறிப்பிடலாம். வேதங்களின் எல்லை உபநிடதங்கள். அந்தம் என்ருல் முடிபு என்பது பொருள். எனவே உபநிட தங்கள் ‘வேதாந்தங்கள்? எனவும் மறைமுடிபு எனவும், பெயர் பெறலாயின.
வேதங்களெல்லாம் பல்லாயிரக்கணக்கான வருடங் களுக்கு முன் எவ்வாறு எழுந்தனவோ, அதே உருவில் இன்றுவரை மாற்றம் எதுவும் பெருது காணப்படுகின்றன. எம்முன்னேர் இவற்றை எழுத்திற் பொறிக்காது பரம்பரை பரம்பரையாக வாயால் ஒதிச் செவியால் கேட்டு வந் ததே இதன் காரணம் என்னலாம். இதையொட்டியே, வேதம் சுருதி” எனவும் எழுதாமறை” எனவும் பெயர்

Page 22
வடமொழி இலக்கிய வரலாறு / 24
பெறலாயிற்று. வேதங்களை ஒதுவதில் பயிற்சி பெறுபவர்கள், இன்று கூட இவற்றை அச்சேறிய வேதநூல்களைப் பார்த்து ஓதாமல், தம் ஆசிரியர் வாயால் முதலில் ஒதி உச்சரிக்க அவற்றைத் தாம் அவதானித்துக் கேட்டு, பின்னர் அவ ரைத் தொடர்ந்து அவ்வழியே ஒதியும் தம் மாணவர்களை யும் அவ்வாறே ஒதுவித்தும், இவ்வரிய பொக்கிஷத்தை நாலாயிரம் வருஷங்களுக்கு அதிகமான காலமாகப் பேணி வந்திருக்கிருர்கள். இவ்வாறு பேணப்பட்டு வந்துள்ள வேத இலக்கியத்தில் இடைச் செருகல்கள் எதுவுமே கிடையா. *பதம், கிரமம், ஜடை, கனம்? என நான்கு முறைகளைக் கடைப்பிடித்தே வேதங்களை அத்தியயனஞ் செய்வர். மந்தி ரங்கள் காணப்படும் நிலை சங்கிதை நிலை?. இதைச் சம்ஹி தாபாடம்? என்று கூறுவர். சங்கிதையில் சந்திசேர்த்து அமையப் பெற்ற சொற்கள் எல்லாம் தனித் தனியாகப் பிரிக் கப்படும்பொழுது இதற்குப் பதபாடம்? என்னும் பெயர் ஏற் படுகின்றது. சொல் என்ருலும்,பதம் என்ருலும் அமையும். சங்கிதா பாடம் பதபாடமாக" உருவேற்கும் பொழுது சந்தி விதிகளுக்கு இணங்க ஏற்கனவே புணர்த்தி எழுதப்பட்ட சொற்கள் எல்லாம் பிரிக்கப்படுகின்றன. தனித்தனி சொற் களாகச் சந்தி சேர்த்தமைக்கப் படுவதற்கு முன் இருந்த பழைய நிலையை இவை பெறுகின்றன. இவ்வாறே இவை இணையும் பொழுது சந்தியின் விளைவாகத் தாம் ஏற்ற ஸ்வரங் களை நீக்கி தனித்தனி சொற்களாக இருந்தபொழுது இயல் பாகப் பெறும் ஸ்வரங்களையே திரும்பவும் பெறுகின்றன. இதுதான் பத பாடத்தின் இயல்பு. பத பாடத்தில் அடுத் தடுத்து வரும் இரு சொற்களை எடுத்துச் சந்தி விதிக் கிணங்க இணைத்தும், இவ்வாறு இணைப்பதன் விளைவாக வேறுபடும் ஸ்வரங்களைத் திருத்தித் தகுந்தவாறு அமைத்தும் ஒதுவர். இப்படி ஒதும் பாடம் கிரம பாடம்" எனப்படும். ஒரு வாக்கியத்தில் ஐந்து சொற்கள் இருந்தால் முதலாவது சொல் லும் இரண்டாவது சொல்லும் முதலில் இவ்வாறு இணை கின்றன. பின்னர் இரண்டாவது சொல்லும் மூன்ருவது. சொல்லும் பிணைப்புறுகின்றன. இப்படியே தொடர்ந்து மூன்ருவதும் நான்காவதும் நான்காவதும் ஐந்தாவதும்

25 | கா. கைலாசநாதக் குருக்கள்
இணை இணையாகப் பிணைந்து சந்தி முறை வழுவாது ஸ்வரம் தொடர்ச்சியாகப் பொருந்தும் வண்ணம் அமைகின்றன. இம்முறையில் தவருதவாறு ஒதப்படும் வேதம் காதிற்கு மிக வுமினிமையாக இருக்கும்.இரு சொற்களை ஜடை போல் பின் னிப் பின்னிச் சந்தி சேர்த்தும், ஸ்வரத்தை அவதானித்தும், இணை இணையாக அமைத்துப் படிக்கும் முறையை ஜடா பாடம்? என்பர். மூன்று சொற்களை இவ்வாறு எடுத்து அமைத்துக் கன பாடத்தை உருவாக்கலாம். வேதம் ஒது பவர்கள் ஆசிரியரிடம் சங்கிதை முதல் கனம் ஈருக ஒதப் பயில்வது வழக்கம். இவ்வாறு ஓதுவதற்கு ஆற்றல் பெற்ற வர்களைக் கனபாடிகள்? என்பர். இவ்விதம் வேதத்தை ஒது வதற்கு பல முறைகளை வகுத்தமைத்து நம்மான்றேர் வேதங்களே வழுவாது ஒதிவந்தமையால், இவை இடைச் செருகல்கள் எதுவும் அற்றவையாய் இன்றும் அன்று விளங்கிய வடிவத்திலே எமக்குக் கிடைத்துள்ளள.வேதத்தை ஒதும் முறை பலவகையாக வகுக்கப்பட்டுள்ள இந்நிலையில், சங்கிதை பாடத்தில் ஒரு சொல் இடையிற் சொருகப்பட் டால் அல்லது திரித்து அமைக்கப்பட்டால் இம் மாற்றம் இதைச் சார்ந்த பதம், கிரமம், ஜடை, கனம் ஆகிய பாடங் கள் ஒவ்வொன்றையும் தனித்தனி பெரிதும் பாதிக்கும் அல்லவா? வேதங்கள் மக்களால் ஆக்கப்படாதவை தெய்விகம் வாய்ந்தவை; என்னும் கருத்தினை உள்ளத்தில் ஆழப்பதித்த ஆன்ருேர், வேதங்களுள் மாந்தர் நுழைக்க விழையும் இடைச் செருகல்களை மனம் ஒருப்பட்டு ஏற்பாரா? ஒருக்காலும் ஏற்கமாட்டார். இதுவே வேதங்கள் இன்று வரை பழைய உருவத்திலேயே பேணிக் காக்கப்பட்டு வரும் வரலாறு

Page 23

இருக்கு வேதம்

Page 24

வேதங்களுள் முதலில் வைத்தெண்ணப்படுவது இருக்கு வேதம். இருக்கு என்பதற்கு பாட்டு என்பது பொருள். இவ்வேதம் பாட்டுக்களை மட்டுமே கொண்டு அமைந்திருப்பதளுல், இருக்கு வேதம் எனப் பெயர் பெறலா யிற்று. இவ்வேதத்தில் உரைவாக்கியங்கள் கிடையா. இருக்கு சங்கிதை பல தனிப்பாடல்களின் தொகுதி. சங்கிதை, என்பதற்கு தொகுதி என்பதுகருத்து இருக்கு வேதசங்கீதை என்னும் பெயர் பாட்டுக்கன்க் கொண்டமையும் வேதத்தின் தொகுதி எனப் பொருள்படும். இவ்வாறு இங்கு காணப் படும் தனிப் பாடல்கள் பலரால் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் ஆக்கப்பட்டுப் பின் ஒன்ருகத் தொகுத்தமைக்கப்பட்டவை. இக்காரணத்தால் இவ்விலக் கியத்தில் காலத்தினல் முந்தியும் பிந்தியும் இயற்றப்பட்ட பகுதிகள் பலவாறு கலந்து வருதல் இயற்கை.
இருக்கு சங்கிதையின் அமைப்பு முறையைச் சிறிது கவ னிப்போம். இச்சங்கிதையிற் பத்து மண்டலங்கள் உண்டு. இவற்றுள் இரண்டாம் மண்டலம் முதல் ஏழாம் மண்டலம் வரையும் உள்ள மண்டலங்களிலே தான் மிகப் பழைய பாடல்கள் இருக்கின்றன. இப்பாடல்கள் பரம்பரையாக ஒரே குடியிற் பிறந்த குடும்பங்களைச் சேர்ந்த கவிகள் பாடி யவை. இவ்வாறு பாடிய அறிஞர்கள் இருஷிகள் எனப்படு வர். அக்கால வழக்கில் கவி, இருவி என்னும் பெயர்கள் இவர்களையே சுட்டி நின்றன. இக்கவிகளைப் பற்றிய விவரங் களைக் கூறும் நூலஅநுக்கிரமணி.எனப்படும்.மேலும், இருக்கு வேதத்தில் வரும் பாடல்கள், இவற்றை அமைக்க எடுத்தா ளப்பட்ட யாப்பு முறை, இவை பாடிப் போற்றும் தெய்வங் கள் என்பவற்றைப் பற்றியெல்லாம் பலவகை குறிப்புக்களை முதன் முதலில் எடுத்துக் கூறியவை இருக்கு வேதப் பிரா

Page 25
வடமொழி இலக்கிய வரலாறு / 30
மணங்களே. ஏற்கனவே கூறப்பட்ட ஏழு மண்டலங்களில் இருக்கும் பாடல்களை இயற்றியவர்கள் கிருத்ஸ் மதர், விசிவா மித்திரர், வாமதேவர், அத்திரி, பாரத்துவாசர், வசிட்டர் என்பவர்கள். ஒவ்வொரு முனிவரும் ஒவ்வொரு மண்டலத் தையும் முழுதாகத்தாமே தனியேஇயற்றினர் என்றுகூறுவர். இது பொருந்தாது. பலதரப்பட்ட பாடல்கள் அமைந்து காணப்படும் ஒரே மண்டலத்தில், காலத்துக்குக் காலம் ஒரே பரம்பரையிற் தோன்றி அதே பெயரைத் தாங்கி விளங்கிய பல கவிகள் இப்பாடல்களை இயற்றினர் எனக் கொள்ளுதலே பொருத்தமுடையது. இவ்வேழு மண்டலங் களும் இவ்வாறு தனிப்பட்ட பண்புடன் அமைந்துள்ளன. எட்டாம் மண்டலத்தில் கண்வர், அங்கிரஸ் என்னும் இரு இருஷிகளின் வழித் தோன்றல்களான கவிகள் பலர் இயற்றிய பாடல்கள் இருக்கின்றன. இவ்வெட்டு மண்டலங்கள் நீங்கிய ஏனைய முதலாம், ஒன்பதாம், பத்தாம் மண்டலங் களில் பல்வேறு பரம்பரையைச் சார்ந்த கவிகள் பாடிய பாட்டுக்கள் உள்ளன. இப்பாடல்களுட் பெண் கவிகளால் ஆக்கப்பட்ட பாட்டுக்கள் சிலவற்றையும் காண்கின்ருேம்.
இருக்கு வேதத்திலுள்ள பாடல்ளெல்லாவற்றுள்ளும் இரண்டாம் மண்டலம் முதல் ஏழாம் மண்டலம் ஈருக உள்ள மண்டலங்களில்தான் காலத்தால் முந்திய பாடல்கள் வரு கின்றன என்று ஆராய்ச்சியாளர் அபிப்பிராயம் கூறியுள் ளார்கள். முதலாம், பத்தாம் மண்டலங்களிற் காணப்படும் பாடல்களுள் பெரும்பாலானவை பித்தியவை. இவ்வடிப் படையில் காலத்தால் முந்திய பாடல்களே இம் மண்டலங் களில் இல்லை என ஒரேயடியாகக் கூறிவிடுதலும் முறை யன்று இருக்கு வேதத்தில் உள்ள பாடல்களுள் இவை முந் தியவை இவை பிந்தியவை எனப் பகுத்தறிதல் முடியாத தொன்றன்று, மொழியமைப்பையும் கூறப்படுங் கருத்தை யும் காணப்படும் மரபையும், ஆதாரமாகக் கொண்டு பாடல்களை ஊன்றிக் கவனித்தால் முந்தியவற்றினின்றும் பிந்தியவற்றை வேறுபடுததிப் பிரித்து அறியலாம்.

31 I கா. கைலாசநாதக் குருக்கள்
இருக்கு வேத மொழியின் அமைப்பைச் சிறிது கவனிப் போம். இம்மொழியில் இருக்கும் பாட்டுக்களில் கவி தான் கூற விரும்பும் கருத்துக்களைத் தெளிவான நடையில் எடுத் துக் கூறுகின்ருர். இங்கு காணப்படும் நடை மிக எளிய நடை. தொகைச் சொற்கள் மிகவும் அருகிக் காணப்படுகின்றன. தெய்வங்களைன் பண்புகளைக் கூறிப் போற்றியும், தாமளிக்கும் பொருள்களைக் குறிப்பிட்டும், தமக்கு வேண்டும் பொருள்களை இரந்து வேண்டியும் அமைந்த பாடல்களில் எளிய நடை பயில்வது முற்றிலும் பொருத்தமே. உவமை அணி ஒன்று மட்டுமே இங்கு கருத்தைத் தெரிந்த பொருளொன்றுடன் ஒப்பிட்டுத் தெளிவாகக் கூறும் தனி நோக்குடன் கையாளப் பட்டிருக்கின்றது. உவமையில் எடுத்துக் கூறப்படும் பொருள் கள் அக்காலத்தில் சாதாரண வாழ்க்கையில் நிலவிக் காணப் படுபவைகளே, எண்ணிறந்த இலக்கண முடிபுகளால் வளம் பெற்ற வினையுருவங்கள் இங்கு இருக்கின்றன. இவை முற் றுக்கள், எச்சங்கள் எனப் பலவகைப்படும். இவ்வுருவங்கள் இங்கு மிகுந்து காணப்பட்டு நாளடைவில் எழுந்த இலக்கி யங்களில் சிறிது சிறிதாக மறைந்தகன்று நீங்கியதிலிருந்து இவை இருக்கு வேதத்திற்கே சிறப்பாக உரியவை என்பது தெளிவாகின்றது. பாணினி ஆசிரியர் பீலேட்” எனக் குறிப் பிட்டுள்ள வினைமுற்று இருக்கு வேதத்தில் அதிகமாக வரு கின்றது. சம்ஸ்கிருத நெடுங்கணக்கில் ஒரே ஒரு லகரம் உண்டு. வேதத்திலோ லகரமும், ளகரமும் வருகின் றன. வேதத்தில், சம்ஸ்கிருதத்தில் காணப்படும் சந்தி விதி களே பெரும்பாலும் காணப்படுகின்றன. ஆயினும் வேதத் திற்கு மட்டும் சிறப்பாக உள்ள சந்தி முறையும் உண்டு. பெயர்ச் சொற்கிள் சம்ஸ்கிருதத்தில் காணப்படாதவாறு விசேட உருவங்களைப் பெற்று வேதத்தில் வருகின்றன. சம்ஸ் கிருதத்தில் இறந்த காலங்களில் வினை உருவங்களின் தொடக் கத்தில் வரும் அகரம் வேதத்தில் பல இடங்களில் குன்றியே காணப்படும். இவ்வாறு குன்றிவரினும் கருத்து வேறுபடாது வரும் இடங்களுமுண்டு. *உபசர்க்கங்கள்? தனிச் சொற்களாக அமைந்து பெரும்பாலும் வினையடி தொடர்ந்து வரும் வண் ணமே வாங்கியங்கள் உள்ளன. இங்கு உபசர்க்கமும் வினை

Page 26
வடமொழி இலக்கிய வரலாறு / 32
யடியும் தனித்தனிச் சொற்களே. சில இடங்களில் உபசர்க் கம் சமஸ்கிருதத்திற் போலல்லாது வினையடியைத் தொடர்ந்து அதன் பின் வாக்கியத்தின் இறுதியில் இடம் பெறும். வேதத்தில் உபசர்க்கங்கள் தனிச் சொற்களாக இடம் பெறுதல் கவனிக்கற்பாலது. இரட்டித்துவரும் இறந்த கால வினையைத் துணைக்கொண்டு உருவேற்கும் வினையுருவங் கள் இங்கு அறவே கிடையா. இறந்த காலச் செயப்பாட்டு வினைப் பெயரெச்சங்கள் இங்கு அருகிக் காணப்படினும், இவற்றினின்றும் பிறந்த நிகழ்கால எச்ச உருவங்கள் இங்கு வருவதில்லை. இறந்தகாலச் செய்வினை வினையெச்சம் சம்ஸ் கிருதத்தில் ஒரே ஈற்றைக் கொண்டுவரும். வேதத்தில் இது பலவகை ஈறுகளைப் பெறுகின்றது. தமிழில் வரும் செய” என்னும் வாய்ப்பாட்டு வினை எச்சத்திற்கு நிகராகச் சம்ஸ்கிரு தத்தில் ஒரே ஒரு வகை உருவம் உண்டு. இவ்வுருவம் இரண் டாம் வேற்றுமையுருபை ஏற்று வரும் சொல்லைப் போல் அமையும். வேதத்திலோ வெனின் நான்காம், ஐந்தாம், ஆரும் ஏழாம் வேற்றுமை உருபுகளைத் தனித்தனி பெற்று இவ்வெச்சம் பலவாறு வருவதைக் காண்கின்ருேம். இன்வ யெல்லாம் சம்ஸ்கிருதத்தில் அறவே மறைந்துவிட்ட உருவங் களாம். இதுகாறும் குறிப்பாகவும் மிகவும் சுருக்கமாகவும் கூறப்பட்ட இருக்கு வேத மொழியியல்புகள் ஏனைய வேதங் களில் இதேயளவிற்குக் காணப்படாதவை. இவை வேத மொழியின் சிறப்பு நிலையை எடுத்துக் காட்டவே இங்கு கூறப்பட்டன. இவை இருக்கு வேதத்தின் தொன்மையையே பெரிதும் வலியுறுத்தி நிற்கின்றன.
ஏற்கனவே கூறப்பட்ட பத்து மண்டலங்களைவிட வேறு சில பாடங்களும் இருக்கு வேதத்துடன் இணைந்துள்ளன' இவற்றை இருக்கு வேதக் கையெழுத்துப் பிரதிகளிற் காண லாம். இவை “கிலங்கள்? எனப்படும். கிேலம்" என்ருல் எஞ்சி யது, மிகுதியாக உள்ளது எனப் பொருள்படும். இவை அநு பந்தங்களாக இவ்வேதத்துடன் சேர்த்திணைபட்டுள்ளன.இதி லிருந்து இருக்கு வேத சங்கிதை தொகுத்தமைக்கப்பட்ட பின்னர்தான் இப்பகுதிகள் சேகரித்து இணைக்கப்பட்டன.

33 | கா. கைலாசநாதக் குருக்கள்
என அறியக்கூடியதாயிருக்கின்றது. இவற்றில் பழைய பாடல்களும் சில இருக்கின்றன. எட்டாவது மண்டலத்தின் இறுதியில் புறம்பாகக் கூறப்பட்டிருக்கும் *வாலகில்ய சூக்தங்களும் கிலங்களேயாம். சுபர்ணு சூக்தங்கள் பிரைவு சூக்தங்கள் உரை நடையில் விளங்கும்?நிவாதங்கள்" எல்லாம் ஓரளவிற்குப் பழமையான வேதப் பகுதிகளே.
இருக்கு வேதத்தின் அமைப்பைப்பற்றி எடுத்துக் கூறும் பொழுது யாப்பைப் பற்றியும் சிறிது கூறுதல் அவசியமாகின் றது. இருக்குவேத யாப்பு முறை மிகவும் பழையது. இல் வுண்மையை ஆதாரமாகக்கொண்டும் இருக்கு வேதத்தின் தொன்மையை வலியுறுத்துவர். வேதத்தில் காணப்படும் யாப்பு முறையிலிருந்து சம்ஸ்கிருதத்தில் பெருகிக் கிடக்கும் யாப்பு முறை மிகவும் வேறுபட்டது. இவ்வேதத்தில் உள்ள பல விருத்தங்கள்"பிற் காலத்தெழுந்த சம்ஸ்கிருதத்தில் முழு வதும் மறைந்துவிட்டன. இதைவிடச் சம்ஸ்கிருத காவியங் களில் எண்ணிறந்து காணப்படும் விருத்தங்களுக்கு நேரிடை யானவை வேதங்களிற் காணப்படவில்லை. இவ்வாறு வழக்கி லிருந்த விருத்தங்கள் மறைந்து வழக்கொழியவும், புதியவை தோன்றி எண்ணிறந்து பெருகவும் எத்துணைக் காலம் ஆகி யிருக்கும்! இதிலிருந்து மிகப் பெருங்கால இடைவெளி வைதிக இலக்கியத்திற்கும், சம்ஸ்கிருத இலக்கியத்திற்கும் இடையில் இருந்திருத்தல் வேண்டும் என ஊகிக்க முடிகின் றது. இது வேதங்களின் தொன்மையை மேலும் தெளிவாகச் சுட்டுகின்றதல்லவா?
வேதங்கள் ஓசையை உரியவாறு எழுப்பி ஒவிக்கப்பட வேண்டியவை. வேதம் ஒதும்பொழுது ஒதுபவரின ஒளி வேறுபட்டு மூன்று நிலைகளிற்காணப்படும்.ஸ்வரங்கள்?என்று கூறப்படும் இவ்வொலி வேறுபாடுகள் உதாத்தம், அநுதாத் தம், ஸ்வரிதம்? என மூவகைப்படும்.குரலை உயர்த்துவதனல் எழுப்பப்படும் ஓசை உதாத்தமாம். குரலைத் தாழ்த்தி ஒலி எழுப்பும் பொழுது வருவது அநுதாத்தம். இரண்டும் ஒரே சமமாகப் பொருந்தி வரும் ஒலி நிலை ஸ்வரிதம் எனப்படும்,
س--ه 6bu

Page 27
வடமொழி இலக்கிய வரலாறு ( 34
இவ்வாறு குரல் வேறுபாட்டைக் கடைப்பிடித்து ஒலிக்கும் முறை பழைய கிரேக்க மொழியில் இருந்ததாக அறியக்கிடக் கின்றது. ஸ்வரங்களை அமைத்தே இருக்கு வேதம், யசுர் வேதம், சாமவேதம் அதர்வண வேதம் பிராமணங்கள், உப ரிஷதங்கள்? முதலியன ஒதப்படுகின்றன. உபநிஷதங்களி லேயே இவ்வழக்குப் பெரும்பாலும் மறையத்தலைபட்டுச் சம்ஸ்கிருத மொழியில் அறவே மறைந்து ஒழிந்து விடுவது நோக்கற்பாலது.
இருக்கு வேதப் பாடல்களை ஆதாரமாகக் கொண்டு அந் நாளில் இந்நூல் சுட்டிக் காட்டும் தேசப் படமொன்றை வரைவோமானல் இப்படம் இந்தியா முழுவதையும் காட் டாது. இதில் இந்து நதியையும் இதைச் சார்ந்த ஐந்தாறு கள் பாய்ந்தோடும் பஞ்சாப் பிரதேசத்தையும் மட்டுமே காணலாம். காலம் போகப் போக, அதாவது இருக்கு வேதத்திற்குப் பின் எழுந்த வேத இலக்கியங்கள் படிப்படி யாகத் தோன்றத் தோன்ற, இலக்கியம் அவ்வப்போது கூறும் தேசங்களைக் குறிப்பிட்டுப் படங்களைத் திருத்தி அமைத்துக் கொண்டே வருவோமானுல் இப்படங்கள் ஒன்றிலிருந்து மற் றது வேறுபட்டுப் பரந்து விரிந்து கொண்டே வருவதைக் காணலாம். இப்படி வரையப்படும் படங்கள் இருக்கு வேத நாகரிகம் கிழக்கு நோக்கிப் படிப்படியாகப் பரவியதைத் தெளிவாக்கி நிற்கின்றன. கங்கை நதியை அறியக்கூடிய வாறு இருக்கு வேதம் எங்களைப் போதிய அளவிற்குக்கிழக்கே அழைத்துச் செல்லவில்லை. வங்காளத்தில் மலிந்து காணப் பட்டதாகக் கூறப்படும் புலியைக்கூட நாம் அறியக்கூடிய வகையில் இருக்கு வேத நாகரிகம் படர்ந்து பரவவில்லை என் பது இம்மிருகம் இங்கு அறவே குறிப்பிடப்படாததிலிருந்து ஊகித்தறியக்கூடியதாக இருக்கின்றது என ஆராய்ச்சியா ளர் எடுத்துக்காட்டியுள்ளார்கள். சம்ஸ்கிருத இலக்கிய வர் ணனைகளில், முக்கியமாக உவமைகளில், தனி இடம் பெற்ற தாமரை மலர் இருக்கு வேதத்தில் காணப்படுவதில்லை. இந்தி பரின்-சிறப்பாகத் தமிழரின்-முக்கிய உணவாகக் காணப் படும் அரிசி இங்கு கூறப்படவில்லை. இவற்றையெல்லாம்

35 / கா. கைலாசநாதக் குருக்கள்
உற்று நோக்கின், இருக்கு வேதப் பாடல்களைப் பாடியோர் மிகப் பழைய சூழ்நிலையில் இருந்து பாடிய பாடல்களே இவை என்பதைக் காட்டுகின்றன. இருக்கு வேத நாகரிகத்தைப் பற்றி இன்னெரு கருத்தும் நிலவுகின்றது. கு திரைகளை மிக வும் போற்றி மதிப்பளித்த நாகரிகம் பழைய நாகரிகம். மிகப் பழையதெனக் கருதப்படும் இந்தோ யூரோபிய நாகரிகம் குதிரையுடன் நெருங்கிய தொடர்புடையது. குதிரைகளைத் தேரிற் பூட்டியும், இவற்றை ஒட்டப் போட்டியில் ஈடுபடுத்தி யும் ஆன்ருேர் வாழ்ந்த வாழ்க்கை வரலாற்றை இருக்கு வேதத்தில் அங்கங்கே காண்கின்ருேம். அக்காலத்து மக்கள் தாம் வணங்குந் தெய்வங்களிடமிருந்து குதிரைச் செல்வத் தைத் தமக்கு வரையின்றித் தரும்படி வேண்டி நின்றதை இருக்கு வேதம் வாயிலாக நாம் அறிகின்ருேம்.
இருக்கு வேதப்பாடல்கள் பெரும்பாலும் அக்காலத்தில் வழிபட்ட தெய்வங்களை விளித்து அவர்களிடமிருந்து வேண் டும் பொருள்களை இரந்து கேட்டலைக் குறிக்கோளாகக் கொண்டு, அவர்களை மக்கள் போற்றிக் கூறும் முறையில் அமைந்து விளங்குகின்றன. இதைவிட, உலகியல் விஷயங் கள், அரசர்களைப் போற்றிக் கூறும் பகுதிகள், தத்துவக்கருத் துக்களைக் கூறும் பாடல்கள் முதலியவற்றையும் இவ்விலக்கி யப் பரப்பில் அங்குமிங்கும் சிதறுண்டு கிடக்கக் காண்கின் ருேம்.
ஏற்கனவே கூறியவாறு இருக்கு வேதத்தில் இயற்கை வருணனைகள் தனியிடம் பெற்றுத் தலைசிறந்து விளங்குகின் றன. உவமை தவிர்த்த ஏனைய அணிகளை இங்கு காணுதல் அரிது. இயற்கை வர்ணனைகள் உள்ளவாறே எடுத்துக் கூறப் படுகின்றன. சூரியன் பர்ஜன்யன், மருத்துக்கள் ஆகிய தெய் வங்களைக் குறித்துப் பாடப்பட்ட பாட்டுக்களில் இந்தில் யைக் காண்கின்ருேம்.*உஷைமீது இருக்கு வேதக் கவி Lurrgulu பாட்டுக்களே சிறந்த வருணனைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு, இருக்கு வேதத்தில் காணப்படும், விடியற்காலத்தில் படிப் படியாக உதித்து எழும் உஷையைக் கூறும் பாட்டுக்கள், வரு

Page 28
வடமொழி இலக்கிய வரலாறு / 36
ணனை நயம் மிகுந்து விளங்குகின்றன. தாயினல் அழகுற அணிவிக்கப்பட்ட புதல்வியை ஒப்பத் தன் உடலழகில் பெருமை கொண்டு சிறந்த ஆடலழகிபோல் தன்னழகை மக்கள் கண்டு இன்புறுமாறு காட்டி நிற்கும் உஷையைக் கவி தம் வர்ணனை மூலம் நம் மனக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றர். ஒளியை உடையாகக் கொண்டு கிழக்கே உதிக்கும் உஷை தன் அழகை வெளிக்காட்டி விண்ணின் கதவுகளைத் திறக்கின்ருள். அவற்றினூடாக ஒளி வீசிக் கொண்டு வெளிவருகின்ருள். காதலுணர்வூட்டும் பெண் ணுடன் உஷை ஒப்பிடப்படுகின்ருள்.
பிற்காலத்தில் சம்ஸ்கிருதத்தில் சிறந்து விளங்கிய காவி யப் பண்புகள் சிலவற்றிற்கு இருக்கு வேதம் எவ்வாறு அடி கோலியதென்பதை இருக்கு சங்கிதையில் உள்ள பல பாடல் களே எடுத்தியம்புகின்றன. இப்பாடல்கள் அடங்கியுள்ள பகுதிகள் சம்வாத சூக்தங்கள், என்பன. இதில், வீரச் சுவை செறிந்த இதிகாச இலக்கியத்துடனும் நாடக இலக்கியத் துடனும் இச் சம்வாத சூக்தங் கொண்டு விளங்கும் தொடர்பு எடுத்துக்காட்டப்படுகின்றது. இச் சூக்தங்களில் உள்ள தனித்தனிப் பாட்டுக்கள் ஒவ்வொன்றும் ஒன்றுட னென்று கருத்தால் பிணைக்கப்படாதவை. இவ்வாறு இவை தனித்தனியே ஒன்றுடன் ஒன்று தொடர்புபடாத பாடல் களைக் கொண்டமைந்திருப்பதிலிருந்து இது பழைய வீரச் சுவை செறிந்த இதிகாசங்களின் தோற்றுவாயாக அமைந்து, முதன் முதலில் உரையும் செய்யுளும் ஒன்ருய் விரவிப் புதிய தோர் உருவம் பெற்று விளங்கியிருக்கலாம் என ஊகித்தறிய முடிகின்றது. இச் சூக்தங்களில் பேச்சுக்கள் மட்டும் செய்யு ளில் அமைய இவற்றுடன் தொடர்புள்ள நிகழ்ச்சிகளை விளக் கும் பகுதிகள் உரைநடையில் வர பாட்டுக்கள் தொடக்கத் தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்றகொள்கையை ஒல்டின் பெர்க்" என்பவர் நிறுவ முன் வந்தார். இவற்றுட் செய்யுட் பகுதிகள் மட்டுமே படிப்பவர்களால் உரக்கப் பாடத்தக்க வாறு அமைக்கப்பட்டுள்ளன. ஆனல் இடையிடையே வர வேண்டிய உரைநடைப்பகுதிகள் பாடுபவர்களால் அவ்வப்

37 I கா. கைலாசநாதக் குருக்கள்
போது தாமே அமைக்கும் வாக்கியங்களாற் கூறப்பட்டதாக வும் இவர் சுட்டியுள்ளார். பாட்டுக்களாலேயே இருக்கு வேதம் அமைதல் வேண்டும் என்னும் மரபு வழுவாதிருக்கவே உரைப்பகுதிகள் நீக்கப்பட்டன. எனவே, செய்யுட் பகுதி கள் மட்டும் இருக்கு வேதத்தில் இடம் பெற்றன. இவ் வாறு அகற்றப்பட்ட உரைப் பகுதிகள் கூறும் கருத்து இன்ன தெனப் பிராமணங்கள் வாயிலாகவும் பழைய உரைகளா லும் அறிதல் முடியும். இவ்வகையான குறிப்புகளெதுவும் கிடைக்காத இடத்து நம் ஊகத்தாலேயே இரு பாடல் களுக்கிடை விட்டுப் போன கருத்துக்களைத் தொடர்புபடுத்தி அறிவதைவிட வேறு வழியில்லை. இச்சம்வாத சூக்தங்களின் அமைப்பு முறை உலகில் உள்ள ஏனைய இலக்கியங்களிலும் மிகப் பழைய பாடல்களிலும் காணப்படும். பழைய வீரகாவி யங்களில் உரையும் செய்யுளும் ஒன்ருய் விரைவியே அமைந் திருந்தன என்னும் உண்மை இக்கருத்தை மேலும் வற்புறுத் துகின்றது. ஸ்காந்திநேவியா, அயர்லாந்து முதலிய தேசங் களில் எழுந்த காவியங்களிலும், இந்தியாவில் எழுந்த பிரா மணங்களிலும், உபநிடதங்களிலும், மகாபாரதத்தின் பல பகுதிகளிலும்,பெளத்த*நூல்களிலும், கதைகள், வரலாறு கள், நாடகங்கள்,*சம்பூ?காவியங்கள் முதலியவற்றிலும் இவ் வாறுசெய்யுளும் உரையும் கலந்து பயிலும் நடையைக் காண லாம். ஏனையஇந்திய இலக்கியங்களில் இரு நடைகளும் கலந்து வருதல் தெளிவாகத்தெரியும் பொழுது இருக்கு வேதத்தில் மட்டும் இது ஏன் மறைந்து நின்றுஅதஞல் ஊகித்தறியவேண் டிய நிலை எய்திற்று என்னும் ஐயம் தோன்றுதல் இயல்பே. ஒல்டின்பெர்க்? இச் சந்தேகத்தை நீக்கி விளக்கம் தந்துள் ளார். இருக்குகளால் மட்டும் அமைய வேண்டுவதேஇருக்கு வேதம் என்பதைக் கருத்திற் கொண்ட தொகுப்பாசிரியர், இருக்கு (பாட்டு) எனக் கருதப்படாத உரைப்பகுதிகளை இவ்வேதத்தினின்றும் நீக்கி விட்டார்.இதனுல் தான் உரைப் பகுதிகளை நாம் இங்கு காண்பதில்லை என்பது இவர் கூறும் விளக்கம். சிலரோ இதை மறுத்து, “இவ்வாறு உரை நடை யில் கூறப்பட்ட பகுதிகளே கிடையா.இவை தொடக்கத்தில் இருந்திருந்தால் அல்லவா நாளடைவில் நீக்கப்பட்டிருக்க

Page 29
வடமொழி இலக்கிய வரலாறு / 38
லாம். இப்பாட்டுக்கள் நாடகங்களிற் காணப்படும் நிலையில் வைத்து விளக்கப்பட வேண்டியவை. நாடகத்தில் சம்பா ஷணைகள் பாடல்கள் எல்லாம் உள்ளன. இவற்றை நடிகர் கள் தம் நடிப்பு மூலம் தொடர்புபடுத்தி முழுக்கதையும் ஒரே தொடர்ச்சியாக அமையும் வண்ணம் நாடகத்தை உருவாக் குவர். இதே நாடகம் போ ன்றதுதான் இருக்கு வேதத்தில் உள்ள இச் சம்வாத சூக்தங்க ளில் காணப்படும் சம்பாஷணை யும். இதைத் தெளிவாக உணர்ந்து எவ்வகை நடிப்பு இவற் றைத் தொடர்புபடுத்தும் என்பதை ஊகித்து நடிப்பு மூலம் தொடர்புபடுத்தி விளக்குவதே நாம் செய்ய வேண்டுவது? எனத் தம் கொள்கையை வெளிப்படுத்துவர். மேக்ஸ்மூலர் *சில்வன் லெவி? என்னும் இரு அறிஞர்களும் ஒல்டின்பேர்கின் கருத்தை இவ்வாறு மறுத்துக் கூறியவர்களே.
இச் சம்வாத சூக்தங்களின் இயல்பு வாய்ந்த பாடல்கள் இந்திய இலக்கியங்களில் மிகுந்து காணப்படுகின்றன. வீர காவியமோ, நாடகமோ என ஐயுறும் வண்ணம்இரு தன்மை களையும் ஏற்றுச் சம்பாஷணை உருவில் அமைந்துள்ள பகுதிகள் மகாபாரதத்திலும், புராணங்களிலும், பெளத்த நூல்களி லும் மிகுந்து காணப்படுகின்றன. இவையெல்லாம் பாடு வதற்கெனவே செவ்விதாக அமைக்கப்பட்ட பழைய ஆக்கி யானங்கள்? எனக் கொள்ளுதலே முற்றிலும் பொருந்தும். இவை போன்ற பாடல்கள் தாம் இதிகாசம், நாடகம் என் னும் இருவகை இலக்கியங்களுக்கும்நிலைக்களனய் இவற்றைத் தோற்றுவித்தன. கதையைக் கூறும் உத்தியும், நாடகத்தின் சாயலும் இவ்வகைப்பாடல்களில் சரிவர இணைந்து அமைந் திருக்கக் காண்கின்ருேம். கதை கூறும் மரபு விரித்து வளர்ச்சி பெற்றதன் விளைவாகவே பெரும் வீர காவியங்களான இதி காசங்கள் உருவாயின. இப்பாடல்களில் உள்ள நாடகப்பண் புகள், நாடக இலக்கியம் தோன்றக் காரணமாயிருந்தன. இவ்வாக்யான சூக்தங்கள் யாவும் முற்றிலும் பாட்டுக்களால் அமைந்திருந்தன எனக் கொள்ளுதல் தவறு. கதையின் தொடக்கத்திலும், அதன் முடிவிலும் இடையில் கதை விறு விறுப்பாக அமையும் பொழுதும் உரை நடைப் பகுதிகள்

39 / கா. கைலாசநாதக் குருக்கள்
இடம் பெறுதல் முற்றிலும் பொருத்தமே. எனவே இருக்கு வேதத்தில் உள்ள இவ்வகைப் பாடல்கள் சிலவற்றில் இவற்றை நெருக்கிப் பிணைக்கும் நோக்குடன் இடையிடையே விரவி வந்ததாகக் கருதப்படும் உரைப் பகுதிகள் இப்பாடல் களில் வரும் சம்பாஷணைகளைத் தெளிவாக்கும் நோக்குடன் முதலில் இடம் பெற்றிருக்கலாம். நாளடைவில் இவை நீக்கப் பட்டும் இருக்கலாம். ஆனல் ஒன்று மட்டும் தெளிவாகின் றது. இவை பழைய ஆக்யான சூக்தங்கள். இவற்றில் வீர காவியங்களினதும், நாடகங்களினதும் பண்புகள் சரிக்குச் சரி விரவியுள்ளன. இவைகளை முற்ருக நாடகங்கள் எனக் கொள் ளுதல் தவறு. இச் சம்வாத சூக்தங்களுள்புரூரவஸ்ஊர்வகி ஆகிய இருவருக்கிடை நிகழ்ந்த சம்வாதம், யமனுக்கும்? யமிக் குமிடை நிகழ்ந்த சம்வாதம் ஆகியவை சிறந்தவை. *சூர்யா" சூக்தத்திலும் இதே சாயல் தெரிகின்றது.
சமயத்ப் தொடர்பு இல்லாததாய் உலகியல் நிகழ்ச்சிகளைக் கூறுவனவாய் அமைந்துள்ள பகுதிகள் பல இருக்கு வேதத் தில் உண்டு. இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது சூதாட்டத்தைக் குறிப்பிடும் சூக்தம். சூதாட்டக்காரனெரு வன் சூதாட்டத்தில் மிகவும் கவரப்பட்டு அதில் ஈடுபடுகின் முன். இதன் விளைவாகத் தன் வாழ்நாளில் இன்பத்தை அறவே இழந்தவனப் தன்னத்தனியே தின்று கவல்யுறுகின் முன். இவன் தன்னைத்தானே நொந்து கூறுவதாக இச்சூக்தம் அமைந்திருக்கிறது. எவ்வாறு சூது, தன் இல்வாழ்க்கை யில் பெறக்கூடிய இன்பங்களை இழக்கச்செய்தது என்பதை படிப்போர் பச்சாதாபமுறும் வகையில் இச் சூதாடி தானே எடுத்துக் கூறுகின்ருன்.
அதர்வ வேதத்திற்காணப்படுபவை போன்று சமயத் தொடர்பற்றவையும் ஆனல் வாழ்க்கையில் அடிக்கடி பிர யோகிக்கக் கூடியவையுமான குக்தங்களும் சில இங்கு உண்டு. சில மழையை வருவிக்கப் பயன்படுவன. சில மாந்திரீக சக்தி வாய்ந்தன. இப்படியான பாடல்கள் மிகமிகச் சிலவே காணப்படுகின்றன. ஓரளவிற்குச் சமயத் தொடர்புபெற்றும்

Page 30
வடமொழி இலக்கிய வரலாறு | 40
பெரும்பாலும் அதனின்றும் வேருகியும் காணப்படும் *தானஸ்துதிகள்? தாமே ஒருவகை இலக்கியமாக அமைந்துள் ளன. வேண்டும் பொருனை ஈந்து வேள்வி வேட்டலை ஊக்கு வித்த பெருள்கொடை வள்ளல்களான அரசர்களின் பெரு மையை இப்பாடல்கள் எடுத்தியம்புகின்றன. இவை நாற் பதுக்கு அதிகமான சூக்தங்கள்.
நொடிகள் போன்று சுருங்கக்கூறித் கூறுவதைத்தெளி வாகக் கூருது, மற்றவர்கள் சிந்தனையைத் தூண்டியே தெளிவை வருவித்து கருத்தை அவர்களே உன்னி அறியும்படி செய்யவல்ல பாடல்களும் இருக்கு வேதத்தில் இடம் பெற் றுள்ளன. இவை நொடிகள் போன்றவை. பழமை மிக்க நாடோடி மொழிகள் என்றும் இவற்றைக் கூறலாம். இவற் றுட் சில இன்றும் மக்களிடை வழங்குகின்றன. தெளிவில் லாது சுருக்கிக் கூறித் தாம் கூறுவதைக் குறிப்பாயுணர்ந்தும் பாட்டொன்று பின் வருமாறு:
பன்னிரண்டு வட்டங்கள்; ஒரு சில்லு: மூன்று அச்சுகள் யாரறிவர்? இதில் அசையக்கூடிய முந்நூற்றருபது கம்பிகள் இருக்கின்றன.
இருக்கு வேதத்தைக் கொண்டு அக்காலத்து அரசியல் நிலையை விரித்துக் கூறுதல் எளிதன்று , இங்கு காணப்படும் விபரங்கள் மிகச் சிலவே. இருக்குவேத காலத் தில் குடிமக்கள் அரசனது ஆட்சியின்கீழ் வாழ்ந்தனர் என்பது ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஏனெனில் இதல்லாத வேறு ஏதாவது அரசியல் முறைபற்றி நேரடியான குறிப்புக் கள் இங்கு கிடையா. ராஜா என்னும் சம்ஸ்கிருத சொல் குறிக்கும் அரசனே அடிக்கடி குறிப்பிடப்படுகிருன். தலைவனை விஸ்பதி என்று கூறும் வழக்கமும் இருந்தது. விஸ் என்பது மக்கள் எனவும் பதி என்பது தலைவன் எனவும் உணர்த்துவ தால் இதற்கு மக்கள் தலைவன் என்னும் பொருள் உண்டு. குடும்பத்தில் ஆண்மகனே தலைவனக விளங்கிய சூழ்நிலையில் இவ்வாறு மக்கள் தலைவன் தம்மைச் சார்ந்தவர்களைப்

41 I கா. கைலாசநாதக் குருக்கள்
பேணும் கடமை ஆற்றி வந்தமை பொருத்தமுடையதே. அரசன் காலத்துக் காலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலை வனல்லன். அவன் பரம்பரை பரம்பரையாகவே வழி வழி வருபவன். இதற்கு ஆதாரங்கள் இங்கு காணப்படுகின்றன. இருக்கு வேதத்தில் மிகவும் அருகிக் காணப்படும் குறிப்புக் களைக் கொண்டே வத்ரயஸ்வன், திவோதாசன், பிஜவனன் சுதாஸன்கிரிக்ஷத்து, புருகுத்ஸன்த்ரஸ்தஸ்யு.குருசிரவணன் உபமஸ்ரவஸ் போன்ற அரச பரம்பரையைப்பற்றி விபரங் களை ஊகித்தறியக் கூடியதாக இருக்கின்றது. அரசர்களைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இங்கு காணப்படுவதாகச் சிலர் எடுத்துக் காட்டுவர். போதிய ஆதாரம் இல்லாததனல் இவ்வழக்கம் இருந்ததென முடிவாக நிறுவப்படவில்லை. அரசன் கடமை குடிமக்களைக் காப்பதே.பெரும்பாலும் சமய நூலாகவே அமைந்து விளங்கும் இருக்கு வேதம் திவோ தாஸன், சுதாஸன், திரிசதஸ்யு போன்ற மன்னர்களின் பெரும் தீரச் செயல்களை நாம் அறியக் கூடியவாறு குறிப்புக் களைத் தந்து உதவுகின்றது. போரின்றி அமைதி நிலவிய வேளேகளில் மன்னன் கடமை இன்னது என்று இருக்குவேதம் எங்காவது எடுத்துக் கூறியதாகத் தெரியவில்லை. ஆனல், பெருந்தொகையினரான வே ட் போ ருக்கு வேண்டிய பொருள்களை ஈந்து இவர்கள் வேட்பதற்கு மன்னர்கள் துணை நின்ருர்கள் என்ற உண்மை நன்கு தெளிவாகின்றது. பள பளப்பான உடை அரசனை மக்களினின்றும் பிரித்துக் காட் டும். அவன் வசிக்கும் மாளிகை அழகு மிக்கது. அவன் பரிவாரங்கள் எல்லாம் அவன் பெருமையை உணர்த்தும் வண்ணம் கூறப்பட்டுள்ளார்கள். தான் அடக்கி வெற்றியீட் டிய குறுநில மன்னர்களிடமிருந்தும், மக்கள் அளித்த நன் கொடையிலிருந்தும் அவன் தான் “அரசோச்சுவதற்காக வேண்டிய பொருளைப் பெற்று வந்தான். இப்பொருளை மக் கள் முதன் முதலாக நன்கொடையாகக் கொடுத்தனர். இவ்வழக்கம் நாளடைவில் அரசனுக்கு கப்பங்கட்டுதல் வரி கொடுத்தல் போன்ற வழக்கங்களைத் தோற்றுவித்திருக்க லாம் என ஊகிக்க முடிகின்றது. இவை கொடுக்கப்படாத வேளைகளில் எல்லாம் அரசன் இவற்றைப் பலாத்காரமாக”

Page 31
வடமொழி இலக்கிய வரலாறு | 42
அறவிட்டு வந்தான். பகைவரிடமிருந்து நிலம், அடிமைகள்,
ஆடு மாடுகள் எல்லாம் இவ்வாறு கவரப்பட்டு வந்தன. மக் களது நிலங்களுக்கு அரசன் உரியவன் என்று எப்பொழுதா வது கருதப்பட்டதாகத் தெரியவில்லை. புரோகிதனே நாள டைவில் அரசனுய் உயர்ந்தான் என்று உலகில் ஏனைய நாடு
சளில் அரசாளும் முறை தோன்றிய வரலாறு கூறும் மேனட்
டறிஞர் பொதுவாகக் கூறுவர். இருக்கு வேதம் கூறுவதிலி ருந்து இத்தகைய நிலை இந்தியாவில் இருந்ததாகக் கொள்ள
முடிவதில்லை
சேநாரீ என்பவன் அரசருல் நியமிக்கப்பட்ட அதிகாரி. இவன் முக்கிய கடமைகள் எதுவும் ஆற்றியதாகத் தெரிய வில்லை. சேனையின் மிகச்சிறிய பிரிவைப் போருக்குச் செலுத் திச் செல்பவன், கிராமணி எனப்பட்டான். வ்ராஜபதி என்ப தும் இவனையே குறிக்கும். அரசனது சுற்றத்தில் புரோகிதன் முக்கிய இடம் வகித்தான். இருக்குவேதப் பாடல்களிலிருந்து புரோகிதர்கள் அரசர்களுடன் போர்க்களத்திற்குச் சென்றர் கள் என ஊகிக்கக் கூடியதாயிருக்கிறது. தன் மந்திரங்களா லும் உச்சாடனங்களாலும் அரசன் வெற்றி பெற இவர்கள் வழி வகுத்தனர் எனக் கருதப்படுகின்றது. இதற்குப் பிரதியு பகாரமாக அரசன் இவர்கட்குப் பெரிதும் பொருள் வழங் கினன். இருக்குவேதத்தில் வரும் தானஸ்துதிகள் கொடை வள்ளல்களான அரசர்கள் கவிகளுக்கும் புரோகிதர்களுக்கும் வாரி வழங்கிய பரிசுகளைப் பற்றிக் கூறுகின்றன.
அரசனது சக்தி சாதாரண வேளைகளில் அவன் நினைத் ததை எல்லாம் செய்ய இடம் அளிக்கவில்லை. மக்களின் குரலை எழுப்புவதற்கு வாய்ப்புப் பெற்றவர்களாய்த் தனிக் குழுவி னர் நியமிக்கப்பட்டிருந்தனர். இக்குழு சமிதி என்றும் சபை என்றும் இருக்கு வேதத்தில் கூறப்பட்டுள்ளது. லுட்விக் என் னும் அறிஞர், சபை வேறு சமிதி வேறு ஒவ்வொன்றும் தனித்தனி வெவ்வேருண இருவகைக் குழுக்களையே குறிக்கும் எனக் காட்டியுள்ளார். மக்கள் தேர்ந்தெடுத்த அங்கத்தின ரையுடையது சமிதி என்றும், நாட்டின் முக்கிய பிரமுகர்

43 I கா. கைலாசநாதக் குருக்கள்
அங்கம் வகிப்பது சபை என்றும் இவர் கூறியுள்ளார். சிம்மர் என்பவர் சமிதி குடிமக்களின் பெருங் கூட்டமென்றும், சபை கிராமத்தில் காணப்படும் கூட்டமெனவும் கருதுவர். அரச னும் சமிதிக் கூட்டங்களிற் சமூகம் அளித்ததாகக் குறிப்புகள் காணப்படுகின்றன.
இருக்கு வேதத்திலுள்ள பாடல்களிலிருந்து அக்காலச் சூழல் எப்படி இருந்திருக்கலாம் என ஊகித்தறிய முடியும். அக்கால மக்களிடை நிலவிய குடும்ப வாழ்க்கை, சாதிப்பாகு பாடு, விவாகமுறை, பெண்கள் நிலை, கல்வி, விளையாட்டுக் கள் பொழுது போக்கு, உணவு, உடை அணிகலன், பிணி, பிணி நீக்கும் மருத்து, ஆரோக்கிய வாழ்வு ஆகியவற்றைப் பற்றிச் சுருக்கமான குறிப்புக்களைக் கீழே காணலாம்.
குடும்பங்களாக இயங்கியது அக்காலச் சமூகம். ஒவ் வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு தலைவன் இருந்தான். இருக்கு வேதத்தில் வரும் “சுனஸ்சேபன் கதையை ஆதார மாகக் கொண்டு குடும்பத்தில் தாய் தந்தையர்களுக்கு அமைந்து குழந்தைகள் வளர்ந்து வந்தார்கள் என்பதை அறியலாம். இருஜிஸ்வான்? என்பவனுக்குத் தந்தை அவன் கண் இழக்கும்படி தண்டித்தமை குடும்பத்தில் உள்ள கட்டுப் பாட்டையே ஒரளவிற்கு எடுத்துக் காட்டுகின்றது. குதில் ஈடுபட்டுப் பொருளிழந்தவனை அவன் தந்தை தாயாரும் உடன் பிறந்தோரும் வெறுத்தொதுக்கினர். நலம் விரும்பித் தந்தையரும் மக்களை அன்புடன் பேணி வந்தனர். குடும்பத். தில் உறுப்பினர் எல்லாரும் ஒற்றுமையை நாடி ஒன்ருய் வாழ்ந்தனர். விருந்தனரை ஒம்பும் பண்பும் இருக்கு வேதங் குறிக்கும் சூழலில் போற்றத்தக்க வகையில் அமைந்து விளங்: கியது. தாம் அடிக்கடி வணங்கும் கடவுளான அக்கினியை அதிதி என்னும் சிறப்புப் பெயர் இட்டு அழைத்தனர். வீட் டுக்கு வருபவர்கள் பெறும் உபசரணை சிறந்த முறையில் அமைந்திருந்ததென்பது நாம் தெளிவாக உணரக்கூடியதாக இருக்கின்றது. அதிதிகளை உபசரிக்கும் இவ்வழக்கமே நாள டைவில் விரிந்து வளர்ந்து இல் வாழ்வான் தினந்தோறும்

Page 32
வடமொழி இலக்கிய வரலாறு / 44
செய்யவேண்டிய பஞ்சயஞ்ஞம் எனப்படும் ஐவகை வேள்வி களுள் ஒன்ருகத் தனியிடம் பெற்றது.
உலகில் வேறெங்கணும் காணமுடியாத வகையில் சாதிப் பாகுபாடு இந்தியாவில் இருந்து வருகின்றது. நான்கு பிரி வாக முதலில் பிரிக்கப்பட்ட சமூகம் ஐந்தாம் வகையாக விரிந்து பின்னர் ஒவ்வொரு பிரிவும் தனித்தனி பல பிரிவுக *ளாகப் பிரிந்து பெருகி இப்பொழுது ஆயிரக்கணக்கான உட் பிரிவுகளை உடையதாகக் காணப்படுகிறது. முதன் முதலில் தொழில் பற்றித் தோன்றிய பிரிவு, நாளடைவில் பிறப்புப் பற்றியதாகப் பிரிக்கப்படவேண்டிய நிலையை எய்திற்று. பழைய நூலாகிய இருக்கு வேத காலத்தில் சாதிப் பிரிவுகள் எவ்வாறு இருந்தன என்பதை இலக்கியச் சான்று கொண்டு ஆராயலாம்.
இருக்குவேத காலத்தில் காணப்படும் சாதிபற்றிய கருத் துக்களை அறிஞர்கள் பலவாருகக் கூறுகின்றனர். இருக்கு வேதத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும்பிேராமணன், ராஜன் யன், வைசியன், சூத்திரன்? என்னுஞ் சொற்கள் காணப்படு கின்றன. இருக்கு வேதம் முழுவதிலும் சிதறிக்கிடக்கும் சாதிபற்றிக் கூறுவதாகக் கொள்ளப்படும் பகுதிகள். தெளி வுக் குறைவினல் முற்றிலும் பயன்படாது போய் விட்டன. இவற்றை நன்கு விளக்கித் துணிவான முடிவுகளைக் கூறுதல் எளிதன்று புருஷனுடைய நான்கு உறுப்புகளான முகம் தோள், தொடை கால் முதலியவற்றுடன் முறையே பிராம ணன்,கூடித்திரியன், வைசியன்,சூத்திரன் ஆகியோர்தொடர்பு பெற்றுள்ளார்கள். இப் பாகுபாடு இருக்கு வேதங் கூறியோர் இந்தியா எங்கணும் பரந்த பின்னர் நிகழ்ந்ததென்பது சிலர் கருத்து. சிலர் அங்ங்ணமின்றி இது நிகழ முன்னரே இவ்வழக் கம் இருந்ததென்பர். இருக்கு வேதப்பாடல்களை ஆதார மாக எடுத்துக்கூறி இச்சாதிப் பாகுபாடு இருக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்து என்பதைத் தெளிவாக்குவர். பிராமணன் என்னுஞ் சொல் பிரமனின் புதல்வன் என்னுங் கருத்துக் கொள்வதனல் பிராமணன் பரம்பரையாக ஒரே

45 / கா. கைலாசநாதக் குருக்கள்
குலத்தில் தோன்றுபவன் என்பது இவர் கூறும் விளக்கங்க ளுள் ஒன்று. ஆயினும் இருக்கு வேதத்தில் பலவகைப் பிரிவு களில் தேர்ந்த புரோகிதர்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட் டிருக்கின்றமையால் இது வழி வழியாக வர வேண்டியது என்ற கருத்து முற்றிலும் பொருந்தாதென மறுத்துக் கூறப் படுகின்றது. புரோகிதர் அரசனைத் தம் வயப்படுத்தி வைத் திருந்தனர். இவர் தமக்கு மட்டுந் தெரிந்த வேள்விகளைச் சரிவர இயற்றினலன்ருே அரசன் நலனெடு வாழப கூடும். எனவே, பிராமண கூடித்திரியப் பாகுபாடு இருக்கு வேதத் தில் இருந்திருக்கிறது என்னுங் கொள்கை ஏற்புடைத்து. கூடித்திரியர் எனும் ஒரு பிரிவினர் இருந்ததாக இருக்கு வேதப் பாடல்கள் அரசர்களைப் பற்றிக் கூறுவதிலிருந்து அறிகின் ருேம். அரசர்கள் பரம்பரையாக ஆண்டு வருதல் வழமை. யல்லவா? எனவே சாதிப் பாகுபாடு ஏதோ ஒரு வகையில் காணப்பட்டது என்பது மறுக்க முடியாததே. எவ்வாரு யினும் புருஷசூக்தம்? ஒன்றைத் தவிர வேறெந்தப் பகுதி யிலாவது சாதிபற்றி நேரடியான குறிப்புக்கள் கிடையாதத னல் இம்முடிபை நன்கு சிந்தித்தே ஏற்றுக்கொள்ளுதல் வேண் டும். இருக்கு வேதத்தில் உள்ள இன்னெரு சூக்தம் இதுபற். றிச் சில உண்மைகளைச் சுட்டி நிற்கின்றது. தந்தை, தாய், தனயன் ஆகிய மூவரும் வெவ்வேருண மூவகைத் தொழில் களில் ஈடுபடுவர். **ஒருவன் கவி; ஒருத்தி மா அரைப்பவள் மற்றவன் பிணி தீர்க்கும் மருத்துவன்’ என ஒரு பாடல் கூறும். இதிலிருந்து அக்கால மக்கள் பரம்பரையாகத் தொழில் இயற்றி வந்தனர் என்ற கொள்கை பொருந்தாது என்பது தெளிவாகின்றது. ஆனல் இவ்விதம் தொழில் ஆற்றி வருபவர்கள், தாம் ஆற்றும் தொழிலையே தலைமுறை யாகத் தொடர்ந்து செய்தல் வேண்டும் என்ற கொள்கை வேரூன்றி நாளடைவில் தொழிலே சாதியை நிர்ணயிக்க வழி கோலியிருக்கலாம், ஆனல் இது இருக்குவேதத்தில் நிகழ்ந் ததா என்பதுதான் பிரச்சினை. எவ்வாருயினும் ஒன்ருயி ருந்து அளவளாவி உண்ணுதல், விவாகத் தொடர்பு கொள் ளுதல் முதலியன சாதிப் பாகுபாட்டின் விளைவாக வரை

Page 33
வடமொழி இலக்கிய வரலாறு / 46
யறுக்கப்பட்டதெனச் சுட்டக்கூடிய அறிகுறிகள் எதுவும் இருக்கு வேதத்தில் இல்லை.
இருக்கு வேத காலத்தில் பெண்கள் நிலையையும், பாடல் களை ஆதாரமாகக் கொண்டு ஒரு சிறிது எடுத்துக் கூறலாம். விவாகமாகாத பெண்கள் பருவமடைந்தோராய்த் தாய் தந் தையருடன் வசித்து வந்ததாக அறிய முடிகின்றது. சிறு பிராயத்திலல்லாமல், பருவம் முதிர்ந்து பின்னரே பெண்கள் விவாகஞ் செய்தனர். காதலித்த ஆடவரை அடைய வேண் டிப் பெண்களால் அணியப்பட்ட அணிகலன்களைப் ப்ற்றிய குறிப்பும், தன் காதலியைச் சந்திக்கச் சென்ற காதலன் வீட் டில் உள்ளோரைத் துயிலச் செய்வதும், காதலன் காதலிக் குக் கொடுக்கும் பரிசுப் பொருள்களைப் பற்றிக் கூறும் பகுதி யும், பெண்கள் பருவம் எய்திய பின்னரே மணம் புரிந்தனர் என்பதைத் தெளிவாக்குகின்றன. விருப்பத்திற்கிணங்கத் தாமே தேர்ந்து மணம்புரிதலை வரையறுக்கும் தடைகள் அக் காலத்திலே இருந்ததாகத் தெரியவில்லை. தந்தை மகள், உடன்பிறந்தவன், உடன் பிறந்தவள் ஆகியோர் ஒருவரை யொருவர் மணம் புரிதல் மட்டும் தடை செய்யப்பட்டிருந் தது. பொருள் கொடுத்துப் பெண்ணைப் பெறும் வழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கலாம். ஊறுபட்ட உடம்பினரா யின் பொருள் கொடுத்தே பெண்களுக்கு மணம் முடித்து வைத்தனர். புருமித்திரன்’ புதல்வியை விமதன்? கவர்ந்து சென்ற சம்பவம் எட்டுவகை மணங்களுள் ஒன்ருன இராக் கத* விவாகத்தை நினைவூட்டுகின்றது.இது பெண்ணின் விருப் பத்துக் கிணங்கவே நிகழ்ந்ததனல் காந்தருவ? மணமுறையும் இங்கு உணர்த்தப்படுகின்றது. இருக்கு வேதத்தில் விவாகக் திரியைகள் பற்றிய குறிப்புக்களும் உள்ளன. மணமகனும் அவனைச் சார்ந்தவர்களும் மணமகள் இல்லம் சேருவர். அங்கு மணமகள் அழகுற அலங்கரிக்கப்பட்டுத் தோற்றமளிப் பாள். அத்தருணம் கிரியைகள் பல நடைபெறும். பெண் னின் கையைப் பிடித்துக் கொண்டே மணமகன் அக்கிணியை வலம் வருவான், கைப்பிடித்தல் வலம் வருதல் என்னும் இரண்டு மணவினையின் பொழுது நிகழும் முக்கியமான

47 / கா. கைலாசநாதக் குருக்கள்
கிரியைகளாம். மணமகன் மனைவியை அழைத்துக்கொண்டு ஊர்வலமாகத் தன் மனைக்கு ஏகுவன். மணமான பெண் குடும்பத்தில் முக்கிய இடம் வகிப்பாள். யாகம் வேட்டல் முதலிய கிரியைகளில் எல்லாம் அவளுக்குத் தனி இடம் உண்டு. மணம் புரிதலின் நோக்கம் சிறந்த ஆண்மகனைப் பெறுதலே. பெற்ருேர் பெண்குழந்தைகளை அதிகம் விரும் பியதாகத் தெரியவில்லை. மக்கட் பேறின்மையும் ஒருவகை வறுமை என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பிள்ளைகளை எடுத்து வளர்த்தல் விரும்பப்படாத தெனினும் வழக்கில் இருந்திருக்கின்றது. பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்ததற்கு நேரடியான சான்றுகள் கிடையா. சிதையின் மேல் ஏறிய பெண்ணைக் கீழே இறங்கும்படி கூறும் பாட் டொன்று காணப்படுவதிலிருந்து இவ்வழக்கு இருந்திருக்க லாம் என ஊகித்தற்கு இடமுண்டு. இவ் வழக்கம் நன்கு பரவவில்லை என்றும், இது அரசர் குலத்தில் மட்டும் இருந் திருக்கலாம் என்றும் சிலர் கருதுவர். கணவனை இழந்த பின் னரும் காரிகையர் மறுவிவாகம் செய்ததாகச் சில குறிப்புக் கள் காணப்படுகின்றன. இருக்கு வேதம் போற்றுவது ஓராண் மகன் ஒரு பெண்ணை மணம் புரியும் முறையேயாயி னும் பல பெண்களை மணம் புரியும் வழக்கமும் பயின்று வற் தது. பல பெண்கள் ஒரே கணவனுடன் வாழ்ந்த வாழ்க்கை வழக்கிலிருந்ததற்கு ஆதாரம் ஏதும் இல்லை.
இருக்கு வேத காலத்தில் கல்விமுறை எத்தகையது என் பதை இங்கு கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு விரித்துக் கூறுதல் எளிதன்று. சிற்சில குறிப்புக்களை மாத்திரமே கூற லாம். தவளைகள் கத்துவதை வேதங்களை உரக்க ஒதுவது டன் ஒப்பிட்டுக் கூறும் பாட்டொன்று உண்டு.*பிரமசாரி குக் தம்” என்று வேருெரு பாட்டும் உண்டு. இவ்விரண்டு பாட்டுக் களையும் ஆதாரமாகக் கொண்டு அக்காலக் கல்வி முறையைப் பற்றி ஒரு சிறிது மட்டும் ஊகித்தறியலாமே ஒழிய இதுபற்றி விரிவாக ஒன்றும் கூற முடியாது. எழுத்துக் கலை பயின்ற தற்கு இங்கு ஆதாரம் எதுவும் இல்லை. வேதங்கள் கேட்டு வாயால் ஒதப்பட்டவையே யன்றி, எழுத்துக்களால் பொறிக்

Page 34
வடமொழி இலக்கிய வரலாறு | 48
கப்பட்டதற்கே ஆதாரம் இல்லாதிருக்கும் பொழுது இருக்கு வேதத்திலேயே எழுத்தைப் பற்றிய குறிப்புக்களைக் காணு தல் எவ்வாறு முடியும்? சங்கீதக் கலை தோன்றி வளர்ந்ததற்கு அறிகுறிகள் இங்கு உண்டு. வாசிக்கப்படும் வாத்தியங் களான வீணை முதலியனவும், வாயால் ஊதி இசைக்கப்படும் கருவிகளான குழல் முதலியனவும் குறிக்கப்பட்டுள்ளன. சூது விளையாட்டு, தேரோட்டப் பந்தயம் முதலிய பொழுது போக்குகள் அக்கால மக்களைக் கவர்ந்தன.
பாலையும் பாலிற் பிறந்த வெண்ணெய், தயிர் முதலி யனவற்றையும் மக்கள் முக்கிய உணவாகக் கொண்டனர். யவம் என்னும் தானியத்தை மாவாக அரைத்து பாலுடன் சேர்த்து அப்பங்களாகச் சுட்டனர். அக்காலத்தில் காய் கறி களும் பழங்களும் உணவுப் பொருள்களாகப் பயன்பட்டன. ஆடு, மாடு முதலியவற்றின் இறைச்சியும் உணவாயிற்று. அக் கால மக்கள் பசுவைக் கொல்லாது பேணி விலையுயர்ந்த பொருளாகப் போற்றினர். சோமலதை" என்னும் ஒருவகைக் கொடியின் பிழிவுத் தேறல் யாகங்களில் பாலுடன் கலந்து பருகினர். சுரா’ எனப்படும் குடிவகையைத் தானியங்களிலி ருந்து வடித்தெடுத்துக் குடிக்கவும் தலைப்பட்டனர். இது பாவங்களுக்கும், தெய்வ நிந்தைக்கும் ஆளாக்குவதால் வெறுத்தொதுக்கப்பட்ட-து:
மக்கள் மேலுடை, கீழுடை என இருவகையாக உடை களை உடுத்தனர். *மருத்துக்கள்? என்னும் தெய்வங்கள் மீது பாடிய பாட்டுக்களில் மான் தோல் உடைகள் குறிப்பிடப் பட்டுள்ளன. ‘முனிகள்? அழுக்கேறிய உடைகளை உடுத்ததாக முேனி சூக்தம்” கூறும்.கூத்தாடும் பெண்கள் கரை பொருந்திய உடைகளை அணிந்தனர். மருத்துக்களின் உடைகள் பொன் வேலைப்பாடுடையவை. ஆண்களின் உடைகளுக்கும் பெண் களின் உடைகளுக்கும் இடையில் வேறுபாடு எதுவும் இருந்த தாகத் தெரியவில்லை. காதணிகள், தலையிலனியப்பட்ட அணிகள், விரலணிகள், நிஷ்கம்" எனப்படும் கழுத்தணி, மணிகள், பீருக்மம்? எனப்படும் பொன்னலான அணிகளும்

49 கா. கைலாசநாதக் குருக்கள்
மாலைகளும் அக்காலத்து மக்கள் அணிந்த அணிகலன்களுள் குறிப்பிடத்தக்கவை. தலைமயிரைச் சீர்பட அமைத்துக் கபர் தம் எனப்படும் முறையில் தலைக்கோலம் புனையும் வழக்கும், பெண்கள் கூந்தலைப் பின்னல்களாகப் பினைத்தமைக்கும் முறையும் நிலவி வந்தன. மக்கள் மீசை தாடி இரண்டும் உடையவர்கள். இவற்றை மழிக்கும் முறையும் வழக்கில் இருந்தது.
ஆங்காங்கு வரும் குறிப்புகளிலிருந்து பசுஷ்மா, க்ஷயம்" முதலிய நோய்களைப்பற்றியும் இவ்வகைத் நோய்களைத் தவிர்க்கவல்ல மூலிகை வகைகளைப் பற்றியும், இவைகளே அறிந்து நோய்களை களையவல்ல வைத்தியர்களைப் பற்றியும் அறியக் கூடியதாக இருக்கின்றது. அஸ்வினிதேவர்கள் சிறந்த வைத்தியர்களாகக் கூறப்பட்டுள்ளார்கள். கண் பார்வை அற்றவர்களுக்குக் கண் பார்வை அளித்தும், நோய் பல தீர்த்தும் கைகால் இழந்தவர்க்கு அவற்றைப் பொருத் தியும் இளமை குன்றிய “சியவனர்” என்பவர்க்குத் திரும்பவும் இளமையை வருவித்தும் அக்கால மருத்துவர் சிகிச்சை முறையை வளர்த்த வரலாற்றைக் கூருமற் கூறும் பகுதி களும் இருக்கு வேதத்தில் இடம் பெற்றுள்ளன.
இருக்கு வேத காலத்தில் உழவுத் தொழில் நன்கு வளர்ற் திருந்தது. உழவர் நிலத்தில் மரத்தாலான கலப்பைகள் ஆழப்பதியும் வண்ணம் மாடுகளைப பூட்டி உழுதனர்; விதை களை விதைத்தனர்; அவை முளைத்து வளர்ந்து கதிர்களாகி முற்றியதும் அரிவாளால் வெட்டினர்; வெட்டிய கதிர்களை அடித்துப் பின் அவற்றைத் தூவித் துப்புரவாக்கினர். பீயவம் என்னும் ஒருவகை நெல் பெரும்பாலும் விளைவிக்கபபட்டது. அரிசியைத் தரும் நெல் பயிரிடப்பட்டதற்குச் சான்று எதுவும் இல்லை.
அக்காலத்தில் எருதுகளும் பசுக்களும் மிகவும் விலைமதித் துப் போற்றப் பட்டன. இவைதாம் அக்காலத்துப் பெருஞ் செல்வங்கள். வேட்பிப்போர் யாகங்களில் இவற்றையே
வ=4

Page 35
வடமொழி இலக்கிய வரலாறு | 50
தட்சணையாக வழங்கினர். பசுவே செல்வத்தை அளவிடுங் கருவியாக விளங்கிற்று எனவும் கூறலாம். இது மட்டுமா? பசுக்கள் போருக்கும் காரணமாய் இருந்தன. பசுவைத் தேடு தல் என்னும் கருத்தை உணர்த்தும் கவிஷ்டி என்னுஞ் சொல் போரைக் குறிக்கும். இது நிற்க, பசு விலை மதிப்பற்ற பெரும் பொருளாக விளங்கினமையால், போற்றிப் பேணப்பட்டு வந்தது. கொல்லாது பாதுகாக்கப்பட்டு வந்தமையால் மக்களிதை "அக்னயா? என அழைத்தனர். அக்னயாஎன்ருல் கொல்லப்படத் தகாத என்பதாம். பசுக்கள் பகலில் மேய விடப்பட்டன. பகல் முழுதும் மேய்ந்த பின் அவை பட்டியை நோக்கித் திரும்பின. இவை கயிற்ருல் பிணைப்புண்டிருக்கும் கன்றை நக்கும் காட்சி அழகு மிக்கது; இவை காதுக்கிணிமை யான ஒலியை எழுப்பி கன்றைக் கூவி அழைப்பது கவிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைப்பற்றி கூறும் பாடல்கள் பல காணப்படுகின்றன.
வியாபாரம் சிறந்த தொழிலாக விளங்கிற்று. தாம் வணங்கும் தெய்வங்களையே இலாபம் கருதி வழிபடுபவர் என்றல்லவா இம்மக்களைப் பற்றி மேனுட்டறிஞர்கள் கூறி யிருக்கின்றர்கள்! பண்டமாற்று அக்காலப் பெருவழக்கு. பசுவைக்கொண்டே பண்டங்களின் விலையை நிர்ணயித்த னர். நிஷ்கம் என்னுஞ் சொல் பொருளளவையே முதலிற் குறித்து நின்றது. நாளடைவில் இது ஒரு நாணயத்தை குறிக்க வந்தது. போரில் ஈட்டிய வெற்றி அரசருக்குப் பெருஞ் செல்வத்தைப் பெற்றுக் கொடுத்தது. இச்செல்வம் பெரும்பாலும் மற்தையாகப் பெருகிய ஆடு மாடுகளாகவும் குதிரைகளாகவும் பொலிந்து விளங்கிற்று. தனிப்பட்ட ஒவ் வொருவனுக்கும் வரும் வருமானத்தில் பெண்ணுக்காகக் கொடுக்க வேண்டிய பொருள் மிகவும் அதிகமானதே. அசை வுள்ள பொருள்கள் பண்டமாற்றுக்காகப் பரிமாறப்பட்டன.
**கடல் இருக்கு வேதத்தில் கூறப்படவில்லை. கடலிற்
கப்பல் ஒட்டியதற்கறிகுறிகள் காணப்படாமையால் இதைப் பற்றித் தெளிவாக ஒன்றுங் கூறல் இயலாது. நாவாய் எனப்

51 I கா. கைலாசநாதக் குருக்கள்
படும் கப்பல் அகழ்ந்து எடுக்கப்பட்ட சிறிய மரக்கலங்களே யாம். பஞ்சாப்பின் அகன்ற நதிகளைக் கடக்க இவை பயன் பட்டிருக்கலாம். பாய்களைப் பற்றியோ, மரக்கலங்களைத் திருப்பிச் செலுத்தும் கருவிகளைப் பற்றியோ, நங்கூரத்தைப் பற்றியோ குறிப்புக்கள் எதுவும் இல்லை. எனவே வேத காலத்தில் கப்பலோட்டுங்க.ைநன்கு விரிந்து வளரவில்ல் யென்றே நினைக்க வேண்டியிருக்கிறது. கடல் வாழ்க்கையைக் குறிக்கும் உவமைகள் இது பற்றிய குறிப்புரைகள் இருக்கு வேதத்தில் இடைக்கிடையும் இடம் பெறவில்லை. இந்து நதி பாய்ந்து ஒடிக் கடலைச் சேரும் பகுதிகளைப்பற்றி ஒன்றுமே கூறப்படவில்லை" என்று சிலர் எடுத்துக் கூறுவர். இவற்றை யெல்லாம் அறவே மறுத்துச் சமுத்திரம், கப்பல் ஒட்டும் கை என்பன எல்லாம் இருக்குவேத கால மக்களுக்கு நன்கு தெரிந் தவைகளே என ஒரு சாரார் வற்புறுத்திக் கூறுவர்.
இருக்கு வேதத்திற் காணப்படும் உவமைகளில் இருந்து போர், ஓட்டப்பந்தயம் முதலியவற்றுக்கு வேண்டிய தேர் களையும், உழுவதற்கு இன்றியமையாத கலப்பைகளையும், பண்டங்களை இடத்துக்கிடம் கொண்டு செல்லவல்ல வண்டி களையும் அமைக்கும் ஆற்றல் படைத்த தச்சர்கள் மரவேலை களில் ஈடுபட்டு வந்தனர் என்பதை அறியலாம். உலோகங் களில் வேலை செய்யுந் திறமை வாய்ந்த கருமான், பறவை களின் இறகுகளைத் துணைக் கொண்டு இயக்கப்படும் உ&ல களில் உலோகங்களை உருக்கிப் பல உருவங்களில் பொருள்களை வடித்துக் கொடுத்தான். அயஸ் எனப்படும் உலோகம் இரும் பையோ, அன்றிச் செம்பைபோ அல்லது வெங்கலத்தையோ குறித்திருக்கலாம். குடிப்பதற்கும் உண்ணுவதற்கும் பயன் படும் மட்கலங்கள் உபயோகத்தில் இருந்தன. தோலைப் பதனிட்டுத் தொழில் செய்வோனும் திறம்படத் தன் தொழி லாற்றி வந்தனன். வில் ஞாண் குதிரைகளைப் பிணைக்கும் கடிவாளம் முதலியன அமைப்பதற்கு மாட்டுத் தோலையே இவர்கள் பயன்படுத்தினர்கள் தண்ணிரைச் சேகரித்து வைக்க நீர்ப்பைகள், தோலாலேயே தைத்து உபயோகப் படுத்தப்பட்டன. மேலும் புல் ஓலை முதலியவற்ருல் பாய்

Page 36
வடமொழி இலக்கிய வரலாறு | 52
முடைதல், துணி நெய்தல், நெய்தவற்றை வேண்டியவாறு இணைத்துத் தைத்தல் முதலானவற்றைப் பெண் .ளே பெரும் பாலும் செய்து வந்தனர். கூத்தாடி, அம்பட்டர் முதலா னேர் தத்தம் தொழில்களைச் செவ்வனே செய்து வந்தனர். இவர்களுள் ஏற்றத்தாழ்வு எதுவுமே இருந்ததாகத் தெரிய வில்லை. வேட்டையாடும் வழக்கம் அரசர்களிடம் இருந்து வந்தது.
பட்டணங்கள், கிராமங்கள் என்ற பாகுபாடு அக்காலத் தில் இருந்து வந்தது எனத் தெளிவாகத் தெரிகின்றது. எனி னும் பெரும் பட்டணத்தைப் பற்றிய குறிப்புக்கள் எதுவும் காணப்படவில்லை. கிராமம் பாதுகாப்பை நோக்காகக் கொண்டு ஒன்றுடன் ஒன்று நெருங்கி அமைந்த பல வீடு களைக் கொண்டு விளங்குவது. பட்டணத்தைக் குறிக்குஞ் சொல் மண்ணுல் அமைக்கப்பட்ட அரணையுடையதும் கற் சுவர்களாற் பாதுகாக்கப்பட்டதுமான இடங்களையே குறிக் கின்றது எனக் கருத இடமுண்டு. இவைகள் அடிக்கடி அழிக்கப்பட்டதைச் சுட்டி வரும் வருணனைகளில் இருந்து யுத்தம் நிகழ்ந்தமையையும் உணரலாம். வீடுகள் மரத்தால் ஆக்கப்பட்டும் மூங்கிற் கம்புகளால் கட்டப்பட்டும் விளங் கின.
வழிகளைக் காக்கும் தெய்வம் எனக் கூறப்படும் பூஷனைப் பற்றி வரும் குறிப்புக்களில் இருந்து வழிகளையும், எனவே தெருக்களையும் இவை வழியே செல்லும் தேர்களையும் பற்றி அறிகின்ருேம். தேர்களை இழுப்பதற்கு மாடுகளையும், குதிரைகளையும் அவற்றிற் பிணைத்தனர். இதைவிடக் குதிரை மீதேறிச் சவாரி செய்யும் வழக்கமும் இருந்தது. பிரயாணங் கள் அடிக்கடி நடை பெற்றன. இவை எவ்வித இடையூறு மின்றி நிறைவேறத் தெய்வங்களை வேண்டியதாகக் கூறும் பகுதிகள் இருக்கு வேதத்தில் வருகின்றன.
இருக்கு வேதம் எடுத்துக் கூறும் வழிபாட்டை இயற்கை வழிபாடு எனச் சிலர் கூறுவர். உலகில் இயல்பாகக் காணப் படும் நீர், நிலம் விண், தீ, காற்று வெய்யோன், விடியற் பொழுது முதலிய இயற்கைக் கூறுகளை வேதகால மக்கள்

53 / கா. கைலாசநாதக் குருக்கள்
வழிபட்டு வந்தனர் என்பது இவர்களது கருத்து. இதை அநுவதிக்கும் முகமாகப் பாடல்கள் பல காணப்படுகின்றன. இப்பாடல்களை உற்று நோக்கினல், இக்கருத்துத் தெளிவா கும். பழைய பாடல்களையுடைய இருக்கு வேதம் சூரிய பசு வான வருணிப்பதாக நாம் காண்பதில்லை. பாடல்களில் குரியணையே காண்கிருேம். கவிகள் இங்கு சந்திரன் என் னும் தெய்வத்தைப் போற்றிக் கூறவில்லை; சந்திரனையே போற்றினர்கள். அவர்கள் பாடல்களிற் பாடியது காற்றுக் கடவுளையன்று! காற்றையே பாடினர்கள். இம் முன்னேர் களின் பாடல்கள் நிலக் கடவுளைப் பற்றி எழவில்லை; நிலத் தைப் பற்றியே எழுந்தன. வேதகால மக்கள் ஆகுதியளித்த தாக இருக்கு வேதம் கூறுவது அக்கினி தேவனுக்கன்று, சுவா லைகளைப் பரப்பி நின்று, சொரியும் நெய்யினை அவாவுடன் பருகும் அக்கினிக்கே அளித்தனர். இருக்கு வேதப் பாடல் களுள் மிகப் பழையவை எனக் கருதப்படும் பாடல்கள் இத் தகைய வருணனைகள் மிகுந்தவையாய் இவ்வுண்மையினையே தெளிவாகத் தெரியவைக்கின்றன. இயற்கைப் பொருள்கள் தம் இயல்பான நிலையுடன் தெய்வப் பண்புகளும் சிறிது சிறி தாக விரவப்பெற்று நாளடைவில் தெய்விக நிலை எய்திய வரலாற்றை இருக்கு வேதமே தெளிவாக்குகின்றது.
வேதகாலச் சமயநிலையை விளக்க எழுந்த விமரிசகர்கள் யாஸ்கரைப் பின்பற்றி இருக்கு வேத தெய்வங்களை மூவகை யாக வகுத்துள்ளார்கள். விண்ணைச் சார்ந்த தெய்வங்கள்? ஒரு வகையின. *மண்ணைச் சார்ந்தவை? வேறினத்தன. விண் ணுக்கும் மண்ணுக்கும் நடுவில் உள்ள "இடை வெளியைச் சார்ந்தவை" மூன்ரும் பிரிவின. விண்ணின் அதி தெய்வமான "தியெள, மித்திரன், வருணன், ஆதித்தியன், சூரியன், சவிதா, பூஷன், விஷ்ணு, இரு அஸ்வினி தேவர்கள், உஷை, ராத்திரி" என்னுந் தெய்வங்கள் விண்ணுலகுடன் நெருங்கிய தொடர்பு வாய்ந்தவை. "பிருதுவி, அக்கினி, பிருகஸ்பதி, சோமன், துவஷ்டா? என்போரும், சிந்து, விபாட், சதுத்ரீ, சரஸ்வதி” போன்ற நதிகளும் மண்ணுலகுடன் பிணைப்பு மிக்கி வை. ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்ட @øðal aasidir

Page 37
வடமொழி இலக்கிய வரலாறு / 54
இந்திரன், திருத அபத்யன், அஜ ஏகபாதன், உருத்திரன், மருத்துக்கள் வாயு, பர்ஜன்யன் என்பவர்களும்°அப்பு’ எனப் படும் நீர்த்தெய்வமுமாம். இருக்கு வேதப் பாடல்கள் பெரும் பாலும் இத்தெய்வங்களைப் போற்றும் முகமாகவே அமைந் துள்ளன. இயற்கைப் பொருள்கள் தெய்வங்களாக மாறும் நிலையை இப்பாடல்கள் தெளிவாகக் காட்டுகின்றன என்பது முன்னமே சுட்டப்பட்டது. இது இருக்கு வேத சமயத்தின் மிகப் பழைய நிலை. இதைத் தொடர்ந்து இத்தெய்வங்களின் பண்புகளைக் கூறும் அடைமொழிகள் தனியே பிரிந்து, அடை. மொழிகள் என்னும் தன்மை நீங்கப் பெற்று, வேறு தனித் தெய்வங்களின் பெயர்களாக அமைந்து வேறு தெய்வங்களைக் குறித்து நிற்பதையும் இங்கு காண்கின்ருேம். விவஸ்வான்? என்பது சூரியனின் பண்பைச் சுட்டும் ஓர் அடைமொழி, எங்கனும் ஒளி வீசுபவன் என்பது இதன் பொருள். நாளடை வில் இவ்வடைமொழி சூரியனின்றும் வேருகி ஒரு புதுத் தெய்வத்தைத் தோற்றுவித்தது. விவஸ்வான் வேறு சூரியன் வேறு என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பூஷன்,மித்திரன்" முத லிய பெயர்களும் இவ்வாறே முதலிற் சூரியனைக் குறித்தன. நாளடைவில் இவை வெவ்வேறு தெய்வங்களின் பெயர்களா யின. இவை தனித்தனி ஒவ்வொரு தெய்வத்தைக் குறிப்பிடு வன. இனி, இவ்வாறு பல்வேறு நிலையிற் காணப்படும் தெய் வங்கள் எல்லாம் எவ்வியல்பின, எப்பண்பின, எவ்வுருவின என்பவற்றையெல்லாம் உற்று நோக்குவோம்.
இருக்கு வேதம் குறிப்பிடும் தெய்வங்களுக்குட் தலை சிறந்த தெய்வமெனக் கருதப்படுபவன் வருணன்?. பாடல் கள் இவனை மிக உயரிய நிலையில் வைத்துச் சித்திரிக்கின்றன. வருணனை மட்டும் தனியே போற்றும் பாடல்கள் பன்னிரண் டே. இத்தெய்வத்தின் கை, கால் முகம் கண்கள் முதலிய உடலுறுப்புகள் கூறப்பட்டுள்ளன. இதைவிட நடத்தல், பவனி வருதல், இருத்தல், உண்ணுதல் முதலிய செயல்களை வருணன் செய்வதாக இப்பாடல்களிலிருந்து அறிகிருேம்.இவ் வருணன் சூரியனைத் தன் இரு கண்களில் ஒன்ருகக் கொண்டு விளங்குகின்றன். இக்கண்ணுலேயே வருணன் உலக நடவடிக்

55 I கா. கைலாசநாதக் குருக்கள்
கைகளை ஒன்றும் விடாது கவனிக்கின்றன். இவன் வேள்விக ளில் தருப்பையின் மீது அமருபவன். பளபளக்கும் பொன் ஞடை அணிந்து தன் மாளிகையில் அமர்ந்து மக்கள் செய்யுங் காரியங்களைக் காண்கிருன். இவனைச் சூழ்ந்து சாரணர்கள் காத்திருப்பர். இவர்கள் இரு உலக நிகழ்ச்சிகளையும் நோக்கு வர். சூரியன் இவனது தூதன். இத்தூதன் பொன்னிறகு படைத்தவன். வருணன் அரசனெனப் போற்றப்படுவான். இவன் அரசன் மட்டுமல்லன். மன்னர் மன்னனுகத் திகழும் *சக்கரவர்த்தி." வருணன் கோலோச்சும் முறை அவனரசு புரியும் தெய்வீகம் வாய்ந்த இடங்கள், அவனது 'மாயா சக்தி? என்பனவற்றைப் பற்றி இருக்கு வேதப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.ஒழுங்கைக் கடைபிடிப்பதில் இவன் ஈடினை யற்றவன். இவன் கடைபிடிக்கும் ஒழுங்கு இருதம், நியதி, விரதம்? என்றெல்லாம் கூறப்படும். இவன் ஆணையாலேயே இயற்கை நியதியின் வழி நின்று நெறிப்பட்டு இயங்குகின்றது. விண்ணையும் மண்ணையும் உரிய இடத்தில் நிலை நிறுத்தியவன் இவனே. இவன் வானில் பருதியை ஒளிரச் செய்தான். ஒளி ரும் பருதி செல்ல வழியையும் வகுத்தான். நீரில் நெருப்பை யும், மலையில் சோமக்கொடியையும் தோற்றுவித்தான். இவன் கட்டளைக்கமைந்து சந்திரன் இரவில் தண்ணுெளி பரப்புகின்றன். சந்திரன் சுற்றி வருவதும் இவன் பெருமை யினலேயே. இவனுல் தாரகைகள் பகலில் ஒளி குன்றிக் கரைந்துறைகின்றன. இவ்வண்ணம் இவன் பகலிலும் இரவி லும் ஒளிக்கு இறை ஆகின்றன். நீரை ஒழுங்கு படுத்துபவன் வருணனே. ஆறுகள் இவன் ஆணைக்கமைந்து ஓடுகின்றன இவன் மாயாசக்தி பெருஞ் சிறப்பு வாய்ந்தது. இச்சக்தியின் பெருமையால் பெருகும் ஆறுகள் வேறெங்கணும் செல்லாத வாறு கட்டுண்டு கடலை நோக்கி விரைந்து பாயினும், அதை நிரப்பாதவாறு அதனுள் விழுகின்றன. இவன் நிலை நிறுத்திய இருதம் எனப்படும் ஒழுங்கைத் தேவர்களும் கடைபிடிப்பர். இவன் எல்லாம் அறிந்தவன். பறவைகள் விண்ணினு டாகப் பறப்பதையும், அண்மையில் காற்று ஈர்த்துச் செல் லும் கப்பல்களையும் பற்றி அவன் நன்கறிவான். இதுவரை நிகழ்ந்தனவற்றையும், இனி நிகழ இருப்பனவற்றையும் எதி

Page 38
வடமொழி இலக்கிய வரலாறு | 56
தகைய இரகசியங்களாயிருப்பினும் அவன் நன்கறிவான். மக்கள் கடைப்பிடிக்கும் நேர்மையையும், அவர்கள் நேர் நெறியிலிருந்து பிறழ்தலையும் கவனித்து நிற்பான்.
நேர்மையுடன் ஆளும் திறமை வாய்ந்த தெய்வமாக வருணனை இருக்கு வேதம் கூறும். பாவச் செயல்கள் இவனது கோபத்தைத் தூண்டும். கோபம் மிகுந்த காரணத்தால் பாவஞ் செய்பவர்களைத் தண்டிப்பான். இவனது பாசங்கள் உறுதியாகப் பிணிக்கவல்லவை. தாம் செய்யும் பாவத்தை யிட்டுப் பச்சாதாபப்படுபவர்களிடம் இரக்கம் காட்டி அவர்கள் செய்த பாவத்தையும் அறிவின்மையால் அவர் முன்னுேர் செய்த பாவத்தையும் பொறுத்து மன்னிப்பான். பாவஞ் செய்தோர் தம் குறை பொறுக்கும்படி வேண்டும் வகையிலேயே?வருண சூக்தங்கள்?எல்லாம் அமைந்துள்ளன.
மித்திரனும் வருணனும் இணைந்து நிற்கும் தெய்வங்கள். இருக்குவேதம் முழுவதிலும், ஒரே ஒரு சூக்தம் மட்டும் மித்திரனுக்கெனத் தனியே உண்டு. இவனுக்கெனக் கூறப் படும் பண்புகள் மிகச் சில. எனவே, இவனது தனிப் பண்பு கள் இவை என எளிதில் கூறமுடியாது. இவன் ஆதித்தன் எனப்படுகிருன் இமைகளை இமைக்காது, மக்களையும் உழவர் களையும் பார்த்து நிற்கும் நிலையில் கவி இவனை வர்ணிக்கின் ருர். சூரியனின் போக்கை வரையறுப்பவன் இவனே. இவ ணுக்குச் சவிதா' என்றும் பெயருண்டு. காத்து நிறுவுவது இவன் நியதியாதலால் விஷ்ணு எனப்படுவான். மூவடியால் உலகை அளந்த பெருமை இவனதே. தூண்டி எழுப்பப்படும் அக்கினி என்றும் இவனைக் கூறுவர். இவனுக்கு நண்பன் என் னுங் கருத்தையுணர்த்தும் மித்திரன் என்னும் பெயர் பொருத்தமானது.அவெஸ்தா"கூறும்பாட்டுக்களைக் கவனித் தால், இவன் சூரியனின் நின்றும் வேருனவனல்லன் என்னும் உண்மை தெரிகின்றது. அன்பு ததும்பும் இயல்பு மித்திரனி டம் சிறப்பாகக் காணப்படும். நண்பன் என்னுங் கருத்தை உணர்த்தி அவன் பெயர் அமைந்திருப்பதையும், நம்பிக்கை செறிந்த நட்பின் அதி தெய்வமாக அவன் அவெஸ்தாவில்

57 / கா. கைலாசநாதக் குருக்கள்
கூறப்பட்டிருப்பதும் இக்கருத்தையே வற்புறுத்துகின்றன. அவெஸ்தா கூறுவதிலிருந்து மித்திரன் என்னும் பெயர் ஒரு காலத்தில் சூரியனைக்குறிக்கும் பெயராக இருந்தது என்பதும் தெளிவாகின்றது.
*ஆதித்தர்கள்? என்னும் குழுவினர் இருக்கு வேதத்தில் ஒன்ருகத் தொகுத்துக் கூறப்படுவர். இவர்கள் அறுவர் என் பதைப் பழைய பாடல்களிலிருந்து அறிகின்ருேம். இருக்கு வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் எட்டாம் ஆதித்தனன *மார்த்தண்டன்?கூறப்படுகின்றன். அதர்வவேதத்தில் இவர் கள் எண்மராக இருக்கின்ருர்கள். பிராமணங்கள் பன்னிரு ஆதித்தர்களைக் குறிப்பிடுகின்றன. இப்பன்னிரு ஆதித்தர் களையே பின்னெழுந்த சமய நூல்களெல்லாம் கூறுகின்றன. இவ்வாதித்தர்களைக் குறிக்க இருக்கு வேதத்தில் வரும் பெயர்கள் கூறும் கருத்துத் தெளிவாக இல்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆதித்தர்கள் அறுவரின் பெயர்கள் வரு கின்றன. இவை “மித்திரன், பகன், அர்யமன், வருணன், தக்ஷன், அம்சன் என்பன. சில இடங்களில் சூரியன் ஆதித்தன் எனப்படுகிறன். இவன் நாளடைவில் ஏழாவது ஆதித்தன் ஆகின்றன். ஆதித்தர்கள் எப்பொழுதும் குழுவினராகவே காணப்படுவர். இக்குழுவில் மித்திரனுக்கும் வருண இணுக்கும் இடம் உண்டு. ஆதித்தர்களிடம், தேவர்களிடம் அமைந்து காணப்படும் பண்புகள் உண்டு. இவர்கள் விண் ணைச் சார்ந்தவர்கள். இவர்களது தாய் அதிதியாவள். இதனுலேயே இவர்களுக்கு ஆதித்தர்கள் என்னும் பெயர் ஏற்பட்டது.
இருக்கு வேதத்தில் பத்துச் சூக்தங்கள் சூரியனைப் போற் றிக் கூறுகின்றன. சூரியனையும் இவனுடன் தொடர்பு படுத் திக் கூறப்படும் ஏனைய தெய்வங்களையும் எடுத்து நோக்கினுல் சூரியனுக்கு உரிய வர்ணனையே இரு இடங்களுக்கும் பொது வாக வந்திருப்பது தெளிவாகும். சூரியனைப் பற்றிக் கூறும் அவனது வட்ட வடிவமான தோற்றம் சூரியனதும், மித்திர னதும், வருணனதும் கண் எனத் தனித்தனி கூறப்பக்

Page 39
வடமொழி இலக்கிய வரலாறு | 58
டுள்ளது. இவன் எல்லாவற்றையும் பார்க்கிறன். உலகம் முழுவதையும் மறைந்து நின்று கவனிக்கின்றன். இவன் மக்களின் நல்லனவும் தீயனவமான இருவகைச் செயல்களையும் கூர்ந்து நோக்குவான். இவன் தேரை விரைவாக இழுத்துச் செல்ல ஏழு குதிரைகள் இருக்கின்றன. பொழுது புலர்தல் இவன் தோற்றத்துக்குக் காரணமாய் இருக்கின்றது. இவன் உதித்தவுடன் மக்களுக்குச் சுறுசுறுப்பை ஊட்டி அவர்களை இயங்க வைக்கிருன். இயங்கும் பொருள்களுக்கும், நிலையியற் பொருள்களுக்கும் இவன் உயிர்க்களஞக விளங்குகின்றன். இவனை உலகம் முழுவதும் பரந்து காணப்படும் பறவை என ஒரு பாடல் கூறுகின்றது. இவன் ஆகாயத்தின் மணி எனப் படுகின்றன். ஆகாயத்தின் நடுவிற் பதிந்துள்ளதும், பல நிறங்கள் வாய்ந்ததுமான கல் என்றும், வலிமை வாய்ந்த படைக்கலம் என்றும், சக்கரம் என்றும் இவனைப் பலவகை யாகக் கவி வர்ணித்துள்ளார். தோலை உரித்துக் களைவது போன்று இவன் இருனேக் களைந்து நீக்குவான். நாட்களைப் பிரித்து அளந்து மக்களின் வாழ்க்கையை நீடிக்கச்செய்வான். நோயை மட்டுமின்றித் தீய கனவுகளையும் நிகழவிடாது விரட்டி ஒட்டுவான். பிராணிகள் அனைத்தும் இவனையே அண்டி வாழ்கின்றன. எல்லாவற்றையும் தோற்றுவிப்பவன் இவனன்ருே பாவமற்றவர்கள் என்று தங்களைப் பற்றி மித்தி ரனிடமும் வருணனிடமும் கூறும்படி மக்கள் இவனை வேண்டுவர்.
பூஷன? என்னுந் தெய்வத்தைப் பற்றி எட்டுச் சூக்தங் கள் இருக்கின்றன. இவை இவனைக் கைகால்கள் முதலிய உறுப்புக்களை உடையவனுக வர்ணிக்கின்றது. ஒருவர் தெளி வாக எடுத்துக் கூறக் கூடிய பண்புகளை இத் தெய்வத்திடம் காணல் அரிது. இச் சூக்தங்கள் இவனது கால், வலக்கை, தாடிசடைமுடி என்பவற்றைக் கூறுகின்றன. இவன் பொன் ஞலான ஈட்டியையும் அங்குசத்தையும் தாங்கி நிற்கின்றன். இவனது தேரை ஆடுகள் இழுத்துச் செல்லும். நன்கு காய்ச் சிய கஞ்சியே இவனுடைய உணவு. இவன் உயிர்களைக் கண் காணித்து வருகின்ருன் இவனது உறைவிடம் விண்ணில்

59 / கா. கைலாசநாதக் குருக்கள்
இருக்கின்றது. பொன் மயமான தன் கையால் இவன் உயிர் களை எழுப்பியும், அவர்களை ஊக்குவித்தும் அருள் புரிகின் ருன். இவனது அழகும் பொன் மயமானதென்பர். இது மண் விண், இடை ஆகிய மூவுலகங்களிலும் நல்லொளி பெருக்கிநிற்கின்றது. தனது பொற்றேரில் ஏறி எல்லா உயிர் களையும் நோக்கியவாறு மேலும் கீழும் நோக்கிச் செல்லுகின் ருன். இவன் மஞ்சள் நிற மயிரினன். முதலில் இவன் தனது ஒளியைக் கிழக்கில் பரப்புகின்றன். இவன் இறந்தவர்களை நற்பண்புடையோர் ஏகவேண்டும் உறைவிடத்திற்கு அழைத் துச் செல்கின்ருன் கெட்ட கனவுகளையும் பாவங்களையும் அரக்கர்களையும் விரட்டி ஒட்டுவான்.நேர்மையை நிலைநாட்டு வான். இந்நேர்மையே இருதம் என்றும் விரதம் என்றும் கூறப்படும், காற்று, நீர், முதலியன இவனல் இயங்குவன. இவன் ஆக்குவது பகலை மட்டுமன்று. இரவையும் இவனே தோற்றுவிக்கின்றன். உயிர்கள் இவனிடம் ஆறுதல் பெறு கின்றன. தெய்வங்கள் இவன் வகுக்கும் வழியை பின்பற் றுவன இவனது விருப்பத்தை மீறுதல் எவர்க்கும் எளி தன்று.இருக்கு வேதத்தில் வரும் மந்திரம் ஒன்று கோயத்திரி? என்றும் சோவித்திரி என்றும் பெயர் பெற்றுப் பிரசித்தமாக வழங்கி வருகின்றது. இது இவனைக் குறித்துப் பாடப்பட் டதே. சவிதா என்னுந்தெய்வத்தைச் சூரியனின்றும் பிரித்து வேருகக் கூறுவர். இவன் சூரியனின் கிரணங்களைத் துணைக் கொண்டு ஒளி பரப்புகின்றன். இவனே சூரியனை இயங்கச் செய்கின்றன். “ஸா? என்னும் வினையடி இயங்குதல் என்னும் கருத்தை உணர்த்தும், சவிதா என்னும் பெயர் இவ்வினை யடி யிடத்துப் பிறந்தது. இது, இவன் இயக்குவிப்பவன், இயக்குவித்தல் இவன் தனிப் பெருந் தொழில் என்பதையே சுட்டுகின்றது. உயிர்களை இயக்குவித்தற்கும் உலகமே இயங் குவதற்கும் காரணமான இவ்வியக்குவிக்குத் தெய்வம் சூரிய னுடன் பெருந் தொடர்பு கொண்டிருப்பது பொருத்த, மானதே.
இந்தியாவில் இன்று வழங்கி வரும் தெய்வங்களுள் இரு பெரும் கடவுளர் தலைசிறந்து விளங்குவர். இவ்விருவருள்

Page 40
வடமொழி இலக்கிய வரலாறு / 60
*விஷ்ணு? ஒருவன். இருக்கு வேதத்தில் இவன் மிகச் சிறு தெய்வமாகவே காணப்படுகிருன். ஐந்தாறு சூக்தங்களில் மட்டுமே இவன் போற்றப்படுகிருன். மூவடியால் இவன் அளக்கும் அழகு பன்முறை எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இவன் மிகவும் அகன்ற அடிச்சுவட்டினன். மூவடியால் அனைத்தையும் அளந்தோன் என்ற அடைமொழி இத்தெய்வ வத்திற்குச் சிறப்பாக அமைந்துள்ளது. இவ்வடிகளைத் துணைக் கொண்டு இவன் விண்ணையும் மண்ணையும் வியாபித்து நின்ற தாக இருக்கு வேதப் பாடல்கள் கூறும். இத் தெய்வத்தின் இரு அடிகள் மட்டுமே மக்களின் கண்களுக்குப் புலனுகின் றன. மூன்ரும் அடி, மக்கள் கட்புலனுக்கோ அன்றி மாக்கள் கட்புலனுக்கோ அப்பாலதாய் அறியப்படாது இருக்கின்றது. விண்ணில் பதிந்து விளங்குங் கண்போல் இருப்பது இம் மூன் ரும் அடி. இது பெரும் ஒளியை வீசி நிற்கின்றது. உலகில் உதயம், நண்பகல், அத்தமனம் ஆகிய மூன்று நிலைகளைக் குறிப்பாகக் கடந்து செல்லும் சூரியனின் செலவை இம் மூவடிகளும் குறிக்கின்றன என்பர். மக்களது கட்புலனுக்கு அகப்படும்படி வெளிவரும் நோக்குடன் விஷ்ணு மேற் கொண்ட உருவமே சூரியன் என்பர். இந்திரனுடன் இவன் பூண்டுள்ள நட்பு இவனது இன்னெரு விசேட பண்பு என்பர். *விருத்திரனுடன்? இந்திரன் அடிக்கடி நிகழ்த்திய போர் களில் விஷ்ணு அவனுக்கு உதவி புரிந்ததை இருக்கு வேதம் எடுத்துக் கூறுகின்றது. விஷ்ணுவை மட்டும் தனியே எடுத்துக் கூறும் பாடல்களில் இரு இடங்களில் இந்திரனே உடன் கூவி அழைக்கப்படுகின்றன். ஒரு பாடல் முழுவதுமே இவ்விருவரைப் போற்றுவதாக அமைந்து விளங்குகின்றது.
இருக்கு வேதத்தில் இருபதுக்கு அதிகமான பாடல்களில் *உஷை” போற்றி வழுத்தப்படுகின்ருள். இப்பாடல்கள் இத் தெய்வத்திற்கு உருவங் கற்பிக்கின்றன. இவளே இருக்கு வேதத்தில் கூறப்படும் தனிப் பெரும் பெண் தெய்வம். இவள் கிழக்கே தோன்றுவள். ஒளியே இவள் அணிந்து விளங்கும் ஆடை அழகிய ஆடை அணிந்து விளங்கும் உஷை ஆடல் அழகியாகப் போற்றப்படுகின்ருள். இவள் இருளை

61 / கா. கைலாசநாதக் குருக்கள்
அகற்றுகின்ருள். இவள் களைவது இருளின் கரிய உடையை என்று கவி வர்ணிக்கின்றர். பருவங்கடந்து பன்னெடுங்
காலம் வாழ்ந்து முதிர்ந்த பிராயம் எய்திக் காட்சியளிக்கும். இவள் எப்பொழுதும் இளமை சிறிதும் குன்றது இளம் பிரா யத்தினளாகத் தெரிவது கவியைப் பெரும் ஆச்சரியத்தில்
ஆழ்த்தி விடுகின்றது. தினந்தோறும் மெருகேறிய புதுப்
புதுத் தோற்றங்களைப் பெற்றுத் தோன்றுமிவள் இளமை குன்ருதவளே. நாள்தோறும் விடியற்காலை வேளை தோன்றும். இவளைக் கவி திரும்பத் திரும்பப் பிறந்து கொண்டிருப்பவ
ளாக வர்ணிக்கின்ருர். இவள் மக்களின் ஆயுளைத் தேய்ந்து அழியும்படி செய்கின்ருள். விண்ணில் கதவங்களை விடியற் காலத்திற் திறக்கின்ருள். இவளது ஒளிமிக்க கிரணங்கள் மாட்டு மந்தை போல் காணப்படுகின்றன. இவள் ஒளிவீசம் தேரில் பவனி வரும் அழகே தனியழகு. செந்நிறம் பொருந் திய புரவிகள் இவள் தேரை இழுத்துச் செல்கின்றன. இவள்
தீய கனவுகளை நிகழ விடாது நீக்குபவள். இருளையும் தீமை பயக்கும் அரக்கரையும் துரத்தி அகற்றுபவள். இவள் பிரகா சிக்கத் தொடங்கும் பொழுது குருவிகள் கூட்டிலிருந்து பறந்து செல்கின்றன. இவ்வேளையில் மக்களும் உணவு தேடத்
தொடங்குவர். குறிப்பிட்ட இடத்திலேயே உஷை நாள் தோறும் ஒழுங்காகத் தோன்றுவள். இயற்கையின் நியதியை இவள் ஒருபொழுதும் மீறுவதில்லை. இவள் ஒவ்வொருநாளும் பிறக்கும் இடம் ஆகாயம். இதுபற்றியே இவள் ஆகாயத் தின் புதல்வி எனப்படுகின்ருள். இவள் இரவுக்கு உடன்
பிறந்த மூத்தவள். இவ்விரு கருத்துக்களையும் உணர்த்தும் பெயர்கள் ஒன்ருக இணைக்கப்பட்டு இவளைக் குறிக்கும் வண் ணம் பாடல்கள் அமைந்திருக்கின்றன. சூரியனுடன் இவளுக் குத் தொடர்பு உண்டு. ஆடவனுெருவன் பெண்ணைத் தொடருவதுபோல் சூரியன் இவளைத் தொடருகின்றன்.
இவள் சூரியனின் மனைவியாகக் கூறப்படுகின்ருள்.வேறு கவி, சூரியன் தோன்றும் முன் இவள் தோன்றுவதைக் கருத்துட் கொண்டு, சூரியனைப் பிறப்பிப்பவள் எனத் தெளிந்து இவ ளைச் சூரியனின் தாய் என வருணிக்கின்ருர், நல்ல ஒளி பொருந்திய குழந்தையை இவள் ஏந்தி வருவதாகக் கவி

Page 41
வடமொழி இலக்கிய வரலாறு / 62
யொருவர் வர்ணிக்கின்ருர். இவள் தோன்றும் விடியற் பொழுதிலேதான் வேள்வித் தீ மூட்டப்படுகின்றது. இது பற்றி உஷை அக்கினியுடன் தொடர்பு பெறுகின்ருள். அக் ஒளியையே இவளது காதலனுகக் கற்பனை செய்கின்ருர் இன் ணுெரு கவி. காலைச் சந்தி வேளையாகிய விடியற்காலத்துடன் தொடர்புபடுத்திக் கூறப்படுபவர்கள் அஸ்வினி தேவர்கள். இவர்களுடன் தொடர்பு கொண்டவளாக இவளை எடுத்துக் கூறும் வருணனைகள் பல காணப்படுகின்றன. இருள் மூடி மறைந்து திடக்கும் செல்வத்தை இவள் வெளிப்படுத்துவது Lன் அமையாது இவற்றை வாரி மக்களுக்கு வழங்குகின்ருள். இதனல் இவள் வண்மை எல்லோருக்கும் வெளியாகின்றது. வழிபடுவோனுக்குச் செல்வம், குழந்தைகள், பாதுகாப்பு, நீண்ட வாழ்வு புகழ் பெருமை என்பவற்றை யெல்லாம் இவள் வழங்குவாள் வடமொழியில் வஸ் என்னும் வினையடி ஒளி வீசுதல் என்னும் கருத்தைக் குறிக்கும். இவளின் பெய ரான உஷை இவ்வினையடியிற்றேன்றி இக்கருத்தைப் பெற்று வருகின்றது. இப்பெயர் ஒளிவீசும் அவள் தனிப் பண்பினை எடுத்துக் கூறுகின்றது.
இராத்திரி என்னும் பெண்தெய்வம் இரவைக் குறிப்பது. இவளும் உஷை போன்று விண்ணின் புதல்வி எனப்படுவாள். இவள் இருள் செறிந்து நிற்கும் கரிய உருவினளாகக் கூறப் படவில்லை. இவளும் இக்கவிகளின் கண்களுக்கு ஒளி வீசி நிற் வளே. இவள் தோன்றும் வேளைகளில்தான் தாரகைகள் ளி வீசுகின்றன.இவளது கண்கள் அழகு மிகுந்து திகழ்வன. அழகு பொலியப் பெற்று இருளை அகற்ற வரும் இத்தெய்வம் அணுகும் வேளை மக்களும் விலங்குகளும் புள்ளினங்களும் அமைதி பெற்று ஆறுதலடைவன. இவள் கொடும் விலங்கு கள் தீண்டாதவாறும், கள்ளர்கள் பொருளைக் கைப்பற்ரு திருக்கும்படியும் வழிபடும் மக்களைப் பாதுகாக்கின்ருள். இரு பது சூக்தங்களில் இவள் உஷையுடன் ஒருங்கே போற்றப் படுகின்ருள்.இப்பாடல்களில் இவளுக்கு நக்தம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

63 I கா. கைலாசநாதக் குருக்கள்
இருக்கு வேதத் தெய்வங்களுள் "அஸ்வினி? தேவர்களும் முக்கியமானவர்கள். இங்கு கூறப்படும் தெய்வங்களுள் இந்திரன், அக்கினி, சோமன் என்னும்மூவரும் நீங்கிய ஏனைய தெய்வங்களுள் இவர்களே முதலில் வைத்தெண்ணப்பட வேண்டியவர்கள். ஏனெனில் இம்மூன்று தேவர்களுக்கடுத் தாற்போல் அதிகப் பாடல்களைப் பெற்று வருபவர்கள் இவர் களே. இவர்கள் இரட்டையர்கள். ஏறக்குறைய ஐம்பது சூக்தங்கள் இவர்கள் மீது பாடப்பட்டுள்ளன. அதி விடியற் காலத்திற்கும் சூரியன் உதிப்பதற்கும் இடைவேளை இவர்கள் தோன்றும் நேரம், உஷையே இவர்களைக் காலையில் துயில் எழுப்புபவள். தமது தேரில் அஸ்வினிகள் இருவரும் இவளைத் தொடர்வர். இருளையகற்றித் தீய பேய்களை விரட்டியகற்று வதில் இவர்களிருவரும் ஈடிணையற்றவர். இருபுக்களால் அமைக்கப்பட்டுள்ளது இவர்கள் பவனி வரும் தேர். இது சூரியனது பண்புகளை உடையது; பொன் மயமானது: இதற்கு மூன்று சில்லுகளே உண்டு. குதிரைகளும், பறவை களும் இதை இழுப்பன. இக் குதிரைகள் சிறகுடையவை. ஆகாயம், பூமி என்னும் இரண்டையும் வலம் வரும் இயல் பினரான இவ்விருவரும் ஒரே நாளில் உலகைச் சுற்றிவருவர். விண்ணினதும் விவஸ்வானினதும் சரண்யுவினதும் புதல்வர் கள் எனத் தனித்தனி கூறப்படுகின்றனர். பூஷன் இவர்களது புதல்வன். சூரியனின் புதல்வியாகிய சூரியா இவர்களுடன் தொடர்புடையவள். இவள் இவர்களது தேரில் செல்வாள். இவளைஇவர்களது மனைவியாகவும் சிலபாடல்கள் கூறும். இவ் விரட்டையர்கள் இணைபிரியாது ஒன்றியே திரிவர். பழமை மிக்கவராயினும் இவர் இளமை சான்று அழகு பொலிந்து பொன்னை நிகர்த்து ஒளிப்பரப்பும் தாமரை மலர் மாலைகள் சூடிக் காணப்படுவர். இவர்களுக்கு மதுவின் மீது அதிக விருப் பம். சோமாசத்தைப் பருக இவர்கள் பெரிதும் விரும்புவர். சூரியை, உஷை ஆகிய இருவருடனும் ஒருமித்து இதைச் சுவைத்துப் பருகுவர். இவர்கள் தெய்விக சக்தி வாய்ந்தவர் கள். இன்னல் களைவதில் இணையற்றவர்கள். இவர்களைத் தெய்வ வைத்தியர்கள் என்பர். கை கால்கள் முதலிய உறுப் புக்களை இழந்தவர்களுக்கு மீண்டும் அவற்றைப் பொருத்தி

Page 42
வடமொழி இலக்கிய வரலாறு / 64
யும், கண்பார்வை நீங்கியவர்களுக்கு மீட்டும் அவற்றை வரு வித்தும், முதியோருக்கு முது ைமயை அகற்றி, இளமையைப் புதுக்கியும் தம்மை வழிபடுவோரை வாழவைப்பவர்கள். கடலில் மரக்கலத்தில் ஏறிச் செல்லும் வேளை திசை தப்பித் திணறிய புஜ்யு என்பவனின் அல்லல் நீக்கிப் பாதுகாத்த வரலாறு இவர்களின் பெருமையை எடுத்தோதுகின்றது. அஸ்வினிதேவர்கள் என்னும் பெயரைத் தாங்கி இப்பெய ரால் தம்மை குதிரை வீரர் என உணர்த்தும் இவர்கள் குதிரை மீது இவர்கள் செல்வதாகப் பாடல்களெதுவும் குறிப்பிடுவதில்லை. இவர்கள் தேரில் செல்வதையே டாடல் கள் கூறுகின்றன. இருளும் ஒளியும் ஒரே அளவாய் விரவிய காலைச் சந்தி வேளையின் உருப்பெற்ற தோற்றமே இருக்கு வேதங் கூறும் அஸ்வினி தேவர்களின் தோற்றம் என்பர் ஒலர், காலையிலும் மாலையிலும் விண்ணில் தோன்றும் இரு தாரகைகளே அஸ்வினிகள் என்பர் வேறு சிலர். கிரேக்க நூல்கள் கூறும் பழைய வரலாறுகளில் இரு குதிரை வீரர்கள் பற்றிக் குறிப்பு வருகின்றது. இவர்கள் "செயுஸ்? என்பவரின் புதல்வர்கள். *ஹெலன?வின் உடன் பிறந்தோர். இவர்கள் சூரியனின் புதல்வியைக் காதலித்துக் குதிரையிலிவர்ந்து செல்வதாக இவ்வரலாறுகள் கூறுகின்றன.
W இனி, விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைவெளியைச் சார்ந்த தெய்வங்களை நோக்குவோம். இத்தெய்வங்களுள் தல சிறந்தவன் இந்திரன். இருக்கு வேதத் தில் காணப்படும் பாடல்களின் நான்கில் ஒரு பகுதிக்கதிகமான பாடல்கள்
இவனைப் போற்றுவதற்காக எழுந்தவை. இந்திரன் கைகால்
முதலிய உறுப்புகளுடன் உருவகப்படுத்திக் கூறப்படுகிருன், இவனைப்பற்றிய வரலாற்றுக் கதைகள் பெருகிக் காணப்படு ன்ெறன.இம் முறையில் பெருமை கூறும் வரலாறுகள் ஏனைய தெய்வங்களுக்கு அமை யவில்லை என்பது எடுத்துக் கூருமலே விளங்கும். இடிமுழக்கம் இரண்டுடனும் தொடர்புடையவன் இந்திரன், வறட்சி, இருள் என்னும் அரக்கர்கள் இவனது பகைவர்கள். இவன் ஒளியைப் பரவச் செய்தும் தடுப்புண்டு திறைவைக்கப்பட்ட நீரை விடுவித்தும் பெரும் புகழை ஈட்டி

65 / கா. கைலாசநாதக் குருக்கள்
யவன். இவனது புறத்தோற்றம் இருக்கு வேதப் பாடல்களில் தெளிவாகத் தீட்டப்பட்டுள்ளது. இவனது பழுப்பு நிறமான தாடி, தலைமயிர் முதலியன இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. கையில் வச்சிரத்தை (இடியை)த் தாங்கி நிற்பான். இது இவ னுக்கெனச் சிறப்பாக அமைந்த படைக்கலம். இதை சிவனுக் குச் சமைத்துக் கொடுத்தவன் துவஷ்டா? என்னும் தெய்வத் தச்சன். இது இரும்பாலானது; கூரிய முனைகள் பலவற்றை உடையது; பொன்னெளி வீசுவது. இந்திரன் வில்லம்புகளை ஏந்தியும் வளைந்த ஈட்டியைத் தாங்கியும் விளங்குகின்ருன். இரு குதிரைகள் பூட்டிய தேரில் இவன் செல்வான். சோம ரசம் பருகுவதில் இவன் நிகரற்றவன். வீரச் செயல்கள் புரிய வேண்டும் வீறை இது இவனுக்களிக்கும். இதுவே விருத்தி ரனை யறிக்கும் ஆற்றலை இவனிடம் தோற்றுவித்தது. சோம பானத்தினுல் வெறி மீறிய இந்திரன் தன் பெருமையையும் ஈடற்ற வலிமையையும் தானே புகழ்ந்து கூறும் முறையில் ஒரு பாடல் முழுவதுமே அமைந்து காணப்படுகின்றது. *தியெள? இவன் தந்தை எனவும், அக்கினி, பூஷன் என்னு மிருவரும் உடன் பிறந்தோ ரெனவும், இந்திராணி மனைவி எனவும் கூறப்படுவர். துவஷ்டா இவனது தந்தையெனச் சில பாடல்கள் குறிப்பிடுகின்றன. இந்திரன் பல தெய்வங்களு டன் இணைத்துக் கூறப்படுகிறன். மருத்துக்கள், அக்கினி வருணன், வாயு, சோமன், பிருகஸ்பதி, பூஷன், விஷ்ணு, ஆகியோர் இவனுடன் கூவியழைக்கப்படும் தெய்வங்கள். இந்திரன் விருத்திரனுடன் நிகழ்த்தும் போர் அடிக்கடி வர் ணிக்கப்படுகின்றது.விருத்திரனை அழிப்போன் என்னுங் கருத் தையுடைய விருத்திரஹா?என்பது இவனது சிறப்புப் பெயர் களில் ஒன்று.இவன் இவ்வாறு நிகழ்த்தும் போரில் அக்கினி, சோமன், பூஷன் ஆகியோர் துணை நிற்பர்.இவன் வேறு சில அரக்கர்களையும் அழித்தான் என்று சில பாடல்கள் குறிப்பிடு கின்றன.இயற்கையைச் சீர்படுத்த இந்திரன் புரிந்தசெயல்கள் பல உண்டு. ஆதியில், அசைந்து திரியும் ஆற்றல் பெற்றிருந் தன மலைகள். இந்திரன் அவற்றை அங்கு மிங்கும் திரியாத வாறு நிலைபெறச் செய்தான்.இந்திரனே விண்ணையும்மண்னை,
ژسته

Page 43
வடமொழி இலக்கிய வரலாறு / 66
யும் அகன்று விளங்கும்படி நிறுத்தி உரியவாறு அமைத்தவன். அரக்கர்களை அழித்த பெருமை வாய்ந்த இவனே வீரர்கள் வழி படுகின்றனர். வழிபடுவோரைப் பாதுகாப்பதுஇவனது பண்பு. அவர்களுக்குப் பேருதவி புரிந்து உற்ற நண்பனுக விளங்கும் பெருமை இவனுக்குண்டு. இவர்களுக்கு வேண்டும் செல்வம் ஈந்து,வெற்றியையும் பெற்றுத்தருகின்றன்.இவனது வண்மை வரைவற்றது. எனவே, வள்ளல் என உயர்த்திக் கூறப்படு கிருன். மகவான் என்னும் பெயர் இதையே எடுத்துக் கூறும். இது இவனுக்கே சிறப்பாக அமைந்துள்ளது. இவன் விண்ணி லிருந்து சோமலதையைக் கொண்டுவந்த வரலாற்றை இருக்கு வேதப் பாடல்கள் சுவைபடக் கூறுகின்றன. பணிக் கூட்டத் தினரால் கவரப்பட்டுக் குகைக்குள் ஒளித்து வைக்கப்பட்ட ஆனிரைகளை சரமா என்னும் பெண் நாயின் துணையுடன் மீட்ட வரலாறும் இந்திரன் பெருமையை எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளது. சுதாஸன் முதலிய மண்ணுலக வீரர்களுடன் இவன் புரிந்த போரும் இங்கு குறிப்பிடப்பட் டுள்ளது. இந்திரனுக்கும் வருணனுக்கும் பலவகை வேறுபாடு கள் உண்டு.இந்திரன் உடல்வலி மிக்கவன். பெளதிக உலகில் பலம் மிகுந்து விளங்குபவன். சிறந்த வீரன். புலன்கள் ஈர்க்க அவை வழி இழுப்புண்டு அதனுல் அளவு அறியாது உண்டு குடிப்பவன்.இவன் தன் தந்தையாகிய துவஷ்டாவைக் கொன் முன் என்று ஒரு பாடல் கூறுகின்றது. வருணனேவெனில் சாந்த குணம் பலடத்தவன்; அமைதியான வழியிற் செல்ப வன். இயற்கையின் நியதிக்கமைந்து ஒழுகுபவன். இருதம், தர்மம் என்பவை இவன் கடைப்பிடிக்கும் உயர் நெறிகள். இவனை மிகவும் உயரிய பண்புவாய்ந்தவனக இருக்கு வேதம் சித்திரித்துக் காட்டுகின்றது. இந்திரன் மிகப் பழமை வாய்ந்த தெய்வம் என்பர் ஆராய்ச்சியாளர். பாரசீகரின் பழைய நூலான அவெஸ்தாவில் வரும் இந்திரன் அசுரன் எனக் கூறப் படுகிருன். இங்கு அசுரன் என்பது சிறப்பான கருத்தில் வரு கின்றது என்பது நோக்கற்பாலது. விருத்திரனையழித்தவன் என்று சுட்டிக்காட்டும் விருத்திரக்னன் என்னும் பெயரும் அவெஸ்தாவில் இடம் பெற்றுள்ளது.

67 கா. கைலாசநாதக் குருக்கள்
இருக்கு வேதம் எடுத்துக் கூறும் சிறு தெய்வங்களுள் பர்ஜனியனும் ஒருவன். இவனைப் பற்றி மூன்று பாடல்கள் வருகின்றன. இவன் மழைத் தெய்வம். பர்ஜன்யன் என் ரூலே மழையைப் பொழியும் மேகம் என்பது பொருள்.மழை யைப் பொழியும் இம் மேகத்தை மாட்டின் முலைகளாகவும், நீரை நிறைய மொண்டு ததும்பி வழியும் வாளிகளாகவும்,நீர் நிரம்பியுள்ளதும் தோலாலமைந்ததுமான நீர்ப்பையாகவும் உருவகித்துக் கூறியுள்ளனர். நிலத்தை வழிப்படுத்திச் செழிப்பாக்கிப் பயிரை முளைத்துத் தழைத்தோங்கவைப்பது இவன் தொழில். இவன் பொழிவிக்கும் மழையாலேயே உலகம் இயங்குகிறது. இவன் நீரால் அமைந்த தேரில் அமர்ந்து பவனி வருவன். இவன் தெய்விகம் வாய்ந்த தந் தையெனப் போற்றப்படுகின்ருன். நீர் நிரம்பியுள்ள பையைத் திறந்து அதைக் கீழே சரித்து மழை பெய்யும் வண் ணம் அதன் நீரைப் பொழிந்து பெருக்குகின்றன். மழைத் தெய்வமாகிய இவனுக்கு இடி மின்னல் என்னும் இரண்டுட னும் தொடர்பு உண்டு. பயிர் வகைகளைச் செழித்தோங்க வைப்பதிலும்,நிலத்தை வளம் மிகச் செய்வதிலும் இவன் மிக வல்லவன். இவன் ஆகாயத்தின் மைந்தன். நிலம் இவன் மனைவி. இவனைப் பற்றி பாடல்கள் இவ்வாறு கூறுகின்றன.
இருக்கு வேதத்தில் உருத்திரன் மீது பாடப்பட்டிருப்பன மூன்றே மூன்று பாடல்கள். இவனது உருவம் இவற்றில் சித்தரிக்கப்பட்டுள்ளது. உருத்திரனது உதடுகள் மிக அழ கானவை. இவன் தனது தலைமயிரைச் சடாமுடியாகக் கட் டியுள்ளான். இவன் சிவந்த மேனியன். கிரணங்களை அள்ளி வீசிப் பிரகாசிக்கும் சூரியனை நிகர்த்து ஒளி வீசுகின்றன். இவன் அணிந்துள்ள ஆபரணங்கள் பொன்னலானவை. Քlէք கான கழுத்தணியால் இவன் மிடறு பொலிவுற்று விளங்கு கின்றது. இவன் தேரில் அமர்ந்து செல்வான். இவன்கையில் தாங்கி வரும் படைக்கலம் இடி என்பர். இவனே ஆகாயத் தில் இருந்து மின்னலை அம்பாக எய்பவன். வில்லும் அம் புமே இவனின் சிறந்த படைக்கலங்கள் உருத்திரன் மருத் துக்களுடன் நெருங்கிய தொடர்புடையவன். இவன் மருத்

Page 44
வடமொழி இலக்கிய வரலாறு / 68
துக்களின் த்ந்தை, அழிவை நிகழ்விக்கும் பொழுது இவன் கொடிய மிருகங்களை நிகர்த்துக் காணப்படுவன், இவன் வலி மைக்கு ஈடு இணை கிடையாது. இவன் மூப்பற்றவன்,இனமை குன்ருத காளை உலகிற்குத் தந்தை எனக் கவிகள் இவனை ஏத்துவர். தேவருலகினரும் நிலவுலகினரும் ஆற்றும் செயல் களனேத்தையும் தலைமை பூண்டு கவனித்து நிற்பவன். மக் களனைவரும் தாமே எளிதிற் போற்றி வணங்கும் பெற்றியன். மங்களகரமானவன். இக்கருத்தை உணர்த்தும் சிவன் என் னும் அடைமொழி இவனது நன்மை செய்யும் பண்பைச் சுட் டுகின்றது. பிற்கால வேதநூல்களும், சம்ஸ்கிருதத்தில் எழுந்த சமயநூல்களும் இதர நூல்களும் சிவனெனப்படும் இவ்வடை மொழியையே இவனது சிறப்புப் பெயராகக் குறிப் பிடுவதைக் காண்கின்ருேம். உருத்திரன் என்னும் பெயர் சிறிது சிறிதாக மறைந்து சிவனென்னும் பெயரே நிலை பெற்று விடுகின்றது. இவன் வழிபடுவோர்க்கு வரைவின்றி வழங்கும் வள்ளல். சில வேலைகளில் தீமை செய்யவும் இவன் விழைவதைக் கவிகள் எடுத்துக்காட்டியுள்ளார்கள். இவ் வேளைகளில்தாம் மக்கள் இவனது கோபத்தை வளராது தடுக்க விரும்புவர். சிறிதும் கோபம் கொள்ளாதிருக்கும் படியும், கோபம் மிகுந்து தீங்கு விளைத்து உயிர்களை அழிக்கா திருக்கும்படியும் இவனை வேண்டுவர். மக்களையும் பசுக்களை யும் கொல்லும் திறன் வாய்ந்த அம்புகளை ஏவாதீர் என்பதே மக்கள் அடிக்கடி இவனிடம் விடுக்கும்வேண்டுகோள். இவன் தீங்கு விளைவிப்பவனக மட்டுமே கவிகள் கண்ணுக்குப் புலப் படுகின்ருன் என்று சொல்லிவிட முடியாது. தீங்குகளில் இருந்தும், தம்மை நாடி வரும் வழிபடுவோரைக் காக்கிருன். அவர்களுக்கும் பெரும் அருள் புரிவது இவனது சிறந்த குணங் களிலொன்று. இவன் மாட்டுச் சிறந்து காணப்படும் நோய் நீக்கும் ஆற்றல் போற்றற்குரியது. இவன் வைத்தியர்களுட் தலைசிறந்த வைத்தியனெனப்படும் வைத்தியநாதன். ஆயிரக். கணக்கான மருத்துவ முறைகளை நன்கு அறிந்து வைத்திருக். கின்றன். இதனல் இவனைச் சார்ந்து நிற்பவர்களுக்கு இவன் செய்யும் நன்மை அளவிடற்கரியது. இதுவரை கூறப்பட்ட
இவனது குளுதிசயங்களில் அருளல்அழித்தல் என்னும் இரு.

69 / கா. கைலாசநாதக் குருக்கள்
பண்புகளும் ஒருங்கே காணப்படுவதை உணருகிருேம். இவ்விரண்டனுள் மங்களகரமானவன் என்னுங் கருத்தை யுணர்த்தும் சிவன் என்னும் அடைமொழி பெரிதும் வழங் கத் தொடங்கியது. இப்பெயர் இதிகாசங்களிலும் புராணங் களிலும் பெரிதும் வழக்கெய்தி இவனையே உணர்த்தும் சிறப் புப் பெயராய் இவனைக் குறித்து நிலைபெற்று வருகின்றது.
இருக்கு வேதத்தில் மருத்துக்கள் முப்பத்துமூன்று தனிப் பாடல்களில் பாடப்படுகின்றனர். இதைவிட வேறு ஒன்பது பாடல்களில் வேறுதெய்வங்களுடன் ஏத்திக் கூறப்படுகின்ற னர். இவ்வாறு இவர்களுடன் இணைத்துப் போற்றப்படுப வர்கள் அக்கினி, பூஷன், இந்திரன் என்பவர்களே. மருத்துக் கள் கூட்டமாகக் கூடித்திரியும் குழுவினர். இவர்கள் எண்பத் தொன்பதின்மர் என்பர். சிலர் நூற்றெண்பது மருத்துக் கள் உளர் எனக் கொள்ளுவர். இவர்கள் உருத்திரன் பிருஷ்ணி என்பவர்களின் புதல்வர்கள். பிறப்பைக் குறிக்கு முகமாக இவர்களைப் பலவாருகக் கவிகள் கூறியுள்ளார்கள். எனவே,இவர்களை வாயு புத்திரர்கள் என்றும், விண்ணிடைப் பிறந்தவர்கள் என்றும், தாமாகவே பிறந்த தான்தோன்றி கள் எனவும் பலவகையாகக் குறிப்பிடுவர். இவர்களனைவ ரும் ஒரே வயதினர்.இவர்கள் உடன்பிறந்தோர் மட்டுமல்லா மல் ஒரே இடத்தில் பிறந்தவர்களாகவும் கூறப்படுகின்றனர். மருத்துக்கள் ஒன்ரு ய் ஒருங்கு வசிப்பவர்கள்.ரோதசி என்னும் தெய்வம் இவர்களுடன் தேரில் பவனி வருபவள்.இவள் இவர் களின் மனைவி எனவும் கூறப்படுபவள். ஒளி செறிந்த தோற் றத்தினரான மருத்துக்களுக்கு மின்னலுடன் பெருந் தொடர்பு உண்டு. மின்னல்களாலேயே உருவாக்கப்பட்ட ஈட்டிகளைத் தாங்கிப் பொன்னலான தலையணிகளை அணிந்து காணப்படுவர். பொன்னுற் செய்த கோடரிகள், அம்பு, வில் லுகள் இவர்களுடைய சிறந்த ஆயுதங்கள். இவர்கள் அணி வன பொன்னடைகளும், பொன்னணிகலன்களும், பொன் மாலைகளும், கையணிகளும், காலணிகளும். இவர்கள் இவர்ந்து பவனிவரும் பொற்றேர் மின்னலை நிகர்த்துப் பேரொளி வீசும். மஞ்சள் நிறம் வாய்ந்தவையும், புள்ளிகள்

Page 45
வடமொழி இலக்கிய வரலாறு / 70
பல விரவப் பெற்றவையுமான பெண்குதிரைகள் தேரை இழுப்பன. இடி முழக்கமும் காற்றெழுப்பும் ஊளையொலி யும் இவர்கள் எழுப்பும் ஒலிகளே. மலைகள் உட்பட உலகம் முழுவதுமே இவர்களெழுப்பும் இப்பேரொலி கேட்டு அஞ்சி நடுங்கும், மருத்துக்கள் காட்டு யானைகளோவென ஐயுறும் வண்ணம் மரங்களை அசைத்து முறித்துக் காடுகளை அழித்து விழுங்கி விடுவர். விண்ணுலகின் தலைசிறந்த பாடகர்களாக மருத்துக்களைக் குறிப்பிடுவர். இவர்கள் பாடும் பாட்டுக்கள் காற்றின் ஒலியை நிகர்ப்பன. இப்பாட்டுக்கள் பெரிதும் போற்றப்படுவன. மருத்துக்கள் மழையைப் பொழிவிப்ப வர்கள். மழைபொழியும் வேளை இருளைக் கவியச் செய்பவர்க ளும் இவர்களே. மலையில் ஊற்றெடுத்துப் பெருகும் பேராறு களை மட்டுமல்லாமல் விண்ணுலகிற் காணப்படும் நீர் நிறைந்த வாளியையும் வழிந்து நீர்பெருகி ஓடும்படி செய் வர். இங்கு கூறப்படும் நீர், இடி முழக்கங்களுடன் சார்புள் ளது. மருத்துக்கள் வெறும் நீரை மட்டுமின்றிப் பால், நெய், தேன் என்பவற்றையும் பெருமழையாகப் பொழிவிப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.இவர்கள் வெப்பத்தைத் தணித்து இருளை அகற்றி ஒளியைப் பரப்பிச் சூரியன் செல்லுவதற்கும் வழிகோலி அமைப்பார்கள். இவர்கள் என்றும் இளமை குன் ருதவர்களாய், தூசினல் மாசுபடாதவர்களாய், பலம் மிகுந் தவர்களாய், சிங்கத்தை போன்று பராக்கிரமசாலிகளாய்ச் சித்திரிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துக்கள் இடி, முழக்கம், மின்னல் ஆகிய மூன்றினுடன் நெருங்கிய தொடர்பு கொண் டவர்கள். இவர்களை இந்திரனுடன் இனத்துக் கூறும் சந்தர்ப்பங்கள் பல. இவர்களின் துணை வலியாலேயே இந் திரன் தெய்விக சாதனைகள் அனைத்தையும் மெச்சும் வண் ணம் சாதித்தான். சில பாடல்கள் மருத்துக்களே இத்தகைய அரும்பெரும் செயல்களைப் புரிந்தார்கள் எனக் கூறுகின்றன.
இந்திரனுடன் இணைக்கப்படாது தனியாகக் கூறப்படும் இடங்களில் எல்லாம் மருத்துக்கள் தங்கள் தந்தையான உருத்திரனின் தீமை விளைவிக்கும் பண்பை மேற்கொண்டு நிற்பதைக் காண்கின்ருேம். இவ்வேளைகளில் மக்கள் தீங்கு

71 / கா. கைலாசநாதக் குருக்கள்
விளையாதிருக்கும்படி இவர்களை வேண்டுவர். உருத்திரனுக்கு தெரிவது போன்று இவர்களுக்கும் நோயை நீக்கவல்ல வழிவகைகள் தெரியும். நீரைப் பொழிந்து அதையே அரும் மருந்தாகக் கொண்டு நோய்களைய வல்லவர்கள் மருத்துக் கள். மருத்துக்கள் என்ருல் நசுக்குபவர்கள், பிரகாசிப்பவர் கள் என்றெல்லாம் கருத்துண்டு.
காற்றுத் தெய்வத்திற்கு வாயு, வாதம்? என்னும்பெயர் கள் இருக்கு வேதத்தில் வழங்கிவருகின்றன. வாயுவின் பெய ரில் ஒரு பாடலும், வாதத்தின் பெயரில் இரு சிறு பாடல் களும் உண்டு. சில பாடல்களில், வாயு, வாதம் என்னும்இரு தெய்வங்களும் ஒருங்கு கூறப்பட்டிருக்கக் காணலாம். உற்று நோக்கின், வாயு என்பது காற்றுத் தெய்வத்தையும் வாதம் என்பது வீசுங் காற்றையும் குறிப்பதைத் தெளிவாக உணர லாம் எனச் சிலர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். வாயு, கைகால் முதலிய உறுப்புக்கள் பொருந்திய தெய்வமாகவும் இந்திரனுடன் இணைத்துக் கூறப்படும் விண்ணவனயும் காணப்படுவன். பர்ஜன்யனென்னும் மழைத் தெய்வத்துடன் தொடர்பு கொண்டுள்ளது வாதம் என்னும் காற்று. வாயு வாதம் ஆகிய இருவருக்கும் வெவ்வேறு பண்புகள் கூறப்பட் டுள்ளன. வாயுவுக்கு ஒளி வீசும் தேர் ஒன்றுண்டு. இத்தேரில் சிவந்த குதிரைகள் பூட்டப்பட்டுள்ளன. சோமபானத்தில் இவனுக்கு விருப்பமதிகம். அதைப் பாதுகாப்பது இவன் பண்பு. இவன் புகழ், சந்ததி, செல்வம் என்பவனற்றை வழி படுவோனுக்கு வழங்குவான். பகைவரையழிப்பது மட்டுமல் லாமல் பலம் குன்றியவர்களுக்கும் பாதுகாப்பளிப்பான். வாதம் எனப்படுந் தெய்வம் தேவர்களின் உயிர்நாடி உருத் திரனை நிகர்த்து இவன் நோயை நீக்கி வாழ்வைப் பெருக்க வல்லவன். இறப்பின்மை இவனது பொக்கிஷம். இடிமுழக் கத்துடன் தொடர்புள்ளவனுகிய இவன் எழுப்பும் ஒலி மிகப் பெரியது. இவன் சிவந்த ஒளியை வீசி விடியற்காலத்தை விளங்கச் செய்வான். விரைவாக இயங்குவதில் இவனுக்கு இணை கிடையாது.

Page 46
வடமொழி இலக்கிய வரலாறு / 72
நான்கு சூக்தங்களில் பாடப்படும் நீர்த்தெய்வம் அப்பு எனப் பெயர் பெறும். இது பெண்பால் பன்மை உருவத்திலே கூறப்படும். பன்மையிற் குறிப்பிடப்பட்டுள்ள நீர்த் தேவ தைகள் தாயராகவும், இளம்பருவ மங்கையராகவும், மனைவி யராகவும், தெய்வங்களாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளார்கள். தெய்வங்கள் வகுத்த வழியே செல்லும் இயல்பின இந்நீர்த் தெய்வங்கள். இந்திரன் வச்சிரத்தாற் கீற அதனமைந்த வாய்க்கால் வழி இந்நீர்ப் பெருக்குகள் பாய்ந்து பெருகுவன: இந்திரனது ஆணையை மீருது இயங்குவன. இவற்றின் குறிக் கோள் சமுத்திரம். இவை தெய்வத் தன்மை வாய்ந்தவை. தேவருலகமே இவற்றினுறைவிடம். அசுரனெனப் போற்றப் படும் வருணன் இவர்கள் நடுவில் உலவுவான். மக்கள் செய் யும் நல்ல செயல்களையும், தீய செயல்களையும் இவன் நோக்கு வான். நீர்த்தெய்வங்கள் அன்னையர்களாகி அக்கினியைத் தோற்றுவிப்பர் அசைவனவும் அசைவற்றனவுமான உயிர் கள் எல்லாம் இவர்கள் தோற்றுவித்தனவே. அழுக்கு அகற் றித் தூய்மை வரவழைத்தால் இவர்களின் சிறந்த பண்பு. பொய், கோபம், கொடுமை, முதலிய தீய அழுக்குகளை நீக்கு வதிலும் இவர்கள் வல்லவர்கள். நோய்களை நீக்கியும் பலத்தையளித்தும் ஆரோக்கியம், நீண்ட வாழ்வு, செல்வம், இறப்பின்மை ஆகியவற்றைக் கொடுத்தும் வழிபடுவோர்க் கருளுவர். யாகங்களில் இவர்க்கும் சோமரசம் வழங்கப்படும். இருக்கு வேதத்தில் நீர்த் தெய்வங்கள் பெரும்பாலும் தேனுடன் தொடர்புறுத்திக் கூறப்பட்டுள்ளன. இவர்கள் கொடுக்கும் தேனுடன் பாலைக் கலந்து மக்கள் தேவர்களுக் களிக்கும் பொழுது அவர்கள் அதை உவகையுடன் ஏற்பர். இதையே இந்திரன் பலம்பெற வேண்டிப் பருகுவன்.தெய்விக நீர் சோமரசம் எனக் கூறப்படுகின்றது. அவெஸ்தாவில் நீர்த் தெய்வங்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. எனவே இத்தெய் வங்கள் பழமை மிக்கவை எனக் கருதுவர்.
*அபாம் நபாத் என்னும் தெய்வம் நீர்த் தெய்வங்களின்
புதல்வனுகக் கூறப்படும். இவன் மீது ஒரே ஒரு பாடல் காணப்படுகின்றது. வேறு பாடல்களில் அபாம் நபாத் சிறிது

73 / கா. கைலாசநாதக் குருக்கள்
குறிப்பிடப்படுகின்றன். இவன் இளமை மிக் கவனப் ஒளி வீசித் திகழ்கின்றன். பற்றுக்கோடு எதுவுமின்றியே நீரில் காணப்படுவான். மனேவேகமுடைய திரைகளில் இவன் செல் வான். ஓரிடத்தில் இவன் அக்கினி எனவும் பெயர் பெறுகி முன். அக்கினி மீது பாடப்பட்டுள்ள பாடலிலும் இவன் அபாம் நபாத் என்று கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
பிருதுவி என்னும் சொல் நிலத்தைக்குறிக்கும். பிருதுவியை ஒரு தெய்வமாக இருக்கு வேதம் எடுத்துக் கூறுகின்றது. இத் தெய்வம் மீது ஒரே ஒரு பாடல் உண்டு. வேறு இடங்களில் இப் பிருதுவி, தியெள என வரும் விண்ணுடன் இணைத்துக் கூறப்பட்டிருக்கக் காண்கின்ருேம் . இவை இரட்டைத் தெய் வங்கள். பிருதுவி தாய் எனவும் அழைக்கப்படுவள். அகன்று விளங்குபவளாதலின் இவள் பிருதுவி எனப்படுவள்.
இருக்கு வேத சமயத்தின் உயரிய நிகழ்ச்சி வேட்டல். இதில் முக்கிய இடம் வகிப்பவர் இருவர். ஒருவன் சோமன்; மற்றவன் அக்கினி. இந்திரனுக்கடுத்துப் பெருமை பெற்று விளங்குபவன் அக்னி. இவனுக்கு இருநூற்றுக்கதிகமான பாடல்கள் உண்டு. யாகத்திற் கற்பிக்கப்படும் கற்பனை வழியே இவன் உருவங் கூறப்படும். நெய் இவன் முதுகு. சுவாலைகள் இவன் தலை மயிர். பழுப்பு நிறமான தாடி, கூரிய தாடைகள் பொன் மயமான பற்கள் எல்லாம் இவனுக் குண்டு. இவனது நாக்குகள் மூலம் தேவர்கள் அவிகளைப் பெற்றுண்பர். இவன் சுவாலித்து எரியும் பொழுது எல்லாப் பக்கங்களிலும் முகங்களைக் கொண்டு காணப்படுவன். அக் கினி பல பிராணிகளுடன் உவமித்துக் கூறப்படுகின்றன். இவன் முக்காரம் இடும் எருதை நிகர்ப்பன் இவன் கொம்பு கள் கூரானவை. பிறந்தவுடன் இவன் ஆவின் கன்றை நிகர்ப் பன். தூண்டிவிடும் பொழுது தேவர்களைச் சுமந்து துள்ளி வரும் குதிரை போன்றவன். இவன் தெய்வப் பறவையாக வும் கூறப்படுவன். அக்கினி ஆகாயத்தில் திரியும் பொழுது கழுகு எனவும் தண்ணிரில் வசிக்கும் பொழுது அன்னப் பறவை யெனவும் கூறப்படுவன் இறகுகளை யுடையோணுய்ப்

Page 47
வடமொழி இலக்கிய வரலாறு | 74
பறவை போன்று மரத்திலேறிக் கொம்பில் குந்தியிருப்பன். விறகும் நெய்யும் இவன் உண்ணும் உணவுப்பொருள்கள். இவன் பருகுவது உருக்கிய நெய்யையே தினந்தோறும் மூவகையுணவருந்துவான். இவன் மூலம் தேவர்கள் யாகங் களில் தம் பங்கைப் பெறுவர். இவனுக்கும் வேள்விகளில் பங்குகள் உரியன.
அக்கினியின் ஒளியைப் பற்றிப் பாடல்கள் அடிக்கடி குறிப்பிடுவன. சூரியனது ஒளி இவனுக்குண்டு. இவன் வீசும் ஒளி சூரியனின் கிரணங்களை நிகர்க்கும். இது மின்ன லின் பிரகாசத்தை நிகர்ப்பதாகவும் பாடல்கள் கூறும். இர விலும் இவன் ஒளி குன்றது. இவன் தன் கிரணங்களால் இருளை நீக்குவான். இவனது பிறப்பு பலவாருகக் கூறப்படும். தீ மூட்டும் இரு கடைக் கோல்கள் இவன் பிறப்பிடம். காய்ந்த விறகிலிருந்து இவன் பிறப்பதையும் பாடல்கள் குறிப்பிட்டுள்ளன. இக்குழந்தை பிறந்ததும் தாய் தந்தை யரை விழுங்கிவிடும். தினந்தோறும் காலையிற் பிறப்பெய்தி இளமை குன்ருது காணப்படுவன். இவன் யாகம் வேட்போ னைக் காட்டிலும் முதிர்ச்சி பெற்றவன். ஏனெனில் இவன் முதன் முதல் வேட்டவனென இருக்கு வேதம் கூறும். தெய் விக நீர் இவன் தோற்றுவாய். நீரிலே இவன் தோற்றுவிக்கப் படுபவன். நிலத்திலும் நீரிலும் இவன் கரந்துறைவதாகக் கூறப்பட்டுள்ளது. இருக்கு வேதம், அக்னி நீரில் தோன்றிய வரலாற்றை அடிக்கடி கூறுவது. இவன் விண்ணுலகிற் பிறந்த வரலாறும் இங்கு கூறப்படும். மாதரிஸ்வான் அக்கினியை விண்ணிலிருந்து மண்ணுக் கழைத்து வந்தான். அக்கினியின் வேற்றுருவம் சூரியன் என இருக்கு வேதம் எடுத்தோதுகின் றது. மூவகைப் பண்புகள் அக்கினிக்கு உண்டு. இவன் மூன்று வகையாகப் பிறப்பெய்தினன். தேவர்கள் இவனை மூவகையா கப் பிரித்தனர். ஒளியின் மூவகை நிலைக்கு இவன் எடுத்துக் காட்டு. இவனுக்கு மூன்று தலைகள் உண்டு. இவனதுடம்பு கள் மூன்று. இப்பண்புகளை இருக்கு வேதமே அக்கிணிக்குக் கற்பிக்கின்றது. வேறு எத்தெய்வத்திடமும் காணப்படாது, இவனிடத்து மட்டும் காணப்படுவது மக்களுடன் இவன்

75 / கா. கைலாசநாதக் குருக்கள்
கொண்டுள்ள நெருங்கிய தொடர்பு. இவன் வீட்டிற்குத் தலைவன்.இவன் சிறந்த அதிதி எனவும் கூறப்படுபவன். இறப் பில்லாத் தெய்வமான அக்கினி இறக்கும் இயல்பினரான மக்கள் நடுவில் உறைபவன். இவன் மனிதரின் நெருங்கிய உறவினன். வழிபடுவோர்க்கு இவன் தந்தையாகவும், தாயா யவும், உடன் பிறந்தோணுகவும், புதல்வனுகவும் கூறப்படு வன். இவன் தேவர்களை யாகங்களுக்கு அழைத்து வருபவன். யாகங்களில் அளிக்கப்படும் அவிகளைத் தேவர்களிடத்துக் கொண்டு சேர்ப்பித்தலையும் இவன் செய்வதுண்டு. இவன் *ஹோதா? என்று கூறப்படுபவன். ஹோதா? என்பதற்கு யாகம் வேட்பவன் என்று பொருள். இந்திரன் சிறந்த வீரன கச்சித்தரிக்கப்பட்டுள்ளான். அக்கினி, வேட்டலில் பயிற்சி மிக்க புரோகிதன் வித்தையை அவன நன்கு அறிந்தவன், எல்லாம் அறிந்தவன் என இவனைப் பாடல்கள் அடிக்கடி சிறப்பிக்கின்றன. வழிபடுவோர்க்குப் பல நன்மைகளையும் புத்திரப் பேற்றையும் செல்வத்தையும் அளிப்பவன். அவெஸ்தா கூறும் அக்னி வழிபாட்டை உற்று நோக்கினல் இத்தெய்வம் த்துணைப் பழமை மிக்கதெனத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
பிருகஸ்பதி என்னும் தெய்வத்தின் மீது 11 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் இவன் இந்திரனுடன் போற்றப் படுகிருன். இவனது பெயர் பிரம்மணஸ்பதி என்றும் காணப் படும். போற்றிக் கூறித் தெய்வங்களை வளர்விப்பனவாகிய மநதிரங்களின் தலைவன் என்பது இதன் பொருள். கூரிய கொம்பும், நீல நிறம் பொருந்திய முதுகும் பொன்னிறமும் இவனுடலை அழகுப்படுத்துகின்றன. இவன் வில்லம்பேந்தி யும், இரும்பாலமைந்த கோடரியைத் தாங்கியும் காணப் வன். இவனது தேரை சிவந்த குதிரைகள் முத்துச் செல் கின்றன. இவன் அரக்கர்களை அழிப்பவன், தேவர்களின் தந்தை. அக்கினியைப்போல் இவனையும் புரோகிதன் என்று கூறுவர். மந்திரங்களை ஆக்கும் இவன் துணையின்றேல் யாகங் கள் நிகழா. இவன் பாடும் பாட்டு விண்ணை எட்டும். பாட கர்களுடன் இவனுக்குத் தொடர்புண்டு. இந்திரனுடனும்

Page 48
வடமொழி இலக்கிய வரலாறு 76
இவன் இணைத்துக் கூறப்படுபவன். தூய பண்பினையுடைய வழிபடுவோனுக்கு நீண்ட ஆயுளையீந்து அவன் நோய் தீர்த் தல் இவன் வழமை. இவன் இருக்கு வேதத்தில் புரோகித ஞகப் போற்றப்படும் அக்கினியின் ஓர் அம்சம். தெய்விகம் வாய்ந்த புரோகிதனுக விளங்கிய இவன் நாளடைவில் பிரம ஞக உயர்ந்து விளங்குவதாகச் சிலர் சுட்டுவர்.
*சோமயாகம்? யாகங்களுள் முக்கியமானது. இதனல் சோமன் என்னும் தெய்வத்துக்கு உயரிய இடம் உண்டு.சோம லதை ஒருவகைக் கொடி. இதன் சாற்றைப் பிழிந்து யாகங் களிற் பயன்படுத்துவர். உருவமாக்கப்பட்ட நிலையில் சோம லதை தெய்வத் தன்மை பெற்றுச் சோமன் என்னும் பெயர் பெறலாயிற்று. சோமன் கூரிய ஆயுதங்களைத் தாங்கி நிற் பன். இவ்வாயுதங்கள் பயங்கரமானவை. வில்லும், ஆயிரம் முனைகள் பொருந்திய அம்பும் இவன் ஆயுதங்கள். இவன் தேர் வாயுவின் தேரை நிகர்ப்பது. இந்திரனுடனும் இவன் தேரில் அமர்ந்து செல்வான். இவன் தலை சிறந்த தேர்ப் பாகன் என்று கூறுவர். இவன் இந்திரன், அக்கினி, பூஷன், உருத்திரன் என்பவர்களுடனும் இணைத்துப் பாடப்படுகின் ருன். மருத்துக்கள் இவன் துணைவராகக் கருதப்படுவர். வெறியூட்டும் சோமரசம் மது என்றும் இந்து என்றும் கூறப் படும். இது செந்நிறமானது. இருக்கு வேதத்தில் ஒன்பதா வது மண்டலம் முழுவதும் சோமனைப்பற்றிக் கூறுவது. சோம லதையைப் பிழிந்து சாறெடுக்கும் வகை, அது தேவர்களுக் களிக்கப்படும் முறை எல்லாம் இங்கு விரித்துக் கூறப்படுவ தைக் காணலாம். மலைகள் சோமலதை வளருமிடங்களாகக் கூறப்பட்டுள்ளன. சோமனது இயல்பான இருப்பிடம் விண் ணுலகம். அங்கே இவன் தூய்மையாக்கப்படுவன். தேவருல கில் இவன் அரசன். இவன் உறைவிடமான தேவருலகத்தி லிருந்து கீழே பூவுலகிற்குக் கொண்டு வரப்பட்டான். கழுகு தேவருலகத்திலிருந்து சோமன இந்திரனிடம் கொணர்ந்த தாகக் கூறும் வரலாறு உண்டு. பூண்டுகளுள் முக்கியமான தால் அவற்றிற்கெல்லாம் அரசனெனப்படுவான். அவெஸ் தாவிலும் இவனைப் பற்றிய குறிப்பு உண்டு.

77 / கா. கைலாசநாதக் குருக்கள்
இதுவரை தனித்தனியே தெய்வங்களை வெவ்வேருகக் குறிப்பிட்டு அவர்கள் பண்புகளை விளக்கினேம். இப்பொழுது இத் தெய்வங்களைப் பற்றிப் பொதுவாகக் காணப்படும் அம் சங்கள் சிலவற்றை நோக்குவாம். இருக்கு வேதம் முதன் முதலிற் சுட்டி நின்றது "இயற்கைப் பொருள்களின் வழிபாட் டையே? என்று சமய வரலாற்றின் நூலாசிரியர்கள் கூறுவர். இயற்கைப் பொருள் வழிபாடு நாளடைவில் வேறு வழியில் திரும்பிற்று. இதன் விளைவாகக் சில பண்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தோன்றிய தெய்வங்கள் இருக்கு வேதத்தில் இடம் பெறக் காண்கின்ருேம்.சிேரத்தை,கோபம்? என்பன இவ்வினத்தைச் சார்ந்தவை. பிரஜாபதி? என்னும் தெய்வமும் இத்தகைய தெய்வமே. இத் தெய்வங்கள் யாவும்: பத்தாம் மண்டலத்திலேயே காணப்படுவன. சிறு தெய்வங் களான “இருபு, அப்சரர்கள், கந்தருவர்கள்? என்பவர்களை யும் பத்தாம் மண்டலத்திலேதான் காண்கிருேம். பிதிரர்கள் இயமன் முதலியவர்களும் அரக்கர்களும்? இருக்கு வேதத் தின் இறுதிப் பிரிவுகளான பத்தாம் மண்டலத்திலே வருவது நோக்கற்பாலதாகும்.
இருக்குவேத காலத்தில் வழிபாட்டுமுறை மிகவும். எளி தாகவே அமைந்திருந்தது. “நான் உனக்கு நெய் முதலிய ஆகுதிகளைத் தருகிறேன்; நீ எனக்கு வீரர்களான மக்களை யும், பசுக்களையும், மழையையும், நீண்ட ஆயுளையுந் தா.?? என்பதே வழிபடுவோர் இருக்கு வேத காலத்தில் தெய்வங் களை மீண்டும் மீண்டும் வேண்டிய வேண்டுகோள். நெய் முதலிய ஆகுதிகளைக் கொடுக்கும் இவ்வழிபாட்டு முறை பல்கிப் பெருகி மிகவும் விரிந்து விரிவான முறையில் வேள்வி? குறிப்பிடப்படலாயிற்று. இவ்வேள்வி முறையை விவரித்து விளக்கிக் கூறுவதற்கென்றே தனி நூல்கள் தோன்றின. இவை பிராமணங்கள்" எனப் பெயர் பெறுவன.
இருக்கு வேதத்தில் பல தெய்வங்கள் கூறப்பட்டிருக்கின் றன அல்லவா? எனவே, இங்கு தெய்வங்கள் பல என்னும் கொள்கை” காணப்படுகின்றதா? என ஐயுறுதல் இயல்பு.

Page 49
வடமொழி இலக்கிய வரலாறு / 78
இருக்குவேத தெய்வங்களின் நிலையையும் இத்தெய்வங்களைப் போற்றிக் கூறும் பொழுது சுட்டப்படும் அவர்களின் இயல்பு களையும், குணங்களையும் உற்று நோக்கினல் ஒருண்மை தெளி வாகின்றது. ஒரு தெய்வத்திற் சிறப்பாக எடுத்துக் கூறும் அதே பண்புகள் வேறு தெய்வத்திற்கும் உரியனவாகக் கூறப் படுகின்றன. வழிபடுபவன் ஒரே தெய்வக் கொள்கையின னல்லன். இருக்கு வேதம் கூறும் தெய்வங்கள் எல்லாவற்றை யும் வழிபடும் மரபினன் எனினும், வழிபடும் வேளையில் தாம் வழிபடுந் தெய்வத்தை உயர்த்திப் போற்றி, உயரிய பண்புகளை அத்தெய்வத்தின் மேலேற்றி, ஒப்புயர்வற்ற ஒரே தெய்வமோ என நினைக்கும் வண்ணம் உயர்நிலைக்கு உயர்த்தி அத்தெய்வத்திடம் தான் விரும்பும் பொருள்களை இரந்து வேண்டுகின்றன். இவனே வேறு ஒரு தருணத்தில் இன்னுெரு தெய்வத்தை வழிபடும் வேளையில் அக்கால நிலைக்கும் சூழ லுக்குமேற்ப அதே உயரிய பண்புகளை இப்பொழுது வழி படும் மற்றத் தெய்வத்தின் மீது ஏற்றி, அதை உயர்த்தி வழி படுகின்ருன். வழிபடுவோன் தெய்வமொன்றையே தன் தனித் தெய்வமாகக் கொண்டு எப்பொழுதும் வழிபடாது, தன் விருப்பதிற்கேற்றவாறு வழிபடும் வேளையில், தன் ண்ணத்தை நிறைவேற்றவல்ல தெய்வம் எனத் தான் கரு தும் தெய்வத்துக்கே உயரிய குணங்களைக் கற்பித்துப் போற்றி வழிபடுதலையே தன் வழக்காகக் கொண்டான். இதே உயரிய குணங்களை வேறு தருணத்தில், வேறு தெய்வத்தைப் பெரி தும் வேண்டி வழிபடும்போது அத் தெய்வத்திற்குக் கற்பித் தலையும் காணலாம். இவ்வழிபாட்டில் அவனைப் பொறுத்த டில் அவன் தேர்ந்தெடுச்குத் தெய்வமே தனிப்பெருந் தெய்வமாகத் தோற்றமளிக்கின்றது. இதில் காலத்துக்குக் காலம் வேறுபட்டு விளங்கும் இயல்பினதானதாய்த் தோற்ற மளிக்கும் ஒரே கடவுட் கொள்கையைக் காண்கிருேம். நேரத்துக்கு நேரம் மாறிக்கொண்டிருக்கும் இவ்வொரே கட வுட் கொள்கையைச் சுட்டி விளக்கியவர் மாக்ஸ்மூலராவர். முதலில் எழுந்த இக்கொள்கை ந7 ளடைவில், ஒரே கடவுட் கொள்கை தோன்ற வழிவகுத்தது. இதுவும் நாளடைவில், மெேபாருள்கள் பலவாகக் காணப்படினும் எல்லாம் ஒரே

79 / கா. கைலாசநாதக் குருக்கள்
பொருளின் வேறு தோற்றங்கள்? என்றுணர்த்தும் ஒரே பொருட் கொள்கை தோன்ற அடிகோலிற்று.
இருக்கு வேதத்தின் பிற்பகுதியான பத்தாம் பண்டலத் தில் தக்துவக் கருத்துக்கள் நிரம்பியுள்ள பாடல்களைக் காண் கின்ருேம். இவை தொடக்க நிலையிலேயே காணப்படுகின் றன. இவற்றின் விரிவாக அமைந்தது இந்திய தத்துவ சாத்திரம்.
அறிவு வளர்வதற்கு அறிதல் காரணம். ஒன்றைப் பற்றி அறிவதாயின் அதைப்பற்றிப் பல கேள்விகளை எழுப்பி அவற் றிற்கு விடை கூற முயல்வதின்றியமையாதது.ஒன்றை உள்ள வாறு கண்ணுரக் கண்டும் இது இதுதான அன்றி வெருென்ரு எனவெல்லாம் கேள்விகளை எழுப்பத் தொடங்கினல்தான் அதைப்பற்றிய அறிவு விருத்தியடையும். அது, இதுதான் என்ற தெளிவும் உரியவாறு ஏற்படும். எனவே இவ்வாறு கேள்வி கேட்கும் நிலையில் சந்தேகம் தோன்றுதல் இயற்கை இவ்விதமான சந்தேக மனப்பான்மை அறிவை வளர்க்க உண்மை நிலையை அறிய-அதாவது தத்துவஞானம் தோன்ற அடிகோலுவது என்பர் தத்துவஞானிகள். இங்கனம் சந் தேகம் நிரம்பிய சூழ்நிலையில் தத்துவ ஞானம் வளரத் தொடங்கும் முறை யை எடுத்துக் கூறுவது போலச் சில பாடல்களமைந்து காணப்படுகின்றன.
இந்திய தத்துவ ஞானத்தின் அடிப்படைக் கருத்துக்கள் இங்கு தொடக்க நிலையிலேயே காணப்படுகின்றன. எனவே விரிவான விளக்கங்கள் இங்கு கிடையா என்ற உண்மையை மனதிற் தெளிவாகப் பதித்துக் கொண்டு தொடர்ந்து கவ னிப்போம். இந்திரன் மீது பாடப்பட்டுள்ள பாடலொன்றில் கூற்ப்பட்டிருப்பதை ஆராய்ந்து நோக்கில், இந்திரன் பெரு மையைச் சந்தேகித்துக் குரல் எழுப்பப்பட்டிருக்கின்றது என் பதை அறியலாம். இதே போன்ற சந்தேக மண்ட்பான்மை வேருெரு பாடலிலும் இந்திரனைப் பற்றியே தோன்றி ffîd பதைக் காணலாம். இருக்கு வேதத்தின் ஒப்பற்ற பெருற்

Page 50
வடமொழி இலக்கிய வரலாறு / 80
தெய்வமான இந்திரனையே சந்தேகிக்கத் தொடங்கியவர் களுக்கு வேறு தெய்வங்கள் மீதும் இதே உணர்ச்சி தோன்றல் இயற்கையே. படைத்தற் தெய்வமாகவும் காக்குந் தெய்வ மாகவும் கொள்ளப்படும் பிரஜாபதி மீது பாடிய பாடலின் ஒவ்வொறு பாட்டினிறுதியிலும் “எந்தத் தெய்வத்திற்கு அவிசொரிவேன்?99என்று ஏக்கம் மேலிட்டுக் கேட்கும் கேள்வி திரும்பத் திரும்ப எழுப்பப்படும் பொழுது இதே சந்தேக உணர்ச்சியே எதிரொலிக்கின்றது. நாசதீய சூக்தத்தில் இவ் வுணர்ச்சி உச்ச வரம்பை மீறுகின்றது. **உலகின் தொடக்க நிலை எத்தகையது? அக்காலத்தில் ஏதாவது இருந்ததா அல்லது ஒன்றுமே இருக்கவில்லையா? ஆகாயம், இடைவெளி என்னும் இவை தானும் காணப்பட்டனவா? எல்லாவற்றை யும் மூடிப் பரந்து நின்றது யாது? எது பாதுகாப்பாயமைந் தது? அளவிட முடியாதவாறு ஆழமான நீர்தான் முதலில் எங்கனுங் காணப்பட்டதா? இறப்பு நிகழ்ந்ததா? இறப் பிறந்த உயிர் ஏதாவது அப்பொழுது இருந்ததா? இரவு பகல் என்னும் பாகுபாடு அக்காலத்தில் இருக்கவில்லைப் போலும். தன்னந்தனியே தனிப் பொருளாய் விளங்கிய அவ்வொன்று காற்றில்லாத அந்நிலையில் தானகவே உயிர்ப்பெய்தியது.”* இப்பாடலைப் பாடிய உண்மையறிவாளி உலகம் எப்படி உரு வாயிற்று என்னுங் கேள்விக்குப் பயந்துகொண்டே விடை யிறுக்கின்ருர். 'இருளிற் பொதிந்துள்ள கடுமிருள் எங்கும் வியாபித்த நிலை தொடக்கத்திலிருந்தது; மிகவும் ஆழமாக நீர் எங்கும் பெருகிக் காணப்பட்டது. தவத்தின் பெருமை யின் விளைவாக ஒப்பற்ற தனிப்பொருள் தோற்றம் பெற்றது. இது அறிவுமயமானது. மனதில் முதற்ருேன்றிய பொருளிதுவே.? இப்படியெல்லாங் கூறிக்கொண்டே வரும் அறிருன் மனத்தில் தத்துவ விசாரணையை நன்கு தூண்டும் வகையில் சந்தேகங்கள் மேலும் தோன்றி வளர் கின்றன. இதைத் தொடர்ந்து விளக்கம் கூற இயலாதவாறு தெளிவற்ற நிலையே ஏற்படுகின்றது. °யார் இதை யறி வார்? யாரிங்கே இதை எடுத்துக்கூற வல்லவர்? படைத்தல் எப்பொழுது நிகழ்ந்தது? படைத்தல் நிகழ்ந்த பின்னரோ தேவர்கள்தோன்றினர்கள்? எங்கு இப்படைத்தல் நிகழ்ந்தது?

81 I கா. கைலாசநாதக் குருக்கள்
யாருக்குத் தெரியும்? படைத்தல் நிகழ்ந்ததா? இன்றேல் நிகழவில்லயா? இவ்வுலகம் முழுவதையும் மேலே விண்ணி னின்று கீழ்நோக்கும் அவன் ஒருவன் இதையறியக் கூடும். சில வேளை அவனும் தான் இதை யறியானே? யார் கண் டார்? இதுதான் நாசதீய சூக்தம் கூறும் விளக்கம்.
தத்துவக் கருத்துக்கள் விரவியுள்ள பாடல்களில் பெரும் பாலானவற்றுள் பிராஜபதி என்னும் படைத்தற்றெப்வம் பற்றிய குறிப்புக்கள் உண்டு. பிரம்னஸ்பதி, பிருகஸ்பதி விஸ்வகர்மா?எனப் பல பெயர் இத்தெய்வத்திற்குண்டு. நாச தீய சூக்தத்தில் படைப்பு நிகழ்ந்ததா என் ஐயந் தோன்றிய தைக் கண்டோம். அங்கே படைத்தலுடன் தொடர்புபடுத் தப்பட்ட பொருள் ஒன்று எனவும் தெளிவாக்கப்பட்டது. இதிலிருந்து ஒரு பொருட் கொள்கையும், ஒன்றின் விரிவிே நம் கண்முன் தோன்றுவன எல்லாம் என்ற கருத்து உருப் பெற்றன. இயற்கையிற் காணப்படும் பல பொருள்கள் தெய் வங்களெனக் கூறடபட்டுள்ள வெனிலும், இவை ஒன்றே யான ஒரு பொருளின் விரிந்த நிலையன்றி வேருென்றில்லை என்பதை உணர்த்தும் பாடலொன்று இருக்கு வேதத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்திரன், மித்திரன், வருணன், அக்கினி என்றெல்லாம் மக்கள் கூறுவர். தெய்விகப் பறவையான கருத்மானையும் குறிப்பிடுவர். அக்கினி, யமன், மாதரிஸ்வன் எனவும் பெயர்களை வழங்குவர். இவ்வாறு ஒன்றையே கவிகள் பல பெயர்களைக் கூறி அழைப்பர்.
இவ்வாறு பின்தோன்றி ஒப்புயர்வற்றவாறு விரிந்து வளர்ந்த தத்துவ நூல் ஈளுக்கடிப்படையான உயர் கருத்துக் கள் இப்பாடல்களில் உருவாகி, உபநிடதங்களில் வளர்ச்சி யெய்தி நிலைபெறுகின்றன.
இதுவரை இருக்கு வேத சமயம் எத்தகையதென்பதை ஓரளவிற்குக் கூறிளுேம். இனி இருக்கு வேதங்களை விளக்கும்
6- 6

Page 51
வடமொழி இலக்கிய வரலாறு / 82
முறையைப் பற்றிச் சிறிது கவனிப்போம். வேதங்கள் மறை யெனப்படுவன. இவை கூறுங் கருத்து மறை பொருளாகவே அநாதி காலமாக இருந்து வருகின்றது. வேதங்களின் கருத்தை யறிய முயலுதல் அநாவசியம் என்பது ஆன்ருேர் கருத்து. வேதங்கள் ஒதவேண்டியவை. அதன் கருத்தை யறிய முனைதல் வேண்டப்படாததொன்று என்னுங் கொள் கையுடன்தான் வேதங் கற்போர் இன்றுங்கூட வேதங் கற்ப தற்கெனத் தாம் செலவிட விரும்பும் பன்னிரண்டு வருடங் கள் முழுவதையும் வேதங்களை ஒதும் முறையைப் பயில் தலி லேயே தம்மை ஈடுபடுத்திவருகின்றனர்.
வேதங்கள் கூறும் கருத்தை அறியப் பெரிதும் முயன்ற வர்கள் மேனுட்டவர்கள். இவர்களுட் தலைசிறந்தவர்கள் ஜெர்மனியரே. உலகில் விமரிசகர்கள் பலரின் முயற்சியால் வேதங்களின் மொழியெர்ப்புக்கள் பல மொழிகளில் தமிழி லும்கூட இதுவரை வெளிவந்துள்ளன. உயர்ந்த ஜெர்மனிய விமரிசகர்கள் கூறியதை இச்சந்தர்ப்பத்தில் நம் ஞாபகத்தில் பதிய வைத்தல்வேண்டும். மொழிபெயர்ப்பாளர்கள் தாமுரு வாக்கும் நூலில் வேதங்கள் எல்லாவற்றையுமே மொழி பெயர்த்து வைத்தல் வேண்டும் என்ற மனப்பான்மை களை யத் தக்கது. வேதங்களில் தெளிவாக விளங்காத பகுதிகள் எவ்வளவோ இருக்கின்றன என்பதே இவர்கள் விடுக்கும் எச்சரிக்கை. இதிற் பெரும் உண்மை காணப்படுகின்றது. மேலும் கவனிப்போம். வேதங்களை விளக்கும் முறை இரு வகையானது. இந்தியாவிலேயே தோன்றி இந்தியரால் வகுக் கப்பட்டது ஒன்று. மற்றையது மேனுட்டு விமரிசகர்களுள் ஒரு சிலரால் தனியே தோற்றுவிக்கப்பட்டது. இவர்கள் இந்தியர் கூறிய விளக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தவர் கள். மேனுட்டவர்கள் வேதங் கூறும் கருத்துக்களை விளங்க வைப்பதற்குப் பன்னெடுங் காலத்திற்கு முன்னரே வேத விசாரனை இந்தியாவில் நிகழ்ந்து வந்தது. சீயாஸ்கர்? என்னு மறிஞரே இதற்கு வழிகாட்டி **வேதங்களை விசாரிப்பதனல் பயனெதுவுமில்லை. இவை கருத்துயர்ச்சியற்றவை. முன்னுக் குப் பின் முரணன கூற்றுக்களைக் கொண்டமைந்தவை."

88 / கா. கைலாசநாதக் குருக்கள்
என யாரோ ஒருவர் ஏற்கனவே கூறியதைக் கண்டிக்கத் தொடங்கி யாஸ்கர் இருக்கு வேதத்திற் காணப்படும் அரிய சொற்களை விளக்கும் நிகண்டாகிய நிருக்தத்தை? இயற்றி ஞர். அதோ கம்பம் இருக்கிறதே. இது கண்ணில்லாத குருடனுக்குத் தெரிகின்றதில்லை. அப்படியாயின் குற்றம் கம்பத்தினுடையதா???என உவமை மூலம் தம்கொள்கையை ஆழப் பதியும் வண்ணம் விளக்கி வேதங்களின் அரும்பகுதி களுக்கு விளக்கம் கூற முற்பட்டார். மிகப் பிற்காலத்தில் சாயனர் இவ்வழியைப் பின் பற்றி இருக்குவேதம் முழுவதற் குமே உரை வகுத்தனர். மேனட்டு விமசரிகருள் ஒருசிலர் இவ்வுரையை பயனற்றதாக ஒதுக்கி விட்டார்கள். பல நூற்ருண்டுகளுக்கு முன்னெழுந்த நூலிற்கு நெடுங்காலத் திற்குப் பின் தோன்றிய சாயணர் நூலெழுந்த காலத்து நாக ரிகம், பழக்க வழக்கங்கள் முதலியனவற்றைப் பற்றி ஒன்று மேயறியாது எப்படி உரை எழுத வல்லார்? என்பது இவர்கள் வாதம். “நாங்கள் சாயணர் காலத்துக்கு இன்னும் பல நூற்ருண்டுகளுக்குப் பின்னர் வசித்தாலும் சாயணருக் குத் தெரிந்திராத இலத்தின் கிரேக்கம், ஜர்மனியம், பழைய பாரசீகம் (அவெஸ்தா) முதலிய மொழிகளின் அறிவைத் துணைக் கொண்டு தோன்றியதும், ஒப்பு முறையிலமைந்தது மான இலக்கண அறிவையும், ஒப்பு நோக்கிவிரிக்கப்பட்டுள்ள சமய அறிவையும் பாகுபாடின்றி காணப்படும் நடு நிலையினையும், விமசரிகருக்கு வேண்டப்படும் பகுத்துணர்வு செறிந்த நுண்ணறிவையும் துணைக் கொண்டு இருக்கு வேத விளக்கம் இன்னும் சிறந்த முறையில் யாமே வல்லோம். வேறு யார் வல்லர்??? என அறைகூவித் தாமே தனித்து உரை வகுக்கவும் தொடங்கினர். இவர்களுள் ரொத், கிராஸ் மன் என்னுமிருவரும் முக்கியமானவர்கள். இவ்விரு வழியி லும் சென்றுவிடாது இரு வழிகளிலும் காணப்படும் சிறந்த அம்சங்களை கைக்கொண்டு தடு வழி நின்று உரை வகுத்தவர் *அல்பிரெட் லுட்விக்? என்பவரும் பிஷல்? என்பவருமாம் . மாக்ஸ்மூலர் என்னும் அறிஞரும் இதே கொள்கையினர். இவர்கள்கடைப்பிடித்த நடு வழியையே அறிஞருலகம் இன்று பெரும் பாலும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

Page 52
வடமொழி இலக்கிய வரலாறு 84
இது நிற்க. இனி வேத காலத்தைப்பற்றிச் சிறிது நோக் குவோம். வேதங்கள் மக்களாலாக்கப்படாதவை என்பதை அபெளருஷேய" என்னும் அடைமொழி குறிக்கின்றது. வேதங்கள் தோற்றம், அழிவு இரண்டுமற்றவை. முக்காலத் துக்கும் உண்மையானவை. இவை தெய்விக நூல்கள் எனவே ஏனைய நூல்களுக்குப் போல் இவற்றிற்கும் கால வெல் ைகூறி வரைவு காட்டல் பொருந்தாது என்பது பழை. மையைப் போற்றிப் பேணும் ஆஸ்திகர் மனத்தில் ஆழப் பதிந்த கருத்து.
வேதங்களே இயற்றியோர் இருவிகள் என்னும் கருத்து வேத காலத்திலேயே நிலவிற்று. பிராமணங்கள் தாம் இதை முதன் முதலில் அங்கங்கே கூறுகின்றன. பின்னெழுந்த அநுக் கிரமணியிலும் இவ்விருஷிகள் பற்றிக் குறிப்புக்கள் உள்ளன. உபநிடதங்களில் கூறப்பட்டுள்ள உயரிய கருத்துக்களைப் பெரும் அறிவாளிகளும், இருவிகளும் கூறியுள்ளதாக அறிகின்ருேம். இப்படியாக சங்கிதை, பிராணம், உபநிட தம் ஆகிய வேதங்களின் பல பிரிவுகளிலும் இருஷிகள் கூறப்ப டும்பொழுது எப்படி வேதம் அபெளருஷேயம் எனக் கூறலாம் என ஐயம் நிகழ்தல் இயற்கையே. இருவிகள் இவற்றைக் கூறி யதாகக் கொள்ளினும் இவை அபெளருஷேயமான நூல்களே. வேதங்கள் கூறுவதெல்லாம் இவர்களது கருத்தல்ல . இவை இவர்களது ஆக்கங்களல்ல. தெய்வத் திருவருளால், தெய் விகத் தூண்டுதலால் இவர்கள் உள்ளத்தில் இக்கருத்துக்கள் தோன்றின. இக் கருத்துக்கள் சொல்லுருவம் பெற்று பாட்டுக்களாயமைந்ததும் தெய்விக நிகழ்ச்சியே. இவர்கள் கேவலம் துணைக் கருவியாக இருந்தார்களேயன்றி, தாமா கவே இவற்றை ஆக்கவில்லை. எனவே வேத வாக்கியங்கள் தெய்விகமானவை. இவை மக்களாலாக்கப்படாதவை யல் லவா தெய்விகமானவை யாதலால் இவை அபெளருஷேயம் என்னும் அடை மொழிக்குத் தகுதி வாய்ந்தவை.
வேதங்கள் எக்காலத்தில் எழுந்தன என்ற கேள்வியை எழுப்பி விடை கூறவந்தவர்கள் மேனட்டவர்களே. இவர்கள்

85 / கா. கைலாசநாதக் குருக்கள்
எவ்வாறு வேதகால ஆராய்ச்சி நிகழ்த்தினர் என்பதை நோக் குவோம். இலக்கிய வரலாற்று நூலாசிரியரான வீபர் என்ப வர் முதன் முதலில் இம்முயற்சியிலீடுபட்டார். காலத்தை ஓரளவிற்கு ஊகித்துப் பெருமளவிலே நிர்ணயிக்க கருதியே இவர் இருக்கு வேத கால நிர்ணயத்தில் ஈடுபட்டார். வேதம் களின் காலத்தைக் கணக்கிட முயலுதல் வீணே என்னும் இவர் கருத்து வேத காலத்தை வரையறுத்து நிறுவுதல் என் வளவு கஷ்டமானது என்பதைத் தெளிவாக்குகின்றது. ஏற்க னவே இந் நூல்களிற் சுட்டிக் காட்டியவாறு வேதங்கள் பழைய நூல்கள் யாவற்றினும் மிகப் பழையவை என்ற உண்மை எல்லோராலும் ஒரே முடிவாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. கங்கை ஒடும் பகுதிவரை விரிந்து பரந்து விளங்கிய வேத நாகரிகத்தைக் கூறும் இருக்குவேதப் பாடல்களுக் கும் தெற்கே பரவிச் சென்று கொண்டிருக்கக் காணப்படும் நாகரிகத்தை விளக்கும் இதிகாச புராணங்களுக்கும் இடை யில் எத்துணைக் காலம் ஆகியிருக்கும் இவ்வுண்மையைக் கருத்தில் நன்கு பதிய வைத்துக் கொண்டே வேத காலத்தை நிறுவும் ஆராய்ச்சியில் ஈடுபடுதல் அவசியம்.
வேதகால விசாரணையில் ஆழ்ந்து ஈடுபட்டுக் காலத்தை நிறுவுவதற்கு முதன் முதலாக முன் வந்தவர் மக்ஸ்மூலர். இன்று கூட சரித்திர வரலாற்று நூலாசிரியர்கள் இவர் இத் துறையில் கையாண்ட வழியை மெச்சிப் போற்றுகின்றனர். வேதங்களின் உட்பகுதிகள் சங்கிதை, பிராமணம், உபநிட தம் என்பன. இவற்றை ஒப்பிட்டு நோக்கினுல் கருத்து வளர்ச்சியாலும் மொழியமைப்பினுலும் ஒன்றிலிருந்து மற் றது வேறு பட்டிருப்பது தெளிவாகின்றது. இவ்விதம் வேறு படும் இருபகுதிகளை எடுத்துக் கொண்டு இவற்றிற்கிடையில் இருநூறு வருடகால இடைவெளி இருந்திருக்கலாம் என ஊகத்தினல் கணக்கிட்டு மாக்ஸ்மூலர் கால நிர்ணயம் செய் யத் தொடங்கினர். இப்படிக் கணக்கிடும் பொழுது, சங்கி தைக்கும் பிராமணங்களுக்கும் இடையே இருநூறு வருஷங் களும் பிராமணங்களுக்கும் உபநிடதங்களுக்கு மிடையே இருநூறு வருஷங்களும் இருந்திருக்கலாமென ஆகின்றது.

Page 53
வடமொழி இலக்கிய வரலாறு / 86
சங்கிதைக்கும் அதன் வளர்ச்சி கருதி அதன் தொடக்க நிலை யைக் கருதிக் கொண்டு இவ்வாறு இருநூறு வருஷங்களைக் கணக்கிடின், வேதங்கள் சங்கிதையாகத் தோன்றி உபநிட தங்களாக முடியும் வரை-அதாவது, வேத இலக்கியம் தோன்றி வளர்ந்து அதன் முழு உருவத்தையும் பெறுவதற் கும்-அறுநூறு வருடங்கள் ஆகி இருக்கலாம். இதுவே வேத காலத்தைத் தாம் நிர்ணயிக்கும் முறையை விளக்கும் மக்ஸ் மூலரின் ஆராய்ச்சியின் முதற்ருெடக்கம். இது நிற்க. புத்த ருடைய காலம் ஒன்றே இந்திய சரித்திரத்தில் சரிவர நிறுவப் பட்ட மிகப் பழைய காலம். இவருடைய காலம் ஏறத்தாழ கி. மு. 500 என்பது எல்லோரும் ஒரே முகமாக ஏற்றுக் கொண்ட உண்மை. எனவே திடமாகத் தெரிந்த கி. மு. 500 ஐ அடிப்படையாக வைத்துக் கொண்டு இதன் உதவி யுடன் வேத காலத்தை அவர் காலத்திலிருந்து பின்நோக்கி ஆராய்கின்ருர் மாக்ஸ்மூலர். புத்தர் கூறும் போதனைகளில் இருந்து அவர் காலத்திலேயே வேத இலக்கியம் உருப்பெற்று விட்டது என்பது தெரிகின்றது. வேத இலக்கியத்தைப்பற் றிய குறிப்புக்கள் அடிக்கடி இங்கு இருக்கின்றன. எனவே இவர் காலத்திற்கு முன், அதாவது 600 வருஷங்களுக்கு முன் இருக்கு வேதம் தோன்றியிருத்தல் வேண்டும் எனத் தெரி கின்றது. ஆகவே மாக்ஸ்மூலர் கி. மு. 1200-100 வரை இருக்கு வேதம் தோன்றியிருக்கலாம் என ஊகத்தால் நிறுவி இருக்கு வேத காலத்தை மட்டிட்டுள்ளார்.
வேதத்தின் ஒவ்வொரு பகுதியும் உருவாக இருநூறு வருடங்கள் ஆயின என்னும் மாக்ஸ்மூலரின்கொள்கை நன்கு, பரிசீலனை செய்யப்பட வேண்டியது. காரணம் எதுவும் காட் டாமல் தன் மனதில் எழுந்தவாறு இருநூறு வருடங்களே இருவகை இலக்கியத்தினிடை இருந்த இடைவெளி எனக் கொள்ளுதல் எல்லோருக்கும் ஏற்புடைத்தன்று. சங்கிதை. பிராமணம் ஆகிய இருபகுதிகளையும் எடுத்து ஒப்பிட்டு நோக். குபவர்கள் சங்கிதையின் நின்றும் பெரிதும் வேறுபட்டுத் தனக்கென உரிய பண்புகளைக் கொண்டு விளங்கும் பிரா மணங்கள் இவ்வாறு தோன்றி விளங்குவதற்கு இருநூறு

87| கா. கைலாசநாதக் குருக்கள்
ஆண்டுகள் எம்மாத்திரம் இவ்வகையே ஏனைய பகுதிகளுக்கு இடையில் இருந்ததாகக் கூறப்படும் இருநூறு வருடங்களைப் பற்றியும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இதிலிருந்து இருக்கு வேத காலம் கி. மு, 1200-1000 என்று மாக்ஸ் மூலர் கொண்ட முடிபு எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிபன்று என்பது தெளிவாகின்றது. எனினும் மாக்ஸ்மூலர் கோலிய கால எல்லை ஒருண்மையை மட்டும் வலியுறுத்தும். அதாவது, இருக்கு வேத கால எல்லை கி. மு. 1200 இதற்குப் பிந்தி இவ்வேதம் தோன்றியது எனக் கொள்ளுதல் பொருந் தவே பொருந்தாது என்பதாம். இருக்கு வேதத்தை மிகவும் பிந்திய நூலாகக் கொள்ளும் பல ஆராய்ச்சியாளர்களின் முடிவு இதனல் நிராகரிக்கப்பட்டது. மாக்ஸ்மூலர் இவ்வாறு காலநிர்ணயம் செய்த பொழுதும் “வேத மந்திரங்கள் கி. மு. 1000 வரையிலோ, அன்றி கி. மு. 1590க்கு முன் பின்னே, இல்லாவிடில் கி. மு. 2000 அல்லது கி. மு. 3000 அளவிலோ இயற்றப்பட்டவை என வரையிட்டுக் கூறுதல் ஒரு பொழுதும் ஒருவருக்கும் முடியாது.?? என்று கூறுவதி விருந்து காலநிர்ணயத்தில் தமக்கு மட்டுமின்றிஇத்துறையில் ஈடுபடுவரெவர்க்குமே இக்கால வரையறையில் ஏற்படக் கூடிய இடர்ப்பாடுகளை இவர் நன்குணர்ந்தார் எனத் தெரி கின்றது. மாக்ஸ்மூலர் நிறுவியது முதல், இருக்கு வேதகாலம் கி. மு. 1200-1000 என்னுங் கருத்து எல்லாராலும் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை இவ்வாறு ஏற்றுக்கொள்பவர்கள் இக்காலத்திற்குள் இருக்கு வேதம் தோன்றியதெனக் கொள்வதில்லை. இதற்குப் பின் இவ் வேதம் தோன்றியிருக்க முடியாது என்பதுதான் பேருண்மை விட்னி" என்னும் அறிஞரும் இக்கருத்தையே தமக்கு உடன் பாடாகக் கொண்டு விளக்கிக் கூறியுள்ளார். "ஷிராடர்" போன்றமாபெரும் மேதைகளும் மிகவும் தயங்கிக்கொண்டே இக்கால எல்லையைப் பெரிதும் வேறுபடுத்தி, இருக்குவேத காலம் இன்னும் பழைய காலத்ததாக இருத்தல் வேண்டும் எனக்கூறி, இக்காலம் கி. மு. 1500 அல்லது கி. மு. 2000 என முடிவு கொண்டனர்.

Page 54
வடமொழி இலக்கிய வரலாறு 188
நட்சத்திரங்களைப் பற்றி வேதங்கள் கூறும் நிலைகளை ஆதாரமாகக் கொண்டு வேதகாலத்தை நிர்ணயிக்கும் ஒரு வழியை இரு பெரும் அறிஞர்கள் கையாண்டனர். வேதத் தில் யாகம் வேட்கவேண்டும் நாட்களைக் குறிப்பிடும் பொழுது, சந்திரனுடன் இன்ன நட்சத்திரம் சேரும் வேண் பில் இன்ன வேள்வி ஆற்றல் வேண்டும் எனக் குறிப்பிட்டி ருக்கக் காண்கிருேம். இவ்வகைக் குறிப்புக்களை ஆதாரமாகக் கொண்டு 1893-ம் ஆண்டில் ஜேகோபி? என்னும் ஜர்மனிய அறிஞரும் பாலகங்காதர திலகர்? என்னும் மராட்டிய மேதையும் தனித் தனியே வேத காலத்தை நிர்ணயிக்க விழைந்தனர். வேதகாலம் கி. மு. 6000 என்று திலகரும் கி. மு. 4500 என ஜகோபியும் வெவ்வேருக முடிபுக்கு வந் தனர். இவர்கள் ஆதாரமாகக் கொண்ட நட்சத்திரங்களைக் கூறும் பகுதிகள் கருத்துத் தெளிவற்வை என்றும், இக்கருத்து கள் தெளிவான பின்னரே இதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுதல் பொருத்தமானது என்றும் கூறிப் பெரும் பாலானவர்கள் இம்முடிபை ஏற்றுக்கொள்ளாது மறுத்துள் 6TITrissir.
திலகரும் ஜகோபியும் தங்கொள்கைகளைச் சரிவர வலி புறுத்தி அறிஞருலகம் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு நிறுவாத பொழுதும், இவை ஆராய்ச்சியாளரின் சிந்தனையைத் தூண்டி வேதகாலம் மாக்ஸ்மூலர் குறிப்பிடுங் காலத்தைக் காட்டிலும் முந்தியதாக இருக்கலாமா என ஆராய்வதற்கு காக்கம் அளித்தது. இதுகாறும் கூறியவற்றின் தெளிவு, வேதகாலம் கி. மு. 12000க்குப் பிந்தியது என்பதை மறுப்ப தற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்பதும், இது கி மு. 1500 கி. மு. 2000 கி. மு. 3000 அல்லது கி. மு. 4000 ஆகவும் இருந்திருக்கலாம் என்பதுமாம். இற்றைய நிலையில் நாம் அறிந்துள்ள அரசியல் சரித்திரம், இலக்கிய சரித்திரம், சமய சரித்திரம், மொழி வளர்ச்சி கூறும் சரித்திரம் என்பவற்றை எல்லாம் கருத்திற் கொண்டுஆராய்ந்து பார்த்ததால்இருக்கு வேதகாலம் கி. மு. 1500 கி. மு. 1200 என்று இன்று பெரும்பாலோர் கொள்ளும் முடிவுகூட வலிமையற்றது"

89 / கா. கைலாசநாதக் குருக்கள்
என்பது தேற்றம். இக்கருத்தைப் பீலர்? என்னும் அறிஞரும் தெளிவாக விளக்கியுள்ளார்.
மேலும் இதைத் தொடர்ந்து புறச்சான்றுகள் சிலவற் றையும் கவனிப்போம். இருக்கு வேத நாகரிகம் மிகவும் தெற்கே பரவிய காலம் கி.மு. 300க்கு முன்னர் என்பது கல் வெட்டுக்கள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. இதைவிடத் தென்னிந்தியாவிலே தோன்றிய பெளத்தாயனர், ஆபஸ் தம்பர் என்னும் இருவரது சூத்திரங்கள் கி. மு. ஏழாம் எட்டாம் நூற்றண்டுகளில் உருவாகி இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இதை ஆதாரமாகக் கொண்டு மேலும் ஆராயும் பொழுது, முதலில் இருக்கு வேதகாலம் ஏறத்தாழ கி. மு. 1500 ஆக இருந்திருக்கலாம் எனக் கொள்ளுவோம். இவ்வாறு கொண்டால் ஏற்கனவே குறிப்பிட்ட எட்டாம் நூற்ருண்டிற்கும் கி. மு. 1500க்குமிடையில் ஏழு நூற்ருண் டுகளே காணப்படுவன. மிகவும் வடக்கே இருந்து மிகவும் தெற்குவரை வேத நாகரிகம் பரவுவதற்கு எழுநூறு ஆண்டு கள் மிகக் குறுகிய காலப் பரப்பாக அன்ருே காணப்படுவன. எனினும் இதை மறுத்து எழுநூறு ஆண்டுகள் பல்வேறு நிகழ்ச்சிகள் நன்கு நிகழ்வதற்கு முற்றிலும் போதிய காலம். அமெரிக்காவைப் பாருங்கள். வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் உன்ா இடைவெளி பெரிது. எனினும் இங்கு நானுாறு ஆண்டுகளுக்குள்ளேயே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அல்லவா?இதிலிருந்து எழுநூறு ஆண்டு கள் குறுகிய காலம் எனக் கொள்வது முறையல்ல என்பது தெரிகின்றதே?? என ஒல்டின் பேர்க்? எடுத்துக்கூறியுள்ளார். விண்டர்னிட்ஸ்? இதை மறுத்து இவ்விதம் ஒப்பிடுவதில் இவர் இழைத்த தவறைச் சுட்டிக்காட்டியுள்ளார். நானுநூறு வருட எல்லைக்குள் அமெரிக்கர் தம்முள் தொடர்பு பூண்டு முன்னேற்றம் பெற்ற நாகரிகநிலை, ஆயிரக்கணக்கான வரு டங்களுக்கு முன் இந்தியாவில் மாற்றம் விளைவித்துப் பரவிச் சென்ற நாகரிக நிலையின் நின்றும் வேருனது என்று கூறியும், சங்கிதை, பிராமணம், ஆரணியகம், உபநிடதம் என்று வெவ்வேறு பெயர்கள் பெற்றுத் தனித்தனி இலக்கியங்

Page 55
வடமொழி இலக்கிய வரலாறு / 90
களாய்த் தமக்குள் வேறுபட்ட மொழியமைப்பைப் பெற்று விளங்க எத்துணைக் காலம் ஆகியிருக்கும் என்னும் உண்மை யினை ஆராய்ந்து இவை குறிக்கும் கருத்துக்கு ஏற்றவாறு இவ்வாறு பரந்து காணப்படுவதற்குப் பன்னெடுங்காலமாகி இருக்கலாம் என்ற உண்மையினைச் சுட்டியும், வேத காலம் குறுகிய எழுநூருண்டுகளுள் வரையறுக்கப்படத்தக்கதன்று என நிறுவியுள்ளார். புத்தர் காலமாகிய கி மு. 500 ஐ அடிப்படையாகக் கொண்டல்லவா! மாக்ஸ்மூலர் வேத காலத்தைக் கணிக்க முன் வந்தார். ஆனல் புத்தர் கூறிய நூல்களில் சூத்திரங்களும் காணப்படுகின்றன, என்பதை நினைவு கொள்ளத் தவறிவிட்டார். மேலும், புத் தருக்கு முன் ஜைனரும் இவர் கூறும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தனர். எனவே புத்தர் காலமாகிய கி. மு. 500ல் இருந்து கணக் கிடாது ஜினரின் காலமான கி. மு 750ல் இருந்தே கணக் கிடுவது முறை எனப் பீலர்? சுட்டிக் காட்டியுள்ளார்.
*ஹ்யூகோ விக்லர்" என்பவர் கண்டு பிடித்த கல்வெட்டு ஒன்றில் காணப்படும் விஷயங்கள் இவ்வாராய்ச்சியை மேலும் ஊக்குவித்தது. கி. மு. 1400 அளவில் ஹிட்டைட்ஸ் என்னும் இனத்தினருக்கும் மிட்டனி? என்னும் நாட்டு மன்னனுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக் கையில், இவ்விரு நாட்டினர் வணங்கிய தெய்வங்களும் கூறப்பட்டுள்ளன.பாபிலோனியதெய்வங்களையும்ஹிட்டைட் மக்களையும் தவிர மித்திரன், வருணன், இந்திரன், நாசத்யர் கள் ஆகியோரும் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். இக் கல்வெட்டைப் பற்றி அபிப்பிராயங்கள் பல உண்டு எனினும் இதைத் துணைக் கொண்டு இத்தெய்வங்களைக் கூறும் வேத காலம் கி.மு 1500 வரை விளங்கியிருக்கலாம் எனச் சிலர்ற கருதுவர்.
கிே.மு 3000 வேதகாலம் என்ற கொள்கையும் முழுதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதொன்றன்று?’எனக் கூறும் ஹெர்டல் என்னும் அறிஞர், **இருக்கு வேதம் கூறும் நாகரிகம் இந்தி யாவிற் பிறக்கவில்லை. இது இரானிலேயே தோன்றிவிட்டது.8

91 I கா. கைலாசநாதக் குருக்கள்
இது சொறஸ்டரின் காலத்தைவிடப் பழையதன்று? என்று சுட்டிக்காட்டியுள்ளார். இவர் கருத்து கி. மு.1000ஆண்டள வில் இருக்கு வேத மக்கள் ஆப்கானிஸ்தான் வரை வந்திருக்க லாம் என்பது. அங்ங்ணமாயின் இதற்குப் பல காலத்துக்குப் பின்னரே இவர் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என ஆகின்றது இருக்கு வேதத்தில் கூறப்படும் கானிதபிருது சிரவத்? என்போன் ஸ்கிதிய மன்னனுன சுனிதஸ் என்பவனே. இவன் கி. மு. இரண்டாம் நூற்ருண்டில் வசித்தவன். இதை எல்லாம் துணைக்கொண்டு கணக்கிடின் இருக்கு வேதகாலம் கி. மு. இரண்டாம் நூற்ருண்டு எனக் கொள்ள நேரிடும். வேதங்களுக்கும் அவெஸ்தாவுக்கும் இடையில் காணப்படும் தொடர்பு வேதகாலம் பிந்தியது எனக் கருத வைக்கின்றது? எனக் கூறி இருக்கு வேதத்தின் தொன்மையை மறுத்துள்
CITTTTT =
இதுகாறும் வேதகாலம் பற்றிக் கூறிய குறிப்புக்களை யெல்லாம், பலவாறு நோக்கி ஆராய்ந்து, மேல் வரும் முக்கி யமான முடிபுகள் கொள்ளத்தக்கவை என விண்டர்னிட்ஸ்" கூறுவர். நட்சத்திரங்கள் பற்றிய குறிப்புக்களைப் பயன்படுத் திக் கால நிர்ணயம் செய்யும் முறை சிறந்ததே. ஆனல் இக் குறிப்புக்களைத்தெளிவாக விளங்கியபின்னரே இம்முறையைக் கையாளல் வேண்டும்.இன்றேல் இம்முறை ஏற்றுக் கொள்ளப் படத் தக்கதன்று. இந்தியாவுக்கும், மேற்காசியாவுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட கல்வெட்டில் கி. மு. 2009 வரை இருக்கு வேத தெய்வங்கள் கூறப்படுவதும் நோக்கற். பாலது. இருக்கு வேதத்தின் மொழியமைப்பு, வேதம், சம்ஸ் கிருதம் ஆகியவற்றுக்கிடையே காணப்படும் வேறுபாடு தொடர்புகள் ஆகியவற்றை யெல்லாம் கவனித்தும் கால நிர்ணயம் செய்யலாம். இது இருக்கு வேத காலத்தை அள வுக்கு மீறிப் பிற்காலத்திற்குக் கொண்டு போகாதவாறு நிறுவ வழி செய்யும். இலக்கிய வரலாற்றையே சான்ருக ஏற்று மாக்ஸ்மூலர் கூறியவழியே பார்ஸ்வநாதர்மகாவீரர், புத்தர் முதலியவர்கள் வேதங்களைக் கூறுவதனல் இவர் காலத் துக்கு முந்தியவை இவை எனக் கொண்டு கி. மு. 1500

Page 56
வடமொழி இலக்கிய வரலாறு / 92
1200 க்கு முன் இருக்கு வேதகாலம் தொடங்கிற்று என முடிபு வரையலாம். இருந்தும் கி. மு. 2500-கி. மு. 2000 வரை பாடல்கள் இயற்றப்பட்டன எனக் கொள்ளுவதில் தவ நில்லை. கி. மு. 750 -கி. மு. 500 வரை உள்ள காலத்தில் உபநிஷதங்கள் இயற்றப்பட்டிருக்கலாம். மிகவும் அளவு மீறிய பழைய காலத்திலோ அன்றி, மிகவும் பிற்காலத்திலோ இவை இயற்றப்பட்டன எனக் கொள்ளாது மிகவும் அவதா னித்து முடிவு கொள்ளுதல் சாலச் சிறந்தது என்பர் வின்டர் னிட்ஸ்.


Page 57

இனி நான்காவது வேதமான அதர்வ வேதத்தின் இயல்பை நோக்குவோம். அதர்வ வேதம் என்று ஒரு வேதம் உளதா என்னுங் கேள்வி,வேத இலக்கியம் படிப்பவர்கள் மன தில் தோன் ஐவது இயற்கையே. வட மொழியில் உள்ள இலக் கியங்களில், பெரும்பாலானவை மூன்று வேதங்களையே குறிப் பிடுகின்றன. வேதங்களைக் குறிக்கும் திரயீவித்யா? என்னுஞ் சொல், மூவகை அறிவு நூலாகிய வேதத்தைச் சுட்டும். இச் சொல் குறிப்பது இருக்கு, யசுர்,சாமம் ஆகிய மூன்று வேதங் களையேயாம். அக்கால மக்கள் அதர்வ வேதத்தை ஒரு வேத மாகக் கருதவில்லை. நாளடைவிலேயே இது?நான்காம்வேதம்" என்னும் நிலை எய்திற்று. இவ்வேதத்தில் மிகப் பழைய கருத் துக்கள் இருக்கின்றன. இக்கருத்துக்கள் ஏனைய வேதங்களிற் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களின் நின்றும் வேருனவை. உயர்நிலையில் நில்லாத கீழோர்க்கு உரியது இவ்வேதம் என்று ஒருகாலத்தில் பொது அபிப்பிராயம் மக்களிடையே நன்கு வேரூன்றி இருந்தது. இதனுல் மக்கள் அதர்வ வேதத்தை ஒரு வேதமாக ஏற்றுக்கொள்ள மறுத்தனர். நாளடை வில் அதர்வ வேதம் சில மாற்றங்களை ஏற்று வேற்றுருப் பெற்றது. ஏனைய வேதங்களில் இருந்து சில பகுதிகளை இவ் வேதம் தன் உறுப்பாக ஏற்றது; அவை கூறும் கருத்துக்களை ஆங்காங்கு கூறத் தலைப்பட்டது. இவ்வாறு தொடக்க நிலை யிலிருந்து வேருகி, விரிந்துருவாகி அதர்வ வேதம் நாளடை வில் அறிஞர் மனதைக் கவர்ந்து நாலாம் வேதமாகத் தனி யிடம் பெற்றுவிட்டது என நாம் ஊகத்தால் அறியக்கூடிய தாயிருக்கின்றது. அதர்வ வேதத்தில் அமைந்து விளங்கும் கருத்துக்களைப் பற்றி இனித் தொடர்ந்து வரும் விளக்கங்கள் இவ்வுண்மையினையே மேலும் வலியுறுத்தும்

Page 58
96 கா. கைலாசநாதக் குருக்கள்
இவ் வேதம் ஏன் அதர்வ வேதம்’ எனப் பெயர் பெறலாயிற்று? இருக்கு, யசுர், சாமம் முதலிய மூன்று வேதங்களின் பெயர்களை நோக்குங்கால், அவை கூறும் கருத்துக்களுக்கும், அக்கருத்துக்களைக் கூறும் முறைக்கும் ஏற்ப இப் பெயர்களைப பெற்று வரும் உண்மை தெரியவரும். இருக்கு என்ருல் பாட்டு என்பதும், இருக்கு வேதம் தெய்வங்களைப்போற் றிப் பாடும் பாட்டுக்களின் தொகுதி என்பதும் ஏற்கனவே எடுத்துக் கூறப்பட்டது. யசுஸ் என்பதற்கு உரைப்பகுதிகள் என்று பொருள். இது கிரியைகளைப் பற்றி விளக்கங் கூறி உரை நடையிற் பெரும்பாலும் அமைந்த உரை நூலாகும். இவ்வுரைகள் உரக்கப் படிக்கப்படத்தக்கன.*சாமம் என்ருல் இசை பெருக்கி இராகம் இழுத்துப் பாடும் பாட்டு என்னுங் கருத்து உண்டு. இது சாமானி என்று பன்மை யுருவத்தில் பெரும்பாலும்வரும். *அதர்வம்" என்னும் பெயரோவெனில், இவ்வாறு எடுத்து விளக்கத் தக்க முறையில் அமையவில்லை. ஏனைய வேதங்கள் தம் பெயரால் கூறுங் கருத்துக்கள் இவை யெனச் சுட்டுவது போல் இவ்வேதத்தின் பெயரும், இது கூறும் கருத்துக்களை அதர்வம் என்று தன் பெயரால் சுட்டிக் குறிப்பிடவில்லை. இவ்வேதத்திற்கு *அதர்வாங்கிரஸ், பிருகு வாங்கிரஸ், பிரம வேதம்’ என்ற வேறு பெயர்களும் உண்டு. பிரம வேதம் என்னும் பெயர் பிற்காலத்தில் வந்தது என்பர். பேஷஜானி, யாது என்னும் இன்னுஞ் சில பெயர்களும் ஒரு காலத்தில் இவ்வேதத்துக்கு வழங்கி வந்திருக்கின்றன. இவை இவ்வேதம் எடுத்துக் கூறும் விஷயங்களில் ஒரு சில பகுதிகளை மட்டுமே குறிக்கின்றன. எனினும் இப்பெயர்கள் பிரசித்தி பெற்று மக்களிடை இன்று வழங்குவதைக் காண்கின்ருே மில்ஜல. அக்கினி வழிபாட்டில் மிகவும் ஈடுபட்ட புராதன காலப் புரோகிதர்களுடன் இவ்வேத தொடர்புடையது என்பர் சிலர். இப் புரோகிதர் இரு பிரிவினர். இவர்கள் அதர்வர்கள்? எனவும் அங்கிரஸர்கள்?எனவும் கூறப்படுவர். பிேருகு" என்பவரின் பரம்பரையைச் சார்ந்த *பிகுகுக்களும்? இப் புரோகிதர்கள் குழுவைச்சேர்ந்தவர்களே. இதுபற்றி இவ் வேதத்துக்கு அதர்வாங்கிரஸ் என்றும் பிருகுவாங்கிரஸ் என் றும் பெயர்கள் தோன்றலாயின. இவ்விரண்டனுள் அதிகம்

97 / கா. கைலாசநாதக் குருக்கள்
பிரசித்தி பெற்ற அதர்வாங்கிரஸ் என்ற பெயரே இவ்வேதத் தின் பெயராகி நிலை பெற்று நாளடைவில் அதர்வம் எனக் குறுகி வழங்கலாயிற்று. இதுவே அதர்வ வேதம் பெயர் பெற்ற வரலாறு
அதர்வ வேதத்தைக் குறிக்கும் பெயர்களை ஒவ்வொன் கச் சிறிது நோக்குவோம். அதர்வாங்கிரஸர்கள் என வரும் இப்பெயர், பன்மை உருபை ஈற்றில் ஏற்று வரும் உம்மைத் தொகைச் சொல். இதுவே இவ்வேதத்தின் மிகப்பழையபெயர் என்பர். அதர்வ வேதத்திலேயே இப் பெயர் இருக்கின்றது. மகாபாரதமும் இப்பெயரையே குறிப்பிடுகின்றது. யாழ் ஞவல்க்ய ஸ்மிருதியும் இப்பெயரை எடுத்து வழங்குகின்றது. மனுஸ்மிருதி இப்பெயரைத் தெளிவாக எடுத்துக் கூறுகின் றது. பெளத்தாயன தர்ம சூத்திரத்திற்கூட இவ் வேதத்தை இப் பெயரிட்டுச் சுட்டிக் கூறச் சந்தர்ப்பம் நேரிட்டுள் ளதைக் காண்கின்ருேம். இதுகாறும் சுட்டிய நூல்களுட் பெரும்பாலானவை பிற்காலத்து நூல்கள் என்பர். அதர்வ வேதத்திலேயே இவ்வேதத்தைக் குறிக்க எழுந்த இன்னும் வேறு சில பெயர்கள் காணப்படுகின்றன. பேஷஜ னி என்று அதர்வ வேதம் கூறும்பகுதிகள் மக்களுக்கு நன்மைவிளைவிக்கும் கிரியைகளைச் சுட்டுவன. இந்திய இலக்கியப் பரப்பில்- சிறப் பாகச் சமய நூல்களில்-இல் வேதத்தைப் பற்றிக் குறிப் பிடும் இடங்களில் எல்லாம் இவ் வேதத்தில் நன்மையைக் குறித்து வரும் பகுதிகளைக் கருத்திற்கொண்டே அதர்வம் எனவும் பேஷஜானி எனவும், சாந்தம் எனவும், பெளவு டிகம் எனவும் அவ்வந்தூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ் வேதத்தில் வரும் தீமை விளைவிக்க வல்ல பகுதிகளுக்கு இத் நூல்கள் இடும் பெயர்கள் வேருனவை. அவை அங்கிரஸ் யாது, அபிசாரம் என்பன. இப்பகுதிகள் பயங்கர உணர்வைத் தூண்டும் இயல்பு வாய்ந்தவை. அதர்வ சங்கிதையிற் கூட இவ்வகைப் பாகுபாடு தெளிவாகப் பிரித்து உணர்த்தப்படு வது நோக்கற்பாலது.வேதத்தின் மந்திரப்பகுதிகளான நான் கினையும் கூறும் சந்தர்ப்பம் ஒன்றில், “இருக்கு, பகர் சாமானி, பேஷஜா?" என்னும் சொற்ருெடரில் அதர்வ
7 س-Jه

Page 59
வடமொழி இலக்கிய வரலாறு / 98
வேதத்தைக் குறிக்கவரும் பேஷஜா என்னுஞ் சொல், அதன் கருத்தைப் பொறுத்த அளவில் அவ்வேதம் முழுவதையும் சுட்டாது, இதன் ஒரே ஒரு பிரிவை மட்டுமே குறித்து நிற்கத் தக்கது. எனினும், இது அதர்வ வேதம் முழுவதையுமே குறிக் கின்றது என்பதைச் சந்தர்ப்பம் நோக்கி நாம் உய்த்துணரல் வேண்டும் அதர்வன், ஆங்கிரஸ் என்னும் இரண்டும் வெவ் வேறு கருத்தை உணர்த்துவனவா என்பதைக் காரணங் காட்டிக் கூறவல்லதும், எக்காலத்தில் இப் பாகுபாடு எழுந் தது என்பதை சுட்டக்கூடியதுமான ஆதாரம் எதுவும் அதர்வு வேதத்தில் இல்லை. ஆனல், இரு பெயர்களையும் இணைத்து அதர்வாங்கிரஸ் என இவ்வேதத்தை நான்காம் வேதம் எனக்குறிப்பிடும் பிற்கால வழக்கு, இவ் வதர்வாங் கிரஸர்கள் அக்கினி வழிபாட்டில் மிகுதியாக ஈடுபட்டபுரோ கிதர்கள் என்று ஏற்கனவே கூறப்பட்ட கருத்தை வலியுறுத் தும் என்பர்.இப்புரோகிதர்கள் சோமனுடன் தொடர்புபடுத் திக்கூறப்படும் இருக்கு வேதங் கூறும் புரோகிதர்களின் நின் றும் வேறுபட்டவர். அங்கிரஸ் என்றும் இவர் பெயர் பெறு வர். இவர் அதர்வ இனத்தவர்களிலிருந்து வேறுபட்டு, அவரி லும் பயங்கரமானவர்களாய்க் காணப்படுவர் என்பதை இருக்கு வேதம் சுட்டும். பிருகஸ்பதி அங்கிரஸ் இனத்தைச் சார்ந்தவர். இவர் தேவகுரு. இவருக்கு ஆங்கிரஸ் என்ற பெயர் பிற்காலத்தில் ஏற்படலாயிற்று.
அதர்வ வேதம் வேதங்களுடன் ஒன்ருக இணைக்கப் பட்டு, உரிய இடத்தைப் பெற்று இப்பொழுது விளங்குகின் றது. இது வேதமாக இடம் பெற்றதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தெய்வங்களைப் பற்றிய பாடல்கள் பல இங்கு உள்ளன. இவற்றுட் பல நன்மை புரிதலையே நோக்காகக் கொண்டுள்ளன. சில பாடல்கள் தத்துவக் கருத்துக்கள் நிறைந்துள்ளன. இவைதாம், இவ்வேதம் பெரும் மதிப்பு டன் விளங்கும் உயர்நிலை எய்தி நன்கு நிலை பெற்று விளங்கு வதற்குக் காரணம் என்பர். தீங்கு விளைவிக்கும் மந்திரங்கள் கூட மந்திரங்களைப் பிரயோகிப்பவரைப் பொறுத்தமட்டில் நன்மை பயப்பனவே. எனவே அதர்வ வேதம் நன்மை பயக்

99 / கா. கைலாசநாதக் குருக்கள்
கும் தனி நோக்கையை கொண்டமைந்துள்ளது என்று சிலர் கூறுவர். ஆயினும் இந்தியச் சமய நூல்களிலும், தத்துவ நூல்களிலும் நெடுநாட்களாக இவ்வேதத்தைப் பற்றி நல்ல, கருத்து நிலவவில்லை. இவ்வேதத்தை ஏற்றுக்கொள்ளாது புறம்பாக ஒதுக்கிக் கூறியது மட்டுமல்லாமல், இதற்கு விரோ தமான கருத்துக்களைக் கூறிப் பழைய நூல்கள் இவ்வேதம் பற்றிக் குறிப்பிடுகின்றன. அதர்வ வேதம் கோபத்தை நீக்கு தலையும், ஆசி கூறுதலையும், சாபம் இடுதலையும் தனி நோக் காக உடையது என்பர். மாந்திரிகத்துடன் தொடர்புள்ள சூக்தங்கள் இங்குள்ளன. இதனுற்ருன் நெடுங்காலமாக இவ் வேதத்தின் மீது வெறுப்பு நிலவி வந்தது, வேதங்களுடன் இதுவும் இடம் பெறத்தக்கதா என்னும் விசாரணை கூடத் தொடங்கி நிகழ்ந்தது.
இருக்கு வேதத்தில் அதர்வ வேதத்தைச் சுட்டக்கூடிய சொற்கள் எதுவும் இல்லை. அதர்வ மந்திரங்களைப் போன்று இவ் வேதத்தில் வரும் மந்திரங்களைக் குறிக்கவும் தனிப் பெயர்கள் எதுவும் கிடையா. மாந்திரிகம், வீட்டில் நிகழும் கிரியைகள் முதலியன அக்காலத்தில் நிகழ்ந்தில என மறுக்க வும் முடியாது. ஆனல் அதர்வாங்கிரஸ் பேஷஜாநி, அதா வர்கள், அங்கிரஸர்கள் ஆகிய பெயர்களுள் ஒன்ருவது இங்கு குறிக்கப்படாதிருப்பது ஆச்சரியத்தையே விளைவிக்கின்றது. அதர்வ வேதப் பாடல்கள் இருக்கு வேதத்திற்குப் பின்னரே ஆக்கப்பட்டன என்பது தெளிவாயினும் இப்பாட்டுக்கள் கூறும் கருத்துக்களைக் கவனித்தால், “இவை இருக்கு வேத காலத்திற்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றி இயற்றப் பட்டிருக்கலாம்?" என்னும் சந்தேகம் தோன்றுகின்றது இதில் ஒரளவு உண்மை இருக்கின்றது என்பர் மேனுட்டு விமரிசகர் 356T. K
ஏற்கனவே கூறியபடி அதர்வ வேதத்தில் இவ்வேதம் பற்றி மிகச் சில அகச் சான்றுகளையே காண்கின்ருேம். இங்கு அதர்வர்கள் அரக்கர்களை அழிப்பவர்களாகக் கூறப்படுகின் றனர். மந்திரம், மாந்திரிகம் ஆகியவற்ருல் தீமை

Page 60
வடமொழி இலக்கிய வரலாறு / 100
விளைவிக்கும் இழிந்த நிகழ்ச்சிகளைச் செய்பவர்களாக அங்கிர வர்கள் கூறப்படுகின்றனர். அதர்வர்களோ எனின், நன்மை பயக்கும் மாந்திரிகம் செய்பவர்களாகத் தொடர்புறுத்தப் பட்டுள்ளனர். சிரெளத நூல்கள்,வைதிக வேள்வி முறையை எடுத்துரைக்கும் தனி நோக்குடன் அமைக்கப்பட்டன. ஆத லால் இங்கு பேஷஜானி, அபிசாராணி என்னும் விஷயங்க ஆளக் குறிப்பிடும் வாய்ப்பு நேரவில்லை. அதர்வ வேதத்தைப் பற்றி உபநிடதங்கள் கூறுவதும் ஏனைய வேதப் பகுதிகள் கூறும் அதே கருத்தே. அதர்வ உபநிடதங்கள் அதர்வ வேதத்தைச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. ஏனைய உபநிடதங் கள் மூவேதங்களை முதலில் குறிப்பிட்டு அதர்வத்தையும் கூறி, தொடர்ந்து வேறு நூல்களையும் கூறுகின்றன. பிருகதாரணி பகம், சாந்தோக்கியம்.முண்டகம்முதலியஉபநிடதங்கள் இவ் வாறே தெளிவாகக் கூறுகின்றன. மூன்று வேதங்களை மட் டுமே குறிப்பிடும் பகுதிகளே உபநிடதங்களில் பெரிதும் காணப்படுகின்றன. நான்கு வேதங்களையும் தனித்தனி குறிப்பிடும் உபநிடதங்கள் நான்கு- இவை நிருசிம்ஹபூர்வ தாபனி உபநிடதம், அதர்வ சிரோபநிடதம், முக்திகோப நிடதம்மகோபநிடதம் என்பன. நான்குவேதங்களுடன் ஏனைய நூல்களையும் குறிப்பிடுவனமுண்டகம். பிரச்சினம், நிருசிம்ஹ தாபனீ என்னும் மூன்றுமாம். பரந்த இலக்கியத்தைக் குறிப் பிடும்பொழுது முண்டகம் பிரச்சினம், நிருசிம்ஹதாபனி என்பன அதர்வ வேதத்தைக் குறிப்பிடாதே விட்டுவிடு கின்றன.
திருஹ்ய சூத்திரங்களுக்கும் அதர்வவேதத்திற்கும்நெருங் கிய தொடர்பு உண்டு என்பர். அதர்வ வேதம் கூறும் நிகழ்ச் சிகள் பெரும்பாலும் வீட்டில் நிகழ வேண்டியவை. இக் கிருஹ்ய சூத்திரங்கள் குறிப்பிடும் மந்திரங்கள் பெரும் பாலும் அதர்வ மந்திரங்களை நிகர்ப்பன. இருந்தும், இச்சூத் ஓரங்கள் இவ்வேதத்துடன் தொடர்பு பெருது, இருக்கு வேதம், யசுர் வேதம், சாமவேதம் ஆகியவற்றுடன் தொடர்பு பெறுவது கவனிக்கற்பாலது. அவ்வாருயினும் இவை அதர்வ வேதத்தை வேதங்களுள் ஒன்ருகக் குறிப்பிடு

101 / கா. கைலாசநாதக் குருக்கள்
கின்றன. ஆபஸ்தம்ப கிருஹ்ய சூத்திரம், சாங்காயன கிருஹ்ய சூத்திரம், ஹிரண்ய கிருஹ்ய சூத்திரம்? முதலியன இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளத் தக்கன. வேதங்களை அடுத்துப் பழைய நூல்கள் எனக் கருதப்படுபவை தர்ம சூத்திரங்கள். இந்நூல்களில் அதர்வ வேதத்திற்கு உரிய இடம் உண்டு. அதர்வ வேதம் பெரும்பாலும் மக்களிடம் காணப்பட்ட நம்பிக்கைகளைத் தொகுத்துத் தருவது. சோதிடம், வைத்தியம் முதலிய விஷயங்கள் அகர்வ வேதத் தொடர்பு மிகுந்தவையாய்க் கருதப்படுகின்றன. சத்துருக் களை அழித்துத் தண்டிக்க வழிவகைகளை மக்களுக்கு மட்டு மின்றி, மன்னனுக்கும் பயனுறும் வண்ணம் கூறுவது அதர்வ வேதம். இக்காரணங்களால் இந்நூல்களில் இவ்வேதம் தனி இடம் பெற்றுள்ளது. அரசனின் புரோகிதன் அதர்வம் வல்லவன். அதர்வ வேதம் பலவாறு பயன்படுவது. இன்றி யமையாது வேண்டப்படுவது. எனவே இது சிறந்ததாக உயரிய நிலையில் வைத்துக் கூறப்படத்தக்கது. இது கூறும் பிர யோகங்கள் சில தூய்மையற்றவை எனினும், மட்டிட்டுப் பயன்படுத்தப்பட வேண்டியவை. இதைத் தவருகப் பிர யோகிப்பவர்கள் தண்டனைக்குட்படவேண்டியவர்கள். இது தான் தர்ம சூத்திரங்களின் கருத்து. தர்ம சூத்திரங்களில் அதர்வ வேதம் மீண்டும் மீண்டும்குறிப்பிடப்படவில்லை. இது கூறும் பழைய நூல்களில் பொதுவாகக் கூறிவந்தவாறு இருக்கு யசுர், சாமம் என்னும் வேதங்களைக் குறிப்பிட்டு, அதன் பின்ஏனைய வேறு நூல்களைக் குறிப்பிடுகின்றன. இங்கு அதர்வம் நான்காவதுவேதமாகக் கூறப்படவில்லை. அதர்வம் தனிஇடம் பெற்றுக் காணப்படும் பகுதிகளும் தர்மசாஸ்திரங் களில் உண்டு இங்கு அதர்வசிரஸ் என்னும் அதர்வ'உபநிட தம் உயர்நிலையிலே வைத்துக் கூறப்படுகின்றது. பிராமணன் சத்துருவை அழிப்பதற்கு உரிய ஆயுதமாக இவ்வேதத்தைப் பிரயோகிக்கலாம் என மனுஸ்மிருதி கூறும். அதர்வாங்கி ரசங்களில் வல்லவனையே அரசன் புரோகிதனுக நியமித்தல் வேண்டும். அதர்வ வேதத்தைப் பற்றித் தர்மசாஸ்திரன் களில் வரும் குறிப்புக்கள் இன்னும்பல உண்டு.ஆனல் அதfவ

Page 61
வடமொழி இலக்கிய வரலாறு / 102
வம் நான்காம் வேதமாகக் குறிப்பிடப்படாதது கவனிக்கத் தக்கது.
மகாபாரதத்தில் ஆங்காங்கு வரும் குறிப்புக்கள் அதர்வ வேதம் தனிவேதமாக இடம்பெற்று விட்டதைத் தெளி வாக்குகின்றன. இவ்வேதத்தை மட்டிட்டு வேண்டிய அள விற்கே பிரயோகித்தல் வேண்டும் என்று இது வற்புறுத்துவ தில்லை. கூடித்திரியர்களான அரசர்களையும் வீரர்களையும் சிறப்பித்துக் கூறும் பாரதத்தில் அரசர்களின் நலனைக் கருதி ஆற்றப்படும் கிரியைகளைக் கூறும் அதர்வ வேதத்தின் உயர்வு கூறுதலையல்லவா நாம் எதிர் பார்த்தல் வேண்டும்! இராமா யணத்தில் ஒரே ஒரு முறை அதர்வவேதம் பற்றிய குறிப்பு வருகின்றது. சம்ஸ்கிருத நூல்களிலும், மகாபாரதத்தில் போல அதர்வ வேதம் தனிவேதமாக எடுத்துக் கூறப்பட்டுள் ளது.*தசகுமார சரிதத்தில் இரு முறையும்,*கிராதார்ச்சுனி? யத்தில் ஒரு முறையும் இதைப் பற்றிய குறிப்பு இருக்கக் காண் கின்ருேம். இலக்கியங்களில் ஆங்காங்கு வரும் பழமொழி களிலும் அதர்வ வேதம் உயரிய நிலையில் வைத்துக் கெளர விக்கப்பட்டுள்ளது. மிகப்பழைய வைத்திய நூலான “சுச்ரு தரின் நூல் அதர்வவேதத்தைக் குறிப்பிடுகின்றது. புராணங் கள் எல்லாம் நான்கு வேதங்களையே கூறுகின்றன. கிரியை முறையின் தோற்றுவாயாகவும், அதனை விரித்து விளக்கும் நூலாகவும் இவ்வேதம் அமைவதை விஷ்ணுபுராணம் குறிப் பிடுகின்றது. மத்ஸ்யபுராணம், மார்க்கண்டேய புராணம் ஆகிய இரண்டும் அதர்வத்தைப் பற்றிக் கொண்டுள்ள மதிப் பைக் கூறும் பகுதிகளை உரையாசிரியர் சாயணர் தம் உரை யில் எடுத்து வழங்கியுள்ளார். கிரியைகளை இழித்துரைக்கும் ஜைன நூல்களிலும், பெளத்த நூல்களிலும் அதர்வ வேதத்தை இகழ்ந்து கூறும் குறிப்புகளே வருகின்றன. இலக் கண நூல், நிகண்டுகள், உரைநூல்கள் எல்லாம் அதர்வ வேதத்தைப் பற்றிக் கூறுகின்றன. இவற்றுட் பெரும்பாலா னவை அதர்வ வேதத்தைப் பற்றி இவை கொண்டுள்ள தெளிவான கருத்தைச் செவ்வனே அறிவதற்குத் துணை நிற் பன அல்ல. அதர்வ வேதத்தின் பிரிவுகள் ஒன்பது என்பர் .

103 / கா. கைலாசநாதக் குருக்கள்
இவை சாகைகள் எனவும், சரணங்கள் எனவும், பேதங்கள் எனவும் பெயர் பெறும். இவை பைப்பலாதம், தெளடம் மெளடாயனம், செளநகியம், ஜாஜலம், ஜலதம், பிரம வாதம், தேவதர்சம், சரணவைதயம் என்பன. இவற்றுள் செளநகியம், பைப்பலாதம் என்னும் இரு சாகைகளே பிரசித்தி பெற்றவை.
செளநகியச் சாகையைச் சேர்ந்த அதர்வ வேதமே இன்று எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது. அதர்வ சங்கிதையில் எழுநூற்று முப்பத்தொரு சூக்தங்கள் உள்ளன. ஏறக்குறைய ஆருயிரம் பாட்டுக்கள் இருக்கின்றன. இவ்வேதம் இருபது காண்டங்களாலான பிரிவுகளையுடையது. ஈற்றில் வரும் இருபதாம் காண்டம் பிற்காலத்தில் இணைக் கப்பட்டது என்பர். பத்தொன்பதாம் காண்டத்தில் வரும் பாடல்கள் இவ் வேதத்திற்கே உரியனவல்ல. இருபதாம் காண்டத்தில் வரும் சூக்தங்கள் எல்லாம் இருக்கு வேதத்தில் இருந்து எடுத்துத் தரப்பட்டவை. அதர்வ வேதத்தில் காணப்படும் பாடல்கள் முழுவதிலும் ஏழில் ஒரு பங்கு இருக்கு வேதப் பாடல்களே. அதர்வவேதத்திற் காணப்படும் பாடல்களிற் பாதிக்கு மேல் இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளன. ஏனைய முதலாம் எட்டாம் மண்டலத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இனி அதர்வ வேதத்தின் காண்டங்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதைக் கவனிப்போம். முதல் ஏழு காண்டங்களிலும் சிறு சூக்தங்களே உள்ளன. முதற் காண் டத்தில் நன்நான்கு பாடல்களை உடைய சூக்தங்களும்,இரண் டாம் காண்டத்தில் ஐந்து பாடல்களான சூக்தங்களும், மூன்ரும் காண்டத்தில் ஆறு பாடல்கள் உள்ள சூக்தங்களும், நான்காம் காண்டத்தில் ஏழு பாடல்களாலமைந்த சூக்தங் களும் இருக்கின்றன. ஜந்தாங் காண்டத்தில் எட்டுப் பாடல் களுக்குக் குறையாதவையும் பதினெட்டுப் பாடல்களுக்கு அதிகப்படாதவையுமான சூக்தங்கள் உள்ளன. ஆருங் காண் டத்தில் நூற்று நாற்பத்திரண்டு சூக்தங்கள் உண்டு. இவை பெரும்பாலும் மும்மூன்று பாடல்களை உடையன. ஏழாங்

Page 62
வடமொழி இலக்கிய வரலாறு / 104
காண்டத்தில் உள்ள சூக்தங்கள் நூற்றுப் பதினெட்டிலும் இரண்டொரு பாட்டுக்கள் இருக்கின்றன. அடுத்து வரும்ஏழு காண்டங்களும் பதினேழாம் பதினெட்டாம் காண்டங்களும் மிக நீண்ட சூக்தங்களை உடையவை. இக்காண்டங்களில் உள்ள மிகச் சிறிய சூக்தத்தில் இருபத்தொரு பாடல்களும் மிகப் பெரிய சூக்தத்தில் எண்பத்தொன்பது பாடல்களும் உண்டு. இவ்வேதத்தின் பதினைந்தாம் பதினரும் காண் டங்கள் உரைநடையில் அமைந்து, மொழி அமைப்பிலும் நடையிலும் பிராமணங்களை நிகர்த்துக் காணப்படுகின்றன. அதர்வ வேதத்தின் இவ்வமைப்பு முறையை நோக்கினுல், *சூக்தங்களின் அளவையே அடிப்படையாகக் கொண்டு இச் சங்கிதை தொகுக்கப்பட்டது என்று தெரிகின்றது. அளவை மட்டுமல்லாமல், சூக்தங்கள் கூறும் பொருளை ஓரளவிற்குக் கருதியும் இவ்வேதம் உருவானதென்பதும் உண்மையே. ஏனெனில் ஒரே விஷயத்தைப் பற்றிவரும் பாடல்கள் அடுத் தடுத்து இருக்கின்றன. முதற் காண்டத்தில் இருந்து ஏழாங் காண்டம்வரை இருக்கும் சூக்தங்கள் பல்வேறு விஷயங்களைப் பற்றியவை. எட்டாங் காண்டத்தில் இருந்துபன்னிரண்டாங் காண்டம் வரை உள்ள சூக்தங்கள் பெரிய பாடல்களா லமைவது மட்டுமின்றிப் பல விஷயங்களைக் கூறுபவையுமாய் விளங்குகின்றன. பதின்மூன்ரும் காண்டம் முதல் பதினெட் டாம் காண்டம் வரை சூக்தங்கள் குறிப்பிட்ட விஷயங்களை ஒழுங்காகக் கூறுவன. உதாரணமாகப் பதினுன்காம் காண்டம் விவாகக் கிரியை பற்றிக் கூறுவதையும், பதினெட் டாம் காண்டம் முழுவதும் மரணக் கிரியைகளைக் கூறுவதை பும் குறிப்பிடலாம்.
இனி, இருக்கு வேதத்திற்கும் அதர்வ வேதத்திற்கும் இடையில் உள்ள தொடர்புகளைக் கவனிப்போம். ஏற்கனவே கூறியபடி இருக்கு வேதப் பாடல்கள் பல அதர்வ வேதத்தில் ஏழில் ஒரு பகுதியாக இடம் பெற்றுவிட்டன. இவ்வாறு இரு வேதங்களுக்கும் பொதுவாகக் காணப்படும் இப்பாடல் சுளில், அதர்வ வேதத்திற்கு மட்டுமே சிறப்பானவை எனக் கருதப்படும் பண்புகளான மாந்திரிகப் பகுதிகள் பொது

105 / கா. கைலாசநாதக் குருக்கள்
வாகக் காணப்படுகின்றன. இவற்றுட் சில நன்மை விளை விப்பன. சில தீங்கிழைப்பன. தாம் எடுத்துக் கூறும் தெய்வங்களைப் போற்றிக் கூறும் முறைகளும் இரு சங்கிதை களிலும் வெவ்வேருனவை. எனவே, இருமுறைகளைக் கையாளும் இருவகைப் பாடல்களை இங்கு காண்கின்ருேம். ஒன்று, இருக்கு வேதத்திற்குச் சொந்தமானது மற்றது, அதர்வ வேதத்திற்குமட்டுமே உரியது. பின்னதுதான் பிரா மணங்கள் குத்திரங்கள் முதலிய கிரியை நூல்கள் அமைய வழியை வகுத்துக் காட்டியது.
வேதங்களில் வரும் தெய்வங்களையே அதர்வ வேதமும் குறிப்பிடுகின்றது. இருக்கு வேதத்தில் வரும் அக்னி முதலி யோரே இங்கும் கூறப்படுவர். எனினும் அதர்வ வேதத்தில் வரும் இத்தெய்வங்களின் இயல்பு வேறுபட்டுள்ளது. இத் தெய்வங்கட்குத் தனிப் பண்புகள் எதுவும் கிடையா. எனவே வேறுபட்டும் காணப்படா. இருக்கு வேதத்திற் போன்று முதலில் இயற்கைப் பொருளாயிருந்து நாளடைவில் தெய்வ மாகும் நிலை இவ்வேதத்தில் அறவே காணப்படுவதில்லை. அரக்கர்களைக் அகற்றுவதற்காகவே இந்திரன், அக்னி முதலி யோர் கூவி அழைக்கப்படுகின்றனர். அரக்கர்களை அழிப்ப வர்களாகவே தெய்வங்களை அதர்வவேதம் சித்திரித்துள்ளது.
இருக்கு வேதம் எடுத்துக் கூறுவது உயரிய தெய் வங் களையே. இவை இயற்கைப் பொருள்களை அடிப்படையாகக் கொண்டவை. இத்தெய்வங்களைப் போற்றும் பாடல்கள் பெரும்பாலும் சிறப்புக்களையும் நலன்களையுமே எடுத்துக் கூறும். இந்திரன், அக்கினி முதலியோரின் உயர்குணங்கள் பலமுறை விரித்துக் கூறப்பட்டுள்ளன. மக்கள் இத்தெய்வங் களை வழிபடுகின்றனர். ஆற்றல் மிக்க இத்தெய்வங்கள் வழி படுபவர்களுக்கு வேண்டியவற்றை வழங்குவன. அதர்வ வேதமோ எனின் அடிக்கடி அரக்கர்களைக் குறித்துக் கூறும். இவர்கள் கரிய நிறத்தினர். மக்களுக்கு நோயையும் வறுமை யையும் இன்னலையும் விளைவிப்பவர். இவர்களைப் பிசாசுக ளெனவும் பேய்களெனவும் கூறுவர். மாந்திரிகர்கள் இவர்

Page 63
வடமொழி இலக்கிய வரலாறு / 106
களை அகற்றுவதற்காக மந்திரங்களைப் பிரயோகிப்பர். இதன் விளைவாக இப் பேய்பிசாசுகள் விரட்டி யோட்டப்படுவன. இதை ஒப்பிட்டு நோக்கும் பொழுது இருக்கு வேதத்திற்கும் அதர்வ வேதத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணருகின்ருேம்.
அதர்வ வேதங் கூறும் தெய்வங்களுக்குச் சிறப்பியல்புகள் எதுவும் இல்லை. ஏற்கனவே கூறியபடி மாந்திரிக நூலாகவே பெரும்பாலும் அமைந்துள்ள இவ்வேதம் கூறும் கிரியை “மாந்திரிகமே. இம்மாந்திரிகம் எவ்வாறு கையாளப்பட்டது என்பதைத் தொடர்ந்து நோக்குவோம். இவ்வேதத்தில் உள்ள மந்திரங்கள் பெரும் சக்திவாய்ந்தவை. சில நோய் நீக்கவல்லன. சில நீண்ட வாழ்வை அளிப்பன. சில செல்வச் செழிப்பைத் தருவன.சில குறைகளைக் களைவன. ஒன்றியிருக் கும் காதலரைப் பிரிக்கவல்ல மந்திரங்கள் சில, பிரிந்த காத லரை ஒன்று சேர்ப்பனவும் சில. தீமையைப் பகைவருக்கு விளைவிக்கும் தனி நோக்குடையவை சில.பகைவரை அழித்து அரசருக்கு வெற்றியை ஈட்டுவதற்கெனச் சில மந்திரங்கள் இருக்கின்றன. அரசன் அரசுகட்டில் ஏறும் வேளை நிகழ்த்தும் கிரியைகளில் பிரயோகிக்கப்படும் மந்திரங்களும் அதர்வ வேதத்தில் இருக்கன்றன. இதைவிட, யாகாதி கிரியைகளில் தனி இடம் வகிக்கும் பிரமா? எனப்படும் வேட்பவர் ஆற்ற வேண்டும் கிரியைகளையும் நாளடைவில் ஏற்று, அதர்வ வேதம் விரிந்த கிரியை நூலாகவே ஆகிவிட்டது. இனி இவை எல்லாவற்றையும் ஒவ்வொன்ருகக் கவனிப்போம்.
அதர்வ சங்கிதை அக்கால மக்களின் சமயத்தை விளக் கிக் கூற மிகவும் பயன்படும். இருக்கு வேதத்தில் வேள்வி வேட்கும் ஒரு குழுவினருடன் தொடர்புபட்ட நிகழ்ச்சிகள் கூறப்படுவன. அதர்வ வேதம் வேட்பவர்களைப் பற்றிக் கூருது பொதுமக்களிடை காணப்பட்ட பழக்க வழக்கங் களையே கூறுகின்றது. பேய் பிசாசுகள், அரக்கர்கள் அடிக்கடி குறிப்பிடப்படுவர். மாந்திரிகம் நிகழத்தப்படும் முறையும்

107 / கா. கைலாசநாதக் குருக்கள்
இங்கு கூறப்பட்டுள்ளது. இவை எல்லாம் கருத்து வளர்ந்த வகையையும், சமய வரலாற்றையும் கூறப் பயன்படும்.
அதர்வ சங்கிதையிற் காணப்படும் ஒரு சில பாட்டுக்கள் நோய் நீக்கவல்ல மந்திரங்களாக விளங்குகின்றன. இவை பேஷஜானி என்னும் இனத்தைச் சார்ந்தவை. இவற்றுட் சில நோய்களைக் கை, கால் முதலிய உறுப்புக்களை உடையன வாய் உருவகப்படுத்தி அவற்றை விளித்துப் பாடிய பாட்டுக் கள் சில அரக்கர்களைக் குறித்துப் பாடப்பட்டவை. இவர் கள் நோயைத் தோற்றுவிப்பவர்கள். நோயைப் பெருகச் செய்யும் இவர், புறத்தே நின்று தம் தொழில் புரிவர். இதை விட தாம் தாக்குவதற்கு விரும்பும் மக்களைப் பீடித்து அவர் களில் ஆவேசமாகி நோயால் அவர்களை அல்லலுற வைப்பர். அதர்வ வேதத்தில் வரும் சில மந்திரங்கள் நோயைத் தீர்க்க. வல்ல மூலிகைகளை விளித்துக் கூறப்பட்டுள்ளன.இம்மந்திரங் களுக்கும் நோய் நீக்கும் ஆற்றல் உண்டு. நோய் நீக்கவல்ல தான நீரை அபிமந்திரிக்கும் பொழுது பிரயோகிக்கப்படும் மந்திரங்கள் சில உண்டு. சில அரக்கர்களைத் துரத்தும் வலிமைமிக்க அக்கினியை விளித்துக் கூறுவன. இவையும் நோய் நீக்குவதற்காகப் பிரயோகிக்கப்படுவனவே. மந்திர சக்தி வாய்ந்தன எனக் கருதப்படும் இப்பாடல்களும் இவற் றின் பிரயோகத்தைப் பற்றிய பகுதிகளுந்தாம் இந்திய மருத்துவ நூலின் தோற்றுவாயாகக் கொள்ளப்படுகின்றன. இப்பாடல்களில் நோய்களின் இயல்புகள் தெளிவாகக் கூறப் பட்டுள்ளன. எனவே, மருத்துவக் கலையைப் பற்றிப் படிப் பவர்களுக்கு இவை விஷயங்களைச் சுவைபட எடுத்துக் கூறும் முதல் நூல்களாக விளங்குகின்றன. வெப்ப நோய் நீக்கும். மந்திரத்தைக் கவனித்தால் மருத்துவ நூல்களுக்கு முதல் நூலாக இப்பாடல்கள் அமையும் இவ்வுண்மை புலணுகும். நீங்கும் நோய்கள், வேறு மக்களைப் போய் அடைந்து பீடிக்க வல்லவை என்றும் தூரத்தில் இருக்கும் வேற்றுாருக்குச் செல்லும் இயல்பு வாய்ந்தவை என்றும், நோயைப் பற்றிக் கருத்துக்கள் அதர்வ வேதத்தில் நிலவக் காண்கின்ருேம். கொடிய அரக்கர்களையும்பேய்களையுந் தவிர,அப்சரஸ் பெண்

Page 64
வடமொழி இலக்கிய வரலாறு / 108
-களும் கந்தருவர்களும் இரவில் மக்களை அணுகிப்பீடிப்பவர். அப்சரஸ்களும் கந்தருவர்களும், பெரும்பாலும் ஆறுகளையும் காட்டில் அடர்ந்துள்ள மரங்களையும் அடுத்து வசிப்பவர்கள். இவர்களை விரட்டி ஒட்ட அஜசிருங்கி? என்னும் மூலிகை உரிய மந்திரத்துடன் பிரயோகிக்கப்படும், பிசாசுகளும் மக்களின் வீட்டை விட்டகன்று ஆறுகளையும், மரங்களையும் சென்று அடையும் வண்ணம் வேண்டப்படுவன. கந்தருவர்களும் அப் சரஸ்களும் சங்கீதத்திலும் நாட்டியத்திலும் வல்லவர்களாய் இவற்றைப் பயன்படுத்தி, ஆடவர்களதும் பெண்களதும் மனதைக் கவர்ந்துவிடுவது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகள் எல்லாம் ஜெர்மனி முதலிய மேலைத் தேசங் களில் வேறுபாடெதுவும் இன்றி மிகப் பழைய காலத்தில் காணப்பட்டதால், இப்பழக்க வழக்கங்கள் மிகப் புராதன மான இந்தோயூரோபிய?நாகரிகத்தைப் பற்றியன என்பர்.
பேஷஜானி என்னும் இனத்தைச் சார்ந்தவை, நீண்ட வாழ்வை அளிக்க வல்லவையான ஆயுஷ்ய சூக்தங்கள். *நோயை நீக்கினுல் மட்டும் போதாது; வாழ்வும் நீண்டு அமைதல் வேண்டும்? என்னும் உண்மையை இக்கால மக்கள் உணர்ந்ததை இவை எடுத்துக் காட்டுகின்றன. நோய் நீக்கு >வதற்காகப் பிரயோகிக்கப்படும் மந்திரங்களிலும் இவை வேறுபட்டவை அல்ல. வீட்டில் விசேஷ நிகழ்ச்சிகள் நிகழும் பொழுது இவைபிரயோகிக்கப்பட்டன. செளளம்உபநயனம், முதலிய கிரியைகள் இவ்வாறு வீட்டில் நிகழும் கிரியைகள். *நூறு சரத் காலங்கள் வாழ்வு அமைதல் வேண்டும். நூறு மழைக் காலங்கள் வாழ்தல் வேண்டும்?? என்று இம் மந்திரங் -கள் எடுத்தியம்புகின்றன. இவற்றின் ஈற்றடிகள் ஒரே வகை :பாகத் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன. பதினெட்டாம் காண்டத்தில் வரும் ஒரு சூக்தம் முப்பது பாடல்களையுடை யது. இது ஆயுஷ்ய சூக்தம் என வழங்குகின்றது.நோய் நீக்கு வதற்கு மூலிகைகளையோ, நீரையோ மந்திரிப்பது போல் ஆயுளைப் பெருக்குவதற்கு சீர ைகூடி? எனப்படும் தாயத்தை மந்திரித்துக் கழுத்தில் தரிக்கும் வழக்கம் இருந்திருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது.

109 கா. கைலாசநாதக் குருக்கள்
இதைவிட பெளஷ்டிகாணி என்று கூறப்படும் மந்தி ரங்கள் சில உண்டு. இவை நன்மை விளைவிப்பன. உழ வனும் வர்த்தகனும் தங்கருமங்களில் சித்தியையும் இன்பத் தையும் பெறுவர். புதிதாக வீடுகட்டும் பொழுதும், உழும் பொழுதும், விதைக்கும் பொழுதும், பயிர் வளரும் பொழு தும், கிருமிகளும் புழுக்களும் பயிரை அழிக்கும் பொழுதும், நெருப்பினல் அபாயம் நிகழும் பொழுதும் பிரயோகிக்கப் பட வேண்டிய மந்திரங்கள் உண்டு. மழையைப் பெய்விக்க வும், மாட்டு மந்தையைச் செழிக்க வைக்கவும், அதைத் திருடர்கள் கவராது தடுக்கவும் வர்த்தகம் நன்கு நடைபெற வும், சூதாட்டத்தில் வெற்றி ஈட்டவும், பாம்பைக் கட்டி வசப்படுத்தவும் பிரயோகிக்கத்தக்க மந்திரங்கள் இங்கு இருக்கின்றன.
அம்ஹஸ் என்னுஞ் சொல் இவ் வேதத்தில் துன்பம்,இன் னல் என்பதை மட்டுமல்லாமல், பாபம், அபராதம் என்னும் கருத்துக்களையும் உணர்த்தும் இழைத்த தவறை நீக்கும் நோக்குடன் இயற்றப்படும் கிரியை பிராயச்சித்தம் எனப் படும். இன்னல் நீக்குவதற்கெனக் கூறப்பட்ட மந்திரங்களைப் போன்றவையே இப் பிராயச்சித்த சூக்தங்களும், ஒழுக்கம் நன்னெறி முதலியவற்றிலிருந்து பிறழ்தலால் வரும் தீமை யைப் போக்குவது மட்டுமன்றிச் செய்யப்படும் கிரியைகளைச் சிறு சிறு தவறுகளை இயற்றித் தெரிந்தும் தெரியாததும் உரியவாறு செய்யாது விடுவதனல் விளையும் குறைகளை நீக் கும் ஆற்றல் வாய்ந்தது பிராயச்சித்தம். எவ்வகைத் தவறு களாலும் வரும் தீமைகளை அவற்றி இது நன்மையையே பயக் கும். நோய் இன்னல், பாவம் தவறு முதலியன நேருவது தீமை விளைவிக்கும் அரக்கர்களாலே என்பது அதர்வ வேதத் தின் கருத்து. பாவம் இழைத்தவனும் நோயினுல் பலம் குன் றியவனைப் போன்றவனே. இவன் கொடிய பிசாசினல் பீடிக் கப்பட்டுள்னான் என அதர்வ வேதம் கூறும். நோயை விளை விக்கும் தீயசக்திகளே கெட்ட நிகழ்ச்சிகளையும் திடீரென நிக மும் கோர சம்பவங்களையும் தோற்றுவிப்பன. கழுத்திற் கட் டப்படும் ரட்சையைப் பற்றி இருபத்தைந்து பாடல்களா

Page 65
வடமொழி இலக்கிய வரலாறு / 110
லான ஒரு சூக்தத்தில் இது எத்தகைய தீங்குகளையும் நிகழ வொண்ணுது தடுக்க வல்லது என்றும், ஏனையோர் எதிராகப் பிரயோகிக்கும் மாந்திரிகத்தின் வயப்படாத பெருமையுடை யது என்றும், தீய கனவுகள் தீய நிகழ்ச்சிகள் நிகழாது தடுக் கும் ஆற்றல் படைத்தது என்றும், தரித்துக் கொள்பவன் மட்டுமன்றி அவன் தாய்தந்தையரும் அவன் உடன் பிறந் தோரும் நெருங்கிய உறவினர் ஏனையோரும் இழைத்த பாவங்களையும் பரிகரிக்க வல்லது என்றும் கூறப்பட்டிருப்ப தைக் காண்கிருேம்.
குடும்பத்தில் நிகழும் பிளவு, தீய அரக்கர்களாலும் பேய் பிசாசுகளாலும், தீமை விளைவிக்கவல்ல மாந்திரிகர்களாலும் தோற்றுவிக்கப்படுவது என்பது அதர்வ வேதம் கூறும் கருத்து. பிளவை நீக்கி ஒற்றுமையைத் திரும்பவும் தோற்று விக்கும் ஆற்றலுடைய மந்திரங்களும் அதர்வ வேதத்தில் இடம் பெறுகின்றன. இவை நன்மையைப் புதிதாகத் தோன் றும்படி நிகழ்விக்கும் பெளவுடிகாணி என்னும் மந்திரங்களைப் போன்றவை அல்ல. ஏனெனில் இவை தீமையை அகற்றுவத னல் ஏற்கனவே இருந்த நன் நிலையைத் திரும்பவும் வருவிப் பன. இவ்வாறே இவை பிராயச்சித்த மந்திரங்களினின்றும் வேருனவை. ஏனெனில், தவறு, பிழை. பாவம் முதலியன நிகழ்வதன் விளைவாகத் தோன்றும் தீமையையல்லவா பிரா யச்சித்த மந்திரங்கள் களைவன. எனவே இவ்விருவகை மந்தி ரங்களின் இயல்புகளும் வாய்ந்து இரண்டினது நடுவழி நிற் பவை இம்மந்திரங்கள் என நாம் கருத இடம் உண்டு. இவை குடும்பத்தில் தோன்றிய பிளவுகளை ஒன்றுபடுத்துவன. குடும் பத் தலைவனின் கோபத்தைத் தணிக்கப் பயன்படுவன. சபை யில் ஒருவனைச் செல்வாக்கு உடையவனுக உயர்த் தி வைப் பன. நீதி மன்றத்தில் கூறப்படும் தீர்ப்பையும் பிரயோகிப் வன் சார்பாக அமையச் செய்வன.
கணவன் மனைவியரிடையே தோன்றும் பிளவை நீக்கி ஒற்றுமையைத் தோற்றுவிக்கவல்ல மந்திரங்கள் இங்கு மிகுதி யாக உள்னன. காதல் விவாகம் முதலியன ஒன்றுக்கொன்று

111 | கா. கைலாசநாதக் குருக்கள்
தொடர்புறும் வண்ணம் விஷயங்களைக் கூறும். அதர்வ வேதப்பாடல்களுக்கு ஸ்திரீகர்மாணி எனப் பெயரிட்டுள் ளார்கள். பெண்களின் நன்மைகளையும் தீமைகளையும் கருதிச் செய்யப்படும் கிரியைகள் இவை. இக்கிரியைகளையும் நன்மை பயப்பவை, தீமை பயப்பவை என இருவகையாகப் பிரித் துள்ளார்கள். விவாகத்தைப் பற்றியும், மக்கட் பேற்றைப் பற்றியும் கூறும் தூய்மை வாய்ந்த மந்திரங்கள் நன்மை விளைவிப்பனவே. தான் விரும்பும் அழகிய ஆடவனை இம் மந்திரங்களின் துணைக் கொண்டு ஒரு பெண் அடைவள். இதே போன்று ஆடவனும் தான் விரும்பும் பெண்ணை மனைவி யாகப் பெற்று வாழ்வான். இவ்விதம் பெற்று இணைந்து நிற் கும் புதுத் தம்பதிகளை வாழவைக்கவல்ல மந்திரங்கள் அதர்வ வேதத்தில் உண்டு. ஒருங்கு வாழும் இத் தம்பதிகளிடம் மக்கட் பேற்றை உண்டாக்குவதையும், இவர் பெறும் மகவு ஆண் மகவாய் இருத்தலையும் இம்மந்திரங்கள் நிகழ்த்த வல்லன. கருவுற்றிருக்கும் அன்னைக்கும், அன்னை பின் கருப் பையுளிருக்கும் கருவிற்கும் காப்பை அளிப்பன. சில மந்திரங் கள். பிறந்த பிள்ளையின் ஆயுளையும், காப்பையும் தர வல்லன. சில. இரண்டாம் பிரிவைச் சார்ந்த மந்திரங்கள் எண்ணிறந் தவை. இவை பெரும்பாலும் பேய் முதலியவற்றை விரட்டி ஒட்டுவன. சில சபிப்பன. சில காதலர்க்கிடையே 26ữ - doo பிணக்கு முதலியவற்றைத் தோற்றுவிப்பன. சில கணவரின் கோபத்தையும் வெறுப்பையும் நீக்குவன. சில மனைவி யைத் திரும்ப கணவனிடம் சேர்ப்பன. சில உறக்கத்தை உண்டு படுத்துவன. சிலவிருப்பில்லாத ஆடவனிடத்து அல்லது பெண்ணிடத்துக் காதலைத் தோற்றுவிக்கும் வலிமை உடை யன. ஒருவனின் படத்தைத் துணைக் கொண்டு அவனைத் தன் வயமாக்கவும், அவனுக்குத் தீங்கிழைக்கவும் வல்ல மந்திரங் கள் சில. ஒரு பெண்ணைக் காதலியாக அடைய விரும்பும் ஒரு வன் செய்ய வேண்டுவதை ஒரு பாடல் கூறும். ஒரு பெண் ணும் இப்படியே தான் விரும்பும் ஆடவனை வலிந்து அவனே தன்னை அடையும் வண்ணம் செய்வள். ஆடவனின் உரு வத்தை அமைத்துத் தன் நிறுத்திச் சூடேற்றப்பட்ட அம்பு களால் அதன் அங்கங்களைத் துளைப்பள். தம் பகைவரை

Page 66
வடமொழி இலக்கிய வரலாறு / 112
அழிக்கப் பெண்கள் கையாளும் மந்திரங்கள் அவர்கள் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சியையும், தீங்கு செய்ய விழை தலையும் தெளிவாகக் காட்டுகின்றன. சில பாடல் பெண் கணக் கருவுறச் செய்யாது தடுப்பதற்கும், ஆடவனை ஆண்மை குன்றியவனுக ஆக்குவதற்கும் ஆற்றல் படைத்தவை. இப் பாடல்கள் எல்லாம் அங்கிரஸர்களுடன் தொடர்புபட் டவை. இதுவரை கூறியவாறு சபிப்பன சில அரக்கர்களைக் கெடுப்பன சில: சத்துருக்களையும், மாந்திரிகர்களையும் அழிப் பன சில. இவற்றிற்கு அபிசாராணி என்று இன்னெரு பெய ரும் உண்டு.
அரசர்களின் நன்மை கருதி அவர்களின் பொருட்டே பிரயோகிப்பதற்கெனச் சில மந்திரங்கள் உண்டு. சில பகை வரின் மீது ஏவப்படுவன. சில அரசர்க்கு ஆசி கூறுவன. அக் காலத்து அரசர்கள் தங்கள் நலம் கருதி வேண்டிய கிரியை களைச் செய்யப் புரோகிதர்களை அமர்த்தி வந்தனர். இப் புரோகிதர்கள் அரசன் நலங் கருதிச் செய்யப்படும் அதர்வக் கிரியைகளில் திறமை மிக்கவர்கள். இக் கிரியைகள் ராஜகர் மாணி எனப்பட்டன. இக்கிரியைகளைச் சார்ந்த மந்திரங்கள் இங்கு உள்ளன. இதிலிருந்து அதர்வவேதத்திற்கும், அரசர் இனத்திற்கும் இருந்த தெர்டர்பு தெளிவாகின்றது. அரசன் அரசுகட்டில் ஏறும் வேளை செய்யவேண்டும் பட்டாபிஷே கம் இங்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதர்வம் வல்லோர் இதனை நிகழ்த்துவர். அரசர் பகைவரை வென்று தலைசிறந்த அரசனுய்த் திகவுழம், ஆற்றலையும் புகழையும் பெறவும், வேண்டிய வலிமையை அளிக்கும் மந்திரங்களும் இங்கு உண்டு. சில மந்திரங்கள் அரசன் கவசங்களையணியும் பொழுது உச்சரிக்க வேண்டியவை. சில போர்க் கோலம் கொண்டு தேரில் ஏறும் பொழுது சொல்ல வேண்டியவை. அரசனைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் வருணனது என ஒரு மந்திரம் கூறும். இது “தேர்ந்தெடுப்பவன்?" என் வருணன் பெயர் அமைந்துள்ளது என்பதைக் காட்டி விளங்க வைக் கின்றது. போர்க்காலத்தில் உச்சரிக்கவேண்டியமந்திரங்களும் உண்டு. வீரரை ஊக்கத்துடன் போர் புரியவும் வெற்றி ஈட்

113 | srt, apasonraprrasë egddd
உவும் தூண்ட முழங்கப்படும் முரசங்களுடன் தொடர்புள்ள மந்திரங்களும் காணப்படுகின்றன.
அரசர்களுக்கு நன்மை விளைவிக்கத் தக்கவாறு இருப்பது போன்று, பிராமணர்களுக்கும் நன்மையைப் பெருகச் செப் யக் கூடிய மந்திரங்களும் இவ்வேதத்தில் இடம் பெற்றுள் ளன. இவைகளுட் சில அரசர்களைச் சார்ந்து கடமையாற்றும் புரோகிதர்களைப் பற்றியன. மந்திரங்களையும் மாந்திரிகள் களேயும் கண்டிக்கும் பகுதிகள் சமய நூல்களிற் பெருமளவிற் காணப்படுகின்றன. எனினும், சத்துருக்களை அழிக்கப் பிரா மணன் அதர்வ வேதத்தைப் பிரயோகிக்கலாம் எனக் கூறும் பகுதிகளும் உண்டு என்பது உன்னற்பாலது. பிராமணர்க ருக்கு நன்மை விளைவிக்கும் மந்திரங்கள் பலவகைப்பட்டன. பிராமணர்களின் பொருளைத் தீண்டுதல் கூடாது. அவர்களின் பொருளைத் தொடுபவருக்கும், அவரது உயிரை அழிப்பவருக் கும் நாசம் விளைவிக்கப் பிரயோகிக்கப்பட வேண்டிய மந்தி ரங்கள் பல இங்குள்ளன. பிராமணர்களுக்கு யாகங்களில் அளிக்கப்படும் தட்சணை பற்றிய விவரங்களும் இங்கு கூறப் பட்டுள்ளன. பிராமணனைக் கொல்வது பெரும்பாவம் என் ணுங்கருத்து இங்கு வற்புறுத்தப் பட்டுள்ளது. இதைவிட அறி வுப் பெருக்கத்தையும் புகழையும் தத்துவக் கருத்துக்களை பும் குறிக்கும் பாடல்கள் பல இங்குள்ளன. ஆனல் இவை காலத்தால் பிந்திய பாடல்களே.
வேள்வி முறை பற்றிக் கூறும் சில பாட்டுக்சளும், மந்தி ரங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன.இவற்றை இங்கு கூறுவ தனுல்தான் இவ்வேதத்தின் மதிப்பு உயர்ந்தது என்பது ஏற்க னவே எடுத்துக் காட்டப்பட்டது.இதுபற்றப் யே அதர்வவேதம் ஏனைய வேதங்களுடன் தனி இடம் பெற்றது. இருக்கு வேதத் தில் போன்று இங்கும் ஆப்ரீ சூக்தங்கள்? உள்ளன. இருக்கு வேதங் கூறுவது போல் விஷயத்தை எடுத்துக் கூறுவதாய் யசுர்வேத உரைநடையையும் விளக்கங்களையும் நிகர்த்துச் சில பகுதிகள் இங்கு இருக்கின்றன. இறந்தவர்களைக்குறித்துச் செய்யப்படும் கிரியைகளைக் குறிப்பிடும் பாட்டுக்களும் இஷ்
aleー5

Page 67
வடமெர்ழி இலக்கிய வரலாறு / 114
வினத்தைச் சார்ந்தன. இருக்கு வேதத்தில் பத்தாவது மண் டலத்தில் வரும் யம சூக்தம் முதலியன அப்படியே இங்கும் இடம் பெற்றுள்ளன. இவற்றுட் சில சிறிது விரிந்து அமைந் துள்ளன. இருபதாங் காண்டத்தில் உள்ள பல இருக்குவேதப் பாடல்கள் சோம யாகத்தைப் பற்றியவை. இருக்கு வேதத் தில் இருக்கும் தானஸ்துதிகளை நிகர்க்கும் குந்தாப சூக்தங்க ளும்? இருபதாங் காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.
அதர்வ வேதத்தில் தத்துவக் கருத்துக்கள் நிறைந்து காணப்படும் சூக்தங்கள் பிற்காலத்தன.சில உலகஅமைப்பை விளக்குவதற்காகப் பாடப்பட்டன. ஆனல் இவ்வகைப் பாடல்கள் கூட, ஏனைய அதர்வ மந்திரங்கள் போல், மந்தி ரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. தத்துவ விசாரணை யில் ஈடுபடும் பொழுது உண்மைகளை எடுத்துக் கூறும் இப் பாடல்கள் உச்சரிப்பவர்களுக்கு மாந்திரிக சக்தியை வளரச் செய்து, எண்ணிய கருமங்களை நிறைவேற்றுவதற்கே பயன் படுவன. எனினும், இவை கருத்து வளம்பெற்றவை. உப நிடதம் கூறும் முக்கிய பொருள்களையும், உலகை ஆக்கவும் காக்கவும் வல்ல பிரஜாபதியையும், உலகத் தோற்றத்துக்குக் காரணமான பரம் பொருளையும், பிரமம், தயஸ், அசத்து, பிராணன், மனஸ் போன்ற உயர்ந்த தத்துவக் கருத்துக்களை புஞ் சுட்டும் சொற்களை உடையன இப்பாடல்கள். அக்காலச் சூழ்நிலையில் தோன்றி மிகவும் பரந்து பயின்று வந்ததற்கு இவ்வேதத்தில் காணப்படும் சான்று. அதர்வ வேதத்தின் உயர்ச்சியைக் குறிப்பிடுகின்றது. இருக்கு வேதத்தில் தோன் றிக் காணப்படும் தத்துவக் கருத்துக்கள் உபநிடதங்களில் வளர்ச்சி பெற முன் உள்ள இடைநிலை அதர்வ வேதத்தில் வரும் இப்பகுதிகளில் காணப்படும் இக்கருத்துக்களே ஆகும். கால தத்துவமே உலகம் இயங்குவதற்கு முதற் காரணம் என எடுத்துக் கூறும் பாடல் அக்கால தத்துவ விசாரணையினுயர் வையே சுட்டுகின்றது.
அதர்வ வேதத்தின் பதின்மூன்ருவது காண்டத்தில் ேேராஹித சூக்தங்கள்? இருக்கின்றன. செந்நிறத்தவனுணசூரி

115 / கா. கைலாசநாதக் குருக்கள்'
யனைக் குறித்து இவை பாடப்பட்டன. நாளடைவில் சூரி யனது ஆத்ம சக்தியே படைத்தற்கு அதி தெய்வமாக உயர்த் தப்பட்டது. இவன் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தான். பூமியை ஆளுவதற்கு அரசன் தோற்றுவிக்கப் படுகிருன். தெய்விக அரசனுன ரோஹிதனுக்கும், நிலவுலக மன்னனுக்கும் தொடர்புகூறப்படுகின்றது. இதன் நடுவில் பகைவரைத் தண்டிப்பதற்கு வேண்டிய மந்திரங்கள் இடம் பெறுகின்றன. ரோஹிதன் உயரிய பரம் பொருளாகக் கூறப் படுகிருன். இதே சூக்தத்தில் ஒவ்வொரு பாட்டின் இறுதி யிலும் பிராமணனைத் துன்புறுத்துவோரைக் கோபித்துத் தண்டிக்கும்படி ரோஹிதன் வேண்டப்படுகிருன். எருது, பசு என்னும் இரண்டும் உயர்த்திக் கூறப்படும் பாட்டும் ரோஹித சூக்தம் போன்றது. இங்கும் உயரிய தத்துவக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. பிரமசாரி சூக்தமும்? விராத்ய சூக்தமும்? இவ்வினத்தைச் சேர்ந்த பாடல்களே,
அதர்வ வேதத்தில் காணப்படும் மொழியமைப்பு:இருக்கு வேதத்தில் இருக்கும் மொழியமைப்பினின்றும் மிக வேறு படாதது. யாப்பு முறையும் அப்படியே. இருந்தும் அதர்வ வேதத்தில் வரும் சில சொல்லுருவங்கள் மிகப் பிற்காலத் தைச் சேர்ந்தன. இங்கு காணப்படுவது மிகப் பழைய உரை நடை. இவற்றை எல்லாங் கருத்திற் கொண்டு அதர்வ வேதத்தின் காலத்தையும் அது தொகுக்கப்பட்ட காலத்தை யும் வரையறுத்து நிறுவுதல் எளிதல்ல. எனினும் இவ்வேதம் பற்றிப் பல உண்மைகளை உணரக்கூடியதாக இருக்கின்றது. ஒன்று, மக்களிடை மிகப் பழைய காலந்தொட்டு வழங்கிவரு மளவிற்கு அதர்வ வேதம் கூறும் கருத்து தொன்மை வாய்ந் தது என்பது. மற்றது. அதர்வ வேத சங்கிதை இருக்கு வேத சங்கிதையிலும் பிந்தியது என்பது. இதற்குப்பல ஆதாரங்கள் இருக்கின்றன. அதர்வ வேதம் சுட்டும் நாகரிகம் பிற்காலத் தையே சார்ந்து நிற்கிறது. இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் பாரதநாடு இருக்கு வேதத்தில் கூறப்பட்டதைக் காட்டிலும் அகன்று காணப்படுகின்றது. அதர்வ வேதம் கூறும் இந்தியா, தென் கிழக்கே விரிந்து செல்லுகின்றது.கங்கைப் பள்ளதாக்கு

Page 68
வடமொழி இலக்கிய வரலாறு ( 116
வரை மக்கள் சென்று வசித்தனர். வங்காளத்திலேயே பெரி தும் காணப்படும் புலி மிகவும் வல்லமைவாய்ந்ததும். ஏனைய மிருகங்களைக் கொன்று தின்னும் ஆற்றல் வாய்ந்ததுமாகக் கூறப்படும். வங்காளத்தைப் பற்றிய குறிப்பெதுவும் இல் வாத இருக்கு வேதத்தில் இது கூறப்படவில்லை. அரசன் முடி குட்டு விழாவில் புலித்தோல் மீது ஏறும் நிகழ்ச்சி பற்றிக் குறிப்பு இங்கு உண்டு. அதர்வ வேதத்தில் பிராமணர், கூடித் திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு வருணத்தின ரும் கூறப்பட்டுள்ளனர். பிராமணர் உயரிய இடம் பெறு கின்றர்கள். அபிசாரம் முதலிய துஷ்பிரயோகங்களுக் கேற்ற மந்திரங்களும், பிராமணர்களின் தொடர்பால் தம் இயல் பான நிலை இழந்து சீராக்கி மாற்றியமைக்கப்பட்டு, கவர்ச்சி கரமான வேற்றுருவம் பெற்றன என மேல்நாட்டாராய்ச்சி வல்லவர்கள் கூறுவர். இப்பாட்டுக்களில் பெரும்பாலான வற்றைப் புரோகிதர்களே ஆக்கித் தொகுத்தனர். பிராமணர் களுக்கு உணவளிப்பதையும் அவர்களுக்கு யாகங்களில் கொடுக்கவேண்டிய தட்சணையையும், இன்னும் இது போன்ற பல விஷயங்களையும் கூறும் பகுதிகள், புரோகிதர்கள் இவ் வேதத்துடன் கொண்டுள்ள தொடர்பையும், அவர்களது கருத்துக்கள் இங்கு சுவறுவதையும் தெளிவாகச் சுட்டுகின் றன. மக்களிடை பெரிதும் பயின்று வந்த அதர்வ வேதத்தில் பழைய மாந்திரிகம் பற்றிப் பாடல்கள் இருப்பதுதான் இயல்பு. இவ்வாறன்றி இவ்வேதம் உயரிய தத்துவக் கருத் துக்களையும் எடுத்துக் கூறும் வகையில் வேறு வகையில் உரு வாக்கப்பட்டது. இந்நிலையில் காணப்படும் அதர்வ வேதம் தான் இருக்கு வேதத்தைக் காட்டிலும்பிந்தியதெனக்கொள் ளப்படும் உண்மையை நிலை நிறுத்துகின்றது. இருக்கு வேதத் தில் வந்த தெய்வங்களே இங்கும் திரும்பவும் கூறப்படுகின் றன. ஆனல் அதர்வ வேதம் கூறும் மாந்திரிகச் சூழ்நிலைக் கேற்பச் சிறிது வேறுபடுத்திக் கூறப்பட்டுள்ளன. இதுவும். அதர்வ வேதம் பிந்தி எழுந்ததென்பதையே சுட்டும்.
கவிதை நயம் செறிந்த பகுதிகளும் இங்கே இடை விடையே காணப்படுகின்றன. எனினும், இவை தனியே எடுத்

117 / கா. கைலாசநாதக் குருக்கள்
துக் கூறக்கூடிய அளவிற்குச் சிறப்பு வாய்ந்தன வல்ல. ஆளும் கவிதையின் மிகப் பழைய உருவம் இருக்கு வேதத்திற் போன்று, இங்கும் காணப்படுகின்றதென்பதை ஒருவரும் மறுக்க முடியாது. இது இந்தியாவில் எழுந்த கவிதையின் ஆதி வரலாற்றை அறியப் பயன்படும். மாந்திரிகம் நோய் இரு வரை ஒன்று சேர்த்தல், சேர்ந்த இருவரை வேருகப் பிரித்தல் முதலிய விஷயங்களைக் கூறும் நூலில் இதை நாம் அதிகம் எதிர்பார்த்தல் முறையன்று.

Page 69


Page 70

யாகங்களில் கடமையாற்றும் பலவகைப் புரோகிதர் களின் தேவையை ஒட்டியே வேதங்களின் சங்கிதைகள் தனித் தனிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அத்வர்யுக்கள் வேட்பவருள் ஒரு பிரிவினர். இவர்களின் தேவையை ஒட்டி எழுந்ததே யசுர் வேதம். அத்வர்யுக்களின் வேதம் நூற் ருெரு பிரிவினதென்று கூறப்பட்டுள்ளது. அத்வர்யுக்கள் இயற்ற வேண்டிய கிரியைகளைப் பற்றிப் பல்வேறு அபிப்பிரா யங்கள் நிலவியதாற் போலும், இவ் வேதத்தில் இவ்வாறு தனித்தனிப்பிரிவுகள் தோன்றின. இவற்றுள் ஐந்து களைப் பற்றி மட்டுமே நாம் இன்று அறியக்கூடியதாய் இருக் கின்றது.இவ்வைந்தனுள் நான்கு கிருஷ்ண யசுர் வேதத்தைச் சார்ந்தவை. அவை காடக சங்கிதை,கபிஷ்டல-கட சங்கிதை மைத்ராயணி சங்கிதை, தைத்திரீய சங்கிதை எனப்படுவன. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு பூண்டுள்ளன. ஐந்தா வது பிரிவான வாஜசநேயி சங்கிதை, கண்வ சாகை எனவும் மாத்தியந்தின சாகை எனவும் பெயர் பெற்று இருவகையின தாக விளங்கும். இதுவே சுக்கில யசுர் சுவதம் எனக் கூறப் படுவது. வாஜசநேயி சங்கிதையில் இருப்பன மந்திரங்களே. இவை வேட்கும் வேளைகளில் அத்வர்யு ஓத வேண்டிய மந்தி ரங்கள். கிருஷ்ண யசுர் வேதத்திலோவெனின் இவ்வகை மற் திரங்களை மட்டுமல்லாமல், வேள்வியுடன் தொடர்புடைய பல்வேறு கிரியைகளைச் செய்யும் முறையையும்,இவைபற்றிய விளக்கங்களையும், விவாதங்களையும் காண்கின்ருேம். எனவே இப்பகுதிகள் மந்திரங்களை மட்டும் பேருமளவிற் பெறுவது டன் மட்டும் அமையாது, பிராமணங்களைப் பெரும்பாலும் நிகர்த்தும் காணப்படுகின்றன. அத்வர்யுக்கள் இயற்றவேண் டிய கிரியைகளைக் கூறி, அவர்க்குப் பயன்படலொன்றையே தனிநோக்காகக் கொண்டு அமைக்கப்பெற்ற இவ்வேதத்தில் யாகக் கிரியைகளின் விளக்கம் கூறப்பப்படுவது இயல்பே.

Page 71
வடமொழி இலக்கிய வரலாறு / 122
கிருஷ்ண யசுர் வேதமே வாஜசநேயி சங்கிதையுைக் காட்டி லும் பழையது என்பது தெரிகின்றது. யசுர் வேதம் செப்ப னிட்டு உருவாக்கப்பட்ட வேளையில், ஏனைய வேதங்களை நிகர்த்து இவ்வேதமும் மந்திரங்களை மட்டுமே கொண்டமை தல் முறை என்னும் கருத்து மனதில் தோன்றியதனல் போலும்,கிருஷ்ண யசுர் வேதம் ஏற்கனவே உருவாகிய இடத் தும் சுக்கில யசுர் வேதம், பிராமணங்கள் வெருயமைதல் வேண்டும் என்னுங் கொள்கை பற்றி, இருக்கு சங்கிதையை நிகர்த்து அமையும் வண்ணம் நாளடைவில் உருவாக்கப்பட் டது. இவ்விதம் கிருஷ்ண யசுர் வேதம், சுக்கில யசுர் வேதம் என வெவ்வேறு பிரிவுகள் காணப்படுவதனல்,இவை காலத் தால் மிகவும் வேறுபட்டவை எனக் கருதுதல் தவறு. இனி இவ்வேதத்தின் இயல்பை நோக்குவோம். வாஜசநேயி சங் கிதையின் உட்பிரிவுகளையும் அமைப்பு முறையையும் இங்கு எடுத்துக் கூறினல், அது ஏனைய பிரிவுகளுடைய கிருஷ்ண யசுர் வேதத்தைப் பற்றியும் அறிவதற்கு ஓரளவிற்கு உதவும். எனவே வாஜசநேயி சங்கிதையைப் பற்றி இங்கு விரிவாகக் கவனிப்போம்.
வாஜசநேயி சங்கிதையில் நாற்பது உட்பிரிவுகள் உண்டு. ஈற்றில் வரும் பதினைந்து பிரிவுகள் காலத்தால் பிந்தியவை யாகக் கருதப்படுவன. முதல் இருபத்தைந்து பிரிவுகள் மிக வும் முக்கியமான வேள்விகளுக்கு வேண்டிய மந்திரங்களைக் கொண்டுள்ளன. முதல் இரு பிரிவுகள் தர்ச பூர்ணமாசத் துக்கு வேண்டிய மந்திரங்களை உடையன. இதைச் சார்ந்த பிண்ட பித்ரு யஞ்ஞத்திற்கு வேண்டிய மந்திரங்களும் இங் குள. மூன்ரும் பிரிவில் நித்தியாக்னி ஹோத்திர மந்திரங்கள் உண்டு. அக்கினியை முதலில் தோற்றுவித்துப் பிறகு அதை வளர்த்துக் காலையிலும் மாலையிலும் நிகழ்த்த வேண்டும். கிரியை கூறப்படும் நான்காம் பிரிவுக்கும் எட்டாம்பிரிவுக்கும் இடையில் வரும் பிரிவுகளில், அக்கினிஹோத்திரத்தைப்பற்றி யும், நான்கு மாதங்களுக்கொரு முறை நடக்கும் சா ர்மாஸ் யம் என்னும் கிரியைப்பற்றியும் எடுத்துக்காட்டப்பட்டிருக் கக்காண்கின்ருேம். சோமயாகத்தில் ஒதவேண்டிய மந்திரங்க

123 / கா. கைலாசநாதக் குருக்கள்
ளும் இங்கு காணப்படுவன. சோமயாகத்தில் ஒருநாள் முழு தும் நிகழும் கிரியைகளும் உண்டு. வாஜபேயம் என்னும் வேள்வி முறை ஒரே நாளில் நிகழ்வது. இவ்வேள்வி பெரும் பாலும் வீரர்களாலும், மன்னர்களாலும் வேட்கப்படுவது. இங்கு தேர் ஒட்டப் போட்டி நிகழும். இவ் வேள்வியில்சோம பானம் நிகழும். அரசர்க்கு மட்டுமெனச் சிறப்பாகக் கூறப் பட்டுள்ளது இராஜசூய வேள்வி.இதில் பழைய காலப் பழக்க வழக்கங்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளன. சில உண்மைகளைக் குறிப்பாக உணர்த்தும் நோக்குடன், போலியாக நிகழும் படை மோதல், தாயவிளையாட்டு, மாந்திரீக நிகழ்ச்சிகள் எல்லாம் இவ்வேதத்தில் இடம் பெற்றுள்ளன.இவ்விருவகைச் சோமயாகங்களைப் பற்றி யசுர் வேதத்தின் ஒன்பதாம் உட் பிரிவுகள் கூறும் குண்டம் வேதி முதலியனவற்றையமைக் கும் பொழுது ஓதவேண்டிய மந்திரங்கள் பதினெராம் பிரிவு முதல் பதினெட்டாம் பிரிவுவரை காணப்படுகின்றன. இது
வருஷம் முழுவதுமே தொடர்ந்து நிகழும் நிகழ்ச்சி. இதில் பொதிந்து காணப்படும் உட்பொருள் விளக்கங்களை எல்லாம் பிராமணங்கள் எடுத்து விளக்கிக் கூறுகின்றன. அக்கினி குண் டம் அக்கினியெனவே கூறப்படும். இக்குண்டம் பதினுெரா யிரத்து எண்ணுரறு கற்களால் கட்டப்படும். அது சிறகுகளை அகலவிரித்து நிற்கும் பறவையை நிகர்த்து நிற்கும். இதை யமைக்கும் விவரங்கள் எல்லாவற்றையும் விரிவாக இப்பிரிவு கள் விளக்கிக் கூறுகின்றன. பத்தொன்பதாம் பிரிவு முதல் இருபத்தொராம் பிரிவுவரை செளத்ரா மணியாகத்திற்குள்ள மந்திரங்களும் அந்த யாகத்தைப் பற்றிய விவரங்களும் கூறப்பட்டுள்ளன. ஈற்றில் காணப்படும் இருபத்திரண்டாம் பிரிவிற்கும், இருபத்தைந்தாம் பிரிவிற்கும் இடையில் வரும் பகுதிகள் அசுவமேத வேள்வியைப் பற்றிக் கூறுவன.
இவ்வேதத்தின் இறுதியில் வரும் பதினைந்து பிரிவுகளும் காலத்தால் சிறிது பிந்தியவை என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்டதொன்றே.இதுபற்றியே இப்பகுதிகளைக்கிலங்கள்” எனக் கூறுவர். இவை அநுபந்தங்கள் என்பதையே கிலம் என்னும் பெயர் உணர்த்தி நிற்கின்றது. இவற்றை மேலும்,

Page 72
வடமொழி இலக்கிய வரலாறு / 124
நோக்கினல், அவைகூறும் விஷயங்கள் தெளிவாகும். இருபத் தாரும் பிரிவிலிருந்து, இருபத்தொன்பதாம் பிரிவு வரை உள்ள பகுதிகளில் இது வரை கூறிய பிரிவுகளுடன் தொடர்பு கொண்டுள்ள மந்திரங்கள் அநுபந்தமாக இணைக்கப்பட்டுள் ளன. முப்பதாம் பிரிவில் மந்திரங்களெதுவும் கூறப்பட வில்லை. புருஷமேதத்தைப் பற்றிய சுருங்கிய குறிப்பு மட்டும் காணப்படுகின்றது. ஏறக்குறைய நூற்று எண்பத்து நான்மர் இங்கு பலியிடப்படவேண்டியவர் எனக் கூறி, ஒவ்வொரு வரையும் தனித்தனி குறிப்பிடுகின்றது. இங்கு கூறப்பட்டி ருக்கும் விளக்கங்களிலிருந்து இவ்வாறு பலி நிகழ்ந்ததென் பதற்கு அறிகுறிகளெதுவுமில்லை. இவ்விளக்கங்கள் மறை பொருளாகப் பல உ ண்  ைம க ளை உணர்த்துகின்றன. இதையே இருக்கு வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் வரும் தொண்ணுருவது சூக்தமும் கூறும். புருஷனை அடிப் படையாகக் கொண்டது இவ்வுலகம் என்ற உண்மையினை உணர்த்துவது இச் சூக்தம். உலகிற் காணும் ஒவ்வொரு பகு தியும் புருஷனின் ஒவ்வோருறுப்பினின்று தோன்றிற் றென்று இச் சூக்தம் எடுத்துரைக்கின்றது. இங்கு புருஷன் உயரிய தத்துவமாகக் கூறப்பட்டுள்ளான். புருவுமேதத்திற் பிரயோகிக்கப்பட வேண்டியதான இம்மந்திரம், உபநிடதம் என்னும் பெயரையும் பெற்றுள்ளது. இந்த யசுர்வேத சங் கிதையின் முப்பத்திரண்டாம் பிரிவும் உபநிடதம் என்ற பெயரில் இதே போன்ற வேறு விஷயங்களைக் கூறுகின்றது. இங்கு பிரஜாபதி புருஷனெவும் பிரமமெனவும் கூறப்படு வன். முப்பத்தி நான்காம் பிரிவில் முதல் ஆறு பாடல்களும் உபநிடதம் என்று கூறப்படும்.இதைச் சிவசங்கல்ப2உபநிடதம் என்பர். முப்பத்திரண்டாம் பிரிவிலிருந்து முப்பத்தினன் காம் பிரிவு வரை சர்வமேதம் என்னும் வேள்விக்குவேண்டிய மந்திரங்கள் காணப்படுகின்றன. வேட்பவன் இவ்வேள்வியில் தனக்குள்ள பொருளனைத்தையும் தானமாக விநியோகித்து விட்டுத் துறவறம் மேற்கொண்டு காட்டையடைவன்.அங்கு அவன் தன் வாழ்க்கையின் இறுதி நாட்களைக் கழிப்பான். முப்பத்தைந்தாம் பிரிவில் பெரும்பாலும் இருக்கு வேதத்தில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகள் உள. இவை ஈமக்கிரிசை

125 | கா. கைலாசநாதக் குருக்கள்
களுக்கு வேண்டப்படும் மந்திரங்கள். முப்பத்தாரும் பிரிவி லிருந்து முப்பத்தொன்பதாம் பிரிவுவரையுள்ள பகுதியில் பிர வாக்கியம் என்னும் கிரியைபற்றி விளக்கங்கள் கூறப்பட்டுள் ளன. நாற்பதாம் பிரிவில் ஓர்உபநிடதம் காணப்படுகின்றது. இது முக்கிய உபநிடதங்களிலொன்ருன ஈசோபநிடதம்? எனப்படுவது. இவை தாம் வாஜசநேயி சங்கிதையின் உட் பிரிவுகள். இச்சங்கிதையின் இறுதியிற் காணப்படும்பகுதிகளி லிருந்து இவை காலத்தாற் சிறிது பிந்தியவையென்பது மிக வும் இலகுவாக ஊகிக்க முடிகின்றது. மந்திரங்களைப் பொறுத்த மட்டில் கிருஷ்ண யசுர் வேதத்தில் முதலரைப் பகு தியை மட்டுமே சுக்ல யசுர் வேதம் நிகர்த்து நிற்பது. காலத் தைப் பற்றிய இவ்வுண்மையை இன்னும் தெளிய வைக் கின்றது.
மந்திரங்சளும் இவைபோன்ற பிரயோகங்களுமே யசுர் வேதத்திற் காணப்படுவன. மந்திரங்கள் இருக்குகளெனப் படுவன. இவை தவிர்க்க ஏனைய பகுதிகள் பாட்டாயமை யாது குறுகிய உரைப் பகுதிகளாயமைந்துள்ளன. இவை மந்திரங்களே. இவைதாம் இவ்வேதத்திற்கு எனச் சிறப் பாக எடுத்துக்காட்டத்தகும் பகுதிகள். இவை வேள்வியில் பெரிதும் உபயோகப்படுவன. எனவே இவை சீயசுஸ்? எனப் பெயர் பெறலாயின. இவ்வுரைப் பகுதிகள் ஓசை நயம் மிகுந்து செவிக்கின்பம் விளைவிக்கும் வகையிலமைந்துள்ளன என்பது எடுத்துக் கூருமலே தெரிகின்றது. இவை செய்யுள் நடையிலே இதுகாறும் பயின்றவர்கள் புதிதாக எடுத்துக் கூறும் உரைகள் அல்லவா? இங்கு காணப்படும் பாட்டுக்கள் பெரும்பாலும் இருக்கு வேதத்தினின்றும் எடுக்கப்பட்டவை. இருக்கு வேதத்தில் இருந்து எடுக்கப்பட்ட பாட்டுக்கள் தாமும் முழுவதுமே இங்கு கூறப்படுவதில்லை. மிகமிகச் சில வற்றையே முழுவதாக இங்கே காணுகின்ருேம் யாகங் களுக்குத் தேவையான மந்திரங்கள் மட்டுமே பிரித்தெடுக்கப் பட்டு இச் சங்கிதையில் சேர்க்கப்பட்டுள்ளன. இம் மந்திரங் கள் மட்டுமின்றி விளக்கங்களுடனும் கூடி விரிவாக அமைந் துள்ளது கிருஷ்ண யசுர் வேதம். இவ்வமைப்பு முறையினின்

Page 73
வடமொழி இலக்கிய வரலாறு / 128
றும் வேறுபட்டு மந்திரங்கள் மட்டும் கொண்டமைவது சுக் கிலயசுர் வேதம். இலக்கிய அமைப்பையும் கூறியுள்ள கருத் துக்களையும் மட்டும் கருத்திற்கொண்டு இவற்றைப் பார்ப்ப வருக்குக் கவர்ச்சியளிக்கும் வகையில் சிறப்பியல்பு எதுவும் இங்கு காணப்படுவதில்லை. எனினும் இவ்வேதத்தில் இருக் கின்ற உரைநடைப் பகுதிகள் மிகவும் கவர்ச்சிகரமானவை. இந்நடையின் தோற்றம், வளர்ச்சி முதலியனவற்றை அறிய வும் அக்காலத்தில் உரைநடை கையாளப்படு மாற்றை உய்த்
துணரவும் வழிகோலும் இப்பகுதிகள், மொழி வளர்ச்சியை
யறியவும் மிகப்பயன்படுகின்றன. இவ்வகை உரைப்பகுதிகள்
தொடக்கத்தில் மிகச் சிறு வாக்கியங்களாக அமைந்து காணப்
பட்டன. இது அக்கினிக்கு உரியது? 38 அக்கினிக்கு நன்மை
உண்டாகட்டும்? என்னும் சிறு வாக்கியங்களை எடுத்துக்
காட்டுகளாக இங்கு குறிப்பிடலாம். இத்தகைய பல சொற்
ருெடர்களில், அக்கினி முதலிய தெய்வங்களைக் குறிப்பன
சில; அவற்றின் பெருமைகளை விரித்துக் கூறுவன சில நோன் சொரியும் அவி குறிப்பிட்ட இத்தெய்வத்தைச் சாரட்டும் இது எனக்கன்று" என்பன போன்ற கருத்துக்களைக் கூறும் சிறு வாக்கியங்களையும் இங்குக் காணலாம்.
இருக்கு வேத சங்கிதையிற் போன்று, தெய்வங்களின் சிறப்சை விரிவாக எடுத்துக் கூறி, அவற்றின் பெருமையை யுணர்த்தும் பகுதிகள் இங்கு கிடையா. யாகங்களில் உபயோ இக்கப்படும் உபகரணங்களே தெய்வங்களுக்குரிய பெருமை யையும், சிறப்பையும் பெற்றுவிட்டன. உபகரணங்கள் தெய் வத்தன்மை பெற்றுத் தெய்வங்களாகவே உயர்த்தி மதிக்கப் Lullet
தூய்மை மிக்க வேள்வித்தீ, கடை கோல்களைக் கொண்டு கடைந்து தோற்றுவிக்கப்படும். இரு கடை கோல்களும் தாய் தந்தையரைத் தனித்தனி குறிப்பன. அவற்றின் நடுவே தோன்றுமக்கினியே இவர்க்குப் பிறக்கும் குழந்தை. இவ் வாறு உருவத்திற் கூறும் குறிப்பு இருக்கு வேதத்திலேயே

127 / கா. கைலாசநாதக் குருக்கள்
காணப்படுகின்றது. இதே போன்ற கருத்துக்களும் இங்கே விரிவாக இடம்பெறக் காண்கிருேம்.
இவ்வேதத்திலுள்ள மந்திரங்கள் பல, வாசிப்போர்க்குத் தெளிவான கருத்துக்களை உணர்த்தாதன வாய், மந்திர சக்தி வாய்ந்தனவாக மட்டும் கொள்ளப்படுன. சில மந்திரங் கள், உச்சரிப்பவர்கள் தம் மனதிலிருக்கும் ஆசைகளை வெளியிட்டுக் கூறுவனவாய் அமைந்துள்ளன. இவ்வகை மந் திரங்கள் இவ் வேதத்திலேயே சிறப்பாகக் காணப்படுவன.
இதே போன்று படிப்பவர்க்கு உடனே புலனுகாது. தெளிவற்றவையாய்-ஆயினும் மறைபொருளாய்க் கருத்தை நுண்ணறிவுடையோர்க்கு மட்டும் உணர்த்தி நிற்கும் பகுதி களும் இடம்பெற்றுள்ளன.
யசுர் வேதத்தில் உரைநடையிற் காணப்படும் மந்திரங் கள், அதர்வ வேத மந்திரங்களினியல்பு வாய்ந்தவை அதர்வ மந்திரங்களைப் போன்று தீயவற்றை விரட்டி ஒட்டவும், சபிக் கவும் ஆற்றலுடைய மந்திரங்களே இவை. வேள்விக் கிரியை களிறி சில பகைவனைத் துன்புறுத்தவும் பயன்படத்தக்கவை. இவ்வாறு நன்மையை மட்டுமின்றித் தேவை நேரிடின் தீமை யையும் ஏனையோருக்கு விளைவிக்கப் பயன்படுத்தும் வழி வகுப்பது யசுர் வேதம் என்பது தெளிவாகின்றது.
சில நொடிகளும் இங்கு காணப்படுகின்றன. இவை உய ரிய தத்துவங்களைக் குறிப்பிடுவன. இவற்றைப் பிரமோத் தியம்? எனக் கூறுவர். பிரமோத்தியம் என்னும் இச்சொல், பிரமத்தைப் பற்றிக் கூறும் பகுதி என்பதை உணர்த்தும். இது போன்ற பகுதிகள் இருக்கு வேதத்திலும், அதர்வ வேதத்திலும் காணப் படுவனவே. யசுர் வேதம் கூறும் வேள்வி முறையில் இவை தனியிடம் பெற்றுவிட்டன. இவற் றுட் சில பிராமணங்கள் வேள்விகட்குக் கூறும் உயரிய விளக் கங்களைப் போன்றும், உபநிடதங்களில் காணப்படும் தத்து வக் கருத்துக்களைக் குறிப்பது போன்றும் காணப்படுவன.

Page 74
வடமொழி இலக்கிய வரலாறு | 128
இங்கு கூறப்படும் மந்திரங்கள் இருக்கு வேத மந்திரங் களைப் போல் வழிபடுதற்குப் பிரயோகிக்கப்படுவன அல்ல. இவை பெரும்பாலும் தெய்வங்களை ஏத்திப் போற்றிக் கூறும முறையில் அமைந்திருப்பதையும் நாம் காணுவதில்லை. வேட் பவன் இம் மந்திரங்களைக் கருவியாகப் பயன்படுத்தித் துணைக் கொண்டு தான் விரும்பியவற்றையெல்லாம் நிகழச் செய் வான். வேட்பவர்கள் இவ்வாறு உணவு முதலியவற்றை அவியாகத் தேவர்களுக்கு அளிக்க விரும்புவர்; தேவர்களும் அதை உணவாகப் பெற அவாவுவர். மேலும் கூற வேண்டு வதை நேரே புலனுக்காது சுருக்கமாக, குறிப்பாக மறை பொருளாய் உணர்த்துதலையே தேவர்கள் விரும்பினர் என் பதை இந்நூல்களே எடுத்துக் கூறியுள்ளன.
வழிபாட்டு முறையில் புதியதொரு திருப்பத்தை யசுர் வேதம் தோற்றுவித்துள்ளது. பிற்காலத்து வழிபாட்டு முறை யில் உயர்ந்ததோர் தனியிடத்தைப் பெற்றுள்ளது. இம் முறை சிறப்பாகத் தென்னட்டில் பெரிதும் கையாளப்பட்டு வருகின்றது. இதுவும் ஏற்கனவே கூறியவாறு, தெய்வங்களை வசீகரித்துத் தன்வயமாக்கும் முறையைச் சார்ந்து நிற்பதா கவே தெரிகின்றது. தெய்வத்திற்குப் பல பெயர்களைக் கூறும் இப்புதியதொரு முறை யசுர் வேதத்தில்தான் முதன் முதலாகக் குறிப்பிடப்பட்டிருக்கக் காண்கிருேம். இப்பெயர் களிற் சில சிறப்புப் பெயராயமைவன; சில காரணப் பெயர் கள்; சில பொதுப் பெயர்கள்; சில தெய்வங்களின் பண்பை மட்டுங் கூறுவன. இத்தகைய பெயர்கள் நூருகவும் ஆயிர மாகவும் தொகுக்கப்பட்டுப் புராணங்களிற் காணப்படுகின் றன. தென்னுட்டு வழிபாட்டில் அன்றன்ருடு நிகழும் நிகழ்ச்
சியில் இவ்வாயிரம் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பெயர்கள் பல கூறும் இம்முறையினை யசுர் வேதத்தில் வரும் *சதருத்திரியம்” என்னும் பகுதியில் முதன் முதலாகக் காண் கின்ருேம், இங்கு உருத்திரனின் நூறு பெயர்கள் கூறப்பட் டுள்ளன.

129 / கா. கைலாசநாதக் குருக்கள்
யசுர் வேதத்தில் சிறப்பியல்பு வாய்ந்த இன்னெரு வகை மந்திரங்களும் உண்டு. இவையும் பலவகை நன்மைகளையும் தீமைகளையும் விளைவிக்கும் ஆற்றல் வாய்ந்தவையெனக் கொள்ளப்படுவன. இவற்றுட் சில ஒரெழுத்தால் ஆனவை. சில இரண்டு அல்லது மூன்றெழுத்துக்களால் ஆனவை. உலகியலில் வைத்துச் சாதாரணமாக நோக்கில், இவற்றிற்கு கருத்தெதையுங் காண்பதரிது. இவை குறிக்கும்கருத்தென்ன வென்பதை யறிவதற்கு இவற்றின் அமைப்பு முறை எவருக் கும் இடத்தராது. இவை மிகவும் கவர்ச்சிகரமான குரலில் மனதில் ஆழப்பதியக் கூடியவாறு யாகங்கள் நிகழும் பொழுது உரிய வேளைகளில் ஒலிக்கப்படுவன. இவை மிகவும் தூய்மையானவை மந்திரசக்தி வாய்ந்தவை. இவைகளில் *சுவாஹா" என்பது மிக முக்கியமானது. அவியாக ஒவ்வொரு பொருளையும் அக்கினியிற் சொரியும் பொழுது வேட்போர் இதை ஒலிப்பர். இதே போன்று பிதிரர்களுக்கு உணவு அளிக்கப்படும் பொழுது சீசுவதா? என்னும் ஒலி எழுப்பப் படும். இத்தன்மை வாய்ந்த வேறு பல ஒலிகளும் இங்கு இருக்கின்றன. இவை வவுட் வேட், வாத்” என்பன. யாகங்கள் நிகழும் பொழுது இவற்றை உரியவாறு பயன் படுத்துவர். இவற்றுட் தனிச் சிறப்பு வாய்ந்தது ஒம் என்பது. “ஓம்?? என்பது ஒருவர் மனத்தில் தோன்றிய சம் மதத்தைத் தெரிவிக்கவே முதலில் எடுத்தாளப்பட்டது. இது இன்றுவரை மிகவும் தெய்விகமானதாகவும், உட்கருத்துக்கள் பல பொதிந்து விளங்குவதாகவும் போற்றப்பட்டு வரு கின்றது. உபநிடதங்கள் இதைப் பிரமம்” எனச் சுட்டு கின்றன. இதற்கடுத்த நிலையில் பூ, புவ, சுவ: என்னும் மூன்று அட்சரங்கள் மிகவும் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளன. இவை விசேடமாகக் கூறப்பட்டவை என்னுங் கருத்தை உணர்த்துவதால் வியாகிருதி" எனப்பெயர் பெற்றவை. இம்மூன்றும் விண்ணையும், இடையையும், மண்ணையும் குறிக்க வரும் பெயர்கள் என்பர். வியாகிருதிதான் பிரமம். இதே உண்மை. இதே ஒழுங்கு. “பூ, புவ, சுவா என்னும் இம்மூன்றும் இன்றேல் வேள்வியும் இல்லை" என வேதங்கள் எடுத்தியம்புவன.
வ-9

Page 75
வடமொழி இலக்கிய வரலாறு / 130
பிற்காலத்தில் விரிந்தெழுந்து, பெரிதும் கடைப்பிடிக்கப் பட்டு வந்த தந்திர? சாஸ்திரங்களில் இதுபோன்ற மேந்திரங் கள்? பல கூறப்பட்டுள்ளன. இவை ஊம், ஆம் ஹ்ரீம் உம், ஏம், க்ரோம், பட்” முதலானவையாம். இருக்கு, யசுர் ஆகியவற்றின் மூலப்பகுதிகளான பாடல்களையும், உரைப் பகுதிகளையும் குறித்த மந்திரமென்னுஞ் சொல் நாளடைவில் அவை மந்திரசக்தி வாய்ந்த இவ்வொலிகளையே குறிப்பதா யிற்று. ஆனல் யசுர்வேதத்தில் காணப்படுவது பழைய நிலைக் கும், புதிய நிலைக்கும் நடுவிலுள்ள இடை நிலையே.
யசுர் வேதம், இலக்கியம் என்ற முறையில் கவர்ச்சி மிக்க சிறப்பெதுவுமில்லாததெனச் சிலர் கருதலாம். எவ்வாரு யினும் சமய நூல்களில் இதற்குத் தனித்தனி இடம் உண்டு. தத்துவ நூல்களை நன்கு விளங்கவும் இதனறிவு இன்றியமை பாது வேண்டப்படுவதொன்றே.இந்தியச் சமய வளர்ச்சியின் தொடக்க நிலையை மட்டுமல்லாமல் உலகத்துக்கே பொது வான சமய வரலாற்றை எடுத்துக் கூறுவதற்கும் இது பெருந் துணை புரியும். சமய வரலாற்றில் மந்திரங்களுக்குரிய நிலையை விளக்கிக் காட்டவும் இது பெரிதும் பயன்படும். பிற்காலச் சமய நூல்களையும் தத்துவ நூல்களையும் செவ் வனே விளங்க வேண்டின், இவ்வேதத்தை முதலில் படித் தறிதல் வேண்டும். யசுர் வேதத்தை முதலில் விளங்கிக் கொண்டால்தான் பிராமணங்கள் கூறுவதென்னவென்பது எமக்குத் தெளிவாகும். பிராமணங்களையறிந்தவர்களே உப நிடதங்களை அறிய வாய்ப்புடையவர்கள். உபநிடதங்களை அறியாதவர் இவை ஊடுருவி நிற்கும் தத்துவ நூல்களை எவ் வாறு விளங்கும் ஆற்றலைப் பெற வல்லவராவர்?


Page 76

சமசங்கிதையிலும் பல சாகைகள் இருந்ததாக நாம் அறியக் கூடியதாக இருக்கின்றது. புராணங்களில் ஆயிரம் வகையான சாம சங்கிதைகள் கூறப்பட்டுள்ளன. எனினும் மூன்று சாம சங்கிதைகளே எமக்குக் கிடைத்துள்ளன. இம் மூன்றலுள், கெளதும சாமசங்கிதை' பிரசித்தி பெற்றது. இதில் இருபிரிவுகள் இருக்கின்றன.இப்பிரிவுகள் ஆர்ச்சிகம்", *உத்தரார்ச்சிகம்" என்பன. ஆர்ச்சிகம் என்பது பாட்டுக் களின் முதல் தொகுதி எனப் பொருள்படும். உத்தரார்ச்சிகம் என்பதற்குப் பாட்டுக்களின் பின் தொகுதி என்பது கருத்து. ஆர்ச்சிகம் என்னும் பெயர் இங்கு குறிப்பிடப்படுவதிலிருந்து இத்தொகுதியில் பாட்டுக்கள் மட்டுமே காணப்படுவன என் பது தெரிகிறதல்லவா? இங்கு ஆயிரத்து எண்ணுாற்றுப்பத்துப் பாட்டுக்கள் இருக்கின்றன. இவை பெரும்பாலும் இருக்கு வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. சில பாட்டுக்கள் திரும்பத் திரும்ப வருகின்றன. இவ்விரு பகுதியில் இப்படித் திரும்ப வருவனவற்றை நீக்கிக் கணக்கிடுவோமேயானுல் ஆயிரத்து ஐநூற்று நாற்பத்தொன்பது பாட்டுக்கள் இருக் கின்றன என்பது தெளிவாகின்றது. இவற்றுள் எழுபத் தைந்து பாடல்களைத் தவிர ஏனைய எல்லாம் இருக்கு வேதத்தி லிருந்தே எடுக்கப்பட்டன. இப்பாடல்கள் தாமும் இருக்கு வேதத்தில் எட்டாம் ஒன்பதாம் மண்டலங்களிலே வருவன. இவை பெரும்பாலும் காயத்ரி யாப்பு முறைக்கு அமைய ஆக்கப் பெற்றுள்ளன.*காயத்ரியும்?,ஜகதியும்"ஒன்று கலந்து வரும் பிரகதா? என்னும் யாப்பு முறைக்கிணங்க அமைந்த பாட்டுக்களும் சில உள. இவ்வாறு காணப்படும் பாட்டுக்கள் நெடுங் காலமாக ஓசை நயத்துடன் பாடுவதற்காகவே ஆக்கப்பட்டன எனத் திடமாகக் கருத இடம் உண்டு. இருக்கு வேத சங்கிதையில் காணப்படாத எழுபத்தைந்து பாடல் களுட் சில வேள்வி முறை கூறும் ஏனைய நூல்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. சிலவற்றை எங்களுக்கு

Page 77
வடமொழி இலக்கிய வரலாறு / 134
இன்று அகப்படாததான ஏனைய சாகைகளிலிருந்து எடுத்து, இருக்கு வேதத்திலிருக்கும் பகுதிகளுடன் கலந்து இவ்வேதம் வகுத்தவர் அமைத்துள்ளனர். இருக்கு வேதத்தில் எடுக்கப் பட்டுச் சாம வேதத்தில் இடம் அளிக்கப்பட்ட பகுதிகளில் பாட்டுக்களைத் திரிபு படுத்தப்பட்ட வெவ்வேறு நிலைகளில் நாம் காண்கிருேம். இவை மிகவும் பழைய சாம சங்கிதையி லிருந்து எடுக்கப்பட்டனவா எனச் சந்தேகிக்கப்படுகின்றது. காரணம் எதுவுமின்றி, வேண்டுமென்ருே அன்றித் தானுக நிகழ்ந்த திரிபினலோ இவ்வகை வேறுபாடுகள் தோன்றி யிருக்கலாம். என ஒளப்ரெச்ட்" என்னும் அறிஞர் கருதுகின்ருர், இசை அமைக்கும் நோக்குடன் பாட்டுக்களைப் பிரித்து வகுக்கும் பொழுது இவ்விதம்திரிபுகள் நிகழ்வது இயற்கையே. சாமவேதம் முழுவதிலுமே பாட்டுக்கள் துணைக் கருவிகளாகக் கருதப்படுகின்றன. இங்கு இசையே முக்கியம். இவ்வேதத்தின் இரு பகுதிகளும் இசை யறிவைப் பெருக்குதலைத் தனி நோக்கமாக உடையன. இவ் வேதத்தை ஒதுவதற்கு உரிமை உள்ளவனுன உத்காதா வாகப் பயிற்சி பெறுபவன் முதன் முதலாக இராகங்களைப் பாடும் அறிவைப் பெறுதல் வேண்டும். இதைப் பெறு வதற்குத் துணைபுரிவது ஆர்ச்சிகம். இவ்வார்ச்சிகத்தை அறிந்த பின்னரே இதைப் போற்றிக் கூறும் பாட்டுக்கள் அனைத்தையும் மனனஞ் செய்தல் முறை. வேள்விகளில் பயன்படும் இப்பாடல்கள் உத்தரார்ச்சிகத்தில் அடங்கி யுள்ளன.
சாம வேதத்தின் முதற்பகுதியான ஆர்ச்சிகத்தில் ஐநூற்றெண்பத்தைந்து தனிப் பாட்டுக்கள் (இருக்குக்கள்) உண்டு. இவற்றிற்குப் பலவகையான சாமங்கள்" (இசைகள்) இருக்கின்றன. இவை வேள்விகளில் பயன்படுவன. சாமம் என்ற சொல் பாடுவதற்கென்றே தொகுக்கப்பட்ட இம்மூன் ரும் வேதத்தைக் குறிப்பினும், இராகம், இசை என்ற கருத் துக்களையே இயல்பாக உணர்த்தும். இன்ன இராகம் இப் பாட்டில் அமைத்துப் பாடப்படுகின்றது எனக் குறிப்படும் வழக்கம் நம்மிடை இன்றும் வழங்கிப்பாட்டுக்கும் இசைக்

135 கா. கைலாசநாதக் குருக்கள்
கும் இடையில் உள்ள தொடர்பை எடுத்துக் கூறுகி இசை தோன்றுவதற்கு நிலைக்களஞய் விளங்குவது பாட்டு என்ற இக்காரணத்தினலே பாட்டில் இருந்து இசைதோன்று வதாகக் கருதப்பட்டது. இருக்கு எனப்படும் பாட்டே யோநி எனப்படும். யோநி என்பதற்குக் கரு என்றும், தோற்றும் இடம் என்றும் பொருள் உண்டு. ஒரே பாட்டுப் பல இராகங் களில் பாடத்தக்கது. ஓர் இராகத்தைப் பல பாடல்களில் இசைக்க முடியும். இவ்வாருயினும் இங்கு காணப்படும் பாட்டுக்களிற் சில கருவாய் அமைந்த பாடல்களாய்க் கருதப் பட்டுக் குறிக்கப்பட்ட இராகங்களில் மட்டுந்தான் பாடப் படலாம் என விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்ச்சிகங்களை ஐநூற்று எண்பத்தைந்து யோநிகளின் தொகுதி எனவுங் கூறலாம். இவை ஏறக்குறைய இரு மடங்கான இராகங்களிற் Litll LuGau607.
உத்தராச்சிகத்தில் நானூறு பாடல்கள் உண்டு. ஒவ் வொரு பாடலிலும் மும்மூன்று பாட்டுக்கள் இருக்கின்றன. இதிலிருந்துதான யாகங்களிற் பாடப்படவேண்டிய பாட்டுக் கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.ஆர்ச்சிகத்தில் சில பாட்டுக் கள் காப்பு முறைபற்றி அமைக்கப்பட்டுள்ளன. சில தெய் வங்களை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தப்பட் டுள்ளன. அக்கினி, இந்திரன், சோமன் முதலிய தெய்வங்கள் மீது உள்ள பாடல்கள் ஒன்றன் பின் ஒன்ருக வருவதைக் காணலாம். உத்திரார்ச்சிகத்தில் பலவகை வேள்விகளை அடிப் படையாகக் கொண்டுதான் பாட்டுக்கள் சேர்த்து வைக்கப் பட்டுள்ளன. முழுப்பாடல்களும் உத்தரார்ச்சிகத்தில் காணப் படுகின்றன. இப்பாடல்களில் அமைத்துப் பாடவேண்டிய இராகங்கள் பாடுபவருக்கு ஏற்கனவே தெரிந்திருத்தல் அவசியம். இதிலிருந்து உத்தரார்ச்சிகம், ஆர்ச்சிகத்தைக் காட்டிலும் காலத்தால் பிந்தியது என்பதை ஆராய்ச்சியா ளர் எடுத்துக் காட்டுவர். ஆர்ச்சிகத்தில் உத்தரார்ச்சிகத்தில் வரும் பாட்டுக்களிற் காணப்படாத பல யோநிகள் உண்டு. எனவே பல இராகங்களும் உண்டு எனக் கூறலாம். உத்த ராச்சிகத்தில் வரும் சில பாட்டுக்களின் இராகங்கள் ஆர்ச்

Page 78
வடமொழி இலக்கிய வரலாறு / 136
சிகத்தில் கூறப்படவில்லை. இதெல்லாம் உத்தராச்சிகம் ஆர்ச்சிகத்திலும் காலத்தாற் பிந்தியது என்னும் உண்மை யையே வலியுறுத்தும். எனினும் உத்தரார்ச்சிகம் இன்றியே ஆர்ச்சிகம் மட்டும் கூறவேண்டியதெல்லாவற்றையும் நிறைவு படுத்தவல்லதன்று. சாமம் கற்போர் முதலில் ஆர்ச்சிகம் கற்றுப் பாடப் பயிலுதல் வேண்டும். பின் உத்தரார்ச்சிகம் பயின்று சிறந்த உத்காதாவாக விளங்கலாம்.
சாம சங்கிதையின் இவ்விரு பகுதிகளும் சிதைவின்றி-- வேறுபாடுகள் எதுவும் தோன்ருது பேணப்பட்டுப்-பழைய நிலையிலேயே இன்றுங் காணப்படுவன. அவற்றின் இராகம் முதலியவற்றைப் பயிற்றுவிப்பவரிடம் இருந்து அவர் வாயால் பாடக்கேட்டுப் பயில்வதே, இச் சங்கிதையைப் பயில்பவர்கள் கையாள வேண்டும் முறை. இவ் வேதத்தை ஒதும்வேளை ஒதுபவர்கள் துணைக்காக ஏதாவது இசைக் கருவி யையும் பயன்படுத்தி இருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது. சாம வேதத்தில் வரும் கானங்கள் என்னும் பகுதி இரா கங்களை இன்னவை எனக் குறிப்பிடுகின்றது; இது இசையை யும் விளக்கிக் கூறுகின்றது. இது பிற்காலத்தில் இயற்றப் பட்டது. அக்ஷரங்களை" நீட்டியும் சிலவற்றைத் திருப்பித் திருப்பிக் கூறியும் சில சொற்களை மேலதிகமாக உள்ளே நுழைத்தும் சாமகானம் நிகழ்த்தப்படும். இவ்வாறு உள்ளே நுழைக்கப்படுவனவற்றிற்கு ஸ்தோபங்கள்? எனப் பெயர் உண்டு. சாமம் பாடும் பொழுது பாடுபவர்கள் தம் வலக்கை விரல்களை ஒன்ருக நெருக்கி நீட்டிப் பிடித்து, அதன்பின், கையை மேலே உயர்த்தியும் கீழே தாழ்த்தியும் இசை பெருக் கிப் பாடுவர். ஆர்ச்சிகத்துடன் இரு பகுதிகள் இணைக்கப் பட்டுள்ளன. ஒன்று கிராமகேய கானம்.? மற்றது அரண்ய கானம்.? அரண்ய கானப் பகுதியுள் உள்ளவை பயங்கரமான வையும், தீமை விளைவிக்கக் கூடியவையுமாம். இவை கிரா மங்களிற் படிக்கத் தகாதவை. இதைப் படிப்பவர்கள் காடு களில் ஒதுக்குப் புறங்களில் வைத்தே இவற்றைப் படிப்பர். இதை விட இன்னும் இரு பிரிவுகள் உண்டு. இவை உஹ கானம் உஹ்யகாணம் என்பன. இவை யாகங்களிற் பயன்

137| கா. கைலாசநாதக் குருக்கள்
படும் வண்ணம் பாட்டுக்களைக் கொண்டு அமைந்து விளங்கு வன. இவை இரண்டும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள கிராமகேய கானத்துக்கும், அரண்ய கானத்துக்கும் தொடர்பு கொண்டு விளங்குவன.
ஒருகாலத்தில் இராகங்கள் பலவாக இருந்திருக்கலாம். அவ்வாருயின் இவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் இருந்தென என்று ஊகிக்க இடம் உண்டு. இப்பெயர்கள் எல்லாம் கல்ப சூத்திரங்களில்? குறிப்பிடப்பட்டுள்ளன. இப் பெயர்களனைத்திற்கும் தனித்தனி சிறப்பான கருத்துக்கள் உண்டு. பிராமணங்களிலும், ஆரணியகங்களிலும், உபநிட தங்களிலும் கூட இவை உள்ளுறையான கருத்துக்களைக் கூறி நிற்பன. இவற்றுள் *பிருஹத் *இரந்தரம்” என்னும் இரண்டும் இருக்கு வேதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்திய வேள்வி முறையின் வரலாற்றை எழுதுபவர்க ளுக்குச் சாம சங்கிதை பல விஷயங்களை எடுத்துக்கூறும். இவ் வேதத்துடன் இணைத்துக் கூறப்படும் கானங்கள் இந்திய சங்கீதத்தின் வரலாற்றை உருவாக்கப் பெரிதும் பயன்படும். எனினும், இதுவரை இவ்வாறு பயன்படுத்தி இத்துறையில் முன்னேறக்கூடிய வகையில் ஒருவரும் முழுமனதுடன் ஈடுபட வில்லை. எவ்வாரு பினும், ஏனைய வேதங்களிற் காணப் படாது, இவ்வேதத்தில் மட்டும் சிறப்பாய் அமைந்து இலக் கியச் சுவை பயக்கும் பகுதி இது எனச் சுட்டிக் கூறுவதற்கு எதுவும் இல்லை.

Page 79

YVA ( பிராமணங்கள்

Page 80
R0 → v vo vso wƆ ro wƆƆ wo ouŋ wɔ wɔ wɔ wɔ王冕 – -v) 看 —x ~~~、本、= * = 才

ஒவ்வொரு வேதத்திலும் சங்கிதையை அடுத்துக் காணப்படும் பகுதிகள் பிராமணங்கள்? எனப்படுவன.இவை மிகவும் விரிந்த நூல்கள். இந்நூல்களுக்கு இந்திய இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. சாதாரணமாக இதை வாசிப்பவர்களின் மனதைக் கவரவல்ல சிறப்புக்கள் இங்கு கிடையா. பிராமணங்கள் வேள்வி பற்றிய விளக்கங்களை மட் டுமே கூறுவதனுலும், அவ்விளக்கங்களை மிகவும் விரித்துக் கூறுவதனலும் சமய அறிவை நாடி நிற்பவர்கள் மட்டுமே இதைப் பொறுமையுடன் ஆறி அமர்ந்து முழுதாக வாசிக்க லாம். இவை யசுர் வேதத்தைக் காட்டிலும் விரிவாக அமைந். துள்ளன. சமய நூல்களையும், தத்துவ நூல்களையும் விளக்கு வதற்கு இவற்றின் அறிவு இன்றியமையாதது. இந்திய Fமயங்களின் உண்மை நிலையினை நன்கு விளக்குவதற்கும் இவை வேண்டப்படுபவை. வேள்வி முறை தோன்றி வளர்ந்த, வரலாற்றையும், விளக்கிக்கூற இவை பெரிதும் உதவுவன.
பிராமணம் என்ருல், வேள்வித் துறையில் வல்லவர்கள் கிரியைகளைப் பற்றி விரித்துக் கூறும் விளக்கம் எனப் பொருள் படும். இது தொகுத்துச் சுட்டும் பொதுப் பெயராக அமை வதுடன், பலர் கூறிய விளக்கங்களால் உருவான நூல் என்பதையும் உணர்த்தும். எனவே, இவ்விலக்கியம் பலர் கூறிய விளக்கங்களின் தொகுதி என்பது தெளிவாகின்றது. இந்நூலில் வேள்விகளுடன் தொடர்பு பெருத பகுதிகளே கிடையா. உலக அமைப்பைப் பற்றிய குறிபபுக்கள், பழைய வரலாறுகள் முதலியன இங்கு காணப்படுவது உண்மையே, எனினும், இவை வேள்விகளுடன் ஏதாவது தொடர்பு கொண்டு காணப்படுவன. வேள்விகளின் இயல்புகளுள் எதை பாவது விளக்கிக் காட்டவே இவை இங்கு எடுத்துக் கூறப் பட்டுள்ளன. பிராமணங்கள் கூறும் வேள்விகளின் விளக்கங்

Page 81
வடமொழி இலக்கிய வரலாறு I 142
களையே யசுர் வேதத்தைச் சார்ந்த வாஜசரேயி சங்கிதையும் கூறுகின்றது. ஆஞல், யசுர் வேதம் இவ்விஷயத்தைச் சுருக்க மாகக் கூறும். பிராமணங்களோவெனின் வேள்விக் கிரியை களைப் பற்றித் தனித்தனி விவரங்களை விரிவாகத் தருவன. கிரியைகளுக்குள் ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பும், மந் திரங்களுக்கும் கிரியைகளுக்கும் இடையில் உள்ள தொடர் பும் இங்கு கூறப்பட்டுள்ளன. இவ்வாறு கூறுமிடங்களில் எல் லாம் மந்திரங்கள் முழுவதும் கூறப்படுவதில்லை. அவற்றின் தொடக்கமாக வரும் தலைப்பு மட்டுமே சுருக்கமாகக் குறிப் பிடப்படும். மந்திரங்கள் முழுவதுமே கூறப்படும் இடங்களும் சில உள. பிராமணங்கள், மந்திரங்களுடன் கிரியைகள் கொண்டுள்ள தொடர்பை மட்டுமின்றி இவை உணர்த்தும் மேறை பொருட் கருத்துக்களை'யும் கூறுகின்றன.கிரியைகளைப் பற்றிய கருத்துக்கள் வேறுபடுத்திக் கூறப்படும் இடங்களில் எல்லாம் இத்துறையில் வல்லவர்கள் கொண்டுள்ள அபிப் பிராயங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கூறி ஆராய்ந்து முடிவு கொள்ளப்படுகின்றது. கிரியை முறைகள் பரந்த தேசத்தின் பல பாகங்களில் வழக்கிலிருப்பது அனைவருமறிந் ததே. இதனுல் கிரியை முறைகள் இடத்திற்கிடம் வேறுபட் டுக் காணப்படும். இவற்றின் விவரங்களும் அவை வேறுபடும் முறையும் இங்கு கூறப்பட்டுள்ளன. கிரியைகள் எவ்வாறு சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு திருத்தி அமைக்கப்படுவன என்
பதைச் சில பகுதிகள் விளக்கிக் கூறும். யாகத்தில் நிகழும் ஒவ்வொரு கிரியையும் எடுத்துக் கூறும் பொழுதெல்லாம்
அததற்கு உரிய தட்சணையையும் இந்நூல்கள் வரையிட்டுக்
கூறக் காண்கின்ருேம். மேலும், வேட்பிப்பவர்கள் வேள்வி களின் மூலம் இம்மையிலோ மறுமையிலோ அடையக்கூடும் பெறுபேறுகளும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. சுருங் கக் கூறின், பிராமணங்கள் யாகங்களைப் பற்றிய பல்வகை
அறிவை விளக்கவல்ல பெரும் நூல்கள் எனலாம்.
பிராமணங்கள் எண்ணிறந்தவைகளாக அக்காலத்தில் இருந்தன எனக் கருத இடம் உண்டு. பரம்பரையாக வழக் கில் இருந்துவரும் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு

143 / கா. கைலாசநாதக் குருக்கள்
இதை நாம் ஊகிக்க முடிகின்றது. இதைவிட எமக்குக் கிடைக்கக்கூடிய பிராமணங்களிலேயே வழக்கொழிந்த இவ் வகை நூல்கள் பலவற்றில் இருந்து எடுத்துத் தரப்பெறும் மெற்கோள்கள் பல காணப்படுகின்றன. இப்பொழுது எமக் குக் கிடைக்கக்கூடிய பிராமணங்களும் பெருந்தொகையி னவே. இந்தியாவில் எழுந்த நூல்களுள் விரிவாக அமைந்து காணப்படும் நூல்களை எடுத்து நோக்குவோமேயானுல் இவ் விரிந்த நூல்களுள் பிராமணங்களும் முக்கியமான இடம் வகித்து நிற்பதைக் காண்போம். நான்கு சங்கிதைகளை யும் தனித்தனி சார்ந்து பிராமணங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு சங்கிதைக்கும் அததற்குரிய சாகைகளை அனு சரித்தே பிராமணங்கள் பலவாகப் பெருகிக் காணப்படுவன. கிருஷ்ண யசுர் வேதத்தில் ஏனைய சங்கிதைகளிற் போன்று, மந்திரங்கள் மட்டுமின்றி யாகங்களின் பொருளும், அவற் றின் நோக்கமும், அவை பற்றிய பலரின் அபிப்பிராயங்க ளும் இடம்பெற்றுள்ளன என்பது ஏற்கனவே எடுத்துக் கூறப் பட்டது. யசுர் வேதத்தில் பிராமணங்களை நிகர்த்து விளங் கும் இப்பகுதிகளையே பிராமணங்களின் முதற்ருெடக்கமாகக் கூறலாம். கிருஷ்ண யசுர் வேதத்தில் காணப்படும் விளக்கங் கள் மந்திரங்களுடன் தொடர்பு பூண்டவையாய் அவற்றை யும் அவற்றின் பிரயோகங்களையும் விளக்கிக் கூறுகின்றன. இதை அடுத்து, ஒவ்வொரு சங்கிதையில் உள்ள மந்திரங்களை விளக்கிக் கூறும் முறையும் இதே வகையில் Ф-Ор வெடுத்தது. நாளடைவில், சங்கிதைகள் எல்லாமே தனித் தனி பிராமணங்களைக் கொண்டு அமைதல் வேண்டும் என் னும் நியதி ஏற்பட்டது. இது பிராமணங்கள் எண்ணிறந்து பெருகிக் காணப்படுவதன் காரணத்தை மட்டுமின்றி. சில காலத்தால் மிகவும் பிந்தியவை என்பதையுங் குறிப்பிடுகின் றது. சாம வேதத்தின் பிராமணங்களை நோக்கினல் அவை பழைய பிராமணங்களைப் போலல்லாமல் வேதாங்கங்களா கவே அமைந்து காணப்படுவது தெளிவாகும். இது இப்பிராம ணங்கள் பிந்திய காலத்தவை என்பதை வற்புறுத்தும். அதர்வ வேதப் பிராமணமாகிய கோபத பிராமணமும் இத் தகையதே. அதர்வ வேதம் வேதமாகக் கொள்ளப்பட்டு

Page 82
வடமொழி இலக்கிய வரலாறு / 144
வேத இலக்கியத்தில் இடம்பெற்ற பொழுது ‘பிராமணங்கள் வேதங்களின் இன்றியமையா உறுப்புக்கள்; இவை இல்லாத வேதங்கள் வேதமாகா? என்னுங் கொள்கை நிலவியமையி னற் போலும், அதர்வ வேதத்தை வேதம் என நிலை நிறுத் தும் நோக்குடன் இப்பிராமணம் தோன்றி அதர்வ வேதத் துடன் இணையும் வாய்ப்பு ஏற்பட்டது. பிராமணங்களுள் முக்கியமானவை பின்வருமாறு: இருக்கு வேதத்தைச் சார்ந் தவை ஐதரேய பிராமணம்”, “கெளவீதகி பிராமணம் என் பன.? தாண்டிய மகா பிராமணமும்” பீஷட்விம்ச பிராமண மும்? ஜைமி நீய பிராமணமும் சாம வேதப் பிராமணங்கள். யசுர் வேதப் பிராமணங்கள் இரண்டனுள் ஒன்ருன ைேநத் திரீய பிராமணம்” கிருஷ்ண யசுர் வேதத்தைச் சார்ந்தது. மற்றதான சதபத பிராமணம் சுக்கில யசுர் வேதத்தின் பாற்படுவது
ஐதரேய பிராமணத்தில் நாற்பது அத்தியாயங்கள் உண்டு. ஒவ்வொரு தொகுதியும் ஐவைந்து அத்தியாயங்க ளைக் கொண்டு வரும் வண்ணம் இப்பிராமணம் எட்டுப் பகு திகளாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் பஞ்சி கை? எனப்படும். மஹிதாச ஐதரேயர்? இதை இயற்றியவர் எனக் கர்ண பரம்பரையான வரலாறு கூறும். இப்பிராமணங் களில் காணப்படும் விஷயங்கள் சோமயாகம் அக்கினி ஹோத்திரம்? ராஜசூயம்? முதலியனவாம்.
கெளவீதகி பிராமணம், சாங்காயன பிராமணம் எனவும் பெயர் பெறும். இதுவும் இருக்கு வேதத்தைச் சார்ந்தது இங்கு காணப்படும் முப்பது அத்தியாயங்களில் முதல் ஆறு அத்தியாயங்கள் அக்கினி சயனம், அக்னிஷ்டோமம், தர்ச பூர்ணமாசம், சாதுர்மாஸ்யம் முதலியவற்றைப் பற்றிக்கூறும் எஞ்சிய இருப்த்தினன்கு அத்தியாயங்களில்°சோமயாகம்?பற். றிக் கூறப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் ஐதரேயப் பிரா மணங் கூறுவதை நிகர்த்து நிற்கின்றது. ஐதரேயத்தின் நின் றும், கெளவீதகி காலத்தாற் பிந்தியது. ஐதரேயம் ஒருவரின் தனி ஆக்கமன்று; இது தொகுப்பு நூலே, கெளவீதகி அங் ங்னமன்று. இது ஒழுங்கு பற்றி அமைந்த தனி நூலாக விளங்குவது.

145 / கா. கைலாசநாதக் குருக்கள்
தாண்டிய மகாபிராமணம் பஞ்ச விம்ச பிராமணம் என வும் பெயர் பெறும். இருபத்தைந்து பிரிவுகளைக் கொண்டு அமைந்திருப்பதனுல் இது பஞ்ச விம்ச பிராமணம் எனப் பெயர் பெற்றது. இது பிராமணங்களுள் மிகப் பழையது என்பர். பழைய வரலாறு ஒன்று இங்கு உண்டு. விராத்தியர் எனப்படுவோரைப் பிராமணருடன் இணைக்கும் விராத்தியஸ் தோமம் இங்கு கூறப்பட்டுள்ளது. ஷட்விம்ச பிராமணம் இதன் தொடர்ச்சியாக-அதாவது இருபத்தாருவது பிரிவாக அமைந்துள்ளது. இதன் இறுதியிற் காணப்படும் பகுதியை அற்புதப் பிராமணம் என்பர். இது வேதாங்கம் போன்று அமைந்து அற்புதநிகழ்ச்சிகளையும் சில சூசகங்களையும் பற்றிக் d#ñ-JOY Lf)•
ஜைமிநீய பிராமணம் தாண்டிய மகாபிராமணத்திலும் பழைய நூல். வரலாறுகள் பல இங்கு கூறப்பட்டிருப்பத ஞல், சமய வரலாற்று நூல் எழுதும் பொழுது இது பயன் படும். ஆயினும் இப்பிராமணம் முழுவதும் கைக்கெட்டாது மறைந்து விட்டது. இதன்பகுதிகள் மட்டுமே கிடைத்திருக் கின்றன.
தைத்திரீய பிராமணம் கிருஷ்ண யசுர் வேதத்தைச் சார்ந்த தைத்திரீய சங்கிதையின் தொடர்ச்சியே. இப்பிரா மணம் கிருஷ்ண யசுர் வேத சங்கிதையிலேயே இடம் பெற் றுள்ளது; இச் சங்கிதையின் இறுதியிற் சேர்க்கப்பட்டதே தைத்திரீய பிராமணம், இங்கு புருஷ மேதம் கூறப்பட்டுள் ளது. இப் புருஷ மேதம் சங்கிதையில் காணப்படாதது குறிப்பிடத்தக்கது.
சுக்கில யசுர் வேதப் பிராமணமாகிய சதபதப்பிராமண தில் நூறு அத்தியாயங்கள் உண்டு. நூறு வழிகளையுடைய பிராமணம் என்பது இதன் பெயர் உணர்த்தும் கருத்து. பிராமணங்கள் எல்லாவற்றுள்ளும் விரிந்தது மட்டுமல்லா மல் முக்கியமானதாகவும் இதுஅமைந்துள்ளது. கண்வசாகை மாத்யந்தின சாகை என இரு சாகைகளையுடையது இப்பிரா மணம், மாத்யந்தின சாகை பதினன்கு காண்டங்களையுடை
al。ーl 0

Page 83
வடமொழி இலக்கிய வரலாறு / 146
யது. வாஜசநேயி சங்கிதையின் முதல் பதினெட்டுப் பிரிவு களின் விளக்கமாக இப் பிராமணத்தின் முதல் ஒன்பது கான் டங்களும் விளங்குகின்றன. பதினன்காவது காண்டத்தின் இறுதியில் யாஞ்ஞ வல்கியர் சதபதப்பிராமணத்தை இயற்றி யவர் எனப்படுகிருர். இவர் கொள்ளுங் கருத்துக்களே பிரா மணங்களில் இறுதியாகக் கூறப்படும் துணியாகக் கொள்ள படுகின்றது. ஆருங் காண்டத்திலிருந்து ஒன்பதாங் காண் டம் வரை உள்ள நான்கு காண்டங்களிலும் அக்கினி சயனம் கூறப்படுகின்றது. இங்கு கொள்ளப்படும் முடிவுகள் எல்லாம் சாண்டில்யர் வாயிலாகக் கூறப்படுகின்றன. பத்தாம் காண் டம் அக்கினி ரஹஸ்யத்தை விளக்கிக் கூறும். பதினுெராவது காண்டம் முதல் பதினன்காம் காண்டம் வரை உள்ள பகுதி களில் ஏற்கனவே கூறப்பட்ட பகுதிகளுக்கு அநுபந்தங்களா கக் கூறப்படும் விஷயங்களுடன் உபநயனம், ஸ்வாத்யாயம் ஈமக்கிரியைகள், அசுவமேதம், புருஷமேதம், சர்வமேதம் முதலியன பற்றிப் பல விளக்கங்களும் காணப்படுகின்றன. இதன் ஈற்றில் பிருகதாரணியக உபநிடதம் இடம் பெற் றுள்ளது.
பிராமணங்கள் வெவ்வேறு வேதங்களைச் சார்ந்து பல உருவங்களில் காணப்படினும் இவற்றுள் காணப்படும் வேற் றுமைகள் மிகச் சிலவே. தாம் சாரும் வேதத்திற்கு ஏற்பத் தனி இயல்பு தாங்கி அமைதலே இவற்றின் சிறப்பு. இது எவ்வாறு உள்ளது என்பதை நோக்குவோம். இருக்கு வேதத் தைச் சார்ந்த பிராமணங்கள் இருக்கு வேத மந்திரங்களை யாகங்களில் ஒதும் கடப்பாடுடைய ஹோதாவுக்கு வேண்டிய கிரியைகளைக் கூறுதலைக் குறிக்கோளாக உடையன. அங்ங் னமே சாமவேதப் பிராமணங்கள் சாமம்பாடுஉத்காதாக்கள் செய்யும் கிரியைகளைக் கூறுவன. அத்வர்யுக்கள் ஆற்றுங் கிரியைகளை கூறுவன யசுர் வேதப் பிரமணங்கள். இவ்வேறு பாடுகள் மட்டுமே உடைய பிராமணங்களில் பொதுவாகக் காணப்படும் பண்புகள் பல உள. இவை எல்லாம் ஒரே இயல் பினவாய் யாகங்களையும், அவற்றுடன் தொடர்புள்ள விஷ யங்களையும் மட்டுமே கூறுவனவாய் தாம் கூறும் விஷயங்க

147 / கா. கைலாசநாதக் குருக்கள்
களைத் தமக்குரிய முறையிலேயே விளக்கும் மரபினவாய் சங் கிதைகளுக்கு விரிவுரைகளாய்த் தமக்கென உரிய பொது வான சாயல் பதிந்து விளங்குகின்றன. பிராமணங்களில் ஐம் பதுக்கு அதிகமான ஆசிரிய பரம்பரைகள் கூறப்பட்டுள்ளன. இப்பரம்பரையினரது பெயர்களை விட வேறு பலரது பெயர் களும் பல பிராமணமாக எடுத்துக் கூறப்படும் பொழுதெல் லாம் குறிப்பிடப்பட்டுள்ளன. பிராமணங்களைத் தொகுத்து அமைத்தவரும் “வேள்வி முறை தோன்றியது பன்னெடுங் காலத்துக்கு முன்னரே?? என்பர். வேள்வி முறை தோற்றம் பெற்று வளர்ந்து பிராமணங்களிற் சுட்டப்படும் நிலையை எய்தப் பல நூற்ருண்டுகள் ஆகியிருக்கும் என்பது தெளி வாகத் தெரிகின்றது.
பிராமணங்கள் இவ்வாறு தோன்றி வளர்ந்த நூற்ருண் டுகள் எவை என வரையிட்டுக்கூறுதல் முடியாது. சங்கிதை களின் காலம் எங்ங்ணம் முடிவாகக் கூறப்படவில்லையோ அங் நுணமே பிராமணங்களின் காலத்தையும் உரியவாறு மட்டிட் டுக் கூற முடியாது. எனினும் இதிலிருந்து ஒருண்மை மட்டும் தெளிவாகின்றது. பிராமணங்கள் வேள்வி ஆற்றும் முறையை விளக்கிக் கூறத் தொடங்கிய காலத்துக்கு மிகவும் முன்பே இருக்கு வேத சங்கிதையிற் காணப்படும் பாட்டுக் கள் உருவம் பெற்று விளங்கின. இவ்வாறு நிலை பெற்றுப் பிரசித்தி பெற்ற பாடல்கள் தாம்நாளடைவில் வேள்விமுறை தோற்றுவதற்குக் காரணமாய் அமைந்தன. மேலும், பிரா மணங்களில் யாகங்களைப் பற்றி எழுந்துள்ள ஊகங்களும் விளக்கங்களும், மந்திரங்கள் நிறைந்த அதர்வ வேதத்தின் பெரும்பாலான பாடல்களையும், யசுர்வேதத்தின் பெரும் பகு தியையும், இசையின் தோற்றுவாயான சாம வேதத் ைத்யும் விடப்பிற்காலத்தன என்பதை எல்லோரும் ஒருமுகமாக ஏற் றுக்கொள்ளுவர். யசுர் வேத சங்கிதையும் அதர்வ சங்கிதை யும் பெரும்பாலும் பிராமணங்கள் உருவேற்ற காலத்திலே தொகுக்கப்பட்டிருக்கலாம். எனவே, பிற்காலத்தைய எனக் கருதப்படுவனவும் சங்கிதையிற் காணப்படுவனவுமான சில

Page 84
வடமொழி இலக்கிய வரலாறு / 148
பகுதிகளும் பிராமணங்களின் தொடக்க காலத்தனவான பழைய பகுதிகளும் ஏறக்குறைய ஒரே காலத்தன எனக் கற லாம். மேலும், அதர்வ சங்கிதையும், யசுர் வேத சங்கிதை பும் பிரதிபிம்பிக்கும் பண்பாடு, வாழ்க்கை நிலை இவை சுட் டும் நிலப் பரப்பு முதலியன பிராமணங்களில் கூறப்பட் டுள்ள பண்பாடு வாழ்க்கை நிலை முதலியவற்றை நிகர்த்து நிற்பன. இருக்கு வேதம் காட்டும் பண்பாடு முதலியனவோ வெனின் அப்படியல்ல. இவை பிராமணங்கள் கூறுவதின் நின்றும் மிகவும் பழையவை எனக் கூறுமளவிற்கு வேறுபட் டுள்ளன. இருக்கு வேதங் கூறும் நிலப்பரப்பு இந்து நதிப் பிரதேசத்தைச் சார்ந்தது. அதர்வ வேதம் முதலியன குறிப் பிடுவது இதனின்றும் அகன்று பரவிய கங்கை, யமுனை முத லிய ஆறுகள் பாயும் இடம் வரை உள்ள நிலப்பரப்பினையே யாம். இவை குரு பாஞ்சாலப் பிரதேசங்களையே குறிக்கின் றன. குருக்ஷேத்திரம் யாகம் வேட்பதற்கு உகந்த சிறப்பு மிக்க பூமியாகக் கூறப்பட்டுள்ளது. கங்கை யமுனை என்னும் இரு நதிகளையும் அடுத்த வெளிக்கு மேற்கே சரஸ்வதி, திரு. ஷத்வதி என்னும் ஆறுகளுக்கு நடுவே, அமைந்துள்ளது குரு க்ஷேத்திரம். இன்றும் இது பிரமாவர்த்தம் எனப் பெயர் பெற்று விளங்குகின்றது. இது யசுர் வேதத்தினதும், பிராம ணங்களினதும் பிறப்பிடமாக அமைவதுடன் மட்டும் நின்று விடவில்லை. இதை அடுத்து வளர்ந்த வைதிகப் பண்பாடு விரிந்து எல்லாத் திசைகளிலும், நாட்டின் ஏனைய பகுதி களுக்கும் பரவுவதற்கு ஏற்ற நடு இடமாக விளங்கிற்று.
இருக்கு வேதம் சுட்டும் சூழலையும் சமய நிலையையும்விட மிகவும் வேறுபட்ட நிலையையே பிராமணங்கள் காட்டுகின் றன. அதர்வ வேதத்திற் போலவே யசுர் வேதத்திலும் பிரா மணங்களிலும் தெய்வங்களைப் பற்றிய குறிப்புக்கள் இருக் கின்றன. இத்தெய்வங்களின் நிலைப் பெருமை மிகக்குன்றிய தொரு நிலையாகவே தெரிகின்றது. இந்திரன் அக்கினி முத லிய தேவர்கள் வேள்வியிலேயே முழுவதும் தங்கி இருக்கின் முர்கள். இவர்களின் பெருமையை விளக்குவதும் உயர்த்திக் காட்டுவதும் பிராமணங்கள் கூறும் வேள்வியே. எனவே

149 / கா. கைலாசநாதக் குருக்கள்
தேவர்களைவிட வேள்விக்கு முக்கியத்துவம் ஏற்படுகின்றது. இது மட்டும் அன்று இருக்கு வேதத்தில் மிகவும் அருகிக் குறிப்பிடப்பட்டுள்ள விஷ்ணுவும் உருத்திரனும் பிராமணங் களில் பெருந்தெய்வங்களாக உயர்த்திக் கூறப்படுகின்றனர். இங்கு பிரஜாபதியும் முக்கிய தெய்வங்களுள்ஒருவன். இவன் சுரர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒப்பற்ற தலைவன் எனப்படு கின்ருன் ஒப்பற்ற வருணனுக்குத் தனி அடைமொழியாக வழங்கிய அசுர? என்னுஞ் சொல், 'தெய்விகம் வாய்ந்த வன்; உயிர்ப்பை அளிக்கும் தெய்விக சக்தி வாய்ந்தவன்" என்னுங் கருத்தை உணர்த்தியே இருக்கு வேதத்தில் வருவ தாக ஏற்கனவே எடுத்துக் காட்டப்பட்டதல்லவா? அச் சொல், பிராமணங்களில் தேவர்களின் பகைவரைக் குறிக் கின்றது. சுரர்கள் என்பார் தேவர்கள். இவரொழிந்த ஏனை யோர் அசுரர்கள் எனப்படுதல் முறையே. அசுரருக்கும் சுர ருக்கும் இடையில் நிகழ்ந்த போர்களைப் பிராமணங்கள் அடிக்கடி கூறுகின்றன. அசுரர், சுரர் என்னும் இருவர்க்கிடை நிலவிய பகை இந்திரனுக்கும் விருத்திரனுக்கும் இடையில் உள்ள நிரந்தரமான பகைமையைப் நிகர்ப்பதன்று.சுரர், அசுர ரென்னும் இரு பிரிவினர்களுக்குள் யார் வலிமை மிகுந்தவர் என நிச்சயிக்க அவாக் கொண்டனர். யாகத்தைத் துனைக் கொண்டே இப்போட்டி நிகழ்ந்தது. இதை எடுத்துக் கூறும் சந்தர்ப்பத்தில் நிகழ்ந்ததே அசுரர்,சுரர் என்னும் பாகுபாடு தேவர்களும் தாம் விரும்பியதைப் பெறுவதற்காக யாகஞ் செய்ய நேர்ந்தது. பிராமணங்களில் எல்லாம் முக்கியமாகக் கூறப்படுவது யாகங்களே. இவை ஒரு குறிக்கோளை நோக்கி வேட்கப்படவில்லை. வேள்வி வேட்டலே வாழ்க்கையின் குறிக் கோளாக அமைந்துவிட்டது?? என்று கூறினும் பொருந்தும். யாகம், வேட்பவனுக்குப் பெரும் வலிமையைப் பயப்பது. இதனுல் இதற்குக் “கிரது" எனப் பெயர் ஏற்படலாயிற்று. *யாகம்தான் பிரஜாபதி?? என்னும் வாக்கியம் அடிக்கடி காணப்படுகின்றது. இது மட்டும் அன்று யாகத்துடன் தொடர்பு கொண்டவை எல்லாம் மந்திர சக்தி வாய்ந்தவை. யாகத்தில் பயன்படும் உபகரணங்கள், பிரயோகிக்கப்படும் மந்திரங்கள், கடைப்பிடிக்க வேண்டிய விதிகள், பாட்டுக்/

Page 85
வடமொழி இலக்கிய வரலாறு 150
சளாயுள்ள மந்திரங்களில் அமைந்துள்ள யாப்புக்கள், சாம கானம் நிகழ்த்தப்படும் பொழுது இசைக்கப்படும் இராகங் கள் முதலியன எல்லாமே மந்திர சக்தி வாய்ந்தவை; இவை எல்லாம் தெய்விகமானவை. இம்மந்திர சக்தியினல் சந்தர்ப் பத்துக்குத் தக்கவாறு நன்மை தீமை இரண்டும் பெறுபேருக விளையும். வேள்வி நிகழும் வேளை, சிறு பிழை நேரிடினும் விளையுந் தீமை சொல்லுந் தரமன்று. யாகக் கிரியைகள் உரிய வேளைகளில் முறை தவருது செய்யப்படுவன. மிகமிகச் சிறு தவறேனும் நிகழ்தல் கூடாது. கிரியைகளைத் தவறெதுவும் நேரிடாது நிகழ்த்தும்ஆற்றல் வாய்ந்தவர் பிராமணர்?எனப் படுவர். பிராமணங்கள் இவர்களை மிகுந்த உயர் நிலையில் வைத்துக் கூறுகின்றன. . இவர்கள் தெய்வங்கள் எனவும் கூறப்படுவர். "பிராமணர்கள் அவனியில் நடமாடும்தெய்வங் கள்?? என்பன பிராமணங்கள். நல்லொழுக்கம்,அறிவுமுதிர்ச் சியினுல் வரும் புகழ், மக்களை உயர்நிலை எய்துவிக்க வேள்வி முதலியவற்றை நிகழ்த்துதல் முதலியனவே இவர்களிடம் அமைய வேண்டும் பண்புகள். இவர்களைச் சார்ந்த மக்களும் இவர்களுக்கு மரியாதை செலுத்துதல் பொருளளித்தல், இவர்க்குத் தீங்கு நிகழாது இவர்களதுயிரைப் பேணுதல் முத லியவற்றைத் தம் கடமைகளாகக் கொண்டு, இவர்களை மகிழ் விக்கும் கடப்பாடு உடையவர்கள். பிராமண களின் பொருளை அரசனும் தீண்டுதல் கூடாது. இவன் இவர்களுக் குக் கிராமங்களையும் பெரும் பொருளையும் தட்சணையாகக் கொடுப்பவன். பிராமணனைத் துன்புறுத்தும் அரசனுக்குத் தீங்கு நேரிடும். பிராமணனைக் கொல்லுதல் (பிரமஹத்தி) மாபெரும் பாவமாகக் கருதப்பட்டது.
பிராமணங்கள் கூறும் விஷயம் முழுவதையுமே விதி என் றும், அர்த்தவாதம் என்று பிரித்துக் கூறுவார்கள். விதி என் பது யாகாதி கிரியைகள் நடக்க வேண்டிய ஒழுங்கை முறை யாகக் கூறும்பகுதி.அர்த்த வாதம் என்பது இவைகள்உணர்த் தும் கருத்துக்களை விளக்குவதும், இவை சம்பந்தமான விவா தங்களை எடுத்துரைப்பதுமான பகுதி. பிராமணங்கள் கிரி யைகள் செய்ய வேண்டும் முறையை முதலில் கூறுகின்றன.

151 / கா. கைலாசநாதக் குருக்கள்
இதை அடுத்து இக்கிரியைகளின் நோக்கம், விளக்கம் உட் கருத்து என்பன இது பற்றிய விரிவுரைகளாக இணைக்கப் பட்டுள்ளன.
சொற்களைப் பிரித்துக் காட்டி அவற்றிற்கு விளக்கங் கூறும் பகுதிகள் இங்கு பல உள. இவ்வாறு கூறும் முறை பெரும்பாலும் இச் சொற்களின் இயல்புக்குப் பொருந்தாத வையாகவே காணப்படுகின்றன. வேண்டுமென்றே இவை பிழையாக விளக்கும் நோக்கத்துடன் இவ்வாறு திரித்துக் கூறப்படுகின்றன என்பதைப் பிராமணங்களே எடுத்துக் கூறு கின்றன. இந்த்? என்னும் வினையடி தூண்டுதல் என்னும் பொருளைக் குறிக்கும்.இதிலிருந்தே இந்த*என்னும் பெயர் முதலில் பிறப்பிக்கப்பட்டது. இதே இயல்பாக எழுந்த பெயர். இதில் வேண்டும் என்றே தவறைத் தோற்றுவித்து *இந்த' என்பதை இந்த்ர எனத் திரித்து, இச்சொல்லை உரு வாக்கியோர் வேறுருவாக்கினர். இப் பெயர் இந்திரனைக் குறிப்பது. இது தான் பிராமணங்கள் சொல்லமைப்பை விளக்கி, சொல் உருவத்தின் அமைப்பு இலக்கணங் கூறும் முறை. மறைமுகமாய் நிற்றலைப் பெரிதும்விரும்புவார்களல் லவா, தேவர்கள்! எனவே, தாம் சுட்ட விரும்புபவனை இந் தன்" என்று இயல்பாக உணர்த்த வேண்டும் வகையில் பெய ரிட்டு உணர்த்தாது, அவன் பெயராகிய இந்தன் என்பதைச் சிறிது திரித்து இந்திரன் என உணர்த்தினர். இவ்வழிப்பற்றி கூறும் பொருளையெல்லாம் தேரே சுட்டாது அடையாளம் மட்டும் கூறி மறைபொருளாய் முதலில் உணர்த்தி, அவன் பின் இவ்வாறு மறைபொருளாய் உணர்த்தப் பட்டவற்றை இதுதான் இங்கு கூறப்படுவது எனத் தெவிவாக்கிக் கூறும் பகுதிகள் பிராமணங்களில் பெருகிக் கிடக்கின்றன. இவை யசுர் வேதத்திற் காணப்படுகின்றன வெனினும் பிராமணங் களில் அளவிற்கதிகமாக இருக்கின்றன.
அர்த்தவாதமாக அமைந்து யாகாதி கிரியைகளுக்கு விளக்கங் கூறும் பகுதிகளில் கதைகள், பழைய வரலாறுகள், இதிகாசங்கள் (நிகழ்ந்த சம்பவங்கள்) எல்லாம் எடுத்துக்

Page 86
வடமொழி இலக்கிய வரலாறு / 152
கூறப்பட்டுள்ளன. இவை பிராமணங்களுக்குப்பின் எழுந்த இதிகாசம், ஆக்யானம்,புராணம் என்பவற்றிற்குத் தோற்று வாயாக இருக்கின்றன. இப்பகுதிகளே இந்நூல்களை வாசிப் பவர்களுக்குச் சுவை பயப்பன என்று சில விமர்சகர்கள் எடுத் துக் காட்டியுள்ளார்கள்.
சதபத பிராமணத்தில் காணப்படும் புரூரவஸ்-ஊர்வசி வரலாறு மிகப் பழையது.இருக்கு வேதத்திலும் இது காணப் படுகின்றது. பெரு வெள்ளம் கரைபுரண்டு பிரவாகிப்பத ஞல் உலக அழிவு நேர இருந்த வேளை, உயிர்களின் அழிவை மநு காப்பாற்றிய வரலாறு இங்கு கூறப்பட்டுள்ளது. ஐத ரேய பிராமணத்தில் இருக்கும் சுனஸ்சேபன் வரலாறும் மிகச் சுவைபட அமைந்துள்ளது. இவ்வகை வரலாறுகள் எல்லாம் யாகத்துடன் தொடர்பு பூண்டவை. இல்லாவிடில் இவற் றிற்கு இங்கு இடம் ஏது?88யாகங்கள் எவ்வாறு தோன்றின? ஏன் வேட்கப்படுகின்றன? இவை எத்துணைச் சிறப்பு வாய்ந் தவை?? என்னுங் கேள்விகள் யாகங்களைப் பற்றிப் பேசும் பிராமணங்களில் எழுந்து காணப்படுதல்இயல்பே. இவ்வகை யான கேள்விகளுக்கெல்லாம் விடை கூறுவதுபோல் அமைந் துள்ளன இவ்வரலாறுகள்.இவ்வரலாறுகளிற் சில பிராமண காலத்துக்கு முன்னர், நெடுங்காலமாக வழங்கி வந்தவை. சிலவரலாறுகள் எடுத்துக் கொண்ட கருத்தை விளக்குவதற் காக அக்காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டவை போற் காணப்படுகின்றன. பிரஜாபதிக்கு ஆகுதி கொடுக்கும் பொழுது ஏன் தாழ்ந்த குரலில் மந்திரங்களை உச்சரித்தல் வேண்டும் என்பதை விளக்கும் வரலாறு இதற்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. கவர்ந்து செல்லப்பட்ட சோம லதையைப் பற்றிக் கூறும் பொழுது உருவகப்படுத்தப்பட்ட பேச்சின் (வாக்கின்) வரலாறு சதபத பிராமணத்தில் இடம் பெற்றுள்ளது. நான்கு வருணங்கள் தோன்றிய வரலாறு இருக்கு வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் வரும் தொண் ணுாருவது சூக்தத்தை அடிப்படையாகக் கொண்டு இங்கு விரித்துக் கூறப்பட்டுள்ளது. படைத்தல் நிகழும் முறையை விளக்கும் வரலாறும் சதபதப் பிராமணத்தில் வருகின்றது.

153 கா. கைலாசநாதக் குருக்கள்
இவ்வகை வரலாறுகள் பிரஜாபதியையே படைத்தலுடன் பெரும் தொடர்பு படுத்திக் கூறுகின்றன.
இந்தியப் பண்பாட்டை விரித்து விளக்கி முதலில் இருந்து இறுதிவரை தொடர்ச்சியாகக் கூறும் வரலாற்று நூல் ஒன்றை நாம் எழுதுவோமேயானல் அதில் பிராமணங்கள் கூறும் கருத்துக்கள் முக்கியமான இடத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை. இருக்கு வேதம் முதலிய சங்கிதைகளிற் ருேன்றி வளர்ந்த கருத்துக்கள் எவ்வாறு பிராமணங்களில் விரிந்து, மேலும் பல கருத்துக்களைத் தோற்றுவித்தன என் பதையும், இக்கருத்துகளின் விளைவாக ஆரணியகங்களும் அதையடுத்து உபநிடதங்தளும் தோன்றி எவ்வாறு உயரிய கருத்துக்களைப் புகட்டும் சிறப்பையும் வாய்ப்பையும் பெற்றன என்பதையும் இவ் வரலாற்று நூல்கள் எடுத்துக் காட்டும் பொழுதுதான் பிராமணங்களின் உயர்தனிப் பெரும்நிலை இன்னதெனத் தெளிவாகத் தெரியும்.
பிராமணங்களில் யாகங்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் முறைகள் விரிந்து இவ்வாறு வளர எவ்வளவு காலம் ஆகி இருக்கலாம்? கல்பம், இதிகாசம், புராணம், காதைகள் அரசரையும் வீரரையும் போற்றும் புகழ்மாலைகள் என்பன எல்லாம் வளர்ந்த விதத்தைச் சாயனரும் எடுத்துக் கூறியி ருக்கின்ருர். அக்கால மக்களின் சுறுசுறுப்பையும் அவர்களது இடையரு உழைப்பையும் திட்டம் வகுத்துக் காரியங்களைச் செய்யும் ஆற்றலையும் இது எடுத்துக் கூறுகின்றது. வேதாங் கங்கள் எனப்படும் இலக்கணம், சிகூைடி முதலியன ஏற்கனவே அதாவது பிராமணங்களுக்கு முன்னரே வேள்வி நிகழ்த்தும் முறையை அடிப்படையாகக் கொண்டு தோன்றியிருக்கலா மென ஊகிக்க இடம் உண்டு.

Page 87

YVA

Page 88

பிராமணங்கள்தாம் முதன் முதலில் தோன்றின. இவற் றைத் தொடர்ந்தே தத்துவக் கருத்துக்கள் உருவெடுத்தன க் கொள்ளுதல் பொருந்தாது. பிராமணங்கள் தோன்று வதற்கு முன்னரே தத்துவ விசாரண நிகழத் தொடங்கிவிட் டது. இருக்கு வேதத்திலேயே சந்தேகத்தை அடிப்படையா ண்ெடதத்துவ விசாரணை விரிந்ததற்குள்ள அடையா ளங்கள் உண்டு என்று முன்னர்க் கூறப்பட்டது. ஆதர்வு வேதத்தில் தத்துவக் கருத்துக்கள் செறித்து காணப்படும் Lல்களிலிருந்தும், யசுர்வேதத்தில் மிகவும் சுருக்கமாக ம் குறிப்பாகவும் இக்கருத்துக்கள் கூறப்படுவதிலிருந்து இவை எவ்வாறு இடையில் அற்றுப்போகாது தொடர்ச்சி அங்கங்கே நினைவுகூரப்பட்டு வழங்கி வந்தன என்பது புலனுகின்றது.
பிராமணங்கள் எடுத்துக்கூறும் யாகங்களில் பெரிதும் ஈடுபட்டவர்களல்லாத ஒரு தனிக் குழுவினரிடையேதான் தத்துவ விசாரணை தோன்றி வளர்ந்திருக்கலாம் எனச் சிலரி ஊகிப்பர். அரச குலத்தைச் சார்ந்தவர்களும் இவ்விசாரணை யில் ஈடுபட்டனர். கெளவீதகி பிராமணத்தில் பிரதர்தனன்" என்னும் மன்னனெருவன் யாகங்களைப் பற்றிய விசாரணை பில் ஈடுபடுவதைக் காண்கின்ருேம். சதபத பிராமணத்தில் ஜனக மன்னன்? தன் தத்துவ ஞானத்தால் யாகங்களில் ஈடு டுபவர்களுக்குத் தம் கோட்பாடுகளைக் கூறிக் குழப்பம் விளை விக்கின்ருர். யாஞ்ஞ வல்கியர்) ஜனகனை அடைந்து அவன்பால் தத்துவ அறிவைப் பெற விழைந்ததைச் சதபத பிராமணங் கூறும் ெேசளல்வாயனர் என்பாருக்கு அறிவூட் டும் அயஸ் தூணன் அரச குலத்தைச் சார்ந்தவன் என்பர். உபநிடதங்களில் அரசர்கள் மட்டுமின்றிப் பெண்களும் தத்துவ விசாரணையில் ஈடுபட்டிருக்கக் காண்கின்ருேம்.

Page 89
வடமொழி இலக்கிய வரலாறு / 158
பிராமணங்களின் இறுதியில் வரும் பகுதிகளுக்கு ஆரணி யகங்கள்? எனப் பெயர் உண்டு. இவை காட்டு நூல்கள் எனி னும் பொருந்தும். இதில் இரகசியக் கருத்துக்கள் அடங்கி யுள்ளன. இதைத் தகுதி அற்றவர் அறிவாராயின் பெருங் கேடு நேரிடும். இவ்வாறு பயம் விளைவிப்பதன் காரணமாக இவை மக்கள் வசிக்கும் இடங்களில் ஒதப் பெறுவதில்லை. காடுகளிலேதான் இவற்றைப் படித்தலும் படிப்பித்தலும் நிகழ்வன. பிராமணற்களிற் போன்று இந்நூல்களில் யாகங் கள் வேட்கும் முறை விரிக்கப்படவில்லை. கிரியைகள் பற்றிய பல்வேறு விளக்கங்கள் இங்கு கிடையா. யாகங்கள் மறை பொருளாய் உணர்த்தும் உண்மையையும், யாகம் எவ் வெவற்றை யெல்லாம் குறிப்பது என்பதையும் விளக்கிக் கூறும் நூல்களே இவ்வாரணியகங்கள். ஆச்சிரமங்கள்? முறையே பிரமசரியம் கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந் நியாசம்? ஏன வகுக்கப்பட்டபின் மூன்ரும் ஆச்சிரமத்தின ரான வானப்பிரஸ்தர்களுக்கென இவ்வாரணியகங்கள் எழுந் தன எனச் சிலர் கொள்ளுவர்.
மிகப் பழைய உபநிடதங்கள் எல்லாம் இவ்வாரணியகங் களுள், அவற்றின் ஓர் உறுப்பாக அடங்கியுள்ளன. ஆரணி யகங்களையும், உபநிடதங்களையும் பிரித்துத் தனித்தனியாக வரையறுத்துக் காட்டல் எளிதன்று. இந்நூல்களெல்லாம் *வேதாந்தங்கள்?எனப் பெயர் பெறுவன. இவைவேதங்களின் இறுதிப் பகுதிகள் என்பதையே இப்பெயர் உணர்த்தும். அறிவை நாடி நிற்கும் மாணவர்களுக்கு வாயால் புகட்டி அறிவுறுத்தவேண்டி யாக்கப்பட்ட நூலின் முதற் பகுதி வேள்வி முதலியவற்றைப் பற்றியது. இலகுவில் விளங்காத வாறு மறைபொருளாய் உணர்த்தப்படும் தத்துவ விசாரணை யாற் கொள்ளப்பட்ட முடிபுகளைக் கூறுவது ஈற்றில் வரும் பகுதி. ஆரணியகங்களும் உபநிடதங்களும் இவ்வாறு வேதங்களின் இறுதியில் அமைந்து வேதாந்தங்கள் எனப் பெயர் பெறலாயின. பிற்காலத்தில் தத்துவ நூலறிஞர்கள் இவற்றை வேதங்களின் முடிவு நூல்களாக மட்டும் கான வில்லை. அன்றி வேதங்கள் துணிந்து கூறும் முடிபை விவரிக் கும் அறிவு நூல்களாகவே கருதுவர்.

159 / கா. கைலாசநாதக் குருக்கள்
வேதங்களின் முடிபான ஆரணியகங்களும் மிகப் பழைய உபநிடதங்களும் பல்வேறு வேதங்களைச் சார்ந்து காணப்படு கின்றன. இவை பிராமணங்களில் அடங்கியுள்ள பகுதிகள். இருக்கு வேதத்தைச் சார்ந்த ஐதரேயே பிராமணத்துள் அடங்கி இருப்பது ஐதரேய ஆரணியகம். ஐதரேய ஆரணிய கத்துள் அடங்கி இருப்பது ஐதரேய உபநிடதம். இருக்கு வேதத்தைச் சார்ந்த இன்னெரு பிராமணமான கெளவீதகி பிராமணத்திலும் இவ்வாறே கெளவீதகி ஆரணியகமும் கெளவீதகி உபநிடதமும் அடங்கியிருக்கின்றன. கிருஷ்ண யசுர்வேதத்தைச் சேர்ந்த தைத்திரீய ஆரணியகமும், இதன் இறுதியில் தைத்திரீய உபநிடதமும் மகாநாராயண உபநிட தமும் காணப்படுகின்றன. சுக்கில யசுர் வேதப் பிராமண மான சதபதப் பிராமணத்தின் பதினன்காவது பிரிவில் முற் பகுதி ஆரணியகம். இறுதியில் வருவது பிருகதாரணியக உப நிடதம், சாமவேத பிராமணமான தாண்டிய மகா பிரா மணத்தின் இறுதியில் வருவது சாந்தோக்கிய உபநிடதம். இதன் முதற் பகுதி முழுவதுமே ஆரணியகமாக அமைந்திருக் கின்றது. கேந? உபநிடத்தை உள்ளடக்கி வரும் ஜைமிநீய ஆரணியகம், தலவகார சாகையைச் சார்ந்த சாம வேத பிராமணத்துள் அடங்கியுள்ளது.

Page 90


Page 91

உபநிடதங்கள் அறிவுப் பொக்கிஷம். இந் நூல்கள் கூறும் அறிவு பேரறிவு. உலகில் பலருக்குப் பெரும் அறிவை மட்டுமல்லாமல் உள்ளத்தில் அமைதியையும் மனச் சாந்தியையும் அளித்ததை உபநிடதங்கள் பற்றி எழுந்த நூல் களும் கட்டுரைகளும் எடுத்தியம்புகின்றன. அறிவுரைகள் பல நிரம்பிய இவ்வுபநிடதங்களைப் பற்றி இனி நோக்குவோம்.
வடமொழியில் சத்” என்னும் வினையடி இருத்தல்என் னும் பொருளை உணர்த்தும். உப, நி ஆகிய இரு உபசர்க்கர் கள் தொடக்கத்தில் வரும்வண்ணம் உருவாகும் உபநிஷத் என்னும் சொல் நெருங்கிக் கீழே அமர்தல்? என்னும் கருதி தையே முதலில் உணர்த்திற்று. ஆசிரியருக்கு அண்மையில் மாணவன் அமர்ந்திருத்தலையே இது குறிக்கின்றது. பின்னர் இது அருகில் நெருங்கி அமர்ந்திருக்கும் நிலையில் தோன்றிய அறிவுரைகளைக் குறிக்கலாயிற்று. மாணவனும் ஆசிரியனும் நெருங்கி இருக்கும் பொழுது கூறப்படுவது அவர்கள் இருவ ருக்குமட்டுந் தெரிந்ததே. எனவே இது இரகசியம் என்னும் பொருளையும் பெறலாயிற்று. நாளடைவில் உபநிடதம்,இரக சியம் என்னும் இரு சொற்களும் ஒரே கருத்தைக் கூறும் சொற்களாயின. இக்கருத்தை உணர்த்தும் சொற்ருெடர்கள் உபநிடதங்களிலேயே இருக்கின்றன. இக்கருத்தையே தமிழ்ச் சொல்லாகிய மறை என்பது உணர்த்துவது, இப் பிரம வித் தையைத் தந்தை தன் மூத்த மைந்தனுக்கு அல்லது தலை சிறந்த மாணவனுக்குப் புகட்டுவான் “எத்தகைய விலையு யர்ந்த பொருளைக் கொடுத்தாலும் கொடுக்கலாம்.விலைமதிப் பிறந்த இவ்வரும் பொருளை எவர்க்காயினும் கொடுக்கவே கூடாது. கொடுப்பதாயின் தகுதி வாய்ந்த மாணவனுக்கு அல்லது தன் மைந்தனுக்குக் கொடுத்தல் வேண்டும்? என் னுங் கொள்கை வழங்கலாயிற்று. மாணவன் குருவை நாடிப்

Page 92
வடமொழி இலக்கிய வரலாறு / 164
பலமுறையணுகி உபதேசம் வேண்டி நிற்பதையும் அவன் தகுதியை நன்கு அறிந்த பின்னரே குரு அறிவுரை வழங்குவ தையும் உபநிடதங்களே அழகாக எடுத்துக் கூறுகின்றன.
சென்ற அத்தியாயத்தினிறுதியிற் கூறப்பட்ட உபநிடதங் களுள், மகாநாராயண உபநிடதம் ஒன்று நீங்கிய ஏனையவை பழையவை. நடையிலும் மொழியமைப்பிலும் இவை தத் தம் பிராமணங்களைப் போன்றவை. எளிய நடையில் அமைந் துள்ள இவ்வுபநிடதங்கள் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளன. இவை கூறும் கருத்தைத் தெளிவாகக்கூறுகின்றன.இவற்றை எடுத்துத் தனித்தனியே நோக்கும் பொழுது ஒவ்வொரு உப நிடதத்திலும் பழைய பகுதியையும் புதிய பகுதிகளையும் ஒருங்கே காண்கின்ருேம். மொழியமைப்பைக் கருத்திற் கொண்டு நோக்கும் பொழுது புதிய இயல்பு வாய்ந்த பகுதி களும் பழைய உபநிடதங்களே என்பது தெளிவாகும். சாந் தோக்கியம், பிருகதாரணியகம்ஆகிய இருபெரும்உபநிடதங் களிலும் அடங்கியுள்ள பகுதிகள் பல உரைத் தொகுதிகளை ஒன்று சேர்த்தமைத்தலால் உருவாகியுள்ளன என ஊகிக்க இடமுண்டு. இவ்வுரைத் தொகுதிகள் தனித்தனி உபநிடதங் களாகவும் ஒருகாலத்தில் இருந்திருக்கலாம். ஒரே உரைகள் பல உபநிடதங்களில் வருவது இக் கொள்கையை வலியுறுத் தும். பெரும் உபநிடதங்கள் பிராமணங்களுடனும், ஆரணி யகங்களுடனும் நெருங்கிய தொடர்பு உடையனவாகவும், புத்தருக்கும் பாணினிக்கும் முற்பட்டவையாவும் இருந்தன என்பது மறுக்க முடியாத உண்மை. உபநிடதங்கூறும் கருத் துக்களின் தொடக்க நிலையை இப் பெரிய உபநிடதங்களான ஐதரேயம், சாந்தோக்கியம் தைத்திரீயம்,கெளSrதகி,கேதம் முதலியவற்றில் காண்கின்ருேம். இங்குதான் பழைய வேதாந்தக் கருத்துக்கள் இருக்கின்றன.
சில உபநிடதங்கள் முழுவதுமே செய்யுள் நடையில் விளங்குகின்றன. இவை காலத்தாற் பிந்தியவை. எனினும் இவை புத்தர் காலத்துக்கு முந்தியவை என்பதை மறுக்க முடியாது. இவை வேதங்களுடன் இணைத்துக் கூறப்படுவன.

165 / கா. கைலாசநாதக் குருக்கள்
எனவே, ஏற்கனவே கூறப்பட்ட உபநிடதங்களைப் போன்ற ஆரணியகங்களின் பகுதிகளாக அமையவில்லை. கடோபநிட தம், சுவேதாஸ்வதரம், மகாநாராயணியம், ஈசோப நிடதம் முண்டகம், பிரச்னம்என்பன இவ்வினத்தைச் சார்ந்தவை. கடோபநிடதம் கிருஷ்ண யசுர் வேதத்தைச் சேர்ந்தது.சுவே தாஸ்வதரம், மகா நாராயணியம் என்னும் இரண்டும் கிருஷ்ண யசுர் வேத உபநிடதங்களே. ஈசோபநிடதம், வாஜசநேயி சங்கிதையில் காணப்படுவது. எனவே இது சுக்கில யசுர்வேதத்தைச் சார்ந்தது. பாதி உரைநடையிலும் பாதி செய்யுளிலும் அமைந்த பிரச்ன உபநிடதமும், முண் டக உபநிடதமும் அதர்வ வேத உபநிடதங்கள். இவ்வாறு உபநிடதங்களிலும் வேதாந்தக் கருத்துக்கள் காணப்படினும் இங்கு ஒரு கடவுட் கொள்கையும், சாங்கியக் கருத்துக்களும் யோக உரைகளும் சுவறிக்கிடக்கக் காண்கிருேம்.
மைத்திராயணி உபநிடதம் கிருஷ்ண யசுர் வேதத்தைச் சேர்ந்தது. இது புத்தர் காலத்துக்குப் பிந்தியதென்பர். இவ் வுபநிடதம் பழைய உபநிடதங்கள் போல் உரை நடையில் அமைந்துள்ளது. இதிலே வைதிக மொழியின் சாயல் மிகுந்து காணப்படவில்லை. இது பெரும்பாலும் சம்ஸ்கிருத மொழி யிலேயே அமைந்து, இச்சம்ஸ்கிருத இனத்தைச் சார்ந்ததா கவே காணப்படுகின்றது. அதர்வ வேதத்தைச் சார்ந்த மாண்டூக்ய உபநிடதமும் இதே காலத்தது எனக் கருத இட முண்டு. பிரம சூத்திர உரையில் ஏனைய உபநிடதங்களைக் குறிப்பிடும் சங்கரர், மைத்திராயணி உபநிடதத்தையும், மாண்டூக்ய உபநிடதத்தையும் கூருது விட்டுவிட்டார். இவை இரண்டும் பிந்திய காலத்து உபநிடதங்கள் எனக் கொள்ளப் படினும், ஏற்கனவே கூறப்பட்ட பன்னிரு உபநிடதங்களுட னும் வைத்து எண்ணத்தக்க பழைமை வாய்ந்தவை. இந்திய தத்துவக் கருத்துக்களை விளக்குவதற்கு இவை இரண்டும் ஏனைய பழைய உபநிடதங்கள் போல் முதல் நூல்களாகக் கொள்ளும் தகுதி வாய்ந்தவை. இவற்றை வைதிக உபநிட தங்கள் என்றும் கொள்ளலாம்.

Page 93
வடமொழி இலக்கிய வரலாறு 166
இருநூற்றுக்கதிகமான வேறு உபநிடதங்கள் காணப்படு கின்றன. இவை வேதங்களுடன் இணைத்துக் கூறப்படினும், நெருங்கிய வைதிகத் தொடர்பு எதுவும் கொண்டனவாகத் தெரியவில்லை. இவற்றில் தத்துவக் கருத்துக்களைக் காட்டி அலும் சமயக் கருத்துக்களே மிகுந்து காணப்படுகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை புராணங்களுடனும் தந்திர சாஸ்திரங்களுடனும் தொடர்பு உடையவை. வேதாந்தக் கொள்கை செறிந்த உபநிடதங்கள், யோகநெறி புகட்டும் உபநிடதங்கள், சந்நியாசத்தை எடுத்து விளக்கும் உபநிடதங் கள் விஷ்ணுவைப் போற்றும் வைஷ்ணவ உபநிடதங்கள், சிவனைப் பரம்பொருளாக உயர்த்திக் கூறும் சைவ உபநிட தங்கள் சக்தியே பிரமம் எனப் புகட்டும் சாக்த உபநிடதங் கள் அறுமதத்தில் கூறப்படும் ஏனைய தெய்வங்கள் ஒவ் வொன்றையும் உயர் பொருளாய் விளக்கும் உபநிடதங்கள் என இவ்வுபநிடதங்கள் பலவகைப்படும். இவற்றுட் சில செய்யுணடையிலமைந்தவை; சில உரைநடையில் உள்ளன. சில இரண்டும் கலந்த நடையில் இருக்கின்றன. சில இதிகாச புராணங்களிலுள்ள சுலோகங்களில் அமைந்துள்ளன. இவை புராணங்களையும் தந்திரங்களையும் போன்றவை. எனினும் இவற்றை வேதங்களுடன் தொடர்புபடுத்தியே கூறுவர். ஜாபால உபநிடதம் இவ்வினத்தைச்சேர்ந்தது.சங்கரர் உரை யில் இது கூறப்படுகின்றது. பரமஹம்ச உபநிடதமும் இதே விடயத்தைக் கூறும். கபால உடநிடதத்திலிருந்து இராமானு ஜர் மேற்கோள் காட்டியுள்ளார். இது உலக அமைப்பு உட லமைப்பு, உள அமைப்பு, தத்துவக் கருத்துக்கள் முதலிய விஷயங்களைப்பற்றிக் கூறும் கருப்ப? உபநிடதம் கருவைப் பற்றிக் கூறும். கருவிற்ருேன்றிப் பிறந்திறந்து உழலாது, வீடு பெறத் தியானிப்பதற்குத் தூண்டும் இயல்பு வாய்ந் தது. அதர்வசிரஸ்"என்னும் சைவ உபநிடதம் பாபங்களைக் கழுவி அகற்ற வல்லது. வஜ்ர சூசக உபநிடதம் வேறென் றுஞ் சுட்டாது தானே தனித்து விளங்கும் பிரமத்தை அவ் வாறு அறிந்தவனே பிராமணன் எனக் கூறும். இது மிகவும் பிந்திய காலத்ததல்ல. இவ்வுபநிடதங்கள் எல்லாம் வேதத் துக்குப்புறம்பானவை. இவை எண்ணில்லாதனவாய் இருப்

187 / கா. கைலாசநாதக் குருக்கள்
பது மட்டுமல்லாமல் காலத்தாற் பிந்தியனவாயும் இருக்கின் றன. எல்லா உபநிடதங்களுக்கும் பிந்தியதாகக் கருதப்படும் முக்திகோபநிடதத்தில் நூற்றெட்டு உபநிடதங்களையும் கற்ப தஞல் ஒருவன் வீடுபேற்றை அடைவானெனக் கூறப்படுகின் றது. இங்கு நூற்றெட்டு உபநிடதங்களும் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் பத்து உபநிடதங்கள் இருக்கு வேதத்தையும் பத் தொன்பது சுக்கில யசுர் வேதத்தையும், முப்பத்திரண்டு கிருஷ்ண யசுர் வேதத்தையும், பதினறு சாமவேதத்தையும் முப்பத்தொன்று அதர்வ வேதத்தையும் சார்ந்தன எனக் கொள்ளப்படுகின்றது. வேதச் சாயல் பெருதவை எல்லாம் அதர்வ வேதத்தைச் சார்ந்தவை என்று கொள்ளப்படும்.
பழைய உபநிடதங்கள் கூறுவதிலிருந்து அங்கு பல்வேறு வகையான கருத்துக்கள் தெரிந்துள்ளன என்பதையும், உப நிடதம் எவ்வகைக் கருத்துக்களைக் கொண்டமைதல் வேண் டும் என்பதையும் ஊகித்தறியலாம். உபநிடதம் புதிர் போன்று அமைந்தது. அதிற் கூறப்பட்டிருக்கும் கருத்துக் கள் பாமர மக்களின் பொருட்டல்ல. அறிவு முதிர்ந்த குறிப் பிட்ட சிலருக்கே. இங்கே ஆழமான தத்துவக் கருத்துக்கள் உண்டு. மறைபொருளாய் உணர்த்தப்படும் உண்மைகளும் இருக்கின்றன. கதை வடிவமாக அமைத்துக் கூறப்படும் பேருண்மைகள் மனதில் ஆழப்பதிய வல்லன. யாகத்தின் இயல்பை விளக்கி உணர்த்தும் உயர் கருத்தும் இங்கு உண்டு. இது போன்ற கருத்துக்கள் பழைய உபநிடதங்களில் பெரும் பாலும் உள்ளன.
கெளவீதகி உபநிடத்தில் தத்துவ விளக்கங்களையும், உயர்மனேநிலையைக் குறிக்கும் கருத்துக்களையும் மறுமை யைக் குறிக்கும் விளக்கங்களையும் காண்கின்ருேம். இதைவிட நன்மை பயக்கும் யாகாதி கிரியைகளின் விளக்கங்களும் மோகனம் முதலிய மந்திரங்களும், சிறுவர்களாக இறத் தலைத் தடுப்பதற்குக் கிரியைகளாலமைந்த வழிவகையும், பகைவரை யழிக்கும் ஆற்றல் வாய்ந்த மறைபொருள் எனக் கருதவல்ல உபநிடதம் எனக் கருதப்படத்தக்க பகுதியும்

Page 94
வடமொழி இலக்கிய வரலாறு / 168
காணப்படுகின்றன. சாந்தோக்கிய உடநிடதம் படைத்தலை விளக்கும் தத்துவக் கருத்துக்களை உடையது. மேலும் பிர பஞ்சத்தையும் ஆன்மாவையும் பற்றிக்கூறி ஓம்’ என்னும் பிரணவத்தின் உட்பொருளையும், நோய் நீக்கவல்ல மந்திரங் களேயும் கூறும். அதர்வ வேத உபநிடதங்களுள் பாம்பு விஷத்தை அடக்கக்கூடிய மந்திரம் ஒரு முழு உபநிடதமா கவே அமைந்து விடுகின்றது. இது கருடோபநிடதம் எனப் படும்.
உபநிடதங்களில் தத்துவக் கருத்துக்கள் பல சிதறுண்டு கிடக்கின்றன. பிரம விசாரணையும், ஆன்ம விசாரணையும் நிகழும் பல சந்தர்ப்பங்களில் பிரமம், ஆன்மா என்னும் இரு பொருள்களைப்பற்றிப் பல விளக்கங்கள் இங்கு காணப்படு வன. இவ்விளக்கங்கள் ஒன்ருேடொன்று கோவைப்படுத்தப் படாதவையாகவே இங்கு இருக்கக் காண்கின்ருேம். உபநிட தக் கருத்துக்களைக் கோவைப்படுத்தி, வரிசையாக்கி கூறும் விஷயங்களைத் தொடர்படுத்திக் கூறுதல் அவசியமாயிற்று. இத்தேவையைப் பூர்த்தி செய்ய முதன் முதல் எழுந்த நூல் பிரம சூத்திரம் எனப்படும். பல்வேறு தத்துவக் கருத்துக் களின் தொகுப்புக்களான உபநிடதங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு ஆசிரியர் இயற்றினர் என்பது பொருந்தாது. பலரது அனுபவங்களும் பலர் கண்டுணர்ந்த உண்மைகளும் வாக்கியங்களாக மறு உருவம் பெற்றுள்ளன. இவ்வாக்கியங் கள் தொகுக்கப்பட்டதும் உபநிடதங்களாக உரு ஏற்றன. இவ்வாக்கியங்களில் தலைசிறந்தவாக்கியங்கள் மகாவாக்கியங் கள் எனப்படும்.
பல்வேறு தருணங்களில் பற்பல அறிஞர்களால் நோக்கி உணரப்பட்ட உண்மைகள் பல உபநிடதங்களாகத் தொகுத் தமைக்கப்பட்டன. எனினும், இவை முழுவதும் குறிக்கும் பொருள் ஒன்முகவே காணப்படுகின்றது. எனவே, உபநிட தங்கள் எல்லாம் ஒரே கருத்தை அடிப்படையாகக்கொண்டு, ஒரே குறிக்கோளை நோக்காகக்கொண்டு, விசாரணையில் ஈடு படுவனவாய்ப் பலவகை விளக்கங்களைக் கூறியமைந்துள்ளன.

169| கா. கைலாசநாதக் குருக்கள்
ஏற்கனவே குறிப்பிடப்பட்ட தலை சிறந்த உபநிடதங்களில் இவற்றை எதிர் பார்க்கலாம். உபநிடதங்களில் இக்கருத்து கள் சம்பாஷணை வடிவில் எடுத்துக் கூறப்படுகின்றன. இவை அக்காலச் சூழலையும் சுட்டி விளக்குகின்றன. அக்காலத்தில் மன்னர் மாளிகைகளில் அறிஞர்களும், அறிவு புகட்டும் ஞானிகளும் ஒன்று கூடி அரசர்கள் முன்னிலையில் தத்துவ விசாரணைகள் நிகழ்த்திய வரலாறுகளை இவ்வுபநிடதங்கள் மூலம் நாம் அறிய முடிகின்றது. இத்தகைய தத்துவ விசா ரணைகளில் அரசர்களும் ஈடுபட்டனர். தத்துவக் கருத்துக் கள் கூருத பகுதிகளும் உபநிடதங்களில் உண்டு. இவை பல் வேறு விஷயங்களேப்பற்றியவை. இவை சாந்தோக்யம், பிருகதாணியகம் போன்ற பழை உபநிடங்களிலே மிகுந்து காணப்படுவன. உபநிடதங்களில் காணப்படும் உய ரிய கருத்துக்களைச் சீர்பட அமைக்கும் நோக்குடன் எழுந்தது "பிரமசூத்திரம்? என்னும் உயரிய வேதாந்தநூல்.
உயர்ந்த தத்துவக் கருத்துக்களை உடையனவே உபநிடதங் களின் விலைமதிப்பற்ற பகுதிகள். சிதறுண்டு கிடக்கும் இக் கருத்துக்களை எடுத்துச் சீராக்கித் தொடர்ச்சியாக அமைத்து உருவாக்கிஞல்தான் உபநிடத தத்துவம் தெளிவாக வெளி யாகும். உபநிடத தத்துவத்தை மிகவும் சுருங்கக் கூறின் அத் தத்துவம் 8*எல்லாம் பிரமம், பிரமம் ஆத்மா இரண்டும் வெவ்வேருனதல்ல? என்னும் வாக்கியங்களில் அடங்கும். உபநிடதத்தில் வரும் அறிஞர்கள் கூறுவதெல்லாம் பிரமம், ஆன்மா என்னும் இரு பொருள்களைப் பற்றியே, எனவே உப நிடத தத்துவங்களை நன்கு உணருவதற்கு இவ்விரு பொருள் களையும் நன்கு விளக்கிக் கொள்ளல் வேண்டும். பிரமம் என் பதற்குப் பல விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. எமக்கு எட்டி யுள்ள நூல்களை எடுத்து நோக்குவோமேயானுல் இதன் தொடக்க நிலை இருக்கு வேதத்தில் இருக்கின்றதைக் காண லாம். மேலும் பிரமம் என்பது வேதம் தத்துவம் தவம் என்னும் கருத்துக்களை உடையது என நிகண்டு கூறும். வேதங்களில் முக்கியமாக இருக்கு வேதத்தில் வரும் இச் சொல் முதலில் சூக்தத்தையும், பின் வேதத்தையும் குறித்

Page 95
வடமொழி இலக்கிய வரலாறு / 170
தது. பின்னர் இது பிராமணத்தையும், பிரணவத்தையும் குறிக்கலாயிற்று. இருக்கு வேதம் குறிக்கும் பிரமம் என்பது மந்திரம் எனக் கொள்ளப்படும் பாட்டுக்களையே சுட்டுகின் றது. இப்பாட்டுக்கள்தாம் வழிபடுதற்குப் பயன்படும் தோத் திரங்கள். இவை மந்திர சக்தி வாய்ந்தவை. எனவே இவற் றைக் கருவியாகக் கொண்டு வழிபடுபவர்கள் தெய்வங்களைத் தம்வயப்படுத்தித் தாம் வேண்டுவதை அடைய முற்படுவர். நாளடைவில் இம்மந்திரங்கள் தொகுதிகளாக்கப்பட்டன. இத்தொகுதிகள் ஒன்று சேர்க்கப்பட வேதம் உருவாயிற்று. இதே திரயீவித்யா" என்பது. ஈற்றில் இது பிரமம் எனப் பெயர் பெற்றது.வேதம்,பிரமம் எனும் இவ்விருபெயர்களும் இதன் தெய்வத் தன்மையை உணர்த்துகின்றன. மேலும் வேதங்களிற் கூறப்படும் யாகமும் மனிதன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட தெய்விக ஆற்றலையே குறிப்பது வேத நெறி நிற்றலால் இவ்வகை ஆற்றலை ஒருவர் அடையலாம். வேத நெறி நிற்க வழி வகுப்பவை வேட்கும் வகையை அறிவுறுத் தும் பிராமணங்கள். இவ்வுயரிய அறிவாகிய வேதமே முதல் முதற்ருேன்றிய பிரமம் எனவும், இதுதான் தோற்றம் அனைத்துக்கும் தோற்றுவாயாய் உள்ளது எனவும் இதை அடுத்துத் தோன்றியனவே படைத்தல் தெய்வமாகிய பிரமா என்னும் சுயம்புவைப் பற்றிய கருத்துக்கள் எனவும் கூறப் படும். இவ்வாறு பிரமம் என்னுஞ் சொல் மந்திரங்களைமுதன் முதலிலும், மந்திரங்களின் தொகுதியான வேதத்தை அதன் பின்னரும், அங்கு கூறப்படும் யாகங்களையும், அவற்றின் தொடர்பு உடையவர்களையும், அவற்றினுல் விளையும் சக்தி யையும் படிப்படியாகக் குறித்து வந்ததைக் கவனிக்கும் பொழுது, பிரமம் என்னுஞ் சொல் உணர்த்தும் கருத்துக் களின் பல நிலைகள் தெளிவாகின்றன. உபநிடதங்கள் குறிக் கும் பிரமமோ எனின் அது எல்லாவற்றிற்கும் நிலைக்களஞகி எல்லாமாய் ஒரே தனிப் பொருளாய்த் தன்னைவிட வேருென் றிலதாய் உள்ள பொருள் என்பது தெரிகின்றது.
ஆத்மா என்னுஞ் சொல் தோன்றி வழங்கி வரும் வரலா றும் மிகத் தெளிவாக உணரற்பாலது. இச் சொல்லின்

171| கா. கைலாசநாதக் குருக்கம்
அமைப்பு, இது சுட்டும் கருத்தைத் தெளிவாக விளக்கப் பயன்படாது. “அன்? என்னும் வினையடியுடன் தொடர்பு கொண்டது ஆத்மா எனச் சிலர் விளக்கியுள்ளார்கள். சிலர் இதைத்தான், தன்னை” என்னுங் கருத்துக்களை உணர்த்தும் த்மன் என்னும் சர்வ நாமத்தில் இருந்து பிறந்ததாகக் கூறு வர். ஆத்மா என்னுஞ் சொல் தத்துவக்கருத்தைக் குறிக்கும் சொல்லாய் மட்டும் அமையாது. ஏற்கனவே சுட்டப்பட்ட கருத்திலேயே சம்ஸ்கிருதத்தில் அடிக்கடி காணப்படுவது, இவ்வாறு வழக்கிலிருக்கும் சொல் நாம் எளிதில் விளங்கக் கூடியதாயன்ருே இருத்தல் வேண்டும், தான் தன்னை? என்று ஒவ்வொருவரும் தம்மைச் சுட்டவும் தம்மைக் குறிக் கவும் இது பயன் படுகின்றது. எனவே இச்சொல் புற உல கில் காணும் பொருள்களின்றும் வேருக்கி ஒருவர் தம மைச்சுட்டவும், தம்முடம்பையோ, உடம்பினுள் நின்றியங் கும் உயிரையோ - அதாவது உடம்பினின்றும் வேருண உயி ரையோ குறிப்பிடவும் பயன்படுகிறது.
பிரமம், ஆத்மா ஆகிய இவ்விரு பொருள்களும் உபநிட தங்கள் கூறும் தத்துவங்களில் ஒன்ருய்ப் பிணைப்புண்டு நிற் பன. சாண்டில்யன் புகட்டும் உண்மையும் இதே அடிப்படை யில் அமைந்துள்ளது. இவை அனைத்தும் பிரமமே எனத் தொடங்கும் இவ்வறிவுரை விரிந்து ஆன்மாவின் இயல்பு கூறும் விளக்கங்களுடன் முடிவெய்துகொள்கின்றது. ஈற்றில் பிரம்மமும் ஆன்மாவும் ஒன்றே என்னும் உண்மை வற் புறுத்தப் பெறுகின்றது.
உலகில் காணப்படுவனவற்றின் பொருள் யாவும் பிரமத் தால் அமைவதனல் அது பிரமமயமானது. உலகில் நிகழும் தோன்றல், நிலைத்தல் அழிதல் முதலியன பிரமத்தால் நிகழ் வன. எல்லாம் ஈற்றில் ஒடுங்குவது பிரமத்திலேயே. இது சாசுவதமானது; என்றும் உள்ளது; எல்லை அற்றது; தெய் விகமானது; இதுவும் ஆன்மாவும் ஒன்று. புறத்தே அமைந்து காணப்படும் எமது பண்புகளை எல்லாம் நாம் களைந்து கொண்டே போகும் பொழுது ஈற்றில் எஞ்சி நிற்கும் சாரம்

Page 96
வடமொழி இலக்கிய வரலாறு / 172
மிகுந்த ஒரு பொருளைக் காண்போம். “அது ஒப்புயர்வற்றுத் தனித்து நிற்பது. அதே ஆன்மா எனப்படுவது? என்று சிலர் உபநிடதங்கூறும் கருத்துக்களை எடுத்துக் கூறிப் பொருளைத் தெளிவாக்குவர். இவ்வுண்மையினையே உபநிடதங்களில் வரும் மகா வாக்கியம் அறைந்து கூறும். இதே, தத்துவ ஞானிகளுக்கு உண்மை நிலையினைத் தெரிய வைத்துள்ளது. தத்-த்வம்- அஸி என்பது இம்மகாவாக்கியம். இப்பிரபஞ்சம் பிரமம் எல்லாம் நீயே.இப்பிரபஞ்சம் நீ உணரும் அளவிற்கே உளது. அதாவது, உன்னில் வேருனதும், வெளியே புறம் பாகத் தெரிவதுமான பிரபஞ்சம் ஒன்று என மனதிற் கருதும் வரைதான் பிரபஞ்சம் உளது. உலகமும் பிரமமும் பிரமமும் ஆன்மாவும் ஒன்றே. இவ்வாறு உலகம் பிரமம், ஆன்மா என்னும் இவற்றில் காணப்படும் ஒருமையை விளக் கும் முகமாகவே உபநிடதங்களில் ஆங்காங்கு வரும் அறி வுரைகள் பெரும்பாலாக அமைந்துள்ளன.
பிரம (அதாவது ஆன்ம) விசாரணையில் அக்காலத்து அறிஞர் காட்டிய ஆர்வமும் அதில் எடுத்துக் கொண்ட ஒயா ஊக்கமும் முடிவான உண்மையினை நன்கு ஆய்ந்து அறிய அவர்கள் கொண்ட முயற்சியும் எத்தகையன என்பதை உப நிடதங்களை வாசிக்கும் பொழுது நாம் எளிதில் தெளிவாக அறியக் கூடியதாக இருக்கிறது.
மனிதனுள் அறிவதில் ஈடுபட்டு அறிவதாக எது அமைந் துள்ளதோ, அதே ஆன்மா எனப்படும். இது ஆன்மாவை விளக்கும் வரைவிலக்கணம். ஆன்மா உலகுடன் ஒன்ருய் அமைந்த ஒரு பொருள். அறியும் பொருள் உண்டு என உண ரும் வரை ஒவ்வொரு பொருளும் வேருக இருக்கும். இவ் வுண்மையினைக் கூறி விளக்கும் முறையில் அமைந்துள்ளது யாஞ்ஞ வல்கியர், மைத்ரேயி ஆகிய இருவர்களுக்கும் இடை நிகழ்ந்த சம்பாஷணை.
உபநிடதங்களில், ஆன்மாவுக்கு உள்ள பெயர்களில் ஒன்று பிராணன் என்பது, உபநிடதங்களில் பிராணன் பற்

173 / கா. கைலாசநாதக் குருக்கள்
றிய குறிப்புகள் பல இடங்களில் காணப்படுகின்றன. இது வும் அறிவும் ஆற்றல் வாய்ந்த ஆன்மாவுடன் இணைத்து தொடர்புபடுத்தப் பெற்றுள்ளது.
பிராணன் ஆத்ம தத்துவத்துடன் தொடர்புகொண்டு நிற்பது உபநிடதங்களில் எடுத்துக்கூறப்படுகின்றது. இதைத் துணைக்கொண்டே பிரமத்துடன் ஒன்றி வீடு பேறு பெறும் வரை ஆன்மா அடையும் விழிப்பு, நித்திரை, ஆழ்ந்த நித் திரை, இறப்பு முதலிய நிலைகளைப் பற்றியும் உபநிடதங்களில் விளக்குகின்றன. ஆன்மா பல உடல்களுள் புகுந்து பிறவி களைப் பெறும் என்னுங் கருத்து இதில் இருந்து பிறந்ததே. இதைத் தொடர்ந்து கன்மம்? என்னும் கருத்தும் தோன்றி வளர்ந்து வரலாயிற்று. செயல் ஒவ்வொன்றிற்கும் அதற்கு உரிய பயன் தொடர்ந்து வருதல் வேண்டும் என்பதே இயற் கையின் நியதி. உபநிடதங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கன்மம் பெளத்த மதத்தில் விரிவாக விளக் கப்பட்டு அங்கே தனி இடம் பெற்றுவிட்டது.
உபநிடதங்கள் கூறும் உயரிய குறிக்கோள் பிரமத் துடன் ஒன்றுதல், இது அவித்தை கெட அதன் விளைவாய் எழும் உணர்வினுல் அடையவல்லது. ஆன்மா பரமான்மா ஆகிய இரண்டின் ஐக்கியத்தை உணர்ந்தவனே வீடு பேற்றை அடைவன். இவ்வீடுபேறு பிரமத்துடன் நெருங்கி ஒன்றி ஐக்கியம்? அடைதல். நல்வினை, தீவினையாகிய இரண்டினை எய்துவிக்கும் செயல்களை நீக்கினுல்இந்நிலையை அடையலாம். வேள்வி முதலிய நற்செயல்கள் திரும்பத் திரும்பப் பிறப்ப தற்குக் காரணமாய் உள்ளன. “வித்தை ஒன்றே சம்சாரத்தி தில் இருந்து விடுதலை அளித்து என்றென்றும் ஒன்ருய் உள்ள உண்மைப்பொருளை அடைய உதவுவது.
வித்தை எனப்படும் அறிவு எத்தகையது என்பதை அதன் பல நிலைகளை ஆராய்ந்து அறியலாம். வேள்விகளைப் பற்றிய அறிவு மறைபொருளாக இருந்து வந்தது. இவ்வறிவை ஒரு வன் பெறுவதால் சிறந்த நன்மைகளைப் பெறுவான் என்னுங்

Page 97
வடமொழி இலக்கிய வரலாறு / 174
கருத்து ஆரணியகங்களிலும், பிராமணங்களிலும் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளது. இன்பம், உயர்ந்த பேறு, இம் மைச் செல்வம், சுவர்க்க போகம் என்பன எல்லாம் இதை அறிபவன் அடைவன் என்பது உபநிடதம் அடிக்கடி கூறும் உறுதி. அறிவு பலம் என்பது மட்டும் அல்ல. இதுவே மிக உயரிய குறிக்கோளாய் விளங்கியது. இதுவே உபநிடதங்கள் வற்புறுத்துவது. இந்திரன் பிரஜாபதியை அடைந்து பத்து ஆண்டுகள் குற்றேவல் புரிந்தது அறிவை அடையவே, அறி வைப் பெறவேண்டி மாணவர்கள் அறிவு நிரம்பிய அறிஞர் களை அடைந்து அறிவூட்டும்படி இரந்து நின்ற வரலாறுகளே உபநிடதங்களிற் பெருகிக் காணப்படுகின்றன. அரசர்கள் ஆன்ம விசாரணையில் ஈடுபட்டவர்களாய் ஆன்மாவைப் பற் றியும் பிரமத்தைப் பற்றியும் அறிவைப் பெற அவாவி ஆபி ரம் பசுக்களையும், அளவிறந்த பொன்னையும் பிராமணர் களுக்கு அளித்தனர். அரசர்களிடமிருந்து இதே உயர்ந்த அறிவை அறிய வேண்டிப் பிராமணரும் அவரை அணுகி அமர்ந்து விளக்கங்கேட்டு உண்மை உணர்ந்தனர். உண்மை யினை அறியும் அவா அக்காலத்தில் எவ்வளவிற்கு மிகுந்து விளங்கியது என்பதை எடுத்துக்கூற நசிகேதன்? வரலாறு ஒன்றே போதும் .
அறிவுமிகவும் உயர்த்தி மதிக்கப்பட்டதன் விளைவாக நில வுலக வாழ்க்கையின்பம் பொருட்படுத்தாது விடுபடுவது மட்டுமின்றி, உலகமும் அறவே வெறுத்து ஒதுக்கப்படு கின்றது. இதை மைத்திராயணி உபநிடதம் கூறும் வரலாறு தெளிவாக்குகின்றது. *இவ்வுலகம் துன்பமயமானது; துக்கம் விளைவிப்பது; இங்கு நிகழ்வன எல்லாம் தீமை யையே தோற்றுவிப்பன? என்னுங் கொள்கையை இவ்வர லாறு விளக்குகின்றது. இவ்வுபநிடதம் புத்தர் காலத்துக்குப் பின்எழுந்தது. பெளத்தமும் இதேகொள்கையை வலியுறுத்து கின்றது. எனினும் ஏற்கனவே உபநிடதங்களில் இக்கருத்து எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது. இப்புற உலகம் காணப் படுவது போல் உண்மையானதன்று. பிரமமே உண்மை யானது. இதுவே, ஆத்மா. இது பசி, தாகம் ஆகிய உணர்ச்சி

175| கா. கைலாசநாதக் குருக்கள்
களுக்கு அப்பாற்பட்டது. துக்கம் மோகம் என்னும் இரண் டுக்கும் புறம்பானது. மூப்பும் இறப்பும் அற்றது. இதற்குப் புறம்பான நிலையில் நிற்றல் துன்பத்தையே பயக்கும். இதை விடத் துன்பம் தரவல்லது வேறு ஒன்றும் இல்லை. உண்மை யில் இதைவிடப் புறம்பானது ஒன்றுமே இல்லை. எனவே இவ்வுலகில் நிகழும் துக்கம், இன்னல் முதலியவற்றின் அனு பவம் பொய்யானது. ஐக்கியத்தின் உண்மை நிலையை உண ரும் ஒருவனுக்குப் பயம் இல்லை, துன்பமும் இல்லை. பிரமா னந்த உணர்வு வரப் பெற்றவனுக்குப் பயமே கிடையாது. ஐக்கியத்தை உணர்பவனுக்கு மோகம் எங்கிருந்து வரும்? அவனுக்குத் துக்கம் ஏது? பிரமம் ஆனந்தம் எனவும் கூறப் படும். ஆன்மம், ஆனந்த மயமானது. ஆனந்தமே பிரமம். உண்மையைக் கூறுவதாயின் ஆனந்தத்தில் இருந்தே இவை எல்லாம் தோன்றின. இதனுலேதான் தோன்றியவை எல்வாம் நிெைபற்றன. இவை மறையும்பொழுது ஆனந்தத் துள்ளேயே ஒன்றி விடுகின்றன.
உபநிடதங்களுக்குப் பிற்காலத்தில் கிளைத்தெழுந்த தரி சனங்கள் எல்லாம் உபநிடதங்களிலேயே வேரூன்றியுள்ளன. உபநிடதம் கூறும் கருத்துக்களின் அடிப்படையிலேயே போத ராயணரின் வேதாந்த சூத்திரம்? அமைந்துள்ளது. சங்கரர் விளக்கியுள்ள அத்துவித? வேதாந்தமும், இராமானுஜர் எடுத்துக் கூறிய விசிட்டாத்துவிதமும் மாத்துவர் புகட்டிய துவிதமும் நீலகண்டர் எடுத்து விரித்துக் கூறிய சிேவாத்து விதமும்’ உபநிடதங்க்ளே முதல் நூல்களாகக் கொண்டே அமைந்துள்ளன. உபநிடதம் கூறும் உயர்ந்த கருத்துக்களை றிலக்களமாகக் கொண்டே இந்தியாவில் எழுந்த தத்துவக் கொள்கைகள் மட்டுமின்றிச் சமயக் கொள்கைகளும்-ஏன் புற சமயங்களான பெளத்தமும் கூடாதாம் தாம் கூறும் உண்மை களே உணர்ந்து நூல்களை உருவாக்கியுள்ளன.

Page 98

XX சூத்திரங்கள்

Page 99

“அறிவு இருவகைப்படும். ஒன்று உயரிய அறிவு. இது பிரமத்தைப் பற்றியது. மற்றையது இருக்கு, யசுர் சாமம் அதர்வம், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஷம் என்பனவற்றைப் பற்றி எழுவது.?? இவ்வாறு உப நிடதம் ஒன்று எடுத்துக் கூறுவதைக் காண்கின்ருேம். இத் தொடர்பில்தான் ஆறு வேதாங்கங்களும் முதன் முதலாகக் கூறப்பட்டுள்ளன எனலாம். அங்கங்கள் எனினும் உறுப்புக் கள் எனினும் பொருந்தும். வேதங்களுடன் தெருங்கிய தொடர்பு பெற்றவையாய், விளக்கங் கூறும் நோக்கம் ஒன் றயே கொண்டு வேதங்களைத் தெளிந்து அறிவதற்கு இன் றியமையாத நூல்களாய் இவை விளங்குகின்றன.இவ்வேதங் களின் தோற்றுவாய் பிராமணங்களிலும் ஆரணியகங்களி லுமே காணப்படும். வேள்வி முறைகளை விளக்கும் சந்தர்ப் பத்தில் சொல்லின் ஒலி இயல்பு, இலக்கணம் சொல் அமையு மாறு,அதை முறையாகப் பிரித்துக் காட்டிக் கூறும் விளக்கம், யாப்பு, வேட்கும் வேளையை யறிவதற்குத் துணை நிற்கும் கோள்களின் நிலை முதலிய ஆறு விஷயங்களைப் பற்றிப் பிரா மணங்களும் ஆரணியகங்களும் குறிப்பிடுகின்றன. இவை பற்றிக் கூறப்பட்ட விளக்கங்கள் சிறிது சிறிதாக விரிந்து உருவாகத் தொடங்கின. இவ்வாறு விரித்துக் கூறப்பட்ட தோடு அமையாது இவை சிேறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட தனித்தனித் துறைகளாக அமைக்கப்பட்டன. ஒவ்வொரு அங்கமும் தனித்தனி பிரிவுகளாகக் கிளைத்தெழுந்தன. பிரா மனங்கள், ஆரணியகங்கள், உபநிடதங்கள் போன்று இவை ம்ே உரியவாறு வெவ்வேறு வேதங்களுடன் தனித்தனி இணைக்கப்பட்டன. இவை பற்றி எழுந்த நூல்கள் புதிய தொரு நடையில் அமைந்து விளங்கின. செய்யுள் நடையல் லாத புதியதொரு நடையைக் கொண்ட குத்திரங்களைக் கொண்டு இவை ஆக்கப்பட்டுள்ளன.

Page 100
வடமொழி இலக்கிய வரலாறு 180
சூத்திரமெனினும் நூலெனினும் ஒக்கும். சில சொற்களை மட்டுமே கொண்டு சுருங்கிய நடையில் அமையும் சிறு சிறு வாக்கியமே சூத்திரம் என்றும் இதை விளக்கிக் கூறலாம். நூல்கள் பலவற்றை நெருக்கி இழையோட்டித் துணியை உரு வாக்குவது போல் சூத்திரங்களை ஒன்றுடன் மற்றது தொடர்புஉறும் வண்ணம் அமைத்து உருவாக்கப்படுவது இவ்வகை இலக்கிய நூல். சூத்திரங்களால் ஆக்கப்படுவத னுல் இது சூத்திரம் என ஆயிற்று. பல விபரங்களை எல்லாம் எடுத்துக் கூறும் சாஸ்திரங்களின் மூல நூல்கள் யாவும் சூத் திரங்களால் அமைந்து விளங்குவது நோக்கற்பாலது. பாணி னியின் அஷ்டாத்யாயீ வேதாந்தத்தின் மூலநூல் எனக் கொள்ளக்கூடிய பிரம சூத்திரம், ஆறு தரிசனங்களின் மூல நூல்களான மீமாம்ஸா சூத்திரம், சாங்கிய சூத்திரம், யோக சூத்திரம், நியாய சூத்திரம், வைசேஷிக சூத்திரம் முதலியன இதற்குஎடுத்துக்காட்டு. இவ்வகை அமைப்பைப் பெற்ற நூல்களை உலகில் உள்ள வேறெந்த மொழியிலும் காணுதல் அரிது.கருத்துத் தெளிவும் பார்த்தவுடன் படிப்பவர்களுக்குத் தாம் கூற இருக்கும் விஷயத்தை விளங்க வைக்கும் இயல்பும் அற்றவை எனினும் சொல்ல வேண்டுவது முழுவதையும் சுருக்கிச் சொல்ல முடியும் அளவிற்குச் சுருக்கிக் கூறும் ஆற் றல் இவற்றிற்கு உண்டு. ஒராண்மகவு பிறந்தால் வரும் இன் பம் சூத்திரத்தை அரை மாத்திரை குறுக்கி அமைப்பதனுல் உண்டாகும் என்னும் மரபு பற்றி ஏற்கனவே கூறப்பட்டது.
சூத்திரங்களாலமைந்த நூல்களுள் மிகப் பழையவை பிராமணங்களுடனும், ஆரணியகங்களுடனும் தொடர்பு உள்ளவை. ஐதரேய ஆரணியகத்தின் சில பகுதிகளே சூத்தி ரங்களாகக் காணப்படுகின்றன. இவை ஏனைய சூத்திரங்களை இயற்றியவர்களான ஆஸ்வலாயனர், செளநகர் முதலியவர் களால் இயற்றப்பட்டன என்பர். சாம வேதத்தின் உறுப்புக் களான சில பிராமணங்கள் கூட அமைப்பில் சூத்திரங்களை நிகர்க்கின்றன. இவற்றை வேதாங்கம் எனக் கருதுதல் பொருத்தம். கல்பம் என்னும் இன்னுெரு வேதாங்கம் கூறு வதையே பிராமணங்களும் கூறுகின்றன. இவ்விஷயங்களை

181 கா. கைலாசநாதக் குருக்கள்
எடுத்துச் சீராக்கி வரிசைப்படுத்தித் தனக்கென உள்ள நடை யில் கூறும் இவ்வேதாங்க நூலைக் கல்ப சூத்திரம் என்பர். வேள்வி முறை பற்றிய விதிகளைத் தொடர்ச்சியாகவும், நினை வில் எளிதில் பதியக் கூடியவாறும் நூலாக்குவதொன்றையே நோக்கமாக கொண்டு இதை இதன் ஆசிரியர் உருவாக்கினர். இது வேட்போருக்குப் பெரிதும் பயன்படும். பிராமணங்கள் கூறும் சிரெளத யாகங்களை எடுத்துரைக்கும் குத்திரங்கள் சிரெளத சூத்திரங்கள் எனப்படும். தினந்தோறும் வீட்டில் நிகழ இருக்கும் வீட்டு நிகழ்ச்சிகளைக் கூறும் நூல்கள் கிருஹ்ய சூத்திரங்கள் எனப் பெயர் பெறுவன.
சிரெளத சூத்திரங்களில் மூவகை அக்கினிகள் மூட்டும் வகையும், அக்கினி ஹோத்திரம், பெளர்ணமாஸ்யம், சோம யாகம் முதலிய வேள்வி முறைகளின் விவரங்களும் விளக்கப் பட்டுள்ளன. வேள்வி முறையைச் செவ்வனே விளங்க இவை இன்றியமையாதவை. மேலும், இந்திய சமய வரலாறு எழுதும் பொழுது இவை பெரிதும் பயன்படுவன.
கிருஹ்ய சூத்திரத்தில் அடங்கியுள்ள விஷயங்கள் பல் வேறு வகையின. இவை சமய வாழ்க்கையின் இயல்புகள் விரிவாய் விளக்க உதவுவன. பிறந்தவுடன் மட்டுமன்றித் தாயின் கருவில் நுழையும் அக்கணம் முதற் கொண்டே இனிப் பிறக்க இருக்கும் சிசுவுக்குத் தூய்மை கருதிச் செய்ய வேண்டிய கிரியைகளை ஒன்றன் பின் ஒன்ருக வரிசைப்படுத்தி இந்நூல்கள் கூறும். இக்கிரியைகளைச் சம்ஸ்காரங்கள் என்பர். எனவே மனிதன் கருவில் தோன்றுமுன் தொடங்கும் சம்ஸ் காரங்கள் இவன் இறந்தவுடனே நின்று விடாது. இவனது ஆன்ம ஈடேற்றம் கருதித் தொடர்ந்து நிகழ்வன. இவ்வாறு வீட்டில் நிகழும் கிரியைக்களைக் கூறும் கிருஹ்ய சூத்திரங்களை கொண்டு அக்கால வாழ்க்கை முறையினை ஒரளவிற்கு விரி வாக எழுதலாம். தாயின் கருவில் சிசு தோன்றுவதற்கு முன் நிகழும் கிரியை கர்ப்பாதானம். கர்ப்பாதானம் நிகழ்ந்து தான்குமாதங்களான பின் தோன்றிய கரு ஆண் மகவாக அமைதல் வேண்டும் என அவாவிச் செய்யப்படும் கிரியை

Page 101
வடமொழி இலக்கிய வரலாறு / 182
பும்ஸவனம். கருத் தோன்றியபின் ஆரும்மாதத்தில் நிகழ்வது சீமந்தம் என்னும் கிரியை. இவ்வாறு குழந்தை பிறந்தது முதல் நிகழும் கிரியைகளான ஜாதகர்மம், நாமகரணம், அன் னப் பிராசனம், நிஷ்கிரமணம், செளளம், உபநயனம், சமா வர்த்தனம், விவாகம் என்பன சுபகாரியங்கள்.இவை பூர்வக் கிரியைகள் என்றும் பெயர் பெறுவன. இறந்தபின் நிகழும் கிரியைகள் அபரக்கிரியைகள் எனப்படும். சிதையில் இட்டுத் தீமூட்டலாகிய தகனம், சஞ்சயனம், பாஷாணஸ்தாபனம் ஏகோதிஷ்டம், விருஷோத்சர்ஜனம், மாசிகம், சபிண் டீகரணம், ஆப்திக சிராத்தம், பிரத்யாப்திக சிராத்தம்என் றெல்லாம்.இக்கிரியைகள் விரிந்து நிகழ்வன. இவை எல்லாம் வீட்டில் நிகழ்வன ஆதலின் கிருஹ்யகர்மங்கள் எனப்படும். இவையன்றி இல்வாழ்வான் நாள்தோறும் செய்யவேண்டிய ஐம்பெரும் வேள்விகளையும் இந்நூல்கள் கூறும். இவை தேவ யஞ்ஞம், பிதிர்யஞ்ளும், தீ வளர்த்தல், நீர்க்கடன் அதிதி ஓம்பல், பிரமயஞ்ஞம் என்பன.மேலும் காலைக் கடன், மாலை கடன், தர்ச பூரண மாஸ்ம், அக்கினி ஹோத்திரம், சாதுர் மாஸ்யம் முதலிய சிரெளத கிரியைகள் பற்றியும் இங்கு குறிப்புக்கள் உண்டு. பிதிரர்களுக்குக் கடமை ஆற்றும் முக மாக அமைந்துள்ள சிராத்த முறைகள் இங்கு விரிவாக இடம் பெற்றுள்ளன.
சிரெளத சூத்திரங்களேயும், கிருஹ்ய சூத்திரங்களையும் விட இன்னெருவகைச் சூத்திரங்களும் உண்டு. இவை தர்ம சூத்திரங்கள் என்பன. இவற்றைக் கிருஹ்ய சூத்திரங்களின் தொடர்பு நூல்கள் என்பர். இவை அறநெறி கூறுவன: ஒவ்வொருவனும் ஆற்றவேண்டும் கடமைகள் இவை என எடுத்து வற்புறுத்தி விதிப்பன. இங்கு வர்ணுச்சிரம தர்மங் கள் விரிவாகக் காணப்படுபவன. தர்ம சூத்திரங்களும். சிரெளத, கிருஹ்ய சூத்திரங்களைப் போல் வேதங்களுடன் தொடர்பு பூண்டு கிரியைகளை விளக்கும் கல்ப சூத்திரங் களின் உறுப்பு நூல்களாக இருப்பது நோக்கற்பாலது.
மேலும், கிரெளத சூத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்வ சூத்திரங்களும் கல்ப சூத்திரங்களுடன் தொடர்பு

183 / கா. கைலாசநாதக் குருக்கள்
உடையவை. யாக வேதிகளையும், குண்டங்களையும் அமைப் பதற்கு வேண்டிய அளவுகளைக் கூறும் இந்நூல்கள் இந்தியா வில் எழுந்த பழைய கேத்திர கணித முறை அமையுமாற் றைச் சுட்டுகின்றன. சுல்வம் என்பதற்கு அளக்கும் நூல் என் பது கருத்து.
சிரெளத குத்திரங்களும், கிருஹ்ய சூத்திரங்களும் வேதங்களை விளக்கத் துணை புரியும் நூல்கள். கிரியைகள் செய்யும் முறையை மட்டும் கூறுவதுடன் நின்றுவிடாது மந்திரங்களைப் பிரயோகிக்கும் முறையையும் இவை விரித் துரைக்கின்றன. இச்சூத்திரங்களில் கூறப்பட்டுள்ள பிரயோ கங்கள் மந்திரங்களின் தெளிவற்ற பகுதிகளையும் விளங்கிக் கொள்ளவும் பயனுறுகின்றன. சில சூத்திரங்கள் மந்திரங் கள் முழுவதையும் கூறுகின்றன. சில மந்திரங்களின் தொடக் கத்தை மட்டும் குறிப்பிட்டு விட்டுத் தொடர்ந்து அவற்றின் பிரயோகங்களைக் கூறுகின்றன.
கிருஷ்ண யசுர் வேதத்தைச் சார்ந்த சிரெளத சூத்திரர் களும் கிருஹ்ய சூத்திரங்களும் கிருஷ்ண யசுர் வேத சங்கிதையில் காணப்படுமாறே மந்திரங்களைக் குறிப்பிடுகின் றன. ஆனல் இப்பாடல்களின் முதற்ருெடக்கம் மட்டுமே இங்கு உள்ளது. இதில் இருந்து இம்மந்திரங்கள் இச்சாகை யைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிந்தவை என்பது தெளிவா கின்றது. இருக்கு சங்கிதை அல்லது அதர்வ சங்கிதையில் இருந்து எடுக்கப்படும் மந்திரங்கள் மட்டும் முழுவதும் கூறப் பட்டுள்ளன. இதை விடச் சில சூத்திரங்களில் சங்கிதைகளில் காணப்படாத மந்திரங்கள் சில உள. இரு கிருஹ்யசூத்திரங் களில் சூத்திரங்களின்றும் வேருக மந்திரங்கள் அமைந்துள் ளன. கோபில கிருஹ்ய சூத்திரத்திற்கு வேண்டிய மந்திரங் களும், ஆபஸ்தம்ப கிருஹ்ய சூத்திரத்தைச் சேர்ந்த மந்திர பாடமும் கொண்டமைந்த இந்நூல் மற்திரபிராமணம் எனப் பெயர் பெறும்.
ஆபஸ்தம்பர், பெளத்தாயனர் என்னும் இருவர் வகுத்த வழி கிருஷ்ண யசுர் வேதம் பற்றியது. இவர்களால் ஆக்கப்

Page 102
வடமொழி இலக்கிய வரலாறு / 184
பட்ட கல்பசூத்திரங்கள் நான்கு பிரிவுகளால் அமைந்த சூத் திர நூல்களாக விளங்குவன. அவை சிரெளத சூத்திரம், கிருஹ்ய சூத்திரம், தர்ம சூத்திரம், கல்வ சூத்திரம் என் பன. எனவே ஆபஸ்தம்ப சிரெளத சூத்திரம், ஆபஸ்தம் கிருஹ்ய சூத்திரம், ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம், ஆபஸ்தம்ப சில்வ சூத்திரம் என்றும் போதாயன சிரெளத சூத்திரம், போதாயன கிருஹ்ய சூத்திரம், போதாயண தர்மசூத்திரம், போதாயன சுல்வ சூத்திரம் என்றும் இவை பெயர் பெறுவன. இந்நால்வகைச் சூத்திர நூல்கள் ஒன்ருேடொன்று தொடர் புற்று விளங்குவதை நோக்குமிடத்து, இவை ஒரே நூலின் நான்கு பகுதிகளோ எனளண்ணக் கூடியதாக இருக்கின்றது. கருத்துக்களைத் தெளிவாகவும், தொடர்ச்சியாகவும், முழு தாகவும் எடுத்துக் கூறுவதில் இந்நூல்கள் ஈடு இணை அற்றவை.
இதுகாறும் கூறப்பட்ட சூத்திரங்களும் வாதூல சூத்தி ரங்களும் வைகானச சூத்திரங்களும் தைத்திரீய சங்கிதை யைச் சார்ந்தவை. சூத்திரங்களை இயற்றியவர்களுள் பெளதாயனரே முந்தியவர். பாரத்துவாசர், ஆபஸ்தம்பர், இறிரண்யகேசி என்பவர்கள் அடுத்தடுத்து வா ழ் ந் து தொடர்ந்து சூத்திரங்களை இயற்றி வந்தனர். மாணவ சிரெளத சூத்திரம், மானவ கிருஹ்யகுத்திரம், மான வசுல்வ சூத்திரம் என்பனவும், மானவ கிருஹ்ய சூத்திரத்துடன் தொடர்புள்ள காடக கிருஹ்ய சூத்திரமும், மைத்திராயணி சங்கிதையைச் சார்ந்தவை.
நான்கு வகைப்பட்டு நிற்கும் சூத்திரங்களைத் தழுவி விளங்கும் கல்பசூத்திரம், *ஒவ்வொரு வேதத்திற்கும், பெளதாயன ஆபஸ்தம்ப சூத்திரங்களைப் போன்று இருந் ததா?? என்னுங் கேள்விக்கு விடை இறுத்தல் எளிதன்று. கிருஷ்ண யசுர் வேதத்தைச் சாராத நூல்களில் அங்கும் இங் குமாகச் சிரெளத கிருஹ்ய சூத்திரங்கள் மட்டும் தனியே காணப்படுவன. எனினும், இருக்கு வேதத்துடனும், சுக்கில யசுர் வேதத்துடனும் தொடர்புள்ள தர்ம சூத்திரங்கள்,

185 / கா. கைலாசநாதக் குருக்கள்
கிடையா எனக் கூறலாம். கோத்யாயன சிரெளத சூத்திரமும் பாரஸ்கர கிருஹ்ய சூத்திரமும், காத்யாயன சுல்வ சூத்திர மும், சுக்கில யசுர் வேதத்தைச் சார்ந்தன. அங்ங்ணமே ஆஸ்வ லாயன சிரெளத சூத்திரம், ஆஸ்வலாயன கிருஹ்ய சூத்தி ரம், சாங்காயன சிரெளத சூத்திரம், சாங்காயன கிருஹ்ய சூத்திரம் இருக்கு வேதத்தைப் பற்றி அமைந்துள்ளன. சாம வேதத்தைச் சார்ந்தவை லாட்யாயன சிரெளத சூத்திரமும் திராஹ்யாயன சிரெளத சூத்திரமும், ஜைமிநீய கிருஹ்ய சூத்திரமும், ஜைமிநீய சிரெளதசூத்திரமும், கோபிலகிருஹ்ய சூத்திரமும், காதிர கிருஹ்ய சூத்திரமுமாம். ஆர்ஷேய கல் பம்? எனப்படும் மசக கல்பசூத்திரமும் சாமவேதத்தைச் சார்ந்தது. இது சாமம் இசைக்கும் முறையினை விளக்குவது; இது பஞ்ச விம்ச பிராமணத்துடன் தொடர்புள்ளது; லாட் யாயன சூத்திரத்தைக் காட்டிலும் முந்தியது. அதர்வ வேதத் தைச் சார்ந்த வைதான சிரெளத குத்?திரம் மிகவும் பிந் திய காலத்து நூல். அதர்வ வேதத்தின் மதிப்பை மேலும் உயர்த்தி அதை வேதமாக இடம்பெறச் செய்வதாக இது எழுந்ததாகத் தெரிகின்றது. இவ்வேதத்தைச் சார்ந்த "கெள சிக சூத்திரமும் பழைய நூல் மட்டும் அன்றி முக்கியமானதா கவும் கருதப்படும். இது கிருஹ்ய சூத்திரமாகப் பெரும்பா லும் அமைந்து கிருஹ்ய கர்மங்களைப் பற்றிக் கூறும். அதர்வ மந்திரங்களை மாந்திரீக ரீதியிற் பிரயோகிப்பதற்கு வேண்டிய விதிகளையும், பல்வகை முறைகளையும் விளக்கிக் கூறும் இந் நூல் அதர்வ வேதத்தின் உறுப்பு நூல். இது இந்தியாவில் வழங்கிய பழைய மாந்திரீக முறைகளை அறிவதற்கு வழி கோலும் நூல். இவ்வாறே சாம வேதத்தைச் சார்ந்த சாம விதானபிராமணமும் மாந்திரீகத்தைப் பற்றிக் கூறுவதாய்ப் பிராமணம் எனப் பெயர் பெறினும் சூத்திர நூலாகப் கருதப்படும்.
கிருஹ்ய சூத்திரங்களை அடுத்துத் தோன்றியன சிராத்த கல்பங்கள்? இவை சிராத்தங்கள் நிகழ்த்த வேண்டுமாற்றை விளக்குவன. பிதிர்மேதகுத்திரங்களும் இத்தகையனவே. இவற்றுட் சிலவற்றை வேதங்களுடன் இணைத்து அவற்றின் உறுப்பாகக் கொள்ளுவர். சில மிகப் பிற்காலத்தில் எழுந்

Page 103
வடமொழி இலக்கிய வரலாறு / 186
தவை. இச்சூத்திர நூல்கள் கிரியை முறைகளை முற்றிலும் கூறி முடித்துவிடவில்லை. உபநிடதங்கள் புகட்டும் உண்மை களைக் காலத்துக்குக் காலம் தொடர்ந்து எழுந்த உரை நூல் கள் விளக்கிக்கொண்டே இருப்பது போல், வைதிகக் கிரியை முறைகளை, கிரியை விளக்கங் கூறும் இத்தகைய நூல்கள் பல, விரித்துக் கூறி வந்தன. இவ்வாறு கூறுதல் நெடுங்கால மாகவே தொடர்ந்து நடைபெற்று வருவது. சிரெளத கிருஹ்ய சூத்திரங்களை அடுத்து எழுந்த நூல்கள் "பரிசிஷ்டங் கள், சூத்திரங்கள் சுருக்கிக் கூறும் கருத்துக்களை இவை நன்கு விரித்துக் கூறுவன. கோபில கிருஹ்ய சூத்திரத்”துடன் தொடர்புள்ள கிருஹ்ய சங்கிரக பரிசிஷ்டமும், “கர்மப் பிர தீபமும்? முக்கியமானவை. அதர்வ பரிசிஷ்டங்கள்? மாந் திரீக முறைகளையும், நன்னிமித்தம், துர்நிமித்தம் ஆகிய சகு னங்களையும் இது போன்ற வேறு விஷயங்களையும் கூறுவன. அக்காலத்தில் நிலவிய சமய வழக்கங்கள் இவை என அறி வதற்கு இவை துணை நிற்பன. "வைதான சூத்திரத்தின் உறுப்பாய் அமைந்து விளங்கும் பிராயச்சித்த சூத்திரத்தின் பரிசிஷ்டங்கள் பிராயச்சித்தங்களைப் பற்றிக் கூறுகின்றன. பரிசிஷ்டங்களுள் பழைய நூல்கள் இவைகளே. கிரியை முறைகளை விளக்க இச்சூத்திர இலக்கியத்தை அடுத்து எழுந்த நூல்கள் பல்வேறு வகையின. இவற்றுட் சில பிர யோகங்கள்"; சில பத்ததிகள்? எனப்படுவன: சில காரிகை கள்? என்று பெயர் பெறுவன. காரியைகள் கிரியை முறை களை விளக்கும் ஒருவகைச் செய்யுட்கள். இவையும் ஏதாவது வேதத்துடன் தொடர்பு கொண்டு நித்திய நைமித்திய கிரியைகளை விளக்குகின்றன. விவாகக் கிரியைகள், இறந் தோரைப் புதைத்தல், தீக்கடன், நீர்க்கடன், சிராத்தம்" முதலிய கிரியைகளைக் கூறும் இந்நூல்கள் மிக முக்கிய மானவை. இவற்றுட் பெரும்பாலானவை கைப்பிரதி வடிவிலும் சில அச்சேறியும் காணப்படுகின்றன.
ஒலி இயலை விளக்கிக் கூறும் சிட்சை என்னும் வேதாங் கம் கல்ப சூத்திரங்களளவிற்குப் பழைமையானவை. கல்ப சூத்திரங்கள் பிராமணங்களின் உறுப்பு நூல்களாக அமைந் துள்ளன. சிட்சை நூல்களோவெனின் வேத சங்கிதைகளு

187 / கா. கைலாசநாதக் குருக்கள்
டன் நேர்த் தொடர்பு உடையவை. சிட்சை பயிற்சி எனப் பொருள்படும். இப்பயிற்சி, வேதம் ஓதுவதற்கு மாணவன் பெறும் பயிற்சியையே குறிக்கும். இது சங்கிதை நூல்களில் வரும் வாக்கியங்களை எல்லாம் உரியவாறு உச்சரித்து வேதங் களை ஒதுவதற்கு வேண்டிய முறையைப் பயிற்றுவிக்கும் நூல் களைக் குறிப்பது. தைத்திரீய உபநிடதத்தில்தான் இவ் வேதாங்கத்தைப் பற்றிய குறிப்பு முதன் முதலில் வருகின் றது. கல்ப சூத்திரங்கள் எழுந்தவாறே எழுத்துக்கள் *மாத் திரை சாமம், சந்தி? முதலியன கூறும் சிகூைடி நூல்களும் வழிபாட்டுக்கு இன்றியமையாதவாறு வேண்டப்பட்டு வேதங்களின் உறுப்புக்களாய் எழுந்தன. யாகாதி கிரியை களை உரியவாறு இயற்றக் கிரியைகள் பற்றிய அறிவு மட் டும் போதாது. வேதங்களைத் தவறெதுவும் இன்றி ஒதவும் தெரியவேண்டியது அவசியம். சிட்சை தோன்றிய பொழுது சங்கிதைகள் வகுக்கப்பட்டு இப்பொழுது வழங்கிவரும் தோற்றம் பெற்றுவிட்டன என்பது இதிலிருந்து தெளிவா கின்றது.
சில ஆராய்ச்சியாளர் இருக்கு சங்கிதை இருடிகளால் முதன்முதலில் அமைக்கப்பட்ட நிலையில்இப்பொழுது காணப் படுவதில்லை என்பர். சிலர் இச்சங்கிதையிற் காணப்படும் சொல் எதுவும் நீக்கப்படவோ புதிதாக ஏதேனும் சொல் சேர்க்கப்படவோ இல்லை என்னும் உண்மையை வற்புறுத் திக் கூறுவர். இவ்விரு கொள்கைகளும் ஆராயப்பட வேண்டி யவை. சொற்களை உச்சரிக்கும் முறையையும் நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் ஒலிக்கப்படும் முறையையும், விட்டிசைக்கப்படவேண்டிய இடங்களில் எல்லாம் விட்டி சைக்காது சேர்த்திசைக்கும் முறையையும் உற்று நோக்கு வோமேயானுல் இயற்கையாக ஒலிக்கும் முறையை விடுத்து ஒலியியல்பு கூறும் விதிகளைக் கடைப்பிடித்தே சங்கிதையை இன்று எமக்குக் கிடைக்கும் வடிவில் உருவாக்கினர் என்று நாம் உணர முடிகின்றது. இவ்வாறு துணிய உதவுவது பாடல்களில் அமைந்து கிடக்கும் யாப்பு முறையே. மொழி யியல் வல்லுனர்களின் கைவண்ணத்தால் மெருகூட்டப்பட்

Page 104
வடமொழி இலக்கிய வரலாறு / 188
டவை, சங்கிதைகள். இச்சங்கிதை பாடத்தைத் தவிர பத பாடமும் உண்டு. சங்கிதைப் பாடம் சிட்சை கூறும் விதி களுக்கு அமைய விளங்குவது. பதபாடத்திலோ எனின் சொற் கள் ஒலியியல் விதிக்கு இணங்கப் பெற்ற இணைப்புகள் நீங்கிய வையாய்த் தனித்தனி சொற்களாகப் பிரிந்து வருவன. இவ் வாறுசொற்கள் பிரிந்து வரும்பொழுது அவற்றின் பீஸ்வரங்" களும் உரியவாறு வேறுபடுவது நோக்கற்பாலது.
சிட்சை என்னும் வேதாங்கத்தின் தொடர்பால் எழுந்த வையே சங்கிதா பாடம், பதபாடம்” என்னும் இரு பாடங் கள். இவ்வேதாங்கத்தின் பாற்படும் மிகப் பழைய நூல்கள் *பிராதிசாக்யங்கள்” என்பன. சங்கிதையைப் பதபாடமாக அமைப்பதற்கு வேண்டிய விதிகள் இங்கு முறையாகக் கூறப் பட்டுள்ளன. உச்சரிக்கும் முறை ஸ்வரங்களின் அமைப்பு, சொற்கள் ஆக்கம் பெறும் பொழுது நிகழும் சந்தி, சொற் களின் ஈறும் முதலும் புணரும் முறை, குறில் நெடிலாதல் முதலியன இப்பிராதிசாக்கியங்கள் கூறும் விஷயங்கள். சங் கிதையின் ஒவ்வொரு சாகைக்கும் பிராதிசாக்கியம் உண்டு. இதனற்ருன் பிராதி சாக்யம்? என்னும் பெயர் இதற்கு ஏற்படலாயிற்று. இருக்கு வேதப் பிராதிசாக்கியத்தை ஆஸ்வலாயனரின் குரு எனக் கருதப்படும் செளநகர்? இயற் றினர் என்பர். இது செய்யுள் நடையில் அமைந்துள்ளது. முதலில் சூத்திரங்களால் உருவாகிப் பின் மாற்றம் பெற்று இவ்வடிவில் அமையப் பெற்றது என்று கொள்வர். இவற்றை விளக்க எழுந்த உரை நூல்கள் இவற்றைச் சூத்திரங்கள் எனக் குறிப்பிடுகின்றன.*தைத்திரீய பிராதிசாக்ய சூத்திரம்? தைத்திரீய சங்கிதையைச் சேர்ந்தது. காத்தியாயனர் , * வாஜசநேயி பிராதிசாக்ய சூந்திரத்தின் ஆசிரியர். இது வாஜசநேயி சங்கிதையைச் சேர்ந்தது. அதர்வ வேதத்துடன் தொடர்புடையது. *அதர்வ வேதப் பிராதிசாக்ய சூத்திரம், இது செளநக சாகையைச் சேர்ந்தது. சாம வேதத்தைச் சார்ந்த இவ்வகை நூல்களுள் சோமப் பிராதி சாக்யம்” முக்கியமானது. புஷ்ப குத்திரம்? என்னும் நூல் சாமவேதத் தின் உத்தர கானத்தைப் பற்றிய பிராதிசாக்யமாகும்.

189 / கா. கைலாசநாதக் குருக்கள்
பஞ்சவித சூத்திரமும் சாமம் பாடும் முறையினை விளக்கும் இவ்வகை நூல்.
இந்தியாவில் இலக்கண நூல்கள் தோன்றி வளர்ந்த வரலாற்றைக் கூறுபவர்கள் பிராதிசாக்யத்தையே முதன் முதலில் குறிப்பிடுவர். இவை இலக்கண நூல்களல்ல. எனி னும் இலக்கண நூல்கள் கூறவேண்டும் விஷயங்களைக் கூறுகின்றன. இந்நூல்கள், பல இலக்கண நூலாசிரியர்களை, மேற்கோள்களில் குறிப்பிடுவதில் இருந்து இலக்கணம் அக் காலத்தில் எவ்வாறு வளர்ந்து விளங்கிற்று என ஊகித்தறிய முடிகின்றது. பிராதிசாக்யங்கள் தோன்றிய காலம் முதல் இன்றுவரை சங்கிதைகள் எவ்வாறன திரிபுகளும் இன்றி அதே வடிவில் பல நூற்ருண்டுகளாக வழங்கி வந்திருக்கின் றன என்பதைப் பிராதிசாக்யங்களே அறிவுறுத்துகின்றன.
வேதாங்க சிட்சை இலக்கியத்தில், மிகப் பழைய நூல். களான இப்பிராதிசாக்யங்கள் மட்டுமல்லாமல் பிற்கால நூல்களும் பல இருக்கின்றன. இவை சொல்லியல் பற்றி யவை; சிட்சை நூல்களாகவே கொள்ளப்படுபவை. பாரத்து வாசர், வியாசர், வசிஷ்டர், யாஞ்ஞவல்கியர் என்பவர்கள் இவற்றை இயற்றியவர்கள். இவை பிராதிசாக்யம் வகுத்த வழியையே பின்பற்றுவன: இச்சிட்சை நூல்களிற் சில பழைய நூல்களாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஏதாவதொரு பிராதிசாக்யத்துடன் தொடர்புடையது. உதாரணமாக வியாச சிட்சை தைத்திரீயபிராதி சாக்யத் தைச் சார்ந்தது
செளநகர், காத்தியாயனர் என்னும் இருவரும் பிராதி சாக்யங்களை இயற்றியோர் எனக் கருதப்படுவர். இவர்கள் இயற்றிய நூல்கள் வேதாங்கங்கள் எனக் கொள்ளுவது பொருத்தம் ஏனெனில் இவை வேத சங்கிதைகளைப்பற்றி யவை. ஆனல் இவற்றை வேதாங்கங்கள் என்று கூறும் மரபு. கிடையாது. இவை அநுக்கிரமணிகள் என்றே இன்று வழங்கி, வருகின்றன. வேத சங்கிதைகள் கூறும் பகுதிகளின் பட்டியல்

Page 105
வடமொழி இலக்கிய வரலாறு / 190
களாகவும், வரிசைப்படுத்திக் கூறும் நூல்களாகவும் குறிப்பகராதிகளாகவும் இவை அமைந்துள்ளன. செள நகர் இருக்கு வேதப் பாடல்கள் பாடிய இருஷிகளின் வரிசை கூறும் அநுக்கிரமணியை அமைத்தனர். இருக்கு வேதப் பாடல்களின் யாப்புப் பற்றிய வரிசையும் இவர் யாத்ததே. இதே போன்று இருக்கு வேதத் தெய்வங்களின் வரிசையையும், சூக்தங்களின் வரிசையையும் இவர் தனித் தனி அமைத்துள்ளார். சர்வாதுக்கிரமணி என்னும் நூல் காத்தியாயனர் இயற்றியது. எல்லாவற்றையும் வரிசைப்படுத் திக் கூறுவது இந்நூல். இது சூத்திரங்களால் அமைந்துள் ளது. ஒவ்வொரு சூக்தத்தின் முதல் தொடக்கத்தையும், சூக்தங்களிற் காணப்படும் பாட்டுக்களின் எண்ணிக்கையை யும், சூக்தங்களை இயற்றிய இருஷிகளின் பெயர்கள், கோத் திரம் முதலிய விவரங்களையும், தனித்தனி பாடல்களால் போற்றப்பட்ட தெய்வங்களின் பெயர்களையும், பாட்டுக்களை அமைக்க எடுத்தாளப்பட்ட யாப்பு முறை பற்றிய குறிப்புக் களையும் இந்நூல் எடுத்துக் கூறுகின்றது. *பிருகத்தேவதா? என்னும் நூலையும் இருக்விதானம் என்னும் நூலையும் இயற் றியவர் செளநகரே யாவர். இவை ஒரே செளநகர் இயற் றியவை அல்ல. இவரின் பெயரைக் கொண்டு இவரின் வழித் தோன்றல்களான இருவர் இயற்றியிருக்கலாம் எனச் சிலர் இதை மறுத்துரைப்பர். இருக்கு வேத சூக்தங்கள் போற்றிக் கூறும் தெய்வங்களின் வரிசையை விரிவாகக் குறிப்பிடும் நூல் பிருகத்தேவதை ஒன்றே. தெய்வங்களின் வரலாறு கூறுவதன் காரணமாக இந்நூல் இந்தியக் கதை இலக்கியத் தின் வளர்ச்சிக்குப் பெரிதும் வழிகோலியது என்பர். வர லாறு கூறும் நூல்களுள் இது முதலில் வைத்து எண்ணத் தக்கது. இதிற்காணப்படும் யாப்புமுறை திருஷ்டுப் என்னும் யாப்பைக் கையாளும் வேதத்திற்கும் சுலோகத்தையே பெரி தும் கொண்டு விளங்கும் இதிகாசத்திற்கும் இடையில் எழுந் திருக்கலாம் என்பதை உணர்த்துகின்றது. இந்நூலுக்கும் மகா பாரதத்திற்கும் சில கதைகள் பொதுவாகக் காணப்படு கின்றன. ஆனல் பாரதத்தில் இருப்பது போல கதை இங்கு விரிந்தமையவில்லை. இருக்விதானமும் இவ்வாறு வரி

191| கா. கைலாசநாதக் குருக்கள்
சைப்படுத்திக் கூறும் நூல் ஒவ்வொரு சூக்தத்தையும் தனித் தனி பாட்டையும் படிப்பதனுல் ஏற்படும் மந்திர சக்தியை யும் இது எடுத்துக் கூறுகின்றது. இது ஏற்கனவே கூறிய சாம விதான பிராமணத்தை நிகர்க்கும் மிகப் பழைய காலத்தி லேயே வேத சங்கிதைகள் இப்பொழுது காணப்படும் இதே வடிவில் இதே பிரிவுகளை உடையனவாய், இதே யளவான பாடல்களுடன் இற்றைய உருவத்தில் விளங்கின என்பதை இவ்வதுக்கிரமணிகள் அறிவுறுத்தும்.
வேதாங்கங்களுள் ஒன்ருன நிருக்தம் என்னும் பிரிவைச் சார்ந்தது யாஸ்கர் இயற்றிய நிருக்தம். இது மட்டுமே இன்று எமக்குக் கிடைத்திருக்கும் நிருக்த நூல். இதுவும் இருக்கு சங்கிதை அன்றுள்ள நிலையிலேயே இன்றும் விளங்கு கின்றது என்னும் உண்மையை நன்கு வலியுறுத்துகின்றது. யாஸ்கர், நிகண்டுகளை இயற்றியவர் என்பர். இது தவறு. இவர் ஏற்கனவே வழக்கிலிருந்த நிகண்டுகளுக்கு உரைவகுத் தவர். பரம்பரையாக வழங்கி வந்த நிகண்டுகளை எளிதில் விளங்க வைக்கும் நோக்குடனேயே தாம் நூல் எழுதியதை யாஸ்கரே குறிப்பிட்டுள்ளார். சொற்களை இங்கு ஐந்து தொகுதிகளாகப் பிரித்துள்ளார். முதற் பிரிவு நைகண்டுக காண்டம்” என்பது. கருத்துக்களைக் கவனித்துச் சொற்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இங்கு மூன்று தொகுதிகள் உண்டு. இரண்டாம் பிரிவு, நைகம காண்டம் என்பது. படிப் போர் மனதில் ஐயம் விளைவித்து மயங்கவைக்கும் வேதச் சொற்களும், அருகி வருவதால், கருத்துத் தெளிவு பெருத சொற்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. மூன்ரும் பிரிவாகிய தைவத காண்டத்தில் யாஸ்கர் தெய்வங்களை மண், விண், இடைவெளி என்பவற்றுடன் தொடர்பு காட்டி மூவகைப் பிரிவுபடுத்திக் கூறுகின்ருர், வேத விளக்கங் கூறும் முறைக்கு இத்தொகுதி நூல்தான் தோற்றுவாய். நிருக்தங் கூறும் முறையைப் பின்பற்றி இந்நிகண்டுகளுக்கு விளக்கங்கள் எழுந்தன. வேதங்களிலுள்ள பாடல்களில் அக்காலத்தில் தெளிவுபெருத பாடல்கள்தாம் இச்சந்தர்ப்பத்தில் விளக்கம் பெறுகின்றன. இதை அடுத்து நாளடைவில் வேதங்கள் முழு

Page 106
வடமொழி இலக்கிய வரலாறு / 192
வதற்குமே தொடர்ச்சியான விளக்க உரைகள் தோன்றலா யின. இதில் இருந்து யாஸ்கர் காலத்துக்கு மிகவும் முன்னரே த் துறையில் ஈடுபட்டு நூல்கள் அமைத்தனர் என்பதும் யாஸ்கருடன் இம்மரபு நின்றுவிடாதவாறு இவ்வகை நூல் கள் தொடர்ந்து எழுந்தன என்பதும் தெளிவாகின்றது.
சந்தஸ், ஜ்யோதிஷம் என்னும் இரு வேதாங்கங்களைச் சேர்ந்த நூல்கள் பல இருப்பினும் இவற்றுள் பழைய நூல் கள் எதுவும் எமக்குக் கிடைத்தில. சாமவேதத்தைச் சார்ந்த நிதான சூத்திரம் யாப்பு முறையைக் கூறும். இது இலக்க ணத் தொடர்பு கொண்டது. பதஞ்சலி இதை இயற்றியவர் என்பர். பிங்கலரால் இயற்றப்பட்ட சந்தஸ் என்னும் நூல் இரு பிரதி பேதங்களை உடையது. இப்பிரிவுகள் இருக்கு, யசுர் ஆகிய இரு வேதங்களைச் சார்ந்தன எனக் கூறுவர். எனினும் சந்தஸ் பிற்காலத்தைய நூலே என்பது பெரும்பாலோரது கொள்கை. ஏனெனில்,இது சம்ஸ்கிருத இலக்கியத்தில்?உள்ள பாட்டுக்களின் யாப்பு முறையை மட்டுமே கூறி நிற்கும். ஜ்யோதிஷ வேதாங்கம் செய்யுள் வடிவாக அமைந்த சிறிய நூல். இது யசுர் வேதத்துடன் தொடர்பு பெறுகின்றது. இங்கு நாற்பத்து மூன்று பாடல்கள் இருக்கின்றன. இருக்கு வேதத்தைச் சார்ந்த ஜ்யோதிஷ வேதாங்கமும் இவ்வாறு முப்பத்தாறு பாடல்களை உடையதாகக் காணப்படுகின்றது. சூரிய சந்திரர்களின் நிலைகளையே இந்நூல்கள் கூறுகின்றன. உரை நடையில் இது அமைந்திருப்பதே இதைப் பிற்காலத்து நூலாகக் காட்டும் என்று கூறுவர்.
வியாகரண வேதாங்க நூல் ஒன்ருவது நமக்கு கிடைத் திலது. வேத விளக்கங் கூறும் மரபு வரத் தொடங்கிய பொழுது இவ்வேதாங்கமும் தோற்றியிருத்தல் கூடும். ஒவ் வொரு வேத சாகையையும் வளர்க்கும் ஆற்றல் இதற்கே உண்டு. ஆரணியகங்களிலேதான் இலக்கண பரிபாஷைச் சொற்கள் முதலில் காணப்படுகின்றன. நமது கைக்கெட்டிய முழு இலக்கண நூல்களுள் பழையது பாணினியமே. இங்கு வைதிக இலக்கணம் விரிவாகக் கூறப்படாது சிற்சில விதிகள்

193 கா. கைலாசநாதக் குருக்கள்
மட்டும் கூறப்படுவது நோக்கற்பாலது. இந்நூல் வேத சாகை களுள் ஒன்றுடனுவது இணைக்கப்படாதிருப்பதும் கவனிக்க வேண்டுவதே. இது எழுந்த காலம் சமயப் பற்றற்ற தனி நிலையில் நூலமையச் சூழ்நிலை பொருந்திய காலம், சமயத் துடன் தொடர்பு பெற்றுச் சமய அடிப்படையிலேயே சாஸ்தி ரங்கள் தோன்றின எனினும், ஆசிரியர்கள் படிப்படியாக இவ் வழியினின்றும் விலகித் தனிவழி நின்று சமயப் பற்றற்ற நூல்களை எழுதும் மரபையும் தொடங்க வைத்தனர் என் பதை இந்நூல் அமைந்திருக்கும் நிலையைக் கொண்டு ஊகிக் லாம். ஆனல் இம்முறை நன்கு வேரூன்றவில்லை,
aw. - 3

Page 107

பொருளகராதி
அக்கினி 43, 46, 53 மீதே و 7 و 69 و 6 و 63 و 62 73-75, 76, 81, 96, 98, 105, 107, 122, 128, 126, 135, 148 அக்கினி சயனம் 144, 146 அக்கினி ரஹஸ்யம் 146 அக்கினி ஹோத்திரம் 122,
144, 181, 182 அக்ன்யா 50 அக்னிஷ்டோமம் 144 அங்கிரஸ்ர்கள் 98; 99
I 12 அங்கிரஸ் 30, 97; 98 அசத்து 114 அசுவமேதம் 123; 145 அதர்வ உபநிடதம் 101)
Η 68 அதர்வசங்கிதை 97 196து
107, 147, 148, 183 அதர்வசிரஸ் 101 166 அதர்வ சிரோபநிடதம் 10 அதர்வ பரிசிஷ்டங்கள் 186 976 و96 و23 و19 ubهerfے
101, 103, 179 அதரிவ வேத சங்கிதை 115 அதர்வ வேதப் பிராதி
-சாக்ய சூத்திரம் 188 அதர்வவேதப் பிராமணம்
43 அதர்வவேதம் 23 34 9ே)
۰ و 1 و 17 و 7 11-99 و b7
144, 147, 148, 7
1 6 5 1 67, 18 S, ISS அதர்வாங்கிரஸ் 96; 97;
98, 99, 101 அதிதி 43, 57, 7
அதிதி ஒம்பல் 182
அத்திரி 30 அத்துவித வேதாந்தம் 175 அத்வர்யு 121; 146 அநுக்கிரமணி 29, 84
189, 191 அநுதாத்தம் 33
அதுவத்தம் 32 239 அபாம் தபாத் 72 அபிசாரம் 97, 118 அபொருஷேயம் 4 கி அப்சரஸ் 77 197 அப்பு 54 71 அம்சன் 37 அம்ஹஸ் 109 அயஸ் 51 அயஸ்துணன் 157 அரண்யகானம் 136து 五莎? அர்த்தவாதம் 159 அர்மயன் 57 அவித்தை 173 அலங்கார நூல்கள் 7 அவெஸ்தா (பாரசீகளின் وقه0 و 56 (نة التي تقويمهم 72, 75, 76, 83, 91 அற்புதப்பிராமணம் 145 அன்னப்பிராசனம் ே

Page 108
வடமொழி இலக்கிய வரலாறு 1 196
அஸ்வினி தேவர் 53, 62,
63-64 அஷ்டாத்தியாயி 11, 180 அஜ ஏகபாதன் 54 அஜசிருங்கி 108
ஆக்கியான சூக்தங்கள் 38,
39 ஆக்கியானம் 38, 152 ஆகுதி 53, 77, 152 ஆங்கிரஸ் 98 ஆதித்தர்கள் 57 ஆதித்தியன் 53 ஆத்மா 169, 170, 171
74 அமரக்கிரியைகள் 182 ஆபஸ்தம்ப கிருதஷ்றய
சூத்திரம் 101, 183 ஆபஸ்தம்ப சிரெளத
சூத்திரம் 184 ஆபஸ்தம்ப கல்வ குத்திரம்
184
ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம்
84 ஆபஸ்தம்பர் 39, 183,
184 ஆப்திக சிராத்தம் 182 ஆம்ரீளுக்தங்கள் 113 ஆயுஷ்ய குக்தம் 108 ஆரணியகங்கள் 19, 23
137, 153, 155-159,
165, 174, 179, 180,
19 成,1 ஆர்ச்சிகம் 133 184, 135
13s
ஆர்ஷேய கல்பம் 185 ஆனந்தம் 175 ஆன்ம விசாரணை 188
174 ஆன்மா 168, 171, 172,
173, 174, 175 ஆஸ்வலாயனர் 180, 188 இதிகாசம் 6, 8, 12, 36,
69, 151, 152, 153, 166 இந்தன் 151 இந்திய தத்துவ சாத்திரம்
79 இந்திரன் 54, 80, 83
64-66, 69, 70, 71, 72, 7s, 75, 76, 79, 8 P. 81 , 90 , 165 , 1 35 , I49, 174 இந்திராணி 65, இந்தோ யூரோபிய நாகரிகம் 35, 108 இத்தோ ஜர்மனிய மொழி
இயமன் 77 இரந்தரம் 187 இராக்கத விவாகம் 46 இராத்திரி 62 இராமாயணம் 6, 192 இராமானுஜர் 9, 166
17 இரSஜசூயவேள்வி 123 இருக்கு 19, 23, 87 95, 96, 97 101. 135, 179, 192

197| கா. கைலாசநாதக் குருக்கள்
இருக்கு சங்கிதை 29, 36,
183, 191 இருக்கு வேத ஆரணியகம்
23 இருக்கு வேத சங்கிதை 23
29 3. இருக்கு வேதப் பிராதி
-சாக்யம் 188 இருக்கு வேதப் பிராமணம்
23, 30, 146 இருக்கு வேதம் 4, 27-92
96 , 9Ꮈ, 100, Ꮧ ᏮᏎ, 105 ,
106, 118, 114 115
116, 124, 125, 127, 14 144 146 148 149, 152, 153, 157,
159, 167, 184, 185,
190, 192 இருதம் 55, 59, 66 இருபு 63 77 இருஜிஸ்வான் 43 ஈசோபநிடதம் 125, 165 ஈமக்கிரியை 146 உடன்கட்டை ஏறல் 47 உதாத்தம் 33 உத்காதா 134, 136; 148 உத்தரகானம் 188 உத்தரமீமாம்சை 4 உத்தரார்ச்சிகம் 133, 134
185, 136 உபநயனம் 32 உபநிடதங்கள் 5 19, 23,
34 37, 81, 84 85
108. 146,
86, 92, 100, 129, 130, 137, 157, 15 а. 159, 161-175 , 179 , 186 உபநிஷத் 168 உபமஸ்ரவஸ் 41 உருத்திரன் 54, 67-69, 70, 71, 76, 128, 149 உஷை 35, 36, 53, 60-62 உஹகானம் 138 உஹ்யகானம் 136 ஊர்வசி 39
ஏகோதிஷ்டம் 182 ஐதரேய ஆரணியகம் 159
18 ஐதரேய உபநிடதம் 1599
164 ஐதரேய பிராமணம் 1449
59 கடோபநிடதம் 165 கண்வ சாகை 121, 145 கண்வர் 30 கபர்தம் 49 கபால உபநிடதம் 166 கபிஷ்டலகட சங்கிதை 121 கருடோபநிடதம் 168 கருத்மான் 81 கருப்ப உபநிடதம் 166 கரோஷ்டர் 13 கரோஷ்டி 13 asif'jurg rror b l 8 1 கர்மப்பிரதீபம் 186 கல்பசூத்திரம் 137, 181,
182, 184, 187
127, 153

Page 109
வடமொழி இலக்கிய வரலாறு / 198
கல்பம் 153, 179, 180 கவிஷ்டி 50 5607 Unt L-th 25 கனபாடிகள் 25 கனம் 24, 25 கன்மம் 173 காடக கிருஹ்ய சூத்திரம்
184 காடக சங்கிதை 121 காணபத்தியம் 4 h− காதிர கிருஹ்ய சூத்திரம்
185 காத்யாயன சிரெளத
சூத்திரம் 185 காத்யாயன சுல்வகுத்திரம்
185 காத்தியாயனர் 188, 189,
190 காந்தருவ மணமுறை 46 காப்பியங்கள் 6 காம சூத்திரம் 8 காம நூல் 8 காயத்ரி 59, 133 காரிகைகள் 186 காவியம் 6, 7, 8, 12, 15,
23 கானங்கள் 136; 137 கானித பிருது சிரவத் 91 கிரம பாடம் 24 கிரமம் 24, 25 கிராதார்ச்சுனியம் 102 கிராமகேயகானம் 136
37 கிராமணி 42
கிரது 149 கிரிக்ஷத்து 41 கிருகஸ்தம் 158 கிருத்ஸ்மதர் 39 கிருஹ்யகர்மங்கள் 182 கிருஹ்ய குத்திரம் 100 181, 182, 183, 184
185, 186 கிருஹ்ய சங்கிரக
Lith 186 கிருஷ்ண யசுர்வேத
சங்கிதை 145, 183 கிருஷ்ண யசுர்வேதம்
122, 125, 143 145, 165, 167, 183
84 கிலம் 32, 38, 123 குந்தாப சூக்தங்கள் 114 குருசிரவணன் 41 குருக்ஷேத்திரம் 148 கேத்திரகணிதம் 183 கேநஉபநிடதம் 159 கேநம் 164 Gastrus lunt LD6007th 14 கோபிலகிருஹ்ய சூத்திரம்
183, 185, 186 கெளசிக சூத்திரம் 185 கெளதும சாமசங்கிதை
133 கெளமாரம் 4 கெளவீதகி ஆ ர னி ய க ம்
59 கெளவீதகி பி ர |ா ம ண ம்
144, 157, 159
பரிசிஷ்
I 144,

199| கா. கைலாசநாதக் குருக்கள்
சங்கரர் 165, 166, 175 JFš65ntuit Lub 24, 188 சங்கிதை 19, 23, 25, 29, 84, 85, 86, 89, 143 145, 146, 187, 188. 189, 191 சஞ்சயனம் 182 சதபத பிராமணம் 144 146, 152, 157, 159 சதருத்திரியம் 128 சந்தஸ் 179, 192 சந்திரன் 53 55, 88 சந்நியாசம் 158, 166 சபிண்டீ கரணம் 182 சபை 42, 43 சமாவர்த்தனம் 182 gruá05, 4 2
சம்பூகாவியங்கள் 7, 37
சம்வாதகுக்தங்கள் 384 39.
Elbslivsmgså 356r 181 சம்ஸ்கிருதம் 3, 4, 5 ே 19, 20, 31. 32, 33, 88, 91, 171, 192 சரணவைதயம் 103 መዐremsu! 68 ayront 66 apgravang 53, il 48 yrhawGBupassach 1245 146 சவிதா 53, 56, 59 . وق14 و134 و133 rrrensی
83 சாத்த உபநிடதங்கள் 166 ar i Bb 4
சாங்காயன கிருஹ்ய
சூத்திரம் 101 185 சாங்காயன சிரெளத
சூத்திரம் 185 சாங்கிய சூத்திரம் 180 சாங்கியம் 4
Freirguri 146 சாண்டில்யன் 171
சாதுர் மாஸ்யம் 122, 144
182 சாந்தம் 97 W சாந்தோக்கிய உபநிடதம்
159, 168 சாந்தோக்கியம் 100, 164
6
சாமகானம் 136
சாமசங்கிதை 135; 136
137
சாமம் 19, 28, 95, 96,
101, 179, 187 சாமவிதானபிராமணம்
185, 191 ヘッ சாமவேதப் பிரர்மணம்
143, 144,146, 159 சாமவேதம் 34 100
131-137, 143, 147, 16 7, 180, 185, 193 சாமானி 96, 97
FiTugorii 9, 83, 102, 153 சாவித்திரி 59 சிட்சை 179, 186, 19 சிந்து 53 Guau6ri 49

Page 110
வடமொழி இலக்கிய வரலாறு / 200
சிரத்தை 77
محبر
சிரார்த்த கல்பங்கள் 185
சிரார்த்தம் 186
சிரெளத கிரியைகள் 182 சிரெளத சூத்திரங்கள் 181
182, 183, 184 சிரெளத நூல்கள் 100 சிரெளத யாகங்கள் 181 சிவசங்கல்ய உபநிடதம்
124 சிவன் 68, 69 சிவாத்துவிதம் 175 சிகூைடி 153, 187, 188 சீமந்தம் 182 சுக்கிலயசுர்வேதப்
பிராமணம் 145, 159 சுக்கில யசுர்வேதம் 121
122, 125,144 167, 185 சுச்ருதர் 102 சுதாஸன் 41, 66 சுதுத்ரீ 53 சுபர்ணுசூக்தங்கள் 33 சுயம்பு 170 சுருதி 11, 23 சுல்வ சூத்திரம் 182, 184 சுல்வம் 183 சுவதா 129 சுவாஹா 129 சுவேதஸ்வதரம் 165 சுனஸ்சேபன் 43, 152 சுனிதஸ் 91
சூத்திரங்கள் 105, 177-193
சூரியன் 35, 53, 54, 55
56 , 57-58, 59 , 60 , Ꮾ1 ; 6367, 74 115
குரியா 63
சூரியை 63
சூர்யா சூக்தம் 39 செயுஸ் 64
சேநாரீ 42
சைவம் தீ
சோமபாணம் 71, 123 சோமயாகம் 76, 122,
123, 144, 181
சோமரசம் 65, 72, 76
சோமலதை 48, 66, 76 சோமன் 53, 63, 65,73,
76, 98, 135 செளத்ராமணியாகம் 123 செளநகர் 180,188 189
190 செளநகியம் 103 செளரம் 4 செளல்வாயனர் 157 செளளம் 108, 182 தகனம் 182 தசகுமாரசரிதம் 102 தட்சணை 50, 116, 142
150 தந்திர சாஸ்திரங்கள் 130
66 தமிழ் 3, 10, 82
தர்ச பூர்ணமாசம் 122
144, 182 தர்ம சூத்திரம் 101 182
及84

201| கா. கைலாசநாதக் குருக்கள்
தலவகாரசாகை 159 தக்ஷன் 57
தாண்டிய மகா பிராமணம்
144. 145, 159 தானஸ்துதிகள் 40 42
II 4 தியெள 53, 65, 73 திரயீவித்யா 23, 95, 170 திராஹ்யாயன கிரெளத
குத்திரம் 185 திருத அபத்யன் 54 திருஷத்வதி 148 திருஷ்டுப் 190 திலகர் 88 திவோதாசன் 41 துவஷ்டா 53, 65, 66 தேவதர்சம் 103 தேவயஞ்ஞம் 182 தைத்திரீய ஆரணியகம்
59 தைத்திரீய உபநிடதம் 159 தைத்திரீய பிராதிசாக்யம்
88 தைத்திரீய பிராமணம் 144
45 தைத்திரீயம் 164 தைவத காண்டம் 191 தெளடம் 103 த்ரஸ்தஸ்யு 41 நக்தம் 62 நவிகேதன் 174 நாசதீய சூக்தம் 80 நாசத்யர்கள் 90 நிகண்டு 102 191
நிதான சூத்திரம் 192 நித்திய நைமித்திய
rapusair 16 நித்யாக்கினி ஹோத்திர மந்திரம் 122 நியதி 55 நியாய சூத்திரம் 180 நியாயம் 4 நிருக்தம் 183, 179 191 நிருசிம்ஹதாபணி 109 நிருசிம்ஹபூர்வதாபணி 106 நிவாதம் 33 நிஷ்கம் 48 நிஷ்கிரமண்ம் 182 நீலகண்டர் 175 நைகண்டுக காண்டம் 19 நைகம காண்டம் 191 பகன் 57 பஞ்சயஞ்ளும் 44 பஞ்சவித சூத்திரம் 189 பஞ்சவிம்ச பிராமணம்
145, 185 பணிக்கூட்டம் 66 பதஞ்சலி 192 பதபாடம் 24, 188 பதபாடம் 24 25 பத்ததிகள் 186 பரமஹம்ச உபநிடத
66 பரிசிஷ்டங்கள் 186 பர்ஜன்யன் 35, 54, 67
7座 பழைய பாரசீகம் (JyQelebast) 83

Page 111
வடமொழி இலக்கிய வரலாறு / 202
Untevitash, 5, 8, ll, 12, . 19 , 20, 22 , 3 1 1 6Ꮞ,
180 Lumrausahaasiuuuh 192 பாதராயணர் 1755 190 ,rg gub6חLJ பாரத்துவாசர் 30 184,
189 பாரஸ்கர கிருஹ்ய சூத்திரம் 185 பாரஸ்வநாதர் 91 பாலகங்காதர திலகர் 83 பாஷாண ஸ்தாபனம் 182 பிக்குணி பாசித்தியம் 12 பிக்கு பாசித்தியம் 12, பிங்கலர் 192 பிண்ட பித்ரு யஞ்ஞம்
22 பிதிரர்கள் 77, 182 பிதிர்மேத சூத்திரங்கள்
185 பிதிர் யஞ்ளும் 182 பிரகதா 133 பிரச்சினம் 100 பிரச்னம் 165 பிரண்வம் 168, 170 பிரதர்தனன் 157 பிரத்யாப்திக சிராத்தம்
18 proafrifiuuh | 58
பிரமசாரி சூக்தம் 47, 115
பிரமசூத்திரம் 5ே, 168) 1 69, l669 eñke *ʻ. b)
பிரமம் 114, 124, 129, 166, 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 179 ரமவாதம் 103 பிரம விசாரணை 168, 172 பிரமவித்தை 163 பிரமவேதம் 96 - பிரமன் 76 பிரமஹத்தி 150 பிரமயஞ்ஞம் 182 grudnr 1 06 170 பிரமாவர்த்தம் 148 பிரமோத்தியம் 127 பிரம்மனஸ்பதி 75, 81 பிரவர்க்கியம் 12 பிரஜாபதி 77, 80, 81, 114 124 149, 152. 153, 174 பிராகிருதம் 5 பிராணன் 114, 159, 172,
173 பிராமணங்கள் 19, 23,
34, 57, 7785, 105, 121, 122, 127, 130, 137, 139-153, 157 158, 159,164, 170 174, 179, 18ο, 181 86 பிராமணம் 85,86,89,
பிராயச்சித்த சூக்தம் 709
பிராயச்சித்த குத்திரம்
196 −

203 I கா. கைலாசநாதக் குருக்கள்
பிராயச்சித்த மந்திரம் 110, பிராயச்சித்தம் 109, 186 பிருசதாரணியக
உபநிடதம் 146, 159 பிருகதாரணியகம் 100,
164, 169 பிருகத்தேவதா 190 பிருகஸ்பதி 53, 65, 75-76
8. பிருகு 96 பிருகுவாங்கிரஸ் 96 பிருதுவி 58, 73 பிருஷ்ணி 69 பிரைஷ சூக்தங்கள் 33 பிஜவனன் 41 புத்தபிக்கு 12, 13 புத்தர் 13, 86, 90, 91
164, 165, 174 புராணம் 12, 38, 89,
02, 152 புருகுத்ஸன் 41 புருஷசூக்தம் 45 புருஷமேதம் 124, 145,
46 புரூரவஸ் 39 புரூரவஸ்-ஊர்வசி வரலாறு
52 புஜ்யு 64 புஷ்பகுத்திரம் 188 பூர்வக்கிரியைகள் 182 பூர்வமீமாம்சை 4 பூஷன் 52, 53, 54, 56-59
63, 65, 69, 76 Ouargagnr 97, 98
பேஷஜானி 96, 97, 99
100, 107, 108 போதாயன கிருஹ்ய சூத்திரம் 184 போதாயன சிரெளத குத்திரம் 184 போதாயனசுல்வ சூத்திரம்
84 போதாயண தர்ம சூத்திரம்
184 பைப்பலாதம் 103 பெளதாயனர் 184 பெளஷ்டிகம் 97 பெளஷ்டிகாணி 109, 110 பெளத்தாயன தர்ம சூத்திரம் 97 பெளத்தாயனர் 89, 188 பெளர்ண மாஸ்யம் 181
шод56әпт657 66 மகாநாராயண உபரிடதம்
159, 164 மகாநாராயணியம் 165 மகாபாரதம் 6, 37, 38,
97, 102, 190 மகாவாக்கியம் 168, 172
osmreogrrř 91 மகோபநிடதம் 100 மசக கல்ப சூத்திரம் 185 மத்ஸ்ய புராணம் 102 மந்திர பிராமணம் 183 மருத்துக்கள் 35, 54
67, 68, 69, 7, 76 மல்லிநாதர் 9

Page 112
வடமொழி இலக்கிய வரலாறு / 204
மனுஸ்மிருதி 97, 10 மஹிதாச ஐதரேயர் 144 மாகேஸ்வர சூத்திரங்கள் 5 மாண்டூக்ய உபநிடதம் 165 மாத்துவர் 175 மாத்யந்தினசாகை 121,
145, 146 மார்க்கண்டேய புராணம்
2 மார்த்தண்டன் 57 மாணவ கிருஹ்ய சூத்திரம்
84 மாணவ சிரெளத சூத்திரம்
184 மாணவ சுல்வ குத்திரம்
84 மிட்டனி 90 மித்திரன் 53, 54, 56.57
58 81 90 மூக்திகோபநிடதம் 100,
167 மூண்டகம் 100 மூனிசூக்தம் 48 மைத் திராயணி-உபநிடதம்
165, 175 மைத்ராயணி சங்கிதை
121, 184 மைத்ரேயி 172 மோகனம் 167 மெனடாயனம் 103 duai 19, a3, 9s, 96,
701 179, 192. சரிவேத சங்கிதை 47
48
யசுர்வேதப் பிராமணங்கள்
144 146
யசுர்வேதம் 34, 100,
وقI و 42 1 و 41 1 و 0 3 1 - 9 1 147,14g, 151, 192
யம குக்தம் 14
யமன் 39, 8
ዚuዕ} 89
பகஷ்மா 49
பாஞ்ஞவல்கியர் 146, 157
172, 189
unr 96, 97
wurTGåvsti 82, 83
யோக சூத்திரம் 180
யோகம் 4
ராத்திரி 53
ராஜகர்மானி 112
ராஜசூயம் 144
ராஜதரங்கினி 8
ருக்மம் 48
ரோதசி 69 ரோஹித சூக்தம் il 14, 115 ரோஹிதன் 115 லாட்யாயன சிரெனத
குத்திரம் 185 வசிட்டதர்ம சூத்திரம் 11 வசிட்டர் 30 வத்ரயஸ்வன் 41 வருணசூக்தங்கள் 56 வருணன் 53, 54-56, 57,
s I و 7 و 66 و 65 و 8 5
9, 112, 149 வக்ர சூசக உபநிடதம் 166 வாதம் 71

205 / கா. கைலாசநாதக் குருக்கள்
6) Jirásfrtugurri 8 வாமதேவர் 30 வாயு 54, 65, 71, 76 வாலகில்ய சூத்திரங்கள் 33 வானப்பிரஸ்தம் 158 வாஜசநேயி சங்கிதை 121
122, 125, 142, 146, 165, 188 வாஜபேயம் 123 விசிட்டாத்துவிதம் 175 விசுவாமித்திரர் 30 வித்தை 173 விபாட் 53 விமதன் 46 வியாகரணம் 179 வியாகரண வேதாங்க
நூல் 192 வியா கிருதி 129 வியாசர் 189 விரதம் 55, 59 விராத்ய சூக்தம் 115 விராத்தியர் 145 விராத்தியஸ்தோமம் 145 விருத்திரக்னன் 66 விருத்திரன் 60, 65, 66, 149 விருத்திரஹா 85 விவஸ்வான் 54, 63 விஸ்பதி 49 விஷ்ணு 53, 56, 60, 85
149, 166 விஷ்று புராணம் 192 வீரகாவியம் 37, 38, 39 வேத சாகை 193
வதாங்கம் 143 145; 179
180, 186, 189, 191. வேதாந்த சூத்திரம் 175 வேதாத்தம் 23, 158, 180 வைகானச சூத்திரம்184 வைதானசிரெளதசூத்திரம்
85 வைதான குத்திரம் 186 வைணவம் 4 வைதிக உபநிடதங்கள் 165 வைஷ்ணவ உடநிடதங்கள்
166 வ்ராஜ்பதி 42 ஜகதி 133 க்ஷத்திரியர் 116 கூடியம் 49 egliturtl -th 25 ஜடை 24, 25 ஜலதம் 103 ஜனகமன்னன் 157 ஜாதகர்மம் 182 ஜாதகக்கதை 12 ஜாபால உபநிடதம் 166 ஜாஜலம் 103 ஜினர் 99 ஜைமிதீய
ஆரணியகம் 159 ஜைமிநீய கிருஹ்ய
சூத்திரம் 185 ஜைமிநீய சிரெளது குத்திரம் 185 ஜைமிநீயபிராமணம் 144,
145 ஜோதிஷம் 179 ஜ்யோதிவும் 192

Page 113
வடமொழி இலக்கிய வரலாறு / 206
ஜ்யோதிவு வேதாங்கம் ஷட்விம்ச பிராமணம் 144
92 卫45 ஸ்திரீ கர்மானி 111 ஹியரகிளிபிக் 14 ஸ்தோபங்கள் 136 ஹிட்டைட்ஸ் 90 ஸ்வரம் 5, 6, 24, 25, 33, ஹிரண்ய கிருஹ்ய
34 குத்திரம் 101 ஸ்வரிதம் 33 ஹிரண்யகேசி 184 ஸ்வாத்யாயம் 146 ஹெலனு 64
ஹோதா 75 146

இந்நூலிற் குறிப்பிடப்பட்டுள்ள மேஞட்டு ஆராய்ச்சியாளர்கள்
அல்பிரெட் லுட்விக் (Alfred Ludwig) 83 ஒல்டின்பெர்க் (Oldenberg)
36, 37, 38, 89 s Gör Gofråkig, mrh (Cunningham)
l4 Grrreñoupar (Grassmann) 83 கோல்ட்ஸ்டுக்கர்
(Goldstucker) 12 albumri (Zimmer) 43
Faivanu Gör (o) Gava (Sylvan Levi)
8 Luari (Tylor) 13 Saygi (Pischel) 83 9f6vrio (Buhler) 1 1, 13, 14
89, 90
Lortisfiepawi (Max Mullery
38, 7.8, 83, 85, 86, 87, 88 90, 91
ரிஸ்டேவிட்ஸ்
(Rhys Davids) 14
Gg mrj (Roth) 83
sy 6âë (Ludwig) 4 2 o "Gaf (Whitney) 87 osaäi Liaon ai (Winternitz)
89, 91, 92 ouri (Weber) 13, 14, 85
gG3&srt ? (Jacobi) 88 ஷிராடர் (Shrader) 87 ஹெர்டல் (Hertel) 90

Page 114


Page 115
f86 ஒலிபரப்புக் கல்
"உயர்தரமான சங்கீதத்தையே மிகுதியாக விரும்பும் படி செய்வதும், அவர்களுடைய மனம் சாந்தி நிறைந்து ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி இருக்கச் செய்வதும் உயர்ந்த சங்கீதத்தைப் பாடும் வித்துவான்களின் வசமே இருக்கின்றன.”*
பாட்டுக்கள் தெரிவு
கச்சேரி சம்பிரதாயத்தைப்பற்றி வித்துவான் பூீங் வாச ஐயர் சொல்லியிருப்பது மேடைக் கச்சேரிகளையே முக் கியமாகப் பொறுத்ததாயினும், ரேடியோப் பாடகர்களும் அநுசரிக்க வேண்டிய பல விதிகள் அதில் அடங்கியுள் ளன. முதலாவதாக ரேடியோக் கச்சேரிகளில் பாடகர் களும் நிலையத்துச் சங்கீத உத்தியோகஸ்தர்களும் மிக முக் கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் பாட்டுத் தெரிவு. பெரும்பாலும் அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஒழுங்கு செய்யப்படும் ரேடியோக் கச்சேரிகளில் மேடைக் கச்சேரிபோல அகாயாசமாக உட்கார்ந்து தம் இஷ்டம் போலப் பாட முடியாது. அந்த அரைமணி அல்லது ஒரு மணிக்குள்ளே பல அம்சங்கள் பரிமளிக்கத் தக்கதாகப் பாட்டுக்களைத் தெரிவு செய்யவேண்டும். அன்றியும், ஒலி பரப்பப்படும் சமயத்தைக் கருத்தில் வைத்துக்கொண்டு அதற்கு ஏற்ற ராகங்களாகப் பொறுக்கியெடுத்தல் வேண் டும். உதாரணமாக, மாலே ஐந்து மணிக்கும் ஆறு மணிக் கும் இடையிலுள்ள நேரத்தில் பிலஹரி, பெளளி, சாவேரி முதலிய சில ராகங்கள் ரஞ்சகமாயிருக்க முடியா. பூரி கல்யாணி, சங்கராபரணம், ஆாபி, காட்டை முதலிய ராகங் கள் மிக எடுப்பாயிருக்கும். இரவு ஒன்பது மணி பத்து மணி வேளையில் ஹிக்தோளம், கேதார கெளளை, எதுகுல காம்போதி, சாரங்கா, வராளி முதலிய ராகங்கள் கவர்ச்சி
*திருவனந்தபுரம் ரேடியோவில் Curupi 'வாமூெலி"யில் வெளிவந்தது.

வானுெலியும் சங்கீதமும் 18?
கச்சேரி ஆரம்பத்தில் ஒரு சிறிய வர்ணமோ அல்ல்து ஒரு மத்தியம கால உருப்படியோதான் விரும்பத் தக்கது. அன்றியும் அது ஷாடவ அல்லது ஒளடவ ராகத்தில் அமைந்தால் விறுவிறுப்பைக் கொடுத்து நேயர்களைக் கவ ரும். கச்சேரி ஆரம்பிக்கும்போதே ராக ஆலாபனை செய் வது உதவாது. கேட்டுக்கொண்டிருக்கும் கேயர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்க விறுவிறுப்பான சங்கதிகளும் கடையும் இருத்தல் அவசியம். அப்போதுதான் மனம் கச்சேரியில் ஈடுபட்டு நிலைக்கும். கச்சேரி, ஸ்டுடியோ வில் பாடகருக்காக மேளம் கட்டுவது மாத்திரமல்ல, கேட் போர் உள்ளங்களிலும் மேளம் கட்ட வேண்டுமென் பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையைப் பெறுவதற்காகத் தான் மத்தியம காலத்தில் ஒரு சிறிய வர்ணமோ அல் லது கீர்த்தனமோ பாட வேண்டும் என்பது. இதை அறி யாது பலர் ஆரம்பத்திலேயே ராக ஆலாபனை செய்து ரேடியோக் கச்சேரியைக் கவர்ச்சியில்லாமல் செய்துவிடு கிருர்கள்.
அரை மணி நேரக் கச்சேரியொன்றுக்குத் தெரிவு செய்யும் பாட்டுக்கள் மீண்ட உருப்படிகளாயில்லாமல் ஒரு மத்திய தரத்தில் உள்ளவையாயிருப்பது நல்லது. சுமார் கான்கு அல்லது ஐந்து உருப்படிகளாவது அரை மணிநேரக் கச்சேரியில் சேர்க்கப்பட்டால்தான் அது பூரணமான கச்சேரியாகத் தோன்றும். இல்லாவிட்டால் அரைகுறை யாகத் தெரியும். வித்துவான் பூரீநிவாச ஐயர் சொல்வது போல, ஒரு சிலர் ராகம் பாடுவதையும் ஸ்வரம் பாடுவதை தம் அளவு தெரியாமல் பாடுவதால், கச்சேரிச் சூழ்நிலையே கலங்கிப் போய்விடுகிறது. அரை மணி நேரக் கச்சேரி களிலும் அளவுக்கு மிஞ்சி ராகம், கிரவல், ஸ்வரம் முதலிய வற்றைப் பாடுவதால் கச்சேரி சுகப்படுகிறதில்லை. அரை மணி நேரக் கச்சேரிகளில் ஒரு பாட்டுக்கு இரண்டு கிமிஷத்துக்கு அதிகமாக ராகம் பாடுவதோ அல்லது

Page 116
188 ஒலிபரப்புக் கலை
ஸ்வரம் பாடுவதோ பொருத்தமா யிருக்காது. ஒரு மணி நேரக் கச்சேரியாயிருந்தால் மாத்திரம் ஒரு முக்கியமான கனராக ஆலாபனையும் அதற்குரிய உருப்படியில் ஸ்வரமும் பாடலாம். அந்த உருப்படியும் சுமார் இருபது அல்லது இருபத்தைந்து நிமிஷத்துக்கு அதிகப்படலாகாது. மிகுதி யாயுள்ள நேரத்தில் நான்கு ர்ேத்தனங்களாவது அழகாகப் பாட முடியும். இவற்றிலும் இரண்டொரு கீர்த்தனங் களுக்கு மிதமாக ராகமும் ஸ்வரமும் பாடலாம். பொதுவா கச் சொல்லப்போனல், அரைமணி அல்லது கால் மணி கேரம் கச்சேரி செய்பவர்கள் மேடையில் அநுஷ்டிக்கும் சம்பிரதாயங்களை முழுவதும் மறந்து, ரேடியோவில் அள வறிந்து உருப்படிகளே மாத்திரம் பாடினுல் கன்ருயிருக் கும். ரேடியோவில் பாடும் பெரும்பாலான இளம் பாடகர் கள் தாம் ஒவ்வொரு பாட்டுக்கும் ராகமும் ஸ்வரமும் பாடி ஞல்தான் கேட்பவர்கள் தம்மை வித்வத் தரத்தில் மதிப் பார்கள் என்ற ஒரு கவருண எண்ணம் கொண்டிருக்கிருர் கள் என்பதை அநுபவத்தில் கண்டிருக்கிருேம். இவர் களிற் பலர் பாடும்போது ராகமெல்லாம் பக்குவம் இல் லாமலும் ஸ்வர மெல்லாம் சிட்டையாகவும் ஒலிப்பதை ரேடியோ நேயர்கள் கவனிக்காமலிருக்கவில்லை. ஆகை யால், இந்த இளம் பாடகர்கள் கொண்டுள்ளதற்கு எதிர் மாருன அபிப்பிராயமே நேயர்கள் மனத்தில் படுகிறதென் பதை கிலையத்திலுள்ள சங்கீகப் பகுதி உத்தியோகஸ்தர் பாடகருக்குத் தெளிவாக எடுத்துணர்த்தக் கடமைப்பட் டுள்ளார்கள். V
கச்சேரிக்குப் பாட்டுக்கள் தெரிவு செய்யும்போது ஒரே வர்க்கத்திலுள்ள ராகங்கள் ஒன்றையொன்று பின் தொடர்ந்து வராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கச்சேரி உருப்படிகளில் ராகங்களெல்லாம் ஒரே தன்மை யான சஞ்சாரத்தைக் கொண்டிருந்தால் அழகு கொடுக் காது என்பதுதான் காரணம். ஆணுல், சில ராகங்கள்

வானெலியும் சங்கீதமும் 189
ஆரோகண அவரோகணக் கிரமத்தில் ஏறக்குறைய ஒரே தன்மையாயிருந்தும், தாம் கொண்டுள்ள விசேஷ மூர்ச் சனேகள் காரணமாக வேறுவிதச் சாயல் பெறுகின்றன. உதாரணமாக, சங்கராபரணத்துக்கும் கல்யாணிக்கும் மத்தியமம் ஒன்றைத் தவிர மற்றைய ஸ்வரங்களெல்லாம் ஒரே மாதிரியா யிருந்தும் காக்தார நிஷாதங்களின் விசேஷ மூர்ச்சனைகள் காரணமாக வெவ்வேறு சாயல் பிறக்க இடமிருக்கிறது. அன்றியும், வேறு சில ராகங்களில் பூர்வ மேளமோ அல்லது உத்தர மேளமோ ஒரே மாதிரி ஒலிக்கும் இரண்டு ராகங்களைக் கச்சேரிப் பாட்டுத் தெரிபவர்கள் அடுத்தடுத்து வைக்க மாட்டார்கள். உருப்
படிகளை ஒழுங்குபடுத்தும்போது ராக உருவங்கள் ஒரே தன்மையான சாயலைக் கொண்டில்லாமல் வேறு வகையான உணர்ச்சியைத் தரக்கூடியனவாக அமைத்தல் வேண்டும். அதே விதமாக, தாள வகையிலும் ஒரு கச்சேரியில் முழுவதும் சதுரஸ்ரமோ, திரிஸ்ரமோ, கண்டமோ இல் லாமல் பல கடைகளும் கலந்து வரக்கூடியதாயிருந்தால் கேட்போருக்கு ரஞ்சகமளிக்கும். கச்சேரிச் குழ்கிலையில் அமைதியும் விறுவிறுப்பும் மாறி மாறி வரத் தக்கபடி விளம்பம், மத்தியமம், துருதமாகிய கதிகளும் ஏற்பட வேண்டும்.
இசைத் தட்டுத் தெரிவு
வானெலி மண்டபமாகிய ஸ்டூடியோவில் பாடகர் களைக் கொண்டு நடக்கும் கச்சேரிகளுக்குப் பாட்டுக்கள் தெரிவு செய்யும் விஷயமாகப் பேசும்போது அத்துடன் சம்பந்தப்பட்ட இன்னெரு விஷயத்தையும் இங்கே சொல்லி வைக்கவேண்டியது அவசியம். ரேடியோ நில்ை யங்களில் சங்கீதப் பகுதியைக் கவனிக்கும் உத்தியோகத் தரும் அறிவிப்பாளரும் இசைத் தட்டு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யும்போதும் மேற்சொன்ன விதிகளை

Page 117
190 ஒலிபரப்புக் கல்
மனத்தில் வைத்துக்கொள்ளுதல் வேண்டும். இசைத் தட்டு நிகழ்ச்சிகளிலும் ராகப் பொருத்தம், தாளப் பொருத்தம் ஆகிய இவற்றைக் கவனிக்கவேண்டும். அன்றியும், பாடகரின் தனிப்பட்ட பாணிகள், அவர்கள் பாடியுள்ள சுருதிகள், வாத்தியங்களின் சுருதி, அவற்றின் ஒலிக் கனம் ஆகியனவும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் கவனிக்கவேண்டிய விஷயங்கள். எந்தவித ஏற்பாடாயிருந்தாலும் கேயர் காதுக்குச் சுகமாயிருக்கவேண்டியது அவசியம். சாரீர விஷயத்தில் ஆண்களின் சாரீரங்களிலேயே பல சுருதிகளில் பாடப்பெற்ற இசைத் தட்டுக்கள் இருக்கலாம். இவற்றை மாறி மாறிக் கலக்காமல் பொருந்தக்கூடிய சுருதிகளாகப் பார்த்துத் தெரிவுசெய்தல் வேண்டும். பெண் குரல்களே, ஆண் குரல்களுடன் கலக்காமல் அவற்றைத் தனிப்பட வைத்துக்கொள்ளுதல் நல்லது. இல்லாவிட்டால், ஒரு கட்டைச் சுருதியில் ஓர் ஆண் பாடகரின் பாட்டைக் கேட்டுவிட்டு, கான்கு கட்டைச் சுருதியுள்ள பெண்ணின் பாட்டைக் கேட்டு, மீண்டும் ஒன்றரைக் கட்டைச் சுருதிப் பாட்டைக் கேட்டால் ரஞ்சகமா யிருக்க முடியாது. வாத்திய சங்கீத இசைத் கட்டுக்களைச் சேர்க்கும்போதும் பொருத்தமாகத் தெரிவு செய்யவேண்டும். உதாரணமாக, மூன்று கட்டைச் சுருதியிலுள்ள ஒரு பாட்டைக் கேட்டு விட்டு, ஏறக்குறைய அதே சுருதியுள்ள ஒரு வயலின் இசைத் தட்டைக் கேட்கும்போது விரசமா யில்லாமல் பொருந்தும். அதாவது, ஒரு கச்சேரியில் வயலின் தனியே வாசித்து முடிப்பது போன்ற உணர்ச்சி ஏற்படத்தக்கதாக அந்த இசைத் தட்டுப் பொருந்துவதுதான் அழகாயிருக்கும். ஆண்களின் குரல்களைத் தனியாகவும் பெண்களின் குரல் களைத் தனியாகவும் அமைத்து இசைத் தட்டு நிகழ்ச்சிகளை அமைப்பதே விரும்பத்தக்கது. வாத்திய இசைத் தட்டுக் களைத் தனியாக ஒரு நிகழ்ச்சியில் அமைப்பது 15ல்லது. இவற்றைக் கலப்பதானுல் காம் முன்னர்ச் சொன்ன

வானெலியும் சங்கீதமும் 191
வகையில் இருக்கலாம். எவ்வாருயினும் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விதி என்னவென்ருல், இசைத் தட்டு நிகழ்ச்சியொன்றைக் கால்மணி நேரமோ அரை மணி நேரமோ ஒரு பூரணக் கச்சேரி நிகழ்ச்சியாகக் கருத வேண்டும் என்பதுதான். ஒவ்வோர் இசைத் தட்டும் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியாயிருக்காமல், பல இசைத் தட்டுக் கள் மூலம் சித்திரிக்கப்பட்ட ஒர் இசை நிகழ்ச்சியென்று கருதி அதற்குத் தக்கவிதமாகப் பாட்டுத் தெரிவு, சுருதி ராகம், தாளம் யாவும் பொருந்த அமைக்கவேண்டும். அப்போதுதான் அந்த நிகழ்ச்சி தரப்படும். குரல் வகை, கேயர் விருப்பம், வாத்திய சங்கீதம் திரைப்பட மெட்டுக் கள் என்று இன்னுேரன்ன தலைப்புக்களில் இசைத் தட்டுக்களை எவ்விதத் திட்டமோ ஒழுங்கோ இல்லாமல் கதம்பமாக ஒலி பரப்புவதில் அர்த்தமே இல்லை. பாட்டுக் களின் பொருட் பொருத்தம், பாடகரின் பாணிப் பொருத்தம், ராகப் பொருத்தம் ஆகியவற்றை அநு சரித்தே இசைத் தட்டு நிகழ்ச்சிகளை கிலையத்துச் சங்கீத உத்தியோகத்தர் ஒழுங்கு செய்தல் வேண்டும்.
பொதுவாக ஒலிபரப்பு நிலையங்களிலெல்லாம் நிகழ்ச்சி கள் குறித்த காலத்தில் ஆரம்பித்துக் குறித்த காலத்தில் முடிவுறவேண்டுமென்ற விதியிருக்கிறது. எட்டு மணி முதல் எட்டே கால் வரை கடை பெறவேண்டிய நிகழ்ச்சி, சரியாக எட்டு மணி அடிக்குப்போதே ஆரம்பித்து, பதினைந்து நிமிஷம் பூரணமாக முடியும்வரை நடைபெற வேண்டும். அரை நிமிஷம் கூடவுமாகாது; குறைதலு மாகாது. சில வேளைகளில் பேச்சோ நாடகமோ வேறு நிகழ்ச்சியோ ஒரு நிமிஷம் இரண்டு நிமிஷம் குறையக் கூடும். அந்தச் சந்தர்ப்பங்களில் அடுத்து வரும் நிகழ்ச்சியை உடனே ஆரம்பிக்காமல் குறைந்த நேரத்தை நிரப்ப வேண்டும். அப்படி நிரப்புவதற்கு எப்போதுமே நிலையத் தவர்கள் ஒரு வாத்திய இசைத் தட்டைக் கைக்காவலாக

Page 118
192 ஒலிபரப்புக் கல்
வைத்திருப்பார்கள். இந்த நிரவல் இசையைக்கூட வேண்டாவெறுப்பாகத் தெரிவு செய்யாமல் சந்தர்ப் பத்துக்குப் பொருத்தமாகவும், பின்னல் வரும் நிகழ்ச்சிக்குப் பொருத்தமாகவும் தெரிவு செய்து வைத்துக்கொள்ளுதல் வேண்டும். பின்னல் தொடரும் நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாட்டுக் கச்சேரியாயிருந்தால் அக் கச்சேரியில் வரும் உருப்படியோ ராகமோ நிரவல் இசைத் தட்டில் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வாத்தியக் கச்சேரியா யிருந்தால் அதே வாத்தியமுள்ள நிரவல் இசைக் தட்டைத் தெரிவு செய்த லாகாது. அதேவிதமாக, கச்சேரி நிகழ்ச்சிகள் முடிந்த சமயத்தில் நேரம் நிரப்பவேண்டி யிருந்தாலும் கிரவல் இசை மேற்சொன்ன முறையிலே அமையவேண்டும். முக் கியமாக ஒலிபரப்பு கிலேயங்களிலுள்ள அறிவிப்பாளர் இந்த விதிகளை நன்கு உணர்ந்திருத்தல் வேண்டும்.
பாடகர் தெரிவு
ரேடியோக் கச்சேரியில் பாடுவதற்கு எத்தனையோ வித்துவான்களும் பாடகரும் வாத்தியக்காரரும் விருப்பம் கொள்வது இயல்பு. இதறல் ஒலிபரப்புக்குப் பொருத்த மானவர்களைத் தெரிக்கெடுப்பது ஒவ்வொரு நிலையத்திலும் உள்ள உத்தியோகத்தரைச் சேர்ந்த, பெரும் பொறுப்பு. நிலையத்திலுள்ள சங்கீத கிகழ்ச்சி அதிகாரியும் மற்றும் இசையறிவுள்ள மூன்று அல்லது 5ான்கு பேரும் இந்தக் கடமையைப் பார்ப்பார்கள். கிலேயத்துக்கு வரும் விண்ணப் பங்களைப் பரீசீலனை செய்து தக்கவர்களை வரவழைத்து, நிலையத்தில் ஒலிபரப்பு 5டவாத ஓய்வு நேரத்தில் பாடகரை யும் வாத்தியக்காரரையும் ஒலிபரப்புக்குப் பரீட்சிப்பார்கள். இது, 'ஆடிஷன்' அல்லது இசைப் பரிசோதனை என்று
சொல்லப்படும்.
இவ்வித இசைப் பரிசோதனை கடத்துபவர்கள் நிறைந்த சங்கீத ஞானமும், நல்ல கேள்வி ஞானமும்,

வானெலியும் சங்கீதமும் 193
சாகித்தியங்களைப்பற்றிய நல்லறிவும் கொண்டவர்களா யிருத்தல் அவசியம். சாஸ்திரோக்தமான சங்கீதத்தை நன்கு உணரக்கூடிய தகுதியும், ரஞ்சகமாகப் பாடுபவர்களைத் தெரிக்தெடுக்கக்கூடிய மதிநுட்பமும் பெற்றவராயிருத்தல் வேண்டும். அத்துடன், நிலையத்தின் கலைஞர் அட்டவணை யில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டிருப்பவர்களின் தகுதியை யும் அவரவர் தராதரத்தையும் நன்கறிந்தவராயிருந்தால், பாடகர்களை வரிசைப்படுத்தி, தகுதிக்கேற்ற விதமாக ஒப்பு நோக்கிப் பாகுபாடு செய்து வைக்கவும் இயலும்.
இசைப் பரிசோதனையில் கலைஞரிடம் எதிர்பார்க்கும் தகுதிகளும் பண்புகளும் எவை? முதலாவதாக, பாடகருக் குச் சாரீர வசதி இருக்கிறதா என்பதைக் கவனித்தல் முக் கியமானது. முன்பே பல தடவை நாம் குறிப்பிட்டுள்ள படி, மேடையிலே கேரில் கேட்கும் சாரீரத்தை ரேடியோ வின் மைக்கிலும் 5ம்பி எதிர்பார்க்க முடியாது. அதனல் தான் இந்த இசைப் பரிசோதனை ஸ்டூடியோவில் ஒலிபரப் புக்கு வேண்டிய யந்திர சாதனங்களுடன், ஒலிபரப்புச் சூழ்நிலையில் நடக்க வேண்டுமென்பது. சாரீரத்தின் பண்பு, அதன் கனம், ஸ்தாயி முதலியவற்றை மைக்கிரபோன் மூலமே பரீட்சிக்க வேண்டும்.
சாரீரத்தைத் தவிர, சங்கீதத் திறமையும் கச்சேரித் திறமையும் பரீட்சிக்கப்படும். ராக தாள ஞானம், பாணி, சாகித்திய உச்சரிப்பு முதலியனவும் கற்பனைத் திறமையும் கவனிக்கப்படும். இன்னெரு முக்கியமான விஷயம்: பாடகர் கைச் சரக்கு எவ்வளவு இருக்கிறத்ென்பதும் ரேடியோ இசைப் பரிசோதனையில் கவனிக்கப்படும். புதிதாகச் சங்கீதம் பயின்று மேடையில் சில காலமாவது கச்சேரி செய்யாதவர்கள் மூன்று நான்கு உருப்படிகளை மாத்திரம் நன்கு மனப் பாடம் செய்து பயின்றுகொண்டு ரேடியோப் பரீட்சைக்குத் தோற்றக்கூடும். அதில் சித்தியடைந்தபின்,

Page 119
194 ஒலிபரப்புக் கல்
இரண்டாவது கச்சேரிக்கு உருப்படி கிடைக்காமல் இவர் கள் பழைய அட்டவணையையே சமர்ப்பிப்பார்கள். ஆகை யால், பாடகர் கையிருப்பில் பத்துப் பதினைந்து உருப்படி களாவது நன்முகப் பாட இருக்கின்றனவா என்பதையும் இசைப் பரிசோதனையிலேயே அறிந்து வைத்துக்கொள்வது நல்லது.
வாத்தியக்காரரைப் பொறுத்த வரையில், அவர்கள் இசை ஞானம் மாத்திரமல்ல, வாத்தியத்தைக் கையாளும் முறையும் கவனிக்கப்பட வேண்டும். வயலினில் வில் போடும் முறையிலும், வீணையில் மீட்டுக் கொடுக்கும் முறையிலும் அகாவசியமான உரைசல் தேய்தல் முதலியன இல்லாமல், தெளிவாகவும் சுத்தமாகவும் இருத்தல் வேண் டும். ஏதாவது ஒரு குறை இருந்தாலும் மைக்கிரபோன் பெரிதாகக் காண்பித்துவிடுமாகையால் ரேடியோவில் வாசிக்கும் வாத்தியக்காரர் இந்த விஷயத்தைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.
ரேடியோக் கச்சேரிக்கு இசைப் பரிசோதனை என்பது கலாசாலைப் பரீட்சை போன்றதல்ல. கலைஞனுடைய ஞானம் எவ்வளவு தூரம் இருக்கிறதென்பதை மட்டும் ஆடிஷன் குழுவினர் பரிசோதிப்பது முக்கியமல்ல; அந்தக் கலைஞருடைய கச்சேரி ரேடியோ கேயர்களால் அங்கீகரிக் கப்படுமா என்பதுதான் முக்கியம். ஆகையால் கலைஞ ருடைய திறமை கச்சேரியில்தான் பிரதிபலிக்க வேண்டும். கேயர்கள் அங்கீகரிக்கத் தக்கதாக அவர்கள் காரியத்தில் செய்து காண்பிக்க வேண்டும்.
நிகழ்ச்சி தயாரிப்பு
எந்த வானெலி நிலையத்திலும் சங்கீதப் பகுதி மிக
முக்கியப் பகுதியாகையால் இதைக் கவனிப்பதற்கென்று ஒரு சங்கீத நிபுணர் நியமிக்கப்பட்டிருப்பார். இசைக்

வானெலியும் சங்கீதமும் 195
கலைஞரைத் தேர்ந்தெடுத்தல், கச்சேரி ஒழுங்கு செய்தல், கச்சேரிக்குப் பாட்டுக்கள் தெரிதல், ஸ்டூடியோவிலே இசை சம்பந்தமான நிகழ்ச்சிகளைக் கண்காணித்தல் ஆகிய காரியங் களெல்லாம் இந்தச் சங்கீத நிகழ்ச்சி உத்தியோகத்தரின் பொறுப்பில் இருக்கும். சில பெரிய நிலையங்களில் கலைஞர் தொகை அதிகமாயிருந்தாலும் நிகழ்ச்சிகள் பல ஒலிபரப் பப்பட்டாலும் சங்கீத நிகழ்ச்சி உத்தியோகத்தருக்கு உதவி யாக மேலும் இரண்டொருவர் இருப்பார்கள். நடைமுறைக் கடமைகளாகிய கடிதப் போக்குவரத்து, இசைத்தட்டு ஒழுங்கமைப்பு, ஒத்திகை முதலியவற்றைக் கவனிப்பதற்கு இந்த உதவியாளர் இருப்பார்கள்.
ஆயினும், இசை நிகழ்ச்சித் தயாரிப்பு முழுவதும் சங் கீத நிகழ்ச்சி உத்தியோகத்தரின் பொறுப்பிலேயே இருக் கும். இசைப் பரிசோதனையில் தேறி ஒலிபரப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட கலைஞர் பெயரெல்லாம் அட்டவ ணைப்படுத்தப்பட்டு நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும். மாதத்துக்கு ஒரு தடவையோ அல்லது பட்சத்துக்கு ஒரு தடவையோ நிகழ்ச்சி அட்டவணை தயாரிக்கும்போது இசைப் பகுதிக்குரிய கச்சேரி நிகழ்ச்சிகளுக்கு, சந்தர்ப்பத் துக்கும் வேளைக்கும் பொருத்தமான கலைஞர் பெயர்களைச் சங்கீத உத்தியோகத்தர் தெரிந்தெடுப்பர். பின்னர், அக் கலைஞருக்குக் கடிதங்கள் அனுப்பிக் கலைஞரின் சம்மதத் தைப் பெறுவதுடன், அவர்களிடமிருந்து கச்சேரிக்குரிய பாட்டு நிரலையும் வரவழைப்பார். இந்தப் பாட்டு நிரல், ஒலிபரப்பு நிலையத்தில் நிகழ்ச்சி அட்டவணை தயாரிப்பதற்கு மிகவும் இன்றியமையாத தென்பதைச் சில கலைஞர் உணர்ந்துகொள்வதில்லை. சில வித்துவான்கள் குறிப் பிட்ட வேளையில் மாத்திரம் நிலையத்து ஸ்டூடியோவிலே நுழைந்து, அந்தச் சந்தர்ப்பத்தில் மன நிலை எப்படியிருக் குமோ அதற்குத் தக்கவிதம் பாடிவிட்டுப் போக விரும்பு வார்கள். ஆனல் தம்மைப்போல எத்தனையோ பாடகர்

Page 120
196 ஒலிபரப்புக் கல்
வாரத்தில் ஏழு நாட்கள், அதிலும் எத்தனையோ கச்சேரி களில் பாடப் போகிருர்களே என்பதையும் இவர்கள் பாட் டுக்களையெல்லாம் நேயர்கள் கேட்கப் போகிருர்கள் என்ப தையும் உணரவேண்டும். இதிலேதான் நிலையத்திலுள்ள சங்கீத உத்தியோகத்தரின் கடமை முக்கியமானதாகிறது. உதாரணமாக, ஒரு வாரத்தில் பன்னிரண்டு கச்சேரிகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். இந்தப் பன் னிரண்டு கச்சேரிகளிலும் சுமார் ஐம்பது அல்லது அறுபது உருப்படிகள் வந்தால் கூடியவரையில் அந்த வாரத்தில் பல திறப்பட்ட ராகங்கள், தாளங்கள், உருப்படிகள் வரக் கூடியனவாகப் பாட்டு அட்டவணைகள் தயாரிக்கப்பட வேண்டும். ஒரே நாளில் இரு பாடகர் ஒரே ராகத்தை ஆலா பனை செய்வதோ அல்லது ஒரே உருப்படியைப் பாடுவதோ விரும்பத் தக்கதல்ல. இக்கக் காரணங்களை உத்தேசித்துத் தான், தினசரி கக்சேரிகளில் பாட்டு அட்டவணையைத் தயா ரிப்பதற்காக நிலையத்து உத்தியோகத்தர் பாடகரிடமும் வேறு கலைஞரிடமுமிருந்து அவர்கள் பாட இருக்கும் உருப் படிகளை ஏற்கெனவே எழுதி வாங்கிக்கொள்வார்கள். அப்படி அனுப்பும்போது குறிப்பிட்ட சில பாட்டுக்களைப் பல கலைஞர்கள் எழுதியிருந்தால் நிகழ்ச்சி தயாரிப் பாளர் மீண்டும் அவர்களிடம் வேறு பாட்டுக்களைக் கேட்க வேண்டி நேரிடுமாகையால், இந்தச் சங்கடம் எழாமல் பார்த்துக்கொள்ள முன்கூட்டியே கச்சேரிக்குத் தேவையான பாட்டுக்களே விட அதிகமாக ஐந்தாறு உருப் படிகளைக் கேட்டு வாங்கிக்கொள்வார்கள். அப்படியானல் அந்த உருப்படிகளிலிருந்து தேவையானவற்றையும் பொருத்தமானவற்றையும் கலேஞருக்கு இடைஞ்சல் இல் லாமல் தெரிக்தெடுத்து நிகழ்ச்சி அட்டவணையில் சேர்க்க வசதி உண்டாகும். w
நிலைய நிர்வாகிகளின் இந்தப் பெரும் பொறுப்பை உணர்ந்து ரேடியோக் கலைஞர் யாவரும் ஒத்துழைக்க

வானெலியும் சங்கீதமும் 19?
வேண்டுமாகையால் இந்த விவரத்தை இங்கு எடுத்துக் கூற வேண்டியிருக்கிறது. சங்கீத வித்துவான்கள் தமது வித் வத்தையோ அல்லது கெளரவத்தையோ ரேடியோ நிலையத் தவர்கள் கட்டுப்பாடு செய்கிருர்கள் என்று ஒருபோதும் கருதலாகாது.
ஒத்திகை
கலைஞரிடமிருந்து பாட்டுக்களைப் பெற்ற பின் கிலே யத்துச் சங்கீத உத்தியோகத்தர் நிகழ்ச்சி அட்டவணையைப் பூர்த்தி செய்வார். பின்னர் நிலையத்தில் கடக்கும் சங்கீத ஒத்திகையைப்பற்றிக் கவனிப்பது அவசியம்.
கச்சேரி ஒத்திகை என்ருலும் பெயர் பெற்ற சில வித்துவான்கள் தம்மை நிலையத்தவர்கள் பரீட்சிக்கிருர்கள் என்று தவருக அபிப்பிராயம் கொண்டு மனம் கோணக் கூடும். ஆனல், ரேடியோ விஷயமாக அநுபவம் பெற்ற வித்துவான்களும், பரந்த நோக்கமுள்ளவர்களும் அப்படி ஒருபோதும் கினைக்காமல் தாராளமாக ஒத்துழைப்பதைக் காண்கிருேம். உண்மையைப் பார்க்கப்போனுல், ரேடி யோச் சாதனம் ஒன்றின் மூலம் நிலைய நிர்வாகிகள் ஒரு புறமும் கலைஞர் மற்ருெரு புறமும் ஒரே நோக்கத்தைத் தான் நிறைவேற்ற விழைகிருர்கள். கலைஞரின் சிறந்த கச்சேரியை ஒலிபரப்பினுேம் என்று திருப்தியடைய விரும்பு பவர்கள் கிலைய நிர்வாகிகள் தமது கச்சேரியை நேயர்கள் கேட்டு மகிழ்ந்தார்கள் என்று திருப்தியடைய விரும்புப் வர்கள் கலைஞர். இப்படியிருக்க, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அவரவர் தனிப்பட்ட கஷ்டங்களை உணர்ந்து, ஒத்துழைப்பதில் என்ன குறை வந்துவிட்டது?
இதிலேதான் நிகழ்ச்சி நிர்வாகிகளின் பக்குவமும் திற மையும் முக்கிய இடம் பெறுகின்றன. ஸ்டூடியோவில் கச்சேரி செய்ய வந்து உட்கார்ந்திருக்கும் கலைஞரின் மன

Page 121
198 ஒலிபரப்புக் கலை
நிலையையும் அவரவர் விருப்புவெறுப்புக்களையும் வெளி உலகத்தில் அவர்கள் அடைந்திருக்கும் செல்வாக்கையும் கன்கு உணர்ந்த நிர்வாகிதான் ஸ்டூடியோ ஒத்திகையைத் திறம்படக் கொண்டு நடத்த முடியும். கலைஞரின் மனம் கோணமல் கடந்து, அவர் திருப்திப்படத்தக்க சூழ்நிலை ஏற்படுத்தி, அதே சமயம் தமக்கு வேண்டிய பலனைப் பெறுவதற்கு அபார சாமர்த்தியமும் சாதுரியமும் வேண்டும். புதிய பாடகராயிருந்தால், அல்லது வெளி புலகத்தில், மேடையில், இன்னும் கீர்த்தி பெருத இளம் பாடகராயிருந்தால், சில காரியங்களைச் சொல்லிச் செய்வித்துக்கொள்ளலாம். ஆனல், ஏற்கெனவே மேடைக் கச்சேரிகளில், புகழ்பெற்றுள்ள வித்துவான்களை ஸ்டூடி யோவில் இருத்தி, இன்ன உருப்படிகளைத்தான் பாட வேண்டும், இன்ன உருப்படிகளுக்குத்தான் விஸ்தாரமாக ராக ஆலாபனை செய்யவேண்டும் அல்லது ஸ்வரம் பாட வேண்டும் என்று கட்டளே இடுவது அசம்பாவிதமாகத் தோற்றும். சபைகள் பலவற்றில் பாடி, எத்தனையோ வித மான ரஸிகர் கூட்டங்களே யெல்லாம் திருப்திப்படுத்தி அநூ பவம் பெற்ற வித்துவான்களுக்கு காம் பாடம் சொல்லிக் கொடுக்கத் துணிவது மதியீனமாகக் கருதப்படும்.
இருந்தபோதிலும் ஒலிபரப்பு விஷயம் தெரிந்த நிலைய நிர்வாகிகள் தமக்கு வேண்டிய சில தேவைகளை அநுசரிக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அவை நிறை வேற்றப்படவேண்டியதும் நல்ல ஒலிபரப்புக்கு இன்றி யமையாதது. இதனை எப்படிச் சமாளிப்பது?
முதலாவதாக, கலைஞரின் கடமையைப்பற்றிக் கவனிப்போம். கச்சேரி ஒலிபரப்பு நேரத்துக்குச் சுமார் ஒரு மணி அல்லது அரை மணி நேரம் முன்பாகவே கலைஞர் நிலையத்துக்கு வந்துவிடவேண்டியது இன்றியமையாதது. அரைமணி நேரக் கச்சேரியாயிருந்தால் அது சுமார்

வானெலியும் சங்கீதமும் 199,
இரண்டு மணி நேர வேலை என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கென கேரம் ஒதுக்கி வைக்கவேண்டியது கலைஞரின் பொறுப்பு. கச்சேரிக்குத் தம்புரா எவ்வளவு அக்கறை யுடன் சுருதி சேர்க்கப்படவேண்டுமோ அவ்வளவு அக் கறையுடன் ஸ்டூடியோவும் தயார்ப்படுத்தப்படவேண்டும் என்பதையும், இதற்காகவே கிலேய கிர்வாகிகளும் பாடுபடு கிருர்கள் என்பதையும் உணரவேண்டும். தமது கச்சேரித் திறமையை மேலும் உயர்த்துவதற்கே நிலையத்தவர் காத் திருக்கிருர்கள் என்ற உணர்ச்சி கலைஞருக்கு ஏற்பட்டு விட்டால் பின்னர் எவ்வளவோ பலன்கள் அதனைத் தொடர்ந்து வரும். சிலையத்தவர்கள் கடமையும் சுலபமாய் இருக்கும்.
கிலையத்துக்கு வரும் கலைஞரை இனிய முகத்துடனும் உபசார மொழிகளாலும் வரவேற்க நிலையத்தவர்கள் கடமைப்பட்டவர்கள். எவ்வளவுதான் பழகிய மனிதரா யிருந்தாலும் கலைஞரை ஒலிபரப்பு நிலையத்தில் வர வேற்கும்போது, மேற்சொன்ன மதிப்பும் கெளரவமும் இன்றியமையாது காண்பிக்கப்பட வேண்டும். அது கலைஞரை உற்சாகப்படுத்தி மகிழ்விக்க ஏதுவாகும். அவர் களை வரவேற்று, ஸ்டூடியோவில் அழைத்துச் சென்று மரி யாதையாக உட்காரவைத்து, மைக்கிரபோனைப் பொருத்த மான இடத்தில் வைத்து ஒத்திகை செய்வதற்கு எவ் வளவோ சாதுரியம் வேண்டும். பாடகரையும் பக்க வாத்தியக்காரரையும் ஒலிபரப்புக்குப் பொருத்தமான இடங்களில் இருத்துவதற்கு அநுசரிக்கவேண்டிய முறை களைப்பற்றி முன்பே சொல்லியிருக்கிருேம். அவற்றைக் கவனித்து மனம் கோகாமலும் உபசாரமாகவும் கலைஞரைக் கொண்டு ஒத்திகை கடத்தவேண்டும். W
ரேடியோவில் அநுமதிக்கப்படும் எல்லாப் பாடகரும் கச்சேரி அநுபவமுள்ளவராயிருப்பார்கள் என்று சொல்

Page 122
800 ஒலிபரப்புக் கலே
வ1, ஸ்ல்ெலே. ஆகையால், இவர்களைப் பக்குவப்படுத்தி ம 1, வியளிப்பதற்காகச் சில நிலையங்களில் சங்கீத மேற்பார் வையாளர் என்ற ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார். புதிய பாடகரை ஸ்டூடியோவில் வைத்து ஒத்திகை செய்து, ராகம் ஸ்வரம் பாடும் அளவை மட்டிட்டு அதற்குத் தக்க ஆலோசனைகளை எடுத்துச் சொல்லி, கச்சேரி நிறைவுபெறக் கூடிய உதவிகளை அளிப்பதே இவர் கடமை.
வாத்திய கோஷ்டி
ரேடியோ நிலையங்களில் நடக்கும் இசை ஒலி பரப்புக் களில் இந்தக் காலத்திலே வாத்தியகோஷ்டி மிக அதிக மாக உபயோகிக்கப்பட்டு வருகின்றது. மேடையில் இதன் உபயோகம் அவ்வளவாக இல்லாவிட்டாலும் ரேடி யோவில் எத்தனையோ வகையில் பயன்படுவதைக் காண் கிருேம். தனியாகக் கச்சேரி, வாய்ப்பாட்டுக்கு அநுபந்த மாக வாசித்தல், ஒலிச் சித்திரம் நாடகம் முதலிய நிகழ்ச்சி களில் இசையணியாக வாசித்தல் முதலிய உபயோகங்கள் ரேடியோவில் வாத்திய கோஷ்டிக்கு ஏற்படுகின்றன. இந்தக் காரணத்தால் ரேடியோ நிலையங்களில் இந்தக் காலத்தில் கிரந்தரமாக வாத்தியக்காரரை நியமித்து வாத்திய கோஷ்டி இசையைப் பயன்படுத்தி வருகின்றனர். வாத்தியங்களின் மூலம் இசையெழுப்பி, அதன் மூலம் பலவிதச் சூழ்நிலைகளைச் சிருஷ்டிப்பதற்கு ரேடியோ கமக்குச் சிறந்த வகையில் பயனளிக்கிறது. ஒன்று, பல வித வாத்தியங்களை ஒருசேர வைத்து நமக்கு வேண்டியவித மெல்லாம் பரிசோதனைகள் கடத்துவதற்கு ஒலிபரப்பு நிலை யத்திலுள்ள சாதனங்களைப்போல் மேடையில் கிடைப்ப தரிது. புதுப்புது இசை வடிவங்களைச் சிருஷ்டிக்கவும், அந்த வடிவங்களை ஒலிப்பதிவு செய்து கேட்டுப் பார்க்கவும், நாளுக்கு நாள் பல ஆராய்ச்சிகளைச் செய்யவும் ரேடியோ வசதி அளிக்கிறது. இதன் விளைவாகவே இன்று சினிமா

வானெலியும் சங்கீதமும் Va 201
உலகில் கட்புலனுக்குரிய சில காட்சிகளிலும் ஒலி உருவங் களைச் சேர்த்துச் சூழ்நிலைகளை வற்புறுத்த வாத்திய கோஷ்டி இன்றியமையாததாகிவிட்டது.
இங்ங்ணம் முக்கிய இடம் பெற்ற வாத்தியகோஷ்டியை ரேடியோவில் பக்குவமாகக் கொண்டு கடத்துவதற்குத் தகுதி வாய்ந்த கலைஞர் இருத்தல் இன்றியமையாதது. வாத்திய கோஷ்டியை நடத்தும் தலைவர் வெறுமனே சங்கீத வித்துவானுக மாத்திரமிருந்தால் போதாது. வாய்ப்பாட்டில் சிறந்த பாடகராகவும், அதாவது, வாத்தியங்களுக்குத் தக்க விதமாகப் பாடாந்தரங்களை வாயினுல் ஸ்வர சுத்தமாகப் பாடிக் காண்பிக்க வல்லவராகவும், வயலின், வீணை, புல் லாங்குழல், கோட்டு முதலிய வாத்தியங்களின் தனிப்பட்ட குணதிசயங்களை நன்கறிந்தவராகவும், மிருதங்கம் முதலிய தாள வாத்தியங்களைப்பற்றி அறிந்தவராகவும், தாள வகைகளையும் மிருதங்க பாடாந்தரங்களையும் பயின்றவ ராகவும் இருத்தல் வேண்டும். அத்துடன், கர்நாடக சங்கீதத்திலுள்ள ராகங்களின் தன்மைகள், அவை உள் ளத்திலே எழுப்பும் உணர்ச்சி வேறுபாடுகள் ஆகியவற்றை கன்கறிந்து, தேவைக்குத் தக்கவாறு ஸ்வரக்கோவை செய்து இசையமைக்க வல்லவராயும் இருத்தல்வேண்டும். ஏற்கெனவே அமைக்கப்பெற்ற ஸ்வரக் கோவைகளை அந்த அந்த அமைதிகளுக்குத் தக்கவாறு பாடிக் காண்பிக்க வல்லவராயும் இருத்தல் வேண்டும். நிலைய வாத்திய கோஷ்டியின் தலைவர் இந்தப் பண்புகளெல்லாம் நிறைந்த வராயும் மற்ற வாத்தியக்காரரை வைத்து நடத்தும் சாதுரியம் வாய்ந்தவராயும் இருத்தல் அவசியம்.
வாத்தியகோஷ்டியில் சேரும் கலைஞர் யாவரும் நல்ல அநுபவம் பெற்றவரா யிருத்தல் இன்றியமையாதது. நான்கு வயலின் வாத்தியக்காரர் இருந்தால் அந்த நால்வரும் ஒரே தன்மையான பாணியுடையவராயும், ஒரே விதமாக வில் போடும் பழக்கம் பெற்றவராயும் இருத்தல் வேண்டும்.

Page 123
2O2 ஒலிபரப்புக் கலே
அதே விதமாக வீணே வாத்தியக்காரரிடம் மீட்டுக்கள் ஒரே தன்மையிலிருத்தல் விரும்பப்படும். அல்லாமல், ஒருவர் ஒருவிதமாகவும் இன்னுெருவர் வேருெரு விதமாகவும் வயலினில் வில் போட்டால் அல்லது வீணேயில் மீட்டினுல் ஸ்வரஸ்தானங்கள் சரியாகத் தோன்றினபோதிலும் பந்தாக் குறைவாக ரேடியோவில் தொனிக்கும்.
சாதாரணமாக நமது சம்பிரதாயத்தில் உருப்படிகளே யும் மற்ற இசை வடிவங்களேயும் மனனம் செய்து வாசிப்பதே வழக்கம். தனிக் கச்சேரிகளில் அவரவர் திறமையைக் காண்பிக்கச் சங்கதிகள் சேர்த்தல், நிரவல், ஸ்வரம் வாசித்தல் ஆகியவற்றில் கற்பனேயை உபயோகிப் பார்கள். ஆஞல், வாத்தியகோஷ்டியைப் பொறுத்த வரையில், அதில் கலந்துகொள்ளும் வாத்தியக்காரர் தமது சொந்தக் கற்பனேகளுக்கோ சங்கதிகளுக்கோ ஒருபோதும் இடம் அளித்தலாகாது. கற்பனேகள் சங்கதிகள் யாவும் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு, ஸ்வரப்படுத்தி எழுத்துப் பிரதியில் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும். வாத்திய கோஷ்டியில் வாசிக்கும் ஒவ்வொருவரும் எழுத்து ப் பிரதியைப் பார்த்துத் தயக்கம் இல்லாமல் வாத்தியத்தில் வாசிக்கும் சிறந்த அ நு ப வம் பெற்றவராயிருத்தல் அவசியம். இது மிகவும் முக்கியமான பண்பு.
மேற்சொன்ன விதிகள் எல்லாம் சாதாரணமாக வாத்தியகோஷ்டிக் கஃலஞர் யாவருக்கும் வேண்டியவைக ளானுலும், ரேடியோ ஒலிபரப்பைப் பொறுத்தவரையில் மிகவும் இன்றியமையாதனவாகக் கருதப்படுமாகையால் இவற்றை இங்கே குறிப்பிட நேர்ந்தது. ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு வாத்தியகோஷ்டியின் அது கூலங்கள் அளவிட முடியாதனவாகையால், நிலேய கிர்வாகி களும் சங்கீதப் பகுதி உத்தியோகத்தரும் அவற்றைக் கூடியவரையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டியது முக்கிய கடமை.
 

பதினுன்காம் அத்தியாயம் ஒலிச்சித்திர நிகழ்ச்சிகள்
பேச்சு, நாடகம், இசை - இந்த மூன்று வகையான நிகழ்ச்சிகளும் ரேடியோ ஒலிபரப்பிலே தனித்தனி முக்கிய இடம் பெற்றபோதிலும், இவை மூன்றும் கலந்த கதம்ப நிகழ்ச்சிகளும் அழகு தரக்கூடியன. இவற்றை ஒலிச் சித்திரங்கள் என்று சொல்லலாம். விவரணச் சித்திரம், இசைச் சித்திரம், இசை நாடகம், நாட்டிய நாடகம் எல்லாம் ஒலிச்சித்திர வகையைச் சேர்ந்தன.
விவரணச் சித்திரம்
பேச்சுப் பாகமே முக்கியமாயிருந்து நாடகத்துக்குரிய சம்பாஷணையும் ஒலிக் குறிப்புக்களும் இடையிடையே கலந்து வந்தால் விவரணச் சித்திரம் என்று சொல்லப்படும். சாதாரணமாக ஒரு விஷயத்தைப்பற்றி நேரடியாக ஒரு பேச்சு நிகழ்த்துவதற்குப் பதிலாக, அப்பேச்சுடன் சம்பாஷஃனகளும் ஒலிக் குறிப்புக்களும் கலந்து கதம்பமாக வழங்கினுல் அது கவர்ச்சியைத் தரும். உதாரணமாக, மிருகக் காட்சிச்சாலேயைப்பற்றி ஒருவர் தாம் கேரில் கண் டதைப் பத்து அல்லது பதினேந்து மிமிஷப் பேச்சாக அமைத்துப் பேசலாம். ஆனுல், அதே பேச்சில், மிருகக் காட்சிச் சாலேக்குத் தாம் போன வரலாற்றைச் சொல்லி, இடையிலே அங்குள்ள ஓர் அதிகாரியைப் பேட்டி கண்ட விவரம், மிருகங்கள் இட்ட சப்தங்கள் முதலியவற்றையும் சேர்த்துக்கொண்டால் அது ஒரு விவரணச் சித்திரமாக, கேட்போருக்குத் தத்ரூபமான காட்சிகளே எடுத்து விளக்கும்.

Page 124
፵04 ஒலிபரப்புக் கல்
விவரணச் சித்திரம் எழுதுவதற்கு நாடகப்பாணி இன்றியமையாதது. காட்சி வருணனேகளேத் தெளிவாக எடுத்து எழுதி, ஒலிக்குறிப்புக்கள் வரவேண்டிய இடங்களே முன்கூட்டியே தீர்மானித்துக்கொள்ளவேண்டும்.
விவரணச் சித்திரங்களே இரண்டுவிதமாகத் தயாரிக்க லாம். ஒன்று தன்மயமாக வைத்து வருணிப்பது; அதாவது, பேச்சாளர் தமது சொந்த அநுபவமாகக் கூறி நேயர்களேத் தம்கூட அழைத்துச் சென்று சகல விவரங்களேயும் சுட்டிக் காண்பிப்பதாக அமைப்பது, மற்றது பேச்சாளர் அசரீரி போன்று தனியே நின்று, தம்மை மறைத்துப், பொருள்மய மாயிருந்து விவரிப்பது. உயர்ந்த கலேப் பண்புள்ள ஒலிச் சித்திரங்களுக்கு இத்தகைய பொருள்மய வருணனே அழகைத் தரும். ஆஞல், விவரணச் சித்திரத்தில் சம்பா ஷனேகளும் ஒலிக் குறிப்புக்களும் குறைவாயிருந்து பேச்சு மாத்திரம் அதிகமாயிருத்தல் வேண்டும். பேச்சுக் குறைந்து சம்பாஷணையும் ஒலிக்குறிப்பும் அதிகப்பட்டால் விவரணச் சித்திரம் நாடகமாக மாறிவிடக் கூடும்.
விவரணச் சித்திரத்திலே முக்கியப் பாத்திரமாகிய பேச்சாளர் கம்பீரமும் தெளிவுமுள்ள குரல் பெற்றிருத்தல் "அவசியம். வார்த்தைகளெல்லாம் தெளிவாகவும் விளக்க மாகவும் நேயர் கர்துகளிலே போய் விழவேண்டும். உச் சரிப்பிலே வசீகரமும் கவர்ச்சியும் தொனிக்க வேண்டும். பேசப்படுவது வசனமாக இருந்தபோதிலும் அதில் ஒசை ஈயம் தோன்றவேண்டும். அப்போதுதான் அது வெறும் பேச்சாக இல்லாமல் சொல்லோவியமாகக் காட்சியளிக்கும். விவரணச் சித்திரத்தின் அழகு யாவும் அதில் வரும் முக்கி யப் பேச்சாளரிடமே இருக்கிறதென்று சொல்லவேண்டும்.
ஆணுல், எவ்வளவு நல்ல பேச்சாளரா யிருந்தபோதிலும் ஒலிச்சித்திரப் பிரதி அதற்குரிய பாணியில் தயாரிக்கப்படா

ஒலிச்சிந்திர நிகழ்ச்சிகள் 25
விட்டால் தகுந்த பலகீனப் பெற முடியாது. வசனம் ஒவ் வொன்றும் கவிதைக்குரிய கற்பனேப் பொலிவும் ஓசையும் கொண்டிருத்தல் வேண்டும். அதற்காக அடுக்குச் சொற் களேயும் எதுகை மோனேகளேயும் கிறைத்துவிட வேண்டு மென்பதில்லை. அதற்கும் எல்லேயுண்டு வசனங்கள் பொருள் நிறைந்தவைகளாயும், மனக்கண்ணில் பல உரு வங்களேச் சிருஷ்டிக்க வல்லனவாயும், விவரிக்கும் பொரு ளுக்கேற்பத் தெரிந்தெடுத்த சொற்கோவையாயும் இருத் தல் வேண்டும்.
இசைச் சித்திரம்
ரேடியோவில் நேரடியாக ஒலிபரப்பப்படும் கச்சேரி நிகழ்ச்சியைத் தவிர, இசையின் மூலம் ஒலிச் சித்திரங்க ளான பல நிகழ்ச்சிகளேயும் தயாரித்து வழங்குவார்கள். பழக்கப்பட்ட இசையுருவங்களாகிய கீர்த்தனேகளைப் பாடி யும் வாத்தியங்களில் வாசித்தும் ஒலிபரப்புவதோடு, புதிய இசை வடிவங்களேச் சிருஷ்டித்து, அங்கிகழ்ச்சி ஒரு சூழ் விலேயை ஏற்படுத்தும் வகையில் கதை முறையிலோ அல் லது ஒரு வர்ணச் சித்திரம் போலவோ நேயர்கள் உள்ளத் தில் ஒரு புதிய உணர்ச்சியைத் தோன்றச் செய்யலாம். மேல்நாட்டுச் சங்கீதத்தில் சிம்ப்வனி என்ற இசை வடிவம் உண்டு. இயற்கைக் காட்சியொன்றை இசையின் மூலம் வருணிப்பதே அதன் நோக்கம். பேதோவன் என்ற புகழ் பெற்ற மேல்ாேட்டு இசையாசிரியர் பல அருமையான இசையோவியங்களைச் சிருஷ்டித்துள்ளார். அவற்றுள் பாஸ்டொரல் சிம்ப்வனி' என்பதும் ஒன்று. இதனே முன்மேக் காட்சி என்று தமிழில் சொல்லலாம். மங்தைகள் மேய்வது, கோவலர் புல்லாங்குழல் இசைப்பது, ஆட்டுக் குட்டிகள் துள்ளி விளேயாடுவது கதறுவது, இருந்தாற் போலிருந்து மேகம் கறுத்து இடியிடித்துப் புயற் காற் றுடன் மழை பொழிவது பயங்கரமான குழ்கிலேயில்

Page 125
206 ஒலிபரப்புக் கல்
மங்தைகள் வெருண்டு ஓடி ஒதுங்குவது, முடிவில் மழையும் புயலும் ஒய்ந்து அமைதி ஏற்படுவது - இப்படியான காட்சி களை முற்றும் இசை வடிவமாகவே சித்திரித்துள்ளார். இத் தகைய இசையுருவம் நமது கர்நாடக சங்கீதத்தில் கிடையா தாயினும் பல்வேறு ராகங்களும் தாள வகைகளும் இருக் கும்போது அவற்றைக் கொண்டு எத்தனையோ சூழ்நிலைச் சங்கீத உருவங்களை நாமும் சிருஷ்டிக்கலாம். ரேடியோவும் ஒலிப்பதிவு வசதியும் பல்வேறு வாத்தியங்களும் வாய்ப்பா யிருக்கும்போது புதிய இசைச் சிருஷ்டிகளைப் பரீட்சித்துப் பார்க்க முடியும்.
இசைச் சித்திரங்களில் இசைதான் முக்கிய இடம் பெறவேண்டும். முற்றும் இசை மயமாகவும் இங்கிகழ்ச்சி யைத் தயாரிக்கலாம்; அல்லது பெரும்பாலும் இசைமய மாகி, ஒரு சிறிது பேச்சாகவும் அமைக்கலாம். இத்தகைய நிகழ்ச்சிகளில் வாத்திய கோஷ்டி முக்கியமான இடம் பெறும். அதிலும் சாதாரணமாக நமது கர்நாடக இசை மரபில் ஆளப்படும் வீணே, புல்லாங்குழல், வயலின், மிரு தங்கம் ஆகிய வாத்தியங்களேத் தவிர விதேச வாத்தியங்க ளாகிய வியோலா, சாக்ஸோபோன், பியானே, டபிள் பேஸ், கிளாரினெட், சித்தார், சாரங்கி, கித்தார் முதலியன வும் சேர்ந்தால் பல விதமான புதிய ஒலி யுருவங்களைச் சிருஷ்டிக்க உதவியளிக்கும். ராக உருவங்கள் மாத்திரம் இசைச் சித்திரத்துக்குப் போதா, ராகத்துக்குரிய லக்ஷணங் களுக்கு அமையச் சூழ்நிலை பலவற்றைச் சிருஷ்டிக்க மேற் சொன்ன வாத்தியங்களின் தொனிகள் எவ்வளவோ பயன்
5QDLD.
இசை நாடகம்
சில ரேடியோக்களிலே சாதாரண நாடகத்தில் சில பாட்டுக்களை மாத்திரம் சேர்த்துக்கொண்டு அதனை இசை

ஒலிச்சித்திர நிகழ்ச்சிகள் 20?
நாடகம் என்று ஒலிபரப்புவதைக் கேட்டிருக்கிருேம். ஆணுல், உண்மையில் இசை நாடகமா யிருந்தால் வசன நாடகமாயில்லாமல் முழுவதும் இசையாலமைந்த நாடகமா யிருத்தல் வேண்டும். அன்றியும், கவிதை நாடகத்துக்கும் இசை நாடகத்துக்கும் வித்தியாசம் உண்டு. கவிதை நாட கத்திலே வசனத்துக்குப் பதிலாகச் சம்பாஷணைகள் எல் லாம் கவிதைகளாய் அமைந்திருக்கும்; அவ்வளவுதான். ஆனல், இசை நாடகத்தில் இசை முக்கியப் பங்கு பெறும். கந்தபுராணக் கீர்த்தனை, திருவிளையாடல் கீர்த்தனை, நந்த ஞர் சரித்திரக் கீர்த்தனை, ராம 15ாடகம் முதலியன முழுவ தும் இசை நாடக வகையைச் சேர்ந்தன. இவற்றை ரேடி யோவில் அழகான இசை நாடகங்களாகத் தயாரித்து ஒலி பரப்பலாம். ஆனல், பாத்திரங்கள் வெறுமனே தமக்குரிய கீர்த்தனைகளை மாத்திரம் பக்கவாத்தியங்களுடன் பாடி முடிப்பது இசை 15ாடகமாகாது. நாடகத்துக்குரிய காட்சி, குழ்நிலை ஏற்படத்தக்கதாக, வாத்திய கோஷ்டியின் மூலம் தகுந்த பின்னணி இசை தயாரித்து அழகான சித்திரங் களாக இடையிடையே பெய்து வைத்தால்தான் அது இசை நாடகமாகத் தோற்ற முடியும்.
இசை நாடகத்தில் வசனத்துக்கு இடமில்லை. ஆனல், கீர்த்தனை முதலிய இசையுருவங்களோடு காட்டிய இசை மிகவும் பயன்படும். உதாரணமாக, குறவஞ்சி, குரவை, பதம் முதலிய இசையுருவங்களுடன் அவற்றுக்குரிய நாட் டிய இசையும் சேர்ந்து வழங்கினல் இசையும் காட்டியமும் ஒரு குறிப்பிட்ட கதையின் விளக்கமாக நின்று, கேட்கும் கேயர்களுக்கு இன்பத்தை அளிக்கும்.
இசைச் சித்திரங்களும் இசை நாடகங்களும் தயாரிக் குப்போது பெண்களும் ஆண்களும் அவற்றில் பங்கு பெற நேரிடுமாகையால், அவர்கள் குரல்கள் வெவ்வேறு சுருதியி லிருப்பது நிகழ்ச்சி தயாரிப்பாளருக்குத் தொல்லையைக்

Page 126
208 ஒலிபரப்புக் கல்
கொடுக்கும். நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே சுருதி ஒலித்தால்தான் அந்த நிகழ்ச்சியில் அழகு பிறக்கும். பல சுருதிகளில் தம்புராக்களே மாற்றி மாற்றி மீட்டுவது நிகழ்ச்சியின் ஓட்டத்தைச் சிதைக்கும். ஆகவே, ஒரே தம்புராவை வைத்துக்கொண்டு முற்றும் அதே சுருதியில் நிகழ்ச்சியை கடத்துவதுதான் விரும்பத்தக்கது.

பதினைந்தாம் அத்தியாயம் பெண்களும் சிறுவரும்
ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் யாவும் பெரும்பான்மையான மக்கட் கூட்டத்துக்கு உபயோகமாகும் வண்ணம் ஒரு பொது நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டபோதிலும், அந்த மக்கட் கூட்டத்திலே இளையோர், முதியோர், ஆண்கள், பெண்கள், மாணவர், கலைஞர், தொழிலாளி, முதலாளி என்ற பல இனத்தவர்கள் அடங்கியிருப்பதைக் காண்கி ருேம். இவர்கள் யாவருக்கும் எந்த நிகழ்ச்சியாவது ஒரே விதமான அநுபவத்தைக் கொடுக்கும் என்று சொல்வதற் கில்லை. மேற்சொன்ன இனத்தவர்களின் லட்சியங்கள் வெவ்வேறு; அவர்கள் ரஸனைத்தரம் வெவ்வேறு; கிரகிக்கும் ஆற்றல் வெவ்வேறு. இங்கிலையிலே சில முக்கியமான இனத்தவர்களுக்குத் தனிப்பட்ட சில நிகழ்ச்சிகளை, அவர் கள் கிரகிக்கும் ஆற்றலையும் ரஸனைத் தரத்தையும் பயனை யும் அளவிட்டு, அதற்கேற்ற வகையில் தயாரித்து ஒலி பரப்ப வேண்டிய பொறுப்பு ரேடியோ நிலையத்தவர்களைச் சேர்ந்தது. ஆகவே, பெரும்பாலான நிலையங்களில் மேற் சொன்ன விசேஷ கேயர் கூட்டங்களுக்கு, விசேஷ நிகழ்ச்சி கள் ஒலிபரப்பப்படுவதைக் காண்கிருேம். . இக் கேயர் இனங்களில் மிக முக்கியமாக இருப்பவர்கள் சிறுவர், மாண வர், பெண்கள், கிராமவாசிகள் ஆகியோர். வருங்காலத்துச் சந்ததியை வளர்ப்பதற்கு முக்கியமாக விளங்குபவர்கள் சிறு வர்களும் மாணுக்கரும். பிற்போக்கு நிலையிலுள்ள கிராம வாசிகள் பல்வேறு துறைகளிலும் முன்னேற வேண்டியவர் களாகையால் ரேடியோச் சாதனத்தைக்கொண்டு அவர்கள் வாழ்க்கை நிலையை உயர்த்தவும், அறிவை வளர்க்கவும், நகர

Page 127
210 ஒலிபரப்புக் கல்
மக்களுக்குக் கிடைக்கும் பொழுதுபோக்கு வசதிகள் அவர் களுக்குக் கிடைக்கவும் ரேடியோ வழி உண்டாக்க வேண்டும். ஆகையால், இம்மூன்று இனத்தவர்களுக்கும் ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில் சில விசேஷ வசதிகள் செய்து கொடுப்பதில் நிலையத்தவர் பொறுப்பு இன்றியமையாதது.
இந்தப் பொறுப்பை எவ்வாறு நிறைவேற்றுவது? சிறுவர்களுக்கு அவர்கள் வயதுக்கும் ஆற்றலுக்கும் பொருத்தமான சிறுவர் நிகழ்ச்சிகள், மாணவர்களுக்குக் கல்வி ஒலிபரப்புக்கள், பெண்களுக்குத் தனி நிகழ்ச்சிகள், கிராமத்திலுள்ளவர்களுக்குத் தனி நிகழ்ச்சிகள் - இவற் றைத் தயாரிக்கும் முறைகளைப்பற்றியும், கடைப்பிடிக்க வேண்டிய விதிகளைப்பற்றியும் இங்கு ஆராய்வோம்.
சிறுவர் நிகழ்ச்சி
ரேடியோ நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட மட்டில் சிறுவர் என்ற பாகுபாட்டில் சுமார் கான்கு அல்லது ஐந்து வயது முதல் பதினன்கு அல்லது பதினைந்து வயதானவர்களே அடக்கலாம். பிள்ளைப் பிராயத்திலுள்ள இவர்களுடைய உள்ளம் முதிர்ச்சி அடையாமலிருப்பதால் சிந்தனை முயற்சி அதிகம் தேவைப்படாத விகழ்ச்சிகளே இவர்களால் கேட்டு ரஸிக்க இலகுவாயிருக்கும். நிகழ்ச்சிகளிலே பொழுது போக்கு வகையான கிகழ்ச்சிகள் சிறுவர்க்கு ஏற்றவை. கல்வி நிகழ்ச்சிகள் சம்பந்தமாகப் பிறிதோரிடத்தில் கூறு வோம். இங்கே சிறுவர் நிகழ்ச்சி என்ற அம்சத்தில் போத னைக்குரிய விஷயங்கள் யாவற்றையும் விளையாட்டு விளை யாட்டாகப் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலமே சேர்க்க வேண்டும். சிறுகதை, நாடகம், இலகுவான இசை இவை யெல்லாமே சிறுவர் நிகழ்ச்சிக்குரிய பொழுதுபோக்குகள். இவற்றைக் கொண்டு பலவகைப்பட்ட போதனைகளைப் புகட்ட இடம் உண்டாகும்.

பெண்களும் சிறுவரும் 211
சிறுகதையா யிருந்தாலும் நாடகமா யிருந்தாலும் அதனைச் சிறுவருக்குப் பொருத்தமான முறையில் தயாரிப் பதில் போதிய விவேகமும் அநுபவமும் தேவை. மற்றைய நிகழ்ச்சிகளைக் காட்டிலும் சிறுவர் நிகழ்ச்சி தயாரிப்பவருக் குத்தான் பொறுப்பு அதிகம் என்று சொல்லவேண்டும். வருங்கால மக்களாகிய இவர்களின் உள்ளங்களைப் பக்கு வப்படுத்தி, அவர்களின் ரஸிகத் தன்மையை வளர்த்து, உயர்ந்த அந்தஸ்தில் கொண்டு வருவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். ஆகையால், நிகழ்ச்சியில் சேர்க்கப்படும் கருத்துக்கள் சிறுவருக்கு உபயோகமாயிருத்தல் இன்றி யமையாதது. அன்றியும் அவர்கள் ஆற்றலுக்கு உகந்த தாயும் இருத்தல் வேண்டும். தூய்மையான சிந்தனையை வளர்க்கவும் உதவியாயிருத்தல் வேண்டும். இந்த நோக் கங்களை முதலில் கருத்தில் ஏற்றுக்கொண்டால் சிறுவர் நிகழ்ச்சிக்கு விஷயம் தேடுவதில் கஷ்டம் இருக்காது. பொதுவாக, சிறுவர்க்குரிய பேச்சுக்கள், நாடகங்கள் அல்லது ஒலிச் சித்திரங்களில் சமூக வாழ்வில் காணப்படும் கொலை, களவு, காமம் முதலிய கருத்துக்கள் எட்டியும் பார்த்தலாகா என்பது எல்லாரும் ஒப்புக்கொண்ட ஒரு விதி. இளம் உள்ளங்களில் இத்தகைய கருத்துக்கள் பதிக் தால் அது விபரீதத்தை விளைக்கக்கூடுமாகையால் ரேடியோ நிகழ்ச்சியிலும் விலக்கப்படவேண்டும். ஒரு காதல் கதை அல்லது நாடகம் வயதுவந்த கேயர்களுக்கு அழகான கலைப் பொருளாக ஒலிபரப்பப்பட்டபோதிலும் அது சிறுவர் உள்ளங்களுக்கு ஏற்றதல்ல. அதேபோல், அநாகரிகமான வார்க்கைகள், 5ாயே கழுதையே போடா வாடா என்ற இழிசொற் பிரயோகங்கள், சிறுவர் நிகழ்ச்சியில் எந்தச் சமயத்திலும் இடம் பெறலாகா. நல்ல போதனைக்குரிய விஷயங்களைக் கதை மூலமாகவோ நாடக மூலமாகவோ தூய்மையான சொற்களில் அமைத்து வழங்குதல் வேண்டும்.

Page 128
212 ஒலிபரப்புக் ශබීඝ
சிறுவர் நிகழ்ச்சிக்கு எழுதும் கதையும் நாடகமும் மற் றைய நிகழ்ச்சிகளைப் போன்ற பாணியிலோ அல்லது தகுதி யிலோ அமைய முடியா. சிறுவர் உள்ளங்களில் இலகு வாகப் பதியத்தக்க விளக்கமான முறையில் அவற்றை எழுதவேண்டும். அந்த அந்த வயதுக்கேற்ற சொற்கூட்டங் களை உபயோகித்து, அவர்களுக்கு எளிதாக விளங்கும் முறையில் எழுதவேண்டும். இதில் சில எழுத்தாளரே வெற்றி பெற்றுள்ளார்கள்.
சிறுவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் இந்தக் காலத் தில் சிறுவர்களே கலந்து ஒலிபரப்பும் வழக்கம் பரவி வரு கிறது. ஒருசில காடுகளில் சிறுவர்களை எந்தத் தொழிலி லும் உபயோகிக்கலாகாது என்று சட்டம் விதிக்கப்பட் டிருப்பதால் ரேடியோவிலும் மிகக் குறைவாகவே சிறுவ ரைச் சேர்த்துக்கொள்கிருர்கள். ஆனல், சிறுவர் பங்கு பெறும் ஒலிபரப்பு நிகழ்ச்சியில் ஒரு தனி யழகு இருக் கிறது. மழலைச் சொற்களைக் கேட்பதிலும் அவர்கள் குழந்தை நடிப்பைக் காண்பதிலும் எவ்வளவோ சிறப் பிருக்கிறது. அன்றியும், கலை வளர்ச்சியில் சிறுவர்கள் இளம் வயதிலேயே ரேடியோச் சாதனத்தின் மூலம் பயிற்சி பெறுவது இன்றியமையாகது. இந்தச் சாதன வசதியிருப்ப தால் சிறுவர்களுக்கு அதிகச் சந்தர்ப்பம் கொடுத்து உற் சாகப்படுத்த வேண்டியதும் நமது கடமை.
ஒலிபரப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சிறுவர்களை எப்படிப் பயிற்றுவது, எங்கனம் ஒத்திகைகளைக் கவனிப் பது என்பது ஒரு சிக்கலான விஷயம். அடுத்தடுத்து ஒத்திகைகள் வரும்போது சலித்துப்போகும் பெரியவர்களைக் கொண்டே ஒலிபரப்பு நடத்துவது சிரமமான காரியமா யிருக்க, விளையாட்டுப் புத்தி நிறைந்த சிறுவர்களைக் கொண்டு ஒலிபரப்பை நிறைவேற்றுவது எவ்வளவு கடின மான காரியமென்று பலர் கருதக்கூடும். ஆனல், ரேடியோ

பெண்களும் சிறுவரும் − 213
வில் ஒத்திகை விஷயத்திலும் சரி, ஒலிபரப்பு விஷயத்திலும் சரி, சிறுவர்களைப்போன்ற நல்ல பாத்திரங்களைக் காண முடியாதென்பது அநுபவஸ்தர் கண்ட உண்மை. ஒத்திகை யில் சொல்லிக்கொடுக்கும் கருத்துக்களை உடனுக்குடன் மனத்தில் வாங்கி காம் சொல்வதுபோல் ஒரே கொடியில் செய்து காண்பிக்கவல்லவர்கள்; ஆகையால், சிறுவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஒரே ஒத்திகையுடன் காரியத்தை நிறைவேற்றி விடலாம். அதற்குமேல் சிரமப்படவேண்டிய அவசியமே இல்லை. அன்றியும், அந்த ஒத்திகைக்குப் பின் ஒலிபரப்பில் ஏதாவது சிறு தவறுகள் நேர்ந்தபோதிலும் சிறுவர் என்ற வகையில் அந்தத் தவறுகளும் இயற்கையாக அமைந்து, ஒலிபரப்பு கிளிப்பிள்ளை ஒப்பிப்பது போல் இல்லாமல் இயல்பாகத் தோன்றும். சில நிகழ்ச்சிகளில் அத்தவறுகள் அழகைக் கொடுக்கவும் செய்யும்.
சிறுவர் நிகழ்ச்சியைக் கொண்டு நடத்தும் தயாரிப் பாளர், குழந்தை வளர்ப்பிலும் அவர்கள் பிரத்தியேக உணர்ச்சிகளைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்வதிலும் அநுபவ முதிர்ச்சி உடையவரா யிருத்தல் வேண்டும். பாட சாலைகளில் பாலர் வகுப்புக்களை கடத்தி அநுபவப்பட்ட ஆசிரியர்களும், தாய்மார்களுமே இந்தத் துறையில் வெற்றி பெறக்கூடியவர்கள். ஆனல், ஆசிரியத் தொழிலில் பழக்கப் பட்டவர்களைச் சிறிது சாவதானமாகவே ரேடியோவில் உபயோகிக்கவேண்டும். பெரும்பாலான பள்ளிக்கூட உபாத்தியாயர்களும் பாடசாலை வகுப்பறைகளில் கட்டளை கள் பிறப்பித்துப் பழக்கம் உடையவர்களா யிருப்பதால் அந்தப் பழக்கம் ஒலிபரப்பிலும் வந்துவிடக்கூடும். ஒலி பரப்பு நிகழ்ச்சியில் அது உதவாது. ஆயினும் இதற்குப் புறநடையாக எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிருர்கள். பெண்கள், அதுவும் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள், ரேடியோவில் சிறுவர் நிகழ்ச்சி நடத்துவதற்கு மிகவும்

Page 129
214 ஒலிபரப்புக் கலை
பொருத்தமுடையவர்கள். ஹாஸ்யமும் சாந்த மனப்பான் மையும் பொறுமையுமுடைய ஆண்களும் ரேடியோவில் சிறுவர் நிகழ்ச்சியை நடத்தலாம். பல ரேடியோ நிலையங் களில் இத்தகைய ஆண்கள் ரேடியோ மாமாக்களாகவும், அண்ணுக்களாகவும் பெயர் பெற்றிருப்பதைக் காண் கிருேம். ரேடியோ நிகழ்ச்சிகளைக் கேட்கும் கேயர்களில் அளவற்ற அபிமானம் காண்பிக்கும் கேயர்களும், நிகழ்ச்சி ஒலிபரப்பாளர் மீது விரைவில் அன்பும் மதிப்பும் காட்டும் கேயர்களும் சிறுவர்கள்தாம். அதே சமயம், நிகழ்ச்சி பிடிக்கவில்லையானல் வேண்டாம் என்று துணிவுடன் சொல்லக்கூடியவர்களும் அவர்களே. ஆகையால், அவர்கள் அன்பையும் அபிமானத்தையும் கவர்ந்து சிறுவர் நிகழ்ச்சியை வெற்றியுடன் நடத்துவது பெரிய பொறுப்பா யிருந்தபோதிலும் அதிலுள்ள திருப்தியும் மகிழ்ச்சியும் வேறெந்த ஒலிபரப்பிலும் பெற முடியாது.
சிறுவருக்குரிய நிகழ்ச்சிகளில் பெரியவர்கள் கலந்து கொள்ளும்போது பல சங்கடங்கள் எதிர்ப்டடக்கூடும். சிறு வருடைய உள்ளத்தை உணர்ந்து, அவர்கள் கிலையில் இறங்கிவந்து அவர்களுடன் ஒரு பாத்திரமா யிருந்து நடிப்பது இலகுவான காரியமல்ல. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிறுவரில் ஒரு பெரிய சிறுவனுக" இருக்க வேண்டும் அவர். அறிவிலும் அநுபவத்திலும் முதிர்க்த ஒரு "சிறுவனுக'. ஆனல் அந்தஸ்தில் மற்றச் சிறுவர்களில் ஒருவராக இருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும், அதுவே முக்கியமானது. சிறுவருக்குக் கதை சொல்லுதல். அல்லது சிறுவர் காடகங்களில் நடித்தல் ஆகிய கருமங்களில் பெரியவர்கள் கலந்துகொள்ளும்போது கூடியவரையில் சிறுவர் அந்தஸ்தில் இறங்கி கின்றுகொள்ள வேண்டும். சிறுவருக்கென்றே ஒரு மழலைப் பாணி யிருப்பதால் அதனைச் சிதைக்காதவாறு பொருத்தமான முறையில் பேச வேண்டும்.

பெண்களும் சிறுவரும் 215
பெண்கள் பகுதி
விசேஷ கேயர் கூட்டத்தில் பெண் இனத்தவர்களும் ஒரு முக்கிய வகுப்பினரா யிருப்பதால் ரேடியோவில் பெண் களுக்கென்றே தனியாக நிகழ்ச்சிகள் தயாரித்து ஒலிபரப்பு வது வழக்கத்தில் வந்துவிட்டது. பெண்கள் என்னும் போது அவர்களுக்குச் சில பிரத்தியேகப் பிரச்சினைகளும் கடமைகளும் இருப்பதாலும், இப்பிரச்சினைகளும் கடமை களும் மற்றைய பொது ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில் இடம் பெருமல் விடக்கூடுமாகையாலும் பெண் இனத்தவர்களுக் குத் தனிப்பட்ட ஒலிபரப்பு வேண்டியதாகிறது. இக்த ஒலிபரப்பிலே எத்தகைய விஷயங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதைப்பற்றி இங்கு ஆராயவேண்டிய அவசியமில்லை. எந்த ரேடியோ சிலையத்திலுள்ளவர்களுக் கும் பெண்கள் பகுதிக்குரிய விஷயங்களைப்பற்றி கன்கு தெரியும். முக்கியமாக, குடும்பக்கலை, சமையல் பகுதி, பிள்ளை வளர்ப்பு முதலியன அவசியமாக இந்த நிகழ்ச்சியில் இடம் பெறும். ஆனல், பெண்களுக்குரிய, அதாவது, பெண் இனத்தவராகிய கேயர்கள் கேட்கவேண்டிய ஒலிபரப்பை நிகழ்ச்சி நிரலில் எந்த வேளையில் சேர்க்கவேண்டும் என்பது பற்றியும், அந்த ஒலிபரப்பு என்ன விதம் தயாரிக்கப்பட வேண்டும் என்பதுபற்றியுமே நாம் இங்கு ஆராயவேண்டும்.
நிகழ்ச்சி நிரலில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை அமைக்கும்போது, அங்கிகழ்ச்சியைக் கேட்கும் பெரும் பாலான கேயர்கள் வீட்டிலே சாவகாசமாயிருந்து ரேடியோ கேட்கத்தக்க வேளையைத் தெரிக்தெடுக்கவேண்டியது நிலை யக்கவர்கள் பொறுப்பு. விசேஷமாக நம் நாட்டு வழக் கத்தில் பெண்கள் பெரும்பாலும் நாள் முழுவதும் வீட்டு வேலைகளில் ஏதாவதொன்று செய்துகொண்டே யிருப் பார்கள். காலேயிலெழுந்தவுடன் ஆபீசுக்குப் போகும் கணவனுக்கு ஆகாரம் தயாரிப்பதிலும் மற்றக் கடமை

Page 130
216 ஒலிபரப்புக் கல்
களிலும் வீட்டுப் பெண் ஈடுபட்டிருப்பாள். குழந்தை களைக் கவனித்து அவர்களைப் பள்ளிக்கூடம் அனுப்புவதி லும் ஈடுபட்டிருப்பாள். இத்தனை காரியங்களும் அதி காலையிலிருந்து ஒன்பது பத்து மணிவரை ஓயாமல் நிறைக் திருக்கும். கணவன் ஆபீசுக்குப் போய், குழக்தைகளும் பள்ளிக்கூடம் போனதும் பெண் ஓய்வு பெறுவாள் என்று சொல்வதற்கில்லை. மத்தியான்ன போஜனத்துக்கு வேண் டிய சமையல் வேலையிலும், வீட்டைச் சுத்தமாக்குவதிலும் அவள் மறுபடியும் ஈடுபட ஆரம்பிக்கிருள். ஆகையால், சமைய முதலிய கருமங்கள் முடியுமட்டும் அவள் ஓய்வு பெற வழியொன்றுமில்லை. இந்த வேளைகளில் ரேடியோ கேட்பதற்கு அவளுக்கு எவ்வித வசதியுமில்லையென்று சொல்லவேண்டும். மேல் காடுகளில் வீட்டுப் பணி நடை பெறும் வேளைகளுக்கென்றே பிரத்தியேகமாகச் சில நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்புகிருர்கள். வீட்டின் அமைப்பும், சமையல்கட்டு அண்மையில் இருப்பதும் ரேடியோவைத் திருப்பிவிட்டு அதில் வரும் ஒலிபரப்பைக் கேட்டுக்கொண்டே அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வேலை செய்வதற்கு வசதியாயிருக்கின்றன. ஆனல், அந்த நிலைமை நம் நாட்டில் ஏற்படவில்லை. சில பெரிய நகரங் களில் மாத்திரம் சமையல் கட்டிலிருந்தும் வசதியாகக் கூடத்திலிருக்கும் ரேடியோவைக் கேட்க முடிகிறது. தமிழ் காட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த வசதி இன்னும் கிடைக்கவில்லை. கிடைக்குமாயின், மத்தியான்னத்துக்கு முன்பாக, சுமார் பத்தரை அல்லது பதினுெரு மணிக்கு ரேடியோவில் இலகுவான சங்கீதம் அல்லது வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சியைப் பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக ஒலிபரப்புவது மிகவும் உபயோகமாய் இருக்கும். வீட்டு வேலையின் ஆயாசம் தோன்ருமல் ரேடியோ நிகழ்ச்சியைக் காதில் விழுத்திக்கொண்டே பெண்கள் குதூகலத்துடன் வேலை செய்வார்கள்.

பெண்களும் சிறுவரும் 21?
மத்தியான்னச் சமையலும் சாப்பாடும் முடிந்து, அதற்குப் பின்னுள்ள பிற்பகல் வேளையில்தான் பெரும் பாலான 15ம் நாட்டுப் பெண்கள் ஓய்வெடுப்பது வழக்கம். இவ்வேளையே அவர்கள் ஆறுதலாக உட்கார்ந்து ரேடியோ கேட்பதற்கு மிகவும் ஏற்ற சமயம். பெண்களுக்குரிய பேச்சுக்களாயினும் சரி, நாடகம், ஒலிச் சித்திரமாயினும் சரி, பிற்பகல் ஒரு மணிக்கும் மூன்று மணிக்கும் இடையி லுள்ள நேரத்தில் ஒலிபரப்புவதுதான் சிறந்தது.
பெண்கள் பகுதிக்கென ரேடியோவில் தயாரித்து ஒலி பரப்பப்படும் நிகழ்ச்சிகள் அதற்குரிய தனிப் பண்புடன் இருக்கவேண்டியது அவசியம். மற்றப் பொது ஒலிபரப்பில் சாதாரணமாக அமையக்கூடியதாயிருக்குமானல் தனிப் பட்ட ஒரு நிகழ்ச்சியாக வைக்கவேண்டிய அவசியம் இல் லாமல் போய்விடும். ஆகையால், பேச்சுக்களையும் நாட கங்களையும் பெண்களுக்கு உபயோகமான முறையில் தயாரித்து ஒலிபரப்ப வேண்டும். அந்த நிகழ்ச்சியைக் கேட்டுப் பெண்கள் தமது நிகழ்ச்சியென்று பெருமைப்பட வேண்டும். ஆகவே, பெண்கள் பகுதி ஒலிபரப்பில் பெண்களே கலந்துகொள்ள வேண்டியது அவசியம். பெண்ணின் உள்ளத்தை அறிந்து அவள் விருப்பு வெறுப் புக்களை கன்கு தெரிந்தவர்கள் அதனைத் தயாரித்து கடத்த வேண்டும்.

Page 131
பதினுரும் அத்தியாயம் கல்வி ஒலிபரப்பு
பல நூற்ருண்டுக் காலமாகப் போதன முறை, ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை மாணுக்கர் கேட்டுக்கொள்வ தாகவோ, அல்லது மேல் வகுப்புக்களில் ஆசிரியர் துணையோடு மாணுக்கர் பல நூல்களைப் படித்து அவற்றி லுள்ள கருத்துக்களைக் கிரகித்துக்கொள்வதாகவோ மாத் திரம் இருந்துவந்தது. ஆனல், இன்று போதன முறை எத்தனையோ வகையில் மாற்றம் அடைந்துவிட்டது. "ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதையும், பாட புத்தகங்களில் உள்ளதையும் மாத்திரம் மாணுக்கர் படித்தால் போதாது; அவர்கள் தாமாகவே எல்லாப் பிரச்சினைகளையும் பார்க்க வேண்டும்; சிந்திக்கவேண்டும்; உணர்ந்து சிருஷ்டிக்க வேண்டும்' என்ற அடிப்படைதான் இன்றியமையாதது என்று கருதுகிருரர்கள். அதாவது, மாணுக்கர் பாடம் கேட்பது போதாது, அவர்கள் உணர்ச்சியானது அநுபவம் பெறவேண்டும் என்பதுதான் இன்றைய நிபுணர்கள் கண்டுபிடித்துள்ள தத்துவமாகும்.
இத்தகைய அநுபவக் கல்வியை விருத்தி செய்வதற்கு ஆசிரியர்கள் பலவிதச் சாதனங்களை நாடுகின்றனர்; பல விதச் சந்தர்ப்பங்களைத் தேடுகின்றனர். ஊர்களைப்பற்றி யும், தேசங்களைப்பற்றியும், மக்களைப்பற்றியும் மாணுக்கர் கேரில் பழகி அறிந்துகொள்ளவேண்டும்; இலக்கியத்திலும் கலைகளிலும் நேரில் சம்பந்தப்பட்டு அநுபவிக்கவேண்டும்; விஞ்ஞானத்தில் இளம் உள்ளங்கள் பல சிக்கல்களையெல் லாம் நேரில் புரட்டிப் பார்த்துத் தீர்த்துக்கொள்ள வேண்டும்; பூமி சாஸ்திரம், சரித்திரம், குடியியல் முதலிய

கல்வி ஒலிபரப்பு 219°
துறைகளிலே உலகக் காட்சிகளையெல்லாம் மாணுக்கர் தமது வகுப்பறையிலேயே காணச் சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும். இவ்வாருக, வெறும் புத்தகப் படிப்பாக மாத் திரமில்லாமல் எல்லாக் கலைகளையும் கேரில் அநுபவிக்கச் சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும் என்பதே இன்றைய தத்துவம்.
இந்த அநுபவ இயக்கத்தை எப்படி வளர்ப்பது என்று ஆசிரியர் வழி தேடும்போது, சினிமாவும் ரேடி யோவும் ஒரளவு துணை செய்கின்றன. இந்த இரு சாத: னங்களும் காட்சிப் புலனுக்கும் கேள்விப் புலனுக்கும் உரியனவாகையால் ஒரளவில்தான் உதவும். புத்தகத்தில் படித்ததற்கும் ஆசிரியரிடம் கேட்டதற்கும் துணையாக மாத்திரம் நின்று, மாணுக்கரின் அநுபவ உணர்ச்சிக்குத் தூண்டுகோலாக உதவுகின்றன. உதாரணமாக, தமிழ் காட்டு மாணுக்கன் ஒருவன் அமெரிக்கா தேசத்தைப் பற்றியும், அங்காட்டு மக்களைப்பற்றியும் புத்தகத்தில் படித்துவிட்டுத் தனக்குத் தெரிந்த அளவில் கற்பனை செய்தே அக்காட்சிகளைக் காணவேண்டும். ஆன ல், அமெரிக்காவில் பிடிக்கப்பட்ட சினிமாவைப் பார்த்து ஓரளவு அநுபவ உணர்ச்சியைப் வளர்க்கலாம்; அல்லது அங்கே கேரில் சென்று திரும்பிய ஒரு பிரயாணி ரேடி யோவில் தம் அநுபவங்களைச் சொல்லும்போதும் புத்தகத் தில் படித்ததை அநுபவிக்கலாம்.
ரேடியோ ஒலிபரப்பினல் மாணுக்கருக்கு ஒருவித அநுபவ உணர்ச்சியை வளர்ப்பது மிகவும் சுலபமாகை யால், இந்தச் சாதனத்தை அதிகமாக இன்று உபயோகித்து வருகிறர்கள். உலகத்தின் பல பாகங்களிலும் மக்கள் வாழ்க்கையைப்பற்றியும் 5 ட க் கும் சம்பவங்களைப் பற்றியும் ரேடியோ மூலம் சித்திரித்து மாணுக்கர் தாமே 5ேளில் அநுபவிக்கத் தக்கதாகச் செய்வதுடன் இலக்கியத் திலும் கலையுணர்ச்சியிலும் அவர்கள் கற்பனைக் கண்,

Page 132
220 ஒலிபரப்புக் கல்
கொண்டு பார்க்கவும்லTசெய்துவிடலாம். சரித்திரத்தில் மாளுக்கர் மகாத்மா காந்தியைப்பற்றிப் புத்தகத்தில் படிக்கலாம். ஆன ல், ரேடியோவில் காந்தியடிகளைப் பற்றிய சில தகவல்களை, அவரை நேரில் காணச் சந்தர்ப்பம் கிடைத்த ஒருவர் தமது சொந்த அநுபவமாகச் சொல்லவும், இடையிலே ஒலிப்பதிவு செய்யப்பட்ட காந்தியடிகளின் பிரசங்கத்தை ஒலிபரப்பவும் மாணவர் கேட்டால் அந்த அநுபவம் எல்லையில்லாத உணர்ச்சியை மனத்தில் பதிய வைக்கும். இசையறிவும் இசையை அநுபவிக்கும் அறிவும் எல்லா மாணவருக்கும் இன்றியமையாதனவாகையால் அதைப்பற்றி ரேடியோவில் பேச்சுக்கள் ஒழுங்கு செய் வதுடன், சாதாரணமாக மாணவர் கேட்க வசதியற்ற பெரிய கச்சேரிகளையெல்லாம் ஒலிப்பதிவுகளாக உபயோ கித்து வழங்கலாம். புத்தகத்தில் மாத்திரம் படிக்கும் விஷயத்தை மாணுக்கர் கேரில் பார்க்கச் சந்தர்ப்பம் வேண்டு மென்பதற்காக, பொருட்காட்சிச்சாலை, மிருகக்காட்சிச் சாலை, சரித்திரப் பிரசித்திபெற்ற பட்டணங்கள், ஊர் களுக்குச் சிற்சில சமயம் ஆசிரியர் மாணுக்கரை அழைத்துச் செல்வது வழக்கம். ஆனல், எப்போதும் இது சாத்தியப் படாது. அதற்காகவே கேரில் பார்த்து வந்தவர்களைக் கொண்டு ரேடியோ மூலம் பேச வைத்து மாணுக்கரின் அநுபவத்துக்கு ஓரளவு உதவி அளிக்கலாம். ஒரு பிர யாணி தான் தூர தேசங்களில் கண்டவற்றை எடுத்துச் சொல்லலாம்; புலவர், என்ஜினியர், மிருக வைத்தியர், காட்டு இ லா கா இன்ஸ்பெக்டர் இவர்கள் தமது சொந்தத் தொழில்கள் பற்றிச் சொல்லலாம்; இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் கலாசாலைப் படிப்பை முடித்துக் கொண்ட பழைய மாணவர்கள் தொழில் தேடுவதைப் பற்றியுள்ள பிரச்சினைகளை விவாதிக்கலாம். இவை யெல்லாம் மாணுக்கர் ரேடியோவில் ஒருவரின் குரல் மூல மாக அநுபவிக்கும் அறிவு.

கல்வி ஒலிபரப்பு る3f
ரேடியோ மூலம் கல்வி ஒலிபரப்பு முக்கியமாகப் பிரிட் டனிலே ஒரு தனி முயற்சியாக கடந்து வருகிறது. லண்டன் பி. பி. வி. ஸ்தாபனத்தில், கல்வி ஒலிபரப்பைக் கவனிக்கும் பகுதியில் பயிற்சியும் அநுபவமும் வாய்ந்த சிறந்த ஆசிரி யர்கள் பலர் பணி புரிகிருர்கள். எல்லோருமே ஆசிரியத் தொழிலில் நன்கு அநுபவம் பெற்றவர்கள். அத்துடன் ஒலிபரப்புக் கலையில் நல்ல பயிற்சி பெற்றவர்கள். இவர் களைத் தவிர, கல்வி ஒலிபரப்புச் சங்கம் என்ற ஒரு ஸ்தாப னம் உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள, கல்வித் துறையில் புகழ் பெற்ற அறிஞர் பலர் இந்தச் சங் கத்தில் உள்ளனர். இவர்கள் காலத்துக்குக் காலம் கூடிப் பல பிரச்சினைகளைப்பற்றி ஆராய்ந்து தம் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் ஒலிபரப்பு நிபுணர்களுக்கு அறிவித்து வருவார்கள்.
கல்வி ஒலிபரப்பு ஒரு பக்கத்துக் கடமையாயிருக்க முடியாது. ஒலிபரப்பு நிலையத்திலுள்ள கலைஞரும் பாட சாலைகளிலுள்ள ஆசிரியர்களுமாகிய இரு பக்கத்தாரது கூட்டு முயற்சியே சிறந்த பலனளிக்கும். ஒலிபரப்பு நிலை யத்தார் மாணுக்கருக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை என்ன வகை யில் தயாரித்து ஒலிபரப்ப வேண்டுமென்று தீர்மானிப்பார் கள். நேரடியான பேச்சா யிருக்கவேண்டுமா, நாடகமா யிருக்கவேண்டுமா, சம்பாஷணையா யிருக்கவேண்டுமா என்று முதலிலே ஆராய்ந்து, அதற்குத் தக்கவிதமாக நிகழ்ச்சியைத் தயாரிப்பார்கள். இதற்கு, நிலையத்திலே கல்வி ஒலிபரப்புப் பகுதியில் இருப்பவர்கள் மாணுக்கரின் மனநிலையைப்பற்றியும் தகுதியைப்பற்றியும் பாடத்திட் டங்களைப்பற்றியும் கன்கு அறிந்தவர்களா யிருத்தல் வேண்டும்.
மறுபுறத்தில், பாடசாலைகளிலே ஆசிரியர்களாயிருப் பவர்கள் கல்வி ஒலிபரப்பை மாணுக்கர் கேட்பதற்குத்

Page 133
233 ஒலிபரப்புக் கல்ை
தமது பாடத் திட்டத்தில் ஒரு தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கி வைப்பதுடன், நிகழ்ச்சியைக் கேட்கும் மாணுக்கர் அதனைப் பூரணமாக அநுபவிக்கவும் வசதிகள் செய்து கொடுத்தல் வேண்டும். ரேடியோ கிலையத்திலே மாணுக் கரை கேரில் காண முடியாமல் இருந்துகொண்டு நிகழ்ச்சி கள் தயாரித்து ஒலிபரப்புகிறவர்களுக்குத் துணை கிற்க வேண்டியவர்கள் ஆசிரியர்களே. பாடசாலை வகுப்பறை யில் ஆசிரியர்களிடம் கேரில் பாடம் கேட்கும் மாணுக்கர் தம் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுத் தெளிந்து கொள்ள வசதியுண்டு. ஆணுல், அத்தகைய வசதியை ரேடியோ ஒலிபரப்பில் .ெறமுடியாது. பேசுவோருக்கும் பேசப்படுவோருக்கும் இடையில் கருத்துப் பரிவர்த்தனை கடைபெறுவதற்கு ரேடியோவில் வழியில்லை.
ஆனல், ரேடியோவில் நடைபெறும் கல்வி ஒலிபரப்பை ஒரு பாடம் என்று சொல்ல முடியாது. அது மாணவர் உள்ளத்தில் ஒருவித அநுபவத்தை மாத்திரம் கொடுக்கிற தென்று முன்பே சொல்லியுள்ளோம். அந்த அநுபவத் தில் பல புதிய கருத்துக்களே ஆசிரியர் வளர்த்துக் கொடுக்க உதவியாயிருக்கும். மாணுக்கர் மனநிலையை நேரில் அறிக் துள்ள ஆசிரியரே அவர்கள் உள்ளத்தில் ஏற்படும் அநு பவ உணர்ச்சியைக் கொண்டு கல்வி புகட்டுவதற்கு வல்ல வர்கள். ஆகையால் ரேடியோ ஒலிபரப்பில் மாணவரின் அநுபவம் ஏற்பட அகைக் துணைக்கொண்டு ஆசிரியர் தமது கடமையை இலகுவாக்கிக் கொள்ளலாம்.
மாணுக்களின் உளநிலையை கேரில் அறிந்த ஆசிரியர்கள் ரேடியோ நிலையத்திலுள்ளவர்களுக்கு அடிக்கடி ஒலிபரப் புக்களைப்பற்றிய தம் அபிப்பிராயங்களையும் மாணுக்கர் அநுபவங்களையும் எழுதித் தெரிவிக்கலாம். இத்தகைய ஆதரவு ஒலிபரப்பாளரின் முயற்சிக்குத் துணை செய்யும். சிறப்பாக, பாடசாலையிலுள்ள ஆசிரியர் ஒலிபரப்பாளரின்

கல்வி ஒலிபரப்பு 223
சேவையை வளர்க்கவேண்டுமானல், கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை மாணுக்கர் கேட்டு அநுபவிப்பதற்கு எல்லா வித உதவியும் செய்துகொடுத்தல்வேண்டும். சாதாரண மாக ரேடியோவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கேட்கும் முறை ஒன்று; ஆனல் கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சி களைக் கேட்கும் முறை வேறு. அதற்கு ஆசிரியர்களே வழிகாட்டிகளாகையால், அவர்களே கல்வி ஒலிபரப்புக் களைக் கேட்கும் முறையை வகுத்து, மாணுக்கர் கவனத்தை வளர்த்து வைத்தல் வேண்டும்.
சில ஆசிரியர்கள், கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சியையும் ஒரு பாடமாகப் பாவித்து, கரும்பலகை முதலிய சாதனங் களை வைத்துக்கொண்டு, ஒலிபரப்பு கடைபெறும்போது மாணுக்களிடம் குறுக்கிட்டுக் கேள்விகள் கேட்டும், ஒலிபரப் பில் குறிப்புக்கள் எழுதச் சொல்லியும், தாமே சில குறிப் புக்கள் எழுதியும் பாடம் 15டத்துவார்கள். இது மிகவும் பொருத்தமற்ற முறை. ரேடியோவில் வந்துகொண் டிருக்கும் ஒலிபரப்பை முழுவதும் கேட்பதற்கு முன்பு மாணுக்கர் புலனைத் தடுத்தலாகாது. ஒலிபரப்பு முடிந்த பின்தான் கேள்விகள் கேட்பதும் சந்தேக நிவர்த்தி செய்த லும் குறிப்புக்கள் எழுதுவதுமாகிய காரியங்களை வைத்துக் கொள்ளுதல் வேண்டும். ஒலிபரப்பை மா னக் கர் தொடர்ச்சியாகக் கேட்பதற்கு முதலில் இடம் கொடுத்து அதன் பின்னரே ஆசிரியர் அதைக் கொண்டு பாடம் நடத்த வேண்டும். இங்ங்னம் சில ஒலிபரப்பைக் கேட்ட பிறகு மாணக்கர்கள் கல்வி ஒலிபரப்பைக் கேட்கும் முறையைப் பழக்கத்தில் வளர்த்துக்கொள்வார்கள். ஒலிபரப்பு முடிந்த பின் ஆசிரியர் கேட்கும் கேள்விகளிலிருந்து இன்ன விஷயங் களைத்தான் முக்கியமாக மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டு விடுவார்கள்.

Page 134
234 ஒலிபரப்புக் கல்
கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சி தயாரிப்பாளர், பாடசாலை யின் பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், மாணுக்கரின் வயதுப் பிரிவுகளை வைத்துக்கொண்டு தயா ரித்தல் வேண்டும்: ஐந்து ஆறு வயதுச் சிறுவர்களுக்கு ஒரு பிரிவு; ஆறுக்கும் ஒன்பதுக்கும் இடையிலுள்ளவருக்கு இன் னுெரு பிரிவு; ஒன்பதுக்கு மேற்பட்டவருக்கு மற்ருென்று. கடைசியாகச் சொன்ன பிரிவை இரண்டு வகுப்பாக்கி, மத்திய வகுப்பு மாணவர் என்றும், மேல் வகுப்பு மாணவர் என்றும் வைத்துக்கொள்ளலாம். இந்த வகையில் மாணக் கரைத் தரம் பிரித்துக்கொண்டு, அவரவர்க்கு ஏற்ற முறை யில் ஒலிபரப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குவது சுலப மாக இருக்கும்.
கல்வி ஒலிபரப்பில் எத்தனையோ வகையான நிகழ்ச்சி களைப் பாடத் திட்டங்களுக்கு உதவியாக ஒலிபரப்பப் பல நிலையங்கள் முயன்று வருகின்றன. உதாரணத்துக்காக மாத்திரம் சில பாடப் பிரிவுகளை இங்கு எடுத்தாளுவோம்.
மொழியும் இலக்கியமும்
மாணுக்கரின் மொழியறிவுக்கும் வளர்ச்சிக்கும் பேச் சுச் சாதனமாகிய ரேடியோ மிகவும் வாய்ப்பான கருவி என்று சொல்லவேண்டும். முக்கியமாக, கீழ் வகுப்பு மாணக்கரிடையே மொழிப்பயிற்சியை வளர்க்கக் கதை, நாடகம் முதலிய நிகழ்ச்சிகள் பெரிதும் பயன்படும். மத்திய வகுப்புக்களில் இலகுவான இலக்கியங்களைக் கதை வடிவத் திலும் 5ாடக வடிவத்திலும் ஒலிபரப்பி, மேல் வகுப்புக் களிலே சங்க இலக்கியக் காட்சிகளையும், தற்கால இலக் கியப் பண்புகளையும், நூலாசிரியர் வரலாறுகளையும் பல விதமான நிகழ்ச்சி உருவங்களாக்கி ஒலிபரப்புவதோடு இலக்கிய நயம் தெரிதலைப்பற்றி அறிக்தோர் வாயிலாகவும் புலப்படுத்தலாம்.

கல்வி ஒலிபரப்பு 235
சரித்திரம், பூமி சாஸ்திரம், குடியியல் ஆகிய பாடங் களே இக்காலக் கல்வி நிபுணர்கள் ஒன்று படுத்திச் சமூக சாஸ்திரம் என்று ஒரு தனிப் பிரிவு ஏற்படுத்தியுள்ளார்கள். அதாவது, ஒன்ருேடொன்று சம்பந்தப்பட்டவை யாகை யால் இம்மூன்றையும் தனித் தனிப் பிரிவாகக் கற்பிக்காமல், இணைத்துக் கற்பிக்கவேண்டுமென்பது அவர்கள் முடிபு. ஒரு காட்டின் சரித்திரத்தை ஆராயும்போது, அங் காட்டின் நிலப் பாங்கு, அதில் வசிக்கும் மக்களின் வர "லாறு, அவர்கள் பண்பாடு பொருளாதாரம் அரசியல் முதலியன வளர்ந்த விதம், நாட்டிலே புகழ் பெற்ற பெரி யாருடைய வரலாறு, காட்டிலே ஆட்சி முறை வளர்ந்த விதம், மக்களின் உரிமைகள், கடமைகள்-இந்த விதமாகப் பாடங்களை வகுத்துக்கொண்டால் மேற்சொன்ன சமூக சாஸ்திரம் என்ற பிரிவில் அடங்கிய எல்லா விஷயங் களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
சங்கீதம்
சங்கீத பாடத்துக்கும் ரேடியோ மிகவும் வாய்ப்பான சாதனம். பிறக்கும்போதே தாயின் தாலாட்டைக் கேட்டுக்கொண்டு வந்த குழந்தை தனது வாழ்நாளில் இசை யறிவை வளர்த்துக்கொள்ள எவ்வளவோ வசதியிருக் கிறது. ஆணுல், நமது நாட்டில் எத்தனே பள்ளிக்கூடங் களில் இசையைக் கட்டாய பாடமாக வைத்திருக்கிருர் களென்று சொல்லத் தெரியவில்லை. சமூகத்தின் பண்பாட் டில் விருப்பமுள்ள சில குடும்பங்களில் மாத்திரம் சங் கீதத்தை வீட்டுப் பாடமாக வைத்திருக்கிருர்கள். அதுவும் பெண்களுக்கே பிராதான்யம் அளிக்கப்படுகிறது. ஆண்கள் சங்கீதம் கற்பது பாட்டு வாத்தியார் தொழில் பார்ப்பதற் காகவோ கச்சேரி செய்து பிழைக்கவோ என்றுதான் ஓர் அபிப்பிராயம் இன்னும் நிலவுகிறது.

Page 135
226 ஒலிபரப்புக் கல்
ஆனல், மற்ற நாடுகளில் மாணுக்கர் வாழ்க்கையில் அவர்கள் அறிவு வளர்ச்சிக்குச் சங்கீதத்தையும் ஒரு கட்டாய பாடமாக வைத்திருக்கிருர்கள். இசையின்பத்தை அநுபவிப்பதும் அதில் பக்குவப்படுவதும் உள்ளத் தூய் மைக்கும் பண்பாட்டுக்கும் இன்றியமையாதன என்பது அவர்கள் கருத்து. பள்ளிக்கூடங்களிலே இசையை ஒரு பாடமாக வைக்காவிட்டாலும் கல்வி நிகழ்ச்சியை ஒலிபரப் பும் ரேடியோ கிலையங்கள் இந்தத் துறையில் எவ்வளவோ சாதிக்க முடியும் என்று சொல்லவேண்டும். வசன பாடமும் கவிதையும் மாத்திரம் மாணுக்கருக்குப் போதா. ஆத்திகுடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, கன்னெறி ஆகிய கவி தைத் தொகுதியிலுள்ள பாட்டுக்களை 5ெட்டுருப் பண்ணி ஒப்பித்தால் மாத்திரம் போதாது. ஆகையால் சங்கீதத் துறையில் ரேடியோச் சாதனம் நல்ல துணை செய்யலாம்.
மேலே சொன்ன பாடங்களிலும் மற்றும் பலவற்றி லும் ரேடியோ நிலையத்தில் மாணுக்கருக்குக் கல்வி ஒலி பரப்பு நிகழ்ச்சிகள் தயாரிப்பவர்கள் கடமையும் பொறுப் பும் மிக மிக முக்கியமானவை. வயதுப் பிரிவுகளை வகுத்துக்கொண்டு அந்த அக்தப் பிரிவுக்குப் பொருத்த மாக ரேடியோப் பாடத்திட்டங்களை அமைத்து, அவற்றை அநுபவமும் தகுதியும் வாய்ந்தவர்களைக் கொண்டு எழுது வித்து, தக்கவர்களைக்கொண்டு ஒலிபரப்புதல் வேண்டும். கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சித் திட்டம் வகுப்பதற்கு உதவி யாக, உதாரணத்துக்கு மாத்திரம் சில குறிப்புக்களை இங்கே தருகிருேம்:
முதல் பிரிவு ஐந்து அல்லது ஆறு வயது மாணவர் மொழிப் பயிற்சி:
உப கதைகள், பஞ்சதந்திரக் கதைகள்-இவைகளை கேரே கதை ரூபமாகவும் 5ாடக ரூபமாகவும் அல்லது

கல்வி ஒலிபரப்பு ܫ V 22?
இரண்டும் கலந்த நிகழ்ச்சியாகவும் ஒலிபரப்பலாம். சிறு பிள்ளைகளுக்கான பாட்டுக்களை ஒலிபரப்பலாம். சரித்திரம்:
பெரியார் வரலாறு அல்லது புராதன மக்களைப் பற்றிய வரலாறு, தேச சரித்திரங்களிலிருந்து சில கதைகள்-இவற்றைப் பலவித உருவங்களில் குழங் தைகள் விரும்பக்கூடிய முறையில் ஒலிபரப்பலாம். இசை :
'நிலா நிலா ஒடி வா’ என்பதுபோன்ற குழந்தைப் பாட்டுக்களை இலகுவான இசையில் பாடுதல், பலவித வாத்தியங்களைப்பற்றிய இன பேதம் தெரிந்து கொள்ளச் செய்தல், பிள்ளைகள் கேட்டு நடிப்பதற்கு உதவியான இலகுவான பாட்டுக்களைப் பாடுதல் ஆகிய ஒலிபரப்புக்கள். மேலே சொன்ன திட்டத்தில் இரண்டாவது பிரிவு மாணவருக்கு அவர்கள் வயதுக்குப் பொருத்தமாக மாற்றம் செய்துகொண்டு, உயர்தர வகுப்பு மாணவருக்குத் திட்டம் அமைக்கும்போது இலக்கியத்தில் நயம் தெரிவித்தல், சிறந்த ஆசிரியரின் கடை முதலியவற்றை அநுபவித்தல், இசை யின் நுட்பங்களை அநுபவிக்கும் ஆற்றலைப் புரிந்து கொள்ளல், பெரியகச்சேரிகளில் பாடகரின் பாணி முதலிய வற்றை மதிப்பிட முறை தெரிந்துகொள்ளல் - ஆகிய அது பவ ஞானத்தை வளர்க்கத் தக்க முறையை ஆளலாம்.
கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சியின் வெற்றி, நிலையத்து நிகழ்ச்சி நிர்வாகிகளின் திறமையையும் பள்ளிக்கூட ஆசிரி யர்களின் ஆலோசனையையும் சேர்ந்த ஒத்துழைப்பையுமே பொறுத்திருக்கிறது என்று ஆரம்பத்தில் சொல்லி யுள்ளோம். ஆகையால், இரு திறத்தினரும் தத்தம் பூரண அநுபவத்தையும் திறமையையும் பயன்படுத்தினுல் கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் தக்க பலனைத் தரும்.

Page 136
பதினேழாம் அத்தியாயம்
ரேடியோவும் கிராம மக்களும்
முன்னேற்றம் அடைந்துள்ள எல்லா நாடுகளிலும் இந்தக் காலத்தில் பிற்போக்கிலிருக்கும் கிராம மக்களுக் கென்று பலவிதச் சமூக சாதனைகள் செய்யப்பட்டு வரு கின்றன. அத்தகைய சமூக சாதனைகளில் ரேடியோ மூலம் கல்வி புகட்டுவதும், பொழுதுபோக்களிப்பதும், மற்றைய அறிவுத் துறைகளில் சேவை செய்வதும் பெரு வழக்கில் வந்துவிட்டன. இதனுல், ரேடியோ நிலையங்களில் நிகழ்ச்சி தயாரிக்கும் பிர்வாகிகள் கிராம மக்களுக்கென்றே தனி நிகழ்ச்சி தயாரிப்பதிலும் ஒலிபரப்புவதிலும் விசேஷ கவனம் செலுத்தி வருகின்றனர். அத்துடன், அங்கிகழ்ச்சி களைக் கேட்டுப் பயன்பெறுவதற்கு அரசாங்கங்களும் பல விதமான செளகரியங்களைச் செய்துகொடுக்கின்றன. ஜன சமூக நிலையங்கள், கிராம முன்னேற்றச் சங்கங்கள் முதலிய நிலையங்களை ஸ்தாபித்து அங்கிலையங்களிலே கிராம மக்கள் தமது ஒய்வு கேரங்களிலே கூடுவதற்கும், கூடி அளவளாவு வதற்கும் வாசகசாலை, நால் நிலையங்கள் முதலியன ஏற் படுத்திக் கொடுத்து, கிராம மக்கள் செளகரியமாயிருந்து கேட்க இலவசமாக வானெலிப் பெட்டிகளும் வழங்கி வருகின்றன.
பட்டணத்துப் பண்பாடு ஒன்று; கிராமத்துப் பண் பாடு வேருென்று. அவை வெவ்வேருயிருந்தபோதிலும் ஒன்றுக்கு மற்றென்று உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்ற எண்ணம் ஏற்பட்லாகாது. ஆகையால், சமூக முன்னேற்றச் சேவையில் ஈடுபட்டோர் கிராமத்துப் பண்

ரேடியோவும் கிராம மக்களும் 229.
பாடு தாழ்ந்தது என்ற எண்ணத்துடன் அதனையும் பட் டணமாக்க முற்படுவது அசம்பாவிதம். அறியாமையுள்ள இடத்தில் அறிவைப் பெருக்குவதே நோக்கமாக இருக்க வேண்டுமேயன்றி, ஒரு சமூகத் தின் பழக்கப்பட்ட வாழ்க்கை மு  ைற  ைய மாற்றியமைக்க முற்படுவது பேதைமை. ஆகையால், கிராமத்துப் பண்பாட்டை மாற்றி யமைக்க முயலாமல், அப்பண்பாட்டைப் பேணி வளர்க்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். இந்த அடிப்படையிலேயே கிராம மக்களுக்கான ஒலிபரப்பு நிகழ்ச்சிகளைத் தயாரிப் பவர்கள் சிந்தித்து வேலை செய்யவேண்டும். கிராம மக் களுக்கு ஒரு பாஷை கடையிருக்கிறது. அவர்கள் சிந்தனைப் போக்கு வாழ்க்கையின் சூழ்நிலையையே பெரும்பாலும் சார்ந்துள்ளது. ஒய்வு 5ேரங்களில் பொழுது போக்குவதும் வாழ்க்கைத் துறையுடன் நெருங்கிய சம்பந்தமுடைய தாகக் காணலாம். இவை காரணமாகவே காட் டு ப் பாடல்கள், நடனங்கள், கூத்துக்கள், நாடகங்கள், விளை யாட்டுக்கள், பேச்சிலே ஒரு தனிப்பட்ட சாயல்-இத் தகைய பண்பாடு மற்றைய சமூகப் பிரிவிலிருந்து வேறு பட்டதாயிருக்கக் காண்கிருேம்.
மேலே சொன்ன விவரங்களை மனத்தில் கொண்டு கிராம ஒலிபரப்பு நிகழ்ச்சிகளைத் தனிப்பட்ட முறையில் தயாரித்து வழங்குவது ரேடியோ நிலையத்தினர் கடமை யாகும். இந்தக் கடமையில் ஈடுபடும் நிர்வாகி கிராமத்துப் பண்பாட்டில் 5ல்ல அநுபவம் பெற்றவராயும், முதியோர் கல்விப் பயிற்சி, கலை ஞானம், கற்பனைத் திறன் இவற்றில் வல்லவராயும் ஒலிபரப்பு நுட்பங்களை நன்கறிந்தவராயும் இருக்கல்வேண்டும். நிகழ்ச்சி தயாரிக்கும்போது கிராமத்து மக்களுக்குப் பொழுதுபோக்களிப்பது மாத்திரமல்ல, அறிவுத் துறையில் எல்லாவித அநுபவங்களையும் வழங்கத் தக்கதாகத் திட்டம் வகுக்கவேண்டும். கிராம மக்கள் எளிதாகத் தெரிந்துகொள்ள அவர்கள் மொழிநடையில்,

Page 137
8፵0 , ஒலிபரப்புக்கம்ே
அவர்கள் சிந்தனைப் போக்கில், அவர்கள் வாழ்க்கை அடிப்
படையில் நிகழ்ச்சிகளேத் தயாரிக்கவேண்டும்.
கிராம நிகழ்ச்சி ஒலிபரப்பில் இன்று பாரத நாட்டில் சிறப்பாகத் தமிழ்நாட்டு ரேடியோ கிலேயங்கள் மிக உயர்ந்த தரத்தில் நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்குகின்றன என்று சொல்லவேண்டும். மற்ற எந்த காட்டையும் விடத் தமிழ் ாேட்டுக் கிராமச் செல்வம் அபரிமிதமாக நமக்குக் கிடைக் கிறது. விவசாயத்திலேயே தலமுறை தலைமுறையாக வளர்ந்து வரும் கிராமத்தவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு தனிப்பட்ட பண்பாட்டைப் பெருக்கி வந்துள்ளார்கள். அவர்கள் தொழில் முறையிலே அநுபவ முதிர்ச்சியில் வந்த அரிய சாதனேகள் நவீன விஞ்ஞான ஆராய்ச்சியிலும் கண்டு பிடிக்கப்படாத பல உண்மைகளேக் கொண்டுள்ளன. அவர்கள் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் அன்பும் பரிவும் பரிமளிக்கின்றன. அவற்றின் விளைவாக, ஒரு கலேயை வளர்த்துப் பாட்டிலும் கூத்திலும் விழாக்களிலும் இன்பங் காண்கின்றனர். இவையெல்லாம் நமது தமிழ்நாட்டில் கிராம ஒலிபரப்பு நிகழ்ச்சிக்கு அள வற்ற கருப்பொருளேக் கொடுத்துதவுகின்றன.
கல்வி ஒலிபரப்புக்கு ரேடியோ நிலயத்திலுள்ள நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கும் பாடசாலைகளிலுள்ள ஆசிரி பர்களுக்கும் எப்படித் தொடர்பு அவசியமோ அதேபோல, கிராம ஒலிபரப்புக்கும் கிலேயத்து கிர்வாகிகளுக்கும் கிராம பரிபாலன அதிகாரிகளுக்கு மிடையில் நல்ல தொடர்பு வேண்டும். கிராம மக்களின் தேவைகள், அவர்கள் குறைகள், விருப்பு வெறுப்புக்கள் ஆகியவற்றை கிலே பத்தில் உள்ளவர்கள் நன்குனர்ந்து அவற்றிற்கு ஏற்ற வாறு நிகழ்ச்சிகளேத் தயாரிக்கவேண்டும். திருச்சிராப் பள்ளி கிலேயத்தில் நடைபெறும் கிராம நிகழ்ச்சிகளில் கிராமத்து மக்களுடன் நேரடியான தொடர்புக்காகக் கிராம
县

|
ரேடியோவும் கிராம மக்களும் 33.
ரேடியோ சங்கம் என்று பல சங்கங்களே அமைத்து, அந்தச் சங்கங்களிலிருந்து பிரதிநிதிகளே வரவழைத்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செய்கிருர்கள்.
ரேடியோவில் கிராம நிகழ்ச்சி ஒலிபரப்பும்போது கிராமத்து மக்களுக்கு உபதேசம் செய்யும் தன்மையோ அல்லது கற்றுக்கொடுக்கும் பாவனேயோ தொனித்த லர்காது. கிராமத்து மக்கள் தமக்கென ஒரு பண்பாட் டைக் கொண்டுள்ளார்களாகையால், ரேடியோ மூலம் அவர்களுக்கு உபதேசம் செய்வதை வெறுப்பார்கள். ஆதிவே, எந்த விஷயத்தை எடுத்துச் சொல்லும்போதும் அவர்களில் ஒருவராக இருந்து அவர்களுடன் கலந்து பேசுவதே அல்லாமல் போதனே'உணர்ச்சி ஏற்படாமல் ார்த்துக்கொள்ள வேண்டும். பேச்சுக்கள், நாடகங்கள், விவாதங்களெல்லாம் ஏற்கெனவே கிராமத்தவர் தமக்கென விளர்த்துக்கொண்ட பாணியில் இருத்தல் வேண்டும். எத்தகைய புதிய விஷயங்களே எடுத்துச் சொன்னுலும் அவை கிராமத்தவர்களுக்கு எளிதில் விளங்கும் நடையில் இருத்தல் வேண்டும்.
கிராம நிகழ்ச்சிக்கு என்னவிதமான பொருள் தேட வேண்டுமென்பதில் எவ்விதச் சங்கடமும் இருக்கவேண்டிய தில்லே. கிராமத்துக்கே பிரத்தியேகமாயுள்ள பாடல்கள், நடனங்கள், நாடகங்கள், அவர்கள் வாழ்க்கையில் கலந் துள்ள விழாக்கள் முதலியன யாவும் ஒலிபரப்பு நிகழ்ச்சி களுக்கு வாய்ப்பானவை. இவற்றைவிட, கிராம மக் களுக்கு அறிவு வளர்ச்சிக்குரிய எல்லாக் கருத்துக்களேயும் பேச்சாகவோ, விவாதமாகவோ, சம்பாஷ்னேயாகவோ, நாடகமாகவோ தயாரித்து அவ்வப்போது வழங்கலாம். ஆணுல் இங்கிகழ்ச்சி உருவங்கள் யாவும் சாதாரணமாக ரேடியோவில் நடக்கும் மற்றைய நிகழ்ச்சிகளேப் போன் றிருக்காமல் ஏற்கெனவே கிராமத்தில் வழங்கும் பேச்சு,

Page 138
232 ஒலிபரப்புக் கலை
நாடகம் முதலிய பாணியில் அமைந்திருந்தால்தான் அவர்கள் எளிதில் கிரகித்துக்கொள்ள வசதியாயிருக்கும். நிகழ்ச்சி தயாரிப்பாளர் இந்த அடிப்படையை நினைவு வைத்துக்கொண்டு பணி புரியவேண்டும்.
கிராம ஒலிபரப்புக்குக் கிராமத்தில் உள்ளவர்களையே நிகழ்ச்சிகளில் பங்குபெறச் செய்யவேண்டுமென்ற தி ! கிடையாது. நிலையத்திலேயே இதற்கெனப் பயிற்சி பெற்ற ஒலிபரப்பாளர்தாம் சிறப்பாகக் கொண்டு நடத்த முடியும். சில விசேஷ நிகழ்ச்சிகளில் கிராமத்தவர்களும் கலக் கொள்ளலாம். ஒலிப் பதிவு வசதியிருப்பதால் கிராமத்துச் குழ்நிலை கொண்ட பல அரிய சம்பவங்களையும் நாடகங் களையும் பாட்டுக்களையும் கேரிலேயே ஒலிப்பதிவு செய் நிகழ்ச்சிகளில் வழங்கலாம்.

பதினெட்டாம் அத்தியாயம் ஒலிபரப்பு விளம்பரம்
பத்திரிகை, சினிமா முதலிய சாதனங்கள் வர்த்தகத் துறையில் விளம்பரத்துக்கு உபயோகப்படுவதுபோல, ரேடியோவும் டெலிவிஷனும் இக்காலத்தில் சில நாடுகளில் அபரிமிதமாக உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இதனல், ஒலிபரப்புக் கலையில் சாதாரணமாக மக்களின் அறிவுக்கும் பொழுதுபோக்குக்கும் கடத்தப்படும் நிகழ்ச்சிகளைத் தவிர, விளம்பரத்துக்காகவே கடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகள் தயாரிப்பதிலும் அவற்றை ஒலிபரப்புவதிலும் பல கலைஞர் விசேஷப் பக்குவம் பெறவேண்டி ஏற்பட்டிருக்கிறது. சிறப்பாக, அமெரிக்காவில் இந்த விளம்பர ஒலிபரப்பு எத்தனையோ ஆண்டுகளாக வளர்ச்சியுற்று வந்திருக்கிறது. ஒலிபரப்புக் கலைஞரிற் பலர் இந்தத் துறையிலே கவனம் செலுத்தி விசேஷப் பயிற்சியும் அநுபவமும் பெற்றுள் ளார்கள், விளம்பர ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில் நிலையத்துக்கு நிலையம் பலத்த போட்டி போட வேண்டியிருப்பதால் தயாரிப்பாளரும் ஒலிபரப்பாளரும் கண்ணும் கருத்துமா யிருந்து, பணம் கொடுக்கும் வர்த்தக முதலாளிகளைத் திருப்திப்படுத்துவதற்கு உயர்தரத்தை ஸ்தாபிக்கவேண்டிய நிர்ப்பந்தமிருக்கிறது. இந்தக் காரணத்தால் கலைஞரும் நிகழ்ச்சி தயாரிப்பாளரும் தமது முயற்சியில் வெற்றி கண்டால் அவர்களுக்கு மதிப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும்.
நமது பிரதேசத்தில் இப்போது ரேடியோ சிலோன் என்ற இலங்கை வானெலியும் மேற்கிந்தியாவில் கோவா

Page 139
234 ஒலிபரப்புக் கஃ9
ரேடியோவும் விளம்பர ஒலிபரப்புத் துறையில் இறங்கி ஓரளவில் ஸ்தாபித்துக்கொண்டு வருகின்றன. பாரத 5ாட்டில் இன்னும் விளம்பர ஒலிபரப்பு இடம் பெறவில்லை. உலகத்தின் பல பாகங்களில் பரவிக்கொண்டு வரும் இந்த இயக்கம் என்றே ஒரு5ாள் பாரத நாட்டிலும் ஏற்படக் கூடும் என்றே சொல்லவேண்டும். விளம்பர ஒலிபரப்பு மக் களின் கீழ்த்தரமான சுவையைத் தூண்டிவிடும் என்றும், கலாசார வளர்ச்சியைத் தடை செய்யும் என்றும் பல அறிஞர்கள் அபிப்பிராயப்படுகிருர்கள். ஆனல் அது தவ ருன அபிப்பிராயம் என்று வேறு பல அறிஞர்கள் கருது கின்றனர். பிரிட்டனில் பல ஆண்டுகளாக 5டந்த இந்த அபிப்பிராயப் போராட்டத்தில் இப்போது வர்த்தகக் குழு வினர் ஒரளவு வெற்றி பெற்று, விளம்பர டெலிவிஷன் ஸ்தாபிக்க அரசாங்கத்தை இசையச் செய்துவிட்டனர். ஆகையால் வருங்காலத்தில் இந்த ஒலிபரப்புச் சாதனம் வர்த்தகத் துறையில் உள்ளவர்களுக்கு ஒரு பக்க பலமாக விளம்பர விநியோகத்தையும் ஏற்றுக்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏற்கெனவே போட்டி நிலையங்கள் இயங்கிக்கொண்டிருக்க, நிறைந்த வருவாயைத் தரும் அம் முயற்சியை எந்த நாடாவது ஏற்றுக்கொள்ளாமல் இருக்க (ԼՔԼԳ.Ա IITցյl.
விளம்பர ஒலிபரப்பு இப்போது ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுவிட்டது. சாதாரண ஒலிபரப்பில் ஈடுபட்டிருக்கும் கலைஞர்கள் விளம்பரத் துறையிலும் தக்க பயிற்சியும் அநுபவமும் பெறவேண்டியது வருங்கால உபயோகத்துக்கு இன்றியமையாத தாகையால் அதுபற்றியும் இந்த நூலில் சிறிது சொல்லி வைப்பது கன்றென எண்ணுகிறேன்.
சாதனச் சிறப்பு
சாதாரணமாகப் பத்திரிகைகளில் காம் பார்க்கும் விளம்பரங்களைவிட ஒலி மூலம் நடைபெறும் பிரசாரத்தில்

ஒலிபரப்பு விளம்பரம் 335.
எவ்வளவோ சிறப்பிருக்கிறது. மனிதருடைய குரல் தரும் கவர்ச்சியும் கம்பிக்கையும் தனி. அவற்றுடன் அந்தக் குரல் நம்மிடம் நேரிலேயே விண்ணப்பிக்கும்போது அதில் அளவற்ற சக்தி இருக்கிறது. இன்னும், விளம்பர ஒலி பரப்பு நிகழ்ச்சியில் கேயர்கள் சிறந்த பல கச்சேரிகளையும் காடகங்களையும் பிற கலையம்சங்களையும் கேட்டதுபவிக்க விளம்பர கர்த்தாக்கள் ஏற்பாடு செய்வதால் வர்த்தகர் களிடம் கேயர்களுக்கு அபிமானமும் பற்றுதலும் ஏற்படு கின்றன. அது விளம்பரக்காரருக்குச் சிறந்த பயனைத் தரும். இப்படியாக, ஒலி மூலம் விகியோகிக்கும் பிரசாரத்துக்கு அதிகச் செல்வாக்கு என்று விளம்பரக் கலை தெரிந்தவர்கள் சொல்லுவார்கள்.
சாதாரண ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் தயாரிப்பவர்களைக் காட்டிலும் விளம்பர ஒலிபரப்புத் தயாரிப்பவர்களின் கடமை மிகவும் கஷ்டமானது. விளம்பரக் கலையே மிகவும் விசேஷப் பண்புகளை உடையதாகையால் அதற்கென்று ஏற்பட்ட கிபுணர்கள் அடங்கிய விசேஷ ஸ்தாபனங்கள் எல்லா நாடுகளிலும் ஏற்பட்டிருக்கின்றன. வியாபார ஸ்தாபனங்கள், முதலாளிகள் ஆகியோர் தமது விளம்பர விஷயம் யாவற்றையும் அந்த நிபுணர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள். ரேடியோவில் ஒலிபரப்பு நேரம் விலைக்கு வாங்குவது, ஒலிபரப்புக்கு வேண்டிய நிகழ்ச்சிகளைத் தயார் செய்வது, விளம்பரத்துக்கான பிரதிகள் தயா ரிப்பது, ஒலிப்பதிவு செய்வது ஆகிய சகல காரியங்களையும் விளம்பர ஸ்தாபனங்களே கவனித்துக்கொள்ளும். நிகழ்ச்சி கள் தயாரிப்பது மாத்திரமல்ல, அந்த நிகழ்ச்சிகளில் பேச் சுக்கள், அறிவிப்புக்கள் முதலிய யாவும் விளம்பரக்காரர் விரும்பிய முறையில் இருக்கவேண்டுமாகையால் அந்தக் கடமைகளையும் விளம்பர ஸ்தாபனங்கள் நிறைவேற்று கின்றன. பெல்ஜிய காட்டிலிருக்கும் ரேடியோ லக்ஸம் பர்க் என்ற ஒலிபரப்பு ஸ்தாபனம் முற்றும் விளம்பர ஒலி

Page 140
386 ஒலிபரப்புக் கல்
பரப்பிலேயே கடைபெற்று வருகிறது. "இங்கிருந்து ஒலி பரப்பாகும் நிகழ்ச்சிகள் ஐரோப்பாவின் பல நாடுகளில் தெளிவாகக் கேட்கக்கூடியனவா யிருப்பதால் விளம்பரக் காரர் பலர் இங்கிலையத்தை உபயோகித்து வருகின்றனர். ஆனல், இங்கு ஒலிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளும் லண்டன், பாரிஸ், நியூ யார்க், பிரஸல்ஸ் ஆகிய நகரங்களில் விளம்பர நிபுணர்களால் தயாரிக்கப்பட்டு ஒலிப்பதிவு களாக வழங்கப்படுவன. அமெரிக்காவில் பல நிலையங்களில் இம்மாதிரி ஒலிப்பதிவு நிகழ்ச்சிகள் கடந்தபோதிலும் ஸ்டூடியோ சிகழ்ச்சிகள் ஏராளமாக நடக்கின்றன. ஆஸ்தி ரேலியாவிலுள்ள அநேக விளம்பர ஒலிபரப்பு நிலையங் களிலும் ஸ்டூடியோ கிகழ்ச்சிகள் பல உள.
தயாரிப்பு
விளம்பர ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் தயாரிப்பதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, கேயர்களை எவ்வாறு வசீகரிக்கவேண்டுமென்ற கோக்கமே. அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு விளம்பரக்காரர் தமது முழு ஆற்றலை யும் பயன்படுத்துவார். ஆனல், அதே சமயம் தமது விளம் பரத்தைத்தான் அவர்கள் முக்கியமாகக் கருதுகிருர்கள் என்று எண்ணி, கேயர்கள் வெறுப்புக்கொள்ளாமல் இருக்கவேண்டி, "நிகழ்ச்சியின் கலைப் பண்பிலும் அதிகச் சிரத்தை காண்பிப்பார்கள். நல்ல விளம்பர நிகழ்ச்சிகளில் அந்த நிகழ்ச்சி சிதைவுபடாதிருக்க ஊடே ஊடே விளம் பரங்களைச் செருகாமல் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பார்த் துக்கொள்வார்கள். கலை நிகழ்ச்சி பூரணமாக முடிந்தபின் தான் விளம்பரத்தை அறிவிப்பார்கள். அன்றியும், விளம் பரத்துக்கும் அதைச் சேர்ந்த நிகழ்ச்சிக்கும் சரியான தொடர்பு இருக்கவேண்டியது அவசியம். நல்ல அருமை யான பிராசீன சங்கீதத்தை ஒலிபரப்பிவிட்டு உடனே பேதி மருந்து விளம்பரத்தைச் செருகுவது வெறுப்பைத்

ஒலிபரப்பு விளம்பரம் 38?
தரும். அல்லது, உயர்ந்த அத்தர் திணிசு ஒன்றை விளம் பரம் செய்யும் நிகழ்ச்சி ஒரு சில்லறை கிகழ்ச்சியா யிருந் தாலும் அந்த வர்த்தகச் சரக்கின் மதிப்பைக் குறைத்து விடும். இத்தகைய விஷயங்களுக்காகவே விளம்பர நிபுணர்கள் நிகழ்ச்சி தயாரிப்பதற்கென்று கியமிக்கப்படு கிருர்கள்.
அறிவிப்பாளர்
ஆயினும், ரேடியோ நிலையத்தில் உடனடியாக ஒலி பரப்பில் சம்பந்தப்பட வேண்டிய அறிவிப்பாளர் எல்லா ரும் விளம்பர ஸ்தாபனங்களின் உத்தியோகத்தரா யிருக்க முடியாது. ஆகையால் கிலேய அறிவிப்பாளர் விளம்பர ஒலிபரப்பில் என்ன பங்கு பெறவேண்டு மென்பது ஆரா யத் தக்கது. உண்மையில், விளம்பர ஒலிபரப்பில் நிகழ்ச்சி யைக் காட்டிலும் அந்த நிகழ்ச்சியை அறிவிக்கும் அறி விப்பாளரும் அறிவிப்புமே நிலையத்தின் ரேடியோ நேரத்தை மார்க்கட்டில் விலைப்படுத்த வேண்டியன. அறி விப்பாளரின் அறிவிப்பைக் கேட்ட கேயர்கள் இன்னுமொரு தடவை கேட்கலாம் என்று விரும்பக்கூடிய கண்ணியம் வாய்ந்த குரலும் பாணியும் அவரிடம் இருத்தல் வேண்டும். கவர்ச்சி முக்கியமாயிருப்பதோடு, விளம்பர ஒலிபரப்புக்கு, பண்டங்களின் விலை கூறும் பாவமும் தோற்றவேண்டு மென வியாபாரிகள் விரும்புவார்கள். ஆகையால், சாதா ரண ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில் அதுட்டிக்கும் இயல்பை விட நேயர்களை அழைக்கும் பாவனை விளம்பர ஒலிபரப்பில் தேவைப்படும். அதுவே விளம்பரத்தை எங்கும் பரவச் செய்து, அறிவிக்கும் பண்டத்தை கேயர்கள் உள்ளத்தில் பதியச் செய்து விற்பனையைப் பெருக்கும் என்பர்.
விளம்பர ஒலிபரப்பு அறிவிப்பாளர், நிறைந்த அநுபவ மும் பக்குவமும் பெற்ற பேச்சாளரா யிருக்கவேண்டியது

Page 141
238 ஒலிபரப்புக் கல்
அவசியம். சாதாரண ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில் எங்காவது தெரிந்தும் தெரியாமலும் தவறு ஏற்பட்டாலும் கேயர்கள் மன்னித்து விடுவார்கள். ஆனல் விளம்பர ஒலிபரப்பு அறிவிப்புக்களில் அஜாக்கிரதை காரணமாக ஒரு சிறு தவறு கேர்ந்துவிட்டால் போதும், விளம்பரத்தின் சக்தி குன்றி வியாபாரிகள் போட்ட முதலும் செலவும் அனர்த்த மாகிவிடும். ஆகையால், விளம்பர ஒலிபரப்பு அறிவிப்பா ளர் அசாத்தியத் திறமைசாலிகளா யிருக்கவேண்டியது இன்றியமையாதது.

பத்தொன்பதாம் அத்தியாயம் ஒலிபரப்பு நிர்வாகம்
ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை முறைப்படி நிர்வகிப்பதற்கு ஒரு ரேடியோ நிலையத்தில் பல்வேறு உத்தியோகத்தர் கிய மிக்கப்பட்டிருப்பார்கள். கிலையத்தின் முழு நிர்வாகப் பொறுப்பும் "ஸ்டேஷன் டைரக்டர்’ அல்லது நிலையத் தலைவர் என்ற உயர்தர அதிகாரி ஒருவர் கையில் இருக்கும். இவருக்குக் கீழே ஒலிபரப்பு விஞ்ஞானப் பகுதியைக் கவனிக்க ஒரு பிரதம இன்ஜினியரும், நிகழ்ச்சி நிர்வாகத்தைக் கவனிக்க ஒரு 'புரோகிராம் டைரக்டர்’ அல்லது நிகழ்ச்சி அதிகாரியும் இருப்பார்கள்.
நிகழ்ச்சி நிர்வாகமே இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டுமாகையால் அதுபற்றி விவரமாக கோக்குவோம். ஒலிபரப்புத் துறையிலே நிகழ்ச்சி கிர்வாகம் பல உப பிரிவு களாக வகுக்கப்பட்டிருக்கும். இசைப் பகுதி, பேச்சுப் பகுதி, நாடகப் பகுதி, கல்வி ஒலிபரப்புப் பகுதி, கிராம ஒலிபரப்புப் பகுதி, வெளிப்புற ஒலிபரப்புப் பகுதி-இப் படியாக நிர்வாக வசதிக்குத் தக்கவாறு பிரிவுகளை வகுத்து, ஒவ்வொன்றுக்கும் தனித் தனி உத்தியோகத்தர், உதவி உத்தியோகத்தர் முதலியவர்கள் நியமிக்கப்பட்டிருப் பார்கள். இவர்களைத் தவிர, அறிவிப்பாளர், எழுத் தாளர், நடிகர், பாடகர், வாத்தியம் வாசிப்போர், வாத்திய கோஷ்டி கடத்துவோர் முதலிய கலைஞர்களும் நிலையத்தின் தேவைக்குத் தக்க அளவில் கியமிக்கப்பட்டிருப்பார்கள். பெரும்பாலான நிலையங்களிலெல்லாம் இந்தக் கலைஞர்கள் கிரந்தர உத்தியோகத்தராயில்லாமல் ஒப்பந்த முறையில் கடமை ஆற்றுவார்கள். இந்த ஒப்பந்தம் வருஷத்துக்கு

Page 142
340 ஒலிபரப்புக் ఆశీలి
வருஷம் புதுப்பிக்கப்படும்; அல்லது புதிய கலைஞர்கள் சேர்க்கப்படுவார்கள். காலத்துக்குக் காலம் புதிய குரல் களையும் புதிய இசையாளர்களையும் நடிகரையும் தேடி நிகழ்ச்சிகளில் உபயோகிக்கவேண்டுமென்பதே நோக்கம். அதாவது, கேயர்கள் அடிக்கடி கேட்டு அலுத்துப் போகாமல் புதிய குரல்கள் ரேடியோவில் தோன்றிக் கொண்டிருக்கவேண்டும். ஆனல் நடைமுறையில் ரேடி யோவில் தொழில் பார்த்தவர்களை ஒப்பந்தம் முடிந்தவுடன் நிலையத்தவர் வெளியேற்றிவிடுவதில்லை. ஒப்பந்தங்களை நீடிக்கச் செய்து வேறு பல துறைகளில் அவர்கள் பணி புரி வதற்கு வசதி செய்வார்கள். சாதாரணமாக, எவ்வித அநுபவமுமில்லாத புதியவர்களை ரேடியோ ஒலிபரப்புக்குச் சேர்ப்பதென்ருல் நிகழ்ச்சி ஒழுங்கும் நிர்வாகமும் கிரம மாய் கடக்க முடியாதாகையால், பயிற்சி பெற்றவர்கள் உதவிதான் என்றும் முக்கியமானது. ஆகவே, எந்தத் துறையிலாவது சேர்க்குகொண்டவர்களுக்கு கிலேயத்தின் பலவிதக் காரியங்களையும் கேரில் அறிந்து பழகிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதை கிலேயத்துக்கு ஒரு சாதகமாகவே கருதவேண்டும்.
நிகழ்ச்சி நிர்வாகப் பகுதியும் ஒலிபரப்பு யந்திர கிர்வாகப் பகுதியும் ஒத்துழைத்து, ஒருமித்த பாதையில் சென்ருல்தான் ஒலிபரப்பு வெற்றி யளிக்கும். நிகழ்ச்சி தயாரித்து ஒலிபரப்பும் உத்தியோகத்தர்களுக்கு, யந்திர சாதனங்களை இயக்கும் உத்தியோகத்தரின் ஆதரவும் ஒத் துழைப்பும் அவசியம், அவர்கள் நிகழ்ச்சி நிர்வாகிகளின் முயற்சியையும் பொறுப்பையும் உணர்ந்து சிரமத்தைப் பாராது ஊக்கத்துடன் உதவியளித்தல் இன்றியமையாதது.
திட்டம் வகுத்தல்
ஒலிபரப்புக் கலையில் வல்லவர்கள் இருந்தபோதிலும், ஒரு நிலையத்து நிகழ்ச்சிகளை நிர்வகித்து கடத்துவதற்கு

ஒலிபரப்பு நிர்வாகம் 241
விசேஷ அநுபவமும் பயிற்சியும் விவேகமும் தேவை. ஒலி பர ப் பு நேரத்தை மதிப்பிடுதல், சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமான சிகழ்ச்சியைத் தீர்மானித்தல், அதற்கு வேண்டிய திட்டங்களை வகுத்தல் முதலிய பல்வேறு நிர் வாகக் கடமைகள்தாம் ரேடியோ நிலையத்து உத்தியோகத் தரின் பொறுப்பில் வரும்.
நிகழ்ச்சி நிர்வாகப் பகுதியில் நிகழ்ச்சி அதிகாரி, சங்கீதம், பேச்சு, நாடகம் முதலிய பிரிவுகளுக்கு பொறுப் புடைய தம் உதவியாளரை அழைத்து ஆரம்பத்தில் ஆலோசனை நடத்துவார். தினசரி ஒலிபரப்பு நேரம் எவ்வளவு என்பது அந்த சிலையத்தின் கொள்கையளவில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும். அந்த விகிதப் படி ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் போன்ற கால எல்லை யில் பேச்சு, இசை, நாடகம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு என்ன விகிதம் ஒதுக்குவது என்று தீர்மானிப்பார்கள். சில நிலை யங்களில் இந்தக் கொள்கைத் திட்டம் தொடர்ந்தாற் போல மூன்று மாதங்களுக்கும், வேறு நிலையங்களில் ஆறு மாதங்களுக்கும் வகுக்கப்படும். ஓர் ஆண்டுக்குமேல் ஒரே திட்டத்தைத் தொடர்ந்து கடத்துவது அபூர்வம். ஏனெனில், ஒரே விதமாக வாரங்தோறும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து வருவதனல் கேயர்களுக்குச் சலிப் புத் தட்டக்கூடும். மூன்று மாதம் அல்லது ஆறு மாதத்துக்கொரு தடவை திட்டத்தைப் புனராலோசனை செய்துகொள்வதே மேல்.
நிகழ்ச்சி அட்டவணை தயாரிக்கும்போது ஒலிபரப்பின் எல்லா அம்சங்களும் இடம் பெறக்கூடியதாக வகுக்கப் படும். சில அம்சங்கள் வாரத்துக்கொரு தடவையில்லாமல் பட்சத்துக்கொன்ருகவும் வரலாம். இப்படியே மூன்று மாத காலமாகிய பதின்மூன்று வாரங்களுக்கு ஓர் அட்ட வணைச் சுருக்கம் முதலில் தயாரிக்கப்படும்.
இந்தவிதமான நேர அட்டவணை தயாரிப்பதில்தான் நிலைய நிகழ்ச்சி உத்தியோகத்தரின் அநுபவமும் விவேக

Page 143
242 ஒலிபரப்புக் கல்
மும் சோதனைக்குட்படும். நிகழ்ச்சித் தலைவர், இசைப் பகுதி, நாடகப் பகுதி, பேச்சுப் பகுதி முதலிய பிரிவுகளின் நிர்வாகிகள் யாவரும் ஒன்றுகூடி, எல்லோருடைய அபிப் பிராயங்களும் திட்டம் வகுப்பதில் கலந்து வரும்.
உதாரணமாக, காலை வேளையில் ஒலிபரப்பு எத்தனை மணிக்கு ஆரம்பிக்கவேண்டும் என்ற பிரச்சினை எழலாம். நாட்டிலே மக்கள் வாழ்க்கை முறை, அவர்கள் பழக்க வழக் கங்கள், காரியாலயங்களிலும் தொழிற்சாலைகளிலும் கருமங்கள் ஆரம்பிக்கும் நேரம் ஆகிய விஷயங்களை யெல் லாம் மனத்தில் கொண்டு அதற்குத் தக்கவிதமாக, கேயர்கள் அதிகாலையில் எந்த வேலையில் ரேடியோ கேட்க வசதியாயிருக்கும் என்பதைத் தீர்மானிக்கவேண்டும்.
நேயர் விருப்பு வெறுப்பு
கால கிர்ணயம் செய்யப்பட்ட பிறகு எத்தகைய நிகழ்ச்சி அந்த வேளைக்குப் பொருத்தமாயிருக்கும் என் பதைக் கவனிக்கவேண்டும். உதாரணமாக, காலை ஏழரை மணிக்கு நம் காட்டில் பட்டணங்களிலுள்ள வீடுகளில் மக்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் எ ன் று கவனிப்போம். தகப்பனுர் தம் காரியாலயத்துக்குப் புறப்பட ஆயத்தம் செய்துகொண்டிருப்பார். குழந்தைகள் பள்ளிக்கூடம் போக ஆயத்தமாவார்கள். இவர்களே அனுப்புவதற்கு முன் ஆகாரம் முதலியன தயாரிப்பதில் தாய் சமையல்கட்டில் ஈடுபட்டிருப்பாள். இந்த நெருக்கடி யான சமயத்தில் ரேடியோவில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியை, அதாவது நேயர்கள் ஆற அமர உட்கார்த்து கேட்கவேண்டிய ஒரு நிகழ்ச்சியை ஒலிபரப்புவதில் எவ்விதப் பயனுமில்லை. இலகுவாகக் காதில் போட்டுக் கொண்டு மற்ற வேலைகளையும் கவனிக்கத்தக்க சிகழ்ச்சி தான் அந்தச் சமயத்துக்குப் பொருத்தமாயிருக்கும். இலகு சங்கீதம் அல்லது சினிமாப் பாட்டுக்கள் அந்த வேளையில்

ஒலிபரப்பு நிர்வாகம் 243
ஒலிபரப்பப்படலாம். பேச்சு 15ாடகம் ஆகிய நிகழ்ச்சி களை R&னக்கவும் முடியாது.
இம்மாதிரியாகவே ஒருநாட் பொழுதில் காலை வேளை யில், மத்தியான்னத்தில், மாலையில், இரவில் - வேளைக்குத் தக்கபடியும், மக்களின் அன்ருட அலுவல்களை உணர்ந்தும், வாழ்க்கை முறையைக் கவனித்தும் நிகழ்ச்சிகளை அமைக்க வேண்டியது ரேடியோ நிலைய நிகழ்ச்சி நிர்வாகிகளின் கடமையாகும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் முன்னேற்றமுள்ள பல நாடு களில் கேயர்களின் விருப்பு வெறுப்புக்களை ஆராயும் ஒரு முறையை இங்கே குறிப்பிடவேண்டும். ரேடியோ நிகழ்ச்சி களைக் கேட்கும் கேயர்கள் எந்த எந்த வேளைகளில் அதிக மாகக் கேட்க விரும்புகிருர்கள், அந்த நிகழ்ச்சிகளைப் பற்றி அவர்கள் என்ன அபிப்பிராயம் கொள்கிருர்கள் என்ற இன்னுேரன்ன விவரங்களையெல்லாம் தெளிவாக அறிந்துகொள்வதற்கு ஒரு தனிப்பட்ட ஸ்தாபனம் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
இந்த ஸ்தாபனத்திலுள்ளவர்கள் கேள்விப் பத்தி ரங்கள் தயாரித்து நாட்டின் பல பாகங்களிலுள்ள கேயர்களில் ஒரு தொகையினரைப் பொறுக்கி எடுத்து அவர்களுக்கு அனுப்பி வருவார்கள். இதைத் தவிர, கேர் முகமாகவும் பலரை விசாரிப்பார்கள். நே ய ர் க ள் ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கும் பதில்களை ஆராய்ந்து அபிப்பிராயங்களையெல்லாம் விகிதாசாரப்படி கணி ப் பார்கள். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைக் கேட்க நேயர்களில் நூற்றுக்கு எண்பது விகிதமானவர் இரவு எட்டு மணி ஒலிபரப்பை விரும்புகிருர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானல் வேறு நேரத்தில் ஒலிபரப்பப்படும் அங்கிகழ்ச்சியை நிலையத்தவர்கள் இரவு

Page 144
244 ஒலிபரப்புக் கலை ,
எட்டு மணிக்கு அமைத்துக்கொள்வார்கள். புதிதாக ஆரம்பமான ஒரு நிகழ்ச்சி கேயர்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததா அல்லது அவர்களேக் கவர்ந்திருக்கிறதா என் பதும் இந்த ஆராய்ச்சியில் தெரிந்துவிடும். நிகழ்ச்சிகளி லுள்ள குறை நிறை எல்லாம் தெளிவாக அறிந்துகொள் வதற்கு ஆராய்ச்சியே முக்கியமானது. இங்ங்ணம் கேயர் களின் விருப்பு வெறுப்புக்களை ஆராயும் முயற்சி, நிகழ்ச்சி நிர்வாகிகளுக்கும் ஒலிபரப்புக் கலையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் அளவற்ற உபயோகமாயிருக்கும்.
ரேடியோ நிகழ்ச்சிகளைக் கேட்பதில் கேயர்களின் பழக்கம், அவர்கள் வாழ்க்கை முறை, ஓய்வு நேர அநு பவம், விருப்பு, வெறுப்பு - இவைகளைப்பற்றிய முழு விவரங்களையும் நிலையத்தில் நிகழ்ச்சித் திட்டம் வகுப்ப வர்கள் நன்கு உணர்ந்திருத்தல் வேண்டும். அதனுடன் அவர்கள் கற்பனைத் திறன், கலைத் திறன் எல்லாம் படைத் தவர்களாயிருத்தல் வேண்டும். மேற்சொன்ன விவரங்களை யெல்லாம் நன்குணர்ந்த பின் நிலையத்து நிகழ்ச்சி நிர் வாகிகள் ஒரு வாரத் திட்டம் அமைப்பார்கள். ஒலிபரப்பு நேரங்களை வரிசைப்படுத்தி, அதில் எந்த எந்த வேளையில் என்ன எ ன் ன நிகழ்ச்சி நடைபெறவேண்டுமென்று குறித்துக்கொள்வார்கள். முக்கியமாக, தினந்தோறும் மாறுபடாமல் வரும் நிகழ்ச்சிகளே அந்த அந்த நேரத்துக் கெதிராகக் குறித்துக்கொள்வார்கள். உதாரணமாக, காலை ஏழரை மணிக்கும், பகல் ஒரு மணிக்கும், மாலை ஆறரை மணிக்கும் செய்தி ஒலிபரப்பாயிருந்தால் அது முதலில் குறிக்கப்படும். பின்னர்ப் பாட்டு, பேச்சு, நாடகம், விவாதம், பெண்கள் பகுதி, சிறுவர் நிகழ்ச்சி, கல்வி ஒலி பரப்பு, கிராம நிகழ்ச்சி . இத்தகைய நிகழ்ச்சிகள் எந்த எந்த நாட்களில் என்ன என்ன 5ேரத்தில் வரவேண்டு மென்பது குறிக்கப்படும். நேர அட்டவணை தயாரான பின் சங்கீதம், பேச்சு 15ாடகம் முதலிய தனிப்பட்ட பகுதி

ஒலிபரப்பு நிர்வாகம் 245
களைக் கவனிக்கும் நிர்வாகிகள் விஷயங்களையும் அவற் றுக்கு ஒலிபரப்பாளரையும் தீர்மானித்து அட்டவணையில் கிரப்பிக் கொள்வர். நிகழ்ச்சி நிர்வாகத்தின் முதற்படி இது சாதாரணமாக இந்த நிகழ்ச்சித் திட்டம் தயாரிப்பது ஒலிபரப்புக்குக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே நடைபெறும். அது தயாரானவுடன் நிகழ்ச்சியைப்பற்றிய சிந்தனே ஆரம்பிக்கும். கலைஞர்களுக்கு எழுதி அவர்கள் சம்மதம் பெறுவது, வசதியற்றபோது வேறு கலைஞரைக் கண்டுபிடிப்பது, எழுத்துப் பிரதிகள் தயாரிப்பது ஆகிய காரியங்களுக்கெல்லாம் போதிய அவகாசம் வேண்டும். இதற்கிடையில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு கேயர்கள் கையில் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பே கிடைக்கத் தக்கதாகச் செய்யவேண்டும். இதற்காகவே ரேடியோ கிலேய கிர்வாகிகள் மூன்று மாதங்களுக்கு முன்கூட்டியே ஆயத்தங்களைச் செய்துகொள்வர். V %*
நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்வது விரும்பத்தக்க காரியமல்ல. ஆகையால் ரேடியோ நிலையத்தவர்கள் கூடியவரையில் / தாம் ஏற் கெனவே திட்டம் போட்டபடி எல்லா நிகழ்ச்சிகளையும் அட் டவணைப் பிரகாரம் ஒலிபரப்புவதில் கவனம் செலுத்தி வரு வார்கள். எதிர்பாராத காரணத்தால் நிகழ்ச்சி நிரலில் அறி விக்கப்பட்ட பாடகரோ பேச்சாளரோ வர முடியாமற் போனல் மாத்திரம் அதற்கு வேருெரு பாடகரை அல்லது பேச்சாளரை உடனே ஏற்பாடு செய்யவும் காத்திருப் பார்கள். விசேஷ நிகழ்ச்சிகள்
விகழ்ச்சிநிரல் தயாரிக்கும்போது முன்னேற்பாடாகவே சமய சந்தர்ப்பங்களை நோக்கி நிலையத்தவர்கள் திட்டம் வகுப்பது வழக்கம். விசேஷ காட்கள், பண்டிகைகள், விழாக்கள் முதலியவற்றையும் நிகழ்ச்சித் திட்டம் அமைக்கும்போது கவனத்தில் வைத்துக்கொள்வார்கள்.

Page 145
ጆይ46 ஒலிபரப்புக் கல்
தைப் பொங்கல், தமழ வருஷப் பிறப்பு, தீபாவளி முதலிய தமிழர் திருகாட்களில் விசேஷ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய் வார்கள். சங்கீத விழா முதலிய விசேஷ சம்பவம் கடக்கும் போதும் அதை அஞ்சல் செய்து கேயர்களுக்கு வழங்க ஏற் பாடுகள் முன்கூட்டியே செய்துவைத்துக்கொள்வார்கள்.
சில சமயங்களில் முன்கூட்டியே தெரியாமல் சில சம்ப வங்கள் ஏற்பட நேர்ந்தால், ஏற்கெனவே திட்டமிடப் பட்ட நிகழ்ச்சிகளை மாற்ற முடியாதே என்ற பிரச்சினை எழலாம். ஆனல், ரேடியோவைப் பொறுத்தவரையில் எந்த நாளும் இசைக் கட்டு நிகழ்ச்சிகள் காணப்படுமாகை யால் அவற்றில் ஒன்றை உடனே நிறுத்திவிட்டு அவசிய மான கிகழ்ச்சியை ஒலிபரப்ப முடியும். இதற்காகவே சில நிலைய அட்டவணைகளில் இடைவேளைச் சங்கீதம் அல்லது குரல் வகை என்று பொதுவாக ஒரு நிகழ்ச்சியை வைத்துக்கொள்வார்கள். அவசியம் நேரிட்டபோது அதனை நீக்கிவிட்டு விசேஷ மிகழ்ச்சிகளை ஒலிபரப்பலாம்.
ரேடியோ நிகழ்ச்ய் கிர்வாகம் அதில் சம்பந்தப்பட்ட யாவருக்கும் ஒய்வு ஒழிவின்றி நாளும் பொழுதும் சலியாமல் உழைக்க வேண்டிய ஒரு கடமை என்பதை உணர வேண்டும். நிகழ்ச்சிப் பகுதியிலுள்ள நிர்வாகிகளும் யந்திர சாதனங்களை இயக்குபவர்களும் கலைஞரும் தமது முழு நேரத்தையும் அர்ப்பணம் செய்து ஒரு தொண்டாகப் போற்றவேண்டியது கடமை. சிலவேளைகளில் உண் ணவோ உறங்கவோ ஒய்வின்றி உழைக்கவேண்டியும் ஏற் படலாம். ஆனல், ஒலிபரப்புக் கலைஞர் ஆர்வம் கொண்டு விட்டார்களானல் ஊனும் உறக்கமும் அவர்களுக்குப் பெரியவையாகத் தோன்றமாட்டா. எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்து முடிக்கும்போது அவர்கள் உள்ளத் தில் எழும் திருப்தியும் அநுபவமும் அளவற்ற பெருமிதத் தைக் கொடுக்கும்; அதுதான் அவர்கள் பெறும் பரிசு.
முற்றும்

அ ஆ ப ந் த ம்

Page 146

அநுபந்தம்-1
ரேடியோ நாடகம்
'ஒத்திகைக்கு முன்னும் பின்னும்"
(சோ. சிவபாத சுந்தரம்)
பாத்திரங்கள் அருமைநாயகம் : ரேடியோ நாடகத் தயாரிப்பாளர்
நிறைந்த அநுபவசாலி; எல்லா நடிகருடனும் சமயோசித மாக கடந்துகொள்ளும் சுபாவமுடையவர்.
சாம்பசிவம்: கதாசிரியர்; நல்ல அநுபவப்பட்ட எழுத் தாளர் என்ற நம்பிக்கையில் எல்லாக் காரியங்களையும் கடைசி நேரம் வரைக்கும் சோரப் போட்டுவிட்டு முடி வில் ஏதாவது ஒரு நாடகத்தைச் சிருஷ்டிக்கும் பழக்கம் S) 6T6T6) IIT.
நாகலிங்கம்: போலீஸ் இன்ஸ்பெக்டர்; நிலையத்து உத்தி யோகத்தரின் நண்பர், தமாஷ் பேர்வழி; கிண்டல் பண்ணினலும் உடனே அதைக் கிரகிக்க முடியாத அப்பாவி.
கந்தசாமி நடிப்பே இன்னதென்றறியாத பேர்வழி:
சொன்னலும் புரியாது.
சரஸ்வதி நாடகத்தில் கடிக்க வந்தும் அலட்சியமாக
இருக்கும் பேர்வழி. கோபம் அதிகம்.

Page 147
250 ஒலிபரப்புக் கல்
மணி : நாடக மேடைப் பேர்வழி, ரேடியோவிலும் அந்தப் பாணியில் பேசுபவர்; தம்மைவிடச் சிறந்த நடிகர் கிடை யாது என்ற அகம்பாவமுடையவர்.
தங்கவேல் : பொறுமை கிடையாது. அநுபவக் குறைவு.
மற்றும் ஆறுமுகம், ராமன், லக்ஷ்மணன் ஆகியோர்.
காட்சி-1
(ரேடியோ நிலையத்தில் ஓர் அறை. நாடக குத்திர தாரி - டைரக்டர் - அருமைநாயகம் பிள்ளையும் கதாசிரியர் சாம்பசிவமும் பேசிக்கொண்டிருக்கிருர்கள்.) அருமை : என்ன சாம்பசிவம், கதை தயாராகிவிட்டதா?
ஒலிபரப்புக்கு நாள் 5ெருங்கிவந்துவிட்டதே.
சாம்ப : கதைக்கென்ன, உட்கார்ந்தால் ஒரு மூச்சிலே எழுதி முடித்துவிடலாம். ஆனல் கடிகர் யார் யார் என்று நீங்கள் இன்னும் சொல்லாமல் இருக்கிறீர்கள்?
அருமை: நடிகர் உமக்கு எதற்கு? கதையை எழுதி முடித்துவிட்டால், உம் கதாபாத்திரங்களுக்குத் தக்க ஆட்களைத் தெரிந்துவிடலாம்.
சாம்ப : டைரக்டர் ஸார், நான் சொல்கிறதையும் கொஞ்
சம் கேட்டுக்கொள்ளுங்கள். கதையை எழுதி முடித்து விட்டு அதிலுள்ள பாத்திரங்களுக்குத் தக்க ஒலிபரப்பு நடிகர்களைச் சேகரிப்பதென்ருல் பகீரதப் பிரயத்தனக் தான். அந்தத் தொக்தரவொன்றுமில்லாமல், அகப்படக் கூடிய ஆசாமிகளை மனத்தில் வைத்துக்கொண்டு, அவர் களுக்குப் பொருத்தான பாத்திரங்களாக அமைத்துக் கதையைச் சிருஷ்டிப்பதுதான் இந்தக் காலத்துக்குப் பொருத்தமாயிருக்கும்; சுலபமுங்கூட.

அநுபந்தம்-1 251
அருமை : நீர் சொல்வதை கான் தெரிந்துகொள்ளாம லில்லை, சாம்பசிவம். ஆனல், உமது கதை தானுக வராமல் வலிந்து சிருஷ்டிக்கப்பட்டு விடுமே என்றுதான் யோசிக்கிறேன்.
சாம்ப (சிரித்துக்கொண்டு) இது நல்ல வேடிக்கை
நீங்களோ கதை எழுதும்படி உத்தரவு போட்டுவிட்டீர் கள். அந்த உத்தரவுக்கு நான் கதை எழுதினலே வலிந்து சிருஷ்டிக்கப்பட்டதாகத்தானே இருக்கப்போகிறது? அருமை : ஆமாம், அதுவும் உண்மைதான். (யோசித்துக் கொண்டு) என்ன செய்கிறது? இந்தக் காலத்தில் எல் லாம் வியாபாரத் தொழிலாயிருக்கும்போது அப்படித் தானே செய்யவேண்டியிருக்கிறது?
(நண்பர் காகலிங்கம் வருகிருர்.) இதோ கம்ம காகலிங்கமும் வந்துவிட்டார். எல்லோரு மாக யோசித்து விஷயத்தைத் தாமதமில்லாமல் முடித்து விடலாம்.
நாக என்ன, ஏதோ பிரமாதமான திட்டங்கள் போட்டுக்
கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே! சாம்ப : ஆமாம், காகலிங்கம்! பிரமாதமான திட்டத்தான். ஆனல் மீ இல்லாமல் அந்தத் திட்டம் நிறைவேற மாட்டேன் என்கிறது நாக: பூ என்ன அப்படிப் பிரமாதம்? நம்ம உலகப் பிரசித்திபெற்ற டைரக்டர் மிஸ்டர் நாய்க் இருக்கும் போது எந்தத் திட்டமும். அருமை : அது யாரப்பா மிஸ்டர் நாய்க்?
நாக: சாக்ஷாத் தாங்களேதான். வேறு யார்? அருமை காயகம் பிள்ளையை இந்தக் காலத்துச் சம்பிரதாயத்திலே சுருக்கமாக "மிஸ்டர் நாய்க்" என்று சொன்னேன்.

Page 148
252 ஒலிபரப்புக் கனே
சாம்ப (சிரித்துக்கொண்டு) சினிமா உலகப் பரிபாஷை யிலே ஒருவேளை அந்த மாதிரி இருக்கலாம், காகலிங்கம்! ஆனல் ரேடியோ உலகத்தில் அப்படியல்ல. முழுப் பெய ரையும் சொல்லி, அதற்கு முன்னேயும் ஒரு பெயரை வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் கன்வென்ஷன்
தாக ஓகோ, அதுவும் அப்படியா? அப்போது, மிஸ்டர்
குண்டப்பா பிள்ளை அருமைநாயகம் பிள்ளை என்று . சொல்லவேண்டுமாக்கும்?
சாம்ப : அப்படியல்ல, சும்மா குண்டப்பா அருமைநாயகம் என்று சொன்னுல் காதுக்கு கன்ருயிருக்கும். ரேடியோ விலே முக்கியமாகக் காதில் விழும் தொனியைத்தான் கவனிப்பார்கள் பார்!
நாக சரி சரி சரி; இப்போது தெரிந்துகொண்டேன். தொனி அப்படியே குண்டு குண்டாயிருக்கவேண்டு மென்று சொல்கிறீர்களாக்கும்?
சாம்ப . (சிரிப்பு.)
அருமை : (அதட்டிக்கொண்டு) நாகலிங்கம்!
நாக : ஸார்!
அருமை : போலீஸ் இலாகாவில் நீ எப்படித்தான் உத்தி யோகம் பார்க்கிருய் என்று எனக்குப் பெரிய ஆச்சரியமா யிருக்கிறது!
நாக என்ன அப்படிச் சொல்கிறீங்க? பெரிய பெரிய கேஸ் எல்லாம் இப்போது என்னிடந்தான் பொறுப்புக் கட்டி வருகிருர்கள் என்று தெரியாதா உங்களுக்கு? "மகாலசுஷ்மி விலாசம் கொலைக் கேஸ் யார் கடத்தி வெற்றி பெற்றது தெரியுமா? இந்தச் சூரப்புலி காக லிங்கத்தான். இப்போது பிரமோஷன் ஆகி, வேருெரு கொலைக் கேஸ் கைவசமிருக்கிறது, தெரியுமா?

அநுபந்தம்-1 353
சாம்ப; என்ன? உனக்கா கொலைக் கேஸ்?
நாக : ஆமாம் என்றுதான் சொல்றேன். ஏன், கான்
என்ன அதுக்கு லாயக்கில்லையா?
சாம்ப : லாயக்கில்லையென்று யார் சொன்னது? யாரைக்
கொலை செய்தாய் என்றுதான் கேட்டேன்!
நாக : (அசட்டுச் சிரிப்பு) சரியாப் போச்சு! நான் யாரையும் கொலை செய்யவில்லை, ஸார். கொலைகாரனைப்
பிடிக்க ஏற்பட்டிருக்கும் துப்பறியும் இன்ஸ்பெக்டர்!
சாம்ப ஒகோ, அப்படியா சமாசாரம்?
அருமை : அது சரி, காகலிங்கம்; உன் துப்பறியும் சாமர்த் தியம் இருக்கட்டும்; இப்போது கம்ம நாடக விஷயத் தைக் கொஞ்சம் கவனிப்போம்.
நாக அதுதானே, ஸார், கானும் இங்கே அவசரமாக வந்திருக்கிறேன். எத்தனையோ பிரசித்தி பெற்ற நாட கங்களை கடத்தி நீங்கள் பெயர் வாங்கி இருக்கும்போது காங்களும் கொஞ்சம் பக்கத்திலே யிருந்தால் அநேக விஷயங்களேத் தெரிந்துகொள்ளலா மல்லவா?
அருமை : ஆமாமாம், உன் அபூர்வ சாமர்த்தியத்துக்கு மீ பக்கத்தில் இருப்பது எங்களுக்கும் நல்ல ஆதரவுதான்.
சாம்ப காகலிங்கம் இல்லாவிட்டால் பொழுது போவ
தெப்படி?
நாக : அப்படிச் சொல்லுங்கள், ஸார். அது சரி, உங்கள்
கதை ரெடியாகிவிட்டதா?
சாம்ப; அதைப்பற்றித்தான் இப்போது பேசிக்கொண் டிருந்தோம். நடிகர் யார் யார் என்று டைரக்டர் இன் னும் தீர்மானிக்கவில்லை. அதனல் கதையும் தாமதப் படுகிறது.

Page 149
&54 ஒலிபரப்புக் கல்
அருமை : உன்னுடைய அபிப்பிராயம் என்ன, காகலிங்கம்? 5டிகரை வைத்துக்கொண்டு கதை எழுதுவதா, அல்லது கதையைத் தயாரித்துக்கொண்டு கடிகரைத் தெரிக் தெடுப்பதா? நாக: அதெல்லாம் எழுத்தாளரைப் பொறுத்த விஷயம், ஸார். நம்ம நாடகாசிரியர் மிஸ்டர் சாம்பசிவம் இருக் கிருரே, கடைசி நிமிஷம்வரை இந்த மாதிரித்தான் தட்டிக் கழித்துக்கொண்டு இருந்துவிட்டு, முடிவிலே நாடகம் ஒலிபரப்பவேண்டிய சமயத்தில் திடீரென்று ஒர் அசல் சித்திரத்தைத் தீட்டிவிடுவார்! சாம்ப பார்த்தாயா, பழையபடி உனக்குச் சினிமாப் பாணி
யிலே வார்த்தைகள் வர ஆரம்பித்துவிட்டன? தாக ம்..மன்னிக்கவேணும், ரொம்பக் காலமாய் சினிமா ராணி கேஸ் ஒன்றிலே ஈடுபட்டிருந்தபடியால் அந்த மாதிரி அவர்களுடைய வசனங்களும் சொற்பிரயோகங் களும் பழக்கப்பட்டுவிட்டன. ரேடியோ நாடக ஆசிரியர் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிருர் என்பதை மறந்துவிட் டேன். அது இருக்கட்டும், உங்கள் கதை என்னவாச்சு? சாம்ப கதை ஐந்து நிமிஷத்து வேலை, ஆட்களைச் சொல்,
பார்க்கலாம்? நாக ஆட்களுக்குத்தான பஞ்சம்? நான் ஒருத்தன்
இருக்கவே இருக்கிறேன். நீங்க ஒருத்தர். சாம்ப அது முடியாது. 15ாடகம் எழுதுகிறவர் 15டிக்கக்
கூடாது என்பது சம்பிரதாயம். நாக: அதெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா, ஸார்? நம்ப டைரக்டர் குண்டப்பா அருமைநாயகம் இருக்கிருரர். அருமை : நாடகத்தை டைரக்ட் செய்பவர் 5டிக்கக்கூடாது
என்பது சட்டம். அது தெரியாதா உனக்கு?

அநுபந்தம்-1 255
நாக: ஒகோ, அதுவும் அப்படியா? அப்படியானல், எழுத் தாளர் நடிக்கக்கூடாது, டைரக்டர் நடிக்கக்கூடாது; யார்தாம் நடிக்கலாம்? அருமை : கடிகர்தாம் நடிக்கலாம். நாக ; அதுவும் சரிதான். நடிகர்தாம் கடிக்கலாம்! ம்..! (யோசித்துக்கொண்டு) ஸார், எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஒத்தவாடைப் பக்கம் போனல். அருமை : உன் அபூர்வ யோசனையை மெச்சத்தான் வேண்டும். ஆனல், மேடையிலே ஏறிப் பழக்கப்பட்ட வர்களுக்கு ரேடியோ நாடகம் கொஞ்சம் அப்படியும் இப்படியுந்தான்! நாக. இப்படியே சொல்லிக்கொண்டு போனுல் காரியம் எங்கே ஸார் ஆகப் போகிறது? ஏதோ அகப்பட்டதைக் கொண்டு முடிச்சுவிடுங்கள். அருமை : ஆமாம், நாடகத்துக்கு இ ன் னும் அதிக காளில்லை. அதற்குள்ளே கதை தயாரித்து, ஒத்திகை கடத்தி ஒலிபரப்புவதென்ருல் எப்படி யிருக்குமோ! சாம்ப சரி சரி, கதைதானே வேண்டும்? நாளைக் காலையி லேயே கதை ரெடியாயிருக்கும். நீங்கள் ஆட்களை ஒழுங்கு செய்துகொண்டு ஒத்திகைக்கு ஆயத்தப்படுத்துங்கள். நாக எனக்கும் இதிலே ஏதாவது பங்குண்டா? சாம்ப பார்க்கலாம். உனக்கு எந்தவிதமான பாத்திரம்
பொருத்தமா யிருக்குமென்றுதான் யோசிக்கிறேன். நாக : பாத்திரமென்ன ஸார், நல்ல அக்ஷய பாத்திரமாகக் கொடுங்கள். (சிரிப்பு) எனக்கும் ரேடியோவிலே நடிக்க வேண்டு மென்று ரொம்ப நாளாக ஆசை. அருமை : சரி, எல்லாம் ஒத்திகையிலே பார்த்து, கடிக்கப்
பொருத்தமென்ருல் சேர்த்துக்கொள்ளலாம்.
நாக : ரொம்ப சரி.

Page 150
&56 ஒலிபரப்புக் கமே காட்சி-2
(ஸ்டூடியோவிலே நடிகர்கள் கூடியிருக்கிருர்கள். டைரக் டர், கதாசிரியர், யந்திர நிபுணர் முதலியோர் சேர்ந்து ஒத்தி கைக்கு ஆயத்தப்படுத்துகிருர்கள். நடிகர் கலகலப்புப் பேச்சு.]
அருமை : (அமைதியை நிலை. நாட்டி) சரி, சரி, எல்லாரும் ஒத்திகைக்குத் தயாராக கில்லுங்கள்! ஒருவரும் இந்தச் சமயத்தில் வேறு விஷயத்தில் கவனம் செலுத்தக் கூடாது. எல்லாரும் அவரவர் எழுத்துப் பிரதியை மாத்திரம் கவனித்துக்கொண்டு, கதைப் போக்கைத் தொடர்ந்து, அவரவர் பாகத்தை உணர்ச்சியோடு தத் ரூபமாக நடிக்க வேண்டும், தெரிகிறதா? கதை எல்லா ருக்கும் தெரிந்த கதைதான். ராமாயணக் கதை. பஞ்ச வடியிலிருந்து சீதா பிராட்டியை இலங்கைவேக்தன் ராவணன் தூக்கிச் செல்கிருன். கவலையுற்ற ராம லசுஷ்மணர்கள் தேடிச் செல்கிருர்கள். வழியிலே சடா யுவைக் கண்டு தகவல் தெரிந்து, சுக்கிரீவன் அனுமான் முதலியவர்கள் துணையோடு சைனியம் தி ர ட் டி ராவணனை வெல்லச் செல்லுகின்றனர்.
நாக : மன்னிக்கவேண்டும்! சீதையை மீட்கச் செல்லு
கிருர்கள் என்றிருக்கவேண்டும்.
அருமை : சரி; அப்படியே  ைவத் து க் கொள்வோம். எல்லோரும் ரெடியா! எங்கே சீதையைக் காணவில்லை?
நாக: (இடக்காக) சீதை எங்கே? அசோக வனத்திலே
தான்!
அருமை : மூடு வாயை யார் அங்கே வாசலண்டை
நிற்கிறது, மணியம்!
மணி: நான் ரெடி, ஸார்.

அநுபந்தம்-1 35?
அருமை : எங்கே சரஸ்வதியைக் காணவில்லை? ஒத்திகை என்ருல் எல்லோரும் அந்த அந்த இடத்தில் நிற்க வேண்டாமோ? மணி; சரஸ்வதி இப்போதான் காபி சாப்பிடப் போயிருக்
கிருள். சிக்கிரம் வந்துவிடலாம். அருமை : கல்ல நேரம் பார்த்துக் காபி. (சரஸ்வதி
வருகிருள்). மணி இதோ வந்தாச்சு. அருமை : என்ன சரஸ்வதி, ஒத்திகைக்கு எல்லோரும்
காத்துக்கொண்டு சிற்பது தெரியவில்லையா? சரஸ் ; ஏன், என்னுடைய பாகம் அப்புறந்தானே வரப்
போகிறது? அருமை : அப்புறம் கிப்புறம் ஒன்றும் இல்லை. எல் லோரும் ஒரே நேரத்தில் இருந்தால்தான் நாடகம் கடத் தலாம், தெரிகிறதா? சரி, ரெடி : முதலாவது காட்சி, ராவண சங்கியாசி சீதையின் பர்ணசாலைக்கு வருதல், கந்தசாமி ராவணன் எப்படிப்பட்டவன், என்ன வித மாகக் கபட நாடகம் 15டிக்கிருன் என்பதையெல்லாம் கற்பனை செய்துகொண்டு அதற்குத் தக்கவிதமாக நடிக்க வேண்டும், தெரிகிறதா? சரஸ்வதி சீதையின் பாகத்தை இந்த இடத்தில் மிக அடக்கமாகவும் பயபக்தியோடும் நடிக்கவேண்டும். சரி, ஆரம்பியுங்கள் பார்க்கலாம். கந்த : (எவ்வித உணர்ச்சியும் நடிப்புமில்லாமல்) பரம சிவம், பரமசிவம், அம்மா, தாயே! இந்த ஏழையின் பசி யைத் தீர்க்க ஏதாவது ஆகாரம் கொடம்மா. சரஸ் : (உணர்ச்சியில்லாமல் வெறுமனே வாசிக்கிருள்.) யாரது வாசலில் நிற்பது? ஸ்வாமி தாங்கள் யார்? எங்கே இந்தக் காட்டில் தன்னந்தனியாக வந்தீர்கள்? இப்படி உட்காருங்கள். தங்களைப் பார்த்தால் தபோ தனர் போலல்லவா இருக்கிறீர்கள்?

Page 151
&58 ஒலிபரப்புக் கல்
அருமை : (அதே உணர்ச்சியற்ற வாசிப்பில்) நிறுத்துங் கள்! வெறும் உணர்ச்சியற்ற பேச்சு (சாதாரணமாக) என்ன கந்தசாமி, ராவணன் சங்கியாசி வேஷத்தில் வந்திருக்கிருன் என்பதை மறந்துவிட்டாயா? சங்கியாசி என்ருல் எப்படி, எந்த சிலையில், எவ்வளவு அமைதி யாகப் பேசுவார் என்பது தெரியாதா? இதோ பார். (5டித்துக் காண்பித்தல்) பரமசிவம், பரமசிவம், அம்மா, தாயே! இந்த ஏழையின் பசியைத் தீர்க்க ஏதாவது ஆகாரம் கொடம்மா. கந்த (திருப்பி வாசித்தல்) பரமசிவம், பரமசிவம்,
அம்மா. அருமை : சே சே! பரமசிவம் முன்னுக்கு நின்ருலொழிய
அந்த அடக்கமும் சாந்தமும் வராது போலிருக்கே! நாக : ஸார், ஒரு சந்தேகம், அருமை : அதென்ன நீ குறுக்கிடுகிருய் நாக : இல்லை, கதையைப்பற்றித்தான் சந்தேகமாயிருக் கிறது. இந்தக் கதை கம்ப ராமயாணத்திலா, அல்லது வால்மீகி ராமாயணத்திலா எடுக்கப்பட்டது? அப்புறம் இலக்கிய சோரம் என்ற அபவாதத்துக்கு நாம் ஆளாகப் படாதல்லவா? அருமை . கம்ப ராமாயணத்தை நாடகமாக 5 டி க்க வேண்டுமானுல் இனிக் கம்பரிடம் ஆசிரிய உரிமை கேட்க வேண்டுமாக்கும்? சாம்ப; ராமன் கதை கம்பனுக்கும் வால்மீகிக்கும் அல்லது உனக்குந்தான் என்ன குடும்பச் சொத்தா? இந்த முட்டாள் நியாயத்தை விட்டுவிட்டு, இப்போது ஒத்திகையைக் கவனிப்போம். ம், கடக்கட்டும்!
அருமை : சரி, முதலிலிருந்து ஆரம்பியுங்கள் பார்க்கலாம்.

அநுபந்தம்-1 名59
கந்த (தனது பாகத்தைப் படித்தல்) பரமசிவம், பரம சிவம், அம்மா தாயே! இந்த ஏழையின் பசியைத் தீர்க்க ஏதாவது ஆகாரம் கொடம்மா, சரஸ்வதி : யாரது வாசலில் நிற்பது? ஸ்வாமி, தாங்கள் யார்? எங்கே இந்தக் காட்டில் தன்னக் தனியாக வங் தீர்கள்? இப்படி உட்காருங்கள். தங்களைப் பார்த்தால் தபோதனர் போலல்லவா இருக்கிறீர்கள்? அருமை : சே! உப்புச் சப்பில்லாத பேச்சு. யாரது வாசலில் நிற்பது' என்று அவள் ஒரு கேள்வி போடு கிருள். அதற்குத் தக்கவிதமாக ஆச்சரியம், சந்தேகம், பயம் எல்லாம் கலந்து குரலிலே தொனிக்கவேண்டும். "யாரது வாசலில் நிற்பது? - இது அவள் ராவணனைக் கானு முன்பு சொன்ன வார்த்தை. ஆனபடியால், சந்தேகமும் பயமும் கலந்திருக்கவேண்டும். அப்புறம், ராவண சங்கியாசியின் முகத்தைக் கண்டபின், ஸ்வாமி, தாங்கள் யார்?" என்ற கேள்வியைப் போடுகிருள். முதலில் சந்தேகத்தோடு தன்னைத் தானே கேட்டுக் கொள்ளுகிருள்; பிறகு தாங்கள் யார் என்று சக்கியாசி யிடம் கேட்கிருள். அதற்குத் தக்கவிதமாகக் குரலை மாற்றிக்கொள்ள வேண்டும். எங்கே பார்க்கலாம். சரஸ் : (வாசிக்கிருள்) யாரது வாசலில் நிற்பது? ஸ்வாமி, தாங்கள் யார் எங்கே இந்தக் காட்டில்? தன்னந்தனியாக வந்தீர்கள்?. அருமை : (ஆச்சரியத்துடன்) என்ன, என்ன? நல்ல வேடிக் கையாக இருக்கிறது! மூச்சு விடாமல் பேசுவீர்கள் போலிருக்கே?'ஸ்வாமி, தாங்கள் யார்?' என்ற இடத்தில் ஒரு கேள்வி அடையாளம் இருப்பது தெரியவில்லையா? சரஸ் : அப்படி ஓர் அடையாளத்தையும் இங்கே காண வில்&ல. 'எங்கே இந்தக் காட்டில்?’ என்ற இடத்தில் தான் கேள்வி அடையாளம் ஒன்று இருக்கிறது.

Page 152
360 ஒலிபரப்புக் கல்
அருமை: டைப் அடித்தவர்கள் பிழை செய்தால் அதைத்
திருத்தி வாசிக்கவேண்டாமோ?
சரஸ் : "எழுத்துப் பிரதிக்குக் கொஞ்சமும் மாறக்கூடாது"
என்று ஆரம்பத்தில் கட்டளே போட்டுவிட்டீர்களே!
அருமை : பிரதியைவிட்டு விலகக்கூடாதுதான். ஆனல் எழுத்துப் பிழையிருந்தால் அதைத் திருத்தி வாசிக்க வேண்டாமா? சரி, கதையை விட்டுவிட்டு முதலிலிருந்து ஆரம்பியுங்கள், பார்க்கலாம். கந்த : பரமசிவம், பரமசிவம் அம்மா தாயே! இந்த ஏழையின் பசியைத் தீர்க்க ஏதாவது ஆகாரம் கொடம்மா.
சரஸ் : யாரது வாசலில் சிற்பது? ஸ்வாமி, தாங்கள் யார்? எங்கே இந்தக் காட்டில் தன்னந்தனியாக வந்தீர்கள்? இப்படி உட்காருங்கள். தங்களைப் பார்த்தால் தபோ தனர் போலல்லவா இருக்கிறீர்கள்?
கந்த அம்மா! பல வருஷ காலமாக நான் இந்தக் காட்டில் தவம் செய்துகொண்டிருந்தேன். இப்போது என் தவம் முடிந்துவிட்டது. இந்தப் பர்ணசாலையைக் கண்டதும் யாரோ எனது சகோதர முனிவர் ஒருவர் இருக்கிருர் என்று நினைத்து வந்தேன். தங்களைக் கண்டதும் எனக்கு இல்லறத்தின் ஞாபகம் வந்துவிட்டது. அதனுல், சாதாரண மனிதனைப்போல் வயிற்றுப் பசியும் ஆரம்பித்துவிட்டது. மணி : (அனுமான் பாகம் நடிக்கவேண்டியவர்) ராமா யணத்தில் இந்தமாதிரி நான் படித்ததாக ஞாபகமில்லை. இது இலக்கிய மாரீசம்! நாக: இது யார், சாக்ஷாத் அனுமார் சுவாமிகளா? மாரீ 'சனத்தான் ராம லசுஷ்மணர்கள் துரத்திக்கொண்டு
போய்விட்டார்களே! இங்கே இருப்பது ராவணன்.

அநுபந்தம்-1 S. 261,
மணி : நான் அதைச் சொல்லவில்லை. இங்கே கதை
பொருத்தமில்லாமல் போலி இலக்கியம் கலக்கிறது. சாம்ப முதலில் நாடகத்தை நடித்துப் பார்க்கலாம். இலக்
கிய ஆராய்ச்சியை அப்புறம் வைத்துக்கொள்வோம். சரஸ் : இந்தமாதிரி நீங்கள் சண்டை போட்டுக்கொண் டிருந்தால் ஒத்திகை கடந்தபாடுதான்! எங்களுக்கு வேறு வேலை கிடையாதா? மணி ஒன்பதுக்கு மேலாகிவிட்டது. நான் பிள்ளைகுட்டிக்காரி. நாக: (கிண்டலாக) அம்மா! தாயே, சீதாபிராட்டி, தங் களுக்கு இன்னும் குழந்தைகள் இல்லையென்றல்லவோ நான் நினைத்தேன்? சரஸ்: மூடு வாயை சீதையும் தமயந்தியுந்தான்! நான்
இங்கே சரஸ்வதி, தெரியுமா? தங்கவேல் : (சுக்கிரீவன் வேஷம் போடுபவர்) இது என்ன ஒத்திகையா, விளையாட்டா? இந்தமாதிரி வாக்குவாதம் செய்து கொண்டிருந்தால் ஒத்திகை எப்படி 15டக்க முடியும்? ஆரண்ய காண்டத்தில் இப்படி ஒரு நாள் முழுதும் போக்கினல் கிஷ்கிந்தைக்கு வர ஒரு வாரமாகப் போகிறது? நாக; நண்பர் சுக்கிரீவன் சொல்வதிலும் நியாயமிருக்
கிறது. தங்க : நாடகத்தில்தான் சுக்கிரீவன். இங்கே என் பெயர்
தங்கவேல். - . நாக எல்லாமே நாடகமாயிருக்கும்போது பெயரில்
என்ன ஐயா இருக்கிறது? அருமை : சரி, சரி, அமைதியாயிருங்கள். முதல் இரண்டு பக்கங்களைத் தள்ளிவிட்டு, ராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும் காட்சிக்கு வருவோம். அத்தோடு சரஸ்வதியை அனுப்பிவிடலாம். உம், ஆரம்பியுங்கள், பார்க்கலாம்?

Page 153
263, ஒலிபரப்புக் கல்
சரஸ் : (நடித்தல்) ஹா ஐயோ, ஐயோ, லக்ஷமண! எங்கே என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய் விட்டாய்? ஐயோ, இதென்ன அக்கிரமம்? ஹா! அருமை : கிறுத்துங்கள். எங்கே நம்ம டெக்னிஷியன்? “சப்த ஜாலம்" என்று எழுத்துப் பிரதியில் போட்டிருப் பதைக் கவனிக்கவில்லையா? ராவணன் சீதையை அப கரிக்கும் இந்தக் கட்டக்தில் இடிமுழக்கம்போன்ற சப்த ஜாலம் செய்தால்தான் சீதையின் மனக் கொந்தளிப்புத் தெரியும். எங்கே ஆறுமுகம்? ஆறு : ஆமாம் ஸார், மறந்துபோனேன். எங்கே, இன்
னெரு முறை ஆரம்பியுங்கள் பார்க்கலாம்? சரஸ் ; ஹா ஐயோ, ஐயோ, லக்ஷமணு எங்கே என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டாய்? ஐயோ, இதென்ன அக்கிரமம், ஹா!
(சப்த ஜாலம் இடி முழக்கம்) அருமை : சே சே! சரியேயில்லை! ராவணன் சீதையைத் தூக்க முயலும்போகே இந்தச் சப்தம் ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் அச்சமான சூழ்கிலை ஏற் படும். சில விநாடிகள் கழித்து, அந்தச் சப்தத்தின் பின்னணியில் சீதையின் அலறல் கேட்கவேண்டும். எங்கே, இன்னுெரு முறை பார்ப்போம். ரெடி! சரஸ் ; ஹா ஐயோ.. அருமை : ம்.ஹ. ! அவசரப்பட வேண்டாம். சப்தம்
வந்த பின்தான் ஆரம்பிக்கவேண்டும். சரஸ்: சப்தமா? எனக்கொன்றும் கேட்கவில்லையே! அருமை : அது கேட்காது. இங்கே என் காதில் மாட்டி யிருக்கும் கருவியில் கான் கேட்டு, ஆரம்பிக்கவேண்டிய சமயத்தில் கையைக் காட்டுவேன். அப்போதுதான் ஆரம் பிக்கவேண்டும். ரைட்! ஆறுமுகம்.
(சப்த ஜாலம்)

அநுபந்தம்-1 s 263
சரஸ் ; ஹா ஐயோ, ஐயோ, லக்ஷ்மணு! எங்கே என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டாய்? ஐயோ, இதென்ன அக்கிரமம், ஹா!
அருமை : பேஷ்! இப்போதுதான் சரியாக வந்தது. ஆனல், பேச்சில் உணர்ச்சியில்லை; அதுதான் ஒரு குறை. பயந்து நடுநடுங்கி உயிர் போவதுபோல் அலற வேண்டும். நாக: சும்மா கல்லுப் பிள்ளேயார் மாதிரி ராவணன் கின்றுகொண்டிருந்தால் சீதை எப்படி ஸார் பயந்து அலற முடியும்? முதலிலே, ராவணனுக்கு வேஷப் பொருத்தமில்லை. கந்தசாமி வெறும் எலும்புக் தோலு மாக கிற்கிருர் ராவணனுக்கு வேண்டிய ராக்ஷச உட லமைப்பு இல்லை. சங்கியாசிக்கு வேண்டிய தாடி மீசை காஷாயம் ஒன்றுமில்லை. அதுவுமல்லாமல் ராவணன் சீதையைத் தூக்கவேண்டாமோ? சும்மா பார்த்துக் கொண்டு கின்ருல் சீதைக்கு எப்படித்தான் உணர்ச்சி வரும்? அருமை : இதோ பார், காகலிங்கம்! இது நாடக மேடையு மல்ல, சினிமாவுமல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள். ரேடியோ நாடகத்தில் அதெல்லாம் தேவை யில்லை. குரலில்தான் கடிப்புத் தோற்றவேண்டும். உரு வத்தை கேயர்கள் பார்க்கப்போகிருர்களா, என்ன?
சரஸ் சரி, சரி, எனக்கு நேரமாகிறது. என்னுடைய ஒத்திகையை நாளைக்கு வைத்துக்கொள்ளுங்கள். இனி எனக்கு சிற்க முடியாது (போகிருள்).
அருமை : கல்லது, இப்போது ராம லசுஷ்மணர்கள் சடாயு வைக் காணும் பகுதியைக் கொஞ்சம் ஒத்திகை பார்ப் போமா? ஆரம்பியுங்கள் பார்க்கலாம்: எட்டாம் பக்கம் திருப்புங்கள்.

Page 154
264 ஒலிபரப்புக் கல்
ராமன் தம்பி, லசுஷ்மணு சீதையின் கை வளையல்களும் மற்ற நகை கட்டுக்களும் இங்கே காணப்படுவதால் இந்த வழியாகத்தான் அவளை யாரோ திருடிக்கொண்டு போயிருக்கவேண்டும். லகஷ்ம : அப்படித்தான் அண்ணு நானும் நினைக்கிறேன்.
(யாரோ முனகும் சப்தம் கேட்கிறது.) யாரோ முனகும் சப்தம் கேட்கிறதண்ணு. யாராயிருக்க லாம்? வாருங்கள், பார்க்கலாம். ராம ; அடேடே, ஒரு கருடனல்லவா மனிதரைப்போல
முனகுகிறது? சடாயு; ராமசந்திரா ராம : என்ன ஆச்சரியம் பெயர் சொல்லி அழைக்கிறதே! சடா : அப்பா, பயப்படாதே. உன் தேவியைக் காப்பாற்ற நான் எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் முடியாமல் போய் விட்டது. லங்காபுரி ராவணன்.ஹா. (சடாயு மூர்ச் சித்து விழுதல்.) ராம : என்ன? மூர்ச்சை போட்டுக் கருடன் விழுந்து
விட்டதே! தாங்கள் யார்? சடா : (அரை உயிரில்) நான் சடா.யு.(உயிர் போகிறது)
ராம : (கோபத்தோடு) அந்த ராவணப் பதரா சேர்ரத் தனமாக வந்து என் தேவியைக் கொண்டுபோனன்? இதோ புறப்படுகிறேன் இலங்கைக்கு.
லக்ஷம: அண்ணு! விடுங்கள்! நானே முதலில் போய் அவனைச் சங்கரித்துவிட்டுத் தேவியாரை மீட்டுக் கொண்டு வருகிறேன். ராக்ஷச குலத்தை நிர்மூலமாக்கி விடுகிறேன்.
ராம தம்பி! அவசரப்படாதே. காம் முதலில் அதற்குத் தக்க சைனியத்தைத் திரட்டிக்கொள்ளவேண்டும். என்

அநுபந்தம்-1 265
நண்பன் சுக்கிரீவன் கிஷ்கிந்தையில் இருக்கிருன். அவன் துணையைக் கொண்டால் எல்லாம் வெற்றியாக முடியும். வா, கிஷ்கிந்தைக்குப் போவோம், புறப்படு.
அனுமான் சரி, சரி, கன்ருகத்தான் நடித்திருக்கிறீர்கள். நீங்கள் கஷ்டப்பட்டுக் கிஷ்கிந்தைக்குப் போகவேண்டிய அவசியம் வேண்டாம். நான் வாயு புத்திரன் அனுமான். இதோ அடுத்த காட்சிக்குத் தயாராய் கிற்கிறேன். என்ன, டைரக்டர் ஸார் அடுத்த சினை ஒத்திகை பார்க்கலாமா?
அருமை: சரி, பார்த்துவிடுவோம், ஆரம்பியுங்கள்.
அனு: (நாடகப் பாணியில்) ராமசந்த்ரப் பிரபோ! அடியேன் வணக்கம். நான்தான் தங்கள் தாஸன் அனு மான். தங்கள் ஆக்ஞையைச் சிரமேல் தாங்கக் காத் திருக்கிறேன்.
அருமை : (அதே பாணியில்) மெச்சினேன், அனுமானே! நிறுத்திக்கொள் உன் பிரசங்கத்தை (சாதாரணமாக) என்னப்பா, ஒரே நாடக மயமாயிருக்கிறதே! ரேடியோ நாடகத்தில் இந்த மாதிரி மேடைச் சம்பிரதாயங்கள் பொருந்தா.
அனு: வேறு எப்படித்தான் நடிக்கவேண்டுமென்று சொல்லுகிறீர்கள்? (கோபத்தோடு) நடிப்பும் வேண்டு மாம், அத்தோடு மேடைச் சம்பிரதாயங்களும் கூடா வாம்! என்ன முட்டாள்தனம் நடிப்புக் கற்றுக் கொடுக்கிருர்களாம், நடிப்பு உப்புச் சப்பில்லாமல் எழுத்துப் பிரதியிலுள்ளதை அப்படியே பாடம் ஒப் பிக்கச் சொல்லுகிறீர்களாக்கும், ம்! ஒய்! நான் பதி னேந்து வருடம் நாடக மேடையில் பிரசித்தி பெற்று விளங்கின நக்ஷத்திரம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்; தெரிகிறதா?

Page 155
266 ஒலிபரப்புக் கல் அருமை : பலே பேஷ்! அப்படியா சமாசாரம்?
நாக நல்ல வேளையாக ரேடியோ மேடை ஏருமல் விட்
டீரே ரேடியோவுக்கு விமோசனம்!
அனு: இனிமேல் இந்தப் பக்கத்திலும் கால் எடுத்து
வைப்பதில்லை (போகிருர்).
அருமை : பரவாயில்லை, மற்றவர்கள் பகுதியைப் பார்ப் போம். தங்கவேல் பொன்னம்பலம்! வாசியுங்கள் பார்க்கலாம்.
சுக்கிரி: ராமசந்த்ரப் பிரபு! உங்கள் பிரதாபத்தை நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன். வாலியைக் கொன்று என் விரோதியைத் தொலைத்து நிம்மதியைத் தந்ததற்கு நான் என்றும் தங்களுக்குக் கடமைப்பட் டிருக்கிறேன். ஆனல், சோகத்துடன் பெருமூச்சு விட்டுக் கொண்டே, என் அண்ணு.
அருமை : நிறுத்து...! நல்ல வேடிக்கையாயிருக்கிறது!
(எல்லோரும் சிரித்தல்.)
சுக்கிரி: (கோபத்தோடு) இதுதான் நான் நடிக்கமாட்டேன் என்று ஆரம்பத்திலேயே சொன்னது. குரங்கு வேஷம் போடச் சொன்னல் எப்படியிருக்கும்? அது போதா தென்று எல்லாருக்கும் சிரிப்பாயிருக்கிறது!
நாக (சிரித்துக்கொண்டே) ஒய்! அதற்காகச் சிரிக்கல்லிங் காணும்.எழுத்துப் பிரதியிலுள்ளதையெல்லாம் அப் படியே ஒப்பித்துவிட்டீரே! அதுதான் வேடிக்கையா யிருக்கிறது. (சிரிப்பு)
சுக்கிரீ; உனக்கு ரொம்பவும் தெரிஞ்சுபோச்சாக்கும். எழுத்துப் பிரதியிலுள்ளதை அப்படியே வாசிக்க வேண்டுமென்பதுதான் டைரக்டர் உத்தரவு; தெரியுமா?

அநுபந்தம்-1 , 36?
அருமை : அது சரிதான், மிஸ்டர் தங்கவேல்; எழுத்துப் பிரதியில் பேசவேண்டியது தவிர, நடிப்புக்கு வேண்டிய குறிப்புக்கள் கீழ்க் கோடிட்டு இருக்கிறதைப் பார்த் தீரா? சோகத்துடன் பெருமூச்சு விட்டுக்கொண்டே, என்ற இடத்தில் பெருமூச்சு விட்டுக்கொண்டு சோகக் குரலில் பேசவேண்டும், தெரிகிறதா? அதையும் சேர்த்துப் படிக்கிறதல்ல.
சுக்கிரி: ஓகோ, அதுவும் அப்படியா? சரி, இப்போது ஆரம்பிப்போம். (நடிக்கிருர்) ராமசந்த்ரப் பிரபு! உங்கள் பிரதாபத்தை நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக் கிறேன். வாலியைக் கொன்று தாங்கள் என் விரோதி யைத் தொலைத்து நிம்மதியைத் தந்ததற்கு (அநாவசிய மான அழுத்தம்) நான் என்றும் தங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனல். என் அண்ணு இறந்து விட்டான் என்றுதான்.
அருமை : (அதிருப்தியுடன்) ம்..ஹம். சோகம் அதிலே போதாது. அதுவுமல்லாமல் அழுத்த வேண்டிய இடத் தில் அழுத்தாமல் தவருன இடத்தில் அழுத்தக்கூடாது. ‘நிம்மதியைத் தந்ததற்கு' என்று ‘நிம்மதியில்' அழுத்த வேண்டுமல்லாமல், தந்ததற்கு என்ற இடத்தில் அழுத்தப்படாது. ‘என் அண்ணு இறந்துவிட்டான்' என்ற இடத்தில் அளவற்ற துயரச் சாயல் தோற்ற வேண்டும். எங்கே பார்ப்போம்?
சுக்கிரி நிம்மதியைத் தந்ததற்கு நான் என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனல், (ஒரே அழுகையுடன்) என் அண்ணு இறந்துவிட்டான் என்றுதான்.
அருமை : ம் ஹ்ம்..! அது அளவுக்கு மிஞ்சிவிட்டது. அப் படியெல்லாம் அழவேண்டுமென்று கட்டாயமில்லை. சோகம் வேறு, அழுகை வேறு. சோகத் தொனி மாத் திரம் கேட்கவேண்டும்.

Page 156
28 ஒலிபரப்புக் கல்
விக்கிரி: இதோ பாருங்கள் டைரக்டர் இந்த மாதிரிக் கஷ்டப்படுத்தினுல் என்னல் நடிக்கவே முடியாது. இந்தக் தொந்தரவு எனக்குத் தேவையில்லை. ரேடியோ நாடகம் இப்படிக் கஷ்டமான் காரியமென்ருல் நான் ஒப்புக்கொண்டே இருக்கமாட்டேன். அருமை : கோபப்படலாகாது, மிஸ்டர் தங்கவேல்! எல்
லாம் போகப் போகச் சரியாய் வரும். பரவாயில்லை. சுக்கிரி: முடியவே முடியாது. நான் போகிறேன். நீங்கள் எதை வேண்டுமானுலும் செய்யுங்கள். (போகிருர்.) ஆறு : என்ன ஸார், ஒத்திகை கடக்கப்போகிறதா,
அல்லது இத்தோடு நிறுத்தப்போகிறீர்களா? அருமை : ஆறுமுகம்! கொஞ்சம் பொறுத்துக் கொள் ளப்பா. இன்னும் இரண்டொரு காட்சியை ஒத்திகை பார்த்து முடித்துக்கொள்வோம். அப்புறம் மிச்சத்தை நாளைத் தினம் பார்த்துக்கொள்ளலாம். ஆறு : இனிமேல் எங்கே ஸார் நேரமிருக்கப்போகிறது? ஸ்டூடியோ மற்றப் புரோகிராமுக்குக் கொடுபட வேண்டும். அரைமணி நேரக் கூத்துக்கு ஐந்து நாட்களா ஒத்திகை பார்க்கவேண்டும்? முக்கால் மணி நேரமாக மூன்று வசனத்தை வைத்துப் பிசைந்துகொண்டிருந்தால் அடுத்த ஆண்டிலேதான் நாடகம் நடக்கும். எனக்கு இனி இங்கே கிற்க முடியாது ஸார், கான் போகிறேன். அருமை : சரி, ஒத்திகை முடிந்தது; எல்லோரும் போக
6) TLD
காட்சி-3
(ஸ்டூடியோவில் அருமைநாயகமும் சாம்பசிவமும் காக லிங்கமும் மாத்திரம் நின்று பேசிக்கொண்டிருக்கிருர்கள்.) அருமை : என்ன மிஸ்டர் சாம்பசிவம் நாடகம் உருப்
படுமா?

அநுபந்தம்-1 269
சாம்ப என்னைக் கேட்டால்? இந்த மாதிரி அசடுகளை வைத்துக்கொண்டு நாடகம் கடத்தினுல் உருப்பட்ட மாதிரித்தான்!
அருமை : என்ன செய்கிறது? விடிந்தால் கல்யாணம்,
தாலி கட்டித்தானே ஆகவேண்டும்?
சாம்ப இதற்குத்தான் கான் எற்கெனவே சொன்ன ஆலோசனையை நீங்கள் கேட்டிருக்கவேண்டும். நடிகர் யார் யார் என்று தெரிந்துகொண்டால் அதற்குப் பொருத்தமாக காம் ஒரு கதை புனைந்து வெற்றிகரமாக ஒலிபரப்பிவிடலாம். சீதைக்கு நடிக்க வந்தவளோ என் முல் சூர்ப்பணகைக்கு மிகவும் பொருத்தமானவளாகத் தெரிகிறது. சுக்கிரீவனுக்கு வந்தவன் கும்பகர்ணன் மாதிரிப் பேசுகிருன். சாந்தமே உருவாயிருக்கவேண்டிய அனுமான் என்னடா என்ருல், சுடு சுடென்றிருக் கிருன், இந்த லக்ஷணத்திலே 15ாடகம் நடந்தபாடுதான்!
நாக : மிஸ்டர் சாம்பசிவம் சொல்கிறதிலும் உண்மை
யிருக்கிறது, ஸார்!
சாம்ப அனுமான் வேஷம் உனக்கெப்படி இருக்கும்,
நாகலிங்கம்?
நாக என்ன வேஷம் வேண்டுமானுலும் கான் கடிக்கத்
தயார்.
அருமை : அனுமானுக்கு ஏற்ற நல்ல முகவெட்டு உனக்கு
இருக்கிறதென்பதை மறுக்க முடியாதுதான்!
நாக (காலகூேடிப பாணியில் நடிக்கிருர்.) அசோக வனத்திலே, அந்தச் சீதாபிராட்டியைக் கண்ட மாத் திரத்திலே. அனுமானனவன் தேவியாரின் பூரண அழகைக் கண்டு வியந்து வருணிக்கிருன். (பாட்டு) காண வேணும் லக்ஷம் கண்கள், சீதா தேவியை.

Page 157
270 ஒலிபரப்புக் கல் அருமை : சிறுத்து! போதும் உன் கடிப்பெல்லாம். அது இருக்கட்டும், மிஸ்டர் சாம்பசிவம், காளைப் புரோகிரா முக்கு என்ன செய்யலாம்? - - - சாம்ப என்ன செய்யலாம்? எனக்கு ஒன்றும் தோன்ற வில்லை. ༣.
நாக : ஸார், எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. “எதிர்பாராத காரணத்தால் இன்று கடைபெற வேண்டிய நாடகம் கடக்க முடியவில்லை' என்று அறி வித்துவிட்டு இசைத்தட்டுக்களை ஒலிபரப்பிவிடுங்கள்.
அருமை : அதுவும் நல்ல யோசனைதான். வேறு வழி?
காட்சி முடிகிறது.

அநுபந்தம்-2 இசைச் சித்திரம்
தயாரிப்பு பெருங்குளம் டி. எஸ். மணி பாகவதர்
கானல் வரி
பாத்திரங்கள் :
இளங்கோ, கோவலன், மாதவி.
வாத்தியங்கள் :
வீணை இரண்டு, தம்புரா இரண்டு, புல்லாங் குழல் ஒன்று, மிருதங்கம் ஒன்று. அறிவிப்பாளர்: காவிரிப்பூம் பட்டினத்துக் கடற்கரை. இந்திர விழாவின் எழில் காணவேண்டி, கோவலனும் மாதவியும் அங்கே புது மணற் பரப்பில் புன்னை மர கீழலில் பாளையம் அமைத்து, ஒவியம் தீட்டிய திரை போட்டு, வெள்ளிக்கால் பூட்டிய அமளிமிசை அமர்ந் திருக்கிருர்கள். பொழுது போக்குக்காக அவர்கள் யாழை எடுத்து இசை கூட்டித் தனித் தனிப் பாடிய பாடல்கள் எதிர்பாராதவிதமாக மீளாப் பிரிவைத் தந்த சோகக் கதையே
(வீணையில் கல்யாணி ராகம்]
f5) if ds(T . . . . . if . . . . . 6m T . . . .
(என்று ஆரம்பித்து)

Page 158
279 ஒலிபரப்புக் கல்ெ
f f ST - f 5 lp uT - SIT f 6v f 6rvT -
நிரி க ம தா பா - காரி ஸ O O. O.
(என்றபடி)
இளங்கோ : (கல்யாணி ராகத்தில் பாடுகிருர். ஒரு வீணை
மர்த்திரம் பக்க வாத்தியமாகத் தொடருகிறது.)
சித்திரப் படத்துட் புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்திப் பத்தருங் கோடும் ஆணியும் நரம்புமென்று இத்திறத்துக் குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது
வாங்கி பண்ணல் பரிவட்டண் ஆராய்தல் தைவரல் கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய எண்வகையால் இசைஎழீஇப் பண்வகையால் பரிவு தீர்ந்து மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள் பயிர்வண்டின் கிளேபோலப் பன்னரம்பின் மிசைப்படர வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் ஏருடைப் பட்டடையென இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக்கர ணத்துப் பட்ட வகைதன் செவியின் ஒர்த்து ஏவல் அன்பின் பாணி யாதெனக் கோவலன் கையாழ் நீட்ட அவனும் காவிரியை நோக்கினவும் கடற்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்

அநுபந்தம்-2 ኃ?8
கோவலன் : (பக்க வாத்தியங்களுடன் பாடுகிருன். ஹரி
காம்போஜி ராகம், ஆதி தாளம்) علمی
கா ம க ரீ ஸா ஸா - ஸ ரி கா ம க - மா , , திங் கள். . மா லை வெண். குடை , யான்
5 ) Lui LD é5RT ʼ— é5 LD i LI LD - LJAT , ,
சென்னி. செங் , கோல் அதுவோ. ச் f நீ தா த நி பா - த நி ஸ் நி - ஸ்ா , ,
கங்கை தன் . னைப் பு னர் ந்தா , லும் , , நி ரி ஸ்ா ஸ் நி தா - த ப த நி - ஸ்ா , , t-! ல வாய் வா . ழி கா வே . 庇 . ஸ் ரி க்ா க் ம் க்ா - க் ரி க் ரி - ஸ்ா , ,
கங் . கை தன் . னைப் புணர்ந்தா. லும்
நி ரி ஸ்ா ஸ் நி தா - த ப த நி - ஸ்ா , , பு ல வா தொ ழி தல் கயற்கண், ணய் ஸ்ா நீ நி த பா - ப த ம க - மா மர் ம ங்கை மா , தர் பெ ருங் கற் . பென் று
க ம பா த நி பா - த நி ஸ் நி - ஸ்ா , , அறிந்தேன் வா பூழி கா . வே . ரி
மன்னு மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அதுவேர்ச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி

Page 159
274
ஒலிபரப்புக் கல்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயற்கண்ணுய் மன்னு மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி உழவ ரோதை மதகோதை
உடைநீர் ஓதை தண்பதம்கொள் விழவர் ஒதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி விழவர் ஒதை சிறந்தார்ப்ப
நடந்த வெல்லாம் வாய்காவா மழவர் ஒதை வளவன்தன்
வளனே வாழி காவேரி
நடபைரவி தாளம் : கண்ட ஏகம்
நி த பா ப ம த ப ம க ரி க மா த . ரு ந - று - ம ல . ரே i് ക ബസ ffn 35 Ld Ld l uir மணம் . விரி ம ல ரே
நி த நி நி ஸ் நி ஸ்ா த று தி ரு மொ ழி யே ബ് ബ് ஸ் நி ரி ஸ் ஸ் நி தா பா யி ள வ ன . மு , லை யே
് ബ ரி ஸ் ரிக் ரிக் ஸ் ரீ, LD ğ5 புரை மு - க - மே .

அநுபந்தம்-2 375
ரி க் ம்ா க் ரி க் ரி க்ம் க்ரி ஸ்ா CP பு ரு வில் . லி , ணை யே ஸ் நி ஸ் ஸ் ஸ் நி ரி ஸ் நி த பா த ம 6T (up த ரு மின் . . . இ . டை G8 u
ப த நி த நி நி ஸ் நி ஸ்ா எ னை யி டர் செய் . த வை யே!
திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே விரைவிரி நறுமலரே மிடைதகு பொழிலிடமே மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே.
வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே தளையவிழ் நறுமலரே தனியவள் திரியிடமே முன்வளர் இளநகையே முழுமதி புரைமுகமே இளையவள் இணை முல் யே எனே யிடர் செய் தவை யே.
ராகம் : சங்கராபரணம் தாளம் : ஆதி
ஸ்ரிஸ்நி தா ப ப பா - க ம பா - ப ப ம க மா ப , வ - ள உலக் கை கையாற் ப ற் . . றி
க ம பா ப ப பா - த நி ஸ்ா , த - நீ ஸ்ா த வ ள முத். தம் குறு வாள் - செங்கண்

Page 160
ጳ?6 ஒலிபரப்புக் கலை
நி ஸ் ரி ரி ரி ரி - ஸ்ரி க்ா -ம் க் க்ரி - ஸ்ா த வ ள முத். தம் குறு வாள் செங் . . கண்
ஸ்ரி ஸ்ா , ரி ஸ் நி தா பா - க ம பா - த நிஸ்ா
குவ ளை . . ய ல் , ல கொடிய கொ டிய ,
புன்னை நிழற் புலவுத் திரைவாய் அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் அன்னம் நடப்ப நட்ப்பாள் செங்கண் கொன்னே வெய்ய கூற்றம் கூற்றம். கள் வாய் நீலம்,கையின் ஏந்திப் புள் வாய் உணங்கல் கடிவாள் செங்கண் புள் வாய் உணங்கல் கடிவாள் செங்கண் வெள்வேல் அல்ல வெய்ய வெய்ய.
இளங்கோ : (கல்யாணி ராகத்தில் பாடுதல்)
கானல்வரிப் பாடல்கேட்ட மானெடுங்கண் மாதவியும்
மன்னுமோர் குறிப்புண்டுஇவன் தன்னில் மயங்கினுன்
எனக் கலவியால் மகிழ்ந்தாள்போல் புலவியால் யாழ்வாங்கத் தானுமோர் குறிப்பினள் போல் கானல்வரிப் பாடற்பாணி நிலத்தெய்வம் வியப்பெய்த நீணிலத்தோர் மனம்மகிழக் கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தால் பாடத்
தொடங்குமன் மாதவி : • ராகம் : அடாணு தாளம் : ஆதி ப ப ம ம ரி மா பா பா - ப ப பா - தநீ, பா
ம ருங் . . கு வண் டு சிறந்தார்ப் ப .

அநுபந்தம்-2 - 372 ம ப ஸ்ா ஸ்ா ஸ்ா ஸ் ஸ் த நி - ஸ்ா , , மணிப் பூ வா டை ய து போர்த் து . . ரி ர் h F ம் ரி ஸ்ா - ஸ் நிரீஸ் நி ஸ் - தா , , கருங்க ய ந் . கண் விழித் தொல் . கி
ப த நீ , ரி ஸ்நிபா பா - பாநிப பாதிப- தநிபா நடந் தா ய் வா . . N கா . . வே. . f..
நி ஸ்ா ரி ரி ? - ரி ரி ரி , ம் - ஸ்ரீ ஸ் க ருங் க யற்கண் விழித்தொல் . கி .
ஸ் ரீ ஸ் ஸ்ா ஸ்ா - ஸ்ா ஸ் நிரிஸ் - தா , , ந டந்த வெல்லாம் நின் க - ண வன் . .
நி ஸ்ா க் க்ாம் ரி ஸ்ா - ஸ்ாஸ்ா - ஸ் நிரிஸ் தா திருந்து செங் . கோல் வ ளை 6OD
ப த நீ , 府 ஸ்நிபா பா - பாநிப பாநிப- தநி பா அறிந்தேன். வா , பூழி கா . . வே. . ரி.
பூவார் சோல் மயிலாலப் புரிந்து குயில்கள் இசைபாடக் காமர் மாலை யருகசைய நடந்தாய் வாழி காவேரி காமர் மால் யருகசைய நடந்த வெல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி,

Page 161
ኃ?8 w ஒலிபரப்புக் கல்
வாழி அவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி மாழி யுய்க்கும் பேருதவி யொழியாய் வாழி காவேரி ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும்
ஆழி யாள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி.
ராகம் : உஸேனி தாளம்: ஆதி
ரீ க ம ரீ க ஸ ஸா ஸா - ஸ ஸ பா - பா ப தா ம கை. . தை , வே லிக் க பூழிவாய் வந் தெம்
த'நி ஸ்ா ஸ்ா - ஸ்ர் , நி ரிஸ் நி த - ப ப மா பொய்தல பூழித் துப் போ , ஞ . . . ரொருவர்
பா த நி ஸ்ா ஸ்ா - ரீ க் ரிக்ஸ் - ஸ்ா ரிஸ் நிதபம பொய்தல பூழித் துப் போ ஞ. . ர . . வர்தம்
பா ஸ்நிஸ்ா ப ப பாதப- க க மபமம - க ரி ரீகஸ
மை யல். . மனம்விட். . ட கல் வா , ரல் லர் .
கானல் வேலிக் கழிவாய் வந்து நீநல் கென்றே நின்ரு ரொருவர் நீநல் கெனறே நின்ரு ரவர்தம் மானேர் நோக்கம் மறப்பா ரல்லர்.
அன்னத் துணையோ டாடக் கண்டு நென்னல் நோக்கி நின்ரு ரொருவர் தென்னல் நோக்கி நின் முர் அவர்நம்
பொன்னேர் சுணங்கிற் போவார் அல்லர்.

அநுபந்தம்-2 3?9
ராகம் : எதுகுல காம்போஜி தாளம் : கண்ட் திருபுட்ை 6m) ff LDIT LD LD LDIT 35 LD — . u Lu l JIT — LJIT 35 Lu LDIT
நுளையர் விள ரி நொடி த ருதீம் பா லை . .
த த த த த நி ஸ்ாநித த த - நிஸ்நிதபா - பா தபமா இளிகிளையிற்கொள் - ளஇறுத் தா , யால் மா லை .
ப த த ஸ் ஸ் ஸ்ா ஸ் ஸ் ஸ் - ரிக்ாரிஸா - தஸ்நித இளி கிளையிற்கொள்ளஇறுத் தாய். மன் னி. . .யேற்
ப த ப ஸ் ஸ் தாப பா - , பாம - மபாம கா ரீ
கொளை வல்லா யென்னுவிகொள் வாழி மா . . லை .
பிரிந்தார் பரிந்துரைத்த பேரருளி னிழல் இருந்தேங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மால் உயிர்ப்புறத்தாய் நீயாகில் உள்ளாற்ரு வேந்தன் எயிர்ப்புறத்து வேந்தனுே டென்ணுதி மாலை. பையுணுேய் கூரப் பகல்செய்வான் போய்வீழ வையமோ கண்புதைப்ப வந்தாய் மருண்மாலை மால்நீ யாயின் மணந்தா ரவராயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.
இளங்கோ (கல்யாணி ராகம்-வீணை மாத்திரம் பக்க
வாத்தியம்.)
கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின் மேல் மனம் வைத்து மாயப்பொய் பலகூட்டு மாயத்தாள் பாடினுளென யாழிசைமேல் வைத்துத்தன் ஊழ்வினை வந் துறுத்ததாகலின் உவவுற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை நெகிழ்ந்தனணுய்ப்

Page 162
1 ܨ .
லிபரப்புக் கலே
பொழுதிங்குக் கழிந்ததாகலின் எழுதுமென் றுடனெசிாது எவலாளருடன்சூழ்தரக் கோவலன்தான் போனபின்னர் தாதவிழ் மலர்ச்சோஃ0 யோதையாய்த் தொலியவித்துக் கையற்ற நெஞ்சினளாய் வையத்தி னுள்புக்குக்
காதலனுடனன்றியே மாதவிதன் மண்புக்கான்,
(வீ&ணயில் கல்யாணி தானம்)
நிரிஸ் நிரி ஸ்நி தபம தபம கரி ககரிஸ நிஸ்திநிதப் மப ககரிஸ் நிஸ் ஸ்ா . . . . . .
(தொடர்ந்து வாத்திய கோஷ்டி)
ராகம் : ஆரபி தாளம் : ஆதி மத்யம காலம்
தர்ஸ் நி ததபா தபமக ரிஸரிம-பாமீா பா,-மபமக ரிஸ்ரீ
மகரிஸரீ ததயா ஸ்நிதா ரிஸ்=ம்க்ரீ;ஸ்ரி-ஸ்நிதபமகரீ
fifts, fertiff upsf. ததபா-ரிஸ்ரித L தர்ஸ்-ரிம்க்ரி
ஸ்நிதத
hஸ்ாநி தயதரிஸ்ாதபாப்-மகரிஸரீ;-தரீரி ரிம்க்ரி-ஸ்ா.
سمې
= دمای
முற்றும்
Sihl,


Page 163


Page 164