கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  நாம் தமிழர்  
 

பொ. சங்கரப்பிள்ளை

 

நாம் தமிழர்

A SHORT HISTORY OF THE TAMILS
UP TO BRITISH PERIOD


பொ. சங்கரப்பிள்ளை
(B.A. (Lond). B. Com. (Hons). (Lond.), M. Sc. (Econ (Lond.)

வெளியீடு: எண்: 18
கொழும்புத் தமிழ்ச் சங்கம்
7, 57வது ஒழுங்கை, வெள்ளவத்தை,
கொழும்பு – 6

முதற் பதிப்பு: யூன் 79
(C)

இரண்டாம் பதிப்பு: பிப்ரவரி 1991.

ஆசிரியரின் பிற நூல்கள்
சைவ சித்தாந்தம்
மரணத்திற்குப் பின்…
கல்யாணப் பொருத்தங்கள்
பெறுமதிக்கொள்கை

தமிழ்ப் பேரறிஞர்
திரு. பொ. சங்கரப்பிள்ளை அவர்கள்
இறைவனடி அடைந்த
ஓராண்டு நிறைவு நினைவாக
இந்நூல்
வெளியிடப்பெற்றது.


பதிப்புரை
உலகிலே தொன்மையும் சிறப்பும் உள்ள தமிழர் வரலாற்றைப் பல நிலைகளிலும் துறைகளிலும் ஆராய்ந்து சிறந்த வரலாற்று நூல்களை அறிஞர் பலர் எழுதியுள்ளனர். ‘நாம் தமிழர்’ என்னும் இந்நூல் தமிழர் வரலாற்று நூல்களுட் சிறந்ததொரு நூல்@ சிறந்த சிந்தனைக் கருவூலமாக உள்ளது.

இந்நூலாசிரியர் பல துறைகளையும் கற்றுத் துறைபோகிய பேரறிஞர். சிறந்த சிந்தனையாளர், நுண்ணிய ஆய்வு உள்ளத்தினர். தமிழர் வரலாற்றைப்பண்டைக்காலம் முதல் அண்மைக் காலம் வரை பல துறைகளிலும் நன்கு ஆராய்ந்து திட்பநுட்பமாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளார். நிறைவான தமிழர் வரலாற்றுக் கருவூலமாக இந்நூல் உள்ளது.

இந்நூலின் பெரும்பயனை உணர்ந்து இந்நூலை மீள்பதிப்பாக வெளியிடக் கொழும்புத் தமிழ்ச்சங்கம் தீர்மானித்தது. இந்நூலை இச்சங்கம் மீள்பதிப்பாக வெளியிட நூலாசிரியரின் மனைவியாரும் பிள்ளைகளும் அநுமதி வழங்கினர். நிதியுதவியும் வழங்கியுள்ளனர்.

கொழும்புப் பல்கலைக்கழகக் கல்வித் துறைப் பேராசிரியர் திரு. சோ. சந்திரசேகரம் அவர்கள் இந்நூலுக்குச் சிறந்த அணிந்துரை வழங்கியுள்ளார். இந்நூலாசிரியரின் நீண்டநாள் நண்பரான கொழும்புக் குமரன் அதிபர் திரு. செ. கணேசலிங்கன் அவர்கள் இந்நூலைச் சிறப்பாக அச்சிட்டு உதவியுள்ளார். இவர்கள் அனைவர்க்கும் இச்சங்கம் பெரும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றது.

இந்நூல் உலகில் அனைவரும் படித்துப் பயன் பெறுதற்கு உரியது. இந்நூலும் இந்நூலாசிரியர் பெயரும் உலகில் என்றும் நிலவுக.

செ. குணரத்தினம் க.இ.க. கந்தசுவாமி
தலைவர் பொதுச்செயலாளர்

கொழும்புத் தமிழ்ச் சங்கம்

தமிழ்;ப் பேரறிஞர் – சங்கப் புரவலர்
திரு. பொ. சங்கரப்பிள்ளை அவர்களின்
வாழ்க்கைக் குறிப்புகள்
இலங்கைத் திருநாடு மிக்க தொன்மையும் புராண - இதிகாசங்கள், சங்க இலக்கியங்கள், காவியங்கள் ஆகியவற்றோடு தொடர்பும் உள்ளது@ சிறந்த பேரறிஞர்கள் இந் நாட்டிலே தோன்றிப் புகழ் பரப்பியுள்ளனர். அவ்வகைச் சிறப்பு மிக்க இலங்கைத் தமிழ்ப் பேரறிஞர் வரிசையில் வந்தவரே இந் நூலாசிரியர் தமிழ்ப் பேரறிஞர் பொ. சங்கரப்பிள்ளை அவர்கள்.

தமிழ்ப் பேரறிஞர் சங்கரப்பிள்ளை அவர்கள் இலங்கையின் வரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாணத்து மாவிட்டபுரம் என்னும் ஊரில் குமாரர் பொன்னம்பலம் அவர்களுக்கு மூத்த மகனாக 1913 –ஆம் ஆண்டு திசெம்பர் 13 –ஆம் நாள் பிறந்தார். முதலிற் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் பின்பு சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்பு கொழும்புப் பல்கலைக் கழகத்திற் சேர்ந்து பொருளியற் பட்டதாரி ஆனார்.

1937 ஆம் ஆண்டில் எழுதி விளைஞராகக் கொழும்பு அட்டோர்னி யெனரல் அலுவகத்திற் சேர்ந்தார். 1938ஆம் ஆண்டு மங்கையர்குல மாமணயான மனோன்மணி அம்மையாரைத் திருமணம் செய்தார். பின்னர் பீ. எஸ். சி@ எம், எஸ். சி. என்னும் அறிவியற் பட்டங்களைப் பெற்றார். பொருளியற்பட்டத் தேர்வில் முதற் பிரிவில் சித்தி பெற்றார். பின்னர் மோட்டார்ப் போக்குவரவுத் திணைக்களத்தில் உதவி ஆணையாளராகப் பணி ஆற்றினார்.

ஓய்வு பெற்ற பின் 19 ஆண்டுகள் இலங்கைத் தேசிய வர்த்தக சம்மேளத்தில் நிருவாகச் செயலாளராகக் கடமையாற்றினார். கொழும்பு அக்குவைனாக உயர் கல்வி நிலையத்திலும், கொழும்பு வித்தியோதயப் பல்கலைக்கழகத்திலும் பொருளியற்துறைப் பகுதிநேர விரிவுரையாளராகக் கடமையாற்றினார். கல்வி அமைச்சுக் கலைச்சொல் ஆக்கக் குழுவிலும் பணிபுரிந்தார்.

இவருக்குச் சந்திரமோகன், அசோகன், நாகேந்திரன், மகேந்திரன் மனோகரன் என்னும் புதல்வர் ஐவரும். செயந்தி, மனோகரி என்னும் புதல்வியர் இருவரும் உள்ளனர். புதல்வர்கள் ஐவர்களும் மருத்துவ, கலாநிதிகள், புதல்வர்களும் புதல்வியர்களும் அ.ஐ. நாட்டிலும் அவுத்திரேலியாவிலும் உள்ளனர்.

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபராக இருந்த சைவப் பேரறிஞர் க. சிவபாதசுந்தரம் அவர்களின் தொடர்பினால் இவர் தமிழ்ப் பற்றும் ஆர்வமும் உள்ளவராய் மொழி, சமயம், வரலாறு தொடர்பான பல நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆய்வு நோக்கோடு கற்றார். பொருளியல், அறிவியல் ஆகிய இருதுறைகளிலும் பட்டம் பெற்றமை இவரது ஆய்வுகள் சிறப்புப் பெறத் துணையாயின். வானியற்துறையிலும் வல்லுநர் ஆக விளங்கினார்.

இவர் “பொருளாதார பெறுமதிக் கொள்கை”. நாம் தமிழர், சைவ சித்தாந்தம், கல்யாணப் பொருத்தம், மரணத்திpன் பின் என்னும் ஐந்து சிறந்த நூல் எழுதி வெளியிட்டுள்ளார். பொருளாதாரப் பெறுமதிக்கொள்கை என்னும் நூல் இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக்கள வெளியீடாக 1964 ஆம் ஆண்டு வெளிவந்தது. நாம் தமிழர் – கல்யாணப்பொருத்தம் என்னும் நூல்கள் இலங்கையிலும், சைவ சித்தாந்தம், மரணத்தின் பின் என்னும் நூல்கள் தமிழகத்திலும் குமரன் பதிப்பக நூல்களாக வெளிவந்தன. இந் நூல்கள் சிறந்த நான்கு துறைகளுக்கு உரிய சிறந்த நூல்கள். இந் நூல்கள் இவரது ஆய்வுத் திறனையும் நுண்ணிய அறிவுத் திறனையும் வெளிபடுத்துவன. மரணத்தின் பின் என்பது சிறந்த மெய்யியணற்துறை நூல், கிழக்கு – மேற்கு மெய்யியற் கோட்பாடுகளை ஆராய்ந்துள்ளது.

தமிழறிஞர் சங்கரப்பிள்ளை அவர்கள் உயர்ந்த சமுதாய நோக்கும் உணர்வும் உள்ளவர். அதனாற் கொழும்புத் தமிழ்ச் சங்க ஆயுள் உறுப்பினராக 1950ஆம் ஆண்டிற் சேர்ந்தார். 1977 – 79 ஆண்டுகளிற் துணைத் தலைவராகவும் 1980 – 83 ஆண்டுகளில் தலைவராகவும் இதன் பின் காப்பாளருள் ஒருவராகவும் விளங்கினார். உயிர் நீங்கும்வரை சங்கத்தோடு தொடர்பு கொண்டு ஊக்கம் தந்தார்.

இவர் தலைவராக இருந்தபோது சங்கத்தின் கணக்ணகு வைக்கும் முறையை நன்கு நெறிப்படுத்தினார். ஆண்டுதோறும் மாணவர்க்கும் வளர்ந்தவர்க்கும் வழங்கும் பல்துறைத் தேர்வுப் பரிசில்களுக்கு நிரந்தரத் தேர்வுப் பரிசில் மூல நிதியங்களை ஏற்படுத்தினார். இவர் வகுத்த முறையின்படி பலர் வழங்கிய மூலநிதிகள் வங்கியில் நிரந்த வைப்பில் இட்டு அவைகளில் இருந்து ஆண்டுதோறும் வட்டியாகக் கிடைக்கும் பணம் அவ்வத் துறைக்குப் பரிசிலாக வழங்கப் பெறுகிறது. இதனால் நாவன்மை. தமிழ்த்திறன், கவிதை, ஆய்வுக் கட்டுரை, நூலாக்கம் முதலிய பதினைந்து துறைகளுக்கு நிதிப்பரிசில்கள் வழங்கப் பெறுகின்றன.

இப் பேரறிஞர் 18-2-90 ஆம் நாள் அ.ஐ. நாட்டில் கலிபோனியாவில் உலகு நீத்தார். இவரது தகனக் கிரியைகள் முறைப்படி அங்கு நிகழ்ந்தன. இவரது அத்தி இந்தியாவில் உள்ள புனித தலங்களில் இடப்பெற்றன. இவரது மனைவியாரும் இளைய மகனும் இதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்தனர்.

இலங்கையிற் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இவருக்கான நினைவஞ்சலி நிகழ்ச்சி நிகழ்ந்தது. சட்டப் பேரறிஞர் எச். டபிள்யூ. தம்கையா கியூ சி. முதுபெரும் எழுத்தாளர் செ. கணேசலிங்கன், புலவர் த. கனகரத்தினம், இலங்கை வர்த்தக சம்மேளன நிருவாகத்தர், பெரும்பான்மை இனத்தவர் ஒருவர், இவரது நண்பர் ஒருவர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

தமிழின் பல துறைகளிலும் ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோராகிய இப்பேரறிஞரின் புகழும் பணிக்கும் இவர்தம் நூல்கள் உள்ளவரை நிலைத்து நிற்பன. தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும் நாட்டிற்கும் கல்வித் துறைக்கும் இவர் செய்துள்ள பயனள்ள பணிகள் பல ஆகும்.

அணிந்துரை
பொருளியல் துறையிலே உயர் பட்டங்கள் பெற்று அத்துறையிலே அறிஞராக விளங்கிய திரு. பொ.சங்கரப்பிள்ளை அவர்கள் தமிழ் மக்கள் பெருமையுறும் அளவுக்கு பல்வேறு துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவராக விளங்கியர். தமிழியல், தமிழர் வரலாறு, தமிழ் இலக்கியம், அரசியல், சமூகவியல், மெய்யியல் ஆகிய பல்வேறு நெறிகளிலும் துறைபோக கற்றவராகவும் விளங்கியவர். இத்துறைகளிலே மேலோட்டமான முறையிலன்றி அகலமாகவும், ஆழமாகவும் கற்க முற்பட்டவர்.

திரு. சங்கரப்பிள்ளை அவர்கள் 1979ஆம் ஆண்டு யூன் மாதம் வெளியிட்ட நாம் தமிழர் என்ற இந்த நூல் இவ்வாண்டு மீள் பதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்படவிருப்பது குறித்து பெருமகிழ்வடைகிறேன். இந்நூல் ஒரு வரலாற்று நூல் போன்று தென்பட்டபோதிலும் - ஆங்கில தலைப்பு அவ்வாறு சுட்டுகின்றது - இந்நூல் தமிழர்களின் அரசியல் வரலாற்றினை மட்டும் ஆய்வதுடன் நில்லாது அவர் தம் பணள்பாடு, கலைகள், இலக்கியங்கள், சமயம், கைத்தொழில், விவசாயம் போன்ற பொருளாதார முயற்சிகள் போன்றனவற்றை வரலாற்று ரீதியாகவும் ஆய்வு ரீதியாகவும் அணுகுகின்றது.

பழந்தமிழ் இலக்கியங்களில் மிகுந்த புலமையுடைய திரு. சங்கரப்பிள்ளை அவர்கள் பரந்த தமிழ் இலக்கிய பரப்பிலிருந்து ஏராளமான தகவல்களையும் கருத்துக்களையும் அகழ்ந்தெடுத்து தமது ஆய்வு நூலிலே விரிவாக பயன்படுத்தியுள்ளார். பழந்தமிழ் இலக்கியங்கள் வெறும் இலக்கியங்கள் மட்டுமன்றி ஒரு இனத்தின் வரலாற்று பண்பாட்டு, சமய பொருளாதார, சமூக ஆய்வுகளுக்கும் உதவுவன என்பதை திரு. சங்கரப்பிள்ளை அவர்கள் நன்கு நிரூபித்துள்ளார். அத்துடன் அவர் தமிழ் வரலாறு, இலக்கிய வரலாறு பற்றிய ஏராளமான நூல்களைக் கற்று அவற்றில் பொதிந்துள்ள ஆய்வு முடிவுகளை தமது நூலில் நன்கு பயன்படுத்தியுள்ளார்.

தமது நூலில் அவர் ஆராய்ந்துள்ள பன்னிரண்டு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மேலும் பரந்த ஆய்வுக்கான விடயங்களாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தமிழியல் ஆய்வாளர்கள் தமது ஆய்வுக்கான விடயங்களை தெரிவு செய்ய இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமையும்.

இன்று நாம் வேற்றுமையில் ஒற்றுமை காணுகின்ற காலப் பகுதியிலே வாழுகின்றோம். இன்றைய உலக நாடுகளில் பெரும்பாலானவை பல இன சமுதாயங்களை கொண்டனவாக விளங்குகின்றன. எமது நாடும் ஒரு பல இன மக்களைக் கொண்ட சமுதாயம் என்று இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு இனத்தினதும் தனித்துவமும் பேணிப் பாதுகாக்கப் படுவதற்கு அவ்வினத்தின் பண்பாடு, மொழி, கலை இலக்கிய மரபுகள் போன்றன நன்கு இனங்காணப்பட்டு பேணப்படுவதோடு அவற்றை மென்மேலும் வளர்க்கவேண்டும் என்ற உணர்வும் உந்துதலும் வளர்முக நாடுகளில் மட்டுமல்லாது மேலை நாடுகளிலும்கூட இன்று காணப்படுகின்றது.

ஒரு காலத்தில் மேலை நாடுகளில் பெரும்பான்மை இன் மக்களோடு இணைந்து கலந்து விடுவதாக பல பொருளாதார நன்மைகள் உண்டென்று அந் நாடுகளில் சிறுபான்மை இனத்தவர்கள் கருதினர். ஆயினும் 1960இல் மேலைநபட்டு சிறுபான்மையினரும் தமது இனத் தத்துவத்தை பேணுவதில் மிகுந்த அக்கறை காட்டத் தொடங்கினர். இன்று எவரும் தான் தன் இனம் என்று சிந்திப்பதிலோ அவ்வினத்துக்குரிய மரபுகளை பேணுவதிலோ கூச்சமடைவதில்லை. இதற்கு மாறாக அவரவரது இன அடையாளங்களும் தனித்துவ அம்சங்களும் அவர்களுக்கு பெருமையூட்டுவனவாக இருக்கின்றன.

இப்பின்னணியில் பொ. சங்கரப்பிள்ளை அவர்களுடைய “நாம் தமிழர்” என்ற இந் நூல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறதென்பதை இந் நூலை படிப்போர் நன்கு உணர்வர். தமிழரின் வரலாற்றுத் தொன்மையும் பண்பாட்டு கலை இலக்கியப் பெருமைகளையும் தெளிவுற எடுத்துக்காட்டும் இந் நூலை எழுதிய திரு. பொ. சங்கரப்பிள்ளை அவர்கள் தமிழ்கூறும் நல்லுலகினால் என்றென்றும் நினைவு கூரப்படவேண்டியவா.
சோ. சந்திரசேரம்,
சமூக, விஞ்ஞான கல்வித்துறை தலைவர்
கல்வி போதனா பீடம்,
கொழும்பு பல்கலைக்கழகம்.

உள்ளடக்கம்
பக்கம்
முதலாம் அத்தியாயம்
நாம் தமிழர் 1

இரண்டாம் அத்தியாயம்
ஆரியரும் திராவிடரும் 13

மூன்றாம் அத்தியாயம்
மொழிகளும் சமயமும் 28

நான்காம் அத்தியாயம்
பண்டை இந்தியாவும் இலேமூரியாவும் 37

ஐந்தாம் அத்தியாயம்
சிந்துவெளி நாகரிகம் - நாம் தமிழர் 43

ஆறாம் அத்தியாயம்
சங்க காலத்தில் நாம் தமிழர் –
தலைச்சங்கமும் இடைச்சங்கமும் 51

ஏழாம் அத்தியாயம்
தொல்காப்பியர் காலத்தில் - நாம் தமிழர் 64

எட்டாம் அத்தியாயம்
கடைச்சங்க காலம் - நாம் தமிழர் 73

ஒன்பதாம் அத்தியாயம்
கடைச்சங்க காலம் (தொடர்ச்சி) 90

பத்தாம் அத்தியாயம்
கடைச்சங்க காலத்துக்குப் பின் - நாம் தமிழர் 113

பதினோராம் அத்தியாயம்
ஈழத்தில் - நாம் தமிழர் 126

பன்னிரண்டாம் அத்தியாயம்
எமது மொழி தமிழ் 141

அட்டவணை 1
கால அட்டவணை 152

அட்டவணை 2
கடைச்சங்ககாலப் புலவர்களிற் சிலரும் நூல்களும் 154

அட்டவணை 3
யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகள் பட்டியல் 158

அட்டவணை 4, 5
ஆதார மேற்கோள் நூல்கள் 163

நாம் தமிழர்
“தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடைய வழியாகும்
(நாமக்கல் கவிஞர்)

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாளொடு முன்தோன்றி மூத்த குடி”
(ஐயனாரிதனார்)

“தமிழுக்கு அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு மண மென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்”
(பாரதிதாசன்)

முதலாம் அத்தியாயம்
நாம் தமிழர்

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

நாம் தமிழர், எமது மொழி தமிழ், தமிழ் என்ற சொல்லுக்கு “இனிமை”, “தூய்மை”, “அன்பு” என்பவை பொருளாகும். எமது மொழி அமிழ்தம் போன்று இனிமையுடையது. மொழிகள் யாவற்றுக்கும் மூலமும் முதலுமானது. இன்றும் தனது சீரிளமை குன்றாது விளங்குகிறது. பண்டைக்காலத்தில் நாம் உலகாண்டோம். எமது மொழியும் பண்பாடும் நாகரிகமும் சமயமும் உலகம் முழுவதும் பரவியிருந்தன. எங்கும் நாடு நகரங்கள் அமைத்து நல்வாழ்வு நடத்தினோம். பாலிங் குளித்தோம், பட்டாடை உடுத்தினோம். எமது பிள்ளைகள் தேரோடி விளையாடினர். இவற்றையெல்லாம் மக்கள் மறந்தனர். ஏன் நாமே மறந்தோம்! தன்னையுமறியாது தனது துணைவனையுமறியாது துயருறும் உயிர்போல வாழுகின்றோம். இன்று அடிமைப்பட்டோம். சிறுமையுற்றோம், அல்லற்படுகிறோம்.

நாம் தமிழர். எமது நாகரிகம் உலகம் முழுவதும் பரந்திருந்த நாகரிகமாகும். பசுபிக் கிழக்கிந்திய தீவுகள் தொடக்கம் மேற்கே அமெரிக்கா வரையும் மத்திய இரேகைக்கு இருமருங்கிலும் தொடர்ச்சியாகப் பரந்துகிடந்த நாடுகளிற் பண்டைக்காலத்திலே நிலவிய நாகரிகம் இதுவாகும். இதனை மேனாட்டவர் பண்டை நடுநிலக் கடலக நாகரிகம் எனவும் இம்மக்களை நடுநிலக் கடலக மக்கள் எனவுங் குறிப்பிடுவர். இந்நாடுகளிற் சில உதாரணமாக அத்திலாந்திகம் இலேமூரியாவும் - கடற்கோள்களினால் அழிந்துவிட்டன. பல நாடுகளில் வடபுல மக்களின் படையெழுச்சியினால் இந் நாகரிகம் அழிக்கப்பட்டு விட்டது.

மக்களின் தொட்டில் - அதாவது மனிதன் முதன் முதலில் தோன்றிய இடம் இலேமூரியா எனவும் அக்காலத்தில் அவர்கள் பேசிய மொழி தமிழ் அல்லது திராவிடம் எனவும் இலேமூரியாவிலிருந்து மக்கள் சென்று பல நாடுகளிற் குடியேறினர். எனவும், குடியேறிய நிலத்திற்கு ஏற்றவாறு நிறம், மொழி, நடையுடை, நாகரிகம் வேற்றுமை யடைந்தனர் எனவும் கர்ணாமிர்த சாகரங் கூறுகிறது.

“நிலைபெற் றோங்குந் தமிழகத்
தாறறி வுடைமைப் பேறுறுமக்கள்
முன்னர்த் தோன்றி மன்னிக் கெழுமி
இமிழிய லொலிசேர் தமிழ்மொழி பேசி,
மண்ணிற் லொவிசேர் தமிழ்மொழி பேசி,
மண்ணிற் பலவிட நண்ணிக் குடியிருந்
தவ்வவ் விடத்துக் கொவ்விய வண்ணம்
கூற்று நடையுடை வேற்றுமை யெய்தி
பற்பல வினப்பெயர் பெற்றுப் பெருகினர்.”

பண்டை எகிப்தியரும் திராவிடரும் ஓரின மக்கள் எனவும் மிகப் பழைய காலத்திலே இப்பழுப்புநிற மக்கள் இந்தியாவிலிருந்து ஸபெயின் வரையும் பரவியிருந்தனர் எனவும் பேராசிரியர் கச்சிலி கூறுகிறார். உலகவரலாற்றுச் சுருக்கத்தில் ர்.பு. வெல்சு கூறுவதாவது:-

“இக்கரிய பழுப்புநிற மக்கள் இந்தியாவிற்கு அப்பாலும் பசுபிக் சமுத்திரம் வரையும் பரவினர். இவர்களே ஆதியில் நாகரிகம் அடைந்தவராவர். புதுக்கற்கால நாகரிகம் இவர்களுடையதாகும். உலகில் தற்காலத்திலுள்ள எல்லா மக்களும் அடிப்படையில் இவ்வினத்தவரே”

“இந்தியாவில் நீண்டகாலமிருந்து நாகரிகம் வளர்த்த பின்பு, திராவிடர் மேற்கு நோக்கிக் குடிபெயர்ந்தனர். மெசொப்பொற்றாமியா முதலிய பல நாடுகளில் தங்கிப் பிரிட்டிஷ் தீவுகள் வரையும் தமது நாகரிகத்தைப் பரப்பினர்” என வணக்கத்துக்குரிய கெறஸ் பாதிரியார் கூறுகிறார். இத்துறையிற் சமீப காலத்தில் ஆராய்ச்சி செய்த உரூசியர் வடதுருவப் பகுதிகளில் வாழும் எஸ்கிமோ மக்களும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர் என ஊகிக்கின்றனர். பண்டைக்காலத்தில் உலகம் முழுவதும் கடலாட்சியும், நிலவாட்சியும் செய்த மக்கள் திராவிட இனத்தவராவர்.

மக்களின் தொட்டிலைப்பற்றிய கதை பல நாடுகளில் உண்டு. மனித இனம் ஓரிடத்தில் தோன்றியதா அல்லது பலவிடங்களில் தோன்றியதா? ஓரிடத்திலாயின் அவ்விடம் யாது? இவ்வாதங்கள் பயனற்றவையாகும். ஓரின மக்களின் குலத்துக்கும் இனத்துக்கும் பண்பாட்டிற்கும் நாகரிகத்துக்கும் அம்மக்களின் நடத்தையே சான்றாகும்.

“பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.”

“மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல் லவர்.” (திருக்குறள்)

பழைய கற்காலந் தொட்டுத் தமிழர் நாகரிகத்துடனும் பண்பாட்டுடனும் சுதந்திர மக்களாக வாழ்ந்தனர் என்பதைக் காட்டுவதே இந்நூலின் நோக்கமாகும். இது வரலாற்று நூலன்று. எனினும் இந்நூலில் தமிழரின் சீரையுஞ் சிறப்பையும் நாம் குமரி நாட்டில் வாழ்ந்த காலத்திலிருந்து (கி.மு. 16,000) சுருக்கமாகக் கூற எத்தனிக்கிறேன். மேலும், இந்நூல் எழுதமுன், ஆங்கிலத்திலும், தமிழிலும் பல நூல்களை வாசித்தேன். வாசிக்கும்போது குறிப்புக்கள் எழுதி வைத்திருந்தேன். இக் குறிப்புக்களிலிருந்தே இந்நூலை எழுதுகிறேன்.

எமது முன்னோர் தமது வரலாற்றை எழுதிவைக்கவில்லை. இந்திய மக்களுக்கு வரலாற்றுணர்ச்சி இல்லையென்பர். ஒருவேளை எழுதியிருந்தாலும் அவை எமக்குக் கிடையாது அழிந்துவிட்டன. அல்லது அழிக்கப்பட்டுவிட்டன. பெரும்பாலான தமிழ் நூல்கள் காலத்தினாலும் பற்பல கடற்கோள்களினாலும் மறைந்துவிட்டன. இந்நூல்களிற் சில இரண்டாம் அட்டவணையிற் கொடுக்கப்படுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பல நூல்கள் இன்று எமக்குக் கிடைக்கவில்லை யென்றால், பழைய நூல்களின் மறைவு வியப்பன்று.

“ஏரண முருவம் யோக மிசை கணக் கிரதஞ்சாலந்
தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமுலோகம்
மாரணம் பொருளென்றின்ன மானநூல் யாவும்வாரி
வாரணங் கொண்டதந்தோ வழிவழிப் பெயருமாள.”

பண்டைத் தமிழகமாகிய குமரிநாடு இந்துமகா சமுத்திரத்திற் குள்ளே ஆழ்ந்து கிடப்பதினாற் புதைப்பொருள் ஆராய்ச்சிக்கு இடமில்லை. எனினும் இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற புதை பொருள் ஆராய்ச்சிகளையும் எமது இலக்கியங்களையும் நோக்கி எமது பழைய வரலாற்றை ஓரளவுக்கு அறியலாம். புராணங்கள் புளுகு மூட்டைகளாயினும் அவற்றிலிருந்தும் சில உண்மைகளைப் பெறலாம்.

மேலும் சம்பவங்கள் நடைபெற்ற காலங்கள் சிற்சில யுகங்களின் கணக்கில் எமது நூல்களிற் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பண்டுதொட்டு இன்றுவரையும் இந்த யுகங்களின் ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கணிக்கப்பட்டு வருகின்றன. இந்த யுகங்களை மறுப்பது, மேனாட்டு வரலாற்றில் கிறித்துவ வருடக் கணக்கை மறுப்பதற்குச் சமனாகும். ஆராய்ச்சியாளர் இந்த யுக வருடக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்த யுகங்களின் தொடக்கங்களாவன:-

கலியுகம் - கி.மு. 3102 – பெப்றுவரி 17ஃ18

உதிட்டிர யுகம் - கி.மு. 3076

சாகர் யுகம் - கி.மு. 550

சாலிவாகன யுகம் - கி.மு. 76

விக்கிரமாதித்த யுகம் - கி.மு. 56

வள்ளுவர் ஆண்டு – கி.மு. 31

வடமொழிகளிலோ தென் மொழிகளிலொ சாசனங்களிலோ நூல்களிலோ இந்த யுகங்களின் ஆண்டுகள் கொடுக்கப்பட்டிருப்பின் சம்பவம் நடைபெற்ற காலத்தைப் பற்றிச் சந்தேகத்திற்கு இடமில்லை. கலாநிதிகளின் பகுத்தறிவுடன் இஃது இணக்கமில்லாதிருப்பின் அவர்களுடைய பகுத்தறிவு தவறானதாக இருக்கவேண்டும்.

இந்திய வரலாறெழுதிய ஆங்கிலேயர் எமது புராணங்களையும் இதிகாசங்களையும் முற்றாகப் புறக்கணித்தனர். இவை பௌராணிக மதமும், பிராமணஞ் செல்வாக்கடைந்த பிற்காலத்தில் எழுதப்பட்டவையாகும். புத்த சமண சமயத்தவர் பௌராணிக மதக் கொள்கைகளை எதிர்த்தபோதிலும் பிராமணரைப் போன்று தமது சமய புராணங்களையும் எழுதினர். புராணங்கள் அண்டப்புளுகுகளும், கட்டுக்கதைகளும், நிறைந்தவையென வில்லியம்லோகுஸ் என்பவர் குறிப்பிடுகிறார். “உண்மைக்கு மாறாக பொய் நிறைந்த கதைகளை இப்பிராமணர் தமது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காகவும் பிழைப்பிற்காகவும் எழுதினர். இவையாவும் வெறிதே புனைந்துரைகள், புழுகு மூட்டைகள்.”

பிற்காலத்திற் சிற்றரசர்களும் செல்வர்களும் தமது குலத்துக்குங் குடும்பத்துக்கும் புகழ்நாடிக் கூலிகொடுத்துப் புராணங்கள் எழுதுவித்தனர். இப்புராணங்கள் மரபு முறைப்படி எழுதப்பட்டவையாகும்.

(1)முன்னோன் தோற்றமும் புகழும், குலத்தின் சிறப்பும். ஒவ்வொரு குலமும் ஆதியில் அக்கினியிலிருந்தோ, யாகத்திலிருந்தோ, சந்திழர சூரியர்களிலிருந்தோ, தேவர்களிலிருந்தோ முனிவர்களிலிருந்தோ, சிங்கத்திலிருந்தோ, யாழியிலிருந்தோ தோன்றியதாக எழுதினர்.

(2)முன்னோன் புகழை மறைமுகமாகப் பின்னோனுக்குச் சாற்றுவர்.

(3)பின்னோன் புகழ் பாடுவது.

(4)எதிரிகளைத் தூற்றுவது சமய நூல்களாயின். பிறமதக்கண்டனம்.

இக்காலத்திற் செத்தவர் மேற்பாடப்படும் கல்வெட்டுக்களிற் போல, இப்புராணங்களிற் பெருமளவு புளுகும் ஓரளவு உண்மையும் இருக்கும். எனினும் அப்புராணங்களை முற்றாகப் புறக்கணிக்க முடியாது. இப்புளுகு பெட்டிகளுக்குள்ளிருந்தும் சில உண்மைகளைப் பிரித்தெடுக்கலாம்.

இந்திய வரலாறு இந்தியாவிற்கு வேலைக்கு வந்த சில ஆங்கிலேயரினாற் பதினெட்டம்பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது. ஏதோ பொழுது போக்கிற்காக இவர்கள் ஒரு செத்த மொழியிலுள்ள சில நூல்களை அரைகுறையாகக் கற்றவுடன் இந்திய வரலாற்றை எழுதத் துணிந்தனர். தொடர்ச்சியற்ற சில சம்பவங்களை எடுத்து வரலாற்றாக்கினர். கால வரையறைகள் ஆதாரமற்ற ஊகங்களாகும். இந்தியாவின் பழைய மக்கள், மொழிகள், பண்பாடு சமயம் முதலியனபற்றி இவர்களுக்கு அறிவில்லை. இந்தியாவிற்குட் புகுந்த பல குழுக்களுள் ஒரு நாகரிகமற்ற நாடோடிக் குழுவின் பாட்டுக்களிலிருந்து பண்டை இந்திய வரலாறெழுதினர். இக்குழு இந்தியாவிற்குட் புகமுன் இந்தியாவிற் பல மக்கள் வாழ்ந்ததையும் பல நாகரிகங்கள் தோன்றி மறைந்ததையும் புறக்கணித்தனர். இந்து சமயத் தத்துவங்களை இக்குழுவின் நாடோடிப் பாடல்களிற் காண எத்தனித்தனர். இந்தியாவின் மிகப்பழைய மொழியாகிய தமிழை இவர் கற்றிலர், பண்டை இந்திய நாகரிகங்களுக்கும் சமயங்களுக்கும், கலைகளுக்கும் இருப்பிடம் இந்தியாவின் தெற்கும் வடகிழக்கும் மத்திய பகுதிகளும் என்பதை இவர்கள் உணரவில்லை.

இன்று இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. அடிமை மனப்பான்மையும் ஓரளவு குறைந்துவிட்டது. இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சிகளிலிருந்து பல உண்மைகளை அறிகிறோம். இந்திய வரலாறு புதிதாக எழுதப்படுகிறது. தமிழ் இனத்தின் வரலாற்றை இந்திய வரலாற்றிலிருந்து பிரிக்கமுடியாது. ஏனென்றால் முன்னொரு காலத்தில் இந்தியாவில் இமயந் தொடக்கம் ஒளிநாடு வரையும் வாழ்ந்தவரும், ஆண்டவரும் தமிழர் அல்லது திராவிடராவர். பிற்காலத்திலெ மங்கோலிய, சித்திய, காக்கேசியக் குழுக்கள் இந்தியாவிற்குட் புகுந்தபோதிலும், இன்றும் இந்திய மக்கள் அடிப்படையிற் பெரும்பாலும் நடுநிலக் கடலக இனத்தைச் சேர்ந்த திராவிடராவர்.

மேனாட்டு வரலாற்றாசிரியர்களின் முடிபுகளுக்கும் கருத்துக்களுக்கும் சில தவறான வைத்துக் கோடல்களும் எடுகோள்களுங் காரணங்களாகும். இவற்றிற் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1.இந்திய வரலாறெழுதிய ஆங்கிலேயர் பெரும்பாலுங் கிறிஸ்தவர்களாவர். பழைய உவில்லியவேதத்தை வரலாற்றுண்மையாக எடுத்துக்கொண்டனர். ஆதாமும் ஏவாளும் முதல் மனிதர். உலகிலுள்ள எல்லா மக்களும் இவர்களுடைய சந்ததிகள். ஆதாம் ஏவாள் தோன்றிய இடம் மத்திய ஆசியா அல்லது மேற்காசியா அல்லது கிழக்காபிரிக்காவாகும். அவர்களுடைய காலம் கி.மு. 8000 அளவிலாகும். இவ்வெடுகோள்கள் உண்மைகளாயின் பின்வரும் இரு முடிபுகளும் இயல்பாகவும் தர்க்க ரீதியாகவும் பெறப்படும்.

(அ)மனிதவினம் உலகிலே தோன்றிய காலம் பத்தாயிரம் வருடங்களுக்குட்பட்டதாகும்.

(ஆ)மேற்கு அல்லது மாத்திய ஆசியா அல்லது கிழக்காபிரிக்காவிலிருந்தே மக்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கவேண்டும். இந்தியாவிற்குள்ளும் புகுந்திருக்கவேண்டும். இக்கருத்தை – வளிப்படையாகவோ மறைமுகமாகவோ மேனாட்டவர் நூல்கள் பலவற்றிற் காணலாம். எனவே, மேனாட்டவர் எகிப்திய மெசொப்பற்றாமிய நாகரிகங்களை இந்திய நாகரிகத்துக்கு முற்பட்டவையாகவும் மூலமாகவும் எடுத்துக்கொண்டது வியப்பன்று.

இந்திய நாகரிகத்தை ஆராயமுன் அவர்கள் புதை பொருளாராய்ச்சிகளிலிருந்து பண்டை எகிப்திய சுமேரிய நாகரிகங்களைப்பற்றி நன்கறிந்திருந்தனர். எனவே இந்திய நாகரிகத்தைச் சுமேரிய நாகரிகத்துடன் தொடர்புறுத்தினர். இந்தியாவிலிருந்து எகிப்திய சுமேரிய நாகரிகங்கள் பரவியிருக்கலாம் என்பதையோ ஒத்த நாகரிகங்கள் பல விடங்களில் ஒரே காலத்திலே தோன்றலாம் என்பதையோ இவர்கள் சற்றேனுஞ் சிந்தித்துப் பார்க்கவில்லை.

இந்தியாவில் வழங்கிய ஆரிய என்ற சொல்லையும் மேனாடுகளில் வழங்கிய ஆரிய என்ற சொல்லையும் ஒரே இன அடிப்படைக் கருத்துடையவையாக எடுத்துக்கொண்டனர். இதனால், வடஇந்தியச் சேர்மனி கொக்கேசியாவிலிருந்து வந்தவர் என ஊகித்தினர். வந்த காலத்தையும் வரையறைசெய்தனர். இதற்கியையச் சம்பவங்களை வியாக்கியானஞ் செய்தனர். இக்காரணத்தினால் இந்திய மரபுக் கதைகளையும் புராணங்களையும் இலக்கியங்களையும் இவர்கள் புறக்கணிக்க வேண்டியதாயிற்று,

இவர்களுடைய எடுகோள்களும் முடிபுகளும் உண்மைக்கு ஒவ்வாதவையென்பதில் ஐயமில்லை. உலகம் தோன்றிய காலத்தையும் மக்கள் உலகிலே தோன்றிய காலத்தையும் பற்றிப் பல அபிப்பிராயங்களும் மதிப்பீடுகளும் இருப்பினும், இவற்றைத் திடமாக அறுதிசெய்ய முடியாது. ஆனால், உவில்லிய வேதங் குறிப்பிடுங் காலத்துக்குப் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் மக்கள் வாழ்ந்தனர் என்பதற்குப் பல சான்றுகளுண்டு. மேலும், இந்து சமுத்திரத்திலிருந்து ஒரு கண்டத்திலிருந்தே மக்கள் சென்று பல நாடுகளிற் குடியேறினர் எனத் தற்கால ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

(அ)“பண்ட்” எனும் ஒரு நாட்டையும் அதிலுள்ள ஓவீர் எனுந் துறைமுகத்தையும் அதனருகே கிடைக்கப்பட்ட தங்கம், தேக்கு, மண்வகைகள் முதலியவற்றையும் பற்றிப் பண்டை எகிப்திய கதைகள் குறிப்பிடுகின்றன. இந்நாடே பண்டை எகிப்திய மக்களின் தாயகம் எனவுங் கூறுகின்றன. இந்நாடு தமிழராகிய எமது பண்டைத் தாயகமாகிய குமரி நாடாகும்.

(ஆ)மேற்கு ஆபிரிக்காவிற் சீரியா இலியோன் எனும் நாடொன்றுண்டு. இன்று, இந்நாட்டவர் பிரெஞ்சு மொழி பேசுகின்றனர். எனினும், இவர்கள் தம்மைத் தமிழ் நாட்டிலிருந்து வந்து குடியேறிய தமிழராகக் கருதுகின்றனர். தமிழ் மொழியிலும் பண்பாட்டிலும் ஆர்வங் காட்டுகின்றனர்.

(இ)மேற்கு ஆசியா, சின்ன ஆசியா நாட்டுப் பழைய மக்கள் தாம் கிழக்கேயுள்ள ‘எல்லாம்’ எனும் நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றனர். இது குமரி கண்டத்தில் இருந்து ‘ஏழ்’ நாடாகும்.

(ஈ)பண்டைக் காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த “குறுயீட்” மக்களின் பழக்க வழக்கங்களையுஞ் சமயத்தையும் ஆராய்ந்த அறிஞர் இவர்கள் நடுநிலக் கடலக மக்கள் எனவும் இந்து சமுத்திரத்திலிருந்து ஒரு கண்டத்திலிருந்து வந்து குடியேறியவர் எனவுங் கூறுகின்றனர்.

(உ)ஸ்பெயின் தேசத்திலுள்ள சுற்றிலோனியா மக்களும் பாஸ்க் மக்களும் நடுநிலக்கடலகத் திராவிடரெனக் கெறஸ் பாதிரியார் கூறுகிறார்.

(ஊ)“பிரளயத்திற்குப் பிறகு முதன் முதலாக இந்தியாவிலே தான் மனிதவினம் தோன்றியது.”

(எ)“தென்னாசியாவிலே மிகவும் பழமையா பகுதி தென்னிந்தியாவாகும். (டோப்பினார்ட்)

(ஏ)“மனிதனின் பிறப்புத் தோற்றம் எல்லாமே தென்னிந்தியாவில்தான்.” (சேர். யோன் எட்பான்ஸ்)

(ஐ)”மனிதனின் மிகப் புராதனமான நாகரிகம் தென்னிந்தியாவிலேதான் இருந்தது. இவற்றைத் தென்னிந்திய மக்களின் வரலாறு கூறுகிறது. இம்மலைப் பகுதிகள் இமயமலையை விடத் தொன்மையானவை. இமயமலை இந்தியாவின் கடற் பகுதிகளிலிருந்து வெளிவந்தது.
(ஸ்கொற் எலியட்)

(ஒ)இரையிலர் எனும் ஆராய்ச்சியாளர் இந்தியாவிற் கற்காலங்களையும் உலோக காலங்களையும் வரையறை செய்திருக்கிறார்.

பழைய கற்காலம் (நுழடiவாiஉ யுபந) – கி.மு. 400,000 – கி.மு. 35,000.

கற்காலம் (Pயடநழடiவாiஉ) – கி.மு. 35,000 – கி.மு. 10,000.

புதுக் கற்காலம் (நேழடiவாiஉ) – கி.மு. 10,000 – கி.மு. 5000.

சிந்துவெளி நாகரிகத் தொடக்கக் காலம் - கி.மு. 10,000.

சிந்துவெளி நாகரிகம் இறுதிக்காலம் - கி.மு. 3000 – கி.மு. 2000.

இரும்புக் காலத் தொடக்கம் - கி.மு. 4000.

பழைய கற்காலத்திலேயே திராவிட மக்கள் இந்தியாவில் வாழ்ந்தனர். இம்மக்கள் வாழ்ந்த கற்குகைகளும் இவர்கள் பயன்படுத்திய கற்கோடரிகளும் தென்னிந்தியாவிலுள்ள மதுரை, திருச்சிராப்பள்ளி, தஞ்சை, வடஆற்காடு, செங்கற்பட்டு, பெல்லாரி, கடப்பை, குர்நூர், நெல்லூர், கோதாவரிவெளி, மைசூர், ஐந்தராபாத் முதலிய இடங்களிற் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. புதுக் கற்கால மக்களின் வாழ்க்கைச் சின்னங்கள் தென்னிந்தியாவிற் பலவிடங்களிற் கிடைத்துள்ளன. புதுக் கற்கால மக்கள் நிலையான வாழ்க்கை நடத்தினர். நிலத்தை உழுது பயிர் செய்தனர். நூல் நூற்’று நெசவு செய்தனர். மண் சட்டி பானைகள் வனைந்தனர். இறையுணர்ச்சியுடையவராக இருந்தனர். தலைச்சங்க காலமும், இடைச்சங்க காலத்தின் முதற் பகுதியும் புதுக்கற்காலமாகும். இக்காலத் தனிப்பட்ட நானில் வாழ்க்கையைத் தொல்காப்பியங் கூறுகிறது.

இந்திய கால வாய்ப்பாட்டை எல்லாப் பஞ்சாங்கங்களிலுங் காணலாம்.

யுகம் ஆண்டுகள்
கிருதயுகம் 1,728,000
திரேதாயுகம் 1,296,000
துவாபரயுகம் 864,000
கலியுகம் 432,000

சதுர்யுகம் 4,320,000

1 மனுவந்தரம் - 71 சதுர்யுகங்கள்
1 கற்பம் - 1000 சதுர்யுகங்கள்

ஒவ்வொரு கற்பத்தின் முடிவிலும் பூமி அழியும், இப்போது நடப்பது சுவேதவராக கற்பமாகும். இதில் ஏழாவதாகிய வைவஸ்வத மனுவந்தரம் நடக்கிறது. இதில் 27 சதுர்யுகங்கள் சென்றுவிட்டன. 28வது சதுர்யுகத்தில் கிருதா திரேதா துவாபரயுகங்கள் கழிந்து இப்போது கலியுகத்தில் 5078வது ஆண்டு நடக்கிறது. எனவே, இக்கற்பகத்திலே பூமி தோன்றி ஏறக்குறைய 1961 மில்லியன் வருடங்கள் சென்றுவிட்டன. மறுபடியும் பிரளயத்திற்கும் பூமி அழிவதற்கும் 2359 மில்லியன் வருடங்கள் இருக்கின்றன. இக்கால வாய்ப்பாட்டை மேனாட்டு விஞ்ஞானிகளின் மதிப்பீடுகளோடு ஒப்பிட்டுப்பார்க்கலாம்.

ஆரம்பத்திலே இவ்வுலகம் அனற்பிளம்பாகக் கிடந்தது என்கின்றனர். வெப்பந்தணிந்து உயிரினங்கள் தோன்றிப் பல நூறு மில்லியன் வருடங்கள் சென்றிருக்கவேண்டும். மனிதவினந் தோன்ற மேலும் பல மில்லியன் வருடங்கள் சென்றன. கண்டெடுக்கப்பட்ட மிகப் பழைய மனித எழும்புகள் 500,000 வருடங்களுக்குச் சற்று முற்பட்டவையாகும். இவை இந்தியாவிலும், சீனாவிலும், கிழக்கிந்திய தீவுகளிலும் கிழக்காபிரிக்காவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இம்மனிதருக்கு “இராமப்பிதிக்கஸ்” எனப் பெயரிடப்பட்டிருக்கின்றனர். இவர்களிலிருந்தே நாம் தோன்றினோம். சமீப காலத்தில் பர்மாவில் 40 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட மனிதரின் எழும்புகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இராமாவதாரம் திரேதாயுகத்தின் இறுதியிலெனவும், இரணியன் காலம் கிருதயுகத்தின் இறுதியிலெனவுங் கூறப்படுகிறது. கிருத யுகமே வேதகாலம் எனவும் பலர் நம்புகின்றனர். மேலே மூறப்பட்ட கால வாய்;பாட்டின்படி இவை நம்பமுடியாத கற்பனைகளாகும். ஆனால், மேலே கூறப்பட்டது தேவ வருட வாய்ப்பாடாகும். மனித வரலாற்றுக் கால வாய்ப்பாடு வேறொன்று இருந்தது. இதை மக்கள் மறந்துவிட்டனர்@ வருடங்களைச் சூரிய வருடங்களாக (அதாவது நாட்களாக) எடுத்துக்கொள்ளவேண்டும். இவ்வாய்ப்பாட்டின்படி:-

யுகம் வருடங்கள்
கிருதயுகம் 12000
திரேதாயுகம் 2400
துவாபரயுகம் 3600
கலியுகம் 4800

சதுர்யுகம் 12,000

இப்போது நடப்பது கலியுகம் 5078வது வருடமாகவும். கலியுகந் தொடங்கியவுடன் பகவான் கிருட்டினர் உயிர் நீத்தார். மகாபாரதப் போர் 36 வருடங்களுக்கு நடந்தது – கி.மு. 3138 இல் என்க. மேலும் கபாடபுரத்தை அயோத்திக் கிருட்டினர் கி.மு. 3105 இல் அழித்தனர் என்ற கதையுமுண்டு. இடைச்சங்க காலம் கலியுகந் தொடக்கத்துக்கு முற்பட்டதாகும். இராமாவதாரம் திரேதாயுகத்தின் இறுதியிலாகும் - கி.மு. 6702 இற்கு முன் என்க. இதற்குமுன்பே இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்திருக்கலாம். இரணியன் காலம் கிருதயுகத்தின் இறுதியிலாகும். – கி.மு. 9102 இற்கு முன் என்க. கி.மு. 9000 தொடக்கம் கி.மு. 3000 வரையிலுமான சம்பவங்களைக் கி;.மு. 2000 அளவில் இந்தியாவிற்குட் புகுந்த ஒரு துருக்கிய - ஈரானியக் குழுவுடன் தொடர்புறுத்த எத்தனித்த மேனாட்டு வரலாற்றாசிரியர்களின் பேதமையை என்னென்றுரைப்போம். பண்டை இந்திய மக்களிடையில் இராமாயண மகாபாரதக் கதைகள் வழக்கமாக இருந்தன. நூல்களும் இருந்திருக்கலாம். இந்நூல்களிலிருந்து இக்கதைகள் பிற்காலத்திலே சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட காலங்களை ஆங்கிலேய வரலாற்றாசிரியர் வரையறை செய்தனரன்றி மகாபாரத இராமாயண காலங்களையல்ல.

பாண்டவரில் ஒருவனாகிய அர்ச்சுன் பாரதநாடு முழுவதும் தீர்த்த யாத்திரை செய்தான் எனவும், நகுலமலையைக் கொண்ட மணிபுரத்திற்கு வந்தான் எனவும் அங்கு சித்திராங்கனை எனும் நாக கன்னியைக் கண்டு காதல் கொண்டு அவளை மணந்தான் எனவும் பின்பு இவர்களுடைய புத்திரனாகிய சித்திரவாகனன் என்பவன் அசுவமேத யாகத்திற்காகத் திக்கு விஜயஞ்செய்த தனது தந்தையை வென்றான் எனவும் சித்தரவாகனின் கொடிகள் சிங்கக் கொடியும் பனைக்கொடியும் எனவும் மகாபாரதங் கூறுகிறது. சித்தராங்கனை நாகர்குலத் தமிழ்ப் பெண். அருச்சுனன் அவளுடன் எம்மொழியிற் பேசினான்? அவனுக்கு எவ்வித மொழிப் பிரச்சினையாவது இருந்ததாகவோ அல்லது அவன் தன்னுடன் மொழிபெயர்ப்பாளரைக் கொண்டு சென்றதாகவோ எவ்விடத்திலாவது கூறப்படவில்லை. தென்னாட்டரசரும் பாரதப் போரிற் கலந்துகொண்டதாக மகாபாரதங் கூறுகிறது. கிருட்டினரைத் தாசர் அரசர்களில் ஒருவனாக இறிக் வேதங் குறிப்பிடுகிறது. அக்காலத்தில் வடக்கில் ஓரினமும் தெற்கில் வேறோரினமும் இருக்கவில்லை. எனவே மகாபாரத காலத்திலே இமயந் தொடக்கம் குமரிவரையும் (ஈழமும் உட்பட) வாழ்ந்த மக்கள் ஓரினத்தவர் என்பதும் ஒரே மொழியையோ கிளை மொழிகளையோ பேசினா என்பதும் தென்படை.

இராமாயண காலம் கி.மு. 6702 இற்கு முற்பட்டதெனக் கூறினோம். இராமாயணப் போர் கங்கைச் சமவெளியிலாண்ட இராமன் எனும் திராவிட அரசனுக்கும் இலங்கையிலாண்ட இயக்கர் குலத்தவனான இராவணன் எனும் திராவிட மன்னனுக்கும் இடையில் நடைபெற்ற போராகும். இராமன் நிறத்திற் கறுத்தவன், இராவணன் செந்நிறத்தவன். அனுமான் சீதையுடன் தேவமொழியிற் பேசாது. மதுரமொழியாகிய மனுஷ மொழியிற் பேசினானென வால்மீகி கூறுகிறார். இம்மொழி பண்டைத் திராவிடமொழி அல்லது பண்டைத் தமிழாகும். அனுமான், சுக்கிரவன் என்போர் மனிதர்களேயன்றி குரங்குகளல்லர். இவர்கள் முண்டர் சாதியினர். இவர்களுடைய கொடி குரங்குகளாக வருணித்தனர். வால்மீகி பழைய கதையை எடுத்து அதற்குள் தமது பௌராணிகக் கொள்கைகளை புகுத்தினர். இதனாலுண்டான முரண்பாடுகளை மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் பல விடங்களிற் காணலாம். இராமனும், இராவணனும் இந்துக்களானபடியினால் கம்பர் இருவரையும் மத அடிப்படையில் “ஆரியர்” என்கின்றனர். வால்மீகி, விசுவாமித்திரர், அகத்தியர், மனு என்பவை பண்டைத் திராவிடப் பெயர்களாகும். இராமாயண காலத்தில் இந்தியா முழுவதிலும் வாழ்ந்த மக்கள் திராவிடராவர். பேசப்பட்ட மொழி பண்டைத் திராவிடம் அல்லது பண்டைத் தமிழாகும்.

“திராவிடரே இப்போது இலங்கை முதல் இமயம் வரை பரவியிருக்கும் மக்கட் கூட்டத்தாரிற் பெரும் பகுதியினராகக் காணப்படுகின்றனர்.” (பேராசிரியர் ரிசிலி)

“இந்திய மக்களின் பண்டைத் தொகுதியில் மிகப் பெரும்பாலானவர் திராவிடராவர். இவர்கள் பிற்காலத்தில் வந்த ஆரியருடனும் சிதியருடனும் ஓரளவு கலப்புற்றனர். (பேராசிரியர் றாட்சன்)


இரண்டாம் அத்தியாயம்
ஆரியரும் திராவிடரும்
இந்தியாவிற் பெரும்பாலும் ஈரின மக்கள் வாழுகின்றனர் எனப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய வரலாறெழுதிய மேனாட்டவர் ஆதாரமின்றி எடுத்துக்கொண்டனர். இவர்களின் கற்பனையில் எழுந்த இந்த இனங்களை ஆரியர், திராவிடர் எனப் பெயரிட்டனர். ஈரான் மத்திய ஆசியா முதலிய இடங்களிலிருந்து வந்த காக்கேசியக் குழுக்களின் சந்ததிகள் ஆரியராவர். பண்டை இந்திய மக்களின் சந்ததிகள் திராவிடராவர். இந்தியாவிற்குட் புகுந்த மங்கோலிய சித்தியக் குழுக்களை இவர்கள் புறக்கணித்தனர்.

ஆரியர், திராவிடர் எனுஞ் சொற்கள் இந்தியா, இந்து மதம் என்பவைபோன்று பிற்காலத்திலெழுந்த சொற்களாகும். வடமொழியிலோ தென்மொழியிலோ “ஆரியன்” என்ற சொல் இன அடிப்படைச் சொல் அன்று. திசை அல்லது நாட்;டடிப்படைச் சொல்லாகும். இந்தியாவின் வட பகுதியிலுள்ள நாடுகள் ஆரியவர்த்தம் எனப்பட்டன. மேலும் ஆரியன் என்ற சொல்லுக்குப் பல கருத்துக்களுண்டு. பெரியோன், பழையவன், நாகரிகமுடையவன், பண்பாடுடையவன், உழவன் என்பவை இவற்றுட் சிலவாகும். தமிழ் என்பது திரிந்து திராவிட மாகிற்று என்பர். அவ்வாறாயின் தமிழ் பேசும் மக்களே திராவிடர் எனப்படுவர். கன்னடம், தெலுங்கு, மராட்டி, ஒரிசா மொழிகள் பேசுவோர் தாம் திராவிடர் என்பதை ஒப்புக்கொள்வதில்லை. அவர்கள் தம்மை ஆரியர் என்கின்றனர். இன்று மலையாள மக்கள் தாமும் தம்மை ஆரியர் என்கின்றனர். இதற்கெனப் புராணங்கள் எழுதி வைத்திருக்கின்றனர். வங்காள மக்கள் இன அடிப்படையில் மங்கோலிய – திராவிடராயினும் தம்மை ஆரியர் என்கின்றனர். தென்னிந்தியாவில் வாழ்ந்த பண்பாட்டிலும் நாகரிகத்திலுங் குறைந்த பல குலத்தவர் - இயக்கர், நாகர், முண்டார் முதலியோர் – பிற்காலத்திலே தம்மை ஆரியரெனப் புகழ்பாடிப் புராணங்கள் எழுதுவித்தனர்.

தமிழ் என்ற சொல் “த்ரமிளம்” என்ற வட சொல்லிலிருந்து பிறந்தது எனவும் த்ரமிளம் என்ற சொல்லின் கருத்து துரத்தப்பட்டவர் எனவுஞ் சில வடமொழியாளர் கூறுவர்.

ஆரியர் என்ற சொல்லிற் சமய அடிப்படையான கருத்துமுண்டு. இந்து மதத்தையும் தர்மத்தையும் ஒழுக்கத்தையும் பின்பற்றுவோர் ஆரியர் எனப்பட்டனர். இருவரும் இந்துக்களானபடியினால் கம்பர் இராமனையும் இராவணனையும் ஆரியரெனக் குறிப்பிடுகிறார். ஆரிய மதம் ஆரியதருமம் என்பனவற்றில் ஆரிய என்ற சொல்லின் கருத்து இந்து என்பதாகும். இக்கருத்தின்படி எந்நாட்டவனும் எவ்வினத்தவனும் இந்துவாகும்போது ஆரியனாகிறான். இந்து மதத்தைச் சேராதவர் ஆரியராக முடியாது.

சிந்து நதிக்குக் கிழக்கே கங்கை சமவெளியில் ஒரு சிறு பகுதி பண்டைக்காலத்தில் ஆரிய வர்த்தகம் எனப்பட்டது. இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எக்காரணம் பற்றியோ தம்மை ஆரியர் எனக் குறிப்பிட்டனர். இப்பகுதியிலேதான் வேதங்களும் ஆகமங்களும் உபநிடதங்களும் தோன்றின. ஞானிகளும் முனிவர்களும் வாழ்ந்தனர். பௌராணிக மதம் வளர்ந்தது. காக்கேசிய, ஈரான் முதலிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்குட் புகுந்த குழுக்களை இப்பகுதி மக்கள் மிலேச்சர் எனக் குறிப்பிட்டனர். இந்த ஆரிய மக்கள் எக்காலத்திலாவது இந்தியாவிற்கு வெளியிலிருந்து வரவில்லை என்பதை இவர்களுடைய நூல்கள் கூறுகின்றன. மனிதன் முதன் முதலிலே தோன்றியவிடம் சரஸ்வதி நதிக்கரையெனவும் அங்கிருந்து சென்று அவன் உலகிற் பல பாகங்களிலுங் குடியேறினான் எனவும் வேதங்கள் கூறுகின்றன. புராணங்களும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.

(அ)மனித குலத்துக்கு மூதாதையரான சப்தரிஷிகள் சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்தனர்.

(ஆ)இங்குதான் வேதங்களும் ஆகமங்களும் உபநிடதங்களும் முதன் முதலிற் கூறப்பட்டன.

(இ)ஆரிய மதமும் தருமங்களும் தோன்றின.

இப்படிப்பட்ட கதைகள் பல மக்களிடையிலுள்ள உவில்லிய வேதமும் இப்படிப்பட்ட கதைகளில் ஒன்றாகும். குமரி நாட்டிலிருந்து மக்கள் இந்தியா முழுவதிலும் வேறு பல நாடுகளிலும் பரவினர் என்பது தமிழராகிய எமது கதையாகும். இக்கதையை இந்நூல் கூறுகிறது. சரஸ்வதி நதிக்கரையிலிருந்து மக்கள் இந்தியா முழுவதிலும் உலகிலும் பரவினர் என்பது வட இந்திய புராணக் கதையாகும். எது உண்மை என்பதை வருங்காலத்தில் விஞ்ஞானிகள் முடிவு செய்யட்டும். ஆனால் இவற்றிலிருந்து ஒரு பேருண்மையை அறியலாம். இந்திய மக்கள் யாவரும் அடிப்படையில் ஓரினத்தவர் என்பதும் எமது மொழிகளில் “ஆரியர்”, “திராவிடர்” என்ற சொற்கள் இன அடிப்படைக் கருத்துடையவையல்ல என்பதும் வெளிப்படை பௌராணிக மதமும் ஆரியப் பண்பாடும் பிற்காலத்தில் இந்தியாவின் ஏனைய பகுதிகளிற் பரவியபோது, அப்பகுதி மக்களும் ஆரியராகினர். தக்கணத்திலும் வடகிழக்கு இந்தியாவிலும் வாழ்ந்த மக்கள் சங்க காலத்தில் ஆரியராகக் கருதப்படவில்லை என்பதைச் சிலப்பதிகாரங் காட்டுகிறது.

“கொங்கணர் கலிங்கர் கொடுங் கருநாடர் பங்களர், கங்கர், பல்வேற்கட்டியர் வடவா ரியரோடு.” இங்கு ஆரியர் என்பது நாட்டடிப்படைச் சொல்லாகும்.

மேனாட்டவர் ஆரியர் திராவிடர் என்ற சொற்களை இன அடிப்படைக் கருத்திற் பயன்படுத்தினர். இவர்கள் மக்களை நான்கு அடிப்படை இனங்களாக வகுத்தனர். ஆரியர், நடுநிலக் கடலக மக்கள், நீக்குரோக்கள், மங்கோலியர், வடபுல மக்கள் ஆரியராவர். ஆரிய மக்களுக்குச் சர்மனியர், காக்கேசியர், ஈரானியர் உதாரணமாவர். “இவர்கள் நீண்டுயர்ந்த தேகத்தின. வெள்ளை நிறத்தினர். கரிய அல்லது நீல விழியினர். முகத்தில் மிகுந்த மயிரினர், நீண்ட மண்டையினர், ஒடுங்கி உயர்ந்திருந்தாலும் தனிப்பட நீளாத மூக்கினர். மேனாட்டவர் இங்கு வந்தபின் ஆரியர், திராவிடர் என்ற எமது சொற்களுக்கு அவர்களுடைய இன அடிப்படைக் கருத்துக்களைக் கொடுக்க எத்தனித்தபடியினால், வரலாற்றில் மயக்கமும் குழப்பமும் ஏற்பட்டன.

பண்டை இந்திய மக்களைக் கியேர்சன என்பவர் ஏழு அடிப்படை இனங்களாகப் பிரிக்கிறார். (1) துருக்கி - ஈரானியர் (2) இந்திய – ஆரியர் (3) ஆரியத் - திராவிடர் அல்லது இந்துஸ்தானியர் (4) சித்தியத் திராவிடர் (5) மங்கோலியர் (6) மங்கோலியத் திராவிடர் (7) திராவிடர்

மேலும் அவர் கூறியதாவது:-

“சென்னை மாகாணத்தில் உள்ளவர்கள் எல்லாம் திராவிடர் என்றோ அன்றி வங்காளத்தில் உள்ளவர்கள் எல்லாம் மங்கோலிய – திராவிடர் என்றோ கூறுவது அறியாமையாகும். பண்டுதொட்டு இவ்வினங்கள் யாவும் இந்தியாவிற் பலகாலம் வாழ்ந்து கலந்துவிட்டன. ஆகவே ஆரியர் – திராவிடர் என்பன போன்ற இனப்பிரிவுவகை ஆராய்ச்சிக் கருவியாகக்கொண்ட பொதுவான அளவுகோலாகும்.” இன்று மக்கள் மொழி அடிப்படையில் இனங்களாகப் பிரிக்கப்படுகின்றனர்.

பண்டைக்காலத்தில் இந்தியா முழுவதிலும் தெற்கே குமரி நாட்டிலும் வாழ்ந்த மக்கள் நடுநிலக் கடலக இனத்தவர் என்பதில் ஐயமில்லை. இவர்களை நாம் திராவிடர் என்போம். ஆனாற் காலத்துக்குக் காலம் பலவினக் குழுக்கள் வெளி நாடுகளிலிருந்து இந்தியாவிற் குட்புகுந்து அங்கு வாழ்ந்த திராவிட மக்களுடன் கலந்தன. இவற்றில் மூன்று இனங்ள் முக்கியமாகக் குறிப்பிடலாம். (1) மங்கோலியர், இவர்கள் முதன் முதலில் இந்தியாவிற்குட் புகுந்த காலம் கி.மு. 14,000 அளவிலாகக் கணிக்கப்படுகிறது. இவர்கள் இமயமலைச் சாரலிலும் வடகிழக்கு இந்தியாவிலும் பரவினர். கிழக்குக் கரையோரமாக இலங்கை வரையும் வந்தனர் என்வும் யக்கரும், நாகரும், மங்கோலிய இனத்தவர் எனவும் ஒரு கொள்கையுண்டு. வங்காளத்திலும் அராமிலும் வாழும் மக்கள் மங்கோலியருடன் ஓரளவு கலந்த திராவிடராவர். மங்கோலிய – திராவிடர் எனப்படுவர். ஆனால், இப்பகுதிகளிலேதானும் மங்கோலியருடன் கலப்பில்லாத திராவிடரும் பெருந்தொகையாக உளர்.

(2)சிதியக் குழுக்கள் இந்தியாவிற்குள் முதன் முதலிற் புகுந்த காலம் கி.மு. 9000 அளவிலாகும். இவையும் திராவிட மக்களுடன் கலந்தன. குஜராத்திலும், மகாராஷ்டிரத்திலும், சிந்திலும் வாழும் மக்கள் சிதிய – திராவிடராவர். அதாவது சிதியருடன் ஓரளவு கலந்த திராவிடர், பிற்காலத்திலே பல குழுக்கள் பிற நாடுகளிலிருந்து வந்து இந்தியாவின் மேற்குக் கரையோரங்களிற் குடியேறின. யவனர் கிரேக்கர், அரேபியர், சீரியர் இவைகளுட் சில.

(3)ஆரியர் என்ற சொல்லை மேனாட்டவரின் இன அடிப்படைக் கருத்திற் பயன்படுத்துவோம். கி.மு. 2000 அளவில் மத்திய ஆசியாவிலிருந்தும் ஈரானிலிருந்தும் பல நாடோடிக் குழுக்கள் இந்தியாவிற்குட் புகுந்தன எனவும் இவையே இந்தியாவிற்குள் முதன் முதலிற் புகுந்த ஆரியக் குழுக்கள் எனவும் மேனாட்டவர் எடுத்துக்கொண்டனர். பிற்காலத்தில் இந்திய வரலாறெழுதிய இந்தியரும் மேனாட்டவரும் மாக்ஸ்முலர் இறிக்வேத காலத்தை கி.மு. 2000 அளவிலாக நிரூபித்துவிட்டனர் என எவ்விதமான ஆதாரங்களுமின்றி எடுத்துக் கொண்டனர். இக்கால வரையறையை இந்துக்களாகிய நாம் எக்காலத்திலாவது ஒப்புக்கொண்டதில்லை. ஆரிய வர்க்கத்திலே வேதங்களும் உப நிடதங்களும் தோன்றிய காலமும், முனிவர்களும், மெஞ்ஞானிகளும் வாழ்ந்த காலமும் கி.மு. 2000 இற்கும் பல்லாயிரம் வருடங்கள் முற்பட்டவையாகும். இந்திய – ஆரியரின் தாயகம்பற்றி இரு கொள்கைகளுண்டு.

(1)இந்திய – ஆரியர் எனப்பட்டோர் எக் காலத்திலாவது வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரவில்லை. இவர்களும் பண்டை இந்திய மக்களாவர். மத அடிப்படையிலோ, திசை அடிப்படையிலோ தம்மை ஆரியர் எனக் குறிப்பிட்டனர். இவர்கள் மேனாட்டவரின் இன அடிப்படையில் ஆரியரல்லர். இந்தியாவிற்குட் புகுந்த காக்கேசிய ஈரானிக் குழுக்களை இவர்கள் மிலேச்சர் எனக் குறிப்பிட்டனர். இக்கருத்து உண்மையாயின், வேதமொழி தானும் பண்டை இந்திய மொழிகளிலொன்று என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இக்கருத்தையே இந்நூலிற் பல விடங்களில் வற்புறுத்துகிறேன். ஆரியமும் தமிழும் ஒரு சாதியார் வழங்கிய இரு வேறு பாஷைகள் என்பதும் அத்துவிதம் என்பதும் மரபுக்கொள்கை.

(2)அலெக்சாண்டரின் படைகள் இந்தியாவிற் சிந்து நதிவரையும் வென்றன. கங்கைச் சம வெளிக்குள்ளும் புகுந்தன. அலெக்சாண்டர் இறந்தபின் அவருடைய படைவீரர் வென்ற நாடுகளை ஆண்டனர். சிந்து வெளிக்கு மேற்கேயுள்ள நாடுகள் இப்படை வீரர் கையில் இருந்தன. இக்காலத்துக்குப் பின் இப்பகுதிகள், ஆங்கிலேயர் ஆட்சி வரையும் இந்திய வரலாற்றிலிருந்து மறைந்தன. அலெக்சாண்டர் படையில் கிரேக்கர், யவனர், அரேபியர், துருக்கியர், ஈரானியர் முதலிய பல நாட்டு மக்கள் இருந்தனர். இவர்களையும் கி.மு. 2000 அளவில் இந்தியாவிற்குட் குடிபுகுந்த குழுக்களையும் மேனாட்டவரின் இன அடிப்படையில் ஆரியராகக் கருதலாம்.

கிறித்துவ சகாப்தத்தின் ஆரம்பத்தில் மேற்கே உரோமப் பேரரசும் கிழக்கே சீனப் பேரரசும் இருந்தன. இவற்றுக்கிடையில் நான்கு பேரரசுகள் இருந்தன.

(1)பார்த்திய அரசு: பார்த்தியா, மீடியா, பாரசிகம், பாபிலோனியா முதலிய நாடுகள் இவ்வரசக்குட்பட்டிருந்தன. சிந்து ஆற்றுவாய் முகத்திலும் குஜராத்திலும் பார்த்திய மன்னரின் சேனைவீரர் ஆட்சி செய்தனர்.

(2)காந்தார அரசு: இவ்வரசு பற்றீயா தொடக்கம் யமுனை வரையும் பரந்து கிடந்தது. இதைச் சாகர் குலத்தவர் ஆண்டனர்

(3)மகத அரசு :- காந்தாரத்திற்குக் கிழக்கே இமயமலை தொடக்கம் தமிழ்நாடு வரையும் (கங்கைச் சமவெளியும் உட்பட, மகதப் பேரரசு இருந்தது. இதையாண்டவர் ஆந்திரப் பெருங்குடி சார்ந்த மகாகர்ணராவர்.

(4)தெற்கே சேர சோழ பாண்டிய அரசுகள் இருந்தன.

இந்துஸ்தானியர் யாவரையும் ஆரிய திராவிடர் எனக் குறிப்பிட்டோம். கங்கைச் சமவெளியில் உத்தரப் பிரதேசம், பீகார் மாகாணங்களில் வாழும் மக்கள் ஆரிய – திராவிடராவர். விந்திய மலைக்குத் தெற்கே வாழும் மக்கள் திராவிடர். தக்கணத்தில் அற்ப ஆரியக் கலப்புண்டு. கஸ்மீரம் இராசஸ்தான மேற்கு வடவெல்லை மாகாணம் முதலிய பகுதிகளில் வாழும் மக்களே இன அடிப்படையில் ஆரியராவர். இப்பகுதிகளிலும் திராவிடருடன் ஓரளவு கலப்புண்டு. இப்பகுதிகள் இன்று பெரும்பாலும் பாகிஸ்தானில் இருக்கின்றன.

சங்க காலத்துக்குப் பின்பு தமிழ் நாட்டுக்கு வந்த ஆரியர் எனப்பட்டோர் பெரும்பாலும் கலிங்கர், கன்னடர், மேலைக்கீழைச் சாளுக்கியர், இராட்டிரகூடர், கங்கர், கோசர், தெலுங்கராவர். இவர்களே வடமொழியையும் பிராமணியத்தையும் தமிழ் நாட்டிற் பரப்பியவர்கள். இவர்கள் யாவரும் இன அடிப்படையில் திராவிடரே. பிராமணர் வழக்கமாகத் தம்மை ஆரியர் என்கின்றனர். இவர்களும் இன அடிப்படையிhல் ஆரியர்களல்லர். இக்கூட்டத்திற் பலவினங்களும் குலங்களுமுண்டு.

(அ)திராவிட மக்களுக்குள் எகிப்திய குருமாரைப் போன்ற ஒரு குலத்திவர் இருந்தனர். இவர்கள் ஐயர். பார்ப்பனர், அந்தணர் எனப்பட்டனர். தொல்காப்பியத்திற் குறிப்பிடப்படுகின்றனர்.

“அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும், ஐவகை மரபின் அரசர் பக்கமும், இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்.”

“நூலே கரகம் முக்கோல் மனையே ஆயுங் காலை அந்தணக்குரிய”

(ஆ)நாகர் முன்டர் குலங்களிலும், மந்திரத்திலும் மருத்துவத்திலும் வல்ல குருமார் இருந்தனர்.

(இ)தெற்கே குடிபெயர்ந்த வடநாட்டு ஆரிய – திராவிடப் பிராமணர்.

(ஈ)தக்கணத் திராவிடப் பிராமணர்.

(உ)தமிழ் நாட்டிலே பிழைப்பதற்காகப் பூனூல் போட்ட திராவிடர்.

திராவிடர்
திராவிடர் என்ற சொல்லை மேனாட்டவரின் இன அடிப்படைக் கருத்தில் இந்நூலிற் பயன்படுத்துவோம். மேனாட்டவரின் நடுநிலக் கடலக மக்களும் திராவிடரும் ஒன்றென எடுத்துக் கொள்வோம். இதுவே, பெரும்பாலான ஆராய்ச்சியாளரின் கருத்தானபடியினால், இதிலிருந்து விலகுவது மயக்கத்துக்கு ஏதுவாகும். தமிழர் திராவிட இனங்களில் ஒன்றென்பதை யாவரும் ஒப்புக்கொள்வர். ஏனைய திராவிட இனங்கள் போன்று நாம் பொய்ப் புராணங்கள் எழுதவில்லை. சிங்கத்திலிருந்தோ முனிவர்களிலிருந்தோ தேவர்களிலிருந்தோ, அக்கினியிலிருந்தோ, சூரியசந்திரரிலிருந்தோ தோன்றவில்லை. உயிரினத்தின்படி வளர்ச்சியில் தோன்றினோம். ஆதி மனிதர் இராமப் பிதிக்கஸ், லெமூரியர் எனப்பட்டனர். எமது உண்மை வரலாறே, எமது பண்டை நாகரிகத்துக்கும் பண்பாட்டிற்கும் போதிய சான்றாக இருப்பதினாற் புராணங்கள் அனாவசியமாகும்.

இன்று தமிழர் என்ற சொல் மொழி அடிப்படையிற் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மொழி பேசும் மக்கள் யாவரும் திராவிட இனத்தவராயினும், ஒரே குலத்தவர் என முடியாது. தமிழர் இந்தியா முழுவதும் பரந்து தமது ஆட்சியையும் நாகரிகத்தையும் பரப்பியபோது, ஏனைய திராவிடக் குலங்களுடன் கலந்தனர். தமிழ் மொழியே திராவிட மொழிகள் யாவற்றுக்கும் மூலமும், முதலுமாயது. ஏனைய திராவிட இனத்தவர் தமது குழுப் பேச்சு மொழிகளைக் கைவிட்டுத் தமிழ் மொழியை ஏற்றனர். இவர்களுடைய மொழி சிதைந்த கொடுந்தமிழாக இருக்கலாம். ஆதலால், இன்று தமிழரில் முண்டர், நாகர், இயக்கர், வேளீர், கந்தருவர் முதலிய பல திராவிடக் குலங்கள் உள.

பண்டைக்காலத்தில் இந்தியா முழுவதிலும் இலங்கையிலும் கிழக்கிந்திய தீவுகள் தொடக்கம் அமெரிக்கா வரையும் மத்திய இரேகைக்கு இரு மருங்கிலுமுள்ள நாடுகளிலும் திராவிட இன மக்கள் வாழ்ந்தனர். இவ்வுண்மையைப் பேராசிரியர்கள் ரிசிலியும் றாப்சனும் வற்புறுத்துகின்றனர். இம்மக்கள் இலேமூரியாக் கண்டத்திலிருந்து சென்று அமெரிக்கா வரையுமுள்ள பல நாடுகளிற் குடியேறினர் எனக் கர்ணாமிர்த சாகரங் கூறுகிறது. உலகிலே தற்காலத்திலுள்ள எல்லா மக்களும் அடிப்படையில் இக்கரிய பழுப்பு நிற இனத்தவரென ர்.பு. வெல்சு தமது உலக வரலாற்றுச் சுருக்கத்திற் கூறுகிறார். இன்றும் இலங்கை முதல் இமயம் வரை பரவியிருக்கும் மக்கட் கூட்டத்தாரிற் பெரும் பகுதியினர். திராவிடரெனப் பேராசிரியர் ரிசிலி கூறுகிறார். இது பெரும்பாலான ஆராய்ச்சியாளரின் முடிவாகும்.

திராவிடர் யாவருங் கறுப்பு நிறந்தவரல்லர். இவர்களிற் பல்வேறு நிறத்தவரைக் காணலாம் - கறுப்பு நிறத்தவர், கறுப்பில் வெளியேறிய நிறத்தவர், சிவப்பு நிறத்தர், பொன்னிறம் மிகுந்தவர். பழுப்பு நிறத்தவர். பண்டைக் காலத்தில் திராவிட இனங்களே உலகையாண்டன எனவும், ஆதியில் நாகரிக மடைந்தவர் இவர்களே எனவும், புதுக்கற்கால நாகரிகம் இவர்களுடையதெனவும் ர்.பு. வெல்சு கூறுகிறார். கடலாட்சியும், நிலவாட்சியும் செய்த பண்டைத் திராவிட இனங்கள் பலவாகும். அக்காலத்திலே திராவிட மக்களே கடலோடிகளாகவும் உலக வாணிகராகவும் இருந்தனர். பண்டைக் காலத்திற் புகழ்பெற்ற கடலோடித் திராவிட இனங்கள் பின்வருவனவாகும். வட ஐரோப்பாவிலிருந்து ஐபீரியர், ஸ்பெயின் நாட்டுப் பாஸ்குகள், இத்தாலி நாட்டு எட்றஸ்கானர், வட ஆபிரிக்கா, கிழக்காசியா, தென் ஐரோப்பியா நாடுகளிற் பரவிய கார்த்தேசியர், பினீசியர், கிறீசிலும் கிறீட்டிலும் வாழ்ந்த ஈஜியர், செங்கடலுக்கு அப்பெயர் அளித்த எரிதிரையர், சுமேரியர், ஏலமியர், சிந்து வெளி மக்கள் இந்தியாவில் வாழ்ந்த திரையர், பரதர். இவர்கள் வாணிபத்திற்காக மேற்கெ அத்துலாந்திசு வரையும் கிழக்கே பசுபிக் தீவுகள் வரையுஞ் சென்று பற்பல இடங்களிற் குடியேறினர்.

பண்டை இந்தியாவில் வாழ்ந்த திராவிட இனத்தின் கிளைகள் பல. பல குலங்குடிகள் இருந்தன.

(1)முண்டர்: இவர்கள் அவுத்திரலொயிட் மக்களாவர். கிழக்கிந்திய தீவுகளிலும் பசுபிக் தீவுகளிலும் வாழும் மக்கள் பெரும்பாலும் இவ்வினத்தவராவர். கிழக்கிந்திய தீவுகளிலிருந்து இவர்கள் இந்தியாவிற்குட் புகுந்தனர் என்பது ஒரு கொள்கை. இவர்கள் பண்டைக்காலத்தில் இலேமூரியாக் கண்டத்திலும் இந்தியாவிலும் வாழ்ந்த ஆதிவாசிகள் என்பது மற்றக்கொள்கை. தமிழர் இந்தியாவிற்கு வரமுன், இவர்களே இந்தியாவில் வாழ்ந்த பூர்வீக மக்கள் என்பது சிலரின் கருத்தாகும். ஆனால், இது தவறான கருத்தென்பதில் ஐயமில்லை. ஏனென்றால், தமிழர் எக்காலத்திலாவது வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரவில்லை. குமரி நாடே தமிழரின் பூர்வீக தாயகம். வரலாறுக்கு முற்பட்ட காலந்தொட்டுத் திராவிடரும் முண்டரும் குமரி நாட்டிலும், இந்தியாவிலும் ஒருங்கு வாழ்ந்து இரண்டறக் கலந்துவிட்டனர். பண்டைக்காலத்திலேயே முண்டர், திராவிடரின் மொழி, சமயம், பண்பாடு, நாகரிகம் முதலியனவற்றை ஏற்றுத் திராவிடராகிவிட்டனர்.

இன்று இந்தியாவில் இம்மக்கள் பல பாகங்களிற் பல பெயர்களினாற் குறிப்பிடப்படுகின்றனர். முண்டர், கொலர், சண்டாளர், பில்சுகள், குறும்பர், கானவர், குறவர், இலங்கையில் வாழும் தமிழர், சிங்களவர் சமுதாயங்களிலும் இவ்வின மக்கள் உளர். இன்றும் இந்தியாவிற் பல பாகங்களில் முண்டர் மொழிகள் பேசப்படுகின்றன. தக்கணத்தில்:- ஐவாங், கேரியாகடவா@ சவநா, மத்திய பிரதேசத்தில் :- கூர்க்கு.

(2) நாகர்:- பண்டைக்காலத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் நாகர் குலத்தவர் பரந்து வாழ்ந்தனர். இவர்களும் இலேமூரியாக் கண்டத்தின் பூர்வீக குடிகளாவர். தென் கிழக்காசிய நாடுகள் எல்லாவற்றிலும் - இந்தியா, இலங்கை, பர்மா, மலேசியா, கிழக்கிந்திய தீவுகள் எல்லாவற்றிலும் - நாகர் வாழ்ந்தனர். தமிழர் மாத்திரமன்றிச் சிங்களவர், கலிங்கர், வங்காளர், பர்மியர், மலேசியர், திபெத்தியர், நேபாளர் முதலிய மக்களும் பெரும்பாலும் நாகர் மரபினராவர். பர்மா, மலேசியா, யாவா, சுமாத்திரா முதலிய நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள தொடர்பு பெரும்பாலும் நாகர் தொடர்பாகும். மன்னர் குடிப்பெயர்களில் மட்டுமன்றி, இடப்பெயர்கள், மக்கட் பெயர்கள் ஆகியவற்றிலும் மொழியிலும் வாழ்விலும் சமயத்திலும் பண்டைச் சாவக நாட்டில் நாம் பல தமிழ்த்தொடர்புகளைப் பொதுவாகவும் பாண்டிநாட்டுத் தொடர்புகளைச் சிறப்பாகவுங் காண்கிறோம். பாண்டியன், மீனன், ஊர், சிவன் முதலிய பெயர்கள் 4000 வருடங்களுக்கு முன்பே பல நாடுகளில் வழங்கப்பட்டன. இந்தியாவின் எல்லாப் பாகங்களிலும் - வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் - நாகர் வாழ்ந்தனர். பல நாகர் இராச்சியங்கள் இருந்தன. இராவணன் இயக்கர்கோன் அவனுடைய மனைவியாகிய மண்டோதரி, மாதோட்டையில் (தற்கால மன்னாரில்) அரசாண்ட நாகவரசர் குலத்தவள். அக்காலத்தில் நாகரும் இயக்கரும் ஒரே மொழியினராகவும் ஒரே சமயத்தவராகவும் இருந்தனர். ஒற்றுமையாக வாழ்ந்தனர். பாண்டவரில் ஒருவனாகிய அருச்சுணன் சித்திராங்கனை எனும் நாக கன்னியை மணந்தான். புத்தர் காலத்தில் வட இந்தியாவில், நாகர் இராச்சியங்கள் பல இருந்தன. மௌரியருக்கு முன் சைசுநாகர் மகத நாட்டை 300 வருடங்கள் ஆண்டவர். புத்தபிரான் கபிலர் வழியில் தோன்றிய நாகர் குலத்தவரென “ஓலட்காம்” எனும் ஆராய்ச்சியாளர் கூறுகிறார். புத்த சமயம் நாகரின் பேராதரவைப் பெற்றது. அவர்கள் வாழ்ந்த நாடுகளில் எல்லாம் விரைவிற் பரவிற்று.

இன்று இமய மலைச்சாரலில் நாகர் நாடு இருக்கிறது. இந்நாகர் சீனருடன் கலத்தவராவர். சீனரையும் நாகர் குலத்தவர் எனச் சிலர் குறிப்பிடுகின்றனர். தென்னிந்தியாவில் நாகர் அரசுகள் பல இருந்தன எனத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் தக்கசீலம் எனும் நகரை அடுத்துள்ள இடங்களில் நாகர் பெருந்தொகையாக வாழ்ந்தனர். மலையாளப் பகுதி இவர்களுடைய சிறப்புவாய்ந்த குடியிருப்பாகும். தலைச்சங்கத்திலும் இடைச்சங்கத்திரும் கடைச்சங்கத்திலும் நாகர் குலத்தைச் சேர்ந்த பல புலவர் இருந்தனர். நாகரின் தாய்மொழி தமிழாகும். தமிழரும் நாகரும் இன அடிப்படையிலே திராவிடராவர். ஆனால் வௌ;வேறு குலத்தவரா அல்லது ஒரே குலத்தவரா? ஒரே குலத்தவர் என்பதற்கிச் சில சான்றுகள் இருப்பினும், சமயத்தையும், பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் நோக்கும்போது வௌ;வேறு குலத்தவர் போலத் தோன்றுகின்றனர். ஈழ நாட்டுத் தமிழ் வேளாளரும் சிங்கள “கொய்கம” சாதியினரும் நாகவேளாளராவர்.

பண்டைக் காலத்தில் நாகர் தொழில் வல்லுநராகவும், சிற்பிகளாகவும், கடலோடிகளாகவும், வணிகராகவும் இருந்தனர். கல்வியிலும், கலைகளிலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கினர். இவர்களுடைய வழிபாடுகளை இன்றும் இந்தியாவிலும் இலங்கையிலும் பலவிடங்களிற் காணலாம்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இலங்கையிற் பல பகுதிகளிற் பல நாகர் அரசுகள் இருந்தன. விசேடமாக மேற்குக் கடற்கரைப் பகுதிகளைக் குறிப்பிடலாம். முதலாவது மணிபல்லவம். இது தற்கால யாழ்ப்பாணமாகும். இரண்டாவது மாதோட்டை. இது தற்கால மன்னார்ப் பகுதியாகும். மூன்றாவது கல்யாணி. இது தற்காலக் கலனியாவாகும். இரண்டாம் நூற்றாண்டிற் கல்யாணியை ஆண்ட திசா என்பவரின் காலத்திலே கடற்பெருக்கினாற் கல்யாணி இராச்சியத்திற் பெரும் பகுதியும் அழிந்ததெனப் புத்த ஏடுகள் கூறுகின்றன.

“அக்காலத்திற் கடல் கல்யாணியிலிருந்து இருபத்தொருகல் தொலைவிலிருந்தது. சமயக் குருவின் வெம்பழியாற் காவல் தெய்வங்கள் சினங்கொண்டு கடலெழுச்சியினால் நிலம் அமிழச் செய்தன. 10,000 பேரூர்களும், 770 மீன் பரவலர் சேரிகளும், 400 சிற்றூர்களுஞ் சேர்ந்து கல்யாணியின் பன்னிரண்டிற் பதினொடு பங்கு கடலில் ஆழ்ந்தது.” (இராஜவள்ளி)

வட இலங்கையிற் கந்தரோடை நாகர் குடியிருப்புத் தலைநகராக இருந்தது. நாகர்களிடையில் ஏற்பட்ட பிணக்குகளைத் தீர்ப்பதற்குப் புத்தபிரான் இலங்கைக்கு மூன்று முறை வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. – முதன்முறை மகியங்கனைக்கும் இரண்டாம் முறை நாகதீபத்துக்கும் மூன்றாம் முறை கல்யாணிக்கும், அக்காலத்தில் இலங்கையிலிருந்து ஏனைய நாகர் இராசதானிகளாவன:- தெற்கே – திசமகறாமை@ கிழக்கே – கிரிநுவரை. மாத்தளைக்கு வடக்கே லெனதொதை. அக்காலத்திலே வாழ்ந்த மக்கள் நாகரான படியினால் இத்தீவு நாகர் தீவு எனப்பட்டது. அநுராதபுரத்திலாண்ட விசயன் பரம்பரை ஐந்து தலைமுறைகளில் அழிந்தபின் நாகர் குலத்தவர் ஆண்டனர். இலங்கை வரலாற்றிலே திசன், நாகன் எனும் பெயர்கள் நாகர் குலத்தவரைக் காட்டுகின்றன. பண்டைக் காலத்தில் நாகர் நாகரிகம் எகிப்து தொடக்கம் கிழக்கிந்திய தீவுகள் வரையும் பரந்திருந்தது. நாகர்களிலும் பல பிரிவினர் இருந்தனர். ஓவியர் என்போர் மிக நாகரிகமுடையவராக இருந்தனர்.

(3)இயக்கம்: இமயம் தொடக்கம் ஈழம் வரை இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலும் ஈழத்தின் கிழக்கு மத்திய பகுதிகளிலும் இயக்கர் வாழ்ந்தனர். இவர்கள் ஆண்மையிலும், வீரத்திலும், போரிலுஞ் சிறந்து விளங்கினர். இயக்கர் அரசுகள் பல பண்டைக்காலத்தில் இருந்தன. இலங்கை வேந்தனாகிய இராவணன் இயக்கர்கோன் மறத்தமிழன், சிவபக்தன், போருக்கு அஞ்சாதவன். பிற்காலத்தில் புராணம் எழுதிய பிராமணர் நயவஞ்சகனும், கோழையும், அரசுக்குப் பேராசைப்பட்டவனும், இனத் துரோகியுமான விபூடணனைப் போற்றிப்புகழ்ந்தனர். இராவணனுக்குப் பின்பு இலங்கையில் இயக்கர் நிலைமை சீர்கேடடைந்தது. இயக்கர் மங்கோலிய இத்தவரென்பது சிலரின் கொள்கையாகும். இது தவறான கொள்கையென இன்று உணரப்படுகிறது. இயக்கர் திராவிட இனத்தவர் வடகிழக்கு இந்தியாவில் இவர்கள் மங்கோலியருடன் ஓரளவு கலந்திருக்கலாம்.

(4) நிருதர்: திராவிட மக்களுக்கும் நீக்கிரோ மக்களுக்கும் பண்டு தொட்டுத் தொடர்புண்டு. ஒரு காலத்தில் இருவின மக்களும் இலேமூரியாவில் ஒளி நாட்டிலும் பெருவள நாட்டிலும் வாழ்ந்தனர். இந்நாடுகள் அழிந்த போது, தப்பியர்வகளிற் பெரும்பாலானோர் ஆபிரிக்காக் கண்டத்திற் குடியேறினர். சிலர் குமரி நாட்டிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் குடியேறினர். இந்தியாவிற் குடியேறியவர் திராவிடர்களுடன் கலந்தனர். சில இந்திய மக்களில் நிருதரின் அடையாளங்களை இன்றும் காணலாம். கொச்சி நாட்டுக்காடர், புலையர் உதாரணமாவர். பண்டைக்காலத்தில் நிருதர் பல காலங்களிற் பொதியம் வரையும் வென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன

(5) பரதர், திரையர், பானியர்: இவர்களே பண்டைக்காலத்திற் கடலோடிய திராவிட மக்களாவர். உலகிற் பல நாடுகளுடன் வாணி பஞ்செய்ததுமன்றி அந்நாடுகளிற் குடியேறி நிறம், மொழி, வேற்றுமையடைந்தனர்.

(6) தமிழர்: இவர்கள் குமரி நாட்டிற் பெரும்பாலும் வாழ்ந்த திராவிட இனத்தவர், வேளீர் எனப்பட்டனர். தெற்கிலிருந்து இந்தியா முழுவதும் பரவித் தமது ஆட்சியையும், மொழியையும் பரப்பினர், சிலர் தமிழரைக் கந்தருவர் என்கின்றனர். தமிழரின் பண்பாடு இலக்கியங்களிற் குறிப்பிடப்படும் கந்தருவர் பண்பாட்டை ஒத்திருப்பதே இக்கொள்கைக்குக் காரணமாகும்.

(7) ஏனைய திராவிட இனங்கள்: கடம்பர், வில்லவர், மீனவர், எயினர், ஒளியர், தோடர், மறவர், மாறர், கோசர், குறும்பர், கங்கர், வானரர், வானவர் முதலியோராவர். இறிக் வேதத்திற் பண்டை இந்திய மக்கள் தாசுக்கள் எனப்பட்டனர். கொடிகளின் அடிப்படையிற் குறிப்பிடப்பட்டனர்.

பறவர் - பறவைக்கொடி
மீனவர் - மீன்கொடி
பானியர் - பனைக்கொடி
அணிலர் - அணிற்கொடி
சிபையர் - கிளிக்கொடி
கோழியர் - கோழிக்கொடி
நாகர் - பாம்புக்கொடி
வில்லர் - விற்கொடி
வானரர் - குரங்குக்கொடி

குமரி நாடு கடலாற் கொள்ளப்பட்ட போது, அங்கிருந்து சென்று வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் குடியேறிய திராவிட இனங்கள் பின்வருவனவாகக் குறிப்பிடப்படுகின்றன:- பிராகுவியர், ஆந்தரர், கோடர், தோடர், கொண்டர், நாகர், துளுவர், கருநாடர், மலையாளர், வேளீர், கந்தருவர்.

பண்டைக்காலத்தில் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் ஈழத்திலும் வாழ்ந்த மக்கள் திராவிடராவர். இவர்கள் கிழக்கிந்திய தீவுகள் தொடக்கம் அமெரிக்கா வரையும் நடுநிலக் கடலக நாடுகளிற் பரவியிருந்தனர். இந்நாடுகளின் பழைய நாகரிகங்களும் வழிபாடுகளும் கலைகளும் இவ்வுண்மையை நிரூபிக்கின்றன. இந்நாடுகளில் வழங்கிய எழுத்துக்களினதும் தமிழ் எழுத்துக்களினதும் உற்பத்தி ஒன்றென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தமிழர் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தனரா அல்லது இந்திய நாட்டுப் பூர்வீகக் குடிகளா? இது பற்றி மூன்று கொள்கைகளுண்டு.

(1)திராவிடர் மத்திய தரை நாடுகளில் தோன்றி இமயமலை கணவாய்கள் வழியாக இந்தியாவிற்குட் புகுந்து இந்தியாவின் வடமேற்கு நாடுகளில் முதன்முதலிற் குடியேறிப் பின்பு தெற்கே வந்தனர் என்பது முதலாவது கொள்கையாகும். இக்கொள்கைக்கு ஆதாரங்களாவன:-

(அ)பலுச்சிஸ்தானில் ஒரு சாரார் பேசும் மொழி திராவிட மொழியை ஒத்திருப்பது@

(ஆ)கடவுள் வழிபாடு, கோயில் அமைப்பு, சிற்பம், பிரேதங்களைப் புதைக்கும் தாளிகள் முதலியனவற்றிற் சுமேரியருக்கும் தமிழருக்கும் உள்ள ஒற்றுமைகள்@

(இ)மத்தியதரை நாட்டு மக்களாகிய மிட்டானியர், ஏல்மையிற்றுக்கள், காசைற்றக்கள் என்போர் மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்குமுள்ள ஒற்றுமைகள்@

(ஈ)ஈரானிலுள்ள காஸ்பியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலுள்ள உடலமைப்பு ஒற்றுமைகள்@

(உ)தமிழ் என்பது த்ரமிளம் எனும் வட சொல்லிலிருந்து பிறந்தது. த்ரமிளம் என்ற சொல்லின் கருத்து துரத்தப் பட்டவர் என்பதாகும். எனவே, தமிழர் வடமேற்கு இந்தியாவில் ஒருகாலத்தில் வாழ்ந்தனர். பின்பு, தெற்கே துரத்தப்பட்டனர்.

இவை யாவும் திராவிடர் இந்தியாவிலிருந்து சென்று இந்நாடுகளிற் குடியேறினர் எனுங் கொள்கைக்குஞ் சமமாகப் பொருத்தமுடையனவாகும்.

(2)தமிழர் திபெத்திலிருந்து இந்தியாவிற்குட் புகுந்த மங்கோலிய இனத்தவர் என்பது இரண்டாவது கொள்கையாகும். இக்கொள்கையைத் “தமிழர் வரலாறு” எனும் நூலிற் சூரிய நாராயண சாத்திரியார் விளக்குகிறார். இக்கொள்கைக்கு ஆதாரங்களாவன:-

(அ)மங்கோலியருக்கும் திராவிடருக்கும் உடலமைப்பிலும் சமூகப் பழக்க வழக்கங்களிலும் உள்ள ஒற்றுமைகள்:

(ஆ)அசாமில் வாழும் காஸ்சிகளும் திராவிடரும் பல வகைகளில் ஒத்திருப்பது@

(இ)தமிழ் நாட்டரசர் வானவர் குலத்தவர் என்ற மரபுக் கதை. அவர்கள் திபெத்திலிருந்து வந்தவரெனச் சிலர் வியாக்கியானஞ் செய்தனர்.

(3)தமிழர் இந்தியாவிற் பூர்வீக குடிகள், மனித இனம் தோன்றிய காலந் தொட்டு இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். குமரி நாட்டிலிருந்து இந்தியா முழுவதும் பரவினர். இது மூன்றாவது கொள்கையாகும். இக்கொள்கையையே எமது இலக்கியங்களும் புராணங்களும் மரபுக் கதைகளும் வற்புறுத்துகின்றன.

திராவிடர் அல்லது தமிழர் மத்தியதரை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்தவரா? இந்தியா அல்லது குமரிநாடு அவர்களின் தாயகமா? இதுபற்றி அறிஞர்களினதும் ஆராய்ச்சியாளர்களினதும் அபிப்பிராயங்கள் சுருக்கமாகப் பின்வருவனவாகும்:-

(1)மக்கள் தோன்றுவதற்கு அடிப்படையானோர் மத்திய தரைக்குங் கிழக்கிந்திய தீவுகளுக்கும் இடையே கிடந்த பெரிய பூகண்டத்தில் தோன்றிப் பெருகிய கபிலநிற மக்களாவர். மத்திய தரை நாடுகளில் ஆதியில் வழங்கிய பாஸ்க் மொழியும் திராவிடமும் நெருங்கிய தொடர்புடையவை:- ர்.பு. வெல்சு.

(2)உலகிலுள்ள மண்ணியல் அமைப்புக்களில் தக்கணமே மிகப் பழையது. பழைய கற்காலச் சின்னங்கள் தக்கணத்திலேயே பெருமளவு காணப்படுகின்றன:- பேராசிரியர் ளு.ர். இறிஸ்லி.

(3)பண்டை நடுநிலக் கடலக மக்களின் வழிபாடுகள் திராவிடரின் வழிபாடுகளாகும். இன்று இவை ஏனைய நாடுகளில் அழிந்து விட்டபோதிலும், இந்தியாவில் நிலை பெற்றிருக்கின்றன.

(4)அவுத்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா முதலியன முன்னொருகாலத்தில் தரையால் இணைக்கப்பட்டிருந்தன. இக்கண்டமே ஆதிமக்களின் தொட்டிலாகும்:- கலாநிதி பேசுடோ.

(5)பழைய கற்காலச் சின்னங்கள் தக்கணத்திற் காணப்படுகின்றன. இங்கிருந்து மக்கள் மத்திய இந்தியாவிலும் கங்கை யமுனைச் சமவெளிகளிலும் வடமேற்கு இந்தியாவிலும் இமயம் வரையுங் குடியேறினர் - இந்தியாவும் பசுபிக் உலகமும்.

(6)இந்திய நாட்டிலே தொல்லுயிர்கள் வளர்ச்சியடைந்து பெருகின. மனிதன் இங்கு தோன்றித் தத்தளித்து மேலோங்கினான்:- பேராசிரியர் கிரேம் உவில்லியம்.

(7)நடு நீலக் கடலகமக்கள் மேற்கிலிருந்து கிழக்குச் சென்றனரென இதுவரை நம்பப்பட்டது. ஆனால், இவர்கள் கிழக்கிலிருந்து மேற்குச் சென்றனர் என்பதை இன்று ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. (வணக்கத்துக்குரிய கெறஸ் பாதிரியார்)

(8)இந்தியாவில் நீண்டகாலமிருந்து நாகரிகம் வளர்த்த பின்பு திராவிடர் மேற்கு நோக்கிக் குடிபெயர்ந்தனர். மெசொப்பற்றாமியா முதலிய பல நாடுகளில் தங்கிப் பிரிட்டிஷ் தீவுகள் வரை தமது நாகரிகத்தைப் பரப்பினர் – வணக்கத்துக்குரிய கெறஸ் பாதிரியார்.

(9) வரலாறு உணரலாகாப் பழங்காலத் திராவிட மக்கள் தாமும் நாகரிக மறியா இழி நிலை மக்களாக வாழ்ந்தவராகத் தெரியவில்லை. ஆரியர் அவர்களிடையில் வந்து வாழத் தொடங்குவதற்கு முற்பட்ட காலத்திலேயே திராவிட மக்கள் நாகரிக வாழ்வில் அடியிட்டிருந்தனர் என்பதில் ஐயமில்லை – கால்டுவெல்.

(10)ஆரியர் இந்தியாவிற்கு வரன்முனரே இந்தியாக் கண்டம் எங்கணும் பெருந் தொகையினராய்ப் பரவியிருந்தவர் தமிழரும் அவரோடு இனப்பட்ட திராவிடருமே – பேராசிரியர் றாப்சன்.

(11)திட்டவட்டமான தேக அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு இனங்களை வகுப்பர். இந்த அடிப்படையிற் பார்த்தால் இந்திய மக்கள் பெரும்பாலுந் திராவிடர் என்பதில் ஐயமில்லை. பேராசிரியர் இறிக்ஸ்லி.

(12)திராவிட மக்களே இந்தியாவின் பூர்வீக குடிகள். இவர்கள் பூர்வீக குடிகளல்லர் என்பதற்கு எவ்வித சான்றுமில்லை – கலாநிதி கியேர்சன்.

(13) தென்னிந்தியாவே திராவிட மக்களின் தாயகம். இவர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்ததாக மரபுக்கதை தானுமில்லை – கலாநிதி பேக்குசன்.

(14) குமரி முனைக்குத் தெற்கேயுள்ள ஞாலத்தின் நடுக்கோட்டிற்கு இரு மருங்கிலுமிருந்த நிலப்பகுதிகளே மக்கள் வாழ்விற்குத் தக்க நிலையை முதற் கண் அடைந்தன. அங்கு மக்கள் முதற் கண்தோன்றி வளர்ந்து நாகரிகத்துக்கு வித்திட்டனர் – கொக்கல்.


மூன்றாம் அத்தியாயம்
மொழிகளும் சமயமும்
சமஸ்கிருதத்தை வட மொழியாகவும் தமிழைத் தென்மொழியாகவும் எடுத்துக் கொள்ளுகிறோம். வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் வேறு பல மொழிகள் இருப்பதை நாம் உணருவதில்லை. வடமொழியா தென்மொழியா சிறந்தது? எது காலத்தால் முற்பட்டது? குறித்த சொல் வடசொல்லா? தமிழ்ச் சொல்லா? இப்படிப்பட்ட வீண் வாதங்களில் ஈடுபடுகிறோம். ஒருசொல் வடமொழியிலும் தமிழிலும் இருப்பின் அதை வடசொல்லெனச் சிலர் முடிவு கட்டி விடுகின்றனர். தமிழிலிருந்து அச்சொல் ஏன் வட மொழிக்குப் போயிருக்க முடியாது?

முன்னொரு காலத்திலே இந்தியா முழுவதிலும் (வடக்கிலும் மெற்கிலும் ஈழமும் உட்பட) ஓரின மக்கள் வாழ்ந்தனர். ஒரே திராவிட மொழியையோ கிளை மொழிகளையோ பேசினர். வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் இன்று வழங்கும் மொழிகள் யாவற்றுக்கும் ஏதொவொரு பண்டைத் திராவிட மொழியே மூலமென அறிஞர் கூறுகின்றனர். ஒரு மொழியே பதினெட்டாகியதென மேருமந்திர புராணங் கூறுகிறது. இம் மொழியே எகிப்து, மேற்கு ஆசியா, கிழக்காசிரியா, கிழக்கிந்திய தீவுகள் முதலிய நாடுகளிற் பண்டைக் காலத்தில் வழங்கிய மொழிகள் எல்லாவற்றுக்கும் மூலமொழியாகும் என்கின்றனர். இம்மூல மொழி பண்டைத் தமிழாக இருக்கலாம். அல்ல பண்டைத் தமிழ் தானும் இம்மூல மொழியினின்று தோன்றியிருக்கலாம்.

காலத்துக்குக் காலம் இந்தியாவிற்குட் பல நாடுகளிலிருந்து பலவின மக்கள் புகுந்தனர். அரசுகளைக் கைப்பற்றி ஆண்டனர். இவர்களுடைய குழுப் பேச்சு மொழிகள் கலந்து மாற்றமடைந்தன. வடஇந்தியாவிற்குள்ளே தான் பிறநாட்டுக் குழுக்கள் பெருந்தொகையாகப் புகுந்த படியினால், வட இந்திய மொழிகளே பெருமாற்றமடைந்தன. ஒரு மொழியின் மூலத்தை அதன் சொற்றொகுதியிலிருந்து மட்டுங் காணமுடியாது. அதன் இலக்கண வரம்புகளிலிருந்தும் வசன அமைப்பிலிருந்துங் காண வேண்டும். இவ்வாறு ஆராய்ந்த மொழியியல் வல்லுநர் வட இந்திய மொழிகளுக்கும் திராவிடமே மூலமொழி எனக் கூறுகின்றனர்.

கி.மு. 2000 அளவிலும் அதற்குப் பின்னரும் மத்திய ஆசியாவிலிருந்தும் ஈரானிலிருந்தும் பல நாடோடிக் குழுக்கள் இந்தியாவிற்குட் புகுந்தன. இவை ஏதோவொரு குழுப் பேச்சு மொழியுடன் வந்தன. இது திருந்தாத கரடு முரடாண பேச்சு மொழி எழுத்தும், இலக்கண வரம்புகளும் இல்லாத மொழி, இக்குழுக்கள் இந்தியாவிற்கு வந்தபின் இவர்களுடைய குழுப் பேச்சு மொழி இலக்கணமும் எழுத்துமுடைய திராவிட மொழிகளுடன் கலந்தது. இலக்கணத்தையும் எழுத்துக்களையும் பல்லாயிரஞ் சொற்களையுங் கடன்பட்டது. மேலும், வட இந்தியாவில் வழங்கிய திராவிட மொழிகள் இக்குழுப் பேச்சு மொழியுடன் கலந் பெருமாற்றமடைந்தன. இன்று வழங்கும் வட இந்திய மொழிகள் பெரும்பாலும் இக்கலப்பிலிருந்து தோன்றியவையாகும்.

சமஸ்கிருதம் பிற்காலத்திலே தோன்றிய மொழி. செயற்கை மொழி, செம்மையாக்கப்பட்டது என்பது இச்சொல்லின் கருத்தாகும். ஆரிய – திராவிடர் பிற்காலத்தில் உருவாக்கிய மொழி. பண்டிதர்களினதும் படித்தவர்களினதும் மொழி. அரசகருமமொழி, சங்ககாலத்துக்குப் பின்பு பல்லவர், களப்பிரியர், சாளுக்கியர் கங்கர் இராட்டிரகூடர் ஆட்சிக் காலத்திற் சமஸ்கிருதம் 500 ஆண்டுகள் தமிழ் நாட்டிலும் ஆட்சி மொழியாக இருந்தது. இக்காலத்திலே தான் தமிழில் அதிக வடமொழிக் கலப்பு உண்டாகியது. இவ்விடைக் காலத்திற் சமஸ்கிருதம் இந்தியா முழுவதிலும் மட்டுமன்றிப் பிறநாடுகளிலும் பெருஞ் செல்வாக்கடைந்தது. இந்து சமய ஞானங்கள் எல்லாம் பொதிந்த மொழி சமஸ்கிருதமாகும். ஆதலால், இந்துக்களாகிய நாம் மத அடிப்படையில் இம் மொழியைத் தெய்வ மொழியாகக் கருதுகின்றோம். இம்மொழியும் இந்திய மொழியே. சில தமிழர்களிடையில் வடமொழித் துவேஷத்தைக் காண்கிறோம். இதற்கு அறிவின்மையே காரணமாகும். ஆரியமும் தமிழும் ஒரு சாதியார் வழங்கிய இரு வேறு பாஷைகள், மூலம் ஒன்றே.

“மாரியம் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய முந்தமி ழும்முட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.”

தமிழ்பெருவள நாட்டிலே தோன்றிக் குமரி நாட்டிலே வளர்ந்து இந்திய முழுவதும் பரவிய மொழியாகும். இஃது எக்காலத்திலே தோன்றியதென வரையறை செய்ய முடியாத அளவுக்குப் பழமையுடையது.

“தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்த்திடு
சூழ்கலை வாணரும் -இவள்
என்று பிறந்தவள் என்று ணராத
இயல்பின ளாம் எங்கள் தாய்.” (பாரதி)

பழமையில் தமிழுக்கு ஒப்பாக வேத மொழி ஒன்றை மட்டுமே குறிப்பிடலாம். வேத மொழியா தமிழா முந்தியது எனுங் கேள்விக்கு விடை ஆரியரைப் பற்றிய எமது கொள்கையைப் பொறுத்ததாகும்.

வேத மொழி அடிப்படையிற் கி.மு. 2000 அளவில் மத்திய ஆசியாவிலிருந்தும் ஈரானிலிருந்தும் இந்தியாவிற்குட் புகுந்த குழுக்களின் பேச்சு மொழி, இந்திய திராவிட மொழிகளுடன் கலந்து வேற்றுமையடைந்தது. இக்கருத்தை மேனாட்டவர் பத்தொன்பதாம் நூற்றாண்டிற் பரப்பினர். இக்கொள்கை உண்மையாயின், வேத மொழி தமிழ் மொழிக்கு மிகமிகப் பிந்தியதாகும்.

(2) இக் கருத்தை இந்துக்களாகிய நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மிகப்பழைய காலத்திலே இந்தியாவில் வேதங்கள் தோன்றின. முனிவர்களும் மெய்ஞானிகளும் சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்தனர். வேதமொழியும் பண்டை இந்திய மொழிகளில் ஒன்று. ஆனாற் பிற்காலத்திற் புகுந்த குழுக்களின் பேச்சு மொழியுடன் கலந்து வேற்றுமையடைந்தது. இக்கொள்கை உண்மையாயின், வேத மொழியும் தமிழைப் போன்று எக்காலத்திலே தோன்றியதென வரையறைசெய்ய முடியாத அளவுக்குப் பழமையுடையது.

“வடமொழியைப் பாணினிக்கு
வகுத்தருளி அதற்கிணை யாத்
தொடர்புடைய தென் மொழியை
உலகெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார்
கொல் லேற்றுப் பாகர்.” (காஞ்சி புராணம்)

இம் மொழிகளின் பழமையை நோக்கியே இவை இறைவனால் அருளப்பட்ட மொழிகள் எனப்படுகின்றன. அறிவும் அன்பும்போல சக்தியுஞ் சிவனும்போல அத்துவிதமான மொழிகள்.

இப்போது மொழியியல் ஆராய்;ச்சியாளர் சிலரின் கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

(1) வடமொழி இந்தியாவில் நுழைந்த காலந் தொட்டுத் திராவிடச் சொற்களைக் கடன்பட்டது. அக்காலத்தில் திராவிடர் பலுச்சிஸ்தானிலிருந்து வங்காளம் வரை பரவியிருந்தனர். அவர்களுடைய கலைகளையும் சமயத்தையும் மொழியையும் ஆரியம் மீது தெளித்தனர் – கலாநிதி ளு.மு. சட்டச்சி.

(2) எ.ஒ. என்பன பாளி மொழியிற் காணப்பட்டாலும், பல்லிடத்துப்பிறக்கும் எழுத்துக்களை நாவிற் பிறப்பனவாக உச்சரித்தமை, ஆரியருக்கு முற்பட்ட மொழியைக் காட்டுகிறது. திராவிடரின் முன்னோரே இந்தியாவிற் பாளி மொழி பேசினவராதல் வேண்டும். வங்க மொழியுந் திராவிட மொழிக்குப் பெரிதுங் கடமைப்பட்டது. தமிழில் உள்ள ‘கள்’ விருதியே வங்க மொழியிற் குலீ, குவா என வழங்கப்படுகிறது – கலாநிதி சு.பு. பண்டக்கார்.

(3) வடமொழி இந்து – ஐரொப்பிய மொழி இனத்தைச் சேர்ந்தது. ஆனால், மற்ற இந்து – ஐரொப்பிய மொழிகளில் இல்லாத மிகப் பல வினைப் பகுதிகளும் சொற்களும் வடமொழியிற் காணப்பட்டவையாகும். வட இந்திய மக்கள் தூய ஆரியரல்லர். ஆரியருந் திராவிடருங் கலந்தவர் - இந்திய மொழியியல் வரலாறு – கியேர்சன்.

(4) சிந்துவெளி மக்களின் மொழி ஆரியருக்கு முற்பட்டது. இதற்குரிய மூன்று காரணங்களாவன:-

(அ) ஆரியர் வருவதற்கு முன் வட இந்தியாவிற் சிறந்த நாகரிகத்தோடு வாழ்ந்தவர் தி ராவிடரேயாவார்.

(ஆ) சிந்துவெளிக்கு அண்மையிலே இன்றளவும் திராவிடமொழிகள் காணப்படலாற், சிந்துவெளியில் ஆரியருக்கு முன் பரவியிருந்த மொழி திராவிடமாயிருக்கவேண்டும்.

(இ) திராவிட மொழிகள் ஒட்டுமொழிகளாதலின் அவற்றுக்கும் சுமேரியருடைய ஒட்டு மொழிகளுக்கும் உள்ள தொடர்பை நன்கு சோதித்து உணரவேண்டும் - சேர் யோன் மாசல் மொகஞ்சதாரோவும் சிந்துவெளி நாகரிகமும்.

(5) வடமொழி, பிராகிருதம், திராவிடம் இம்மூன்றையுஞ் சோதித்துப் பார்ப்பின், பண்டைக்காலத்தில் வடஇந்தியா முழுவதிலும் திராவிடம் இருந்ததென்பது தெளிவு. பாளி முதலிய பிராகிருத மொழிகள் உருபுகளைச் சொற்களின் முற்கூட்டும் வடமொழிமுறையை அறவே கைவிட்டுத் திராவிட முறைப்படி சொற்களின் பின்னரே உருபுகளைக் கூட்டினமையாலென்க – திராவிட ஆராய்ச்சிகள்.

(6) புதிய கற்கால மக்கள் இந்தியா முழுவதுந் திராவிடமொழிகளையே பேசினர். விந்திய மலைப்பகுதிகளைச் சேர்ந்த சில இடங்களிலே தான் அவுத்திரலொயிட் (முண்டா) மொழிகள் பேசப்பட்டன. இன்று வட இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளும் ஆரியர் வரகவ்கு முன் திராவிட மொழிகளாக இருந்தவையாகும். அவை வடமொழியின் கலப்பால் தமது உண்மை இயல்பை இழந்துவிட்டன. அவை வடமொழியையோ பிராகிருதத்தையோ சேர்ந்தவைகளல்ல. இவ்விரண்டின் கூட்டுறவினால் உருவங்கெட்டவை. பஞ்சாப்பிலிருந்து ஒரிசாவரை பேசப்படுகின்ற பல்வேறு வட இந்திய மொழிகளும் இலக்கணவமைப்பில் தென்னிந்திய மொழிகளை ஒத்தனவாகும். பால், எண், வேற்றுமை உருபுகள், பெயர்களோடு பொருந்துதல், எச்சங்கள், வினைச்சொல்லின் பலவகைக் கூறுபாடுகள், வாக்கியவமைப்பு, சொல், அலங்காரம் முதலிய அம்சங்களில் வட இந்திய மொழிகள் திராவிட மொழிகளையே ஒத்தன.

இன்றுள்ள வட இந்திய மொழிகள் ஆரியர் வரகவ்கு முன் திராவிட மொழிகளாக இருந்தன. இன்று ஆரியமொழிக் கலப்பினால், அடிப்படையில் திராவிடமாகவும் மற்றவற்றில் ஆரியமாகவும் இருக்கின்றன@ வடமொழி ஒருபோதும் பேசப்பட்ட மொழியன்று. எனவே அது வட இந்திய மொழிகளின் பிறப்புக்குரிய பேச்சு மொழியாக இருந்திருக்கமுடியாது. வட இந்திய (திராவிட) மொழிகள் வடமொழியோடு பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்புகொண்டிருந்தமையினால் அவை தமது பண்டை உருவை இழந்து தமிழ் முதலிய மொழிகளிலிருந்து வேறுபட்டனபோல மேற்போக்கிற் காணப்படுகின்றன. இம்மேற்போக்கான நிலையை மட்டுமே கவனித்து “வட இந்திய மொழிகள் வேறு, தென்னிந்திய மொழிகள் வேறு” என ஆழ்ந்த அறிவற்ற சிலர் நினைத்தனர். இன்று பேச்சு வழக்கிலுள்ள இந்திய மொழிகள் அனைத்தும் திராவிடக் கிளைமொழிகளே” இந்தியாவிற் கற்காலம் - P.வு.னு. ஐயங்கார்.

(7) இன்றைய தமிழ் மொழியும் தமிழ் நாடு வேதகால நாகரிகத்துக்கு நெடுந் தொலைவில் இருக்கின்றன. எனினும் தமிழின் பழைய மொழியான திராவிடம் வேதகால ஆரியத்துக்கு அண்மையில் இருந்தது. வேதகால மொழியிலேயே பெரு மாற்றத்தை உண்டாக்கிப் பிற்காலப் பிராகிருத மொழியையும் இன்றைய வடஇந்திய மொழிகளையும் உண்டாக்கி விட்டதென்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் - கீழத்திசை மொழிகளின் ஆராய்ச்சிகள் - சிறீ வெங்கடேஸ்வரி.

(8) காக்கேசிய சித்திய குழுக்கள் இந்தியாவிற்கு வரமுன் திராவிட மொழிகளே வடமேற்கு இந்தியாவிற் பேசப்பட்டவை என்பதில் ஐயமில்லை – பேராசிரியர் றாப்சன்.

(9) சிந்துவெளி மக்கள் திராவிடராவர். ஒரு திராவிடமொழி பேசினர். இம்மொழிக்கும் தமிழுக்கு தொடர்புண்டு. மொழிகள் எல்லாவற்றிலும் தமிழ் மொழியே மிகப் பழையது என்ற கருத்தை இது வலியுறுத்துகிறது – வணக்கத்துக்குரிய கெறஸ் பாதிரியார்.

(10) பண்டை மொழிகளில் தமிழ் மொழியே மிகச் சிறந்தது. இலக்கண இலக்கியமுடையது – மாக்ஸ் முல்லர்.

(11) பண்டை மொழிகளாகிய சமஸ்கிருதத்திலும் கீபுறூ மொழியிலும், கிரேக்க மொழியிலும் பல தமிழ்ச் சொற்கள் உள – றையிஸ் டேவிஸ்.

(12) சுருங்கச் சொல்லி விளங்கவைப்பதில் தமிழுக்கு நிகரான வேறெம் மொழியையும் காணமுடியாது. இறையுணர்ச்சிக்குத் தமிழ் மொழியே சிறந்த கருவியாகும் - வணக்கத்துக்குரிய பேசிர்சிவெல்.

(13) கிரேக்க மொழியைப் பார்க்கினும் தமிழ் செம்மையுந்திட்பமும் உடையது. இலத்தின் மொழியைப் பார்க்கினும் சொல்வளம் உடையது. நிறைவிலும் ஆற்றலிலும் தமிழ் தற்கால ஆங்கிலத்தையும் சர்மன் மொழியையும் ஒத்ததாகும் - கலாநிதி வின்சிலோ.

(14) இந்திய நாகரிகத்தின் அடிப்படை திராவிடர் நாகரிகமும் மொழியுஞ் சமயமுமாகும் - கலாநிதி கில்பேட்சிலேட்டர்.

எல்லாத் திராவிட மொழிகளுக்கும் தமிழ் மொழியே மூலமும் முதலுமானதெனத் தமிழராகிய நாம் கூறுகின்றோம். ஆனால் தமிழும் உட்பட எல்லாத் திராவிட மொழிகளும் ஏதோவொரு மூலத்திராவிட மொழியிலிருந்து தோன்றியிருக்கலாம். இன்றுள்ள தமிழே பண்டைக்காலத்திலும் இருந்ததெனக் கூறமுடியாது. எல்லா மொழிகளுக்கும் மாற்றமும் வளர்ச்சியும் இயல்பாகும். மொழியியல் வல்லுநர் ஒருவர் அளித்த திராவிடக் கிளைமொழி அட்டவணை பின்வருவதாகும்.

திராவிட முதல்மொழி

துளு
கூ பழஞ் கோகாடி உராசுன்
பிரளகி சிங்களம்
சங்கத் மால்டோ
தமிழ்

பழங்
- சிங்களம் கன்னடம்
செந்தமிழ்



தமிழ் மலையாளம்
தெலுங்கு கன்னடம் குடகு


இவற்றுள் திருத்தமுற்ற மொழிகள் ஆறாகும்:- தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, குடகு. திருத்தமுறாத மொழிகள் ஆறாகும்:- தூதம், கோதம், கொண்டு, கூ, ஒரியன், இராசமகால். மேலும் இத்திராவிட முதல் மொழியிலிருந்தே சிந்துவெளி மொழியும் ஏனைய வட இந்திய மொழிகளும் தோன்றின.

இந்து மதம்
இந்தியாவையும் இந்து மதத்தையும் பிரிக்க முடியாது. இந்திய நாகரிகம் பண்பாடென்றாலும், இந்து நாகரிகம் பண்பாடென்றாலும் ஒன்றுதான். தத்துவ ஆன்மீகஞானங்களுக்கும் சமயங்களுக்கும் பண்டுதொட்டு இந்தியாவே இருப்பிடமாகும். இந்துமதத்துக்குரிய சிறப்பான அடிப்படைத் தத்துவங்களுண்டு. இவை இறைவன், உயிர், உடம்பு எனும் முப்பொருள் விளக்கம், மறுபிறப்பு, ஊழ்வினை, ஆலைய வழிபாடு, உருவ வழிபாடு, கொல்லாமை, எல்லா உயிர்களிலும் அன்பு என்பவையாகும்.

“அன்பும் சிவமும் இரண்டென் பரறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமிர்ந்திருந்தாரே.”

இந்துமதக் கொள்கைகளெல்லாம் வேதத்தில் உளவென்பது பிற்காலத் திராவிடப் பிராமணரின் பிரசாரமாகும். இந்து மதத்தின் மேலே குறிப்பிட்ட சிறப்பம்சங்களை வேதத்திற் காணவியலாது. இன்று சிலர் இவற்றை வேதப்பாடல்களுக்குள் வலிந்து புகுத்துகின்றனர். ஆரியரின் வேதத்தில் முப்பொருள் விளக்கமில்லை. மறுபிறப்பு, ஊழ்வினை முதலியவையில்லை. ஆலய வழிபாட்டையும் உருவ வழிபாட்டையும் வேதகால ஆரியர் வெறுத்தனர். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரையும் வேதாந்திகள் இவற்றை முரண்கோட்பாடுகளாகக் கருதினர்.

இறிக் வேதத்திற் பத்தாம் மண்டிலம் தவிர்ந்த – ஏனையவை நாடோடி மக்களின் பாடல்களாகும். பத்தாம் மண்டிலம் பிற்காலத்தில் திராவிடருடன் கலந்து நாகரிகமடைந்த பின்பு எழுதப்பட்டதாகும். இந் நாடோடி மக்கள் மத்திய ஆசியாவில் அலைந்து திரிந்தபோது இயற்கைத் தோற்றப்பாடுகளினாற் பெரிதும் வருந்தினர். இத் தோற்றப்பாடுகளை உருவகித்து அவற்றைச் சாந்தி செய்யப் பாட்டுகள் பாடினர். இவை இந்திரன் (இடிமுழக்கம்) வருணன் (மழை), வாயு (புயற் காற்று) அக்கினி முதலியவையாகும். இந் நாடோடி மக்கள் அறத்தை அறியாதவர். மறவாழ்க்கை நடத்தினர். கொலை செய்தனர். கொள்ளையடித்தனர், மது அருந்தினர், புலால் உண்டனர், அநாகரிக மூர்க்கம் பெண்களை அடிமையாக்கினர். பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டனர். உபநிடதங்களும் ஆகமங்களும் பண்டத் திராவிடர் வேதங்களாகும். இவை பிற்காலத்திலே வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டன.

“இந்து மதத்திலுள்ள கர்மம், மறுபிறப்பு, யோகம், சிவன், சக்தி, விட்டிணு முதலிய மதக் கொள்கைகளும், ஆசாரங்களும், கோவில்களில் நடைபெறும் பூசை முறைகளும் திராவிடருடையவையாகும். புராணங்களும் இதிகாசங்களும் கூறுங் கதைகளும் திராவிடருடைய வையாகும். கலைகள், கைத்தொழில்கள் பயிர் செய்கை முறைகள் திராவிடருடையவை.” – எஸ்.கே. சட்டச்சி.

பண்டைத் தமிழ் வேதங்கள் இருந்தன. இவை, மறை எனப்பட்டன. வேதம், மறை எனுஞ் சொற்களின் கருத்துக்கள் ஒன்றே. மறை எனுந் தமிழ்ச் சொல்லை மொழி பெயர்த்துத் தமது நாடோடிப் பாடல்களுக்கு நாமஞ் சூட்டினர். தமிழ் மறைகள் பற்றிய குறிப்புக்களை தமிழ் இலக்கியத்திற் காணலாம். இம்மறைகள் குமரி நாட்டின் மலைகளில் ஒன்றாகிய மகேந்திரத்தில் தோன்றியவை என மணிவாசகப் பெருமான் கூறுகிறார்.

“மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்”
“கேவேட்டாகிய வாகமம் வாங்கியு
மற்றவை தம்மை மாந்திரத் திருந்து
உற்றவைம் முகங்களாற் பணித்த ருளியும்.”

தமிழ் மறைகள் முப்பொருள் உண்மை. வினைப்பயன், மறு பிறப்பு, கொல்லாமை முதலிய தத்துவ ஞானங்களைக் கூறும் நூல்களாகும். இந் நூல்கள் எமக்குக் கிடைத்தில. பிற்காலத்தில் எழுந்த திருக்குறளும் திருமந்திரமும் பண்டைத் தமிழ் மறைகளின் பொருள்களைக் கூறுகின்றன. திராவிட மறைகளைப் பிற்காலத்திற் பிராமணர் உபநிடதங்களாகவும் ஆகமங்களாகவும் வடமொழியில் எழுதினர்.

ஆலயவமைப்பு, கிரியை முறைகள், வழிபாட்டு முறைகள் முதலியனவற்றை ஆகமங்கள் கூறுகின்றன. ஆலய வழிபாடோ உருவ வழிபாடோ இல்லாத ஆரியர் இந் நூல்களை எவ்வாறு எழுதியிருக்கலாம்? வட மொழியில் இன்றுள்ள ஆகமங்கள் யாவும் திராவிட மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவையாகும். புராணங்களும் இதிகாசங்களும் பெரும்பாலும் ஆரியர் வருகைக்கு முற்பட்ட வரலாறுகளைக் கூறுகின்றன. இவை திராவிட மொழிகளில் இருந்திருக்கவேண்டும். பிராமணர் வடமொழியில் மொழி பெயர்த்தபோது, இவற்றைத் திரித்தும் பெருக்கியும் கட்டுக்கதைகளைச் சேர்த்து தமது கொள்கைகளைப் புகுத்தியும் எழுதினர்.

சைவமே தமிழர் சமயமாகும். இச் சமயம் அனாதியானது. சைவ சமயக் கொள்கைகளை ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தொல்காப்பியத்திற் காணலாம்.

“தென்னா டுடைய சிவனே போற்றி
எந் நாட்ட வருக்கும் இறiவா போற்றி.”

சிவநெறியும் இலிங்க வழிபாடும் பண்டைக் காலத்தில் நடுநிலக்கடலக நாடுகள் எல்லாவற்றிலும் பரவியிருந்தன. ஆனாற் சைவமே எல்லாத் திராவிட மக்களினதுஞ் சமயம் எனக் கூறமுடியாது. இது தமிழ் வேளீர் சமயமாகும். திராவிடக் குலங்களிடையில் வழிபாடுகள் வித்தியாசப்பட்டனவாக இருந்தன.

சங்க காலத்திற்குப் பின்பு தென்னாட்டிற் சமணமும் பௌத்தமும் ஐந்து நூற்றாண்டுகள் பெருஞ் செல்வாக்கடைந்திருந்தன. இவை வடநாட்டிலே தோன்றியபோதிலும் பௌராணிக மதத்திற்கு எதிரான புரட்சிகளாகும். வேத சமயம் திராவிடர் சமயத்துடன் சேர்ந்து பௌராணிக மதமாயிற்று. சங்க காலத்துக்குப் பின்பு பௌராணிக மதமும் சைவமுங் கலந்தன. சமயத்துறையில் இந்திய மக்கள் “எம்மதமுஞ் சம்மதம்” என்ற சமரச மனப்பான்மையுடையவர். இந்து மதத்திற் பல சமயங்களுங் கொள்கைகளுங் கலந்தன. ஆனால், அடிப்படையில் இந்து மதம் திராவிடர் சமயமாகும். இது நடுநிலை நின்று ஆராய்ந்த அறிஞர் பலரின் கருத்தாகும்.

“இந்து சமயம் பண்டைத் திராவிட சமயமாகும். ஆரியர் வருகையினாற் சில அற்ப மாற்றங்கள் அடைந்தது.”
-சேர் சாள்ஸ் எலியொற்.


நான்காம் அத்தியாயம்
பண்டை இந்தியாவும் இலேமூரியாவும்
முன்னொரு காலத்திலே விந்திய மலைக்கு வடக்கே ஒரு மாபெருங் கடல் இருந்தது. அக்காலத்திற் கங்கைச் சமவெளியோ இமயமலைத் தொடரோ இருக்கவில்லை. இவை ஆழ்கடலுக்குள்ளிருந்தன. இக்கடல் இந்தியாவிலிருந்து நடுநிலக்கடல் வரையும் - மேலும் மத்திய ஐரோப்பா வரையும் - பரந்து கிடந்தது. இன்றுள்ள பல நாடுகள் - கங்கைச் சமவெளி, காஸ்மீர், பாகிஸ்தானிற் பெரும்பகுதி, பலுச்சிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாரசிகம் முதலியவை – அன்று பெருங்கடலாக இருந்தன. அக்காலத்தில் ஆசியாவின் மத்திய பகுதியிலும் மிகப் பெரிய கடல் ஒன்றிருந்ததெனவும் அது பிற்காலத்தில் அழிந்துள்ளதாகவும் லெனின் கிறாட் பல்கலைக்கழகச் சமுத்திர ஆராய்ச்சிக் குழு ஒன்று சமீபகாலத்திற் கண்டுபிடித்துள்ளது. இக்கடலை எதிர்நோக்கி விந்திய மலைத்தொடர் இருந்தது. விந்திய மலைத் தொடரிலிருந்து ஆறுகள் இக் கடலுக்குட் பாய்ந்தன. விந்திய மலைத் தொடருக்குத் தெற்கே இலேமூரியா எனும் மாபெருங் கண்டம் ஒன்றிருந்தது.

பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு உலகின் பல பாகங்களிற் பற்பல காலங்களில் பெரும் பெயர்ச்சிகள் உண்டாகின. இக்காலங்களை வரையறை செய்யவியலாது. இவற்றினால் நிலத்தின் புறத்தோட்டில் மடிப்புப் பெயர்ச்சிகள் தோன்றின. கடலுக்குள்ளிருந்த வண்டற் படிவுகளும் கடற்பாறைகளும் படிப்படியாக வளர்ந்து உயர்ந்து தற்போதைய இமய மலைத்தொடர் தோன்றிற்று. கடல் மேற்கு நோக்கிப் பின் வாங்கக் கங்கைச் சமவெளியும் மேலே குறிப்பிட்ட நாடுகளுந் தோன்றின. இம்மாற்றங்கள் உண்டாவதற்குப் பல மில்லியன் வருடங்கள் சென்றிருக்க வேண்டும்.

தென் காற்றுக்கள் திபெத்துக்குட் புகுவதை இமயமலைத் தொடர் தடுத்தபடியினால், இமயமலைப் பகுதிகளில் மழை வீழ்ச்சி அதிகமாயிற்று. ஆறுகள் இமயமலைத் தொடரிலிருந்து கங்கைச் சமவெளிக்குட் பாய்ந்து கடலை அடைந்தன. ஆரம்பத்திற் பல அருவிகள் ஒருங்கு சேர்ந்து ஒரு பேராறாக்கிக் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்தன எனவும் இந்த ஆறு அசாமிலுள்ள பிரமபுத்தரத்தில் உற்பத்தியாகி யமுனைவரையும் மேற்கு நோக்கிப் பாய்ந்து அங்கிருந்து தென் மேற்கு முகமாகத் திரும்பிச் சிந்துப் பிரதேசத்தின் ஊடாகச் சென்று அரேபியன் கடலை அடைந்தது எனவும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்பு இமயமலை மேலும் உயர்ந்து பல மாற்றங்கள் உண்டாகின. மேலே குறிப்பிட்ட ஆறு பிரிந்து பல ஆறுகளாயிற்று. இவற்றுட் சில கிழக்கு நோக்கிப் பாய்ந்தன.

கங்கைச் சமவெளி தோன்றி நெடுங்காலத்துக்குப் பின்பு தென்னிந்தியாவிலிருந்தும் இலேமூரியாக் கண்டத்திலிருந்தும் மக்கள் படிப்படியாக வடக்கே பெயர்ந்து கங்கைச் சமவெளியில் இமயம் வரையுங் குடியேறினர். கி.மு. 2000 வரையும் பிறநாடுகளிலிருந்து இந்தியாவிற்குட் புகுந்த குழுக்களை இரண்டாம் அதிகாரத்திற் குறிப்பிட்டோம். ஆனாற், கி.மு. 2000 இற்குப் பின்னரும் காலத்துக்குக் காலம் பல குழுக்கள் இந்தியாவிற்குட் புகுந்தன. எக்காரணம் பற்றியோ இந்தியா பிறநாட்டு மக்களைக் காந்தம் போல என்றுங் கவர்ந்தது. பல அநாகரிக நாடோடிக் குழுக்களுக்கு வேட்டைக் களமாயிற்று, பிற்காலத்திற் புகுந்த குழுக்களாவன:-

(1) அலெக்சாண்டர் படைகள்:- கிரேக்கர், ரோமர், மசிடோனியர், துருக்கியர், அரேபியர், ஈரானியர் முதலிய பல நாட்டு மக்கள் இக் கூலிப்படையில் இருந்தனர். இவர்கள் யமுனை ஆறுவரையும் வென்று குடியேறினர்.

(2) குஷான், கன்ஸ் (ர்ரளெ) முதலிய மங்கோலிய மக்கள் வடமேற்குக் கணவாய் வழியாக இந்தியாவிற்குட் புகுந்தனர்.

(3) யவனர், எகிப்தியர், அரேபியர், தென்னிந்திய நகரங்களிலும் துறைமுகங்களிலும் குடியேறினர்.

(4) யூதர்களும், பாசிகளும், இந்தியாவிற்கு வந்து குடியேறினர்.

(5) மகமதியர் படையெடுப்பு - இவர்கள் அரேபியர், ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் முதலிய பல நாடுகளிலிருந்து வந்தனர். பிற்கால அக்பார் முதலிய மகமதியர் மங்கோலியராவர்.

(6) ஐரோப்பியர் – போர்த்துக்கீசர், டச்சுக்காரர், பிறெஞ்சுக்காரர், ஆங்கிலேயர்.

பெருங்கடலுக்குட் பல ஆறுகள் பாய்வர் போலப் பலவின மக்கள் இந்தியாவிற்குட் புகுந்த போதிலும், இந்திய மக்கள், இன அடிப்படையில் திராவிடராவர். நாகரிகத்திலும் பண்பாட்டிலும் இந்துக்களாவர்.


2. இலேமூரியா
இமயமுங் கங்கைச் சமவெளியுந் தோன்றாக் காலத்தே விந்திய மலைக்குத் தெற்கே ஒரு மாபெருங் கண்டம் இருந்தது. தெற்கே தென்துருவம் வரையும், தென்கிழக்கே அவுஸ்திரேலியா வரையும் கிழக்கே கிழக்கிந்திய தீவுகள் வரையும் மேற்கே ஆபிரிக்கா வரையும் இக்கண்டம் பரந்து கிடந்தது. அக்காலத்தில் அவுத்திரேலியா, தென்னாபிரிக்கா இந்தியா முதலிய நாடுகள் தரையால் இணைக்கப் பட்டிருந்தன எனக் கலாநிதி பேசுடோ கூறுகிறார். யாவா சுமாத்திரா முதலியவையும் இக் கண்டத்தின் பகுதிகளாக இருந்தன.

இக் கண்டம் இலேமூரியா அல்லது கொந்வானா எனப்பட்டது. மிகமிகப் பழைய காலத்திலே காலத்துக்குக் காலம் ஏற்பட்ட கடற்கோள்களினால் இக்கண்டத்தின் பெரும் பகுதியும் அழிந்தது. இப்பரந்த நிலப்பரப்பில் இந்து மகாசமுத்திரம் தோன்றிற்று. கடலின் அடியிலுள்ள கருங்கற் பாறைகள் வெடித்தமையால் அவுத்திரேலியா, தென்னாபிரிக்கா, இந்தியா முதலிய கண்டங்கள் விடுபட்டு அகன்று சென்றன எனவும், ஐந்தாம் ஊழியில் இம்மாற்றங்கள் நிகழ்ந்தன எனவும் பேராசிரியர் வெசினர் கூறுகிறார். இம்மாற்றங்கள் படிப்படியாக ஏற்படப் பலவிலட்ச வருடங்கள் சென்றிருக்க வேண்டும். மண்ணியலாளர் பின்வருங் கடற் கோள்களைக் குறிப்பிடுகின்றனர்.

(அ) முதலாவது கடற்கோள் பத்துலட்சம் வருடங்களுக்கு முற்பட்டதாகும். (கி.மு 1,000.000). இப்பெரிய கடற்கோளினால் இக்கண்டம் அவுத்திரேலியாவிலிருந்தும் ஆபிரிக்காவிலிருந்தும் பிரிந்து மிகவுஞ் சுருங்கிற்று. இந்து மகா சமுத்திரந் தோன்றிற்று.

(ஆ) இரண்டாவது கடற்கோள் எட்டிலட்சம் வருடங்களுக்கு முற்பட்டதாகும் (கி.மு. 800,000). இக்காலத்தில் நிலப் பரப்பு மேலுஞ் சுருங்கிக் கடற்பரப்பு விரிந்தது.

(இ) மூன்றாவது கடற்கோள் மூன்றிலட்சம் வருடங்களுக்கு முற்பட்டதாகும் (கி.மு. 300,000).

(ஈ) நான்காவது கடற்கோள் எண்பதினாயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாகும். (கி.மு 80,000).

இப்பழைய இலேமூரியாக் கண்டத்தைப் பற்றி எமது இலக்கியங்களிலும் புராணங்களிலும் எவ்வித குறிப்புக்களுமில்லை. ஆனால் மண்ணியலாளரும் மறைஞானிகளும் இக்கண்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர்.

“இலேமூரியா தென்கோளத்தில் இந்து சமுத்திரம் முழுவதிலும் பரந்து கிடந்தது. கிழக்கே அவுத்திரேலியா வரையும் மேற்கே ஆபிரிக்கா வரையும் தெற்கே தென்துருவம் வரையும் இருந்தது. மூன்றாவது ஊழியிலுண்டான கடற் கோள்களினால் அழிந்தது. (கெலியா விளவத்ஸ்கி அம்மையார்). உறுடொல்வ் ஸ்ரீனா எனுங் சர்மன் மறைஞானி இம்மறைந்த கண்டத்தைப் பற்றிப் பல விபரங்கள் கொடுத்தனர். ஸ்கொற் எலியற் என்பவர் இக்கண்டத்தையும் அத்திலாந்திசையும் வரைபடங்கள் மூலம் விளக்கினர். இக்கண்டம் அழிந்த போது தப்பிப் பிழைத்த மக்ள் இந்தியாவிலுங் கிழக்கிந்திய தீவுகளிலும் ஆபிரிக்காவிலுங் குடியேறினரென எலியற் கூறுகிறார்.

இந்த அழிவுகளுக்குப் பின்னரும் இமயம் தொடக்கம் தென்துருவம் வரையும் ஒரு நாடிருந்தது. இந்நாட்டைப் பற்றியே எமது இலக்கியங்களிலும் புராணங்களிலும் பல குறிப்புகள் உள. இதை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்.

(1) வட இந்தியா - இஃது இமயந் தொடக்கம் விந்திய மலைவரையுள்ள நிலப் பரப்பாகும்.

(2) தென்னிந்தியா:- இது விந்திய மலை தொடங்கும் குமரிமரை வரையுள்ள நிலப்பரப்பாகும். இம்மலை மத்திய இரேகையில் இருந்தது. தற்போதுள்ள இலங்கை இப்பகுதியைச் சேர்ந்ததாகும்.

(3) குமரிநாடு – குமரியாறுக்கும் 700 காவதம் தெற்கேயிருந்த பஃறுளியாறுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்புக் குமரிநாடாகும். குமரி நாடே பண்டைத் தமிழ் நாடு@ தமிழ் தோன்றி வளர்ந்த நாடு. தலைச்சங்க மிருந்த நாடு. இதற்கு எல்லம் என்பது வேறொரு பெயராகும். ஏழ், எலு, ஈழம், சிலோன் என்பவை எல்லம் என்பதிலிருந்து பிறந்த சொற்களாகும். மேருமலை குமரியாறுக்குத் தெற்கே பூ மத்திய இரேகைக்கு அண்மையில் இருந்தது. பாஸ்கராச் சாரியார் எழுதிய வான நூலிற் பூமத்திய ரேகை பழைய இலங்கைக்கு ஊடாகச் சென்றதெனக் கூறுகிறார்.

“இடையிற் கலையிம் வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாஞ் சுமுனை”

தற்கால இலங்கையின் தென்முனையும் வடக்காகும்.

மிருகேந்திர ஆகமம் குமரி நாட்டைப் பற்றிய பின்வருமாறு கூறுகிறது. “ஏழு பெருந்தீவுகளின் நடுத்தீவானது நூறாயிரம் யோசனை பரப்புடைத்தாய் வட்டமாய் நிலமகட்கு உந்தித்தானமாயுள்ள நாவலந்தீவு - இந்நாவலந் தீவின் நடுவே மேருமலை – மேரு மலையைச் சூழ்ந்த நிலம் இளாவிருதம்…. பாரத கண்டம் ஒன்பது கண்டங்கள் அல்லது தீவுகள் அடங்கியது:- இந்திரத் தீவு, கசேருத்தீவு தாமிர பரணித்தீவு, சுமதித்தீவு, மாகதீவு, சாந்திரமத்தீவு, காந்தருவத் தீவு, வாகுணத் தீவு, குமரித்தீவு - இவற்றுட் குமரி கண்டம் ஒன்றே சிறந்தது. ஏனைய எட்டுக்கண்டங்களும் மிலேச்சர் வாழுமிடங்களாகும்.”

சிலப்பதிகாரத்துக்கு விரிவுரை யெழுதிய அடியார்க்கு நல்லார் இந்நாட்டைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:-

“அக்காலத்து அவர் நாட்டுத் தென் பாலி முகத்திற்கு, வடவெல்லையாகிய பஃறுளி என்னுமாறிற்கும் குமரி என்னுமாறிற்கு மிடையே எழுநூற்றுக் காவதமாகும். இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ் தெங்க நாடும் ஏழ் மதுரை நாடும், ஏழ் முன் பாலை நாடும், ஏழ் பின் பாலை நாடும், ஏழ் குன்ற நாடும், ஏழ் குண காரை நாடும், ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பனிமலை நாடும், காடும், நதியும் பதியும், தடநீர்க்குமரி, வடபெருங் கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலால்.”

குமரி கண்டத்தைப் பண்டை மக்கள் நாவலந்தீவு எனவுங் குறிப்பிட்டனர். இந்நாட்டிற் பல ஆறுகளும் மலைகளம் இருந்தன. மலைகள் மேரு, மகேந்திரம் முதலியவைகளாகும். மகேந்திர மலையில் ஆகமங்களை இறைவன் உபதேசித்தருளினர் என்பது மணிவாசகப் பெருமானின் அருள் வாக்காகும். “மன்னுமாமலை மகேந்திர மதனில் சொன்ன வாகமந் தோற்றுவித்தருளியும்.” ஆறுகள் குமரி, பஃறுளி முதலியவைகளாகும். பஃறுளி ஆற்றங் கரையிலிருந்த பழைய மதுரை தலைச் சங்கமிருந்த குமரி நாட்டின் தலைநகராகும்.

“எங்கோ வாழிய குடுமீ தங் கோச்
செந்நீர்ப் பசும் பொன் வயிரியர்க் கீந்த
முந்நீர் வழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலிலும் பலவே”

எனக் குமரி நாட்டைக் கடல் கொள்ளாமுன் ஆண்ட முதுகுடுமிப் பெருவழிதியெனும் பாண்டியனை நெட்டிமையார் எனும் புலவர் பாடினர்.

(4) பெருவளநாடு – பஃறுளியாறு தொடக்கம் தென் அயனவரை (வுசழிiஉ ழக ஊயிசiஉழசn) அளவிலுமான நிலப்பரப்பு பெருவள நாடாகும். இந்நாட்டு மலைகளில் மணிமலை ஒன்றாகும்.

(5) ஒளிநாடு – தென் அயன வரை தொடக்கம் தென்துருவம் வரையுமான நிலப்பரப்பு ஒளி நாடாகும்.

பாண்டி நாட்டையும், குமரி நாட்டையும், பெருவள நாட்டையும், முதலாம் நிலந்தருதிருவிற் பாண்டியனும் அவன் குடிவழி வந்தவரும் கி.மு. 30,000 தொடக்கம் கி.மு. 16,500 வரையுமாண்டனர். இது மத்திய கற்காலமாகும். காலத்துக்குக் காலம் நிருதர் படைகள் பொதியம் வரையும் வென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. வட இந்தியாவில் அரசாண்ட திராவிட மன்னர் பாண்டியருக்கு உதவி செய்தனர். கி.மு. 14,000 அளவில் ஒளி நாடும் பெருவள நாடும் அழிந்தன. தமிழ்மொழி பெருவள நாட்டிலே தோன்றிக் குமரி நாட்டிலே வளர்ந்து இந்தியா முழுவதிலும் நடுநிலக் கடலக நாடுகளிலும் பரவிற்று: என்னே, அதன் தொன்மையுஞ் சீருஞ் சிறப்பும் பரப்பும், இதனாலன்றோ தமிழைத் தன்னேரிலாத் தனிமொழி எனவும், உலக முதன் மொழியெனவும், உயர் தனிச் செம்மொழியெனவும் அறிஞர் கூறுகின்றனர்.

தமிழர் வரலாறு குமரி நாட்டில் தொடங்குகிறது. தலை சங்க இடைச்சங்க காலங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களாகும். இடைச் சங்க காலத் தமிழக எல்லைகளைப் பின்வரும் பாடல்கள் கூறுகின்றன:-

“தென்குமரி வட பெருங்கள்
குணகுட கடலா எல்லை.”

“வடாஅது பனி படு நெடுவரை வடக்கும்
தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பவ்வத்தின் குடக்கும்.”

இருபாக்களிலும் இமயமலை வட வெல்லையாகக் குறிப்பிடப்படுகிறது. இங்கு குமரி எனப்பட்டது. தற்காலக் குமரி முனையன்று. மத்திய இரேகைக்குத் தெற்கிலிருந்த குமரிமலை அல்லது குமரி ஆறாகும். பிற்காலத்திற் கிரேக்க எகிப்தியரான பிளினியும் டாலமியும் தமிழகத்தை இலி முரிகே (அல்லது திமுரிகே) எனக் குறிப்பிட்டனர். இது பண்டை இலேமூரியாவை நினைவுறுத்துகிறது. பிளினியும் பாரதமும் மூன்று மதுரைகளைக் குறிப்பிடுகின்றன. இடைச் சங்க காலம் கலியுகத்துக்கும் பாரதப் போருக்கும் முற்பட்டதாகும்.

ஐந்தாம் அத்தியாயம்
சிந்துவெளி நாகரிகம் - நாம் தமிழர்
இருபதாம் நூற்றாண்டிற் புதைபொருள் ஆராய்ச்சியாளர் சிந்துவெளியிற் பல விடங்களில்p அகழ்ந்து புதையுண்டு கிடந்த நகரங்களைக் கண்டனர். இவ்விடங்கள் மொகஞ்சதரோ, கரப்பா, சான்கூதரோ, லொகூஞ்சோதரோ, சகபூர்யாணிசியால், அவிமுராத், பாண்டிவாகி அமரிகோட்லா, நிகாங்கான், அரங்பூர் முதலியனவாகும். இவை மத்திய ஆசியாவிலிருந்து குழுக்கள் இந்தியாவிற்குட் புகமுன் வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த பண்டை மக்களின் நாகரிகத்தையும் வாழ்க்கை முறைகளையும் எமக்குக் காட்டுகின்றன.

இந் நாகரிகத்தைப் பற்றிப் புதைபொருள் ஆராய்ச்சியாளர் கூறும் விபரங்கள் சிலவற்றை முதலிற் சுருக்கமாகப் பார்ப்போம்.

(1) நகரமைப்பும் வீடுகளும்
மொகெஞ்சதரோ ஆற்றோரத்தில் இருந்த நகரமாகும். தெருக்கள் கிழக்கு மேற்காகவும், தெற்கு – வடக்காகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பெரிய தெருக்களை சிறிய தெருக்கள் ஒரே நேராக வெட்டிச் செல்லுகின்றன. பெரிய தெருக்களின் அகலம் ஏறக்குறைய 33 அடியாக இருக்கிறது. 12 அடி தொடக்கம் 18 அடி வரை அகலமுள்ள சிறிய தெருக்களும் காணப்படுகின்றன. எல்லாத் தெருக்களுக்கும் இணைப்புகள் இருக்கின்றன. வீதிகள் ஒழுங்கான முறையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை போன்று தோன்றுகின்றன.

மொகொஞ்சதரோவிற் கால்வாய்கள் இல்லாத பெரிய தெருவோ சிறிய தெருவோ இலை. இவை செங்கற்களினாற் கட்டப்பட்டிருக்கின்றன. இல்லங்களில் அமைக்கப்பட்டிருக்குஞ் சிறிய கழிநீர்க் கான்களுஞ் சிறந்த முறையிற் கட்டப்பட்டிருக்கின்றன. சுவர்களுக்குட் கழிநீர்க் குழைகள் அமைக்கப்பட்டிக்கின்றன. தெருக்களில் ஓடுங் கால்வாய்கள் செங்கற்களினால் மூடப்பட்டிருக்கின்றன. குப்பை கூழிகள் தங்குவதற்குக் கால்வாய்களில் தாழிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. நீண்ட கால்வாய்களுக்கு இடையிடையே தொட்டிகள் காணப்படுகின்றன. இச் சிறந்த வடிகால் துறை வேறெந்தப் பண்டை நகரத்திலும் இருந்ததாகக் கண்டதுமில்லைக் கேட்டதுமில்லையெனச் சேர். யோன் மாசல் வியப்புறுகிறார்.

நகரங்களிற் பலவகைப்பட்ட கட்டடங்கள் காணப்படுகின்றன. வறியவர் இல்லங்களும் செல்வர் மாடமாளிகைகளும் அரசர் அரண்மனைகளும் இருக்கின்றன. வீடுகள் சுட்ட செங்கற்களினாலும் உலந்த செங்கற்களினாலுங் கட்டப்பட்டிருக்கின்றன. சுவர்கள், தரை, கூரை முதலியவை களிமண் சாந்தினால் மேற் பூசப்பட்டிருக்கின்றன. மர உத்திரங்களைப் போட்டு, அவற்றின்மீது நாணற்பாய்களைப் பரப்பி, அப்பாய்களின்மீது களிமண் சாந்தைக் கனமாகப் பூசிக் கூரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வீடுகளில் யன்னல்களையும் கதவுகளையுங் காணலாம். கதவுகள் உயரமானவையல்ல. இங்கு வாழ்ந்த மக்கள் பிற்காலத்தில் இந்தியாவிற்குட் புகுந்த காக்கேசியக் குழு மக்களைப் போன்று உயரமானவர்களல்லர் என்பதற்கு இது சான்றாகும். பெரும்பாலான இல்லங்களில் மலங்கழிப்பதற்குரிய ஒதுக்கிடங்களும் சமையல் அறைகளும், நீராடும் அறைகளும், தையல் அறைகளுங் காணப்படுகின்றன. இல்லங்களுக்கு அண்மையில் ஊற்றுக் கிணறுகள் இருக்கின்றன.

வீடுகளிற் பலவகைப்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டன. அழகான மட்பாண்டங்கள் (ஓவியந் தீட்டப்பட்ட வையுந் தீட்டப்படாதவையும்), மெருகிடப்பட்ட பாண்டங்கள், கைப்பிடி கொண்ட கலன்கள், மைக்கூடுகள், புரிமனைகள், எலிப் பொறிகள், பீங்கான்கள், அம்மிகள், உரல்கள், மமா அரைக்குங்கல், எந்திரங்கள், பலவகை விளக்குகள், பொன், வெள்ளி, ஈயம், செம்பு முதலிய உலோகங்களினாற் செய்யப்பட்ட பட்டயங்களும் கருவிகளும், செம்பினாற் செய்யப்பட்ட ஆபரணங்கள், பானை சட்டிகள், நீலநிறக் கண்ணாடியினாற் செய்யப்பட்ட வளையல்கள், பிள்ளைகளின் பலவகைப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் முதலியவையாகும். விளையாட்டுப் பொருட்கள் மண், சங்கு, தந்தம், கிளிஞ்சல், ஓடுகள், எலும்புகள் முதலியவற்றினாற் செய்யப்பட்டவையாகும். அங்கு சுண்டெடுக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்களிற் சில பின்வருவனவாகும்:- விலங்குகள், பறவைகள், ஆண் பெண் பதுமைகள்ண, சிறு செப்புக்கள், ஊது குழல்கள், தலை அசைக்கும் எருதுகள், கைகளை அசைக்கும் பதுமைகள், வனப்புடைய களிமண் வண்டிகள், சொக்கட்டான் கருவிகள்.

(2) தொழில்களும் வாணிபமும்:-
மொகெஞ்சதரோ ஆற்றோரத்தில் நீர்நில வளமுடைய மருதநிலத்தில் அமைக்கப்பட்ட நகரமாகும். நெல், கோதுமை, வாற்கோதுமை, பார்ளி, எள், பருத்தி முதலியன அங்கு பயிர் செய்யப்பட்டன. எக்காலத்திலும் பண்டை இந்திய நாகரிகத்தி விவசாயமே அடிப்படையாக இருந்தது. பழைய கற்காலந் தொட்டு இந்தியாவில் நெற் பயிர்ச் செய்கை நடைபெற்று வருகிறது. சிந்துவெளி நாகரிகத்திலும் உழவுத் தொழில் சிறப்புற்றிருந்தது. தெற்கே தொல்காப்பியர் காலமும் வடக்கே சிந்துவெளி நாகரிகக் காலமும் ஒன்றாகும். தென்னாட்டில் தொல்காப்பியர் காலத்தில் விவசாயம் அடைந்திருந்த நிலையைப் பின்பு கூறுவோம். பயிர்ச் செய்கைக்கு வேண்டிய நீரை மக்கள் சிந்து ஆற்றிலிருந்து பெற்றிருக்க வேண்டும். மக்கள் பருத்தி ஆடைகளையுங் குளிர் காலத்திற் கம்பளி உடைகளையும் அணிந்தனர். வீடுகள் பலவற்றிற் “கதிர்கள்” கண்டெடுக்கப்பட்டன. நெசவுத் தொழிலின் சிறப்புக்கு இவை சான்றாகும். மக்கள் புலால் உண்டனர். ஆற்று மீன் பிடித்தனர். முக்கிய உணவுப் பொருள்கள் அரிசி கோதுமை, பார்ளி, பேரிச்சை, மீன், இறைச்சி, முட்டை முதலியனவாகும். மொகொஞ்சதரோவில் நடைபெற்ற கைத்தொழில்களைப் பல சான்றுகளிலிருந்து அறியலாம். அவைகளாவன:- கொத்துவேலை, மண்பாண்டத் தொழில், கல் தச்சுத்தொழில், மரத்தச்சுத்தொழில், கன்னார் வேலை, பொற்கொல்லர் வேலை, இரத்தினக் கற்றொழில் செதுக்கு வேலை, சங்குத்தொழில், வண்டி ஓட்டுதல், மீன் பிடித்தல், நாவிதத் தொழில், தோட்டத் தொழில், கப்பல் கட்டுந் தொழில். கப்பலோட்டித்தொழில், தையல் பின்னற்றொழிகள், தந்தவேலைகள், மணிகள் கோர்க்குந் தொழில், பாய்கள் பின்னுதல், சிற்ப ஓவியக் கலைத்தொழில்கள்.

பிற்காலத் தென்னாட்டு நகரங்களைப்பற்றிச் சங்க நூல்கள் கூறுகின்றன. இந்நகரங்களும் மொகெஞ்சதரோவும் பல வகைகளில் ஒத்திருப்பதைக் காணலாம். சிந்துவெளி நாகரிகம் புதுக் கற்கால உலோக கால நாகரிகமாகும். அணிகளும் கருவிகளும் பொருட்களும் பலவகைப்பட்ட உலோகங்களினாற் செய்யப்பட்டிருக்கின்றன. பயன் படுத்தப்பட்ட உலோகங்களாவன:- பொன், வெள்ளி, செம்பு, செம்பில் ஈயக்கலவை, செம்பில் நிக்கற் கலவை, செம்புகலந்த மண், வெண்கலம், வெள்ளீயம், காரீயம், எவ்விரும்புப் பொருட்களாவது கண்டெடுக்கப்படவில்லை. சிந்துவெளியிற் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளிலிருந்து அக்காலத்தில் அங்கு வாழ்ந்த மிருகங்களையும் பறவைகளையும் அறியலாம். இவை யானைகள், நாய்கள், பூனைகள், பன்றிகள், ஆடுகள், கழுதைகள், மான்கள், எருமைகள், திமில் பருத்த எருதுகள், ஓட்டகங்கள், முயல்கள், ஆமைகள் முதலியனவாகும்.

மொகெஞ்சதரோவின் செல்வத்திற்கு விவசாயம் மட்டுமே அத்திவாரமாக இருந்திருக்க முடியாது. இந்நகரம் ஒரு வாணிபமையம் போலத் தோன்றுகிறது. இங்கு வாழ்ந்த மக்கள் இந்தியா முழுவதிலும் வெளிநாடுகளிலும் வியாபாரஞ் செய்தனர் என்பதை இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்டுகின்றன:- உதாரணமாகச் செம்பு முதலிய கனிப்பொருட்கள் இராசபுத்தான் மத்திய மாகாணம் முதலிய இடங்களிலிருந்தும் மான் கொம்புகள் காசுமீரிலிருந்தும் வைரமும், வெள்ளி கலந்த ஈயமும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் உயர்தரப் பச்சைக் கற்கள் பர்மாவிலிருந்தும், பச்சைக் கற்கள் மைசூரிலிருந்தும், அமெசான் கற்கள் நீலகிரியிலிருந்தும் பொன் கோலார் அனந்தபுரி எனுஞ் சென்னை மாகாணத்திலுள்ள இடங்களிலிருந்தும் சங்கு, முத்து முதலியவை பாண்டி நாட்டிலிருந்தும் கிடைக்கப்பட்டவையாகும். தென்னிந்தியா, கத்திவார், வடமேற்கு மண்டிலம், சிந்து – பஞ்சாப் மண்டிலங்கள் கங்கை சமவெளியின் வடபகுதி இராசபுத்தான் முதலிய இந்தியப்பகுதிகளே அக்காலத்தில் வாணிபமுஞ் செல்வமும் மிகுந்த நாகரிகமடைந்த பகுதிகளாக இருந்தனவெனத் தீட்சிதர் எனும் வரலாற்றாசிரியர் கூறுகிறார்.

சிந்துவெளி மக்கள் வெளிநாட்டு வியாபாரத்திற் சிறந்து விளங்கினர் என்பதை அங்கு கிடைத்த எழுத்துக்குறிகளும், முத்திரைகளும், ஓவியங்களும், கருவிகளும் ஏனைய பொருட்களுங் காட்டுகின்றன. இவர்கள் வாணிபஞ் செய்த நாடுகளில் ஏலம், சுமேரியா, மொசொப்பொட்டாமியா, இறாக்கி, எகிப்து முதலியவை சிலவாகும். சிந்துவெளி நாகரிகம் சுமேரிய நாகரிகம் என்ற அபிப்பிராயத்துக்கு இவ்வாணிபத் தொடர்பே காரணமாகும். வியாபாரத்திற்காக இந்திய மக்கள் மேற்காசிய நாடுகளிற் குடியேறினர். மேற்காசிய மக்களும் சிந்துவெளியில் வியாபாரத்திற்காகக் குடியேறியிருக்கலாம். பண்டைக் காலத்தில் திராவிட மக்களே கடற்றொழிலிலும் வெளிநாட்டு வாணிபத்திலுஞ் சிறந்த விளங்கினர். சங்ககாலத் தமிழர் வாணிபத்தைப்பற்றிச் சங்க நூல்கள் கூறுகின்றன. இரண்டு கால வாணிபங்களுக்குமிடையிற் பல ஒற்றுமைகளைக் காணலாம். இருகாலங்களிலும் திரையர், பானியர் முதலிய திராவிட மக்களே கடலோடிகளாகவும் வெளிநாட்டு வாணிகராகவும் இருந்தனர். சுமேரியாவிற்கும் சிந்துவெளிகளும் தென்னிந்தியாவிற்கும் இடையில் இம்மிகப் பழைய காலத்திலேயே வியாபாரம் நடைபெற்றதென ர்.சு. கோல் கூறுகிறார். பின்பு இவ் வியாபாரம் பபிலோனியா, எகிப்து, ஆபிரிக்கா வரையும் பரவிற்று.

உடைகளும் அணிகலன்களும்:-
ஓவியங்கள், பதுமைகள், முத்திரைகள் முதலியவற்றிலிருந்து சிந்துவெளி மக்களின் உடைகளைப்பற்றி ஓரளவு அறியலாம். சிந்துவெளியிற் பருத்தி பயிரிடப்பட்டதினாலும், நெசவுக் கருவிகள் காணப்படுவதினாலும் மக்கள் நூல் நூற்றுப் பருத்தி ஆடைகள் நெய்து அணிந்தனர் என்பதில் ஐயமில்லை. குளிர் காலத்திற் கம்பளி உடைகள் அணிந்தனர். செல்வர் பூவேலைப்பாடுடைய பருத்தி ஆடைகள் உடுத்தினர். வறியவர் கித்தான் போன்ற முரட்டு ஆடைகளையும், நாராற் செய்யப்பட்ட ஆடைகளையும் உடுத்தினர். மேலும், மக்கள் சட்டைகளையும் கழுத்துப் பட்டைகளையும் அணிந்தனர்.

பாவடைகள் மணிகள் கோர்த்துச் செய்யப்பட்டிருக்கின்றன. கண்டெடுக்கப்பட்ட அணிகலன்களாவன:- வளையல்கள், காப்புக்கள், பலவகைப்பட்ட முத்துமாலைகள், கொண்ட ஊசிகள், காதணிகள், இடுப்பில் அணியும் ஒட்டியாணங்கள், சரங்கொண்டை, கையணிகள், நெற்றிச் சுட்டிகள், மூக்கணிகள், மோதிரங்கள், பொத்தான்கள், தலைநாடாக்கள், கூந்தல் ஒப்பனைகள். இவற்றை நோக்கும்போது, தற்காலத் தமிழ் மகளீரும் சிந்துவெளிக் கால மகளீரும் ஏறக்குறைய ஒரே வகையான நகைகளை அணிந்தனர் போலத் தோன்றுகிறது. மேலும் பெண்கள் கண்ணுக்கு மையும் முகத்திற்குப் பொடியும் பூசினர்.

எழுத்துங் கலைகளும்:- இந்தியாவிற்குட் புகுந்த நாடோடி மக்கள் எழுத்தறிவில்லாதவர். பண்டை இந்திய மக்களிடமிருந்து எழுத்துக்களைக் கடன்பட்டனர். தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்ட தமிழ் எழுத்துக்களைப் பற்றிப் பின்பு கூறுவோம். சிந்துவெளியிற் கண்டெடுக்கப்பட்ட பொருட்களி;லும் முத்திரைகளிலும் ஓவிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இவை பண்டைத் திராவிட எழுத்துக்கள் எனவும் சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் எனவும் வணக்கத்துக்குரிய கெறஸ் பாதிரியார் நிரூபிக்கிறார். சிந்துவெளிச் சித்திர எழுத்துக்களிலிருந்து பிராமி எழுத்துக்களும் ஏனைய தென்னிந்திய எழுத்துக்களும் தோன்றினவென அறிஞர் கூறுகின்றனர். சிந்துவெளி மக்களிடையிற் சிற்பம், ஓவியம், இசை, நடனம், கணிதம், மருத்துவம், வானநூல், உடற்பயிற்சி, யோகம் முதலிய பல கலைகள் வளர்ச்சியடைந்திருந்தன.

சமயம்:- மக்களின் சமயமே அவர்களுடைய ஒழுக்கத்துக்கும், பண்பாட்டிற்கும் நாகரிகத்துக்குஞ் சான்றாகும். ஒழுக்கம் உயர்குலம் என்பர். சிந்துவெளி மக்கள் சைவ சமயத்தவர் என்பதும், சைவ சமயம் சிந்துவெளி நாகரிகத்துக்கும் முற்பட்ட பழமையுடையதென்பதும் வெளிப்படையெனச் சேர் யோன் மாசல் கூறுகிறார். “சைவ சித்தாந்தமாவது தென்னிந்தியாவிற்கே சிறப்பாக உரிய தமிழர் சமயமாகும். தென்னிந்தியாவிலே வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட இச் சமயம் தமிழ் மக்கள் நெஞ்சத்தில் நிறை விளங்குகிறது.

சைவத்தைப் போலவே யோகமும் ஆரியருக்கு முற்பட்ட மக்களிடையே தோன்றியதாகும். சிவன் தலையாகிய யோகி மட்டுமன்றி விலங்குகளுக்கெல்லாம் தலைவருமாவர். இப் பண்பினைச் சிவனைச் சுற்றி நான்கு மிருகங்கள் நிற்பது காட்டுகிறது. இவற்றையெல்லாம் நோக்கும்போது, பிற்காலத்திற் சிவனுக்குக் குறிக்கப்பட்ட அம்சங்கள் சிந்துவெளி முத்திரைகளில் தோற்ற நிலையிலே காணப்படுகின்றன.” – சேர் யோன் மாசல்.

சிந்துவெளியில் பெண் தெய்வ வழிபாடும் இருந்தது. இது பண்டைத் திராவிடர் வழிபாடாகும். இவ்வழிபாடு பிற்காலத்திற் சக்தி வழிபாடாகவும், கொற்றவை வழிபாடாகவும், வேறு பெண் தெய்வ வழிபாடுகளாகவும் மாற்றமடைந்தது. பண்டைக் காலத்தில் திராவிடர் சமயமாகிய சிவ வழிபாடும், இலிங்க வழிபாடும், ஞாயிறு வழிபாடும் நடுநிலக் கடலக நாடுகளில் பரவியிருந்தன.

“தென்னாடுடைய சிவனே போற்றி
எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி.”

சிந்துவெளி மக்கள் நதியையுஞ் சிவனையும் வழிபட்டதற்குப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. இலிங்க வழிபாடு இருந்ததை அங்கு கண்டெடுக்கப்பட்ட இலிங்கங்கள் காட்டுகின்றன. இடது காலைத் தூக்கி ஆடும் நடராசர் உருவங்கள் கிடைத்துள. ஆசனமிட்டு யோகத்தில் அமர்ந்திருக்கும் முனிவர் உருவங்களுங் கிடைத்துள. கண்ணன் வழிபாடும் சிந்துவெளி மக்களிடையில் இருந்தது. புதிய கற்காலத்திலிருந்தே கண்ணன் வழிபாடு இந்திய மக்களிடையில் இருந்துவருகிறது. வேதகாலத்திற் கிருட்டினன் ஆரியரை எதிர்த்த தாசுக்களின் அரசனாக இறிக் வேதங் கூறுகிறது. எருதுவாகனக் கடவுள் வணக்கமும் ஞாயிறு வழிபாடும் சிந்துவெளி மக்களிடையில் இருந்தன. பாம்பு வணக்கம், மரத் தேவதைகள் வணக்கம், கருடன் வணக்கம், பெண் தெய்வங்கள் வணக்கம் முதலியன இருந்தமைக்குஞ் சான்றுகள் காணப்படுகின்றன. இதுவே பண்டைக்காலத்தில் ‘நாம் தமிழரின்’ சிந்துவெளி வாழ்க்கையாகும்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிப் பல நூல்கள் உள. இம்மிக உன்னத நாகரிகத்தைக் கண்டு ஆராய்ச்சியாளரும் மேனாட்டறிஞரும் வியப்புறுகின்றனர். இந்நாகரிகத்தையுடைய மக்கள் யாரோ? இந்நாகரிகம் பண்டைத் திராவிட மக்களின் நாகரிகம் என்பதில் எள்ளளவேனும் ஐயமில்லை.

(1) இது மத்திய ஆசியாவிலிருந்தும் ஈரானிலிருந்தும் இந்தியாவிற்குட் புகுந்த நிலையான வாழ்க்கையில்லா நாடோடிக் குழுக்களின் நாகரிகமன்று. இக்குழுக்களின் வேதப் பாடல்களே இதைத் தம்மை எதிர்த்த தாசுக்களின் நாகரிகமெனக் குறிப்பிடுகின்றன. “தாசுக்கள் தட்டை மூக்கினர். கரு நிறத்தவர். மாறுபட்ட வழிபாடுடையவர். விநோத மொழியினர். செல்வப் பெருக்குடன் நகரங்களிலும் கோட்டைகளிலும் வாழ்ந்தவர். போரிற் பேரோசைபோடுபவர். வேள்விகள் செய்யாதவர். பணக்காரர். கால்நடைகளை வளர்ப்பவர்.” இப்பாடல் குறிப்பிடும் தாசுக்களே சிந்துவெளி மக்களாவர். கி.மு. 2000 அளவிற் காக்கேசியாவிலிருந்தும் ஈரானிலிருந்தும் இந்தியாவிற்குட் புகுந்த குழு மக்கள் எப்படிப்பட்டவர் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம். இவர்கள் உயரமானவர், வெண்ணிறத்தவர், நீண்ட மூக்குடையவர், போரில் வீரர், அநாகரிக மூர்க்கர், நிலையான வாழ்க்கையில்லா நாடோடிகள், குதிரை ஏற்றத்தில் வல்லவர், இரும்பைப் பயன்படுத்தியவர், தீ வளர்த்து வேள்விகள் செய்தவர். அக்கினி முதலிய இயற்கை வழிபாடுடையவர். உருவ வழிபாட்டை வெறுத்தவர். உண்மையில் இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை அழித்தவர்களாவர்.

(2) சிந்துவெளி நாகரிகத்தை சுமேரிய நாகரிகம் என்பாருமுளர். இரு நாகரிகங்களிடையிலும் சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இதன் காரணத்தை முன்பு கூறினோம்.

(3) காக்கேசியக் குழு மக்கள் எழுத்தறிவில்லாதவர். சிந்துவெளி மக்களின் ஓவிய எழுத்துக்கள் பண்டைத் திராவிட மக்களின் எழுத்துக்களெனக் கெறஸ் பாதிரியார் கூறுகிறார்,

(4) சிந்துவெளிச் சாசனங்களிலே வேல், வேலாளன் ஊர் எனப் பொருள் தரும் வகையிற் குறிப்புக்கள் அமைந்திருக்கின்றன. மேலும் நாய், வேலூர் முதலிய சொற்களுக்கும் குறிப்புக்களை இச்சாசனங்களிற் காண்கிறோம்.

(5) சிந்துவெளியில் எடுக்கப்பட்ட இலச்சினை ஒன்றில் மூன்று முகங்களுடன் நான்கு மிருகங்கள் சூழத் தியானத்தில் அமர்ந்திருக்கும் உருவம் ஒன்று பொறிக்கப்பட்டிருக்கிறது. இது திராவிடரின் பசுபதியை அல்லது நடராசரை ஒத்ததாகும்.

(6) சிந்து வெளியிற் பல இலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை சில வழிபாட்டையும் இலிங்க வழிபாட்டையுங் காட்டுகின்றன.

(7) பல மீன் இலச்சினைகள் கிடைக்கப்பட்டுள. மீன் பாண்டியரின் சின்னமாகும்.

(8) கண்டெடுக்கப்பட்ட அணிகலன்கள் தமிழ் மாதர் இன்றும் அணியும் அணிகலன்களை ஒத்தனவாகும்.

எனவே சிந்துவெளி நாகரிகம் பண்டைத் திராவிட நாகரிகமாகும். தமிழராகிய எமது நாகரிகம். நாம் ஒரு காலத்தில் இந்தியா முழுவதிலும் வாழ்ந்ததையும் ஆண்டதையும் நினைவுறுத்துகிறது. எமக்குக் கிடைத்த மிகப் பழைய நூல்கள் கடைச்சங்க நூல்களாகும். இவற்றின் காலம் இற்றைக்கு 2000 ஆண்டுகளாகும். இக் காலத்தைப் போன்ற மும்மடங்கு காலத்தில் (கி.மு. 4000 அளவில்) வட இந்தியாவில் வாழ்ந்த மக்கள் திராவிடர் அல்லது தமிழர் என்பதில் ஐயமில்லை. பெருவள நாட்டிலே பிறந்த குமரி நாட்டிலே வளர்ந்த தமிழ் கி.மு. 4000 அளவிற் சிந்துவெளியிலும் பரவியிருந்தது. தமிழ்மொழி தலைச்சங்க காலத்திலே ஆரம்பமாகி, இடைச்சங்க காலத்திலே அரும்பிக் கடைச்சங்க காலத்திலே அலர்ந்த மலர். நாம் தமிழர். எமது மொழி தமிழ். இதைக் கேட்டு அளவிலா இன்பமடைகிறோம். இறும்பூதெய்துகிறோம்.

ஆறாம் அத்தியாயம்
சங்ககாலத்தில் நாம் தமிழர்.
தலைச்சங்கமும் இடைச்சங்கமும்.
பண்டு தொட்டுத் தமிழர் சங்கங்கள் அமைத்துத் தமிழை வளர்த்தனர். இக்காரணம் பற்றியே ‘சங்கத் தமிழ்’ என்பர். காலத்துக்குக் காலம் பல சங்கங்கள் இருந்த போதிலும், மூன்று சங்கங்கள் விசேடமாகக் குறிப்பிடப்படுகின்றன:- தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம், தலைச்சங்க நூல்களும், தொல்காப்பியம் தவிர்ந்த இடைச்சங்க நூல்களும் எமக்குக்கிடைத்தில. கடைச்சங்க நூல்களிற் சிலவே கிடைத்திருக்கின்றன. பிற்கால உரையாசிரியர்கள் இச்சங்கங்களைப் பற்றிப் பல விபரங்கள் கொடுத்திருக்கின்றனர். எமது மரபுக் கதைகளிலும் இலக்கியங்களிலும் இச்சங்கங்களைப் பற்றிய குறிப்புக்கள் உள.

“தொல்லாணை நால்லாசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின்
நிலந்தரு திருவி னெடியோன்” (மதுரைக் காஞ்சி)

“ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் றலைவனாக
வுலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகவென் னிலவரை” (புறம்)

“இமிழ்குரன் முரச மூன்றுட னாளுந்
தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே” (காரிக்காண்ணனார்)

“நான் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளினோன் காண்”
(திருநாவுக்கரசு நாயனார்)

“உறைவா னுயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோவன்றியேழிசைச் சூழல்புக்கோ”
(மாணிக்கவாசக நாயனார்)

இவ் விபரங்களிடையிற் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன. தலைச்சங்கஇடைச்சங்க காலங்களுக்கும் உரையாசிரியர் காலங்களுக்குமிடையில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகள் சென்றுவிட்டபடியினால் விபரங்கள் காலத்துக்குக் காலம் மாற்றமடைந்திருக்கலாம். மிகைப்படுத்திக் கூறப்பட்டிருக்கலாம். மேலும், வடமொழியும் பௌராணிக மதமும், புராணங்களும் தென்நாட்டில் ஆதிக்கம் பெற்ற பிற்காலத்தில் உரையாசிரியர்கள் வாழ்ந்தவராவர். இவர்கள் தமது கொள்கைகளையும் கருத்துக்களையும் பல விடங்களில் வலிந்து புகுத்தினர். கற்பனையான கதைகளைச் சேர்த்தனர். பண்டைத் தமிழ் நூல்கள் ஓலைகளில் எழுதப்பட்டவை. ஏடுகளைக் காலத்துக்குக் காலம் பெயர்த்து எழுதும்போது, எழுதுவோர் தமது அறிவிற்கெட்டியவாறு திருத்தங்கள் செய்வதும், புதிய சூத்திரங்களை இடைச்செருகுவதும் வழக்கமாகும். ஒரு நூலின் காலத்தை இம் முரண்பாடுகளின் அடிப்படையில் வரையறை செய்வது தவறாகும். காலத்தை அந் நூலிற் குறிப்பிடப்படும் கருத்துக்கள் சமயக் கொள்கைகள். வாழ்க்கை முறைகள், சூழல்கள், சம்பவங்கள் முhலியவற்றின் அடிப்படையில், மட்டுமே வரையறை செய்யலாம்.

உதாரணமாகப் பண்டைக்காலத்தில் இக்காலத் தமிழ் எழுத்துக்கள் இருந்தன எனக் கூற முடியாது. தொல்காப்பியர் காலத்திலோ அல்லது அதற்கு முன்போ நான்கு வகைப்பட்ட எழுத்துக்கள் இருந்தன. இவ்வெழுத்துக்களைப் பற்றிச் சங்க நூல்களிலுஞ் சில குறிப்புக்களைக் காணலாம்.

“வடிவு பெயர் தன்மை முடிவுநான் கெழுத்தே” வடிவெழுத்து உருவெழுத் தெனப்படும். இது பண்டைக்காலத்திற் சீனாவிலும் எகிப்திலும் வழங்கிய சித்திர சங்கேத இலிபிகளைப் (ர்நைசழபடலிh) போன்றதாகும்.

“காணப் பட்ட உருவ மெல்லாம்
மானக் காட்டும் வகைமை நாடி
வடுவி லோவியன் கைவினை போல
எழுதப் படுவ துருவெழுத் தாகும்.”

ஒரு பெயரைச் சுட்டுவதற்கு வழங்கப்பட்ட சங்கேதக்குறி பெயரெழுத்தாகும். இதுவுஞ் சீன மொழியில் வழங்கப்பட்டதாகும். தன்மை, சக்தி முதலியனவற்றைச் சுட்டுவதற்கு வழங்கப்பட்ட அடையாளக் குறி தன்மை யெழுத்தாகும். வினை முடிவுள்ள வாக்கியத்தைச் சுட்டுவதற்கு வழங்கப்பட்ட குறி முடிவெழுத்தாகும். பண்டைக்கால இந்திய எழுத்துக்கள் சிந்துவெளி ஓவிய எழுத்துக்கள் போன்றவையாக இருக்கலாம். சிந்துவெளி ஓவிய எழுத்துக்களிலிருந்தே பிராமி எழுத்துக்களும் ஏனைய தென்னிந்திய எழுத்துக்களும் தோன்றின என அறிஞர் கருதுகின்றனர். தொல்காப்பியர் காலத்திலுள்ள புள்ளி எழுத்துக்கள் கடைச்சங்க காலத்துக்கு முற்பட்டே மறைந்து விட்டன. பிராமி எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்களும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியவையாகும். இம் மூலம் சித்திர எழுத்துக்களாகும். இப்பண்டை எழுத்துக்களிலிருந்தே கிரந்தம் வட்டெழுத்து, கண்ணெழுத்து, மலையாள எழுத்து, சிங்கள எழுத்து முதலியவை யாவும் தோன்றின. கி.மு. முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘சம வாயங்கனசுத்த’ என்ற நூல் 18 வகை எழுத்துக்களைக் குறிப்பிடுகிறது. அவற்றில் தாமினி (தாமிழி) என்ற பெயரும் பராம்மி என்ற பெயருங் காணப்படுகின்றன. சமீப காலத்தில் வீரமா முனிவர் அச்சிடும் வசதிக்காகத் தமிழ் எழுத்து முறையிற் பல திருத்தங்கள் செய்தனர்.

இப்போது சங்கங்களைப் பற்றி எமது இலக்கியங்களிற் காணப்படும் குறிப்புக்களிற் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

பெருவள நாட்டிற் சங்கம்
“பேராற்றருகில் பிறங்கு மணிமலையில்
சீராற்றுஞ் செங்கோ றிறற் செங்கோ – நேராற்றும்
பேரவையி லேநூற் பெருமக்கள் சூழ்ந்தேத்த
பாரரசு செய்த தமிழ்ப் பைந்தேவி” (தமிழ் விடுதூது)

பேராறும் மணிமலையும் பெருவள நாட்டில் இருந்தன. இங்க ஒரு தமிழ்ச் சங்கம் இருந்ததாக இப் பா கூறுகிறது. இச்சங்கத்தைப் பற்றிச் சில விபரங்கள் கிடைத்திருக்கின்றன. செங்கோன் காலத்தில் (கி.மு.14,000 அளவில்) இச்சங்கம் இருந்தது. முத்தூர் அகத்தியர் இக்காலத்தவராவார். இவர் பெருவள நாட்டிற் பஃறுளியாற்று அணைகட்டியவா. அருகிலிந்த முத்தூர் எனுஞ் சிற்றூரில் வசித்தவர். சக்கரன் என்பவன் இச்சங்கத் தலைவனாக இருந்தான். தனியூர்ச் சேந்தன், முத்தூர் அகத்தியன், பேராற்றி நெடுந்துறையன், இடை கழிச் செங்கோடன் என்போர் இச்சங்கமிருந்த புலவரிற் சிலராவர். செங்கோனின் வெற்றிகளைப் பற்றித் தனியூர்ச் சேந்தன் “செங்கோண் தரைச் செலவு” எனும் நூலை இயற்றினான். இந்நூல் முழுவதும் தாப்புலிப்பாவினால் இயற்றப்பட்டது. சக்கரன் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது. இதற்கு முத்தூர் அகத்தியர் பாயிரம் பாடினார்:-

“செங்கோ ன்றரைச் செலவைச் சேந்தன் தனியூரான்
துங்கன் தமிழ்தாப் புலித்தொடரால் - அங்கிசைத்தான்
சக்கரக் கோமுன்னின்று சாற்றும் பெருவூழி
அக்கரக் கோநாமஞ்சு வோம்”

பெருவள நாட்டுச் சங்க இலக்கண நூல்கள் நெடுந்துறையன் பெருநூல், இடைகழிச் செங்கோடன் இயல் நூல், குமரம் என்பவை யாகும். பெருவள நாட்டிலே வேறு சங்கங்களும் இருந்தன.

(அ) பஃறுளி யாற்றுத் தென் மதுரைச் சங்கம்
(ஆ) பொதிய மலைச் சங்கம்
(இ) மகேந்திர மலைச் சங்கம்
(ஈ) மணிமலைச் சங்கம்
(உ) குன்ற மெறிந்த குமரவேள் சங்கம்


தலைச்சங்கமும் இடைச்சங்கமும்
தலைச்சங்கம் 4449 வருடங்கள் இருந்தது@ சங்கம் இரீயினோர் காஞ்சினவழுதி முதலாகக் கடுங்கோனீறாக 89 பாண்டிய மன்னராவர். சங்க உறுப்பினர் 549. இவர்களில் அகத்தியர். சிவபிரான், குமரவேள், நிதியின் கிழவன், முரஞ்சியூர் முடிநாகராயர் என்போர் சிலராவர். சங்கப் புலவர் தொகை 4449. தலைச்சங்க அகத்தியர் வாதாபி அகத்தியராவார். இவர் அகத்தியர் எனும் இலக்கண நூலை இயற்றினர். தலைச்சங்க நூல்களாவன:-

இலக்கியம்:- முதுநாரை, முதுகுருகு, புறப்பொருள்

இலக்கணம்:- அகத்தியம்

இசை:- முறுகல், சயந்தம், குணநூல், செயிற்றியம்

நாடகம்:- பரிபாடல், களரியாவிரை, காக்கை பாடினியம், அபிநயம், நற்றந்தம், வாமனம்.

கடுங்கோனே முதலாம் நிலந்தரு திருவிற் பாண்டியனாவான், (நிலந்தரு திருவென்பது பாண்டிய மன்னருக்கு3 சிறப்புப் பட்டப்பெயர் போலத் தோன்றுகிறது) தலைச்சங்கமிருந்த இடம் குமரி நாட்டின் தலை நகராகிய பழைய மதுரை அல்லது தென்மதுரையாகும். தலைச்சங்க காலத்தின் இறுதியிற் குமரி நாடும் தென் மதுரையும் கடலாற் கொள்ளப்பட்டன.

இடைச் சங்கம் 3700 வருடங்கள் இருந்தது. சங்கம் இரீயினோர் வெண்டூர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பாண்டிய மன்னராவர். சங்கமேறிய புலவர்தொகை 3700. சங்க உறுப்பினர் 59 இவர்களில் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கொடுங்கோழி, மோசி, வெள்ள+ர்க் காப்பியன், சிறு பண்டாரங்கன், திரையன், மாறன், கீரந்தை என்போர் சிலராவார். இடைச்சங்க நூல்களாவன:-

இலக்கியம்:- கலி, குரு, வெண்டாளி, வியாழமாலை, மாபுராணம்.

இலக்கணம்:- அகத்தியம், தொல்காப்பியம், (ஐந்திரம் எனும் இலக்கண நூலுமிருந்தது)

இசை:- இசை நுணுக்கம், பூதபுராணம், அகவுள், சங்கமிருந்த இடம் கபாடபுரம், இதுவுங் கடலாற் கொள்ளப்பட்டது.

கி.பி. எட்டாம் நூற்றாண்டிலா இறையனார் அகப்பொருளுரை முச் சங்கங்களின் காலங்களையும் ஆண்டுக் கணக்கிற் கூறுகிறது. தொல்காப்பியம் வேதவியாசர் நான்கு வேதங்களையும் வகுப்பதற்கு முற்பட்டது என்பதும் ஆதி ஊழியின் அந்தந்த நூல் என்பதும் கி.பி. 14ந் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியர் நச்சினார்க்கினியாரின் கருத்தாகும். “இரண்டாம் ஊழியதாகிய காபாடபுரத்தின் இடைச்சங்கத்துத் தொல்காப்பியம் புலப்படுத்திய மகாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன்” எனக் கி.பி. 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த அடியார்க்கு நல்லார் கூறுகிறார். “இவற்றானெல்லாம் அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம், தொல்காப்பியம் அதன் வழி நூலென்பதுஉம், அது தானும் பனம்பாரனார் ‘வட வெங்கடம் தென்குமரி’ எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறிப் பாயிரஞ் செய்தமையாற் சாகரர் வேள்விக் குதிரை நாடித் தொட்ட கடலகத்துப்பட்டுக் குமரியாறும் பனை நாட்டோடு கெடுவதற்கு முன்னைய தென்பதுஉம்” எனக் கி.பி 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த பேராசிரியர் கூறுகிறார். “இடைச் சங்க மிருந்தார் தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப. அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல்கொண்டது” (இறையனார் அகப்பொருளுரை.)

தலைச்சங்க இடைச்சங்க கால மன்னர்களைப் பற்றியும் கடற்கோள்களினால் அழிந்த தமிழ் நாட்டைப் பற்றியும் கடைச்சங்க கால நூல்களிற் பல குறிப்புக்கள் காணப்படுகின்றன.

“வடிவேலெறிந்த வான்பகை பொறாது
பஃறுளியாற்றுடன் பன்மலை யடுகத்துக்
குமரிக் கோடுங் கொடுங் கடல் கொள்ள
வடதிசை லங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி” (சிலப்பதிகாரம்)

“எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீந்த
முந்தீர் வழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”

“தொல்லானை நல்லாசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவி னெடியோன்.”
(மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார்)

“மலிதிரை யூர்ந்து தன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சொன்று மேவார் நாடிடம்படப்
புலி யோடு வின்னீங்கிப் புகழ் பொறிந்த கிளர்கொண்டை
வலியினான் வணங்கிய வாடாச்சீர் தென்னவன்.”

“தீங்கனி நாவ லோங்குமித் தீவிடை
யின் றேழ் நாளி லிருநில மாக்கள்
நின்று நடுக் கெய்த நீணில் வேந்தே
பூமி நடுக்குறூஉம் போழ்தத் திந்நகர்
நாக நன்னாட்டு நானூ றியோசனை
வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும்” - மணிமேகலை

“மடவர னல்லாய் நின்றன் மாநகர்
கடல் வயிறு புக்கது” - மணிமேகலை

சங்க மென்பது வடசொல் என்றும் சமணரே முதன் முதலில் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவினர் என்றும், தமிழ்ச்சங்கங்களைப் பற்றிய விபரங்கள் தமிழ் நாட்டிற் சமணருக்குப்பின் எழுந்த கட்டுக்கதைகள் என்றுஞ் சிலர் வாதிக்கின்றனர். சங்கம் என்ற சொல் பழைய தமிழ் நூல்களில் இல்லை என்பது உண்மையே. ஆனாற் பண்டைக்காலத்தில் தமிழ் மக்கள் சங்கத்தைக் குறிப்பதற்குத் தொகை, மன்றம், அவை, அம்பலம், குழாம், பொதியில் என்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம். பிற்கால உரையாசிரியர் இச் சொற்களைப் பயன்படுத்தியிருக்கலாம். பிற்கால உரையாசிரியர் இச் சொற்களுக்குப் பதிலாகச் சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம். உதாரணமாக நாம் இன்று வழங்கும் யன்னல் என்பது போர்த்துக்கீசச் சொல். ஆதலாற் போர்த்திகீசர் காலத்துக்கு முன் தமிழர் வீடுகளில் யன்னல்கள் இருக்கவில்லையென வாதிக்கலாமா? தேவாரங்களிலே தானும் பழைய சங்கங்களைப் பற்றிக் குறிப்புக்களைக் காணலாம். எமது சமயகுரவர் தாமும் பொய்ப்புகழ் பாடினர் எனக்கூறும் அளவுக்கு இக்காலத்தில் எமது தமிழ்க் கலாநிதிகள் சிலரின் தலைக்குட் பகுத்தறிவு ஏறிவிட்டது.

சங்கங்களைப் பற்றிய விபரங்களை நம்ப முடியாது எனச் சிலர் வாதிக்கின்றனர். தலைச்சங்கம் 4449 வருடங்கள் இருந்ததெனவும் இரீயினோர் 89 பாண்டிய மன்னரெனவுங் கூறப்படுகிறது. அவ்வாறாயின் ஒவ்வொரு மன்னனின் ஆட்சிக் காலமும் சராசரியாக ஐம்பது ஆண்டுகளாக இருந்திருக்கவேண்டும். இடைச்சங்கம் 3700 வருடங்கள் இருந்தது. இரீயினோர் 59 பாண்டிய மன்னர். அவ்வாறாயின், ஒவ்வொரு மன்னனின் ஆட்சிக் காலமும் சராசரியாக அறுபத்து நான்கு ஆண்டுகளாக இருந்திருக்கவேண்டும். பண்டை வரலாற்றை நோக்கும் போது, மன்னரின் ஆட்சிக்காலம் சராசரியாக இருபது ஆண்டுகளுக்கு மேலிருக்கவில்லை. இக்காரணம் பற்றிச் சங்கங்கள் இருக்கவில்லை என வாதிப்பது பேதமையாகும். இதற்கு இரண்டு விளக்கங்கள் இருக்கலாம்.

(1)பிற்கால உரையாசிரியர்கள் சங்ககாலங்களை மிகைப்படுத்திக் கூறியிருக்கலாம். மன்னரின் ஆட்சிக்காலத்தைச் சராசரியாக இருபது ஆண்டுகளாக எடுத்துக்கொண்டால், தலைச்சங்ககாலம் 1780 ஆண்டுகளும் இடைச்சங்க காலம் 1180 ஆண்டுகளுமாக இருக்கவேண்டும்.

(2)இச்சங்கங்கள் தொடர்ச்சியாக இருக்கதிருக்கலாம். நூல்களை அரங்கேற்றுவதற்குக் காலத்துக்குக் காலங் கூட்டப்பட்டிருக்கலாம். இதுவே பொருத்தமான விளக்கம் போலத் தோன்றுகிறது.

தலைச்சங்க இடைச்சங்க காலங்கள்
தலைச்சங்க நூல்களுந் தொல்காப்பியம் தவிர்ந்த ஏனைய இடைச்சங்க நூல்களும் எமக்குக் கிடைத்தில. எனவே, சங்க காலங்களைவரையறை செய்வதற்குத் தொல்காப்பியர் காலத்தை அறியவேண்டும். மேலும், கடைச்சங்க காலம் 1950 ஆண்டுகளெனக் கூறப்படுகின்றது. கடைச்சங்க காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் முடிவடைந்தது என்பதற்குப் போதிய சான்றுகள் உள. கடைச்சங்க காலத்தை கி.மு. 1715 தொடக்கம் கி.பி. 235 வரையுமென அறிஞர் பலர் ஏற்றுக்கொள்ளுகின்றனர். எனவே, இடைச்சங்கம் கி.மு. 1718இற்கு முன் முடிவடைந்திருக்கவேண்டும்.

தொல்காப்பியர் காலம் பற்றிக் கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. தொல்காப்பியம் கடைச்சங்க காலத்துக்கு மிகவும் பிற்பட்ட நூலெனவும், அது கி.பி. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது எனவுஞ் சிலர் வாதிக்கின்றனர். தொல்காப்பியர் சமண முனிவர் என்பதும் ஐந்திரம் பத்ரபாகு இயற்றிய ஜெநேந்திரம் என்பதுமான ஆதாரமற்ற ஊகங்களே இவ்வாதத்துக்கு அடிப்படையாகும். தொல்காப்பியர் தலைச்சங்கத்தவர் என்பாருமுளர். ஆனால், தொல்காப்பியர் இடைச்சங்கத்தின் இறுதிக்காலத்தவர் என்பது மரபுவழிச் செய்தியாகும். மேலும் ஒரு நூலில் ஒழுக்க நெறிகள் கூறப்பட்டிருந்தால், அதைச் சிலர் சமண நூலெனக் கண்மூடித்தனமாக எடுத்துகொள்ளுகின்றனர். தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் இதற்கு உதாரணங்களாகும். பண்டைத் தமிழர் சமுதாயத்திலும் சமயத்திலும் ஒழுக்க நெறிகள் இருக்கவில்லையா? தமிழருக்கு ஒழுக்கத்தை வட வரும் பிராமணருமா கற்பித்தனர்?

தொல்காப்பியர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்ற கொள்கையைப் பல தமிழ் அறிஞர் தாமும் சமீப காலம் வரையும் ஏற்றனர். “இற்றைக்குச் சற்றேறத் தாழ இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப் பெற்ற பழந் தமிழ் நூல் தொல்காப்பியம்” பேராசிரியர் இராமநாதன் செட்டியா. இக்கொள்கைக்குஞ் சில தவறான எடுகோள்களே ஆதாரங்களாகும்.

(1)இந்தியாவிற் சமஸ்கிருதம் தமிழுக்கு முற்பட்டதெனவும், தமிழ் வடமொழியின் ஒரு கிளை மொழி யெனவும் தமிழ் இலக்கியங்களும் இலக்கணமும் சமஸ்கிருதத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை யெனவும் சிலர் எடுத்துக்கொண்டனர். அவ்வாறாயின், தமிழ் இலக்கிய இலக்கணங்கள் சமஸ்கிருத இலக்கண இலக்கியங்களுக்குப் பிற்பட்டவையாக இருக்கவேண்டும். இது பிற்காலப் பிராமணீயப் பொய்ப் பிரசாரம் என்பதில் ஐயமில்லை. பண்டைக் காலத்தில் இந்தியா முழுவதிலும் வாழ்ந்த மக்கள் திராவிடர் என்பதையும் பேசிய மொழிகள் திராவிட மொழிகள் என்பதையும் தற்கால மேனாட்டறிஞர்களின் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

(2) பிற்காலச் சமஸ்கிருத நூல்களிலுள்ள சில சமயக் கொள்கைகளும் பழக்க வழக்கங்களும் தொல்காப்பியத்திற் காணப்படுவதினால் தொல்காப்பியம் இந்நூல்களுக்குப் பிற்பட்டதெனச் சிலர் வாதித்தனர். இந்து மதம் அடிப்படையில் திராவிடர் மதம் எனக்கண்டோம். இந்தியாவிற்குட் புகுந்த சிறிய காக்கோசியக் குழுக்கள் திராவிடரின் சமயத்தையும் பண்பாட்டையும் பின்பற்றி நாகரிகமடைந்தன. தொல்காப்பியத்தில் ஆரம்ப நிலைச் சைவ சமயத்தைக் காண்கின்றோம். இச்சைவ மதம் பண்டைத் திராவிடர் மதம் என்பதில் ஐயமில்லை.

(3) பாயிரத்திலே கூறப்படும் ஐந்திரத்தைப் பாணினியி; இலக்கணம் எனச் சிலர் எடுத்துக்கொண்டர். வேறு சிலர் பாணினியின் காலத்திலே வடமொழியில் இந்திரனால் இயற்றப்பெற்ற ஐந்திரம் என்ற ஓர் இலக்கண நூல் இருந்ததென்பர். தமிழில் இலக்ணமெழுதுவதற்கு வடமொழி இலக்கணங் கற்கவேண்டுமா? மேலும், தொல்காப்பியத்துக்கும் பாணினியின் இலக்கணத்துக்கும் எல்வித தொடர்புமில்லை. தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டே தமிழில் இலக்கண இலக்கிய நூல்கள் இருந்தன. “முந்துநூல்கண்டு முறைப்பட எண்ணிப்புலந் தொகுத்தோனே” எனப் பாயிரங் கூறுகிறது.

(4) தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்ற கட்டுக்கதையுமுண்டு.

“மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை இருந்த சீர்சால் முனிவரன்
தன்பால் தண்டமிழ், தாவின் றுணர்ந்த
துன்னருங் கீர்த்தித் தொல்காப்பியன் முதல்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோர்”

இது புறப்பொருள் மாலையில் ஒரு பாடலாகும். அகத்தியரை வடநாட்டு ஆரிய முனிவர் என எடுத்துக்கொண்டனர். ஆரியர் கி.மு. 7ம் 8ம் நூற்றாண்டில் தென்னாடு வந்தனர். எனவே, அகத்தியரின் மாணவரான தொல்காப்பியர் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்திருக்க முடியாது. அகத்தியர் என்பது தமிழ்ச் சொல். பண்டைக் காலத்தில் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பற்பல காலங்களிற் பல்லாயிரம் அகத்தியர் இருந்தனர். இன்றும் ஒவ்வொரு தமிழ்க் கிராமத்திலும் இரண்டு மூன்று அகத்தியரைக் காணலாம். அகத்தியருக்கும் தொல்காப்பியருக்கும் எவ்வித தொடர்புமில்லை. இருந்திருப்பின் நூலிலோ பாயிரத்திலோ இது குறிப்பிடப்பட்டிருக்கும்.

(5) தொல்காப்பியர் வடமொழியைக் குறிப்பிடுகிறார். ஆதலால் சமஸ்கிருதம் பரவியபின், தொல்காப்பியம் எழுதப்பட்டது.

“வட சொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே”

தொல்காப்பியர் காலத்திலே பல வடமொழிகள் இருந்தன. அவர் குறிப்பிட்ட வடமொழி சமஸ்கிருதமன்று.

(6) ஓரை என்பது கிரேக்க சொல்லெனவும் இச்சொல் தொல்காப்பியத்திற் காணப்படுவதினால், தொல்காப்பியம் கிரேக்கர் இந்தியாவிற்கு வந்தபின் எழுதப்பட்டது எனவும் வாதித்தனர். இந்திய மக்கள் கிரேக்கரிடமிருந்தா சோதிடத்தைப் பெற்றனர்? சொற்களின் ஓசை அடிப்படையில் தொடர்பு காண்டல் தவறாகும். மேலும் மிகப் பழைய காலத்திலேயே இந்தியாவில் வாழ்ந்த திராவிட மக்களுக்கும் கிரேக்கருக்கும் தொடர்பு இருந்தது.

(7) தொல்காப்பியர் குறிப்பிடும் அந்தணர், ஐயர், பார்ப்பனர் முதலியோரை ஆரியப் பிராமணராக எடுத்துக்கொண்டனர். இவர்கள் திராவிட குலத்தவரன்றி ஆரியப் பிராமணர்களல்லர்.

தொல்காப்பியர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்ற கொள்கைக்கு ஆதாரமான வாதங்கள் யாவும் தவறானவையாகும். எவ்வாறு நோக்கினும், தொல்காப்பியர் கலியுகத்துக்கு (கி.மு. 3102இற்கு) முற்பட்டவராவர்:-

(1)இடைச்சங்கமிருந்த கபாடபுரம் தாமிரபரணியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடையில் இருந்தது. பாண்டியரின் தலைநகர் கபாடபுரமென இராமாயணங் குறிப்பிடுகின்றது. ஆனால், மகாபாரத காலத்தில் மணலூர் பாண்டியரின் தலைநகராக இருந்தது. மகாபாரத காலத்துக்கு முன் கபாடபுரம் அழிந்துவிட்டது. எனவே, இடைச்சங்க காலம் இராமாயண காலத்துக்கும் மகாபாரத காலத்துக்கும் இடைப்பட்டதாகும்.

(2) தொல்காப்பியர் காலம் இரண்டாம் ஊழியம் மகாபாரத காலம் மூன்றாம் ஊழியுமென உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

(3) கபாடபுரம் துவாரகைக் கண்ணனினால் அழிக்கப்பட்டதென்ற மரபுக்கதை ஒன்றுண்டு.

(4) தொல்காப்பியர் காலத் தமிழக எல்லைகளைப் பாயிரங் கூறுகிறது.

“வட வெங்கடந் தென் குமரி
ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து”

இங்கு குறிப்பிடப்படும் தென்குமரி இக்காலத் தென்குமரிமுனையன்று. இரு மலைகள் எல்லைகளாகக் குறிப்பிடப்படுகின்றன. குமரி என்பது அக்காலத்தில் மத்திய ரேகைக்கு அண்மையிலிருந்த குமரி மலையாகும். அவ்வாறாயின் தொல்காப்பியர் காலத்திலே இலங்கை தமிழ்கூறு நல்லுலகத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கவேண்டும். தற்போது இலங்கையின் தென்புள்ளி மத்திய ரேகைக்கு 6 வடக்கில் உளது. மத்திய ரேகைக்கு இப்புள்ளிக்கும் இடைப்பட்ட நிலப் பரப்புத் தொல்காப்பியர் காலத்துக்குப் பின்பு ஏதோவொரு கடற்கோளினால் அழிந்திருக்கவேண்டும். இப்படிப்பட்ட கடற்கோளொன்று கலியுகத்தின் ஆரம்பத்திற்குச் சற்று முன்பு கி.மு 3105இல் நடந்ததெனத் தெனன்ற் (வுநnயெவெ) எனும் இலங்கை வரலாற்றாசிரியர் கூறுகிறார். அக் காலத்தில் இலங்கையி;ன் மேற்குப் பகுதிகள் சிலவும் அழிந்திருக்கலாம். இப்போதுள்ள இலங்கை பண்டைக்கால இலங்கையிற் பன்னிரண்டில் ஒரு பாகமெனப் புத்த ஏடுகள் கூறுகின்றன. ஒரு காலத்தில் இலங்கை, மாலைதீவுகள் வரையும் பரந்து கிடந்தது.

(5) “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்” எனத் தொல்காப்பியர் கூறுகிறார். இப்பன்னிரு நிலங்களையும் உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் – பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, கற்கா நாடு, பன்றி நாடு, அரூவ நாடு, அருவா வடதலை, சீத நாடு, பூழிநாடு, மலாடு. தொல்காப்பியர் காலத் தமிழ்நாடு தற்காலத் தமிழ்நாட்டையும், கேரளத்தையும். கன்னட நாட்டையும், கோவாவையும், பம்பாய் மாகாணத்தின் சில பகுதிகளையும் அடங்கியதாக இருந்தது. தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டே தெலுங்கு நாடு பிரிந்துவிட்டது.

(6) வள்ளுவர் காலத்தில் தமிழ் நாட்டில் இரும்பு பயன்படுத்தப்பட்டது. தொல்காப்பியர் இரும்புக் காலத்துக்கு முற்பட்டவராவர்.

(7) தொல்காப்பியர் காலத்துக்கும் கடைச்சங்க காலத்துக்கும் இடையில் தமிழ் மொழியிலும் தமிழர் வாழ்க்கையிலும் சமயத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

(அ) தொல்காப்பியத்திற் குறிப்பிடப்படும் புள்ளி எழுத்துக்கள் கடைச்சங்க காலத்துக்கு முன் மறைந்துவிட்டன. தொல்காப்பியர் விதிகளுக்கு மாறான சொல் வழக்குகளும் தொல் காப்பியத்திற் காணப்படாத புது வழக்குகளும் சங்க நூல்களிலுந் திருக்குறளிலுங் காணப்படுகின்றன.

(ஆ) கடைச்சங்க காலத் தமிழ் நாட்டில் நகரங்களும் வாணிபமும் செல்வமும் பெருகிவிட்டன. தொல்காப்பியர் கால வாழ்க்கையை அடுத்த அதிகாரத்திற் பார்ப்போம். தொல்காப்பியம் கூறும் தனிப்பட்ட நானில் வாழ்க்கை சங்க காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டதாக இருக்கவேண்டும்.

(இ) தொல்காப்பியர் சைவ சமயத்தின் ஆரம்ப நிலையைக் காட்டுகிறது. தொல்காப்பியர் சைவ சமயத்தவர் எனவும் சைவ சமயக் கருத்துக்களைத் தொல்காப்பியத்தில் ஆரம்ப நிலையிற் காணலாம் எனவும் மறைமலை அடிகள் தெளிவாகக் காட்டுகிறார்.

“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே”

தொல்காப்பியர் காலத்திற் சிவனோடு ஞாயிறும் திங்களும் வழிபடப்பட்டன. கடைச்சங்க காலத்திற் பல்வேறு மதங்களும் மதக் கொள்கைகளும் தமிழ் நாட்டில் தோன்றிவிட்டன. சமய வளர்ச்சி;யின் அடிப்படையில் நோக்கும்போது, தொல்காப்பியம் கடைச்சங்க காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டதாக இருக்கவேண்டும்.

(8) தொல்காப்பியர் காலத்தில் ஆவணி வருட முதல் மாதமாக இருந்தது. இஃது இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முற்பட்ட காலமென வான நூலாரும் சோதிடருங் கூறுகின்றனர். எவ்வாறு நோக்கினும், தொல்காப்பியம் இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முற்பட்ட நூலாகும். அக்காலத்தில் ஏனைய மக்கள் மிருகங்களோடு மிருகங்களாகக் காடுகளிலும், மலைகளிலும், மரங்களிலும், குகைகளிலும் வசித்தனர். 5000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்மொழி இலக்கண இலக்கிய வளமுடைய செம்மொழியாக இருந்தது.

“பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தோன்றி இற்றை ஞான்று நம் கைவரப்பெற்ற தமிழ் நூல்கள் எல்லாவற்றிலும் காலத்தாலுஞ் சிறப்பாலும் விளக்குவது ஒல்காப் பெரும் புகழ் தொல்காப்பியம் என்னுந் தலையாய இயல் நூலேயாகும். இது கடலின் கட்பண்டு நிலவிய முச்சங்கத்துள் தலைச்சங்க காலத்தில் தோன்றியதென்பது யாவரும் உணர்வர்” – திரு. பண்டிதமணி மூ. கதிரேசன் செட்டியார்.

கடைச்சங்கம் 1950 ஆண்டுகள் இருந்தது. அதை இரீயினோர் குடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதியீறாக நாற்பத்தொன்பது பாண்டிய மன்னர். அரங்கேறிய புலவர் நாற்பத்தொன்மர். சங்க உறுப்பினர் சிறு மேதாவியார், சேற்றம்பூதனார். அறிவுடையரனார். பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லத்துவனார், மருதனின் நாகனார், கணக்காயனார் மகன் நக்கீரர் முதலிய நாற்பத்தொன்மராவர். இச்சங்கமும் தொடர்ச்சியாகவில்லாது நூல்களை அங்கேற்றுவதற்குக் கூட்டப்பட்டிருக்கலாம். சங்கங்களிடையிலும் பல நூற்றாண்டுகள் சென்றிருக்கலாம்.

கடைச்சங்க காலத்தைப்பற்றி உறுதியான சான்றுகள் உள. திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்கள் கடைச்சங்கத்தின் இறுதிக் காலத்தவையாகும். வள்ளுவர் ஆண்டு இன்று வரையும் தமிழ் மக்களிடையில் தொடர்ச்சியாக வழங்கிவருகிறது. இன்று கிறித்துவ சகாப்தம் 1978 வள்ளுவர் ஆண்டு 2009 ஆகும். வள்ளுவர் ஆண்டு தொடக்கம் கி.மு. 31. எனவே, திருக்குறள் கி.மு. முதலாம் நூற்றாண்டு நூலாகும். வள்ளுவர் காலம்பற்றி வீண் ஊகங்களுக்கு இடமில்லை. சிலப்பதிகாரமும், மணிமேகலையுஞ் சமகாலத்தவை. இலங்கை வரலாற்றுடன் ஒப்புநோக்கி இவற்றுன் காலத்தை கி.பி. இரண்டாம் நூற்றாண்டாக அறிஞர் வரையறை செய்திருக்கின்றனர். ஏனைய கடைச்சங்க நூல்கள் இவற்றுக்கு முற்பட்டவையாகும். களப்பிரர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற் பாண்டி நாட்டை வென்றதோடு கடைச்சங்கம் அழிந்தது.

கபாடபுரத்தைப் பாண்டியரின் தலைநகராக இராமாயணம் குறிப்பிடுகிறது. குமரி நாட்டையும் தென் மதுரையையும் பற்றிய குறிப்புகள் இராமாயணத்திலில்லை. இவை இராமாயண காலத்துக்கு (கி.மு. 6800இற்கு) முன் அழிந்திருக்கவேண்டும். முச்சங்கங்களையும் இரீயினோர் பாண்டிய மன்னராவர். பாண்டியர் இந்நெருங்காலம் பல்லாயிரம் வருடங்கள் ஆண்டனரா என்ற கேள்வி எழலாம். பாண்டிய அரச குலம் எப்போது தோன்றியது எனக் கூறல் இயலாது. வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு (கி.மு.30,000 தொடக்கம்) பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையும் பாண்டியர் ஆட்சி இருந்தது. பிற்காலத்தில் இவர்கள் சிற்றரசராகிவிட்டனர். அலெக்சாண்டரின் படையெடுப்பு வரையும் 154 பாண்டிய மன்னர் 6431 ஆண்டுகள் ஆண்டனர் என மேகஸ்தீன் எனுங் கிரேக்க நாட்டறிஞர் குறிப்பிடுகிறார். இடைச்சங்க கடைச்சங்க காலம் 5650 ஆண்டுகளாகும்.

இந்நூலின் இறுதியின் திருமந்திரமணி துடிசைக்கிழார் அ. சிதம்பரனாரின் கால அட்டவணை கொடுக்கப்படுகிறது. இவ்வட்டவணைப் படி சங்ககாலங்களாவன:-

தலைச்சங்கம் - கி.மு. 14,004 – கி.மு. 9564
இடைச்சங்கம் - கி.மு. 6805 – கி.மு. 3105
கடைச்சங்கம் - கி.மு. 1715 – கி.மு. 235

இதுவே இந்நூலிலுள்ள குறிப்புக்களுடன் பொருத்தமுடையதாகும். கபாடபுரம் கி.மு. 2000 இல் உண்டான கடற்கோளினால் அழிந்தது எனவும் தலைச்சங்க காலம் 1780 ஆண்டுகள் எனவும். இடைச்சங்க காலம் 1180 ஆண்டுகள் எனவுஞ் சிலர் கூறுகின்றனர். அவ்வாறாயின் சங்ககாலங்களாவன:-
தலைச்சங்கம் - கி.மு 4060 – கி.மு. 3180
இடைச்சங்கம் - கி.மு. 3180 – கி.மு. 2000
கடைச்சங்கம் - கி.மு. 1715 – கி.மு. 235

இஃது உண்மையாயின் தொல்காப்பியர் தலைச்சங்கப் புலவராக இருந்திருக்கவேண்டும். ஆனால், இக்கால வரையறை பொருத்தமானதாகத் தோன்றவில்லை.

ஏழாம் அத்தியாயம்
தொல்காப்பியர் காலத்தில் - நாம் தமிழர்
“வட வெங்கடந் தென் குமரி
ஆயிடைத் தமிழ்கூறு நல்லுல கத்து
வழக்குஞ் செய்யுளம் ஆயிரு முதலி
னெழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தோடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந் தொகுத் தோனே.”

“நிலந்திரு திருவிற் பாண்டியன் அவையற்று
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற்(கு) அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின், எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் றிறுத்த படிமை யோனே.”

இவை தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தின் பகுதிகளாகும். தொல்காப்பியருடன் படித்தவரான பனம்பாரனார் இப்பாயிரம் எழுதினார் என்பது மரபுக் கதையாகும்.

தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களும் இருபத்தேழு இயல்களும் உடையது. நூற்பாக்களின் எண்ணிக்கை 1610 ஆகும்.

அதிகாரம் – நூற்பாக்கள்

எழுத்ததிகாரம் – 483
சொல்லதிகாரம் – 462
பொருளதிகாரம் – 665

மொத்தம் 1610

பொருளதிகாரத்தின் இயல்களும் நூற்பாக்களும் பின்வருவனவாகும்.

இயல்கள் நூற்பாக்கள்
அகத்திணையியல் - 35
புறத்திணையியல் - 36
களவியல் - 50
கற்பியல் - 53
பொருளியல் - 54
மெய்ப்பாட்டியல் - 27
உவம வியல் - 37
செய்யுளியல் - 243
மரபியல் - 110

மொத்தம் 665

தொல்காப்பியம் ஓரிலக்கண நூலாயினும், பொருளதிகாரத்திலிருந்தும் ஏனைய நூற்பாக்களிலுள்ள சில குறிப்புகளிலிருந்தும் இற்றைக்கு ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தமிழரின் அகவாழ்க்கையையும் புறவாழ்க்கையையும் அறியலாம். ஏனைய மக்கள் எழுத்துக்குஞ் சொல்லுக்குஞ் செய்யுளுக்கும் வசனத்துக்கும் இலக்கணம் வகுத்தனர். வாழ்க்கை நெறிக்கு இலக்கணம் வகுத்தவர் தமிழரைத் தவிர வேறெவராவதுண்டா? பண்டைத் தமிழரின் சீரிய பண்பாட்டிற்கும் உயர்ந்த நாகரிகத்துக்கும் தொல்காப்பியம் ஒன்றே போதிய சான்றாகும்.

வாழ்க்கைப் பொருள்கள் அறம், பொருள், இன்பம் எனும் மூன்றாகும். பிற்காலத்தவர் வீட்டையுஞ் சேர்த்தனர். அறமில்லா வாழ்க்கை ஆறறிவுடைய மனித வாழ்க்கையாகாது.

“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்
கன்போடு புணர்ந்த ஐந்திணை” (தொல்காப்பியம்)

இக் கருத்தையே பிற்காலத்திற் கடைச்சங்கப் புலவரும் வள்ளுவரும் வற்புறுத்தினர்.

“அறத்தினூ உங் காக்கமுமில்லை யதனை
மறத்தலி னூங்கில்லை கேடு”

“அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில”

“அன்பு மறனு முடைத்தாயி னில் வாழ்க்கை
பண்பும் பயனு மது”

“அறனெனப் பட்டதே யில் வாழ்க்கை யஃதும்
பிறன் பழிப்ப தில்லாயி னன்று”

அறனாவது நல்லன நினைத்தலுஞ் சொல்லுவதும் செய்தலுமாகும்.

அகமும் புறமும் வாழ்க்கையின் இரு கூறுகளாகும். இரு துறைகளிலும் ஒத்த வளர்ச்சியில்லாது வாழ்க்கை முன்னேறாது. இக்காலத்திலும் பலருணரா இச் சீரிய உண்மையைத் தொல்காப்பியர் காலத் தமிழர் உணர்ந்திருந்தனர். இருதுறை வாழ்க்கையையும் தொல்காப்பியர் விளக்குகிறார். ஒத்த அன்புகுடைய ஒருவனும் ஒருத்தியும் தாமே எதிர்ப்பட்டுக் காதலுற்றுக் காதல் முதிர்ந்து பெற்றோர் அறிய மணஞ்செய்து வாழும் வாழ்க்கையினை அகப்பொருள் கூறுகிறது. இவ்வாழ்க்கையின் பல்வேறு நிகழ்ச்சிகளையும் அவற்றினால் உண்டாகும் இன்ப துன்பங்களையும் - மலிவு, புலவி, ஊடல், துணி, பிரிதல், கூடல் முதலியனவற்றை – தொல்காப்பியர் காட்டுகிறார். இவ் வாழ்க்கைக்குத் துணையாய செல்வம், கல்வி அரசு பற்றிப் புறப்பொருள் கூறுகிறது.

பண்டைத் தமிழ் நூல்கள் கூறும் வாழ்க்கை நெறிகள் புலவரின் கற்பனை இலட்சியங்களா? இவற்றுக்கும் மக்களின் உண்மையான வாழ்க்கைக்கும் எவ்வளவு தொடர்புண்டு? உண்மையான வாழ்க்கையின் அடிப்படையில் மட்டுமே உன்னத இலட்சியங்கள் தோன்றலாம். எனவே, இவை பெருமளவுக்கு மக்களின் உண்மையான வாழ்க்கை நெறிகளை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஓரளவு இலட்சியமுங் கலந்திருக்கலாம். தொல்காப்பியர் ‘வழக்குஞ் செய்யுளும் நாடி’ இலக்கணம் வகுத்தனர்.

தொல்காப்பியர் காட்டும் அக வாழ்க்கையை முதலிற் சுருக்கமாகப் பார்ப்போம். அக வாழ்க்கைக்குக் காமம் அல்லது காதல் அடிப்படையாகும். “தூய அன்பு” என்ற கருத்திற் காமம் என்ற சொல் அக்காலத்தில் வழங்கப்பட்டது. அதேபோல இன்பம் என்ற சொல்லும் சிறந்த கருத்தில் வழங்கிற்று. பேரின்பம் சிற்றின்பம் என்பவை பிற்காலக் கருத்துக்களாகும். எல்லா உயிர்களுக்கும் இன்பம் இயல்பானது.

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்.”

அறந்து வழி நின்று செல்வத்தைத் தனது முயற்சியினால் ஈட்டித் தூய அக வாழ்க்கையில் இன்பத்தை அனுபவிப்பது வாழ்க்கையின் நோக்கமாகும்.

தொல்காப்பியர் காலத்தில் ஆண்களும் பெண்களும் தமக்கேற்ற வாழ்க்கைத் துணைவரைத் தாமே தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இக்காலத்திற் போலத் தரகருஞ் சீதனமும் டோனேசனும் மணச்சடங்குகளும் அக்காலத்தில் இருக்கவில்லை. மணம் வரையும் இருவருக்குமுள்ள தொடர்புகள் களவியலிலும் மணத்துக்குப் பிற்பட்ட தொடர்புகள் கற்பியலிலும் விளக்கப்படுகின்றன. ஒரு சமுதாயத்தின் உயர்ந்த நாகரிகத்தையும் பண்பாட்டையும் அச்சமுதாயத்திற் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் அளிக்கப்படும் இடத்திலிருந்தும் மதிப்பிலிருந்தும் அறியலாம்.

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின” எனவும்

“மங்கல மென்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு” எனவும் பிற்காலத்தில், வள்ளுவர் இவ்வுண்மையை விளக்கினார்.

தொல்காப்பியர் ஏழுவகைப்பட்ட ஒழுக்கத்தைக் குறிப்பிடுகிறார்.
“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை யென்ப”

இவற்றுட் கைக்கிளையும் பெருந்திணையுந் தகாத ஒழுக்கங்களாகும். ஏனைய ஐந்திணைகளும் வழக்கத்தில் இருந்தன. கற்பொழுக்கமே சிறந்ததாகக் கருதப்பட்டது.

“கற்பெனப் படுவது கரண்மொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே.”

வேறு வழக்கங்களையும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
“கொடுப்போர் இன்றியும் கரணமுண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான்”

பண்டைக்காலத்தில் மணச் சடங்குகள் இருக்கவில்லை. மறையோன் வழி கட்டவுமில்லை. எனினம் தொல்காப்பியர் காலத்திலேயே சில மக்களிடையில் இவ் வழக்கமுந் தோன்றிவிட்டது.

“பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ன”

பின்பு இச்சடங்குகள் யாவருக்கும் பொதுவாயின.

“மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம்
கீழோர்க்கும் ஆகிய காலமும் உண்டே”

மணத்துக்குப் பின்பு நடத்தும் வாழ்க்கை கற்பு எனப்படும். தமிழ்ப் பெண்மணிகளின் சிறந்த பண்புடைய இல்லற வாழ்க்கையைக் கற்பியல் கூறுகிறது.

“கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமுங்
மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்”

தமிழ் மக்களின் இல்லற வாழ்க்கையின் சிறப்பை வள்ளுவர் இரு நூறு குறள்களில் விளக்குகிறார். இல்லறமெ நல்லறம் என்பர். இல்லறம் நடத்திய பின் யாக்கை நிலையாமையை உணர்ந்து வீட்டு நெறி நிற்கும் தமிழர் வழக்கத்தையும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இது பிற்காலத்தில் எழுந்த உலகை விட்டோடும் சந்நியாசமன்று.

“காமஞ் சான்ற கடைக் கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களோடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததின் பயனே”

பழைய கற்காலந் தொட்டுத் தமிழ் மக்களிடையிற் சமயவுணர்ச்சி பரவியிருந்தது. குணங்குறிகளும், ஆதியுமந்தமும் இல்லாத எங்கும் நிறைந்த எல்லாம் வல்ல அன்பே உருவமான பரம்பொருள் ஒன்று உண்டு எனப் பண்டைத் தமிழ் மக்கள் நம்பினர். இறை வேறு, உயிர் வேறு, உடம்பு வேறு எகும் முப்பொருள் உண்மையை அறிந்திருந்தனர். சொல்லிலுஞ் செயலிலுஞ் சிந்தனையிலும் அறத்தை வற்புறுத்தினர்.

“வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல் நூலாகும்”

“மெய்யோ டியையினும் உயிரியல் திரியா”

தொல்காப்பியர் காலத் தமிழர் கடவைள உருவமாகவும், அருவமாகவும், அருருவமாகவும் வழிபட்டனர். முழு முதலாகிய இறைவனைச் சிவன், மாயோன், சேயோன், கதிரவன் எனும் நாமங்களினால் வழிபட்டனர். சிவ வழிபாடு, சக்தி வழிபாடு, இலிங்க வழிபாடு, ஞாயிறு வழிபாடு, திங்கள் வழிபாடு முதலியன பெரு வழக்காக இருந்தன.

ஒவ்வொரு நிலத்திற்கும் சிறப்பாக ஒரு தெய்வத்தைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புன லுலகமும்
வருணன் மேய பெருமண லுலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”

இவ்வுலகம் ஐம்பூதங்களின் சேர்க்கையாகும்.

“நிலந்தீ நீர்வளி விசும்போடு ஐந்துங்
கலந்த மயக்கம் உலக மாதலின்”

உயிர்களின் படிவளர்ச்சியைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு கண்ணே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.”

மறு பிறப்புண்டு. பிறவிகள் பல உள. இரு வினைகளுக்கேற்ப உயிர்கள் பிறவிகளில் மாறி மாறிச் செல்லும். இச்சித்தாந்தங்களைத் தொல்காப்பியத்திற் காணலாம். இறந்த வீரருக்குக் கல்நட்டு வணங்குதல் தொல்காப்பியர் காலத்திற் பெருவழக்காக இருந்தது.

“காட்சி கால்கோள், நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்து வென்
றிரு மூன்று வகையிற் கல்லொடு புணரச்
சொல்லப் பட்ட வெழு மூன்று துறைந்தே.”

தொல்காப்பியர் காலப் புற வாழ்க்கையை இப்போது சுருக்கமாகப் பார்ப்போம். அரசு, போர்வகைகள், வாழ்க்கை முறைகள், கோட்டைகள், கோட்டை மதில்கள், போர்க் கருவிகள், பொறிகள், நிரைகோடல், நிரைமீட்டல், அறங்கூறவையங்கள், துறவு, புலவர் பாடல்கள், பரிசில்கள், கூத்து, விளையாட்டு முதலியனவற்றைப் பற்றித் தொல்காப்பியத்திலுள்ள புறத்திணையியல் கூறுகிறது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை எனும் எண்வகை ஒழுக்கங்களும் புறப்பொருளிற் கூறப்படுகின்றன. சிந்துவெளியிலும் கடைச்சங்க காலத்திலும் போலத் தொல்காப்பியர் காலத்திலே பெரிய நகர வாழ்க்கை இருந்ததற்குச் சான்றுகளில்லை. தொல்காப்பியர் காலத்திலும் தமிழ்நாட்டை மூவேந்தரே ஆண்டனர். ஆனாற் பெரும்பாலும் ஆட்சி சிற்றரசர் கையிலிருந்தது. இச் சிற்றரசுகளிடையில் இடையறாப் போராட்டம் நடந்தது. சிற்றூர்கள் தொடர்பற்றவையாக இருந்தன. எமது இலக்கியங்களிற் குறிப்பிடப்படும் தனிப்பட்ட நானில வாழ்க்கை, தொல்காப்பியர் கால வாழ்க்கை முறையாகும்.

தொல்காப்பியர் காலத் தமிழர் கல்வியிலுங் கலைகளிலுஞ் சிறந்து விளங்கினர். வான நூல், நில நூல், பயிர் நூல், உயிர் நூல், உடல் நூல், உள நூல், இயக்க நூல், கணக்கியல், சிற்பம், ஓவியம் முதலிய துறைகளில் அறிவு வளர்ச்சியடைந்து இருந்தது. இத்துறைகளிற் பல நூல்களும் இருந்திருக்கலாம். அக்கால எண்ண வளவைகளாவன:- தாமரை, குவளை, சங்கம், வெள்ளம், ஆம்பல், நிறுத்தலளவைகளாவன:- கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அற்றை, உம்பி, கா. முகத்தலவைகளாவன:- கலம், சாடி, தூதை, பானை, தாழி, மண்டை, வட்டில், அகல், உழக்கு, தூணி, பதக்கு, உரி.

நல் வாழ்வுக்கு வேண்டிய செல்வம், தொழில் வளர்ச்சி, வாணிபம் முதலியவை யாவும் தொல்காப்பியர் காலத் தமிழகத்தில் இருந்தன. தொழிற்றிறனுக்கே தொல்காப்பியர் இலக்கணம் வகுத்தனர்.

“வினையே செய்வது செயப்படு பொருளே
நிலனே ஞாலம் கருவி யென்றா”

உழவு, கைத்தொழில், வாணிபம் எனத் தொழில்கள் மூவகைப்படும். கற்காலந் தொட்டு இந்தியாவில் நெல் பயிர் செய்யப்பட்டு வருகிறது. உழவுத் தொழிலைப் பற்றிப் பல குறிப்புக்களைத் தொல்காப்பியத்திற் காணலாம்.

“வேளாண் மாந்தர்க் குழுதூ னல்ல
தில்லென மொழிப.”

“எண் வகை உணவின் செய்தி.”
“ஏரோர் கள வழி.”

“எருவும் செருவும் அம்மொடு சிவணித்
திருபிட னுடைய தெரியுங் காலை.”

நெல், கம்பு, சோளம், வரகு, சாமை, உழுந்து, கடலை, அவரை, துவரை, தட்டை, பச்சை, கொள்ளு, எள்ளு முதலியன பயிர் செய்யப்பட்டன. நெய்தல் பண்டைத் தமிழ் மக்களின் முக்கிய தொழிலாகும். தொல்காப்பியத்திற் குறிப்பிடப்படும் ஏனைய தொழில்களாவன:- தையல், தச்சு, கொற்றொழில், செம்பு பித்தளை வெண்கலப் பாத்திரங்கள் செய்தல், பலவகைப்பட்ட மட்கலன்கள் செய்தல், ஆபரணங்கள் செய்தல், கண்ணாடித் தொழில், கட்டடப் பொருட்கள் செய்தல், கப்பல் கட்டும், ஒட்டுந் தொழில்கள் முதலியனவையாகும்.

பண்டுதொட்டுத் திராவிட மக்கள் வாணிபத்திற் சிறந்து விளங்கினர். இவர்களே முதன் முதலிற் பிறநாட்டு வாணிபராகவும் கடலோடிகளாகவும் இருந்தனர். உள்நாட்டு வெளிநாட்டு வியாபாரங்கள் தொல்காப்பியத்திற் குறிப்பிடப்படுகின்றன.

“வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை”

“முந்நீர் வழக்கம் மகடூ உவோ டில்லை.”

அக்காலத்திலேயே இந்தியாவிற்கும் எகிப்து மேற்காசிய நாடுகள் முதலியனவற்றிற்கும் இடையில் வியாபாரம் நடந்தது. தென்னிந்தியப் பொருட்களான தேக்கு, மல்மல் ஆடை, மண வகைகள் எகிப்திய கூரங் கோபுரங்களிற் கண்;டெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு நாட்டின் செல்வத்தை அந்நாட்டுப் பெண்மணிகளின் அணிகலன்களிலிருந்து அறியலாம். தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ்ப் பெண்கள் பொன்னாலும் மணிகளினாலும், முத்துக்களினாலும் செய்யப்பட்ட பலவகை ஆபரணங்கள் அணிந்தனர். ஆண்களும் பெண்களும் மலர்மாலை சூடினர். குங்குமச் சந்தனக் குழம்பால் மேனியில் எழுதினர். தொய்யில் எழுதல், கண்ணுக்கு மை போடல், இதழுக்கும் நகங்களுக்கும் செம்பஞ்சுக் குழும்பு பூசல், அக்கால வழக்கங்களாகும். மக்கள் பலவகைப்பட்ட மண் வகைகளை உபயோகித்தனர். முகத்துக்குப் பொற்கண்ணம், குங்குமச் சந்தனக் கலவை@ உடலுக்குத் தேய்த்துக் குளிக்கும் நறும்பொடி@ குழலுக்குத் தடவும் நறுநெய்@ கூந்தலுக்கு ஊட்டும் அகிற்புகைசூ ஆடைக்குப்போடும் மட்டுப்பால்.

தொல்காப்பியர் காலத்திலே நான்கு நாகரிகங்களை மட்டுமே குறிப்பிடலாம். எகிப்திய நாகரிகம், சுமேரிய நாகரிகம், திராவிட நாகரிகம், சீனர் நாகரிகம் இவை நெருங்கிய தொடர்புடையவையாகும். அக்காலத்தில் ஏனைய மக்ள் மிருகங்களோடு மிருகங்களாய்க் காடுகளிலும் மலைகளிலும் மரங்களிலும் குகைகளிலும் வசித்தனர். அக்காலத்திலே தமிழ் தவிர்ந்த எம்மொழியாவது செம்மொழியாக இருக்கவில்லை. தொல்காப்பியர் காலத்திலேயே முத்தமிழும் செம்மை நிலையடைந்துவிட்டன. தொல்காப்பியம் முத்தமிழ் இலக்கணமாகும். பலவகைப்பட்ட இசை நுணுக்கங்களுங் கருவிகளும் கூத்துக்களும் தொல்காப்பியத்திற் குறிப்பிடப்படுகின்றன.

தொல்காப்பியம் பழந்தமிழ் மக்களின் வரலாற்றுக் கண்ணாடி, ஒப்புயர்வில்லா ஒழுக்கக் களஞ்சியம், இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே நாம் தமிழர் இறையுணர்ச்சியும், அன்பும், அறனும், பண்பும், பயனும், காதலும், வீரமும் செறிந்த வாழ்க்கை நடத்தினோம். தமிழ் தன்னிகரில்லாத் தனிமொழி, உலக முதல்மொழி. உயர் தனிச் செம்மொழி. கி.மு. 14000இற் முன்னரே பெருவள நாட்டிற்றோன்றி அக்காலத்திலேயே இலக்கிய இலக்கண வளம் பெற்றுவிட்டது. தொல்காப்பியர் காலத்திலேயே - இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே - இயல், இசை நாடகம் எனும் முத்தமிழும் வளர்ச்சியடைந்து விட்டனவென்றால், தமிழ் மொழியின் பழமைக்கும் பெருமைக்கும் வேறு சான்று வேண்டுமா? நாம் தமிழர், எமது மொழி தமிழ். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னே நாம் தமிழர் இவ்வுன்னத நாகரிகத்துடனும் செல்வத்துடனும் வாழ்ந்தோமென்றால், மற்றவர்கள் அதை நம்ப முடியாதிருப்பது இயல்பாகும். இதைத் தற்புகழ் என நினைக்கலாம். ஆனால், இஃது உண்மை. மற்றவர்கள் நம்பாமைக்குக் காரணம் எமது தற்கால நிலைமையாகும்.

எட்டாம் அத்தியாயம்
கடைச் சங்க காலம் - நாம் தமிழர்.
இப்போது நாம் வரலாற்றுக்குட்பட்ட காலத்துக்கு வருகிறோம். கடைச் சங்க நூல்கள் பல எமக்குக் கிடைத்திருக்கின்றன. அக்காலத் தமிழரின் வாழ்க்கையையும் நாகரிகத்தையும் பற்றி இந் நூல்களிலிருந்து அறிகிறோம். மேலும் பிளினி, டாலமி, பெரிபுளஸ் முதலியயவனாசிரியர்களின் குறிப்புக்களிலிருந்தும் கடைச்சங்க காலத் தமிழகத்தின் நிலைமையை அறிகிறோம்.

கடைச் சங்க காலப் புலவர்களும் நூல்களும் இரண்டாவது அட்டவணையிற் கொடுக்கப்படுகின்றன. இப்புலவாகள் கி.பி. முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களாவர். கி.மு. 18ம் நூற்றாண்டு தொடக்கம் கிறித்து சகாப்தம் வரையும் வாழ்ந்த கடைச்சங்கப் புலவர்களின் பெயர்களும் நூல்களும் எமக்குக் கிடைத்தில. இப்புலவர்களின் தனிப்பாடல்கள் தொகை நூல்களிற் சேர்க்கப்பட்டிருக்கலாம். மேலும், இப்போது எமக்குக் கிடைத்திருக்கும் நூல்களும் 19ம் 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சாமிநாத ஐயர், தாமோதரம் பிள்ளை போன்ற சில தமிழ்ப் பெரியோரின் அருமுயற்சியினால் தேடி எடுக்கப்பட்டு அச்சிடப்பட்டவையாகும். இந்நூல்கள் கிடைத்திருக்காவிடின், கடைச்சங்க காலமும் தமிழரின் தொன்மையும் கற்பனைகளெனத்தானுஞ் சிலர் வாதித்திருப்பர். பல்லாயிரம் பழந்தமிழ் நூல்களை இழந்துவிட்டோம். இவற்றுட் சில இரண்டாம் அட்டவணையிற் கொடுக்கப்படுகின்றன.

கடைச் சங்க காலத்திலே தமிழர் கல்வியிற் சிறந்து விளங்கினர். சங்கத்திற் பல பெண் புலவர்களும் இருந்தனர். எட்டுத் தொகைப் புலவர்களில் 30 பேர் பெண் புலவர்களாவர். காக்கைபாடினியர், நச்சென்னையார், பொன்முடியார், பூதபாண்டியன் தேவி, பெருங்கோப்பெண்டு, ஆதிமந்திரியார், வெண்ணிக்குயத்தியார், பாரி மகளிர், ஒளவையார், அஞ்சியத்தை மகள் நாகையார், ஒக்கூர் மாசாத்தியார், காவுற்பெண்டு, குறமகள் இளவெயினி, குறமகள் குயியெயினி, பேய்மகள் இளவெயினி முதலியோர் இப்பெண் புலவரிற் சிலராவர். நாகர் இனத்தைச் சேர்ந்த பல புலவர் இருந்தனர். பல அறிவுத்துறை நூல்களும் பல தொழினுட்ப நூல்களும் இருந்தன: அளவை நூல்கள் வைத்திய நூல்கள், ஆரூட நூல்கள், இரத்தினப் பரீட்சை நூல்கள், எண் கணித நூல்கள், ஓவிய நூல்கள், கரவட நூல்கள், கனா நூல்கள், பரி நூல்கள், சித்தாரூட நூல்கள், சிற்ப நூல்கள், சோதிட நூல்கள், நிமித்த நூல்கள், துடி நூல்கள், இரேகா சாத்திர நூல்கள், பாசண்ட நூல்கள், மந்திரவாத நூல்கள், ஆயுது நூல்கள், ஆடை நூல்கள், அணி நூல்கள், அருங்கல நூல்கள் என்பன இவற்றுட் சிலவாகும். கல்வி தமிழராகிய எமது பரம்பரைத் தொழிலாயிற்றே!

கி.மு. 1715 தொடக்கம் கி.பி.235 வரையிலுமான பரந்துபட்ட 1950 வருடங்கள் கடைச்சங்க காலமாகும். கடைச்சங்க காலத்தில் தமிழ் நாட்டு எல்லைகள் மிகவுஞ் சுருங்கிவிட்டன. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் இவ்வெல்லைகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கிற் தண்டமிழ் வரைப்பில்”

தலைச்சங்க காலத்தில் தமிழ்நாடு இமயம் தொடக்கம் பெருவள நாடுவரையுங் கிடந்தது. தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் தொடக்கம் குமரிமலை வரையுமிருந்தது. தலைச் சங்கத்துக்கும் இடைச்சங்கத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வட இந்தியாவில் வாழ்ந்த திராவிட மக்கள் இந்தியாவிற்குட் புகுந்த சீன, சித்திய, காக்கேசியக் குழுக்களுடன் கலந்தபடியினால், அவர்களுடைய மொழி, பண்பாடுகள் வேற்றுமையடைந்தன. இக்கலப்பிலிருந்து பல மொழிகள் தோன்றின. கடைச்சங்க காலத்துக்கு முற்பட்டே. கன்னடம், தெலுங்கு முதலிய இனமொழிகள் பிரிந்துவிட்டன. கடைச்சங்க காலத்தில் மலையாளம் தோன்றவில்லை. கடைச்சங்க காலத்தைத் தமிழரின் பொற்காலம் என்பர். ஆனால் உண்மையிற் சங்க காலம் முழுவதையும் இவ்வாறு கூறவேண்டும்.

சங்க நூல்கள் மக்களின் அக வாழ்க்கையையும் புற வாழ்க்கையையும் ஐந்திணைகளிலும் வைத்துக் கூறுகின்றன. இவ்விலக்கியத்திற்கு அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை அடிப்படையாக இருந்திருக்க வேண்டும். முழுவதும் புலவர் கற்பனையன்று. தொல்காப்பியத்திலும் கடைச்சங்க நூல்களிலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஒவ்வொரு நிலத்தினதும் வாழ்க்கை முறைகளும், ஒழுக்கங்களும், தெய்வங்களுங் குறிப்பிடப்படுகின்றன. நிலத்தின் இயல்பிற்கேற்ப மக்கள் தமது வாழ்க்கை முறைகளை அமைத்தனர். குறிஞ்சி நில மக்கள் குறவர், குன்றவர், கானவர், வேட்டுவர் எனப்பட்டனர். தேன் அழித்தலும், கிழங்கு அகழ்தலும், தினை விதைத்தலும், வேட்டையாடலும் இவர்களுடைய முக்கிய தொழில்களாகும். தேனும் தினை மாவும் இறைச்சியும் குறுஞ்சிநில மக்களின் முக்கிய உணவுப் பொருட்கள், முருகன் குறிஞ்சி நிலத் தெய்வம்.

முல்லைநில மக்கள் ஆயர், இடையர், கோவலர், பொதுவர் எனப்பட்டனர். ஆடு, மாடு மேய்த்தலும் வரகு விதைத்தலும் இவர்களுடைய தொழில்களாகும். வரகரிசிச் சோறும் பாலும் தயிரும் இவர்களுடைய முக்கிய உணவுப் பொருட்கள். மருதநில மக்கள் வேளீர், உழவர் கனமர், கடையர் எனப்பட்டனர். வேளாண்மையே இவர்களுடைய முக்கிய தொழில், பெரும்பாலான மக்கள் மருத நிலங்களில் வாழ்ந்தனர். நெல், வாழை, கரும்பு முதலிய பயிர்கள் செய்தனர். வேளாண்மைச் செய்முறைகள் சங்க நூல்களிற் கூறப்படுகின்றன. நெய்தல் நில மக்கள் பரதவர், பறவர், பாணியர், திமிலர், திரையர், நுழையர் எனப்பட்டனர். மீன் பிடித்தலும், உப்பு விளைத்தலும், வாணிகமும் இவர்களுடைய முக்கிய தொழில்களாகும். தமிழ் நாட்டிற் பாலைவனங்கள் இல்லை. வானம் பொய்த்து வறண்டுபோன நிலங்களைப் பாலை என்றனர். பாலைநில மக்கள் எயினர், மறவர் எனப்பட்டனர். இவர்கள் சிறந்த போர்வீரர். ஏனைய நில மக்களைக் கொள்ளையடித்து வாழ்ந்தனர்.

தொழில்களுக்கேற்பவும் மக்கள் வௌ;வேறு பெயர்கள் பெற்றனர். அந்தணர், ஐயர், பார்ப்பனர், அரசர், வணிகர், வேளாளர், அடியோர், வினைவலர், கொல்லர், பொற்கொல்லர், தச்சர், குயவர், புலைத்தியர், பறையர், துடியர், பாணர், கடம்பர், கூத்தர், பொருநர், சங்ககாலத்துக்கு முற்பட்டே தமிழ் நாட்டிற் பல சாதிகள் தோன்றிவிட்டன. குடிகள் நான்கெனச் சங்க நூல்கள் கூறுகின்றன.

“துடியன், பாணன், பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியுமில்லை.”

எனினும், இச்சாதிகளிடையில் உயர்வு தாழ்வு தோன்றவில்லை. சங்ககாலத் தமிழரிடையில் நிலத்திற்கேற்பப் பண்பாட்டிலும், சமயத்திலும் பழக்க வழக்கங்களிலும், உணவிலும் சில வேற்றுமைகள் காணப்படுகின்றன. பொதுவாக நாம் வேளிர் நாகரிகத்தையே தமிழர் நாகரிகமாக எடுத்துக்கொள்ளுகிறோம்.

தமிழ் நாட்டிலே பல்லாயிரஞ் சிற்றூர்களும் பேரூர்களும் பல நகரங்களும் பட்டினங்களும் துறைமுகங்களும் இருந்தன. துறைமுகங்களில் விசேடமாகக் குறிப்பிடத்தக்கவை@ காவிரிப்பூம் பட்டினம், கொற்கை, முசுறி, மாந்தை முதலியனவாகும். நகர வாழ்க்கையையும் சிற்றூர் வாழ்க்கையையுஞ் சங்க நூல்கள் விரிந்துரைக்கின்றன.

சிற்றூர்க் காட்சிகள் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

(1) எங்கும் புல் மூடிக்கிடக்கிறது. ஊரைச் சுற்றி முள்வேலி அடைக்கப்பட்டிருக்கிறது. முள்வேலிக்கு இடையே அங்கும் இங்கும் சிறு குடிசைகள் காணப்படுகின்றன. மனையின் புறத்திற் பருத்திச் செடியும் பீர்க்கு முதலாங் கொடிகளும் பரந்து கிடக்கின்றன. மனையை அடுத்து ஒரு குப்பைமேடு. இங்கு கோழிகள் குப்பையைக் கிளறுகின்றன. பறவைகளும் பன்றிகளும் வளர்க்கப்படுகின்றன. ஊரில் நடுவே கிணறும் பொதுவிடமும் இருக்கின்றன. ஊர் மக்கள் ஆட்டுக்கிடாய் கோழிச் சண்டை பார்த்துப் பொழுது போக்குகின்றனர்.

(2) வரகுக் கற்றையால் வேய்ந்து சிறு குடிசைகள்@ உள்ளே ஆட்டுத்தோல் விரிக்கப்பட்டிருக்கிறது. ஆடுகள் மனையைச் சுற்றக் கட்டப்பட்டிருக்கின்றன.

(3) நிரை மரங்களாலான வேலி சூழ்ந்த மனை. அதற்கருகில் ஒரு பந்தல். மேலும் ஒரு கொட்டில். இங்கு கலப்பைகளும் வண்டிகளுங் கிடக்கின்றன. வரகு வைக்கோலால் மனை வேயப்பட்டிருக்கிறது.

(4) தென்னங் கீற்றுக்களால் வேய்ந்த மனை. மரச் செடிகள் வளவில் வளர்ந்து இருக்கின்றன.

(5)கடற்கரையில் பரதவர் குடிசைகள் காணப்படுகின்றன. மீன் பிடிக்கும் பறிகள் குடிசையின் முன்னே கிடக்கின்றன. சுரை முதலாங் கொடிகள் காய்த்துத் தொங்குகின்றன.

(6) பரவர் குடிசைகள்:- மூங்கிலைப் பரப்பி அதன் மேற்கிளைகளை வைத்துத் தாழை நாணாற் கட்டப்பட்டு மேலே தருப்பைப் புல்லால் வேயப்பட்டிருக்கின்றன. தாழ்ந்த குடிசைகள். அவற்றின் முற்றங்களிற் பறிகள்.

(7) நன்னன் நாட்டுக் குறவர் மூங்கிற் குழாய்களில் தேனாற் செய்த கள்ளையும் நெல்லாற் சமைத்த கள்ளையும் குடிக்கின்றனர். மாவையும் புளியையும் கலந்து உண்ணுகின்றனர். அரிசியினாலாக்கிய வெள்ளிச் சோறும் உண்ணுகின்றனர்.

(8) அந்தணர் வாழும் ஊர் மிகவும் சுத்தமாக இருக்கிறது. வீடுகள் பசுஞ் சாணியினால் மெழுகப்பட்டிருக்கின்றன. பந்தல்களிற் பசுக் கன்றுகள் கட்டப்பட்டிருக்கின்றன. வீடுகளில் நாய் கோழிகள் இல்லை.

சங்க காலத் தமிழகத்தில் வறுமை இருக்கவில்லையெனக் கூறமுடியாது. சிற்றூர்களிலும் பேரூர்களிலும் வறியோர் சிலரும் வாழ்ந்தனர். வறுமையின் கொடுமையைச் சில புலவர் பாடினர். கிழிந்த கற்றை அணிந்த மக்களும் இருந்தனர். குப்பையிலே பயிரான கீரையை நகத்தினாற் கிள்ளி எடுத்து உப்பில்லாமல் வேகவைத்து வாயிற் கதவைத் தாளிட்டுச் சுற்றமுடன் உட்கார்ந்து ஒருத்தி உண்டாளெனக் கூறப்படுகிறது. புல்லரிசியை உப்புடன் கலந்து வேடர் உண்டனர். ஆனால், வறுமையிலும் பண்பாடுடைய வாழ்க்கை நடத்தினர். இப் பண்பாட்டை விளக்குவதே இவ்வதிகாரத்தின் நோக்கமாகும்.

சிற்றூர் காட்சிகள் ஒருபக்கம், பேரூர் காட்சிகள் மறுபக்கம். நகரங்களில் அரசரும், அமைச்சர்களும், சேனைத் தலைவர்களும், வணிகரும், செல்வர்களும் பல்வேறு வகைப்பட்ட தொழிலாளர்களும் வாழ்ந்தனர். பிறநாட்டு வாணிபரும் தொழிலாளரும் இருந்தனர்.

“கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவனர் இருக்கையும்
கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள்
கலந்திருந்நுறை மிலங்கு நீர் வரைப்பும்”

சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப் படை, மதுரை காஞ்சி, நெடுநேல் வாடை முதலிய நூல்கள் இந் நகர வாழ்க்கையைச் சிறப்பாகக் கூறுகின்றன. அரசரேயன்றிச் செல்வர்களும் மாடமாளிகைகளில் வாழ்ந்தனர். பல தட்டுக்களுடைய வீடுகளில் இடைத் தட்டுக்களில் மக்கள் வாழ்ந்தனர். கால நிலைக்கு ஏற்ற பள்ளியறைகள் வீடுகளில் இருந்தன. வேனிற் பள்ளி, உதிரிப்பள்ளி என்பன.

“மலை தோய் உயர் மாடம்”
“முகில் தோய் மாடம்”
“நெடுநிலை மாடத்து இடைநிலையில்”
“வகைபெற எழுந்து வானம் மூழ்கிச்
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்”

பூம்புகார் நகர்ச் செல்வப் பெண்களின் வாழ்க்கைக் காட்சி ஒன்று:-

“பூம்புகார் நகரத்தில் வண்ணமும், சுண்ணமும், தண்ணறுஞ், சாந்தமும், பூவும், புகையும் விரையும் வீதிகளில் விற்கப்பட்டன. பத்து வகைப்பட்ட விரகாலும் ஐந்து வகைப்பட்ட விரையாலும் முப்பத்து வகைப்பட்ட வாசனைப் பொருட்களினாலும் ஊறிக் காய்ந்த நண்ணீரிற பெண்கள் நமது கூந்தலைத் தோய்த்து நனைத்தனர். ஈரத்தை வாசனைப் புகையில் உலர்த்திக் கூந்தலுக்குச் சவ்வாது முதலிய நறுமணங்கள் பூசினர். பொன்னாலும் நவமணிகளினாலும் செய்யப்பட்ட பல்லாபரணங்கள் அணிந்தனர்.

தொல்காப்பியத்திற் குறிப்பிட்ட தனிப்பட்ட திணை வாழ்க்கை கடைச்சங்க காலத்துக்கு முற்பட்டே ஓரளவுக்கு மறைந்து விட்டது. எனினும், மரபு முறைப்பற்றிக் கடைச்சங்க நூல்களும் இவ்வாழ்க்கையைக் குறிப்பிடுகின்றன. கடைச்சங்க காலத்தில் நானில மக்களிடையிலும் பொருளாதாரத் தொடர்புகளும் உறவுகளும் ஏற்பட்டு விட்ன. தமிழ்நாட்டு மூவேந்தர்களும் நாடெங்கும் வீதிகளும் வழிகளும் அமைத்தும், இடையூறு மிகுந்த இடங்களிற் பாசறைகளிற் படைகளை நிறுவியும் பிரயாணிகளுக்கும் வணிகருக்கும் பாதுகாப்பு அளித்தனர். திரையன் ஆண்ட தொண்ட நாட்டில் வழிகளில் வில் வீரர் நின்று வணிகரைக் காத்தனர் எனப் பெரும் பாணாற்றுப்படை கூறுகிறது.

“கழுதைச் சாந்தோடு வழங்கும்
உலகுடைப் பெருவழிக் கவ லை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன் காட்டு இட்டு”

ஆய்ச்சியர் தயிர் கடைந்து வெண்ணெய் மோரை மருதநில மக்களுக்கு விற்று அந்நிலப் பொருட்களை மாற்றாகப் பெறுகின்றனர். நெய்தல் நில மக்களும் மருதநில மக்களும் தமது பண்டங்களை மாற்றிக் கொள்ளுகின்றனர். குறிஞ்சி நிலப் பொருட்களாகிய தேனுங் கிழங்குகளும் ஏனைய நிலங்களில் விற்கப்படுகின்றன. இத்திணை மயக்கத்தைச் சங்கப்பாடல் ஒன்று அழகாகக் கூறுகிறது.

“தேன் நெய்யோடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யோடு நறுவு மறுகவும்
தீங் கரும்போடு அவல் வகுத்தோர்
மான் குறையோடு மது மறுகவும்
குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்
நறும் பூங் கன்னிக் குறவர் ஆடக்
கானவர் மருதம் பாட, அகவர்,
நீணிற முல்லைப் பஃறிணை நுலலக்
கானக் கோழி கதிர் குத்த
மனைக் கோழி தினை கவர
வரை மந்தி கழி மூழ்கக்
கழி நாரை வரை இறுப்பத்
தண் வைப்பின் நாடு குழீஇ”

துங்க பத்திரை யாறு வரையிற் சேர, சோழ, பாண்டிய, குறும்ப, எருமை நாடுகள் இருந்தன. தமிழ் நாட்டிற்கு வடக்கே கொங்கணர், கலிங்கர், இராட்டிரகூடர் முதலிய நாகரிகங்குறைந்த மக்கள் வாழ்ந்தனர். மேலும் வடக்கே வங்காளம், பிகார் சிந்து நாடு, கசமார் நாடு (முயளாஅசை) பூதர் நாடு (டீhரவயn) முதலியன இருந்தன. இப் பகுதிகளில் வாழ்ந்த திராவிட மக்கள் சித்திய, காக்கேசிய சீனக் குழுக்களுடன் சேர்ந்து மொழி, பண்பாடு வேற்றுமையடைந்து விட்டனர்.

2. கடைச் சங்ககால விவசாயம்
கடைச்சங்க காலத்திலும் விவசாயமே அடிப்படைத் தொழிலாகும். நீர்வளமும் நிலவளமுமுடைய தமிழ் நாட்டில் அக் காலத்தில் உணவுக்குப் பஞ்சமில்லை. பாரதப் போரின் போது, ஒரு பாண்டியனெ இரு சேனைகளுக்கும் உணவளித்தான். மூவேந்தருஞ் சிற்றரசர்களும் கிணறுகள் குளங்கள் வெட்டியும் ஆறுகளுக்கு அணைகள் கட்டியும் நீர்வளத்தைப் பெருக்கினர். இடைச் சங்க காலத்திற் காந்தமன் எனுஞ் சோழன் காவேரியை வெட்டிச் சோழ நாட்டிற்குத் திருப்பினான். தமிழர் மறையாகிய திருக்குறளில் வள்ளுவர் உழவின் சிறப்பைப் பத்துக் குறள்களில் விளக்குகிறார். “சிறுபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை வேளாளர்க்கு முரித்தாய உழுதற்றொழில்@ செய்விக்குங்கால் ஏனையோருக்கு முரித்து@ இது, மேற் குடியுயர்தற்கேது வென்ற ஆள் வினைவகையாகலின், குடிசெயல் வகையின் பின் வைக்கப்பட்டது.” என்பது பரிமேலழகர். உரைக்குறிப்பாகும்.

“வேளாண் மாந்தர்க் குழுதூ னல்ல
தில்லென மொழிப”

“ஏரினு நன்றா வெரு விடுதல் கட்டபி
னீரினு நன்றதன் காப்பு”

“சுழன்று மேர்ப்பின்ன துலக மதனா
லுழந்து முழவே தலை”

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந்
தொழுதுண்டு பின் செல் பவர்”

“இலமென் றசைஇ யிருப்பாரைக் காணி
னில மென்னு நல்லா னறும்.”

“வரம்புயர நீருயரும்@ நீருயர நெல்லுயரும்@
நெல்லுயரக் குடியுயரும்@ குடியுயரக் கோலுயரும்@
கோலுயரக் கோன் உயரும்.”

கடைச் சங்க கால விவசாயமுறை நிலப்பண்ணை முறை என்பதற்குப் பல சான்றுகளுண்டு. எல்லா நிலங்களும் விளைபொருளில் ஆறிலொரு பங்கும் அரசனுக்குரியவை. அரசர் சேனைத் தலைவர்களுக்கும் புலவருக்கும் நிலங்களை வழங்கினர் எனச் சங்க நூல்கள் கூறுகின்றன. இவர்கள் பல சலுகைகள் பெற்றனர். பல கடமைகள் செய்யவேண்டியும் இருந்தனர். இவர்கள் இடைக்கால ஐரோப்பிய நிலப்பிரபுக்களைப் போன்றவராவர். யூதர் கி.பி. முதலாம் நூற்றாண்டில் தமிழ் நாடு வந்தனர். அவர்களுடைய தலைவர்களில் ஒருவனாகிய யோசப் இரப்பயனுக்குத் தமிழ் நாட்டரசன் ஒருவன் அஞ்சுவள நாட்டை வழங்கிய செப்புப் பட்டயம் பின் வருமாறு கூறுகிறது. “யாம் யோசப் இரப்பயனுக்கு அஞ்சு வளநாடு, பணமாகவும் பொருளாகவும் திறை பெறும் உரிமை, அஞ்சு வளத்தின் வருமானம், பகல் விளக்கு தெரு விரிப்பு, பல்லக்கு, குடை, வடுக முரசு, எக்கானம், கால் மிதியடி, அணித் தோரண வளைவுகள், மேற்கட்டிகள் முதலிய பெருமகனுக்குரிய 72 சிறப்புரிமைகளையும் கொடுத்துள்ளோம்.

நிலவரியும் நீர் வரியும் கொடுங்குள் கடமையிலிருந்து அவருக்கு விலக்குரிமை கொடுத்திருக்கிறோம். அரண்மனை வகைக்கு மற்றை நாட்டு வாசிகள் வரி செலுத்துஞ் சமயம் அவர் வரி செலுத்தவேண்டியதில்லை யென்றும் அவர்கள் பரிசுகள் பெறுஞ் சமயம் அவரும் பெறுவாரென்றும் இந்தச் செப்புப் பட்டயம் மூலம் நாம் கட்டளை செய்கிறோம்.


3. கைத்தொழில்கள்
சங்க காலத்திலே நகரங்களிலும் பட்டினங்களிலும் பேரூர்களிலுஞ் சிற்றூர்களிலும் பல்வேறு கைத்தொழில்கள் செழிப்படைந்திருந்தன. புகார் நகரின் தொழிற் சிறப்பை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திற் பின்வருமாறு விவரிக்கிறார்.

வண்ணமுஞ் கண்ணமும் தண்ணறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினுங்
கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும்
தூசுந் துகிரும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோ டளந்துகடை யறியா
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும்
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலங் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பன்னிண வினைஞரோ
டோசுநர் செறிந்த ஊன்மலி யிருக்கையும்
கஞ்ச சாரருஞ் செம்புசெய் குநரும்
மரங் கொல் தச்சருங் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னருங்
கிழியினுங் கிடையினுந் தொழில் பல பெருக்கிப்
பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களுங்
குழலினும் யாழினுங் குரன்முத லேழும்
வழுவின் றிசைத்து வழித் திறங் காட்டும்
அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும்
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாள ரொடு
மறுவின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்
கோவியன் வீதியுங் கொடித்தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர்
மாட மறுகும் மறையோ ரிருக்கையும்
வீழ்குடி உழவரோடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதருங் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை யிருக்கையும்
திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோ
டணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவற் கணிகையர் ஆடற் கூத்தியர்
பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர்
பயில்தொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரோடு வகைதெரி யிருக்கையும்
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்த ரூருநர் கடுங்கண் மறவர்.
இருந்துபுறஞ் சுற்றிய பெரும்பா யிருக்கையும்
பீடுகெழு சிறப்பிற் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பிற் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பிற் பட்டினப் பாக்கமும்”
கச்சி மாநகரின் தொழிற் சிறப்பை மணிமேகலையிற் காணலாம்.
“பன் மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர்
கண்ணொடை யாட்டியர் காழியர் கூவியர்
மைந்திண விலைஞர் பாசவர் வாசவர்
என்னுநர் மறுகு மிருங்கோ வேட்களும்
செம்பு செய்ஞ்ஞரும் சஞ்ச காரரும்
பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன்செய் கொல்லரும்
மரங்கொற் றச்சரும் மண்ணீட்டாளரும்
வரந்தர வெழுதிய வோவிய மாக்களும்
தோலின் துன்னருந் துன்ன வினைஞரும்
மாலைக் காரரும் காலக் கணிதரும்
நலந்தரு பண்ணுந் திறனும் வாய்ப்ப
நிலக்கலங் கண்ட நிகழக் காட்டும்
பாண ரென்றிவர் பல்வகை மறுகும்
வேத்தியல் பொதுவிய லென்றிவ் விரண்டின்
கூத்தியல் யறிந்த கூத்தியர் மறுகும்
பால்வே றாக வெண்வகைப் பட்ட
கூலங் குவைஇய கூல மறுகும்
மாகதர் சூதர்வே தாளிகர் மறுகும்
போகம் புரக்கும் பொதுவர் பொலிமறுகும்
கண்ணுழை கல்லா நுண்ணூற் கைவினை
வண்ண வறுவையர் வளந்திகழ் மறுகும்
பொன்னுரை காண்போர் நன்மனை மறுகும்
பன்மணி பகர்வோர் மன்னிய மறுகும்
மறையோ ரருந்தொழில் குறையா மறுகும்
அரசியன் மறுகு மமைச்சியன் மறுகும்
ஏனைப்பெருந் தொழில்செ யேயோர் மறுகும்”

பாண்டி நாட்டு மதுரையின் தொழிற் சிறப்பையும் இளங்கோவடிகள் கூறுகிறார். மதுரைக் காஞ்சியிலும் இச்சிறப்பினைக் காணலாம்.

நெசவு: கடைச்சங்க காலத்தில் தமிழ்நாடு நெய்தல் தொழிலிற் புகழ்பெற்றிருந்தது. உறையூர் ஆடைகள் உரோமாபுரிச் செல்வர்களினாற் பெரிதும் விரும்பப்பட்டனவெனவும் இதனால் தமிழ்நாடு உரோமப் பேரரசிலிருந்து பெருந் தொகை பொன்னைப் பெற்றதெனவும் ரோம வரலாறு கூறுகிறது. நெசவுத் தொழிலையும் நெய்யப் பட்ட ஆடை வகைகளையும் பற்றிய குறிப்புக்களைப் பல சங்க நூல்களிற் காணலாம்.

“நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூ றடுகத்து

நறுமடி செறிந்த அறுவை வீதியும்” (சிலப்பதிகாரம்)

“பாம்புரி யன்ன வடிவின காம்பின்
கழையடு சொலியி னிழையணி வாரா” (புறநானூறு)

“நோக்கு நுழைகல்லா நுண்வய பூக்கனித்து
அரவுரி யன்ன வறுவை”
“இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்”
(மலைபடூகடாம்)

“ஆவி யன்ன அவிர் நூற் கலிங்கம்” (பெரும்பாண்)

“போதுவிரி பகன்றைப் புது மலரன்ன
அகன்று மடி சலிங்கம் முடீஇ”
(புறநானூறு)

“பாம்புரித் த்ன வான்பூங் கலிங்கம்”
“அரவுரியன்ன அறுவை”

“இழை மருங்கறியா நுழைநூல் கலிங்கம்”

“கொட்டைக் கரைய பட்டுடை நல்கி
கொட்டைக் கரைபோட்ட பட்டாடை கொடுத்து”

“பனி மயிர் குளிர்ப்பன பஞ்சின மெல்லிய
கனி மயிர் குளிர்ப்பன கண் கொளாதன
எலி மயிர்ப் போர்வை”
(சீவகசிந்தாமணி)

நெய்யப்பட்ட ஆடை வகைகளாவன:- கோசிசம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்டுகில், கண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கொங்கலர், கோபம், சித்திரக் கம்பி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக் காசு, வேதங்கம், புங்கர்க் காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறைஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, மணிப்பொத்தி என்பன வாகும்.

அணிகலன்கள்:- ஒரு நாட்டின் செல்வத்தை அந்நாட்டு மக்கள் ஆடவரும், பெணீடீருங் குழந்தைகளும் - அணியும் ஆடைகளிலிருந்தும் ஆபரணங்களிலிருந்தும் வீட்டிற் புழங்கும் தட்டு முட்டுப் பொருட்களிலிருந்தும் அறியலாம். கடைச் சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்திலே பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்களைப் புதைபொருள் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. சங்க காலத்தில் எமது பிள்ளைகள் தேரோடி விளையாடினர். கடலாடு காதையில் இளங்கோவடிகள் மாதவி அணிந்த அணிகலன்களைக் குறிப்பிடுகிறார். இவை அக்காலத் தமிழ் மாதரின் அணிகலன்களுக்கு உதாரணமாகும். மதுரையிலிருந்த ஆபரணக் கடைகளும் அங்கு விற்கப்பட்ட பொன் நவரத்தினங்களும் சிலப்பதிகாரத்திற் குறிப்பிடப்படுகின்றன:- நால்வகை வருணத்து வைரங்கள்@ மரகதங்கள்@ பதுமம், நீலம், விந்தம் படிதம் எனப்படும் நால்வகை மாணிக்கங்கள்@ புருடராகம்@ வயிடூரியங்கள்@ பல்வேறு வகை மணிகள்@ முத்து வருக்கங்கள், சிவந்த கொடிப்பவள வர்க்கங்கள்@ சாகரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூத்தம் எனும் நால்வகைப் பொன்: மதுரையில் விற்கப்பட்ட ஏனைய அலங்காரப் பொருட்களாவன:-

(அ) அகில்:- அருமணவன், தக்கோலி, கிடாரவன் காரகில் முதலிய வகைகள்

(ஆ) ஆரம்:- மலையாரம், தீமுரன், பச்சை, கிழான் பச்சை, பச்சை வெட்டை, அரிச் சந்தனம், வேர்ச்சுக் கொடி முதலிய வகைகள்

(இ) வாசம்:- அம்பர், எச்சம், கத்தூரி, சவாது, சாந்து, குங்குமம், பனிநீர், புனுகு, தக்கோலம், நாகப்பூ, இலவங்கம், சாதிக்காய், வசுவாகி, திரியாசம், தைலம் முதலிய வகைகள்.

(ஈ) கருப்பூரம்:- மலைச்சரக்கு, கலை அடைவ சரக்கு, மார்பு இளமார்பு ஆரூர்க்கால், கையொட்டுக்கால், மார்ப்பற்று, வராசான், குமடெறிவான், உருக்குருக்கு, வாரோசு, சூடன், சீனச் சூடன் முதலிய வகைகள்:

சிற்பக் கட்டடக் கலைகள்
பண்டு தொட்டுத் தமிழர் சிற்பக் கட்டடக் கலைகளிற் சிறந்து விளங்கினர். திராவிடச் சிற்பக்கலை எல்லா நாடுகளிலும் பரவியிருப்பதைக் காணலாம். சிந்துவெளியிலும்p வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் அரண்மனைகளையும், நகரங்களையும், கோட்டை கொத்தளங்களையும், அரண்களையும், மதில்கலையுங் கட்டினவர் திராவிட மக்களே. அரண்களின் அமைப்புங் காவலும் பல சங்க நூல்களிற் கூறப்படுகின்றன. வள்ளுவர் அரணின் சிறப்புக்களைப் பத்துக் குறள்களில் விளக்குகிறார். சங்க காலத்துக்குப் பின்பு தென்னாட்டிற் பெருங் கோயில்களையுங் கோபுரங்களையுங் கட்டியவரும் திராவிட மக்களே. உருவங்களைச் சமைத்தவரும் இவர்களே. சங்க நூல்கள் “மழைதோய்” “முகில் தோய்” மாடங்களைக் குறிப்பிடுகின்றன.

“வேயா மாடமும் வியன்கல இருக்கையும்
மான்கட் காலதர் மாளிகை யிடங்களும்
கயவாய் மருங்கிற் காண் போர்த் தடுக்கும்
பயனற வறியா யவன ரிருக்கையும்”
(சிலப்பதிகாரம்)

திவாகரம் சிற்பத் தொழிலின் உறுப்புக்களைக் கூறுகிறது.

“கல்லு முலோகமும் செங்கலு மரமும்
மண்ணுஞ் கதையும் தந்தமும் வண்ணமும்
கண்டசர்க் கரையு மெழுகு மென்றிவை
பத்தே சிற்பத் தொழிறள் குறுப் பாவன”

பிற நாட்டுத் தொழிலாளரும் தமிழ் நாட்டில் வாழ்ந்தனர். தொழில்கள் நடத்தினர்.

“மகத வினைஞரும் மாரட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடித்
தொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினை”
(மணிமேகலை)

பண்டைத் தமிழர் நாகரிகம் கடலக நாகரிகமாகும். வேளாண்மைக்கும் தொழிலுக்கும் உள்நாட்டு வாணிபத்துக்குங் கொடுத்த அதே முக்கியத்துவத்தைப் பண்டைக்காலத் தமிழர் கடல் வாழ்வுக்குங் கடல் வாணிபத்துக்குங் கொடுத்தனர். பிற்காலத்தில் ஆங்கிலேயரைப் போல இவ்வாணிபத்தின் பொருட்டுக் கடலாட்சி செய்தனர். கடற்படைகள் வைத்திருந்தனர். மீன் பிடித்தல், உப்பு விளைத்தல், முத்தெடுத்தல், சங்கெடுத்தல், முத்துக்கோர்த்தல், சங்கறுத்து வளையல்கள் செய்தல் முதலிய கடற்றொழில்கள் பல தமிழ் நாட்டில் நடைபெற்றன. கரையோரப் பயணத்துக்குரிய சிறு கலன்களையும் ஆழ்கடலைக் கடத்தற்குரிய நெடுநாவாய்களையும் தமிழர் கட்டினர்.

பல தொழினுட்ப நூல்கள் சங்ககாலத்திலே தமிழில் இருந்தன என அறிகிறோம். “மந்திரவாத நூல்கள், மருத்துவ நூல்கள், சாமுத்திரிக்க நூல்கள், நிலைத்து நூல்கள், சிற்ப நூல்கள், ஆயுத நூல்கள், மத்துவிச்சை நூல்கள், ஆடை நூல்கள், அணி நூல்கள், அருங்கல நூல்கள், இசை நூல்கள், கூத்து நூல்கள்” மேனாட்டுக் “கில்டு” முறையே சங்ககாலத் தமிழ் நாட்டுத் தொழின் முறையும் போலத் தோன்றுகிறது.

4. வெளிநாட்டு வாணிபம்
“திரை கடலோடியுந் திரவியந்தேடு” என்பது எமது பழமொழிகளில் ஒன்றாகும். பண்டு தொட்டுத் திராவிட மக்கள் கடலோடிகளாகவும் உலக வாணிபராகவும் இருந்தனர். கடலாட்சி செய்த திராவிட வினங்கள் வரலாற்றிற் பலவுள – வட ஐரோப்பாவிலிருந்த ஐபீரியர், ஸ்பெயின் நாட்டு பாஸ்குகள், இத்தாலி நாட்டு ஏட்றஸ் கானர், தென் ஐரோப்பிய, வட ஆபிரிக்க கிழக்காசிய நாடுகளிற் பரவிய கார்த்தேசியர், பினீசியர், கிறீசிலும் கிறீட்டிலும் வாழ்ந்த ஈஜியர், செங்கடலுக்கு அப்பெயர் அளித்த எரிதிரையர், சுமேரியர், ஏலமியர், இந்தியாவில் வாழ்ந்த திரயர், பரவர், சிந்துவெளி மக்கள். இவர்கள் யாவரும் திராவிடவின மக்களாவர். வாணிபத்துக்காகச் சென்ற திராவிட மக்கள் மேற்கே அத்திலாந்திசு வரையும் கிழக்கே மசுபிக் சமுத்திரம் வரையுங் குடியேறினர்.

கி.மு. 1000 அளவிற் சொலமன் ஆட்சிக்காலத்தில் கீபுறு நாட்டிற்குந் தென்னிந்தியாவிற்கும் இடையில் வியாபாரம் நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கீபுறுக் கப்பல்கள் இந்தியாவிற்கு வந்து பொருட்களை ஏற்றிச் சென்றன. தமிழ் நாட்டிரசர் ரோமுக்குத் தூதனிப்பினர். ரோமருடனும், கிரேக்கருடனும் வியாபாரஞ் செய்தனர். யவனர் பலர் தமிழ் நாட்டில் வாழ்ந்தனர். ரோமப் பொன் நாணயங்கள் தமிழ் நாட்டில் வழங்கின.

“யவனர் தந்த வினைமா ணன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங் கெழு முரிசி” (அகநானூறு)

“கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவன ரிருக்கையும்
கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந் துறையு மிலங்குநீர் வரைப்பும்”
(சிலப்பதிகாலரம்)

“மொழி பலபெருகிய பழிதீர் தேஎத்தும்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்” (பட்டினப்பாலை)

எகிப்து முதலிய நாடுகள் செங்கடல் வழியாகத் தென்னிந்தியாவுடன் வாணிகத் தொடர்புகள் கொண்டன. கிரேக்கரும், யவனரும், கோசியரும், பினீசியரும் இவ்வியாபாரத்தை நடத்தியர். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சால்டிய வேந்தன் நபோனி தாசு காலத்திலேயே இவ்விந்திய வாணிபஞ் சிறந்து விளங்கிற்று, கி.பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளினி “செங்கடற் செலவைப்” பற்றிய நூலிற் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“எகிப்து நாட்டு ஒசிசிஸ் துறையினின்று புறப்படுங்கலம், தென் மேற்குப் பருவக் காற்றைத் துணைக்கொண்டு நாற்பது நாட்களில் முசிறித்துறையை அடையும். அத்துறையிற் கடற்கொள்ளைக் கூட்டத்தினர் இருந்தனர். அவர்கள் நித்திரியான் என்ற இடத்தில் உறைபவர். முசிறித்துறைக்கும் கலம் நிற்கும் இடத்திற்கும் நெடுந்தூரம் இருந்தமையினாற், பொருட்களைச் சிறு சிறு படகுகளிற் கொணர வேண்டும். முசிறியிலும் பார்க்க நியாசிண்டி நாட்டிலுள்ள பாரேஸ் துறைமுகஞ் சிறந்து விளங்குகிறது. இந்நாட்டு வேந்தனாகிய பாண்டியோன் உள்நாட்டில் மதுரை எனும் நகரில் இருக்கிறான். பாரேஸ் துறைக்குக் கோட்டநாராவிலிருந்து மிளகுப் பொதிகள் வருகின்றன.”

முசிறித்துறை செல்வத்தாற் சிறப்புடைய மானகர் எனவும் வடக்கிலிருந்தும் எகிப்திலிருந்தும் கலங்கள் எப்பொழும் இத்துறைக்கு வந்து போயின எனவும் இவ் வியாபாரத்துக்குத் தமிழ் மக்கள் பயன்படுத்திய சிறு கலங்கள் பெருங்கலங்கள் பெருநாவாய்கள் பற்றியும் பெரிபுளுஸ் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

கடைச்சங்க காலத்திலே தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள் அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி, கருவப்பட்டை, மிளகு, வெற்றிலை, துணிவகைகள், முத்து, பவளம், சக்கிமுக்கிகள், வெள்ளி, தந்தம், மைக்கல், மாணிக்கம், வைரம், ஆமையோடுகள், தேக்கு, கருமருது, சந்தனம், குரங்குகள், மயில்கள், குரங்குக்கும் மயிலுக்கும் விவிலிய வேதச் சொற்களாகிய கபிம், துகிம் என்பவை தமிழ்ச் சொற்களாகும். இறக்குமதி செய்த பொருட்களாவன:-

தங்கம், பொற்காசுகள், உயர்வகை மதுக்கள், குதிரைகள், கண்ணாடி, பித்தளை, ஈயம், தகரம், சாடி, திராட்சை ரசம்.

பர்மா, மலாயா, யாவா, சுமாத்திரா, சீனா முதலிய கீழைத் தேசங்களுடனுஞ் சங்க காலத் தமிழர் வியாபாரஞ் செய்தனர். அக் காலத்திற் கீழைத் தேசங்களுக்கும் மேலைத் தேசங்களுக்கும் இடையில் வியாபாரம் தமிழ் நாட்டின் ஊடாகவே நடைபெற்றது. சுமாத்திரா, யாவா, பார்லி, பர்மா, சீயம், இந்துச் சீனா முதலிய நாடுகளில் தமிழ் வியாபாரிகள் குடியேறினர். சில காலங்களில் இந் நாடுகளிற் சிலவற்றைக் கைப்பற்றியும் ஆண்டனர். சாவகத் தீவிலுள்ள நாகபுரத்திலிருந்து அரசாண்ட தமிழ் அரசர் இருவரைப் பற்றி மணிமேகலை குறிப்பிடுகிறது. சீனக்கப்பல்கள் ‘சங்’ எனப் பட்டன. ஏனைய நாட்டுக் கப்பல்களைக் காட்டினும் இவை பெரியவையாக இருந்தன. இக் கப்பல்கள் இந்தியாவிற்குக் கொண்டுவந்த பொருட்கள் சீனக் கோப்பைகள், பட்டாடைகள், ஈயம், செம்பு, ஆமையோடுகள், பவளம், அகில், கரிக்கோடு, மரப்பிசின்கள் முதலியவையாகும். இந்தியாவிலிருந்து கொண்டுசென்ற பொருட்கள்:- முத்து, மிளகு, விரைபொருட்கள், நீலம், பூந்துகில்கள், கண்ணாடிச் சாமான்கள், பாக்கு முதலியவையாகும்.

கிழக்கிலும் மேற்கிலும் பல துறைமுகங்கள் இருந்தன. டிண் டிஸ், முசிறி, நெல்கின்றா, முமரி முதலியவை மேற்குத் துறைமுகங்களாகும். காவிரிப்பூம்பட்டினம் நாகபட்டினம், கொற்கை, புதுச்சேரி, மரக்காமை, தசார்க்கு முதலியவை கிழக்குத் துறைமுகங்களாகும். அக்காலத்திற் காவிரிப்பூம் பட்டினம் முசிறி கொற்கை முதலியவை புகழ்பெற்ற முறைமுகங்களாக இருந்தன. இங்கு நடைபெற்ற வியாபாரத்தைப் பற்றியும் குழுமி நின்ற கப்பல்களைப் பற்றியும் சங்க நூல்கள் கூறுகின்றன:-

“நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
காலின் வந்த கருங் கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும், அகிலும்
தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெளிய வீண்டி” (பட்டினப் பாலை)

தமிழர் அன்று ஈழத்தில் இருந்திராவிடின் ஈழத்துணவை யார் அனுப்பினர்? ஏற்றுமதி செய்யும் அளவுக்கு விவசாயம் முன்னேற்றம் அடைய முன், தமிழர் இந்நாட்டில் நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழ்ந்திருக்கவேண்டுமல்லவா?

“கடலருகே இருக்கும் பரதவருடைய அகன்ற தெருவிடத்தே அரிய காவலையுடைய பண்டசாலையுண்டு. கடலில் ஏற்றுவதற்குக் கொண்டுவந்த பண்டங்களும், கடலிலிருந்து இறக்கிய பண்டங்களும், சுங்கங் கொள்வதற்கு முத்திரை பொறித்துப் புறம்பே அடுக்கப் பட்ட பண்டங்களும் பண்டசாலையில் மலைபோற் குவிந்து கிடந்தன. சுங்கங் கொள்வோர் எப்பொழுதும் ஓய்வின்றிச் சுங்கங் கொள்வர்.”
(பட்டினப்பாலை)

கடைச் சங்க காலத்தில் வெளிநாட்டு வியாபாரமேயன்றி உள்நாட்டு வியாபாரமும் அபிவிருத்தியடைந்திருந்தது. தமிழ்நாடு முழுவதும் பொருளாதாரத் தொடர்பிருந்தது. குறிஞ்சி, முல்லை நில மக்கள் தமது பொருட்களை மருத நிலத்தில் விற்று நெல்லைப் பெற்றனர். நெய்தல் நிலத்துப் பரதவர் எல்லா நிலங்களிலும் உப்பு விற்றனர். உப்பை எழுது வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். நகரங்களிலும் பேரூர்களிலும் நானிலப் பொருட்களும் பிறநாட்டுப் பொருட்களும் விற்கப்பட்டன. நாணயங்கள் வழங்கின. உடன்படலும் கொடுத்தலும் அக் காலத்தில் வழக்கமாகும்.

நகரங்களிற் பெருங்குடி வாணிகர் இருந்தனர். செல்வ நிலைக்கேற்ப வாணிகர், இரப்பர், கலிப்பர் பெருங்குடியரெனப்பட்டனர். செல்வமும், புகழும் பெற்ற வணிகரை அரசர் “எட்டிப்” பட்டங் கொடுத்துக் கௌரவித்தனர். பிறநாட்டு வியாபாரம் பெரும்பாலும் வர்த்தகக் குழுக்களினால் நடத்தப்பட்டது. தாம் தேடிய செல்வத்தில் ஒரு பங்கை இக் குழுக்கள் சமூகத் தொண்டிலும் சமயத் தொண்டிலுஞ் செலவிட்டன. கோயில்கள் கட்டின. தமிழர் நாகரிகத்தையுஞ் சமயத்தையும் பிறநாடுகளிற் பரப்பிய இக்குழுக்களுக்கு அரசர் ஆதரவளித்தனர். நகரங்களில் வாழ்ந்த வாணிகரின் சிறப்பையுஞ் செல்வத்தையுஞ் சிலப்பதிகாரங் கூறுகிறது.

“உரைசால் சிறப்பின் அரசுவிழை திருவிற்
பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்
முழுங்கு கடல் ஞால முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்த தாகி
அரும்பொருள் தரூஉம் விருந்திற் றோம்
ஒருங்கு நொக் கன்ன உடைப்பெரும் பண்டம்
கலந்தினுங் காலினுந் தருவன ரீட்டக்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்”

வாணிகரின் பண்பைச் சங்க நூல்கள் கூறுகின்றன.

“நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நன்னெஞ்சி னோர்
வடுவஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள் வதூஉ மிகைப் படாது
கொமுப்ப தூஉங் குறை படாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்
தொல் தொண்டி துவன்றிருக்கை”
(பட்டினப்பாலை)

பிற்காலத் திவாரகம் வாணிகர் பண்புகளைப் பின்வருமாறு கூறுகிறது:-

“தனிமை யாதல் முனிவில னாதல்
இடனறிந் தொழுகல் பொழுதொரு புணர்தல்
உறுவது தெரிதல் இறுவ தஞ்சாமை
ஈட்டல் பகுத்தல் - என்றிவை யெட்டும்
வாட்டமிலா வணிகர தியற் குணமே”

ஒன்பதாம் அத்தியாயம்
கடைச்சங்க காலம்
(தொடர்ச்சி)

1. தமிழர் வீரம்
“உயர் வீரஞ் செறிந்த தமிழ்நாடு”
“சிங்களம் புட்பகம் சாவக – மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் – நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு”

“சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத்தொழில் வாணிபம் – மிக
நன்று வளர்த்த தமிழ் நாடு”
(பாரதியார்)

வரலாறுக்கு முற்பட்ட பண்டைக் காலத்திலேயே திராவிட மக்கள் இலேமூரியாவிலிருந்து வடக்கேயும், மேற்கேயும், கிழக்கேயுஞ் சென்று பல நாடுகளிற் குடியேறித் தமது ஆட்சியையும் நாகரிகத்தையும் பரப்பினர். சேரர் ஆட்சி இந்தியாவின் மேற்கில் இமயம் வரையும், சோழர் ஆட்சி இந்தியாவின் மத்திய பகுதியிலுங் கிழக்கிலும் இமயம் வரையும் பாண்டியர் ஆட்சி தெற்கே ஒளி நாடு வரையும் பரவியிருந்தன. மூவேந்தர் ஆட்சி தொல்காப்பியருக்கு மிக முற்பட்ட காலத்திலிருந்தே இருந்து வருவதனால் அவற்றை அநாதியாகவுள்ளவை என்பர்.

சங்கப் பாடல்கள் புகழ்ந்துரைக்கும் முதலாவது பேரரசன் நெடியோனாவான். இவன் நிலந்தரு திருவிற் பாண்டியன் எனவும், வடிவலம்ப நின்ற பாண்டியன் எனவும், சயமாகீர்த்தி எனவும் ஆதிமனு எனவும் குறிப்பிடப்படுகிறான். இவனின் தலைநகர் பஃறுளியாற்றங்கரையிலிருந்த தென் மதுரையாகும். பஃறுளியாறும் தென் மதுரையும் கடற்கோளினால் அழிந்தபின், இவன் இமயம்வரை வென்று தனது ஆட்சியைப் பரப்பினான் எனச் சிலப்பதிகாரங் கூறுகிறது.

“பஃறுளி யாற்றுடன் பனிமலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்திசை யாண்ட தென்னவன்”

இவன் கடல்கடந்த நாடுகளிலும் தனது ஆட்சியை நிறுவினான். நீர் விழவின் நெடியோன் எனுஞ் சிறப்புப் பெயர் பெற்றான்.

“முழுங்கும் முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளில் தந்து தம்புகழ் நிறீஇ
ஒருதாம் ஆகிய உரவோன்”

எனக் குடபுலவியனாரும்

“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீந்த
முந்நீர் வழலின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணல்”

என நெட்டிமையாகும்

“வானியைந்த இருமுந்நீர்ப்
போ நிலைஇய இரும்பௌவத்துக்
கொடும்புணரி விலங்கு போழ
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ!”

என மாங்குடி மருதனாரும் இம்மன்னனைப் புகழ்ந்து பாடினர். உயர் நெல்லின் என்பது சுமாத்திரா நாட்டிலுள்ள சாலியூராகும். யாவா, சுமாத்திரா, மலாயா முதலிய நாடுகளில் இம் மிகப் பழங்காலத்திலேயே தமிழர் இராச்சியங்கள் இருந்ததற்கும் தமிழ் மொழி வழங்கியதற்கும் வேறு பல சான்றுகளுமுள. சேர ம்னரிற் மிகப் பழையவனாகிய இமயவரம்பன் என்ற வானவரம்பனின் இராச்சியம் இமயம் வரையும் இருந்ததெனக் கூறப்படுகிறது. சோழர் பரம்பரையிற் சூரியச் சோழன், முசுகுந்தன் மனுநீதிகண்ட சோழன் என்போர் பழைய மன்னராவர். இவர்களுடைய வெற்றிகளையும் புகழையும் பல சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன.

கடைச்சங்க காலத்திலும் பல தமிழ் வேந்தரின் வடநாட்டு வெற்றிகளைச் சங்கப் பாடல்கள் கூறுகின்றன. சேர-சோழ-பாண்டியர் இமயத்திலே தமது கொடியைப் பொறித்தனர்.

“கயலெ ழுதிய விமய நெற்றியின்
அயலெ ழுதிய புலியும் வில்லும்”

“ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசை
தொன்று முதிர் வடவரை வணங்குவில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பணித்தோன்”
(அகநானூறு)

மோரிய அரசனாகிய அசோகனைப் போரில் வென்றவன் சோழன் இளஞ்செட்சென்னியாவான். மோரியரின் தென்னாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தியவன் இவனே. கடைச்சங்க காலத்திலே வட இமயத்தில் தமிழ்த்தடம் பொறித்த சேர முதல்வன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனாகக் குறிப்பிடப்படுகிறான்.

“ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங் குமரியோ டாயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடத்தே”
(பத்துப்பாட்டு)

பிற்காலத்திற் சேரன் செங்குட்டுவனின் வடநாட்டு வெற்றிகளை இளங்கோவடிகள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“வடபே ரிமயத்து வான்றாகு சிறப்பிற்
கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின்
சினவேல் முன்பிற் செருவெங் கோலத்துக்
கனக விசயர்தங் கதிர்முடி யேற்றிச்
செறிகழல் வேந்தன் தென்றமி ழாற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகை உண்ட வொன்பதிற் றிரட்டியென்று
யாண்டும் மதியும் நாளுங் கடிகையும்
ஈண்டுநீர் ஞாலங் கூட்டி யெண்கொள்
வருபெருந் தானை மறக்கள மருங்கின்
ஒருபக லெல்லை உயிர்த்தொகை உண்ட
செங்குட் டுவன்றன் சினவேற் றானையொடு”

“வடவரைமேல் வாள் வேங்கை ஏற்றினன்
திக்கெட்டும் குடை நிழலிற் கொண்டளித்த
கொற்றவன் காண் அம்மானை”

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழாவெடுத்தபோது அங்கு வந்திருந்த மன்னரைச் சிலப்பதிகாரங் கூறுகிறது:-

‘அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தனும்
கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்”

கடைச்சங்க காலத்தில் வடதிசை வென்ற பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனாவான்:-

“வட ஆரியர் படை கடந்து
தென் தமிழ்நாடு ஒருங்கு காணப்
புழைநீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசில் கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியன்” (சிலப்பதிகாரம்)

கடைச் சங்ககாலச் சோழ மன்னரில் வடநாடு வென்று இமயத்திலே தனது சின்னத்தைப் பொறித்தவன் இரண்டாங் கரிகாலனாவான்.

கடைச்சங்க காலத்திலே தமிழ் மக்கள் - ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் - வீரராக வாழ்ந்தனர். “வீரஞ் செறிந்த தமிழ் நாடு”. நோய் காரணமாகப் பிள்ளைகள் இறப்பினும் அல்லது இறந்து பிறப்பிலும், அவர்களை வீரர் செல்லும் உலகத்துக்குச் செல்கவென்று வாளால் வெட்டிப் பின்பு புதைப்பர். போரில் வீழ்ந்த வீரரைக் கல்லில் அமைத்து வழிபடுதல் அக்காலத்திற் பெரு வழக்காக இருந்தது. நடுகல் அமைத்து வழிபடும் முறைக்குத் தொல்காப்பியரே இலக்கணம் வகுத்தனர். வேந்தரின் படைகளையும் அரண்களையும் பற்றிச் சங்க நூல்கள் பல விடங்களிற் கூறுகின்றன. அரசர் பலவகைப்பட்ட படைகள் வைத்திருந்தனர்:- யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை, வேளைப்படை, மூலப்படை, விலைப்படை, விற்படை, வேற்படை, மற்படை, வாட்படை, படை மாட்சியை வள்ளுவர் இருபது குறள்களில் விளக்குகிறார்.

“விழுப்புண் படாத நா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை யெடுத்து.”

“உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
செறினுஞ் சீர் குன்ற லிலர்”

அரண்களின் அமைப்பையுஞ் சிறப்பையும் திருக்குறளிலும் சிலப்பதிகாரத்திலுங் காணலாம்.

“மணிநீரு மண்ணு மலையு மணி நிழற்
காடு முடைய தரண்.”

“உயர் வகலந் திண்மை யருமையிந் நான்கி
னமைவர ணென்றுரைக்கு நூல்.” (திருக்குறள்)

“மிணையுங் கிடங்கும் வளைவிற் பொறியும்
கருவிர லூகமும், கல்லுமிழ் கவணும்,
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் உலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமும் கையெயா ஊசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவுஞ் சீப்பும், முழுவிறற் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்” (சிலப்பதிகாரம்)

சங்க காலத் தமிழ் நாடு வீரத் தாய்மார் வாழ்ந்த திருநாடாக விளங்கிற்று. வீரத்தின் அறிகுறியாக ஆண்களும், பெண்களும். பிள்ளைகளும் புலிப்பற் கோர்த்து அணிந்தனர் புலிப் பல் தாலி கட்டினர். புலித்தோல் போர்த்தனர்.

“மறங்கொள் ளயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண்பல் தாலி.”

இளந் தமிழ்ப் பெண்கள் அன்று வீரனை மணஞ் செய்யவே விரும்பினர். உத்தியாக மாப்பிள்ளை தேடி அலையவில்லை.

“திருநயத் தக்க பண்பினிவள் நலனே
பொருநர்க் கல்லது பிறர்க்கா காதே”

ஏறுகளை எதிர்த்துப் பொருது அடக்குவதற்கு, அஞ்சும் ஆயனை எந்த ஆய்ச்சியும் விரும்ப மாட்டாள்.

“கால்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்”

“கொல்லேறு கொண்டான் இவள்கேள்வன் என்று ஊரார்
சொல்லும் சொல் கேளா அலைமாறி யாம்வரும்
செல்வம் எங் கேள்வன் தருமோ எங் கேளே.”

வீரப் பெண்களின் கடமையாது என்பதைப் பொன் முடியார் எனுஞ் சங்க காலப் பெண் புலவர் தெளிவாகக் காட்டுகிறார்.

“ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவா ளருஞ்சமம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”

தகடூர் யாத்திரையிலுள்ள அரிய பாடலொன்று பின்வருவதாகும்.

“தருமமும் ஈதேயாம் தானமும் ஈதாம்
கருமமுங் காணுங்கால் ஈதாம் - செருமுனையிற்
கோள்வாண் மறவர் தலைதுமிப்ப என்மகன்
வாள்வாய் முயங்கப் பெறின்.”

முதல்நாட் போரில் ஒருத்தி தனது தமையனை இழந்தாள். இரண்டாம் நாட் போரிற் கணவனை இழந்தாள். எனினும், மூன்றாம் நாட்போருக்குத் தனது பால் மணம் மாறாச் சிறுவனை உவப்புடன் அனுப்புகிறாள்.

“மேனாள் உற்ற செருவிற்கிவள் தன்னை
யானை எறிந்து களத்தொழிந் தன்னே
நெருநல் உற்ற செருவிற்கிவள் கொழுநன்
பொருநரை விலங்கி ஆண்டுப்பட் டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇ
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமக னல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே”

உன்மகன் எங்கே சென்றான் என்ற கேள்விக்கு ஒரு தமிழ்த்தாயின் விடை பின்வருவதாகும்:

“சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவதி@ என் மகன்
யாண்டுள னாயினும் அறியேன்@ ஓடும்
புலிசேர்ந்து போகிய நல்லளை போல
ஈன்ற வயிறோ விதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களந் தானே.”

இறந்த மகனின் உடலைப் போர்க்களத்திலே கண்டு உவப்பினால் ஒரு வீரத்தாயின் வாடிய முலைகள் பாலூறிச் சுரந்தனவெனப் புறள நானூறு கூறுகிறது.

“இடைப்படை யழுவத்துச் சிதைந்துவே றாகிய
சிறப்புடைய யாளன் மாண்புகண் டருளி
வாடுமுலை யூறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே”

தன் மகன் போரிற் பின்வாங்கி ஓடினான் எனக் கேட்டு ஒரு தாய் சினங்கொண்டாள். அவள் அவ்வாறு செய்திருப்பின், அவனுக்குப் பாலூட்டிய முலையை அறுத்தெறிவேன் எனச் சபதஞ் செய்தாள்.

சிறுவன்
“பாடை யழித்து மாறுன னெற்று பலர்கூற
மண்டமர்க் குடைந்த னனாயின் னுண்டவென்
முலையறுத் திடுவேன் யானெனச் சினைஇக்
கொண்ட வாளோடு படுபிணம் பெயராச்
செங்களத் துழவோன் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை சாணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே”

சங்க காலத்துக்குப் பின்பும் தமிழர் வீரம் மறையவில்லை. பாண்டிய சோழப் பேரரசுகளைப்பற்றி அடுத்த அதிகாரத்திற் படிப்போம். இன்று தமிழர் ஆட்சி யெங்கே! நிலைமை மாறிவிட்டது.

“கால மென்பது கறங்கு போற் சுழன்று
மேலது கீழாய் கீழது மேலாய்
மாற்றிடுந் தோற்றம்”

எமது வரலாறு இலங்கை வேந்தன் சோகக்கதை போலாயிற்று.

“வாரணம் பொருதமார் பன், வரையினை எடுத்ததோ ளன்
பாரொடு விண்ணும் அஞ்சிப், பதைத்திட உரப்பும் நாவன்
தாரணி மவுலிபத் தும், சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும் களத்தேபோட்டு, வெறுங்கையோடு இலங்கை
புக்கான்

2 நாம் தமிழர் கண்ட அரசு
“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு”

“முறை செய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்” (திருக்குறள்)

அரசு சட்டமுறை அதிகாரத்தின் இருப்பிடம் எனவும், பலமே அதற்கு ஆதாரம் எனவும் மேனாட்டு மெய்ம்மையியலாளர் கூறுகின்றனர். அரசு மக்களின் இணக்கம் ஒத்துழைப்பு முதலியவற்றின் அடிப்படையில் உருவாகிறது எனவும், அஃதொரு சமூக ஒப்பந்தம் எனவும் உறூசோ கூறுகிறார். “பெரும்பாலான மக்கள் தமது சமூக நலனை மிகவுயர்ந்த படிக்கு ஏற்றுவதற்காக உதவும் அடையம் அரசு” எனப் புகழ்பெற்ற அரசியல் ஞானியாகிய கறோல் லாக்சி கூறுகிறார். தனியார் தமது பரஸ்பர நன்மைக்காக அமைத்த நிறுவனம் அரசென்பது இவர்களுடைய கருத்தாகும்.

வேறுசில மேனாட்டுக் கருத்துக்களாவன:-

“சாத்தியமான உயர்ந்த மட்டத்தில் மக்களின் தேவைகளைத் திருப்தி செய்வது அரசின் நோக்கம்.”

“பாதுகாப்பு, நீதி, சமூக நலன் எனும் மூன்றும் அரசின் முக்கிய குறிக்கோள்களாகும்” பேற்றிறன் றசன்.

“அரசு அறத்தை அடையும் வழியாகும்.” -கீகெல்

“சட்ட முறைப்படி அதிகாரஞ் செலுத்தும் தாபனமாக மக்கள் அரசை வழக்கமாகக் கருதுகின்றனர். மக்களின் பொது நன்மைக்காக அரசு அதிகாரஞ் செலுத்துகிறது.”

அரசு வன்கண் அதிகாரம் எனவும், பொருளாதார பலம் உடைய வர்க்கத்தினர் அரசியல் அதிகாரத்தையும் பெற்று ஏனைய மக்களைச் சுரண்டுவர் எனவும், அரசு அழிந்தாலன்றி மக்கள் சுதந்திரமாக வாழமுடியாது எனவும் மாக்சிய வாதிகள் கூறுகின்றனர். சாணக்கியர், மைக்கியாவல்லி ஆகியோர் எழுதிய பழைய நூல்களும் இக் கருத்துக்களையே வற்புறுத்துகின்றன.

மேனாட்டவர் பொருளாதார பலத்தின் அல்லது அதிகார பலத்தின் அடிப்படையில் அரசுக்கு இலக்கணங் கூறினர். தமிழர் கண்ட அரசுக்கு அறமே அடிப்படையாகும். அரசியல் என்பது உலகிடை மறவினை பரவாது அறவினை பரவுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும். அறம் தறவி நடைபெறும் ஆட்சி அரசாகாது. இக்கருத்தைத் திருக்குறளில் மட்டுமன்றிப் பல சங்கப்பாடல்களிலுங் காணலாம்.

“அறம் துஞ்சும் செங்கோல்”

“அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டம்”

“அறவோர் புகழ்ந்தஆய் கோலன்”

“அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”

அறத்தின் முன்னிலையிற் பெரும்பான்மை, சிறுபான்மை, சாதி, மதம், குலம், எனது மக்கள், உனது மக்கள் என்ற பேதங்களில்லை. தமக்கொரு நீதி பிறர்க்கொரு நீதியில்லை. யாவருஞ் சமம்.

“நான்குடன் மாண்ட தாயினும்
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால், தமரெனக் கோல் கோடாது
பிறரெனக் குணங் கொல்லாது”

அரசன் உலகபாலகனாய் நின்று மக்களையும் அறத்தையும் காப்பாற்றுவதினால், தமிழ் மக்கள் அவனை இறைவனுக்குச் சமமாகக் கருதினர்.

“திருவுடை மன்னரைக் காணிற் றிருமாலைக் கண்டேனே’
“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்”
“முறை செய்து காப்பாற்றும் மன்னவன்
மக்கட்கு இறையென்று வைக்கப்படும்”

அரசனைக் காவலன் என்பர்@ காவலன் என்ற சொல்லின் பொருளைத் திருத்தொண்டர் புராணம் இயற்றிய சேக்கிழார் பெருமான் தெளிவுற விளக்கினார்.

“மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங்கால்
தானதனுக் கிடையூறு தன்னால், தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர் தம்மால்
ஆனபயம் ஐந்தும் தீர்த்து அறங்காப்பான் அல்லனோ”

அரசன் அறத்தினின்று தவறினாற், செங்கோல் கோடினால், அந்த அரசனேயன்றி நாடும் அழியும். அநீதிகள், கொடுமைகள் செய்த பல வல்லரசுகளின் அழிவை வரலாற்றிற் படிக்கிறோம். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதே சிலம்பின் கதையாகும்.

“அரசியல் பிழைத்தோர்க் கறம்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை உகுத்துவந் தூட்டும் என்பதூம்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுளென”

இக்கருத்தை வள்ளுவரும் வலியுறுத்துகிறார்.
“அல்லற்பட்டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை”
“முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யொல்லாது வானம் பெயல்.”
“ஆபயன் குன்று மறு தொழிலோர் நூன் மறப்பர்
காவலன் காவா னெனின்.”
சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையில்:-
“கோன்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறம் கூரும்
மாரிவறம் கூரின் மன்னுயிர் இல்லை”

நாட்டின் நீதி எவ்வாறு செலுத்தப்பட வேண்டும் என்பதை மனுநீதி கண்ட சோழன் கதை கூறுகிறது. ஒரு பசுவின் முறையீட்டைக் கேட்டு தன் மகனையே கொன்றான்.

“வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுட
தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்புகார் என்பதியே”

“ஒரு மைந்தன் தன்குலத்துக் குள்ளான் என்பது உணரான்
தருமந்தன் வழிச்செல்கை கடனென்று தன்மைந்தன்
மருதந்தன் தேராழி உறஊர்த்தான் மனுவேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோ மற்றெளி தோதான்”

பிற்காலத்திற் கவிச்சக்கரவர்த்தி கம்பர் இத் தமிழ் இலட்சியத்தை மிகவும் தெளிவாக விளக்குகிறார். மக்களுக்கு அரசன் உயிரேயன்றி உடம்புமாவான் என்கிறார்.

“வயிரவாள் பூணஅணி மடங்கல் மொய்ப்பினான்
உயிர்எலாம் தன்னுயிர் ஒப்ப ஓம்பலால்
செயிர்இலா உலகனில் சென்று நின்றுவாழ்
உயிர்எலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்”

அரசன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதையும் கம்பர் கூறுகிறார்.

“தாய் ஒக்கும் அன்பில்: தவம் ஒக்கும் நயம் பயப்பில்
சேய் ஒக்கும் முன்னின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரால்
நோய் ஒக்கும் என்னின மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னான்.”

முடியரசாயினும் சரி குடியரசாயினும் சரி, அறத்தினின்று தவறும் அரசு கொடுங்கோலாகாது. அரசியல் அமைப்பு உமிக்குச் சமனாகும். அதன் ஒழுக்கம் அல்லது நடத்தை அரிசிக்குச் சமமாகும். அரிசியை விட்டு இன்று நாம் உமிக்குச் சண்டை போடுகிறோம்.

சனநாயகத்தை மெச்சுவது இன்று வழக்கமாகிவிட்டது. ஆனாற் சனநாயகத்தில் இன்று நடைபெறும் அதர்மங்களையும், அநீதிகளையும், நசுக்கல்களையும், அடக்குமுறைகளையும், சுரண்டல்களையும், சுயநலப் போராட்டங்களையும், மரபுக்குழுக் கலவரங்களையும், வர்க்கப் போராட்டங்களையும் நாம் கவனிப்பதில்லை. ஒன்பது வாக்குக்கெதிராகப் பத்து வாக்கென்றால் அதர்மம் தர்மமாகுமா? அநீதி, நீதியாகுமா? எந்த நாயகம் என்றாலென்ன, அறமும் நீதியும் முக்கியமானவை.

தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டே தொடங்கிய மூவேந்தர் ஆட்சிகள் சங்க காலத்திலும் தொடர்ந்து இருந்தன. இம் மூவரும் பேரரசர்களாவர். பெருங்கோ, மாவேந்தர் எனப்பட்டனர். கி.பி. 1ம், 2ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சேர, சோழ, பாண்டிய அரசர்கள் பின்வருவோராவர்.

சேரர்: இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன், சேரன் செங்குட்டுவன், மந்தரம் சேரலிரும்பொறை.

சோழர்: முதலாம் கரிகாலன், இரண்டாம் கரிகாலன், இளஞ்சேட் சென்னி, நலங்கிள்ளி, நெடுகிள்ளி, கிள்ளிவளவன், கோப்பெருஞ் சோழன், பெருநற்கிள்ளி.

பாண்டியர்:- முதுகுடுமிப் பெருவழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன், வெற்றிவேற் செழியன், தலையங் கானத்துச் செருவென்ற நெடுங்செழியன்.

பேரரசருக்குக் கீழ்ச் சிற்றரசர் இருந்தனர். இச் சிற்றரசருக்குக் கீழும் சிற்றரசர் இருந்தனர். சிற்றரசர் மன்னர் எனப்பட்டனர். சங்க காலத்திலும் சங்கத்துக்குப் பிற்பட்ட காலத்திலும் இச்சிற்றரசர்களை அண்டியே பெரும்பாலும் புலவர் வாழ்ந்தனர். சங்கநூல்கள் குறு நில மன்னர் பலரைக் குறிப்பிடுகின்றன. வேளிர், மோகூர், பழையன், மாரன் நன்னன், வேண்மான், வில்லவன், கோதை, ஓய்மாநாடன், நல்லியக் கோடன், நிதியன், வேள், ஆய், வேள்பேகன், வேள்எவ்வி, வேள்பாரி, நன்னன், வேல்மான் முதலியோர் வேளீர்ச் சிற்றரசர்களிற் சிலராவர். மேலும் கோசர், எயினர், கட்டியர், கருநாடர் முதலியோரும் தத்தமக்கெனத் தனிச் சிற்றரசுகள் நிறுவியிருந்தனர்.

தலைநகரிற் பேரரசருக்குத் துணையாக ஐம்பெருங்குழுவும் எண் பேராயமும் இருந்தன. ஐம்பெருங்குழு:- அமைச்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதர், ஒற்றர், எண்பேராயம்:- கணக்காயர், கருமவிதிகள், கனகச்சுற்றம், கடைக்காப்பாளர், நகர் மாந்தர், படைத்தலைவர், யானை மறவர், இவுளிமறவர்.

உண்மையில் ஆட்சி சிற்றரசர் கையிலும் நாட்டவை, ஊரவைகளின் கையிலும் இருந்தன. பேரரசரின் நேர் ஆட்சி நகர எல்லைகளுக்குட்பட்டதாகும். சிற்றரசர் பேரரசருக்குத் திறை கட்டி ஆண்டனர். அவைகளின் அங்கத்தவர் மக்களினால் தெரிவு செய்யப்பட்டனர். யார் யார் தேர்தலுக்குத் தகுதியற்றவர் என்பதையும் தேர்தல் முறைகளையும் சங்கநூல்கள் கூறுகின்றன. மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு அதிகாரம் கிராம மட்டம் வரையும் பன்முகப்படுத்தப்பட வேண்டுமென இன்று நாம் கற்பனை செய்கிறோம். ஆனாற் சங்ககாலத் தமிழகத்தில் இப்படிப்பட்ட ஆட்சி முறையே இருந்தது. இன்று போல அதிகாரம் மையமாக்கப்பட்ட சிலராட்சி இருக்கவில்லை.

பண்டு தொட்டு ஆங்கிலேயர் ஆட்சி வரையும் இந்தியாவில் நிலவிய ஆட்சிமுறை இடைக்கால ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ முறை போன்றதாகும். தென்னிந்தியாவில் மூன்று பேரரசர் இருந்தனர். சேர சோழபாண்டியர், வட இந்தியாவில் முதலாவது பேரரசு மகதப் பேரரசாகும். இவர்களுக்குக் கீழ் பல்லாயிரஞ் சிற்றரசர் இருந்தனர். சிற்றரசர் பேரரசருக்குத் திறைகட்டினர். பேரரசர் பலங்குன்றிய காலத்திற் சிற்றரசர் திறைகட்ட மறுத்தனர். பேரரசர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் இடையிற் பல போர்கள் நடந்தன. ஒரு சிற்றரசனைப் பேரரசன் வென்றால் அச்சிற்றரசன் மறுபடியும் திறைகட்ட வேண்டி நேரிடும் திறைபெறும் உரிமைக்கே பேரரசர் போரிட்டனர். சிற்றரசரின் நாட்டைக் கவர்ந்து அதை நேரே ஆளப் பேரரசர் எத்தனிக்கவில்லை. பேரரசர்களும் தமக்கிடையிற் போரிட்டனர். ஒரு பேரரசனை மற்றொரு பேரரசன் வென்றால், முந்திய பேரரசனின் கீழிருந்த சிற்றரசர்களிற் பலர் பிந்திய பேரரசனுக்குத் திறை கட்ட வேண்டி நேரிடும். இப்போர்களினால் மக்களின் வாழ்க்கை எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை. போரில் யார் வெல்லினுந் தோற்கினும், நாட்டாட்சி சிற்றரசனினதும் ஊரவைகளினதுங் கையில் இருந்தது. மரபு முறைப்படி அரசரும் ஊரவைகளும் ஆட்சி செய்தனர். கடைச்சங்க காலத்துக்குப் பின்பு பேரரசர் சிற்றரசராவதும் சிற்றரசர் பேரரசராவதும் வழக்கமாயிற்று. எனினும் ஆட்சிமுறையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

நீதி வழங்குவதற்கு அறங் கூறு அவையங்கள் இருந்தன. இவை நீதி தவறினாற் கண்ணீர் சொரிந்து அழும் பாவையொன்று புகார் நகரில் இருந்ததென இளங்கோவடிகள் கூறுகிறார்.

“அரசுகோல் கோடுனும் அறங்கூ றவையத்து
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீ ருகுத்துப்
பாவைநின் றழுஉம் பாவை மன்றமும்.”

சோழருக்குரிய உறையூரில் அறங்கூறு அவையத்தில் நீதியும் தர்மமும் எப்பொழுதும் நிலவிற்றென ஒரு புலவர் பாடுகிறார்.

“மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் நின்று நிலையிற் றாகலின் அதனால்
முறைமைநின் புகழும் அன்றே.”


3. கல்வியும் பண்பாடும்
“கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல
பல்வித மாயின் சாத்திரத்தின் – மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.”

இது வீண் புழுகன்று. அன்று தமிழராகிய நாம் கல்வியிற் சிறந்த விளங்கினோம். இன்றுஞ் சிறந்த விளங்குகிறோம். எல்லாவற்றையும் இன்று நாம் இழந்துவிட்டபோதிலும், கலைமகளின் கடாட்சத்தை இழந்துவிடவில்லை. எமது கல்விச் சிறப்பைக் காட்டக் கள்ளப் புள்ளிகள் வேண்டியதில்லை. கல்வியும் ஞானமும் பாடசாலைகளையும் ஏட்டுப்படிப்பையும் பொறுத்தவல்ல. பரம்பரையான ஒழுக்கமும் பண்பாடும் குடும்பச் சூழ்நிலையும் இவற்றுக்குக் காரணமாகும்.

கடைச்சங்க காலத்திற் பெண்புலவர் பலர் இருந்தனர். ஆண்களும் பெண்களும் சரி சமமாகக் கல்வியிற் சிறந்து விளங்கினர். நாம் கல்விக்கு அளிக்கும் மதிப்பைச் செல்வத்துக்கோ பதவிக்கோ அளிப்பதில்லை.

“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினுங் கற்கை நன்றே.”

தமிழ் நாட்டரசர் கல்விக்குப் பேராதரவு அளித்தனர்
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே.”

என்பது பாண்டிய மன்னன் ஒருவன் வாக்காகும்.

“ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும்.”

என்பது சங்கப் பாடல்களில் ஒன்றாகும்.

வள்ளுவர் கல்வியின் சிறப்பைப் பத்துக் குறள்களிலும் கல்லாமையின் இழிவைப் பத்துக் குறள்களிலும் விளக்குகிறார்:

“கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றையவை.”

“ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற்
கெழுமையு மேமாப் புடைத்து.”

“அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.”

“விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.”

சங்ககாலப் புலவர்களின் பெயர், ஊர், குலம் முதலியனவற்றை நோக்கும்போது, அவர்கள் பல இனத்தவராகவும் குலத்தவராகவும், பேரூர்களில் மட்டுமன்றிச் சிற்றூர்களில் வாழ்ந்தவராகவுங் காணப்படுகின்றனர். பலர் நாகரினத்தைச் சேர்ந்தவராவர். சங்ககாலத் தமிழ் நாட்டிற் பரந்த கல்விமுறை இருந்ததுமன்றி அது உயர்ந்த மட்டத்திலும் இருந்திருக்க வேண்டும்.

எவ்வளவு செல்வமும் அதிகாரமும் இருப்பினும், பண்பாடில்லா விட்டால் மக்களின் வாழ்க்கை சிறப்படையாது.

“பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்” (நெய்தற்கலி)
“பண்புடையார் பட்டுண்டு உலகம்” (திருக்குறள்)

“பெயக்கண்டும் நஞ்சுண்ட மைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்.” (திருக்குறள்)

ஒழுக்கம் உயர் குலம். தமிழர் விரிந்த மனப்பான்மையும் அன்பும் அறனுமுடைய வாழ்க்கை நடத்தினர்.

“யாதும் ஊரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே” (புறநானூறு)

இக்காலத்திற் சமவுடைமையாளர் பொதுநல நோக்கத்தை வலியுறுத்துகின்றனர். அன்று ஒரு சங்கப் புலவர்:-

“உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இவரே முனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவதஞ்சிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”
(கடலுள் பாய்ந்த இரும் பெருவழுதி)

அரசியலில் மட்டுமன்றித் தமது வாழ்க்கையிலும் அறத்தைக் கண்டவர் தமிழர். அறத்தின் வழி நின்று பொருளை ஈட்டித் தமக்கும் பிறருக்கும் பயன்படுவழியிற் செலவழித்து இன்பத்தை அடைவதே வாழ்க்கையின் நோக்கமெனக் கொண்டனர்.

“சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉத் தோற்றம் போல”
“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்போடு புணர்ந்த ஐந்திணை.”

குடும்ப வாழ்க்கையை இல்லறம் என்றனர். இல்லறம் நல்லறமென வாழ்ந்தனர்.

“அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று.”
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.”

இல்லறத்தின் சிறப்புப் பண்புகளை வள்ளுவர் 240 குறள்களில் விளக்குகிறார்.

ஒரு சமூகத்திலுள்ள பெண்களின் நடத்தை அச்சமூகத்தின் பண்பாட்டைக் காட்டும்.

“மங்கல மென்ப மனையாட்சி மற்றத
னன்கல நன் மக்கட் பேறு.”

“மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.”

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மையுண் டாகப் பெறின்.”

பெண்களின் குணங்களாவன:-
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப.”

“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண் பாலன.”

“உடம்போடு உயிரிடையென்ன மற்றன்ன
மடந்தையோடு எம்மிடை நட்பு.”

“யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி யறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”

விருந்தோம்பல் இல்வாழ்வோர் கடமையாகப் பல விடங்களிற் குறிப்பிடப்படுகிறது.

“இருந்தோம்பி இல் வாழ்வ தெல்லாம்
விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு”

கணவனைப் பிரிந்திருந்த போது தான் இழந்தவற்றைக் கூறிக் கண்ணகி பின்வருமாறு வருந்தினாள்.

“அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும்
துறவோர் கெதிர்த்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”

தமிழர் எக்காலத்திலும் பிள்ளைகளைச் செல்வமாகக் கருதினர்.

“படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும், தொட்டும், கல்வியும், நுழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே.”
(பாண்டியன் அறிவுடை நம்பி)

“அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்.”
“குழலினி துயாழினி தென்பதும் மக்கள்
மழலைச் சொற் கேளா தவர்.” (திருக்குறள்)

செல்வத்தின் பயன் ஈதலாகும். கொடையைச் சங்கப்புலவர் புகழ்ந்து பாடினர். அதே போல இரத்தலின் இழிவையுங் கூறினர். அறத்தைக் கடமையாகச் செய்தனரன்றி இக்காலத்திலே போலப் பயன் கருதிச் செய்யவில்லை.

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆய்அலன்.”

முல்லைக் கொடிக்குப் பாரி தன் தேரைக் கொடுத்தான்.

எல்லா மக்களும் இன்புற்றிருக்க வேண்டுமெனத் தமிழ் மக்கள் எண்ணினர். தனியொருவனுக்கு உணவில்லை யென்ற நிலையைத் தாங்க முடியாததென மருதன் இள நாகனார் எனுஞ் சங்கப் புலவர் பாடினார்.

“ஒரு நாள் ஒரு பொழு தொருவன் ஊணொழியப் பார்க்கும்
நேர் நிறை நில்லா தென்றுமென் மனனே”

இக் கருத்தையே பிற்காலத்திற் பாரதியாரும்.

“தனியொருவனுக்கு உணவில்லை யென்றாற்
சகத்தினை அழித்திடுவோம்” எனக் கூறினார்.

4. தமிழர் சமயம்
தொல்காப்பியர் காலத்திலும் சிந்துவெளிக் காலத்திலும் தமிழர் சமயம் பற்றி முன்பு கூறினோம். சமய உணர்ச்சி தமிழர் சமுதாயத்தில் அநாதியாகவே தோன்றி இன்று வரையும் நீடித்து நிலைத்திருக்கிறது. இறைவன் ஒருவன் உளன். அவன் பேர், ஊர், குணங்குறியில்லாதவன், மனம் வாக்குக்கு எட்டாதவன். உயிர்கள் பிறந்திறந்து துன்புறுகின்றன. மறுபிறப்புண்டு. அறம் கொல்லாமை, புலால் உண்ணாமை. இச் சைவக் கொள்கைகளும் ஆசாரங்களும் தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழர் சமுதாயத்தில் இருந்து வருகின்றன என மறைமலையடிகள் கூறுகிறார். இச் சைவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பல சங்கப் பாடல்களிற் காணலாம். பிற்காலத்தில் தேவாரதிருவாசகத்திலும், திருமந்திரத்திலும், சைவ சித்தாந்த சாத்திரங்களிலும் இக் கொள்கைகள் தெளிவாக விளக்கப்பட்டன. முப் பொருளுண்மையைப் பின்வருஞ் செய்யுள் சுருக்கமாகக் கூறுகிறது.

“சான்றவ ராய்திடத் தக்க வாம் பொருள்
மூன்றுள மறையெல்லாம் மொழிய நின்றன
ஆன்றநோர் தொல்பதி யாருயிர்த் தொகை
வான்றிதழ் தளையென வகுப்ப ரன்னவே” (கந்தபுராணம்)

“சைவ சித்தாந்தமாவது தென்னிந்தியாவிற்கே சிறப்பாக உரிய சமயமாகும். தென்னிந்தியாவிலே வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட இச் சமயம் தமிழ் மக்கள் நெஞ்சத்தில் இன்னும் நிறைந்து விளங்குகிறது.”

ஆனாற் தொல்காப்பியர் காலத்திலும் கடைச் சங்க காலத்திலும் எல்லாத் தமிழ் மக்களும் இச் சைவ மதத்தைப் பின்பற்றினர் என்பது ஐயமாகும். பலவின மக்கள் பலவகைப்பட்ட வழிபாடுகளும் கொள்கைகளும் உடையவராக இருந்தனர். நிலத்திற்கேற்ப வழிபாடுகள் வித்தியாசப்பட்டன. சங்க காலத்திற் பல தெய்வ வழிபாடுகளும் சிறு தெய்வ வழிபாடுகளும் தோன்றிவிட்டன. புகார் நகரிலுள்ள கோயில்களை இளங்கோவடிகள் இந்திரவிழாவூரெடுத்த காதையிற் குறிப்பிடுகிறார்.

“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வாள்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மாமுது முதல்வன் வாய்மையின் வாழாஅ
நான் மறை மரபின் தீ முறை யொருபால்
நால் வகைத் தேவரும் மூவறு கணங்களும்
பால் வகை தெரிந்த பகுதித் தோற்றத்து
வேறு வேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்
அறவோர் பள்ளியும் அறனோம் படையும்”

ஊர்காண் காதையில் மதுரையிலுள்ள கோயில்களைக் குறிப்பிடுகிறார்.

“நுதல் விழி நாட்டத் திறை யோன்கோயிலும்
உவணச் சேவ லுயர்ந்தோன் கோயிலும்
மேழிவல னுயர்ந்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்,
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்”

சிவன் திருமால் கோயில்கள் மட்டுமன்றிப் பல வகைப்பட்ட கோட்டங்களும் இருந்தன:- அமரர் கோட்டம், பல தேவர் கோட்டம், வெள்யானைக் கோட்டம், சூரியன் கோட்டம், நிலாக் கோட்டம், ஊர்க் கோட்டம், வேல் கோட்டம், சாத்தான் கோட்டம், காமதேவன் கோட்டம், குறிஞ்சி, முல்லை, நெய்தல் நிலங்களுக்கே விசேடமான வழிபாடுகளும் தெய்வங்களும் இருந்தன.

சங்க காலத்தில் வணங்கப்பட்ட தெய்வங்களாவன:- சிவன், திருமால், முருகன், இந்திரன், பலதேவன், பிரமன்.

சிறு தெய்வங்களாவன:- தேவி, கொற்றவை, காளி, கிருட்டணன், வருணன், திருமகள், நீர்த் தெய்வம், ஞாயிறு, திங்கள், பதினெண் கணத் தேவர்கள். பாம்பு வணக்கமும் இறந்த வீரருக்குக் கல் நட்டு விழாவெடுத்து வணக்கஞ் செய்வதும் அக்கால வழக்கங்களாகும். பெண் தெய்வ வழிபாடு வரலாற்றிற்கு முற்பட்ட காலந்தொட்டு திராவிடர் வாழ்ந்த எல்லா நாடுகளிலும் முற்பட்ட காலந்தொட்டு திராவிடர் வாழ்ந்த எல்லா நாடுகளிலும் இருந்து வந்தது. மக்கள் பல பெயர்களினாற் பெண் தெய்வத்தை வழிபட்டனர். சங்க காலத்திற்க கொற்றவை வணக்கம் மறவரிடையிற் பெரு வழக்காக இருந்தது. மறவர் கொற்றவைக்குப் பலி கொடுத்து வழிபாடு செய்தனர்.

“சிலம்பும் சுழலும் புலம்பும் சீறடி
வலம் படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை”

வேலன் வெறியாட்டு, குரவை, நுணங்கு முதலிய வழிபாட்டு முறைகளும் குறிஞ்சி நில மக்களிடையில் இருந்தன.

பலவகைப்பட்ட பழக்க வழக்கங்களுஞ் சங்க நூல்களிற் குறிப்பிடப்படுகின்றன. சாதிக் கட்டுப்பாடுகள், நல்லநாட் கெட்ட நாட் பார்த்தல், சகுனம் பார்த்தல், குறி சொல்லல், சோதிடம் பார்த்தல், பலி கொடுத்தல், புலால் உண்ணல், கள்ளுண்ணல், சூதாடல், பரத்தையோடு வாழ்தல். இப்பழக்க வழக்கங்கள் பொதுவாக இருக்காவிடினுஞ், சிற்சில குலங்குடிகளில் இருந்தன. உடல் கட்டையேறும் வழக்கமுங் குறிப்பிடப்படுகிறது.

வட நாட்டு வேள்விகளும் சடங்குகளும் சங்க காலத் தமிழ் நாட்டிற் புகுந்து விட்டன.

“எண்ணாணப் பல வேட்டும்
மண்ணாணப் புகழ் பரப்பியும்”

“அறுதொழில் அந்தணர் அறம்பிரித் தெடுத்த
தீயொடு விளங்கும் நாடன்”

பிராமணீயமும் புராணக் கதைகளும் தோன்றிவிட்டன. புத்த சமண சமயக் கொள்கைகளும் எங்கணும் பரவிவிட்டன. பல புத்த சமண நூல்கள் சங்க காலத்திலும் பிற்காலத்திலும் தோன்றின. பெயர் பெற்ற புத்த நூல் சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையாகும். உருவ வழிபாடு எங்கணும் இருந்தது.

தமிழ் நாட்டில் அக்காலத்தில் வழங்கிய பல மதக் கோட்பாடுகளைச் சாத்தனார் குறிப்பிடுகிறார். அளவை வாதம், சைவ வாதம், பிரம வாதம், வைணவ வாதம், வேத வாதம், நிகண்ட வாதம், ஆசீவக வாதம், சாங்கிய வாதம், வைசேடிக வாதம், பூத வாதம், புத்தம், எனினும், அன்றும் இன்றும் சமயத் துறையிற் சமரசங்கண்டவர் தமிழராவர். சங்க காலத்தில் தமிழிற் சமண புத்த பேரிலக்கியங்கள் தோன்றின. பிற்காலத்திற் கிறிஸ்த்துவ மகம்மதியப் பேரிலக்கியங்கள் தமிழில் தோன்றின.

5. திருக்குறள் வள்ளுவரும்
கடைச் சங்க காலத்தைப் பற்றிக் கூறும்போது திருக்குறளைப் பற்றிக் கூறாதுவிட முடியாது. இது கடைச்சங்க நூல், கி.பி. முதலாம் நூற்றாண்டு நூல், வள்ளுவரைப் பற்றி பல கட்டுக்கதைகள் உள. இவையாவும் நம்ப முடியாதவை. பிற்காலத்தில் எழுந்த கற்பனைகள். தமிழ் மொழியிலுள்ள நூல்களில் தலை சிறந்து நிற்பது திருக்குறளாகும். எம்மமச் சார்போ வகுப்புச் சார்போ இல்லாத நூல். இக்காரணம் பற்றிப் பொதுமறை எனப்படும். பொய்யாமொழி, தெய்வநூல், பொதுமறை, தமிழ் மறை என இந்நூலுக்குப் பெயர்களுள. திருக்குறள் உலகிலுள்ள பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. போப் முதலிய மேனாட்டறிஞர் யாவரையும் மிகக் கவர்ந்த தமிழ் நூல்கள் திருக்குறளும் திருவாசகமுமாகும். எக்காலத்துக்கும் பொருத்தமான உண்மைகளைக் கூறுகிறது.

‘திருக்குறள் போன்ற விழுமிய மெய்யறிவுச் சால்புரைத் திரட்டை உலகிலுள்ள வேறெம் மொழியிலாவது காணவியலாது.’
-சுவெயிற்சர்

திருக்குறளை அரசியல், பொருளாதாரம், வாழ்க்கையியல், ஒழுக்க நெறியியல், சமூகவியல், குடும்பவியல், மெய்ஞ்ஞானம் எனும் பல கோணங்களிலிருந்தும் பார்க்கலாம். எல்லாப் பொருள்களும் திருக்குறளில் உள.

“எல்லாப் பொருளும் இதன்பா லுளஇதன்பால்
இல்லாத எப்பொருளு மில்லையாற் - சொல்லாற்
பரந்தபா வாலென் பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத் துணை”

அரசியல் நூல் என்ற அளவில் திருக்குறளை சாணக்கியரின் அர்த்த சாத்திரத்துடன் அல்லது கறொல்ட் லாக்சியின் கொள்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தாற் குறளின் சிறப்புப் புலனாகும். நீதி நூல் என்ற அளவிற் குறளை மனுதர்ம சாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

“வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி”

திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் எனும் முப்பாலும் கூறுகிறது. எல்லாத் துறைகளிலும் அறத்தின் அடிப்படையில் நடத்தையை விளக்குகிறது. 133 அதிகாரங்களும் 1330 குறள்களும் உடையது.

1 அறத்துப்பால் அதிகாரம் குறள்கள்
பாயிரவியல் 04 40
இல்லறவியல் 20 200
துறவறவியல் 13 130
ஊழியல் 01 10

2. பொருட்பால்
அரசியல் 25 250
அங்கவியல் 32 320
ஒழிபியல் 13 130

3. காமத்துப்பால்
களவியல் 07 70
கற்பியல் 18 180

133 1330

பாயிரவியலிற் கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது.

“அகர முதல வெழுத் தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு”
திருக்குறளுக்குப் பிற்காலத்தில் உரைசெய்தோர்: தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பரிதி, திருமலையர், மல்லர், காளிங்கர், பரிப் பெருமான் முதலியோராவர்.

திருக்குறளின், நுண் பொருளை விளக்குவது எனது நோக்கமன்று. பெரும்பாலான தமிழ் மக்கள் திருக்குறளைக் கற்றிருப்பர். குறளைப் பற்றிப் புலவர் பாடிய பாக்களிற் சிலவற்றை இங்கு குறிப்பிடுவோம்.

“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமி தனில் யாங்கணுமே பிறந்ததில்லை”

“வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு” (பாரதியார்)

“கடுகைத் துழைத் தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.” -(இடைக்காடனார்)

“என்றும் புலரா தியானர்நாட் செல்லுகினும்
நன்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மையதாய்க் குன்றாத்
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போல்
மன்புலவன் வள்ளுவன் வாய்ச் சொல்” (இறையனார்)

“மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாண்டியான்
ஞால முழுதும் நயந்தளந்தான் - வாலறிவின்
வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடி யால் வையத்தார்
உள்ளுவவெல் லாமளந்தா ரோர்ந்து” (பாணர்)

“நான் மறையின் மெய்ப் பொருளை முப் பொருளா
நானமுகத் தோன்
றான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த நூன்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ் சஞ்
சிந்திக்க கேட்க செவி” - (உக்கிரப் பெருவழுதியார்)

“ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றென
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பான் மொழிந்த மொழி” (கல்லாடர்)

“மும்மயலயம் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும் முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவுந்
தாமுடைய மன்னர் தடமுடி மேற் றாரன் றோ
பாமுறை தேர் வள்ளுவர் முப்பால்” –
(சீத்தலைச் சாத்தனார்)

“சாற்றிய பல்கலையுந் தப்பா அருமறையும்
போற்றி யுரைத்த பொருளெல்லாந் - தோற்றவே
முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பார்
எப்பா வலரினு மில்” - (ஆசிரியர் நல்லத்துவனார்)

“சிந்தைக் கினிய செவிக் கினிய வாய்க்கினிய
வந்த இருவினைக்கு மாமருந்து – முந்திய
நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
பன்னிய இன்குறள் வெண்பா”

“பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனதம்
பாவிற்கு வள்ளுவர் வெண்பா”

“அறன் அறிந்தேம்@ ஆன்ற பொருள் அறிந்தேம்@ இன்பின்
திறன் அறிந்தோம்@ வீடு தெளிந்தேம் - மறன் எறிந்த
வாளார் நெடுதாற! வள்ளுவனார் தம் வாயால்
கேளா தனவெல்லாம் கேட்டு” (பூதனார்)

“தௌ;ளு தமிழ் நடை
சின்னஞ் சிறிய இரண்டடிகள்
அள்ளு தொறுஞ் சுவை
உள்ளுந் தொறும் உணர்வாகும் வண்ணம்
கொள்ளும் அறம் பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்த திரு
வள்ளுவ னைப் பெற்ற
தாற் பெற்ற தேபுகழ் வையகமே” (பாரதிதாசன்)


பத்தாம் அத்தியாயம்
கடைச்சங்க காலத்துக்குப் பின் - நாம் தமிழர்.

கடைச்சங்க காலத்துக்குப் பின் தமிழரின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது. பண்டுதொட்டுத் தென் நாட்டையாண்ட மூவேந்தர் ஆட்சிகள் மறைந்தன. சேர அரச குலம் முற்றாக அழிந்தது. பாண்டியரும், சோழரும் பால காலஞ் சிற்றரசர்களாக இருந்தனர். தமிழ் நாட்டை பல்லவர், களப்பிரர், சாளுக்கியர், கங்கர், கதம்பர், கோசர், இராட்டிரகூடர் ஆண்டனர். இவர்கள் யாவரும் தமிழ் நாட்டிற்கு வடக்கே தென்னிந்தியாவில் வாழ்ந்த திராவிட மக்களாவர். ஆனால், இவர்களுடைய தாய்மொழி தமிழன்று. கன்னடம், தெலுங்கு மராட்டி, கலிங்கம் முதலியவை தாய்மொழிகளாகும். இப்பகுதிகளிலே தான் சமஸ்கிருதம் இடைக்காலத்திற் பெரு வளர்ச்சியடைந்தது. ஆதலால், இவ்வரசர் வடமொழிக்குப் பேராதரவு அளித்தனர். தமிழ் மொழி அரியாசனத்தை இழந்தது. இக்காலத்தில் வடமொழி தமிழ் நாடு முழுவதும் பரவிப் பெருஞ் செல்வாக்கடைந்தது. பிராமணீயம் தமிழர் சமயத்துடன் கலந்து தற்காலச் சைவ வைணவ மதங்கள் தோன்றின. இளவரசர் பலர் ஆரம்பத்திற் புத்த சமண சமயத்தவராக இருந்தனர். இச்சமயங்களை ஆதரித்தனர். ஆனாற், பிற்காலத்தில் இச்சமயங்கள் மறைந்து சைவமும் வைணவமும் தலையோங்கின. இவ்வரசர்கள் மொழியளவில் அந்நியராயினும், சமயம், பண்பாடு, நாகரிகம், கலை முதலியனவற்றில் இவர்களுக்கும் தமிழருக்கும் முரண்பாடில்லை. சில காலம் தமிழ் நாட்டில் வாழ்ந்த பின் இவர்கள் தமிழரோடு கலந்து தமிழராகினர். தமிழ் மொழிக்கும் ஆதரவளித்தனர். இக் காலத்திற் சமயத்துறையிற் பெரு முன்னேற்றத்தைக் காணலாம். பக்தி மார்க்கம் தென்னாட்டிலே தொடங்கி இந்தியா முழுவதும் பரவிற்று. தென் நாட்டிலுள்ள பெருங் கற்கோயில்கள் இக்காலத்திற் கட்டப்பட்டவையாகும். சங்கீதம், சிற்பம், ஓவியம் முதலிய கலைகள் இக்காலத்தில் வளர்ச்சியடைந்தன.

கடைச்சங்கத்துக்குப் பிற்பட்ட காலத்தைப் பற்றிப் பல வரலாற்று நூல்கள் உள. தமிழர் வாழ்க்கையிலேற்பட்ட சில மாற்றங்களை மிகச் சுருக்கமாகக் காட்டுவதே எனது நோக்கமாகும். ஆதலாற் கடைச் சங்கத்துக்குப் பிற்பட்ட காலத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கிறேன். (1) கி.பி 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையும் (2) 14ஆம் நூற்றாண்டுக்குப் பின்.

(1) 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையும்
களப்பிரர்: களப்பிரர் தொண்டை நாட்டின் வட பகுதியில் வாழ்ந்த கனவர் அல்லது குறும்பர் எனுஞ் சாதியினராவர். இவர்களுடைய தாய்மொழி தமிழாயினும், இவர்கள் நாகரீகத்திலும் பண்பாட்டிலுஞ் சற்றுக் குறைந்தவர்களாக இருந்தனர். இவர்கள் பல்லவரையும், சோழரையும், பாண்டியரையும் வென்று தமது ஆட்சியைப் பரப்பினர். பாண்டியரை இவர்கள் வென்றதினாற் கடைச்சங்கம் அழிந்தது என்பர். இஃது எவ்வாறாயினும், இவர்களுடைய ஆட்சிக்காலம் கலவரங்களும், நாட்டில் அமைதியின்மையுமுண்டான காலம் என்பதில் ஐயமில்லை. தமிழ் மொழி இக்காலத்திற் சீரழிந்தது. இக்கால நூல்கள் மிகச் சிலவாகும். கி.பி. 300 தொடக்கம் கி.பி. 500 வரை இருநூறு வருடங்கள் இவர்கள் தமிழ் நாட்டிற் பேராட்சி நடத்தினர். இக்காலத்தில் இத்துறையிலாவது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.

பல்லவர்: இவர்கள் எந் நாட்டவர் என்பது பற்றிக் கருத்து வேற்றுமையுண்டு. இராசநாயக முதலியார் இவர்கள் மணிபல்லவ (ஈழ நாட்டு) அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிறார். ஆனால் இக்கொள்கைக்குப் போதிய ஆதாரமில்லை. தமிழ் நாட்டிற்கு வடக்கே தெலுங்கு நாட்டில் தென்பொண்ணை கிருஷ்ணா ஆறுகள் பாயும் பகுதியிற் பல்லவர். சாதவர்கள் அரசரின் கீழ்ச் சிற்றரசர்களாக இருந்தனர். சாதவாகன அரசு பலங் குன்றியப்போது. இவர்கள் சுதந்திர மன்னராகினர். பின்பு சோழ நாட்டைக் கைப்பற்றிக் காஞ்சியில் தமது அரசை நிறுவினர். படிப்படியாகத் தமது அரசைத் தென்னாட்டிற் பரப்பினர். பல காலங்களிற் பாண்டி நாட்டையும் கைப்பற்றி ஆண்டனர். கி.பி 7ஆம் நூற்றாண்டிற் பல்லவர் ஆட்சி தென்னாடு முழுவதும் பரவியிருந்தது. முதலாம் நரசிம்மன் சேரர், சோழர், பாண்டியர், களப்பிரர், இராட்டிர கூடர் முதலிய யாவரையும் வென்று வாதாபி வரையும் தனது பேரரசை நிறுவியனான். இவன் ஈழத்தையும் வென்றான். 9ஆம் நூற்றாண்டின் இறுதியிற் பல்லவப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.

பல்லவர் சோழ நாட்டிற்கு வடக்கே வாழ்ந்த தெலுங்கர் என்பதைப் பல சான்றுகள் காட்டுகின்றன.

(அ)மன்னர்களின் பெயர்கள்:

(ஆ)பல்லவர் ஆட்சியில் வடமொழியை அரசாங்க மொழியாக இருந்தமை.

(இ)இவர்களுடைய காலத்தின் ஆரிய – திராவிடப் பிராமணீயமும் வடமொழியும் தென்னாட்டிற் பரவியமை.

(ஈ) பல்லவர் புத்த சமண சமயங்களை ஆதரித்தனர். அக்காலத்திற் காஞ்சி இச்சமயங்களுக்கு இருப்பிடமாக இருந்தது.

(உ) பல்லவ மன்னர் பெரும்பாலும் தெலுங்கு சாளுக்கிய மன்னர் குலங்களிற் கல்யாணஞ் செய்தமை.

(ஊ) பல்லவருக்கும் மூவேந்தருக்கும் எவ்வித தொடர்மின்மை: கதம்பர், மேலைக்கங்கர், இராட்டிர கூடர், சாளுக்கியர்:- கதம்பர் கன்னட நாட்டவர், பல்லவரையும் கங்கரையும் வென்று தமது ஆட்சியைப் பரப்பினர். மேலைக்கங்கர் மைசூரில் ஆண்ட அரச வமிசத்தவர். சமண சமயத்தை ஆதரித்தனர். வடமொழியையும் கன்னடத்தையும் வளர்த்தனர். சோழரையும் இராட்டிர கூடரையும் வென்று தமது ஆட்சியைப் பரப்பினர். மேலைச் சாளுக்கியர் தக்கணத்தின் பிஜாப்பூரில் ஆண்ட பண்டை மராட்டியராவர்.

கடைச்சங்க காலத்துக்குப் பின் 200 ஆண்டுகள் தமிழ் நாட்டில் ஓர் இருட் காலமாகும். ஆனாற் பல்லவர் ஆட்சியில் தமிழ் பழைய நிலையை அடைந்தது. பல நூல்கள் தோன்றின. பண்டிதர் கா.பொ. இரத்தினம் எழுதிய “நூற்றாண்டுகளில் தமிழ்” என்ற புத்தகத்தில் இக்கால நூல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் முக்கியமானவை சில இங்கு குறிப்பிடப்படுகின்றன.

1. மணிவாசகப் பெருமானின் திருவாசகமும் திருக்கோவையாரும்.

2. கொங்கு வேளிர் – பெருங்கதை.

3. திருமூலர் – திருமந்திரம்

4. அப்பர் சம்பந்தர், சுந்தரர் – தேவாரங்கள்

5. ஆழ்வார்கள் - நாலாயிரப் பிரபந்தம்.

6. ஐயனாரிதனார் – புறப்பொருள் வெண்பா மாலை.

7. பெருந்தேவனார் – பாரதவெண்பா.

8. நந்திக் கலம்பகம்

9;. திருக்குறள் தவிர்ந்த ஏனைய கீழ்க்கணக்கு நூல்கள்.

பிற்கால நூல்கள் பெரும்பாலுஞ் சமயத் தொடர்பனவையான படியினால் அவற்றிலும் பார்க்கச் சங்ககால நூல்களைச் சிறந்தவையாகச் சிலர் கருதுகின்றனர். ஆனாற் சங்க நூல்களை இன்று மிகச் சிலரே படிக்கின்றனர். இப்பிற்காலச் சமய நூல்கள் பெரும்பாலான மக்கள் போற்றும் நூல்களாகும். உதாரணமாகத் திருவாசகத்தை எடுத்துக்கொள்வோம். இதற்கு ஒப்பான நூல் எம்மொழியிலுமில்லை. திருக்குறளையும் திருவாசகத்தையும் தமிழ் நூல்களில் தலை சிறந்தவையாகக் கருதவேண்டும். “தேவர் குறளும் திருநாள் மறை முடிவும் மூவர் தமிழும், முனிமொழியும் - கோவை திருவாசகமும், திருமூலர் சாலும் ஒருவாசகமென் றுணர்.” இக்காலத்தில் தமிழுடன் வடமொழி கலந்த போதிலும் இதனால் தமிழ் சிறப்படைந்ததேயன்றி இழிவடையவில்லை. வளரும் மொழி பிற மொழிகளிடமிருந்து கடன்படுவது இயல்பாகும்.

சமயத்துறையிற் பக்தி மார்க்கத்தின் எழுச்சியும் வெற்றியும் இக்காலத்தில் நடைபெற்றன. சமணமும் புத்தமும் நாட்டிலிருந்து மறைந்தன. தென்னிந்தியாவிலுள்ள பெரிய கற்கோயில்கள் பல்லவர் காலத்திற் கட்டப்பட்டவையாகும். கலைகள் இக்காலத்தில் வளர்ந்தன.

சோழப் பேரரசும் பாண்டியர் பேரரசும்
சோழப் பேரரசில் மறுபடியும் தமிழராட்சி தென்னாடு முழுவதிலும் பரவிற்று. மறுபடியும் தமிழ் அரச மொழியாகி அரியாசனம் ஏறிற்று. சைவமும் தமிழும் வளர்ந்தன. சங்க காலத் தமிழரின் வீரத்தையுஞ் செல்வத்தையும் கல்வியையும் புகழையும் மீண்டும் சோழப்பேரரசிற் காண்கிறோம்.

கி.பி. 9ஆம் நூற்றாண்டிற் சோழர் உறையூரிற் சிற்றரசர்களாக இருந்தனர். சங்ககாலத்துக்குப் பின்பு ஏழு நூற்றாண்டுகள் சோழர் புகழ் மங்கிக் கிடந்தது. கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிற் பல்லவர் ஆட்சி பலங்குன்றிச் சீரழிந்தது. ஆதித்தியன் எனுஞ் சோழ அரசன் கி.பி. 890இல் பல்லவரை வென்று தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றினான். பின்பு கொங்கை நாட்டையும் மேலைக் கங்கர் தலைநகரத்தையும் தனதாக்கினான். இலங்கையையும் வென்றான்.

முதலாம் பரந்தகன்: (கி.பி. 907 – 953) இவன் ஆதித்தியனுக்குப் பின் அரசனானான். இவனுடைய ஆட்சிக்காலம் 46 ஆண்டுகளாகும். பாணரையுங் கங்கரையும் பல்லவரையும் பாண்டியரையும் வென்று சோழப் பேரரசைக் கன்னியாகுமரி வரையும் பரப்பினான். மதுரையில் ஆடசி செய்யச் சோழப் பிரதிநிதிகளை நியமித்தான். கி.பி. 934இற்கும் கி.பி. 944இற்கும் இடையில் இலங்கையைப் பலமுறை வென்று பொலநறுவாவில் தனதாட்சியை நிறுவினான்.

“வெங்கோல் வேந்தன் றென்னன் நாடும்
ஈழமுங் கொண்டதிறல் செங்கோல் சோழன்
கோழி வேந்தன் செம்பியன்”

ஒட்டைக் கூத்தர் மூவருலாவிற் பரந்தகனின் ஈழநாட்டு வெற்றியைப் புகழ்கிறார்.

“ஈழம் எழுநூற்றுக் காவதமும் சென்று எறிந்து வேழம் திறை கொண்டு மீண்ட கோன்”

முதலாம் இராசராசன்: (கி.பி. 985 – 1014) இவன் காலத்திற் சோழப் பேரரசு மேலும் உச்சநிலையடைந்தது. இவனுடைய எண்ணற்ற வெற்றிகளையும் ஆட்சிக் காலத்திலேற்பட்ட பல சீர்திருத்தங்களையும் பல நூல்கள் கூறுகின்றன. இவனுடைய முதலாவது போர் கந்தள+ர்ப் போராகும். இப்போரிற் சேரனை வென்று அவனுடைய இராச்சியத்தைக் கைப்பற்றினான். பின்பு பாண்டி நாட்டை வென்றான். இவ்வெற்றிகளுக்குப் பின்பு வடக்கே பெயர்ந்தான். குடகு, கங்கைபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி முதலிய நாடுகளைவென்றான். கி.பி. 991இல் இலங்கை மேற் படையெடுத்து அனுராதபுரம், பொலநறுவா, மாந்தோட்டை முதலிய நகரங்களைக் கைப்பற்றினான். இலங்கையிற் பல பாகங்களில் இன்றுஞ் சோழர் ஆட்சிச் சின்னங்களைக் காணலாம். பின்பு சாளுக்கியரை வென்றான். வடக்கே சீட்புலி நாடு, வேங்கை நாடு, கலிங்கம் முதலியவற்றையும் மேற்கே மாலைதீவுகளையுங் கைப்பற்றினான். முதலாம் இராசராசனின் வெற்றிகளைப் பின் பரும் பாட்டுக் கூறுகிறது.

“காந்த ள+ர்ச்சாலை கல மறுத் தருளி
வேங்கை நாடும் கங்கை பாடியும்
தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் எலிங்கமும்
முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டலமும்
இரட்டைபாடி ஏழரை இலக்கமும்
முந்நீரப் பழந்தீவு பன்னீராயமுங் கொண்டு – தன்
எழில் வளர் ஊழியில் எல்லாயாண்டும்”

இரண்டாம் இராசேந்திரன்:- கி.பி. 1014 இல் இராசேந்திரன் பட்டத்துக்கு வந்தபோது, சோழப் பேரரசு தற்காலத் தமிழகம் முழுவதையும், தற்கால ஆந்திரம், கேரளம் முழுவதையும், கன்னடத்தின் பெரும் பகுதியையும், ஏறக்குறைய இலங்கை முழுவதையும் உள்ளடக்கி இருந்தது. இராசேந்திரன் இவ்வரசை உலகப் பேரரசாக்கினான். முதலில் கன்னியாகுமரி தொடக்கம் இமயம்வரை பல நாடுகளை வென்றான். இராசேந்திரனின் வடதிசை வெற்றிகளை மெய்கீர்த்தி எனும் புலவர் பாடுகிறார். இவன் வென்ற நாடுகளாவன:-

(அ)இடைத்துறை நாடு: இது கிருஷ்ணா – துங்கபத்திரா ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பாகும். தற்போது பம்பாய் மாவட்டத்திலுள்ள இரேய்ச் சூரப் பகுதியாகும்.

(ஆ)வனவாசி பன்னீராயிரம்@ இது மைசூரின் வடமேற்குப் பகுதியும் அதற்கு வடக்கிலுள்ள கோவாப் பகுதியுமாகும்.

(இ)மண்ணைக் கடக்கம்: இது சாளுக்கிய இராட்டிர கூடப் பேரரசின் தரைநகரமாகும்.

(ஈ)ஈழம்:- ஏனைய சோழ, பாண்டிய அரசர் பெரும்பாலும் இலங்கையில் வடக்கு, வட கிழக்குப்பகுதிகளை மட்டுமே வென்றனர். மத்திய தென் பகுதிகளில் இவர்கள் ஆட்சி பரவவில்லை. இராசேந்திரன் இலங்கை முழுவதையும் வென்றான்.

(உ)சக்கரக் கோட்டம்: இது தற்போதைய நடு மாகாணத்திலுள்ள ஒரு நகரமாகும்.

(ஊ)ஒட்டர் தேசம் - இது தற்கால ஒரிசாவாகும்.

(எ)கோலசம் - இது கங்கைச் சமவெளியிலுள்ள பண்டை நகரமாகும்.

(ஏ)தண்டபுத்தி – தற்கால வங்க மாகாணத்தின் மீதுன்புரி மாவட்டம்.

(ஐ)வங்காளம்.

(ஒ) தக்கணலாடம் - இது குஜராட்டின் தென்பகுதி.

(ஓ) உத்தரலாடம் - இது குஜராட்டின் வட பகுதி.

இராசேந்திரனும் அவனுக்குப் பின் வந்த சோழ அரசர்களும் அந்தமான், நிக்கோபார்த், மாலைதீவுகளையும், பர்மா, மலேஷியா, சுமத்திரா முதலிய கிழக்காசிய நாடுகளையும் வென்று சோழப் பேரரசிற் சேர்த்தனர். கடல் கடந்து இரண்டாம் இராசேந்திரன் வென்ற நாடுகளாவன.

(1) சீர் விசயம்:- சீர் விசயம் கடாரப் பேரரசின் தலைநகரமாகும். (கடாரம் தற்காலச் சுமாத்திரா) சங்க காலத்திலும் அதற்கு முன்னரும் சுமத்திராவைத் தமிழ் மன்னர் ஆண்டனர். சீர் விசய நகர் அரசர் குலம் சேர், சோழ, பாண்டியரைப் போன்று மிகப் பழையதாகும்.

(2) மலையூர் – மலையூர் சுமாத்திராவின் ஒரு பகுதியாகும்.

(3) பண்ணை - இது சுமாத்திராவின் கீழ்க்கரைப் பகுதியாகும்.

(4) மாயுருடிங்கம் - மாயுருடிங்கம் தற்கால மலேஷியாவின் ஒரு பகுதியாகும்.

(5) இலங்கா சோகம் - இது மலேஷியாவின் கீi;டக் கரையிலிருந்த ஒரு நகரமாகும்.

(6) மாமப்பனரம் - இது மலேஷியாவின் வட பகுதியாகும்.

(7) தலைத்தக்கோணம் - இது மலேஸியாவின் மேற்குப் பகுதியாகும்.

(8) தாமரலிங்கம் - இதுவும் மலேஸியாவின் கீழ்க்கரைப் பகுதியாகும்.

(9) இலாமூரி - இது மலேஸியாவின் வட பகுதியாகும்.

(10) பர்மா –

(11) மாகக்கவாரம் - நிக்கோபார்த் தீவுகள்.

(12) அந்தமான் தீவு –

(13) மாலைத்தீவுகள் -

(14) சாந்திமத் தீவு - இது அரபிக் கடலில் இருந்த ஒருதீவாகும்.

வரலாற்றில் குறிப்பிடப்படும் ஏனைய பேரரசுகளுடன் இச்சோழப் பேரரசை ஒப்பிடுக. இச் சோழ அரசர் கடலாட்சியும் தரையாட்சியும் செய்தனர். இரண்டாம் இராசேந்திரன் காலத்திலும் வீர இராசேந்திரன் காலத்திலும் சோழப் பேரரசு உச்சநிலையில் இருந்தது. இப்பேரரசைப் பற்றிய பல நூல்களுள. இவற்றைத் தமிழராகிய நாம் தவறாது படிக்க வேண்டும்.

முதலாம் குலோத்துங்கன் காலத்திலே சோழப் பேரரசிற் பல குழப்பங்கள் உண்டாயின. அரசு ஆட்டங்காணத் தொடங்கிற்று. எனினும் குலோத்துங்கன் கலிங்க போர்களில் இருமுறை வெற்றிகண்டான்.

குலோத்துங்கனுக்குப் பின்பு சோழப் பேரரசு படிப்படியாகப்பலங் குன்றிற்று. 11ம் நூற்றாண்டு தொடக்கம் 13ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலுமான 350 வருடங்கள் இப்பேரரசின் காலமாகும்.

பாண்டியர் பேரரசு
பண்டு தொட்டுப் பாண்டியர் பேரரசு நிறுவி ஆண்டனர். இவர்கள், பெருவள நாட்டுப் பேரரசர் குடும்பத்தவராவர். சங்கங்களை நிறுவியவர் பாண்டிய மன்னராவர். தமிழைப் பேணிவளர்த்தவர் பாண்டியரே. பாண்டி நாடே செந்தமிழ் நாடெனும் பெருமைக்குரியதாகும். 3ஆம் நூற்றாண்டில் களப்பிரர் பாண்டி நாட்டைக்கைப் பற்றி 200 வருடங்கள் ஆண்டனர். 6ஆம் நூற்றாண்டில் மறுபடியும் பாண்டியர் எழுச்சியுற்றனர். களப்பிரரை வென்றனர். பாண்டிய மன்னன் இராச சிம்மன் காலத்தில் பல்லவ சாளுக்கிய அரசுகளின் பலங் குன்றின போது, இவன் கூடல், வஞ்சி, கோழி எனும் பாண்டிய சோழச் சேரத்தலை நகர்களைக் கைப்பற்றினான்.

கி.பி. 815இற் பட்டமெய்திய திரு வல்லவன் ஈழன் வரைவென்றான். குடமுக்கு என்ற இடத்தில் கங்கர், பல்லவர், சோழர், கலிங்கர், மகதர் படைகளைத் தோற்கடித்தான் எனவும் வில்லினம் என்ற இடத்தில் சேரனை வென்றான் எனவும் சின்னமதூர்ப் பட்டயம் கூறுகிறது. சோழப் பேரரசின் போது பாண்டியர் சிற்றரசர்களாக இருந்தனர். சோழர் பிரதிநிதிகள் மதுரையில் ஆண்டனர்.

கி.பி. 1187 இல் விக்கிரமன் மதுரையிற் பாண்டிய அரசானன காலந் தொடக்கம் பாண்டிய அiசு மறுமலர்ச்சியடையத் தொடங்கிற்று. கி.பி. 1190 இற் குல சேகரன் பட்டமெய்திய பின் மேலும் வளர்ந்தது. சுந்தர பாண்டியனின் காலம் (கி.பி. 1216 – 38) பொற் காலமாகக் கருதப்படுகிறது. சுந்தர பாண்டிய் சோழ நாட்டைவென்று உறையூரையும் தஞ்சையையும் தீக்கிரையாக்கினான். முதலாம் சடாவீரமன் காலத்தில் பாண்டியர் திருவாங்கூரையும் கோயசாளரையும், சோழரையும், ஈழத்தையும் வென்றனர். இக் காலத்திலே தான் வட இலங்கையில் ஆரியச் சக்கரவர்த்தி குடும்பத்தவரின் ஆட்சி தொடங்கிற்று. வீரபாண்டியன் கி.பி. 1310இல் மகமதியரின் உதவியை நாடினான். உதவிக்கு வந்த மகமதியர் மதுரையைக் கைப்பற்றி 50 வருடங்கள் ஆண்டனர். மகமதியரிடமிருந்து விசயநகரப் பேரரசு பாண்டி நாட்டைக் கைப்பற்றிற்று. இதற்குப் பின் மேனாட்டவர் தென்னிந்தியாவிற்குட் புகுந்தனர்.

பாண்டியப் பேரரசு சோழப் பேரரசைப் பார்க்கிலும் பரப்பிற் குறைந்ததாயினும், செல்வாக்கிலும், செல்வத்திலும் குறைந்ததன்று. பாண்டி நாட்டிற் குவிந்து கிடந்த செல்வத்தையும் அதற்குக்காரணமான வாணிபத்தையுங் கவரவே மகமதியரும், போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும், பிரஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும் தமிழகஞ் சூழ்ந்த தென்கிழக்காசியாவில் வட்டமிடத் தொடங்கினர்.

மூவேந்தர் ஆட்சி முற்றாக மறைந்தது. வரலாறுக்கு முற்பட்ட காலந்தொட்டு வந்த தமிழ் மக்கள் சுதந்திரத்தை இழந்து அடிமைகளாகினர்.

சோழப் பேரரசில் தமிழ் மொழியும் சைவமும் தழைத்தோங்கின. பல நூல்கள் எழுந்தன. ஒரு மக்களின் மொழி, பண்பாடு, நாகரிகம், தொழில், வாணிபம், செல்வம் முதலியவற்றின் வளர்ச்சிக்கும் அரசியற் சுதந்திரத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புண்டு. சங்க காலத்திற்குப் பிற்பட்ட இலக்கியத்திற் பல குறைபாடுகளைச் சிலர் எடுத்துக் காட்டுகின்றனர்.

(1) நூல்கள் பெரும்பாலும் பிரபந்தங்களாகும், கோவை, உலா இரட்டை மணிமாலை, கலம்பகம், பரணி எனப்பிரபந்தங்கள் முப்பத்தாறு வகைபடும்.

(2) நூல்கள் பெரும்பாலும் அதிகங் கலந்துவிட்டது.

(3) தமிழில் வடமொழி அதிகங் கலந்துவிட்டது.

(4) பிராமணீயக் கொள்கைகள் பரவிவிட்டன.

(5) நூல்கள் பெரும்பாலும் வடமொழியிலிருந்து மொழி பெயர்ப்புக்களாகும்.

இவற்றைக் குறைபாடுகளாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு நூலையும் அதன் சொல் பொருள் நயம் பற்றி மதிப்பிட வேண்டும்.

10ம் நூற்றாண்டு
1. வளையாபதி

2. குண்டலகேசி – நாத குத்தனார்

3. சிந்தாமணி – திருத்தக்கதேவர்

4. யாப்பருங்கலம் –
அமிதசாகரர்
5. யாப்பருங்கலக்காரிகை

6. பட்டினத் தடிகள் பாடல்கள்


11ம் நூற்றாண்டு
7. உதயண குமார காவியம்

8. யசோதர காவியம்

9. நாககுமார காவியம்

10. வீரசோழியம் - புத்தமித்தரனார்

11. தண்டியலங்காரம் - தண்டி

12. கலிங்கத்துப்பரணி – சயங்கொண்டார்


12ம் நூற்றாண்டு
13. கந்தப்புராணம் - கச்சியப்ப சிவாச்சாரியார்

14. பெரிய புராணம் - சேக்கிழார்

15 இராமாயணம் - கம்பர்

16 மூருலா

17 குலோத்துங்கன்
- ஒட்டக் கூத்தர்
பிள்ளைத்தமிழ்

18. ஆத்திசூடி முதலிய ஒளவையார் நூல்கள்

19. திருவுந்தியார் திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார்

20 நளவெண்பா – புகழேந்திப் புலவர்.

21. நன்னூல் - பவணந்தி முனிவர்

13ம் நூற்றாண்டு
22. சிவஞான போதம் - மெய்கண்ட தேவர்

23. சிவஞான சித்தியார் – அருணந்தி சிவாச்சாரியார்


(2) 14ம் நூற்றாண்டு தொடக்கம்
இச்சமீப காலத்தைப் பற்றிப் பல வரலாற்று நூல்கள் உள@ 14ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நாம் தமிழரைப்பற்றி எழுதுவது எனது நோக்கமன்று. இதுவரையும் அரசுகளும் அரசர்களும் மாறினபோதிலும், பேரரசுகள் காலத்துக்குக் காலம் தோன்றி மறைந்த போதிலும் இவை யாவும் ஒரே நாகரிகமும் பண்பாடுமுடைய ஒரு நாட்டு ஓரின மக்களிடையில் நடந்தவையாகும். போர்கள் அடிக்கடி நிகழ்ந்த போதிலும், இப்போர்களினால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பண்டுதொட்டுப் பற்பல காலங்களில் இந்தியாவிற்குட் புகுந்த சீன, சிதிய காக்கேசியக் குழு மக்கள் இந்திய மக்களுடன் கலந்து ஒன்றாகினர். இக்கலப்பிலிருந்து இந்திய மொழிகளும், நாகரிகமும், பண்பாடும், சமயங்களும் தோன்றின. ஆரியம் திராவிடர் என்பவை திசையைக் குறிக்குஞ் சொற்களன்றி இனத்தைக் குறிக்குஞ் சொற்களன்று எனக் கண்டோம். சீன, சிதிய காக்கேசியக் குழுக்களின் பேச்சு மொழிகளுடன் திராவிடம் கலந்து வட இந்திய மொழிகள் தோன்றின. சமஸ்கிருதம் மத்திய இந்தியாவிற் பிற்காலத்திலே தோன்றி வளர்ந்த செயற்கை மொழி. தமிழும் சமஸ்கிருதமும் தொடர்புடைய ஓரின மொழிகள் எனக் காஞ்சி புராணங் கூறுகிறது.

“வட மொழியைப் பாணினிக்கு
வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென் மொழியை
உலக மெலாம் தொழு தேத்தும்
குடமுனிக்கு, வலியுறுத்தார்
கொல் லேற்றுப் பாகர்”

14ஆம் நூற்றாண்டிலிருந்து மொழிகள், பண்பாடு, சமயத்தில் வேறுபட்ட அந்நியர் இந்தியாவிற்குட் புகுந்தனர். இவர்கள் வர்த்தகத்துக்காக இந்தியாவிற்குட் வந்து நாட்டின் பல பாகங்களைக் கைப்பற்றிக் கொள்ளையடித்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் தமது ஆட்சியை இந்தியா முழுவதிலும் நிறுவும் வரையும் நாடெங்கும் போர்களும், கொலைகளும், கொள்ளையடித்தலும் நடந்தன. இவ்வந்நியரின் சமயங்கள் இந்தியாவிற்குட் புகுந்தன. சமயச் சண்டைகளும், மத மாற்றங்களும் தோன்றின. இந்தியா (தமிழ் நாடும் உட்பட) அழிந்தது. இந்து சமயமும் இந்தியப்பண்பாடும் நாகரிகமும் சீர்குலைந்தன. செல்வம் செழித்தோங்கிய இந்திய நாடு வறுமையடைந்தது. விவசாயமும் தொழில்களும் குன்றின. வாணிபத்தை அந்நியர் கைப்பற்றினர்.

இக்காலத்தில் தென்னாட்டை மகமதியரும் விசயநகரப் பேரரசர்களும் ஆண்டனர். இவர்களிடையில் இடையறாப்போர்கள் நடந்தன. 14ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விசயநகர அரசர் துங்கபத்திரை நதிக்கரையிற் சிற்றரசர்களாக இருந்தனர். படிப்படியாகப் பல மன்னவர்களை வென்று சில காலத்திற்குள் இச்சிற்றரசு சோழப் பேரரசை ஒத்த பேரரசாகிற்று. விசய நகரப் பேரரசைப் பற்றிய பல நூல்கள் உள. இங்கு நாம் இப்பேரரசின் விளைவாகத் தமிழ் நாட்டிலேற்பட்ட மாற்றங்களை மட்டுமே சுருக்கமாகப் பார்ப்போம்.

(அ) விசயநகரப் பேரரசர் வடமொழியையும் தெலுங்கையும் ஆதரித்தனர்.

(ஆ) இக்காலத்தில் தெலுங்கர் பெருந்தொகையாகப் படையெடுத்து வந்து தமிழ் நாட்டிற் குடியேறினர். தெலுங்கர், கன்னடியர் படைகள் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டன. தெலுங்கு நாட்டு விவசாயிகளும் தொழிலாளிகளும் தமிழ் நாட்டிற் குடியேறினர். தமிழ்ச் சிற்றரசர்களின் இடத்தில் நாயக்கர் ஆண்டனர். தெலுங்கருக்கே நிலங்கள் அளிக்கப்பட்டன. இவர்கள் நிலப்பிரபுக்கள் அல்லது பண்ணைக்காரராயினர். ஆட்சியை மட்டுமன்றி வாணிபத்தையும் செல்வத்தையும் கைப்பற்றினர். தமிழ் மக்கள் மேலும் வறுமையடைந்தனர். ஒரு பக்கம் மகமதியர் கொடுமையினாலும் மறு பக்கம் தெலுங்கர் கொடுமையினாலும் தமிழ் மக்கள் துன்புற்றனர்.

(இ) தெலுங்குப் பிராமணர் தமிழ் நாட்டிற்கு வந்தனர். பிராமணீயம் மேலும் பரவிற்று. இக்காலத்தில் சாதி வேற்றுமைகளும் இந்து மதத்துக்கு இழுக்கான கொள்கைகளும் பழக்க வழக்கங்களும் பரவின. தெலுங்குப் பிராமணர் சைவருக்கும் வைணவருக்குமிடையிற் பகைமையையும் பொறாமையையும் உண்டாக்கினர். வைணவ சமயம் பரவிற்று.

(ஈ) எனினும், விசயநகரப் பேரரசு தென்னாட்டில் மதத்தைக் காப்பாற்றிற்று. இப்பேரரசு இருந்திருக்காவிடின், தென் இந்து நாட்டில் இந்து மதம் அழிந்திருக்கும்.

தமிழ் மொழி இக்காலத்தில் வளர்ச்சியடையவில்லை. பெரும் பாலான நூல்கள் பண்டார சாத்திரங்களாகும். தல புரணங்களும் சதகங்களும் பள்ளுகளும், சிற்றரசர்களைப் பற்றிய மான்மியங்களும் தோன்றின. சுதந்திரமற்ற தமிழ் மக்கள் உன்னத இலட்சியங்களை இழந்தனர். அற்ப சிறு விடயங்களைப் பற்றி நூல்கள் எழுதினர். இந்நூல்களில் அடிமை மனப்பான்மைக் காணலாம். இக்காலத்திற் சிறந்த நூல்களாக மிகச் சிலவற்றையே குறிப்பிடலாம்.

1. பாரதம் – வில்லிப்புத்தூராழ்வார்

2. திருப்புகழ் – அருணகிரிநாதர்

3. சீறாப்புராணம் – உமறுப்புலவர்

4. தேம்பாவணி – வீரமாமுனிவர்

5. தாயுமானவர் பாடல்கள்

6. இராமலிங்க சுவாமிகள் பாடல்கள்

7. தமிழ் விடுதூது – அமிர்தம் பிள்ளை

ஆங்கிலேயரும் வாணிபத்திற்காகவே இந்தியாவிற்கு வந்தனர். கிழக்கிந்திய தீவுக் கொம்பனியின் ஆட்சிக் காலத்திற் பல அநீதிகளும் போர்களும் கொலை களவுகளும் நடந்தன. ஆங்கிலேயர் தமது சாம்ராச்சியத்திலிருந்த நாடுகளைச் சுரண்டிச் செல்வமடைந்தனர் என்பதில் ஒரளவு உண்மையுண்டு. எனினும், இங்கிலாந்துப் பாராளுமன்றம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் அரசியல் நிலை படிப்படியாகச் சீரடைந்தது. இந்தியா முழுவதையும் ஆங்கிலேயர் ஒரு குடைக்கீழ்க் கொண்டுவந்தனர். நாடு முழுவதிலும் கலவரங்களையும் போர்களையும் தடுத்து அமைதியை நிலை நாட்டினர். யாவருக்கும் சம நீதி வழங்கினர். சமவாய்ப்பு அளித்தனர். கல்வியைப் பரப்பினர். இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் என்றுமுள தமிழ் மீண்டும் தலையோங்கிற்று. பல துறைகளில் பல தமிழ் நூல்கள் தோன்றின.

“தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலியாலும்
இந்தப் பெரும் பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்”
(பாரதி)

ஆங்கிலம் தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக இருந்த தன்றிச் தடையாக இருக்கவில்லை. தமிழர் தொழிலிலும் வாணிபத்திலும் முன்னேறினர். ஆங்கில சாம்ராச்சியத்திலிருந்த பல நாடுகளிற் குடியேறினர்.

பதினொராம் அத்தியாயம்
ஈழத்தில் – நாம் தமிழர்
“புத்த மத்தின் மூலம் வட நாட்டுப் பண்பாடு புகுந்து சிங்களமொழி வேறுபடுவதற்கு முன், இலங்கை தமிழகமாக இருந்தது. சிங்களம் வேறுபட்ட பின்பும், வட இலங்கை தமிழ் நாட்டைவிடத்தொன்மை மிக்க தமிழகமாகவே இருந்து வந்தது. ஈழ நாட்டவரான வட இலங்கைத் தமிழர் இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய வரல்லர். அவர்கள் சிங்களவரிலும் பழமையான இலங்கை நாட்டு மக்களாவர்” – பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை. “அதிசயம் மிக்க இந்து வெளி நாகரிகத்தை உண்டாக்கிய திராவிட இனம் பண்டைக் காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்தது. ஹதரபாட்டில் எடுக்கப்பட்ட பிரேதங்கள் புதைக்கும் தாளிகளும், தின்னவேலி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மட்பாத்திரங்களும் கேகாலையினுள்ள குகையொன்றிற் காணப்பட்ட கல்வெட்டுப் பொறிப்புகளும் இதற்குச் சான்று பகர்கின்றன” வணக்கத்துக்குரிய கெறஸ் பாதிரியார். “இலங்கையில் முதன் முதலிற் குடியேறியவர் தென்னிந்திய மக்கள் என்பதையும் விஜயன் வருகைக்கு முன்னர் திராவிடமும் திராவிட நாகரிகமும் இலங்கை முழுவதும் பரவியிருந்தன என்பதையும், வட மாகாணத் தொல் பொருள் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இலங்கையின் வடக்கிலேதான் நாகரிகம் முதன் முதலில் தோன்றிப் பின்பு ஏனைய பகுதிகளுக்குப் பரவிற்று.” புலவர் ஊ.ளு. நவரத்தினம்.

“சிங்களம் உண்மையில் ஒரு திராவிட மொழியாகும். தமிழ் அடிப்படையில் வளர்ந்தது. பாளியிலிருந்தும் சமஸ்கிருதத்திலிருந்தும் பெருந்தொகையான சொற்களைக் கடன்பட்ட போதிலும் அஃது அமைப்பிலும் அறிகுறிகளிலும் தமிழின் குழவியாகும். சொற்றொடரியல் மரபு வழக்கியல் விதிகள் பெரும்பாலும் தமிழ் விதிகளை ஒத்தனவாக இருக்கின்றன.” – முதலியார் குணவர்தன.

சிலர் பாண்டி நாட்டைச் செந்தமிழ் நாடென்பர். வேறு சிலர் சோழநாட்டைச் செந்தமிழ் நாடென்பர். ஆனால், வட இலங்கையே செந்தமிழ் நாட்டிற் செந்தமிழ் நாடென்பதை இவ்வதிகாரத்திற் காண்போம். பண்டு தொட்டுத் தமிழுக்கும் சைவத்துக்கும் ஈழம் இருப்பிடமாக விளங்கியது. ஈழத்தை நினைக்கும் போது.

‘எந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந் நாடே – அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே’ என்பதை நினைவு கூர்வோமாக.

இன்று இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலமாகும். விஞ்ஞான உலகம், முன்னோர்க்குப் பேசுகிறோம். எனினும், இலங்கை வரலாறாக ஒரு புராணங் கற்பிக்கப்படுகிறது. மகாவம்சம் அநுராதபுரத்திலாண்ட சிற்றரசர் வம்சத்தின் புராணம் அல்லது மான்மியமாகும். இச்சிற்றரசர் புத்த மதத்தையும் சங்கத்தையும் ஆதரித்தபடியினால், அவர்கள் புகழைப் புத்த குருமார் பாடினர். சங்கத்தின் செல்வாக்கையும், அதிகாரத்தையும் நிலை நாட்டுவது இந்நூலின் நோக்கமாகும். புராண முறைப்படி எழுதப்பட்டது. புராணங்கள் எழுதுவதிற் புத்தகுருமார் எமது பிராமணரிலும் பார்க்க குறைந்தவர்களல்லர்.

பண்டைக்காலத்தில் இந்தியாவிற் பல்லாயிரஞ் சிற்றரசுகள் இருந்தன. ஒவ்வொரு குலமுங்குடியும் தன்னைத்தானே ஆட்சி செய்தது. காலத்துக் காலம் பேரரசுகள் தோன்றின. தென்னாட்டிலே சேர, சோழ, பாண்டியர் பேரரசுகள் நெடுங்காலம் நீடித்திருந்தன. எனினும், இவர்களும் சிற்றரசர்களாக இருந்த காலங்களுமுண்டு. சிற்றரசர் பேரரசருக்கு திறை கட்டினர். பேரரசர் பலங்குன்றிய காலத்திலே திறை கட்ட மறுத்தனர். அடிக்கடி போர்கள் மூண்டன இலங்கையிலும் பல சிற்றரசுகள் இருந்தன. அநுராதபுரச் சிற்றரசு இவற்றில் ஒன்றாகும். அநுராதபுர அரசர் இலங்கையிற் பேரரசாக இருந்தனரா? அவ்வாறாயின் எவ்வௌ; காலங்களில்? அநுராதபுரச் சிற்றரசின் புராணம் இலங்கையின் வரலாறாகாது. இந்தியாவிற் சிற்றரசர் புராணங்கள் பல்லாயிரம் உள. இலங்கையிலும் இவைபோன்ற புராணங்கள் உள. சிங்களத்தில் மகாவம்சம், சூளவம்சம் முதலியன தமிழில் யாழ்ப்பாண வைபவமாலை, வன்னியர் புராணம், கோணேஸ்வர புராணம், மட்டக்களப்பு மகாத்மிகம் முதலியன.

சிங்களவர் தம்மை ஆரியர் என ஒரு கட்டுக் கதை எழுதி வைத்திருக்கின்றனர். ஆரியர் எனுஞ் சொல்லின் பல கருத்துகளையும் இரண்டாம் அதிகாரத்திற் படித்தோம். எக்கருத்தில் இவர்கள் தம்மை ஆரியர் என்கின்றனர். இன அடிப்படையில் ஆரியரா? அதாவது இந்தியாவிற்குட் புகுந்த காக்கேசிய ஈரானியக் குழுக்களின் சந்ததிகளா? அல்லது திசை அடிப்படையில் ஆரியரா? அதாவது வட இந்தியாவிலிருந்து வந்தவரா? விஜயன் இலங்கைக்கு வரமுன் இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் நாகரும், இயக்கமும் முண்டரும் என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர்.

இவர்கள் அழிந்து விடவில்லை. இலங்கையில் வாழும் மக்களிற் பெரும்பான்மையானோர் தமிழராயினும் சரி சிங்களவராயினும் சரி இவர்களின் சந்ததிகளாவர். நாகர் இலங்கையின் மேற்குப் பகுதியில் வாழ்ந்தனர். ஆதலால் தமிழர் பெரும்பாலும் நாகராவர். இயக்கரும் முண்டரும் கிழக்குப் பகுதிகளிலும் மத்திய பகுதிகளிலும் வாழ்ந்தனர். ஆதலாற் சிங்களவர் பெரும்பாலும் இயக்கரும் முண்டருமாவர். இவை யாவுந் திராவிட இனங்களென முன்பு கூறினோம். எவராவது சந்தேகப்பட்டால் தம்மைத்தாமே கண்ணாடியிற் பார்த்துத் தெளிவு பெறலாம்.

அக்காலத்திற் குடிவரவுக் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஆதலாற் பண்டுதொட்டுத் தென்னிந்தியாவிலிருந்து பல குழு மக்கள் பற் பல காலங்களில் இலங்கைக்கு வந்து குடியேறினர். இங்கு வாழ்ந்த நாகர் இயக்கர். முண்டர்களுடன் கலந்து ஒன்றாகினர். வட இலங்கையிற் குடியேறியவர் பெரும்பாலும் பாண்டி நாட்டிலிருந்தும் சோழ நாட்டிலிருந்தும் வந்த தமிழராவர். சிங்களவர் தங்களைவ விஜயனின் சந்ததிகள் எனக் கூறிக்கொள்ளுகின்றனது. விஜயனின் அரச பரம்பரை, ஐந்தாம் தலைமுறையுடன் அழிந்தது எனவும் அதற்குப்பின் நாகர் வமிசத்தவரும் தமிழரும் கலப்பு மிசிர குலத்தவரும் அநுராதபுரத்தில் ஆண்டனர் எனவும் மகாவம்சமே கூறுகிறது. சிங்களவரிற் சிலர் விஜயனின் சந்ததிகள் என எடுத்துக்கொண்டாலும், எல்லாச் சிங்களவரும் விஜயனின் சந்ததிகளாக இருக்க முடியாது. விஜயனும் திராவிடன் என்பதை அறிந்தால் அவனையே தூற்றுவர். இக்காலச் சிங்களவர் போல் இருக்கிறது. விஜயன் கலிங்க தேசத்திலிருந்து காவாலித் தோழர்களுடன் நாடு கடத்தப்பட்டவன். கலிங்கம் பழைய காலத்தில் ஆந்திராவின் ஒரு பகுதியாக இருந்தது. தக்கணத்தில் இருக்கிறது. அன்றும் இன்றும் இந்நாட்டில் வாழும் மக்கள் திராவிடராவர். விஜயன் திராவிடன். இந்து மதத்தவன். இவன் எவருக்காவது சந்தேகமிருந்தால் ஒருமுறை கலிங்கத்துக்குப் போய் அங்கு இன்றும் வாழும் மக்களைப் பார்த்துத் தெளிவு பெறலாம்.

இதை உணர்ந்த பிற்காலச் சிங்களவர் சிலர் தாம் இன அடிப்படையில் ஆரியர் என்பதை நிலைநாட்டுவதற்கு விசயனின் தாயகம் வங்காளம் என வாதித்தனர். வங்காளம் போனாலும் அங்கு வாழும் மக்கள் மங்கோலிய திரவிடர் என்பதை இவர்கள் உணரவில்லைப் போலும். ஒருவர் கலிங்க நாடு மலேசியாவில் இருந்ததெனவும். அங்கிருந்தே விசயன் வந்தான் எனவும் எழுதினர். இதன் உண்மை எவ்வாறாயினும், மலேசியாவிற்குப் போனாலும் அங்கு வாழும்மக்கள் மங்கோலிய – நாகர் திராவிட இனத்தவர் என்பதை இவர் உணரவில்லை. இப்போது ஒரு புதுக்கதை தோன்றியிருக்கிறது. சிங்களவர் அலெக்சாண்டருடன் இந்தியாவிற்குட் புகுந்த படைகளின் சந்ததிகளாம். ஒரு வேளை தாயகத்தை வட துருவத்துக்குக் கொண்டு சென்றாலும் செல்லலாம். அங்கு வாழும் எஸ்கிமோக்களும் திராவிடர் என்பதை அறிந்தால் இவ்வாறு செய்யமாட்டார். ஒரு கட்டுக்கதைக்கு ஆதாரம் தேடி எத்தனை கட்டுக் கதைகள்? புராணங்கள்? அண்டப் புழுகுகள்? இலங்கை வாழ் சிங்களவரும் தமிழரும் பெரும்பாலும் விசயன் வருகைக்கு முன் இலங்கையில் வாழ்ந்த நாகர், யக்கர், முண்டர், லம்பகர்ணர், கபோயியர், மிசிரர், மோரியர், புலையர், முரிதிசர், வேளீர், தமிழர், வணிகர், பிராமணர் குலங்குடிகளாவர்.

சிங்களவர் பெரும்பாலும் நாகரும், இயக்கரும், முண்டரும், கலிங்கரும் கலந்த இனத்தவர். பிற்காலத்தில் வேறு பல குலங்களும் இங்கு வந்து குடியேறிக் கலந்தன.

(அ) பாண்டிய சோழப் படை வீரர் – பெரும்பாலும் மறவர்படைகள் - சிங்களப் பிரதேசங்களிற் குடியேறிச் சிங்களவருடன் கலந்து இன்று சிங்களவராகி விட்டனர்.

(ஆ) வன்னியர் – சோழப்படைகளுடன் வன்னியர் இந்நாடு வந்து குடியேறினர். வன்னியர் வரலாறு பற்றிப் பல நூல்கள் உள. வன்னியர் விசேடமாகத் தொண்டை நாட்டவர்: காடவர் மரபினர். காடுகள் அடர்ந்த முல்லை நிலங்களில் வாழ்ந்தனர். படைக்கலப் பயிற்சியிற் சிறந்து விளங்கினர். போரில் வீரர், மறவருக்குச் சமமானவர், தென்னாட்டு வேந்தருக்குப் படைத்தலைவர்களாகப் பலர் இருந்தனர். சோழர் படையில் வன்னியர் பெருந்தொகையாக இருந்தனர். இலங்கைக்கு வந்த வன்னியரிற் பெரும்பாலானோர் இன்று சிங்களவராகி விட்டனர். வன்னியருடன் இங்கு வந்த வேறு பல குலத்தவரும் - வில்லி துரையர். வாகையர், ஒட்டர், மலையாளிகள் - இலங்கையிற் குடியேறினர். இவர்கள் வடமத்திய மாகாணத்திலும் வடமேற்கு மாகாணத்திலும் இன்று பெருந்தொகையினராக வாழுகின்றனர். சிங்கள மொழி பேசுவதனால் இன்று சிங்களவராவர் – பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்பு தென்னிந்தியாவில் இருந்து மூன்று குலத்தவர் – கரவர், சலாராகமா, துவர் - இங்கு வந்து குடியேறினர். இவர்கள் இந்தியாவின் மேற்குக் கரைப் பகுதிகளிலிருந்து வந்தனர். இவர்களுடைய தாயகங்களைப் பம்பாய்க்கும், மலையாளத்துக்கும் இடைப்பட்ட பகுதிகளாகக் கருதலாம். இவர்களும் தம்மைப் பற்றி புராணங்கள் எழுதி வைத்திருக்கலாம். எனவே சிங்களவர் எக்குலத்தவராயினும் திராவிடர். அவர்கள் மொழியுந் திராவிட மொழிகளில் ஒன்றாகும். பண்டை இலங்கை மக்களின் மொழி ஈழு அல்லது எலு எனப்படும். புத்த சமயத்தின் பின்பாளி சமஸ்கிருதக் கலப்பினாற் சிங்களமாயிற்று. கிறிஸ்து சகாப்தத்தின் பின் சிங்களம் இலக்கியமும் இலக்கணமும் பெற்றது – வட இலங்கையில் ஈழு மொழி தமிழுடன் கலந்து தமிழாயிற்று.

இந் நாட்டில் வாழும் தமிழரும் சிங்களவரும் ஓரினத்தவர் – திராவிடர். மொழியாலும் மதத்தாலும் வேறுபட்டவர். இன்று மொழிகளின் அடிப்படையில் இனங்கள் வகுக்கப்படுகின்றபடியினால் ஈரினத்தவர் எனக் கூறலாம். பண்டுதொட்டு இந்நாடு சிங்களவருக்கும் தமிழருக்கும் சொந்தமானது. பல நாடுகளில் இரண்டு மூன்று இன மக்கள் ஒற்றுமையாகவும் நாகரீக மனிதராகவும், வாழ்வதைக் காண்கிறோம். இரண்டு மூன்று மொழிகள் பேசப்படுகின்றன. இலங்கையில் ஏன் ஆக்கிரமிப்பும் அநீதிகளும் அட்டூழியங்களும் நடைடிபறுகின்றன? ஈரின மக்கள் சரிசமனாகவும் ஒற்றுமையுடனும் பொதுவுடமைச் சமுதாயத்தில் மட்டுமே வாழலாம் எனப் பொதுவுடமை வாதிகள் கூறுகினற்ன. இஃது உண்மையா? இக்கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளிப்பது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்யலாம்? பொதுவுடமை வாதிகள் கூறுவது உண்மையானால், யாவரும் பொது உடமைவாதிகளாவது நன்று!

இப்போது ஈழத்தில் தமிழராகிய எமது வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம். வரலாற்றுக்கு முற்பட்ட பண்டைக்காலத்திலே எமது நாடு தமிழகமாகிய குமரி நாட்டிற்கு வடக்கேயும் தாமிர பரணியாற்றுக்குத் தெற்கேயும் இலேமூரியாக் கண்டத்திலிருந்த பகுதியாகும். இப்பகுதி இராமாயணக் காலம் வரையும் இந்தியாவுடன் தொடர்பாக இருந்தது. மாலைதீவுகள் வரையும் பரவிக் கிடந்தது. அக்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் திராவிட இனத்தவரான முண்டரும் இயக்கரும் நாகருமாவர். மிருகேந்திர புராணம் இவர்களை மிலேச்சர் எனக்குறிப்பிடுகிறது. தலைச்சங்கமிருந்த முரஞ்சியூர் முடிநாகராயர் ஈழ நாட்டு நாகர் குலத்தவராகக் கருதப்படுகின்றனர். தொல்காப்பியர் ஈழநாட்டுக் “காப்பியர்” குலத்தவரென இராச நாயக முதலியார் கூறுகிறார். கடைச்சங்கப் புலவர்களுள் ஈழத்துப் பூதந்தேவனாரும் ஒருவராவர். இவருடைய ஏழுபாடல்கள் சங்க நூல்களிற் காணப்படுகின்றன. இவை எவ்வாறாயினும், இம் மிகப் பழைய காலத்திலே ஈழநாடு தமிழ்நாடாக இருந்தது என்பதில் ஐயமில்லை.

இராமாயண காலத்தில் இயக்கர் கோனாகிய இராவணன் இலங்கையிற் பேரரசனாக இருந்தான். இக்காலத்துக்கு முன்னரே சிற்சில கடற்கோள்களினால் இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்து விட்டது. இராவணன் தென்னிந்தியாவிலுஞ் சில பகுதிகளை வென்று ஆண்டான். இவன் மறத்தமிழன். சிவ பக்தன்.

“தென்றிசையைப் பார்க்கின்றேன்
என் சொல்வன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம்
பூரிக்குதடடா
அன்றிருந்த இலங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும்
தன்புகழை வைத்தோன்” (பாரதிதாசன்)

இராவணன் காலத்துக்குப் பின்பு இயக்க அரசர்கள் வலிகுன்றி அவர்களுடைய சீருஞ்சிறப்பும் செல்வமும் புகழும் மறைந்தன. அன்று இயக்கர் குலத்தை இனத்துரோகி ஒருவன் வேதம் பேசி அழித்தான். இன்று எம்மைப் பலர் பணஞானம் பேசி அழிக்கின்றனர். நாகர் அரசுகள் தோன்றின. ஒருவேளை இயக்கர் சிற்றரசர்களாகச் சிலவிடங்களில் இருந்திருக்கலாம். இராவணனின் மனைவி மண்டோதரி. இவள் மாதோட்டையில் வாழ்ந்த நாகர் அரச குலத்தவள். இக் கம்மிய நாகரைப் பற்றி இராசநாயக முதலியார் அநேக வரலாற்று விபரங்கள் கொடுக்கிறார். இப்பண்டைக் காலத்திலே யாழ்ப்பாணத்தின் நிலைமையைப் பற்றியும் அவர் கூறுகிறார். மகாவம்சம், சூளம்சம், யாழ்ப்பாண வைபவமாலை முதலியவை போன்று இவருடைய நூல் புராணமன்று, இது வரலாற்று ஆராய்ச்சி நூலாகும்.

“இப்போது குடாநாடாகவிருக்கும் யாழ்ப்பாணம் முன்னொரு காலத்தில் - அதாவது கிறித்துவுக:கு அநேகவாயிரம் ஆண்டுகட்கு முன்னர் - இரண்டு தீவுகளாகவிருந்தது. மேற்கே நாகதீவம், மணி நாகதீவம், பணபுரம், மணிபல்லவம் எனும் நாமங்களால் வழங்கப்பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமை முல்லைத்தீவு, எருமைத்தீவு என்று பெயர்பெற்ற சிறு தீவும் ஆக இரு பிரிவாக இருந்தது. காலந்தோறும் பூகம்பங்களினாலும், பிரளயங்களினாலும் அழிக்கப்பட்டு, மேற்கே ஒன்றாயிருந்த தீவகம் பல தீவுகளாகப் பிரிந்தது. காரைத்தீவு, வேலணை, மண்டைதீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினா தீவு, நெடுந்தீவு முதலிய தீவகங்களும் வலிகாமமும் இப்பெருந்தீவகத்தின் பகுதிகளேயாம். அவ்வாறே, கிழக்கே ஒன்றாயிருந்த சிறு தீவகம் களப்புக் கடலால் வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப் பள்ளியெனும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

பண்டைக்கடல், பூநகரிக்கடல், யானையிறவுக்கடல், எனுங்களப்புக் கடல்கள், முன்னே வங்காளக் குடாக் கடலுடன் சேர்ந்து ஆழமும் அகலமும் உள்ளனவாயிருந்தன. அன்றியும் மேலைத்தேசங்களிலும் சீனம் முதலிய கீழைத்தேசங்களிலுமிருந்து போக்குவரவு செய்யுங் கப்பல்களுக்குப் பெரு வழியாகவும், சோளகம், வாடைக்காற்றுக்கள் தொடங்கும் காலங்களில் உண்டாகும் புயல்களுக்கு அக்கப்பல்களின் ஒதுக்கிடமும் உறைவிடமுமாகவும் இருந்தன……………………………………………………………
…………………………………………………………………………………………………………...

ஓவியரல்லாத மறுநாகர் வகுப்பைச் சேர்ந்த அரசர்கள் கந்தரோடையிலும், எருமை முல்லைத் தீவிலும், குதிரை மலையிலுமிருந்து அரசாண்டு வந்தார்கள். அல்லியரசாணியும், எழுனியும், பிட்டங்கொற்றனும் குமணனும் குதிரை மலையிலும், ஆந்தை, ஆதனழிசி, நல்லியக் கோடன், வில்லியாதன் என்பார் மாந்தையிலும், எருமையூரன் எருமை முல்லைத்தீவிலும் இருந்து அரசாண்டமை பண்டைத் தமிழ் இலக்கியங்களால் அறியலாம்…………………………………………………………………………….
……………………………………………………………………………………………………………

பன்னெடு காலமாகப் பீனீசியர் என்னும் அரேபிய தேசவாசிகள் இந்தியா இலங்கையுடன் கப்பல் மார்க்கமாக வாணிபம் நடத்தி வந்தார்கள். விவிலியண நூலில் “ஓவிர் தேசத்திலிருந்து பொன்னும் வெள்ளியும், தந்தமுங், குரங்குத் தோகையுங் கொண்டுவரப்படும்’ என்று சொல்லப்பட்ட ஓவிர் தேசம் ஓவியராகிய நாகர் வாழ்ந்த மாந்தையே”

வட இலங்கையிலுள்ள பெரிய குளங்கள்
வவனிக் குளம், பாவற்குளம் முதலியவை விசயன் இலங்கைக:கு வரமுன் கட்டப்பட்டவையாகும். கி.பி. முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளிற் கட்டப்பட்ட பெரிய குளம், மாமடு, ஒலுமடு, கனகராயன் குளம், பண்டாரகுளம் முதலியவையுந் தமிழராற் கட்டப்பட்டவையாகும். திருகோணமலைப் பகுதியிலுள்ள கந்தளாய்க் குளமும் விசயன் காலத்துக்கு முற்பட்டதாகும். நாகதீவு, நாகர்கோயில், மாதோட்டம் முதலியவை பற்றிய குறிப்புக்கள் குநற்தொகையிற் காணப்படுகின்றன.

புத்தமதம் இலங்கைக்கு வரமுன் ஈழ மக்கள் இந்துக்களாக இருந்தனர். மத மாற்றத்தினால் இன மாற்றம் ஏற்படுவதில்லை.

“விசயன் இலங்கைக்கு வருவதற்கு ஆதிகாலத்துக்கு முன்னரேயே இலங்கையிற் பெயர் பெற்ற ஐந்து சிவாலயங்கள் இருந்தன – திருக்கேதீசுவரன், முனீசுவரன், தண்டேசுவரம், திருக்கோணேசுவரம், நகுலேசுவரம்.” – பீரிஸ். இந்த ஐந்து கோயில்களையே இன்று சில சிங்களவர்கள் பறிக்க எத்தனிக்கின்றனர்.

திருகோணமலையிலுள்ள கோணேசுவரர் கோயில் பற்றிப் பல நூல்கள் உள@ தட்சண கைலாச புராணம், கோணேசர் கல்வெட்டு, திருக்கோணாசல வைபவம். இக்கோயிலின் தொடக்கத்தைக் கோணேசர் கல்வெட்டுக் கூறுகிறது.

“திருந்துகலி பிறந்தைஞ்…ற் றொருபதுட
னிரண்டாண்டு சென்ற பின்னர்
புரிந்திடப மாதமதி லீரைந்தாந்
தேதி திங்கள் புணர்ந்த நாளில்”

அதாவது கி.மு. 2590இல் என்க.

குளக்கோட்டன் சோழ மகராசா என்ற புராணக் கதையை நாம் நம்பவேண்டியதில்லை. புராணத்திற் சாதாரண மனிதனும் மகாராசாவாகிறான். நாடு கடத்தப்பட்ட விசயன் மகாவம்ச புராணத்திற் சிங்கத்திலிருந்து உதித்த கலிங்கத்து இளவரசனாக வில்லையா?

திருகோணமலை எக்காலத்திலும் சைவத்திருத்தலமாகிய தமிழ் நாடாக இருந்தது. சோழப் பேரரசுக் காலத்தில் திருகோணமலையைச் சோழப் பிரதிநிதிகள் நேராக ஆண்டனர். திருகோணமலையிலாண்ட சிற்றரசர் சில காலம் தனியாட்சி செய்தனர். சில காலம் சிங்கள அரசருக்குத் திறைகட்டி ஆண்டனர். ஆனாற் பெரும்பாலும் யாழ்ப்பாணப் பேரரசின்கீழ்ச் சிற்றரசர்களாக இருந்தனர். திருகோணாமலை தேவாரப் பாடல்கள் பெற்ற திருப்பதியாகும்.

“மந்திரத்து மறைப் பொருளுமாயினான் காண்
மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே”
- திருநாவுக்கரசு நாயனார்.

“மாதரொடு மாடவர்கள் வந்தடி
யிறைஞ்சி நிறை மாமலர் கடூய்க்
கோதைவரி வண்டிசை கொள் கீத முரல்
கின்றவளர் கோகரணமே”
- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

நம்பொத்த என்ற சிங்கள நூல் வட இலங்கையைத் தமிழ்ப் பட்டணம் எனவும் இப்பட்டணத்துளடங்கிய இடங்களுள் திருகோணமலை ஒன்றாகும் எனவுங் குறிப்பிடுகிறது. போர்த்துக்கீசப் பாதிரியார் குவைறோஸ் என்பவர் கோணேசுவரர் கோயிலைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:-

“இக்கோயில் கீழைத் தேசத்திலுள்ள கிறிஸ்தவரல்லாத மக்களின் உரோம புரியாகும்: இத்திருத்தலத்துக்கு யாத்திரிகர் கூட்டங்கள் இடையறாது வந்து சென்றன. இந்தியாவிலுள்ள புண்ணிய தலங்கள் பலவற்றைக் காட்டிலும் - இராமேஸ்புரம், காஞ்சிபுரம், திருப்பதி, திருமலை, ஜகத்நாத், விஜந்தி முதலியவற்றைக் காட்டிலும் - திருகோணாமலை சிறந்த புண்ணிய தலமாகக் கருதப்பட்டது.”

கி.மு. 1000இற்கு முற்பட்டிருந்தே தென்னிந்தியாவிலிருந்து தமிழ் மக்கள் வந்து வட இலங்கையிற் குடியேறி அங்கு வாழ்ந்த மக்களுடன் கலந்தனர். விசயன் வருகைக்கு முன்பு கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இராமேஸ்வரத்தை ஆண்ட சூளோதரன் நாக தீவிலாண்ட மாகாதரனின் மருகன் என மகாவம்சங் கூறுகிறது. தென்னிந்தியாவிற்கும் வட இலங்கைக்குமுள்ள நெருங்கிய தொடர்பை இது காட்டுகிறது.

கி.மு. ஆறாம் நூற்றாண்டு தொடக்கம் தென்னிந்தியத் தமிழருக்கும் இலங்கைக்கும் இடையில் அரசியல் சமுதாய மணத்தொடர்புகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலும் முதலாம் நூற்றாண்டின் முதற் பகுதியிரும் தமிழர் மரபினர் இலங்கையிலாண்டனர். கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கும் கி.பி. முதலாம் நூற்றாண்டுக்கும் இடையில் பாண்டிய நாட்டவரும் இலங்கை நாட்டவரும் ஒரே தமிழ்க் குடிமக்களாக வேற்றுமையின்றி நேசத் தொடர்பு கொண்டிருந்தனர். இத் தொடர்புகள் வட இலங்கைத் தொடர்புகள் என்பதில் ஐயமில்லை.

கி.மு. 543இல் விசயன் இலங்கையில் இறங்கியதாக மகாவம்சங் கூறுகிறது. இப்புராணக் கதை எவ்வளவுக்கு உண்மையானது என்பதை அறியோம். விசயன் கலிங்க தேச இளவரசன். அவ்வாறாயின், திராவிட இனத் தெலுங்கன். சைவமதத்தவன். விசயன் மரபினருக்கும் வட இலங்கை அரசருக்கும் இடையிலிருந்த நெருங்கிய தொடர்புகளை வைபவ மாலை கூறுகிறது. இயக்கர் குலத்து மாது குவேனியைத் துரத்திய பின்பு, பாண்டிய பேரரசன் மகளை விசயன் மணந்தானென மகாவம்சங் கூறுகிறது. இது பெரும் புளுகுக் கதையாகும். விசயன் யாழ்ப்பாணத்திலாண்ட நாக அரச குலத்தில் மணஞ் செய்தான். மேலும் தேவநம்பியத்தீசனின் அன்னையும் மூத்த சிவனின் மனைவியுமாகிய பெண் யாழ்ப்பாண நாகர் குலத்தவள்.

மகாவம்சத்தில் தமிழர் வெற்றிகளெல்லாம் இந்தியாவிலிருந்து வந்த படைவீரர் வெற்றிகளாகக் குறிப்பிடப்படுகின்றன. பிற்காலத்திலே சோழ, பாண்டிய பல்லவப் பேரரசர் இலங்கையிற் படையெடுத்து வென்றது உண்மையே. ஆனால், அநுராசபுர அரசின் ஆரம்ப காலத்தில் அதை வென்று ஆண்ட தமிழர் வட இலங்கையிலாண்ட தமிழராவர். கப்பன் எனும் காவற்காரன், சேனன் எனும் குதிரை வாணிகன், ஏலேல சிங்கன் அநுராதபுரத்திலாண்ட மறவர் தலைவர் ஐவர், பாண்டு வமிசத்தவர் - இவர்கள் யாவரும் வட இலங்கைத் தமிழராவர். இவ்வுண்மையை ர்.று. கோடிறிங்கன் எனும் வரலாற்றாசிரியர் வற்புறுத்துகிறார்.

“போதிய பலமுடைய நிலையான தமிழ்க்குடிகள் அருகில் இருந்திருக்காவிட்டால், ஏலேலசிங்கன் அன்னிய மக்களான அனுராதபுரத்துச் சிங்களவரை 43 ஆண்டுகள் ஆண்டிருக்க முடியாது. தென்னிந்தியாவிலிருந்து இடையறாத குடிவரவினால். அக்காலத்தில் வட இலங்கை தமிழ் நாடாக இருந்தது. மன்னார் மாவட்டத்திற் குறிப்பிடத்தக்கதாகும்.” மன்னாரைப் போர்த்துக்கீசர் அழித்தனர்.

கரிகாலன் காலத்திலிருந்து தென்னிந்தியாவில் ஆட்சி செய்த பாண்டிய, சோழப், பல்லவ, அரசர் இலங்கைமேற் படையெடுத்து வெற்றி கண்டனர். இந்திய வரலாற்றிலும் சாசனங்களிலும் பல இலங்கைப் படையெடுப்புக்களும் வெற்றிகளும் குறிப்பிடப்படுகின்றன. இவற்றுட் பல மகாவம்சத்திற் குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால், இக்குறிப்பிடப்படாத படையெடுப்புக்கள் வட இலங்கை அரசின் மேலாக இருந்திருக்கலாம். சிங்கள அரசர் பாதிக்கப்படாவிடின், மகாவம்சங் குறிப்பிடக் காரணமில்லை. இலங்கையிலாண்ட அரச வம்சங்கள் யாவும் தென்னிந்திய அரச வம்சங்கள் என்பதை உணர வேண்டும். இவை கலிங்கர், பாண்டியர், கலிங்கரும் நாகருஞ் சேர்ந்த மிசிரர் முதலிய குலங்களாகும். பிற்காலத்திற் கண்டி அரசர் மலையாள வம்சத்தவர். கோட்டையிலாண்ட அளகக்கோனார் குடும்பமும் மலையாளத்தவராக இருக்கலாம். நடுக்கால ஐரோப்பிய அரச குடும்பங்களிடையிற் போல இவர்களிடையிலும் நெருங்கிய உறவும் மணத் தொடர்புகளும் இருந்தன.

வட இலங்கையில் தனிப்பட்ட அரசு இருக்கவில்லையென இக்காலத்திற் சில சிங்களவர் முழுப் பூசனிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கப் பார்க்கின்றனர். விசயன் வருகைக்கு முன்பு வட இலங்கையிலிருந்த நாகவரசுகளைக் குறிப்பிட்டோம். விசயன் வருகைக்குப் பின்னும் இவ் வரசுகள் தொடர்ச்சியாக இருந்தன. அக்காலத்தில் அநுராதபுரச் சிற்றரசர்களுக்கும் வட இலங்கை சிற்றரசர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவும் தொடர்புமிருந்தன. அக்காலத்திலே தான் சில தமிழ் அரசரும் சேனை வீரரும் அநுராதபுரத்தைப் கைப்பற்றிச் சில காலங்களில் ஆட்சி செய்தனர். சிங்கள அரசருக்குத் தமிழ்ப் பிரதானிகள் இருந்தனர்.

வட இலங்கையிற் சிங்கை ஆரியர் ஆட்சி கி.பி. 785இல் உக்கிரசிங்கனுடன் தொடங்கி கி.பி. 1620இற் சங்கிலியுடன் முடிவடைகிறது. எட்டு நூற்றாண்டுகள் காலம் இவர்கள் தொடர்ச்சியாக ஒருவர் பின் ஒருவராகப் பரராசசேகரன், செகராசசேகரன் எனச் சிங்காசனப் பெயர்கள் பூண்டு அரசு செலுத்தினர். முதலாம் பராக் கிரமபாகு சிங்கை ஆரியர் வம்சத்தவன். கி.பி. 1215இற் கலிங்க மாகன் சிங்கை ஆரியர் அரசைப் பேரரசாக்கினான். பொலனறுவாவை வென்று இலங்கை முழுவதுக்கும் பேரரசனானான். சக்கரவர்த்தி எனப் பெயர் பூண்டான்.

“தென்னன் நிகரான செகராசன் தென்னிலங்கை மன்னவனாஞ் சிங்கை யாரிய மால்” போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்த போது சிங்கை அரசர் கடற்படையோடு தரைப்படையுங் கொண்டு வலிமை மிக்க அரசர்களாக விளங்கினர். இவ்வரசின் பரப்பையும் தமிழ் மொழி பேசப்பட்ட பகுதிகளையும் ஜே. ஆர். சின்னத்தம்பி என்பவர் “தமிழ் ஈழம் - நாட்டு எல்லைகள்” எனும் நூலில் தெளிவாக விளக்குகிறார். மேற்கே கரையோரமாக மாஓயாவரையும் - சிலாபம் முனீஸ்வரம், குசலை, உடைப்பு, ஆனைமடு, புத்தளம், கற்பிட்டி, வண்ணாத்தி வில்லு, குதிரைமலை, வில்பற்று, நானாட்டான் முதலிய பகுதிகள் - ஆரியச் சக்கரவர்த்திகள் ஆட்சியில் இருந்தன. கிழக்குக் கரையோரமாகக் குறுப்பன் ஆறு வரையுமிருந்த நிலப்பரப்பும் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. இவ்விராச்சியம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவுப்பற்று, பச்சிலைப்பள்ளி, கரைச்சிக்குடியிருப்பு என்பவை அரசரின் நேராட்சியில் இருந்தன. ஏனைய பகுதிகள் வன்னிமைகளினால் ஆளப்பட்டன. வன்னிமைகள் ஆரியச் சக்கரவர்த்திகளின் மேலாணை ஏற்றனர். திறை கட்டினர். இவ்வாறு வன்னிமைகளினால் ஆளப்பட்ட பகுதிகள் முள்ளியவளை வன்னிமை, கொட்டியாற்றுப்பற்று வன்னிமை, பழுகாம வன்னிமை, பாணமை வன்னிமை, பனங்காம வன்னிமை, கரைத்துறை வன்னிமை, கரைவாகுப்பற்று வன்னிமை, கற்பிட்டி வன்னிமை என்பவைகளாகும்.

குமணை, உகந்தை, பொத்துவில், அம்பாறை முதலிய பகுதிகள் பானமை வன்னிமையின் ஆட்சியில் இருந்தன. மகாவலிகங்கையை மேற்கெல்லையாகவும் வெருகல் ஆற்றை வடக்கெல்லையாகவும் கொண்டதும் மட்டக்களப்பு, உகணை, ஓமுனை முதலிய ஊர்களை உள்ளடக்கியதும் பழுகாம வன்னிமையாகும். வெருகல் ஆற்றுக்கு வடக்கேயும் பறங்கி ஆற்றுக்குத் தெற்கேயும் உள்ளதும், செருவிலை, மூதூர், தம்பலகாமம், திருகோணமலை, கந்தளாய், பதவியாக்குளம், பன்குளம், திறப்பனை, குச்சவெளி, நிலாவெளி முதலிய ஊர்களை உள்ளடக்கியதும் கொட்டியாற்றுப்பற்று வன்னிமையாகும். முல்லைத்தீவு வவுனியாப்பகுதிகள் முள்ளியவளை வன்னிமையில் இருந்தன. மன்னார்ப் பகுதிகள் பனங்காம வன்னிமையில் இருந்தன. மாஓயா தொடக்கம் முசலிவரையும் கரைத்துறைப்பற்று கற்பிட்டி வன்னிமைகள் இருந்தன.

போர்த்துக்கீசர் சங்கிலியை வென்றபோது ஆரியச் சக்கரவர்த்திகளின் இராச்சியத்திலிருந்த எல்லாப் பகுதிகளையும் வெல்லமுடியவில்லை. குடாநாட்டிற்குத் தென்கிழக்கிலிருந்த வன்னிப் பகுதிகளும் முள்ளியவளை வன்னிமையும் போர்த்துக்கீசரின் மேலாண்மையை ஏற்கமறுத்தன. எனினும் கண்டி அரசரின் பாதுகாப்பை நாடவில்லை. தன்னாட்சி செய்தன. கொட்டியாற்றுப்பற்று, பழுகாமம், பாணமை வன்னிமைகள் கண்டி அரசரின் பாதுகாப்பை நாடி அவர்களுடைய மேலாண்மையை ஏற்றன. எனினம் இப் பகுதிகள் தன்னாட்சித் தமிழ்ப் பிரிவுகளாக இருந்தன. ஆனால் இக் காலந்தொட்டுச் சிங்களவர் இப்பகுதிகளில் குடியேறத் தொடங்கினர்.

சிங்கள அரசர் ஆரியச் சக்கரவர்த்திகளுக்குப் பயந்தோ திறைகொடுக்க மறுத்தோ தமது இராசதானியை அநுராதபுரத்திலிருந்து பொலநறுவாவிற்கும் பின்பு குருநாகலைக்கும் தம்பதெனியாவிற்கும் கம்பளைக்கும் மாற்றினர். கி.பி. 1344 இல் இலங்கைக்கு வந்த இஸ்லாமியப் பிரயாணியாகிய இபுன் பற்றூற்றா என்பவர் அக்காலத்திலாண்ட ஆரியச் சக்கரவர்த்தியைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:-

“இவ்வரசனின் பெயர் ஆரியச் சக்கரவர்த்தியாகும். கடற்படை வலிகொண்டவன். மலையாளத்திலே நான் தங்கியிருந்தபோது, இவன் நாவாய்கள் சிறியவையும் பெரியவையுமாக நூறு கப்பல்கள் நங்கூர மிட்டுக் கெம்பீரமாக அங்கு நின்றன. இவன் அதிதிகளை உபசரிக்கும் அன்புசார்ந்த நெஞ்சினன். பாரசீகமொழியில் வல்லுநன். அம்மொழியில் என்னுடன் உரையாடினான். எனக்கு நல்ல பரிசில்களை வாரி வாரியிறைத்தான். தனது இராச்சியத்திற் கிடைக்கும் திறமான முத்துக்களையும் பரிசாக ஈந்தான். நான் விரும்பியவண்ணம் ஆதாம் மலைக்கு யாத்திரை செய்ய உதவியுஞ் செய்தான்.”

சிலாபத்தில் முத்துக்குளிக்கும் உரிமை சிங்கை ஆரிய அரசருக்கே இருந்தது. கி.பி. 1278இல் யாப்பகுவாவில் ஆரியச் சக்கரவர்த்தியின் வெற்றிக்குப் பின்பு வடமத்திய மாகாணத்தின் பெரும்பகுதியும் யாழ்ப்பாண அரசின் கீழிருந்தது. உக்கிரசிங்கன் தொடக்கம் சங்கிலி வரையுமான சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகளின் பெயர்களும் காலங்களும் ஐஐஐவது அட்டவணையிற் கொடுக்கப்படுகின்றன.

போர்த்துக்கீசரும் ஆரியச் சக்கரவர்த்திகளும் கி.பி. 1519 தொடக்கம் கி.பி. 1620வரை ஒரு நூற்றாண்டு காலம் போராடினர். ஈற்றில் கி.பி. 1620இற் போர்த்துக்கீசரின் நேராட்சி தொடங்கிற்று. சங்கிலி சிரச்சேதம்செய்யப்பட்டான். சிங்கை ஆரியர் அரச பரம்பரை அழிந்தது. ஈழத் தமிழ் மக்கள் அடிமைகளாகினர். பல விடுதலைப் போராட்டங்கள் தோல்வியடைந்தன. போர்த்துக்கீசர் பத்தொன்பது வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்தபோதிலும், இவர்களுடைய கொலை, களவு, கொடுமைகள் 140 வருடங்கள் நடைபெற்றன.

கி.பி. 1638 தொடக்கம் கி.பி. 1796 வரையுமான 157 வருடங்கள் ஒல்லாந்தர் இந்நாட்டை ஆண்டனர். கண்டி இராச்சியத்தையும் கயிலாய வன்னியன் ஆண்ட வன்னிப் பகுதிகளையும் இவர்களினாற் கைப்பற்ற முடியவில்லை. அக்காலத்து மேனாட்டவர் பலர் ஈழத்திலே தமிழர் வாழ்ந்த பகுதிகளைத் தெளிவாகக் காட்டுகின்றனர்.

கண்டி அரசனின் படைகளினால் திருகோணமலையிற் சிறைபிடிக்கப்பட்ட றொபேட் நொக்ஸ் என்னும் ஆங்கிலேயர் கி.பி. 1679இல் தப்பி அநுராதபுரத்தின் வழியாகச் சென்றர். அக்காலத்தில் அநுராதபுரத்திற் சிங்களமொழி தெரிந்தவர் எவருமில்லையெனவும் தமிழ்மொழி தெரிந்தவர்களே அங்கு வாழ்ந்தனர் எனவும் கூறுகிறார். கைலாயவன்னியனின் தனியாட்சியையுங் குறிப்பிடுகிறார். 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கைக்கு வந்த ரேலண்ட் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“இந்தத் தீவின் பெரும்பகுதி தமிழர்களின் வாழ்விடமாக உள்ளது. இந்தப் பகுதி (வன்னி) கைலாயவன்னியனால் ஆட்சி செய்யப்படுவதுடன் அவனின் நாடு எனவும் அழைக்கப்படுகிறது. இவர்கள் சிங்களவர் ஆட்சிக்குட்பட்ட குடிமக்கள் அல்லர். எங்கள் (ஒல்லாந்தர்) ஆட்சிக்குட்பட்டவருமல்லவர். கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களுட் பெரும்பான்மையினோர் தமிழ்மொழி பேசுகின்றனர். நீர்கொழும்பில் இருந்து தெற்கே தேவேந்திரமுனைவரை உள்ளகரையோரப் பகுதிகளிற் சிங்கள மொழி பேசப்படுகிறது.”

கி.பி. 1700 இல் இலங்கைக்கு வந்த சுவைட்சர் என்பவர் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்.

“இத் தீவின்மற்றக் குடிகளான தமிழர் காலி, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், அரிப்பு, கற்பிட்டியிலிருந்து நீர்கொழும்பு வரையும் வாழ்கிறார்கள். வன்னி நாட்டிலுள்ள தமிழரைத் தவிர ஏனைய தமிழர் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் உள்ளார்கள். வன்னி நாட்டிலுள்ள தமிழர் தமக்கென ஓர் அரசைக் கொண்டுள்ளார்கள்.

ஒல்லாந்தர் தமிழ்ப் பகுதிகளையும் சிங்களப் பகுதிகளையும் தனித்தனியாகப் பிரித்து ஆட்சி செய்தனர். ஒல்லாந்தர் தாம் ஆண்ட பகுதிகளை ஆறு ஆட்சிப் பிரிவுகளாகவும் மூன்று நீதிப் பிரிவுகளாகவும் வகுத்தனர். கொழும்பு ஆட்சி மாவட்டம், புத்தளம் - கற்பிட்டி ஆட்சி மாவட்டம் யாழ்ப்பாண ஆட்சி மாவட்டம், திருகோணமலை ஆட்சி மாவட்டம், மட்டக்களப்பு ஆட்சி மாவட்டம், காலி ஆட்சி மாவட்டம். நீதிப் பிரிவுகள்: யாழ்ப்பாணம், கொழும்பு, காலி.

ஆங்கிலேயர் ஆட்சி கி.பி. 1795 தொடக்கம் கி.பி. 1948 வரையிலுமான 153 வருடங்களாகும். கி.பி. 1815 இற் கண்டி அரசையும் ஆங்கிலேயர் கைப்பற்றினர். தமிழ் மொழியே கண்டி அரசின் ஆட்சிமொழி. இலங்கை முழுவதையும் ஒருகுடைக்குக் கிழ்கொண்டு வந்தனர். எனினும், கி.பி. 1829 கோல்புறூக் திட்டம் வரையும் தமிழ்ப் பகுதிகளையும் சிங்களைப்பகுதிகளையும் தனித்தனியாக ஆட்சி செய்தனர். ஆங்கிலேய ஆட்சியாளர் சிலரின் குறிப்புகளையும் பார்க்கலாம்.

கி.பி. 1799இற் கிளெர்க்கோர்ன் குறிப்புகள் பின்வருவன:-

“இலங்கைத் தீவானது மிகப்பழங்காலந் தொட்டே இரு வௌ;வேறு நாட்டினங்களால் வௌ;வேறு பகுதிகளாக உடமை கொண்டாடப்பட்டது. இத் தீவின் நடுப்பகுதியும் தெற்குப் பகுதியும் வளவை ஆற்றிலிருந்து சிலாபம் வரையுமுள்ள மேற்குப் பகுதியும் சிங்கள நாட்டினத்தால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகும். இத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகள் தமிழர்களினால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகும்.” இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன் சிங்களவரும் தமிழரும் நாட்டினங்களாக கருதப்பட்டனர். இன்று ஏகாதிபத்தியச் சொற்களான பெரும்பான்மை சிறுபான்மை என்பவை பேசப்படுகின்றன. என்னே எமது அரசியல் அறிவு வளர்ச்சி. கி.பி. 1805 இல் அலெக்சாண்டர் யோன்சனின் குறிப்புப் பின்வருவதாகும்.

“நான் சேகரித்த உள்நாட்டு வழக்கத்திலுள்ள சில சட்டங்கள் புத்தளம், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நான்கு மாகாணங்களிலும் வழமையில் உள.” மேலும் அக் குறிப்பில்:

“வட மேற்கிலுள்ள புத்தளத்தில் இருந்து தென்கிழக்கே உள்ள நிலப்பகுதி தமிழர்களின் குடியிருப்பாகும். மேற்கே சிலாபம் ஆற்றிலிருந்து தென் கிழக்கேயுள்ள குமணை ஆறு வரையுள்ள நிலப்பகுதி சிங்களவரின் குடியிருப்பாகும்.” ஆங்கிலேயரும் சுரண்டலுக்காக இங்குவந்த போதினும், அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் நாடு முன்னேறியது. எங்கணும் அமைதி நிலவிற்று. காடரையும் கொள்ளைக் காரரையும் அடக்கினர். சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டனர். மக்கள் பயமின்றி வாழ்ந்தனர். பொலிஸ் இராணுவ அட்டூழியங்கள் இல்லை. தமிழராகிய நாம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறினோம்.”

வட இலங்கையே செந்தமிழ் நாட்டிற் செந்தமிழ் நாடாகும். தமிழுக்கு இருப்பிடம் பண்டைத் தமிழ்நாடு. அன்னியர் ஆட்சிக் காலங்களிலும் தமிழர் பண்பாடும் மரபு முறைகளும் அழிந்து விடவில்லை.

“நல்லைநக ராறுமுக நாவலர் பிறந்திலரேற்
சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே – யெல்லவரு
மேத்து புராணாகமங்களெங்கே பிரசங்கமெங்கே
யாத்த னறிவெங்கே யறை”

நாவலர் பரம்பரை மிக நீண்டதாகும். அவர் அக்காலத்துக்கு ஒரு சந்ததி முன் இருபாலைச் சேனாதிராயரும் நல்லைச் சரவண முத்துப் புலவரும் இவர்களுக்கு ஒரு சந்ததி முன் நெல்லைநாத முதலியாரும் மயில்வாகனப் புலவரும் இவர்களின் குரு கூழங்கைத் தம்பிரான். இவ்வாறு அரசகேசரி வரையும் செல்லலாம். சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகள் இரு தமிழ்ச் சங்கங்களை நிறுவினர். இரகு வம்சம் முதற் பல புகழ்பெற்ற தமிழ் நூல்கள் ஈழத்தில் தோன்றின. செந்தமிழுக்கு இன்பத் தமிழுக்கு இனிய தமிழுக்கு, தூய தமிழுக்கு வட இலங்கை என்பர்.


பன்னிராண்டாம் அத்தியாயம்
எமது மொழி தமிழ்
தமிழ் என்று சொல்லுக்கு “இனிமை”, “தூய்மை”, “அன்பு” என்பவை பொருளாகுமென இந்நூலின் ஆரம்பத்திற் குறிப்பிட்டோம். இனிமைக்கும் தூய்மைக்கும் தன்னொப்பிலா மொழி தமிழாகும். “தேனினுமினியது தமிழ்: தெவிட்டாச் சுவையது தமிழ்@ இலக்கணஞ் சிறந்தது தமிழ்@ இயல் வளஞ் செறிந்தது தமிழ்@ ஒப்புயர்வற்றது தமிழ்@ ஒண்கலை நிறைந்தது தமிழ்@ தன்னேரிலாதது தமிழ்@ தனிப்புகழ் வாய்ந்தது தமிழ்@ பண்ணிற் சிறந்தது தமிழ்@ மண்ணிற் பழையது தமிழ்@ செந்தமிழ்@ உயர்தனிச் செம்மொழி”, என்றெல்லாம் புகழ்பெற்ற மொழி எமது தமிழ். இவ்வாறு நாம் மட்டுமன்றி. மொழிகளை ஒப்பிட்டுச் சீர்தூக்கி ஆராய்ந்த மேனாட்ட வருங் கூறுகின்றனர்.

“தமிழ் தழீஇய சாயலவர்”
(திருத்தக்கதேவர்)

“தமிழ் பாட்டிசைக்குந் தாமரையே”
“என்றுமுள தென்றமி ழியம்பியிசை கொண்டான்”
(கம்பர்)

“இனிமையு நீர்மையுந் தமிழெனலாகும்”
(பிங்கள நிகண்டு)

மேலும், “தமி” என்ற பதத்திற்கு “ஒப்புயர்விலாத” என்பதும் கருத்தாகும். இறைவனைத் “தமியன்” என்கிறோம். இறையிலக்கணம் தமிழுக்கும் பொருத்தமாகும். எமது தமிழ் ஆதியும் அந்தமுமில்லாத மொழி. அன்பே உருவமானது. அருள் வடிவமானது. இன்பத்தமிழ். தெய்வத்தமிழ். கந்தன் அருளிய தமிழ்.

“கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோட மர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ், ஏனை
மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல
எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ”
(திருவிளையாடற் புராணம்)

“வடமொழியைப் பாணினிக்கு
வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை
உலகெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார்
கொல்லேற்றுப் பாகர்” (காஞ்சிபுராணம்)

“சங்கத் தமிழின் தலைமைப் புலவா
தாவே தாலேலோ.” (குமரகுருபரர்)

“தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்ததும் என்புபெண் ணுருவாக்
கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித்
தண்ட மிழ்ச்சொலோ, மறுபுலச் சொற்களோ? சாற்றீர்”
(பரஞ்சோதியார்)

“ஆதியிற் றமிழ்நூல் அகத்தியர்க்
குணர்த்திய மாதொரு பாகன்”

பண்டு தொட்டுத் தமிழ்மக்கள் இறையுணர்ச்சியுடைய வாழ்க்கை நடத்தினர். இந்த இறையுணர்ச்சியை வெளிப்படுத்தத் தமிழ்மொழி போன்று அருள்மொழி வேறில்லை. தமிழிலுள்ள பெரும்பாலான நூல்கள் சமய நூல்களாகும், பக்திப்பாடல்களாகும். நாயன்மாரும் நம்மாழ்வாரும் தமிழ் இசையையும் இறைவனையும் ஒன்றுபடுத்தி அன்புருகினர். பண்ணார்த்த பாட்டிசைத்தனர். ஞானசம்பந்தர் தம்மை “நற்றமிழ் ஞானசம்பந்தன்” என்கிறார். “தமிழொடு இசை பாடல் மறந்தறியேன்” எனத் திருநாவுக்கரசர் உருகுகிறார். சுந்தரர் இறைவனையே தமிழுக்கு ஒப்பிடுகிறார்.

“பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்
பழத்தினில் சுவை ஒப்பாய்”

“மற்றுநீ வன்மை பேசி
வன்தொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கும் அன்பில்
பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே யாகும்
ஆதலான் மண்மேல் தம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார்
தூமறை பாடும் வாயார்.”

திருமூலர்:-
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”

பூதத்தாழ்வார்:-
“அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
இன்புகை சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்”

இப் பக்தி உணர்ச்சிக்கு உதாரணமாக இரட்சணிக யாத்திரீகத்திலுள்ள சிலுவையின் பெருமையைப் பற்றிய பின்வரும் பாடலைப் பார்க்கலாம்.

“தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப்
பன்னரிய பல்பாடு படும்போதும் பரிந்தெந்தாய்
இன்னதென அறிகில்லார் தாம் செய்வ திவர் பிழையை
மன்னியும் என்று எழற்கனிவாய் மலர்ந்தார் நம் அருள்
வள்ளல்”

தமிழருக்கு எம்மதமுஞ் சம்மதமென்பர். எல்லா மதநூல்களும் தமிழில் உள. எல்லா மதத்தவரும் இறைவனைத் தமிழிற் பாடி இன்புற்றனர்.

சைவம்:- பன்னிரு திருமுறைகளும் பதின்னான்கு சித்தாந்த சாத்திரங்களும், பிற்காலத்தில் பட்டினத்தடிகள் பாடல்கள், அருண கிரிநாதர் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், இராமலிங்கசுவாமிகள் பாடல்கள்.

வைணவம்:- நாலாயிரப் பிரபந்தம், பாகவத புராணம்.

பௌத்தம்:- மணிமேகலை, வீரசோழியம், திருப்பதிகம், சித்தாந்தத் தொகை, புத்த ஜாதகத் கதைகள்.

சமணம்:- நாலடியார், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.

கிறிஸ்த்தவம்:- தேம்பாவணி, இரட்சணிய யாத்திரீகம்.

இஸ்லாம்:- சீறாப்புராணம்.

இயல், இசை, நாடகம் என முத்தமிழ் என்பர். தொல்காப்பியரே இசைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவரென்றால், அவர் காலத்துக்கு முற்பட்;டே தமிழிற் பல இசை நூல்கள் இருந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரம் இயல் இசை நாடக நூலாகும். பலவகைப்பட்ட இசைப்பாடல்கள் சிலப்பதிகாரத்திலுஞ் சங்க நூல்களிலுங் குறிப்பிடப்படுகின்றன:- “ஆற்றுவரி, சாந்துவரி, சாயல்வரி, நிலைவரி, முரிவரி திணைநிலைவரி, அம்மானை வரி, ஊசல்வரி, முகவரி, முகமிலவரி, வள்ளைப்பாட்டு முதலியவை. தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம், திருப்புகழ் முதலியவை பண்ணார்த்த இசைப்பாடல்களாகும். கீர்த்தனம், சிந்து, தெம்மாங்கு, பல்லவி, பாவையர் பாட்டு, ஒப்பாரி முதலியவை பிற்காலத்திலே தோன்றின. வடமொழியில் இசைநூல்கள் இயற்றிய பரதரும் சாரங்கதேவரும் தமிழிலிருந்து கடன்பட்டனர்.

“ஏற்றப் பாட்டும் இறைவைப் பாட்டும்
காவடிப் பாட்டும் கப்பற் பாட்டும்
படையினெழுச்சியும் பள்ளி யெழுச்சியும்
சிந்தமுஞ் சந்தமுந் திருத்தா லாட்டும்
கல்லுளிப் பாட்டுங் கவனெறி பாட்டும்
பாவைப் பாட்டும் பலகறை பாட்டும்
மறத்தியர் பாட்டுங் குறத்தியர் பாட்டும்
பள்ளுப் பாட்டும் பலகடைத் திறப்பும்
வள்ளைப் பாட்டும் பிள்ளைப் பாட்டும்
கறத்தற் கயர் திறத்துரை பாட்டும்
பொருத வேந்தர் விருதுப் பாட்டும்
கணாலப் பாட்டும் காதற் பாட்டும்”

சங்க நூல்களிற் பல கூத்து வகைகள் குறிப்பிடப்படுகின்றன:-

‘அகக்கூத்து, புறக்கூத்து, வேத்தியல், பொதுவியல், வசைக்கூத்து, புகழ்க் கூத்து, சாந்திக் கூத்து, இயல்புக் கூத்து, ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து, விநோதக் கூத்து, தேசியக் கூத்து, பழைய நாடகத் தமிழ் நூல்கள் பல மறைந்து விட்டன. அகத்தியம், பரதம், குணநூல், கூத்த நூல், சந்தம், சயந்தம், செயன்முறை, செயிற்றியம், மதிவானர் நாடகத் தமிழ் நூல், முறுவல், பூம்புலியூர் நாடகம், விளக்கத்தார் கூத்து.

பலவகைப்பட்ட இயல் நூல்கள் தமிழில் உள. காப்பியங்கள். வீரகாவியங்கள், புராணங்கள், பிரபந்தங்கள், தோத்திரங்கள், வேதாந்த சித்தாந்த சாத்திரங்கள்.

காப்பியங்கள்
ஐம்பெருங் காப்பியங்களாவன:- சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி. பிற்காலத்திலெழுந்த பெருங் காப்பியங்களாவன:- கம்பர் இராமாயணம், வில்லிபுத்தூர் ஆழ்வார் மகாபாரதம், சேக்கிழார் பெரியபுராணம், கச்சியப்ப சிவாச்சாரியர் கந்தப்புராணம், வீரமாமுனிவர் தேம்பாவணி, உமருப்புலவர் சீறாப்புராணம், ஐஞ்சிறுங் காப்பியங்களாவன@ சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாக குமார காவியம், பெருங் கதை வீரகாவியங்களாவன: புறநானூறு, சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி முத்தொள்ளாயிரம், நந்திக்கலம்பகம், கலிங்கத்துப்பரணி, மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், பாரதி பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள். நீதி நூல்கள்:- திருக்குறள், நாலடியார், பதினென் கீழ்க் கணக்கு நூல்கள், ஒளவையார், இலக்கண நூல்கள்: பெருநூல் இயல் நூல், குமரம், அகத்தியம், ஐந்திரம், தொல்காப்பியம், நன்னூல், வீரசோளியம், தண்டிலங்காரம், யர்பருங்கனக்காரிகை உரிச்சொல் நிகண்டு, இலக்கணக் கொத்து.

இவற்றைவிடப் பல புராணங்களும் அருட்பாடல்களும், பிரபத்தங்களும், உரை நூல்களும் தமிழில் உள.

“புத்தம் புதிய கலைகள் – பஞ்ச,
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்,
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை”

எனப் பாரதியார் மனம் உருகினார். இன்று இக்கலைச் செல்வங்களும் தமிழில் உள. இலக்கிய இலக்கண வளங்களில் உலகில் முதனிலையிலுள்ள மொழிகளில் தமிழும் ஒன்றாகும்.

“கிரேக்க மொழியைப் பார்க்கினும் தமிழ் செம்மையுந்திட்பமும் உடையது. இலத்தின் மொழியைப் பார்க்கிலுஞ் சொல் வளம் உடையது. நிறைவிலும் ஆற்றலிலும் தமிழ் தற்கால ஆங்கிலத்தையும் சர்மன் மொழியையும் ஒத்ததாகும்” கலாநிதி வின்சிலோ. தொன்மையிலும், சொன்னயத்திலும், இலக்கிய இலக்கண வளத்திலும், அறிவிலும், இனிமையிலும், தெளிவிலும், பண்பாட்டிலும், சிறப்பிலும் தமிழுக்கு ஒப்பான மொழியில்லையென இந்நூலிற் பலவிடயங்களிற் கூறினோம். மொழியுலகில் தமிழ் அன்னை சிறப்பாசனம் வகிக்கிறாள். இப்போது தமிழைப் பற்றிய புலவர் பாடல்களிற் சிலவற்றைப் பார்ப்போம். தமிழின் தொன்மையைப் பின் வரும் பாடல்கள் காட்டுகின்றன:-

“தொன்று நிகழ்த்தது அனைத்தும் உணர்ந்திடும்
சூழ் கலை வாணரும் - இவள்
என்று பிறந்தவள் என்று ணராத
இயல்பின ளாம் எங்கள் தாய்” (பாரதியார்)

“பற்பல ஆயிரம் ஆண்டுகள் - இந்தப்
பாரினில் இருந்தறம் பூண்டள்
அற்புதம் இன்னமும் கன்னியே – புது
அழகு தரும் தமிழ் அன்னையே” (நாமக்கல் கவிஞர்)

“பேராற் றருகில் பிறங்கு மணி மலையில்
சீராற்றுஞ் செங்கோ றிறற் செங்கோ – நேராற்றும்
பேரவையி லேநூற் பெருமக்கள் சூழ்ந்தேத்த
பாரரசு செய்த தமிழ்ப் பைந்தேவி” (தமிழ் விடு தூது)

“சதுர்மறை ஆரியம் வருமுன்
சகம் முழுவதும் நினதாயின்
முது மொழி நீ அனாதி யென
மொழிகுவதும் வியப்பாமே” (மனோன் மணியம்)

“பல்லுயிரும் பல உலகும்
படைத்தளித்துத் துடைக்கினு மோர்
எல்லையறு பரம் பொருள் முன்
இருந்தபடி இருப்பது போல்
கன்னடமும் களி தெலுங்கும்
கவின் மலையாளிமுந் துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே
ஒன்று பல ஆயிடினும்
ஆரியம் போல் உலக வழக்
கழிந் தொழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே” (மனோன் மணியம்)


இன்பத் தமிழ், அமிழ்தத் தமிழ், அருமைத் தமிழ், எங்கள் தமிழ்:-

“யாரறிவார் தமிழருமை? என்கின்றே னெனின்
அறிவீனமன்றோ? உன்மதுரை மூதூர்
நீரறியும், நெருப்பறியும், அறிவுண்டாக்கி
நீயறிவித் தாலறியும், நிலமுந் தானே”
(பரஞ்சோதியார்)

“பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்
திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரென
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்
(பாரதம்)

“ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்”
(சேக்கிழார் பெருமான்)

“வானார்த்த பொதியின் மிசைவளர்கின்ற மதியே
மன்னிய மூவேந்தர் கடம் மடிவளர்ந்த மகளே
தேனார்த்த தீஞ்சுளைசால் திருமாலின் குன்றம்
தென்குமரியாயிடை நற் செங்கோல் கொள் செல்வி
கானார்ந்த தேனே! கற்கண்டே! நற்கனியே
கண்ணே! கண்மணியே! அக் கட்புலம் சேர் தேவி
ஆனாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே
அம்மே நின்சீர்முழுவதும் அறைதல் யார்க்கெளிதே”
(கவியரசு வெங்கடாசலம்பிள்ளை)

“இருந்த தமிழே உன்னால் இருந்தேன்
இமயவர்தம்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”
(தமிழ்விடுதூது)

“நீராரும் கடலுடுத்த நிலமடைந்தைக்கு எழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநற் றிடுநாடு
அத்திலக வாசைன போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழணங்கே”
(பேராசிரியர் சுந்தரம்பிள்ளை)

“இயற்கையிலே கருத்தாங்கி
இனிமையிலே வடிவெடுத்துச்
செயற்கை கடந் தியலிசையில்
செய் நடமே! வாழியரோ!
பயிற்சி நிலப் பயிர்களெலாம்
பசுமை யுற ஒளி வழியே
உயிர்ப்பருளும் திறம் வாய்ந்த
உயர் தமிழ்த் தாயே! வாழியரோ!
(வி. கல்யாணசுந்தர முதலியார்)

“தேவினை நெஞ்சில் திகழவும் வைத்தாய்@
சித்தியை ஞானியர் செப்பவும் வைத்தாய்@
பாவினை நூலிற் சுவைக்கவும் வைத்தாய்@
பத்தியைத் தொண்டர் புகழ்க்கிடை நட்டாய்@
பூவினைக் காக்கென வேத்தியல் சொற்றாய்@
புத்தியைக் காக்கப் புலவரை யுய்த்தாய்@
யாவினைக் குங்குடி மக்களை வைத்தாய்@
எத்தனை செய்தனை? நற்றமி ழன்னை@”
(ரா. இராகவைங்கார்)

“வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே.”
“வாழிய செந்தமிழ்! வாழ்கதற் றமிழர்!” (பாரதியார்)

“தமிழே, தமிழே, தமிழர்க்குயிரே
அமுதே, அழகே யன்பே அருளே
சங்கரன் போற்றிய சங்கத் தமிழே
மங்கலம் பொலியும் மாமணி விளக்கே
பாண்டியன் வளர்த்த பச்சிளஞ் செல்வியே
வேண்டிய வரங்கள் ஈண்டிய திருவே”
(பைந்தமிழ்ச் சோலை)

“மூவேந்தர் தாலாட்ட முச்சரங்கத்தே கிடந்து
பாவேந்தர் செந்நாளில் நடைபழகி மொழி பயின்று
மங்குலுறை வேங்கடமும் வான்குமரிப் பேராறும்
தங்குமிடைத் தமிழுலகும் அரசுபுரிந் தமிழ்த்தாயே”


”மாவாழ் பொதிய மலையிற் பிறந்து வரமுனிவன்
பூவாழ் சரமெனும் பொற்றொட்டி லாடிப் புலவர்சங்கப்
பாவாழ் பலகை இருந்து ஏட்டி வேதவழ்பாவையென்றன்
நாவாழ்வு உகந்தமை நான் முன்பு செய்திட்ட நற்றவமே
தவந்தரு மேலாந் தனந்தரும் இன்பத் தருந்தணியா
நவந்தரு சீர் தரும் நட்புத் தரும் நல்ல வாழ்வு தரும்
பவந்தரு தீவினை வேரும் மரமும் பறித்தழியாச்
சிவந்தருஞ் செந்தமிழ்ச் செல்வியின் ஞானத் திருவடியே”
(நவாலியூர் க. சோமசுந்தரப் புலவர்)

“என்ன புண்ணியம் செய்தேனே நான்
இந்நன்னாட்டினில் வந்து பிறந்திடவே”

“மன்னவர் மூவரும் வளர்த்த தீந்தமிழ்
இன்பம் காதினிலே என்றும் சேரவே”

“அம்புவி யோர்க்கெல்லாம் அமுதென வேவளர்
கம்பநா டன் தரும் காவியம் கேட்கவும்
இன்ப வாழ்க்கையே எய்த மெய்ம் மறை
தந்த வள்ளுவன் தமிழ் படிக்கவும்”
(ம.ப. பெரியசாமித்தூரன்)

வீரத்தமிழ், எங்கள் தமிழ்:
“யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழி போல் இனிதாவது
எங்குங் காணோம்
பாமரராய் விலங்குகளாய்
உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லப்
பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக்
கொண்டு இங்கு வாழ்ந்திடல்
நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை
உலக மெலாம் பரவும் வகை
செய்தல் வேண்டும்”

“யாமறிந்த புலவரிலே
கம்பனைப் போல் வள்ளுவர் போல்
இளங்கோ வைப் போல்
பூமிதனில் யாங்கணுமே
பிறந்ததில்லை@ உண்மை@
வெறும் புகழ்ச்சியில்லை@
ஊமையராய்ச் செவிடர்களாய்க்
குருடர்களாய் வாழ்கின்றோம்
ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில்
தெருவெல்லாம் தமிழ் முழக்கம்
செழிக்கச் செய்வீர்”
(பாரதியார்)

“வெண்ணிலாவும் வானும் போலே
வீரனும் கூர் வாளும் போலே
வண்ணப்பூவும் மணமும் போலே
மகரயாழும் இசையும் போலே
கண்ணும் ஒளியும் போலே எனது
கன்னல் தமிழும் நானும் அல்லவோ?
வையகமே உய்யு மாறு
வாய்த்த தமிழ் என் அரும் பேறு
துய்யதான சங்க மென்னும்
தொட்டிலில் வளர்ந்த பிள்ளை
(தம்) கையிலே வேலேந்தி - இந்தக்
கடல் உலகாள்மூ வேந்தர்
கருத்தேந்திக் காத்தார் அந்தக்
கன்னல் தமிழும் நானும் நல்ல”

“தமிழ் எங்கள் இளமைக்குப்பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிர்த்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ!”

“தமிழுக்கு அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பந் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமிந்த ஊர்”

“நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும்
நான் நான் நான்”

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”
(பாரதிதாசன்)

“எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே”
(பாரதியார்)

நங்கை தமிழை, மங்கை தமிழை, மாது தமிழை அன்னை தமிழைக் கண்டேன். காலாதி காலமெல்லாங் கண்டேன். பெருவள நாட்டிலே பிறங்கு மணிமலையில் பெருமக்கள் சூழ்ந்தேத்தப் பாரரசு செய்யக்கண்டேன். குமரி நாட்டிலே பாண்டியர் ஆட்சியிலே சங்க மேறக் கண்டேன். கிழக்கிந்திய தீவுகள் தொடக்கம் அத்திலாந்திக வரையும் மத்திய ரேகைக்கு இருமருங்கிலுமிருந்த நாடுகளிற் பேருலா வரக்கண்டேன். இமயந் தொடக்கம் இந்தியா முழுவதிலும் தனியரசு செய்யக் கண்டேன். ஆடல் புரியும் அரன் தமிழ்ப் பாடல் புரியும் பலன் வாழ் கூடலிற் சங்கப் புலவர் போற்ற மங்களமாக வீற்றிருக்கக் கண்டேன். நம்மாழ்வார் நாயன்மார் நாவில் திருநடனம் புரியக் கண்டேன் சோழப் பேரரசில் உலகாளக் கண்டேன். இன்று என்ன காட்சி, என்ன கோலம்! பூவிழந்து பொட்டிழந்து எமது அன்னை தலை விரித்தழக் கண்டேன். காலில் தளைகள், கைக்கட்டுச் சங்கிலிகள், காடையர் பூசிய தார் திருமேனியில், அடி உதைபட்டுப் புண்பட்ட அங்கம், வாடிய வதனம், நீர் பெருக்கெடுத்து ஓடுங் கண்கள்.

“பதி யிழந்தனம், பாலனை யிழந்தனம், படைத்த நிதியி ழந்தனம் இனி நமக்குளதென நினைக்கும் கதியிழக்கினும் கட்டுரை இழக்கிலேன்” அரிச்சந்திரனின் இந்நிலைமையே இன்று எமதுமாகும். இந்நிலைமையிலும் அரிச்சந்திரன் நேர்மையிலிருந்து விலக மறுத்தான். இதுவன்றோ விரதமும் வைராக்கியமாகும். என்ன நேரினும் எமக்குத் தமிழ் மொழியில் நீங்காப்பற்றுந் தணியா ஆர்வமும் இருக்க வேண்டும்.

“எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்”

இது பொய்யாப் மொழிப்புலவரின் வாக்காகும்.

அட்டவணை – 1

கால அட்டவணை
கி.மு: 3,000 இற்கு முன் – சேரன் இமயவரம்பன் என்ற வானவரம்பன், சூரியச் சோழன்,
மதியன் என்ற சுந்திரபாண்டியன்.

கி.மு. 30,000 – கி.மு. 29,920 – நெடியோன், மாகிர்த்தி எனப்பட்ட முதலாம் நிலந்தரு
திருவிற்பாண்டியன்.

கி.மு. 30,000 – கி.மு. 16,500 – பஃறுளியாற்றுத் தமிழ்ச் சங்கம்

கி.மு. 16,000 – பொதியமலை அகத்தியரும் பொதியமலைத் தமிழ்ச் சங்கமும்.

கி.மு. 16,000 – கி.மு. 14,550 – மகேந்திர மலைத் தமிழ்ச் சங்கம்.

கி.மு. 14,550 – கி.மு. 14,470 – மணிமலைத் தமிழ்ச் சங்கம்.

கி.மு. 14,550 – முத்தூர் அகத்தியர்.

கி.மு. 14,490 - இந்தியாவிற்குள் மங்கோலியர் வருகை.

கி.மு. 14,100 – கி.மு. 14,030 – முசுகுந்தச் சோழன்.

கி.மு. 14,058 – தமிழ் நாட்டில் முதற் கடற்கோள், வாதாபி அகத்தியர்.

கி.மு. 14,038 – கி.மு. 14,004 – குன்ற மெறிந்த குமரவேள் தமிழ்ச் சங்கம்.

கி.மு. 14,004 – கி.மு. 9594 – தலைச் சங்கம்.

கி.மு. 14,004 – காய்ச்சின வழுதி என்ற இரண்டாம் நிலந்தரு திருவிற் பாண்டியன்.

கி.மு. 9,564 – தமிழ் நாட்டில் இரண்டாங் கடற்கோள்.

கி.மு 9000 – இந்தியாவிற்குட் சிதியர் காக்கேசியக் குழுக்களின் வருகை.
கி.மு. 7500 – கி.மு. 6700 – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி காலத்துத் தமிழ்ச் சங்கம்.

கி.மு. 6805 – கி.மு. 3105 – இடைச்சங்கம்.

கி.மு. 6805 – கி.மு. 6730 – வெண்டோர்ச் செழியன் என்ற நேர்மாறன் பாண்டியன்.

கி.மு. 6000 – கி.மு. 5,925 – மூன்றாம் நிலந்தருதிருவிற் பாண்டியன்.

கி.மு. 3145 – கி.மு. 3105 – பெரு சோற்று உதியன் சேரலாதன்.

கி.மு. 3105 – கடங்கோள்

கி.மு. 3102 – கலியுகந் தொடக்கம்

கி.மு. 2450 – கடற் கோள் (நுழெiடியைள)

கி.மு. 2387 – கடற்கோள் (இலங்கை வரலாறு – வுநnநெவெ)

கி.மு. 2341 – கடற் கோள் (ரசழாரச)

கி.மு. 2344 – கடற் கோள் (பழைய விவிலிய வேதம்)

கி.மு. 2300 – கடற் கோள் (ஆரியசப்த பிராமணம்)

கி.மு. 2150 – கடற் கோள் (கீபுறு வரலாறு)

கி.மு. 2000 – கடற்கோள் (பாபிலோனிய வரலாறு)

கி.மு. 1730 – கி.மு. 1695 - மூன்றாம் முடத்திருமாறன் என்ற பாண்டியன்.

கி.மு. 1715 – கடற்கோள்

கி.மு. 1715 – கி.பி. 235 கடைச் சங்கம்

கி.மு. 120 – கி.மு. 90 – முதலாங் கரிகாலன்

கி.மு. 50 – கி.பி. 37 - இரண்டாங் கரிகாலன்

கி.மு. 31 – வள்ளுவர் ஆண்டு தொடக்கம்

கி.பி. 85 – கி.பி. 160 - இளங்கோவடிகள்

கி.பி. 235 – பாண்டி நாட்டிற் களப்பிரர் ஆட்சித் தொடக்கம் கடைச் சங்க முடிவு.ஸ


அட்டவணை 2.
கடைச் சங்க காலப் புலவர்களிற் சிலரும் நூல்களும்
1. காழாந்தலை

2. உருத்திரக் கண்ணனார் இயற்றிய நூல்கள்:- பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை.

3. கபிலர் - இயற்றிய நூல்கள்:- பார்ப்பனர்நூல், பெருங்குறிஞ்சி, இன்னா நாற்பது, ஐங்குறு நூறில் நூறு பாடல்கள், பதிற்றுப் பத்திற் சேரன் ஆதனைப் பற்றிப் பாடிய பத்துப்பாடல்கள்.

4. நக்கீரர் இயற்றிய நூல்கள்:- திருமுருகாற்றுப்படை, நெருநல் வாடை, இவருடைய தனிப்பாடல்கள் பல புறநானூறு, அகநானூறு, குநற்தொகை, நற்றிணை முதலிய தொகை நூல்களிற் காணப்படுகின்றன.

5. கல்லாடனார் – தொல்காப்பியத்திற்கு இவர் ஓருரை இயற்றியதாகக் கூறப்படுகிறது. இவ்வுரை எமக்குக் கிடைக்கவில்லை.

6. மாமூலனார் - இவருடைய பாடல்கள் அக நானூறிலும் குறுந்தொகையிலும் நற்றிணையிலுங் காணப்படுகின்றன.

7. மாங்குடி மருதனார் - இயற்றிய நூல் மதுரைக் காஞ்சி இவருடை சில பாடல்கள் புறநானூறிற் காணப்படுகின்றன.

8. திருவள்ளுவர் - இயற்றிய நூல் திருக்குறள்.

9. கோவூர் கிழார் - இவருடைய பாடல்கள் புற நானூறிற் காணப்படுகின்றன.

10. இறையனார் - இயற்றிய நூல் அகப்பொருள்

11. பரணர் – தனிப்பாடல்கள்

12. முடத்தாமக் கண்ணனார் - இயற்றிய நூல் பெருநராற்றுப் படை

13. பெருங் கௌசிகனார் - இயற்றிய நூல் மலைபடுஉகடாம்.

14. ஒளவையார் - இயற்றிய தனிப்பாடல்கள் புற நானூறிலும் அக நானூறிலுங் காணப்படுகின்றன.

15. இடைக் காடனார் - இயற்றிய நூல் ஊசிமுறி.

16. இளங்கோவடிகள் - இயற்றிய நூல் சிலப்பதிகாரம்.

17. சீத்தலைச் சாத்தனார் - இயற்றிய நூல் மணிமேகலை

18. அரசியல் கிழார் - இவருடைய பாடல்கள் தகடூர் யாத்திரையிற் காணப்படுகின்றன.

19. பொன்முடியார் - இவருடைய பாடல்கள் பதிற்றுப் பத்திற் காணப்படுகின்றன.

வேறு பல புலவரும் கடைச்சங்கத்தில் இருந்தனர். இவர்களுடைய பெயர்ப் பட்டியலைப் பண்டிதர் க.பொ. இரத்தினம் எழுதிய “நூற்றாண்டுகளில் தமிழ்” எனும் நூலிற் காணலாம்.

கடைச்சங்க நூல்கள்: எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை.

எட்டுத் தொகை நூல்களாவன:- நற்றிணை, குநற்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு. இவை புறப் பொருளையும் அகப்பொருளையும் பற்றிப் பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகை நூல்களாகும்.

பத்துப்பாட்டு நூல்களாவன:-
(1) திருமுருகாற்றுப் படை – நக்கீரர்

(2) பெருநராற்றுப் படை – முடத்தாமக்கண்ணியார்.

(3) சிறு பாணாற்றுப்படை – இடைகழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்.

(4) பெரும்பாணாற்றுப் படை – கடியலூர் உருத்திரங் கண்ணனார்.

(5) முல்லைப்பாட்டு – பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்

(6) மதுரைக் காஞ்சி – மாங்குடி மருதனார்

(7) நெடு நெல் வாடை – நக்கீரர்

(8) குறிஞ்சிப்பாட்டு – கபிலர்

(9) பட்டினப் பாலை – கடியலூர், உருத்திரக் கண்ணனார்

(10) மலைபடுஉகடாம் – இரணயமுட்டற்றுப் பெகுங் குன்றூர்ப் பெருங் கௌசிகனார்.

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களாவன:-
(1) திருக்குறள் – திருவள்ளுவர்

(2) நாலடியார் – சமண முனிவர்கள்

(3) நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்

(4) இனியவை நாற்பது – பூதஞ் சேந்தனார்

(5) இன்னா நாற்பது – கபிலர்

(6) கார் நாற்பது – மதுரைக் கண்ணங் கூற்றனார்

(7) களவழி நாற்பது – பொய்கையார்

(8) ஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார்

(9) ஐந்திணை எழுபது - மூவாதியார்

(10) திணைமொழி ஐம்பது – சாத்தத்தையார் மகனார் கண்ணஞ் சேந்தனார்

(11) திணைமொழி நூற்றைம்பது – கணிமேதையார்

(12) திரிகடுகம் – நல்லாதனார்

(13) ஆசாரக் கோவை – பெருவாயின் முள்ளியார்

(14) பழமொழி மூன்றுறையரையார்

(15) சிறு பஞ்சமூலம் – காரியாசான்

(16) கைந்நிலை – புல்லங்காடனார்

(17) முதுமொழிக்காஞ்சி – மதுரைக் கூடலூர் கிழார்

(18) ஏலாதி – கணிமேதையார்.

இவற்றுட் சில கடைச்சங்க காலத்துக்குப் பிற்பட்டவையாகும்.

எமக்குக் கிடைத்த கடைச்சங்க நூல்களும் அடிகளும்:-

நூல் அடிகள்
திருக்குறள் 2660
மணிமேகலை 4857
சிலப்பதிகாரம் 4957
கலித்தொகை 4304
இன்னா நாற்பது 160
பெருங்குறிஞ்சி 261
குறிஞ்சி (ஐங்குறு நூற்றிற் கபிலர் பாடியது) 101
திருமுரு காற்றுப்படை 317
நெடுநல் வாடை 188
பெருநராற்றுப்படை 248
பெரும்பாணாற்றுப்படை 248
பட்டினப்பாலை 201
மதுரைக் காஞ்சி 701
மலைபடு உகடாம் 583
பதிற்றுப் பத்து 600
புறநானூறு அகநானூறு,
குநற்தொகை நற்றிணை
முதலிய தனிப்பாடல்கள் 4000

24,386

பழைய தமிழ் நூல்களிற் பல எமக்குக் கிடையாது. அழிந்தொழிந்து விட்டன. இவற்றுட் சிலவாவன:- மாபுராணம், இசை நுணுக்கம், பூத புராணம், கலி, குரு, வெண்டாளி, வியாழ மாலை அகவுள் அடிநூல், அணியியல் அவிநயம், ஆசிரிய மாலை, ஆனந்தவியல், இந்திர காளியம், இளந்திரையம், ஐந்திரம், ஓவிய நூல், கடகண்டு, கணக்கியல், கலியாண காதை, கவிமயக்கறை, கவிக்கேட்டுத்தண்டு, களரியாவிரை, கனவு நூல், காக்கைபாடினியம், காலகேசி, குணநூல், குண்டலகேசி, கூத்து, கோணூல், சங்கயாப்பு, சயந்தம், சச்சபுடவெண்பா, சாதவாகனம், சிந்தம், சிறு காக்கை பாடினியம், சிறு குரீஇ, உரை, சிற்ப நூல், சிற்றெட்டகம், சிற்றிசை, செயன்முறை, செயிற்றியம், நகடூர் யாத்திரை, தந்திரவாக்கியம், தான சமுத்திரம், தாளவகையோத்து. தும்பிப்பாட்டு, தேசிகமாலை, நாககுமார் காவியம், நீலகேசி, பஞ்சபாரதீயம், பரதம், பரி நூல், பலகாயம். பல காப்பியம், பன்னிருபடலம், பாட்டு மடை, பாவைப் பாட்டு, புணர்ப் பாவை, புதையனூல், புராணசாகரம், பூதபுராணம், பெரியபம்பம், பெருவல்லம், பேரிசை, போக்கியம், மணியாரம், மதிவாணர் நாடகம், தமிழ் நூல், மந்திரநூல், மயேச்சுரர் யாப்பு, மாபுராணம், மார்க்கண்டேயர் காஞ்சி முதுகுருகு, முதுநாரை, முத்தொள்ளாயிரம், முறுவல், மூவடி முப்பது, மோதிரப்பாட்டு, யசோதர காவியம், வச்சத் தொள்ளாயிரம், வஞ்சிப் பாட்டு, வரி வளையாபதி, வாய்ப்பியம், விளக்கத்தார் கூத்து, அகத்தியம், அகத்தியர் பாட்டியல் அசதிக்கோவை, உலகாயதம், செங்கோன் தரை செலவு.

அட்டவணை 3

யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகள் பட்டியல்

(ஆதார நூல்கள்:-
யாழ்ப்பாண சரித்திரம் - இராசநாயக முதலியார்
யாழ்ப்பாண வைபவமாலை – மயில்வாகனப் புலவர்)

(1) யாழ்ப்பாணத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி கி.பி. 785 இல் உக்கிரசிங்கனுடன் தொடங்குகிறது. இவனுக்கு முன் யாழ்ப்பாணத்தில் நாகச் சிற்றரசர் ஆண்டனர். இவன் இராசதானியைக் கதிரை மலையிலிருந்து சிங்கை நகருக்கு மாற்றினானர். இவனுடைய காலத்திலேதான் மாவிட்டபுரக் கந்தசுவாமி கோவில் கட்டப்பட்டது. விசயன் கதைபோல இவனைப் பற்றியும் புராணக் கதையுண்டு.

(2) உக்கிரசிங்கன் இறந்தபின் அவனுடைய மகனாகிய ஜெயதுங்க பரராசசேகரன் அரசனானான். இவனுடைய ஆட்சிக்காலத்திலே தான் யாழ்ப்பாடி எனும் பாணன் பரிசில் பெற்றான். இவன் காலத்தில் வரகுணன் எனும் பாண்டியன் இலங்கைக்குப் படையெடுத்து வந்து இவனையும் பொலனறுவாவில் ஆண்ட சிங்கள அரசனையும் வென்றான். ஜெயதுங்க பரராசசேகரனைக் கொன்றான்.

(3) கி.பி 9ம் நூற்றாண்டு மத்தி தொடக்கம் 12ம் நூற்றாண்டு வரையும் ஜெயதுங்கனின் சந்ததிகள் பாண்டிய சோழருக்குச் சிற்றரசர்களாக யாழ்ப்பாணத்திலாண்டனர். இக்காலத்தில் அடிக்கடி ஏற்பட்ட சோழ, பாண்டிய பல்லவர் படையெடுப்புக்களையும் வெற்றிகளையும் தென்னிந்தியச் சாசனங்களும் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன. இக்காலத்திற் சிங்கை அரசரும் சிங்கள அரசரும் மணத்தொடர்பும் நெருங்கிய உறவும் உடையவராக இருந்தனர். கி.பி. 941 – 49 இல் சோழன் பராந்தகன் சிங்கை அரசனை வென்றான். சிங்களவரசனைப் புறங்கண்டான். கி.பி. 995இல் முதலாம் இராசேந்திரன் இலங்கை மேற் படையெடுத்து சிங்கள அரசன் மகிந்தனைப் பொலனறுவாவிலிருந்து துரத்தினான். கி.பி. 1014இல் இராசேந்திர தேவன் மகிந்தனைச் சிறைசெய்து இலங்கை முழுவதையுஞ் சோழ மண்டலத்திற் சேர்த்தான். வட இலங்கை கி.பி. 944 தொடக்கம் கி.பி. 1070 வரையும் 126 வருடங்கள் சோழப் பிரதானியாக விருந்தது. சிங்கை அரசர் சோழருக்குக் கீழ்ச் சிற்றரசர்களாக இருந்தனர். இக்காலத்தில் சிங்கை அரசர் சிலர் கலகம் விளைவித்ததினால் சோழரினாற் கொலை செய்யப்பட்டனர். மானாபாணன், வீரசலாமேகன், கிறீவல்லப மதனராசன் என்போர். இரண்டாங் குமாரகுலோத்துங்கன் காலத்திலே (கி.பி. 1118 – 1146) புகழேந்திப் புலவர் கதிர்காம யாத்திரையின் பொருட்டு இலங்கை வந்தபோது சிங்கை அரசனைப் பாடிப் பரிசில் பெற்றார். மேலும் கி.பி. 1154 இற்குச் சற்று முன்பு இலங்கையிற் பஞ்சம் ஏற்பட்டபோது சடையப்ப வள்ளல் வட இலங்கை அரசனுக்கு நெல்லனுப்பியதாக இலக்கிய வரலாறுண்டு.

(4) முதலாம் பராக்கிரமவாகு: குலோத்துங்கன் காலத்துக்குப் பின்பு சோழப் பேரரசு பலங்குன்றிற்று. சிங்கை அரசரும் சிங்கள அரசரும் தமது நாடுகளைத் திரும்பவும் பெற்றனர். இராச இராஜனாற் கி.பி. 1038 இற் கொல்லப்பட்ட மானாபாணன் எனும் சிங்கை அரசனின் மகள் திலக சுந்தரியை சிங்கள அரசனாகிய முதலாம் விஜயபாகுவும், விஜயபாகுவின் சகோதரி மிற்றாயை மானாபாணனின் மகனும் மணஞ் செய்தனர். இம் மானாபாணனின் பிள்ளைகள் மூவராவர். மானாபாணன், கீர்த்திசிறீமோகன், சிறீவல்லபன். மானாபாணன் இரத்தினவல்லியை மணஞ்செய்தான். இவர்களுடைய புத்திரனே முதலாம் பராக்கிரமவாகு. பராக்கிரமவாகு இளமையில் யாழ்ப்பாணத்தில் வளர்ந்து ஆரியச் சக்கரவர்த்திகளின் மரபு முறைப்படி உபநயனம் பெற்றவன். வன்னியை வென்று பனங்காமத்திற் சிற்றரசனாக விருந்தான். பின்பு பொலனறுவாவிலாண்ட தனது மைத்துனன் இரண்டாம் கயவாகுவை வென்று இலங்கை முழுவதையும் ஆண்டான். பராக்கிரமவாகுவின் பின்பு, வட இலங்கையும் தென்னிலங்கையும் வௌ;வேறு இராச்சியங்களாகின.

(5) கலிங்கமாகன் செகராசசேகரன்: (கி.பி. 1215 – 1240) இவன் பொலனறுவாவை வென்று அங்கிருந்து கி.பி. 1236 வரையும் ஆட்சிசெய்தான். சக்கரவர்த்திப் பட்டமும் பெற்றான். இவனுக்குப்பின் வட இலங்கை அரசர் ஆரியச் சக்கரவர்த்திகள் எனப்பட்டனர்.

“தென்னன் நிகரான செகராசன் தென்னிலங்கை
மன்னவனாகுஞ் சிங்கையாரியமால்”

எனப் போற்றப்பட்டான். பொலனறுவை, புளச்சேரி, கந்தளாய், கந்துப்புலு, குருந்து, பதவியா, மாட்டுக்கொணா, ஊராத்தொட்டை, கொழுது, மீபாதொட்டை, மண்டலி, மன்னார் முதலிய இடங்களிற் கோட்டைகள் கட்டினான்.

(6) குலசேகரச் சிங்கையாரியச் சக்கரவர்த்தி – பரராசசேகரன்: (கி.பி. 1240 – 1270) அந்தக் கவியின் வருகையும் ஆரூருலா பாடப்பட்டதும் இவன் காலத்திலாகும்.; கி.பி. 1253 இற் சோழப்படை வெற்றி. கி.பி. 1256 இற் சந்திரபானுவின் படையெடுப்பு.

(7) குலோத்துங்க சிங்கையாரியன் - செகராசசேகரன் - கி.பி. 1270 – 1292 இக்காலந்தொட்டு சிங்கள அரசர் ஆரியச் சக்கரவர்த்திகளுக்குத் திறைகட்டி ஆண்டனர். மன்னார்க் கடலில் முத்துக்குளிக்கும் உரிமைக்கு இக்காலத்திற் செகராசசேகரனுடன் சிங்கள அரசன் புவனேகபாகு போர் செய்தான். கி.பி. 1284 இல் மார்க்கோ போலே என்ற புகழ்பெற்ற பிரயாணி யாழ்ப்பாணத் துறைமுகமொன்றில் இறங்கினான். யாழ்ப்பாணத்தைப் பற்றியும், ஆரியச் சக்கரவர்த்தி ஆட்சிமுறைகள் பற்றியும் தனது நூலில் விபரமாகக் குறிப்பிடுகிறான்.

(8) விக்கிரமசிங்கையாரியன் - பரராசசேகரன்:- கி.பி. 1292 – கி.பி. 1302. இவனுடைய காலத்தில் யோவான் எனுங் கிறிஸ்தவ குரு யாழ்ப்பாணம் வந்தார். இவரும் யாழ்ப்பாணத்தைப் பற்றியுஞ் சிங்கை அரசைப்பற்றியுங் குறிப்பிடுகிறார். கி.பி.1296 இல் யாப்பாகுவில் தோல்வியுற்ற புவனேகவாகுவின் குமாரனுக்கு அவனுடைய அரசைப்பெற உதவிசெய்தான். ஆரியச் சக்கரவர்த்திகளுக்குத் திறைகட்டப் புவனேகவாகுவின் மகன் உடன்பட்டான். பின்பு யாழ்ப்பாண அரசருக்குப் பயந்தோ அல்லது திறைகட்ட மறுத்தோ சிங்கள அரசர் தமது இராசதானியைக் குருநாக்கலுக்கும், தம்பதெனியாவுக்கும் கம்பளைக்கும் மாற்றினர். வன்னி அதிகாரிகள் பலர் சிற்றரசர்களாக ஆளந் தொடங்கினர். இஃது அக்கால நிலப் பிரபுத்துவ முறையுடன் இணக்கமுடையதாக இருந்தது.

(9) வரோதய சிங்கை ஆரியன் - செகராசசேகரன் - கி.பி. 1302 – 1325

கி.பி. 1303 இற் குருநாக்கலில் அரசு செய்த நாலாம் பராக்கிரமவாகு சிங்கை அரசருக்குத் திறை கட்ட மறுத்துத் தனது இராசதானியை தம்பதெனிக்கு மாற்றினான். இப்பராக்கிரமபாகுவின் சபையிலேதான் போஜராஜ பண்டிதர் என்பவர் சரசோதிமாலை எனுந் தமிழ்ச் சோதிட நூலை அரங்கேற்றினார். அக்காலத்திற் சிங்கள மேன் மக்களிடையில் தமிழே கற்றவர் மொழியாக இருந்தது. சுந்தரபாண்டியன் தான் இழந்த இராச்சியத்தைப் பெற வரோதய சிங்க ஆரியனின் உதவியை நாடினான். இக்காலத்திலே தென்னிந்தியாவில் மகமதியர் செய்த கொடுமைகளினால் பல பெருங்குடி மக்கள் வட இலங்கைக்கு வந்து குடியேறினர். இக்காலத்தில் இலங்கைக்கு வந்த பிரையர் ஓடொறிக் எனும் கத்தோலிக்கப் பாதிரியார் இவ்வரசனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இவன் காலத்தில் யாழ்ப்பாணத்திலே தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவினான்.

(10) மார்த்தாண்டசிங்கை ஆரியன் - பரராசசேகரன் - கி.பி. 1325 – 1347

இவனுடைய காலத்தில் இபின் பட்டூட்டா எனும் மகமதியப் பிரயாணி இலங்கை வந்தான். ஆரியச் சக்கரவர்த்தியைப் பற்றிய அவருடைய குறிப்புக்களை முன்பு இந்நூலிற் கூறினோம்.

(11) குணபூஷணன் - செகராசசேகரன் - கி.பி. 1347.

கி.பி. 1348 இல் போப் சீனாவிற்கு அனுப்பிய தானாதிபதியத் தலைவன் யாழ்ப்பாணம் வந்தான். யாழ்ப்பாணத்தைப் பற்றிப் பல விபரங்கள் எழுதியிருக்கிறான்.

(12) விரோதயசிங்கை ஆரியன் - பரராசசேகரன்.

இவனுடைய காலத்தில் வன்னி நாட்டிற் பல கலகங்கள் நடந்தன. அவற்றையெல்லாம் அடக்கித் தனதாட்சியைப் பலப்படுத்தினான். கி.பி. 1380 இல் இறந்தான்.

(13) ஜெயவீரசிங்கை ஆரியன் - செயராசசேகரன் - கி.பி. 1380 – 1410.
ஆரியச் சக்கரவர்த்திகளில் இவனே மிகப் புகழ்பெற்றவன். விடையும் பிறையும் பொறித்த நாணயங்களை அடித்தான்.

கி.பி. 1340இற் கோட்டையில் அளகக் கோனார் ஆட்சி தொடங்கிற்று. இவன் வஞ்சி நகரத்து மலைய குலத்தைச் சேர்ந்தவன். கம்பளையில் மூன்றாம் விக்கிரமவாகுவின் மந்திரியும் படைத்தலைவனுமாகவிருந்தவன். சிங்கள அரசில் ஒரு பகுதியைக் கவர்ந்து கோட்டையில் தன்னரசை நிறுவினான். சிங்கள அரசர் ஆரியச் சக்கரவர்த்திகளுக்குக் கட்டிவந்த திறையைக் கட்ட மறுத்தான். திறை கேட்க வந்த ஏவலாளரைக் கொன்றான். அளகக்கோனுக்கும் ஜெயவீர சிங்கை ஆரியனுக்கு மிடையிற் போர் மூண்டது. அழகக்கோன் வென்றான் எனச் சிங்கள இதிகாசங்கள் கூறுகின்றன. சிங்கை ஆரியன் வென்றானெனச் சில காலத்துக்கு முன்பு கேகாலைப் பகுதியிற் கண்டெடுக்கப்பட்ட சாசனங் கூறுகிறது. செகராசசேகரம் எனும் வைத்திய நூல், செகராச சேகரமாலை எனுஞ் சோதிட நூல், காரிவையாவின் கணக்கதிகாரம் எனும் கணித நூல், தக்ஷிண கைலாச புராணம் இவன் காலத்தவையாகும்.

(14) குணவீரசிங்கை ஆரியன் - பரராசசேகரன் - கி.பி. 1410 – 1440

இவனே இராமேச்சுரக் கர்ப்பகிரகம் கட்டுவித்தவன். பரராச சேகரம் எனும் வைத்திய நூல் இவன் காலத்தில் எழுதப்பட்டது.

(15) கனகசூரிய ஆரியன் - செகராசசேகரன் - கி.பி. 1440 – 1478

இவனுடைய காலத்தில் பராக்கிரமவாகு சபையிலிருந்த மலையாளப் பணிக்கன் ஒருவனின் மகனாகிய யுத்தவீரன் செண்பகப்பெருமாள் சிங்களப் படையுடன் யாழ்ப்பாணத்தை வென்று கனகசூரியனைத் துரத்தினான். இவன் யாழ்ப்பாணத்திற் 17 வருடங்கள் ஆட்சி செய்தான். இவனே நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டுவித்தான். கி.பி. 1467இல் பராக்கிரமவாகு இறந்தபின் கோட்டை யரசனாகினான். கனகசூரியன் யாழ்ப்பாணத்துக்குப் படைகளுடன் திரும்பிவந்து அரசைக் கைப்பற்றினான்.

(16) சிங்கைப் பரராசசேகரன் - கி.பி. 1478
இரண்டாவது தமிழ்ச் சங்கத்தை நிறுவினான். இச் சங்கத்தில் இவனுடைய மைத்துனன் அரசகேசரி “இரகுவமிசம்” எனும் நூலை அரங்கேற்றினான். பரராசசேகரன் உலாவும் இக்காலத்ததாகும். இவனுடைய காலந்தொட்டுச் சிங்கை ஆரியர் ஆட்சி ஆட்டங்காணத் தொடங்கிற்று. வன்னியர்கள் திறை கொடுக்க மறுத்துத் தம்மாட்சி நடத்தினர். இலங்கையின் வியாபாரம் முழுவதையும் மகமதியர் கைப்பற்றினர். போர்த்துக்கீசர் நாட்டிற் புகுந்தனர். பரராசசேகரனுக்கு நான்கு புத்திரர். சிங்கவாகு, பண்டாரம், பரநிரூபசிங்கம், சங்கிலி, சங்கிலி அண்ணன்மாரைச் சூழ்ச்சியினாற் கொன்று அரசைக் கைப்பற்றினான். சிங்கை அரசர் போர்த்துக்கீசரின் பொம்மைகளாகினர்.

சங்கிலியின் ஆட்சிக் காலத்திற் சங்கிலிக்கும் போர்த்துக்கீசர்களுக்குமிடையில் இடையறாப் போர்கள் நடந்தன. போர்த்துக்கீசர் பரநிரூபசிங்கனைக் கிறித்தவனாக்கி அவனை அரசனாக்க எத்தனித்தனர். கி.பி. 1565இற் சங்கிலி இறந்தான்.

காசி நயினார் அல்லது குஞ்சி நயினார் – பரராசசேகரன். போர்த்துக்கீசர் இவனைச் சிறைப்படுத்தி வேறோர் அரச குமாரனை நியமித்தனர். ஆனாற் போர்த்துக்கீசர் யாழ்ப்பாணத்தை விட்டு விலகியவுடன் காசி நயினார் புதிய அரசனைக் கொன்று மறுபடியும் அரசனாகினான்.

போர்த்துக்கீசர் காசி நயினாரை நஞ்சூட்டிக் கொன்று பெரிய பிள்ளை எனும் அரசகுமரனை செகராசசேகரன் எனும் பட்டத்துடன் கி.பி.1570இல் அரசனாக்கினர். கி.பி. 1582இற் பெரியபிள்ளைக்குப்பின் புவிராஜ பண்டாரம் பரராசசேகரன் என்னும் நாமத்துடன் அரசனானான். புவிராஜ பண்டாரம் பலமுறை போர்த்துக்கீசருடன் போர் செய்து தோற்றான். ஈற்றிற் போர்த்துக்கீசரனினாற் கொல்லப்பட்டான். போர்த்துக்கீசர் அவனுடைய மகன் எதிர்மன்னசிங்கனைத் தங்கீழ் அரசனாக்கினர். இவன் பரராசசேகரன் எனும் பெயர் பெற்றான். இவன் கி.பி. 1591 தொடக்கம் கி.பி.1616 வரையும் ஆட்சி செய்தான். இவன் இறந்தபோது சங்கிலி எனும் அரசகுமாரன் பட்டத்தைக் கைப்பற்றினான். இச் சங்கிலி ஈற்றிற் போர்த்துக்கீசரினாற் கொலை செய்யப்பட்டான். கி.பி. 1620இற் போர்த்துக்கீசரின் நேராட்சி தொடங்கிற்று.

அட்டவணை 4, 5

ஆதார மேற்கோள் நூல்கள்
1. வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட பழந்தமிழர் – திரு ந.சி. கந்தையாபிள்ளை

2. தமிழர் சரித்திரம் - திரு ந. சி. கந்தையாபிள்ளை

3. தமிழகம் - திரு. ந.சி. கந்தையாபிள்ளை

4. தமிழ் இந்தியா – திரு. ந.சி. கந்தையாபிள்ளை

5. திராவிட இந்தியா – திரு. ந.சி. கந்தையாபிள்ளை

6. திராவிட நாகரிகம் - திரு. ந.சி. கந்தையாபிள்ளை

7. குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு – பன்மொழிப் புலவர் திரு.கா. அப்பாத்துரை

8. தென்னகப் பண்பு – பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரை

9. தென்னாட்டுப் போர்க்களங்கள் - பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரை

10. தமிழ்ச் சங்கங்களின் வரலாறு – திருமந்திரமணி துடிசைகிழார் அ. சிதம்பரனார்

11. அகத்தியர் வரலாறு – திருமந்திரமணி துடிசைகிழார் அ. சிதம்பரனார்

12. திராவிடமக்கள் வரலர்று திரு. நு.டு. தம்பிமுத்து

13. தமிழர் நாகரிகமும் பண்பாடும் - டாக்டர் ம. இராசமாணிக்கனார்

14. தொல்காப்பிய ஆராய்ச்சி – பேராசிரியர் சி. இலக்குவனார்

15. சிந்துவெளி நாகரிகம் - வித்துவான் மா. இராசமாணிக்கம்பிள்ளை

16. தமிழக வரலாறு – பேராசிரியர் அறுவர் சொற்பொழிவுகள்

17. தமிழக வரலாறு – திரு. அ.மு. பரமசிவானந்தம்

18. தமிழர் வாணிகம் - புலவர் கா. கோவிந்தன்

19. ஆயிரத்துத் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் - திரு. வி. கனகசபை

20. 1800 ஆண்டுகளுக்குமுன் தமிழர் – பேராசிரியர் ஆ.ளு. பூரணலிங்கம்

21 மறைந்துபோன தமிழ் நூல்கள் - மயிலை சீனி வெங்கடசாமி

22. பல்லவர் வரலாறு – வித்துவான் மா. இராசமாணிக்கம்பிள்ளை

23. சோழப் பேரரசு – வித்துவான் மா. இராசமாணிக்கம்பிள்ளை

24. தமிழர் மதம் - மறைமலையடிகள்

25. தமிழ்நாட்டு வரலாறு – டாக்டர் மு. ஆரோக்கியசாமி

26 வுயஅடை ஐனெயை – டில Pசழக. Pரசயெடiபெயஅ Pடைடயi

27. வுhந யுnஉநைவெ வுயஅடைள – டில ளு.மு. Pடைடயi

28. வுயஅடை ர்ளைவழசல – டில சு. சுயபாயஎய யுலையபெயச

29. நூற்றாண்டுகளில் இன்பத் தமிழ் - பண்டிதர் கா. பொ. இரத்தினம்

30. தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள் - திரு. து.சு. சின்னத்தம்பி

31. வன்னியர் – கலாநிதி சி. பத்மநாதன்

32. யாழ்ப்பாண வைபவமாலை – மயில்வாகனப் புலவர்

33. யாழ்ப்பாணச் சரித்திரம் - முதலியார் செ. இராசநாயகம்

34. வுயஅடைள யனெ ஊரடவரசயட Pடரசயடளைஅ in யnஉநைவெ ளுசi டுயமெய டில சுநஎ. னு.து. முயயெபயசயவயெஅ Ph. னு.

35. யுவடயவெiஉ – நுனபயச ஊயலநந.

தமிழர் வரலாற்று நூல்
பொருளியல் துறையிலே உயர் பட்டங்கள் பெற்று அத்துறையிலே அறிஞராக விளங்கிய திரு. பொ. சங்கரப்பிள்ளை அவர்கள் தமிழ் மக்கள் பெருமையுறும் அளவுக்கு தமிழியல், தமிழர் வரலாறு, தமிழ் இலக்கியம், அரசியல், சமூகவியல், மெய்யியல் ஆகிய பல்வேறு நெறிகளிலும் துறைபோக கற்றவர். இத்துறைகளிலே அகலமாகவும், ஆழமாகவும் ஆராயமுற்பட்டவர்.

இந்நூல் தமிழர்களின் அரசியல் வரலாற்றினை மட்டும் ஆய்வதுடன் நில்லாது அவர் தம் பண்பாடு, கலைகள், இலக்கியங்கள், சமயம், கைத்தொழில், விவசாயம் போன்ற பொருளாதார முயற்சிகள் போன்றனவற்றையும் வரலாற்று ரீதியாகவும் ஆய்வு ரீதியாகவும் அணுகுகின்றது.

பழந் தமிழ் இலக்கியங்களில் மிகுந்த புலமையுடைய ஆசிரியர் பரந்த தமிழ் இலக்கியப் பரப்பிலிருந்து ஏராளமான தகவல்களையும் கருத்துக்களையும் அகழ்ந்தெடுத்து இந்த ஆய்வு நூலிலே விரிவாகப் பயன்படுத்தியுள்ளார். பழந்தமிழ் இலக்கியங்கள் வெறும் இலக்கியங்கள் மட்டுமன்றி ஒரு இனத்தின் வரலாற்றுப் பண்பாட்டு, சமய, பொருளாதார, சமூக ஆய்வுகளுக்கும் உதவுவன என்பதை நன்கு நிரூபித்துள்ளார். அத்துடன் அவர் தமிழர் வரலாறு, இலக்கிய வரலாறு பற்றிய ஏராளமான நூல்களைக் கற்று அவற்றில் பொதிந்துள்ள ஆய்வு முடிவுகளையும் இந் நூலில் நன்கு பயன்படுத்தியுள்ளார்.

தமிழரின் வரலாற்றுத் தொன்மையும் பண்பாட்டுக் கலை இலக்கியப் பெருமைகளையும் தெளிவுற எடுத்துக்காட்டும் இந் நூலாசிரியர் தமிழ்கூறும் நல்லுலகினால் என்றென்றும் நினைவு கூறப்பட வேண்டியவர்.
சோ. கந்திரசேகரம்
சமூக விஞ்ஞான கல்வித்துறைத் தலைவர்,
கொழும்புப் பல்கலைக்கழகம்.