கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழியற் கட்டுரைகள்

Page 1
எஸ். சிவலிங்கராஜா
மயிலங்கூடலூர் பி. நடரா
ழறி சுப்பிர
யாழ்ப்பாணம்
 

TIT5T
மணிய புத்தகசாலே

Page 2

தமிழியற் கட்டுரைகள்
தொகுப்பாசிரியர்கள் :
எஸ். சிவலிங்கராஜா பி. ஏ. (சிறப்பு) துணைவிரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
மயிலங்கூடலூர் பி. நடராசன் பொறுப்பு அலுவலர், கல்வி வளநிலையம் - நல்லூர், யாழ். இந்துக் கல்லுரி.
வெளியீடு நீ சுப்பிரமணிய புத்தகசாலை
235, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,

Page 3
முதற் பதிப்பு யூலை 1982
அச்சுப்பதிவு: பூரீ சுப்பிரமணிய அச்சகம் 63, B. A. தம்பி ஒழுங்கை, աn tքւIւմn"60ծTւԸ,
வெளியீடு: பூரீ சுப்பிரமணிய புத்தகசாலை 235, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்,
ESSAYS ON TAMILOLOGY (Thamizhiyat Kaddutaikal)
Editors:
• S. Sivalingara jah B. A. (Hons.), Asst. Lecturer, Department of Tamil University of Jaffna.
• Mailangoodaloor P. Nadarajan, O. I. C. R. C. L. D - Nallur, J 1 Jaffna Hindu College.
afio ரூபா: 19-00 (பதிப்புரிமை

அணிந்துரை
பேராசிரியர் க. கைலாசபதி கலைப்பீடாதிபதி, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
அண்மைக் காலத்திலே ஆய்வுலகிற்கு அறிமுக மான சொற்களில் ஒன்று தமிழியல் என்பதாகும். தமிழ்க் கல்வியில் ஏற்பட்ட புதிய பரிமாணங்களையும் நோக்கு நிலைகளையும் தொகுத்துக் காட்டும் வகையில் அமைந்தது அச்சொல். இலக்கியம், இலக்கணம், தருக் கம், சாத்திரம் முதலியனவே பல நூற்ருண்டுகளாய்த் தமிழ்க் கல்வியின் பிரதான கூறுகளாய் விளங்கின. மரபுவழித் தமிழறிஞர்களில் ஒருவராய்த் திகழ்ந்த கோப் பாய்ச் சபாபதி நாவலர், திராவிடப் பிரகாசிகை (1899) என்னும் நூலிலே இலக்கண மரபியல், இலக்கிய மர பியல், சாத்திர மரபியல் என்பவற்றையே சிறப்பாக விவரித்திருக்குமாற்றை நோக்குவோர்க்கு இவ்வுண்மை தெளிவாகும். எனினும், சென்ற நூற்ருண்டின் பிற் பகுதியிலிருந்து மேனுட்டுக் கல்விமுறை நம்மவரிடையே பரவிவந்ததன் பயணுகவும் பொதுவாகவே உலகில் வேக பாகப் பெருகிவரும்அறிவியல் துறைகளின் செல்வாக்குத் தமிழ்க் கல்வியையும் பாதித்தமையாலும், தமிழ்ச் " (முதாயத்தில் நிகழ்ந்த சில அரசியல், சமூக, கலாசார இயக்கங்களின் விளைவாகவும் தமிழ்க் கல்வியின் பரப்பும்

Page 4
i
1W
எல்லைகளும் விரிவடையத் தொடங்கின. பாரம்பரியக் கல்வியில் இடம்பெற்ற இலக்கியம், இலக்கணம், சாத் திரம் என்பன மட்டுமே அன்றி, தொல்பொருளியல், வரலாறு, புவியியல், மானிடவியல், சமூகவியல், மொழி யியல், நாட்டார் வழக்கியல், உளவியல், பொருளியல் முதலியனவும் வெவ்வேறு அளவிலும் வகையிலும் தமிழ் ஆராய்ச்சிக்கு இன்றியமையாதனவாயின. நமது கல்விக் கொள்கையிலும் நடைமுறையிலும் ஏற்பட்ட மாற்றங் களின் பிரதிபலிப்பாகவும் இது அமைந்தது எனலாம். உதாரணமாக, ஓர் இலக்கிய நூலின் காலத்தைக் கணிப் பதற்கு அந்நூல் பற்றிய ஆழமான அறிவு மாத்திர மன்றி மொழி வரலாறு, கல்வெட்டாராய்ச்சி, அரசி யல், சமூக, சமய வரலாறு, ஒப்பியல் ஆய்வு முதலி யனவெல்லாம் அவசியமாயுள்ளன. அது போலவே, ஒரு நூலின் மூலபாடத்தை நிர்ணயிப்பதற்கு அந்நூற் பயிற்சி மட்டுமேயன்றி, தொல்லெழுத்தியல், கல்வெட்டியல், மொழியியல், அரசியல் - சமுதாய வரலாறு, சமய வர லாறு, இலக்கியத்திறனய்வு முதலியவற்றின் அறிவோடு, பிறமொழிப் பயிற்சியும் முறையியல் உணர்வும் முக் கியமானவையாயுள்ளன. சுருங்கக் கூறின், பரந்த நோக்கும் பல்துறைப் பயிற்சியும் ஆராய்ச்சி நெறி முறையும் தமிழ் நூற் புலமையுடன் ஒருங்கிணையும் போது தமிழியல் தழைத்தோங்குகிறது.
தமிழியலின் பரிணுமத்திலே இலங்கைத் தமிழ் அறி ஞர்களின் பங்களிப்பு விதந்துரைக்க வேண்டிய அள வுக்கு விசேடமானது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. இலங்கையில் இருந்துகொண்டும் தமிழ்நாட் டில் சில பல காலம் வதிந்தும் (அங்கேயே தமது வாழ் நாளிற் பெரும் பகுதியைக் கழித்தும்) ஈழத்தவர் பலர் தமிழியற்றுறைகளுக்குத் தனித்துவமான பங்களிப்பு களைச் செய்திருக்கின்றனர். மூலபாடத்திறனுய்வை முத லாவதாக முறையியல் அடிப்படையிற் செய்து புது நெறி வகுத்த சி. வை. தாமோதரம்பிள்ளையிலிருந்து, கல் வெட்டியல்சார் மொழியாராய்ச்சியில் முன்னேடியாய்

V
விளங்கிய பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை வரையிலும் அவர்களுக்குப் பின்னரும் ஈழத்தவர் சிலரின் பணிகள் பாதை சமைக்கும் தன்மையனவாய் இருந்துவந்திருக் கின்றன. அவர்களிற் சிலர் பற்றி இந்நூலிலுள்ள கட்டு ரைகள் குறிப்பிடுகின்றன.
இலங்கைத் தமிழிலக்கியம் தனக்கெனச் சில சிறப் பியல்புகளைக் கொண்டது என்ற எண்ணமும் பத்தொன் பதாம் நூற்றண்டின் நடுப்பகுதியிலிருந்தே மெல்ல மெல்ல உருவாகி வந்துள்ளது. அவ்வெண்ணம் முதலில் நல்லைநகர் ஆறுமுகநாவலரின் கண்டனக் குரலிலே கேட் கிறது. அதன் தெளிந்த ஒலியை இன்று பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் எழுத்துக்களிற் கேட்கிருேம். தொடக்கத்திலே இத்தனித்துவம் சமயத்திலும் கலர் சாரத்திலுமே முனைப்பாகத் தென்பட்டதெனலாம். இந் நூற்றண்டிலே - குறிப்பாக முப்பதுகளிலிருந்து - கலை இலக்கியத்திலே தனிச்சிறப்பியல்புகள் அழுத்தம் பெற்று வந்திருக்கின்றன. இன்று, புதுக்கவிதைகளிற்கூடத் தமிழகத்து ஆக்கங்களுக்கும் ஈழத்துப் படைப்புக்களுக் கும் சிற்சில வேறுபாடுகளைக் கண்டு கொள்ளலாம் என்று திறனுய்வாளர் கூறுவர். இலக்கிய வளர்ச்சியின் இயக்கவியலை உணர்பவர்களுக்கு இச்செய்தி வியப்பளிக்க மாட்டாது. அதேவேளையில் தமிழியல் ஆய்வு, இலக் கிய சிருஷ்டி, திறனுய்வுப் போக்கு இவற்றிலே தவிர்க்க வியலாதவாறு தமிழகத்திலும் இலங்கையிலும் சில பொதுப்பண்புகள் உருவாகி வளர்வதையும் நாம் கண்டு கொள்ளலாம். இவற்றையெல்லாம் தமிழ்க் கல்வியில் ஈடுபட்டுள்ள ஆசிரியரும் மாணுக்கரும் மாத்திரமன்றி. ஓரளவிற்குத் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு ஆகி யவற்றில் அக்கறைகொண்ட பொது மக்களும் அறிந்து கொள்ளுதல் விரும்பத்தக்கதும்; வேண்டப்படுவதுமா கும், பொதுசன சாதனங்களின் பெருக்கம் இத்தகைய அறிவின் பரம்பலுக்கும் நிச்சயம் உதவ வேண்டும்.

Page 5
vi
முதற் பகுதியில் உள்ள கட்டுரைகள் கவிதை, புனே கதை, நாடகம் ஆகிய துறைகளிலே தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் ஏற்பட்டு வந்திருக்கும் வளர்ச்சிகளையும் செல் நெறிகளையும் அருகருகே வைத்து விவரித்துக் காட்ட, இரண்டாம் பகுதியில் உள்ள கட்டுரைகள் தமி ழியலிலும் இலக்கிய ஆக்கத்திலும் குறிப்பிடத்தக்க முயற் சிகள் மேற்கொண்ட தமிழறிஞர்களை அறிமுகஞ் செய்து வைக்கின்றன. இதனல் ஆய்வுத் துறையிலும் ஆக்கத் துறையிலும் ஏக காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள்ை வாச கர்கள் ஒருவாறு தெளிந்து கொள்ள வாய்ப்பு உண் டாகும். விபுலாநந்தர், கணபதிப்பிள்ளை முதலியோர் ஆய் வாளராகவும் படைப்பாளிகளாகவும் மிளிர்வதைக் காணலாம். மரபிற்கும் நவீனத்துவத்திற்கும் இருந்து வரும் நுண்ணிய உறவினை ஈழத்து இலக்கியத்திலே துல் லியமாய்க் காணமுடியும், ஆய்வுலகிலே தமிழியல் எவ் வாறு அங்கீகரிக்கப்பட்ட ஒன்ருக உருப்பெற்று விட் டதோ, அவ்வாறே தமிழுலகில் இலங்கைத் தமிழிலக் கியமும் தனியாகவும் சேர்த்தும் கவனத்திற் கொள்ள வேண்டிய ஒன்ருகிவிட்டது. இன்று இலங்கைத் தமி ழிலக்கியம் 'அக்கரைச் சீமை’’ இலக்கியம் என்று வரு ணேரிக்கப்படும் நிலைமையைத் தாண்டி, தமிழிலக்கியத் தின் பிரிக்க இயலாத அங்கமாகி வருவதைத் தமிழகத்து ஆய்வாளரும் திறனய்வாளரும் ஏற்றுக் கொண்டுள் GT60T IT. ܀-
புதிய துறைகள் உருவாகும்பொழுது, ஆரம்பத்தில் அவற்றேடுநேரடியாகத் தொடர்புடையோருக்கு மட்டும் அவற்றில் ஆர்வமும் அக்கறையும் இருக்கும். ஆயினும் காலக்கிரமத்தில் அவை பற்றிய தகவல்களும் செய்தி களும் விளக்கங்களும் பொது அறிவின் பகுதிகளாக அமைந்துவிடுகின்றன. இலங்கைத் தமிழ் இலக்கியம், தமிழியல் வளர்ச்சி என்பன குறித்துப் பொதுநிலை நூல்கள் மிகவும் குறைவு. சில ஆய்வேடுகளே இருக் கின்றன. அவையும் பெரும்பாலும் பல்கலைக் கழகங் களிலே நூலகங்களிற் கிடைப்பனவாயுள்ளன. உயர்

y拉
கல்வியைப் பயிலும் மாணக்கரும் ஆய்வாளரும் மாத் திரமன்றி, பொதுவான வாசகரும் இலக்கிய ஆர்வல ரும் இரசிகரும் தற்காலத் தமிழ் வளர்ச்சிபற்றி எளி தில் வாசித்தறிந்து கொள்ளக்கூடிய நூல்கள் நம் மிடையே இல்லாமை பெருங்குறை. இக்குறையை ஓரளவில் நிவிர்த்திசெய்யும் வகையில் இந்நூல் அமைந் துள்ளது. இதுபோன்ற பல நூல்கள் வெளிவரக்கூடிய சூழ்நிலை தோன்றும்பொழுதே, சமுதாயத்தில் உண்மை யான இலக்கிய உணர்வும் ரசனையும் ஏற்புடைமையும் பரவியிருக்கின்றன என்று துணிந்து கூறமுடியும். ஏனெ னில் தனித்துறை வல்லுநருக்கு ஏற்ற ஆய்வு நூல்கள் எத்துணை முக்கியமோ அந்த அளவிற்குப் பொதுவான வாசகர்களுக்கு உகந்த செம்மையான நூல்களும் அவ சியமாகும். ஒவ்வொரு துறையிலும் ஈடுபாடுடைய கட் டுரையாளர்களை ஒருமுகப்படுத்திப் பலருக்கும் பயன் படத்தக்க இத்தொகுப்பினைத் தயாரித்து அளிக்கும் ஆசிரியர்கள் நமதுபாராட்டுக்குரியவர்கள். இதுபோன்ற முயற்சியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுதல் வேண்டும்.

Page 6
அறிமுகம்
எஸ். சிவலிங்கராஜா மயிலங்கூடலூர் பி. நடராசன்
தமிழியற் கட்டுரைகள் என்னும் இந்நூலிலே தேர்ந் தெடுக்கப்பட்ட தலைப்புக்களிலான இருபத்தொரு கட்டு ரைகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் இரண்டு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளன.
முதற்பகுதியிலுள்ள கட்டுரைகள் பொதுவாகத் தமிழ் இலக்கியப் பெருமரபின் மையத்திலே இலக்கிய வடிவங்களையும்,அவற்றின் பொருட்டோக்குக்கு இயைபு பட்ட செல் நெறிகளையும் மனங்கொண்டே தொகுக் கப்பட்டுள்ளன. தமிழிலக்கியப் பரப்பினை மனங் கொண்ட போதினும் ஈழத்து இலக்கியப் போக்கினை պւծ வளர்ச்சிக்கட்டங்களையும் கோடிட்டுக் காட்டுவன வாகவும் அவை அமைந்துள்ளன எனலாம்.
தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் இலக்கிய மரபு. தமிழ் இலக்கியப் பரப்பு என்றதும் தமிழ் நாட்டு இலக் கிய வரலாற்றையே முற்றுமுழுதாக மனங்கொள்ளும் ‘மயக்க நிலை இன்றும் பலரிடையே காணப்படுகின்றது. இம்மயக்கத் தெளிவுக்கும் தமிழ் நாட்டு இலக்கியங் களுடன் ஈழத்து இலக்கியங்களை அருகருகே வைத்து ஆய்வினை மேற்கொள்ளும் வகையிலும் (குறிப்பாகப் புனைகதை இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

ix
குறிப்பாக ஈழத்து இலக்கியங்களின் தோற்றம், வளர்ச்சி, நிலைப்பாடு என்பன இக்கட்டுரைத் தொடர் " ரின் ஊடுபாவாக ஒடுகின்றன எனலாம். ஈழத்து இலக்கிய வரலாற்றை முழுமையாக நோக்கப் புறப்படும் ஆராய்ச்சி மாணவனுக்கு இக்கட்டுரைத் தொகுப்புக் 'கைவிளக்காகவேனும் அமைய வேண்டும் என்று கருதி ைேம். இலக்கிய வரலாற்றிற்குப் பண்பாட்டின் உள்ளுர மும் அத்தியாவசியமாகையால் பண்பாடு சார்ந்த கட்டு ரைகளும் இடம்பெற வேண்டியமை அவசியமாயிற்று.
இந்நூலின் இரண்டாவது பகுதியில் ஈழத்துத் தமிழறிஞர்களின் தமிழ்ப்பணி சிறப்பாகவும் குறிப் பாகவும் விளக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய மேன் மைக்கு ஈழத்தவர்களின் பங்களிப்புக் கணிசமான அளவு கிடைத்திருக்கிறது. ஈழத்து அறிஞர் பலர் தமிழியலின் சில துறைகளில் முன்னுேடிகளாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சங்க இலக்கியங்களில் இடம்பெறும் ஈழத்துப்பூதன் தேவனுர் இலங்கையைச் சேர்ந்தவர் என்று கூறுவர். ஈழம் என்ற அடைமொழியை மாத்திரம் நம்பிப் பூதந் தேவனரை ஈழத்தவர் என்று துணிந்துவிடமுடியாது.
பூதந்தேவனரின் பெயரால் இடம்பெறும் பாடல் களில் (குறுந்தொகை - 34, 189, 360, நற்றிணை-366, அகநானூறு - 68, 231, 307) ஈழம் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. ஈழத்துப் பூதன்தேவஞரை விட்டால் ஈழத்து இலக்கிய வரலாறு யாழ்ப்பாண மன்னர்கள் காலத்துடனேயே துலக்கமடையத் தொடங்குகிறது. (வேறு கட்டுரையில் இவ்விடயம் தனித்து ஆராயப் படும்)
யாழ்ப்பாண மன்னர்கள் காலத்திலிருந்து தமிழ் நாட்டுத் தமிழறிஞர் ஈழத்தில் வந்து வாழ்ந்து தமிழ்ப் பணி புரிவதும் ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் தமிழ் நாடு சென்று வாழ்ந்து தமிழ்ப்பணி புரிவதும் சாதா

Page 7
Χ
ரணமான நிகழ்வுகள். இவ்விலக்கிய இதரவிதர உறவு இன்றும் இருப்பதை அவதானிக்கலாம்.
யாழ்ப்பாண மன்னர்கள் காலத்திலிருந்து காணப் படுகின்ற கல்வி, இலக்கிய மரபுகள் இன்றுவரை நின்று நிலைப்பதைப் பாரம்பரியக் கல்வி இலக்கியம்பற்றி வரன் முறையாக ஆராய்வோர் நன்கு அறிவர். ஈழத்து இலக்கியவரலாற்றின் அருத்தொடர்ச்சியினை, வளர்ச்சிப் போக்கினைக் கால அடைவினுரடு கண்டுகொள்ளலாம்.
இந்நூலில் இடம்பெறும் ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் ஒவ்வொருவகையிற் சிறப்புடையவர்கள் இலக்கிய வர லாற்றில் இடம்பெற வேண்டியவர்கள். அவர்களுடைய பணிகளும் ஆளுமையும் கட்டுரைகளில் விளக்கப்பட் டுள்ளன.
இக்கட்டுரைத்தொகுப்புக்கான 'கரு' வைக்கொடுத்த் தோடல்லாது கரு உருவாகப் பெரிதும் உழைத்து ஊக்கியவர் ஆசிரியர் திரு. சொக்கன். 'கரு' இன்று உருப் பெற்று உலா வருகையில் ஆசிரியர் சொக்கன் அவர் களுக்கு நன்றி கூறுகின்ருேம். சொக்கனின் குன்ரு உழைப் பும் குறையா ஊக்கமும் தமிழியற் கட்டுரைகளில் நிறையச் செலவாகியுள்ளன. சொக்கன் என்றும் நன்றிக் குரியவரே.
இக்கட்டுரைத்தொடருக்கு அணிந்துரை எழுதியதோட மையாது அவ்வப்போது ஆக்கபூர்வமான ஆலோசனை களை வழங்கியும் ஊக்குவித்த பேராசிரியர் க. கைலாசபதி அவர்களுக்கு என்றும் எம் நன்றி உரியதாகும்.
இத்தொகுப்புக்கான கட்டுரைகளை எழுதியவர்களில் பெரும்பாலோர் அவ்வத்துறைகளில் ஆய்வுகள் நிகழ்த்தி யவர்கள். எம் வேண்டுகோளை ஏற்றுக்குறிப்பிட்ட கால எல்லைக்குள் கட்டுரைகளை எழுதியுதவிய கட்டுரையாசி ரியர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிருேம்.

xi
ஈழத்து இலக்கிய உலகுக்குத் தன்னலான உதவியினைப் பெருமனத்துடன் செய்ய முனைந்த பூரீ சுப்பிரமணிய அச்சக, பதிப்பக உரிமையாளர் திரு. ஆ. சுப்பிரமணியம் அவர்களுக்கு எம். இதயபூர்வமான நன்றிகள் உரியன.
பல வழிகளிலும் நூலுக்காக உழைத்த அனைவரை யும் அன்புடனும் நன்றியுடனும் பாராட்டுகின்ருேம்.
பல்வேறு போக்கினையும் நோக்கினையும் கொண்டு வெளிவரும் தமிழியற் கட்டுரைகள் பல்கலைக்கழகப் புகு முக மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஈழத்து இலக்கிய வரலாறு பற்றி அறிய ஆவலுறும் வாச கர்களுக்கும் மிகுந்த பயன் தரும் என்று முழுமையாக நம்புகிறேம்.
நூலை அச்சிடுவதிலுள்ள சிரமத்தையும் அதற்காக ஏற்படும் செலவினங்களையும் அதை விற்பனை செய்வ திலுள்ள இடர்ப்பாடுகளையும் அறியாதார் இன்று மிகச் சிலரே. இவ்வாருன சூழ்நிலையிலும் தமிழ் மாணவர்களை மனங்கொண்டே இக்கட்டுரை நூல் வெளிவருகிறது.

Page 8
பொருளடக்கம்
பகுதி ஒன்று
தமிழிலக்கிய வளர்ச்சி
1. ஈழத்தில் தமிழ்க்கவிதை வளர்ச்சி 1.
எம். ஏ. நுஃமான் பி. ஏ. (சிறப்பு), பி. பில், துணைவிரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
இருபதாம் நூற்றண்டுத் தமிழ்க்கவிதை 9
சித்திரலேகா மெளனகுரு எம். ஏ. விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
தமிழில் நாடக வளர்ச்சி 15 வித்துவான் க. சொக்கலிங்கம் எம். ஏ. விரிவுரையாளர், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கழகம்.
ஈழத்துத் தமிழ் நாட்டுக்கூத்துக்கள் 22
சி. மெளனகுரு எம். ஏ. - ஆசிரியர், யா / ஒஸ்மானியாக் கல்லூரி.
ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சி 29
வித்துவான் க. சொக்கலிங்கம் எம். ஏ.

7,
10.
11.
ء ، ل X1
தமிழ் நாட்டுச் சிறுகதைகள்
கலாநிதி க. அருணுசலம் விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள்
கலாநிதி க. அருணுசலம்
தமிழகத்துத் தமிழ் நாவல் நா. சுப்பிரமணியம் எம். ஏ. துணைவிரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
ஈழத்துத் தமிழ் நாவல்
நா. சுப்பிரமணியம் எம் ஏ.
குழந்தை இலக்கியம்
எஸ். சிவலிங்கராஜா, பி. ஏ. (சிறப்பு) துணை விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
பொதுசனத் தொடர்புச் சாதனங்கள்
சித்திரலேகா மெளனகுரு எம். ஏ.
37
50
62
70
80
88

Page 9
பகுதி இரண்டு
ஈழத்துத் தமிழறிஞர் தொண்டுகள்
12. தமிழ் வளர்த்த தாமோதரம்பிள்ளை 95
மயிலங்கூடலூர் பி. நடராசன் பொறுப்பு அலுவலர், கல்விவள நிலையம் - நல்லூர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.
13. நாவல் இலக்கிய மூலவர்
அறிஞர் சித்திலெவ்வை 103
୬. ଗd. அப்துஸ் சமது பி. ஏ. (சிறப்பு) விரிவுரையாளர், ஆசிரியர் பயிற்சிக் கழகம் அட்டாளைச்சேனை.
14. சொற்கலைப் புலவர்
சுவாமி ஞானப்பிரகாசர் 114 வித்துவான் ச. அடைக்கலமுத்து (அமுது) பாடசாலை முன்னுள் அதிபர்
15. தங்கத்தாத்தா சோமசுந்தரப்புலவர் 122
கலையரசி சின்னயா எம். ஏ.
விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

17. .
18.
19.
20.
21.
Xν
வித்துவசிரோமணி மறைத்திரு சி. கணேசையர் 132
மயிலங்கூடலூர் பி. நடராசன்
முத்தமிழ் வித்தகர்
விபுலாநந்த அடிகள் 142 வித்துவான் க. செபரத்தினம் பி. ஏ. டிப் எட். அதிபர், மட்/பட்டிருப்பு மகாவித்தியாலயம்.
கலையருவி கணபதிப்பிள்ளை 150
த. சண்முகசுந்தரம் பி. ஏ. டிப். எட். ஆசிரியர், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி.
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை 159
எஸ். சிவலிங்கராஜா பி. ஏ. (சிறப்பு)
தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 167 வித்துவான் ச. அடைக்கலமுத்து (அமுது)
ஈழத்துக் கவிஞர் மஹாகவி 176
எம். ஏ. நுஃமான் பி. ஏ. (சிறப்பு), பி. பில்.
பொருள் அட்டவணை 185
தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்பட்டியல்

Page 10

தேர்ந்தெடுக்கப்பட்ட
ற் Lu L’ Lוש -ן ல் வாழ்க்கை வரலாறும் இலக்கிய வரலாறும்
இருபதில் கவிதை, தமிழவன், ஜெயகுமாரி ஸ்டோர்ஸ்,
நாகர்கோவில், 1971 இருபதாம் நூற்றண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்,
சி. மெளனகுரு-மெள-சித்திரலேகா, எம். ஏ. நுஃமான், வாசகர் சங்க வெளியீடு, கல்முனை, 1979. இலக்கிய வழி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை,
திருமகள் அழுத்தகம், சுன்னகம், 1964, இலங்கையில் இன்பத் தமிழ், கா. பொ. இரத்தினம்,
கலைவாணி புத்தக நிலையம், யாழ்ப்பாணம், 1969. இலக்கியத் தென்றல் ,
சு. வித்தியானந்தன், தமிழ் மன்றம் கண்டி 1953, இஸ்லாமிய இலக்கியக் கருவூலம் ஆர். பி. எம். கனி, இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் எம்.ஆர்.எம்.அப் துற்றஹீம் ஈழத்தில் நாடகமும் நானும், கலையரசு க.சொர்ணலிங்கம்.
இலங்கை இளம் நடிகர் சங்கம், 1968. ஈழத்தில் தமிழ் நர்வல் வளர்ச்சி, சில்லையூர் செல்வராசன்,
அருள் நிலையம், சென்னை, 1967. w ஈழத்து இலக்கிய வளர்ச்சி, கனக. செந்திநாதன், அரசு
வெளியீடு, கொழும்பு, 1964. ஈழத்துத் தமிழ் இலக்கியம், கலாநிதி கா. சிவத்தம்பி
தமிழ்ப்புத்தகாலயம், சென்னை, 1978, ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், ஆ. சதாசிவம் (தொ, ஆ), சாகித்திய மண்டல வெளியீடு, 1966.

Page 11
xviii
ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி,
க. சொக்கலிங்கம், முத்தமிழ் வெளியீட்டுக்கழகம், யாழ்ப்பாணம், 1977. w ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், நா.சுப்பிரமணியம், முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ்ப்பாணம், 1978. ஈழத்து வாழ்வும் வளமும், பேராசிரியர் க. கணபதிப்
பிள்ளை, பாரி நிலையம் சென்னை, 1962. ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், சி. கணேசையர், திருமகள் அழுத்தகம், சுன்னகம், 1939. ஈழநாட்டுத் தமிழ்ச்சுடர் மணிகள், மு. கணபதிப்பிள்ளை. கலையருவி கணபதிப்பிள்ளை - சில நினைவுகள்,
த. சண்முகசுந்தரம், அம்பனைக் கலைப்பெருமன்றம் , தெல்லிப்பழை, 1974. குமாரசுவாமிப் புலவர் சரித்திரம், சி. கணேசையர்,
சோதிடப்பிரகாச யந்திரசாலை,கொக்குவில், 1925. குமாரசுவாமிப்புலவர் வரலாறு, கு. முத்துக்குமாரசுவாமிப்
பிள்ளை, புலவரகம், சுன்னகம், 1970 ஞானப்பிரகாசரும் தமிழாராய்ச்சியும், ஆ. சிவநேசச்செல்
வன், கலைக்கண் மறுபிரசுரம், 1973. தங்கத்தாத்தா, “தெல்லியூர், தமிழ்மணிப் பதிப்பகம்,
யாழ்ப்பாணம், 1961 தமிழ் இலக்கியத்தில் ஈழத்தமிழறிஞரின் பெருமுயற்சிகள், பொ. பூலோகசிங்கம், கலைவாணி புத்தக நிலையம், யாழ்ப்பாணம், 1970. தமிழ்த்திரு தனிநாயகம் அடிகளார், ஆ. தேவராசன்,
கிறித்தவ தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை, கொழும்பு 1980. தமிழ் நாடகம் - ஓர் ஆய்வு, டாக்டர் ஏ. என்.
பெருமாள், தமிழ்ப்பதிப்பகம், சென்னை, 1979. தமிழ் நாவல் இலக்கியம், க. கைலாசபதி, பாரி நிலையம்,
சென்னை, 1968.

xix.
தமிழ் நாவல் நூற்றண்டு - வரலாறும் வளர்ச்சியும்,
பெ. கோ. சுந்தரராஜன் - சோ. சிவபாதசுந்தரம், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை, 1977 தமிழ் நாவல் நூற்றண்டுவிழா ஆய்வரங்கு,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு 1978. தமிழியற் சிந்தனை, பேராசிரியர் சு. வித்தியானந்தன், முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ்ப்பாணம்,1979. தமிழில் சிறு கதையின் தோற்றமும் வளர்ச்சியும்,
கார்த்திகேசு சிவத்தம்பி, பாரிநிலையம்,சென்னை, 1967. தாமோதரம்,சி. வை.தாமோதரம்பிள்ளை, யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக்கழகம், யாழ்ப்பாணம், 1971. × திறவாத படலை, கனக. செந்திநாதன், யாழ். இலக்கிய
வட்டம், யாழ்ப்பாணம், 1972. நவீன தமிழ் இலக்கியத்தின் அடிப்படைகள்,
கலாநிதி. க. கைலாசபதி, மக்கள் வெளியீடு, 1980 நெஞ்சே நினை, ச. அடைக்கலமுத்து (அமுது),
யாழ். மறைமாவட்ட இலக்கியக்கழகம், யாழ்ப்பாணம், 1975. பத்தொன்பதாம் நூற்றண்டுத் தமிழிலக்கியத்தின் முக்கிய
போக்குகள், மனேன்மணி சண்முகதாஸ், யாழ்ப்பாணம், 1978. 参 பைந்தமிழ் வளர்த்த பதின்மர், 'சொக்கன்’, பூரீலங்கா
அச்சகம், யாழ்ப்பாணம், 1972. *ぐ மட்டக்களப்புத் தமிழகம், வி. சீ. கந்தையா, ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்ப சிட்டி, 1964, A முஸ்லிம் தமிழ்ப் பாரம்பரியம், எம்.கே. செய்யது அகமது,
அரசு வெளியீடு, கொழும்பு, 1968. யாழ்ப்பாணப் புலவர்கள், சொ. முருகேச முதலியார், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை, 1979.

Page 12
XX
வாழையடி வாழை, க. செபரத்தினம், அரசு வெளியீடு,
கொழும்பு, 1962. /
TAMIL WRITING IN SRI LANKA,
K. S. Sivakumaran, Wijeyaluxmy Book Depot, Colombo. s
மஹாகவியின் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்,
உலக இலக்கியப்பரப்பீல் மஹாகவியின் ஒரு சாதா
ரண மனிதனின் சரித்திரம்',சண்முகம் சிவலிங்கம், வாசகர் சங்க வெளியீடு, கல்முனை, 1971.
மஹாகவியின் கோடை, 'மஹாக்வியும் தமிழ் க்கவிதையும்", சண்முகம், சிவலிங்கம், வாசகர் சங்க வெளியீடு, கல்முனை, 1970.
மலர்களும் சஞ்சிகைகளும் அடிகளார் படிவமலர், விபுலாநந்த அடிகளார் சிலை
நிறுவனக்குழுவினர், காரைதீவு (கி.மா) 1969. இலங்கைத் தமிழ்விழா மலர், யாழ்ப்பாணம், 1951. சுவாமி ஞானப்பிரகாசர் நூற்றண்டு நினைவு மலர்,
ஞானப்பிரகாசர் நூற்றண்டு விழாக்குழு, கொழும்பு, 1975. A. தமிழ் சாகித்திய தின விழா மலர், இலங்கைக் கலாசாரப்
பேரவை, கொழும்பு, 1975. தவத்திரு தனிநாயகம் அடிகளார் மாட்சி நயப்பு மலர், யாழ். மறைமாவட்டக் கத்தோலிக்க ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணம், 1981. நாவலர் நூற்றண்டு மலர், பூனரீலபூg ஆறுமுகநாவலர்
சபை, கொழும்பு, 1979. நாவலர் மாநாட்டு மலர், பூரீலழரீ ஆறுமுகநாவலர் சபை,
கொழும்பு, 1969. பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றண்டுவிழா மலர், மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை, 1972.

XXi
மணி விளக்கு
உரைநடை வளர்ச்சியில் சித்திலெவ்வையின் பங் களிப்பு, எஸ். எம். கமாலுத்தீன், - ஒக்டோபர் 1978. மறுமலர்ச்சிக்காலம் - இலக்கியச் சிறப்பிதழ்,
அம்பனைக் கலைப்பெருமன்றம், தெல்லிப்பழை,1973, மஹாகவி து. உருத்திரமூர்த்தி நினைவு மலர்,
அம்பனைக் கலைப்பெருமன்றம், தெல்லிப்பழை,1971 "ஈழத்திற் பா நாடகம்’, மயிலங்கூடலூர் பி. நடராசன், சிலம்பொலி, தெல்லிப்பழை, சித்திரை, 'ஆனி. ஆடி 1971. ‘ஈழத்துப் பா நாடகங்கள்”, எம். ஏ. நுஃமான், மல்லிகை, ஜனவரி - மார்ச்சு, 1980. “மஹாகவியின் சிறு நாடகங்கள்’, இ. முருகையன்,
மல்லிகை, யாழ்ப்பாணம், ஓகஸ்ற் 1980. 'மஹாகவியின் வாழ்க்கை நோக்கு, எம். ஏ. நுஃமான்,
மல்லிகை, யாழ்ப்பாணம், ஓகஸ்ற், 1979.
பிழை திருத்தம் -பக்கம், 9 சித்திரலோகா - சித்திரலேகா
33 கிளங்ஸ்பரி - கிங்ஸ்பரி
36 புதுமைத்தனின் - புதுமைப்பித்தனின் 49 ஜெயகாந்தன் - ஜெய்ந்தன்
பறம்பை, - பறம்பை, 52 தாழையடி - தாழையடி 59 கவிராயர் - கவிராயர்
99 காலநிதி - கலாநிதி

Page 13

பகுதி
ஒன்று
தமிழிலக்கிய
வளர்ச்சி

Page 14

ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி
பண்டைக்காலம் தொட்டு ஈழநாடு தமிழ்மொழிக்குச் பிறந்த இருப்பிடமாகத் திகழுகின்றது. சங்ககாலத்தில் ஈழநாட்டிலிருந்தும் பல புலவர்கள் தமிழகம் சென்று தமிழ் மொழியை அலங்கரித்துப் புகழ்பெற்று விளங் கினர். அவர்களுள் ஒருவர் ஈழத்துப் பூதன் தேவனும் எனப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை தமது ஈழத்து வாழ் வும் வளமும் என்னும் நூலில் குறிப்பிடுகின்றர். ஈழத் துப் பூதன்தேவனரால் எழுதப்பட்ட ஏழு கவிதைகள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய எட்டுத் தொகை நூல்களிலே காணப்படுகின்றன. பூதன்தேவ ைைர ஈழத்தவராகக் கொண்டால் சங்ககாலம் முதற் கொண்டே இங்கும் கவிதை வளர்ந்து வந்திருக்கிறது எனலாம். ஆயினும் பூதன்தேவனர் ஈழத்தவர்தாமா எனச்சந்தேகிப்போரும் உளர்.
பூதன்தேவனரின் பின்னர் 13ஆம் நூற்றண்டில் இருந்துதான் ஈழத்தில் கவிதை நூல்கள் தோன்றியமைக் கன சான்றுகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்

Page 15
s தமிழியற் கட்டுரைகள்
தைத் தமிழ் மன்னர் ஆண்ட காலத்தில் இருந்து இக் காலம்வரை இலங்கையிலே தமிழ்க்கவிதை தொடர்ச்சி யாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது: ஈழத்திலே கவிதை தோன்றி வளர்ந்த வரலாற்றைப் பல்வேறு காலப்பகுதி களாகப் பிரித்து ஆராய்வர். ஆயினும் கவிதையின் பொருள், உருவம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க் கும்போது ஈழத்துக் கவிதை வளர்ச்சியை இரு நிலைப் படுத்தி ஆராயலாம். ஒன்று மரபுவழிக் கவிதை மற்றது நவீன கவிதை. 20ஆம் நூற்ருண்டின் தொடக்ககாலம் வரை வளர்ந்த கவிதை பொதுவாக மரபுவழிக் கவிதை எனலாம். அதன்பின்னர் உள்ள கவிதையைப் பொது வாக நவீன கவிதை எனலாம்.
மரபுவழிக் கவிதைகள் பெரும்பாலும் சமயச்சார்பான விடயங்களையே உள்ளடக்கமாகக் கொண்டவை. அரசர் கள், பிரபுக்கள் முதலானேரின் புகழ் பாடுபவையாகவும் அவை காணப்ப்டுகின்றன. சாதாரண மனிதனும் அவ னது அன்ருட வாழ்க்கை அநுபவங்களும் உணர்ச்சி களும் மரபுவழிக்கவிதையில் அரிதாகவே இடம் பெற்றன. அவ்வகையில் மரபுவழிக் கவிதையின் உள்ளடக்கம் வரை யறுக்கப்பட்டதாக அமைந்தது. அதற்கேற்ப அதன் உருவமும் வரையறுக்கப்பட்டிருந்தது. காவியங்கள், புரா ணங்கள் என்றும் உலா, பரணி, கலம்பகம், பிள்ளைத் தமிழ், பள்ளு, குறவஞ்சி முதலிய பிரபந்தங்கள் என் றும் மரபுவழிக் கவிதை வடிவங்கள் அமைந்துள்ளன. ஆனல் இந்த நூற்ருண்டில் ஏற்பட்ட சமுதாய மாறு தல்கள் காரணமாகக் கவிதையின் பொருளிலும் வடிவி லும் மாற்றங்கள் ஏற்பட்டன. இவ்வாறு மாற்றமடைந்த கவிதையையே நாம் நவீன கவிதை என்கின்ருேம். இதையே,
"சுவை புதிது, ப்ொருள் புதிது, வளம் புதிது, சொற் புதிது சோதி மிக்க நவ கவிதை' என மகாகவி பாரதியும் வருணித்தான்.
மரபுவழிக் கவிதைக்கிருந்த உள்ளடக்க வரைய றையை நவீன கவிதை உடைத்துவிட்டது.

ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி
இன்னவைதாம் கவி எழுத ஏற்ற பொருள்
என்றில்லை என்பது நவீன கவிதையின் அடிப்படை களுள் ஒன்ருகும். இன்றைய ஈழத்துக் கவிஞர்கள் குண்டூசி முதல் விஞ்ஞான வளர்ச்சியின் சமுதாய விளை வுகள்வரை தங்கள் கவிதைப் பொருளாகக் கொண்டுள் ளனர். கவிதையில் தெய்வங்கள், திருத்தலங்கள், சமயா சாரங்கள் என்பன பெற்ற இடத்தைப் பொதுமனித னும் அவனது நடைமுறை வாழ்க்கை அநுபவங்களும் பெற்றன. சுருக்கமாகச் சொல்வதானல் நவீன கவிதை சமயநெறியிலிருந்து சமூகநெறிக்கு மாறியது எனலாம். இவ்வுள்ளடக்க மாற்றத்தின் விளைவாகக் கவிதை வடிவங் களும் யாப்பு முறையும் வெகுவாக மாற்றம் அடைந்தன. பழைய பிரபந்தவகைகள் நவீன கவிஞர்களால் கைவிடப் பட்டன. புதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சிபற்றி ஆராயும் போது இவ்விரு கட்ட வளர்ச்சி நிலைகளையும் நாம் கருத் தில் கொள்ளவேண்டும்.
13 ஆம் நூற்ருண்டு முதல் 17 ஆம் நூற்ருண்டின் தொடக்கம் வரை யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். இக்காலப் ப்குதியிலிருந்து தான் இலங்கையில் மரபுவழிக் கவிதையின் தொடர்ச்சி யான வளர்ச்சியினைக் காண்கின்ருேம். தக்கண கைலாச புராணம், கண்ணகி வழக்குரை, திருக்கரைசைப் புராணம், இரகுவம்சம், கதிரைமலைப் பள்ளு முதலியன இக்காலப் பகுதியில் எழுந்த முக்கியம்ான நூல்களுட் சிலவாகும். இவற்றுள்ளேகண்ணகி வழக்குரை, இரகுவம்சம், கதிரை மலைப்பள்ளு முதலியன விதந்து கூறத்தக்கன. சிலப்பதி காரக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்ட, கவிச்சுவை நிரம்பிய ஒரு காவியம் கண்ணகி வழக்குரை. சகவீரன் என்பார் இதனை எழுதியதாகக் கருதப்படுகின்றது. அரசகேசரி இயற்றிய இரகுவம்சம் மஹாகவி காளிதாசரின் வடமொழிக் காவியத்தின் தமிழாக்கமாகும். நூலாசிரியரின் மொழி விற்பன்னத்

Page 16
4 தமிழியற் கட்டுரைகள்
தைக் காட்டுவது இது. கதிரைமலைப்பள்ளு, பள்ளு இலக்கியத்தின் முன்னேடி என்று கருதப்படுகின்றது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
17 ஆம் நூற்ருண்டு முதல் 20 ஆம் நூற்ருண்டின் நடுப்பகுதி வரை போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கி லேயர் ஆகிய ஐரோப்பிய சாதியினர் இலங்கையை ஆண்டனர். இவர்களது ஆட்சிக்காலத்திலேயே கிறிஸ் தவ சமயம் இங்கு வேரூன்றிப் பரவியது. இதன் விளை வாகக் கிறிஸ்தவ சமயச் சார்பான கவிதை நூல்கள் பல இக்காலப்பகுதியில் இலங்கையில் தோன்றின. ஆங்கி லேயர் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் பலரும் இஸ்லாமிய சமயத்தை அடிப்படையாகக் கொண்ட பிரபந்தங்களை இயற்றினர். இவ்வாறு ஐரோப் பியரின் ஆட்சிக்காலத்திலே ஈழத்துத் தமிழ்க் கவிதை யில் பிறசமயத் தாக்கம் இடம் பெறத் தொடங்கியது. சமயச்சார்பற்ற சில கவிதை நூல்களும் இக்காலப் பகுதியில் எழுந்தன.
ஞானப்பள்ளு, ஞானுனந்த புராணம், அர்ச் யாகப்பர் அம் மான,யோசேப்புப் புராணம், எம்பரதோர் நாடகம் முதலி யன இக்காலப்பகுதியில் எழுந்த கிறிஸ்தவ சமயச் சார் பான நூல்களுட் சில. இவை ஈழத்துத் தமிழ்க்கவிதைக்கு ஒரு புதிய வளத்தைச் சேர்த்தன எனலாம். அருள் வாக்கி அப்துல் காதிறுப் புலவர், அசனுர் லெவ்வைப் புலவர், அப்துல் றகுமான் புலவர், சின்ன ஆலிம் அப்பா போன்ற சிறந்த முஸ்லிம் புலவர்கள் பலர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே ஈழத்தில் கவிதை வளர்ச்சிக்கு உதவினர். அருள் வாக்கி அப்துல் காதிறுப்புலவர் இவர்களுள் முதன் மையானவர் எனலாம். இவர் முப்பதுக்கு அதிகமான பிரபந்தங்களை எழுதியதாகத் தெரியவருகிறது. சந்தத் திருப்புகழ் இவரது செய்யுளாற்றலைக்காட்டும் ஒரு நூலா கும். சின்ன ஆலிம் அப்பாவின் ஞானரை வென்றன் ஒரு சிறந்த ஞான நூலாகக் கருதப்படுகின்றது.
இக்காலப்பகுதியிலே சைவத் தமிழ்ப் புலவர்கள் பலரும் தமிழ்க் கவிதை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி

ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி t 5
புள்ளனர். சின்னத்தம்பிப்புலவர், மயில்வாகனப்புலவர், விரதபண்டிதர் ஆகியோர் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த புலவர்களாவர். சின்னத்தம்பிப் புலவரின் மறைசை அந்தாதி, கல்வளை அந்தாதி, கரவை வேலன்கோவை, பறளை விநாயகர் பள்ளு முதலியன அவரது கவிச்சிறப்பைக் காட்டுவன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத் நில் வாழ்ந்த புலவர் பெருமக்களுள் சுன்னகம் குமார சாமிப்புலவர், க. மயில்வாகனப்புலவர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, புலவர் சுப்பையனுர், நவநீத கிருஷ்ண பார இபர் முதலியோர் பிரசித்தி டெற்றவர்கள். புலவர்
1. ப்பையனுரின் கனகி புராணம் சமயச்சார்பற்ற தனித்துவ 10ான கவிதை நூலாகும். இதன் அங்கதச் சுவை விதந்து போற்றத்தக்கது. x
இந்த நூற்ருண்டின் தொடக்கத்தில் வார்ந்த, பாரதியின் சமகாலத்தவரான பாவலர் துரையப்பாபிள்ளை முதல் சமீபகாலம்வரை புகழ்பூத்த வேறுசில கவிஞர் (பெருமக்களும் வாழ்ந்துள்ளனர். சோமசுந்தரப்புலவர், விபுலானந்த அடிகள், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஆகியோர் இவர்களுள் முக் கியமானவர்கள். இவர்கள் வெவ்வேறு அளவில் நவீன சிந்தனையுடைய மரபுவழிக் கவிஞர்களாவர். அவ்வகை யில் பழைய மரபுக்கும் நவீனமரபுக்கும் இடைப்பட்ட வர்களாக நாம் இவர்களைக் கருதலாம். பாவலர் துரை யப்பாபிள்ளை சமூக சிந்தனையை முதல் முதல் ஈழத்துத் தமிழ்க்கவிதையில் புகுத்தியவராவர். இவரது யாழ்ப் பாண சுவதேசக்கும்மி அவ்வகையில் குறிப்பிடத்தக்கது. சோமசுந்தரப்புலவர் ஈழத்தில் சிறுவர் கவிதையின் முன் ைேடிகளுள் முக்கியமானவர். இவரது சிறுவர் செந்தமிழ் என்னும் நூலில் உள்ள பல பாடல்கள் பிரசித்தி பெற் றவை. விபுலாநந்த அடிகள் தமது கம்பீரமான செய் யுள் நடையிலே சேக்ஸ்பியரின் நாடகப் பாடல்கள் சில வற்றை மொழிபெயர்த்துத் தமிழுக்கு வளம் சேர்த்தவர். புலவர் மணியின் பகவத்கீதை வெண்பாவும் இலங்கைமணித்

Page 17
6 தமிழியற் கட்டுரைகள் திருநாடு என்னும் பாடலும் நன்கு புகழ்பெற்றவை. இக் கால சமூகப் பிரச்சினைகள் சிலவற்றைத் தமது கவிதை யில் கையாண்ட பெருமை பேராசிரியர் கணபதிப்பிள் ளேக்கு உண்டு. அவரது தூவுதும் மலரே, காதலியாற் றுப்படை முதலிய நூல்களில் இதனைக் காணலாம். ஆயினும் அவரது பழமைசார்ந்த மொழிநடை பொரு ளின் நவீனத்துவத்துக்கு ஊறு செய்துவிட்டது என்றே கூறவேண்டும்.
இவர்களின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளங் கவிஞர்கள் மூலம் ஈழத்திலே முற்றிலும் நவீனத்துவம் உடைய கவிதைமரபு ஒன்று தோன்றி வளரத்தொடங் கிற்று. 1940ஆம் ஆண்டுகளில் இருந்து இப்புதிய மரபை நாம் காண்கின்ருேம். அன்ருட வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் சமூக அரசியல் பிரச்சினைகள்,தனிமனித உணர்வுகள், ஆசாபாசங்கள், அநுபவங்கள் போன்ற வற்றை உள்ளடக்கமாகக்கொண்ட கவிதைகளை இவர் கள் எழுதின்ர். பாரதி, பாரதிதாசன் ஆகிய தமிழகக் கவிஞர்களின் செல்வாக்கினல் இவர்கள் தூண்டுதல் பெற்றனர் என்லாம். மஹாகவி, அ. ந. கந்தசாமி, முருகையன், நீலாவணன், புரட்சிக்கமால் முதலியோர் ஈழத்தில் நவீன தமிழ்க் கவிதையினை வளம்படுத்திய வர்களில் முக்கியமானவர்களாவர். இவர்களின் நோக்கு தரம் போக்குகளும் வேறுபட்டவை எனினும் தற்கால ஈழத்துக் கவிதை வளர்ச்சியில் இவர்கள் முக்கியமான வர்கள் என்பதில் ஐயமில்லை. மஹாகவியின் வள்ளி, குறும்பா, கண்மணியாள் காதை, கோடை, இரண்டு காவி யங்கள், ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், வீடும் வெளி யும் ஆகிய நூல்கள் அவரது கவிதா மேன்மையை உணர்த்துகின்றன. முருகையனின் நெடும்பகல், வந்து சேர்ந்தன, தரிசனம், கோபுரவாசல், ஆதிபகவன், ஒருவரம் முதலிய நூல்களிலே அவரது தனித்துவமான கவிதைப் போக்கைக் காணலாம். நீலாவணன், புரட்சிக்கமால் ஆகியோர் ஏராளமாக எழுதியிருப்பினும் நீலாவண னின் வழி, புரட்சிக்கமால் கவிதைகள் ஆகிய நூல்களே

ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி - 7
வெளிவந்துள்ளன. அ. ந. கந்தசாமி புதுமையான சில கவிதைகள் எழுதியிருப்பினும் அவை இன்னும் நூல் உருப்பெறவில்லை.
இவர்களின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த முக்கியமான கவிஞர்கள் சிலரும் ஈழத்தில் நவீன தமிழ்க்கவிதை வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகின்றனர். 1960 களில் தோன்றிய இப்புதிய பரம்பரைக் கவிஞர் களுட் பலர் சமூக அரசியல் பிரக்ஞையைத் தம் கவிதைகளில் பிரதானமாக வெளிப்படுத்தினர். 1970களி விருந்து நவீன தமிழ்க்கவிதையின் ஒரு பிரிவான புதுக் கவிதை அல்லது வசனகவிதையும் இங்கு வளர்ந்து வருகின் றது. பல புதுக் கவிதைத் தொகுப்புகளும் வெளி வந்துள்ளன. இவ்வகையில் தா. இராமலிங்கத்தின் காணிக்கை குறிப்பிடத்தகுந்த ஒர் நூலாகும்.
ஈழத்துக் கவிதை வளர்ச்சியிலே மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கும் ஒரு முக்கிய இடமுண்டு. பழங்காலம் (முதலே இங்கு மொழிபெயர்ப்பு முயற்சிகள் நடை பெற்றுள்ளன. அரசகேசரியின் இரகுவம்சம் இவ்வகை பில் முதல் முயற்சி எனலாம். எனினும் 1960 களின் பின்னரே கவிதை மொழிபெயர்ப்புக்கள் இங்கு பரவ லாகக் காணப்படுகின்றன. சமீபகாலத்திலே பல்வேறு நாட்டுக்கவிதைகளை ஈழத்துக் கவிஞர்கள்மொழிபெயர்த் துள்ளனர். இவ்வகையில் வியட்நாமிய, சீன, ரூசிய, இந்திய, பல்கேரிய, பலஸ்தீன, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்கக் கவிதைகள் பல மொழிபெயர்க்கப்பட்டுள் மான. இவற்றுட் சில தொகுப்புக்களாகவும் வெளிவந் துள்ளன. ஹோஷிமின் கவிதைகள், மாஒசேதுங்கவிதைகள், பலஸ்தீனக் கவிதைகள் என்பன இவற்றுட் குறிப்பிடத் தக்கன. நமது நவீன கவிஞர்களின் உலகக் கண்ணுேட் டத்தை இவை காட்டுகின்றன.
ஈழத்தில் கவிதை வளர்ச்சி பற்றிப் பேசுகையில் பிறுவர்களுக்கான கவிதைபற்றியும், சிறிது குறிப்பிட

Page 18
s தமிழியற் கட்டுரைகள்
வேண்டும். சிறுவர் கவிதை நவீன கவிதையின் ஒரு முக் கிய பிரிவாகும். மரபுவழிக்கவிதையிலே சிறுவருக் கென்று விசேடமாக எழுதப்பட்ட கவிதைகளைக் காண முடியாது. சோமசுந்தரப்புலவரே ஈழத்தில் இத்துறை யில் முன்னேடி என்பதை முன்னரே குறிப்பிட்டோம். முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி, யாழ்ப்பாணன் ஆகி யோரும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்களே. வித்து வான் க. வேந்தனரின் பல சிறுவர் கவிதைகள் இன்று பிரபலம் பெற்றுள்ளன. சமீபகாலத்திலே பல சிறுவர் கவிதை நூல்களும் வெளிவந்துள்ளன. அம்பியின் அம் பிப்பாடல்கள், எம். சி. எம். சுபைரின் மலரும் உள்ளம், பா. சத்தியசீலனின் பாட்டு, மழலைத் தமிழ் அமுதம் போன் றவை இவற்றுள் சில. ܢܠ ܼܲ
W . இவ்வாறு பண்டைக்காலம் முதல் இன்றுவரை ஈழத்தில் தமிழ்க்கவிதை பன்முகப்பட்டு வளர்ச்சிய டைந்து வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இருபதாம் நூற்றண்டுத் தமிழ்க்கவிதை
マ
சித்திரலோகா மெளனகுரு
தமிழ் இலக்கியவடிவங்களுள் காலத்தால் மூத்தது கவிதையாகும். இக்கவிதை பண்டுதொட்டு இன்று வரை பல்வேறு மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் அடைந்து வந்துள்ளது. இவ்வாறு தமிழ்க்கவிதை அடைந்த வளர்ச்சிகளுள் இருபதாம் நூற்றண்டில் அது அடைந்த வளர்ச்சி முக்கியமானதாகும். முன்னைய காலக் கவிதை நெறினியின்று பொருளிலும் வடிவிலும் அதிகஅளவு வேறுபட்டதாக இக்காலக்கவிதை நெறி அமைந்தது. இவ்வாறு இக்காலக்கவிதை அடைந்த மாற்றமே அதனைத் தனியே ஆராய்வதற்குரிய காரண மாகவும் உள்ளது.
சங்ககாலம் த்ொடக்கம் இருபதாம் நூற்ருண்டு வரையும் கவிதை, அரசர்களையும், பிரபுக்களையும் கடவு ளர்களையும் பாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தது. இன்னேர் வகையிற் சொன்னல் சமூகத்தின் உயர் நிறுவனங்களும் சமயமுமே இருபதாம் நூற்ருண்டின் ஆரம்பம் வரையும் தமிழ்க்கவிதையின் கருப்பொரு ளாய் அமைந்திருந்தன. ஆனல் இந்தியாவில் ஏற்பட்ட

Page 19
10 தமிழியற் கட்டுரைகள்
ஐரோப்பியர் ஆட்சி தமிழ்க்கவிதையில் மாற்றம் ஏற்
பட வழிவகுத்தது. ஐரோப்பியர் ஆட்சியும் அதனல் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்களும் தமிழ்ச் சமூகத்தினரின் சிந்தனையையும் வாழ்க்கைக் கண்ணுேட் டத்தையும் தத்துவநெறியையும் ஓரளவு மாற்றின. பொதுமக்களும் அவர்தம் பிரச்சினைகளும் கவிதைக் குரிய பொருள்களாயின. எளிய பதம், எளிய நடையிலே கவிதை இயற்றப்பட்டது. இருபதாம் நூற்ருண்டிலேற் பட்ட இம்மாற்றம் மகாகவி பாரதியாருடன் தொடங்கு கின்றது. எனினும் இருபதாம் நூற்ருண்டுக் கவிதை யின் மூலவித்துக்களைப் பாரதிக்கு முன்னரேயே காணக் கூடியதாயுள்ளது.
பாரதிக்கு முன்னர் வாழ்ந்த கோபாலகிருஷ்ண பாரதியார், அருணுசலக் கவிராயர், அண்ணுமலை ரெட்டி யார் முதலியோர் கீர்த்தனை சிந்து முதலிய வடிவங்களிற் கவிதை இயற்றியிருந்தனர். இராமலிங்க சுவாமிகளும் கவிதை முறையில் எளிமையினைப் புகுத்தியிருந்தார். ஆனல் இவர்களால் செய்யப்பட்ட மாற்றங்கள் கவி தையின் உருவங்களாக மாற்றவேயிருந்தன என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இவர்களிடமிருந்தும் இன் னும் சித்தர் போன்றேரிடமிருந்தும் சிந்து, கண்ணி, தெம்மாங்கு போன்ற உருவங்களைப் பெற்ற பாரதி புதிய உள்ளடக்கங்களைத் தமது கவிதையிற் கொணர்ந் தார். பாரததேசம் பற்றியும் அத்தேசத்தின் மேன்மை பற்றியும் தேசத்து க்காற்றவேண்டிய பணிகள் பற்றியும் கவிதை புனைந்தார். பாரதிக்குப் பின்வந்த கவிஞர்கள் பெரும்பாலோர் பாரதியின் வழிகாட்டலால் ஆகர்ஷிக் கப்பட்டவராயிருந்தனர். -
பாரதிக்குப் பின்னர் தமிழ்க்கவிதை இரு பெரும்
பிரிவுகளாய் வளர்ச்சி பெற்றது. ஒன்று யாப்புநெறிப் பட்ட கவிதை மரபு. மற்றது வசன கவிதை மரபு.

இருபதாம் தூற்றண்டுத் தமிழ்க் கவிதை и
பாரதி தம் முன்னேர் கையாண்ட அகவல், வெண்பா, விருத்தம், சிந்து, கீர்த்தனை முதலாம் யாப்பு வடிவங்களைக் கையாண்டதுடன் தேசவிடுதலை, சமூக விடுதலை முதலிய புதிய உள்ளடக்கங்களையும் தமிழ்க் கவிதையிற் புகுத்தினர். தமிழ்க்கவிதை மரபில் இடம் பெற்ற தெய்வபத்தி, பாரதி காலத்திலே தேசபத்தி யாக மாறியது. பாரதமாதாவைத் தெய்வமாகக்கொண் 1.ார் பாரதி. அவர் தெய்வப் பாடல்களிலும் மனுக் குல விடுதலையின் குரல் ஒலித்தது. பழைய காப்பியத் கிற்குப் பதிலாகப் பாஞ்சாலிசபதம் என்ற புதிய குறுங் காவியம் படைத்தார். அதனைப் புதிய காவியம் என வும் அழைத்தார். மழை, சூரியன், அக்கினி, காற்று முதலிய இயற்கைப் பொருட்களை வைத்துத் தனிப் பாடல்கள் இயற்றினர். சமூகநிலை, சமூக சீர்திருத்தம், தமிழ்மொழி முதலியவை பற்றியும் அவர் கவிதைகள் அமைந்தன. பாரதி உருவாக்கிய இம்மரபினைப் பின் பற்றியவர்களில் முக்கியமானவர்களாக நாமக்கல் இராம லிங்கம்பிள்ளை, ச. து. சு. யோகியார், தேசிகவிநாயகம்பிள்ளை, பாரதிதாசன், கலைவாணன் முதலியோரைக் குறிப்பிட லாம். இவர்கள் மரபுவழி யாப்புகளையும் பாரதி சிறப் பாகக் கையாண்ட சிந்து, கீர்த்தனை முதலான பாவகை களையும் தாமும் கையாண்டனர். தேசிய உணர்வும் சமூக விடுதலையும் இவர்கள் பாடல்களிலும் இடம் பெற்றன. இவை மட்டுமன்றி இயற்கைப் பொருட்கள் குறித்தும் இவர்கள் எளிமையான முறையிற் கவிதை புனைந்தனர்.
இவர்களிற் பாரதிதாசன் தனியாகக் குறிப்பிடப் பட வேண்டியவர். பாரதியைப் பின்பற்றியவராகப் பாரதிதாசன் காணப்படினும், இவர் தமக்கென ஒரு பரம்பரையினரையும் உருவாக்கியவர். தமிழ் மொழிப் பற்று, பெண்விடுதலை, தொழிலாளர் விடுதலை, திராவிட நாட்டுக் கோரிக்கை முதலியன இவர் கவிதைக்குரிய பிரத் தியேகக் கவிப்பொருளாய் அமைந்தன. தனிக்கவிதை

Page 20
12. தமிழியற் கட்டுரைகள்
களை மாத்திரமன்றிக் குறுங்காவியங்கள், கவிதைநாடகங் கள்முதலியவற்றையும் இவர் புனைந்தார். இவரைப் பின் பற்றிக் கண்ணதாசன், வாணிதாசன்,முடியரசன், பொன்னி வளவன் முதலிய கவிஞர்கள் உருவாகினர். இவர்களைப் பழைமையை நாடும் கற்பனவாதிகள் என விமர்சகர்கள் அழைப்பர். பாரதி மரபில் பாரதிதாசன் வழிவந்தோர் மாத்திரமன்றி இப்பிரிவில் இன்னும் சிலரும் அடங்குவர். ப, ஜிவானந்தம், கே. சி. எஸ். அருணுசலம், சிதம்பர ரகு நாதன் முதலியோர் பாரதி பயன்படுத்திய வடிவங்களைக் கையாண்டும், அவரது கவிப்பொருளான தேசப்பற்று, சமூக விடுதலை முதலிய பொருட்களை வைத்தும் கவிதை செய்தனர்.
இத்தகைய ஒரு கவிதைப் போக்கிற்குச் சமாந்தர மாக இதினின்று மாறுபட்ட ஒரு போக்கும் பாரதி கவிதைகளிலிருந்து தொடர்ந்து வந்துள்ளது. பாரதி யாப்பு வடிவில் அமைந்த கவிதை மாத்திரமன்றி வச னத்தில் - ஆனல் கவிதை எனத்தக்க இறுக்கமும் நய மும் வாய்ந்த - சில படைப்புக்களையும் எழுதியுள்ளார். இவற்றை இன்று வசன கவிதை அல்லது புதுக்கவிதை என்கின்றனர். இவற்றில் மரபுக் கவிதையில் காணப் படும் யாப்பமைதியோ, ஒசை ஒழுங்கோ இல்லை. இவ் வகைக் கவிதை வடிவமே இக்காலத் தமிழ்க்கவிதையில் பிரதான இடம் வகிக்கிறது.
பாரதிக்குப்பின் இக்கவிதை மரபினை நிலைநிறுத்திய வராகப் பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன் போன்றேர் விளங்குகின்றனர். சூருவளி, கலாமோகினி, கிராமஊழி யன், மணிக்கொடி போன்ற அக்காலச் சிறு சஞ்சிகை களில் இத்தகைய கவிதைகளை இவர்கள் வெளியிட்டனர். ஆனல் ஆரம்பத்தில் இத்தகைய கவிதை வடிவம். மிகுந்த கண்டனத்தைப் பெற்றது. காரசாரமான விவா தங்களுக்குட்பட்டது. எனினும் அது நிலைபெற்றது. 1950க்குப்பின்னர் சி. சு. செல்லப்பா நடத்திய எழுத்து பத்திரிகை புதுக்கவிதை வளர்ச்சியில் முக்கிய

இருபதாம் நூற்ருண்டுத் தமிழ்க் கவிதை 18
இடம் வகித்தது. சி. சு. செல்லப்பா, தர்மூ, சிவராமு க. நா. சுப்பிரமணியம், சி. மணி, வைத்தீஸ்வரன் போன் ருேர் எழுத்து பத்திரிகைக் காலத்தில் பிரதானமாக வசனகவிதை எழுதினர். மணமுறிவு, விரக்தி, அக் சி. யப்படல் போன்ற உணர்வுகள் இவர்கள் கவிதைகளின் பொருளாயின. இவர்கள் கவிதைகளில் விளக்கமின்மை மறைபொருள் ஆகியன மலிந்திருந்தன.
1970 ஆம் ஆண்டுகளை அடுத்து வானம்பாடிக் குழு வினர் என்ற ஒரு குழுவினர் புதுக்கவிதை உலகினுட் பிரவேசித்தனர். இவர்கள் புதுக்கவிதையில் புதிய உள்ளடக்கத்தைப் புகுத்தினர். மக்களை எழுச்சியுறப் பண்ண இலக்கிய வடிவங்கள் பயன்படவேண்டும் என்று கூறிய இவர்கள் சமகாலச் சமூக நிகழ்வுகளையும் புதிய சமூக விருப்பையும் தமது கவிதைகளில் வெளிப்படுத் தினர். நவபாரதி, புவியரசு, விடிவெள்ளி, காமராசன், பிற்பி, அக்கினிபுத்திரன் முதலியோர் இவர்களிற் குறிப் பிடத்தக்கவர்கள்.
இன்று தமிழ்நாட்டின் பிரபல்யம் பெற்ற கவிதை நெறியாகப் புதுக்கவிதை நெறி காணப்படுகிறது. ஆரம் பத்தில் இக்கவிதை வடிவத்திற்கிருந்த எதிர்ப்புக்கள் குறைந்துவிட்டன. ஆணுல் சில சமயங்களில் இக்கவிதை வடிவம் மூன்று நான்கு வசனங்கள் மட்டும் கொண்ட தாக அமைகின்ற ஒரு போக்கையும் காணலாம். 1973 ஆம் ஆண்டு உதயம், நீ என்ற இத்தகைய குட்டிப்புதுக் கவிதைத் தொகுப்புக்கள் வெளியாகின. சில சமயம் இவை விடுகதைகள் போன்றும் தோற்றமளிக்கின்றன.
எவ்வாருயினும் இன்று நிலைபெற்ற ஒரு இலக்கிய வடிவமாக இப் புதுக்கவிதை வடிவம் காணப்படுகிறது. வருடந்தோறும் பலர் இக்கவிதைத்துறையில் புதிதாக *(டுபடுகின்றனர். யாப்பு முதலிய கட்டுப்பாடுகள் எது விம் இல்லாததால் இலகுவான வெளிப்பாட்டுச் சாதன யாக இது விளங்குவது, பலரும் இதைக் கைக்கொள்ளக் காரணமெனலாம்.

Page 21
i4 தமிழியற் கட்டுரைகள்
தமிழ்நாட்டுக் கவிதை நெறிக்கும் ஈழத்துத் தமிழ்க் கவிதை நெறிக்குமிடையே பல ஒற்றுமைகளும் வேறு பாடுகளும் உள்ளன. ஈழத்திலும் இருபதாம் நூற்ருண் டிலிருந்து கவிதையில் ஒரு புதிய மரபு உருவாகியது. சமயத்தின் பிடியிலிருந்து விடுபட்டுக் கவிதை சமூகம் சார்ந்ததாக மாறியது. இவ்வகையில் இருபதாம் நூற் ருண்டுத் தமிழ்நாட்டுக் கவிதைக்கும் ஈழத்துக் கவி தைக்கும் ஒற்றுமை உண்டு. இங்கும் மரபு ரீதியான யாப்பு வடிவங்களைப் பயன்படுத்திப் பழைய முறையிற் கவிதை இயற்றுவோரையும் வசனகவிதையைப் படைப் போரையும் காணலாம். அதேசமயம் தமிழ்நாட்டில் முக்கியம் பெருத இன்னேர் வளர்ச்சியும் இங்குண்டு. மரபுரீதியான யாப்பு வடிவங்களைக் கையாளும் அதே சமயம் பொருள் தொடர்ச்சிக்கும்; பேச்சோசைக்கும் முதன்மை கொடுக்கும் ஒரு முறை ஈழத்தில் வளர்ந் துள்ளது. இது ஒரு முக்கிய நெறியாகவும் காணப்படு கிறது. 8,
ஈழத்துத் தமிழ்க்கவிதை வளர்ச்சி தனித்தன்ம்ைகள் கொண்டுள்ளதால் தனியாகவும் தமிழ்நாட்டுடன் ஒப்பு
நேர்க்கியும் ஆராயத்தக்கது. O

தமிழில் நாடக வளர்ச்சி
க. சொக்கலிங்கம்
தமிழ்மொழியை இயற்றமிழ், இசைத்தமிழ், நாட கத் தமிழ் என முப்பிரிவுகளாய் வகுத்தகாலம் எது எனத் தெரிந்து கொள்ளப் போதிய சான்றுகள் இல்லை. முத்தமிழ் என்ற சொற்ருெடர்ப் பிரயோகம், கி. பி. ஏழாம் நூற்றண்டிலே வாழ்ந்தவராகக் கொள்ளப்படும் திருநாவுக்கரசு நாயனுரின் திருத்தாண்டகம் ஒன்றிலேயே முதன்முதற் காணப்படுவதாய் ஆய்வாளர் கூறுவர்.
முத்தமிழும் நான்மறையும் ஆணுன் கண்டாய் என்பது திருத்தாண்டகத்திலே வரும் அடி. சங்ககாலத் தில் (கி. பி. 100-300) எழுந்த இலக்கியங்களில் நாடகம் பாஸ்னப்படுவது, அபிநயமும் இசையும் இணைந்த .%டலைத்தான் குறித்திருத்தல் வேண்டும். சோழர் காலக் தில் (கி. பி. 900-1400) கோயிலை மையமாகக் கொண் டெழுந்த நாடகங்களாய் இராஜராஜேசுவர நாடகம், பூம்புலியூர் நாடகம் என்பன கல்வெட்டுக்கள் வாயிலாய் அறியவருகின்றன. ஆனல் இவை நூல்வடிவில் எமக் குக் கிட்டவில்லை. விசயநகர மன்னர் காலத்தில் (கி.பி. 1100-1800) பள்ளு, குறவஞ்சி ஆகிய பிரபந்தங்களிலே 1.1.கப் பண்பினைப் பெருமளவு காணலாம். ஐரோப் யர் காலத்தில் (கி. பி. 1800-1947) நாடகமானது

Page 22
16 தமிழியற் கட்டுரைகள்
தெருக்கூத்து, கம்பனிக்கூத்து (கொட்டகைக் கூத்து), நவீனமுறை நாடகம் என்ற முப்பிரிவுகளாய் நிலவக் தொடங்குவதை அவதானிக்கலாம். உண்மையில் ஐரோப்பியர் காலத்திலிருந்தே தமிழக நாடகத்தின் வரலாற்றினை, வளர்ச்சியை அறிந்து கொள்ளப் போதிய ஆதாரங்கள் கிடைக்கின்றன.
நாடகம் ஒரு மேடைக்கலை. சமுதாய நிகழ்வுகளைப் பாத்திரங்களின் நடிப்பினலும் உரையாடலாலும் மக்க ளின் முன்பு கலைவடிவமாகக் காட்டி நயக்கவைப்பதே நாடகக் குறிக்கோள். இந்தக் குறிக்கோளினை நிறைவு செய்யத் தமிழகத்திலே பண்டுதொட்டு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டே வந்துள்ளன என்பதற்கு ஐயம் இல்லை. ஆனல் இன்று மேடையேறும் நாடகங்கள் தமிழ் நாடக மரபுமுறையிலே வளர்ந்த கலைவடிவங்கள் என்று கொள்ளல் இயலாது. ஏனெனிற் கிரேக்க மொழியிற் போலவோ சமஸ்கிருத மொழியிற் போலவோ தமிழிலே பழைமையான நாடகங்கள் எவையும் கிடைக்கவில்லை.
நாடகங்கள் புராதன மக்களின் சமயக் கிரியை, களிலே ஓர் இன்றியமையாக் கூருய் விளங்கி வந்துள் ளன என ஆய்வாளர் கூறுவது தமிழ் நாடகத்திற்கும் பொருந்துவதே. சங்க இலக்கியங்களிலே வரும் வெறி யாட்டு முதலானவையும் பிற்காலத்திலிே சிலப்பதிகாரத் தில் வரும் ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை, வேட்டுவ வரி ஆகியனவும் சமயக்கிரியைகளின் அடிப்படையில் அமைந்த நாடகங்களே. தொல்காப்பியம் கூறும் நாடக வழக்கு, உலகியல் வழக்கு என்ற இரண்டனுள்ளும் நாடகவழக்கு என்பது மக்களின் வாழ்க்கை நிகழ்ச்சி களைச் சற்றே மிகைபட இலட்சிய பூர்வமாய் எடுத் துக் காட்டும் முறைமையே. இம்முறைமை சார்ந்த பாடல்கள் பலவற்றைச் சங்ககாலத்தொகை நூல்களிலே காணலாம். இப்பாடல்கள் அக்காலத்தில் அரங்குகளிலே நாடகங்களாக நடிக்கப்பட்டிருக்கலாம். சங்ககாலத்தில் மட்டுமன்றி அதற்குப் பிற்பட்ட காலங்களிலும்

தமிழில் நாடக வளர்ச்சி
நாடகப் பண்பமைந்த இலக்கியங்கள் பல தமிழிலே தோன்றியுள்ளன. எனினும் விசயநகர மன்னர் கால இறுதிப் பகுதியிலே தோன்றிய குறவஞ்சி, பள்ளு இலச் கியங்கள் தாம் மிக அதிகமான நாடகப் பண்பினைத் தம்முள் அடக்கியவை என்று கொள்வதில் தவறில்லை. இவற்றைத் தொடர்ந்து ஐரோப்பியர் காலத்திலே கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தன் சரித்திரக் ப்ேத்தனை, அருணுசலக் கவிராயர் இயற்றிய பெரிய புராணக் ர்ேத்தனை, இராமாயணக்கீர்த்தனை என்பன நாடகப் பண் பி% மேலும் அதிகமாகக் கொண்டு வெளிவந்தன.
இவ்விரண்டுவகை இலக்கியங்களிலும் குறவஞ்சி, பள்ளு என்பன நாட்டார் இயல் அடிப்படையில் அமைந்த மரபுவழி நாடகங்களுக்கு வித்திடச் சரித்திரக் கீர்த்தனைகள் கொட்டகைக் கூத்துக்களுக்கு அடிகோலின. நாட்டாரியல்சார் கூத்துக்கள் நாட்டுக் கூத்துக்களாய் நிலக்க, கொட்டகைக்கூத்துக்கள் காலப்போக்கில் ஆங் கில நாடக மரபைத் தழுவிய நவீன முறை நாடகங். களுக்கு இடம் அளித்தன.
இலங்கையிலே நாட்டுக்கூத்து அல்லது மரபுவழி நாடகம் என்பது தமிழகத்திலே தெருக்கூத்து என அழைக்கப்படும். ஆட்டமும் பாட்டும் மிக அதிகமாக இடம்பெற்று ஓரிரவு முழுவதும் ஆடப்படும் இத்தகைய கூத்துக்கள் புராண இதிகாசக் கதைகளாகவோ அந்நிய ரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக விடுதலைப் போர் நடத்திய வீரபாண்டியக் கட்டப்பொம்மன் போன்ற வீரர்களின் வரலாறுகளாகவோ அமைவதே பெரும்பான்மை. சமூகத் இன் உயர் வர்க்கத்தினரது அநியாயங்களுக்கெதிராக அவர்களை நையாண்டிபண்ணும் வகையிலே பாடப் பட்டுச் சாமானிய ஏழை மக்களின் அபிலாட்சைகளைப் புலப்படுத்திய பள்ளுப் பிரபந்தங்களின் இடத்தைப் பிற்காலத்தில் இத்தகைய தெருக்கூத்துக்கள் பெற்றுக் கொண்டன. இவற்றேடு கிறிஸ்தவ சமயச் சார்பான
3

Page 23
18 தமிழியற் கட்டுரைகள்
கதைகளையும் - ஞானசவுந்தரி முதலியவை - கூத்துக் களாக்கி ஆடும் வழக்கம் இருந்தது. எனினும் கிறிஸ் தவக் கூத்துக்கள் இலங்கையிலே பெற்றிருந்த அளவு செல்வாக்கினைத் தமிழகத்திலே பெறவில்லை என்றே சொல்லல் வேண்டும். இத்தகைய தெருக்கூத்துக்களும் கொட்டகைக் கூத்துக்களுமாகப் பத்தொன்பதாம் நாற் முண்டில் வெளியான தமிழக நாடக நூல்களின் தொகை நூறு என்பது பேராசிரியர் தெ. பொ. மீட்ைசிசுந்தரை
Gör மதிப்பீடாகும்.
கூடிய அளவு கர்நாடக சங்கீதப் பாடல்களையும் செந்தமிழ் நடையிலே அமைந்த உரையாட்ல்களையும் உள்ளடக்கிய கொட்டகைக் கூத்துக்கள் தமிழகத்திலே கம்பனி நாடகங்கள் எனப்பட்டன. பத்தொன்பதரம் நூற்ருண்டின் இறுதிக் காலந்தொட்டுத் திரைப்படங் களும் நவீன முறை நாடகங்களும் செல்வாக்குப் பெற முன்னுள்ள காலம்வரை கம்பனி நாடகங்களே சிறப்புப் பெற்றிருந்தன. நடிப்பிலும் கூடிய அளவு இசைத் திற னுக்கே முதன்மை வழங்கப்பட்ட இத்தகைய நாடகங் களை எழுதியோருள் சங்கரதாஸ் சுவாமிகள் குறிப்பிடத் தகுந்தவர். நாடகத்துறையிலே சிறந்து விளங்கிய டி. கே. சண்முகம் இவரைத் தமிழ் நாடகத்தின் தந்தை எனப் போற்றுவர்.
பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதிக் கட்டத் திலே ஆங்கிலம் கற்ற தமிழறிஞர் ஆங்கில நாடக பாணி யிலே சிலநாடகங்களைனழுதி நவீனமுறை நாடகத் தோற் றத்திற்கு வித்திட்டனர். 1891இல்பேராசிரியர்பெ.சுந்தரம் பிள்ளை, மனுேன்மணீயம் என்ற நாடக நூலை எழுதினர். ஷேக்ஸ்பியர், ஷெரிடான் முதலான ஆங்கில நாடகாசிரி யர்களின் நாடகப் பாங்கினைப் பின்பற்றிச் செய்யுள் யாப் பிலே மனேன்மணியம் எழுதப்பட்டுள்ளது. இது லிட்டன் பிரபு என்பார் எழுதிய இரகசிய வழி என்ற ஆங்கிலக் கதையைத் தழுவியது. பேராசிரியர் சுந்தாம் பிள்ளையின் வழியிலே வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரி

தமிழில் நாடக வளர்ச்சி 19
யார் என்ற தமிழறிஞர் ரூபாவதி (1896), கலாவதி (1898) மானவிஜயம் (1902) ஆகிய நாடக நூல்களை எழுதினுர் . இவற்றுள் முன்னைய இரண்டும் செந்தமிழ்ப் பாங்கான உரைநடையில் அமைந்தவை. மூன்ருவது நாடகம் மனேன்மணியம் போலச் செய்யுள் நடையில் ஆக்கப்பட்டது. இங்குக்குறிப்பிட்ட நான்கு நாடக நூல்களும் மேடையில் அரங்கேற்றும் குறிக்கோளோடு எழுதப்பட்டவையல்ல. இவற்றை நாடகப்பாங்கான இலக்கியங்கள் என்பதே பொருந்தும். வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் நாடக இலக்கணம் கூறும் நாடகவியல் (1897) ஒன்றும் எழுதினர்.
மரபு வழிக் கூத்துக்கள்போல நேரக்கட்டுப்பாட்டின் மமையோ நடிப்பிலும் அதிகமான பாடற் பாங்கோ இல்லாது சுருங்கிய காலத்தில் நடிப்புக்கான வாய்ப் புக்கள் கூடியனவாய் அமையும் நாடகங்களை எழுதியும் அவற்றை அரங்கிலே நடித்தும் நவீன முறை நாடகங் களுக்கு வழிகாட்டியவர் பம்மல் ப. சம்பந்த முதலியா ராவர். ஈழத்துத் தமிழ் நாடகத் துறையிலே அரை நூற்ருண்டுக்குமேல் கலைப்பணி ஆற்றிய கலையரசு க. சொர்ணலிங்கம் இப்பெரியாரைத் தம் குருவாகப் போற்றுவதோடு இவரே நவீன நாடகத்தந்தை என்றும் புகழ்ந்துள்ளார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவித் தமிழிலே வாணிபுர வணிகன், விரும்பிய விதமே, அமலா தித்யன் முதலிய நாடகங்களை மேடைக்குகந்த வகை யிலே இவர் எழுதியதோடு புராண, இதிகாச, சமூக நாடகங்களை எழுதியும் நடித்தும் மேடையேற்றியும் வழிகாட்டினர். இவர் இவ்வகையில் அறுபது நாடகங் கள் வரை எழுதியுள்ளார். நாடகத்தில் ஈடுபடுவோர் படிப்பறிவு குறைந்த பாமரரே என்ற நிலையை மாற்றிப் 1.டித்த உயர்வர்க்கத்தினரும் அத்துறையிலே ஈடுபட 2வக்கமும் உற்சாகமும் அளித்தவகையிலும் பம்மல் ப. சம்பந்த முதலியார் குறிப்பிடத்தக்கவரே.

Page 24
20 தமிழியற் கட்டுரைகள்
1931 ஆம் ஆண்டிலே தமிழகத்திலே திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கும்வரை தொழிற்றுறை சார்ந்த நாடகக் கம்பனிகளும் பொழுதுபோக்கிற்காய் அமைந்த சபாக்களும் நாடகங்களை மேடையேற்றி அக்கலைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்தன. பார்சி நாடக முறை என்ற முறையினைப் பின்பற்றி அழகிய திரைகள் இட்டு, அலங்கார ஆடை அணிகளுடன் புராண, இதி காச, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றுவதிலே பெரும் போட்டியே இருந்ததெனலாம். டி. கே. எஸ். சகோதரர்கள், நவாப் இராசமாணிக்கம் ஆகியோர் நாடகத் துறையிலே தலைசிறந்து விளங்கினர். இவர்கள் பெரும் பாலும் புராண இதிகாசக் கதைகளுக்கே முதன்மை யளித்தபோதும் அவ்வப்போது சமகாலச் சமூக நிகழ்ச் சிகளையும் நாடகமாக்கத் தவறவில்லை. இந்திய தேசீயப் போராட்டத்தில் தமிழ் நாடகத்துறையும் தனது பங் களிப்பைக் கணிசமான அளவில் வழங்கி நாடகம் சமூக விழிப்புக்கு உதவக்கூடிய கலைச்சாதனம் என்பதைச்செய லிற் காட்டியது. −
தமிழக நாடகத்துறையில் சென்னை, திருச்சி வானெலி நிலேயங்களும் நாடகத்தின் ஒரு பிரிவாகிய வானெலி நாடகத்துறைக்குத் தமது பங்களிப்பைச் செய்து வந் தன; வருகின்றன. நாடகத்தைச் செவிப்புலக் கலைச் சாதனமாகவும் வளர்க்கலாம் என்பதற்கு வானெலி நாடகங்கள் தக்க உதாரணங்களாகும். இவற்றேடு மேடை நாடகத் துறைக்கு எழுத்தாளரின் பங்களிப்பும் சாமானியமானதன்று. பி. எஸ். இராமையா, தி. ஜான கிராமன், அரு இராமநாதன் முதலான எழுத்தாளர்கள் தரமான நாடகங்களை எழுதி நாடகத் துறையை ஊக் கினர்.
எனினும் திரைப்படத்தின் செல்வாக்குத் தமிழக நாடக வளர்ச்சியைப் பெரிதும் பாதித்துள்ளமையையும் மறுத்தற்கில்லை. புதிய பரிசோதனைகளை நடத்தவும் தாடக மேடைக்கலையை வளர்க்கவும் தமிழகத்தில்

தமிழில் நாடக வளர்ச்சி t
அண்மைக்காலத்தில் பாரிய முயறசிகள் எவையும் மேற் கொள்ளப்படவில்லை என்றே கூறல் வேண்டும். திரைப் பட நடிகர் மனுேகர், 'சோ' முதலியோர் நாடகத்திகே முறையே கட்புலக்கலைச் சாதனமாகவும் அரசியல் பிரசார சாதனமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான நாடகக் கலைஞர்கள் இவர்களின் வழி யையே பின்பற்ற முயன்று வருவதால் நாடக வளர்ச்சி தமிழகத்தைப் பொறுத்தவரையிலே தேக்கநிலையிலேயே உள்ளது எனலாம். வங்காளம், கேர்ளம் முதலிய இந்தியாவின் மற்றைய மாகாணங்களில் நாடகக்கலை வளர்ந்துள்ள நிலையோடு ஒப்பிடும்பொழுது தமிழகத்தில் நாடகம் தவழ் நிலையிலேயே நிற்கிறது எனலாம்.
திரைப்படத்தை மறந்து தூய்மையான நாடக உருவத்தைப் புலப்படுத்தும் வகையில் அதனை வளர்ப் பதற்கான ஆலோசனைகள் கலையார்வம் கொண்ட தமிழகச் சஞ்சிகைகளிலே எடுத்துரைக்கப்பட்டு வருகின் றன. சில காலத்திற்குமுன் தெருக்கூத்துப் பாணியில் மேடையேறிய குசேலா நாடகம் கலைத்துறையின் விழிப் புணர்ச்சியை ஒரளவு எடுத்துக் காட்டியபோதிலும் (இந்நாடகம் 'கணையாழி' சஞ்சிகையில் வெளியாகியுள் பளது) இத்துறையில் தமிழகம் பலபடிகள் மேலேற வேண்டும் என்பதற்கு ஐயம் இல்லை. O

Page 25
4
ஈழத்துத் தமிழ் நாட்டுக் கூத்துக்கள்
G, மெளனகுரு
நாட்டுக் கூத்தினைக் கிராமிய நாடகம் எனவு11 அழைப்பர். /கிராமிய நாடகம் மக்கள் வளர்த்த அழ குக் கலைகளுள் ஒன்று. கிராமிய மக்களின் உணர்வுகளை யும் சிந்தனைப் போக்கினையும் வாழ்க்கை முறையினை யும் இது வெளிப்படுத்துகிறது. இது ஒரு இனத்தின் தேசியச் சொத்தாகும். ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தனது பாரம்பரியக் கலைகளுள் ஒன்றன நாட்டுக் கூத்தினே" இன்று மறந்து வருகிறது. எனினும் அறிஞர், ஆர்வ லர் சிலரது முயற்சியினுல் அதனை மீண்டும் தமிழ்ச் சமூகம் நினைக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
ஈழத்தில், தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் நாட்டுக் கூத்துக்கள் இடையிடையே நடைபெற்று வருகின்றன. இக் கூத்துக்கள் தென்மோடி, வடமோடி, தென்பாங்கு, வடபாங்கு, காத்தான்கூத்து, மகுடிக்கூத்து, வசந்தன்கூத்து, வாசாமா, காமன்கூத்து எனப் பலவகைப்படும்.
ஈழத்தில் தமிழர் மத்தியில் ஆடப்படும் கூத்துக் களிடையே பாடல் வகைகள், கதைப்பொருள், கதைப் போக்கு, கூத்து நடத்தப்படும் முறை ஆகியவற்றிற்

ஈழத்துத் தமிழ் நாட்டுக்கூத்துக்கள் 2.
கிடையே ஒற்றுமை உண்டு. எனினும் பிரதேச வேறு 11ாட்டிற்கு ஏற்ப அவ்வப் பிரதேசத்தின் தனித்தன்மை களையும் இவை பெற்றவையாயுள்ளன. மன்னர்க் கூத்துக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ சமயச் சார்பு.ை யவையாயிருக்க மட்டக்களப்புக் கூத்துக்கள் இந்து மதச் சார்புடையனவாயுள்ளன. யாழ்ப்பாணக் கூத் தில் ஆர்மோனியம், டோல்கி, கடம் போன்ற வாத் தியக் கருவிகள் இடம் பெற மட்டக்களப்புக் கூத்தில் மத்தளம், தாளம் என்னும் வாத்தியக்கருவிகளும் மலை நாட்டில் தப்பு என்ற வாத்தியக் தருவியும் இடம்பெறு கின்றன. பிரதேச வேறுபாடுகளே இதற்கான காரண lo f) T l D) .
இக்கூத்துக்கள் நவீன நாடகங்களினின்றும் பாத் திரங்கள் தமக்குள் கருத்துப் பரிமாறும்முறை, மேடை அமைப்பு, பழகும் விதம், கதைப்போக்கு ஆகியவற் றில் வேறுபாடுடையன. இவையே இக் கூத்துக்களின் தனித்துவமான அம்சங்களுமாகும்.
நவீன நாடகம்போலக் கூத்து, வசனத்தால் ஆன நன்று. வசனம் மிகக் குறைவாகவே இடம்பெறும். வசனத்தைக் கூடப் பாட்டாகவே இழுத்துக் கூறுவர். கருானசவுந்தரி, என்றீக் எம்பரதோர் போன்ற நாடகங் களில் வசனமே இல்லை. ஆடலும் பாடலுமே கூத்தின் அடித்தளமாகும். இன்று ஈழத்தின் மட்டக்களப்பு, புல்லைத்தீவு, மலைநாடு ஆகிய பகுதிகளிலேதான் கூத் ேெல ஆட்ட மரபு பேண்ப்படுகிறது. ஏனைய பிரதேசங் 'களில் ஆட்ட மரபு கை விடப்பட்டு பாட்டு மரபு மட்டுமே பேணப்படுகிறது.
இக் கூத்துக்கள்.ஆரம்பத்தில் வட்ட வடிவமானமேடை பிலேயே ஆடப்பட்டிருக்கவேண்டும். மட்டக்களப்பிலே இம் மேடை அமைப்பு வட்டக்களரி என அழைக்கப் படுகிறது. நாற்புறமும் பார்வையாளரைக் கொண்ட வட்டக்காரிமுறை இன்றும் மட்டக்களப்பிலுண்டு.

Page 26
24 தமிழியற் கட்டுரைகள்
ஏனைய பிரதேசங்களிலும் இம்முறை முன்னர் ப்யன் படுத்தப்பட்டதாயினும் இன்று முப்பக்கம் அடைக்கப் பட்டதும் ஒரு பக்கம் பார்வையாளரைக் கொண்டது மான மேடையமைப்பே அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது. இன்றைய நாடகங்களைப்போல மேடைக் குப் பின்னணியாகக் காட்சிகளை விவரிக்கும் திரைச் சீலைகள் நாட்டுக் கூத்திற் பயன் படுத்தப்படுவதில்லை. கூத்தரின் பாடல்களிலிருந்தே கதை நிகழும் இடங்களைப் பார்வையாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கூத்தைப் பழக்குபவர் அண்ணுவியார் என்று அழைக் கப்படுகிருர். இவரே கூத்தில் மத்தளம் வாசிப்பவரா வார். இவருக்கு உதவியாகத் தாளக்காரர், ஏடுபார்ப் போர், பக்கப்பாட்டுக்காரர் இருப்பர். இவர்கள் சபை யோர் என அழைக்கப்படுவர்.
இக்கூத்துக்களைப் பழக்குவதற்கென்று ஒரு மரபு பெரும்பாலான கிராமங்களில் இன்றும்பேணப்படுகிறது. ஆரம்பத்தில் கூத்தாட விரும்புவர்களின் குரலுக்கும் தோற்றத்திற்கும் ஏற்பப் பாத்திரத் தெரிவு நடை.ெ றும். அண்ணுவியாரே இதனைச் செய்வார். இது சட்டம் கொடுத்தல் எனப்படும். தினமும் மாலை 7 மணிமுதல் இரவு 11 மணிவரை கூத்துப் பழகுவர். இது தினக் கூத்து எனப்படும். கூத்தருக்கு நன்முக ஆட்டம் கைவரப் பெற்றதும் சதங்கை அணிதல் நடைபெறும். சதங்கை அணிதலின்போது கூத்துப் பகல் முமுவதும் ஆடப்படும். பின்னர் கிழமைக் கொருதடவை இக் கூத்தினைப் பழ குவர். இது கிழமைக் கூத்து எனப்படும். அரங்கேற்றுவ தற்கு ஒரு கிழமைக்கு முன்னர் உடுப்பு அணியாமல் முழுக்கூத்தினையும் இரவு முழுவதும் ஆடுவர், இது அடுக்குப்பார்த்தல் எனப்படும். இவ்வளவும் நடைபெற்ற பின்னரே அரங்கேற்றம் நடைபெறும். இந் நிகழ்ச்சிகள் அனைத்திலும் கிராமம் முழுவதும் பங்கு கொள்ளும், சதங்கை அணிதல், அரங்கேற்றுதல் என்பன ஊர்ப் பெருவிழாவாகவே கொண்டாடப்படும்,

ஈழத்துத் தமிழ் நாட்டுக்கூத்துக்கள் 25
மக்கள் அறிந்த கதைகளே கூத்தின் கருவாக அமை வதால் எதிர்பாராத திருப்பங்களோ, நாடகத்திற்குரிய ஆரம்பம், வளர்ச்சி, உச்சம், வீழ்ச்சி என்றபடி நிலை களோ கூத்திற் காணப்படா. பெரும்பாலும் கூத்துக் கள் புராண இதிகாசக் கதைகளையும் நாடோடிக் கற் பஃனக் கதைகளையும் கருத்துக்களாகக் கொண்டுள்ளன. கிறித்தவர் வருகைக்குப் பின்னர் கிறித்தவமத சம்பந்த மான கதைகளும் கருக்களாகக் கொள்ளப்பட்டன. சமூகக் கருக்கள் முன்னர் கூத்துக்களாக ஆக்கப்பட வில்லை. அறத்திற்கும் மறத்திற்கும் நல்லதற்கும் தீய தற்கும் நடக்கும் போரில் இறுதியில் நன்மை இறை துணையுடன் வெல்வதையே இக் கூத்துக்கள் சித்திரித் தன. அமங்கல முடிவுகள் “கூத்தில் இடம்பெறவில்லை GT GOT 6) TL 5.
கூத்திலே பாடல்கள் முக்கிய இடத்தினை வகிக் கின்றன. கூத்தர் பாடலைப் பாடி ஆட மேடையில் நிற்கும் சபையோர் அதனை இரட்டித்துப் பாடுவர். மீண்டும் மீண்டும் ஒரு பாடல்.பாடப்படுவதால் பார்வை யாளருக்குப் பாட்டின் பொருள் நன்கு புலப்படுவதுடன் கதைத் தொடர்பையும் அறிய முடிகிறது. நாட்டுக் கத்தைப் பாடியவர்கள் பொருத்தமான இடங்களிற் பொருத்தமான யாப்புக்களைப் புகுத்தியுள்ளனர். வெண்பா, ஆசிரியப்பா, கலிவெண்பா போன்ற பாக் களும் கலிவிருத்தம், கலித்துறை, கொச்சகம் போன்ற 11 வி ன ங் களு ம் நாட்டுக் கூத்துக்களுக்குரிய தரு, பிந்து, தோடயம், இன்னிசை, கீர்த்தனம், கவி, உலா போன்ற இசைப்பா வகைகளும் கூத்து நூல்களிற் கையாளப்பட்டுள்ளன. ۔۔۔۔۔
இக் கூத்துக்களுக்குரிய ஆட்ட முறைகளும் தனித் துவமானவை. மட்டக்களப்பில் இவ்வாட்ட முறைகள் பெரிதும் பேணப்படுகின்றன. ஒவ்வொரு பாத்திரமும் தன் வரவின்போது ஒரு நீண்ட வரவு ஆட்டத்தை
4 w

Page 27
26 தமிழியற் கட்டுரைகள்
நிகழ்த்தும். அப்போது பல்வேறு வகைத் தாளங்கள் மத்தளத்தில் இசைக்கப்படும். அத்தாளங்கள் வாயாற் சொல்லப்படுகையில் தாளக் கட்டுக்கள் எனப்படும். தாளக் கட்டுக்களுக்கு ஏற்பவே ஆட்ட முறைகள் அமையும். இவ்வாட்டங்கள் ஆண்களுக்கு வேருகவும் பெண்களுக்கு வேருகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாத் திரத்திற்கும் தகத் தாளக்கட்டுகள் வேறுபடுதலும் உண்டு. உலா, பொடியடி,வீசாணம், எட்டு,நாலடி, குத்து மிதி, பாய்ச்சல், ஒய்யாரம், அடந்தை, தட்டடி, குத்துநிலை முதலிய ஆட்ட முறைகள் கூத்திற் பயன் படுத்தப்படும்.
கூத்துக்களை வடமோடி, தென்மோடி எனப்பிரித்து நோக்கும் வழக்கமுண்டு. இரு மோடிகளுக்குமிடையே யான துல்லியமான வேறுபாடுகளை மட்டக்களப்பிற் காணமுடிகிறது. ஆடல், பாடல், உடைகள், கூத்தில் உபயோகிக்கும் ஆயுதங்கள் என்பவற்றில் இரண்டிற்கு மிடையே வேறுபாடுண்டு. தென்மோடி ஆட்டங்கள் வடமோடி ஆட்டங்களிலும் நுணுக்கமானவை; பாடல் கள் இனிமையானவை. தென்மோடி நாடகங்கள் கற் பனைக் கதைகளைப் பொருளாகக் கொள்ள, வடமோடி நாடகங்கள் புராண இதிகாசக் கதைகளைப் பொரு ளாகக் கொள்கின்றன.தென்மோடிக் கூத்துக்கள் பாரம் குறைந்த உடுப்பினைஅணிந்து வாள் மாத்திரம் கொண்டு ஆட, வடமோடிக் கூத்தில் பாரம் கூடிய உடுப்பினை அணிந்து வாள், வில், கதாயுதம், கட்டாரி முதலிய ஆயுதங்களை ஏந்தி ஆடுவர். இன்று இரண்டு மோடி களிடையேயும் ஆடல், பாடல் தவிர்ந்த ஏனைய அமிசங் களில் வேறுபாடுகளைக் காணமுடியாதுள்ளது.
ஐரோப்பியர் வருகையின் முன்னர் இக்கூத்தே ஈழத்தமிழரின் நாடகமாய் இருந்தது. கற்றேரும் கல்லா தோரும் இக்கூத்துக்களைப் பார்த்து மகிழ்ந்தனர். சமய விழாக்களின்போதும் புதுவருவும், தைப்பொங்கல் போன்ற விழாக் காலங்களிலும் இக்கூத்துக்கள் ஆடப் பட்டன. புலவர்கள் கூத்துக்களை எழுதினர்; அண்ணுவி

ஈழத்துத் தமிழ் நாட்டுக் கூத்துக்கள் 37
மார் பழக்கினர். சில இடங்களில் அண்ணுவிமாரே கூத்துக்களே எழுதியும் பழக்கியும் வந்தனர். பல நூற் றுக்கணக்கரன சுத்துக்கள் ஆடப்பட்டமைக்குச் சான் றுகளுண்டு.
கத்தோலிக்கர் வருகையின் பின் ஈழத்துக் கூத் துக்கள் சில புதிய அமிசங்களைப் பெற்றன. யாழ்ப் பாணத்திலும் மன்னர்ப் பகுதியிலும் இத் தாக்கத்தைக் காண முடிகிறது. கிறித்தவக் கதைகளான ஞான சவுந்தரி, மூவிராசாக்கள், எஸ்தாக்கியார் முதலியன நாடக்ங்களாயின. புலசந்தோர், பூந்தோழிமார், பபூன் போன்ற பாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பண்டைய கூத்தில் கட்டியகாரன் பெற்ற இடத்தினைப் பின்னர் பபூன் பெற்றன்; ஆட்டமுறைகள் கைவிடப் பட்டன.
அதன்பின்னர் தமிழ் நாட்டினின்றும் இங்கு புகுந்த பார்ஸி வழி நாடக மரபும் கூத்து மரபினைத் தாக்கியது. இதுவே வட்டக்களரி முறையினை மாற்றிக் கொட்டகைக் கூத்தாகப் பண்டைய கூத்தினை மாற்றியது. பார்ஸி வழி நாடகத்தினுரடாகப் பல புதிய இராகங்களையும் கூத்துப் பெற்றது. விலாசக் கூத்து இச் சங்கமிப்பில் பிறந்த ஒன்ருகும். விலாசத்தில் கர்நாடக இசையே அதிகம் பயன்படுத்தப்பட்டது.
ஆங்கிலேயர் வருகையுடன் நவீன நாடக மரபு ஈழத்தில் உருவாகியது. தொடர்ந்து தென்னிந்திய சினிமாப் படங்கள் இங்கு வரத் தொடங்கின. நவீன நாடக வருகையும் சினிமா மோகமும் சுத்தினைப் பின் னிலைக்குக் கொண்டுசென்றன. படித்தவர்களும் நவநா கரிகக்காரர்களும் கூத்தினைப் புறக்கணித்தனர். கூத்துக் கிராம மக்களைச் சென்றடைந்தது: "நாட்டுக் கூத்து' என்ற பெயரும் பெற்றது.
1956க்குப் பின்னர் ஈழத்தில் ஒரு தேசிய மறுமலர்ச்சி ஏற்பட்டதென்பர். இக்காலகட்டத்தில் ஏற்பட்ட

Page 28
28 தமிழியற் கட்டுரைகள்
பொருளாதார அரசியல் வளர்ச்சிப் போக்கினல் இது எமது நாடு, எமது இனம், என்ற தேசிய உணர்வு இரு இன மக்களிடையேயும் ஏற்பட்டது. அந்நியர் கலாச் சாரத்திற்கு எதிராக எழுந்த இத்தேசிய உணர்வு தேசி யக் கலை வளர்ச்சிக்குச் சாதகமாயிற்று. அரசாங்கத் தால் நிறுவப்பட்ட கலாசாரக் கழகம் பண்டைய கூத் துக்களைப் பேணுவதிலும் அண்ணுவிமாரைக் கெளரவிப் பதிலும் கூத்து நூல்களை அச்சிடுவதிலும் பேரூக்கம் காட்டியது. நாடெங்கினும் அண்ணவிமார் மாநாடுகள் நடத்திப்பட்டு அண்ணுவிமார் கெளரவிக்கப்பட்டனர். 1960களில் ப்ேராசிரியர் வித்தியானந்தன் பல்கலைக்கழக மாணவரைக் கொண்டு பழைய கூத்துக்களை நவீனப் படுத்தி நாடகமாக்கி, கூத்துக்குப் புத்துயிரளித்தார். இதனைத் தொடர்ந்து விழாக்களிலும் சிறு வைபவங் களிலும் கூத்துக்களைச் சுருக்கி மேடையேற்றும் முயற சிகள் மேற்கொள்ளப்பட்டன. கூத்து எமது தேசியச் ’சொத்து என்ற உணர்வு தமிழ் மக்களிடம் உருவானது.
பண்டைய கதைகளை விடுத்துச் சமூக உள்ளடக்கம் கொண்ட புதிய கூத்துக்களும் உருவாகின. கந்தன் கருணை சங்காரம் என்பன இதற்கு உதாரணங்களா கும். 1970 களில் நவீன நாடக நெறியாளர்கள் தமது மோடியுற்ற நாடகங்களில் கூத்தாட்ட முறைகளைக் கலக்கத் தொடங்கினர். பரத நாட்டியத்துடன் கூத்து முறைகளையும் கல்ந்து நாட்டிய நாடகம் தயாரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
தேசிய உணர்வோடு மீண்டும் புத்துயிர் பெற்று மெல்ல வளர்ச்சி பெற்று வரும் இக்கலையை மேலும் வளர்ப்பதும் வளர்ப்பவர்கட்கு உதவிபுரிவதும் தமிழ் மக்கள் அனைவரினதும் கடமையாகும்.

ஈழத்தில் தமிழ் நாடக வளர்ச்சி
• • , بچصعحـمـr" ہو ۔
க. சொக்கலிங்கம்
பிறநாடுகளிலும் மொழிகளி லும் அமைந்துள் 11 வாறு போன்றே ஈழத்துத் தமிழ் மக்களிடை பயும் மேடைக் கலையாகவும் எழுத்திலக்கியமாகவும் நாடகம் நிலவிவருகின்றது. கதிரைமலைப்பள்ளு என்ற பிரபந்தம் ஆமிழிலே தோற்றிய பள்ளுகளுள் முதலிலே தோன்றி து என ஆய்வாளர் சிலர் கொள்வர். இப்பள்ளுப் பிரபந்தமும் பின்தோன்றிய குறவஞ்சிகளும் தமிழகம் போன்றே ஈழத்திலும் நாடகங்கள் தோன்ற முன் துடி களாய் அமைந்திருக்கலாம். இவற்றின் வழியிலே பூன்று நாட்டுக்கூத்து அல்லது மரபுவழி நாடகம் என அழைக் கப்படும் "கலைவடிவம் பிறந்திருக்கலாம். இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமேற்கு மாகாணங்களில் நாட்டுக் சித்து ஏறக்குறைய இரண்டு நூற்ருண்டுகளாய் வ1ர்ந்து வந்துள்ளது. பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை காரணமாக மலேயகத்தில் குடியேறிய இந்திய மக்களும் அவர்களின் பரம்பரையினரும் ‘காமன்கூத்து' ஒான்ற நாடகக்கலை வடிவத்தினைப் பரவலாகப் பயன்செய்து வருகின்றனர். ஈழத்துத்ப் தமிழ் நாட்டுக் கூத்தானது சிங்கள நாடகக் கலையிலும் தன் செல்வாக்கைப் பதித்

Page 29
30 தமிழியற் கட்டுரைகள்
துள்ளது என்றும் 'நாடகம’ எனச் சிங்கள மக்கள் பெயரிட்டுக் கையாண்டுவரும் கலைவடிவம் இலங்கைத் தமிழருக்கு உரியது, என்றும் பேராசிரியர் ஈ. ஆர். சரச் சந்திரா கூறியுள்ளார். இருபதாம் நூற்ருண்டுத் தொடக்கத்திலிருந்து இலங்கையிலே தமிழ் நாடகமா, னது நவீன முறைகளைச் சார்ந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகிறது, தமிழகத்தில் வர்த்தக ரீதியான திரைப்படத் தொழில் நாடக வளர்ச்சியைப் பெரிதும் பாதித்தமைபோல இலங்கையிலே பாதிப்பு ஏற்படா மையால் தமிழ் நாடகம் இங்கு அண்மைக்காலங்களில் பல பரிசோதனைகளூடாக வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதே.
இருபதாம் நூற்றண்டின் முதற்காலிலே நவீன முறை நாடகம் இலங்கையில் தமிழரிடையே அறிமுக மாயிற்று, இதற்கு முன்பு இங்குப் பெரிதும் செல்வாக் குப் பெற்றிருந்தவை மரபுவழி நாடகங்கள் என்று இன்று அழைக்கப்படும் நாட்டுக்கூத்துக்களே. ஆட்டம், பாட்டு, இடையிடையே பாட்டைப் போலவே இசை யோடு இழுத்துப் பேசும் வசனங்கள் ஆகியவற்றைக் கொண்டு களரிகளிலே ஆடப்பட்டு வந்த கூத்தையே நாட்டுக்கூத்து என்று அழைத்தனர். இந்நாட்டுக் கூத் துக்களிலே ஆட்ட நுணுக்கங்கள் சற்றுக் குறைவாய். அமைந்தவை வடமோடி எனவும் ஆட்ட நுணுக்கங்கள் அதிகம் கொண்டவை தென்மோடி எனவும் அழைக் கப்பட்டன. இவை தவிர மாதோட்டப்பாங்கு, யாழ்ப் பாணப் பாங்கு என்ற வேறு இரு பிரிவுகளும் நாட்டுக் கூத்தில் இடம் பெற்றன. நாட்டுக் கூத்தைச் சுருக்கி வசனமும் பாட்டும் அமைய எழுதப்படும் வாசாப்பு என்ற ஒரு வகை நாட்டுக்கூத்தும் நிலவியது. இது வாசகப்பா என்ற செந்தமிழ்ச் சொற்ருெடரின் திரிபு.
நாட்டுக்கூத்துக்களை மேலும் இரு பெரும் பிரிவு களுள் அடக்கலாம். சைவசமய மக்கள் ஆடிய நாட்டுக்
கூத்துக்கள், கத்தோலிக்க மக்கள் ஆடிய நாட்டுக்கூத்

ஈழத்தில் தமிழ் நாடக வளர்ச்சி 31
துக்கள் என்பனவே இவ்விரு பிரிவுகளுமாகும். சைவ நாடகங்களிலே போர், வெற்றி, காதல், பத்தி, வீர மரணம் ஆகிய உணர்வுகள் மேலோங்கி நிற்கும். கத் தோலிக்க நாடகங்களிலே சமயப்பிரசாரம், தியாகம், சோகம் ஆகியவை ஓங்கித் தோன்றும். மார்க்கண்டன் நாடகம், வாளபிமன் நாடகம், இராம நாடகம், விசயமனுே கரன் நாடகம் முதலியன சைவசமய நாட்டுக் கூத்துக் களுக்கு உதாரணங்கள். ஞானசவுந்தரி நாடகம், மூவிரா சாக்கள் நாடகம், தேவசகாயம்பிள்ளை நாடகம் என்பன கத் தோலிக்க நாட்டுக்கூத்துக்களுக்கு உதாரணங்கள். ஒப் பிட்டு நோக்குகையில் தொகையால் கூடியவை கத் தோலிக்க நாடகங்களே. நாட்டுக்கூத்துத் துறையிலே கூடிய பணியை அன்று தொடக்கம் இன்றுவரை ஆற்றி வருபவர்களிலே கணிசமான தொகையினர் கத்தோலிக் கத் தமிழர்களே எனலாம்.
இந்நாட்டுக் கூத்துக்கள் நவரசங்களை வெளிப்படுத்து வதோடு நில்லாது, சமயப் பிரசாரம் நிகழ்த்துவதோடு அமைந்துவிடாது, சமகாலச் சமுதாய நிகழ்வுகளை அவ் வப்போது விமர்சனம் செய்யும் வகையிலும் அமைந்திருந் தன. இன்று வளர்ச்சி பெற்றுள்ள நாட்டாரியலுக்கு நாட்டுக்கூத்துக்களின் பங்களிப்பு மிகவும் கணிசமானதே. இலங்கைத் தமிழரின் கலாசார மரபின் தனித்தன்மை யைப் பண்டுதொட்டுப் பேணிக் காத்துவருவனவும் இந்த நாட்டுக்கூத்துக்களே எனலாம். -
இருபதாம் நூற்ருண்டுத்தொடக்கத்திலே ஆங்கிலக் கல்வியின் வளர்ச்சியாலும் அந்நிய கலாச்சாரங்களின் கல்ப்பிலுைம் பாரம்பரிய சிந்தனைகளும் மரபுகளும் ஆட் டங்காணத் தொடங்கின. கிாரமங்களின் தனித்தன்மை படிப்படியாக நலிவுறலாயிற்று. நகரத்தை நோக்கிப் படித்தவர்களும் உத்தியோகத்தர்களும் புலம் பெயர்ந்து சென்றபொழுது அவர்கள் தமது பழைய மரபு முறை களேயும் கஃவடிவங்களையும் புறக்கணிக்கத் தொடங்

Page 30
32 தமிழியற் கட்டுரைகள்
கினர்; இந்நிலையிலே நாட்டுக்கூத்தின் இடத்தை நவீன நாடகம் பெற நாட்டுக்கூத்துத் தாழ்வடைந்தது. இக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து வந்த நாடகக் கொம் பனிகள், நாடக சபாக்கள் என்பன தமிழ் நாடகக் துறையிலே ஒரு திருப்பத்தை ஏற்படுத்தின.
1911ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுண விலாச சபை கொழும்புக்கு வந்து நவீனமுறை நாடகங்களை நடத்தத்தொடங்கித் திறந்த வெளியில் நான்குபக்கமும் மக்கள் அமர்ந்திருந்து பார்க் கும் வட்டக்களரி முறைக்குமாருக, மண்டபத்தின் ஒரு பக் கத்தில் மேடையிலே நாடகம் நடத்தும் முறையினை அறிமுகம் செய்தது; காட்சிப் பின்னணியாக இறக்கி ஏற்றுந் திரைகளைக் கையாண்டது; இரவு முழுவதும் விழித்திருந்து கூத்துப் பார்க்கும்முறையினைக் கைவிட்டு நான்கோ ஐந்தோ மணித்தியாலங்களில் நாடகத்தை முடித்துக்கொண்டது; பாடல்கள் முன்னரிலும்குறைவ! கவே கையாண்டதோடு வசனத்திற்கும் நடிப்பிற்கும் முதன்மையளித்தமை இந்நாடகசபையின் புதுமையாய் விளங்கியது. இவற்ருல், படித்த வர்க்கத்தினரிடையே நாடகத்தின்மீது விருப்பமும், கவர்ச்சியும் உண்டாயின.
இவ்வாறு கவரப்பட்டோரில் முதன்மையானவர் கலையரசு க. சொர்ணலிங்கம். இவர் ககுணவிலாச சபைத் தாபகரும் நாடகாசிரியரும் சிறந்த நடிகரும் இயக்குநரு மான சம்பந்த முதலியாரைத் தமது குருவாய் வரித்து அவரால் எழுதப்பட்ட நாடகங்களை மேடையேற்ற முற்பட்டார்; தமது கலையார்வம், திறமை, செல்வாக்கு யாவற்றையும் பயன்படுத்தி நாடகக்கலையினை இந்நாட் டில் வளர்ப்பதற்காக 1913 ஆம், ஆண்டில் கொழும் பிலே இலங்கா சுபோத விலாச சபையினைத் தாபித்தார். 1914இல்யாழ்ப்பாணத்தில் சரஸ்வதி விலாச சபைதொடங் கியது. 1920 இல் மட்டக்களப்பில் சுகிர்த விலாச சபை ஆரம்பமாயிற்று. இச் சபைகளின் அயரா உழைப்பி லுைம் ஆர்வத்தினலும் நாடகக்கலை இலங்கையில் நன்கு

ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சி 33
வளர்ந்தது எனலாம். இலங்கா சுபோதவிலாச சபை
யினர் பம்மல் சம்பந்தமுதலியார் எழுதிய நாடகங் களையே நடித்துக்கொண்டிருந்தபொழுது மற்றைய இரு சபையினரும் தம் உறுப்பினர்களைக் கொண்டு இராமா யணம், கந்தபுராணம் முதலாம் நூல்களிலிருந்து சம்ட வங்களைத் தெரிந்து நாடகமாய் எழுதுவித்து நடித்து வந்தனர். இதனல் நாடகம் எழுதும் துறையிலும் எம்மனேர் ஈடுபட்டமை வரவேற்றற்குரியதே.
இருபதாம் நூற்றண்டின் நாற்பதுகள் ஈழத்தின் தமிழ் நாடக வரலாற்றிலே குறிப்பிடத்தக்க ஆண்டு களாகும். நாடகக்கலையினைப் பல்கலைக்கழக மட்டத்தில் உள்ளோரும் ஆதரிக்கத் தொடங்கிய காலம் இது. 7 அக் காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராய் விளங்கிய கிளங்ஸ்பரி என்ற தமிழறி ஞர் மனேன்மணி, சாந்திரகாசம் ஆகிய நாடகங்களை எழுதி வெளியிட்டார். இவை தழுவல், இதிகாச நாடகங் களெனினும் சமூகவிழிப்பையும் நோக்கையும் நாடக பாத்திரங்கள் வாயிலாய் வெளிப்படுத்தின. பெண் சமத் துவத்தை இவ்விரு நாடகங்களும் மிகுதியும் வலியுறுத் தின.
கிங்ஸ்பரியின் மரணுக்கரும்மொழியியல் வல்லுநரும் கவிஞருமான பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை தமிழ் நாடகத்துறையிலே ஈடுபட்டமை அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிற்று. யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமி ழைக் கையாண்டு சமுதாய மாந்தரின் உணர்வுகளையும் நோக்குகளையும் வெற்றி தோல்விகளையும் இவர் சிறந்த வகையிலே நாடக வாயிலாய்ப் புலப்படுத்தினர். இவர் எழுதிய நான்கு நாடகங்கள் நானுடகம் என்ற பெயரி லும் இரு நாடகங்கள் இருநாடகம் என்ற பெயரிலும் நூல்வடிவம் பெற்றுள்ளன. யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த விடுதலைப்போரின் பிதாமகனன ‘சங்கிலியின் வாழ்வை மையமாகக் கொண்டு இவர் எழுதிய சங்கிலி தலை
5 /

Page 31
34 தமிழியற் கட்டுரைகள்
சிறந்த வரலாற்று நாடகமாகும். ரத்னுவளி என்ற வடமொழி நாடகத்தையும் மொழிபெயர்த்து மாணிக்க மாலை என்ற பெயரில் இவர் வெளிப்படுத்தினர். எந்த வகையில் நோக்கினும் ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச் சியிற் பேராசிரியரின் பங்களிப்பு மறக்கமுடியாத ஒன்றே
யாகும்.
நாற்பதுகள் போலவே ஐம்பதுகளின் இறுதிப்பகு தியும் , தமிழ் நாடக வளர்ச்சியில் இலங்கையைப் பொறுத்தவரையில் நினைவிற் கொள்வதற்கு உரியதே. 1956 இல் ஆட்சிக்கு வந்த மக்கள் ஐக்கிய முன்னணிக் கட்சி, அதுகாலவரை நிலவிய காலனித்துவமனப்பான் மையினை ஒழித்துக்கட்டி மக்களிடையே தேசீய உணர் வினைப் புகுத்த முற்பட்டது. இவ்வுணர்வின் ஒரங்க, மாக இந்நாட்டு மக்களின் கலாசார பாரம்பரியங்களைப் பேணுவதற்கென இலங்கைக் கலைக்கழகம் நிறுவப்பட் டது. இதன் உப குழுக்களுள் ஒன்ருய்த் தமிழ் நாடகக் குழு அமைந்தது.
1957 வரை மந்த கதியிலே இய்ங்கிய தமிழ் நாடகக் குழு அவ்வாண்டின் பின்னர் உயிர்த்துடிப்புடன் இயங் கத்தொடங்கியமைக்கு அதன் தலைவராய் அமர்ந்த கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களே (இன்று பேரா சிரியராயும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துத் துணை வேந்தராயும் விளங்குபவர்) முக்கிய காரணர். இவரின் தலைமைக்குப்பின் கலக் கழகத் தமிழ் நாடகக் குழு தமிழ் நாடக வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் மிகப்பல. அன்று வரை புறக்கணிக்கப்பட்ட நாட்டுக்கூத்துக் கலைக்குப் புத்துயிரளிக்கப்பட்டது. நவீன சாதனங்களின் பின்ன ணியிலே குறுகிய கால இடைவெளியில் நாட்டுக் கூத்துக் கள் மேடையேற்றப்பட்டு மக்களின் இரசனைக்கு விருந் தாயின. பல்கலைக்கழக மாணவரையே நடிகராய்க் கொண்டு இராவணேசன், கர்ணன்போர், நொண்டி நாடகம் முதலியன இலங்கையின் பிரதான நகரங்களிலெல்லாம் மேடையேற்றப்பட்டன. நாட்டுக் கூத்துக்களின் உயிர்

ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சி 35
நாடிகளான அண்ணுவிமார் கெளரவிக்கப்பட்டனர். நாட்டுக்கூத்துக்களைப் பாடசாலை மட்டத்திலே போட்டி படிப்படையில் மேடையேற்றிப் பரிசில்கள் வழங்கப் பட்டன. நாட்டுக் கூத்துக்கள் பல நூல் வடிவில் வெளி யிடப்பட்டன. நாடகப் பிரதிப்போட்டி நிகழ்த்தி ஆண்டுதோறும் முதன்மை பெற்ற நாடகப் பிரதிகளை எழுதியோருக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன. கருத் தரங்குகள் மூலம் நாடகம் தொடர்பான சிந்தனைகளை வளர்க்க வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டன. இவ்வாறு ஏறக்குறையப் பத்தாண்டுகளாய் இந் நாடகக் குழு ஆற்றிய பணி தமிழ் நாடகத் துறைக்குப் புதிய இரத் தம் பாய்ச்சியது.
பிற கலைகளுக்குப் போலவே நாடகக் கலைக்கும் புதிய பரிமாணங்களை அமைத்து அதனை வளர்க்கும் பேரார்வம் அறுபதுகளுக்குப் பிறகு பரவலாய் ஏற்பட் டது. பேராசிரியர் சரத்சந்திராவின் மனமே, சிங்கபாகு முதலிய சிங்கள நாட்கங்களும், பேராசிரியர் வித்தியா னந்தனின் நாட்டுக்கூத்துக்களும் இப்புதிய வேட்கை யினை நாடகக் கலைஞரிடையே ஏற்படுத்தின. இவற்றின் தாக்கத்தினைக் கொழும்பு, பேராதனை நாடகக் கலைஞ கிடையே முனைப்ப்ாகக் காணலாம். ஏனெஸ்ற் மக்கன் ரைர், கலாநிதி ஆஷ்லி கல்பே ஆகிய நாடகக்கலை நிபுணர் களின் செல்வாக்கினலும் அவர்களிடம் பெற்ற பயிற்சி யினுலும் அன்றுவரை நிலவிய நாடக உத்திகளை மாற் றிப் புதிய வடிவில் நாடகங்களை மேடையேற்றும் முஃணப்பு இளங்கலைஞர்களிடையே ஏற்பட்டது.
1969ஆம் ஆண்டிலே “மஹாகவி' எழுதிய கோடை என்னும் கவிதை நாடகத்தினை அ. தாசீசியஸ் புதிய முறையிலே தயாரித்து மேடையேற்றினர். இவ்வரிசை பிலே முருகையனது குற்றம் குற்றமே நீலாவணனின் பழைக்கை, திமிலைத்துமிலனின் முல்லைக்குமரி என்பவையும் மேடையேறின. 1971 இல் முருகையனின் கழிேயம் நாடகம் நா.சுந்தரலிங்கத்தாலும் அதே ஆண்டில் மஹாகவி

Page 32
36 தமிழியற் கட்டுரைகள்
யின் புதியதொருவீடு அ. தாசீசியஸாலும் மேடையேற் றப்பட்டன. இந்த வரிசையில் மெளனகுரு மேடை யேற்றிய சங்காரம் நாடகமும் குறிப்பிடத்தக்கதே. இவையாவும் நாடகத்தின் புதிய பரிமாணத்தை நன்கு பிரதிபலிக்கின்றன.
பழைமையான நாட்டுக்கூத்து மெட்டுக்களேப் பயன் செய்தல், ஆடம்பரமற்ற குறியீடுகள், மேடையமைப் புகள், பாத்திரங்கள், பாடுவோர் ஆகியோரிற் பலர் அரங்கிலிருந்து அவ்வப்போது சென்று நாடகத்திற்பங் கேற்றல், இடையிடையே கதைத் தொடர்பினைப் பாட லாகவும், வசனமாகவும் மேடையில் இருந்தே இசைத் தும் கூறியும் பணிபுரியும் கூறுவோர் பங்களிப்பு, பாவ னேகள் ஆகியவற்ருல் நாடகங்கள் புதுமையும் காத்திர மும் பொருந்தி வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. பேட்டல்பிறெஸ்ற் முதலிய மேற்றிசை நாடக நிபுணர் களின் நாடகங்கள் பாலேந்திரா, நிர்மலா நித்தியானந்தன் ஆகியோராற் சிறந்த முறையிலே தமிழுக்கு அறிமுக மாகிக் கொண்டிருக்கின்றன. பழைமையான நாடக உத்திகள் படிப்படியாய்க் கைந்நெகிழ்க்கப்பட்டுவருகின் றன. இவற்றையெல்லாம் நோக்கும் பொழுது இல: கையிலே தமிழ் நாடகத்தின் எதிர்காலம் பிரகாசமாக விளங்கும் என்று நம்பலாம். 鬱

தமிழ் நாட்டுச் சிறுகதைகள்
கலாநிதி க. அருணுசலம்
(சிறு கதைககுத் திட்டவட்டமான வரைவிலக்னம் கூறுவது இலகு வானதல்ல. சிறுகதைக்கு வரைவிலக்கணம் கூறப்புகுந்த மேலே நாட்டினரும் கீழை நாட்டினரும் முடிந்த முடிபான வரையறையைக் கூறமுடியாது திணறியது மட்டுமன்றிக் காலத்துக்குக் காலம் தமது வரை யறைகளையும் மாற்றிக் கொண்டனர் அமெரிக்க எழுத்தாளர் எட்கர் அலன்போ ‘அரைமணிமுதல் ஒன்று அல்லது இரண்டு மனி நேரத்திற் படித்து முடிக்கக் கூடியது சிறுகதை’ எனக் கூறியுள்ளார். ஆயின் பத்து நிமிடத்திற்குட் படித்து முடிக்கக்கூடிய சிறந்த சிறுகதைகள் பலவும் இரண்டு மணித்தியாலத்திற்கு மேலும் படித்து முடிக்கக்க டிய சிறந்த சிறுகதைகளும் இன்று காணப்படுகின்றன. ‘புதுமைப் த்தனின்’ "பொன்னகரம்’, எஸ். பொன்னுத்துரையின் 'சுவை, நீர்வை. பொன் னேயனின் ‘சிருஷ்டி முதலியவை அளவிற் சிறியனவே. எனவே பொதுவாகக் கூறுமிடத்துச் சிறுகதை நாவலிலும் பார்க்க அளவிற் சிறியதாகவும் இறுக்கமும் கட்டுக்கோப்பும் முழுமையும் ஒருமைப்பாடும் கொண்ட அமைப்பையுடையதாகவும் இருத்தல் வேண்டும். செம்மை 1ான பாத்திர வார்ப்பும், சொற்சிக்கனமும், உயிர்த்துடிப்பும் செறி வும் திட்பமும் மிக்க நடையும், கதைக்குப் பொருத்தமான தொடக்க மும் முடிவும் சிறு கதைக்கு, இன்றியமையாதன. நீண்ட வருணனை களுக்கோ சொற்சிலம்பங்களுக்கோ சிறுகதையில் இடமில்லை. சிலவற் றைக் கூறிப் பலவற்றைச் சிந்திக்க வைப்பதாகச் சிறுகதை அமைதல் வேண்டும். சிறுகதை ‘வாழ்க்கையின் சாளரம்" என்பர் புதுமைப்
பித்தன்)

Page 33
38 தமிழியற் கட்டுரைகள்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழிற் செய்யுள் இலக்கியம் செழித்து வளர்ந் துள்ளபோதும் *மேனுட்டுச்சரக்கு’ எனப் புதுமைப்பித்தனுல் வருணிக் கப்பட்ட புன்ேகதை இலக்கியம் தமிழிற் குறுகிய கால வரலாற்றையே கொண்டுள்ளது. புனை கதை இலக்கி யத்தின் ஒரு பிரிவான சிறுகதை இலக்கியம் இருபதாம் நூற்ருண்டின் முதற் காற் பகுதியிலேயே தமிழிலே தோற்றம் பெற்றதாயினும் குறுகிய காலப் பகுதியுள் அது அடைந்துள்ள வளர்ச்சி விதந்து கூறத்தக்கதாகும். மேனுட்டினர் வருகையினல், குறிப்பாக ஆங்கிலேயரின் வருகையினல் இந்தியாவினதும் அதன் ஒரு பகுதியான தமிழ் நாட்டினதும் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் துறைகளிற் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பல ஏற்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஏற் படுத்தப்பட்ட அரசியல் மாற்றங்கள், நிர்வாகச் சீர் திருத்தங்கள், ஆங்கிலக் கல்விவிருத்தி முதலியன தமிழர் சமூகத்திற் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தின. பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலும் இருப தாம் நூற்றண்டின் முற்பகுதியிலும் இந்திய மொழி களிலும் இலக்கியங்களிலும் பரவலாக மறுமலர்ச்சி அரும் பத் தொட்ங்கிற்று. நவயுகக் கவிஞரான பாரதியாரும் இக்காலப் பகுதியிலேயே வாழ்ந்து தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் புத்துயிரூட்டினர். மேலே நாட்டினர் வருகையைத் தொடர்ந்து தமிழில் வளரத் தொடங்கிய உரைநடை இலக்கியம் இருபதாம் நூற்ருண்டில் மேலும் செல்வாக்குப் பெற்றுத் தழைக்கலாயிற்று. இத்தகைய தொரு சூழ்நிலையிலேயே தமிழிற் சிறுகதை இலக்கியம் தோற்றம் பெற்றது.
தமிழ்ச்சிறுகதையின் தந்தை எனப்போற்றப்படும் வ. வே. சு. ஐயரே (வரகநேரி வேங்கட சுப்பிரமணிய ஐயர்: 1881 - 1925) தற்கால உருவ உத்திகளுடன் கூடிய சிறுகதைகளேத் தமிழிலே முதன் முதல் எழுதியவ ராவர். பதினெட்டாம் நூற்ருண்டில் வீரமாமுனிவரால்

தமிழ் நாட்டுச் சிறுகதைகள் - 99
எழுதப்பட்ட பரமார்த்த குருகதையும் பத்தொன்பதாம் நூற்றண்டில் வீரசாமிச் செட்டியாரால் எழுதப்பட்ட விநோதரஸ மஞ்சரியும் தாண்டவராய முதலியாரால் எழுதப் பட்ட பஞ்சதந்திரமும் திருமணம் செல்வக்கேசவராச முத லியாரால் எழுதப்பட்பு அபிநவக் கதைகளும் சிறிய கதைகளேயெனினும் அவை தற்கால உருவ உத்தி களுடன் கூடிய சிறுகதைகளல்ல. வ. வே. சு. ஐயரது சிறுகதைகள் வெளிவருவதற்குச் சற்று முன்னும் பின் னுமாகச் சிலர் சிறுகதைமுயற்சியில் ஈடுபட்டனராயினும் குறிப்பிடத் தகுந்த வெற்றியீட்டவில்லை. எனினும் அவர் களது முயற்சிகள் தமிழ்ச் சிறுகதைக்கு வளம் சேர்ப் பனவாகவே அமைந்தன. இவ்வகையிலே பாரதியார், அ. மாதவையா, இராமநுஜலு நாயுடு முதலியோரது முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. மாதவையாவின் சிறு கதைகள் குஷிகர் குட்டிக்கதைகள் என்ற தொகுதியாக வெளிவந்தன. இவரது கதைகளிற் சமூகச் சீர்திருத் தக் கருத்துக்கள் ஒங்கி ஒலிப்பதையும் கலையம்சத்தை யும் மீறும் வகையிற் பிரச்சாரத் தொனி மேலோங்கி நிற்பதையும் அவதானிக்கலாம். வ. வே. சு. ஐயர் எழுதியவற்றுள் எட்டுக்கதைகள் மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் என்னும் தொகுதியாய் வெளி
வந்துள்ளன. சிறுகதைகளில் ரசபாவமும் பெருநோக் கமும் இருக்க வேண்டும் என வற்புறுத்திய ஐயர் தமது
கதைகளில் வீரம் தியாகம், காதல், விடுதலை, நாட்டுப் பற்று முதலியனவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்
துள்ளார். மனிதனின் பலத்தையும் உயர் பண்புகளை
யும் விண்டு காட்டிய ஐயர் அவனது பலவீனங்களையும் பிறுமைகளையும் தமது கதைகளில் வெளிப்படுத்தவில்ஃல.
ஐயரது கதைகளுள் வரதட்சணைக் கொடுமையைப் பிரதி
பலிக்கும் குளத்தங்கரை அரசமரம் என்னும் கதை பல வகையிலும் சிறப்புப் பெறுகின்றது. அவரது கதைகள் பல குறைபாடுகளையுடையன வேனும் முதன் முதலிலே 1.மிழ்ச் சிறு கதைக்கு உயிரும் உருவமும் கொடுத்துப் பலவிதப்பட்ட பரிசோதனைகளே நடத்தி, கதையின்

Page 34
0 தமிழியற் கட்டுரைகள்
பொருளிலும் உத்தியிலும் நடையிலும் பிற்காலச் சிறு கதையாசிரியர்களுக்கு வழிகாட்டியாக விளங் கி ய ஐயரைத் தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் போற்று வது பொருத்தமானதே. •
முதலாம் உலக மகாயுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்திய விடுதலைப் போராட்டம் பெரும் திருப்பத்தை அடைந்தது. காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாக்கிரகம் முதலியன மக்களி டையே தீவிரம் பெற்றன. இக்காலப் பகுதியிற் பல துறைகளிலும் பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து கொண் டிருந்தன. எல்லாத் துறைகளிலும் காந்தியின் ஒப்பற்ற செல்வாக்குப் பெருகத் தொடங்கியது. ஆங்கில ஏகா பத்தியத்திற் கெதிரான எதிர்ப்பியக்கம் ஒருபுறம் வலு வடைய மறுபுறம் காந்தியின் கருத்துக்களை அடியொற் றித் தாழ்வுற்று நின்ற பாரத மக்களின் வாழ்வுப் புன ருத்தாரணத்திற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட் டன. இப்பணியிற் சுதந்திரச் சங்கு, தேசபக்தன், தமிழ் நாடு, மணிக்கொடி, ஆனந்த, விகடன், கலைமகள், சுதேச மித்திரன், முதலிய பத்திரிகைகள் முன்னின்றுழைத் தன. இப்பத்திரிகைகளுட் சில அரசியல், இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும் தீவிர பங்காற்றின. இத் தகைய சூழ்நிலைகள் 1930 களிலே தமிழ் இலக்கிய உல கிற் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தின. 1930கள் தொடக்கம் 1940களின் இறுதி வரையிலான இக் கால கட்டப் பகுதி தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. இக்கால கட்டப் பகுதி யிலேயே தமிழ்ச் சிறுகதை இலக்கியம் தமிழ் மண்ணிலே நன்கு வேரூன்றி ஆழமாகவும் அகலமாக்வும் வளர்ச்சி யடையல்ாயிற்று. தமிழின் தலைசிறந்த சிறுகதைகள் பல இக்காலகட்டப் பகுதியிலேயே எழுந்தன. இக்கால கட்டப்பகுதியிற் சிறுகதை எழுதியோருள் ராஜாஜி, கல்கி, தி. ஜ. ர. முதலியோரும் மணிக்கொடி எழுத்தாளர்கள் எனப்போற்றப்படும் புதுமைப்பித்தன், கு. ப. ரா. ந. பிச்ச மூர்த்தி, மெளனி, சி. சு. செல்லப்பா, சிதம்பர சுப்பிரமணி யன், பெ. கோ. சுந்தரராஜன், பி. எஸ். ராமையா, லா, ச. ராமாமிர்தம் முதலியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்,

தமிழ் நாட்டுச் சிறுகதைகள் 4
தமிழ்ப் புனைக்கதை உலகிற் பெருஞ் செல்வாக்குடன் திகழ்ந்த கல்கி நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் பல நாவல்களையும் எழுதியுள்ளார். கல்கியின் ஒப்பற்ற பணி தமிழ்ச்சிறுகதையின் அகல வளர்ச்சிக்குக் காரணமாகிய துடன் சிறுகதை இலக்கியம் பொதுமக்கள் மத்தியிற் செல்வாக்கடைவதற்கும் தமிழ்ச்சிறுகதையுலகு பெரும் வாசகர் கூட்டத்தைப் பெறுவதற்கும் வழிவகுத்தது. சாதாரண மக்களும் படித்து விளங்கக்கூடிய வகையில் அவர் கையாண்ட குத்தலும் கேலியும் நகைச்சுவையும் நிறைந்த எளிமையான சிக்கலற்ற சிறியநடை அவரது கதைகளுக்குத் தனிச் சிறப்பையளித்தது. காந்தீயத் தின் செல்வாக்கினைக் கல்கியின் கதைகளிற் பரக்கக் காணலாம். இந்தியப்பண்பாட்டை எடுத்து விளக்கு வதற்கும் பர்ரம்பரியத்தை நிலை நிறுத்துவதற்கும் அரசி யற் கொள்கைகளை மக்களிடையே பரப்புவதற்கும் சிறு கதை இலக்கியத்தை முக்கிய சாதனமாகப் பயன்படுத் திய ராஜாஜியின் சிறுகதைகள் உருவத்தாற் சிறப்படை யாவிடினும் சிறுகதைப் பொருளில் விரிவை ஏற்படுத்தின.
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மணிக்கொடிக் காலப் ஒப்பற்ற சிறப்பிடத்தைப் பெறுகின்றது. 1933 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவரத் தொடங்கிய மணிக் கொடிப் பத்திரிகை 1936 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் நின்று, மீண்டும் 1937 ஆம் ஆண்டில் வெளிவரத் தொடங்கிச் சிறிது காலத்தில் மறுபடியும் நின்றுவிட்டது. நீண்டகாலம் பணியாற்றிய பத்திரிகைகளைவிடச் சொற் காலம் பணியாற்றிய மணிக்கொடிப் பத்திரிகையின் பணி போற்றத்தக்கது. தமிழ்ச் சிறுகதையின் பன்முகப் பட்ட வளர்ச்சிக்கு மணிக்கொடியுடன் சம்பந்தப்பட்ட வர்கள் அரும்பணியாற்றினர். தமிழ்ச் சிறுகதை மன்னன் எனப் போற்றப்படும் புதுமைப்பித்தன் மணிக்கொடி எழுத்தாளர்களுள் முதன்மையானவர். மகாகவி பாரதி, யாரை மறந்த இருபதாம் நூற்றண்டுத் தமிழ்க் கவிதை,
6

Page 35
42 தமிழியற் கட்டுரைக:
வரலாறும் இல்லை, புதுமைப் பித்தனை மறந்த தமிழ் சிறுகதை வரலாறும் இல்லை எனக் கூறத்தக்க அளவிற்கு; தமிழ்ச் சிறுகதையின் பல்வேழுன வளர்ச்சிக்கும் தமிழ் சிறுகதை வரலாற்றின் திருப்பத்திற்கும் அரும்பண ஆற்றியவர் புதுமைப்பித்தன், வ. வே. சு. ஐயரின் கதைகளுடன் தோற்றம் பெற்ற தமிழ்ச்சிறுகதை இலக் கியம் பூரணத்துவம் பெற்றுப் பொலிவுடன் திகழ்வது புதுமைப்பித்தனது கதைகளிலேயே எனலாம். உலகத் தின் தலைசிறந்த சிறுகதைகளுடன் ஒப்பிடக்கூடிய சிறு கதைகளைத் தமிழ் உலகிற்கு அளித்த பெருமை புதுமைட் பித்தனுக்கேயுரியது. சிறுகதைகள் எழுதுவோருக்கு முன் மாதிரியாக அவரது கதைகள் திகழ்கின்றன, அது கால வரை எழுத்தாளர்களாற் புறக்கணிக்கப்பட்ட சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளையும் மற்றவர்கள் தொடு வதற்கு அஞ்சிய விடயங்களையும் மற்றவர்களாற் பார்க்க மறுக்கப்பட்ட சமூகத்தின் இருண்ட பகுதிகளை யும் அசாதாரணத்துணிவுடன் சிறுகதைகளாக்கியவர் புதுமைப்பித்தன். மனித வாழ்க்கையைக் கூர்ந்துநோக்கி அவற்றிற் காணப்படும் முரண்பாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் சிறுமைகளையும் இன்னல்களையும் அநு தாபத்தோடும் வேதனையோடும் அணுகினர். சமூகத்தின் மேல், மத்தியதர வர்க்கங்களில் உள்ளவரது வாழ்க்கை யிற் கவனம் செலுத்தாது சமூகத்தின் அடித்தளத்தில் வாழ்ந்து அல்லற்படுவோர்மீது அதிக கவனம் செலுத் திய புதுமைப்பித்தன், அவர்களது நிலையை மனிதா ? மானத்தோடும் ஆத்திரத்தோடும் சோகத்தோடும் சிக் தனையோடும் கேள்வியோடும் கிண்டலோடும் நோக்கி ஞர். அவரது கதைகள் இருட்டிலே இருந்தவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தன. வெளிச்சத்தில்ே பகட் டித் திரிந்தவற்றை இருளிற் கோட்டின என்பர். சமுதாயப் புன்மைகள், சாதிக்கொடூரம், விதவைக் கொடுமை, இளமை மணம், பொருந்தாத் திருமணம், மதமாற்றம், மூடநம்பிக்கைகள், போலிக்கெளரவம் முதலியவற்றை எடுத்துக்காட்டி அவற்றுக்குச் சாட்டையடி ()é5 fr(i) oi,

፳፯
தமிழ் நாட்டுச் சிறுகதைகள் 43
தவர் புதுமைப்பித்தன், தமிழ்ச்சிறு கதையின் உள்ள டக்கத்திலும் உருவத்திலும் உத்திவகைகளிலும் பல வகைப்பட்ட பரிசோதனைகளைக் கையாண்டு ஒப்பற்ற வெற்றியீட்டிய புதுமைப்பித்தன் தமிழ்ச்சிறுகதை வர லாற்றில் மட்டுமன்றித் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் என்றுமே நீங்காத நிலையான இடத்தைப் பெற்றுள்
I ITT
சிறுகதையின் உருவச் செம்மையில் அதிக கவனம் செலுத்திய கு. ப. ரா. மனித மன விவகாரங்களுக்கு அடிப்படையாய் அமைவது பாலுணர்வே என்ற நோக் கிற் பல கதைகளைப் படைத்துள்ளார். தமது கதை களிற் பெண்மையின் இயல்புகளைத் திறம்படச் சித்தி ரித்துள்ள கு. ப. ரா. சமூகத்தில் நிலவும் மூடக்கொள் கைகள், அர்த்தமற்ற கட்டுப்பாடுகள், கைம்மைக் கொடுமை முதலியவற்ருல் அல்லலுறும் பெண்களின் பரிதாப நிலைமையை அநுதாபத்தோடு அணுகியுள் ளார். ஆண் - பெண் உறவில் ஏற்படும் மிக நுண்ணிய உணர்வுகளையும் மனச்சிக்கல்களையும் ஆசை, நிராசை களையும் தமது கதைகளிலே துல்லியமாகக் காட்டியுள் ளார். கு. ப. ராவின் கதைகள் ,பொதுவாக உடைந்த மனுேரதங்கள், தீய்ந்த காதல்கள், நிறைவேறத ஆசைகள் ஆகியவற்றைக் கொண்டன என்பர்.
தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் எனப் புகழப்படும் மெளனி எழுதிய கதைகள் குறைந்த அளவினவே எனி தறும் அவை தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அதிக முக் கியத்துவம் பெறுகின்றன. மெளனியின் கதைகள் பெரு பளவிற்குத் தனி மனித சிந்தனை பற்றியனவாகவே அமைந்துள்ளன. மனித மனத்தின் பல்வேறு நிலைகளே யும் உணர்வுப் போராட்டங்களையும் குடைந்து குடைந்து காட்டும் மெளனியினது கதைகள் பல, காதல் சம்பந்தப் பட்டவையே எனினும் கு. ப. ரா., லா. ச. ரா, பிச்ச மூர்த்தி, அகிலன் முதலியோரது கதைகளிலிருந்து வேறு பட்டவை; தனித்துவமான்வை. அவரது கதைகளிற்

Page 36
44 தமிழியற் கட்டுரைகள்
காதல் ஏக்கமும் அதனுலேற்படும் மன உளைச்சல்களும் சோகமும் பல்வேறு வகையிற் காட்டப்பட்டுள்ளன.
மணிக்கொடிப் பத்திரிகையின் தோற்றத்திற்கும் அதன் வெற்றிக்கும் மூல காரணராய் விளங்கிய பி.எஸ். ராமையா பாசம், தியாகம், நாட்டுப்பற்று, மனிதாபி மானம். கடமையுணர்வு முதலியவற்றை உள்ளடக்க மாகக் கொண்ட சிறு கதைகள் பலவற்றை எழுதியுள் ளார். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதி யுள்ள பிச்சமூர்த்தியின் ஆரம்ப காலக் கதைகளிற் பாலு னர்வும் அதனல் ஏற்படும் சடலங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவரது பிற்காலக் கதைகளில் வேதாந்த கத்துவ விசாரணையும் ஆன்மீக நோக்கும் அதிக முக்கி யத்துவம் பெற்றுள்ளன. புதுக்கவிதையில் ஆர்வங் கொண்ட பிச்சமூர்த்தி புதுக்கவிதையின் நடையைப் போன்றதொரு நடையைத் தமது சிறுகதைகளிலும் கையாண்டுள்ளார். அவர் த்மது கதைகளிற் கையாண் டுள்ள விடயமும் நடையும் உருவக, உத்தி முறைகளும் அணிகளும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியிலே தனிச்சிறப் பிடம் பெறுகின்றன. தமிழ்ச் சிறுகதையின் உருவ அமைப்புக்கு வலுவும் வளமும் ஊட்டும் வகையிற் பல சிறு கதைகளை எழுதியுள்ள லா. ச. ரா சிறுகதையின் உருவப் பரிசோதனையில் மிகக் கூடுதலான கவனம் செலுத்தி அதில் அதிக அளவு வெற்றியும் கண்டவர். இவரது கதைகள் பல மெளனி, பிச்சமூர்த்தி முதலா னேரது கதைப் போக்குடன் ஒற்றுமையுடையனவேனும் அவர்களிடம் காணப்படாத தனித்துவப் பண்பு ப் புதுமை நோக்கும் இவரது கதைகளில் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சிறுகதையுலகில் நனவோடை உத்திவகையை மிகச்சிறப்பாகக் கையாண்டவர்களில் லா. ச. ரா முக்கியமானவர். தமிழில் வரலாற்றுச் சிறு கதைகள் பெருகுவதற்கு வழிகோலும் வகையில் வரலாற் றுண்மைகளுக்கு மாறுபடாத வரலாற்றுச் சிறுகதைகளை எழுதிய தி. நா. சுப்பிரமணியத்தின் சிறுகதைகள் பல

தமிழ் நாட்டுச் சிறுகதைகள --- ULI
வற்றில் மரணபயம், உலக நிலையாமை, கலையின நிலே பேறு, விதியின் வலிமை முதலியன முக்கியம் பெற் றுள்ளன.
1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதை படுத்து இந்தியாவில் அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டுத்துறைகளிற் பெரும் மாற்றங்களும் விழிப் புணர்ச்சியும் ஏற்பட்டன; நவயுகப் பண்புகள் வலுப் பெற்றன. சுதந்திரம் பெறும் வரை நிலவி வந்த பாரத ஒற்றுமையுணர்வுகள் நலிந்து பிரதேச, மொழி, இன உணர்வுகள் தலைதுாக்கின. இத்தகைய உணர்வுகள் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் மிகத் தீவிரமாக வளர்ந்தன. சி. என். அண்ணுதுரை யின் தலைமையிலே வலிமை வாய்ந்த இயக்கமாகத் திகழ்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் அரசியற்றுறை யிலே பெரும் மாற்றங்களை ஏற்படுத்தாவிடினும் சமூக பண்பாட்டுத் துறைகளிற் குறிப்பிடத்தக்க மாற்றங் களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திற்று.
இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து உலக அரங்கில் ஏற்பட்டுவந்த பாரிய மாற் றங்கள் தமிழ் நாட்டினையும் வெகுவாகப் பாதித்தன. 1917ஆம் ஆண்டு ஏற்பட்ட மாபெரும் அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து பலவித இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் உலகமே மலைப்புறும் வகை யில் எழுச்சியுற்றுக் கொண்டிருந்த சோவியத் ரஷ்யா வின் புதுமை மிகு கருத்துக்களும் பொதுவுடைமைத் தத் துவமும் இக்காலப்பகுதியிலே தமிழ் நாட்டில் மட்டு மன்றி இந்தியா எங்கணும் பலரைக் கவர்ந்தன. தமிழ் நாட்டிலே முற்போக்கு இலக்கிய இயக்கம் ஆரம்பிக்கப் பட்டு வீறுடன் செயற்படலாயிற்று. இவற்றுக்குப் பக்க பலமாக மனிதன், சாந்தி, சரஸ்வதி, தாமரை, ஜனசக்தி, தீபம் முதலிய பத்திரிகைகள் பணியாற்றின. இவை மட்டுமன்றி ஜனரஞ்சகமான பத்திரிகைகள் பலவும் பெருக்கெடுத்தன. இத்தகையதொரு சூழ்நிலை தமிழ்ச்

Page 37
46 தமிழியற் கட்டுரைகள்
சிறுகதை வளர்ச்சிப் போக்கிற் குறிப்பிடத்தகுந்த மாற் றங்கள் பலவற்றையும் ஏற்படுத்தியது. தமிழ்ச்சிறுகதை எழுத்தாளருள் ஒரு பகுதியினர் காந்தியக் கருத்துக்களை அடியொற்றிச் சிறுகதைகளைப் படைத்தனர். இன்னுெரு பகுதியினர் திராவிட முன்னேற்றக் கழகக் கருத்துக் களைப் பிரசாரம் செய்யும் சாதனமாகச் சிறுகதை இலக் கியத்தைப் பயன்படுத்தினர். வேருெரு பகுதியினர் இந்தியாவினதும், அதன் ஒரு பிரிவான தமிழ் நாட்டி னதும் சமகால அரசியல், பொருளாதாரப் பிரச்சினை களுக்கும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் முரண்ப்ாடுகளுக்கும் பொதுவுடைமை மலர்ச்சியின் மூலமே விடிவு காண முடியும் என்ற தளராத நம்பிக் கையுடன் பொதுவுடைமைக் கருத்துக்களையும் முற்போக் குச் சிந்தனைகளையும் ஆழமாகப் பிரதிபலிக்கும் சிறுகதை களைப் படைக்கலாயினர். மேற்குறிப்பிட்ட பகுதியினரி லிருந்து வேறுசிட்ட வகையிற் பலர் வர்த்தக நோக் குடன் பாலுணர்வைக் கிளறிவிடும் மட்டரகமான கதை களையும் வீண் பொழுது போக்குவதற்கேற்ற நகைச் சுவை யம்சங்களைக் கொண்ட துணுக்குகளையும் சிறுகதை என்ற பெயரில் எழுதலாயினர்.
1940களின் பிற்பகுதியிலும் 1950களிலும் சிறுகதைத் துறையில் முக்கியம் பெற்ற்வர்களுள் விந்தன், ஜெய காந்தன், சிதம்பர ரகுநாதன், கு. அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, தி. ஜானகிராமன், அகிலன், நா. பார்த்தசாரதி, ஆர். சூடாமணி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுக்குச் சற்றுக் காலத்தாற் பிற்பட்ட எழுத் தாளர்களுள் வையவன், தாமரைமணுளன், வல்லிக் கண்ணன், டி. செல்வராஜ், ஆ. மாதவன், நீல. பத்ம நாபன், இந்திரா பார்த்தசாரதி, கிருஷ்ணன் நம்பி, கி. ராஜ நாராயணன், அழ. கிருஷ்ணமூர்த்தி, வீர. வேலுச் சாமி, அஷ்வகோஸ், அசோகமித்திரன், ராஜம் கிருஷ் னன், எம். ஏ. அப்பாஸ், பொன்னிலன் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இக்காலகட்டப் பகுதியில் வர

தமிழ் நாட்டுச் சிறுகதைகள் 47
லாற்றுச் சிறுகதைகளை எழுதும் முயற்சியும் குறிப்பிடக் தக்க அளவிற்கு மேற்கொள்ளப்பட்டது. சி.என். அண்றை துரை, புலவ்ர் அரசுமணி, கண்ணதாசன், வே. கபிலன், சாண்டில்யன், கோவி. மணிசேகரன், நா. பார்த்தசாரதி, வே. ரங்கராஜன் முதலியோர் இவ்வகையிற் குறிப்பிடத் தக்கவர்கள்.
புதுமைப்பித்தனின் பாதையைத் தொடர்ந்த விந்தன் (வி. கோவிந்தன்) போலி நாகரிகத்தையும் வாட்டுக் கெளரவத்தையும் சமுதாயப் புன்மைகளையும் தமதுகதை களில் ஆவேசத்துடன் சாடியுள்ளார். இவர் சமுதாயக் கொடுமைகளைவிட அக்கொடுமைகளுக்கான காரணி களைத் தமது கதைகளிலே தெளிவாகச் சித்திரித்துள் ளார். அடக்கி ஒடுக்கப்பட்டு வாழ்வு பறிக்கப்பட்ட அப்பாவி மக்களிடத்தும் ஏழைகளிடத்தும் அதிக இரக் கத்தை ஏற்படுத்தும் விந்தனது கதைகள் கொடுமை களுக்கெதிராகப் புரட்சியைத் தூண்டும் பண்பும் மனித உள்ளத்தில் மறைந்து கிடக்கும் மனிதாபிமான உணர் வைத்தட்டியெழுப்பும் வேகமும் கொண்டவை. 1950 கரிலே தமிழ்ச் சிறுகதைவளர்ச்சியிலே ஏற்பட்ட திருப் பத்திற்கும் முற்போக்குச் சிந்தனைகள் வலுப்பெறுவதற் கும் விந்தனது கதைகள் துணைபுரிந்தன. புதுமைப் பித்தன் வாழ்ந்த காலப் பகுதியிலேயே சிறுகதைகள் எழுதத்தொடங்கிய சிதம்பர ரகுநாதன் முற்போக்குக் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் பல சிறுகதைகளை எழுதி புள்ளார். சிறுகதையாக்கத்தின் நுட்பங்களை உணர்ந்து இலக்கியத்தரம் குன்ருத சிறுகதைகள் பலவற்றை எழுதி புள்ள அகிலன் தமது கதைகளிற் காதலை முக்கியமா கக்கொண்டு காதல் நிலையில் ஏற்படும் உணர்வுச் சிக்கல் களையும் உணர்வுப் போராட்டங்களையும் சிறப்பாகச் பித்திரித்துள்ளார். நடைமுறை வாழ்வின் அடித்தளத் திற் காணப்படும் மனித நிலைகளையும் முரண்பாடுகளை யும் முக்கியமாகக் கொண்டு பல சிறுகதைகளை அழகிரி 11 மி எழுதியுள்ளார். புதுமைப்பித்தன் தொடக்கி

Page 38
48 தமிழியற் கட்டுரைகள்
வைத்த பிரதேச வழக்குப் பிரயோகத்தைச் சிறந்த முறையிற் கையாண்டு பல சிறந்த சிறுகதைகளை எழுதி யுள்ள ஜானகிராமன் காவேரிப் படுகையைக் களமா கக் கொண்டு தஞ்சாவூர்ப் பகுதி மக்களின் வாழ்க்கை யைப் பிரதேசமணம் கமழும் வகையிலே தமது கதை களிற் பிரதிபலித்துள்ளார்.
மணிக்கொடிக் காலத்தைத் தொடர்ந்து தமிழ்ச் சிறுகதை எழுத்தாளரின் சமூக நோக்கு ஆழமாகவும் அகலமாகவும் கூர்மையாகவும் விளங்கலாயிற்று. 1950 களிலிருந்து தமிழ்ச் சிறுகதைகளில் சமூக, பொருளா தாரக் கண்ணுேட்டம் முற்பட்ட காலக் கதைகளிலும் பார்க்கத் தெளிவு பெற்றிருப்பதையும் சமுதாய நிலை பற்றிய தீட்சண்ய நோக்கையும் எதிர்காலச் சிந்தனைக்கு வழிவகுக்கும் பண்பையும் அவதானிக்க முடிகின்றது. 1960களில் "எழுத்தாளர்களுக்கிடையிலும் பத்திரிகை களுக்கிடையிலும் இடம்பெற்ற இலக்கிய நெறிப்பாடு பற்றிய கருத்து மோதல்களும் முரண்பாடுகளும் சிறு கதை எழுத்தாளர்களைப் பல அணிகளாகப் பிரிய வைத் தன. எனினும் பொதுவாக இவர்களது கதைகளிற் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளினல் ஏற்படும் இன்னல்களும் தொழிலாளர் போராட்டங்களும் வறு மையால் ஏற்படும் சீரழிவுகளும் முக்கியம் பெறுகின்றன.
மணிக்கொடிக் காலத்தின் பின் தமிழ்ச் சிறுகதை வரலாற்றிலே தன்னிகரற்றுத் திகழ்பவர் ஜெயகாந்தன். புதுமைப்பித்தனின் பாதையைப் பின்பற்றிய ஜெய காந்தன் புதுமைப்பித்தனிலும் பார்க்கச் சமுதாயப் பிரச்சினைகளையும் வாழ்க்கை அடிப்படைகளையும் ஆழ மாகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் மனிதநேயத் தோடும் தீட்சண்யத்தோடும் தமது கதைகளில் அலசி யுள்ளார். சமூக. பொருளாதார முரண்பாடுகளைத் தமது கதைகளில் நன்கு பிரதிபலித்துள்ள ஜெயகாந்தன் அம்முரண்பாடுகளைக் கூர்ந்து நோக்கி அவை தோன்று வதற்கான அடிப்படைக் காரணங்களேயும் அவற்றுக்கான

தமிழ் நாட்டுச் சிறுகதைகள் 49
தீர்வுமார்க்கங்களையும் காட்ட முயன்றுள்ளார். அவரது கதைகள் பலவற்றிற் பாலுணர்வு முக்கியத்துவம் பெற் றுக் காணப்படினும் வெறுமனே பாலுணர்வுக்கு முக்கி யத்துவமளிக்காது பாலுணர்வுடன் சமுதாயப் பிரச்சினை களை இணைத்தும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு களை, உணர்ச்சி நிலைகளைப் பாலுணர்வு நிலையில் வைத்து நோக்கியும் நுணுக்கமாகச் சித்திரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜெயகாந்தனுடன் சமகாலத்தில் எழுத ஆரம்பித்த சுந்தர ராமசாமியின் ஆரம்ப காலக் கதைகளில் இடம்பெற்ற ஆழமான சமுதாயப் பார்வை யும் உயிரோட்டமும் அவரது பிற்காலக் கதைகளிலே தளர்வடைந்துள்ளன. புதுமைப் பித்தனுக்குப் பின் தென்பாண்டி நாட்டுத் தமிழைச்சிறப்பாகக் கையாண்ட வர்களிற் சுந்தர ராமசாமி முக்கியமானவர். இன்றைய சிறுகதையாசிரியர்கள் பலர் தமிழ்நாட்டின் பின் தங்கிய பகுதிகள் பலவற்றைக் களமாகக்கொண்டு அவ்வப் பகு திச் சமூகத்தின் அடித்தளத்திலுள்ளவர்களது வாழ்க்கை நிலையையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் பிரதி பலிக்கும் சிறுகதைகளைப் பிரதேச மண்வாசனையுடனும் புதிய கருத்து வீச்சுடனும் வேகத்துடனும் எழுதி வரு கின்றனர். இன்றைய சிறுகதை எழுத்தாளர்களுள் ஜெயகாந்தன், அபராஜிதன், வேந்தன், கே. ராமசாமி, பறம்பை, அ. ஜெகதீசன், ஆழியான், பா. ஜெயப்பிரகாசம், சந்திரபோஸ், பழநியப்பன், வேலுமித்திரன், சார்வாகன், ரவீந்திரன், சாகுந்தலன் முதலியோர் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழிலே கணிசமான அளவிற் குப் பிற மொழிச் சிறுகதைகளை மொழிபெயர்க்குப் முயற்சியும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆங்கில, ரஷ்ய, வங்க, மலையாள, இந்தி மொழிகளின் சிறு 3. தைகள் பல தமிழிலே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன இப்பிறமொழிச் சிறுகதைகள் தமிழ்ச்சிறுகதைகளுக்கு வளம் சேர்ப்பனவாக விளங்குகின்றன.

Page 39
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள்
கலாநிதி க. அருணசலம்.
ஆங்கில மொழியிற் புனைகதை இலக்கிய வளர்ச்சி இங்கிலாந்தில் மட்டுமன்றி அமெரிக்கா, கனடா, அவுஸ் திரேலியா முதலியநாடுகளிலுங் காணப்படுவது போன்று தமிழிலும் புனைகதை இலக்கிய வளர்ச்சி தமிழ் நாட் டில் மட்டுமன்றி ஈழம், மலேசியா முதலிய தமிழர் வாழும் ஏனைய நாடுகளிலும் காணப்படுவது குறிப்பிடத் தக்க ஒன்ருகும். தமிழ் நாட்டினைப் போன்றே ஈழத் திலும் புனைகதை இலக்கியத்தின் ஒரு பிரிவான சிறு கதை இலக்கியம் இன்று பூரணம்பெற்ற ஓர் இலக்கிய வடிவமா வளர்ந்துள்ளது.
பதினரும் நூற்ருண்டிலிருந்தே ஈழத்தில் ஜரோப் பியர் ஆட்சி இடம் பெற்றபோதும் பத்தொன்பதாம் நூற்றண்டளவில் ஆங்கிலேயர் ஈழம் முழுவதையும் தமது ஆதிக்கத்திற்கு உட்படுத்தியதையடுத்தேஈழத்தின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத் துறை களிற் பாரிய மாற்றங்கள் ஏற்படலாயின. நிலமானிய அமைப்புமுறையின் சிதைவு, அரசியற்றுறையிலான சீர் திருத்தங்கள், கல்வி - குறிப்பாக ஆங்கிலக்கல்வி விருத்தி, மத்தியதர வர்க்கத்தின் தோற்றம், அரசியல்

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் ፵፱
துறையிற் பொதுமக்கள் பங்குபெறத் தொடங்கிய1ை1. மேலைநாட்டு இலக்கியங்களின் தொடர்பு, தமிழ்நாட்டு எழுத்துக்களின் தாக்கம் முதலிய இன்னுேரன்ன கார ணங்கள் ஏறத்தாழ 1930 ஆம் ஆண்டையொட்டி ஈழத் திலும் சிறுகதை இலக்கியம் தோன்றுவதற்கான சூழ் நிலையை ஏற்படுத்தின. தமிழ் நாட்டினைப் போலவே ஈழத்திலும் முதலில் நாவல்களே தோன்றின.அவற்றைத் தொடர்ந்தே சிறுகதை இலக்கியம் முகிழ்க்கலாயிற்று. கதாசிந்தாமணி, ஹைதர்ஷா சரித்திரம், நற்பவளத் திரட்டு முதலிய கதைத் தொகுதிகளில் அமைந்த கதைகள் பழையமரபு தழுவிய கதைகளேயன்றித் தற்கால உருவ. உத்தி முறைகளைக் கொண்ட சிறுகதைகளல்ல. 1930களி லிருந்தே ஈழத்திலே தமிழ்ச் சிறு கதைகள் உருவப் பிரக் ஞையுடன் எழுதப்பட்டன. இக்காலப் பகுதியிற் சோ. சிவபாதசுந்தரம் முதலியோரும் சிறுகதைகளை எழு தும் முயற்சியில் ஆர்வம் காட்டினராயினும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை முன்னுேடிகளாய் மத்திய தர வர்க்கத் தைச் சேர்ந்த சி. வைத்திலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகியோர் விதந்து போற்றப்படுவர். இவர் களது கதைகள் கலைமகள், கிராம ஊழியன் முதலிய பத்திரிகைகளில் வெளியாகின. இலங்கையர் கோனின் கதைகளுள் அதிகமானவை வெள்ளிப் பாதசரம் என்னும் தொகுதியாய் வெளிவந்துள்ளன. ஏனையோரது கதை கள் தொகுதிகளாக வெளிவரவில்லை. N w"
பொதுவாக நோக்குகையில் இம்மூவரது கதை களிலும் மணிக்கொடி எழுத்தாளர்களுள் ஒரு பிரிவின ரான கு. ப. ரா., பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்பிரமணி யன், மெளனி ஆகியோரது சிறுகதைகளின் நேரடித் தாக்கமும் மேலைநாட்டுச் சிறுகதைகளின் பாதிப்பும் காணப்படுகின்றன. பழைய வரலாற்றுச் சம்பவங்கள் புராண இதிகாசங்களில் இடம் பெறும் நிகழ்ச்சிகள், மனிதனின் மென்மையான உணர்வுகள், மன உணர்வுப் போராட்டங்கள், ஆண் - பெண் உறவு, கிராமியப்

Page 40
52 தமிழியற் கட்டுரைகள்
பண்புகள் முதலியன இம்மூவரது சிறு கதைகளிலும் முக்கியம் பெற்றுள்ளன. இவர்களது சிறுகதைகள் பல ஈழத்தைக் களமாகக்கொண்டு அமைந்துள்ளபோதும் அவை ஈழத்து மக்களுக்கேயுரிய பிரச்சினைகளைப் பிரதி பலிக்காமற் பொதுவான மன உணர்வுகளைப் பிரதி பலிப்பனவாகக் காணப்படுகின்றன. இலங்கையக்கோன், சி. வைத்திலிங்கம் ஆகியோரது கதைகள் சிலவற்றிற் சமூக உணர்வு மெல்லியதாக இழையோடினும் முனைப் புப் பெறவில்லை. எனினும் முன்னேடிகளான இவர்கள் மூவரும் கலைமெருகு குன்ருத வகையில் உருவ அயை தியுடன் தமது கதைகளைப் படைத்துள்ளமை போற்றத் தக்கது. ஈழத்து மண்ணிலே தமிழ்ச் சிறுகதை இலக் கியம் வேரூன்றி வளர்ச்சியடையவும் தமிழ்நாட்டுச் சிறு; கதைகளுக்கு ஈடுகொடுத்து நிற்கவும் இம்மூவரும் வழ சமைத்தனர் என்பதில் ஐயமில்லை. .
மேற்குறிபிட்ட முன்னேடிகளைத் தொடர்ந்து 1940 களில் அ. செ. முருகானந்தம், அ. ந. கந்தசாமி, வ. அ. இராசரத்தினம், வரதர் (தி. ச. வரதராசன்) கனக. செந்தி நாதன், சொக்கன், சு. வேலுப்பிள்ளை, க. சிவகுருநாதன், சு. நல்லையா, தாழையாடி, சபாரத்தினம், இராஜநாயகன் முதலியோர் சிறுகதை எழுதும் முயற்சியில் இறங்கினர். 1940 ஆம் ஆண்டு தொடக்கம் ஈழத்துத் தமிழ்ச் சிறு கதை வரலாற்றிலே ஏறத்தாழ 1950களின் முற்பகுதி வரையிலான காலப்பகுதியை மறுமலர்ச்சிக்காலம் என லாம். இக் காலகட்டப் பகுதியில் ஈழத்துத் தமிழ் இலக் கியத்தின் சகல துறைகளிலும் மறுமலர்ச்சிக் கருத்துக் கள் இடம்பெற்ற பொழுதும் சிறுகதை இலக்கியத்திலே அவை அழுத்தம் பெற்றுள்ள இக் காலகட்டப் பகுதியில் எழுந்த சிறுகதைகள் முற்பட்ட காலக் கதைகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு வேறுபட்டனவாகவும் மறுமலர்ச் சிக் கருத்துக்களையும் சமுதாய நல ஈடுபாட்டையும் கொண்டனவாகவும் அமைந்துள்ளமையை அவதானிக் கலாம். V−

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் ۔۔۔۔۔ ۔۔ ዕዳ
இந்தியாவில் வீறுடன் செயற்பட்டுககொண்டிருந்த காந்தீயஇயக்கமும் தமிழ்நாட்டின் மறுமலர்ச்சிச்சிந்தனை களும் மணிக்கொடிப் பத்திரிகை, அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வெளியாகிய பித்திரிகைகள் ஆகியவற் றின் இலக்கியப் பரிசீலனைகளும் அவற்றின் தாக்கமும் ஈழத்து இலக்கியத்துறையையும் பாதித்தன. 1930 முதல் வெளிவந்த ஈழகேசரிப் பத்திரிகையும் வீரகேசரிப் பத்தி ரிகையும் மறுமலர்ச்சிக் கருத்துக்களுக்கு வரவேற்பளித் தன. 1943ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச்சங்கம் ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறையிற் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்தது. 1945ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மறுமலர்ச்சி என்னும் பத்தி ரிகை காலத்திற்கொவ்வாத பழைய மரபுகளை நீக்கியும் புதிய சிந்தனைகள் மறுமலர்ச்சிக் கருத்துக்கள் என்ப வற்றை வரவேற்றும் பண்டித மனப்பான்மையை எதிர்த்தும் இலட்சிய வேகத்திற்கும் இலக்கிய வேட் கைக்கும் முக்கியத்துவமளித்தும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையுலகை வளம் படுத்த உதவிற்று. மேற்குறிப் பிட்ட நிலைமைகள் ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர் களைப் புதிய பாதையில் வீறுநடை போடத்தூண்டின; அவர்களுக்குப் புத்தூக்கத்தை அளித்தன. இப் புதிய பரம்பரையின் தோற்றத்துடனேயே ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிறப்படை யத் தொடங்கியதுடன் ஆழமாகவும் அகலமாகவும் வளர்ச்சியடையலாயிற்று. ஈழத்துத் தமிழ்ச் சிறு கதை கள் ஈழத்தையே களமாகக் கொண்டு ஈழம் வாழ் மக்களின் பிரச்சினைகளையும் எண்ணங்கள் அபிலாகூைடி களையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் பிரதி பலிப் பனவாக அமைய வேண்டும்; சமூகச் சீர்திருத்தத்துக் கும் சமூக முன்னேற்றத்திற்கும் பயன்பட வேண்டும் என்னும் கருத்துக்கள் இக்காலப் பகுதியிலிருந்து வலுப் பெறலாயின~ தென் இந்திய மரபை அழுங்குப்பிடி யாகப் பின்பற்றும் போக்கினை விடுத்து ஈழத்திற்கெக்

Page 41
54. தமிழியற் கட்டுரைச :
தனித்துவமான இலக்கிய பாரம்பரியம் வளர்வதர் கும் இக்காலப்பகுதி எழுத்தாளர்கள் வித்திட்டனர்
பழைய போக்கு முற்ருக 1ாருது காணப்பட ட
போதும் ஆரம்ப காலச் சிறுகதை எழுத்தாளர்களின் போக்கிலிருந்து பெருமளவு மாறுபட்ட நிலையில் இலக் கியம் சமூகத்தைச் சீர் திருத்தவும் புதியதோர் ச{/ கத்தை உருவாக்கவும் பயன்படவேண்டும் என்ற துடிப்பு இக்காலப் பகுதி எழுத்தாளர்கள் பலரது சிறுகதை களிற் காணப்படுகிறது. இவர்கள் தாம் வாழும் சமு தாயத்துடன் இணைந்து நின்று தமது கதைகளிற் சமூ கப் பிரச்சினைகளைப் பிரதி பலித்துள்ளதுடன் சமூக, சீர்திருத்தத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும். சிறு கதை இலக்கியத்தையும் ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. இதல் பிரதிபலிப்பாகச் சிறுகதைப் பொருளில் மாற்றமும் Gilli வும் ஏற்படலாயின. சிறுகதை இலக்கியத்தின் நோக் கமும் போக்கும் மாறுபடலாயின. அ. செ. முருகானத் தம் அ. ந. கந்தசாமி, வ. அ. இராசரத்தினம், வரதர் ஆகியோரது பல சிறுகதைகள் இவ்வகையில் விதந்து குறிப்பிடத்தக்கன. இப்புதிய பரம்பரையினரின் கதை கள் பலவற்றிற் சமூக, சமயத் துறைகளிலான சீர்கேடு களும் ஊழல்களும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு களும் வன்மையாகக் கண்டிக்கப்படுவதுடன் வறுமை யினல். அல்லலுறும் ஏழை மக்கனின் வாழ்வுக் கஷ்டங் கள், மன வேதனைகள், உக்கி மக்கிப்போன அர்த்த மற்ற சம்பிரதாயங்களுக்கும் பழைய மரபுகளுக்கும் ஆண்களின் அடக்கு முறைகளுக்கும் உள்ளாகித் தவி க் கும் பெண்களின் பரிதாப நிலைமை, அவர்களது உள ளக்குமுறல்கள், அவர்கள் முன்னேற வேண்டியதன் அவ சியம் முதலியன சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
இக்காலப் பகுதி எழுத்தாளர்கள் பலர் ஈழத்தின் வட பகுதியைக் களமாகக் கொண்டு பிரதேச மண்

ஈழத்துத் தமிழ்ச் சிறுகவத#ள் 55 வாசனையுடன் பல சிறுகதைகளைப் படைத்துள்ளனராயி லும் அ. செ. முருகானந்தம், அ. ந. கந்தசாமி, வ. அ. இராசரத்தினம் முதலியோர் கிழக்கிலங்கை, மலையகம், கொழும்பு முதலிய பிரதேசங்களைப் பிரதி பலிக்கும் கதைகளை எழுதியுள்ளனர் என்பது மனங் கொள்ளத்தக்கது. பழைமைப்பண்பு, சமயச் சூழல், யாழ்ப்பாணக் கலாசாரம் முதலியன கணக. செந்தி நாதனது சிறுகதைகளின் தனித்துவப் பண்புகளாகமிளிர் கின்றன. பிரதேச மண்வாசனை மிகுந்த சிறுகதைகள் பலவற்றை எழுதிய கனக. செந்திநாதன் பழைமையைப் போற்றும் அதே நேரம் பழமையின் அடியாகப் புது மையை வரவேற்கவும் தயங்கவில்லை. கிழக்கிலங்கை யைச் சேர்ந்த வ. அ. இராசரத்தினம் அப்பிரதேசத் நினைக் களமாகக் கொண்டு கிழக்கிலங்கை மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார். சு. வேலுப்பிள்ளையின் கதைகளிற் சம் 11வங்களிலும் பார்க்கச் சம்பவங்களினடியாகத் தோன் லும் உணர்வு நிலை முக்கியத்துவம் பெறுகின்றது. இவர் சிறுகதைத் துறையில் உருவப் பரிசோதனைகள் சிலவற் றைச் செய்து கணிசம்ான வெற்றியுமீட்டியுள்ளார். * மய, தத்துவ, புராணக் கருத்துக்கள், மனிதனின் போதுவான இயல்புகள், குணக்கேடுகள் வாழ்க்கை முரண்பாடுகள் முதலியன முக்கியத்துவம் பெற்றுள்ள சொக்கனது சிறுகதைகளில் மனித இன்னல்களைக்கண்டு துன்பமுறும் வே தனக்குரல் மேலோங்கிக் காணப்படு 'றெது. வரதரின் கதைகள் பலவற்றிற் சமுதாய சீர்
திருத்த ஆர்வமும் காந்தீயப் பற்றும் மேலோங்கி நிற் ன்ெறன. காதல், கற்பு, பெண்மை, வீரம் முதலிய வற்றுக்குத் தமது கதைகள் மூலம் புரட்சிகரமான கருத்துக்களைக் காட்டியுள்ளார். தாழையடி சபாரத்தி னத்தின் சிறுகதைகளிர், பல்கியின் ஆதிக்கம் அதிக அளவிற் காணப்படுகிறது. இவரது சில கதைகள்

Page 42
56 ’ தமிழியற் கட்டுரைகள்
சமூகத்தைப் பிரதிபலிப்பனவாயினும் பெரும்பாலான கதைகள் கனமற்றனவும் சிக்கலற்றனவுமான விடயங்க ளையே கொண்டுள்ளன. பொதுவாக மறுமலர்ச்சிக் கால எழுத்தாளர் பலரின் ஆக்கங்கள் அடுத்துவரும் காலப்பகுதிச் சிறு கதைகளில் யதார்த்தப் பண்பு மேலோங்குவதற்கும் முற்போக்குக் கருத்துக்கள் வலுவ டைவதற்கும் ஈழத்திற்கென்ற தனித்துவமான இலக்கி: பாரம்பரியம் உரம் பெறுவதற்கும் வழிகோலின.
1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதை,
யடுத்து அங்கு அரசியல், பொருளாதார, சமூகத் து)ை களில் ஏற்பட்ட மாற்றங்களைப் போன்று 1948 ஆம் ஆண்டு ஈழம் சுதந்திரம் பெற்றதும் உடனடியாகப் பெரும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஏறத்தாழ 1950 களின் நடுப்பகுதியிலிருந்தே பலதுறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாயின. 1950 களின் நடுப்பகுதியிலிருந்து தேசிய விழிப்புணர்வு முக் கியம் பெறலாயிற்று. 1956 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து தமிழ் மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படலாயிற்று. இந்தியா தாய் நாடு, ஈழம் சேய் நாடு என்னும் போக்கில் எடுத்ததற் கெல்லாம் தென்னிந்தியாவை எதிர்பார்த்து நிற்கும் நிலைமை மாறி ஈழத்துத் தமிழர்களாகத் தாம் வாழ வேண்டும், தமக்கெனத் தனித்துவமானதோர் பாரம் பரியம் உண்டு என்னும் உணர்வும் முக்கியம் பெற லாயிற்று. ஏறத்தாழ 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 1960 களின் பிற்பகுதிவரையிலான கால கட்டம் ஈழத் துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் அதிக முக்கியத் துவம் பெறுகின்றது.
இக்காலப் பகுதியிலே தேசிய முதலாளித்துவம் தலையெடுத்தமை, இலவசக் கல்வித் திட்டத்தினல் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி, பொதுவுடைமை நாடு களினின்றும் பரவிய பொதுவுடைமைத் தத்துவமும் சோஷலிஸச் சிந்தனையும் அவை சார்பான நூல்களும்

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் 57
இலக்கியங்களும் தமிழ் மொழியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெறத் தொடங்கியமை, சமூகத்தில் நிலவும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு களையும் அவற்றிற்குரிய அடிப்படைக்காரணிகளையும் மக் கள் மிகுதியாக உணரத் தலைப்பட்டமை, தமிழர் சமூகத்
ற்ெ சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் முக்கியபிரச்
வினைகளாகத் தலையெடுத்தமை, தொழிற் சங்கங்களின்
வளர்ச்சி, 1960 ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக் கழகம் வரை சுயமொழிக் கல்வி விருத்தியேற்பட்டமை, தமிழ
கத்திலே வீறுடன் செயற்பட்டுக் கொண்டிருந்த திரா
விட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகள் ஈழத்து
இளைஞர் பலரைக் கவர்ந்தமை முதலியன ஈழத்துத்
தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிப்போக்கிற் பல மாற்றங்கள் ாற்படத் தூண்டுகோலாயின. இத்தகைய மாற்றங்
களுக்கு மேலும் உரமூட்டும் வகையில் இக்காலப் பகு
யிெலே தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைந்தது. 1946 ஆம் ஆண்டு தொடங்கிய இலங்கை முற்போக்கு
எழுத்தாளர் சங்கம் 1956 ஆம் ஆண்டிலிருந்து செயல்
வேகம் பெற்றதுடன் ஈழத்து இலக்கியப் போக்கினை
நெறிப்படுத்தும் செல்வாக்கும் செயற்றிறனும் மிக்க
புக்கிய நிறுவனமாகவும் பணிபுரியலாயிற்று. இக்காலப்
பகுதியிலிருந்து சிறுகதை எழுதத் தொடங்கியவர்களுள்
பெரும்பாலோர் இச்சங்கம் முன் வைத்த முற்போக்குச்
கருத்துக்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கவ
பப்பட்டனர் என்பதை இக்காலச் சிறுகதைகள் புலப்
படுத்தி நிற்கின்றன. இக்காலப் பகுதியிலே தமிழ்நாட்
டி லிருந்து ஈழத்துக்கு வருகை தந்திருந்த பகீரதன், நா.
பார்த்தசாரதி, கி. வா. ஜகந்நாதன் ஆகியோர் ஈழத்து இலக்கியம் பற்றித் தெரிவித்த அலட்சியமான கருத்துக்
களும் ஈழத்து எழுத்தாளர்களுக்குச் செய்த "உபதேசங்
களும் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிக்கு உரமூட்டுவன
வாகவே அமைந்தன. −
8

Page 43
58 தமிழியற் கட்டுரைக
தினகரன், சுதந்திரன், தேசாபிமானி, பாட்டாளி, பாரத மல்லிகை முதலிய பத்திரிகைகளும் இக்கால கட்ட பகுதியில் நடைபெற்ற எழுத்தாளர் மகாநாடுகளும் கருத்தரங்குகளும் இலக்கிய நெறிப்பாடு பற்றிய கருத்து மோதல்களும் திறனய்வும் ஈழத்துச் சிறுகதை இலக்கியப் தக்கமுறையில் வளர்ச்சியடைய உதவியாக அமைந்தன. இக்காலப்பகுதியில் எழுத்தாளர் பலரின் சிறுகதைகள் தொகுதிகளாக வெளிவந்தமையும் பெண் எழுத்தாளர் கள் சிறுகதைத் துறையிற் பங்கு கொண்டமையும் குறிப்பிடத்தக்கன. சிறுகதை இலக்கியத்தை இழி சனர் இலக்கியம்’ எனவும் "சிறுகதை இலக்கியம்' என வும் எள்ளிநகையாடிச் சிறுகதைகளிற் பேச்சுத்தமிழ் இடம்பெறுவதை மூர்க்கமாக எதிர்த்து வந்தோர் இச் காலப் பகுதியின் வீறுகொண்ட போக்கிற்கு எதிர் நிற்க, லாற்ருது பின்வாங்கினர். தேசிய இலக்கியம், மண் வாசனை இலக்கியம், யதார்த்த இலக்கியம் ஆகியன பற்றிய கருத்துக்கள் வலுவடைந்தன. 1956ஆம் ஆண் டுக்குச் சற்று முன்னும் பின்னுமாக எழுதமுற்பட்டவர் களுள் டொமினிக் ஜீவா, டானியல், எஸ். அகஸ்தியர், எஸ். பொன்னுத்துரை, செ. கணேசலிங்கன், என். கே. ரகுநாதன், பித்தன், சிற்பி, என். எஸ். எம். ராமையா, காவலூர் இராசதுரை, நீர்வை பொன்னையன், முத்துலிங்கம், நா. க. தங்கரத்தினம் முதலியோர் குறிப்பிடத்தக்கவர் கள். 1960 ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகம் வை சுய மொழிக் கல்வி விருத்தியடைந்ததைத் தொடர்ந்து இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் சிறுகதை இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்படலாயின. பல்கலைக்கழக மாணவர் பலரின் சிறுகதைகள் தொகுதிகளாக வெளி வந்துள்ளன. 1960 களிற் சிறுகதை எழுதத்தொடங்கிய வர்களுள் மு. தளையசிங்கம், செ. கதிர்காமநாதன், செ. யோகநாதன், பெனடிக்ற் பாலன், செம்பியன் செல்வன், செங்கை ஆழியான், கே. வி. நடராசன், தெணியான், க. சத சிவம், நெல்லை க. பேரன், சாந்தன், மருதூர்க் கொத்தன், புதுமைப் பிரியை, குந்தவை, பவானி, நந்தி முதலியோ,

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் 59
குறிப்பிடத்தக்கவர்கள். 1960 களின் இறுதியிலும் 1970 களிலும் சிறுகதை எழுதத் தொடங்கியவர்களுள் வன் னரியூர்க் சுவிராயர், திக்குவெல்லை கமால், அ. யேசு ராசா, லெ. முருகபூபதி, சி. சண்முகநாதன், பொ. பத்மநாதன், எஸ். எம். இக்பால், என். கே. மகாலிங்கம், மருதூர் வாணன், எஸ். பாக்கியசாமி, காவலூர் எஸ். ஜெகநாதன், ப. அப்டீன், செந்தாரகை, செ. கந்த சாமி, அ. பாலமனேகரன், அ. ஸ.அப்துல் சமது, சட்ட நாதன், அமுதன், வை.மு. திருநாவுக்கரசு, சுதாராஜ், அன்ரனிஜிவா,மு.கனகராசா, குப்பிளான் ஐ.சண்முகன், சசி.கிருஷ்ணமூர்த்தி, யாதவன், நீள்கரை நம்பி, சபா. ஜெயராசா, செளமினி, எம். எம். நூர்டீன், துரை. சுப்பிரமணியன், க. நவம், எம்.எச்.எம். ஷம்ஸ் முதலி யோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இக்காலப் பகுதியில் எழுந்த சிறுகதைகளில் முற் பட்ட காலப்பகுதியிலும் பார்க்கப் பொருள் விரிவை பும் அடிப்படையான கருத்து மாற்றங்களையும் அவ தானிக்கலாம். முற்போக்குச் சிந்தனைகள் முக்கியத்து வம் பெற்றுக் காணப்படும் இக்காலப் பகுதிச் சிறு கதைகள் காலத்தின் தேவைக்கேற்றனவாகவும் காலத் தின் குரலாகவும் ஈழத்தின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைப் பிரதிபலிப்பனவாகவும் சமூகத்தை முன் னேற்றப் பாதையை நோக்கிச் செலுத்துபவையாகவும் யதார்த்தப் பண்பு கொண்டவையாகவும் அமைந்துள் ாமை நோக்கத்தக்கது. மறுமலர்ச்சிக் காலப்பகுதியில் அங்கும் இங்குமாகத் தொட்டுக் காட்டப்பட்ட சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் பல இக்காலப் பகுதிக் கதைகளில் விரிவாகக் காட்டப்பட்டுள்ளன. சாதிப் பிரச்சினை, சீதனப்பிரச்சினை, சுரண்டற்கொடுமை, வேலை யில்லாத் திண்டாட்டம் முதலிய இன்றைய எரியும் பிரச்சினைகளைச் சிறுகதைப் பொருளாக்கிய எழுத்தாளர் பலர் அவற்றுக்கான அடிப்படைக் காரணங்களையும் தீர்வு மார்க்கங்களையும் தமது கதைகளில் விண்டு காட்டத் தவறவில்லை. இக்காலப் பகுதியிற் சிறுகதைத்

Page 44
60 தமிழியற் கட்டுரைகள்
துறையிற் சிறப்புப் பெற்றவர்கள் பலர் ஈழத்துத தமிழர் சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பகுதியினரிடையே யிருந்தும் தொழிலாளர், விவசாயிகள், மீனவர் முதலி யோரிடையேயிருந்தும் தோன்றியமையினுற் போலும் அது காலவரை எழுத்தாளர்கள் அதிக கவனம் செலுத் தாத சமூகத்தின் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களினதும் தொழிலாளர், மீனவர், விவசாயிகள் முதலியோரதும் பலவகைப்பட்ட பிரச்சிஃண்களையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் எண்ணங்கள் அபிலான சுஷ்களையும், மனிதாபிமானத்துடனும் யதார்த்தத்துடனும் தமது கதைகளிற் பிரதிபலித்துள்ளமை நோக்கத்தக்கது. இக் காலப் பகுதி எழுத்தாளர்கள் பலர் கதைகளின் உள்ள டக்கத்திலும் உருவத்திலும் பரவலான முயற்சிகள்: மேற்கொண்டனர். முற்பட்டி காலப்பகுதி எழுத்தா ளர்கள் தொடுவதற்கு அஞ்சிய விடயங்கள் பல இக் காலப்பகுதிக் கதைகளில் விரிவாகவும் ஆழமாகவும் நோக்கப்பட்டுள்ளன. இன்றைய சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கும் அவற்ருல் ஏற்படும் பிரச்சினே களுக்கும் பொதுவுடைமை மலர்ச்சியின் மூலமே விடிவு காண முடியும் என்னும் கருத்துப் பலரது கதிை:ளில் அடிநாதமாக ஒலிக்கின்றது. ஈழத்துத் தமிழர் + (புத் தில் இன்று விசுவரூபம் பெற்றுள்ள இ ை பொழி3 பிரச்சினைகள் சிறுகதையாசிரியர்களின் அதிக கவனது திற்குள்ளாகாமை ஆய்வுக்குரியதாகும்.
ஏறத்தாழ 1960 களின் பிற்பகுதியிலிருந்து ஈழத் ச சிறுகதை வளர்ச்சிப் போக்கிற் குறிப்பிடத்தக்க ற்றங்கள் சில ஏற்படலாயின. அது காலவரை பிர 'சம் பெற்ற சிறுகதை எழுத்தாளர்களாய் விளங்கி 1ார் பலர் நாவல், நாடகம் முதலிய துறைகளிற் வனம் செலுத்த முற்பட்டனர். ஈழத்துத் தமிழ்ச் 'றுகதைகளின் களம் விரிவடையலாயிற்று. 1960களின் மற்பகுதிவரை பாரம்பரியமாகத் தமிழ்மக்கள் செறிந்து பாழும் பிரதேசங்களும் கொழும்பு நகரப் பிரதேசமும்

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் 61
சிறு கதைகளின் களமாக முக்கிய இடம் பெற்றிருந் தன. 1960 களின் பிற்பகுதியிலிருந்து நீர்கொழும்பு, திக்குவல்லை, அநுராதபுரம், குருனகல், மாத்தறை, மினுவாங்கொடை, இரத்தினபுரி முதலிய சிங்களமக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலிருந்தும் இளைஞர்கள் குறிப் பாக முஸ்லிம் இளைஞர்கள் பலர் தோன்றி இளமை மிடுக்கோடும் வேகத்தோடும் புதிய கருத்து வீச்சுப னும் சிறுகதைகளை எழுதிவருதல் குறிப்பிட்டுக் கறக் கூடியதொன்ருகும். திக்குவல்லை எழுத்தாளர் சங்கம், மாத்தள மக்கள் இலக்கிய வட்டம் முதலியனவும் சஞ்சி கைகள் சிலவும் இவர்களது முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிற் பணியாற்றி வருதல் போற்றத்தக்கது. குறிப் பாகக் கடந்த பதினேழு ஆண்டுகளாக ஈழத்து இலக் கிய வளர்ச்சிக்கு அயராது உழைத்துவரும் மல்லிகை யின் பெரும்பணி விதந்து கூறக்கூடியதாகும்.
1960களின் பிற்பகுதியிலிருந்து மலேயகத் தொழிலா ளர் மத்தியிலேயே பிறந்து வளர்ந்து அவர்களது துயரம் தோய்ந்த வாழ்க்கைப் போராட்டங்களேயும் பிரச்சினே களேயும் இன்னல்களேயும் அநுபவ பூர்வமாக உணர்ந்த இளைஞர்கள் பலர் சிறுகதை எழுதும் முயற்சியில் ஈடு பட்டுள்ளனர். இவர்களுக்கு முன்பே மலையகத் தொழி லாளர் பிரச்சினைகஃ மையப; கக் கொண்டு கணிபு படி) அளவு சிறுகதைகள் வெளிவந்துள்ளபோதும் அக்கதை களிற் காணமுடியாத சில சிறப்பம்சங்களே இவ்விளைஞர் களது கதைகளிற் காணலாம். மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் என். எஸ். எம். இராமையா, தெளிவத்தை ஜோசெப், மாத்தளை வடிவேல், மலரன் பன், பூரணி, மலைச்செல்வன், பன்னீர்ச் செல்வன், சாரல் நாடன், திருச்செந்தூரன், பொ. கிருஷ்ணசாமி, நூரளை சண்முகநாதன், மாத்தளை சோமு முதலியோர் குறிப்பிடத்தக்க்வர்கள். 'தமிழ் நாட்டு எழுத்தாளர் களைவிட இலங்கை எழுத்தாளர்களின் பொருளாதாரக் கண்ணுேட்டத்தின் எதார்த்தநிலை மிக ஆழமானது நுணுக்கமானது என்று சொல்லலாம். இலங்கை எழுத் தாளர்களின் தனித்தன்மையே சமுதாயப் பார்வை தான்’ எனத் தமிழ் நாட்டுத் திறனுய்வாளர் ஒருவர் ஈழத்துச் சிறுகதைகள் பற்றிக் கூறியுள்ளமை மனங் கொள்ளத்தக்கது. *^

Page 45
தமிழகத்துத் தமிழ் நாவல்
நா. சுப்பிரமணியம்
சமுதாய வளர்ச்சிக்கு ஏற்பக் கலை இலக்கியங்கள் புதிய பரிமாணங்களைப் பெறுவது வரலாற்று நியதி. கடந்த நான்கு நூற்ருண்டுகளில் ஐரோப்பிய சமுதாய அமைப்பில் நிகழ்ந்த பெருமாற்றங்களினடியாக உரு வாகிய புதிய ‘சமூக பொருளாதார உறவுகளால் இலக் கியம் அடைந்த பரிமாணங்களிலொன்று நாவல்.
நாவல் (NOVEL) என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் புதுமை என்பது பொருள். மத்தியகாலத்தில் இத்தாலி யில் வழங்கிய கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப் புச் செய்து படித்த ஆங்கிலேயர் அவற்றைப் புதிதாகக் கிடைத்தவை என்ற கருத்தில் "நாவல்’ எனப் பெயரிட்டு வழங்கினர். பின்னர் அவற்றைப் போலத் தாம் புனைந்த காதலுணர்வுக் கற்பனைகளையும் இயற்கையிகந்த சம்!! வச் சித்திரிப்புக்களையும் அதே பெயரால் வழங்கத்தலைப் பட்டனர். கைத்தொழில் வளர்ச்சி, வணிகவளர்ச்சிஆகிய வற்ருல் பாரம்பரிய சமுதாயஅமைப்புச் சீர்குலைந்துபுதிய சமூக பொருளாதார உறவுகள் உருவான சூழ்நிலையில் நாவல் புதிய உள்ளடக்கத்தைப் பெறத் தொடங்கியது. “சாதாரண பொது மனிதனின் நடைமுறை வாழ்க்கைப்

தமிழகத்துத் தமிழ் நாவல் f3
பிரச்சினைகளை நடப்பியல்புக்குப் பொருந்தக் கதை வடி வில் புனைந்து கூறும்,குறிப்பிடத்தக்க அளவு நீளமுடைய உரைநடையிலக்கியம்’ ஆக நாவல் பரிணமம் பெற்றது. கடந்த மூன்று நூற்ருண்டுகளில் ஐரோப்பா வில் வளர்ச்சியடைந்த இவ்விலக்கிய வடிவம், பத்தொன்ப தாம் நூற்ருண்டின் இறுதிப்பகுதியில் தமிழுக்கு அறி முகமாயிற்று.
பத்தொன்பதாம் நூற்ருஜண்டிலே ஆங்கில ஏகாதி பத்தியத்தின்கீழ் மேனட்டுப் பண்பாட்டுத் தாக்கத்தில்ை இந்தியாவிலும் ஈழத்திலும் தேசிய பாரம்பரிய சமூக அமைப்பு நிலை தளர்ந்து கொண்டிருந்தது. ஆங்கிலப் பயிற்சியும் மேட்ைடுக் கல்வி முறையும் சமூகத்தில் புதிய மதிப்பீடுகளை உருவாக்கத் தொடங்கியிருந்தன. ஆங்கில ஆட்சியின் விளைவுகளிலொன்ருன நடுத்தர வர்க்கம் வலிமிக்கதொரு சமூக சத்தியாக உருப்பெறத் தொடங்கியது. மேனட்டுக் கல்வி முறையினலும் வெளியீட்டுச் சாதனங்களின் வளர்ச்சியினலும் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டு வந்த அறிவு வளர்ச்சியும் வாசிப்புப் பழக்கமும் இலக்கியத் துறையிலே பெரு 10ளவு தாக்கத்தை விளைவித்தன. அக்காலம் வரை கற்ருேர் கற்றுச் சுவைக்கும் வண்ணம் எழுதப்பட்டு வந்த மரபுவழி உரை நடையும் செய்யுளும் புதிய பரிணுமத்தை அவாவி நின்றன. இத்தகைய சூழ்நிலை யின் தேவையை நிறைவு செய்யும் வகையில் நாவலி லக்கியம் ஆங்கிலத்தின் மூலமாகத் தமிழுக்கு அறி முகமாகியது.
தமிழகத்துத் தமிழ் நாவலிலே முக்கியமான மூன்று வளர்ச்சிக் கட்டங்களை அவதானிக்கலாம். அறிமுக நிலை, பரந்த வாசகர் வட்டத்தைப் பெற்றுத் தலை யாய இலக்கிய வடிவமாகப் பரிணமித்த நிலை, உருவம், உள்ளடக்கம் ஆகிய இரண்டிலும் புதிய எல்லைகளை நோக்கிய வளர்ச்சி நிலை என இக்கட்டங்கள் அமையும். மாயூரம் ச. வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் தொடக்கிவைத்த அறிமுகத்தை 1896 இல்

Page 46
64 தமிழியற் கட்டுரைகள்
வெளிவந்த பி. ஆர். ராஜம் ஐயரின் ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம் நிறைவு செய்து தரமான முதல் தமிழ் நாவலாக அமைந்தது. அடுத்து ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் தேக்க நிலைக்குப்பிறகு 'கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, மு. வரதராசன், “அகிலன்' ஆகியோரால் மீண்டும் புத்தெழுச்சி பெற்றது; பரந்த வாசகர் வட்டத்தை நோக்கி இட்டுச் செல்லப்பட்டது. ஏறத்தாழ 1960 ஆம் ஆண்டை அடுத்து உருவத்திலும் உள்ளடக்கத்திலுமான புதிய பரிணமங்களை நோக்கிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.
பிரதாப முதலியார் சரித்திரம் முதல் நாவல் என்று வரலாற்று முக்கியத்துவம் பெற்ருலும் கதையம்சத்தி லும் அதை வெளிப்படுத்தும் முறையிலும் சிறப்படைய வில்லை. உரைநடை நூல்கள் மூலம் சமுதாயத்திற்கு நலன்தரும் கருத்துக்களை முன் வைக்கலாம் என்ற நோக்கம் கொண்டவர் அவர். தாம் அறிந்த-அநுப வித்த-பலவற்றையும் கதையில் கூறமுயன்றுள்ளார். கற்பனையான செய்திகளும், கிளைக்கதைகளும் புகுத்தப் பட்டமைந்த இம் முதல் நாவல் ‘நாவல்’ என்ற வகை யின் ஒரு தோல்விகரமான முதல் முயற்சியாக அமைந் ததி. V
நடப்பியல்புக்குப் பொருந்தும் உண்மைச் சம்பவங் களுடன் கதை 17ந்தர் படைப்பு, கதையை வளர்த்துச் செல்லும் முறை ஆகிய பண்புகளில் நிறைவான முத லாவது தரமான தமிழ் நாவலாக அமைந்தது கமலாம் பாள் சரித்திரம். அமைதியான பண்பான ஒரு குடும்பத் தில் உறவினரால் நிகழும் இன்னல்களும் அவற்றினின்று அக்குடும்பம் மீட்சி பெறுவதுமே இந்நாவலின் கதை பம்சம். இதை அடுத்து 1898ஆம் ஆண்டில் வெளி வந்த அ. மாதவையாவின் பத்மாவதி சரித்திரமும் நடப் பியல்புக்குப் பொருந்தும் கதையம்சத்துடன் தரமான கலைப்படைப்பாக அமைந்தது. பாரம்பரிய சமூக அமைப்பு சிதைவடைந்து புதிய சமூக பொருளாதார

தமிழகத்துத் தமிழ் நாவல் 65
உறவுகள் தலையெடுக்கும் ஒரு காலப் பகுதியைக் காட் டும் ஒரு சமூகக் கண்ணுடியாகவும் இந்நாவல் அமைந் தது. பிரச்சினைகளுக்கு வேதாந்த தத்துவ அநுபவத் தில் தீர்வு காண முயல்கிருர் ராஜம் ஐயர். நடை முறைச் சாத்தியமான தீர்வுகளை நாடும் மாதவையா அதற்கேற்பச் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை முன் வைப்பவராகிருர், தரமான கலைப் படைப்புக்கள் என்ற வகையில் கமலாம்பாள் சரித்திரமும் பத்மாவதி சரித்திரமும் தமிழ் நாவல் வளர்ச்சிக்கு உறுதியான அடிப்படைகளை அமைத்தன.
இருபதாம் நூற்றண்டின் முதல் முப்பது ஆண்டு களில் பல நாவல்களும் தொடர்கதைகளும் எழுதப் பட்டபோதும் அவை மேலே குறிப்பிட்ட இருநாவல் களின் இலக்கியத் தரத்தினை எட்டவில்லை. இதனல் தமிழ் நாவல் வரலாற்றில் இக்காலப்பகுதியில் ஒரு ‘தேக்கநிலை நிலவியது.
இத் தேக்கநிலையை உடைத்துத் தமிழ் நாவலுக் குப் புது வாழ்வளித்தவர் என்ற புகழைப் பெறுபவர் 'கல்கி’ எனப் புனைபெயர் தாங்கிய ரா. கிருஷ்ண மூர்த்தியவர்கள். பத்திரிகையாசிரியராகத் திகழ்ந்த இவர் வாரந்தோறும் தொடர்கதைகளை எழுதினர். இதன் விளைவாகப் பத்திரிகை வாசகர் மத்தியில் "நாவல் வாசகர்' என்ற் புதிய வாசகர் வட்டம்' உருவாயிற்று. தேசிய விடுதலை உணர்வும் தமிழரது பண்பாட்டுப் பாரம்பரியச் சிறப்புக்களை மீளப்பார்த்து மகிழும் ஆர்வ மும் தலைதூக்கிய சூழ்நிலையில் பத்திரிகைமூலம் “தொடர் கதை’ப் பணி புரிந்த 'கல்கி’, கள்வனின் காதலி, தியாக பூமி, அலையோசை முதலிய சமூக நாவல்களையும் பார்த் திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகிய வரலாற்று நாவல்களையும் எழுதினர். தியாக பூமியும் அலையோசையும் சமகால விடுதலைப்போராட்ட
9

Page 47
66 தமிழியற் கட்டுரைகள்
உண்ர்வைக் 'கரு'வாகக் கொண்டவை. பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் மூன் றும் தமிழர் அந்நியரால் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன் அடைந்திருந்த நாகரிக வளர்ச்சியைத் திரும்பிப் பார்க்கும் ஆவலைத் தூண்டும் இயல்பின.
இன்றைய திறனுய்வு நோக்கில் மேற்படி நாவல் கள் சம்பவச் சுவையும், செயற்கையான கதைப்புணர்ட் பும் கொண்டவை போலக் காட்சியளித்தாலும் தமிழ் நாவலைப் பொது வாசகனை நோக்கி இட்டுவந்து ஒரு தலையாய இலக்கிய வடிவம் என உணரச் செய்த பெருமை இவற்றைச் சாரும். w
'கல்கி" யின் சமகாலத்தில் தமிழ் நாவல் எழுதிய வருள் முக்கியமான இருவர் மு. வரதராசனரும் அகிலனு மாவர். சமூகத்துக்கு நல்லொழுக்கம் போதித்தல் என்ற நோக்குடன் நாவல்கள் எழுதினர், மு.வரதராசன். திருவள்ளுவர், மகாத்மாகாந்தி, பேர்ணுட்ஷா முதலியவர் களது போதனைகளை அடிப்படையாகக் கொண்டு அவற் "றைப் புலப்படுத்தற்கு ஏற்ற பாத்திரங்களைப் படைத்து இவர் எழுதிய கள்ளோ காவியமோ, கரித்துண்டு, நெஞ் சில் ஒரு முள், கயமை, பெற்ற மனம், அல்லி முதலியன தமிழ் நாவலுக்குக் கற்றறிந்த உயர்மட்ட வாசகர், வட் டத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. இந் நாவல்களிலே உணர்ச்சியைவிடச் சிந்தனையே முதன்மை பெற்றதால் கலைப்பன்டப்பு என்ற வகையில் இவை சிறப்புப் பெற
சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் பொருளாதார முரண்பாடுகளையும் கண்டு சீர்திருத்தம், பேச விழைந்த அகிலனின் படைப்புக்களில் ‘காதல்" உணர்ச்சியே அடி நாதமாக அமைந்தது. நெஞ்சினலைகள், பாவை விளக்கு ஆகிய படைப்புக்களில் இவரது இலக்கிய நோக்கையும் போக்கையும் இனங்காணலாம்.
தமிழ் நாவல்களின் இத்தகைய போக்குகள் 1960 ஆம் ஆண்டை அடுத்து ஓரளவு மாற்றம் பெறத் தொடங்

தமிழகத்துத் தமிழ் நாவல் 67
கின. ‘கதை’யினைச் சம்பவச் சுவையுடன் சித்திரிப் பது, அறம்போதிப்பது, உணர்ச்சியூட்டுவது என்ற நிலைகளைக் கடந்து தனிமனிதனையும் அவன் வாழும் சமுதாயத்தையும் பண்பாடு, மரபு ஆகிய திரைகளை விலக்கி ‘இனங்கண்டு விமர்சனம் செய்வது என்ற கட்டத்தைத் தமிழ் நாவல் அடைந்தது. இது நாவலின் உள்ளடக்கம், உருவம் ஆகியவற்றிலே குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியதோடு சாதாரண வாசக ரசனை யைக் கடந்த உயர்மட்ட இரசனைத் திறனையும் தோற்று வித்தது. கதையம்சம் முதன்மையிழந்து கதைமாந் தரின் குணவியல்புகள் முதன்மை பெற்றன. இலட்சி யப் பாங்கான உணர்வுகளோடு சமூகப் பிரச்சினைகளை அணுகும் முறை மாற்றமடைந்து நடைமுறைச்சாத்திய மான, அறிவுபூர்வமான அணுகுமுறை தலைதூக்கியது. மனிதனின் இயல்பான உணர்ச்சிகள் அவனைப் பாதிக்கும் புறக்காரணிகள் ஆகியவற்றை 'அவன் வாழும் இயற் கைச் சூழலோடு பொருத்தி நோக்கிமதிப்பிடுவதுதான் பன்டப்பாற்றலின் அடிப்படை என்பது உணரப்பட்டது. இவ்வகையில் நாவல்கள் படைக்க முயன்றவர்களில் ஒரு சாரார் தனிமனிதனைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினை களில் 'பாலியல் அம்சத்துக்கு முதன்மை கொடுத் தனர். இன்னெரு சாரார் இயற்கைச் சூழலுக்கும் பிரதேச வாழ்க்கை முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் என்பவற்றிற்கு முதலிடம் தந்தனர். வேருெரு சாரார் பொதுவுடைமைக் கோட்பாட்டினடிப்படையில் சமுதாய மாற்றத்திற்கான கருத்துக்களே முன்வைத்தனர். "
பாலியல் அம்சத்துக்கு முதன்மை கொடுத்தவர் களில் தி. ஜானகிராமன் முக்கியமானவர். இவரது மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு ஆகிய நாவல்கள் பாலியல் தொடர்பான 'மரபு-மரபுமீறல் உணர்வுகளைப் பிரதிபலிப்பன. தஞ்சாவூரைச் சார்ந்த கிராமப்புறச் சூழலே இவரது பெரும்பான்மையான நாவல்களின்

Page 48
68 தமிழியற் கட்டுரைகள்
கதை நிகழ்களமாக அமைந்தது. பாலியல் பிரச்சினையை நகரச் சூழலில் பொருத்தி நோக்கி எழுதப்பட்ட நாவல் களில் த. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், இந்திரா பார்த்தசாரதியின் திரைகளுக்கு அப்பால் என்பன குறிப்பிடத்தக்கன. நீல. பத்மநாபனின் பள்ளிகொண்ட புரம் நாவலையும் இவ்வகையில் சேர்க்கலாம்.
இயற்கைச் சூழல், பிரதேச வாழ்க்கை முறைகளின் சடங்கு சம்பிரதாயங்கள் ஆகியவற்றுக்கு முதன்மை தந்து எழுதியவர்கள் சூழல் மாறுபடுவதற்கேற்ப மனித குணவியல்புகளும் சடங்கு சம்பிரதாயங்களும் மாற்ற மடைவதை இனங்காட்டத்தக்க வகையில் பலதலே முறை களைத் தமது கதைகளுக்குள் காட்ட வேண்டியவர்களா? யினர்; சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்பான நுணுக்க விபரங்களை விரிவாகச் சித்திரிக்க முனைந்தனர். இவ வாறு எழுதப்பட்ட நாவல்களில் சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, நீல. பத்மநாபனின் தலைமுறை கள், ஆ. மாதவனின் புனலும் மணலும், ராஜநாரா யணனின் கோபல்ல கிராமம் ஆகியன தரமான படைப் புக்கள். தமிழ் நாட்டின் கிராமப் புறங்கள் சிலவற்றில் Aண்பாடு தொடர்பான தகவற் களஞ்சியங்கள் என இந்நாவல்களைக்குறிப்பிடலாம். இத்தகைய நாவல்களைப் பிரதேச நாவல்கள், வட்டார நாவல்கள், மண் வாசனை நாவல்கள் என்றும் வழங்குவர். ராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித்தேன் நாவலும் இவ்வகையினதே. அவர் தமிழ் நாட்டின் பலவேறு தொழில்சார் கிராமங்கட்கும் சென்று தகவல் திரட்டி அவ்வப்பிரதேச நாவல்களைப்படைத்து வருகிருர், − .
பொதுவுடைமைக் கோட்பாட்டினடிப்படையில் சமூக மாற்றத்துக்கான கருத்துக்களை முன் வைத்த நாவல் களில் சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும் 1953 இல் வெளிவந்தது. இது நெசவாளர் வாழ்க்கையில் அரசாங்க ஜவுளிக் கொள்கை ஏற்படுத்தியதாக்கத்தை எதிரொலித் தது. டி. செல்வராஜ் எழுதிய மலரும் சருகும், தேநீர்

தமிழகத்துத் தமிழ் நாவல் 69 கு. சின்னப்பபாரதியின், தாகம், பொன். பொன்னிலனின் கரிசல் ஆகியன இவ்வகையின் குறிப்பிடத்தக்க படைப் புக்கள். தமிழ் நாட்டின் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலும் நிலமற்ற விவசாயிகள், கூலித் தொழிலாளர் ஆகியோர் மத்தியிலும் உருவாகிவரும் சிந்தனை மாற்றத்தைக் காட்டும் கண்ணுடிகளாக இவை அமைந்துள்ளன எனலாம்.
தமிழகத்தில் கடந்த ஒரு நூற்றண்டுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட நாவல்கள் நூல்வடிவில் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்கதை களாக நூல்வடிவம் பெருது உள்ளவை பல ஆகலாம். இப்பொழுது தொடர்கதை, மாதநாவல் பிரசுரம், குறுநாவல், நெடுங்கதை ஆகிய வகைகளில் மாதந் தோறும் ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புக்கள் வெளி வருகின்றன. இப்பெரும் பரப்பில் இலக்கியத் தரமுள்ள வளர்ச்சிப் போக்கை இனங்காண முயல்கையில் மேலே நோக்கிய வண்ணம் மூன்று முக்கிய கட்டங்களே தெளி வாகப் புலப்படுகின்றன. தொடர்கதைகளாக, சஞ்சிகை களில் வெளிவருவனவும் மாதநாவல் பிரசுரங்களாக "அசுர கதியில் உற்பத்தி செய்யப்படுபவையும் சமகால வாசகரது தொகையைப் பெருக்குவதையே நோக்க மாகக் கொள்வதால் இலக்கிய வளர்ச்சிப்பாதையில் ‘சுவடு பதிக்கத் தவறிவிடுகின்றன. எனினும் இது பொது விதியல்ல. வளர்ந்து வரும் நூற்பிரசுரச் செலவு எழுத்தாளன் சுயமாக நாவல்களை வெளியிடத் தடை யாகவுள்ளது. ஆயினும் சமூகப் பொறுப்புணர்வுடைய எழுத்தாளர்கள் "அணிகளாகத் திரண்டு தரமான நாவல்களைப் படைப்பது, தரமான உயர் ரசனையைப் பேணுவது என்றவகைகளில் முயற்சிகளை மேற் கொண் டுள்ளமை தமிழகத் தமிழ் நாவலின் எதிர் காலத் துக்கு ஒரு ‘பச்சை விளக்கு’ ஆக அமைகின்றதென G) TLD

Page 49
ஈழத்துத் தமிழ் நாவல்
"(IT. சுப்பிரமணியம்
தமிழக்த்திலே தமிழ்நாவல் எழுதப்படத் தொடங்கிய பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறுதிப் பகுதியிலேயே ஈழத்திலும் அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப் படலாயின. கல்வி கற்ற நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த சமூக சிந்தனையாளர் தாம் அறிந்தவற்றையும் உணர்ந்த வற்றையும் மக்களுக்குப் பயன்படத்தக்க வகையில் கதை வடிவிலே தரமுற்பட்டனர். மேனுட்டிலக்கியப் பயிற்சி, மேனடுகளினதும் மத்திய கிழக்கு நாடுகளினதும் சமய கலாச்சாரத் தொடர்பு, தமிழ் நாட்டுத் தொடர்பு ஆகி யன இத்தகைய முயற்சிகளைத் தூண்டிநின்றன என லாம். ஆயினும் இக்காலப் பகுதியில் வெளிவந்த ஈழத்து நாவல்கள் நாவலிலக்கியப் பண்புகளில் நிறைவு பெருத வீர சாகசக் கதைகளாகவே அமைந்தன. மேலும் இவற் றின் கதையம்சம் ஈழத்து மண்ணுக்குரியனவல்ல.
ஈழத்தின் முதல் தமிழ் நாவலான சித்திலெவ்வை யின் அசன்பேயுடைய கதை (1885) எகிப்திய ராஜவம்ச வீரனுெருவனது சாகசங்களையும் காதலையும் புனைந்து ரைப்பது. எஸ். இன்னுசித்தம்பியின் ஊசோன் பாலந்தை கதை (1891) "அலுமான்ய" தேச வீரவாலிபர்களது

ஈழத்துத் தமிழ் நாவல் 71
கதை. திருகோணமலை த. சரவணமுத்துப்பிள்ளை தமிழ் நாட்டில்எழுதிய மோகனுங்கி(1895). அந்நாட்டுநாயக்கர் வரலாற்றில் ஒரு சம்பவத்தைக் கருவாகக் கொண்டது.
ஈழத்து மண்ணைக் களமாகக் கொண்ட முதல் நாவல் என்ற சிறப்பு 1905ஆம் ஆண்டில் வெளிவந்த வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஐயம்' நாவலுக் குரியது. இதை எழுதிய சி. வை. சின்னப்பபிள்ளை ஈழத்து மக்களின் சாதாரண கிராமப்புற வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் புலப்படுத்தும் வகையில் நாவல் எழுத வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர். யாழ்ப்பாணத்து மல்லாகம் கிராமத்தைச் சார்ந்த வீர சிங்கன் என்ற வாலிபனைத் தலைவனுகக்கொண்டு எழுதப் பட்ட இந்நாவலும் நாவற் பண்பு நிறைவு பெருத வீர சாகசக் கதையாகவே அமைந்தது. ஈழத்துச் சமூகக் களம் இந்நாவலில் முக்கியத்துவம் பெறவில்லை.
ஈழத்து மக்களது சமுதாயப் பிர்ச்சினைகளுக்கு முதன்மை நல்கி நடைமுறை வாழ்க்கைச் சம்பவங்களை யும் உணர்ச்சி பூர்வமான கதை மாந்தரையும் கொண்டு கதை புனையும் போக்கு 1914 ஆம் ஆண்டில்ே மங்கள நாயகம் தம்பையா என்ற பெண்மணி எழுதிய நொறுங் குண்ட இருதயம் நாவலோடேயே தொடங்குகின்றது.
பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்ருண்டின் முதல் நாற்பதாண்டுக் காலப் பகுதிவரை சமய அடிப்படையிலான சமுதாய சீர் திருத்த நோக்கமே ஈழத்துத் தமிழிலக்கியத்தை நெறிப் படுத்தும் உந்து சக்தியாகத் திகழ்ந்தது. கிறிஸ்தவ மிஷனரியினர்க்கும் நாவலர் மரபு பேணிய சைவர் களுக்குமிடையில் நிலவிய ‘போட்டி நிலை சமுதாயத் தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சமயம் சார்பான தீர்வுகளை முன்வைக்கும் இயல்புகளைத் தூண்டிநின்றது. இத்தூண்டுதலின் இலக்கிய வெளிப்பாடுகளிலொன் முகவே மங்கள நாயகம் தம்பையாவின் நாவல் அமைந்

Page 50
72 தமிழியற் கட்டுரைகள்
தது. மக்கள் மத்தியில் சமயப் பிரசாரம் செய்வது நோக்கமானதால் நடைமுறைவாழ்க்கைச் சம்பவங்க% யும் அவற்றினடிப் படையிலான பிரச்சினைகளையும் உணர்வுபூர்வமாக அணுகிச் சித்திரிக்க வேண்டியது தவிர்க்க முடியாததாயிற்று.
சன்மார்க்க சிவியத்தின் மாட்சியை உபதேசத்தால் விளக்குவதிலும் உதாரணங்களால் உணர்த்துவது மிகவும் நன்மை பயத்தற்கு ஏதுவாகும் என்றெண்ணி இக்கதையை எழுதத் துணிந்தேன். −
என்று தமது நோக்கத்தை வெளிப்படுத்தும் ஆசிரி1ை1 கிறித்தவ சமய அடிப்படையிலான வாழ்க்கையையே 'சன்மார்க்க சீவியம்’ என்று கொண்டார். கணவனின் கொடுமைகளுக்காளாகி இதயம் நொறுங்குண்ட கண் மணியென்ற, பெண் கிறித்தவ பாதிரியாரொருவரது இதம்ான போதனைகளால் அமைதியடைகிருள். பொரு ளாசை, அந்தஸ்துணர்வு என்பன இன்பவாழ்வுக்குத் தடையாக இருப்பதையும் அன்பில்லாதவாழ்க்கை சுமை யாக அமைவதையும் இந்நாவல் உணர்த்துகின்றது.
இந்நாவலை அடுத்துக் கால்நூற்றண்டுக் காலப்பகுதி யில் ஏறத்தாழ ஐம்பது நாவல்கள் எழுதப்பட்டன. சமகால சமூகப் பிரச்சினைகளைக் கதைப் பொருளாகத் தேர்ந்தும் மேனட்டுக் கதைகளை மொழிபெயர்த்தும் தழுவியும் இவை எழுதப்பட்டன். சத்திய வேத பாது காவலன், இந்துசாதனம், ஈழகேசரி முதலிய பத்திரிகை கள், ‘தொடர் கதைகளாக' நாவல்கள் எழுதப்படு வதற்குச் சாதனங்களாயின.தமிழ்நாட்டிலிருந்து மர்மப் பண்பு நாவல்களும் சம்பவச் சுவை நாவல்களும் ஈழத் துக்கு இறக்குமதி செய்யப்பட்டன. நாவல் வாசிப்பதற் கான பழக்கம் அதிகரித்தது.
இக்காலப் பகுதியில் வெளிவந்த நாவல்களில் ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை எழுதிய கோபால நேசரத்தினம்

ஈழத்துத் தமிழ் நாவல் 73
(1926 - 27), துரைத்தினம் நேசமணி (1927-28) ஆகியன குறிப்பிடத்தக்கவை. கிறித்தவ மிஷனரியினரின் சமயப் பிரசார நோக்கில் உள்ள குறைபாடுகளைச் சைவர்களின் தளத்தில் நின்று கண்டிப்பதான கதைப் பொருளில் அமைந்தது கோபால நேசரத்தினம். பிற கல்வி வசதி களற்ற நிலையில் தம்முடைய கல்விக் கூடங்களை நாடி வரும் ஏழைப் பிள்ளைகளைப் பாதிரிமார் எவ்வாறு ஆசை காட்டி மதம் மாற்ற முயல்கின்றனர் என்பதும் சைவத் தாய்க் குலத்தால் அது எவ்வாறு முறியடிக்கப் படுகின்றதென்பதுமே இந்நாவலில் கதையாக விரிகின் றது. சீதனப்பிரச்சினையால் மனைவியை அவளது பெற் ருேர் வீட்டுக்கு அனுப்பிவிட்டுத் தீயவர் சகவாசத்தால் ஒழுக்கம் தவற முயல்கின்ற கணவனை அம்மனைவியின் நற்பண்புகள் எவ்வாறு மீட்டெடுக்கின்றன என்பது துரைரத்தினம் நேசமணி நாவலின் கதையம்சம். கிறித்தவ மதமாற்றப் பிரச்சினையைப் பொருளாகக் கொண்டு காசி நாதன் நேசமலர் (1924) என்ற வொரு நாவலையும் இவர் எழுதியுள்ளார். சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக் கும் தீர்வு காண்பதில் சைவத் தமிழ்ப் பெண் குலத்தின் பங்கு எத்தகையது என்பதை இவரது மூன்று நாவல் களும் எடுத்துக்காட்டுகின்றன.
மங்களநாயகம் தம்பையாவும் திருஞானசம்பந்த பிள்ளையும் தத்தம் சமய நோக்கிற்கமையச் சமூகப் பிரச்சினைகளை அணுகி உயிரோட்டமுள்ள கதைமாந்த ரைப் படைத்துள்ளனரெனினும் புனைகதை யிலக்கியத் துக்கு (நாவலுக்கும் சிறுகதைக்கும்) இன்றியமையாத பண்புகளிலொன்றன உணர்ச்சிபூர்வமான அதன் உரை நடை அமைப்பில் கவனம் செலுத்தவில்லை. உள்ளத் தில் உருவாகும் உணர்ச்சி பேதங்களையும் கற்பனைகளை யும் உள்ளவாறே வாசகருள்ளத்திற் பதியவைப்பதற் குப் பயன்படும் வகையில் ஊடகமாக அமைவதே புாை கதைக்குரிய உரைநடையின் பண்பும் பயனுமாகும்.
10

Page 51
74 தமிழியற் கட்டுரைகள்
தமிழகத்தில் ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரத் துடனே உருவாகி வளரத் தொடங்கி விட்ட இந் நடை - மறுமலர்ச்சி நடை - இக்கால ஈழத்து நாவலா சிரியர்களது கவனத்தைக் கவரவில்லை. கருத்தை முதன் மைப்படுத்தி வசன இலக்கியம் படைக்க முற்பட்ட ஈழத்து இக்கால நாவலாசிரியர்களிற் பலர் கதை சொல் லும் முறை பற்றியோ அல்லது மொழியைக் கையா ளும் முறைபற்றியோ சிந்தித்திருப்பார்கள் என்று சொல் வதற்கில்லை.
ஏறத்தாழ 1940 ஆம் ஆண்டை அடுத்து ஈழத்துத் தமிழ் நாவலில் ஒரு புதிய திருப்பம் உருவாகியது. சமுதாயத்துக்குப் பயன்படத்தக்க கருத்துக்களைக் கறு வதற்கான ‘கதை’ வடிவமே நாவல் என்ற எண்ணம் மாற் றமடைந்து அது ஒரு கலைவடிவம் என்ற உணர்வு த?ல தூக்கியது./ மரபுரீதியிலான இலக்கியச் சிந்தனைகளி லிருந்து விடுபட்டுப் புதுமைநாடும் ஆர்வமும் புதியது படைக்கும் ஆவலும் மேலோங்கின. மேல்நாட்டு நாவல் களையும் தமிழ்நாட்டு நாவல்களையும் வாசித்து அவற்றின் அருட்டுணர்வால் ஏற்பட்ட இப்புத்தெழுச்சிக்கு அக் காலப்பகுதிப் பத்திரிகைச் சாதனங்கள் களம் அமைத் தன. ஈழகேசரிப் பத்திரிகையின் பணி இவ்வகையில் வர லாற்றுச் சிறப்புடையது. சமகாலத் தமிழ்நாட்டின் நவீன இலக்கிய விழிப்புணர்ச்சியோடு ஈழத்து எழுத் தாளர் கொண்டிருந்த எழுத்துத் தொடர்பு’ சிந்தனை வளர்ச்சிக்கு உறுதுணைபுரிந்தது. ஈழத்து மண்ணின் பண் பாட்டம்சங்களைக் கலாபூர்வமாகப் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் "ஐம்பது'களின் முடிவில் தேசிய உணர் வுச் சாயலைப் பெற்றது.
எழுபதுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் நூற்றுக்கு மேற்பட்ட நாவல்களை எழுதினர். மொழிபெயர்ப்பும் தழுவலும், மர்மப் பண்பு, காதல், சமூக உணர்வும் தேசிய உணர்வுச் சாயலும் என்ற பல வகைகளில்
இவை இனங்காணத்தக்கன. ஆங்கில, பிரெஞ்சு,

ஈழத்துத் தமிழ் நாவல் 75
ஜெர்மனிய, ரூசிய, வங்க மொழி நாவல்கள் பல மொழி பெயர்த்தும் தழுவியும் தமிழிற் கொணரப்பட்டன. இலங்கையர்கோன், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, யாழ்ப் பாணம் தேவன், அ. செ. முருகானந்தன், அ. ந. கந்த சாமி முதலியோர் இத்தகைய முயற்சிகளை மேற்கொண் டனர். ரஜனி என்ற புனைபெயர் தாங்கிய கே. வி. எஸ். வாஸ், எம். ஏ. அப்பாஸ் ஆகியோர் மர்மப் பண்பு நாவல் களை எழுதினர். க. தி. சம்பந்தன், க. சச்சிதானந்தன், சு. வே முதலியோர் காதல் குடும்ப உறவுகள் சார்ந்த நாவல்களைப் ப்டைத்தனர். சம்பந்தனின் பாசம் தாகூர், காண்டேகர் ஆகியோரது உத்தி முறைகளை நினைவூட்டும் வகையில் சுவையாக எழுதப்பட்ட காதல் நாவல்.
யாழ்ப்பாண மண்ணின் மணத்தையும் சமூகப் பிரச்சினைகளையும் நாவலாக வெளிக் கொணர்வதில் அ. செ. முருகானந்தன், கனக. செந்திநாதன் இருவரும் முன் நின்றனர். முருகானந்தனின் புகையில் தெரிந்த முகம்" (1950), கனக. செந்திநாதனின் விதியின்கை என்பன குறிப்பிடத்தக்கன. வ. அ. இராசரத்தினம் கிழக்கிலங்கை மண்ணின் மணத்தோடு கொழுகொம்பு (1955-56) என்ற காதல் - தியாக உணர்வுக் கதையை எழுதினர். தனியார் நிறுவனங்களின் பாடசாலை ஆசிரியர்களது பிரச்சினைகளைச் சொக்கன் செல்லும்வழி இருட்டு நாவலில் சித்திரித்தார். மலையகத்துத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் இன்னல்கள் வலி. வி. வேலுப் பிள்ளையின் வீடற்றவன், எல்லைப்புறம், நந்தியின் மலைக் கொழுந்து (1962), கோகிலம் சுப்பையாவின் தூரத்துப் 15603 (1964) ஆகிய நாவல்களில் இலக்கியமாயின.
இக்காலப்பகுதி நாவல் வரலாற்றுக்கு ஒரு புதிய பரிணுமத்தைத் கொடுத்த பெருமை இளங்கீரனின் தென்றலும் புயலும் (1955), நீதியே நீ கேள் (1959) நாவல்களைச் சாரும். சாதி ஏற்றத்தாழ்வு, பொருளா தார ஏற்றத்தாழ்வு, தமிழர் - சிங்களவர் இனவேறு

Page 52
76 தமிழியற் கட்டுரைகள்
பாடு ஆகிய பகைப்புலங்களில் காதலைப் பொருளாகக் கொண்டு இவர் எழுதிய நாவல்கள், பொதுவுடைமைக் கோட்பாட்டில் சமூகப்பிரச்சினைகட்குத் தீர்வுகாணும் கருத்தோட்டத்துடன் அமைந்தவை. அதற்கேற்ப வர்க்க வகை மாதிரியான பாத்திரங்களைப் படைத்துக் கதையை வளர்த்துச் சென்றுள்ளார்.
எஸ். பொன்னுத்துரை எழுதிய தீ (1961) பாலியற் பிரச்சினையைப் பொருளாகக் கொண்ட பரிசோதனை முயற்சி என்ற வகையில் குறிப்பிடத்தக்கது.
1960 ஆம் ஆண்டை அடுத்து தமிழக நாவலைப் போலவே ஈழத்து நாவலிலும் சமுதாய விமர்சனப் பண்பு தலைதூக்கலாயிற்று. கதையம்சம் பின் தள்ளப் பட்டுச் சமூகப் பிரச்சினைகளின் இயங்கியலான வளர்ச் சியே நாவலுக்குப் பொருளாயிற்று. ஐம்பதாம் ஆண்டை அடுத்துத் தமிழிலக்கியத்துறையில் செல்வாக் குச் செலுத்தத் தொடங்கிய பொதுவுடைமைச் சிந்தனை யின் தர்க்கரீதியான வளர்ச்சியாக இது அமைந்தது. 1965 ஆம் ஆண்டில் இப்போக்கிற்கு வகை மாதிரியான செ.கணேசலிங்கனின் நீண்டபயணம் நாவல் வெளிவந்தது. யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்சினை எரிமலைபோல் வெடித்துக் குமுறிய காலச் சூழலே இதன் பகைப்புலம். இந் நாவலைத் தொடர்ந்து சடங்கு (1966) போர்க்கோலம் (1969) ஆகிய சாதிப் பிரச்சினை நாவல்களையும் அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பொருளாகக் கொண்ட செவ்வானம்(1967), தரையும் தாரகையும் (1968),மண்ணும் மக்களும் (1970) நாவலையும் எழுதி ஈழத்து நாவலுக்கு ஒரு புதிய கட்ட வளர்ச்சியையும் உயர் வாசக ரசனை யையும் ஏற்படுத்தினர். தமிழகத்திலே பதிப்பிக்கப் பட்ட இந்நாவல்கள் தமிழ் எழுத்தாளர், திறனுய் வாளர் மத்தியில் ஈழத்து நாவலுக்கு ஒரு கணிப்பைப் பெற்றுக்கொடுத்தன.
யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமப் பகுதியில் உயர் சாதியினரின் அடக்குமுறைக் கெதிராகப் போராடும்

ஈழத்துத் தமிழ் நாவல் 77
அடிமட்ட மக்களின் உரிமைப் போராட்டத்தின் ஒரு கட்டத்தைக் கடப்பதை நீண்டபயணம் காட்டுகிறது. அப்போராட்டப் பயணத்தின் இன்னெரு கட்டத்தைப் போர்க்கோலம் காட்டுகிறது. புனிதப் பிணைப்பான திரு மணம் உயர்சாதியினரின் சடங்கு சம்பிரதாயங்களாற் சீரழிவதைச் சடங்கு காட்டுகின்றது. இப்பிரச்சினைகளுக் குப்பொதுவுடைமைக் கோட்பாட்டினடிப்படையில்தீர்வு நாடுகிருர் செ. கணேசலிங்கன் சாதிப்பிரச்சினை நாவல் களில் கே. டானியலின் பஞ்சமர் (1972), செங்கை ஆழி யானின் பிரளயம் (1975), தி. ஞானசேகரனின் புதிய சுவடுகள் (1977) ஆகியனவும் குறிப்பிடத்தக்கவை. டானியல், கணேசலிங்கனைப்போல வர்க்க ரீதியான இணைந்த போராட்டத்தில் தீர்வு நாடுகின்ருர், செங்கை ஆழியானும் ஞானசேகரனும் பிரச்சினையின் இயல் பான வரலாற்றுப் போக்கை மனிதாபிமான நோக்கில் இனங்காட்டுகின்றனர்.
செவ்வானம் 1964 - 65 கூட்டரசாங்க ஆட்சிக் காலப்பகுதியில் கொழும்பு நகரின் நடுத்தர வர்க்கம் முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கங்களைப் பாத் திர்மாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். நடுத்தர வர்க்கம் முதலாளி வர்க்கத்தால் முதலில் ஈர்க்கப்பட்டா லும் ஈற்றில் தொழிலாளி வர்க்கத்தைப் புரிந்துகொள்ள முயல்கின்றது. நடுத்தர வர்க்கத்தின் பலவீனங்களை எடுத்துக்காட்டுவது தரையும் தாரகையும். நிலமற்ற விவசாயிகளின் போராட்டத்தைக் கற்பனைசெய்து காட் டுவது மண்ணும் மக்களும். கணேசலிங்கனின் இந்நாவல் களை அடுத்து சி. சுதந்திரராஜாவின் மழைக்குறி (1975) அரசியல் பொருளாதார அம்சங்கட்கு முக்கியம் தந்து எழுதப்பட்டது. s
மலையகத்தின் தோட்டத் தொழிலாளர்களது, முதலா ளித்துவத்துக்கு எதிரான போராட்ட உணர்வை யோ, பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன் ? (1968) நாவல் சித்திரித்தது. தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்ட

Page 53
78 , • தமிழியற் கட்டுரைகள்
சூழ்நிலையில் சூழவுள்ள கிராம மக்களுக்கும். தோட்டத் தொழிலாளர்க்கு மிடையிலேற்பட்ட முரண்பாட்டை ஒரு சமூக வரலாற்றுத் தரவு எனத்தக்க வகையில் சித் திரித்தது. தி. ஞானசேகரனின் குருதிமலை (1979).
இன உணர்வு தலைதூக்கி நிற்கும் எல்லைப் புறமான திருகோணமலையைச் சார்ந்த ஒரு தமிழ் இளைஞன் உணர்ச்சிகளுக்கும் சமூகப் பிரச்சினைகளுக்கும் இடையில் ஈடுகொடுத்து நிற்கும் மனவளர்ச்சியைப் பெறுவதைக் கலாபூர்வமாகச் சித்திரித்ததன் மூலமே ஈழத்து நாவ லுக்கு வயது வந்து விட்டது. என்பதைக் காட்டியது க. அருள் சுப்பிரமணியத்தின் அவர்கிளுக்கு வயது வந்து விட்டது (1973). . . .
கடந்த பதினைந்தாண்டுகட்கு மேலாக சமுதாய விமர்சனப் பண்புடன் ஈழத்துத் தமிழ் நாவல் அடைந்து வரும் வளர்ச்சியை இனங்காட்டும் வகையில் மேற் கூறிய நாவல்கள் அமைந்துள்ளன. சமுதாய விமர் சனத்தின் ஒரு கூருண இயற்கைச் சூழலுக்கும் பிரதேச வாழ்க்கை முறையின் சடங்கு-சம்பிரதாயங்கட்கும் முக்கி யம் தரும் பிரதேச நாவல் என்ற துறை கடந்த் பத்து. ஆண்டுகளாகத் தனிவளர்ச்சி பெற்று வருகின்றது. 1973 இல் அ. பாலமனுேகரன் எழுதிய நிலக்கிளி .இவ் வகையின் தரமான முதல் முயற்சியாகும். வ்ன்ன்ரிப். பிரதேச விவசாய மண்ணின் சித்திரம் இது.
உயர் கல்வியைத் தமிழிற் பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டு இருபதாண்டுகளாகின்றன. இதன் விளைவாக ஈழத்தின் பல்வேறு கிராமப் புறங்களும் கல்வித்தரமும் சமூகப் பார்வையுமுடைய ஒரு புதிய தலைமுறை இலக் கிய ரசனையும் எழுத்தார்வமும் கொண்டதாக உருவா யிற்று. 1972 இல் வீரகேசரி நிறுவனம் தொடங்கிய நூற் பிரசுரப்பணி இத்தலைமுறையினர்க்கு உந்து சக்தி யாயிற்று; பிரதேச நாவல் முயற்சி முனைப்பாகியது. இதன் முதற் பிரசவமே நிலக்கிளி. தொடர்ந்து ஈழத்

ஈழத்துத் தமிழ் நாவல் 79
தின் பல்வேறு கிராமப் புறங்களும் ஈழத்து நாவலின் களம் ஆயின. ஏ. ரி. நித்தியகீர்த்தியின் மீட்டாதவீணை (1974), வை. அஹமத்தின் புதிய தலைமுறைகள்(1976),எஸ். யூனி ஜோன் ராஜனின் போடியார் மாப்பிள்ளை (1976), தாம ரைச் செல்வியின் சுமைகள் (1977), ஞானரதனின் புதிய பூமி (1977), செங்கை ஆழியானின் வாடைக்காற்று (1973), காட்டாறு (1977), க. சதாசிவத்தின் நாணயம் (1980) ஆகிய இவ்வகை நாவற்போக்கை இனங் காட்டுவன. இவற்றுட் காட்டாறு குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலத்தில் தீவிரமடைந்துள்ள (சிங்களதமிழ்) இனவுணர்வும் அதன் சமகால விளைவுகளும் தமிழ் நாவலுக்குப் பொருளாகத் தொட்ங்கியுள்ளன. அருளரின் லங்காராணி (1978), ராஜேஸ்வரி பாலசுப்பிர மணியத்தின் ஒரு கோடை விடுமுறை (1981) ஆகிய இவ்வகை நாவல்கள் ஈழத்துத் தமிழ் நாவலின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான திசையை உணர்த்தி நிற்கின் றன என்று கொள்ளலாம்.
கடந்த நான்காண்டுகளாகத் தமிழக நாவல்கள் சஞ்சிகைகளின் கட்டற்ற இறக்குமதியால் ஈழத்து நாவல் வெளியீட்டுத்துறை தேக்கமடைந்துள்ளது. இந் நிலையில் மாற்றம் அவசியம் என்பது இலக்கிய ஆர்வலர் களால் உணரப்படுகின்றது. ()

Page 54
10
குழந்தை இலக்கியம்
wa
எஸ். சிவலிங்கராஜா,
சமூகத்தின் தவிர்க்க முடியாத தேவைகளை ஒட்டியே இலக்கியங்கள் தோன்றுகின்றன. மக்களின் தேவை. விருப்பு, ஆர்வம் என்பன ஏதோ ஒரு வகையில் புதிய புதிய இலக்கிய வடிவங்களைத் தோற்றுவிக்கின்றன. இந்த வகையில் பண்டுதொட்டே பயின்று வந்த இலக்கிய வகைகளுள் குழந்தை இலக்கியமும் ஒன்ருகும். குழந்தை இலக்கியம் தமிழில் எப்போது தோன்றியது என்று அறுதியிட்டுக் கூற முடியாது. தமிழில் குழந்தை இலக் கியம் தொல்காப்பியர் காலத்திலேயே வழங்கிவந்துள் ளது என்பர்.
தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் வரும்,
பாட்டிடை வைத்த குறிப்பி ஞனும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருண்மர பில்லாப் பொய்ம் மொழியானும் பொருளொடு புணர்ந்த நகைமொழியானுமென் றுரைவகை நடையே நான்கென மொழிப
என்ற சூத்திரத்திற்கு உரையெழுதிய பேராசிரியர் “பொருண் மரபில்லாப் பொய்மொழியானும் என்னும் தொடருக்குப் பின்வருமாறு உரை கூறுவர்;

குழந்தை இலக்கியம் 8.
"ஒரு பொருளின்றிப் பொய்படத் தொடர்ந்து சொல்லுவன. அவை ஒர் யானையும் குரீஇயும் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறு செய்தன வென்று அவற்றுக் கியையாப் பொய் படத் தொடர் நிலையான் ஒருவனுழை ஒருவன் கற்று வரலாற்று முறையான் வருகின்றன’’.
இவ்வுரைப் பகுதியை ஆதாரமாகக் கொண்டு தொல்காப்பியர் காலத்திலேயே குழந்தைக் கதைகள் வழங்கிவந்தன என்று கூறுவர். தமிழில் குழந்தை இலக்கியம், சிறுவர். இலக்கியம், என்னுந் தொடர்கள் ஒரு பொருளையே குறித்து நிற்கின்றன. மேலைத்தேயங் கள் போலத் தமிழில் குழந்தை இலக்கியம் நுண்மை யாகப் பகுக்கப்பட்டு ஆக்கவோ, ஆராயவோ படவில்லை. ‘தமிழில் சிறுவர் இலக்கியம் என்று சிறப்பாகக் குறிப் பிடக்கூடியது ஒப்பீட்டளவில் மிகக் குறைவு' என்று பேராசிரியர் கைலாசபதி குறிப்பிட்டிருப்பது மனங் கொள்ளத்தக்கது. தொல்காப்பியர் காலத்திலேயே குழந்தை இலக்கியம் தமிழில் வழங்கி வந்தது என்ப தைப் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
தமிழில், குழந்தை இலக்கியம் என்று பெரும்பா லோர் குழந்தைக் கவிதைகளையே கருதுவர். இலக்கி யம் எனிற் கவிதைதான் என்ற இறுக்கமான பாரம் பரியத்தின் விளைபொருளாக இது அமைந்திருக்கலாம். பொதுவாகக் குழந்தை இலக்கியம் என்னும் போது குழந்தைக் கவிதைகள், குழந்தைக்கதைகள், குழந்தை களுக்கான நாவல்கள், நாடகங்கள் என்பன யாவும் அடங்கும்.
குழந்தை இலக்கிய வகைகளுள் குழந்தைகளுக் கான சினிமாக்கள், குழந்தைகளுக்கான வானெலி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான சித்திரங்கள் என்பு வற்றையும் சிலர் அடக்கி ஆராய்வர்,
1

Page 55
82 தமிழியற் கட்டுரைகள்
குழந்தை இலக்கிய வளர்ச்சியில் சினிமா,வானெலி, பத்திரிகைகள் என்பன குறிப்பிடத்தக்க பங்கினை வகிக் கின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
தமிழ் மொழியில் முதன் முதலிலே தோன்றிய இலக்கியம் கவிதையே. அதுவும் வாய்மொழியாகத் தோன்றியது என்பது இன்று ஐயத்திற்கிடமின்றி நிறு வப்பட்டுள்ளது. குழந்தை மனம் இசையால் மிக இலகுவாக ஈர்க்கப்படும். அழுகின்ற குழந்தையைத் தாய் தாலாட்டித் தூங்க வைப்பதை நாம் இன்றும் காண்கிருேம். இசையால் இசைவுபட்ட குழந்தை காலப்போக்கில் இலகுவான, ஒத்திசையுள்ள பாடல் களை வாய்விட்டுப் பாடுவதையும் நாம் அவதானிக்க் லாம். குழந்தைகளுக்காகப் பெரியவர்களால் பாடப் பட்ட பாடல்களும், குழந்தைகளே கூடிக்குலாவிப் பாடு வதுமான ருவகையான குழந்தைப் பாடல்கள் நாபி டார் வழக்கில் வழங்கிவருகின்றன. இலகுவான, மென் மையான இழுமென் ஓசையுள்ள பாடல்களைக் குழந் தைகள் மிக இலகுவாகப் பாடத் தொடங்கிவிடுவர்.
தமிழ் இலக்கியப்பரப்பில் முதன்முதலிலே தோன் றிய குழந்தைப்பாடல்களும் நாடோடிப் பாடல்களே நாட்டுப்புற அல்லது நாட்டார் இலக்கிய அடிய 4 மேலே கிளம்பிய எழுத்திலக்கியங்களையும், குழந்தை களுக்குரியன, முதியோருக்குரியன என்று பகுப்பாய்வு செய்யக் கூடிய வகையிலேயே அமைந்துள்ளன.
நமது கல்விப்பாரம்பரியத்திலே இரு வகையான கல்விமரபுகள் உண்டு. ஒன்று மரபுரீதியான திண்ணைப் பள்ளிக்கூட மரபு. மற்றையது நிறுவனரீதியான பாட சாலைகள். இந்த இரண்டு அமைப்புக்களுக்குள்ளும் சிறுவர்கள் தம் ஆரம்பக்கல்வியைக் கற்று வந்தனர். இவ்விரண்டு அமைப்புக்குள்ளும் சிறுவர்களுக்கு ஆரம் பத்தில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, வெற்றி வேற்கை, போன்ற நீதிநூல்களே போதிக்கப்பட்டன.

குழந்தை இலக்கியம் 83
சிறுவர்களுக்குப் பொருள் விளங்காதபோதும், இவற் றின் ‘புறத்தோற்றம்’ பற்றி இவை சிறுவர் இலக்கி யம் என்றே அழைக்கப்பட்டன. தமிழில் கவிதை, பாடல், செய்யுள் என்னும் பதப்பிரயோகங்களும் ஒரு பொருளையே கருதி வந்துள்ளமையையும் அவதானிக்க லாம். சிறுவர்களுக்கு மனனப் பயிற்சியை ஏற்படுத் தும் வகையில் ஒளவையாரால் “அருளிச்’ செய்யப் பட்ட ஆத்திசூடியை ஆற்றல் வாய்ந்த மகாகவியான பாரதியார் கூடப்பின்பற்றியமை கவனிக்கத்தக்கது. தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதலிலே தோன் றிய குழந்தை இலக்கியங்கள் மேற்காட்டியவையே யென்று பூவண்ணன், டாக்டர் முத்துச்சண்முகன் முத லியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குழந்தைக் கவிதைகளை வசதிகருதி நாம் இரண்டு பெரும் பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று தனிப் பாடல்கள், மற்றையது கதைப்பாடல்கள். இந்த இரண்டு வகையுள்ளும் தனிப்பாடல்களே பெருமளவு வெளிவந்துள்ளன. இவற்றில் குழந்தைகள் காணும் காட்சிகள், நிகழ்ச்சிகள், விருப்பு, வெறுப்பு என்பன அடங்குகின்றன. .ست "
தமிழ் கூறும் நல்லுலகிலேயே முதன் முயற்சியாகச் சிறுவர் பாடல் என்ற உணர்வோடு 1935ஆம் ஆண்டு க. ச. அருணந்தி அவர்களாற் தொகுக்கப்பட்ட பிள்ளைப் பாட்டினையே குறிப்பிட வேண்டும். பாடசாலைகளின் தேவைகளைக் கருத்திற் கொண்டு, அருணந்தியவர்களாற் தொகுக்கப்பட்ட “பிள்ளைப்பாட்டு’ மூலம் பல நல்ல குழந்தைக் கவிஞர்கள் உருவாகினர். நவாலியூர் சோம சுந்தரப் புலவர், பீதாம்பரன், பஞ்சாட்சரஐயர், ஜே. எஸ். ஆழ்வாப்பிள்ளை, க. சின்னத்தம்பி முதலியோர் குறிப் பிடக் கூடியவர்கள். இக்குழந்தைக் கவிஞர்கள் அனை வரும் ஆசிரியர்களாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. குழந்தை இலக்கிய வரலாற்றில் க. ச. அருணந்தி யவர்களால் தொகுக்கப்பட்ட பிள்ளைப் பாட்டிற்குத் தனி யான ஒரு முக்கியத்துவம் உண்டு.

Page 56
84 தமிழியற் கட்டுரைகள்
"சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை எண்ணற்ற குழந்தைக் கவிஞர்களை ஈன் றெடுத்தது. அந்தக்கவிஞர்களின் குழந்தைப் பாடல் களை அப்போதே ஒன்று திரட்டி கே.எஸ். அருணந்தி என்பவர் பிள்ளைப்பாட்டு என்ற பெயரில் வெளி யிட்டார். குழந்தை இலக்கியம் கொடி கட்டிப் பறக்கும் நம்நாட்டில் 1970 இல் தான் அப்படிப் பட்ட குழந்தைக் கவிதைத் தொகுதி வெளி வந்துள்ளது' என்று பூவண்ணன் குறிப்பிடுவது மனங்கொள்ளத் தக்கது.
ஈழத்துக் குழந்தைக் கவிஞர்களுள் சோமசுந்தரப் புலவர், மு. நல்லதம்பி, அல்வையூர் செல்லையா, பண்டிதர் க. வீரகத்தி, இ. நாகராஜன், வேந்தனுர், அம்பிகைபாகன், சத்தியசீலன், அமிர்தநாதர், ஸ"பைர், சரணுகையூம், கோசுதா முதலியோர் குறிப்பிடக் கூடியவர்கள்.
தமிழ் நாட்டுக் குழந்தைக் கவிஞர்களாகத், தமிழ்க் கவிதை வரலாற்றின் மையப்புள்ளியாகவும் திருப்பு முனையாகவும் அமைந்த பாரதியார் தொடங்கி, அவர் பரம்பரையினரான, பாரதிதாசன், கவிமணி, கம்பதாசன் அழ. வள்ளியப்பா போன்ற நூற்றுக்கணக்கான குழந் தைக் கவிஞர்களைச் சுட்டிக்காட்டலாம். அழ. வள்ளியப் பாவுக்குக் குழந்தைக் கவிஞர்' என்ற நிலையான பெயர் அவரின் பங்களிப்பினைக் காட்டுகிறது எனலாம்.
குழந்தைகளுக்குப் பரிச்சயமான இனிய, அழகிய சொற்களையும் நிகழ்ச்சிகளையும் மனங்கொண்டு எழுந்த குழந்தைக் கவிதைகள் தமிழில் பெருமளவு இல்ல்ை யென்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும், ஈழத்துக் குழந்தைக் கவிதைகளுள், ஆடிப்பிறப்பு, கத்தரி வெருளி போன்றனவும், வேந்தனரின் ‘அம்மாவும், கவிஞர் செல்லையாவின் இளம்பிறையும், இ. நாகராஜனின் 'பட்டுச் சட்டையும் க. வீரகத்தியின் பலூனும்'.

குழந்தை இலக்கியம 85
அவை பிறந்த நாட்தொடக்கம் குழந்தைகளாற் படிக் கப்படுவதையும், இலக்கிய விமர்சகர்களாற் பாராட்டப் படுவதையும் அவதானிக்கலாம்.
Ꭷ1ᎶᏡ0ᏯᏏ மாதிரிக்குக் கவிஞர் செல்லையாவின்
“அம்மா வெளியே வா அம்மா அழகாய் மேலே பாரம்மா
சும்மா இருந்த சந்திரனத் துண்டாய் வெட்டின தாரம்மா ? - என்ற இளம்பிறைப் பாடலைச் சுட்டிக் காட்டலாம்.
குழந்தைக் கவிதைகளுள் இன்னெரு வகையானவை கதைப்பாடல்களாகும். பெரும்பாலான கதைப் பாடல் கள் குழந்தைகளின் மனத்தில் நீதியை நிலைநிறுத்துவன
வாகவே அமைந்துள்ளன. தனிப்பாடல்களைவிடக் கதைப்பாடல்களைக் குழந்தைகள் ஆர்வத்துடன் படிப் பதையும், கேட்பதையும் காணலாம். “கதைப்பாடல்
களில் கருத்துக்களிலும் பார்க்க நிகழ்ச்சிகளும், காட்சி வருணனைகளுமே இயல்பாய் இடம் பெறவேண்டும்’ என்று பேராசிரியர் கைலாசபதி குறிப்பிட்டுள்ளார். இந்தவகையில் தாடி அறுந்த வேடன், பவளக்கொடி, கொழுக்கட்டைப் பொன்னன் போன்ற கதைப்பாடல் களைச், சிறப்பானவையெனக் குறிப்பிடலாம். பிள்ளைப் பாட்டு, அம்பிப்பாடல், குழந்தைக் கவிதைகள் போன்ற தொகுதிகளிலும் சிறப்பான கதைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பிள்ளப்பாட்டில் இடம் பெறும் கரவெட்டி க. சின்னத்தம்பி இயற்றிய -
“தேசஞ் சுற்றிப் பார்ப்பதற்குச் சென்ற தொரு சீமான் சென்ற தொரு சீமான் செத்தது போற் கிடந்த தொரு
சிறுகுரங்கைக் கண்டான் சிறுகுரங்கைக் கண்டான்'

Page 57
&6 ν தமிழியற் கட்டுரைகள்
என்று தொடங்கும் கதைப்பாடல் “குண்டுடுக்கி, குடுகுடுக்கி - என்ற குறவஞ்சிப்பாட்டின் இசைதழுவிச் சிறப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடக்கூடியது.
குழந்தைப்பாடல்கள் அழகான, பொருத்தமான படங்களுடன் பெரிய எழுத்துக்களில் அச்சிட வேண்டிய அவசியமுடையவை. பாட்டுக்கு ஏற்ற படமும், இசை யும் குழந்தைகளை இலகுவில் கவர்ந்து குதுகலிக்கச் செய்யும்.
குழந்தைகளுக்கான கதைகள் தமிழில் மிக அருந்த லாகவே காணப்படுகின்றன. ஈழத்தில் குழந்தைக் கதைகள் எழுதியவர்களாக ஆறுமுகநாவலர், குமாரசாமிப் புலவர், அழகசுந்தரதேசிகர், சோ. நடராஜன் முதலியோ ரைச் சுட்டிக் காட்டலாம். இவர்கள் எழுதிய கதைகள் பாடநூல்களின் தேவையை யொட்டியே அமைந்த1ை1 யால் குழந்தைகளின் உள, உணர்வுகளை எந்த அவுக்குப் பாதித்தன என்பது ஆராய்வதற்குரியது. தமிழ் நாட்டில் பாரதியாரில் இருந்து பூவண்ணன் வரை குழந்தைக் கதைகள் எழுதியுள்ளனர். குழந்தைக்கதை எழுத் தாளர்களுள் பூவண்ணனுக்குக் குறிப்பிடக் கூடிய முக்கி யத்துவம் உண்டு. தமிழில் பெரும்பாலான குழந்தைக் கதைகள், குழந்தை, சிறுவர், இளைஞர் என்ற பாகு பாடின்றியே எழுதப்பட்டுள்ளமையை அவதானிக்க GUIfL). - . . ' \ -
சித்திரக் கதைகள் ஈழத்தில் பெருமளவு வெளி வரவில்லை. குறிப்பாகத் தப்பியோடிய தோழர்கள், பாட சாலைக்குச் சென்ற யானை, குரங்கின் தீர்ப்பு போன்ற விரல் விட்டு எண்ணக் கூடியவையே வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டில் ஒரளவு சித்திரக்கதைகள் வெளிவந்துள் ளன. இவற்றுள் பெரும்பாலான வீரசாகசங்கள் நிரம் பியவையாகவும், விடுப்பார்வத்தைத் தூண்டுபவையா கவும், அதிஅற்புத மாயாஜாலங்கள் பொருந்திய கதை களாகவுமே காணப்படுகின்றன. ஒப்பீட்டு அடிப்டை யில் தமிழில் சித்திரக் கதைகள் மிக, மிகக் குறைவா கவே காணப்படுகின்றன.

குழந்தை இலக்கியம் 87
குழந்தைகளுக்கான நாவல்களும் தமிழில் குறிப் பிடக் கூடியளவுக்கு இல்லையென்றே கருதலாம். ஈழத் தில் க. நவசோதி எழுதிய ஒடிப்போனவன் என்ற நாவ லைச் சுட்டிக்காட்டலாம். குழந்தை இலக்கியப்பரப்பில் சிறுவர் நாவல்கள் ‘சுயசரிதைகளாக அமைந்தமையை யும் அவதானிக்கலாம். பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவரும் பாங்கிலேயே சில நாவல்கள் இழுபட்டுப்’ போவதையும் அவதானிக்கலாம்.
குழந்தைகளுக்கான நாடகங்களும் அவ்வாறே அமைந்துள்ளன. குழந்தைகள் படிப்பதற்கும், குழந் தைகள் நடிப்பதற்கும் என்று இருவகையான நாடகங் கள் அமைந்துள்ளன. பாடநூல்களில் இடம் பெறும் நாடகங்கள் இரண்டு நிலையிலும் பயன்படுத்தப்படுவ தும் கண்கூடு. சர்வதேசக் குழந்தைகள் ஆண்டினை யொட்டிக் குழந்தை சண்முகலிங்கம் தயாரித்தளித்த கூடிவிளையாடுபாப்பா என்னும் நாடகம் குழந்தைகளுக் கான நாடக வரலாற்றில் குறிப்பிடக்கூடிய முக்கியத் துவம் வாய்ந்தது. லவகுசா, வீரசிவாஜி போன்ற புராண, வரலாற்று நாடகங்கள் குழந்தைகளுக்காக அமைக்கப் பட்டபோதும் அவை எதிர்பார்த்த வெற்றியைப் பெற் றனவா என்பது ஆய்வுக்குரியதே.
குழந்தை இலக்கியத்தைச் செழுமைப்படுத்த இன்று ஏற்ற கருவியாகப் பயன்படுவது - பத்திரிகைகளும். வானெலியும், தொலைக்காட்சியுமே யெனலாம். குழந்தை களுக்கென்றே வெளிவரும் பத்திரிகைகள் மேல்நாடு களில் மிக மிக அதிகமாகும். தமிழில் அம்புலிமாமா, பாலமித்திரா போன்றவை விதந்தோதக் கூடியவை. ஈழத்தில் பொதுவான இலக்கியப் பத்திரிகைகள் போலவே பல சிறுவர் சஞ்சிகைகளும் தோன்றி மறைந் துள்ளன. கண்ணன், கரும்பு, கண்மணி. முதலியவை இவ்வன்கயுள் அடக்கக் கூடியவை.
தமிழில் குழந்தை இலக்கியம் சிறப்புற அமைய அவர்களின் உள்ளம், வயது, சூழல், என்பவற்றை விஞ்ஞானரீதியாக அறிந்து, அளந்து, கவிதை, கதை, நாடகம் என்பன படைக்கப்பட வேண்டும்.

Page 58
பொதுசனத் தொடர்புச் சாதனங்கள்
சித்திரலேகா மெளனகுரு.
புராதன காலத்திலிருந்து நவீனகாலம் வரை எல் லாச் சமூகங்களிலும் ஏதோ வகையிலான தொடர்பு முறைமை இருந்துள்ளது. இத் தொடர்பு முறை மையே சமூக அலுவல்கள் ஒழுங்காக நடைபெறுவதற் கும் சமூகப்பாரம்பரியம் ஒரு தலைமுறையிலிருந்து இன் னேர் தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கும் துணைபுரிகின்றது. இத்தொடர்பு பல்வேறு சாதனங்கள் வழியாக ஏற்படுகிறது. பண்டைக் காலத்தில் பறை யறைந்து ஒரு செய்தியைத் தெரிவிப்பதிலிருந்து இன்று வானெலி மூலமோ தொலைக்காட்சி முலமோ அறிவித் தல் கொடுக்கும் நிலைவரை இத்தொடர்பு முறையில் பல்வேறு வகைகளும் வளர்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன.
இன்று பொது சனத்தொடர்பு சாதனங்கள் என்ற சொற்ருெடருக்குக் குறிப்பிட்ட திட்டவட்டமான பொருள் உண்டு. ஒரு சமூகத்தில் நிறுவனமோ அல்லது தனிநபரோ தமது கருத்துக்களைக் கூறவும் செய்திகளை அறிவிக்கவும் ஊடகங்களாக விளங்குபவையே பொது சனத் தொடர்பு சாதனங்கள் - Mass Media எனப் படுகின்றன. அதாவது இத்தொடர் பொது சனங்களு டன் தொடர்பு கொள்ளுவதற்கு உதவும் சாதனங்களைக்

பொதுசனத் தொடர்புச் சாதனங்கள் 39
குறிக்கின்றது. ஒரேசமயத்தில் பல்வேறு மக்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய நான்கு தொடர்புச் சாத னங்களை இன்றைய உலகிற் காணலாம். பத்திரிகை, வானுெலி, சலனப்படம், தொலைக்காட்சி ஆகியவை இவையாகும். இவையே இன்று பல்வேறு நாடுகளிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பொதுசனத் தொடர்புச் சாதனங்களாக விளங்குகின்றன.
இத்தொடர்பு சாதனங்களுக்கும் உலகில் ஏற்பட்ட, தொழில்நுட்ப இயந்திர வளர்ச்சிக்குமிடையே தொடர்பு உண்டு. உலகம் அடைந்த தொழில் நுட்ப வளர்ச்சியின் பெறுபேறுகளாகவே இத்தொடர்புச் சாதனங்கள் உருவா கின எனக் குறிப்பிடுவது பொருத்தமானது. பத்திரிகை, வானெலி, சலனப்படம், தொலைக்காட்சி ஆகிய இத் தொடர்புச் சாதனங்கள் யாவும் ஒரே காலத்தில் உருவா கின, பயன்பட்டன என்பதற்கில்லை. இச்சாதனங்களுள் காலத்தால் முந்தியது பத்திரிகையாகும். மனிதன் தனது கருத்துக்களை ஏனையோருடன் பரந்துபட்ட முறையில் பகிர்ந்து கொள்ள உதவிய முதல் தொழில் நுட்ப சாதனம் பத்திரிகை. இது அச்சுக்கலையை அடிப்படை யாகக் கொண்டது. உடலுழைப்பும், நீண்ட காலமும் தேவைப்படும் கையெழுத்துமுறை போலன்றி அச்சிற் பதிப்பிக்கும் முறை இலகுவானதாகவும். ஒரேசமயத் திற் பல்லாயிரம் பிரதிகளை உண்டுபண்ணக் கூடியதாக வும் அமைந்தது. கண்ணுான்றியும் கருத்தூன்றியும் படிக்கவேண்டிய கையெழுத்தைப் போலன்றி அச்செ ழுத்திற் பார்வையைப் படரவிடுதல் மூலமே விஷயத் தைக் கிரகிக்கமுடிந்தது; இத்தகைய அச்சுக்கலையின் புக்கியமான ஒரு விளைபொருளாகத்தான் பத்திரிகை தோன்றியது. இவ்வாறு கூறுவதனுல் 1476ஆம் ஆண்டு முதலாவது அச்சுக்கூடம் அமைக்கப்பட்டதுமே பத்தி ரிகை மூலம் தொடர்பு கொள்ளுதல் உண்டானது என் பது பொருளல்ல. உண்மையில் இங்கிலாந்தில் அச்சு
12

Page 59
90 தமிழியற் கட்டுரைகள்
முறை அறிமுகமாகி ஒன்றரை நூற்றண்டுகளின் பின் னரேயே, செய்திகளுக்கு முக்கியமளிக்கும், ஒழுங்கான் இடைவெளிகளில் பிரசுரமாகும் பத்திரிகை வெளிவந் தது. பின்னர் அச்சுக்கலை பரவிய நாடுகளிலெல்லாம் பத்திரிகையும் பிரதானமான பொதுசனத் தொடர்புச் சாதனமாக வளர்ச்சியடைந்தது.
சலனப்படம், வானெலி, தொலைக்காட்சி ஆகிய
சாதனங்கள் பத்தொன்பதாம் இருபதாம் நூற்ருண்டு களில் தொடர்புமுறைகளில் பெரும் புரட்சியையே ஏற் படுத்தின. இச்சாதனங்கள் மூலம் அறிய அல்லது மகிழ் வடைய விரும்பும் ஒருவருக்கு எத்தகைய தகுதிகளும் தேவையில்லை. உதாரணமாக, பத்திரிகை மூலம் அறிய வேண்டின் வாசிக்கத் தெரிந்திருப்பது அவசியம். ஆனல் வானெலி, தொலைக்காட்சி ஆகியவை மூலம் அறி31 தற்குப் பார்க்கவோ கேட்கவோ முடியுமானுல் போதும். அதாவது மனித புலன்களே போதுமானவை. இவற்றுக் கப்பால் வேறு தேவைகள், வானெலி, தொலைக்காட்சி மூலம் அறிவதற்கு வேண்டியிருக்கவில்லை. மின்னியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றம் இத்தொடர்புச் சாதனங்களின் தோற்றத்துக்கும் வளர்ச்
சிக்கும் காலாயமைந்தது.
இலங்கையில் சமீபகாலமாகத்தான் இப்பொது சனத்தொடர்புச் சாதனங்கள் பயன்பட்டுவருகின்றன. இதற்கு முன்னர் பாரம்பரிய முறையிலேயே தொடர்பு கொள்ளப்பட்டது. (முன்பு திருமண வைபவமானல் வீடுவீடாகச் சென்று அழைத்தலையும் இன்று பத்திரிகை யில் அழைப்பு விடுத்தலையும் உதாரணங்களாகக் கூற லாம்) ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்தில் அச்சுக்கூடங் கள் நாட்டின் பலபகுதிகளிலும் பரவலாக அமைக்கப் பட்டதையடுத்து இங்குப் பத்திரிகைகள் தோன்றின. இவ்வாறு பத்தொன்பதாம் நூற்ருண்டில் வெளியாகிய பத்திரிகைகள் கிறிஸ்தவ சமயப் பிரசாரத்துக்காக, சமய தத்துவங்களை மக்களுக்கு அறிவிக்கும் பணியையே

பொதுசனத் தொடர்புச் சாதனங்கள் 91
முதன்மையாகச் செய்தன. ஆனல் காலப்போக்கில் செய்திகளுக்கு முக்கியமளிக்கும் நிலைமை ஏற்பட்டது.
பத்திரிகைத் துறையையடுத்து மிகமிகச் சமீபகால மாகத்தான் வானெலியும், சலனப்படமும் இங்குத் தொடர்புச் சாதனங்களாகப் பயன்பட்டன. தொலைக் காட்சியோ ஓரிருவருடங்களுக்குள்ளேயே பிரபலம் பெற்றது. எனினும் நாட்டின் சகலபகுதிகளையும் தொலைக் காட்சி எட்டும் நிலை வெகு தூரத்திலில்லை.
பொதுசனத் தொடர்புச் சாதனங்கள் மூலம் ஏற்படும் தொடர்பு முறைக்குக் குறிப்பிட்ட சில பண் புகள் உள்ளன. இவை இத்தொடர்பு முறைக்கே பிரத்தியேகமானவையுமாகும். முதலாவதாக இத் தொடர்பு ஒரு வழித் தொடர்பாகும். வாசிப்பவருக்கோ கேட்பவருக்கோ பார்ப்பவருக்கோ உடனடியாகத் திரும் பப் பேசவோ, மேலும் தெளிவை நாடவோ, கேள்வி கேட்கவோ முடியாது. பார்ப்போர் அல்லது கேட் போரின் உடனடித் தொடர்புக்கு இடமின்றியிருத்த லால் பொதுசனத்தொடர்புச் சாதனங்கள் மூலம் ஏற் படும் தொடர்பு ஒரு பக்கத் தொடர்பாக அமைகிறது.
இரண்டாவதாக இச்சாதனங்கள் தமது வாசகர், பார்வையாளர், கேட்போர் ஆகியோர் எவர் எனத் தேர்ந்தெடுக்கின்றன. வானெலியில் ஒலிபரப்பப்படும் விவசாய நிகழ்ச்சி விவசாயிகளைக் கருத்திற் கொள் கிறது. சிறுவர் நிகழ்ச்சி சிறுவர்களுக்காக அளிக்கப் படுகிறது. இதுபோலவே பத்திரிகைகளும் தமது வாசகர் கூட்டத்தை ஏற்கனவே நிர்ணயம் செய்து அதற்கு ஏற்றது போலச் செய்திகளையும் பொழுதுபோக்குஅம்சங் களையும் அமைக்கின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வரும் ‘ஈழநாடு’ எனும் பத்திரிகை யாழ்ப்பாணத்து மக்களை வாசகர்களாகக் கொள்வதால் அப்பகுதி சார்ந்த செய்திகளை அதிகமாக வெளியிடும். இவ்வாறு ஒரு பக்கம் சாதனங்கள் தமது வாசகரை அல்லது பார்வை யாளரைத் தேர்ந்தெடுக்க, மறுபுறம் வாசகர் அல்லது பார்வையாளர் தமக்கு எது வேண்டும் என்று தேர்ந் தெடுக்கச் சுதந்திரம்உடையவராய் உள்ளனர். வானெலி

Page 60
92 தமிழியற் கட்டுரைகள்
யைக் கேட்பதா அல்லது பத்திரிகையை வாசிப்பத! என்பதை அவர் தீர்மானிக்கிருர்,
மூன்ருவதாக, இச்சாதனங்கள் பரவலான, அதிக அளவான மக்களைச் சென்றடையும் திறன் பெற்றிருப் பதால் மிகக் குறைந்த சாதனங்களே தேவைப்படுகின் றன. முன்பு ஒரு செய்தியை நாடுமுழுக்கத் தெரிவிப் பதாயின் பலர் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கவேண்டி யிருந்தது. ஆனல் வானெலி அறிவிப்பின் மூல! ஒரே நேரத்தில் எல்லாப் பகுதிகளுக்கும் செய்தியைத் தெரிவிக்கமுடியும்.
நான்காவதாக, இச்சாதனங்கள் முடியுமானவரை அதிக அளவு பார்வையாளரை, வாசகரைக் கவரவேண்டி யுள்ளன. இதனல் வாசகரிலும் பார்வையாளரிலும் மிகச்சாதாரண தரத்தோரையே இவை தமது இலக் காகக் கொள்கின்றன. அப்போதுதான் பொதுமக்கள் இச்சாதனங்களை நாடமுடியும். எனவே மிக எளிமை யான, இலகுவான முறையில் செய்திகளைத் தயாரிக்க வேண்டும். தொலைக்காட்சியில் காட்சித் தொகுப்பு அமைதல் விேண்டும். இவற்றில் பயன்படுத்தப்படும் மொழிநடை, மிக எளிதில் புரிவதாகவும் ஏற்கனவே பரிச்சயமானதாகவும் இருத்தல் வேண்டும்.
ஐந்தாவதாக, பொதுசனத் தொடர்புக்கும் இத் தொடர்பு இடம்பெறும் சமூகத்துக்கும் பரஸ்பர தொடர் புண்டு; பரஸ்பர பாதிப்புண்டு. இச்சாதனங்கள் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் செல்வாக்குச் செலுத்துவது மாத்திரமன்றி, சமூகத்தின் மேற்கூறிய நிலைகளாலும் கருத்துக்களாலும் பாதிக்கவும் படுகின் றன. சமூகத்தில் பிரபல்யம் பெற்றிருக்கும் கருத்தோட்டங்கள், எண்ணங்கள் ஆகியவற்றை இத் தொடர்புச் சாதனங்கள் வெளியிடுகின்றன. அதேநேரம் ஒரு குறிப்பிட்ட கருத்தை, பொதுசன அபிப்பிரா யத்தை உருவாக்குவதிலும் பிரதான பங்கு வகிக்கின்றன. இதுகாறும் கூறியவற்றைத் தொகுத்து நோக்கும் போது, பொதுசனத் தொடர்புச் சாதனங்கள் நவீன தொழில் நுட்பவளர்ச்சியினபடியாகத் தோன்றியவை என்பதும், பரந்துபட்ட மக்களை நோக்கிச் செயற்படு கின்றன. என்பதும், அவற்றுக்கெனச் சில பிர்த்தியேக மான இயல்புகள் உண்டென்பதும் பெறப்படும். 9

LIGJ56
இரண்டு
ஈழத்துத் தமிழ்

Page 61

12
தமிழ் வளர்த்த தாமோதரம்பிள்ளை
மயிலங்கூடலூர் பி. நடராசன்
(தோற்றம்: 1832-09-12. மறைவு: 1901-01-01 தந்தையார்: சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை தாயார்: பெருந்தேவி
பாடசாலைப் பரிசோதகரான தந்தையாரிடம் ஆரம்பக்கல்வி. முத்துக்குமாரகவிராயரிடம் உயர்இலக்கண இலக்கியக்கல்வி. தெல்லிப்பழை ஆங்கில கலாசாலேயில் ஆரம்பக்கல்வி. 1844-1852 வரை வட்டு யாழ். சர்வசாத்திர கலாசாலையில் கல்வி. - ஆசிரியர்கள்: கறல் விசுவநாதபிள்ளை, நெவின்ஸ் சிதம்பரப் பிள்ளை, சி. ரி. மில்ஸ், ஆசிரியர்களே பண்டிதர் என அழைத் தனர். Y 一〜”で
1852 இல் கோப்பாய் போதனு வித்தியாசாலை ஆசிரியர் ஆஞர். பார்சிவல் பாதிரியார் அழைப்பில் சென்னை சென்று தினவர்த்த மானி ஆசிரியராஞர். மேல் நாட்டோர்க்குத் தமிழ் பயிற்றீல். பின் சென்னை இராசதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதர் பதவி. 1857 இல் பட்டதாரியானுர். 1871 இல் பீ. எல்." தேர்வு சித்தி. கள்ளிக்கோட்டை இராசாங்க வித்தியாசாலையில் ஆசிரியர். பின் கணக்காளர் பதவி. 1881 இல் இளைப்பாறிஞர். 1887 இல் புதுக்கோட்டை சமஸ்தான நீதிபதி. மொழி ஆய்வு நிறுவனங்களில் உறுப்பினர் பாரத அரசு இராவ்பகதுர் கெளரவப்பட்டம் வழங்கியது)

Page 62
96 தமிழியற் கட்டுரைகள்
ஈழ நாட்டின் தனித்தன்மையான மரபு வழிக் கல்வியும் மேல்நாட்டு நவீன கல்வி முறையும் பத்தொன் பதாம் நூற்ருண்டிலே சங்கமித்தன. இவ்விருவகைக் கல்வி முறைகளும் தந்த நலன்களையெல்லாம் தமதாக் கிக் கொண்டு ஈழ நாட்டிலே சிலர் வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்த தமிழ்த்தொண்டினைப் புரிந்தனர். இவர்களுள் நல்லை நகர் ஆறுமுகநாவலரும், சிறுப்பிட்டி வை. தாமோதரம்பிள்ளையும் குறிப்பிடத்தக்கோர். ‘நல்லை நகர் ஆறுமுகநாவலர் தோன்றியிராவிட்டால் சொல்லு தமிழ், சுருதி, புராணம், ஆகமம், பிரசங்கநெறி அனைத்தும் அழிந்திருக்கும். என்பது பிள்ளையவர்களின் மதிப்பீடு. ‘இலக்கண இலக்கியங்களிலே மிக வல்ல வரும் சென்னை முதல் ஈழ மீருகவுள்ள தமிழ்நாட்டு வித்துவான்களில் தமக் கு இணையில்லாதவருமாகிய தாமோதரம்பிள்ளை' என்பது நாவலரின் நற்சான்று.
இன்று தமிழ்மொழி மிகப்பழைய நூல்களைக் கொண்டதாகவும் அதனுல் உலகப் புகழ் பெற்றதாகவும் விளங்க நாவலரும் பிள்ளையவர்களும் மேற்கொண்ட பதிப்பு முயற்சிகளே காரணமாகும். பனை ஓலை ஏட்டிலே இராம பாணத்துக்கும் கறையானுக்கும் இரையாகி அழியும் நிலையிலிருந்த ஏடுகளைத் தொகுத்து ஆராய்ந்து அச்சிற் பதித்து வெளியிடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட முதல்வர் நாவலர். அவருக்குப் பின்னர் அவ ருடைய ஆசியோடு பதிப்பு முயற்சிகளில் ஈடுபட்டவர் சி.வை.தாமோதரம்பிள்ளை. பிள்ளையவர்களே தமிழ்த் தாத்தா எனப்போற்றப்படும் உத்தமதானபுரம் வே.சாமி நாதையருக்குப் பதிப்புத்துறையில் முன்னேடியாகவும் ஆளுக்கமூட்டுபவராகவும் அமைந்தார். பழந் தமிழ் நூல் களை அச்சிற் பதித்து வெளியிட்டு அவற்றுக்குச் சாகா வரம் அளித்த மும்மூர்த்திகள் என இம்மூவரையும் போற்றுவர்.
பிள்ளையவர்களின் தமிழ்ப்பணி பன்முகப்பட்டது. எனினும், அவருக்குப் பெருமையும் புகழும் தருவது

தமிழ் வளர்த்த தாமோதரம்பிள்ளை 97
அவர் மேற்கொண்ட நூற்பதிப்புப் பணியேயாகும். 1852-ஆம் ஆண்டளவில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் விரிவுரையாளராய் இருந்த போதே, தமது இருபதாம் வயதில் பிள்ளை நீதிநெறி விளக்க உரைப் 1.திப்பின்மூலம் பதிப்பாளர் ஆனர். தமிழகத்துக்குச் சென்று அங்குப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்த போது ஏட்டு நூல்களைத் தேடித் தொகுப்பதிலும் ஆராய்வதிலும் ஈடுபட்டிருந்தார். பதிப் புத்துறையில் ஆறுமுகநாவலருக்குத் துணை செய்தார். 1868 இல் நாவலர் ஆராய்ந்து கொடுத்த தொல்காப்பியம் சொல்லதி காரம் சேணுவரையருரையை நாவலரின் வழிகாட்டலுடன் அவரது மேற்பார்வையிற் பதித்தார். பிழையின்றி நூல்களைப் பதித்தலிற் புகழ் பெற்ற நாவலரிடம் தாம் பெற்ற நுணுக்கமான பயிற்சியே பிள்ளையின் பிற்காலப் பதிப்புக்களின் சிறப்புக்குக் காரணமாயமைந்தது.
நாவலருடைய மறைவுக்குப் பின்னர், பிள்ளையவர் கள் தாமே பதிப்பு முயற்சிகளில் ஈடுபட்டார். வீரசோழி யம் (1881), இறையனுர் களவியலுரை (1883), தொல் காப்பியம் பொருளதிகாரம் நச்சிஞர்க்கினியருரை (1885), இலக்கணவிளக்கம் (1889), தொல்காப்பியம் எழுத்ததி காரம் நச்சிர்ைக்கினியருரை (1891), தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினுர்க்கினியருரை (1892) ஆகிய இலக் கண நூல்களையும் தணிகைப்புராணம் (1883), கலித் தொகை (1887), சூளாமணி (1889) ஆகிய இலக்கியங் களையும் அச்சிற் பதித்தார். 1897 இல் அகநானூறு மணிமிடை பவளப் பகுதியைப் பரிசோதித்துப் பதிக்க முயன்று கொண்டிருந்தார். எனினும் உடன லமின்மை பாலும் 1901 தை முதலாந் திகதி இயற்கையெய்திய தலுைம் அகநானூற்றை அவர் அச்சிற் பதிக்க முடியா மற்போய்விட்டது. அகநானுாற்றை மட்டுமன்றி ஏனைய ாட்டுத்தொகை நூல்களையும் பிரசுரிக்கும் நோக்குடன் ஆராய்ந்தார். "இதிற் புறநானூற்றுரை ஈற்றில் 14
13

Page 63
98 தமிழியற் கட்டுரைகள்
செய்யுளும் பரிபாடல் பூரண பிரதியும் பதிற்றுப்பத்தில் முதற்பத்தும் கடைசிப் பத்தும் இன்னும் அகப்பட வில்லை. என்று குறிப்பிடுவது அவரது இடைவிடாத தேடுதல் முயற்சியைக் காட்டுகிறது.
அன்றைய நிலையிற் பதிப்பு முயற்சி பகீரதப் பிர யத்தனமானது. w
‘தூக்கினலன்ருே தெரியும் தலைச்சுமை. பரிசோத சிைரியர் படுங் கஷ்டமும் ஓர் அரிய பழைய நூலைச் சுத்த மனச் சாட்சியோடு பரிசோதித்து அச்சிட் டார்க்கன்றி விளங்காது. எனக்கு வே. சாமிநாதை யரும் அவருக்கு நானுமே சாட்சி’ - என்ற கூற்றுப் பிள்ளையவர்கள் பட்ட இன்னல்களை விளக் குவதாகும்.
இவற்றிைவிடப் பண நெருக்கடியும் பெரிதாய் இருந் தது. அதுபற்றிப் பிள்ளையவர்களே உளம் நெகிழ்ந்து வருமாறு கூறுகிருர் :
“தேடுவாரும் பரிபாலிப்பாருமின்றி ஒன்றென்முய் அழிந்து போகும் அருமையான பழைய தமிழ் நூல் களைப் பாதுகாத்தற் பொருட்டு அடியேன் ஏட்டுப் பிரதிகள் தேடிப் பரிசோதித்து அச்சிடுவதிற் புத்த கங்கள் விலைபோகாமல் நேரிடும் கஷ்டம். பணக் குறைவினல் எனது முயற்சி மிகத் தாமசப்பட்டு நடைபெறுகின்றது. லோகோபகாரமாய் யான் கையிட்ட இத்தொழிலைத் தற்காலம் சர்வகலா சோதனைச் சங்கத்தில் எனக்கு வரும் பரீட்சா நிவேதனம் ஒன்றைக்கொண்டே நடத்திவருகின் றேன். அது பிரதிகள் தேடி அப்பப்போ யான் செல்லும் பிரயாணங்களுக்கே முன்னுே பின்னே என்று கட்டிவருகிறது. நூற்பதிப்பு முயற்சியிற் பிள்ளையவர்களின் நோக்கும், தன்னை ஒறுத்துத் தமிழை வளர்த்த பாங்கும் நன்கு புலப்படுகின்றன.

தமிழ் வளர்த்த தாமோதரம்பிள்ளை 99
பிள்ளையின் நூற்பதிப்புப் பணியிலே குறிப்பிடத் தக்க மற்றேர் சிறப்பு அவரது பதிப்புரைகளாகும். நவீன தமிழ்க் கவிதையின் முன்னேடி என்று போற்றப் படும் மகாகவி பாரீதியாரையே அவரது பதிப்புரைகள் பெரிதும் கவர்ந்துள்ளன. சின்னச் சங்கரன் கதையில்,
*சென்னப்பட்டணத்தில் சி. வை. தாமோதரம் பிள்ளை என்று ஒரு மகாவித்துவான் இருந்தாரே, கேள்விப்பட்டதுண்டா? அவர் சூளாமணி என்னும் காவியத்துக்கு எழுதிய முகவுரையை யாரைக்கொண் டேனும் படிக்கச் சொல்லியாவது கேட்டதுண்டா?
என்று ஒரு பாத்திரத்தின் மூலம் பிள்ளையின் பதிப்பு ரைச் சிறப்பைப் பாரதியார் எடுத்துக் காட்டுகிருர். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் தெ. பொ. மீனுட்சி சுந்தரனுர், புலவர் சொ. முருகேசமுதலியார் முதலி யோர் பிள்ளையின் பதிப்புரைகள் நூலாக வெளிவர வேண்டும் என்று விரும்பினர். fo
"சி.வை.தா. பதிப்புரைகளைத் தொகுத்துப் புத்தக் உருவத்தில் தாமோதரம் என்ற பெயரில் வெளியிடு தல் நன்று. பதிப்புரைகள் அவ்வக்காலத் தமிழ்ச் சரித்திரமாய் உயர்வகுப்பு மாணவர்க்கு இன்றிய மையாதனவாய் அமையும்’ என்ற பண்டிதமணியின் விருப்பம் நிறைவேற்றப்பட் டுள்ளது. தாமோதரம் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சிறப்புமாணவர்க்குப் பாட நூலாய் அமைந் துள்ளது.
கோல்ட்வெல் ஐயரிலிருந்து காலநிதி ஆ. வேலுப் பிள்ளை வரை தமிழிலக்கிய வரலாற்றைக் கால அடிப் படையில் பாகுபாடு செய்துள்ளனர். நிரம்பிய தமிழ்ப் புலமையும் உலக இலக்கிய வரலாறு பற்றிய அறிவும் நிறைந்த தமிழர் என்ற வகையில் இலக்கிய வரலாற்றுக் காலப் பாகுபாட்டை மேற்கொண்ட முன்னேடி பிள்ளை

Page 64
100 தமிழியற் கட்டுரைகள்
யவர்களே. 1881 ஆம் ஆண்டு தாம் பிரசுரித்த வீர சோழியப் பதிப்புரையில் தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலத்தை எட்டுக் கூறுகளாக வகுத்துள்ளார். அபோத காலம் (வாய்மொழி இலக்கிய காலும்), அட்சரகாலம் (ஆதி இலக்கிய காலம்), (முன்) இலக்கண காலம், சமுதாய காலம் (முச்சங்ககாலம்), அநாதார காலம் (புத்தர் காலம்), சமண காலம், இதிகாச காலம், ஆதீன காலம் என்பன அவர் வகுத்த காலப்பாகுபாடுகள். இக்காலப் பாகுபாடு இலக்கியத்தின் முக்கிய உந்து சத்திகளை அடிப் படையாகக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டாலும் முன்னேடி முயற்சி என்ற வகையிற் சிறப்புடையது.
பதிப்பாசிரியர், இலக்கிய வரலாற்று ஆசிரியர் என்ற வகையில் மட்டுமன்றி நூலாசிரியர் என்ற வகை யிலும் தாமோதரனர் தமிழ்ப்பணி ஆற்றியுள்ளார். இவர் கட்டளைக் கலித்துறை என்ற நூலே யாத்தார். சூளாமணியை உரை நடையில் எழுதி வெளியிட்டார். செய்யுளும் உரையும் கலந்த சைவமகத்துவம் என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். நட்சத்திரமாலே என்பது இவர் எழுதிய பிறிதொரு நூல். நாவலர்ை அடியொற்றி 6 ஆம் 7 ஆம் பாலபாடம் என்னும் வாசக நூல்களையும் வெளியிட்டார்.
ஆறுமுக நாவலரை உரைநடையின் தந்தை எனப் போற்றுகிறது தமிழுலகம். நாவலரின் வாரிசான பிள்ளையும் உரைநடை ஆற்றல் மிக்கவராய் விள்ங்கினர்.” பதிப்புரைகளும் சூளாமணி வசனமும் பிறவும் இவரது உரை நடையாற்றலுக்குச் சான்றகும். இவரது உரை நடை பொருளுக்கேற்ப இறுக்கமானதாகவோ எளிமை யானதாகவோ அமைந்தது. இலக்கண விளக்கப் பதிப் புரை மிகவும் திட்டமும் தருக்கவாதமும் மிக்கதாயுள் ளது. கலித்தொகைப் பதிப்புரை நாவலரின் கண்டன நடையை ஒத்ததாகவுள்ளது. பதிப்புரைகளில் நூற் பதிப்பு அநுபவங்களை எடுத்துரைக்கும்போது வாசகரு டன் நேரே உரையாடுவதுபோன்ற எளிய நடையைப்

தமிழ் வளர்த்த தாமோதரம்பிள்ளை 101
பயன்படுத்தியுள்ளார். நாவலரும் இதுபோலவே பொரு ளுக்கும் நூலின் வாசகர் தரத்துக்குமேற்ற நடையைப் பயன்படுத்தியிருப்பது நோக்கத் தக்கது.
காலந்தோறும் மாணவர்களுக்குக் கல்வி பயிற்றி அவர்களை அறிஞர்களாக்கித் தமிழ்க் கல்விப்பாரம்பரி யத்தைக் காப்பதும் சிறந்த தமிழ்ப்பணியாகும். நாவலர் சிதம்பரத்திலும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு சிற்றுார் களிலும் சைவப்பிரகாச வித்தியாசாலைகளை நிறுவிக் கல்விப்பணி யாற்றியது போலத் தாமோதரனரும் 1878 இல் ஏழாலையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவிக் கல்விப்பணி ஆற்றினர். முருகேச பண்டிதர் தலைமையாசிரியராகவும் சுன்னகம் குமாரசுவாமிப்புலவர் ஆசிரியராகவும் அமர்த்தப்பட்டனர். முருகேசபண்டி தரின் பின் குமாரசுவாமிப் புலவர் தலைமையாசிரியரா (ணுர். தொல்காப்பியம், நன்னூல், முல்லையந்தாதி, கம்ப ரந்தாதி, தணிகைப்புராணம், கந்தபுராணம், இரகு வம்சம் முதலிய நூல்கள் ஏழாலைப் பாடசாலையிற் கற்பிக்கப்பட்டன. 1878 இல் முதன் முதலில் தாமோ தரனர் வேண்டுகோட்படி நாவ்லர் பெருமான் அப்பாட சாலை. மாணவர்களைப் பரீட்சித்தார். அவரைத் தொடர்ந்து முருகேச பண்டிதர், ந. ச. பொன்னம்ப்ல் பிள்ளை, சபாரத்தின முதலியார், சரவணமுத்துப் புலவர் முதலியோர் காலத்துக்குக் காலம் தேர்வுகளை நடத்தி மாணவர் தேர்ச்சிக்குச் சான்று வழங்கினர். குமாரசுவா மிப் புலவரின் நுண்மாண் நுழைபுல விருத்திக்குப் பிள்ளையின் பாடசாலையே சிறந்த களமாயிற்று. வித்து வான் ப. சிவானந்தையர் முதலிய பேரறிஞர்களை உருவாக் கியதும் அப்பாடசாலையில் புலவர் வழங்கிய கல்வியே. இருபத்திரண்டு ஆண்டுகள் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டுப் பாடசாலையை நடத்திஞர். நோய்வாய்ப் பட்ட பின்னர் 1898 இல் பாடசாலையை மூட நேர்ந் தது. புலவரும் பல மாதங்கள் தொடர்ந்து வேதனம் வழங்கப்படாத நிலையிலும் தமிழ்ப்பணி செய்கிருேம் என்ற நோக்குடன் கற்பித்து வந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.

Page 65
102 தமிழிய ற் கட்டுரைகள்
பிள்ளையவர்கள் ஆரம்பத்தில் தமது தந்தையாரிட மும் பின்னர் சேனதிராச முதலியாரின் சமகாலத்தவரும் நண்பருமான சுன்னகம் முத்துக்குமார கவிராயரிடமும் கல்வி கற்றுப் பேரறிஞரானர். பின் தெல்லிப்பழை அமெரிக்கமிஷன் வித்தியாலயத்தில் ஆங்கிலக்கல்வி பயின் றர். 1844இல் வட்டுக்கோட்டைச் சர்வசாத்திரகலாசாலையில் சேர்ந்து 8 வருடம் பயின்று கணிதம், தமிழ், ஆங்கிலம், தத்துவம், வானியல் ஆகிய பாடங்களில் சிறப்புச் சித்தி பெற்ருர், ஆசிரியராகிய நெவின்ஸ் பிண்டிதன் என்றே இவரை அழைப்பார். சென்னை சென்ற இவர் முத லில் பத்திராதிபராகவும் பின்னர்,ஆசிரியராகவும் பணி யாற்றினர். சென்னைப் பல்கலைக்கழக முதல் நிலைத் தேர்விலும் பட்டத்தேர்விலும் சித்திய்ெய்திஞ்றர். சட் டத்துறையிலும் பட்டம் பெற்ருர், பல்வகைப்பட்ட அறிவே இவரது பல்வேறு தமிழியற் பணிகளுக்கும் அடிப்படை ஆதாரமாக அமைந்தது.
சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள், கலாசாலை ஆசிரியர், பதிப்பாசிரியர், நூலாசிரியர், பத்திராதிபர், பாடசாலை நிறுவுநர், உரைநடை வல்லார், இலக்கிய வரலாற்ருசிரியர் முதலிய பல நிலைகளில் நின்று தமிழ்ப் பணியாற்றியுள்ளார். பிள்ளையவர்களின் பன்முகப்பட்ட தமிழ்ப்பணிகளை மதிப்பிடும்போது,
*சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களது சரித்திரம்
தமிழ்ச் சரித்திரமாகவே முடிந்திருக்கிறது’ என்று பண்டிதமணி கூறுவது மிகச் சிறந்த மதிப்பீடே என்பதில் ஐயமில்லை. O

13
நாவல் இலக்கிய மூலவர் அறிஞர் சித்திலெவ்வை
அ. ஸ. அப்துஸ்ஸமது
சித்திலெவ்வை 1838 ஜூலை 11இல் கண்டி மாநகரிற் பிறந்தவர். இவரது தகப்பஞர் எம். எல். சித்திலெவ்வை; இலங்கையின் முதலாவது முஸ்லிம் சட்டத்தரணியாவார். இவரும் தந்தையைப் போல் சட்டத்தரணியாகப் பயின்றவர். மார்க்கக் கல்வியையும் அறபு மொழியையும் கஸாவத்தை ஆலிம் அப்பாவிடம் கற்றர். இவரது பெயர் முஹம்மது காசிம் மரைக்கார் என்பதாகும். எம். சி. சித்திலெவ்வை என்று பெயர் வழங்கப்பெற்ற இவருக்கு ‘ஆரிபுபில்லா’ என்னும் கெளரவப்பட்டமும் உண்டு. h−
1862 இல் மாவட்ட நீதிமன்றத்திலும் 1864இல் உயர் நீதி மன்றத்திலும் சட்டத்தரணியாகவும், 1874இல் கொழும்பு முனிசி பல் நீதிபதியாகவும் கடமையாற்றிஞர். இவரது மனம், சட்டத் தொழில் செய்வதைவிடச் சமூகத்தொண்டும், அறிவியற்பணியும் செய்வதிலேயே ஆர்வம் கொண்டது. இதன் விளைவாக 1891இல் கொழும்பில் ‘முஸ்லிம் கல்விச் சங்கம்’ ஒன்றை அமைத்தார். அப்பொழுது எகிப்திலிருந்து பிரிட்டிசாரால் தேசப்பிரஷ்டம் செய் யப்பட்டு இங்கு வந்த அறபி பாஷா என்ற பெரியாரும். இவ ருக்கு உதவியாக இருந்தார். முதலில் கொழும்புபுதிய சோனகத் தெருவில் மத்ரசதுல் கைரியாவையும் மருதானையில் மத்ரசதுஸ் ஸாஹிருவையும் (சாஹிரு கல்லூரி) அமைத்தார். கண்டியில் முஸ்லிம் பெண்களுக்கென ஒரு பாடசாலையையும் ஸ்தாபித்தார் தொடர்ந்து கம்பளை, பொல்காவல, உடுநுவர, கேகால, குருநாகல் ஹட்டன், நுவரெலியா, பதுளே முதலாம் இடங்களிலும் முஸ்லிம் பாடசாலைகளே அமைத்தார்,

Page 66
104 தமிழியற் கட்டுரைகள்
சட்டசபையில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் இடம்பெறவேண்டு மென்று பாடுபட்டார். முஸ்லிம் நேசனிலும் மற்றும் ஆங்கில இதழ்களிலும் இது பற்றிக் கட்டுரைகள் எழுதினுர். இதன் விளை வாக ஜனுப். ஏ. எல். எம். ஷரீபு சட்டசபை உறுப்பினராக நிய மனம் பெற்றர். அறிஞர் சித்திலெவ்வை தம் அறுபதாவது வயதில் 1898 பெப்ருவரி 5இல் இறையடி எய்தினுர்)
ஈழத்துத் தமிழ் உரை நடைவரலாற்றில் அவசியம் குறிப்பிடப்படவேண்டிய ஒருவர் அறிஞர் சித்திலெவ்வை ஆவர். பத்திரிகை ஆசிரியராகவும், புாடநூல்கள், நவீனம், சரித்திரம், ஆன்மீக நூல்கள் என்பனவற்றின் ஆசிரியராகவும் இருந்து அவர் ஆற்றிய பணிகள் அளப் பரியன. 19ஆம் நூற்றண்டில் நிலவிய ஆங்கிலக்கல்வி முறையும் ஆங்கில இலக்கியங்களும் புதிய மதிப்பீட்டா ளர்களை உருவாக்கத் தொடங்கின. தாம் கொண் கருத்தைப் புல திறப்பட்ட மக்களின் மத்தியில் நிலை யூன்றச் செய்வதற்கு, செய்யுள் பிரபந்த முறைகளை விட, உரைநடையாக்கம் இலகுவானதும், மக்களிடையே மாற்றங்களை உண்டாக்கும் தன்மையதும் என்பதும் அப்போது மனதிற் கொள்ளப்பட்டது. எனவே, இக் காலப்பகுதியில் ஆறுமுகநாவலரின் இலக்கியப் பங்களிப் புகள் எவ்விதம் சமூக அரசியல் கலாசார விழிப்பு ணர்ச்சியொன்றை ஏற்படுத்திற்றே அவ்விதமே அறிஞர் சித்தி லெவ்வையின் இலக்கியப் பணியும் முஸ்லிம் சமு தாயத்திடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்திற்று.
ஆறுமுகநாவலர், அறிஞர் சித்திலெவ்வையினும் பதினறு வயது மூத்தவர். அவரது பணியினையும் அறி வாற்றலையும் சித்திலெவ்வை பல இடங்களில் வியத் தோதி நிற்கின்றர். ஆதலால் அவர் வழி இவர் நின்று பணியாற்றினர் என்பதை ஜஅப் எஸ். எம். கமால்தீன் பின்வருமாறு குறிப்பிடுகிருர்:
'சித்திலெவ்வையின் இலக்கிய ஆக்கங்களை ஆய்வ
தற்கு முற்படும்போது நாம் ஆறுமுகநாவலர் அவர் களது உரை நடை ஆக்கங்கள், சமகாலத் தமிழறி

அறிஞர் சித்திலெவ்வை 1ი5.
ஞரிடையே ஏற்படுத்திய தாக்கத்தினை எளிதில் உணரக்கூடியதாக உள்ளது. . சிறப்பாகச் சிக்கி லெவ்வை அவர்கள் பல வகைகளில் நாவலர் அவர் களது இலக்கிய வழி நின்று பணிபுரிந்துள்ளார். பத்தொன்பதாம் நூற்ருண்டில் எழுந்த சமய, கலாசார, அரசியல் விழிப்புணர்ச்சியே நாவலர் , சித்திலெவ்வை போன்றேரின் உரைநடை ஆக்கங் களுக்கு உந்து சத்தியாக அமைந்தது எனலாம்' (-உரைநடை வளர்ச்சியில் சித்திலெவ்வையின் பங்களிப்பு)
அறிஞர் சித்திலெவ்வை சிறந்த கல்விமான்; சமு தாய் உயர்ச்சிக்காகத் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்; தம் செல்வத்தினைச் செலவு செய்த வர்; முஸ்லிம்களிடையே அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர். அவர்களது கல்வி வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர். இந்தப் பணிகளுக்கெல்லாம் ஆதார பலமாக அவர் கைக்கொண்டது பேணு முனை யையேயாகும். ஒரு போர் வீரனது வாள்முனை சிந்தும் இரத்தத்தை விட, ஒர் எழுத்தாளனது பேணுமுனையி லிருந்து சொட்டும் மை புனிதமானது என்ற நபிநா யுகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியை மனத்திற் கொண்டு இவர் தம் பணியை ஆற்றத் தொடங்கியதன் விளைவாக இவர் தமிழிலக்கிய வரலாற்றிலும் இடம் பெற்றுவிட்டார். .
‘முஸ்லிம்களுள் முதல் உரை நடை ஆசிரியர்கள், கஸஸால்அன்பியா என்னும் நபிமார் சரித்திரம் எழுதிய பவள மாநகர் ஜான் சாகிபு லெவ்வை ஆலிம் என்பவரும் அதே ஊரைச்சேர்ந்த முகம்மதுலெவ்வை ஆலிம் என்பவருமாவர்'. என்று அறிஞர் ஆர். பி. எம். கனி இஸ்லாமிய இலக்கியக் கருவூலம் என்ற நூலிற் குறிப்பிடுகிறர். இவ்விருவருக் கும் பிறகு சிறந்த உரை நடை ஆசிரியராக விளங் கியவர் அறிஞர் சித்திலெவ்ன்வ ஆவார். இவர் அறபு.
14

Page 67
106 தமிழியற் கட்டுரைகள்
ஆங்கிலம், தமிழ், சிங்களம் என்னும் நான்கு மொழி யும் தெரிந்தவர். தம் கல்வியை ஆங்கில மொழி மூலமே கற்றுச் சட்டத்தரணியாகவும் நீதிபதியாகவும் கடமை யாற்றியவர். எனினும் இவரிடத்தமைந்த இலக்கண சுத்தமான தமிழ் அறிவும் ஆற்றலும் வியக்கத்தக்கன வாக இருந்தன. பத்திரிகை ஆசிரியராகவும் நாவலாசிரி பராகவும் விளங்கும் அளவுக்குத் தமிழ் அறிவு கைவரப் பெற்றவராகவும் திகழ்ந்தார்.
இவ்ருடைய தமிழ்ப்பணிகள் பன்முகப்பட்டவை. பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிருர்; அருமையான ஞானநூல்களை எழுதியுள்ளார்; பாடநூல்களை ஆக்கி அளித்தார்; சரித்திர நூல்களையும் தந்தார்; நாவல் ஒன்றையும் எழுதி உதவினர். இவை ஒவ்வொன்றிற் கும் வெவ்வேறுபட்ட அறிவும் ஆற்றலும் இவரிடத்தே அமைந்திருந்ததுபோல, மொழிநடை கைவந்தவராக வும் விளங்கினர். இவர் முஸ்லிம் நேசன் (1882) என்ற பத்திரிகையைத் தொடங்கி ஆறு வருடங்கள் நடத் தினர். இது முஸ்லிம்களின் கல்வி, அரசியல், சமூகம் முதலியவற்றை வளர்ப்பதை நோக்கமாகக் கொண் டது. இதுபற்றி இவர் குறிப்பிடுகையில்,
'இத் தேசத்திலுள்ள முஸ்லிம்கள் கல்வி அறிவில் அதிக அசட்டையாக இருக்கிருர்கள். மற்றுஞ் சாதி யார்களெல்லோரும் நாளுக்குநாள் கல்வியிலும் சீர்திருத்தத்திலும் தேறி வருகிறர்கள். இதற்காக நாம் உலமாக்கள், கல்விமான்களுடைய உதவி யுடனே ஒருபத்திரிகையைப் பிரசுரஞ் செய்து வருகிருேம். ஆனல் அப்பத்திரிகையிலே கல்வியின் மேன்மைகளை எவ்வளவு சொன்னலும் அதைக் குறித்து எவ்வளவூன்றினலும் அவைகள் பலன் கொடுப்பது சுணக்கமாக இருக்கிறது.'
என்கிறர். இதிலிருந்து அப்பத்திரிகையின் நோக்கம் என்னவென்பது புலனுகிறது.

அறிஞர் சித்திலெவ்வை 107
ஞானதீபம் (1892) ஆன்மிக வளர்ச்சியை நோக்க மாகக் கொண்டது. சமூகத்தில் வேரூன்றி இருந்த சமயத்திற்கு முரணுன பழக்க வழக்கங்கள் பற்றியும் ஆன்மீக வாழ்வின் தத்துவார்த்தங்கள் பற்றியும் இவர் இதில் எழுதினர். இவ்வாறு ஆன்மிக இரகசியங்களை எடுத்துக் காட்டி எழுதியதைச் சிலர் விரும்பவில்லை. அவ்வாறு விரும்பாதோரில் ஆலிம்களும் இருந்தனர். இவ்வேளை ஆலிம்களைக் கண்டித்து எழுதவும் இவர் தவறவில்லை. 'ஆலிம்களில் இரண்டு வகையினரென்றும் ஒருவகை "உலமா உல் ஆகிரு’ வென்னும் மறுமையைப் பற்றிப் பேசுகிறவர்களென்றும், மற்றது 'உலமா உஸ்ஸ9உ' என்னும் பொருளையும், கெடுதியையும், சம்பாதிக்கிறவர்களென்றும், இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்களின் கருத்தொன்றை எடுத்துக் காட்டினர். இதிலிருந்து இவர் பாமர மக்களிடையே அறிவையும் உணர்ச்சியையும் ஏற்படுத்த முயன்ற அதேவேளை,அறிவு சார்ந்த ஒரு வர்க்கத்தினரிடையே அறிவின் தெளிவை ஏற்படுத்தவும் பாடுபடவேண்டி இருந்தது. ஞான தீபத்தை இரண்டு ஆண்டுகள் இவர் நடத்தினர்.
” நாவலரைப் பின்பற்றி இவர் முஸ்லிம் மாணவர் களுக்கெனப் பாடநூல்களை எழுதினர். அவைகளுள் அறபு கற்கும் மாணவர்களுக்கென அறபு இலக்கண சம்பந்த மான நூல்கள் ஒரு பகுதி. இவ்வரிசையில் 'ஹிதாயத் துல் காசிமியா’, ‘துஹபதுந் நஹல்" என்பன இரண்டு நூல்களாகும். மற்றவை, தமிழ்ப் பாடசாலைகளில் கற் கும் மாணவர்களுக்கான வாசிப்பு, இலக்கணம் சம்பந் தப்பட்டனவாகும். முதலாம் வகுப்பு முதல் ஜந்தா: வகுப்புவரை எழுதப்பட்ட இந்நூல்கள் பற்றிச் சித்: லெவ்வை அவர்கள் குறிப்பிடுகையில் ‘முதலில் நாடி சிறு பிள்ளைகளின் உபயோகத்திற்காக முதலாவது புத்த கத்தை எழுதினேன். இந்த நூலில் எளிய சொற்களும், வாக்கியங்களும் உள்ளன. இந்த முறையை அநுசரித்தே இரண்டாவது, மூன்றுவது, நான்காவது, ஐந்தாவது

Page 68
106 தமிழியற் கட்டுரைகள்
பாடநூல்களையும் எழுதினேன் இரண்டாவதாக நான் ஓர் இலக்கண நூலை மூன்று பாகங்கள் கொண்டதாக எழுதினேன். இவையெல்லாம் இலங்கைப் பாடசாலை யில் பயிற்றப்படுகின்றன’ என்கிருர்,
நாவலரைப்பற்றி அறிஞர் சித்திலெவ்வைக்கு உயர்ந்த எண்ணமும் மதிப்பும் உண்டு. அவர் சென்ற வழியிலேயே இவரும் சென்று இப்பாடநூல்களை எழு தினர். அதஞ்ேடு, இவருக்குள்ள இலக்கண ஞானத்தை யும் பின்வரும் பந்தியொன்று எடுத்து க்காட்டி நிற்கின் றது. அப்பந்தி வருமாறு:
'இற்றைக்குச் சில காலத்துக்கு முன் சரவணப் பெருமாளேயர் நன்னூலுக்குக் காண்டிகை உரை செய்தார்.அதனையே இப்பொழுது நன்னூல் உரை யாகப் படித்து வருகிருர்கள். அதிலுள்ள சூத்திரங் களும் உரைகளும் அதிகப் பிரயாசைப்பட்டுக் குரு மூலமாகப் படித்தாலன்றி, அவைகளை நன்ருய் அறிந்து, அவதானிக்கக் கூடாதவைகளாக இருக் கின்றன. ஆ ைல் யாழ்ப்பாணத்திலே கீர்த்தி பெற்றிருந்த பூரீலபூரீ ஆறுமுகநாவலர் இலக்கணச் சுருக்கம், இலக்கண வினவிடை என்னுமிலக்கண நூல்களைச் செய்தார். அவைகள் இலேசாயிருத் தலாற் பெரும்பாலும் வாசித்தறியக்கூடிய நூல் களாம்."ஃ −
மேற்கூறிய பந்தி சித்திலெவ்வையின் உரைநடைக் கும் உதாரணமாக விளங்குகிறது. ஆனல் “சுறுத்துஸ் ஸலாத்' என்னும் மார்க்க சம்பந்தமான நூல் ஒன்றி லும், "மெய்ஞ்ஞானப் பேரமுதம்‘ என்னும் பொருள் பட்ட "அஸ்றுல் ஆலம்' என்னும் நூலிலும் இவர் கையாண்ட நடை சற்று வேறுபட்டது. இஸ்லாம் சம் பந்தமான மரபுச் சொற்களையும் கலைச் சொற்களையும் இவற்றில் உபயோகிக்கவேண்டி இருந்ததால் கணிசமான அறபுச் சொற்கள் கலந்த ஒரு வசன நடையாக அவை இருந்தன. ” அந்த நடையில் இக்வான்கள் ( - சகோ

ஆறிஞர் சித்திலெவ்வை 109
தரர்கள், சிர்று (-இரகசியம்), றஹ்மத் ( அருள்), ஸ்மான் ( யுகம்), பஞவுடைய மக்காம் ( பொய் யான நிலை) இவ்வாரு ன சொற்களைக் கையாண்டு செல் கிருர் , “அஸ்ருறுல் ஆலம் பல்வேறு இஸ்லாமிய ஞானவான்களின் கருத்துக்களையும் தொகுத்து, ஞான வழிச் செல்வர்களுக்கு ஒர் பேரமுதமாகப் படைக்கப் பட்டதாகும். பன்னூலாசிரியர் அறிஞர் ஆர். பி. எம். கனி இதனைப் புதிய பதிப்பாக வெளியிட்டுள்ளார். இது பற்றி இவர் குறிப்பிடுகையில் 'நான் வாசித்த தத்துவ நூல்களுள் என்னை மிகக் கவர்ந்தது அறிஞர் சித்திலெவ் ைேவயின் அஸ்ருறுல் ஆலம் ஆகும்.’ என்கிருர்,
“சுறுத்துஸ்ஸலாத்" என்னும் இஸ்லாம் சம்பந்த மான நூல் அறபுத் தமிழில் எழுதப்பட்டதாகும். அதா வது அக்காலத்தில் முஸ்லிம்களில் அநேகர், குர் ஆனை அறபு எழுத்து முறையாகவும், தமிழைப் பேச்சு முறை யாகவுமே அறிந்திருந்தனர். எனவே இவர்களுக்கு விளங்கும் படியாக அறபெழுத்தில் தமிழ் மொழியை எழுதும் ஒரு வழக்கம் இருந்தது. இம்முறையில் அச்ச கங்கள் அமைத்து இஸ்லாம் சம்பந்தமான நூல்களை அச்சிட்டு வந்தனர். இதில் கணிசமான அளவு அறபுச் சொற்களே கலந்திருக்கும். இத்தகைய அறபுத் தமிழ் நூலாகக் “சுறுத்துஸ் ஸலாத்' அமைந்திருந்தது.
பேரறிஞர் சித்திலெவ்வை பத்திரிகை ஆசிரியராக, சமய அறிஞராக, தமிழ் மொழி வல்லாளராக, இருந்த தோடமையாது சிறந்த சரித்திர ஆசிரியராகவும் இருந் தார். அவரியற்றிய சரித்திர நூல்களாவன: துருக்கி கிரேக்க சரித்திரம், உமறுபாஷா யுத்த சரித்திரம், இலங்கைச் சோனகர் சரித்திரம் என்பனவாகும். இவை சரித்திரப் பாங்கான ஒருவகை விறுவிறுப்பான நடை யில் அமைந்திருந்தன. ஈழத்து முஸ்லிம்களின் வரலாறு பற்றி இது வரை வெளியான ஒரேயொரு நூல் இலங்கைச் சோனகர் சரித்திரமாகும்.

Page 69
.11Ս தமிழியற் க ட்டுரைகள்
உமறு பாஷாவின் யுத்தசரித்திரத்தில் சித்திலெவ்வை கையாண்டுள்ள பல சொற்கள், சிறப்பாக ஈழத்து முஸ் லிம்களிடையே வழங்கும் பேச்சு மொழியாக இருப்பது கவனிக்கத்தக்கது. அவ்வாருன சிலசொற்கள் வருமாறு: வலோற்காரம் (பலாத்காரம்), பிகில் (ஊதுகுழல்), அழற்சி (ஆத்திரம்) துலாம்பரம் (தெளிவு), செந்தழிப்பு (செழிப்பு), உத்தரங்கள் (மறுமொழிகள்), திடுக்காட்டம் (அதிர்ச்சி), சத்துராதி (எதிரி), சக்கிருத்தார் (காரிய
தரிசி), வீதிறு (கண்ணுடி), தவறண (மதுக்கடை).
ஜனுப் சித்திலெவ்வையின் பணியும் ஆற்றலும் பன் முகமாகச் செயல்பட்டவாறு பெரிதும் வியப்புக்குரிய தாகும். அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளிலெல்லாம் அவர் வெற்றியே பெற்ருர், தென்னிந்தியாவில் தென் ஞ லிராமன் என்னும் விகடகவியைப்பற்றி நகைச்சுவை யான பல கதைகள் உண்டு. இவனைப்போல் அறபு நாட்டில் வாழ்ந்த விதூஷகன் அபுநுவாஸ். இவன் நிகழ்த்திய நகைச்சுவைச் சம்பவங்களை யெல்லாம் தொகுத்து அபுநுவாஸ் கதைகள் என்னும் நூலொன் றையும் ஜனுப் சித்தி லெவ்வை வெளியிட்டார்; அபு நுவாஸ் அப்பாசிய காலத்தவன். இவனுடைய நகைச் சுவைக் கதைகள் மூலம் அக்காலத்து மன்னர்களின் குணம், நடை, இயல்புக% யும் அறியக் கூடியனவாக இருந்தது.
அறிஞர் சித்திலெவ்வை தம் இலக்கியப் பணிகளுக் கெல்லாம் மணிமுடி வைத்தாற்போலச் செய்த ஆக்கம் அஸன்பேயின்கதை என்னும் சமூக் நவீனத்தை எழுதி வெளியிட்டதாகும். "ஆயிரத்தொரு இரவு' என்னும் அராபிய கதையினைப் படித்த தாக்கத்தினுலோ அல்லது ஐரோப்பியர் கால உரைநடை இலக்கிய எழுச்சியினலோ தூண்டப்பட்டு இவர் இந்நவீனத்தைப் படைத்தார். இது பல்வேறு முக்கியத்துவங்களைப் பெற்றது. தமிழி லெழுந்த முதல் நவீனம் என்ற பெருமையைப் பெற் றது. தேவநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார்

அறிஞர் சித்திலெவ்வை 111
சரித்திரம் (1879) ஆகும். இதுபோல ஈழத்திலே எழுந்த முதல் நவீனம் என்ற சிறப்பை அஸன் பேயின் கதை (1885) பெறுகிறது. அதேவேளை தமிழிலெழுந்த இரண்டா வது நவீனமும் இதுவாகும். தமிழில் வெளியான மூன்ரு வது நவீனமும் ஈழத்தவரான, திருகோணமலை இன்னு சித்தம்பி எழுதிய ஊசோன் பாலந்தை கதை(1891) ஆகும் என்பதும் நாம் பெருமைப்படும் விஷயமாகும்.
"அஸன் பேயின் கதை'ச் சுருக்கம் வருமாறு: மிசிறு (எகிப்து) தேசத்துக் காபிர் பட்டணத்து யூசுபுபாஷா என்னும் இராசவம்சத்தவருக்கு மகனகப் பிறந்து தீ யோராற் கடத்தப்பட்டு, பம்பாயில் ஜகுபர் என்பாரி டம் வளரும் குழந்தைக்கு ‘அஸன்’ எனும் பெயர் (கட்டப்படுகிறது. பதின்ைகு வயதில் ஜகுபரை விட்டுப் பிரிந்து வஞ்சகர் பலரின் சூழ்ச்சிகளுக்கு இலக்காகித் தப்பும் அஸன், கல்கத்தா சென்று அங்கு ஆங்கில தேசாதிபதியின் நட்பைப் பெறுகிருன். அவராதரவில் கல்வி கற்று முன்னேறிப்பல தடைகளைக் கடந்து தனது தாய் தந்தையரை அடைந்து மகிழ்ந்ததோடு ஆங்கிலப் பெண்ணுெருத்தியின் காதலைப் பெற்று மணம் முடித்து இன்பவாழ்வு வாழ்கிருன்.
இக்கதைபற்றி நா. சுப்பிரமணியம் எம். ஏ. அவர்கள் ஆரம்பகாலத் தமிழ் நாவல்கள்’ என்ற கட்டுரையில் குறிப்பிடுவது :
இக்கதை மத்திய கிழக்கு நாடுகள், வட இந்திய ஆசியப் பிரதேசங்களுடன் தொடர்புள்ளதொரு சம்பவக் கதை. அராபிய இரவுக்கதைகளில் ஈடுபாடு கொண்டவரும் ஈழத்து இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்ைேடியுமான சித்திலெவ்வையின் இம் முயற்சி வேதநாயகம் பிள்ளையின் பரந்துபட்ட கிளைக்கதைப் போக்குகளினின்றும் வேறுபட்டதாக, விறுவிறுப் பர்னதும் ஓரளவு மர்மப்பண்புள்ளதுமான கதை யாக அமைகிறது.' ܫ

Page 70
112 தமிழியற் கட்டுரைகள்
சித்திலெவ்வை இந்நவீனத்தில் கையாளும் மொழி நடை மற்ற நூல்களில் அவர் கையாண்ட மொழி நடை முறையினின்றும் வேறுபட்டது. ஒரு நாவலுக் குரிய வருணனைப் பாங்கும் எளிய இனிய வசன நடை யும் இந்நாவலை அவர் விறுவிறுப்பாக நடாத்திச் செல் லப் பெரிதும் உதவுகின்றன. அஸன்பேயின் கதையின் நாயகியான பாளினவைப் பின்வருமாறு அவர் வருணிக்கிருர்: ‘'இவளழகு மிகவும் வியக்கத்தக்க தாயிருந்தது. அவன் முன்பு அநேக அழகான ஸ்திரி களைப் பார்த்திருந்தாலும் இவளைப் போன்ற இயற்கை யழகு வாய்ந்த ஒரு பெண்ணையும் இதுவரையிலும் பார்த்ததில்லை. துலையில் நிறுத்தக் குகையில் உருக்கி அச்சில் வார்க்கப்பட்ட தங்கச்சிலையோ அல்லது உறைந்த பனிக்கட்டியைத் திரட்டி உருவாக்கப்பட்ட சித்திரப் பாவையோ, என்று கண்டோர் அதிசயிக் கத்தக்க அவளுடைய மேனியையும், கிருபை என்னும் சுடர் விட்டிலங்கி எதிர்த்துப் போர் செய்கின்ற இரண்டு கெண்டைமீன்களையொத்த இணைவிழிகளையும் முருக்கம் பூவையும் பவளத்தையும் பழிக்கத்தக்க, இதழ்களையும் முல்லை மொக்குகளை அல்லது ஆணி முத்துக்களை வரிசையாகக் கோத்துக் கட்டியதைப் போன்ற தந் தப் பந்திகளையும் அன்னத்தின் கழுத்தோ அல்லது வலம் புரிச் சங்கமோ என்று சொல்லத்தக்க நீண்ட கழுத் தையும் கொண்டவள்"
இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தம் கை வண்ணத்தைக் காட்டி, நவீன இலக்கிய எழுச்சியிலும் தம் பங்களிப்பைச் செய்த சித்திலெவ்வையின் தமிழ்த் தொண்டு, காலத்தை வென்று நிலைத்து விட்டது. அறிஞர் என்ற அடைமொழிக்குப் பொருத்தமாகப் பத் திரிகை ஆசிரியராக, ஞான நூல் மேதையாக, பாட நூல்களின் தொகுப்பாளராக, அறபியிலும் தமிழிலும் இலக்கண விற்பன்னராக இவர் விளங்கினர். இத்தோடு இப்பணி நின்றுவிடவில்லை. தமிழிலக்கியத்தின் நவீன

அறிஞர் சித்திலெவ்வை ፲ 18
துறையான நாவலிலும் கை வைத்து ஒரு சாதனையை நிறுவினர். இவருடைய அறிவும் ஆற்றலும் தமிழ்ப் புலமையும் ஒப்பற்றவை. இவருடைய சமூகத் தொண் டுக்காக முஸ்லிம் சமுதாயம் இவருக்குக் கடமைப்டட் டிருப்பதுபோலத் தமிழ்த் தொண்டிற்காகத் தமிழ் கூறும் நல்லுலகமும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. நூாருண்டுகளுக்கு முன்பு இவர் ஆற்றிய அரும்பணி களின் விளைவுகள் காலநதியில் கரைந்துவிடாது இன்றும் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் பெருமை மிக்கது. N O
15

Page 71
14
சொற்கலைப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசர்
வித்துவான் ச. அடைக்கலமுத்து
(நல்லூர், சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் மானிப்பாயில் ஆதிக்கல்விமான்கள் மரபில் புகழ்பூத்த குடும்பத்தில் பிறந்த வர் (1875. இவர் குழந்தையாய் இருக்கும்போது தந்தையார் சாமிநாதர் இவ்வுலகை நீத்தார். இளம் விதவை தங்கமுத்து, அச்சுவேலியில் மறுமணம் செய்துகொண்டார். சிறிய தந்தை யார் தம்பிமுத்துப்பிள்ளை பத்திராசிரியராயும் பதிப்பாசிரியரா யும் புலவராயும் இருந்ததோடு சொந்தமாய் ஒரு அச்சியந்திர சாலையையும் வைத்திருந்தார். இந்தப் பின்னணியில் ஞானப் பிரகாசர் வளர்ந்து, அச்சுவேலியிலும் யாழ். சம்பத்திரிசியார் கல்லூரியிலும் படித்து, புகையிரதப் பகுதியில் இலிகிதராகப் பணியாற்றி வந்த வேளையில் உத்தியோகத்தை உதறி விட்டுக் கத்தோலிக்க குருவாகச் சேர்ந்து கொண்டார்.
இவர் திருப்பணி செய்த இடம் நல்லூராகும். எடித் தாளராகவும் பேச்சாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய ஞானப்பிரகாசர், பல பழைய நூல்களைப் பதிப்பித்தார். சிறியவும் பெரியவுமாக எழுபது நூல்களை எழுதி முடித்தார். பதினுறு மொழிகளைக் கற்றுப் பாண்டித்தியம் பெற்றர். வரலாற்றுத் துறையிலும் பல நூல்களை வெளியிட்டார். சமயத்துக்கு அரும் பணியாற்றினுர். தமிழ்ச் சான்றேர்களின் நண்பனுயிருந்தார். தருக்க சாத்திரம், தமிழ் அமைப்புற்ற வரலாறு, தமிழ்ச்சொற் பிறப்பாராய்ச்சி, தமிழ் ஒப்பியல் அகராதி என்பன அவரியற்றிய சிறந்த நூல்களாகும். தமிழே உலக மொழிக் குடும்பத்தின் தாய் என நிலைநாட்ட முயன்றர். 1947 இல் இறைவடிை சேர்ந்தார்.)

சுவாமி ஞானப்பிரகாசர் 15
“ஒவ்வொரு மொழியும் ஓர் ஆலயம்' என்ருர் அறிஞர் சாமுவேல் யோன்சன். தமிழ் மக்களும் தங்கள் இனிய மொழியை ஓர் ஆலயமாக எண்ணிப் போற்று வதில் வியப்பில்லை. ஒரு நாட்டின் கலை, பண்பாடு, நாகரிகம், செயலாக்கம் அறிநெறியனைத்தையும் வளர்க் கும் ஊட்டச்சத்துள்ள உணவு மொழியேயாகும்.
தமிழ்ச் செல்வி சாதி, இன, மத வேறுபாடுகளின் நிப் போற்றத்தக்க பெருமைக்குரியவள். அந்த அன்னைக் குப் பிற சமயத்தினரைப் போலவே கத்தோலிக்கரும். அரும்பணியாற்றியுள்ளனர். காவியங்களை இயற்றியும் தமிழ் உரைநடையின் தந்தையாயிருந்தும் அகராதி யமைத்தும் அச்சுவித்தைக்கு அடிகோலியும் மேடைப் பேச்சை அறிமுகஞ் செய்தும் சிறுகதை, நாவல் என்ப. வற்றுக்கு அரிச்சுவடாயிருந்தும் அவர்களாற்றிய பணி கள் பலவாகும்.
இந்த வரிசையில் வீரமாமுனிவருக்குப் பின்னர்த் தமிழ் தொண்டாற்றியவர்களில் சுவாமி ஞானப்பிரகாசர் தலை சிறந்தவராய் விளங்குகின்றர். அவருக்குச் சொற் கலுை: புலவர் எனப் பட்டம் அளித்துப் பாராட்டிய வேளையில் பசுமலைச் சோமசுந்தர பாரதியார்,
தமிழ் நாட்டில் சிலைசெய்து பாராட்டப்பட வேண்டி யவர் சுவாமிகள். நதிகள் எல்லாம் கடலில் சென்று சங்கமிப்பதுபோல மொழிகளெல்லாம் சுவாமிகள் உள்ளத்தில் வந்து ஒன்று கூடுகின்றன என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
செந்தமிழ் மொழியே செகமொழிக்கு உயிரென விளக்கப் புகுந்த வித்தகச் செம்மல் பைந்தமிழ் வளர்த்த பன்மொழிப் பண்டிதன் ஐந்தமிழ் வல்லோன் அறிவுப் பொழிலோன் எனக் கவிஞர் யோகி சுத்தானந்தர் கூறிச் சென்றர்.

Page 72
116 தமிழியற் கட்டுரைகள்
ஞானப்பிரகாசர் பல்கலைக் கழகம் ஒன்றில் படித்த தில்லை; சீமைக்குச் சென்று திரும்பியவருமல்லர். பிற மொழிகளைக் கற்பதற்கு ஆசிரியர்களைத்தேடி அலைந்த வருமல்லர். தமது சொந்த முயற்சியாலே அறிவுத் துறையில் முன்னேறி அறிஞர் வரிசையில் முன்னணி யில் திகழ்ந்தார். பல்கலைக்கழக மூதவை உறுப்பின ராயும் விளங்கினர்.
பண்டிதர் ஒருவர் அவரிடம் வந்து "ஐயா, தொல் காப்பியும் என்ற இலக்கண நூலை யாரிடம் பாடங் கேட்டீர்கள் ?' என்று வினவியபோது, சுவாமியார் உடனே, "இளம்பூரணர், சேனவரையர், நச்சினர்க் கினியர், பேராசிரியர் என்போரிடத்தில் கற்றுக் கொண் டேன்' என்று கூறிச் சிரித்தார். பண்டிதர் விழித் தார். ஏனெனில் தொல்காப்பியத்துக்கு உரை எழுதி யவர்கள் இவர்களே !
ஞானப்பிரகாசருக்கு எழுத்தும் பேச்சும் இருகண் களாகும். புத்தகக் குவியல்களின் மத்தியில் மூழ்கிக் கிடந்ததைப் பல எழுத்தாளர்கள் குறிப்பிடத் தவறிய தில்லை. சிறியவும் பெரியவுமாக அவர் எழுதி அச்சேற் றிய நூல்கள் எழுபதுக்கு மேலாகும். தென் நாட்டி லும் ஈழத்திலும் நடந்த எந்தத் தமிழ்ச்சான்றேர் அவைகளிலும் அவர் சிறப்பான இடம் பெற்ருர், பேச்சுக்கலையில் அவர் ஒரு சிகரம் எனக் கூறலாம்.அவரு டைய உரைகளில் வரலாறுகள், பழந்தமிழ் வழக்குகள், ஆராய்ச்சிகள், பழமொழிகள், திருக்குறள், சித்தர் பாடல்கள் என்பன வந்து பொங்கி நுரைக்கும்.
பரந்த ஆராய்ச்சியாலும் நுண்ணறிவாலும் பூத்த கருத்துக்களை வெளியாக்கப் பத்திரிகைகளையே துணை யாகக் கொண்டார். அவருடைய பல நூல்களில் ஒவ் வொன்றும் ஏதோ ஒரு பத்திரிகையில் வெளிவந்தி ருப்பதைக் காணலாம். தமது கருத்துக்களை நியாய பூர்வமாக யாராவது மறுத்து எழுதினல் அவற்றைப் புனர் ஆலோசனை செய்ய அவர் எண்ணினர். மேலும்,

சுவாமி ஞானப்பிரகாசர் 17
நூல்களை வாசிப்போர் தொகையிலும் பத் திரிகை படிப் போர் தொகை கூடியதென்ற எண்ணம் அவருக்கு இல்லாமற்போகவில்லை. -
மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்தி வந்த செந்தமிழ் என்ற வெளியீடு தமிழ் அறிஞர்களால் அக்காலத்தில் போற்றப்பெற்றது. சுவாமி அவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல அதிலே வெளிவந்திருப்பதைக் காண லாம். கலாநிலையம், கலைமகள் என்பவற்றிலும் சத்திய நேசனிலும் சுவாமியாருடைய கட்டுரைகள் காணக் கிடக்கின்றன. ஈழநாட்டில் சுவாமி அவர்களுடைய கட்டுரைகளைத் தாங்கி வெளிவராத பத்திரிகைகளே இருந்ததில்லை. ஈழநாட்டில் சிறப்புடன் வெளிவந்த ஈழகேசரி சுவாமிகளின் இனிய நண்பனுய் இருந்து உத விற்று. காவலனிலும் அடிக்கடி எழுதிவந்தார். யாழ். ஆரிய் திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் நடத்தி வந்த கலாநிதி என்ற சஞ்சிகையில் தொடர்ந்து எழுதி வந்ததோடு, சொற்பிதிர்வழி என்ற தொடர் கட்டுரையை வித்தியா சமாச்சாரப் பத்திரிகையில் வெளியிட்டு வந்தார். மனித வரலாறு எனும் அனைத்துலக மொழி ஆராய்ச்சி ஏட்டில் திராவிடமொழி அமைப்பையிட்டு எழுதிய கட்டுரைகளை நாம் காணலாம். - -
ஞானப்பிரகாசர் எழுதிய நூல்களை - வரலாற்று. நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், சமய நூல்கள், பிர ாங்கப் பிரசுரங்கள், தமிழாராய்ச்சி நூல்கள் எனவகுக் கலாம். அவர் குருப்பட்டம் எனும் திருப்பட்டம் பெற்ற இருபதாம் நூற்றண்டின் ஆரம்ப காலத்தில் (1901) காணப்பெற்ற சமய அறநெறி நூல்களைக் கணக்கிடவேண்டுமாயின் கைவிரல்களே போதுமான வையாகும். அவற்றின் வசனநடையும் மணிப்பிரவாள 10ாய் வடசொற்கள் கலந்து கற்றேர்க்கன்றி மற்றேர்க் குப் பயன்படாதவையாயின. கோடைகாலத்திற் பெய்த பெருமழைபோல இந்த வரட்சியை நீக்கிய பெருமை சுவாமி அவர்களுக்கே உரியது.

Page 73
118 தமிழியற் கட்டுரைகள்
செபருால்களையும் ஞானவாசகங்களையும் ஆக்கியும் கோவைக் குருமார்களுடைய நூல்களைப் புதுக்கிப் பதிப் பித்தும் இறையியல், மெய்யியல் நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்து அச்சிட்டும் பிரசங்க நூல்களை எழுதி யும் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டும் பழைய நாட கங்கள் வரலாறுகளை நூல்வடிவிலமைத்தும் அவர் செய்த பணிகள் சமயத்துக்கு மாத்திரமன்றித் தமிழுக் குச் செய்த சேவையாகவும் மதிப்பிடக்கூடியவை ஆகும்.
சொற்கலைப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசருடைய நூல்களெல்லாம் வசனநடையிலேயே வெளிவந்துள் ளன. அவருடைய வசனநடை பூவைப்போல் மிருது வானது; ‘சாமிநாத ஐயர் அவர்களுடைய வசனநடை யும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசருடைய வசன நடையும் நண்பர்கள் போலக் கைகோத்துச் செல்வதைக் காணலாம்' என எழுத்தாளர்களைப்பற்றி அக்காலத் தில் எழுதிய அறிஞர் ஒருவர் குறிப்பிட்டார். சுவாமி அவர்களுக்குச் செய்யுள் இயற்றும் திறமை இருந்தும் அவர் அதில் அதிகம் ஈடுபடவில்லை. சமயப்பாடல்களை எழுதியதோடு நிறுத்திக்கொண்டார்.
நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு உயர்தர வகுப்புக்களில் படிக்கும் மாணவர்களுக்கு வேண்டிய நூல்கள் தமிழில் கிடைக்கவில்லை. தாவரவியல், விலங் கியல், பெளதிகம், இரசாயனம், தத்துவம், தருக்கம்" முதலான பாடங்களைப் படிக்க இடர்ப்படவேண்டியதா யிற்று. 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள். தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்று பாரதியார் தேவையை உணர்ந்து குறிப்பிட்டார்.
தருக்கம் பயிலுவோர்க்கு 'தருக்க சங்கிரகம் அன்னம்பட்டீயம்' என்ருெரு சிறு நூலேயிருந்தது. அது காலத்துக்கும் தேவைக்கும் ஏற்றதாய் இருக்க வில்லை. எனவே தருக்கம் பயிலும் மாணவர்க்கு ஒரு நூல் இன்றியமையாதது எனக் கண்ட சுவாமியார்

சுவாமி ஞானப்பிரகாசர் 19
தருக்க சாஸ்திரச் சுருக்கம் என்ற நூலை வெளியிட்டார் சுருக்கமாயினும் அது முந்நூறு பக்கங்களைக் கொண்டது. கல்வித் திணைக்கள அதிபதியே நூலைப் பெரிதும் பாராட் டியுள்ளார். இருபத்தொரு நால்களிலிருந்து ஆதாரங் கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. இந்நூல் பால பண்டித, பண்டித பரீட்சைகளுக்குப் பல காலம் பாடப் புத்தகமாக இருந்ததை இங்குக் குறிப்பிடல் நன்ருகும்.
பழைய நாகரிகத்தின் புகழ் படைத்தவர்களாய் இனிமையான மொழியை உரிமை கொண்டவர்களாய்த் தென்னிந்தியாவைத் தங்கள் தாயகம் என்று கூறும் தமிழ் மக்களுடைய தொன்மையும் பழக்க வழக்கங் களும் திணைப் பகுப்புக்களும் பற்றி ஆராய்ந்தபோது ஆச்சரியமான உண்மைகள் புலனயின. இவற்றிலிருந்து தமிழரின் பூர்விக சரித்திரமும் சமயமும் என்ற நூலை எழுதினர். - -
சுவாமிகளுடைய தமிழ்த்தொண்டு என்ற மாணிக்க கங்கையில் மொழியாராய்ச்சியில் செய்த பணிகள் என்ற மணிகளை இனிநோக்குவோம். பண்டைத் தமிழ் நூல்களில் காலத்தால் முற்பட்டது. “தொல்காப்பியம்’ என்னும் இலக்கண நூலாகும். அதனை 'ஒல்காப்புக ழுடைத் தொல்காப்பியம்’ என அறிஞர் போற்றுவர். தொல்காப்பியர், ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ (தொல், சொல் 155) எனக் கூறிப் போந்தார். ஆனல் இடைக்காலத்தில் சொற்களின் உண்மைப் பொருளை அறிவதில் மயங்கும் நிலை ஏற்பட்டபோது, சொற்களை இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என வகுத்து கருத்துப் புலப்படாத சொற்களை இடுகுறிப் பெயர் என எழுதினர் இலக்கண நூலார். தொல் காப்பியனர் பிறிதோரிடத்தில் “மொழிப் பொருள் காரணம் விழிப்பத்தோன்ரு’ என்று கூறியிருப்பதை யும் நாம் உற்றுநோக்க வேண்டும்.
தொல்காப்பியனரே கைவைக்கத் துணியாத துறை பில் தமது அறிவு நுட்பத்தாலும் பன்மொழிப் புலமை

Page 74
20 தமிழியற் கட்டுரைகள்
ய்ாலும் ஆராய்ச்சி செய்யத் தலைப்பட்டார் சுவாமிகள், மொழிநூலுக்கும் இலக்கணநூலுக்கும் நூலும் சீலை யும் போலத் தொடர்பிருந்தாலும் மொழிநூல் வேறு; இலக்கணநூல் வேறு. ஞானப்பிரகாசர் மொழிநூல் துறையில் கால்வைக்குமுன் எழுந்த இரண்டொரு நூல்கள் இலக்கண ஆராய்ச்சி நூல்களேயன்றி மொழி நூல்களல்ல எனச் சுவாமியவர்கள் ‘செந்தமிழ்ப்பத்திரி கையில் எழுதியுள்ளார். . . .
வளருகின்ற ஒரு மொழியில் காலத்துக்கு ஏற்ற வாறு சொற் கூட்டங்கள் பெருகுவதும், பிறமொழிச் சொற்கள் கலப்பதும் சொற்கள் புதிய கருத்துக்களைத் தாங்குவதும் இயற்கையாகும். தமிழ் மொழியிலும் அவ்வாறு பல்கிப் பெருகிய ஒரு தொகைச் சொற்களைக் களைந்தபின் தெள்ளி எடுக்கும் தூய தமிழ்ச் சொற்களை ஆராய்ந்தால் அவை ஒரு சிறங்கை அளவினதாகும் என்பது சுவாமிகளின் கருத்தாகும்.
தமிழ்ப்பெருங்குடி மக்கள் தொடக்கத்தில் பயன் படுத்திய சொற்கள் எவை ? அவை எவ்வாறு கிளைத் தெழுந்தன? என்பவற்றைத் ‘தமிழ்அமைப்புற்ற வரலாறு என்னும் நூலில் ஆராய்கின்ருர். பல நூற்றுக்கணக் கான சொற்கள் ஒத்த இனம் கொண்ட கூட்டம் கூட்ட மாய் வருவதையும் அவற்றில் குடும்பச்சாயல் போன்ற ஒற்றுமையிருப்பதையும் அவர் பல்வேறு எடுத்துக் காட்டுகளால் புலப்படுத்தியுள்ளார்.
மானிட அறிவு விரிவடைந்த வரலாறுகளை யாராய்ந்த மாக்சுமுல்லர், சுறேதர் என்ற அறிஞர்களின் மொழி உற்பத்திக் கொள்கையையும் கருத்தோடு நோக்கினர். தமிழ்மொழிப் பரப்புக்கு மூலவேர் இடம்பற்றிய கட் டுக்களே எனத் துணிந்து அ, இ, உ எனும் மூன்று சுட்டுக்களோடு எகரத்தையும் சேர்த்துக் கொள்ளு கிருர், ‘கு’ மொழியில் இன்றும் எகரம் ஒரு சுட் டாய் இருப்பதையும் அவர் குறிப்பிடுகிறர். இச்சுட்டுகள்

சுவாமி ஞானப்பிரகாசர் 121
இடம்பற்றியும் தொழில் பற்றியும் பெருகி வளர்ந்த உண் மையைக் கோவை கோவையாகத் தூக்கிக் காட்டுகிருர், இவ்வாறு ஆராய்ந்தபோது தமிழ்ச் சொற்களின் சில தாதுக்கள் பிறமொழிகளில் கலந்திருப்பதை அவர் அறிய நேரிட்டது. வடமொழியில் இருந்தே தென்னிந் திய மொழிகள் அனைத்தும் தோன்றின என்று தமிழ் நாட்டறிஞர் கொண்டிருந்த கருத்தை எடுத்தெறிந் தார். வடமொழியில் சில திராவிடச் சொற்கள் குடி புகுந்திருப்பதையும் வெளியிட்டார்.
தமிழ்ச் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியில் ஆறு பாகங்களே வெளிவந்துள்ளன. எஞ்சியுள்ள பதினன்கு பாகங்களையும் எழுதி முடிக்க யாராவது வருவார்களா என்பது சந்தேகமே ! ஒரு பல்கலைக் கழகம் செய்து முடிக்க வேண்டிய பணியைச் சுவாமியவர்கள் தன்னந் தனியணுகச் செய்து கொண்டு வந்தார். சொல்லாராய்ச்சி யில் ஈடுபட்ட உயர் திரு. தேவநேயப் பாவாணருக்குத் தமிழக அரசு துணை புரிந்ததாயினும் பயன் கிட்டிய தாகத் தெரியவில்லை.
ஆரிய மொழிகளுடன் தமிழுக்குள்ள தொடர்புகளை யிட்டு டெயிலி நியூஸ் (Daily News) பத்திரிகையில் பல கட்டுரைகளை வெளியிட்டார். எபிரேய மொழியைக் கற்றபின்னர், அம்மொழி சுமேரிய மொழியின் கிளை மொழியென அவர் கருதியதோடு, சுமேரிய மொழிக் கும் தமிழுக்குமுள்ள தொடர்புகள் பற்றி "இலங்கை பின் பூர்வீகம்’ என்ற இதழிலும், உலக மொழி வரலாற் றுப் பத்திரிகையிலும் எழுதித் தம் கருத்தை நிஃ) நாட்ட இனிது முயன்ருர். இவற்ருல் தமிழே உலகத் தாய் மொழி என நிரூபிக்க எண்ணினர். அவர் கருத்துக் களை இன்னும் பிற அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவின் பூர்வ வரலாறுகளை ஆராய்ந்தவரும் இந்தியப் புதை பொருள் ஆராய்ச்சிக் கழகத் த% வரும் பம்பாய்ப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசி ரியருமான அறிஞர் கெரஸ் அவர்கள் நாலாயிரம் ஆண்டு களுக்குமுன் அழிந்துபோன சிந்துநதிப் பள்ளத்தாக்கின் கற் சாசனங்களை வாசிக்கச் சுவாமி ஞானப்பிரகாசரி டமே வந்தாரென்ருல் அது தமிழ்க் குலத்துக்கே பெருமை தரும் செய்தியன்றே !
16

Page 75
15
தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
கலையரசி சின்னையா
( சோமசுந்தரப்புலவர் யாழ்ப்பாணத்தில் நவாலியென்னு மிடத்தில் பிறந்தார் (1878) 1899ஆம் ஆண்டிலிருந்து நாற்பது ஆண்டுகள் அதாவது 1939 ஆம் ஆண்டு வரை வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி என இன்று வழங்கும் பாடசாலையில் ஆசிரிய ராகக் கடமையாற்றியவர். சிறுவயதிலேயே செய்யுளியற்றும் ஆர்வமுடையவராக இருந்த புலவர் செய்யுள் இலக்கியங் களையே அதிகம் எழுதியுள்ளார். அவை பெரும்பாலும் சமய சம்பந்தமானவையாகவே உள்ளன. சமயத்திற்கப்பால் சமூக தேசிய உணர்வுடன் புலவர் இலக்கியம் படைத்தமைக்கு இலங்கை வளம், மருதனஞ்சலோட்டம், தால விலாசம் முத லான நூல்களும் வேறு சில தனிப்பாடல்களும் சான்றக உள்ளன. இவற்றைவிடக் குழந்தைகளுக்கேற்ற தனிப்பாடல்கள், கதைப் பாடல்கள் என்பனவற்றையும் புலவர் இயற்றியுள் ளார். புலவரின் ஆக்கங்களில் அதிகமானவை நூலுருப் பெற்றுள்ளன. நூலுருப் பெறதவை இந்து சாதனம், ஈழகேசரி, சுதேச நாட்டியம், செந்தமிழ்ச் செல்வி ஆகிய பத் திரிகைகளில் வெளிவந்துள்ளன. செய்யுள் இலக்கியங்களை இயற்றித் தமிழ்ப்பணி புரிந்த புலவர் சமயத்தொண்டுகளும் செய்துள்ளார். வட்டுக்கோட்டையிலும் நவாலிபிலும் புலவர் நடத்திய சைவசித்தாந்த வகுப்புகளும் புராண வகுப்புகளும் அவரின் சமயப்பணிக்குச் சான்றகும். புலவர் நடத்திய சைவ பாலிய சம்போதினி என்னும் பத்திரிகை சைவ சித் தாந்தத்தையும் சைவ சாரத்தையும் விளக்குவதாக அமைந் ததும் குறிப்பிடத்தக்கது. ) -

நவாலியூர் சோமசுந்தரப்புலவர் 123
ஈழத்துப்பூதன் தேவனுர் காலம் முதலாக இன்று வரை ஈழத்திலே தோன்றிய புலவர்களுள் சிலரே ஈழத்துச் செய்யுளிலக்கிய வரலாற்றில் முக்கிய இடத் தினைப் பெற்றுள்ளனர். அத்தகையோர் வரிசையில் வைத்தெண்ணத் தகுந்தவராகவும் 20 ஆம் நூற்ருண் டின் ஆரம்பகாலப் புலவர்களுள் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராகவும் சோமசுந்தரப் புலவர் விளங்குகின்றர். அத்துடன் 19 ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்து ஈழத் துச் செய்யுளிலக்கிய வரலாற்றில் பழமைக்கும் புது மைக்கும் பாலமாக அமைந்த புலவர்கள் வரிசையிலும் சோமசுந்தரப் புலவருக்கு முக்கிய இடமுண்டு. சோம் சுந்தரப் புலவரின் இலக்கியப் பணியினை அவர்காலப் பின்னணியில் வைத்து மதிப்பிடுமிடத்துத்தான் அவரின் இலக்கியப் பணியின் சிறப்பினையும் ஈழத்துச் செய்யு ளிலக்கிய வரலாற்றில் அவர் பெறும் முக்கியத்துவத் தினையும் நாம் முழுமையாக உணர்ந்து கொள்ளலாம்.
20 ஆம் நூற்றண்டிற்கு முன்னர் ஈழத்தில் எழுத்த செய்யுளிலக்கியங்களுள் பெரும்பாலானவை சமயசம். பந்தமானவையாகவே அமைந்துள்ளன. சிலகாலப் பகுதிகளில் முக்கியமாக 17 ஆம் 18 ஆம் 19 ஆம் நூற் ருண்டுகளில் சமயமே இலக்கியத்தின் தனிப்பொருளாக அமைந்துள்ளது எனக் கூறத்தக்க வகையில் சமய உள்ள டக்கம் பெற்ற இலக்கியங்கள் தோற்றம் பெற்றுள் ளன. தலங்களையும், தலங்களில் எழுந்தருளியுள்ள தெய்வங்களையும் போற்றுவனவாகவும் சமயக் கடவுள ரைப் போற்றுவனவாகவும் விரதங்களைப் போற்று வனவாகவும் அவை அமைந்துள்ளமையைக் காணலாம். பெரும்பாலும் பிரபந்த இலக்கியங்களாகத் தோற்றம் பெற்ற அவற்றில் மரபுவழிவந்த யாப்புக்களை-அதாவது விருத்தம்,கட்டளைக்கலித்துறை, வெண்பா,கலிவெண்பா, கொச்சகம் என்பனவே செல்வாக்குப் பெற்றிருந்தன. இந்நிலையிலிருந்த - அதாவது சமயத்தைப் பொருளாகக்

Page 76
124 தமிழியற் கட்டுரைகள்
கொண்டு மரபுவழி வந்த யாப்புக்களினல் பிரபந்தங் களைப் பாடும் நிலையிலிருந்த ஈழத்துச் செய்யுளிலக்கிய மரபானது 20 ஆம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் மாற்ற மடைந்தது. சமயத்தை முக்கிய பொருளாகக் கொண் டிருந்த ஈழத்துச் செய்யுளிலக்கியம் தேசியம் சமூகம் என்பனவற்றை முக்கிய பொருளாகக் கொண்டு, புதிய யாப்புகளை வரவேற்று வளர்ச்சியடைந்தமையினை 20 ஆம் நூற்ருண்டின் நடுப்பகுதியிலிருந்து எழுந்த கவிதை களில் காணலாம். இப்புதிய கவிதைப் போக்குக்குக்கால் கோளிடப்பட்ட 20ஆம் நூற்ருண்டின் ஆரம்ப காலத் தில் பழைய செய்யுள் மரபும் ஓரள்வு அருகத் தொடங் கியதெனினும், 20 ஆம் நூற்றண்டின் ஆரம்பகாலத் தில் வாழ்ந்த புலவர்களுள் சிலர் பழைய செய்யுள் மரபைப் பெரிதும் போற்றினர். அவர்களுள் சுன்னுகம் குமாரசாமிப்புலுவர், வறுத்தலைவிளான் மயில்வாகனப் புலவர், முதுதமிழ்ப்புலவர் நல்லதம்பி, வண்ணை நெ. வை. செல்லையா, சோமசுந்தர்ப்புலவர் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். சமகாலப் புலவர்களான இவர் களுடன் ஒப்பிடுமிடத்து, சோமசுந்தரப் புலவரே 20ஆம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் சமயத்தைப் பொருளாகக் கொண்ட மரபுவழிபட்ட பிரபந்த இலக்கியங்களை அதி கம் பாடினுர் எனலாம்.
'அஞ்சு முகத்தவர் கொஞ்சி முகந்திடு மாறுமுகப் பதுமம் . . . ' என முருகனைப் போற்றிப் பதினெட் டாவது வயதிற் பாடத்தொடங்கிய சோமசுந்தரப் புலவர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் பெரும்பாலானவை சமய உள்ளடக்கம் கொண்டவையாகும். தலங்களையும் அவற் றில் எழுந்தருளியுள்ள தெய்வங்களையும் போற்றும் பிரபந்தங்களாகவும் முருகன், நாமகள், இலக்குமி முதலான தெய்வங்களின்மேலான பிரார்த்தனைப் பாடல் களாகவும் சைவசமய உண்மைகளை விளக்கும் பாடல் களாகவும் அவை விளங்குகின்றன.

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் 125
தலங்களின் அடிப்படையில் பெரும்பாலான தமது சமகாலப்புலவர்களைப் போன்று பதிகம் ஊஞ்சல் என் னும் இரண்டு பிரபந்தங்களையும் அதிகம் பாடிய சோமசுந்தரப்புலவர் அத்துடன் அமையாது கலம்பகம் நான்மணிமாலை, அட்டகம், அந்தாதி, திருப்பள்ளி யெழுச்சி, சிலேடைவெண்பா ஆகிய பிரபந்தங்களையும் பாடியுள்ளார். தலங்களின் அடிப்படையில் புலவர் பாடிய பிரபந்தங்கள் யாவற்றையும் சிறந்தன எனக் கூறமுடியாதெனினும் புலவரின் பதிகங்கள் சிலவற்றி னதும் அட்டகிரிக்கலம்பகம், நல்லையந்தாதி, கதிரைச் சிலேடை வெண்பா ஆகிய இலக்கியங்களினதும் சிறப் பினைப் போற்ருதிருக்க முடியாது. கதிரைச்சிலேடை வெண்பாவில் ஒவ்வொரு வெண்பாவின் முதலிரண்டடி களும் கதிர்காமத்தின் சிறப்பினைச் சிலேடை நயத்துடன் கூறுகின்றன. கதிரைத்தலத்தின் பெருமையினை விளக் குமிடத்துப் புலவர் கதிர்காமத்திற்குச் சிறப்பாக உரிய செய்திகளையும் கதிர்காமத்திற் காணக்கூடிய காட்சிகளை யும் சிலேடைகள் மூலம் விளக்கியுள்ளமை சிறப்பாக உள்ளது. கதிர்காமத்தில் முருகக் கடவுள் உறையும் பேடகம் யானைமேல் ஏற்றி வலம் செய்யப்படும். அதனை யும் அத்தலத்திலே தினமா விளக்குகள் ஏற்றப்படும் தன்மையையும் சேர்த்து, முருகன் உறையும் பேடகம் யானைமேல் ஏறும் கதிரை(கம்பமா- யானை) என்றும் நல்ல பசுவின் நெய்யில் எரியும் விளக்குகள் தினமா வாகிய தகழியிலே ஏறும் கதிரை (கம்பமாதினைமா) என்றும் சிலேடையாக அமைத்துள்ளார்.
நம்பனுறை பேடகமு நல்லாவி னெய்விளக்குங்
கம்பமா வேறுங் கதிரையே எனும் அடிகளிற் காணலாம்.
பிரார்த்தனைப் பாடல்களுள் நாமகள் புகழ்மாலை ப் பாடல்கள் ஈழத்துச் செய்யுளிலக்கிய வரலாற்றில் சோமசுந்தரப்புலவருக்குச் சிறப்பிடத்தினை அளிக்கக் காரணமாயுள்ளன. சிவனருள் பெற்ற மணிவாசகர்

Page 77
126 தமிழியற் கட்டுரைகள்
சிவன் தம்மை ஆட்கொண்டமையை வியந்தும் அவன் அருளே வேண்டியும் உள்ளம் உருகிப் பாடிய பாடல் களைத் திருவாசகத்திற் காண்பதுபோல, நாமகள் அருள் பெற்ற சோமசுந்தரப் புலவர் நாமகள் தமக்கு அருள் புரிந்தமையை எண்ணியும் அவள் அருளுக்காக ஏங்கி யும் நாமகள் சிறப்பினை எடுத்தோதிப் பாடிய பாடல் களை நாமகள் புகழ் மாலையிற் காணலாம். புலவர் நாமகளைத் தமிழ்த் தெய்வமாகப் போற்றியமையால், தமது காலத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்ட தன்மையினையும் நாமகள்மேற்பாடிய பாடல்களில் ஆங் காங்கு குறிப்பிட்டுள்ளார்.
சைவசித்தாந்தக் கட்டளைக்கும்மி, பதிபசுபாச விளக்கம் என்னும் செய்யுள் நூல்களும் உரையும் செய்யுளும் கலந்தமைந்த உயிரிளங்குமரன் என்னும் நாடகமும் சைவசமய உண்மைகளை விளக்குகின்றன. இவற்றுள் சைவசித்தாந்தக் கட்டளைக்கும்மியில் சைவசித்தாந்தக் கருத்துக்களை எளிமையான கும்மிப்பாடல்களிலே தெளி வாக விளக்கியதன் மூலம் சைவசித்தாந்தக் கருத்துக் களைச் செய்யுளில் எளிமையாக விளக்கிய சிறப்பினைச் சோமசுந்தரப்புலவர் பெறுகிருர், உயிரிளங் குமரன் நாடகம் சைவசித்தாந்தக் கருத்தினைக் கதைமூலம் விளக்குகிறது. இந் நூலிலும் புலவர் சமூகக் குறைபாடு கள் ச் சுட்டிக் காட்டியுள்ளார். புலவர் எழுதிய கந்த புராணக் கதைகளும் அவைகளுணர்த்தும் உண்மைநூற் கருத்தும் என்னும் நூலும் சைவசமய உண்மைகளையே விளக்குகிறது.
சமய சம்பந்தமான பாடல்களில் விருத்தம், கட்ட ளேக் கலித்துறை, ஆசிரியப்பா, வெண்பா ஆகிய யாப் புக்களையே புலவர் அதிகம் கையாண்டுள்ளார். LDU Լ| வழிவந்த யாப்புக்களிற் பாடியபோதும் அத்தகைய யாப்புக்களைக் கையாண்ட சமகாலப் புலவர்களின் ஆக்கங்களோடு ஒப்பிடுமிடத்துச் சோமசுந்தரப்புலவரின் சமய சம்பந்தமான பாடல்கள் எளிமையான நடையில்

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் 27
அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வெளிமை யும் சமய சம்பந்தமான ஆக்கங்களிற் சிறப்பாக நாம கள் புகழ்மாலை, உயிரிளங்குமரன் நாடகம் ஆகியவற்றிற் சமூகக்குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியமையும் சமயப் பிரபந்தங்களைப் பாடிய சமகாலப் புலவர்களிலிருந்து சோமசுந்தரப் புலவரை வேறுபடுத்துகின்றன.
தமது சமகாலத்தில் வாழ்ந்த பெரும்பாலான புலவர்களைப் போன்று சமய சம்பந்தமான ட்பாடல்க%ள மட்டும் சோமசுந்தரப்புலவர் ஆக்கியளித்திருந்தால், ஈழத்தின் பழைய செய்யுள் மரபினைத் தழுவி எளிமை யும் கவித்துவமும் நிரம்பிய சமயசம்பந்தமான செய் யுளிலக்கியங்களை ஆக்கியவர் என்றஅளவிலேயே அவரின் இலக்கியப்பணி அமைந்திருக்கும். ஆனல் சோமசுந்தரப் புலவர் சமய சம்பந்தமான பாடல்களுடன் காலத்திற் கேற்பத் தேசிய சமுதாய உணர்வுடைய பாடல்களையும் பாடியமையால் ஈழத்தின் புதிய கவிதைக்கும் வழி காட்டியாக விளங்குகின்றர். メ
ஈழத்தில் ஆங்கிலேயர் ஆட்சி நடத்திய காலத் தில் ஆங்கிலக்கல்வியிலும் மேனுட்டு நாகரிகத்திலும் மோகம் கொண்ட ஈழத்தவர் தமதுமொழி LugoTLITG) என்பனவற்றை மறந்தனர். இவற்றைக் கண்ட ஈழத் தறிஞர்கள் சிலர் சிறப்பாக சேர். பொன். இராமநாதன் சேர். பொன். அருணுசலம், சேர்.ஜேம்பீரிஸ், சேர். பாரன் ஜயத்திலகா ஆகியோர் 20 ஆம் நூற்றண்டின் ஆரம்ப காலத்தில் ஈழத்தவரின் மொழி பண்பாடு என்பன வற்றைப் பேணவேண்டும், சுயாட்சியைப் பெறவேண் டும் என்ற துடிப்புடன் அவற்றிற்கான முயற்சியில் ஈடு பட்டனர். 20 ஆம் நூற்ருண்டின் ஆரம்ப காலத்தி லேற்பட்ட இத்தேசிய விழிப்புணர்வு அக்காலத்தில் வாழ்ந்த ஈழத்துப்புலவர்கள் சிலரின் பாடல்களிலும் பிரதிபலித்தது. பாவலர் துரையப்பாபிள்ளை சோமசுந்தரப் புலவர் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.

Page 78
毒28、 தமிழியற் கட்டுரைகள்
சோமசுந்தரப்புலவர் சமய சம்பந்தமான பாடல் களை அதிகம் பாடியவிடத்தும், தமதுகாலச் சமூகக் குறைபாடுகளை ஊன்றி அவதானித்து, அவற்றைக் கண்டு மனம் வருந்தி, அக்குறைபாடுக%ள நீக்கவேண் டும் என்ற கருத்துடையவராக இருந்தமையினலேதான் சமய சம்பந்தமான பாடல்களிற்கூட அவற்றைக் குறிப் பாகப் புலப்படுத்தினுர் . நாமகள் புகழ் மாலையில் தமிழ்மொழியின் ஆதரிக்கப்படாத நிலையினைத் - தமிழ் மொழியினை மக்கள் புறக்கணிப்பதை-உணர்த்தியமை யும், உயிரிளங்குமரன் நாடகத்தில் கமத்தொழில் நெச வுத்தொழில் என்பனவற்றை மக்கள் கைவிட்டமையி னல் வறுமையேற்பட்டது என்று கூறி அத்தொழில் களின் சிறப்பினை விளக்கியமையும் சாதிவேற்றுமை பாராட்டக்கூடாது எனக் கூறியமையும் அந்நியரின் உணவு உடைஎன்பனவற்றில்மோகங்கொண்டு அவற்றை நம் மக்கள் தமிதுணவு உடையாகக் கொண்டுள்ள1ை யினைக் காட்டியமையும் அதற்குச் சான்ருகின்றன.
a குருமடம் புகுந்த வுருவிலாக் காமன் கல்விச் சாலையை யொற்றழிப் பித்துத் தாய்மொழி மடவார் வாய்மொழி யாக்கிச் சமயமும் லீலா சமயமாய்ச் செய்து நிகரில் தீக்கை நிருவாண மாக்கிச் சந்நிதா னங்கள் தந்நிதா னம்விடக் குன்றிலுங் குழியினும் விழுத்திவரு கின்றன்
புதியவ னென்போன் பூமியிற் புகுந்து கோலவா டவர்தங் குடுமியை யரிந்தும் விசையை முக்கால் வீசங் குறைத்து மந்நிய ருடையூண் தம்முடை யூனுய் மன்னிய, பலவித மாறுதல் புரிந்து வருகின்றன்
எனவரும் உயிரளங்குமரன் நாடகத்தின் பகுதிகள் இங்கு நோக்கத்தக்கன. இவ்விதம் சமயசம்பந்தமான ஆக்கங்களிற் சமூக நோக்கினைப் புலப்படுத்திய

நவ்ாலியூர் சோமசுந்தரப்புலவர் 129
புலவர் தேசிய, சமூகக் கருத்துக்களை வெளிப்படுத்தும் சில செய்யுள் நூல்களையும் தனிச் செய்யுள்களையும் இயற்றி யுள்ளார். இலங்கை வளம், மரதனஞ்சலோட்டம், தால விலாசம் ஆகிய நூல்களையும் செந்தமிழ் மக்கட்கு ஒரு வேண்டுகோள், தொல்புரம் பனைத்தொழில் விருத்தி ஐக்கிய சங்க வேலைகள், பனைமரக்கும்மி, பஞ்சமில்லை, ஆடுகதறியது ஆகிய தனிச்செய்யுட்களையும் அவ்வகை பிற் சிறப்பாகக் குறிப்பிடலாம். * 。
புலவரின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வினைச் சிறப் பாகப் புலப்படுத்தும் இலங்கை வளத்தில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும் தொழில் முன்னேற் றத்திலும் புலவருக்கிருந்த அக்கறை வெளியாகின்றது. ‘செந்தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்’ என்ற பாடல் தமிழ் மொழியின் பெருமையினையும் ஆங்கில மொழி மோகத்தி ஒல் தமிழ்த்தாய்க்கு ஏற்பட்ட அவ லத்தினையும் கூறி, அந்நிலையை நீக்கித் தமிழ்மொழி யைப் போற்றுமாறு மக்களை வேண்டுவதாக அமைந் துள்ளது. இவை தவிர்ந்த தால விலாசம், பனைமரக் கும்மி, யாழ்ப்பாணம் தொல்புரம் பனைத்தொழில் விருத்தி ஐக்கிய சங்க வேலைகள், பஞ்சமில்லை ஆகிய படல்கள் பொது அடிப்படையில் நோக்குமிடத்து நாட்டின் பொருளாதார வளங்கருதிய பாடல்களாகவே அமைந்துள்ளன. தேசியப் பொருட்களைப் போற்ற வேண்டும். அந்நியப் பொருட்களுக்குப் பதிலாகத் தேசியப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். பனை யிலிருந்து பெறப்படும் பொருட்களினல் பல்வேறு கைத்தொழில்களை விருத்தி செய்வதுடன், உணவுப் பொருட்களையும் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பி எமது பொருளாதாரத்தைப் பெருக்கவேண்டும் என்ற கருத்துக்களின் வெளிப்பாடாக அமைந்த அப்பாட்ல் கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலு: தேசியப் பொருட்களின் பயன்பாட்டிலும் புலவர் ஈடு பாடு கொண்டிருந்தமையைக் காட்டுகின்றன.
17

Page 79
130 தமிழியற் கட்டுரைகள்
வாய்ச்சிட்ட கற்பக தாருவெ னும்பன
மதுரப் பழத்தினை யாமறந்தே ஈச்சம் பழத்திற்கு வாயூறிக் கைப்பொருள்
இழக்கின்ற வாறென்ன ஞானப்பெண்ணே செங்கதி ரோன்சுடு மிந்தப் பலகாரம்
செய்துவைத் துத்தின்ன மாட்டாம லங்கே பிறர்சமைத் திங்கே விடுமவைக்
காசைப்பட் டோமடி ஞானப்பெண்ணே
என்னும் பாடல்கள் உதாரணமாக நோக்கத் தக்கன. ‘ஆடுகதறியது' என்னும் பாடல் புலவர் காலத்தில் சமூகத்தில் நிலவிய கொடுமையினை பலியிடும் கொடிய வழக்கத்தினை நீக்க வேண்டும் என்ற கருத்தில் எழுந்க சீர்திருத்தப் பாடலாக உள்ளது. இவற்றைப் பார்க்கு மிடத்து சமயசம்பந்தமான பாடல்களை ஆக்குவதில் அதிக கவனஞ் செலுத்தியிராவிடில் காலத்தின் குரலா கப் பல சமூக தேசிய உள்ளடக்கம் கொண்ட பாடல் களேப் புலவர் பாடியிருப்பார் என எண்ணத்தோன்று கிறது. சமூக, தேசியக் கருத்துக்க்ளின் வெளிப்பாடாக அமைந்த புலவரின் பாடல்களில் புதிய யாப்புக்களே பெரிதும் பயின்று வந்துள்ளன.
இந்தவகையிற் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக அமைந்த சோமசுந்தரப்புலவர் தாமியற்றிய குழந்தைப் பாடல்கள் மூலம் ஈழத்துச் செய்யுளிலக்கிய வரலாற்றில் தாம் பெற்ற சிறப்பிடத்தை மேலும் வலுப்படுத்தியுள் ளார். திரு. கே. எஸ். அருணந்தி அவர்களின் தூண்டுதலி ஞல் குழந்தைப்பாடல்களை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஈழத்துப் புலவர்களுள் சோமசுந்தரப் புலவரே ஈழத் துக் குழந்தைகளின் அநுபவத்திற்கேற்ற சிறந்த பாடல் களைப் பாடியுள்ளார். புலவர் அதிக குழந்தைப் பாடல் களைப் பாடவில்லையெனினும் அவர் சிறந்த குழந்தைக் கவிஞராகப் போற்றப்படுவதற்கு அவர் பாடிய குழந் தைப்பாடல்கள் சிறப்புடன் அமைந்தமையே காரண மாகும். புலவர் குழந்தைகளுக்காகப் பாடிய பாடல்கள்

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் 13i
சிறுவர் செந்தமிழ் என்ற நூலில் இடம்பெற்றுள்ளன. அந்நூலில் குழந்தைகளுக்காகப் பாடிய பாடல்களுடன், குழந்தைகளுக்கு விளங்கக்கூடியவையான, புலவரின் மற்றைய நூல்களில் அம்ைந்த இலகுவான பாடற் பகு திகள் சிலவும் இலகுவான தனிப்பாடல்கள் சிலவும் இடம்பெற்றுள்ளன. தனிப்பாடல்களாகவும் கதைப் பாடல்களாகவும் புலவர் பாடிய குழந்தைப் பாடல் களுள் ஆடிப்பிறப்பு, கத்தரி வெருளி, புழுக்கொடியல், எலியுஞ் சேவலும், பவளக்கொடி முதலான பாடல்கள் குழந்தைகளுக்கேற்ற சிறந்த பாடல்களாகும். இக் குழந்தைப் பாடல்கள் ஓரளவு யாழ்ப்பாணப் பண்பாட் டினைப் பிரதிபலிப்பனவாகவும் அமைந்துள்ளன. இத் தகைய சிறந்த குழந்தைப் பாடல்களைப் பாடியதனல், குழந்தைப் பாடல்கள் இயற்றுவதில் தமிழ்நாட்டுப் புலவர்களுக்குக் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை முன் னேடியாக அமைந்ததுபோன்று ஈழத்துப் புலவர்களுக் குச் சோமசுந்தரப் புலவர் முன்னேடியாக அமையும் சிறப்பு ஏற்பட்டது.
இவ்விதம் பழந்தமிழ்ச் செய்யுள் மரபினைப் போற் றிக் கவித்துவம் நிரம்பிய பிரபந்தங்கள் சிலவற்றை அளித்தும் காலத்திற்கேற்ற வகையில் சமூக, தேசியக் கருத்துக்களைக் கவிதைப் பொருளாக்கி மறுமலர்ச்சிக் கவிதைக்கு வித்திட்டும் குழந்தைப் பாடல்களுக்கு வழி காட்டியும் சோமசுந்தரப் புலவர் செய்த இலக்கியப் பணிகள் அவருக்கு ஈழத்துச் செய்யுளிலக்கிய வரலாற் றில் சிறப்பான ஓரிடத்தினை அளித்துள்ளன. 姆

Page 80
வித்துவசிரோமணி
0றைத்திரு. சி. கணேசையர்
மயிலங்கூடலூர் பி. நடராசன்
(பிறப்பு: 1879-4۔ ہر. பிறந்த ஊர்: புன்னுலைக்கட்டுவன். தந்தையார்: சின்னையர். தாயார்: சின்னம்மா. பெரிய தந்தையாகிய கதிர்காம ஐயரிடம் புன்னுலக்கட்டுவன் சைவப்பாடசாலையில் ஆரம்பக்கல்வி. வித்துவசிரோமணி ந. ச. பொன்னம்பலபிள்ளையிடமும் அவர் மறைவுக்குப்பின் சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவரிடமும் கல்வி: காசிவாசி செந்திநாத ஐயரிடம் ஐயந்தெளிந்தார். 21 ஆம் வயதில் வண்ணுர்பண்ணே விவேகாநந்த வித்தியா லயத்தில் ஆசிரியர்ப்பணி ஆரம்பம். ஆசிரியர் தராதரப்பத்தி ரம் பெற்றர். பல பாடசாலைகளில் தலைமையாசிரியராா.1 பணியாற்றினுர், 32 ஆம் வயதில் அன்னலக்குமியை மணந்தா 1921 முதல் 1932 வரை சுன்னுக்ம் பிராசினி பாடசாலையில தலைமைத் தமிழ்ப் பேராசிரியர். 1932 க்குப்பின் வறுத்தலே விளானில் அமைந்த ஆச்சிரா, தில் குருகுலக் கல்வி முறையிற் கற்பித்தல். 1938 இல் பொற்கிழி பெற்றர். 1951 இல் தமிழக விஞ்ஞானி கே. எஸ். கிருஷ்ணன் பெர்) ஞடை போர்த்திச் சிறப்புச் செய்தார். 1952 இல் வித்துவசிரோமணிப் பட்டம் பெற்றும், 3-11-1958 இல் மறைவு.)

வித்துவசிரோமணி கணேசையர் 133
ஈழத்துத் தமிழ்த் தொண்டர் வரிசையை ஈழத் துப் பூதன் தேவனுரிலிருந்து தொட்ங்கும் மரபு உளது எனினும் தொடர்ச்சியான வரலாறு யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் வாழ்ந்த அரசகேசரியுடன் ஆரம்ப மாவதாகக் கொள்ளலாம். இம்மரபில் சென்ற நூற் ருண்டில் வாழ்ந்த நல்லைநகர் ஆறுமுகநாவலர் ஒரு திருப்பு முனையாகிருர், அவர் வாழ்ந்த நூற்றண்டிலும் இந்த நூற்ருண்டிலும் வாழ்ந்த, வாழ்கின்ற மரபுவழித் தமிழ்த் தொண்டர்களை நாவலர் மரபினர் என்பது வழக்கு. நாவலர் மரபுவழி அறிஞராய் இருந்த போதி லும் நவீன துறைகள் பலவற்றையும் - சிறப்பாக உரை நடையைத் - தமதாக்கிக் கொண்டார். இதனுல் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் நவீன தமிழ் உரை நடையின் தந்தை எனப் போற்றப்படுகிறர். தமிழகமே அவ ரைச் சிறந்த பதிப்பாளர், உரையாசிரியர், இலக்கண விற்பன்னர் எனப் போற்றுகிறது.
நாவலரின் மருகரான வித்துவசிரோமணி ந. ச. பொன்னம்பலபிள்ளை நாவலரின் மாணவராகவும் வாரி சாகவும் விளங்கினர். சுன்னகத்தில் வாழ்ந்த நமச் சிவாய தேசிகர், முருகேச பண்டிதர், நாகநாத பண்டிதர் முதலிய பேரறிஞர்களிடம் பயின்று பேரறிஞராய் விளங்கியவர் அ. குமாரசுவாமிப்புலவர். புலவர், நாவலரி டம் தமது ஐயங்களைக் கேட்டுத் தெளிவுபெற்றவர். வித்துவசிரோமணி, புலவர் ஆகிய இருபெரும் அறிஞர் களிடமும் தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் வட மொழி, சமயம் என்பவற்றையும் பயின்றவர், புன்ஞ ஃலக்கட்டுவன் மறைத்திரு சி. கணேசையர். இதனல் அவர் இரு மரபுகளிலுமுள்ள அறிவு நலம் அனைத்தினை யும் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தொண்டராய் விளங்கினர். ,
ஐயரவர்களுடைய தமிழ்த்தொண்டு பரந்துபட்டது. மாணவர்களுக்குக் 'கற்பித்தல், ஆராய்ச்சிக் கட்டுரை கள் வரைதல், சிறுவர்களுக்கான எளியநடை நூல்களை

Page 81
134 தமிழியற் கட்டுரைகள்
எழுதுதல், இலக்கிய - வாழ்க்கை வரலாற்று நூல்களே யாத்தல், தொல்லிலக்கியங்களுக்கு உரைவகுத்தல், இலக்கண நூல்களை உரைவிளக்கக் குறிப்புக்களோடு பதிப்பித்தல், செய்யுள் இலக்கியம் படைத்தல் ஆகிய பல் வகைத் தொண்டுகளிலும் ஐயரவர்கள் ஈடுபட்டார்கள்.
நூலிலே அன்புவைத்து அதன்பாலுள்ள விஷயங் களை வெளிப்படுத்துதலையே தனி இன்பமாகக் கொண்டு பலகாலம் ஆராய்ந்து பதிப்பிக்கும் முயற் சியுடையார் சிலருள் ஐயர் ஒருவர்
எனத் தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் ஐயர் அவர்களைப் பாராட்டியுள்ளார். -
அறிவினுல் ஏழையாகிய ஒருவனுக்கு அறிவுத் தானம் வழங்குதலே தலைசிறந்த தொண்டு என்பர். வித்துவ சிரோமணி, புலவர் ஆகியோரிடம் தமிழின் துறைகள், யாவும் ஐயந்திரிபறக் கற்ற ஐயரவர்கள், புலவரிடம் வடமொழியையும் துற்ைபோகக் கற்றர். வாழ்நாள் முழுவதுமே மாணவராய் இருந்த ஐயர் அவர்கள் இரு பது ஆண்டுகள் தொடர்ந்து கல்வி கற்றபின் ஆசிரிய ர்ாகப் பதவியேற்றர். கற்பித்தலை வாழ்வுக்கு வருவாய் தரும் தொழிலாய்க் கொள்ளாது தமிழ்த் தொண்டா கவும் கற்கும் தொழிலின் நிறை நிலையாகவுமே அவர் கருதினர். ஆசிரியர் தராதரப் பத்திரம்பெற்ற ஐய ரவர்கள் ஆரம்பத்தில் ஆசிரியராயும் பின் தலைமை யாசிரியராயும் பணியாற்றிஞர். அரசின் சட்ட திட்டங் களுக்கு அமைவான பாடசாலைகளிற் கற்பித்தபோது சூழலில் வாழ்ந்த பல மாணவர்களுக்கு உயர் இலக்கண, இலக்கியங்களைக் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
1921ஆம் ஆண்டு மரபுவழிக் கல்வியை நிறுவன அடிப்படையில் ஊக்குவிக்கும் நோக்குடன் ஆரிய திரா விட பாஷாபிவிருத்திச் சங்கம் நிறுவப்பட்டது. இச்சங் கம் பிரவேச பண்டித, பாலபண்டித, பண்டிதத் தேர்வு

வித்துவசிரோமனி கணேசையர் 135
களை நடத்தத் திட்டமிட்டது. இத் தேர்வுக்குத் தோற் றும் மாணவர்களைப் பயிற்றுவதற்கெனச் சுன்னகத்தில் பிராசீன பாடசாலை நிறுவப்பட்டது. இவ்வுயர்கல்வி நிறு வனத்தில் ஐயரவர்கள் தலைமைத் தமிழ்ப் பேராசிரிய Ππ(συ)ff. இக்காலத்தில் தொல்காப்பியம் கற்பித்தலிலும் உரைகளை நுணுகி ஆராய்வதிலும் ஐயரவர்கள் ஈடு பட்டார். தம் ஆசிரியர்களிடம் பயின்றவற்றைவிடத் தம் நுண்ணுணர்வாலும் ஐயரவர்கள் புதிய இலக்கண முடிபுகளை அ றிந்து தெளிந்து கொண்டார்.
1932 க்குப்பின் வறுத்தலைவிளானில் அமைந்த தமது இல்லத்தை நாடிவரும் மாணவர்களுக்குக் கற்பிப் பதிலும் நூலாாாய்ச்சி செய்வதிலும் அறிஞர்களோடு உரையாடுவதிலும் ஈடுபட்டுவந்தார். இக்கால கட்டத் தில் ஐயரவர்களிடம் கற்று வல்லவர்களான மாணவர் தொகை எண்ணரியது. இம்மாணவர்களுள் அவரது அணுக்கத் தொண்டராய் இருந்து நெடுங்காலம் பயின்று இலக்கணத் துறையில் ஐயரது வாரிசு என்னும் பெருமை பெற்றவர் மயிலிட்டி தெற்கைச் சார்ந்த பண்டிதர் இ நமசிவாயம். அவர்கள். பண்டிதர் அவர்களுக்கு யாழ்ப் பாணப் பல்கலைக்கழகம் வழங்கிய இலக்கணவித்தகர்ப் பட்டமே ஐயரவர்கள் தமது மாணவர்களுக்கு வரை யாது வழங்கிய கல்விக் கொடைக்குச் சான்ரு கும். ஐயரவர்களது கல்வித் தொண்டின் சிறப்புக்கு அவரது 1ாணவர் பெற்ற பட்டமே உரைகல்லாகும்.
சோழவந்தான் அரசன் சண்முகனர் தமிழகத்துப் பேரறிஞர்களுள் ஒருவர். அதிதீவிர விவேகமும் நுண் மாண் நுழைபுலமும் மிக்கவர். அவர் தொல்காப்பியப் பாயிரத்துக்கும் முதற் சூத்திரத்துக்கும் புத்துரைகண்டு சண்முகவிருத்தி என்ற நூலை எழுதியவர். இவ்வறிஞ ருக்கும் ஐயர் அவர்களுக்கும் இருபெயரொட்டு ஆகு பெயர், அன்மொழித்தொகை என்பன தொடர்பாகக் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. சண்முகனர் இரண் டும் வேறுவேறு என்றர். ஐயரவர்கள் இரண்டும்

Page 82
136 தமிழியற் கட்டுரைகள்
ஒன்றே என்றர். இருவரது கருத்துக்களுக்கும் ஏற்பு டைய வாதங்கள் செந்தமிழ் ஏட்டில் தொடர்ந்து வெளி வந்தன. இருவரும் முன்வைத்த கருத்துக்கள்அறிஞர்கள் கருத்தைக் கவர்ந்தன. ஈற்றில் ஐயர் / அவர்கள் தம் கட்டுரைகள் மூலம் கூறிய கருத்தே தக்கது என அறிஞ ருலகம் ஏற்றுக்கொண்டது.
கவியின்பம், ஒரு செய்யுட் பொருளாராய்ச்சி, நச்சி ர்ைக்கினியர் உரை நயம், இராமாயணச் செய்யு பாடாந்தரம், அளபெடை, போலி எழுத்து, பிறிதுயிரி தேற்றல், ஆறனுருபு பிறிதேற்றல், தொகை நிலை, சிறுபொழுதாராய்ச்சி போன்ற பல கட்டுரைகளைப் பல் வேறு இதழ்களில் ஐயரவர்கள் எழுதினர்கள். இக் கட்டுரைகள் திட்ப நுட்பம் செறிந்தவை; பரந்த நூல றிவையும் நுண்ணறிவையும் புலப்படுத்துவன. இவரது கட்டுரைகளைத் தமிழகம் எவ்வளவு ஆர்வத்துடன் எதிர் பார்த்தது என்பதற்குச் செந்தமிழ்ப் பத்திராதிபரும் பேரறிஞருமான மு. இராகவையங்கார் எழுதிய கடித மொன்றே சான்று பகரும் : "தாங்கள் ‘தொணி என் னும் அரிய விஷயம் அனுப்பிய பின்பு வேறு விஷயம் அனுப்பாமைக்குப் பலர் (அவாவுடன்) வருந்துகிருர்கள். தயை செய்து ‘இராமாவதாரச் செய்யுட் பாடாந்தரத் தின் தொடர்ச்சியை அனுப்பிவரின் உபகாரமாம்.' ஐயரது கட்டுரைகள் பல்வேறு விடயங்கள் தொடர் பான ஐயங்களைத் தீர்ப்பனவாயும் அறிவூட்டுவனவா யும் இருந்தன.
தாம் வாழ்ந்த காலத்தில் முதல் நிலை அறிஞராக் விளங்கிய ஐயரவர்கள் சிறுவர்களுக்காக, எளிய உரை நடையில் குசேலர் சரிதம் என்ற நூலை எழுதியுள்ளார். தமது ஆசிரியரான குமாரசுவாமிப்புலவர் சரித்திரத்கை யும் ஈழநாட்டுப்புலவர் சரிதத்தையும் ஓரிரண்டு வருடத்து நூற்பழக்கமுள்ள பொது மக்களும் புரிந்துகொள்ளும் உரைநடையில் எழுதியுள்ளார்.

வித்துவசிரோமணி கணேசையர் · 1,ጃ7
நூலாசிரியன் ஒருவன் தான் எழுதும் மொழி நடை யைப் பொருளுக்கேற்றதாகவும் கற்போரின் தரத்துக்கு ஏற்றதாகவும்அமைத்துக்கொள்வது அவசியமாகின்றது. இதனை நன்குணர்ந்த ஐயரவர்கள் வேறுபட்ட உாை நடைகளைக் கையாண்டுள்ளார். S.
கண்ட பொழுதே கண்ணனைக் கண்டதுபோல் மகிழ்ச்சியுற்றர். வழிவந்த வருத்தமும் தீர்ந்தார். கண்ணன்பாற் கனநிதி பெற்றவரை ஒத்தார். அப்பொழுதே அவ்விடத்தில் நில்லாது தாவி விரைவாக நடக்கத் தொடங்கினர் இது ஐயரவர்கள் குசேலர் சரிதத்தில் கையாண்டுள்ள நடை. இது பாடசாலைச் சிறுவர்களுக்கேற்ப எளிதாக அமைக்கப்பட்டுள்ளது.
மேகதூதக் காரிகையுரையில் ஐயரவர்க்ள் எழுதிய உரைநடை வேறுபட்டதாக உள்ளது. அவ்வுரைநடை கற்றேர்க்குரியதான உயர்ந்த தரத்தில் உள்ளது. பின் வரும் பகுதி ஓர் எடுத்துக்காட்டாகும்:
இம்மேகதூதக் காரிகையென்னும் நூல் இன்ப மென்னும் ஒன்று பயப்பச் செய்ததேயாம். இந் நூல் முந்நூலுள் எந்நூலெனின் வழிநூலேயாம். எதன் வழி யாக்கப்பட்டதெனின் கவிகளைச் சுவை படச் செய்யும் காளிதாச மகாகவியினலே வ. மொழியிலே இயற்றப்பட்ட மேகசந்தேசமென்னும் நூலின் வழி யாக்கப்பட்டதே.
நூலைக் கற்பவர்களுக்கேற்ப உரை நடை மாறு படவேண்டுமென்பதை உணர்ந்தே அவர் செயற்பட் டார் என்பதை ‘ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் முகவுரையில் உள்ள பின்வரும் பகுதி உறுதி செப் கிறது - •
இச் சரிதங்களிலுள்ள வாக்கியங்களுள் வரும்தொடர் மொழிகளுட் பெரும்பாலன படிப்போர். எளிது ணரற்பொருட்டுச் சந்தி நோக்காது பிரித்தெழுதப் பட்டும் புலவர்களுடைய இயற்பெயர்களுட் சில
18

Page 83
38 தமிழியற் கட்டுரைகள்
இலக்கண விதி நோக்காது வழங்கிவந்தபடியே எழுதப்பட்டும் உள்ளன.
கம்பனுக்கு நிகராகக் காவியம் செய்யும் எண்ணத் துடன் வடமொழி மகாகவி காளிதாசனின் இரகுவம் சத்தைத் தமிழில் பார காவியமாகப் பாடினர் அரச கேசரி. இந்நூலை ந. ச. பொன்னம்பலபிள்ளை அவர்கள் அச்சிற்பதிப்பித்து வெளியிட்டார். சுன்னகம் அ.குமார சுவாமிப்புலவர் "இரகுவம்சக் கருப்பொருள்" என்ற பெயரில் நூலிலுள்ள முக்கிய பாடல்களுக்கு உரை எழுதி வெளியிட்டார். ஈழத்தின் உயர்ந்த இலக்கியச் சொத்தான இந்நூலைக் கற்கும் மரபு தொடர்ந்து நிலவியது. வித்துவசிரோமணியிடமும் புலவரிடமும் இந்நூலை ஐயரவர்கள் ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தார். புலவரிடம் வடமொழி இரகுவம்சத்தையும் பயின்ருர்; பிராசீன பாடசாலையில் சமஸ்கிருதப் பேராசிரியராக விளங்கியவரும் சமஸ்கிருதத்தில் நிறைந்த அறிவுபெற்ற வருமான வி. சிதம்பரசாஸ்திரியிடமும் தம் ஐயங்களைத் தெளிந்து கொண்டார். பரந்த இப்பயிற்சி காரண மாக உரை காண்டற்கு அரிதான இந்நூலுக்கு ஐயர வர்கள் விரிவான புத்துரை எழுதினர். இவ்வுரை ஐயரவர்களின் பரந்த இலக்கிய அறிவையும் நுணுகிய இலக்கண அறிவையும் செய்யுட்சுவை உணர்வையும் புலப்படுத்துகிறது.
அகநானூறு என்ற சங்க நூலின் முதல் நூறு பாடல்களுக்கும் ஐயரவர்கள் புத்துரை எழுதியுள்ளார். இவ்வுரையின் ஒரு பகுதி ஈழகேசரி இதழ்களில் வெளி வந்தது. நாணிக் கண்புதைத்தல் என்ற ஒரு துறைக் கோவைக்கும் ஐயரவர்கள் புத்துரை எழுதியுள்ளார்.
ஐயரவர்களின் நிறைந்த தமிழறிவின் வெளிப்பா டாக விளங்குவது அவரது தொல்காப்பிய உரைவிளக்கக் குறிப்புக்களாகும். தொல்காப்பியம் சங்க காலத்தை ஒட்டி எழுந்த இலக்கணநூல். பல நூற்றண்டுகளுக்குப் பின் அதற்கு உரைகள் எழுந்தன. ஏட்டுவடிவில் இருந்த பழைய உரைகளை அடிக்கடி பெயர்த்தெழுதும்போது பிழைகள் மலிந்தன. இதனல் கற்போர் பொருள்

வித் துவசிரோமணி கணேசையர் 139
உணரமுடியாது துன்பமுற்றனர். நாவலர் பெருமான், சி. வை. தாமோதரம்பிள்ளை ஆகியோரைத் தொடர்ந்து ஐயரவர்களும் தொல்காப்பியத்தையும் அதன் உரை களையும் செம்மை செய்து பாதுகாக்க முயன்ருர்.
இரண்டு பேரறிஞர்களிடம் முறைப்படி பெற்ற் கல்வி, பல ஆண்டுகள் திரும்பத்திரும்ப மாணவர்க்குக் கற்பித்த அநுபவம், பல உரைகளையும் ஏடுகளையும் ஒப் பிட்டு ஆராய்ந்து பெற்ற தெளிவு, சரியானதை உண ரும் மனப்பக்குவம், தாம் கற்றவை, உணர்ந்தவை, கற்கும்போது எழுந்த ஐயங்கள் என்பவற்றைக் குறித்து வைத்து மீண்டும் மீண்டும் ஆராயும் மனப்பாங்கு என்பன ஐயரவர்களை இப்பெரும் பணியில் ஈடுபடத் ஆாண்டின. தாம் பிழைகள் எனக் கண்டவற்றையும் அவற்றுக்குப் பொருத்தமான திருத்தங்களையும் பத்திரி கைகளில் வெளியிட்டு அறிஞர்களது ஒப்புதலையோ திருத்தங்களையோ பெறுவதில் ஐயரவர்கள் என்றும் பின்னின்றது கிடையாது. சரியான மூலபாடத்தைக் கண்டறிய வேண்டுமென்பதற்காகத் தாம் நேரடியாகத் தமிழகம் சென்ருர். அல்லது தகுதிவாய்ந்த தமது மாணவர்களே அறிஞர்களிடம் அனுப்பி உரிய திருத்தங் களை உறுதி செய்துகொண்டார். தமது வாழ்நாளிற் பெரும்பகுதியை ஐயரவர்கள் தொல்காப்பிய ஆய்வி லேயே செலவிட்டார்.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சிஞர்க்கினியர் உரை (1935), தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேணுவரை யர் உரை (1938), தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண் டாம் பாகம்) பின்னுன்கியல்களும் பேராசிரியமும் (1943), தொல்காப்பியம் பொருளதிகாரம் 1முதலாம் பாகம்) முன்னைந்தியல்களும் நச்சிஞர்க்கினியமும் (1948) ஆகிய வற்றை ஐயரவர்கள் உரைவிளக்கக் குறிப்புக்களோடு பதிப்பித்தார்கள். ஞா. தேவநேயப்பாவாணர், அ. பூவரா கம்பிள்ளை, கு. சுந்தரமூர்த்தி முதலியோர் பின்னளில் வெளியிட்ட தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புக் களுக்கு ஐயரவர்களே வழிகாட்டியாக விளங்கினர்.

Page 84
140 தமிழியற் கட்டுரைகள்
மாணவராயிருந்த காலமுதல் ஐயரவர்களின் அணுக் சுத் தொண்டராகவும் உசாத்துணைவராகவும் விளங்கிய இலக்கணவித்தகர்,பண்டிதர் இ. நமசிவாயம் அவர்கள்,
தொல்காப்பியமாகிய பெ ரு ங் கடலிற் புகு வோர்க்கு ஐயரவர்களின் குறிப்புக்கள் மரக்கலம் போல உதவுவன. இது ஐயர் தொண்டுகளில் மிக உயர்ந்தது
என்று கூறுவது ஐயரின் இலக்கணத் தொண்டின் சிறந்த மதிப்பீடாக உள்ளது. பதிப்புத் துறையில் அளப்பரிய சாதனைகள் செய்த தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர் 'உங்கள் பதிப்புக்கள் மிக்க திருப்தியை உண்டுபண்ணுகின்றன’ என்று பாராட்டியிருப்பது ஐயரவர்களின் புகழ் உடம்பை விளக்கம் செய்வதாய் அமைகின்றسره لكى
ஐயரவர்களது மிகுபுகழ் குடத்துள் விளக்காக ஒடுங்கிவிடாது குன்றின் மேலிட்ட தீபமாக ஒளிர வழி வகுத்தவர் சுன்னுகம் திருமகள் அழுத்தக உரிமையா ளரும் ஈழகேசரி (தமிழ்), கேசரி (ஆங்கிலம்) ஏடுகளின் வெளியீட்டாளருமான திரு. நா.பொன்னேய்ா அவர்களே. ஐயரவர்களது நூல்களை எல்லாம் பல்லாயிரம் ரூபா செலவில் வெளியிட்டு அவரது தமிழ்த் தொண்.ை நிலைபெறச் செய்தவர் நா. பொன்னையா அவர்களே,
ஐயர் அவர்கள் கசடறக் கற்றவர்; கற்றபடி ஒழுகியவர். இறுதிக் காலத்தில் கற்பனவும் இனி அமை யும் என்று தெளிந்து இறைவன் திருவடிகளையே இடை விடாது நினைந்து வாழ்ந்தவர். அவரது பத்தியின் வெளிப்பாடாக அவரது வழிபடு கடவுளாகிய வறுத்தலே விளான் மருதடி விநாயகர் மீது இருபா இருபஃது, அந் தாதி, கலிவெண்பா, கலிநிலைத்துறை, ஊஞ்சல் முதலிய பல்வகைப் பிரபந்தங்களைப் பாடினர். இவற்றைவிட வாழ்த்துக் கவிகளாகவும் சாற்று கவிகளாகவும் எண் னற்ற செய்யுள்களைப் படைத்தளித்துள்ளார். இவை அவரது செய்யுள் ஆக்கும் திறனை வெளிப்படுத்துவன.

வித்துவசிரோமணி கணேசையர் 141
ஐயரவர்கள் வாழும்போதே தமிழகமும் ஈழமும் அவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டிப் பெருமை பெற்றன. அவரது அறுபதாண்டு நிறைவின்போது (1938) தமிழறிஞர்களும் புரவலர்களும் பாராட்டி விழா எடுத்துப் பொற்கிழிவழங்கினர். 1951 இல் தமிழகத்துத் தமிழ் வளர்ச்சிக் கழகம் திருநெல்வேலி பரமேசுவரக் கல்லூரியில் நிகழ்த்திய நான்காம் தமிழ் விழாவில் ஐயரவர்களுக்குப் பொன்னடை போர்த்திச் சிறப்புச் செய்தது. 1952ஆம் ஆண்டு ஆரிய திராவிட பாஷாபிவி ருத்திச் சங்கம் தனது இருபத்தொன்பதாம் ஆண்டு நிறைவு விழாவின்போது நடத்திய முதலாவது சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் ஐயரவர்களுக்கு வித்துவசிரோ மணி என்ற பட்டத்தை வழங்கிப் பெருமை பெற்றது.
ஈழத்தில் இருவகையான கல்வி மரபுகள் நிலவு கின்றன. ஒன்று மேல்நாட்டு மரபில் அமைந்த அகலக் கற்றலை அடிப்படையாகக் கொண்ட பல்கலைக் கழகக் கல்வி முறை. மற்றையது மரபு வழிவந்த உயர் கல்வி முறை. இது ஆழக் கற்றலை அடிப்படையாகக் கொண் L-gl. இக்கல்விமரபு மேல்நாட்டுக் கல்வி மரபின் தாக் கத்தால் அழிந்துபடாது காத்தவர் நாவலர் பெருமான். இம்மரபினை முன்னெடுத்துச் செல்பவராக அமைந்தவர் ஐயர் அவர்கள். உயர்கல்வி நிறுவனமாக இயங்கி வந்த ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்துடன் நெருங் கிய தொடர்பு கொண்டு இம் மரபைக் காக்க்ஐயரவர் கள் அயராது உழ்ைத்தார். ஈழத்திலும் வெளிநாடுகளி லும் வாழும் தமிழர்கள் அஞ்சல் வழியாகத் தமிழைக் கற்றுப் பண்டிதத் தேர்வுகளுக்குத் தோற்ற வழி செய் யும் திட்டமொன்றைக் கலாநிலையத்தினர் வகுத்தார் கள். ஐயரவர்கள் இத்திட்டத்திலும் ஈடுபாடு கொண் டிருந்தார். இவற்றின் மூலம் ஐயரவர்களும் பிறரும் உருவாக்கிய மாணவர் பரம்பரை ஒன்று இன்றும் ஈழத் தில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இம்மரபுக்குப்புத்துயிர் கொடுத்து நவீன அம்சங்களையும் புகுத்தி,பல்கலைக்கழகக் கல்விக்கு ஈடாக இதனையும் வளர்த்துச்செல்வது அவசிய மாகும். O

Page 85
17
முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகள்
வித்துவான் க. செபரத்தினம்
(ஈழவள நாட்டின் கிழக்கு மாகாணத்திலே, மட்டக்களப்புக்குத் தென்திசையிலுள்ள காரைதீவில் 29-03-1892இல் விபுலாநந்த அடிகள் பிறந்தார். தந்தையார் பெயர் சாமித்தம்பி; தாயார் கண்ணம்மை. இடப்பட்ட பெயர் மயில்வாகனம்.
தமிழ், ஆரியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிற் பெரும் புலமை பும் இலத்தீன், மலையாளம், சிங்களம் முதலிய மொழிகளில் அறிவும் பெற்றிருந்தார். பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியராகவும் விஞ்ஞான டிப்ளோமாப் பட்டதாரியாகவும், தமிழ்ப் பண்டிதராக வும் பி. எஸ் சி. (8. Sc.) பட்டதாரியாகவும் இவர் விளங்கினுர், ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றிய மயில்வாகனனுர் 1922இல் துறவு பூண்டு 1924இல் சுவாமி விபுலாநந்தர் என்னும் துறவுத்திருநாமம் பெற்றர். அண்ணுமலைப் பல்கலைக்கழகத் திலும் இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். இவர் 19 - 07 - 1947இல் இறைவனடி சேர்ந்தார்)

விபுலாநந்த அடிகள் 143
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்றமை நன்று
என்னும் வள்ளுவர் வாக்கிற் கிணங்க, விபுலாநந்த அடிகளும் புகழுக்கேதுவாகிய குணத்தோடு தோன்றி, புகழ்பட வாழ்ந்து, புகழொடு மறைந்தவராவார். இரு பதாம் நூற்ருண்டின் முற்பகுதியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றிய பெரியார்களுள், அடிகள் பெற்றுள்ள உயரிய இடமானது மேலே கூறிய கூற்றினை உறுதி செய்து நிற்பதனைக் காண்கிருேம்.
விபுலாநந்த அடிகள் முத்தமிழையும் முறையாகக் கற்று நிறைவான புலமை பெற்றிருந்தார். இதனல் அவர் ஆற்றிய தொண்டானது, தமிழ்மொழியின் முத் துறைகளையும் வளர்த்திடுவதாய் அமைந்துள்ளது. அடி களின் துறவு வாழ்க்கையும் பன்மொழி அறிவும் கணித விஞ்ஞானப் புலமையும் அவரது சீரிய தமிழ்த்தொண் டுக்குப் பெரிதும் துணை நின்றன. * ՝
தமிழ்மொழியின் தொன்மை பற்றியும் பரந்து பட்ட தமிழ் இலக்கிய வளம் பற்றியும் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அடிகள் எழுதியுள்ளார். மதுரைத் தமிழ்ச்சங்க இதழான செந்தமிழ், கரந்தைத் தமிழ்ச்சங்க இதழான தமிழ்ப்பொழில், இராமகிருஷ்ண சங்க இதழான, ழரீராமகிருஷ்ணவிஜயம் ஆகியவற்றிலும், கலைமகள், செந்தமிழ்ச்செல்வி முதலிய சஞ்சிகைகளிலும் அடிகளின் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இவற்றுட் பல கட்டுரைகளை திரு. அருள் செல்வநாயகம் என்பவர், பிபுலாநந்த ஆராய்வுகள், விபுலாநந்த செல்வம், விபுலாநந்த வெள்ளம் முதலிய நூல்களில் தொகுத்து வெளியிட் ள்ெளார். அடிகளாரின் அச்சிடப்படாத சில கட்டுரை ள் விபுலாநந்த அமுதம் என்னும் நூலில் திரு. அருள். சல்வநாயகத்தில்ை வெளியிடப்பட்டுள்ளன.

Page 86
144 தமிழியற் கட்டுரைகள்
விபுலாநந்த அடிகளால் இயற்றப்பட்ட, நடராஜ வடிவம் - தில்லைத்திருநடனம் என்னும் வசன நூலானது உரை மன மிறந்துநின்றவொரு தனிக்கடவுள், ஆன்மாக் கள்மீது வைத்த பேரருளினலே, அவ்வருளே வடிவ மாகத் தோன்றுவான் என்னும் உண்மையினையும் அத் திரு வருளின் ஐந்தொழில்களையும் விளக்குவதாக அமைந்துள்ளது. உமாமகேசுவரம் என்னும் வசன நூலானது, இறைவன் மாதொரு பாகனயமர்ந்துள்ள நுட்பத்தினை விளக்கிநிற்கிறது.
அடிகள் கையாண்ட எழுத்து நடையானது, க்ற் போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளத்தக்க செந் தமிழ் நடையாகும். இவற்றினைக் கற்றுணர்ந்த அறிஞர் கள், அடிகளின் மதிநுட்பத்தினையும் ஆராய்ச்சித் திற னையும் எழுத்து வன்மையையும் வெகுவாகப் பாராட் டியுள்ளனர். தமிழ் உரைநடை வரலாறு என்னும் நூலில் ஆசிரியரான பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள், ‘விபுலாநந்த அடிகள் நடையிலே ஓசைச் சிறப்பும் செறிவும் உண்டு. பொருளைப் புலப்படுத்து தற்குரிய சிறந்த சொற்களைத் தெரிந்து வாக்கியங் களில் அமைத்து அழகுற எழுதும் இயல்பு அவருக் குண்டு’ எனத் தமது நூலிலே எழுதியுள்ளமையை இங்கு குறிப்பிடலாம்.
விபுலாநந்த அடிகள் மிகச் சிறந்த செய்யுள்களையும் ஆக்கித் தமிழ்மொழியை வளப்படுத்தியுள்ளார். தமது பன்னிரண்டாவது வயதிலேயே,
அம்புவியிற் செந்தமிழோ டாங்கிலமும் எனக்குணர்த்தி அறிவு தீட்பு வம்புசெறி வெண்கமல வல்லியருள் எனக்கூட்டி வைத்த . எனத் தொடங்கும் பாடலைத் தமது குரு வணக்கப் பாடலாகப் பாடி குழந்தைப் புலவர் எனப் பாராட டப்பட்ட அடிகள், மாணிக்கப்பிள்ளையார் இரட்டை மணி மாலை, சுப்பிரமணியசுவாமி இரட்டை மணிமாலை (1606), கோதண்ட நியாயபுரிக் குமரவேள்நவமணிமாலை கணேச

விபுலாநந்த அடிகள் ፲45
தோத்திர பஞ்சகம் (1911-12) என்னும் பிரபந்தங்களை இயற்றி, அவற்றினைத் தமது இருபத்து மூன்ருவது வயதிலே (1915) பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இப் பிரபந்தங்களில் இழையோடியிருக்கும் பத்திச் சுவையும்
தமிழ்ச் சுவையும் படித்து இன்புறத்தக்கன. இவற்றை விட மஹாலசுஷ்மி தோத்திரம், குருதேவர் வாக்கியம், தேவ பாணி, தில்லி மாநகர்த் திருமருமார்பன் திருக்கோயிற் காட்சி முதலியனவும் கங்கையில் விடுத்த ஒலை, ஈசனுவக்கும் மலர் என்பனவும் அடிகளின் உயரிய சிந்தனையின் விளைவு களாம்.
அறிவற்றங் காக்குமெனும் அறிவுரைன்ய எழுதி
அறநெறியால் இன்பமெய்தும் அமைதியையும் எழுதி
உறுநட்பு நிலைபெறுமென் றுறுதிப்பா டெழுதி
ஒதுவிபு லாநந்தன் உரையிவையென் றெழுதி
கங்கையில் விடுத்த ஒலை என்னும் படைப்பிற் காணப் படும் ஒலி அமைப்பும் பொருட்செறிவும் உணர்ச்சிப் பெருக்கும் சங்கச் சான்றேரின் பாடல்களை நினைவுகூரச் செய்கின்றன. ஈசன் உவக்கும் இன்மலர் என்னும் பாடல்களில் வரும், 'உள்ளக் கமலம்', 'கூப்பியகைக் காந்தள்', ‘நாட்டவிழி நெய்தல்" என்னும் உயரிய உருவகங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு நிற்கின் றன. -
மொழி பெயர்ப்புப் பணிமூலமும் விபுலாநந்த அடி கள் தமிழ் மொழியைச் சிறப்படையச் செய்துள்ளார். கருமயோகம், ஞானயோகம், விவேகாநந்த ஞானதீபம், நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை, விவேகாநந்தர் சம்பா ஷணைகள் என்பன அடிகள் மொழி பெயர்த்த நூல் களாம். இவற்றைவிட வங்கக் கவிஞர் ரவீந்திரநாத தாகூரின் கார்டனர் என்னும் பாடல்களேப் பூஞ்சோலைக் காவலன் என்னும் பெயரில் அழகாக மொழிபெயர்த் துத் தந்துள்ளார். ஆங்கிலப் புலவர்கள் சிலரின் படைப்பு
19

Page 87
146 தமிழியற் கட்டுரைகள்
களும் அடிகளால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. செக சிற்பியரின் ஜூலியஸ் சீசர் என்னும் நாடகத்தின் ஒரு
அஞ்சினர்க்குச் சதமரண மஞ்சாத நெஞ்சத்து ஆடவனுக் கொருமரண மவனிமிசைப் பிறந்தோர் துஞ்சுவரென் றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்குந் துன்மதி மூடரைக் கண்டாற் புன்னகை கொள்பவன் யான்
என மூலச்சுவை குன்றது, அழகு தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளமை அடிகளின் மொழி பெயர்ப் புத் திறமையை விளக்கி நிற்கிறது. அதனுடன், ஆங் கில வாணி என்னும் பாட்டிடையிட்ட உரைத்தொடர் நிலையானது, ஆங்கில மொழிக் கவிநயத்தினைத் துய்த் திட், ஆங்கில மொழிப் புலமையற்றவர்களை ஆற்றுப் படுத்துவதாய்/அமைந்துள்ளது.
நவநீதகிருஷ்ண பாரதியார் பாடிய தனிச் செய் யுள்களின் தொகுப்பாகிய உலகியல் விளக்கம் என்னும் நூலின் பதிப்பாசிரியராய் விபுலாநந்த அடிகள் பணி யாற்றியுள்ளார். அடிகளின் பதிகத்தினையும், கடவுள் வாழ்த்தினையும், ஆங்கில மொழியில் எழுதப்பட்ட முன் னுரையினையும் கொண்டு 1922-இல் வெளியிடப்பட் உலகியல் விளக்கமானது, தமிழ் இலக்கியப் பூங்காவை அழகு செய்யும் மலர்களுள் ஒன்ருகத் திகழ்கின்றது.
இராம கிருஷ்ண சங்கத்தின் ஆங்கிலமொழி இதழ் களான வேதாந்த கேசரி, பிரபுத்த பாரதம் என்பவற்றின் ஆசிரியராய்ப் பணி புரிந்த அடிகள், அவற்றிலே தமிழ் மொழி பற்றியும் தமிழ் இலக்கியங்கள் பற்றியும் தமிழ்ப்புலவர்கள் பற்றியும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ்ப்புலவர்கள் சிலரின் ஆக்கங்கள் மொழி பெயர்க்கப்பட்டு மேற்படி இதழ்களிலே வெளி யிடப்பட்டன. இவற்றின் மூலம் பிறமொழி பேசுவோ ரும் தமிழ் மொழியின் பெருமையினை அறிந்து போற் றிட வழி ஏற்படலாயிற்று.

விபுலாநந்த அடிகள் ከáየ
திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும் என்னும் பாரதியின் வேட்கை, இங்கு நிறைவு பெறு வதைக் காண்கிருேம்.
அடிகள் ஆற்றிய தமிழ்த்தொண்டுகளுள் இசைத் தமிழ் நூலாகிய ய்ாழ்நூலை ஆக்கி அளித்தமையே உயர்ந்து, சிறந்ததாய்த் திகழ்கிறது. தமிழ் இசைக் கலை நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விரித்து விளக் கும் இந்நூல், சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதை யிலே யாழாசிரியர் அமைதி கூறும் இருபத்தைந்து அடி களுக்குமான விளக்கமாய் அமைந்திருக்கிறது. வழக்' கொழிந்து போன இசைநூல் இலக்கணத்தை வகுத் துரைப்பதாகவும் பண்களின் உருவத்தை விளக்குவ தாகவும் பண்களை இசைத்தற்கு வேண்டிய அலகுநிலை களுக்குரிய விளக்கத்தினைத் தருவதாகவும் அமைந்துள்ள யாழ் நூலானது, பழந்தமிழ் இசைமரபிற்கு புத் துயிர் அளிக்கும் உயரிய நூலாகப் போற்றப்படுகிறது. வில்யாழ், பேரியாழ், மகரயாழ், செங்கோட்டியாழ் ஆகியவற்றினையிட்ட பொதுவான் விளக்கத்தினையும், சகோடயாழினையிட்ட சிறப்பான விளக்கத்தினையும், யாழ் நூலிலே காணலாம்; சகோடயாழின் வடிவத் தினையும் இயல்பின்ையும் இயக்கத்தினையும் 'வெகு நுட்ப மாக இந்நூல் விளக்கி நிற்கிறது. அத்துடன் தேவாரப் பதிகங்கள் முழுவதற்குமான யாப்பமைதி, கட்டளை யமைதி, சுவையமைதி முதலியவற்றினை விளக்கி அவ் வவற்றிற்குரிய பண்களின் உருவங்களையும் தந்து நிற் கும் இந்நூலான்து, தேவாரங்களைப் படிப்போர்க்குப் பேருதவியாக அமைந்திருக்கிறது. அடிகள் தமக்கிருந்த பூதநூலறிவையும் கணிதநூலறிவையும் முத்தமிழ்ப் புலமையுடன் ஒன்றிணைத்து, ஏறத்தாழப் பதினன்கு ஆண்டுகளாய் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயணுகப்" பாரதியார் ஆசித்த இறவாத புகழுடைய புதுநூல் களுள் ஒன்றன. யாழ்நூல் என்னும் அருங்கலை நிதிய

Page 88
148 தமிழியற் கட்டுரைகள்
மானது, 1947 ஆம் ஆண்டு யூன் மாதம் 5 ஆம் திகதி யன்று வெளியிடப்பட்டது. . -s
நாடகத் தமிழ் வளர்ச்சிக்கும் அடிகள் தமது பங்களிப் ைேபச் செய்துள்ளார். ஆங்கிலம்,ஆரியம் என்னும் மொழி களில் அடிகள் கொண்டிருந்த புலமை, மதங்க சூளா மணி என்னும் நாடகத் தமிழ்நூலின் ஆக்கத்திற்குப் பெரிதும் உதவிற்று. இந்நூலின் முதலாம் இயலாகிய உறுப்பியலிலே, தமிழ் இலக்கண இலக்கியங்கள் கூறும் நாடகத் தமிழ்பற்றிய கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள் ளன. இரண்டாம் இயலாகிய எடுத்துக் காட்டியலிலே ஆங்கில நாடகாசிரியரான செகசிற்பியரின் பன்னிரண்டு நாடகங்களின் சிறப்பியல்புகள் விளக்கப்பட்டுள்ளன. மூன்ரும் இயலாகிய ஒழிபியலிலே ஆரியமொழிப் புலவர் தனஞ்சயன் முதலானேர் நாடகம் பற்றிக் கூறி யுள்ள கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. ஆரியம், ஆங்கிலம், செந்தமிழ் என்னும் மும்மொழிகளையும் ஒப்பியல் நோக்கில் ஆராய்ந்து, அவை நாடகமரபு பற்றிக் கூறும் கருத்துக்களைக் கண்டறிந்து எழுதப் பட்ட நாடகத் தமிழ் நூலாம் மதங்க சூளாமணியானது 1926 ஆம் ஆண்டில் நூல்வடிவில் வெளியிடப்பட்டது. மகாகவி பாரதியாரின் படைப்புகளைப் பழைய மர பிலேவந்த அறிஞர்கள் ஏற்க மறுத்த காலத்திலே, பாரதி யாரின் பெருமையினை இனங்கண்டு அறிந்துகொண்ட விபுலாநந்த அடிகள், பாரதி கழக மொன்றினை அமைத் துப் பாரதி பாடல்களை இசையுடன் பாடுவித்து பாரதி யாரின் பெருமையினை அனைவரும் ஏற்றுக்கொள்ள வழி செய்தார். இதன் பின்னர்ே பாரதியாரின் புகழ் தமிழக மெங்கும் பரவத் தொடங்கியது. அடிகள் ஆற்றிய இத்தமிழ்த்தொண்டானது, தமிழ் இலக்கியப் போக்கில் ஒரு திருப்பு முனையாய் அமைந்துவிட்டது. இதனுல் பாரதியுகம் விரிந்து பரந்திட வழி ஏற்பட்டது.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

விபுலாநந்த அடிகள் i49
படுத்துவதற்குக் கலைச்சொற்கள் இன்றியமையாதவை யாய் இருந்தன. இதனை விபுலாநந்த அடிகள் உணர்ந் தார். இதன் பயனக அடிகளைப் பொதுத்தலைவராக வும் அறிஞர்கள் பலரை உறுப்பினர்களாகவும் கொண்ட சொல்லாக்கக் கழகம் ஒன்று 1934ஆம் ஆண்டிலே அமைக் கப்பட்டது. இக்கழகத்தின் அயராத பணியினல் கலைச் சொற்கள் என்னும் அகராதி நூலொன்று 1938 ஆம் ஆண்டில் வெளியிடப்படலாயிற்று. சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினுல் வெளியிடப்பட்ட இந்நூலில் பதின யிரம் கலைச்சொற்கள் இடம்பெற்றுள்ளன. இக்கலைச் சொற்களைப் பயன்படுத்தி,
என மகாகவி பாரதி விரும்பினர். இதனை நடைமுறைப்
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் நூல்கள் பல புதிது புதிதாக ஆக்கப்படுவதனக் காணும் போது அடிகளின் இத்தமிழ்த் தொண்டினைப் பாராட்ட வேண்டியவர்களாயிருக்கிருேம். s
இவ்வாறு விபுலாநந்த அடிகள், முத்தமிழ் வளர்ச் சிப்பணியில் அயராது பாடுபட்டு, செந்தமிழின் சிறப் பினே வெளிநாட்டவர் போற்றிடவும் பிறநாட்டு இலக் கியச் செல்வங்களைத் தமிழ் நாட்டவர் போற்றிடவும் வழிசெய்து, இறவாத புகழுட்ைய புது நூல்களை ஆக்கி அளித்து, மகாகவி பாரதியின் புகழினைப் பாரறியச் செய்து, பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ் மொழியிற் பெயர்த்திட உதவும் கலைச்சொற்களை ஆக் கும் பணியிற் சேர்ந்து உழைத்துத் தமது இறுதி மூச்சி ருந்தவரை, சீரிய தமிழ்த் தொண்டாற்றியுள்ளமையைக் காண்கிருேம். O

Page 89
18
கலையருவி கணபதிப்பிள்ளை
த. சண்முகசுந்தரம்
இலங்கைப் பல்கலைக் கழகத்தின் இரண்டாவது தமிழ்ப்பேரா சிரியராகவும் கலப்பீடாதிபதியாகவும் இருந்தவர் பேராசிரியர் கந்தசாமிப்பிள்ளை கணபதிப்பிள்ளை. தந்தையார் பருத்தித்துறை யைச் சேர்ந்த தும்பளையில் ஆயுர் வேத வைத்தியராக இருந் 'தார். 1903 ஆம் ஆண்டிலே தோன்றிய கணபதிப்பிள்ளை தம் தந்தையாரின் மேற்பார்வையில் தமிழ் கற்ருர். பின்னர் இவர் தும்பளை நான்மறையோன் மகாதேவையர் முத்துக்குமாரசாமி ஐயரிடம் வடமொழியையும் தமிழையும் பழைய மரபுவழி கற்றர். பின்னர் பருத்தித்துறை காட்லிக் கல்லூரியில் ஆங்கிலம் கற்றுத் தேறிஞர் அதன் பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகக் கல்லூரியிலே சேர்ந்து வடமொழி, பாளி ஆகியவற்றைக் கற்று இலண்டன். பல்கல்ைக் கழகக் கலைமாணிச் சிறப்புத் தேர்வில் முதலாம் "வகுப்பிலே தேறினர்.
புகழ்பெற்ற தமிழறிஞர் சி. வை. தாமோதரம்பிள்ளையின் மகனும் பல்கலைக்கழக விரிவுரையாளருமான கிங்ஸ்பரி தேசி கரின் பணிப்புப்படி அண்ணுமலைப் பல்கலைக் கழகஞ்சென்று விபுலாநந்த அடிகளார், சொல்லின் செல்வர் இரா. பி. சேதுப் பிள்ளை ஆகியோரிடம் கற்று வித்துவான் பட்டம் பெற்ருர்.பின்னர் இலண்டன் பல்கலைக் கழகம் புகுந்து மொழியியல் விற்பன்னர் இரால்பு இரேணர் என்பார் வழிகாட்ட ஆராய்ச்சி செய்து கலா நிதிப் பட்டம் பெற்றர். 1936 ஆம் ஆண்டில் ஈழம் திரும்பிய கலாநிதி கணபதிப்பிள்ளை இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி யிலே சேர்ந்து விரிவுரையாளராய்ப் பணிபுரிந்தார். ஈற்றில் பேராசிரியராய்ப் பணிபுரிந்தார். 1963 இல் இப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றர். 1965 ஆம் ஆண்டிலே மறைந்தார்.

கலையருவி கணபதிப்பிள்ளை 151
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை தலைசிறந்த ஆராய்ச்சியாளர்; பட்டதாரி மாணவருக்குத் தமி ழைத் திறம்படச் சொல்லிக்கொடுத்தார். ஆராய்ச்சி மாணவருக்கு ஒப்பில்லாத வழிகாட்டியாகவும் இவர் திகழ்ந்தார். தமிழ் ஆர்வத்தை அப்போதைய மாணவ ரிடம் பரப்பினர். அதுமட்டன்று, இவர் சிறந்த நாடகாசிரியர். செந்தமிழ்ச் செய்யுள் பலவற்றையும் அவ்வப்போது தீட்டினர். ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவற்றையும் எழுதினர். மேலையந்தேயத்துப் புனை கதைகளைத் தமிழில் வடித்துக் கொடுத்தார். சிறந்த வானெலிப் பேச்சாளராகவும் இவர் திகழ்ந்தார். FITFoo வியல் ஆராய்ச்சியில் இவருக்குப் பெரும் புலமை இருந் தது. ஈழத்து மக்கள் கலை மறுமலர்ச்சியின் ஈடு இணை யற்ற முன்னேடியாக இவர் திகழ்ந்தார். ஆகவே, இவரின் நல்லாசிரியர் இரா. பி. சேதுப்பிள்ளை இவரைக் கலையருவி என அழைப்பதிற் பெருமை கொள்வார். வற்ருத அருவி போல இவரது கலைப்புலமை பாய்ந்து கொண்டிருந்தது.
பல்கலைக் கழகத்தில் இவர் தொடர்ச்சியாக 29 ஆண்டு நற்பணி புரிந்து வந்தார். ஆகவே இவரின் பல்கலைக் கழகத் தமிழ்த் தொண்டுபற்றி முதலில் ஆராய்வதே பொருத்தம். அந்தக் காலத்துத் தமிழ் மாணவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுப்பது பொறுப் பான அலுவல். அவர்களுக்கு “டமிள் தெரியாது: பிரித்தானியப் பேரரசு தன் ஆட்சியை இலங்கையில் நடத்திய காலம் அது. எங்கும் ஆங்கிலம். நடை உடை பாவனை பேச்சு எல்லாம் ஆங்கில மயம். அப்படியான நிலையில் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார். அந்தக் காலத்துத் தமிழர் நிலையைப் பேராசிரியரே. தனக்குரிய பாணியில் "தாளித்த சுவையான' தமிழில். சொல்வார். "பலாப்பழம் உண்பதற்கு மேசைக்கத்தி, கரண்டி, முள்ளுத் தேடியலைந்தமாந்தர் வாழ்ந்த காலம் அது. தமிழைப் போதிப்பதுடன் மட்டும் நில்லாமல் இலங்கைப் பல்கலைக் கழகத்துத் தமிழ்ச் சங்கமூலம்

Page 90
52 தமிழியற் கட்டுரைகள்
தமிழ் ஆர்வத்தையும் தமிழ்ப் பண்பாட்டில் நாட்டத் தையும் ஏற்படுத்திஞர். இலங்கைப் பல்கலைக் கழகத்துத் தமிழ்ச் சங்க ஏடாகிய இளங்கதிர் உருவாக இவர் முன் னின்று உழைத்தார். தமிழ் நாடகங்களை எழுதிப் பட்டதாரி மாணவர்களைக் கொண்டு நடிக்க வைத்தார். இப்படி இவர் பல்கலைக் கழக மட்டத்தில் புரிந்த பணி இம்மட்டன்று
இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரி முழுமையான பல்கலைக் கழகமாக 1942 இல் மாறியது. இதன் முதலா வது தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் முத்தமிழ் வித் தகர் விபுலாநந்த அடிகள், எமது நாட்டின் தேவைக்கு, தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்றவகையில் தமிழ்க் கல்வி நெறிகளை மாற்றியமைக்க விபுலாநந்தருக்கு உறுதுணை யாகக் கணபதிப்பிள்ளை நின்று உழைத்தார். பல்கலைக் கழகப் பட்டப் பின்படிப்பிற்குரிய ஆராய்ச்சிகளில் குறிப் பாக ஈழம் பற்றிய ஆராய்ச்சிகளில் மாணவர் ஈடுபட வேண்டும் என்பதை வற்புறுத்தி அதனை நடைமுறைக்குக் கொண்டு வந்த பெருமை பேராசிரியர் கணபதிப்பிள்ளை யையே சாரும். இன்று ஈழத்துப் பல்கலைக் கழகங்களில் தமிழ்த்துறைகளிலிருந்து தமிழ்த்தொண்டு புரிகின்ற பேராசிரியர்கள் யாவரும் கணபதிப்பிள்ளை என்ற 'அச்சிலே வார்த்து எடுக்கப்பட்டவர்கள். * இறுதிவரை தம்மைத் தமிழ் மாணக்கனகவே கருதி வந்த பேரா சிரியர் கணபதிப்பிள்ளை தாமும் கற்ருர், மற்றையோரை யும் கற்கும்படி தூண்டினர்; வழிநடத்தினர்; தாமும் நடந்து காட்டினர், மேற்பார்வை செய்தார். தம் மறிவு மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டுமென்பதே இவரின் குறிக்கோள். தமிழ்ச் சாசனவியல் ஈழத்தில் நன்கு வளர உழைத்தவர் பேராசிரியர்.
ஆராய்ச்சியாளர் நடுவே இவர் பெரும் பொலிவு டன் திகழ்ந்தார். அதே நேரத்தில் தமிழ் கூறும் நல்லுலகத்துப் பொதுமக்க*ள இவர் ஒரு போதும்

* கலையருவி கணபதிப்பிள்ளை 153
மறந்ததில்லை. 'மக்கள் இல்லாமல் மொழி இல்லை; பண்பாடு இல்லை'என்பது இவீரின்கோட்ப்ர்டு. ஆகவே, இவர் புதிய் துறைகளில் ஈடுபட்டு, தளர்ச்சியுற்றி ருந்த தமிழ்’ அன்னைக்குப் புத்துயிர் கொடுக்கும் வகை யில் உண்ழத்த்ார். ‘தம் நல்லாசிரியிர்களர்ன் கிங்சுபரி அடிகனார் (அழிக ந்ேதரதேசிகர்), விபுலாந்ந்த அடிக ளார் ஆகியோன்ரப் பின்பற்றி ஆக்க இலக்கிய முயற்சி பிலும் பேராசிரியர் ஈடுபட்டார். "ய்ாழ்ப்பாண்த்துப் பருத்தித்துற்ைக்கே "சிறப்பான் பேச்சுத் ‘த்மிழில் இவர் எட்டு நாடகங்களை எழுதி அரங்கேற்றினர் இவற்றுள் ஆறு நான்ட்கம், இருநrடக்ம் என்ற பெயரில் அச்சில் வந்தன: யாழ்ப்பாணத்தை ஆண்ட இறுதி மன்னன் சங்கிலியை நாடக நீாயகளுக வைத்து "ள்ழுதப்பட்ட நாடகம் சங்கிலி. இதன் நீண்ட முன்னுரை ஆராய்ச்சி மாணவருக்கு அரிய விருந்து. ஈழத்துத் தமிழ் மக்களின் 'மத்தியில்-இந்த நாடகம் பெரும்" விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது, இரத்தினுவளி என்னும் வடமொழி நாடக நூலை மாணிக்கமாலை என்ற பெயரில்" மிகவும் நல்ல:செந்தமிழில் மொழிபெயர்த்தார். இந்த நூல் இங்கிலாந்துப் பல்கலைக் கழகத் தேர்விற்குப் பாட நூலாய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.பேச்சுத் தமிழில் நாடகத்தை எழுதிப்* புது வழியை ஏற்படுத் திய பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை - இத்துறையில் முன்ைேடியாய் இருந்தார் என்ற பாரஎட்டைப் பெற் (sprit. .
"மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்று யார்ாவது டேசினல் ”அல்லது இந்தக் கருத்துப்பட்ங்' பேசினுல் பேராசிரியர் 'கண்பதிப்பிள்ளேஇேல்ாங்கி எழுந்துவிடு வார். புதிய துறையில் எல்லாம் தமிழ் வளரவீேண் டும் என்பதும் பேராசிரியரின் இல்ட்சிய் வெறி: ஆங்கி லேயரின் சிறந்த படைப்புக்கள்ை யாராவது அவ்வப் போது மொழிபெயர்த்து வெளியிட்டர்ல் அந்த முயற் சியை அவர் பாராட்டுவார்; 'ஆங்கில மொழியில்
20

Page 91
54 தமிழியற் கட்டுரைகள்
உள்ள உயர்ந்த இலக்கிய நூல்களைப் போல ஐரோப்பிய மொழிகளில் உள்ள சிறந்த படைப்புக்களை எல்லாம் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதை வற்பு றுத்துவார் பேராசிரியர். இதனலேதான் செருமானிய மொழியில் தியோடர் சுதோம் என்பவர் எழுதிய இம்வென்வே என்ற நூலைப் பூஞ்சோலை என்ற பெய ரிலே தழுவி எழுதி வெளியிட்டார். தபூ என்பவர் பிரஞ்சு மொழியில் எழுதிய இரட்டையர் என்ற நூலை வாழ்க்கையின் வினுேதங்கள் என்ற பெயரில் எழுதி அச்சேற்றினர். இத்துறையில் மேலும் உழைக்க வேண்டும் என்பது இவரின் பேரவா. இந்த முயற்சி கைகூடவில்லை. இவரின் தமிழாக்கங்கள் சில கையெ ழுத்துப் பிரதிகளாகவே முற்றுப் பெருத நிலையில் இருக் கின்றன.
குழந்தை இலக்கியத்தில் பேராசிரியர் கணபதிப் பிள்ளைக்குப் பெரும் ஈடுபாடிருந்தது. பாரதியாரின் பாப்பாப் பாடல்களுக்கு இவர் அருமையான விளக்கம் கொடுப்பார். இலங்கை வானெலியில் குழந்தைகளுக் கான நிகழ்ச்சிகளை அவ்வப்போது தயாரித்து ஒலிபரப்பி வந்தார். பஞ்ச தந்திரக் கதைகளைக் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் எழுதி ஒலிபரப்பி வந்தார். இந்த எண்ணம் பேராசிரியரின் உள்ளத்தில் எப்போதும் கொழுந்து விட்டு எரிந்தது. ஐரோப்பாவைச் சேர்ந்த "குழந்தைப் பிள்ளைக் கதையாளர் செய்த முயற்சி யாவற்றையும் பேராசிரியர் பாராட்டுவார். Va
அந்தேசன் என்பார் எழுதிய மோகனச் சிறுமி நூலைத் தமிழ் மரபுக்கு ஏற்றவாறு நீரர மங்கையர் என்ற பெய ரில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து சிறுவர்க்கான கதைகளை வெளியிட முயற்சி செய்தார். இது கை கூடவில்லை. இதுவும் கையெழுத்துப் பிரதியாகவே இருக்கின்றது.
பண்ணிசை, நாட்டார் பாடல், கூத்து என்பவற்றி லும் பேராசிரியர் கணபதிப்பிள்ளைக்குப் பெரும் ஈடு

கலையருவி கணபதிப்பிள்ளை i55
பாடிருந்தது. இவர் பெரிதும் விரும்பிக் கற்கின்ற நூல் களில் ஒன்று சிலப்பதிகாரம், சிலப்பதிகார வரிப்பாட லில் பெரிதும் உள்ளத்தைப் பறி கொடுத்தவர் பேரா சிரியர். இந்தப் பாடல்களைப் பின்பற்றி அவர் எழுதிய பாடலில் ஒன்று:
கருவிழிகள் தனநோக்கிக் காதலினுற் கட்டுண்டு.
சிறுமிநின தழகினிற் சிக்கினேன் காணெண்ருய்
சிறுமியென தழகதனிற் சிக்கிநின்ற யாமாகில்
கருவிழிகள் தாம்வாடிக் கவினழிந்து போங்காலும்
திருவினையா யென்றழைத்துச் சேர்ந்தெனை நீ
w அணைப்பாயே.
அண்ணவிமார், கூத்துப்புலவர் ஆகியோர் எல்லோரை யும் பேராசிரியர் பாராட்டுவர். நாட்டார் பாடல்களை "இழிசனர் வழக்கு" என எள்ளி நகையாடியவர் வாழ்ந்த காலம் அது. நாட்டார் இலக்கியம், மக்கள் கலை, கூத்து என்பவற்றில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் கணபதிப் பிள்ளை. ஈழத்திற்கே சொந்தமான கண்ணகி வழக் குரையை 1953ஆம் ஆண்டிலே வார இதழ் ஒன்றில் தொடர்ச்சியாக வெளியிட்டார். ஆனல், அத்தொடர் நிறைவு பெறவில்லை. மக்கள் கலைகளில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை. இவரின் ஆர்வத்தினல் தூண்டப்பெற்ற பேராசிரியர் சு. வித்தி யானந்தன் இந்த நாட்டு மக்கள் கலைக்கு ஆற்றிய தொண்டு இன்று நாடறிந்த அலுவல். •
தனித்தமிழ் இயக்கம் ஈழத்திற் பரவ வேண்டும் என்பதற்காகப் பெரிதும் உழைத்தவர் பேராசிரியர். இதனுல் இவருக்குப் பலத்த எதிர்ப்பும் இருந்தது. கணபதிப்பிள்ளை என்ற பெயரை மாற்றி ஈழத்துக் குழுஉ இறையனுர் என்ற பெயரில் கட்டுரை, செய்யுள் பல வற்றையும் எழுதினர். நாடக பாத்திரங்கள் என்பதை "நாடகத்துள் வரும் ஆடவர் அரிவையர்' என எழுது வார். தம் ஆக்கங்களில் இயன்ற அளவு வடமொழிச்

Page 92
iöö. தமிழிய்ற் கட்டுர்ைகள்
ச்ொற்களை விலக்குவார். மேல்ை நாட்டுச் சொற்கள் யாவும் செந்தமிழ் வ்டிவம் பெறவேண்டும் என்பதில் மிகவும் 'கண்டிப்பானவர்.இத்னைக் கடைப்பிடிக்க அவர் பெரிதும்.முயற்சிசேய்துவந்தார்.
'தமிழ்ப் புலவன் ஒருவன் வாழும்போதே அவனைப் பாராபிட்வேண்டும் இறந்த் பின்னர் இந்திரனே சந்தி ரனே ச்ர்ன்பதிற் கருத்தில்லை என்பது பேராசிரியரின் தளராத "நம்பிக்க்கை. இதற்காக இவர் பெரிதும் உழைத் தார். பல எடுத்துக்கர்ட்டுகளைத்தரலாம். ஆனல் அவற் றுள் மூன்ல்ற மட்டும் இங்கே குறிப்பிடலாம். திருவா சகத்துக்கு உண்ர கண்டுகொண்டிருந்த வெண்ணெய்க் கண்ணணுர் நவநீத கிருட்டின பாரதியாரைப் பாராம். டும் விழாவிலே இவர் கலந்து கொண்டார்: ஐயுரை வாயார வாழ்த்தினர். பண்டிதமணி இலக்கிய கலாநிதி சி. கணபதிப்பிள்ளை எழுதிய இலக்கியவழி என்ற நூலை இலங்கைப் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பிற்குப் பாட நூலாக்கிய டிெருமை, பெரிதும் பேராசிரியரையேசாரும்: அதுமட்டன்று சக்கரவர்த்தி இராசகோபாலாச்சூாரி யார் எழுதிய சக்கரவர்த்தித்திருமகன் என்னும் நூலைப் பல்கலைக் கழகப் பாடநூலாகச் சேர்த்து அந்தப் பேரறிஞரை அவர் வாழும்போதே பாராட்டிஞர் பேர:
ஈழத்துத் தமிழியல் ஆராய்ச்சி மேலும் வள்ர வேண்டும் என்பதில் பெரிதும், ஈடுபாடுண்டியவர் பேரா சிரியர்; தரமும் ஆராய்ந்து எழுதினர். மற்றவரையும் ஆராய்ந்து எழுதும்பிடி துண்டினர். கிட்ட்த்த&ட 40 ஆராய்ச்சிக் கட்டுரைகள்ைப்ப்ல்வேறு இதழ்களுக்கு அவ்வப்போது எழுதினர்.” இவ்ற்றுள் வையாபாடல் வசனம் ஒன்று. “ஈழத்துத் தமிழர் வாழ்வை ஆராய இந்த வெளியீடு பெரும் உதவியர்ய் இருந்தது. பன் மொழிப் புலவர்ான இவருக்கு ஆங்கில்ம், பிரஞ்சு, செர்மன், சிங்க்ளம்,’ப்ாளி, வடமொழி. தெலுங்கு; துளு, மலையாளம் ஆகிய். மிொழிகள் நன்கு தெரியும்.

கலையருவி கணபதிப்பிள்ளை 15%
அதனுடன் வேத, ஆகம கால வடமொழியில் இவர் விற்பன்னர். இந்தப் பெரும் புலமை காரணமாய் மொழியியலை, சாசன இயலை நன்கு கற்றுத் தேறினர். மாணவருக்கும் திறம்படக் கற்பித்தார். கலாநிதிப் பட்ட ஆராய்ச்சிக்கு இவர் இலண்டன் பல்கலைக்கழகத் திற்குச் சமர்ப்பித்த கட்டுரை ஆழ்ந்த் புலமை வாய்ந் தது. இதனை முன்னேடியாகக் கொண்டு பின்வந்த வர்கள் ஆராய்ந்தனர். இது தட்டச்சுப்பிரதியாகவே இன்றும் இருக்கிறது; அச்சிலே வரவில்லை. இந்த அரிய ஆராய்ச்சி மற்றவர்களுக்கு வழி காட்டியாய் அமைந் தது.
பு:இயற்றுவதில் இவர் கைதேர்ந்தவர். காலத் திற்குக்காலம் அரிய பாடல்களே யாத்தார். இவர் எழுதியவற்றுள் அச்சில் வந்தவை காதலி ஆற்றுப்படை, தூவுதும் மலரே என்பன. இக்கால வாழ்க்கையைச் செந்தமிழ் மரபையொட்டிப் படம் பிடித்துக்காட்டுவது காதலி ஆற்றுப்படை தூவுதும் மலரே என்னும் தொகுப்பு நூலில் முக்கியமானவை கதைப்பாடல்கள் அவை. "சீதனக் காதை’, ‘விந்தை முதியோன்','தீவெட் டிக்கள்ளர்’ இன்னும் ப்ல பாடல்கள் ஈழத்துத் தேசிய இதழ்களில் வெளிவந்தவை; வெளிவந்து எல்லோர் பாராட்டையும் பெற்றன.
*தம் நல்லாசிரியராம் முத்தமிழ் வித்தகர் விபுலா நந்த அடிகளார் வழி நின்று இயல், இசை, நாடகம் ஆகியவற்றை வளர்க்க இவர் செய்த அரும்பெரும் முயற்சி போற்றப்பட வேண்டியது. சங்கப் புலவர் ஈழத் துப் பூதன் தேவனர் தொடக்கம் பேராசிரியர் சு. வித்தியானந்தன் வரை தமிழ் வளர்த்த பரம்பரை ஒன்று எமது நாட்டிலே இருக்கின்றது. இந்தத் தமிழ் மணி கள் வரிசையில்தான் தமிழ் அருவியெனப் பாய்ந்தவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை. −
வற்ருத அருவிபோல, கலையருவியாக, பண்பு நிரம்பிய மனித அருவியாக ஓடிக் கொண்டிருந்தவர் பேராசிரியர்

Page 93
158 தமிழியற் கட்டுரைகள்
கணபதிப்பிள்ளை. இந்தக் கலையருவிக்குத் தன்னலம் இல்லை; தமிழ் நலம் மட்டுமே இருந்தது. ஆடல் வல் லான் மீது பெரும் அன்பு கொண்டவர் இவர். பிறர் போற்றுவதையும் தூற்றுவதையும் பொருட்படுத்தா மல் தமிழ்ப்பணி செய்து வந்தார்; 1968-ஆம் ஆண்டு மறைந்தார். தன்னடக்கமாக வாழ்ந்து தமிழ்ப் பூங் காவை வளம்படுத்திய அருவி வற்றியது. ஆனல் அதன் கலைப்பெருக்கு ஒருபோதும் வற்றவில்லை.இந்தப்பெருக்கு அவர் ஆக்கித் தந்த மாணவர் பரம்பரை மூலம் ஓடிக் கொண்டே இருக்கின்றது. பேராசிரியர் பதவியை 1947 இல் இவர் ஏற்றபோது இவரின் மாணவர் இவருக்கு வழங்கிய பாராட்டு மடலிலிருந்து ஒரு பாட்டு:
ஓங்கிடு நற்றமிழ் மாணவர்
UTfi கொருங்கு ծa-ւգ
தேங்கிடு நின்கலைப் பண்போ
நிலவுக நித்த மின்றே
ஈங்குநின் சீர்தனப் போற்றியே
வாழ்த்தை இயம்பு கின்றேம்
நீங்கிடும் பல்லிடர் நிற்கும் தமிழினி நிச்ச யமே.
முத்தமிழும் நிலைத்து நிற்க உழைத்தவர்கலையருவி கண பதிப்பிள்ளை. O

19
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை
எஸ். சிவலிங்கராஜா
(புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை மட்டக்களப்பைச் சேர்ந்த மண்டுரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலவர்மணி மண்டூர் வண்ணக்கர் சோ. ஏகாம்பரப்பிள்ளை அவர்களுக்கும் சின்னத்' தங்கம் அம்மையாருக்கும் மகனுய் 1899 ஆம் ஆண்டு சனவரி 8ஆம் நாள் பிறந்தார். . .
பத்து வயதிலேயே கு, டாமணி நிகண்டு, கந்தபுராணம், பாரதம், திருச்செந்தூர்ப்புராணம் முதலியவற்றைப் புலோலி சந்திரசேகர ஆசிரியரிடம் பாடங் கேட்டவர்.
ஆறுமுகநாவலரின் காவிய பாடசாலையில் கல்வி நன்கொடை பெற்றுச் சுன்னுகம் குமாரசுவாமிப் புலவரிடம் கற்றவர். விபுலாநந்தரின் தொடர்பால் தம் அறிவை மேலும் வளப்படுத் திக் கொண்டவர்.
திருக்கோணமலை இந்துக்கல்லூரி, மட் அர்ச் சிசிலியா மகளிர் பாடசாலை, மட்/அர்ச்அகுஸ்தினர் ஆசிரியர் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றினுள் அதன்பின் சிலகாலம் உயதபாலதி பராகவும் பணியாற்றியபின் மட்/அரசினர் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றர்.
பல பட்டங்களையும் பல மாணவர்களையும் பெற்ற புலவர் மணியவர்களின் நூல்கள் இப்போது வெளிவந்து கொண்டி ருக்கின்றன.
இவர் 18-9-1978 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

Page 94
160 தமிழியற் கட்டுரைகள்
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே புலவர் மணி பெரியதம்பிப் பிள்ளைக்குத் தனித்துவமானதோர். இடமுண்டு. மட்டுநகர் தந்த தமிழறிஞர்களுள் சுவாமி விபுலாநந்தருக்குப் பின் விதந்து போற்றப்பட வேண் டியவர் புலவர் மணியவர்கள். புலவர் மணியின் தமிழ்த் தொண்டில் மட்டக்களப்பின் மண் வளமும் யாழ்ப் பாணத்தின் பாரம்பரியக் கல்வி மரபும் பளிச் சிடுவதை அவதானிக்கலாம். பல்வேறு பட்டங்களையும் புகழ் மாலைகளையும் அவ்வப்போது பெற்ற 'பெரியதம் பிப் பிள்ளையவர்கள் புலவர் மணி என்ற பெயராலேயே கவரப்பட்டார். ஆதலால் அப்பெயரே அவருடன் ஒட்டி நின்று நிலைக்குழ் பெயருமாயிற்று.
19ஆம் நூற்றண்டில் யாழ்ப்பாணத்தில் நிலவிய மரபுவழிக் கல்வியின் பிரதிநிதிகளாய் நாம் இருவரைத் தரிசிக்கலாம். ஒருவர் ப்ண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே மற்றவர் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை. இவ்விரு "பிள்ளைகளும் இலங்கையின் இரு தமிழ் ‘மணிகளாய் மதிக்கப்பட்டனர். முன்னவர் இன்றும் நம்மிடையே வாழ்கின்ருர், புலவர்மணி 1978 இல் அமரராயினர். இவ்விரு “மணிகளும் ஒரு சாலைமாணக்கர். ஒருவரை ஒருவர் உண்மையாய் அறிந்தவர்கள் அளந்தவர்கள். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையைப் பற்றிப் புலவர் மணி பல இடங்களிற் குறிப்பிட்டுள்ளார். அண்மை யிற் புலவர் மணி எழுதிய உள்ளதும் நல்லதும் என்னும் கட்டுரைகள் ஏறத் தாழ அவரின் வாழ்க்கை வரலாறு தான், அதிற் பல இடங்களில் பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளையைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டுள் ளார். மரபு வழிக் கல்வியின் 'பழுத்த பழமாய் வாழ்ந்த புலவர்மணி மரபுவழிக் கல்வியின் கடைசிக் கொழுந்தாய் வாழும் பண்டிதமணியைப் பின்பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை 61
பரீட்சை தொடங்கி விட்டது. முழுதும் வாய்ப் பாடமாகவே மறுமொழி சொல்ல வேண்டும். எழுத்துப் பரீட்சையேயில்லை. மூன்று நான்கு மணி நேரம் நடந்து முடிந்தது பரீட்சை. புள்ளி அடிப் படையிற் கண்ட பரீட்சை முடிவில் சி. கணபதிப் பிள்ளை திறமைச் சித்தியில் முதலாமிடம் பெற்ருர், எனக்கு இரண்டாமிடம் கிடைத்தது. சி. கணபதிப்பிள்ளையும் நானும் ஒரே மரத்தின் இரண்டு கிளைகளில் ஒருமிக்கப் பழுத்த இரண்டுபழங் கள். அவர் சற்றே மூத்தவர். எங்களுள் அக் கிர பூசை (முன்னீடு) பெறுவதற்கு உரியவர் அவரே,
என்று குறிப்பிட்டுச் சொல்லுவதிலிருந்து புலவர் மணியின் 'ஆழ்ந்தகன்ற புலமை'யை நாம் நன்குஅறிந்து கொள்ளலாம்.
புலவர்மணியவர்கள் தமிழை மரபு ரீதியில் வரன் முறையாகக் கற்றவர். யாழ்ப்பாணம் புலோலியூர் சந் திர சேகர உபாத்தியாயரிடம் தொடங்கிய இவரது தமிழ்க் கல்வி, வண்ணுர்பண்ணைக் காவிய பாடசாலையிற் சுன்னகம் குமாரசுவாமிப் புலவரிடம் முற்றிப் பழுத்துக் கனியாகியது. மட்டக்களப்புப் பகுதியில் யாழ்ப்பா ணத்தின் கல்வி உரத்தைக் கனிவாக வளர்த்தவர் புலவர் மணியவர்கள் எனலாம்.
ஆழ்ந்த தமிழ்ப் புலமையின் வெளிப்பாடுகளில் ஒன்ருஜன 'குருபக்தி'யைப் புலவர்மணியிடம் நிாம்பச் காணலாம். ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்ற ஆன்ருேர் வாக்குக்கு இலக்கணமாகத் திகழ்ந் தவர் புலவர்மணி. தமது பகவக்கீதை வெண்பாவில் தமது குருவணக்கத்தை மிகச் சிறப்பாகச் செலுத்தி யுள்ளார். 19 ஆம் நூற்றண்டின் பழம்பெட்டி எனக் தம்மை அறிமுகஞ் செய்யும் புலவர்மணி தமது ஆசிரி யர்களே அப்பழைமைப் பாணியிலேயே நினைவுகூருகிறர்.
2.

Page 95
162 தமிழியற் கட்டுரைகள்
சந்திரசேகர உபாத்தியாயர், குமாரசுவாமிப்புலவர், விபுலா நந்தர் ஆகியோரை அவர் வணங்கியே பகவத்கீதை வெண்பாவைப் பாடுகிருர்,
வண்மைத் தமிழ்க்கு வரம்பு வடமொழியின் உண்மைத் தெளிவுக் குரையாணி - கண்மணியென் சுன்னைக் குமார சுவாமிப் புலவனடி சென்னிக் கியான்செய் சிறப்பு.
புலவர்மணியின் புலமையை அளந்தறிய இக்குரு வணக்கத்தைப் 'பதச்சோருகக் கொள்ளலாம்.
பல்வேறு யாப்பு வடிவங்களையும் கையாண்டு செய்
யுள் செய்யும் ஆற்றல் வாய்ந்தவர் புலவர்மணி. இது
காவிய பாடசாலை வழங்கிய நன்கொடையெனலாம்.பல
வகையான யாப்பு வடிவங்களிலும் பரிச்சயம் இருந்த போதும் வெண்பா யாப்பில் புலவர் மணிக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. விபுலாநந்தருக்கு யாழ்நூல் பெருமை
தேடித் தந்ததுபோலப் புலவர்மணிக்குப் பகவத் கீதை வெண்பா பெருமை தேடித் தந்தது. புலவர் மணியின் ஆக்கங்களுள் காலங்கடந்தும் நின்று நிலைக் கப்போவது பகவத்கீதை வெண்பா எனலாம். புலவர் மணி பகவத்கீதையை வெண்பாவாகப் பாடுவதற்கு மூலபாடமாகப் பாரதியாரின் பகவத் கீதையையே கையாண்டார்என்பதும் குறிப்பிடத்தக்கது. வடமொழி, ஆங்கிலம் இவற்றிலும் புலவர்மணி கணிசமான புலமை யைப் பெற்றிருந்தபோதும் மிக அடக்கமாகத் தமது மொழிபெயர்ப்புப்பற்றி முகவுரையில் குறிப்பிட்டமை அவரது சத்திய நேர்மையையே சுட்டுகிறது எனலாம். பகவத்கீதை வெண்பா பிறந்த கதையைப் பகவத்கீதை வெண்பா முதலாம் பாகத்தில் (கருமயோகம்) விளக்க மாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலவர் மணியவர்களிடம் தமிழ்ப்புலமை சிறந்து காணப்பட்டமைக்கு அவரது பிற ந் த ஊரும் ஒரு

புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை 263
காரணம் கவிதை புனைய ஏற்ற இயற்கைச் சூழலும் பண்பாட்டுப் பாரம்பரியப் பின்னணியும் மட்டுநகரின் கொடைகள். தம் நாட்டையும் புலவர்மணி நன்கு நேசித்தவர். தமது பிரதேசத்தைப் பற்றி ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிடுவார்: w
.என்னைப் பெற்ற தாய்நாட்டிலே, இயலிசைநாடக அமைதிகள் இயல்பாகவே அமைந்துள்ள இனிய நாட்டிலே, நிலவளம்போல் மனவளமும் வாய்ந்த மக்கள் வாழ்கின்ற மட்டக்களப்பு மாநாட்டிலே.
உண்மையான ஒரு புலவனுக்கு இருக்கவேண்டிய தாய்நாட்டுப் பற்றுப் புலவர்மணியிடம் நிரம்பக் காணப் பட்டது. இப்பற்றே இவர் தமது பன்முகப்பட்ட கல்விப்பணியைத் தம்நாட்டிற்கு வழங்க மூலகாரன் மாக அமைந்தது. புலவர் மணியினுடைய கவிதை துர்ல் கள் பல வெளிவந்துள்ளன. அவர் இயற்றிய தனிப் பாடல்கள் பல மிகப் பிரசித்தம் வாய்ந்தவை. புலவர் மணியின் தேசிய நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக அமைந்த இலங்கை மணித் திருநாடெங்கள் நாடே என்றபாடல் நாடறிந்த பாடலாகும். புலவர்மணி, பகவத்கீதை வெண்பா (கரும யோகம், பக்தியோகம், ஞானயேர்க்ம்); சீவக சிந்தாமணி (பாலசரிதை நாடகம்) விபுலாநந்தர் மீட் சிப்பத்து, மண்டூர்ப் பதிகம், கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுரர் பதிகம், சிற்றண்டிப்பதிகம், மாமாங்கப்பதிகம், சர்வ சமய சமரசப் பதிகம், இலங்கைப் புகையிரதப் பெரு விபத்து 1923 முதலிய நூல்களை எழுதியுள்ளார். இவை அவ்வப்போது அச்சு வாகனம் இவர்ந்தவை. அண்மை யில் புலவர்மணி கவிதைகள் என்ற பெயரில் இவை தொகுப்பாக வெளிவந்துள்ளன. ་་་་་་་་་་་་་་་
புலவர்மணியின் செய்யுள்கள் 18ஆம் 19ஆம் நூற்ருண்டின் தன்மையனவாய்ப் பெருமளவு அமைந்த போதும், குறிப்பிடத்தக்க சமகாலச் சமூக சிந்தனை யுடையனவாகவும் காணப்படுகின்றன. இலங்கை முழு

Page 96
164 தமிழியற் கட்டுரைகள்:
வத ற்கும் உணவளிப்போம், கூட்டுறவு, பெரருட் காட்சி போன்ற பாடல்களை வகைமாதிரிக்குச் சுட்டலாம்.
புலவர் மணியின் பாடல்கள் பல, சிலேடை நயம் பொதிந்தவை. “நெல்லும் அசீஸ்துரைக்கு நேர்' என்று முடியும் சிலேடை வெண்பா காளமேகப் புலவரை நினை வூட்டுவதாய் அமைந்துள்ளது. "சட்டம்' என்ற தலைப் பில் புலவர் மணியின் கவிதைத் தொகுப்பில் ஒரு பாடல் இடம் பெறுகிறது. அப்பாடல் W
சட்ட மென்பது வேசரி யேயதைத் தழுவி நிற்பது வேசரி யேயிட்ட என்று தொடங்கிச் சிறப்பான சிலேடைப் பொருளைத் தருகின்றமையை அவதானிக்கலாம். நாயக்கர் காலப் புலவர்களைப் போலச் சந்தர்ப்பங்களுக்குத் தக்க வகை யில் சிறப்பாகவும் நையாண்டியாகவும் பல பாடல்களைப் புலவர் மணி பாடியுள்ளார். புலவர் மணியின் கவிதைகள் பிறந்த கதையை அவருடனிருந்தோர் சொல்லக் கேட் பது இன்பமளிப்பதாகும். : /
புலவர் மணியின் உரைநடையும் தனித்தன்மை வாய்ந்தது. பழந்தமிழ் இலக்கிய உரம் அவர் உரை நடைக்கு உதவியாக அமைந்திருக்கலாம். 'எளிய பதம் எளிய நடை' என்ற வகையிலேயே இவரது கட்டுரை நடைசெல்லும். இவரின் உரைநடை சிற்சில இடங்களில் பண்டிதமணியின் உரைநடைக்கு ஒப்பானதாகவும் அமைந்திருக்கிறது. புலவர்மணியின் உரைநடை ஒரே சீரானதாகவன்றிக் காலதேச வர்த்த மானங்களுக்குத் தக வளைந்தும் நெகிழ்ந்தும் ஏறியும் இறங்கியும் செல்லும் தன்மையுடையது. அவரின் நடையின் தனிச் சிறப்பே அதுதான். “உணர்வு’க்குப் புலவர்மணி முக்கியத்துவர். கொடுத்தார் என்று கொள்ளலாம்.
1913 ஆம் ஆண்டு எனக்கு வயது பதிஞலு. ஆங்கிலத்தில் ஒரெழுத்தும் தெரியாது. முதலாம். வருட வகுப்பில் சேர்ந்து கொண்டி என்னை அவ் வகுப்பிலுள்ள சிறுவர் சிறுமியர் அண்ணுந்து

புலவர்மனி பெரியதம்பிப்பிள்ளை 165
பார்க்கிருர்கள். பெரிய உருப்படி கன்னக்கொண்டை சால்வைப் போர்வை; சட்டையில்லை; கிளுகிளுத் துச் சிரிக்கிருர்கள். இதென்ன கருநாடகமென்று.
புலவர்மணியின் உரைநடைக்கு இதை ஒரு வகை மாதிரியாகக் கொள்ளலாம். பல்வேறு தலைப்புக்களி லும் இவர் எழுதும்போது விடயத்திற்குத் தக்கதாக உரை நடைமுறையினையும் மாற்றியமை சிறப்பாகக் குறிப்பிடக் கூடியது.
புலவர்மணியவர்களின் உரைநடைச் சிறப்பினை. இவரது மேடைப்பேச்சுக்களிலே சிறப்பாகக் காணலாம். 'மட்டக் களப்புப் பகுதியில் புலவர்மணி ஏருத மேடை யுமில்லை பேசாத பேச்சுமில்லை;** என்று கூறுவார்கள். இலக்கிய இரசனை சொட்டச் சொட்டப் புலவர்மணி, பேசும் பொழுது வள்ளுவரின் ‘கேட்பார்ப் பிணிப்பக் கேளாரும் வேட்ப‘ என்ற குறளுக்கு இலக்கணத்தைக் கண்டு கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் காவிய Nாடசாலையிலும், சந்திர சேகர-ஆசிரியரிடமும் பெற்ற பயிற்சி உரையாசிரியர் என்ற வகையில் உதவியதுபோலவே “நயம்பட உரைக் கும்’ ஆற்றலையும் வழங்கியது எனலாம். இச்சிறப் புக்கு உறுதுணையாக இவர் ஆசிரியராகப் பணிபுரிந்த மையும் குறிப்பாக ஆசிரியர்பயிற்சிக் கலாசாலைத் தமிழ்ப் பேராசிரியராய் வாழ்ந்தமையும் அமைந்தன எனலாம். கற்பிக்கவும் கற்கவும் கற்பித்த பேராசானல்லவா அவர். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை வாழ்வு புலவர் மணிக்குப் பட்டை தீட்டியது' எனலாம். இதனும் முன்போலும் எஸ். டி. சிவநாயகம் ‘புலவர்மணி ஒரு வைரமணி’ எனக் குறிப்பிட்டார். அவரின் கூற்று நூற்றுக்கு நூறு பொருத்தமானதே. -
புலவர்மணி பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டிருந்த போதிலும் அவரின் ஆளுமை புலப்பட ஆசிரியப் பணி வாய்ப்பாய் இருந்தது. புலவர் மணியைப்பற்றி அவரது

Page 97
166 தமிழியற் கட்டுரைகள்
'உள்ளதும் நல்லதும்' என்ற நூலின் முன்னுரையில் எஸ். டி. சிவநாயகம் குறிப்பிடுவது ஆழ்ந்து நோக்கத் தக்கது, அனைவரும் அறியவேண்டியது;
அவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர், சிறந்த கவிஞர், சிறந்த வசனகர்த்தா, சிறந்தமொழி பெயர்ப்பாளர், சிறந்த நல்லாசிரியர், சிறந்த அரசியல் ஆய்வாளர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த இலக்கிய ஆய்வாளர், சிறந்த பண்பாளர், சிறந்த பக்தர், சிறந்த நண்பர், சிறந்த சீர்திருத்த வாதி, சிறந்த புரட்சியாளர், சிறந்த பத்திரிகை யாளர். இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு வகையிலும் சிறப்புற்று வாழ்ந்த புலவர் மணி இலக்கியமும் சமூகமும் ஒன்றே என்ற உணர் வோடு இவ்விரு பணியையும் ஒன்ருகக் கருதியே வாழ்ந்து வந்தனர். மட்டக்களப்பு மண்ணின் தனித்துவம் பேணிய அதே வேளையில் புலவர்மணி பிரதேசம் கடந்த கேண்மையுடனும் நட்புடனும் பண்புடனும் வாழ்ந்தார். இதனுல் இவரின் புகழும் நாடு பரந்த, நாடுகள் கடந்த புகழாயிற்று.
ஈழத்து இலக்கிய வரலாற்றினை எழுதப் புகுவோர் மட்டக்களப்பையும் புலவர் மணியையும் மறத்தல் கூடாது என்பதற்காகவே புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை நினைவுப் பணி மன்றம் குன்ரு உழைப்பையும் குறையா ஊக்கத்தையும் கொண்டு செயற்படுகின்றது எனலாம். புலவர் மணி இந்தத் தலைமுறையின் தலை மக்களில் ஒருவர் என்பது யாவரும் அறிந்ததே. ம

20
தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள்
வித்துவான் ச. அடைக்கலமுத்து
தனிநாயக அடிகளாரின் இளமைப் பெயர் சேவியர் என்ப தாகும். இவர் ஊர்காவற்றுறையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் நெடுந்தீவைச் சேர்ந்தவர். ஊர் காவற்றுறையிலும் யாழ். பத்திரிசியார் கல்லூரியிலும் கல்வி கற்றர், குருமாணவராகச் சேர்ந்து கொழும்பிலும் உரோமா புரியிலும் சமயக் கல்வியைக் கற்றுத் தேறிக் குருவானுர், "அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் கலைமாணி, முதுமாணிப் பட்டங்களைப் பெற்றர். தூத்துக்குடியில் ஆசிரியராகப் பணி புரிந்தபோது தனிநாயகமெனப் பெயர் புனைந்து கொண்டார். தமிழ் அறிவும் தமிழ்ப்பற்றும் நிரம்பியவராய்ப் பிறநாடுகளுக் குச் சென்று தமிழின் சிறப்புகளையிட்டு உரைகள் நிகழ்த்தி ஞர். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்திற்குச்சென்று இந்தியக் கலைகளின் பேராசிரியராகப் பணிபுரிந்தார். உலகில் பல நாடுகளுக்கும் சென்று ஆங்காங்குள்ள பல்கலைக்கழகங் களில் விரிவுரை ஆற்றினுர். தமிழ்த்துாது, ஒன்றே உலகம், என்ற தமிழ் நூல்களையும் சில ஆங்கில நூல்களையும் எழு தியதோடு நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதினுர். தமிழ்ப் பண்பாடு என்ற ஆங்கில சஞ்சிகையை நடத்தி வந்தார். தழிழாராய்ச்சி மாநாடு இவருடைய சிந்தையின் செல்வமே! 1913 இல் மலர்ந்த அடிகள் 1980 இல் இயற்கை எய்திஞர்.)

Page 98
768 தமிழியற் கட்டுரைகள்
தமிழன்னைக்குப் பேரிலக்கியங்களைப் புனைந்து அழகு செய்தனர் புலவர்கள். இலக்கணங்களை எழுதி அவளு டைய கன்னித்தன்மைக்கு அழியாத பாதுகாப்பளித் தனர் அறிஞர். உரை நூல்களையும் சிறு கதை, நாவல் களையும் எழுதி அவளை வளம்படுத்தியோர் பலராவர். தமிழின் மொழி வரலாற்று ஆராய்ச்சியிலும் ஒப்பியல் ஆய்விலும் ஈடுபட்டவர்களும் ஒரு சிலர் இருக்கிருர்கள்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்காக அள விடற்கரிய பணியாற்றியவர்களில் தனிநாயகம் அடிகளை விஞ்சியோர் எவருமில்லை
எனப் பேரறிஞர் குலேந்திரன் அவர்கள் குறிப்பிடுவது நாம் சிந்திக்கத் தக்கது.
ஈழ நாட்டிலும் தமிழகத்திலும் தனிநாயக அடி களிலும் பார்க்கதி தமிழை நன்குகற்ற அறிஞர்கள் இருக் கிருர்கள் என்பதில் ஐயமில்லை. ஆயினும் அடிகளா ருடைய தமிழ்ப்பற்றினையும் பணிகளையும் நோக்கும் போது அவருக்கிணையான இன்னெருவரைக் கண்டு கொள்வது கேள்விக் குறியாகவே இருக்கிறது. தனி நாயகம் சமய குரு, பேராசிரியர், ஆராய்ச்சியாளர், திட்டமிட்டுச் செயலாற்றும் செயல் வீரன்; உயர்ந்த இடத்தை அளிக்கும் அன்பான நட்பாளன்.
என்னை நன்றக இறைவன் படைத்தனன் தன்னை நன்றகத் தமிழ்செய்யு மாறே w என்ற திருமூலர்வாக்கிற் சிந்தையைப் பறிகொடுத்தவர்.
உரோமா புரியில் சமய உயர் படிப்பைப் படித்த போது ஆங்கு வீரமாமுனிவர் கழகத்தை நிறுவி, தமி ழோசை செய்தவர் தனிநாயகம். நாற்பத்து மூன்று நாடுகளைச் சேர்ந்த மாணவருடன் அவர் பயின்றபோது பரந்த உலக மனப்பான்மையும் குறையாத மொழிப் பற்றும் தமக்குஏற்பட்டதாய் அவரே குறிப்பிட்டுள்ளார். அவர் இன, மொழி, மத, தேச வேறுபாடுகளின்றித்

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 769
தமிழையும் தமிழர் பண்பாடுகளையும் போற்றி அனைத் துலகிலும் அந்த நிதியங்களை அள்ளிச் சொரிந்தார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது அவருடைய சிந்தையிற் பூத்த செந்தாமரையாகும். அவர் எங்கு சென்ருலும் அங்கு இந்த அமுத வாக்கை உரைக்கத் தவறியதில்லை.
தாத்துக் குடியில் துறவியாகப் பணி புரிந்த தனி நாயகம் அவர்களை, அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயிலச் செய்து ஊக்கமும் ஆக்கமும் அளித்தவர். தமிழ்ச் சான்ருேராய் அங்கிருந்த ஆயர் றேச் ஆண் டகை அவர்கள். அண்ணுமலையில் சிறப்புப் பட்டங் களைப் பெற்றுக் கொண்டபோது தமிழ் அன்னையின் பொன் நிறமான சாயல் அவருள்ளத்தில் பூங்குழல் ஊதியது. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அவர் எண்ணியதில் வியப்பில்லை. தூத்துக்குடி யில் தமிழ் இலக்கியக் கழகம் ஒன்றை அமைத்துப் பல நூல்களை அச்சேற்றி வந்தார்.
கத்தோலிக்க துறவிகள் சிலர் மொழியார்வத்தில் ஈடுபடுவதற்கான சில வாய்ப்புகள் உண்டு. கத்தோலிக் கத் துறவிகள் யாவரும் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், சிங்களம் எனும் மொழிகளை அறிந்தவர்களே! தனி நாயகம் அடிகள் உரோமா புரியில் கற்கும்போது இத் தாலிய மொழியை நன்கு அறிந்து கொண்டார். அவ ருடைய ஆற்றலினல் பிரான்சியம், இஸ்பானியம், ஜேர் மன் மொழிகளையும் கற்றுக்கொண்டார். ஓரளவு பேசவும் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தவும் ஈபுறு, கிரேக் கம், சம்ஸ்கிருதம், போர்த்துக்கேயம், உரூசியம்,மலாய் முதலான மொழிகளையும் அறிந்து கொண்டார். இவற் ருல் தமிழிலக்கியங்களையும் கருத்துக் குவியல்களையும் பிறமொழிச் செல்வங்களோடு ஒப்பு நோக்குவது அவருக்கு இலகுவாயிற்று.
யாழ்ப்பாணத்தில் 1951இல் நடைபெற்ற தமிழ் விழாவில் அவர் ஆற்றிய கன்னிப் பேச்சில் அவருடைய பன்மொழி ஞானம் புலனுயிற்று. s 22

Page 99
170 தமிழியற் கட்டுரைகள்
ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும் இலத் தீன் சட்டத்தின் மொழி என்றும் கிரேக்கம் இசை யின் மொழி என்றும் இத்தாலியம் காதலின் மொழி என்றும் பிரெஞ்சு தூதின் மொழி என்றும் கூறுவது ஒரு புடையொக்கு மெனின் தமிழ் இரக் கத்தின் மொழி - பத்தியின் மொழி - எனக் கூறு வதும் இனிது பொருந்தும். என்று அவர் பேச்சில் குறிப்பிட்டார்.
தமிழார்வம் கொண்ட அடிகளார் தாம் செல்லும் நாடுகளிலே தமிழின் தொன்மை, மென்மை, பத்தி இலக்கியங்கள் பற்றியெல்லாம் விதந்துரைத்தார். தமி ழரின் பண்பாடு பற்றி உரைகள் நிகழ்த்தினர்; கட்டு ரைகள் எழுதினர்; வானெலிகளில் உரை செய்தார். அந்தந்த நாட்டு மக்க ள் தமிழ் மொழியிடத்து ஆர்வமும் தமிழ்ப்பண்பாட்டில் கருத்தும் தமிழ் இலக் கியங்களில் ஆர்வமும் கொள்ள அத்திவாரமிட்டார். பல மொழிகளை அவர் அறிந்திருந்தமையால் அந்தந்த நாட்டு வரலாறு, கலாசாரம், பண்பாடு முதலியவற் ருேடு தமிழ்த் திருநாட்டின் வரலாறு, இலக்கியம், பண்பாடுகளை ஒப்பிட்டுக் கருத்துக்களை உரைத்தபோது கேட்போருக்குத் தமிழில் பற்றும் தமிழ் இலக்கியக் கருத் துக்கள்ை அறிவதில் அவாவும் பண்பாடுகளை நோக் குவதில் ஊக்கமும் ஏற்படுவது இயல்பேயன்றே!
1950 ஆம் ஆண்டு அமெரிக்கா, யப்பான் முதலிய நாடுகளுக்குச் சென்று கல்விச் சுற்றுலாச் சொற்பெருக் குகளை நடாத்தினர். அப்போது தமிழ்மொழி, கலா சாரம், வரலாறு பற்றி அறிந்துகொள்ள ஆங்கில இதழ் ஒன்றை வெளியிடுதல் நன்றென்று பலர் வேண்டினர். இதன் பயனகத் தமிழர் பண்பாடுகளை எடுத்துரைக்கத் தமிழ்ப் பண்பாடு (Tamil Culture) என்ற ஆங்கில முத்திங்கள் வெளியீடு ஒன்றை 1952 இல் வெளியிட் டார். முதலாவது இதழிலே பேராசிரியர் மீனுட்சி சுந்தரனர், வையாபுரிப்பிள்ளை, சிதம்பரநாதச் செட்டி

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 17
யர் முதலிய பேரறிஞர்கள் எழுதியிருந்தனர். இவ் வெளியீடு பதினைந்து ஆண்டுகாலம் வெளிவந்து பெரும் பணி புரிந்தது. - -
உலக நாடுகள் பலவற்றை வலம் வந்தார். ஒற்றுமை அமெரிக்கா, தென்னமெரிக்கா, யப்பான், இங்கிலாந்து, போர்த்துக்கல், கனடா, இத்தாலி, சோவியத் ஒன்றியம், யேர்மனி, வியட்னம், மேற்கிந்தியத் தீவுகள் என்பவற் றுக்குச் சென்று திரும்பினர். சில நாடுகளுக்குத் திரும் பச் சென்றதும் உண்டு. இதனல்தான் அவரைத்தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகள் எனச் சிறப்புப் பெயர் கொண்டு அன்பர்கள் அழைப்பராயினர். மேலும் தமிழ்த் தூது என்ற நூலை எழுதியமையால் இப்பெயர் பெற் றர் என்று கூறுவதும் பொருந்தும். தமிழர் பண் பாடே அவர் தூதின் உட்பொருளாய் அமைந்ததென லாம். தமிழர் பண்பாட்டின் குறிக்கோள்களை அவர் நிகழ்த்திய பேருரையொன்றில் பின்வருமாறு கூறுகிா?ர்:
தமிழர் பண்பாடுகள் பலவற்றை நம்மிலக்கியங் களில் தெளிவாகக் காணலாம். பரந்த உலக மனப் பான்மை ஒரு கொள்கை. அதனுல்தான் புறநா னுாற்றில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் வள்ளுவத்தில் யாதானும் நாடாமால் ஊராமால் என்றும் குறிப்பிடப்பட்டுள்ள்ன. விருந்தோம்பல் ஒருசிறந்த கொள்கை. பிறரன்பு, ஈகை,த்மக்கென வாழாப் பிறர்க்குரியாளன் எனும் கோட்பாடு, என் கடன் பணி செய்து கிடப்பதே, எனும் கருத்து அகத்திணை புறத்திணை மரபு, மானமென்ருல் உயி ரையும் கொடுத்துக் காப்பாற்றும் வேட்கை, மனத் தூய்மை, விடாது முயலல், யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற மனநிலை, உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் எனும் உயர்ந்த இலட் சியம் என்பன தமிழர் பண்பாட்டில் அரிய சில கோட்பாடுகளெனக் கூறலாம் என உரைத்திருக்கின்றர்.

Page 100
172 தமிழியற் கட்டுரைகள்
தனிநாயக அடிகள் உலகிலுள்ள நாற்பதுக்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் தமிழின் சிறப்பியல் புகளையும் தமிழர் பண்பாட்டின் சால்புகளையும் எடுத் துச் சொற்பெருக்காற்றியுள்ளார். வேறு நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் இந்திய ஆய்வுகள் (மdian Studie) என்ருல் சம்ஸ்கிருதம் பற்றிய அறிவினையே குறிக் கும். தமிழ் இடம் பெறவில்லை. அடிகளாரின் அயரா முயற்சியால் உலகின் பல பல்கலைக் கழகங்களில் திராவிட இயல் கற்பிக்கப்படுவதோடு தமிழியல் துறையை அனைத்துலக அறிவுத் துறையாக்கிய பெருமையும் அடிக ளாருக்கே உரியதாகும்.
'திருவாசகம் எனுந்தேன்’ எனப்போற்றப்பெறும் திருவாசகத்தில் அடிகளாருக்கு அளவற்ற ஈடுபாடுண்டு. திருக்குறள் போன்ற ஒழுக்க நூல் உலகில் எங்கணும் தோன்றியதில்லை "/எ ன் பது அவருடைய உறுதி யான முடிபு. இயற்கையிலும் சிறப்பாக மலர்களிலும் அவருக்கு ஒரு கண். இறைவனின் கைவண்ணத்தை இவற்றில் கண்டு மகிழ்ந்தார். மலர்களைத் தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தியதுபோல வேறெந்த இனமும் பயன்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளார். பலமொழிகளில் பாண்டித்தியம் பெற்ற அடிகளார், ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவர். ஆயினும் தன்னந்தனியணுய் இருக்கும்போது தமிழ் நூல்களையே விரும்பிப் படிப்பார். அமெரிக்காவிலும் அவ்வாறே தாம் செய்ததாகக் குறிப்பிடுகிருர்,
தமிழ்த் தூது, ஒன்றே உலகம் என்ற இரு நூல்களையும் இருநூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள் ளார். சங்க இலக்கியத்தில் இய்ற்கையின் இடம், திருவள் ளுவர், தமிழர்பண்பாடும் நாகரிகமும், தமிழரின் மானிட வியற் கொள்கை, தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வுகள் என்பவற்றை இங்கே குறிப்பிடுதல் பொருந்தும்.

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 173 வேற்று நாடுகளில் தமிழ் மணத்தைப் பரப்பிய தோடு, ஆங்காங்குள்ள தமிழாராய்ச்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு மொழியின் செம்மையையும் தமி ழர் பண்பாடுகளையும் தெளிவு படுத்தியும் வந்தார். செக்கோசிலவாக்கியா, சோவியத் நாடு என்னும் நாடு களுக்குச் சென்றபோது, செம்பியன், கண்ணன் என்ற தமிழ்ப் பெயர்க%ளக்கூடச் சிலர் தம் பிள்ளைகளுக்கு இட்டு அழைப்பதைக் கண்டு வியப்புற்றர். தென் கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் தமிழரின் பூர்வீக மரபுகள் இழையோடிக் கொண்டிருப்பதைக் கண்டு கொண்டார். மேலும் தமிழ்ச் சொற்கள் சிதைந்தும் சிதையாமலும் இன்றும் வழக்கிலிருப்பதை அறிந்து நய்ந்தார். v
தமிழ் நாட்டில் பெயரளவில் கேள்விப்பட்டு இது வரை மறைந்திருந்த தம்பிரான் வணக்கம், போர்த்துக் கீச - தமிழ் அகராதி என்பவற்றை லிஸ்பன் பல்கலைக் கழகத்தில் கண்டறிந்து முதல் நூலை அச்சேற்றுவித் தார். வத்திக்கான் நூற் கூடத்தை ஆராய்ந்து திருத் தொண்டர் திருமலர் என்னும் பழைய நூலைக் கண் டறிந்தார். பாரீசுப் பட்டின நூற் கூடத்தில் இன்னும் அச்சேருத பழைய தமிழ் நூல்களும் ஏடுகளும் இருப் பதையறிந்து தமிழுலகுக்கு அறிவித்தார். 1544 இல் அச் சேறிய முதலாவது தமிழ் நூலைப் போர்த்துக்கேய பொருட் காட்சி நிலையத்தில் கண்டறிந்தார். அந்நாட்டில் ஐரோப் பியர் ஒருவரால் எழுதப்பெற்ற முதலாவது இலக்கண நூல் கையெழுத்துப் பிரதியாகவே இன்னும் இருப் பதையும் எடுத்துரைத்தார்.
தனிநாயக அடிகள் மலேசியப் பல்கலைக் கழகத்தில் இந்திய இயல் பகுதியில் விரிவுரையாளராய் இருந்த போது 1964 இல் இந்தியாவின் தலைநகரில் கலை பண் பாட்டியல் ஆய்வாளர்களின் 22 ஆவது மாநாடு நடை பெற்றது. உலகின் பல பகுதிகளிலுமிருந்து தமிழ் ஆர்வம் கொண்டவர்களும் தமிழ்ப் பயிற்சியுடைய பிற

Page 101
it 4 தமிழியற் கட்டுரைகள்
மொழி அறிஞர்களும் அங்கே கூடினர்கள். தமிழகத் துப் பேராசிரியர்கள், ஈழத்து அறிஞர்கள் பலர் தில்லி நகரில் கூடியிருந்த வேளையில் உலகு தழுவிய தமி ழமைப்பு ஒன்றை உருவாக்க அடிகளார் முனைந்தார். இதன் பயனக ஒரே நாளில் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாயிற்று. அடிகளார் தனிநாயகமே அதன் செய லாளர் நாயகமாகப் பொறுப்பேற்க வேண்டுமென்று எல்லோரும் கேட்டுக் கொண்டனர். ་་་་་་་
1966 இல் உலகு தழுவிய தமிழாராய்ச்சி மாநாட் டைத் தமிழகத்துக்கு வெளியே கோலாலம்பூரில் நடத்தி முடித்தமை ஓர் அரிய சாதனை என்றே கூற லாம். தமிழர்கள் “குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பார்கள்’ என்ற பழிச் சொல்லைத் துடைத் தெறிந்து, உலக அரங்கில் தனது பெருமையைத் தமி ழனும் உயர்த்தி வைக்க வல்லவன் என்ற புதிய வர
"லாற்றைத் தொடக்கிய காலம் அது.
தனிநாயக அடிகளை மலேசிய முதலமைச்சரே பாராட்டினர். 1968 இல் தமிழ் நாட்டில் சென்னை யிலும் 1970 இல் பிரான்சு தேசத்தில் பாரீசிலும் அனைத் துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. நான்காவ து மாநாடு 1974இல் பெரிய புள்ளிகளின் எதிர்ப் பையும் . அரசாங்கத் தடைகளையும் தாண்டி யாழ்ப் பாண்த்தில் நடைபெற்றது. அவ்வேளை உலகத் தமி ழாராய்ச்சி மாநாட்டுக்குத் தலைமை வகித்த பேராசிரி யர் வித்தியானந்தன்,
இதுவரை நடத்திய மாநாடுகள் மூலம் தனி நாயக அடிகளார் சாதித்தவை எவை? தமிழ் இலக் கியம் பற்றியோ மொழி பற்றியோ ஆராயும் உரிமை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வர்க்கே உரியது என்ற கொள்கையை இவர் தகர்த் தெறிந்து விட்டார். தமிழாராய்ச்சி குறுகிய எல் லைக்குட்பட்டிராது பரந்து விரிந்து பல துறைகளில்

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 175
விருத்தியடைந்திருக்கிறது. தமிழ் இலக்கிய இலக் கண ஆராய்ச்சியே தமிழாராய்ச்சி என்ற நிலை மாறி, தமிழ் மக்கள் வரலாறு, தமிழ் மக்கள் மனிதவியல், தமிழ் மக்கள் சமயங்கள், தத்து வங்கள், தொல் பொருள் இயல், பிறநாட்டுத் தொடர்புகள், தமிழர் பண்பாடு, தமிழ்க் கலைகள், தமிழ் மொழியியல் இன்னேரன்ன பல துறைகளி லும் தமிழாராய்ச்சி விரிந்து சென்றிருக்கிறது. மேலும் இவரது தொண்டினுல் பிறநாடுகள் பல வற்றிலுள்ள பல்கலைக் கழகங்களிலே தமிழை ஒரு பாடமாக அமைத்திருக்கின்றனர். தமிழாராய்ச்சி யில் அப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ஈடுபடு கின்றனர். இப்போது தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழர் பண்பாடு முதலியன பற்றியும் ஆராய்ச்சி செய்கின்ற நிலை இப்பல்கலைக் கழகங்களில் உருவாகி வளர்ச்சி பெற்று வருகிறது. எனக் குறிப்பிட்டார்.
இவ்வாறு தமிழியல் ஆய்வில் புதிய மறுமலர்ச்சி யைத் தோற்றுவித்தும் பிறநாடுகளில் தமிழின் சிறப் பையும் பண்பாடுகளின் உயர்வையும் அறிய வைத்தும் பன்மொழி அறிவால் ஒப்பியற் கருத்துக்களை உரைத் தும் அன்புடனும் புண்புடனும் அறிஞர்களை அணுகி யும் இடை விடாத முயற்சியில் ஈடுபட்டும் எழுதியும் உரையாற்றியும் அடிகளார் செய்த பணிகளால் அவர் திருவுருவம் தமிழ் மக்கள் நெஞ்சில் நிலைபெற்று விட்டது. O

Page 102
21
ஈழத்துக் கவிஞர் மஹாகவி
எம். ஏ. நுஃமான்
(1927 - 1971). இவரது சொந்தப் பெயர் து. ருத்திரமூர்த்தி. அளவெட்டியில் ஒரு சாதாரண குடும்பத்தில் 9-1-1927 இல் பிறந்தார். உயர்கல்வி பெற முடியாமையால் தமது 19ஆம் வயதில் ஒரு கிளாக்காகக் கொழும்பில் உத்தியோகம் பார்க்கச் சென்ருர், 28 வயதில் திருமணம் செய்தார். மனைவி யின் பெயர் பத்மாசனி. பாண்டியன், சேரன், சோழன், இனியாள், ஒளவை ஆகிய ஐந்து பிள்ளைகளின் தகப்பன். 1967இல் இலங்கை நிருவாகச் சேவைப் பரீட்சையில் (C. A.S.) சித்தியடைந்து மாவட்டக் காணி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றர். மன்னுர், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இடங் களில் கடமையாற்றி 1970 இல் அரச கரும மொழித் திணைக் களத்தில் உதவி ஆணையாளராகப் பதவியேற்று மீண்டும் கொழும்பு சென்றர். 1971 யூன் 20ஆம் திகதி இருதய நோயி ஞல் மரணமடைந்தார்.
இதுவரை வெளிவந்துள்ள மஹாகவியின் நூல்கள்: வள்ளி (1955), குறும்பா (1966), கண்மணியாள் காதை (1968), கோடை (1970), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்(1971),
இரண்டு காவியங்கள் (1974), வீடும் வெளியும் (1973), புதிய தொரு வீடு (ஆறு நாடகங்கள் தொகுப்பில் 1979)

ஈழத்துக் கவிஞர் மஹ்ாகவி - 177
ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னேடிகளுள் பிரதானமானவர் மஹாகவி. உள்ளடக்கத்திலும் உரு வத்திலும் இவர் கவிதையில் புகுத்திய புதுமைகள் பல. யதார்த்த நெறியைக் கவிதையில் கையாண்டார். மனித வாழ்க்கையில் ஓர் ஆழமான நம்பிக்கையையும் மனிதாபிமானத்தையும் அவர் தம் கவிதைகளில் வெளிப் படுத்தினர். சாதாரண மக்களின் வாழ்வைத் தமது கவிதைப் பொருளாகக் கொண்டவர் புதிய காவியங் கள், பாநாடகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தார். பழைய யாப்பு வடிவங்களைப் பேர் சோசைப் பாங்கில் எளிமைப் படுத்தினர். கிராமிய வழக் குச் சொற்களைக் கவிதையில் தாராளமாகக் கையாண் டார். இக்காரணங்களால் தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சியில் மஹாகவி முக்கிய இடம் பெறுகிருர்,
மஹாகவி தமது பதினன்காவது வயதில் கவிதை எழுத ஆரம்பித்தார். முதலில் பண்டிதன் என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதி வந்தார். பின்னர் மஹாகவி என்னும் புனைபெயரைத் துணிச்சலோடும் தந்நம்பிக்கையோடும் சூடிக்கொண்டார். புதுக்கம்பன், புதுநாப்புலவர், மாபாடி, மகாலட்சுமி முதலிய புனை பெயர்களிலும் இவர் கவிதைகள் எழுதியுள்ளார். 1943 இல் இருந்து அவரது கவிதைகள் பத்திரிகைகளில் பிர சுரமாகத் தொடங்கின. கிராம ஊழியன், மறுமலர்ச்சி, ஈழகேசரி, ஆனந்தன் போன்ற இதழ்களில் அவரது ஆரம்ப காலக் கவிதைகள் பிரசுரமாயின. ஆரம்பத்தில் மஹாகவி சில சிறு கதைகளும் எழுதியுள்ளார். வேதாந்தம், பிரமசாரி பரமசிவம், ஈகை, உலகம் கோண லானது, நஞ்சு போன்றவை இவற்றுட் சில. எனினும் இவர் கவிதைத் துறையையே தனக்குரியதாக ஆக்கிக் கொண்டார். சுமார் முப்பது வருடங்களாக அவர் தமிழ்க் கவிதையை வளம்படுத்தி வந்துள்ளார். நூற் றுக் கணக்கான கவிதைகளும் இசைப் பாடல்களும் காவி
23

Page 103
78 தமிழியற் கட்டுரைகள்
யங்களும் பாநாடகங்களும் அவர் எழுதியுள்ளார். மஹா கவியின் சுமார் முப்பது ஆண்டு காலக் கவிதை முயற்சி களில் தேக்கமற்ற சீரான வளர்ச்சிப் போக்குகளைக் காணலாம். 1960 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு பெரிய பின்னணியில் வாழ்க்கையை நோக்கும் தன்மை அவரிடம் காணப்படுகின்றது. சடங்கு, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கந்தப்ப சபதம், கண்மணியாள் காதை ஆகிய காவியங்களையும் கோடை,முற்றிற்று,புதியதொருவீடு ஆகிய பாநாடகங்களையும் அறுபதின் பின்னரே அவர் படைத் தார். 娶
மஹாகவியின் கவிதைகள் தனித்துவமானவை. இன்றைய நடைமுறை வாழ்க்கையை யதார்த்த பூர் வமாகக் கவிதையில் சித்திரித்துக் காட்டியமை தமிழ்க் கவிதைக்கு மஹாகவி வழங்கிய முக்கியமான பங்களிப்பு ஆகும். Wvs
இன்னவைதாம் கவிஎழுத ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதீர்; சோலை, கடல் மின்னல், முகில், தென்றலின மறவுங்கள்; மீந்திருக்கும் இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு என்பவற்றைப் பாடுங்கள் என்று தம் ஆரம்ப காலத்திலேயே அவர் எழுதினர். 'நிகழ்காலச் செய்திகளையும் பிரச்சினைகளையும் கவிதை யில் ஆண்டு அதனை இன்றைய யுகத்துக்கு இழுத்து வரல் அவசியமாகும்.’’ என்று பிற்காலத்திலும் அவர் எழுதினர்.
இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள் இன்றைய காலத் தியங்கும் நோக்குகள் இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள் இன்றைய காலத் திக்கட் டுக்கள்.

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 179
ஆகியவையே கவிதையில் இடம் பெற வேண்டும் என்று அவர் சொன்னர். இதுவே அவரது கவிதைக் கொள்கை யாகும். சமகாலப் பிரக்ஞை, சமூகப் பிரக்ஞை, யதார்த்தம் ஆகியவையே அவரது கவிதைக் கொள்கை யின் அடிப்படையாகும். அவரது பெரும்பாலான கவி தைகளிலும் காவியங்களிலும் மேடைப் பாநாடகங்களி லும்நாம் இதனைக் காணலாம். கற்பன வாதப் பண்புகள் மஹாகவியின் ஆரம்ப காலக் கவிதைகள் சிலவற் நில் காணப்படும்போதிலும் . யதார்த்தப் போக்கே அவரது பிரதான படைப்புகளின் முக்கிய பண்பு ஆகும். இந்த வகையில் அவர்காலத்துப் பெரும்பாலான கவிஞர் களில் இருந்து மஹாகவி தனித்துத் துலங்குகின்றர்.
y V
பேதங்களும் முரண்பாடுகளும் அற்ற ஒரு சமத்துவ மான சமூக வாழ்வையே மஹாகவி தமது கவிதை களில் வலியுறுத்தியுள்ளார். எல்லா வகையான இடர் களையும் வென்று மனிதன் வாழ்வில் முன்னேறிச் செல் வான் என்பதே இவர் நமக்குத் தரும் செய்தியாகும். ஆழமான மனிதாபிமானமும் வாழ்க்கையின் மீதும் மனித வல்லமையின் மீதும் ஓர் ஆழமான நம்பிக்கை யும் இவரது கவிதைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன.
கொண்டுவா பார்ப்போம் கொலை எருமை பூட்டிய நின் வண்டியினை எனது வாசலுக்கு
நான் இங்கே சூழ்வேன், சுழல்வேன், சுமப்பேன், சுவைத்திருப்பேன் வாழ்வேன் மடியும் வரை
என்று ஒரு கவிதையில் மஹாகவி எமனுக்குச் சவால் விடுகிருர். மரணத்துக்கு அஞ்சாமையை இதில் நாம் காண்கிருேம். மரணத்தோடு மனித வாழ்வு முடிந்து விடுவதில்லை. அவன் தன் சந்ததிகள் ஊடாக வளர்க் து செல்கிருன். அவ்வகையில் மனிதன் மரணிப்பதில் என்ற ஒரு கருத்தையும் மஹாகவி முன்வைத்துள்ளார்.

Page 104
180 தமிழியற் கட்டுரைகள்
அன்று பிறந்து இன்று இறப்பதுள் ஆய. தன்றுநாம் மானிட வாழ்வுகாண் அப்பனே மகனுகி, வளர்ந்து உயிர் ஒய்தலன்று உயர்வு ஒன்றினை நாடலே உண்மை.
என்ற தத்துவத்தை இவர் தமது சாதாரண மனிதனது சரித்திரம் என்ற காவியத்திலும் முற்றிற்று என்ற பாநாடகத்திலும் வலியுறுத்துகின்ருர், மஹாகவியின் கவிதைகளில் காணப்படும் இத்தகைய நம்பிக்கைக் குரல் நவீன தமிழ்க்கவிதைக்கு அவர் கொடுத்த ஒரு பல L Din (g5 Lib.
யாழ்ப்பாணத்துக் கிராம மக்களின் வாழ்வே மஹா சுவியின் பெரும்பாலான முக்கிய கவித்ைகளின் கருப் பொருளாக உள்ளது. கிராமப்புற வாழ்க்கையை மஹாகவிபோல் கவிதையில் கொண்டுவந்த பிறிதொரு கவிஞன் இல்லை எனலாம். மஹாகவியின் ஆரம்ப காலக் கவிதைகள் சிலவற்றில் நகர வாழ்க்கையின்மீது வெறுப்பும் கிராமத்தின்மீது அளவிறந்த மோகமும் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் செல்வேன், கிராமம் முதலிய கவிதைகளில் இப்பண்பைக் காணலாம். இக் கவிதைகளில் கிராமத்தை இவர் இலட்சிய பூமியாக நோக்குகின்றர். ஆனல் இவர்து பிற்காலப் படைப்புக் களிலே கிராமம் அதன் சகல முரண்பாடுகளுடனும் மோதல்களுடனும் சித்திரிக்கப்பட்டுள்ளது. சடங்கு, கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனது சரித் திரம், கோடை, புதியதொரு வீடு முதலியவற்றை உதா ரணமாகக் காட்டலாம். கிராமிய வாழ்வை யதார்த்த பூர்வமாகச் சித்திரிக்கும் இப்படைப்புகள் தமிழ்க் கவி தைக்கு ஒரு புதிய வளத்தைக் கொடுத்துள்ளன என லாம்.
கிராமப்புற வாழ்வை மட்டுமன்றி நகரப்புற வாழ வையும் மஹாகவி தம் கவிதையின் கருப் பொருளாகக் கொண்டுள்ளார். நகர்ப்புற நாகரிகத்தினல் உருவாக் கப்பட்டு ஒதுக்கித் தள்ளப்பட்ட பிச்சைக்காரர்கள்,

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 18i
விவசாயிகள், திருடர்கள் முதலியோர் இவரது சில கவி தைகளில் அநுதாபத்தோடு சித்திரிக்கப்பட்டுள்ளனர். சிமாட்டி, விட்ட முதல், விசாதீர், திருட்டு முதலிய கவிதை கள் இத்தகையன. நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்வும் மனப்பாங்குகளும்கூட இவரது கவிதைகளிற் சித்திரிக்கப்பட்டுள்ளன. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் இதற்கு நல்ல உதாரணமாகும்.
நவீன தமிழ்க் காவிய வளர்ச்சியிலும் மஹாகவி யின் பங்கு கணிசமானது. குயிற் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய காவியங்களின் மூலம் பாரதி தொடக்கிவைத்த நவீன காவிய மரபை ஒட்டித் தமிழில் தாராளமான காவியங்கள் எழுதப்பட்டுள்ளன. அவ ற்றுள் மிகப் பெரும்பாலானவை இலக்கியச் செய்திகளையும், புராண இதிகாசக் கதைகளையும் அடிப்படையாகக் கொண்ட கற்பனைப் படைப்புக்களாகும். தற்கால வாழ்க்கை யோடு சம்பந்தமற்றவை அவை. தற்கால வாழ்க்கை அநுபவத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன தமிழ்க் காவியங்களைப் படைத்தவர்களுள் மஹாகவி முதன் மையானவர். ஆரம்பத்தில் இவர் எழுதிய கல்லழகி (1959) ஒரு கற்பனைக் காவியமே. அதைத் தொடர்ந்து அவர் எழுதிய சடங்கு (1962) யாழ்ப்பாண்க் கிராம வாழ்வை யதார்த்தமாகச் சித்திரிக்கும். ஓர் அரிய படைப்பாகும். தமிழில் இதற்கு முன் உதாரணம் கதுவும் இல்லை. மிக உயர்ந்த கலை நுணுக்கம் கொண் டது அது. இதைத் தொடர்ந்து மஹாகவி எழுதிய 1.ண்ணிையாள் காதை, ஒரு சாதாரண மனிதனது அபித்தியம், கந்தப்ப சபதம் ஆகியன மஹாகவியின் கவித்து வ ஆற்றலையும் வாழ்க்கைத் தரிசனத்தையும் வெளிப்படுத்தும் மிகச் சிறந்த படைப்புக்களாகும். தமிழில் இவை மிகுந்த தனித்துவம் உடையவையாகும்.
காவியங்களைப் போல் தமிழில் பாநாடக வளர்ச்சி யிலும் மஹாகவியின் பங்கு முக்கியமானது. ஆரம்பத் தல் வானுெலிக்காக இவர் பல பாநாடகங்கள எழுதி

Page 105
182 தமிழியற் கட்டுரைகள்
ஞர். அடிக்கரும்பு, சிற்பி ஈன்ற முத்து, பொய்மை, சேணு பதி, வாணியும் வறுமையும், திருவிழா, கோலம் ஆகியவை அவரது வானெலிப் பாநாடகங்களாகும். பிற்காலத்தில் மேடைக்காகக் கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று ஆகிய பாநாடகங்களை எழுதினர். கோடை, புதியதொரு வீடு ஆகியவை பலமுறை மேடையேற்றப்பட்ட பாநாட கங்களாகும். ஈழத்து நாடக வளர்ச்சியிலே இவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. மஹாகவியின் யதார்த்தப் போக்கை அவரது மேடைப் பாநாடகங்களிலும் காண லாம்.சமகால வாழ்க்கையைப் பின்னணியாகக்கொண்டு யதார்த்த பூர்வமான மேடைப் பாநாடகங்களை எழுதிய முதல்வராக மஹாகவியைக் கருதுவதில் தவறில்லை.
தமிழ்ச் செய்யுள் நடை வளர்ச்சியிலும் மஹாகவி யின் பங்கு குறிப்பிடக்கூடிய முக்கியத்துவம் உடையது. தற்கால உரை நடைக்குச் சமாந்தரமாகச் செய்யுள் நடையை நவீனப் படுத்துவதில் மஹாகவி பல வெற். றிகள் கண்டுள்ளார். அன்ருட வழக்கில் உள்ள சாதா ரண சொற்களையே அவர் கையாண்டார். யாழ்ப் பாணப் பேச்சுத் தமிழ் வழக்குகளை அவர் இயல்பாக வும் பிரக்ஞை பூர்வமாகவும் தம் கவிதைகளில் பயன் படுத்தினர். இன்றைய உரை நடையில் கையாளப்படும் வாக்கிய அமைப்பை ஒட்டிய சிறுசிறு வாக்கியங்களையே அவர் செய்யுளில் கையாண்டார். இத்தகைய பண்புகள் மஹ்ாகவியின் செய்யுள் நடைக்கு உரைநடை போன்ற ஒரு பேச்சோசைப் பண்பைக் கொடுத்தன. மஹாகவியின் ஆரம்பகாலக் கவிதைகளைவிடத்தற்காலக் கவிதைகளிலேயே இப்ப்ண்பு முனைப்பாகக் காணப்படு கின்றது. தமிழ் நாட்டில் செத்துக்கொண்டிருக்கும் செய் யுளுக்கு 'ஈழத்தில் ஒரு புது உயிர் கொடுக்கப்பட்டது. மஹாகவியே அதில் தலையாயபங்கு வகித்தார் எனலாம்.
தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சியிலே மஹீா கவிக்கு ஓர் உயர்ந்த இடம் உண்டு என்பதில் ஐயமில்லை.

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 183 ஆயினும் மஹாகவி பற்றிய ஆய்வுகள் மிகக் குறை
வாகவே உள்ளன. அவரது படைப்புக்கள் எல்லாம் நூல் உருப்பெற வேண்டும், அவர் பற்றிய ஆய்வுகள் பெருக வேண்டும். அப்போதுதான் மஹாகவியின் முக் கியத்துவம் பரவலாக உணரப்பட வழி ஏற்படும். கு

Page 106
பjப்பாணப் பல்லர் முகத் தமிழ் Аын 3эг ni Тэ0||3| Lалыг 11, i, ы эгш |Îï, 1) 1. தமிழ் பிறப் டேவிஸ் புதலாம் வ
ப்ெ 1 ன்றும் தலப்பின் ஆட்வு நிக 11. குழந்தை, இக்சிபம், மரபுவழிக்ால்வி
|1, 11 111,
്ങ ங்கைத் தமிழ் இல
என்பன குறித்துப் (3), , ; ; சில ஆய்வேடுவே இரு கின் உயர் கல்வியைப் பயிலும் பாத் திர மன்றி, பொதுவான வலரும் இரசிகரும் தற்காலச் தில் வசித்தறிந்து , இல்லான பெருங்கு)ை.
இக் குறையை நிவிர்த்தி அந்ைதுள்ளது.
S S S S
l
1ற்றர். பத்தின் (ந | III i njIT II i
II, III || ?
i ь лі
- - - 11) ந
தமிழர்

ங்கராT
பாழ்ப்பா | II i III 声 LIII
இலக்கிட iiதியுள்
+ புர்து
1ள் ,
LLS SL LS SLS SLS S S SLSLSLSLSLSLS LS LSLS LSLSLSL SLL LSSLSLSSLSLSSLSLSSLSLSL LSLSLSLSLSLSLSLSLSLSLSLS SLS
hi՝ , ,
॥ 黑 தமிழி Gi 5ኽ | | | ! நால்கள் மிகவும் கு ை  ை
'):',
* f f f } i,j, 7, 17 = }, f'51 IN I AI I 3; IF வாரகர் கரும் இக்கிய ஆர் தமிழ் வார் i. Trs)
கூடிய நூல்கள் நம்மிடையே
செப்ார் வகையில் இந்நூல்
s ويكي +1 ו ו ו "ה + 1++ , , ו ו ו L היה ו ו ו 61
... ." 一、 ܨܡܐܷ I TI" | 11-1) 1,
S SSL LS S SLS S S D DD SDD S LLLLL L L S SLSLSLS LSLSL L SLL S SLLLSLS S LSLS LS SL L L L SLS
விலங் ஓர் பி. நடராசன்
றுப்பு அ1ை1 1ாப் பகை வி 1, 1ான நெறிபிற் சிறப்புப் பயிற்சி பிடர் ஆ பிற முதலிப பு:1 பெபர்
த கட்டு: எ புதிபுள்ளார்.
சிறப்பாகப் பயிலும் மானவர்

Page 107
‚azoVs ̃ «@∞q
I
@ ¿ T ∞
∞P @∞ o d@ @o T ∞
P ∞ o @ @ @ @ @∞ o „o „
@ ∏ PoLT §
¿∞ ∞ L L ∞ oLT
‘ @ ƒ @∞ P
@ ∏ ∞ @ ∞ o ∞ L @ @ „ @ o „P @
I

@∞q
I
∞
@∞ o ∞
„o „
T §
L ∞ oLT @∞
P
∞ o
107

Page 108
@ @ ∞ P∞oà P ’
P P∞ P P∞ o
@ ∞ ∞
@o ∞o §Ã@∞ ∏ @∞
@∞ ‹ P∞
∞ , ∞ o ∞ @∞
∞ ∞ ƒ ¿∞ o ∞ ¿∞ @ Ù o o @∞ , T à o@ ∞§ Ã
‹ „l@ P∞
∞ , P @ @ ∞„ o oà o »@ ∞
∞
¿∞ ∞ P∞ o o @∞ T o Ù @ P p Ù P∞@ ÃoP @ TÃ P∞ @ , ∞ L∞
Ù §Ã o l P∞ P∞ ∞ ∞o „
108

∞ P∞oÃ
’
P∞ P∞ o „
∞ ∞
∞o T§ P @∞ ‹ P∞
∞ P∞ „ ∞ @∞
∞ ƒ ¿∞ o ∞
¿∞ @ Ù „ @∞ , @ ∞§ à @ ∞ @ P∞
@ ∞„ o oà ∞ P∞
∞ P§ PL ∞
P∞ ∞ T o p Ù P∞@ ÃoP P∞
∞ L∞
Ù §Ã o l P∞ @
∞ ∞o „
I

Page 109
I
∞@ Ã∞ Ù P@ ¿∞ @ ∞ „ ¿oL P∞ L §P∞ , ¥ÿ, o „ o P∞
∞o ¿∞ @ » Ã T o
o @ PL ∞ ∞ o P o ®o @ @ @ ∞ „o ‘¿∞ ∞ ∞@, PoL ¿∞o @∞
∞ ∞ ∞ ’ L @ P∞
@∞o @ T P∞
∞ @ P , @∞ @∞ P ∏ Ù
L ∞ o L∞ ∞ @
Ù
∞P Ù , @ §
L ∏@
¿∞ ∞ PoL @ @ t P∞
∞ ÿ o @ ∞
P ¥§Ão „ ∞ , P @ T
„ ∞ ∞ ∞ ∞L T§

@ ¿∞ @ P∞ L §P∞ ,
P∞
» Ã T o
PL ∞ P o
∞ „o PoL ¿∞o @∞ ∞ ’
P∞
P ∏ Ù
∞ ∞ @
@ §
@ @ t P∞ @ ∞
@ T
∞
109

Page 110
110
, o P @ ∞L , P ÙoPP∞» ƒ @ o @∞ o o à ÿ ∞ ∏ @ ∞ Ù ƒ ¥ ¿∞ , P o oà ∞ P∞
o ∞ ∞
‘@ o @ ∞„ o ’ ‘ @ ∞L ∞ ’
, Po o P P¿∞
∞ o ƒ P Ã ∞
‘ P ∞ o @o ∞
‘ P Ã\ ∞ ∞ ¿
ÿ@ @o o à ∞ o P∞ § ∞ @∞
Ã∞ ÿ§ P∞ ¿ @ ÿ§ P∞
∞ o P∞
P L ¿∞ ÿ§ P
“ ∞‹T t
P à P ¿∞ »Ã∞ L∞ , ¿

, P @ ∞L , P∞» ƒ @ ∞
o o à ÿ @, @ ∞ Ã,
¥ ¿∞ , ∞ P∞ ∞ ∞
@ ∞„ o ’ ∞L ∞ ’ ∞ L∞
P P¿∞ oL
ƒ
∞ ∞
o @o ∞ ’ ∞ L∞
∞ ∞ ¿∞ ¿ ∞ ,
@o o à P∞ § ∞ @∞ ” ∞ L
∞
P∞ P∞
¿∞ ÿ§ P
t ∞L oP à P »Ã∞ L∞ , ¿ ∞ ”
I

Page 111
I
¿∞ L ÃoP ∞ L ¿ ∞ L∞
¿ P∞
p P∞ T§ Ù ∞
„ oL ∞ L „
@ o @ @ o o o o
Ù§, ∞ @ \§ o P∞L o @ ∞@ ¥ ¿∞
o o P∞ L ∞ L∞
¿∞ oL @∞ T o ∞ ¿∞ @ P ∞ T o o oL
P @∞ ∞ ¿ ∞ ∞ ƒ o@ ÙP§ „ P @∞ t „ ∞ L∞ T „ §@o @∞ P @ ÿ P @d ,
P∞ P§Ã ¿ o ∏ P ƒ
§ P∞ ƒ Ã o ÃL ∞ Marry-go-round ∞
o@Ã∞@ » , P oL ƒo @» Marry-go-round , ∞ ∞
∞ P
P‹ P∞ P§Ã ¿ o ∏ P P∞

ÃoP ∞ L ∞
∞
Ù ∞ ∞ L „
o
\§ o P∞L @ ¥ ¿∞
L ∞ L∞ L @∞ T o
P o o oL
∞
P§ „ P ∞ T „ §@o
∏ P ƒ
ÃL ∞
∞
L ƒo @»
, ∞ ∞
∏ P P∞
111

Page 112
Ã∞ ∞ ƒ oL ∞ ¿o@Ù§
¿ ∏ P∞ Marry-go-round ∏ ƒ ∞ o
∞ ∏ ∞ P ∞ P oL ∞ oL ¿ ∞ ∞ ÿ§ P∞ o
∞ @ ∞
, ¿∞ ∏ P
∞L P P ∞P „ P
@∞ ∞ § ¿∞ @ „ P o To Ã∞ d ÿ
@ P T P ∞ ∞ ∞ L “ o ”
∞ o@ P∞ „ §Ã®
o oà T L∞
@ P “¿∞o ,
∞ ” oP P∞ o @ ¥ L
∞ ∞ P o P §
( o o ¿∞ Ã “T T ∞ ∞ “T L „ ”
oL T ∞
¿∞ @ ÿ L
112

oL ∞ ¿o@Ù§ P∞
∏
nd ∏ o
∞ P ∞ ∞ oL o@ ∞ @ ∞ ÿ§ P∞ o „o P∞
¿∞ ∏ P∞
∞L P P ∞P
P∞
¿∞ @ „ P o , Ã∞ d ÿ LoL T P
∞ L ”
P∞ „ §Ã® ∞ ∞
„
L∞
P ,
oP P∞ o @»oL
P § ∞
( o o P “T T ∞ ∞ ”
” ,
T ∞ ¿∞ @ ÿ L
I

Page 113
I
o ∏ § ƒ @∞ o
o o o o
@ @
o o o o ƒ „ o
L L
@ T P , P∞ @L PoL¿∞ ∞ LL∞ ( o § ∞
∞
@ ∞ ∞
¿∞ ¿ P l ¿ „ P§
∞ à P∞o Ã∞
∞ l Ù§Ã∞ o Ã∞ ¿∞
@∞o Ù @ @
ÿ ∞ ‹ ∏ ∏ ∞ Ù P
ÿ Ùo@, Ù , L ∞L ∞ ¥ o ∞ L ∞
P §ÃoL ∞ Ù ∏ P
P∞ @ @» ∞ o @∞

o ∏ §
o @
o
P∞ @L PoL¿∞ ∞ ( o § ∞ ∞
∞
„ P§
P∞o Ã∞ ∞ o Ã∞ ¿∞
@
∞ Ù P∞
L ∞L ∞
∞
∞ o @∞
113

Page 114
P∞ ∞
P ƒ» l @ o@
§ ∞ Ã
o à @∞ @» , P
à P T ¿∞ @ ∞ L ¿oL P t
∞ T ∞ ¿ ÿ ÙoP P
∞@L @ o ∞„ @ o ∞oP P
@o ÿ ¿ ∞ ∞ P P P∞ „ @ P ∞ , d „d ∞ oà ∞ Po oà ∞ P ∞ t „
§ ∞ ∞ @∞ Ù ∞§ o Nice ∞ Ã∞ ∞
¿∞ „ ∞L oP o „ »@o
® , ∞
B
ÿ
‘
o Ù
’ T.S. Eliot. ‘Wast Land’ I will sho dust (ƒ 114
l∏ „ Ã oP

∞
@ o@ ∞ à @∞ @» , P @∞§ ƒ»
T ∞ L t ¿ ÿ ÙoP P ∞ Ã
∞„ ∞oP P @
@o „ ∞ L ∞ P– P∞ ’ ,
P ∞ P ∞ oà ∞ , ∞ P ∞ t „ P
@∞
∞§ o o@ Ã∞ ∞
„ ∞L oP ∞ P
»@o , ∞
Ù
’ t Land’ I will show you... in a handful of
„ Ã oP @∞
I

Page 115
SfiÀq ̃ „aY@÷
I
∞
§ d T „ l P§o@
∞ @o @ t @ t
∞o@ § ¿∞
„ o@ @∞ T „
“¿∞ @ ¥ P ¿@ T
o ∞ § ∞ ”
“ ∞ P∞ ¿@ @ ∞ P§
@∞ P ∞ @∞ » o @ ® P P ∞ L ®
PoL „ P @∞
∞T Ù P∞ @ » @ p „ P∞ @
§ To Ã∞
t „» @∞ o P o@ L ∏@ ∞@ ¿ ∞
P ∏@ ¥ „ o @T o
@ , Po „ , oP @ P∞ @ „ @∞ ∏@ P ∞
@∞ o Ù
„o Ã∞ ∞ P∞» d L
I

Y@÷
I
P§o@
¿∞ @∞ T „ @
@ T
§ ∞ ”
∞ P§ »
L ®
P @∞
@ » @ @
o P o@
∞
„ o @T o
„ ,
@ „
∞ P∞» d L
115

Page 116
¿ Ù d ¿ ¿∞
ÙP ∞ ∞
o ̰
L∞ ∞ ¿∞ ¥ @ @ @ ∞ o @ @ ∞ P
, @ P§Ã∞P ÿ Ù ® ∞ ¿∞ @
@ , ƒ Ã∞ ƒ P o ∞ @o @ t
, oL L @∞ ∞ ÿL ∞ d Ùo
¿∞ @ o @ P ¿∞ @ ¿oL P
@ P @ o P @ P
¿∞ @ @∞ ∏ ∞ P∞
∞ § Po oà „
∞ § d T „ l P§o@
∞ @o @ t @ t ∞o@ § @ „ o @ @
o
B
116

d ¿ ¿∞ @
∞
Ã∞ ∞ ¿∞ ¥ @ ∞
∞ o ∞ P o Ã∞ , @ P§Ã∞P ® ∞ ¿∞ @
,
ƒ P o
@ t @ t , oL L @∞
∞ d Ùo ∞
@ P @ ¿oL P @ P @ o P
P
∏ ∞ P∞ ∞ , § Po oà „ ∞ ”
l P§o@
@ t
§ ¿∞ o @ @ Ã L
o ̰ @
I

Page 117
Nz»Ã∞ zfio@
I
¿
o ∞ ∞ L o@ ∞ T
à o P P ∞ P oà @Po @
∞ P§ P
I

o@
I
∞ T
P P Po @ P§ P
117

Page 118
@∞ „ ∞o@ ∞L oP ∞ ∞ P
∞@ »@ d
∞ „ ƒ o
∞ ∞ P ∞
∞
»@ To ¿ ∞ ∞ @ @o P @ L
o P∞
»@ To @ P oL@» §Ã P∞
o oà ∞ Ù ÿ Ù Po ƒ ÿ à @ o @d ∏T ÿ @∞ Ù “ P∞ L∞ L »
P L„o@ , “ ” L
@ Ã ƒ Ùo@ P L∞o o P ÿ P∞
P @∞ P∞ @ ∏ ∞ ∞ Ù ÙÃ P§
“ P∞ L∞ L »
P t L„o
118

∞o@
∞ ∞ P »@ d L
∞ o
∞ P ∞
To PL
@ L
To
§Ã P∞ L ∞
∞ Ù ÿ Ù @∞ @ ƒ ÿ Ã @ o
∏T ÿ @∞ Ù L∞ L » Ã ∞ ”
P „o@ ,
à ƒ Ùo@ ,
o P ÿ oÃ
∏ ∞
P§
L∞ L » Ã ∞ ”
P t L„o@
I

Page 119
“ ” L p @ Ã ƒ Ùo@
P L∞o o P ÿ oà P∞
L »@ L »@
„ @∞@ „ @∞@ L
à o
T
P » @ „ PL ∞ ∞o Ã∞ » Ã∞ P o ∞ P @ ∞ @ t ∞ ∞ ∞§ ∏ o@oà T
P T ∞
∞ @P PL ∞ @P P P∞ »@ @P∞ T ∞ ∞
∞ t „ P
∞ ¿∞ Ã ®o oL ∞ P ƒ @ @∞ „
∞
P L∞ @∞ o ∞ o P∞
I

Ùo@ o P ÿ oÃ
à o
» Ã∞ P @ ∞
∞ ∞ @oà T
PL P P∞
Ã
∞ o P∞
119

Page 120
∞ @ ƒ o Po Ùo ∞ Ã P L∞ ∞ @∞P ∞ Ù„
„ o@ ®o à ® ∞ @∞o à ® ∞ @∞o ƒ P∞ T ∞ L∞ ∞ @∞ ‘ ’ @o ∞
o P ƒ @
@ ∏ o o „T P∞ ¿∞
Ã∞ ¿ ¿ „
∞ ƒ
∞ „ o P∞ “ L „ P ∞ „ ”
L @ “ ∞ P∞ ” ∞ @
∞ @ P @ „ ÿP
„ ∞ ‹
∞ ∞ P o ® T ∞ ∞ ∞L ® ∞ P P ƒ P ∞d „ o ¿ ∞ “ @ o ”
L @
120

ƒ o Po ÙoL P∞
P L∞
∞ Ù„ P
à ® ∞ à ® ∞ ƒ P∞ L∞
@∞ @o ∞ @∞ ∞ L∞
o „T P∞ @
¿ „
P∞ P ∞ „ ”
∞ ” ∞ @
P ÿP
∞ ‹ ∞
® T ∞
∞L ® ∞ , P P ƒ P
o ¿ ∞ o ”
I

Page 121
I
@oL P P∞ @ l P ÿ “ LL o à ∞ ”
‘ÿ “ ∞ »Ã∞o ¥ PL∞ ”
‘ÿ ∞ L∞ “ L ”
o Ã∞ o ∞ ÿ ƒ o
„ @∞ ” ∞
ÿ P ¿∞ @ ƒ oL X T ¿∞ @ P∞
P ¿ oL @∞ ∞ P∞ ,
@o ∞ ∞ ¿∞ P Ã
∞‹ ∞
“„ ∞ , ∞
@∞ T ∞
P Ã,
∞‹ ∞
T P “ Ù @ @∞ ”
P o ∞ P
B
0

”
¥ PL∞ ”
∞ L∞ ”
@∞ ” ∞
X T
@∞ ∞
∞ ∞ ¿∞
‹ ∞
∞
‹ ∞
121

Page 122
©“flY ¬oV ̃„Ó ƒfi z∞Y ¿À› ́iaÓ
I
o @ @ ∞
122

¬oV ̃„Ó ƒfi À› ́iaÓ
I
∞
I

Page 123
@∞ „
@» ∞ @ @o @∞
@ Ù t Ã∞‹ ∞ t
@ Po @ à P∞‹
t o @o @∞ ∞
∞ P Ã∞ @ P Ù @∞ o
∞ ƒ o@
P @ o à @ ∞ ¿∞à @ T ∞L o à ® P∞ L „ „ o @
„ @ ∞ ∞ „ » P @ @ ∞
P∞ Ã oP @∞ ∞
o
@ @ ∞
∞ t @o ∞ ∞ @∞ @∞ @ ∞ @ @ Po „ Po @
P§ @o L ∞ ∞
@ Ù ÿ o@
P∞
I

@ @o @∞ ∞
P∞‹ @o @∞ ∞
L o à „ o @
» P @ @ ∞ oP @∞ ∞
@o ∞ ∞
@∞ @ @
L ∞ ∞
o@
123

Page 124
∞ @o „ @ ∞ ∞ „ » P @
Ã∞ oP @∞ ∞
‘ @ ÿ
∞ ¿ oP ¿∞ @ ∞ @∞ o@
@ @∞ o P @o
P ∞ L∞
@ ∞P o P ¿ ¿ o ƒ ∞ ƒ ∞ ∞
∞ T „»o P ∞ @ @
o „ @ ¿ @ ¿∞ @ @ P∞
P o L∞
o à @ P∞ @∞ ∞ ∞ ® @ ∞ ∞ L∞
P ∞ ¿
@∞ L
∞ ∞ “ ∞ ¿ ∞ ”
∞ L @
∞ ∞
124

∞
» P @ @ ∞ oP @∞ ∞
oP ¿∞ @ ∞
P @o L∞
o
¿ o P∞
∞ ∞
P ∞ @ @ „ @ ¿ @
@ P∞
L∞
P∞ ∞ ∞ ∞ L∞
¿ o
∞
∞ ” L @
∞
I

Page 125
I
@ ∞
∞ @ ∞T , ∞ L∞ o @
@ ƒ ∞ @
∞
@ P @ o Ã∞ o@ Ã∞ L∞
o@ T ∞P @ ¿o ∞ ∞ ¿∞ ¿∞
o Ã
@ ÃL Ã T ∞ @
“ ∞ ¿ ,
@ ” o @ ∞
“ ∞L P ∞L ¿ ” L @ Ù o ∞L @∞ @o ¿@ ∞ L∞ ¿∞ @ @ » P∞
» P
” ∞L oPT ,
¿∞ ¿ oP ¿ ∞ ∞| ”
„ @
∞ ∞
@∞ @ Ù

∞
@ ∞ @
P @ o@ Ã∞ L∞
@
à T ∞ @
@ ∞
¿ ” L ∞L @∞ @o
P∞
∞| ”
125

Page 126
∞ Ã∞‹ ∞ Ù @∞ o
∞ ƒ o@ ® P∞ L „ „ o
@ Ù t ∞oP
∞ ® ® ∞
„ @ ∞ ∞ „ » P @ @
Ã∞ –
∞ ¿∞ @ ∞ ∞ ¿∞ @ ∞ ¿ oP @∞ o@
@ @∞ o P @o
P ∞ L∞
@ ∞ dt o à P∞ ∞L oP T
o P ¿ oP ¿∞ P P∞
@ ∞ o @ ∞ @ ∞
B
126

o@
„ „ o
t ∞oP
∞
∞
» P @ @ ∞
–
∞ ∞
¿ oP
P @o L∞
à P∞
o P
¿∞ P P∞
o
I

Page 127
©¢ ̃@ov ̃„g «‚∞r«G∞Ó
I
¿∞
@ @o „ ∞ ∞ d T ¿ Ã P ∞ @»
P§o ∞@L @ P∞T To t P ¿∞ @ @o „ ∞ ∞
@o ∞ ¥ @ o à ∞o ¿∞ @ „¿∞ @ ∞
∞ÿ Ão o ∞ ∞ „ o P‹@ ÙoP ∞ p ÿ@ o T o o P
∏ ∞ o ƒ @o Ùo@ ∞@ @o ÃT ∞
@ @o ∞ @ – ¿∞ oP ∞ ¿ @ – ¿∞ @ ∞ @ oP
@ d
@ Ùo@oà d‹ ∞
p ∞ÿ Ão o ∞
o P Ù ∞ Ã
I

g «‚∞r«G∞Ó
I
∞ ∞
t P ∞ ∞
à ∞o ¿∞ @ ∞
o ∞ P‹@ ÙoP ∞
T o o P
T ∞
@ – ¿ @ –
oP
oà d‹ ∞
o o ∞
∞ Ã
127

Page 128
@ P ∞o @ @o
L o ƒ» o P „ @o
∞
@o ¿∞ @ @ @∞ @o ¿∞ @ ƒ Ù @∞ @o ∞ ¥
@ ∞‹ ¿ @ ∞ @ @∞ @ » ∞ @ P ∞ à @ ∞o @ „@ , P∞à @ oL t @ @o oL oP ¿∞ @ P P
@o ∞ ¥ P
d T ¿ Ã P ∞ @»
P§o ∞@L P∞T o t
P ¿∞ @ P ∞ Ã∞ „ à ∞ Ã∞ „ „o T ∞ ¿∞ @
@ @∞ ¿ @ T Ù ∞
B
128

∞o @ @o L
o P „ @o
∞
@ @ @∞ ∞ @ ƒ Ù @∞ ∞ ∞ ¥
¿ ∞
@ » ∞ , à @ ∞o @ , P∞à @
@ @o X @ ¿∞ @ P P ∞ ¥ P
∞ @»
o t
∞ ∞ o T ∞
Ù ∞
I

Page 129
71 Í TMÍL
I
¿
o@ @ ¿ @
∏ ∞@ @o P ¿ o@oà P∞ ¿∞ @ P ∞
@∞ P @
o T
@∞ o oà @ ∞@ PL∞ ® Ù ∞ Ã∞ o
o@ @ Ã∞ @ @∞ @o Ã∞ @∞ ∞ ¿ o@ P∞o ∞ ƒ ∞
L∞ ∞ t „ L
∞ ® Ù o ‘ ∞ ’ ∞ P
B
I

¿ @
P ∞ @ P ∞ @
∞ Ã∞ o @ Ã∞ @ ∞ Ã∞ @∞ ∞ ∞ ƒ ∞
∞ P
129

Page 130
‚∞i@÷
I
T P Ã o@
¿ @∞ § P Ù o L
P o „ o@ @∞t P TÃ∞ @ ∞ P o P Ã∞oL P P P∞ ∞L∞
ÿÃ∞d o Ão
o à P∞ P @ o Ù @ oà o P∞
o ∞ o@ ∞ pÿÃ Conjugation
130

o@
@∞
Ù o L
„
@ ∞
P∞ ∞L∞
o Ão ∞
Ù P∞
@ ∞ Conjugation
I

Page 131
ƒ „ ∞ L∞ ∞
P @ Ã o P
ÿ @∞ P∞L „ P d „ Toà ¿
P ∞L o ,
L o ∞L∞
@ T ƒ ∞
∞ o
§L ® Ù P „o oà L I.Q.100 „ ‹ à ∞ , ¿ ∞ ¿ ∏
∞ o o ¿∞t@∞ ¿∞to@ P o
∞ Ã∞ o@ „
P ¿∞| P P∞ 1⁄2 + 1⁄2 =1
∞ ¿∞ Ã L ∞
® Ù P
∞ ∞
P∞ „
B
I

∞ Ã o P
∞L
ToÃ
∞
P
L
o o P o
o@ „
P∞
∞
131

Page 132
∏Ãz∞ gÙ@÷
I
Chromosomes Good bye Mutations farewell
@ ∞Ão ¿∞ @ Ù o ® @∞ ¿ ¿ Tà Po @ o @ o @ P∞ „ @ § ¿∞ @ @ ∞Ão ¿ L
Chromisomes Good by Mutations farewell
„ „ @ Homo sapiens x
PoL ∞ L Cro-magnon P ,
132

Ù@÷
I
s Good bye rewell
¿∞ @ L∞
® @∞ ¿ Tà Po @ o @ P∞ „ @ § @ ∞Ão ¿ L∞
Good by rewell
Homo sapiens x ∞ L L∞
P ,
I

Page 133
I
¿§Ã ¿ ®§Ã ¿∞
@ @∞ P @ o „o , P∞ ∞o @
@ §o @
@ ∞ @ ∞ ∞ @
∞ ∏ @ o @
∞L∞ ∞ @ ∞ ∞ L @
ÿ @ Photostats∏@
@∞ ∞ @ @ @ @ Ù oP ® @ ∞ @
P∞ ¿∞ @ » ÿP ∞ o d L ∞
Ù o ® @∞ ¿
¿ TÃ Po @ o @ @ o @ P∞ „ @ §
@ ∞Ão ¿∞ @ L∞
Chromosomes Good bye Mutations farewell
B
8

@ ∞o @
∏ @ o @
tats∏@
∞ @
@∞ ¿
@ o @ @ § @ L∞
bye
133

Page 134
̊o∆gÙ
I
l
¿∞ @ „ ƒ l ¿∞ @ ∞ T t
@ L t ∞ P
134

@
@ t
L t
I

Page 135
I
L ∞ l ¿∞ @ „ ƒ l ¿∞ @
@ ƒ @∞ P @ ƒ ∏
∞ @ ∞ o ∞ L @ @ „
∞ o @» „ o »
@ @ ∞ P∞oà P ∞ , l ¿∞ @ „ ƒ l ¿∞ @
@ @ ,
o @∞ P oL@»
l ÿ „ ÿ o
@∞ l @ ∞ „ t @ „
„ oP oL ∞ l ¿∞ @ „ ƒ l ¿∞ @
B

∞
@∞ ƒ ∏ ∞ L @ @ „
o @»
∞
∞ , @
@
P oL@»
o
∞
∞
135

Page 136
SÍμ Sas
I
∞ P ∞ o oL oL @ , @§Ã P oL@ l @ ∞ P∞ „ ∞L
»@o ∞
à ∞
“ o ∞ , oL @ ∞ T o@ o @∞ @
, , ,  ̧ L T ,
136

Sas
I
∞ P ∞ o oL oL @ ∞ @§Ã P oL@ ∞ „ ∞L
∞ Ã ∞
, oL @ ∞ ” L
@∞
, ,
,
I

Page 137
I
» P o oà @ à ∞
, » , ∞ o@ ¿ ÿ T
@o à Ã∞ P o @ ∞
P ∞ ∏o ∞ ,
dP ∞L @ @» dP
»@»o Ã, T @ Ã ,
d ∞ T t , ∞ ∞ t ,
, ∞ T t , ∞ P‹ o Tt
oL ∞ ∞ “ ∞ ” ∞ L
P Po , P o ∏Po , L „ ∞ L P @ Ã farewell x oL , oL
∞ ,
∞ P ∞ , o oL oL @ ∞
B
80

oà @
, ∞
¿ ÿ T P à Ã∞
∞ ,
dP
,
∞ t ,
P‹ o Tt ∞
∞ L
L x
P ∞ , L oL @ ∞
137

Page 138
‚∞v∞P ‚∞vY@÷
I
@
@ ∞ P @ T L @ P§ P @ @ ÿoP @‹
»Ã∞ ÿ o o @ P  ̧ L
∞o o @ T  ̧ L
∞o o @ T
∞o ∏ o „ @∞ „ ∏ ÿ „ ∞ @
138

‚∞vY@÷
I
∞ P T L
@ @‹
o o @ P§ P∞t
@ T
@ T ∏
@∞ „ ∏ @
I

Page 139
I
∞ L∞t
oL ∞ ∞ ∞
P T @ ¿∞ L,
o o @ o „ ∞
Ù ∞ @ Po @ à ‹ ÿ @∞ à ∏ L o à @ ∞ ∞ ∞ ∞ @ @o @o P ∞ ∞ @ @o ƒ à @ @ @∞ o ∞
L∞t
oL ∞ ∞ ∞
„ o P ∞ @
@ „ ∞ @
@ L @§Ã Ùo@@ ∞ Po @T ∞ @ @ ÿoPÃ∞
»Ã∞
∞o o @ T ∞ ¿ o „ o ¿∞T @∞ ƒ
∞P @ ∞
B
84

∞ ∞
¿∞ L,
„ ∞
L ∞ ∞ @ P ∞ ∞ @
@ o ∞ ∞ @
∞ ∞
@ ∞ @
∞ ∞ @
T ∞
@∞ ƒ
139

Page 140
Nz»gÙ
I
@
∞ o ÃT o @ @ P » ÿ tÃ
» ∞L d @ P» o ÿ
L∞t @∞ o ÃT o
oL ® P∞ P @
¿@ ÃT o
à ÃT o T» Ù o o P∞
P @
140

ÃT o
P
» ∞L d @
o ÿ »
o ÃT o ® P∞
ÃT o
ÃT o o P∞ @
I

Page 141
I
P ¿∞ @»
∞ Ù@ o , t o P Ù ∞ L @» ¥
∞ L∞ oL @∞
o @∞ oP ∞ P∞ P Ã
P P ¿ o@ L L
L ¥ L
o@ L „ “ § Ã∞ ” ∞ to@
P» ∞L Ù Lo@
oL @ T P∞t ¥ ∞
L P‹@» @o Ã∞
P P∞ L ÿ L
p o
@ @ @ o P Ã
P∞ » à ¿∞ p ∞ ∞ @∞ o Ã∞P P @
@ oP T T „ TL∞ d @ p ∞„ L
∞
B
8

o , t o
∞
L∞
oP ∞ P∞
o@
L
∞ to@ @ ∞t
̰
ÿ L
» Ã
∞ @ „ TL∞ ∞„ L
141

Page 142
S>gÙ@^Ó @›gÙ@^Ó
Ù@ @ Ù@ PoL o ∞T @∞@ @» ®
142

^Ó @›gÙ@^Ó
I
@ Ù@ PoL Ã∞
®
I

Page 143
„ @ ¿∞ ¿∞ o
o Ã∞ „ o @ X
∞ @ ∞ L @ Ù
o T à Ùo à ¿∞ o@
o ∞ @»
@o ¿ „
o „ à P ÿ oP@ @ ∞ „ ƒ» „
@ , @ Ã „
∞ ∞ ∞t
@ „ “Ã∞ Ã∞ @» ”
........................................... “ P ¿∞ ƒ P
∞ Ã ∞ ”
..........................................
Ã∞@, Ù@ @ Ù@ PoL Ã∞
B
8
I

∞ o
L @ Ù
Ã
oP@ „
@» ”
........ P Ã
”
.......
PoL ̰
143

Page 144
Sg«‚∞¢
I
∞ P ∞ oL@ ¿ „ @o @ T § L
„ @»
o ∞»@
∞
∏ @» @» ® @
∏ o @∞ @ „o@ @»
à oP ∞
T L
l @ „ T®
∞ ‹ ∞ @» P∞ o @∞ L
¥ L @,
o o @
B
8
144

∞ ¿
T § L
»
∞»@
» @
@»
L
T®
@» P∞ L
@,
I

Page 145
¶©¢ ‚∞q@»Í aoLz∞@
I
Ã
∏ ,
∞ @o P P ∏ @∞ Ã∞L ∞ o@@o L∞ @ L∞
@ à @ L∞ à o à P∞ @T ∞ @ ∞ P∞ @T §Ùo@oà o ∏ ∞ÿ @ P∞ @ ∞
∞ @ oà L∞ @ ∞
@ @»t ∞ t d @∞ l lTL∞ @ ∞
o @ P∞ @ ∞ o @ @ P∞ @ ∞
I

Í aoLz∞@
I
Ã∞L ∞ ∞ @ L∞ @
L∞ Ã ∞ @T ∞ @ ∞
∞
∞ ∞
∞ t @ ∞ ∞
P∞ @ ∞
145

Page 146
146
̸ ,
oà @o , P§ , ∞ o Ã∞ P P∞
o@@»t ,
∞P @»t , oà o ÿto ¥
T ∞o Ã∞ „ P∞ @ ,
o @ ∞
P oP ÿ „ P∞ @ @o L∞ @ ∞ o X ∞∏ L∞ @ ∞ o § ¿ P o ¿∞ ∞ T
∞ Ã∞ ∏ ∞ @ ∞
, ̸ ,
ÿto Ã∞ P @ oP ÿto @ PoL @ @ ÿ @ o
P∞ , P P @ Ã∞
P P @ ̰
@ o @∞ o @ „ T Po oà P
Ã∞ ∞ @
B
8

,
à @o ,
,
P P∞ @ @@»t , ∞P @»t , o ÿto ¥ L∞ @
Ã∞ „
∞ oP ÿ „ P∞ @ ∞
L∞ @ ∞ ∞∏ L∞ @ ∞ ¿ P∞ @ ∞ ∞ T ∏ ∞ @ ∞
, Ã∞ P @ oP ÿ X , @ PoL @ @o
o
P @ Ã∞ P∞ @ ,
Ã∞ ∞ @ o @∞ o Po oà P oP
∞ @
I

Page 147
TM÷oV ̃@∫
I
∞
„ @∞ o à T P P d o ∞ , o ∞L T @» PoL ∞ ∞ ∞ ∞o Ù ∞ @ P T „ o à „ @∞ o @ ∞ @ , @ o ∞@L @» P ¿ @
o@ @ P , P ,
o » Po à P o@ ,  ̧ L,
 ̧  ̧  ̧ , § P
@∞ „ ¿∞o @
PoL „ Ù ∞ @ ∞ P @»
¿ ∞ „ „ p ∞o@ p T P P
B
8
I

P P ∞ ,
T @» ∞ ∞ @
∞ @ , » P ¿ @
@
o@ ,  ̧ L, ,
Ù ∞ @ ∞
„
∞o@
147

Page 148
@∞zY  ̊a“@÷
I
p
@ Pd‹ L o ∞
148

 ̊a“@÷
I
Pd‹
∞
I

Page 149
@ ÿ ∞o @∞
L oà L „ @ P oL @o
P∞o@Ã∞ „ Tt L ¿ » Tt ,
P T ∞ ¥ Ã ∞ @
T @ P§
∞ Ã P @» @ ∞ P o @ „ @ o @»
∞ „@ Ù ∞ oL P§
po @ @∞P
o @» , Pd‹
o @L ∞ T @∞
L o
,
B
8
I

@∞
P∞o@Ã∞ „
∞
@» @ ∞
„
§
T @∞
149

Page 150
∂oL√Gs ¬@∞Ó
I
Po P ∞@L @ ƒ o ,
150

Gs ¬@∞Ó
I
Po P ƒ o ,
I

Page 151
I
o Ã∞ o oà § „ ÿ @∞ ∞ @∞ P po @ ∏ o P @ @ Ù
» @∞ o P
„ o@@ @ oP „
„@∞ P Ù §o @∞ o @o P Po @∞ „
§ ,
@L @ ∞@L ∏ @» @∞ P P @
à , ∞ „ @TÃt @ ∏ ,
o @»o ÿ Ù ®o @
L ÿL @∞ ,
@ To Ùo@ , l »
o
Ù @o @
B
8

à § „
@∞
@@
§o @o P Po
@»
@
, Ùo@ ,
151

Page 152
›a ́¬ ́NPÀq«z@Ó
I
∞ ∞ , Lo @ @ ∞ Ù ÿ
@ ∞ L ¿∞ @ @∞ P @∞TÃ
 ̧ L P ÿ @oPÃ∞L∞
@ @ T ƒ P T L,
∞‹ P o , P∞ ¿∞ @o ÿ L ∞ ÿ
∞‹ P o , P∞ ,
P o @∞ ƒ d d
d d , @∞ o @∞ L Ã∞ @ PT o ,
L » §L ∞P P ∞ P§ P
∞PÙ , P ∞o , @∞ ∞ ¿∞Ã∞ @o ® P∞ @∞ ∞ ,
152

NPÀq«z@Ó
I
, @ @ ∞ Ù ÿ L ¿∞ @ TÃ
P ÿ @oPÃ∞L∞
T L,
, ∞
∞ ÿ
,
@∞
@∞ L
o ,
» P P§ P
P ∞o , ¿∞Ã∞ @o ®
∞ ,
I

Page 153
ƒ „ o @ „ ∞L
@ L o P∞ Ã @∞ T ∞L „ Ù , P ∞ ( P∞o P∞ Ù
o à P@
oL P∞o ¿ @ PL
∞‹ P∞ ,
∞ ÿ P∞ „Po , d à @ ƒ P ¿@ @ „
ÿ
∞TÃ T @ „ o ∞ ∞ Ã ,
∞‹ P o P∞
P o @∞ ƒ d d ,
∞‹ P o P∞ ¿∞ @o ÿ L ∞ ÿ
B
88
„ Ù @∞o à ∞
P∞„ Ù „ o Ã
I

@ „ ∞L
P∞
Ù ,
@ PL ,
, @
à ,
à ∞ , Ã
153

Page 154
¶Yoπ@»Y ƒfi ¿÷»aT
¿
» Ãd o ¿∞ @ ∞
o oà @∞ @ ∞ ∞ @∞ @ ∞ ∞, P∞ @ ∞ ∞
∞ „ ƒ L @∞ ∞ , P§ P
∞ @ , o Ù, §Ã ∞ „ t @ @ ¿ ∞X o Ã∞ o @ @ @ Tà T @ ÿ o , ƒ ƒ P
154

@»Y ƒfi ¿÷»aTY
I
d o
∞
∞ @ ∞ ∞ ∞ ∞, P∞ @ ∞ ∞
„ ƒ
∞ , P§ P∞
, o Ù, §Ã o
@ ¿ ∞X o @ o @ Ã T @
ƒ P
I

Page 155
I
o Ù @
o@T @ ƒ o ƒ @∞ Po ƒ ∞
Ù @∞ „ „
T ∏ , x P∞ o@ P Ù P o oà @∞ @ @ o PT @ oL @ @∞§Ã @ P§ @∞o XTt P§Ã ,
∞»o@ @∞ t P§
@o ÿ oà ∏ à @ @o ÿ o@oà @o ÿ o@ @∞Tà @
§ ¿ T „ @ „
o ∞§ @ Ù§ o @ P∞ @ P∞
ƒ ∞
Ù , P @ @, ¿ Ùo @ ∞
P „ PÃ ∞ @ ¿ »
Ãd o ¿∞ @ ∞
B
88

Ù @
@∞ Po
P∞ o@ P Ù , @∞ @ T
@∞§Ã @ P§ ,
P§
∏ Ã @
@ „ @ Ù§ o P∞
¿ Ùo @ ∞ ∞ @
@
∞
155

Page 156
©}Y«©Àq ›§s@»Y
∞
¿ ¿∞Ã@ @L ∞ ∞ ∞
∞‹@
oL Pd‹ ∞
¿ o oP , d P ¿o ¿ T
∞ o „
P P∞
@ oL o „ , @ P
P∞ ÿo@ „ P
“¿∞ Pd‹ o ¿ oL ,
o ∞ oL ∏ , ,
156

©Àq ›§s@»Y
I
¿∞Ã@
∞
‹ ∞
P , d P ¿o
„ P∞
o „ , @ P Po , ÿo@ „ P
o L ,
oL
,
I

Page 157
ÿ @ @ ∞ ∞ @ ÿo P ¿∞ Pd‹ o
P o § § P P @ „ oà P∞ @ L∞
à „ @» ∏ ∞ o „o ∞
„ ÙoP ∞ ”
P P @∞§@ PL T ∞ ∞ po o P o § § P @ oL d , @§Ã P oL @
@o P∞ , §Ã @∞ ∞
à ∞ P @ ¿∞ ÃoP @
o oà @
∞ ¿∞ Ã „ @ d ÿ PL ( o
o ÿ
o@P∞L∞ @∞ oP P
∞ „ ∞ ∞ Ù@ ∞ p ∞‹@
oL Pd‹ ∞
B
8
I

ÿo P
P P∞ @ L∞ ,
∏ ∞
∞
P
, @§Ã P oL @ @ , §Ã
oP
¿∞ à ÿ PL ( o Ã∞
o ÿ ∞
∞ Ù@ ∞ p ∞
∞
157

Page 158
›©∞P∞LŸ ›∞ ̃@ov
I
∞P∞L ∞ @o Pd‹ Ù ∞ @
Ù ∞ @ ¥ ¿∞ @ ∞ „
d
158

Ÿ ›∞ ̃@ov
I
∞ @o @
@ @ ∞ „
I

Page 159
I
∞ ∞ ∞ ,
o@ à ƒ o @ ƒ ∞ ¿∞ ∞„
@∞o XT @§ ∞ t
∞»o@ @∞ @ ƒ ƒ „o
∞»o@ @∞ » ∞à @» T @ @ o P@ P „
∞ Ã @» „
∞ „@o à ∞ o@ ,
@∞ @,
o @ P Ù ,
, ÙoPÃ Ù , P o , ∞P∞L ∞ @o Pd‹ Ù ∞ @
‘ Ù ∞ @ ¥ ¿∞ @ ∞ „
d
B
8

,
∞„
∞ t
@
∞à @» P@ P „
o@ ,
„
159

Page 160
©§Ã∞oP u√ Ÿ∏zqÓ TπrŸ N›YtÓ o©Ã_@^
∞ ¿∞ P ¥
à L o à ∞
ƒ ∞ @ oLT P ∞
T o à L ƒ P∞
160

P u√ Ÿ∏zqÓ
N›YtÓ o©Ã_@^Ó
I
∞
à ∞
∞ @ P ∞
à L ∞
I

Page 161
I
L o à ∞ ¿ P „ L∞ , L∞ , d@ L∞ ,
ÿ o à @ T P „ L∞ à P oL Tà ƒ P∞ ∞ ∞ P∞
∞ , ,
¿ oP ∞ P
∞L∞ ∞L∞ o @∞ § P @∞P ∞
¿ ÿ o „ oP
∞L∞ ∞L∞ @∞
¿ ÿ ∞ P∞
“ „ o
∞ p ∞ oL
L ∞Ã∞ ∞ ∞ ∞
∞à @ @∞ o ∞ @∞ ∞ ∞ oL ∞
PÃ P ∞ o P o Ã
P P ∞
, ƒ ÿ ¿∞ P L ¿∞ ,

¿ P „ L∞ , ∞ ,
T P „ L∞ ,
P∞
,
∞L∞ § P @∞P ∞ o „ oP ∞L∞ @∞
ÿ
o ∞T p ∞ oL ∞Ã∞
@ ∞Ã∞
∞ ¿ ÿ @∞ o @L
∞ L ∞
P o Ã
161

Page 162
o Ã
Ù o P L , ¿ o „ ÿ
∞t L
٠o à @ @
“ T o Ã∞ ÙoL @
∞o Ã∞ p T ∏ T ¿o oL ¿Ã P P
, @ P ∞ @ P oL ∞ Ù„ P∞ oLT Ù
¿∞ o à o @» Ã
@∞ o à o P @ o à ∞ o @ o@ ∞
@∞ o @ @ ÿ LP∞ Ã L∞
“ ÿ Ù ¿o ¿o à ¿o à ∞ ,
T Ã∞ ƒ oLT T
@ o @ ¿∞ @
162

o P ¿ o „ ÿ o
L
o à @ ∞
o Ã∞ ÙoL @» ∞
∏ T ® oL ¿Ã P P @∞ ∞
,
∞ @ ∏ P oL ∞
oLT Ù ¿ ”
o Ã
à o à o P à ∞ o
∞ o @ ÿ PoL Ã L∞
ÿ Ù @ à ¿o à ∞ , ¿o
@∞ Ã∞ ƒ oLT To ∞
L o o @ ¿∞ @o
p L ”
I

Page 163
I
L , ∞ @ ∞ T Ù Surrealist @
¿ ÿL
@∞ o o Po P∞ @∞ o à @ @ ÿ PoL L à L∞
“ ¿ ∏ „ o „ oP
o P Ù @ @o L P
o L ¿∞ ”
¿∞ @o o @» @ o@ P∞
P∞ o P Ù @ P∞ @ Ù@ P P∞
“¿∞ @ @ ∞ ¿∞ @ o @
„ § P∞ Ù » Ã „ P∞ @ @
T p
¿∞ L Ã oLT „
“ ¿ d@ Ã , ∏ ∞ o @ `§ » ∞ @∞ ¿ @ P @∞P

Ù
o Po P∞ Ã
PoL L∞
„ o „ oP
@
P L ¿∞ ”
∞
@ Ù@ P P∞
@ ∞ ∞ o @ ∞ ∞ Ù » Ã @∞
@ @
T p ”
„
@ à , ∏ ∞ o Ã∞
∞ @∞ ¿
P @∞P L∞ ”
163

Page 164
164
¿∞ oL ¿∞ ∞ Ã
o à @o @ ∞ ∞ o à @ L
o à ∞
o@ P ƒ o@ Ã P @ d T „ ‹ o §@» ¿ P ¿o @ ÿ ∞ P @
» P ∞T @§Ã P oL@o ∞
@∞ @ PL
@∞ P oL o
∞ ∞ ¿oL , ¿oL P o
T ,
t » ∞ „ “ T ”
L Ã ¿∞ @ ¿@ PL
P o à oP @ @∞§ P ¿∞ P
, @∞ ¿∞ P

oL
∞ Ã o @ ∞ ∞
L L, Ã ∞
P ƒ o@ d T „ ‹ Ã §@»
P @ PL
∞T @o ∞
@∞ @ PL
o ∞
o
» ∞ „ , T ”
¿@ PL
P @ @∞§ ¿∞ P
¿∞ P ∞‹T
I

Page 165
Po T o o , ¿ o o ,
L ∞ Ù@o ƒ » ∞ ∞Ã
P @ o d @ ∞ @» ( ¿ ®
P @o ÿ o Ã
@ `o @
à ¿∞ @» , L „ à » P ÿ @∞ @ @ , L „ o ∞ ÿ P∞ ∞ @ @
oL L @ @∞ @ @ o ∞@L ∞ @∞ ¿∞ „ ∞ o ÿ @ oL „ „ P L
§
∞ ∞ ¿ oL ∞ o@ ,
@ oL P P∞ @ l à ∞ @ P∞
, @∞ o T o @ o@ ƒ Ù » ƒ ÿ Ã @∞ L
∞‹ o@ @L @o ∞ P o
L oL @o ∞ P o ,
∞ ¿ l ∞
I

,
∞ @»
ÿ
ÿ
L
∞ @∞ o ÿ @ P L
∞
o@ ,
P P∞ @
o @ o@ , »
∞ P o @o ∞ P o , ¿ l ∞
165

Page 166
¿∞ L∞,
L @P∞ „ @∞ ∞à @ @∞ o p T ∏ à T ®
ÿ Ù @ ∞ @ , ÿ ∞ P @
∞ , oL ∞ P P∞ ∞ ∞o ∞
@∞, @ @∞, ƒ ƒ ∞
∞ ∞
@» Ã Ã ,
¿∞ L∞,
L @P∞ „ @∞ Ã P Ù » ,
o ∞ P @ »Ã∞ ∞ „ @∞ P ¿o P P∞ o ÃoL
ƒ Living fossile , § @∞P ∏ ∞ , Xiphonosuridae , P ∞ d , T t P o à @o
B
8
166

@P∞ „ @∞ , @∞ o à @L @ , à T ® @ , ÿ Ù @ ,
, P @
∞ ∞ ∞o ∞
ƒ ∞
à à ,
@P∞ „ @∞ P Ù » ,
∞ P ∞ „ @∞ P P∞ o ÃoL ∞
ssile , ∏ ∞ , ae , d , t P o à @o ∞ P
I

Page 167
¿∞Í@∞Ó Sas
I
∏
P ∞ ∞ ∞L∞ çoL P∞ @∞
oP P∞
„ ∞ o P∞
¿∞ , ∞ ∞L∞ P ∞ L∞
∞ P∞ ∞
@ ¿∞ „ ¿∞o
L∞ , T @ ∞L∞t
@d ∞P P
@ d@ ∞ o @ ∞ ¿ ÿ oP ∞ @ „ P ∞P∞ P
P P @ t oL,
L Ã P∞
P∞ L ∞ P∞ ∞ P∞ L L ∞@∞ Ã∞ „» P „
I

s
∞ @∞
P∞
∞
, ∞t
∞
¿ ÿ @ „
oL, P∞
L L
„
167

Page 168
168
PL P∞ @ L ∞
@ L ∞ @ oL @∞ P∞ ,
∞L o „ ∞
∞ ¿
∞ L , T ∞ P T oL ¿∞ ∞ Ã∞
∞ ∞ @ L L P P∞ P∞ Po @∞ ∏ oL PL L ∞ @∞ ÿ
o @ ∞ ¥ ¥
@o „ P∞ ∞ , P P∞ ÙoP ∞ ∞
∞ , ¿∞ „,
@ ∞ „ P ∞ P∞ ∞ T , P oL p
∞o @∞ ƒ oL @ ∞ ƒ ¿ ÿ T d ∏
B
8

P∞ L ∞
L ∞
P∞ ,
∞L „ ∞ ¿ L , P ¿∞ ∞ Ã∞
∞ ∞ @
P P∞ P∞
oL ∞ @∞ ÿ ¥ ¥
@o „ ∞ , P ÙoP ∞ ∞
¿∞ „, @
„ P P∞ ∞ oL p
@∞
@ ∞ T d ∏
I