கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இடப் பெயர் ஆய்வு காங்கேசன் கல்வி வட்டாரம்

Page 1


Page 2

இடப் பெயர் ஆய்வு
காங்கேசன் கல்வி வட்டாரம்
கலாநிதி இ. பாலசுந்தரம் சிரேஷ்ட விரிவுரையாளர்,
தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி.
பண்டிதர் சி. அப்புத்துரை மணிவிழா வெளியீடு
988

Page 3

பொருளடக்கம்
பதிப்புரை
முன்னுரை
இயல் - நீர் நிலைப் பெயர்கள்
இயல் - 2 நிலவியல்பு குறித்த GPuudusi 656řir இயல் - 3 நிலப் பயன்பாட்டுநிலைப் Glutzvrја,6ўт
இயல் - 4 குடியிருப்புநிலைப் பெயர்கள்
Θιανού - 5 ஊராட்சிநிலப் Glслилдѓ456іт
இயல் -6 தாவரப் பெயர்கள் சுட்டிய இடங்கள் இயல் - 7 சிறப்புநிலைப் பெயர்கள்
ህዛዛጫጋ
ஆய்வுத்துணை நூல்கள்
இடப்பெயர் அட்டவணை
பக்கம்
vi - x
5 ܐ ܚܝܗܝ ܐܳ
9] سسسسست 6 |
33 -س- 20
|| 5 سسس 34
60 سس۔ 52 6 - 63
7 6 سایر 4 6
68-69
ء / 7 س- .(70
- 72

Page 4
களுக்குச் 'சிங்களமுலமாகக் கூறியவற்றை waĝöurat ճնծ 62 103 621 கெளமுதியில் இணைத்து அவற்றுக்கு நிலைபேறு தந்தவர் ஆசுகவி கல்லடி க. வேலுப்பிள்ளை ஆவர்.
இன்று ஈழத் தமிழர் வரலாற்றின் தொன்மையை நிலை நாட்டும் உறுதியான புதிய சான்றுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் ஈழத்து இடப்பெயர் ஆய்வுச் செய்திகளையும் மீளாய்வு செய்ய வேண்டிய இன்றியமையாத் தேவை ஏற்பட்டுள்ளது.
ஈழத்து இடப்பெயர் ஆய்வுகளில் பின்வரும் காரணிகள் அடிப் படையாகக் கொள்ளப்படவேண்டும்.
1) ஈழத்தில் மூலத்திராவிடர் தொல் குடிகளாக வாழ்ந்தமை. 2) ஈழ - தமிழகத் தொடர்பு.
3). தமிழகத்திலிருந்து காலத்துக்குக்காலம் நடைபெற்ற தமிழர்
குடியேற்றம்.
4) தமிழ், சிங்களம் ஆகியவற்றில் வட இந்திய மொழிகளின்
செல்வாக்கு.
5) சிங்கள அரசரின் குறுகிய கால ஆட்சிகள்.
6) சிங்கள அரசருக்கும் ஈழத்தமிழக அரசுகளுக்குமிடையே நில
விய தொடர்பு.
7) சிங்கள மொழி, பண்பாட்டு உருவாக்கத்தில் தமிழ் தமிழர்
செல்வாக்கு.
8) ஈழத்தில் இந்திய அரசுகளின் ஆட்சி.
இக்காரணிகள் அனைத்தையும் வரலாற்று அடிப்படையில் ஆராய்ந்தே ஈழத்து இடப்பெயர் வரலாறு எழுதப்பட வேண்டும். இவ்வகை நோக் கில் அவ்வப்போது ஆய்வுகள் சில மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் நெறிப்ப்டுத்தப்பட்ட ஆய்வாக எவரும் மேற்கொள்ளவில்லை.
இக்குறையைப் போக்கும் வகையில் பல்துறை ஈடுபாடு கொண் டவரான யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைச் சிரேஷ்ட விரி வுரையாளரான கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்கள் இடப்பெயர் ஆய்வில் ஈடுபட்டுவருகிறர். கிழக்கிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி இ. பலா சுந்தரம் அவர்கள் யாழ்ப்பாணத்து இடப் பெயர் ஆய்வை மேற்கொள்ளும்போது அதில் ஈழத் தமிழகம் தழுவிய முழுமை நோக்கு அமையும் வாய்ப்பு உண்டு.
است. ii . .

1972 ஆம் ஆண்டு கலாநிதிப்பட்ட ஆய்வுக்கு நாட்டார் வழக்கி யலை மேற்கொண்ட காலம் முதல் இடப்பெயர் ஆய்விலும் அவர் நாட் டம் கொண்டார். 1982 இல் சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறு வனம் ஈழத்து இடப்பெயர் ஆய்வை மேற்கொள்ளும் பணியை அவ ருக்கு வழங்கியது. கள ஆய்வு, முன்னர் வெளியான இடப்பெயர் நூல்கள், கட்டுரைகள் என்பன பற்றிய ஆய்வில் கலாநிதி அவர்கள் ஈடுபட்டார்கள். இதன் விளைவாக யாழ்ப்பாண மாவட்ட இடப் பெயர் ஆய்வு என்ற நானூற்று இருபது பக்கங்கள் கொண்ட தட்டச்சு நூல் உருவானது. நூல் 1986 இல் முற்றுப்பெற்ற போதிலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் மாற்றம் காரணமாக நூல் வெளியீடு தடைப்பட்டிருக்கிறது. V−
மயிலிட்டி, கலைமகள் மகா வித்தியாலய அதிபராக விருந்து ஓய்வு பெற்ற பண்டிதர், சைவப் புலவர் சி. அப்புத்துரை அவர்களது மணி விழாவை ஆடம்பரமின்றி, அமைதியாக ஆனல், நினைவு நிலைக்கும் வகையில் நிகழ்த்தப் பண்டிதரின் அன்பர்கள் எண்ணினர்
காங்கேசன்துறைக் கல்வி வட்டாரக் கல்வி வரலாற்றை விரி வாக ஆராயும் காங்கேசன் கல்வி மலரை வெளியிடுவதில் ஈடுபட்ட சிலரும் மணிவிழாக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்களின் யாழ்ப்பாண மாவட்ட இடப் (ou uusử ஆய்வு நூலில் இடம்பெறும் காங்கேசன் கல்வி வட்டார இடப் பெயர் ஆய்வுப் பகுதியை மணி விழாப் பரிசாக வெளியிட்டு வழங்க விரும்பினர். கலாநிதி அவர்கள் மணிவிழாக் குழுவினரின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளார்கள்.
மணிவிழா நாயகர் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்கள் புகழ்பூத்த அசிரியர், காங்கேசன் கல்வி வட்டாரத்தில் அரும்பணியாற்றிய அதிபர் 353 மாணவர்கள் கற்ற மயிலிட்டி பேய்க் கோயில் பள்ளிக்கூடத்தை 1012 மாணவர் பயிலும் முன்னேடிக் கலைமகள் மகா வித்தியாலயமாகக் குறுகிய காலத்துள் மாற்றிய செயல் வீரர்.
நூற் பதிப்புத்துறையில் பண்டிதரின் பணிகள் பரந்து பட்டவை தமது தமக்கையார் மறைந்த போது அவர் நினைவாக மழலைச் செல்வம் (1964) என்ற குழந்தைக் கவிதைத் தொகுப்பை அன்பளிப்பாக வெளி யிட்டு, குழந்தை இலக்கிய வெளியீட்டைப் பரவலாக்கும் ஒரு புதிய நெறியைத் தொடக்கி வைத்த முன்னே டி.
அன்னயாரின் நினைவாக மாவிட்டபுரம் முருகன் பேரில் எழுந்த இலக்கியங்களின் அறிமுகத்தொகுப்பாக மாவை முருகன் கவிப்பூங் கொத்து (1976) நூலை வெளியிட்டு பண்டிதர் அவர்கள் தமிழ் இலக் சியத்துக்கும் சமயத்துறைக்கும் அரிய அன்பளிப்பை வழங்கியவர்.
-- ii

Page 5
மல்லாகம் பண்டித மாணவர் கழக மாணவராக இருந்தபோது கழகக் கையெழுத்து ஏடான பண்டிதன் (1964) சிறப்பு மலராக மலரப் பணியாற்றியவர் பண்டிதர் அவர்களே. அப்போது சுன்னகம் அ, குமார சுவாமிப் புலவரின் இலக்கண சந்திரிகை (1965) வினைப்பகுபத விளக்கம் (1965) ஆகிய நூல்களை மறுபதிப்பாக வெளியிடுவதில் கழகச் சார்பில் அவரே ஊக்கத்தோடு உழைத்தார்.
மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்தில் பாரதி (1974-1937) என்ற பெயரில் பாடசாலைச் சஞ்சிகை வெளியிடும் மரபை ஏற்படுத்தினர். வழமையான பாடசாலை விடயங்களோடு அறிவுக்கு விருந்தாகும் அரிய கட்டுரைகளும் பாரதியில் இடம் பெற்றுள்ளன.
யாழ்ப்பாண வரலாற்று ஆய்வுக்குப் பெரிதும் துணைசெய்யும் தண்டிகைக் கனகராயன் பள்ளு (1985) என்ற பிரபந்தத்தை மேற்படி வித்தியாலய ஆசிரியர் அமரர் க. ஞானசுந்தரம் நினைவாக வித்தியால யத் தமிழ் மன்றம் வெளியிட ஏற்பாடு செய்தார்.
காங்கேசன்துறைக் கல்வி வட்டாரத்தில் வெளியான நூல்களின் பட்டியலொன்றை அரிதின் முயன்று கெர குத்து, காங்கேசன் கல்வி மலரில் (1986) வெளியிட்டார். இது இலக்கிய வரலாற்று ஆய்வாளர் களுக்கு மிகவும் பயனுள்ள தொகுப்பாகும்.
தேவாரம் வேதிசாரம் என்பது காசிவாசி செந்தி நாத ஐயர் எழு திய அரிய நூல். இந்த நூலைப்பதிப்பித்து வெளியிடுவதற்கான முன் முயற்சிகளில் இப்போது மணிவிழா நாயகர் ஈடுபட்டுள்ளார். சைவத் தமிழுலகுக்குப் பதிப்பாசிரியர் என்ற வகையில் அவர் செய்யும் அரும் பெரும் பணியாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.
வெளியிட்டுத் துறையில் விடுதலறியா விருப்புக் கொண்டிருக்கும் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்களின் மணிவிழா அன்பளிப்பாக அவ ரது அன்பர்கள் பயனுள்ள நூலொன்றை வெளியிட முன்வந்தமை பொருத்தமானதும் பாராட்டத் தகுந்ததுமாகும்,
இந்நூல் வெளியீட்டுத்திட்டத்தை முன்மொழிந்து, நிதியும் வழங்கிய அப்புத்துரை அன்பர்கள்,
நூலை வெளியிடத் தந்துதவிய கலாநிதி இ. பாலசுந்தரம்,
நூல்வெளியீட்டில் இணைந்து செயற்படுவதோடு பண்டிதர் அவர் களின் பணிபற்றிய கருத்தரங்கையும் நூல் வெளியிட்டு விழ்ர்வோடு நிகழ்த்தும் கலை இலக்கியக் களத்தினர், :
س، Vi --سه

இந் நூலின் அமைப்புக்கும் விழாவின் வெற்றிக்கும் அயராது உழைத்த மயிலங்கூடல் பி. நடராசா,
நூலை அழகுற அச்சிட்டு வழங்கியுள்ள செட்டியார் அச்சகத்தினர்,
1மணிவிழா தடத்தப் போகிருேம்' என்று வேண்டிய அன்பர்களுக்கு என்னைப் பாராட்ட வேண்டாம், தமிழ்ப்பணி ஏதாவது பயனுறச் செய்க" என்று ஆற்றுப்படுத்திய மணிவிழா நாயகர் பண்டிதர் சைவப் புலவர் சி. அப்புத்துரை,
ஆகிய அனைவர்க்கும் எமது உளம் நிறை நன்றியை உரிமையாக் குகிருேம்.
மணிவிழா நாயகரும் துணைவியாரும் குழந்தைகளும் எல்லா நலங் களும் பெற்றுப் பல்லாண்டு வாழ இறையருளை வேண்டுகிருேம்.
1988.08.21

Page 6

மணிவிழா நாயகனும்
Yx -a.
நாயகனின் நாயகியும்
பண்டிதர் சி. அப்புத்துரை திருவாட்டி சைவப்புலவர் இரத்தினம் அப்புத்துரை

Page 7
முன்னுரை
இ. பாலசுந்தரம்
ஆதிகால மக்கள் நிலையாக ஓரிடத்திலிருந்து தொழிற்பட வேண் டிய நாகரிக நிலை ஏற்பட்டபோது தாம் வாழுமிடங்களை மற்றவர்க ளுக்குச் சுட்டிக்காட்ட வும், ஏனைய இடங்களிலிருந்து ஒரிடத்தைப் பிரித் துக் காட்டவும் தாம் வாழ்ந்த இடங்களுக்குப் பெயர்களைச் சூட்டலா ஞர்கள். இயற்கைச் சூழலில் அவர்கள் அறிந்திருந்த மரப்பெயர்கள் நீர்நிலைப்பெயர்கள், நிலவியல்புப் பெயர்கள், பறவைப் பெயர்கள், விலங்குப் பெயாகள் ஆகியனவற்றைப் பயன்படுத்தி இடப்பெயர்களைக் குறித்து வழங்கலாயினர். இவ்வாறு இயற்கைப் பெயர்களின் அடி யாக இடங்களுக்குப் பெயர் சூட்டும் மரபு பல்லாயிரம் ஆண்டுகளT கப் பின்பற்றப்பட்டு வருகின்றமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும். ஆயினும் காலப் போக்கில் ஏற்பட்ட அறிவு வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி என்பவற்றுக்கமைய அரசர், தலைவர், அதிகாரிகள், என்போரின் பெயர்களும், புராண இதிகாச இலக்கியப் பெயர்களும், கடவுட் பெயர்களும் இடப்பெயர்களின் ஆக்கத்தில் இடம் பிடித்துக் கொண்டன.
வேறு ஊர்களிலிருந்து குடி பெயர்ந்து வந்து காட்டுப் பிரதேசங் களிற் குடியேறி, அவற்றைத் திருத்தி நன் செய், புன்செய் நிலமா கவோ அல்லது குடியிருப்பு இடமாகவோ மாற்றிய மக்கள், தம்பழம் பதியின் பெயரையே தாம் உருவாக்கிய புதிய ஊருக்கும் இட்டு வழங் குதல் பொதுமரபாக இருந்து வந்துள்ளது. இந்நூலிலே இடம்பெறும் சித்திரமேழி, சேந்தான்குளம் ஆகிய இடப்பெயர்கள் தமிழகத்திலும் உள்ளமை ஈண்டு சிந்திக்கத் தக்கதாகும்.
வரலாற்று நிகழ்வுகள், பிற நாட்டு அரசியல் தொடர்புகள், சமய நடவடிக்கைகள், அபிவிருத்தி வேலைகள் என்பனவும் இடப்பெயர் ஆக் கத்தில் தம் பெயர்களைப் பதித்துள்ளன. மேலும் தொழில் முறைகள், சாதி அமைப்புக்கள் என்பனவும் இடப் பெயர்ாக்கத்தில் இடம் பிடித் துக்கொண்டன .
காலம் காலமாக வழங்கி வந்த இடப்பெயர், ஆட்சியாளர்களாலும் புதுமை விரும்பிகளாலும் மாற்றம் பெறுதலும் உண்டு. இதற்குச் சிறந்த உதாரணமாக யாழ்ப்பாணத்துக் காரைதீவு என்ற பெயர் காரைநகா என்று மாற்றப்பட்டமையைக் குறிப்பிடலாம். இது போன்றே குறிப் பிட்ட ஒரு மொழியில் வழங்கும் இடப்பெயருக்கு அங்கு வந்து சேர்ந்த வேற்று மொழியினர் தம் மொழியில் அவ்விடத்திற்கு வேறு பெயரிட்டு
- viii -

வழங்குதலுமுண்டு. சான்றக ஊர்காவற்றுறை கையிற்ஸ் (Kayts) என்றும், யாழ்ப்பாணம் ஜவ்ன (Jaffna) என்றும், பருத்தித்துறை பொயின் பெற்றே (Point Pedro) என்றும் வழங்குவதைக் காணலாம்.
ஒரு மொழியின் இலக்கண வரம்பிற்கமைய ஆக்கம் பெற்ற இடப் பெயர்கள், காலப் போக்கில் பேச்சு வழக்கில் சிதைந்து வழங்குதலு முண்டு. ஊர்காவல்துறை ஊருத்துறை என மருவியபோது (சிங்கள மொழியில் ஊற என்பது பன்றி) பன்றி ஏற்றும் துறை எனச் சிங் கள மொழியிலும் தமிழ் மொழியிலும் பலர் விளக்கம் கொடுத்துனர்.
ஒரு நாட்டின் வரலாற்றுண்மைகளையும் பண்பாட்டுச் செய்திகளை யும் புதைபொருட் சான்றுகள், கல் வெட்டுக்கள், கட்டிட சிற்ப ஒவி யங்கள், இலக்கியங்கள் எடுத்து இயம்புவன போன்று, இடப்பெயர் களும் வரலாற்றuய்வுகளுக்கு ஆதாரமாகின்றன. இடப் பெயராய்வின் மூலம் இடங்களின் புவியியல்பு, பிற நாட்டார் தொடர்பு, அரசியல் திகழ்வுகள், மொழி மாற்றம் முதலாம் விடயங்களை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. எனவே ஓரிடத்தின் பெயர் விளக்கத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் அவ்விடத்தின் வரலாறு, கலாசாரம், தொழில் முறை மக்கள் நிலை என்பவற்றின் ஒரு பாகத்தை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. V− V
இடப் பெயர் விளக்கம் என்ற அடிப்படையில் பத்திரிகைகளில் எல்வேறு கட்டுரைகள் வெளிவந்தன. சில நூல்களும் வெளிவந்துள் ான. இவற்றுள் எஸ். டபிள்யு. குமாரசுவாமி 1918இல் வெளியிட்ட "வட மாகாணத்துச் சில ஊர்ப் பெயர்கள்' என்ற நூல் மிகவும் அவ ானமாக ஆராயப்பட வேண்டிய ஒன்ரு கும். இவ்வாசிரியர் யாழ்ப் இடப் பெயர் பெரும்பாலானவற்றிற்குச் சிங்கள மூலம் காண் தில் பெரும் திருப்தி அடைந்திருக்கிறர். த. சண்முகசுந்தரம் (1984:3) அவர்கள் எழுதிய ஒரு குறிப்பினை இவ்விடத்தில் எடுத்துக் காட்டுதல் பொருத்தமாகும்:
"ஈழத்து இடப் பெயர் ஆரம்பகால ஆராய்ச்சியாளர் பலரும் கண்டபடி எழுதினர் வடமொழியின் திரிபு என்றனர். தேவையில்லா மல் தொன்மைக் கதைகளைப் புகுத்தி ஆக்கி ஆராய்ந்தனர். கற்பனை, 2ாகம் பழமையை மறுத்தல் போன்றவை ஆராய்ச்சியில் இடம்பெற் றன. இதனல் இப்போது பெரும் இடர்பாடு தமிழுக்கு எழுந்துள்ளது'
ஐரோப்பிய நாடுகளில் ஒரு நூற்ருண்டுக்கு மேலாக இடப்பெயராய்வு வளர்ச்சி யடைந்து வருகிறது. 1949இல் UNESCO சார்பில் அனைத் ዕ1qህ6C} பெயராய்வுக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழில் இடப்பெயராய்வு' அண்மைக் காலமாக வளர்ந்து வரும் ஒரு புதிய ஆய்வுத் துறையாகும். ஈழத்தில் இடப் பெயராய்வு இன்
— іх —

Page 8
னும் வளர்ச்சியடையவில்லை. தமிழகத்தில் இடப் பெயராய்வு துரித வளர்ச்சியடைந்து வருகிறது. இத் துறையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முன்னின்று உழைக்கின்றது. 1982இல் அந் நிறுவனத்தின ரின் வேண்டு கோளின் பெயரில் யாழ்ப்பாண மாவட்டத்தின் இடப் பெயராய்வினை மேற்கொண்டு 420 பக்கங்களில் (தட்டச்சு) ஒரு நூலினை 1986இல் எழுதினேன். அந்நூல் வெளியீட்டுக்காக தற்போது காத்து நிற்கின்றது.
மaபிலிட்டி வடக்கு கலைகள் மகாவித்தியாலய அதிபர் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்கள் சமூக சமயத் தொண்ட ர், இலக்கிய ஆர்வ லர், நூற்பதிப்பு முயற்சிகளில் ஈடுபாடு உடையவர். அவர்களின் மணிவிழா வெளியீடாக அவர் வாழும் 'காங்கேசன்துறைக் கல்வி வட்டாரம்' பகுதியிலுள்ள ஊர்ப் பெயர்களைத் தொகுத்து விளக்கும் வகையிலான ஒரு நூலினே எழுதித் தருமாறு ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி திரு. பொ. சிவஞானசுந்தரம் அவர்களும், மணிவிழா அமைப் பாளர்களுள் ஒருவரான சைவப் புலவர் சு. செல்லத்துரை அவர்களும் கேட்டுக் கொண்டதற் கிணங்க, முன்னர் நான் எழுதி வைத்துள்ள "யாழ் மாவட்ட இடப்பெயராய்வு' என்ற நூலிலிருந்து இக்கல்வி வட்டாரத்து இடப்பெயர் விளக்கத்தினை இந் நூலில் தொகுத்துத் தந் துள்ளேன். , . . . . .
இக் கல்வி வட்டாரத்துக் கிராமங்களில் வாழும் மக்களும், அறி. ஞர் பெருந்தகைகளும் இந் நூலிலே மேலுஞ் சேர்க்க வேண்டிய தக வல்கள், இவ் வூர்ப் பெயர்களுடன் தொடர்புடைய நாட்டார் பாடல் கள் கதைகள், பழமொழிகள், கல்வெட்டுக்கள் என்பன கிடைப்பின் அவற்றை எனக்கு அனுப்பி வைத்தால் அவற்றை அடுத்து பதிப்பில் நன்றியுடன் சேர்த்துக் கொள்வேன். ஈழத் தமிழ் மக்களின் வரலாற் றைக் கட்டி எழுப்பும் பணியில் இந்நூல் தன் பங்களிப்பை ஆற்று கின்றது. --

இயல் 1
நீர் நிலைப் பெயர்கள்
நீர் நிலைகளும் இடப்பெயர்களும்
பண்டைய நாகரிகத்தின் தொடக்க் காலத்திலே நீர் நிலைப் பெயர்களே பெரிதுந் தோன்றியிருக்க வேண்டும் என எதிர்பார்த்தல் இயல்பானதே. தமிழ் நிகண்டுகள் நீர்நிலைப் பெயர்களைப் பெருகக் கூறுகின்றன. சங்க இலக்கியத்திலே நீர் நிலைப் பெயர்களாக ஆறு, ஊற்று, கயம், கழி, கால், சிறை, துறை, படக்கை, ப்ாழி என்பன வழங்கியுள்ளன (கி. நாச்சிமுத்து 1983 ; 133). "நீரகம் பொருந்திய ஊரக த்திரு” என்பது ஒளவையார் வாக்கு.
யாழ்ப்பாண மாவட்டம் நீர் வளம் செறிந்த பிரதேசம் அன்றெனினும் நீர் நிலைகளாற் சூழப்பட்டுக் காணப்படுவ தால் நீர்நிலைப் பெயர்கள் இங்கு பெரிதும் காணப்படு
1 'படுகரே தாங்கல் கேணிபல் வளம் படுவேட்டம் மடுவுளகமே பண்ணைவாவியே சுனையே வட்டம் தடமொடு கயம்பயம் பூந்தடாகமே குளமேகுட்டம் அடைவுள கிடங்கு குழி யவந்தையே குண்டம் பங்கம் இலஞ்சி கோட்டகமே பொய்கையேல்வை யோடையேரி",
(சூடாமணி. 5:23-24)
- 1. -

Page 9
தல் சிறப்பியல்பாயிற்று அவ்வகையில் அமைந்த பெயர் களை மேல்வருமாறு வகைப்படுத்தலாம்: '
அளை குளம் ஆரை கேணி ஆவி கொட்டு j0 அதுறை g60) L. ιρ (Β
கரை மோட்டை களப்பு வில் கால்
இத்தகு நீர் நிலைப் பெயர்க் கூறுகளோடு முன்னுெட்டு நிலையில் அடைகள், இயற்கைக் கூறுகள், ஆட்பெயர்கள் என்பன இணைந்து இடப்பெயர்கள் ஆக்கம் பெற்றுள்ளமை ஈண்டு விரிவாக விளக்கப்படுகின்றது.
"அனை" ஈற்றுப் பெயர்கள்
அளை என்பது புற்று, பொந்து, குகை எனப் பொருள் தருவதாகும் (பொருநர் - 7). வயலில் நீர் வடித்து ஒடும்பொருட்டு வெட்டப்படும் வடிகா லும் அளை எனப் படும். நாக வழிபாட்டினரான திராவிட மக்கள் ஆதி யிலே தாம் குடியேறிய இடங்களிற் காணப்பட்ட பாம்பின் உறைவிடமான புற்றைப் பயத்தின் காரணமாக அதற்கு முதன்மை அளித்து, அதனை நினைவுக் குறியீடாகக் கொண்டு ஊர்ப் பெயர் அமைத்தனர் எனவும் கருத இடமுண்டு. *அளை ஈற்று இடப்பெயர்கள் யாழ்ப்பாண மாவட்டத் தில் மூன்று காணப்படுகின்றன. இவற்றில் அளை = வாய்க் கால் என்ற பொருளில் இரு இடப்பெயர்களும், அளை -
1 கையளை = சிறு வடிகால், கால் அளை = பெரிய வடிகால், தாயளை ! பேரளை = சிறுவடிகால்கள் வந்துசேரும் பெரியவடிகால். விதைப்பு நடைபெறும்போது விதைப்பதற்கு எளிதான முறையில் வயற் பரப்பைச் சிறுசிறு பகுதியாக வகுப்பதற்கு அமைக்கப்படும் மிகச் சிறிய வடிகால் தட்டளை எனப்படும். (இ. பாலசுந்தரம் 1979 : பக். 329)
نص 2 سب

ற்று என்ற பொருளில் ஓரிடப்பெயரும் ஆக்கம் பெற் ^ள்ளன. இம் மூன்று இடங்களில் கும்பளை மட்டுமே இப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
கும்பளே (வலி. வ. 62.5)
கும்பல் + அ2ள = கும்பளை, கும்பி + அளை = கும் 18: ; கும்பல் = குவியல், கூட்டம்; கும்பி = குவியல், நர கம், சேறு, யானை (தமிழகராதி: பக். 96). அளை = நீர் வ13 ந்தோடும் சிறு வாய்க்கால். எனவே கும்பளை என்பது சிறு வாய்க்கால்கள் நிறைந்து காணப்படும் இடம் என்பது பொருளாம். இக் கிராமம் அளவெட்டி வடக்கில் அமைந் துள்ளது. அளவெட்டி என்பது வடிகால்கள் வெட்டப் பட்ட இடம் எனப் பொருள் தருவதாகும். இவ்விரு இடங் களும் அயற் கிராமங்களாக அமைந்திருப்பதும் சொற் பொருள் அடிப்படையில் ஒத்துக் காணப்படுகின்றன.
மழைக் காலங்களிற் காணிகளிலே தேங்கி நிற்கும் மழைநீர், வடிந்தோடும்பொருட்டுப் பல அளைகள் (கால் வாய்கள்) இங்கு வெட்டப்பட்டு, அவை வழுக்கியாற்றுடன் தொடுக்கப்படுதல் வழக்கம். இக் காட்சியின் வெளிப் பாடாகவே கும்பளை, அளவெட்டி என்பன காரணப்பெயர் களாகத் தோற்றம் பெறலாயின.
‘ஆரை", ஈற்றுப் பெயர்கள்
ஆரை என்பது கோட்டை மதில், அரண் எ ன ப் பொருள்படும். யாழ். மாவட்டத்தில் ‘ஆரை ஈற்றுப் பெயர் களாக அல்லாரை, கல்லாரை என்ற ஈரிடங்களுள். தமிழ் நாட்டில் ஆரைக்கல் (நாமக்கல்) என்ற பழம்பதி இருந்த தாகச் சேதுப்பிள்ளை (1976 : 5) குறிப்பிட்டுள்ளார். நாஞ் சில் நாட்டிலுள்ள ஆரல்வாய்மொழி < ஆரவாய் மொழி என்பதன் திரிபென்றும், அது ஒரு கோட்டையைப் போன்று மூன்று புறமும் சூழ்ந்த பொதியமலைத் தொடரின்கண் அமைந்தமையால் அப்பெயர் ஏற்பட்டதென்றும் கூறப்படு கிறது. இங்கே ஆரை என்பது கோட்டை என்ற பொருளில் வந்தது.
سن 3 -

Page 10
மட்டக்களப்புப் பேச்சு வழக்கில் மழை பெய்து நீர் வடிந்து ஒடும் இடம் ‘ஆரை” அல்லது ‘ஆரைப்பற்றை” எனப்படும். அத்துடன் மட்டக்களப்புக்குத் தெ ந் கே நான்கு மைல் தொலைவில் ஆரைப்பற்றை என்ற கிராம மும் உள்ளது. -
கல்லாரை; (வலி: a 61.3ر
கல் + ஆரை = கல்லாரை. கல் அரண் அல்லது கற் பாறை உள்ள இடம் என்ற பொருளில் இப்பெயர் அமைந் துள்ளது. மல்லாகம் பகுதியில் இவ்விடம் அமைந்திருக் கிறது.
ஊரணி (வலி. வ. 33.5)
ஊர் + அணி = ஊரணி, ஊரணி என்பது ஊருணியின் திரிபாகலாம். 'ஊருணி நீர் நிறைந்தற்றே” 6τ δόν 60) ιδ திருக்குறள் தொடரால் அச்சொல்லின் பழமை விளங்கும். ஊருக்கு அணித்தாக உள்ள நீர்நிலை ஊரணி என்றும் கூறுவர் (ரா. பி. சேதுப்பிள்ளை 1976 பக். 45). தமிழகத் திலுள்ள எழும்பூர் தற்போது எக்மூர் என்று அழைக்கப் படுகிறது. எழும்பூர் என்பது எதிரிக்கெதிராக அணி திரண்டு எழுந்த ஊர் என்ற பொருள் தரும் என்பர். அதுபோன்றே ஊரணி என்பதும் எதிரிக்கு எதிராக அணி திரண்டெழுந்த ஊர் என்ற நிலையில் பெயர் ஏற்பட்டது 6T60F (35.
ஊரணி('ஆரணி ஆரணி=நீர்ச்சுழி. இச்சொல் சங்கத இலக்கியங் களில் ஒன்றிலுமே காணப்படவில்லை என மொனியர் வில்லியம்ஸ் சங்கத அகராதியிற் கூறினர். ஆனல் அவர் தரும் அரண (பக் கம் 149) என்பது ஆழம்காணமுடியாத ஆழி, பாதாளம் செங் குத்தான மலைச்சரிவு என்ற பொருள்களைத் தருவதால் இது ஆரணி என்ற தமிழ்ச் சொல்லின் சிதைவேயாகும்'. தாவீது : 1970 பக். 13, 14,
-- 4 جب۔

கரை" ஈற்றுப் பெயர்கள்
நீர் நிலைகளின் கரையோரங்களை அடுத்துள்ள நிலப் பகுதி அல்லது குடியிருப்புக்கள் “கரை” என்ற ஈற்றுச் சொல் அமைந்த பெயர்களால் வழங்கப்படுகின்றன. இவ் வகையில் நான்கு இடப்பெயர்கள் யாழ். மாவட்டத்தில் காணப்படுகின்றன. அவற்றில் இரு பெயர்கள் வலிகாமம் புகுதியிலுள்ளன.
மயிலிட்டிக் கரை (மயிலிட்டித்துறை) வலி, வ. 72;
மயில் + இட்டி + கரை = மயிலிட்டிக்கரை. மயிலிட்டிக் கிராமத்தின் கடற்கரையை அண்மித்த பகுதி மயிலிட்டிக் கரை என வழங்கிற்று. தற்ப்ோது இவ்விடம் மயிலிட்டித் துறையென்றே வழங்குகின்றது.
வீரமாணிக்கத்தேவன் துறை, பெரியநாட்டுத்தேவன் துறை ஆகிய இரு பழங்கிராமங்களின் இணைப்ப்ே மயி
லிட்டித் துறையாகும்.
இங்கு வாழும் பழங்குடியினரின் காணித் தோம்புகள் உறுதிகள், பிறப்புப் பத்திரங்கள், ஒல்லாந்தர், ஆங்கிலே யரில்ை வரையப்பட்ட இலங்கை வரைபடங்கள், கடலோ J LĎ வீற்றிருக்கும் கண்ணகை அம்மன் ஊஞ்சல் பாட்டு, கப்பல்பாட்டு, முன்னையள் வளவு முருகையன் ஊஞ்சல் பாட்டு என்பன இதற்கான சான்றுகளாகும்.
மதுரை சங்கரநாதபுரத்திலிருந்து வீரமாணிக்கதேவன், பெரியநாட்டுத்தேவன்,நரசிங்கதேவன் ஆகிய மூன்று சகோ தரர்களும் அவர்களது படையணியுடன் இங்கு வந்தனர் என்றும், மூத்தவர்கள் இருவரும் தங்கள் பெயர்களை அக் கிராமங்களுக்குச் சூட்டினர்கள் என்றும் இவர்களும் இவர் களது படையணிகளும் இங்கு வாழத் தொடங்கிவிட்டனர்
سے 5 --س

Page 11
என்றும், இவ்வீர மரபினரது வருகைக்கு முன்னர் இங்கு சிறப்புடன் வாழ்ந்த குருகுலத்தவர்களுக்கும் தேவர்களுக் கும் கலப்பு ஏற்பட்டது என்றும் இவ் விரு வீரமரபினரது வழித்தோன்றல்களே இங்கு வாழும் பழங்குடியினர் என் றும் இங்குள்ள மக்கள் கருதுகின்றனர். (தகவல் எம். ராஜா யோகானந்தம் - மயிலிட்டித்துறை).
இங்குவாழும் மக்கள் படைத் தலைர்களாகவும் படை வீரர்களாகவும் கடல் வணிகர்களாகவும் கப்பலோட்டிகளா
கவும் கடலோடிகளாகவும் விவசாயிகளாகவும் கடற் ருெழிலாளர்களாகவும் விளங்கினர்.
வீரமாணிக்க தேவன் என்னும் பெயர் கொண்ட படைத் தலைவரை யாழ்ப்பாண வரலாற்றில் பல இடங்களில் காண லாம்.
இங்குள்ள மக்கள் சைவர்கள்; கண்ணகி வழிபாடுடை யவர்கள். சிவவழிபாடு, விஞயக வழிபாடு, முருக வழிபாடு காளி, ஐயனுர் வழிபாடு என்பனவும் இங்கு காணப்படுகின் றன. கண்ணகி அம்மன் ஆலயம், முருகையன் ஆலயம், வர சித்தி விநாயகர் ஆலயம் என்பன இங்கு சிறந்து விளங்கு கின்றன. கண்ணகி ஆலயத்தின் தேர்த் திருவிழா, கப்பல் திருவிழா, முருகையன் ஆலயத்தின் தேர்த் திருவிழா, சூர சங்காரவிழா என்பன சிறப்பானவைகள்.
இங்கு கத்தோலிக்கர்களும் வாழ்கின்றர்கள். அவர்கள் தங்களுக்கென சென். மேறிஸ் காணிக்கை மாதா என்னும் கத்தோலிக்க ஆலயத்தினை சிறப்புடன் வைத்துள்ளார்கள்.
'மயிலிட்டி ருேமன் கத்தோலிக்க பாடசாலையும் மயி
லிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயமும் இப்பகுதியை அணி செய்கின்றன,
திக்கரை (வலி, தெ. மே, 53.10)
இது பெரியவிளான் பகுதியிலுள்ள ஓரிடம், திக்கு + கரை = திக்கரை.

"கால்" ஈற்றுப் பெயர்கள்
கால் = நீர் போல் நேரம் பாய்தல்; காலம்; கால அளவு; பாய்தல்; கால் = கால்வாய் = வாய்க்கால்; வளி = காற்று; பாதம் = பூவின்தாள்; அடிப்பாக மீ; தேர் உருள், ஏழ னுருபு எனப் பத்து வகைப் பொருள் கூறினர் தாவீது அடிகள் (1970 பக். 33, 34). அகநானூற்றில் “கால் விரிபு ன இடம் எலாம் விரிந்து” (151 : 5) இங்கு கால் கொண்ட இடம் என்ற பொருள் சுட்டிவந்துள்ளது. கால் என்பதற்கு வழி எனப் பொருள் கொண்டு லூயிஸ் (1917 : 46) ஆவரங் காலுக்கு விளக்கம் கொடுத்தமையும் நோக்கற்பாலது.
குளமங்கால் (வலி. A. 65.4)
இது தெல்லிப்பளைப் பகுதியிலுள்ள ஓரிடம். இது (குளமண் கால் என்பதன் திரிபாகும். இங்கு வெட்டுக்குளம், கட்டுக்குளம் என்ற இரு சிறு குளங்களுள. குளமண் = களிமண், களிமண் எடுப்பதற்குச் செல்லும் வழி என்ற 'பொருளில் இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
குளம் ஈற்றுப் பெயர்கள்
ஈழத்து ஊர்ப் பெயர்களில் நீர்நிலைகளைச் சு tiq-ul பெயர்களே எண்ணிக்கையில் மேம்பட்டுக் காணப்படு கின்றன. குளம், கேணி முதலிய நீர்நிலைப் பெயர் க ஆள ஈற்ருகக் கொண்ட 332 இடப்பெயர்கள் வன்னிப் பகுதியிலே உள்ளன என லூயிஸ் கணக்கிட்டுள்ளார்." நீர்நிலையைக் குறிப்பனவாக அமைந்த மடு, கேணி, நீராவி ஓடை, குழி, வில், தாழ்வு, மோட்டை, பள்ளம் முதலான சொற்கள் இடப்பெயர் ஈறுகளாக அமைந்து விளங்குகின்றன. நீர் நிலைகளுக்குப் பெயர் வைக்கும்போது விவசாயிகளோ அன்றி ஏனையவரோ அவற்றைச் சூழ இருந்த முக்கியமான மரங்களுக்கு முதன்மை அளித்து அம்மரப் பெயர்களோடு
J. T. P. Lewis, 1896 P 205

Page 12
ஈற்றில் நீர்நிலைப் பெயர்களையும் இணைத்து அழைக்கலா யினரி. அவ்வாறு பெயரிடும்போது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு மரப் பெயரைக் சுட்டிய குளப்பெயர்கள் காணப்பட்டால் அவற்றுக்கு அடை கொடுத்து ஒன்றிலிருந்து மற்றை பதை வேறுபடுத்தி வழங்கியுள்ளமையையும் கவனிக்கக் கூடியதாகவுள்ளது.
ப்ச்சிலைப்பள்ளி, கரச்சி, பூநகரிப் பகுதிகளிலே 10 ஆம் நூற்ருண்டுக்கு முன்னரே பல குளங்கள் அமைக்கப்பட்டுப் பயிர்ச்செய்கைக்கு நீர் பயன்படுத்தப்பட்டது. பிற்காலத் தில் ஏற்பட்ட கலவரங்கள், மலேரியா என்பன காரண மாக இவை கைவிடப்பட்டன. பின்னர் மறுபடியும் 20ஆம் நூற்ருண்டின் ஆரம்பத்தோடு இக் குளங்கள் புனரமைக்கட் பட்டு நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின் றன. இத்தகைய குளங்களும் குளத்தாலமைந்த இடப் பெயர்களும் இப் பிரதேசத்தின் பழமைக்கோர் எடுத்துக் காட்டாக அமைகின்றன. காங்கேசன்துறைப் பகுதியில் குளம் ஈற்றுப் பெயராக ஒரேயொரு இடமே அமைந் துள்ள ஆ.
சேந்தான்குளம் (வலி வ. 63.4)
சேந்தான் + குளம். இது கடற்கரை ஓரத்துக் கிராமம். இங்கு குளம் இல்லை. தமிழகத்திலுள்ள சேந்தான்குளம் என்ற இடத்தைச் சேர்ந்த மக்கள் இங்குவந்து குடியே றியபோது இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். சேந்தான்குளத் தின் ஒரு பகுதி சேந்தான்புலம் என்றும் வழங்கப்படு கின்றது. யாழ்ப்பாண வைபவமாலையில் (பக். 10) இல் விடப்பெயர் சேந்தான் களம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளடை நோக்கற்பாலது.
, − ‘துறை ஈற்றுப் பெயர்கள்
துறை=இடம், நியாயவழி, பகுதி, உபாயம், கடல் துரை கடல்,ஆறு, வண்ணுன் ஒலிக்குமிடம், நீர்த்துறை, ச ை கூடு மிடம், பொருட்கூறு, ஒழுங்கு, (தமிழ் லெக்சிக்கன் IV ப 2005). துறை என்பது சமஸ்கிருத மூலத்திலிருந்து அ6
"-س- & -سسه

p
)
i
லது சிங்கள Tara என்பதிலிருந்து வந்திருக்கவேண்டும் என்பர் யாழ்ப்பாண இடப்பெயர்கள் பற்றி எழுதிய ஜே லூயிஸ் (1917 : 45), இவ்வாறு அர்த்தமற்ற விளக்கங்கள் யாழ்ப்பாண இடப்பெயர் ஆராய்ச்சியில் இடம் பெற்றுள் ளன என்பதற்கு இதுவுமோர் எடுத்துக்காட்டு.
யாழ்ப்பாண மாவட்டத்தின் மூன்று கரையோரங்களிலும் சிமைந்துள்ள இறங்குதுறைகள், துறைமுகங்கள் என்பன வர்த்தக பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பரிமாறிக்கொள் ளும் வாயில்களாக விளங்கின என்பது இவற்றின் பெயர் களைக் கவனிக்கும்போது அறியப்படுகிறது. A
கப்பல்கள் இத்துறைகளிலிருந்து எங்கே புறப்பட்ச்ே சென்றனவோ அந்ந இடத்தின் பெயரையே இவை பொதுவா கக் கொண்டிருக்கின்றன. கொழும்புத்துறை, காயாத்துறை, சம்புத்துறை ஆகியன இவ்வகையினவாகும். இத் துறை முகங்கள் பண்டைக்கால வணிக வரலாற்றுடனும் பண் பாட்டு வரலாற்றுடனும் தொடர்புடையனவாகக் காணப் படுகின்றன.
காங்கேசன்துறை (வலி வ. பக். 33)
காங்கேயன் (ஆட்பெயர்) + துறை என்ற நிலையில் காங்கேயன் துறை என்ற இடப்பெயர் அமைந்துள்ளது. இதன் வடக்கே பாக்குநீரிணைக் கடலும் தெற்கே மாவிட்ட புரமும் கிழக்கே மயிலிட்டியும் மேற்கே கீரிமலையும் எல்லை களாக அமைந்துள்ளன. இங்கு பட்டினசபை என்ற உள் ளூராட்சி மன்றம், ஆறு வட்டாரங்களைக் கொண்டதாக இயங்குகின்றது. இங்கு சுமார் ஏழாயிரம் மக்கள் வாழ் கின்றனர். வடகடல் மீன்பிடி வலயமாக இருப்பதால் இங்கு வாழ் மக்களிற் சிலர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட் டுள்ளனர். இலங்கையின் வடக்கேயுள்ள துறைகளில் கப்பல் கள் வந்து பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு வாய்ப் புடைய ஒரு துறையாகவும் இவ்விடம் விளங்குகின்றது.?
1) M. D. Raghavan, Tamil Culture in Ceylon, pp. 65 - 66 து) 1851இல் இத்துறைமுகம் யாழ். அரசாங்க அதிபராற் புதுப்
பிக்கப்பட்டது.
- 9 am.

Page 13
இதன் கடற்கரையில் அழகியதொரு சிறுவர் பூங்கா அமைக் கப்பட்டுள்ளது. உல்லாசப் பயணிகள் நலன் கருதிப்பல வச திகளுடைய உல்லாசப் பயணிகள் விடுதியும் (Harbour View Hotel) நகரப் பாதுகாவலர் நிலையமும் இங்கே அமைந்துள் ளன. இலங்கையில் மிகப்பெரிய சீமெந்துத் தொழிற்சாலே இங்கேயே இயங்குகின்றது, “காங்கேசன் சீமெந்து”, விலங்கா சீமெந்து” என்பன இங்கே உற்பத்தி செய்யப்படு கின்றன. இத் தொழிற்சாலைக்கு ஏற்ற மூலவளத்தைக் கொண்டதாக இப்பகுதியின் நிலவியற்கை அமைந்துள் ளது. இங்கு பேருந்து நிலையம், புகையிரத நிலையம், நடேஸ்வராக் கல்லூரி என்பனவும் அமைந்துள்ளன. ாங்கொல்ஜல, தையூர் முதலிய பல குறிச்சிப் பெயர்களும் இவ்வூரில் காணப்படுகின்றன.
மருதப்புரவீகவல்லி, தன் குதிரை முகம் நீங்கியதன் 605LDT@° மாவிட்டபுரத்தில் கோவில் கட்டுவதற்கு ઉ6.168T 母山 பொருட்களைத் தந்தையாகிய சோழ மன்னனிட மிருந்து வருவித்தாள். அப் பொருட்களைக் காங்கேயன் என்பவன் கப்பலில் கொண்டு வந்து கசாத்துறை என்ற இடத்தில் இறக்கினன். காங்கேயன் இறங்கிய துறையான தன்மையால் இத்துறை அன்று முதல் காங்கேயன் துறை பயிற்று.2 காங்கேயணுகிய முருகப்பெருமானது திரு வுருவச்சிலை இரண்டு வரப்பட்டு இங்கே இறக்கப்பட்டமை ல் இத்துறை (காங்கேயன் = முருகன்) காங்கேயன் துறை என்ற பெயரையும் பெறுவதாயிற்று என்றும் கருதப் படுகிறஅ.
டை நாளில் காங்கேயன் துறை கசாத்துறை என வழங்கிற்று. இங்கிருந்து புத்தக யாவுக்குச் சென்றமை யால் இத்துறை கயாத்துறையெனப் பெயர் பெற்றுப் பின்பு, அஆ கசாத்துறை என மருவிற்று என்றும் கூறட் படுகிறது, இங்கு கசாத்துறை ஆனந்தப் பிள்பேர் கோயிலுமுண்டு. இப் பிள்ளையாரை “யாத்திரைப் பிள்&ா யார்” என்றும் கூறுவர்.
amar 1) Lorrall-lu இடப்பெயர் விளக்கம் நார்க்க
2) க. வேலுப்பிள்ளை, 1918, LuÈ 8
- 10 -

தகூழி ைகைலாச மான்மியப்படி, சூரசங்காரம் முடிந்த பின்பு கந்தவேளும் அவர் பரிவாரங்களும் கதிர்காமம் தோக்கி வரும் வழியில் கப்பலேறி, துறையில் வந்திறங்கிய இடமே காங்கேயன் துறையாகும் எனவும் பெயர் விளக்கம் கொடுக்கப்படுகிறது (வி. குமாரசுவாமி 1935 பக் 26-29).
சம்பில்துறை (வலி. தெ. மே - 52, 10)
இதன் பழைய பெயர்கள் சம்புகோவளம், ஜம்புகோளம், சம்புக்கல், ஜம்புக்கோளப் பட்டினம், ஜம்புத்துறை என் 3ெல்லாம் வழங்கலாயின. கி. மு. மூன்ரும் நூற்றண்டில் அசோகன் புத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் தன் மகளாகிய புத்தபிக்குணி சங்கமித்தையை, வெள்ளரசின் கிளே ஒன்றுடனும் பரிவாரங்களுடனும் இலங்கைக்கு அனுப்பினுன். அவர்கள் இந்தச் சம்புத்துறையில் வந்து இறங்கித் தரை மார்க்கமாக அநுராதபுரம் சென்ருர்கள் என மகாவம்சம் (19 : 35; 22 : 23; 40 : 35) கூறுகிறது. அவர்களை வரவேற்று தேவநம்பியதீஸன் வெள்ளரசின் கி2ள ஒன்றைச் சம்புகோளத்தில் நாட்டிஞன் என்றும் அதனருகே திசைமாளுவை என்ற இடத்தில் திசமகா விகாரை என்ற புத்த பள்ளியைக் கட்டுவித்தான் என்றும், மகாவம்சம் (20 : 2) செப்புகின்றது. இவற்றின் அழிபாடு கள் சம்பில்துறை, திருவடிநிலைப் பகுதிகளில் இன்றுங் காணப்படுகின்றன.
சம்புத்துறை சிங்கள இலக்கியங்களில் "ஜம்புகோள” 'ானக் கூறப்படுகின்றது. இது சம்புகோவளம் என்ற பழைய பெயரின் மருஉ எனவும் கொள்ளலாம், இது மாதகல் துறைக்கு அண்மையிலுள்ளது. இந்த சம்புத் ஆறையிலிருந்தே தேவநம்பியதீசனுல் அசோக மன்ன டம் அனுப்பப்பட்ட அாஅவர்கள் மரக்கலம் ஏறிச் சென்றனர் என வரலாறு கூறுகிறது
பண்டைக் காலத்தில் சம்புகோளம், மாந்தை என்ற இ(ா, துறைமுகங்களும் மிக்க கீர்த்தி வாய்ந்திருந்தன. வங்காளத்திலுள்ள தாம்ரலிப்தி என்னும் குறைமுகத்திற்
- 11 -

Page 14
கும் சம்புகோளத்திற்கும் கடல் வணிகத் தொடர்பு இருந்துவந்தது. பெளத்தம் இங்கு வரமுன்பே வடபா லுள்ள யம்புகோளப் பட் டி ன ம், வடமேற்கிலுள்ள மா தோ ட் டம், கிழக்கேயுள்ள கோணேஸ்வரப்பகுதி ஆகியவை நாகரீக வளர்ச்சியில் முன்னின்ற துறைமுகங் கள் என்பதை விஜயன், பண்டுகாபயன் கதைகள் எடுத் தியம்புகின்றன (க, சிற்றம்பலம், 1984; 111).
தேவநம்பியதீசன் காலத்திற்குப் பின்பு (கி. மு. 3ஆம் நூற்றண்டு) சம்புகோளத் துறைமுகம் பெரிதும் பயன் படுத்தப்படவில்லை. அதனுல் அதன் செல்வாக்குக் குறை வதாயிற்று (பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை: 1962 : 90).
திருவடிநிலை என்ற இடப்பெயரோடு இராமர் கதையைத் தொடர்புபடுத்திக் கூறும் வாய்மொழிக் கதை ஒன்றும் வழக்கிலுள்ளது. சீதைக்கு அந்திமக் கிரியை செய்வதற்காக இராமர் இங்கு வந்தார் என்றும், அதன் பொருட்டுக் கட லிலே நீர் எடுக்க இராமர் ஓர் அடி எடுத்து வைத்தவுடனே கடலிலே மூழ்கி உயிர் நீத்தார் என்றும், இராமபிரானது திருவடி பதிந்த இடமே திருவடிநிலை எனப்பெயர் பெற்று வழங்குகின்றது என்றும் கூறப்டுகிறது. திருவடிநிலைக்கு அண்மையில் பொன்னுலை வரதராசப்பெருமாள் கோயில் அமைந்திருப்பதும் ஈண்டு நோக்கற்பாலது.
*வில்’ ஈற்றுப் பெயர்கள்
வில் என்ற சொல்லுக்குப் பல்வேறு பொருள்கள் கூறப்படுகின்றன. வில் = விற்றல் (குறள் - 220); அம்பு எய்தற்குரிய கருவியான வில் (தொல். பொருள்: 638); வில் லிணநாண் (இலக்கண விளக்கப் பாட்டியல் - 608, உரை ப. 514.); வானவில் (நெடுநல் 104); ஒளி (சீவக சிந்தா மணி, பக் 2959). வில்மாடம் = விற்போல் வளைந்த கட்டடப் பகுதி; வில்யாழ் (பெரும்பாணுற்றுப்படை: 182), வில்லரணம் (முல்லைப்பாட்டு 42) முதலான தொடர்களும் வழக்கிலுள்
1) தகவல்: பேராசிரியர் அ. சண்முகதாஸ்
- 12

ளன (த. லெ. 6 : 3708), இலங்கைத் தமிழரின் பேச் சு வழக்கில் வில் என்பது பெரிய குளத்தையும் நீர்த் தேக் கத்தையும் குறித்து வழங்கக் காணலாம். இந்த * வில் ” என்ற சொல்லே சிங்களத்தில் வில’ என்ற சொல்லாகக் குளத்தைக் குறிக்கிறது. வளைந்த இடத்தை, வளைந்து நீர் தேங்கி நிற்குமிடத்தைக் காரணப்பெயராக **வில்” என்பது தமிழில் குறித்து வழங்கிற்று. இவ்வாறிருக்க, யாழ்ப்பாண இடப்பெயர் பற்றிய தம் கட்டுரையில் எஸ். சபாரத்தின முதலியார் தமிழில் ஊர்ப்பெயர் விகுதியாக *வில்” என முடிவுறும்போது எவ்வித அர்த்தமும் இல்லை எ ன் று கூறினர். இது தமிழில் அவருக்குள்ள நுண்மாண் நுழை புலத்தைக் காட்டுகின்றதென்று கருதினுர் போலும், அவ ருக்கு முன்பு யாழ்ப்பாண இடப்பெயர் பற்றி எழுதிய ஹோர்ஸ்பரோ என்பவரும் அவரைப்போன்றே தமிழில் இடப்பெயர் இறுதியாகவரும் “வில்?’ என்பதற்கு எவ்வித பொருளும் இல்லை எனத் துணிந்து எழுதினுர்.2 அப்போ திருந்த தமிழறிஞர்கள் இவரது தமிழறியாத் தன்மையினைச் சுட்டிக்காட்டாமை புதுமையே. அக்கட்டுரையாளர் இத் தாவில், இணுவில். உடுவில், கெருடாவில், கொக்குவில், கோண்டாவில், நுணுவில், மட்டுவில், மந்துவில், மல்வில் மிருசுவில், முகவில் ஆகிய பன்னிரு ஊர்ப்பெயர்களைத் தந்து இவை யாவும் சிங்களப் பெயர்களின் சிதைவாகத் தமிழில் வழங்கின என்றர்?. ஆயினும் அப்போதிருந்த தமிழறிஞர் இதனை மறுக்கத் துணியாதபோது ஜே. பி. லூயிஸ் என்ற ஆங்கில அறிஞர் அக்கருத்தை மறுத்து, இதனைத் நுனித்து ஆராயவேண்டும் என்றும், இதுபோன்ற பெயர்கள் மன்னர் மாவட்டத்தில் "வில்”, “வில்லு’ என்ற ஈற்றையுடையனவாக உள்ளன என்றும் கூறினுர்.4 ஆணுல் அதே யாண்டில் இடப் பெயர்பற்றி எழுதிய சுவாமி ஞானப்பிரகாசர் 1916 இல்
i) The suffix 'Vil' has no meaning in Tamil as part of a Village name, while is Sinhala it has an appropriate meaning” ” - Sabaratna Mudaliar 1917 p : 170.
d) B. Horsburgh 1616 u. 55. 3) மேலது பார்க்க.
6) J. P. Lewis 1917. p. 171.

Page 15
ஹோர்ஸ்பரோ குறிப்பிட்ட 12 “வில்" ஈ ற் றுப் பெயர் களுடன் மேலும் பின் வரும் 12 பெயர்களைக் குறிப்பிட்டார்" கண்டுவில், காவில், கூவில், கொணுவில், சுளுவில், தளு வில், துலாவில், நந்தாவில், நீவில், பண்டாவில், யாவில், வேவில் என்பன அவை. ஞானப்பிரகாசரும் ஹோர்ஸ் பரோ கருத்தை அவ்வாறே ஏற்று இப்பெயர்கள் பசவும் சிங்களப் பெயரின் சிதைவென் ருர், இதனைச் சாதகமாகக் கொண்ட ஹோர்ஸ்பரோ 1917 இல் பின்வருமாறு கூறியதில் வியப்பில்லை:
"Fr. Gnanaprakasar accepts my article as placing beyond doubt the fact of Sinhalese occupation of the Jaffna Penninsula antecedent to the Tamil period'
இக்கூற்றிலிருந்து சுவாமி ஞ ணப்பிரகாசர் உட்பட சகல அறிஞர்களும் இடப்பெயர் ஆராய்ச்சியை வேறு நோக்கத்துடன் நடாத்தியிருக்கின்றனர் என்பது தெளி வாகின்றது.
மேலே எடுத்துக் காட்டியவற்ருல் 'வில்” என்பது தமிழ்ச்சொல் என்பதும், அது வில் போன்றமைந்த குளங்களைச் சுட்டவும் பயன்பட்டது என்பது மீ, குளங் களைச் சுட்டிய “வில்" ஈற்றுப் பெயர்கள் குளங்களுள்ள இடங்களையும் இருமடி ஆகுபெயராய்க் குறித்து நின்றதும் புலனுகிறன்றன. இக்கருத்துக்களை மேலும் சான்றுபடுத்து வதாகக் கலாநிதி இரகுபதி அவர்கள் கூற்று (1983) அமைவதால், தம் மதம் நிறுவுதல் என்னும் உத்திக் கமைய அவர் கருத்தை ஈண்டுத் தருதல் பொருத்தமானது:
('Another feature of the surface water of the Penninsula is the 'vil" type of ponds. Some of these ponds are formed naturally by the formation of shallow pits where certain areas of limestone bed dissolve in the water ... ... ... The ancients had a system of raising a half-circle bund (that rendered the term “vil”, for the ponds.) and duri og drought
1) சுவாமி ஞானப்பிரகாசர், 1917 ப. 168. 2) B. Hersburgh, 1917, p. 173.
or 4 -

times at least muddy water could be seen preserved by this half circle bund. This could be observed in South lndia and in Sri Lanka especially in the arid plains. In the penninsula these innumberable 'vil" ponds later becam nucleii for the settlements, and the name of the vi" became thc name of the village''.1
நீரிமலைக்கு அண்மையிலுள்ள சிறு கிராமம் கூவில், கூந்தல் பஜன நிறைந்த விடம் என்ற அடிப்படையில் கிப் பெயர் வழங்கிற்ருே எனவும் ஆராயலாம். இங்கு பழைய அண்ணன்மார், புதிய அண்ணன்மார் கோயில்களுமுள்ளன. கொக்குவில், கோண்டாவில், பருத்தித்துறை ஆகிய இடங்களிலும் கூவில் என்ற பெயரில் குறிச்சிகளுள்ளன,
கெல்லாவில் (வலி. தெ. மே, 53, 2) :
இது மாதகல் பகுதியிலுள்ள ஓரிடம். கல்லாவில் > கெல் லாவில் எனத் திரிந்துள்ளது. அகரம் எகரமாகத் திரிதல் பேச்சு வழக்கில் பொதுவானதே. கல்லுதல் = தோண்டு தல். தோண்டப்படாத குளம் அல்லது குளத்தின் அணைக் L அதன் நீர் தோண்டாத ஆளைத் து உடைக்காதகுளம் என்ற பொருளில் கல்லாவில் என்ற பெயர் தோற் றம் பெற்றிருக்கலாம்.
மக்குவில் (வலி, தெ. ഥ, 53, 2)
இது பெரியவிளான் கிராம சேவகர் பிரிவிலுள்ள முரிடம். இங்கு குளமில்லை. ஆனல் இப்பிரதேசத்தின் ஒரு மூஜலயில் இவ்விடம் இருப்பதாலும் (மூலை=வில்) இது மக்கிக் ாரிகளுள்ள பகுதியாதலாஅலும் (மக்கு + வில்) > மக்குவில் rற பெயர் ஏற்படுவதாயிற்று. இவ்வூரில் யூதா தேயு ஆல ந(St. Judes Church ) ஒன்றுள்ளது. இங்கு புலி வளைந் நான் என்ற குறிச்சிப் பெயரும் வழக்கிலுள்ளது.
1) P. Ragupathy, 1983, p. 438.
ܚ 15 ܤܚ

Page 16
இயல் 2
நிலவியல்பு குறித்த பெயர்கள்
நிலவியற் கூறுகளும் இடப்பெயர்களும்
நிலவியல்பு - நிலத்தோற்றம் - நில அமைப்பு என்ற அடிப்படைகளிலும் இடப் பெயர்கள் தோற்றம் பெற்றுள் ளன. இவ்வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 19 வகை யான நிலக் கூற்றுப் பெயர்கள் காணப்படுகின்றன அவற்றை முறையே பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:
கட்டு கிரி செம்பாடு பள்ளம் Cup 2507 கல் குடா தரை பிட்டி மூலே கலட்டி குண்டு திடல் மணல் வளே
5 ITGB குழி தீவு D&h)
நிலப்பயன்பாடு குறித்த பெயர்கள் தனியாக ஆர யப்படுவதால் அத்தகு பெயர்கள் பற்றி ந்ேதாம் இயலிலே தனித்து ஆராயப்பட்டுள்மை காண்க.
கட்டுவன் (வலி, வ. 69. 1)
வலிகாமம் வடக்கு, மயிலிட்டி தெற்குக் கிராமசேவக! பிரிவிலுள்ள கட்டுவன் என்ற கிராமத்தின் பெயர் கட்டு வன், குட்டுவன், கட்டுவனூர் என வழங்குகின்றது. பண் டைய தமிழகத்தைச் சேர்ந்த குட்டநாட்டு மக்கள் இங்கு
- 16

வந்து குடியேறியபடி யால் “குட்டுவனூர்” என்ற பெயர் வந்ததென்பர். குட்டுவனூர் > “குட்டுவன்’ ஆயிற்று என்பது இவ்வூர் பற்றி த. சண்முகசுந்தரம் வருமாறு கூறுகின் (if : -
“இங்கு மலையில்லை. வற்ருத பேராறு எதுவும் இல்லை மாரியில் மட்டும் நீர் தேங்கி ஓடும். இந்நீரை யாழ்ப்பா ணத்தில் வாழ்ந்த முந்தையோர் தேக்கி வைத்தனர். தமது நிலப்பரப்புக்கு ஏற்பக் கல்லணை, மண்ணணை என்பவற்றை அமைத்தனர். மேட்டுப் பூமியாகிய கட்டு வன் ஊரிலே தோன்றுவது வழுக்கை ஆறு. இங்கு அணை ஒன்றைக் கட்டினர். ஆகவே “அணைகட்டு வன் ஊர்” என்ற பெயர் எழுந்தது.
சேரன் செங்குட்டுவன் > குட்டுவன் > குட்டுவனூர் என்பதிலிருந்தே கட்டுவன் தோன்றிற்றென்றும் கூறுவர் இதனைக் குமாரசுவாமி (1917 : 68) சிங்களப் பெயரெனக் கொண்டு கட்டு = முள் ; வன் = காடு > முட்காடு என்ற பொருளில் தோன்றியதே கட்டுவன் என்ற பெயரெனக் கூறுவர். சேரர் தொடர்பாற் குட்டுவனூரிலிருந்து வந்தே றிய குடிகளிட்ட தம்மூர்ப் பழம் பெயரே கால கதியிற் குட்டு வனூர் > கட்டுவன் என்ருயிற்று எனக் கோடலே பொருத் தம். குறுந்தொகையிற் * கு ட் டுவ ன் மா ந் தை” என்ற தொடர் வருகின்றது. குட்டுவன் என்னுஞ் சொல் சேரனின் பெயர்களில் ஒன்று.2
“கலட்டி? ஈற்றுப் பெயர்கள்
கலடு > கலட்டி - கலட்டித்தரை. கற்கள் நிறைந்த த ரப்பகுதியுடைய பகுதியை “கலட்டி” என்ப. யாழ். மாவட்டத்திற் கலட்டி என்ற பெயருடைய ஐந்து கிராமங் கரும் அனேக குறிச்சிப் பெயர்களும் காணப்படுகின்றன, மட்டக்களப்பு வழக்கில் வயற் காணிகளில் வளம் குறைந்த மயல் நிலம் கலட்டி எனப்படும்.
1) த. சண்முகசுந்தரம் 1984, ப. 4 2) பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, 1962 ப. 92.
. س= l7 سسسس אי

Page 17
கொல்லன்கலட்டி (வலி, வ. 642);
கொல் > கொல்லன். (*மரங் கொல் தச்சர்? - சிலம்பு
5929), மரங்களே வெட்டி வீழ்த்துவோரையும் கொல் ல ர் என்ற பதம் சுட்டிற்று.
கொல்லன்? கலட்டி என்பதில் வரும் கொல்லன் என்
Lug g)5ò di Ges T6ò a) 6ór (Black Smith) 6T6Tp sfi 2souffléò தொழில் காரணமாக இந்த இடப்பெயர் தோற்றம் பெற் றது. இக்கிராமம் தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள் ளது. நிற்க, கொல்லை + கலட்டி, இங்கு பல்வகைப் பயிர்த் தோட்டங்கள் காணப்படுவதால் இதனைக் கருப்பொருளடி யாகப் பிறந்த இடப்பெயரெனக் கொள்வதே பொருத்தம்
s
'மலை? ஈற்றுப்பெயர்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் மலையே இல்லை. இருப்
பினும் மலை ஈற்றுப்பெயர்களாகக் கம்பர் மலை, கீரிமலை, சுதுமலை என்ற மூன்று இடங்களுள்ளன. எனவே இப் பெயர்கள் கற்பனை அடிப்படையிலோ அல்லது வேறு சொற்களின் திரிபாகவோ தோன்றியிருக்க வேண்டும்"
கீரிமலை (வலி, வ. 64. அ. 4:
காங்கேயன் துறையிலிருந்து மேற்கே இரண்டு மைல்
தொலைவிற் கடற்கைேரயோரமாகப் புனித நீரூற்றுத் தல * மாகக் கீரிமலை அமைந்துள்ளது. இங்கு முன்னர் காடு இருந்ததென்றும் இங்கு கீரிப்பிள்ளைகள் அதிகம் காணப் பட்டன என்றும் அதனுல் இவ்விடத்திற்குக் கீரிமலை என்ற பெயரேற்பட்ட தென்றும் கூறப்படுகிறது.
1)
&)
'Gairgi' was employed in the sense of felling or cutting āown trees. If we mediate for half an hour on all these factors we shall be obliged to admit that killing" or “felling trees was in the age of primitive man the first stage of “tilling' or agriculture'. Hence we pass, painlessly for us, not for the trees concerned from kol is kill to "koi" = till' - H. S. Daaviidu, 1972 p. 35
கொல்லர் - அரண்மனைக் காவலர், மரத்தச்சர், தாவீது, 1970:36
د- 18 س

கீரிமலை நீரூற்றை ஈழத்துக் குற்றலம் என்பர். ஆணுல் இ. மலையருவியன்று. நிலத்து நீரூற்ரும். ஆடி அமாவா சைத் தினத்தன்று பல்லாயிரக் கணக்கானேர் இதில் தீர்த்தமாட வந்து சேர்வது வழக்கம். இந்நீரூற்றுப் பற்றிய ஒரு பாடல் வருமாறு:
மண்ணின் சுகமெல்லாம் வாயுமே வானவர் சேர். விண்ணின் சுகமும் விளையுமால் - தண்ணுாறல் சிற்றுாற்றுங் கீழே சிறந்தோட மேற்படுக்கப் பெற்றேர்க்கென் றென்றென்றும் பேசு, 1
கி. மு. 543 இல் இலங்கை அரசைத் தாபித்த விஜயன் என்பவன், தனது இராச்சிய பாதுகாவலுக்காய் இலங்கை யின் பழைய ஆலயங்களைப் புதுப்பித்தான். அவ்வகை திருக்கோணேசர் கோயில், திருக்கேதீஸ்வரன் கோயில், கீரிமலைச்சாரலின் பழுதுபட்டுக்கிடந்த திருத்தம் பலேசுவரம், திருத்தம்பலேசுவரி கோயில், கதிரை ஆண்டவர் கோயில் முதலியவற்றைத் திருத்தி இந்தியப் பூசகர்களை வரவழைத்து ஆங்குக் குடியமர்த்தினுன் என்றும் கூறப்படு கின்றது? இக்கிராமத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டுத் திகழ்ந்தமையால் இதற்குக் “கோயிற் கடவை” என்ற பெய ரும் ஏற்படுவதாயிற்று,3
நாகுலம் என்னும் இதன் பழைய நாமம் நகுலம் என மருவிப் பின்னர் தமிழிற் கீரிமலை என்ருயிற்று என்கிருர் இராசநாயகம் (1926 : 3). ஆனல், குமாரசாமி (1918:131) கிரி என்னும் வடசொல்லும் அதன் பொருள்தரும் மலை என் னும் தமிழ்ச் சொல்லும் சேர்ந்து கீரிமலை ஆயிற்று என் ST
1. க. சு. நவநீதகிருஷ்ண பாரதியார், பூரீ லங்கா, பெப்ருவரி
1955 - t_1 - 18
2. க. வேலுப்பிள்ளை: 1918 ப. 4 J. Quo Gavgi u. 5

Page 18
3
இயல்
நிலப் பயன்பாட்டுநிலைப் பெயர்கள்
பண்டைக்கால மக்கள் நிலையாக ஓரிடத்திற் குடி யிருக்க முற்பட்டபோது காடழித்து, மனை அமைத்துத் தம் சூழலில் வளம் பெருக்கி வாழத் தொடங்கினர். வளமான சுற்ருடல்களிலேயே வாழவும் தலைப்பட்டனர். உணவு உற் பத்தியின் பயணுகக் களனிகளும் தோட்டங்களும் தோன்ற லாயின. அவற்றிற்குப் புதுப்புதுப் பெயர்களும் சூட்டப் பட்டன. நிலப் பயன்பாட்டு நோக்கில் வயல்களும் தோட்ட நிலங்களும் முதன்மைபெற்றன. அவற்றின் பயணுக மொழி யிற் புதுப்புதுச் சொற்களும் பெருகலாயின,
ஈழத்திற் பொதுவாக கமம், வயல், வட்டை, வெளி என்ற பெயர்ச் சொற்கள் வயல் நிலத்தைச் சுட்டுவனவாக அமைந்துள்ளன. இவற்றில் கமம் என்பது காமம் என நீண்டொலித்து வழங்கக் காணலாம். கண்டி எ ன் ப து வயற் பெயரைச் சுட்டும் பெயர்க்கூருகவே வழங்கப்படு கின்றது. கொல்லை, தோட்டம், தோப்பு என்பன பயிர்த் தோட்டங்களுடன் தொடர்புடைய பெயர்ச் சொற்களாகும். இவற்றைவிட வத்தை என்ற சொல்லும் தோட்டம், குடி யிருப்பிடம் என்ற பொருளிலும் வழங்கப்பெற்றுள்ளவை நூலில் விளக்கப்பட்டுள்ளது. வெட்டி என்ற சொல்லும் நிலப் பயன்பாட்டடிப்படையில் இ . ப் பெயர் க் கூ ரு க அமைந்துள்ளது.
س- 20 --

இப் பெயர்க்கூறுகள் அனைத்தையும் தமிழகத்து இடப் பெயர்க் கூறுகளுடன் ஒப்பிட்டு ஆராயும்போது ஈழத் திற்குரிய தனித்துவமான பெயர்க் கூறுகள் எவை என் பதை அறிய வாய்ப்புண்டு.
*காமம்’ ஈற்றுப் பெயர்கள்:
காமம் = நகரம் அல்லது கிராமம் என்பர் வின்ஸ்லோ • வடமொழி “க்ராம” என்ற சொல்லிலிருந்தே காமம் என்ற சொல் தோன்றியுள்ளது. சிங்கள மொழியில் “கம” “கமுவ என்ற ஈறு பெறும் இடப்பெயர்களுள. இப்பெயர்களும் வட மொழிக் "க்ராம” என்பதிலிருந்தே ஆக்கம் பெற்றுள்ளன. எனவே, தமிழில் வரும் காமம், சிங்களத்தில் வரும் கம கமுவ ஆகிய மூன்று சொற்களும் ஒரே வட மொ ழி ச் சொல்லிலிருந்து தோற்றம் பெற்றவை என்பது தெளிவு.
இலங்கையின் பல பாகங்களிலும் “காமம்’ ஈ ற் று இடப்பெயர்கள் காணப்படுகின்றன. யாழ். மாவட்டத்தில் கொடிகாமம், தம்பகாமம், வலிகாமம், வீமன்காமம் என் பனவும் முல்லைத்தீவிற் பனங்காமம், கிழக்கு மாகாணத் தில் இறக்காமம், இலங்கையின் தென்கோடியில் கதிர்கா மம் முதலிய பல இடங்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.
ஹோர்ஸ்பரோ என்பவர் (Horsburgh 1916:54) “காமம்’ *கம', 'கமுவ” என்ற சொற்கள் ஒரே மூலத்திலிருந்து தோற்றம்பெற்ற சொற்கள் என்பதை ஏற்றுக்கொண்ட பின்னர் அதே கட்டுரையின் (பக். 55) மறு பக்கத்தில் “காமம்’ என்பது சிங்களக் கம’ என்பதன் தமிழ் வடிவம் என்கிறர். ஆசிரியரே முன்பின் முரணுகக் கூறு வ தி ல் இருந்து அவரே தம்மோடுதாம் முரண்படுதலைக் காண
லாம்.()
1) Now Gramam is from the Sanskrit, grama from which the Sinhalese word gama is derived. So that both Kamam and Gama came from antrerir common stock ...... I am however, of openion that where Kamam is found in place name of the Jaffna Penninsula, it is a Tamized form, of Gama, because the Tamil word Kamam is not used by - the Tamils of the penninsula' Horsburgh 1916 : 54-55

Page 19
சுவாமி ஞானப்பிரகாசர் (1917 : 167 - 169), குமார சுவாமி (1917 - 26) முதலியோர் கொடிகாமம், தம்பலகாமம், வலிகாமம், வீமன்காமம் என்பனவற்றுடன் குறி சி சி ப் பெயர்களாம் இளகாமம், தேகாமம் என்பனவும் சிங்களப் பெயர்களே என்றனர். ஆயினும் இவர்களது ஒருபக்க வாதங்கள் ஆழ்ந்த ஆய்வுக் குரியனவாகவே காணப்படு கின்றன.
sı:55sırıpır :
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் 111 சதுர மைல் பரப்புடைய பரந்த பகுதி வலிகாமம் 5ானப் பெயர்பெறும். இதன் வடக்கு, மேற்குப் பகுதிகளில் பாக்குத்தொடு கடலும், தெற்கே யாழ்ப்பாணக் கடனி:ே ரியும் கிழக்கே தொண்டைமாஞற்றுக் கடனீரேரியும் எல்லை களாக அமைந்துள்ளன. கடலேரிகளாலும் பாக்கு நீர2ண யாலும் சூழப்பட்ட வலிகாமம் பகுதி நிர்வாக அடிப்படை யில் வலிகாமம் வடக்கு, வலி, கிழக்கு, வலி, தெற்கு, வலி மேற்கு, யாழ்ப்பாணம் என 8ந்து உப அரசாங்க அதிபர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் குடி யடர்த்தியான பகுதிகளில் இதுவும் ஒன்ருகக் கணிக்கப் பட்டுள்ளது.
வல்>வலிமை*கமம்>வலிகாமம் எனப் புணர்ந்துள்ளது, இப்பிரதேசம் முழுவதும் செம்மண் கொண்ட செம்பாட்டு நிலப் பகுதியாகவும் செம்மண்ணும் செங்களியும் கொண்ட ஒரு திட்டிப் பிரதேசமாகவும் அமைந்துள்ளது. எனவே பெரும்பாடுபட்டு உழைத்துக் கமம் செய்யவேண்டிய நிலை யில் அமைந்த வலியகமம் > வலிகாமம் ஆயிற்று. “வலி காமம் என்பது ஐயத்திற்கிடமின்றி அது சிங்களப் பெய r - g i 5 s eligarna (Sandy Village) 6r6ät li 5 . f.6ät gff அதனை வழி, வலி, வளி எனத் தமிழில் பொருள் காணல் பொருளற்றது” என்றும் ஹோர்ஸ்பரோ (Horsburgh 1916 : பி 55) கூறிஞர். இக்கருத்தே குமாரசுவாமியிடமும் (1918: 26) காணப்படுகிறது. வலிகாமம் என்பதற்கு அதன் நில அமைப்பே முதற் காரணியாகிறது. வலி = மணல் என்ற
- 22 -

சிங்களப் பொருள் கொளின் இப்பகுதியில் பெரும்பாலும் செம்பாட்டுத் தரையே காணப்படுகிறது. மணல் தரையைச் செம்பாட்டுத் தரையாக்க முடியாது; செம்பாட்டுத் தரை மணல் தரையாகவும் மாறது. அன்றியும் மணல் தரையின் அடியில் சுண்ணக்கல் முருகைக் கற்களே அமையும்.
ஆணுல் செம்மண் தரையின் சுண்ணக்கல் (வெள்ளைக் கல்) பாறையே அமைந்திருக்கும். வலிகாமம் பெரும்பாகம் சுண்ணக்கற் பாறைகளையே கொண்டுள்ளது. எனவே வலி காமம் என்பது வலிகமத்தின் திரிபாகிய தமிழ்ப் பெயரே என்பது தேற்றம். வல் > வலி = சேனை, வெற்றி என்ற பொருள்களும் கூறப்படுகிறது (தாவீது : 1970 - 85): மேலும் தமிழர் தம் தாயகமாம் தமிழகத்திலும் வலிதா யம், வலிவலம், வல்லம், வல்லன்சேரி, வல்லப்பாக்கம் வலம்புரம் முதலான இடப்பெயர்கள் வல் > வலிமை என்ற அடிச்சொல்லிலிருந்து தோற்றம் பெற்றிருத்தல் எம் கருத்தை வலிதாக்குகின்றது.
யாழ்ப்பாணத்திற்கு மணற்றி, மணற்றிடர் என்ற தூய தமிழ்ப் பெயர்கள் முன்னர் வழங்கியமை யா ழி ப் பாண வைபவமாலை, வையா பாடல் முதலிய நூல்களால் அறியப் படுகின்றது. மதுரை மன்னன் வரகுண பாண்டியன் இந்த ‘மணற்றியை வென்ற செய்தி கூறுவதாய் அமைந்த "மன் னுேரழிய மணற்றி வென்ருன்’ என்ற பாடல் ஒன்று இறையனர் அகப்பொருளில் மேற்கோளாக எடுத்துக் காட் டப்பட்டுள்ளது. எனவே மணற்றி - மணற்றிடர் - மணலூர் வலிகாமம் என்பன ஒரேயிடக் சுட்டும் தமிழ்ப் பெயர்கள் என்பது புலணுகின்றது.
வீமன்காமம் : y
வீமன் + கமம் = வீமன்காமம் ஆயிற்று. இப்பெயர் விமன் என்பவருக்குரிய கமநிலப்பகுதியைச் சுட்டி, பின்பு அவ்வூர் முழுவதையும் இப்பெயர் குறிப்பதாற்று. பாரதக் கதையில் வரும் வீமனையும் இங்கு தொட ர் பு படுத்திக் கூறும் வழக்கமுண்டு. இது சிங்களப் பெயர் எனக் கூறும்

Page 20
குமாரசுவாமி வருமாறு விளக்கம் கொடுத்துள்ளார் (1918 நம்பொத்த என்னும் நூலிலே لC[560)L-u له56Tr6ق لf; féھی»، (27--26 நுவலப்பட்ட பீவன் கழுவிகாரய’ என்பது இவ் வீமன் காமத்திலேயுள்ள தென்பதற்கு அக்குறிச்சியிலேயுள்ள “山岳西贞 கோயில்’ எனப் பெயரிய காணியும் அக்காணியின் கண்ணே காணப்படும் அழிந்துபோன ஒரு கட்டடத்தின் அத்திபாரக் குறிகளுமே சிறந்த அத்தாட்சியாம். “மீவன் a Cup' ph LDS; if நாவிலே வீமன்காமமெனச் சிதைவுற்றது வினுேதமன்று”. இவர்தம் கூற்றும் வினுேதமாகவே இருக் கிறது.
ஈழத்திலே தமிழர் வாழும் பாரம்பரியப் பிரதேசங் களில் பாரதம் இதிகாசந் தழுவிய நாட்டுக் கூத்துக்கள் பெரிதும் இடம்பெற்றுள்ளன. அக்கூத்துக்களிற் சிறந் தோருக்குக் கதாபாத்திரப் பெயர்களும் வழங்கலாயின. உ+ம்: * தருமர் மார்க்கண்டு , ! அருச்சுணன்குமாரன் ” விமன் அருணசலம்’, ‘ நீலன்மணியன் * , * சீதை வேலன்' என்ற தொடக்கத்தக்கனவாகிய பழைய பெயர்கள் இன்றும் கிராமங்களிலே வழக்கிலுள்ளன. எனவே “வீமன்’ என்ற கூத்துக் கலைஞன் ஒருவன் வாழ்ந்த இடமே வீமன்காமம் 'கூறுவதில் எந்தத் தப்பும் இல்ல; எந்த விஞே த முமில்லை. இதனுேடு G5It lifló0 lu வகையில் டாக்டர் கரு. நாகராசன் கூறும் கருத்தும் (1988 : 194) ஈண்டு நோக்கற்பாலகு:
*கூத்துக் கலைகளில் வல்ல கூத்தர்களுக்குப் பரிசாக சில ஊர்களை மன்னர்கள் வழங்கியிருத்தல் 366រើT டும். அப்படிப்பட்ட ஊர்கள் *கூத்தவாக்கம்’ என்று
குறிப்பிடப்படுகின்றன”.
பஞ்சபாண்டவர்களின் பாரதப் போரை நினைவுபட 3 தும் வகையில் இன்றும் இலங்கையில் பல இடப்பெயர் & ஸ் வழக்கிலுள்ளன. உதாரணமாக பாண்டிருப்பு, மணிபல்ல வம், வீமன்காமம், நகுலேஸ்வரம் முதலியவற்றைக் குறிட் பிடலாம்.
- 24 س
 
 
 
 
 

குமாரசுவாமிக்கு 1 முன்பே ஹோர்ஸ்பரோ என்ப suj (Hersburgh: 1916: L. 55) 65 udsårsar Loub S6oflé. Få FSML பெயர் என்றர். அவரே வவுனியா மாவட்டத்திலுள்ள மாமடு என்ற கிராமத்தின் அயற் கிராமமாகிய வீமன் கல்லு" என்ற இடத்தைக் குறிப்பிட்டு, இதுவும் சிங்களப் பெய ரென் ருர். இவர்கள் நோக்கம் தமிழ்ப் பெயர்களுக்குச் சிங்கள மூலம் கற்பிப்பதாகவே காணப்படுகிறது.
மேலும் சில குறிச்சிப் பெயர்களாக இங்கு அம்பட்டிய வத்தை, நப்பிய கடவை, கிறியவத்தை, சின்னம்பக்தை, முள்ளாத்தனை, பரியாரி கடவை என்பன காணப்படுகின் றன. Rafael என்ற கிறிஸ்தவர் வாழ்ந்த இடத்தின் காரண மாக Rafael > றப்பி என வழக்குப் பெறுவதாயிற்றுப் போலும். இங்கு கேணியடி வைரவர் கோயிலும் அமைந் துள்ளது. முள்ளாத்தனையில் மாரியம்மன் கோயிலுள் ளது. பண்டைநாள் முதலாக வைத்திய பரம்பரையினர் வாழ்ந்த இடம் பரியாரி கடவை என்ற காரணப் பெயர்
பெறுவதாயிற்று.
வீமன் என்ற தலைமகன் ஒருவன் விரும்பி வந்து தங்கி வாழ்ந்த இடம் என்ற அடிப்படையில் (வீமன் + காமம்) வீமன்காமம் என்ற பெயர் தோன்றியிருக்கலாம் என்றுஞ் சிலர் கருதுவர். 2 இதன் அயலேயுள்ள மயிலப் பையில் 8 கூத்திவளவு ” என்ற குறிச்சிப் பெயர் வழக்கில் இருப்பதும், பண்டை நாளில் இங்கு பாரதக் கதையோடு தொடர்புடைய கூத்துக்கள் ஆடப்பட்டமையும் * வீமன்
i) “ This name is spelt Minivangamu in a different editions of the Nam Potta, but judging from the name 69 Logăr asitidth which is clearly a Sinhalese term in Tamil grab I think ". Minivangamu is the more correct of the Sinhalese name, Mivan easily turns into Viman according to a law of phonetic change known to the Tamil grammarians as metathesis (Gusta): Sass) > 6.5iS). It is also noteworthy that the form afudairasm Loth (S. W. Coomaraswamy 1918:160).
2) தகவல்: திரு. தெல்லியூர் செ. நடராசா
4. 25 سے --

Page 21
நாடகம் * அல்லது ? வீமன்’ என்ற கதாபாத்திரம் முதன்மை பெற்ற நிலையும் வீமன்காமம் என்ற பெயர் ஏற்படக் காரணமாக இருந்திருக்கலாம்.
வீமன்காமத்தில் மாந்தப்பாய், தலப்பாய், மல மண்டலப்பாய் ஆகிய குறிச்சிப் பெயர்களுமுள.
கொல்லை / சோலை - முதன்மைப் பெயர்கள்
ஒல்லை > கொல்லை. ஒல்லையூர் நாடு பற்றிச் சங்க இலக்கியங்களிற் காணலாம். ஒல்லை > ஓலை எனவும் திரிந் அள்ளது. அளவெட்டிக் கிராமத்திலுள்ள :ளவோலை, கள்ளி யோலே முதலான குறிச்சிப் பெயர்கள் இவ்வகையின வாகும். சோலை > ஓலை > தோலை எனவும் மாறியுள்ளது. அம்மன் சோலை > என்பது அம்மன் தோலை எனப் பெயர் பெற்று வழங்குகின்றது.
அழகொல்லை (வலி, வ. 62 1)
இது அளவெட்டிக் கிராம சேவகர் பிரிவிலிடம்பெறும் ஓரிடம், அழகு + கொல்லை > அழகொல்லையாயிற்று. அழ கிய தோட்டத்தையுடைய இடம் என்பது இதன் பொரு ளாம்.
கொல்லே2 - முல்லை நிலம் புன்செய் நிலம், தரிசு, புழைக்கடை, தோட்டம் (த. லெ, 2 பக். 1157), கொல்லே என்பது இலங்கை வழக்கில் சோலை என்பதையும் சுட்டும். கொல்லைப்புறம் எனும்போது, வீட்டின் பின்பக்கச் சோலை என்ற பொருளில் வருவதாகும், தமிழகத்திலும் ఈ&Tఈ&ు 1) 9 ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன்
மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே "
fւյՈ0ւն 242) 2) கொல்லை - சோ ை(** மீனேறும் கொடிமுல்லை விடுகொல்லைக் கடிமுல்லை . " மதுரைக் கலம்பகம் - 5). ** கொல்லை
இரும்புனம் * (அகம்: 89:17) = கொல்லையினையுடைய பெரிய காடுகள் என்ற வழக்குகளும் காண்க.
- 26 -

யிற்றுப் பெயர்கள் காணப்படுகின்றன. ஞானப்பிரகாசர் இது சிங்களச் சொல்லென்பார் (1417). அழகொல்லை என்ற யாழ் மாவட்ட இடப் பெயருடன் சுவாமி ஞானப்பிர காசர் களவொல்லை, விம்ருக்கொல்லை என்ற இரு ஊர்ப் பெயர்களையும் ஒப்பிட்டுக் காட்டுவர்.
செட்டிச்சோலை: (வலி, வ. 62.3) y
அழகொல்லைக்கு அயலிலே அமைந்துள்ள இன்னுேரி டம் செட்டிச்சோலை. இவ்விரு இடங்களும் அருகருகே அமைந்து கந்தரோடைக்கு அண்மையிற் காணப்படுவ தாற் பண்டைநாளிற் கந்தரோடை கிராசதானி நிலவிய போது இப்பகுதி அரச பூங்காப் பகுதியாக இருந்திருக் குமோ என்ற ஐயந் தோன்றுகிறது.
*வத்தை ஈற்றுப் பெயர்கள்
ஈழத்தின் பலபாகங்களிலும் “வத்தை ஈற்றுப்பெயர்கள் மிகவும் பரந்து காணப்படுகின்றன. சிங்களத்தில் இதை *வத்த’ என எழுதுவர். சொல்லின் புறவடிவத்தையும் அதன் ஒலியமைப்பையும் கருத்திற் கொண்டு வத்தை ’ என்ற சொல் சிங்கள மூலச்சொல் எனப் பலர் வாதிடுவர். ஈழத் தில் இற்றைவரை இடப்பெயர் ஆய்வில் ஈடுபட்ட அனை வரும் 6 வத்தை ஈற்று இடப்பெயர் அனைத்தும் சிங்களப் பெயர் என்றே எழுதினர். குறிப்பாக சுவாமி ஞானப்பிர காசர் (1919) குமாரசுவாமி (1917; 1918) ஹோர்ஸ்பரோ (1916) முதலியோரை இவ்வரிசையிற் குறிப்பிடலாம். சுவாமி ஞானப்பிரகாசர் (1919 : 75) இதனைச் சிங்களச் இல் எனக் கூறியது மட்டுமன்றி Vattai என்பது போர்த் துக்கீசச் சொல் எனவும் அதன் பொருள் bale, boat GTair றும் கூறினர்
இவர்கள் காலத்தில் பண்டைத் தமிழர் தமி நாகரிக வரலாறும், அவர்தம் மோழி வளமும், இன்றுள்ள அள வுக்கு வெளிப்படவில்லை, * வத்தை ’ என்பது தூய
صے 27 ست

Page 22
தமிழ்ப் பெயர் என்பதில் 8யமே இல்லை. இதனைச் சொற் பிறப்பியல், சொற்பொருள், மக்கட் பண்பாடு, வாழ்வியல் அடிப்படையிலும் நிறுவலாம். வத்தை என்பதற்குத் தமி ழில் நீரிற் செல்லும் கட்டுமரம், மக்கட் குடியிருப்பிடம் என்ற இரு பொருள்கள் உள. இதன் அடிச்சொல், சொல் லாக்க நிலை, பொருள் நிலை என்பனபற்றியும் அறிதல் அவசியமாகின்றது. w
1.
2)
3
)
வறு > வற்று > வத்து > வத்தை ஈரலிப்புத் தன்மை காய்ந்து வற்றிய மரத்துண்டுகள், நீர்ப் பரப்பைக் கடக்கும் கருவியாகப் பயன்பட்ட போது, அம் மரத்துண்டுகள் (வற்றல்கள்) வத்தை என வழங்கப்பட்டன.
வறு > வற்றல் > வற்று > வித்து + 8 = வத்தை, பண்டை நாளில் நிலையான மக்கட் குடியிருப்புகள் நீர் நிலைகள் அண்மித்த ஈரலிப்பான பிரதேசங் களுக்கு அருகிலேயே அமையலாயின. ஈரலிப்பான பகுதியில் அவர்கள் விவசாயத்தை மேற்கொண்
டனர். குடியிருப்புக்குரிய குடிசை, வீடு முதலி:
வற்றைத் தண்ணிர் பரவாததும், என்றும் காய்த் ததாக, வற்றலாக இருப்பதுமான மேட்டுப் பகுதி ஆளில் அமைத்துக் கொண்டனர். எனவே அவர்தம் குடியிருப்புப் பகுதி பெரு வெள்ளம் ஏற்பட்ட போதும் வற்றும் பகுதியாக இருந்தபடியால் அது காலப்போக்கில் * வற்றை ” எனப்பட்டு * வத்தை ” யாகியதில் வியப்பில்லை.
நீர்ப் பரப்பைக் கடக்கப் பயன்பட்ட வத்தைகள் மலிந்த நிலப்பரப்புப் பாகம் இருமடி ஆகுபெய ராய் 9 வத்தை ? என்று சுட்டி வழக்குப் பெற்ற தென்றும் கொள்க.
இது தொடர்பாக வித்துவான் நா. சிவபாதசுந்தரணு ருடன் உரையாடியபோது, இப் பழந் தமிழ்ச் சொல் நாகர்
- 28 -

மூலம் சிங்கள மொழியில் இடம் பெறலாயிற்று என்ருர், அவர்தம் கருத்தை மொழியியலாளர் ஆயின் மேலும் உண்மைகள் பிறக்க வழி ஏற்படலாம்.
* வத்தை ” என்ற ஈறு தனிக் கிராமத்திற்கு மட்டு மன்றி, ஊரின் உப பிரிவுகளிலமைந்த தோட்டங்களுக்கும், சிறு குறிச்சிகளுக்கும் பெயராக வழங்குகிறது. சுவாமி ஞானப்பிரகாசர் * வத்தை ” பற்றிக் குறிப்பிடும் போது இதன் பொதுவான உச்சரிப்பு * வத்தை * அல்ல * வெட்டை ’ என்றும் கூறிஞர், !
வயல் -> வட்ட்ை -> வெட்ட்ை - வத்தை
யாழ்ப்பாணத்து ஊர்ப் பெயர்களில் வத்தை என்ற ஈற் றப் பெயராகப் பத்து ஊர்கள் உள.
தமிழில் ஊர்ப் பெயர்களின் ஈருக வருட் வயல், வெளி, புலம், கமம் முதலியன விவசாயத்துடன் தொடர்புடையன வாகக் காணப்படுகின்றன. தமிழகத்து ஊர்ப்பெயர்களின் முழுப் பட்டியலையும் ஈண்டு ஒப்பு நோக்குதல் அவசிய மாகின்றது. * வயல் என்பதை மட்டக்களப்புத் தமிழில் * வட்டை ‘ என்றே வழங்குவர். வயற் பெயர்களைக் கூறும் போது கோமாரி வட்டை, கரைவாகு வட்டை, சாளம்பை வட்டை என்றே வழங்குவர். வட்டை P வெட்டை எனத் திரிந்து ஒலிப்பதுமுண்டு. வட்டை என்பதை ஆங்கிலத் தில் Vattai என்றெழுதினர். இதனைச் சிங்களத்தில் * வத்தை " என உச்சரித்தனர். சிங்களத்தில் வத்தைக்குத் தோட்டம் என்பது பொருள். எனவே, தமிழிலுள்ள * வத்தை " என்ற ஈற்று ஊர்ப் பெயர்கள் பண்டு வட்டை ‘ என்ற ஈற்றுப் பெயராகவே அமைந்திருந்து, அவை பின்பு ** வத்தை ” என மாறிற்று எனக் கூறின் பொருந்துமோ என்பதை அறிஞர் பால் விடுவாம்.
1) As to Nichchiya Vattei the common pronounciation, I
believe is with the affix . " Veddai' and not Wattei (Gnanaprakasar: 1917 : 47). 2) தமிழகத்து ஊர்ப்பெயர்ப்பட்டியல் முழுவதுங் கிடைக்குமாயின் இதனுடன் ஒப்பிட்டு ஆராயும்போது பயனுள்ள கருத்துக்கள் வெளிவரலாம்.
-- 29 سے

Page 23
மேலும் * வட்டை என்பது வயலை மட்டுமன்றி குடியிருப்புக்களையும், மட்டக்களப்பு மாநிலத்தில் சுட்டி நிற்கின்றது.
வட்ட்ம் > வத்தை,
பண்டை நிலையில் மக்கட் குடியிருப்பு வட்டமாக அமைந்திருந்தது. குடிசைகளும் வட்டமாகவே காணப் பட்டன. அவர்கள் வாழ்ந்த இடமும் வட்டம் எனப்பட் டது. காலப் போக்கில் வட்டம் > வத்தை என மாற்றம் பெற்றிருக்கலாம். இக் கருத்தைச் சான்றுபடுத்தும் வகை யிலான சுவாமி ஞானப்பிரகாசர் கூற்று பொருத்தம் நோக்கி ஈண்டுத் தரப்படுகிறது:
* நம் இலங்கையில் இருந்த பழந்தமிழர்களே சிங் களத்தை ஆக்கிக் கொண்டு தாங்களும் சிங்களர் ஆஞர்கள். முந்திய தமிழ்ச் சிங்களவர் வைத்த ஊர்ப்பெயர், காணிப் பெயர்களையே நாம் இன் றைக்கும் வழங்கிக் கொண்டு அவற்றைச் சிங்களம் பெயர்கள் என்கிருேம். ஒரு உதாரணம் மாத்திரம்; எத்தனையோ காணிப் பெயர்களின் ஈற்றில் 8 வத்தை * என வருகிறதன்ருே? வத்தை எனும் சொல், இன் றைக்கும் தஞ்சாவூர் முதலிய சில இடங்களில் வழங் குகின்ற வட்டம் என்பதே வட்டம் = தோட்டம். இக் காலத்து வளவு (வளைவு, அடைப்பு) என்பதும் வட்ட மும் பெயரளவில் ஒன்றுதான், வத்தையின் வேலியைக் சிங்களர் * வய்ற்ற " என்ருர்கள். வட்டம் > வட்ட > வய்ற்ற > வத்த > வத்தை எனச் சொல் திரிந்து வந்த தைக் காண்க. இவ்வாறே பழந்தமிழ் வட்டம் தமிழ்ச் சிங்களத்தில் வத்தையாகி வந்தது ".
(ஞானப்பிரகாசர் 1973. 34) யாழ் மாவட்டத்தில் யானைகிறவுக்கு வடபாலுள்ள இடங்களிலேயே வத்தை ஈற்றுப் பெயர்கள் காணப்படு கின்றன. அவற்றிற் கிராம சேவகர் பிரிவில் உப பகுதி களாகக் குறிப்பிடப்பட்ட பெயர்கள் வருமாறு:
- 30 -

கலியாவத்தை (வலி, மே, ப. 31, 1) கொற்ருவத்தை (வடம. தெ. மே 1272)
சித்தவத்தை (வலி, தெ. ப. 32, 7) நலியாவத்தை (வலி, மே, ப. 31, 3) பத்தாவத்தை (வலி. வ. 63, 2) மாவத்தை (வலி, வ. 65, 6) வட்டாவத்தை (வடம. வ. கி. 140, 6) வட்டுவத்தை (வடம. வ. கி. 140, 6) வட்டுவத்தை (வடம, தெ. மே, ப. 33, 4)
வசதரவத்தை ! (வலி, கி. 78.2)
* வெட்டி * ஈற்றுப்பெயர்கள்:
தென்னிந்தியச் சாசனங்களில் ‘வெட்டிக்குடி பற்றிய செய்திகள் வருகின்றன. கோயிலுக்கு நெய் கொடுக்கும் நிவந்தக்காரர் என அவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். * மேலும் * வெட்டி " என்பது கோயில் வரிகளில் ஒன்ருக வும் காணப்படுகிறது. ? ? முகவெட்டி " என்ற பெயரில் சோழப் பெருமன்னர் கால அதிகாரிகள் இருந்திருக் கிருர்கள். புதுக்கோட்டை இரகுநாதராயத் தொண்டை மானின் ஆறு மனைவிமாரில் ஒருத்தி * காடுவெட்டியாரின் மகள் வீரத் தாயி’ என்பவளாவள். 4 இங்கு வரும் * காடுவெட்டி " என்ற தொடரும் ஒப்பிட்டு ஆராயப்பட வேண்டியதாகும். பல்லவ அரசர் பட்டப் பெயராகவும் இது இருந்தமை குறிப்பிடத்தக்கது (த. லெ. சப்ளிமென்ட்)
1) புத்தூர் கிழக்குப் பகுதியில் வாதரவத்தை அமைந்துள்ளது. வாதுரு - காற்று வாதுமை ஒருவகை மரம்; பண்டை நாளில் (வாதுமை) வாதுர மரத்தினுல் வள்ளம் (வத்தை) கட்டி, தொண்டைமானற்றினூடாக உப்பேற்றிச் சென்றதாகவும் அத ஞலேயே இப்பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
2. S. I. I. Vol. V, P. 151. 3) o S. I. I. Vol. viii P. 217
4) சிரஞ்சீவி (பதிப்பு), புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு,
சென்னை;- 1980, ப. 47.
- 31 -

Page 24
கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் (கி. பி. 1249) இருந்த கோயிற் கணக்குகளை கவனிக்கும் தணிக்கை அதிகாரிகள் * உடையபெருமாள் ? என்றும், * காடுவெட்டிகள் " என்றும் பெயர் பெற்றிருந்தனர். 1 இவர்களது ஈற்றுப் பெயராக வுள்ள " வெட்டி ” என்ற சொல் கரவெட்டி, அளவெட்டி என்ற ஊர்ப் பெயர்களுடன் காணப்படுவதும் சோழர் கால நிர்வாகத்தை நினைவூட்டுவதாகவும் அமைகின்றது
அளவெட்டி (வலி. வ; 62, 2)
கந்தரோடைக்கு வடக்கே அளவெட்டி அமைந்துள் 6ff හී • அள டி வெட்டி = அளவெட்டி. அள் = செறிவு, கூர்மை. அள் > அள்ளல் = சேற்றின் குழம்பு, அளறு = நீர், சேறு, மணச் சாந்து ?; அளறு + வெளி > அளவெட்டி, வெடி > வெளி 3. வெடி >வெட்டி, வெடி என்பதிலுள்ள ஈற்று மெய் இரட்டித்து வெட்டியாயிற்று. 4 அளவெட்டி வழுக்கை யாற்றைச் சார்ந்து பசுமையான ஈரலிப்புப் பிரதேசமாகக் காணப்படுவதால், இது அளறு டி வெடி அல்லது அளறு + வெளியாக இருந்து அளவெட்டியாயிற்று என்க.
இதன் குறிச்சிப் பெயர்களாகக் கிணற்றை அடியாகக் கொண்டு உடையா கிணற்றடி, தென்னு கிணற்றடி, பெரிய கிணற்றடி என்பனவும், தொழிலடிப்படையில் கொல்லர் தோட்டம், தச்சம் புரம், வண்ணுவளவு, தட்டாகடவை, அம்பட்டா வத்தை என்பனவும் அமைந்துள்ளன. மேலும் மா விளிதிட்டி, இராசமுதலியார் வளவு, விஷபிட்டி, தம்மளை,
) நா. வெங்கடேசன், வரலாற்றில் வில்லியனுரர், சென்னை. 1979. 2) பாட்டுந் தொகையும், 1958, 2. 84; சூடாமணி நிகண்டு
Lu. 95. 3) சொற்பொருள் விளக்கம் என்னும் அகராதி, 1960. ப. 288, 4) வெளிநாடு என அழைக்கப்பட்ட பகுதியின் அரசன் வெளி அரசன் > வெடி அரசன் எனப் பெயர் பெற்றிருத்தலும் ஈண்டு நோக்கற்பாலது.
- 32 -

சீனன் கலட்டி, சாத்தா கலட்டி, கூத்தஞ் சீமா, வாரி சீமா, (சீமா = எல்லை; சீமா = சீர்மையான நிலம்) அதிரன் புலம், மாபுரம், இருல்மடம், தில்லையிட்டி, மாரீட்டி தேரீட்டி என்பனவும் காணப்படுகின்றன. மரப்பெயரடி யாக முல்லைக்கட்டை, நாவல் கட்டை வெள்ளியம்பத்தை, (வெள்ளி = விளாமரம்), சந்திப்புமால் என்பனவும் குறிச்சிப் பெயர்களாகக் காணப்படுகின்றன. ஒல்லாந்தர் காலத்தில் பகலில் ஊர்காவல் செய்யும் படையினர் இரவில் சந்தித்த இடமே சந்திப்புமால் ஆகும்.

Page 25
இயல் 4
குடியிருப்பு நிலைப் பெயர்கள்
இடப்பெயர்களிலே மக்கட் குடியிருப்புகளையும், அவர் கள் நடமாடும் பகுதிகளையும் சுட்டும் பெயர்கள் தனித்து வம் வாய்ந்தவை. மக்கள் குடிமனை அமைத்து வாழ்ந்து வரும் பகுதிகள் மொழி, பண்பாட்டு விடயங்களை அகத்தே கொண்ட பழமை மிக்க பெயர்களைப் பெற்றுள்ளன. இப் பெயர்கள் அவர்தம் பண்டைச் சிறப்பை, வரலாற்று நிகழ்வுகளை, சமய நடவடிக்கைகளை எடுத்தியம்புவனவா கும். யாழ் மாவட்டத்தில் அமைந்த இத்தகு பெயர்க் கூறுகளை வருமாறு வரிசைப்படுத்தலாமீ:
s:9) stð குடியிருப்பு Lu 6&T280T புலம்
કૃb2%o குறிச்சி பள்ளி 6) இட்டி கடல் Lu25T LD Lib ஊர் சேரி பாய் au Truitu
தென்னிந்தியாவிலே தமிழர் வாழும் குடியிருப்புப்பகுதி களிலேயுள்ள இடப்பெயர் ஈறுகளுக்கும் இங்குள்ள இடப் பெயர் ஈறுகளுக்குமிடையே சில ஒற்றுமைகள் காணப் படினும், வேறுபட்ட தன்மைகள் இருப்பதையும் இப் பெயர்கள் சுட்டுகின்றன. இது இரு இடத்து மக்களது மொழி, சூழல், அவதானிப்பு, கலாசாரப்போக்கு ஆகிய வற்றின் தனித்தத்துவத்தைச் சுட்டுவதாக அமைகின்றது. இவ்வகையிலான ஒப்பீட்டு ஆய்வு இத்துறையில் மேற் கொள்ளப்படுதலும் அவசியமாகின்றது.
مسدسه 34 سم

* அகம் ? ஈற்றுப்பெயர்கள்
அகம் பழந்தமிழ்ச் சொல்லாகும். அகம் = இடம், வீடு, உள்ளிடம், மனம், மார்பு, மலை, ஆசௌசம் பாவம், மாசு, தானியம், நான், பூமி, விலாசம், ஆகாயம், ஆழம், ஒருவகை மரம், பாம்பு, ஏழாம் வேற்றுமை உருபு (தமிழகராதி பக். 2). இத்தகு பொருள் கொண்ட 8 அகம் ? என்ற சொல், இடப்பெயர் ஈருகத் தமிழகத்தில் (ஏடகம், கல்லகம், கையகம், திருஏரகம், மருதகம்) மட்டுமன்றி யாழ் மாவட்டத்திலும் (கரம்பகம், கல்லாகம், சுன்னுகம், பண்ணுகம், மல்ல்ாகம்) காணப்படுகின்றது. இச்சொல் முதலில் வீட்டுக்கு அமைந்து, அப்பால் வீடுகளையுடைய ஊரைக் குறித்ததுபோலும் என்கிருர் ரா. பி. சேகுப்பிள்ளை (1976 : 57). இவ்வாறு அறிவு பூர்வமான விளக்கங்களைக் கொண் டமைந்த * அகம் ? ஈற்று இடப்பெயர்கள் யாவும் சிங்களப் பெயர்களின் திரிபு στ 6στές குமாரசுவாமி ( 918 ; 27; 1928 : 158), ஹோர்ஸ்பரோ (1916 : 55) முதலி யோர் எழுதலாயினர். அன்னர் கருத்து இவ்விடப் பெயர்களின் சொற்பிறப்பியல் அடிப்படையிலும், சொற் பொருளடிப்படையிலும் பொருத்துவதன்று.
ucsisorsit (ausú. n. 61. 4)
இது யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் ஏழு மைல் தொலைவில் அமைந்துள்ளது. மல்லர் டி அகம் = மல்லரகம் > மல்லாகம். மல்லர்கள் குடியிருந்த இடம் என்பது இதன் பொருள். மல்லர் + கமம் = மல்லாகம் எனக் கொள்ளின் மல்லர் கமம் செய்த இடம் எனப் பொருள் தொனிக்கும். மல்லாகம் தோட்டக் காணிகள் செறிந்த செம்பாட்டு நிலப் பகுதியாகும். இங்கு ஆங்கிலேயர் காலம் முதலாக மாவட்ட நீதி மன்றம் ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள சோழியங்கட்டை என்ற குறிச்சிப் பெயர் சோழர் காலத் தொடர்பைக் காட்டுகின்றது.
سے 35 -

Page 26
* ஆலை ? ஈற்றும் பெயர்கள்
ஆலை = நீர் இறைக்கும் பொறி, நீர் வழிந்தோடும் சிறு வாய்க்கால், மழைநீர் வழிந்தோடும் பள்ளமான நிலம், ஆலயம் என்ற பொருள் நிலையில் இடப்பெயர் ஈருக அமைந்த 13 இடங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தி லுள்ளன. இம்மாவட்டத்திற்கு வெளியே பேசாலை, வங் காலை, கேகாலை, தங்காலை என்ற இடங்களுமுள. ஆலை’ ஈற்று இடப் பெயர்கள் பற்றி எழுதிய சுவாமி ஞானப் பிரகாசரும் (1917 : ) 68), குமாரசுவாமியும் (1918 52) இவ்விடப் பெயர்கள் யாவும் சிங்களச் சொல் என்றனர். ஆணுல் ஜே. பி. லெவிஸ் ( J. P. Lewis 1917 - 170 ) இவை தமிழ்ப் பெயர்கள் என்பதில் 8யமில்லை என்றெழுதினுர்,
ஆலை= ஆலமரம் எனவும் பொருள் கொள்ளலாம். ஆலம் என்பது தமிழில் விசாலம், அகலம், ஆலமரம் 0 Banyan. Ficusbengalenis ) sT6or 6.jub all uir (15 Sir ag(5tb. # 6ir னடத்திலும் “ஆலெ? என்பது ஆலமரத்தைச் சுட்டி வழங்கு கிறது. மலையாளத்திலும் *ஆலம்” என்பது இதே பொருளில் வழங்குகிறது. கன்னடம், குடகு, கொண்டி மொழிகளில் வரும் * ஆலெ ", "ஆல் ”, “ ஆலீ ” என்பனவற்றை உற்று நோக்கினுல் தமிழ்த் தொடர்ச் சொற்களில் பேரும் * ஆலை ” இதையே குறிக்குமெனக் கொள்ளப் போதிய இடமுண்டு. துன்னுலை, ஏழாலை முதலிய இடங்களில் ஆலமரம் முன்னர் செறிந்திருந்ததாகக் கூறப்படுகின்ற ஆர். இக்கருத்தைச் சான்றுபடுத்தும் வகையில் தாவீது அடிகள் வருமாறு கூறுகிருர்:
* இவ்வூர்ப் பெயர்களை மாந்தர் எங்ங்ணம் உச்சரிக் கின்றனர் எனக் கவனியுமின்; புன்ஞலெ, சரசாலெ வங்காலெ என்றல்லவா உச்சரிக்கின்றனர். இந்த * ஆலெ ” என்பதற்கும் ஆலமரத்தைக் குறிக்கும்
1) தாவீது அடிகள், ** ஊரும் பெயரும் *, சில்லால் சமூகசேவா
(வெளியூர்) சங்க வெள்ளிவிழா மலர், கொழும்பு, 1971, 56,

கன்னட * ஆலெ ” என்பதற்கும் எவ்வித வேறுபாடு மின்று; ஆனதினுலே தமிழிலும் இச்சொல் இக்கருத் தில் மாந்தரின் சாமான்ய வழக்கில் வழங்கப்பட்ட தெனக் கொள்வதே சால்புடைத்தெனக் கொள்மின் *.
மேற்காட்டிய சான்றுகளால் சுவாமி ஞானப்பிரகாசர், குமாரசுவாமி முதலியோர் கூறியவாறு இது சிங்களச் சொல் அல்ல என்பதும், இஃது திராவிடச் சொல் என் பதும் நிறுவப்படுகின்றன.
அதுளு நாட்டிலும் * ஆல ” என்ற ஈற்றுப் பெயர்கள் வழக்கிலுள்ளன. இதுபற்றி ஆராய்ந்த இரகுபதி கெம்துர் என்பவர் * ஆல ” என்ற துளுநாட்டு இட ப் பெயர் ஈறு தண்ணிர் என்ற பொருளடிப்படையில் பெயர்த் தோற்றம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். 2 கர்நாடக மாவட்டத்து ஆல ஈற்றுப் பெயருக்குத் (hala > vala = alaர் தரிசுநிலம் (Fallow Land) என்ற பொருளுங் கூறப் பட்டுள்ளது 3
ஆலை என்பதற்குப் பொறிகள் பொருத்தப்பட்ட சாலை என்றபொருள் நிலையில் இவ்விடப்பெயர்கள் தோற்றம் பெற் றுள்ளனவா என ஆராய்தல் பொருத்தமானதாகும். இவ் வகையில் மரவேலை செய்யப்பட்ட இடம் அரியாலை என வும், டொன்னகை செய்யப்பட்ட இடங்கள் பொன்னுலை, பொன்னுலைக்கட்டுவன், பன்னுலை எனவும், துன்னர் ஆலை
1) மேலது பக். 57.
2) “ Ala : This must not be taken as a most common hydroaym i.e: al (water, river etc) prevailing in all the main Dravidian languages ---' (Raghupati Kemtur: “A few interesting place - names of Tulu Nadu', Studies in Indian Place Names -1, Mysore, 1980, P. 50.
3) B. B. Rajapurohit: " Regional Features in Naming PlaceNames in Karnataka '. Studies in Indian Place Names - 1,
1980: P. 65.
- 37 -

Page 27
கள் இருந்த இடம் அல்லது நுண்ணிய தொழில் மேற் கொள்ளப்பட்ட இடம் துன்குலை அல்லது நுண்ணுலை என்றும், தனிநபருக்குரிய ஆலைகள் ஆட்பெயர் பெற்றுச் சரசாலை, தம்பாலை எனவும், ஆலைகளின் இயல்பு நோக்கி இளவாலை, ஏழாலை, சில்லாலை எனவும் பெயர் பெற்றன எனப் பொஆப்படக் கூறலாம். ஆயினும் இப்பெயர்கள் பற்றித் தனித்தனியாக ஆராயும்போது வெவ்வேறு பொருள் மூலங்களும் காரணங்களும் இவற்றுக்கு அடிப் படையாக அமையும் கன்மையும் ஆங்காங்கே காட்டப் பட்டுள்ளன.
f
இளவாலை: (வலி, தெ. மே, 53.1)
இப்பெயர்க்காரணி முற்றிலும் மாறுபட்டதாகக் காணப்படுகின்றது. இவ்வூர் வளம்மிக்க இடமாகவும், வாழைத் தோட்டங்களுள்ள பகுதியாகவும் அமைந்துள் ளது. வாழை இனங்களில் * இலைவாழை ” என்ற ஓரின முண்டு. இந்த இடத்தில் * இலைவாழை ” நன்கு செழித் தோங்கியமையாற் பொருளாகு பெயராய் 1 இலேவாழை * என்ற பெயர் இவ்விடத்திற்கு ஏற்பட்டு, காலப்போக்கில் இலைவாழை உ இளவாலை என ளகர > ழகர > லகர மாற் றங்களுக்குட்பட்டு இன்று இளவாலை எனப் பெயர் வழங்
இளவாலை வடக்கு (சித்திரமேழி) - பன்னுலை வீதியில் ஆனை விழுந்தான் என்ற இடமும், ஆங்கொரு பிள்ளையார் கோயிலும் உள்ளன. இவை கீரிமலை, சேந்தான் குளம் கிராமங்களை அயலாகக் கொண்டன. இப்பிரதேசங்களில் மரவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் பற்றியும் மாருதப் பிரவீகவல்லி கதை பற்றியும் பெரிதும் பேசப்படுவதால் சோழ அரசியான மாருதப்பிரவீகவல்லியின் யானை விழுந்து இறந்த இடமே ஆனைவிழுந்தான் என்ற இடம் எனக் கருதப் u(6&p 5. " 36št60tih LDTsir " (St. Anne's Church) -63f; தேவாலயம் பழம் பெருமையுடன் இங்கு விளங்குகின்றது. வணக்கத்திற்குரிய எமிலியானுஸ்பிள்ளை அவர்கள்
سے 38 سے

இவ்வூரிற் கடமையாற்றும்போது இலங்கையின் (p56b தமிழ் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமையும் குறிப் பிடத்தக்கதாகும். இளவாலையில்4 மெய்கண்டான் மகா வித்தி யாலயம் என்றியரசர் கல்லூரி, திருக்குடும்பக் கன்னியர் மடம் முதலிய பாடசாலைகள் அமைந்துள்ளன.
பள்ளுலை (வலி. வ. 64. 4)
இது தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்த ஓரிடமாகும். பன்னல்+ஆலை= பன்னுலைஆயிற்று.பன்னல்=பருத்திச்செடி, பருத்திப்பஞ்சு, நெருக்கம், கொல்லுதல், பஞ்செஃகுதல் (தமிழகராதி: 211). எனவே இங்கு பஞ்செஃகும் (பஞ்சு பறிததல்) ஆலைகள இருந்தபடியாற் காரணப்பெயராகப் பன்னுலை என்ற பெயர் தோன்றுவதாயிற்று,
சொற்பிறப்பியல் அடிப்படையில் இதற்கு வேறுவிளக்கம் கொடுக்கக்கூடியதாயுளது. பண்ணுலை என்பதே பன்னுலை என வழங்கிற்றெனலாம். இதன் அயற் கிராமம் அம்பஜன. அம்பணை < அம்பண்ணை. பண்ணை = என்பது மருதநிலம், நீர்நிலை, தோட்டம் முதலியவற்றைச் சுட்டுஞ் சொல், எனவே (பண்ணை + ஆல் + 8 =) பன்னுலை என்பது வயல் அல்லது தோட்டத்திற்குப் பக்கமாய் அமைந்த குடியிருப்பிடத்தைச் சுட்டும் பெயராகும். பண்ணுலை > பன்ஞலை ஆயிற்று, இங்கு சேர் கனகசபை வித்தியா லயம் உள்ள அது.
* இட்டி”, “ சிட்டி ஈற்றுப் பெயர்கள்:
யாழ் மாவட்டத்தின் சில இடப்பெயர்கள் இட்டி ", * சிட்டி * என்ற விகுதி பெற்றமைந்துள்ளன. இடு > இட்டி ஆயிற்று. இடு=தங்குதல்; இட்டி தங்கி வாழும்= இடம் என்ற பொருளில் வந்தது.
1) ஏழுர் > என்பதே இளவாலை என மருவிற்ரு என்ற சந்தேகமும் தோன்றியுள்ளது. இளவாலையூர் இராஜரெத்தினம் தன்னை 4 ஏமூர் இராசரெத்தினம் " (மெய்கண்டான் மகா வித்தியாலய தாபகர்) என அழைத்தமை சிந்திக்கத் தக்கது,
ܘܚܗ 39 ܚ

Page 28
* மயிலிட்டி, போசிட்டி, குரும்பசிட்டி, தம்பசிட்டி,
களைசிட்டி, விழிசிட்டி ”.
மேற்காட்டிய பெயர்கள் மாற்றம் பெற்று அல்லது உருத்திருந்து சிங்களத்திலிருந்து தமிழுக்கு வந்தன என் கிருர் குமாரசுவாமி (1918 - 158). ஆணுல் * இடு ’ (தங்கி யிரு) என்ற வினையடித்திரிபின் பின்னுெட்டுத் தமிழ்ப் பெயர்களே இவை என்பதில் 8யமில்லை.
குரும்பசிட்டி (வலி, வ. 702)
குறும்பர் + இட்டி = குறும்பரிட்டி > குரும்பரிட்டி > குரும்பசிட்டி என மருவிவந்துள்ளது. குறும்பர்கள் வந்து பாளையம் அமைத்து வாழ்ந்த இடம் எ ன் பது இ த ன் பொருள். தோம்புகளிலும் பழைய உறுதிகளிலும் குரும்ப சிட்டி என்றே வழங்குகின்றது. சான்ருக எஸ். ஆர். முதி துக்குமாரு என்பவரின் காணி உறுதியை நோக்கியபோது (எஸ்.ஆர். இல,எச்114/17015-02-1927) அக்காணிப்பெயரும் குரும்பசிட்டி என்றே குறிக்கப்பட்டுள்ளது. குரும்பசிட்டி என்ற ஒரு குறிப்பிட்ட காணிப் பெயரே காலப்போக்கில் ஊர்ப்பெயராகவும் வழங்குவதாயிற்று என்ற கருத்துமுண்டு. தமிழகத்தில் செட்டிநாட்டில் 13-5-1909இல் சோழவந்தா னுார் மகாவித்துவான் அரசன் சண்முகனுர் தலைமையில் ஒரு சன்மார்க்க சபை ஆரம்பிக்கப்பட்டது. அதேபோன்று குரும்பசிட்டியிலும் சன்மார்க்க சபை 1934இல் ஆரம்பிக் கப்பட்டு மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. இங்கு பொன். பரமானந்தா மகா வித்தியாலயம் உண்டு.
தையிட்டி (வலி. 724)
இது காங்கேசன்துறைப் பகுதியில் மயிலிட்டிக் கிராம சேவகர்’பிரிவிலிடம் பெறும் ஓரிடம், இதனைத் தையிட்டியூர் என்றும் கூறுவர். தையிட்டி, போயிட்டி, மயிலிட்டி ஆகிய இம்மூன்று பெயரும் ஒரேதன்மைத்தனவாக இருப்பதோடு மட்டுமன்றி, ஒரே பகுதியில், ஒரே எல்லைக் கோட்டிடங் களிலும் அமைந்துள்ளன. இதனை es is Lu 60) யாகக் கொண்டு இப்பெயர்களை முறையே தை + ஈட்டி

போர் + ஈட்டி, மயில் + ஈட்டி எனப் பிரித்துப் பொருள் கூறுவாருமுளர். பண்டைநாளில் பல்வேறு வகைத்தான ஈட்டி ஆயுதங்களைத் தரித்த காவற்படையினர் தங்கி யிருந்த இடங்களே இவ்வாறு மருவிற்று என்பர். அவ் வகையில் தைக்கும் + ஈட்டி>தையீட்டி>தையிட்டி ஆயிற்று என்க. இதுபற்றி யாழ்ப்பாண வைபவ கௌமுதி வரு மாறு விளக்கம் கூறுகின்றது:
“மிகுபண்டைக் காலந் தொடங்கி இவ்விடம் எழுந் தருளியிருக்கும் கணேஜ தெய்வத்திற்கு விழாக் கொண் டாடி வந்தமை பற்றி தெய்வ ழ் இட்டி டி ஊர்> தையிட் டியூரென மருவி வழங்கப்பெற்று வருகின்றது. அன்றியும் சிங்களப் பெயர்கள் யாழ்ப்பாணத்திற் சிலவிடங்களுக்கு அமையப் பெற்றிருக்கிறமையால், இப்பெயரும் அப்படி யாகுமோவென்று சொல்லினும் தெய்யோ + ஹிற்றிய > தையிட்டி எனக் 'கணேஜ" தெ ய் வ மிரு க் குமிடமெனப் 'பொருள்படத் தமிழில் மருவி வழங்கிற்றெனக் கொள்ளினு மமையும்” (க. வேலுப்பிள்ளை - 1918 : 205) இத் த கு பொருத்தா விளக்கங்களும் வலிந்து கூறப்பட்டமையும் நோக்கற்பாலது.
போயிட்டி : (வலி. தெ மே 536)
இது பெரியவிளான் கிராமசேவகர் பிரிவிலுள்ள ஓரிட மாகும். போர் + ஈட்டி = போரீட்டி > போயிட்டி என்ற நிலையில் இப்பெயர் ஏற்பட்டதெனக் கருதப்படுகிறது, கீரிமலை - மாவிட்டபுரம் வீதியில் சீமெந்துத் தொழிற்சாலை யின் மேற்பாலிலும் இப்பெயருள்ள குறிச்சிகளுள்ளன.
மயிலிட்டி : (வலி, வ. 336)
காங்கேசன்துறைக்குக் கிழக்கே கடற்கரை ஓரமாக மயிலிட்டிக் கிராமம் அமைந்துள்ளது. இவ்விடப்பெயரை மயில் + ஈட்டி எனப் பிரித்துப் பொருள் கூறுவாருமுளர் மயில் வடிவான சின்னம் பொறிக்கப்பட்ட ஈட்டிப்படை
யினர் தங்கியிருந்த இடம், பின்னுளில் மயிலிட்டி எனப்
6 سے 41 سے

Page 29
பெயர்பெற்றதென்பர். ஆனல் மயிலாப்பூர் (மயிலை) வாசி கள் வந்து தங்கியிருந்த இடம் (இடு > இட்டி) எ ன் ற பொருளில் மயிலை + இட்டி > மயிலிட்டி ஆயிற்று எனக் கொள்வதே பொருந்தும்.
தண்டிகைக் கனகராயன் பள்ளிலே,
“மயிலையம் புயம்பொருந்து வயலுந் தண்டணைக் காமர்
மயிலையம்பதி வாழக் கூவாய் குயிலே” (65)
என இக்கிராமம் மயிலையம்பதி” என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. ஆரியச் சக்கரவர்த்தி காலத்தில் மயிலாப்பூரி லிருந்து (மயிலை) வரவழைக்கப்பட்ட அரசிறை உத்தி யோகத்தர் நரசிங்கதேவர் தங்கியிருந்த இடம் (மயிலை , இட்டி) மயிலிட்டி என வழங்கிற்று என்கிருர் வ. குமார சுவாமி (1932-26).
இங்கு பழமை வாய்ந்த கண்ணகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அமைந்த விடம் *தேவியாகொல்ஜல? எனப்படும். கோயிலின் முன் அமைந்துள்ள குளம் “தேவ குளம்” என்று ஒல்லாந்தரின் தோம்புகளிற் குறிப்பிடப்பட் டிருப்பினும் இங்குள்ளோர் இதனைத் 'தொண்டை மான் குளம்” என்றே வழங்குகின்றனர். 1 தொண்டை நாட்டிலி ருந்து குடிபெயர்ந்தோர் மயிலிட்டியிற் குடியேறினர் என் கிருர் இராசநாயகம் (1926 - 239 - 248).
ஒல்லாந்தர் காலத்தில் மயிலிட்டியிற் பெரிய தேவால யம் இருந்தமை பற்றிய செய்திகள் பால்தேயஸ் (Philipus Badius 1672) குறிப்புக்களில் அறியப்படுகின்றன. அத் தேவாலயம் அழிந்து மண்ம்ேடாகக் காணப்படுகின்றது. அதன் அருகே புதிய தேவாலயம் இப்போது அமைந்
1) திருமதி இ. தர்மராசன் *வடமயிலைக் கமைகள் வரலாற்றுப் பின்னணி பாரதி" சிறப்பு மலரி, மயிலிட்டி வடக்கு கலை மகள் மகாவித்தியாலயம், காங்கேசன்துறை. 1983, 32
' س- 42 سسسسه

துள்ளது. ஒல்லாந்தர் காலம் முதல் நிலவிய பாடசாலை மரபு இங்குள்ளது. கலைமகள் வித்தியாலயம் இங்கே அமைந்துள்ளது, மயிலிட்டியில் வீரமாணிக்க தேவன்துறை பெரிய நாட்டுத் தேவன்துறை, நரசிங்க தேவன்துறை முதலிய இடப்பெயர்களுமுள்ளன.
மயிலிட்டியார்களது குலதெய்வம் பூதராயர் என்பர். இப்பெயரின் உற்பத்தியை ஆராயுமிடத்து, இது “போத் தரையர்” என்பதன் திரிபாகக் காணப்படுகிறது. போர்த் தரை என்பது பல்லவ மன்னரின் பரிபாலன நாமம் இந்தியாவில் பல்லவரின் கீழ் இராசகாரியஞ் செய்தவர்" களின் சந்ததியார் அவ்வரசரைத் தெய்வமாக்கிக் கோயில் அமைத்து வணங்குவராயினர் என்னும் கொள்கை வழு வாகாது,
மயிலிட்டியில் 'பள்ளந்தரை? என்று ஓர் இடம் உண்டு. இது பழைய உறுதிகள், தோம்புப் பதிவு, காணிப் பதிவுப் புத்தகங்களிற் "பள்ளந்திரை’ எனக் காணப்படுகிறது. இது பல்லவ திரையர் ஒருவர்க்கு உரிய உறைவிடம் ஆயினமையின் “பல்லந்திரை’ என்றழைக்கப்பட்டு, இது *பள்ளந்திரை” ஆகிப் பின் “பள்ளந்தரை” ஆக மாறினமை அறியக்கிடக்கின்றது (குமாரசுவாமி : 1932, 39.
இப்பள்ளந்தரையில் முன்னுளில் உயர்குடி மண்டலாதி பதிகள், பிரபுக்கள் முதலியோர் வாழ்ந்தனர் என்றும், அவர் கள் மரபினேர் இருபாலை, கோப்பாய், தெ ல் லிப் பளை, மாவிட்டபுரம், கந்தரோடை, இளவாலைப் பகுதிகளிற் சிறந்து விளங்கினர் என்றும் மேலும் அடுயப்படுகிறது. மயிலிட்டி யின் வடபாலுள்ள சங்குவத்தை, மயிலியோடை, தோர ணப்புலம் முதலிய குறிச்சிப் பெயர்களும் இவ்வகையில் ஆராயப்படவேண்டியனவாகும்.
affFLą: (a sű. a 68'4)
இது தெல்லிப்பழை தென்மேற்கில் அமைந்துள்ளது. விழி + சிட்டி < விழி + தீட்டி, இப்பெயர் முன்பு விழி தீட்டி என இருந்து மருவி விழிசிட்டி ஆக மாறிற்று
- 43 -

Page 30
என்பர். இதுதொடர்பாக நாட்டார் கதை ஒன்றும் வழங்கு கின்றது. முன்னெரு காலத்தில் இவ்விடத்தில் வாழ் ந் த ஒரு மூதாட்டி ஒருவர்க்கு கண்பார்வை குறைந்துபோயிற்று. அவர் சில காலமாக வைரவப் பெருமானை மெய்யன் போடு வணங்கி வந்தார். வைரவர் திருவருளால் அவருக்கு கண்பார்வை மீண்டும் கிடைப்பதாயிற்று. அதனுல் அவர் வழிபட்ட அருள்மிகு வைரவப் பெருமானுக்கு “விழிதீட்டி ஞானவைரவர்” என்ற பெயரும் சூட்டப்பட்டது. காலகதி யில் கோயிலைச் சூழ்ந்த ஊர்ப் பகுதி முழுவதும் விழி தீட்டி என வழங்கப்படலாயிற்று.
விழிசிட்டி ஞானவைரவ சுவாமி பேரில் எழுந்த ஊஞ் சற் பாவில் விழிதீட்டி என்றே குறிக்கப்படுகின்றமை காண்க,
*வையமகிழ் விழிதீட்டிபி பதியில் வாழும் வளர்ஞான வயிரவரே ஆடீர் ஊஞ்சல்”.
(தகவல் விழிசிட்டி க. உமாமகேஸ்வரன்)
‘கூடல்" ஈற்றுப் பெயர்கள்
கூடல் என்பது மதுரை மாநகரைக் குறித்து வருவது எனச் சங்க இலக்கியங்களாலும், பாண்டியச் செப்பேடு களாலும், வேள்விக்குடிச் சாசனங்களாலும் அறியப்படு கின்றது. இறையனுர் அகப்பொருளுரையிற் பாண்டியன் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த செய்தி விரிவாகக் கூறப்படுகின்றது. சங்கம்=கூடல். கூடல் பழந்தமிழ்ச்சொல் லாம். மேலும் இரு நதிகள் சே(hமிடம் கூடல் என்றும் மூன்று நதிகள் சேருமிடம் முக்கூடல் என்றும் பெயர் பெறும் (சேதுப்பிள்ளை ; 1976 : 43),
மயிலன் கூடல் : (வலி, வ. 643.)
இது தெல்லிப்பளை தென்மேற்குப் பகுதியில் அமைந்து உள்ளது. இதற்கு மூன்றரை மைல் தொலைவில் மாரிசன்
- 44 -

கூடல் என்ற இடம் காணப்படுகின்றது, இராமாயணத்தில் இடம்பெறும் மயிலரக்கன் கதை, மாரீசன் கதை இரண் டையும் இவ்விடப் பெயர்களுடன் தொடர்புபடுத்திக் கூறும் நாட்டார் வழக்குக் கதைகளும் இங்கு காணப்படுகின்றன; மயில் + தங்கு + கூடல் = மயிலன் கூடல் எனப் புணர்ந்தது என்றும் கூறுவர். மாவிட்டபுரத்துக் கோயில் மயில்கள் தங்குமிடம் என்றும், பண்டைய நாளில் காடுகள் செறிந்து காணப்பட்ட நிலையில் மயிற் கூட்டங்கள் இங்கு காணப் பட்டதாகவும் கதைகள் வழங்குகின்றன. (தகவல் மயிலன் கூடலூர் ப. நடராசன்)
மாரீசன்கூட்ல்: (வலி. தெ, மே, 1333)
இது மாதகலுக்கு அண்மையில் இளவாலைப் பகுதியில் அமைந்துள்ளது. மாரீசன் + கூடல் என்ற நிலையில் இரா மாயணக் கதாபாத்திரத் தொடர்பு கா ட் ட ப் படுகிறது. மா = காடு, காவல் தெய்வம், மழைத் தெய்வம். மாரியம்மன் கோயிலுள்ள இடம் மாரீசம் எனப்படும். இங்கு பன ங் கூடல் செறிந்து காணப்படுகின்றது, தோட்டப் பயிர்ச் செய்கை நடைபெறுகிறது. இங்குள்ள கந்தசுவாமி கோயில் மிகப் பழையதும் பிரபல்யம் பெற்றதுமாகும். காவடியாட் டம் இங்கு சிறப்பாக இடம்பெற்று வருகிறது. பழைய குடியேற்றம் இங்கே இடம்பெற்று பின் இங்கிருந்து ஏனைய இடங்களுக்குக் குடிகள் பரந்தன எனவும் கருதப்படு கிறது. மாதகல், சேந்தான்குளம் என்பன இதன் அயற் கிராமங்கள், இங்கு போர்த்துக்கேயர் காலத்துக் “கைத்தார் கோயில்” ஒன்று முள்ளது. இத்தேவாலயத்தில் திருவிழாக் காலத்தில் “பாஸ் நாடகம்’, பொம்மைக் கூத்துக்கள் என் பன பரம்பரை பரம்பரையாக நிகழ்த்தப்பட்டு வந்துள் '66
* பண்ணை 99 ஈற்றுப் பெயர்கள்
பனை > பண்னை, பண்னை = வயல், (எழினலம் பயக்கும் மன்றலம் பணைசூழ் மருத வேலி. பண்டார மும்மணிக் கோவை : 292 4-455). பணை = பெருமை, மரக்கொம்பு,
- 45 -

Page 31
மூங்கில், மருத நிலம், வயல் நீர்நிலை, குதிரை, யானைகள் தங்குமிடம், விலங்கு குயிலிடம், முரசு (த, லெ, 4:8460), பண்ணை > பண ஈற்றுப்பெயராக ஓரிடமே இப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அம்பனை : (வலி, வ. 65.1)
அம்பண்ணை என்பதே இடைக்குறையாய் அம்பணை' யாயிற்று. இது அளவெட்டியின் வடபாலமைந்த வ ய ந் பிரதேசம், படப்பை நிலம் பண்படுத்தப்பட்டபோது பண்ணையெனப் பெயர்பெற்றது. அம்=அழகு. பண்படுத்திய தால் அப்பண் ண நிலம் அழகு பொருந்தப் பெற்று அம் பணை என வழங்குவதாயிற்று. அம்பணைக் கல்வி வலயத் தின் தலைமைப் பாடசாலை மகாஜனக் கல்லூரி ஆகும்,
“பளை’ ஈற்றுப் பெயர்கள்
பளை = குடியிருப்பு, மக்கள் வாழும் பகுதி, மாவட்டம் மாகாணம் (Davidu: 1972 : 53). பள்ளி, பளை இரண்டும் ஒரு பொருட்களவிகள். பள்ளி = நகரம், இ ட மீ இடை ச் சேரி, சிற்றுார், நித்திலை, தேவர் கோயில், மக்கட் படுக்கை முனிவர்வாசம், விலங்கின் படுக்கையிடம், வீடு, சாலை. (தமிழகராதி யக் 210). யாழ்மாவட்டத்தில் இவ்வீறுகள் கொண்டவையாக தெல்லிப்பளை, பளை, புலோப்பளை, வரத் துப்பளை விடத்தற்பளை ஆகிய இடங்கள் அமைந்துள்ளன.
இவ்விடப் பெயர்கள் பற்றி எழுதிய குமாரசுவாமி (1918 : 46) " ப்ொல = பூமி எனப்பொருள்படும். சிங்களச் சொல்லை எம்மவர் பளை ” எனச் சிதைத்தே வழங்கு வர் ” எனத் துணிந்து எழுதியுள்ளார். சுவாமி ஞானப் பிரகாசர் (1917 167) ஹோர்ஸ்பரோ (1917 : 172) முதலி யோரும் * பளை ” என்பதைச் சிங்களம் என்றே எழுதினர். சபாரத்தின முதலியார் (1917 170) பாழி என்ற சொல்லை. பளையுடன் தொடர்புபடுத்தி இரண்டும் தூய தமிழ்ச் சொல் என்று நிறுவியது பொருத்தமானதே,

பள் + 8 = பளை, பள் + இ = பள்ளி. இவை இரண் டும் ஒரே தமிழ் அடிச்சொல்லினின்றும் பிறந்தவை. சங்க இலக்கியத்தில் அகத்தியன்பள்ளி, காட்டுப்பள்ளி, நனிப் பள்ளி முதலாம் தமிழ்ப்பெயர்களிடம் பெற்றுள்ளன. தென்னிந்தியாவிற் பாளையம் ” என்று ஈறுபெற்ற இடப் பெயர்கள் பரவலாகக் காணப்படுகின்றன. பள்ளம் என்ற ஈறுபெற்ற பெயர்கள் இரு நாடுகளிலும் வழக்கி லுள்ளன. அதுவும் * பள்” என்ற அடிச் சொல்லி னின்றே தோன்றியதாகும். வற்றப்பளை, பட்டிப்பளை முதலாகப் பளை ஈற்றுப் பெயர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் காணப்படுகின்றன.
தெல்லிப்பளை (வலி. வ, 65.9)
தெல்லி + பளை = தெல்லிப்பளை, இதன் அயற் கிரா மத்திற் பளை எனப் பெரிய இடம் உண்டு. எனவே இரண்டு இடங்களையும் வேறுபடுத்தும் பொருட்டு அடை மொழி பெற்றது. தெல்லி என்ற தலைவணுெருவனின் ஆணைக்குட்பட்ட பளை = தெல்லிப்பளை ஆயிற்று. தெல் லிப்பளையிலே தெல்லிவளவு, தெல்லியம்பற்றை என்ற பெயருடைய காணிகளுமுள. இப்பெயர் டில்லி (Delhi ) என்ற நகரிலிருந்து மருவியிருக்க முடியுமா எனச் சந் தேகம் கொள்கிருர் ஜே. பி. லெவிஸ் (1917 171), ஆணுல் அத்தகைய சந்தேகத்திற்கு ஆதாரமெதுவுங் காணப்பட வில்லை,
நம்பொத்த’ என்ற சிங்கள நூலில் தெல்லிப்பளை, * தெலிப்பொல “ வெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தெலி பொல - என்பதிலுள்ள ' தெலி’ என்பதற்குச் சிங்களத் திற் பொருளில்லை. பொல என்பதும் தமிழ்ப்புலம் என்ப தன் சிதைவெனக் கொள்ளலாம் (புலம் > பொல).
இப்பெயரைச் சிலர் தெல்லிப்பளை, தெல்லிப்பள்ளி, தல்லிப்பள்ளி என்றும் குறிப்பிட்டு அவற்றிற்குக் கதை
سے 47 ہے

Page 32
யும் புனைந்தனர். மாவிட்டபுரத்தின் அயற்கிராமமே தெல் லிப்பளை, மாருதப்பிரவீகவல்லி தனது குதிரை முகம் நீங்கி, இளமையும் வனப்பும் பொருந்தப்பெற்று இவ் விடத்திலே தங்கியிருந்தாள் என்றும், அதன் sy JT 6007 மாகவே இவ்வூருக்குத் தல்லிப்பிளை எனப் பெயர் ஏற் பட்டது என்றும் கூறுவர். தல்லி = தாய், தல்லி வடுக நாட்டு வழக்கு (உவின்ஸ்லோ அகராதி - ). இப்பகுதி யில் இரு இடங்கள் ப2ள ” எனப்படுவதால் இதனைத் தாய்ப்பளை (பெரிய பளை) எனக் குறிப்பதற்காகத் தல்லிப்பளை > 3 தெல்லிப்பளை ” என்றனர் எனவும் விளக் கம் கொடுக்கப்படுகிறது.
தெல்லிப்பளைக் கிராமத்திற் 17 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த பேதுருப்புலவர், கிளாலி கத்தோலிக்கத் தேவா லயத்தின் மீது பாடிய * சந்தியோகுமையோர் அம்மானை ? (கி. பி. 1947) என்ற நூலிலே தெல்லிப்பளை பற்றி மேல் வருமாறு குறிப்பிடுகின்றர்:
* இலங்காபுரியிருக்கும் யாழ்ப்பாண ராச்சியத்தில்
துலங்கு மென்ஞல் பதிக்கும் துங்கமுடிமேலுயர்ந்த வல்லிக்கிராமத்தில் வளர்ந்த திருநகராம் தெல்லிக்கிராமமெனும் சீர் சிறந்தபேரூரில்.--
う9
18 ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த மாவை சின்னக் குட்டிப்புலவர், பாடிய * தண்டிகைக் கனகராயன் பள் ளில், ' தெல்லிப்பழை ’ என்றே இப்பகுதி குறிப்பிடப்படு கின்றது. சைமன் காசிச்செட்டி (1834 : 211) தில்லிப்பள்ளி என்று குறிப்பிட்டுள்ளார். இப்பழம்பதியினைத் தெல்லியம் பதி, தெல்லிநகர் என்றும் வழங்குவர். அ. சதாசிவம் பிள்ளை தமது பாவலர் சரித்திர தீபகத்திலே, இவ்வூரிலே பிறந்து திருச்செல்வர் காவியம் இயற்றிய அருளப்ப நாவலரைத் ' தெல்லிநகர் அருளப்பர் ” என்றே குறிப் பிட்டார். தெல்லிப்பளையிலுள்ள சோடங்கன் பெரியா வுடை, வேள்வை, சாத்தணுவத்தை முதலிய குறிச்சிப் பெயர்கள் வரலாற்றுப் பழமையைத் தொடுத்து நிற்கின்றன.
-- 48 ܚܗ

பண்டை நாளிலே தொண்டை மண்டலத்துக் காரைக் காட்டு வேளாளர் பலர் இங்கு வந்து குடியேறி வாழ்ந் துள்ளனர் என அறியப்படுகிறது.
um t (ausról. a. 6 Lu. 174°5)
இப்பெயர் கொண்டதாக மாவிட்டபுரத்திலும் தென் மராட்சிப் பகுதியிலும் இரு இடங்கள் அமைந்துள்ளன. தென்மராட்சியிலுள்ள பளை பண்டைய வரலாற்றுத் தள மாகக் கருதப்படுகிறது. மாவிட்டபுரப் பகுதியிலுள்ள பனை என்ற கிராமமும் பழமை மிக்கதாகும். மா விட்டபுரம் கந்த சுவாமி கோயிலின் கட்டங்கள் அமைந்த ஒரு பகுதி *மாவிட்டபுரம் இறை” என்றும் மற்றுமொரு பகுதி “பளை இறை” என்றும் உறுதிகளிற் காணப்படுகின்றன. காங் கேசன் துறைமுகத்திலிருந்து 400 யார் தூரத்திலுள்ள காணிகள் “பழை இறை” என வழங்குகின்றன. இக் கிரா மத்தின் வடபகுதியில் நெய்தலும், கிழக்கில் ம. ரு த மு ம் பொருந்தியுள்ளன. மேற்கு எல்லையில் மாவட்டபுரம் கந்த சுவாமி கோயலும்; கிழக்கெல்லையில் ஞானவைரவர் கோயி லும் அமைந்துள்ளன. இக்கிராமத்திலேயே காங்கேசன் சீமெந்துத் தொழிற்சாலையும் இயங்குகின்றது.
பண்டிதர் மகாலிங்க சிவம், நவ கீதக் கிருஷ்ணபாரதி யார் என் போராலும் இக்கிராமத்தின் புகழ் மேலோங் கிற்று.
*புலம்’ ஈற்றுப் பெயர்கள்
புல் + அம் = புலம்: பொலமி = (கொலமி), பொல = (கன்னடம்) (தாவீது 197069)
*தோடே மடலே ஓலை என்ரு ஏடே இதழே பாளை என்ற ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும் புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்”.
7 ܗܢܘܣ 49 ܚܢ

Page 33
(தொல்-பொருள்-641) என்ற சூ தீ தி ர மும் ஈ ண் டு நோக்கற்பாலது. புல் + இலை + வைப்பு = புல்லிலை வைப்பு= குடிபோய்ப் பாழ்ந்த ஊர்கள்; இலைகளால் வேயப்பட்ட குடிசைகளேயுடைய ஊர். அகநாநூற்றில் புலமீ = என்பது நிலம் என்ற பொருளில் 29 முறை வந்துள்ளது. புல ம் என்பதற்கு வயல், இடம், திக்கு, மேட்டு நிலம் என்ற பொருள்களுமுள (த. லெ. 5: 2784). புலம்பு = நெய்தல் நில ; புலம்பன் - நெய்தல் நிலத்தலைவன் (அகம்: 10:4)
புலம் - முல்லைநிலத்தைக் குறித்தது. புல் > புலம் < புலம்பு = நெய்தல் நிலத்தைச் சுட்டிற்று. புலம் பு=தனிமை என்ற பொருளில் (அகம், தொல்) நூற்சான்று காட்டி பெயராக = தனிமை, வினையாக = தனிமையுறு எ ன் று பொருள் தந்தார் தாவீது (1970 : 70), காலப்போக்கில் புலம்பு = வருந்து, வருத்தம் என்ற பொருளும் சேர்ந்தது. அகநாநூற்றிலே நிலத்தைச் சுட்டும் புலம் என்பதிலிருந்தே புலவி - (ஊடல் ) என்ற பதமும் வந்தது. புல் + அர் = புலர் = விடியல் (மனம்) விரிதல்; புலரி = விடியல் (தாவீது 1971 : 72}. விடியற் காலத்தில் உழவன் செல்லிடம் புல்ம் ஆதலால் அது காரணப் பெயராகவும் அமையலாம். மேலும் “வெளி ளம் உவரோடு உவரிக் கடற்புலவு மாற் நும்.” முத் ஆக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் - செய் 3) என்ற பாடல் வரியாலும் (புலவு உபுலம்) உ வ ர் நிலம் சார்ந்த நிலப் பகுதி என்ற பொருளுந் தொ னித் த து. மேலும் முல்லை நிலம் இருவகைப்படுமெனவும், அவை முறையே மரம் நிறைநிலம், புல்நிறை நிலம் எனப் படுமென வம், முன்னது புறவு எனவும் பின்னது புதவு 8 வுைம் படும். இப்புதவே புலம் எனப்பட்டதாகும் என்ற விளக்கங்களும் நோக்கப்பாலன (நா, சிவபாதசுந்தரஞர் புறப்பொருள் வெண்பா மாலை ஆராய்ச்சி - 1972:பக். 147 a 50).
தையிட்டிபுலம் (வலி. வ. 64 - 5)
இது தையிட்டிக் கிராமத்தின் ஒரு பகுதியாகும். இது காங்கேசன்துறைப் பகுதியில் மயிலிட்டிக் கிராம சேவகர்
ܗܡܗ 50 ܚ

பிரிவில் இடம் பெறுகின்றது. இதனைத் தையிட்டி ஊர் என்றும் கூறுவர், தையிட்டிப்புலம் என்ற ஒரு குறிச்சி விழிசிட்டி, கொல்லங்கலட்டிக் கிராமங்களின் எல்லைகளி லும் அமைந்துள்ளது.
* பை ? ஈற்றுப் பெயர்கள்
பை = கொள்கலம். பை என்பதற்கு ஆங்கிலத்தில் Pocket என்பது பொருள். Pocket = சிற்றிடத்தையும் குறிக் கும். * பை ஈற்றுப்பெயர்கள் பொதுவாகக் கொள்ளிடம் என்ற பொருளிலேயே வந்துள்ளன,
குமாரசுவாமி (1918:158) சிங்கள * Pe ” பே* ஈற்று இடப்பெயர்கள் Pay * = பாய் என மருவி, அது பின்னர் பை எனத் திரிந்தது எனக் கூறி, மாதம்பை ;. < Madampe, LDuila)')60) u < Mayillape, பலுப்பை < Palupe, -9 fb Gou < Hape என்னும் உதாரணங்களையும் காட்டியுள்ளார். சுவாமி ஞானப்பிரகாசரும் (1917 168) இதே கருத்துடையவராவர். இப்பெயர்கள் சிங்கள இடப் பெயர்களின் ஈருன * பே ” என்பதன் திரிபன்று; தமிழ் * பை” ஈற்றுப்பெயர் என்பதே பொருந்துவதாம்.
மயிலப்பை (வலி, வ. 68, 1)
மாவிட்டபுரத்திலிருந்து கிழக்கே ஒரு மைல் தூரத் தில் உள்ள ஒரு சிறிய கிராமமே மயிலப்பை, தமிழ கத்து மயிலாப்பூரின் சிதைவே மயிலப்ப்ை எனவும் கரு தப்ப்டுகிறது. இங்கிருந்த பழைய கண்ணகி அம்மன் கோயில் ஒன்று, 1910 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டது. மீண்டும் கண்ணகிக்கு 1970 இல் புதிய சிலை எடுக்கப் பட்டுள்ளது. இவ்வூரினர் தாம் மயிலாப்பூர் வாசிகள் என்பர். அருகிலுள்ள மாவிட்டபுரத்தின் மயில்கள் வந்து தங்குமிடம் இதுவாதலால் இப்பெயர் ஏற்ப்ட்டிருக்கலாம். மயில் அப்பன் (மயில்) தங்குமிடம் மயிலப்பை என்ருயிற்று
1) இந்நூலில் தையிட்டி - இடப் பெயர் விளக்கம் பார்க்க,
- 51 -

Page 34
இயல் 5
ஊராட்சி நிலைப் பெயர்கள்
மக்கள் குறிப்பிட்ட பகுதிகளிலே குடியேறி நிலையான குடிமனே அமைத்து வளமாக வாழ்ந்து, தமக்கென ஆட்சி ஒழுங்குகளை மேற்கொண்டு வாழும்போது கிராமம் -> நகர ம3 கி நாகரிகங்களும் தோன்றுவதாயின. பண் பாட்டு வளர்ச்சிப் போக்கில் ஆட்சி Qp60). D5 (6.55 e'9g Jr களும் வளர்ச்சி பெறலாயின. பல்வேறுபட்ட பண்பாட்டு வளர்ச்சியினுற் குடியிருப்பிடங்களும் புதுப்புதுப் பெயர் களைக் கொண்டனவாக அமையலாயின. ஆட்சியாளர் களின் பெயர்கள், அதிகாரிகளின் குடியிருப்பு, நிர்வாகக் கடமைகள், படைகளின் தரிப்பிடங்கள் என்ற அடிப் டையில் ஊராட்சி நிலை சுட்டும் இடப்பெயர்களுக் தோற்றம் பெறலாயின. இவ்வகையில் யாழி மாவட்டத் திலுள்ள ஊராட்சி நிலை சுட்டும் இடப் பெயர் 4 கூறுகளை வருமாறு வகைப்படுத்தலாம்:
ஆராட்சி திசை பற்று (6O 6 நகர் புரம் கோட்டை நாடு வேலி தரிப்பு
இவற்றுள் காங்கேசன் கல்வி வட்டாரத்திற் త5-60ఐu, புரம் ஆகிய ஈற்று இடப் பெயர்களே இடம் பெற்றுள்ளன.

* கடவை" ஈற்றுப் பெயர்கள்
கட > கடவு > கடவை = கடப்பு; கட > கடத்தல், கடவை = கடந்து செல்லுமிடம். எந்த இடத்தைக் கடந்து சென்ருர்களோ அந்த இடத்திற்குக் கடவை என்ற பெயர் ஏற்படுவதாயிற்று. வீதிகள் பொதுவாகப் ப்ல்வேறு இடங் களையும் கடந்து செல்லுதல் இயல்பே. ஆயினும் குறிப் பிட்ட ஓர் இடத்தைக் கடக்கும் போது சில முக்கிய அம்சங்களாக வரி அறவிடல், கோயில் வழிபாடு, அச்சந்தீர் தல், ஆறுதல் பெறுதல் முதலானவை நிகழும்போது அந் நிகழ்ச்சிகளையும் சேர்த்துக் கடவை எனப் பெயர் அவ் விடத்திற்கு ஏற்படுதல் இயல்பாயிற்று, கடவை ஈற்றுப் பெயர்கள் ஈழத்தின் பல பாகங்களிலும் காணப்படுகின் றன. யாழ் மாவட்டத்தில் 11 இடங்கள் * கடவை ’ ஈற்றுப் ப்ெயர் பெற்றுள்ளன. எனினும் காங்கேசன் பகுதி யில் இரு இடங்களே இவ்வீறு பெற்று வழங்குகின்றன.
பெருமாள் கடவை (வலி, வ. 62 அ. 9)
ስ கந்தரோடைப் பகுதியில் அளவெட்டியில் பெருமாள் கடவையுள்ளது. பெருமாள் = விஷ்ணு, பண்டை நாளில் இங்கு பெருமாள் கோயில் இருந்திருக்க வேண்டும் வடக்கு நோக்கிய கந்தரோடைப் பெரும்வீதி இக் கோயில் இருந்த இடத்தைக் கடந்தபோது இவ்விடம் கோயிற் பெயராற் பெருமாள் கடவை எனப் பெயர் பெற்றது.
சுந்தரோடையில் 1958இல் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிறக் கர்ணேலியன் முத்திரையிலே விஷ்ணுபூதிய (விஷ்ணு வினுடைய) என்ற வாசகம் காணப்படுகின்றது, ஆந்திர நாட்டிலுள்ள நாகார்ஜ"னகொண்டாவிலே கி. பி. 3 - 4 ஆம் நூற்றண்டளவிலே நிலவிய வளர்ச்சியுற்ற தென்
ー63ー

Page 35
பிராமி லிபியில் இம்முத்திரை எழுதப்பட்டுள்ளது. 1 இந்த முத்திரையும் இங்கு பெருமாள் வழிபாடு இருந்தமைக் குச் சான்ருகின்றது. கந்தரோடை இராச்சியத்தின் வடக் குக் காவலூராகப் பெருமாள்கடவை இருந்திருக்கலாம்.
வேர்க்குத்திக் கட்வை (வலி, தெ. மே, 53. 11)
இக்கிராமம் தற்போது சென்ஜேம்ஸ் என வழங்கு கிறது. சென் ஜேம்ஸ் தேவாலயத்தின் மகிமையால் இப் பெயர் ஏற்பட்டது. வேர் + குத்தி + கடவை = வேர் குத் திக்கடவை. ஒல்லாந்தர் ஆட்சிக் is T6d6d6db ) " Guu uu i தோன்றியிருக்கலாம். பிடவைகளுக்குச் சாயமூட்டுந் தொழிலை யாழ்ப்பாணத்தில் நடத்தியவர்கள் ஒல்லாந்தர். ஒருவகைச் சாயச்செடிகளை வளர்த்து அவற்றின் வேர்களே குத்திப் பிடுங்கிக் கொடுப்போர் “வேர்க்கொத்தியர்” எனப் படுவர். அந்த வேர்களைப் பெற்றுப் LJ uu6ör LJ (Bjö #57do - gratuură காய்ச்சுவோர் “சேணியர்” (சாயக்காரர்) எனப்பெயர் பெறு: வர். வேர்குத்தியர் வேர்களைத் தேர்ந்து பிடுங்கிக் கொடு பது அவர்கள் கடமை. எனவே தொழிலடிப்படையில் (வேர்க்கொத்தி)> வேர்குத்திக் கடவை என்ற பெயர் தோற் றம் பெற்றது தெளிவு. கல்வியில் சிறந்து விளங்கும் இக் கிராமத்தினர் பின்பு இதனை சென்ஜேம்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மரபுவழியாகச் சிஐல களுக்குச் சாயமூட்டுந் தொழில் நடைபெற்று வந்தது. அதற்குரிய மூலப்பொருளாகச் சாயவேர் பெறப்பட்டது. அம்மரங்கள் சில இடங்களிற் இயற்கையாகவே வளர்ந் தன. அவற்றைப் பதப்படுத்துவோர் சாயக்காரர் என பட்டனர். போத்துக்கேயர் காலத்திலும் சிறப்பாக டச் சுக்காரர் காலத்திலும் மக்களுக்குப் பெரிதும் வருவாயைத்
1) சி. பொன்னம்பலம், * கந்தரோடைத் தொல்கிபாருட்களும் யான் பெற்ற அனுபவங்களும் * பூர்வகலா, யாழ். தொல் பொருளியற் சஞ்சிகை, 1973 : 2.
54 a

தரும் தொழிலாக இது வளர்ந்திருந்தது. சாயமூட்டப் பட்ட பிடவைகள் டச்சுக்காரர் காலத்தில் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது.
*புரம்" ஈற்றுப் பெயர்கள்
புரம் என்பதற்கு பின்வரும் விளக்கம் கொடுக்கப்பட் டுள்ளது. புரம் = ஊர், நகரம், இராசதானி, கோ யி ல், ன்ேமாடம், வீடு, சரீரம், தோல். (த. லெ. 5 ; பக். 2 70}. புரம் என்பது ஊர் > பூர் > புரம் என மாற்றம் பெற்று வந்தது என்கிருர் தாவீது அடிகள் 1 ஆயினும் புர ம் என்பது வடசொல் என்பதும் அது மிகப் பழங்காலமி முதலாகத் தமிழிற் கலந்துவிட்டது என்பதும் ஏ ற் று க் கொள்ளத்த கனவே. 2 י
புரம் என்ற ஈற்றுப்பெயருடைய கிராமங்களும் நக ரங்களும் தமிழகத்திலே தொன்மைக் காலம் முதலாக இருந்துள்ளன. இது பற்றிய கரு. நாகராசனின் கருத்து (1985 : 95) ஈண்டு நோக்கத் தக்கது.
* புரம் என்பது இடத்தைக் குறிக்கும் சொல்லாக நெடுநாள் வழக்கிலுள்ளது. அந்தப்புரம், சந் தைப்புரம் போன்ற வழக்குகளையும் காண முடி கிறது. கபாட புரத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் கிருந்ததாகவும், அது கடலுள் மறைந்து விட்டதாகவும் அறிஞர் கூறுவர். அவ்வூர்ப் பெயரை நோக்கினுல் புரம் என்ற பொதுக்
1) " The Tamizh fortification to the Sanskritic “ Pura o or fort is just a short semantic steps now we know the origin of the Sanskrit pura -e- Pur (fort), which English transform into ' Pore '' as in Singapore; Civilization, is associated rightly with city life; and nearly all the words for cities are sumero - Dravidian Origin (Daviidu - 1972: P 50)
پست 55 سس

Page 36
கூறினது தொன்மையும், அப்பெயரில் பல ஊர்கள் முன்னர் தமிழ் நாட்டில் இருந்திருக்க வேண்டும் என்று உண்மையும் புலப்படும் ".
சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயரால் வழங் கும் என்றும், அது போன்றே * புரம் ’ என்னும் சொல் லும் சிறந்த ஊர்களைக் குறிப்பதாகும் என்றும் ரா. பி. சேதுப்பிள்ளை (1976 : 49) குறிப்பிட்டுள்ளார். புரம் ? என்பதற்குச் சமனுன புரி" என்பதும் தமிழ் நாட்டில் அநேக இடங்களில் ஈருகவும் அமைந்துள்ளது. அவ்வகையில் ஈழத்தில் இரத்தினபுரி என்ற பெயரைத் தவிர * புரி ஈற்று இடப் பெயர்கள் வழக்குப் பெருமை குறிப்பிடத்தக்கதாகும். புரம் - புரி = நகரம் என்பன ஒரே பொருள் தரினும், நகரம் சற்று வேறுபட்டு வழங்குவ தையும் கவனிக்கலாம். திவாகர நிகண்டிலே புரம் என்ப தற்கு இராசதானி என்ற பொருள் கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பதினைந்து இடப்பெயர்கள் புரம் ’ என்ற ஈறு பெற்றமைந்துள்ளன. இப் பெயர் களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாமீ,
தெய்வஞ் சார்ந்தவை:
உமையாள்புரம், உருத்திரபுரம், கணேசபுரம், கனக
புரம், கனகாம்பிகைபுரம், காஞ்சிபுரம், குமரபுரம், வல்லிபுரம்.
வரலாறு சார்ந்தவை சுழிபுரம், தொல்புரம்
தனிமனிதப் பெயர் பெற்றவை:
இராமநாதபுரம், ஸ்கந்தபுரம்,
நிகழ்வு குறிப்பன: தர்மபுரம், மாவிட்டபுரம், வசந்தபுரம்
மேலே குறிப்பிட்ட இடங்களிற் * புரம் ’ என்பது நகர் என்ற பொருளில் எந்த இடப் பெயரிலாவது அமைய வில்லை. மாவிட்டபுரம், வல்லிபுரம், சுழிபுரம் என்பன தவிர்ந்
سے 56 باب

தவை யாவும் புதுக் குடியிருப்புக்களைச் சுட்டும் புதுப்
பெயர்களாகவே உள்ளன.
சனத்தொகைப் பெருக்கம், சேரிஒழிப்பு, புதிய குடி யேற்றத் திட்டங்கள், தனிநபர் சார்ந்த அரசியல் புகழா ரம், சான்ருேரைக் கெளரவித்தல் என்ற அடிப்படையிற் புதிய இடங்களுக்குப் பெயர்சூட்டும்போது "புரம்”, “நகர்’ என்ற ஈற்றுப் பெயர்களே பெரிதும் கையாளப்படுகின் றன. எனவே "புரம்" என்ற ஈற்றுப் பெயர்களிற், பழமை சுட்டும் எண்ணிக்கையிலும்விட, புதுமையைக் குறிப்பிடு வதே பெருந்தொகையின என்பதைத் தமிழ்கூறும் நல் லுலகத்துப் பெயர்கள் சான்று படுத்துகின்றன.
மாவிட்ட்புரம் (வலி. வ. 66.4)
காங்கேசன்துறைக்கு அண்மையிலுள்ள இடம் இது வாகும். மா + விட்ட + புரம் = மாவிட்டபுரம் = குதிரை முகம் விடுபட்ட நகர் என்பது இதன் பொருள். மாருதப்பிர வீகவல்லி என்னும் சோழ அரசகுமாரியின் கதையோடு இவ் விடப் பெயர் இணைந்து தோற்றம் பெற்றுள்ளது. இந்த அரசகுமாரியுடன் தொடர்புபடுத்தப்பட்ட கதை, மக்களின் மரபுக் கதையாக வழங்கி யாழ்ப்பாண வைபவமாலையிலும் (பக். 15-22) இடம்பெற்றுள்ளது. இவ்விடப்பெயரை விளங் கிக்கொள்ள இக்கதை அவசியமாதலின் அதன் சுருக்கம் ஈண்டுத் தரப்படுகிறது:
சோழமண்டலாதிபதியாகிய திசையுக்கிரசிங்க சோழனின் அரிய புத்திரியாகிய மாருதப்பிரவீகவல்லி யென்னும் கன்னி தனக்குற்ற குன்ம நோயால் மிகவருந்தி, வைத்தியரின் ஒளடதப் பிரயோகத்தில் ஆரோக்கியமடையாமை கண்டு கீரிமலைச் சாரலில் ஒடும் நன்னீர் அருவியின் விசேடத்தைக் கேள்வியுற்றுத் தன் பரிவாரத்துடன் ஆங்கு சென்று பாளைய மிட்டுப் பல நாட்களாய் வாசம் ட்பண்ணி, அக்கீரிமலையில் வசித்த நகுலமுனிவரின் ஆசி பெற்று, அவ்விட மகிமை களைக் குறித்துக் கேள்விப்பட்டு அச்சிற்றற்றில் ஸ்நானஞ் செய்து வந்தனள். சிலகாலத்தால் அவளுடைய குன்ம நோய்
8 - 57 m.

Page 37
நீங்கிக் குதிரைமுகமும் மாறிற்று என்றும், அக்காரணத் தால் அவ்விடத்திற்கு மாவிட்டபுரம் எனப் பெயர் வந்த தென்றும் பழங்கதையாகச் சொல்லப்படுகின்றனது.
இவ்வரசி கட்டுவித்த கோயிலே மாவிட்டபுரத்துக் கந்தசுவாமி கோயிலாகும் என்பது அக்கோயிற் பட்டயம் கூறுஞ் செய்தி. மேலும் இவ்வரசி செவிலித்தாய், பணிப் பெண்கள், போர்வீரர் சகிதம் வந்து தங்கியிருந்த இடம் *குமாரத்திப் பள்ளம்” என இன்றும் இங்கே வழங்குகின் றது. “வல்லிக் கிணற்றடி” என்ற ஓரிடமுமீ இங்குண்டு. இது முன்பு மாருதப்பிரவீகவல்லிக் கி ண ற் ற டி’ என இருந்து பின்பு மருவி *வல்லிக் கிணற்றடி" என ஆயிற்று என்பர்.
கி. பி. 9ஆம் நூற்ருண்டினன் எனக் கரு த ப் படும் உக்கிரசிங்கன் என்னும் ஈழத்தமிழ் மன்னன் மா வி ட் ட புரத்தில் அழகிய தோற்றத்துடன் கூடியவளான மாருதப் பிரவீகவல்லியைக் கண்டு காதலுற்றுத் திருமணம் செய்து கொண்டான் என்பது மரபு. இந்த உ க் கி ர சிங்க னே தொண்டைமான் உப்பு வணிகம் செய்வதற்கு வாய்ப்பாக கால்வாய் வெட்டத் துணைநின்றவன் என யாழ்ப்பாண வைபவமாலை (பக், 21) செப்புகிறது. இவ் விடம் முன்பு *கோயிற்கடவை” என வழங்கிற்று, மாருதப்பிரவீகவல்லியே தனக்குக் குதிரை முகம் நீங்கிய இடம் என்ற காரணத் தால் "கோயிற்கடவை” என்னும் இடத்திற்கு மாவிட்டபுரம் எனப் பெயர் சூட்டினுள் எனவும் கூறப்ப்டுகிறது (யாழ்ப் பாண வைபவமாலை பக். 19).
மகாவிட்டன் என்ற பெயருடனும் இவ்விடப்பெயர் தொடர்புபடுத்தப்படுகிறது. மகா விட்டன் என்ற தளபதி மாருதப்பிரவீகவல்லியோடு வந்து பின்னர் மாவிட்டபுரத் திலே வசித்தான் என்றும் கூறப்படுகிறது (மகாவிட்டன் புரம் > மாவிட்டபுரம்). இப்பெயரை பரவை வழக்கிலுள்ள மாவிட்டபுரம் எனக்கூறி அஆ மஹாவிட்டபுரம் எ ன் ற சிங்களச் சொல்லின் திரிபென்பாரும் உளர் (குமாரசுவாமி 1918.132).

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்கு மேற்கே சிறிது தூரத்தில் “வளவர்கோன் பள்ளம்” என்ற ஓரிடம் இருக் கிறது. பத்தாம் நூற்றண்டில் 4ஆம் மகிந்தன் அநுராத புரத்திலிருந்து அரசாண்டிருக்கும்போது 2ஆம் பராந்தக சோழன் இலங்கைமீது படையெடுத்து வர யாழ்க்குடா நாட்டில் இரு படைகளும் மோதின. அப்போது சோழரு டைய படைத் தளபதி இறந்தான். அவன் இறந்த இடமே வளவர் கோன் பள்ளம்" எனப்படுகிறது. இ வ் வா ரு க மாவிட்டபுரத்துடன் சோழர் தொடர்பு கற்பிப்பதாகக் கதை களும் செய்திகளும் வழங்குகின்றன.
இவ்விடத்திற்கும் கர்நாடகத்துக்கும் தொடர்பு இருத் தல் அறியப்படுகிறது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயி லுக்கு அண்மையில் "கண்ணடிய தெரு’ என்னுமோரிட முண்டு. கர்நாடக தேசத்தவர் இங்கு வந்து குடியேறிய படியால் எழுந்த பெயரே ஈற்றில் "கண்ணடியார் தெரு’ என மருவி வழங்கலாயிற்று எனலாம்.
இங்கு சில காணிப் பெயர்கள் * மத்தேசு பங்கு * *இயவாத்தை வளவு என வழங்குகின்றன. இவை பிற் காலத்தில் இங்கு கத்தோலிக்க மதம் பரவியபோது அதன் செல்வாக்காலேற்பட்ட கத்தோலிக்கப் பெயர்களாகும்,
மாவிட்டபுரக் கந்தசுவாமி கோயிலின் தெற்குப் பக்க மாக தச்ச கடவை என்ற குறிச்சிப் பெயரும், மேற்குப் பக்கமாக * தச்சன் காடு” என்ற குறிச்சிப் பெயரும், குளாவத்தை (சோழர்வத்தை) என்ற குறிச்சியும் காணப் படுகின்றன. வீணி யவரை என்ற குறிச்சிப் பெயரை யுடையதாக ஓர் அம்மன் கோயிலுமுண்டு.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இக்கிராமம் * மாவல்லி புரம் ’ என்ற பெயரில் அழைக்கப்பட்டிருக்கிறது. கி. பி. 1824 இல் ஆங்கிலேயர் நடாத்திய குடிசனத் தொகை மதிப்பீட்டின்படி மாவல்லிபுரத்தில் 767 மக்கள் வாழ்ந்த தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை காண்க,

Page 38
வசந்தபுரம் (வலி, வது 637)
இவ்விடம் கீரிமலைப் பகுதியில் அமைந்துள்ளது. மாரு தப்பிரவீகவல்லி குதிரை முகம் நீங்கப்பெற்ற செய்தி மாவிட்டபுர இடப்பெயரில் விளக்கப்பட்டது. அச் சோழ அரசகுமாரி குன்மநோயகன்று புதுப்பொலிவுடன் கீரிமலைப் பகுதியில் இறைவழிபாடியற்றி வாழ்ந்து வரும்போது உக் கிரசிங்கன் என்ற ஈழத் தமிழ் மன்னன் அவளைக் கண்டு காதலுற்றுத் திருமணஞ் செய்து வசந்த காலத்தை இன்ப மாகக் களித்த இடம் என்ற நிலையில் இவ்விடத்திற்கு *வசந்தபுரம்” என்ற காரணப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என ஊகிக்கவேண்டியுள்ளது, இதுப்ற்றிய செய்தி க ள் யாழ்ப்பாண வைபவமாலையிலும் கூறப்படுகின்றன (பக், 21,22),

இயல் 6
தாவரப் பெயர்கள் சுட்டிய இடங்கள்
இயற்கை நிலைப் பெயர்களே காலத்தால் முற்பட் இடப் பெயர்கள் என்பதும் அப்பெயர்களுள்ளும் ப்ொதுக் கூறு , சிறப்புக்கூறு இணையாது ஒரே சொல்லாக அமைந்த பெயர் களே () முதலில் தோற்றம்பெற்றிருக்கவேண்டும் என் பதும் இடப்பெயர் ஆய்வாளர்களாற் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன (பகவதி : 1984 : 289). இட் பின்னணி யில், பல்வகை இயற்கைப் பெயர்களிலும் தாவரப் பயர் சுட்டும் இடப் பெயர்களே காலத்தால் முற்பட்டது என் பதைப் பேராசிரியர் ச. வே. சுப்பிரமணியம் (1984) நிறுவி யுள்ளார்.
பண்டைக்கால மக்கள் நிலத்தோற்றம், நீர்நிலைகள் என்ப்வற்றின் அடிப்படையில் இடப்பெயர்களைச் சுட்டிய நிலையினின்றும் வளர்ச்சியடைந்தபோது அச்சூழலில் நிலை யாகக் காணப்பட்ட தாவரங்களையும் அடையாளமாகக் கொண்டு இடப்பெயர்களைக் குறிக்கும் மரபை ஏற்படுத்திக் கொண்டனர். அவ்வகையில் மரங்கள், செடி, கொடிகள் புல், பூண்டுகள் என்பனவற்றின் பெயர்களை இனங்கண்டு இடங்களைச் சுட்டப் பயன்படுத்தலாயினர். தாவரங்களின்
(1) கிராஞ்சி, கிழாலி, குப்பிழான், கைதடி, சளம்பன், சண்டில், முள்ளி முதலான இடப்பெயர்களை இவ்வகையிற் குறிம்பிடலாம்
9 -حس 61 سي

Page 39
தோற்றம், அவற்றின் பயன்பாடு, அவை வளருமிடம், அவற்றின் தொகுதி, அவற்றில் வாழும் பறவைகள், விலங் குகள் என்பன பெயரடைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன
தாவரப் பெயர்கள் சுட்டும் இடப்பெயர்கள் அவை குறிப்பிடும் இடங்களின் இயற்கை நிலை, பயிர்வளம், மக்கள் வாழ்க்கை நெறி என்பவற்றைப் புலப்படுத்துவனவாக வுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்திலே தாவரப் பெயர்க ளாக அமைந்த இடப்பெயர்களை மரம், செடி, கொடி, புல் என்பவற்றினடியாக வகைப்படுத்திக் கொள்ளலாம்,
பனையுடன் தொடர்புடைய பெயர்கள்
கருகம்பானே : (வலி. வ. 641)
கீரிமலைக் கிராமத்தின் தெற்குப் பகுதியில் கரு கம்பானை என்ற இடம் அமைந்துள்ளது. கருமை + அம் + பனை = கருமையம்பனை > கருகம்பனை > கருகம்பானை என இப்பெயர் மருவி வந்துள்ளது. இவ்விடத்தில் சில பனைகளின் குருத்தும் ஒலைகளும் கருமை நிறமாக இருந் தபடியால் இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. அன் றியும் இங்கு பனைகள் செறிந்து காணப்படுகின்றமை இப்பெயர்த் தோற்றத்தின் தொடர்ச்சியைக் காட்டுகிறது.
இப்பெயரை கரு + கம்பு + ஆணை எனப் பிரித்து கம்புப் பயிர்ச்செய்கை இங்கு நிகழ்ந்தமை நோக்கி இப் பெயர் பெற்றது என்றும், ஆலை என்பதன் மருஉ 17 ஆனை” என்றும், அது இருப்பிடத்தைச் சுட்டும் விகுதி என்றும் விளக்கம் கூறுவாரும் உளர் (தகவல் புலவர் நா. சிவபாதசுந்தரஞர்.)
முள்ளான (வலி. தெ மே. 40. 4)
முள் > முள்ளி + ஆனை = முள்ளானை, ஆனை விகுதிச் சொல், முள் > முளிதல் = காய்தல், உலர்தல், உலர்ந்த
سسس- 62 س

இடம். முட்களைக் காயவைத்து எரித்து நிலத்தை வள மாக்கிக் குடியிருப்பாக்கிய இடமே முள்ளானை எனப் பெயர் பெற்றது. இங்கே டச்சு வீதி அமைந்துள்ளது டச்சுக்காரர் காலத்தில் இங்கு * மஞ்சள் * உற்பத்தி பெரிதும் இடம் பெற்றிருந்தது. சித்திரமேழி மக்களுக் கும் முள்ளானை மக்களுக்குமிடையே சமூக உறவுகள் காணப்படுகின்றன.
"விளான்” முதன்மைப் பெயர்கள்
விளர் = வெண்மை, இளமை, கொப்பு; விளர்தல் = வெளுத்தல்; விளவு = விளா மரம், நிலப்பிளப்பு (தமிழக ராதி - 281). விளா = ஒருவகைச் செடி. இது சிறு விளா , பெரு விளா என இரு வகைப்படும்.
இப் பின்னணியில் விளா > விளான் என்ற சொல் முதன்மை பெற்றதாக சிறு விளான் (வலி, தெ. மே. 53.8) பெரு விளான் (வலி, தெ. மே, 53, 5), வயா விளான் (வலி, வ. 71.5) என்ற மூன்று இடங்கள் உள்ளன. பெரியவிளானில் பழமை வாய்ந்த * வடசேரியம்பதி விக்கினேஸ்வரர் ?? கோயில் அமைந்துள்ளது. இதன் வெளி வீதி முக்கோண அமைப்பு உடையதாகும். அதனுல் * முக்கோணப் பிள்ளை யார் " என்ற பெயரும் வழங்குகின்றது. இப்பகுதியில் வாழ் விவசாயிகள் தமக்கு ஏற்படும் எலித் தொல்லைக2ளப் போக்க நேர்த்தி வைத்து வழிபட்டுப் பலன் பெறுவது வழக் கம். அதனல் "எலிப்பிள்ளையார்?’ என்ற சிறப்புப் பெயரும் இக்கோயிற் பிள்ளையாருக்கு உரியதாயிற்று. இங்கு சென்ற் ஜ-0 வானியர் கோயில், அந்தோனியார் கோயில் என்பனவும் உள்ளன. Yuk : s
பெரிய விளான் என்ற இடத்தின் அயலிலே சிறு விளான் என்ற இடம் உள்ளது. சிறு விளான், பெரிய விளான் ஆகிய பகுதிகளில் ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலங்களில் மஞ்சள், இஞ்சிப் பயிர்ச்செய்கை பெரிதும் இடம் பெற்ற தாகக் கூறப்படுகின்றது. அதனுல் * மஞ்சள் தே விளான் ” என்ற பழைய பெயரும் வழங்கி வருகின்றது. பெரிய விளானில் குறிச்சிப் பெயர்களாகக் கொட்டைக் களம், சோபனை, அம்பன், பிளாவை, வடசேரி என்பன வழக்கில் உள்ளன.
in 63 -

Page 40
இயல் 7
சிறப்புநிலைப் பெயர்கள்
இதுவரை வகுத்துக்காட்டிய இடப்பெயர்கள் இயற்கை நி%, செயற்கை நிலைப் பெயர்க் கூறுகளின் அடியாகத் தோற்றம் பெற்றுள்ளமை அறியப்பட்டது. ஆயினும் இவ் :கையில் வகைப்படுத்தவியலாத சில சிறப்புநிலைப் பெயர் களும் காணப்படுகின்றன. அவற்றை சிறப்புப் பெயர்கள் சிறப்பு விகுதிப் பெயர்கள் என வகுத்து அவற்றுக்கு விளக்கங்கொடுக்கலாம்.
ஒத்திரமேழி (வலி, மே, 50. அ. 4)
இ* கிராமம் மாதகல் குறைக்குத் தென்கிழக்காகவும் சேந் ரன் குளத்திரீகு மேற்காகவும் அமைந்துள்ளது. சித் திரமேழியிற் பசுமையான புற்றரைகளும், வயல் வெளி களும் காணப்படுகின்றன. பசுமாடுகள் வீடுகளில் வளர்க் கப்படுகின்றன. தயிர், நெய் முதலியவற்றை வீட் டு த் தொழிலாகச் செய்து விற்பனை செய்கிறர்கள். வலிகாமம் மேற்குப் பகுதியிற் ப்ால், தயிர், நெய் என்பவற்றுக்குப் பெயர்பெற்ற இடமாக சித்திரமேழி விளங்குகிறது.
சித்திரம் + மேழி = அழகிய வேலைப்பாடுடைய கலப்பை என்ற பொருளில், சித்திரமேழி என்பது இருமடி ஆகு பெய்ராய் மக்களையும் இடத்தையும் சுட்டிற்று. டி.சி. ஸேர் கார் (D. C. Sircar) என்பவர் சித்திரமேழி என்பது
- 64 -

விவசாயக்குழு, வேளாளர்களின் விவசாயக் கூட்டு நிறுவ னம், விவசாயக் குழுவின் சின்னம், விவசாய நிலத்தின் எல்லைகளில் நாட்டப்படும் சின்னம் பொறிக்கப்பட்ட எல்லைக்கல் எனக் குறிப்பிட்டுள்ளார். ()
தமிழகத்துச் சித்திரமேழி மக்கள் இங்குவந்து குடி யேறியபோது தம் தாய்நாட்டுப் பெயரை இங்குஞ் சூட்ட லானர்கள் எனக் கொள்வதில் தவறில்லை. ஜடாவர்மன் பூரீபல்லவ பாண்டியனது ஆட்சியாண்டிற் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டின் சில வரிகள் வருமாறு:
“உத்தம நீதி உயர் பெருங் கீர்த்தி
முத்தமிழ் மாலை முழுமையும் நிரந்த சித்திரமேழிப் பெரிய நாட்டோமுமீ”
(S. 1. I, Vol. XV (IV) P-154)
இதிற் “சித்திரமேழிப் பெரிய நாட்டார்” என்ற தொடர் வரக் காணலாம். இச்சித்திரமேழிப் பெரிய நாட்டினரே இங்கும் வந்து குடியேறியிருக்கலாம். இவர்களைப் பற்றி இரா. நாகசாமி (1973 - 166 - 169) வருமாறு கூறுகிருர்:
"சித்திரமேழிப் பெரிய நாட்டவர்” என்போர் உழ வையே தங்கள் தொழிலாகக் கொண்டு தமிழக த்தில் வாழ்ந்த ஒரு குடிமக்களாவர். இவர்கள் பல ஆண்டுக ளாகத் தமிழகத்தில் சீரும் சிறப்புடனும் வாழ்ந்திருக்கிறர் கள். இவர்கள் பல நாடுகளிலும் வாழ்ந்திருக்கிருர்கள். கலப்பையையே தங்களது கொடிகளாகக் கொண்டிருந்த னர். இத்தகு செய்திகள் யாவும் சோழ காலத்துக் கல் வெட்டுக்களால் அறியப்படுகின்றன”.
... Chitrameli also spelt Sittirameli an organisation of the
agriculturalists; agricultural Corporation of the Vellallas the plough which was the emblem of the organisation, the boundary Stone with the representation of the plough emblem planted to mark the limits of their land's
D. C. Sircar, Indian Epigraphical Glossary, Delhi, Motilal Banasidas, 1966 t P 75.

Page 41
மேலும் பிரான்மலை என்ற இடத்திலுள்ள ஒருகல்வெட்டு சித்திரமேழியினரைப்பற்றிப் பலசெய்திகளைத் தருகின்றது. (நாகசாமி - 1973: 188 - 189), யாழ்மாவட்டத்திற் பிரான் பற்று, சித்திரமேழி என்ற இரு இடங்களும் ஒரே பகுதி யில் அமைந்த அண்மைக் கிராமங்கள் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. எனவே சித்திரமேழிப் பெரிய நாட்ட வரே இங்கு வந்து குடியேறினர் என்ற ஊகம் மேலும் வலுப்பெறுகிறது.
மாதகல் (வலி, வ. தெ மே, 52, 5)
யாழ்ப்ப்ாணக் குடாநாட்டில் வடமேற்கு முனையில் அமைந்துள்ள கடற்கரையோரக் கிராமமே மாதகல், மாது + ஏகல்= மாதகல் எனப் புணர்ந்தது என்பர். இந்த மாது யார் என்பதில் பல்வேறு பட்ட கருத்துக்கள் காணப்ப்டு கின்றன. தேவநம்பிய தீசன் காலத்தில் இலங்கைக்கு வெள்ளரசுக் கிளையுடன் வந்திறங்கிய சங்கமித்தை ஜம்பு கோளத்தில் இறங்கினுள் என்றும், அதுவே சம்பில்துறை என்ற இடம் என்பதும், மாதகல்துறை இதற்கு அண்மை யில் அமைந்துள்ளது என்பதும் ஈண்டு நோக்கத்தக்கன. கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடையதாகவும் மாதகல் இடப்பெயர் விளக்கம் கூறப்படுகிறது. மேலும் மணி மேகலை, மாருதப்பிரவீகவல்லி என்போர் வந்திறங்கிய இடமாகவும் இது கருதப்படுகிறது. மாது 4 கல் = மாதகல் மாது = உமாதேவி; கல் = உருவச்சிலை. உமாதேவியின் உருவச்சிலையை வைத்து வழிப்ட்ட இடம் என்ற பொரு ளிலும் இப்ப்ெயர் ஏற்பட்டதென்பர்.
யாழ்ப்பாணத்து இறுதித் தமிழ் மன்னன் சங்கிலி இறந்த பின்பு அவனது மூத்த சகோதரன் பரநிருபசிங் கனும், அவன் மகன் பரராசசிங்கனும் பறங்கிக்கார ருக்குச் சேவகம் செய்தனர் (யாழ்ப்பாண வைபவமாலை: 80), இந்தப் பரராசசிங்கனின் மகள் வேதவல்லிக்கு வேளாள குலத்திலே திருமணம் செய்து மாதகலில் குடி யமர்த்தப்பட்டமையும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கதாகும்.

சிறப்பு விகுதிப் பெயர்கள் *அண" அனை” விகுதிப் பெயர்கள்
அணை = சேர்தல், சேர்ந்த - பொருந்திய இடம் என்ற பொருளில் அணை ஈற்று இடப்பெயர் அமைகிறது. "அனை" ஈற்றுப்பெயர்களும் * அணை ஈருக இருந்து பின்பு "அனை" என மருவின என்றே கொள்ள வேண்டியுள்ளது.
இக்ரேன: (வலி, வ. 61. 3)
இது மல்லாகம் பகுதியிலுள்ள ஓரிடம் இப்பெயர் விளக்கம் ஆராயப்பட வேண்டியுள்ளது.
மாத்தனை (வலி, வ. 65. 5)
இது தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள்ளது. மகா ஸ்தானம் என்ற பொருளில் இப்போது மகாத்தனை என எழுதி வருகின்றனர். புலோலிப் பகுதிலும் இப்பெயர் கொண்ட ஒரிடமுள்ளமை நோக்கற்பாலது.
*ஆலி? விகுதிப் பெயர்கள்
ஆலி, ஆலு = (கன்னடம், மலையாளம்) மழைத்துளி. காற்று; ஆலி > ஆலித்தல் = ஒலித்தல் (த, லெ, 1, 247) ஆலி = ஒலித்தல் என்ற பொருள் நிலையிலேயே முதன்மை பெறுகின்றது. ஆலி ஈற்றுப்பெயர்களாக யாழ்மாவட்டத்தில் அராலி, கிளாலி, நவாலி, பலாலி என்ற நான்கு இடங்கள் காணப்படுகின்றன, இவற்றில் காங்கேசன் கல்வி வட்டா ரத்தில் பலாலி என்ற இடம் மட்டுமே அமைந்துள்ளது.
பலாலி (வலி, வ. 83 15)
பல் + ஆலி > பலாலி, யாழ்ப்பாண மா வட்ட த்தின் விமான நிலையம் இங்கு அமைந்துள்ளது. இதன் அயற் கிராமம் மயிலிட்டியாகும். மயில்கள் பலவாகக் கூடிநின்று ஆலிக்குமிடம் பலாலி என்பாருமுளர். பலாலி " என்பது மயில்களுக்காகி பின் இடத்தைச் சுட்டியதால் இது இரு மடியாகுபெயராம். ر.
1) தகவல் த. சண்முகசுந்தரம் - தெல்லிப்பளை,
- 67

Page 42
முடிவுரை
இந்நூலிற் காங்கேயன் கல்வி வட்டாரத்திலுள்ள இடப் பெயர்கள் - வரலாறு, மொழிமரபு, பண்பாடு, நாட்டார் வழக் கியல் என்பனவற்றின் அடிப்படையில் ஆராயப்பட்டுள் ளன. இவற்றை நீர், நிலம், நிலப்பயன்பாடு, குடியிருப்பு ஊராட்சி, தாவரம், சிறப்புநிலை என வகுத்து, இடப் பெயர்க் கூறுகளோடு இணைத்து பெயராக்கம் பெற்று ள் ளமை விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஊரிலும் வழங்கும் குறிச்சிப் பெயர்கள், அவை வழங்கும் இடங்களின் முழு மையான தகவல்களை அறிந்துகொள்ளப் பெரிதும் துணை யாக அமைவதால் இயன்றவரை குறிச்சிப் பெயர் க ள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது. இன்னும் சேகரிக்கப்பட வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குறிச்சிப் பெயர்கள் உள என்பதையும் குறிப்பிடுதல் சாலும்,
பண்டைக்காலம் முதலாக வழங்கிவந்த பழைய இடப் பெயர்களின் தோற்றக் காரணம், பெயர் விளக்கம் என்பன காலப்போக்கில் மறைந்துபோக, அவற்றுக்குப் பிற்காலத் தோர் புதிய கராணகாரியத் தொடர்பான விளக்கங்களும் கதைகளும் புனைந்துரைக்கலாயினர். இவை வரலாற்ருசிரி யர்களுக்கும் பண்பாட்டாய்வார்ளகளுக்கும் பல்வேறுபட்ட சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளமையும் ஈண்டு குறிப்டத்தக் கதாகும். ஈழத்திலே தமிழர் தாயகத்தில் சில சிங்கள இடப் யெயர்களும் சிங்களப் பிரதேசங்களில் தமிழ் இடப்பெயர் களும் காணப்படுகின்றன. எனவே இவற்றை முழு மை மையாக அறிந்துகொள்வதற்குத் தொல்லியற் சான்றுகள், கல்வெட்டுகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள், பிறநாட் டார் குறிப்புகள், நாட்டார் வழக்கியற் சான்றுகள் யாவும் இடப்பெயர் ஆய்வாளரின் கவனத்திற்கு உரியனவா கின்றன.
மேலை நாடுகளில் இடப்பெயராய்வு மொழியியல் ஆய் வாளரின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்துள்ளது, மொழி
س 68 دس

யியல் ஆய்வு ஈழத்து இடப்பெயர் ஆய்வில் மேற்கொள் ளப்பட வேண்டியதும் அவசியமாகின்றது. சொற்பிறப் பியல், மொழி மாற்றம், மொழிக் குடும்பம் முதலான அடிப் படைகளில் மொழிப் பிரச்சனைக்குரிய இடப்பெயர்களை அணுகும் போது அவை தூய தமிழ்ப் பெயர்கள் என்பது புலனுகின்றது.
இடப்பெயர் ஆய்வின் மூலம் தமிழகத்திற்கும் இலங் கைக்குமிடையே எத்தகு உறவுகள் பண்டைக் காலம் முதலாக இருந்து வந்தன என்பதும், தமிழகத்தின் எப் 1.ாகத்திலுள்ள மக்கள் இங்கு வந்து குடியேறித், தம் நாட்டு இடப் ட்ெயர்களைத் தாம் குடியேறிய இடங் களுக்கு இட்டு வழங்கினர் என்பதும் அறியப்படுகின்றன.
இப் பகுதியிலுள்ள சில இடப்பெயர்கள் பண்டைய போர்க் கருவிகளுடன் தொடர்புடையனவாகக் es r 6oor u படுகின்றன. மாதகல், மா விட்டபுரம் முதலான இடப் பெயர்கள் இந்நாட்டின் சமய வரலாற்றுச் செய்திகளைத் தருகின்றன. எனவே இடப்பெயராய்வின் மூலம் வரலாறு, சமயம், மொழிமரபு, பல்வேறுபட்ட பண்பாட்டுக் கூறுகள் சார்ந்த விடயங்களை அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது.
இத்தகைய ஆய்வுகள் ஈழத்தின் ஒவ்வொரு பகுதி யிலும் இடம்பெற வேண்டும். அப்போதுதான் ஈழத் தமிழ் மக்களின் தாயகம் பற்றிய முழுமையான விளக்கம் வெளிவரும்,

Page 43
ஆய்வுத் துணை நூல்கள் 1. தமிழ்
A. கணபதிப்பிள்ளை, க. ஈழத்து வாழ்வும் வளமும், சென்னை, பாரிநிலையம்
1962
குமாரசுவாமி, எஸ். டபிள்யூ. வ. மாகாணத்துச் சில ஊர்ப் பெயர் கள், யாழ்ப்பாணம், 1918. (யாழ்ப்பாண வைபவ கௌமுதி என்ற நூலின் பின்னிணைப்பாக இந்நூல் வெளிவந்தது).
குமாரசுவாமி வ. (பதிப்பு) தண்டிகைக் கனகராயன் பள்ளு, யாழ்ப்பாணம், 1932.
சண்முகசுந்தரம், த. நாட்டார் இலக்கியத்தில் மழை இரங்கிப் பாடல்கள், தெல்லிப்பளை, 1984.
சிற்றம்பலம், சி.க 'ஈழமும் இந்து மதமும்" சிந்தனை, தொகுதி 2 இதழ் 1, 1984, பக். 108, 141
சேதுப்பிள்ளை ரா,பி, தமிழகம் ஊரும் பேரும், (5ம் பதிப்பு) G)a Girakoy, ugaof cujua spo gaan), 1976
· "۰۰ .سیاسی.سی P. ஞானப் பிரகாசர், சுவாமி. எஸ். யாழ்ப்பாண வைபவ விமர்சனம், அச்சுவேலி, 1928
தாவீது அடிகள், ஹ. சி., லிலா கதை அன்றேல் சொற் பிறப்பு ஒப்பியல் தமிழகராதி, (முதற்பரகம்) யாழ்ப்பாணம் ஆசீர்வாதம் அச்சகம், 1970
நாகசாமி, இரா. யாவரும் கேளிர், சென்னை, வாசகர் வட்டம், 1973
நாகராசன், கரு. செங்கை மாவட்ட ஊர்ப் பெயர்கள். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். 1985
நாச்சிமுத்து, கி. தமிழ் இடப்பெயர் ஆய்வு, நாகர் கோவில் கோவிதம் பதிப்பகம், 1983
பகவதி, கே. இலக்கியத்தில் உளர்ப்பெயர்கள், தொகுதி 2,
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1984
பாலசுந்தரம், இ, ஈழத்து நாட்டரர் பாடல்கள், - ஆய்வும் மதிப் பிடும், சென்னை, தமிழ்ப் பதிப்பகம், 1979.
வேலுப்பிள்ளை, க. யாழ்ப்பாண வைபவ கௌமுதி, யாழ்ப்பாணம்,
1918
70

ENGLISH
Casie Chetty, Simon - The Ceylon Gazetteer, Colombo-1834
Coomaraswamy. S. W. - “Place names in Jaffna ending in pay'
C. A. L. R. 3, (3) - Jan. 1918: 157-162
Daviidu, Rev. Fr. H. S. — The three in one and etimological and comparative lexicon, 2nd vol. Jaffna, Aseervatham Press 1972.
Gnanapragasar, Rev. S. - 'Some ruins in Jaffna'', C. A. L. R. 7,
(2), 1921: 8-120
Gnanapragasar, Rev. S. "Ceylon Originally a land of Dravidian',
Tamil Culture, 1 (1), 1952:25-27
Horsburgh, B. - “Sinhalese Place names in the Jaffna Peninsula’’ C. A. L. R., 2, l) Jan, 1916:54-58; 2 (3) Jan, 1917 172-74
Lewis, John Penny - 'Sinhalese Place Names in the Jaffna
Peninsula' . C. A. L. R. 2, (3) July 1917, 44 - 46, 48.
- “Place Names in Vanni' J R A S C B 14, (47), 1896 203-222
Raghavan, M. D. - Tamil Culture in Ceylon : a General
Introduction, Colombo, Kalanilayam (1971)
Ragupathy, P. - “Early Settlements in Jaffna and Archealogical
Servey (Ph. D. Thsis), Univercity of Jaffna, 1983.
Sabaratna Muda liyar, “Sinhalese Place Names in the Jaffna
Peninsula' C A LR 2, (3) 1917.
Subramaniam, S. V. - 'The Place Names in Early Tamil
Literature' Indian conference of Tamil place names Society of India, Mysore 1984.
- 7 -

Page 44
இடப்பெயர்
அம்பனை அளவெட்டி அழகொல்லே 6 ά ά στέλιον
இளவாலை ஒளரரிை கட்டுவன் agéb೮/7 ಶಿಶT கல்லாரை காங்கேசன்துறை கிரிமலே குட்டியா புலம் கும்பளை குரும்பசிட்டி குளமங்கால் கெல்லாவில் கொல்லன் கலட்டி கோயிற் கடவை சம்பில் துறை சித்திரமேழி செட்டிச்சோலை சேந்தான்குளம் பத்தாவத்தை υάιτ
அட்டவணை
பன்னுலை பெருமாள் கடவை Gustus g. மக்குவில் 00ിബc) ഞ மயிலன்கூடல் மயிலிட்டி மயிலிட்டிக்கரை மல்லாகம்
மாரீசன்கூடல் மாத்தனை மாதகல் மாவிட்டபுரம் முள்ளான திக்கரை தையிட்டி தையிட்டிப்புலம் தெல்லிப்ப&ள வசந்தபுரம் ബ് ബിക് (ob விழிசிடடி ഖ് ഗുമ്മ, സob
வேர்க்குத்திக்கடவை
- 72 അ

பொற்குவை தந்தோர்
தெல்லிப்பழைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் திரு. சு. செல்லத்துரை - இளவாலை திரு. க. சபாநாதன் விமன்காமம் தெல்லிப்பளை திரு. வ. சிதம்பரநாதன் மயிலங்கூடல் திரு. வை. கணேசமூர்த்தி தெல்லிப்பளை டாக்டர் தி. இராசேந்திரா காங்கேசன்துறை திரு. பி. யோசேப்பு மயிலங்கூடல் திரு. பொ. சிவஞானசுந்தரம் யாழ்ப்பாணம் திரு. ந. தனபாலன் கருகம்பன திரு. க. குட்டித்தம்பி மயிலங்கூடல் திரு. சி. நவரத்தினம் மயிலங்கூடல் திருமதி. ஆ. வேதநாயகி திரு. சா. த்ருமலிங்கம் 。沙 திரு. மு. அருளையா மல்லாகம் திரு. க. க. வேலாயுதபிள்ளை தெல்லிப்பளை திரு. பொ. சிறீகுமார் மயிலங்கூடல் திருமதி. கோகிலாமகேந்திரன் விழிசிட்டி திரு. க. இராசநாயகம் கருகம்பானை திரு. பொ. இராசேந்திரன் இளவாலை திரு. ந. சுப்பிரமணியன் தெல்லிப்பள்ை திரு. பி. நடராசன் மயிலங்கூடல் திரு. மு. சிவராசரத்தினம் இளவாலை திரு. வ. நாகராசா சிறுவிளான் திரு. யூ. பாக்கிய நாதர் மயிலங்கூடல் திரு. க. திருதாவுக்கரசு பன்னலை திரு. சொ. நவரத்தினம் பொற்கலந்தம்பை திரு. ஏ. ரி. பொன்னுத்துரை குரும்பசிட்டி திரு. மு. நடராசா கருகம்பானை திரு. வே . குமாரவேல் கருகம்பானை செல்வி, சாந்தி சுப்பிரமணியம் இளவா8ல திரு. ம. பார்வதி நாதசிவம் மயிலங்கூடல் திரு. இ. சந்திரலிங்கம் மயிலிட்டி திரு. சி. துரைராசா திரு. நா. இராசர்த்தினம் * 親
2000 OO 50 OO 50 1 00 500 OO 500 OO 500 OO
300 00
250 OO 250 00 250 00 250 00 250 00 250 OO 250 00 200 00 200 00 200 00
200 00 | 50 00 700 00 100 OO 00 00 OO OO | 00 00 IOO OO 100 00
100 OO . 50 00 50 OO 50 00 50 OO 50 00 50 00 50 00

Page 45


Page 46
இருந்தனவேயன்றி, உறக்க மயக்கத்தால் மூவருடைய தலைகளும் நாலு பக்கத்திலும் ஆடிக்கொண்டேயிருந்தன. நண்டினை மீட்க வேண்டும் என்ற ஆத்திரம் மட்டுமே அவர்களையும் சைக்கிள்களை பும் தள்ளிக்கொண்டு சென்றது.
இடையிலே ஸின் டிரீஸி வழக்கம் போல் கதைகள் சொல்ல ஆரம்பித்தான். வழியிலிருந்த ஊர்களின் சரித்திரங்களையும் அவற் றில் வசித்த வீரர்களைப் பற்றியும் அவுன் விரிவாக எடுத்துச் சொன்னன். திடீரென்று ஏதோ வீழ்வதாகச் சத்தங் கேட்டது. டிரீஸியும், தான்பிரீனும் பின்ஞல் திரும்பிப் பார்த்தனர். ரொபின் ஸ்ன் சைச் கிளிலிருந்து தூங்கிக் கீழே விழுந்து விட்டான் விழுந்த வன் எழுந்திராமல், மறுபடி சைக்கிளைக் கட்டிக்கொண்டே வீதி யில் உறங்குவதைக் கண்டனர் அவன் உடலில் அவ்வளவு களைப்பு இருந்தது. அவர்கள் அவனைத் தட்டி எழுப்பி அழைத்துக் கொண்டு சென்று மே மாதம் 13 ஆம் திகதி காலை எமிலியை அடைந்தனர்.

LO
ரயில் நிலையத்தில் ரகளை
தான்பிரின் கூட்டத்தார் காலை 3.30 மணிக்கே எமிலியை அடைந்தனர். முதல் ரயில் மதியத்தில்தான் வரும் என்று தெரிந்து கொண்டு அவர்கள் திப்பெரரியிலிருந்து உதவியாட்கள் வருவதை எதிர்பார்த்துக் காத்கிருந்தனர். கிப்பெரரி வீதியில் வழிமேல் விழிவைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தனர். ஒருவரும் வரக் காணுேம். வழியில் என்ன நேர்ந்ததோ என்று கவலையுற்றனர். மணி பதினென்று அடித்தது. ஒவ்வொரு நிமிஷமும் ஒரு நாளா கத் தோன்றிற்று. எந்த ஆசாமியும் வரக் காணுேம். ரயில் வரக் கூடிய நேரம் நெருங்கி விட்டது.
உதவிக்கு நண்பர்கள் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? ஸ்பீன் ஹோகன் பகைவர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டிருக் கும்போது, அவனுடைய் நண்பன் சும்மா இருப்பதா? அது நட் புக்குத் துரோகம் அல்லவா? இவ்வாறெல்லாம் தான்பிரின் எண் ணமிட்டான். எப்படியாவது முயற்சி செய்து பார்த்துவிட வேண் டியது. தங்கள் கடமை என்று தீர்மானிததான். ஹோகனுக்குப் பாதுகாப்பாகச் சுமார் நான்கு முதல் எட்டுப் பொலிஸார் தக்க ஆயுதங்களுடன் வரக்கூடும். அதே ரயிலில் வேறு பொலிஸாரும் அரு வேளை வரக்கூடும். ஆனூல் அவைகளையெல்லாம் பற்றி

Page 47
கவிதைப் பாகுபாடும் 9 தன் உணர்ச்சிக் கவிதையும்
Ο
எல்லா ஆய்வு முயற்சிகளுக்கும் பாகுபாடு (Classification) அவசியமாக இருப்பதுபோல கவிதை பற்றிய ஆய்வுக்கும் பாகுபாடு அவசியமாக உள்ளது. பாகுபாடுகள் பல்வேறு அடிப்படைகளில் செய்யப்படுகின்றன. கவிதைகளையும் வெவ்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்த முடியும். முக்கிய மான மூன்று அடிப்படைகளைக் கீழே தருகின்றேன்.
1) ஊடகத்தின் (Medium) அடிப்படையில் கவிதை
களைப் பாகுபடுத்துவது
கவிதை வடிவத்துக்கு, செய்யுள் ஊடகமாகக் கொள்ளப்படு கின்றதா? அல்லது வசனம் ஊடகமாகக் கொள்ளப்படுகின் றதா? என்ற அடிப்படையில் கவிதைகளை வகைப்படுத்து வதை இது குறிக்கின்றது. கடந்த மூன்று நான்கு சகாப் தங்களாக இந்த அடிப்படையில் கவிதைப் பாகுபாடு நடை பெற்றுவருகின்றது. செய்யுளை ஊடகமாகக் கொண்டக் கவிதைகள் மரபுக் கவிதை என்றும் வசனத்தை ஊடகமாகக் கொண்ட கவிதைகள் புதுக்கவிதை அல்லது வசன கவிதை என்றும் பரவலாகப் பேசப்படுகின்றது.
(2) வடிவ அமைப்பின் அடிப்படையில் கவிதைகளைப்
பாகுபடுத்துவது
வடிவ அமைப்பை பொறுத்தவரை இருவேறுபட்ட அமைப் புடைய கவிதைகள் காணப்படுகின்றன. ஒன்று பிரிபடா

எம்.ஏ. நுஃமான் / 91
வடிவ முழுமை உடைய கவிதைகள், இத்தகைய கவிதை களில் கவிதையின் தொனிப் பொருள் அக்கவிதை முழுவதும் பரவி படிப்படியாக வளர்ச்சியுற்று முழுமைப் பெற்று இருக் கும். இதனால் கவிதையின் ஒரு அடி அல்லது ஒரு வாக் கியம் அல்லது ஒரு தனிச் செய்யுள் அக்கவிதையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டால் அக்கவிதையின் முழுமை கெட்டுப் பொருள் முறிவும் சிதைவும் நிகழும். கவிதையின் பொருள் ஊறுபடும். மேலும் அக்கவிதையில் இருந்து பிரித்தெடுக் கப்பட்ட பகுதிகள் தனித்து நின்று கவிதையின் தொனிப் பொருளை உணர்த்தும் ஆற்றல் அற்றவையாக இருக்கும். இத்தகைய வடிவ அமைப்புடைய கவிதைகளை முழுனரிலைக் கவிதைகள் எனல் பொருந்தும். மஹாகவியின் அனேக கவிதைகள் இதற்கு உதாரணமாக உள்ளன. பல்லி, விட்ட முதல், வீசாதீர் என்பன சில. முருகையனின் அகிலத்தின் மையங்கள் சண்முகம் சிவலிங்கத்தின் சனங்கள், சந்நிதியில் நிற்கிறேன் என்பன இன்னும் சில. சமீபத்தில் 'அலை” பத்தாவது இதழில் வெளிவந்துள்ள “எனது நேற்றைய மாலையும் இன்றையக் காலையும்’ ‘துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும்’ என்பவற்றையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
இரண்டாவது வகை இதற்கு மாறுதலையான பிரிநிலை வடிவ அமைப்பு உடைய கவிதைகள். இத்தகைய கவிதை களில் ஒரு கவிதையின் தொனிப் பொருள் அக் கவிதை முழுவதும் செறிந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று முழுமை பெறாது உதிரிகளாக நிற்கும் அக்கவிதையின் ஒரு தனிச் செய்யுள் அல்லது ஒரு அடி அல்லது ஒரு வாக்கியம் தனித்து நின்றும் பயன்படுத்தக் கூடியதாக (கவிதைப் பொருளை உணர்த்தக் கூடியதாக மேற்கொள் காட்டக் கூடியதாக) இருக்கும், அவை பிரிக்கப்பட்ட பிறகும் அக்கவிதையின் தொனிப் பொருள் ஊறுபடாது. இத்தகைய கவிதைகளைப் பிரினிலைக் கவிதைகள் எனலாம். பொதுத் தலைப்பில் அத் தலைப்புப் பொருளோடு உறவுடைய செய்திகள், கருத்துக்கள், கற்பனைகள் (Image) ஆகியவற்றைத் தொகுத்துக்கொடுப்பது இக்கவிதைகளின் பொது இயல்பாகும். சில வேளை கவிதைத் தலைப்பே கவிதைப் பொருளாகவும் அமைந்திருக்கும். இத்தகைய கவிதைக்கு உதாரணமாக தருமு சிவராமுவின் விடிவு என்பதைக் காட்டலாம். -
விடிவு பூமித் தோலில் அழகுத்தேமல் பரிதி புணர்ந்து படரும் விந்து கதிர்கள் கமழ்ந்து விரியும் பூ

Page 48
92 / திறனாய்வுக் கட்டுரைகள்
இருளின் சிறகைத்
தின்னும் கிருமி
வெளிச்சச் சிறகில்
மிதக்கும் குருவி மேற்காட்டிய கவிதை விடிவு பற்றிய, ஒன்றுடன் நின்று உள் ளார்ந்த தொடர்பு அற்ற ஐந்து வெவ்வேறு படிமங்களின் தொகுதியாக அமைந்துள்ளது. இவற்றில் எந்த ஒரு படிமத்தை அகற்றினாலும் கவிதை சேதம் அடைவதில்லை. அல்லது வேறு பல படிமங்களைச் சேர்த்தாலும் கவிதை ஊறு படுவதில்லை. இத்தகைய கவிதைகளே அநேகம் ஆக்கப்படு கின்றன. பாரதி முதல் வானம்பாடி வரை அநேக உதாரணங் கள் தரலாம். பாரதியின் பாரததேசம், வந்தே மாதரம், நடிப்புச் சுதேசிகள் என்பன சில. 3) பொருள் அடிப்படையில் கவிதைகளை பாகுபடுத்துவது பொருள் அடிப்படையில் கவிதைகளைப் பாகுபடுத்துவதற்கு ஒரு வரன்முறை இல்லை. தேவையை ஒட்டி வெவ்வேறு பாகுபாடுகளைச் செய்யலாம். காதற் கவிதை, பக்திக் கவிதை, தேசியக் கவிதை, அரசியற் கவிதை, தமிழியக்கக் கவிதை, இயற்கை வர்ணனைக் கவிதை முதலிய பாகுபாடுகள் எல்லாம் அவற்றின் பொருளை அடிப்படையாகக் கொண்ட பாகு பாடுகளே. இவை தவிர கவிதையின் உத்திமுறைகளை அடிப்படையாகக் கொண்டு குறியீட்டுக்கவிதை, படிமக்கவிதை, விபரணக் கவிதை என்றும் கவிதைகள் வகைப்படுத்தப்படுகின்றன. சில ஆய்வாளர்கள் கதைப்பாடல்கள், காவியம், பிரபந்த வகைகள், கவிதை நாடகம் ஆகியவற்றையும் வெவ்வேறு கவிதை வகை களாகப் பாகுபடுத்துவர். ஆனால் இவ் வகைப் பாகு பாடு பொருத்தமானதாகப்படவில்லை. மேற்காட்டியவற்றின் பொருள் பரப்பும், வடிவ அமைப்பும், உத்தி முறைகளும் மிகவும் வேறுபட்டன. செய்யுள் என்ற பொது ஊடகமே இவற்றை ஒன்றிணைத்து நிற்கின்றது. உரை நடையைப் பொது ஊடகமாகக் கொண்ட சிறுகதை, நாவல், குறுநாவல் உருவகக்கதை, குட்டிக்கதை, நாடகம் போன்றவற்றை வெவ் வேறு இலக்கிய வடிவங்களாகக் கொள்வதுபோல் செய்யுளைப் பொது ஊடகமாகக் கொண்ட இவற்றையும் (காவியம், கதைப்பாடல் முதலியன) வெவ்வேறு இலக்கிய வடிங்களாக வகைப்படுத்துவதே பொருத்தமாகப் படுகின்றது. செயல் முறை விமர்சனத்தை இத்தகைய பாகுபாடே எளிதாக்கும் இல்லையேல் பிரச்சினைக்குரிய அநேக வினாக்கள் எழு கின்றன.
II
கவிதையின் பொருள் அடிப்படையான பாகுபாடுகளில் ஒன்றே தன்உணர்ச்சிக் கவிதை என்பது. ஆங்கிலத்தில் இதை

எம். ஏ.நுஃமான் / 93
*lyrics’ என்பர். இந்தப் பாகுபாட்டின் பொருள் அடிப் படையை வரையறுத்துக் கொள்ள வேண்டும். பாகுபாடுகள் எந்த அடிப்படைகளில் இருந்தாலும் அந்த அடிப்படைகள் பற்றிய வறையறைகள் அவசியமாகும். இல்லையேல் செயல் முறை விமர்சனத்தில் முரண் நிலை விளைவுகள் ஏற்பட இடம் உண்டு. தமிழில் தன் உணர்ச்சிப் பாடல் என்ற சொற் றொடர் சில விமர்சகர்களால் கையாளப்படுகின்றது. தன் உணர்ச்சிப் பாடல் தனி ஒருவருக்குரிய ஆளுமைக் கூறுகளின் திரண்ட வடிவம் எனலாம். கவிஞனது ஆளுமை அதில் சிறப் பிடம் பெறுகின்றது. என்பர் கலாநிதி க. கைலாசபதி. இதற்கு விளக்கமாக, “பல நூற்றுக்கணக்கான அடிகளைப் பாடியுள்ள சிலப்பதிகார ஆசிரியரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் நமக்குத் தெரியாது, ஆனால் பாரதி, பாரதிதாசன் ஆகியவரின் உள்ளத்தை நாம் குறிப்பிட்ட அளவு அறிவோம்’ என்றும் “இராவணனைப் பற்றிய கம்பனின் சொந்த அபிப்பிராயம் என்ன என்று நமக்குத் தெரியாது. ஆனால் வீரத்தமிழன் கவிதைகளில் பாரதிதாசன் இராவணனைப் பற்றி என்ன கருதுகிறார் என்பது வெளிப்படை”என்றும் “முன்னது பொது முறைக் கவிதை, பின்னது தனிப்பட்டவருக்குரிய தன்னு ணர்ச்சிப் பாடல்” என்றும் கூறுகிறார். (இலக்கியமும் திற னாய்வும் பக்கம் 63-64). கைலாசபதி அவர்களின் விளக்கத் தின்படி தன் உணர்ச்சிப் பாடலைப் பின்வருமாறு வரையறை செய்யலாம். ஒரு கவிஞனின் சொந்தக் கருத்துக்கள் சிந்தனை கள், உணர்ச்சிகள், அபிலாசைகள் போன்வற்றைத் தற்கூற் றாக வெளிப்படையாகத் தெரிவிப்பவை தன் உணர்ச்சிப்
6956.
இது தெளிவான வரையறையே. ஆனால் அதேவேளை ஒரு பரந்துபட்ட (broad) வரை விலக்கணமாகவும் உள்ளது. கூர்ந்து நோக்கினால் இதை நாம் மேலும் இருவகையாகப் பிரிக்கலாம். ஒரு கவிஞன் தனது மனைவி அல்லது குழந்தை அல்லது காதலி அல்லது ஒரு நண்பன் இறந்து விட்டமைக்காக இரங்கி தனது துன்பத்தை ஒரு கவிதையில் வெளிப்படுத்து கிறான் என்று கொள்வோம். அதே கவிஞன் சிலியில் நடக்கும் படுகொலைகளுக்கு எதிராக தனது ஆவேசமான கண்டனத்தை அல்லது பலஸ்தீன விடுதலை வீரர்களுக்கான தனது ஆதரவை ஒரு கவிதையில் வெளிப்படுத்துகிறான் என்றும் கொள்வோம். நமது வரைவிலக்கணத்தின்படி இரண்டும் தன்னுணர்ச்சிப் பாடல்களே.
இவை இரண்டையும் நாம் நுட்பமாக நோக்கினால் முதலா வது கவிதை கவிஞனுக்கு உரிய தனிப்பட்ட, சொந்த உணர்ச்சி களைப் பற்றியது என்றும் இரண்டாவது கவிதை, வெளி உலகோடு அல்லது சமூகத்தோடு அவனுக்குள்ள உறவு நிலை பற்றியது என்றும் நாம் காண்போம். முதல்வகைக் கவிதையை ஆங்கிலத்தில் சிலர் Personal tyrics என அழைப் பர். தமிழில் நாம் இவற்றை சுயநிலைக் கவிதை எனலாம்.

Page 49
94 / திறனாய்வுக் கட்டுரைகள்
புதியதொரு கலைச்சொல் தேவை இல்லை எனில் இவ்வகைக் கவிதைகளுக்கு மட்டுமே தன் உணர்ச்சிப் பாடல் என்ற தொடரைப் பயன்படுத்தலாம். வெளி உலகோடு சம்பந்தப் பட்ட இரண்டாவது வகைக் கவிதையை பொதுமுறைக் கவிதை என்றோ அல்லது பொருளை ஒட்டி, அரசியல் கவிதை என்றோ வகைப்படுத்தலாம்.
எவ்வாறாயினும் சுயநிலைக் கவிதை அல்லது தன் உணர்ச்சிப் பாடல் (Personal yrics) என்ற பாகுபாட்டுள் அடங்கக் கூடிய கவிதைகள் உள்ளன். ஆகவே அவற்றை நாம் பின் வருமாறு வரையறை செய்து கொள்வது பொருந்தும். தனிப் பட்ட வாழ்வோடு சம்பந்தப்பட்ட, ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கே உரிய அபிலாசைகள், விருப்பு வெறுப்புகள், அனு பவங்கள், உணர்ச்சிகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகள் சுயநிலைக் கவிதைகள் அல்லது தன் னுணர்ச்சிக் கவிதைகள் ஆகும். இவை கவிஞனது சொந்த உணர்வாக இருக்கலாம் அல்லது வேறு பாத்திரங்கள் பற்றிய தாக இருக்கலாம். காதல் பற்றிய கவதைகளின் அநேகமான வையும் பக்திப்பாடல்கள் பெரும்பாலானவையும் இவ்வகை யுள் அடங்கும். பாரதியின் கண்ணன் பாட்டுக்களுள் பெரும் பாலானவையும் காணி நிலம் வேண்டும் போன்றவையும் இவ் வகையே. அழியா நிழல்கள், தூரத்துமின்னல் கால வீதி யில் முதலிய எனது கவிதைகளும் இவ்வகையைச் சேர்ந் தனவே. சில வேளைகளில் இத்தகைய கவிதைகள் பல அவற்றின் கலை முறையாலும், உணர்ச்சிக் கனதியினாலும் உள்ளத்தைப் பிணிப்பனவாய் உள்ளன. கவிதையில் சமுதாய உள்ளடக்கத்தை முதன்மைப்படுத்தும் விமர்சகர்களுள் சிலர் இத்தகைய கவிதைகளைக் குறைவாக மதிக்கின்றனர், அல் லது புறக்கணித்து விடுகின்றனர். சமுதாயப் போராட்டத் தில் இருந்து இவை ஒதுங்கி நிற்பவை என்பது உண்மையே. ஆனால் இவை மனிதஉணர்வுகளின் புறக்கணிக்க முடியாப் பகுதிகளைப் பிரதிபலிக்கின்றன, இலக்கியத்தில் சமூக உணர்வு போல் தனி உணர்வுக்கு முக்கியத்துவம் உண்டு. தேசத்துக்காக யுத்த களத்தில் நின்று போராடும் ஒருவன் தன் காதலிக்குக் கடிதத்தில் ஒரு முத்தம் அனுப்புவதும் உண்டு அல்லவா?
O அப்புத்தளை கலை இலக்கிய மன்றம் முதலாம் ஆண்டு நினைவு விழா சிறப்பு மலர் - 1978,

மஹாகவியின் O
வாழ்க்கை நோக்கு
O
மஹாகவி மறைந்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அவர் வாழ்ந்த காலத்திலும் மறைந்ததன் பிறகும் அவரது படைப் புக்கள் இதுவரை ஏழு நூல்களாக வெளிவந்துள்ளன. வள்ளி, குறும்பா, கோடை, கண்மணியாள் காதை, வீடும் வெளியும், ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், இரு காவியங்கள் ஆகி யன அவை. நூல்வடிவம் பெறவேண்டிய அவரது படைப்புக் கள் இன்னும் ஏராளனமாக உள்ளன. ஆயினும் மஹாகவி பற்றி நம்மிடையே இன்னும் ஒரு முழுமையான விமர்சன முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்பதும் அவர் பற்றிய ஒரு சரியான பார்வை பரவலாக்கப்படவில்லை என்பதும் விசனிக்கத்தக்கதே. இக் கட்டுரையில் மஹாகவியின் நூல் உருப்பெற்ற, உருப் பெறாத படைப்புக்களை அடிப்படை யாகக்கொண்டு அவரது வாழ்க்கை நோக்கைத் திரட்டிக் காண் பதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
மஹாகவியின் படைப்புக்கள் பற்றிய பின்வரும் மூன்று வினாக் களுக்கு விடை காண்பதன் மூலம் அவரது வாழ்க்கை நோக்கை - அவரது உள்ளடக்கத்தின் சாராம்சத்தை - நாம் ஒருவாறு திரட்டிக் காண முடியும்.
(1) சமூக அமைப்பின் எந்தத் தளத்தின் மீது அவரது
பார்வை விழுந்திருக்கின்றது?
(2) அவரது படைப்புக்களில் இழையோடுகின்ற பொதுத்
தன்மைகள் யாவை?

Page 50
96 / திறனாய்வுக் கட்டுரைகள்
(3) அவரது படைப்புக்களில் ஆங்காங்கே வெளிப்படை யாகத் தெரிகின்ற வாழ்க்கை பற்றிய கருத்தோட்டங்
கள் எத்தகையன?
மஹாகவியின் படைப்புக்கள் அனைத்தையும் மொத்த மாக எடுத்து நோக்கினால் - நாங்கள் சாதாரண பொது மக்கள் என்று கருதும் கிராமப் புறத்து விவசாயிகள், நகரப் புறத்து வாழ்க்கைக்குப் பலியான ஏழைகள், மத்தியதர வர்க் கத்தினர் ஆகியோர் மீதே பெரும்பாலும் அவரது பார்வை விழுந்திருக்கின்றது என்பதைச் சுலபமாகக் காணலாம். நூற்றுக் கணக்கான அவரது கவிதைகளில் ஒரு கணிசமான தொகையும், அவர் எழுதிய ஒன்பது நாடகங்களில் மேடைக் காக எழுதிய கோடை, முற்றிற்று, புதியதொரு வீடு ஆகியவை யும், அவர் எழுதிய ஐந்து காவியங்களில் கல்லழகி, கந்தப்ப சபதம் தவிர சடங்கு, சாதாரண மனிதனது சரித்திரம், கண் மணியாள் காதை ஆகியனவும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையையே உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன. பொது வாக 1955-க்குப் பிற்பட்ட மஹாகவியின் பெரும்பாலான கவிதைகளில் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளும், வாழ்க்கை முரண்பாடுகளும் அவற்றின் விளை வான மனித நடத்தைகளுமே சித்திரிக்கப் பட்டிருப்பதை நாம் காணலாம். 55-க்கும் 60-க்கும் இடையில் அவர் எழுதிய செத்துப் பிறந்த சிசு, சீமாட்டி, விட்ட முதல், நீருழவன், விசாதிர், திருட்டு, நேர்மை, மீண்டும் தொடங்கும், மிடுக்கு
முதலிய கவிதைகளை உதாரணமாகக் காட்டலாம்.
நடப்பியல் வாழ்வில் இருந்து புறம் போக்காக ஒதுங்கிச்
சென்று கற்பனை உலகில் அவர் சஞ்சாரம் செய்யவில்லை
என்பதையே இவை காட்டுகின்றன.
‘இன்னவைதாம் கவிஎழுத ஏற்றபொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதீர், சோலை, கடல் மின்னல், முகில், தென்றலினை மறவுங்கள்! மீந்திருக்கும் இன்னல், உழைப்பு ஏழ்மை, உயர்வு என்பவற்றைப் பாடுங்கள்"
என்று இருபது வருடங்களுக்கு முன் மஹாகவி எழுதினார். நிகழ்காலச் செய்திகளையும் பிரச்சினைகளையும் கவிதையில்

எம். ஏ. நுஃமான் /97
ஆண்டு அதனை இன்றைய யுகத்துக்கு இழுத்துவரல் அவசிய மாகும்” என்று பத்து ஆண்டுகளுக்கு முன்னும் அவர் எழுதி 6
* இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள் இன்றைய காலத் தியங்கும் நோக்குகள் இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள் இன்றைய காலத் திக்கட்டுக்கள்." ஆகியவையே கவிதையில் இடம் பெற வேண்டும் என்று அவர் கருதினார் சுருக்கமாகச் சொல்வதானால் இலக்கியத்தின தும் கலைகளினதும் ஒரே ஊற்றுக் கண்ணான மனிதனது சமு தாய வாழ்வே மஹாகவியின் படைப்புக்களில் உள்ளடக்க மாகவும் உள்ளது. அவரது ஆரம்பகாலப் படைப்புக்களில் சில புறநடைகள் உள்ளன. எனினும் அவரது அடிப்படை இதுவே. பெரும்பாலும் நடப்பியல் வாழ்வில் இருந்தே அவர் தன் படைப்புக்களுக்கான கருப்பொருளைப் பெற்றார். தான் கண்டு அனுபவித்த வாழ்க்கையை அதன் முரண்பாடுகளை அவர் பிரதிபலித்தார்.
நடப்பியல் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இவரது பெரும்பாலான படைப்புக்களில் இழையோடுகின்ற பொதுத் தன்மைகளாக நாம் மூன்று அம்சங்களைக் குறிப்பிடலாம்.
1) ஆழமான மனிதாபிமானம். 2) வாழ்க்கையின் மீது ஒர் உறுதியான நம்பிக்கையும்
வாழ வேண்டும் என்ற முனைப்பும்.
3) சமூக ஏற்றத்தாழ்வின் மீதும் அதன் போலி ஆசாரங்
கள் மீதும் எதிர்ப்பு.
இந்த மூன்று அம்சங்களும் ஒன்றில் இருந்து ஒன்று வேறு பட்டதல்ல. பதிலாக உள்ளார்ந்த உறவுள்ள ஒன்றின் பகுதிகளேயாகும். மனிதர்களையும் வாழ்க்கையையும் நேசிப் பதும் மற்றவர்களின் இன்ப துன்பங்களில் அக்கறை காட்டலும், சமூக முரண்பாடுகளைக் களைந்து அதைச் சீர மைக்க விரும்புவதும் மனிதாபிமானத்தின் அம்சங்களேயாகும். அந்த வகையில் மஹாகவியை ஒரு மனிதாபிமானி என்று அழைப்பது முற்றிலும் பொருந்தும்.
தமிழ் வழக்கிலே மனிதாபிமானம், மனிதாபிமானி ஆகிய சொற்கள் இடர் உறும் மனிதர்கள் மீது இரக்கமும் நேச பான்மையும் காட்டுவதையே பொதுவாகக்” குறிக்கின்றன.

Page 51
TTLTTCHCL TT0LTTLTLLLLLLL LTTTLLLLLT S LS TLSL LLLLL S S LTLLTLCLCL ஹெட்பக் கொலைகள் சம்பந்தமாகப் பிடிபட வேண்டியவர்களில் ஒருவன் என்பதைக் கண்டுபிடித்து விட்டான்
பீலர்கள் ஹோசனைப் பலவிதமாகத் துன்புறுத்தினர்கள். சைகளாலும் தடிகளாலும் அடித்தார்கள். அடிமேல் அடி விழுந் தும், அவன் வாய் திறந்து ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. ஒரு பெலிஸ் தாரன் தான் பிரீனும், டிரீஸியும் கைதுசெய்யப்பட் டிருப்பதாயும் அவர்சள் உள்ளதையெல்லாம் ஒளியாமல் சொல்லி விட்ட தாயும் தெரிவித்தான். அவ னும் உள்ளதைச் சொன்னல் தூக்கிலிடப்படாமல் விண்டனுக்குத் தப்பிப்போக வழி உண்டு என் பதையும் அவன் ஆறிப்பாக எடுத்துக்காட்டினன். ஸின் ஹோகன் பெn லிஸ்காரர்களின் வர்த்தைகனே நம்புவாஞ? அவனுடைய நண்பர்கள் உயிரை இழப்பினும் மானத்தையும், கொள்கைகளை பும் இழக்க மாட்ட8ர்கள் என்பது அவனுக்கு வெகு நன்ருகத் தெரியும். ஆதலால் அவன் முற்றிலும் மேளனமாக இருந்து விட்டான். பொலிஸார் மேலும் பயமுறுத்தினர்கள், அடித்தார் கள், ஏசிஞர்கள் ஏமாற்றிப் பார்த்தார்கள். ஒன்றும் பயன்பட வில்லை. பின்ஞல் 3 ஆம் திகதி அவனைக் கார்க் ஜெயிலுக்குக் கொண்டுபோகையில் தான் ரயிலில் தோழர்கள் வந்து அவனே விடுதலை செய்தனர்.
வழியில் சார்ஜென்ட் வாலஸ் அடிக்கடி, "தான்பிரீன் எங்கே? எங்?ே? என்று கேட்டு ஒவ்வொரு கேள்வி கேட்கும் பேர்தும் அவனைக் கத்தி முனையால் குத்தி வந்தாளும். ஹோகனுடைய உடம்பிலிருந்த புண்களே பொலிஸாரின் திருவினேயாடல்களே எடுத்துக்காட்டின. ஆனல் சrர்ஜென்ட் வாலஸ் மேற்கொண்டு உயர்ந்த உத்தியோகத்தைப் பெறமுடியாதபடி இவ்வுலகத்தை விட்டே புறப்பட நேர்ந்து விட்டது.
இனி, தான் பிரின் முதலானவர்களைக் கவனிப்போம். கடை சியாக கொன் ஸ் ட பிள் ரெய்லி ஒடிய பிறகு தான் பிரி னும் நண்பர்களு? ஸ்டேஷனை விட்டு வெளியேறினர்கள். அவர்க ளுடைய உடம்புகளிலும் உடைகளிலும் ரத்தம் கொட்டுவதைக் கண்டு மக்கள் திடுக்கிட்டுப் பல இடங்களிலும் சிதறி ஓடி மறைந் தனர். அந்த ஸ்டேஷனில் இம்மாதிரியான சம்பவத்தை அவர் கள் முன்னரி கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. ஒருவரும் புரட் சிக்காரரை நெருங்கவேயில்லே புரட்சி வீரர்கள் கைதியைச் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர்களிகுந்தனர்.
re- 4 -

தான்பிரினுல் நடக்கவே முடியவில்லை. அத்துடன் அவனு டைய ஹிவோல்வரில் குண்டுகளும் காலியாகிவிட்டன. அவன் பக்கத்தில் யாராவது வருகிருர்களா என்று பார்த்தான். வெளி யிலிருந்து ஸ்டேஷனப் பார்த்து ஒரு மோட்டார் கார் வந்து கொண்டிருந்தது. உடனே ?வன் வெற்று றிவோல்வரை நீட்டி அதை வழிமறுத்து நிறுத்தினுள், அத்த நிலையில் அவனைக் கண் ஆணுற்ற பாருள் இரக்கப்படாமலிருக்கமுடியாது. அவனுடைய தலை கிர். கிர்" என்று சுழன்று கொண்டிருந்தது; உடம்பெல்லாம் இரக்தம் வழிந்தது; வழியில் ஒரு சுவரில்முட்டித் தலையிலிருந்து கண்ணை மறைத்து இரத்தம் பொழிந்து கொண்டிகுந்தது. அவ னுடைய கால்கள் தள்ளாடி வீழ்ந்ததால் அவன் ஒரு கையால் பூமியைத் தடவிக் கொண்டே உருளலாஞன். அவனைப் பார்த்த சில மக்கள் அலறிக் கொண்டு ஒடிஞர்கள். கடைசியாக ஒரு புண்ணி:வான் ஒடி வ$து உதவி செய்யலாஞன். அவன் காக்கி யுடை தரித்திருந்த அரசாங்கப் பட்டாளச் சிப்பாட் தான்பிரின் அவன் கைமீது சாய்ந்து கொண்டே வீதியில் நடக்கலாஞன். அவனுடைய மூளையும் கஜிங்கியிருந்தது. முடிவில் றிவோன்வ ரைக் கட்டி நிறுத்திய க்ரீரை உபயே கிக்க அவனுக்கு ஞாபக மில்லை. &ழியிe மற்ற நண்பர்கள் வீதியோரமாகக் காத்திருத் தனர். அவர்கள் ஒரு கசாப்புக்கடை சீகாரனுடைய கத்தியை பு:கி ஹே "சனுடைய கைவிலங்குகளை உடைத்தெறிந்தனர். நான்கு ஜ்ோண்டர்கள் அவனே மிகவும் பந்தோபஸ்தான இடத் திற்கு அழைத்துக் கொண்டு சென்றனர்,
தான்பிரீன், டிரீளி. இமன் ஒபிசியன், ஸ்:ன்லன் ஆகிய நால்வரும் ஷனுசனுடைய வீட்டை நோக்கிப் புறப்பட்டனர். சுற்றிலும் மையிருட்டாக இருந்ததால் பாதை சரியாய்த் தெரிய வில்லை. இடையில் சில் வாலிபர்கள் அவர்களுக்கு வழிகாட்டி உதவி செய்தஈர்
வீடு சேர்ந்ததுல் தான்பிரீன் ஒரு படுக்இகயில் படுக்கவைக் கப்பட்டான். அவனுக்கு ஆறுதல் சே#ல்ல ஒரு பாதிரியாகும் வைத்தியம் செய்யப் புகழ் பெற்ற ஒரு வைத்தியரும் அழைத்து வரடிபட்டார்கள். வைத்தியருடைய பெயர் டாக்டர் ஹென் னெஸ்ஸி. அவ்விருவரும் நோயாளி 24 மணி நேரத்திற்குமேல் ஜீவித்திருக்கமாட்டார் என்று அபிப்பிராயப்பட்டனர். ஏனென் ரு தான் பிரீனுடைய சுவாசப்பையில் குண்டு பாய்ந்து மறு புறத்தால் வெளியே போயிருந்தது அத்துடன் உடலிலிருந்து ஏராளமான ரத்தம் வெளியாகியிருந்தது. தான்பிரின் தான் உயி

Page 52
100 / திறனாய்வுக் கட்டுரைகள்
மாகவும் தேறுதலாகவுமே மனிதன் சாவதில்லை என்ற கருத்துக்கு ஒரு புதிய அழுத்தம் கொடுக்க முனைந்துள்ளார்.
* அன்று பிறந்து இன்று இறப்பதுன்
ஆயதன்று நம் மானிட வாழ்வுகாண் அப்பனே மகனாகி, உயிர் ஓய்தலற்று உயர்வு ஒன்றினை நாடலே உண்மை". என்ற அவரது கருத்து முற்றிற்று என்ற நாடகத்திலும் சாதா ரண மனிதனது சரித்திரத்திலும் கலைவடிவம் பெற்றுள்ளது. வாழ்வின் மீதுள்ள பற்றுதலின் ஒரு அம்சமே இது.
5
கவிஞர் முருகையன் மஹாகவியின் வாழ்க்கை நோக்குப் பற்றி ஓர் இடத்தில் குறிப்பிடுகையில் “முரண்பாடுகளையும் இடர்ப் ப்ாடுகளையும் கண்டாலும் காணாதமாதிரி விடுத்து இதுதான் உலக இயல்பு, ஏதோ ஏலுமானவரை சமாளிக்க முயல்வோம் என்ற பார்வைதான் இவரது படைப்புக்கள் பலவற்றில் ஊடோடி நிற்பது' என்றும், உலகத்தை உள்ளது உள்ளபடியே ஏற்றுக் கொண்டு அந்த உலகத்தில் இயலுமானவரை சுலப மான் ஒரு பாதையில் நடந்து செல்கையில் கைக்கு எட்டும் சுகானுபவங்களை நுகர்ந்து ஈடுபடும் ஒரு வாழ்க்கைத் தத்துவம் இவரது கவிதைகளில் பின் புலமாக உள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முருகையன் என்ன அடிப்படையில் இந்தக் கருத்துக்கு வந் தார் என்பது தெரியவில்லை. ஆனால் நாம் இதுவரை பார்த்த மஹாகவியின் வரிகளே இக்கூற்றுத் தவறானது என்பதைக் காட்டப் போதுமானவை என்று நினைக்கின்றேன். மஹாகவி பெரும்பாலும் சாதாரண மக்களின் நடப்பியல் வாழ்க்கையைத் தன் படைப்புக்களுக்குக் கருவாகக் கொண்ட வர்.அன்றாட வாழ்க்கை அனுபவத்தைக்கருவாகக் கொள்ளும் எவனும் சமூக முரண்பாடுகளைப் பிரதிபலிக்காமல்-கண்டும் காணாதது போல் ஒதுங்கிச் செல்ல முடியாது. அத்தகைய கலைஞனின் படைப்புக்களில் விரும்பியோ விரும்பாமலோ, பிரக்ஞை பூர்வமாகவோ பிரக்ஞை பூர்வமற்றோ அவை பிரதிபலிக்கப்படவே செய்யும். அது யதார்த்த நெறியின் ஒரு முக்கிய பண்பு ஆகும். நிலப் பிரபுத்துவ வர்க்கத்தின் சார்பில் நின்ற பால்சாக்கும், கிறிஸ்துவ ஆன்மீக வாதியான டால்ஸ்டாயும் கூட இதற்கு விலக்கு அல்ல என்பதை நாம் அறிவோம்.
அந்த வகையில் மஹாகவியின் முக்கியமான படைப்புக்கள் அனைத்திலும் சமூக முரண்பாடுகள் மீதும் அதன் போலி

எம். ஏ. நுஃமான் / 101
ஆசாரங்கள் மீதும் எதிர்ப்புணர்ச்சியும் அவற்றைக் களைய வேண்டும் என்ற விருப்பும் சில இடங்களில் வெளிப்படை யாகவும்-சில இடங்களில் பின்புலமாகவும் தெரிவதை நாம் காணலாம். 60-க்கு முந்திய அவரது பல தனிப் பாடல்களில் இந்த எதிர்ப்புணர்ச்சியும் சமூக முரண்பாடுகளுடன் ஒத்தியங்க முடியாத மனப்பாங்கும் தெளிவாகத் தெரிகின்றன. இம் மானிடர், இனம் உய்ய வழி உண்டா, மடிகிறோம், இயற்கைப் பெருந்தாய் இதயம், கடவுளே முதலிய கவிதைகள் இதற்குச் சில உதாரணங்களாகும். சீமாட்டி, செத்துப் பிறந்த சிசு, வீசாதீர், விட்டமுதல், நீருழவன், திருட்டு, தேரும் திங்களும் போன்ற கவிதைகளில் மனித வாழ்வின் நெரிசலும், முரண் பாடுகளின் மோதலும் தெளிவான சித்திரங்களாகத் தீட்டப் படுகின்றன. மனித வாழ்வு ஏன் இவ்வாறு அவலமாக இருக்க வேண்டும்? என்ற கேள்வியே இப்படைப்புக்களின் அடிப்படைத் தொனியாகும். இந்த அவலம் களையப்பட வேண்டும் என்ற தூண்டுதலே அவற்றின் பின்புலத்தில் அழுத்தப்படுகின்றது.
சடங்கு, கோடை, கண்மணியாள் காதை ஆகிய 60-க்குப் பிந்திய மஹாகவியின் பெரும் படைப்புக்களில் சமூக முரண் பாடுகளே பிரதிபலிக்கப் படுகின்றன.
தன் திருமணத்துக்கு எவ்வித எதிர்ப்புமில்லாத போதும் போலியான சடங்காச்சாரங்களுக்குக் கட்டுப்பட விரும்பாது தனது காதலியுடன் வன்னிப்பகுதிக்கு இடம் பெயர்ந்து செல் லும் ஒரு யாழ்ப்பாணத்துஇளைஞனின் கதையைக்கூறுகின்றது சடங்கு. கோடை, ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில், அவர் கள் தோற்றுவித்த புதிய நாகரீகத்துக்கும் பழைய விழுமியங் களுக்கும் இடையே தோன்றிய முரண்பாடுகளைச் சித்திரிப் பது. கண்மணியாள் காதை சமுதாய மூடத்தனங்களையும் சாதிக் கொடுமையையும் பற்றிய ஒரு துன்பியல் காவியம். இவை எல்லாம் உலகத்தை உள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனோபாவத்தைக் காட்டவில்லை. சமூக முரண்பாடுகளையும் இடர்ப்பாடுகளையும் கண்டும் காணாதது போல் மஹாகவி இருந்தார் என்பதற்கு அவரது படைப்புக் களில் எவ்வித ஆதாரமும் இல்லை.
மஹாகவி சமூக முரண்பாடுகள் பற்றியதன் உணர்வுகளை தன் படைப்புக்களில் காட்சியனுபவ வெளிப்பாடுகள் மூலம் மட்டுமன்றி கருத்து நிலையிலும் வெளிப்படுத்தியுள்ளார். *பாதி உலகை மறுபாதி தின்றுழலும் சேதியைக் காணார், செழும் சிந்தனையற்றார், காதலோ காதல் கவிதைகளே கட்டுவதில் போதைக் கழிக்கும் பொடியள்’ என்று முரண் பாடுகளைக் காண மறுக்கும் கவிஞர்களை அவர் சாடுகின் றார். "பிறர் உழைப்பில் பிழைத்தல்’ என்ற கவிதையில் அவர் பின்வரும் கருத்துக்களைக் கூறுகின்றார்.

Page 53
பல பொம்பும் புளுகுகளும் புனைந்துரைக்கப்பட்டிருந்தன. வழக் கம்போல் தொண்டர்களுடைய செயலைக் கண்டித்து அறிக்கை களும் அபிப்பிராயங்களும் வெளிவந்தன. அரசர் பெருமான் தம்மிடம் கூலிக்கு வேலைபார்த்து ந4 க்லாங்கில் உயிர் கொடுத்த வர்களுடைய பந்துக்களுக்கும் ஐரிஷ் பதில் ஆளுநருக்கும் அணு தாபச் செய்தி அனுப்பியிருந்தார்.
கெர்ரியிலிருந்து தொண்டர்கள் ஷன்னன் நதிக்கரையின் வழி யாக மீண்டும் விமெரிக் பகுதிக்குத் திரும்பிஞர்கள். அங்கு தின சரி ஆற்றில் முழுவதும் ஒய்வெடுத்துக் கொள்வதும் பழைய விஷ யங்களேயும் புதிய விஷயங்களையும் பற்றி ச் சிந்திப்பதுமாகப் பொழுதைப் போக்கி வந்தனர். அவர்களுடைய காயங்களும் விரைவாகக் குணமடைந்து வந்தன. சும்மாயிருக்கும் நேரங்களில் அவர்கள் பிடித்து வந்த மீனுக்கு அளவேயில்லை. சுற்றிலும் ரசி சியப் பொலிஸ், தடியடிப் பொலிஸ், பீரங்கிப் பட்டாளம், பற் பல அதிகாரிகள் அனேவரும் சேர்ந்து, அவர்களைப் பிடிப்பதற்காக என்னிருக்கும் இடத்தையும் விடாது தேடிக் கொண்டிருந்தனர். அந்த வேளையில் அவர்கள் ஸ்நானமும் பானமும் தவரு மல் மிக்க மன அமைதியுடன் மீன் பிடித்து மகிழ்ந்து வந் sarff

2
பாதிரி வேஷம்
தொண்டர்கள் மேற்கு லிமெரிக்கில் இருக்கும்போது பொலி ஸாரும பட்டாளத்தாரும் அவர்களைப் பிடிக்க எத்தனையோ முயற் சிகள் செய்து கொண்டிருந்த னரி. அந்தப் பிரதேசம் முழு வதையும் வளைத்துக்கொண்டு, வீடு வீடாகச் சோதனை செய்து வந்தார்கள். தொண்டர்களைப் பற்றிய தகவல் கொடுப்பவர்க ளுக்கு ஏராளமான பொன் பரிசளிப்பதாக நாடெங்கும் பறை சாற்றப்பட்டு வந்தது. அவர்களுடைய அங்க அடையாளங்கண் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு போடப்பட்டது
1919 ஆம் ஆண்டு கோடை காலத்தில் பிரிட்டிஷ் கவன் மெண்டார் பழைய கிழட்டு ஐரிஷ் சிப்பாய்களையெல்லாம் ஒன்று சேர்த்து புதிய ரகசிய இலாகா அமைத்துப் பலப்படுத்திக் கொண் டனர். அடுத்த இரண்டு வருஷங்களில் அவர்கள் எத்தனே பேர் இந்த உத்தியோகம் பார்ப்பதற்காக உயிரை இழந்தார்கள் என் பதை அக்காலத்துப் பத்திரிகைகளைப் பார்த்தால் தெரியவரும். ஐரிஷ் தொண்டர்கள் தங்கள் தேசத்தாரே தங்களைக் காட்டிக் கொடுக்கும் நீசத் தொழிலைச் செய்வதற்கு முன் வந்ததைக் கண்டு சந்தித்த இடத்திலெல்லாம் அவர்களைப் பரலோகத்திற்கு

Page 54
*அப்பி வந்தனர். அரசின் ரகசிய இலாகாவிலுள்ளவர்கள் தீவிர
* எதையும் செய்யமுடியாதபடி அந்த இலாகாவையே முறித்து avgö45m Přes Gir
அக்காலத்தில் தெருப்புறங்களில் ரகசியப் பொலிஸாருடைய பிரேதங்கள் அடிக்சடி கிடப்பது வழக்கம். அவற்றின் கழுத்துக்க னிலே சீட்டுக்கள் கட்டப்பட்டிருக்கும், அச்சீட்டுக்களிலே "ஐரிஷ் தொண்டர் படையினரால் தண்டிக்கப்பட்டவர்கள். ஒற்றர்களே "சீசரிக்சை!” என்று எழுதப்பட்டிருக்கும். ஆனல் librosia TT இல்லையா என்று சந்தேகப்படக்கூடிய நபர்களுக்கு மட்டும் உயிர்ப் பீச்சை கொடுத்தனுப்பி விடுவதே வழக்கம்.
*டைசியாகத் தொண்டர்கள் மீண்டும் ஷன்ஞன் நதியைத் த?ன்டித் தென் திப் பெரரிக்குச் சென்றனர். அவர்களுக்குச் செலவுக்குப் பணம் இல்லாமல் கஷ்டமேற்பட்டது. பலர் 4 னம் கொடுக்கத் தயராயிருப்பினும், அவர்களைப் பார்க்கச் சந்தர்ப் பம் கிடைக்கவில்லை. தொண்டர்கள் தங்களைப் போன்ற ஏழை *9?-ய வீடுகளிலேயே பெரும்பாலும் தங்கியிருந்தாாகள். பல்லாக் நகர வ:சியான மன் ஒடிபீர் அவர்களுக்கு வேண்டிய **விகளைச் செய்துவந்தார். அந்த நண்பருடைய வீட்டில்தான் முன்பு நடனக் கச்சேரி நடத்து, பின்னர் ஸின் ஹோகன் வெளி யேறும்போது கைதுசெய்யப்பட்டான்.
வெகு காலமாக ம ைஐந்து திரிந்து கொண்டு, தீவிரமான *சியங்களைச் செய்வதற்கு வழியில்லாமல் பொழுதுபோவதைக் *ண்டு தான் பிரீன் மனம் இருந்திஞன். அவன் ஸே லோஹெட் டக்கிலும், நாக்லாங்கிலும் ஆரம்பித்துக் கொடுத்த காரியங்களைத் தேசத்ார் பின்பற்றி ஆங்காங்தே பெரும் போர் தொடுப்பஈர் ** என்று நம்பியிருந்தான். சிற்சில இடங்களில் மட்டும் பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டும், உதிரியான பொலிஸாரிடமிருந்து விவோல்வர்களும் துப்பாக்கிகளும் பறிக்கப்பட்டும் வந்ததே தவிர *ங்கும் ஒரேபடியான வேலை நடக்கவில்லை. ஆதலால் மேலும் காரியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று தான்பிரி அ* தோழர்களும் முடிவு செய்தனர். டப்ளினுக்குப் போனல் திான் தொண்டர்படையின் நிலையும், தேசமக்களின் அபிப்பிரச ேேசிம் நன்கு புலப்படு: என்று அவர்கள் சருதினர்கள். அதன் படி ரொபின்ஸனையும், ஹே ஸ்க்யும் வட திட்பெரரியில் விட்டு விட்டு தான் பிரீனு:ஜ் டிரீஸியும் இரண்டு சைக்கின்களே எடுத்துக் கொண்டு டப்ளினுக்குச் சென்றனர்.
aus 94 -

டப்ளினில் அவர்கள் ஷஞஈனுடைய வீட்டில் ஆங்கியிருந் தார்கள். ஷனகன் அவர்களுடைய பழம்பெரும் தோழன். எற் தத் தொண்டர் டப்ளினுக்குச் சென்ருலும் அவருடையூ, வீட்டுக் குத்தான் செல்வது வழக்கம், தொண்டர் படையின் சேஞதி பதிக்கு உதவியக் கடிதப் போக்குவரத்தைக் கவனித்து வந்த மைககேல் கொலின்ஸ் ஸ்க் கண்டு தான் பிரீனுக் s சமயம் விவாதம் செய்தார்கள். டப்ளினில் தங்குவதற்கு களுக்கு வேண்டிய உதவி செய்வதாய் கொலின்ஸ் மெக்களித் தான். அவ்வுறுதியைப் பெற்றுக் கெகண்டு அவர்கள் Copy a v sår ஸனையும், ஹே ஆனையும் அழைத்துக்கொண்டு *ருலகம் இ ை"து டும் தாட்டுப்புறம் சென்றனர்.
அச்சமயம் தான்பீரீன் ஒரு பாதிரியாரைப் போல ്'ഖു', போட்டுக் கொண்டிருந்தான். பல புரட்சிக்காரர்கள் ப? திரி வேஷம் பூணுவது அக்கால வழக்கம், அயர்லாந்தில் )Nearrs9 قnکہہ د பாதிரிமார்களிடம் பணிவுடன் நடப்பார்கள் ஆனல் புர.கிக் காரர் பலரும், ப7 திசீகளைப் பேல் மாறு வேஷம் கரித்து வரு கிற விஷயமும் அவர்களுக்குத் தெரியும். பாகை ஃன்ே ஒமை பாதிரி என்றும் யாரைப் போலிப் பாதி: என்றும் இம்புகிது? அவர்கள் ஒருவதையும் தடுத்துக் கேள்வி கேட்க so ti jsisë. ஏனெனில் உண்மைப் பாதிரியை வழிமறித்தால், வும் கோபமடைவார்கள். போலிப்பாதிரியை வழிமறித்தால் துப் பாக்கிக்குப் பலியாக நேரும்
ட ப்ளினில் இருந்தபோது ஒருசமயம் தான்பிரீன் ரேனுத் என்ற இடத்திற்கு போச நேர்ந்தது. வழியில் *வனுடைய சைக்கிள்களில் ஒரு சக்கரத்தில் கற்று இறங்கி றப்பர் சக்கரம் சிறிது கிழிந்தும் போய்விட்டது. அதை ஒட்டுவதற்கு றப்பர் துண்டும், பசையும் தேவைய? யிருந்தன. அவன் இசகதிஷ் கிடைத் குச் சென்று ஒட்டித் தரும்படி கேட்டான். சிலமணி தேரம் காத்திருந்தால் கான் முடியும் என்று கடைக்காரன் *? ఈ@ar. பக்கததில் மேனூத்துக் கலாசாலையிருப்பதாயும், அங்கே இளம் பாதிரிமார்கள் படித்து வருவதாயும், அவாகளிடம் போனஸ் ஒட்டித்தருவார்கள் என்றும் தெரிவித்தான். போலிப் “Altflussr தான்பின் உண்மைப் பாதிரியார்களின் GP7 67. Il ut- Ü un முடியும்? கடைக்காரனிடம் கோபப்பட்டுக் கொண்டு அவல் விெ யேறிஞன், சைக்கிள் திருத்தப்படா விட்டால் கொஞ்ச விரங்கூட போவது கஷ்டம். ஆதலால் மேற்கொண்டு எங்கே செல்வ. தென்று தான் பிரீன் யோசித்தான், ஆபத்துக் காலத்தில் பொவி
མ། བར་ན་ 6 མང་མང་།

Page 55
ஸாரே தனக்கு உதவி செய்வது வழக்கம் என்பது அவன் ஞாப கத்திற்கு வந்தது. உடனே பக்கத்திவிருந்த பொலிஸ் நிலையததிற் குச் சென் ருன் அங்கு சென்றதும் காவலிலிருந்த பொலிஸ்காரன் முன்ஞல் ஓடிவந்து "சலாம்" செய்தான். பாதிரியும் மிகந்த தா ராள சிந்தையுடன் ஆசீர் ஆதித்து, வந்த காரியத்தைக் கூறிஞன். உடனே பல பொலிஸாருமி ஓடி வந்து சைக்கிள் சக்கரத்தில் கிழிந்த இடத்தை ரப்பரை ஒட டிக் காற்றடைத்துக் கொடுத்த அர். அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, பாதிரி நிலையத்துள் சுவரில் ஒட்டப்பட்டிருந்த அச்சிட்ட அறிக்கைகளை யணனல் வழியாகக் கவனித்துப் பார்த்தான். அவற்றில் ஒன்றில் பினகண்டவாறு எழுதப்பட்டிருந்தது.
பொலிஸ் நிலையம் 1900 பவுண் இனும்
அயர்லாந்தில் கொலை செய்த கொலேகாரன் தேவை
Esige Sîrför IsfÝ såg utfalò ]
மூன்றுவது திப்பெரரித் தொண்டர் பட்டாளத்தின் தளகர்த்தர் என்று அழைக்கப்படுகின்றவர்.
வயது 27, உயரம் 5 அடி 7 அங்குலம், சிறிது கபிலநிறம் கறுத்த மயிர் முன்னல் நீண்டிருக்கும்), சாம்பல் நிறமான கண்கள், குட்டையான வளந்து மூக்கு தடித்த உருவம், கனம் சு:ர் 18 ஸ்டோன் (168 முததல்), முற்றிலும் கூடிவ ரம் செய்யப்பட்ட முகம், கோபமுள்? “ புல்டாக்" தோற்றம், வேலை செய்து விட்டு வருகிற கரும8 ன் போன்ற உருவம், தொப்பி நெற்றிவரை இழுத்து மாட்டப்பட்டிருக்கும்.
அதிகரக் கைது செய்வதற்கு உதவியாகப் “பொதுஉளழிய இலாக" வைச் சேராத எந்த நபராவது துப்புச் சொல்லும் பட்சத்தில் அலருக்கு மேற்படி பரிசு ஐரிஷ் அதிகாரிகளால் கெrடுக்கப்படும். தகவலை எந்தப் பொலிஸ் நிலையத்திலும் கொடுக்கலாம்.
அந்த அறிக்இைடைப் படிச்சூம் போது பாதிரி தான்பீரின் சிறிதும் சிரிக்கவேயில்லை. உள்ளத்தில தோன்றிய உவகையை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான். பிறகு பீலர்கள் செய்த உதவிக்குப் பலமுறை வந்தனம் கூறிவிட்டு, மெதுவாக வெளியே வந்து கம்பி நீட்டினன்.

3
பதில் ஆளுநரைக் குறிபார்த்தல்
நாக்லாங் சம்பவத்°லிருந்து அயர்லாந்தில் புரட்சிக்காரர்சளு 8ை.இ போராட்டம் தீவிரமாகி விட்டது. எங்கு பார்த்தாலும் கொண்டர்கள் ஆயுதங்களுக்காக கெர்ஸ்ளேயிட்டனர். ஊர்: லுக்காகச் செல்லு: பொலிசார் ஆங்காங்கே தாக்கப்பட்டனர். டப்ளின் நகரிலிருந்த இரசியப் போலி திஐ. சிளையும், சூதாடிக்க்ளவும் சாதாரண கலகக்காரர்? ஆளபு, சீண்டுபிடி ட்பதை விட்டு, அரசியல் 4 : திசுளயும் புரட் கி க்காரர்களேயும் பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் தங்களுடைய ஆப்பறியும் வேலைக ளுகதப் பழைய திருடர்களையும், தேற்றவாளிகயுேம insuras ளாகச் சேர்த்துக் கொண்டினர், ந*ளிர விஷ் ஸின் பீனர்களுடை: வீடுகளில் சோதனை பே7 டவும் , ஸின் பீஷ் புத்தகங்களையும், துண் G. Strnia &me. Gs si sui sa è *வர்கள் பட்டாளத்தார் கூடச் சென்று உதவி புரிந்து இந்த சீர்கள், டப்ளின் நகரிலுள்ள மக்கள் அனைவருக்ஆல் அவர்களைத் 9தரிநதிருந்த போதிலும், அவர்கள் அச்சமின்றி நடமாட மு:த்தது. ஒரு குற்றமும் செய் யாதவர்களு, வாழ்நாள் முேத இப்பாக்கிடிையே தொட்டறி பால்வர்களலான மக்களுடைய வீடுகளில் நாள் தவமு. சே8 து னைகள் போடப்பட்டன. இந்தி அற்பக் கொடுமைகள் மக்களை அரசாங்கத்திற்கு விரோதபாய்த் தாண்டிவிட்டன. ஐரிஷ்மொழி

Page 56
ttTS HLHLL L TLY LLLL LLL T L0LL TTTTS LLS0 T 0LtttLL Y SLEYLSLTL LLtttLL0z சளுக்காகப் பல ஆடவர்களும், பெண்களும், பையன்களும், சிறு மிடிஞரும் கூடச் சிறையில் அடைக்கபபட்டார்கள் தொண்டர்க னால் இக் கொடுமைகளைச் சகித்திருக்க முடியவில்லை.
1919 ஆம் வருடக் கடைசியில் நிலைமை மாறிவிட்டது. முதல் மையான இரகசியப் பொலிஸார் நடுத்தெ3 க்களில் சுடடுததன் பட்டார் 4ள். சுட்ட தொண்டர்கள் பகைவர்களிடம் சிக்கr மல் டிப்பிவந்தனர் பிற்காலத்தில் இரகசியப் பொலிஸ் வர் * கத்தையே அழித்து விடவேண்டு* என்று தொண்டர்கள் உறுஇ செய்தபின், அவர்கள் தங்கள் விகிகளில் வசிக்கமுடியவில்லை, தெருக்களில நடமாட வும் முடியவில்லை. கடைசியாக அவர்சள் அ னை வரும் டப்ளின் மாளிகை’க்குள்ளேயே பதுங்கிக்கிடக்க நேர்ந்தது. அங்கி *ந்து அவர்கள் வெளியேறுவதனுல் ஆ! சுந் த துகிய பட்ட எல்த7ருடன் வருத்தே ழைக்கம். அவாகளில் பலர் வேலையை ராஜினமா செய்தனர்; மற்றும் சிலர் புரட்சி: ஆாரர்களுடைய தொந்தரவுக்குத் தப்பி வாழமுடிந்தது; ஏனென் ருல் அவர்கள் புரட்சிக்காரருடைய வழிச்கு வருவதில்லை என்று அவர் ஆளுடன் ஒtந்தம் செய்து கெ ஒண்டிருந்தனர். பின்ஞல் பல 3: சி: :ெ லில: புரட்சிக்காரருடைய இ74சி: இலா கலர்ஸ் சேர்ந்து கொண்டு, தங்களுக்குக் கிடைத்த அரசாங்க ஆவணங்களையும் இக்கல்கின்:யும் கெடுததுப பேருதவி செய்து வந்தர்ே.
திப்பெரரயிலிருந்து வத்திருந்த தான் பிரீன் முதலான தான் வ ரும் டப்ளின் நகரில் நிலயாக் இருப்பதற்கு வேண்டிய வசதிகளைச் ஏெப்து கொண்டார்கள். அவர்களுக்கு நகரிலுள்ள சந்துகள், .ொந்துகள் உட்பட எல்லாப் பகுதிசளும் ந ைருய்த் தெரிந்தி ருந்த%ர எவ்விதமான மாறுவிேஷமும் அணியாமல், நினைத்த இடமெல்லாம் சுற்றித் திரிந்தனர். டப்ளின் பெரிய நகராதலால் அவர்கள் சுயேச்சையாகத் திரியவும், நண்பர்களைச் சந்தித்து மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றிக் கலந்து கொள்ளவுறு வசதியிருந்தது இரகசியப் பொலிஸாரின் தொந் தர கவச் சகிக்கமுடியாமல் தன் பிரின் கூட்டத்தார் ஒற்றர்களுக் குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்று தீர்மானித்தனர். அவர் கள் சில ஒற்றர்களைச் சுட்டுத்தள்ளிஞர்கள்; மற்றும் சிலரைத் ஆ°க்கித் துரத்திஞர்கள் தங்&ளத் தொடர்ந்து வந்தால், என்ன வெகுமதி கடைக்கும் என்பதை அவர்கள் செய்கையில் சுட்டி சூறாக்ஸ், பிறகு ஒற்றர்களுடைய இடையூறு குறைய ஆரம்பித்
سست 983 عینم۔
 

இது திப்பெரரியிலிருந்து சில ஒற்றர்கள் டப்ளினுக்கு வரவழைக் கப்பட்டிகந்தார்கள், அவர்கள்தான் ஸோலோஹெட்டக் ஆசாமி ச2ள எளிதாக அடைவாளம் கண்டு பிடிக்க முடியும் என்பது அர சின் எண்ணம். அந்த ஒற்றர்கள் வந்த சில நாட்களுக்குள் 447&.க்கற்று விட்டனர் அவர்கள் தான் பிரின் கூட்டத்தாரைப் பின்பற்றிச் செல்வது தங்கள் உடம்புக்கு நல்லகில்லை என்று கண்டுகொண்டனர் குளிர்காப்வதற்கு, நெருப்போடு ஒட்டியிரா மலும் வெகுதூரம் விலகிவிடாமலும் இருப்பது போல அவர் கள் தொண்டர்களிடம் நடந்து கொண்டனர், சில சமயங்களில் அவர்கன் தொண்டர்களை ஆெகு சமீபத்தில் கண்டு விட்டாலு . காணுதது போல் வெகு விரைவாகச் சென்றுவிடுவர்கள்
சிறிது காலத்திற்குப்பின் தான் பிரீனும் அவன் தோழர்களும் -ொலிஸ்காரர்களையும், சிப்பா ப்+ஆளயு. சுட்டுத்தள்ளி வந்ததீைப் பற்றி நீ.ே விவாதங்கள் செய்து வந்தனர். முடிவில் அது போதாதென்றும், வேறு சிலமுறைகளைக் கையாள வேண்டுபி என்றும் தீர்மானித்தனர். பெரிய அதிகாரிகள் பொலிஸ் "ரை நீ தங்களுடைய வில்லுக்கேற்ற அம்புகளாக உபயோகித்து வந்தால், எய்தவரை விட்டு அம்பை நோவதில் என்ன பயன்? சில பொலி ஸ ரைச் சுட்டுத் தள்ளிட்டால் அதிகாரிகள் வேறு சிலி சை நியமித்து விடுகிருர்கள். அதிகப் படிப்பில்லாத ஏழை மச்சி ஸ் ஏராளமாயிருக்கும் வரை தொப்பீயும் சட்டையும் மாட்டி சிவர் சளைப் பெ8 லிஸ் வேலைக்கு நியமிடபது எளித 7 கவிருந்தது மேலும், டொலிஸாருடைய உயிர் பலிவாங்கப் டுவதை இங்கிலந்து அதிகமாய்ட போருட்படுத்தவேயில்&. எனவே பெரி. அதிகாரி ளை வதைத்தால்தான் இங்கிலாந்து கண் பிழிக்கும் 8 ல் து புட் சிக்காரர்கள் தீர்மானித்தர்கள், அரசாங்க தலைமை அதிகாரி ஃந் டழி:ாங்கினல் தேசமெங்கும் தந்திகள் பறக்கு & லகமெங் கும் பததிரிகைகளில் செய்திகள் வெளிவரும்; சகல ந: ட டார்க ளும் ஐரிஷ் அரச க்கத்தில் ஏதே கோளாறு: ஜீ குட் & த கித் தெரிந்து ஜி4ாள்வார்கள் ஆங்கில அதிகரி ஞம் ராஜ தநகரின் ளும் துணுக்கமடைவார்கள். அயர்லாந்தில் ஆங்கில ஆடசி ஒழுங் காக நடேபெருமற் போகும் தொண்டர்கள் இவ்வறு பலவித மாக யோசனை செய்து, அயர்லாந்தின் பதில் ஆளுநர ன லோட் பிரெஞ்சைத் தாக்க வேண்டும என்று முடிவு செய்தனர். அ முடிவைப் பல முக்கியமான நண்பர்களுக்கு அர் விதது அவர் களில் சிலரை உதவிக்கு வரும்படிய: க் அழைப்டனுடபினர்.
லோர்ட் பிரெஞ்சைச் சுடுவது சாமானியபான விஷயமில்லே தரிசனம் கிடைப்பதே அரிது. அவர் வெளியே செலனும் பொழு
ܥܘܼܚ 99 -----

Page 57
செல்லாம் ஏராளமான பட்டாளத்தார் பாதுகாப்பிற்குச் செல் வது வழக்கம். அவர் ளங்கு எப்பொழுது செல்லப3:ாசிழுர் என்ற் விஷயம் இரசியமாக வைக்கப். டிருந்தது முக்கியமான விஷேசங்களிலும், விழாக்களிலும் அவர் அடிக்கடி கRந்து கொள் வதில் அல. இச்&ாரணங்களினுன் தான்பிரீன் கூட்டத்தார் அவர் சம்பந்தமாகத் தங்சளுடைய எண்ணத்தை நிறைவேற்ற முடி: வில்லை மூன்று மாத காலமாய் இரவு பகலாப் அகர் உள் திட்டங்கள் போட்டுப் பல இடங்களிலே அவரை எதிர்பார்த் ஆக் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய இரகசியத் தூதர்கள் ஒ: அ*ந்து பதில ஆளுநர் செல்லுமிடங்களைப் பற்றி விசாரித்து அறிவித்து வந்தனர். 1919-ஆ8 வருடத்தின் கடைசி மூன்று மாதங்களிலும் தொண்டர்கள் 12 இடங்களில் துப்பார்க்கி விளையும் வெடிகுண்டுக*யும் வைத்துக் கொண்டு காத்திருந்து ஏமாந்தி னர். பதில் ஆளுநர் வருகிற பாதையும் நாமுங் அவர்களுக்ே வெகு நன்ருப்த் தெரியும் எனினும் தில் ஆளுநா அவர்கள் சையில் சிக்கவி ஆல, ஏனென்முல் ஆஷர் கடைசி நேரத்தின் முன் ஞல் போட்ட பிரயாணத் திட்டங்களை அடியோடு மாற்றி விதி வார். தாம் செல்ல வேண்டிய இடங்களுக்கு மிசவும் காலதாமதி மாப்ச் செல்வார் அல்லது முன்னதாகவே சென்று வித்வார். சில் லது போகாமலே நின்று விடுவார்
பதில் ஆளுநரைத் தாக்குவதற்இாசச் செய்யப்பட்ட முதல" வது முயற்சியில் மைக்கேல் கொலின்ஸு: தான் பிரீனும் இதிேஜி னர். அவ்வாறே கார்க் நகரத் தொண்டா படையின் தளக*த்* வான டாம் மக்கள் டெயின் என்பருே பன்முறை கூட இருந்து உதவி புரிந்தார். (அவர் அடுத்த வருஷம் க?ர்க் நகர சபை த ஸ்லே வராக இருந்த பொழுது, பொலீஸார் அடிரை அவர் வீட்டில் வைத்தே கொலை செய்தார்கள். நவம்பர் மாதல் 1 -ல் திகதி யுத்த சமாதான தினத்தில் புதிய ஆளுநர் கலந்து கொள்வதற் காக டிரினிட்டி கலாசாலேயில் ஒரு பேரிங் விருந்து ஏற்:டு செய்யப்பட்டிருந்தது. தான் பிரீன் தனது தோழர்களு" என் கிரட்டின் பாலத்தருகில் சென்று காத்துக் கொண்டிருந்தான். அந்தப்.: ல8 பதில் ஆளுதர் கலாசாலைக்குச் செல்லக் கூடிய பாதையின் த ன் இருத்தது தான்பிரின் ஏராளமான வெடிகுண்டுகரைத் தோழர் 8 விடம் கோடுத்து வைத்திருந்தான். பதில் ஆளுநருடைய கr" வரவும் குண்டுகளே அதன் மேல் எறிற்து க்ா தரவே தவிடுபொ: பாக்கி விடவேண்டும் என்று அவன் ஏற்பாடு செய்திருந்தான் ஆனுல் பதில் ஆளுநர் வரவில்லை. அவர்கள் குண்டுகனேக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்ததுதான் மிச்சம்.
-- 00 a

அக்காலத்தில் பத்திரிகைசளுக்குக்கூட பதின் ஆளுநரின் சுற் றுப் பிரயாணத்ளதப் பற்றி உண்மையான விவரங்கள் கிடைப்ப தில்ல. அதிகாரிகள் பொய்ச் செய்திகளையே பத்திரிரதிகளுக்கு அறிவித்து வந்தனர் பதில் ஆளுநர் கடற்கrையிலிருக்இம் பொ முது. தட்டுப்புறத்திலிருப்பதாகப் பத்திரிஇை&ளில் செய்தி வரும் தொண்டர்கள் இதை நம்பாமல் தங்களுடைய இரகசிய இலாகா வின் உதவியால் உண்மையான தகவல்க ைஉடனுக்குடன் தெரிந் துகொண்டிருந்தனர். 1919 டிசம்பர் மாதத்தில் பதின் ஆளுநர் வட சட வில் ஒடம் விட்டு உல்லாசமாக வாழ்ந்து வருவதாகப் பத்திரிசைகளில் செயதி வந்தது. ஆனல் உண்மையில் அவர் ரோஸநம்மன் என்னுமிடத்தில் தமது நாட்டுப்புற பாரிசையில் வசித்துக் கொண்டிருந்தார். அங்சிருத்து அவர் டப்ளினிலுள்ள தமது "வைஸ்ரோய் மாளிகை"ச் குத் திருப்பும் பொழுது பீனிக்ஸ் தோட்டத்திலேயே அவரை தாக்க வேண்டுமெனறு முடிவு செய்யப்பட்டது. பீனிசஸ் தோட்டத்திற்கு அருகே ஆஸ். வுன் ரயில் நிலயத்தின் பக்கத்திலே அவரு.ைய காரை கிறிக் ஏ,ம் பாடு செய்யப்பட்டது.

Page 58
14
ஆஷ்டவுனுக்குப் பின்னுல்
ஆஷ்டவுனில் பதின் ஆளுநரைச் சுட்டு வீழ்த்துவதற்காசச் செய் 'ப் பெற்ற போராட்டத்தைப் பற்றி முதல் அத்தியாயத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அப்போராட்டத்திற்குப் பின்னல் காய மடைந்த தான் பிரீன் தோர்களுடன் சைக்கிளில் விரைவாக வந்து ட வின் நகரத்தின் வடபாகத்தில் தங்கியிருந்தாள். மற்ற நண் டர்களே பல இடங்களுக்குப் பிரித்து அனுப்பிவிட்டான். பிறகு பிப்ஸ்பரோ விதியிலிருந்த திரு தி டூமி அய்மாளுடைய வீட் பு: ல் அவன் தங்கி வைத்திய சிகிச்சை பெற்று வந்தான். ஜே. எம். ரியான் என்ற பெரிய வைத்தியரு: , மேட்டர் ஆஸ்பதி திரியிலிருந்து மக்ருெரு வைத்திரும் அடிக்கடி அலக்னக் கவ னித்து வந்தனர். டூமியின் அன்புக்கு அளவேயில்லை. அவள் ஜீமைகள் கண்ணைக் காட்பதுபோல , தான் பிரிக்னக் காத்துவந் தாள். கனன் பிரின் படுத்த கட டிலே விட்டு எழுந்திருக்க முடி யாத நிக் யில் மிகவும் தளர்ச்சியடைந்திருந்தான்.
ஆஷ். வுள் சம்பவத்திற்குப் பின்ஞல் லோர்ட் பிரெஞ்சைச் சுடுவதற்கு வேறு சந்தர்பபம் வாய்க்கவே இலக்ல. அவர் பொது வாழ்க்கையிலிருந்து அடியோடு விலகி விட்டார். எந்த விசேஷத் திலும் அவர் பொது மக்கள் முன்னிலையில் தோளறுவதல்ல

மாளிகைக்குள்ளேயே அடைந்துகொண்டு கிடந்தார். கடைசி யாக அவர் சீமைக்குச் செல்லும் பொழுது கூட ஆயுதந்தாங் திய வீரருடன் பல மோட்டார் கார்கள் வீ தி யி ன் இருபுறங் களிலும் பாதுகாப்புக்காசச் சென்றுகொண்டிருந்தன. பல லாயி ரம் சிப்பாய்கள் ஒழியெங் தம் அணிவகுத்து நிறைனர். கப்பலி றும் அவருக்குப் பந்தோபஸ்து அதிகம், சீமைக்குச் சென்ற பின் னும் அவரை ஆயுதந்தாங்கிய இரகசிய பொலிசர் காத்து வந்தனர்.
டப்ளின் பத்திரிகைகளின் கீrசகத்தைப் படிக்கு: பொழு தெல்லாம் தான் பிரீன் ம ன க் கொதிபபடைந்தான். அ  ைவ தொண்டர்களுடைய செய்கைகளை, முக்கியமாக ஆஷ்டவுன் போராட்டத்தை வெகு இழிவாகக் கண்டித் ஈ வசைசாரி 'பொழிந்துவந்தன. ஒவற்றுள் "ஐரிஷ் ரைம்ஸ்" என்ற ஆங்கி லேடீருடைய பத்திரிகை ஒன்று. அது தன் இனத்தாரையே ஆத ரீத்தேழுவது இயற்கை "பீரீமன்ஸ் ஜேர்னல்" என்ற பததிரிகைை புரட்சிக்காரர்கள் சையில் எடுத்துப் பார்ப்பது கூடக்கிடையாது, ஆஞல், "ஐ ஷ் இன்டிப்பென்டென்ட் ஐரிஷ் சுதந்திரt ) என்ற பத்திரிகை ஐரிஷ் மக்களின் பண உதவியால் அவர் 8ளுடைய தன்மைக்காகவே நடத்தப்படுவதாய்ச் சொல் லப்படடு வந்தது. அப்பத்திரிகை ஆஷ்டவுன் போராட்டத்தைப் பற்றி எழுதும் பொழுது, "கொலைகாரர்கள், கொடுங் குற்றம், அக்கிரமம், படு கொலை முதலிய கடுமையான தங்கள உபயோகித் திருந்தது. அவற்றைக கண்ணுற்றவுடன் அப்பத்திரிகைக்கு ஒரு பாடம கற் பித்து அதன்மூலம் மற்றப் பத்திரிகைசளும் திருந்தும்படி செய்ய வேண்டும் எனறு தான்பிரின் தீர்மானித்தான். அடபொழுது அவன் படுத்த படுக்கையாய்க் கிடந்ததாலே, மற்ற நண்பர்கள் அவ்வேலையை மேற்கொண்டனர். தேசத்திற்காக மார்ட்டின் சவேஜ் உயிர் நீதது அவனுடைய சரீரத்தை அடக்சஞ் செய் வதற்கு முன்ஞலேயே, "இன்டிப்பென்டென்ட் அவனுடைய ஆன் மாவைப் பழித்துக் கூறியதற்குப் பழிவாங்க வேண்டும் என்று அவர்கள் துணிந்தனர். அப்பத்திரிகையின் ஆசிரியரைச் சுட்டுத் தள்ளிவிடலாமா என்று யோசிததனர். பின்னர் அது வேண் டாம் என்றும் பத்திரிகையைக் கொஞ்சம் அடக்கி வைத்த9 லே போதும் என்றும் முடிவு செய்தனர்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு பீடர் கினான்ஸி பின் தலைமையில், சுமார் முப்பது தொண்டர்கள் "இன்டிப்பென் டென்ட்" காரியாலயத்தை நோக்கிச் சென்றனர். அங்கு சென் றதும் வேல் செய்துகொண்டிருந்த தொழிலாளர்களையும் எழுது
معهد 9 سص.

Page 59
வி%னஞர்களையும் எழுந்து விலகி நிற்கும்படி உத்தரவிட்டார்கள் துப்பாக்கிகளைக் கணடதும் எல்லோரும் வாய்பேசாது உத்தர வுக்குப் பணிந்து நின்றனர். ஆசிரியருக்கும் அதே கதிதான் நேர்ந் தது. தொண்டர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த அச்சு யந்திரங் தளையும் எழுத்துக்கோர்க்கும் யத்திரங்களேயும் தகர்த்தெறிந்தனர் மறுநாள்முதல் பத்திரிகை நடக்காமல் இருப்பதற்கு எவ்வளவு இடையூறு செய்யவேண்டுமோ அவ்வளவையும் செய்துவிட்டு, அவர்கள் வெளியேறிச் சென்றனர். ஆணுல் மறுநாள் பத்திரிகை வெளிவந்து விட்டது அதன் ஆசிரியர் வேறு அச்சுக்கூடங்களிள் உதவியல் அதை வெளியிட ஏற்ட2:சடுகளைச் செய்தார். "இன்டிப் பெண்டென்ட்" ட2த்த கோலயத்தில் வேலை செய்து கொண்டிருந்த இவர்களில் பலர் புரட்சிப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள். அவர் கள் த**ஃ?ச் சேர்ந்த தொண்டர்கிள் வந்தவுடன் அவர்களோடு ஒத்துழைப்பதுபே7ல், எதிர்காமல் பேசா திருத்துவிட்டனர். எனி னு ,ே ஆசிரியர் அவர் அஜில் 4: அரபு: ைேலயில் இருந்து நீக்க வில்லை).
*ஜ் ஸ் டி : பென் டென்ட் தாக்கப்பட்டதிலிருந்து மற்றப் பத்திரிகைகளெல்லாம் நல்ல பாடத்தைக் கற்றுக் கெ: ண்டன அதன் பிறகு டப்ளின் பத்திரிகை எதுவும் தொண்டர் ஞடைய செய்கைகளைப் பற்றி அவதுருக எழு ஆ&தில்லை. "இண்டிபபென் டென்ட்" பத்திரிஜக கூட நாளடைவில மறுத8டைந்து, பிற் காலத்தில் பிரிட்டிஷார் செய்த கோடு.ை&ல்ceயெல்லாம் கண் டித்து ந்ேதன.
மார்ட்டின் ஸாவேஜினுடைய பிரேத விசாரனேக்குப் பிறகு சரீரம் அவன் உறவினரிடம் கொடுக்கப்பட்டது. டப்ளினிலிருந்து ம: த கோயில்களின் அதிகரிகள் அ.பிரேதத்தைத் தங்கள் இடு க ச டு ஜிவில் புதைக்கக்கூடாது என்று தடுத்துவிட்டனர் பின் னர் அச்சடலம் பல விசிஸ் டேர் என்னும் இடத்திற்குக் கொண்டு போ கபடிட்டது. அதுதான் ஸஈஸ்ேஜின் ஊர். அங்கு மக்கள் பிரேதத்தைத் தொடர்ந்து பல:ேல் நீளமுள்ள ஊர்வலமாகச் சென்றனர். அவ்வூர்ப் பாதிரியார் சவக்குழியின் பக்கததில் நின்று கடைசிப் பிரார்ததனையைக் கூறிஞர், வி. பொழுது பல ஐரிஷ் கொன்ஸ்டபிள்கள் உருவிய கத்தியும், நீட்டிய துப்பாக்கியுமாகக் குழியைச் சுற்றி நின்றனர். கலவரமேற்படாமல பாதுகாப்தற் கக3ே; அவர்கள் அனுப்பப்பட்டிருந்தனர்.
சில நாட்சஞக்குப் பின் ஞல் தான்பிரின் டூமி அம்மையாரின் வீட்டிலிருந்து புறபட்டு கிரந்தான் தெருவில் 13ஆம் எண்ணு
- 4 -

டைய வீட்டிற்குச் சென்று "வசித்துவந்தான். அங்கு மலோனும், அவருடைய மனைவியும், இரண்டு பெண்களும் தங்கியிருந்தார்கள்.
மலோன் 1918ஆம் ஆண்டு சஸ்டர் கலகத்தின் போது போராட் டத்தில் தமது மனை இழந்தவர். அதுமுதல் களவனும், மனை வியும் இதர தொண்டர்களைத் தமது மகன் மைக்கேலைப்போலவே பாவித்து அன்புடன் ஆதரித்து வந்தனர். சிலநாட்கள் கழிந்த பின் தான்பிரின் டிரீஸியையும், ஹோகனையும் அங்கு அழைத்து இந்து மலோன் குடும்பத்தாரை அறிமுகம் செய்துவைத்தான். மலோகனின் பெண்களான பிரிஜிட்டும். எயினியும் பெண்களுடைய சுதந்திரச் சங்கத்தில் அங்கத்தினராக இருந்து தீவிரமாக வேலை செய்து வந்தவர்கள். அவர்கள் தான்பிரினுடைய தபால்களே விநியோகம் செய்வதற்கும் அங்கிருந்து திப்பெரிக்கு அனுப்ப வேண்டிய வெடிமருந்தையும் துப்பாக்கியையும் கிங்ஸ் பிரிட்ஜ் ஸ்டேஷனுக்குக் கொண்டுடே ய் ரயிலில் கச்னுப்புவதற்கு மிக்க உஆவியாயிருந்தனர். தான்பிரின் ஆன் கையில் கிடைக்கும் சகல ஆயுதங்களேயும் தோட்டக்களையும் உடனுக்குடன் திப்பெரரிக்கு ஜ்னுப்பி விடுே *ழக்கம் அங்குள்ள சில விய8 : ரிகளுடைடி வில்சசங்களுக்கே அவன் அனுப்புவரின் விடிா.ாசிகளுக்குச் சாமன் வருகிற வி:ாம் முன் கூட்டிம்ே அறிவிக்கப்படு: சாக் *சர் அந்த* சாமா? பெட்டிகளில் பற்றிச் சநதேகமே கொள் ஆதில்ஃ.

Page 60
血5
மீண்டும் திப்பெரரி
920 ஆம் ஆண்டு ஆரம்பத்தில்தான் பிரீனு~ை& ஃ:* குண மஈ.ந்து ந்ேததால் அவள் சென்ற ஆண்டின் நிகழ்ச்சிகளை பற்றிச் சிந்தனை செய்யப் போதிய ஓய்விருத்தது.
ஸோலோஹெட்பக்கில் டோர். ப்பட்ட வித்து முக்ாவிட்டு வளர்ந்து பலன் கொடுத்து வந்தது புரட்சிக் %ாரியங்களை பற்றி மக்களும் தொண்டர்களும் தன்ருய்த் தெரிந்துகொள்வதற்கு அரசாங்க அறிக்கைகள் மிகவும் உதவி புரிந்தன. "அயர்லாந்தில் செய்யப்பட்ட குற்றங்கள்" என்று பிரிட்டிஷ் சர்க்கார் வெளி பிட்ட அறிகைகளில் புரட்சிக்காரருடைய செய்கைகளே வரி LTLtL0T TTTSTTTTL S S LLLLtCT SLLTTTTTLLTS LLLLT LHT TTLLL S SLLSLLLLLL தியில் தொண்டர்களுடைய சூரத்தனங்கண் விவரித்தன.
இங்கிலாந்து வெளியிட்ட அறிக்கைகளில் தன்னுடையடட் ட*ளங்களும் பொலிஸும் செய்த குற்றங்களையும் கொடுமைகனே யும் சிறிது கூ.ே வெளியிடவிலகில எத்தளே நிரபராதிகளுடைய வழிகள் நள்ளிரவில் சோதனையி.ப்பட்டன. ஒருடாவமும் அறி பாத மக்கள் எத்தனைபேர் சிறையிடப்பட்டனர் துன்புறுத் தப்பட்டவர் எத்தனை வர்களில் ராணுவச் சடடம் அமுல் செப்

ஈப்: த எத்தனை சங்க்ங்களும் கூட்டங்களும் சட். விசோ தானவை எனறு கூறப்பட்டன. இவற்றையெல்லாம் சசிக்ாேரி கூகி கிறகு அறிவிக்க வெட்கப்பட்டு மெளனமாக இருந்தவிட, 4.து. அயர்லாந்தின் உண்மைப் பிரதிநிதிச்துவமுள்ள ம  ெ (சும் சடையான .ெ பில் ஐரான் சட்டவிரோதமான சபை என்று விளம்பரப்படுத்தப்பட்டது கெயி லிக் மொழி அபிவிருத்தி இங்கம், பெண்களின் தேசிய சங்கர், ஐரீஷ் தொண்டர் பன். ஐரிஷ் வ*விபச் ச?ரணர்படை முதலிய யாவும் சட்டவிரே"த மன சபைகள் $சன்று விளம்பரப்படுத்தப்பட்ட ன. சுருக்கம” ப்ச் சொன்னல் ஐரீஷ் தலைவர் ஆதர் கி சி பி த கூறியது பேல் 'ஐ*ஷ் ஜன சமூகம் முழுமையும் சட்டவிரோதமான கூட்டல்" எ*து விளம்பரப்படுத்தப்பட்டது
மேற்சொல்லப்பட்டதில் இருந்து பிரிட்டிஷ் சர்க்க*ர் அயரி லாத்தில் சகல கொடுமைகளையும் செய்து தீர்த்துவிட்டத"க zT TLSekMTLSTTT LL LLLTLSS STSMMT SS S Y0T TeTT LLLSTTT LLLT LLLLLL LTTS கிள் செய்யாமல் பாக்கி வைத்திருந்தனர். பின் ஞல் படி படி
பாக அவர்கள் எதற்கும் துணிந்து முன்வந்து விட்டார்கள்.
1987ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தான்பிரின் மலோனுடைய வீட் டிலிருகுே .ொழுதே முதலாவது "வரடங்குச் சட்டம்" அமு லுக்கு வந்தது. அவ்வருடம் பெப்ரவரி மாதம் ஒருநாள் நள்ளிரவின் ஒரு பொலிஸ்காரன் ஐரிஷ் கொண்டர்களை எதிர்த்த சி.ஈ.ஓ கிராட் டின் தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டான். உ.னே பிரி. தி ஷார், |4ட்டாலத்தைத் தவிர வேறெந்த மக்க ளு க் இரவு 2 மணிக் ஆம் காலை 5 &ணிக்ஷ்மிடையில் வீட்டை வி.ல்ே லெளியேறக் கூடாதென்று உத்தரவிட்டார்கள் சில மாதங்: Oல் *ந்த உத் தரவு தென் அயர்லாந்திலுள்ள பல கிராமங்களிலும் தகரக் களி லும் அமுலுக்கு வந்துவிட்டது. அத்துடன் அது ந7ளுக்கு நாள் மிகக் கடுமையாகவும் செய்யப்பட்டது. லிமெரிக்கில் இரவு 7 மணிக்கு மேன் யாரும் வெளியேறக்கூடாது என்று உத்தர விடப்பட்டது கார்க் நகரில் கொஞ்ச காலத்திற்கு மாலே 4 மணி க்கு மேல் உத்தரவு அமுலில் இருந்து தெருக்* எரில் பார் சென்ற போதிலும் அதிகாரிகள் அவர்களேச் சுட்டுத்தல் விரி வந்தார்கள் இவ்வாறு 1920-21ல் நூற்றுக்கணக்கான ஆடவரும், டேண்டிரும் குழந்தைகளும் ஈடுத்தெருக்களில் படுகொலை செய்யப்பட்டர்ை. பட்டாளத்தார் செய்த விக்கிரமங்கக்ள யாரும் தெரிந்து கெrல் எ7

Page 61
மலிருந்தது. ஏனெனஜ் &rr நடக்கும் otimp să "கேர்பியூ **நீரவு அமுலில் இருந்தது
1920-ஆம் 6avCI56ngub *சந்தகாலத்தில் காரி பிரினுக்கு ஒரு பெரும் Jinréiš Kuu கிடைத்தது. Tu?li si: gage துளிதன் விழுந்து குளிர்ச்சிய யுள் தrா மலைப்பிரதேசத்தில் அவன் சில நாள் Az54kuas நேர்ந்தது. நெருக்கமான -வின் நகர ஒத் கிரந் திான் தெருவில் வசித்ததற்கும் *8*லயடிவாரத்தில் வசிதி அதற்கு: மிகுந்த சிேற்றுமை இருந்தது தாரா கிகியிலுள்ள பகத்தே. '-த்தில்தான் **#க ஐரிஷ் அரசர் "சிந்த காலத்தில் இங்கு து முக்கம். ஆன்டி அங்கு சென்ற முகல் ந7ளே குன் றின் மேல் 9றி அதன் உச்சியில் ஒரு சேணி நேர, தின் சுற் ரிஅமிருந்த இயற்.ை வண.பைக் சண்ணுரட பருகிக்கேண் டிருந்தான், அந்நேரத்தில் Luepuu ggfey Gerri 95 h7 ஃற்றியும் கேத்திரத்துடன் சிகாலுவீற்றிருந்த *னங்க" முடி மன்னர்க: ufsíðar. அயர்லாந்தின் *ேசியக் கொடி ''' attar G is கொண்டு கோயத்தில் துலங்ஓக் சோண்டிருந்ததைப் էմք միn:h. பின்னல் *யர்லாந்தின் மக்கள் அடிமை விலங்குகளால் பிணி. lear() கிடந்ததைப் சிற்றியும், *க் பத்தில் வி affing) சிடிமைத்தனத்தின் துர்நாற்றக் நாறியதைப் பற்றியும் ஆன் உள்ளத்தி, அஜல அது பாதுப் பல லண்ணங்கள் எழுந்தன. துல் Safleär Guoa பழம் பெருமையைக் காட் டக்கூடிய ஒரு பெரு இதம் காணப்படவில்ஆ. மின்னர்கள் வசித்த அரண்மனெகன் புன: மேங்களாகிவிட்டன. எல்லா 48க்தொழிந்து விட்டன. ஆனுள் அயர்லாந்தை எதிர்த்த ைெற்றி இெரண்) ஆங்கிலப் ஐகவும் கிளின் சிப் :) அவ்விடத்தி: 3. in targ இறந்ததற்கு அறி குறியாக ஒரு சிலுவை tot GB) நடப்பட்டிருந்தது. அவ்விடத் தில் 1898-ஆம் ஆண்டு அயர்லாந்தின் சுதந்திரக்தைக் விாட்பதற்
விக் குறியாக விளக்கியது. கான்பிரின் அவ்விடததில் முழங்காற் பணியிட்டுக் கொண்டு lu6opupalo gifloro வீரர்களுடைய ቆ56w@፡
ወbዚዛዪጭur፱ፊይSá፡ uropiu basrpruara, மாளிகைச்தப் பதி லாச நாட்டைப்பிடித்துக் கொண்ட *ந்நியருடைய கோட்ட
ܚܙܝ 108 --

களோ காணப்பட்டன. அங்கு குடியானவர்களே São D. ano யிடையே தொழிலாளர்களுடைய குடிசைகள் சில கைதானங் களின் மத் தி யி ல் இருந்தன. வீதி வில் ஐக்சளுடையூ ந. மாட்.மேயில்லை. அரசர்சளுக்கும் குடியானவர் ஞக்கும் பதில7 கக் கொழுத்த மாடுகளே அங்குமிங்கும் ஒடிக்கொண்டிருந்சன. அந்த மாடுகளும் ஆங்கிலேkரின் உணவுக்காக வளர்கீகப் பட்டஇை!
கோடைகாலம் நெருங்கி வந்துகொண்டிருந்தது, தான்பிரின் உ.* பு முற்றிலு:* குணமாகி மீண்டும் வேலைக்குத் தய"ராப் விட்டாள். தேசத்தின் நெருக்கடி அதிகமாகி விட்டது. பத்திரி விக களில் மனம் பதிறக்கூடிய பல செய்தி கன் வெளிவந்தன அச்சடி தில் அவன் போராட்டத்தின் மததி பீல் நில்லது ம* படி வாரத்தில் பொழுது "ேக்கவிரும்பவில்லை. ஐந்தாறு மாதங் சளுக்கு முன்னுல் டப்ளினி & லோர்ட் பிரெஞ்சைச் சுடு இதற்கு ஆ$படலசமயம் தான் பிரினுடன் காத்துக்கொண்டிருந்த கார்க் ந*ர மே8ரான டாம் மக்கர் டெயின் என்பவர் அவருடைய வீட்டிலேயே அவரது மனைவியின் முன்னுல் பிரிட்டிஷாரால் கொலை செய்கிப்பட்டார். தர்லஸ் நகரிலும் இதுபோல இரண்டு மூன்று கெ" ஜேகள் செய்யப்பட்டன. இவற்றை கேட்டபொழுது க*ன் offspJ60 - au 9 prá45à கொதித்தது, போர்! போர் என்று தில: னுடைய உள்ளம் துடித்தது. உடனே டட்னிறுக்குச் சென்று, TLT T DTTLLLLLLLLtttLLtL aaL TT S TTT0T TLLt ttTTTLLS LLTTLS SeYLL ஆரம்பிக்: வேண் நிம் என்று வற்புறுத்தின்ை. "டிக் மக்கீ, பீடர் கிளான் வி முதலியேர் அவனை ஆதரித்தனர். ஆனல் டேயில் ஐாானே. தொண்டர் படையின் தலைமை அதிகாரிகளோ தான் பிரிக்ன ஆதரிக்கவில்லை. மைக்கேல் கொலின்ஸ் மட்டும் கொஞ்சஜ் ஆதரவு காட்டினன்.
உண்மை என்னவென்முல் தலவர்களுக்குக் தீவிரமான எந்த வேலையும் பிடிக்கவில்லை. தொண்டர்கள் தங்களுக்கும் அவர்களுக் கும் இருந்த வேற்றுமைகளைப் பகைவர்களுக்குத் தெரியும் படி யாக வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
பொது மக்களும் யுத்தத்தை விரும்பவில்லை. 1918ஆம் ஆண்டு கடந்த பொதுத் தேர்தலில் அவர்கள் கொடுத்த வாக்கினவேயே

Page 62
இ4*ரன்ை ஏற்படுத்து இதற்கு முடிந்தது என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். பொலிஸாரைத் தாக்குவதால் சட்ட விரோத உத்தரவுகளும், கைது செய்வதும் மேலும் அதிகரிப்பதைக் கண்டு அவர்கள் அஞ்சினர்கள்.
த”ன்பிரீன் . ப்ளினில் அதிக நாள் தங்க விரும்பவில்லை. விரைவாகத் தி:பெரரிக்குச் செல்லவேண்டும் எனறு தீர்மா னித்தான் அங்கு தொண்டர்கள் எதற்கும் தயார யிருந்தபோதி அம் என்ன செய்வதென்று தெரியாமல் திசைததுக் கொண்டி ருந்தினர். அவர் *ளுக்கு ஒரு தக்வன் வழிகாட்ட வேண்டிய அவசியம் இருந்தது. ஆதலால் தான் பிரீனும் டிரீளியும் நூறு மைல்கள் சைக்கிளின் பிரயாணம் செய்து திப்பெரரியையடைந் தனர். பன்னிரண்டு மாதங்களுக்கு பிறகு தான்பிரின் அப்டொ ழுதுதான் திப்பெரரியை மீண்டும் கண்ணுற்ருன்.
O

16
புதிய போர்முறை
1920 ஆம் வருஷம் ஆரம்பத்தில், அயர்லாந்து பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் நிச்சயமான போர் தொடுத்துவிட்டது என் பதை உலகத்திற்கு அறிவிப்பதற்காகத் தொண்டரீகன் புதிய போர் முறையைக் கைக்கொண்டனர். அவர்கள் போவிஸ்காரர் கள் தங்கியிருந்த படைவீடுகளைத் தாக்கித் தேசம்முழுதும் சூழப் பத்தை உண்டாக்கி வந்தனர். அக்காலத்தில் பீலர்கள் வார்க் காவலுக்காகச் சுற்றுவதை அடியோடு நிறுத்திவிட்டனர். அவர் கள் வெளியே சென்ருல் உயிருடன் திரும்புவது நிச்சயமில லா மல் இருந்தது. அவர்கள் தங்கள் படைவீடுகண் விட்டு வெளி யேறமுடியாமல் உள்னே அடங்கிக்கிடந்தனர். தொண்டர் ஆள் aLTtLLLLLLLLS LLLLLLTTTSS S tStSTLTLLS TLTTTTTTLL LLLLLLTT LLTLLTT TT LTS LLLLL LL0LLLTLLS TTTT TTLL TTLTLT TTTLSSTLT OTTLLL STT ( ' என்று தீர்மானித்தனர். பட்டிகளிலும் சாக்லபடிறங்களிலும் துருந்த படைவீடுகளையெல்லாம் காலி செய்து பெரிய படைவீடு களில கூட்டங்கூட்டமாக வசித்து வந்தனர். தொண்டர்கள் தள் களே எளிதில் வெல்ல முடியாதபடி ஏராளமான Slike Gård சேகரித்து வைத்துக் கொண்டனர். வீடுகளுக்கு இருமடிக் கதவு கள் போட்டுக் கொண்டதுடன் சுற்றிலும் முட்கர் பி வேலிகளும் அமைத்துக்கொண்டனர். அந்தச் சமயத்தில் கொண்டர்களிள்

Page 63
TYTLLLHH LLLLLS TLTLSLLELETT 0LTT TLSLLLTTTLTG THLTLTTLLLLSS 0LLL கன் காலிசெய்த ஆயிரம் படைவீடுகள் ஒரே நாள் இரவில் அக் கிணிக்கு இரையாக்கப்பட்டன. அவற்றைத் தொண்டர்கள் ரன் எரித்தனர் என்ருல் பின்னல் பட்டாளத்தாரு பீலர்களும் அவற் றில் வந்து தங்க இடமில்லாமல் செய்ய வேண்டும் என்பதற் காகவே.
அற்தச் சமயத்தில் பீலர்கள் தாங்கள் பொலிஸார் என்பதை அறவே மறந்து விட்டனர். போலிஸாரி பொது மக்களைத் துன்புறுத்தாமல் அவர்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட் டவர்&* ஆவர். ஆனல் அடிமை நாடுகளில் பொலிஸார் கட மைகளை கைவிட்டுத் தேசபக்தர்களே அந்நிய அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்து உளவு சொல்வதையும், சுதந்திரக் கிளர்ச் சியை அடக்க ஆயுதந் தாங்கிய டட்டாளத்தாரைப்போல் சண்டை சேய்வதுைமே கடமையாகக் கொண்டிருப்பார்கள், சுருங்கச் ச்ொன் ஞல் ஐரிஷ் பீலர்கள் ஒற்றர்களாயிருந்தனர். அல்லது பட்ட ஓரத்தாரைடபோல யுத்தமி செய்துவந்தனர். எனவே மக்கள் சிந் நி (ப அதிகாரிகளின் ராணுவத்தாரைப் பகைத்த ஆதக் காட்டிலும் தங்கள் கூட&ேயிதுநது கொள்ளி லுைக்கு: பீலர்களை மிக அதிகமாய்ப் பல்கத்தன்ர் தோண்டர்களும் பீலர் களுடைய வட சீத் அ4:தக் கருவறுத்து விடவேண்டும் என்று முற பட்டனர். பீலர்கள் எந்தெந் ஐக் கிராமத்துத் விட்டு வேளியே pணுர்களே ஆங்க்கர் லாம் தொண்டர்கள் தங்க ளு  ைடய பொலிஸை நியமித்துக் கொண்டு திருடர் &ளயும் கொண்க்ளக்கr ரர்களையும் அடக்கி வந்தனர். சத்தப் பீலருக்கும் பயப்படாத கொள்ளக்காரர்கள் தொண்டர்களுடைய பொலின் படைக்கு அடங்கி ஒடுங்கிக் கிடந்தனர்.
ஐரிஷ் பொலிஸார் மக்களைத் திருடரிடமிருந்து பாதுகாக் கும் கடமையை கைவிட்டதோடு நிற்கவில்லை. தொண்டர் படை யினர் க்ளவு முதலான குற்றங்களைச் செய்தவர்க:ேக் கைது செய்தால் பொலிஸார் அக்குற்றவாளிகளே விறலே செய்து விட்டு, அவர்களேப் பிடித்த தோண்டர்கனேயே தண்டித்துச் ஜூறை&ளில் போட்டு வந்தனர். அக்காலத்துப் பத்திரிகைகளில் இது சம்பந்தமான செய்திகள் அடிக்கடி ஆெளிவந்து கொண்டி ருந்தன. மீத்தலுகாவில் ஒரு முன்னுள் பிரிட்டிஷ் சிப்பாய் பயங்கர் மான ஒரு கோலையைச் சேய்து விட்டான். பொலீஸ் சர் அவனைக் ஷீ இது செய்து விசாரணையில்லாமலேயே விடுதல் செய்து விட்ட னர். தொண்டர்கள் கையில் அவன் விக்கிவிடாமல் தேசத்தை
- 3 -

விட்டு வெளியேறி விடும்படியும் அவர்கள் புத்தி சொல்வியும் அனு பினராக் ஆனுல் அந்தி ஆங்கில சிப்பாப் பொலிஸாரிட மிருந்து விடுதலையடைத்தி ஐந்து நிமிஷத்திற்குள் தொண்டரி ஆனால் கைது &ேய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டான்
அதே சமயத்தில் தான் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்தை அடக்குதற்க்கப் *பிளாக் அண்டு டான்ஸ் if - -?? 6m75m riř அனுபடப்பட்டனர். அவர்களுக்க இந்த விசித்திரமான பெயர் எப்படி வந்தது என்பதே ஒரு விசித்திரத்தான் "பிளாக் அன்று é osir so" பட்டாளத் கார் எமது தர்களுக்கு திரானவர்கள் 1989 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பல ஐரிஷ்காரர்கள் பொவில் ப&டயிலிருந்து வி:விட்டதால் அஷ்ர் சஞக்குப் பதிலாக ஆங்கி லேரைச் சேர்த்து அனுப்பு படி ஸர் கமார் கிரீர்வுட் என்ப வர் ஆஷ்கில அரசாங்கத்திற்கு eேr & சோன்ஜர் கிரீன்வு. டின் நோக்கம் ஆயிரக்கணக்கான : 1.*ளங்*** கொண்லு *8ர்லாந்தில் ச$க்கமுடி: த கே: இ ைமக*ச் செய்து அடக்கி வி.வேண்டும் என்பதே. திய : டானத்தில் (Festir அயர்லாந் இஜ் ஆள் கிடைக்கவில்ஃவு இங்கிலத்திலும் யோக்கிமீ உவர் ஆன் அதில் சேர விஆர் டிவில்லை. ஆதல78 பிழைப்பில்லாமல் தீண்ட784 கி கொண்: குக்த பல பஈழிஇ ஆங்கில சி. பாய்சஐ பும், தாழ்ந்த வகுப்பிக்ஷ ரையும் கிரீன்வுட் : டர்சனமாகச் சேர்த் தார். அந்தப்பட்டாணித்தில் பெரும்பாலும் ஈற்றவ: லிதுளுல், கேடிகளும், உல3rறை சிறை சென்றவர்களுமே நிறைந்திருந்த ஈர். அவர்கள் அயர்லாந்திற்கு ஐந்தபோது அரசாங்கத் தாரால் அவர் கன் எல்லோருக்கும் ஒரே விதமான உ8 டகள் கேடுக்கமுடிய வில்&. பொலிஸாருக்குக் கறுப்பு உடைகள் இொடுப்பது இழக் கஜ் உதிதாய் வந்தவர்களுக்குக் கறுப்பு உடைகள் கொடுக்க Sழியில்லாமையால் சர்க்&ார் இை&சமிருந்த சில கறுப்பு உ.ை களையுக் அபில நிறமான உடைகளையும் கலந்து கொடுத்துவந்த னர். இதனுள் புதிதாக வந்த&ர்களிற் பலர் பலவிதமான உடை அணிய நேர்த்தது. சிலர் கறுப்புத் தொப்பிகளையும் கறுப்புக் காற்சட்டைகண்யும் கபிலச் சட்டைகளையும் அணிந்திருந்தனர். சட்டை ஒரு நிறம் குல் ல* ஒரு நிலம், காற்சட்டை வேறு நிதி ! இவ்வாறு கறுப்பும் க: லமுல் கலந்த ஆபாசம?ன பழைய உடைகளே அணிந்திருந்த சட்டாளத்த ரைக் கண்டவுடன், ஐரீஷ் இக்கள் நகைத்து ஏளனம் செய்த**கள் லேடிக்கையான புனை பெயர்கள் இவப்பதில் ஐரிஷ் 68 ரர்கள் மிகவும் சாமத்தியசாலி காச லால் புதியட்டாளததிற்கு "பிளாக் அன்டு டான்ஸ்" என்று பெயர் வைத்தனர். ("பிளாக் அன்டு டான்ஸ்" என்ருல்
-re -

Page 64
கறுப்பும் கபிலமும் கலற்தது என்பது பொருள்) அயர்லாந்தி நாச் லாங்கைச் சுற்றியுள்ள ஜில்லாவில் கறுப்பும் *பிலமும் கலந்த நிறத்துடன் சில வேட்டை நாப்ளுண்டு. அந்த நாய். "en más அன் தி டான்ஸ்" எனறு அழைக்கப்பட்டு வந்தன. பு அந்த நாப் 1ளின் பெயரையே புதிய பட்டாளத்திற்கும் இட்டிஞர்கள், புதிய பட்டாளத்தார் வெறிபிடித்த நாய்களிலும் கே, நடந்து கொண்டதால், அவர்களுக்குச் சூட்டிய பெயர் பல வழிகளிலும் பொருத்தமானதுதான்.
இனி பொலிஸ் படைவீடுகள் தாக்கப்பட்டதைக் போம், முதல் முதலாகக் கால்ட்டீ மலைகளின் தென்பாகத்தி லுள்ள அரக்லன் என்னுமிடத்தில் படைவீடுகள் இசக்கப்பட்டு அங்கேயிருந்த பொலிஸார் தொண்டர்களால் பிடித்து .ெ ளப்பட்டனர். அந்த போராட்டத்தைத் தலைமை வலுத்து ந1.த் தியவர் ஜெனரல் லியாம் லிஞ்ச் (அவர் மூன்று மணித்தியா லங்களுக்குப் பின்னல் உள்நாட்டுக்சலகத்தில் கொல, வீரர்களுள் ஒருவர். ; வியாம் விஞ்ச் பிறவியிலே.ே களகர்த்த ஒரு பெரிய பட்டானத்தை அணிவத்து நிறுத் தீவு o, šy- áci ஜ: , சாமர்த்திமாப் நடத்தவும் அவரி வல்லமையுடை, +. sošá Gi, assos (é-L“ üAssi so sie st: Lob (oyG தள*ர்த்தாவும் சேர் த்து கொண்டு பிரிட் , ஷார் திகைக்கு படி கீற்புதமவு .ே டங்கள் செய்திருக்கிருர்கள்.
லியாம் லிஞ்ச் ஆறு அடி உயரமும், கம்பீரமா தமும் உடையவர். அவருடைய கண்களில் காளப்பட்ட ஒரு அவர் போர் வீரர் என்று அறிவுறுக்கியது அவர் கு ந்தையை போல் திறத்த வெள்ளைச் சிந்தையுடையவர் ஆகு ፴Lሠጥ grn ̇ டத்தில் காலனும் அஞ்சுப் படியாக எதிரிகளைக் & Ryáš@5a morfo. ஐரிஷ் தேசியப்படையின் ஒரு பெரும் பிரிவுக்கு அவ தலைவு pா & இருந்தார். 1919ஆம் ஆண்டு முதலி அவா பிரிட்டிஷr ரைப் பல இடங்களில் தாக்கியுள்ளார். அரக்லது வீடுஆளைப் பிடித்ததும் அவருடைய சாமர்த்தியமேயாகும்.
அரச்லனைத் தாக்கியதற்குப் பின்னல் மைக்கேல், 9Grešir grav "கிளே' என்ற இடத்தில் படை வீடுகளைத் தாக்கி, JPY iš Sðugas ஆயுதங்கக் யெல்லாம் அபகரித்துக் கொண்டார். oes Qsarseño டபிள் பக்லி என்பவன் முதலில் தொண்டர்களை எதிர்த்து நின்று பின்னல் கீழ்படிந்து விட்டான். (அவன் பிற்காவத்தில் fist-is
- 4 -

உள்நாட்டுக் கலசத்தில் கெர்ரி என்றுமிடத்தில் கைதியாயிருந்த பொrது கொல்லப்பட்.ான் ) தொண்டர்கள் «WGášas Lug Guns as ஏப்ரல் 28ஆம் நிசதி பல்லி லண்டர்ஸ் படைவீடுகளை முற்றுகை பிட்டுப் பிடித்துக்கொண்டனர். அவ்விடத்தில் மூன்று பெரவி ஸாருக்குப் படுகாயம் ஏற்பட்டது. படை வீடுகள் முற்றிலும் எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அங்கிருந்த பொலிஸார் சசல ஆயுதங்கிளைவும் தொண்டர்கள் தலைவராய் நின்ற வீன் 4.GavFT Gadifluh ப்பித்துவிட்டுச் சரணுகதியடைந்தனர்,
தான்பிரினும் திப்பெரரித் தொண்டர்படையை அழைத்துக் கொண்டு மூன்று இடங்களில் படைவீடுகளேத்தாக்கிஞன், முத லாவது அவனுக்குப் பணிந்தவை டிரங்கன் படைவீடுகள், அங்கு டே ராட்ட நடந்தது ஜூன் 4ஆம் திகதியில்.
டிரங்கனில் நடந்த போராட்டம் முடிவடைய வெகுநேரம் பிடித்தது அதில் கலந்துகொண்ட தொண்டர்படை அதிகாரிகள் தான் பிரீன், ஸின் டிரீஸி. ஸிமஸ் ராபின்ஸன், எர்னி ஒ மல்லி, ஸின் ஹோகன் ஆகியோர். விடியும்வரை இருபக்கத்தார்க்கும் அருஞ் சமர் நடந்தது. ஆாலை இளஞ்சூரிய னின் கிரணங்ஸ் வீதிய பினனும் இவ்விடத்தில் தொண்டர்சளுடைய துப்பாக்கிக்குண் டுளூ வெடிகுண்டுகளும் சடச. வென்று வெடிப்பது நிற்கவில்லை. சிறிது நேரத்தில் பகைவர்கள் சுடுவதைத் திடீரென்று நிறுதி விட்டனர். ஒரு நிமிஷத்திற்குப் பின்பு ஒருமூ* யிலிருந்த ஜன் னஸ் வழிய ஈய பொலிஸார் குழல் ஊதின கள். அதைக் கே' டுத் த்ெ ண்டரீக்ஸ் அவர் சளை வெளியே வந்து நிற்கும் படி உத் தரவு பே? . டார்க் , * வவாறே அவர்கள் வெளியே இந்து நிறுை தங்கள் ஆயுதங்களைச் சமர்ப்பித்தனர். தொண்ட துள் $ 1.ர்களைக் கைதுசெ ஆகொண்டு மற்ற பட்டாளங்கள் வெளி யிலிருந்து உதவிக்கு விரு புன்ஞல், விரைவாக ஊ* ரவிட்டு வெளி பேறி வி. னர். ஊருக்கு வெளியே சென்றதும் அவர்கள் தங்க ளுடைய கைதிகளை மன்னித்து விடுதலை செய்தாரிகள்! அக் ைேகதிக் கூட்டத்தில் ஆறு கொன்ஸ்டபிள்களும் இரண்டு சார்ஜன் டுகளும் இருந்தனர். தொண்டர்களில் ஒருவருக்குக் கூடக் காய Lఅడి.
அதே இரவில் கப்பர் ஒயிட் படை வீடுசஞம் வேறு தொண் டர்களால் தாக்கப்படடன. ஆஞல் அங்கு பெ; விஸர் பணி விலலை.
பத்திரிகைளில் இவ்விஷயங்களைப் பற்றி உண்மையான விவ ரங்கள் வெளிவருவதேயில்லை. தொண்டர்கள் வெளிவந்து தாங்
-- 1 15 —

Page 65
*செய்த வீரச் செயல்க Gavarrfara சூழ்நி ைபக்குவதா பில்லு, போராட்டத்தில் தப்பிப்பிழைத்து Curren Gly தங்களுல் குத் தெரிந்த விஷயங்களே வெளியிடு வந்தனர். அவர்கள் தங் ள் இலாகாவுக்குக் கேவலம் ஏற்படாதவாறு, விருத்தாந்தங்* brš திரித்தும், மாற்றியும், புதிதாய்ச் சிருஷ்டி செய்துக் கூறி சர்கள். தாக்கிய .ெ சீ0 பேர் என்ருல் பொவி
முல் 30 பேருக்கு அவர்கள் தேற்றனர் என்பது கேவலதல் லவா மேலதிகாரி இதைக் கேட்டு அவர்களக் கண்டிக்கவும் *டும். சில பத்திரிை நிருபர்களுக்கு உண்மைச் செய்திகள் கிடைப்பினும் அவர்கள் சர்க்காருக்குக் கேவலத்தையுண்டாக்கும் விடயங்களே வெளியிட அஞ்சினர். வெளியிட்டால் நள்ளிரவில் "பிளாக் அண்டு டால் படையினர் அவர்களை வாட்டி வருத்துவர். 9á5896, 9ourisei செய்தி எழுதுகையில் தொண்டரில் எவரும், காயமடையாமலிருக்கும் பொழுது பல தொண்டர்கள் கடிய டந்தனர். சிலர் இறந்து வீழ்ந்தனர் என்று குறிப்பிடுவது வழக்கம், ஆனல் உண்மையிலேயே சில தெ7ண்டர்கள் இறந்த பொழுது, *வர்களுக்கு அவ்விஷயயே தெரியாது .ோய் டும்
*இத்தாற் போல் தான்பிசன் கூஃடத்தார் தாக்கிய இடம் ஹால்லி போர்மு. அது திப்பெரரித் தாலுகாவின் வடமேற்குப் பக்கத்திலுள்ளது. அங்கிருந்த பொலிஸாரும் தொண்டர்களிடம் சரணுகதியடைந்து, ஆயுதங்களைப் பறி கொடுத்தனர். *:கு அந்த போராட்டத்தில் தலைமை வகித்தவர்கள் டிரங்கனில் தலைமை வசித்த தொண்டர்படை அதிகாரிகளேயாவர்.
ffurf &ctorrow என்னுமிடல் அடுத்தாற் போல் இாக்கப்பட்டது, சிங்கு போராட்டம் , உக்கிரமாக நடைபெற்றது. முடிவில் தொண்டர்கள் பொலிஸாரை முறியடிக்காமலே திரு. GipsfA இது இந்தப் போராட்டத்திற்குப் சில இடங்களிலிருந்து தொன் டர்கிள் உதவிக்கு யந்திருந்தனர். ஸ்பீன் டிரீஸியும், கான் பிரீனுமே தலைமிை வகித்து நின்ருர்கள். பொலிஸாரும் உயிரை வெறுத்துத் gotipruomras போராடினர்கள், அவர்கள் எறிந்த வெடிகுண்டுகளின் சில்லுகள் ஒமல்வி, ஜிம் கோர்மன், டிரீவி, தான்பிரின் முதவி யோரைச் சிறிது காயப்படுத்தின. தொண்டர்கள் படை வீடுகளைத் தீ வைத்து எரித்தார்கள், ப்ல பகைவர்கள் தீயில் வெந்தனர். இருவர் கடப்பட்டு இறந்தனர்.
மே மாதம் 7-ஆம் திகதி கில்மல்லக் படை வீடுகள் தாக்கப் பட்டன. அந்தப் போரா' மிகவும் புகழ் பெற்றது. sa di
ܘܝܗ- ܨ371:6 ܕܗܝܗ

tLLLLLLL LALTTL LLTLTTL TTtLTLL CesS TMLLLLL MTTLTLS TTEL டர்களைத் தலைமை வகித்து நடத்தினர் அப் போராட்டம் இரவு 12 மணிக்கு ஆரம்பமாகி காலை 7 மணி வரை தடந்தது. கில்மன் லக் படை வீடுகள் மிகப் பெரியனவாய், உறுதியான கட்டிடல் சளுடன் நகரின் நடுமத்தியில் இருந்தன. தொண்டர்கள் ஒரு பெரிய சாட்பாட்டு விடுதியையும் வேறுபல வீடுடிளேஆம் அமர்த் திக் கொண்டு அவற்றில் தங்கியிருந்து போராட்ட நேரத்தின் தான் வெளியே சென்றனர். முதலில் படை வீடுகளின் மேல் ஒரு குழாய் மூலம் பெற்ருேலைச் சொரிந்தனர். தீ வைத்தவுட ன் அவ்வீடுகள் எரித்து தரைமட. மாயின போராட்டத்தில் ஸ்ஆன் லி என்ற ஒரு தொண்டன் குண்டுபட்டு இறந்தான். பகைவர்சளில் காயமடைந்தவர் அறுவர் இறந்தர்ே இருவர். இறந்துபே ன இரு பீலர்களின் கதை மிகப் பரிதாபமானது. அவர்கள் முதலி லேயே தொண்டர்4ளுக்குப் பணிந்து விடவேண்டும என்று சென் னதற்காக மற்றப் பொலிஸார் அவர்களை ஒரு அறைக்குள் தள்ளி. பூட் டிவிட்டனர் இந்த அறை தீப்பற்றி எரியும் பொழுது அந்த இருவரும் தப்பிச் செல்ல வழியின்றி எரிந்து சாம்பர7யினர் டொலிஸாரூக்கு தலைமை வகித்து நின்ற சார்ஜண்டு பின்னல் அரசாங்கத்தால் ஜில்லா இன்ஸ்பெக்டர்" வேலைக்கு உயர்ததப் பட்டார் சில மாதங்களில் தொண்டர்கள் அவரையும் வானுல கத்திற்கு அனுப்பி விட்டனர்.
அடுத்த பெரும் போராட்டம் காலாவில் நடந்தது. அன்று TSTLLLLLL LLLLLLLLSkL 0STctS TT tTSLLL0StLtCtT S TTLT ttt LT T SS SS T S ரான லூகாஸ் தொன்.ர்களால் சிறை வைக்கப்பட்டிரு5% இடத்திலிருந்து த.பி ஓர் ஜார்.

Page 66
17
ஜெனரல் லூகாஸ்
லூகாள்" என்பவர் ஆங்கிலப்படையில் பிசிகேடியர் ஜென ரல் பதவியிலி தந்தார் நீலரையு வேறு இரண்டு தளர்த் தாக் உளையும் புரட சித்தலைவர ஐ லியாக் லிஞ்ச் 1920 ஆம் ஆண்டு ஜ"ன் trதக் 28ஆம் திகதி கைதுசேய்த"ர் அ ப்டொ மு து லூகாஸ் கொன்னுவில் தம்முடைய நண்பர் 4ளுடன் தங்கியிருந் இார். திடீரென்று விஞ்ச் தமது படையுடன் அங்கே சென்று லிவர்களைப் பிடித்துக் கொண்டார். லூகாஸ~ன் கலனல் டான் போர்டும், கலனல் டிரெல்லும் இருந்தனர் லிஞ்ச் அம்மூவரையும் அழைத்துக் கொண்டு சமீபத்தில் தயராய்க் காத்திருந்த ஒரு மோட்டர்ர் கா ருக்குச் சென் ருர்,
பார்ட்டன் என்ற ஐரிஷ் தேசாபிமானி ஒருவர் ஆங்கிலேய ரின் சிறையிலிருந்தார், அரசாங்கத்தார் அவர்மீது ராஜத்துவே ஷக் குற்றஞ் சாட்டிப் பத்து வருடத் தண்டனை விதித்தனர். சிறை யில் கொலை, களவு செய்த குற்றவாளியைப்போல் அவரை மிக வும் கேவலமாக நடத்தி 3 ந்தனர். அவரை விடுதலை செய்து வெளியே கொண்டுவருவதற்காகத்தான் லூகாஸ் கைது செய்யப்

LLLTTTS LLLaS TLTHt LE TLTT S S L LC S0E LML0LLT a L0 T T S S TTT TT கொண்டு தங்களுடைய அன் ரான ப7ரீட்டனை விடுதலை செய் தால் தான் அரை விடுதலை செய்ய முடியும் என்று சாக்காருக்கு அறிவிக்கலாம் என்று கருதியிருநதார்.
விஞ்ச் தம்முடைய கைதிகன் மூவரையும் அழைத்துக் கொண்டி :சல்லும் பொழுது அவர்கள் அரபி பாஷையில் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் விஞ்சையும் அவருடைய தொண் டர்களையும் திடீரென்று எதிர்த்துப் போராடித் தப்பிவிடவேண்டு மென்றே இரகசியமாகப் .ேசி% கொண்டனர். சில நிமிஷங்க களுக்குள் அவர்கள பேசி.டியே தொண்டர்கள் மீது பாய்ந்த னர். இரு கடசியாருக்கும் போராட்.ேம் முற்றியது. கலனல் டான் போர்டுக்குக் காயம் பட்டது. %ொண்டர்களே வெற்றி பெற்றனர் அதன் மேல் லிஞ்ச் காயமடைந்த கலனையும் , டிரேல் லையும் ளெரவமாக விடுதலை செய்து, பெர்மா யிலிருந்த பட்ட" ளப்படை வீதிகளுக்குப் பே குt படி அவர்களை ஒரு காரில அனுபவி விைத்தார். லூ டிான ஸ மட்டும் கைதியாக ஷைத்துக் கொண்டு பந்தோ ஸ்தான ஓரிடக் தில் அவரையடைத்து வைக் தப்படி அனு:சீனர். இரு தளகர்த்தாக்களை விடுதலை செய்ததிலிருந்து லிஞ்சின் தா: எ சித்தத்பு: தெ7 இண்டச்சளுடை : 3ண் 68ணியமும் விளங்குகின்றன. ஆணுல் இந்த உதவிக்குப் பட்டால்ாத்தார் எனண கை மறு செய்தனர்? மறுநாள் இரவில் பெர்ம? ப் நகரையே தீ வைத்து எரித்தனர் லியம் லிஞ்ச வெற்றியடைந்து விடடர் என்ற கோபமே தற்கெல்லாம் காரணம்.
ஜெனரல் லூகாஸ் ஆண்ணியமான போர் வீரர். அவர் இதாண் டர்களிடம் ஐந்து வrரம கைதியாயிருந்தார். தொண்ட8கள் அவரை மிக்க மரியாதையாக நடத்தி இந்து வேண்டிய உணவு உடை முதலிய செளகரியங்களும் செய்து கொடுத்தார். அவரு டைய பந்துக்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதுவதற்கு வசதிகள் அளித்தனர், லூகாஸ் பின்னல் தப்பியோடிய காலத்திலும் தொண்டர்களுடைய உதவிகளை நன்றியறிதலுடன் ஒப்புக்கொண் டிருக்கிருர், −
கடைசியாக அவர் சிறை வைக்கப்பட்டிருந்து இடம் கீழ் லிமெ சிக்கிலிருந்த ஒரு வீடு. ஜ"3ல மாதம் முதல் இரவு அவா மிகவும் சாமர்த்தியமாக அங்கிருந்து தப்பி ஓடி விட்.ாா. இநத விஷயம் முக்கியமான தொண்டர்களுக்கெல்ல. ம பத்திரிகையைப் பார்தத பின்பே தெரிய வந்தது.
- ) as

Page 67
ஜூலே மாதம் 30ஆம் திகதி சன்டிரீஸி, தான்பீரின் முதல4 னவர்கள் விடிெரிக் நகருக்ஜ&ல் திப்ரெரிக்கும் பத்தியிலுள்ள ரஸ் தாவில் ஆயுதபாணிகளாகக் காத்துக் கொண்டிருந்தனர். அக்கா த்தில் தொண்டர்கள் சர்க்காருக்கு மீ த த் த தொந்தரவு கொடுத்து வந்தனர். ரயில் களையும் தபால்களைக் கொண்டு செல் லும் கார்டிளேயும் அவர்கள் மறித்து நிறுத்தினர்கள் அவற் றிலிருந்த கடிதங்களேயும், படடாளத்தாரின் இரகசிய தஸ்தா வே ஜுகளையு: 9ை:பற்றி வந்தனர். இதஞல் அவர்களுக்கு எதிரி &ளுடைய நடவடிக்கைகளே மு8 க. டியே தெரிந்து கொள்ளச் சந்தர்ப்ப ேகி.ை சீதது. ஆங்இங்கேயிருந்த ஒற்றர்களில் எவரி கள் மிகவும் ஆயோக்சியூர் கீல் என்பதை அறிந்து இென்டு அவர்சிஃாத் தண் டி.டதற்கும் அரசாங்க கடிதங்கள் உபயோகமr யிருந்தன. சர்க் கார் தென்டர்3 ரூ டைய தொகி லே பொறுக்க S LLTLtLLSSLL LEtTS T SC teMSY TTS00 TTO TT TELtLLtLSLTTLS LL LSLTT L E LtO TL கக்" யூ* Frதுகாப்புக்கி & சினு:பிஃபர ஆரம்பிததது. லிமெரிக் வீதியி: இத்தகை: பட்.ாe: ஒ8 ஹ தபால் பாதுகாப்புக்காக வந்து கொண்டிருத்ததால் அதை எதிர்த்துப் போராடவே தொண் டர்கள் கேபே கூறிய முறையில் tறை:ைகக் காத்துக் கொண்டு நின்றனர். அ&ர்கள் நின்ற இடம் ஊலா கிராமத்திலிருந்து அரை மைல் தூரத்திலிருந்தது. அங்குத்து திப்பெரரி ஆறு ஜேமல் லிமேரி பதினேத்து சுமைஸ்ஸே லோஹெட்பக் தான்குலமல் இவ்வி.க்கலேச் சுற்லுேம் சம*ெ விகள் இருந்தமையால் தப்பி யே: கே. தற்குப் :ேதீய செளகரியங்கள் இருந்தன. ராணுவக் கார் கால் 10-30 மணிக்கு வரக்கூடும் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து, அதற்கு முன்னதாகவே சென்று ஒரு பெரியமரத் தை வெட்டி அதனுல் ரஸ்தா வீதியை அடைத்து விட்டுப் புதர்சு ளில் மறைந்திருந்தனர். கைலாவில் ஒரு பீலர் படையும் அதற்கு இாண்டு மைலுக்கு அப்: ல் லிமெரிக் சந்தியபில் ஒரு பீவர்படை யு இருந்தன. ஆதலால் எந்த நிமிஷத்தில் எள்ள மேருசிமன்று தெரியாமலிருந்தது.
குறித்த நேரத்தில் பட்டாளத்தாருடைய கார் மிக வேக als ஓடிவந்தது. தொண்டர்கள் அதைக் குறிவைத்துச் சுட்ட னர். உடனே கருக்குள்ளேயிருந்த சிப்பாய்கள் ஆகினவரும் கீழே குதித்து மறைவாக நின்று கிெ கண்டு பதிலுக்குச் சுட ஆரu, பித் ந6னர் அவரை அமைதியாயிருந்த அந்த நாட்டுப் புறத்தில் திடீரென்று குண்டுகள் இடி இடித்தது போல முழங்க ஆரம் பித்தன. முதல் நிமிடத்திலேயே ஆரண்டு ஆங்கிலேயர்கள் குனடு பட்டுத் தங்கள் துப்பாக்கிகளை எறிந்து விட்டுக் கீழே சாய்ந்து
- || ! a.

LGTLTTLTTLLLLSS S LLLTT T LLL LLLLLLLL0LLL TTTTTTLL TTTTLLS LL0 TTLTL LLTLTL திசையைப் பார்த்துச் சுட்டுக்கொண்டேயிருந்தனர். தொண் டர்கள் மொத்தம் பத்துப் பேரேயிருந்தனர்; அவர்கள் ஒவ் வொருவரிடமும் பக்துமுறை சுடுவதற்குத்தான் மருந்து இருந் தது அந்நிலையில் திடீரென்று லிமெரிக் பக்கத்திலிருந்து மற்ருெரு ராணுவக் காரும் வந்து கொண்டிருநததை அவர்கள் கண்ணுற் றதுர். இவ்வாறு ஏற்படுமென்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. தற் செல்லாக எதிரிகளுக்கு 2-5 asuurr L-assir aš gaúL. L. Gay rifl தொண்டர்கள் திலகத்தனர். அவர்கள் பின்வாங்கி மெதுவாக வேறிடத்திற்குச் சென்றுவிடத் தீர்மானித்துப் புறப்பட்டனர்.
தொண்டர் மறையும் பொழுதும் சிப்பாய் ஈகிளப் பார்த்துச் கட்டுக் கொண்டே பின்வாங்கி வந்தனர். அந்நேரத்தில் சிப்பாய் ாளுக்க உதவியா% ஊ" வினிஜத்தும் ஆ* பீ%ர்கள் வந்து ஜ்ெ சண்டிருந்தனர். தொண்டர் %Aடமு: பே8 தில் ஆண்களிருந் தி ந்தால் அவர்கள் ஊலா பொலிஸ் திலேயப் பக்கம: கச் சிலரை அனுபயிச் சுடச்சொல்லியிருப்.:ர்கள். குண்டோசை கேட்டால் Sawírasawië išri. Epy:: சி:பாய்னின் உதவிக்காக வெளிகே வத்தி ருக்கமாட்டான். அதற்கும் வழியில்லாமற் போயிற்று எலவே அவர்கள் யாருக்கும் காயப்படFiலும் உயிர்ச் "ேதமில்லாமலும் போராட்டத்தில் இருந்து விலகிச் சென்று மறைந்துவிட்டனர். எதிரிகளில் மூவர் இறந்தனர்; மற்றும் மூவர் கா:4ை ந் தனா.
அங்கு போராடிய சிப்பாய்சளுடன் ஜெனரல் லூகாலம் நின்று கொண்டிருந்தார். இவ் விஷயம் தொண்டர்களுக்கு மறுநாள் காலேயித்தான் தெரிய இந்தது. அவர் 89ஆம் தேதி இரவே தபபியோடி பல வயல்களையும் மைதானங்ககேயுt தாண்டி தொண் டர்களுடைய கையில் சிக்காமல், மிக்க எச்சரிக்கையுடன் மறை வாக லிமெரிக் வீதிக்கு வந்து சேர்ந்தார். அதன் வழியே நடந்து *சல்லுகையில் தற்செயலாய் அங்கு வந்துகொண்டிருந்த ராணு வக் கார் அவரைக் கண்டது. அதிலிருந்த சிபபாப்கள் அவரைக் கார்ல் ஏற்றிக்கொண்டு வந்தனர்,
தொண்டர்கள் சண்டையின்டேர்:து அங்கர அடையாளம் வண்டு பிடிக்கவில்க் , மறுநாள் பத்திரிகைகளில் "ஜெனரலே மீண் டும் பிடிக்க முயற்சி" என்று பெரி: எழுத்துக்களிற் செய்தி வந்த பின்பே அவர்களுக்கு லூகாஸ் தப்பியோடிய விவரம் தெரிய வத் தது. அவர்கள் சிப்பாய்களே வழிமறித்துப் போராடச் சென்றி
- B -

Page 68
ருந்த போதிலும் பத்திரிகைகள் அகாளை மீண்டும் பிடிக்கவே அவர்கள் போசாடியதாகக் கற்பன் செய்து எழுதின.
ஊலாச் சண்.ை நடந்து சில தினங்களுக்குப் பின்பு த*ன்பி ரீன் டட்ணினுக்குச் சென்று பாக்கியிருந்த பல சிலலறையான LTtMMStteeL TLL YT S TTTS LLLLT S TtLLT TTT0 T LLLGLS S LTLSS eTY தாக்கிய பொழுது அவனுடைய உ.கி பில் தைத் திருந்த வெடி கு ைடுகளின் சண்ணுடித துண்டுகளையும் ஆணிகளையும் எடுத் தெ றிந்து உடம்பைக் குணப்படுத்திக் கொள்வதற்கு அவனுக்குத் தக்க சந்தர்ப்பம் கிடைத்ததால், அவன் அதை உபயோகித்துக் கோண்டான்.
மேற்சொன்ன சம்பவங்கள் நடந்தது 1920ஆம் ஆண்டு இலை புதிரி காலத்தில், அக்காலத்தில் தேசியப் போராட்டம் நாளுக்கு ந ள் வலுத்து வந்தது. மக்கள் கடைசி வரை போராடியே தீ வேண்டும் என்று உறுதி கொண்டனர். "பிளாக் அண் டு டான் பட்டாளத்தாருடைய கொடுமைகள் சகிக்க முடியாமல் இருந்தன அல்சர்கன் வீதிகளையும், தெருக்களேயும் பயிர்களையும் கொளுத்திப் பல ஐ யிர் டிஃாயும் வ ைதத்து வந்த7ர்கள். அரசியல் வசதிகளைக் தடி#து செய்து கொண்டு :ேதம் :ேபுது சுட்டுத் தள்ளி வந்தனர். நித்திரை செய்து கொண்டிருந்த மக்கள் துப்பாக கிளுக்குப் பலி டிாகி வந்தனர் பாருக்கும் உயிரும், சொத்தும் உரிமையாக Q ** cషాశీఖ, ஆதலால் ம க் க ள் ஒன்றும் செய்யா மல் வீடுகளிலிருந்து மடிவதைக் காட்டிலும் பு"ட்சிப்படையிலே சேர்ந்து வீபரணம் அடைவது மேலென்று கருதினர்கள் அவர் கள் தொண்டர்களுக்கு உணவும் உடையும் கெடுத்ததோடு அவ சியமான செய்திகளேயும் துப்புக்களையும் அறிந்து கூறி உதவி செய்து வந்தார்கள்.
ஆங்கிலப் பட்டாளத்தார் அயர்லாந்தில் எத்தளை கோடி பவுண் பெறுமானமு ன்ன செ*த்துக்களை அழித்தனர் என்பதை யும் எத்தவை ஆயிரம் உயிர்களைப் பலிவாங்கினர் என்பதையும் பிற்ஆr லச் சரித திர சிரியர்களே கணக்கிட்டுக் கூற முடியும் இந்தக் கெடுமை $2ளச் செய்துவந்த "பிளாக் அண்டு டான" பட்டாளத் தாரிற் பலர் பின்ஞல தாங்கள் செப்த கொடுமைகளை மறக்க முடியா மற் பைத்திடம் பிடித்து அலைந்தனர், தற்கொக்ல செய்து கொடுை மடித்தன? என்ருல் ஐரிஷ் மக்கள் அந்தப் பாதகர்க வி. எவ்வளவு துன்பபட்டிருப்பார்கள் என்பதை நாமே யூகித் துக கொள்ளலாம்.
- See

அதேசமயத்தில் தொண்டர் படையும் வலிமையடைந்து தீர ம*ன பட்டாளமாகி விட்டது. அது ஐரிஷ் குடியரசுப் படை என்ற  ெயருக்குப் பொருத்தமாயிருத்தது. 1919ஆம் ஆண்டு தான்பிரீன் டிரீஸியிடம் கூறிய வாச்கு இரண்டு வருடங்களில் பலித்து விட் 4.து. முதலில் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டால் அது பின் ஞல் நாடெங்கும் பரவிவிடும் என்று அவன் கூறியிருந்தான் அதன்படி தேசத்து வாலி.ர்கள் சுதந்திரப் படையில் ஆயிரக்க னக்காய்ச் சேர்ந்து வந்தனர். ஐரிஷ் மக்கள் எவ்வளவு துன்பப் பட்டாயினும் சுதந்திரம் பெற்றே தீரவேண்டும் என்று விரதம் பூண்டனர். அயர்லாந்தின் சுதந்திரத்தைக் கடைசிவரை நசுக்கியே தீவேண்டும் என்று இங்கிலாந்தும் கண்மூடித்தளமாக வெறி கொண்ட செயல்களில் இறங்கி நின்றது.

Page 69
18
கொலைக்கூட்டித்தின் முயற்சி கள்
தலைநகரில் இருந்த தொண்டர் படைத் தலைமை அதிகாரிக ளிடம் தான்பிரின் ஒரு புதிய வேலைத்திட்டத்தைச் சமர்ப்பித்து அதை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்திஞன், அத்திட்டத்தின் படி "பறக்கும் தொண்டர் படை யென்று சில படைகளை நிய மிக்க வேண்டும் என்பது அவன் நோக்கம். இத்தகைய படை ஒரேயிடத்தில் தங்காது. தேசம் முழுதும் சுற்றித்திரிந்து எங் கெங்கு அவசியம் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் போரிடும். எ ல் லை ய |ற் ற கொடுமைகள் செய்யு அதிகாரிகள் எந்த உாரில் இருந்தாலும் அப்படை அவர்களைப் பழிவாங்கும். எந்த பிரதேசங்களில் தேசிய ஊக்கம் குறைகின்றதோ எங்கெல்ல? ம் அதிகாரிகள் அமைதியுடன் ஆனந்தமாய்க் காலம் கழிக்கிருர் களோ, அங்கெல்லாம் அப்படை சென்று உறங்குகின்ற மகக ளையும் அதிகாரிகளையும் தட்டி எழுப்பிவிடும் அடிமை நாட்டில் அமைதி நிலைளியிருந்தால் ஆள்வோருக்குத்தான் செளகரியம், ஆதலால் விடுதலை வேட்கையுள்ள மக்கள் ஆடசிமுறையை எப் பொழும் இடைவிடாது எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள். இத்

தகைய எதிர்ப்புக்குப் பறக்குந் தொண்டர் படை” பெரிய உத வியாயிருக்கும் என்று தான்பிரின் கருதினன்,
தொண்டரி படையில் அதுவரை சேர்ந்திருந்த வாலிபர்களிற் பல ரி தங்சளுடைய சொந்த வேலைகளைப் பார்த்துக்கொண்டு இடையிடையேதான் தேசிய ைேலக்கு முன்வந்தனர். அவர்கள் முழுநேரத் தொண்டர்களாக இருக்கவில்லை. இதனுல் முக்கிய மான சந்தர்ப்பங்களில் மிகுந்த நஷ்டங்கள் ஏற்பட்டன. நாக் லாங்கில் ஸ்பீன் ஹோகனை மீட்பதற்காக உதவிப்படை அனுப்பும் படி தான்பிரீன் திப்பெரரிக்குச் சொல்லியனுட்பி ஏமாந்து போன தன் காரணம் இதவே. பாதிநேரம் வேலை செய்தவர்கள். திடீ ரென்று வெளிவந்து எந்தக் காரியத்திலும் கலந்து கொள்ள முடி யாது. அவர்கள் பகல் முழுதும் சொந்தத் தொழில்களப் பார்த்து விட்டு, இரவில்தான் தேச ஊழியத்திற்கு வரமுடிந்தது. மேலும் மறு நாள் காஃயில் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிடுவார் கள். நல்ல யுத்த வீரர்களுக்கு வேண்டிய பயிற்சியை அவர்க் ளுக்கு அளிக்கமுடியவில்லை. எல்லா விஷயங்களைப் பார்க்கிலும் ஒரு பெருங்குறை அவாகளிடமிருந்தது. அவர்கள் பெரும்பகுதி பான நேரத்தை அமைதியான வாழ்க்கையிலே சழித்து வத்த தால், போரின் ஆவேசம் அவர்களிடம் அதிகம் காணப்படவில்லை, எப்போதும் டோரில் ஈடுபட்டு, இரவும் பகலும் பாசறையையும் படையையும் பகைவனையும் பற்றி எண்ணிக் கொண்டிருப்பவர் களே வீராவேசத்துடன் இருக்க முடியும். ஆதலால் முழுதேர மும் தொண்டு செய்யகூடியவரிகளை அதிகமாய்ச் சேர்த்துத் தக்க யுத்தப் :யிற்சி கொடுத்து திறமையுள்ள அதிகாரி வின் கீழ் உட் டுப்பட்டிருக்கும்படி செய்ய வேண்டும் என்று தான் பிரின் தீர்மா னித்தான் அதன்படி வாலிபர் ஈளும் நூற்றுக்கணக்க * முன்வந்
567 nr.
"பறக்குத் தொண்டர்" படைகளை ஏற்படுத்தியதால் திப்:ெ ர ரியிலும் கார்க் பகுதியிலும் இருந்த வாலிப வீரர்கள் மிகவும் பிற்.ே 8 க்கா யிருந்த கில்கென்னி, வாட்டர் போர்டு, பகுதிகளிலே சென்று போராடுவதற்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இந்த ஏற் பஈட்டினல், தேசத்தில் ஒரு குதியில் ஊக்கமும் மற்ருெரு பகு தியில் அயர்வும் ஏற்படாமல் எங்கும் ஆவேசத்தைப் பரப்ப வழி Фуди и , 5. .
தான்பிரீன் டப்ளினிலிருந்த பொழுது டின்னி லேஸி என் னும் அவது ஐடய ஆருயிர்த் தோழன் பலநாள் கூடல்ேபிருந்து உதவி செய்து வந்தான லேவி தேசத்திற்கே உழைக்கவேண்டு
- B -

Page 70
மென்று ஜன்மமெடுத்தவன். 1920 முதல் 1922 வரை அவன் பற்பல வீரச் செயல்களைச் செய்து பெரும் புகழ் பெற்ருள். திப் பெரரிக் பகுதியிலுள்ள கோன் டன் கார்டன் (தங்கத்தோட் டம்) என்பது அவனுடைய சொந்த ஊர். அவன் மிக்க தேக்
கட்டோடு, விளங்கிய தோடு ஒட்டத்திலும், கால்பந்து விளையாட் டிலும் பெரிய சூரஞயிருந்த? இன். அவனுடைய வீடு தான் பிரீனு டைய வீட்டிலி நந்து அரை மைல் தூரத்திலிருந்தது. தான் பிரினும் அவனும் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஒருயிரும் ஈருடலுமாகப் பழகி வந்தவர்கள். வயது வந்தபின் அவன் ஒரு பெரிய கடையில் வேலை பார்த்து வந்தான்.
1920 ஆம் ஆண்டு மே மாதம் கில் மல்லக்கில் நடந்த போராட் ட த்தில் அவன் கலந்து கொண்டான், அது முதல் அவன் மறைந்து வாழும்படி ஏற்பட்டது. அவன் செய்துவந்த வீர ப் போராட்டங்களைக் கேட்டுப் பிளாக் அன்டு டான்" பட்டாளத் தார் அவனைப் பிடிக்க வேண்டுமென்று பகீரதப் பிரயத்தனம் செய்தனர். திப்பெரரியில் அவன் சிலநாள் தங்கியிருந்த வீட்டைக் கூட அவர்கள் கொழுத்திவிட்டனர் பிரிட்டிஷாருடைய குண்டு களுக்கெல்ல*ம் லேவி தப்பிவிட்டான் ஆனல் பின்னுல் நடந்த உள்நாட்டுக் கலசத்தில் 1923 ஆம் ஆண்டு அவன் பிரீ ஸ்டேட் படைசளுடன் செய்த போராட்டத்தில் தன்நாட்ட வா க ளா லேயே உயிர் பறிக்கப்பட்டு மாண்டான்.)
டப்ளின் ந&ரிலே தான் பிரீன் நடமாடுவது மிகவும் அபாயக ரமானதாயிருந்தது எங்கு பார்த்தாலும் இரகசியப் பொலிஸா ரும் அவர்களிடம் கூலிக்கு மாரடிக்கும் ஒற்றர்களும், உளவாளி களும் நிறைந்திருந்தனர். தொண்டர்களேட்பற்றி யார் என்ன ஆகவல் கொடுத்தாலும் ஏராளமான வெகுமதிகள் கொடுக்கப்ப டும் என்று விள: பரப்படுத்தப்பட்டிருந்தது, இரகசியப் பொலிஸ் ப.ை சீர்குலைந்திருந்ததால், அதைப் புனருத்தாரளம் செய்வதற்கு அதிகாரிகள் ஒய்வொழிவின்றி முயற்சித்து வந்தார்கள். பார்த்த இடமெல்லாம் காக்கி உடையணிந்த துருப்புக்களும், துப்பாக்கிக ளும், ராணுவ லாரிகளுமே கூட்டங் கூட்டமாகக் காணப்பட்டன. தெருக்கசீஸ் நடமாடுகிறவர்களெல்லாம் ஒரே தாளில் ஏழெட்டு முறை சோதனை போட்டார்கள். "டிராய் வண்டிகளிலும், பஸ் வண்டிகளிலும் படைவீரர் திடீர் திடீரென்று புகுந்து பிரயாணி களைத் தடைபடுத்திச் சோதனையிட்டனர், பட்டாளத்தார் பற்பல வீடுகளைச் சுற்றிப் பலநாள் சூழ்ந்து நின்று, உள்ளேயிருந்துய சரும் வெளியேருமலும் வெளியேயிருந்து யாரும் உட்செல்லாமலும்
- S -

颅°莎多八 வந்தார்கள். இவையெல்லாம் அத்த ைநகரிலே தினசரி நிகழ்ச்சிகளாகப் போய்விட்டன.
பொது மக்சளுடைய கடிதங்கள் தடாற் காரியாலயங்க ளிலே உடைத்துப் பார்க்கப்பட்டன. நிய பரr தி*ளான மக்4ள் ட ப்ளின் மாளிகைக்கு கொண்டு போசப்பட டு, தெண்டர்க: ப் பற்றிய தகவல்களைச் சொல்லுயபடி சித்திரவதைசெப்பட பட்டவர் அங்கு இரகசியமாய் நடத்தப்படட கொடுnை8ளுக்கு அளவே யி லை, சஈப்ாட்டு விடுதிகளிலுள்ள வேலைக்காரர்களுக்கெல்லாம் சர்க் டிார் வஞ்சம் கொடுத்துத் தொண்டர்கள் வந்தால தத்தில் கொடுக்குப் படி ஏற்பாடு செய்தனர். பட்டாளத்தாரும் அதிகாரி களும் டெ லிடோன் மூலம் சேசிக்கொள்வதைய பிறர் அறியாம விருப்பதற்கு ஓர் இரகசிய பரிபாஷையை அமைத்தக் கொண் டார்கள். இவ்வளவு நெருக்கடியின் மத்தியிலே தான் பிரீனும் இ.ை விடாது ஒற்றரால் பின்ற்ேறப்பட்டான். அவரை தனது துப் பாக்கியையும் வீரத்தையுமே துணையாகக் கொண்டு சுற்றி வந் தான் ஆபத்து வேளைகளில் அவனுடைய வலது கை துப்பாக்கி யைப் பற்றிய பண்னமாகவேயிருந்தன.
கடைசியாக ஒருநாள் அவன் பகைவர்சளின் கூட்டத்தில் அப்பட்டுக் கொள்ள நேர்த்தது. ஒரு ஃென்னி கிழமை :ஐ அன்ே ஹென்றி தெரு முனையிலுள்ள நெல்ஸன் தூண் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான். அவன் அன்றிரவு கமோலன் என்பவ ருடைய வீடடுக்குச் செல்வதற்க: & டிரம் வண்டிக்ய எதிர்பார் த்துக் கொண்டிருந்தான். அவ்வீல் டிரங்கொண்டராவு: கும் வயிட் ஹோலுக்கும் மத்தியிலிருந்தது. வயிட் ஹோலுக்குச் செல்லக் கூடிய டிராம் வண்டி அப்பக்கத்தில் வந்த பொழுது அவன் உடனே அதில் பாய்ந்து மேல் தளத்திலேறி உட்காாந்து கொண் டான் அவனைத் தொடர்ந்து வேறு ஐந்து பேர்கள் அவ்வண்டி யிலேறி வருவதையும் அவன் கண்டான,
அவர்களில் இருவர் சர்க்காருடைய கொலக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவன் தெரிந்து கொண்டான். இக்கொ லேக் கூட்.த்தார் ஜெனரல் சியூ டர் என்பவரால் நிபமிக்கப்பட். வர்கள். அவர்களும் த "உதவி. பலடயினர்” என்று பெயர். ரியூடரே அப்படையினருக்குத் தலைவர் அ ப் படை யினர் செய்துவந்த அட்டகாசங்களுக் அளவேயிலல். அவர்கள் கொங்ககு அஞ்சாதவர்கள். தெருக்களில் எந்தப் புரட்சிககார ரைக் கண்டாலும் சந்தேகப்படத்தக்க நபர்களைக் கண்டாலும், உடனே கண்ட இடத்திலேயே சுட்திக் கொலல் வேண்டுமெ சறு அவர்களுக்அ உத்தரவு. அவர்கள் கொலைகள் செய்ததாக வழக்
- 27 -

Page 71
துகள் ஏற்படாமல் பாதுகாப்பதாகவும், அதிகாரிகள் கூறியிருந் தார்கள் இத்த இரகசியப் படை அமைக்கப்பட்டிருந்த விஷயம் பீலர்சளுக்கும் பட்டானங்களுக்குங் கூடத் தெரியாது ஆஞல் தொண்டர்களுக்கு அப் டையைப் பறறியும் அப்படையிலுள்ள வர்சிளில் யார் யார் எத்தனை தொலைகளையுப் கொடுமைக% யும் செய்தன* எள்பதைப் பற்றியும் வெகு நன்கு ப்த தெரிந்திருத தது. முக்கியமான கிெ லைகிரர்களுடைய புகைப்பட ங்களை யும் சிரமப்பட்டுச் சம்பாதித்துத் தெ உண்டா படைத் தலைமைக் காரியாலயத்தார் எல்லாத் தெண்டர் படைகளுக்கும் அனுப்பி யிருந்தனர்.
டிராம் வண்டியில் ஏறிய ஐவரையும் தான்பிரின் கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஆன். அ புே r களி ல் இருவர் அe:ன் அருகில் வந்து பக்கத்திற்கு ஒ ஆல்: 3 விரு பக்கத்*லும் உட் கார்ந்து கொண்டனர். ஒருஷ்ன் இவர்களுக்கு முகனுல சென்று நின்று கொண்டிருந்தானே. மற்றும் இருவர் முனபக்கம் சென்று வணடியின் முகப்பின் நிள்நு கொண்டனர். சொல்லக்கு அஞ்சாத பாதகர்கள் தனக்கு இருபக்கத்திலும் அமர்ந்திருந்ததால், எத்த நிமிஷத்தில் என்ன அபயம் நேருமோ என்று தான் பிரீன் மி% வு எச்சரிககையாகக் கவனித்துக் கே: ண்டிருந்தான். கெரி லேக் காரர்கள் தன்னைக் கண்டு வந்தார்களா, அன்றித் தாங்களாகவே வேறு வேலைகளுக்காக வந்த்?ா8ளn என்பது புலனுகவில்லை. ஆனல் இருவர் அவன் பக்கத்தில் வந்து உட்கrரக் காரணம் என்ன? ஆவ்வாறு அவனுக்குப பல யோசனைகள் தோன்றின. என்ன நேர்த்தாலும் அவன் போராட்டத்திற்குத் தயார3 யிருந் தான். உயிரோடு பகைவர்கள் கையிலே சிக்காமல் அரும்போ ராட்டம் செய்து எதிரிகளில் பலரைச் சுட்டுக்கென்ற பின்பே தன் உயிரை விடவேண்டும் என்று அவன் வெகு கy லத்திற்கு முன்பே தீர்மானித்திருந்தான்
மணி 11 க்கு மேலாகிவிட்டது. சேர்பியூ உத்தரவு 12 மணி முதல் ஆரம்பம். டிராம் வண்டி பார்னல் ஸ்குயர் பக்கம் சென் றது. அப்.ோழுது இரண்டு பக்கத்திலும் இருத்த கொலைஞரும் சட்டைப் பைக்குள் கைவிட்டு எதையோ எடுக்க மூபன்றனர். தரன் பிரீனுச்கு விஷயர் நன் ருக விளங்கிவிட்டது. உடனே அவன் தன் றிவோல்வரையும் சரேலென்று உருவிக் கையில் பிடித்துக் கொண்டாள். அவனுடைய நோககமும் பகைவர்களுக்குப் புல் கு யிற்று. மேற்கொண்டு அங்கு தங்கிளுல் உயிருககு அபாயம் தேரும் என்று தெரிந்துகொண்டு வண்டியின் உட்புறத்திலிருந்த
- E -

மூன்று கொலைஞரும், திடீரென்று எழுந்து ஒருவர்மேல் ஒருவர் விழுந்து வெளியே குதித்து ஓடினர். தான்பிரீன் அவர்களத் தொடர்ந்து சென்ருன். ஆனல் அந்த இடத்தில் சுடுவது அபா யார் என்று கருதினன். அவன் சுட்டிருந்தால், வண்டியிலுள்ள வர்கள் கலவரமடைந்திருப்பார்கள், குண்டுகளின் ஒசை கேட்டுப் பக்கத்தில் எங்கேனும் நிற்கும் பீலர்களும பட்டாளத்தாரும் அங்கு வந்து கூடியிருப்பார்கள், அதனுல் தான்பிரினுடைய உயி ருக்கே ஆபத்து வந்துவிடும். தெருவும் பல மக்கள் நடமாடக் கூடிய தெருவாயிருந்தது. தான்பிரின் தெருவில் குதித்து, செயின்ட் ஜோசப் மாளிகைக்குப் பக்கம் அருகேயிருந்த ஒரு தெரு வுக்கு விரைந்து சென்றன். அவன் செல்வதைக்கண்ட கொலை ஞர் மூவரும் வேருெரு தெருவின் வழியாகச் சென்று, அவனைத் நெருவின் மறுபுறத்தில் மறித்துக்கொள்ளலாம் என்று கருதி ஓடி னர், த*ன்பிரீள் சுவர்களு.ை சூழ்ச்சிஜி யறிந்து, அத்தெரு வின் வழியே செல்லாமல் திரும்பி வந்து தெருவி: அப்பொ ழுதுதான் வந்து நின்ற இயிட்ம் ஹாலுக்குச் செல்லும் டிராம் வண் டியில் ஏறி உட்&rநது ல்ெ: எண் டான்.
அப்பொழுதுதான் அவனுக்கு முன்நடந்த நிகழ்ச்சிகளைப் பற் ரிச் சிந்திக்கச் சிறிது அவகாசம் ஏற்பட்டது. மூன்று பகைவர்க ளுல் ஓடும் பொழுது வண்டியிலிருந்த மற்ற இருகொலைஞரும் ஏன் அவர்களுக்கு உதவிக்கு வராமல் இருந்துவிட்டனர் என்பது புல ஞகவில்லை. தங்கள் உயிருக்கே அபாயம் நேரு பொழுது, அவர் கள் தோழர்கள் என்றும் வேண்டியவர்கள் என்றும் கவனித் து உதவிசெய்ய வருவது வழக்கமில்லைப் போலும் கூலிக்கு மாரடிக் கும் ஒற்றர்களுக்குப் பொறுப்பேது? ஒழுக்கமேது,
அந்த ஐவரில் ஒருவன், பின்னல் தான்பிரீனும் தோழர்களும் டிரம்கொண்டராவில் இருந்ததை எப்படியோ அறிந்து பின் தொடர்ந்தான். அவன் அன்றிரவே தான்பிரீனுக்குப் பின் ன ல் வேருெரு டிராம் வண்டியிலேறிச் சென்று புலன் விசாரிக் கவு ங் கூடு தான்பிரீன் மறுநாள் காலையில் டிரீளியிடம் தனக்குநேர்ந்த விபத்தைப்பற்றிச் சொல்லும்பொழுது அவன், "உன்காலம் நெருங் கிவிட்டது போலிருக்கிறது; நீ இனிமேல் வெகுநாள் தப்பியிருக்க முடியாது என்று வேடிக்கையாகக் கூறினன். ஆனல் பின்னர் இருவரும் அவ்விசயத்தைக் குறித்துத் தீர்க்கமாக ஆராய்ச்சி செய் தனர். அன்றுமுதல் வெளியே செல்வதானுல் இருவரும் சேர்ந்து செல்லவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டனர். அன்று சனிக் கிழமை, இருவரும் காலேயிலேயே பிட்ஜெரால்டு அம்மையின் வீட்

Page 72
இக்குச் சென்று பகல்முழுதும் படுத்துறங்கி ஒப்வெடுத்துக் கொன் டனர். அந்த அம்மையும் திப்பெரரியைச் சேர்ந்தவளா தல r ல் அவர்களை அன்புடன் ஆதரித்தாள்.
மறுநாள் அவர்கள் அரைமைல் தூரத்திலிருந்த கெ யிலி க் தேகப்பயிற்சிச் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்திற்குச் சென்று பொழுதைப் போக்கினர். அங்கிருந்த நண்பர்களுடன் அவர்கள் சீட்டு விளையாடவும் சந்தர்ப்பம் கிடைத்தது. பந்தயப் பணம் அதி கமாயில்லாததால் தான் பிரீன் பணம் வைத்து விளையாடுவதில் சலிப்படையவில்லை. சீட்டாட்டத்திலுங்கூட அதிர்ஷ்டம் அவன் பக்கத்திலிருந்தது, அவன் கையில் கொஞ்சல் பணம் சேர வும் இது ஒரு வழியாயிற்று. அச்சமயத்தில் அவனுக்குப் பிற்கால வேலை களைப்பற்றி மனதில் முடிவான திட்டம் எதுவுமில்லை. தலைமைக் காரியாலயத்தார் அவனையும் அவன் நண்பர்களையும், சில போலி யான காரணங் டிளேச் சொல்வி, டப்ளினிலேயே பலநாள் தாம திக்கும்படி செய்தனர். தலைவர்கள் முன்னுல் நின்று வழிகாட் டத் தயாராயிருக்கவில்லை மற்றவர்கள் சுயேச்சையாக வேலைசெய் யவும், வழிவிடவில்லை. டின்னி லேஸி தான்பிரினை எதிர்த் துத் திப்பெரரியில் தான், தலைமைக் காரியாலயத்தார் பொறுப்பேற்க அஞ்சினதோடு, தான் பிரீனை விரைவாக ஊருக்கு அனுப்பத் தயா ராயில்லை. ஆனல் தொண்டர்கள் அடிக்கடி பயிற்சி செய்து வந்த தால், அதிக வதரியத்தையும் பயிற்சி:ளயும் பெற்றுவந்தனர். அவர்களுடையூ குடியரசுப் படை நாளொரு மேனியும் பொழு தெரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தது. சுடச்சுட ஒளிருப் பொன்போல், துன்பங்களை அனுபவித்து, அனுபவித்து அப்படை மிக்க வல்லமையுடையதாகிவிட்டது,
11 ஆம் திகதி மாலை தான்பிரீன் டிரீஸியை அழைத்துக் கொண்டு சினிமா ஒன்றைப் பார்க்கச் சென்ருன். அது பொழுது போக்க யிருக்கும் என்று அவன் கருதினன், கோட்டகையில் டிரம் கொண்டர: வைச் சேர்ந்த பிளெமிங் குமாரிகள் இருவரை யும் இமன் ஓபிரியனுடைய மனைவியையும் சந்தித்தான். அவர்கள் அவனையும் டிரீஸியையும் கண்டு திடுக்கிட்டுப்போயினர். இருவ ரையும் பிடிப்பதற்குத் தேசம் முழுவதும் பட்டாளங்களும் பீலர் களும் இரவு பகலாய் அலைந்து தேடிக்கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தலதகரத்தில் பல்லாயிரம் மக்கள் கூடியுள்ள கொட் டசையில் வந்து நின்றது பெரும் வியப்பாகவே தோன்றியது. அவர்களை எந்தச் சிப்பாய் கண்டாலும் சுட்டுத்தள்ளும்படி சர்க் கார் உத்தரவு போட்டிருந்தது. தான்பிரின் அந்தப் பெண்களோடு
- 1)) r

குடும்ப நலன்கள்பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். காட்சிமுடிந்த பின்பு எல்லோரும் சேர்ந்து வெளியேறினர்.
கொட்டனை வாயிலில் ஒற்றன் ஒருவன் நின்றுகொண்டு வெளியே போகிறவர்களைக் கவனமாய்ப் பார்த்துக் கொண்டிருந் தன். அவனைப் பாரித்தவுடன் அவன் யாரென்பது தாபிரினுக் குப் புலனுகிவிட்டது. சில தினங்களுக்கு முன்னுல் டிராம் வண் டியில் அவன் பக்கத்தில் உட்கார்ந்த இருவரில் அவன் ஒருவன் அவன் தான்பிரின் எப்பொழுது வருவான் என்று எதிர்பார்தி
துக்கொண்டே நின்முன், அந்த இடத்திலேயே அவனை கட்டுத்
தள்ளிவிடலாமா என்று தான்பிரின் யோசனை செய்தான். ஒரு
லிேக்ள அவனுக்கு உதவியாக வேறு ஒற்றர்கள் அங்கு வந்திருக்க
ம்ே என்பதாலும் பொது மக்கள் அண்மையில் இருந்ததாலும் அ8ன் துப்பாக்கியை வெளியே எடுக்காமல் ஒன்றும் அறியாத வன் போல் அப்பெண்களுடன் போய்விட்டான்,
அவர்கள் ஐவரும் டிரம் கொண்டராவுக்குச் செல்லும் ஒரு டிராம் வண்டியில் ஏறிக்கொண்டனர். தான்பிரின் மட்டும் கடை சியாக ஏறினன். பெண்களில் ஒருத்தி அவளைப் பார்த்து "அதோ, ஒரு நண்பன் தொடர்ந்து வருகிருன்" என்று மெதுவாகக் கூறி ஞள். தன்பிரின் திரும்பிப்பார்க்கையில் பழைய சாக்கன்தான் அனைத் தொடர்ந்து வந்து வண்டியிலேற முயன்று கோண்டி ருந்தான். ஆனல் தா ன் பி f ன் கால்சட்டை ப் பையிலிருந்த றிவோல்வரில் கை போட்டுக்கொண்டிருந்த நிலையைக் கண்டு அலன் மெதுவாகப் பின்வாங்கி நகர ஆரம்பித்தான். ந%ர்ந்து கூட்டத்தோடு கூட்டமாய் மறைந்து விட்டான். அந்த இடத்தி லேயே தான்பிரீன் அவனைச் சுட்டிருந்தால், பின்னல் அவஞல் இலடயூறு நேர்ந்திராது. ஆனல் பெண் சளின் மத்தியிலே நின்று போராடினுல் எதிரியின் குண்டுகள் அவர்களையும் காயப்படுத்துமே என்றெண்ணி அவன் அந்த நேரத்தில் ஒற்றனை உயிரோடு விட் டுவிட்டான்.
அப்பொழுது உயிர் தப்பிய அந்தக் கயவனே ஜின்றிரவு
தான் பிரீன் டிரம்கொண்டராவில் தங்கியிருந்த இடத்தில் சிப் : ப் கள் சென்று தாக்குவதற்குக் காரணமஞன்,
O

Page 73
டிரம் கொண்டரா சண்டை
அன்றிரவு 11 மணிக்குத் தான்பிரினும், டிரீஸியும் பிளெ மின் துடும்பத்தாருடைய வீட்டிலிருந்து புறப்பட்ட வர். வாயில் வழியாகச் சென்ருல் பொலிஸ் ஒற்றரிகள் ஒரு வேளை கவனித்து விடக்கூடும் என்று அவர்கள் கொல்லப்புறமாகவே வெளியேறி னர். சந்திரனின் ஒளி மிகப் பிரகாசமாயிருந்தது, அருசேயிருந்த ஒரு தோட்டத்திற்குளே சென்று அவர்கள் மேற்கொண்டு எங்கு போகலாம் என்பதைப் பற்றி யோசித்தனர். திருமதி பிட் ஜெரால்டின் வீடும், கரோலன் என்ற நண்பருடைய வீடுமே அவர்கள் க்ன்றிரவு தங்குவதற்கு ஏற்ற இடங்கள். முடிவாகக் கரோலனுடைய வீட்டை நோக்கியே அவர்கள் புறப்பட்டனர். வழியில் .ோல்கா நதியின் மேல் கட்டப்பட்டிருந்த ஒரு பாலத் தைக் கடக்க வேண்டியிருந்தது. அப்பாலத்தின் மேல் செல்லும் பொழுது அவர்கள் வெகுதூரத்தில் ராணுவ லெ7றிகள் ஓடிக் கொண்டிருந்த ஒசையைச் செவியுற்றனர். அப்பொழுது "கேர்பியூ" உத்தரவு அமுளில் இருத்ததால் 12 மணிக்கு மேல் யாராவது தெருவில் வருகிருர்களா என்று பார்ப்பதற்கு ராணுவத்தாரி சுற்

நிக் கொண்டிருந்தனர். அதற்கு வெகுநேரத்திற்கு முன்பே தெருகி களில் ஜனநடமாட்டம் நின்று போய்விட்டது.
தான்பிரின் எப்பொழுதும் கரோலனுடைய வீட்டுக்கு இரவு 11 மணிக்கு மூன்பே போய்விடுவது வழக்கம். ஆணுல் இந்தத் தடவை அங்கு சேரும்பொழுது மணி 11,80 ஆகிவிட்டது. வீட் டில் வெளிச்சமொன்றும் காணப்படாமையால் வீட்டிலுள்ளவர் கள் உறங்கிவிட்டனர் என்று தெரிந்தது, தான்பிரினும், டிரீஸி யும் சந்தடி செய்யாடில் மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே புகுந்தனர். அவர்கள் எந்த நேரமும் தங்குவதற்காக மேல்மாடியின் பின்புறத்தில் நாற்றுக்கூட்டத்தின் பக்கம் ஒர் அறையில் படுக்கை முதலானவை போடப்பட்டிருந்தன. அவர்கள் வீட்டிலுள்ளவரி எவரும் அறியாமலே அங்கே சென்று படுத்துக்கொண்டனர்.
இரண்டு பேர்களும் ஒரே படுக்கையில் படுத்துக் கன்களே மூடிக்கொண்டு உறங்க முயன்றனர். ஆனல் உறக்கம் வரவில்லை. பிற்கால வேலைத்திட்டத்தைப் பற்றியும், திப்பெரரிக்குத் திரும்ப வேண்டியதைப் பற்றியும், பேச ஆரம்பித்தனர். கொஞ்ச நேரத்திற்குப் பின்னல் பேச்சுச் சுருங்கிவிட்டது.
இதன் பின்னுல் இருவரும் "சிறிது கண்ணயர்ந்தனர். சில நிமிஷங்கள் சழிவதற்கு முன்னுல் இருவரும் திடீரென்று விழித் தெழுந்து படுக்கையில் உட்கார்த்தனர். வெளியே தெருவில் சிப்பாய்கள் பலர் "பூட்ஸ்" காலுடன் அணிவகுத்து நடக்கம் சப்தம் கேட்டது. பின் பக்கத்து யன்னல் வழியாக அவர்கள் இருந்த அறைக்குள் ஒரு மின்சார விளக்கைக் காட்டியத: கேயே அவ்வேளிச்சம் தெரிந்தது. அப்பொழுது ஒரு மணி இருக்கும்,
முன் கதவில் ஏதோ கண்ணுடி ச. சட"வென்று உடைத் தது ஒரு கதவு திறக்கப்பட்டது. படிகளின் வழியே சிப்பாய்கள் ஏறிவந்த காலோசையும் கேட்டது
உடனே த" விபிரீனும் டிரீஸியும் படுக்கையிலிருந்து ஏககாலத் தில் துள்ளி எழுந்தனர். இருவரும் றிவோல்வர் சளைக் கையில் எடுத் துக் கொண்டார்கள், கான்பிரின் இரண்டு கைகளிலும் இரண்டு றிவோல்வர்களைப் பிடித்துக் கொண்டான். அவர்களுடைய அறைக் கதவை யாரோ வெளியில் தட்டிக் கொண்டிருந்த சப்தம் கேட் டது. தான்பிரின் வாய் திறக்கவேயில்லை. டிரீஸி அண்டையில் நின்று அவன் வலக்கைைையப் பற்றிக் குலுக்கிவிட்டு "வந்தனம்
- 18 -

Page 74
அன்பா இனி மேலுலகில் சந்தித்துக் கொள்வோம் erdŵrgy, கூறிஞன்.
அந்த நிமிஷத்தில் வெளிக்கதவின் வழியாக இரண்டு குண்டு கிள் சரேலென்று உத்வே பாய்ந்தன. உள்ளிருந்தவர்சளும் உடனே சுட ஆரம்பித்தனர். அறைக்குள்ளே குண்டுகளின் ஒளியைத்தவிர வேறு வெளிச்சமில்லை. வெளியே ஓர் ஆங்கிலேயன் தன் பாஷை பில் "ரியான் எங்கேயிருக்கிருன்? ரியான் எங்கேயிருக்கிருன்? என்று கூவினன்,
என்லாப் பக்கங்களிஅலும் குண்டுகள் பாய்ந்து கொண்டிருந்தன. *றக் தீவு சிறிது திறந்திருந்தது தான்பின் கதவை நோக்கிச் சென்முன், *னது வலது கைப் பெருவிரலிலே ஒரு குண்டுபட்டு இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. ஆனல் அவன் வலியைச் சிறிதும் உணரவில்லை. வெளியே யாரோ ஒருவன் வழுக்கிவிழுந்த இ*கேட்டது. அந்நேரத்தில் டிரீஸியின் றிவோல்வரில் ஏதோகோ வாறு ஏற்பட்டுச் சுடமுடியாது போயிற்று. தான் பிரீன் அவனைப் பின்புறத்து யன்னலைக் கவனித்துக் கொள்ளும்படி கறிவிட்டு வாயிற்கதவைத் தாண்டி வெளியேற முயன்ருன். அப்பொழுது ஒரு குண்டு உள்ளே வந்து உடைகள் வைத்திருந்த இடத்தில் பாய்ந்தது. மாடிப்படியிலிருந்து சுடும் ஒசை திடீரென்று சிறிது நேரம் நின்றுவிட்டது. சிப்பாய்கள் மடமடவென்று கீழே இறங் கிக்கொண்டிருந்தனர். ஆனல் அறையின் பின்புறத்தில் குண்டுகள் வெடித்த வண்ணமாயிருந்தன.
தான்பிரின் அறைக்கு வெளியே சென்று மாடிப் படிககர உற்று நோக்கினன் கீழேயிருந்து ஆறு சிப்பாய்கள் மின்சார ஜூளக்குகளே ஏந்திக் கொண்டு மீண்டும் மேலே போராடா வந்து கொண்டிருந்தனர். அவர்சளுடைய விளக்கொளியில் தான் பிரினு .ை & உருவம் வெகு தெளிவாய்த் தெரிந்து. அவன் பகைவர் கள் தன்னை எளிதில் குறிவைத்தக் கொன்றுவிடுவார்கள் என்ப தையறிந்து விரைவாக அவர்களை நோக்கிக் குண்டுக்கு மேல் குண் டாகப் பொழிந்து கொண்டிருந்தான். வீட்டைச் சுற்றிப் பட்டா ளத்தார் நின்ற விஷயமும், அவன் அவர்கள் அனைவரையும் தப் பிச் யெல்வது எளிதல்ல என்பதும் அவனுக்கு நன்ருய்த் தெரி யும். ஆயினும் அவன் அஞ்சவில்லை. மரணம் நிச்சயம் என்று தோன்றிய போதிலும், எதிரிகளில் எத்தனை பேரை வதைக்க முடியுமோ அத்தனை பேரையும் தீர்த்து விட்டுத்தான் மடிய வேண்டும் என்று அவசன் வீராவேசம் கொண்டு நின்ஞரன்.
m 4 -

அவன் படிக்கட்டை நோக்கிச் சுட்டுக்கொண்டே சென்ற பொழுது சிப்பாய்கள் கீழிறங்கி ஓட முயன்றனர். சிலர் கீழ் வீட்டிலுள்ள அறைகளுக்குள் பதுங்கிக் கொண்டனர்; மற்றும் சிலர் ஒருவர்மேலொருவர் விழுந்துகொண்டு தெருவுக்கு ஒடிச் சென்றனர். தான்பிரினுடைய குண்டுகளுக்கேற்ற பகைவன் எவ னேயும் காணுேம். பின்புறத்தில் மட்டு: இடையிடையே ஒரு குண்டோசையும் காயப்பட்டவருடைய புலம்பலும் கேட்டன.
முன்னுல் வேறு சிப்பாய்களைக் காணுமையால் தான்பிரின் அவசரமாக அறையை நோக்கித் திரும்பினன் அறையின் வாயிற் படியில் இரண்டு பட்டாள அதிகாரிகள் சேத்துக்கிடந்தனர். ஒரு சிப்பாய் குற்றுயிராயிருந்தான். தான் பிரீன் அவர்கல் மிதித் துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அவர்களை வழியைவிட்டு வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு அவன் உள்ளே சென்று கத வைத் தாழிட்டுக் கொண்டான். முதலில் அறையை விட்டு வெளியே சென்றபோது அவன் இந்தப் பிரேதங்களைப் ப9ர்க்க வில்லே. அதற்குக் காரணம் சண்டையின் வேகத்திலே அவனுக் கெதுவும் நன்ருய்ப் புலப்படவில்லை.
சிறிதும் ஒய்திருக்க முடியவில்லை. ஏனென்ருல் : 1. 1ளத் தார் நூற்றுக்கணக்காய் இந்திருந்ததால் மீண்டும் ஒரு முறை வந்து தாக்குவார்கள் என்று அவன் எதிர்பார்த்து யன்னலருகில் சென்றன். பின்புறத்திலிருந்து மின்சார விளக்கின் வெளிச்சம் அறைக்குள் வீசியதும் கண்ணுடிக் கதவுகளை உடைத்துக் கொண்டு பல குண்டுகள் ஜன்னல் வழியாக உள்ளே பாய்ந்தன. அவற்றில் சில அவனுடைய பல அங்கங்களிலும் காயப்படுத்திக்கொண்டு சென்றன.
பன்னலின் கீழ்ப்பாகம் திறந்து கிடந்தது. அதைக் கண்டவு டன் தான்பிரீன் டிரீவி அதன் வழியாகத் தப்பியோடியிருக்க வேண்டுமென்று யூகிக் , அதன் வழியாக வெளியேறி, நாற்றுக் கூடத்தின் கூரையின்மேல் குதித்தான் அங்கிருந்து பார்த்தபொ ழுது வீட்டைச்சுற்றி எண்ணிறந்த உருக்குத் தொப்பிகள் அவன் கண்சளுக்குப் புலப்பட்டன. ராணுவத்தார் யாவரும் நாற்றுக் கூடத்தின் கூரையை நோக்கிச் சுட ஆரம்பித்தனர். தான் பிரினு டைய நிலைமை அபாயகரமாயிற்று எந்த நிமிஷத்திலும் குண்டு பட்டுச் கீழே சுருண்டு விழக்கூடிய நிலையில் அவள் துப்பாக்கிகளுக் குக்குறியாய்க் கூரையின் மேல் தனியாக உட்கார்ந்திருந்தான். கரையை விட்டுக் கீழே இறங்கினல் துப்பாக்கிக் காட்டைத்
- JPS -

Page 75
தாண்டாமல் வெளியேற முடியாது. அந்நிலையே அவன் இடது கையிலே துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு கூரை ஒட்டைப் பார்த்துச் சுட்டான். கூரையில் ஒரு பெரிய துவாரஞ் செய்து கொண்டு அதன் வழியே உட்குத்து உத்திரக் கட்டையைப்
பிடித்துக் தொங்கிக் 8ெ7ண்டிருத்தான் அத்துடன் இடையி டையே வெளியே தலைநீட்டி எதிசிகளை நோக்கிச் சுட்ட தையும் அவன் நிறுத்தவில்லை. அவன் கூட்டத்திற்குள் மறைத்திருந்ததால் எதிரிகளின் குண்டுகள் அவனைப் பாதிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் திடீரென்று சகல பட்டாளத்தாரும் அவ்விடத்தை விட்டு மறைந்து போயினர்
பதுைவர்களைக் காணுமையால் அவன் மெதுவாக மீண்டும் கூரைமேலேறி அங்கிருந்து தரையில் மீது குதித்தான்.
அச்சமயத்திலேலோம் அவனுடைய ஞாபகம் முழுவதும் ஸின் டிரீவியைப் பற்றித்தான். அந்த உயிர்த்தோழன், எங்கே யிருந்தான். என்ன செய்தான் என்ற ஒரு விசயமும் புலப்பட வில்லை. அவனுடைய அறிகுறிகளே தென்படவில்லை. "டிரீஸி டிரீஸி!” என்று அவன் பன்முறை கூவிப்பார்த்தான், பதிவில்லை எங்கேனும் கைவர்கள் மறைந்திருந்து தன்னைச் சுட்டு விடாமல் இருப்பதற்காக அவன் தரையின் ஃல்ே படுத்துக் கொண்டு. "தோழா ! எங்கு சென்ருய்? என்று வினவினுள். பதில் சொல் வார் யர்ருமில்லை. ஐவன் மனம் அனலிடைப்பட்ட மெழுகுபோல்) வருந்திற்று.
கீழே கவிழ்ந்து கிடக்கும் பொழுதுதான் தேகத்தின் பலவீ னம் அவனுக்கு நன்முய்த் தெரிய வந்தது. உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை பற்பல புண்களிலிருந்தும் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது குறைந்தது ஆறு இடங்களிலாவது குண்டு கள் தைத் திருந்தன. அவனுடைய தொப்பியுல், மேற் சட்டை பும், பூட்ஸுகளும் அறைககுள்ளே கிடந்தன. உறங்கிக் கொண் டிருந்தவன் திடீரென்று எழுந்து போராட நேர்ந்ததால், அவசர த்தில் அவற்றை எடுத்துக் கொள்ள முடியவில்லை. போதிய ஆடையில்லாமையால், அவன் வாடையில் துன்புற நேர்ந்தது. ஆளுல் அங்கு தாமதித்திருப்பது அபாயம் என்பதையுணர்ந்து மெய் வருத்தத்தையும் மெலிவையும் பொருட்படுத்தாது எப்படி யாவது தப்பிவிடலாம் என்று அவன் தைரியங்கொண்டு எழுந் தான,
- C -

தப்பிச்செல்வதற்கு வழி தேடிக்கொண்டிருக்கையில் பல வெடி குண்டுகள் நாற்றுக் கூடத்திற்குப் பக்கத்தில் வெடித்தன. அவன் தைரியத்தைக் கைவிடாமல் மெதுவாகச் சென்று அருகேயிருந்த தாழ்ந்த தோட்டச் சுவரைக் கண்ணுற்ருரன். அறிஞர் கரோவன் ஆதியிலேயே அந்தச் சுவரைக் கட்டி வைத்திருந்தார். அது ஆபத் திற்கு உபயோகமாயிருந்தது. நா ற் று க் கூடத்திற்கு அருகே தோட்டத்தில் இரண்டு படை வீாருடைய பிரதேங்களேத் தான் பிரீன் கண்டான், அவற்றிலிருந்து டிரீவி அந்தப் பாதையின் வழியாகவே சென்றிருக்கவேண்டும் என்று தீர்மானித்தான். ஆணுல் டிரீவி அங்கே தப்பியிருந்தாலு: தோட்டத்தின் மத்தி யிலே கொல்லப்பட்டிருத்தல் கூடும் என்றும் அவன் சந்தேகித் தன.
அவன் சுவரின் அடியில் சென்றவுடன் சுவருக்கு மறுபக்கத் திருேந்து ஒரு சிப்பாய் துல்: ஆத தலை நீட்டினுன். சிப்பாய் ஜப்பாக்கியை அவனுக்கு தோராக வைத்துக்கொண்டு குறிபார்த்து, யாரது? தில் அக்கே!" என்று உத்தரவிட்டுச் சுட்.ான். அந் தக் குண்டு குறிதஈ:றிப்போய் விட்டது. உடனே தன்பிரினும் பதிலுக்குச் சுட்டுவிட்டுச் சுவசிலேறி மறுபுறம் குதித்தபோது அந்தச் சிப்பாப் கீழே சுருண்டு கிடத்ததைக் கண்டான்.
வேருெரு சிப்பாய்க் &.ட்டத்தார் அப்பr ல் நின்று கொண்டு அவனைக் குறிபார்த்துச் சுட்டனர். அவன் தன் துப்பாக்கியை *வர்களுக்கு நேராகப் பிடித்துப் பல குண்டுகளை மழையாகப் பொழிந்துகொண்டே, அடுத்த தோட்டத்திலிருந்த மற்ருேரு சுவரையும் தாண்டி வெளியே தெருவில் குதித்தன். அவன் குதித்ததுதான் தாமதம் எங்கிருந்தோ ஒரு ராணுவக் கார் வேக மாய் வந்து அவன் அண்டையில் நின்றது. திேலிருந்தவர்களும் அவனைப் பார்த்துச் சுட ஆரம்பித்தனர். த:ண்பிரின் உயிரை இெறுத்து நின்றதால், காரிலுள்ளவர்கள் நன்ருய்க் குறிபார்க்கு முன்பே எதிர்த்துச் சுடலாஞன். காசிலிருந்த ஒரு சிப்பாப் குண்டு LLTTSTTT ccTTTSS TS STTT tTLT S TATT LLLtLTLTLL TTtL LL LLLLLLLLSS z :ெசின் குண்டுகள் தன்னுடம்பில் பா4: நீதவாறு தப்பி மறைந்து கொண்டான். குண்டுகள் நாலா பக்கத்திலும் பறந்து கொண்டி ருந்தனவேயுள்றி *வன் மேல் டேவிஸ் ஃம்; சுவர்களிலும் மரங்க ளிலுமே பாய்ந்துகொண்டிருந்தன. தான்பிரின் தான் நின்ற தெரு கரோலனுடைய வீட்டுக்கும் டிரம்கொண்டிரா பாலத்திற் குமிடையேயுள்ளது என்று கண்டான். அவ்வழியே, செனழுஸ் ஆங்காங்கே நிறுத்தபட்டிருந்த பட்டாளத்தருடைய கையில் சிக்கும்படி நேரும் என்பதை உண்ர்ந்து. வலது பக்கமாய்த் திரும்
- 7

Page 76
பிச் சென்மூன். சிறிது தூரத்தில் செயிண்ட் பட்ரிக் கலாசாசில யிருந்தது. அதன் முன்புறத்தில் சுமார் 18 அடி உயரமுள்ள பெரிய சுவர் உண்டு. அவன் அந்தச் சுவரைத் தாண்டிவிட்டால், சிப், ய்கனின் வலையில் அகப்படாமல் தப்பி விடலாமென்று «GayL-óir arawartåntdär. e4S9 றர் உதவியில்லாமல் அந்தச் சுவரை எப்படித் ് கால்களில் பூட் ஸுகளும் இல்லை. வலது கால் பெருவிரலோ குண்டுபட்டு ஒடிந்து வேதனை கொடுத்து வந்தது. இவற்ருேடு உடம்பு முழுவதும் குண்டு பட்ட புண்கள் ஆளுல், உயிருக்காகப் போராடுகிற ஒரு மனிதனுக்கு எங்கிருந்தோ தைரியமும் வலிமையும் டிந்து விடும் எப்படியோ அவன் ஒரே மூச்சில் அச்சுவரிலேறி அப்பால் குதித்து விட்டான் இது பெரிய விந்தைதான். தான்பிரீன் பிற்காலத்தில் பட்ரிக் கலாசாலைப் பக்கம் செல்லு:பொழுது எல்லாம் அந்தப் பெரிய சுவரைத் தான் தாண்டியது உண்மைதானு என்று ஆச்ச ரியப்படுவது வழக்கம். கலாசாலைக்குள்ளே சென்றதும், அவனுக் ருக் கொஞ்சம் மன அமைதி ஏற்பட்டது. ஆயினும் அந்து இ. மும் கரோலனுடைய வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்ததால் சீப்பப்கள் எந்த நேரத்திலும் இங்கு வந்து விடக்கடுக் என் பதையறிந்து அவன் மெதுவாகச் சந்தடி செய்யாமல் ஊர்ந்து செண்முன்,
அவன் நடந்து செல்லும்பொழுது இடையே டோல்கா நதி இழக்கிட்டது, தங்குவதற்கு அபக்கத்தில் வேறு இடமில் ல:&. அவன் ஆற்றைக் *1.ந்து செல்லவேண்டியிருந்தது. எப்படியும் பட்டாளத்தார் நின்ற இடத்திலிருந்து வெகுதூரம் தள்ளிச்சென்று விட வேண்டியிருந்தது. வீதி மார்க்&மாய்ச் சென்றல், ஆற்றைத் தாண்டப் பாலம் இருக்கும். ஆணுல் வீதி பில் பட்டாளத்தாரும் இருப்பார்கள் அல்லா? எவ்வளவு குளிராயிருந்தாலும் ந தி யி ல் வி ழு ந் து நீ த் தி அக்கரை செல்லவேண்டுமென்று தான்பிரின் துணிந்தான். ஆற்றில் குதித்து விட்டார். நீந்துகையில் கால்களில் குண்டுகளால் துல்ாக்கப்பட் டிருந்த துவாரங்களில் ஒரு பக்கமாய்த் தண்ணிர் புகுந்து மறு பக்கத்தால் வெளியே சென்றது. அத்தனைக் கொடுத்துண்டத்தி லும் அவனுக்குத் தண்ணீருடைய தண்மை அதிகமாய்த் தெரிய வில்லை. இத்தகைய சந்தர்ப்பத்தில் நெருப்புச் சுடாது. நீரும் குளிாாது. இயற்கை உணர்ச்சியே அற்றுப் போய்விடுமல்லவா! மனத்திலே ஒரு பெரும் உணர்ச்சி குடிகொண்டிருக்கும் பொழுது, அற்பமான துன்பங்களும் இன்பங்களும் ஒருவனைப் பாதிக்க
سم وقف مسمى

மாட்டா. ஈனவே கைகளையுக் கால்களையும் அடித்துக் கொண்டு தான்பிரின் எப்படியோ அக்கரை சேர்ந்தான்
ஆற்றின் மறுகரையில் சமீபத்தில் சில வீடுகளிருந்தன. அவையிருந்த இடம் மரங்களடர்ந்த "பொட்டணிக் அளினியூ" என்று அவன் தெரிந்து கொண்டான். அவன் நின்றது வீடுகளின் பின்புறத்தில். மேற்கொண்டு அவளுல்ை நடக்கமுடியவில்லை. அவ னுடைய உடஃபிலிருந்து இரத்தம் வழிந்த வண்ணமாயிருந்தது. மேற்கெ*ண்டு வெளியே கங்கினல் வெறுங் களப்பினுலேயே இற ந்து விழநேரும். ஆதலால் ஏதாவஐ ஒரு வீட்டிற்குச் சென்று இளைப்பாற வேண்டுமென்று அவன் விருபிஞன்,
யாதொரு யோசனையுமில்லாமல், அவன் திடீரென்று சென்று ஒரு வீட்டின் கொல்லைக் கதவைத் தட்டிகுறன். அன்றிரவு அவன் எந்த வீட்டைத் தட்டியிருந்தாலும், அவன்பாடு அன்ருேடு தீர்ந்து போயிருக்கும். எந்தத் தெய்வமோ வழிகாட்டியது என்று சொல் லும்படியாக, ஆவன் அந்த வீட்டின் கதவைத் தட்டினுல் அந்ே ஈத்தில் (காலை 3 அல்லது 4 மணிக்கு) தலவிரி கோலமாய், உடம் பெல்லாம் இரத்தம் பெருகி, உடையெல்லாம் நனைந்து, அவன் நின்றுகொண்டிருந்த நிலையை யார் கண்டாலும் திடுக்கிட்ப்ே போயிருப்பர்.
ஒரு முறை தட்டியதில் ஒருவரும் ஏனென்று கேளாததால், அவன் மீண்டும் தட்டினுண். ஒரு மனிதர் வந்து கதவைத் திறந்து எதிரே நின்றுகொண்டிருந்த உருவத்தைக் கண்டார். தான் பிரீன் மெய்மறந்த நிலையில், வாய் குழறிக்கோண்டே, தனக்குத் தங்க இடம் வேண்டுமென்று வேண்டிஞன். அவ்வீட்டுக்காரர் அவனே யாரென்றும், எவ்வாறு காயமுற்ருன் என்றும் கேட்க வில்லை. “உள்ளே வாருங்கள் எங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ அதைச் செய்யக் காத்திருக்கிருேம்" என்று வரவேற்று உள்ளே அழைத்தார்.
அவரும் அவர் மனேவியும் தான்பிரிக்ாப் படுக்கையில் படுக்க வைத்து, உடனே அருகே வசித்துக்கொண்டிருந்த லாங் என்ற தாதிப் பெண்ணை அழைத்துவந்தனர். அவர்கள் அவனுடைய புண்களுக்கு மருந்திட்டு, உற்சாகமளிக்கும் பாணமொன்றையும் குடிக்சக கொடுத்தனர். அந்தப் பானம் தனதிப் பெண்ணுல் வெளியிலிருந்து வாங்கிக் கொண்டுவரப்பட்டது.
தான்பீரின் ஆதரித்து வீடு கொடுத்து உதவிய கனவான் பிரெட் ஹோம்ஸ் என்பவர். அவருக்குப் புரட்டியில் அபிமான
- 9 -

Page 77
மில்லாததோடு ஆங்கிலேயரிடமே அனுதாபமுண்டு. ஆயினும், "அவரும் அவர் பத்திவியும் தான்பிரிக்னத் தங்கள் செrந்தப் பிள்ளையைப் போலும், சகோதரன்ாப்போலும் பாவித்துச் சிகி ச்சை செய்து வந்தனர். தான்பிரின் தனக்குக் காயங்கள் எப்படி யேற்பட்டன என்பதைச் சொல்லாமலிருப்பினும், அவர்கள் வேண் டிய உபசாரம் செய்து அவன் உயிரைக் காப்பாற்றினர்.
நன்ருக விடிந்த பிறகுதான் தான்பிரின் அவர்களிடம் தான் யாரென்பதைக் கூறிஞறன். ஹோம்ஸ் அவனைத் தேற்றி நன்ருகக் குணமடையும்வரை தாங்கள் பாதுகாப்பதாயும், பின்ஞல் வேறு பத்தோபஸ்தான இடத்திற்கு அனுப்பி, வேண்டிய உதவி செய்வ தாயும் வாக்களித்தனர்.
மறுநாள் தோழர்கள் தான்பிரினை ஒரு காரில் வைத்து. மேட்டர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். வழியில், சார் லஸ் தெருவில் டிரீவி அவனைக் கண்டு உயிர்தப்பிவந்த விபரத் 6mAg Garmrally Sysär.
வைத்தியசால்யில் டாக்டர்கள் தான்பிரினுக்கு மிகுந்த அன் புடன் சிகிச்சை செய்து வந்தனர். ஆஞல் அங்கு அடிக்கடி பட் டானத்தாருடைய சோதனை நடந்து வந்தது. இப்படி அக்டோ கர் மாதம் 14 ம் நிகதி வெடிகுண்டினுல் காய48டைத்த ஒரு பைய கிாத தேடி ஒரு சோதனை நடத்தது, அதஞல் தேர்த்த விடf தத்தை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.

20
பிரிவும் பிரிவாற்றமையும்
தான் பிரின் மேட்டர் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டிருக் கும்பொழுது, அவனுடைய உயிர்த் தோழன் ஸின் டிரீவி சிறிது கூடச் சோம்பியிருக்கவில்லை. ஆஸ்பத்திரியில் கிடந்த தன்னுடைய நண்பனுக்கு எவ்வித ஆயத்தும் நேராமலிருக்க வேண்டுமென்று அன்ை கண்ணில் எண்ணெயூற்றிக்கொண்டு கவனித்து வந்தான் பீலர்களோ, பட்டrளத்தார்களோ ஆஸ்பத்திரிப்பக்கம் சென்ருல் உடனே சென்று அவர்களை எதிர்த்து போராடவேண்டும் என் பது அவன் தீர்மானம், அக்ாடாபர் 14 ம் திகதி வியாழக்கிழமை மாலையில் அவன் எதிசபார்த்திருந்த சோதளே நடத்தது. அவன் அதை முன்கூட்டியே அறிந்து உடனே வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய முற்பட்டான்.
அவன் நேராகத் தொண்டர்களுடைய தலைமைக் காரியால யத்திற்குச் சென்று தன்னுடன் ஒர் உதவிப்படை அனுப்பவேண் டும் என்று கேட்டான், அவர்கள் அவ்வேண்டுகோளுக்கு இசைந் தனர். டிரீவி பல நண்பர்களை அழைத்துக்கொண்டு மற்றும் சில முக்கியஸ்தர்களையும் கூப்பிடுவற்காக வெளிப்பட்டான். தான் பிரினக் காக்க வேண்டுமென்ற ஆவலினுல் அவள் தன்னை அறவே மறந்து விட்டான், டப்ளின் நகரத் தெருக்களில் பகலில் தாரா

Page 78
விரமாய் நடந்து சென்ரூன். ஒற்றர்களோ தொண்டர்களில் எவன் தெருவில் வருவான் :ன்று வேட்டை நாய் போல் காத்துக் கொண்டிருந்தனர். அ&ர்களில் சிலர் டிரீஸியைப் பின்தொடர்ந்து கவனித்து வந்தனர். அவன் அவர்களைக் கவனிக்கவேயில்லை. அங் &#prubntas psL-Ábágy Gaasmrečia7uq, QubÁñas M7aâ7.
அவன் சகல ஏற்பாடுகளேயும் செய்து விட்டுக் கடைசியாக டால் டட் தெருவிலிருந்த ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்ருன். அங்கு சில முக்கியமான தகவல்கள் கொடுக்கவேண்டியிருந்தது. அந்தக் கடை புரட்சிக்கட்சித் தலைவர்களான டாம் ஹண்டர், பீடர் கிளான்ஸி ஆகிய இருவராலும் நடத்தப்பட்டு வந்தது. அவர்கள் ஜவுளிக்கடை என்று பெயருக்கு வைத்துக்கொண்டிருந் தார்களே தவிர அவ்விடத்தில் தான் குடியரசுப்படை சம்பந்த மான பல வேல்சளும் செய்து வற்தனர். சுருங்கச் சொன்னுல் அந்தக் கடையே தொண்டர்களுடைய "சதியாலோசனை மணி மண்டபம்" என்று கூறலாம். பீலர்களும் அதையறியாமலில்லை. அவர்கள் இரகசியமாய்ப் பல நாட்களாக அதைக் கவனித்துக் கொண்டு வந்தனர். எனவே அங்கு செல்லும் தொண்டர்கள் அங்கு அதிக நேரம் தாமதிப்பதில்லை.
டிரீஸி கடைக்குச் சென்ற சமயத்தில் அங்கு டப்ளின் நகரப் புரட்சிப் பட்ட8ளத்தின் தலைவர்கள் சிலர் ஒர் அவசரக் கூட் டத்தே நடத்திக்கொண்டிருந்தனர். அவள் உள்ளே புகுந்து, கதவண்.ையில் நின்று சில தகவல்கன்ப் பேசிக்கொண்டிருந் தான.
அதற்குள் பட்டாளத்தார் கடைப்பக்கம் நெருங்கி விட்ட னர். சடைமுகப்பில் நின்று கொண்டிருந்த டிரீஸியே பகைவரின் ருேகையை முதன் முதல் தெரிந்து கொண்டவன். வேறு இரண்டு மூன்று பேர்கள் கடைக்குள்ளிருந்து துணிந்து வெளியே ஒடிஞர் Gesir.
ராணுவ வாகனங்கள் கடை வாசலில் வந்து நின்றன. அச்ச மயந்தில் கடைக்குள்ளிருந்த ஒருவன் வெளியே ஒடிஞன் ஒரு கிப் பாய் வாகனத்திலிருந்து கீழே குதித்து அவனை வழிமறிக்கச் சென் முன், இப்பொழுது ஒரு ராணுவ ஒற்றன் முன்வந்து, "அவனே விட்டுவிடு' நமக்கு வேண்டியவன் அதோ நிற்கிருன்" என்று டிரீவியைச் சுட்டிக்காட்டின்ை. டிரீஸி அப்பொழுது கடைக்கு வெளியிலிருந்த தன்னுடைய சைக்கிளில் காஃ வைத்து ஏறிக் கொண்டிருந்தான். உடனே அந்த ஒற்றல் அவன் மேலே பாங்க்
- 4 -

* டிரிளியா பயிற்து கொடுப்பன் இப்பிவிருந்து றிவோல் வரை உருவிக்கொண்டு, ப*கவனக் காக்கலானன். Ք-ւ-tծւլ சிேசிேதும் சல்லடைத் கண்ணுவத் துணைக்கப்படுவரை அவன் 胰sö山 மாட்டான் என்பது சிப்பாய்களுக்கு எப்படித் ஜேரியும்? ஆணுல் ஜீவன் போராட்டத்திற்கு கயாராயில்லாதபொழுது, எதிர்பாராத நில்வில் பகைவர்கள் அவர் சூழ்ந்து நின்றனர்.
வாகனங்களிலிருந்த ராணுவ வீரர்கள் தனவரும் நீங்களுடைய துபோக்கிகளை டிரிஸியை நோக்கிப் பிடித்துக் கொண்டு சு. ஆரம் பித்தனர். அவர்களுடைய ஒற்றன் டிரிஸியுடன் GLuryurmrugdi; கொண்டிருந்ததால் அவன் மேலும் குண்டுகள் படக்கூடும் என் * அவர்கள் பொருட்படுத்தவேயி3 ஒரு மனிதனை எதிர்ப் *திற்கு எத்தனை சி:பய்கள் எத்தனே இயந்திரத்துப்பr லேன் டிரீவியைச் சுற்றி நெருப்பு மழை பொழிந்தது. அவன் உட லெல்லாம் குண்டுகள் பாய்ந்தன. கடைசிவரை பகைவரை நோக் &gë சிட்டுக்கொண்டே, அந்த உத்தம வீரன் * யிர்துறந்து பெற் * படுத்த Her 6ðaflg. பூமியின் மடியிலே *ாய்ந்தான் *னுெடன் அவ்வழியாகச் சென் நிற மூவர்களும் ச* இறுவத்தாருடைய குண்டு ளுேக்கு இரைய:யினர். டிரீவியுடன் LinTurnrgau ஒற்றணும் படு காயமடைந்து கீழே வீழ்ந்துகிடந்தான்.
தேசத்திற்கு இதயத்தையும், தொண்டிற்குக் கைகளையும் கிரிப்பணம் செப்த டிரீவியின் வாழ்க்கை இவ்வாறுஆடிந்தத. தோழனுடைய உயிரைப் பாக்காக்க அவன் தன் ஆருயிரையே பலிகொடுத்தான் மாளிகைகளில் தங்கி, அறுசுகிேயுண்டிகளை .ேண்டு, கோழைகளாயும், அடிமைகளாயும், அந்நியருடைய கொடுங்கோலுக்குப் பணிந்து வாழும் விதர்களின் நடுவே, பெற்று வளர்த்து தாயின் மானத்தை அந்தியர் குலைத்துது கொண்டிருக்கும் பொழுது வீரத்திருமகன் சுகத்தையும் போகத் தையும் விரும்புவான? அவன் படுக்குக் மெல்விய பஞ்சணை கல் லறையின் கீழுள்ள *வக்குழி அவன் உண்ணு; சுலையுள்ன உண்டி தஞ்சினும் கொடியது லீன் அrை ஒன்றையும் விரும் சேது வீட்டையும் வாசலையும் விட்டு, உற்ருரையும் பெற்றுரை 4ம் துறந்து, பகலில் தங்கிய இடத்தில் இரவில் தங்காது அகல து. பகைவருடன் பற்பல இடங்களில் வீரப் போராட்டங்கள் செய்து. கடைசியாக டப்லின் கிடைத்தெருவில் பகைவருடைய குண்டுகளை நெஞ்சிலே தாங்கி,வீர மரணமடைந்தான்
சிவன் வாழ்விலும் விர, சாவிலும் வீரன், அவனைப்பஈர்க்கி அம் ராணுவ அறிவும் போர்த்தந்திரங்களும் தெரிந்தள்ை
ܝܗܝ 10 ܡܗܝ

Page 79
அவரிலாத்தில் கிடையாது. 28 வயது நிரம்ப முன்னரே, அவன் இறந்துவிழ நேரினும், அந்த வாழ்க்கையில் அவனுடைய அபா ரத் திறமைகளே வெளிக்ாேட்டி விட்டாள். பொதுவாக ஐரிஷ் தொண்டர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு செய்துவந்த கெரில் லாச் சண்டை வல்லமை மிக்க தலைவர்களால் மிகத் திறமை யோடு நடத்தப்பட்டது என்பதை உலகத்தார் அாேவரும் ஒப் புக்கொள்வர். இத்தல்வர்களிலே சிறந்தவன் டிரீவி. அவன் கூரிய யுத்திகளை வைத்துக்கொண்டே மற்றத்தளகர்த்தாக்கள் அற் புதுப் போராட்டங்கள் செய்து பெரும் புகழ் படைத்த it.
டால் பட் தேருவில் நடந்த போராட்டத்தைக் குறித்து தான் பிரீனுக்குப் பல நாட்கள் வரை ஒன்றுமே தெரியாது. அவன் குருட்டு நம்பிக்கை கொள்பவனல்லன்; அவனிடம் கற்பஞ சக்தி யும் அதிகமில்லை. அப்படி யிருத்தும் 13 & திகதி வியாழக்கிழமை மாலை, அலன் தனது கட்டிலின் பக்கத்திலே டிரீஸியின் உருவம் வந்து நின்றதாகக் கண்டான். இதைக் கேட்டவர்கள் அது கனவு என்றும், மனைவி கற்பம் என்றுtல் சமாதானம் கூறிவிடலாம். ஆணுல் அவனுக்குத் தான் கண். காட்சியை என்றும் மறக்க முடியவில்லை.
அன்று மாலை மைக்கேல் காலின்ஸ் தான்பிரினக் கானச் சென்ருன், உடனேயே தான் பிரீன், "டிரீஸி எங்கே?' என்று முதலர்வதாகக் கேட்டான். உள்ளதைச் சொன்ஞல் அவனுடைய புண்கள் ஆறுவதற்கு இடையூருயிருக்குகிென்றும், அவனுடைய மனம் முறிந்து போகும் என்றும் கருதி, "அவன் நாட்டுப்புறத் துக்குப் போயிருக்கிருன்," என்று காலின்ஸ் கூறிஞன்.
பத்து நாட்களுக்குப் பின்புதரின் தான்பிரீனுக்கு முழுவிவரம் தெரியும். பிரிட்டிஷார் டிரீஸியின் பிரேதத்தைக் கப்பல் தெரு விலிருந்த படை வீடுகளுக்குக் கொண்டுபோய்ப் பரிசோதனை செய்து விட்டு, அதை அவனுடைய நண்பரிகளிடம் கொதித்தனர், பிரே தம் டிரீஸியின் சொந்த ஊரான திப்பெரரிக்குக் கொண்டு போகப் பட்டு, ராஜாக்களும் கண்டு பொருமைப்படக்கூடிய முறையில் கெளரவிக்கப்பட்டது. திப்ரெரி வாசிகளில் எவனுக்குல் அவ்வித மான மரியானதகள் செய்யப்பட்டதில்லை. பல டிைல் நீளமுள்ள பெரிய வார்வலத்துடன் பிரேதம் கல்லறைக்கு எடுத்துச்செல்லப் பட்டது. டிரிலியின் இறந்த உடல்க்கண்டும் அஞ்சுவது போல், பிரிட்டிஷrருடைய துருப்புக்கள் ஆயுதம்தாங்கி வழிழழுதும் நின்று கொண்டிருந்தன. அன்றையதினம் தென் திப்பெரரிப்
- 44 at

பிரதேசம் முழுதும் துக்கதினமாகக் கொண்டாடப்பட்டது. அன்று அழுது கண்ணீர் பெருக்காத ஜனங்களேயில்லை. டிரீஸியின் சமாதி கில் பீக்கின் என்னுமிடத்தில் இருக்கிறது. அது பிற்காலத்தில் ஐரிஷ் ஜனங்கள் யாத்திரை செல்லும் புனிஷ் ஸ்தலமாகி விட்டது
மேட்டர் ஆஸ்பத்திரியில் வைத்தியர்களும் தாதிகளும் தான் பிரீனுக்குச் செய்துவந்த உபசாரத்திற்கு அளவேயில்லை. அக்கா லததில் குண்டுபட்டுக் காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரிசளுக்குள் கொண்டுவரப்பட்டால், உடனே வைத்தியர்கள் டப்ளின் மாளி 8ைக்குத் தகவல் கொடுக்க வேண்டுமென்று சர்க்கார் உத்தரவு பிறப்பித்திருந்தனர் இந்த உத்தரவின் மூலம் தான் பிரின் போன்ற தர்களைப் பிடித்துவிடலாமென்று அவர்கள் மனப்பால் குடித்து வந்தனர். ஆளுல் வைத்தியர்கள் தங்களுடைய அரசி பல் கொள்கை எப்படியிருந்தபோதிலும், சர்க்காருடைய உத் தரலை நிறைவேற்றுவதில்ஃ. அது அவர்களுடைய ருெற் a369659 Ls).
அடுத்த வெள்ளிக்கிழமையன்று தான்பிரின் மேட்டர் ஆஸ் பத்திரியிலிருந்து வெளியேறினன். சில நண்பர்கள் அவனை நகரின் தேன்.ததியிலிருந்து வே*ருரு வைத்தியப் டெண்ணினுடைய வீட்டுக்குக் கொண்டு பேசஞர்கள், ஏனெனில் ஆஸ்:த்திரியில் மேற்கொண்டு தங்ஜதுை :7ய:ாய்ப் போய்வி.து, புதிய வீட்டில் அவன் இணமடைந்து சிலநாட் அளில் எழுத்து பக்கத்தில் நடமாடக்கூடிய எளிமையும் பெர்ருள். அவனை வேறிடத்திற்கு அ8ழத்ஈப்போகஆேண்டிய அ' ஃ:மேற்பட்டது. பார் விம்மை யின் வீட்டில் ஜீவனுடைய &**சைக்கு வேண்டிய ஏற்பrடுகள் செய்யப்பட்டன. இரண்டு மூன்று தினங்களில் அந்தத் தெருவை யும் பட்டாளத்தார் சோதனை இட்டனர்.
O

Page 80
2.
திருமணம்
தான் பிரீன் நிலேயாக ஓரிடத்திலே தங்கியிருக்க முடியவில்லே, அடிக் டி இடம் மாற்றிக்கொண்டேயிருந்தான். ஏனெனில், :* கிலாந்து ஆயிரக்கணக்கான புதிச் சிப்பாய் க்ள அயர்லாந்து *கு அனுப்பிக் கொண்டிேயிருந்தது, இங்கிலாந்திலுள்ள சிறைச் அக்க அளல்லாம் காலியாகி, அவைகளிலிருந்த கேடிகளும் தூர்த் தர்களும் அயர்லாந்தின் மீது அவிழ்த்துவிட்டனர். அந்தக் கொலைக்காரர்கள் சாத்தா உயிரைப் பழிவாங்கிலுைபு, எத்தனை ஊர்களைக் கொள்காயடித்தாலும், தீ வைத்து சாரித்தாலும் கேள்வி கேட்பதில்லை என்று அதிகாரிகள் அவர்களுக்கு உறுதிமொழி கொடுத்திருந்தனர்.
இதுகாறும் தான்பிரின் தனிமையாகவே வாழ்ந்து வந்தான். தேகத்தில் புரட்சிப்போர் கொழுந்து விடடெரித்து கெ: ண்டிருந் தது அவனுடைய உயிருக்கு எந்தநேரம் ஆபத்து என்பது தெரி யாமலிருந்தது. அவனுடைய தலையைக் கொப்து சர்க்காரிடம் கொடுபவர்களுககுக் கை நிறையப் சொற்குவியல் கிடைத்திருக் கும், நடு. நகரும் நன்கு அறியும்படி அவன் கலகக்காரருடைய தலைவன் ஒன்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அந்தநிலையில் அவன் திருமணம் செய்துகொண்டான், 1921 ஜாள் மாதம்

12 ஆம் திகதி ஆங்கிலேயருக்கும் அபரிமாற்திற்கும் சமாதானம் ஏற்படுவதற்கு ஒருமrதத்திற்கு முன்னர், அத்திருமணம் நிறை வேறியது.
TL TTLLctMLSSS 0000 TTLLLS LLLLLLtLEtt SLL0LaS SSM 00T TT TTTr மாதினுல் சிகிச்சை செய்யப்பட்டு வந்த விஷயம் முன்னரே கூற பட்டிருக்கிறது. அம் மாதே அவனுடைய மனைவியாள்ை அவ ளுடைய கவனத்தினுலும் ஆதரவிஞலுமே அவன் முன்னல் விரை வாகக் குணமடைய முடிந்தது. பிரிகிட்டும் அவளது சகோஃரி ஆன்னியும் அவனைக் தங்கள் குடும்பத்தாஞ%வே கருதி உபசரித்து ந்ேததை அவன் என்றும் மறந்ததில்லை. அவன் மலோன் குடும் பத்தாரைக் கண்டமுதல், நாளுக்கு நாள் அவர்களுடைய நேசப் பான்னம வளர்ந்து வந்து. கடைசியாக அக்டுேம்பத்தைச் சேர் ந்த கட்டிளங்கன்னியை அவனே மணந்துகொள்ளவும் நேர்த்தது. 1920 லேயே தான் பிரீனும் பிரிகிட்டும் மனந்து கொள்வதென்று முன்கூட்டி உறுதி செய்து கொண்டிருந்தனர்.
டிரம் கொண்டரா சண்டைக்குப்பின்ஞல் தான் பிரீன் காய மடைந்து கிடைக்கையில் பிரிகிட் அடிக்கடி சென்று அவன்' &ார்த்துவந்தான். தான் பிரீனை மணந்து கொள்வதில் எத்தனை *ஷ்டங்கள் இருந்தன என்பதைப் பிரிகி. அறியாதவள*ல. அவன் எந்த நிமிஷம் பகைவரால் சுடப்படுவான் என்பது is சயமில்லை. ஓவனுடைய அன்புக்குப் பாத்திரமான மனைல் என்ற இாரணத்தால் பிரிகிட்டையும் பட்டாளத்தர் இரவு ப&ல் எந் ஈ நேரத்திலும் கொடுந்துன்பங்களுக்கு ஆளாக்குவார்கள். அக்*ா லத்தில் அவனுடன் நட்டாயிருப்பதே குற்றம், அதி: மனேவி பாயிருப்பது எவ்வளவு பெரிய குற்று: ஒiறர் ஸ் பி.ே ' "ே விட்டே நினைத்தபொழுதெல்லாம் சே துனை போடுவார்கள். "உன் கணவன் எங்கே?" என்று கேட்டு அவளைச் சித்திரவதை செய்வார்கள். இத்தனை துன்பங்களும் அவளுக்கு ேெகு நன்ரு 'க் தெசிக் திருந்தும், அவள் எதையும் பொருட்படுத்தாது, அந்த வீர சிங்கத்தையே காதலித்து மணந்து கொள்ள இசைந்தாள், தான் பிரீனும் அவளை மணந்து கொள்வதால் தேசியப் பேரா. த் தில் தனக்கு அதிக வலிமையாகும் என்று கருதினுள்.
திருமணத்தன்று தொண்டர்கள் அணிவகுத்து நின்ற காட்சி ஒரு பெரிய மன்னரைக் கெளரவிப்பது போலிருந்தது, கயெ7ணத் திறகு முதல் நாள் இரவு ஸ்ரீன் ஹோகன். டின் னி லேவி முத லிய தோழர்கள் தான் பிரீனுடன் ஒரு கூடாரத்தில் தங்கியிருந் தர்ை. இரவுமுழுதும் அவர்கள் உறங்காது தங்கள் தே? பூக்னக்
حسمه، 47 -سسس

Page 81
கேலி செய்வதும், அவனுக்கு உடதேசங்கள் செய்வதுமாகக் காலக் கழித்தனர். பகைவர்களுடைய குண்டுசஞக்கெல்லாம் தப்பிய தான்பிரின் தோழர்களுடைய தாக்குதலுக்குத் தப்பமுடியாமல் தவித்துக்கொண்டிருற்கான்
திருமணத்தில் நண்பர் யாவருக்கும் பெரிய விருந்தளிக்கப் பட்டது. அன்று முழுதும் எங்கும் ஆண்களும் பெண்களும் ஆனந் தமாப்ப்பாடவு.ே ஆடவுமாகயிருந்தனர். இரவில் எல்லோருே நடனம் செய்தனர். பட்டாளத்தார் வந்துவிடாமல் வெளியிடங் களிலே காத்துக்கிகாண்டிருந்த தொண்டர்கள் இடையிடையே வேறு தொண்டர்களைத் தங்கள் இடங்களில் வைத்துவிட்டு வற்து. தாங்களும் கல்யாண விமரிசைகளில் கலந்துகொண்டனர். ஆளுல் பையன்கள் நடனமாடும் பொழுதும் துப்பாக்கிகளை மட் டும் மறக்கவில்லை அவை பக்கத்து ஜன், ஸ்களில் தயாராயிருந் தன. கூத்திலும் பா.டிலுங்கூட அவர்கள் பேrருக்குத் தயாரா கவேயிருந்தனர்
திருமணத்திற்குப் பிறகு தான்பிரின் தம்பதிகள் பல அன்டர் களுடைய விருந்தினர்களாக அநேக வார்க்ளில் தங்கிவந்தனர். சென்ற இடங்ஜினிலெல்லாம் அவர்களுக்குக் கிடைத்த பாதுகீrட் புக்கும் உபசாரத்திற்கும் அளவில்லை. அவர்க*ள வாழ்த்தாக தன்
ரேயில்லை; வியந்து போற்றுத ஜனங்கனேயில்லை,

22
சமாதானம்
192. ஆம் வருடம் ஜூன் மாதம் ஆரம்பத்திலேஐே சில ஐரிஷ் தலைவர்கள் இங்கிலாந்தோடு சமாதானம் செய்துகொள்ள முயற்சித்த செய்தி வெளிவந்தது, ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் சமாதானம் ஆமுலுக்கு வரவேண்டுகிென்று உடன்படிக்கை யும் செய்யப்பட்டது.
தொண்டர்கள் இந்த்ச் சமாத இத்தில் கொஞ்சம் ஒப்வு கிடைக்கும் என்றும் பின்னர் மீண்டும் சண்டையை ஆரம்பிக்க லாம் என்றும் எண்ணியிருந்தனர். அவர்களிடம் வெடிமருந்து அதிகமாயில்லை. குண்டுகளும் குறைவு. ஒய்வுக்காலத்தில் வெளி நஈடுகளிலிருந்து வெடிருந்தை ஏராளமாய் வரவழைத்துக் கொள்ளலாம் என்று அ&ர்கள் தீர்மானித்தனர். சமாதானம் பின்ஞல் தேசத்தைப் பிளவுபடுத்திப் பெருந்த அவமானத்தை விளைவிக்குமென்ற விஷயம் அவர்களுக்குத் தெரி:ாமற்போய் விட்டது, சமாதானக் காலத்தில் தான் பிரீன் தென்பகுதியிலிருந்த குடியரசுப் படையின் "குவார்ட்டர் மாஸ்டர்" பதவியில் இருற் தான், ஆணுல், பின்னல் அப்பதவியை ராஜினுமச் செய்துவிட் டான். அக்கிாலத்தில்தான் அயர்லாந்து முழுதும் சிதறிக்கி.ந்த குடியரசுப் படையின் பிரிவுகள் பெருஞ்சேனைகளாக ஒன்று சேர்க் ésüul-l-Gör.

Page 82
சமாதானக் காலத்தில் தான்பிரீனும் மற்றத் தொண்டரி களும் நகரங்களில் சுயேச்சையாக நடமாட முடிந்தது. சென்ற இடமெல்லாம் ஜனங்கள் அவர்களே வரவேற்று, "சுதந்திர வீரர் கள்" என்று பாராட்டிப் புகழ்ந்தனர். இரண்டு வருஷங்களுக்கு முன்ஞல் அவர்களைக் கொலைகாரர்கள்? என்று கூறிவந்த ஜனங் களே, பின்னல் அவர்களைப் போற்றிப்பரவ நேர்ந்தது
செப்டம்பர் மாதம் முடிவில் அவன் .ப்ளினுக்குச் சென்று
தங்கியிருந்த:ேது, அங்கிருந்த தொண்டர்ட்டைத் தலைவர்கள்
அவனுக்கு ஒரு தங்சுக் கடிகாரமும், சங்கிலியும் பரிசளித்து அவ
ச்ெ பாரஈட்டிப் புகழ்ந்தனர்,
சமாதான உடன்படிச்கை கையெழுத்தாவற்குச் சில தினங் சுளுக்கு முன்ல்ை தான் பிரீன் டப்ளினை விட்டுத் தென்பாகத்திற் குச் சென் முன், Qg vaše u ries? Qudi arth ஒன்று சேர்த்துப் போலிச் சமாதானத்தை எதிர்த்து நிற்கும்படி செய்துவிட்டாலி" தலைவர்கள் அவர்களுக்கு விரோதமாக நடக்கமாட்டார்கள் என்று அவன் நம்பியிருந் தான். தொண்டர்களே அரசியல் வாதிகளுக்கு வழிகாட்ட வேண்டியிருந்தது.
தான்பிரீன் டிசம்பர் 7ஆம் திசதி மீண்டு: டப்ளினுக்குச் சென்று லியா விஞ்ச், ஸ்பீன் ஹோகன் முதலிய pašovni ščenáš கண்டு, சமாதானத்தைத் தொலைத்து, உடனே சண்டையை மறுபடி தெஈ. ரந்து நடத்தவேண்டு:ென்று வற்புறுத்தினன்" குடியரசுப் படையில் பிளவு ஏற்படாமலும், நாட்டுமக்கள் சி" பலில் ஆழ்ந்து விடாமலும் இருக்க வேண்டுமானல், போர் நடத் துவதே உத்தமம் என்பதை விளக்கினன். பிரிட்டிஷாருடன் எவ் விதமான சமாத7னல் செய்யப்பட். லும், ஜனங்கள் அதை :ற்றுச் *ொண்டுவிடு:ார்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஏனெனில், மக்கள் போராட்டத்தினுல் பெரும் நஷ்டங்களடைந்து க*ப்புற்றிருந்தார். ஆதலால் சமாதான உடன்படிக்கையை ஏற்றுக்கெண்டு, அதன்படி புதிய தோதலே நடத்தி, அதன் மூலம் ஜ6:4ளுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்வது சரிய?ன முறையன்று என்று அவன் வாதாடினன். தலைவர்கள் யாவரும் அவனுடைய நோக்கத்தை ஆதரிக்க மறுத்துவிட்டனர். பழைய நண்பர்கள் பலரு: அவனை இவ்விஷயத்தில் கைவிட்ட
அவன் தன் முயற்சி தோல்வியுற்றதன்மேல் அயர்லாந்தை விட்டு வெளியேறி, அந்நிய நாடுகளுக்குச் செல்லவேண்டும்
50 -

என்று தீர்மானித்தான். அவனும் ஸ்பீன் ஹோகனும் லண்டனில் இருந்த இந்தியத் தலைவர்களே இது சம்பந்தமாய்க் கலந்து பேசிய பொழுது அவர்கள், ஐரிஷ்காரர்களாகிய நீங்கள் உங்கள் நாட் டுப் போராட்டத்தையே முடிக்காமல் இடையில் நிறுத்திவிட்ட பொழுது, நீங்கள் இம்தியாவுக்கு வந்து என்ன செய்துவிடமுடி யும்?" என்று கேட்டார்கள். இதஞல் தான்பிரின் இந்தியாவுக்கு வரவேண்டாம் என்று கருதி, அமெரிக்காவுக்கிப் புறப்பட ஏற் பாடு செய்தான். இடையில், அவனுடைய உயிர்த்தோழன் ஸிமஸ் ராபின்ஸனுக்கு டப்ளினில் திருமணம் நடந்தது, தான் சீரின் கூடவே இருந்து அதை நடத்திவைத்தான்.
அவன் அயர்லாந்தை விட்டுப் புறப்படுவதற்குமுன்னுல் குடி யரசுப் படையின் முக்கியமான அதிகாரிகளைக் கண்டு, மீண்டும் போரை ஆரம்பிப்பதின் அவசியத்தை வற்புறுத்திக் கூறி, அதை ஆதரிக்கும்படி வேண்டினன். அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டி ருந்தால், அவன் அயர்லாந்தை விட்டுவெளியேற வேண்டியிராது.
தான் பிரீன் நாட்டைவிட்டுப் புறப்படும்பொழுது, அதுவரை தானும் நண்பர்களும் செய்து வந்த அருtபெரும் முயற்சி: வீண க்கப்பட்டதையும் , அ3:ளுt.t தியா கல்ெல் கிம் ஜேசத்தை இரண்டு பிரிவுகளாக வெட்டுவதற்கு உபயோகிக்கப்பட்டதையு: அந்நிய அரசனுக்கு ‘:ஜ விசுவாசமாக இருப்பதாகப் பிரமா ணம் செய்ய வேண்டிய கட்டுப்பாடுடைய சுதந்திரமே கிடைத் திருப்பதையும் எண்ணி மனம் வருந்தினன்.
ஸின் ஹே"துன் முன்கூட்டி4ே லண்டனுக்குச் சென்று அவ னுடன் சேர்ந்து கொண்டான். அதுவரை அவன் தேசத்தை விட்டு வெளியேறி எந்த அந்நிய நாட்டையும் கண்டதில்லை. லண்டன் நகரின் புதுமைகள் அடின் தாய்நாட்டைப் பற்றிக் கொண்டிருந்த மனக்கவலையைக் கொஞ்சம் மறப்பதற்கு உதவி செய்தன. அந்நகரில் அவன் இரண்டு வாரம் தங்கியிருந்து, ஆங் காங்கிருந்த விசேஷங்களைக் கண்ணுற்று வந்தான்,
அங்கிருந்து நேராக அமெரிக்க ஜக்கிய மாகாணத்திற்குச் செல்லமுடியாதென்பதை அறிந்து அல்னு: ஹோகனும் முதலில் கனடாவுக்குப்சோய், அங்கிருந்து ஐக்கிய மாகாணத்திற்குள் நுழைந்துவிடவேண்டும் என்று தீர்மானித்தனர். அவர்களிடம் போதிய பணமில்லை. கனடாவுக்குள் இறங்குவதற்கு அனுமதிச் சீட்டுக்களுமின்லை. பின்னல் ஏதோ தந்திரம் செய்து அவர்கள் அனுமதிச்சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டு விட்டனர்.
- 5 -

Page 83
மூன்று வாரம் கப்பலில் பிரயாணம் செய்து அவர்கள் செனக் கியமாகக் கனடாவையடைந்தனர். அங்கிருந்து ஐக்கிய மாகா ணத்திற்குப் போய், சிக்காகோ நகரையடைந்தனர். அங்கு தான் பிரினுடைய இரு சகோதஈர்களான ஜான், பாட் என்பவர்களுக்க சகோதரியான மேரியும் அவர்களைச் சந்தித்தனர். அவர்கள் பல வருஷங்களாக அமெரிக்காவிலேயே தங்கியிருந்தவர்கள் வெகு தொலைவிலிருந்த அந்த அந்நிய நஈட்டிலும், தான் பிரீன் தம் பந்தக்களின் மத்தியிலே வாழ நேர்ந்ததr &, தான் அயர்லாந் திலேயே இருந்ததாக எண்ணிக்கெ: ண்,ான் வேறு பல ஐரிஷ் நண்பர்களும் அவனைக் கண்டு மிகுந்த உபசாரம் செய்தனர். நாக்ல7ங்கலே அவனுடன் போராடிய ஓ’பிரியன் அவனைக் கண்டு பேசிஞர். அமேரிக்காவில் பல ஐரிஷ்காரர்கள் ஏரRனமான மூல தனங்களேப் போட்டுப் பெரிய தொழிற்ச?லைகளை நடத்திக்கொண் டிருப்பதைக் காணத் தான் பிரீன் டிகிழ்ச்சியடைந்தான்
பிறகு அவன் பிலடல்பியா, கலிபோர்னியா முதலிய நகரங் களைப் பார்வையிட்டான். அக்காலத்தில் அவனுக்கு அயர்லாந் தில் நடந்து வந்த விஷ:ங்களைக் குறித்து அடிக்கடி தெரிந்து கொள்ளச் சந்ஆர்ப்பம் ஏற்பட்டது. உடன்படிக்கைக்இப் பிறகு அயர்லாந்தின் நிலை:யைக் குறித்து அமெரிக்கப் பத்திரிகைகள் விரிவான செய்திகளை வெளியிட்டு வந்தன. அவற்றிலிருந்து தொண். ர்கள் இரு பிரிவாகப் பிரிந்து ஒரு ஐைேரயொருவர் ப:ைத் தக் :ெ ண்டிருந்தனர் என்பது தெளிவாய்த்தெரிந்தது. ஒவ் வே:ருந7ளும் அவர்:ளுக்குள் :னஸ்தா: பெருகிக்கொண்டே வந்தது. அயர்லாந்திலுள்ள பிளவு அமெரிக்காவிலிருந்த ஐரிஷ் காரர்களுக்குள்ளுங் பரவி விட்டது. அவர்களும் இருபிரிவாகப் பிரிந்து நின்ற8ர்.
மார்ச் மாதம் ஆரம்பத்தில் லிமெரிக் நகரில் தொண்டர் கள் இரு பிரிவாகப் பிரிந்து சண்டைக்குத் தயாராயிருந்ததாகச் செய்திஇன் வெளிவந்தன. ஒரு பிரிவினர் உடன் டிக்கையை ஆத ரித்தும், மற்றப் பிரிவினர் எதிர்த்தும் நின்றனர். அவர்களுக் குள் சண்டை ஆரம்பித்து விட்டால், தேசம் முழுதும் உடனே உள்நாட்டுக் கலகம் பரவிவிடுல் லிகெரிக் நகரத் தொண்டர்கள் ஒரு சிறு சமாதானம் சேய்துகொண்டு தான்பிரினை உடனே புறப் பட்டு வரும்படி கம்பியில்லாத் தந்திமூலம் ஒரு செய்தி அனுப்பி யிருந்தனர்,
தான் பிரீன் அப்பொழுது கலிபோர்னியாவில் இருந்தான். இரண்டு தினங்களில் அவன் அங்கிருந்து சிக் கா கோ வுக் கும்
- 5 -

பிடைல்பியாவுக்கும் சென்று, பழைய நண்பர்களிடம் விடைபெற் றுக் கொண்டு ஹோகனுடன் நியூயோர்க் நகரையடைந்தான். அங்கிருந்து கப்பலேறுவது எளிதென்று அவர்கள் கருதியிருந்த னர். போதுமான பணமும் அனுமதிச் சீட்டுக்களும் இல்லாமை யால், அவர்கள் அமெரிக்காவுக்கு வரும்பொழுது ஏற்பட்ட கஷ் டம் அங்கிருந்து புறப்படும் பொழுதும் ஏற்பட்டது.
தான்பிரினும் ஹோகனும் பின்னும் பல ஏமாற்றங்களடை ந்து, கடைசியாக மிகுந்த முயற்சியின்மேல் ஒரு க.பலில் ஏறிக் கொண்டு அயர்லாந்திலுள்ள கோப் நகரை நோக்கிப் புறப்பட் டனர்.
ஏப்பிரல் மாத ஆரம்பத்தில் அவர்கள் கோப் நகரை அடை ந்தனர். அங்கு ஒரு நண்பர் அவர்களைச் சந்தித்து வரவேற்று, தான்பிரீனுடைய மனைவி ஓர் ஆண் மகனைப் பெற்றிருப்பதா புல், தாயும் குழந்தையும் அவன் வரவை ஆவலுடன் எதிர்பார் த்துக் கொண்டிருந்ததாயும் அறிவித்தார்
Ο

Page 84
23
முடிவுரை
தான்பிரீன் டப்ளின் நகருக்குச் சென்றபொழுது வீர அயர்லாந்து பிளவுபட்டுக் கிடந்ததைக் கண்டான். பழைய குடி யரசுப் படை இரண்டு பிரிவாகப் பிரிந்து, "பிரி ஸ்டேட் படை", "குடியரசுப் படை” என்ற இரண்டு பெயர்களுடன் விளங்கியது. பிரிட்டிஷ் துருப்புக்களால் காலி செய்யப்பட்ட படை வீடுகளே எல்லாம் இரு படைகளும் பிடித்துக்கொண்டன. தேசச் முழுதும் இரு படைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் போரா டத் தயாராப் நின்றன.
தான்பிரீன் இரு கட்சியாரிடமும் சென்று அடிக்கடி சமாதா னப்படுத்த முயன்ருன். அவர்களை அழைத்துக் கூட்டங்கள் தடத் திஞன். அவனுடைய நன்முயற்சிபால் இரு கட்சித் தலைவர்களி லும் சிலர் ஒன்றுகூடி விவாதம் செப்து, கடைசியில் ஒரு சமா தான உடன்படிக்கை செய்துகொண்டனர். அந்த உடன்படிக்கை பின் விவரம் முழுதும் மே 1ஆம் திாதிப் பத்திரிகைகளில் வெளி பிடப்பட்டது. தொண்டர்களுக்குள் பிளவு ஏற்பட்டுக் கலகம் நேருமாளுல், அதஞல் அயர்லாந்து பல நூற் றண்டுகள் தலை துக்கமுடியாதபடி பெரும் நஷ்படையும் என்பதும், எல்லாத்

தொண்டரிகளும் உடனே வேற்றுமைகளே மறந்து ஐக்கியப்படவேண்டும் என்பதும், தலைவர்கள் யாவரும், பொது மக்களும், யுதக வீரர்களும் தேசத்தின் நிலைமையை உணர்ந்து தங்கள வலிமையைத தொலைக் கக்கூடிய எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது என்பதும் உடன் படிக்கையில் வற்புறுத்தப்பட்டிருந்தன.
இந்தச் சமாதான உடன்படிக்கை நெடுநாள் அமுலில் இல் லாமற் போயிற்று. குடியரசுப் படையைச் சேர்ந்த சில அதிகா ரிகள் அதைக் சண்டித்து அறிக்கைகளை வெளியிட்டனர். அதற் குக் காரணமாயிருந்த தான் பிரினும் பலமாய்க் கண்டிக்கப்பட் டான். அரசியல் தலைவர்களுக்குள்ளும் ராணுவத் தலைவர்களுக் குள்ளும் நிரந்தரமான சமாதானம் ஏற்பட வழியில்லாது பே"யி ற்று. ஆயினும் இருதட்சித்தலைவர்ணிலும் முக்கியஸ்தரrய் விளங் கிய டிஸ்லராவும் மைக்கேல் கொவின்ஸும் .திதாய் நடக்கவேண் டியிருந்த பொதுத் தேர்தலில் இருகட்சிகளையும் ஒன்று சேர்த்து ஒரே வின் பீன் கட்சியின் சார்பாகப் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டுமென்ா; ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆஞல், அந்த ஒப்பந்தமும் சிதைந்து போயிற்று. கிழக்குத் திப்பெரரி அங்கத் தினர் ஸ்தானம் காலியாயிருந்ததால், அதற்கு எந்தக் கட்சி அங் கத்தினரை உபேட்சகராக நியமிக்கலாம் என்பதைப் பற்றிப் பல தீத விவாதம் ஏற்பட்டதால் இப்படி நேர்ந்தது.
மேலும் விவசாயிசளும் தொழிலாளர்களுல் குடியரசுக் கட்சி னையும் பிரீ ஸ்டேட் கட்சியையும் எதிர்த்து $ தங்களுடைய பிரதி நிதிகளைச் சுயேச்சையாக நிறுத்த முற் ட்டனர்.
உள்நாட்டுக் கலகம் ஏற்பட"மல் தடுப்பதற்குத் த”ன் பிரீன் தன்னுல் இயன்றளவு மு:சிசெய்து பார்த் தான் அவன் முயற் சிசன் பயனற்றுப் போயின. சகோதரர்களுக்குள்ளேயே பூசல் விளைந்தது. ஒருவரையொருவர் சுட்டுத் தள்ளமுற்ப3. டவர். கொடிய கலகல் மூண்டுவி. தால், தான் பிரீன் குடியரசுப் படை யுடன் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமற் போயி ற்று. டின்னி லேவி, வியாம் லிஞ்ச் முதலிய பல வீரர்கள் கல சத்தில் குண்டு பட்டு மடிந்தனர். தோழர்களே இழக்க நேர்த்த தைக் குறித்துத் தான்பிரின் வருந்தினன்.
1923ஆம் ஆண்டு வியாம் லிஞ்சின் மரணத்திற்கு பின் ஞல் தைர் பள்ளத்தாக்கில் நடக்கக்கூடிய ஒரு சம: தானக் கூட்
டத்திற்குத் தான்பிரீன் சென்ருன். இடைவழியில் பிரி ஸ்டேட்
- 5 -

Page 85
பட்டாளத்தார் அவசிாயும் அவனுடன் சென்ற நண்பர்களையும் பார்த்துச் சுட ஆரம்பித்தனர். அப்பொழுது அவர்கள் பல திசை களைப் பார்த்து ஒடிசிறைந்துகொள்ள நேர்ந்தது. தான்பிரீன் இரண்டு நாள் காட்டுப்புறத்தில் சுற்றித்திரித்து, பின்னுல் பூமிக் குள் தோண்டப்பட்டிருந்த ஒரு பாசறைக்குள் பதுங்கியிருத தான். கண்ப்பு மிகுதியால் அவள் அங்கே விழுந்து உறங்கிவிட் டான். சிறிது நேரத்தில் பிரி ஸ்டேட் பட்டாளத்தார் அங்கு சென்று. அவளேக் திடீரென்று சூழ்ந்துகொண்டு கைதுசெய்த னர். அவன் விழித்துப் பார்க்கையில் நாலு புறத்திலும் பட்டா த்ெதார் துப்பாக்கிகளேத் தன்னை நோக்கிப் பிடித்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டுப் போஞன். ஐந்து வருஷகாலம் வல்லமை மிகக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, எந்த நேரத்தி இம் பகைவர்களுடைய கையில் சிக்காமல் சா மர்த் தி யத் துட ன் தப்பிவந்த தான்பிரீன், தன் நாட் டுச் சகோதரர் களு டைய கையில் எளிதாக அகப்பட்டு விட்டான் அவன் அளவற்ற துக்க மடைந்து பரிதவித்த போதிலும், எதிரிகள் முன்பு தைரியத் தைக் கைவிடாதது போல் பாவண்செய்து கொண்டான்.
பிறகு, அவன் கால்பல்லிக்குக் கொண்டு போகப்பட்டு, அங் கிருந்து திப்பெரசிக்குக் கொண்டு பேசகப்பட்டான் திப்பெரரி யிலிருந்த பிரீ ஸ்டேட் அதிகாரிகள் அவனை லிமெரிக் சிறைச்சால் க்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவன் இரண்டுமாதம் வைக்கப் பட்டிருந்தான். அந்தச் சிறையில் அவன் முன்னுல் ஆஷ்.கின் போராட்டத்தில் காயப்படுத்திய லோர்ட் பிரெஞ்சினுடைய கார் டிரைவரைக் கான தேர்ந்தது. அந்த டிரை:ர் லிமெரிக் சிறை யில் ஓர் உத்தியோகஸ்தனுயிருந்தான்.
லிமெரிக்கிலிருந்து தான்பிரீன் மெலூசண்ட் ஜாய் சிறைக்கு மாற்றப்பட்டான். அங்கே ஒரு வசதியுமில்லை எனவே அவன் உண்ணுவிரதம் இருக்க நேர்ந்தது. 12 நாள் உண்ணுவிரதமும் , 6 நாள் (நீரே பருகாமல்) நாகந்தணியா விரதமும் இருந்த பிறகு அவன் விடுதலை செய்யப்பட்டான்
அவன் சிறையிலிருந்த பொழுது திப்பெரரி வாசிகள் அவன் பால் நன்றி செலுத்தி, அவனையே தங்களுடைய குடியரசுக் கட் சியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தனர்.
சமாதான உடன்படிக்கைப்படி பிரிட்டிஷ் பார்லிமென்டால் அங்கீகரிககப்பட்ட சுதந்திர ஐரிஷ் ஆட்சி 1922ஆம் ஆண்டு ஜன
- 56 -

வரி மாத்ம் 15ஆல் திகதி ஏற்படுத்தப்பட்டது. அதன்படி அயர் லாந்துக்கு பிரிட்டிஷ் உறவு இருந்துவந்தடேTதிலும், ஐரிஷ் பார் லி மென்டான் "டெயின் ஐரானின் த*வர் இமன் டி பெலரா நாளடைவில் கீந்த உற்வு இல்ல73ல் செய்துவிட்டார். அத ஞல் குடியேற்ற நாடு குடியரசாகிவிட்டது. ஆயினும் தொண் டர் பன். யினருக்குள் இடையில் ஏற்பட் பூசல்களால் என்றும் மறக்கமுடியாத பல கஷ்டங்கள் அயர்லாந்துக்கு ஏற்பட்டன. டப்ளினில் தோண்டர் படைத் தலைமையில் நின்று, எண்ணற்ற வீரத்திாகங்கள் செய்து போராடிய வைக்கேல் கெவின்ஸ் தன் னு:ை 1. பழைய நண்பர்கள் க&ையrலேயே மடிய தேர்ந்தது நண்பரை நண்பரே வ ைஆத்தனர். சொத்துக்கள் நெருப்புக்கு இரையாயின எதிரிகள் கொக்கரித்துக் கொண்டிருந்த6 ரி!
ஆஞ்ரல் ஐரிஷ் தலைவர்கள் அரசாங்கத்தை அமைத்ததோே நில்லாமல், வெகு வேகமாக முற்போக்கான திட்டங்களைக் கையாண்டதான் நின்மையை மாற்றமுடிந்தது.
ஐரிஷ் தலைவர்களில் முதலாவதாக டி வலராவைக் குறிப் பிடவேண்டும். அவர் கல்வி கேள்விகளிற் சிறந்தவர். 1913 லேயே அவர் சுதந்திரப் பட்டாளத்தில் சேர்ந்தர்ே. 196 ஆம் வருடம் நடந்த ஈஸ்டர் சண்டையில் அவரும் தலைமைவகித்து .ே ராடி ஞர். அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஆனல் 1917ஆம் ஆண்டு நடந்த சம 7 தாண .ை ன்டடிக் ைஈயின்படி அவர் ஜூன் மாதம் 15 ஆம் திகதி விடுதலை செய்யப்பெற்ருர், அடுத்தவருடால் டப்ளினின் கடிய குடியரசுச் ச. ச.ை கு அவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுபடி அவரை அரசாங்கத்தாரி கைதுசெய்து லிங்கன் சிறையில் அடைத்தனர். அங்கிருந்து அவர் தப்பி வெளிவந்து, அமெரிக்கா சென்று அயர் லாந்துக்கு அரும்.ெரும் வேலைகச் செய்தார் கடைசிச் சுதந்தி சப் போருக்கு வேண்டிய பணத்தையும் அங்கேயே தட்டிக் கொண்டார். பின்ஞல், தாய்தாடு திரும் பி, சுதந்திர நாட்டிற் காக அல்லும் பகலுமாக &ழைத்து விந்தார். அவருடைய விசைக் கனவுகள் ஒவ்வொன்முகப் பலித்துவிட்டன. பின்னல் பிரிட்டி ஷார் சூழ்ச்சியால், அல்ஸ்டர் மாகாணம் வேறு, அயர்லாந்து வேறு என்று அயர்லாந்து இரண்டு துண்டுகளாக வெட்டப்பட் டதை மட்டும் அவரால் மாற்றவே மூடியவில்லை அல்ஸ்டர் தான் அயர்லாந்தின் பாகிஸ்தாள்.
ஆர்தர் கிரிபித் என்ற அரசியல் ஞானியையும் அயர்லாற் தின் விடுதலைப் போரின் வீரச் சரித்திரத்தில் குறிப்பிடவேண்டி
- 57 as

Page 86
யது அவசியம். அவர் நடத்திய பத்திரிசைகளும், எழுதிய நூல் களும் முக்களுக்கு விரத்தை ஊட்டில் தாய்மொழியாகிய "கெயி லிக்" மொழியின் மீது மட்டற்ற அன்பை வளர்த்தன. 1923ஆம் ஆண்டு ஒ4ஸ்ட் 12ஆம் திகதி அவர் தமது காரியாலயத்திற்குச் சென்றுகொண்டிருந்தடோது. வழியில் களைப்பினுல் இறந்து விழுந்துவிட்டார். அவருடைய கடுமையான உழைப்பே அவரைக் கொன்றுவிட்டது.
இளம் சிங்கம் மைக்கேல் கொலின்ஸையும் அயர்லாந்து ஒரு நாளும் மறக்காது. சிரித்த முகமும், செவ்விய உள்ளமும் கொண் S Ae TS SSALLTS LLLTTTTT LLLT SeeTT LLTT LLaLaSLAAS S S LLLLLLT LLLLTE தும் அவளைப் பிடிக்கப் பொலிஸ் கrர்களு, பட்டாளத்தார் களும் திரியும்பொழுது, அவன் பெரிய வீதிகளின் முனையில் நின்று தொண்டர் சுளுக்கு வே% த்திட்டம் வகுத்துக்கொண்டிருப் பான். அவனைப் பிடித்துக் கொடுப்பவருக்கு 10,000 பவுன் பசி சளிப்பதாக அதிகாரிகள் கூவிப்பார்த்தார்கள், கடைசிவரை அற் தப் பதினுயிரம் டவுணை வங்கி அயர்லாந்திலே ஆள் கிடைக்கவே , யில்லை.
இத்தகைய த*வர் சளின் பெருமையாலும் தான்பிரீன், ளின் டிரீஸி, லியாம் லிஞ்ச், ஹோகன், மார்ட்டின் ஸாவேஜ் போன்ற பல்லாயிரம் வீரத் தொண்டர்களின் தியாகத்தாலும் அயர்லாந்த விடுதலை பெற்றது. உலக சரித்திரத்தில் ஒரு பொன் ஏட்டில் எழுதவேண்டிய சரித்திரம், 43 ஓட்சம் ஐரிஷ் மக்கள் rட்சத வலிமையுள்ள ஓர் ஏகாதிபததியத்தை எதிர்த்து வென் றது விசித்திரமேயாகும்
சுதந்திர ஜோதியில் அடிமை இருளும், அறியாமை இருளும் அதன்றன. ஒவ்வொரு நாளும ஒரு முன்னேற்றம். பற்பல சீர் திருத்தங்கள் ! ஐரிஷ் மக்கள் மற்ற நாட்டவரைட்போல், தலை நிமிர்ந்து மிடுக்குடன் வாழுகிருர் 4ள்
வாழ்க சுதந்திரம்! வாழ்க வையகம்

சுதந்திரம்
சுதந்திரத்தின் சுடரை ஏற்றி வருவதற்காக கனத்த இருளில் அவன் சென்முன் திரும்பி வருவேன் எனக்காகக் காத்திருங்கள் என்ருன்
at Gas Garaivayairp சேர்கத்தில் கறுத்த பனைக் கோடுகளுக்குள்தத்தளிக்கும் கருநீலக் கடல் வெளியினூடேஎத்தனை தடைகளை அவன் தகர்த்திருப்பான்? கடுமையான முனைகளில் எப்படிப் போரிட்டான்?
தெரியவில்லை.
தெரிவதெல்லாம் சுதந்திரத்தை மீட்டு வருவதாகத் தந்த உறுதிமொழிகள். காத்திருக்கச் சொன்ன நம்பிக்கைகள் .
அவனுக்காகச் சில காலம் காத்திருப்பேன். பிறகு, அவனும் வரவில்லையெனில் நானே போவேன். நானும் திரும்பாவிட்டால் எனது பையன்களும் போவர்ர்கள்.
-- add a larvaruru எழுதிய வம்காாக் கவிதையைத் தழுவியது.

Page 87
இளங்கோவின்
52ცენ
கவிதை:
எம் மக்களின், இளேஞர்களின் இறந்த உடல்களின் மீதும், சாம்பல் மேடுகளின் மீதும், ஏறி நின்று
உயர்த்திய கரங்களில் துப்பாக்கிகளை ஏந்தியபடி, ஓங்கிய குரல்கள்
விண்னதிர ஒலிக்க உனது முகத்திலறைந்து கூறுகின்ருேம்:
“இங்கு எமக்கொரு வாழ்வுண்டு; எங்கள் இருப்பை அங்கீகரிக்க மறுக்கும் எல்லோருக்கும் நாங்கள் எதிரிகளே!"
உனது . இரத்தமொழுகுக் கரங்கள்
வாழ்வுக்காக மரணிப்பதைத் தவிர வேறெதனையும் எமக்கு உணர்த்தவில்லை.


Page 88


Page 89


Page 90
176 / திறனாய்வுக் கட்டுரைகள்
கர எழுத்தாளர்கள் வரை ஜானகிராமனின் எழுத்தில் மோகம் கொண்டுதான் உள்ளனர். இந்த இலக்கியச் சித்தாந்தங்கள் பற்றிய எவ்வித பிரக்ஞையுமற்று வியாபார இலக்கியத்துக்கு அடிமைப்பட்டுப் போன ஜனரஞ்சக வாசகனுக்குக்கூட ஜானகி ராமன் ஒரு அன்னியமான எழுத்தாளன் அல்ல. இவ்வாறு பல் வேறு இலக்கிய நிலைப்பாடு உள்ளவர்களையும் பல்வேறு ரசனை மட்டத்தில் உள்ளவர்களையும் தன்வசமாக்கும் எழுத் தாற்றல் புதுமைப் பித்தனுக்குப் பிறகு ஜானகிராமனுக்கே சாத்தியமாயிற்று என்று சொன்னால் அது தவறாகாது.
மாறும் சமூகத்திலே ஆண் பெண் உறவில் ஏற்படும் நெரிசலே ஜானகிராமனின் எல்லாப் படைப்புக்களிலும் (குறிப்பாக நாவல்களில்) கையாளப்படும் பிரதான விசயப் பொருளாகும். ஆண் பெண் உறவு பற்றிய பாரம்பரிய சமூக நெறிமுறைகள் உடைந்து வருவதை அவர் தன் படைப்புக்களில் சிறப்பாக வெளிப்படுத்தினார். புதிய சமூக நிலைமைகளுக்கும் பாரம் பரிய அல்லது நிலப்பிரபுத்துவ ஒழுக்க நியமங்களுக்கு மிடையே அல்லலுறும் மனித உணர்வை, அதன் சோகத்தை மிகுந்த பொறுப்புணர்வுடனும் மனிதாபிமானத்துடனும் தன் படைப்புக்களில் அவர் சித்திரித்தார். * சிறு வயது முதலே என்னுடைய மனதில் “கன்வென்ஷன்” என்று சொல்லப்படும் படியான கட்டுப்பாடுகளை எதிர்க்கும் ஒரு மனோபாவம் உருவாயிற்று. நம்முடைய மக்கள் மரபையும் (டிரெடிஷன்) கட்டுப்பாட்டையும் ஒன்று சேர்த்துக் குழப்பிக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். கட்டுப்பாடுகள் காலத்துக்கு ஏற்றபடி மாறும் தன்மையுடையன. ஆனால் அவைகளுக்கு நம் முடைய அன்றாட வாழ்வில் நிரந்தரமான ஒரு இடத்தை அளிக்க முற்படும் போதுதான் தனி மனித சுதந்திரம் வெ வாகப் பாதிக்கப்படுகின்றது. ஒரு சமுதாய நாகரீகத்தின் உயிர்ப்புச் சக்தியுடன் கூடிய ஜீவனானது இம் மாதிரியான கட்டுப்பாடுகளிலே நசித்துப் போக ஏது இருக்கிறது. மனித உணர்ச்சிகளைப் பற்றி, மன விகாரங்களைப் பற்றி எழுத முற் படும்போது கட்டுப்பாடுகளை அறுத்தெறிய வேண்டியிருக் கிறது” என்று ஜானகிராமன் ஒரு பேட்டியிலே கூறியுள்ளார். அவரது படைப்புக்களில் இச் சிந்தனை வெளிப்பாட்டை நாம்
5600T6) id.
ஆயினும் நிலப்பிரபுத்துவ விழுமியங்களின் அடிப்படையில் ஒழுக்கவியல் கண்ணோட்டத்தில் சிலர் ஜானகிராமனைத் தாக்கியுள்ளனர். பெண்களைச் சோரம் போபவர்களாகவும்
சலனசித்தம் உள்ளவர்களாகவும் அவர் சித்தரித்துள்ளார் என்று அவர்கள் கூறுகின்றனர். இது மனித யதார்த்தத்தைக் காண மறுப்போரின் கூற்றெனலாம். ஒழுக்கவியல் கண்ணோட்டத்
தில் மட்டும் நின்று ஜானகிராமனை விமர்சிப்பது நியாய மாகாது.
ஜானகிராமன் அடிப்படையில் ஒரு யதார்த்த நெறிக் கலைஞரே. அதே வேளை கற்பனாவாதத்தின் அம்சங்களையும்

எம். ஏ. நுஃமான் / 177
நாம் அவரிடம் காண்கின்றோம். அவ்வகையிலே யதார்த்தமும் மிகை உணர்ச்சியும் கலந்த கலவையே அவரது கலைப்பாணி , எனலாம். தனது படைப்புக்களில் அன்பு, நேசம், நேர்மை ஆழ்ந்த தூய கலைஉணர்வு போன்ற உன்னத உணர்வு களுக்கு அவர் அழுத்தம் கொடுக்க முனையும்போது ஒரளவு கற்பனாவாதமும் மிகையுணர்ச்சியும் அவருக்குத் தவிர்க்க முடியாததாய் விடுகின்றது.
அவரது இந்தப் படைப்பு நெறியிலிருந்து - அவர் எழுப்ப விரும்பும் உன்னத உணர்வுகளில் இருந்து அவரது மொழி நடையைப் பிரித்துப் பார்க்க முடியாது. பலர் அவரது மொழி நடைக்காகவே அவரில் மோகமுற்றுள்ளதாகக் கூறு வர். அவரது மொழிநடை அவரது கலையின் இன்றியமை யாப் பண்பாகும். தற்கால உரைநடைக்கு - உரைநடை இலக்கியத்துக்கு ஒரு புதிய வளமும் வனப்பும் கொடுத்தவர் ஜானகிராமன். நாவல் சிறுகதைகள் மூலம் மட்டுமன்றி, நாடகம், மொழிபெயர்ப்பு, பிரயாண நூல்கள் போன்றவை மூலமும் அவரது எழுத்து ஆளுமை நன்கு வெளிப்பட்டிருக் கின்றது. இத்துறைகளில் இதுவரை அவரது சுமார் இருபத் தைந்து நூல்கள் வெளிவந்துள்ளன.
இவற்றை அவரது இலக்கியப்பணி என்று சொன்னால் அவர் ஒத்துக்கொள்வதில்லை. ‘இலக்கியப்பணி என்று எதைச் சொல்வது? என் ஆத்ம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்க்கையின் ரசனையை எனக்கு எளிதாகக் கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகின்றேன். இதிலே சேவை என்பதோ பணி என்பதோ இடமே பெறவில்லை. என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்ற வர்களுடன் பகிர்ந்து கொள்ளவே நான் விரும்புகின்றேன். சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக சாதாரண அசைவு களில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப்
பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம்தான். அதைத் தான் நானும் பகிர்ந்து கொள்கிறேன் - எழுத்துமூலம்” என்று அவர் கூறியுள்ளார்.
தன்னுடைய இலக்கியச் சாதனைகள் பற்றி ஒருபோதும் அலட்டிக்கொள்ளாது அடக்கமாக இருந்து இன்றையத் தமிழ் இலக்கியத்தில் சிலர் எட்ட முடியாத சில சிகரங்களைத் தொட்டு மறைந்துபோன ஜானகிராமனின் உயிர்வாழும் படைப்புக்களில் நாம்பெற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ உள்ளன.
O புதுசு மே 1983.

Page 91
மெளனியுடன் v 18 ஒரு சந்திப்பு •
Ο
30-12-1984 மாலை 5 மணி அளவில் மெளனியைப் பார்க்கப் போனேன். சென்னையில் க்ரியாவுக்குப் போயிருந்த போது தான் மெளனியும் சிதம்பரத்தில் இருப்பதாக அறிந்தேன். திலீப்குமார் அரைகுறையாகச் சொன்ன ஒரு விலாசத்தை இன்னும் அரைகுறையாகக் குறித்து வைத்திருந்தேன். வடக்கு வீதியும் தெற்கு வீதியும் சந்திக்கும் மூலையில் பிரியும் ஒரு தெரு. இலக்கம் 4. ஒரு மாடிவீடு என்ற குறிப்பு எனது டயரியில் இருந்தது. வீட்டைத் தேடிச் சென்ற போதுதான் வடக்கு வீதியும் தெற்கு வீதியும் சந்திக்காதே என்ற உண்மை உறைத்தது. முதலில் கீழவீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் இடத்துக்குப் போனேன். 總鶯"蠶 விசாரித்தேன். அவர்கள் மெளனி பயரைக் கேள்விப்பட்டதில்லை. தி. மு. க. அலுவலகத்தில் போய் விசாரித்தேன். அவரின் சொந்தப் பெயர் மணி, பழைய எழுத்தாளர் என்று சொல்லியும் அவர்களுக்கும் தெரியவில்லை. கிழக்கு வீதி தெற்கு வீதிச் சந்தியிலும் நிரந்தர வாசிகள் சிலரை விசாரித்தேன். அவர் களுக்கும் தெரியவில்லை. தெற்கு வீதி மேலை வீதிச் சந்தி யிலும் அதன் முடுக்குகளிலும் சற்றுப்படித்தவர்கள் போல் தெரிந்த சில முதியவர்களைக் கேட்டுப் பார்த்தேன். நாலாம் இலக்க வீடு ஒன்றைத் தட்டி விசாரித்துப் பார்த்தேன். அவர் களுக்கும் மெளனியைத் தெரியவில்லை. கடைசியாக மேலவிதி வடக்குவீதிச் சந்தியில் பிரியும் தெருவில் இறங்கினேன். எப் படியும் இங்கு மெளனியைப் பிடித்து விடலாம் என்ற நம்பிக் கையுடன் தெருவில் சிறிது தூரம் போய் அது கிளை பிரியும்

எ. ம்ஏ. நுஃமான் 179
ஒரு சந்தியில் ஒரு வீட்டுக்காரரிடம் விசாரித்தேன். அவரும் மணி, மெளனி என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கவில்லை. அங்கிருந்து ஒரு மூன்று நான்கு வீடு தள்ளிச் சென்றேன். 4ம் இலக்கத்தில் ஒரு மாடி வீடு இருந்தது. கேற்றைத் திறந்து கொண்டு போனேன். ஒரு வயதான அம்மா வந்தார். மெளனி இருக்கிறாரா என்று விசாரித்தேன். “உள்ளே வாங்க" என்றார். மெளனி சிதம்பரத்தில் இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு மேலாக இருக்கிறார் என்று நினைக்கின்றேன். அந்தச் சிறு நகரத்தில் அவரை, அவரது இருப்பிடத்தை அறிந்த ஒருவர் எனக்குச் சுலபத்தில் அகப்படவில்லை. மில் மணிஐயர் என்று விசாரித்திருந்தால் சில வேளை தெரிந்திருப்பார்கள் என்று பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது.
மெளனிக்கு ஒரு அறுபது வயது இருக்கலாம் என்பதாக எனக்குள் ஒரு எண்ணம். முப்பதுகளில் எழுதத் தொடங்கிய வருக்கு அதைவிட அதிகம் இருக்கும் என்ற உண்மை மெளனியைக் காணும்வரை எனக்கு ஏனோ தோன்றவே இல்லை. மெளனி முதுமையின் அரவணைப்பில் இருந்தார். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவனைப் பார்க்கும் இயல் பான திகைப்போடு என்னைப் பார்த்ததும் இருக்கையில் இருந்து மெல்ல எழும்பினார். வயிறு ஒட்டி உடல் தளர்ந்து போய் இருந்தது. இலங்கையன் என்று என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் ஒரு ஆராய்ச்சிக்காக வந்திருப்பதாகச் சொன்னேன். தன்னுடைய படிப்பறைக்குள் என்னைக் கூட்டிச் சென்றார். அடிமேல் அடிவைத்து மெல்ல ஊர்ந்து நடந்து வந்தார். வயது எண்பதாகி விட்டது. ஒரு கண் பார்வை முற்றிலும் போயிற்று. மறு கண்ணும் பெரிதும் மங்கிவிட்டது என்றார். அடங்கிய குரலில் அவர் கூறுவதைக் கூர்ந்து கவனிக்க வேண்டி இருந்தது.
ஈழத்து இலக்கிய முயற்சிகள், எழுத்தாளர்கள் பற்றி அவ ருக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. இலங்கையர் கோன், சி. வைத்தியலிங்கம் ஆகியோர் உங்கள் காலத்தில் எழுதினார் களே, அவர்களைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன், அவருக்கு அவர்களைத் தெரிந்திருக்கவில்லை. போர் முரசோ எதோ ஒரு புத்தகம் தனக்கு அனுப்பப்பட்டதாகவும், ஒரே உணர்ச்சி மயம், அங்கு அப்படித்தான் எல்லோரும் எழுது வார்களோ என்று கேட்டார். அவர் குறிப்பிட்டது தளைய சிங்கத்தின் போர்ப்பறை' நூலை என்று புரிந்து கொண்டேன். அவர் சொல்வதுபோல் அப்படி ஒன்றும் உணர்ச்சிமயமான புத்தகம் அல்ல அது.
ஆங்கிலம்தான் அவர் படித்ததெல்லாம். கல்லூரியில் தமிழ் முறையாகப் படித்ததில்லை. ஆங்கில இலக்கியம் நிறையப் படித்திருக்கிறார். அவருடைய மேசையிலும் ஷெல்பிலும் நிறைய ஆங்கிலப் புத்தக்ங்கள் இருந்தன. Creation and discovery என்று நினைக்கிறேன். ஒரு இலக்கியத் திற

Page 92
180 / திறனாய்வுக் கட்டுரைகள்
னாய்வுப் புத்தகத்தைக் காட்டினார். அது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமானது. நெடுங்காலமாக அவருடைய உடமையாக இருந்து வருவதாகத் தோன்றியது. அந்தப் புத்தகத்தை நான் படித்ததில்லை. அதுபற்றி அவருக்கு மிக உயர்ந்த எண்ணம் இருப்பது தெரிந்தது. அந்தப் புத்தகத்தை அடியொற்றி விமர்சகனும் ஒரு படைப் பாளிதான் என்ற கருத்தை வலியுறுத்திச் சொன்னார். creative writer 6Taitugi Gu Tsi creative critic 6T6örgy சொன்னார். ஒரு படைப்பாளிக்குரிய நுண்ணுணர்வு இல்லாத ஒருவன் ஒரு சிறந்த விமர்சகனாக முடியாது என்ற பொருளிலேயே அவர் அந்தப் பதத்தைக் கையாண்டார் என்று நினைக்கின்றேன்.
இலக்கியம் மட்டுமன்றி, தத்துவம், பண்பாடு, நாகரீகம் என் றெல்லாம் அவரது படிப்பார்வம் விரிவானது என்று தெரிந் தது. தென் அமெரிக்க அஸ்ரேக் (Aztec) நாகரீகம் எகிப்திய பிரமிட்டுக்கள் பற்றிய புத்தகங்களைக் காட்டினார். அதில் இருந்து கில பகுதிகளை எனக்குப் படித்துக் காட்டுவதற்குச்
சிரமப்பட்டார்.
தனது குடும்ப நிலை பற்றிக் கொஞ்சம் சொன்னார். ஒரு உள்ளார்ந்த சோகம் அவரைக் கவிந்து கொண்டிருப்பது தெரிந்தது. இரண்டு மகன்கள் அகாலமாக விபத்தில் இறந்து விட்டார்கள். இன்னொருவர் தத்துவத்தில் எம். ஏ. படித்து விட்டு மனக்கோளாறோடு வீட்டில் இருக்கிறார். இன்னொரு மகன் எம். எஸ் சி. பி. எச். டி. அமெரிக்காவில் இருக்கிறார்.
பிச்சமூர்த்தி, கு. ப. ரா. பற்றியும் சில செய்திகள் சொன்னார். பிச்சமூர்த்தி ஒரு சமயம், ஏதோ ஒரு பத்திரிகையில் தான் ஏன் தாடி வளர்க்கிறேன் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தாராம். அதைப் படித்தாயா என்று மெளனியைக் கேட்டிருக்கிறார். பார்த்தேன். படிக்கவில்லை. தாடி ஏன் வளர்கிறது என்று எழுதியிருந்தாயானால் படித்திருப்பேன் என்று மெளனி பதில் சொன்னாராம். அதற்குப் பிறகு அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பிச்சமூர்த்தி தன்னுடன் பேசுவதில்லை என்றார். மெளனி இப்போது எதுவுமே படிப்பதில்லை. முதுமையும் பார்வைக் குறைவும் அதற்கு அனுமதிப்பதில்லை. அடிக்கடி இலக்கிய நண்பர்கள் யாரும் வருவதில்லை. சமகாலத்தில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவருக்கு எதுவும் தெரியாது அவர் தனக்குள் தன்னுடைய கடந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். தன்னைப் பற்றி தனது படைப் புக்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு நிகழ்காலம் இல்லாது போய்விட்டதை உணர வருத்தமாக இருந்தது.
இடையில் மனைவியை அழைத்து கோப்பி வரவழைத்துத் தந்தார். குடித்துக் கொண்டிருக்கும் போதே ஷெல்பைத் திறந்து அழியாச்சுடர், மெளனிகதைகள் ஆகிய தொகுதிகளை

எம். ஏ. நுஃமான் / 181
எடுத்து வந்தார். அவருடைய கதைகள் பற்றி எங்களுடைய பேச்சுத் திரும்பியது. தன்னுடைய கதைகள் எதற்கும் தான் தலைப்பு வைத்ததில்லை என்றும் எல்லாம் பத்திரிகைக்காரர் களே வைத்த தலைப்புக்கள் என்றும் சொன்னார். தீபத்தில் வெளிவந்த பேட்டியிலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஞாபகம். அவருடைய பெரும்பாலான கதைகளுக்குப் பி. எஸ். ராமையாவே தலைப்புக் கொடுத்துப் பிரசுரித்ததாக பலர் குறிப்பிட்டுள்ளார்கள்.
தனது கதைகளைத்தான் ஒரே இருப்பில் எழுதி முடித்து விடுவ தாகச் சொன்னார். ஒரே இருப்பில் முடியாவிட்டால் முடிந்த அவ்வளவும்தான் கதை என்றார். டால்ஸ்டாய் போன்ற பெரிய எழுத்தாளர்கள் தங்கள் கதைகளைப் பலமுறை திருத் தித் திருத்தி எழுதுவார்களாமே, டால்ஸ்டாய் தனது புத்துயிர் நாவலை ஏழுமுறை திருப்பி எழுதியதாகச் சொல்கிறார்களே, நீங்கள் அப்படிச் செய்வதில்லையா என்று கேட்டேன். இல்லை என்றார். செப்பனிடும் பழக்கம் இல்லை என்றும் ஒரே முறையில் எழுதுவதுதான் என்றும், எழுத்துப் பிழைகள் இருந்தால் அதைத் திருத்திக் கொள்வார் என்றும் சொன்னார். ஒரு பத்திரிக்கைக்காகத் தான் எழுதிய ஒரு கதையில் அதன் கதாநாயகன் இறந்து விடுவதாக எழுதியதாகவும் அந்தப் பத்திரிகை ஆசிரிய நண்பர் அதை மாற்றி எழுதினால் நன்றாக இருக்கும் என்று அதை மாற்றி எழுதும்படி கேட்டதாகவும் முடியாது என்று தான் அதைக் கிழித்துப் போடப் போன தாகவும், வேண்டாம் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லி அவர் அதை வாங்கிப் போனதாகவும் மெளனி கூறினார். அது எந்தக் கதை, பத்திரிகாசிரியர் யார் என்று அவர் கூறவில்லை. ' நானும் அதைக் கேட்கவில்லை.
மெளனியின் மொழியில் விசேட வழக்குகள் பல இருப்பதைக் குறிப்பிட்டு உங்கள் மொழி நடையைப் பிரக்ஞை பூர்வமாகக் கையாள்கிறீர்களா என்று கேட்டேன், இல்லை. அப்போது வருவதுதான் எழுத்து என்று சொன்னார். எனினும் காதல் கொண்டான் அல்ல, காதல்கண்டான் என்றுதான் நான் எழுது வேன் என்றார். மெளனி கதைகள் நூலில் சில பக்கங்களைப் புரட்டி அப்படிப்பட்ட சில இடங்களைக் காட்டினார். ‘பிரக்ஞை வெளியில்" கதை இப்படிTமுடிகிறது. அப்பிடியாயின் ஒரு வகையில் காதல் கண்டபெண் கலியாணமாகாத கைம்பெண் என்றஅபத்தம் தானே” காதல் சாலையின் முடிவையும் எடுத் துக் காட்டினார். அது இப்படி முடிகிறது. ‘நேருக்கு நேரே காதலைக் கண்டதே போறும், கண்டதன் கதிபோறும்.காண்ட வரின் கதிபோலும்”.
இப்போது அவரால் எழுதவோ வாசிக்கவோ முடிவதில்லை என்றார். எழுத வேண்டும் போல் இருந்தால் யாரையும் கொண்டு சொல்லச் சொல்ல எழுதுவிக்கலாமே என்றேன். அப்படி டிக்டேட் பண்ணுவது எழுத்தல்ல என்றார். மெளனி கதைகள் முதல் தொகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு நான்

Page 93
182 / திறனாய்வுக் கட்டுரைகள்
இரவலாகப் படித்ததுதான். இப்போது அது கிடைப்ப தில்லை. மேலதிகப் பிரதிகள் இருந்தால் ஒன்று தர முடியுமா என்று கேட்டேன். தன்னுடைய புத்தகங்கள் இப்போது கிடைப்பதில்லை என்றும் யார் விரும்பினாலும் அவற்றை மறு பிரசுரம் செய்து கொள்ளலாம் என்றும் சொன்னார். அவரிடம் மெளனி கதைகள் இரண்டு மூன்று மேலதிகப் பிரதி கள் இருந்தன. அது நிறையப் பிழைகளுடன் அச்சாகி இருக் கின்றது என்றார். தன் கைப் பிரதியில் பல இடங்களில் வெட்டித் திருத்தி இருந்தார். ஒரு பிரதியில் நடுங்கும் கரத்தி னால் கோணல் மாணலான ஆங்கிலத்தில் with the best of wishes to M. A. Nuhman 6T6örgl 6TCup;5 605 Guy (gift (6.5 தந்தார். சுமார் ஒரு மணி நேரம் அவருடன் இருந்திருப்பேன். மீண்டும் சந்திப்பதாகக் கூறி விடை பெற்றேன். ஆனால் மீண்டும் சந்திக்க முடியாமலே போகும் என்று அப்போது தோன்றவில்லை.
அன்று இரவு மெளனி கதைகளுக்கு தருமு சிவராமு எழுதி யிருந்த முன்னுரையை வாசித்தேன். ஒரு செய்தி முக்கிய மாகப்பட்டது. அவர் அதில் இப்படி எழுதியுள்ளார்.
மெளனிக்கு தமது கதைகளில் ஒவ்வொரு சொல்லுமே முக்கியமானது. சொற்களின் அர்த்தத்தோடு, சில வேளைகளில், அவற்றின் சப்த அமைப்பையும் கூட அவர் கவனத்தில் ஏற்கிறார்: “ எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ?’ (அழியாச்சுடர்) என்ற வரியில் எவற்றின்” என்ற சொல் தவறு, ‘எவைகளின்’ என்பதே சரி என ஒருவர் மெளனியிடம் சொன்னாராம். மெளனி அச் சொல்லின் சப்தம் அந்த வசனத்திற்குத் தேவைப்படு கிறது என்றார். ‘எவற்றின்’ என்ற சொல்லின் அழுத்த மான சப்தமே அவ்வரியிலுள்ள கேள்விக்கு அதிக வலிமை யைக் கொடுக்கிறது எனக் காணலாம். தம் கதைகளில் பலவற்றை பல தடவைகள் வேறு வேறு சொற்பிரயோ கங்களுடன் திரும்பத் திரும்ப எழுதி, முக்கியமான இடங்களைச்சீராக்கும் மெளனியைப் பற்றி சரி-தப்பு” பார்ப்பவர்கள் கொஞ்சம் நிதானித்து தங்கள் அபிப்ரா யங்களைச் சொல்வது நல்லது’ (அடிக்கோடு என்னுடை யது). இங்கு மெளனி தனது கதைகளைத் திரும்பத் திரும்ப எழுதிச் செப்பனிடுபவர் என்ற கருத்தே முக்கியமானது. மெளனி தனது கலைமுறை பற்றி என்னிடம் நேரில் சொன்ன தற்கும் தருமு சிவராமு இங்கு எழுதியிருப்பதற்கும் இடையே பெரிய முரண்பாடு இருப்பதைக் கண்டேன். அடுத்த முறை சந்திக்கும்போது இதுபற்றி மெளனியுடன் பேச வேண்டும்

/ எம். ஏ. நுஃமான் I 183
என்று எண்ணிக் கொண்டேன். இதற்குச் சில வாரங்களுக்குப் பிறகு வெங்கட் சாமிநாதனின் என் பார்வையில் படிக்கக் கிடைத்தது. மெளன உலகின் வெளிப்பாடு” என்ற தலைப் பில் மெளனி பற்றி ஒரு நீண்ட கட்டுரை அதில் இடம் பெற் றுள்ளது. தருமு சிவராமு போல், இன்னும் சற்று அழுத்தமாக அதில் அவர் இப்படி எழுதியுள்ளார்: * .۰ م
மெளனி எழுத உட்கார்ந்தால் கடுமையாக உழைப்பவர். பலமுறை திரும்பத் திரும்பத் திருத்தி எழுதுவார். ஏனெ னில் பேனாவை எடுத்து எழுத உட்கார்ந்தால் அவர் தனது வேலையில் மிகத் தீவிரமான சிரத்தை கொள்பவர். ஏதோ ஒன்றை ஒருமுறை எழுதி, அத்துடன் அவர் திருப்தி அடைந்தார் என ஒரு முறை கூட நிகழ்ந்த தில்லை. கடைசித்தேதி நெருங்கும் வரை, அது அனு மதிக்கும் வரை, பிரசுர கர்த்தரின் பொறுமை எல்லை கடந்து சோதிக்கப்படும் வரை திருத்தம் செய்து கொண்டே இருப்பார்.
சாமிநாதன் சொல்வதன் உண்மை பொய் எவ்வாறு இருப் பினும் அவர் விஷயத்தை நன்கு மிகைப்படுத்திச் சொல்கிறார் எனறே தோன்றுகின்றது. மெளனி ஏராளமாக எழுதிக்குவித் தவர் அல்ல. மொத்தமாக 23 கதைகள் தான் எழுதியிருக் கிறார். 1936, 37ம் ஆண்டுகளில் தான் தொடர்ச்சியாக ஒரு பத்துக்கதைகள் பிரசுரமாகியுள்ளன. அவற்றுள்ளும் பெரும் பகுதி 34, 35 ம் ஆண்டுகளில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. மற்றவையெல்லாம் நீண்ட இடைவெளிகளில் எழுதியவை. 60க்குப் பிறகு நாலோ ஐந்து கதைகள் தான் எழுதியிருக் கிறார். எந்தப் பிரசுர கர்த்தாவும் மெளனியின் கதைகளுக் காகத் தவம் இருந்ததாக சொல்லமுடியாது. அவ்வகையில் பிரசுர கர்த்தாக்களின் கெடுவை மீறி அவர்களின் பொறு மையைச் சோதிக்கும் வாய்ப்பு மெளனிக்கு இருந்ததாகவும் சொல்லமுடியாது. சில வேளை கசடதபறவுக்குக் கதை பெறுவதற்கு இவர்கள் அப்படிச் சிரமப்பட்டிருக்கக்கூடும். மற்றப்படி புதுமைப்பித்தனைப் போல், பி.எஸ். ராமையா போல் பத்திரிகைகளின் நெருக்குதல்களுக்காக எழுதிக்குவித் தவர் அல்ல மெளனி. தவிரவும் தருமுசிவராமுவும் சாமி நாதனும் மெளனியின் எழுத்து முயற்சிகளை நேரில் அறிந் தவர்களை போலவே எழுதுகின்றனர். 60 களில் தான் இவர் கள் மெளனியைச் சந்தித்தார்கள் என்று நம்புகிறேன். அந் நேரம் மெளனி தான் எழுதுவதைப் பெரும்பாலும் நிறுத்தி விட்டார். இவர்களுடைய இலக்கியப் பிரவேசத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் தனது பெரும்பாலான கதை களை எழுதி முடித்துவிட்டார். ஆகவே மெளனி தனது பெரும்பாலான கவிதைகளை மீண்டும் மீண்டும் திருத்தி செப் பனிட்டு எழுதினாரா என்பதை இவர்களுக்கு நேரில் அறியும் வாய்ப்பு இருக்க பெரும்பாலும் நியாயம் இல்லை. இது பற்றி மெளனி அவர்களுக்குச் சொல்லி இருந்தால் தான்

Page 94
184 / திறனாய்வுக் கட்டுரைகள்
உண்டு. அல்லது அவரது திருத்தப்பட்ட கையெழுத்துப் பிரதிகளைப் பார்த்திருந்தால் தான் உண்டு. ஆனால் இது பற்றி என்னால் திடமாக ஒன்றும் சொல்ல முடி
யாது. மெளனி என்னிடம் சொன்ன தகவலை வைத் துக்கொண்டு பார்க்கும் போது இவர்கள் சொல்பவை மிகவும் முரண்பாடாகத் தோன்றுகின்றன. எனக்கு
இது ஒரு முக்கியமான விஷயமாகப் படுகின்றது. மெளனி பிரக்ஞை பூர்வமாகத் தன் மொழியைக் கையாண்டாரா இல்லையா என்பது அவரது படைப்புகள் பற்றிய மதிப் பீட்டில் முக்கிய பங்காற்றக்கூடிய ஒன்றாகும். நிறையப் புதுமாதிரியான பிரயோகங்கள் நிறைந்த அவருடைய மொழியில் அவை அவருடைய பிரக்ஞைபூர்வமான புத்தாக் கமா (innovation) அல்லது அவருடைய வழுவா என்பதை நிர்ணயிப்பதில் இது முக்கியமானது. சில சொற்பிரயோகங் களைப் பொறுத்தவரையில் மெளனி பிரக்ஞை பூர்வமாகவும் பிடிவாதமாகவும் இருந்திருப்பதாகத் தெரிகிறது. நான் முன் குறிப்பிட்ட ‘காதல் கண்ட' என்பதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். கொள், காண் என்ற வினச்ை சொற்களை அபரிமிதமாகவும் தமிழுக்குப் புதுவிதமான அமைப்புகளிலும் (constructions) இவர் கையாண்டுள்ளதையும் கூறலாம். உதாரணமாக "இரவு கண்டு விட்டது" "காலை காண ஆரம் பித்தது’ போன்ற வாக்கியங்களைக் காட்டலாம். (மனக் கோலம்) தமிழிலே காண் என்பது செயப்படு பொருள் குன்றா வினை. இங்கு மெளனி அதனைச் செயப்படு பொருள் குன்றிய வினையாகப் பயன்படுத்தியுள்ளார். இது ஒரு வழுப்போல் தோன்றினாலும் இதை அவருடைய புத்தாக்கம் என்று நாம் அங்கீகரிக்கலாம்.Tஆனால் வாக்கிய அமைப்பில் எப்போதும் அவர் பிரக்ஞைபூர்வமாக இருந்திருக்கிறார் என்று சொல்வதற் கில்லை. அவருடைய வாக்கியங்கள் பல தாறுமாறாக உள்ளன. அவருடைய வசனம் எளிமையானது என்று சொல் கிறார்கள். ஆனால் அவரைப்போல் தெளிவில்லாத வசனம் எழுதியவர்கள் தமிழில் வேறுயாரும் இல்லை. அவர் சொல்ல நினைத்த பலவற்றைச் சொல்வதற்குப் பல சந்தர்ப்பங்களில் அவருடைய மொழித்திறன் தடையாக இருந்திருப்பதை உணர முடிகிறது. கவிதை போன்ற அற்புதமான வசனங்கள் அவருக்குச் சாத்தியமாகி இருக்கின்றன என்பதில் ஐயம் இல்லை. ஆனால் கரடுமுரடான வசனங்களும் அவரிடம் ஏராளம் உண்டு என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். உதாரணத்துக்கு ஒன்று தருகிறேன். "அவ்வேளைகளில் அவன் தவறாது மேற்குப்பார்த்த அந்த ஜன்னலின் முன் நிற் பான். சிலசமயம் அவன் பார்வையில் குறுக்காக அவளைக் கோவிலுக்குப் போகப் பார்க்க நேரிடுவதும் உண்டு'. (மனக்கோலம்). இதில் வரும் இரண்டாவது வசனம் மிகவும் தாறுமாறானது. இங்கு அவர் சொல்ல வருவது அவன் ஜன்னலில் நிற்கும் போது, சில சமயம் அவள் கோவிலுக்குப் போவதைப் பார்க்க நேரிடுவதும் உண்டு அல்லது அவள் கோவிலுக்குப் போவது அவன் பார்வையில் படுவதுண்டு

எம். ஏ. நுஃமான் / 185
என்பதுதான். ஆனால் மெளனியின் மேற்காட்டிய வசனம் எவ்வகையிலும் புத்தாக்கம் அல்ல. தமிழின் வாக்கிய அமை திக்குக் கட்டுப்படாதது. அதனால் குழப்பமானது. பொருள் தெளிவற்றது; வழுவானது. அவர் தனது மொழியில் பூரண பிரக்ஞையுடன் இருந்திருந்தால் இத்தகைய கட்டற்ற வச னங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று எனக்குத் தோன்று கின்றது.
மெளனியை மீண்டும் சந்திக்கும் போது இதுபற்றி விளக்க மாக அறிய வேண்டும் என்று எண்ணி இருந்தேன். உடனே அதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இலங்கைக்குப் போய் விட்டேன். ஜூன் 5ம் தேதிதான் திரும்பி வந்தேன். அந்த வார இறுதியில் மெளனியை எப்படியும் சந்திக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். அது முடியாமலே போயிற்று. 6ம் தேதி அவர் காலமான செய்தியை மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தியன் எஸ்பிறஸ் மூலம் அறிந்தேன். எனது சந் தேகங்கள் பற்றி மெளனி மூலம் தெளிவுப்படுத்திக் கொள்ள இனி வாய்ப்பே இல்லை.
மெளனியின் மறைவுக்குப் பிறகு தாய் சஞ்சிகை 30-6-85 இதழில் அவரைப் பற்றிய சிலரின் கருத்துக்களை வெளி யிட்டிருந்தது. அவற்றுள் கி. அ. சச்சிதானந்தனின் சில கருத் துக்கள் இங்கு முக்கியமானவை. சச்சிதானந்தன் மெளனி யோடு நன்கு பழகியவர். மெளனி கதைகள் நூலை வெளி யிட்டவர். அவர் இவ்வாறு சொல்லியுள்ளார்.
(மெளனி) எழுதுவதற்கு நிரம்ப கால அவகாசம் எடுத்துக் கொள்வார். ஒவ்வொரு சொல்லையும் சுண்டிச் சுண்டிப் பார்ப்பார். ஒரு நாளைக்கு ஒரு வாக்கியத்தோடு நிறுத்திக் கொண்டதும் உண்டு. தமிழில் முதலில் வர வில்லை என்றால் ஆங்கிலத்தில் எழுதிவிடுவார். பின் னால் தமிழ்ப்படுத்துவார். ஒரு கதைக்கு இருபது டிராப்ட் கூடப் போட்டிருக்கார்.”
தருமு சிவராமு, வெங்கட் சாமிநாதன் ஆகியோர் கருத்துடன் சச்சிதானந்தனின் கருத்தும் ஒத்திருக்கின்றது. சச்சிதானந்த னுக்கும் மெளனியின் எழுத்தை நேரில் அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காதுதான். ஆனால் அவர் மெளனியின் கை எழுத்துப் பிரதிகள் பலவற்றைச் சேர்த்து வைத்திருக் கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு கதையைத் திரும்பத் திரும்ப வெட்டி, திருத்தி, மாற்றி எழுதிய மெளனி யின் கைப்பிரதிகள் அவரிடம் இருந்தால் அது அவருக்கு ஒரு நல்ல ஆதாரமாக இருக்கும். அதைச் சச்சிதானந்தன் வெளிப் படுத்துவாராயின் அது இலக்கிய ஆய்வாளருக்கும், விமர்

Page 95
186 / திறனாய்வுக் கட்டுரைகள்
சகருக்கும் பயனுடிையதாக இருக்கும். இவர்கள் சொல்வது உண்மையெனில் தமிழ் வாக்கியத்தை லாவகமாகவும் வழு , , வின்றியும் கையாள்வதில் மெளனிக்கு இயல்பான சில் தடை கள் இருந்தன என்பது உறுதிப்படுவது ஒருபுறம் இருக்க, மெளனி ஏன் என்னிடம் வேறு மாதிரியாகக் கூறினார் என்பது, என்னைத் தொடர்ந்து சங்கடப்படுத்திக் கொண்டே இருக்கும்.
செப்டம்பர்-1985


Page 96
யாழ்ப்பாணப் பல்கலைக் பேராசிரியராக விளங்கும் வி கிழக்கிலங்கையில் உள்: பிறந்தவர். இலங்கை இல் வாக ஆராய்ந்து வரும் இ மொழியியல், நாட்டார் வ பல கட்டுரைகள் எழுதியுள் களும் எழுதிவரும் இவர்
காலாண்டுக் கவிதை இத (1969-70) நடத்தி வந்தா பதிப்பகத்தை நிறுவி அதன் பதிப்பித்து வெளியிட்டுள்ள காத பார்வையில்-மொ, பாரதியை ஆராய்ந்துள்ளா
கடந்த பதினேழு ஆண் தொடர்பாக அவ்வப்போது கட்டுரைகள் இந்நூலில் இ இ. முருகையன், நீலாவ கவிஞர்கள்,மௌனி, கி. ஜ சிறுகதை-நாவலாசிரியர்க சாமிநாதன் போன்ற வி வெவ்வேறு-கோணத்தில் வி இலக்கிய வகைகள் குறிக் கள் குறித்தும் அறிந்து கெ கள் பல உள்ளன.
இதுவரை வெளிவந்துள் தாத்தாமாரும் பேரர்களும் றாண்டு ஈழத்துத்தமிழ் இல் கவிதைகள் (1981),அழிய கள் வரும் (1983), பார (1984).

கழகத்தில் மொழியியல் ாம்.ஏ. நுஃமான் 1944-இல் ா கல்முனைக் குடியில் ஸ்லாமியத் தமிழ் பற்றி விரி வர், இலக்கிய விமர்சனம், ழக்கியல் ஆகிய துறைகளில் ாளார். 1960 முதல் கவிதை "கவிஞன்" என்ற பெயரில் ழ் ஒன்றையும் சில காலம் ர். வாசகர் சங்கம் என்னும் மூலம் பல நல்ல நூல்களைப் ார். இதுவரை யாரும் பார்க் ழியியல் நோக்கில்-இவர்
ாடுகளில் கலை இலக்கியம் இவர் எழுதிய பதினெட்டுக் டம் பெற்றுள்ளன. மஹாகவி, னன் போன்ற ஈழத்தமிழ்க் ானகிராமன் போன்ற தமிழ்ச் ள், கைலாசபதி, வெங்கட் மர்சகர்கள் பற்றியெல்லாம் விமர்சிக்கும் இந்நூலில் தமிழ் தும் அவற்றின் தனித்தன்மை ாள்ளும் அபூர்வமான செய்தி
ள ஆசிரியரின் நூல்கள்: (1977), இருபதாம் நூற் பக்கியம் (1979), பலஸ்தீனக் ா நிழல்கள் (1982), மழைநாட் தியின் மொழிச் சிந்தனைகள்

Page 97
166 தமிழியற் கட்டுரைகள்
'உள்ளதும் நல்லதும்' என்ற நூலின் முன்னுரையில் எஸ். டி. சிவநாயகம் குறிப்பிடுவது ஆழ்ந்து நோக்கத் தக்கது, அனைவரும் அறியவேண்டியது;
அவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர், சிறந்த கவிஞர், சிறந்த வசனகர்த்தா, சிறந்தமொழி பெயர்ப்பாளர், சிறந்த நல்லாசிரியர், சிறந்த அரசியல் ஆய்வாளர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த இலக்கிய ஆய்வாளர், சிறந்த பண்பாளர், சிறந்த பக்தர், சிறந்த நண்பர், சிறந்த சீர்திருத்த வாதி, சிறந்த புரட்சியாளர், சிறந்த பத்திரிகை யாளர். இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு வகையிலும் சிறப்புற்று வாழ்ந்த புலவர் மணி இலக்கியமும் சமூகமும் ஒன்றே என்ற உணர் வோடு இவ்விரு பணியையும் ஒன்ருகக் கருதியே வாழ்ந்து வந்தனர். மட்டக்களப்பு மண்ணின் தனித்துவம் பேணிய அதே வேளையில் புலவர்மணி பிரதேசம் கடந்த கேண்மையுடனும் நட்புடனும் பண்புடனும் வாழ்ந்தார். இதனுல் இவரின் புகழும் நாடு பரந்த, நாடுகள் கடந்த புகழாயிற்று.
ஈழத்து இலக்கிய வரலாற்றினை எழுதப் புகுவோர் மட்டக்களப்பையும் புலவர் மணியையும் மறத்தல் கூடாது என்பதற்காகவே புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை நினைவுப் பணி மன்றம் குன்ரு உழைப்பையும் குறையா ஊக்கத்தையும் கொண்டு செயற்படுகின்றது எனலாம். புலவர் மணி இந்தத் தலைமுறையின் தலை மக்களில் ஒருவர் என்பது யாவரும் அறிந்ததே. ம

20
தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள்
வித்துவான் ச. அடைக்கலமுத்து
தனிநாயக அடிகளாரின் இளமைப் பெயர் சேவியர் என்ப தாகும். இவர் ஊர்காவற்றுறையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் நெடுந்தீவைச் சேர்ந்தவர். ஊர் காவற்றுறையிலும் யாழ். பத்திரிசியார் கல்லூரியிலும் கல்வி கற்றர், குருமாணவராகச் சேர்ந்து கொழும்பிலும் உரோமா புரியிலும் சமயக் கல்வியைக் கற்றுத் தேறிக் குருவானுர், "அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் கலைமாணி, முதுமாணிப் பட்டங்களைப் பெற்றர். தூத்துக்குடியில் ஆசிரியராகப் பணி புரிந்தபோது தனிநாயகமெனப் பெயர் புனைந்து கொண்டார். தமிழ் அறிவும் தமிழ்ப்பற்றும் நிரம்பியவராய்ப் பிறநாடுகளுக் குச் சென்று தமிழின் சிறப்புகளையிட்டு உரைகள் நிகழ்த்தி ஞர். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்திற்குச்சென்று இந்தியக் கலைகளின் பேராசிரியராகப் பணிபுரிந்தார். உலகில் பல நாடுகளுக்கும் சென்று ஆங்காங்குள்ள பல்கலைக்கழகங் களில் விரிவுரை ஆற்றினுர். தமிழ்த்துாது, ஒன்றே உலகம், என்ற தமிழ் நூல்களையும் சில ஆங்கில நூல்களையும் எழு தியதோடு நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதினுர். தமிழ்ப் பண்பாடு என்ற ஆங்கில சஞ்சிகையை நடத்தி வந்தார். தழிழாராய்ச்சி மாநாடு இவருடைய சிந்தையின் செல்வமே! 1913 இல் மலர்ந்த அடிகள் 1980 இல் இயற்கை எய்திஞர்.)

Page 98
768 தமிழியற் கட்டுரைகள்
தமிழன்னைக்குப் பேரிலக்கியங்களைப் புனைந்து அழகு செய்தனர் புலவர்கள். இலக்கணங்களை எழுதி அவளு டைய கன்னித்தன்மைக்கு அழியாத பாதுகாப்பளித் தனர் அறிஞர். உரை நூல்களையும் சிறு கதை, நாவல் களையும் எழுதி அவளை வளம்படுத்தியோர் பலராவர். தமிழின் மொழி வரலாற்று ஆராய்ச்சியிலும் ஒப்பியல் ஆய்விலும் ஈடுபட்டவர்களும் ஒரு சிலர் இருக்கிருர்கள்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்காக அள விடற்கரிய பணியாற்றியவர்களில் தனிநாயகம் அடிகளை விஞ்சியோர் எவருமில்லை
எனப் பேரறிஞர் குலேந்திரன் அவர்கள் குறிப்பிடுவது நாம் சிந்திக்கத் தக்கது.
ஈழ நாட்டிலும் தமிழகத்திலும் தனிநாயக அடி களிலும் பார்க்கதி தமிழை நன்குகற்ற அறிஞர்கள் இருக் கிருர்கள் என்பதில் ஐயமில்லை. ஆயினும் அடிகளா ருடைய தமிழ்ப்பற்றினையும் பணிகளையும் நோக்கும் போது அவருக்கிணையான இன்னெருவரைக் கண்டு கொள்வது கேள்விக் குறியாகவே இருக்கிறது. தனி நாயகம் சமய குரு, பேராசிரியர், ஆராய்ச்சியாளர், திட்டமிட்டுச் செயலாற்றும் செயல் வீரன்; உயர்ந்த இடத்தை அளிக்கும் அன்பான நட்பாளன்.
என்னை நன்றக இறைவன் படைத்தனன் தன்னை நன்றகத் தமிழ்செய்யு மாறே w என்ற திருமூலர்வாக்கிற் சிந்தையைப் பறிகொடுத்தவர்.
உரோமா புரியில் சமய உயர் படிப்பைப் படித்த போது ஆங்கு வீரமாமுனிவர் கழகத்தை நிறுவி, தமி ழோசை செய்தவர் தனிநாயகம். நாற்பத்து மூன்று நாடுகளைச் சேர்ந்த மாணவருடன் அவர் பயின்றபோது பரந்த உலக மனப்பான்மையும் குறையாத மொழிப் பற்றும் தமக்குஏற்பட்டதாய் அவரே குறிப்பிட்டுள்ளார். அவர் இன, மொழி, மத, தேச வேறுபாடுகளின்றித்

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 769
தமிழையும் தமிழர் பண்பாடுகளையும் போற்றி அனைத் துலகிலும் அந்த நிதியங்களை அள்ளிச் சொரிந்தார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது அவருடைய சிந்தையிற் பூத்த செந்தாமரையாகும். அவர் எங்கு சென்ருலும் அங்கு இந்த அமுத வாக்கை உரைக்கத் தவறியதில்லை.
தாத்துக் குடியில் துறவியாகப் பணி புரிந்த தனி நாயகம் அவர்களை, அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயிலச் செய்து ஊக்கமும் ஆக்கமும் அளித்தவர். தமிழ்ச் சான்ருேராய் அங்கிருந்த ஆயர் றேச் ஆண் டகை அவர்கள். அண்ணுமலையில் சிறப்புப் பட்டங் களைப் பெற்றுக் கொண்டபோது தமிழ் அன்னையின் பொன் நிறமான சாயல் அவருள்ளத்தில் பூங்குழல் ஊதியது. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அவர் எண்ணியதில் வியப்பில்லை. தூத்துக்குடி யில் தமிழ் இலக்கியக் கழகம் ஒன்றை அமைத்துப் பல நூல்களை அச்சேற்றி வந்தார்.
கத்தோலிக்க துறவிகள் சிலர் மொழியார்வத்தில் ஈடுபடுவதற்கான சில வாய்ப்புகள் உண்டு. கத்தோலிக் கத் துறவிகள் யாவரும் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், சிங்களம் எனும் மொழிகளை அறிந்தவர்களே! தனி நாயகம் அடிகள் உரோமா புரியில் கற்கும்போது இத் தாலிய மொழியை நன்கு அறிந்து கொண்டார். அவ ருடைய ஆற்றலினல் பிரான்சியம், இஸ்பானியம், ஜேர் மன் மொழிகளையும் கற்றுக்கொண்டார். ஓரளவு பேசவும் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தவும் ஈபுறு, கிரேக் கம், சம்ஸ்கிருதம், போர்த்துக்கேயம், உரூசியம்,மலாய் முதலான மொழிகளையும் அறிந்து கொண்டார். இவற் ருல் தமிழிலக்கியங்களையும் கருத்துக் குவியல்களையும் பிறமொழிச் செல்வங்களோடு ஒப்பு நோக்குவது அவருக்கு இலகுவாயிற்று.
யாழ்ப்பாணத்தில் 1951இல் நடைபெற்ற தமிழ் விழாவில் அவர் ஆற்றிய கன்னிப் பேச்சில் அவருடைய பன்மொழி ஞானம் புலனுயிற்று. s 22

Page 99
170 தமிழியற் கட்டுரைகள்
ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும் இலத் தீன் சட்டத்தின் மொழி என்றும் கிரேக்கம் இசை யின் மொழி என்றும் இத்தாலியம் காதலின் மொழி என்றும் பிரெஞ்சு தூதின் மொழி என்றும் கூறுவது ஒரு புடையொக்கு மெனின் தமிழ் இரக் கத்தின் மொழி - பத்தியின் மொழி - எனக் கூறு வதும் இனிது பொருந்தும். என்று அவர் பேச்சில் குறிப்பிட்டார்.
தமிழார்வம் கொண்ட அடிகளார் தாம் செல்லும் நாடுகளிலே தமிழின் தொன்மை, மென்மை, பத்தி இலக்கியங்கள் பற்றியெல்லாம் விதந்துரைத்தார். தமி ழரின் பண்பாடு பற்றி உரைகள் நிகழ்த்தினர்; கட்டு ரைகள் எழுதினர்; வானெலிகளில் உரை செய்தார். அந்தந்த நாட்டு மக்க ள் தமிழ் மொழியிடத்து ஆர்வமும் தமிழ்ப்பண்பாட்டில் கருத்தும் தமிழ் இலக் கியங்களில் ஆர்வமும் கொள்ள அத்திவாரமிட்டார். பல மொழிகளை அவர் அறிந்திருந்தமையால் அந்தந்த நாட்டு வரலாறு, கலாசாரம், பண்பாடு முதலியவற் ருேடு தமிழ்த் திருநாட்டின் வரலாறு, இலக்கியம், பண்பாடுகளை ஒப்பிட்டுக் கருத்துக்களை உரைத்தபோது கேட்போருக்குத் தமிழில் பற்றும் தமிழ் இலக்கியக் கருத் துக்கள்ை அறிவதில் அவாவும் பண்பாடுகளை நோக் குவதில் ஊக்கமும் ஏற்படுவது இயல்பேயன்றே!
1950 ஆம் ஆண்டு அமெரிக்கா, யப்பான் முதலிய நாடுகளுக்குச் சென்று கல்விச் சுற்றுலாச் சொற்பெருக் குகளை நடாத்தினர். அப்போது தமிழ்மொழி, கலா சாரம், வரலாறு பற்றி அறிந்துகொள்ள ஆங்கில இதழ் ஒன்றை வெளியிடுதல் நன்றென்று பலர் வேண்டினர். இதன் பயனகத் தமிழர் பண்பாடுகளை எடுத்துரைக்கத் தமிழ்ப் பண்பாடு (Tamil Culture) என்ற ஆங்கில முத்திங்கள் வெளியீடு ஒன்றை 1952 இல் வெளியிட் டார். முதலாவது இதழிலே பேராசிரியர் மீனுட்சி சுந்தரனர், வையாபுரிப்பிள்ளை, சிதம்பரநாதச் செட்டி

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 17
யர் முதலிய பேரறிஞர்கள் எழுதியிருந்தனர். இவ் வெளியீடு பதினைந்து ஆண்டுகாலம் வெளிவந்து பெரும் பணி புரிந்தது. - -
உலக நாடுகள் பலவற்றை வலம் வந்தார். ஒற்றுமை அமெரிக்கா, தென்னமெரிக்கா, யப்பான், இங்கிலாந்து, போர்த்துக்கல், கனடா, இத்தாலி, சோவியத் ஒன்றியம், யேர்மனி, வியட்னம், மேற்கிந்தியத் தீவுகள் என்பவற் றுக்குச் சென்று திரும்பினர். சில நாடுகளுக்குத் திரும் பச் சென்றதும் உண்டு. இதனல்தான் அவரைத்தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகள் எனச் சிறப்புப் பெயர் கொண்டு அன்பர்கள் அழைப்பராயினர். மேலும் தமிழ்த் தூது என்ற நூலை எழுதியமையால் இப்பெயர் பெற் றர் என்று கூறுவதும் பொருந்தும். தமிழர் பண் பாடே அவர் தூதின் உட்பொருளாய் அமைந்ததென லாம். தமிழர் பண்பாட்டின் குறிக்கோள்களை அவர் நிகழ்த்திய பேருரையொன்றில் பின்வருமாறு கூறுகிா?ர்:
தமிழர் பண்பாடுகள் பலவற்றை நம்மிலக்கியங் களில் தெளிவாகக் காணலாம். பரந்த உலக மனப் பான்மை ஒரு கொள்கை. அதனுல்தான் புறநா னுாற்றில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் வள்ளுவத்தில் யாதானும் நாடாமால் ஊராமால் என்றும் குறிப்பிடப்பட்டுள்ள்ன. விருந்தோம்பல் ஒருசிறந்த கொள்கை. பிறரன்பு, ஈகை,த்மக்கென வாழாப் பிறர்க்குரியாளன் எனும் கோட்பாடு, என் கடன் பணி செய்து கிடப்பதே, எனும் கருத்து அகத்திணை புறத்திணை மரபு, மானமென்ருல் உயி ரையும் கொடுத்துக் காப்பாற்றும் வேட்கை, மனத் தூய்மை, விடாது முயலல், யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற மனநிலை, உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் எனும் உயர்ந்த இலட் சியம் என்பன தமிழர் பண்பாட்டில் அரிய சில கோட்பாடுகளெனக் கூறலாம் என உரைத்திருக்கின்றர்.

Page 100
172 தமிழியற் கட்டுரைகள்
தனிநாயக அடிகள் உலகிலுள்ள நாற்பதுக்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் தமிழின் சிறப்பியல் புகளையும் தமிழர் பண்பாட்டின் சால்புகளையும் எடுத் துச் சொற்பெருக்காற்றியுள்ளார். வேறு நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் இந்திய ஆய்வுகள் (மdian Studie) என்ருல் சம்ஸ்கிருதம் பற்றிய அறிவினையே குறிக் கும். தமிழ் இடம் பெறவில்லை. அடிகளாரின் அயரா முயற்சியால் உலகின் பல பல்கலைக் கழகங்களில் திராவிட இயல் கற்பிக்கப்படுவதோடு தமிழியல் துறையை அனைத்துலக அறிவுத் துறையாக்கிய பெருமையும் அடிக ளாருக்கே உரியதாகும்.
'திருவாசகம் எனுந்தேன்’ எனப்போற்றப்பெறும் திருவாசகத்தில் அடிகளாருக்கு அளவற்ற ஈடுபாடுண்டு. திருக்குறள் போன்ற ஒழுக்க நூல் உலகில் எங்கணும் தோன்றியதில்லை "/எ ன் பது அவருடைய உறுதி யான முடிபு. இயற்கையிலும் சிறப்பாக மலர்களிலும் அவருக்கு ஒரு கண். இறைவனின் கைவண்ணத்தை இவற்றில் கண்டு மகிழ்ந்தார். மலர்களைத் தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தியதுபோல வேறெந்த இனமும் பயன்படுத்தவில்லை என அவர் கூறியுள்ளார். பலமொழிகளில் பாண்டித்தியம் பெற்ற அடிகளார், ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவர். ஆயினும் தன்னந்தனியணுய் இருக்கும்போது தமிழ் நூல்களையே விரும்பிப் படிப்பார். அமெரிக்காவிலும் அவ்வாறே தாம் செய்ததாகக் குறிப்பிடுகிருர்,
தமிழ்த் தூது, ஒன்றே உலகம் என்ற இரு நூல்களையும் இருநூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள் ளார். சங்க இலக்கியத்தில் இய்ற்கையின் இடம், திருவள் ளுவர், தமிழர்பண்பாடும் நாகரிகமும், தமிழரின் மானிட வியற் கொள்கை, தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வுகள் என்பவற்றை இங்கே குறிப்பிடுதல் பொருந்தும்.

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 173 வேற்று நாடுகளில் தமிழ் மணத்தைப் பரப்பிய தோடு, ஆங்காங்குள்ள தமிழாராய்ச்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு மொழியின் செம்மையையும் தமி ழர் பண்பாடுகளையும் தெளிவு படுத்தியும் வந்தார். செக்கோசிலவாக்கியா, சோவியத் நாடு என்னும் நாடு களுக்குச் சென்றபோது, செம்பியன், கண்ணன் என்ற தமிழ்ப் பெயர்க%ளக்கூடச் சிலர் தம் பிள்ளைகளுக்கு இட்டு அழைப்பதைக் கண்டு வியப்புற்றர். தென் கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் தமிழரின் பூர்வீக மரபுகள் இழையோடிக் கொண்டிருப்பதைக் கண்டு கொண்டார். மேலும் தமிழ்ச் சொற்கள் சிதைந்தும் சிதையாமலும் இன்றும் வழக்கிலிருப்பதை அறிந்து நய்ந்தார். v
தமிழ் நாட்டில் பெயரளவில் கேள்விப்பட்டு இது வரை மறைந்திருந்த தம்பிரான் வணக்கம், போர்த்துக் கீச - தமிழ் அகராதி என்பவற்றை லிஸ்பன் பல்கலைக் கழகத்தில் கண்டறிந்து முதல் நூலை அச்சேற்றுவித் தார். வத்திக்கான் நூற் கூடத்தை ஆராய்ந்து திருத் தொண்டர் திருமலர் என்னும் பழைய நூலைக் கண் டறிந்தார். பாரீசுப் பட்டின நூற் கூடத்தில் இன்னும் அச்சேருத பழைய தமிழ் நூல்களும் ஏடுகளும் இருப் பதையறிந்து தமிழுலகுக்கு அறிவித்தார். 1544 இல் அச் சேறிய முதலாவது தமிழ் நூலைப் போர்த்துக்கேய பொருட் காட்சி நிலையத்தில் கண்டறிந்தார். அந்நாட்டில் ஐரோப் பியர் ஒருவரால் எழுதப்பெற்ற முதலாவது இலக்கண நூல் கையெழுத்துப் பிரதியாகவே இன்னும் இருப் பதையும் எடுத்துரைத்தார்.
தனிநாயக அடிகள் மலேசியப் பல்கலைக் கழகத்தில் இந்திய இயல் பகுதியில் விரிவுரையாளராய் இருந்த போது 1964 இல் இந்தியாவின் தலைநகரில் கலை பண் பாட்டியல் ஆய்வாளர்களின் 22 ஆவது மாநாடு நடை பெற்றது. உலகின் பல பகுதிகளிலுமிருந்து தமிழ் ஆர்வம் கொண்டவர்களும் தமிழ்ப் பயிற்சியுடைய பிற

Page 101
it 4 தமிழியற் கட்டுரைகள்
மொழி அறிஞர்களும் அங்கே கூடினர்கள். தமிழகத் துப் பேராசிரியர்கள், ஈழத்து அறிஞர்கள் பலர் தில்லி நகரில் கூடியிருந்த வேளையில் உலகு தழுவிய தமி ழமைப்பு ஒன்றை உருவாக்க அடிகளார் முனைந்தார். இதன் பயனக ஒரே நாளில் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாயிற்று. அடிகளார் தனிநாயகமே அதன் செய லாளர் நாயகமாகப் பொறுப்பேற்க வேண்டுமென்று எல்லோரும் கேட்டுக் கொண்டனர். ་་་་་་་
1966 இல் உலகு தழுவிய தமிழாராய்ச்சி மாநாட் டைத் தமிழகத்துக்கு வெளியே கோலாலம்பூரில் நடத்தி முடித்தமை ஓர் அரிய சாதனை என்றே கூற லாம். தமிழர்கள் “குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பார்கள்’ என்ற பழிச் சொல்லைத் துடைத் தெறிந்து, உலக அரங்கில் தனது பெருமையைத் தமி ழனும் உயர்த்தி வைக்க வல்லவன் என்ற புதிய வர
"லாற்றைத் தொடக்கிய காலம் அது.
தனிநாயக அடிகளை மலேசிய முதலமைச்சரே பாராட்டினர். 1968 இல் தமிழ் நாட்டில் சென்னை யிலும் 1970 இல் பிரான்சு தேசத்தில் பாரீசிலும் அனைத் துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. நான்காவ து மாநாடு 1974இல் பெரிய புள்ளிகளின் எதிர்ப் பையும் . அரசாங்கத் தடைகளையும் தாண்டி யாழ்ப் பாண்த்தில் நடைபெற்றது. அவ்வேளை உலகத் தமி ழாராய்ச்சி மாநாட்டுக்குத் தலைமை வகித்த பேராசிரி யர் வித்தியானந்தன்,
இதுவரை நடத்திய மாநாடுகள் மூலம் தனி நாயக அடிகளார் சாதித்தவை எவை? தமிழ் இலக் கியம் பற்றியோ மொழி பற்றியோ ஆராயும் உரிமை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வர்க்கே உரியது என்ற கொள்கையை இவர் தகர்த் தெறிந்து விட்டார். தமிழாராய்ச்சி குறுகிய எல் லைக்குட்பட்டிராது பரந்து விரிந்து பல துறைகளில்

தமிழ்த்தூதர் தனிநாயக அடிகள் 175
விருத்தியடைந்திருக்கிறது. தமிழ் இலக்கிய இலக் கண ஆராய்ச்சியே தமிழாராய்ச்சி என்ற நிலை மாறி, தமிழ் மக்கள் வரலாறு, தமிழ் மக்கள் மனிதவியல், தமிழ் மக்கள் சமயங்கள், தத்து வங்கள், தொல் பொருள் இயல், பிறநாட்டுத் தொடர்புகள், தமிழர் பண்பாடு, தமிழ்க் கலைகள், தமிழ் மொழியியல் இன்னேரன்ன பல துறைகளி லும் தமிழாராய்ச்சி விரிந்து சென்றிருக்கிறது. மேலும் இவரது தொண்டினுல் பிறநாடுகள் பல வற்றிலுள்ள பல்கலைக் கழகங்களிலே தமிழை ஒரு பாடமாக அமைத்திருக்கின்றனர். தமிழாராய்ச்சி யில் அப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ஈடுபடு கின்றனர். இப்போது தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, தமிழர் பண்பாடு முதலியன பற்றியும் ஆராய்ச்சி செய்கின்ற நிலை இப்பல்கலைக் கழகங்களில் உருவாகி வளர்ச்சி பெற்று வருகிறது. எனக் குறிப்பிட்டார்.
இவ்வாறு தமிழியல் ஆய்வில் புதிய மறுமலர்ச்சி யைத் தோற்றுவித்தும் பிறநாடுகளில் தமிழின் சிறப் பையும் பண்பாடுகளின் உயர்வையும் அறிய வைத்தும் பன்மொழி அறிவால் ஒப்பியற் கருத்துக்களை உரைத் தும் அன்புடனும் புண்புடனும் அறிஞர்களை அணுகி யும் இடை விடாத முயற்சியில் ஈடுபட்டும் எழுதியும் உரையாற்றியும் அடிகளார் செய்த பணிகளால் அவர் திருவுருவம் தமிழ் மக்கள் நெஞ்சில் நிலைபெற்று விட்டது. O

Page 102
21
ஈழத்துக் கவிஞர் மஹாகவி
எம். ஏ. நுஃமான்
(1927 - 1971). இவரது சொந்தப் பெயர் து. ருத்திரமூர்த்தி. அளவெட்டியில் ஒரு சாதாரண குடும்பத்தில் 9-1-1927 இல் பிறந்தார். உயர்கல்வி பெற முடியாமையால் தமது 19ஆம் வயதில் ஒரு கிளாக்காகக் கொழும்பில் உத்தியோகம் பார்க்கச் சென்ருர், 28 வயதில் திருமணம் செய்தார். மனைவி யின் பெயர் பத்மாசனி. பாண்டியன், சேரன், சோழன், இனியாள், ஒளவை ஆகிய ஐந்து பிள்ளைகளின் தகப்பன். 1967இல் இலங்கை நிருவாகச் சேவைப் பரீட்சையில் (C. A.S.) சித்தியடைந்து மாவட்டக் காணி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றர். மன்னுர், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இடங் களில் கடமையாற்றி 1970 இல் அரச கரும மொழித் திணைக் களத்தில் உதவி ஆணையாளராகப் பதவியேற்று மீண்டும் கொழும்பு சென்றர். 1971 யூன் 20ஆம் திகதி இருதய நோயி ஞல் மரணமடைந்தார்.
இதுவரை வெளிவந்துள்ள மஹாகவியின் நூல்கள்: வள்ளி (1955), குறும்பா (1966), கண்மணியாள் காதை (1968), கோடை (1970), ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்(1971),
இரண்டு காவியங்கள் (1974), வீடும் வெளியும் (1973), புதிய தொரு வீடு (ஆறு நாடகங்கள் தொகுப்பில் 1979)

ஈழத்துக் கவிஞர் மஹ்ாகவி - 177
ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னேடிகளுள் பிரதானமானவர் மஹாகவி. உள்ளடக்கத்திலும் உரு வத்திலும் இவர் கவிதையில் புகுத்திய புதுமைகள் பல. யதார்த்த நெறியைக் கவிதையில் கையாண்டார். மனித வாழ்க்கையில் ஓர் ஆழமான நம்பிக்கையையும் மனிதாபிமானத்தையும் அவர் தம் கவிதைகளில் வெளிப் படுத்தினர். சாதாரண மக்களின் வாழ்வைத் தமது கவிதைப் பொருளாகக் கொண்டவர் புதிய காவியங் கள், பாநாடகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தார். பழைய யாப்பு வடிவங்களைப் பேர் சோசைப் பாங்கில் எளிமைப் படுத்தினர். கிராமிய வழக் குச் சொற்களைக் கவிதையில் தாராளமாகக் கையாண் டார். இக்காரணங்களால் தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சியில் மஹாகவி முக்கிய இடம் பெறுகிருர்,
மஹாகவி தமது பதினன்காவது வயதில் கவிதை எழுத ஆரம்பித்தார். முதலில் பண்டிதன் என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதி வந்தார். பின்னர் மஹாகவி என்னும் புனைபெயரைத் துணிச்சலோடும் தந்நம்பிக்கையோடும் சூடிக்கொண்டார். புதுக்கம்பன், புதுநாப்புலவர், மாபாடி, மகாலட்சுமி முதலிய புனை பெயர்களிலும் இவர் கவிதைகள் எழுதியுள்ளார். 1943 இல் இருந்து அவரது கவிதைகள் பத்திரிகைகளில் பிர சுரமாகத் தொடங்கின. கிராம ஊழியன், மறுமலர்ச்சி, ஈழகேசரி, ஆனந்தன் போன்ற இதழ்களில் அவரது ஆரம்ப காலக் கவிதைகள் பிரசுரமாயின. ஆரம்பத்தில் மஹாகவி சில சிறு கதைகளும் எழுதியுள்ளார். வேதாந்தம், பிரமசாரி பரமசிவம், ஈகை, உலகம் கோண லானது, நஞ்சு போன்றவை இவற்றுட் சில. எனினும் இவர் கவிதைத் துறையையே தனக்குரியதாக ஆக்கிக் கொண்டார். சுமார் முப்பது வருடங்களாக அவர் தமிழ்க் கவிதையை வளம்படுத்தி வந்துள்ளார். நூற் றுக் கணக்கான கவிதைகளும் இசைப் பாடல்களும் காவி
23

Page 103
78 தமிழியற் கட்டுரைகள்
யங்களும் பாநாடகங்களும் அவர் எழுதியுள்ளார். மஹா கவியின் சுமார் முப்பது ஆண்டு காலக் கவிதை முயற்சி களில் தேக்கமற்ற சீரான வளர்ச்சிப் போக்குகளைக் காணலாம். 1960 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு பெரிய பின்னணியில் வாழ்க்கையை நோக்கும் தன்மை அவரிடம் காணப்படுகின்றது. சடங்கு, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கந்தப்ப சபதம், கண்மணியாள் காதை ஆகிய காவியங்களையும் கோடை,முற்றிற்று,புதியதொருவீடு ஆகிய பாநாடகங்களையும் அறுபதின் பின்னரே அவர் படைத் தார். 娶
மஹாகவியின் கவிதைகள் தனித்துவமானவை. இன்றைய நடைமுறை வாழ்க்கையை யதார்த்த பூர் வமாகக் கவிதையில் சித்திரித்துக் காட்டியமை தமிழ்க் கவிதைக்கு மஹாகவி வழங்கிய முக்கியமான பங்களிப்பு ஆகும். Wvs
இன்னவைதாம் கவிஎழுத ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதீர்; சோலை, கடல் மின்னல், முகில், தென்றலின மறவுங்கள்; மீந்திருக்கும் இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு என்பவற்றைப் பாடுங்கள் என்று தம் ஆரம்ப காலத்திலேயே அவர் எழுதினர். 'நிகழ்காலச் செய்திகளையும் பிரச்சினைகளையும் கவிதை யில் ஆண்டு அதனை இன்றைய யுகத்துக்கு இழுத்து வரல் அவசியமாகும்.’’ என்று பிற்காலத்திலும் அவர் எழுதினர்.
இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள் இன்றைய காலத் தியங்கும் நோக்குகள் இன்றைய காலத் திழுப்புகள் எதிர்ப்புகள் இன்றைய காலத் திக்கட் டுக்கள்.

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 179
ஆகியவையே கவிதையில் இடம் பெற வேண்டும் என்று அவர் சொன்னர். இதுவே அவரது கவிதைக் கொள்கை யாகும். சமகாலப் பிரக்ஞை, சமூகப் பிரக்ஞை, யதார்த்தம் ஆகியவையே அவரது கவிதைக் கொள்கை யின் அடிப்படையாகும். அவரது பெரும்பாலான கவி தைகளிலும் காவியங்களிலும் மேடைப் பாநாடகங்களி லும்நாம் இதனைக் காணலாம். கற்பன வாதப் பண்புகள் மஹாகவியின் ஆரம்ப காலக் கவிதைகள் சிலவற் நில் காணப்படும்போதிலும் . யதார்த்தப் போக்கே அவரது பிரதான படைப்புகளின் முக்கிய பண்பு ஆகும். இந்த வகையில் அவர்காலத்துப் பெரும்பாலான கவிஞர் களில் இருந்து மஹாகவி தனித்துத் துலங்குகின்றர்.
y V
பேதங்களும் முரண்பாடுகளும் அற்ற ஒரு சமத்துவ மான சமூக வாழ்வையே மஹாகவி தமது கவிதை களில் வலியுறுத்தியுள்ளார். எல்லா வகையான இடர் களையும் வென்று மனிதன் வாழ்வில் முன்னேறிச் செல் வான் என்பதே இவர் நமக்குத் தரும் செய்தியாகும். ஆழமான மனிதாபிமானமும் வாழ்க்கையின் மீதும் மனித வல்லமையின் மீதும் ஓர் ஆழமான நம்பிக்கை யும் இவரது கவிதைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன.
கொண்டுவா பார்ப்போம் கொலை எருமை பூட்டிய நின் வண்டியினை எனது வாசலுக்கு
நான் இங்கே சூழ்வேன், சுழல்வேன், சுமப்பேன், சுவைத்திருப்பேன் வாழ்வேன் மடியும் வரை
என்று ஒரு கவிதையில் மஹாகவி எமனுக்குச் சவால் விடுகிருர். மரணத்துக்கு அஞ்சாமையை இதில் நாம் காண்கிருேம். மரணத்தோடு மனித வாழ்வு முடிந்து விடுவதில்லை. அவன் தன் சந்ததிகள் ஊடாக வளர்க் து செல்கிருன். அவ்வகையில் மனிதன் மரணிப்பதில் என்ற ஒரு கருத்தையும் மஹாகவி முன்வைத்துள்ளார்.

Page 104
180 தமிழியற் கட்டுரைகள்
அன்று பிறந்து இன்று இறப்பதுள் ஆய. தன்றுநாம் மானிட வாழ்வுகாண் அப்பனே மகனுகி, வளர்ந்து உயிர் ஒய்தலன்று உயர்வு ஒன்றினை நாடலே உண்மை.
என்ற தத்துவத்தை இவர் தமது சாதாரண மனிதனது சரித்திரம் என்ற காவியத்திலும் முற்றிற்று என்ற பாநாடகத்திலும் வலியுறுத்துகின்ருர், மஹாகவியின் கவிதைகளில் காணப்படும் இத்தகைய நம்பிக்கைக் குரல் நவீன தமிழ்க்கவிதைக்கு அவர் கொடுத்த ஒரு பல L Din (g5 Lib.
யாழ்ப்பாணத்துக் கிராம மக்களின் வாழ்வே மஹா சுவியின் பெரும்பாலான முக்கிய கவித்ைகளின் கருப் பொருளாக உள்ளது. கிராமப்புற வாழ்க்கையை மஹாகவிபோல் கவிதையில் கொண்டுவந்த பிறிதொரு கவிஞன் இல்லை எனலாம். மஹாகவியின் ஆரம்ப காலக் கவிதைகள் சிலவற்றில் நகர வாழ்க்கையின்மீது வெறுப்பும் கிராமத்தின்மீது அளவிறந்த மோகமும் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் செல்வேன், கிராமம் முதலிய கவிதைகளில் இப்பண்பைக் காணலாம். இக் கவிதைகளில் கிராமத்தை இவர் இலட்சிய பூமியாக நோக்குகின்றர். ஆனல் இவர்து பிற்காலப் படைப்புக் களிலே கிராமம் அதன் சகல முரண்பாடுகளுடனும் மோதல்களுடனும் சித்திரிக்கப்பட்டுள்ளது. சடங்கு, கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனது சரித் திரம், கோடை, புதியதொரு வீடு முதலியவற்றை உதா ரணமாகக் காட்டலாம். கிராமிய வாழ்வை யதார்த்த பூர்வமாகச் சித்திரிக்கும் இப்படைப்புகள் தமிழ்க் கவி தைக்கு ஒரு புதிய வளத்தைக் கொடுத்துள்ளன என லாம்.
கிராமப்புற வாழ்வை மட்டுமன்றி நகரப்புற வாழ வையும் மஹாகவி தம் கவிதையின் கருப் பொருளாகக் கொண்டுள்ளார். நகர்ப்புற நாகரிகத்தினல் உருவாக் கப்பட்டு ஒதுக்கித் தள்ளப்பட்ட பிச்சைக்காரர்கள்,

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 18i
விவசாயிகள், திருடர்கள் முதலியோர் இவரது சில கவி தைகளில் அநுதாபத்தோடு சித்திரிக்கப்பட்டுள்ளனர். சிமாட்டி, விட்ட முதல், விசாதீர், திருட்டு முதலிய கவிதை கள் இத்தகையன. நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்வும் மனப்பாங்குகளும்கூட இவரது கவிதைகளிற் சித்திரிக்கப்பட்டுள்ளன. ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் இதற்கு நல்ல உதாரணமாகும்.
நவீன தமிழ்க் காவிய வளர்ச்சியிலும் மஹாகவி யின் பங்கு கணிசமானது. குயிற் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய காவியங்களின் மூலம் பாரதி தொடக்கிவைத்த நவீன காவிய மரபை ஒட்டித் தமிழில் தாராளமான காவியங்கள் எழுதப்பட்டுள்ளன. அவ ற்றுள் மிகப் பெரும்பாலானவை இலக்கியச் செய்திகளையும், புராண இதிகாசக் கதைகளையும் அடிப்படையாகக் கொண்ட கற்பனைப் படைப்புக்களாகும். தற்கால வாழ்க்கை யோடு சம்பந்தமற்றவை அவை. தற்கால வாழ்க்கை அநுபவத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன தமிழ்க் காவியங்களைப் படைத்தவர்களுள் மஹாகவி முதன் மையானவர். ஆரம்பத்தில் இவர் எழுதிய கல்லழகி (1959) ஒரு கற்பனைக் காவியமே. அதைத் தொடர்ந்து அவர் எழுதிய சடங்கு (1962) யாழ்ப்பாண்க் கிராம வாழ்வை யதார்த்தமாகச் சித்திரிக்கும். ஓர் அரிய படைப்பாகும். தமிழில் இதற்கு முன் உதாரணம் கதுவும் இல்லை. மிக உயர்ந்த கலை நுணுக்கம் கொண் டது அது. இதைத் தொடர்ந்து மஹாகவி எழுதிய 1.ண்ணிையாள் காதை, ஒரு சாதாரண மனிதனது அபித்தியம், கந்தப்ப சபதம் ஆகியன மஹாகவியின் கவித்து வ ஆற்றலையும் வாழ்க்கைத் தரிசனத்தையும் வெளிப்படுத்தும் மிகச் சிறந்த படைப்புக்களாகும். தமிழில் இவை மிகுந்த தனித்துவம் உடையவையாகும்.
காவியங்களைப் போல் தமிழில் பாநாடக வளர்ச்சி யிலும் மஹாகவியின் பங்கு முக்கியமானது. ஆரம்பத் தல் வானுெலிக்காக இவர் பல பாநாடகங்கள எழுதி

Page 105
182 தமிழியற் கட்டுரைகள்
ஞர். அடிக்கரும்பு, சிற்பி ஈன்ற முத்து, பொய்மை, சேணு பதி, வாணியும் வறுமையும், திருவிழா, கோலம் ஆகியவை அவரது வானெலிப் பாநாடகங்களாகும். பிற்காலத்தில் மேடைக்காகக் கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று ஆகிய பாநாடகங்களை எழுதினர். கோடை, புதியதொரு வீடு ஆகியவை பலமுறை மேடையேற்றப்பட்ட பாநாட கங்களாகும். ஈழத்து நாடக வளர்ச்சியிலே இவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. மஹாகவியின் யதார்த்தப் போக்கை அவரது மேடைப் பாநாடகங்களிலும் காண லாம்.சமகால வாழ்க்கையைப் பின்னணியாகக்கொண்டு யதார்த்த பூர்வமான மேடைப் பாநாடகங்களை எழுதிய முதல்வராக மஹாகவியைக் கருதுவதில் தவறில்லை.
தமிழ்ச் செய்யுள் நடை வளர்ச்சியிலும் மஹாகவி யின் பங்கு குறிப்பிடக்கூடிய முக்கியத்துவம் உடையது. தற்கால உரை நடைக்குச் சமாந்தரமாகச் செய்யுள் நடையை நவீனப் படுத்துவதில் மஹாகவி பல வெற். றிகள் கண்டுள்ளார். அன்ருட வழக்கில் உள்ள சாதா ரண சொற்களையே அவர் கையாண்டார். யாழ்ப் பாணப் பேச்சுத் தமிழ் வழக்குகளை அவர் இயல்பாக வும் பிரக்ஞை பூர்வமாகவும் தம் கவிதைகளில் பயன் படுத்தினர். இன்றைய உரை நடையில் கையாளப்படும் வாக்கிய அமைப்பை ஒட்டிய சிறுசிறு வாக்கியங்களையே அவர் செய்யுளில் கையாண்டார். இத்தகைய பண்புகள் மஹ்ாகவியின் செய்யுள் நடைக்கு உரைநடை போன்ற ஒரு பேச்சோசைப் பண்பைக் கொடுத்தன. மஹாகவியின் ஆரம்பகாலக் கவிதைகளைவிடத்தற்காலக் கவிதைகளிலேயே இப்ப்ண்பு முனைப்பாகக் காணப்படு கின்றது. தமிழ் நாட்டில் செத்துக்கொண்டிருக்கும் செய் யுளுக்கு 'ஈழத்தில் ஒரு புது உயிர் கொடுக்கப்பட்டது. மஹாகவியே அதில் தலையாயபங்கு வகித்தார் எனலாம்.
தற்காலத் தமிழ்க் கவிதை வளர்ச்சியிலே மஹீா கவிக்கு ஓர் உயர்ந்த இடம் உண்டு என்பதில் ஐயமில்லை.

ஈழத்துக் கவிஞர் மஹாகவி 183 ஆயினும் மஹாகவி பற்றிய ஆய்வுகள் மிகக் குறை
வாகவே உள்ளன. அவரது படைப்புக்கள் எல்லாம் நூல் உருப்பெற வேண்டும், அவர் பற்றிய ஆய்வுகள் பெருக வேண்டும். அப்போதுதான் மஹாகவியின் முக் கியத்துவம் பரவலாக உணரப்பட வழி ஏற்படும். கு

Page 106
பjப்பாணப் பல்லர் முகத் தமிழ் Аын 3эг ni Тэ0||3| Lалыг 11, i, ы эгш |Îï, 1) 1. தமிழ் பிறப் டேவிஸ் புதலாம் வ
ப்ெ 1 ன்றும் தலப்பின் ஆட்வு நிக 11. குழந்தை, இக்சிபம், மரபுவழிக்ால்வி
|1, 11 111,
്ങ ங்கைத் தமிழ் இல
என்பன குறித்துப் (3), , ; ; சில ஆய்வேடுவே இரு கின் உயர் கல்வியைப் பயிலும் பாத் திர மன்றி, பொதுவான வலரும் இரசிகரும் தற்காலச் தில் வசித்தறிந்து , இல்லான பெருங்கு)ை.
இக் குறையை நிவிர்த்தி அந்ைதுள்ளது.
S S S S
l
1ற்றர். பத்தின் (ந | III i njIT II i
II, III || ?
i ь лі
- - - 11) ந
தமிழர்

ங்கராT
பாழ்ப்பா | II i III 声 LIII
இலக்கிட iiதியுள்
+ புர்து
1ள் ,
LLS SL LS SLS SLS S S SLSLSLSLSLSLS LS LSLS LSLSLSL SLL LSSLSLSSLSLSSLSLSSLSLSL LSLSLSLSLSLSLSLSLSLSLSLS SLS
hi՝ , ,
॥ 黑 தமிழி Gi 5ኽ | | | ! நால்கள் மிகவும் கு ை  ை
'):',
* f f f } i,j, 7, 17 = }, f'51 IN I AI I 3; IF வாரகர் கரும் இக்கிய ஆர் தமிழ் வார் i. Trs)
கூடிய நூல்கள் நம்மிடையே
செப்ார் வகையில் இந்நூல்
s ويكي +1 ו ו ו "ה + 1++ , , ו ו ו L היה ו ו ו 61
... ." 一、 ܨܡܐܷ I TI" | 11-1) 1,
S SSL LS S SLS S S D DD SDD S LLLLL L L S SLSLSLS LSLSL L SLL S SLLLSLS S LSLS LS SL L L L SLS
விலங் ஓர் பி. நடராசன்
றுப்பு அ1ை1 1ாப் பகை வி 1, 1ான நெறிபிற் சிறப்புப் பயிற்சி பிடர் ஆ பிற முதலிப பு:1 பெபர்
த கட்டு: எ புதிபுள்ளார்.
சிறப்பாகப் பயிலும் மானவர்

Page 107
‚azoVs ̃ «@∞q
I
@ ¿ T ∞
∞P @∞ o d@ @o T ∞
P ∞ o @ @ @ @ @∞ o „o „
@ ∏ PoLT §
¿∞ ∞ L L ∞ oLT
‘ @ ƒ @∞ P
@ ∏ ∞ @ ∞ o ∞ L @ @ „ @ o „P @
I

@∞q
I
∞
@∞ o ∞
„o „
T §
L ∞ oLT @∞
P
∞ o
107

Page 108
@ @ ∞ P∞oà P ’
P P∞ P P∞ o
@ ∞ ∞
@o ∞o §Ã@∞ ∏ @∞
@∞ ‹ P∞
∞ , ∞ o ∞ @∞
∞ ∞ ƒ ¿∞ o ∞ ¿∞ @ Ù o o @∞ , T à o@ ∞§ Ã
‹ „l@ P∞
∞ , P @ @ ∞„ o oà o »@ ∞
∞
¿∞ ∞ P∞ o o @∞ T o Ù @ P p Ù P∞@ ÃoP @ TÃ P∞ @ , ∞ L∞
Ù §Ã o l P∞ P∞ ∞ ∞o „
108

∞ P∞oÃ
’
P∞ P∞ o „
∞ ∞
∞o T§ P @∞ ‹ P∞
∞ P∞ „ ∞ @∞
∞ ƒ ¿∞ o ∞
¿∞ @ Ù „ @∞ , @ ∞§ à @ ∞ @ P∞
@ ∞„ o oà ∞ P∞
∞ P§ PL ∞
P∞ ∞ T o p Ù P∞@ ÃoP P∞
∞ L∞
Ù §Ã o l P∞ @
∞ ∞o „
I

Page 109
I
∞@ Ã∞ Ù P@ ¿∞ @ ∞ „ ¿oL P∞ L §P∞ , ¥ÿ, o „ o P∞
∞o ¿∞ @ » Ã T o
o @ PL ∞ ∞ o P o ®o @ @ @ ∞ „o ‘¿∞ ∞ ∞@, PoL ¿∞o @∞
∞ ∞ ∞ ’ L @ P∞
@∞o @ T P∞
∞ @ P , @∞ @∞ P ∏ Ù
L ∞ o L∞ ∞ @
Ù
∞P Ù , @ §
L ∏@
¿∞ ∞ PoL @ @ t P∞
∞ ÿ o @ ∞
P ¥§Ão „ ∞ , P @ T
„ ∞ ∞ ∞ ∞L T§

@ ¿∞ @ P∞ L §P∞ ,
P∞
» Ã T o
PL ∞ P o
∞ „o PoL ¿∞o @∞ ∞ ’
P∞
P ∏ Ù
∞ ∞ @
@ §
@ @ t P∞ @ ∞
@ T
∞
109

Page 110
110
, o P @ ∞L , P ÙoPP∞» ƒ @ o @∞ o o à ÿ ∞ ∏ @ ∞ Ù ƒ ¥ ¿∞ , P o oà ∞ P∞
o ∞ ∞
‘@ o @ ∞„ o ’ ‘ @ ∞L ∞ ’
, Po o P P¿∞
∞ o ƒ P Ã ∞
‘ P ∞ o @o ∞
‘ P Ã\ ∞ ∞ ¿
ÿ@ @o o à ∞ o P∞ § ∞ @∞
Ã∞ ÿ§ P∞ ¿ @ ÿ§ P∞
∞ o P∞
P L ¿∞ ÿ§ P
“ ∞‹T t
P à P ¿∞ »Ã∞ L∞ , ¿

, P @ ∞L , P∞» ƒ @ ∞
o o à ÿ @, @ ∞ Ã,
¥ ¿∞ , ∞ P∞ ∞ ∞
@ ∞„ o ’ ∞L ∞ ’ ∞ L∞
P P¿∞ oL
ƒ
∞ ∞
o @o ∞ ’ ∞ L∞
∞ ∞ ¿∞ ¿ ∞ ,
@o o à P∞ § ∞ @∞ ” ∞ L
∞
P∞ P∞
¿∞ ÿ§ P
t ∞L oP à P »Ã∞ L∞ , ¿ ∞ ”
I

Page 111
I
¿∞ L ÃoP ∞ L ¿ ∞ L∞
¿ P∞
p P∞ T§ Ù ∞
„ oL ∞ L „
@ o @ @ o o o o
Ù§, ∞ @ \§ o P∞L o @ ∞@ ¥ ¿∞
o o P∞ L ∞ L∞
¿∞ oL @∞ T o ∞ ¿∞ @ P ∞ T o o oL
P @∞ ∞ ¿ ∞ ∞ ƒ o@ ÙP§ „ P @∞ t „ ∞ L∞ T „ §@o @∞ P @ ÿ P @d ,
P∞ P§Ã ¿ o ∏ P ƒ
§ P∞ ƒ Ã o ÃL ∞ Marry-go-round ∞
o@Ã∞@ » , P oL ƒo @» Marry-go-round , ∞ ∞
∞ P
P‹ P∞ P§Ã ¿ o ∏ P P∞

ÃoP ∞ L ∞
∞
Ù ∞ ∞ L „
o
\§ o P∞L @ ¥ ¿∞
L ∞ L∞ L @∞ T o
P o o oL
∞
P§ „ P ∞ T „ §@o
∏ P ƒ
ÃL ∞
∞
L ƒo @»
, ∞ ∞
∏ P P∞
111

Page 112
Ã∞ ∞ ƒ oL ∞ ¿o@Ù§
¿ ∏ P∞ Marry-go-round ∏ ƒ ∞ o
∞ ∏ ∞ P ∞ P oL ∞ oL ¿ ∞ ∞ ÿ§ P∞ o
∞ @ ∞
, ¿∞ ∏ P
∞L P P ∞P „ P
@∞ ∞ § ¿∞ @ „ P o To Ã∞ d ÿ
@ P T P ∞ ∞ ∞ L “ o ”
∞ o@ P∞ „ §Ã®
o oà T L∞
@ P “¿∞o ,
∞ ” oP P∞ o @ ¥ L
∞ ∞ P o P §
( o o ¿∞ Ã “T T ∞ ∞ “T L „ ”
oL T ∞
¿∞ @ ÿ L
112

oL ∞ ¿o@Ù§ P∞
∏
nd ∏ o
∞ P ∞ ∞ oL o@ ∞ @ ∞ ÿ§ P∞ o „o P∞
¿∞ ∏ P∞
∞L P P ∞P
P∞
¿∞ @ „ P o , Ã∞ d ÿ LoL T P
∞ L ”
P∞ „ §Ã® ∞ ∞
„
L∞
P ,
oP P∞ o @»oL
P § ∞
( o o P “T T ∞ ∞ ”
” ,
T ∞ ¿∞ @ ÿ L
I

Page 113
I
o ∏ § ƒ @∞ o
o o o o
@ @
o o o o ƒ „ o
L L
@ T P , P∞ @L PoL¿∞ ∞ LL∞ ( o § ∞
∞
@ ∞ ∞
¿∞ ¿ P l ¿ „ P§
∞ à P∞o Ã∞
∞ l Ù§Ã∞ o Ã∞ ¿∞
@∞o Ù @ @
ÿ ∞ ‹ ∏ ∏ ∞ Ù P
ÿ Ùo@, Ù , L ∞L ∞ ¥ o ∞ L ∞
P §ÃoL ∞ Ù ∏ P
P∞ @ @» ∞ o @∞

o ∏ §
o @
o
P∞ @L PoL¿∞ ∞ ( o § ∞ ∞
∞
„ P§
P∞o Ã∞ ∞ o Ã∞ ¿∞
@
∞ Ù P∞
L ∞L ∞
∞
∞ o @∞
113

Page 114
P∞ ∞
P ƒ» l @ o@
§ ∞ Ã
o à @∞ @» , P
à P T ¿∞ @ ∞ L ¿oL P t
∞ T ∞ ¿ ÿ ÙoP P
∞@L @ o ∞„ @ o ∞oP P
@o ÿ ¿ ∞ ∞ P P P∞ „ @ P ∞ , d „d ∞ oà ∞ Po oà ∞ P ∞ t „
§ ∞ ∞ @∞ Ù ∞§ o Nice ∞ Ã∞ ∞
¿∞ „ ∞L oP o „ »@o
® , ∞
B
ÿ
‘
o Ù
’ T.S. Eliot. ‘Wast Land’ I will sho dust (ƒ 114
l∏ „ Ã oP

∞
@ o@ ∞ à @∞ @» , P @∞§ ƒ»
T ∞ L t ¿ ÿ ÙoP P ∞ Ã
∞„ ∞oP P @
@o „ ∞ L ∞ P– P∞ ’ ,
P ∞ P ∞ oà ∞ , ∞ P ∞ t „ P
@∞
∞§ o o@ Ã∞ ∞
„ ∞L oP ∞ P
»@o , ∞
Ù
’ t Land’ I will show you... in a handful of
„ Ã oP @∞
I

Page 115
SfiÀq ̃ „aY@÷
I
∞
§ d T „ l P§o@
∞ @o @ t @ t
∞o@ § ¿∞
„ o@ @∞ T „
“¿∞ @ ¥ P ¿@ T
o ∞ § ∞ ”
“ ∞ P∞ ¿@ @ ∞ P§
@∞ P ∞ @∞ » o @ ® P P ∞ L ®
PoL „ P @∞
∞T Ù P∞ @ » @ p „ P∞ @
§ To Ã∞
t „» @∞ o P o@ L ∏@ ∞@ ¿ ∞
P ∏@ ¥ „ o @T o
@ , Po „ , oP @ P∞ @ „ @∞ ∏@ P ∞
@∞ o Ù
„o Ã∞ ∞ P∞» d L
I

Y@÷
I
P§o@
¿∞ @∞ T „ @
@ T
§ ∞ ”
∞ P§ »
L ®
P @∞
@ » @ @
o P o@
∞
„ o @T o
„ ,
@ „
∞ P∞» d L
115

Page 116
¿ Ù d ¿ ¿∞
ÙP ∞ ∞
o ̰
L∞ ∞ ¿∞ ¥ @ @ @ ∞ o @ @ ∞ P
, @ P§Ã∞P ÿ Ù ® ∞ ¿∞ @
@ , ƒ Ã∞ ƒ P o ∞ @o @ t
, oL L @∞ ∞ ÿL ∞ d Ùo
¿∞ @ o @ P ¿∞ @ ¿oL P
@ P @ o P @ P
¿∞ @ @∞ ∏ ∞ P∞
∞ § Po oà „
∞ § d T „ l P§o@
∞ @o @ t @ t ∞o@ § @ „ o @ @
o
B
116

d ¿ ¿∞ @
∞
Ã∞ ∞ ¿∞ ¥ @ ∞
∞ o ∞ P o Ã∞ , @ P§Ã∞P ® ∞ ¿∞ @
,
ƒ P o
@ t @ t , oL L @∞
∞ d Ùo ∞
@ P @ ¿oL P @ P @ o P
P
∏ ∞ P∞ ∞ , § Po oà „ ∞ ”
l P§o@
@ t
§ ¿∞ o @ @ Ã L
o ̰ @
I

Page 117
Nz»Ã∞ zfio@
I
¿
o ∞ ∞ L o@ ∞ T
à o P P ∞ P oà @Po @
∞ P§ P
I

o@
I
∞ T
P P Po @ P§ P
117

Page 118
@∞ „ ∞o@ ∞L oP ∞ ∞ P
∞@ »@ d
∞ „ ƒ o
∞ ∞ P ∞
∞
»@ To ¿ ∞ ∞ @ @o P @ L
o P∞
»@ To @ P oL@» §Ã P∞
o oà ∞ Ù ÿ Ù Po ƒ ÿ à @ o @d ∏T ÿ @∞ Ù “ P∞ L∞ L »
P L„o@ , “ ” L
@ Ã ƒ Ùo@ P L∞o o P ÿ P∞
P @∞ P∞ @ ∏ ∞ ∞ Ù ÙÃ P§
“ P∞ L∞ L »
P t L„o
118

∞o@
∞ ∞ P »@ d L
∞ o
∞ P ∞
To PL
@ L
To
§Ã P∞ L ∞
∞ Ù ÿ Ù @∞ @ ƒ ÿ Ã @ o
∏T ÿ @∞ Ù L∞ L » Ã ∞ ”
P „o@ ,
à ƒ Ùo@ ,
o P ÿ oÃ
∏ ∞
P§
L∞ L » Ã ∞ ”
P t L„o@
I

Page 119
“ ” L p @ Ã ƒ Ùo@
P L∞o o P ÿ oà P∞
L »@ L »@
„ @∞@ „ @∞@ L
à o
T
P » @ „ PL ∞ ∞o Ã∞ » Ã∞ P o ∞ P @ ∞ @ t ∞ ∞ ∞§ ∏ o@oà T
P T ∞
∞ @P PL ∞ @P P P∞ »@ @P∞ T ∞ ∞
∞ t „ P
∞ ¿∞ Ã ®o oL ∞ P ƒ @ @∞ „
∞
P L∞ @∞ o ∞ o P∞
I

Ùo@ o P ÿ oÃ
à o
» Ã∞ P @ ∞
∞ ∞ @oà T
PL P P∞
Ã
∞ o P∞
119

Page 120
∞ @ ƒ o Po Ùo ∞ Ã P L∞ ∞ @∞P ∞ Ù„
„ o@ ®o à ® ∞ @∞o à ® ∞ @∞o ƒ P∞ T ∞ L∞ ∞ @∞ ‘ ’ @o ∞
o P ƒ @
@ ∏ o o „T P∞ ¿∞
Ã∞ ¿ ¿ „
∞ ƒ
∞ „ o P∞ “ L „ P ∞ „ ”
L @ “ ∞ P∞ ” ∞ @
∞ @ P @ „ ÿP
„ ∞ ‹
∞ ∞ P o ® T ∞ ∞ ∞L ® ∞ P P ƒ P ∞d „ o ¿ ∞ “ @ o ”
L @
120

ƒ o Po ÙoL P∞
P L∞
∞ Ù„ P
à ® ∞ à ® ∞ ƒ P∞ L∞
@∞ @o ∞ @∞ ∞ L∞
o „T P∞ @
¿ „
P∞ P ∞ „ ”
∞ ” ∞ @
P ÿP
∞ ‹ ∞
® T ∞
∞L ® ∞ , P P ƒ P
o ¿ ∞ o ”
I

Page 121
I
@oL P P∞ @ l P ÿ “ LL o à ∞ ”
‘ÿ “ ∞ »Ã∞o ¥ PL∞ ”
‘ÿ ∞ L∞ “ L ”
o Ã∞ o ∞ ÿ ƒ o
„ @∞ ” ∞
ÿ P ¿∞ @ ƒ oL X T ¿∞ @ P∞
P ¿ oL @∞ ∞ P∞ ,
@o ∞ ∞ ¿∞ P Ã
∞‹ ∞
“„ ∞ , ∞
@∞ T ∞
P Ã,
∞‹ ∞
T P “ Ù @ @∞ ”
P o ∞ P
B
0

”
¥ PL∞ ”
∞ L∞ ”
@∞ ” ∞
X T
@∞ ∞
∞ ∞ ¿∞
‹ ∞
∞
‹ ∞
121

Page 122
©“flY ¬oV ̃„Ó ƒfi z∞Y ¿À› ́iaÓ
I
o @ @ ∞
122

¬oV ̃„Ó ƒfi À› ́iaÓ
I
∞
I

Page 123
@∞ „
@» ∞ @ @o @∞
@ Ù t Ã∞‹ ∞ t
@ Po @ à P∞‹
t o @o @∞ ∞
∞ P Ã∞ @ P Ù @∞ o
∞ ƒ o@
P @ o à @ ∞ ¿∞à @ T ∞L o à ® P∞ L „ „ o @
„ @ ∞ ∞ „ » P @ @ ∞
P∞ Ã oP @∞ ∞
o
@ @ ∞
∞ t @o ∞ ∞ @∞ @∞ @ ∞ @ @ Po „ Po @
P§ @o L ∞ ∞
@ Ù ÿ o@
P∞
I

@ @o @∞ ∞
P∞‹ @o @∞ ∞
L o à „ o @
» P @ @ ∞ oP @∞ ∞
@o ∞ ∞
@∞ @ @
L ∞ ∞
o@
123

Page 124
∞ @o „ @ ∞ ∞ „ » P @
Ã∞ oP @∞ ∞
‘ @ ÿ
∞ ¿ oP ¿∞ @ ∞ @∞ o@
@ @∞ o P @o
P ∞ L∞
@ ∞P o P ¿ ¿ o ƒ ∞ ƒ ∞ ∞
∞ T „»o P ∞ @ @
o „ @ ¿ @ ¿∞ @ @ P∞
P o L∞
o à @ P∞ @∞ ∞ ∞ ® @ ∞ ∞ L∞
P ∞ ¿
@∞ L
∞ ∞ “ ∞ ¿ ∞ ”
∞ L @
∞ ∞
124

∞
» P @ @ ∞ oP @∞ ∞
oP ¿∞ @ ∞
P @o L∞
o
¿ o P∞
∞ ∞
P ∞ @ @ „ @ ¿ @
@ P∞
L∞
P∞ ∞ ∞ ∞ L∞
¿ o
∞
∞ ” L @
∞
I

Page 125
I
@ ∞
∞ @ ∞T , ∞ L∞ o @
@ ƒ ∞ @
∞
@ P @ o Ã∞ o@ Ã∞ L∞
o@ T ∞P @ ¿o ∞ ∞ ¿∞ ¿∞
o Ã
@ ÃL Ã T ∞ @
“ ∞ ¿ ,
@ ” o @ ∞
“ ∞L P ∞L ¿ ” L @ Ù o ∞L @∞ @o ¿@ ∞ L∞ ¿∞ @ @ » P∞
» P
” ∞L oPT ,
¿∞ ¿ oP ¿ ∞ ∞| ”
„ @
∞ ∞
@∞ @ Ù

∞
@ ∞ @
P @ o@ Ã∞ L∞
@
à T ∞ @
@ ∞
¿ ” L ∞L @∞ @o
P∞
∞| ”
125

Page 126
∞ Ã∞‹ ∞ Ù @∞ o
∞ ƒ o@ ® P∞ L „ „ o
@ Ù t ∞oP
∞ ® ® ∞
„ @ ∞ ∞ „ » P @ @
Ã∞ –
∞ ¿∞ @ ∞ ∞ ¿∞ @ ∞ ¿ oP @∞ o@
@ @∞ o P @o
P ∞ L∞
@ ∞ dt o à P∞ ∞L oP T
o P ¿ oP ¿∞ P P∞
@ ∞ o @ ∞ @ ∞
B
126

o@
„ „ o
t ∞oP
∞
∞
» P @ @ ∞
–
∞ ∞
¿ oP
P @o L∞
à P∞
o P
¿∞ P P∞
o
I

Page 127
©¢ ̃@ov ̃„g «‚∞r«G∞Ó
I
¿∞
@ @o „ ∞ ∞ d T ¿ Ã P ∞ @»
P§o ∞@L @ P∞T To t P ¿∞ @ @o „ ∞ ∞
@o ∞ ¥ @ o à ∞o ¿∞ @ „¿∞ @ ∞
∞ÿ Ão o ∞ ∞ „ o P‹@ ÙoP ∞ p ÿ@ o T o o P
∏ ∞ o ƒ @o Ùo@ ∞@ @o ÃT ∞
@ @o ∞ @ – ¿∞ oP ∞ ¿ @ – ¿∞ @ ∞ @ oP
@ d
@ Ùo@oà d‹ ∞
p ∞ÿ Ão o ∞
o P Ù ∞ Ã
I

g «‚∞r«G∞Ó
I
∞ ∞
t P ∞ ∞
à ∞o ¿∞ @ ∞
o ∞ P‹@ ÙoP ∞
T o o P
T ∞
@ – ¿ @ –
oP
oà d‹ ∞
o o ∞
∞ Ã
127

Page 128
@ P ∞o @ @o
L o ƒ» o P „ @o
∞
@o ¿∞ @ @ @∞ @o ¿∞ @ ƒ Ù @∞ @o ∞ ¥
@ ∞‹ ¿ @ ∞ @ @∞ @ » ∞ @ P ∞ à @ ∞o @ „@ , P∞à @ oL t @ @o oL oP ¿∞ @ P P
@o ∞ ¥ P
d T ¿ Ã P ∞ @»
P§o ∞@L P∞T o t
P ¿∞ @ P ∞ Ã∞ „ à ∞ Ã∞ „ „o T ∞ ¿∞ @
@ @∞ ¿ @ T Ù ∞
B
128

∞o @ @o L
o P „ @o
∞
@ @ @∞ ∞ @ ƒ Ù @∞ ∞ ∞ ¥
¿ ∞
@ » ∞ , à @ ∞o @ , P∞à @
@ @o X @ ¿∞ @ P P ∞ ¥ P
∞ @»
o t
∞ ∞ o T ∞
Ù ∞
I

Page 129
71 Í TMÍL
I
¿
o@ @ ¿ @
∏ ∞@ @o P ¿ o@oà P∞ ¿∞ @ P ∞
@∞ P @
o T
@∞ o oà @ ∞@ PL∞ ® Ù ∞ Ã∞ o
o@ @ Ã∞ @ @∞ @o Ã∞ @∞ ∞ ¿ o@ P∞o ∞ ƒ ∞
L∞ ∞ t „ L
∞ ® Ù o ‘ ∞ ’ ∞ P
B
I

¿ @
P ∞ @ P ∞ @
∞ Ã∞ o @ Ã∞ @ ∞ Ã∞ @∞ ∞ ∞ ƒ ∞
∞ P
129

Page 130
‚∞i@÷
I
T P Ã o@
¿ @∞ § P Ù o L
P o „ o@ @∞t P TÃ∞ @ ∞ P o P Ã∞oL P P P∞ ∞L∞
ÿÃ∞d o Ão
o à P∞ P @ o Ù @ oà o P∞
o ∞ o@ ∞ pÿÃ Conjugation
130

o@
@∞
Ù o L
„
@ ∞
P∞ ∞L∞
o Ão ∞
Ù P∞
@ ∞ Conjugation
I

Page 131
ƒ „ ∞ L∞ ∞
P @ Ã o P
ÿ @∞ P∞L „ P d „ Toà ¿
P ∞L o ,
L o ∞L∞
@ T ƒ ∞
∞ o
§L ® Ù P „o oà L I.Q.100 „ ‹ à ∞ , ¿ ∞ ¿ ∏
∞ o o ¿∞t@∞ ¿∞to@ P o
∞ Ã∞ o@ „
P ¿∞| P P∞ 1⁄2 + 1⁄2 =1
∞ ¿∞ Ã L ∞
® Ù P
∞ ∞
P∞ „
B
I

∞ Ã o P
∞L
ToÃ
∞
P
L
o o P o
o@ „
P∞
∞
131

Page 132
∏Ãz∞ gÙ@÷
I
Chromosomes Good bye Mutations farewell
@ ∞Ão ¿∞ @ Ù o ® @∞ ¿ ¿ Tà Po @ o @ o @ P∞ „ @ § ¿∞ @ @ ∞Ão ¿ L
Chromisomes Good by Mutations farewell
„ „ @ Homo sapiens x
PoL ∞ L Cro-magnon P ,
132

Ù@÷
I
s Good bye rewell
¿∞ @ L∞
® @∞ ¿ Tà Po @ o @ P∞ „ @ § @ ∞Ão ¿ L∞
Good by rewell
Homo sapiens x ∞ L L∞
P ,
I

Page 133
I
¿§Ã ¿ ®§Ã ¿∞
@ @∞ P @ o „o , P∞ ∞o @
@ §o @
@ ∞ @ ∞ ∞ @
∞ ∏ @ o @
∞L∞ ∞ @ ∞ ∞ L @
ÿ @ Photostats∏@
@∞ ∞ @ @ @ @ Ù oP ® @ ∞ @
P∞ ¿∞ @ » ÿP ∞ o d L ∞
Ù o ® @∞ ¿
¿ TÃ Po @ o @ @ o @ P∞ „ @ §
@ ∞Ão ¿∞ @ L∞
Chromosomes Good bye Mutations farewell
B
8

@ ∞o @
∏ @ o @
tats∏@
∞ @
@∞ ¿
@ o @ @ § @ L∞
bye
133

Page 134
̊o∆gÙ
I
l
¿∞ @ „ ƒ l ¿∞ @ ∞ T t
@ L t ∞ P
134

@
@ t
L t
I

Page 135
I
L ∞ l ¿∞ @ „ ƒ l ¿∞ @
@ ƒ @∞ P @ ƒ ∏
∞ @ ∞ o ∞ L @ @ „
∞ o @» „ o »
@ @ ∞ P∞oà P ∞ , l ¿∞ @ „ ƒ l ¿∞ @
@ @ ,
o @∞ P oL@»
l ÿ „ ÿ o
@∞ l @ ∞ „ t @ „
„ oP oL ∞ l ¿∞ @ „ ƒ l ¿∞ @
B

∞
@∞ ƒ ∏ ∞ L @ @ „
o @»
∞
∞ , @
@
P oL@»
o
∞
∞
135

Page 136
SÍμ Sas
I
∞ P ∞ o oL oL @ , @§Ã P oL@ l @ ∞ P∞ „ ∞L
»@o ∞
à ∞
“ o ∞ , oL @ ∞ T o@ o @∞ @
, , ,  ̧ L T ,
136

Sas
I
∞ P ∞ o oL oL @ ∞ @§Ã P oL@ ∞ „ ∞L
∞ Ã ∞
, oL @ ∞ ” L
@∞
, ,
,
I

Page 137
I
» P o oà @ à ∞
, » , ∞ o@ ¿ ÿ T
@o à Ã∞ P o @ ∞
P ∞ ∏o ∞ ,
dP ∞L @ @» dP
»@»o Ã, T @ Ã ,
d ∞ T t , ∞ ∞ t ,
, ∞ T t , ∞ P‹ o Tt
oL ∞ ∞ “ ∞ ” ∞ L
P Po , P o ∏Po , L „ ∞ L P @ Ã farewell x oL , oL
∞ ,
∞ P ∞ , o oL oL @ ∞
B
80

oà @
, ∞
¿ ÿ T P à Ã∞
∞ ,
dP
,
∞ t ,
P‹ o Tt ∞
∞ L
L x
P ∞ , L oL @ ∞
137

Page 138
‚∞v∞P ‚∞vY@÷
I
@
@ ∞ P @ T L @ P§ P @ @ ÿoP @‹
»Ã∞ ÿ o o @ P  ̧ L
∞o o @ T  ̧ L
∞o o @ T
∞o ∏ o „ @∞ „ ∏ ÿ „ ∞ @
138

‚∞vY@÷
I
∞ P T L
@ @‹
o o @ P§ P∞t
@ T
@ T ∏
@∞ „ ∏ @
I

Page 139
I
∞ L∞t
oL ∞ ∞ ∞
P T @ ¿∞ L,
o o @ o „ ∞
Ù ∞ @ Po @ à ‹ ÿ @∞ à ∏ L o à @ ∞ ∞ ∞ ∞ @ @o @o P ∞ ∞ @ @o ƒ à @ @ @∞ o ∞
L∞t
oL ∞ ∞ ∞
„ o P ∞ @
@ „ ∞ @
@ L @§Ã Ùo@@ ∞ Po @T ∞ @ @ ÿoPÃ∞
»Ã∞
∞o o @ T ∞ ¿ o „ o ¿∞T @∞ ƒ
∞P @ ∞
B
84

∞ ∞
¿∞ L,
„ ∞
L ∞ ∞ @ P ∞ ∞ @
@ o ∞ ∞ @
∞ ∞
@ ∞ @
∞ ∞ @
T ∞
@∞ ƒ
139

Page 140
Nz»gÙ
I
@
∞ o ÃT o @ @ P » ÿ tÃ
» ∞L d @ P» o ÿ
L∞t @∞ o ÃT o
oL ® P∞ P @
¿@ ÃT o
à ÃT o T» Ù o o P∞
P @
140

ÃT o
P
» ∞L d @
o ÿ »
o ÃT o ® P∞
ÃT o
ÃT o o P∞ @
I

Page 141
I
P ¿∞ @»
∞ Ù@ o , t o P Ù ∞ L @» ¥
∞ L∞ oL @∞
o @∞ oP ∞ P∞ P Ã
P P ¿ o@ L L
L ¥ L
o@ L „ “ § Ã∞ ” ∞ to@
P» ∞L Ù Lo@
oL @ T P∞t ¥ ∞
L P‹@» @o Ã∞
P P∞ L ÿ L
p o
@ @ @ o P Ã
P∞ » à ¿∞ p ∞ ∞ @∞ o Ã∞P P @
@ oP T T „ TL∞ d @ p ∞„ L
∞
B
8

o , t o
∞
L∞
oP ∞ P∞
o@
L
∞ to@ @ ∞t
̰
ÿ L
» Ã
∞ @ „ TL∞ ∞„ L
141

Page 142
S>gÙ@^Ó @›gÙ@^Ó
Ù@ @ Ù@ PoL o ∞T @∞@ @» ®
142

^Ó @›gÙ@^Ó
I
@ Ù@ PoL Ã∞
®
I

Page 143
„ @ ¿∞ ¿∞ o
o Ã∞ „ o @ X
∞ @ ∞ L @ Ù
o T à Ùo à ¿∞ o@
o ∞ @»
@o ¿ „
o „ à P ÿ oP@ @ ∞ „ ƒ» „
@ , @ Ã „
∞ ∞ ∞t
@ „ “Ã∞ Ã∞ @» ”
........................................... “ P ¿∞ ƒ P
∞ Ã ∞ ”
..........................................
Ã∞@, Ù@ @ Ù@ PoL Ã∞
B
8
I

∞ o
L @ Ù
Ã
oP@ „
@» ”
........ P Ã
”
.......
PoL ̰
143

Page 144
Sg«‚∞¢
I
∞ P ∞ oL@ ¿ „ @o @ T § L
„ @»
o ∞»@
∞
∏ @» @» ® @
∏ o @∞ @ „o@ @»
à oP ∞
T L
l @ „ T®
∞ ‹ ∞ @» P∞ o @∞ L
¥ L @,
o o @
B
8
144

∞ ¿
T § L
»
∞»@
» @
@»
L
T®
@» P∞ L
@,
I

Page 145
¶©¢ ‚∞q@»Í aoLz∞@
I
Ã
∏ ,
∞ @o P P ∏ @∞ Ã∞L ∞ o@@o L∞ @ L∞
@ à @ L∞ à o à P∞ @T ∞ @ ∞ P∞ @T §Ùo@oà o ∏ ∞ÿ @ P∞ @ ∞
∞ @ oà L∞ @ ∞
@ @»t ∞ t d @∞ l lTL∞ @ ∞
o @ P∞ @ ∞ o @ @ P∞ @ ∞
I

Í aoLz∞@
I
Ã∞L ∞ ∞ @ L∞ @
L∞ Ã ∞ @T ∞ @ ∞
∞
∞ ∞
∞ t @ ∞ ∞
P∞ @ ∞
145

Page 146
146
̸ ,
oà @o , P§ , ∞ o Ã∞ P P∞
o@@»t ,
∞P @»t , oà o ÿto ¥
T ∞o Ã∞ „ P∞ @ ,
o @ ∞
P oP ÿ „ P∞ @ @o L∞ @ ∞ o X ∞∏ L∞ @ ∞ o § ¿ P o ¿∞ ∞ T
∞ Ã∞ ∏ ∞ @ ∞
, ̸ ,
ÿto Ã∞ P @ oP ÿto @ PoL @ @ ÿ @ o
P∞ , P P @ Ã∞
P P @ ̰
@ o @∞ o @ „ T Po oà P
Ã∞ ∞ @
B
8

,
à @o ,
,
P P∞ @ @@»t , ∞P @»t , o ÿto ¥ L∞ @
Ã∞ „
∞ oP ÿ „ P∞ @ ∞
L∞ @ ∞ ∞∏ L∞ @ ∞ ¿ P∞ @ ∞ ∞ T ∏ ∞ @ ∞
, Ã∞ P @ oP ÿ X , @ PoL @ @o
o
P @ Ã∞ P∞ @ ,
Ã∞ ∞ @ o @∞ o Po oà P oP
∞ @
I

Page 147
TM÷oV ̃@∫
I
∞
„ @∞ o à T P P d o ∞ , o ∞L T @» PoL ∞ ∞ ∞ ∞o Ù ∞ @ P T „ o à „ @∞ o @ ∞ @ , @ o ∞@L @» P ¿ @
o@ @ P , P ,
o » Po à P o@ ,  ̧ L,
 ̧  ̧  ̧ , § P
@∞ „ ¿∞o @
PoL „ Ù ∞ @ ∞ P @»
¿ ∞ „ „ p ∞o@ p T P P
B
8
I

P P ∞ ,
T @» ∞ ∞ @
∞ @ , » P ¿ @
@
o@ ,  ̧ L, ,
Ù ∞ @ ∞
„
∞o@
147

Page 148
@∞zY  ̊a“@÷
I
p
@ Pd‹ L o ∞
148

 ̊a“@÷
I
Pd‹
∞
I

Page 149
@ ÿ ∞o @∞
L oà L „ @ P oL @o
P∞o@Ã∞ „ Tt L ¿ » Tt ,
P T ∞ ¥ Ã ∞ @
T @ P§
∞ Ã P @» @ ∞ P o @ „ @ o @»
∞ „@ Ù ∞ oL P§
po @ @∞P
o @» , Pd‹
o @L ∞ T @∞
L o
,
B
8
I

@∞
P∞o@Ã∞ „
∞
@» @ ∞
„
§
T @∞
149

Page 150
∂oL√Gs ¬@∞Ó
I
Po P ∞@L @ ƒ o ,
150

Gs ¬@∞Ó
I
Po P ƒ o ,
I

Page 151
I
o Ã∞ o oà § „ ÿ @∞ ∞ @∞ P po @ ∏ o P @ @ Ù
» @∞ o P
„ o@@ @ oP „
„@∞ P Ù §o @∞ o @o P Po @∞ „
§ ,
@L @ ∞@L ∏ @» @∞ P P @
à , ∞ „ @TÃt @ ∏ ,
o @»o ÿ Ù ®o @
L ÿL @∞ ,
@ To Ùo@ , l »
o
Ù @o @
B
8

à § „
@∞
@@
§o @o P Po
@»
@
, Ùo@ ,
151

Page 152
›a ́¬ ́NPÀq«z@Ó
I
∞ ∞ , Lo @ @ ∞ Ù ÿ
@ ∞ L ¿∞ @ @∞ P @∞TÃ
 ̧ L P ÿ @oPÃ∞L∞
@ @ T ƒ P T L,
∞‹ P o , P∞ ¿∞ @o ÿ L ∞ ÿ
∞‹ P o , P∞ ,
P o @∞ ƒ d d
d d , @∞ o @∞ L Ã∞ @ PT o ,
L » §L ∞P P ∞ P§ P
∞PÙ , P ∞o , @∞ ∞ ¿∞Ã∞ @o ® P∞ @∞ ∞ ,
152

NPÀq«z@Ó
I
, @ @ ∞ Ù ÿ L ¿∞ @ TÃ
P ÿ @oPÃ∞L∞
T L,
, ∞
∞ ÿ
,
@∞
@∞ L
o ,
» P P§ P
P ∞o , ¿∞Ã∞ @o ®
∞ ,
I

Page 153
ƒ „ o @ „ ∞L
@ L o P∞ Ã @∞ T ∞L „ Ù , P ∞ ( P∞o P∞ Ù
o à P@
oL P∞o ¿ @ PL
∞‹ P∞ ,
∞ ÿ P∞ „Po , d à @ ƒ P ¿@ @ „
ÿ
∞TÃ T @ „ o ∞ ∞ Ã ,
∞‹ P o P∞
P o @∞ ƒ d d ,
∞‹ P o P∞ ¿∞ @o ÿ L ∞ ÿ
B
88
„ Ù @∞o à ∞
P∞„ Ù „ o Ã
I

@ „ ∞L
P∞
Ù ,
@ PL ,
, @
à ,
à ∞ , Ã
153

Page 154
¶Yoπ@»Y ƒfi ¿÷»aT
¿
» Ãd o ¿∞ @ ∞
o oà @∞ @ ∞ ∞ @∞ @ ∞ ∞, P∞ @ ∞ ∞
∞ „ ƒ L @∞ ∞ , P§ P
∞ @ , o Ù, §Ã ∞ „ t @ @ ¿ ∞X o Ã∞ o @ @ @ Tà T @ ÿ o , ƒ ƒ P
154

@»Y ƒfi ¿÷»aTY
I
d o
∞
∞ @ ∞ ∞ ∞ ∞, P∞ @ ∞ ∞
„ ƒ
∞ , P§ P∞
, o Ù, §Ã o
@ ¿ ∞X o @ o @ Ã T @
ƒ P
I

Page 155
I
o Ù @
o@T @ ƒ o ƒ @∞ Po ƒ ∞
Ù @∞ „ „
T ∏ , x P∞ o@ P Ù P o oà @∞ @ @ o PT @ oL @ @∞§Ã @ P§ @∞o XTt P§Ã ,
∞»o@ @∞ t P§
@o ÿ oà ∏ à @ @o ÿ o@oà @o ÿ o@ @∞Tà @
§ ¿ T „ @ „
o ∞§ @ Ù§ o @ P∞ @ P∞
ƒ ∞
Ù , P @ @, ¿ Ùo @ ∞
P „ PÃ ∞ @ ¿ »
Ãd o ¿∞ @ ∞
B
88

Ù @
@∞ Po
P∞ o@ P Ù , @∞ @ T
@∞§Ã @ P§ ,
P§
∏ Ã @
@ „ @ Ù§ o P∞
¿ Ùo @ ∞ ∞ @
@
∞
155

Page 156
©}Y«©Àq ›§s@»Y
∞
¿ ¿∞Ã@ @L ∞ ∞ ∞
∞‹@
oL Pd‹ ∞
¿ o oP , d P ¿o ¿ T
∞ o „
P P∞
@ oL o „ , @ P
P∞ ÿo@ „ P
“¿∞ Pd‹ o ¿ oL ,
o ∞ oL ∏ , ,
156

©Àq ›§s@»Y
I
¿∞Ã@
∞
‹ ∞
P , d P ¿o
„ P∞
o „ , @ P Po , ÿo@ „ P
o L ,
oL
,
I

Page 157
ÿ @ @ ∞ ∞ @ ÿo P ¿∞ Pd‹ o
P o § § P P @ „ oà P∞ @ L∞
à „ @» ∏ ∞ o „o ∞
„ ÙoP ∞ ”
P P @∞§@ PL T ∞ ∞ po o P o § § P @ oL d , @§Ã P oL @
@o P∞ , §Ã @∞ ∞
à ∞ P @ ¿∞ ÃoP @
o oà @
∞ ¿∞ Ã „ @ d ÿ PL ( o
o ÿ
o@P∞L∞ @∞ oP P
∞ „ ∞ ∞ Ù@ ∞ p ∞‹@
oL Pd‹ ∞
B
8
I

ÿo P
P P∞ @ L∞ ,
∏ ∞
∞
P
, @§Ã P oL @ @ , §Ã
oP
¿∞ à ÿ PL ( o Ã∞
o ÿ ∞
∞ Ù@ ∞ p ∞
∞
157

Page 158
›©∞P∞LŸ ›∞ ̃@ov
I
∞P∞L ∞ @o Pd‹ Ù ∞ @
Ù ∞ @ ¥ ¿∞ @ ∞ „
d
158

Ÿ ›∞ ̃@ov
I
∞ @o @
@ @ ∞ „
I

Page 159
I
∞ ∞ ∞ ,
o@ à ƒ o @ ƒ ∞ ¿∞ ∞„
@∞o XT @§ ∞ t
∞»o@ @∞ @ ƒ ƒ „o
∞»o@ @∞ » ∞à @» T @ @ o P@ P „
∞ Ã @» „
∞ „@o à ∞ o@ ,
@∞ @,
o @ P Ù ,
, ÙoPÃ Ù , P o , ∞P∞L ∞ @o Pd‹ Ù ∞ @
‘ Ù ∞ @ ¥ ¿∞ @ ∞ „
d
B
8

,
∞„
∞ t
@
∞à @» P@ P „
o@ ,
„
159

Page 160
©§Ã∞oP u√ Ÿ∏zqÓ TπrŸ N›YtÓ o©Ã_@^
∞ ¿∞ P ¥
à L o à ∞
ƒ ∞ @ oLT P ∞
T o à L ƒ P∞
160

P u√ Ÿ∏zqÓ
N›YtÓ o©Ã_@^Ó
I
∞
à ∞
∞ @ P ∞
à L ∞
I

Page 161
I
L o à ∞ ¿ P „ L∞ , L∞ , d@ L∞ ,
ÿ o à @ T P „ L∞ à P oL Tà ƒ P∞ ∞ ∞ P∞
∞ , ,
¿ oP ∞ P
∞L∞ ∞L∞ o @∞ § P @∞P ∞
¿ ÿ o „ oP
∞L∞ ∞L∞ @∞
¿ ÿ ∞ P∞
“ „ o
∞ p ∞ oL
L ∞Ã∞ ∞ ∞ ∞
∞à @ @∞ o ∞ @∞ ∞ ∞ oL ∞
PÃ P ∞ o P o Ã
P P ∞
, ƒ ÿ ¿∞ P L ¿∞ ,

¿ P „ L∞ , ∞ ,
T P „ L∞ ,
P∞
,
∞L∞ § P @∞P ∞ o „ oP ∞L∞ @∞
ÿ
o ∞T p ∞ oL ∞Ã∞
@ ∞Ã∞
∞ ¿ ÿ @∞ o @L
∞ L ∞
P o Ã
161

Page 162
o Ã
Ù o P L , ¿ o „ ÿ
∞t L
٠o à @ @
“ T o Ã∞ ÙoL @
∞o Ã∞ p T ∏ T ¿o oL ¿Ã P P
, @ P ∞ @ P oL ∞ Ù„ P∞ oLT Ù
¿∞ o à o @» Ã
@∞ o à o P @ o à ∞ o @ o@ ∞
@∞ o @ @ ÿ LP∞ Ã L∞
“ ÿ Ù ¿o ¿o à ¿o à ∞ ,
T Ã∞ ƒ oLT T
@ o @ ¿∞ @
162

o P ¿ o „ ÿ o
L
o à @ ∞
o Ã∞ ÙoL @» ∞
∏ T ® oL ¿Ã P P @∞ ∞
,
∞ @ ∏ P oL ∞
oLT Ù ¿ ”
o Ã
à o à o P à ∞ o
∞ o @ ÿ PoL Ã L∞
ÿ Ù @ à ¿o à ∞ , ¿o
@∞ Ã∞ ƒ oLT To ∞
L o o @ ¿∞ @o
p L ”
I

Page 163
I
L , ∞ @ ∞ T Ù Surrealist @
¿ ÿL
@∞ o o Po P∞ @∞ o à @ @ ÿ PoL L à L∞
“ ¿ ∏ „ o „ oP
o P Ù @ @o L P
o L ¿∞ ”
¿∞ @o o @» @ o@ P∞
P∞ o P Ù @ P∞ @ Ù@ P P∞
“¿∞ @ @ ∞ ¿∞ @ o @
„ § P∞ Ù » Ã „ P∞ @ @
T p
¿∞ L Ã oLT „
“ ¿ d@ Ã , ∏ ∞ o @ `§ » ∞ @∞ ¿ @ P @∞P

Ù
o Po P∞ Ã
PoL L∞
„ o „ oP
@
P L ¿∞ ”
∞
@ Ù@ P P∞
@ ∞ ∞ o @ ∞ ∞ Ù » Ã @∞
@ @
T p ”
„
@ à , ∏ ∞ o Ã∞
∞ @∞ ¿
P @∞P L∞ ”
163

Page 164
164
¿∞ oL ¿∞ ∞ Ã
o à @o @ ∞ ∞ o à @ L
o à ∞
o@ P ƒ o@ Ã P @ d T „ ‹ o §@» ¿ P ¿o @ ÿ ∞ P @
» P ∞T @§Ã P oL@o ∞
@∞ @ PL
@∞ P oL o
∞ ∞ ¿oL , ¿oL P o
T ,
t » ∞ „ “ T ”
L Ã ¿∞ @ ¿@ PL
P o à oP @ @∞§ P ¿∞ P
, @∞ ¿∞ P

oL
∞ Ã o @ ∞ ∞
L L, Ã ∞
P ƒ o@ d T „ ‹ Ã §@»
P @ PL
∞T @o ∞
@∞ @ PL
o ∞
o
» ∞ „ , T ”
¿@ PL
P @ @∞§ ¿∞ P
¿∞ P ∞‹T
I

Page 165
Po T o o , ¿ o o ,
L ∞ Ù@o ƒ » ∞ ∞Ã
P @ o d @ ∞ @» ( ¿ ®
P @o ÿ o Ã
@ `o @
à ¿∞ @» , L „ à » P ÿ @∞ @ @ , L „ o ∞ ÿ P∞ ∞ @ @
oL L @ @∞ @ @ o ∞@L ∞ @∞ ¿∞ „ ∞ o ÿ @ oL „ „ P L
§
∞ ∞ ¿ oL ∞ o@ ,
@ oL P P∞ @ l à ∞ @ P∞
, @∞ o T o @ o@ ƒ Ù » ƒ ÿ Ã @∞ L
∞‹ o@ @L @o ∞ P o
L oL @o ∞ P o ,
∞ ¿ l ∞
I

,
∞ @»
ÿ
ÿ
L
∞ @∞ o ÿ @ P L
∞
o@ ,
P P∞ @
o @ o@ , »
∞ P o @o ∞ P o , ¿ l ∞
165

Page 166
¿∞ L∞,
L @P∞ „ @∞ ∞à @ @∞ o p T ∏ à T ®
ÿ Ù @ ∞ @ , ÿ ∞ P @
∞ , oL ∞ P P∞ ∞ ∞o ∞
@∞, @ @∞, ƒ ƒ ∞
∞ ∞
@» Ã Ã ,
¿∞ L∞,
L @P∞ „ @∞ Ã P Ù » ,
o ∞ P @ »Ã∞ ∞ „ @∞ P ¿o P P∞ o ÃoL
ƒ Living fossile , § @∞P ∏ ∞ , Xiphonosuridae , P ∞ d , T t P o à @o
B
8
166

@P∞ „ @∞ , @∞ o à @L @ , à T ® @ , ÿ Ù @ ,
, P @
∞ ∞ ∞o ∞
ƒ ∞
à à ,
@P∞ „ @∞ P Ù » ,
∞ P ∞ „ @∞ P P∞ o ÃoL ∞
ssile , ∏ ∞ , ae , d , t P o à @o ∞ P
I

Page 167
¿∞Í@∞Ó Sas
I
∏
P ∞ ∞ ∞L∞ çoL P∞ @∞
oP P∞
„ ∞ o P∞
¿∞ , ∞ ∞L∞ P ∞ L∞
∞ P∞ ∞
@ ¿∞ „ ¿∞o
L∞ , T @ ∞L∞t
@d ∞P P
@ d@ ∞ o @ ∞ ¿ ÿ oP ∞ @ „ P ∞P∞ P
P P @ t oL,
L Ã P∞
P∞ L ∞ P∞ ∞ P∞ L L ∞@∞ Ã∞ „» P „
I

s
∞ @∞
P∞
∞
, ∞t
∞
¿ ÿ @ „
oL, P∞
L L
„
167

Page 168
168
PL P∞ @ L ∞
@ L ∞ @ oL @∞ P∞ ,
∞L o „ ∞
∞ ¿
∞ L , T ∞ P T oL ¿∞ ∞ Ã∞
∞ ∞ @ L L P P∞ P∞ Po @∞ ∏ oL PL L ∞ @∞ ÿ
o @ ∞ ¥ ¥
@o „ P∞ ∞ , P P∞ ÙoP ∞ ∞
∞ , ¿∞ „,
@ ∞ „ P ∞ P∞ ∞ T , P oL p
∞o @∞ ƒ oL @ ∞ ƒ ¿ ÿ T d ∏
B
8

P∞ L ∞
L ∞
P∞ ,
∞L „ ∞ ¿ L , P ¿∞ ∞ Ã∞
∞ ∞ @
P P∞ P∞
oL ∞ @∞ ÿ ¥ ¥
@o „ ∞ , P ÙoP ∞ ∞
¿∞ „, @
„ P P∞ ∞ oL p
@∞
@ ∞ T d ∏
I