கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மத்து

Page 1
\, |-" |- |-\, |-||||-|
s',\!\, , |- ||-|- ||-||||||-
|
|-
|
『확활 ** 韃
寻
\,\!
\,\!
TT
|
|
|. -│ │ │ │ │
 


Page 2


Page 3
sN 17esesso
Apart fron any fair dealing for the pureose of Private Study, Research, Criticism or Review as Permitted under the Copyright Act, No part may by reproduced, stored in a
retrieval system, or transmitted, in any form or any means, electronic, mechanical orphotocopying, recording or otherwise without prior written permission from the publishers. Mithra Publication books are published by Dr Pon Anura
Production Editor
ESPO
мАтнтнu A Collection of Essays
by A.J. CANAGARATNA Originally Published by ilampirai M.A. Rahman of Arasu Publications, at Colombo, Sri Lanka in 1970.
Mithra Books First Edition 1st December 2000
Cover Design K. PUGAZHI ENTH
Made in India by Mithra Book Makers
Marc Arts grad Gregos
3S-0ARCOT ROAD f23 MUNRO STREE OWANNASREE CHENINA 600 024. NDIA EASTWooD 2122 AUSTRALA BATTCALoA (EP) Ph (O44) 3723 182
Ph (O2) 986g 2567 SRI LANKA e-mail: www.mithragmd4.com in e-mail: www.anuraginatra.com.a. Fax: 009-44-472336
மித்ர - 42 l gastbui 2000
விலை 45.00 பக்கங்கள் 152
 
 
 
 
 
 

16 ஆம் ஆண்டில்
இலங்கையில் நிறைவேற்றப்பட்ட "தனித் சிங்களும்’ சட்டத்திற்கு இந்நூல்
படைப்பு

Page 4
THE AUTHORS INTRODUCEDARE:
J.K. Gabraith
Rachel Carson
lan Sutie
Richard Foster Jones
Milovan Dijlas H.R.G. Greaves Philip Rahv Brian Inglis R.D. MacCann Joseph Campbell A.M. Hocaft
E4

என்னுரை*
இளம்பிறை' என்னும் மாசிகையை வெளியிடத் தொடங்கியதும், அதிலே பிரசுரிப்பதற்காகக் கட்டுரைகள் சிலவற்றை எழுதித் தருமாறு பணித்தார் அதன் நிர்வாக ஆசிரியரும் என் நண்பருமான ஜனாப் எம்.ஏ. ரஹற்மான். அவருடைய வேண்டுகோளில் ஒர் எல்லை வகுப்பும் இருந்தது. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும், ஏதேனும் ஒரு வகையிற் சிறந்து விளங்கும் ஒவ்வொரு நூலினைத் தமிழ்ச் சுவைஞர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் என்னுடைய கட்டுரைகள் அமைதல் பெரிதும் விரும்பத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டார். அவருடைய விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் முகமான கட்டுரைகள் சிலவற்றை அவ்வப்போது எழுதிக் கொடுத்தேன். இளம்பிறையில் 'மத்து' என்னும் தனிப் பகுதியில், என் கட்டுரைகளை அவர் பிரசுரித்து வரலானார்.
அவ்வாறு பிரசுரமான கட்டுரைகளைத் தொகுத்தும், பிரசுரமாகாத என் புதிய கட்டுரைகள் சிலவற்றைப் புகுத்தியும், என் கட்டுரைகள் அடங்கிய தொகை நூல் ஒன்றினைத் தமது 'அரச வெளியீடு' என்னும் பிரசுர நிறுவனத்தின் சார்பாக வெளியிட நண்பர் ரஹ்மான் பேரார்வம் 5

Page 5
காட்டினார். அவர் காட்டிய அவ்வார்வம் காரணமாகவே இந்நூல் தமிழ்ச் சுவைஞராகிய உங்களுக்குக் கிட்டும் வாய்ப்புச் சித்திப்பதாயிற்று.
இந்நூலினை வெளியிடச் சகல உதவிகளையும் ஆலோசனைகளையும் நல்கியதுடன், இந்நூலுக்கு முன்னிடு ஒன்றினையும் எஸ். பொன்னுத்துரை அவர்கள் வழங்கி யுள்ளார். இத்தொகை நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை களை எழுதும் பொழுது என் வலக் கை' யாக உதவியவர் நவாலியூர் நடசேன். இவ்விருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆங்கிலம் அரச மொழியாகக் கொலுவிருந்த காலத்தில் கல்விப் பயிற்சி பெற்றவன் நான். எனவே தமிழை முறையாகக் கற்கும் வாய்ப்பு இல்லாது போய்விட்டது. சிங்களச் சட்டத்தின் அநுகூலம் - பிரதிகூலம் பற்றிய விசாரணை தேவையில்லை. ஆனால், அச்சட்டம் காரணமாகத் தமிழ் அபிமானம் மீதுர்தல் பெற்றவர்களுள் நானும் ஒருவன். அந்த அபிமானமே தமிழில் எழுதுதல் வேண்டும் என்ற என் முனைப்பின் ஊக்கமாகவும் அமைந்தது. அவ்வூக்கத்தின் காரணமாக நான் தமிழிலேயே எழுதிய கட்டுரைகளிற் பெரும்பாலானவை இந்நூலிலே இடம் பெற்றுள்ளன. இந்த உண்மையின் நிலைக்களனில் நின்று, இந்நூலினைத் தாராள மனப்பான்மையுடன் ஏற்றுக் கொள்ளும் படி வாசகரைத் தயவாக வேண்டுகிறேன்.
ஏ.ஜே.கனகரத்னா 本 28-8-70 இல் எழுதப்பட்டது.

முன்னிடு
மத்து என்னும் தங்களுடைய கன்னித் தமிழ் நூலினை யாருக்குச் சமர்ப்பணமாக்க உத்தேசித்திருக்கிறீர்கள்?"
நண்பர் ஏ.ஜே. கனகரத்னாவுடன் இலக்கிய விடயங்கள் பலவற்றைப் பற்றிய சம்வாதத்தில் ஈடுபட்டிருக்கையில், சடுதியாகக் கிளை பிரிந்த சிந்தனை ஒன்றிலே தொற்றி, இந்த வினாவினைத் தொடுத்தேன்.
வினாவின் வேகத்திற்குப் பொருந்தக் கூடிய விரைவினை இணைக்க ஏ.ஜே. முந்தவில்லை. அஃது அவர் சுபாவம். தமது குறுந்தாடியைத் தடவி, ஒரு சிட்கை மூக்குப் பொடியினைப் பெரு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்குமிடையில் அப்பி எடுத்துக் கொண்டு, நடுவிரலை என் திசையிலே நீட்டி, "ஏன்? 1956 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தனிச் சிங்களச் சட்டத்திற்கு இதனைச் சமர்ப்பிக்கலாம் என்று நினைக்கின்றேன். உங்கள் அபிப்பிராயம் என்ன?" எனக்கேட்டு, மூக்குப்பொடி நுகர்வினைச் சாவகாசமாக இயற்றத் தொடங்கினார்.
நண்பர் ஏ.ஜே.யின் கலை-இலக்கியம்-சமுதாயம் ஆகியவை பற்றிய நோக்கின் கோணத்தையும், இலக்கிய வாழ்க்கையையும் ஒரளவு பரிச்சயப்படுத்தி வைத்திருப்பவன் என்ற காரணத்தினால், சிந்தனைக்கும் அது தொற்றிய உரையாடலுக்கும் இடையீடு அளிக்காது, "பொருத்தமாக இருக்கும்" என ஆமோதித்தேன். என் ஆமோதிப்புத் தூண்டுதலன்று, சம்மதம் மட்டுமே.
ஈழத்து அரசியல் வரலாற்றிலும், இரு மொழி இனங்களின்
7

Page 6
செளஜன்ய வாழ்க்கையிலும் அச்சட்டம் இச்சித்தலுக்குப் புறம்பான கறையினை ஏற்படுத்தியது என்பது வரலாறு. அந்த சோர விளைவினை மகிமைப்படுத்துவது அவருடைய நோக்கமன்று. தமிழ்ப்பாலுண்டு, தமிழுணர்வு பெற்ற எவனும் அதனை உன்னிப் பார்க்கவும் ஒப்பான். அந்தச் சட்டத்தின் நேரடி விளைவுச் சாரத்தினை அன்று, அதற்கு நேரடிச் சம்பந்தம் எதுவுமே அற்றதாக இருந்தாலுங்கூட, அது ஏற்படுத்திய தாக்கத்தினை - வேண்டுமானால், அது ஏற்படுத்திய மெல்லியச் சலனத்தினை என்று வைத்துக் கொண்டாலுங்கூட - கெளர வித்தல் வேண்டும் என்கிற தவிப்பினை ஏ.ஜே. பல சந்தர்ப்பங்களிலே வலியுறுத்தி இருக்கின்றார்.
ஏ.ஜே.யின் இலக்கியஞ் சார்ந்த வாழ்க்கைப் பின்னணி யினைச் சற்று விளங்கிக் கொண்டாற்றான், அநீதியானது என்று தோன்றக் கூடிய ஒரு சட்டத்தின் உபவிளைவு என்று கூடக் கணிக்கப்படத்தகாத ஒன்றினைக் கெளரவித்தல் வேண்டும் என்ற கட்டித்த அக்கறை அவர் உள்ளத்தில் விளைந்த சீர்த்தியைப் புரிந்து கொள்ளுதல் சாலும்.
ஆங்கில மொழியே வீட்டு மொழியாகவும் பயிலப்படும் சூழலிலே ஏ.ஜே. பிறந்தவர். லத்தீன் மொழியைத் துணை மொழியாகக் கற்றதுடன், தமிழிலே பேசுவதும் சிந்திப்பதும் அறி வின் பாமரத்தனத்திற்குச் சான்று என்று பிழைபடக் கருதும் ஆங்கிலேயர் ஆட்சியினால் தோற்றுவிக்கப்பட்ட சர்வ ஆங்கில மோகம் என்ற சூழலில், அதன் வாரிசுக் கொழுந்தாக, அவர் ஆரம்ப - இடை நிலைக் கல்வியைப் பெற்றார். இலங்கைப் பல்கலைக் கழகத்திலே சிறப்புப் பட்டம் பெறுவதற்கு ஏற்ற பாடமாக, ஆங்கிலத்தையே தேர்ந்தெடுத்தார். ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியனாகப் பணிபுரிந்து, இடையில் Daily News என்ற இலங்கையின் பிரபல ஆங்கிலத் தினசரியின் ஆசிரியர்

குழுவிலும் சேவை செய்துள்ளார். தற்பொழுது 'Co-operator என்ற ஆங்கில - தமிழ்ச் சஞ்சிகையின் ஆசிரியப் பணியினை மேற்கொண்டுள்ளார்.
ஆங்கில மொழியை ஜீவனோபாயக் கருவியென இலங்கையர் - விசேடமாக, யாழ்ப்பாணத் தமிழர்கள் - சத்தியமாகவே நம்பினார்கள். 1956 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த நிதர்சன நிலையும் அதுதான். ஆங்கிலத்திலே செலுத்தப்பட்ட பக்தி பூர்வமான சம்பாவனை சுயமொழிச் செழுமைக்குக் குந்தகமானது என்பதை மட்டுமல்ல, அது விதேசீயத்தின் மீது செலுத்தப்படும் காமம் என்பதையுங்கூட நம்மவர்கள் உணர வில்லை. இதனால் 'ஆங்கிலம் கற்பதற்கும் சுவைப்பதற்கும் ஏற்ற மொழியல்ல" என்ற பிரமேயம் பெறப்படவில்லை. ஆங்கிலத்துடன் இன்னும் எத்தனை மொழிகளைப் பயில முடியுமோ அவற்றை எல்லாம் கற்று நமது அறிவினையும் பார்வையையும் அகலித்துக் கொள்ளுதல் தக்கது. ஆனால், தாய் மொழி முதன்மைச் சேவிப்பிற்கு உரியது. அதுவே சுய கெளரவத்தையும், சுதேசியப் பற்றினையும் உறுதி செய்யும். சிங்கள மக்கள் மத்தியிலே வளர்ந்து வந்த சுய மொழிப் பற்றிற்கு ஈடு செய்யத் தக்க சுய மொழிப் பற்று ஆங்கிலம் படித்த தமிழர்கள் மத்தியில் முனைப்பாக உருவானதில்லை. மின்னாமல் முழங்காமல் விழுந்த இடியின் சடுதியில் தனிச் சிங்களச் சட்டம் தமிழர் தலையிலே விடிந்தது. அந்த விடிவில், தமிழ் மொழியினைக் கெளரவப்படுத்துவதின் மூலமே (ஆங்கில மொழியை அஞ்சலி செய்வதினாலல்ல) இந்நாட்டில் சுய கெளரவத்துடன் வாழுதல் சாத்தியம் என்ற உண்மையும் உறைத்தது. எனவே ஈழ நாட்டின் அரசியல் வரலாற்றிலே மட்டுமன்றி, தமிழ் இலக்கிய வரலாற்றிலும் மேற்படி சட்டம் திருப்பு முனை ஒன்றினை ஏற்படுத்தியது.

Page 7
இந்த நிதர்சனத்தினை அழுத்துவதிலும், இந்த உண்மையைப் பூரணமாகத் தரிசித்துத் தமிழ் இலக்கியப் பணி யினை இயற்றுதல் வேண்டும் என்பதை வற்புறுத்துவதிலும், ஏ.ஜே. கடந்த ஒரு தசாப்த காலமாக முன்னணிப் படையின் தலைமை வீரனாகத் திகழ்கின்றார். இதனாலும், தேசீய இலக்கியம் என்ற கோஷத்திற்கு அவரால் தெளிவான விளக்கங்களை முன் வைக்க முடிந்தது.
ஏ.ஜே. ஆங்கிலத்தில் எழுதுவதில் மிக்க ஆற்றலுடையவர் எனக் குறித்தல் பூக்கடைக்கு விளம்பரஞ் செய்தலைப் போன்று அபத்தமானது. ஆனால், அவர் தமது ஆங்கிலப் புலமையைத் தமிழைச் செழுமைப்படுத்தும் பணியிலே திசை திருப்பி உள்ளமை நமது தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் பேறாக முற்றியது. இதற்காகத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் சார்பாக அவருக்கு நன்றி கூறுவதற்கும் இச்சந்தர்ப்பத்தினை எடுத்துக் கொள்ளுகின்றேன்.
"இலங்கையின் தற்காலச் சிறுகதைகள்' என்ற தொடரில் 'Observer என்ற ஆங்கிலத் தினசரியின் வாரப் பதிப்பு 1961 ஆம் ஆண்டில் உள்ளுர்க் கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை வெளியிடலாயிற்று. சிங்களத்தில் எழுதும் முன்னணிக் கதைஞர்களுடைய கதைகள் ஆரம்பத்தில் இடம் பெறுவ தாயிற்று. ஈழத்தின் தேசீயக் கதை வளத்திற்கு தமிழ்க் கதைஞர்களுடைய பங்களிப்பும் சிறப்பு வாய்ந்தது என்பதை நிறுவுவதைப் போல, தமிழ்க் கதைகள் சிலவற்றை ஆங்கிலப் படுத்தி, அத்தொடரிலே புகுத்தி, தமிழ்க் கதைஞரை மகிமைப் படுத்தியவரும் கனகரத்னாவே. இதனால், சிங்கள இலக்கியச் சுவைஞர்கள் மத்தியில் தமிழ்க் கதைஞர்களுடைய கெளரவம் நிலைநாட்டப்பட்டது என்பது மட்டுமல்ல; தமிழின் கெளரவமே நிலை நிறுத்தப்படுவதாயிற்று. வேறு சில ஈழத்தமிழ்க் கதைகளை
10

aridssouG856. Times of Ceylon', 'Illustrated Weekly of India' ஆகியவற்றிலும் வெளிவரச் செய்தார்.
நம் நாட்டிலுள்ள பலர், அரசியற் கட்சி சார்ந்த அநுதாபங்களை மனத்திலே இருத்திக் கொண்டு, ஒரு வகை முதுகு சொறிதலைத் திறனாய்வுக் கலையென வேகமாக வளர்த்து வரும் இந்நாளில், நடுவுநிலைமை பிறழாது, தெளிவான இலக்கியப் பார்வையுடன், மேலைநாட்டுத் திறனாய்வு நெறியினையும், தமிழ் இலக்கியத் திறனாய்வு மரபினையும், மாறிவரும் முற்போக்கு அரசியல் இயக்கங்களின் தாக்குதற் பெறுபேறுகளையும் ஒன்றிணைக்கும் ஏ.ஜே.யின் திறனாய்வு முறைமை குளிர்வினைத் தருவதாக அமைந்துள்ளது. என்னுடைய இக் கூற்றின் உண்மையினை தரிசிப்பதற்கும் இந்நூலில் இடம் பெற்றுள்ள சில கட்டுரைகள் உதவுகின்றன.
மத்து' என்னும் இந்நூலின் மூலம், அவர் தமது ஆங்கில மொழிப் புலமையைப் பிறிதொரு களத்திற்கு விரிவு படுத்துகின்றார். 1945 ஆம் ஆண்டிலே புகுத்தப்பட்ட இலவசக் கல்வித் திட்டத்தினால் ஆங்கிலப் பயிற்சியின் தரம் சற்றே இறங்கு முகமாக நகரத் தொடங்கியது. 1956 ம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டத்திற்குப் பின்னர், ஆங்கில மொழி அறிவினால் எத்தகைய பண ஆதாயமும் பெற முடியாது (எதையும் ரூபா சதங்களிலே மதிப்பிடுவது யாழ்ப்பாணத் தமிழரின் மகத்தான பண்பு என்ற உண்மையை ஒப்புக் கொள்ளுவதற்கு நாம் கூச்சப்படலாகாது) என்ற விரக்தி நிலை, தரத்தின் இறங்குமுக முனைப்பிற்கு விரைவாக்கம் ஊட்டுவதாயிற்று. ஆங்கில மொழியைக் கற்று அதன் மூலம் பயனைச் சுகிக்கும் ஆர்வம் கருகிவிட்டது. ஆங்கில மொழியின் ஆதிக்கத்தை வெறுப்பது என்பது வேறு; அந்த மொழி மூலம் பயனடைவது என்பது வேறு. இந்நிலையில் உலகின் அறிவு இயக்கங்களையும், கலையின் போக்குகளையும் பூரணமாகப்
11

Page 8
பிடிமானத்திற்குள் கொண்டு வருவதற்கு மொழிபெயர்ப்பு நூல்களே உதவுதல் வேண்டும். அத்தகைய தமிழாக்க நூல்கள் மலிவதற்கான அறிகுறியைக் காணோம். இந்நிலையிலே, சிறந்த ஆங்கில நூல்களை எவ்வாறு தமிழ் வாசகர்களுக்கு அளிக்கலாம் என்பது பற்றிய ஞான தீட்சை தரவல்லதாக இந்நூலிலே இடம் பெற்றுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளன.
பிறமொழி நூல்களைத் தமிழிலே சுருக்கித் தரும் பணி யினை 'மஞ்சரி' என்னும் தமிழகச் சஞ்சிகை இயற்றி வருகின்றது. புத்தகச் சுருக்கம் ஒன்றினைப் பிரசுரிக்கும் முறையினை "Readers Digest அளிக்கும் அத்தகைய பகுதியின் பாணியை 'மஞ்சரி' பின்பற்ற முயன்ற போதிலும், இப் பணியிலே அது குறிப்பிடத்தக்க வெற்றிதானும் பெற்று விடவில்லை என்பது என் அபிப்பிராயம். மூலத்தின் ஆத்மாவைத் தரிசிக்கப் பூரணமாக உதவாத சுருக்கத்தினால் பயனில்லை. 'எனக்குப் பிடித்த நூல்' என்ற வரிசையிலே சில கட்டுரைகள் 'ஆனந்தவிகடனில் வெளிவந்தன. அந்தக் கட்டுரைகள் நூல்களின் சாரத்தைக் கோட்டைவிட்டு விட்டு, நூல்களைப் பற்றிய சுவைஞரின் சலனங்களுக்கே முக்கியத்துவம் அளித்தன. இவை இரண்டு பாங்குகளுக்கும் மாறுபட்ட ஒரு சுவையான பாணியிலே பதினொரு நூல்களை இந்நூலிலே ஏ.ஜே. அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப் பாணியி லுள்ள நயத்தினையும் வாசகனின் சுயத்திற்கு விட்டு விடுதல் தர்மமானது என நான் கருதுகின்றேன்.
ஏ.ஜே. கனகரத்னா இந்நூலிலே அறிமுகப்படுத்தும் பதினொரு நூல்களும், பொருளியல் (Economics), உயிரின 6Tpé605éf (p65us) (Ecology), D-6T6iuj6) (Psychology), GLDT.g. ShigeosTibgfu6) (Histroy of Language), sidfuju6) (Politics), by dugo60LDigibgfu systué of (Constitutional study), S6).d5a5ulb (Literature), D(5gbgob (Medicine),
12

g56OJJULdë 6606) (Film), புராணவியல் (Mythology), Direful வியல் (Anthropology) ஆகிய பதினொரு பல்வேறு துறைகளைச் சரர்ந்த நூல்களாக, வகைக்கு ஒன்று வண்ணத்திற்கு ஒன்றாக அமைந்துள்ளன. இத்தெரிவு முறை தேர்ந்த பயன் தரும் முயற்சியாகும்.
"அமெரிக்க முதலாளித்துவம்: எதிர் வலுக் கோட்பாடு என்னும் பொருளியல் நூலை எழுதியுள்ள ஜே. கே. கல்பிரயித்து ஒரு காலத்தில் இந்தியாவில் அமெரிக்கத் தூதுவராகப் பணி புரிந்துள்ளார். வேறு பல நூல்களையும் எழுதியுள்ளார். பொருளியலின் கருநிலைக் கோட்பாடுகள் மறைத்து வைத்திருக்கும் மெய் நிகழ்வுகளை நுணுக்கமாக ஆராய்ந்து கண்டறிவதில் வல்லவர். பொருளியலாளரிடம் சாதாரணமாகக் காணப்படாத நகைத் திறன் சார்ந்த எழுத்து நடை இவருடைய * நூல்களுக்கு மேலும் கவர்ச்சி ஊட்டுகின்றது.
உயிரியலின் ஒரு கிளையான உயிரின வாழ்க்கைச் சூழலியல் சார்ந்த ஒலிக்காத இளவேனில்' என்னும் நூலினை எழுதி, செல்வி ரசேல் கார்சன் மிகுந்த பரபரப்பினையும் வாதப் பிரதிவாதங்களையும் விஞ்ஞானிகள் மத்தியில் ஏற்படுத்தினார். டி.டி.ரி. போன்ற பூச்சி கொல்லிகளுக்கு எதிராக மிக வலிமை வாய்ந்த ஆராய்ச்சிக்குரிய கருத்தினை முன் வைத்தார். இது துவக்கி வைத்த இயக்கத்தின் பெறுபேறாக டி.டி.ரி.யின் உபயோகம் சுவீடிஸ் நாட்டிலே தடை செய்யப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயற்றியுள்ள பிறிதொரு நூலின் மகுடம் நம்மைச் சூழவுள்ள கடல்' என்பதாகும்.
Dogsgj6ftb (Medicine), D-6T6ius) (Psychology), DTGiful வியல் (Anthropology), மனித சமுதாயத்தின் வளர்ச்சி-இயல்புசட்டங்கள் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வுத்துறை (Sociology) ஆகிய பல துறைகளிலும் பயிற்சி பெற்ற இயன் சட்டி, 'அன்பினதும்
13

Page 9
வெறுப்பினதும் பிறப்பிடம்' என்னும் நூலை 1935-ஆம் ஆண்டில் வெளியிட்டு உளவியல் சம்பந்தமான கருத்துக்களிலே புதிய திருப்பத்தினை ஏற்படுத்தினார். பிராய்டுவின் உளவியல் சார்ந்த கருநிலைக் கோட்பாடுகளை கிறிஸ்ரபர் காட்வெல் என்ற மார்கஸிஸவாதி கண்டித்த பொழுது ஏற்படுத்திய தாக்கத்தினைப் பார்க்கிலும், இயன் சட்டியின் தற்பண்பு வாய்ந்த கண்டனம் அதிக பலிதத்தை ஏற்படுத்தியது. பிராய்டுக்கு எதிரான சட்டியின் கருத்துக் கொத்து இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே கணிக்கப்படுகின்றது.
பதினைந்தாம் நூற்றாண்டிற்கும் பதினேழாம் நூற்றாண் டிற்கும் இடையில் ஆங்கில மொழி தனிமுதன்மை நிலைக்கு எவ்வாறு வளர்ந்தது என்பதைப் புலமை, சான்ற முறையிலே, "ஆங்கிலம் வெற்றி வாகை சூடிய வரலாறு' என்னும் தமது நூலிலே றிக்சட் ஃபஸ்டர் ஜோன்ஸ், ஆதார பூர்வமாக எண்பித்துள்ளார். ஆங்கில மொழியின் இவ்வரலாற்று நூலிலே அரசியல்-சமுதாய நோக்கு - பொருளியல் ஆகியன சார்ந்த காரணக் கூறுகளையும் நேர்த்தியாக இணைத்துள்ளார்.
ஆட்சியியல் துறையில் பொதுவாகவும், கம்யூனிஸ் முகாமிலே குறிப்பாகவும் மிகுந்த வாதப் பிரதிவாதத்தினை ஏற்படுத்திய புதிய வர்க்கம்' என்ற நூலினை எழுதிய எம். ஜிலாஸ் ஒரு காலத்தில் டிட்டோவின் சகாவாகவும் யூகோஸ்லோவாகி யாவின் உப ஜனாதிபதியாகவும் இருந்தவர். கம்யூனிஸப் புரட்சி வர்க்க பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, புதிய வர்க்கத்தின் கொடுங்கோன்மைக்குத் தவிர்க்க முடியாது வழி கோலுகின்றது என்ற மையக் கருத்தினை முன் வைத்து, கருநிலைக் கோட்பாட்டிற்கு முற்றிலும் முரண்பட்டதாக நிலவும் மெய்யியல்புகளை வெளிப்படுத்தியதற்காக அவர் அலைக் கழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
14

லண்டன் பொருளியல் பள்ளியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் எச்.ஆர்.ஜி.கிறீவ்ஸ் எழுதியுள்ள பிரித்தானிய யாப்பு, அரசியலமைப்பிற்குரிய ஆராய்ச்சி நூலாக அமைந் துள்ளது. இத்துறையில் எழுதப்பட்ட அநேக நூல்கள் சட்டஞ் சார்ந்தே எழுதப்பட்டுள்ளன. ஆனால், கிறீவ்ஸ் பிரித்தானிய யாப்பு அதனை உருவாக்கிய சமுதாயத்துடன் எவ்வாறு தொடர்பு பட்டுள்ளது என்பதை விளக்குகின்றார். எனவே, மாணாக்கருக்கும் பொது வாசகர்களுக்கும் எழுதப்பட்ட வேறு நூல்களிலும் பார்க்க இந்நூல் புது வலுவுண்டாக்குகின்ற தனித்தன்மை வாய்ந்ததாக அமைந்திருக்கின்றது.
"அமெரிக்காவில் இலக்கியம்' என்னும் தொகை நூலிலுள்ள இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துப் LGögnö ú6ðÚ yssi 'Partisan Review' 616ög LaspGusbg அமேரிக்கச் சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இருந்தவர். அவருடைய இந்தத் தொகை நூல், தேசிய அநுபவம் என்ற ஆய்வு நோக்குக் கோணத்தில் அமேரிக்க இலக்கியத்தைத் தரிசிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர் பிரசுரித்துள்ள பிறிதொரு புகழ் வாய்ந்த நூலின் மகுடம் 'படிமமும் கருத்துவமும் என்பதாகும்.
நவீன மருந்துகள், அவற்றின் விளைவுகள், மருந்து உற்பத்தித் தொழில் ஆகியன பற்றி மருந்துகள், வைத்தியர்கள், நோய்கள் என்னும் நூலிலே ஆராயும் பிறையன் இங்கிளிஸ், தற்கால மருந்துகளின் உய விளைவுகள் மருந்துச் சரக்குகளின் தொழில் துறை ஆகியவற்றை புத்தாய்வு செய்துள்ள அநுபவம் வாய்ந்த பத்திரிகையாளராவர். இவை சம்பந்தமாக "சிறு வழக்கு மருத்துவம் (Fringe Medicine) என்னும் பிறிதொரு நூலினையும் எழுதியுள்ளார்.
திரைப்படம்: கோட்பாட்டுக் கொத்து' என்ற நூலின்
15

Page 10
பதிப்பாசிரியரான ஆர்.டி.மக்கான் திரைப்படக் கலையைப் போதிப்பதிலே நிறைந்த அநுபவம் பெற்றவர். அவருடைய தொகை நூல் பல்வேறுபட்ட நோக்கு நிலைகளை, சில முரண்பட்டவை யாக இருப்பினுங்கூட, பயனுடன் ஒன்றிணைப்பதினால், திரைப் படக் கலையின் தன்மை பற்றி மிகுதியான கிரகிப்பினை வாச கனாற் பெறமுடிகின்றது.
'ஆயிரமுக வீரன்' என்னும் புராணவியல் நூலின் ஆசிரியரான ஜோசப் கம்பெல் மிக்க கீர்த்தி பெற்றுள்ள ஹென்றிச் ஸிம்மர், ஆனந்த குமாரசாமி ஆகியோருடனும் சேர்ந்து பழகும் வாய்ப்புப் பெற்றவர். ஆர்வத்தை இழுத்து வைக்கக் கூடிய இச்சுவைமிகு நூலிலே, உலகத்தின் முக்கியமான புராணங் களுக்கிடையேயுள்ள 605 போக்கினைப் புத்தாய்வு செய்துள்ளார்.
'அரசு' என்ற நூலின் ஆசிரியரான ஏ.எம்.ஹோகார்ட் இந்நூற்றாண்டிலே வாழ்ந்த மானிடவியலாளருள் தலை சிறந்த வராகக் கொண்டாடப்படுகின்றார். அவர் பத்தாண்டு காலம் இலங்கையில் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக் களத்தின் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார். அவருடைய நிலை பேறான ஆக்கங்களுள் ஒன்றான அரசு என்னும் நூலிலே சிங்கள மக்களுடைய நம்பிக்கைகளையும் இணைத்திருப்பதை வாசிக் கும் பொழுது நமது மண்ணிலே தோன்றிய ஒரு நூலினை வாசிக்கும் நிறைவே ஏற்படுகின்றது.
ஏ.ஜே. நிரம்பவும் வாசிப்பவர். ஏராளமான ஆங்கில நூல்களையும், கடந்த ஒரு தசாப்தமாக ஏராளமான தமிழ் நூல்களையும் வாசித்துள்ளார். வாசிப்பதுதான் அவருடைய முதன்மையான பொழுதுபோக்கு என்று சொல்வதை விட அதுவே அவருடைய முதன்மையான தொழில் எனக் கூறினும் பொருந்தும். அவருடைய வாசிப்புப் பரப்பினை நோக்குமிடத்து, அவர்
16

எழுத்திலே சாதிக்க முனைந்தவை திருப்தி தருவதாக அமைய வில்லை என்பது கசப்பான உண்மை. சுய கீர்த்தி அவர் நத்தாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஈழத் தமிழின் செழுமைக்காக வேனும் தமிழின் ஆற்றலிலக்கியம் சம்பந்தமான பணிக்கு அதிக நேரத்தினை அவர் பங்கிட்டு ஒதுக்க முன்வருதல் வேண்டுமென உரிமையுடன் கேட்டுக் கொள்ளுவேன்.
பதினொரு ஆங்கில நூல்கள் என்னும் தயிரைக் கடைந்த மத்தாக இந்நூல் விளங்குகின்றது. பொருத்தமான மகுடம். மத்திலே ஒட்டிக் கொண்டிருக்கும் வெண்ணெயின் சுவையே இந்நூலின் சுவை.
எஸ். பொன்னுத்துரை .70 سے 10 - 20
ஒரு குறிப்பு:
மத்துவுக்கான முன்னிடு எழுதிப் பல்லாண்டுகள் கழிந்தன. மூன்று தசாப்தங்கள் ஓடி மறைந்தனவா? போர்கள், அழிவுகள், அநர்த்தங்கள். ஆனாலும், ஏ.ஜே. சமர்க்களம் விட்டு வெளியேறாது, யாழ்ப்பான மண்ணின் பரமார்த்த உபாசகராய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவருடைய மண் பக்தி பிரமிப்புத் தருவதாகும்.
அண்மையில் ஒரு வாரம் நான் லண்டனில் தங்க நேர்ந்தது. இலக்கிய அன்பர் மாலியின் வீட்டிலே பசுமையான இலக்கியச் சந்திப்புகள் சில நிகழ்ந்தன. நித்தியானந்தன், பத்மநாப ஐயர், வரதகுமார், நேமிநாதன், பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டார்கள். அப்பொழுது ஏ.ஜே.யின் இலக்கிய ஊழியம் மிகவம் சிலாகிக்கப்பட லாயிற்று. மத்துவின் செம்பதிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டது. இதற்கு ஏற்படக் கூடிய மேலதிக செலவுகளை லண்டன் வாழ் ஏ.ஜே.யின் நண்பர்களும் அபிமானிகளும் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித் 25Tirab6ft. Tamil Information Centre Goaoisgy Qafujibul (pair 6 giggy. அவர்களுடைய பற்றார்வமும், அக்கறையும் இன்றைய தமிழ்ச் சுவைஞரின் யோகமாக வாய்க்கின்றது. இந்நேரத்தில், அவருடைய செங் காவலர் தலைவர்: யேசுநாதர்' என்கிற புதிய நூலையும்
வெளியிடுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைகிறேன். O
எஸ்.பொ
D1 17

Page 11
1. American Capitalism : The Concept of Countervailing Power... 19 2. Silent Spring .29 3. The Origin of Love and Hate...37 4. The Triumph of the English Language....52 5. The New Class....66 6. The British Constitution....73 7. Literature ln America....83 8. Drugs, Doctors and Disease.... 100 9. Film: A montage of Theories.... l 12 10. The Hero With A Thousand Faces.... 30 l l. Kingship.... 140
later. . . . அமெரிக்க முதலாளித்துவம்; எதிர் வலுக் கோட்பாடு 19
ஒலிக்காத இளவேனில் 29 அன்பினதும் வெறுப்பினதும் பிறப்பிடம் 37
ஆங்கிலம் வெற்றி வாகை சூடிய வரலாறு 52 புதிய வர்க்கம் 83 பிரித்தானிய யாப்பு 73 அமெரிக்காவில் இலக்கியம் 83 மருந்துகள், வைத்தியர்கள், நோய்கள் 100 திரைப் படம்-கோட்பாட்டுக் கொத்து 112 ஆயிரமுக விரன் 130 அரசு 140
18

அமெரிக்க முதலாளித்துவம்:
எதிர்வலுக் கோட்பாடு
The Concept of Countervailing Power by J.K. Galbraith
முதலாளித்துவத்தின் படைவீடாக அமெரிக்கா இன்று திகழ்கின்றது, மக்கள் முதலாளித்துவம்' அங்கு நிலவுவதாக அமெரிக்கா பெருமைப்படுகின்றது. இதென்ன ஐயா நூதனம்' என்று கேட்கிறீர்களா? வாலைக் குழைத்துக் கொண்டு நிற்கும் நாய்க்கு எசமான் எலும்புத்துண்டுகளை எறிவது போல, தமது ஆதாயத்தில் ஒரு பங்கை முதலாளிகள் தொழி லாளருக்கு பகிர்ந்து கொடுக்கினறார்கள். தொழிலாளருக்கு எனச் சில பங்குகள் (Shares) ஒதுக்கப்படும். இதனால், தொழி லாளர் குட்டி முதலாளிகள் ஆகின்றனர். இந்த ஏற்பாட்டைத் தான் மக்கள் முதலாளித்துவம்' என அமெரிக்கா பறைசாற்று கின்றது. அதாவது, முதலாளித்துவ அமைப்பைப் பேணு வதற்கு இ.தொரு தந்திரமான ஏற்பாடு. ஆதாயத்திற் பெரும் பங்கு முதலாளிகளைச் சேருகின்றது; ஒரு பங்கு வணிக நிலையத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக ஒதுக்கப்படுகின்றது. மிகுதியைத் தான் தொழி லாளருக்குப் பகிர்ந்து கொடுக் கின்றனர். தொழிலாளருக்கும் வெளியாட்களுக்கும் ஒதுக்கப்
参 - 19

Page 12
அமெரிக்க முதலாளித்துவம்: எதிர் வலுக் கோட்பாடு
படும் இப்பங்குகள் மிகச் சிறிய அளவே. நூற்றுக்கணக்கான பங்குதார்கள் இருந்தாலும், நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் சிலரின் வசத்திலேயே இருக்கும். லோகநாதன் திட்டம் இந்த அடிப்படையிலே தான் வகுக்கப்பட்டுள்ளது. தாம் 'குட்டி முதலாளிகள் என்ற உணர்வு நிலவும் போது, முதலாளித்துவ அமைப்பைப் பேணுவதில் எல்லோருக்கும் அக்கறை இருக்கத் தான் செய்யும். பொதுவுடைமையின் தாக்குதல் களைச் சமாளிப்பதற்காகத்தான் முதலாளித்துவம், வேறு வழியின்றி, இத்தந்திரத்தைக் கையாளுகின்றது என்பதில் ஐயமில்லை. அந்த அளவிற்காவது பொதுவுடைமையை நாம் பாராட்ட (866ör TuDIT?
அமெரிக்காவின் முதலாளித்துவ அமைப்பைப் பற்றி கல்பிரயித்து என்னும் பொருளியல் அறிஞர், பொருளியலறிவு என்ற திட்சை பெறாதவர்கள்கூடப் புரியக் கூடிய வகையில், நகைச்சுவை ததும்பும் நடையில் ஒரு நூலை எழுதியிருக் கின்றார். அதன் பெயர் அமெரிக்க முதல7ளித்துவம் எதிர் 62.65 (3.25/TZ Z/76 (American Capitalism: The Concept of Countervailing Power by J.K. Galbraith) 616örLug5/tg5úb. 9356ör ஆசிரியர் சிறிது காலத்திற்கு முன்பு இந்தியாவிலே அமெரிக்கத் தூதுவராகக் கடமையாற்றினார் என்பது குறிப் பிடத்தக்கது.
முதலாளித்துவந் தோன்றி உருவம் பெற்ற காலத்திலே, ஆதம் சிமித் போன்ற பொருளியல் அறிஞர் அவ்வமைப்பினை விளக்கும் முகமாக அதன் நற்பயன்களை விவரிக்க விழைந் தனர். அவர்களுடைய கருத்துப்படி, நிறைவுப் போட்டியே (perfect competition) முதலாளித்துவத்தின் உயிர்நாடி. விற்பனையாளர் பலர் இருந்தால், அவர்களுக்கிடையே போட்டி ஏற்படும். இப்போட்டியின் பயனாக விலைகள் குறையும்.

ஏ.ஜே. கனகரட்னா ஆதலால், இம்முறை நுகர்வோர்க்கு நன்மை பயக்கும். எம் மூதாதையரும் இவ்வுண்மையை அறிந்திருந்தனர். 'கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்' என்ற பழமொழி பயிலப் பட்டு வருகின்றதல்லவா? உங்கள் ஊர்ச் சந்தையை உற்று நோக்குவீர்களானால், இதன் உண்மை தெற்றனப் புலப்படும். ஒரு பொருள் பல வணிகரிடமிருந்தால், விலை நிதானமா யிருக்கும். ஒருவனிடம் மட்டுமே இருந்தால், அவன் கேட்கும் விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். நிறைவுப் போட்டி நிகழுமாயின் ஆகக் குறைந்த விலையும், ஏக போக உரிமை (monopoly) கொண்டாடப்படுமாயின் ஆகக் கூடிய விலையும் நிலவும் என ஆதம் சிமித் கூறியதற்கு இவை 6TGBig5ds absTGab6trab 6.56mmigásip607. (The price of mono poly is upon every occasion the highest which can be got... the price of free competition on the contrary is the lowest which can be taken not upon every occasion indeed but for any considerable time together) இதே போன்றுதான் வாங்குவோரைப் பொறுத்த தாகவும் உள்ளது. எடுத்துக் காட்டாக, சிகரெட் புகையிலை உற்பத்தியைக் குறிப்பிடலாம். இப்புகையிலையை வாங்க ஒரே ஒரு வணிக நிலையந்தானிருந்தால், அவர்கள் தீர்மானிக்கும் விலையை உற்பத்தியாளர் ஏற்க வேண்டி நேரிடும். வேறு பல நிலையங்களும் புகையிலையை வாங்க முற்பட்டால், அவர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டு, அதன் விளைவாக உற்பத்தியாளருக்குக் கூடிய பணம் கிடைக்க ஏதுவாயிருக்கும். ஆனால், நிச்சயமாக உற்பத்தியாளருக்குக் கூடப் பணம் கிடைக்கும் என அறுதியிட்டுக் கூற முடியாது. புகையிலையை வாங்கும் வணிக நிலையங்கள் ஒன்று கூடித் தமக்குள்ளே உடன்படிக்கை செய்துகொண்டால், பழைய படி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகத் தான்
经
どう 21

Page 13
அமெரிக்க முதலாளித்துவம்: எதிர் வலுக் கோட்பாடு
(Մlգալք!
தடையில்லாப் போட்டியே - நிறைவுப் போட்டியே - முத லாளித்துவ அமைப்பைச் சம நிலைப்படுத்துகின்றதென முத லாளித்துவ பொருளியலறிஞர் கருதி வந்தனர். சிமித், ரிக்கார்டோ, மில் போன்றோர் எழுதிய காலத்திலே, இஃது உண்மையாகவே இருந்தது. அக்காலச் சூழ்நிலையில், பிரித் தானியாவில் இவ்வித போட்டியே நிகழ்ந்தது. ஆனால், அவர் களுடைய கூற்று இன்றைய முதலாளித்துவ அமைப்பிற்குப் பொருந்துமா?
ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அடொல்வ் 62 fillb (Adolf Berle), a/7/ft26wif leafenib (Gardiner Means) கூட்டுத்தாபனங்கள் (Corporations) எவ்வாறு அமெரிக்காவின் பொருளாதார அமைப்பைத் தாக்குகின்றன என்பதை ஆராயத் தொடங்கினார்கள். மிகப் பெரிய கூட்டுத்தாபனங்கள் சில கைத்தொழிற் துறையின் பெரும் பகுதிக்குப் பொறுப்பாயிருக் கின்றன என்னும் உண்மையை அவர்கள் சுட்டிக் காட்டி னார்கள். அமெரிக்காவில் மட்டுமல்ல, பொருளயிவிருத்தி அடைந்த மற்றைய நாடுகளிலும் இவ்வாறுதான் நடை பெற்றிருக்கின்றது. தொடக்கத்தில் ஒரே பொருளைத் தயா ரிக்கும் பல வணிக நிலையங்களிருக்கின்றன. படிப்படியாக அவற்றின் தொகை குறைகின்றது. ஈற்றில், இவற்றிற் சில இணைக்கப்பட்டு மிகப் பெரிய கூட்டுத்தாபனங்கள் சிலவே எஞ்சியிருக்கின்றன. இந்நிலையில் நிறைவுப் போட்டி எங்கே? போட்டிக்குப் பதில் ஒன்று திரட்டல் (concentration) அல்லவா நிலவுகின்றது? பலருக்குப் பதில் மிகச் சிலர், தடையில்லாப் போட்டிக்குப் பதில் திரட்டல்! இவைதான் இன்றைய அமெரிக்க முதலாளித்துவ முறையின் தன்மைகள் என்கிறார் கல்பிரயித்து.
どう

ஏ.ஜே. கனகரட்னா
இக்கூட்டுத்தாபனங்கள், முன்பு போல, கழுத்தறுக்கும் விலைப்போர்களில் ஈடுபடுவதில்லை. அவ்வாறு பொருதுவது தற்கொலைக்கு ஒப்பாகும் என்பதை அவர்கள் நன்குணர்ந் திருக்கின்றார்கள். விளம்பரஞ் செய்தல், விஞ்ஞானத்தின் துணைக் கொண்டு தொழில் முறைகளைத் திருத்திக் கொள் ளுதல் - இவ்வழிகளிலேதான் இன்று போட்டி நடைபெறு கின்றதே தவிர, விலைகளைக் குறைப்பதன் மூலமன்று என கல்பிரயித்து விளக்குகின்றார். விலைப்போர், தத்தித் தத்தி நடை பயின்ற முதலாளித்துவத்தின் போர்க் கருவி; முதிர்ந்த முதலாளித்துவ அமைப்பு அவ்வாயுதத்தைப் பெரும்பாலும் உபயோகிப்பது இல்லை.
இன்றைய முதலாளித்துவ அமைப்பு முன்னைய முறையிலிருந்து வேறுபட்டது என்பதைச் சில பொருளிய லறிஞர் முதலில் உணரத் தவறிவிட்டனர். நிறைவுப் போட்டி அல்லது ஏகபோக உரிமை ஆகிய இரண்டு அளவு கோல்களே அவர்களுக்குத் தெரிந்திருந்தன. இவ்வளவுகோல்கள் வரை யறுக்கப்பட்ட காலத்திற்கு ஏற்றனவாகத் தானிருந்தன. ஆனால், காலப் போக்கில், சமுதாயம் மாறிவிட்டது. இதனை உணராத இவ்வறிஞர், இவ்வளவுகோல்கள் பயனற்றவை என் பதையும் உணரத் தவறியதில் வியப்பொன்றுமில்லை. பழைய பொருளியல் கோட்பாடினை விடுத்து, நடைமுறை உலகை உன்னிப்பாய்க் கவனித்த சில அறிஞர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளிலே வளர்ந்து வேரூன்றியிருந்த பொருளா தார அமைப்பு பழைய அளவுகோல்களுக்குள் அடங்காது என்பதைச் சுட்டிக் காட்டினார்கள். நிறைவுப் போட்டி அல்லது ஏகபோக உரிமை என்ற பழைய பாகுபாட்டை, 1932 - 33 இல் வெளியான இரண்டு நூல்கள் தகர்த்தெறித்தன. ஒன்று, அமெரிக்கப் பொருளியலறிஞர் போராசிரியர் சேம்பர்லினின்

Page 14
அமெரிக்க முதலாளித்துவம்: எதிர் வலுக் கோட்பாடு ஏகபோக உரிமைப் போட்டியின் கோட்பாடு" (The Theory of Monopolistic Competition). LDib60)spugby, LifjögbiTofu IIT60)6d சேர்ந்த திருமதி யோன் ராடரின்சனின் நிறைவில்லாப் (SuTugu air Guit(b6fusio' (The Economics of Imperfect Competition). நிறைவுப் போட்டி, ஏக போக உரிமை ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நிலை உருவாகியுள்ளதை, இவர்கள் எடுத்துக் காட்டினார்கள். இதனைச் சிலருரிமை (oligopoly) எனலாம். பேர்ல் மின்சு போன்றோரின் பொருளியற் புள்ளிவிவர ஆராய்ச்சி, மேலே குறிப்பிட்ட பேராசிரியர்களின் புதுக் கருத்துக்கள் - இவற்றுடன் மாபெரும் பொருளியல் மந்த மும் (The Great Depression) சேர்ந்து பழைய கோட்பாடுகளை வலிமை குன்றச் செய்தன. நிறைவுப் போட்டியே முதலாளித் துவத்தின் உயிர்நாடி, அதுவே அவ்வமைப்பினைச் சமநிலைப் படுத்துகிறது என்ற கொள்கை மலையேறியது. முதலாளித் துவமே செயல்திட்பமுள்ளது என்ற கருத்தை மாபெரும் மந்தம் சுக்கு நூறுக்கியது.
அம்மந்தத்திற்குப் பின்பு, அமெரிக்கா பொருளாதார முன்னேற்றம் எய்தியபோதிலும், இது நீடிக்குமா அல்லது மீண்டும் அழிவு ஏற்படுமா என்ற அச்சம் பெரும்பான்மையான பொருளியல் அறிஞரின் மனத்தை உறுத்தியது எனக் கல்பிரயித்து குறிப்பிடுகின்றார். அமெரிக்கா செழிப்புற்றிருந்த போதும், இவ்வச்சம் பலரின் அடிமனதில் மண்டிக்கிடந்தது. சம நிலைப்படுத்தும் நிறைவுப் போட்டியாகிய பாதுகாப்பு இல்லாத தினால், ஈற்றில், அழிவே ஏற்படும் எனச் சில பொருளியல் அறிஞரும், வணிகரும் கருதலாயினர். இதனை வெகு நேர்த்தியாக, நகைச்சுவையுடன் பேராசிரியர் கல்பிரயித்து குறிப்பிடுகின்றார். இயக்க நூல் அறி வின்படி, Bumblebee என்னும் வண்டு பறக்கமுடியாது, ஆனால், அது பறக்கின்றது!
24 -
どう

ஏ.ஜே. கனகரட்னா பறப்பதில் வெற்றியீட்டிய போதிலும், பறத்தல் விதிகளை மீறுவதினால் அவ்வண்டு காப்பில்லாததாம். இவ்வண்டினைப் போன்றுதான் அமெரிக்காவின் மனப்போக்கும் உள்ளது எனக் கல்பிரயித்து கூறுகிறார். ஆதம் சிமித், பென்தம், ரிக்கார்டோ போன்றோர் வகுத்த விதிகளை மீறுவதனால், (குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்) அமெரிக்கா செல்வச் செழிப்புற்றிருந்த போதிலும், இச்செல்வநிலை நீடிக்க முடியாது என்று பலர் சஞ்சலப்பட்டனர்.
பழைய கோட்பாடுகளை விடுத்து உண்மையை நோக்கு தல் தெளிவை ஏற்படுத்தி, அச்சத்தைப் போக்கும் எனக் கல்பி ரயித்து கருதுகிறார். எதிர்வலுக் கோட்பாட்டை முதன் முதலே தெளிவாக வரையறுத்த பெருமை இவரைச் சாரும். அமெரிக்காவிற் கூட்டுத்தாபனங்களின் கை ஓங்கவே, அதனை மட்டுப்படுத்தும் எதிர் வலுவும் பிறந்தது. வலுவே எதிர் வலுவைத் தோற்றுவிக்கின்றது' என்கிறார் கல்பிரயித்து. இக்கொள்கையைச் சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்க லாம். முதலாளித்துவ முறை உருவாகிய காலத்திலே, முதலா ளிகள் தொழிலாளரைச் சுரண்டி, மட்டற்ற ஆதாயத்தைச் சம்பாதித்தார்கள். அமெரிக்காவிலே ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன், உருக்குத் தொழிற் சாலைகளிலே தொழிலாளர் ஒரு நாளுக்குப் பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது, ஒரு வாரத்தில் எழுபத்திரண்டு மணி நேர வேலை இருவாரத்திற்கு ஒரு தடவை வேலையாட்கள் மாறிய போது (shift-tums) ஒரு தொழிலாளி இருபத்திநான்கு மணி நேரந் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. இன்று இவற்றை நம்ப முடியவில்லையல்லவா? ஈற்றில், முதலாளிகளின் வலு தொழிலாளரின் எதிர் வலுவைத் தோற்றுவித்தது. தொழிலாளர் ஒன்றுபட்டுத் தொழிற்
毫 25

Page 15
அமெரிக்க முதலாளித்துவம்: 6T6 as Galuoros
சங்கங்களை அமைத்தனர். இவ்வெதிர் வலு முதலாளிகளின் வலுவை மட்டுப்படுத்தியது. வலிமை பொருந்திய கூட்டுத்தாப னங்களுள்ள துறைகளிலேதான் சக்தி வாய்ந்த தொழிற் சங்கங்கள் தோன்றியிருக்கின்றன எனக் கல்பிரயித்து சுட்டிக் காட்டுகின்றார். வலு, எதிர் வலுவை தோற்றுவிக்கின்றது. குடியானவர் பெரும்பாலும் வலிமையற்றவர்களாய் இருப்ப தனால், பயிர்த் தொழிற் துறையிற் பலம் வாய்ந்த தொழிற் சங்கங்கள் நிறுவப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படவில்லை. தொழிலாளர் துறையில் மட்டுமல்ல, வேறு எத்தனையோ துறைகளிலும் எதிர்வலுத் தோன்றியிருப்பதாகக் கல்பிரயித்து கூறுகிறார். பலம் வாய்ந்த உற்பத்தியாளருக்கு எதிராகத் தோன்றிய சில்லறை வணிகரின் எதிர்வலு, உற்பத்தியாளரின் வலுவைக் கட்டுப்படுத்துகிறது, பொறியூர்திகளைத் தயாரிப் பவர்கள் உருக்குத் தொழிற்சாலை அதிபர்களின் வலிமையை மட்டுப்படுத்தி வருகின்றனர். பயிர்த் தொழிற்றுறையில், குடி யானவர்கள், விற்பனையாளர்கள் என்ற ரீதியில் வலுவற் றவர்களாய் இருந்தார்கள்; பின் உத்தரவாத விலைத்திட்டம் போன்ற அரசாங்க உதவியுடன் இவர்களுடைய எதிர்வலு வளர்க்கப் பட்டது. நிறைவுப் போட்டியல்ல, எதிர் வலுவே -- எல்லாத் துறைகளிலும் வியாபித்தில்லாத போதும் - இன்றைய முதலாளித்துவ அமைப்பைச் சமநிலைப்படுத்துகிறது எனக் கல்பிரயித்து கருதுகிறார். ஆனால், பணப்பெருக்கம் (Inflation) ஏற்படும் போது, நுகர்வோருக்கு எதிர் வலு பாதுகாப்பளிக் காது என்கிறார். தேவைக்கு (demand) கூடுதலாக தரவு (supply) இருந்தால், எதிர்வலு கட்டுப்பாடாய் இருக்கின்றது. இத்தகையச் சூழ்நிலையிற் சம்பளத்தை உயர்த்தும் படி தொழிற்சங்கம் கோரினால், முதலாளிகள் எதிர்ப்பார்கள். சம் பளத்தைக் கூட்டினால், தாம் தயாரிக்கும் பொருள்களின்
参 - م2

ஏ.ஜே. கனகரட்னா
விலை உயரும்; ஆதலால், விற்பனை குறையும்; இதன் விளைவாகத் தொழிலாளர் தொகையைக் குறைக்கவேண்டி நேரிடும் எனக் காரணம் காட்டுவார்கள். இலாபத்தைப் பிரிப்பது பற்றியே வேலை நிறுத்தம் நடைபெறும். ஆனால், தரவுக்கு மித மிஞ்சிய தேவையிருப்பின், தொழிலாளரின் கோரிக்கைகளை வழங்குவதனால் விற்பனை குறைந்துவிடும் என முதலாளிகள் அஞ்ச வேண்டியதில்லை. தொழிலாள ருக்குச் சம்பளத்தைக் கூட்டிக் கொடுத்து, தமது பொருள் களின் விலைகளை உயர்த்துகிறார்கள். வாங்குவதற்கு எத் தனையோ பேர் முன்வருவதனால், விலையைக் கூட்டப்படாது எனச் சில்லறை வணிகர் உற்பத்தியாளர்மீது தமது எதிர்வலு ஆயுதத்தைப் பயன்படுத்தமாட்டார்கள். பண வீக்கம் நிலவும் போது, வலுவினரும் எதிர்வலுவினரும் கூட்டுச் சேருவதனால், எதிர்வலு கட்டுப்பாடாகவோ பாதுகாப்பாகவோ இல்லை.
இன்று அமெரிக்காவில் உருவாகியிருக்கும் முதலாளித் துவ அமைப்பில், எதிர்வலுத்தான் சமநிலைப்படுத்துங் கருவி யாய் உள்ளதென்றும், இப் பாதுகாப்பை ஆட்சிப் பீடம் வளர்ப் பது நன்மை பயக்கும் என்றுங் கல்பிரயித்து வற்புறுத்துகிறார். இதைக் கேட்டதும், பழைய முதலாளித்துவக் கோட்பாடு களிலே பற்றுள்ளவர்களுக்கு - அரசு ஒர் ஊர்க்காப்பாளன் போன்றது, சட்டத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவது தான் அதன் கடமை, இயன்றளவு ஆட்சி செய்யாதிருக்கும் ஆட்சி முறையே சிறந்தது எனக் கருதுவோர்க்கு - அதிர்ச்சி ஏற்படலாம். ஆனால் முன்பிலும் பார்க்க, அமெரிக்காவிலேகூட அரசு எத்தனையோ துறைகளில் இன்று தலையிடுகின்றது. பண வீக்கம் ஏற்பட்டால், ஆட்சிப் பீடம் பொது நன்மையைக் கருதித் தலையிட நேரிடும். ஆதலால், பண வீக்கமே முதலா ளித்துவத்திற்குப் புத்துருவம் கொடுக்கப் படுவதற்கு ஏதுவா
经
どう 27

Page 16
அமெரிக்க முதலாளித்துவம்: எதிர் வலுக் கோட்பாடு
யிருக்கும் எனக் கல்பிரயித்து கருதுகிறார்.
முதலாளித்துவத்தை ஒரு சமய சித்தாந்தமாகக் கொள்ளாமல், அதனை நடைமுறை விடயமாகக் கருதி, பன்முகத் தீர்ப்புக்கு (decentralised decision) வாய்பளிக்கும் ஓர் ஏற்பாடாகக் கல்பிரயித்து நோக்குகிறார். நாம் முதலாளித் துவத்தை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், நடைமுறை உலகை மறைத்த கொள்கைத் திரைகளைக் கல்பிரயித்து நீக்கி விட்டார், தெளிவை ஏற்படுத்தியிருக்கின்றார் என்பதை
மறுக்க முடியாது.
28 - 参

ஒலிக்காத இளவேனில்
Silent Spring by Rachel Carson
இளவேனில் கோலோச்சத் தொடங்கியதும், இயற்கை அமுதகானம் பொழிகிறது. தேனீக்களும் வண்டுகளும் முரலிக் கின்றன. கிளைகளிலுள்ள பறவைகள் பண் இசைக்கின்றன. இயற்கையே இசை மயமாக மாறிவிட்டதோ என இந்த இணைப்பிசை மயக்குகின்றது. செவி விருந்து மட்டுமா? ஐம்புலன்களுக்கும் இயற்கை விருந்தளிக்கின்றது. மொட்டு கள் கட்டவிழ்ந்து கமழ்கின்றன. எங்கும் பசுமை, மலர்ச்சி, இன்பப் பொலிவு! w
இத்தகைய இயற்கை வனப்பையும், வளத்தையும் அழித்து உருமாற்றி, உலகத்தை ஒரு மகாமசானமாக்க முடியும். அணு ஆயுதங்களையும், நீரகக் குண்டுகளையும் நான் ஈண்டு குறிப்பிடவில்லை. அவற்றின் பயங்கர அழிவுச் சக்தியை யாவரும் அறிவர். இச்சக்திகள் உலகத்தை ஒரே மூச்சில் அழிக்கக் கூடியவை. ஆனால், மனிதனின் ஆற்றல் இவற்றுடன் நின்றுவிடவில்லை. உலகத்தை மெதுவாக
参一 ---- - 29

Page 17
ஒலிக்காத இனவேனில் அழிக்கவல்ல சக்திகளையும் அவன் கண்டுபிடித்திருக் கிறான். அவைதாம் பூச்சி கொல்லிகளும் (Insecticides), புற் பூண்டு கொல்லிகளும் (Herbicides). இந்தச் செயற்கை Quattu 607 Guit (56irab6ft (Synthetic chemicals) untonjab, உண்மையில், உயிர்கொல்லிகள் (Biocides) என்று செல்வி A6276) a/7/faai (Miss Rachel Carson) abogaisipirit. 66i 6Topguj6irst 56%ia/25 A67762ofi (Silent Spring) 6T6ip நூலை வாசிக்கும் பொழுது, உலகத்தின் வருங்காலம் பற்றிய அச்சந்தோன்றி, இவ்வுயிர்க்கொல்லிகளைத் தயாரிக்கும் முதலாளிகள் மீது வெறுப்பும் ஏற்படலாம். செல்வி கார்சன் போன்றோரின் கண்டனங்களையும் பொருட்படுத்தாது, இவ்வுயிர்க் கொல்லிகள் பாதுகாப்பானவை, மனிதருக்கு ஒருவிதத் தீங்கும் விளைவிப்பனவல்ல என விஞ்ஞானிகள் சிலர் அறுதியிட்டுக் கூறியிருப்பதற்குக் காரணமில்லாமல் இல்லை. இந்த இரசாயனப் பொருள்களைத் தயாரிக்கும் வணிக நிலையங்களிலேதான் இந்த விஞ்ஞானிகளுடைய சம்பளங்களும் - பதவிகளும் தங்கியிருக்கின்றன. செஞ் சோற்றுக் கடனைச் செலுத்துவதற்காக இவர்கள் ஏதோ விளக்கந் தருகிறார்கள். (இவ்வாறு கூலிக்கு மாரடிக்கும் விஞ்ஞானிகள் சிலர்தாம், சிகரெட்'க்கும் புற்று நோய்க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என நிறுவுவதற்கு இப்பொழுது அமெரிக்காவில் முயன்று வருகிறார்கள்) இவர்கள் உண்மையை நிலைநாட்டும் விஞ்ஞானிகளல்லர், தமது கட்சிக்காக வாதாடும் வழக்கறிஞரேயாவர்!
இளவேனில் ஒலிக்காது எவ்வாறு மெளனம் சாதிக்க வேண்டி நேர்ந்துள்ளது என்பதைச் செல்வி கார்சன் தமது நூலில் விளக்குகின்றார். இந்நூலிற்குப் புகழ்பெற்ற விஞ்ஞானி uJIT607 (327f 46.5/167 277.567ta (Sir Julian Huxley) trait(pabib
30 参

ஏ.ஜே. கனகரட்னா
வழங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது. பயிர்களை நாச மாக்கும் பூச்சிகளையும் களைகளையும் அழிப்பதற்காக டி.டி.ரி. (DDT) போன்ற மருந்துகளை உபயோகிக்கின்றோம். அமெரிக்காவில் வானுர்திகள் மூலம் இம் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. விளைவு? பூச்சிகளும் களைகளும் அழிவதுடன், இயற்கையின் பாடகர்களான பறவைகளும் மாய்கின்றன. இது புனைந்துரையல்ல. அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இவ்வாறான நிகழ்ச்சிகள் எத்தனையோ தடவைகளில் நடந்திருக்கின்றன. இவற்றின் முழு விபரங் களையுந் தமது நூலிற் செல்வி கார்சன் தருகின்றார். பறவைகள் மட்டுமல்ல; தேனிக்கள், விலங்குகள், மீன் இனங்கள், கோழிகள், கால்நடைகள், நாய்கள், பூனைகள் - மனிதனின் நணபர்களெனக் கொள்ளக் கூடிய யாவும் - இறந் துள்ளன. கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாகத் தான் முடிந்திருக்கின்றது. ஆனால், விந்தையிலும் விந்தையாக, கேடு விளைவிக்கும் பூச்சிகளும் வண்டுகளும் அழிந் தொழிந்து போகாமல், சிறிது காலத்தின் பின்னர் மேன்மேலும் அதிகரித் திருக்கின்றன! இப்பூச்சிகள் காலப் போக்கில் விடுபாடைப் (Immunity) பெறுகின்றன. முன்பு தெளிக்கப்பட்ட மருந்து இவற்றை அழிக்குஞ் சக்தியை இழந்து விடுகின்றது. (மலேரியாக் காய்ச்சலைப் பரப்பும் நுளம்பிற்கும் இதுதான் நடந்திருக்கின்றது) ஆதலால், அவற்றை மீண்டும் அழிக்க இன்னுஞ் சக்தி வாய்ந்த மருந்துகளைப் பயன்படுத்து கிறார்கள். ஈற்றில், அம் முயற்சியுந் தோல்வியடைகின்றது! நமது இயற்கை நண்பர்கள் அழிந்தொழிய, நாசகாரப் பூச்சிகளும் வண்டுகளுஞ் செழித்துப் பரம்புகின்றன. இவை யாவும் விழலுக்கு இறைத்த நீராகின்றன. ஆனால், 'எரிகிற வீட்டிற் பிடிங்கியது ஆதாயம்' என்ற பழ மொழிக்கிணங்க,
参 31

Page 18
ஒலிக்காத இளவேனில்
இம்மருந்துகளைத் தயாரிக்கும் வணிக நிலையங்கள் கொழுத்த ஆதாயத்தைச் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றன.
பூச்சி கொல்லிகளும் புற்பூண்டு கொல்லிகளும் மிகச் சக்தி வாய்ந்த நஞ்சுகள். அவை பூச்சி பொட்டுகளை அறவே ஒழிக்கத் தவறிய போதிலும், இயற்கைப் பாதுகாப்புகளை அழிக்கின்றன. “ஏராளமான நாசக்காரப்பூச்சிகளை முற்றிலும் அழித்தல் சாத்தியமன்று; ஆனால், அவ்வாறான முயற்சியில் ஈடுபடும் போது, அவ்வளவு ஏராளமாக இல்லாத நன்மை பயக்கும் பூச்சிகளையும், உயிரினங்களையும் அறவே ஒழிப்பது எளிது” என, சேர் யூலியன் ஹக்ஸ்லி தமது நூன்முகத்தில் எச்சரிக்கின்றார். அமெரிக்காவிலும், பிரித்தா னியாவிலும் நடந்தேறிய நிகழ்ச்சிகள் இக்கூற்றினை வலியு றுத்துகின்றன. இந்த நஞ்சுகளை உபயோகிப்பதினால், நீர்நிலம்-உணவுமரஞ் செடிகள் - ஏனைய உயிரினங்கள் எல்லா வற்றிற்கும் நாமே வலிந்து நஞ்சூட்டுகின்றோம். சில விலங்கி னங்களினதும் பறவைகளினதும் இனப் பெருக்கச் சக்தி இவற்றினாற் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை ஆராய்ச்சியா ளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். நிலைமை இவ்வாறு பிரதிகூலமாக இருக்கும் பொழுது, நாம் வாளாவிருத்தல் மனித குலத்திற்குச் செய்யும் துரோகமாகும். மனிதன் ஏனைய உயிரினங்களிலும் மேம் பட்டவன், அவனை இந்த நஞ்சுகள் ஒன்றுஞ் செய்ய மாட்டாதென மனப்யால் குடித்தல் பேதமை யேயாகும். இந்த மருந்துகளைத் தெளிக்கும்போது, தற் செயலாக இத்துளிகள் உடம்பிற் பட்டதினால் எத்தனையோ சிறுவர்களும், வயதானவர்களும் இறந்திருக்கிறார்கள். சிலர் நீண்ட கால நோயாளராகப் படுத்த படுக்கையாகக் கிடக் கிறார்கள். (இலங்கையில், புகையிலைத் தோட்டங்களில்,

ஏ.ஜே. கனகரட்னா
பொலிடோல் தெளிக்கும் பொழுது அதன் அடர்ந்த ஆவியை உட்கொண்டதினாற் சிலர் இறந்திருக்கிறார்களென்பதும் குறிப்பிடத்தக்கது) இப்பூச்சிகொல்விகள் மனிதனின் கல்
உண்டாகின்றன. நரம்புகளும் தாக்குப்படுவதால், மன நோய் களும் உண்டாவதற்கு ஏதுவாயிருக்கின்றன என்பது வல்லுநர் சிலரின் கருத்தாகும். உயிரணுக்களின் மூச்சு விடுதலைப் (Respiration of cells) uééflGasTsibalassï Laroussrsö, Lubm நோய் உண்டாவதெனப் புற்றுநோய் வல்லுநர் சிலர் கருது
இதும் ஒரு காரணமென இவ்வல்லுநர் சாட்டுகின்றனர். பூச்சி பொட்டுக் கொல்லிகள் (Pesticides) சந்ததியை உறுதிப் படுத்தும் நுட்ப அணுக்களைத்(Gres) தாக்கவல்லன. பாரம்
ஆற்றொழுக்காகச் செல்வதற்கு இவ்வணுக்கள் இன்றியமை யாதன. அவைதாம் இறந்த காலத்தையும், நிகழ் காலத் தையும், எதிர் காலத்தையும் பிணைப்பன. இவை பாதிக்கப் பட்டால், பாரதூரமான மாறுதல்கள் (Mutations) ஏற்படலாம். இதன் விளைவாக, இயற்கையை மீறிய தன்மைகளும் (Abnormalities), "தலடோமைட் மாத்திரை ஏற்படுத்திய அங்க வீனங்களைப் போன்ற குறைபாடுகளும் ஏற்படலாம். தீயுடன் விளையாடித் தன்னைத் தானே எரித்துக்கொள்ளுங் குழந்தையைப் போன்று, நாம் சக்தி வாய்ந்த நச்சு மருந்து களுடன் விளையாடுகின்றோம். ‘தன் வினை தன்னைச் சுடும்’ என்பதற்கொப்ப நம்மை அழித்துக் கொள்வதுடன், வருங் காலச் சந்ததிகளையும் அழித்தொழிக் கும் வழியாகவே இஃது அமைந்துள்ளது. உய்யப் பிணக்கத்தில் அழிந் தொழிந்த சில உயிரினங்களைப் போன்று, மனிதனும் தன்
33

Page 19
Gaðkas onosaleið
ஆற்றலால் அழிந்துபோகலாமென விஞ்ஞானிகள் சிலர் அஞ்சு கிறார்கள். “முற் கூட்டி அறிந்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும் ஆற்றலை மனிதன் இழந்து விட்டான். இறுதியில், அவன் பூமியையே அழிப்பான்” என egyköymf(3 droon (277 (Albert Schweitzer) géfébab25ffier6oruDITabdis கூறியிருக்கின்றார்.
பூச்சிபொட்டுகளைப் போன்று, மனிதனும் விடுபாட்டைப் பெறமுடியாதாவென வினவுதல் இயல்பானது. ஆம், விடு பாட்டைப் பெறமுடியும். ஆனால், அஃது இன்றோ, அடுத்த தலைமுறையிலோ பெறக் கூடிய ஒன்றன்று. எத்தனையோ தலைமுறைகள் கழிய வேண்டியிருக்கும். ஒரு நூற்றாண்டில் ஏறக்குறைய மூன்று தலைமுறைகளை மனிதன் காண்கிறான். ஆனால், பூச்சிகளோ சில நாட்களிலேயோ, வாரங் களிலேயோ பல தலை முறைகளைக் கண்டுவிடுகின்றன. அவற்றுடன் மனிதனாற் போட்டியிட முடியுமா?
இரசயானப் பொருள்களின் உபயோகத்தை முற்றாகக் கைவிடவேண்டுமெனச் செல்வி கார்சன் கூறவில்லை. ஆனால், அவற்றின் உபயோகத்தை இயன்ற வரையிற் குறைத்துக் கொள்ளுதல் வேண்டுமென வற்புறுத்துகின்றார். இயற்கையை நுணுகி நோக்குவோமாயின், வேறு வழிகள் புலப்படும். ஒவ் வொரு பூச்சிக்கும் வேறு இயற்கைப் பகைகளுள. இவ்வியற் கைப் பகைகளின் இனப் பெருக்கத்தை விருத்திசெய்ய முயலுதல் சாலும். அமெரிக்காவின் சில பகுதிகளிலும், வேறு சில நாடுகளிலும் இம்முறை வெற்றிகரமாகக் கையாளப் பட்டுள்ளது. ஆண் பூச்சிகளை ஆண்மைத் திறனற்றவையாக
disg,6256ir (p6 lb (Male sterilization technique) did பொட்டுகளின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல் இன்னொரு முறையாகும். அமெரிக்காவைச் சேர்ந்த கலாநிதி
34 am 参

ஏ.ஜே. கனகரட்னா
நதிப்னிங் (Dr. Knipling) என்பவர் இந்த முறையைக் கையாண்டு, கணிசமான வெற்றியையும் பெற்றார். பூச்சிகளிலிருந்து எத்த னையோ வித நஞ்சுகளும், கவர்ச்சிப் பொருள்களும் (attractants) விலக்குப் பொருள்களும் (Repelants) சுரக்கின்றன. இவற்றின் தன்மைகளை நாம் ஆராய்ந்தறிந்தால், இவற்றைச் செயற்கையாக உற்பத்தி செய்து, பூச்சி கொல்லிகளாகப் பயன்படுத்தலாம். இம்முயற்சியிலும் ஒரளவு வெற்றி கிடைத் துள்ளது. செவிக் கெட்டா ஒலி அலைகள் (Ultrasonic Sound) மூலம் பூச்சி பொட்டுகளைக் கொல்வது பற்றி இப்பொழுது ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. நம்மைப்போன்றே பூச்சி பொட்டுகளும் நோயாற் பாதிக்கப்படுவன. இவ்வுண்மையைப் பண்டு தொட்டு அறிந்திருக்கின்றோம். அவற்றின் நோய் களைப் பற்றிய அறிவைப் பயன்படுத்திப் பூச்சி பொட்டு களுக்கிடையே நோய்களைப் பரப்பி, அவற்றின் பெருக் கத்தைக் கட்டுப்படுத்தலாம். ஏறக்குறைய முப்பது ஆண்டு களுக்கு முன்பு, வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியிற் பரவிய யப்பானிய வண்டை இவ்வாறு கட்டுப்படுத்தினார்கள். நச்சு ஊனிர் (virus) மூலமும் பூச்சி பொட்டுகளை அழிக்கலாம். கனடாவிலுள்ள காட்டுப் பகுதிகள் சிலவற்றில் இம்முறை வெற்றிகரமாகக் கையாளப்பட்டுள்ளது. இவ்வாறாக, வெற்றி யளிக்கக் கூடிய வேறு எத்த னையோ முறைகளிருக்க, இவற்றைப் புறக்கணித்து விட்டு, பூச்சி பொட்டுகளுடன் இயற்கையையும் நம்மையும் அழிக்க வேண்டுமா?
வாழ்க்கை சிலந்தி வலை ஒன்றிற்கு ஒப்பானது. அதன் ஒர் இழையைத் தொட்டால், அதன் அதிர்வு வலை முழுவதும் வியாபிக்கும். வாழ்க்கையின் ஒருமையை கீழைத்தேய மரபு வலியுறுத்துகின்றது. இப்பொழுது, உயிரியலாளரும் இதனை வலியுறுத்துகின்றனர். இயற்கையில் மிக நுட்பமான, நேர்த்தி
盔
どう
35

Page 20
ஒவிக்காத அனவேனில்
யான சமநிலை உண்டு. இதனைக் குலைத்தல் கேட்டையே விளைவிக்கும். விஞ்ஞானத்தின் தீவிர வளர்ச்சியினால், விஞ்ஞானிகள் சிலர் தாமே சகல வல்லவர்களென இறுமாப்புக் கொள்ளுகிறார்கள். அவர்கள் இயற்கையின் புனிதத்து வத்தைக் கனம் பண்ண மறுக்கிறார்கள். இயற்கையைத் தம் எண்ணப்படி ஆட்டிப்படைக்கலாமென்ற இறுமாப்பில் மனப்பால் குடிக்கிறார்கள். இயற்கையே மனிதனின் செளகரியத்திற் காகவும் வசதிக்காகவுமே படைக்கப்பட்டது என்ற தவறான எண்ணம் நிலவிய காலத் திலேதான், இயற்கையைக் கட்டுப்படுத்துதல், அடக்கியாளுதல்' என்ற கொள்கை உருவாகியது. விஞ்ஞானத்தின் இக் கற்கால' த்திற்றான் புழுப்பூச்சி இயலாளரின் (Entomologists) கருத்துக்களுந் தொழில் முறைகளுந் தோன்றின. இப்பிற்போக்கான விஞ்ஞானத்துறை மிகப் பயங்கரமான ஆயுதங்களை உபயோ கிப்பதனால், இயற்கைக்கும் மனித குலத்திற்கும் பேராபத்து ஏற்பட்டிருக்கின்றதெனச் செல்வி கார்சன் எச்சரிக்கிறார். இந்த எச்சரிக்கையை நாம் ஏற்று, ஆவன செய்யாது விடின், மனிதகுலத்தின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகவே இருக்கும்.

*அன்பினதும் வெறுப்பினதும் பிறப்பிடம்
The Origin of Love and Hate by an Suttie
உளவியல் என்றதும் அறிஞர் ட்ராயிடுவின் (Freud) பெயரே யாவர்க்கும் நினைவுக்கு வரும். உளவியலை விஞ்ஞான அடிப் படையில் அமைத்த பெருமை அவரையே சாரும். அவருடைய கருத்துக்களே பெரும்பாலும் ஆதிக்கஞ் செலுத்துகின்றன. அவருடைய கொள்கைகளைப் பலர் இன்றும் உச்சிமேற் கொண்டு போற்றுகிறார்கள். அவ்வாறே நானும் பிராயிடுவின் கருத்துக்களை வேதவாக்காகக் கருதியதுண்டு. கிறித்தோப்பர் காட்வெல்லின் (Chirstopher Caudwell) இறந்து கொண்டிருக்கும் பண்பாடுபற்றிய sayirikárdabóir' ( Studies in a Dying Culture) 6T6irgib by 606 படித்த பின், என் குருட்டுப் பற்று ஆட்டங் காணத் தொடங்கியது. இந்நூலாசிரியர் ஒரு மார்க்கியவாதியாவார். இறந்துகொண்டிருக்கும் பண்பாடுபற்றிய ஆராய்ச்சிகள்' என அவர் குறிப்பிடுவது நடுத்தர வகுப்பாரின் பண்பாட்டையுஞ் சமூக அமைப்பையுமேயாம். இப்பண்பாடுஞ் சமுக அமைப்புந்
参 - 37

Page 21
அன்பினதும் வெறுயினதும் đgũứù.ư
தனிமனித வாதத்தையும், தனியார் சொத்துரிமைக் கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டவை. தனியாட் களின் உரிமையை வற்புறுத்தி, நிலமானிய முறையை அழித்து, நடுத்தர வகுப்பினர் ஆதிக்கம் பெற்றனர். ஆனால் மேல் வகுப்பாரிடமும் நிலக் கிழார்களிடமிருந்து தாம் பறித்த உரிமைகளைத் தொழிலாளருடன் பகிர்ந்து கொள்ள நடுத்தர வகுப்பினர் விரும்பவில்லை. எத்தனையோ போராட்டங் களுக்குப் பின், 1832-ல் பிரித்தானியாவிலே நடுத்தர வகுப் பினர், வாக்குரிமையைப் பெற்றனர். ஆனால் இதே வகுப்பினர், தொழிலாளருக்கும் வாக்குரிமை வழங்கப்படுவதை விரும் பாது, அதற்கு இடையூறு செய்தனர். (இலங்கையிலும், ஆங் கிலங் கற்ற நடுத்தர வகுப்பார் சர்வசன வாக்குரிமையை எதிர்த்தார்கள் அல்லவா? தாம் பெற்ற நன்மைகளை ஏனையோருக்கும் பகிர்ந்தளிப்பதை நடுத்தர வகுப்பார் விரும்புவதில்லைபோலும்!) எவ்வளவுதான் முயன்றாலும், இறுதியிலே தொழிலாளர் வெல்லுவர். உளுத்துப்போன நடுத்தர வகுப்பாரின் சமூக அமைப்பும் பண்பாடும் அழிந் தொழிந்து போகும் எனக் காட்வெல் திடமாக நம்பினார். வரலாற்றின் போக்கை உணராத சிலர், பழைய தனியார் சொத்துரிமைக் கோட்பாட்டையுந் தனி மனித வாதத்தையுங் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர் என அவர் குற்றஞ் சாட்டுகிறார். அவ்வாறு காட்வெலாற் சாடப்படுபவர் களுள் பிராயிடுவும் ஒருவர். விஞ்ஞானியான பிராயிடுவுக்கும் தனி மனித வாதத்திற்கும் எவ்வகையிலே தொடர்பிருக்க முடியும் - முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுவது போலல்லவா இருக்கின்றது - என நாம் ஐயுறலாம். விஞ்ஞானியோ, எழுத்தாளனோ, வரலாற்றாசிரியனோ, தத்துவ ஞானியோ வெறுங் கர்மயோகியுமல்லன்; சூனியத்
38 参

ஏ.ஜே. கனகரட்னா தில் வாழ்பவனுமல்லன். அவர்கள் வளருஞ் சூழல், அவர்க ளுடைய காலப் பின்னணி ஆகியன அவர்களை ஒரளவுக் காயினும் உருவாக்குகின்றன. இத்தாக்கம் அவர் களுடைய கோட்பாடுகளிலும் ஆராய்ச்சிகளிலும், அவர்கள் அறிந்தோ அறியாமலோ, பிரதிபலிக்கப்படுகின்றது. முழுமையான உண்மையை அறிய மனிதன் அவாவுறுகிறான். ஆனால், ஒவ்வொருவனும் தன் கோணத்திலிருந்துதான் இவ்வுண் மையை நோக்கலாம். இதனைத் தவிர்க்க முடியாத நியதியுமெனலாம். இத்தொடர்பில், ரசோமொன்' (Rashomon) என்ற சிறந்த யப்பானியத் திரைப்படந்தான் நினைவிற்கு வருகின்றது. கணவனும் மனைவியுங் காட்டினுடாகச் செல் கின்றனர். அச்சமயம், இவளது அழகைக் கண்டு மயங்கும் கொள்ளைக்காரன் கணவனைத் தாக்கிக் கொன்றுவிட்டு அவளைக் கற்பழிக்கிறான். படந் தொடங்குவதற்கு முன்பே இவையாவும் நடந்தேறி விட்டன. கதையை நகர்த்துவதற்கு மீட்கும் உத்தி (F lash - back technique) கையாளப் படுகின்றது. இறந்த கணவனின் ஆவி, மனைவி, கொள்ளைக்காரன், வாட் சண்டையையும் கொலையையும் ஒளித்து நின்று பார்த்த மரம்வெட்டி ஒருவன் ஆகிய நால்வரும் நடந்தவற்றைத் தனித்தனியே வருணிக் கின்றனர். ஈற்றில் உண்மை எதுவென அறியாது தவிக்கின்றோம். ஒவ்வொருவருந் தத்தம் இயல்புக்கு ஏற்பத் தத்தம் கோணத்திலிருந்தே எல்லா வற்றையும் நோக்குகின்றனர் என்னும் கருத்துந் தெளிவா கின்றது. எமது குறைபாடுகளையுங் குற்றங்களையும் முடி மறைப்பதற்கு, எமது மதிப்பிற்கு இழுக் கேற்படாதிருக்கும் பொருட்டு, நாம் நடந்த எல்லாவற்றையும் வெளிப்படுத்தா திருக்கலாம். அல்லது, எம்மை அறியாமலே, உண்மையை நாம் திரிக்கலாம்.
经 - 39
どう

Page 22
பிராயிடுவை உருவாக்கிய சூழல் நடுத்தர வகுப்பாரின் பண்பாடேயாகும். தனியார் சொத்துரிமைக் கோட்பாடு அவ் வமைபபின் உயிர்நாடி எனலாம்.
இத் தனி மனிதவாதம் பிராயிடுவின் கருத்துக்களில் விரவியிருக்கின்றது என்கின்றார் காட்வெல்.
“பிராயிடு நடுத்தர வகுப்பினர். இவ்வர்க்கச் சார்பு, உளவியலைப் பற்றிய அவருடைய கருத்துக்களைப் பாதிக் கின்றது. நடுத்தர வகுப்புப் பண்பாடு இரண்டு அடிப் படைகளிலே தங்கியிருக்கின்றது. ஒன்று: மனிதன் தன்னறிவுச் (Consciousness) சமூகப் படைப்பென்பதை மறந்து, அது விதை யிலிருந்து வளருஞ் செடியைப் போன்று தானாகவே உருவா கின்றது என்ற எண்ணம். இரண்டு; மனிதன் சுதந்திரமாகச் செயலாற்றுவதற்கு அவனுடைய இயல்புணர்ச்சிகள் (instincts) சமூகக் கட்டுப்பாடுகளின்றி வெளிப்படல் வேண்டும் என்ற கருத்து. பண்பாடு, சமூக அமைப்புப் போன்றவற்றின் தாக்கத் திலிருந்து எவ்வளவிற்கு விடுபடுகின்றானோ அவ்வளவிற்கு LDaf256ir சுதந்திரமுடையவனாவான் என்பதும் நடுத்தர வகுப்புப் பண்பாட்டின் அம்சமாகும். அப்படியாயின், தன்னறி வற்ற விலங்குகளல்லவா உண்மையாகச் சுதந்திரப் பிராணி கள்? மேற் கூறப்பட்ட அடித் தளத்திற்றான் நாகரிகமென்பது மனிதனின் சுதந்திரமான இயல்புணர்ச்சிகளை நசுக்குதல் என்ற பிராயிடுவின் கருத்து எழுப்பப்படுகின்றது. ஆனால், இங்குகூட ஒரு முரண்பாடு உண்டு. இன்னொரு கோணத் திலிருந்து நோக்கி, தன்னறிவுக்கும் நாகரிகத்திற்கும் இடர் விளைவிக்கும் பேய் கள்தாம் இயல்புணர்ச்சிகள் என்கிறார் பிராயிடு. இம் முரண்பாட்டைத் தீர்க்க முடியாது திக்கு முக்காடுகின்றார். அவருடைய நிலைக் களனிலிருந்து இது
を جف تسنت (40

ஏ.ஜே. கனகரட்னா
திர்க்க முடியாததே! ஒருவித கட்டுப் பாடுமற்ற நிலைதான் சுதந்திரம் என எண்ணுதல் தவறாகும். அப்படியாயின் விலங்குகளின் நிலைதான் எமக்கு, இலட்சியமாக அமைய முடியும். மனிதன் விலங்குகளிலும் மேம்பட்டவனென்றால் அதற்குக் காரணம் அவன் சமூகக் கட்டுப்பாடுகள் மூலஞ் சுதந்திரமெய்தியமையே ஆகும். சுதந்திரம் என்பது ஒவ் வொருவனும் ஒருவிதக் கட்டுப் பாடுமின்றித் தான் விரும்பி யதைச் செய்வதே என்ற எண்ணத்தின் அடிப்படையிலே தான் நடுத்தர வகுப்பு நாகரிகம் எழுப்பப்பட்டுள்ளது. மேலும், தகப்பன் மூலம் ஒவ்வொருவனும் மற்றவர்களுடன் தன்னை 60Tilab60irG Gabitsfrogb6NITipTsir (he attributes the organisation of society to the identification of all individuals with each other through the father, thus explaining both social cohesion and leadership) சமூகம் அமைக்கப்படுகின்றது என்கிறார் பிராயிடு. இப்படித்தான் சமூக இணைப்பிற்குந் தலைமைக்கும் விளக்கங் கொடுக்கின்றார். இட்லர் தோன்றுவதற்கு முன்பே, நாட் டுரிமைச் சர்வாதிகாரத்தின் (facism) உரிமைப் பத்திரத்தை பிராயிடு வரைந்துவிட்டார். “பாசிச தத்துவத்திற்கு பிராயிடு ஆதரவாளரானார். வேடிக்கை என்னவெனில், அதே தத்துவம் அவரை நிராகரித்து, அவருடைய நூல்களையும் எரித்தது! இயல் புணர்ச்சித் திரிபுகளைக் (instinctive distortions) குணப்படுத்த முயலும் பிராயிடு, நாசிக் கொள்கைக்கு வழி வகுப்பதால், அவரை பாசிசத்தின் நண்பனுங் கூட்டாளியு மெனக் கூறுதல் மிகையாகாது. தனிமனித வாதம் இன்னொரு வகையில் பிராயிடுவின் கருத்துக்களைக் கோணச் செய் கின்றது. பிராயிடு, மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நெருங் கிய தொடர்புண்டு என்பதை மறக்கின்றார். சூழலே மனிதனை - அவனுடைய உணர்வுகளை உருவாக்குகின்றது என்பதை
参 ത്ത് 41

Page 23
அன்பினதும் வெது மறந்து, மனிதனைச் சமூகத்திலிருந்து பிரித்தெடுத்து, அவனுடைய மனவியல்புகளையும், மனப்படி முறைகளையும் (mental processes) ஆராய்கின்றார். இவையாவும் வெறுஞ் சூனியத்தில் நிகழ்கின்றன எனப் பிராயிடு கருதுகின்றார் போலும், சமூகத் தொடர்புகளே தன்னறிவைக் கட்டுப்படுத் துவதனால், சமூக வாழ்வியல் (Sociology) தான் உளவியலின் அடிப்படையாகும். பிராயிடுவும், மற்றும் உளவியலாளர் பலரும் இதனை உணரவில்லை”
காட்வெல் மார்க்கீயவாதி. இதன் காரணமாக, அவருடைய கண்டனங்களைச் சிலர் புறக்கணிக்கலாம். ஆனால், இயன் சட்டி (Ian Sutte) எழுதிய அண்மினதும் 6,227 parab Ezzai, af'6T6irgib ibrosu (The Origins of Love and Hate by Ian Suttie) Ligdisgjib Gun (upgby giru.56606). Libriu எமது ஐயங்கள் மேலோங்குகின்றன.
சட்டி இஸ்கொத்துலாந்தில் 1889இலே பிறந்தார். 1914 - ஆம் ஆண்டில் மருத்துவராகச் சித்தி எய்திய இவர், முதலாவது உலகப் போரில், பிரான்சு, இந்தியா போன்ற இடங்களிற் கடமையாற்றினார். பின்னர், உளநோய் மருத்து வராகச் சிறப்புப் பயிற்சி பெற்று, இலண்டனிலுள்ள மருத்துவ மனையொன்றிற் கடமையாற்றத் தொடங்கினார். 'அன்பி னதும் வெறுப்பினதும் பிறப்பிடம்' என்னும் இவரது நூல் 1935இல் வெளிவந்தது. அவப் பேறாக, முதல் முறையாக நூல் வெளிவந்த அன்றே சட்டி இறந்தார். உளவியலைத் தவிர, சமூகவியல், மானிடவியல் போன்ற துறைகளிலும் இவருக்கு ஈடுபாடிருந்தது. தமது விரிவான அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்தி, புதுக் கோணத்திலிருந்து பிராயிடுவின் கருத்துக்களைச் சட்டி விமர்சித்தார். “அவர் புதுச் சிந்தனை

ஏ.ஜே. கனகரட்னா யாளர். இந்நூலில் அவர் பல முக்கியமான கருத்துக்களை விரித்துரைக்கின்றார். அவை உளநோய்களைத் தீர்க்கின்ற மருத்துவக் கலையின் கோட்பாட்டடிப்படையையே மாற்றி அமைக்கின்றன. அவரின் கருத்துக்கள் பல இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன" என சி ஏ. மேஸ் (C. A. Mace) தன் முன்னுரையிற் குறிப்பிடுகின்றார்.
பிராயிடு, அட்லர் போன்றோர் மனிதனை அவன் உருவா கிய சூழலிலும் பண்பாட்டிலுமிருந்து பிரித்து நோக்குவதனால், மனித இயற்கை', 'இயல்புணர்ச்சிகள்' என அவை குறிப்பிடு பவை உண்மையிற் சில பண்பாடுகளினால உருவாக்கப்பட்ட தன்மைகள் என்பதை அவதானிக்கத் தவறி விட்டனர் என்கி றார் சட்டி. (மனிதன் மிகச் சிக்கலான பிறவியாக இருப்ப தினால், இயல் புணர்ச்சிகள்' என்ற பேச்சுக்கே இன்று இடமில்லை என்கின்றனர் அல்போட் (Alport), கோகன் (Cohen), கன்திரிப் (Guntrip) போன்ற உளவியலாளர். சிலர் பாலுணர்ச்சி போன்ற துரண்டு கைகளைக் (impulses) கட்டுப் படுத்த முடியாது இடர்ப்படுகின்றனர். அவர்கள் முதிர்ச்சி பெறாததே இதற்கான காரணமென்பது இவர்களுடைய கருத்தாகும்.)
பண்டைய கிரேக்க மக்களிடையே ஒரு கதை பயிலப்பட்டு வந்தது. ஈடிப்பஸ் (Oedipus) என்பான் தன் தகப்பனைக் கொன்று, தன் தாயையே மணந்தானாம். இக்கதையைத் தழுவி சொவொக்கிலிஸ் (Sophocles) என்ற சிறந்த கிரேக்க நாடக ஆசிரியர் ஒரு புகழ் பெற்ற நாட கத்தை இயற்றினார். எம்மை அறியாமலேயே நாம் தாய்மீது காமுற்று, தகப்பனைப் பொறாமையின் நிமித்தம் வெறுக் கின்றோமென பிராயிடு கருதினார். இதற்கு ஈடிப்பஸ்
} 43

Page 24
அன்பினதும் வெறுப்பினதும் spilub
p 6oovirởréfởF dfäsat56üb (Oedipus Complex) 6TGOTŮ Goulu Urfisrir. இது மனிதனின் அடிப்படையான இயல்பென்றுங் கருதினார். ஆண்பிள்ளைகள் தாய்மீது காமுற, பெண்பிள்ளைகள் தகப்பன் மீது காமுறுவர்; மானிடனைப் பற்றிய அடிப்படை உண்மையிது என பிராயிடு வற்புறுத்தினார். ஈடிப்பஸ் உணர்ச்சிச் சிக்கல் குறிப்பிட்ட குடும்ப அமைப்பினாலும், குழந்தை வளர்ப்பு முறையினாலும், பண்பாட்டினாலும் உருவாக்கப்பட்ட ஒன்றேயாகும். ஆதலால், அஃது எங்கும் பொருந்தும் மாறா உண்மையெனக் கொள்ள முடியாதென சட்டி விளக்குகிறார். இதைப் பின்பு பிராயிடுவே ஒருவாறு உணர்ந்தார். ஆதலாற்றான். “ஈடிப்பஸ் உணர்ச்சிச் சிக்கலே மனக் கோளாறின் (Neurosis) முளை என்ற கூற்று அனைத்து லகத்துக்கும் பொருந்தும் என்ற எண்ணத்தைக் கைவிடல் வேண்டும்” என பிராயிடு பின்னர் குறிப்பிட்டார்.
பரந்துபட்ட மானிடவியல் அறிவு இருந்தாற்றான், வெவ் வேறு பண்பாடுகளை ஒப்பிட்டு அவை உருவாக்குந் தன்மை களை உணரலாம். 'மனித இயற்கை', 'இயல்புணர்ச்சிகள்' என்று கூற முன்னர், இவ்வாறு ஒப்பிட்டுணர்தல் இன்றி யமையாத தென சட்டி வற்புறுத்துகின்றார். வெவ்வேறு பண்பாடுகளை ஒப்பிட்டு ஆராயுமிடத்து, ஈடிப்பஸ் உணர்ச்சிச் சிக்கலையும் பார்க்க அடிப்படையான உண்மைகள் புலனாகும். பெண்களின் பிள்ளைப் பேற்றுச் சக்தி, பாலூட்டுஞ் சக்தி - இவற்றைப் பற்றி ஆண்கள் பொறாமைப் படுகின்றார்கள். இப்பொறாமை எத்தனையோ பண்பாடுகளிற் பிரதிபலிக்கப்படுகின்றதென, எடுத்துக் காட்டுகள் மூலஞ் சட்டி எண்பிக்கிறார். சில இடங்களில் ஆண்கள் தமக்கும் மாத விடாய் நிகழ்கின்றதெனக் காட்டுவதற்கு ஆண்குறியிலே கிறி
44 - 参

ஏ.ஜே. கனகரட்னா
இரத்தம் ஒடவிடுவார்களாம். இந்தச் சடங்கு நடைபெறும் போது, பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லையாம். (பெண்கள் அனுமதிக்கப்பட்டால், குட்டு வெளிப் பட்டுத் தாம் கேலிக்கா ளாவார்கள் என ஆண்கள் அஞ்சுதல் இயல்பானதே!) மேற்கு ஐரோப்பாவிலே, மனைவி பிள்ளைப் பெறும் போது, கணவனும் பிள்ளைப் பெறுவதான ஒரு சடங்கு நிகழ்த்தப்படுவதுண்டாம். இப்போலிப் பிரசவம் மனைவியின் பிரசவ வேதனையைக் குறைப்பதற்காக கையாளப்படும் ஒரு யுக்தி எனப் பலர் விளக்கங் கொடுக்கின்றனர். ஆனால், பிள்ளையைப் பெறுவதிலே தாயுடன் தனக்கும் பங்குண்டு என நிலைநாட்ட விழையும் ஆணின் உள்ளக் கிடக்கையை இதிற் காணலாம் என சட்டி கருதுகின்றார். பெண்கள் ஆண்குறியைப் பற்றிப் பொறாமைப்படுகின்றனரென பிராயிடு சுட்டிக் காட்டினார். ஆனால், மேலே கூறப்பட்ட ஆண்பொறாமைகள் இதனையும் பார்க்க அடிப்படையானவை என சட்டி கருதுகின்றார். எத்தனையோ பண்பாடுகளில், அங்கு வழங்கும் கதைகளில், இது பிரதிபலிக்கப் படுவதாக விளக்குகிறார். குலத் தலைவர் பண்பாடு கூட (Patriarchal Culture) இப்பொறாமையின் பிரதி பலிப்பு என்கிறார். வேறு சில முக்கிய பொறாமைகளும் இருக்கின்றன. தன்மீது தாய் கொண்டுள்ள அன்பு குறையும் என அஞ்சுவதினால், முத்த பிள்ளை இளையபிள்ளை மீது பொறாமைப்படுகின்றது. (கெயின் (Cain), சின்டரெல்லா (Cinderella) ஆகிய கதைகளை இத்தொடர்பில் நோக்குக. இது நமது குடும்பங்களிலேயே கண்கூடு. இப்பிரச்சினையைத் தீர்க்க, அவுஸ்ரேலிய பழங்குடி ஒன்று விசித்திரமான முறையைக் கையாண்டது. ஒவ்வொரு இரண்டாம் பிள்ளையையுந் தாய்கொன்று, சமைத்து, தானும் முத்த பிள்ளையும் உண்டனர். தகப்பனும் பிள்ளை மீது பொறா
参 45

Page 25
Îawấuồ Clairei அன்பினதும் வெறு:
மைப்படாலாம். தாய் பிள்ளை மீது தனது அன்பைச் சொரிவத னால், தகப்பன் பொறாமையடையலாம். இக்கோணத் திலிருந்து ஈடிப்பஸ் கதையைச் சட்டி நோக்குகிறார். ஈடிப்பஸ் பிறக்கு முன்பு, அவனுடைய தகப்பனாகிய அரசன் லேயஸ் (King Laius) G6ü5 (Delphi) usSõ25 Ggij6ias 956) flö (Oracle) எதிர்காலக் குறி உரை கேட்கின்றார். பிறக்க விருக்கும் மகன் தகப்பனைக் கொன்று தாயை மணப்பான் எனப் பதில் கிடைத்தது. இதைத் தவிர்ப்பதற்காக, மகன் பிறந்ததும் அவனைக் கொல்லும்படி லேயஸ் ஆணையிட்டான். ஆனால், குழந்தைமீது இரக்கங் கொண்ட பணியாள் அவ்வாறு செய்யாது அண்டை நாட்டிலுள்ள ஒருவனிடங் குழந்தையைக் கொடுக்க, ஈடிப்பஸ் அந்நாட்டு அரசனின் வளர்ப்புப் பிள்ளையாக வளருகின்றான். பின்னர், ஈடிப்பஸ் சொந்த நாட்டிற்குச் சென்று, தன் தகப்பனென்று அறியாது லேயசைக் கொன்று, தன் தாயென அறியாது யோகஸ்டாவை (Jocasta) மணஞ் செய்கிறான். கிரேக்கரிடையே வழங்கிய கதையின் சுருக்கம் இதுதான். தன் மகன் மீது கொண்ட பொறாமைதான் லேயசின் ஆணைக்குக் காரணமெனச் சட்டி இக்கதைக்குப் புது விளக்கங் கொடுக்கிறார்.
மனநோயுற்றவர்களின் வரலாறுகளைக் கொண்டு கோட் பாடுகளை வரையறுப்பதிலும் பார்க்க, பல பண்பாடுகளை ஒப்பிட்டு அவ்வாறு செய்தல் பயனுடைத்து எனச் சட்டி வற் புறுத்துகின்றார். அப்படிச் செய்வதினால் சொந்த விருப்பு வெறுப்புக்களின் தாக்கத்தையும் இயன்றளவு குறைத்துக் கொள்ளலாமென நம்புகிறார். பொதுவாக, பிராயிடு தாய் வழி மரபுப் பண்பாடுகளை (Matriarchal cultures) புறக்கணிப் பதாகவும் அவர் மீது சட்டி குற்றஞ் சுமத்துகின்றார்.
盔 46 w be

ஏ.ஜே. கனகரட்னா
மனிதனை இயக்குகின்ற உட்கோள்கள் (motives) எவை? பிராயிடுவின் கருத்துப்படி, அவை இரண்டாகும். ஒன்று: D 600ritérdab6061T G66f(Sulibp256io (evacuation or detensioning). gyoirGS: Louair babférd (sensory gratification). 9Ldisafu உணர்ச்சிகளை வெளியேற்றுவதற்குப் போக்கிடம் (outlet) இல்லாதவிடத்து, உணர்ச்சி மிகுதியினால் (tention) மனக்கவலை (anxiety) தோன்றும். வாழ்வென்பது ஒரு குறிப்பிட்ட முறையிற் சாவை நாடுதலே என பிராயிடு கருதினார். தூண்டுகைகளினால் ஏற்படக்கூடிய பயங்கர விளைவுகளை நினைந்து அஞ்சுதலே சமூக வாழ்வைக் கட்டுப்படுத்துகின்றது என்றார். மனிதன், சக்திகள் பல நிறைந்த பொட்டலம். இச்சக்திகளை விரயஞ் செய்ய அவாவு றுகிறான். ஆனால், அச்சந் தடுக்கின்றது. இக்கருத்துக் களை சட்டி ஏற்க மறுக்கிறார். உணர்ச்சி வெளியீடு (expression) வெளியிட வேண்டுமென்ற நோக்கத்திற்காகவல்ல, மற்றவர் களின் எதிர்வினையைப் (response) பொறுத்ததாகவே நடை பெறுகின்றதென சட்டி கருதுகிறார். இதனைப் பெறாதவிடத்து மனக் கவலையும் சீற்றமும் ஏற்படுகின்றன. மனிதன் வெடி மருந்தைப் போன்று சும்மா வெடித்துச் சிதறுவதில்லை. அவனுடைய மனக் கொந்தளிப்புக்குஞ் சீற்றத்திற்கும் காரண மில்லாமலில்லை. கலவியின்பத்திற் கூட ஒருவர் மற்றவரின் எதிர்வினையை வேண்டி நிற்கின்றார். தாய்மையின் நிறைவென்பது பால் வேதனையை குறைப்பது மட்டுமன்று. அதிலும் மேம்பட்டது. அன்பென்பது உணர்ச்சி வெளி யீட்டையும் எதிர்வினையையும் வேண்டி நிற்குந் தலையான, தன் நிலையான தேவை என்பதை பிராயிடு மறுப்பதினால், இசைவைப் பெறாதவிடத்து ஏற்படுங் கொந்தளிப்பிற்கும், சிற்றத்திற்கும் அவர் விளக்கங் கொடுக்கவில்லை. மனிதன்
47 خــــنځي

Page 26
அன்பினதும் வெறுப்பினதும் ůlptúłub
இயல்பாகவே அழிவை விரும்புகின்றவன்; இத் தலையான, தன்நிலையான அழிவியல் புணர்ச்சி உந்துகிறது என பிராயிடு நம்பினார். ஆனால், பிராயிடுவின் சீடர்களிடையே இதைப் பற்றிக் குறிப்பிடத்தக்க கருத்து வேற்றுமை நிலவுகின்றது. தம்மைப் பாதிக்காத வகையிலே தம் உணர்ச்சிகளை வெளியிடுந் தனி ஆட்களின் தொகுப்புத்தான் மனித இனம்; அவர்கள் தம்மையும் மற்றவர்களையும் அழிக்க வேண்டு மென்பதற்காகவே அழிக்கிறார்கள்; - இதுவே பிராயிடு அளிக்கும் மானிட தரிசனமென்கிறார் சட்டி. மேற் கூறியவற்றிலிருந்து பிராயிடுவின் சோர்வு மனப்பான்மை (pessimism) நன்கு புலனாகும். அன்பு, பாலுணர்ச்சியையன்று. சமுகத்தைச் சார்ந்தது. அது பிறப்புறுப்புக்களின் வேட்கை யிலிருந்தல்ல (genital appetite) தற்காப்பு இயல்புணர்ச் சிகளிலிருந்து தோன்றுகிறது என சட்டி வற்புறுத்துகிறார். அன்பையோ பொது நலப் பண்பையோ (altruism) பாலுணர்ச்சியிலிருந்து பிராயிடுவாற் பெயர்த்தெடுத்துத்தர முடியவில்லை. வெறுப்பு தன்நிலையான, தவிர்க்க முடியாத, தலையாய இயல்புணர்ச்சி அன்று என்பதைப் பிராயிடு உணரவில்லை. மற்றவர்களின் இசைவைப் பெற விரும்பும் நேர் நிலையான (positive), தலையாய உணர்ச்சிகள் இருக்கின்றன என்பதைப் பிராயிடு ஏற்க மறுக்கிறார்.
தொடக்கத்திலிருந்து, பிள்ளை தாயின் பாதுகாப்பில் வளருகின்றது. தாய்தான் பிள்ளைக்கு உணவூட்டிப் பாதுகாப் பளிக்கின்றாள். இருவருக்குமிடையே உள்ள தொடர்பு பாலு ணர்ச்சியைச் சார்ந்ததன்று. இந்நெருங்கிய தொடர்புதான் அன்பின் பிறப்பிடம் என்கிறார் சட்டி, தாய் அன்பு பொழிய மறுத்தால், பிள்ளையிடம் வெறுப்பும் அச்சமுந் தோன்றும்.
48 - 一惨

ஏ.ஜே. கனகரட்னா வெறுப்பு, மனிதனின் அடிப்படையான அழிவியல்புணர்ச்சியின் விளைவே எனக் கருதிய பிராயிடு, போர் தவிர்க்க முடியாதது; மேலும், அஃது உயிரியல் ரீதியாகப் பயனுடைத்து எனத் திருவாய் மலர்ந்தது வியப்பன்று. இத்தகைய பிறழ்வு மிகு கருத்தை அறிவுடையான் எவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அன்பும் வெறுப்பும் ஒரே நாணயத்தின் இரு முகங்கள்.
தகப்பன் விதை அடித்துவிடக் கூடும் என்ற அச்சத் garit(Sou (Castration Complex) grairGoodab soldisabib (repression) ஏற்படுகின்றதெனப் பிராயிடு கருதினார். தாயின் அன்பு தேவைப்படுவதனாற்றான் இவ்வாறு நடைபெறுகின்றது என்பது சட்டியின் கருத்தாகும். பாலுணர்ச்சியைச் சார்ந்த பொறாமையும் (விதையடி அச்சம் இதனை வலியுறுத் துகின்றது), ஆண்குறிமிது பெண்களுக்கு ஏற்படும் பொறாமையும் சமூகம் வளர்ச்சியடைவதற்கு மிக முக்கியம் எனப் பிராயிடு விளக்கினார். தாயும் பிள்ளைகளும் அடங்கிய குழுவே சமுகத்திற்குக் கருவாய் அமைந்திருக்க வேண்டுமெனச் சட்டி கருதுகின்றார். அன்புதான் சமூக வாழ்வின் ஊற்று என்கிறார். அவப்பேறாக, இன்று அன்பு திட்டு’ப் பொருளாகக் கருதப்படுகின்றது. அறிவியற் றுறையின் வளர்ச்சிக்கு பற்றற்ற நோக்கு (detached outlook) இன்றியமையாதது. இது விஞ்ஞான ஊழியாகையால், இத்திட்டு மனப்பான்மையும் வளர்ந்துள்ளது.
சமயம் வெறும் முடநம்பிக்கை எனப் பிராயிடு நினைத் தார். சமயம் ஒரு நோயல்ல, அது மனநோயைத் தீர்க்கவல்லது என்கிறார் சட்டி, கலை, இலக்கியம், பண்பாடு போன்றவை, பாலுணர்ச்சித் தூண்டுகைகளைப் புடமிடுவதற்கு (sublimate) உதவுகின்றன என்னுங் கொள்கையைச் சட்டி ஏற்கவில்லை.
ஆன 49

Page 27
அன்பினதும் வெழு
முன்பு தாய்க்கும் பிள்ளைக்குமிடையே இருந்த அன்புப் பிணைப்பு வகித்த இடத்தை அவை நிரப்புகின்றன என்பது சட்டியின் கட்சி. முன்பு தாய் வகித்த இடத்தைப் பின்பு சமூகச் சூழல் நிரப்புகின்றது.
பிராயிடுவின் கோட்பாடுகளே ஒருவகை நோயெனச் சட்டி அவற்றைச்சாடுகிறார். அவற்றிற் கோட்பாட்டு ரீதியாக அன்பிற்கு இடமில்லாதபோதும், பிராயிடுவும் அவரது சீடர்களும் மனநோயுற்றவர்களைக் குணப்படுத்த முயலும் போது, அவர்களுடன் அன்புத் தொடர்புகள்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். பிராயிடு குலத் தலைவர் பண் பாட்டிலே (Patriarchal culture) வளர்ந்தவர். இப்பின்னணியே அவருடைய கருத்துக்களில் ஆதிக்கஞ் செலுத்தியது. சொந்த வாழ்க்கையிலேற்பட்ட அனுபவங்கள் அவருடைய உட்கோட்டங்களுக்குக் காலாகவிருந்தன.
1908 - ஆம் ஆண்டளவிலிருந்து கோலோச்சத் தொடங்கிய பிராயிடுவின் கொள்கைகள் இன்று பெரும்பாலும் வலியிழந்து விட்டன. எமது இயல்புணர்ச்சிகள்மீது சமூகம் விதிக்கும் தடைகளே மனக் கோளாறுகளுக்குக் காரணம் என்ற கருத்து, இன்று பெரும்பாலும் ஏற்கப்படுவதில்லை. இயல்புணர்ச்சிகளைத் தடையின்றிச் செயற்படவிடுவதே சிறந்த வழி என்பதை வின்னிகொட் (Winnicot), பெயபெயன் (Fairbain), கன்திரிப் போன்றோர் மறுக்கின்றனர். ஆனால் பிராயிடுவின் கருத்துக்கள் தனிமனித வாதத்தில் நம்பிக்கை வைத்திருந்த வணிக சமுதாயத்திற்கு மிகவும் வசதி யாகவிருந்தன என்பது சொல்லாமலே விளங்கும். மனிதனின் உள்ளார்ந்த இயல்புகள் (Potentialities) மலர்வதற்குச் சமூகம் இன்றியமையாதது. சமூகக் கட்டுப்பாடுகளல்ல, குழந்தைப்
so 参

ஏ.ஜே. கனகரட்னா பருவத்தில் அன்பின்மையே மனக்கோளாறுகளுக்குப் பின்பு வழிகோலுகின்றது எனத் தற்கால உளவி யலாளர் பலர் இயம்புகின்றனர். ‘முதற் கோணல் முற்றுங் கோணல்" என்ற பழமொழி, உளவியல்ரீதியாக எத்துணை பொருத்தமானது!
உளவியற்றுறையில் மீண்டும் பகுத்தறிவைப் புகுத்தத் தான் முயலுவதாகச் சட்டி கூறுகிறார். அவருடைய நூல் சிந்தனையைத் துண்டிப் பெரு விருந்தளிக்கின்றது.
毫 51

Page 28
ஆங்கிலம் வெற்றிவாகை சூடிய வரலாறு
The Triumph of the English Language by Richard Foster Jones
இலங்கை இந்தியா போன்ற நாடுகள் விடுதலை பெற்றதும் தாய்மொழிகளை அரியணையேற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதிலே மேலோங்கிற்று. தாய் மொழிதான் போதனா மொழியாயிருத்தல் வேண்டுமென்றும், ஆட்சி மொழி யாய்த் திகழ வேண்டுமென்றும் மக்கள் கிளர்ச்சி செய்தனர். இவ்வியக்கத்திற்கு நந்திகள் போல் குறுக்கே நின்றனர் ஆங்கிலங் கற்ற நடுத்தர வகுப்பினர். ஆங்கிலம் உலக மொழியென்றும், அதனைக் கைவிட்டால் நமது அறிவு வளர்ச்சி தடைப்பட்டு விடும் என்றும், தமிழ் - சிங்களம் ஆகிய சுயமொழிகள் மூலம் நவீன விஞ்ஞானக் கருத்துக்களை உணர்த்த முடியாதன்றும், ஆங்கிலத்தைப் புறக்கணித்தால் நாம் கிணற்றுத் தவளைகள் போலாகி விடுவோமென்றுங் காரணங்கள் பலவற்றைக் காட்டினர்.
இந்த ஆங்கில தாசர்கள் ஆர். எவ் ஜோன்ஸ் எழுதிய

ஏ.ஜே. கனகரட்னா
"ஆங்கில மொழி வெற்றி வாகை குடிய வரலாறு' என்னும் நூலை வாசித்தார்களேயானால், நிச்சயமாக வியப்படை வதுடன், தங்கள் தவறான கருத்துக்களையும் களைந் தெறிவர்.
இலத்தீனும், கிரேக்க மொழியும் இங்கிலாந்திலே கோலோச்சிய காலத்தில் ஆங்கிலமும் இவ்வாறுதான் இகழப் பட்டது. பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளிலே ஆங்கிலத்தை அரியணையில் அமர்த்துவதற்கு ஆங்கில மொழிப்பற்றுள்ளவர்கள் எடுத்த முயற்சிகளுக்கும், இன்று தமிழ்-சிங்கள மொழிகளுக்கு பழைய பெருமையைத் தேடிக் கொடுக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கும் நெருங்கிய ஒற்றுமை இருக்கின்றதென்பதை இந்நூலை வாசிப்பவர் உணர்வர்.
இந்நூலிலே பதினைந்தாம் நூற்றாண்டு தொடக்கம் பதி னேழாம் நூற்றாண்டு வரை ஆங்கிலமொழியைப் பற்றி ஆங்கி லேயர் கொண்ட கருத்துக்கள் தொகுத்து ஆராயப்படு கின்றன. ஏறக்குறைய கி.பி. 1575 வரை ஆங்கில மொழியில் பற்றுள்ளவர்கள் கூட, தமது தாய் மொழியைப் பற்றித் தாழ்வாகத் தான் எண்ணினார்கள். இவர்களை ஒருவித தாழ்வுச் சிக்கல் உறுத்தியது. தமது மொழியை வர்ணிப் பதற்கு இவர்கள் கையாண்ட அடைமொழிகளே இவ் வுண்மையைப் புலனாக்குகின்றன. தமது மொழியை அவர்கள் காட்டுமிராண்டித்தனமான, பண்படாத மொழியெனக் கூறிக் கொண்டனர். இவ்வாறு தமது மொழியைப் பற்றிக் கடுமையான பதங்களைக் கையாண்ட போதிலும், இவ்வடை மொழிகள் யாவும் ஆங்கிலமொழி சொல்வன்மை யற்றது என்பதையே உண்மையாகக் குறித்தன. எலியட், அஸரம் போன்றோர்
毫 - 53

Page 29
ஆங்கிலம் வெற்றி வாகை
supsu aganap
ஆங்கிலத்திலே மிகத் திறமையாக எழுதிய போதிலும், தமது தாய்மொழி சொல்வன்மை வாய்ந்த தென்று துணிந்து கூற முற்படவில்லை. இலத்தீன், கிரேக்கம் போன்ற மொழி களுக்கும் ஆங்கிலத்திற்கும் இடையேயுள்ள ஏற்றத் தாழ்வை உணர்த்துவதற்கு அவர்கள் ஓர் உவமையைக் கையாண் ட்ார்கள். ஆங்கிலத்தைச் சாதாரணத் துணிக்கும், இலத் தீனை உயர்ந்தரக ஆடம்பர உடைக்கும் ஒப்பிட்டனர்.
பதினாறாம் நூற்றாண்டின் இறுதிக் கந்தாயத்தில் ஆங்கில மொழியின் சொல்வன்மையில் நம்பிக்கை வளர்ந் தது. இதனால், தாய் மொழியை இகழும் போக்கும் படிப்படி யாக மறையத் தொடங்கியது. சொல்வன்மை, அணி முதலிய வற்றிற்கு எத்தகைய மதிப்பைக் கொடுத்தார்களோ, அதைப் பொறுத்திருந்தது தாய் மொழியைப் பற்றிய கண்டனம். இலத்தின், கிரேக்க மொழிகளைக் கண்ணெனப் போற்றி யவர்கள் அணிக்கே முதலிடம் கொடுத்தனர். ஆனால் மதச் சீர்திருத்தத்திற்குப் பின்பு உருவாகிய உளப்பாங்கு பெரும் பாலான ஆங்கிலேய மக்களாகிய துரயவாதிகளைப் (Puritans) பிடித்துக் கொண்டது. ஆடம்பரமான மொழி நடை சீர்கே டானது எனக் கருதிய இவர்கள், நடை தூய்மையானதாகவும், எளிமையானதாகவும், ஆடம்பர மற்றதாகவும் உண்மையில் இயல்பான ஆடையாகவும் இருத்தல் வேண்டுமென வற்புறுத் தினர். பதினாறாம் நூற்றாண்டில் இரண்டாம் மூன்றாம் கந்தா யங்களில் இவ்வெண்ணப் போக்கு பரவலாயிற்று. இக் கருத்தை ஆதரித்தவர்களுக்கு தாய்மொழிக்குச் சொல் வன்மை இல்லையென்பது பெருங் குறையாகப் படவில்லை.
பதினாறாம் நூற்றாண்டிலே ஆங்கில மொழியைப் பல துறைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தலை
54- 参

ஏ.ஜே. கனகரட்னா
துர்க்கியது. அச்சியந்திரத்தின் தோற்றுவாய் இதற்குத் துண்டு கோலாய் அமைந்தது. மதச்சீர்த்திருத்தமும் இதற்கு முக்கிய காரணமாகும். மேலும், புதுக் கண்டுபிடிப்புகள், பண்டைய இலக்கியங்களில் ஏற்பட்ட புது மோகம், மறுமலர்ச்சி இயக்கம் போன்றவற்றின் பலனாக புதுப் புது நூல்கள் அன்னிய மொழிகளில் இயற்றப்பட்டன. இவற்றை ஆங்கிலத் திலும் மொழி பெயர்த்து வழங்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகத் தோன்றிற்று. கல்வியற்ற பாமர மக்களுக்கு கல்வி புகட்ட வேண்டும் என்னும் விருப்பம் இந் நூற்றாண்டிலே மேலோங்கியது. அறிவுக் களஞ்சியங்களாக விளங்கிய பண்பட்ட மொழிகளுக்கும் ஆங்கிலத்திற்குமிடையே உள்ள பரந்த வெளி மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த ஆங்கிலே யனை உறுத்திற்று. இந்த இடைவெளியைச் சுருக்குவதுதான் தனது தலையாய கடமை எனக் கருதலானான். பாமரர் களோடு தமது அறிவைப் பகிர்ந்து கொள்ள மறுத்த அறிஞர் களுக்கு அடிக்கடி பலர் ‘சாட்டையடி’ கொடுத்தனர். நடை முறைக்கு வேண்டிய பயனுள்ள அறிவைப் பொது மக்களிடையே பரப்ப வேண்டுமென்ற எண்ணத்தால் உந்தப் பெற்ற பலர் விஞ்ஞான நூல்களை ஆங்கிலத்தில் பெயர்த் தனர். இத்தகைய மொழி பெயர்ப்புக்கள் இந்நூற்றாண்டின் முதல் முன்று கந்தாயங்களிலும் பெருகிற்று. ஒரு காலத்திலே இலத்தீனும் கிரேக்கமும் பண்படாத பேச்சு மொழிகளாக இருந்து, பின்புதான் இலக்கிய மொழிகளாக உயர்ந்தன என்ற உண்மையை ஆங்கில மொழியைக் கையாண்டவர்கள் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டனர். சிசறேவும் டிமொஸ் திண்சும் தமது தாய் மொழிகளிலே எழுதியது சரியென்றால், ஏன் ஆங்கில எழுத்தாளர் தமது தாய்மொழியைக் கையாளக் கூடாதென இவர்கள் வாதாடினர். அறிவும் இலத்தின் போன்ற
毫 ss

Page 30
ஆங்கிலம் வெற்றி வாகை
Støt stofen
உயர் மொழிகளும் இணைந்திருப்பதனால் அவற்றைப் பிரிக்க முற்படுவது அறிவுக்கே உலைவைக்கும் செயலென இலத்தின் பிரியர்கள் வாதாடினர். ஆங்கிலத்தில் புத்தகங்கள் வெளிவந்தால் பல்கலைக் கழகங்களுக்கும் அறிஞர்களுக் கும் உள்ள மதிப்பு அற்றுப் போய்விடும் என இவர்கள் சுட்டிக் காட்டினர்.
இவ்வித கூற்றுக்களிலிருந்து, அறிவுத் துறையிலே உயர் நிலை எய்தியிருந்தோர், இந்தப் புதுப் போக்கினால் தாம் அனுபவித்து வந்த சலுகைகளும் உரிமைகளும் பறிபோய் விடுமென அஞ்சியமை தெரிகின்றது. குறிப்பாக மருத்துவர், ஆங்கிலத்தைக் கையாள்வது பெருவழக்காகிவிட்டால் தமது நல உரிமைகள் வெகுவாகப் பாதிக்கப்படுமெனப் பீதியடைந் தனர். அக்காலத்திலே, மருத்துவ அறிவை இலத்தின் மூலம் தான் பெறுவது வழக்கம். இந்த மொழித் தடைநீக்கப்பட்டால், அதாவது ஆங்கிலமே மருத்துவ அறிவைப் புகட்டுவதற்குக் கையாளப் பட்டுவந்தால், மருத்துவரின் தொகை பெருகி விடும். சாதாரண மனிதனும் தனக்குத் தானே மருத்துவனாய் விளங்குவான். இதனால் தங்களது உழைப்பு வெகுவாய் பாதிக்கப்படும் என்ற உண்மைகளை அக்காலத்தில் வாழ்ந்த மருத்துவரில் பெரும்பாலோர் உணர்ந்தனர். இதனாற்றான் அவர்கள் மருத்துவ நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவருவதை வன்மையாக எதிர்த்தனர். ஆனாலும், தாய்மொழிப் பற்றுள்ள வர்கள் இத்தகைய எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை. றோமரும் கிரேக்கரும் தத்தமது தாய்மொழிகளிலேதான் மருத்துவ நூல்களை வெளியிட்டார்கள். அந்த முன் மாதிரியையே தாமும் பின்பற்றுவதாக ஆங்கில மொழியை மருத்துவத் துறையில் பயன் படுத்தியவர்கள் சுட்டிக் காட்டி னர். மேலும், தனிப்பட்டோரின் நல உரிமைகள் அல்ல, பொது
56 a . . . 袭
どう

ஏ.ஜே. கனகரட்னா நன்மையே மேலானது என இவர்கள் வற்புறுத்தினர். ஆங்கி லத்தில் பல பல நூல்கள் வெளிவருவதனால் அஃது ஒர் அறிவுக் களஞ்சியமாகத் திகழுமென்றும், இந்நிலையினை எய்துவதற்கு மொழிபெயர்ப் புக்களும், óፈjህ ዘርOfföö ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற நூல்களும் ஏராளமாக வெளி வருவது இன்றியமையாததென தாய்மொழிப் பற்றினால் உந்தப் பெற்றவர்கள் அழுத்தி வந்தனர். ஆங்கிலத்தில் மருத்துவ நூல்கள் வெளிவருவதற்கு எத்தகைய எதிர்ப் புக்கள் இருந்தனவோ, அதேபோன்று விவிலிய நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்கும் எதிர்ப்பிருந்தது. விவிலிய நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தால் தமது நல வுரிமைகள் பாதிக்கப்படுமென கத்தோலிக்கர் அஞ்சினர். ஆனாலும், இவர்களது எதிர்ப்பு வலுவுள்ளதாய் இருந்த போதிலும், அது முறியடிக்கப்பட்டது. விவிலிய நூல் ஆங் கிலத்திலும் வெளி வந்தது. கத்தோலிக்கரின் தோல்விக்கு மூன்று காரணங்களைக் கூறலாம்: ஒன்று, அச்சியந்திரத்தின் தோற்றம்; இரண்டு, பாமரருக்குக் கல்வி ஊட்டவேண்டும் என்ற வேணவா, மூன்று, மதச் சீர் திருத்தம்.
எண்ணக்கோவைகளை வெளியிடுவதற்கு ஆங்கில மொழி ஏற்றதோர் கருவி என்ற கருத்திற்கு இந்நூற்றாண்டின் இறுதிக் கந்தாயத்தில் எதிர்ப்புத் தோன்றியது. மறுமலர்ச்சிக் காலத்தில் பெருகிக் கொண்டு சென்ற அறிவை ஆங் கிலத்தில் உணர்த்துவதற்கு ஆங்கில மொழியின் சொல் வளம் போதாதெனச் சுட்டிக் காட்டப்பட்டது. இந்தக் குறையை நிவிர்த்தி செய்வதைப் பற்றியும், புதுச் சொற்களை ஆக்குவது பற்றியும் உணர்ச்சி மிகு விவாதங்கள் எழுந்தன. புதுப் புதுப் பொருள்களைக் குறிப்பிடுவதற்குப் போதிய சொற்கள் இல்லையென்று சிலர் அங்கலாய்த்தனர். போதிய கலைச்
盔 57
をジ

Page 31
ataub Gad atas
Egipt group
சொற்கள் இல்லாத குறையை நீக்குவதற்கு சில மொழி பெயர்ப்பாளர் அன்னிய மொழிச் சொற்களை நேரடியாக இறக்குமதி செய்தனர். ஆனால், இம்முறைக்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. பொதுவாக மூன்று முறைகள் கையாளப்பட்டன. அவையாவன: ஒன்று, பிறமொழிச் சொற்களைக் கடன் வாங்கு தல், இரண்டு, பண்டைய சொற்களை மீண்டும் வழக்கில் கொண்டு வருதல்; மூன்று, பழைய வேர்ச் சொற்களை இணைத்து புதுச் சொல்லை ஆக்குதல், பிறமொழிச் சொற் களைத் தேவையெனக் கண்டால் கடன் வாங்க வேண்டு மெனச் சிலர் வாதாடினர். ஆனால், ஹளப் கொம்பின்போன்றோர் பிறமொழிக் கலப்பைக் கடுமையாக எதிர்த்தனர். ஈற்றிலே, நான் மேலே சுட்டிய மூன்று முறைகளில் பிறமொழிச் சொற் களைக் கடன் வாங்கும் \ முறையே எதிர்ப்புகளைத் தோற் கடித்து நிலைபெற்றது. இதனால் ஏற்பட்ட விளைவுகளை நோக்குமிடத்து, ஆங்கில மொழியைப் பொறுத்தவரை பிறமொழிச் சொற்களைக் கடன் வாங்கும் முறையே நல்ல பயனளித்திருக்கின்றது என்பது கண்கூடு. பிற மொழிச் சொற்கள் ஆங்கிலத்திற்கு வளமுட்டி அதன் துரித வளர்ச்சிக்கு உதவின. V
ஒலிப்பு முறைக்கேற்பவே எழுத்திலக்கணம் அமைய வேண்டுமேன அடுத்தபடியாக இயக்கம் தொடங்கப்பட்டது. பதினான்காம் நூற்றாண்டு தொடக்கம் பதினாறாம் நூற் றாண்டு வரை ஆங்கில மொழியின் நிலை மிகவும் குழம்பிய தொன்றாய் இருந்தது. மொழிக்கு வாய்க்கால் வகுக்க வல்ல பேரெழுத்தாளர் இல்லாததே இதற்குக் காரணம், அச்சியந் திரம் புழக்கத்திற்கு வந்ததும், எழுத்திலக்கண முறையிலே யுள்ள நிலையாமை வெளிப்படையாயிற்று. இந்த நிலை அறிவாளிகளின் கவனத்தை ஈர்த்ததில் வியப்பில்லை.
58 一毫

Gణ. கனகரட்னா கிரேக்க எழுத்துக்களை உச்சரிப்பது பற்றி நடந்த சூடான தர்க்கங்களைப் பற்றியும் எழுத்திலக்கணத்தைச் சீர்திருத்து வதற்கு பிரான்சிலே செய்யப்பட்ட முயற்சிகளையும் இவர்கள் அறிந்திருந்தனர். பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குச் சற்று முன்னதாக, ஆங்கில எழுத்திலக் கணத்தைத் திருத்துவதற்கான இயக்கம் தோன்றிச் செழித்தோங்கியது. இவ்வியக்கத்தின் செல்வாக்கு ஒரு தலைமுறைக்கு மேல் நீடித்தது. ஆனால், எல்லோரும் இவ்வியக்கத்தை ஆதரித் தனர் என நினைத்தலாகாது. எடுத்துக் காட்டாக நிச்சர்ட் மல்களப்ரா என்பவர் எழுத்திலக்கணச் சீர்திருத்தத்தை எதிர்த்தார். ஒலிப்பு முறைக்கேற்பவே எழுத்திலக்கணம் அமைய வேண்டும் என்ற கொள்கையை அவர் ஏற்க மறுத் தார். குரலுக்குரிய உறுப்புக்களைப் பொறுத்தவரை எமக் கிடையே வேற்றுமைகள் இருப்பதனாலும், ஒலிகள் எங்கள் ஒவ்வொருவரின் செவிகளில் பதிவதில் வேற்றுமைகள் இருப்ப தனாலும் ஒலியை எழுத்திலக்கணத்திற்கான நிலையான அடித்தளமாய்க் கொள்ள முடியாதென அவர் வாதிட்டார். இதனால் நெடுங்கணக்கிலே எதுவித மாற்றத்தையும் செய் வதை அவர் எதிர்த்தார். எழுத்துக்கள் மரபுக் குறியீடாய்ப் பயன்படுத்துவதில் எதுவித தவறுமில்லையென அவர் விளக் கினார். எவ்வாறு ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள் இருக்கின்றனவோ, அதே போன்று ஒர் எழுத்து பல ஒலிகளைக் குறிக்கலாம் என்றும், இவை மரபு வழியாய் வந்திருப்பதனால் குழப்பமோ மயக்கமோ ஏற்படுவதற்கு இடமில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார். வேண்டுமாயின், தெளிவின் பொருட்டு அழுத்தக் குறியீடுகளைப் பயன்படுத் துவதே சிறந்தது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
பதினாறாம் நூற்றாண்டிலே தோன்றிய எழுத்திலக்கணச்
兹 59

Page 32
ஆங்கிலம் வெற்றி வாகை sigat agawa
சீர்திருத்த இயக்கம் தாய் மொழியின் நிலையினை உயர்த்த வேண்டும் என்ற வேணவாவைக் கோடிட்டுக் காட்டுகின்றது. இதனை நாம் புலே7க்கர் என்பவரிடங் காணலாம். எழுத்திலக் கணச் சீர்திருத்தம் மட்டுமன்று, ஆங்கிலத்திற்கு அகராதியும் இலக்கணமும் தேவைப்படுகின்றன என அவர் கூறினார். அப்பொழுதுதான், இலத்தீனைப் போன்று ஆங்கிலத்திற்கும் “இலக்கண வரம்புடைய மொழி” என்ற பெருமை ஏற்படும் என்று அவர் கருதினார். இலத்தீனுக்கும் கிரேக்க மொழிக்கும் ஆங்கிலம் சற்றேனும் சளைத்த தல்ல என மல்காஸ்ரர் வற் புறுத்தினார். இக்கூற்றிலிருந்து தாய் மொழியைப் பற்றிய கருத்துக்கள் எவ்வாறு மாறி வருகின்றன என்பதை நாம் அவ தானிக்கலாம். பதினாறாம் நூற்றாண்டின் முதல் மூன்று கந்தா யங்களில் ஆங்கிலத்தைப் பற்றி நிலவி வந்த இழிவான எண்ணம் படிப்படியாக மறைய, கடைசிக் கந்தாயத்தில் ஆங்கிலம் இலத்தீன், கிரேக்க மொழிகளைப் போன்று சொல் வன்மை வாய்ந்ததென்ற நம்பிக்கை நிலைபெற்றது. ஆங்கி லத்தின் நிலையை உயர்த்துவதில் கவிதை பெரும் பணியாற்றியதென பாராட்டுப் பெற்றது. இலத்தீன் கிரேக்க யாப்பிலக்கணத்தை, ஆங்கிலக் கவிதைத் துறையில் புகுத்து வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆங்கிலத்திற்குச் சொல் வன்மையை ஏற்றும் பொருட்டே இத்தகைய முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆங்கிலத்திற்கு மெரு கேற்றிய தற்காக எழுத்தாளர் பாராட்டப் பெற்றனர். தாய் மொழியினை ஏற்றி, அதனை அலங்கரித்தலே இலக்கியத்தின் நோக்கம் என அக் காலத்திற் கருதப்பட்டது.
பதினாறாம் நூற்றாண்டின் கடைசிக் கந்தாயத்தில் ஆங்கிலத்தின் சொல்வன்மையில் ஏற்பட்ட புதிய நம்பிக்கை இருவழிகளிலே புலப்படுத்தப்பட்டது: முதலாவதாக, இக்கால
60 - 参

ஏ.ஜே. கனகரட்னா கட்டத்தில் இயற்றப் பெற்ற இலக்கியங்கள் அணியலங் காரங்கள் நிறைந்தனவாய் விளங்கின; இரண்டாவதாக, தாய் மொழி மீது எழுத்தாளருக்கேற்பட்ட தெம்பு அக்காலத்தின் இலக்கியப் போக்கை ஓரளவிற்கேனும் வரையறுத்தது. முதலாம் எலிசபெத் மகாராணியின் காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்களில் நாம் காணும் உற்சாகத் திற்கும் ஆங்கில ஆர்வத்திற்கும் களிப்பிற்கும் வித்திட்டது யாதெனில், அவர்கள் தம் தாய் மொழியின் உள்ளார்ந்த இயல்புகளை முதற் தடவையாகக் கண்டுணர்ந்தமையே.
பதினாறாம் நூற்றாண்டின் இறுதிவரை, ஆங்கில மொழியின் வரலாற்று ரீதியான வளர்ச்சி பற்றி அதிக அக் கறை காட்டப்படவில்லை. ஆனால் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்துடன் நிலைமை மாறியது. பழைமைப் பற் றுள்ளோர் ஆங்கிலமொழியிலேயுள்ள சாக்ஸன் கூறுகளை அழுத்தத் தொடங்கினர். ஜெர்மன் நாடுகளிலே உருவாகிய இயக்கமே இதற்கு வழிகோலியது.
ஜெர்மனிய இனமும் அதன் மொழியும் ஐரோப்பாக் கண்டத்திலே செல்வாக்கும் புகழும் பெற்றவுடன் இங்கிலாந் திலும் அவ்வியக்கம் எதிரொலித்தது. அப்பொழுது தான், தமது இனமும் மொழியும் ‘ரியூடொனிக் இன மக்களில் உயர்ந் தோராய் விளங்கிய சாக்ஸன் மக்களைச் சார்ந்தவை என்ற உண்மையை ஆங்கில எழுத்தாளர் உணரத் தலைப்பட்டனர். இதன் விளைவாக, ஆங்கில மக்களின் மூலத்தன்மையாகிய ‘ரியூடொனிக்’ தன்மையை மாசுபடுத்தியதாக டானிஷ் மக்கள் மீதும், நோர்மனிய மக்கள் மீதும் ஆங்கிலேயரிடையே வெறுப்பு வளர்ந்தது. பிரெஞ்சு சட்டங்களும், சொற்களும், பழக்க வழக்கங்களும் ஆங்கிலேயரினதும் அவர்களது
经
どう
61

Page 33
ஆங்கிலம் வெற்றி வாகை
glau yang
மொழியினதும் தூய்மையைக் கெடுத்து விட்டதென்று ஜோன் ஹெயர் போன்றோர் புலம்பினர். தமது பண்டைய சுதந்திரம், பெருமையாவும் பறிபோய்விட்டன என அங்கலாய்த்தனர்.
ஆங்கில மொழியிலேயுள்ள ஜெர்மனிய கூறுகளைப் பற்றி ஆங்கிலேயரிடையே பெருமை ஏற்பட்டதும், ஓரசைச் சொற் களைப்பற்றிய கருத்தும் மாறியது. பதினாறாம் நூற்றாண்டிலே ஓரசைச் சொற்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் நிலவ வில்லை. ஓரசைச் சொற்கள் ஆங்கில மொழிக்குப் பெரும் இழுக்காய் இருக்கின்றன என்று சிலர் எண்ணினர். ஆனால், அவ்வெண்ணம் இப்பொழுது இல்லை. ‘சாக்ஸன்’ சொற்கள் மீது மோகங் கொண்டிருந்தவர்கள், ஆங்கிலக் கவிதைக்கு ஓரசைச் சொற்களே உகந்தவை என வாதாடினார். மேலும், அந்நிய மொழி களிலிருந்து சொற்களை நேரடியாகக் கையாள்வதிலும் பார்க்க வழக்கிழந்த சொற்களை உயிர்ப் பிப்பதும், பழைய வேர்ச் சொற்களை இணைத்து புதுச்சொற் களை ஆக்குவதுமே மேல் என்னும் எண்ணம் பரவியது. வேர்ச் சொற்களை இணைத்து புதுச்சொற்களை ஆக்கும் முறை செல்வாக்குப் பெற்றதற்குக் காரணம் ‘சாக்ஸன்’ சொற்கள் இம்முறைக்கு இயைபாக இருந்தமையேயாகும்.
இலக்கண வரம்புடைய மொழி' என்ற பெருமை ஆங்கிலத் திற்கேற்பட வேண்டும் என்றால், அகராதிகளும் இலக்கண நூல்களும் பெருக வேண்டும் எனச் சிலர் சுட்டினர். இக்கால கட்டத்தில் பல அகராதிகள் வெளிவந்தன. இதே போன்று பல இலக்கண நூல்களும் வெளிவந்தன. ஆங்கி லத்தை இலத்தின் மொழி மூலமும் கிரேக்க மொழி மூலமும் படிக்கும் வழக்கம் கைவிடப்பட்டு, அம்மொழிகளை ஆங்கில மொழிமூலம் படிப்பது பெருவழக்காயிற்று. இந்த மாற்றத்திற்கு
62 参

ஏ.ஜே. கனகரட்னா
தூய்மைவாதிகள் நடாத்திய இயக்கமே வழிகோலிற்று. இது மட்டுமன்று. அந்நிய மொழிகளைப் படிக்கு முன்பு ஆங்கி லத்தைப் படிக்க வேண்டுமென தூய்மைவாதிகள் வற்புறுத்தி வெற்றியுங் கண்டனர். பதினேழாம் நூற்றாண்டிலே ஆங்கி லத்திற் பல இலக்கண நூல்கள் வெளிவந்தன. ஆங்கி லத்திற்கு இலக்கண வரம்புடைய மொழி என்ற பெருமையைத் தேடித்தரும் பொருட்டு அதற்கு இலத்தின் உருவம் கொடுக்கச் சிலர் முனைந்தனர். ஆனால் ஜோன் வொலிஸ் என்ற தூய்மை வாதி இதனை எதிர்த்தார். இலத்தீன் உருவத்திற்குள் ஆங்கிலத்தைச் சிறைப்படுத்தலாகாது எனக் கூறி. அப்படிச் செய்ய முயன்றவர்களைக் கண்டித்தார். வொலிஸ், தான் இயற்றிய இலக்கண நூலில் ஆங்கிலத்தின் தனித்துவத்தை அழுத்தினார். ஆங்கிலத்தின் வளர்ச்சியையும் அதன் தனித்துவத்தையம் பேணும் பொருட்டு நடாத்தப்பட்ட இயக்கத்திற்குத் தூய்மைவாதிகள் பெரும் ஆதரவாளித் தனர். பதினாறாம் நூற்றாண்டிலே ஆங்கிலத்தின் சொல் வன்மை எவ்வாறு அழுத்தப்பட்டதோ, அதே போன்று பதினேழாம் நூற்றாண்டிலே ஆங்கிலம் பயனுள்ள மொழி என வற்புறுத்தப்பட்டது. ஆங்கிலம் போதனா மொழியாக இருந்தால், கற்க வேண்டியவற்றைச் சொற்பகாலத்திலே எளிதாகக் கற்றுக் கொள்ளலாம் என சினெல் என்பார் கூறினார். பயன் தரவல்ல கல்வி முறையையே தூய்மை வாதிகள் விரும்பினர். மத்திய காலத்திற்குகந்த தன்மை களைப் பல்கலைக்கழகங்கள் களைந்தெறிய வேண்டும் என்றும், வழகொழிந்த மொழிகளைக் கற்பிப்பதை விட்டு விட்டு விஞ்ஞானத்தையும் தொழிற் கல்வியையும் அவை புகட்ட வேண்டுமென்றும் துய்மை வாதிகள் கிளர்ச்சி செய் தனர். சிரமப்பட்டு இலத்தின் போன்ற மொழிகளைப் பயில்

Page 34
ஆங்கிலம் வெற்றி வாகை
sylla ajar
வதில் பயன் எதுவுமில்லை எனத் துய்மை வாதிகள் எண் ணினர். இவ்வாறு இலத்தீன் மதிப்பிழக்க, ஆங்கிலம் ஏற்றம் பெறலாயிற்று.
ஆங்கிலத்தையே எல்லாத்துறைகளிலும் பயன்படுத்த வேண்டுமெனத் தூய்மைவாதிகள் இயக்கம் நடாத்தி வந்தமைக்குப் பல காரணங்கள் உள. அவர்களை உந்திய உட்கோள்கள் சிலவற்றைச் சற்று ஆராய்வோம். தாய் மொழியை எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தினாற்றான் அஃது ஏற்றம் பெறும் என்பதைத் துய்மைவாதிகள் உணர்ந் தனர் . இவ்வாறு பயன்படுத்தினால் அது திறமை மிக்கக் கருவியாக விளங்குமென்றும் அவர்கள் வற்புறுத்தினர். மேலும், அந்நியமொழியை விடத் தாய் மொழி மூலமே எளி தாகக் கற்றுக் கொள்ளலாம் என அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். இலத்தின் போன்ற மொழிகளைக் கற்பதனால் பயனில்லையென்றும், தாய்மொழிக் கல்வி அதிக பயன்தர வல்லது என்றும் அவர்கள் நம்பினார்கள். பள்ளிக் கூடங் களிலும், சட்டம் - மருத்துவம் போன்ற துறைகளிலும் ஆங்கி லமே கையாளப்படல் வேண்டுமெனத் துய்மை வாதிகள் அழுத்தந் திருத்தமாகக் கூறி வந்தார்கள். ஈற்றிலே, இவர்களது இயக்கம் வெற்றி பெற்றது.
மேற் கூறியவற்றிலிருந்து ஆங்கிலம் வெற்றிவாகை சூடியதற்கும் தூய்மைவாதிகளுக்குமிடையே நெருங்கிய தொடர்பிருக்கின்றது என்பது வெள்ளிடை மலை. தூய்மை வாதிகள் மட்டுந்தான் ஆங்கிலத்தை ஆதரித்தனர் என நினைத்தலாகாது. ஆனால், அவர்களே இவ்வியக்கத்திற்கு முதுகெலும்பாய் விளங்கினர். தூய்மைவாதிகள் நடுத்தர வகுப்பினராய் இருந்ததினால், ஆங்கில மொழியின் வளர்ச்சிக்
&
64 一※
どう

ஏ.ஜே. கனகரட்னா கும் வர்க்கப் போராட்டத்திற்குமிடையேயுள்ள தொடர்பும் ஈண்டு குறிக்கற்பாலது. நடுத்தர வகுப்பாரின் வளர்ச்சியுடன் ஆங்கிலத்தின் செல்வாக்கும் வளர்ந்தது. ஈற்றிலே இலத்தின் வீழ்ச்சியுற, ஆங்கிலம் அரியணை ஏறி, அவனி மொழியாக ஏற்றம் பெறலாயிற்று.
经
@ジ up-4 65 ܫ

Page 35
புதிய வர்க்கம் - பொதுவுடைமை அமைப்பினைப் பற்றிய பகுப்பாராய்ச்சி
The New Class
by Milovan Djilas
இன்றைய உலகு இருபெரும் பாசறைகளாகப் பிரிந்திருக்கின்றது. முதலாளித்துவ அமைப்பிலே நம்பிக்கை யுள்ள நாடுகள் அமெரிக்காவின் தலைமையிலே ஒரு கூறா கவும், பொதுவுடைமைப் பற்றுள்ள நாடுகள் ருஷியாவினதும், சீனாவினதும் தலைமையில் மறு கூறாகவும் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன. இத்தகைய சூழ் நிலையில் வளர்ச்சி யடைந்து வரும் சில ஆசிய ஆபிரிக்க நாடுகள் நடுநிலைமை வகிக்க முனைகின்றன. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ, இந்நாடுகள் கூட மறைமுகமாக பக்கஞ் சாரவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது.
நாடுகள் இவ்வாறு பிரிந்துள்ள போது ஒரு சாரார் மற்றவர் களைத் தாக்குவதும் கண்டிப்பதும் இயல்பே. எதிரிகளுக் குள்ளேயே கருத்து வேறுபாடுகளும் பிளவுகளும் ஏற்படும் போது மற்றவர் அதனைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள் வது உலக வழக்கு. இவ்வாறுதான் பொதுவுடைமையைத் தாக்கி ருஷிய நாட்டைச் சேர்ந்த யாராவது நூலை
66

ஏ.ஜே. கனகரட்னா வெளியிட்டால் அமெரிக்காவும் அதனைச் சார்ந்த நாடுகளும் ஆரவாரிக்கின்றன. அது மட்டுமல்ல, அத்தகைய நூல்களை அமெரிக்கா போன்ற நாடுகள் வெளியிடுவதற்கும் முனைந்து நிற்கின்றன. இதற்கமையவே ஸ்டாலின் மகளின் வாழ்க்கை வரலாற்றினை அமெரிக்க வெளியீட்டு நிலையமொன்று விரைவில் வெளியிடவிருக்கின்றது.
ஜிலாசின் ‘புதிய வர்க்கம்" என்னும் நூலை அமெரிக்க வெளியீட்டு நிலையம் ஒன்றே வெளியிட்டது. மார்க்சும் எங்கல் சும் வெளியிட்ட பொதுவுடைமைப் பிரகடனத்திற்கு இந்நூல் எதிர்ப்பிரகடனம் என வெளியீட்டாளர் இதனை வர்ணித்தனர். பொதுவுடைமையினை இந்நூல் சுக்கு நூறாக்குகின்றது என் றெல்லாம் வெளியீட்டாளர் கூறினர். இவ்வர்ணனையில் எத் துணை உண்மையிருக்கின்றதென்பதைப் பின்பு ஆராய்வோம். இந்நூலின் ஆசிரியர் ஜிலாஸ் யார்? ஒரு காலத்திலே யூகோஸ்லாவியாவின் உப ஜனாதிபதியாய் இருந்தவர் ஜிலாஸ். ஆனால், அவருக்கும் ஜனாதிபதி டிட்டோவிற்கு மிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதின் விளைவாக 1955-ல் ஜிலாஸ் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு முடிந் ததும், அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வுச் சம்பளம் நிறுத்தப்பட்டது. அவரும் குடும்பத்தினரும் பல வழிகளிலே துன்புறுத்தப்பட்டனர். இரக சியப் போலிசார் இவர்களை எங்குந் தொடர்ந்து சென்றனர். இவரையும் மனைவியையும் தாக்குவதற்குப் பலர் எத்தனித் தனர். கணவனையும் மனைவியையும் பிரிப்பதற்குக் கூடத் தந்திரங்கள் சில கையாளப்பட்டன. ஒரு நாள் ஜிலாசின் மனைவி தெருவால் சென்று கொண்டிருந்த பொழுது, கூச்சலிட்ட படி ஒரு பெண் அவர் முன்பு வந்து நின்றாள். தான் ஜிலாசின் வைப்பாட்டி என்றும், ஜிலாசிற்கு அவரது மனைவி மணவிலக்கு கொடுக்க வேண்டும் என்றும் இப்பெண் வற்புறுத்தினாள். போலிசார்
经 67
どう

Page 36
புதிய வர்க்கம்
அவ்விடத்திற்கு விரைந்து சென்றனர். பின்பு, இது சம்பந்தமாக வழக்கு நடந்தது. ஜிலாசைச் சந்தித்தவர்களை போலிசார் குறுக்கு விசாரணை செய்ததுடன், அவரை இனிமேல் சந்திக்கக் கூடாதென்றும் ஆணையிட்டனர். சிலரை வேவு பார்க்கும் படியும் போலிசார் துண்டினர். அவருடைய உறவினர் சிலர் வேலைகளிலிருந்து நீக்கப்பட்டனர். ஈற்றிலே ஹங்கே ரியில் சோவியத் படைகள் தலையிட்டபோது, அச்செயலைக் கண்டிக் காததையிட்டு யூகோஸ்லாவிய அரசாங்கம் மீது ஜிலாஸ் கணை தொடுத்தார். இதன் பயனாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேர்ந்தது. பின்பும் ஒரு முறை சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது.
சுரண்டலை ஒழித்து, சமுக ஏற்றத்தாழ்வுகளைக் களைந் தெறிந்து, வர்க்க பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதே மார்க்சீயவாதிகளின் இலட்சியமாகும். பொதுவுடைமை நாடு களிலே, வர்க்கபேதமற்ற சமுதாயம் உருவாக்குவதற்குப் பதில், புதிய வர்க்கம் அங்கு வேரூன்றியுள்ளது என்பதே ஜிலாஸ் வற்புறுத்தும் முக்கிய கருத்தாகும். இதனை ஆராயு முன்பு ஜிலாசின் நூலில் பொதிந்துள்ள மற்றும் பிரதான கருத்துக்களை எடுத்துரைப்பது நன்மை பயக்கும்.
புரட்சிவாதிகளுக்குச் சாதகமாக முடிவுற்ற முதற் புரட்சி பொதுவுடைமைப் புரட்சியே எனக் குறிப்பிடும் ஜிலாஸ், பொது வுடைமைவாதிகள் தமது கொள்கைகளைச் செயற்படுத்த முடியாதிருப்பதால் அவர்களுடைய செயல்களுக்கும் சித்தாந் தத்திற்குமிடையே எப்பொழுதும் முரண்பாடு இருக்கும் என சுட்டிக் காட்டுகின்றார். இவ்வுண்மையைப் பொதுவுடைமை வாதிகள் பகிரங்கமாக ஒப்புக் கொள்ள முடியாததால், தாம் சமுகவுடைமையை உருவாக்குவதாகக் கூறிக் கொண்டு, மக்களை முன்பு எப்போதாவது வரலாறு கண்டறியாத வகையில், சுரண்டுகின்றனர். அரசே பொருளாதார அமைப்பு
68 毫

ஏ.ஜே. கனகரட்னா மீது ஆதிக்கஞ் செலுத்தினால், பொதுவுடைமை அமைப் பினை அரசு முதலாளித்துவம் எனக் கூற முடியும் என்றும், ஆனால் இன்று பொதுவுடைமை நாடுகளிலே அரசு புதிய வர்க்கத்தின் கருவியாக இருப்பதனால் அக்கூற்று பொருந் தாதென்றும் ஜிலாஸ் விளக்குகின்றார். ஆதலால், பொது வுடைமை நாடுகளிலே அரசு முதலாளித்துவம் உருவாகக் கூடிய அறிகுறிகள் தென்பட்டால் அவை வரவேற்க வேண்டிய முற்போக்கான அம்சம் என அவர் கருதுகின்றார். இப்பொழுது புதிய வர்க்கம் கொடுங்கோலோச் சுகின்ற போதிலும், அதன் அழிவுக்கான அம்சங்கள் அதிலேயே அடங்கியுள்ளதாக ஜிலாஸ் கருதுகின்றார். பொருளாதாரத் தைத் தொழில் மய மாக்க வேண்டிய நிர்ப்பந்தமே பொதுவுடைமையை இன்றி யமையாத தாக்கியது. அதே சமயம் இத்தொழில்மயம் பொது வுடைமை ஆட்சி முறையை தேவையற்றதாய் ஆக்குகின்றது என்பது ஜிலாசின் கட்சியாகும். புதிய வர்க்கத்தினரிடையே பிளவுகள் தோன்றி, பின்பு வெவ்வேறு பொதுவுடைமை நாடுக ளுக்கிடையே வேற்றுமைகள் தலையெடுத்து, ஈற்றிலே, பொது வுடைமையின் சர்வாதிகாரம் தகர்த்தெறியப்படுமென அவர் குறிப்பிடுகின்றார்.
அவரது கருத்துப்படி கூட்டுத்தலைமையும், தேசியப் பொதுவுடைமை வாதமும் பொதுவுடைமை சீர் குலைகின்றது என்பதற்கான அறிகுறிகளாம். வர்க்க பேதமற்ற சமுதாயம் என்ற இலட்சியத்திற்கும் தமது வர்க்க ஆதிக்கத்திற்கு மிடையேயுள்ள முரண்பாட்டை புது வர்க்கத்திற்கு சிலர் உணர முற்படுவது பொதுவுடைமையின் வீழ்ச்சியைத் துரிதப் படுத்தும். இக் கட்டத்தில் படை வீரர் சர்வாதிகாரம் ஏற்பட் டால் அது முன்னேற்றமானது என ஜிலாஸ் கருதுகின்றார்.
மேற்கூறப்பட்டவைகளே ஜிலாசின் முக்கிய கருத்துக் களாகும். மார்க்ஸ், கெகலை அடிதலை மாற்றினார் என்று
参 69

Page 37
புதிய வர்க்கம்
கூறுவது வழக்கம். இதே கைங்கரியத்தைத்தான் ஜிலாஸ் மார்க்சுக்கு செய்திருக்கின்றார். பொதுவுடைமைப் புரட்சி, வர்க்கபேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்குப் பதிலாக புதியவர்க்கத்தின் கொடுங்கோன்மைக்கு தவிர்க்க முடியாது வழிகோலுகின்றது என்பது ஜிலாசின் வாதம். இவரது துணிபு மார்க்ஸ் வரையறுத்த மையக் கருத்தை தலைகீழாக்கு கின்றது. எவ்வாறு மேற்கு நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஏகபோக முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் இன்றியமை யாதனவாகினவோ அவ்வாறே மிகப் பின்தங்கிய கிழக்கு நாட்டின் விருத்தியிலே பொதுவுடைமைவாதிகளின் கொடுங் கோன்மையும், சுரண்டலும் தவிர்க்க முடியாதவை என ஜிலாஸ் கூறினார். மார்க்சீயவாதத்தை மறுப்பதற்கு, ஜிலாஸ் மார்க்சீய தர்க்க முறைகளைக் கையாண்டிருப்பது குறிக் கற்பாலது. இயந்திரத்தின் இயக்கத்தைப் போன்று வரலாற்று நிகழ்ச்சிகள் கட்டவிழ்கின்றன என்ற தவறான எண்ணத்தின் சாயலை ஜிலாசிடமும் நாம் அவதானிக்கலாம். ஆனால், வேடிக்கை என்னவெனில் இக்குற்றச்சாட்டையே ஜிலாஸ் பொதுவுடைமை வாதிகள் மீது சுமத்துகின்றார். தமது சொந்த அனுபவங்களைப் பொது நியதியாக்கி, அவை வரலாற்றின் மாற்ற முடியாப் போக் கென பறை சாற்றுபவர்களில் ஜிலாசும் ஒருவர். பின் தங்கிய நாட்டைத் தொழில் மயமாக்குவதற்குப் பொதுவுடைமைப் புரட்சி இன்றியமையாதது என்று ஜிலாஸ் கூறும் போது அவர் யூகோஸ்லாவியா, ருஷியா, சீனா போன்ற நாடுகளிலே நடைபெற்ற நிகழ்ச்சிகளையே கருத்திற் கொள் கின்றார். இப் பின்தங்கிய நாடுகளிலே பொதுவுடைமைக் கட்சியின் புரட்சிக்குப் பின்பே பொருளாதாரம் பெருமளவிலே தொழில் மயமாக்கப்பட்டது. இதைப் பொது நியதியாகக் கொண்டு எல்லா நாடுகளிலும் இவ்வாறுதான் நடை பெறல் வேண்டுமெனக் கொள்ளலாகாது. இந்தியாவிலே
70 参

ஏ.ஜே. கனகரட்னா பொதுவுடைமைப் புரட்சி நிகழாத போதிலும் அங்கு பொரு ளாதாரம் தொழில் மயமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
இதே போன்றுதான் அவருடைய ஏனைய கூற்றுக்களும். புரட்சிகரக் கட்சியிடம் கட்டாயமாகக் கெட்டியான கோட்பாடி ருக்கும். பொதுவுடைமைவாதிகள் அதிகாரத்திற்கு வந்ததும் அவர்கள் சீரழிந்து விடுவார்கள் என்ற கூற்றுகள் சொந்த அனுபவங்களைப் பொது நியதியாக்க விழைவனவே. பொது வுடைமை நாடுகளின் ஆட்சியாளர் சர்வாதிகாரிகளாக விளங் குகின்றனர் எனக் கூறும் ஜிலாஸ், மேற்கத்திய நாடுகள் இவற் றிற்கு எதிர் முரணாய்த் திகழ்கின்றன என்றும் கருதுகின்றார். மேற்கத்திய நாடுகளில் நிலவும் நாடாளுமன்றக் குடியாட்சி முறை பொதுவுடைமை நாடுகளிலும் வேரூன்ற வேண்டும் என்பதே ஜிலாசின் வேணவா.
பொதுவுடைமைப் புரட்சி வர்க்க பேதங்களை ஒழிப் பதற்குப் பதில் புதிய வர்க்கத்தை உருவாக்கியிருக்கின்ற தென்பதே ஜிலாசின் மையக் கருத்து, வர்க்கம் என்ற பதத் தினை மார்க்சின் வரையறைக்கேற்பவே கையாள்வதாக ஜிலாஸ் கூறுகின்றார்.
இப் புதிய வர்க்கத்தின் ஆதிக்கத்திலும் கட்டுப் பாட்டி லுமே நாட்டுமயமாக்கப்பட்ட சொத்துக்கள் யாவும் உள எனக் குறிப்பிடுகின்றார். இவ்வாறெல்லாம் உறுதியாகக் கூறிவிட்டு முன்னுக்குப்பின் முரணான முறையிலே ஜிலாஸ் பின்பு எழுது கின்றார். திறமையுள்ள எவர்க்கும் இப்புதிய வர்க்கத்தில் இட முண்டு என அவர் ஒப்புக்கொள்கிறார். பின்பு இப்புதியவர்க்கம் பொருளாதார அடிப்படையில் எழுந்த வகுப்பன்று என்பதையும் ஒப்புக்கொள்கின்றார். புதிய வர்க்கம் என்ற பதம் ஒரு உருவக மேயன்றி வேறொன்றுமில்லை. ஆனால் இதை ஜிலாஸ் வெளிப்
怨 锣 71

Page 38
புதிய வர்க்கம்
படையாக ஏற்றிருந்தால் அவருடைய நூல் வலு விழந் திருக்கும். ஆனால், ஜிலாஸ் கையாண்ட உருவகம் மிக நுட்ப மான ஓர் உண்மையை உணர்த்துகின்றது. வர்க்க பேதங் களைக் களைந்தெறிவதுதான் புரட்சியின் நோக்கம். ஆனால், புரட்சி வெற்றி பெற்றதும் ஆட்சி பீடத்தில் அமர்பவர்களில் சிலர், பழைய ஆளும் வர்க்கத்தினரின் போக்கையே கடைப் பிடிக்கின்றனர். இவர்களைப் புதிய வர்க்கத்தினர் என்று கூறு வதைவிட பழைய ஆளும் வர்க்கத்தினரின் மிச்சில்கள் என்று சொல்வதே பொருந்தும். இத்தகைய போக்கு இன்னும் ஆட்சி யாளரை விட்டகலவில்லை என்பதே உண்மை.
இவ்வுளப்பாங்கை மாற்றியமைப்பதே சீன கலாசார புரட்சியின் நோக்கங்களில் ஒன்றாகும்.
மேற்கூறியவற்றிலிருந்து ஜிலாசின் நூல் மார்க்சீயவாதத் தினை சுக்கு நூறாக்குகின்றது என்ற கூற்று ஆதாரமற்றது என்பது விளங்கும். ஆனால் ஜிலாஸ் சுட்டிக்காட்டும் சில கசப் பான உண்மைகளைப் பொதுவுடைமை வாதிகள் ஒப்புக் கொண்டேயாக வேண்டும். அப்படிச் செய்ய மறுப்பின் அது முட பக்தியின்பாற்படும் என்பது வெளிப்படை.
n ጎኦ 参

பிரித்தானிய யாப்பு
The British Constitution by H.R.G. Greaves
பிரித்தானிய யாப்பினை விசாரணை செய்யும் அநேக நூல்கள் அதனைச் சட்டக் கண் கொண்டே நோக்குகின்றன. இதனால், பிரித்தானிய யாப்பு சூனியத்திலே இருக்கின்றதோ என்ற மயக்கம் சிலருக்கு ஏற்படலாம். ஆனால் அரசமைப் புக்கள் (பிரித்தானிய யாப்பு உட்பட) அந்தரத் தாமரைகள் அன்று, அவை அந்தந்தச் சமுக அமைப்புக்களின் பிரதி பிம்பங்கள் என்றும், அந்தச் சமுக அமைப்புக்களின் பின்னணி யிலேதான் அவற்றினைச் செவ்வனே புரிந்து கொள்ளுதல் சாலும் என்றும் H.R.G. கிறிவ்ஸ் பிரித்தானிய யாப்பு என்னும் நூலில் வற்புறுத்துகின்றார்.
இவருடைய நோக்கும், பிரித்தானிய யாப்பினை அவர் அணுகும் முறையும் அவரது நூலிற்குத் தனித்துவ முத் திரையைப் பதிக்கின்றன. இவர் கூறும் கருத்துக்கள் புதியன வல்ல. பேராசிரியர் லஸ்கி போன்றவர்கள் இக்கருத்துக்களை

Page 39
பிரித்தானிய யாப்பு
எத்தனையோ தடவைகளில் எடுத்துரைத்திருக்கின்றனர். ஆனால், மாணவர்களுக்கும், பொது வாசகர்களுக்கும் எழுதப்படும் ஆட்சியியல் நூல்கள் வழக்கமாக அரசமைப்புக் களை அவற்றைத் தோற்றுவித்த சமூகப் பின்னணியுடன் தொடர்புபடுத்துவதில்லை. இந்த வகையிலே கிறீவ்ஸின் நூல் சாதாரண ஆட்சியியல் நூல்களிலிருந்து வேறுபட்டதாகவும் குறிப்பிடத் தக்கதாகவும் அமைந்துள்ளது.
பிரித்தானிய யாப்பென்றால் மரபுகளுக்கும் சட்டங் களுக்கும் ஏற்ப இயங்கும் நிறுவனங்களின் தொகுப்பு மட்டு மன்று, அது சமூகத்தின் அரசியற்தோற்றம் என கிறீவ்ஸ் வலி யுறுத்துகின்றார். ஆதலால், பிரித்தானிய யாப்பினைப் புரிவது என்றால் சமுகத்தின் இயல்புகளை நன்கு தெரிந்திருத்தல் வேண்டுமென அவர் சுட்டிக் காட்டுகின்றார். சொத்து யார் யார் கையிலே இருக்கின்றது, தேசீய வருமானம் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகின்றது, உற்பத்திச் சாதனங்கள் யார் வசம் இருக்கின்றன - இவை போன்ற விடயங்களை நன்கு தெரிந் திருந்தாற்றான் பிரித்தானிய யாப்பினைப் புரிந்து கொள்ள முடியும் எனவும் கிறீவ்ஸ் கூறுகின்றார். ஏனெனில் இவைதான் சமுதாயத்திலே உண்மையான அதிகாரத்தினை வரையறுக் கின்றன என அவர் இயம்புகின்றார். மேலும், மக்களின் அறிவுத் தேவைகளும், அக ரீதியான தேவைகளும் எவையென்றும், அவை எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்றும் அறிதல் இன்றி யமையாதது என்கிறார். ஏனெனில், அவை தீர்க்கப்படும் முறை அதிகாரம் எவ்வாறு கையாளப்படுகின்றது என்பதையும் அரசியல் நடவடிக்கைகளையும் நிர்ணயிக்கின்றது.
பிரித்தானிய யாப்பினை அதன் சமூகப் பின்னணியிலே நோக்கும் கிறீவ்ஸ் அவ்வரசமைப்பு உயர் நடுத்தர வகுப்பிற்கு பெரும்பாலும் ஒரு முகமுடியே என்கிறார். இந்த வகுப்பின்

ஆர்.ஜே. கனகரட்னா ஆதிக்கமே பிரித்தானிய அரசமைப்பிற்கு ஒருவகை இணைப்பைக் கொடுகின்றது எனச் சுட்டிக் காட்டுகின்றார். தொழிற் கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்ததின் விளை வாக ஓரளவிற்குச் சமூக ஏற்றத் தாழ்வுகள் குறைந்துள்ள போதிலும், பாராளுமன்றத்தினதும், அமைச்சரவையின் வர்க்க அடிப்படையை இக்கட்சி மாற்றியுள்ள போதிலும், இன்றும் உயர், நடுத்தர வகுப்பே சமுகத்தில் ஆதிக்கம் பெற்றி ருக்கிறது என்கிறார். இவ்வர்க்கமே ஆட்சித்துறையிலும், நீதித் துறையிலும், நிருவாகத் துறையிலும், திருச்சபையிலும், படைத்துறையிலும் உள்ள முக்கிய பதவிகளை வகிக் கின்றது. அந்த வர்க்கமே பத்திரிகைத் துறை யையும், வணிகத் துறையையும், தொழிற் துறையையும் கட்டுப் படுத்துகின்றது. அதுவே அரசியல், சமூக அமைப்புக்களுக் கிடையே இணைப்பை ஏற்படுத்துகின்றது. பொருளாதார வல்லமை உள்ளவர்களுக்குத் தான் அரசியல் அதிகாரம் உண்டு. இவ்வர்க்கமே உயர் குடியினரிடமிருந்து அதி காரத்தைக் கைப்பற்றியுள்ளது. இவ்வர்க்கம் உயர் குடிகளுடன் தொடர்பு கொண்டு இருப்பதுடன், தனக்குச் சற்றுக் கீழே இருக்கும் வர்க்கத்தினரிடமிருந்தும் ஆள் சேர்க்கின்றது. பிரித்தானிய யாப்பு திருப்தியாய் இயங்கு வதற்கு இவ்வர்க்கத்தின் பலமே கால் என கிறீவ்ஸ் விளக்குகின்றார்.
இனி, ஆசிரியர் ஆட்சி நிறுவனங்களைப் பற்றிக் கூறு பவற்றைத் தனித் தனியே பார்ப்போம்.
பிரித்தானிய ஆட்சிமுறையை பாராளுமன்ற முறை எனக் கூறுவது வழக்கம். ஆனால் இப்படிக் கூறுவது தவறான அர்த் தத்தைக் கொடுக்க வல்லது என கிறிவ்ஸ் சுட்டிக் காட்டு கின்றார். பாராளுமன்ற முறை எனும்பொழுது, பொது மக்கள்
参 メ ベ・シー - ・ - ー - 75

Page 40
čišBATøffluu rių
சபையே வழக்கமாக அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவ தென்றும், அமைச்சரவை அதற்குப் பொறுப்பாளி என்றும் கருதுவதற்கு இடமுண்டு. ஆனால், இன்றைய நிலையில் இது பொருத்தமற்றது என ஆசிரியர் விளக்குகின்றார். முன்பொரு காலத்திலே சாதாரண பாராளுமன்ற உறுப்பினருக்கு அதிக செல்வாக்கு இருந்தது உண்மைதான். பரமஸ்ரன், கிளாட்ஸ்ரன், டிஸ்ரேலி போன்ற பெருந் தலைவர்களையே பொது மக்கள் சபை கவிழ்த்த தென்றால் அப்பொழுது சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்த செல் வாக்கு நன்கு புலனாகும். ஆனால், 1885 ஆம் ஆண்டு தொடக்கம் பாராளுமன்றத்தின் பலம் குன்றி, அமைச் சரவையினதும் வாக்காளரினதும் கை ஓங்கியிருக்கின்றது. பாராளுமன்றமல்ல, பொது மக்களே ஓர் அரசாங்கத்தின் தலைவிதியை நிர்ணயிக்க வேண்டும் என்ற கொள்கை இப்பொழுது வேரூன்றிவிட்டது. சாதாரண பாராளுமன்ற உறுப் பினரின் செல்வாக்கு குன்றியதற்குப் பல காரணங்கள் உள. தேர்தல் தொகுதிகளின் அளவும், கட்சியமைப்பு கெட்டியாக்கப் பட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணம். ஆனால், வேறு ஏதுக்களும் உள. 19 ஆம் நூற்றாண்டிலே பாராளுமன்ற உறுப்பினருக்கு சமுகத்திலே தனிப்பட்ட செல்வாக்கிருந்தது. அப்பொழுது அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாததால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வந்தராய் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இதனால் அவர்களுக்குச் சமூகத்தில் மதிப்பும் உண்டு. ஆனால், இன்றோ பாராளுமன்ற உறுப் பினர்க்கு சமுதாயத்தில் தனிப்பட்ட மதிப்பு இருக்கின்றது எனத் துணயவியலாது. மேலும், சட்டாமாக்குதல் இப்பொழுது பெருகியிருப்பதனால், விவாத நேரத்தினைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு. இதுவும் இயல்பாகச்
76
どう

ஏ.ஜே. கனகரட்னா சாதாரண பாராளுமன்ற உறுப்பினரின் செல்வாக்கை மட்டுப்படுத்த உதவியிருக்கின்றது. இத்துடன் தனிப்பட்ட உறுப்பினர்களாற் கொண்டுவரப்படும் முறிகள் சட்டமாவதற்கு அதிக வாய்ப்புக்கள் இல்லை. இப்பொழுது தனிப்பட்ட அங்கத் தவரல்ல, அமைச்சரவையே பெரும்பாலும் சடடங்களை ஆக்குவதற்கு முனைகின்றது. இவை யாவும் சாதாரண உறுப் பினரின் செல்வாக்கினைக் குன்றச் செய்வதற்கு வழி வகுத் திருக்கின்றன.
இவற்றைத் தவிர பாராளுமன்ற உறுப்பினர்களாவ தற்குக் கூடிய வாய்ப்பு பெரும்பாலும் நடுத்தர வகுப்பினருக்கே நடைமுறையில் உண்டு. வணிகத் துறையிலும், தொழிற் றுறையிலும் வேலை பார்க்கும் பணியாளர் அரசியலில் ஈடுபட முடியாதென அவர்களது முதலாளிமார் கட்டுப்பாடு விதிப் பதினாலும், இத்தகைய கட்டுப்பாடுகளை உள்ளூராட்சி மன் றங்களும், அரசாங்கமும், பல்கலைக்கழகங்களும் மேற் கொள்வதனாலும், திறமைமிக்க எத்தனையோ பேருக்கு பாரா ளுமன்ற உறுப்பினர்களாக கடமையாற்றுவதற்கு வாய்ப்புச் சித்திப்பதில்லை. இதுவும் உறுப்பினர்களின் செல்வாக்குக் குன்றுவதற்கு ஒரு காரணம் எனலாம்.
19 ஆம் நூற்றாண்டிலே பொதுமக்கள் சபையில் அங் கத்துவம் வகித்தவர்கள் ஏறக்குறைய ஒரே வர்க்கத் தினராய் இருந்ததினால் அவர்களிடையே பெரும்பாலும் கருத்து ஒற்றுமை நிலவியது. ஆனால், இன்றோ சமுதாயத்திலே நிலவும் வர்க்கப் போராட்டம் பொது மக்கள் சபையிலும் பிரதி பலிக்கப்படுகின்றது. இதுவும் பொது மக்கள் சபையின் செல் வாக்கினனைக் குன்றச் செய்துள்ளது. உறுப்பினர்களுக் கிடையே நிலவும் வர்க்க பேதங்கள் பொது மக்கள் சபை ஒரு சீராய் இல்லாததற்குக் காரணம் என்கிறார் கிறீவ்ஸ்.
参 77

Page 41
* Ğfilbaoafiku la rina
பிரபுக்கள் சபையை அடியோடு மாற்ற வேண்டும் என ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் கூறப்பட்டு வந்த போதிலும், அது இன்னும் உயிர்த்திருக்கிறது. அது மட்டுமல்ல, அண்மையில் நடந்தது போல, தொழிற்கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந் திருக்கும்போது பிரபுக்கள் சபை அதற்கு தொல்லை கொடுக்கவும் வல்லது. பிரபுக்கள் சபையின் வரலாற்றினை நுணுகி ஆராய்பவர், அது செல்வந்தரின் நலவுரிமைகளைப் பேணுவதிலேயே கண்ணுங் கருத்துமாய் இருந்து வந்துள்ளது என்பதனை அவதானிக்கத் தவறமாட்டார் என கிறீவ்ஸ் கூறு கின்றார். எடுத்துக்காட்டாக ஐரிஸ் சுய ஆட்சி பிரச் சினையைக் குறிப்பிடுகின்றார். பிரபுக்கள் சபையிலே ஐரிஸ் நிலக் கிழார்கள் செல்வாக்குப் பெற்றிருந்த மையால் அயர் லாந்திற்குச் சுய ஆட்சி வழங்குவதைப் பிரபுக்கள் சபை எதிர்த்தது. இதனால் ஏற்பட்ட இரத்தக் களரிக்கு இச்சபையே பொறுப்பாளி என கிறீவ்ஸ் கூறுகின்றார். பிரபுக்கள் சபை என்ற ஒன்று இல்லாதிருந்தால் சுய ஆட்சி வழங்கப்பட்ட ஆண்டிற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே கொடுக்கப்பட்டிருக்குமென அவர் சுட்டிக் காட்டுகின்றார். நிலக்கிழார்கள் பிரபுக்கள் சபையிலே செல்வாக்குப் பெற்றிருந்தமையால் நிலபுலங் களைப் பற்றிய சட்டங்களிலே அதிக அக்கறை காட்டியமை வியப்பன்று. தமது நலவுரிமைகள பாதிக்கப்படா வண்ணம் எச்சரிக்கையாய் இருந்தனர். இதற்கு எடுத்துக் காட்டாக பிரபுக்கள் சபை 1907 ஆம் ஆண்டிலும், 1908 ஆம் ஆண்டிலும் நிலப் பெறுமதி மதிப்பீட்டு முறிகளை நிராகரித்தமையைக் குறிப்பிடலாம். இதன் விளைவாக அரசைச் சேர்ந்திருக்க வேண்டிய அதிக வருமானம் நிலக்கிழார்களின் கைகளிலே சிக்கியது. பிரபுக்களுக்குச் சம்பளம் வழங்கப்படாத போதி லும், அவர்களது இத்தகைய நடவடிக்கைகளினால் சமு

ஏ.ஜே. கனகரட்னா தாயம் அதிக நட்டமடைந்தது என கிறிவ்ஸ் உறைப்பாகக் கூறுகிறார். நில புலங்களைப் பற்றி மட்டுமல்ல, தொழில் அதிபர்களினது நலவுரிமைகளைப் பேணுவதிலும் பிரபுக்கள் சபை முனைந்திருக்கின்றது. தொழிற்கட்சி நிலக்கரிச் சுரங்க முறியினை சமர்ப்பித்தபோது பிரபுக்கள் சபை அதைத் தாம தித்து வைத்ததுடன், நிலக்கரிச் சுரங்க சொந்தக்காரர் களாகிய சில பிரபுக்களின் துரண்டுதலின் பேரில் முக்கிய திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும் வற்புறுத்தியது. ஒரே கட்சியும் (பழைமைக் கட்சி), ஒரே வர்க்கமும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றால் ஒழிய, மற்றும்படி பிரபுக்கள் சபை நிலைத்திருப்பதற்கு நியாயம் இல்லை என கிறீவ்ஸ் கூறுகின்றார்.
படைகளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதும் அங்கும் வர்க்க பேதங்கள் நிலவுவதாக கிறீவ்ஸ் கூறுகின்றார். அநேக மாக உயர் பதவிகள் வகிப்பவர்கள் மேல் வர்க்கத்தினர் என்றும், சாதாரண போர் வீரர் கீழ் வகுப்பார் என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார். இதனால் பொதுவாக பிரித்தானியப் படைகள் பழமையைப் பேணும் மனப்பான்மை கொண்டவை என அவர் குறிப்பிடுகின்றார். பழைய சமூக அமைப்பினைப் பேணிப் பாதுகாப்பதற்குப் பிரித்தானியப் படைகள் சிறந்த கருவி என அவர் மேலும் கூறுகின்றார். ஆனால், சமூக அமைப்பிலே அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவர வல்ல ஒரு முற்போக்கான அரசாங்கம் ஆட்சிப்பீடத்தில் அமர்ந் திருக்கும் பொழுது, அதற்கு கீழ்ப்படிந்து பிரித்தானிய படை கள் நடக்குமா என்பது ஐயத்திற்குரியது என கிறீவ்ஸ் அபிப்பிராயப்படுகின்றார். சாதாரண காலங்களிலே பிரித்தா னியப் படைகள் அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்து வந்துள்ள போதிலும், அயர்லாந்து சுய ஆட்சிப் பிரச்சினை
参 79

Page 42
பிரித்தானிய யாப்பு
தோன்றிய பொழுது பிரித்தானியப் படை, குறிப்பாக உயர் அதிகாரிகள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மாறாக நடக்க எத்தனித்தமை ஈண்டு குறிக்கற்பாலது.
நீதிபதிகள், அதுவும் பிரித்தானிய நீதிபதிகள், பக்கம் சாராது நேர்மையாக நடப்பவர்கள் எனப் பொதுவாக நம்பப்படுகின்றது. அவர்களது நேர்மையில் நாம் நம்பிக்கை வைத்திருந்தாலும், அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தமது வர்க்கத்தினைப் பிரதிபலிப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அமெரிக்காவின் உச்ச மன்றத்தின் வரலாற் றினை நாம் அவதானிப்போமாயின் இவ்வுண்மை புலப்படும். அங்கு கடமையாற்றும் நீதியரசர்கள் பொதுவாக இரு குழுக் களாகப் பிரிந்திருப்பர். ஒரு குழு முற்போக்கான சட்டங்களை ஆதிரிப்போராயும், ஏனையவர்கள் பழைமையைப் பேணும் மனப்பான்மை கொண்டோராயும் விளங்குவர். இத்தகைய வர்க்கச் சார்பு பிரித்தானிய நீதிபதிகளிடமும் நிலவுகின்ற தெனக் கிறீவ்ஸ் கூறுகின்றார். இதற்குக் காரணம் நீதிபதிகள் பொதுவாக உயர் வகுப்பைச் சேர்ந்தவராக இருப்பதே. தொழிலாள வர்க்கத்தின் நிலையினை உயர்த்தும் பொருட்டு பாராளுமன்றம் பல சட்டங்களை இயற்றிய பொழுதிலும், அச்சட்டங்கள் முதலாளிகளின் நலவுரிமைகளை நியாயமற்ற முறையில் பாதிக்கின்றன எனக் கருதிய சில நீதிபதிகள் சட்டத்தின் நோக்கத்திற்கு முரணாகத் தீர்ப்புக்கள் அளித்தனர் என கிறீவ்ஸ் சுட்டிக் காட்டுகின்றார்.
பிரித்தானியாவின் கல்வியமைப்பும் சமுதாயத்திலே நில வும் வர்க்க ஏற்றத் தாழ்வுகளை மேலும் வலியுறுத்துகின்றன என கிறீவ்ஸ் அபிப்பிராயப்படுகின்றார். இத்தகைய வர்க்க பேதம் பிரித்தானியாவின் கல்விமுறை முழுவதிலும் ஊடுரு வியிருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். தனிப்பட்ட
80 经

ஏ.ஜே. கனகரட்னா பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களிலிருந்துதான் தொழிற்றுறையிலும், வணிகத்துறையிலும், அரசாங்கத் துறை யிலும் உயர் பதவிகளை வகிப்பவர்கள் பொதுவாகத் தேர்ந் தெடுக்கப்படுகின்றனர். செல்வத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பே இயற்கையானதென மாணவர் களை ஏற்றுக் கொள்ளும்படி இக்கல்வியமைப்பு துண்டுகிறது. இதனால், இக்கல்வியமைப்பு எவ்வாறு பிரித்தானிய அரசி யலைப் பாதிக்கின்றது என்பதனை மேலும் விளக்க வேண்டியதில்லை.
குடியாட்சியிலே பொதுசன அபிப்பிராயம் மிக முக்கியமான ஓர் இடத்தினை வகிக்கின்றது எனக் கூறுவது வழக்கம். இதை ஒரளவிற்காயினும் ஏற்றுக் கொள்ளலாம். இந்தப் பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதில் பத் திரிகைகள் மிக முக்கிய பங்கெடுக்கின்றன என்பதில் ஐய மில்லை. பிரித்தானிய பத்திரிகைத்துறையைப் பொறுத்த வரையில் மிகப் பிரபலமான பத்திரிகைகள் ஒரு சிலரின் கைவசமிருப்பது கண்கூடு. செல்வந்தரின் ஆதிக்கத்தில் பெரும்பாலான பத்திரிகைகள் இருப்பதனால் அவை பிற்போக் கானவையாகவோ அல்லது பழைமையைப் பேணுபவை யாகவோ இருப்பதில் வியப்பில்லையென கிறீவ்ஸ் கூறுகின்றார். இப்பத்திரிகைகளிலிருந்தே மக்கள் பெரும் பாலும் செய்திகளைப் பெறவேண்டியிருப்பதனால் அவை எவ்வாறு மக்களின் அபிப்பிராயங்களை உருவாக்க வல்லன என்பதை விரித்துரைக்க வேண்டியதில்லை. பெரும் பத் திரிகைகளுக்கு இத்தகைய செல்வாக்கு இருப்பதனால் அவர்களுடைய உறவை அரசாங்கங்கள் நாடுவதில் வியப் பில்லை. அமைச்சர்கள் பத்திரிகைச் சொந்தக்காரர்களுடன் உறவாட, நிருவாகிகள் பத்திரிகையாளருடன் தொடர்பு
参
81
D-5

Page 43
பிரித்தானிய யாப்பு
கொள்ள. இதன் விளைவாக முக்கிய சமயங்களிலே பெரும் பாலான பத்திரிகைகளில் வரும் செய்திகளும் தலை யங்கங்களும் ஒத்தவையாக இருக் கின்றன என கிறீவ்ஸ் சுட்டிக் காட்டுகின்றார். பத்திரிகைச் சொந்தக்காரர்களுக்குச் சாதகமான ஓர் அரசாங்கம் ஆளுகையில் அதற்குப் பத் திரிகைகள் பக்க பலமாய் நிற்கும். ஆனால், முற்போக்கான அரசாங்கம் கோலோச்சுகையில் அதற்கு எதிராகப் பொதுசன அபிப்பிராயத்தைத் திரட்டுவதற்கும் இப்பத்திரிகைகள் தயங்கமாட்டா. --
இவ்வாறு கிறீவ்ஸ் ஒவ்வொரு துறையினையும் நுணுகி ஆராய்ந்து சமூக அமைப்பிற்கும் அதற்கும் உள்ள தொடர் பினை விளக்குகின்றார். விரிவு அஞ்சி நான் சில பகுதிகளை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன். அவரது நூலிலிருந்து பிரித்தானிய யாப்பு என்னும் உடலை இயக்கும் உயிரை நன்கு உணர முடிகின்றது.
82 毫

அமெரிக்காவில் இலக்கியம்
Literature lm America by Philip Rahv: An Anthology of Literary Criticism Selected and introduced by Philip Rahv
சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலே தேசீய இலக்கியப் பிரச்சினை தோன்றியமை பலருக்கு நினைவிருக் கலாம். அப்புயல் ஓய்ந்த பின்பு அதனைப் பற்றி ஈண்டு குறிப் பிடுதல் செத்த பாம்பை அடித்தது போல் சிலருக்குப் படலாம். ஆனாலும், அவ்வாறு குறிப்பிடுவதற்குக் காரணமுண்டு. பிரச் சினை தோன்றிய காலத்தில் வாதப் பிரதி வாதங்களுக் கிடையில் அமெரிக்க தேசீய இலக்கியப் பிரச் சினை ஒப்புவமையாகச் சுட்டிக் காட்டப்பட்டது. அமெரிக்க ஒப்பு வமையைச் சற்று விரிவாக ஆராய்தலே இக் கட்டுரையின் நோக்கமாகும். அவ்வாறு செய்வது ஈழத்துத் தேசீய இலக்கியப் பிரச்சினையை விரிவான வரலாற்றுப் பின்னணியில் நோக்குவதற்கு உதவும்.
w نمایی
参 W * . 83

Page 44
அமெரிக்காவில் இலக்கியம்
இங்கிலாந்தும், அமெரிக்காவும் ஒரே மொழியினாற் பிரிக்கப்பட்ட நாடுகளெனக் காலஞ் சென்ற பேணாட் ஷா அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் ஒரு முறை குறிப் பிட்டார். இக்கூற்று நகைச்சுவை ததும்பியதாய் இருப்பினும், அதில் ஆழமான உண்மையும் மண்டிக் கிடப்பதை அவதானிக் கலாம். ஒவ்வொரு நாட்டு இலக்கியத்திற்குந் தனித்துவம் உண்டென்பதை இன்று பொதுவாக எல்லோரும் ஏற்பர். ஆனால், எவ்வாறு ஈழத்திலே தேசீய இலக்கியப் பிரச்சினை தோன்றியபொழுது தேசீய இலக்கியம் என்ற ஒன்று இல்லை எனச் சிலர் வாதிட முனைந்தனரோ அதேபோன்று அமெரிக் காவிலும் ஆங்கில இலக்கியம் ஒன்றுதான் இருக்கின்றது எனச் சில அமெரிக்க எழுத்தாளர்களும், திறனாய்வாளரும் வற்புறுத்தினர். அமெரிக்காவிலே தேசிய இலக்கியப் பிரச் சினை எத்தகைய உருவெடுத்தது என்பதனை நோக்கு வதற்கு முன்பு அன்றைய அமெரிக்க இலக்கிய நிலையினைச் சற்று ஆராய்வது பயனுடைத்து. இதனை ஆராய்வதற்கும் அமெரிக்காவிலே தேசீய இலக்கியப் பிரச்சினை எத்தகைய வடிவம் எடுத்தது என்பதை உய்த்துணர்வதற்கும் அமெரிக்காவில் இலக்கியம் என்னுஞ் சிறந்த தொகுப்பு நூல் பெரிதும் உதவுகின்றது. இதன் தொகுப்பாசிரியர் பிலிப் ராவ் என்பவராவர். இத்தொகுப்பிலே அடங்கியுள்ள கட்டுரைகள் தேசீய அநுபவத்தின் பின்னணியிலே அமெரிக்க இலக்கி யத்தை நோக்குவது குறிக்கற்பாலது.
1835ஆம் ஆண்டிலே ரொக்வேவில் (Tocqueville) என்னும் பிராஞ்சுக்காரர் அமெரிக்க இலக்கிய நிலையைப் பின் வருமாறு வருணித்தார் :
அமெரிக்க வாசகர்களுக்குத் தேவையான பெரும் பாலான நூல்களை இங்கிலாந்தே வழங்குகின்றது. முக்கிய
84 -
どう

ஏ.ஜே. கனகரட்னா மான ஆங்கில நூல்கள் அமெரிக்காவிலே மறு பிரசுரஞ் செய்யப்படுகின்றன. பிரித்தானியாவின் இலக்கிய மேதா விலாசம் அமெரிக்காவின் சந்து பொந்துகளில் ஊடுருவி ஒளிபாய்ச் சுகின்றது. மேலும், அமெரிக்காவிலே சுயமாக ஆங்கிலத்திலே எழுதப்படும் நூல்கள்கூட உள்ளடக்கத் திலும் உருவத்திலும் பிரித்தானிய நூல்களின் நகல் களாகவே அமைகின்றன. அமெரிக்கா குடியாட்சி நாடாக இருந்தபொழுதிலும், அதன் எழுத்தாளர்கள் உயர்குடி ஆட்சி நாடாகிய இங்கிலாந்தின் இலக்கியத்தினையே பின்பற்று கின்றார்கள். அவர்கள் பயன்படுத்தும் வர்ணங்கள் அந்நியமா னவைகளாய் இருப்பதனால், அவர்களுடைய படைப்புக்கள் அவர்களின் சொந்த நாட்டினைச் செவ்வனே பிரதிபலிப் பனவாய் இல்லை. இதனால், அவை மக்களால் அநேகமாகப் பாராட்டப் படுவதில்லை. அமெரிக்க எழுத்தாளரை இங்கிலாந்து அங்கீகரித்த பின்புதான் அமெரிக்க மக்கள் அவர்களை ஒப்புக்கொள்கின்றனர். நிலைமையை உற்று நோக்குமிடத்து அமெரிக்காவிலே இப்பொழுது உண்மையான இலக்கியம் இல்லை என்றே கூறல் வேண்டும். பத்திரிகை யாளர்தான் உண்மையான அமெரிக்க எழுத்தாளர். அவர்கள் பெரும் படிப்பாளிகளாய் இல்லாதபோதிலும் அவர்கள் தம் நாட்டு மொழியினைப் பேசுகின்றனர். மற்றையவர்கள் வெறும் அந்நியர்கள். அமெரிக்கா தனக்கே உரித்தான தனித் தன்மை வாய்ந்த இலக்கியத்தினை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவ்விலக்கியம் இன்றைய இலக்கியத் திலிருந்து வேறுபடுவது திண்ணம்.
கூப்பர் என்னும் அமெரிக்க எழுத்தாளர் 1828 ஆம் ஆண்டிலே அமெரிக்காவிலே நிலவிய இலக்கிய நிலை யினைப் பின்வருமாறு விளக்குகின்றார் :
经 85
どう

Page 45
அமெரிக்காவில் இலக்கியம்
அமெரிக்காவிலே எழுத்தாளனுக்கு முன்பு 'அச்சகன்' தோன்றினான். முதலில் பிரித்தானிய நூல்களை மறுபிரசுரஞ் செய்தலே இவ்வச்சகங்களின் தொழிலாய் அமைந்தது. பின்பு பஞ்சாங்கங்கள், தோத்திர நூல்கள், சமய ஆய்வுக் கட் டுரைகள், பிரசங்கங்கள், அரசியற் கட்டுரைகள், கலை மெரு கற்ற கவிதைகள் போன்றன வெளியிடப்பட்டன. இவை யாவும் அமெரிக்கச் சுதந்திரப் போருக்கு முற்பட்டவை. எழுத்தாளர் களைப் பொறுத்த வரையில், வெளியிடப்படும் நூல்களின் தொகையோடு ஒப்பிடும்போது மிகச் சிலரே அமெரிக்க நாட்டவர். உயிர் வாழ்வதற்காக மூளையை உபயோகிக்க வேண்டியநிலை இல்லாமையே இதற்கு முக்கிய காரணமாகும். தனக்கே சொந்தமான நிலையங்களையும், தனக்கே உரித் தான கொள்கைகளையும் கொண்டிருந்த போதிலும், தனது இலக்கியத்திற்காக அந்நிய தேசத்தினை நம்பியிருக்கும் முதல் நாடு அமெரிக்காவே. ஒரே மொழியைப் பேசி வருவ தினாலும், நீண்ட காலமாகத் தாய் நாட்டிலிருந்து நூல்களை இறக்குமதி செய்து வருவதினாலும், சுதந்திரம் இந்நிலை யினை உடனடியாக மாற்ற முடியவில்லை. அமெரிக்க இலக்கியம் தனது சொந்த நாட்டுச் சந்தைகளிலே பிரித்தானி யரிவின் இலக்கியத்துடன் சமமாகப் போட்டிபோட வேண்டு மாயின் அதற்குப் பண ரீதியான ஆதரவு இன்றி யமையாதது. அமெரிக்க நூல்களுக்குச் சட்டப் பாதுகாப்பு இல்லாத விடத்து தேசிய இலக்கியம் தோன்றுவது தடைப்படும். ஏனெனில், பணம் கொடுக்காமலேயே பிரித்தானிய நூல்களை மறுபிரசுரஞ் செய்யக்கூடிய வாய்ப்பிருக்கும் வரை அமெரிக்க வெளியீட்டாளர் பணம் கொடுத்து அமெரிக்க எழுத்தாளர் களின் படைப்புக்களை வெளியிடப் போவ தில்லை. நூற்றுக்கணக்கான பிரித்தானிய நூல்களை மறுபிரசுரங்

ஏ.ஜே. கனகரட்னா செய்யும் ஓர் அமெரிக்க வெளியீட்டாளர், தான் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புக்களைத் துணிந்து வெளி யிடமாட்டார் என என்னிடம் கூறினார். இதற்குக் காரணம் இரு நாட்டு எழுத்தாளர்களுக்கிடையேயும் இருக்கக்கூடிய இலக் கிய ஏற்றத் தாழ்வன்று. இலக்கியப் பிரசுரத் தொழிலே ஒரு வகை வணிகச் சூதாட்டமாய் இருக்கும் போது ஒரு படைப் பாளிக்குப் பணம் கொடுத்து நூலை வெளியிடுதல் இடர்மிக்க ஒன்றாகும். இதுவே எமது வெளியீட்டாளரின் தயக்கத்திற்குக் காரணமாகும்.
சுயமான அமெரிக்க இலக்கியத்தினையிட்டு எழுந்த வாதப் பிரதிவாதங்களை நோக்கு முன்பு, அமெரிக்கா கற்பனைக்கு வளமுட்டி இலக்கியம் தோன்றுவதற்குத் தக்க நிலைக்களனாய் விளங்க வல்லதா என்ற கருத்துப் போராட்டத்தினைச் சற்று ஆராய்தல் சாலவும் பொருத்த
DIT605.
19 ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த அமெரிக்க எழுத் தளர்கள் பலர் - திறமை மிக்கவர்களும் மட்டமானவர்களும் உட்பட - தமது நாடு கற்பனைக்கு வளமுட்ட வல்லதல்ல என்றும், இலக்கியஞ் செழித்தோங்குவதற்கு நிலைக்களனாய் அமையவில்லை என்றும் அங்கலாய்த்தனர். எழுத்தாளனின் கற்பனைக்கு வேண்டிய மூலப் பொருள்கள் அமெரிக்காவிலே இல்லை எனக் கூப்பர்சுட்டிக் காட்டினார். இதே குற்றச்சாட்டை (627.625/762db (Hawthorne) (62.267 (32 befit (Henry James) சுமத்தினர். இலக்கியத்திற்கு இன்றியமையாத, அமெரிக்கா விலே இல்லாத ஆக்கக் கூறுகள் எவை என்பதை ஜேம்ஸ் பின்வருமாறு வரிசைப்படுத்தினார்: ஐரோப்பாவிலே இருப்பது போன்ற அரசு இல்லை; மன்னன் இல்லை; அரசவை இல்லை: உயர் குடிகள் இல்லை; திருச்சபை இல்லை; அரண்மனைகள்
兹 87

Page 46
gaokass baddhub
இல்லை; ஆசனக் கோவில்கள் இல்லை; புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் இல்லை; பொருட்காட்சிச் சாலைகள் இல்லை: இலக்கியம் இல்லை.
இவ்வாதத்திலேயுள்ள வழுவினை பிலிப் ராவ் சுட்டிக் காட்டத் தவறவில்லை. ஐரோப்பிய இலக்கியத்தினை அமெரிக்காவிலே எழுத முடியவில்லையே என்பதுதான் இவர்களது அங்கலாய்ப்பின் உட்கருத்தென அவர் குறிப்பிடு கின்றார். மேலும், இலக்கியத்தின் ஆக்கக் கூறுகள் திட்ட வட்டமாக வரையறுக்கப்பட்டவை, மாறாதவை என நினைப் பது தவறு என்கிறார். இலக்கியத்திற்கும், உயர் நாக ரிகத்திற்குமிடையே நெருங்கிய பிணைப்புண்டு என்ற கற் பிதமும் தவறு என்கிறார் ராவ். தனது கட்சிக்கு ஆதாரமாக 19 ஆம் நூற்றாண்டிலே ரஷ்யா மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தபோதிலும் புஷ்கின், கெரகோல் போன்ற மாபெரும் எழுத்தாளர் அங்கு தோன்றியமையைச் சுட்டிக் காட்டு கின்றார். ஆக்கக் கூறுகள் இல்லாமல் அல்ல, இருந்த ஆக்கக் கூறுகளைச் செவ்வனே கையாளவல்ல எழுத்தாளர் இன்மையே உண்மையான நிலை என அவர் மேலும் விளக்குகிறார்.
இலக்கியத்திற்கு இன்றியமையாத ஆக்கக் கூறுகள் அமெரிக்காவிலே இல்லை என்ற குற்றச் சாட்டினை எல்லோரும் ஆதரிக்கவில்லை. விற்மன், எமர்சன் போன் றோர்கள் இதை மறுத்துரைத்தனர். அமெரிக்காவே மாபெரும் காவியம் என விற்மன் கூறினார். அமெரிக்காவிலே நிகழ்பவை பெருங்காப்பிய நிகழ்ச்சிகளுக்கு நிகரானவை என்றும், அவற்றைக் கையாளக் கூடிய மேதை இன்னும் அமெரிக் காவிலே தோன்றவில்லை என்றும் 1842 இல் எமர்சன் அங்கலாய்த்தார். அமெரிக்காவிலேயுள்ள ஆக்கக் கூறு
88 盔
どう

ஏ.ஜே. கனகரட்னா களை வரிசைப்படுத்துகையில் அவர் அமெரிக்காவின் அரசி யலையும், அதன் மீன்பிடித்தொழிலையும், நீக்கிரோ மக் களையும், சிவப்பிந்தியரையும், தென் மாகாணத்திலே இருந்த பருத்திப் பண்ணைகளையும் குறிப்பிடுகின்றார். அமெரிக்கா தன் கண்முன்னே ஒரு கவிதையாகத் தோன்றுவதாகவும், தனது நாடு வெகு விரைவிலே பாடல் பெறுவது திண்ணம் என்றும் கூறுகின்றார். எழுத்தாளன் கையாளக்கூடிய ஆக்கக் கூறுகளை எமர்சன் திறமையாக வரிசைப்படுத்திய பொழு திலும், இவ்வாக்கக் கூறுகளை நாட்டுப் பற்று ஊடுருவ வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளது தவறென ராவ் சுட்டிக் காட்டுகின்றார். தேசீய உணர்விலே கருத்து வேற் றுமைகளை ஏற்படுத்துவதிற்றான் ஒரு நாட்டின் இலக்கியப் பெருமை தங்கியிருக்கிறது எனக் குறிப்பிடும் ராவ், நாட்டுப் பற்றையே இலக்கியம் புலப்படுத்துதல் வேண்டும் எனக் கோருவது கற்பனையூற்றுக் கண்களை அடைத்துவிடும் என எச்சரிக்கின்றார்.
உண்மையான அமெரிக்க இலக்கியம் உருவாக்கப்படல் வேண்டும் என இளம் அமெரிக்கக் குழு' வாதிட்டது. இதற்குத் தலைமை தாங்கியவர்கள் டைக்கிங் (Duyckinck), மத்தியூஸ் (Mathews) போன்றவர்கள். இலக்கியத்தைப் பொறுத்த வரையில் அமெரிக்கா குடியேற்ற நாடு என்ற இழிநிலையிலே உள்ளதென டைக்கிங் இடித்துரைத்தார். இதிலிருந்து விடு தலை பெறுவதின் அவசியத்தினை வலியுறுத்திய அவர், தனது தேசீய இலக்கியக் கோட்பாட்டினைப் பின்வருமாறு விளக்கினார்.
தேசிய இலக்கியம் என்னும்போது அமெரிக்க எழுத்தாளர்களையே முதலிற் கருத்திற் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, அமெரிக்கத் தொனிப் பொருள்களை நியாய
参 89

Page 47
அமெரிக்காவில் இலக்கியம் மான அளவிற்கு இலக்கியத்தில் கையாளுதல் வேண்டும். கண்ணாடி போன்று இலக்கியம் ஒரு நாட்டினைப் பிரதி பலித்தல் வேண்டும். வேற்று நாட்டு இலக்கியங்களுக் கிடையே வேறுபாடுகள் இருப்பதை எந்த அறிஞனும் மறுக்க மாட்டான். ஒவ்வொரு நாட்டு இலக்கியமும் தனித்தன்மை வாய்ந்த தனாற்றான் கிரேக்க நாட்டு இலக்கியத்திற்கும், ரோமாபுரியின் இலக்கியத் திற்கும், ஸ்பானிய நாட்டு இலக்கியத்திற்கும், ஜெர்மனிய நாட்டு இலக்கியத்திற்கும், பிராஞ்சு நாட்டு இலக்கியத்திற்கும், பிரித்தானிய நாட்டு இலக்கியத்திற்கு மிடையேயுள்ள வேறுபாடுகளை உய்த் துணர முடிகின்றது. தேசீய இலக்கியம் உருவாக வேண்டும் எனக் குறுகிய நோக்கத்தோடு நாம் வாதிடவில்லை. நூல் களை எரிப்பதோ, ஆசிரியர்களை நாடு கடத்துவதோ எமது நோக்கமல்ல. சிந்தனைப் பேரரசைச் சுருங்கச் செய்வது எமது நோக்கமன்று. எமது எல்லைப் பரப்பையும் அப்பேரரசுடன் இணைப்பதே எமது குறிக்கோள். ஷேக்ஸ்பியர், மில்டன், தாந்தே, கேதே போன்ற உந்நத படைப்பாளிகள் உண்மை யான தேசிய உணர்வோடு தான் எழுதினார்கள். ஆனாலும், அவர்கள் தமது நாட்டிற்கோ, காலத்திற்கோ உரித்தான தொனிப் பொருள்களை மட்டுமே கையாண்டார்கள் என்பதற் கில்லை. மனித குலத்திற்குப் பொதுவானவற்றை அமெரிக்க எழுத்தாளன் தாராளமாகக் கையாளலாம். ஆனால் அமெரிக்கர் என்ற முறையிலே எமது நாட்டிற்கும் நாட்டவர்க்கும் உரித்தானவற்றில் எமது எழுத்தாளர் தனிக் கவனம் செலுத்துதல் வேண்டும். இலக்கியத்திலே கையாளக் கூடிய தொனிப் பொருள்கள் எமது நாட்டிலே இல்லையா? இங்கிலாந்திலே உள்ளது போன்று இங்கும் உணர்ச்சி வேறுபாடுகள் நிலவவில்லையா? இன்ன பொருள்களைத்தான்
90 を

ஏ.ஜே. கனகரட்னா கையாளுதல் வேண்டும் என எழுத்தாளர் களுக்கு நாம் ஆணையிடப் போவதில்லை. மனித குலத்தினதும், இயற்கை யினதும் முழுப் பரப்புகளையும் அவர்களுக்கு விட்டுவிடுகின் றோம். ஆனால், தமது தாய் நாட்டிற்கு அவர்கள் ஊறு விளை வித்தலாகாது. எமது எழுத்தாளர்கள் அந்நிய உருப்படிவங் களுக்கு அடிமைப்படுவதையே நாம் எதிர்க்கிறோம். தொனிப் பொருள்களைத் தேர்ந்தெடுப்பதிலும், அவற்றைக் கையாள் வதிலும் அவர்கள் பிரித்தானியராகவோ ஜெர்மனியராகவோ இருக்கின்றனரேயன்றி அமெரிக்கராக அல்லர்.
இதற்குப் பதிலிறுப்பதுபோல லே7யல் என்பவர் கிண்ட லாகப் பின்வருமாறு எழுதினார் : அமெரிக்கா சுதந்திரம் அடைந்ததும், சுயமான இலக்கியம் இன்றி ஒரு நாடு இருக்க முடியாதென உடனடியாகத் தீர்மானிக்கப்பட்டது. எமக்கு இலக்கியம் இல்லையாம்! ஷேக்ஸ்பியர் எமக்குச் சொந்த மில்லையாம்! ஆனால், இந்தப் பொது முதுசொம் எமக்குத் திருப்தி தரவில்லை. பிரிவினைக்கிடமில்லாததினால், எமக் கென்றே நாடகமும், காப்பியமும் வேண்டும் போலும். அதுவும் தேசிய இலக்கியமாய் இருத்தல் வேண்டுமாம். எமது சொத்தாய் இருத்தல் வேண்டுமாம். அயலவரோடு போட்டி போடுவதற்காகக் குதிரை வண்டி வைத்திருப்பதைப் போன்று எமக்கும் ஓர் இலக்கியம் வேண்டுமாம். புது மொழி ஒன்றிலே வேண்டுமெனக்கூடச் சிலர் வற்புறுத்தினர். ஒரு குறிப்பிட்ட நாளிலே கட்டுரைகளைச் சமர்ப்பிக்குமாறு ஆசிரியர் மாணாக்கர்களுக்கு ஆணையிடுவது போன்று தேசிய இலக்கியத்தினை உருவாக்குமாறு சில விமர்சகர்கள் எம்மைப் பணிக்கின்றனர். மனிதர் என்ற முறையிலே எல்லா நாட்டு மகா கவிஞர்களும் விட்டுச் சென்ற முதுசொத்தில் எமக்கும் பங்குண்டு. ஆதலால், சிந்தனைகளின் ஒட்டத்
参 91

Page 48
seClofitassisið 9aoi fhlub
திற்குத் தடை போடுவதை நாம் எமது திறனாய்விலே அநுமதிக்கலாகாது. இலக்கியத்தில் தேசீயம் என்பது குறுகிய மாகாணப்பற்றும், படுகோமாளித் தனமுமேயன்றி வேறொன்றுமல்ல.
இவ்வாறெல்லாம் கண்டித்த லோயல் தேசீய இலக்கிய வாதிகளின் கோரிக்கையிலே ஓரளவு அடிப்படை உண்மை உண்டு என்பதையும் ஒப்புக் கொள்கின்றார். அமெரிக்காவின் சமூக, அரசியல், இல்லற வாழ்க்கையினை இலக்கியம் செவ்வனே பிரதிபலிக்க வேண்டுமென அவர் வற்புறுத்து கின்றார். அமெரிக்காவிற்கே உரித்தான தொனிப் பொருளைக் கையாளும் போதும் அதற்கு அந்நிய உடை அணிவிப்பதே அமெரிக்க எழுத்தாளரின் தவறு எனச் சுட்டிக் காட்டும் லோயல், இதற்கு மாறாகப் பழைய மாபெரும் எழுத்தாளர் அந்நிய தொனிப் பொருள்களைக் கையாண்ட பொழுதிலும், அவற்றிற்குத் தத்தமது நாட்டு உடைகளை அணிந்தமையைக் குறிப்பிடுகின்றார். எழுத்தாளர் தமது கண்களையும், காதுகளையும் உபயோகித்தல் வேண்டும் என்பதே தேசீய இலக்கியக் கோரிக்கையில் மண்டிக் கிடக்கும் உண்மையென அவர் மேலும் மொழிகின்றார்.
தேசீய இலக்கியத்தினைப் பற்றிய சொற்போர் 19 ஆம் நூற்றாண்டுடன் ஒய்ந்துவிட்டதென எண்ணலாகாது. இந்நூற் றாண்டின் முற்பகுதியிலேகூட இக்கருத்து மோதுதல் நடை பெற்றது. பிரித்தானிய இலக்கியத்திற்கும், அமெரிக்க இலக்கியத்திற்கும் இடையே வேறுபாடுகள் உள என்பதை உயர் மதிப்பான (Genteel) எழுத்தாளர்களும், விமர்சகர்களும் ஒப்பவில்லை. கொப்பூழ்க் கொடியை அறுப்பதை இவர்கள் தொடர்ந்து எதிர்த்ததற்குக் காரணம் இருநாட்டு இலக்கி யங்களுக்கும் இடையே முனைப்பான வேற்றுமைகள்
92 参

ஏ.ஜே. கனகரட்னா இருக்கின்றன என்பதை அறிய அஞ்சியமையே என ராவ் விளக்குகின்றார். 1900 ஆம் ஆண்டிலே அமெரிக்க இலக்கிய வரலாறு என்னும் நூலினை வெளியிட்ட பேராசிரியர் வென்டல் இத்தகைய உயர் மதிப்பான விமர்சகர்களுள் ஒருவர். அவரது நூலிலே மெல்வில், விற்மன் போன்ற சிறந்த அமெரிக்க எழுத்தாளர் புறக்கணிக்கப்பட்டனர். 1920 இலே கூடப் பல் கலைக்கழக வட்டாரங்களிலே அமெரிக்க எழுத்தாளர் புறக் கணிக்கப்பட்டதுடன் தக்கரே டெனிசன்போன்ற பிரித்தானிய எழுத்தாளரே எழுத்தாள மன்னராகப் போற்றப் பட்டனர். பொதுவாக அமெரிக்க எழுத்தாளர் தீண்டத் தகாதவர்' என்ற கருத்து இவ்வட்டாரங்களில் நிலவிற்று.
ஒரு நாட்டினை நிலைக்களனாய் வைத்து அங்கு நிகழும் நிகழ்ச்சிகளையும், வாழும் பாத்திரங்களையும், அவர்களது பேச்சையும், அவர்களது நடையுடை பாவனைகளையும் இலக்கியத்தில் கையாளுதல் மட்டுமே தேசீய இலக்கியம் ஆகாது. ஒரு நாட்டின் இலக்கியம் தனி முத்திரை பெற்றிருத்தல் வேண்டும். இவ்வுண்மையினை வலியுறுத்தும் ராவ், ஜெர்மனியப் படைப்பு மனம் தத்துவ விசாரணைகளில் தோய்ந்திருப்பதாகவும், பிரெஞ்சு மனம் கோட்பாடுகளாற் சிறைப்படுத்தப்படாது அறிவுத் திறனின் பேரார்வத்தினால் உந்தப்பட்டதென்றும், ருஷ்யப் படைப்பு மனம் வாழ்க்கைத் தகவுகளை உருவாக்குவதில் பேரார்வம் கொண்டுள்ள தெனவும் விளக்குகின்றார். ஓர் அடிப்படைத் தொனிப் பொருளும், முலக் கோட்பாடுமே ஒரு நாட்டின் இலக் கியத்திற்குத் தனி முத்திரையைப் பொறித்து அதை, தேசிய இலக்கியமாக்குகின்றது என்பது அவரின் வாதம். இதனை அடித்தளமாய் வைத்து அமெரிக்க இலக்கியத்தின் தனித்துவத்தை எவ்வாறு வெவ்வேறு விமர்சகர்கள்
盔
どう
93

Page 49
அமெரிக்காவில் இலக்கியம்
வரையறுக்கின்றார்கள் என்பதை இனி நோக்குவோம்.
தனிமையிலிருந்து சமுதாய உறுப்பாக மாறுவதையும், கரவின்மையிலிருந்து அநுபவத்தை எய்தும் நிலையினையும், ஐரோப்பிய நூல்கள் கோடிட்டுக் காட்டுவதாக நறிச்சேட் சேஸ் என்பவர் குறிப்பிடுகின்றார். கரவின்மையைப் புறக்கணிக் காவிட்டாலும் சமூக அநுபவத்தின் மூலம் அதனைத் தாண்டு வதே தனியாளின் தவிர்க்க முடியாத பணி என்பதனை ஐரோப்பிய நூலாசிரியர்கள் சுட்டிக்காட்டினார்கள். சமூகம் மாசுபட்டுவிட்ட போதிலும், அது தனியாளை மீட்கவல்ல சக்தி என்ற தொனி அவர்களது படைப்புக்களிலே ஒலிக்கின்றது. ஆனால், அமெரிக்க இலக்கிய மரபோ இதற்கு முற்றிலும் மாறானது என சேனல் விளக்குகின்றார். சமூகத்தின் பிடியி லிருந்து தப்பி, காட்டிலும், கடலிலும், ஆற்றிலும் தன்னிறைவு எய்துமாறு வாலிபனை இப்படைப்புகள் அழைக்கின்றன. கரவின்மையும் சுதந்திரமும் நிறைந்த நிலையினைப் பற்றிய கனவாக அமையும் இந்நூல்கள் நாட்டுப்புற வாழ்க்கையை (Pastoral) விதந்தேத்தும் வகைத்தன. இத்தகைய நூல் களிலே பெண்கள், ஆண்களின் வாழ்க்கைக் கடுமைகளைத் தாங்க முடியாத அப்ஸரசுகளாகவோ அல்லது ஆண்களின் சுதந்திரத்தை அழித்தொழித்து அவர்களைச் சமுதாயத்தின் சம்பிரதாயங்களுக்கு அடிமைப்படுத்தும் அரக்கிகளாகவோ வருணிக் கப்படுகின்றனர் என மேலும் சேஸ் குறிப்பிடுகின்றார். ஆனாலும், உயர் தனி அமெரிக்க நூல்களிலே சமூகம் தற்காலிகமாக உதறித் தள்ளப்பட்ட போதிலும் அது முற் றாகப் புறுக்கணிக் கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார். இவர்களது நூல்களிலே சமூகம் உருவாக்கிய சம்பிரதாயங்களின் நிழல் படியத்தான் செய்கிறது என்கிறார்.
அமெரிக்க இலக்கியத்தை விளக்க விழையும் எச்.பி
94 参

ஏ.ஜே. கனகரட்னா
ப7க்ஸ் என்பவரும் ஏறக்குறைய இதே முடிவிற்கு வருகின்றார். சமூகத்தின் அமுக்கத்திலிருந்து விடுபட்டு ஓட விழை வதையே அமெரிக்க இலக்கியம் (உயர் இலக்கியமும், ஜனரஞ்சக இலக்கியமும்) கோடிட்டுக் காட்டுவதாக அவர் குறிப்பிடுகின்றார். ஜனரஞ்சக இலக்கியத்திலிருந்து இதற்கு ஆதாரமாகப் பல உதாரணங்களை எடுத்துக் காட்டும் அவர், நவீன அமெரிக்க துப்பறியும் நாவல்களும் இதே அமைப்பைக் கொண்டவை என்கிறார். ஊழல் நிறைந்த சமுதாயத்திலே தனிப்பட்ட துப்பறிபவர் நீதிக்கும் அறத்திற்குமாகத் தனித்து நின்று போராடுவதே இத்தகைய நூல்களின் வாய்ப்பாடாகும். வேற்று நாட்டு, குறிப்பாக பிரித்தானிய ஜனரஞ்சக இலக்கியம் இம்முறையிலே அமையாதது ஈண்டு நோக்கற்பாலது என பாக்ஸ் சுட்டிக் காட்டுகின்றார். தனி மனிதனின் நேர்மைக்கும், வாய்மைக்கும் சமூகம் பகைவன் என்ற எண்ணம் ஜனரஞ்சக இலக்கியத்தில் மட்டுமன்று, உயர் அமெரிக்க இலக்கியத் திலும் நிலவுவதாக அவர் குறிப்பிடுகின்றார். எடுத்துக் தாட்டாக மொபி டிக்கையும் (Moby Dick) ஹக்கிபெரிள் வின்னையும் (Huckleberry Finn) சுட்டுகின்றார். இருபதாம் நூற்றாண்டின் அமெரிக்க நாவலாசிரியர்களிலும் இப்போக்கு நிலவுவதாகக் கூறுகிறார். மங்கலகரமான திருமணத்திலே முடிவுறும் காதலையும் அமெரிக்க நாவல்களிலே காண்பது அரிது என்கிறார். இப்பண்பும் அமெரிக்க நாவலாசிரியனை ஐரோப்பிய நாவலாசிரியனிலிருந்து வேறுபடுத்துகின்றது என் கிறார். திருமணம் என்ற பொறி மூலம் நாகரிகம் தனி மனிதனைப் பணியச் செய்து, அவனைச் சீரழிக்கின்றது எனப் பழைய எல்லைப்புற வீரர் கருதினர். இதே கருத்தோட்டத்தை இன்றைய அமெரிக்க நாவலாசிரியர்களினது படைப்புக் களிலும் அவதானிக்கலாம் என்கிறார் 47க்ஸ் தனது வரை
经 95
どう

Page 50
geurofikawasio galakhab
யறை தெற்கு எழுத்தாளர்களுக்குப் பொருந்தாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார். ஆனால், புறநடையாக ஃவோக்னரின் கரடி" என்ற நீண்ட கதையும் பாக்ஸின் வாய்பாட்டிற்குள் அடங்கும் என ராவ் சுட்டிக் காட்டுகின்றார். தான் மரபுரிமை யாகப் பெற்ற பூமியை இக்கதையிலே வரும் முக்கிய பாத்திர மான மக்கசிலின் என்பவர் கைவிடுகின்றார். காட்டைத் திருத்தி கழனியாக்கியதின் நோக்கம் கொள்ளையடித்தலே என்று அவர் உணரத் தலைப்பட்டதும் இவ்வாறு செய்தார். நாகரிகம் என்பது நற்குணங்களையும், கரவின்மையையும் இழத்தலே என்றும், இக்குற்றத்திற்காகத் தகுந்த பரிகாரம் செய்யப்படல் வேண்டும் என்று அவர் எண்ணினார்.
பிலிப் ராவ் அமெரிக்க இலக்கியத்தின் தனித்துவத்தை வேறு கோணத்திலிருந்து வரையறுக்கின்றார். கடுந் தூய்மை வாதத்தின் (Puritanism) விளைவாகப் பழைய அமெரிக்க எழுத்தாளர் அநுபவத்தை நேர் நின்று பார்க்க முடியாதவர் களாய் அதனுடன் 'கண்ணாமூச்சி விளையாடினர் என அவர் குறிப்பிடுகின்றார். விற்மன், ஜேம்ஸ் போன்றவர்களின் காலம் தொடக்கம் அநுபவத்திலே தோய்ந்து, அதில் ஊறித் திளைப்பதையே தனது தலையாய பணியாய் அமெரிக்க இலக்கியம் வரித்துக் கொண்டது என அவர் விளக்கு கின்றார். இதன் விளைவாக தத்துவ அலசல்களையோ, வாழ்க்கையைப் பற்றிய ஆழ்ந்த மதிப்பீடுகளையோ அமெரிக்க இலக்கியத்தில் காண்பது அரிது என்கிறார். ஜேம்ஸினுடைய கதைகளிலே வரும் பாத்திரங்கள் பண்பட்ட உள்ளம் உடையவர்களாயும், நுண்மாண் நுழைபுலன் உள்ளவர்களாயும் விளங்கியபோதிலும், அவர்கள் வாழ்க்கை யின் அடிப்படைப் பிரச்சினைகளை கிரகித்துக் கொள் பவர்களாய் இலரென ராவ் சுட்டிக் காட்டுகின்றார். இதுவே
96 参

ஏ.ஜே. கனகரட்னா அமெரிக்க நாவலுக்கும் ஐரோப்பிய நாவலுக்குமிடையே யுள்ள அடிப்படை வேற்றுமை என்கிறார். பின்னையதில் வாழ்க்கையின் உள்ளார்ந்த தகவும் மானிடனின் தலைவிதி யுமே நாவலாசிரியர்களைக் கவரும் தொனிப் பொருள்களாய் விளங்குகின்றன. இயன்ற அளவிலே அநுபவத்தை சிந்தனை யாக மாற்றுவதன் மூலமே மிகச் செம்மையாக வாழலாம் என மால்றே7 ஒரு சமயம் குறிப்பிட்டார். இஃது அமெரிக்கக் கலை *ஞனுக்கு முற்றிலும் மாறான போக்காகும். அநுபவத்திலே திளைத்திருக்கும் அமெரிக்கக் கலைஞன் அஃது எங்கு அவனை இட்டுச் செல்கின்றதோ, அங்கே செல்கிறான் என ராவ் கூறுகின்றார். இதற்கு எடுத்துக்காட்டாக அமெரிக்க இடது சாரிப் படைப்புக்களைச் சுட்டிக் காட்டுகின்றார். மல்றே7, சிலொனி போன்ற ஐரோப்பிய இடதுசாரி எழுத் தாளர்கள் அரசியற் கோட்பாடுகளையும், இலட்சியங் களையும் ஆழமாகத் தமது எழுத்துக்களிலே ஆராய்ந் தனரென்றும், அமெரிக்க இடதுசாரி எழுத்தாளர்களோ சித்தாந்தத்தில் புலன் செலுத்தாது, வர்க்கப் போராட்டத்தை வெறும் அநுபவமாகவே கருதலாயினர் என்றும் அவர் குடுப்பிடுகின்றார். வெறும் அநுபவத்தையே இலக்கியத் தொனிப் பொருளாகக் கையாளும் போக்கு வலுவிழந்து வருவ தாகவும், சர்வதேசப் பாதிப்புக்களே இனி அமெரிக்க இலக்கி யத்தின் போக்கை நிர்ணயிக்கும் எனவும் அவர் கூறுகின்றார். பழைய பண்பாட்டிலேயிருந்து பெயர்ந்து, புதிய நாட்டிலே குடிபுகுந்தவர்கள் தமது புதிய சூழலை அவதானித்து அதனை இலக்கியத்தில் கையாளத் தொடங்கினர். இ.தே அமெரிக்க எழுத்தாளர் அநுபவத்தில் ஊறித் திளைக்க விழைந்தமையின் உட்கருத்து என்கிறார். அந்தக் கணக் கெடுப்பு முடிந்துவிட்டதனால் பழைய இலக்கியத் தடத்தில்
登= 97

Page 51
saoises saddhub
செல்வதில் இனிப் பயனில்லை எனக் கருதுகின்றனர்.
தெற்கைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தனித் தன்மை வாய்ந்தவர்கள். தமது நாட்டை வடக்கு கைப்பற்றியதன் விளைவாக மரபு வழி வந்த வாழ்க்கை சீரழிந்து தமது நாடு குலைந்தமையே இவ்வெழுத்தாளர்களைக் கவர்ந்திருக்கும் தொனிப்பொருள். இவர்களது படைப்புக்களின் அடிநாதம் தெற்கு மக்களின் கூட்டுக் கற்பனையின் பிரதிபலிப்பே. இது சிலருக்கு வெறும் ஒப்பாரியாகப்படலாம். ஆனால், ஃவோக்னர் போன்ற தலை சிறந்த தெற்கத்திய எழுத்தாளரின் படைப்புக் களிலே சீரழிந்த தாய்நாடு இன்றைய உலகின் உருவகமாகக் காட்சியளிக்கிறது. முதலாளித்துவ சுரண்டலும் மேலோங்கி மரபுகள் எல்லாம் சீர்குலைந்த இன்றைய உலகையே இத்தகைய எழுத்தாளர் தமது தாய் நாட்டின் சீரழிவிற் காண் கின்றனர். ஆதலால், இவர்களது படைப்புக்களை வெறும் குறுகிய பிரதேச இலக்கியம் என நாம் புறக்கணித்தலாகாது. மேலும், இவர்களது தலை சிறந்த படைப்புக்கள் மிகச் சிக்கலானவை என்பது ஈண்டு குறிக்கற்பாலது. இவர்களது தலைசிறந்த படைப்புக்கள் வெறும் ஒப்பாரியாக அமையாமல், தெற்குப் பண்பாட்டிலுள்ள குறைநிறைகளை ஆழமாக ஆராய் வனவாக விளங்குகின்றன. இதற்கு ஃவோக்னரின் நூல்களே சிறந்த எடுத்துக் காட்டாகும்.
இக்கட்டுரையிலே அமெரிக்காவின் தேசிய இலக்கியப் பிரச்சினைக்கும், ஈழத்தின் தேசீய இலக்கியப் பிரச்சினைக் குமிடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் காண நான் விழையவில்லை. அதை வாசகர்களுக்கே விட்டுவிடுகின் றேன். ஒன்றை மட்டும் சுட்ட விரும்புகின்றேன். அமெரிக்க இலக்கியத்திற்குத் தனித் தன்மைகள் இருப்பது போன்று, ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்குத் தனித்தன்மைகள் இல்லை
98 - }

ஏ.ஜே. கனகரட்னா என்பதே உண்மை. வருங்காலத்திலே ஈழத்து இலக்கியம் தனித்தன்மைகள் வாய்ந்ததாய் விளங்குமோ என்பதும் ஐயம். இது வரையிலும் இரு நாட்டு இலக்கியங்களுக்கு மிடையே யுள்ள வேற்றுமைகள் புறம்போக்கானவையே. உள்ளியல்பிலே வேற்றுமைகள் இருப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்க இலக்கியம் அதற்கே உரித்தான தொனியைப் பெற்றிருப் பதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உள. மதச் சுதந்தி ரத்தை விரும்பி ஆங்கிலேயர் சிலர் அமெரிக்காவில் குடியேறி யதுடன், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வெவ்வேறு இனத்தவர் அங்கு சென்றனர். இந்தப் பண்பாட்டுக் கலப்பின் விளை வாகவும், புதிய இயற்கைச் சூழலின் பாதிப்பினாலும் தனித் தன்மை வாய்ந்த அமெரிக்க இலக்கியம் உருவாகுதல் தவிர்க்க முடியாத தாயிற்று. அமெரிக்கனாய் இருப்பது மிகச் சிக்கல் வாய்ந்த தலைவிதி என ஹென்றி ஜேம்ஸ் கூறியமை ஈண்டு நோக்கற்பாலது.
ஈழத்தைப் பொறுத்தமட்டில் இத்தகைய காரணிகள் இல் லாததினாலும், தென்னிந்தியர்க்கும் எமக்குமிடையே சில வேறுபாடுகள் இருந்த போதிலும், எம்மிடையே பொதுப் பண்பு களே மேலோங்கி இருப்பதனாலும், இரு நாட்டு இலக்கியங் களுக்கிடையேயும் புறம்போக்கான வேறுபாடுகளைத் தவிர அடிப்படையான உள்ளார்ந்த அக வேற்றுமைகளை எதிர் பார்க்க முடியவில்லை.

Page 52
மருந்துகள்,வைத்தியர்கள்,
நோய்கள்
Drugs, Doctors and Disease by Brian Inglis
சாதாரண தலையிடிக்கும், காய்ச்சலுக்கும் மேற்கு நாட்டிலே தயாரிக்கப்பட்ட குளிகைகளை நாடுவது இன்று இங்கு பெருவழக்காயிற்று. தடிமன் காய்ச்சலுடன் வைத்தியரி டஞ் சென்றால் சக்தி வாய்ந்த நவீன மருந்துகளையே (modern drugs) அவரும் கொடுப்பார். வானொலியிலும், படத்திரைகளி லும், பத்திரிகைகளிலும் நவீன மருந்துகளைப் பற்றி ஓயாது விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவையின்றி நாம் உயிர் வாழமுடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. மருத் துவத்துறையைப் பொறுத்தமட்டில் நாம் இன்னும் குடியேற்ற நாட்டு நிலையிலேயே இருக்கின்றோம். நாட்டு வைத்திய முறைகளை வளர்ப்பதற்கு அரசாங்கம் ஒரு சில முயற்சி களைக் கையாண்டுள்ள போதிலும், அவை அதிகம் வெற்றி யளிக்கவில்லை. மக்களுட் பலர் மேற்கத்திய வைத்திய முறைகளையே பெரிதும் விரும்புகிறார்கள். இதனால், நாட்டு
100
罗

ஏ.ஜே. கனகரட்னா வைத்தியம் உயிர் வாழ்கின்றதே ஒழிய செழித்தோங்க வில்லை.
மேற்கத்திய மருத்துவ முறை அதிக வெற்றியீட்டிருப் பதனாற்றான் மக்களும், வைத்தியர்களும் அதனைப் பெரிதும் ஆதரிக்கின்றனர் என்றும், இதன் விளைவாக நாட்டு வைத்திய முறைகள் செல்வாக்கிழப்பது தவிர்க்க முடியா ததும் இயல்பானதும் என்றும் பலர் சமாதானங் கூறலாம். மேற் கத்திய மருத்துவம் நோயைக் குணப்படுத்துகின்றதா அன்றி நோயின் அறிகுறிகளை ஒழிக்கின்றதா என்பதனைத் தெளிவு படுத்திக் கொண்டால் இவ்வெற்றியின் இரகசியத்தைப் புரிந்து கொள்ளுதல் சாலும்,
மருந்துகள், வைத்தியர்கள், நோய்கள் என்ற நூலிலே Alouat Ariassifs (Brian Inglis) 6T6irushir (SuDig, BITGS களிலே நவீன மருந்துகள் பற்றியும், அவற்றின் விளைவுகள் பற்றியும், மருந்து உற்பத்தித் தொழில் பற்றியும் ஆராய்ந் துள்ளார். அவர் கண்ட முடிவுகள் மேலே குறிப்பிட்ட வினா விற்கு ஓரளவு விடையாகவும் அமைந்துள்ளது. இந்நூலிற்கு (p6iiuLug5Ta5 96iiiir 77azpy 62ge2aże5 ageżz562zib' (Fringe Medicine) என்ற நூலினை எழுதினார். பிரித்தானியாவிலே இலவச உடல் நலசேவை தேசிய அடிப்படையில் இயங்கி வருகின்ற பொழுதிலும், துளையிட்டு மருத்துவ முறை (Acupuncture) வன்மப்பிடி மருத்துவமுறை (Osteophathy) போன்ற சிறு வழக்கு மருத்துவ முறைகள் ஏன் அங்கு செழித் தோங்கி வளர் கின்றன என்பதனை அந்நூலிலே அவர் ஆராயத் தலைப் பட்டார். மருத்துவர்கள் கட்டுப்பாடற்ற முறையிலே நவீன மருந்துகளைக் கையாளுவதனாற்றான் பல நோயாளிகள் துளையிட்டு மருத்துவர் போன்றவர்களை நாடுகின்றனர்
参 SA AAS S S S S JJAA DD AAS SALSESASS LSeLSS SSASS ' ' -2-Yarraness - 101

Page 53
மருத்துகள், வைத்தியர்கள்,
gais
என்றும், இந் நவீன மருந்துகள் ஒரளவு நன்மையளித்த போதிலும், பல தீமைகளை விளைவிக்கின்றன என்றும் அவர் அந்நூலிலே விளக்கியுள்ளார்.
மருந்துகள், வைத்தியர்கள், நோய்கள் என்ற நூலின் அறிமுகத்தில், ஆசிரியர் இந்நூலினை எழுதத் தூண்டிய சூழ் நிலையை விளக்குகின்றார். இருபதாம் நூற்றாண்டின் ஐந்தாம் தசாப்தத்தின் நடுப்பகுதியில் ரெற்றாசைக்கிளின் என்னும் மருந்து பிரித்தானியாவில் அறிமுகமாயிற்று. அப்பொழுது ஆயிரம் மாத்திரைகளின் விலை 90 பவுணாய் இருந்தது. 1960ல் ஆயிரம் மாத்திரைகளின் விலை 60 பவுணாய்க் குறைந்தது. ஆனால் 1961ல் ஒரு புதிய வணிகக் கம்பெனி இதே மாத்திரை களில் ஆயிரத்தை 6 பவுண் 10 சிலிங்கிற்கு விற்கத் தலைப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி யதுடன், ஒரு வழக்கிற்கும் வழிகோலியது. அப்பொழுது ஆட் சிப்பீடத்தில் அமர்ந்திருந்த பழைமைக் கட்சியின் உடல்நல அமைச்சர், இலவச உடல் நலத்திட்டச் செலவுகளை குறைக்கும் பொருட்டு இப்புதிய கம்பெனியிடமிருந்தே அம்மாத்திரைகளை வாங்கு மாறு ஆணையிட்டார். இதனை எதிர்த்து இம்மாத்திரைக்கென தனிக் காப்புரிமை பெற்றிருந்த கம்பெனி வழக்குத் தொடுத்தது. ஆனாலும், அதனால் வெற்றி யிட்ட முடியவில்லை. மலைக்கும் மடுவிற்குமிடையே உள்ள ஏற்றத் தாழ்வினைப் போன்ற இவ்விலை வித்தியாசத்தினை துருவி ஆராய இந்நூலாசிரியர் முற்பட்டார். அவரது முயற் சிக்கு அமெரிக்க முதவை உபகுழு ஒன்றினால் வெளியிடப் பட்ட அறிக்கை (இது கெவோவர் அறிக்கை என வழங்கும்) பெரிதும் உதவிற்று. பிரித்தானிய மருந்து ஆக்கத் தொழில், நடைமுறையிலே அமெரிக்கக் கம்பெனிகளின் ஆதிக்கத்
102 参

ஏ.ஜே. கனகரட்னா திலே இருப்பதனால் கெவோவர் அறிக்கை பிரித்தானிய மருந்து ஆக்கத் தொழிலுக்கும் பொருந்தும் என நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.
புதிய மருந்துகளைத் தயாரிப்பதற்கு நீண்ட கால ஆராய்ச்சி தேவைப்படுகின்றதென்றும், இதற்குப் பணத்தை வாரி இறைக்க வேண்டியிருக்கின்ற தென்றும், இதனாற்றான் மருந்துகளின் விலை அதிகமாயிருக்கின்ற தென்றும், இத் தகைய ஆராய்ச்சிகளுக்கு தனிக்காப்புரிமை முறையே பெருந் தூண்டுகோலாய் அமைகின்றதென்றும் மருந்து ஆக்கத்தில் ஈடுபடும் கம்பெனிகள் வாதாடுகின்றன. இக்கூற்று களை விரிவாக ஆராயும் பிறையன் இங்கிளிஸ் அவற்றினை ஆதார பூர்வமாக மறுத்துரைக்கின்றார்.
மருந்து ஆக்கத்தொழிலின் வெற்றிக்கு தனிக்காப்பு உரிமை முறை இன்றியமையாதது எனப் பெரும் கம்பெனிகள் வாதாடுவது இயல்பே. அதன் மூலம் அதிக ஆதாயத்தினை அவர்கள் பெறுவதனால் அதனைக் கைவிட அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் தனிக்காப்புரிமை முறையினாலே சமுதாயத்திற்கு நன்மை உண்டா என்பது நோக்கற்பாலதே. தனிக்காப்புரிமை முறை புதிய ஆராய்ச்சிகளுக்கு ஊக்கம ளிக்கும் என்ற வாதம் பொருந்தாததென இங்கிளிஸ் சுட்டிக் காட்டுகின்றார். இதை ஆராய்ந்த கெவோவர் அறிக்கை தனிக்காப்புரிமை முறை இல்லாத நாடுகளிலேயே கூடுத லாகப் புது மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிடு கின்றது. அவர்களுடைய கணிப்பின்படி, தனிக்காப்புரிமை முறையுள்ள நாடுகளிலே புதிதாகத் தயாரிக்கப்படும் ஒவ் வொரு மருந்திற் கும் அத்தகைய காப்புரிமை முறையில்லாத நாடுகளிலே பத்துப் புது மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
盔 103
どう

Page 54
மருந்துகள், வைத்தியர்கள், நோய்கள்
ஆதலால், நடைமுறையிலே தனிக்காப்புரிமை முறை புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தயாரிப்புகளுக்கும் முட்டுக்கட்டை யாய் இருப்பது கண்கூடு என்கிறார் இந்நூலாசிரியர். இதனை விளக்குகையில் சட்ட விதிகள் இந்நடைமுறைக்கு அது சரணையாய் இருக்கின்ற தெனக் குறிப்பிடுகின்றார். காப் புரிமைச் சட்டத்தின்படி தனிக்காப்புரிமையைப் பெறும் கம்பெனி அம்மருந்தைத் தயாரிக்கும் முறையினை வெளி யிடல் வேண்டும். இது போட்டியிடும் மற்ற கம்பெனிகளுக்கு வாய்ப்பளிக்கின்றது. அத் தயாரிப்பு முறையை அடிப்படை யாகக் கொண்டு அந்த மருந்தின் அணுத்திரண்ம அமைப் î6oo6oTěř (Molecular Structure) érsbmy Dasibólgö 25 Dg5 uDutöögis புதிய தயரிப்பு என்க் காப்புரிமை பெற்று விடுகின்றன. ஆதலால், தனிக்காப்புரிமை முறை புதிய ஆராய்ச்சிகளையும் கண்டு பிடிப்புகளையும் துண்டுவதற்குப் பதில் பெரும்பாலும் உருத்திரிபுகளுக்கே வழி கோலியுள்ளது. புதிய மருந்துகள் எனப் பறைசாற்றப்படுபவை பல, உண்மையிலே இத்தகைய உருத்திரிபுகளே. இத்தனிக்காப்புரிமை முறை, மருந்து ஆக்க விருத்திக்குத் தடையாய் இருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக இரண்டாம் உலகப் போர் காலத்திலே, அமெரிக்காவிலே பென்சிலின் தயாரிப்பிற்காக மேற்கொள் ளப்பட்ட நடவடிக்கையின் வரலாற்றினை இங்கிளிஸ் விரித் துரைக்கின்றார். போர் வீரர்களின் உயிரைக் காக்க வல்ல பென்சிலினை பெரிய அளிவிலே தயாரிப்பதில் கம்பெனிகளை ஈடுபடச் செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் முனைந்து அதற்கெனப் பிரித்தானிய ஆராய்ச்சியாளரின் உதவி யினையும் பெற்றுக் கொடுத்த்து. ஆனால், அரசாங்கத்தின் முயற்சிகள் பலிக்கவில்லை. காரணம் பென்சிலினைத் தயா
104 一惨

ஏ.ஜே. கனகரட்னா ரிக்கும் வழி முறைகளிலே தனிக்காப்புரிமையைப் பெற கம்பெனிகள் தமக் குள்ளே போட்டி போட்டமையே. ஒத் துழைப்பிற்குப் பதில் வழி முறைகளை அம்பலமாக்காது தமக்குள்ளே இரகசியமாக வைத்திருப்பதிலேயே அவை கண்ணும் கருத்துமாக இருந்தன. இதனால் எத்தனை உயிர்கள் மாண்டனவோ? இந்த இழி நிலை நீடித்திருக்கும். ஆனால், நற்பேறாக விவசாயப் பகுதியினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பென்சிலினை பெருமளவிலே தயாரிக்கக் கூடிய எளிய முறையினைக் கண்டு பிடித்தனர். வழக் கமாக கண்டுபிடிப்பாளருக்கு பயனிட்டாளர் பணம் செலுத்த வேண்டும் என்ற நியதி உண்டு. ஆனால் இவ்விடயத்திலே அந்த நிர்ப்பந்தம் இல்லாததனால் பென்சிலினைத் தயாரிப்பத்றகு எல்லாக் கம்பெனிகளும் முந்திக் கொண்டன. இவைகளுக் குள்ளே ஏற்பட்ட போட்டியின் விளைவாக விலையும் குறைந்தது.
தனிக்காப்புரிமை முறை இல்லாத விடத்து மருந்து விலைகளும் குறைவாக இருக்கின்றன என கெவோவர் அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. தனிக் காப்புரிமை முறை ஆராய்ச்சியைத் துரண்டி ஈற்றிலே விலை குறைப்பிற்கும் வழிகோலும் என கம்பெனிகளுக்கு ‘வக்கலாத்து வாங்கு பவர்கள்’ கூறுவதுண்டு. ஆனால், உண்மையோ வேறு. தனிக்காப்புரிமை முறை உள்ள நாடுகளிலும் பார்க்க அம்முறை இல்லாத நாடுகளிலே மருந்துகளின் சராசரி விலைகள் குறைவாகவே இருக்கின்றன என கெவோவர் அறிக்கை கூறுகின்றது. அவர் களுடைய புள்ளி விபரங்களின் படி இச்சராசரி விலை வித்தியாசம் 255 வீதத்திலிருந்து 18 வீதம் வரை நிலவிற்று.
毫 105

Page 55
Asah, egotist, Cgrsusselt
தனிக்காப்புரிமை முறை உண்மையான அடிப்படை ஆராய்ச்சிக்கு வழி கோலவில்லை என்றும், விலை குறைப் பிற்கு ஏதுவாயில்லை என்றும் மேலே கண்டோம். கண்டுபிடிப் பாளருக்கும் அது உண்மையான பாதுகாப்பு அளிப்பதாக இல்லை. தனிக் காப்புரிமைச் சட்டங்கள் கம்பெனிகளின் ஆதிக்கத்தினைப் பலப்படுத்தி அவர்களின் கையை ஓங்கச் செய்ததுடன் தனிக்கண்டு பிடிப்பாளருக்கும் இடர் விளை விக்கின்றது. இவர் தனது கண்டு பிடிப்பின் முழுப்பயனையும் அநுபவிப்பதில்லை. கறையான் புற்றெடுக்க பாம்பு குடி கொள்வது போல இவருடைய கண்டுபிடிப்பின் முழுப் பயனையும் கம்பெனிகளே நுகர்கின்றன. கெவோவர் குழுவின் ஆராய்ச்சியின்படி தனிக்காப்புரிமை பெரும்பாலும் கம்பெனி களின் பெயரிலே இருக்குமேயன்றி கண்டுபிடிப்பாளரின் பெய ரில் அன்று. ஆதலால், தனிக்காப்புரிமை முறை கம்பெனி களுக்குப் பெரும் ஆதாயத்தினைப் பெற்றுக் கொடுக் கின்றதே ஒழிய சமுதாயத்திற்கோ, வேறு யாருக்குமோ நன்மை பயப்பதில்லை. அமெரிக்காவிலே ஆண்டிற்கு 200 கோடி டொலர் பெறுமதியான மருந்து ஆக்கத் தொழில் நடைபெறுகின்றது. இதில் 90 வீதம் 22 கம்பெனிகளின் கைப் பிடிக்குள் இருக்கின்றது. இவைகள் ஏனைய தொழில்களில் ஈடுபடும் கம்பெனிகளிலும் இரு மடங்கிற்கு மேலாக இலாபம் ஈட்டுவது குறிப்பிடத்தக்கது. சுருங்கச் சொல்லின் நோயாளி களின் துயரம் இவர்களின் ஆதாயம்.
கோட்பாட்டின்படி முதலாளித்துவ அமைப்பிலே தடை யற்ற போட்டிகள் நிகழ்வதால் விலைகள் குறையும். அதனால் நுகர்வோர் பயன் பெறுவர். ஆனால், நடைமுறையோ இதற்கு முரணாக உள்ளது. இன்றைய முதலாளித்துவ அமைப்பிலே
106 一惨

ஏ.ஜே. கனகரட்னா
பெரிய கம்பெனிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்குவது போன்று இவைகளும் சிறு கம்பெனிகளைத் தம்மோடு இணைத்துப் பலம் பொருந்திய தாபனங்களாய் விளங்குகின்றன. இக்கம் பெனிகள் “கழுத்தறுக்கும் விலைப் போரிலே பெரும்பாலும் ஈடுபடுவதில்லை. மாறாக விளம்பரம் மூலமும், தமது தயாரிப் புகளுக்கு விசேட முத்திரையை ஏற்றுவதன் மூலமும் தமக் குள்ளே போட்டிபோடுகின்றன. மாடுகளுக்குக் குறிசுடுவது போன்று தமது தயாரிப்புகளுக்கும் குறிசுட்டு, விளம்பரம் மூலம் மக்கள் மத்தியிலே அக்குறிகளுக்குத் தனிக் கவர்ச் சியினை ஏற்படுத்து கின்றனர். இவ்வுத்தியின் வெற்றியினை, நம் அன்றாட வாழ்விலே அவதானிக்கலாம். குறிப்பிட்ட வகைப் பால்மா இன்றேல் குழந்தைகளின் பாடு பெரும் பாடாகிவிடும் எனப் பெற்றோரை நம்பப் பண்ணும் அளவிற்கு நவீன முதலாளித்துவத்தின் விளம்பரக்கலை வளர்ந்து விட்டது. இதே உத்தியைத்தான் மருந்து ஆக்கத் தொழிலில் ஈடுபடும் கம்பெனிகளும் கடைபிடிக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக இங்கிளிஸ் ஒரு சுவையான நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றார். கம்பெனிகளுக்கிடையே உண்மையான போட்டி நடை பெறுகி ன்றதா எனக் கண்காணிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் வணிகக்குழு ஒன்றினை நியமித் துள்ளது. போட்டியைக் கட்டுப்படுத்தி நுகர்வோரை “கறப் பதற்காக கம்பெனிகள் இணைவதைத் தடுப்பதே இக்குழுவின் பணி. இக்குழுவினைச் சேர்ந்த ஒர் ஊழியரின் கணவர் ஒரு தடவை வைத்தியரிடம் செல்ல நேரிட்டது. தொண்டை அரிப்பிற்கு மருந்து கேட்கவே வைத்தியரும் அதற்கென ஒரு மருந்தினைக் குறித்துக் கொடுத்தார். இவர்
参 V 107

Page 56
மருத்துகள், வைத்தியர்கள், Egmissst
மருந்துக் கடைக்குச் சென்று அதனை வாங்க விழைந்த போது அதன் விலையைக் கேட்டு திடுக்குற்றார். உடனே வைத்தியருடன் தொடர்பு கொண்டார். அவரும் அதன் விலையைக் கேட்டு அதிசயப்பட்டு வேறு இரு மருந்துகளைத் தகவுரை செய்தார். ஆனால் வேடிக்கை என்னவெனில், அம் மருந்துகளும் அதே விலைதான்! அவற்றைத் தயாரித்தவை வெவ்வேறு கம்பெனிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
. ஆராய்ச்சியிலே பணத்தைப் பெருவாரியாகச் செல* வழிக்க வேண்டியிருப்பதனால் பெரும் ஆதாயம் இன்றி யமையாதது என சில கம்பெனிகள் எடுத்துரைக்கின்றன. உண்மையான அடிப்படை ஆராய்ச்சியினை கம்பெனிகள் பெரும்பாலும் மேற் கொள்வதில்லை என்றும், அவை நடாத்தும் ஆராய்ச்சிகள் சமூகத்திற்கோ, நோயாளிக ளுக்கோ நன்மை பயப்பதைவிட கம்பெனிகளின் ஆதாயத் திற்கே வழிகோலுகின்றன என்றும் ஆசிரியர் இடித்துரைக் கின்றார். ஆராய்ச்சியிலும் பார்க்க விளம்பரத்திலேயே கம் பெனிகள் கூடுதலாகச் செலவழிக்கின்றன என அவர் சுட்டிக் காட்டுகின்றார். இதற்கு ஆதரமாக கெவோவர் அறிக்கையின் புள்ளி விபரங்களைத் தருகின்றார். இருபத்திரண்டு அமெரிக்க கம்பெனிகளின் கணக்கறிக்கைகளின் படி ஒரே யொரு கம்பெனிதான் விளம்பரத்திற்குச் செலவழித்த தொகையில் அரைவாசியினை ஆராய்ச்சிக்குச் செலவிட்டது. மூன்று கம்பெனிகள், விற்பனையால் ஈட்டிய பணதொகையில் பத்து வீதத்தினை ஆராய்ச்சியில் செலவிட, ஏழு கம்பெனிகள் (முன் வரிசைக் கம்பெனிகள் உட்பட) ஐந்து வீதத்திற்குக் குறைவாகவே ஆராய்ச்சியில் செலவிட்டன. மிகுதியான பதினொரு கம்பெனிகளும் ஆராய்ச்சியில் செலவிட்ட தொகை

6g.G3ag. asaoTaGigÜLGOTAr யிலும் பார்க்க ஐந்து தொடக்கம் பத்து மடங்காக விளம்பரத்திலே செலவிட்டன. ஆராய்ச்சியிலும் பார்க்க விளம்பரத்திலே கம்பெனிகள் பணத்தை வாரி இறைத்தன என்பதே கெவோவர் அறிக்கையின் துணிபு.
தமது மருந்துகளை விளம்பரப்படுத்தும் போது கம்பெனிகள் கையாளும் உத்திகளை விபரிக்க ஆசிரியர் தவறவில்லை. ஒரு தடவை ஒரு கம்பெனி தான் தயார் செய்த மருந்தினை விளம்பரப்படுத்திய போது பல வைத்தியர்கள் அளித்த சான்றிதழ்களையும் பாராட்டுகளையும் வெளி யிட்டது. இந்தச் சான்றிதழ்களைப் பற்றி ஐயுற்ற ஒருவர், விளம்பரத்திலே குறிக்கப்பட்ட வைத்தியர்களின் விலாசங் களுடன் தொடர்பு கொள்ள விழைந்தார். அவரது கண்டுபிடிப்பு, அப்பெயர்களைத் தாங்கிய வைத்தியர்கள் இல்லை என்பதே இத்தகைய திருகுதாளங்களால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை முடி மறைப்பதில் அல்லது அதிகம் விளம்பரப்படுத்தாததில் வியப்பில்லை. அப்படிச் செய்யின், அது தற்கொலைக்கு ஒப்பாகும்.
நவீன மருந்துகளால் ஏற்படும் பாதக விளைவுகள் பற்றி மேல் நாட்டிலே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆதாயமே கம்பெனிகளின் முக்கிய குறிக்கோளாய் இருப்ப தனால், பாதக விளைவுகள் பற்றி அத்துணை அக்கறை கொள்ளாது தமது தயாரிப்புகளை விற்க அவை முந்து கின்றன. இப்போக்கிற்கு ‘தலிடோமைட் மாத்திரை நல்ல எடுத்துக் காட்டாகும். பரிசோதனைக்கும் போதிய அவகாசம் கொடுக்காது, அதனைத் தயாரித்த கம்பெனி அதனை விற்க முனைந்தது. கர்ப் பிணிகளுக்கு அதனை வைத்தியர்கள் கொடுத்தனர். விளைவு - அத்தாய்மார் சிலர் ஈன்றெடுத்த
毫 109

Page 57
aspal, apakahtat, Great
குழந்தைகள் அங் கவினர்களாகப் பிறந்தனர். இதே போன்று புதிது புதிதாகத் தயாரிக்கப்படும் எத்தனையோ மருந்துகள் பாதக விளைவு களுக்கு வழி கோலுவதுடன், நோய்க் கிருமிகளுக்கு எதிர்ப்புச் சத்திகளையும் ஊட்டுகின்றன. இதனால் இம்மருந்துகள் பயனற்றுப்போய் விடுகின்றன. வரையறையின்றி இத்தகைய மருந்துகளைப் பயன்படுத் துவதனால், இம்மருந்துகள் இன்றி வாழ முடியாத நிலை சிலருக்கு ஏற்பட்டிருக்கின்றது என அவர் கூறுகின்றனர். இத்துடன் இம்மருந்துகளைப் பரிசோதிக்கும் முயற்சியிலே மனிதர்களும், மிருகங்களும் வீணே இம்சிக்கப்படுவதாக மேலும் சுட்டுகின்றார்.
வைத்தியர்கள் கற்றறிந்தவர்கள்; ஆதலால் அவர்களை எளிதிலே ஏமாற்ற முடியாதென சிலர் நினைக்கலாம். ஆனால், உண்மை நிலை வேறு என ஆசிரியர் விளக்குகின்றார். இன்று மருந்து ஆக்கம் பல்கிப் பெருகியுள்ளது. இந்நிலையில் வைத்தியர்கள் செய்வதறியாது திணறுகின்றனர். கம் பெனிகள் வெளியிடும் பிரசுரங்களே அவர்களுக்குத் தஞ்சம். தாம் தயாரிக்கும் மருந்துகளுக்கு எதிரான செய்திகளை கம் பெனிகள் விரித்துரைக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம். மேலும், சில வைத்தியர்கள் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ கம்பெனிகளிடமிருந்து சலுகைகளையும் . நன்மை களையும் பெறுகின்றனர் என்பதையும் மறுத்த லாகாது. இந் நிலையிலே வைத்தியர்கள் சமுதாயத்தினை கம்பெனிகளின் ‘திருவிளையாடல்களிலிருந்து பாதுகாப்பார் என முழுக்க முழுக்க எண்ணுவது தவறு.
நோய்களின் அடிப்படைக் காரணங்களை ஆராய்வதை விடுத்து, அறிகுறிகளைத் குணப்படுத்தும், அல்லது ஒழிக்கும்
110 参

ஏ.ஜே. கனகரட்னா மருந்துகளைத் தயாரிப்பதிலே கம்பெனிகள் பெரும்பாலும் புலன் செலுத்தியிருக்கின்றன என ஆசிரியர் வற்புறுத்து கின்றார். இதற்கு எடுத்துக்காட்டாக இன்சுலினைக் குறிப் பிடுகின்றார். முதன் முதல் அது தயாரிக்கப்பட்டபோது, அது நீரிழிவுக்கு எமன் என பறைசாற்றப்பட்டது. ஆனால் அக்கூற்று இன்று பொய்ப்பிக்கப்பட்டு விட்டது. கணையக் கோளாறுதான் நீரிழிவுக்கு அடிப்படைக் காரணம் என்ற நம்பிக்கை தவிடு பொடியாகவே, இன்சுலின் நோயின் அடிப்படைக் காரணத்தை அல்ல, அறிகுறியையே குணப்படுத்துகின்றது என்பது புலனாயிற்று. இவ்வாறுதான் பல நவீன மருந்துகள் வெறும் அறிகுறிகளையே குணப்படுத்துகின்றன. இதனால் பாரா துரமான விளைவுகளும் ஏற்படலாம் என ஆசிரியர் எச்சரிக் கின்றார்.
சமுதாயத்தினைப் பாதுகாக்க வேண்டுமாயின் மருந்
தாக்கத் தொழிலை நாட்டுரிமை ஆக்குவதை விட வேறு வழியில்லை. இதனை வற்புறுத்த ஆசிரியர் ஏனோ தவறி
விட்டார். கம்பெனிகளுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்து, அவற்றினை அரசு கண்காணித்தல் நன்மை பயக்கும் என்ற தோரணையிலே ஆசிரியர் தனது நூலுக்கு முத்தாய்பப்பு வைக்கின்றார். சமூகத்தின் நலனை அல்ல, தமது சொந்த ஆதாயத்தினையே குறிக்கோளாகக் கொண்ட முதலாளிகள் வசம் மருந்தாக்கத் தொழிலை இனிமேலும் விடுவது மடமை யிலும் மடமை, சமூக நன்மைக்கும் சொந்த ஆதாயத் திற்குமிடையே எப்போதும் முரண்பாடு இருந்தே தீரும். அது தவிர்க்க முடியாத நியதி. புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா?
ஆ 111

Page 58
திரைப்படம் : கோட்பாட்டுக் கொத்து
Film:
A Montage of Theories by R.D. MacGann
ஆயகலைகள் அறுபத்தி நான்கில் திரைப்படக்கலை இடம் பெறாத போதும் அதுவும் ஒரு கலை என்பதில் இன்று ஐயுறவு இருத்தல் முடியாது. ஆனால், ஆரம்பத்தில் சினிமா வையோ புகைப் படங்களையோ கலை என்று ஏற்றுக் கொள்ளப் பலர் மறுத்தனர். உலகத்தின் தோற்றத்தையும், இயக்கத்தையும் பதிய வல்ல வெறும் கருவிகள் என்றே இவை கருதப்பட்டன. இதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. முதன் முதலில் படம் எடுத்தவர்கள் லூமியர் எடிசன் போன்ற விஞ்ஞானிகளாவர். அவர்கள் தம்மைக் கலைஞர்கள் என்று பறை சாற்றிக் கொள்ளவில்லை. அக்காலத்தில் வாழ்ந்த அழகுக் கலை வல்லுநர் படம்பிடித்தல் வெறும் இயந்திர மயமானது என்றும், அதற்கும் கலைப்படைப்பிற்குமிடையே எதுவித உறவும் இல்லை என்றுங் கருதலாயினர். திரைப்படம் அக்கால விஞ்ஞானிகளைக் கவர்ந்ததோடு சந்தைகளில் குழுமியிருந்த மக்களுக்கு வேடிக்கையாகவும் அமைந்தது. ஆனால், அக்காலத்தின் கலாரசிகர்களை இஃது ஈர்க்க
どう

ஏ.ஜே. கனகரட்னா வில்லை. எத்தனையோ பரிசோதனைகளுக்குப் பின்புதான் சினிமா ஒரு கலையாக மலர்ந்தது; கலாரசிகர்களின் நெஞ்சங்களையுந் தொட்டது.
திரைப்படக்கலையின் தன்மைகளை ஆராயும் எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. திரைப்படம் - கோட்பாட்டுக் கொத்து என்னும் தொகுப்பு நூல் திரைப் படக் கலையின் தனித் தன்மைகளையும், அதற்கும் வேறு கலைக ளுக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் பல்வேறு கோணங்களில் நின்று ஆராய்கின்றது. கட்டுரை ஆசிரியர்கள் முரண்பட்ட கருத்துக் களைத் தெரிவிப்பது உண்மையே ஆயினும், இது தவிர்க்க முடியாதது. கலையைப் பற்றிய கோட் பாட்டினை அறுதியாக வரையறுக்க முடியாது. மேலும், கருத்து மோதல்கள் நுண்ணறிவைத் துண்டி, தெளிவையும் பிறப்பிக்கின்றன. ஆதலால், இத்தகைய தொகுப்பு நூலினை வாசிப்பது திரைப்படங்களை மிக நுட்பமாக நோக்குவதற்குப் பெரிதும் உதவும்.
திரைப்படக் கலையின் தனித்தன்மைகளை உய்த்து உணர்வதற்கு சேர் ஹெபர்ட்றிட்டின் கட்டுரை பெரிதும் உதவு கிறது. கலை, இலக்கிய விமர்சகரான இவ்வாசிரியர் இக்கட் டுரையினை 1932ஆம் ஆண்டிலே எழுதிய போதிலும் இன்றும் அது பொருந்துவதாகவே விளங்குகின்றது. திரைப்படம் கலையா என்று நிர்ணயிப்பதற்கு தேர்ந்தெடுத்தல் நடை பெறுகின்றதா இல்லையா என்ற வினாவிற்கு விடை கண்டால் போதும் என அவர் குறிப்பிடுகின்றார். தேர்ந் தெடுத்தல் என்பது சில அளவு கோல்களின் அடிப்டையிலே நடை பெறுகின்றது. இந்த அளவு கோல்களுக்கு இயைய உணர்ச்சி வெளிப்பாட்டை நிகழ்த்துதலையே அவர் கலை என்கிறார்.
113 −V ܙ . . . . . . " " , .ܝ
どう D-7

Page 59
AsütubTÜUTGÅ GATA
திரைப்படங்களில் இவ்வாறு தேர்ந்தெடுத்தல் நிகழ்வதால் அது சந்தேகமின்றி கலைதான் என அவர் வற்புறுத்துகின்றார். ஒவ்வொரு கலைக்கும் சிறப்பியல்புண்டு. திரைப்படம் கட்புலனை அடிப்படையாகக் கொண்ட கலை. "அசையும் படங்கள், அதாவது, படம் + அசைவு: இதுதான் திரைப் படத்திற்கு செம்மையான, முழுமையான வரையறை என ரீட் குறிப்பிடுகின்றார். கனோடோ என்ற இத்தாலியர், சினிமா வெளியை அடிப்படையாகக் கொண்ட கலைகளினதும் (ஓவியம், சிற்பம், கட்டிடம், நடனம்) காலத்தை அடிப் படையாகக் கொண்ட கலைகளினதும் (இசை, நாடகம், இலக்கியம்) இணைப்பு என்றார். இக்கூற்றை மேற்கோள் காட்டிச் சிலர் திரைப் படக்கலைகளுக்குத் தனித்துவம் இல்லை என நிறுவ விழைகின்றனர். ஆனால், சினிமா மேற்கூறிய கலைகளின் வெறுங் கூட்டுச் சேர்க்கை அன்று. அதற்கென்று சிறப்பியல்புகள் சில இருக்கின்றன. அவை சினிமாவை ஏனைய கலைகளிலிருந்து வேறுபடுத்துகின்றன.
சிற்பம் எவ்வாறு வெளியை அடிப்படையாகக் கொண்டி ருக்கின்றதோ, இசை எவ்வாறு காலத்தை அடிப் படையாகக் கொண்டிருக்கின்றதோ, அதே போன்று திரைப் படம் வெளி காலம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது. வெளி காலத் தொடர் என அதனை ரீட் குறிப்பிட்டுள்ளார். திரைப்படத்தில் நாம் தரிசிக்கும் வெளி-காலத்தொடர், யதார்த்த உலகத்தின் வெளி-காலத் தொடரை ஒத்ததாகக் காட்சியளித்த போதிலும், அஃது உண்மை அன்று. ஏனைய கலைகளைப் போன்று சினிமாவும் ‘மாயையே.
ஒவியன் எவ்வாறு துரிகையினதும் வண்ணக் குழம்பு களினதும் துணை கொண்டு ஒவியத்தைத் திட்டுகின்றானோ,
114 盔
どう

ஏ.ஜே. கனகரட்னா சிற்பி எவ்வாறு உளியைக் கொண்டு சிற்பத்தைச் செதுக்கு கின்றானோ அதே போன்று திரைப்பட நெறியாளன் படம் பிடிக்குங் கருவியைக் கொண்டு, ஒளி என்னும் ‘உளி’யினால் பொருள்களைச் செதுக்கி, அவற்றில் மறைந்திருக்கும் உண்மையை புலப்படுத்துகின்றான் என நீட் மேலும் கூறு .கின்றார். இறைவனின் திருவுருவத்தைக் கல்லிலோ, மரத் திலோ, உலோகங்களிலோ செதுக்கும் சிற்பி அவற்றிலே மறைந்திருக்கும் அவனது வடிவத்தையே புலப்படுத்துகின் றான் என்ற கீழைத் தேச மரபினை ஈண்டு நோக்குதல் தகும். ஒளிதான் நெறியாளனின் ஊடகம்: அவனது கலைத் தெய்வம் எனறிட் வற்புறுத்துகின்றார்.
திரைப்படம் கலையா என்பதை நிர்ணயிப்பதற்கு தேர்ந் தெடுத்தல் நடைபெறுகின்றதா என்பதையே அளவு கோலாக றிட் பயன்படுத்தியதை மேலே கண்டோம். ஆனால், தேர்ந் தெடுத்தல் என்ற பதம் முற்றிலும் பொருத்தமன்று என ஹிட் மேலும் விளக்குகின்றார். அச்சொல் அசைவற்ற தன்மையைச் சுட்டுகின்ற தென்றும், அசையும் தன்மை, எளிதில் உருமாறும் தன்மையே திரைப்படக் கலையின் சிறப்பியல்பு என நீட் வற் புறுத்துகின்றார். இவ்வியல்பினாலேயே திரைப்படங்கள் கலை என்ற நிலைக்கு உயருகின்றன எனக் குறிப்பிடுகின்றார். மூவகையிலே இவ்வியக்கம் நடைபெறுகின்றது. படப்பிடிப்புக் கருவியின் அசைவு, ஒளியின் அசைவு, படம் பிடிக்கப்படும் பொருளின் அசைவு, இம்மூவகை அசைவுகளின் சேர்க்கை யினால் எண்ணற்ற உருவங்கள் பிறக்கலாம். ஒளியின் அசைவே திரைப்படத்தின் தனிச்சிறப்பு என்கிறார் அவர். ஆத லால், ‘தூய வடிவப் படம் ஒளியினாலும், இருளினாலும் ஆக்கப்பெற்ற படைப்பாகும். இத்தகைய படங்கள் ‘துய’
毫 · ቀ15

Page 60
soyiulubகோட்பாடுக் கொத்து
உருவவாதிகளையே திருப்தியுறச் செய்யும் என அவர் கூறுகின்றார். திரைப்பட ஒட்டிணைப்பின் முக்கியத்துவத் தினை அவர் உணர்ந்த போதிலும் (கலை ரீதியாக அதுவே படத்தயாரிப்பில் மிக முக்கியமான கட்டம் எனக் குறிப்பிடு கின்றார்) ஒட்டிணைப்பினால் ஏற்படக்கூடிய அசைவினைச் சுட்டத் தவறிவிட்டார்.
இயக்கம் அல்லது அசைவே திரைப்படக் கலையின் தனி இயல்பாக இருப்பதனால், அது தடைப்படாது பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் றிட், சாதாரணப் பேசும் படத்திலே பேச்சு, இயக்கத்தின் தொடரைக் குலைக்கின்றது எனக் குறிப்பிடுகின்றார். இதன் உண்மையைப் பெரும்பாலான தமிழ்த்திரைப் படங்களில் காணலாம். இத்தகைய படங் களிலே தோன்றும் கதாபாத்திரங்கள் ‘சொல்மாரி" பொழி வார்கள். நாடகத்தின் பாணியைப் பின்பற்றியதாக இஃது அமைகின்றது. இதனால் நாடகத்திற்கும், திரைப்படத்திற்கு முள்ள வேறுபாடுகள் சிதைவுறுவதுடன் சினிமாவின் சிறப் பியல்பான இயக்கம் தடைப்படுகின்றது. இதனாற்றான் பெரும் பாலான தமிழ்ப்படங்கள் படம் பிடிக்கப்பட்ட நாடகங்களாகக் காட்சியளிக்கின்றன. இதே குற்றச்சாட்டை சிலவ்கோ வொர்க் காபிச் என்பவர் அமெரிக்க திரைப்படங்கள் மீதும், ஏனைய நாட்டுத் திரைப்படங்கள்மீதும் சுமத்துகின்றார். பெரும்பாலான படங்கள் படம் பிடிக்கப்பட்ட நாடகங்கள் என்பதே அவரது வாதம். இவற்றிலே படம் பிடிக்கும் கருவியும், ஏனைய கருவி களும் வெறும் பதிவு இயந்திரங்களாகவே பயன்படுத்தப் படுகின்றனவே தவிர, படைப்பாற்றலுடன் அவை கையாளப் படுவதில்லை என அவர் மேலும் விளக்குகிறார். இத்தகைய படைப்பாற்றலுக்கு மிகச் சில திரைப்படங்களே எடுத்துக்
116 --- - - - - - - ❖ · “ “ww. - 毫

ஏ.ஜே. கனகரட்னா காட்டுகள் என அவர் கூறுகின்றார். அவற்றிலும் ஒரு சில கூறுகளே ஏனைய கலைகளின் சாதனைகளுடன் ஒப்பிடக் கூடியவை என்கிறார். ஏறக்குறைய இதே கருத்தை ஹான்ஸ் றிஸ்டர் என்பவரும் எதிரொலிக்கிறார். நாடகங்க ளினதும், நடிகர்களினதும் சாதனைகளையும் நாவல் களையும், இயற்கையையும் பதிவு செய்பவையாகவே திரைப் படங்கள் இருக்கின்றன என அவர் குறிப்பிடுகின்றார். இதனால் பெரும் பாலான படங்களுக்கு சுயமான உருவம் இல்லை என்கிறார். ஆனால், இருவகைப் படங்கள் சுய உருவத்தைப் பெறுவதில் வெற்றியீட்டியிருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார். அவை யாவன: புனையா மெய்விளக்கத் திரைப்படம் (documentary film), பரிசோதனைப் படம். முதல் வகைப் படத்திலே இயற்கையே (மனிதன் உட்பட) படத்தின் கருப்பொருள். இயற்கைக் கூறுகளைத் தேர்ந்தெடுத்து, அகற்ற வேண்டிய வற்றை அகற்றி, அவற்றினை ஒத்திசைப்பதினால் சுய ரூபமுள்ள திரைப்பட வடிவம் உருவாகின்றது என அவர் விளக்குகின்றார். இவ்வடிவம் நாடக, இலக்கிய மரபுகளினால் கட்டுண்டதல்ல. படப்பிடிப்புக் கருவியைப் படியெடுக்கும் வெறும் கருவி என்ற நிலையிலிருந்து விடுவித்த பெருமை பரிசோதனைப் படங்களையே சாரும். இத்தகைய படங்க ளுக்குத் துரண்டு கோலாக இருந்தவர்கள் நவீன ஐரோப்பிய ஒவியர்களாவர். ஒவியம் கட்புலனை அடிப்படையாகக் கொண்டது. ஆதலால் திரைப்படங்களும் கட்புலனை அடிப் படையாகக் கொண்டு இயங்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியதில் வியப்பில்லை. நாடகக் கொட்டகையிலே அமர்ந்திருக்கும் குருடனும், திரைப்படத்தினைப் பார்க்கும் செவிடனும் இரசிக்கக் கூடிய வகையிலே முறையே நாடகமும்
参 117

Page 61
soyiulubகோட்பாடுக் கொத்து
திரைப்படமும் அமைந்திருத்தல் வேண்டும் என நிணி கிளேயர் செப்பியமை ஈண்டு நோக்கற்பாலது.
தொடக்கத்திலே மெளனப்படங்களே தயாரிக்கப்பட்டன. இப்படங்களிற் சில உந்நத கலைப் படைப்புக்களாம். திரைப் படங்களில் ஒலி கையாளப்பட்டதும், இது திரைப்படக் கலை யின் தூய்மையை ஊறுபடுத்தும் என மெளனப்படப் பிரியர்கள் கருதலாயினர். இவர்கள் அஞ்சியமைக்கு ஓரளவு காரணம் இருந்ததும் உண்மை. ஆனாலும், ஒலி, சினிமாவின் தனித் துவத்தைக் களங்கப்படுத்திவிட்டது என்ற கருத்து முற்றிலும் ஏற்புடைத்தன்று. சிறந்த திரைப்படங்களிலே, திரையிலே நாம் காணும் உருவத்திற்கு ஒலி உறுதுணையாக நின்று, அதனுடன் இரண்டறக் கலந்து, சிறப்பிக்கின்றது என்பதை நாம் மறக்கலாகாது. றினி கிளேயர் என்ற பிரெஞ்சு நெறியாளர் மெளனப் படங்களைத் தயாரிக்கத் தொடங்கி, பின்பு பேசும் படங்களையும் தயாரித்தார். ஆதலால், அவர் இப்பொருள் பற்றிக் கூறுவது சிந்தனைக்குரியது. பேசும் படம், ஒலிப்படம் என அவர் இருவகைப்படுத்துகின்றார். முழுக்க முழுக்க பேச் சாக அமையும் படத்தினை அவர் அதிகம் விரும்பவில்லை. ஆனால் ஒலிப்படத்திலோ, ஒலி திரைப்பட வீச்சிற்குப் (Shot) பதிலாகப் பயன்படுத்தப்படுவதினால் நுண்ணிய கலைப் பாதிப்பு ஏற்படுகின்றது என அவர் சுட்டிக் காட்டுகின்றார். இதனைச் சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகின்றார். காதலியோடு கோபித்துக் கொண்டு காதலன் வெளியேறி காரிலே சென்று விடுகின்றான். அவன் செல்வதைக் காட் டாமல், காதலியின் துயரந் தோய்ந்த முகம் மட்டுமே திரையிலே தெரிய, கதவு வேகமாக அடித்து மூடப்படும் ஒலியும், கார் ஒடுஞ் சத்தமும் எம்செவிகளை எட்டுகின்றன.
118

9.08g. saoirsiú air இத்தகைய உத்தி நுணுக்கங்களால் ஒலி எவ்வாறு திரைப் படங்களுக்கு மெருகேற்றுகின்றது என்பதனை நாம் ஊகிக் கலாம்.
திரைப்படக்கலை வளர்ச்சியடைந்து வருங் கலை யாகும். ஆதலால், மெளனப்படங்களையே நிரந்தர அளவு கோல்களாகக் கொள்வது பொருந்தாது என கெவின் லம்பேர்ட் கூறுகின்றார். மெளனப் படங்களுக்கும், பேசும் படங்களுக்குமுள்ள வேறுபாடுகளை ஆராயுமிடத்து, மெளனப் படத்தினைக் கவிதைக்கு ஒப்பிடுகிறார். மெளனப் படத்தில் உருவம் மட்டுமே தெரிகின்றபடியால் அங்கே கவிதைக்குரிய கலைச் செறிவு உண்டு. ஆனால், பேசும் படத்திலே கண்கள் திரையிலே உள்ள உருவத்தினை பார்க்க, காதுகள் பேச்சினையும், ஒலியினையும் கேட்கின்றன. இவற்றால் மெளனப் படத்திலே உள்ள செறிவு அற்றுப் போய் விடுகின்றது. ஆனாலும், வேறு வழிகளிலே பேசும் படங்கள் மேன்மை பெற்றுள்ளன என அவர் சுட்டிக் காட்டுகின்றார். எடுத்துக்காட்டாக பாத்திர வார்ப்புகளை நயத்தோடு சித்தி ரிக்க முடிகின்றது. மேலும், பேசும் படம் கதை அம்சத்தினை கூடுதலாக வற்புறுத்துகின்றது. இத்தகைய மேன்மைகளால் பேசும் படங்கள் சில சமயங்களிலே கவிதா உணர்ச்சிகளை ஊட்டவல்லன. செறிவு - கவிதையிலே நாம் காணும் செறிவு - - பேசும் படங்களிலே இல்லை எனக் குறிப்பிடுகிறார்.
திரைப்படங்கள் வெளி - காலத்தொடர் என்பதனை மேலே கண்டோம். ஆனால், திரைப்படங்களிலே நாம் தரி சிக்கும் வெளி - காலத் தொடர் யதார்த்த வெளி - காலத் தொடரிலிருந்து வேறுபட்டது என்பதனை மறத்தல் ஆகாது. இதனைப் புகழ் பெற்ற ருஷ்ய நெறியாளர் புடோவ்கின் நன்கு
经 119
どう

Page 62
V- ఊపీ"పి தெளிவாக்கு கின்றார். ஒட்டிணைப்பே திரைப்படக் கலையின் அடிப்படை என வற்புறுத்தும் அவர், இயற்கை நிகழ்ச்சிக்கும் அதன் திரைத் தோற்றத்திற்குமிடையே வேற்றுமை உண் டென்றும், அவ் வேற்றுமையே திரைப் படத்தினை கலையாக் குகின்ற தென்றுங் குறிப்பிடுகின்றார். திரைப்பட நெறியாளர் கையாளும் பொருள் யதார்த்த வெளியிலும் காலத்திலும் நடைபெறும் நிகழ்ச்சிகள் அல்ல. அவை படம் பிடிக்கப்பட்ட *செலலோயிட்' துண்டுகளே. இத்துண்டுகளை நெறியாளர் தான் விரும்பியவாறு ஒட்டிணைப்பு செய்ததினால் திரைப் படத்திற்கே உரிய காலத்தொடர் தோன்றுகின்றது. அதே போன்று வெவ்வேறு இடங்களிலே படம் பிடிக்கப்பட்ட கூறு களை ஒட்டிணைப்பதன் மூலம் திரைப் படத்திற்கே உரிய வெளித்தொடர் உருவாகின்றதென புடோவ்கின் வற்புறுத்து கின்றார். ஏறக்குறைய இதே கருத்தைத் தான் கலாநிதி ஆணல்ட் கெளசள் வெளியிடுகின்றார். மேடை நாடகங்களே திரைப்படங்களுக்கு,உருவத்தைப் பொறுத்த வரை ஒத்தவை என்றும், ஆனால் திரைப்படங்களிலே வெளியும் காலமும் கலந்திருப்பது போன்று மேடை நாடகங்களில் நிகழ்வதில்லை என்றுங் குறிப்பிடுகின்றார். ஏனைய கலைகளுக்கும் திரைப் படக் கலைக்கும் இடையேயுள்ள அடிப் படையான வேற்றுமை யாதெனில் திரைப்படங்களிலே வெளி-கால எல்லைகள் நெகிழத் தக்கவையாக இருப்பதே.திரைப்படங்களிலே வெளி, காலத்தன்மையை பெற, காலம் வெளியின் தன்மையைப் பெறு கின்றதென அவர் வற்புறுத்துகின்றார். நவீன திரைப் படங் களிலே காலம் எவ்வாறு கையாளப்படுகின்றதோ அதே போன்று தான் நவீன மேற்கத்திய இலக்கியத்திலும், குறிப் பாக நாவலில், காலம் வரிசை கிரமமாய்க் கையாளப்படாது
120 ܡܫܼܕ 经
どう

ஏ.ஜே. கனகரட்னா திடீரெனத் துண்டிக்கப்பட்டதாய், தொடர்ச்சியாய் இராததாய், காட்சியளிக்கின்றதென கலாநிதி கெளசர் நுட்பமாய் சுட்டிக் காட்டுகின்றார். எலியட் போன்ற கவிஞர்களின் கவிதா உத்தி களும் நவீன திரைப்பட ஒட்டிணைப்பிற்கு ஒத்தன என்பது ஈண்டு குறிக்கற்பாலது.
திரைப்படக் கலை கூட்டுக்கலை என்பதனை கலாநிதி கெளசர் வற்புறுத்துகின்றார். இத்தன்மைக்கும் திரைப்படக் கலை ஒன்றில் மட்டும்தான் சோவியத் ஒன்றியம் திறமை எய்தியிருப்பதற்கும் தொடர்புண்டு என அவர் குறிப்பிடு கின்றார். மேலும், இயந்திரமே திரைப்படக்கலையின் அடிப் படையாக இருப்பதனால், உலகத்திலே மிக இயந்திரமயமான நாடுகளாகிய அமெரிக்காவும் ருஷ்யாவும் திரைப்பட கலையின் வளர்ச்சியில் அதி முக்கிய பங்கு வகித்தமை வியப் பன்று என விளக்குகின்றார்.
திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மக்கள் ஆயிரக் கணக்கிலே செல்கின்றனரே, இவர்கள் திரைப்படங்களை நாடுவதேன்? இவர்களின் மனோநிலை, உளப்பாங்கு என்ன? இத்தகைய பிரச்சினைகளை கியூகோ மோர்கொவ்வர் என்னும் ஜெர்மனிய உளவியலாளர் தனது கட்டுரையிலே ஆராய்கின்றார். அன்றாட வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள்ள முனைவதே மக்களை திரைப்படங்களைப் பார்க்கத் துரண்டுகின்றது என அவர் கூறுகின்றார். அவருடைய கருத்துப்படி சினிமா மனநோய்க்கு பாண்டுவஞ் செய்கின்றது. திரைப்படங்களைப் பார்ப்பதாலே இலட்சக் கணக்கான மக்கள் கவலைகளை மறந்து வாழ்க்கையை சமாளிக் கின்றார்கள். நவீன நாகரிகத்தில் வாழ்க்கை வெறுமை தட்டி விட்டதனால் திரைப்படங்கள் இதனை ஈடுசெய்ய உதவு
参 121

Page 63
ఆరవీడిపిడ్
கின்றன என அவர் கருதுகின்றார். ஒருவன்-சினிமாக் கொட் டகைக்குள் புகுந்ததும் அவனது மனோநிலை மாற்றம் அடைகின்றதென அவர் சுட்டிக் காட்டுகின்றார். அகநிலை ரீதி யாக நோக்கும் இடத்து ஒருவன் பொழுது போக்கிற்காக சினிமாவிற்குச் செல்லலாம். அதனால், அவன் திரைப்படங் களின் பொருளாதார சமூகப் பின்னணி போன்றவற்றைப் பற்றி அக்கறை கொள்ளாதிருக்கலாம். இவற்றைவிட புறநிலைக் காரணிகளும் கூட்டுச்சேருகின்றன என அவர் குறிப்பிடு கின்றார். ஒருவன் சினிமாக்கொட்டகைக்குள் சென்றதும் அவன் வெளி உலகிலிருந்து விடுபடுகின்றான். வெளி உலகத்தின் ஒலிகளும், காட்சிகளும் அவனைப் பாதிப்ப தில்லை. இருள் சூழ்ந்த மண்டபத்திலே அமர்ந்திருக்கையில் அவனது கால உணர்வு மாறுகின்றது. காலம் ஆமை வேகத்தில் நகர்வதாக அவனுக்குப் படுகின்றது. இதே போன்று வெளியின் தன்மையை அவன் உணரும் முறையிலும் மாற்றம் ஏற்படுகின்றது. பொருள்களின் உருவங்கள் தெளி வாகப் புலப்படாததினால் அவனது கற்பனை தன் போக்கிலே செல்வதற்கு அதிக வாய்ப்புண்டு. இதனால் விழிப்பு மனத் திற்கும், அடிமனத்திற்குமிடையே உள்ள தடைகள் அகல் கின்றன. ஆதலால் திரைப்பட அனுபவத்திலே அடிமனத்தின் பங்கினை புறக்கணித்தல் ஆகாது என்று அவர் கூறுகின்றார்.
சினிமாக் கொட்டகையில் வெளிச்சம் அணைந்ததும் அங்கு அமர்ந்திருப்பவர்களின் உளப் பாங்கு மாற்றம் அடை கின்றது. இருளினால் கால - வெளி உணர்வுகளில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக அங்கு குழுமியிருப்பவர்களிடையே சலிப்புணர்ச்சி ஏற்படுவதுடன், அவர்களுடைய கற்பனையும் துரிதமாகச் செயற்படத் தொடங்குகிறது. கால உணர்வில் ஏற்
122 参

ஏ.ஜே. கனகரட்னா படும் மாற்றத்தினால் பார்ப்பவர்களின் மனம் உச்ச வேகத்தில் அமைந்த நிகழ்ச்சிகளை நாடுகின்றது. நிகழ்ச்சிகள் உண்மையில் நிகழும் வேகத்திலே திரையிலே காட்டப் படுவதை நாம் பொதுவாக வெறுக்கிறோம். திரைப்படத்தின் லயம் வாழ்க்கையின் லயத்திலிருந்து வேறுபடாவிட்டால் அநேகமாகப் பலருக்குச் சலிப்புத் தட்டும். ஆனால், புற நடை யாக, சில திரைப்படக் காட்சிகள் குறியீட்டு நோக்கங்களுக் காகவோ உயிர்த்துடிப்பைக் கருதியோ வாழ்க்கைலயத்தி லேயே அமையலாம். இதனாற்றான் போலும் பெரும் பாலான திரைப்படங்களிலே பரபரப்பூட்டும் நிகழ்ச்சிகள் நிறைந் திருக்கின்றன. ஒரு திரைப்படம் சலிப்பையூட்டுவ தென்றால் அவ்வுணர்ச்சி உருவாவதற்குப் பெரும்பாலும் திரைப்படம் அல்ல, பார்ப்பவரின் மனோநிலை மாற்றமே அதற்கு அடிப் படையாகும் எனக் கட்டுரையாசிரியர் வற்புறுத்துகின்றார்.
துயின்று கொண்டிருப்பவரின் நிலைக்கும், திரைப் படத்தைப் பார்ப்பவரின் நிலைக்கும் இடையே உளவியல் ரீதி யான ஒற்றுமை உண்டென கட்டுரை ஆசிரியர் குறிப் பிடுகின்றார். இரு நிலைகளிலும், யதார்த்தத்திலிருந்து வில கிய தன்னிச்சையான உயிர்ப்பற்ற தன்மையும், நித்திரைக்கும் படத்தைப் பார்ப்பதற்கும் முன்னோடியான இருளும் தேவைப் படுகின்றன. ஆதலால், திரைப்படங்கள் கனவுகளின் தொழிற் கூடங்கள் என ஏரண்பேர்க் என்னும் ருஷ்ய நாவலாசிரியர் குறிப்பிட்டமை பொருந்தும் எனக் கட்டுரை ஆசிரியர் கூறு கின்றார். நாம் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது நாமே நமது கனவுகளை உருவாக்குகின்றோம். ஆனால் திரைப் படங்களிலோ இக்கனவுகள் ஏற்கெனவே தயாரிக்கப் பட்டு எமக்களிக்கப்படுகின்றன.
兹 123
どつ

Page 64
Googikutbகோட்பாடுக் கொத்து
நாம் திரைப்படங்களைப் பார்க்கும் பொழுது எமது நிறை வேறா ஆசாபாசங்களும், பகற் கனவுகளும் தாண்டவ மாடு கின்றன என மோர்கொவ்வர் சுட்டிக்காட்டுகின்றார். திரைப் படம் ஒன்றினை இருவர் ஒரே விதத்தில் அனுபவிப்பதில்லை என்றும், இதனாற்றான் திரைப்பட விமர்சனர்கள் முரண்படு கின்றனர் என்றும் அவர் விளக்குகின்றார். வெவ்வேறு ஆட்களின் அடிமனத்திலே உள்ள வேற்றுமைகளே இதற்குக் காரணம் என்கிறார். எண்ணற்ற மக்களின் மூலக் கூறுகளை திரைப்படங்களே வழங்குகின்றன என்பது கட்டுரை ஆசிரி யரின் வாதமாகும். இந்நிலையிலே அன்றாட யதார்த் தத் திற்கும் தனிப்பட்டவரின் கனவிற்குமிடையே சினிமா இடை நிலை வகிக்கின்றதென அவர் குறிப்பிடுகின்றார். மேலும் படமாளிகைகளிலே அமர்ந்திருப்பவர் ஒருவரையொருவர் தெரியாத நிலையில் உள்ளனர் என்பதையும் கட்டுரையா சிரியர் வற்புறுத்துகிறார். இம்மறைவுநிலையினால் நாடகக் கலையிலே உருவாவது போன்ற ‘சமுகம் உருவாக முடியாது என்பதை அவர் சுட்டிக்காட்டுகின்றார். இத்தன்மைகளே "சினிமா நிலையின் முக்கிய கூறுகள் என அவர் விரித் துரைக்கின்றார். கட்டுரையாசிரியர் கூறியவற்றில் பல உண்மைகள் பொதிந்திருந்த போதிலும் அவை முற்றும் பொருந்துவன என நாம் கொள்ளவேண்டியதில்லை. அவர் சுட்டிக் காட்டும் பண்புகள் எல்லாத் திரைப்படங்களுக்கும், எல்லாத் திரைப்படச் சுவைஞர் களுக்கும் பொருந்தா என்பது வெள்ளிடைமலை. எல்லாத் திரைப்படங்களும் வெறும் பொழுது போக்குப் படங்களுமல்ல, திரைப்படங்களைப் பார்ப்பவர் எல்லோரும் வாழ்க்கையிலே இருந்து தப்பித்துக் கொள்ள விழைபவர்களுமல்லர்.
124 经

ஏ.ஜே. கனகரட்னா
திரைப்படத்திற்கும் துயிலுக்குமிடையே ஒரு வகை ஒற்றுமை இருக்கிறதென மேலே கண்டோம். திரைப்படத்தின் பாணி கனவின் பாணி என சுசன் லஞ்சர் விளக்குகிறார். இதனால் கனவுகளைத் திரைப்படங்கள் பிரதி பண்ணுகின்றன என்றோ படத்தைப் பார்ப்பவர்களுக்கு அவை பகற் கனவு களை ஊட்டுகின்றன என்றோ கொள்ள வேண்டியதில்லை என அவர் சுட்டிக் காட்டுகின்றார். கனவு காண்பவர் எப்பொழுதும் கனவு நிகழ்ச்சிகளின் மத்தியிலேதான் இருக்கின்றார். அதாவது, அந்நிகழ்ச்சிகளிலிருந்து கனவு காண்பவர் சரிசம தொலைவிலேயே இருப்பார். கனவிலே இடங்கள் மாறலாம்; பல ஆட்கள் தோன்றி, பேசி, செயலாற்றி மறையலாம். ஆனால், கனவு காண்பவர் இந்நிகழ்ச்சிகளின் மத்தியிலே தான் இருக்கின்றார். அவரை இக்கனவுச் சம்பவங்கள் யாவும் நேரடியாகப் பாதிக்கின்றன. கனவிலே, நிகழ் காலத்திலே தான் நிகழ்ச்சிகள் யாவும் நடைபெறுகின்றன. அதேபோன்று தான் திரைப்படங்களிலும் கனவுகளின் நிகழ் கால நேரடிப்பாதிப்பு நிகழ்கின்றதென லஞ்சர் விளக்குகின்றார். ஆதலாற்றான் கனவுப் பாணிக்கும் திரைப்படப் பாணிக்கும் ஒற்றுமை உண்டு என அவர் சுட்டுகின்றார். இப் பணி ஒரு புதிய கவித்துவ பாணி என மேலும் அவர் வற்புறுத்துகின்றார். கனவு காண்பவருக்கு ஒத்ததாகவே நிழற்படக் கருவி இருக்கின்றது. ஆனால், ஒரு வேறுபாடு உண்டு. கனவு காண்பவர் கனவிலே அமிழ்ந்திருக்கின்றார். நிழற்படக் கருவியோ படத்திற்கு வெளியிலே உள்ளது. அது மனக் கண்ணுக்கு ஒப்பாகும். மேலும், திரைப்படத்தின் அமைப்பு கனவின் அமைப்பு போன்ற தல்ல. திரைப்படம் கவிதை போன்று இசைவினையுடைய உறுப்பமைதி வாய்ந்த ஒரு படைப்பாகும்.
どう

Page 65
agilik ibGud GMT
சடப்பொருள்களைப் பதிவு செய்து அவற்றினை வெளிப் படுத்துதலே திரைப்படத்தின் முக்கியதன்மை என்பது சிறிட் கிறக்கவறின் வாதமாகும். புலன்களுக்கு உட்பட்ட உலகமே திரைப்படத்தின் உலகம். ஊடகத்தின் தன்மையை மறந்து இயற்கையை, புறஉலகைப் புறக்கணித்தால் திரைப்படத்தின் தன்மை சிதைந்து விடும் என்கிறார். இயற்கையை ஊடுருவி ஆராய்வதே திரைப்படக்கலையின் உண்மையான பணி என மேலும் அவர் விளக்குகிறார். சாதாரண நாடகப்பாணியிலே அமைந்த திபைடங்களும் சில நவீன கலைப் படங்களும் ஊடகத்தில் இயல்பை புறக்கணிப்பதினால் அவை உண்மை யில் திரைபடங்கள் அல்ல என அவர் வலியுறுத்துகின்றார். திரைபடங்கள் செப்பஞ் செய்யப்பட்டவையாக இராது, வாழ்க்கையின் ஒழுங்கற்ற தன்மையை பிரதிபலிக்க வேண்டும் என அவர் கூறுகின்றார். சடப்பொருட்கள் என்னும் காட்டி னுரடே திரைப்படக் கலைஞன் புகுந்து ஆராய்கின்றான். அவன் எந்நேரமும் அக்காட்டினிலே வழி தவறலாம் என்று அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
கிறக்கவறின் கருத்துக்கள் குறுகியவையாக சில ருக்குப் படலாம். புறத்தை அவர் வற்புறுத்துவதனால் அகத்தை ஒதுக்கிவிடுகின்றார் என சிலர் நினைக்கலாம். ஆனால் அவர் அகத்தைப் புறக்கணிக்கவில்லை. திரைப்படக்கலைஞன் சடப் பொருட்களைத் தனது நிழற்படக் கருவி மூலம் ஊடுருவி அக உலகைத் தோற்றுவிக்கின்றான் என அவர் விளக்குகின்றார். ஏனைய கலைகள் ஓர் எண்ணத் துடன் தொடங்கி அதனைச் சடப் பொருள்கள் மீது திணிக் கின்றன என்றும், ஆனால் திரைப்படமோ சடப்பொருள் களுடன் தொடங்கி எண்ணங் களையும், உணர்வுகளையும்
126 参

ஏ.ஜே. கனகரட்னா தோற்றுவிக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். அவருடைய கருத்துப்படி திரைப் படத்திலே சடம் அக நிலையை நோக்கித் துழாவிச் செல்கின்றது.
நவீன மேற்கத்திய ஒவியத்திலே மனித உருவம் மறைந்து விட்டது என்றும், அவ்வுருவம் வரிகள் மூலமும், கோடுகள் மூலமும் கன சதுரங்கள் மூலமுமே குறிக்கப் படுகின்றன என்றும் பார்க்கர் ரைலர் கூறுகின்றார். இதனால் பண்டைய நாள் தொட்டு உருவாக்கப்பட்டு வந்த மனித உருவத்தினை நவீன ஓவியம் சிதைத்து விட்டது என அவர் சுட்டிக்காட்டுகிறார். இப் போக்கிற்கு திரைப்படங்கள் மாற்று மருந்தாக அமைக்கின்றன என அவர் வற்புறுத்துகின்றார். திரைப்படங்கள் கண்ணாடி போன்று மனிதனையும், அவன் இயங்கும், உலகையும் பிரதிபலிப்பதனால் நவீன ஓவிய்த்திலே சிதைந்து போன மனித உருவத்தினை மீண்டும் மீட்க முடிகின்றது என்று அவர் விளக்குகின்றார்.
அச்சுக் கலை தோன்றியதும் முக பாவங்கள் மூலமும் கருத்துக்களை ஊகிக்கும் வழக்கம் வழக்கொழிந்து விட்டது என்றும் அதனால் மனித முகங்கள் "படிக்க முடியாதவை ஆகிவிட்டன என்றும், பேல7யலாளம் கருத்துத் தெரிவிக் கின்றார். ஆனால் திரைப்படங்கள் மூலம் முகபாவங்களையும், அவை சுட்டும் அக அநுபவங்களையும் ஊகிக்க முடியும் என்றும், இதனால் மனிதன் மீண்டும் கண்ணுக்குப் புலனாகி விட்டான் என்றும் அவர் வற்புறுத்துகின்றார். இன்றைய நாகரீகத்திலே சொல்லே கோலோச்சுகின்றது. இதனால் விஞ்ஞானத் துறை, சிந்தனைத் துறை போன்றவற்றிலே துரிதமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இம்முன்னேற்றத்தை மறுக்கவோ, அழிக்கவோ அவர் விரும்பவில்லை. ஆனால்
巻。 127

Page 66
sit-b-- கோட்பாடுக் கொத்து
இப்போக்கினால் சில துறைகளிலே இழப்பு ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக் காட்டுகின்றார். உடல் மூலம், அதன் அசைவுகள் மூலம், சைகை மூலம் உணர்ச்சிகளையும், பொதுவாக சொல்லிலே வடிக்க முடியாத அக அநுபவங்களையும் வெளிப் படுத்தும் வழக்கம் அச்சுக் கலை தோன்றியதுடன மறைந்து விட்டதனால் மாபெரும் இழப்பு ஏற்பட்டு விட்டது என்றும், இதனால் மனித இயல்பே பாதிக்கப்பட்டுவிட்டது என்றும், ஆனால் திரைப்படம் மூலம் இவ்விழப்பினை ஈடுசெய்து, மனிதன் தன்னை மீண்டும் இனங்கண்டு கொள்வதற்கு வழி பிறந்து விட்டதாக அவர் விளக்குகிறார்.
ஏனைய கலைகள் போன்று திட்ைபடக் கலையிலும் உருவ - உள்ளடக்கப் போராட்டம் நடந்து கொண்டே வருகின்றது. இன்றைய “கலைத் திரைப்படங்கள் பெரும் பாலானவை உருவத்திலேதான் கவனஞ்செலுத்துவதாக பே7ளின் கில் என்பவர் அவற்றினைச் சாடுகிறார். உத்தி, நுட்பங்கள் மூலம் கால உணர்வுடன் விளையாடி’ தம் படைப்புகள் உந்நத கலைப்படைப்புகள் என நிறுவச் சில நெறியாளர் விழைவா தாகவும், அவர்களுக்கு பக்க பலமாக சில விமர்சகர்கள் நிற்பதாகவும் அவர் கூறுகின்றார். இவ்வித படங்களிலே எதுவித பொருளும் இல்லை என்பதே அவரது வாதம். இக்கருத்தின்மையை முடி மறைப்பதற்காகத் தான் நவீன உத்திகள் பயன்படுகின்றன என அவர் கூறுகின்றார். திரையிலே தோன்றும் உருவங்கள் வடிவியல் உருவங்களாக பெரும்பாலும் இருப்பதில்லை என்றும், அவை மக்களின் அல்லது இடங்களின் அல்லது நிகழ்ச்சிகளின் உருவங்களாக இருப்பதனால் அவற்றிலே பொருள் தொக்கி நிற்பது தவிர்க்க முடியாது என்றும் வற்புறுத்துகிறார்.
128 经
どう

ஏ.ஜே. கனகரட்ன
இத்தொகுப்பிலேயுள்ள சில கட்டுரைகளை மட்டும் தான் நான் இங்கு கோடிகாட்டியிருக்கிறேன். இடம் இன்மையால் பல கட்டுரைகளைக் குறிப்பிட முடியவில்லை. பல கோணங் களிலே இருந்து இத்தொகுப்பு நூல் திரைப்படக்கலையினை ஆராய் வதினால் வாசகனுக்கு மிக்க பயன் நல்கும் ஒன்றாய் விளக்குகின்றது.
129

Page 67
ஆயிரமுக வீரன்
The Hero with a Thousand faces by Joseph Campell
இன்று பகுத்தறிவு ஊழி. விஞ்ஞானம் கோலோச்சும் இக்காலத்திலே புராணங்கள் தமது கவர்ச்சியை இழந்தமை வியப்பன்று. மனிதன் சந்திரனிலே நடமாடியதற்குப் பின்னர், கல்லாதவர்களைத் தவிர யார்தான் சிவபெருமான் பிறையைத் தனது செஞ்சடையிலே சூட்டினார் என நம்புவார் கள்? மனிதன் தனது நுண்மதியாலே விண்மதியை வென் றிருக்கும் போது, "பித்த7 பிறை குடி' என்ற தேவாரத்தைப் பாடும் அடியார்களுக்கு அல்லாது மற்றவர்களுக்கு அ.து உண்மை யாகத் தென்படமாட்டாது.
புராணங்களை வெற்றுரைகள் எனப் பெரும்பாலோர் இன்று புறக்கணிக்கின்றார்கள். மனித குலம் தனது குழந்தைப் பருவத்திலே இத்தகைய கட்டுக் கதை உருவாக்கித் தனது பொழுதைப் போக்கிக் கொண்டது என்பதே இவர்களது
130 经
どう

ஏ.ஜே. கனகரட்னா கணிப்பு. உலகைப் பற்றியும், மனித இயற்கையைப் பற்றியும் சில உண்மைகளைப் புராணங்கள் சுற்றி வளைத்துத் தவறான முறையிலே உருவகிக்கின்றன என வேறு சிலர் கருதுகின் றனர். விஞ்ஞானத்தினாலேதான் இவ்வுண்மைகளை நுட்ப மாக வரையறுத்துக் கூறமுடியும் என்பது இவர்களது என்ணம். புராணங்கள் வழக்கொழிந்து வலுவிழந்ததுடன், பயனற்றவை யாகிவிட்டன என்றே இருசாராரும் கருதுகின்றார்கள்.
புராணத்துறை செல்வாக்கிழந்ததற்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சியே - அது உருவாக்கிய மனப்பான்மையே -- முக்கிய காரணம் எனலாம். புராணத்திற்கு விஞ்ஞானி வைரியாக இருபக்கலாம். ஆனால், புராணத்துணையின்றி கலையோ, இலக்கியமோ செழித்தோங்க முடியாது. புராணங் களே கலைக்கு அடித்தளம் என அமெரிக்கக் கவிஞர் ஒருவர் கூறியமை ஈண்டு நோக்கற்பாலது. இதே கருத்தினை மெக்சிகோ கவிஞர் ஒருவரும் அழுத்தியிருக்கின்றார். புரா ணம் இன்றேல் கலையும் பண்பாடும் உயிர் வாழ்தல் முடியா தென அவர் கூறியிருக்கின்றார்.
நவீன மேற்கத்திய இலக்கியத்திலே குறியீட்டுப் போக்கு தலைதுாக்கியதின் விளைவாக, ஆதி கால மனிதன் கையாண்ட குறியீடுகள் பற்றி குறிப்பாக அவர்களிடம் வழங்கிய புராண இதிகாசங்கள் பற்றி ஆராய்வதற்குச் சில உளவியலாளரும் மனித இயல் நூலாரும் விழைந்தனர். இவ்வாராய்ச்சிகளின் பயனாக ஆதிகால மனிதரிடம் வழங் கிய புராணங்களும் குறியீடுகளும் ஒருவகை உண்மையைப் புலப்படுத்துகின்றன என்பது தெளிவாயிற்று. மனித மனம், ஒளியை எதிரடித்துக் காட்டுகின்ற கண்ணாடியைப் போன்று, உலகை உயிர்ப்பற்ற தன்மையிலே பிரதிபிம்பம் செய்வ
经 131
どう

Page 68
ஆயிரமுக விரள்
தில்லை; பதிலாக, நாம் உணரும் மெய்ம்மையின் வடிவத்தினை அது பாதிக்கின்றது என காண்ட் என்னும் தத்துவஞானி கருதினார். இவ்வடிப்படையிலே நோக்கு மிடத்து, ஆதிகால மனிதனின் குறியீடுகளின் முக்கியத்துவம் சொல்லாமலே விளங்கும். புராணங்கள், நுண் பொருள் ஆய்வின் முதற்கட்டம், பொது எண்ணங்களின் முதல் கருத்துருவம் என லஞ்சர் மொழிந்தமை ஈண்டு குறிக்கற் பாலது. புராணச் சார்பான உருவாக்கத்திலிருந்துதான் மொழி தோன்றி இருக்க வேண்டும் என ஏர்டர் என்னும் அறிஞர் கூறுகின்றார். புராணத்தின் ஆற்றல் வாய்ந்த தன்மையைக் கவிதை பேணுகின்றதென அவர் மேலும் கருதுகின்றார்.
புராணம் ஒருவகைக் கவிதைக் கூற்று என விக்கோ என்னும் மற்றோர் அறிஞர் கருதுகின்றார். இக் கூற்றுகளைத் தொகுத்து நோக்குமிடத்து, புராணவியல் ஆராய்வு தனிச் சிறப்பு வாய்ந்ததென்பது தெற்றெனப் புலப்படும். மனிதன் குறியீடுகளை ஆக்க வல்ல விலங்கென்றால், புராணங்களின் உட்கருத்தை, அவற்றின் உள்ளியல்பை உய்த்துணருவ எமது தலையாய பணியாகும். -
மனித வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே, சடங்கு முறைகளுக்கும், புராணங்களுக்கும், கவிதைக்குமிடையே நெருங்கிய பிணைப்புகள் நிலவி வந்திருக்கின்றன. இவற்றின் தோற்றத்திலிருந்துதான் மனிதன் ஏனைய விலங்கினங்களிலி ருந்து வேறுபடுகிறான். இவற்றின் அரவணைப்பிலேதான் ஆதி மனிதன் வளர்ந்து முன்னேறினான். இவ்வுண்மையை உணர்ந்த நவீன மேற்கத்திய இலக்கியத் திறனாய்வாளர்
132 १
どう

ஏ.ஜே. கனகரட்னா புராணங்களுக்கும் இலக்கியத்திற்குமிடையே உள்ள தொடர்பு திறனாய்வுக்கு ஒரு புதிய திறவுகோலாய் அமையும் எனக் கருதலாயினர். புராணங்களின் மூலம் கற்பனையின் செயல் ஒழுங்குகளை ஆராயலாம் என எண்ணினர். யுங் போன்ற உளநிலைப் பகுப்பாய்வாளரின் முயற்சிகளும் இவர்க ளுக்கு ஊக்கமளித்தன.
யுங்கின் கோட்பாட்டின்படி சில படிவங்கள் ஆதியிலி ருந்தே ஓர் இனத்தின் அடி மனத்திலே தோன்றிக் காலங் காலமாக வெளிப்படுத்தப்பட்டு வருவதனால், அவை அவ் வினத்தின் குருதியுடன் ஒன்றித்து விடுகின்றன. சில அடிப் படையான பாத்திரங்களும், நிலைமைகளும் இவ்வாறு பாமரர் இலக்கியந் தொடக்கம் சான்றோர் இலக்கியம் வரை விரவியிருக்கின்றன. இத்தகைய ஆதி படிவங்கள் நாகரிக மனிதனைக் கூடக் கவரவல்லன.
புராணங்கள் வாயிலாக இலக்கியத்தை அணுகுவதில் ஆபத்தில்லாமலுமில்லை! தரமான இலக்கியமும் தரமற்ற இலக்கியமும் ஆதி படிவங்களைக் கையாளலாம். ஆதலால் இவ்வம்சத்திலிருந்து மட்டும் நாம் இலக்கியங்களின் ஏற்றத் தாழ்வினைக் கணிக்கமுடியாது.
கம்பெல்லின் நூலினை அணுக முன்பு, கவிதை, புராணம் மெய்ம்மை என்ற தலைப்பிலே பிலிப் வில் ரைட் என்னும் அமெரிக்கத் திறனாய்வாளர் வெளியிட்ட சில கருத்துக்களை இங்கு சுட்டுதல் பொருத்தமாயிருக்கும்.
புராணங்கள் சமுதாய மனத்தின் வெளிப்பாடு, கூடி வாழ்தலின் விளைபயன் என்பதே அவரது வாதமாகும். பிரபஞ் சத்திற்கு அப்பாற்பட்ட அறிவெல்லை கடந்த சக்திகளை
133

Page 69
ஆயிரமுக விரன்
உணர்த்துதலே புராணங்களின் சாரம் என அவர் மேலும் விளக்குகின்றார்.
கூட்டு வாழ்க்கையின் பயனாகத் தோன்றிய உணர்வு நிலையிலிருந்துதான் தனி மனத்தின் விழிப்புநிலை உருவாகி யது என அவர் விளக்குகின்றார். ஆதலால் தனி மனம் கூட்டு மனத்திலிருந்து தன்னை முற்றாகப் பிரித்துக் கொள்ளும் பொழுது, அது வரண்டு விடுகின்றதென அவர் சுட்டிக் காட்டு கின்றார்.
இவ்வுண்மையை எலியட், பேட்க ஜொப்சுபோன்ற எழுத் தாளார்களின் படைப்புகளிலிருந்து நாம் அவதானிக்கலாம். தமது எழுத்துக்களுக்கு வளமுட்டுவதற்காக இவர்கள் பழைய புராணங்களைக் கையாள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற் பட்டது. ஆனால் புராணங்கள் சமுதாயப் படைப்பு. இத்தகைய பின்னணி இன்று இல்லாதவிடத்து, இவர்களது முயற்சிகள் முற்றிலும் வெற்றி பெறாதது வியப்பன்று. புராண நோக்கு இன்று சிதைந்து போய்விட்டதே இன்றைய இலக்கியத்தின் வரட்சிக்கு முக்கிய காரணமென அவர் கருதுகின்றார். மேலும், பண்டைய இலக்கியத்திலும், ஈஸ்கிலஸ், செகற்பிரியர் போன் றோரின் படைப்புக்களிலும் எவ்வாறு புராணங்கள் கலைக்கு வளமுட்டுகின்றன என்பதையும் அவர் விளக்கு கின்றார்.
புராண மனப்பாங்கை விஞ்ஞான ரீதியாக ஆராய முடியாது என்பதே அவரது திடமான நம்பிக்கை. ஒரு குறிப்பிட்ட புராணம் எங்கு தோன்றியது, எவ்வாறு பரவியது போன்றவற்றை விஞ்ஞான அடிப்படையிலே ஆராய்ந்தறிய லாம். ஆனால் விஞ்ஞான நோக்கும் புராண நோக்கும் இரு துருவங்களாய் இருப்பதனால் விஞ்ஞானத்தின் துணை கொண்டு புராணத்தின் இதயத்தைத் தொட்டுணர முடியாது

6.J.C3eg. SawaGyeoTT என அவர் கருதுகிறார்.
கம்பெல்லின் நூல் புராணங்களின் தோற்றம் பற்றிய நூலன்று. அதனை புராணங்கள் பற்றிய ஒப்பியல் ஆராய்வு எனலாம். அவரே கூறுகின்றார்: “புராணங்களுக்கிடையே மட்டு மன்று, அவைகளுக்கு ஞானிகள் கொடுத்த விளக்கங் களுக்கு மிடையேயும் முக்கியமான ஒப்புமைகள் உண்டு என்பதை எண்பிப்பதே இந்நூலின் நோக்கமாகும். புராணங் கள் போற்றும் வீரர்கள் நாட்டுக்கு நாடு வெவ்வேறு உடை களை அணிந்திருக்கலாம்; ஆனால் அடிப்படையில் அவர் களெல்லாரும் ஒருவனே; இவ்வீரன் ஆயிரமுகத்தான் என நூலாசிரியர் எடுத்துரைக்கின்றார். இவ்வாதத்தினை நிலை நாட்டுவதற்கு பல்வேறு நாட்டுப் புராணங்களை ஆசிரியர் ஆராய்ந்து அவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டுகின்றார். இவ்வாறு செய்தல் வெவ்வேறு நாட்டு மரபுகளுக்கிடையே உள்ள வேற்றுமைகளை மறுப்பதாகும் என்ற குற்றச்சாட்டை ஆசிரியர் முறியடிக்கவும் தவறவில்லை. உடல் உறுப்பு அமைப்பியலிலே எவ்வாறு வெவ்வேறு இனத்தவர்களுக்கிடையே உள்ள உடற்கூறு வேற்றுமைகள் பொருட்படுத்தப்படுவதில்லையோ, அதே போன்று தனது நூலிலே புராண ஒற்றுமைகளே ஆராயப்படுகின்றன என அவர் விளக்குகின்றார். வேற்றுமைகள் உண்டு என்பதை ஒப்புக் கொள்கிறார். ஆனால், பொதுவாக நம்பப்படுவதற்கு மாறாக இவ்வேற்றுமைகள் அத்துணை பாரதூரமானவையன்று எனக் கூறுகின்றார். சத்தியம் ஒன்றே, அதனை ஞானிகள் பல் வேறு பட பேசுவர் என்ற வேதவாக்கை அவர் நமக்கு நினை வுறுத்துகின்றார்.
புராணத் துறையைப் பல்வேறு கோணங்களிலிருந்து 兹
どう
135

Page 70
ஆயிரமுக விரன்
நோக்கலாம் என ஆசிரியர் விளக்குகின்றார். இயற்கையை விளக்குவதற்கு ஆதி மனிதன் முனைந்த பொழுது, அத்தடு மாற்ற முயற்சியின் விளைவாக எழுந்தவையே புராணங்கள் என விரேசர் கருதுகின்றார். வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தின் கவித்துவப் புனைவே புராணங்களென்றும், அவற்றைப் பின்னர் மக்கள் தவறாகப் புரிந்து கொண்டனர் என்றும் மல்லர் போன்ற் அறிஞர் கூறுகின்றனர். ஒருவனை அவன் வாழும் மக்கள் கூட்டத்தினருடன் இணைக்கும் பொருட்டு எழுந்த அறிவுறுத்தல் - உருவகக் கதைக் களுஞ்சியமே புராணங்கள் என துர்கிம் போன்றோர் விளக்குகின்றனர். யுங்கின் கருத்துப் படி, மனித மனத்தின் ஆழத்திலே ஒளிந்திருக்கும் மூலப்படிவ துரண்டுகைகளைக் கோடிட்டுக் காட்டும் மக்கள் கூட்டத்தின் கனவே புராணங்களாகும். கலாயோகி ஆனந்த குமார சாமியோ, மனிதனின் மிக ஆழமான மறைபொருள் நுண் அறிவிற்கு புராணங்களே மரபு வழி வந்த ஊடகம் எனக் கருதுகின்றார். புராணங்கள் கடவுளின் திருவெளிப்பாடு எனத் திருச்சபை கருதுகின்றது. இவை யாவும் ஒவ்வோர் கோண நோக்கு, யாவற்றிலும் உண்மை இருக்கின்றது எனக் கம்பெல் சுட்டிக்காட்டுகின்றார். புராணங்களின் தன்மையை ஆராயாது விடுத்து அவை இவ்வாறு மனிதனுக்கு பயன்பட்டிருக்கின்றன, பயன்படக்கூடும் என நோக்குவோமாயின், அவை தனி ஆளி னதும், இனத்தினதும், காலத்தினதும் தேவைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்க வல்லன என்பதை அவதானிக்கலாம் என ஆசிரியர் விளக்குகின்றார்.
மனிதனின் முழுமையான உருவத்தை ஒருவனால் முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஒவ்வொரு வனிலும் இம் முழுமையின் ஒரு பகுதியையோ அன்றேல் உருத்
136 参

ஏ.ஜே. கனகரட்னா திரிபையோதான் காணமுடியும். ஆதலால், சமுதாயத்திற் றான் மனித முழுமை அடங்கியிருக்கின்றது, தனி ஆள் அதன் உறுப்பே எனக் கம்பெல் வற்புறுத்துகிறார். ஒருவன் தன்னைச் சமுதாயத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முனைவது, தனது வாழ்க்கையின் பிறப்பிடத்துடன் உள்ள தொடர்புகளை துண்டிப்பதற்கு ஒப்பாகும். தனி ஆளின் வாழ்க்கையில் ஏற்படும் திரும்பு கட்டங்கள் (Crisis; திருமணம் போன்றவை), சடங்குகள், புராணங்கள் மூலம் தனி ஆளைக் குறிக்காத, தனி முறைச் சார்பற்ற பொதுவான உருவங்களாக மாறுகின்றன. இத்திரும்பு கட்டங்களில், விழிப்பு மனத்திலும், அடிமனத்திலும் அடிப்படையான மாற்றம் தேவைப்படுகின்றது. புதிய வாழ்க்கைக் கட்டத்தின் வாயிலுக்குள்ளே நுழைய, புராணங்களும் சடங்குகளும் உதவுகின்றன என ஆசிரியர் விளக்குகின்றார். இத்தகைய வாழ்க்கை முதிர்ச்சிக்கு முன்பு வழிகோலிய புராணங்கள் இன்று வலுவிழந்து விட்டதனாற் றான் போலும், மனக்கோளாறுகள் இன்று பெருகிவிட்டன எனக் கம்பெல் கூறுகின்றார்.
புராணங்கள் இயம்பும் உண்மைகளை அறிவதற்கு நவீன உளநிலைப் பகுப்பாய்வு பெரிதும் உதவுகின்றதெனக் கம்பெல் கருதுகின்றார். உளநிலைப் பகுப்பாய்வின்போது மன நோயாளிகள் வெளிப்படுத்திய கனவுகளும் புராணங்களும் ஒத்திருக்கின்றன என அவர் விளக்குகின்றார். இதற்குரிய சான்றுகளையுந் தருகின்றார். ஆனால், கனவுகளும் புராணங் களும் ஒத்திருந்தபோதிலும், அவற்றின் பிறப்பிடம் ஒன்றாய் இருந்த போதிலும், அவற்றிற்கிடையே வேற்றுமையும் உண்டு எனக் கம்பெல் சுட்டிக் காட்டுகின்றார். கனவுகள் நித் திரையின் போது இயல்பாக எழுகின்றன, புராணங்களுக்கு
参 137

Page 71
ஆயிரமுக விரன்
விழிப்பு மனம் வடிவம் கொடுக்கின்றது. புராணங்கள் மரபு வழி வந்த ஞானத்தை ஊட்டுகின்றனவென்றும், அவை என்றும் மாறாத சில ஆன்மீகக் கொள்கைகளை வரையறுக்கின்றன வென்றும் அவர் குறிப்பிடுகின்றார். புராணங்கள் இயம்பும் உண்மையின் சாரம் இதுதான் என அவர் மேலும் விளக்கு கின்றார். உலகத் திலே கண்ணுக்குப் புலனாகும் யாவும், எங்கும் பரவியுள்ள சக்தியிலிருந்து எழுகின்றன. பின்பு மடிந்து அதனுடன் சங்கமித்து விடுகின்றன.
வெவ்வேறு நாட்டுப் புராணங்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளை ஆதாரபூர்வமாக நிறுவி விட்டு, கம்பெல் அவற்றின் அடிப்படையை விளக்க விழைகின்றார். அவரின் கருத்துப்படி, புராணங்களைத் தொகுத்துப் பார்க்குங்கால், அவற்றின் மையக் கருவை - மூல அலகை - மூன்று பகுதி களாக வரையறுக்கலாம். அவை வருமாறு துறவு, மறை வின் புகுமுகம், மீளல். சாதாரண உலக விவகாரங்க ளிலிருந்து பிரிந்து செல்வதைத் துறவு” என்றும், சாதாரண காரணங் களுக்குள் அடக்க முடியாத ஒன்றிலே புகுந்து தீட்சை பெறுதலை ‘மறைவின் புகுமுகம்’ என்றும் விளங்கிக் கொள் ளுதல் பொருந்தும். உலகிலுள்ள பெரிய மதங்களை நிறுவிய பெரியார்களுடைய வாழ்க்கையிலும் -ஏசுநாதர், புத்தபகவான் ஆகியோருடைய வாழ்க்கை வரலாறுகளைக் குறிப்பாக எடுத்துக் கொண்டாலுங்கூட . இம்மூன்று அம்சங்களும் ஒரு கட்டத்தில் மிக நேர்த்தியாகப் பொருந்துவதை நாம் தெளிவாக விளக்குவதற்கு கம்பெல் ஏராளமான எடுத்து காட்டுகளைத் தந்துள்ளார்.
விஞ்ஞானம் புராணங்களைப் பொய்ப்பித்துவிட்டது. இதனைக் கம்பெல் ஒப்புக் கொள்ளுகின்றார். ஆனால்
138 ۔۔۔۔
どう

ஏ.ஜே. கனகரட்னா அவற்றிலே பொதிந்திருக்கும் அடிப்படை உண்மைகள் சில வற்றை நாம் மறத்தலாகாது. மனிதனை அவனது சூழலுடன் மனோரீதியாக இணைப்பதற்கு ஆதியிலிருந்து புராணங்கள் உதவியிருக்கின்றன. பிளவுபட்டிருக்கும் இன்றைய மனிதனை ஒன்றாக இணைப்பதற்கும் நான் என்ற முனைப்பினை ஒழிக்கவும் அது வழிகாட்டும்.
கருத்தைக் கவரும் கம்பெலின் நூல் வாசகனுக்கு பெரு விருந்தாய் அமைந்துள்ளது என்பது சொல்லாமலே விளங்கும்.
毫 139

Page 72
6lga
Kingship by A. M. Hocart
Qg5 Glg5/rLf08ad é767zð 62mara;/rfha' (A.M. Hocart) என்னும் ஆங்கிலேயரின் நூலைத் தேர்ந்தெடுத்ததற்கு இரு காரணிகள் உள. இந்நூற்றாண்டிலே வாழ்ந்த மானிட இயலாளரிலே ஹொகார்ட் தலைசிறந்தவர் என்பது ଦ୍ଵ୯୬ காரணி மற்றையது, அவர் பத்து ஆண்டுகளாக இலங்கையில் தொல் பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் ஆணையா ளராகக் கடமை ஆற்றியது. இங்கு அவர் கடமை ஆற்றிய காலத்திலே இலங்கையின் வரலாற்றைப் பற்றியும், சிங்கள வரின் ஐதீகங்கள் பற்றியும் பல அருமையான கட்டுரைகளை வரைந்தார். அத்துடன் “அரசு’ என்னும் முக்கிய நூலையும் யாத்தார். ஆழ்ந்த மானிட இயல் அறிவைப் பெற்ற இவரின் நூலை அறிமுகஞ் செய்வதே இக்கட்டுரையின் நோக்க மாகும்.
“ஈற்றிலே ஐந்து அரசர்களே உலகத்திலே எஞ்சியிருப் பார்கள் - கடுதாசிக் கூட்டத்திலே உள்ள நால்வரும், பிரித்

ஏ.ஜே கனகரட்னா தானிய மன்னரும்’ எனக் காலஞ் சென்ற எகிப்திய மன்னர் பாரூக் வேடிக்கையாகவும், அதே சமயம் தீர்க்கதரிசன மாகவும், ஒரு தடவை மொழிந்தார். இன்று முடியாட்சியல்ல, குடியாட்சியே பெரும்பாலும் நிலவுகிறது. ஆனால், நிலைமை முன்பு இதற்கு நேர்மாறாக இருந்ததை மறப்பதற்கில்லை.
அரசர்களின் தெய்வத் தன்மையில் நம்பிக்கையே ஆதிச்சமயம் என்று திட்டவட்டமாய்க் கூற முடியாவிடினும், அதுவே வரலாற்றறிவுக்கு எட்டியவரை முதல் நிலவிய மதம் என ஹொகார்ட் கருதுகிறார். தெய்வங்களையும் அவற்றின் உலகப் பிரதிநிதிகளாகிய அரசர்களையும் மனிதன் வணங்கினான் என்பது மிகப் பழமையான ஆவணங்கள் முலம் அறியக் கிடக்கின்றது. தெய்வ வழிபாடோ அல்லது அரச வழிபாடோ காலத்தால் முந்தியது என்பதை ஐயந்திரிபறக் கூற முடியாது. அரசர்களின்றித் தெய்வங்களோ அல்லது தெய்வங்களின்றி அரசர்களோ இருந்ததில்லைப் போலும். தெய்வங்களின் பிரதி நிதிகளாகிய அரசர் ஆட்சி புரிகின்றனர். எகிப்து, சுமேரியா, கிரேக்க நாடு, உரோமாபுரி, ஜெர்மனி, வேதகால இந்தியா, இலங்கை, யப்பான், பிஜித்தீவுகள், வட அமெரிக்கா-எங்குமே தெய்வீக அரசுக் கொள்கை நிலவியது எனலாம். இக்கொள்கை ஒரு பொதுப் பிறப்பிடத்தில் தோன்றி. பின்பு மற்ற நாடுகளுக்குப் பரவியதா அல்லது தனித் தனியே வெவ்வேறு இடங்களில் உருவாகியதா? இக்கொள்கை முதலில் ஓரிடத்தில் உருவாகிப்பின்பு வேறு நாடுகளுக்குப் பரவியிருக்க வேண்டும் என ஹொகார்ட் ஊகித்தார். அரசன் ஒரு சூரியத்தெய்வம் என்னும் நம்பிக்கை எகிப்து, இந்தியா, தகிட்டி, பேரு போன்ற இடங்களில் வேரூன்றியிருந்ததினால், இந்த அம்சம் தெய்வீக
经 141
どう

Page 73
அரசுக் கோட்பாட்டின் தொடக்கத்திலேயே அடங்கியிருக்க வேண்டும் என அவர் கருதுகிறார். முதன் முதலில் வணங்கப் பட்ட கடவுளர் வானுலகத்தில் உள்ளவராகவும், குறிப்பாக ஞாயிறுடன் அல்லது வான ஒளியுடன் தொடர்புள்ளவராயும் கருதப்பட்டனர். இந்தோ - ஐரோப்பிய தாய் மொழியில் தெய்வத்தன்மையைப் புலப்படுத்துவதற்கு கையாளப்படும் வேர்ச் சொல் ‘ஒளிர்தல்’ எனப் பொருள்படும். மங்கோலிய மொழியில் வானத்திற்கும் தெய்வத்திற்கும் ஒரே சொல்லே வழங்குகிறது. (வானவர் என்னும் தமிழ்ச் சொல்லை ஒப்பு
நோக்குக) அரசன் ஒரு சூரிய தெய்வமாகக் கருதப்பட்ட தனாற்றான் எகிப்தியர் தமது அரசனுக்கு வணக்கம் செலுத்தும் போது தங்கள் முகங் களுக்கு முன்னால் கை களைப் பிடித்தார்கள். அச்செயலின் உட்கருத்து அரசனுடைய சூரியப் பிரகாசத் தினால் கண் கூசாதவாறு பார்த்துக் கொள்வதே. சிங்களக் கல்வெட்டுக் களையும் இதற்கு மேற்கோள் காட்டலாம். “கிழக்கு மலை மேலே உதிக்கும் ஞாயிறு எவ்வாறு இருளைக் கலைக் கின்றதோ அவ்வாறே அவர் (அரசன்) தனது பகைவரை விரட்டி யடித்தார்.” சூரிய வம்சத்தைத் தவிர சந்திர வம்சத்தில் வந்த அரச பரம்பரையைப் பற்றியும் இந்தியாவில் கேள்விப்படு கிறோம். இரு அரச மரபுகளுக்கிடையும் நெருங்கிய தொடர்புண்டு. மேற்கூறியவற்றிலிருந்து தெய்வீக அரசுக் கொள்கை தனது கவர்ச்சியினால் மனித மனத்தை ஆட் கொண்டது என்பது புலனாகும். கிரேக்க நாடும் உரோமா புரியும் வாலிபத்தின் மிடுக்குடன் இக்கொள்கையை உதறித் தள்ளிய போதிலும், கிழடுதட்டிய காலத்திலே மீண்டும் அதனைக் கடைப்பிடித்தன. தான் சேயசின் மகன் என
142 参

ஏ.ஜே. கனகரட்னா அலெக்ஸ்சான்டர் சக்கரவர்த்தி கூறியபோது அவர் ஒரு பண்டைக் காலத்து நம்பிக்கையை மீட்டார். அந் நம்பிக்கையின் படி, அரசனின் தலைப்பிள்ளை உண்மையில் ஒரு தெய்வத்தின் மகன்; அத் தெய்வம் ராணியோடு புணர் வதற்காக மனித ரூபம் எடுத்திருக்கும். எகிப்தில் இந்நம் பிக்கை மிகப் பழைய காலத்திலே நிலவியது. உடம்பெடுத்த கடவுளே அரசன் என்கிற கொள்கைக்கும் அரசன் தெய்வத் தின் பிரதிநிதி என்பதற்கு மிடையே உள்ள வேறுபாடு மிக நுட்பமானது. அரசனுக்கும் தெய்வத்திற்கும் உள்ள தொடர்பை பண்டைக் காலத்து மக்கள் உயர்வுநவிற்சியற்ற நேருண்மையான முறையிலே நோக்கினர். பிற்காலத்தவர் இத் தொடர்பை மறை மெய்ம்மை சார்ந்ததாகக் கருதினர். இது அறிவுடன் முரண்படாமல் உணர்ச்சிகளைத் திருப்திப் படுத்தியது.
போரே அரசரின் விளையாட்டாகவும் அதில் வெற்றி ஈட்டுவதே அவர்களின் உயர்ந்த குறிக்கோளாகவும் இருந்து வந்தது. இறைவன் தமது அரசருக்கு வெற்றியளிப்பாராக என மக்கள் வேண்டிக் கொண்டனர். மொங்கோலியாவில் 'அரசன்’ என்னும் சொல் ‘வெற்றியீட்டியவன்’ எனப் பொருள்படும். இந்தியர் இந்த அம்சத்தை மிகவும் அழுத்தினர். “வெற்றி யீட்டுவாயாக’ என்றே தமது அரசரை வரவேற்றனர். வெற்றி எனப் பொருள்படும் “ஜய’, ‘விஜய போன்ற நாமங்களை சிங்கள அரசர் தமக்குச் சூட்டிக்கொண்டனர். அகிம்சையில் நம்பிக்கையுள்ளவர்கள் வெற்றியைப் பற்றிச் சதா பேசுவது முரண்பாடாகத் தோன்றலாம். ‘வெற்றி’ என்னும் போது எதைக் குறிக்கின்றனர்? இந்திய மரபிலே அமைதியான வெற்றிக்கு இடமுண்டு. வாள் இன்றி, ஒழுக்க சீலத்தினால்
彰 143

Page 74
கடல் சூழ்ந்த உலகத்தை ஒரு வேந்தன் கைப்பற்றலாம்.
அரசு கட்டில் ஏற முன்பு, அரசன் உண்மையான அல்லது உண்மை போல் தோற்றக்கூடிய வெற்றியீட்டவேண்டும் எனப் பொதுவாக எதிர்பார்க்கப்பட்டான். வேதங்களில் அரசன் இந்திரன், இந்திரன்தான் சூரியன். அவன் தோற்கடிக்கும் பசாசுகள் இருளின் சின்னங்கள். நாடு செழிப்படைவதற்கு சூரியன் இருளை விரட்டியடிக்க வேண்டும். சூரிய-தெய்வம் என்ற முறையில்தான் அரசன் வெற்றியீட்டுகிறான்; அரசனின் வெற்றி உண்மையில் ஞாயிற்றின் வெற்றி; ஜயசூரிய, விஜய சூரிய, விக்கிரமசூரிய என்ற பெயர்களை ஈண்டு நோக்குக. பண்டைக் காலத்திலே “ஜய’ (அதாவது வெற்றி) சூரியனின் நாமங்களுள் ஒன்றாகவிருந்தது. (இன்றுகூட கிழக்கே உதிக்கும் சூரியனுக்கும் மாஓவின் சிந்தனைக்கும் சீனக் கவிதை முடிச்சுப் போட்டிருப்பது இப் பழைய மரபினைத்தானே மறைமுகமாக வலியுறுத்துகின்றது?)
எப்படி அரசன் ஒரு தெய்வப் பிறவியாக இருந்தானோ அதே போன்று பிசாசுகளும் உடலெடுத்து பூமியில் உலாவினர் எனப் பண்டைக் காலத்தில் கொள்ளப்பட்டது. இந்தியாவிலே நான்காம் வருணத்தினரும், அன்னியரும் பேய்களாகவே கருதப்பட்டனர். பேய்களைத் தோற்கடிப்பதற்கு வழி அவர்க ளுடைய சார்பாளராக உலகத்திலே உலாவுபவர்களை வெல்லுவதே. சமயச்சார்பான போர், சமயச்சார்பற்ற போர் எனப் பண்டைக் காலத்தவர் வேறுபடுத்தவில்லை. இந்த வேறுபாடு தற்காலத்திற்குரியது. அரசனின் பகைவரே இறைவனின் பகைவர் என்னும் கொள்கையின் போர்வையிலே யுத்தத்தில் ஆர்வமுள்ள சில அரசரும் மக்களும் போரில் குதிப்பதற்கு ஏதுவாகயிருந்தது.
144 \ 盔
どう

ஏ.ஜே. கனகரட்னா
நாட்டின் செழிப்பும் மக்களின் நலனும் அரசனின் செங்கோலில் தங்கியிருக்கின்றது என்ற நம்பிக்கை எங்கும் ஒரு காலத்தில் பரவியிருந்தது. பண்டைய இந்திய இலக்கி யங்கள் இதனை மிகவும் அழுத்தின. தமிழ் இலக்கியமே இதற்குச் சான்று பகரும். தன் கைகளாலே வேலை செய்யாது, இயற்கைச் சூழலை சூரியனைப் போன்று துரத்திலிருந்து கொண்டே பாதிக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஒருவரை புதுக்கக் கண்டுபிடித்ததை வரலாற்றிலே அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும் என் ஹோகார்ட் கருதுகிறார். அக்கண்டு பிடிப்பே ஆட்சியின் தோற்றுவாய் எனக் கூறுகிறார்.
அரசன் செங்கோலோச்சினாற்றான் நாடு செழிப்புறும், பருவ மழை பெய்யும், பயிர் வளரும் என்ற நம்பிக்கை எவ்வாறு மக்கள் மனத்தைக் கவர்ந்தது?அனுபவத்தை செம்மையாக புரியாததினாற்றான் இவ்வித கொள்கைகள் தோன்றியிருக்க வேண்டும் என மேலெழுந்தவாரியாக நோக்கின் கருத இட முண்டு. இதனை ஹோகார்ட் மறுத்துரைக்கின்றார். அரசாட் சியின் விளைவுகளை அவதானிப்பதற்கு, முதலில் அரசன் ஒருவன் இருத்தல் வேண்டும். நீதியும், சமயப் பாதுகாப்பும், ஒழுக்கத்தின் பாதுகாப்பும் அரசனிடம் ஒப்படைக்கப்பட்டி ருத்தல் வேண்டும். இந்நம்பிக்கை மக்களின் அவதானிப் பிலிருந்து எழுந்தது எனக் கூறுவதை விட, அதனை ஏற் கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட சித்தாந்தத்திலிருந்து உய்த் துணர்ந்தனர் எனக் கொள்வதே பொருத்தம் என்று அவர் கருதுகின்றார். அரசன் ஒரு தெய்வம்; குறிப்பாக சூரிய தெய்வம். இதிலிருந்து அவரின் திருவிளையாடற் சக்தி பெறப்படும்; இச்சக்திக்கும் நீதி வழுவாமைக்கும் நெருங்கிய தொடர்புண்டு; பின்னதில்தான் இச் சக்தி தங்கியிருக்கிறது. . .
145 ہنسی بھی..
どう 9-פו

Page 75
dyo.
ஞாயிற்றின் தன்மையிலிருந்து அரச நீதியை வருவிக் கலாமா என்பதை ஹோகார்டுடன் நாமும் சற்று ஆராய்வோம். ஞாயிறு, திங்கள் போன்றவற்றினதும் பருவ காலங்களினதும் மாறுபடாத் தன்மைக்கும் ஒழுக்க நெறி அமைதிக்குமிடையே யுள்ள ஒப்புவமையை இந்தியர் நன் குணர்ந்திருந்தனர். இயற்கை அமைதிக்கும் ஒழுக்க அமைதிக்கும் வேதங்களில் ஒரே சொல்லே வழங்கியது. வருண என்னும் தேவரே இரு அமைதிகளையும் தாங்கியவராதலால் “சட்டத்தின் தலைவர் என்ற பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது. வருண ஓர் அரச தெய்வம்; இன்றும் பூதானில் “சட்டத்தின் தலைவன்’ என்று அரசனுக்குப் பட்டப் பெயர் உண்டு. ஞாயிற்றுக்கும், சட்டத் துக்கும் அமைதிக்குமிடையே உள்ள தொடர்பை சதப்பத பிராமண குடுப்பிடுகின்றது. புத்த நெறியிலே பேசப்படும் ஒழுக்க நெறியின் சக்கரம் ஞாயிற்றின் குறியீடாகும். ஞாயிறே ஒழுக்க நெறியையும் அமைதியையும் தாங்குபவன் என்னும் கொள்கை நிலவியதனாற்றான் சிங்களவரிடையே இன்றும் விமலதர்மசூரிய (மாசற்ற ஒழுக்க நெறியின் ஞாயிறு) போன்ற பெயர்கள் வழக்கிலிருக்கின்றன என ஹோகார்ட் கூறுகிறார். எகிப்திலும் கிரேக்க நாட்டிலும் இக் கொள்கைகள் ஒரு காலத்தில் நிலவியிருந்தன என்பதற்குச் சான்றுகள் உள.
ஞாயிறே எல்லாவற்றின் மேலும் அமைதியைச் சுமத்துவ தனால் அஃது ஒழுக்க நெறி எனக் கொள்ளப்பட்டது. ஆனால் ஞாயிறுகூட ஒர் ஒழுங்கு முறைக்கு உட்பட்டதனால், சட்டம் ஞாயிற்றிலிருந்து வேறுபட்டதென்று அதே சமயம் கருதப் பட்டது. அரசன் ஞாயிறாக இருந்ததனால், அரச நீதி தவிர்க்க முடியாததாயிற்று. அவர் ஞாயிறாக இருந்ததனால் உலகத் திலே ஓர் ஒழுங்கு முறையை நிலைநாட்டி அதனைச் செழிப்
146- 一锣

ஏ.ஜே. கனகரட்னா புறச் செய்தார். காலந்தவறி மழை பெய்தால் அழிவே ஏற்படும். அதே போன்று அரசன் நெறி தவறினால் இடையூறுகள் ஏற் படும். குடிமக்களும் சட்டத்தை மீறுவது இயற்கையை மீறு வதற்குச் சமமாகக் கருதப்பட்டது. விண்மீன் நிறைந்த வானமும் மக்கள் உள்ளத்திலே குடியிருந்த ஒழுக்க நெறியும் தன்னகத்தே மதிப்பச்சத்தை உண்டு பண்ணியது எனத் தத்துவஞானி காண்ட் கூறும் போதும், ‘மாற்ற முடியாத சட்டத் தின் படை” என ஆங்கிலக் கவி மெரடித் கோள்களை விழிக் கும் போதும், இருவரும் மிகப் பழமையான கொள்கை களையே பிரதிபலிக்கின்றனர் என ஹோகார்ட் சுட்டிக் காட்டுகின்றார். பொருள் சிதைந்து மறைந்த போதிலும் அதன் நறுமணம் இன்றும் கமழ்கின்றது. வான அமைதிக்கும் ஒழுக்க நெறிக்கும் இடையே உள்ள ஒப்புவமை இப்பொழுது கவிஞர் களின் அழகுக் கற்பனையாகச் சுருங்கிவிட்டது. ஆனால் இவ்வொப்புவமையை முதலிற் கண்டு பிடித்த பண்டைக் காலத்து சிந்தனையாளர் வெறும் அழகை நாட வில்லை; வான நிலையினால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே அவர்கள் அவாவினர் என ஹோகார்ட் கருதுகிறார். இம் முயற்சியில் ஒரளவு வெற்றியுங் கண்டார். இயற்கைச் சக்தி களைக் கட்டுப்படுத்துவதில் அல்ல, தங்களைக் கட்டுப் படுத்தியதனால் ஒற்றுமையாக இயற்கையின் தாக்குதல் களை அவர்களால் சமாளிக்க முடிந்தது.
ஒலிகள் தான் மொழியின் அடிப்படை இவ்வொலிக் கூட்டங்களிற் சில நிலைத்திருக்கின்றன; சில திரிகின்றன; சில மறைகின்றன. காலப்போக்கில் நிகழும் இம். மாற்றங் களினால் இவ்வொலிக் கூட்டங்களை இனங்கண்டு கொள்ள முடியாத வாறு ஆகின்றது. இவ்வொலிக் கூட்டங்களை
} -147

Page 76
e
அடிப்படையாகக் கொண்டு அவற்றைத் துருவி ஆராய்ந்ததின் பயனாக, மொழிக் குடும்பங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டுபிடிப்பதில் மொழி நூலார் வெற்றி யீட்டினர். இவ் வுத்தியைக் கையாண்டு முடிசூட்டு விழாவை ஆராய்ந்தால், வெவ்வேறு நாடுகளில் வழக்கிலிருந்த முடி சூட்டு விழாச் சடங்குகள் ஒரே பிறப்பிடத்திலிருந்து தோன்றி யமை புலப்படும் என ஹொகார்ட் கூறுகிறார். சில நாடுகளிலே இச்சடங்குகளில் வேறுபாடுகள் இருந்த போதிலும், பல்வேறு நாடுகளில் வழக்கிலிருந்த முறைகளில் அடிப்படை ஒற்றுமை இருந்த தென்பதை ஹொகார்ட் எண்பிக்கிறார். ஈஜியன் கடலுக்கும் கங்கை நதிக்கும் இடைப்பட்ட பகுதியிலிருந்து தான் ஆதியில் இம் மூலச்சடங்கு தோன்றியிருக்க வேண்டும் என அவர் ஊகிக்கிறார்.
திருமணத்தின் போது, மணமகனும், மணமகளும் அரசருக்குரிய நிலையில் வைத்துக் கொண்டாடப்படுகின் றனர். இவ்வாறு அவர்கள் கெளரவிக்கப்படுவது ஏன்? திருமணச் சடங்குகள் அரச வம்சத்தினாலும் மேல் வகுப்பாரி னாலும் அனுட்டிக்கப்பட்டு கீழ்வகுப்பாராலும் பின்பற்றப்பட்ட தென்பது தானா இதன் விளக்கம்? அரசனின் திருமணத் திற்கும் அவருடைய முடிசூட்டு விழாவிற்கும் தொடர்பு உண்டு என ஹோகார்ட் கருதுகிறார். விஜயனின் வரலாற்றை ஈண்டு நோக்கிக் கொள்க. அரச வம்ச பெண் ஒருத்தியை மதுரையி லிருந்து வரவழைத்து, பின்பு ஆசாரப்படி முடிசூட்டுவிழா நடைபெறுகின்றது. பண்டைக்காலத்து இந்தியாவில் அரசி யில்லாமல் மன்னன் முடிசூடிக்கொள்ள முடியவில்லை என்பது இதிலிருந்து புலனாகின்றது. சதப்பத பிராமணத்தில் இது வெளிப்படையாகக் கூறப்படுகிறது. “மனைவி அவரின் பாதி
148 参

ஏ.ஜே. கனகரட்னர் ஆதலால் அவர் மணமாகாவிட்டால் முழுமையடையாதவர்; பிறப்பெடுக்காதவர். ஆனால் (மனைவியை) மணந்தால், பிறப்பெடுக்கிறார். முழுமையடைகின்றார்.” ஆதலால் திருமணமும் முடிசூட்டு விழாவும் பொருந்துவதில் வியப் பொன்றுமில்லை.
அரசியின்றி ஒருவன் அரசனாக முடியாது. அரசி ராஜ பரம்பரையில் பிறந்தவளாக இருத்தல் வேண்டும் என்பது பண்டைக் காலத்து நியதி போலும், திருமணம், முடிசூட்டு
விழாவின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும் என
ஊகிக்கலாம். அரசன் தெய்வமாகவும், வானமாகவும், ஆன்மா அல்லது உயிராகவும், அரசி இறைவியாகவும், பூமியாகவும், உடம்பாகவும் இந்திய மரபிலே கருதப்பட்டனர். முடிசூட்டு விழாவிலே இடம் பெற்ற திருமணச் சடங்குகள் பின்பு மூலத்திலிருந்து பிரிக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக் காக எளிதாக்கப்பட்டது என ஹொகார்ட் கருதுகிறார். சதாரண திருமணத்தில் இதே கோட்பாடும் (ஆண் - வானம், பெண் -பூமி), முடிசூட்டு விழாச் சடங்குகளில் சிலவும் மண்டிக் கிடப்பது இதற்குச் சான்றாகும்.
பண்டைக் காலத்தில், புரோகிதனுக்கும் அரசனுக்கு முள்ள வேறுபாட்டை ஐயந்திரிபறக் கூறுவது மிக்க கடினம் என்கிறார் ஹொகார்ட்,
இம்மயக்கத்தின் விளைவாக, மதகுரு - அரசன் என்ற பதத்தை உண்டாக்கியிருக்கின்றனர் வரலாற்றாசிரியர், இந்தச் சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ள அரசனோ புரோகிதனோ எனத் திட்டவட்டமாய் வரையறுத்துக் கூற முடியாதவிடத்து இப்பதத்தினை அவர்கள் கையாளு
参一 149

Page 77
eyer
கின்றனர். பண்டைக் காலத்திலும், பின்தங்கிய சமுதாயங் களிலும்தான் இத்தகைய மதகுரு-அரசர் காணப்படுகின்றன. தற்பொழுது இருவருக்குமிடையே திட்ட வட்டமான வேறுபாடு உண்டு. ஒரு பேரினத்திலிருந்து அரசனும் புரோகிதனும் கிளைத்திருக்க வேண்டும் என ஹொகார்ட் கருதுகிறார். பண்டைக் காலத்து இந்தியாவிலே, அரசரைப் போன்று, மத குருமாரும் தெய்வீகத் தன்மை வாய்ந்தவர்களாக இருந்தனர். இருவரும் ஒரே வகைத்தான ஆசாரம் மூலம் திருநிலை வாணராக்கப்பட்டனர். ஆனால் விளைவுகள் வேறுபட்டன. அரசன் இந்திரனானான், மதகுரு பிரகஸ்பதியா னான். அரசன் யாகத்தின் புரவலர். யாகத்தை ஒப்புக் கொடுத்தவர் மதகுரு. பின்னர், சுஷத்திரிய குலத்திலும் மேம்பட்டது பிராமணர்குலம்; செல்வாக்குப் பெருகி அவர்களது கை ஓங்கியது. பிராமணன் தெய்வங்களின் தெய்வம் என்றார் மனு, புத்த சமய நூல்களின் போக்கு வேறு. சக்கரவர்த்தியாவதுதான் அரசன் அடையக் கூடிய உயர்ந்த மதிப்பு. ஆன்மிகத் துறையில், புத்தராவது தான் இலட்சியம். சித்தார்த்தன் புத்தராக மாறிய வரலாற்றை ஆராய்ந்தால் ஞானியாவது துறவியாக மாறிய அரசன் என்ற பண்டைக் காலத்து இந்திய நம்பிக்கை புலனாகும்.
வரலாற்றின் விடிவிலேயே அரசனுக்கும் புரோகி தனுக்குமிடையே வேறுபாடு தெளிவாகத் தொடங்கி விட்டது என ஹோகார்ட் குறிப்பிடுகிறார்.
முடிசூட்டு விழா பூரணத்துவமான சடங்காகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், இதிலும் விரிவான ஒரு சடங்கின் பகுதியே இது என்பது ஹொகார்ட்டின் கட்சி.
யாகத்தின் மூலம் உலகத்தை பிராமணன் படைக்கிறான் என்ற கொள்கை இந்தியாவிலே நிலவியது. உலகத்தைப்

ஏ.ஜே. கனகரட்ணா படைப்பதற்குக் கையாளப்பட வேண்டிய சடங்குகளை சதப்பத பிராமணம் விரிவாக எடுத்துரைக்கின்றது. இப் படைப்பின் மூலம் பிரபஞ்சத்தின்மீது அதிகாரம் பெறலாம் என்ற நம்பிக்கை நிலவியது. ஹொகார்ட்டின் கருத்துப்படி, முடிசூட்டு விழாவின் நோக்கம் உலகத்தின்மீது அதிகாரம் பெற்று அதனைச் செழிப்புறச் செய்வதே.
படைப்பைப்பற்றிய புராணங்கள் வரலாற்று ஆவணங் களே என ஹொகார்ட் கொள்கிறார். பிரபஞ்சத்திற்கு எழுச்சி கொடுத்து அதற்கு உரம் ஏற்றுகின்ற முறைகளை அவை சுட்டுகின்றன என்கிறார். பிரபஞ்ச மேட்டைக் குவித்தல், தெய்வீக விருட்சத்தை நாட்டுதல், பகைவரைத் தோற் கடித்தல், அரசன் அரசியை வினைமுறைகளுடன் பணியமர்த் துதல் - இவையாவையும் உள்ளடக்கியதொன்றுதான் ஆதிப்படைப்புச் சடங்கு என அவர் குறிப்பிடுகிறார். இந்தப் புராணங்கள் வரலாற்று உண்மைகளை உள்ளடக்கியன. அவற்றை வெறுங் கட்டுக் கதைகளென ஒதுக்கலாகாது என்பதே அவரது துணிவு.
இந்நூலை வாசிப்பவர்கள் ஹொகார்ட்டின் ஆழ்ந்த, பரந்த அறிவையும், நுண்மாண் நுழைபுலத்தையும், மேலெழுந்த வாரியாக தொடர்பற்றவை எனத் தோன்றுப வற்றுக்கு இடையேயுள்ள உள்ளார்ந்த தொடர்புகளை வெளிப்படுத்தும் ஆற்றலையும் மெச்சாதிருக்க முடியாது.
毫 . 151

Page 78


Page 79


Page 80
Ia'ul alapa. Hu Jiu. எட்டுத் தீக்கும் சென்று கலை நானங்களைந் தொகுத்துத் தரும் முயற்சி மத்து'.
பொருளியல், உளவியம், மொழி வரலாற்றியல், உயிரின வாழ்க்கைச் சூழலியல், ஆட்சியியம், அரசியலமைய்யியல், இலக்கியம், மருத்துவம், புரானவியல், திரைப்படக் கடிை மானிடவியல்
ஆகிய பதினொரு துறைசார்ந்த
மணியான ஆங்கிய நூல்களின் ஊடாகச் சஞ்சரிக்கும் இனிய அநுபவத்தினை
மத்து தருகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திங்,
303deார்5ே என்று பேர் பண்ணபட்டவர்கள்
LITE CEITEETIStG ETTER,
இருந்த அவலச் சூழலிங்
A.၂ ခးါရှီဂျီ 2း : မျိုး
ஆனால், அவரே பல்கலைக்கழகத்தின்
அநண்ட வெள்கையிங்
எங்களுக்குக் குளிதரும்
நிழலாக இருந்திருக்கிறார்.
- மு.நித்தியானந்தன்
 
 

||||||||
|
\,
)

Page 81
158 மலரும் நினைவுகள்
அப்படி மாடுகளைக் கொண்டு போனவர்கள் இடைக் கிடை காரைநகருக்கு வந்து மாடுகளின் நிலைமை பற்றிச் சொல்வது வழக்கம். ኵ
அப்படித்தான் கொண்டு போன மாடுகளைப் பற்றிச் சொல்வதற்காகச் செம்பாட்டுக்காரர் காரைநகரிலுள்ள மாட்டுச் சொந்தக்காரரின் வீட்டுக்கு ஒருநாள் வந்தார். அவர் வந்ததற்கு வேறொரு உள் நோக்கமும் இருந்தது.
காரைநகர் வீட்டுக்காரர். நித்தியம் அரிசிச் சோறு தின்று அலுத்துப்போய். மாற்றத்துக்காக, அருமை பெருமை யாய் அன்றைய தினம் குரக்கன் பிட்டு அவித்திருந் தார்கள்.
செம்பாட்டார் மாடுகளைப் பற்றிக் கதைத்த பின், வழக்கம்போல அவரைச் சாப்பிடும்படி சொன்னார்கள்.
அவரும் ஆவலோடு சாப்பிட உட்கார்ந்தார். சாப்பாட் டுத் தட்டில் அன்று தாங்கள் அருமையாகத் தயாரித்த குரக் கன் பிட்டைக் கொண்டுவந்து போட்டார்கள். ". . .
செம்பாட்டார் திகைத்துப் போனார். பெரிய ஏமாற்றம் அவருக்கு.
** அட. எனக்கு முன்னம் நீ இங்கே வந்துவிட்டாயா!' என்றாராம் அவர்.
செம்பாட்டுக்காரரின் வீட்டில் அந்தக் காலத்தில் பெரும் பாலும் குரக்கன் பிட்டுத்தான் சாப்பாடாம் அவருடைய கடுமையான உழைப்புக்கு அரிசி நின்று பிடிக்காது. குரக்கன் தான் நின்று பிடிக்கும். அவர் மாடுகளைப்பற்றிக் கதைக் கும் சாட்டில் அரிசிச் சோறு சாப்பிடும் எண்ணத்திலேதான் அன்று காரை நகருக்கு வந்திருந்தார். அவரை முந்திக் கொண்டு குரக்கன்பிட்டு அன்று காரை நகருக்கு வந்துவிட்ட தைக் கண்டு அவருக்குப் பெரிய ஏமாற்றமும் கவலையும் ஏற்பட்டுவிட்டது!
இது வெறும் கதையாகவே இருக்கலாம். ஆனால் அந்தக் காலத்து உணவுப் பழக்கத்தைச் சற்றே "பிட்டுக் காட்டுகிறதல்லவா?

18. உடையும் நகையும்
ஒகு மனிதனின் வெளித் தோற்றத்துக்கு முக்கியமான காரணமாயிருப்பவை அவனுடைய ஆடையணிகளும் தலை முடி (கூந்தல்) அமைப்புமே "ஆள் பாதி, ஆடை பாதி” என்று பழமொழியும் உண்டு.
ஆயிரத்துத் தொழாயிரத்து இருபதுகளில் சுமார் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணப் பகுதியில் பொது வாக ஆண்களும் பெண்களும் முடியுடை வேந்தர்களாகவே இருந்தார்கள். அதாவது குடுமி வைத்திருந்தார்கள் *சிலுப்பா" வெட்டிய ஆண்களை மிக அரிதாகவே காண முடியும். ;
ஆண்களும் குடுமி வைத்திருப்பது அக்காலத்தில் ஒரு சமூக வழக்கமாக இருந்தது. அந்தச் சமூக வழக்கத்தை மீறுவதற்குப் பெரும்பாலானவர்கள் துணியவில்லை.
இப்போதெல்லாம் புதுமை செய்வதற்காகவும் பகுத் தறிந்து சரியானதைச் செய்வதற்காகவும் சமூக வழக்கங் களை உடைத்துக்கொண்டு வருவதற்குப் பலர் தயாராக இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் இந்தக் குணம் மக்க ளிடையே சற்றுக் குறைவாகவே இருந்தது. அப்பா எப்ப டிச் செய்தார், அப்பாவின் அப்பா எப்படிச் செய்தார், நாமும் அப்படித்தான் செய்யவேண்டுமென்ற ஒரு மனப் பதிவு அன்
றைய மக்களிடம் இருந்தது. ெ

Page 82
160 மலரும் நினைவுகள்
இப்போது புலிப் பெண்களில் சிலர் ஆண்களைப்போலச் சிலுப்பா" வெட்டியிருப்பதைக் காணக்கூடியதாக இருக் கிறது. அந்தக் காலத்தில் யாராவடி, இதை நினைத்துக் alLi Li Titu Trias6Trr?
சில ஆசாரக் குடும்பங்களில் பெண்களின் கணவர் இறந்து விட்டால் அந்தப் பெண்களின் தலையை மொட்டையடிப்பார் கள். இந்தியப் பிராமணர்களிடையே இந்தப் பழக்கம் முன்பு பெருவழக்கு. யாழ்ப்பாணத்திலும் மிக மிகக் குறைந்த அளவில் சில குடும்பங்களில் இந்த வழக்கம் இருந்தது.
புலிப் பெண்களின் சிலுப்பாத் தலைகளைப் பார்க்கும் போது என் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி தோன்றுகிறது எங்கள் பெண்களின் முன்னேற்றப் பாதைக்கு இது ஒரு அடையாளம் என்றே நான் கருதுகிறேன். "ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே.”*
(ஆனால் "ஐயோ, நமது தமிழ்ப் பண்பாடு சீரழிந்து போகிறதே!" என்று கூக்குரலிடும் பழைமைவாதிகள் இப் போதும் நிறைய இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடி யாது. அவர்களின் வாய்கள் இப்போதைக்கு மூடப்பட்டிருப் பது நல்லதே!)
அந்தக்காலத்தில் ஆண்கள் சிலர் தலையின் முன் பக்கத்தை மழுங்கச் சிரைத்து பின் அரைவாசிக்கே மயிரை வளர்த்துச் குடுமி வைத்திருப்பார்கள்.
* காற்சட்டை, கோட் போட்டுக்கொண்டு கச்சேரி? உத்தியோகத்துக்குப் போன பலர்கூட அந்தக் காலத்தில் குடுமியை வெட்டத் துணியவில்லை. அவர்கள் தமது தலைப் பாகைக்குள் குடுமியை மறைத்து வைத்திருப்பார்கள்,
ஆண்களின் இந்தக் குடுமி மோகம் மிக விரைவில் மாறத்
தொடங்கிற்று. 1930களில் பல இளைஞர்கள் குடுமிகளை வெட்டிச் சிலுப்பா வைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

.16 . tפץ שנחc
குடுமி வைத்திருந்த இளைஞர்களை மற்றச் சிறுவர்கள் டேய், குடும்பாஸ்" என்று கேலி செய்யவும் தொடங்கி னார்கள். அதற்குப் பயந்து தமது குடுமிகளை வெட்டிக் கொண்ட சில நண்பர்களை நான் அறிவேன்.
பெண்களின் தலைமுடி அன்று தொடக்கம்-இன்றும் கூடப் பெரும்பாலும் மறையாமல் இருக்கிறதென்று சொல்ல arub.
ஆங்கிலப் பள்ளிகளுக்குச் சென்ற சில பெண்கள் தமது கூந்தலை சற்றே தோள்வரை வெட்டிவிட்டதுண்டு. ஆனால் அவர்களும் தமது திருமணத்துக்கு முன்பு கூந்தலை வளர்த் துக் கொண்டை போட்டுக்கொள்வார்கள். அல்லது பின்னித் தொங்கவிடுவார்கள்.
கூந்தலை வளர்த்து அழகாகக் கொண்டைகள் போடு வதும், அல்லது விதம் விதமாகப் பின்னி விடுவதுமே தமக்கு அழகாக இருக்கும் என்ற ஒரு மனப்பான்மை பெண்களிடம் பொதுவாகப் பரவியிருக்கிறது.
அழகு, நாகரிகம் என்பனவெல்லாம் அவர்கள் மனதிலே வளர்த்துக்கொண்ட எண்ணங்களால் ஏற்படுகிற ஒரு தோற்றந்தான்!
ஆபிரிக்காவுக்குப் போகவேண்டாம், பக்கத்திலுள்ள தமிழ்நாட்டுக்குக்கூடப் போக வேண்டாம். இங்கே யாழ்ப் பாணத்தில்கூட, முன்பெல்லாம் காதுகளில் துளை போட்டு, அவற்றில் பெரிய பெரிய பாரமான ஆபரணங்களைத்தொங்க விடுவதும், அதனால் காதுத் துவாரம் இரண்டு விரல்களை நுழைக்கக்கூடிய அளவுக்குப் பெரிதாகப் போவதும் அழ கென்று, நாகரிகமென்று நினைத்தார்கள். சேலை கட்டு வதில்கூட ஒரு காலத்தில் பதினாறு முழச் சேலையைச் சுற்றிச் சுற்றி வரிந்து கட்டினார்கள். பிறகு பன்னிரண்டு முழச் சேலையைக் கட்டும்போதுகூட அதன் முந்தானையைத்
ഥ-l1

Page 83
iÖ2 மலரும் நினைவுகள்
தோள்மீது போட்டு, பின்பக்கமாக எடுத்து, இடுப்பை ஒரு சுற்றுச் சுற்றி மறுபடியும் பின்பக்கத்தில் "பின் பண்ணித் தொங்கவிட்டார்கள். அதுவே அழகென்றும் நாகரிகமென் றும் நினைத்தார்கள். இன்றைக்கு யாராவது அப்படிச் செங் தால் அதை அழகாயிருக்கிறதென்று சொல்வார்களா? நாகரிகமென்று சொல்வார்களா?
பெண்களைத் தங்கள் ஆளுகையின் கீழ் அடக்கி வைத் திருக்கவேண்டுமென்றும், அவர்களை அழகுபடுத்தித் தங்கள் போகப்பொருளாக வைத்திருக்க வேண்டுகென்றும் இன்றைக்கும் பல ஆண்கள் நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். ... இதில் ஆச்சரியம் என்னவென்றால், அப்படி அடக்கி அடக்கமாக இருப்பதே - அல்லது அப்படி இருப்பதாக உலகுக்குக் காட்டுவதே நாகரிகம் என்றும், பண்பாடு என்றும் பெண்களும் நினைக்கிறார்கள்!- சிறு வயதிலி ருந்தே பெண்களுக்கு அப்படிப் பாடம் படிப்பித்து வைக்கப் பட்டிருக்கிறது.
'கணவன் எப்படித்தான் கொடுமைப்படுத்தினாலும் அவற்றையெல்லாம் பொறுத்து வாழ்வதே பெண்ணின் பெருமை' என்ற இந்தப் படிப்பு இன்னும் பல நாட்களுக்கு நின்று பிடிக்காதென்றே நினைக்கிறேன். உலகெங்கும் பெண்ணியல் வாதமும் பகுத்தறிவு வாதமும் தலைதூக்கியி ருக்கிறது. நமது தமிழீழப் பெண்கள் தமிழ் கூறும் நல்லு லகுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதுக்குமே வழிகாட்டிக ளாக நெஞ்சில் உரமும் நேர் கொண்ட பார்வையும் கொண் டவராய்க் கைகளில் துப்பாக்கி ஏந்தியிருக்கிறார்கள்
ஈழத் தமிழகம் பெருமைப் படலாம்! அந்தக்காலத்தில் இரண்டு மூன்று வயதுச் சிறு பிள்ளை கள் பலர் உடம்பில் உடை என்று எதுவுமில்லாமல் பிறந்த மேனியாகத் திரிவதை நான் பார்த்திருக்கிறேன்" இப்போது

வரதர் 163
குழந்தை பிறந்த உடனேயே "நப்கின்" என்றும், பிறகு "யங்கி" என்றும் அணியாத பிள்ளைகளைப் பார்ப்பதே
அரிது!
முன்பு, மூன்று நாலு வயதாகும் போது ஆண் பிள்ளை களும் சரி. பெண் பிள்ளைகளும் சரி இடுப்பில் ஒரு சிறு துண்டு கட்டியிருப்பார்கள்.
இன்னும் சற்றே வளர்ந்ததும், பெண்பிள்ளைகள் மேலுக்கு ஒரு சட்டையும், அரையில் சிற்றாடையும் அணி வார்கள். சிறிய பெண்பிள்ளைகள் அணிவதற்கேற்ற சிற்றா டைகள் (சிறிய சேலைகள் - நீளமும் குறைவு; அகலமும் குறைவு) அப்போது விற்பனைக்கு வந்தன. அத்தகைய சிற்றாடை தயாரிக்கும் தொழிலே இப்போது நின்று, விட்டிருக்குமென்று நினைக்கின்றேன்
"பெரிய பிள்ளை ஆகிவிட்ட, வசதிபடைத்த பெண்" பிள்ளைகள். வெளியே விசேடங்களுக்குப் போகும்போது, கீழே பாவாடைகட்டி, மேலே சட்டை போட்டு, அதன் மீது தாவணி அணிந்து செல்வார்கள்.
இப்போது கூடச் சில இந்துப் பாடசாலைகளில் சரஸ் வதி பூசை போன்ற விசேட தினங்களில் பெண்பிள்ளைகள் இப்படித் தாவணி அணிந்து செல்வதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி உடை அணியும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் அல்லது ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பெண் பிள்ளைகள் இப்படிப் பாவாடை தாவணி அணிந்து, தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்றுவதாகச் சிலர் நினைவு கொள்கிறார்கள்!
ஆனால், அவர்களும் ஆண் பிள்ளைகள் வேட்டி சால்வை - அவசியமானால் தலைப்பாகையும் அணிந்து தமிழர் பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்று வற்புறுத் துவதில்லை!

Page 84
64 மலரும் நினைவுகள்
இங்கேயும் பெண்கள் அடக்கி ஆளப்பட வேண்டியவர் கள் என்ற நினைவே தலைதூக்கி நிற்கிறது!
முன்பெல்லாம் பெண்கள் திருமணம் ஆகிவிட்டால் சேலைதான் அணிவார்கள். வீட்டுக்குள் இருக்கும்போதும் சேலைதான்; வெளியே போகும்போதும் சேலைதான்!
இப்போது பெண்கள் வீட்டுக்கு வெளியே போகும்போது தான் சேலை அணிவது என்று ஆகிவிட்டது. சில பெண்கள் திருமணமான சில பெண்கள் வெளியே போகும்போது கூடப் பாவாடை சட்டை, "கவுண்" போன்றவற்றை அணிகிறார் கள். அவர்களை யாரும் தள்ளிவைத்து விடவில்லை!
ஆண்கள் காற்சட்டை அணிவது இப்போது சர்வ சாதாரணம்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, காற்சட்டை போட்டவர் ஏதோ வெள்ளைக்காரருக்கு அடுத்த துரை என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது. மிக உயர்ந்த பதவியில் உள்ள வர்கள் மட்டுமே காற்சட்டை அணிவார்கள். அவர்களில் சிலவகை உத்தியோகத்தர்கள் - முக்கியமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் அரைக் காற்சட்டையே அணிவது வழக்கம். (அரைக் காற்சட்டை என்பது "சோட்ஸ். அது முழங்காலுக்குக் கீழே இறங்காது.) s
அந்த அரைக் காற்சட்டை இப்போது காணக்கிடைக் காத ஒரு பொருளாகிவிட்டது. முன்பு பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் எல்லாரும் அரைக்காற்சட்டைதான் அணிவார்கள். (பாடசாலைகள் என்றதும் ஆங்கிவப் பாட சாலைகள், தமிழ்ப் பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் எல்லாருமே வேட்டியும் சால்வையும்தான் அணிவார்கள்) பல்கலைக்கழகம் போகிறவறையும் அரைக் காற் afoolதான் மாணவர்களின் யூனிபோம் ஆக இருந்தது.
இப்போது மூன்று வயதுப் பையனுக்கும் முழுக்காற் சட்டைதான்!

வரதர் ሶ 65
பதவி, அந்தஸ்து வித்தியாசங்களின்றி காற்சட்டை பொது உடைமையாகிவிட்டது. "தமிழ்ப்பண்பாடு அழி கிறதே!" என்று முக்கியமாகப் பெண்கள் சேலை உடுக்க வேண்டும், சிறுபெண்கள் பாவாடை, சட்டை தாவணி போட வேண்டும் என்று அழுகிறவர்கள் யாருமே இந்தக் காற்சட்டை நாகரிகத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவ தில்லை. ஏனென்றால் அப்படிக் குரல் கொடுக்கக் கூடிய வரும் காற்சட்டைதான் அணிந்திருப்பார். அல்லது அவ ருடைய உறவினர்கள் நண்பர்கள் எல்லோருமே காற்சட்டை அணிந்தவர்களாக இருப்பார்கள்.- ஏன் வம்பு? சிறிய வாய்க்காலில் வரும் நீருக்கு அணைபோட்டுப் பார்க்கலாம். சீறிப் பொங்கி வரும் காட்டாற்றுக்கு அணைபோட நினைப்
Lu Třs6TT.
இப்போது வேட்டி உடுக்கும் ஆண்களில் அநேகர் சால்வை போடுவதில்லை. "சேட்" தான் போடுகிறார்கள்
முன்பு சிறுவர்கள் வேட்டி உடுத்தி மேலே சேட்" போடு வார்கள். சேட் போட்டால் அனேகர் சால்வை அணிவ தில்லை. ஆனால் பெரியவர்கள் வேட்டி உடுத்துவதானால் "நாஷனல்" என்னும் சட்டை அணிந்து, அதற்கு மேல் கழுத் தைச் சுற்றி சால்வை அணிவார்கள். "நாஷனல் சட்டை என்பது தமிழாசிரியர்களின் 'யூனிபோம்" மாதிரியே அந்தக் காலத்தில் விளங்கிற்று. சேட்" வெள்ளைக்காரருடைய உடுப்பு. "நாஷனல்’ என்பது எங்கள் நாட்டுக்குரிய சட்டையாகக் கருதப்பட்டது. ஆனால் அதன் பெயர்மட்டும் "நாஷனல்" என்று இந்திய மொழியிலேயே வழங்கப் பட்டது.
முன்பெல்லாம் ஆண்களில் பலரும் நெற்றிப் பொட்டு வைத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது, இப்பொழுது அந்தப் பழக்கம் மிக அருகிவிட்டது. நெற்றியில் விபூதிக் குறிவைத்துப் பெரிய அளவில் அதன்மீது சந்தனப் பொட்டு வைப்பவர்கள் ஒருவகை. விபூதியையோ பவுடரையோ

Page 85
166 மலரும் நினைவுகள்
அழுத்திப் பூசி, புருவங்களின் நடுவே சின்னஞ் சிறு வட்ட மிான சிந்தனப்பொட்டு இட்டுக் கொள்வார்கள். அந்தச் சந்தனப்பொட்டின் தடுவே சிறு குச்சி முனையால் குங்குமம் வைத்து அலங்கரிப்பவர்களும் உண்டு. "
ஆண்களில் சிலர் கழுத்திலே தங்கச் சங்கிலியில் *அச் சரக்கூடு" கோத்து அணிந்ததும் உண்டு. அது அவர்களின் செல்வச் செழிப்பின் அறிகுறியாகவும் இருந்தது
பெரும்பாலான ஆண்களும் பெண்களைப் போலக் காது களில் துளை போட்டிருந்தார்கள். அதிலே கடுக்கன் போட்டுக் கொள்வதே அழகாகக் கருதப்பட்டது. இப் போதும் திருமணச் சடங்கின் போது மணமகனுக்குக் கடுக்கன் அணிவது ஓர் முக்கிய சடங்காக நடக்கின்றது. இப்போது ஆண்கள் காதில் துளை போடுவதில்லையாதலால் அவர்களுக்காக "வில்லுக் கடுக்கன்" வந்திருக்கிறது!
பெண்களின் நகைப்பித்து அன்றைக்கும் உள்ளதுதான் இன்றைக்கும் உள்ளதுதான். ந ை$ப்பித்தும் புகைவைப் பித்தும் பெரும்பாலான பெண்களோடு உடன் பிறந்த ' வியாதி.
புடைவைகளின் தரத்திலும் மாதிரிகளிலும் அணியும், விதத்திலும் இப்போது மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது போலவே நகைகளின் வடிவங்களிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. み
பெண்களின் முக்கிய ஆபரணங்களில் ஒன்றான 'அட்டியல்' என்னும் நகையை இப்போது காணோம். அட்டியல் கழுத்தைச்சுற்றி இறுக்கமாக பட்டை போல அணியப்படும். அதன் நடுவில் ஒரு சிறிய பதக்கம் தொங்கும்.
பல பெண்கள் காதுகளின் கீழ்ப்பக்கம் நடுப்பக்கம் மேல் பக்கம் ஆகிய மூன்று இடங்களிலும் துளை போட்டு அவற்

வரதர் 67
றில் நகைகள் அணிந்ததுண்டு. காதில் மேற்பக்கத்தி லிருந்து தொங்கிய நகைக்கு "வாளி' என்று பெயர். கீழ்க் காதில் அணிந்த தோடு பெரிய கொட்டைப் பாக்கின் அளவில் பல சிவப்புக் கற்கள் பதித்ததாகவும், வேறு பல வடிவங்களிலும் இருந்தது. m
பெண்கள் கழுத்தில் இப்போது முக்கியமாக அணியும் "நெக்கிலஸ் அப்போது இல்லை. அட்டியலைவிட, இரட்டைப்பட்டுச் சங்கிலி, பெரிய பதக்கம் கோத்த சங்கிலி முதலியவற்றை அப்போது அணிந்தார்கள். பெரிய பணக் கார வீட்டுப்பெண்கள் கழுத்தில் காசு மாலையும், இடுப்பில் தங்க ஒட்டியாணமும் அணிந்ததுண்டு.
கைகளில் அப்போது அணியும் காப்புகள் இப்போது போல மெல்லிய வளையல்களாக இருக்கவில்லை. ஒவ்வொன் றும் இரண்டு பவுனுக்கு குறையாத தட்டையான தடித்த காப்புகளையே அன்று அணிந்தார்கள்.
கை விரல்களில் தங்க மோதிரமும் கால் விரல்களில் வெள்ளி மோதிரமும் அணியும் வழக்கம் இருந்தது.
பெண்களின் இந்த நகை விஷயத்திலும் அத்தக் காலத்து வேறுபல நடைமுறைகளிலும் சரி எனக்குத் தெரி யாதவையும் நான் மறந்துவிட்டவையும் இன்னும் நிறைய இருக்கலாம்.

Page 86
(9) 10)
(II) (፲2) (13) (14) (15) (16) (17) (18)
ஐந்திணை எழுபது - மூவாதியார் திணைமொழி ஐம்பது - சாத்தத்தையார் மகனார்
கண்ணஞ் சேந்தனார்
திணைமொழி நூற்றைம்பது - கணிமேதையார்
திரிகடுகம்- நல்லாதனார்
ஆசாரக் கோவை - பெருவாயின் முள்ளியார் பழமொழி மூன்றுறையரையார் சிறு பஞ்சமூலம் - காரியாசான் கைந்நிலை - புல்லங்காடனார் முதுமொழிக்காஞ்சி - மதுரைக் கூடலூர் கிழார்
ஏலாதி - கணிமேதையார்.
இவற்றுட் சில கடைச்சங்க காலத்துக்குப் பிற்பட்டவையாகும்
எமக்குக் கிடைத்த கடைச்சங்க நூல்களும் அடிகளும்t
நூல் திருக்குறள் மணிமேகலை; சிலப்பதிகாரம் கலித்தொகை இன்னா நாற்பது பெருங்குறிஞ்சி குறிஞ்சி (ஐங்குறு நூற்றிற் கபிலர் பாடியது) திருமுரு காற்றுப்படை நெடுநல் வாடை பெருநராற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை பட்டினப்பாலை மதுரைக் காஞ்சி மலைபடு உகடாம் பதிற்றுப் பத்து
புறநானூறு அகநானுறு
குறுந்தொகை நற்றிணை முதலிய தனிப் பாடல்கள்
ー忍56ー
அடிகள்
名660
4857
4957
430s
60
261
0.
37
88
245 248
201
701.
553 600
4000
a 4,386

பழைய தமிழ் நூல்களிற் பல எமக்குக் கிடையாது. அழிந்தொ ழிந்து விட்டன. இவற்றுட் சிலவாவன:- மாபுராணம், இசை நுணுக் கம், பூத புராணம், கலி, குரு, வெண்டாளி, வியாழ மாலை அகவுள் அடிநூல், அணியியல் அவிநயம், ஆசிரிய மாலை, ஆனந்தவியல், இந்திர காளியம், இளந்திரையம், ஐந்திரம், ஓவிய நூல், கடகண்டு, கணக்கியல், கலியாண காதை, கவிமயக்கறை, கவிக்கேட்டுத்தண்டு, களரியாவிரை, கனவு நூல், காக்கையாடினியம், காலகேசி, குணநூல், குண்டலகேசி, கூத்து, கோணுால், சங்கயாப்பு, சயந்தம், சச்சபுட வெண்பா, சாதவாகனம், சிந்தம், சிறு காக்கை பாடினியம், சிறு குரீஇ, உரை, சிற்ப நூல், சிற்றெட்டகம், சிற்றிசை, செயன்முறை செயிற்றியம், நகடுர் யாத்திரை, தந்திரவாக்கியம், தான சமுத்திரம், தாளவகையோத்து, தும்பிப்பாட்டு, தேசிகமாலை, நாகசூமார் காவி யம், நீலகேசி, பஞ்சபாரதீயம், பரதம், பரி நூல், பலகாயம். பல காப்பியம், பன்னிருபடலம், பாட்டு மடை, பாவைப் பாட்டு, புணர்ப் பாவை, புதையனுால், புராணசாகரம், பூதபுராணம், பெரியபம்பம், பெருவல்லம், பேரிசை, போக்கியம், மணியாரம், மதிவாணர் நாடகம், தமிழ் நூல், மந்திரநூல்,மயேச்சுரர் யாப்பு, மாபுராணம், மார்க்கண் டேயர் காஞ்சி முதுகுருகு, முதுநாரை, முத்தொள்ளாயிரம், முறுவல், மூவடி முப்பது, மோதிரப்பாட்டு, யசோதர காவியம், வச்சத் தொள் ளாயிரம், வஞ்சிப் பாட்டு, வரி வளையாபதி, வாய்ப்பியம், விளக் கத்தார் கூத்து, அகத்தியம், அகத்தியர் பாட்டியல் அசதிக்கோவை, உலகாயதம், செங்கோன் தரை செலவு,
- 157 -

Page 87
அட்டவணை 3
யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகள் பட்டியல்
(ஆதார நூல்கள் :- யாழ்ப்பான சரித்திரம் - இராசநாயக முதலியார் யாழ்ப்பாண வைபவமாலை - மயில்வாகனப் புலவர்)
(1) யாழ்ப்பாணத்தில் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி கி. பி. 785 இல் உக்கிரசிங்கனுடன் தொடங்குகிறது. இவனுக்கு முன் யாழ்ப்பாணத்தில் நாகச் சிற்றரசர் ஆண்டனர்; இவன் இராசதானி யைக் கதிரை மலையிலிருந்து சிங்கை நகருக்கு மாற்றினான். இவ னுடைய காலத்திலேதான் மாவிட்டபுரக் கந்தசுவாமி கோவில் கட் டப்பட்டது. விசயன் கதைபோல இவனைப் பற்றியும் புராணக் கதையுண்டு.
(2) உக்கிரசிங்கன் இறந்தபின் அவனுடைய மகனாகிய ஜெய துங்க பரராசசேகரன் அரசனானான். இவனுடைய ஆட்சிக்காலத்திலே தான் யாழ்ப்பாடி எனும் பாணன் பரிசில் பெற்றான். இவன் காலத் தில் வரகுணன் எனும் பாண்டியன் இலங்கைக்குப் படையெடுத்து வந்து இவனையும் பொலனறுவாவில் ஆண்ட சிங்கள அரசனையும் வென்றான். ஜெயதுங்க பரராசசேகரனைக் கொன்றான்.
(3) கி. பி. 9ம் நூற்றாண்டு மத்தி தொடக்கம் 12ம் நூற்றாண்டு வரையும் ஜெயதுங்கனின் சந்ததிகள் பாண்டிய சோழருக்குச் சிற்றரசர் களாக யாழ்ப்பாணத்திலாண்டனர். இக்காலத்தில் அடிக்கடி ஏற் பட்ட சோழ,பாண்டிய பல்லவர் படையெடுப்புக்களையும் வெற்றிகளை யும் தென்னிந்தியச் சாசனங்களும் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன. இக்காலத்திற் சிங்கை அரசரும் சிங்கள அரசரும் மணத்தொடர்பும் நெருங்கிய உறவும் உடையவராக இருந்தனர். கி. பி. 941-49இல் சோழன் பராந்தகன் சிங்கை அரசனை வென்றான். சிங்களவரசனைப் புறங்கண்டான். கி. பி. 995இல் முதலாம் இராசேந்திரன் இலங்கை மேற் படையெடுத்து சிங்கள அரசன் மகிந்தனைப் பொலனறுவாவி லிருந்து துரத்தினான். கி. பி. 1014இல் இராசேந்திர தேவன் மகிந் தனைச் சிறைசெய்து இலங்கை முழுவதையுஞ் சோழ மண்டலத்திற் சேர்த்தான். வட இலங்கை கி. பி. 944 தொடக்கம் கி. பி. 1070 வரையும் 126 வருடங்கள் சோழப் பிரதானியாக விருந்தது. சிங்கை அரசர் சோழருக்குக் கீழ்ச் சிற்றரசர்களாக இருந்தனர். இக்காலத் தில் சிங்கை அரசர் சிலர் கலகம்விளைவித்ததினால் சோழரினாற்கொலை செய்யப்பட்டனர். மானாபாணன், வீரசலாமேகன், கிறீவல்லப மதன
ܗܡ= 158 ܚ

ராசன் என்போர். இரண்டாங் குமாரகுலோத்துங்கன் காலத்திலே (கி, பி. 1118 - 1146) புகழேந்திப் புலவர் கதிர்காம யாத்திரையின் பொருட்டு இலங்கை வந்தபோது சிங்கை அரசனைப் பாடிப் பரிசில் பெற்றார். மேலும் கி.பி. 1154 இற்குச் சற்று முன்பு இலங்கையிற் பஞ்சம் ஏற்பட்டபோது சடையப்ப வள்ளல் வட இலங்கை அரசனுக்கு நெல்லனுப்பியதாக இலக்கிய வரலாறுண்டு,
(4) முதலாம் பராக்கிரமவாகு: குலோத்துங்கன் காலத்துக்குப் பின்பு சோழப் பேரரசு பலங்குன்றிற்று. சிங்கை அரசரும் சிங்கள அரசரும் தமது நாடுகளைத் திரும்பவும் பெற்றனர். இராச இராஜ னாற் கி. பி. 1038 இற் கொல்லப்பட்ட மானாபாணன் எனும் சிங்கை அரசனின் மகள் திலக சுந்தரியை சிங்கள அரசனாகிய முதலாம் விஜய பாகுவும், விஜயபாகுவின் சகோதரி மிற்றாயை மானாபாணனின் மகனும் மணஞ் செய்தனர். இம் மானாபாணனின் பிள்ளைகள் மூவரா வர். மானாபாணன், கீர்த்திசிறீமோகன், சிறீவல்லபன். மானாபாணன் இரத்தினவல்லியை மணஞ்செய்தான். இவர்களுடைய புத்திரனே முதலாம் பராக்கிரமவாகு. பராக்கிரமவாகு இளமையில் யாழ்ப் பாணத்தில் வளர்ந்து ஆரியச் சக்கரவர்த்திகளின் மரபு முறைப்படி உபநயனம் பெற்றவன். வன்னியை வென்று பனங்காமத்திற் சிற்றர சனாக விருந்தான். பின்பு பொலனறுவாவிலாண்ட தனது மைத்து னன் இரண்டாம் கயவாகுவை வென்று இலங்கை முழுவதையும் ஆண் டான். பராக்கிரமவாகுவின் பின்பு, வட இலங்கையும் தென்னிலங் கையும் வெவ்வேறு இராச்சியங்களாகின.
(5) கலிங்கமாகன் செகராசசேகரன்: (கி. பி. 1215 - 1240) இவன் பொலனறுவாவை வென்று அங்கிருந்து கி. பி. 1236 வரையும் ஆட்சி செய்தான். சக்கரவர்த்திப் பட்டமும் பெற்றான். இவனுக்குப்பின் வட இலங்கை அரசர் ஆரியச் சக்கரவர்த்திகள் எனப்பட்டனர்!
**தென்னன் நிகரான செகராசன் தென்னிலங்கை
மன்னவனாகுஞ் சிங்கையாரியமால்" எனப் போற்றப்பட்டான். பொலனறுவா, புளச்சேரி, கந்தளாய், கந்துப்புலு, குருந்து, பதவியா, மாட்டுக்கொணா, ஊராத்தொட்டை கொமுது, மீபாதொட்டை மண்டலி, மன்னார் முதலிய இடங்களிற் கோட்டைகள் கட்டினான்.
(6) குலசேகரச் சிங்கையாரியச் சக்கரவர்த்தி-பரராசசேகரன் (கி.பி. 1240 - 1270) அந்தகக் கவியின் வருகையும் ஆரூருலா பாடப்பட்டதும் இவன் காலத்திலாகும். கி. பி. 1253 இற் சோழப்படை வெற்றி: கி. பி. 1256 இற் சந்திரபானுவின் படையெடுப்பு,
سس ,159 مســـــ

Page 88
(7) குலோத்துங்க சிங்கையாரியன் - மசகராசசேகரன் - கி. பி. 1270 - 1292 இக்காலந்தொட்டு சிங்கள அரசர் ஆரியச் சக்கரவர்த்தி களுக்குத் திறைகட்டி ஆண்டனர். மன்னார்க் கடலில் முத்துக்குளிக் கும் உரிமைக்கு இக்காலத்திற் செகராசசேகரனுடன் சிங்கள அரசன் புவனேகபாகு போர் செய்தான். கி* பி. 1284 இல் மார்க்கோ போலோ என்ற புகழ்பெற்ற பிரயாணி யாழ்ப்பாணத் துறைமுக மொன்றில் இறங்கினான். யாழ்ப்பாணத்தைப் பற்றியும், ஆரியச் சக்கர வர்த்தி ஆட்சிமுறைகள் பற்றியும் தனது நூலில் விபரமாகக் குறிப்பிடுகிறான்.
(8) விக்கிரமசிங்கையாரியன்-பரராசசேகரன் - கி. பி. 1292 - கி. பி. 1302. இவனுடைய காலத்தில் யோவான் எனுங் கிறிஸ்தவ குரு யாழ்ப்பாணம் வந்தார். இவரும் யாழ்ப்பாணத்தைப் பற்றியுஞ் சிங்கை அரசைப்பற்றியுங் குறிப்பிடுகிறார். கி. பி. 1296 இல் யாப் பாகுவில் தோல்வியுற்ற புவனேகவாகுவின் குமாரனுக்கு அவனுடைய அரசை சப்பெற உதவிசெய்தான். ஆரியச் சக்கரவர்த்திகளுக்குத் திறை கட்டப் புவனேகவாகுவின் மகன் உடன்பட்டான். பின்பு யாழ்ப்பாண அரசருக்குப் பயந்தோ அல்லது திறை கட்ட மறுத்தோ சிங்கள அரசர் தமது இராசதாணியைக் குருநாக்கலுக்கும், தம்பதெனியாவுக்கும் கம்பளைக்கும் மாற்றினர். வன்னி அதிகாரிகள் பலர் சிற்றரசர்களாக ஆளத் தொடங்கினர். இஃது அக்கால நிலப் பிரபுத்துவ முறையுடன் இணக்கமுடையதாக இருந்தது.
(9) வரோதய சிங்கை ஆரியன் - செகராசசேகரன் - கி.பி. 1302-1325
கி. பி. 1303 இற் குருநாக்கலில் அரசு செய்த நாலாம் பராக்கிரம வாகு சிங்கை அரசருக்குத் திறை கட்ட மறுத்துத் தனது இராச தானியை தம்பதெனிக்கு மாற்றினான். இப்பராக்கிரமபாகுவின் சபையிலேதான் போஜராஜ பண்டிதர் என்பவர் சரசோதிமாலை எனுந் தமிழ்ச் சோதிட நூலை அரங்கேற்றினார். அக்காலத்திற் சிங் கள மேன் மக்களிடையில் தமிழே கற்றவர் மொழியாக இருந்தது. சுந்தரபாண்டியன் தான் இழந்த இராச்சியத்தைப் பெற வரோ தய சிங்க ஆரியனின் உதவியை நாடினான். இக்காலத்திலே தென்னிந் தியாவில் மகமதியர் செய்த கொடுமைகளினால் பல பெருங்குடி மக்கள் வட இலங்கைக்கு வந்து குடியேறினர். இக்காலத்தில் இலங்கைக்கு வந்த பிரையர் ஒடொறிக் எனும் கத்தோலிக்கப் பாதிரியார் இவ்வர சனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இவன் காலத்தில் யாழ்ப்பாணத்திலே தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவினான்.
-- 60 Il -سسه

(10) மார்த்தாண்டசிங்கை ஆரியன்-பரராசசேகரன்-கி. பி. 1325-1347,
இவனுடைய காலத்தில் இபின் பட்டூட்டா எனும் மகமதியப் பிரயாணி இலங்கை வந்தான். ஆரியச் சக்கரவர்த்தியைப் பற்றிய் அவருடைய குறிப்புக்களை முன்பு இந்நூலிற் கூறினோம்.
(11) குணபூஷணன்-செகராசசேகரன்-கி. பி. 1347.
கி. பி. 1348 இல் போப் சீனாவிற்கு அனுப்பிய தானாதிபதியத் தலைவன் யாழ்ப்பாணம் வந்தான். யாழ்ப்பாணத்தைப் பற்றிப் பல விபரங்கள் எழுதியிருக்கிறான்.
(12) விரோதய சிங்கை ஆரியன்-பரராசசேகரன். இவனுடைய காலத்தில் வன்னி நாட்டிற் பல கலகங்கள் நடந்தன. அவற்றையெல்லாம் அடக்கித் தனதாட்சியைப் பலப்படுத்தினான்" கி. பி. 1380 இல் இறந்தான்.
(13) ஜெயவீரசிங்கை ஆரியன் - செயராசசேகரன்- கி. பி. 1380-1410. ஆரியச் சக்கரவர்த்திகளில் இவனே மிகப் புகழ்பெற்றவன். விடையும் பிறையும் பொறித்த நாணயங்களை அடித்தான்.
கி. பி. 1340இற் கோட்டையில் அளகக் கோனார் ஆட்சி தொடங் கிற்று. இவன் வஞ்சி நகரத்து மலைய குலத்தைச் சேர்ந்தவன். கம் பளையில் மூன்றாம் விக்கிரமவாகுவின் மந்திரியும் படைத்தலைவனு மாகவிருந்தவன். சிங்கள அரசில் ஒரு பகுதியைக் கவர்ந்து கோட்டை யில் தன்னரசை நிறுவினான். சிங்கள அரசர் ஆரியச் சக்கரவர்த்தி களுக்குக் கட்டிவந்த திறையைக் கட்ட மறுத்தான். திறை கேட்க வந்த ஏவலாளரைக் கொன்றான். அளகக்கோனுக்கும் ஜெயவீர சிங்கை ஆரியனுக்கு மிடையிற் போர் மூண்டது. அழகக்கோன் வென் றான் எனச் சிங்கள இதிகாசங்கள் கூறுகின்றன. சிங்கை ஆரியன் வென்றானெனச் சில காலத்துக்கு முன்பு கேகாலைப் பகுதியிற் கண் டெடுக்கப்பட்ட சாசனங் கூறுகிறது. செகராசசேகரம் எனும் வைத் திய நூல், செகராச சேகரமாலை எனுஞ் சோதிட நூல், காரி வையாவின் கணக்கதிகாரம் எனும் கணித நூல், தக்ஷண கைலாச புராணம் இவன் காலத்தவையாகும்.
(14) குணவீரசிங்கை ஆரியன் - பரராசசேகரன் - கி. பி. 1410-1440
இவனே இராமேச்சுரக் கர்ப்பகிரகம் கட்டுவித்தவன். TgTTF சேகரம் எனும் வைத்திய நூல் இவன் காலத்தில் எழுதப்பட்டது.
- 16 l -

Page 89
(15) கனகசூரிய ஆரியன் - செகராசசேகரன் - கி.
இவனுடைய காலத்தில் பராக்கிரமவாகு சபையிலிருந்த் மலையா ளப் பணிக்கன் ஒருவனின் மகனாகிய யுத்தவீரன் செண்பகப்பெருமாள் சிங்களப் படையுடன் யாழ்ப்பாணத்தை வென்று கனகசூரியனைத் துரத்தினான். இவன் யாழ்ப்பாணத்திற் 17 வருடங்கள் ஆட்சி செய் தான். இவன்ே நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டுவித்தான். கி பி. 1467இல் பராக்கிரமவாகு இறந்தபின் கோட்டை யரசனாகி னான். கனகசூரியன் யாழ்ப்பாணத்துக்குப் படைகளுடன் திரும்பி வந்து அரசைக் கைப்பற்றினான்.
(16) சிங்கைப் பரராசசேகரன்- கி. பி. 1478.
இரண்டாவது தமிழ்ச் சங்கத்தை நிறுவினான். இச் சங்கத்தில் இவனுடைய மைத்துனன் அரசகேசரி 'இரகுவமிசம்" எனும் நூலை அரங்கேற்றினான். பரராசசேகரன் உலாவும் இக்காலத்ததாகும். இவனுடைய காலந்தொட்டுச் சிங்கை ஆரியர் ஆட்சி ஆட்டங்காணத் தொடங்கிற்று. வன்னியர்கள் திறை கொடுக்க மறுத்துத் தம்மாட்சி நடத்தினர். இலங்கையின் வியாபாரம் முழுவதையும் மகமதியர் கைப் பற்றினர். போர்த்துக்கீசர் நாட்டிற் புகுந்தனர். பரராசசேகர னுக்கு நான்கு புத்திரர். சிங்கவாகு, பண்டாரம், பரநிரூபசிங்கம், சங்கிலி, சங்கிலி அண்ணன்மாரைச் சூழ்ச்சியினாற் கொன்று அரசைக் கைப்பற்றினான். சிங்கை அரசர் போர்த்துக்கீசரின் பொம்னிம களாகினர்.
சங்கிலியின் ஆட்சிக் காலத்திற் சங்கிலிக்கும் போர்த்துக்கீசர் களுக்குமிடையில் இடையறாப் போர்கள் நடந்தன. போர்த்துக்கீசர் பரநிரூபசிங்கனைக் கிறித்தவனாக்கி அவனை அரசனாக்க எத்தனித் தனர். கி. பி. 1565இற் சங்கிலி இறந்தான்.
காசி நயினார் அல்லது குஞ்சி நயினார் - பரராசசேகரன். போர்த் துக்கீசர் இவனைச் சிறைப்படுத்தி வேறோர் அரச குமாரனை நியமித் தனர். ஆனாற் போர்த்துக்கீசர் யாழ்ப்பாணத்தை விட்டு விலகியவுடன் காசி நயினார் புதிய அரசனைக் கொன்று மறுபடியும் அரசனாகினான்.
போர்த்துக்கீசர் காசி நயினாரை நஞ்சூட்டிக் கொன்று பெரிய பிள்ளை எனும் அரசகுமரனை செகராசசேகரன் எனும் பட்டத்துடன் கி. பி. 1570இல் அரசனாக்கினர். கி. பி. 1582இற் பெரியபிள்ளைக் குப்பின் புவிராஜ பண்டாரம் பரராசசேகரன் என்னும் நாமத்துடன் அரசனானான். புவிராஜ பண்டாரம் பலமுறை போர்த்துக்கீசருடன் போர் செய்து தோற்றான். ஈற்றிற் போர்த்துக்கீசரனினாற் கொல் லப்பட்டான். போர்த்துக்கீசர் அவனுடைய மகன் எதிர்மன்னசிங் கனைத் தங்கீழ் அரசனாக்கினர். இவன் பரராசசேகரன் எனும் பெயர் பெற்றான். இவன் கி. பி. 1591 தொடக்கம் கி. பி. 1618 வரையும் ஆட்சி செய்தான். இவன் இறந்தபோது சங்கிலி எனும் அரசகுமாரன் பட்டத்தைக் கைப்பற்றினான். இச் சங்கிலி ஈற்றிற் போர்த்துக்கீசரி னாற் கொலை செய்யப்பட்டான். கி. பி. 1620இற் போர்த்துக்கீச ரின் நேராட்சி தொடங்கிற்று.
ബ് 162 -

• نۓ1
13.
l4.
l5。
6.
17.
8.
ei.Lh62693T 4, 5
ஆதார மேற்கோள் நூல்கள்
வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட பழந்தமிழர்
-திரு. ந. சி. கந்தையாபிள்ளை
தமிழர் சரித்திரம்-திரு. ந. சி. கந்தையாபிள்ளை
தமிழகம்-திரு. ந. சி. கந்தையாபிள்ளை
தமிழ் இந்தியா-திரு. ந. சி. கந்தையாபிள்ளை
திராவிட இந்தியா-திரு. ந. சி. கந்தையாபிள்ளை திராவிட நாகரிகம்-திரு. ந. சி. கந்தையாபிள்ளை
குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
-பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரை தென்னகப் பண்பு - பன்மொழிப் புலவர்
திரு. கா. அப்பாத்துரை தென்னாட்டுப் போர்க்களங்கள்
பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரை
தமிழ்ச் சங்கங்களின் வரலாறு
-திருமந்திரமணி துடிசைகிழார் அ. சிதம்பரனார்
அகத்தியர் வரலாறு *。
-திருமந்திரமணி துடிச்ைகிழார் அ. சிதம்பரனார்
திராவிடமக்கள் வரலாறு திரு. E. L. தம்பிமுத்து
தமிழர் நாகரிகமும் பண்பாடும்
-டாக்டர் ம. இராச்மாணிக்கனார்
தொல்காப்பிய ஆராய்ச்சி-பேராசிரியர் 9, இலக்குவனார்
சிந்துவெளி நாகரிகம் a.
-வித்துவான் மா. இரர்சமர்ணிக்கம்பிள்ளை தமிழக வரலாறு-பேராசிரியர் அறுவர் சொற்பொழிவுகள் தமிழக வரலாறு-திரு. அ. மு. பரமசிவானந்தம் தமிழர் வாணிகம்-புலவர் கா. கோவிந்தன்
- 163 -

Page 90
19.
20.
2丑。
2发。
26.
岔7。
28.
29.
30.
3.
32.
33.
34.
35。
ஆயிரத்துத் தொண்ணுாறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் -திரு. வி. கனகசபை
1800 ஆண்டுகளுக்குமுன் தமிழர்
-பேராசிரியர் M. S; பூரணலிங்கம்
மறைந்துபோன தமிழ் நூல்கள்-மயிலை சீனி வெங்கடசாமி
பல்லவர் வரலாறு-வித்துவான்
மா. இராசமாணிக்கம்பிள்ளை
சோழப் பேரரசு-வித்துவான் மா. இராசமாணிக்கம்பிள்ளை தமிழர் மதம்-மறைமலையடிகள் தமிழ்நாட்டு வரலாறு-டாக்டர் மு. ஆரோக்கியசாமி Tramil India-by Prof. Purnalingam Pillai The Ancient Tamils-by S. K. Pillai Tamil History-by R. Raghava Aiyangar
நூற்றாண்டுகளில் இன்பத் தமிழ்
-பண்டிதர் கா. பொ. இரத்தினம்
தமிழ் ஈழம்-நாட்டு எல்லைகள்-திரு. J. R. சின்னத்தம்பி வன்னியர்-கலாநிதி சி. பத்மநாதன் யாழ்ப்பாண வைபவமாலை-மயில்வாகனப் புலவர் யாழ்ப்பாணச் சரித்திரம்-முதலியார் செ. இராசநாயகம்
Tamils and Cultural Pluralism in ancient Sri Lanka
by Rev. D. J. Kanagaratnam Ph. D.
Atlantis-Edgar Cayce.
- 64 -


Page 91
ഗ്ര/ سمي~~~
தமிழர் வர
பொருளியல் துவி
பெற்று அத்துறையிலே அ பொ. சங்கரப்பிள்ளை அவர் யுறும் அளவுக்கு தமிழியல் இலக்கியம், அரசியல், சமூ பல்வேறு நெறிகளிலும் து துறைகளிலே அகலமாகவி முற்பட்டவர்.
இந்நூல் தமிழர்களி றினை மட்டும் ஆய்வதுட பண்பாடு, கலைகள், இன் தொழில், விவசாயம் போ சிகள் போன்றனவற்றைய ஆய்வு ரீதியாகவும் அணு பழந் தமிழ் இலக்கிய புடைய ஆசிரியர் பரந்த விருந்து ஏராளமான துகள் யும் அகழ்ந்தெடுத்து இந்த பயன்படுத்தியுள்ளார். ட வெறும் இலக்கியங்கள் ம வரலாற்றுப் பண்பாட்டு, ! ஆய்வுகளுக்கும் உதவுவன துள்ளுரார். அத்துடன்
இலக்கிய வரலாறு பற்றி சுற்று அவற்றில் பொதித் யும் இந் நூலில் நன்கு ட தமிழரின் வரலாற்று பாட்டுக் கலை இலக்கியப் வுற எடுத்துக்காட்டும் இ நல்லுலகினால் என்றென்
வேண்டியவர்.
Carr, சமூக விஞ்ஞான் கொழும்புப் ப

லாற்று நூல்
நபிவே று பர் பட்டங்கள் அறிஞராக விளங்கிய திரு. கன் தமிழ் மக்கள் பெருமை தமிழர் வரலாறு தமிழ் கவியல், மெய்யியல் ஆகிய துறைபோசு 'கற்றவர். இத் ம் ஆழமாகவும் ஆராய
ன் அ ர சி ய ல் வரலாற் -ன் நில்லாது அவர் தம் க்கிபந்தன், சமயம், கைத் ன்ற போருளாதார முயற் ம் வரலாற்று ரீதியாகவும் குகின்றது. ங்களில் மிகுந்த புலமை தமிழ் இலக்கியப் பரப்பி வல்களையும் கருத்துக்களை ஆய்வு நூலிலே விரிவாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் ட்டுமன்றி ஒரு இனத்தின் சமய, பொருளாதார, சமூக என்பதை நன்கு நிரூபித் அவர் தமிழர் வரலாறு ப ஏராளமான நூல்களைக் துள்ள ஆய்வு முடிவுகளை பயன்படுத்தியுள்ளார். த் தொன்மையும் பண் பெருமைகளையும் தெளி ந் நூலாசிரியர் தமிழ்கூறும் ாறும் நினைவு கூரப்பட
சந்திரசேகரம் 5 கல்வித்துறைத் தலைவர், ல்கலைக்கழகம்,
■

Page 92
74
உறுதியுண் டாகு முண்மையொன் றுளது சிறுமதி சூடிய சிவபெரு மானை இறுதியுள் ளளவும் மறவா தேத்திப் பொறுதியா யிருந்து பூரண மாகுதும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஊணு யுணர்வா யுயிருக் குயிராய் நானுய் நீயாய் நன்மையாய்த் தீமையாய் வானுய் மதியாய் வாயுவாய்த் தேயுவாய்த் தானுய் நின்ருன் சச்சிதா னந்தனே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஊழிக் காலத்து மொருவா வொருவனை வாழி வாழியென் றேத்தி வணங்கி ஆழிசூ முலகி லாசை யெலாம்போய் தாளி ரண்டுஞ் சரணெனச் சாருதும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஊமத்தை கொன்றை யுவந்த பிரானைப் பாவத்தை நீக்கும் பராபர வஸ்துவைச் சேமத் தைத்தருந் திறமெனக் கொண்டு ஒமத்தை யாற்றி யொருவழிப் படுவோமே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஊரும் பேரு மில்லா னுள்ளான் நீரும் நிலனு மாகி நின்ருன், ஆரு மறியா வாற்ற லுடையான் சீருஞ் சிறப்பு முடைய சிவனே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஊசி முனையி லிருந்தோம்பு வோர்கள் பேசி யறியார் பிறரை யுலகில் நாசி வழியில் நடக்கும் பிராணனைத் தேசி போலச் செலுத்த வல்லாரே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
நற்சிந்தன்ை
25
26
27
28
29
30

நற்சிந்தனை
என்னைக் கணமும் பிரியா விறைவன் அன்னை போல வன்பு சான்றவன் பொன்னைப் பொருளைப் போகத்தைத் தள்ளி உன்னு வோர்க ளுறுவர் பரகதி ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
எங்குந் திருவிழி யெங்குந் திருச்செவி எங்குந் திருக்கர மெங்குந் திருக்கழல் எங்குந் திருவடி வெங்கு மிவனே எங்கு மிவனென் றேத்து வோமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
என்செய லாவ தில்லைச் சிவனர் தன் செய லென்னல் தகுமென வெண்ணி முன்செய் வினையெல்ாம் முழுதும் போக்கிப் பின்செய் வினையிலை பிறப்பிறப் பிலையே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
எட்டாத கொப்பி லிருக்குந் தேனுக்குக் கொட்டாவி கொண்ட முடவன் கொள்கைபோல் அட்டாங்க யோக மறியாத நாங்கள் நட்டோ மென்று நவிறல் நகையே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
எல்லாம் நீயே யென்றிருந்த மாதவர் சொல்லாலே சொல்லப் புகார்நீ சும்மா நில்லா யென்ன நிறுத்துவ ரதனை நல்லோ ரறிவார் நயந்து போற்றுவோம் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஏக னநேக னெல்லார்க்கு மீசன் மோகமார் தக்கன் வேள்வி முனிந்தவன் வேகமா கரியை யுரித்துப் போர்த்தவன் தாகமா நாடினுேர்க் கருடரு வானே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
75
3.
2
33
34
35
36.

Page 93
76 நற்சிந்தனை
ஐயனை யழகன யன்பர் சகாயனைத் தையல் பாகனத் தத்துவா தீதனை வையகம் வானகம் வணங்கும்பொற் பாதனை மையல் தீர வந்திப்போம் நாமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஒன்ரு யிரண்டாய் மூன்ருயோ ரைந்தாய் நின்ருய் நின்லை நினையவல் லார்கள் பொன்றத் துணையும் போகமும் பொருந்துவர் என்ருர் பெரியோ ரிறைஞ்சுதும் நாமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஓங்காரத் துட்பொரு ளானவுத் தமன நீங்கா தெங்கும் நிறைந்த வஸ்துவைப் பாங்கார் பஞ்சாட் சரப்ப ரமனைத் தூங்காது நாளுந் தோத்திரிப் போமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
ஒளவிய மனத்தின ரறியா வறிவைச் செளபாக் கியமுடைத் தற்பர வஸ்துவை நெளவியு மழுவு மேந்து நம்பனைக் கெளரவத் துடனே கழறுதும் நாமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
கறங்கு போலக் கலங்கு மனத்தைத் திறங்கொள் யோக சித்தியால் நிறுத்தி உறங்கி யுறங்கா திருந்து நோக்கிற் பிறப்பிறப் பென்பது பிராந்தியா கும்மே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
கங்குலும் பகலு மில்லாக் காட்சியன் சங்கரன் தானு சம்பு சதாசிவன் பொங்கர வணிந்த பூத நாதன் மங்கையோர் பாகன் மான்மழுக் கரனே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
37
38
39
49
4.
43.

நற்சிந்தனை
சத்தியுஞ் சிவமும் தானய் நின்றவன் பத்திசெ யடியரைப் பரகதி சேர்ப்பவன் எத்திக்கு மாகி யிருக்கு மிறைவன் சித்தத் துள்ளே தித்தித் திருக்குமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
அஞ்ஞான விருளை யகற்று மாதவன் மெய்ஞ்ஞானி கட்கு வீட்டைத் தருபவன் செஞ்ஞா யிற்றை யொத்த சிவனுர் எஞ்ஞான்று மென்ற னுள்ளத் துளனே ஒதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
இடம்வல மோடி யியங்கும் பிராணனைத் திடம்பெறச் சுழுமுனை தன்னிற் சேர்த்தால் திடம்பெறுங் காயஞ் சித்திக ளெய்தும் மடம்பெறு வஞ்சக மனம்மா யும்மே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
வணக்கி ஞன்மா மேரு மலையினைக் கணக்கிலா வசுர கணங்கள் மாய்ந்தன பணுமுடி யாதி சேடனும் பயந்தான் கணுதி பர்கள் கண்ணுற்று மகிழ்ந்தனர் ஓதுக வது நாம் ஒம்தத் சத்ஓம்.
தன்னை யறியத் தவத்தை யாற்றிப் பின்னமற் றெல்லாம் பிரமமே யென்ன அன்னை போல அன்பு கூர்ந்து இன்னல் தீர வென்றுமேத் துதுமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
நமச்சி வாயவே நாம்சொல்லும் மந்திரம் எமக்கி னிக்குறை யொன்றுமே யில்லை
தமர்பிற ரென்னுந் தளையுந் தீர்ந்தோம் சமமா யுயிரெல்லாந் தாம்நினை வோமே
εδ . g ஓதுக வது நாம ஓமதத சதலும.
12
177
43
44
45
46
47.
尘8°

Page 94
178
பற்றற் ருர்பற்றும் பரம்பொரு டன்னச் செற்றம் நீக்கிச் செய்வன செய்து நற்றவர் தங்க ளுறவினை நாடிப் பற்றுது மதுவே பாக்கிய மாகும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
மத்தர் பேயர் மதலைய ரெனவே அத்த னருள்பெற்ற வன்ப ரிருப்பர் சித்தரு மவரே தேவரு மவரே முத்தி வேண்டி முறைமையான் வணங்குதும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
இயமன் வருணன் குபேரன் இந்திரன் வியக்கத் தகுந்த வேறுபல் தெய்வமும் வியனடி வேண்டி யாற்றினர் வெகுதவம் முயலுதும் நாமும் முதன்மை யடைகுதும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
அரவரைக் கசைத்த விசைசால் பரமன் குரவு வார்கழல் கும்பிடும் பாக்கியம் தரைமிசை பெற்றேர் தமக்குச் சமமாய் எவரையுங் காண்கிலம் இறைஞ்சுது மவரடி ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்:
இலங்கை வேந்தன் இராவண னென்பான் நலங்கொள் கயிலையை நாடி யெடுத்துக் கலங்கின காரணங் கண்டு மடியேம் நிலந்தனிற் ருழ்ந்துநீ ளகந்தை யகற்றுதும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
வடியார் சூலம் வலக்கர மேந்தி இடியார் பேரொலி யெங்கு மார்ப்ப அடியார் காணவன் முடிய கூத்தை அடியேங் காண வாசைகொள் வோமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
நற்சிந்தனை
49
50
51
52
5$
64

நற்சிந்தனை
அழல்சேர் கையு மருவிபாய் சென்னியும் கழற்கீழ் முயலகன் கலங்கும் வன்மையும்
இளநிலா வெறிப்பும் எடுத்தபொற் பாதமும்
பழவினை நீக்கும் பார்வையும் காணுதும் ஒதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
இளமையு மூப்பு முள்ளா னில்லான் களவிலா நெஞ்சினர் காட்சிக் கெளியன் மழவிடை யூர்தியன் மாசி லாமணி யளவு கடந்தவ னவனடி சூடுதும் ஓதுக வது நாம் ஒம்தத் சத்ஓம்.
அறம்புரி வோர்கள் திறம்பா வாற்றலர் உறங்கி யுறங்கா திருக்கு முத்தமர்
கறங்குபோல் மனத்தைக் கடந்த சித்தர் இறந்தும் பிறந்து மிடுக்கணெய் தாதவர் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்
சனகர் சனந்தன ராதியாந் தவத்தினர் இனந்தனி லெம்மை யிருத்தி வைத்துச் சினந்தனை நீக்கிச் சிவானந்த மென்னும் வனந்தனில் வைக்க வள்ளலைப் பாடுவோம் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
கற்பனை கடந்த வற்புதன் கமலப் பொற்றுணை மலரடி போற்றி யுலகில் நிற்பதும் நடப்பது மாய வுயிரெலாம் சிக்கன வாழ்வுறச் சிந்தைசெய் வோமே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
காரா ராணவக் காட்டைத் திருத்திப் பாரார் விண்ணுேர் பரவுஞ் சிவமெனும் பேரார் வித்தை யிட்டுப்பே ரின்பமாம் சீரார் தெவிட்டாக் கணியருந் துவமே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
179
55
56
57
58
59
60

Page 95
18O
கிஞ்சுக வாயுமை கேள்வனை யமரர் சஞ்சலந் தீர்த்த சற்குரு நாதனை நெஞ்சக மலரிடை நினைந்து நாடொறும் வஞ்சனை கோபம் பொருமைமாய்ப் போமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
கீரன் சொன்ன வாசகங் கேட்டுப் பேரன் புற்றுப் பிணியை நீக்கி மாரனைக் காய்ந்த மறைமுதல் வோனைப் பூரண மாகப் போற்றுவோம் நாமே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
கையையுங் காலையு முன்பணிக் காக்கிச் செய்கை யெல்லாந் திருவடிக் காக்கிப் பொய்யுங் கொலையும் புலையும் போக்கி மெய்யன் புடன்மே தினியில் வாழ்வோமே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம். V
கொன்றை மத்தம் தும்பை கூன் பிறை துன்று கங்கை சூடிய சொக்கனை மன்றுள் மாணிக்க வல்லி மகிழ்நனை என்று மேத்தி -யிறைஞ்சுதும் நாமே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்
கோகனகத் தானுங் கோவிந் தனுந்தேடி ஆகம் நொந்து அறிவழிந் தார்கள் மோகஞ்சேர் மாரன் முழுது மழிந்தான் யோக நாதன்றன் னுரைக்கா ரொப்பார் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
சக்கரம் மாலுக்குத் தந்த பரமனை அக்கரந் தோறு மமர்ந்த பெருமானைத் துக்கம் வெட்கம் தொலைய நினைந்து தக்க வன்பொடு சமர்ப்பிக் குதும் நாம் ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம். .
நற்சிந்தனை
61
69
63
64
65
C6

நற்சிந்தனை
சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெம்மை யாண்ட
போத குருவைப் புண்ணிய மூர்த்தியை நாதங் கடந்த ஞான வெளியிடை பேத மின்றிக் கண்டுபிறப் பற்ருேம் ஒதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
சித்திர காரன் தீட்டிய தீபம்போல் நித்திய வஸ்துவில் நினைப்பு மறப்பற முத்தியி லிருக்கும் முறையைப் புகல்வாய் எத்திக்கு மாகி யிருக்கு மீசனே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
சீரக முள்ள சீவான் மாவே பாரக மெல்லாம் பரந்த தென்னத் தாரக மோதிச் சாந்தம் பொறுமையோ டோரகஞ் சார வுறுதி தந்தருள் ஒதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
செல்வர்பின் சென்று தினமலை யாமல் நல்வரந் தருவாய் ஞானிகள் நாட்டமே சில்பக ருேன்றிச் சிதையா வண்ணம் எல்லையில் கால மென்றனுக் கருளுதி ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
சேணிடை விடைமேற் றிருஞான சம்பந்தர் காணிய வண்ணங் காட்சி கொடுத்த ஆணிப் பொன்னே அம்பல வாணு வேணியா வென்முன் வெளிப்பட வருக ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
சைவனே யுன்னைத் தமசம மாதியோ டைவரும் பொன்ற வடியே னுக்குக் கைவர மருள்வாய் கால காலா மைதவ ழம்மை மருவு மார்பனே
ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
81
67.
68.
69.
70
71.
72.

Page 96
182
சொன்ன பாணன் சுந்தரன் கவிக்காய்ச் சொர்ண மளித்த சொக்க நாதனே இன்னு மென்னை யிடருற வைத்தால் என்ன செய்குவே னேழை யேனே ஓதுக வது நாம் ஒம்தத் சத்ஓம்.
சோடி ழந்த வன்றில் சுகத்தைத் தேடி யலையுஞ் செய்கை போல நாடி யானு முன்னை யணுக ஓடி வந்தரு ஞதவு வாயே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
தந்தை தாயும் மைந்தரும் பிறரும் வந்த வாழ்வுமோ ரிந்திர சாலம் அந்த மாதியு மில்லா வரனே எந்த நேரமு மென்னைக் காக்குதி ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
தாவும் வேங்கை யுடையாய் சடையாய் ஏவும் மார னெனைத்தொட ராமல் கூவு மென்குரல் கேட்டி ரங்குதி தாழ்வும் வாழ்வும் இல்லாச் சம்புவே ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
திங்கள் கங்கை வைத்த செல்வனே அங்கை தன்னி லனலேந்து மாதியே மங்கை பங்கனே மறலி காலனே எங்கே நினைப்பினு மென்னெதிர் நிற்குதி ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
தீவினை கெஞ்சத் தீப்பிணி யஞ்ச நாவினில் நமச்சி வாயங் கொஞ்ச
சாவிற் சஞ்சல முழுதுந் துஞ்ச சேவிக்க வருள்தா செஞ்சர னிணையினை
ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
நற்சிந்தனை
73
75
76
77,
78

நற்சிந்தனை துண்டப் பிறையாய் தூவெண் நீற்ருய் அண்டர் பிரானே அரகர சிவனே தொண்டர் மனத்தாய் சோதியுட் சோதி கண்டவ ருண்டோ கடவுளே யுன்னை ஒதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
தூதுசுந் தரர்க்காய்ச் சென்ருய் நல்லிருட் போதுசம் பந்தர்க்குப் பொற்கிழி கொடுத்தாய் மாதுலற் காக வழக்குமுன் னுரைத்தாய் சேது மேவிய செல்வா நீதுணை ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
தென்னவன் தீப்பிணி தீர்த்தாய் முன்னுள் மன்னவ ஞக மதுரையில் வாழ்ந்தாய் அன்னந் தண்ணி ரரசுக் கீந்தாய் என்ன நான் கேட்பே னெந்தாய் இரங்காய் ஓதுக வது நாம் ஒம்தத் சத்ஓம்.
தேவர் பிரான் பழி தீர்த்தாய் கூடலில் சேவக ஞகக் குதிரை செலுத்தினை மூவர் தமிழ்மொழி கேட்டுகந் தாய்முன் காவல ஞகவும் நடித்தனை நீயே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
தையலை வேட்டுச் சார்ந்தாய் மதுரையில் வையகம் வானக முட்க நடித்தாய் பையர வந்தனை யார்த்தாய் பணியாய் ஐய ஐயவென் றனக்கரு ளாயே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம்.
தொல்லைநா விருவர் காணுச் சோதியே தில்லை யம்பலத் தாடிய சிவனே எல்லை யில்லா ஏக வெளியே ஒல்லை வந்தரு ஞதவுவாய் கடனே ஓதுக வதுநாம் ஓம்தத் சத்ஓம்.
183
79
J
81
82
83
84

Page 97
184 நற்சிந்தனை
தோளா முத்தே சுடரிற் சுடரே பாழா யடியேன் ப ைதயா வண்ணம் நீளா வருள்நீ தருவாய் வருவாய் ஆள்வா யடியார் குடிவாழ் பவனே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம். 85
நந்தா விளக்கே ஞானச் சுடரே இந்தா றணியு மிறையே முறையோ வந்தாள் தருணம் மறையின் முடிவே எந்தா யென்றுங் காப்பா யெனையே ஒதுக வது நாம் ஓம்தத் சத்ஓம். 86.
நாமார்க் குங்குடி யல்லோம் நாடிற் தாமார்க் குங்குடி யல்லாச் சங்கரன் கோமான் வைத்த குடியே நாங்கள் ஏமாப் போம்பிணி யறியோ மென்றும் ஓதுக வது நாம் ஓம்தத் சத்ஓம். 87.
நின்ன வார்பிற ரில்லை யெலாம்நீ சொன்னர் முன்னேர் தோத்திரஞ் செய்து பன்ன விரிப்படிப் பயிலப் பயில என்ன யகமே யெமக்கறி வுண்டோ ஓதுக வது நாம் ஒம்தத் சத்ஓம். 88
தாமரையில் நீர்போற் சகத்திலே தம்பிநீ சேமமுடன் வாழ்வாய் சிவனைநினை-ஆமளவும் நன்மையையே செய்வாய்நீ நல்லோரைப் பேணிநட தன்னை யறியலாந் தான். - l
தந்தை தாய் மற்றுந் தமர்தார மெல்லாருஞ் சந்தையிற் கூட்டமிது தப்பாது - எந்தைபால் 1 எப்போது ம ன்புவை எல்லா மவன் செயலே இப்போ சமய மிணங்கு, . . 2

நற்சிந்தனை 185
பராயரக் கண்ணிகள் 1
அன்னைதந்தை சுற்றம் அரிய சகோதரர்கள் உன்னையன்றி யுண்டோ என்னுயிரே பராபரமே. I
ஆக்கையே கோயில் அகமே சிவலிங்கம் འ་ பூக்கைகொண்டு போற்றவருள் புரியாய் பராபரமே. 2 இருவினையால் கட்டுண்டு இடர்ப்பட்டுத் திரிவேனக் கருணையா லாட்கொண்ட கண்ணே பராபரமே. 3 ஈயாத புல்லர் இடந்தோறும் நாயடியேன் வாயார வாழ்த்தி வாழவிட்டாய் பராபரமே. 4. உன்னைப் பிரிவேனே உயிர் நான் தரிப்பேனே என்னைப் பிரிவாயோ இறையே பராபரமே. 5 ஊரும் பேருமில்லா ஒருவன் உலகத்திலே ஆரென்று காட்டென்பார்க் கென் சொல்வேன் பராபரமே.6
எல்லாமா யல்லவுமாய் இருப்பான் இறைவனென்ருல் சொல்லாலே எப்படிநான் சொல்வேன் பராபரமே. 7.
ஏக னனேக னென்றுசொல்லும் விந்தை தேகத்துக்கோ சித்துக்கோ செப்பாய் பராபரமே. 8. ஐம்பொறியும் மனமும் அறியாமல் நிற்குமொன்று எம்மறிவுக்கு எட்டுமோ எந்தாய் பராபரமே. 9.
ஒருபொல் லாப்புமில்லை உண்மை முழுதுமென்ற திருவாக்கை யாரறிவார் செப்பாய் பராபரமே. 10.
ஓங்காரத் தாலே உலக முதிக்குமென்ற பாங்கறிவார் யார்தான் பகர்வாய் பராபரமே. 11 ஒளவிய நெஞ்சத்தார் அறியா ரெனவுரைத்தால் ஒளவிய நெஞ்சமிலார் யார்தான் பராபரமே. 12. அஃகுத லில்லா அறிவுடைய பெரியோர்யார் வெஃகுத லின்றி விளம்பாய் பராபரமே. 13

Page 98
186 நற்சிந்தனை
II.
ஒருபொல்லாப்பு மில்லையென்னு மொருமொழியால்
உள்ளம் உருகாதோ வென்றன் உயிரே பராபரமே. I. எப்பவோ முடிந்ததென எந்தை குருநாதன் செப்புந் திருவாக்கின் சீர்தருவாய் பராபரமே. 9.
நாமறியோ மென்றுமுன்னுள் நல்லூரில் சொன்னமொழி நாமறிந் துய்யவரம் நல்காய் பராபரமே. 3
ஆரறிவா ரென்றுமுன்னுள் ஆசா னுரைத்தசொல்லின் சீரறியச் செய்வாய் சிவமே பராபரமே. 4
அப்படியே யுள்ளதென அன்ருசான் சொன்னமொழி இப்படியில் யானறிய இரங்காய் பராபரமே. 5
என்றுநீ யன்றுநாம் என்னுந் திருவாக்கைக் கண்டுதொண்டு செய்யக் கருணைசெய்வாய் பராபரமே. 6
அஞ்செழுத்தை நெஞ்சில் அழுத்தா தழுத்திநிற்கக் கஞ்ச மலரடியைக் காட்டாய் பராபரமே. 7
பஞ்சப் புலன்வழிபோய்ப் பாரி லலையாமல் செஞ்சரணே தஞ்சமெனச் செய்வாய் பராபரமே. 8
கட்டுப்படா மனத்தைக் கட்டத் திருவருளை இட்டமுடன் நீதாராய் எந்தாய் பராபரமே. 9
ஊன யுயிராய் உடலாயென் னுட்கலந்த தேனு ரமுதே தீங்கரும்பே பராபரமே. Ι0
ஒருதெய்வம் ஒருலகம் உண்மை முழுதுமென்னும் திருவருளில் நிற்கவருள் செய்வாய் பராபரமே. ll

நற்சிந்தனை 187
III சிந்தித்துச் சிந்தித்துச் சிவமேநா மென்றெண்ணத்
தந்திடுவாய் நல்லவரம் தற்பரனே பராபரமே. 1 அந்தமு மாதியு மில்லா ஆண்டவனே என்தன் பந்தத்தை நீக்கிடுவாய் பராபரமே. 2 ஆரறி வாரென்ற அருமைத் திருவாக்கின் சீரறியச் சிவஞானம் தருவாய் பராபரமே. 3. இருவினையை நீக்கி யின் பத்திலே நான்தேக்க வருவாயென் னுள்ளத்தில் வாழ்வே பராபரமே. 4
ஈசனே யெவ்வுயிர்க்கும் அவ்வுயிராய் நிற்கும் தேசனே சிந்தை தெளியவைப்பாய் பராபரமே. 5 உருகி யுருகி உணரும்மெய்ஞ் ஞானிகளின் திருக்கூட்டஞ் சேரவருள் செய்வாய் பராபரமே. 6 ஊரூராய்த் திரிந்து உன்மத்த னிவனென்னும் பேரூரச் செய்து பிறப்பறுப்பாய் பராபரமே. 7 எல்லாமா யல்லவுமா யிருக்குந் திருவருளைச் சொல்லாமற் சொல்லுஞ் சுகந்தருவாய் பராபரமே. 8 ஐயப் படாமல் அருள்வழியே செல்லநல்ல துய்ய வருள்தாராய் என்துணையே பராபரமே. 9. ஒன்பதுவாய்த் தோற்பைக்கு உணவளிக்க நான்திரிதல் என்ன மதிதான் இயம்பாய்நீ பராபரமே. O ஓங்காரக் கம்பத்தின் உச்சியிலே நிற்குமுனை பாங்காய்ப் பணியவருள் பண்ணுய் பராபரமே. ஒளவிய மில்லாதார் அகம்மேவும் ஆண்டவனே எவ்வித மாய்ப்பணிவேன் இயம்பாய் பராபரமே. I 2. அஃகமுங் காசுந்தேடி அலையும் அடியேன நஃகுதல் செய்யாமல் வரந்தாராய் பராபரமே. 3

Page 99
188 நற்சிந்தனை
IV
அன்பிற் கரைந்துருகி யடிபணியும் மெய்யடியார் இன்ப நிலையே எந்தாய் பராபரமே. l
ஆருய்க்கண் ணிர்பெருக்கி அவசமுறும் மெய்யடியார் மாருக் கருணை மனவிளக்கே பராபரமே. 2
இருவினையை நீக்கி இரவுபக லற்றவன்பர் கருவினையை நீக்கும் கதியே பராபரமே.
ஈசனே யெங்குமென வெண்ணுகின்ற மெய்யடியார் வாசனே நல்லவழி காட்டாய் பராபரமே. 4.
உன்னை யுணர்ந்தவர்கள் ஒசையற்ற நிட்டையிலே தன்னை மறந்திருப்பார் சத்தே பராபரமே. 5
ஊணு யுயிராகி யுட்கலந்த சோதிதனை நான ரறியவென்றன் நட்பே பராபரமே. 6.
எல்லாம் நினதுசெய லென்றறிந்த மெய்யடியார் நில்லா வுலகை நினைவரோ பராபரமே. 7.
ஏது மறியாத ஏழையென்று கைவிட்டால் யாதுசெய் வேனென்ன யாள்வாய் பராபரமே. 8
ஐயுந் தொடர்ந்து அறிவழியு முன்னமென் கையுந் தொழப்பண்ணிக் காப்பாய் பராபரமே. 9
ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமிலான் நல்லூர்க் குருவாக வந்து குறைதீர்த்தான் - வருவாரை வையாமல் வைது வரந்தருவான் நாமெல்லாம் உய்யாமல் உய்வோம் உவந்து.
சிவமேநா மாமென்று சிந்திக்கச் சீரார் சிவமேநா மென்று தெளிவோம்-அவமே மனமே யுடன் போகும் மற்றுமோர் தெய்வம் கனவிலும் எண்ணுது காண். 2.

நற்சிந்தனை 189
ஊதூது சங்கே ஊதூது
ஊதுாது சங்கே ஊதூது
ஒம்சிவாய நமவென் றுாதுாது (1) ஊதூது சங்கே ஊதூது ஒருபொல்லாப் பில்லையென் றுாதூது (2) ஊதூது சங்கே ஊதூது உட்பகையை விட்டிடென் றுாதுாது (3) ஊதூது சங்கே ஊதூது உங்கள்பிரான் இங்குவர ஊதூது (4) ஊதூது சங்கே ஊதூது ஒருவருக்குந் தெரியாதென் றுாதூது (5) ஊதூது சங்கே ஊதூது ஐம்பூதம்நா மல்லவென் றூதூது (6) ஊதூது சங்கே ஊதூது ஐம்பொறி நாமல்லவென் றுாதுாது (7) ஊதூது சங்கே ஊதூது அந்தக்கரணம் நாமல்லவென் றுாதுாது (8) ஊதூது சங்கே ஊதூது பஞ்சவாய்வு நாமல்லவென் றுாதுாது (9) ஊதூது சங்கே ஊதூது தசநாடி நாமல்லவென் றுாதுாது (10) ஊதூது சங்கே ஊதூது அடிமுடி இல்லையென் றுாதூது (11) ஊதூது சங்கே ஊதூது காமக்குரோதம் நாமல்லவென் றுாதுாது (12) ஊதூது சங்கே ஊதூது உன்னையுன்னுல் அறியென் றுாதுாது (13)
ஊதூது சங்கே ஊதூது சிவதொண்டன் வாழ்கவென் றுTதூது (14)

Page 100
90
நற்சிந்தனை
ஊதூது சங்கே ஊதூது II
ஊதூது சங்கே ஊதூது ஒருபொல்லாப்பு மில்லையென் றூதூது காது செவிடுபட ஊதூது
கங்குல்பகல் காணுமல் ஊதூது.
நல்லூரான் திருமுன்புநின் றுாதுாது நாமேநா மென்றுசொல்லி ஊதுரது எல்லாஞ்சிவன் செயலென் றுரதூது ஏகமன தாய்நின் றுாதுாது.
அல்லும்ப கலுமற ஊதூது ஆணவத்தை நீக்கிநின் றுாதூது வெல்லும் பகையொழிய ஊதூது வேறுபொருள் இல்லையென் றுாதுாது.
ஐம்பூதம்நா மல்லவென் றுாதூது ஐம்பொறிநா மல்லவென் றுாதுாது ஐம்புலன் நா மல்லவென் றுாதூது அந்தக்கரணம் நாமல்லவென் றுாதுாது.
ஆன்மாவே நாமென் றுாதுரது ஆசானைப் பணிந்துநின் றுாதூது ஆரறிவா ரென்றுசொல்லி ஊதூது அன்பே சிவமென்று ஊதுாது.
மாதுமை பங்கனென் றூதூது மங்களம் மங்களமென் றுாதுாது சோதி சொரூபனென் றுாதுரது சுந்தரர்து தானுனென் றுாதுாது.
அடியார்க் கடியானென் றுாதுாது ஆதியந்த மில்லானென் றுாதூது
திங்கட் சடையானென் று தூது தேவாதி தேவனென் றுாதுாது.

நற்சிந்தனை 191
ஆன்மா நீ
அன்பி னுருகி அவனேநா னென்றுசொல்லி இன்பக் கடலில் இளைப்பாறித்-துன்பமற்று எந்நாளும் வாழ்வாய் இறப்பும் பிறப்புமில்லைச் சொன்னே னிதுவே சுகம். I
ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறியு நீயல்லை ஐம்புலனும் நீயல்லை ஆன்மாநீ-உண்மையில் செம்மையாய் வாழ்ந்துசீ வன்சிவ னென்றமுழு உண்மை யறிவாய் உகந்து. 2
உகந்து மணங்குவிந்து ஒன்றுக்கு மஞ்சா தகந்தை அவாவெகுளி யாற்றிச்-சகந்தனிலே தாமரையிற் றண்ணிர்போற் சாராமற் சார்ந்துநற் சேமமொடு வாழ்வாய் தெளிந்து. - 3.
சிந்தனைக் கெட்டாத தெய்வத்தை நாம்நிதமும் வந்தனை செய்து வணங்குவோம்-பந்தமுண்டு முத்தியுண் டென்று முனைத்துநில் லாமலே நித்தியணு மென்றே நினை. 4.
தன்னை யறியத் தனக்கொருகே டில்லையென முன்னைப் பெரியோர் மொழிந்தனரால்-தென்னைபனை சேரிலங்கை வாழுஞ் சிவநேயச் செல்வர்காள்! தேரீரிச் சீவன் சிவன், 5 ܖ
தெரிந்து செயலாற்றுந் தீரர்களே நல்ல விரிந்த அறிவுள்ள மேலோர்-திரிந்து மதியிழந்து வாடாமல் மாணடியை யென்றும் துதிமனமே சொன்னேன்வெற் றி. 6
வெற்றிதரும் வேண்டியன வெல்லாந் தருமனமே பத்தியுடன் பாடிப் பணிசெய்வாய்-சித்தத்தில் ஆனந்தம் பொங்கும் அதுவே நானென்று தியானஞ்செய் சீவன் சிவன். 7

Page 101
192 நற்சிந்தனை
உற்றதுணை
१ " வெண்பா சேவித்துஞ் சென்றிரந்துஞ் சீவன் சிவனென்று பாவித்துக் கொண்டாலிப் பாரினிலே -ஆவிக்கே
உற்ற துணையென் றுறுதிகொண்டு நல்லூரில் நற்றவனை நாடுவோம் நாம் . 1
நாமந்தி சந்திதொறும் நல்ல சிவநாமம் சேம முறப்பாடிச் சிந்தையிலே-காமமுதல் கட்டறுத்து நிட்டையிலே கங்குல் பகலின்றி இட்டமுடன் வாழ்வோம் இனிது. 2
இனியே தெனக்குன் அருள்வருமென் றெண்ணுது கனிகாய் அருந்திக் கடும்பசிக்குத்-தனியே இருந்துமுத்தி சேர்வதற் கெண்ணுவதே யல்லால் பொருந்துவனே பூவிற் புகுந்து. 3.
போதுகொண்டு போற்றேன் பொறிவழியே போயலையேன் தீது செயுமனத்தைச் சேர்ந்திடேன்- யாதுக்கும் \ அஞ்சேன் அவரிவரை அண்டிடேன் எஞ்ஞான்றுந்
தஞ்சமென்று வாழ்வேன் தனித்து. 4
சற்குருவைப் போற்றித் தரணியிலே சீரடியார் பொற்பதத்தைப் போற்றிப் புகலுவேன்-கற்றவர்கள் நாடுஞ் சிவதொண்டன் நாஞ்சிவம் என்றுசொல்லி ஓடி வருவான் உவந்து. 5
உவந்து வருவானே மென்றுரு வேற்றிப் பவம்வெந்து போக வருள்வான்-தவஞ்செய்வார் கண்டு மகிழுவார் காதலுட னுதரிப்பார் பண்டுபோ லென்றும் பரிந்து. 6 பரிந்தன்பர் பாதத்தில் பாங்குடனற் போது சொரிந்துசிவ தொண்டன் தொழுது-கரங்கூப்பிச் சீவன் சிவனச் சிவநாமம் பாடுவான் தேவர் புகழநிற்பா ன் தேர்ந்து. . . 7

நற்சிந்தனை 193 யோகமறியேன்
யோக மறியேன்யான் யோகியரை யும்மறியேன் ஆகுநெறி மற்ருென் றறியேன்யான் தேகமிது வீழ்வதன் முன்னுன் விரையார் மலர்த்தாளைச் சூழப் பணியாய் தொழுது. .
தொழுது வணங்கிநின் துரநெறியே செல்லும் முழுமனத்தார் தங்கூட்டம் முன்னி-அழுதே உருகி யுருகி யுளநைந்து கண்ணிர் பெருக வரந்தருவாய் பின், 2
பின்ன ரெனக்குப் பிறப்போ டிறப்பென்னும் மன்னுபெரு வாதைமற் றென்செய்யும்-உன்னைச் சரணென் றடைந்த தகவுடையார் பாதம் அரணென் றிருந்தேற் கறி. 3
அறிவுக் கறிவாகி யப்பாலுக் கப்பாற் பிறிவற் றிருக்கும் பெருமான் -நெறிநின்றர் நீடூழி வாழ்வாரே நீநா னவனென்று பாடுபட மாட்டார் பரிந்து. 4
பரிந்து பணியாற்றிப் பாவமெல்லாந் தீர்த்தேன் இருந்த படியிருக்கு மெம்மான் - வருந்த வழியு மினியுண்டோ வாழ்வுடன் தாழ்வோ செழுமலர்ப் பாதஞ் சிரம். 5
சென்னிக் கணியுன்ருள் சேவித்து நிற்றலே பண்ணுக் கணியுன்னைப் பாடுதலே-கண்ணுக் கணியுன் வடிவுகண் டானந்தங் கொள்ளல் பணியை யணிந்தாய் பரம். 6
பரவுமடி யார்க்கருளைப் பாலிக்கும் ஐய!
இரவுபகல் காணுநின் றேத்த-வரமருள்வாய்
வாய்விட்டுச் சொல்ல வகையெனக்கிங் கில்லையே
நீவிட் டிடாதே நினை. 7
13

Page 102
194
நற்சிந்தனை
நினைவி னினைவாகி நீயிருக்க நாயேன் வினைவழியே சென்று மெலிகோ- எனையும் இடுக்க ணெனக்கில்லை நின் செயலே யாவும் நடுக்கமெனக் குண்டோ நவில். 8
நவிலு மறைநான்கு மாகமமுந் தேடி நவில முடியாத நாத-தவமுடையார் தம்மனத்தாய் நாயடியேன் சாற்றுங் கவிக்கிரங்க எவ்வமுண்டோ கூரு யினி. 9
இனிப்பிறவா நன்னெறிக்க ணெய்தினர் சேவைக் கினிப்பிறக்க வென்னைப் பணியாய்-இனித்ததிருக் கோலத்தா லைந்தொழிலுங் கூட்டிக் குனித்தருளுஞ் சீலத்தாய் தில்லைச் சிவ! 10
பதைப்பற்றிரு நெஞ்சமே இராகம்-தன்னியாசி, தாளம்-ஆதி
பல்லவி
பார்ப்பதெல் லாஞ்சிவ மாகவே கண்டு பதைப்பற்றிரு நெஞ்சமே.
அநுபல்லவி
பதைப்பற்ற பேர்க்கேசிவ பாக்கிய முண்டு பஞ்சேந் திரியம் அஞ்சையும் வென்று. (ւմn rՒ)
சரணம்
மார்க்கஞ் சொல்லும் வழிதனிற் செல்லு மாருத மெளனத் தியானத்தில் நில்லு தீர்க்க மானகுரு செல்லப்பன் பாதம் w சிந்திக்கும் யோகசுவாமி வந்திக்குங் கீதம். (LunTrif) ,

நற்சிந்தனை 195
முத்தி நெறி
நேரிசை வெண்பா-அந்தாதித்தொடை
நல்லூர்ப் பதியிலே ஞான நெறிகாட்டச் செல்லப்பன் என்னும் திருப்பெயரான்-பொல்லாப்பிங் கொன்றுமே யில்லையென ஒதினுன் ஒதயான் கண்டுமெய் தேறினேன் காண்.
காண்பதெலாம் பொய்யென்று காட்டினன் காட்டயான் வீண்பா வனையெல்லாம் விட்டொழிந்தேன்-மாண்புடனே நீயும் மனத்தில் நினைத்தால் வினையெல்லாம்
மாயும் இதைநீ மதி. 2
மதிக்கும் மதிகொடுக்கும் மாநிலத்தை யாள விதிக்கும் விமலனடி சேர்க்கும்-துதிக்கும் அடியவர்கள் துன்பம் அகற்றி அருளுங் கடிமலராற் பூசித்துக் காண். 3.
காணுவார் தொண்டர் கருதுவார் சொன்னசொற் பேணுவார் பேணிப் பெரிதுவப்பார்-சாணு வளர்க்க வழிதேடி வையத் தலையார் கலக்கமறக் கண்டு களி. 4.
களிபெருகுங் காமக் குரோதமெலாங் குன்றுந் தெளிவுண்டாஞ் சித்தத்தில் தீமை -விளியுமே ஆரறிவா ரென்றதனை அந்திசந்தி சிந்தித்தாற் பேரறிவு தான்வருமே பின், 5
பின்னுமுன்னு மில்லைப் பிரமமே யுள்ளபொருள் என்னு மொழிதம் இதயத்தில்-மன்னுபவர் சாந்தம் அடக்கம் தயவுடனே வாழ்ந்தினிது சேர்ந்திடுவார் முத்தி தெரி. 6

Page 103
96. நற்சிந்தனை இலங்கை நம் நாடு
தூண்டு சுடர்ச்சோதி தொல்லுலகில் வந்துநமை யாண்டுகொண் டான மார்க்குங் குடியல்லோம் வல்வினையும் போச்சு வரம்பிலின்ப மேயாச்சு நல்வினை சேரிலங்கை நாடு.
வேண்டுதல் வேண்டாமை யில்லான் விரும்பிவந்து ஆண்டுதான் கொண்டான மார்க்குங் குடியல்லோம் பொய்பேசு கில்லேம் புறங்கூறு கில்லேம்யாஞ் செய்யா ரிலங்கை நமது. . . 2
இல்லையென்று சொல்கிலோம் யார்பாலு மன்புடையோம் எல்லையில்லா வின்ப மெவர்க்குங் குடியல்லோம் தில்லைவாழ் தெய்வத் திருவடியைச் சிந்தித்து நைவோ மிலங்கைநம் நாடு. 3
தீமையெவர் செய்தாலும் சித்தத்திற் கொள்ளேம்யாம் ஆமைபோ லடக்குவோ மார்க்குங் குடியல்லேம் செய்வோம் சிவபூசை தீங்கவிகள் பாடுவோம் உய்வோ மிலங்கைநம தூர். 4.
அச்சமொடு கோபத்தை ஆகா வெனத்தடுத்தோம் இச்சையெல்லாம் விட்டோம் எவர்க்குங் குடியல்லோம் நெஞ்சிற்பஞ் சாக்கரத்தை நேச முடனுரைப்போம் மஞ்சு தவழிலங்கை வைப்பு. 5
ஆதியு மந்தமு மில்லைநமக் கென்றுமென ஒதி யுணர்ந்தோ மொருவர் குடியல்லேம் ஆறுங் குளமும் அணியார் பொழில்களுஞ் சேருநம தூரிலங்கை தேர். y 6 சிந்திக்க நெஞ்சும் தெரிசிக்கக் கண்ணிரண்டும் வந்திக்கச் சென்னிபிறர் வைத்தகுடி நாமல்லோம்
-அந்திசந்தி வாழ்த்தி வணங்குவோம் வாயாரப் போற்றுவோம் தாழ்த்திநிற் போமிலங்கை தாள். 7

நற்சிந்தனை I97
எல்லார்க்கு மாங்கடவு ளொன்றென் றியம்புவோம் பொல்லாங்கு செய்யோம் பிறர்குடி யல்லேம் கொலைகளவு கோபத்தைக் கொள்கிலேம் நெஞ்சில் நிலையென் றிலங்கை நினை. 8
நிற்போம் சமாதியிலே யென்றும் நிலைத்திருப்போம் பெற்ருேம் பிறர்க்கடிமை நாமல்லோம்-சுற்றந் துறந்தோம் பிறவாத தொல்பதியைச் சேர்ந்தோம் சிறந்தோ மிலங்கை தெரி. 9
செல்வநிலை யாதென்று தேர்ந்தோம் சிவபெருமான் நல்ல பதமறவோம் ஆளல்லோம்-அல்லலுற மாட்டோ மவனி மதித்தாலு மின்புருேம் வேட்டோ மிலங்கை வெளி. 10
இலங்கைவாழ் தெய்வ மெமையாளுந் தெய்வம் கலங்க விடாத்தெய்வம் காணின்
-புலன்வழியிற் செல்ல விடாத்தெய்வம் தேவர் தொழுந்தெய்வம் நல்லதெய்வம் நாடோறும் நாடு. 11
எல்லாந் தருந்தெய்வம் எல்லாமா குந்தெய்வம் எல்லாந் தொழுந்தெய்வ மெந்தெய்வம்-நில்லாநீர் செஞ்சடைசேர் தெய்வம் சிரஞ்சீவி யானதெய்வம் அஞ்செழுத் தானதெய்வ மாம். 12
நிலனகிக் காற்ருகி நீராகுந் தெய்வம் அலகி லருக்கனு மம்புலியும்-பலபலவாம் வேடங் கொளுந்தெய்வம் வேதாளஞ் சூழ்தெய்வம் மாட மலியிலங்கை வாழ்வு. 13

Page 104
198 நற்சிந்தனை
தன்?னயறிந்தோர் தலையானுேர்
Go6nu saru T
தன்னை யறிதல் தலையானேர் தங்கடமை என்னப் பெரியோ ரியம்புவரால்-மின்னனைய பொய்யான வாழ்வைப் புதுமையென வெண்ணுவரோ கைமேற் கணியாகக் காண்.
தெரிந்து வினையாற்றுந் தீரர்களே மண்ணில் அருந்தவர்க ளென்றுமுனே ராய்ந்தார்-பொருந்துவன செய்து சிறுதொழில்கள் செய்யா தொழியவிட்டு உய்வாய்நீ யென்னி லுறைந்து, 2
சிவத்தை விடத்தெய்வம் வேறில்லை யென்போர் அவத்தி லழுந்துவரோ வன்றே - உவத்தல் வெறுத்தலாற் றெய்வம் பலவாய் விதித்தோம் அறுத்தார்க்கு முண்டோ வவை. 3
அவைக்கஞ்சா வீர ரவர்தம்மை நோக்கில் சுவைமுதலாய் வென்றநல்ல தூயோர்-நவைசேரும் இந்திரனே சாலுங் கரியென்ருல் வேறெனக்குச் சந்தேக மேன்காணுஞ் சாற்று. 4
சாற்று முடல்பொருளு மாவியுந்தந் தோர்களிந்த மாற்றமாம் வையம் மதிப்பாரோ-தோற்றமெலாம் தாமே யலவென்று தம்மையறிந் துய்வோருக் காமாறென் காணு மறை. 5
அறையும் மறைநாலு மாகமங்கள் தாமும் இறையளவும் தெய்வ மியம்பா-தறநெறியே கும்பிட்டார்க் கல்லால் குளிர்ந்த மலர்ப்பாதம் இம்மட்டென் றேகூற லில். ... ' 6
இசையும் பொருளை யிரப்போருக் கீந்தே இசைபடவே வாழ்வார்க்கிப் பூமி-திசையறியப் பூங்கோயி லாகப் பொருந்துமே யாதலினல் நீங்காம லீந்தே நிலை. 7

நற்சிந்தனை 199
நாடு மீழத்து நற்றமிழ் நாடனே
அந்தி சந்தியுஞ் சிந்திக்கு மெய்யன்பர் பந்த பாசங்க டீர்க்கும் பரிசினன் அந்த மாதியு மில்லா வியல்பினன் இந்த விலங்கை யெழில்நக ரானே. l
ஆடு பாம்பணிந் தம்பலத் தாடுவான் பாடு வார்பவந் தீர்த்திடும் பண்பினன் ஒடு கங்கை யுடன் வைத்த சென்னியன் நாடு மீழத்து நற்றமிழ் நாடனே. 2
இருவினை வந்தெனைத் தாக்கா திருக்கவும் கருவி கரணமென் கட்டளை கேட்கவும் அருவி கண்களி லாருய்ப் பெருகவும் தருக வருளிழத் தண்ணக ரானே. 3.
ஈவது கடைப்பிடித் தென்று மொழுகவும் நோவது பேசாது நோன்பைப் பிடிக்கவும் சாவது வந்தாலுஞ் சத்தியந் தழைக்கவும் தேவர்தொழு மிலங்கைத் திருநக ரானே. 4
உண்டான போதுநா னுற்ருர்க் குதவவும் சண்டாள ரோடுசச் சரவின்றி வாழவும் கண்டொன்று சொல்லாமற் காலங் கழிக்கவும் மண்டலம் புகழிலங்கை மாநக ரானே. 5
ஊன யுயிரா யுடலா யுறுப்பாய்க் கோணய்க் குருவாய்ச் சீடனுய் நீநின்ருய் யான ரறிவே னம்பலத் தரசே தேன ரிலங்கைத் திருநக ரானே. 6
ஐயா றகலாத வானந்தக் கூத்தனே தையலாள் தன்னைப் பிரியாத தாணுவே மையல்சேர் மாரனை நீறுசெய் வள்ளலே தெய்வமே யீழச் செழுநக ரானே. 7

Page 105
200 நற்சிந்தனை
ஒப்பற்ற தெய்வமே உயிருக்கு ஞயிரே தப்பற்ற மாதவர் தாந்தொழுங் கோவே துப்பிதழ் மடந்தை சேவிக்குஞ் செல்வமே இப்புவி யீழத் தெழில்நக ரானே. 8 ஒதுவார் தீவினை உடன்தீர்க்குந் தெய்வமே மாதுமை பாகனே மான்மழுக் கையனே பாதுகாப் பதுகடன் பாரேழு முன்னிடம் மீதுநீ கிருபைவை வேலையிலங் கையானே. 9 ஒளவிய மில்லா மனந்தா வடியாரைத் திவ்விய மாய்ப்பாடுஞ் சித்தமும் நீதா நவ்வியை யேந்தும் நம்பா நடராஜா கெளரிதன் பாகனே கடியிலங்கை நகரானே. Ι0
முழுவதும் உண்மை
பல்லவி முழுவதும் உண்மையென்று மோன முனி சொன்னனன்று.
அநுபல்லவி பழுதொன்று மில்லையென்று பண்ணுவாய் சிவதொண்டு. (முழு)
சரணங்கள் ஒழிந்துபோ கும்பிறவி அழிந்துபோம் பழிபாவம் எழுந்திரு விழித்துக்கொள் எல்லாம் உனக்குவெற்றி
((Մ) (Լք) 1 தளர்ந்துபோ காதேகுரு சாற்றிய ஞானமொழி தெளிந்துகொண் டாற்சீவன் சிவனெனக் காணலாம்.
((Մ) (լք) 2 சொல்லித்து திக்கும்யோக சுவாமியைத் தினங்காக்கும் செல்வன்திருப் பாதமே யல்லும்ப கலுந்துணை. (முழு) 3

நற்சிந்தனை - 2 Ol
96)6O)85uTGGOT
கலிவிருத்தம்
மதியும் நதியும் வைத்த சென்னியன்
விதியு மரியு மறியா விமலன் துதிசெ யடியார் துன்பந் தீர்ப்பவன்
மதில்சே ரிலங்கை மாநக ரானே. l
நீருங் காலும் நிலனுந் தீயுந் ஆரும் வானு மம்புலி கதிருஞ் சீருந் திருவுஞ் சிறப்பு முடையான் நேரு மிலங்கை நெல்வய லானே. 2
எண்ணி யெண்ணி யுருகு மடியார் மண்ணில் வந்து பிறவா வண்ணம் உண்ணின் றருளை யுதவும் நாதன் எண்ணில் வளஞ்சே ரிலங்கை யானே. 3
போக்கும் வரவும் இல்லாப் புனிதன் ஆக்கும் அழிக்கும் அவனி யெல்லாங் காக்கும் அடியார் கவலை தீர்க்கும் பூக்கும் இலங்கைப் பொன்னக ரானே. 4
பொன்னும் பொருளும் புகழுந் தருவான் முன்னும் பின்னும் இல்லா முதல்வன் என்னுள் அறிவா யென்றும் விளங்கும் துன்னும் வரைசூழ் இலங்கை யானே. 5
நினைக்கு மடியார் நெஞ்சத் துள்ளே முனைக்கும் காமக் குரோதம் மோகம் அனைத்தும் போக்கும் அம்மான் பெம்மான் சுனைச்சே ரிலங்கைத் தொன்னக ரானே. 6 நீள நினைக்கு மடியார் பாவம் மாள வருளை வழங்கும் பெருமான்
ஆழ நீள வாழி சூழ்ந்த நீள விலங்கை நெல்வய லானே. 7

Page 106
202
நற்சிந்தனை
மூவ ரறியா முதல்வ னுலகில் தேவ ராலு மறியாத் தெய்வம் யாவ ரேனுந் தொழு வார் பாவம் வேவ வருளு மிலங்கை யானே.
செக்கர் போலும் மேனிச் செல்வன் அக்கு மாலை யணியு மமலன் சொக்க னென்னுஞ் சொந்தப் பெயரான் இக்கு மலியு மிலங்கை யானே.
ஆளும் பெருமா னகத்து விருக்க நாளுங் கோளு நங்கட் கெங்கே வீழு மருவி விளங்கு மிலங்கை வாழும் பெருமான் மலர்த்தாள் காப்பே.
36A6061T6óT கலிவிருத்தம்
நேசத் தாலரன் நீள்கழல் போற்றுவார் பாசத் தாற்றுயர் பாரினி லெய்திடார் வாசக் காபல சேரு மிலங்கையித் தேசத் தான் சொல்லைச் சிந்தையிற் கொண்மினே.
எல்லாம் வல்ல இறைவன் றிருப்பதம் சொல்லும் பூக்கொடு தோத்திரஞ் செய்பவர் கல்லா ராயினுங் கதியுண் டிலங்கையான் சொல்லைச் சிந்தித்துத் துன்பத்தைத் தீர்மினே.
மொழிக்கு நற்றுணை முன்னஞ் செழுத்துமே விழிக்கு நற்றுணை மென்மலர்த் தாள்களே வழிக்கு நற்றுணை வண்புகழ் பாடலே
களிக்கு மிலங்கையான் கட்டுரை கேண்மினே.
பொறிவ Nமனம் போயலை யாமலே நெறிவ பூழிநிற்கக் கற்றுக் கணந்தொறும்
அறிவ பூழிந்திட ரெய்தீ ரிலங்கையான்
குறிவ பூழிச்செலக் கூடிடும் முத்தியே.

நற்சிந்தனை 203
புன்னெ றிசெலும் போக்கை யொழித்துநீர் நன்னெ றிதனில் நாட்டத்தை வைத்திடிற் சென்னெ றிக்குநற் செல்வ மிலங்கையான் சொன்னெ ஹிதனைச் சோரா துணர்மினே. 5
சமய தீக்கையைப் பெற்றுப்பின் சற்குரு அமையு மப்பா லவன்வழி செல்விரால் தமையு ணரறிவு தலைப்படு மிலங்கையான் சுவைதருஞ் சொல்லைக் கேட்பது தக்கதே. 6
காண்பான் காட்சி காட்சிப் பொருளிவை மாண்பாய் விட்டு மலரடி சிந்தித்தால் வீண்பா வங்கள் வெருண்டோடு மிலங்கையான் மாண்பாச் சொன்னது மனத்திடை வைம்மினே. 7
இருப்பி னும்நடந் தெத்திசை செல்லினும் பொருப்பில் வாழ்ந்திடு புங்கவன் பொற்பதம் விருப்ப மாவிளம் பீரிவ் விலங்கையான் விருப்ப மானசொல் வீட்டை யளிக்குமே. 8
அம்மை யப்ப னரிய சகோதரர் இம்மை யில்லிறை யென்றுநீ ரெண்ணியே மும்மைக் காலத்தும் போற்றி ரிலங்கையான் செம்மை யான சொன் முத்தியிற் சேர்க்குமே. 9
போன காலத்தை யெண்ணிப் புகையுநீர் ஞான நாயகன் நற்பதம் போற்றுவீர்
ஈன மானவை யேகு மிலங்கையான் மோன நல்கு மொழிதனை உள்ளுமின். 10
எனக்கினி யான் பிறர் யாவர்க்கு மினியான் தனக்கொப் பிலாதான் தத்துவா தீதன் சினக்குங் கரியுரி திருமேனி போர்த்தான் வனப்புறுஞ் சோலைகு Nலங்கை மன்னுமே. l

Page 107
204 . · நற்சிந்தனை
எங்கு முள்ளவன் எல்லாம் வல்லவன் மங்கையோர் பாகன் மான்மழுக் கையினன் பங்கயன் மால்பறந் திடந்துங் காணுன் கொங்கவிழ் காவிலங்கை கோயில்கொண் டானே. 12
என்னை யென்ன லெனக்கறி வித்தவன் அன்னை தன்னினு மன்புமிக் குள்ளவன் தன்னை யெவரு மறியாத் தலைமையன் தென்னைசே ரிலங்கை தேடியாண் டானே. 13
நல் வரம் தா கலிவிருத்தம்
என்னை யென்ன லெனக்கறி வித்தவன் தென்னை மாப்பனை சேரும் நல் லூருளான் அன்னை தன்னினும் மேம்படு மன்புளான் தன்னை நாடினன் தந்தன னேர்வரம். I மதியி லேரவி வைத்திடும் மாதவர் துதிசெய் தூய மலரடி யென்னுளம் பதிய வைத்திடும் பாக்கியம் யான்பெற மதியை வேண்டினேன் தந்தரு விரிவ்வரம். 2 இருவி னைக ளெனக்கண்டா லஞ்சவும் வருவி னைகளில் வையத்திற் கெஞ்சவும் குருப ரனுடன் கூடிச் சிறக்கவும் மருவு பாவம் மறக்கவுந் தாவரம். 3 அதுவி துவென்ற வவையெல்லாங் கண்டாருக் கதுவி துவுமாய் நின்ற பரம்பொருள் பொதுவி னில் நடங் கண்டு களிக்கவுன் புதும லரடி போற்றிடத் தாவரம். 4 ஆதா ரத்தால் நிராதாரஞ் சென்றுயான் பேதா பேதங்கள் காணுப் பெருமையை வேதாக மத்தில் விளங்கும் விமலனே நாதா நீதா எனக்கிந்த நல்வரம். 5

நற்சிந்தனை 265
இன்பம் எது
கலிவிருத்தம் எல்லாம் நீயென எண்ணுதல் இன்பமே எல்லாம் நானென எண்ணுதல் இன்பமே எல்லாஞ் சிவன்செயல் என்பதும் இன்பமே எல்லாம் என்செயல் என்பதும் இன்பமே. 1
குருபரன் அடியிணை ஏத்துதல் இன்பம்
குருபரன் அருட்பணி ஆற்றுதல் இன்பம்
குருபரன் அருள்வாக் காக்கிடும் இன்பம் ኣ குருபரன் சரண்புகக் கூடிடும் இன்பமே. 2
மோனத் தாழுதல் முடிவிலா இன்பம் ஞானத் துயருதல் நவையறு மின்பம் மானமார் நற்றவம் மதிப்பரு மின்பம் யானென தற்றிடல் எல்லையில் இன்பமே.
தன்னலம் வீந்திடத் தோன்றிடு மின்பம் இன்னல்செய் வினையற இயைந்திடு மின்பம் துன்னிய மலமறத் தழைத்திடு மின்பம் மன்னிய பிறப்பற மலர்ந்திடு மின்பமே. 4
ஐம்புலப் பந்தனை அற்றிடல் இன்பம் வெம்புறு வெகுளி விலக்குதல் இன்பம் துன்புறு காமத் தொடக்கறல் இன்பம் வம்புறு ம்யக்கற வாய்த்திடும் இன்பமே. 5
மன்னுயி ரெல்லாம் மகிழ்ந்திடல் இன்பம் என்னுயிர் போலவை ஓம்பிடல் இன்பம் இன்னுயி ரிவையெலா மிறைவன் வடிவென உன்னிடும் மெய்யுணர் வுற்றிட லின்பமே. 6
யாவருஞ் சமமென வுணர்ந்திட லின்பம் யாவருஞ் சகோதர ரென்பது மின்பம் யாவரும் நலனுற வுழைத்திட லின்பம் யாவரு மொன்றென வொன்றிட லின்பமே. 7

Page 108
206 நற்சிந்தனை
பணிதலைக் கொள்ளல் பாரினி லின்பம் பணிபயன் கருதா தாற்றிட லின்பம் பணிமுயன் ருற்றி முற்றுற லின்பம் பணியெலாஞ் சிவபணி யாக்கிட லின்பமே. கூசுங் கொலைகள வொழித்திட லின்பம் மாசுடை மதுவகை நீக்கிட லின்பம் பூசலும் பகைமையும் போக்கிட லின்பந் தேசத் தொற்றுமை யோம்பிட லின்பமே. நல்லன புரிந்திடல் நவின்றிட லின்பம் அல்லன வஞ்சி யகற்றிட லின்பம் புல்லியோர் பிழையெலாம் பொறுத்திட லின்பந் தொல்லைக ளல்லல்கள் தாங்கிட லின்பமே. வாய்மையும் ஆற்றலும் வளர்த்திடல் இன்பம் தூய்மையும் அழகும் ஆர்த்திடல் இன்பம் மேயநன் னிதி மேவிடல் இன்பம் நேயஅன் புலகினில் நிறைந்திடல் இன்பமே. பாமர மக்கட் பணிசெயல் இன்பம் தோமற அவர்வாழ் வுயர்த்துதல் இன்பம் சேமநச் சாலைகள் நிறுவுதல் இன்பம் வாமநூற் கலைகள் வகுத்திடல் இன்பமே. முத்தமிழ்ச் சங்கம் மல்குதல் இன்பம் வித்தகர் சங்கம் விரவிடல் இன்பம் பத்தர் சங்கம் பரவுதல் இன்பம் நற்றவர் சங்கம் நாட்டிடும் இன்பமே. எங்கும் மாதவர் மாமறை முழக்கம் எங்குஞ் சான்ருேர் அறவுரை முழக்கம் எங்குந் தொண்டர் சுதந்திர முழக்கெனிற் பொங்கும் இன்பம் புவிடமிசைச் சிறந்தே. பவநெறி கடக்கப் பிறந்திடு மின்பம் அறநெறி துடைப்ப அணைந்திடு மின்பம் தவநெறி தலைப்படத் தழைத்திடு மின்பஞ் சிவநெறி பூத்திடுஞ் சச்சிதா னந்தமே.
12
13
14
15

நற்சிந்தனை 207
ஏதும் இயம்ப மாட்டேன் கலிவிருத்தம்
ஒன்றென இரண்டென எண்ணவும் மாட்டேன் நன்றெனத் தீதென நண்ணவும் மாட்டேன் அன்றென இன்றென அறையவும் மாட்டேன் சென்றன வருவன தெரிந்திட மாட்டேன். l
ஒருபொல்லாப்பு மிலையென ஒரவும் மாட்டேன் குருவென்றுஞ் சீடனென்றுங் கொள்ளவும் மாட்டேன் இருவினை யுண்டென இயம்பவும் மாட்டேன் சுருதியின் முடிவெனச் சொல்லவும் மாட்டேன். 2
இகழ்ச்சி புகழ்ச்சியென ஏங்கவும் மாட்டேன் மகிழ்ச்சியி லேமனம் வைக்கவும் மாட்டேன் முகமன்சொல் வாரிலே மோகமும் வையேன் அகம்பிர மாஸ்மியென் றனுதினம் நையேன்.
இடையரு அன்பென எடுத்துநான் சொல்லேன் கொடைகொடு விடுவெனக் கூறவும் மாட்டேன் மடையரை ஞானியரை மதிக்கவும் மாட்டேன் இடைமுதல் முடிவென இயம்பவும் மாட்டேன். 4
அஞ்சென ஆறென எட்டென அறியேன் வஞ்சனை சூதென மனத்தினிற் குறியேன் நஞ்சிது அமுதென நயக்கவும் மாட்டேன் வெஞ்சினம் சஞ்சலம் விரும்பவும் மாட்டேன். 5
வேறு பார்க்குமிட மெங்குஞ்சிவ தொண்டராய்ப் பார்க்கவொரு வார்த்தை சொல்லவந்த மகத்தே சிவதொண்டா. 1 ஆர்க்குங் கடல்சூழ்ந்த அகிலமெலாம் தொண்டரெனக் காக்குங் கருணைக் கடலே சிவதொண்டா. 2 மூர்க்க குணமில்லை முழுதுஞ்சிவ தொண்டரெனப் பார்க்கும் அறிவுதந்த அன்பே சிவதொண்டா. 3

Page 109
208 ላ' நற்சிந்தனை
ஆசான் அருள் கலிவிருத்தம்
ஆசான் அருளால் அகந்தை அழிந்தது ஆசான் அருளால் அகங்கு விர்ந்தது ஆசான் அருளால் அன்பு வளர்ந்தது ஆசான் அருளால் ஆசானைக் கண்டிலன் . 1.
அளந்தேன் அருளால் பூதங்கள் ஐந்தும் அளந்தேன் அருளால் ஐம்பொறி ஐந்தும் அளந்தேன் அருளால் ஐம்புலன் ஐந்தும் அளந்தேன் அருளால் ஆன்மாவை அறிந்தேன். 2
சிவதொண்டு செய்தல் செகத்திற் சரியை சிவதொண்டு செய்தல் செகத்திற் கிரியை சிவதொண்டு செய்தல் செகத்தில் யோகம் சிவதொண்டு செய்தல் சிவஞானம் ஆமே. 3
ஆவதும் இல்லை அழிவதும் இல்லை போவதும் இல்லைப் புகுவதும் இல்லை தேவரும் இல்லைத் திசைகளும் இல்லை யாவரும் இல்லை யார்தான் அறிவார். 4.
அயலறி யாத ஆனந்தம் பெற்றேன் மயலறி யாத மெளனத்தில் உற்றேன் செயலறி யாத சிவத்தினைக் கற்றேன் இயம நியமாதி யாவையு மற்றேன். 5
ஆணில் பெண்ணும் பெண்ணில் ஆணும் தூணில் துரும்பும் துரும்பில் தூணும் காணுங் கண்ணுங் காணுத கண்ணும் பேணும் அடியார் பிறப்பற் ருரே. 6
பூவும் மணமும் போலப் பொலியும் நாவுஞ் சுவையும் போலத் தெளியும் தேவுக் கடியார் செய்யுந் தொழிலும் நாவுக் கெளிதோ நாமறி வோமோ. 7 د -ت.

நற்சிந்தனை
ஒன்றும் இரண்டும் மூன்றும் ஐந்தும் நன்றுந் தீதும் நாளுங் கோளும் ஒன்றி லொன்றி இருக்கு முபாயம் கண்டு கொண்டவர் கலங்காச் சித்தரே.
திங்களுங் கங்கையுஞ் சீறும் பாம்பும் மங்கையும் மானும் மழுவுஞ் சூலமும்
அங்கியு முடுக்கையும் அரக்கனும் பொலியும்
சிங்காரங் கண்டார் சீவன் முத்தரே.
அகரத்தில் உகரமும் மகரமும் சேர்த்து
சிகரமும் வகரமும் யகரமும் செபித்தாற்
பகர வொண் ணுத பாத மணிந்து தகரா காயத்தில் தனித்து வாழலாம்.
அகலிடத் தாசான் அருளா லடியேன் புகலும் பத்தும் போற்றி யேத்துவார் இயல்சேர் இருவினை இடுக்கண் நீக்கிப் பகலிர வில்லாப் பதவி யடைவரே,
நல்லூர்ச் செல்வன்
209
10
ஒருபொல்லாப்பு மில்லையென்று சொல்வான்-செல்வன்
உல்லாச மாகவே நல்லூரிற் செல்வான்.
குருசீடம் முறையொன்றுங் கொள்ளான்-செல்வன் குனதித ஞெருவரையுங் கும்பிட்டு நில்லான். அருவென்றும் உருவென்றும் சொல்லான்-செல்வன்
ஆரறி வாரென் றதட்டியே வெல்வான்.
வருவாரைப் போவாரைத் தெருவில் -செல்வன்
வைவான் சிரிப்பான் மகிழ்ச்சி தருவான்.
மருமத்தில் மருமமா யிருப்பான்-செல்வன்
மாதவ ருமறி யாதம கத்தான்.
14

Page 110
210 நற்சிந்தனை
நல்லூராசான் கலிவிருத்தம்
உலகமு முயிரும் உம்பர் பிரானும் கலகஞ் செய்யும் நடனங் கண்டால் உலகில் பிறந்திறந் துழலா ரென்று நலஞ்சேர் நல்லூ ராசான் நவின்ருன்.
மலர்மிசை யோனும் மாலுங் காணு அலகிலா வாட லுடைய அப்பன் மலர்தலை யுலகத்து மானிடன் போல நலமிகு நல்லூரில் நாடியாட் கொண்டான். 2
குலநலம் பாராக் கொள்கை யுடையான் சலன மில்லாத் தத்துவா தீதன் பலரும் பைத்திய காரனென் றேச நலமிகு நல்லையில் நாடக மளித்தான். 3
கற்றவர் விழுங்குங் கருணை யாளன் மற்றவ ரறியா மாணிக்க மாமலை சிற்றறி வுடையார் தேருச் செல்வன் நற்றவர் வணங்கும் நல்லூ ரானே. 4
விருப்பு வெறுப்பை வேரறப் பறித்தோன் திருவடி மறவாச் சீருடை யாளன் ஒருபொல் லாப்பு மில்லையென் றுரைத்தோன் குருவடி வாகக் கோலங்கொண் டானே. 5
உண்மை முழுதுமென் ருேயா துரைப்பவன் நன்மை தீமையைக் கடந்த நாதன் என்னையுந் தன்னையு மொன்ருய்க் காண்பவன் . சென்னியில் சேவடி சூட்டினன் அன்பால். 6.
ஆரறி வாரென அடிக்கடி ஒதும் பேரறி வாளன் பேர்செல் லப்பன் பாரறி யாத பயித்திய காரன் தேரடிப் படியில் தினமு மிருப்பான். 7

நற்சிந்தனை 2
கார்நிற வண்ணன் கைதலை யணையாய்ப் பார்மிசை யுறங்கும் பண்பை யுடையான் நீர்வளம் நிலவளங் குறையா நல்லூர் சீர்பெற வாழ்ந்த தேசிக மூர்த்தி. 8 நாமறி யோமெனும் நல்ல மந்திரம் சேமமுண் டாகச் செப்புந் திறத்தோன் காமங் குரோத மோகங் கழிந்தவன் நாமமோ செல்லப்பன் நல்லூ ரானே. 9 எப்பவோ முடிந்ததென் றெடுத்தெடுத் துரைக்கும் ஒப்பிலா மாமணி உன்மத்த னெவரும் இப்படி யென்று இயம்பவொண் ணுதவன் எப்போதும் முருகன்சந் நிதியில் வாழ்பவன். 10 பாவலர் நாவலர் பணியும்நல் லூரில் சாவதும் பிறப்பதுந் தவிர்த்தென யாண்ட காவலன் நல்லூர்க் கந்தன் பதியில் சேவகஞ் செய்யுஞ் செல்லப்ப மூர்த்திகாண். 1
வேடிக்கை செய்கிருனே
பல்லவி வேடிக்கை செய்கிருனே -பரமபிதா வேடிக்கை செய்கிருனே.
அநுபல்லவி வேடிக்கை செய்கிருன் கூட இருக்கிருன். வேருய் இருப்பதுபோற் பாசாங்கு பண்ணுகிருன். (வேடி)
சரணம் و --س-.... பாடுகிறன் படிக்கிருன் பக்தரினம் சேர்கிருன் நாடுகிருன் நன்மைதீமை நாமல்ல வென்கிருன்
ஓடும் இருநிதியும் ஒன்ருகக் காண்கிருன். ஒன்றே விரண்டோவென ஓதி யறியவொண்ணுன். (வேடி)

Page 111
212
நற்சிந்தனை
சிவசிவ என்னச் சிவகதியாமே கலிவிருத்தம்
தந்தி முகத்தனைச் சங்கரன் மைந்தனைத் தொந்தி வயிறனைத் தோடணி செவியனை இந்திர னுக்கரு ஸ்ரீந்த இறைவனை மந்திர ரூபனை நான் மற வேனே.
ஒருவ ஞலே உலக முதித்தது ஒருவ ஞலே உலகம் நிலைத்தது ஒருவ ஞலே உலகம் ஒடுங்கிடும் ஒருவ னேயென் உயிர்த்துணை யாமே. 2
ஒருவ னேயொரு மூவரு மானன் ஒருவ னேயெல்லா வுயிர்களு மானுன் ஒருவ னேயெல்லா வுலகமு மானுன் ஒருவ னேயென்னை உய்யவைத் தானே. 3
அண்ட சராசர மவன்வடி வாகும் அண்ட சராசர மவனே யாகும் அண்ட சராசரத் ததிசயந் தன்னை அண்டரு மறியா ததிசயித் தாரே. 4
சிவபக்தி யாலே சிந்தை குவிந்தது சிவபக்தி யாலே சிந்தை தெளிந்தது சிவபக்தி யாலே சிந்தை யிறந்தது சிவபக்தி யாலே சீவன் முத்தியே. 5
சிவனையல் லாமல் தேவரு மில்லை சிவனையல் லாமல் சீவரு மில்லை சிவனையல் லாமல் தேகமு மில்லை சிவனையென் சித்தத்துட் கண்டுகொண் sேனே 6
நகரத் துள்ளே நான்முக ஞனுன் மகரத் துள்ளே மாலவ ஞணுன் சிகரத் துள்ளே சிவனப் நின்றன் வகரத் துள்ளே யருள்வடி வானனே5 7

நற்சிந்தனை
சிவசிவ என்று சிந்திப்பர் தேவர் சிவசிவ என்று சிந்திப்பர் சீவர் சிவசிவ என்று சிந்திப்பர் முனிவர் சிவசிவ என்னச் சிவகதி யாமே.
பக்தி செய்து பந்தத்தை நீக்கினேன் பக்தி செய்து பரமனைக் கண்டேன் பக்தி செய்யும் பாக்கியம் பெற்றேன் பக்திக் கடலில் படிந்திருந் தேனே,
ஒன்றை நினைந்தென் னுள்ள மொடுங்கிற்று ஒன்றை நினைந்தென் னுள்ளங் களித்தது ஒன்றை நினைந்தென் சிந்தை யுயர்ந்தது ஒன்றை நினைந்து ஒன்ரு னேனே.
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
தாலே ஆக்கை பிறந்தது தாலே ஆன்மா சிறந்தது தாலே ஆனந்த மாயிற்று துள்ளே அடங்கிநின் றேனே.
தாலே சஞ்சல மழிந்தது தாலே பஞ்ச மொழிந்தது தாலே ஆனந்த மாயிற்று துள்ளே அடங்கிநின் றேனே.
தாலே அரனடி காணலாம் தாலே அகிலத்தை யாளலாம் தாலே அகவினை தீர்க்கலாம்
அஞ்செ முத்துமென் நெஞ்சம் புகுந்ததே.
ஆருறுக் கப்பால் ஆனந்தக் கூத்து ஆருறுக் கப்பால் ஆனந்த வீடு ஆருறுக் கப்பால் ஆர்தான் ஈடு ஆறறுக் கப்பால் சென்ருேரைக் கூடு.
2 13
10

Page 112
214 நற்சிந்தனை தன்னை யறிந்தேன் தானவ ஞனேன்
கலிவிருத்தம் அகண்ட வெளியிலே அப்பனு மம்மையும் அகண்ட வெளியிலே யாருயி ரெல்லாம் அகண்ட வெளியிலே யஞ்சுபூ தங்களும் அகண்ட வெளியிலே யானிருந் தேனே. I அண்டமும் பிண்டமு மகத்திற் கண்டேன் அண்டமும் பிண்டமு மகமாய்க் கண்டேன் அண்டமும் பிண்டமு மகத்திற் கண்டிலேன் அண்டமும் பிண்டமு மாயிருந் தேனே. 2 அன்னை பிதாக்குரு வாகிய வமலன் என்னை வளர்த்தா னென்னே டிருந்தான் முன்னை வினையெலாம் முடித்த முதல்வன் தன்னை யறிந்தேன் தானவ ஞனேன். 3
அருந்தவர் நெஞ்சி லிருக்கு மமிர்தம் இருந்த படியே யிருக்கு மின்பம் பொருந்திய வல்வினை போக்கும் மருந்து அருந்துயர் நீக்கி யறிந்தேன் யானே. 4 அருவமு முருவமு மாகிய வமலன் குருவாய் வந்தே குறித்தெனை யாண்டான் இருபதும் நாலு மில்லா விடத்தில் கருவாகி நின் முன் காரணன் ருனே. 5 அச்சந் தீர்த்தெனை யாண்ட சோதி பொய்த்தவர் நெஞ்சிற் போகா நீதி மெய்ச்சம யத்தில் விளங்கு மாதி வைச்சனன் திருவடி வாழ்ந்தேன் யானே. 6 அறுபதும் நாலு மறியா வாதி உறுதுயர் தீர்க்கு முயர்ந்த சோதி குறுமுனிக் கருள்முனங் கொடுத்த வாதி மறுவிலா வென்மனம் வாழ்ந்திருந் தானே. 7 அஞ்சின் வழியை யடைத்தோ ரகத்தில் பஞ்சின் மெல் லடியாள் பாக னரிருக்கும் வெஞ்சினம் வேட்ட வெறிய ரகத்தில் அஞ்செழுத் துட்பொரு ளடையா தாமே. 8

நற்சிந்தனை 215
திங்கள் வணக்கம் ۔۔۔۔
கலிவிருத்தம் செய்ய மேனிய னேசிவ னேயுனைக் கையு மெய்யுங் கருத்திற் கிசையவே வைய கந்தனில் வாழ்த்தி வணங்கிடத் தையில் வந்தருள் தான் செய்ய வேண்டுமே.
மாசில் மாதவர் மனத்திற் கினிமையே பேசில் இன்பம் விளைக்கும் பெருமையே வாசி யாம்பரி ஏறும் வலவனே மாசி மாதம் வருக வருகவே. 2
பங்கில் மங்கையை வைத்த பராபர! இங்கு மங்கும் இருக்கு மிறைவனே துங்க மால்விடை யேறுநற் சோதியே பங்கு னிதனிற் பாங்கின் வருகவே. 3
செத்தா ரென்பு திகழ்திரு மார்பனே அத்தா வென்றடி போற்றுவார்க் கன்பனே கத்தா வுன்னைநான் கண்டு களித்திடச் சித்தி ரைதனிற் சீக்கிரம் வருகவே, 4
தேகா திதனை மெய்யெனச் சிந்தைசெய் மோகா திபதி யாகிய மூர்க்கனை ஏகா திபதி நீயெனை யாளுவான் வைகா சியெனும் மாதம் வருகவே, 5
ஆனி ரைதனை மேய்க்கு மரியொடு நாணி லந்தரு நாதனுங் காண்கிலர் வானு லாவும் மதிவைத்த அப்பனே ஆனி மாதம் வருக வருகவே. 6
பாடி யாடிப் பணியு மடியவர் கூடிக் கூடிக் கும்பிடு வாரவர் வாடிப் பின்னர் மகிழச்செய் வள்ளலே ஆடி மாதம் வருகவன் பாகவே.
7

Page 113
21 6 நற்சிந்தனை
பாவ ணிசெய்து பாடு மடியவர் நாவ ணிசெய்து நிற்கும் நலஞ்சுடர் பூவ ணிசெய்து போற்றுவார் சிந்தையில் ஆவ ணியருள் மாதம் வருகவே. . 8
அரற்று மன்பர்க் கருள்செ யிறையவன் அரக்க லுக்கருள் செய்தவன் என்னையும் புரக்கு மாறடி யேன்புகழ் போற்றிடப் புரட்டா சிதனில் புண்ணியன் நண்ணுமே. 9
துப்பி சைந்த இதழ்மடத் தோகையான் அப்பி சைந்த அணிமுடி யாண்டவன் செப்பி சைந்து திறலுடன் என்முனம் ஐப்ப சியெனு மாதம் அணுகவே. 10
கார்த்தி கேயனைக் கண்ணுத லிற்றரு கீர்த்தி வாய்ந்த கிருபா சமுத்திரம் தோத்திரஞ் செய்வார் துன்பந் துடைத்திடக் கார்த்தி கையெனும் மாதத்திற் காணும்ே.
மார்க்க நன்னெறி சென்றிடு மாந்தர்கள் மூர்க்க மான குணத்தை முனிந்திடும் போர்க்கு றிப்புடைப் புங்கவன் புண்ணிய மார்க பூழியினில் வருக வருகவே. 2
ஐயம்வை யாதேநெஞ்சே யரனடி தினம்பணி தெய்வமா லோனல்லால் வேருெரு தெய்வமில்லை செய்வன திருந்தச்செய் சேரிடம் அறிந்துசேர் உய்யவ பூழியிதுவே உனக்குண்மை யாய்நட.

நற்சிந்தனை 21 7
குருதரிசனம் வெண்பா
கருத்தில் நினைந்துருகிக் கைகூப்புந் தொண்டர் வருத்தமெலாந் தீர்க்கும் வடிவேல்-திருத்தலத்தில் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் v ஆரடாநீ யென்ருன் அவன். தன்னை யறியத் தவமுஞற்றும் மாதவரை அன்னையைப்போ லாதரிக்கு மாறுமுகன்- சந்நிதியில் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தேரடாவுள் ளென்ருன் சிரித்து. 2 வண்டுபண் செய்யும் வளம்பெருகு நல்லூரில் மிண்டு மனத்தவரை மேனிலைக்குக்-கொண்டுவரும் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தீரடாபற் றென்ருன் சிரித்து. − 3 கன்னலொடு செந்நெல் கதலிபலா மாவர்க்கந் துன்னு நல்லூர்ச் சாமி திருமுன்றில் மன்னுசீர்த் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் சீரடியார் சூழ்ந்துநின்றர் தேர். 4 அயலறியா வந்தணர்க ளான்ற நல் லூர்ப்பதியிற் கயற்கணுர் காமவலை சேரா-வியல்புடைய செல்லப்ப னென்னுஞ் சிவகுருவை நான்கண்டேன் நல்லதப்பா வென்ருன் நயந்து. 5 ஒன்ருே விரண்டோ வொருமூன்றே வென்றெவரும் அன்றுதொட் டின்றுவரை யாராய-ஒன்றுக்கும் எட்டாமல் நின்ரு னெழிற்குருவாய் நல்லூரிற் பட்டமளித் தானெனக்குப் பார். 6 நீராய் நெருப்பாய் நெடுநிலனுய்க் காற்ருகி ஆராலுங் காணு வமலனங்கே - நேராகச் சற்குருவாய் வந்தேயென் சந்தேகந் தீர்த்தாண்டான் நிர்க்குணம் பூண்டேன் நினை. 7 புனலொழுகப் புள்ளிரியும் பொன்னிழ நாட்டில் அனலேந்து வான்றன் புதல்வன்-மனமார வாழ்நல்லை யம்பதியில் வாழ்வளிக்கச் சற்குருவாய்த் தாள்காட்டி யாண்டான் தனி. 8

Page 114
218 நற்சிந்தனை
மறப்பேனே குருநாதன் தன்னை
நேரிசை வெண்பா
இல்லையென் னமல் இரப்போர்க்கொன் றிவரேல் தொல்வினை யெல்லாந் தொலைந்துபோம்-நல்லைக் குருநாதன் கூறினன் பொல்லாப்பிங் கில்லை உருகாதோ நெஞ்ச முவந்து. I
உண்மை முழுதுமென் ருேதுங் குருநாதன் தன்னை மறப்பேனே தாரணியில் - பின்னையினித் துஞ்சல் பிறப்புண்டோ சோர்வச்சந் தாமுண்டோ கஞ்சமலர்த் தாளென்றுங் காப்பு. 2
காக்குந் திருவடிகள் எந்நாளு மென்மனத்தில் பூக்கும் பொறிவழியே போகாமல் - நோக்குமென்றும் தேக்குஞ் சிவானந்தத் தேனமுதை யுண்டுமனம் நீக்கமின்றி நிற்கும் நினை. 3
நினைக்கு மடியாரை நீயேநா னென்றே அணைக்குந் திருக்கரந்தா னென்னே - கனக்குங் கடல்சூழ் கவினிலங்கைக் கார்சூழ்நல் லூரான் தொடுக்கும்வல் வேலைத் துதி. 4
துதிக்க மதிதந்த தூயோன்றன் பாதம் துதிக்க வினைகள் துகளாம்-மதிக்கருளும் ஐயன் திருமதலை ஆறுமுகன் வீதியிலே தெய்வமென நின்ருன் தெளி. 5
ஒன்பது வாசலா லாயவோர் உறுப்பில் அன்பு வைத்துநீ அலையாதே வீணில் அன்பர் பணிசெய் வதுஅற மென்றறி இன்பவீ டளிக்கும் எல்லாக் கதியும்வரும் என்பதை மறவாதே இதுவுனக் குறவாமே.

நற்சிந்தனை 219
அன்னையொத்த செல்வன் அறி நேரிசை வெண்பா
ஒருபொல்லாப் பில்லையென் ருேதுந் திருவாக்கால் உருகி யுருகி யுணர்வற் -றிருநிலத்தில் இன்பதுன்ப மென்னுமவை யென்றுமொப்பாந்
தன்மைகண்டேன் என்னப்பன் செல்லப்ப னென்று.
உண்மை முழுதுமென வோதுந் திருமொழியின் தன்மையினைக் கண்டேன் தலைப்பட்டேன்-பின்னைப் பிறப்பு மிறப்புமிலைப் பேதை மட நெஞ்சே மறப்பின்றி யேத்தி மதி. 2
முடிந்த முடிபென்று முன்னின்று சொல்லப் படிந்ததென் னுள்ளம் பதியில் -முடிந்ததே மாயவிருள் மந்திரமுந் தந்திரமும் நான்மறந்தேன் தாயனைய செல்லப்பன் தான். 3 நாமறியோ மென்று நகைத்தென்னை நோக்கியே காமங் கடந்தோன் கழறினன்-சேமமுடன் சிந்தித்துச் சிந்தித்துச் சேவடியே தஞ்சமென்று வந்தித்து நின்றேன் மகிழ்ந்து. 4 ஆரறிவா ரென்றே அடிக்கடி யேநகைக்கும் பேரறி வாளனையும் பித்தனென்றே-பாரிற் பலரே இகழுவார் சில்லோர் புகழ்வர் சலனமற்று வாழுவார் தாம். 5
கரைகாணு வின்பக் கடலாடு வானை உரையாட யாருக்கிங் கொல்லுந் -தரைமீது நால்வேதங் காண்கிலவே நற்றவத்தோர் தாமறியார் மால்பிரமன் தேரார் மதி. 6
ஆசைக் கடலி லலைந்து திரிவார்கள் ஆசை கடந்தவனை யாரறிவார்-மாசற்ற மேகத்தைச் சந்திரனை மின்மிணிதான் மூடுமோ மோகத்தை யின்றே முனி, 7

Page 115
220 நற்சிந்தனை
உயர்ந்ததிருக் கோபுரமு மோங்கெயிலுங் கண்டு வியந்து விழுந்தெழுந்து விம்மி-அயர்ந்துநிற்கும் ஆடவரும் மங்கையரும் மற்றுள்ள அன்பர்களும் பாடவரு வார்தினமும் பார்.
எட்டு மிரண்டும் அறியாத வென்னையும் நட்டஞ்செய் செல்லப்பன் நல்லூரில்-திட்டமுடன் நீயேநா னென்று நினைந்துருக வைத்தனனே
தாயே யனையா னவன். 9
ஆதியந்த மில்லையென்று சொல்லாமற்
சொன்னன்காண் நீதி நெறிவிளங்கும் நல்லூரில்-வீதியிலே என்னைத்தா னுக்கி எடுத்தாண்டான் யாரென்னின் அன்னையொத்த செல்வன் அறி. 10
தம்பி கேளடா
தா வித்தாவிச் செல்லும் மனத்தைத் தம்பிகேளடா கூவிக்கூவி யழைத்துக் கூடக் குடியிருத்தடா.
சேவித்துஞ் சென்றிரந்துந் தம்பி கேளடா சிவமேநா மென்றுதினஞ் சிந்தை செய்யடா 2 பாவித்தும் பாட்டிசைத்துந் தம்பி கேளடா மூவிதமாம் ஆசைதன்னை முனிந்து வெல்லடா. 3
வாவியாறு சேரிலங்கை நல்ல நாடடா
பாவியென்ற நாமந்தன்னைப் பகைத்து நில்லடா. 4
தூவிமயி லேறும்வேலைத் துதித்துக் கொள்ளடா நாவினில் நமச்சிவாயம் நவின்று நில்லடா. 5

நற்சிந்தனை 22
ஆசானக் கண்டேன் நேரிசை வெண்பா
ஆசானக் கண்டேன் அருந்தவர்வாழ் நல்லூரிற் பேசா தனவெல்லாம் பேசினன் -கூசாமல் நின்றேன்நீ யாரடா வென்றே யதட்டினன் அன்றேயான் பெற்றே னருள்.
அருளொளிக்குள் ளேபுகுந்து சென்றேன்யான் ஆங்கே இருள்சூழ்ந் திருப்பதைக் கண்டேன்-பொருளறியேன் ஒர்பொல்லாப் பில்லையென வோதினன்
கேட்டுநின்றேன் மர்மந்தே ராது மலைத்து. 2
மலைத்துநின்ற வென்னை மனமகிழ நோக்கி அலைத்துநின்ற மாயை யகலத் -தலைத்தலத்திற் கைகாட்டிச் சொல்லலுற்ருன் கந்தன் திருமுன்றில் மெய்ம்மறந்து நின்றேன் வியந்து. 3
வியந்துநின்ற வென்றனக்கு வேதாந்த வுண்மை பயந்தீரும் வண்ணமவன் பண்பாய்-நயந்துகொள் அப்படியே யுள்ளதுகாண் ஆரறிவார் என்ருனல் ஒப்பில்லா மாதவத்தோன் உற்று. 4
உற்ருரும் போனுர் உடன்பிறந்தார் தாம்போனர் பெற்ருரும் போனர்கள் பேருலகில்-மற்ருரும் தன்னுெப்பார் இல்லாத் தலைவன் திருவருளால் என்னெப்பா ரின்றியிருந் தேன்.
ஒடும்பு விரியம்பழ மும்போலும் உலகத்தை நாடுதல் சீலமன்று ஞானிகள் முன்சொன்னர் கோடுதல் இல்லாமல் குரைகழல் அடிபணி வீடுனக் குண்டாகும் விருப்பமா யிதைப்படி,

Page 116
223 நற்சிந்தனை
நல்லமழை பெய்யாதோ நேரிசை வெண்பா நல்லமழை பெய்யாதோ நாடு சிறவாதோ எல்லவரும் இன்புற்று வாழர்ரோ - நல்லூரான் ஆசானுய் வந்தே யடியேனை யாண்டுகொண்டான் பேசானு பூதியென் பேறு. I நற்சிந் தனையென்னும் நல்லமுதம் உண்டக்கால் கற்கும் நெறியுண்டோ காசினியில் - விற்றுரண் ஒன்றுமே யில்லாத உன்மத்தன் யோகனுக்(கு) என்றுமின்ப மென்றே யிசை, 2 பாட வறியான் பலகலையுந் தானறியான் தேட வறியான் சிவயோகன்-நாடறியப் பிச்சைச்சோ றுண்டு பிறவிப் பிணிதீர்ந்தான் அச்சமிவற் கில்லை யறி. 3 இச்சையில் லோரே யிடும்பைக் கிடும்பையை நிச்சய மாய்ப்படுப்பர் நீயறியாய்-அச்சமற்று வாழ்சிவ யோகனமுன் வந்துவவிந் தாண்டுகொண்டான் கேள்கிளைகள் நீங்கக் கிளர்ந்து. 4 எழுவாய் பயனிலைகள் இல்லாமற் பாடித் தொழுவான் சிவயோகன் சொல்லின்-அழுவான் விழுவான் விதிர்விதிர்ப்பான் ஆரறிவார் என்று தழுவுவான் தன்னையுன்னித் தான். 5
ஞானதேசிகன் பல்லவி ஞான தேசிகனே சரணம் நற்றவனே நல்லூர் வித்தகனே வருக.
அநுபல்லவி ஈனப் பிறவி நீக்கு மெழிலது கண்டேன் என்னை யென்னலறிந் தானந்தங் கொண்டேன் (ஞான)
w சரணம்
காமக் குரோதமோகக் கடலைக் கடந்தேன் கங்குல் பகலற்ற காட்சியைக் கண்டேன் கருதுஞ் சுவாமியோக நாதனுன் தொண்டன் தருமொரு வரமுண்டு அதுவெங்கும் மங்களம் தங்கும்படி யருள்தந்து இரட்சி. (ஞான)

நற்சிந்தனை 223
சின்னத்தங்கம்
தெய்வத்துக்குத் தெய்வம் சிந்தையிலே தானிருக்க
வையகத்தி லேனலைந்தாய்-சின்னத்தங்கம் வாட்டமெல்லாம் விட்டிடடி. l
ஆழித் துரும்பெனவே யங்குமிங்கு மாயலைந்து பாரில் தவியாதே -சின்னத்தங்கம் பார்த்து மகிழ்ந்திடடி. 2
அங்குமிங்கு மெங்குமந்த ஆண்டவன் தானிருக்க அங்குமிங்கு மலையாதே - சின்னத்தங்கம் ஆடிப்பாடி மகிழ்ந்திடடி. V− 3.
கங்குல்பகல் காணுத கருணைதனை வேண்டிக்கொண்டு செங்கமல மடமாதே-சின்னத்தங்கம் சீராக வாழ்ந்திடடி. 4
ஆடம் பரமெல்லாம் அடியோடே நீக்கிவிட்டு கேடறியாத் திருவடியைச்-சின்னத்தங்கம் கிட்டநீ கண்டிடடி. 5
வேடமொன்றும் போடாதே வீணருடன் கூடாதே தேடவேண்டாந் திகைக்கவேண்டாஞ்-சின்னத்தங்கம் சீவன்சிவன் ஆச்சுதடி. . 6
தொழுது வணங்கிடுவாய் துரியநிலை சாருமட்டும் அழுதழுது ஆண்டவணைச்-சின்னத்தங்கம் ஆன்மலாபம் தேடிடடி. 7
முழுதுமுண்மை யென்றுமுன்னள் மோனகுரு சொன்னரடி பழுதொன்று மில்லையடி-சின்னத்தங்கம்
பவுத்திரமாய் வாழ்ந்திடடி. 8 காண்பானுங் காட்சியும்போய்க் காட்சிப் பொருளுமற்று
மாண்புடனே நின்றிடுவாய்-சின்னத்தங்கம் மரணபய மில்லையடி. 9

Page 117
224 நற்சிந்தனை
சேண்பொலியுந் திருவடியே சித்தத்திலெப் போதுமுண்டு வீண்காலம் போக்காதே - சின்னத்தங்கம் வேண்டிப் பணிந்திடுவாய். 10
மானபி மானம்விட்டு மண்ணும்விண்ணுந் தெரியாமல் தானுன தன்னிலையில் - சின்னத்தங்கம் தனியே யிருந்திடடி. 11
தானுன தானேயல்லால் தனக்குதவி யாருமில்லை மோன நிலைதனிலே -சின்னத்தங்கம் மூழ்கி யிருந்திடடி. 12
புத்தியைநீ நாட்டாதே புன்னெறியைச் சூட்டாதே வெற்றியுனக் குண்டாகுஞ்-சின்னத்தங்கம் விருப்பும் வெறுப்பும்விடு. 13
எத்திக்கு மீசனடி இருந்தபடி யேயிருந்து பத்திசெய்து பார்த்திடுவாய்-சின்னத்தங்கம் பழிபாவ மில்லையடி. 14
தத்துவப் பேயோடு தான் தழுவிக் கொள்ளாதே சுத்தபரி பூரணத்தில்- சின்னத்தங்கம் சுகித்துநீ வாழ்ந்திடடி. 15
வித்தகம்நீ பேசாதே வேறென்றை நாடாதே செத்தாரைப் போல்திரிவாய்-சின்னத்தங்கம் தெய்வம்நீ கண்டிடடி. 6 .
மெத்தக்கதை பேசாதே மேன்மக்களை யேசாதே
சத்துருவும் மித்துருவுஞ்-சின்னத்தங்கம் தானென்ருய்ப் போகுமடி. 17

நற்சிந்தனை - 225
நீகரில்லாத இன்பம் நிறையுமே
அன்று மின்று மென்று முள்ளவன்
என்று மெங்க ளகத்துள் நிறையுமே. I ஆக்கையே கோவில் அகஞ்சிவ லிங்கம் பூக்கைக் கொண்டு பொன்னடி போற்றுதும். 2 இல்லை யுண்டென்று சொல்லவொண் ணுதவன் நல்லூரில் வாழும் நற்றவ ராசனே. 3.
உம்பர் தலைவ னுயர்கை லாயன் R செம்பொ னம்பலத்தே திருநடனம் புரியுமே. 4 ஊரும் பேரு மில்லா வொருவன் சீருந் திருவுமாயென் சிந்தையுள் நிற்குமே. 5
எண்ணு மெழுத்துமாய் நின்றிடு மெந்தை கண்ணுக்குக் கண்ணுய்க் கலந்து நிற்குமே. 6
ஏகம்பம் மேவி ஏந்திழை கலக்கம் போக வருள்செய்தான் புண்ணிய மூர்த்தியே. 7 ஐங்கரத் தொருகோட் டானையைத் தந்தவன் அங்கு மிங்கு மெங்குமாய் நிற்கும். 8
ஒருபொல் லாப்பு மில்லையென் ருேதினுன் , திருவாழும் நல்லைத் தேசிக மூர்த்தியே. 9 ஓங்கா ரத்தில் உதித்த வுலகெலாம் ஓங்கா ரத்தில் ஒடுங்கு முண்மையே. IJ
ஒளவனத் தில்லையில் ஆடல் உகந்தவன்
நவ்வியைப் பாகம் வைத்த நம்பனே. I
அஃகுத லில்லா அறிவினை யுடையவன்
நஃகும் நம்வஞ்ச வேடங் கண்டே. 12
கட்டுப் படாத மனத்தைக் கட்டினுல்
எட்டுணை யேனும் இடுக்கண் இல்லையே. 1 3
15 -

Page 118
226 - நற்சிந்தனை
ங்கரம் போல நாங்கள் வாழ்ந்தால் நிகரில் லாத இன்பம் நிறையுமே. 14
சந்ததம் சாதனை தவருது செய்யின் -
சிந்துார முரித்த சிவனடி சேர்வோம். 15 ஞான யோகம் நாங்கள் புரிந்தால்
மோனவீ டடைவோம் முழுது முண்மையுே. 6
இடத்து மடந்தையை வைத்த பெருமான் நடத்தைக் கண்டால் நாமுய்ந் தோமே. 17
அணங்கு தந்தெமை ஆட்டும் மனத்தை இணங்காம லெந்தை யிணையடி பணிகுதும். 18
தன்னைத் தன்னு லறிந்த ஞானிகள் ۔ விண்ணில் விளங்கும் வெய்யவன் போல்வார். 19
நன்றுதீ தென்று நாடாமல் நாடினல் குன்றின் மேல் வைத்த விளக்கின் கொள்கையே. 20
பத்மா சனத்தில் பரிவுட னிருந்து சித்த விருத்தியைத் தீர்த்திடு வோமே. 21
மணிவா சகந்தரு மந்திர மோதினல் பிணிமூப் பில்லாப் பிரம மாகுதும் . 22
யவனர் சோனகர் தமிழர்சிங் களவர் எவரும் வணங்குவார் எந்தைதன் தாளே. 23
அரவார் செஞ்சடை அண்ணல் தன் பாதம்
விரவி நிற்பவர் வீடுபெற் றனரே. 24
இலது உளதென வெவருமே மாறக் 1. கலந்து நிற்பவன் கண்ணுத லாமே. 25
வஞ்ச நெஞ்சினர் காணு வள்ளலை அஞ்செழுத் தோதி அர்ச்சிப் போமே. - 26

நற்சிந்தனை
அழகா ரரியும் அம்புயா சனனும் தொழுதிட நின்றவன் சுத்த சிவமே. இளமை மூப்பிலா னெம்பி ரானெனத் தொழுதிட நின்றவன் சோதிசொ ரூபனே. இறப்பும் பிறப்பு மெமக்கில்லை யென்றவன் அறமார் நல்லூ ராசா ஞமே.
அனங்க ணுகத்தை யன்றெரி செய்தவன் கணங்கொள் பேயோ டாடிய கள்வனே.
ரங்கநின் திருவருள் தரலாகாதா இராகம்-காபீ; தாளம்-ஆதி
பல்லவி
ரங்கநின் திருவருள் தரலாகாதா
obufiivsus
தேசகாலம் யாவும் மறந்து தேவா உன்றனருள் நிறைந்து
சரணங்கள்
பாதகன் கஞ்ச னனுப்பிய பூதகி பாரில் மாளவே செய்தாய்
அதுபோல் அடியேன் ஆணவமொழிய அருள்நீ தருவாய் ஐய.
வேத புராணம் காணவொண் ணுத வித்தகனே பக்தர் வேண்டும் விமலா அமலா கமலக் கண்ணு விரைவாய் நீ வருவாயே.
2
2
7
27
28
29
30
(பூg) "
(பூg)
(பூனி) 1
(பூரி) 2

Page 119
228 நற்சிந்தனை
அன்பே வடிவாய் அமைந்த துறவி
ஆசிரியப்பா ܫ
அன்பே வடிவாய் அமைந்த துறவீ! அன்பே யன்றி யாற்றலு முண்டோ? இன்பமா முலகி லெங்கணுஞ் செறிக துன்பமாம் மாயை தொடரா தொழிக எல்லியு மல்லு மீசனைப் போற்றுக கல்லுங் கரையக் கவிமழை சொரிக கங்குல் பகலற்ற காட்சி பெறுக; எங்குஞ் சிவத்தைக் கண்டின் புறுக மங்குவார் செல்வம் மதியா தொழுகுக இங்கு நீ, இருந்த படியே யிருந்து வாழுதி அருந்துய ருன்னை யடையா வன்றே. V l
வஞ்சகம் நீக்கி வாழுந் துறவீ! அஞ்செழுத் துட்பொரு ளாகிய வமலனை நெஞ்சத் துள்நீ வைத்து வணங்குதி கஞ்சத் தேவனுங் கண்ணனுங் காணுர் தன் போற் பிறரைத் தானி னந்திடு உன் போற் பிறரிவ் வுலகி லுண்டோ
முன்பு நீ, செய்த வல்வினை தீர்ந்திடுந் தியானஞ் செய்தினஞ் சீவன் சிவனே யன்ருே. 2
ஒருமைமனம் படைத்த வுத்தமத் துறவீ! இருமையு மளிக்கு மிறைவன் திருவடி அந்தியுஞ் சந்தியு மகலாது போற்றிப் பந்தித்து நின்ற பாவம் போக்குதி சிந்தித்துச் சிந்தித்துச் சீவபோத நீக்குதி நிந்திப் பார்களை நேசத்தால் வெல்லுதி சந்தேகமில்லை, - நீயோ நித்தியன் நினக்கயல் கற்பனை நீயோ நிராமயன் நினைவொழிந்து வாழுதி, 3.

நற்சிந்தனை 229
ஈழநாடு வாழவந்த சிவதொண்டன்
ஈழநாடு வாழவந்த எழில்மிகுந்த தொண்டன் எளியவர்க்கும் பெரியவர்க்கும் ஏவல்செய்யுந் தொண்டன் தாளமேள மில்லாமலே தான் வளருந் தொண்டன் தன்னைப்போல அயலவரைத் தான்நினையுந் தொண்டன் காளகண்ட னடியவர்க்குக் காவலான தொண்டன் கங்குல்பகல் காணுமற் கருமமாற்றுந் தொண்டன் நீளநினை நித்தியன் நீ யென்றுரைக்குந் தொண்டன் நிட்டையிலே யெந்நாளும் நிலைத்துநிற்குந் தொண்டன். 1
ஈழநாடு வாழ்வந்த எங்கள் சிவ தொண்டன் ஏழைகட்கும் பெரியவர்க்கும் ஏவல்செய்யுந் தொண்டன் காளகண்ட னடியவர்க்குக் காவலான தொண்டன் காமக்கு ரோதமோகம் நீக்கிவிடுந் தொண்டன் வாழவெண்ணும் அடியவர்க்கு வழிகாட்டுந் தொண்டன் மறுபிறப்பை யிப்பிறப்பில் நீக்கிவிடுந் தொண்டன் தாளமேள மில்லாமலே தான் வளருந் தொண்டன் தாயாகி யனைத்துலகுந் தாங்கிநிற்குந் தொண்டன். 2
சூழமிக நினைத்துவினை யாற்றுமெங்கள் தொண்டன் சோம்பலே பாவமென்று சொல்லுகின்ற தொண்டன் கூழெனினும் கூடிக்குடி யென்றுசொல்லுந் தொண்டன் கூச்சமின்றி யுலகத்திலே குடியிருக்குந் தொண்டன் ஆழநினை யகம்பாவம் போகுமெனுந் தொண்டன் அடியவர்கள் திருவடியைச் சிரசில்வைக்குந் தொண்டன் வாழிமிக வாணிச்சிக்கா மண்சுமந்த மாறன் மாபெருமை வழுத்துகின்ற மாண்புமிக்க தொண்டன், 3
நானென்னும் ஆணவத்தை நலியவைக்குந் தொண்டன் நன்மைக்குந் தீமைக்கும் நடுவில் நிற்குந் தொண்டன் தேனென்ன இதயத்தில் தித்திக்குந் தொண்டன் சிவாயநம வென்றுதினஞ் செப்புகின்ற தொண்டன் ஆணென்றும் பெண்ணென்றும் அறியாத தொண்டன் அடியவரைத் தானக ஆக்கிவிடுந் தொண்டன் பேணுத மாந்தரையும் பிரியாத தொண்டன் பெரியோர்கள் கருத்திலென்றும் பொருந்திவளர்
தொண்டன். 4

Page 120
230 நற்சிந்தனை தொண்டு செய்வார்
தொண்டுசெய் வாருக் குண்டே ஞானம் தொண்டுசெய் வாருக் குண்டே மோனம் தொண்டுசெய் வாருக் குண்டே தானம் தொண்டுசெய் வாருக் குண்டே கானம்.
எல்லா ரிடத்தும் அடியேன் வாழ்வேன் எல்லா ரிடத்தும் அடியேன் தாழ்வேன் எல்லார்க்கு மென்றும் அடியேன் கேள்வன் சொல்லாற் பயனிலை யென்றே சூழ்வன். 2
எல்லா ருருவமு மென்னுரு வாகும் எல்லார் நலன்களு மென்னல மாகும் எல்லார் பலமு மென்பல மாகும் நல்லோர் என்னுரை நயந்துகொள் வாரே. 3.
வருவன வெல்லாம் வந்தே யேகுக கருதுவ வெல்லாங் கருதித் தீருக ஒருவரு மறியா வொண்செஞ் சீறடி குருபரன் திருவடி கொண்டா டுதுமே. 4.
ஒன்றிரண் டென்றே யுரையார் பெரியார் கன்றும் மனத்தைக் கண்டாற் பரிவார் கொன்றுயிர் வாழக் குறியார் திரிவார் நன்றிது தீதென நலியார் அரிஓம். 5
எல்லா ரிடத்தும் உள்ளாய் தூயாய் எல்லா எழிலும் நீயே யானுய் கல்லாய் மலையாய்க் கவின்பெறு மரமாய்ப் புல்லாய்ப் பூடாய்ப் பொலிவாய் நீயே. 6
உன்துணை யன்றி யுயிர்த்துணை காணேன் பின்னை யென்னைப் பிரியா துறைவாய் அன்னையுந் தந்தையும் ஆசா னும்நீ முன்னைப் பொருட்கெலாம் முன்னைப் பொருள்நீ. 7

நற்சிந்தனை 231
உடல்பொருள் ஆவி யுன்னதே இறைவா! திடம்பெற ஞானத் தெளிவை நல்குதி கண்ணே கருத்தே யெண்ணே எழுத்தே விண்ணே விண்ணில் விளங்கும் மதியே. 8
பண்ணே பண்ணிற் கணியே பரம! எண்ணேன் இனிப்பிற தெய்வம் நாயேன் ஏத்தி யேத்தி யிணங்கி வணங்கச் சாற்றிய கவியை யேற்றிடு வாயே. 9
wr-a-minas
ஒன்றே தெய்வம் ஒன்றே உலகம்
உலக முவக்கவும் உன் மனங் களிக்கவும் கழறும் வாசகங் கருத்தி லிருத்துக ஒன்றே தெய்வ மொன்றே யுலகம் நன்றே யென்றும் நாடிப் புரிவாய் நீசடப் பொருளல நிறைதரு சித்து பேச வரிதுன் பெருமையெவ ராலும் ஆதலா லுன்னை யங்கி சுடாது காதல்சேர் காற்றும் உலர்த்தா கவலல் மாதிரந் தானும் வருத்த முடியாது ஒதிடு மப்புவுங் குளிரச்செய் யாதுனை ஈறிலாப் பொருணி யெள்ளள வேனும் மாறிலா மகிழ்ச்சி மனத்திடைக் கொள்வாய் சாதி சமயம் யாவுமுனக் கில்லை நீதி யொன்றை நெஞ்சிடை வைத்திடு உபாதி செய்யும் புலன்வழி யுருதே அபாய மொன்று மென்று முனக்கிலை செய்ய வேண்டிய செவ்வனே செய்வாய் உய்ந்தாய் முன்னர் யுலகமுன் கைவசம் சந்தேக மில்லைச் சாற்றினன் கேணி சற்குரு உன்துணை சாட்சிநீ யாவாய் அற்புத னடியிணை யென்றும் வாழ்கவே.

Page 121
232
கூத்தாடுதே மனமென்ன கொடுமை
பல்லவி
கூத்தாடுதே மனமென்ன கொடுமை
கும்பிட்டேன் குருநாதா உன்னடிமை.
அநுபல்லவி
நற்சிந்தனை
தீர்த்தங்க ளாடினேன் யாத்திரை செய்தேன் w சித்தந் தெளியவில்லை என்னநான் செய்வேன். (கூத்)
பார்த்த விடமெங்கும் நீயல்லா தில்லை பாராமல் நானும் பட்டேன் தொல்லை காத்தெனை யாள்வ துன்றன் கடமை
சரணங்கள்
கருணைக் கடலே நானுன் உடைமை.
பத்திசெய் யோக சுவாமி பாட்டைப்
பாடிப் படிப்பவர் பல்லூழி காலம் உத்தம ராக உலகினில் வாழ்ந்து வித்தகன் சேவடி விரவிநிற் பாரே.
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ ஓம் ஓம்
செல்வக் கணபதி செல்வவே லாயுதன் w செல்வச் சிவதொண்டன் செல்வச் சிவனடியார்
எம்முள் திருவருள் செல்வத் திருமால் அயன்முதல் தேவர்கள் ஐம்பெரும் பூதங்கள் சிவ சிவ ஐம்பொறி சிவ சிவ ஐம்புலன் சிவ தச நாடிகள் சற்குரு நாதன்
(கூத்) 1
(கூத்) 2
ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம்
ழ் ஒம்
ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம் ஓம்

நற்சிந்தனை. 233
அரகர சிவசிவ மறையோனே
அன்பர்தஞ் சிந்தையில் உறைவோனே அரகர சிவசிவ மறையோனே. . 1
பொன்னே மணியே பூங்கோவே புலவரெல் லாம்புகழ் எங்கோவே. 2
காணுங் கண்ணிற் கலந்தவனே கதிரொளி போலெங்கும் நிறைந்தவனே. m 3
ஆணும் பெண்ணும் ஆனவனே அடியவர் பேணும் வானவனே. 4
கோணிய பிறையை முடித்தவனே கொல்புலித் தோலை யுடுத்தவனே. 5
வேணியிற் கங்கை தரித்தவனே வேழத்தின் தோலை யுரித்தவனே. 6
பாற்கடல் தன்னை அழைத்தவனே பாரொடு விண்ணுய்ப் பரந்தவனே. 7
நூற்பொருள் தன்னை விரித்தவனே நுண்ணிடை யாள்தன் இடத்தவனே. 8
தில்லையில் ஆடிய சிற்பரனே சிவசிவ சிவசிவ தற்பரனே. 9
எல்லையில் லாவருள் தந்தவனே என்போல் நல்லையில் வந்தவனே. IO

Page 122
நற்சிந்தனை
கும்மி
கும்மியடி பெண்ணே கும்மியடி குரு நாதனைப் பாடிக் கும்மியடி
இம்மை மறுமைக்கும் எங்களை யாட்கொண்ட
எழிலைப் பாடிக் கும்மியடி. I
சிவனெ ருத்தனே தெய்வமடி தோழி சென்னியிற் கங்கை பாயுதடி
அவனி டத்தினிற் பெண்ணை நீ பாரடி
எண்ணியெண் ணிக்கடைத் தேறடி. 2
அவனன்றி யொன்றும் இல்லையடி பெண்ணே
அங்கையி லங்கியெ ரியுதடி
அவன்ற ஞகத்தில் நாகமடி பெண்ணே
அரையி லேபுலி யுடையடி. , 3
அடிக்கீ ழரக்கன் கிடக்கி முனடி
அங்கையி லேமழு மானடி
துடியொ ருகையில் தோன்றுதடி பெண்ணே
சூலமுங் கையிற் றுலங்குதடி. 4
குடிமு முதையும் ஆண்டுகொண் டானடி
கொல்லும் நமன யுதைத்தான்டி
அடிமு டியொன்று மில்லையடி பெண்ணே
ஆனந்த மாய்க்கும்மி பாடடி. 5
தூக்கிய பாதத்தின் தோற்றத்தைப் பாரடி
தொந்தோந் தோமென்ற நாதத்தைக் கேளடி
ஆக்கி யழிக்கவும் வல்லவ னவனடி p
ஆனந்த மாய்க்கும்மி பாடுமடி. 6
பாம்பும் புலியும் பார்த்திருந் தாரடி
பாரளந் தோனயன் பாடுபட் டாரடி
நாம்பு கழ்ந்திட நற்றரு ணமடி
நங்கைய ரேகும்மி பாடுமடி. 7

நற்சிந்தனை 235
மாறிப் புலன்வழி போகா தேயடி மதிக்குள் ளேரவி சேர்த்திடடி
ஆறி யிருந்து பாரடி பெண்ணே
அவனை நீகண்டு தேறடி. 8
சித்தத்துள் நித்தந் தித்திக்குந் தேனடி
தீராப் பிணியைத் தீர்க்கும் மருந்தடி
பத்தர்கள் கண்டு பரவு வாரடி
பாவைய ரேகும்மி பாடுமடி. 9
இலங்கை என் திருநாடு
எல்லார்க்குந் தம்பிரா னென்னைவந் தாண்டுகொண்டான் கொல்லேன் பொய் சொல்லேன்யான் குருமொழியை
மறக்கிலேன் நில்லாத காயத்தை நிலையெனவே யெண்ணுகிலேன் செல்லாரும் பொழில்குழு மிலங்கையென் திருநாடே. 1 என்னைவிட் டகலாம லெப்போது மிருக்கின்ற அன்னையொப் பானவனை யடியேன்யான் மறப்பேனே முன்னைநா ஸ்ரீராவணன்றன் முடிபத்தும் நெரித்தவன் தென்னைபனை சேரிலங்கை சிறியேன்றன் திருநாடே. 2 நீர்நிலந்தீ கால்வானுய் நின்றபிரான் சிறியேன ஒர்கணமும் பிரிவறியான் உத்தமர்தஞ் சிந்தையான் கார்நிற மேனியனுங் கமலனுங் காண்கிலான் சீர்பெறுரஉ மிலங்கையென் திருநாடு கண்டுகொளே. 3
பொறிவழிபோ யலையாமற் பூவுலகிற் காத்தபிரான் அறிவுக் கறிவானன் ஆரணமு மறியகில்லான் குறிகுணங்க ளற்றவொன்றைக் கும்பிடுவோ மெப்போதும் செறிபொழில்குழிலங்கையே சிறியேன்றன் திருநாடே. 4 முற்ருத பின்மதியம் முடிதனிலே வைத்தபிரான் அற்ருர்க்கு மலந்தார்க்கு மருள்புரியு மம்பலவன் நற்ரும ரைப்பாதம் நாள்தோறுங் கைதொழுவார் வற்ருத வளஞ்செறியு மிலங்கையென் திருநாடே. 5

Page 123
236 நற்சிந்தனை திங்கட் சடையாய் எங்களை யுடையாய் சிவனே ஓம்
திங்கட் சடையாய் எங்களை யுடையாய் சிவனே ஒம்
சீரிய அடியார் சிந்தையி லுறையுஞ் செல்வா ஓம் மங்கையை யுடையாய் மழவிடை யானே மாதவனே ஓம்
மண்ணும் விண்ணும் ஒன்ருய் விளங்கும் மணியே ஒம் அங்கையி லங்கி தங்கிய பரனே யரனே ஒம்
ஆருயி ரெல்லாம் நீயே யாகி யமர்ந்தாய் ஒம் கங்குலும் பகலும் இல்லாக் காட்சி தருவாய் ஒம்
கருதும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம்.
சிறையார் வண்டறை கொன்றைப் போதனே சிவனே ஒம்
சீவன் சிவனுய்ப் பாவனை செய்வார் திருவே ஒம் குறையா வன்பு தரவே வருவாய் குருவே ஒம்
கூடிக்கூடி யுன்னடி பாடல் கொடுப்பாய் ஒம் . பிறையார் சடையாய் பேரா யிரமே யுடையாய் ஒம் பேசப் பேச வின்பம் பெருகும் பிரானே ஒம் அறையார் கழலே யல்லாற் சிறியே னறியேன் ஒம்
அன்புசெய் யடியரை யென்றும் ஆளக் கடவாய் ஒம். 2
கல்லாப் பிழையுங் கருதாப் பிழையும் பொறுப்பாய் ஒம்
காலனைக் காலாற் முக்கிய பரனே யரனே ஒம் எல்லாஞ் செய்ய வல்லபம் உடையாய் எந்தாய் ஒம்
எழில்சேர் நல்லை வாழும் குருவே யிறைவா ஒம் பொல்லா வினைகள் போகும் வண்ணம் புரிவாய் ஒம்
பூவார் மலர்கொண் டடியார் போற்றும் பொருளே ஓம் எல்லா முன்செய லாமெனும் எண்ணந் தருவாய் ஒம்
ஏத்தும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம். 3
மாறிப் பொறிவழி போகா மனத்தார் இனத்தாய் ஒம் மாலோ டயனுங் காணு ஒளியே மணியே ஒம் ஆறும் பிறையுஞ் சூடிய ஐயா மெய்யா ஓம்
ஆதியு மந்தமு மில்லாய் உள்ளாய் அறிவே ஒம் தேறித் தெளிவார் சிந்தையி லூறும் அமுதே ஒம்
செயசெய வென்று பணியும் தேவர்கள் தேவா ஓம் கூரிய சூலப் படையினை யுடையாய் கோவே ஒம்
கும்பிடும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம், 4

நற்சிந்தனை 237
போற்றியென் வாழ்முத லாய பொருளே யருளே ஓம்
புண்ணியர் நண்ணும் பூரண வடிவே புகலே ஓம் தோற்ற மறைக்குங் காரண மாகிய தொல்லோய் ஒம்
சோதிச் சுடரே தோகைக் கிடமி துணையே ஓம் நீற்ருெடு பொலியும் நெற்றிக் கண்ணு நிமலா ஓம்
நீதி வழுவா மாதவர் தங்கள் நெறியே ஒம் ஆற்ருெடு தும்பை யம்புலி சூடிய யரனே ஓம்
அன்புசெய்யடியரை யென்றும் ஆளக் கடவாய் ஒம். 5
ஆநந்த நடனம் ஆடினன் பல்லவி ஆநந்த நடனம் ஆடினன் அல்லும் பகலும் நல்லூர் வீதியிற் செல்லப்பன்.
அநுபல்லவி
மோனந் திகழுஞ்சிவ யோகியர்தா மறியார் முழுவது முண்மையென முகமலர்ந் தோதுவான். (ஆநந்த)
சரணங்கள்
ஈனந் தரும்பிறவி யெடுத்தெடுத் துழலாமல் என்னைவந் தாண்டுகொண்டான் இன்பத்தில் மாண்டு
கொண்டேன்
தானந் தவமிரண்டுஞ் சரியை கிரியைவிண்டும் சதுர்வித வுபாயத்தாலே தானுக வென்னைச்செய்தான்.
(ஆநந்த) 1
முன்னிலை யில்லையென்றும் முழுவது முண்மையென்றும் மூடிய மாயவிருள் ஒட வருள்புரிந்தான் அந்நிலையி லேயுட லாவியவன் வசமாச்சு . . ஆகா அதையறிவார் ஆர்தானிவ் வையகத்தில் (ஆநந்த) 2

Page 124
238 நற்சிந்தனை
ஒளவையார் திருமொழி அறஞ்செய விரும்பென ஒளவையார் தந்த
சிறந்த திருமொழி தீவினை தெறுமே. 1 ஆறுவது சினமெனு மரிய மந்திரங் கூறுவார் நாவிற் குலவுஞ்சொல் லணங்கே. 2 .
இயல்வது கரவே லெவரே யாயினும் பயில்வுறப் பயில்வுறப் பாவங் கெடுமே. 3
ஈவது விலக்கே லெல்லாந் தந்து ܚ சேவைகள் செய்யத் திறங்கொடுக் கும்மே. 4 உடையது விளம்பே லுணர்வார்க் கெல்லாந் தடையிலா வான்ம சக்தியீ னும்மே. 5 ஊக்கமது கைவிடே லூழ்வினை நீக்கும் தேக்குமா னந்தஞ் சித்தியுந் தருமே. 6
"Чыгымы
LGOofluGIT 6TsiT LOGDSLO
நித்தியர்நா மென்னும் நினைவுதடு மாருமற் பத்திபண்ணிப் பாடிப் பணியவா என்மனமே.
முத்திக்கு வித்தை முனையில்வைத்துச் சீராட்டித் தித்திக்குந் தேனருந்தச் சீக்கிரம்வா என்மனமே, 2 அத்துவி தப்பொருளை யருந்தவர்கட் காரமுதைச் சித்தத்துட் கண்டு தெளியவா என்மனமே. 3 எத்திக்கு மாகி என்னிதயத் தேவாழும் தத்துவத்தைக் கண்டு சலிப்பறவா என்மனமே. 4 சித்திதருந் தேவாய்த் திகழும் பரம்பொருளின் வித்தகத்தாள் வாழ்த்த விரைந்துவா என்மனமே, 5 உத்தமர்கள் போற்றும் ஓங்காரத் துட்பொருளைப் பத்தியொடு பாடிப் பணியவா என்மனமே. 6

நற்சிந்தனை 239 ܀
தன்னை யறிந்தோமே
தன்னை யறிந்தோமே-கிளியே தவத்தி லுயர்ந்தோமே பின்ன மிறந்தோமே -கிளியே பெருமா னருளாலே எம்மை நிகராவார் - கிளியே எவரு முலகிலில்லை செம்மை மனத்துடனே-கிளியே சிவன்பாதம் நினைப்போமே இம்மை மறுமைக்கும் - கிளியே எவரும் இணையில்லை அம்மையு மப்பனுமே - கிளியே ஆம்துணை நீயறியே.
நல்லூர் வெளியில்
நல்லூர் வெளியிலே பொதுநடம் புரிகிருன்
நங்கள்குரு நாதன் வாங்கும் பிரகாசன்
எல்லாரை யுந்தன் னிடத்திலே காண்பவன்
இயம நியமங்களில் எள்ளளவு மோபிசகான்.
பொல்லாப்பிங் கில்லையென்று போதனை செய்வான் புகழ்ச்சியு மிகழ்ச்சியு மொன்ருகக் காண்பவன்
செல்லப்ப னென்னுந் திருப்பெய ருடையான்
சிங்கார நடையொடு சிரிப்பினை யுடையான்.
ஆரறி வாரென அடிக்கடி சொல்லுவான்
தேரடிப் படியிலே சிங்கார மாய்க்கிடப்பான்
பேரறி வாளனெனப் பிறரெவரு மோவறியார் பித்தனென் றுலகோர் பேசுவா ரேசுவார்.

Page 125
240. , நற்சிந்தனை ஆராதனைசெய் தறிவாய் G2GOT
ஆதியு மந்தமு மில்லான்-தம்பி ஆதியு மந்தமு முள்ளான். I சாதி சமயங்க ளில்லான்-தம்பி சாதி சமயங்க ளுள்ளான். 2
ஒதி யுணர முடியான்-தம்பி ஒதி யுணரும் வடிவான். 3.
நீதி குருபர ஞனுன்-தம்பி நீர்நிலந் தீகால் வானமு மானன். 4
சந்திர சூரிய ராணுன்-தம்பி தாரா , கணங்களு மானன். 5
மந்திர தந்திர மானன்-தம்பி மருந்து மருந்து மவர்களு மானன். 6
இந்திர ராதியோ ராணுன்-தம்பி எல்லா வுலகமுந் தானே யானன். 7
இந்த வுயிருட லானன்-தம்பி இருக்கு முதலிய வேதங்க ளானன். 8 பந்தமும் வீடும் படைப்பான்-தம்பி பந்தமும் வீடுந் துடைப்பான். 9
அந்தியுஞ் சந்தியு மிதனைத்-தம்பி ஆரா தனைசெய் தறிவாய் சிவனை. 10

நற்சிந்தனை r 24
அன்னபிதாக் குருவானுன்-அரன்
அன்னை பிதாக்குரு வானன் - அரன் ஆகாய மாதி பூதங்க ளானன் என்னையுந் தன்னையும் பிரியான் --அரன் ஏக னநேகன் என்பார் பெரியோர் முன்னைப் பொருட்கெல்லாம் முன்னேன்.--அரன் மூர்த்தி தலந்தீர்த்த மாதற் குரியோன் அண்ட சராசர மெல்லாம்-அரன் ஆடலைக் கண்டு தொண்டுசெய் வோமே சண்டை யிடும்போதுஞ் சலியான்-அரன் தன்னி லையினிற் சற்றுஞ் சலியான் ஆணென்றும் பெண்ணென்று மறியான்-அரன் அப்போதைக் கப்போ தாடல் புரிவான் வீண்புகழ் தன்னை விரும்பான்-அரன் வேதாந்த சித்தாந்த சமரசந் தருவான் கூறும் நா முதலாக யாவும்-அரன் கொண்டாடு மிடமென்று கண்டுகொள் வோமே நித்திய வாழ்வினைத் தந்தான் --அரன் நீநா னென்பதை நீங்கினன் ருனே.
F6L91 GG)
மார்க்கஞ் சன்மார்க்கம் மகரிஷிகள் கண்டமார்க்கம் மார்க்கம் 1
மூர்க்கமான குணம்போக்கும் முழுதும்உண்மை யெனவாக்கும் மார்க்கம் 2 பார்க்கப்பார்க்க இன்பந்தேக்கும் பரமானந்த நிலையைநோக்கும் மார்க்கம் 3 ஆர்க்குஞ்சுதந்தி ரத்தையாக்கும் அனைவரையும் முத்தியிலேசேர்க்கும் மார்க்கம் 4 பக்திசெய்யோக சுவாமிபாட்டு படிப்பவருக்குநல்ல வழிகாட்டும் மார்க்கம் 5
6

Page 126
242 | | நற்சிந்தனை
இன்பமாய் வாழ்ந்திடடி
அங்கிங்கென் றெண்ணுதே அவனிவ்னென் றுன்னதே எங்குஞ் சிவத்தைக்கண்டு-தங்கமே இன்பமாய் வாழ்ந்திடடி. ஆசை வலையிற்சிக்கி-ஆண்டவனை நீமறந்தாய் பூசைசெய்து பொன்னடியைத்-தங்கமே பூரணமாய் வாழ்ந்திடடி. இல்லையென்றும் உண்டென்றும் எடுத்துச்சொல்ல
|- வொண்ணுத நல்லூரான் திருவடியை -தங்கமே நாடோறும் போய்வணங்கு. ஈடேற வேண்டுமென்றல் எல்லாஞ் சிவன்செயலாய் நாடோறும் வேண்டிப்பணி-தங்கமே நல்லூரான் கிருபையுண்டு.
உண்மை முழுதுமென்ற வுயர்ந்த திருவாக்கை எண்ணுமல் எண்ணிப்பணி-தங்கமே எல்லாங்கை கூடுமடி.
ஊரும்பேரு மில்லாத உத்தமனைச் சித்தத்தில் சேரும்வண்ணம் நாள்தோறும்-தங்கமே தியானஞ்செய்து வாழுவமே. என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கு மீசனென்று சொன்ன திருவாக்கே-தங்கமே சுந்தரமென் றெண்ணியிரு.
ஏழுலகும் தொழுதேத்தும் எம்பெருமான் திருவடியை
நாளும் மறவாதே - தங்கமே நானுமில்லை நீயுமில்லை.
ஐம்பூதம் நீயல்லை அறிந்திதனைக் கொள்ளுவாய்
ஆன்மாநீ மறந்திடாதே-தங்கமே ஆட்சிசெய்ய வேண்டாமடி.
2

நற்சிந்தனை X 243
ஒன்பது வாயிலுள்ள வுடம்பு சிவன்கோயில் என்பதை மறந்திடாதே -தங்கமே
ஏத்தியேத்திப் பணிந்திடடி. * . 9 ஒதுவதொ ழியேலென்ற உண்மையைநீ மறவாதே ஏதுக்கு மஞ்சாதே -தங்கமே n எல்லாஞ் சிவமயமே.
ஒளவியம் பேசாதே ஆவியுள்ள மட்டும்நீ தெய்வம் ஒருவனென்று-தங்கமே திடமுடன் வாழ்ந்திடடி. 12.
அஃகமும் காசுந்தேடி அம்புவியி லலையாதே வெஃகாதே பிறன்பொருளைத் -தங்கமே வீடுனக்குச் சொந்தமடி. 3
திருநாமத்தைச் செபித்திடடா
அனைத்துயிரும் நீயேதம்பி அதையறிந்து வாழ்ந்திடடா தினைத்துணையும் மறந்திடாமல் திருநாமத்தைச்
செபித்திடடா, 1
வினைப்பகையை வென்றிடுவாய் வேறுபொரு ளில்லையடா முனைத்துவருஞ் சினத்தை வென்றல் மூவர்களும்
a. ஏவல்செய்வார். 2
உனைப்போலே யுத்தமர்கள் உலகத்தினி லில்லையடா நினைத்தபடி நடந்திடடா நிட்டையிலே
பொருந்திடடா, 3
ஆவதில்லா அழிவதில்லா ஆன்மாவை யறிந்திடடா தேவர்களும் முனிவர்களுஞ் சித்தத்திலே திகழுகின்றர். 4
ஒருபொல்லாப்பு மில்லைத்தம்பி உண்மையே முழுதுமடா குருநாதன் கூற்றிதடா கும்பிட்டுக்கொண் டாடிடடா. 5

Page 127
244 நற்சிந்தனை எல்லாம் கடவுள் கண்டீரே கலித்தாழிசை காணுங் கண்ணிற் கலந்து நிற்பது கடவுள் கண்டீரோ ஆணும் பெண்ணு மலியு மானது அதுநீர் குறியீரோ. 1
பாரும் விண்ணு மாகி நிற்பது அதுநீர் பாரீரோ சீருந் திருவு மாகி நிற்பது அதுநீர் தெரியீரோ, 2
தாயுந் தந்தையு மாகி நிற்பது தானு வறியீரோ நீயும் நானு மாகி நிற்பது நினைந்து பாரீரோ. 3 ܢ
காயுங் கனியு மாகி நிற்பது கண்டு களியீரோ தேயு வாயு வாகித் திகழ்வது சிந்தித் துணர்வீரோ. 4
மாயும் மனிதரை மாயாது வைக்கும் மருந்தை யுண்ணீரோ பேயொடு காட்டி லாடும் பிரானைய பேதமாய்ப் பாரீரோ. 5
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ـیے
ஆன்மா நித்தியம்
ஐம்புலன் வழிபோம் ஆசை தனைத்தடுப்போம் ஆன்மா நித்தியம் என்று படிப்போம் வெம்பகையை வென்று வெற்றி எடுப்போம் வேறுபொருள் இல்லை என்றுதிடப் படுவோம் நம்பிக்கை யென்னும் கையைநாம் நீட்டுவோம் நாதாந்த நிலையில் நாம்முடி சூட்டுவோம் சும்மா இருக்குஞ் சுகத்தினைக் காட்டுவோம் சுருதி நிலையில் நிற்குஞ் சுகங்காட்டுவோம் இம்மை மறுமைதனை யிங்கு காட்டுவோம் ஏகாந்த வெளியிலே நம்மை நாட்டுவோம் தம்மைத் தாமாக உய்யவழி காட்டுவோம் சஞ்சலமில் லா வழியில் நம்மை நாட்டுவோம் தும்பிமுகன் பாதத்தைத் தோத்திரஞ் செய்வோம் சுவாமி தரிசனஞ் சூத்திரம் என்போம்.

நற்சிந்தனை 245
ஓம் தத் சத்
இருவருந் தேடிக் காணு இறைவ னென்போ
லுருத்தாங்கி இணங்கி யெவரும் வணங்கும் நல்லையில் இன்ன
னிவனென்ன ஒருவரு மறியா தோடியுலாவி யுவகை பூத்த
முகத்தினராய் ۔•
ஒருநா ளென்றனை யுற்று நோக்கிஓர் பொல்லாப்பு
மிலையென்று کیمیایی அருவமுங் காட்டி யுருவமுங் காட்டி யப்பாற் -- கப்பாலாம்
அருள்நிலை காட்டிக் காட்டிக் காட்டி யந்த மாதி
s யில்லாச்
சொரூபமுங் காட்டிச் சும்மா விருக்கும் சூட்சத்தில்
மாட்டி விட்டான்
துன்ப மிறந்தன வின்ப மிறந்தன சோதிசோதி
சிவசோதி. 1
சிவத்தினை வளர்க்கும் பாக்கிய மெமக்குச் சித்தித்த
திணிமேலே தெய்வம் வேறே யுண்டென வெண்ணுஞ் சிந்தையு
மிறந்ததுவே
அவத்தினிற் செல்லும் மனத்தினை வெல்வோம்
ஐம்பொறி வழிச்செல்லேம் அழியா மெய்ப்பொரு ளாகிய ஆன்மா அறிவோம்
w நாம் நன்ருய் தவவழிச் செல்வோம் குருமொழி கொள்வோம்
தன்னைத் தானறிவோம் சாந்தம் பொறுமை யேய்ந்த நற்பணி சந்தத
மணிந்துகொள்வோம் உவத்தலுங் காய்தலு மோடி யொளித்தன ஒன்றுங்
குறைவில்லேம் உண்மை முழுதும்நீ ஓதுக தினமும் ஓம்தத் சத்ஓம். 2

Page 128
246 நற்சிந்தனை
கதிரவ னெழுமுன் காலை யெழுந்து கைகால் முகங்கழுவு கடிமல ரெடுத்து மாலை தொடுத்துக் கடவுளைப்
பூசனைசெய் அதிர வராமுன் மனத்தினை யடக்கி ஐம்பொறி
- வழிச்செல்லாது ஆண்டவன் திவ்விய பாதத்தை வேண்டி ஆசையை
வென்றிடலாம் முதிர முதிர முழுவது முண்மை யெனமுனி
சொன்னமொழி முகமுக மாகக் கண்டு தெளிந்து முத்தியிற்
சேர்ந்திடலாம் இதிலே ஐயமில்லை யில்லை யெல்லா மவன் செயலே இரவும் பகலு மிதய வெளிக்குள் ஏத்துக ஒம்தத்சத், 3
எண்ணி யெண்ணிப் பணிவார் நெஞ்சே யீசன்
உறைகோயில் இருந்துங் கிடந்தும் நடந்துந் தொடர்ந்தும்
ஏத்திப் பணிவோமே புண்ணிய பாவ மிரண்டுங் கற்பனை போக்கொடு
வரவில்லாப் பொருளே நாங்கள் அருள்கொண் டறிநீ புத்தியை
நாட்டாதே மண்ணில் வந்து பிறந்ததும் வாழ்ந்ததும்
மாமா யையிதனை மாதவ ரறிவார் மற்றவ ரறியார் மதியா தேயிதனை எண்ணில் காலம் உயிரோ டிருப்போம் ஏதுக்கு
மஞ்சாதே இயைந்த படிநீ நடந்துகொ ளென்றும் ஏத்துக
ஓம்தத் சத் , 4

நற்சிந்தனை 247 தன்னைத் தன்னு லறிந்திடடா
அன்பேசிவ மறிந்திடடா அதுவே நாமெனத் தெரிந்திடடா என் புருகப் பாடிடடா எழுந்திரடா நடந்துவாடா எல்லாஞ்சிவ ரூபமடா.
விண்ணைப்போல விளங்கிடடா வீணுசையை விட்டிடடா கண்ணைப்போலக் காத்திடடா கருமத்தைச் செய்திடடா கலங்காமல் நடந்திடடா இலங்கையெங்கள் நாடிதடா. 2
பெண்ணுமாணு மில்லையடா பேதா பேத மில்லையடா மண்ணும்விண்ணுமொன் ருச்சுதடா மகத்துக்களின் பேச்சிதடா மகிழ்ந்துவாடா நடந்துவாடா மாநிலத்தை யாள்வோமடா . 3
தன்னைத்தன்னு லறிந்திடடா தானேதானென் றிருந்திடடா அன்னைபோல வந்தானடா அழகாரும்நல் லூரிலடா பின்னைப்பேச் சில்லையடா பெருமைசிறுமை தொல்லையடா. 4
உறுதி தருவது சிவமே உள்ளத் துணர்வது சிவமே பொறுதி தருவது சிவமே பூரண மானது சிவமே
இறுதி யிலாதது சிவமே என்னை யுடையது சிவமே கருத வினியது சிவமே காசினி யெல்லாஞ் சிவமே,

Page 129
248 நற்சிந்தனை ஒரு பொல்லாப்புமில்லை
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் உண்மை
முழுதுமென்பான் ஒருவருக்குந் தெரியாதென்பான்-சின்னத்தங்கம் ஓவியம்போல் இருந்தானடி. 4. l
அப்படியே யுள்ளதென்பான் ஆரறிவா ரென்றுசொல்வான் செப்படி வித்தையென்பான்-சின்னத்தங்கம் செல்லப்பன் என்னுஞ்சீமான். 2
கந்தைத் துணியணிவான் கந்தன்திரு முன்றில்நிற்பான் வந்தாரைப்போ வாரைவாயில் - சின்னத்தங்கம் வந்தபடி யேசிடுவான். " 3 سے
அப்படியே யுள்ளதென்பான் அங்குமிங்கு மாயலைவான் செப்படி வித்தையென்பான்-சின்னத்தங்கம் V தேரடியி லிருப்பான டி. - 4
சாதி சமயமென்னுஞ் சங்கடத்துக் குள்ளாகான் சேதியொன்றுஞ் சொல்லகில்லான்-சின்னத்தங்கம் சித்தப் பிரமையென்பார் (எல்லோரும்). 5
நீதி யநீதியென்னும் நிலைமையொன்று மில்லாதான் மாதிரிகள் ஒன்றுஞ்செய்யான்-சின்னத்தங்கம் மத்தனைப்போல் திரிவான டி. 6
நீறு மணியான் நெற்றியிலே பொட்டுமிடான் கூறிய தைக்கூருன்-சின்னத்தங்கம் குணமொன்று மில்லான டி. 7
ஆறுதலா யிருமென்னன் ஆணவத்தை நீக்குமென்னன் மாறுபாடாய்ப் பேசிடுவான்-சின்னத்தங்கம் மதியிழந்தான் என்பாரடி. 8

நற்சிந்தனை 249
சின்னத் தனமாய்த் தெருவாலே போவாரை என்னப்பன் பேசிடுவான்-சின்னத்தங்கம் - இவன்விசரன் என்பாரடி h 9 உல்லாச நடையனடி ஊரூராய்த் திரிவனடி எல்லோரு மிவனைக்கண்டு - சின்னத்தங்கம் ஏளனஞ் செய்வாரடி. 10
பத்துப்பாட்டுப் படிப்போரும் கேட்போரும் பாரினிலே வித்தகராய் வாழ்ந்துபின்னே - சின்னத்தங்கம் விதேகமுத்தி சேர்வாரடி. 11
அங்கு மிங்கு மெங்கும் ஓடாதே
அங்கு மிங்கு மெங்கு மோடாதே
ஆன்மாநித் தியமதைத் தேடாதே. பொங்கும் காமக் குரோதமதம் போக்காயோ பூரண நிட்டையிலே தேக்காயோ. - 2 தங்குஞ் சிவயோ கத்தைத் தேராயோ தன்னைத்தன் ஞலறியப் பாராயோ . 3 மங்கள மான வார்த்தை பேசாயோ மன்னுயிரைத் தன்னுயிர்போற் பாராயோ . 4 உன்னை யுனக்கொரு போதும் ஒளியாதே ஒருபொல் லாப்புமில்லை யறிவாயே. 5 செந்நெலுடன் கன்னல் எங்கும் மல்கும் சீர்பெருகும் நல்லூரில் கல்லும். 6 கரைய வொருசொற் சொல்லுஞ் செல்வன் கழலடியை மறவாமற் சொல்லு, 7
செல்வம் அது பெரிய செல்வம் சிவசிவ என்றுநீ சொல்லு , 8 துள்ளும் மனத்தை யென்றும் வெல்லு சும்மா விருக்கும்நிலை நில்லு. 9

Page 130
250 நற்சிந்தனை Guoli Liquiffe,6ir Qib
கடவுளை யெங்குங் கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம் காமக் குரோத மோகம் நீக்குவர்
மெய்யடியார்கள் ஓம். 1
திடமுடன் தியானஞ் செய்து களிப்பார்
.” . மெய்யடியார்கள் ஒம்
தீவினை நல்வினை கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம். 2
படமுடியாத துயரம்வரினும் கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம்
பாரும்விண்ணு மொன்ருய்ப் பரவுவர்
மெய்யடியார்கள் ஒம், 3
நடமிடுந் திருவடி கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம்
நமச்சிவாய வாழ்க வென்று நவில்வர்
மெய்யடியார்கள் ஓம். 4
ஆதியு மந்தமும் நமக்கிலை யென்பார்
மெய்யடியார்கள் ஓம் அன்புசெய் பத்தரை யென்றும் மறவார்
சிவனடியார்கள் ஒம். 5
சாதி சமயப் பற்றினை விட்டார்
மெய்யடியார்கள் ஒம்
சந்ததம் மோன நிலைதவ ருதார்
மெய்யடியார்கள் ஒம். 6
மாதிரி யொன்றுஞ் செய்யா ருலகில்
மெய்யடியார்கள் ஒம்
மன்ன இளமை யென்றும் மகிழார்
மெய்யடியார்கள் ஓம். 7

நற்சிந்தனை 251
ஒதி யோதி யுன்மத்த ராவார் *
மெய்யடியார்கள் ஓம் உண்மை முழுதும் என்று சொல்வார்
மெய்யடியார்கள் ஒம் . 8
ஆணும் பெண்ணு மலியு மறியார்
. மெய்யடியார்கள் ஓம் அரகர சிவசிவ வென்று மகிழ்வார். . . . . .
சிவனடியார்கள் ஒம். 9
காணுங் கண்ணிற் கலந்த தென்பர்
சிவனடியார்கள் ஒம்
கங்குல் பகலற்ற கரட்சியைக் காண்பார்
சிவனடியார்கள் ஓம். 10
பேணும் பிறப்பிறப் பில்லை யென்பார்
மெய்யடியார்கள் ஒம் பேயர் பித்தர் போல விருப்பார்
மெய்யடியார்கள் ஒம், 11
நாணும் நன்னெஞ்சில் வஞ்சகந் தீர்ப்பார்
மெய்யடியார்கள் ஒம் நாதன் நாம நமச்சி வாயவென்பார்
மெய்யடியார்கள். ஓம், 12
ஆவதும் மழிவதும் இல்லை யென்பார்
- மெய்யடியார்கள் ஒம் அஞ்சும் மூன்று மொன்ரு யறிவார் . .
மெய்யடியார்கள் ஒம், 13
போவதும் வருவது மில்லை யென்பார்
மெய்யடியார்கள் ஒம் புன்னெறி செல்லும் மனத்தை வெல்வார் ”
14 .மெய்யடியார்கள் ஒம் ۔۔۔۔
தேவரும் முனிவருஞ் சித்தரு மறியார்
மெய்யடியார்கள் ஒம்
சிவசிவ வென்று தினமுந் துதிப்பார்
மெய்யடியார்கள் ஓம். 15

Page 131
252 நற்சிந்தனை
தேவ தேவனை யென்றுந் துதிப்பார்
சிவனடியார்கள் ஒம்
தீவினை செய்வார் தம்மையு மிகழார்
சிவனடியார்கள் ஒம், 16
ஐம்பொறி வழிபோ யவனியி லலையார்
மெய்யடியார்கள் ஒம் ஆணவந் தன்னை யழித்திடு வார்கள்
மெய்யடியார்கள் ஓம். 17
ஐந்து மடக்கா வறிவு பெற்ருர்
மெய்யடியார்கள் ஓம்
ஆசை வழிபோய் மோசம் போகார்
மெய்யடியார்கள் ஓம். 18
வந்தது போனது மனத்தே வையார்
மெய்யடியார்கள் ஓம்
வாணுள் ஆசை, பேணு திருப்பார்
மெய்யடியார்கள் ஓம். 19
நைந்துநைந் துருகி நமனை வெல்வார்
சிவனடியார்கள் ஒம் நாளுங் கோளும் மனத்தில் வையார்
சிவனடியார்கள் ஓம். 20
அந்த விதமே தோற்றின னுலகில்
அறிவார் சிவதொண்டன் ஒம் அவனியில் நாளும் வளர்மதி போல
வாழ்க சிவதொண்டன் ஓம். 21
எந்தச் செயலுஞ் சிவன்செயல் என்பார்
சிவனடியார்கள் ஒம் எளிதா யெவர்க்கு மின்னுரை சொல்வார்
எழிலார் சிவதொண்டர் ஒம். 22

நற்சிந்தனை 253
காயமே கோயில்
நிலைமண்டல ஆசிரியப்பா காயமே கோயில் கடிமன மடிமை நேயமே பூசை நீயிதை யறிந்தே உபாயமாய் நடந்தா லுனக்கொரு குறைவிலை ஆயநான் மறையும் இப்படி யறையும் எள்ளள வேனும் பிரியா இறைவனைக் கள்ள மனத்தவர் காண மாட்டார் உள்ளமே கோயில் உயிரே விளக்கு உள்ள வுள்ள உண்மை யுதிக்கும் பகைவ ருறவோ ரென்று பகரும் வகையை நீக்கிச் சிவசிவா வென்ன உவகை யுன்னை விழுங்கிக் கொள்ளும் தகைமை யிதுவே சாதனை செய்யே சாதனை செய்வோர் தன்னை யறிவார் பேதபுத் தியைப் பெம்மா னருளால் நீர்மேற் குமிழியில் வாக்கை வாழ்வே ஆதலா லன்பர் பணியே யறமாம் பணியப் பணியப் பாவ மகலும் அணிமா வாதியாம் சித்திக ளெய்தும் பிணியு மகலும் பேரின்பம் வாய்க்கும் துணிவுண் டாகும் சொல்லொணுச் சுகமே எல்லா வுயிரையுஞ் சிவனென வெண்ணி நல்லறம் புரிவோர் நாடுவார் பரகதி அல்ல லறுப்பார் ஆனந்தம் பெறுவார் தில்லை நடேசனைச் சேருவார் திண்ணமே உடல்பொரு ளாவியுன் னடைக்கல மென்றே திடமுட னெப்புக் கொடுப்போர் தமக்கு நடராஜ வள்ளல் நளினபொற் பதத்தை உடனே கொடுக்கு முண்மை யிதுவே ஒடவும் வேண்டாம் உலரவும் வேண்டாம் பாடவும் வேண்டாம் பணியவும் வேண்டாம் தேடவும் வேண்டாஞ் சிந்திக்க வேண்டாம் ஆடகப் பொன்னடி சூடிய காலை ஒழுக்க முயிரினு மோம்பப் படுமென வழுத்திய பெரியவன் மறைமொழி தன்னை அழுத்த வழுத்த ஆனந்த வீசுரன் வழுத்தொணு மலரடி நாடிவாழ் வோமே

Page 132
254 - நற்சிந்தனை
மோன நிலை நீங்காதே
அங்கிங் கலையாதே-அகப்பேய் ஆண்டவன் அருள்பெறவே எங்குமவன் காணடி-அகப்பேய் ஏத்தியேத்தித் துதிப்பாய்.
பொன்னுசை மண்ணுசை-அகப்பேய் புத்தி சிதைக்குமடி மன்னன மன்னவனை - அகப்பேய் . மனத்து நினைத்திடடி. 2
கொஞ்சம் கொஞ்சமாய் மனத்தைக் கொண்டுவா சித்தப்படி
அஞ்சாதே யொருவருக்கும் - அகப்பேய்
ஆண்டவன் உன்னுளடி.
துஞ்சாதே தூங்காதே - அகப்பேய் துரியநிலை சாரடி ஒன்றுமற நில்லடி-அகப்பேய் ஒமென்று செபித்திடடி. 4.
பண்டுசெய் வல்வினைநோய்-அகப்பேய் பாரில் பறக்குமடி மிண்டு மனம்விடடி-அகப்பேய் வேதாந்த நெறிநில்லடி. 5
என்று மிருந்தபடி-அகப்பேய் இருந்தபொருள் நீதான்டி குருநாதன் சொல்லை - அகப்பேய் தூய்மையாய்ப் போற்றிடடி. 6
தானன தத்துவன - அகப்பேய் சார்ந்து நீ வாழ்ந்திடடி மோனநிலை நீங்காதே - அகப்பேய் முத்தியுன் கைவசமே. 7

நற்சிந்தனை 255
நன்றென்றுந் தீதென்றும்-அகப்பேய் நாட்டிமலை யாதேயடி கொன்றென்றும் புசியாநே- அகப்பேய் குருபாதம் போற்றிடடி. 8
கண்டாரு மில்லையடி அகப்பேய் காணுரு மில்லையடி முன்னுமில்லைப் பின்னுமில்லை-அகப்பேய் மூவரில்லைத் தேவரில்லை. 9
கஞ்சாஅபின் தின்னதே-அகப்பேய்
கருணை அகத்தேயடி பஞ்சாட்சரத்தை நெஞ்சில்-அகப்பேய்
பக்குவமாய்ப் போற்றிடடி. 10
குரு பக்தி
குருபக்தி யேபெரும் பேறு கொண்டாடிக் கொண்டாடி ஆறு. தரும நிலையிலே ஏறு சங்கர சிவனேயென்று கூறு. : 2 ஒருபொல்லாப்பு மில்லையென்று தேறு உண்மை முழுதுமென்று கூறு 3
திருவருளை நாடிநீ செல்லு சிவாயநம வென்றுநீ சொல்லு, 4 தன்னைத்தன் ஞலறிய வேண்டும் சாந்தம் பொறுமையுன்னில் தோன்றும் . 5 பின்னை யுனக்குத்துணை நீயே பேதா பேதமெல்லாம் அணையே. 6
முன்னைவினை யென்றும்நினை யாதே மூவாசை போக்கநிலை வாயே. 7

Page 133
256
w நற்சிந்தனை ஆனந்தக் கூத்தாடினன்
பல்லவி ஆனந்தக் கூத்தாடினன் தொண்டன் ஆனந்தக் கூத்தாடினன் தொண்டன்.
அநுபல்லவி தானதாம் என்றுபாடி சாந்தம் பொறுமைகூடி. (ஆனந்த)
சரணங்கள்
மோனந் தனைத்தேறி
முழுதுமுண்மை யென்றுகூறி. (ஆனந்த) 1 வேதாந்த நிலைமேவி . . வேறில்லை யெனக்கூவி (ஆனந்த) 2 தாதா தரிகிடதோம் ஜனதஜனத தீமென்று. (ஆனந்த) 3
ஒடுங்குவதாங்கே
உலக முதித்தது மாங்கே-இந்த உலக முதித்து ஒடுங்குவ தாங்கே. . . . I சலன முதிப்பது மாங்கே-இந்தச் சலன முதித்து ஒடுங்குவ தாங்கே. s நீர்நிலம் தீகாற்று மாங்கே-நெடு வானெடு சந்திர சூரியர் ஆங்கே. 3. சீர்பெறு சித்தரும் ஆங்கே-நல்ல தேவரும் முனிவரும் பக்தரும் ஆங்கே.
இல்லையுண் டென்பது மாங்கே-எங்கும் ஏது மறியாமல் நிற்பது மாங்கே. 5 வல்லாரும் மாட்டாரும் ஆங்கே-வளம் வாய்ந்த இலங்கையில் வாழ்வாரும் ஆங்கே, 6

நற்சிந்தனை 257
அவனே நான் இராகம்-பைரவி. தாளம்-ஆதி
su sübsbwâ
அவனேநா னென்று சொல்லித் தியானஞ்செய்
வாய்தினமும் ஆசையெல் லாமொழியும் ஈசனருள் பொழியும்
அநுபல்லவி
அஞ்சாதே அஞ்சாதே பஞ்சாய்ப் பறக்கும் பாவம் பஞ்சாட்சரத்தை நெஞ்சில் துஞ்சாமலே செபி. (அவனே)
சரணங்கள்
கொஞ்சங் கொஞ்சமாய் மனத்தைக்
கூடுமட்டு மடக்கு குருநாதன் திருவடியைக் கும்பிட்டு நீதொடக்கு கோபம் பொருமை தள்ளு கொலை களவை எள்ளு கூடிப் பாடி யாடு சிவனடி யாரோடு. (அவனே)
ஆதியோ டந்தமில் லாதவான் மாவென்று அடிக்கடி நீபடி துடிதுடிப் பாய்நடி அயலுனக் கில்லை ஆரறி வார்நல்லை ஆசான் சொன்னமொழி முழுவது முண்மை. (அவனே)
பலபல வானசித்தி பாரினிற் கைகூடும் பத்திநெறி விட்டிடாதே பத்தர்சொல்லைத் தட்டிடாதே பைரவி ராகம்பாடிப் பணிசெய்யும் யோகசுவாமி பாவமெல் லாமோடப் பாரினில் ஈடேற. (அவனே)
17

Page 134
258 நற்சிந்தனை எல்லாகும் வாழியடா
ஒருபொல் லாப்பு மில்லையடா-தம்பி உண்மை முழுதும் அறிந்திடடா வருவதைக் கண்டு மகிழாதே-தம்பி வஞ்சகப் பேச்சைத் தழுவாதே. -
கருமத் தைக்கை நெகிழாதே-தம்பி கவலை கொண்டு கலங்காதே தரும நெறியில் வழுவாதே-தம்பி தன்னை யறிய எழுவாயே. 2
அகர முதல எழுத்தெல்லாந்-தம்பி அதுபோல் ஆதி யுலகுக்கடா பகரில் அவனே ஒருவனடா-தம்பி பலபல வாகச் சொல்வாரடா. 3
கற்றதனற் பயன் இல்லையடா-தம்பி கழல் அடியிணை கண்டிடடா வெற்றிப் பேச்செல்லாம் விட்டிடடா-தம்பி விதியை மதியால் வென்றிடடா. 4
பொறி வழியினிற் செல்லாதே-தம்பி போனதை யெண்ணிக் கொள்ளாதே கிறியுங் கீழ்மையுஞ் செய்யாதே-தம்பி கெட்டவர் மேல்நட்பு வையாதே. 5
புத்தியை ஒன்றிலும் நாட்டாதே-தம்பி புகழும் இகழுஞ் சூட்டாதே - எத்தொ ழிலைநீ செய்தாலுந் -தம்பி
ஈசனுக் கர்ப்பணம் பண்ணிடடா. 6
வித்தாரப் பேச்சையும் விட்டிடடா - தம்பி விருப்பு வெறுப்பை யகற்றிடடா செத்தாரைப் போலத்தி ரிந்திடடா -தம்பி சீவன் சிவனென்ற நிந்திடடா, 7

நற்சிந்தனை 259
நிகரொ ருவரும் இல்லையடா-தம்பி நின்ற நிலையிற் பிரியாதே
ஆன்மா நாங்கள் அறிந்திடடா தம்பி ஆக்கை நாமன்று தெரிந்திடடா- 8
வீண்பா வனையெல்லாம் விட்டிடடா-தம்பி வேத நெறியிலே தொட்டிடடா காண்பான் காட்சியு மில்லையடா-தம்பி காணப் படும்பொரு ஸ்ரில்லையடா. 9
வாழி குருநாதன் வாழியடா - தம்பி வாய்மை யடியாரும் வாழியடா கேளிருஞ் சுற்றமும் வாழியடா -தம்பி கேட்டவ ரெல்லாரும் வாழியடா. 1. )
--a
பார்க்கு மிடமெங்கு மந்தப் பரமவஸ்து பாவியென்று சொல்லாதே எவரையும் - நீ பார்க்கு மிடமெங்கு மந்தப் பரமவஸ்து கூவியழைத் திடுவாய் என்றுஞ்-சிறு குழந்தையைப் போலநின்று கும்பிட்டுக் கொள்வாய் கோபம் பொருமையை நீதள்ளு-பொல்லாக் குடிவெறியை மோகத்தை நீயெள்ளு தாபதர்தம் சங்கத்தை நீநாடு-தன்னைத் தன்னு லறிந்த பெரியோரைக் கூடு குருவான நல்லூரிற் செல்வன்-உள்ளங் குளிர வைத்தான் நாணுெரு புல்லன் வெட்ட வெளியில் என்னை விட்டான்-நல்லூர் வீதியிலே தன் கரத்தால் தொட்டான் அட்டாங்க யோகமெல்லாம் விட்டேன்-அங்கே அடியார்க் கடியனய் ஆட்பட்டேன்.

Page 135
260 நற்சிந்தனை
தங்கப்பாட்டு
காயமே கோயிலடி தங்கமே தங்கம் கடவு னிருப்பிடங்காண் தங்கமே தங்கம் மாயம னத்தைவெல்லு தங்கமே தங்கம் மற்றுப்பற்றை நீக்கிவிடு தங்கமே தங்கம் உபாய மதுவாகுந் தங்கமே தங்கம் உண்மை முழுதுமடி தங்கமே தங்கம் ஒருபொல்லாப்பு மில்லையடி தங்கமே தங்கம் உறுதி யெழுதிக்கொள் தங்கமே தங்கம் அப்படி யுள்ளதடி தங்கமே தங்கம் ஆரறிவார் பாரினில் தங்கமே தங்கம் எப்பவோ முடிந்ததடி தங்கமே தங்கம் ஏகாந்த மாயிரடி தங்கமே தங்கம் செப்ப முடியாதடி தங்கமே தங்கம் செல்லப்பன் திருவாக்குத் தங்கமே தங்கம் ஒப்பற்ற வாக்கடி தங்கமே தங்கம் உடம்பை மறந்துவிடு தங்கமே தங்கம் அப்பிலுப்புச் சேர்ந்தாற்போல் தங்கமே தங்கம் ஆண்டவனில் கரைந்துவிடு தங்கமே தங்கம் வெப்பந்தட்ப மில்லையடி தங்கமே தங்கம் வேதாந்த நெறிநில் தங்கமே தங்கம் அப்பனு மம்மையுந் தங்கமே தங்கம் அகத்திலே வாழ்கின்ருர் தங்கமே தங்கம் ஒப்புரவாய் நடந்திடடி தங்கமே தங்கம் ஒருகுறையு மில்லையடி தங்கமே தங்கம் கைப்போது மலர்கொண்டு தங்கமே தங்கம் கழலடியைப் போற்றிடடி தங்கமே தங்கம் முப்போதும் முடிசாய்த்துத் தங்கமே தங்கம் மூர்த்தியைப் பணிந்திடடி தங்கமே தங்கம் அப்போதைக் கப்போது தங்கமே தங்கம் அருள்வடிவங் காட்டுவான் தங்கமே தங்கம் தப்பேதுஞ் செய்யாதே தங்கமே தங்கம்

நற்சிந்தனை 261
தனித்திருந்து பார்த்திடடி தங்கமே தங்கம் அப்பாலுக் கப்பாலே தங்கமே தங்கம் ஆருமறி யாரடி தங்கமே தங்கம் அப்புசுவாமி தன்சொல்லைத் தங்கமே தங்கம் அகத்தில் மற வாதேயடி தங்கமே தங்கம்
சிவ சிவா
சீரான வடியரொடு கூடு - சிவசிவா செல்லப்பன் தந்த மந்திரம் நாடு. (ரோ) ལ་ ஆராய்ந்து கருமத்தை யாற்று - சிவசிவா
அனைவரையு மன்பாய் உலகத்தில் போற்று. (சீரா) ஆரென்ன சொன்னலும் வாது-சிவசிவா - ஆணவத்தை யுண்டாக்குந் தீது, (சீரா)
பாரெல்லாம் பகைத்தாலுஞ் சிறிதும் - சிவசிவா பதையாம லிருப்பதே மிகவும் பெரிது. (gèrnr)
3.
சீவனே சிவமென்று பெரியோர் -சிவசிவா செப்பிய மொழியை ஒப்புக்கொள் ளறிவாய். (சீரா)
ஆவது மழிவதும் உண்டோ - சிவசிவா ஐம்புலனை வென்றவர்கள் நன்முக அறிவார். (சீரா)
கருமஞ் சிதையாமல் உலகில்-சிவசிவா கண்ணுேட வேண்டும்நீ கருது. (gitnr ,
அருமையி லருமையெங்க ளான்மா--சிவசிவா அதையறிந்து வாழ்வதே மாண்பாம். (சீரா) அங்கிங் கென தபடி நாங்கள்--சிவசிவா அம்புவியில் வாழ்வதே பாங்கு. , (சீரா)
காங்குநீ யங்குநா னென்று-சிவசிவா எங்கள்குரு ஒதினுன் நன்கு. m (go trT).

Page 136
262 நற்சிந்தனை
மெய்ப்பொருளை ஒன்றெனக் கும்பிடுவாய் இராகம்-கமாஸ். தாளம்- ஆதி
பல்லவி ஒன்றெனக் கும்பிடுவாய் மனமே யிந்த உலகுயிர் பரமென ஒளிரும்மெய்ப் பொருளை
- ஒன்றெனக் கும்பிடுவாய்.
அநுபல்லவி உண்டில்லை யென்றெவரும் ஒதமுடி யாததாய் பண்டுமின்றும் என்றும் அப்படி யுள்ளதாய்
-ஒன்றெனக் கும்பிடுவாய்.
சரணம் V நன்றுக்குந் தீதுக்கும் நடுவாய் உள்ளதாய் ஞான யோக தியானத்தில் வருவதாய் கன்றிய காமனக் கண்ணுல் எரித்ததாய் கால காலனைக் காலால் உதைத்ததாய்
- ஒன்றெனக் கும்பிடுவாய்"
எங்கு தேடினுய் இறைவனை
பல்லவி
எங்குதேடினய் இறைவனைநீ இங்கு காணுமல் (எங்கு)
சரணங்கள்
அங்குமிங்கும் ஒடியே அவதிப்படுகிருய் பங்குபோட்டுப் பார்க்கிருய் பரிதவித்து வாடுகிருய் (எங்கு) எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றுவாதுபேசுகிருய் சாதி சமயமென்று சண்டைப் படுகிருய் தத்துவத்தை யறியாமல் சங்கடப்படுகிருய் ஒதியு முணராமல் உண்மை யறிந்தவன்போல் ஊரெங்குஞ் சென்றுநீ பிரசங்கம் பண்ணுகிருய் எங்கு)

நற்சிந்தனை
சற்குரு தரிசனம்
garnt sub - FrLDIt தாளம்-ஆதி
பல்லவி
சற்குரு தரிசனம் சகலபாக்கிய சுகம்
தாளினை பணிநீ தினம். - அநுபல்லவி தாந்தன்னை யறியுமே சாந்தமுஞ் செறியுமே
சரணங்கள் பேரன்பு பெருகிவிடும் பேதைமை கருகிடும்
பிரியாப் பிரியமெல்லாம் பேசாம லகன்றிடும்.
ஆகம விதிமுறை அகத்தினில் பொருந்திடும் ஆசாபாச மகலும் நேசானு பூதிவரும். தேவாதி தேவர்களுஞ் செய்வார் பணிவந்து
சீவன் சிவனென்னுந் தெளிவுமுண் டாகுமே.
ஆநந்தக் களிப்பு
சங்கர சங்கர சம்பு-சிவ சங்கர சங்கர சங்கர சம்பு.
ஒருபொல் லாப்பு மில்லையெனவே-முன்னுள்
ஒதினன் உண்மை முழுது மெனவே பருவத்தில் மழைபெய்தாற் போல-ஐயன் பந்தத்தை நீக்கி வளர்த்தானன் பாலே அருவமு முருவமு மானன்-என்னை ஆட்கொள்ள வந்தான் நல்லூரிற் ருஞய் கருவிக ரணங்க ளெல்லாம்-தத்தம் கருமத்தை விட்டுக் காவலுக் குள்ளாய் வருவதும் போவது மின்றித்-தூய மெளன நிலையில் நிலைத்தது தானே ஆரு மறியா ரெனவே-அப்பன் அப்படி யுள்ளதென் முனறி வாயே.
263
(சற்குரு)
(சற்குரு)
(சற்குரு)
(சற்குரு)
(சங்கர)
(சங்கர)
(σε Ιάι 5μ)
(சங்கர) (சங்கர)
(சங்கர :

Page 137
264 நற்சிந்தனை சும்மா விருந்துபார் தம்பி
நல்ல சமயமிது தம்பி w நம்மைநா மறிந்துகொள்ளத் தம்பி. எல்லார்க்கும் நன்மைசெய் தம்பி இறைவனுன் னிடமுண்டு தம்பி. 2 கொல்லாதே கோபம்வை யாதே
கும்பிடு காலைமாலை தம்பி. 3.
சொல்லாலே பயனில்லைத் தம்பி சும்மா விருந்துபார் தம்பி. 4 கண்ணல்லக் காதல்லத் தம்பி கண்ணுக்குக் கண்ணெடா தம்பி. 5 எண்ணிலடங் காதெடா தம்பி எல்லா மதுவெடா தம்பி. 6
மண்ணுசை வையாதே தம்பி மற்றிரண்டும் அப்படியே தம்பி. 7
ஒன்றுக்கு மஞ்சாதே தம்பி ஒடி ஒளியாதே தம்பி. 8
பண்டுமின்றும் உள்ளதெடா தம்பி பாடிப் பணியெடா தம்பி. 9
அகம்பிர மாஸ்மியென்று தம்பி அனுதினமுஞ் சாதனைசெய் தம்பி. 10
இகலோகம் பரலோகந் தம்பி இங்கேரீ கண்டுகொள்வாய் தம்பி, 11

நற்சிந்தனை 265
அங்கும் இங்கும் எங்கும் நான்
அங்கும் இங்கும் எங்கும் நான் அதை யறியும் விசரன் நான் (1)
பங்கு போட்டு வணங்க மாட்டேன் பாவ புண்ணியம் அறிய மாட்டேன் (2)
மங்கள மாகப் பேச மாட்டேன் மாய வாழ்வை மதிக்க மாட்டேன் . (3)
பொங்கல் பூசை செய்ய மாட்டேன் போனதை யெண்ணிக் கலங்க மாட்டேன் (4)
மங்குவார் செல்வம் மதிக்க மாட்டேன் மாய வித்தை காட்ட மாட்டேன் (5)
சிங்கக் குட்டி போல நடப்பேன் தீயா ரோடு கூட மாட்டேன் (6)
எங்கும் என்றன் தங்கும் வீடு ஏற்ப திகழ்ச்சி என்ன மாட்டேன் (7)
சிங்களவர் தமிழரைக் காண மாட்டேன் சின்னம் ஒன்றும் போட மாட்டேன் (8)
தங்கப் பொம்மை போல விருப்பேன் சாம்ப சிவசிவ என்று சொல்வேன் w (9)
மங்கைமார் சூழ்ந்து கும்பிடும் நல்லூரான் என்னப்பன் செல்லப்பனை மறக்க மாட்டேன் (10)

Page 138
266 நற்சிந்தனை
ஆடு பாம்பே 8.
ஆடு பாம்பே பணிந்தாடு பாம்பே ஆன்மாநித் தியமென்று ஆடுபாம்பே
மாடுமக்கள் சுற்றமெல்லாம் மயக்க மென்றே மாதவர்தம் இயக்கத்தை மகிழ்ந்து கொண்டே தோடுடைய செவியனைத் தோத்திரஞ் செய்தே சும்மா விருந்துகண்ணைத் திறந்து கொண்டே
(ஆடு பாம்பே.) 1 வீடு நமக்கென்றுஞ் சொந்த மென்றே வீணசைப் படுவதெல்லாம் பந்தம் என்றே தேடும்பொரு ளெல்லாஞ்சிவ தொண்டுக் கென்றே தேசமெங்குஞ் சென்றுண்மை பேசிக் கொண்டே
(ஆடு பாம்பே.) 2 பாடு படும்போதும் ஆதிபதம் நினைந்தே பாடிப் பாடித் திருவருளைப் புகழ்ந்துகொண்டே ஒடு மிருநிதியும் ஒன்ருகக் கண்டே உண்மை முழுதுமென மன்ருடிக் கொண்டே
(ஆடு பாம்பே.) 3
திருவருள் கைகூடுது இராகம்-சாவேரி. தாளம்- ஆதி.
- . பல்லவி திருவருள் கைகூடுது சிந்தை களிகூருது
அநுபல்லவி ஒருவரும் எதிரில்லாத உண்மை முதிருது. (திருவருள்)
சரணங்கள் ஒன்ருே விரண்டோ வென்னுஞ் சந்தேகந் தெளியுது ஒம்சிவாய நமவென்ன உள்ளங் குளிருது. (திருவருள்)
அதிர வரும்நமனும் அஞ்சியே பணிசெய்யும் அஞ்சுவ தொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை. (திருவருள்)

நற்சிந்தனை 26 。 வரந் தருவார்
வருவார்வ ருவார்வரந் தருவார் சுவாமி
வஞ்சம்பொருமைகோபம் நெஞ்சினில் நீவையாதே (வரு) 1
ஒருவரு மிருவரும் மூவரு மானவர் ஓங்காரத் துட்பொருள் ஆகியே நிற்பவர் (வரு) 2
கருமத்தைச் செய்பலன் கருதாம லுலகத்தில் காயமே கோயிலாய்க் கண்டு வணக்கஞ்செய் (வரு) 3
தருமநெறி பிசகாமல் தாரணி தனில்வாழ் தன்னைத்தன் னலறியத் தியானத்தில் நீரூமுழ்கு (வரு) 4
மரும மறிந்தவர்கள் மண்ணிற்பிற வாரென்ற மகத்துக்கள் வாக்கியத்தை மறவாமல் நினைத்துக்கொள்
(வரு) 5
திருவாரும் நல்லூரில் செல்லப்பன் மாணக்கன் திருவாளன் சொன்ன சொல்லைச் சிந்திக்கச் சீவன்முக்தி
(வரு) 8
GTUIGLOTO &ğßgå GeisTuf6)
காயமொரு சித்திரக் கோயில் - அது கண்ணுதல்பெண் ணுமைவாழ் கோயில் மாய மெனமதி யாதே - அடடா மகத்துவஞ்சொல்ல மதிபோ தாதே தூய குருவரு ளாலே-நானும் சொல்லுவேன் கேள்மருள் போமே மாய னயன்மக பதியும்-அடடா மற்றுமுள்ள தேவர்களும் அரக்கர்களும் தேயுவுடன் வாய் வப்பு-மண்விண் சேர்ந்திருக்குஞ் சித்திரக் கோயில் ஆதித்தனுஞ் சந்திரனும் இங்கே-இன்னும் அளவற்ற அண்டங்களும் இங்கே வேதியருஞ் சூத்திரரும் இங்கே-விளங்கும் வேதமுஞ் சூத்திரமும் இங்கே. (காயமொரு)

Page 139
268 நற்சிந்தனை
ஆண்டவன் திருவடி இராகம்-தன்னியாசி. தாளம்-ஆதி
பல்லவி
ஆண்டவன் திருவடி வேண்டிக்கொண் டாலென்றும் ஆறுதல் உண்டாகும்.
அநுபல்லவி
காண்பதெல் லாம்நிலை யன்றெனக் காட்டும் காயத்தை வெல்லுமு பாயத்தை யூட்டும். (ஆண்டவன்)
சரணங்கள்
பஞ்சப் புலன்வழி போம்மனத் தினவெல்லும் பஞ்சாட் சரத்தை யனுதினஞ் சொல்லுங் கொஞ்சங்கொஞ் சமாகச் சினத்தினைக் கொல்லுங் குற்றம் யாவையுங் குணமாகக் கொள்ளும். (ஆண்டவன்)
பொன்னசை மண்ணுசை பெண்ணுசை போக்கும் போக்கு வரவற்ற பொன்னடி நோக்கும் எந்நாளும் சும்மா விருப்பதைக் காக்கும் ஏழைகள் பேரில் இரக்கத்தை யாக்கும். (ஆண்டவன்)
வெட்ட வெளியிலே நின்றிடர் தீர்க்கும் வேதாந்த சித்தாந்தம் ஒன்றென்று நோக்கும் கட்டுப் படாத மனத்தினைக் கட்டும் கங்குல் பகலற்ற காட்சியுண் டாக்கும். (ஆண்டவன்)
சுவாமி யோகநாதன் சொல்லிய பாட்டு சுந்தர மான வழிதனைக் காட்டும் ஆவி யுள்ளளவும் அமுதத்தை யூட்டும் அகம்பிர மாஸ்மி யெனமுடி சூட்டும். (ஆண்டவன்)

நற்சிந்தனை 269
uTij8LON GJ
ஐம்பூதம் நீவிரல்லீர் பாங்கிமாரே ஐம்பொறியும் நீவிரல்வீர் பாங்கிமாரே ஐம்புலனும் நீவிரல்லீர் பாங்கிமாரே அந்தக்கரணம் நீவிரல்லீர் பாங்கிமாரே 1
ஆதியந்த முங்கட்கில்லைப் பாங்கிமாரே ஆன்மாவே நீவிர்காணும் பாங்கிமாரே வந்ததிலும் போனதிலும் பாங்கிமாரே மனம்வையாமல் வாழ்ந்திடுவீர் பாங்கிமாரே.
2
ஆதார மாறும்விட்டுப் பாங்கிமாரே அப்பனை வணங்கிடுவீர் பாங்கிமாரே பாதார விந்தங்காண்பீர் பாங்கிமாரே பகலு மிரவுமில்லைப் பாங்கிமாரே. 3
முன்னிலை யுங்கட்கில்லைப் பாங்கிமாரே முனையில்வைத்துச் சீராட்டும் பாங்கிமாரே அன்னிய முங்கட்கில்லைப் பாங்கிமாரே ஆச்சரிய மொன்றுமில்லைப் பாங்கிமாரே. 4.
நீயேநீ யாயிருக்கப் பாங்கிமாரே நித்தியத்தைத் தேடுவதேன் பாங்கிமாரே தாயைப்போ லிருக்கவேண்டும் பாங்கிமாரே சங்கற்பம் விட்டிடுவீர் பாங்கிமாரே. 5 -
வையகம் முழுதும்நீங்கள் பாங்கிமாரே வார்த்தையொன்றும் பேசாதீர் பாங்கிமாரே கையில்நெல்லிக் கனிபோலப் பாங்கிமாரே கடவுள்நம் மிடமுண்டு பாங்கிமாரே. 6

Page 140
270. - நற்சிந்தனை
தாலாட்டு
அன்னைபிதாக் குருவாகி யடியேனை யாட்கொண்ட தன்னிகரில் லாதசற் குருவேநீ கண்வளராய்.
என்னையினிப் பிறவாமல் ஈடேற்றி வைத்தவனே உண்மை முழுதுமென்ற வுத்தமனே கண்வளராய்.
நாமறியோ மென்று நல்லூரிற் சொன்னவனே சேமமுட னென்னகத்தில் சீமானே கண்வளராய்.
அப்படியே யுள்ளதென வடிக்கடியே சொல்லியென்னை இப்படியில் வாழவைத்த எந்தையே கண்வளராய்.
காணுங் கண்ணிற் கலந்தவனே கார்வண்ணு நானும்நீயு மென்றுரைக்க நாணுவேன் கண்வளராய்.
சீராரும் நல்லூரில் தேரடியி லேயிருந்து
ஆரறிவா ரென்றுசொன்ன அப்பனே கண்வளராய்.
எப்பவோ முடிந்ததென எனக்குப தேசஞ்செய்த ஒப்பிலா மாமணியே யுறவோனே கண்வளராய்.
ஒருபிடி சோற்றுக்காய் ஊரூராய் நானலையத் திருவருள் தந்தவனே செல்லப்பனே கண்வளராய்.
எட்டாத கொப்பில் இருக்குமுனை யாரறிவார் மட்டில்லா மாமணியே மாதவனே கண்ாவளராய்.
கண்ணே யுறங்குறங்கு கார்வண்ணு நீயுறங்கு எண்ணேன் பிறதெய்வமென் னிதயத்தே நீயுறங்கு.
10

நற்சிந்தனை 271
சிந்தை தெளிந்தேனே
uნს6სიf:
தேடித் தேடித் திரிந்தலைந்து நான் சிந்தை தெளிந்தேனே.
சரணங்கள்
சிந்தையிற் கண்டேயென் தீவினை போச்சுது சிவபெரு மான்தன் னிணையடி வாய்ச்சுது இந்த வுலகம் கனவாய்ப் போச்சுது எல்லாம் என்தன் கைக்குள்ளே யாச்சுது. (தேடி) 1
கருவி கரணங்கள் ஒய்ந்து போச்சுது காணுத காட்சிகள் காண லாச்சுது ஒருவரு மெதிரில் லாமற் போச்சுது ஒஓ மாயை பறந்து போச்சுது (தேடி) 2
நில்லென்று சொல்லி மனத்தை நிறுத்துவேன் நேர்மை யான வழியிற் செலுத்துவேன் வல்லபம் பேசி யாரையும் வெல்லுவேன் வாணு ளாசை வீணெனச் சொல்லுவேன். (தேடி) 3
யாழ்ப்பாணத்தானே
அன்பி ஞற்பணிந் தேத்து மடியவர் துன்பம் யாவும் துடைத்தருள் செய்தவன் பொன்னர் மேனியன் போர் விடை யூர்தியன் இன்பந் தங்கும் யாழ்ப்பாணத் தானே.
ஆதி யந்தமும் அற்றவன் மெய்த்தவர் ஒதி நாளும் உவந்திடும் உத்தமன் பாதி மேனியில் பாவையை வைத்தவன் நீதி நின்றிடும் யாழ்ப்பாணத் தானே. இன்ன தன்மைய னென்றறி வொண்ணுன் முன்னர் இராவணன் முடிபத்தும் நெரித்தான் மன்னர் மன்னவன் மதிதவழ் சென்னியன் நன்ன லஞ்சேர் யாழ்ப்பாணத் தானே.

Page 141
272 நற்சிந்தனை சிவத்தியானஞ் செய்
சிவத்தியா னத்தைச் செய்யும் மாந்தர்கள் அவத்தில் பாரினில் அலைவ தில்லையே. I தவத்தை யாற்றிடில் தன்னை யறியலாம் அவத்தை யாற்றிடில் வீழ்வர் நரகினில். 2 தில்லை யம்பலத் தாடுஞ் சேவடி எல்லை யற்றநல் லின்பம் நல்குமே. உள்ளத் தூய்மையாய் ஒருவன் பாதத்தை உந்து வார்தமக் குணர்வு வந்திடும். 4. அல்லும் எல்லியும் இறைவன் பாதத்தைச் சொல்ல வல்லவர் தூய்மை யாவரே. 5 எங்கு மீசனை யேத்துவார் தம்மைப் பொங்கும் வல்வினை பொருந்த லில்லையே. 6 தெய்வ மொன்றெனத் தெரியும் மாந்தர்கள்
உய்வர் வையத்தில் யுண்மை உண்மையே. 7
எந்த நேரமும் இறைவன் பாதத்தைச் சிந்தை செய்திடில் தீரும் வல்வினை 8
அடியவர் பாதத் தன்பு செய்திடில் கொடிய கூற்றுவன் மடியுந் திண்ணமே 9
சீலஞ் சேர்சிவ ஞானத் தேனினை ஞாலத் துண்பவர் நமன வெல்லுவார். 10
வாலை வணக்கமாய் மகிழ்ந்த பாவினைக் காலையும் மாலையும் ஒதக் கவலைபோம்.

நற்சிந்தனை 27
நாதாந்த முடிவில் நடனம் புரிவது
கண்ணுலே காணுெணுதது கண்ணுக்குக் கண்ணுயுள்ளது காதாலே கேட்கொணுதது காதுக்குக் காதாயுள்ளது கையாலே எடுக்கொணுதது கைக்குக்கை யாயிருப்பது காலாலே நடக்கொணுதது காலுக்குக்கா லாயுள்ளது வாயாலே பேசொனதது வாய்க்குவா யாயிருப்பது மனத்தாலே எண்ணுெணுதது மனத்துள்மன தாயிருப்பது மூக்காலே முகரொணுதது மூக்குக்குமூக் காயிருப்பது முன்னெடுபின் னில்லாமுதலது மூப்புப்பிணியில்லாவடிவது தாயுந்தந்தையு மானவுருவது தானே தானுய்த்
தழைத்துநிற்பது عر ஒன்றிரண்டென ஒதவொண்ணுதது ஓவியராலும்
எழுதவொண்ணுதது நன்று தீதிற்கு நடுவாய்நிற்பது ஞானியர்
நெஞ்சில் என்றுமுள்ளது வேதாந்த சித்தாந்தம் வேருெளுதது
நாதாந்த முடிவில் நடனம்புரிவது.
ஏற்குமோ
பல்லவி ஏற்குமோ திருவருளுக் கேற்குமோ
அநுபல்லவி என்னையும் உன்னையும் வேருய் எண்ணிப் பணிவதற்கு (ஏற்குமோ)
சரணங்கள் கண்ணே கண்ணின் மணியே கனியே கனிரசமே எண்ணேன் பிறதெய்வம் எல்லாம் உனது செயல்
(ஏற்குமோ) விண்ணுதி பூதமே வேதவே தாந்தமே பெண்ணே ஆணே அலியே பேதமில்லாப் பெம்மானே
(ஏற்குமோ) 18

Page 142
274 நற்சிந்தனை ஆன்மா நீத்தியம்
ஆன்மா நித்தியம் ஆன பொருளென ஆசான் சொல்லக் கேட்டிருந்தோம் அதையே மறந்தோம் பிறந்தோம் இனிநாம் அதுவே நாமென எண்ணிடுவோம். அநுதினம் சாதனை செய்யச் செய்ய ஆனந்த மான மோட்ச வீட்டை w அடைவோம் இதிலோர் ஐயமும் இல்லை-ஆனல் அடக்கமும் பொறுமையும் வேண்டுதுமே. 2 குழந்தை யன்பொடு குருவின் பாதத்தைக் கும்பிடும் பாக்கியம் உண்டானல் கோடா கோடி பாவத்தைப் போக்கும் நாட்டத்தைச் சிவத்தில் வைப்போமே. 3 கெளரியை யிடத்தில் வைத்தவன் பாதம் கைதொழும் அடியார்கள் காலனை வென்று ஞாலந் தன்னில் கவலையை நீங்கி வாழ்வாரே. 4
அருள் நீ தா இராகம்-கரஹரப்பிரியா தாளம்-ஆதி பல்லவி அருள்நீ தாதாவே - எனக் கார்தான் துணை வேறே
அநுபல்லவி இருள்சேர் வினையாலே யிடரே படலாமோ. (அருள்) சரணம் ஆசாபாச தோஷம் நீக்கி-ஆரவார மார போத தந்திர ரூபனே-நேச வாசம் தந்து வீடருள் தேவ -தேவ சாலஞ் செய்யலாமோ அநுகூல கோல கால லீல விநோத-ராஜராஜநீ- வளர்த்தி வளர்த்தி உண்டி யூட்டி முழுதும் உண்மை. (அருள்).

நற்சிந்தனை
நானே கோனே
வானே தேனே
ஊனே மீனே
ஆனே கானே
ағлтC36рат ஆணே
தூணே ஊனே
பொன்னே
எண்ணே
நானே தானே
பூதம்
வேதம்
காதல் <翌应
d5 *;
Gl)
T
ல்
அறிவார்
275
நானே நீ
வஞ்சித்துறை
நீயே குருவே
ன்
மண்ணே
தெருளே
2-uGr வெண்மதி
அடல்விடை
கடலே
சதுரே பெண்ணே
துரும்பே உடையே
பொருளே எழுத்தே
நன்மதி தானே
பொறியும் வேதியன்
தி
f
ன்.
8
;
9
கருத்தும்
10
f
fi

Page 143
276 நற்சிந்தனை
அவரடியே தஞ்சமெடி
பிறியென்முன் பிறியாமற் பிறியென்றன் பேசாமல் நெறிநின்று பாரென்முன்- கிளியே நீயேநா னென்றுரைத்தான். l
ஒருபொல் லாப்புமில்லை யென்றே யுரைத்தான் உண்மை முழுதுமென்ருன்-கிளியே ஊமைபோ லிருந்தானெடி, m 2
முடிந்த முடிபென்ருன் முன்னும்பின்னு மில்லையென்றன் இடிபோ லுரைத்தானெடி-கிளியே இனியென்ன சொல்வேனடி. 3
அப்படியே யுள்ளதென்றன் ஆரறிவா ரென்முன் ஒப்புவமை காணேனெடி-கிளியே ஒவியம்போ லானேனடி. 4.
நாமறியோ மென்றுசொன்னன் ஞான குரவனெடி சேமமாய் வாழவைத்தான்-கிளியே தீவினைகள் போச்சுதெடி, 5
அண்டபிண்ட மனத்தும் ஒன்ருகக் கண்டேனடி கண்டவெனைக் காணேனெடி-கிளியே காரணமும் போச்சுதெடி. 6
நல்லைநகர் வாசனெடி நாட்டிலவன் திருநாமம் செல்லப்ப னென்றுசொல்வார் - கிளியே தேரடியி லிருப்பானெடி. 7
சொல்லித் துதிக்குந்தொண்டர் சுயநல மற்றவர்கள் அல்லும் பகலுங்காணுர்-கிளியே அவரடியே தஞ்சமெடி. 8

நற்சிந்தனை 277.
தன்னைத் தன்னல் அறிவார் சான்றேர் கலிவிருத்தம்
நம்மிட மெல்லா நலனு முண்டு நம்மிட மெல்லா வுலகமு முண்டு நம்மிட மெல்லாக் கலகமு முண்டு நம்மிட மெம்மைக் காண்பது தொண்டு. I
நம்மிட ம்ென்றுங் கடவு ஞண்டு நம்மிடம் நன்மை தீமை யுண்டு நம்மிடம் பிறப்பு மிறப்பு முண்டு நம்மிடம் நரக மோட்சமு முண்டு.
2
தன்னைத் தன்னல் அறிவார் சான்றேர் தன்னைத் தன்னல் பணிவார் சான்றேர் தன்னைத் தன்னல் பிறிவார் சான்றேர் தன்னைத் தன்னுல் தேடுவார் சான்றேர். 3. கண்ணைக் கண்ணுல் பார்ப்பார் சான்றேர் பண்ணைப் பாடிப் பணிவார் சான்றேர் விண்ணை நோக்கி விழிப்பார் சான் முேர் மண்ணைக் கிண்டி வாழ்வார் சான்றேர். 4
wanymawit
6Ts66T (LOT6óT அன்னைபிதாக் குருவானன் எங்கள் பெருமான் ஆதியந்த மில்லாதான் எங்கள் பெருமான் இருவரோ டொருவரானன் எங்கள் பெருமான் ஈசனனன் அனைவருக்கும் எங்கள் பெருமான் உண்மை முழுதுமென்ருன் எங்கள் பெருமான் ' ஊரும்பேரும் உள்ளானில்லான் எங்கள் பெருமான் எண்ணுக் கடங்காதான் எங்கள் பெருமான் ஏவலாளாய் மண்சுமந்தான் எங்கள் பெருமான் ஐம்பூதமைம் பொறியானன் எங்கள் பெருமான் ஒருபொல்லாப்பு மில்லையென்றன் எங்கள் பெருமான் ஒமென் றுறுதிதந்தான் எங்கள் பெருமான் ஒளவனத்தில் ஆடுகின்ருன் எங்கள் பெருமான் அஃது மிஃதுமானன் எங்கள் பெருமான்

Page 144
278 நற்சிந்தனை சாதனையால் வேதனையைத் தீர்க்கிருேமில்லை
நித்தியம் நாமென்று சொன்னல் நினைக்கிருேமில்லை நீநான் அவனென்று சண்டைபோட்டுக் கொள்ளுகிருேம் பத்தி செய்து வாழவழி தேடுகிருேமில்லைப் பத்தரினத் தோடுநாம் கூடுகிருேமில்லை. l
எத்திசைக்கும் ஈசனென்று எண்ணுகிருேமில்லை இரப்பவர்க்கு ஈயாமல் தேடுகிருேம் ஐயே முத்திக்கு வழிதேட முயல்கிருேமில்லை மூவாசை யாலேமனம் கோணுகிருேம் ஐயே. 2
வித்தார மாகக் கதைபேசிக் கொள்ளுவோம் வீணருடன் கூடி விளையா டுகிருேம் சத்திசிவம் ஒன்ருன தன்மையைக் காணுேம் சாதனையால் வேதனையைத் தீர்க்கிருேமில்லை. 3
குழந்தை யன்போடுநாம் கும்பிடமாட்டோம்
கூக்குரல் போட்டுநாம் கும்பிட்டுக் கொள்ளுவோம் தளர்ந்துபோன அடியவரைத் தாங்குகி ருேமில்லைச் சற்குரு பாதத்தை வணங்குகி ருேமில்லை. 4 .
மதிக்குமதி கொடுப்பவனை மதிக்கிருேமில்லை மண்ணுசை பெண்ணுசையால் மாய்கிருேமையே விதியினை வெல்லவழி காண்கிருேமில்லை விதிவிதி யென்றுசொல்லி விளங்குகிருேமையே. 5
கண்ணுக்குக் கண்ணநாம் காண்கிருேமில்லைக் காதுக்குக் காதுதன்னைக் கருதுகிருேமில்லை உன்னைப்போல் உலகத்தில் விளங்குகிருேமில்லை வேதாந்த சித்தாந்தம் படிக்கிருேமில்லை. 6
அலங்கார மாக ஆடை அணிந்துகொள்ளுவோம்
அங்கு மிங்கும் நாம்திரிந்து அலைகிருேம்
கலங்காத நன்னெறியிற் செல்கிருேமில்லைக் கந்தா முருகா என்று கத்திக்கொள்ளுவோம். 7

நற்சிந்தனை 279:
ஓடிவாடா தொண்டா
ஒடிவாடா தொண்டா ஒடிவாடா
ஒருபொல்லாப்பு மில்லையென்று ஓடிவாடா, 1
தேடிவாடா தொண்டா தேடிவாடா
சிவனடியார் மனங்களிக்கத் தேடிவாடா.
2
பாடிவாடா தொண்டா பாடிவாடா
பரமபதி யொன்றென்று பாடிவாடா, 3.
நாடிவாடா தொண்டா நாடிவாடா
நாங்கள் சிவ மென்றுசொல்லி நாடிவாடா, 4
கூடிவாடா தொண்டா கூடிவாடா
குழந்தைக ளோடுசேர்ந்து கூடிவாடா, 5
சூடிவாடா தொண்டா சூடிவாடா
தூயநீறு சூடிக்கொண்டு ஓடிவாடா. 6
ஆடிவாடா தொண்டா ஆடிவாடா
அஞ்செழுத்தை நாவிற்கொண்டு ஆடிவாடா. 7
சொல்லச் சொல்லச் சுவைக்குமே செல்லப்பன் திருநாமம்
சொல்லச்சொல்லச் சுவைக்குமே செல்லப்பன் திருநாமம் அல்லும் பகலுமற்ற ஆனந்தந் தருமோனம் வெல்லவரும் மாந்தர்தம் வாயடக்குஞ் சிவஞானம் கொல்லவரும் யமனுங் குடியோடிப் போய்விடுவான் கல்லை யுருக்கிவிடுங் கருணைவெள்ளம் பெருகிவிடும் இல்லையென்னுஞ் சொல்லை யில்லாமல் ஆக்கிவிடும். (1)
நல்லூரில் தேரடியில் நாங்கண்ட சிவயோகம் சொல்ல முடியாத சுகத்தினைக் காட்டிவிடும் வில்லை விடத்தையஞ்சா வீரசாந்தம் ஊட்டிவிடும் பல்லைக்காட்டித் திரியாமல் பரலோகங் கூட்டிவிடும் பத்துப்பாட்டுப் படிப்பவருங் கேட்டுச் சுவைப்பவரும்
வித்தக ராகவாழ்ந்து விதேகமுத்தி சேர்வாரே. (2)

Page 145
280 நற்சிந்தனை வேண்டிப் பணிந்திடடி
அவனன்றி யோரணுவும் அசையா தெனும்பெரிய சிவனடியார் தம்மைக்கண்டு-சின்னத்தங்கம் சிவனென்று வணங்கிடடி.
அங்கிங் கெனதபடி யானந்தமாய்க் கூத்தாடும் சங்கரனை நீவணங்கிச்-சின்னத்தங்கம் சந்தேகந் தீர்த்திடடி. 2
அத்து விதப்பொருளை அறிவுக்கறி வானதொன்றைச் சித்தத்தி லேநீவைத்து சின்னத்தங்கம் சிந்தை தெளிந்திடடி. 3
அருவா யுருவாகி யம்பலத்தே கூத்தாடும் குருபரனை நீவாழ்த்திச்-சின்னத்தங்கம் கும்பிட்டுக்கொண் டாடிடுவாய். М 4
அகம்பிர மாஸ்மியென்னும் அரியதிரு மந்திரத்தை அகத்திலே நீசெபித்துச்-சின்னத்தங்கம் ஆறுதலாய் இருந்திடடி. அந்தியுஞ் சந்தியும்நீ ஆசானைச் சிந்தித்து வந்தனை செய் திருந்திடுவாய் சின்னத்தங்கம் மதியிரவி யுள்ளமட்டும். 6
ஆவது மில்லையடி அழிவது மில்லையடி தேவரு மில்லையடி-சின்னத்தங்கம் சிவனே முழுதுமுண்மை. 7
ஆசையை விட்டிடடி அதுவேசிவ பூசையடி காசைக் கருத்தில்வைத்துச்-சின்னத்தங்கம் கவலைநீ கொள்ளாதே.
ஆன்மாவுக் கயலில்லை யப்படியே யுள்ளதடி வீண்வாதம் விட்டிடடி- சின்னத்தங்கம் வேண்டிப் பணிந்திடடி. 9

நற்சிந்தனை 28
அடுக்குமோ வின
இராகம்-நாட்டை தாளம் - ரூபகம்
பல்லவி அடுக்குமோ வினை நம்மைக்-கெடுக்குமோ
அநுபல்லவி ஆன்மா அழியாதென்ன
ஆசான்பால் கேட்டபின். (அடுக்குமோ)
சரணங்கள் அடுத்தடுத்துச் சொல்வதினுல்
ஆம்பயன் ஒன்றுமில்லை அன்பேசிவ மென்றடியார் o
அருள்வாக்கை மறவாதே. (அடுக்குமோ) ஒன்ருே விரண்டோவெனுஞ் சந்தேகந் தனநீக்கி ஓம்சிவாய நமவென
உள்ளத்துட் டெளிந்துகொள். (அடுக்குமோ) தவஞ்செய்யும் யோகநாதன்
சாற்றும்நாட் டையைக்கேட்டு சஞ்சலமில் லாமல்நெஞ்சில்
தானுன தன்னையறி. (அடுக்குமோ)
சிவதொண்டன் நடந்துவரும் சிங்காரம்
பல்லவி
சிங்காரந் தனைப்பாரீர் சிவதொண்டன் நடந்துவரும் (சிங்)
அநுபல்லவி சிங்காரந் தனைப்பாரீர் சீவனே சிவனென்று திங்கள் தோறுஞ்சிவ தொண்டர்கள் வீடுவரும் (சிங்)
சரணம் நற்சிந்த னையெனும் நல்ல மருந்தை யூட்டி நல்லூரான் திருவடியை நாளும் மற வாமலேற்றிக் கற்பனை கடந்தவனைக் காணுமல் கண்டுகொண்டு காலமொரு மூன்றுங் கடவாமல் கடந்துநிற்கும் (சிங்)

Page 146
282 நற்சிந்தனை
சிவனடி
சிவனடியைச் சிந்தை செய்வோமே இந்தச் சீவன் சிவனென்று தெரிந்துகொள் வோமே, I
அவனரு ளாலே யவன்ருள்-நாங்கள் ஆரா தனைசெய்து சீராய்வாழ் வோமே. 2
உவமை கடந்தபே ரின்பம் - எங்கள் உள்ளத்தி லுண்டொரு பொல்லாப்பு மில்லை. 3
சிவனடி யாரொடுங் கூடி -நாங்கள் சிவபுரா ணந்தினம் படித்துவரு வோமே. 4
ஐம்பூதம் நாமல்லக் காணும்-நாங்கள் ஐம்பொறியும் ஐம்புலனும் நாமல்ல அறியும், 5
அந்தக்கரண நாமல்லப் பேணும் - இந்த ஆன்மாவே நாமென் றறிந்திட வேணும். 6
வாழிசிவ னடியார்கள் வாழி-இந்த வையகத்தில் வாழும் உயிரெல்லாம் வாழி. 7
ஆழிசூழ் இலங்கையும் வாழி-எங்கள் அப்பணு மம்மையும் எந்நாளும் வாழி. 8
ஆரறிவார் என்றப்பன் சொல்வான்
ஆரறிவார் என்றப்பன் சொல்வான் -தன்னை அணைந்துவந்த பேர்களையே யாதரித்துக் கொள்வான்.
பாரறியார் இவருடைய தன்மை -பலர் பைத்திய காரனென்று பரிகாசஞ் செய்வார். 2
தேரடியில் எந்நாளும் இருப்பான்-ஆசான் தெருவாலே வருவாரைப் போவாரை வைவான். 3
ஆரடா நீயென்றே யதட்டி-ஆசான் அன்பிலான் போலவே துன்புறுத்தி நிற்பான். 4.
メ

நற்சிந்தனை
அப்படியே யுள்ளதெனச் சொல்லி-ஆசான் அந்தரங்க மாகவே பேசிக்கொண் டிருப்பான். எப்படி யிவன்றன்மை யென்று-எவரும் எண்ண முடியாமல் சும்மா இருப்பான்.
பாவலர் நாவலர்கள் தாமும் -ஆசான் பரிபாஷை யறியாமல் பதறியே போவார். மூவர்களும் ஒன்ருகச் சேர்ந்த-நல்ல மூர்த்த மிதுவென்று முகமலர்ந்து நிற்பார்.
மருந்து கண்டேனே
மருந்து கண்டேனே நல்லூரில் நான்-மருந்து கண்டே மருந்துகண்டேன் மாருப் பிறவியை நீக்கும் மாருத நோயைத் தீர்த்துடல் காக்கும்- மருந்து
கண்டேனே.
அருந்த வர்தம் மோடுற வாக்கும் ஆமில்லை யென்று சொல்லாமற் காக்கும் - மருந்து
கண்டேனே.
திருந்து மடியவ ரோடுற வாக்கும்
கண்டேனே.
குருந்த மரத்தடியில் குருவாக வந்து கும்பிட்ட மாணிக்கற்குத் தீட்சைவைத் தாண்டன
மருந்துகண்டேனே.
அப்பர்க்குச் சமணர்செய் யாபத்துத் தீர்த்து
283
னே
அப்பூதி யடிகள்தம் பிள்ளைக்குயிர் கொடுத்த-மருந்து
கண்டேனே.
மார்க்கண்டற் காக மறலியை யுதைத்து மாயா மருந்தை அவன்றனக் கீந்த-மருந்து
கண்டேனே.
wazuhuippur
5

Page 147
284 நற்கிந்தன
அனைவருக்குந் தெய்வம் ஒன்றே
அனைவருக்குந் தெய்வம் ஒன்றே-அதை அறிந்துலகில் வாழ்வது தொண்டே.
முனைந்துநிற்கும் காமக்குரோதம் போக்கிப்-பின்பு மூவரையுந் தேவரையும் ஏவலாக்கு. 2
நெஞ்சுருகு மடியார்கள் கூட்டம்-இந்த நீணிலத்தில் நன்மையெல்லாங் கூட்டும். 3
வினைப்பகையை வெல்வதற்கு மார்க்கங்-குரு வேந்தன் தந்ததிரு வாக்கு. 4
தினைத்தனைப் போதும்மற வாமல்-சிவத் தியானத்தில் தினந்தினம் மூழ்கு. 5
மனத்துயரை நீக்கநல்ல மருந்து-குரு வாக்கியமொரு பொல்லாப்பு மில்லை. 6
நினைத்தபடி நீணிலத்தில் வாழ்வோம்-நாங்கள் நித்தியரா மென்பதை நாளும்மறவோம். 7
அயலுனக் கில்லையென்று பெரியோர்-சொன்ன அந்தரங்க மறிந்துநீ திரிவாய். 8
முயல முயலவின்பந் தேக்கும்-பொல்லா மூவித ஆசைகளை நீக்கும். 9
சுயநல மடியோடே மடியும்-சுருதி சொன்ன சுவானுபவம் படியும். 10.
warsaawaange
ஆனந்த மாநந்த மானந்தந் தானே அங்கு மிங்கு மெங்கும் நானே

நற்சிந்தனை 285
கணமேனுஞ் சும்மா விருக்குங் கருத்திலார்
மனச்சாட்சி மனச்சாட்சி யென்று மருட்டினர்
தனதாட்சி செய்யத் தலைநி மிர்த்தினர். 1 பணமாட்சி வேணுமென்று பறை யறைகிருர் கணமேனுஞ் சும்மா விருக்குங் கருத்திலார். 2 மனமாட்சி வேணுமென்று மனம் பதைக்கிருர் குணமாட்சி யில்லாமல் தினங்கு ரைக்கிருர், 3.
மனமாட்சி யுள்ளார் போல் தம்மை மதிக்கிருர் இனமாட்சி யுள்ளோமெனத் தம்மைத் துதிக்கிருர் 4 வணக்கம் வணக்கமென்று வாயால் பதிக்கிருர்
இணக்க மறிந்து இணங்க எதிர்க்கிருர், 5 சினத்தை மனத்தில் வைத்துச் சிரிக்கிருர் கனக்கக் கதைத்துத் தம்மை வியக்கிருர் . 6 நனைத்து உலர்ந்த உடையு டுக்கிருர் வினைப்பய னென்று வீணுய்ப் பதைக்கிருர், 7 தினைத்தனைப் போதும்மற வோமெனச் செபிக்கிருர் மனத்துயர் வந்த போது தவிக்கிறர். 8
&sïGalib LSybLD LDUJub பிருதுவியப்புத் தேயுவாயு ஆகாசம் - அவை பிரம மயமென்று பேசுவார் கருமை வெண்மை செம்மையை-அது கலந்து நிற்கும் காரணம் − காமக் குரோதமற்ற பெரியோர்கள்-அவர் கண்டு கொண்டனர் உண்மையை எள்ளுக்குள் எண்ணெய்போல் நிறைந்திடும்-அது எல்லா ரிடத்தும் இருந்திடும் சொல்லும் பொருளுமாய்த் தொடர்ந்திடும்-அது சூக்கும ரூபமாய்ப் படர்ந்திடும் செப்படி வித்தை காட்டிடும் -அது செய்தி யறியாமல் மாட்டிடும் கண்ணுக்குக் கண்ணுய்க் கண்டிடும் - அது காதுக்குக் காதாய்க் கேட்டிடும் காலுக்குக் காலாய் நடந்திடும்- அது கைக்குக் கையாய் எடுத்திடும்.

Page 148
286 `ሩ நற்சிந்தனை இசைந்து வா என்மனமே 1
கண்டொன்று சொல்லாதே கடவு ளொருவன் உண்டென் றுறுதி கொள்ளவா என்மனமே.
அண்டர் முனிவர்நரர் அன்புசெய்யும் பெருமானைக் கண்டு களிக்கக் கருதிவா என்மனமே.
பண்டுசெய்த வல்வினையால் பலபிறவி நாமெடுத்துத் திண்டாட்டப் பட்டோம் சீக்கிரம்வா என் மனமே. எட்டுணையும் தாழ்ச்சியில்லா இறைவன் திருவடியைச்
சுட்டாமற் சுட்டிச் சுகம்பெறவா" என் மனமே.
பட்டுக் குடைபிடித்துப் பரியேறித் திரிவாரை எட்டுணையும் நம்பாமல் என்பின்னே வாமனமே.
விட்டகுறை தொட்டகுறை யிரண்டும்விட் டேகாந்த நட்டணையில்* நிற்க நயந்துவா என்மனமே.
முட்டாத பூசைபண்ணி முழுமணமாய் நாம்வணங்கத் திட்டமிட் டென்பின்னே சேர்ந்துவா என்மனமே.
சிட்டர் பரவுஞ் சிவதொண்டன் நிலையத்தே கிட்டாமற் கிட்டிநிற்கக் கிருபையுடன் வாமனமே.
அட்டாங்க யோகம் அவத்தையைந்தும் விட்டேகி மட்டற்று நிற்க மகிழ்ந்துவா என்மனமே. எட்டாத கொப்பில் இருக்கின்ற தேனமுதை
இட்ட முடன் புசிக்க எட்டிவா என்மனமே.
எட்டும் இரண்டும் இசைந்துவந்த பாமாலை தட்டாமல் நாம்படிக்கத் தாவிவா என்மனமே.

நற்சிந்தனை
இசைந்து வா என்மனமே 11
அல்லும் பகலும் அறிவாக நிற்பவர்க்கு எல்லையில்லா வின்பமுண்டு என்பின்னே வாமனமே.
ஆறுவது சினமென்னும் ஒளவைமொழி கண்டார்க்கு ஆறுதல் வேறுமுண்டோ அதிவிரைவாய் வாமனமே.
இடும்பைக்கு இடும்பை படுப்பார் இடும்பைக்கு இடும்பை படாதவர் என்பின் வாமனமே.
ஈசன் ஒருவனென எண்ணிப் பணிவார்க்குப் பூசைசெய்ய வேண்டுமோ புகலவா என்மனமே.
உண்மை முழுதுமென்னும் உத்தமனைக் கண்டார்க்கு என்னகுறை வுண்டு இசைந்துவா என்மனமே.
ஊக்கத் தைப்போல உறுதுணைவே றுண்டாமோ பூக்கை யிலேந்திப் போற்றவா என்மனமே.
எல்லாஞ் சிவன்செய லென்றேத்திப் பணிவார்க்குப் பொல்லாங்கு முண்டோ புத்தியுடன் வாமனமே.
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்கவென்று தேகம் விழுமுன்னே செப்பவா என்மனமே,
ஐயமிட் டுண்ணென்னும் ஒளவை திருவாக்கே துய்ய வழிகாட்டும் சொல்லக்கேள் என்மனமே.
ஒருபொல்லாப்பு மில்லையெனு முத்தமனர் திருவாக்குத்
தருமநெறி காட்டுஞ் சடுதியில்வா என்மனமே.
ஒம்சிவாய நமவென்று உறுதியுடன் செபித்தால் நாம் சிவமே ஆவோம் நயந்துவா என்மனமே.

Page 149
288 நற்சிந்தனை
ஒளவியம் பேசுதல் ஆக்கத்துக் கழிவென்னும் ஒளவைசொல் நாமறிய அன்புடன் வாமனமே. 12
அஃகமுங் காசுஞ் சிக்கெனத்தே டென்றமொழி அஃகு தலில்லா அறிவுதரும் என்மனமே. 13
இசைந்து வா என்மணமே III
ஒருபொல்லாப்பு மில்லையென்றென் னுள்ளங் குளிரவைத்த குருநாதன், திருவடியைக் கும்பிடவா என்மனமே.
உண்மை முழுதுமென வுறுதி யெனக்களித்த அண்ணலை நான் வணங்க அதிவிரைவாய் வாமனமே. 2
நாமறியோ மென்று நல்லூரிற் சொன்னவனைச் சேம முடன் காணச் சீக்கிரம்வா என்மனமே. 3
அப்படியே யுள்ளதென அடிக்கடியே சொல்லுஞ்செல் லப்பனை யான்காண அதிவிரைவாய் வாமனமே. 4.
ஆரறிவா ரென்றென் னகங்களிக்கத் தேரடியிற் பாரறியச் சொன்னவனைப் பாடவா என்மனமே. 5
தவராச சிங்கத்தைச் சற்குருவை நல்லூரில் எவருமறி யாதவனை யேத்தவா என்மனமே. 6
கந்தைத் துணியணிந்து காமங் குரோதமற்ற எந்தை தனக்காண இசைந்துவா என்மனமே. 7
மந்திர தந்திரமும் மானபி மானமில்லாச் சுந்தரனைக் காணத் தொடர்ந்துவா என்மனமே. 8 பிச்சைக்கே யிச்சித்துப் பித்தனைப் போற்றிரிந்த அச்சமில்லா வாசானை யன் புசெய்ய வாமனமே. 9
ஆருறு தத்துவத்துக் கப்பாலே யுள்ளவனை மாருக் கருணையனை மருவவா என்மனமே. 10

நற்சிந்தனை 289
இசைந்து வா என்மனமே IV
அன்பே சிவமென்ற அடியார் திருவாக்கை இன்பமென்று போற்ற இசைந்துவா என்மனமே. I
ஆரறிவா ரென்னும் ஆசான் திருவாக்கைப் பாரறியச் சொல்லிப் பணியவா என்மனமே. 9.
இதுவதுவென் றெண்ணமல் எல்லாஞ் சிவமயமாய்ப் பொதுவில் நடங்காணப் புகழ்ந்துவா என்மனமே. 3
ஈச ஞெருவனென எண்ணியெண்ணி யேயுருகிப் பூசைசெய்ய வென்பின் புறப்படுவாய் என்மனமே. 4
உன்மத்தன் போல வுலகறிய நல்லூரில் என்னப்பன் வாழ்ந்தவிடம் போகவா என்மனமே. 5
26TCD5lb பேருமில்லா வொருவனே நல்லூரில் சீருடனே வாழ்ந்ததிறம் தெரியவா என்மனமே. 6 எண்ணிப் பணிவார் இடரகற்ற நல்லூரில் கண்ணியமாய் வாழ்ந்த கழல் காணவா என் மனமே. 7 ஏதுமற நில்லென் றெனக்குரைத்த செல்வன்தாள் போதுகொண்டு போற்றப் புறப்படுவாய் என்மனமே, 8
ஐயமெலாந் தீர அன்புடனே நோக்கியென வையகத்தில் வாழவைத்த வரங்காணவா என்மனமே. 9 ஒருபொல்லாப்பு மில்லையென உவந்தெனக்குச் சொன்னகுரு திருவாக்கைக் காணச் சிறந்துவா என்மனமே. 1) ஒடு மிருநிதியும் ஒன்ருகக் காணவைத்த கேடுபடாத் திருவடியைக் கிட்டவா என்மனமே. Il ஒளவியத்தை நீக்கி அகந்தூய்மை யாக்கிவைத்த திவ்விய பாதந் தெரிசிக்கவா என்மனமே. 12 அஃகமுங் காசுந் தேடி யலையாமல்
நஃகுதல் செய்தநல்லான் நண்ணவா என்மனமே. 13
19

Page 150
290 நற்சிந்தனை
எங்கள் நாடு
அன்பர்பணிந் தேத்திநிற்கும் நாடெங்கள் நாடு அறஞ்செய்ய விரும்பென்னும் நாடெங்கள் நாடு ஆதியந்த மில்லாத நாடெங்கள் நாடு ஆறுவது சினமென்னும் நாடெங்கள் நாடு இயல்வது கரவேலென்னும் நாடெங்கள் நாடு இன்பதுன்ப மில்லாத நாடெங்கள் நாடு ஈவது விலக்கேலென்னும் நாடெங்கள் நாடு ஈச ஞெருவனென்னும் நாடெங்கள் நாடு உடையது விளம்பேலென்னும் நாடெங்கள் நாடு உண்மை முழுதுமென்னும் நாடெங்கள் நாடு ஊக்கத்தைக் கைவிடாத நாடெங்கள் நாடு ஒருபொல்லாப்பு மில்லையென்னும் நாடெங்கள் நாடு எண்ணிக்கைக் கடங்காத நாடெங்கள் நாடு ஏவாது பணிசெய்யும் நாடெங்கள் நாடு ஐயமிட் டுண்ணென்னும் நாடெங்கள் நாடு ஐயஞ்சற்று மில்லாத நாடெங்கள் நாடு ஒப்புர வொழுகென்னும் நாடெங்கள் நாடு உத்தமர்கள் வாழ்கின்ற நாடெங்கள் நாடு ஒதுவ தொழியேலென்னும் நாடெங்கள் நாடு ஒருவனே தெய்வமென்னும் நாடெங்கள் நாடு ஒளவிய மில்லாத நாடெங்கள் நாடு ஒளவைசொல் மறவாத நாடெங்கள் நாடு அஃகஞ்சுருக் கேலென்னும் நாடெங்கள் நாடு ஆரறிவார் என்றுசொல்லும் நாடெங்கள் நாடு ஆணவத்தை நீக்குவிக்கும் நாடெங்கள் நாடு. கண்டொன்று சொல்லேலெனனும் நாடெங்கள் நாடு நப்போல் வளையென்னும் நாடெங்கள் நாடு நாங்கள்சிவ மென்றுசொல்லும் நாடெங்கள் நாடு ஞயம்பட வுரையென்னும் நாடெங்கள் நாடு தந்தைதாய் பேனென்னும் நாடெங்கள் நாடு நன்றி மறவேலென்னும் நாடெங்கள் நாடு பருவத்தே பயிர்செய்யென்னும் நாடெங்கள் நாடு மன்றுபறித் துண்ணேலென்னும் நாடெங்கள் நாடு.

நற்சிந்தனை 291 அன்பாய்ப் பணிந்திடடி
வடிவ மிலாதவனே-கிளியே! வடிவ மெடுத்தான்டி
அடிமுடி யில்லையடி-கிளியே! அன்பாய்ப் பணிந்திடடி. I
கடிவது மறந்திடடி-கிளியே! காப்பது விரதமடி மடியும்நாள் வருமுன்னே-கிளியே! மாதவஞ் செய்திடடி. 2
முடியாப் பிறப்பிறப்பைக் கிளியே! முற்றும் அழித்திடடி துடியிடை பாகனடி-கிளியே! சோமசுந்தர சுவாமியடி. 3
கொடிய வசுரர்புரங்-கிளியே! கோபித் தெரித்தான்டி படியில் மனிதனுகக்-கிளியே! பரிவுடன் வந்தான்டி. 4.
வடிவுடை வணிகளுகக்-கிளியே! மதுரையில் வந்தான்டி கொடியிடை பாகனடி-கிளியே! கொண்டாட நல்லதடி. 5
விடியுமுன் எழுந்திடடி-கிளியே! விமலனப் போற்றிடடி பொடியணி மேனியனைக்- கிளியே!
புகழ்ந்துநீ பாடிடடி. 6

Page 151
292
நற்சிந்தனை
ஓம்சிவாய நமவெனத் துதிப்போம்
ஒம்சிவாய நமவெனத் துதிப்போம் நாம்சிவ மென்றுநெஞ்சில் பதிப்போம் l
வீம்பிடும்பை யகங்காரம் விடுவோம் போம்வினை யென்றுசொல்லித் தடுப்போம் 2
ஐம்பொறி வழிசெல்லாமல் தடுப்போம் ஐம்பூதம்நா மல்லவென்று தொடுப்போம் 3
வெம்பகை விளையாமல் மடுப்போம்
நம்பொருள் சிவமெனப் படிப்போம் 4
தும்பிமுகன் அடிக்கீழ்ப் படுப்போம் அம்மையப்பன் பாதத்தில் கிடப்போம் 5
ஆறுவது சினமென நடிப்போம்
நாறுமுடல் நா மல்லவென்று முடிப்போம் 6
தேறித் தெளிந்தவரை அடுப்போம்
ஊறிவரும் அமுதத்தை உண்போம் 7
வாழ்கசிவ தொண்டனெனக் களிப்போம்
ஊழ்வினையை முற்ருக அழிப்போம். 8
ஆசான் வாசகம்
ஆசிரியத் தாழிசை
முழுவது முண்மை யெனமுன் சொன்ன பழுதில் வாக்கியம் பரகதி காட்டும் தொழுது வணங்கிச் சுகமாய் வாழுதி. I அப்படி யுள்ளதென் ருசான் சொன்ன ஒப்பில் வாக்குநல் லுணர்வை யளிக்குங் கைப்போது தூவி எப்போதும் வாழுதி. 2

நற்சிந்தனை 293
வெண்செந்துறை
ஆரறிவா ரென்ற ஆசான் வாசகம் பேரறி வைத்தரும் பேணி வாழு தி.
நாமறியோ மென்ற நலந்திகழ் வாக்குச் சேம மளித்துச் சிவகதி யாக்குமே தாமத மின்றிச் சார்ந்து வாழுதி. 4 முடிந்த முடிபென்னும் முனிவன் வாக்கு படிந்த மனத்தில் பரகதி காட்டும் விடிந்ததும் மலரிட்டு விரும்பி வாழுதி. 5
ஆசான் மலரடி மறவா அடியவன் பேசுஞ் செந்தமிழ் பிறவிநீக் கும்மே. 6
நாம் எங்கே நாதன் எங்கே
பல்லவி
ஆதார வாதேயம் முழுதுமான அப்பனுக்குப் பாதார விந்தமெங்கே பார்த்துப் பணிவதெங்கே.
அநுபல்லவி பூதாதி ஐந்துமவன் பொறிபுலன்க ளெல்லாமவன் தாதாவும் பெற்றெடுத்த தாய்தந்தை தானுமவன் (ஆதா)
சரணங்கள்
தாம் தீமி திமிதீமி ததிங்கிணதோ மென்று தானேதா னய்நின்று சலிப்பற நடஞ்செய்யும் (ஆதா)
வாளுளை வீணுகக் கழியாதே என்றுசொல்வார் நானுரோ இதைக்கேட்டு நாமெங்கே நாதனெங்கே.
(ஆதா)
தேனரும் நல்லூரில் சீவன்முத்த ஞய்வாழ்ந்த கோனுகுஞ் செல்லப்பனைக் கும்பிடும் மாணுக்கன். (ஆதா)

Page 152
294 நற்சிந்தனை
எக்காலம் 1
அல்லும் பகலும் அப்பன் திருவடியைச் சொல்லாமற் சொல்லிச் சுகம்பெறுவ தெக்காலம் (II)
நில்லா வுலகையும் நிலையென வெண்ணிமனஞ் செல்லாமல் திருவடியைச் சிந்திப்ப தெக்காலம் (2)
காண்பான் காட்சியுங் காட்சிப் பொருளுமற்றுத் தூண்போ லிருந்து சுகம்பெறுவ தெக்காலம் . (3)
பொன்னுசை மண்ணுசை பெண்ணு சையைநீக்கிப் பொன்னர் திருவடியைப் போற்றுவது மெக்காலம் (4)
வேதாந்தம் பேசி வீண் காலம் போக்காமல்
நாதாந்த மோனநிலை நண்ணுவது மெக்காலம் (5) எள்ளுக்கு ளெண்ணெய்போ லெங்கும் நிறைந்தவனைத் தெள்ளுதமிழ் பாடிச் சேவிப்ப தெக்காலம் (6)
ஆருறு தத்துவத்துக் கப்பாலா யிப்பாலாய் வேரு யுடனய் நினைப்பதுவு மெக்காலம் (7) நினைவுக்கு நினைவாய் நிலைத்திருக்கும் மெய்ப்பொருளை அனைத்துக்குங் காரணனை யறிவதுவு மெக்காலம் (8)
முனைத்துவரும் மூர்க்கக் குணமெல்லாம் நீக்கித் தினைத்தனையும் மறவாமல் சேவிப்ப தெக்காலம் (9)
பத்தும் படிப்போர்கள் கேட்போர்க ளெல்லாரும் வித்தகன்றன் திருவடியை விரவிநிற்பர் நிச்சயமே. (10)
III
அன்பு சிவமென்ற ஆன்ருேர் திருவாக்கை இன்பமுடன் போற்றி யிருப்பதுவு மெக்காலம்.
ஆதியந்த மில்லாத ஆன்மாவே நாமென்ற சேதி யறிந்து தெரிவிப்ப தெக்காலம். 2

நற்சிந்தனை 295
இம்மையிலும் மறுமையிலு மெம்மைவிட்டு நீங்காத செம்மலர்த் தாள்கண்டு சீவிப்ப தெக்காலம். 3
ஈசன் திருவடியை யென்றும் மறவாமல் வாச மலர்கொண்டு வணங்குவது மெக்காலம். 4
உருகி யுருகி உணர்வழிந்து நின்று பெருகி வருமமிழ்தைப் பருகுவது மெக்காலம். 5
வளரும் பேருமில்லா ஒருவன் திருவடியை நீரும் பூவும்போட்டு நெக்குநிற்ப தெக்காலம். 6
எல்லா வுயிரினும் நில்லாமல் நிற்பவனை நினைந்து நினைந்துருகி நிற்பதுவு மெக்காலம். 7
ஏக னநேக னரிறைவனடி வாழ்கவெனும் மோக மறுக்குமொழி கண்டுய்வ தெக்காலம். 8
ஐந்து புலன்வென்ற ஆன்ருேர் திருவடிக்கீழ் நைந்துருகி நின்று நயம்பெறுவ தெக்காலம். 9
ஒன்றென் றிருதெய்வம் உண்டென் றிருவென்று அன்றுசொன்ன பட்டினத்தா ரடிபணிவ தெக்காலம். 10
ஒமெனு மெழுத்தினுள்ளே ஒளியதாய் விளங்குகின்ற சோமசுந் தரத்தின் அடிதொழுவ தெக்காலம். II
அரியதி லரியது ஆன்மா வதுதான் பெரியதிற் பெரியது சிறியதிற் சிறியது பிரிவறி யாதது பேதாபேத மற்றது குறியுங் குணமு முள்ள தற்றது நெறிவழி வழாதது நிரஞ்சன மானது துரியா தீதத்தில் தூங்காமல் தூங்குவது.

Page 153
296 நற்சிந்தனை
தன்மை முன்னிலை படர்க்கை அற்றவன் * -
தன்மை முன்னிலை படர்க்கை யற்றவன்
தன்னை யுணர்ந்தவச் சற்குரு வாமே (I) பின்னைப் பிறப்பிறப் பவனுக் கில்லை முன்னை வினையின் முடிச்சவிழ்த் தானே (2) அன்னை பிதாகுரு தெய்வம் அவனே
அவனை வணங்கினர் அருந்தவத் தோரே (3) பூதங்க ளில்லைப் பொறிபுல னில்லை
வேதங்க ளில்லை விளங்குசாத் திரமில்லை (4)
சந்திரனில்லைச் சூரியனில்லை தாரகா கணங்களில்லை இந்திரன்முதலிய தேவருமில்லை இருடிக ணங்களுமில்லை (5) வாசித்துக் காணுெணுதபொருள், வாய்விட்டுச்
சொல்லொணுதபொருள் மாயத்துக்கு அப்பாலுள்ளது மாதவர்க் கெட்டொனது. (6)
8px; wrthwwwwwww.
எந்நாளோ
ஒருபொல்லாப்பு மில்லையென வுரைத்த குருநாதன் திருவடியைச் சேவிக்கு மருள்பெறுவ தெந்நாளோ உண்மை முழுதுமென வோதுந் திருவாக்கு என்னை விழுங்கி யிருப்பதுவு மெந்நாளோ ஆரறி வாரென்று அடிக்கடியே சொல்லும் சீரறிந்து வாழும் செயலறிவ தெந்நாளோ அப்படியே யுள்ளதென அடிக்கடியே பேசும் அப்பனைக் காணும் அருள்பெறுவ தெந்நாளோ முடிந்த முடிபென்று முகமலர்ந்து சொன்னவன்றன் அடிபணிந்து நிற்குநாள் இந்நாளோ எந்நாளோ சீராரும் நல்லூர்த் தேரடியிலே யிருக்குங் காராரும் மேனியனைக் காணும்நாள் எந்நாளோ பித்தனென எல்லோரும் பேசுவதைக் கேட்டிருந்தும் சித்தங்கலங் காதவனைச் சிந்திப்ப தெந்நாளோ

நற்சிந்தனை 297
இலங்கைவாழ் தெய்வம்
எல்லாஞ்செய வல்லதெய்வம் எல்லார்க்குந் தெய்வம்
இதையறிந்து வாழுவார் எல்லாருந் தெய்வம் நில்லாத நீர்சடைமேல் நிற்கவைத்த தெய்வம்
நிலமேழுந் தாண்டிநின்ற நின்மலஞ்சேர் தெய்வம் கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காணுத காட்சியெல்லாங் காட்டுகின்ற தெய்வம் செல்லாரும் மலைசூழு மிலங்கைவாழ் தெய்வம்
சிவனென்ற நாமமுள்ள தெய்வமிதே தெய்வம். 1
இருநிலன யிரவிமதி யாகிநிற்குந் தெய்வம்
இன்னதன்மை யென்றெவரும் சொல்லவொண்ணுத்
தெய்வம் கருவிகர ணங்களெல்லாங் கலந்துநிற்குந் தெய்வம்
காவலனுய் மதுரைநகர் ஆண்டுகொண்ட தெய்வம் ஒருவணு யுலகேத்த ஓங்கிநின்ற தெய்வம்
உத்தமிக்குக் கூலியாளாய் மண்சுமந்த தெய்வம் திருவரைசேர் இலங்கைநகர் வாழுகின்ற தெய்வம்
சிவனென்ற நாமமுள்ள தெய்வமிதே தெய்வம். 2
பண்டயனும் மாலுமடி பரவவருள் தெய்வம்
பரியெல்லாம் நரியாகப் பணித்தபர தெய்வம் மண்டலத்தி லுயிரெல்லாம் வணங்கவருள் தெய்வம்
மருவியென் சிந்தையிலே புகுந்துறையுந் தெய்வம் கண்டெவரும் சொல்லவொணுக் கதிசேருந் தெய்வம்
காதலிக்கும் மெய்யடியார்க் கருள்செய்யுந் தெய்வம் தண்டரளம் விளங்கிலங்கை நகர்வாழுந் தெய்வம்
தானுக விருக்கின்ற தெய்வமிதே தெய்வம். 3

Page 154
298 நற்சிந்தனை நில்லடா நிலையிலென்று சொல்லுது
ஒம்நாம் நாமென்று ஒலிக்குது
ஞாதுருஞானம் போயோடி ஒளிக்குது I நமக்குநாமே துணையென்று விழிக்குது நாதாந்த முடியிலேறிக் குளிக்குது 2
வேதாந்தசித்தாந்தஞ் சமமென்று களிக்குது
மாதாபிதாவை மறவாதிருக்க மதிக்குது 3 மூதாதைமார் சொல்நெஞ்சில் மதிக்குது சூதான வார்த்தைதன்னைத் தொலைக்குது 4 நில்லடா நிலையிலென்று சொல்லுது நீயேநான் என்றுசொல்லி வெல்லுது 5 உல்லாச மாயெங்குஞ் செல்லுது - உண்மை முழுதுமென்று சொல்லுது 6 நல்லூரில் செல்லப்பன் என்னப்பன் நானவரைக் கேட்கும் விண்ணப்பம் 7
mrrassemwimb
6L6ìồIIằ 5ff6üIIffijff
தலையை நிலத்தில் நிறுத்திப் பார்த்தா லிறைவனுவீரோ காலை மேலே யேற்றிப் பார்த்தால் கடவுளைக்காண்பீரோ. 1 மலைமே லேறி மவுனஞ் செய்தால் மகாதேவனைக்
காண்பீரோ சிலைபோ லிருந்து சிந்தித்துப் பார்த்தால் தேவனைக்
காண்பீரோ, 2
கலைகள் பலவுங் கற்றுவிட்டால் கங்கா தரனைக் காண்பீரோ விலைக்குப் புத்தகம் வேண்டிப் படித்தால் விமலனைக்
காண்பீரோ. 3. பாலைக் குடித்துப் பட்டினி கிடந்தால் பரமனைக் காண்பீரோ வேலைசெய் யாமல் வீதியில் திரிந்தால் வேந்தனைக்
காண்பீரோ. 4 மூலையி லிருந்து முணுமுணுத்தால் முதல்வனைக்
காண்பீரோ சாலப் பசிக்கொரு போது புசித்தால் சாமியாவிரோ. 5

நற்சிந்தனை
ஆசான் அருளால் ஆசான் ஆயினேன்
சிவதொண்டு செய்வார் தீநெறிச் செல்லார் சிவதொண்டு செய்வார் புலனைந்தும் வெல்வார்
சிவதொண்டு செய்வார் பிறன்பொருள் வெஃகார்
சிவதொண்டு செய்வார் சிவமே யாவர்.
ஆதியு மந்தமும் அரனர்க் கில்லை ஆதியு மந்தமும் ஆன்மாவுக் கில்லை சாதி சமயமுஞ் சற்குரவர்க் கில்லை ஒதி யுணர்ந்தா னுரைத்தான் நல்லூரில் .
அருளா லறிந்தேன் ஐம்பூதத் தியக்கம் அருளா லறிந்தேன் ஐம்பொறி மயக்கம் அருளா லறிந்தேன் ஐம்புலன் தயக்கம் அருளா லறிந்தேன் ஆன்ம வியப்பே.
சிவமே தாமெனச் சிந்திப்பார் பெரியோர் சிவமே வேருகச் சிந்திப்பர் சிறியோர் தவநெறி நிற்பின் தன்னை யறியலாம் அவநெறி நிற்பின் பின்ன முறலாம்.
ஆசா னருளால் அகந்தை யழிந்தது ஆசா னருளால் அருண்மழை பொழிந்தது ஆசா னருளால் ஆனந்தம் விளைந்தது ஆசா னருளால் ஆசா னயினேன்.
சிவத்தை மறைத்தது தீநெறிச் சேறல் சிவத்துள் மறைந்தது தீநெறிச் சேறல் அவத்தை யைந்தும் அருளை மறைத்தன அவத்தை யைந்தும் அருளால் மறைந்தன.
299

Page 155
300 ۔۔۔۔ நற்சிந்தனை
ஒருவனே தெய்வமென்னும் உண்மையைக் கண்டோம்
ஒருவனே தெய்வமென்னும் உண்மையைக்
கண்டோம் -இந்த உலகமெல்லாம் நமக்குற வாகவே கொண்டோம் தரும நெறிசற்றும் பிசக மாட்டோம் தாய்தந்தை சொல்லையினித் தட்ட மாட்டோம் வருவதையும் போவதையும் எண்ண மாட்டோம் வாணுளில் ஆசையைப் பேண மாட்டோம் சாந்தம் பொறுமை யென்னும் பணியணிவோம் சற்குரு பாதத்தை இனிம றவோம் வேந்தர் விதியையொரு காலத்துந் தட்டோம் வீணிலே காலத்தைக் கழிக்க மாட்டோம் அச்சமொடு கோபத்தை யகற்றி விட்டோம் ஆருக்கு மினிநாம் ஆட்பட மாட்டோம் பொய்ச்சமய நெறிசொல்லும் போதனை கேளோம் எச்சமயத் தோரையும் ஏளனஞ் செய்யோம் பஞ்சப் புலன்வழியிற் செல்ல மாட்டோம் பழியோடு பாவத்தைக் கொள்ள மாட்டோம் மந்திரங் கற்போம்வினைத் தந்திரங் கற்போம் மனத்தைக் கொல்வோம் பொல்லாச் சினத்தை
வெல்வோம் உழுதுண்ணு வோமினிப் பழுதெண் ணிடோம் ஊரெங்குஞ் செல்லுவோம் நல்ல வேதங்கள்
சொல்லுவோம் வான மளப்போம் இந்த மண்ணையளப்போம் சிவஞான முவப்போந் திரிகால முணர்வோம் தானங் கொடுப்போம் பொல்லா ஈனம் விடுப்போம் சகல சமயத்துக்குஞ் சம்மதங் கொடுப்போம்.

நற்சிந்தனை - 301
ஊக்க முள்ளவர் ஏக்க முற்றிடார்
அந்தியுஞ் சந்தியும் ஆசான் திருவடி சிந்தை செய்பவர் சீவன் முத்தரே. I
ஆன்மா நித்தியம் என்று அறிந்தவர் அங்கு மிங்கு மாய லைந்திடார். 2
இல்லை யுண்டென எடுத்துச் சொல்லொணு இறைவ னிதயத்தில் என்று முள்ளவன். 3
ஈசன் திருவடி யென்றும் ஏத்துவார் இறந்து பிறந்திடார் இவர்கள் முத்தரே 4 உலகமே கோயிலாய் உணர்ந்து கொண்டவர் உண்மை முழுவதும் என்று காண்பரே 5
ஊக்க முள்ளவர் ஏக்க முற்றிடார்
உதய பானுபோல் உலகில் வாழ்வரே. 6
எல்லாஞ் சிவமயம் என்று கண்டவர் எங்கு இருப்பிலென் என்ன செய்யிலென் . 7
ஏக மாகிய இறைவன் பாதத்தை எண்ணு வார்தினம் நண்ணு வாரவர். 8
ஐயப் பாடின்றி யகத்தது உணர்பவர் ஆப்தர் வாக்கியம் என்று கூறுவார். 9
ஒருபொல் லாப்பு மில்லை யென்றவர் உயர்ந்த நல்லூர் இருந்த மாதவர். 10
ത്തങ്ങ,
அடியா ருள்ளக் கமலத்தே யணையா தெரியும்
t ரு 5 زھوقا த ணிேவிளக்கே முடியா முதலே முக்கண்ணு மூவர் போற்றும் முழுமுதலே முடியாப் பிறவிக் கடலிடத்தே மூழ்கா தென்ன
யாண்டுகொள்வாய் அடியே னுன்றன் குடியன்ருே அரசே யுனக்கே
யடைக்கலமே.

Page 156
302 நற்சிந்தனை
5TGITC I
(உயிர் வருக்கக் கோவை)
அரியும் பிரமாவும் அடிமுடியுந் தேடித் ሶ தெரிவரி தாய்நின்ற தெய்வமே கண்வளராய். I
ஆராயும் வேதமுதல் ஆகமங்கள் தாமறியாப் பேரா யிரமுடைய பெம்மானே கண்வளராய். 2
இரவும் பகலுமுன்னை ஏத்தித்துதிப் போர்க்குவரந் தரவல்ல தெய்வமே சங்கரனே கண்வளராய். ".. 3
ஈசனே எவ்வுயிர்க்கு முயிராய் விளங்குகின்ற தேசனே செல்வக் கொழுந்தேநீ கண்வளராய். 4 உன்னையல்லால் வேறுதெய்வ முள்ளத்திற் கொள்ளாத பொன்னப் பனைக்காக்கும் பூரணனே கண்வளராய். 5
ஊரும் பேருமில்லா வுத்தமனே சிவனடியார்
சாருந் தவக்கொழுந்தே சம்புவே கண்வளராய். 6
எல்லைசொல்ல வல்லார் எவருமில்லா மெய்ப்பொருளே அல்லலெல்லாம் நீக்கும் அரனே நீ கண்வளராய். 7
-. ܇ ܐܸܐܹܵ
ஏழைக்காய் வந்திரங்கி எழில்வைகை யாறடைத்த தாளைமற வாமலருள் தந்தவனே கண்வளராய். 8
ஐயனே யாரூரில் ஆரூரன் தனையாண்ட r. தெய்வமே சிந்தா மணியேநீ கண்வளராய். 9
ஒன்பதுவாய்த் தோற்பைக்கு ளுயிரடங்கி நிற்கும்வண்ணம் அன்புசெய்த வண்ணலே ஆருயிரே கண்வளராய். 10 ஓம்சிவாய நமவென்று ஒதுகின்ற அன்பருக்கு ஆம்என் றுறுதிதந்த அத்தனே கண்வளராய், 11 ஒளவியம் G81 18FIT அறிவுதந்த ஆண்டவனே
நவ்வி மழுவேந்தும் நாயகமே கண்வளராய். 12

நற்சிந்தனை
அஃகுக லில்லா அறிவுடைய அன்பரகம் வெஃகுத லில்லா விமலனே கண்வளராய்.
பன்ெ மூன்று பாடல்களும் படிப்போருங் கேட்போரும்
க'யுண்மை யுடன்வாழ வுறுதிசெய்வோய்
303
13
கண்வளராய், 14
gösT6IVTLIGB II
Grா ரிலங்கைநகர் சிறக்கவந்த செல்வமே பேரார் பிறைசூடும் பெருமானே கண்வளராய்.
ஆராயும் வேதம் அறியாத மெய்ப்பொருளே பேராயி ரம்படைத்த பெம்மானே கண்வளராய்.
ஆருத காதல்சேர் அடியார் அகத்தூறும் மாருத வின்பமே மகாதேவனே கண்வளராய்.
நீmர் திருமேனி நிமலா வுனையல்லால் வேழுர் துணைசொல் விமலனே கண்வளராய்.
என்ன ருயிரே எனக்கினிய மெய்ப்பொருளே பின்னர் துணையாவார் பெருமானே கண்வளராய்.
அக்கைநிலை யாதெனவே யறிந்து பிரிந்திருந்த நீக்கமற்ற அன்பர் நிறைவேநீ கண்வளராய்.
ாங்கெங்கே பார்த்தாலும் எல்லாம்நீ யென்றுகண்ட துங்க வடியார்தந் துணைவனே கண்வளராய்,
வித்தத்தி லூறுந் தெவிட்டாத தெள்ளமுதே அத்தனே யாருயிரே ஆண்டவனே கண்வளராய்.
மத்தம் மதிசூடி மழவிடையின் மீதேறி எத்திசையுஞ் செல்லும் இறைவனே கண்வளராய்.
கருத்திற் கருத்தேயென் கண்ணுக் கினியவனே நிருத்தமிடுஞ் சோதியே நின்மலனே கண்வளராய்.
10

Page 157
364 நற்சிந்தனை
வருத்தமற்ற மெய்யடியார் மனத்திற் குடியிருக்கும் ஒருத்தனே புன்னையன்றி உண்டோநீ கண்வளராய். 11
காமக் கடல்கடந்து காட்சிபெற்ற நல்லடியார் சேம நிதியே சிவனே நீ கண்வளராய். 12
அன்பிற் குழைந்து குழைந்தையா வெனவரற்றும் அன்பர்க் குகந்த அரசேநீ கண்வளராய். 13
மண்ணுதி பூதமெல்லாம் வகித்த வுனையன்றி எண்ணவே றுண்டோ இறைவனே கண்வளராய். 14
ஆதார மாறு மகன்ற பழம்பொருளே பேருன செல்வப் பிரானே நீ கண்வளராய். 15
எட்டுத் திசையுமற் றெள்விடத்தும் நின்னையன்றிச் சுட்டவே றுண்டோ சுவாமிநீ கண்வளராய். 16
அந்திசந்தி யுன்னடியை வந்திக்கும் மெய்யடியார் சிந்தனையி லூற்றே செழுஞ்சுடர்நீ கண்வளராய். 17
குற்றமெல்லாம் போக்கிக் குணமாக்கி யெனையாண்ட தற்பரனே யென்குருவே சாமிநீ கண்வளராய். 1 8
ஆருக் கவலையெல்லாம் நீருக்கி யடிமையெனப் பேருக்கி வைப்பாய் பிரானேநீ கண்வளராய். 19
உள்ளத் தினுள்ளே யொளிருஞ் சிவக்கொழுந்தைக் கள்ள மனத்தவருங் காண்பரோ பராபரமே.
எல்லாஞ் சிவன்செயலென் றெண்ணுத மாந்தருக்கு உல்லாச மானகுணம் வருமோ பராபரமே.

நற்சிந்தனை V− 305 உண்மை முழுது மறிந்திடெடா
ஒருபொல் லாப்பு மில்லையெடா தம்பி உண்மை முழுது மறிந்திடெடா வருவது வந்து போகட்டுஞ் சாட்சியாய் வையகத்தில் நீ வாழுவாய் மாட்சியாய்.
சர்வம் பிரம மயமெடா தம்பி சந்தேக மில்லை நம்புநீதம்பி மர்ம மிதுபெரும் மர்மமெடா மகத்துக்கள் கண்ட மர்மமெடா. 2
அப்படியே யுள்ள பொருளெடா தம்பி ஆசையை நீக்கி யறிவாய்நீ நம்பி ஒப்புவமையு மில்லாப் பொருளெடா உள்ளும் புறம்பு முள்ளதெடா. 3
எல்லாச் சமயமுஞ் சொல்லுமெடா தம்பி ஏத்தி ஏத்தி வணங்கிடெடா உல்லாச மாகத் திரிந்திடெடா தம்பி ஒம்சிவாய நமவென் ருேதெடா. 4.
குணங்க டந்தது குணத்தில் கிடந்தது கும்பிட்டுக் கொண்டாடிப் போற்றிடெடா கணப்பொ முதும்மற வாதே தம்பி காமக் குரோதத்தை நீக்கிடெடா, 5
கூறும் நாமுதல் எல்லா மதுவெடா கூர்ந்து பார்த்துக் கும்பிடெடா ஆறுமுகமும் ஐந்து முகமும் ஐம்பெரும் பூதமும் அதன்வடிவே. 6
நல்லூரில் வாசன் செல்லப்பன் சொல்லை
எல்லோருங் கேட்டு மகிழ்ந்திடுவீர்
பொல்லாப்பு மிங்கில்லைப் புதுமையு மிங்கில்லைப்
பூரண சுதந்திரம் எம்மிடமே. 7
20 /

Page 158
306 w நற்சிந்தனை
திருவடி துணை
கண்ணபிரானுங் காணுக் கழலிணை என்றும் எந்துணை ஒம் விண்ணும் மண்ணும் ஒன்ருய்நின்ற மெய்யடி எந்துணை ஒம் எண்ணு மெண்ண மெல்லா மறியு மிணையடி
-- எந்துணை ஓம் நண்ணு மடியார் நாவில் நிற்கும் நல்லடி எந்துணை ஒம். 1 பண்டுமின்றும் என்றுமுள்ள பரனடி எந்துணை ஒம் மண்டுபேயோ டாடும்மலரடி என்றும் எந்துணை ஒம் நன்றுந்தீதுந் தான காத நல்லடி எந்துணை ஒம் மன்றுளாடும் மலரடி யிணைகள் என்றும் எந்துணை ஒம். 2
அந்த மாதி யில்லா வடியிணை என்றும் எந்துணை ஒம் வந்த கால னுயிரை வாங்கிய மலரடி எந்துணை ஒம் பந்த பாசம் நீக்கி யாண்ட பரனடி எந்துணை ஒம் தந்தை தாயாய் நின்ற தாளிணை என்றும் எந்துணை ஒம். 3
நினைக்கு மடியரை உருக்கு மடியிணை என்றும் எந்துணை ஒம் சினத்த காலனைச் செறுக்கு மடியிணை என்றும்
எந்துணை ஒம் தனத்த தனதன தாண்டவத் தாளிணை என்றும்
எந்துணை ஒம் அனைத்துந் தான யாடிய அடியிணை என்றும்
4 .எந்துணை ஒம் ܗܝ
--- சிவனடி துண
ஓம் சிவசிவ சிவனடி துணைஒம் ஓம் சிவசிவ கணபதி துணைஒம் ஓம் சிவசிவ சிவகுரு துணைஒம் ஓம் சிவசிவ அடியார் துணைஒம்,
அரகர சிவசிவ ஆடும் அடிதுணைஒம் சுரர்நரர் துதிசெய் தூய அடிதுணைஒம் பரவும் அடியார் பாடும் அடிதுணைஒம் கரவுடை நெஞ்சினர் காணுக் கழல்துணைஒம்

நற்சிந்தனை 367
தில்லையம்பலத் தாடுஞ் சேவடி துண்ைஒம் எல்லையில் லாவருள் அருளிய அடிதுணைஒம் வல்லை வந்தெனை ஆண்டவன் அடிதுணைஒம் கல்லை நேர்மனங் கரைத்த வனடி துணைஒம்
அம்மை யப்பன் அழகிய அடிதுணைஒம் இம்மைநற் பயன்தரு மீச னடிதுணைஒம் செம்மை சேர்சிவன் திருவடி துணைஒம் எம்மை யாண்ட எங்கோன் அடிதுணைஒம்
தேசம் புகழுஞ் சிவன்திரு வடிதுணைஒம் வாசம் மருவும் மலரடி எந்துணைஒம் பாசம் அகலும் பரன்திரு வடிதுணைஒம் ஈச னெந்தை எம்பிரா னடிதுணைஒம்.
" ஓம் நமோ நாராயணு " இராகம்-மத்தியமாவதி தாளம்-ஆதி
பல்லவி
ஓம் நமோ நாராயணு உத்த மனே பூரீராமா அநுபல்லவி நாம் வேருே நீ வேருே நல்ல வாக்குத் தாராயோ. (ஒம்)
சரணங்கள் ஏங்குவதே நாமையா எழில்சேரும் ராமையா தாங்குவா யினிராமச் சந்திரனே தருணமிது. (ஒம்) அசோதைகுல பாலனே யசுரர்குல காலனே தசாவ தாரனே தமியேனுக் காதரவே. (ஓம்)
எந்தவே ளையுமுன்னை ஏத்திநீநா னேயென்று சிந்திக்கவரந் தாராய் சீமானே பூரீராமா. (ஒம்)

Page 159
308 நற்சிந்தனை எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவான் ஈசன்
அன்னை பிதாக்குரு தெய்வந் தன்னை அறிந் தேனடி-தங்கமே
சற்குருவி னருளாலே
தானதாம் தானதாம் தனதாம் தனதாம். 1.
ஆரறி வாரென்று சொல்லும் பேரறிவைக் கண்டேனடி-தங்கமே பேசாதேவாய் நேசமாய்நில் ஆசாபாச மனைத்தையும்வெல், 2
இம்மையிலும் மறுமையிலும் எம்மைவிட்டு நீங்கானடி -தங்கமே இறப்புப் பிறப்பில்லையடி ஏத்தியேத்தித் தோத்திரஞ்செய் சூத்திரத்தைக் கண்டுதொழு. 3.
ஈயாத புல்லரை நீ ん வாயாரப் பாடாதே -தங்கே
வாணுளைநீ பேணுதே நாணுதேமனங் கோணுதே காணுதேபணம் பேணுதே. 4.
. உண்மை முழுதுமென்ற
கண்ணைத் திறந்துவிடு-தங்கமே காட்சியைவிடு சூட்சியைத்தொடு சாட்சியையடு மாட்சிமைப்படு. - 5
ஊனயுயிராய்க் கலந்த கோனரைநீ கொண்டாடு-தங்கமே
கூவிக்கூவி யழைத்திடுவாய் கும்பிட்டுக்கொள் நம்பிக்கைவை
கூடாதகூட்டங் கூடாதே. - V− 6

நற்சிந்தனை 309
எண்ணுவார் நெஞ்சிலீசன் நண்ணுவான் நீயறிந்துகொள்-தங்கமே நானுமில்லை நீயுமில்லை நாடிக்கொள் தேடிக்கொள் கூடிக்கூடிப் பாடிக்கொள். 7
ஏகன நேகனென்று மோகமறச் சொன்னசொல்லைத்-தங்கமே மொழியாமல் மொழிந்துகொள் மூட்டிக்கொள் அங்கி
கூட்டிக்கொள் அருள். ん 8
ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறிநீ யல்லையடி-தங்கமே அந்திசந்தி கும்பிடடி ஆதாரமவன் ஆதேயமவன் நிராதாரமாய் ஆராதனைசெய். 9
ஒன்றிரண்டென் றெண்ணுதே நன்றுதீதென்று நாடாதே-தங்கமே நாதாந்தமென்று நாடிடடி நந்தாவிளக்கது சிந்தாமணி நொந்தாரைவந்து ஆதரிக்கும். 10
-ஒவியம்போ லிருந்திடடி
பாவியென்றநாமம் படையாதே-தங்கமே * சேவித்துச்சீவன் முத்தியடைந்திடு
சிந்தித்திடுதினம் வந்தித்திடு பந்தபாசம் வெந்துவிடும். m 1
ஒளவியநெஞ்சம் படையாதே திவ்வியமாக வாழ்ந்திடடி-தங்கமே அக்குமாலை யணிந்திடடி அஞ்சாதேசென்று கெஞ்சாதே அஞ்செழுத்தைநெஞ்சிற் கொஞ்சிடடி. 12

Page 160
3 10 °
நற்சிந்தனை
கண்டேன்
நில்லாத நீர்சடைமேல் வைத்த நிமலனை நினைக்கு மடியவர் மனங்கோயில் கொண்டானை 1
எல்லாமு மல்லவு மாயிருப் பானை என்ன ரமுதினை எளிவந்த பிரான 2
கொல்லானை யின்னுரி போர்த்துகந் தானக் கூடலிற் பரியெல்லாம் நரியாக்கி னனை 3
செல்லார் வரைகளும் அருவியும் பொழில்களும் தேங்கும் இலங்கை மாநக ரானை 4
எண்வகை யொருவனை யேந்திழை பாகனை மண்முதற் பூதங்கள் வகுத்த பிரான 5
கண்ணுக் குக்கண் ஞய கடவுளை மன்னு மிலங்கை மாநகர் கண்டேன் 6
தித்திக்கு மமுதினைத் தெளிந்த தேறலை
எத்திக்கு மாகிய என்ன ருயிரினை 7
பத்திக்கு மடியவர் பாட்டிற் குகந்தானை முத்துக்கள் சேர்முது இலங்கையிற் கண்டேன் 8 சாந்தம் பொறுமையன்பு தாங்கொண்ட 6(JLg_חחש மாய்ந்துபோ காவண்ண மருள்தரும் ஒருவனை 9
காந்தள் முல்லை கானர் மல்லிகை ஏந்திருக்கும் நல்ல இலங்கையிற் கண்டேன் 10 பொன்னர் மேனி புரிசடை யண்ணலைப் பூதங்க ளைந்தும் பொருந்திநிற் பானை l
தென்ன தென்ன வெனவண்டு பாடும் சீரார் இலங்கை மாநகர் கண்டேன். 12

நற்சிந்தனை 311 வேண்டும். வேண்டாம்
நாங்கள் சிவமென் றெண்ண வேண்டும் தூங்காமல் தூங்கிச் சுகிக்க வேண்டும் ஆங்காரந் தன்னை யகற்ற வேண்டும் நீங்காத நிட்டையில் நிலைக்க வேண்டும் மாங்காய்ப்பா லுண்டு மகிழ வேண்டும் தேங்காமல் தேங்கி யிருத்தல் வேண்டும் ஏங்காமல் வையத்தி லிருக்க வேண்டும் உல்லாச மாக வுலாவல் வேண்டும் எல்லா ரிடத்தும் அன்பு வேண்டும் மேலோரைக் கண்டால் வணங்க வேண்டும் பொல்லாப் பில்லையெனச் சொல்ல வேண்டும் வல்லமை பேசி மகிழ வேண்டும் அல்லாகூ என்று அரற்ற வேண்டும் சில்லாலைப் பாட்டுப் பாட வேண்டும் தில்லாலைக் கள்ளுக் குடிக்க வேண்டும் கல்லானை கன்னல் உண்ணல் வேண்டும் மல்லாகத் தானை மதிக்க வேண்டும் தன்னைத் தன்ன லறிய வேண்டும் முன்னை வினையைக் களைய வேண்டும் சென்னைப் பட்டினஞ் செல்ல வேண்டும் அன்னை போல அன்பு வேண்டும் பொன்னை மாதரைப் போக்க வேண்டும் பின்னைப் பிறவியை நீக்க வேண்டும்.
Χ X Σζ சாங்காலம் வந்தால் திகைக்க வேண்டாம் வாங்காமல் வாசியில் தூங்க வேண்டாம் பாங்காக வாழ விரும்ப வேண்டாம் வேங்கைப் புலிவந்தா லோட வேண்டாம் ஆங்கென்றும் ஈங்கென்றும் அலைய வேண்டாம் போங்காலம் வந்தால் புலம்ப வேண்டாம்.

Page 161
32". நற்சிந்தனை
ஆசான் கூசான் பேசான்
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் ஆசான்-அவன் உன்மத்தன் போற்றிரிவான் கூசான். 1 -
வருவாரைப் போவாரை ஆசான் - வாயில் வையாமல் வைதுவிடக் கூசான். 2
உண்மை முழுதுமென்பான் ஆசான் - அவன் உறங்காம லுறங்குவான் பேசான். 3.
நன்மைதீமை யறியாதான் ஆசான் - அவன் நாமறியோம் என்றுசொல்லக் கூசான். 4.
அப்படியே யுள்ளதென்பான் ஆசான்-சொல்லி
ஆரறிவா ரென்றுநகை செய்வான். 5
முப்போதுந் தேரடியி லிருப்பான்-ஆசான் முகமலர்ந்து தன்னிலே சிரிப்பான். 6
விற்றுாணுென் றறியாதான் ஆசான்-என்றும் விசரனைப் போற்றிரிவான் கூசான். vn 7
கற்ருேரும் அறியாத சீரான்-அவனைக் s கைதொழுது நின்ருலும் பாரான், 8
இன்னணிவ னென்றெவரு மறியார்-இவனை ஏற்றித் தொழுதவரைக் குறியான். 9
பன்னட் பழக்கத்தினுற் சிலபேர்-இவனைப் பாரிற் குருவாகக் கொண்டார். 10

நற்சிந்தனை . 313
. 36öTLOT sŠšŠL LosLOlg
அக்கக் காவடி அம்மம் மாவடி ஆன்மாநித்திய மாமடி Ι முக்குறுணிப்பிள்ளையாரை வேண்டி மூலமந்திரஞ் செபியடி 2 பக்குவமாய்ப் பேணடி
பத்தரினத்தொடு கூடடி 3
அக்குமணிதனைக் கட்டடி مح۔ ஆசைமூன்றும் நீக்கடி 4
திக்குத்திகாந்தமுங் கைவசமாச்சடி சீவன்சிவனென்று சிந்தித்துக்கொள்ளடி 5 முக்குணமாயைக் கப்பாலேசெல்லடி முன்னும்பின்னும் பாராதேயடி 6
பக்குவகால மித்தருணமடி பாராதிபூத மெல்லாநீயடி 7
விக்கினமொன்றும் இல்லையடி விண்போலிலங்கி நின்றிடடி 8 துக்கஞ்சுகம் இல்லையடி
சும்மாவிருந்து பாரடி 9 தர்க்கஞ்செய்யப் போகாதேயடி தானேதான யிருந்திடடி Va 10
செக்கச்சிவந்த கழற்பாதம் சிரசிற்சுமந் தேத்திடடி,

Page 162
314
நற்சிந்தன.
ஒளவை வாக்கி னருமை காண்க
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் தன்னையும் பிறரையுந் தானே காண்க
ஆலயந் தொழுவது சாலவும் நன்று சீலமு டைமையைச் சிந்தையிற் காண்க
இல்லற மல்லது நல்லற மன்றெனுஞ் செல்வ வாக்குத் திசைதொறுங் காண்க
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் ஓயாது பேசி யுவந்து காண்க
உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகெனும் ஒண்டொடி ஒளவை தன்னுரை காண்க
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடுமெனுஞ்
சீருடை நன்மொழி சிறப்பே காண்க
6
எண்ணு மெழுத்துங் கண்ணெனத் தகுமெனும்
வண்ணச் செய்யுளின் வளத்தினைக் காண்க ஏவா மக்கள் மூவா மருந்தெனுந் தேவா மிர்தஞ் சிந்தையிற் காண்க
ஐயம் புகினுஞ் செய்வன செய்யெனும் பொய்யில் வாசகம் புந்தியிற் காண்க ஒருவனைப் பற்றி யோரகத் திருவெனுந் திருமொழி தன்னைத் தேடிக் காண்க ஒதாதார்க் கில்லை யுணர்வோ டொழுக்கம் வேதா கமத்தின் விதியினைக் காண்க
ஒளவியம் பேசல் ஆக்கத்திற் கழிவெனுந் திவ்விய வாக்கைத் தினமுமே காண்க அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடெனும் அஃகுத லில்லா வரும்பொருள் காண்க.
7
10
12
13

நற்சிந்தனை 3 I5。 கூறுவார் கோடிபாவம் நீறுமே
வஞ்சி விருத்தம் கூறுவார் கோடி பாவம் நீறுமே நெஞ்சி லெண்ண ஆறுவா ரகத்தி லீசன் சேருமே சிந்திப் பாயே. − சிந்தித்துத் தெளிந்தார் தம்மைப் பந்திக்க மாட்டா பாவம்
பொறிவழி போகார் நல்லோர்
அறிவினு ரறிவார் திண்ணம். 2 இருவினை சேரா தீசன் திருவடி சேர்வார் தம்மைக் குருவருள் கொண்டார் தம்மைத் திருவருள் சேரும் மெய்யே. 3
இருவருங் காண வீசன் அருவமு முருவு மாவான் இணங்கியே யேத்து வாரை வணங்குமே மண்ணும் விண்ணும். 4
வேண்டும்
நமச்சிவாய வாழ்கவென நயந்து பாடவேண்டும்
-நயந்து பாடவேண்டும்
நமனுக்கிட மில்லையென வியந்து கூறவேண்டும்
இமைப்பொழுதும் மறவாமல் ஏத்தி விடவேண்டும்
ஏத்தி விடவேண்டும் -- ۔
எமக்குக்குறை வில்லையென வாழ்த்தி விடவேண்டும். 1.
சமயநெறி கடவாமல் தான்வாழ வேண்டும்
-தான் வாழ வேண்டும் தன்னைப்போற் பிறரையெல்லாம் நேசித்திட வேண்டும் உமையம்மை திருவடியைக் கும்பிட்டிடவேண்டும்
... . . . -~கும்பிட்டிடவேண்டும் உடன்பிறந்தா ரோடுறவு கொண்டாட வேண்டும். 2

Page 163
36 நற்சிந்தனை
பட்டதுபட்டேற்றும் கண்டவரும் விண்டதில்லை விண்டவருங் கண்டதில்லைத் - தங்கம் வேறுபொரு வில்லையெடி. பண்டயனும் மாலுந்தேடிப் பார்க்கொணுது நின்றரெடி-தங்கம் என்றுமே யுள்ளதெடி, 2 பட்டதுபட் டேற்றுமென்று பட்டினத்தார் சொன்னுரெடி-தங்கம் இருந்தபடி யிருக்குதெடி. 3. பொறியஞ்சும் வென்றவர்தம் பூஷணமா யுள்ளதெடி -தங்கம் நெறியா யிருந்திடெடி. 4 சித்தத்திலே தித்திக்குந் தேனைநீ யுண்டிடெடி-தங்கம் தீராநோய் தீருமெடி. 5 அட்டாங்க யோகத்திற்கும் அப்பாலே யுள்ளதெடி-தங்கம் ஆரறிவா ரென்ருரெடி. 6 கட்டுப்ப டாமனத்தைக் கட்டிவிட்டால் பூமியிலே-தங்கம் தட்டுப்பா டில்லையெடி. .7 வலமிடமா யோடுகின்ற வாசியின் நிலையறிந்தால்-தங்கம் வாழ்வுனக் குண்டாமெடி. 8 தச்சன்கட்டா வீட்டிலே தாவுபரி கட்டிவிட்டால்-தங்கம் w அச்சமினி யில்லையெடி. 9 பிறப்பிறப் பில்லாத பெருமான் திருவடியைத்-தங்கம் மறக்க முடியுமோடி. 10

நற்சிந்தனை - 317
ஐந்தெழுத்தை நெஞ்சகத்தில் துஞ்சாமல் சொல்லுமவர்-தங்கம் துரியத்தில் வாழ்வாரெடி.
இன்சொல் விளைநிலனய் ஈதலே வித்தானுல்-தங்கம் இன்பம் பெருகுமெடி, 12
துட்டச் சமணர்கள்தம் துடுக்கை யடக்கினவன்-தங்கம் மட்டில்லாத் தெய்வமெடி, 13
நன்மையுந் தீமையும் நாமல்ல வென்றுகண்டால்-தங்கம் மயக்க மொழியுமெடி. 4
சுருதியோ டாகமங்கள் சொல்லமுடி யாதபொருள்-தங்கம்
கருத்தி லிருத்திடெடி, 15 விருத்தணுய்ப் பாலணுகி வேடிக்கை செய்தவனைத்-தங்கம் வேண்டிப் பணிந்திடெடி. 16
፵፭
அறிவை அறிவாலே அறி இராகம்-பைரவி தாளம்-ஆதி
usis)
பொறிவழிப் புகுத்துதே பொல்லாத மனமையோ போக்கு வரவில்லாப் புண்ணியனே கண்பாராய்.
அநுபல்லவி அறிவை யறிவாலே அறியெனப் பெரியோர்தாம் அன்றுசொன் ஞரதை ஐயை யோமறந்து. (பொறி)
. சரணம்
கிறியுங்கீழ் மையுஞ்செய்து கீழும்மே லுஞ்சென்று நெறிவழிச் செல்லாமல் நெஞ்சு கலங்குதே நீயேநா னெனவெண்ணி நேசிக்க எனக்குன்றன் நிசசொட் ரூபங்காட்டி நேரில்முன் வாராயோ. (பொறி)

Page 164
818 நற்சிந்தனை குருமணி
புலனவென்ற பெரியோர்க ளுளம்பூத்த மணி
பொள்ளாமணி யென்றும் புதுமணி இலமென்று வந்தடைந்தா ரிடும்பை கெடுக்கும்மணி
எவராலும் விலைமதிக்க வொண்ணு மணி பலநிறமாய்ப் பாரினிடைத் தோற்றும் மணி பச்சைமால் மெச்சிப் பணியும் மணி இலங்கையிலே யெங்கு மிருக்கும் மணி
என்னைப் பணிகொண்ட குருமா மணி.
கசிந்துருகிப் பாடுவார் காணும் மணி
கண்மூன் றுடைய கதிர்மா மணி − வலிந்தென்னைப் பணிகொண்ட வண்ண மணி
மலரோனும் மாலவனுங் காணு மணி இந்தோடு கங்கைசென்னி யேந்தும் மணி
இளநாகம் -மேனியிலே சாத்தும் மணி அந்தமணி இலங்கையிலே வாழும் மணி ,
ஆரேனும் தேடுவார்க் ககப்படுந் தெய்வமணி. 2
பந்தமெனும் பாழிருளைக் கிழிக்கும் மணி
பரவுவார்க் கிலவசமாய்க் கிடைக்கும் மணி அந்தமுட னதியில்லா அரும்பொன் மணி
அதிசயங்க ளநேகமெல்லாங் காட்டும் மணி முந்திய மணிக்கெல்லாம் முதலான மணி
மூவர்களுந் தேவர்களும் பணியும் மணி இந்தவளஞ் சேரிலங்கை வந்த மணி
எனையாண்ட குருமணியென் சொந்த மணியே. 3
ஓம் சிவாயநம
ஓம் சிவாயநம என்று சொல்லு , உண்மை முழுது மென்று வெல்லு நாம் நாம் நாம் என்று நில்லு நரக மோட்சம் நாடாமல் தள்ளு போம் போம் வினையென்று கொள்ளு பூரண நிட்டையிலே நில்லு - - - - - வீம்பிடும்பை யகங்காரம் கல்லு - விண்ணும் மண்ணும் கைவசமாய்த் துள்ளு. 1

நற்சிந்தனை 39
சற்குருவின் பாதத்தைப் போற்று தன்னைத் தன்னல் அறிந்து தேற்று நிர்க்குண நிட்டையிலே யேற்று நீநான் என்பதை மாற்று மல்லாகத்தில் சுன்னகத்தான் வீற்று மாசற் றிருப்பா னென்று சாற்று பொல்லாப் பிங்கில்லையென்று போற்று போக போக்கியம் எல்லாம் மாற்று. 2
அன்பருடன் கூடிநீ வாழ்த்து புண்ணிய பாவத்தை வீழ்த்து போக்குவர வில்லையென்று தேற்று எல்லாரி டத்து மன்பு காட்டு ஏகனநேகன் என்று நாட்டு நல்லூரான் திருவடியே பாட்டு நமச்சிவாய வாழ்க வென்று சூட்டு. 3
போக்கும் வரவு முள்ளா னில்லான்
போக்கும் வரவு முள்ளா னில்லான்
பூத கணங்கள் சூழப் பொலிவான்
தேக்கு மடியார் சிந்தையி லுள்ளான்
திருவே யுருவாய்ச் செறிந்த சீமான்
காக்குந் தலைவன் கருணை யுடையான்
கண்மூன் றுடையான் கால காலன்
பூக்கும் பொழில்சே ரிலங்கை வாழ்வான் 2:ዶ , -
பொன்ன ரடியைப் போற்ருய் மனனே
என்று மினியான் ஏத்து மடியார்
இடர்சே ராமே விடைமேல் வருவான் நன்றுந் தீது முள்ளா னில்லான்
நாரி பாகன் ஞான வுருவான் அன்று மின்று மென்று மாகி
யந்த மாதி யில்லாப் பெருமான் குன்றும் மலையும் பொலியு மிலங்கை
குடியாய்க் கொண்டா னடிகள் போற்றுதுமே 2

Page 165
320 நற்சிந்தனை
தம்மையன்றி வேறென்றுங் காணுர்
தம்மைத்தம் மாலறிந்த சாலப் பெரியோர்கள் தம்மையன்றி வேறென்றுந் தாங்காணுர்-பின்னைப் பிறப்பும் இறப்புமில்லைப் பேய்பித்தர் போல்வார் மறப்பின்றி வாழ்வார் மகிழ்ந்து.
மதியு மிரவியும் மன்னுஞ் சமாதி பதியும் படியாக்கிப் பாழ்த்த-விதிவென்று வாழ்வாரை வாழ்த்தி வளரு மடியவர்க்குத் தாழ்வுண்டோ தம்பிநீ சாற்று. 2
சாந்தம் பொறுமை தயைதவந் தானமிகு மாந்தருக்குத் துன்பம் மருவுமோ-சாந்தனையும் அன்னர்பா லன்புவைத்து ஆரறிவார் என்றகுரு தன்னுணை போற்றல் தவம். 3.
தவத்திற் சிறந்தார் தமதுயிர் போல உவப்புடனே யோம்பியொரு பொல்லாப்பு-மில்லென்ருன் தாளிணையைப் போற்றிச் சகத்துடன் கூடியே வாழக் கருதுவதே மாண்பு. 4
மாண்டார் மனத்தானை மண்விண்ணு மொன்முகி நீண்டான நெஞ்சமே நீநினைப்பாய்-வேண்டாமை வேண்டுவோர் வீடு பெறுவாரே வையத்தை ஆண்டாலு மென்ன மறி. 5 . سه
அப்படி யுள்ளதென் றன்பாகச் சொல்லியே அப்பன்செல் லப்ப னருள்தந்தான்-இப்பார் இருள்கடிந் துள்ளத் தெழுந்தவெல் லென்றன் அருள்சேர் மாதவத்தோ னன்று. 6

நற்சிந்தனை v 32
தேவாதி தேவ இராகம்-மோகனம் தாளம்-ஆதி
தேவாதி தேவ அடியார் இடர் பொடிபட அருள் தரு. (தேவாதி)
அநுபல்லவி −
ஆபாச மாபாச ஆழி வீழாவடிய வரும் கோபாலனும் மற்றுங் கோகனகத்தானுந் துதி. (தேவாதி)
சரணங்கள்
காலும் புன லணலும் வானும் நெடுநிலனும் சசி ரவியுமான மாவடிவா மேலை யெழுவிடத்தை மிடற்றி லடக்கிவைத்த விகிர்தன் எனையுடையான். (தேவாதி)
கலகஞ் செய்யும் இருண்ட காலனும் நெஞ்சமஞ்ச உலகங்களும் நடுங்க நடனமிடும் துதிமிகு யோகசுவாமி சொன்ன கீதம் விளங்கச் சதுர்வேத முழங்கத் தாண்டவமாடும். (தேவாதி)
செல்வன் சீரடிகள் காப்பு ஒருபொல்லாப்பு மில்லை யென்னு மோசையோடுவந்து
. . . நோக்கித் திருவருள் தீக்கை செய்த செல்வன்சீ ரடிகள் காப்பு. 1 ஆரறி வாரென் றுன்னு மரியமந் திரத்தைத் தந்த ,
பேரறி வுடைய செல்வன் பெய்கழ லென்றுங் காப்பு. 2
முழுவது முண்மை யென்று முகமலர்ந் v
- தெனக்குச் சொல்லிப் பழுதற வாண்டு கொள்ளும் பாதபங் கயமே காப்பு. - 3 பாராதி -பூத மெல்லாம் பரமன்றன் வடிவ மென்றே சீராக வெடுத்துச்சொன்ன செல்வன் தாளென்றுங் காப்பு.4 காயமே கோவிலாகக் கண்டுபா வனைசெய் யென்று நேயமா யெனக்குச் சொன்ன நிமலன்தா ளென்றுங்
. . காப்பு." 5 பற்றினற் பிறந்திறந்து பாரினில் சுழன்ரு யந்தப் ? பற்றிலை விடுவாயென்ற பரமன்தா ளென்றுங் காப்பு. 6
2.

Page 166
322 நற்சிந்தனை
வந்தனை செய்திடடா தம்பி
உண்ணுதே யுறங்காதே யூரூராய்த் திரியாதே பெண்ணுசை வையாதே-தம்பி!
பிரமத்தை யறிந்திடடா- 1
கண்ணுரக் கண்டிடடா காலமே லேற்றிடடா விண்ணுணம் பேசாதே-தம்பி! வேறுபொரு வில்லையடா. 2
எண்ணும லெண்ணிடடா இயைந்தபடி நடந்திடடா மண்ணுசை வையாதே -தம்பி! மலரடியைப் போற்றிடடா. 3
சுன்னகத் தானையென்றுந் தோத்திரம்நீ செய்திட்டா அன்னை பிதாக்குருவை-தம்பி! அன்புடனே போற்றிடடா, 4.
வலமிடமாய்ச் செல்லுகின்ற வாயுவைநீ தம்பியடா பலமுனக்கு வந்துவிடுந்->தம்பி! பற்றற்று நின்றிடடா, 5
குலநலம் பாராதே கோபம்நெஞ்சில் வையாதே தலமாறுந் தாண்டிடடா-தம்பி! தனிமையைநீ நாடிடடா. 6
உண்டில்லை யென்றுசொல்லி யுரையாட வேண்டாமடா கண்டு களித்திடடா-தம்பி! கருணைவெள்ளம் பெருகுமடா. 7
பண்டுசெய்த வல்வினைநோய் பாரிற் பறக்குமடா நன்றென்றுந் தீதென்றுந்-தம்பி!
நடுவாக நின்றிடடா. - - 8 கொன்ருென்றும் புசியாதே குருவாக்கை மறவாதே அன்றுமின்று மென்றுந்-தம்பி! அப்படியே யுள்ளதடா. 9

நற்சிந்தனை 323
மன்றுபறித் துண்ணுதே மாயத்திற் சிக்காதே குன்றுபோல் நின்றிடடா தம்பி! குறைவொன்று மில்லையடா. 10
இந்தப்பத்துப் பாடலையும் இரவும்பக லுஞ்சொல்லி வந்தனை செய்திடடா-தம்பி! வறுமைபிணி தீருமடா.
நினைமின் மாந்தர்காள்
நினைமின் மாந்தர்காள் நினைமின் மாந்தர்காள் நீடூழி சிவதொண்டன் வாழ்க. (நினைமின்) 1
அனைவரு மொன்றப்க் கூடி யவன ஆதரித் தன்பு பாராட்டிப் - , புனைந்து பூமாலை சூட்டிப் புகழ்ந்து (நினைமின்) 2 தினைத்துணைப் போதும் மறவாது சிந்தித்துத் தேவாரம் திருவாசக மோதி. (நினைமின்) 3
முனைத்து வரும்பெருங் கூற்றை யுதைத்த முதல்வனைத் திங்கள் தோறும் நும்மணம். (நினைமின்) 4
அணைந்து வந்து ஆசான் செப்பிய அரிய வாசகந் தருஞ்சிவ தொண்டன. (நினைமின்) 5 கனைக்குங் கடல்சூழ் இலங்கைத் தீவில் கதிரொளி போலொளி பரப்புந் தொண்டனை. (நினைமின்) 6
வினேப்பகை வெல்ல விருது கட்டிய வேத மோதும் வித்தகத் தொண்டன. (நினைமின்) 7
சுனைக்கும் நல்லூர் தூயசற் குருவின் துணையடிமற வாத தொண்டன. (நினைமின்) 8

Page 167
昭24 நற்சிந்தனை
சிவனடி வாழ்க
உலகெலா முணர்ந்த வொருவ னடிவாழ்க அலகிலா நாத னடியிணை வாழ்க ஈருய் முதலா யிருந்தோ னடிவாழ்க மாருக் கருணை வள்ளலடி வாழ்க சிவனெனும் நாமத் திருவுடையான் தாள்வாழ்க என்னை விலகா விறைவனடி வாழ்க அன்னைபோல் வந்த வவனடி வாழ்க பின்னைப் பிறவிப் பெருமா னடிவாழ்க முன்னைவினை தீர்த்த முதல்வனடி வாழ்க எல்லாமா யல்லவுமா யிருந்தோ னடிவெல்க கொல்லான யுரிபோர்த்த குழக னடிவெல்க தில்லையிற் கூத்தன் திருவடிகள் மிகவெல்க எல்லையில் லாத இறைவ னடிவெல்க கல்லான கன்னல் கறிக்கவைத்தோ னடிபோற்றி நல்லோரை நாளும் பிரியா னடிபோற்றி நாரணனுங் காணுத நாத னடிபோற்றி ஆரணமுங் காணு வடியிணைகள் தாம்போற்றி பூரண மான புண்ணியன்றன் தாள்போற்றி எல்லையில் லாம லிறந்து பிறந்தேனை எல்லையில் லாத கருணையின லாண்டபின்பு கண்டேன் களித்தேன் கலங்காத சித்தமின்று கொண்டேன் குளித்தேன் குவலயத்தி லாசையெல்லாம் விண்டேன் வெளிப்பட்டேன் வேறென்றி லிச்சையுமே அண்டாத வண்ண மடிமைகொண்ட பெம்மானே பொன்னன மேனியனே போக்குவர வில்லானே எந்நாளு மென்னை மறவாப் பெருமானே அடியார்த முள்ளமே யாலயமாய்க் கொண்டோனே கடியார் புரமூன்றுங் கண்ணழலாற் செற்றேனே முடியா முதலே முதலீறு மானவனே அடியேனை யாட்கொண்ட வையா பெருமானே பொடியாரும் மேனியனே பூங்குழலாள் பாகனே படிமீதில் வேடனிட்ட பன்றியூ னுண்டானே

நற்சிந்தனை Y 325
அடியார்க் கடியனே யானந்தக் கூத்தனே பாண்டியனுய் வந்துமண்ணிற் பாராண்ட பெம்மானே வேண்டுவார் வேண்டுவதை விரும்பிக் கொடுப்போனே இருநிலனய்த் தீயா யிருந்த விறையோனே மருவார் குழலியொடு மகிழ்ந்தங் கிருந்தவனே அப்பருக்குப் பொற்கா சளித்த பெருமானே ஒப்பிலா வொன்றே யொளியே யெனவழுத்தி எப்பொழுது முன்னை யிறைஞ்சத் தப்பிலாத் தண்ணருளைத் தந்தாள் தனிப்பொருளே.
ஆள வேண்டுமே
இராகம்- சங்கராபரணம் தாளம்- திரிபுடை
sis)
சஞ்சல மிகவும் மிஞ்சுதே சற்குருநாதா தமியேனை யாள வேண்டும். (சஞ்சல)
அநுபல்லவி
வஞ்சம் பொருமை கோபம் வரவர நெருக்குதே வாணு வினசை மிகமிகப் பெருக்குதே. (சஞ்சல)
gy Goto
எப்படிச் சொன்னலும்நீ யேனென்று கேளாமல் செப்படி வித்தை செய்தல் திருவருட் காகுமோ ஒப்புவமை யில்லாத அப்பனே செல்லப்பனே உன்றுணே யல்லாம லொருவரு மில்லை ஐயா. (சஞ்சல)

Page 168
326 நற்சிந்தனை தீருவருள் தருவாயே
இராகம்-மோகனம் தாளம் -ஆதி
பல்லவி தெய்வமே திருவருள் தருவாயே நீ.
அநுபல்லவி வையக மீதில் வணங்க அறியேன் பொய்யும் புலையுங் கொலையுந் தவிரேன். (தெய்வமே)
சரணங்கள்
கையும் மெய்யுங் கருத்துக் கிசைய ஐயா தந்தனை யதையா னறியேன் மெய்யா யுன்றன் மெல்லடிக் கபயம்
மேலும் மேலும் உனையான் வேண்டுவன். (தெய்வமே) செந்நெலுங் கன்னலுஞ் செறியும்நல் லூரில் dh
தேசிகன் தாசன் யோகசுவாமி சொல்லுங் கீதம் சொல்லுவார் கேட்பார் துன்பம் நீங்கி யின்ப மோங்கும். (தெய்வமே)
தாளம் பேர்டு தாளம்போடு தாளம்போடு தாளம்போடு தன்னையறிந்தோ மென்றுசொல்லித் தாளம்போடு 1 ஆழநீள மில்லையென்று தாளம்போடு அவனேநா மென்றுசொல்லித் தாளம்போடு 2 வாழுவோ மென்றுவென்று தாளம்போடு மாளமாட்டோ மென்றுசொல்லித் தாளம்போடு 3 நாம்நாம்நாம் என்றுசொல்லித் தாளம்போடு / நம்மையறிந் தோமென்று தாளம்போடு 4. போம்போம் வினையென்று தாளம்போடு பெம்மானுக் கடிமையென்று தாளம்போடு 5 ஒம்ஓம் என்றுசொல்லித் தாளம்போடு உள்பொருள்நாம் என்றுசொல்லித் தாளம்போடு. 6

நற்சிந்தனை 3.27
சமயங் கடந்த சங்கரா வடைக்கலம்
நேரிசையாசிரியப்பா
உவமையொன் றில்லா வொன்றே யடைக்கலஞ் சமயங் கடந்த சங்கரா வடைக்கலம் அமையு மடியா ரன்பே யடைக்கலம் உமையாள் மகிழு மொருவா வடைக்கலம் எந்தா யடைக்கல மிறைவா வடைக்கலஞ் சிந்தனைக் கரிய சிவமே யடைக்கலம் அந்தமு மாதியு மில்லாய் போற்றி அந்தமு மாதியு முள்ளாய் போற்றி ஒடும் பொன்னும் ஒன்ருய் நோக்குவார் தேடும் பொருளே செல்வமே போற்றி பாடு மடியார் பரனே போற்றி வாடு மடியார் மழையே போற்றி தேடக் கிடையாச் சிவமே போற்றி ஆடகத் தில்லை யரனே போற்றி குழைத்தெனை யாண்ட கோவே போற்றி மழவிடை யேறும் மாதவ போற்றி பிழைத்த வெல்லாம் பொறுப்பாய் போற்றி தழைத்தநற் கொன்றைச் சடையாய் போற்றி வரம்பி லின்ப வடிவே வாழ்க கரத்தி லங்கி கலந்தாய் வாழ்க சிரத்திற் றண்மதி தரித்தாய் வாழ்க புரத்தை யெரித்த புங்கவ வாழ்க வாழ்க வாழ்க நின்னடி வாழ்க வாழ்க வாழ்க வையகம் வாழ்க வாணுதல் மங்கையும் மகிழ்ந்தே.

Page 169
32& நற்சிந்தனை
அடைக்கலம் அடைக்கலம் 1
அளவிலா வொன்றே யன்பர்க ளன்பே உலகெலாம் நிறைந்த வொண்சுட ரொளியே மலமிலா முதலே மாசிலா மணியே பலரும் புகழ்ந்துரை பரம தயாளுவே நிலம்நீர் தீகால் வானப் நின்ற அலகிலா வாட லுடைய வப்பனே அழுதபிள் ளைக்காய்ப் பாற்கட லழைத்தாய் தொழுதசுந் தரர்க்காய்த் தூயபொன் வழங்கினய் வழுதிபோல் வந்து மாமுடி தாங்கிப் பழுதி லாத பார்தனை யாண்டாய் அந்தணன் வேண்ட வரிய கூற்றினை வெந்திறற் ருளால் வீழச் செய்தனை கண்ணப்ப னுானைக் கலந்து புசித்தாய் என்பது கேட்டுன் னிணையடி யடைந்தேன் என் பிழை யெல்லாம் பொறுப்பதுன் கடனே பொன் போல் மதியம் பொதிந்த சடையாய் அடைக்கலம் அடைக்கலம் அப்பனே படைக்கலம் நின்திருப் பஞ்சாக் கரமே.
அடைக்கலம் அடைக்கலம் 11
அடைக்கல மடைக்கல மரனே யடைக்கலம் விடைக்கல னுகந்த வேதாந்த விளக்கே ஆறும் பிறையுஞ் சூடிய வரசே கூறு மடியார் தங்கள் குருவே உருகி யுருகி யடியே னுணரப் பெருவரந் தருவாய் பேரரு ளாளர மாசிலா மணியே மன்னர்தம் மன்னவா காசி வாழும் கண்ணுதற் பரனே பூசிக்கும் யோக நாதன் பொற்பே வாசித்துக் காண வொண்ணு மறையே இந்திரன் முதலோ ரறியா விறையே சந்திரன் தயங்குஞ் சடையுடை யோனே அந்தமு மாதியு மில்ல3 வமலா சந்தத முன்பதஞ் சாற்றுவார் தமக்குச் சாலோக பதவி வீற்றிருக்க வைத்த விமலா வடைக்கலம்.

நற்சிந்தனை 329
அப்படியே உள்ளது
ஒருகறியும் ஒருசோறும் ஆக்கியுண்ணும் ஆசான்
ஒருபொல்லாப்பு மில்லையென்றன் உணர்.
ஒதாமல் வேதம் உணர்ந்த குருநாதன் உண்மை முழுதுமென்ருன் உணர். 2
நாமறியோம் என்ற நல்ல திருவாக்கை நாமறியச் சொன்னன் நய. 3 முடிந்த முடிவென்று முன்னளில் ஆசான் அடியவர்முன் சொன்னு னறி. 4.
அப்படியே யுள்ளதென அத்து விதப்பொருளைச் செப்பினன் செல்லப்பன் தேர். 5 நீறணியான் காவி யுடையணியான் நீணிலத்தில் தேறவைத்தான் என் முன் சிரித்து. 6 சிரித்துப் புரமெரித்த சிவனேயொப் பானென்ன மரித்துப்பிறவாத மாண்பளித்தான் மதி. 7 பாசத்தால் வெந்துநொந்து பாழாகப் போகாமல் நேசத்தால் ஆக்கினன் என்னை நினை. 8 தேரடியில் வீற்றிருப்பான் சிரிப்பான் சினத்திடுவான் ஆரறிவார் என்பா னவன். 9 பித்தனென்றும் பேசுவார் பேயனென்றுஞ்
சொல்லுவார் சித்தனென்றுஞ் சொல்லுவார் சிலர். 10
ஆர்கொடுக்க வாசையுடன் வந்தாரோ வவரைச் சீர்கேடாய்ப் பேசுவான் தேர்.
நரிபோல் உழலுவான் நாய்போல் திரிவான் பெரியவனென்னும் பேர்படையான் பித்தன். 12
மாருட்ட மாகவே வந்த படிபிதற்றித்
தேருமற் செய்வான் சிரித்து. 13

Page 170
330 . நற்சிந்தனை jTLOTÄ குடியுமல்லேம் நாகநாதன் குடிகானும்
நானென நீயென வேறில்லை யென நகையால் . தானெனைச் செய்தபிரான் அவன் சமர்த் தாரறிவார் கோனெனை யாண்டுகொண்டா னென்றுங் குறைவில்லைத் தேனெனச் சிந்தையுள்ளே யெந்தநாளுந் தித்திக்குமே. 1
பாரவன் விண்ணவன்காண் பன்னும்வேத
மொழியவன்காண் காரவன் கடலவன்காண் கறைக்கண்ட முடையவன்காண் சீரவன் திறலவன் காண் சிரம்பத் துடையானமுன் தேர நெரித்தவன்காண் தேவதேவர் தம்பெருமானே. 2
நாமார் குடியுமல்லேம் நாகநாதன் குடிகாணும் ஏமாந்து போவோமல்லே மினிமறலி தானுமஞ்சேம் சாமாறுந் தணிவிடையன் திருப்பாத மல்லாமல் நாமார்க்குந் தொண்டுசெய்யேம் இனிநாளை நினையோமே 3
போக்கொடு வரவுமில்லைப் பூமிவான மிங்கில்லை நீக்கற வோங்கிநிற்கும் நின்மலன் றன்னையன்றிக் காக்குமோர் தேவுமில்லைக் காலநே ரமுமில்லை நோக்குவார் தங்கட்கெல்லாம் நுணுக்கமாய்த்
t தெரியுமன்றே. 4
எத்திக்குமாகி யிருக்குந் தெய்வமே இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி பல்லவி முத்திக்கு வழிகாட்டும் -என்றன் மூட புத்தியை யோட்டும் k அநுபல்லவி எத்திக்கு மாகி யிருக்குந் தெய்வமே ஏழையடி யார்க்கு இரங்கு முய்யவே (முத்தி)
syGrotto சித்தத்துட் டித்திக்குந் தீங்கரும்பே தெளிந்த தேனே சீனியே பாகே பத்த ருள்ளத்தில் பாக்கிய வானே பாவ மனத்தும் நீக்கியாள் கோனே. (முத்தி)

நற்சிந்தனை 33 I. கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வம்
இராகம்-எதுகுலகாம்போதி தாளம்-மிஸ்ரம்
uრსის6მ. ኔ கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வமே கடைக்கண் பார்நீ தெய்வமே.
அநுபல்லவி ஒருத்தர் துணையுமில்லை யுன்றுணை யல்லாமல் உலகுயிர் பரமாகி நடிக்கின்ற செல்வமே. (கருத்தில்)
சரணம் எங்கெங்கு சென்ருலும் அங்கெங்கும் நீயே ஈசா மதுராபுரி வாசா மீனுட்சி -- நேசனே சொக்கநாதா யோகனுக்கருள் தாதா நின்று மிருந்துமுனை யென்றென்றும்
போற்றநான். (கருத்தில்)
அரகர சிவசிவ இராகம்-சுத்தபங்களா தாளம்-ஆதி
பல்லவி - . . அடியா ருள்ளத்தே வாழும் பரனே அஞ்சுவ தகற்றி யாள்வதும் பரமே
அநுபல்லவி
அரகர சிவசிவ சம்போ சங்கர
அறிஞரு மறிவரி தாகிய பொருளே (அடியா)
சரணம் " ... .
அறிவாருளரோ அகம்பிர மாஸ்மி
வெகுபலம்வாசி சமாதிநீ யோசி
வேண்டும் வேண்டும் அருள்நீ தாதா விக்ந விநாயக விமலா நமோ நமோ (அடியா)

Page 171
332 நற்சிந்தனை
இடர்படாதிருக்கத் தயவுவை - இராகம்-நளினகாந்தி தாளம்-ஆதி
- ubຄbຄທີ எனதுயானெனும் இடர்படா(து) இருக்கத்தயவுவை எம்பிரான்
அநுபல்லவி கண்ணுதலே கறைக்கண்ட நீ கருணுணந்த காமாட்சி பாகா வா (எனது)
Freyyub எந்நேரமும் உன்றன் பொன்னரடி ஏத்தித்தொழ வேழைக் கேயருள் அன்னே யுன்னை யல்லால்துணை இம்மாநிலம் எவரு மில்லையே. (எனது)
நிஜமா மான்மா தெளி இராகம்-உமாபரணம் தாளம்-ஆதி
பல்லவி
நிஜமா மான்மா தெளி அரகர சிவ நெஞ்சே யஞ்சேல் நீ வரோதய
V அநுபல்லவி தசமுகன் நெரிதரத் தனதடி யூன்றிய சாமிநாத பாதமே ஒதுமந்திரம் நீதமே (நிஜமா)
சரணம் சுதிரச பூரண பரப்பிரம தாரக தூய அற்புத சுகமார மாரண சுரசேவித தொந்தத்தசி சுந்தரா னந்தனே துய்யா மெய்யா சுபானுபவ.
(நிஜமா)

நற்சிந்தனை W 333
ஓங்கார நாதமே
இராகம்- ஹரிகாம்போதி தாளம்- ஏகம்
பல்லவி ஓங்கார நாதமே யோதவொண்ணுப் பிரமாதமே
அநுபல்லவி தாந் தாந் தோம் என்றிடு மோசை அற்புத விற்பன நிர்க்குண நேயம் (ஓங்கா)
சரணங்கள் உத்திக்கும் எத்திக்கும் அவரவர் சத்திக்கும் பத்திக்கும் அதிரச (ஓங்கார) ஒதும் வேதம் இதமுடன் - அன்றும் இன்றும் ஒருவிதம் (ஓங்கார) உம்பர்களு மிம்பர்களும் தினசரி எண்ணரிய சித்தர்களும் மிகவேத்தும் (ஓங்கார) ஒதிடவே யருள் பாலிக்குமே நன்மை பூரிக்குமே மனஞ் சேவிக்குமே யருள் (ஓங்கார) உயிரை யெழுப்பிச் சிவத்தி லேமனம் பயிலப் பயிலச் சுவைக்கு மேதினம் (ஓங்கார) ஆதரித் திணிமேற் சுகித்திட நீநினைத்திடு ஆசைவைத்திடு (ஓங்கார)
தொகையற நீங்காது எந்தநாளு மினிது முடிந்து இளந்தென்றலும் வீச விபுதர் பலர் ஒன்றுகூடி அஞ்சலஞ்சலென்று செஞ்சொல் மிஞ்ச நீங்காரம்பாட வருள்கூட நல்ல சித்தர்கள் பக்தர்கள் தித்தி மத்தளம் தத்தித் தகு தகு. -

Page 172
334 நற்சிந்தனை
திருவருட் செய லெப்படியோ இராகம் - காப்பி தாளம்-சதுர்சஜாதி ஏகம்
பல்லவி திருவருட் செய லெப்படியோ சீமானே கோமானே
அநுபல்லவி திருவளர் நல்லூர் மேவிய தேவே செல்லப்பா v (திரு)
சரணங்கள் வரவர மனத்திற் கவலைகள் மிஞ்சி வலிந்துகவரும் மாய வாழ்வினுக் கஞ்சி அரகரசிவனே சங்கராவென்று போற்றினேன் புகழ் சாற்றினேன் (திரு) இரவும் பகலு மிணையடி மறவேன் இனியடியேன் மண்ணிற் பிறவேன் பரவும் யோக சுவாமிகட் கன்பு
காட்டுமோ வொளி சூட்டுமோ! (திரு)
நீ வா தா அருள்
இராகம்-ஹம்சத்வனி தாளம்-ஆதி
Y. பல்லவி -, -,
நீ வா தா அருள் பத்திசெய்வோம் சிவ
நித்திய ஆனந்தம் நிர்மல சகிதம்
அநுபல்லவி ஆசாபாசம் ஆகிய விசனம் , நாசமாகவுன் ஞானப் பிரகாசம்
தாதா தொம்தொம் தகுதகு தகுதகு தளங்கு தரிகிட தக்கிட கிடஜாம் (நீவா)

நற்சிந்தனை 3.35
SFDJGTo
பாராய் என்முகம் பரமயோகப் பரப்பிரவேசந் தாராய் சகலலோக வஸ்ய சம்மதம் பராபர பரிபூரணம்
கோலாகல குமாரி கவுரி கும்பிடும் புராரி பிரமாதிதேவர் கொண்ட கோடி பழிவிண்ட விபுதன் குஞ்சிதாம் புயமலர் நெஞ்சில் வைத்திடு குற்ற மற்றசிவ யோக நற்றவன் குருகுல வாசந் தருமொரு வசனங் கருது மவர்மிடி காணு தோடுங் காவாய் அடியனைப் பூணு யன்பு ஹம்சத்வனி பேசிடு பேரின்பம் (நீவா)
' ennsnamu!
மறவாதே என்மனசே!
இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி
பல்லவி
குருராஜ ராஜ பரசிவ பக்தி தன்னைநீ மறவாதே யென்மனசே
சரணங்கள்
அச்சுதன் அயன்முதல் அமரருங் காண்கிலர் அடிமுடி யில்லை யறி அண்டசரா சரங்கள் அவையனைத்தும் அவனே தானென வறியென் மனசே (குருராஜ)
தவஞ் செய்வோர்க் கனுகூலன் சர்வ சாட்சிப் பிரதாபன் அவனிவன் என்னும் மாயம் அனைத்து மில்லாத சிவயோக நாதன் விசுவாசன் சிவராசன் (குருராஜ)

Page 173
336 நற்சிந்தன்ை
தர்மமெங்குந் தங்க அருளையா V இராகம்-காம்போதி தாளம்-ஆதி
பல்லவி
ஐம்பொறி மாட்டு மனசுபோய் அலைந்திடிலோ பழி பழி
அநுபல்லவி நம்பினேன் நானே நடராஜ நீவாகா நியாயந்தானே கைவிடச் சற்குருநாதா (ஐம்)
சரணம் t சர்வகுணுதி சசிதவழ் சேகர சாமுண்டி சமேத சாமி சர்வாலங்கிர்த சகள நிஷ்கள மங்கள சுரசேவிதபானு சித்தம்வைத்து ஆண்டிடு சின்மய ஜெகசோதி சாயுச் சியமும் வேண்டினேன் ஆண்டி சர்வதியாகந் தந்தேன் தாளைத் தலையிற் சூட்டிடு தர்மமெங்குந் தங்கக் குறைகள் மங்க அருளையா (ஐம்)
www-Wawa wanamwikhawhnw
அருவமு முருவமு மானுன் ஒரு பொல்லாப்பு மில்லையெனவே-முன்னுள்
ஒதினன் உண்மை முழுது மெனவே பருவத்தில் மழைபெய்தாற் போல-ஐயன் பந்தத்தை நீக்கி வளர்த்தா னன்பாலே 2 அருவமு முருவமு மானன்- என்னை ஆட்கொள்ள வந்தான் நல்லூரிற் றணுய் 3 கருவிக ரணங்க ளெல்லாந்-தத்தம் கருமத்தை விட்டுக் காவலுக் குள்ளாய் 4. வருவதும் போவது மின்றித்-தூய மெளன நிலையில் நிலைத்தது தானே 5
ஆரு மறியா ரெனவே - அப்பன் "அப்படி யுள்ளதென் முனறி வாயே. -x 6

நற்சிந்தனை 337
உன்னடிமை நான் ஐயனே
இராகம்-கானடா தாளம்-திஸ்ரம்
பல்லவி
உன்னடிமை நான் ஐயனே உளமகிழ்ந்து பார் மெய்யனே
சரணங்கள்
பொன்னடி மாதவர் சேர்பெரு முத்தனே
பூங்கொடியாள் பங்கா
உன்னடி யென்முடி வைத்தினி யாளுவாய்
ஓங்காரத்துட் பொருளே (உன்)
ஓயாமற் பொய்பேசி உழைக்கின்ற வுலுத்தரை
உறவென்றிருந்து விட்டேன் வாயார வாழ்த்தி வணங்கு மடியாரை
மனசாரப் போற்ற வைப்போய் (உன்)
சித்தத்துட் டித்திங்குந்தேனே பாலென்று
சிந்தனை செய்த டியேன் இனியுத் தமரோடு பிரியாமல் வாழ
உன்னருள் தாருமையா (உன்)
நீயே நானென்று நினைக்கும்மெய் யடியாரை
நேயத்தொடு வணங்கிடுவார் தாயே யனைய சங்கரனே வந்து
தண்ணருள் தாருமையா (உன்)
22

Page 174
338 நற்சிந்தனை
நீ அருளாவிடிற் கதியேது
இராகம்-அடாணு தாளம்-ஆதி
பல்லவி
நீ யருளா விடிற் கதியேது-ராமா நீ ரவிகுல திலகம் உலகுக் கெல்லாம்
அநுபல்லவி
தாயுந் தந்தையுஞ் சகலமும் நீயே தமியேன் உயிருக்குயி ராகிய பரனே (நீயரு)
agFJRRTo
பாற்கடல் தன்னிற் பள்ளி கொள்வோனே பாக்கிய லட்சுமி தன்மண வாளா ஆர்க்கு முணர்வரி தாகிய பொருளே அடியேன் மனத்தைக் கொள்ளை கொண்டவனே நீக்கமற் றெங்கும் நிறையும் நின்மலனே நினையும் யோக சுவாமிதன் துணையே போக்கும் வரவு மில்லாப் பொருளே பூதலத் துள்ளோர் போற்றும் அருளே (நீயரு)
சிவசிவ வென்றுசொல்லிப் பேணேனே இராகம்-செஞ்சுருட்டி தாளம்-ஆதி
பல்லவி.
தில்லையம்பலத்தைக் கண்ணுற் காணேனே சிவசிவ வென்று சொல்லிப் பேணேனே
அநுபல்லவி
நல்லவர் கூட்டத்தைத் தேடிநா டேனே அல்லும் பகலும் பாடியா டேனே (தில்லை)

நற்சிந்தனை 339
சரணங்கள்
கல்லை நிகர்த்த மனமுரு காதோ காமக்குரோத மோகங் கருகாதோ (தில்லை) எல்லை யில்லாத வின்பம் பெருகாதோ ஏழைகள்மே லிரக்கம் வாராதோ (தில்லை) நில்லாத காயத்தை நான்வெல் லேனே நீயேநா னென்றுசொல்லி நில்லேனே (தில்லை) உல்லாச மாக வெங்குஞ் செல்லேனே உண்மையைச் சொல்லிச்செல் கில்லேனே (தில்லை) இல்லையென் றெவர்க்கும் நான் சொல்வேனே இனிய செஞ்சுருட்டியைக் கல்லேனே (தில்லை)
சிவனே உன் தரிசனந் தாராயோ இராகம்- ஆனந்தபைரவி தாளம் -ஆதி
u sibsna சிவனே யுன்தரிசனந் தாராயோ தேவாதி தேவர்தொழும் பெருமானே
அநுபல்லவி தரிசனந் தாராய் தமியேனைக் காவாய் தத்துவா தீதனே சங்கர சிவசம்போ (சிவனே)
சரணங்கள்
அரிய விருவரும் அறியாத விமலனே கரியுரி போர்த்த கருணைக் கடலே திரிபுர தகனனே தில்லையில் வாசனே சிவகாமி யம்மை பூசிக்கு மீசனே (சிவனே) வரவர மனசு சங்கடப்படுகுதே வாராய் துயர்தீராய்: கண்பாராய் என்னைக்காவாய் இரவும் பகலுமுன்றன் இணையடி மறவாமல் பரவி யானந்த பைரவி ராகம் பாடி. (சிவனே)

Page 175
340 நற்சிந்தனை
எல்லாஞ் சிவன்செயலென்றிருப்போம் தோன்ருத் துணையை யென்றுந் துதிப்போம் தூயதிருப் பாதத்தைப் பதிப்போம் ஈன்ருளையு மப்பனையும் மதிப்போம் எல்லாஞ் சிவன்செயலென் றிருப்போம் ஆன்ருேர் விதித்தபடி நடப்போம் அந்திசந்தி மந்திரத்தைப் படிப்போம் நான் ரு னெனுமிரண்டுந் தடுப்போம் நாதனடி யிணைக்கீழ்க் கிடப்போம் வஞ்சம் பொருமை நெஞ்சில் வையேம் சஞ்சலத் தால் மிஞ்சி நாங்கள் நையேம் கொஞ்சம் கொஞ்ச மாய்மனத்தை வெல்வோம் கூடாத கூட்டத்தில் நாங்கள் செல்லோம்
வாரா வரவினில் வந்த சஞ்சீவியே
தோடுடைச் செவியனே தோன்றத் துணையே பீடுடைப் பெரியோர் பெட்டகத் தணியே தந்தையுந் தாயும் மைந்தருந் தமரும் எந்தையே நீயென் றெண்ணியெப் போதும் விந்தைசே ரவர்பணி வேண்டியா னுற்றி இவ்வுல கத்தி லிறுமாப் புடனே சந்ததம் வாழத் தயைபுரி யுமையாள் வந்தனை புரியும் வண்ணமே ணியனே கந்தமுங் காயுங் கடும்பசி மூடியே வந்திடி னுண்ணும் மாசிலா மனத்தர் சிந்தையிற் குடிகொள் தேசிக மூர்த்தி தீராக் கோபமுஞ் சித்தக் குரோதமுஞ் நீரா யுருக்கும் நெறியிது காணெனத் தாரா விடில்யான் தளையுண் டுழல்வேன் வாரா வரவினில் வந்தசஞ் சீவியே , பழியொன்று பூணு வழிபடு தெய்வமே
ஒழியா வின்பமாய் நின்று − தெளியாவென் சிந்தை தெளிந்திடச் செய்யே

நற்சிந்தனை 341 நல்லூரில் ஆட்டக்காரன்
நல்லூரில் ஆட்டக்காரன் நான்வணங்கும் குருநாதன் கல்லைக்க ரைக்குஞ்சித்தன் கருணைபூத்த திருமுகத்தான்
இல்லை யென்னுஞ்சொல்லை இல்லாம லாக்கிடுவான் அல்லும் பகலுமென்றன் அகத்தினிலே வாழ்ந்திடுவான்
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் உண்மை
முழுதுமென்பான் கருப்பையிலே வாராமல் காத்தென்னையாண்டுகொண்டான்
தேரடியில் வீற்றிருப்பான் செல்லப்பனென்னும் பெயரா 7 ஆரறிவா ரென்றுசொல்வான் அன்னையைப்போல்
அன்புடையான்
பொய்சொல் லாதேயென்பான் மெய்யுஞ்சொல்
லாதேயென்பான்
வல்லபங்கள் பேசிவந்தோர் வாயை யடக்கிடுவான்
வித்தையொன்றுஞ் செய்துகாட்டான் விவேகமற்றேர்
போலிருப்பான் அத்துவா மார்க்கம்விட்டு ஆறியி ருந்திடுவான்
*** --W*-.*W*A*a*l*ið
சிவசிவ என்றிடத் தீரும் பாவம்
சிவசிவ என்றிடும் போதினிலே செய்த
பாவமெல்லாம் ஒடும் பாரினிலே அவனிவன் என்கின்ற வார்த்தையெல்லாம் போக்கி
ஐயன் திருப்பாதம் உண்மையதாய் நோக்கி தவம்செய்வார்தமைத் தானக நோக்கிச்
சச்சி தானந்தம் தன்னிடத்தே தாக்கில் உவமையில் லாமுத்தி நிலையிலே போக்கும்
உண்மை யறிந்து சொன்னேன் யோகசுவாமி.

Page 176
344 நற்சிந்தனை
இதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய்
பல்லவி w
என்னிதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய் ஏகாம்பர நாதனே சிவனே
அநுபல்லவி
பதசாரி தோறும் உன்னதி சிலம்பொலி கேட்டுப் பரமானந்தம் பெறுவேன் சிற்ச பேசனே -என்னிதய
சரணங்கள் எனதென்ற கங்கரிக்கும் மனதுப னரிந்துவர இருவினைக் கட்டுகள் இற்றுச் சுயேச்சைபெற அனவரதமு முன்னை நினைந்து கசிந்துருகி அத்தாவுன் மலரடிப் பித்தணுய் வாழ்ந்திட-என்னிதய ஹரஹர வென்று அரவங்கள் கோஷிக்க அன்பு மகரவீணை தும்தும் என வாசிக்க சிரசி லானந்தஞ் சிலிர்த்து நடமாடச் செந்தமிழ் வாணியுமுன் மந்திரப் பொருள்பாட
- என்னிதய
GFA Gig) LOGOof எல்லை யெமக் கில்லையென்று சொல்லு மணியே எல்லாஞ் சிவன் செயலாய்ச் சொல்லு மணியே இல்லையென் ருெருபோதுஞ் சொல்லாய் மணியே ஈச ஞெருவ னென்று சொல்லு மணியே அன்னைதந்தை சுற்றத்தைப் பேணு மணியே அயலவர் தம்முறவு வேணு மணியே பின்னைப்பொய் சொல்லாமல் காணு மணியே பிறர் பொருள்மே லாசையின்றி வாழு மணியே என்னையினி மறவாமல் பாடு மணியே ஈச னடியவரைத் தேடு மணியே
முன்னை வினையெல்லாமோடு மணியே முருகன் திருவடியைக் கூடு மணியே.

நற்சிந்தனை 345 சிவனடியைச் சிந்திநெஞ்சே
அன்பிலா ரோடுறவு கொள்ளாதே அடுத்தோருக்குத் துன்பத்தைச் செய்யாதே சூதும்வாதும் பேசாதே இன்பத்தில் துன்பத்தில் ஏகமன சாயிருந்து தென்புடனே யரன்பாத மந்திசந்தி சிந்திநெஞ்சே.
ஆரோடும் பகையாதே ஆசைதனைக் கொள்ளாதே ஊரோடே ஒத்து நட உண்மையைத் தேடிக்கொள் நீரோடே வெகுநேரம் நீந்திவிளை யாடாதே
சீரோடே. சிவன்பாத மெப்போதுஞ் தேடுநெஞ்சே,
இடுவதை மறவாதே ஏழைகளை இகழாதே கெடுவது நினையாதே கேளிரைப் பிரியாதே சுடுவது சொல்லாதே துணையின்றிச் செல்லாதே படுதலையிற் பலிகொள்ளும் பரமனைப் பாடுநெஞ்சே.
ஈவது விலக்காதே யிழிதொழில்கள் செய்யாதே சாவது வந்தாலுஞ் சத்தியத்தை மறவாதே ஆவதும் அழிவதும் நமக்கில்லை யெனவறிந்து vn தேவர்கள் தொழுதேத்துஞ் சிவனடியைச் சிந்திநெஞ்சே.
அன்பாய் இருப்போமே
அன்பே சிவமென்று கிளியே! ஆன்ருே ருரைத்தார்கள் ஆனமையால் நாங்கள் கிளியே! அன்பாய் இருப்போமே இரப்பவர்க் கில்லையென்று கிளியே! எடுத்துநீ
சொல்லாதே
ஈவது நன்மையெனக் கிளியே! எடுத்தவ்வை சொன்னரே. சாவது வந்தாலுங் கிளியே! சத்தியம் மறவாதே தேவர்கள் வந்தாலுங் கிளியே! சித்தங் கலங்காதே தாய்சொல்லைத் தட்டாதே கிளியே! தந்தைசொல்
.மந்திரமே ۔

Page 177
346 ܪ f நற்சிந்தனை
இலங்கை என்னூர்
எல்லாமென் னுரர்எல்லா மென்சுற்றத் தார்களே எல்லா மெனக்குதவி யென்றறிந்தேன்-நில்லாத நீர்சடைமேற் கொண்ட நிமல னெனக்கன்பன் சீரிலங்கை யென்னுரர் தெரி.
நாமார்க்கும் ஆளல்லேம் நாளை வருவதெண்ணேம் ஆமா றறம்புரிவே மார்க்குமஞ்சேங்-கோமாற்கே மீளா வடிமையாய் மேதினிமேல் வாழுவோம் தாளா ரிலங்கையென்னுடர் தான்.
மெய்யுரைப்போம் மேன்மக்கள் நட்பை விரும்புவோம் செய்வன வெல் லாந்திருந்தச் செய்குவோம்- வையகத்தில் தாமரைமேல் நீர்போற் ருனியைந்து வாழுவேம் காம ரிலங்கை யென்னுரர் காண்.
சூரியன் தோன்றுதற்கு முன்ன ரெழுந்திருப்பேம் சீரியவா யாற்சிவனைப் பாடுவேம்-பாரினிலே தண்ணுர் பொழிலுந் தடவரையு மாறுகளும் நண்ணிலங்கை யென்னுரர் நய.
புன்சொல் புறங்காப்பேம் போன வகையெண்ணேம் எஞ்செயலா லொன்றுமில்லை யென்னுவேம் - வன்சொற் களை வேம் கனமேகங் கண்ணுறங் கின்பப் பழவிலங்கை யென்னுரரே பார்.
சித்தி பெறலாம் திருவெல்லாஞ் சேரலாம் பத்தியின்றேல் என்ன பலனிவற்ருல் - எத்திசையும் மெச்சு புகழிலங்கை மேலோர்கள் வந்துதினம் நச்சு மிலங்கையென்னுரர் நாடு.
நாடி யொருகருமம் நாடோறு மாற்றுவார் வாடி மெலிவதில்லை மாநிலத்தில்-நீடியசீர் கொண்ட விலங்கையிலே கோடிசனம் வந்துபணம் கொண்டுசெல்வார் என்னுரர் குறி.
கருங்குயில்கள் பாடுங் கரியினங்கள் கூடும் நெருங்குங் கதலிபலா தென்னை - ஒருங்குதிரை
கொண்டுவந்து முத்தங் கொடுக்கும் வளநாடு கண்டுகொண் டேனிலங்கை காண்.

நற்சிந்தனை 347 ܕ
மாது பங்கனை மறக்கவு மாமோ
ஒப்பில்லாத இலங்கைநகர் ஒருவன் றிருவடியைத் தப்பில்லாமற் போற்றுவார்கள் சாகார் பிறவாரே கொப்பில் மந்தியோடு குயில்பயிலும் பொழில்நீழல் எய்ப்பிலாத விளமான் மரைமேதி துயில்கொள்ளும்.
கடல்சூ Nலங்கைநகர் மேவிய கடவுள்பாதம் திடமோ டெந்தநாளுஞ் சிந்திப்பார்கள் மிடியாலே புடிவிதனில் துயரால் நொந்துபோகார் வரைமீது அடவிதனில் ஆமா புலியான துயில்கொள்ளும் கரையு மன்பர்தங் கருத்தி னனையே உரைசெய் வார்க்கொரு குறையு மில்லையே.
ஆடு பாம்பணிந் தாடு வான் கழல் பாடு வார்களே பரம யோகிகள்
அறஞ்செய்வார் தங்க ளகமே கோவிலாய் நிறைஞ்சு நிற்குமே நிமலன் நாடொறும் புறத்திற் கூறுவர் புகழைப் பெற்றிடார் அறத்தைக் கூறுவா ராக்கஞ் சேர்வரே.
காலை மாலையுங் கடவுள் பாதத்தைச் சால வேதொழு வார்க ளன்பரே.
ஒது மன்பர்க ளுள்ளத் துளான மாது பங்கனை மறக்கவு மாமோ
பாது காவெனைப் பகலு மிரவும்
மோதுங் கரைசேர் முதுலங்கை யானே.
கூடலி லன்று குதிரையை நரியாய் நர்ட வைத்த நம்பனை யல்லால் பாட்ட வும்வேறு பரம்பொரு ஞண்டோ மாடமலி யும்மிலங்கை மாநக ரானே.

Page 178
348 நற்சிந்தனை.
கரையு மன்பர்கள் கண்டுகந் தானும் வரையை யெடுத்த மன்னநெரித் தானும் மரையும் மானும் மயிலினமுங் குயிலும் நிரைநிரையாய் நிற்கு மிலங்கைமா நகரானே.
மத்தம் மதியொடு மாநா கத்தை வைத்த சென்னியன் வாணுதல் கணவன் புத்தஞ் சமணம் போயக லும்படி சித்தத்திற் கொண்ட சீரிலங்கை யானே.
சிவ சிவ சிவ
அன்பரன்பது சிவசிவசிவ ஆசையற்றது சிவசிவ சிவ இன்பமயமது சிவசிவசிவ ஈசனுயிர்தொறுஞ் சிவசிவசிவ முன்பின் அற்றது சிவசிவசிவ மோனமுதலது சிவசிவசிவ தன்வயத்தது சிவசிவசிவ சர்வவல்லபஞ் சிவசிவசிவ.
பொன்னிறத்தது சிவசிவசிவ போக்கிலாதது சிவசிவசிவ என்னிடத்தது சிவசிவசிவ எங்குமுள்ளது சிவசிவசிவ மண்ணிடத்தது சிவசிவசிவ மந்திர ரூபஞ் சிவசிவசிவ விண்ணிடத்தது சிவசிவசிவ வேதமானது சிவசிவசிவ. 2
மட்டிலாதது சிவசிவசிவ மங்கைபங்கது சிவசிவசிவ முட்டிலாதது சிவசிவசிவ மூவராவது சிவசிவசிவ கிட்டொனதது சிவசிவசிவ கிருபையுள்ளது சிவசிவசிவ எட்டிலானது சிவசிவசிவ ஏகமாவது சிவசிவசிவ. 3
அன்னையாவது சிவசிவசிவ அப்பணுவது சிவசிவசிவ முன்னையுள்ளது சிவசிவசிவ முனிவர்புகழ்வது சிவசிவசிவ என்னையாள்வது சிவசிவசிவ எடுத்த திருவடி சிவசிவசிவ பின்னையென் பிழை சிவசிவசிவ பேதாபேதஞ் சிவசிவசிவ. 4
3. 4.

நற்சிந்தனை s - 849
இலங்கை நகரானே
சிந்தை செய்கதிர் வேலனைத் தந்த எந்தையை யெந்த நாளும் மறந்திடார் பந்தங்க ளற்றுப் பரமவி டெய்துவர் கந்தம் பொலியு மிலங்கைக் கடிநகரானே.
கண்மூன் றுடைய கடவுளை நாளும் பண்முறை தப்பாது பாடு மடியார் மண்ணுள வளவும் மனக்கவலை எய்தார்கள் விண்டொடு வரைமே விலங்கைமா நகரானே. 2
மண்முதற் பூதங்கள் வகுத்த வொருவனை எண்முத லெல்லா மாயிருப் பானைப் பெண்ணுமை யாளைப் பிரியாப் பெருமானை விண்ணுேர் விரும்பு மிலங்கை நகர்கண்டேன். 3.
ஒதுபல் வேத முரைசெய்த நாவானே போது கங்கை சூடிய புனிதனே தீதுசேர் தக்கன் வேள்வி சிதைத்தானே மீதுவண் டார்க்கு மிலங்கை மேவியபரனே, 4
கமல நான்முகன் கண்ணனுங் காணு தமல னேயென வாரருள் செய்தானே , பவன மனலம் பாராகிய பரமனே உவமைசொல் லவொண்ணு லங்கை நகரானே.
பாலனுக் காகப் பாற்கடலை யழைத்தானை ஞாலம் புகழ்ஞான சம்பந்தன் தந்தையை ஆல மரத்தின்கீ ழன்றற முரைத்தானைக் கோலக் குயில்கூவு மிலங்கையிற் கண்டேனே. 6
சூதான வெளியிலே சும்மாவிருப்போம்
ஒம்நம சிவாயவென உருவேற்றுவோம் உருகி யுருகிநாம் உணர்வவிழ்வோம் வீம்பிடும்பை யகங்காரம் விட்டுவிடுவோம் வேதாந்த வீட்டிலே குடியிருப்போம்

Page 179
350 நற்சிந்தனை
நாம்நாம் நாமென நடமிடுவோம் நல்லவிருளை நல்ல வொளியாக்குவோம் போம்போம் வினையெனப் போற்றிசெய்குவோம் பூரண மானநிட்டை புகுந்திடுவோம் ஆம்ஆம் நமக்கெல்லாம் ஆய்விடுமென்போம் அவனேநா மென்றுசொல்லி யானந்தங்கொள்வோம் சந்திரனைச் சூரியனை ஒன்றுசெய்குவோம் சச்சிதா னந்தத்தேனைத் தானருந்துவோம் இடைகலை பிங்கலை யிரண்டுமடைப்போம் எழிலாருஞ் சுழுமுனைக்குள் ஒடுங்கிநிற்போம் பஞ்சவர்ணப் பரிமேலே பவனிசெல்வோம் பாரும்விண்ணும் ஒன்ருகப் பண்புசெய்குவோம் ஆதார மாறுக்கு மப்பாலேசெல்வோம் அங்கே திருநடனங் கண்டுகளிப்போம் சூதான வெளியிலே சும்மாவிருப்போம் சுகம்சுகம் எந்நாளு முற்றிடாதோ.
9ILIT Liguodalib
இராகம்-புன்னுகவராளி தாளம்-ஆதி
பல்லவி அப்பா பரமசிவம் (அப்பா)
சரணங்கள்
அன்றுதொட்டு இன்றுமட்டும் அடியேனுந் தேவரீரும்
அத்துவித மாயிருந்த
வித்தைதனை யாரறிவார் (அப்பா) ஒப்பாரும் மிக்காரு மில்லா வொருபொருளே தப்பேது யான்செயினும் அப்பா பொறுத்தருள்வாய் அப்பாலுக் கப்பாலா யாருமறி யாதவண்ணம் ஆடுந் திருநடனங் காண வருள்புரிவாய் (அப்பா)

நற்சிந்தனை
அத்துவிதப் பொருள் காப்பாம்
அத்துவி தப்பொருள் காப்பாம்-எனக் கடியார்க ளென் றென்றுங் காப்பாம்
சித்தருந் தேவருங் காப்பாம் என்றன் சித்தத் திலங்குந் திருவருள் காப்பாம்.
அட்ட வசுக்களுங் காப்பாம் - எனக் கானந்த மான பராபரன் காப்பாம் எட்டுத் திசைகளுங் காப்பாம் - எனக் கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம்.
பிராண னபானனுங் காப்பாம் - என்னைப் பிரியா திருக்கும் பிரணவங் காப்பாம் அராவணி வேணியன் காப்பாம்-எனக் கருளை யளிக்குங் குருபரன் காப்பாம்.
பஞ்சப் புலன்களுங் காப்பாம் என்னைப் பரவு மடியவ ரனுதினங் காப்பாம் குஞ்சர முகத்தவன் காப்பாம் - நல்ல
குழந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம்.
சந்திர சூரியர் காப்பாம்- எங்குந் தங்கு முயிர்க ளனைத்துமென் காப்பாம் மந்திரந் தந்திரங் காப்பாம் - நான்கு மறைகள் சிவாகமம் மாநிலங் காப்பாம்.
351
(அத்து) 1
(அத்து) 2
(அத்து) 3
(அத்து) 4
(அத்து) 5

Page 180
352
நற்சிந்தனை
எல்லாஞ்சிவமே
அப்பனும் அம்மையுஞ் சிவமே அரிய சகோதரருஞ் சிவமே ஒப்பில் மனைவியுஞ் சிவமே ஒதரும் மைந்தருஞ் சிவமே செப்பில் அரசருஞ் சிவமே தேவாதி தேவருஞ் சிவமே இப்புவி யெல்லாஞ் சிவமே என்னை யாண்டதுஞ் சிவமே.
usm -4
மங்களம் ஜெய மங்களம் 1
அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம் அத்துவித வஸ்துவுக்கு மங்களம் ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம் உத்தம பத்தருக்கு மங்களம் முப்பொழுதுந் தொழுவார்க்கு மங்களம் மூவாசை வென்றவர்க்கு மங்களம் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம் முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம் தன்னைத்தன்னு லறிந்தவர்க்கு மங்களம் ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம் ஐயமில்லாச் சாதுக்கட்கு மங்களம் ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம் சீர்காழித் தேவருக்கு மங்களம் திருநாவுக் கரசருக்கு மங்களம் சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் திவ்விய மாணிக்கர்க்கு மங்களம் எங்குந்தங்கும் உயிர்களுக்கு மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்

நற்சிந்தனை 353
மங்களம் ஜெய மங்களம் 11
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
ஆதியந்த மில்லா அப்பனுக்கு மங்களம் சோதிவடி வாயுள்ள சுவாமிக்கு மங்களம்.
ஆன்மா நித்தியமென்ற ஆன்ருேர்க்கு மங்களம் தேன்போ லுருசிக்குஞ் சிவனுர்க்கு மங்களம். 2
காண்பதெல்லாங் கடவுளாய்க் காண்பார்க்கு மங்களம் நாண்மல ரெடுத்துப்பூசை பண்ணுவோர்க்கு மங்களம், 3
பொறிவழிபோ யலையாத புண்ணியர்க்கு மங்களம் நெறிவழியே செல்லுகின்ற நிருபருக்கு மங்களம். 4.
நாமறியோ மென்றுசொல்லும் நாதனுக்கு மங்களம் உண்மை முழுதுமென்ற வுத்தமர்க்கு மங்களம். , 5
தன்னைத் தன்னலறிந்த தாபதர்க்கு மங்களம் அன்னைபிதாக் குருவான அப்பனுக்கு மங்களம். 6
மண்ணைப்பெண்ணை மதியாத மாதவர்க்கு மங்களம் வண்ணநகர் வாழும்வைத் தீசனுக்கு மங்களம். 7
திண்ணனென்ற பேர்கொண்ட அப்பனுக்கு மங்களம் சண்முக நாதனுக்குஞ் சங்கரற்கும் மங்களம், 8
விண்ணில் விளங்குஞ் சூரிய சந்திரர்க்கும் மங்களம் எண்ணிலடங் காவுயிர்கள் அத்தனைக்கும் மங்களம். 9 நித்தியகர்மந் தவருத நின்மலர்க்கு மங்களம் பத்துப்பாட்டும் படிப்போர்க்குங் கேட்போர்க்கும்
A. மங்களம், 10
மங்களம் ஜெய மங்களம் محي மங்களம் ஜெய மங்கள்ம் ,
23

Page 181

பகுதி II
உரைநடைப் பகுதித் திரட்டு

Page 182
6
குருநாதன் அருள்வாசகம்
ஒரு குறைவுமில்லை
நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே. ஆகையால் நாம் அவருடைய உடைமை.
அவருடைய அடிமை. நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே. நாம் அவரை ஒருபோதும் மறந்திருக்க முடியாது.
நமக்கு ஒரு குறைவுமில்லை.
நாம் என்று முள்ளோம்.
எங்கு மிருக்கிருேம்.
எல்லா மறிவோம். இப்படியே நாம் இடையருது சிந்தித்துச் சிந்தித்துக்
கீழ்மையான குணங்களைப் போக்கி மேலான தெய்வ தத்து வத்தை அடைவோமாக.
*சந்ததமு மெனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மை
நினையன்றி யில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த
சமரச சுபாவமிதுவே."
என்னுந் தாயுமானவர் அருமைத் திருவாக்கே இதற்குப்போதிய சான்று.

நற்சிந்தனை V, 357
சிவதொண்டு I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு செய்வதே எங்கள் தொழில். அதற் காகவே நாங்கள் பூமியில் வாழுகிருேம்.
சந்திரன் சிவதொண்டு ஆற்றுகின்றது. சூரியனும் ஏனைய கிரகங்களும் அத்திருப்பணியையே செய்கின்றன. தேவர் களும் அசுரர்களும் கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர் களும் அப்படியே தொண்டாற்றி வருகின்றனர்.
அனைத்துஞ் சிவன் செயல்; அவனன்றி அணுவும் அசை யாது. நாம் இழந்து போவதுமொன்றுமில்லை. ஆதாய மாக்கிக் கொள்வதும் ஒன்றுமில்லை. இருந்தபடியே இருக் கின்ருேம்.
நமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லை. நமக்கு இதம் அகிதம் இல்லை. மரணம் பிறப்பில்லை. வேண்டுதல் வேண்டாமை இல்லை. மண்ணுதி ஆசை யில்லை. மனமான பேய் இல்லை. காலதேச வர்த்தமானம் நமக்கில்லை. நாம் அனைத்துக்குஞ் சாட்சியாக விளங்குகின்ருேம்.
ஓம் தத் சத் ஒம்
I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு ஆற்றுவதே எங்கள் தொழில். அதற். காகவே நாம் உயிரோடிருக்கிருேம். உண்பதும் உறங்குவ தும் அதற்காகவே. எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத் தைப் பட்டாலும் எல்லாம் அதற்காகவே செய்கிருேம். நமக்கு ஆதியுமில்லை அந்தமுமில்லை. பிறப்புமில்லை இறப்பு மில்லை. நாம் விளையாட்டுக்காகினும் பிறர்பொருளைக் கவ ரோம். பிறர்வசை உரையோம். எல்லாஞ் சிவன்செய

Page 183
g58 நற்சிந்தனை
லென்பதை மறவோம். பசித்தாற் புசிப்போம். பிறர்செய் யும் நிட்டூரத்தையாவது, கிருபையையாவது பொருளாகக் கருதமாட்டோம். எப்பொழுதும் தூய்மை உடையோம். துன்பத்திலும் இன்பத்திலும் கவலை அடையோம். முழு தும் உண்மை.
ஓம் தத் சத் ஓம்.
II
நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார். இது சரியை; இது கிரியை; இது யோகம்; இது ஞானம்; இது மந்திரம்; இது தந்திரம் இது மருந்து.
இந்தத் தியானத்தில் நிலைத்தலே நிட்டை இந்த நிட்டையுடையோர்க்குச் சீலமில்லை; தவமில்லை; விரத மில்லை; ஆச்சிரமச் செயலில்லை.
இவர்கள் தாம் விரும்பிய வண்ணம் மண்ணில் வாழ்ந் தார்கள்; வாழுகிருர்கள்; வாழ்வார்கள். இவர் பெருமை யாவருமறியார்; கற்கண்டின் இனிமை கற்கண்டை உமிப வர்க்கே தெரியும்.
ஒரு பொல்லாப்பு மில்லை. எப்பவோ முடிந்த காரியம். நாமறியோம். முழுதும் உண்மை.

நற்சிந்தனை" 359
ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்தது. ஒழுக்க முடையார் எல்லாமுடையார். ஒழுக்கங்களாவன கொல்லாமை, கள் ளாமை, பிறர் வசை உரையாமை, பிறர் பொருள் கவ ராமை, தாழ்மை, பொய்யுரையாமை முதலியனவாம்.
எக்கருமத்தைச் செய்யும் பொழுதும் ஊக்கத்தோடுஞ் சிரத்தையோடும் மனமகிழ்ச்சியோடுஞ் செய்து பழகுதல் வேண்டும். அப்படிச் செய்து பழகிவந்தால் மன உறுதி உண்டாகும். அஃதாவது மனம் ஏகாக்கிர சித்தத்தைப் பொருந்தும். பொருந்தவே ஆன்மசக்தி அதிகரிக்கும். நினைத்தகாரியம் நினைத்த மாத்திரத்திலே உண்டாகும். இவர் பகைவர், இவர் உறவினர் என்ற பாகுபாடு சித்தத் திற் புகுந்து கவலையை உண்டாக்காது.
எல்லாம் என்னிடத்தே உண்டாகின்றன; எல்லாம் என் னிடத்தே நிலைத்திருக்கின்றன; எல்லாம் என்னிடத்தே ஒடுங்குகின்றன என்ற தூய்மையான எண்ணம் உடைய வராய் இருத்தல் வேண்டும். மேலும் எனக்கொரு குறைவு மில்லை; என்னிடத்திலே எல்லோரும் அன்பாய் இருக்கி ருர்கள்; நானும் எல்லாரிடத்திலும் அன்பாய் இருக்கிறே னென்று அடிக்கடி நினைந்து நினைந்து சாதிக்க வேண்டும். இப்படியே இடைவிடாமற் பழகிவந்தால் எல்லாமறியும் ஆற்றலும் எல்லாஞ் செய்யும் வல்லமையும் எளிதிற் கைவரும்.
'ஓம் தத் சத் ஓம்"

Page 184
360 நற்சிந்தனை
சன்மார்க்கம்
குரங்குபோல் மனங்கூத்தாடுகின்றதே.
இதன் கூத்தை எப்படி யடக்குவதென்று தெரியவில் லையே. நன்று சொன்னய். இதற்கு நல்ல மருந்துன்னிட முண்டு. நீ அதை மறந்து போனுய். சொல்லுகிறேன் கேள்.
சிவத்தியான மென்னும் மருந்தைத் தினந்தோறுஞ் சாப்பிட்டுவா. மனக்குரங்கின் பிணி மாறும்.
அதைச் சாப்பிடும்போது அனுபானத்தைக் கூட்டிச் சாப்பிடு. அதுவுமுன்னிடமுண்டு.
அது என்னவென்றல்; நாவடக்கம், இச்சையடக்க மென்னுஞ் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு.
இதுவும் போதாது. பத்திய பாகத்திலே தான் முற் றுந் தங்கியிருக்கிறது. அதுவு முன்னிட முண்டு.
அது என்னவென்முல்; மிதமான ஊண், மிதமான நித்திரை. மிதமான தேக அப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம். ஆன்ம இலாபத்தின் பொருட்டிதைச் செய். vn
மனத்தை ஒருவன் அடக்கி வெற்றி கொள்ள முழு மனத்தோடு விரும்புவானனல் சிவத்தியானத்தைத் தினந் தோறுஞ் செயது வரக் கடவன். -
படிப்படியாக அவன் மனமொடுங்கி வருவதை அவன் கண் கூடாகக் காணுவான்.
சாந்தம், பொறுமை, அடக்கம் முதலிய நற்குணங் கள் அவனிடத் துதிக்கும். γ.
அவன் மனமெந்த நேரமும் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். இகழ் புகழிரண்டினலும் இழிவடையான்.

நற்சிந்தனை 36.
அந்தராத்மாவிலே சுகிப்பான். பிறர் சுகந் தன் சுக மென்ற எண்ணம் பெருகும்.
கைவிளக்கை யொருவன் கொண்டு செல்வானுணுல் இராக்காலத்தில் அவன் மனங் கலங்குவான? கலங்கான். அப்படியே சிவத்தியானத்தைச் செய்து வருவானனல் மாய விருள் அவனை அடையுமா? அடையா. V
போதனையிலுஞ் சாதனை சிறந்தது. ஒரு பொல்லாப்பு மில்லை.
ஆன்ம இலாபமே பொருளெனக்கண்ட அறிஞர் அநித் தியமான இந்த உலக இன்ப துன்பத்தின் மயங்காது தாமரையிலையில் நீர் போற் சகத்துடன் கூடிவாழ்வார். ஆன்ம இலாபத்தைப் பெற நினையாதவர் இந்த உலகத் துன்ப இன்பத்தினுற் கலங்கித் தியங்கித் திரிவார்கள். ஆன்ம இலாபத்தையே குறிக்கோளாகக்கொண்டு நன்மை தீமை யைவென்று நான் எனதென்னும் அகங்கார மமகாரங் களைக்களைந்த அறிஞர் இறைவன் திருவடி நிழலில் பிறப் பிறப்பற்றுப் பேரின்பத்துடன் வாழ்வார்.
அஃதறியா அறிவிலிகளே துன்பக் கடலிலே வீழ்ந்து எரிவாய் நிரயத்துக் காளாவார்.
வண்டுகள் பூவைக்கிண்டித் தேனை உண்டு ஒன்று மறி யாது கிடப்பது போல் பக்தனும் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத்தினுல் கிண்டி ஆங்குவரு மானந்தத்தேனை யுண்டு ஒன்று இரண்டு, நன்று தீதென்றறியாமற் தேக் கிக் கிடக்கிருன்.
ஒரு கமக்காரன் தன்னுடைய நிலத்திலே நல்ல வித்தை யிட்டு அதிலுண்டாகுங் களையைக் களைந்து, விளையுந் தானியத்தை யொன்று சேர்க்கிறன்.
அதுபோலப் பக்தனும் சிவமாகிய நிலத்திலே பக்தி யென்னும் வித்தை வித்திக் காமக்குரோத மோக மதமாச்

Page 185
362 நற்சிந்தனை சரியமென்னுங் களையைக் களைந்து சிவபோக மென்னுந் தானியத்தைச் சேர்த்து வைத்துப் புசிக்கிருன்.
பூலோகமாகிய நந்தன வனத்திலே சீவர்களாகிய மலர்கள் மலர்ந்து கிடக்கின்றன. சிவன் அதைக்கண்டு மகிழ்கிறன்.
பொற்கொல்லன் பொன்னை யெடுத்துப் பல பூண் களைப் படைக்கிருன்.
சிவனகிய பெரிய பொற்கொல்லன் ஆன்மாவாகிய
பொன்னை யெடுத்துச் சீவர்களாகிய பலபணிகளையு மாக்கு கிருன். 8.
வைத்தியன் பல மூலிகளையு மெடுத்து ஒன்ருக்கி நோய்க்கு மருந்து கொடுத்து நோயை மாற்றுகிருன்.
பெரிய ஞான வைத்தியனும் தனு கரண புவன போகங் களை ஆன்மாவுக்குக் கொடுத்து அதன் நோயை மாற்றி இன்ப வீட்டில் வைக்கிருன்.
தாய் தனது குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான் களைக் கொடுத்து மகிழ்விக்கிருள்.
சிவபெருமானுந் தன் குழந்தைகளாகிய எங்களுக்குப் பல விதமான இன்பங்களையுந் தந்து மகிழ்விக்கிருன்.
பொறி வழியே போந்து மனம் அலைய அறிஞர் இடங் கொடார். ஏனெனில் ஆத்மாவே தானென அறிந்தவர்கள்; ஆசை நோய்க்கு இடங்கொடுப்பாரா? அன்று.
அவர்தம் பெருமையை வேத சிவாகமங்களும் புகழ் கின்றன. இவர்களைக் கண்டால் கல்லுங் கரையும்
அனைத்தினும் வெற்றி யுண்டு.

நற்சிந்தனை 3 SB
W சிவத்தியானம்
ஒ மனிதனே! நீ உண்மைப் பொருள். கேடற்றவன். உனக்கு ஒருவருங் கேடு விளைவிக்க முடியாது.
நீ இங்கும் அங்கும் எங்கும் உள்ளவன். நித்தியன். உறுதியுடனே சிங்கங் கானகத்தில் திரிவதுபோல் உலக மாகிய கானகத்தில் திரி. எந்த விதத்திலுந் தளர்வடை
யாதே. ஒரு நூதனமு மிங்கில்லை. முழுதுமுண்மை. ஒரு பொல்லாப்புமில்லை.
ஒ மனிதனே! வானம் வந்தாலும் பூமி வந்தாலும் ஆட்சிசெய்யக் கருதாதே. சாட்சியாயிரு. மாட்சி உன் பிறப்புரிமை.
அது என்ன வுபாயத்தாலு மடையப்படுவதொன் றன்று. அப்படியுள்ள காரியம். மற்றனைத்துஞ் செப்படி வித்தை, அறிவு, அறியாமை உன்னிடமில்லை. நீ பர LDfTjöLorr.
l ஓம் தத் சத் ஒம் |
ஒ மனிதனே! சற்றுப் பொறுமையாயிருந்து பார். நீ யாரெனத் தெரிந்து கொள்வாய். துயருறத் தகாத காரியங்களில் துயருருதே. துன்பமும் இன்பமும் உலக
நடவடிக்கைகள். நீ சித்துப் பொருள்.
உன்னை ஒன்றுந் தாக்கமாட்டாது. எழுந்திரு. விழித் துக்கொள். சிவத்தியான மென்னுந் திறவுகோலால் மோகூடிவீட்டின் கதவைத்திறந்து பார். எல்லாம் வெளி யாகும். VK.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஓ நண்பனே! உன்னை யார்தான் பாவியென்று சொல்ல வல்லான், ஏன்?

Page 186
364 நற்சிந்தனை
" நீ சிவத்தின் அம்சமல்லவா? மறந்து போனுய். ஓம் தத் சத் ஒம் என்று ஓயாமற் சொல்லு, உன் முழுமனத் தோடும் இறைவனுக்கு உன்னை ஒப்புக்கொடு. சிவத்தியா னத்தை அசட்டை பண்ணுதே. ஈற்றில் யாவும் நன் மையாய் முடியும். சோம்பலுக்குஞ் சோம்பலின்மைக்கும் நீ கட்டுப் படாதே, h
அதிகப் பேச்சில் என்ன பயன். பண்படுத்தப்பட்ட தரையிலன்றே நல்ல பயன் வரும். அஞ்சாதே.
நாங்கள் சிவனடியார். சிவபெருமான் என்றுள்ள வரோ அன்று நாமுமுள்ளோம்.
வெப்பந் தட்பம், இன்பந் துன்பம், இளமை முதுமை இயற்கையின் குணங்கள்.
இவைகளின் தீண்டுதலால் நாமேன் கவலைப்படுவான்.
இவைகள் தோன்றி மறைவன. நாமோ தோன்றுவது மில்லை. மறைவதுமில்லை.
உண்மை இன்மை யாகாது. இன்மை உண்மை யாகாது.
எல்லாஞ் சிவன் செயலென்ற எங்களுக்குக் குறைவு முண்டோ? நிறைவு முண்டோ? நாம் சிவபெருமானென்ற நூலிலே கோக்கப்பட்ட பல நிற முள்ள மணிகளை யொப் பவர். நூலறுவதுமில்லை. நாங்கள் சிதறிப்போவதுமில்லை. பலபடக் கூறுவதால் பயனில்லை. . . . . . .
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஒ சினேகிதா! நீ சிவனடியானென்று முழுமனத் தோடும் நினை. எல்லா வெற்றியு முன்னிடமுண்டு. அதற்கு மேல் வேருென்று மில்லை. யாவுமுன் காலடியில்.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |

நற்சிந்தனை s 365
குரு வாசகம்
ஆத்துமா நித்தியமானது. பிரிவில்லாதது. பூரணமா னது. சரீரமோ அழியுந் தன்மையுள்ளது. பிரிவுள்ளது. இப்படி யிருக்கையில் நாங்கள் இவ்விரண்டையுஞ் சரி யென்று சொல்ல முடியுமா? அப்படி நாங்கள் சொன்னல் இதிலும் பெரிய பாவமும் பழியும் வேறுண்டோ?
ஆத்துமா எல்லாவற்றுக்கு மாதியாயுள்ளது. யாவை யும் ஆளுகின்றது.
சரீரமோ தொடக்கமுடையது. ஆளப்படுந் தன்மை (1460)L-Ugbl.
இப்படி யிருக்கையில் நாங்களில்விரண்டையும் ஒன்ருே டொன்று ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? அப்படி யொப் பிட்டால் இதிலும் வேறு பழி கிடையாது.
இயற்கையிலே ஆத்துமா அறிவுடையது. தூய்மையா னது. சரீரமோ அறியாமை யுடையது. தூய்மை யற்றது. இவ்விரண்டையும் ஒப்பிட்டால் இதிலும் அஞ்ஞானம் பிறி துண்டோ?
ஆத்துமா பிரகாசமுடையது. அதாவது சுயம்பிரகாச முடையது. சரீரமோ இயற்கையிலே இருள் மயமானது. இவ்விரண்டையு மொப்பிடலாமா?
யாரொருவன் தன்னைச் சரீரியென்று நினைக்கிருனே ஐயோ, அவனிலுங் கீழ்மகன் யார்?
யார் ஒருவன் தன்னுடைய சரீரமென்று சொல்லு , கிருனே அவன் மட்பிண்டத்தைத் தன்னுடையது என்று சொன்னது போலிருக்கும்.
யார் ஒருவன் தன்னைப் பூரணனென்றும், நித்தியன் என்றும், இயற்கை அறிவுடையவனென்றும் நினைக்கிருனே அவன் உண்மை யறிவாளி. அவனுக்கிணையாக ஒரு தெய் வமுமில்லை.

Page 187
366 நற்சிந்தனை
யார் ஒருவன் தன்னை ஓர் அழுக்கும் பற்றமாட்டா
தென்றும், மாறுபாடில்லாதவனென்றும், தூய்மையிலுத்
தூய்மை யென்றும் நினைக்கிருணுே அவனை அறிவாளிகள் ஞானி யென்று சொல்லுவார்கள்.
வேதம் ஆகமம் யாவும் இந்த உலகம் முழுவதுந் தெய்வமே நிறைந்திருக்கிற தென்றும் அதைவிட வேறு யாதுமில்லை யென்றும் முறையிட நாங்கள் எப்படி உலக மிருக்கிறது சரீர மிருக்கிறதென்று நினைக்கலாகும். அப்படி உலகஞ் சரீரம் வேருயிருக்கிறதென்றல் இதைவிடப் பழி பிறிதுண்டோ? ஆன்ருேரும் நின்னவார் பிறரன்றி நீயே ஆணுய்" என்று சொல்லி யிருக்கிருர்கள்.
இன்னேரன்ன பல காரணங்களாலுங் கடவுளைத் தவிர வேறென்றுமில்லை. யாவு மவன் செயல்.
சொல்லெல்லாம் மோனம் தொழிலாதியும் மோனம் எல்லாம் நன்மோன நிறைவே.
சிவபக்தி
சிவபக்தி மாத்திரந்தான் மனிதனைப் பாக்கியவானக் கும். மற்றையவனத்தும் பிரயோசனமற்றவை. ஆகை யால் இடைவிடாமற் சிவத்தியானம் பண்ணு. ஒன்றுக்கும் பயப்படாதே. வெற்றியுன் சொந்தம். எத்தனைமுறை தவ றினலுந் தைரியத்தைக் கைவிடாதே. தவறுதல் சடசம் பந்தமானது. நீயோ சித்துப்பொருள் (அதாவது அறிவுப் பொருள்). நீயொரு நாளும் அழிய மாட்டாய். எழுந் திரு! விழித்துக் கொள்! காரியங் கைகூடுமட்டும் வழி யிலே தங்கிவிடாதே! உற்சாகத்தோடு முன்னேறிச் செல். உனக்குச் சகல சத்தியுங் கட்டுப்படுவதைக் காண். வீண் வாத தர்க்கத்திலே நாளைப் போக்காதே. நீ எங்கே போகிருயோ அங்கே உன்னுடன் பகவான் வருவார்.
வெளிமாதிரி யொன்றுஞ் செய்யாதே. உனக்குள் நீ பெலத்துக்கொள். சமயமென்பது ஒரு மாதிரியுமற்ற தனித்த நிலை. உடல் பொருள் ஆவி மூன்றையும் பகவா னுக்கு ஒப்படை. அதன்பின் உன்னைப் பற்றிய காரியங் களைக் கைவிட்டுவிடு. அனைத்தும் அவனே பார்.

நற்சிந்தனை 367 தவம்
தவத்திலே மேம்பட்டவர்களைக்கூட இந்திரியங்கள் வரம்பு கடந்து இழுத்துச் செல்கின்றன. ஆதலால் அவற்றை வெல்வதற்குச் சிவத்தியானஞ் செய்க. அதனல் மாத்திரந் தான் புலன்களைத் தன்வசப்படுத்தத்தக்கது. ஆகவே இடை விடாமற் சிவத்தியான ஞ் செய். மனிதன் விடயங்களைக் கருதும் போதெல்லாம் பற்றுண்டாகிறது. பற்றுதலால் விருப்பம் உண்டாகிறது. விருப்பத்தாற் சினம் பிறக்கிறது. சினத்தால் மயக்கம். அம்மயக்கத்தால் தவறுதல் உண்டா கும். ஆதலால் உன்னைச் சிவத்தியானத்தால் காத்துக் கொள்.
நாங்கள் எங்கள் சிறுமைக் குணத்தினல் இயல்பழிந்து தரும வழியினின்று தவறுகிருேம். தவறுதல் நீங்கித் திட முண்டாகச் சிவத்தியானமே சிறந்த கருவியாகும். இந்த உலகத்தில் மிகுந்த செல்வமிருப்பினும், வானுேரை ஏவல் கொள்ளக்கூடிய வல்லமையிருப்பினும் நாங்கள் புலன்களை அடக்கியாளுதல் முடியாது. ஆதலால் திருவருளை முன்னிட்டு மனத்தைப் புலன்வழிச் செல்லாமல் அடக்கியாள். இது தான் தவமென்று பெரியோர் சொல்வர். அதைவிடுத்து இடம்பமான வேள்வி முதலியவை செய்வதால் திடமுண் டாக மாட்டாது.
நானே நீ
என்னுடைய இராச்சியத்தில் இராப்பகலில்லை; நன்மை தீமையில்லை; நீ நானில்லை; இன்றைக்கு நாளைக்கு இல்லை; பெரிது சிறிது இல்லை; நீயுமிந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டுமாகில், அங்கு முழுமனத்தோடு வெளியேறக் கடவை; புகையிரதம் வேண்டியதில்லை; மாட்டுவண்டி தேவையில்லை; பின் என்ன வேண்டுமாகில் வைராக்கிய மென்னும் புதுக்காத வண்டிலும், சாந்தம் என்னும் இரண்டு வெள்ளை எருதுகளும், மனப்பாக்கிய மென்னுஞ் சமையாத சாதமும், யாசகமென்னும் அங்கவஸ்திரமும், ஞானமென்னும் மூக்குக் கண்ணுடியும் எடுத்துக்கொண்டு பின் முன் நாடாமல் வரக்கடவை. அப்பொழுது நீ காண விருக்கும் காட்சிகளை என்னுற் சொல்ல முடியாது. கட வுளே சாட்சி.

Page 188
368 நற்சிந்தனை
866).T6th UTG).260T
தெய்வத்தை நம்பு, முழுமனத்தோடு நம்பு; உலகில் உனக்கினியதெனத் தோன்றும் எவற்றிலும் இனியதாக நினை. அதைவிட வேறில்லை என்று நினை. இருக்கும் போதும் நிற்கும்போதும், நடக்கும்போதும், கிடக்கும்போதும் நினை. உனது நரம்பிலும் தசையிலும் இரத்தத்திலுந் தெய்வ மென்னும் நினைவே நிறைவதாக. நானில்லை, கடவுளே இருக்கிருரென எண்ணு. கடவுளைக் கும்பிடுதலே வாழ்வின்' இலக்காக வைத்துக்கொள். எவன் எதை நினைக்கிருனே அவன் அதுவாகிறன். கடவுளை உனது உள்ளத்தில் வைத்து வளர்ப்பாயாக. எல்லாம் அவருடைய செயலாகுக. ஈற் றில் எல்லாம் அவனுகவே காணப்படும்.
சிவபெருமான் அத்துவிதமாக இருக்கிருர், அடியேன் அவரே எனத் தியானிக்கும் மகிமை எனக்குண்டு. ஒருவன் எப்படிப் பாவனை செய்கிருனே அவன் அப்படி ஆகிறன். ஆகையால் "நான் அவனே' என்று தியானஞ் செய். அப் போது உன் செய்கைகள் அனைத்தும் அவன் செய்கையே யாகும். அவனைத் தவிர வேறு பொருள் இல்லை. அவனே அனைத்தும். அப்படியான அவனே தன்னைப் பல கோலங் களாக்கி விளையாடுகிருன்,
அவனுக்குப் பிறப்பிறப்பில்லை. ஆதியந்தமில்லை. ஒரு மாறுதலுமில்லை. முழுதுமுண்மை.
ஓம் சாந்தி.

நற்சிந்தனை : 369
66.60TiguTf
நாங்கள் சிவனடியார்
ஆதியுமந்தமும், இறப்பும் பிறப்பும், இரவும் பகலும், சுகமுந் துக்கமும் எங்களுக் கில்லை யென்னும் திருமந்தி ரத்தை எவனெருவன் மறவாமல் தியானஞ் செய்கிருனே அவனுக்கு ஒரு குறையும் வராது.
எதை நீ பாவனை செய்கிறயோ அது நீ யாவாய்.
இதற்கெல்லாம் விடாமுயற்சி, அதாவது சலியாமை வேண்டும் .
பாடுபட அஞ்சுபவனுக்கு ஒரு பிரயோசனமு முண்டா காது; பாடின்றிப் பட்டங் கிடையா தென்பது உலக வழக்கு.
காரியசித்தி எய்தும் வரையும் விடாமுயற்சி செய். நீ ஏன் ஓயாமல் கெட்ட காரியங்களைச் சிந்திக்கிருய்? அச் சிந்தனையை விட்டு முழு மனத்தோடு தெய்வத்தை வணங்கு. உனக்கு விதிவசத்தாற் பொருந்துவனவற்றை உவகையோடு ஏற்று நடத்து. இறுதியில் யாவும் ஜெயமாகும்.
அது அப்படி யுள்ள காரியம் என்பதைச் சதா நெஞ் சிற் பதித்துக் கொண்டு இயல்பாய் உனக்கு வரும் வேலை களையுங் கடமைகளையுஞ் செய்து கொண்டிரு. அல்லது அவற்றை விட்டிரு. எதுவுஞ் சரியே.
செய்தலிலுஞ் செய்யாமையிலும் அது தங்கியிருக்க வில்லை. கருமம் இல்லாமையை விரும்பாதே. கருமத்தைப் பற்றதே. செய்தல் செய்யாமை இவற்றுள் இயல்பாய் எது உனக்கு அமைகின்றதோ அதையே பற்றி நில்.
24

Page 189
370 நற்சிந்தனை
இன்பவிறையே
ஒரு பிதா தனது குழந்தையினது மழலைமொழியைக் கேட்டு மகிழ்வானன்றிச் சிறிதுமிகழமாட்டான்.
அவ்வண்ணமே, தேவரீர் அடியேனுடைய விண்ணப் பத்தைக் கேட்டருள்வீராக. இவ்வுலகத்திலே எத்தனையோ சாதிகளுண்டு. அவைகளின் பழக்கவழக்கங்கள் ஒன்ருே டொன் ருெவ்வாது முரண்படுகின்றன. ஒவ்வொரு சாதி யுந் தத்தம் பழக்க வழக்கங்களே மேம்பாடுடைத்த தெனக் கூக்குரலிடுகின்றது. சமயங்களுமப்படியே. இவைகள் யாவும் உலகத்தின் சிறப்புக்களேயன்றி வேறல்ல. இந்த வித்தியாசமான போராட்டங்களெல்லாம் முன்னு முள் ளன. நூதனமான காரியங்களல்ல. இவைதாம் இந்தப் பிரகிருதியின் தோற்றங்கள். இவை வேறு தான் வேறு என்றறிந்த அறிவாளி இவைகளுடன் கூடியுங் கூடாது மிருப்பன். எத்தனையோ முறைகளில் பெரிய பெரிய அவ தாரங்கள் வந்து எவ்வளவோ வேலைகளைச் செய்தும் மீட் டும் இந்த உலகம் அப்படியே யிருக்கின்றது. இது ஒரு பெரிய இரகசியம்.
தேவரீர் இவைகள் எல்லாம் நன்கறிவீர். நானென் றுமறியேன். என்னை மன்னித்துக் கொள்ளும்.
pamahagið
ஆண்டவனை யன்றி வேருெரு பொருளுமில்லை. அனைத் தும் அவன்செயல். உனது சுமைமுழுவதையுந் திருவடிக் கீழ் இறக்கி வைத்து இளைப்பாறு. கவலைக்கிடங்கொடாதே. நான் செய்தேன், அவன்செய்தானென்று நலியாதே. விழித்திரு.

நற்சிந்தனை " , 371 ·
சுகவாழ்வு
கடவுளை மனம் வாக்குக் காயத்தாலே காலை, உச்சி, மாலை என்னும் மூன்று காலத்திலும் வழிபடுதல் வேண் டும்.
சரீரத்தையும் மனத்தையும் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சரீரத்திலாவது மனத்திலாவது ஏதுங் குழப்படி ஆரம் பிக்கும்போது அந்த கூடிணமே சாப்பாட்டை நிறுத்தி, ஆலய வழிபாடு, அடியார் வழிபாடு, அல்லது இயன்ற தானதருமங்கள் செய்யவேண்டும். w வரவுக்கேற்ற செலவு செய்யவேண்டும்.
தனிமையாக இருந்து கொண்டு அல்லது நடந்து கொண்டு, தன் வாழ்நாளை நடாத்தும் வகையைச் சிந் திக்கவேண்டும்.
மிஞ்சிய போகத்திலாவது, போசனத்திலாவது, வைத் திருக்கு மாசையை அடியோடு தவிர்க்கவேண்டும்.
இறைச்சி மீன் குடி முதலியவைகளை விடவேண்டும்.
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புள்ளவனுக இருக்க வேண்டும். م s
தான் மிகவும் பரிசுத்தன் என்றுந் தனக்கு ஒரு குறை வில்லை யென்றும் அமைதியாகச் சிந்தித்தல் வேண்டும்.
மேலே சொல்லிய வண்ணம் இவ்வாறு ஒருவன் சாதித் துப் போதித்து வருவானுயின், யோகமும், ஞானமும், சர்வசித்தியும் ஈற்றில் முத்தியும் லபிக்கும்.

Page 190

US6 III
திருமுகங்கள்

Page 191
374 . . . நற்சிந்தனை
நான் யார்
நீ உடம்பன்று, மணமன்று, புத்தியன்று, சித்த மன்று, நீ ஆத்மா.
ஆத்மா ஒரு நாளும் அழியாது. இது மகான்க ளுடைய அநுபவ சித்தாந்தம். இந்த, உண்மை உனது உள்ளத்தில் நன்ருய்ப் பதியக் கடவது.
ஆனல் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு, அதா வது தருமநெறியிற் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் திருமுன்னிலை என்று சாதனை செய். கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளவர்.
இப்படிக்கு அவனே நானே.
~~
ஓம் தத் சத் ,
கொல்லம், ஆணி 17, 1938
அகமுக மாகு. அப்போதே ஆனந்தமுண்டாம்.
எதனல் கண் காணுகிறது? எதனுல் காது கேட்கின்றது? எதனல் மூக்கு முகருகின்றது? எதனுல் வாய் பேசு கின்றது? அதுதான் ஆத்துமா அல்லது கடவுள். எவ் வளவு சுலபமான வழி! நினைத்துப் பார். அனைத்துமுன் கைவசம். ஒரு கணம் நீ ஊன்றி யோசிப்பாயானல், நீ அதுவென உனக்கு நன்கு புலணுகும். உன்னுள்ளே தெய் வீகத்தன்மையை உணர். நீயே உனக்குத் தலைவன். நீயே உன்னை நடத்துபவன். நீயே உலகத்துக் கேகசக்கராதிபதி. இந்தத் தூய எண்ணத்தை மறந்தால் இறப்புப் பிறப் பாகிய சமுத்திரத்திற் கிடந்து திக்குமுக்குப்படுவாய்.
எழுந்திரு, விழித்துக்கொள். உன்னை இனி ஒன்றும் வெற்றியெடுக்க முடியாது. விளக்கு எரியவேண்டுமாயின் திரியும் எண்ணெயும் வேண்டும். நீ பிரகாசமடைய வேண்டினல் ஓயாமல் ஒம் தத் சத் என உணர்ச்சியோடு (அதாவது உயிரை எழுப்பி) பிரார்த்தனைசெய். சீக்கிரம் புத்தகத்தை முடி. h−
 

நற்சிந்தனை ‘ - 375 உத்தம இரகசியம்
நாங்களெல்லாம் ஒரே சமயத்தையும் ஒரே சாதியை யும் சார்ந்தவர்கள்; எங்களுக்குள் ஒருமாறுதலும் இல்லை. நாங்கள் பரிசுத்தரும், தெய்வத்துவத்துள் வைக்கப்பட்ட வர்களாகவும் இருக்கின்ருேம். வித்தியாசம் வித்தியாச மான மாறுதல்கள் யாவும் உண்மைச் சுபாவத்தின் சிறப் புக்களாக இருக்கின்றன. இவைகளை மாயை எனப் பெரி யோர் சொல்வர், ஒழுக்கத்தினுல் வசீகரப்படுத்தப்பட் டோர்க்கன்றி மற்றையோர்க்கு இவ்வுண்மை புலப்படாது. அதுபற்றியே தன்னுயிர்போல் மன்னுயிர் யாவையும் நேசித்தல் வேண்டுமென்று மகத்துக்களால் திரும்பத் திரும்ப வற்புறுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால் யாவும் ஒழுக்கத்திலேயே தங்கியிருக்கின்றன. இவ் வொழுக்கவழியில் நின்று எல்லாம் நாம் என்று பாவனை செய்து வரவர அற்புதமான அநுபவங்கள் மூலமாக நாங்கள் சடப்பொருள் அல்ல, சித்துப் பொருளென்று தெளியலாகும்.
அஞ்சேல்
14-11-33
'அஞ்சுவ தியாதொன்றுமில்லை, அஞ்ச வருவதியா தொன்றுமில்லையென்னு மான்றேர் மெய்ம்மொழி நம்மைப் பிறப்பிறப்பாகிய கடலைக் கடப்பிக்குந் தெப்பம்". இதைத் துணையாகக் கொண்ட வெமக்கென்னகுறை? ஆதலால் நிறைந்த மனத்துடன் இந்தப் பெரும் பிரயாணத்தைச் செய்வோமாக.
'அகர வுயிர்போ லறிவாகி யெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து'
இப்படிக்கு என்றும் மறவாதவன்.

Page 192
376 நற்சிந்தனை
காசியிலிருந்து எழுதிய கடிதம்
தேடித்திரிந்து காசிக்கு வந்து கண்டேன் விசுவநாதனை என்னுள். வாடித்திரிந்து வருந்த வேண்டாம். தேடிய பூடு காலுக்குள்ளே என்ற தெவிட்டா வாசக மொன் றுண்டு. இவ்விடத்திலும் மனிதர்களெல்லாம் எங்களைப் போலே தானிருக்கிறர்கள், நூதனமான காரணமொன் றும் பூதலமீதிலில்லவே இல்லை. இருந்த இருக்கிற இருக் கும் யாழ்ப்பாணத்தா ரெல்லாருக்குமாகக் கருமாதிகளெல் லாஞ் செய்து முடிந்து விட்டன. இனிமே லுங்களுக் கியைந்தபடி அன்பாக உலகில் நடந்து ஆண்டவன் அடிக்
கீழ் அமர்ந்து வாழ்க.
30- 1 - 40
Gl Glouubub
இதோபார். நான் உனக்கு மிகவும் அணித்தாயிருக் கிறேன். என்னைக் காண்கிருயா? நல்ல கூர்மையாய்ப் பார், உள்ளேயிருக்கிறேன். இன்னுந் தெளிவாய்ச் சொல் லில் நான் நீயாயிருக்கிறேன். பின் நீயேன் என்னை உனக்கு வேருய் நினைக்கிருய்?
நீயொரு கெட்டிக்காரனல்லவா? உனக்கு என்ன குறை? ஒரு குறைவுமில்லையல்லவா? உனது கடமையை நீ நல்லாய்ச் செய். யாவரிடத்தும் அன்பாயிரு. அதா வது உன்னைப்போல எவரையும் பார். பின்னல் வருவன வற்றைப் பாடம் பண்ணு.
'அரும்பிய கொன்றை அணிந்த சென்னியன்
ஆறும் பிறையும் சூடிய அழகன் இறையவன் மறையவன் ஏழுல காளி ஈசன் மழுப்படை தாங்கிய கையன் உம்பர் தலைவன் உயர்கை லாயனே'.
-ஈசுரமாலே ஒளவையார்.

நற்சிந்தனை 377.
β) - சிவமயம்
பகைத்தலும் விரும்புதலும் இல்லாதவன் சந்நியாசி யாயினுஞ் சரி, இல்லறத்தானுயினுஞ் சரி, அவனே பரம புருடன். அதாவது அவன் சீவன் முத்தனென்று பெரி யோர் சொல்லுகிருர்கள். இயற்கையோடு அளவளாவி வாழுதல்தான் பேரின்பம். அது ஒரு மாதிரியல்ல; உண்மை உணர்ச்சி. தனக்குத் தான் உண்மையாக விருந்தால் யாவும் விளங்கும். தன்னைப்போல மற்றவர்களையும் நேசித் தலே ‘தவம்'. அதுவே அறம்.
எங்குஞ் சிவம்
.ெ
சிவமயம்
யாவும் நமது ஊர். யாவரும் நமது கேளிர். நன்மை தீமை நாம்தர வருவன. பிறராலன்று. பிறர் காய்ந்த வழிக் காய்கிலம்; உவந்தவழி உவக்கிலம். யாவும் திரு வருளென்பது நன்கு அறிவேம். நம்மைச் சூழவரவிருக் கும் மலைகள் திருமாலைப்போல் பச்சைப் பசேலெனக் காணப்படுகின்றன. இரைந்து விரைந்து செல்லு மருவி களின் இனிய சத்தம் திருமாலின் கரத்திலிருந்து இடை விடாது ஒலித்துக்கொண்டிருக்கும் பாஞ்ச சன்னியத்தை ஒத்தன. சந்திரனுஞ் சூரியனு மிருபாரிக ளிருபக்கத்தும் விளங்குவதுபோல் விளங்குகின்றன. மரக்கொம்பரிலிருந்து தீங்குரலாற் பாடும் பட்சிகள் அக் கண்ணன் புல்லாங் குழல் பாடுவதை ஒத்திருக்கின்றன. தேயிலை கொய்யும் மகளிர் திருமாலின் இனிய பத்தரான கோபிகாஸ்திரீகளை நேர்வர். இவ்விடத்துக் கறங்கும் முரசம் துரியோதன னுடனே போருக்குச் சென்ற பஞ்சபாண்டவரின் தேரின் மீது அடிக்கப்படும் பேரிகையை இசைந்தது. எப்படித். திருமால் சகல வளங்களுடனுந் துவாரகையில் விளங்கி ஞனே அப்படியே இம்மலை இவ்விடத்து மிளிர்கின்றது. கண்ணனுடைய விருந்தினராக நாம் இவணிருக்கிறேம். ஒன்று கூறுதும். உவந்து கேட்குதி. நன்று தீதென நாட் கழிந்தன. என்று காணுவல் என்ற எண்ணமே இன்றும் எம்மை இசைந்து வாட்டிற்று.
என்றும் மறவாதவன். 17-3-32

Page 193
378 u நற்சிந்தனை
சிவமயம்
சொல்வதை மிகவும் கவனமாகக்கேள். நீ யார்? உடம்பா? மனமா? அன்றிக் கண், காது, வாய் மூக்கு முதலிய அவயவங்களா? இல்லை. ஏன்? எனது உடம்பு எனது கையென்று சொல்லுகிறதனுல் நான் உடம்பை விட வேறு பொருளல்லவா? ஆம்? பின்னை நான் எப் படிப்பட்டவன்? அழிவில்லாதவன். ஆகையால் எனக்குப் பயம் முதலியன விரலாமா? இல்லை. ஆனல், சரீர மன தர்மத்தையொட்டிப் பாவத்திற்குப் பயப்பட வேண்டும். புண்ணியத்தைச் செய்யவேண்டும். புத்திமான்கள் இப்படி நினைந்தும், செய்தும் பேரின்பத்திற்கு இம்மையிலும் மறு மையிலும் பாத்திரமுள்ளோராகின்றனர். நிலம், காற்று, தண்ணிர், நெருப்பு, வானம் இவைகளா லாக்கப்பட்ட வீட்டில் பகவான் வசிக்கிருர். ஆனபடியால், வீட்டைச் சுத்தமாயும், மனத்தைச் சுத்தமாயும் வைத்து அமைதி யாய் நட.
என்றும் மறவாதவன்.
842ے 18 سے87
6.
Soul Duth
உனக்குச் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. நாங்க ளெல்லாம் தேவ சந்நிதானத்தில் இருக்கிருேம். இது ஒரு பெரும் சத்தியம். யாவும் இருந்தபடியே நடந்து வருகின் றது. கிலேசமோ, அன்போ, பகையோ, இவையாவும் பகவானுடைய விளையாட்டு. இவை என்றும் இப்படியே. நாமும் அப்படியே. பிறப்பைப் போல இறப்பு. புகழைப் போல இகழ். நன்மையைப்போலத் தீமை. முழுதும் உண்மை. முன்னிலை இன்றித் தன்னிலையில் யாவும். இயங் காமல் இயங்கு. முடிவைக் காணுேம். அதுதான்
சுற்றிச் சுற்றிச் சுப்பருடைய கொல்லை.
என்றும் மறவாதவன்

நற்சிந்தனை 379
வ. &laյւՃամ)
நான், நீ, ஐயா, அம்மா, அண்ணர், அக்காமார், அத்தை, அப்பாச்சி, பெரியையா, சீனியையா, சின்னையா, கந்தசாமி, கணபதி, வைரவர், வீரபத்திரர், காளி, கூளி, கிருஷ்ணன், கிறிஸ்து, புத்தன், முகம்மது, இராச ரத்தின மாமா, சோமா மாமா, செல்லத்துரை மாமா, கன்று, பசு, ஆடு, குதிரை, சந்திரன், சூரியன், நட்சத் திரங்கள், மேடம். இடபம், மிதுனங் கர்க்கடகம், சிங் கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம், ஊர்வன, பறப்பன, கிடப்பன, நடப்பன, மலை, கடல், வாவி, குளம், கொடி, செடி என்று அளவிடக் கூடாமல் விரிந்து நிற்கிற ஒன்றுதான் கடவுள். இதை விட வேறில்லை யென்று தியானிக்கிறவன்தான் உண்மை யான பக்தனென்று சொல்லப்படுகிருன். இவனுக்கு இந்த உலகில் வெறுப்பானவர்களும் பிரியமானவர்களுமில்லை.
என்றும் பிறவாதவன்
60 -. சிவமயம்
வருடப்பிறப்பாய் விட்டது. நீங்கள் நல்ல பலகார வகைகள் செய்வீர்கள். பட்டுவேட்டி கட்டுவீர்கள். வீடு வெள்ளையடிப்பீர்கள். கோவிலுக்குப் போவீர்கள். சுவா மிக்கு நைவேத்தியமயிடேகம் முதலியவைகள் செய்விப்பீர் கள். நானே சாந்தமென்னும் புனலாடிப் பொறுமை என் கிற உத்தரீயம் பூண்டு வறுமையென்று சொல்லப்படுங் குருவின் போதனை கேட்டு மாசற்ற மனத்தைத் தரும் வெண்ணிறனிந்து, வேண்டாமையென்னும் விழுச் செல் வத்தையே மேலும் மேலும் தருமாறு பணிந்து அஞ் சாமை யென்கின்ற கேடகத்தை யுடையவனுய்ச் சுப்பிர மணிய சுவாமியினுடைய நெஞ்சிலே மிதித்து விளையாடு வேன்.
என்றும் மறவாதவன்
Η Α.- 4- 32

Page 194
380 நற்சிந்தனை
டெ சிவமயம்
பார். எல்லாம் சிவமயமாய் இருக்கின்றன. அப்போது நீ யார்? நான் யார்? ஐயா யார்? மற்றும் எல்லாம் என்ன? சிவமல்லவா? இன்னுஞ் சந்தேகமா? பயமா? பார். நான் உன்னுடனும் நீ என்னுடனும், எல்லாம் ஒன்ருகவும், ஒன்று எல்லாமாகவும் ஒருவிதமான மாறு தலும் அடையாமல் இருந்தபடியே இருக்கின்றது. எழுந் திரு. வரவரப் படி.
காலமில்லை. சுகம். சுகம். சுகம்.
பிறவாதவனிறவாதவன்
шаважами
, 29-5-33 இயாழ்ப்பாணம்
உலகமு முயிரு மாகியு மாகா அலகில் சோதி யடிமலர் பரவி ஒன்று சொற்றுது முவந்து கேண்மதி என்றும் நாங்க ளெல்லாஞ் சிவன்செயல் ஒன்றுக்கு மஞ்சேல் ஒருவனே தெய்வம் நன்று தீதென நாடிநீ கவலலை இன்று தொட்டுப் பணமெனக் கனுப்பாதே தொன்று தொட்டுப் பணந்தொல்லை யென்பர் முன்னும் பின்னு மெண்ணிமலை யாதே உன்னுள்ளு மென்னுள்ளு மிருப்ப தொன்றே சொன்ன வாசகஞ் சித்த சுத்தியைத்தரும் ஒன்னலர் தம்மை யுவந்துகொள் என்ன புதுமை யீண்டுண் டெனவறி.
ஒருநாளுமறவா யோகசுவாமி

நற்சிந்தனை " 881
.ெ சிவமயம்
நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றுண்டு. நீங் கள் உங்கள் கடமையை வழுவாது செய்யுங்கள். உங்க ளுக்குப் பகவான் நல்லருள்புரிவார்.
எல்லாருக்கும் என் அன்பார்ந்த வணக்கத்தைச் செய் கிறேன். ... । ‘’
இப்படிக்கு அவனே தானே
"செய்வன திருந்தச்செய்
மூத்தோர் வார்த்தை அமிர்தம்'.

Page 195
நாம் கடவுளை உள்ளத்தில் வளர்க்கிருேம். நாம் அவருடைய தாய். நமக்கு மவருக்குமொரு குறைவுமில்லை. நம்மை அவர் பிரிய முடியாது.
முழுதும் உண்மை.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!

v
Jfr "G8 அஃகமுங் காசும் அதிகம் அஃகமுங் காசும் தேடி அலேந்து நான். அஃகமுங் காசுஞ் சிக்கென அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடெனும் அஃகமும் காசுக் தேடி அம்புவியில் அஃகமுங் காசுக்தேடி அலையும் அஃகமும காசுக் தேடிடில் Q b (y அஃகமுங் காசுந்தேடி யலையாமல் அஃகா மனத்தா அஃகுதலில்லா அறிவினை Y. அஃகுதலில்லா அறிவுடைய அன்பரகம் . அஃகுதலில்லா அறிவுடைய பெரியோர் . அஃதை யறிவோ அகண்ட வெளியிலே அகந் தூய்மை அகம் பிரமாஸ்மியென்று அகம் பீரமாஸ்மியென்னும் அகரத்திலுகர மகர st அகரத்தில் உகரமும் o Y அகரமாம் எழுத்துப்போல அகரமுதல் எழுத்தெலாம் அகல நீளங் sh அகலிடத்தாசான் அகலிகை கல்லானுள் அக்கினறுமாலை அக்கக்காவடி அக்கு மனிதனைக் அங்கிங் கல்யாதே அங்கிங் கென்றெண்ணுதே அங்கிங் கெனுதபடி ஆனந்தமாய் அங்கிங் கெனுதபடி யெங்குஞ் es a அங்கிங் கெனுமல் அங்கிங் கெனுமலெங்குமான அங்கும் இங்கும் எங்கும் நான் 峰姆曾 அங்குமிங்குமாக அங்குமிங்கு மெங்கும் ஓடாதே A அங்குமிங்கு மெங்கும் திருக்கூத்து . அங்குமிங்கு மெங்குமந்த அங்கு மிங்கு மோடி அங்கையிலே பூவெடுத்து அங்கையிற் போது அச்சம் தீர்த்து அச்சமும் கோபமும் அச்சமொடு கோபத்தை
பக்கம் 343 56 288 314 243 187 115 289 157 225 303 185 16S 214 17 264 280 156 209 57 258 166 209 102 05 33 313 254 242 280 55 105 164 265 129 249 95 223 121
85 214
25 196
6. பாட்டு முதற்குறிப் பகராதி
அ
us0 அச்ச மொழியும் அஞ்சடுக்குத் தீபமுதல் அஞ்சின் வழியை அஞ்சும் மூன்றும் அஞ்சுகங்காள் அஞ்சுபூதம் யேல்ல அஞ்சு மடக்கு
அஞ்செழுத்தாலே அனைத்தும்
அஞ்செழுத்தாலே ஆக்கை அஞ்செழுத்தாலே சஞ்சல அஞ்செழுத்தாலே அரனடி அஞ்செழுத்தின அஞ்செழுத்துப் அஞ்செழுத்துள்ளே அனைத்தையுங் அஞ்செழுத்துள்ளே அஞ்செழுத்தை நெஞ்சில் அஞ்செழுத்தை வழுத்திடேன் அஞ்சென ஆறென அஞ்ஞான் விருளை அடிக்கடி மிடியால் அடிக்கீழ் அரக்கன்
spp. uu fi g LS 6TTàs asubsoġ5(8gb அடியார்க் கடியானென்று அடியவர் பாதத் தன்பு செய்திடில் அடியவர் மனத்தை அடியா ருள்ளத்தே அடுக்குமோவின அடைக்கல மடைக்கல மரனே அட்டவசுக்களும் அட்டாங்க யோகம் அவத்தை அட்டாங்க யோகத்திற்கும் அட்டாங்க யோகமெலாம் அட்டாங்க யோகமெல்லாம் அட்டாங்க யோகம் விட்டேன் அட்டாங்கயோக மறிந்து அணங்கு தந்தெமை அனேக்து வந்து அண்டசராசரம் அவன் அண்டசரா சரமவன் வடிவாகும் sı6örlerger a0 GLDü6)Tû அண்டமும் பிண்டமும் அகத்திற் அண்டமும் பிண்டமும் ஒன்ருே அண்டமும் பிண்ட மடங்கலு அண்ட பிண்ட மனத்தும்
பக்கம் . 133
214
始
多
6
134 94 102
26 . 213 23 23 10 151. 44 112 186 137 2O7 177 159 234 301
272 40 33 281 328 35 286 316 341
155 67 226 323 26 212 18 214 13 169 276

Page 196
பாட்டு
அண்ட பிண்ட மெல்லாம் அண்ட பிண்ட மெல்லா மடக்கி அண்டர் முனிவர் கரர் அண்ணன் மாரே அதுங்ானென்னு அதுவிது வென்றவன் அத்த சாமப் பூசைக்கு அத்துவா மார்க்கமாறும் அத்துவிதப் பொருள் அத்துவிதப் பொருளை அருந்தவர்கட் அத்துவிதப் பொருளை அறிவுக் அநுதினம் சாதனை அந்தக் கரண நாமல்ல அந்தம் ஆதி
அந்தமும் ஆதியும் அகன்றேன் வருக .
அந்தமும் ஆதியும் அறியொன அந்தமும் ஆதியும் இல்லான் அந்தமும் ஆதியு மில்லா அந்தமு மாதியு மில்லா ஒருவனே அந்த வாக்கும்
அந்த விதமே அக்தி சந்தி உன் அடியை அந்தி சந்தியும் சிந்திக்கு அந்தியுஞ் சந்தியும் அன்பினி அக்தியுஞ் சந்தியும் ஆசான் அந்தியுஞ் சந்தியும் இதனே அந்தியுஞ் சந்தியும் நீ அப்படி யுள்ள தென் அப்படியே உள்ள தென்பான் அங்கு அப்படியே உள்ள தென்பான் ஆசான்
su
es ve
·4· ·
அப்படியே உள்ள தென்பான் ஆரறிவார்
அப்டடியே அப்படியே அப்படியே அப்படியே அப்படியே
உள்ள தென்றன் உள்ள தென்று உள்ள தென அடிக்கடி
உள்ளதென அன்றசான் அப்படியே உள்ளதெனச் சொல்லி அப்படியே யுள்ளதென அத்து அப்படி யுள்ளதென்று அன்பாக அப்படியே உள்ள பொருளெடா அப்பர்க்கு சமணர் செய் அப்பர் சுநதரா அப்பனுக்கும் அம்மைக்கும் அப்பனும் அம்மையும் அப்பனும் அம்மையுஞ் சிவமே அப்பனே ஆகுயிரே
a as
oe
a.
உள்ளதென அடிக்கடியே
. . .
På asb
162 63 286 55 16 204
56 351 238 280 274 282 306
34
14 I87 100 88 252 304 199 159 301 240 280 292 248 312 248 276 163 270 288 86 283 329 320 305 283 38 352 47
352
130
i
i
பாட்டு
அப்பா பரமசிவம் அம்மையப்பன் அம்மை யப்பனரிய அம்மையு மப்பனுமாய் அம்மையப்பன
அயலறியா
அயலறியாத அயலுனக்கில்லே அயணு மரியும் அரகர சிவசிவ அாகரவென்று அரவரைக் கசைத்த அரவார் செஞ்சடை அரவுசேர் பேணியெம் அரற்று மன்பர்க்கு அரனு முமையு அரியதி லரியது ஆன்மா வதுதான் அரியதி லரியது ஆன்மா அரியயனுந்தேடி அரியும் பிரமாவும் அருந்தவர்தம் அருந்தவர் கெஞ்சிலிருக்கும் அருந்தவர் கெஞ்சில் ருசிக்குங் அருமருந் தொரு ჰotტნისტყ) ტყიტნllტყ) அருவமு முருவமு மானுன் அருவாகி நின்றவன் அருவாவுருவா அருவா யுருவாகி அருவென்றும் உருவென்றும் அருளா லறிந்தேன் அருளொளிக்குள்ளே அருள்நீ தாதாவே அலகிலாச் சோதியை அலகில் உயிர்களை அலங்காரமாக அலேயும் மனத்தை அல்லலற்று வாழ வழி அல்லலெல்லாம் நீக்கி அல்லும் எல்லியும் இறைவன் அல்லும் பகலும் அறிவாக அல்லும பகலும் அப்பன் அல்லும் பகலும் அறிவாகி அல்லும் பகலுமற அவமானப் படுவதில் அவனருளாலே
பக்கம்
350 307 203 49 32 217 208 284 39 306 39 178 226 1 C6 216 103 35 295 128 302 283 214 132
214 336 108 100 280 209 299
274 106
26 278 C4
65 121 272 287 294
44 190
77 282

t_jRL".(B -
அவனவ ளதுவெனு - 。 அவனன்றி யணுவும் அசைய
அவனன்றி ஓரணுவும் அவனி வனுரென் அவனிவ னென்றதை அவனன்றி யொன்றும் அs னன்றி யோரணுவுமசை அவனே நானென்று அவைக் கஞ்சா அழகாரரியும் அழகாருமமயுலியும் அழல்சேர் கையு அளந்தேன் அருளால் அளவிலா மதங்தொறு அளவிலா வொன்றே அளவில் மதங்தோறும் அளவுக்காகாரம் அளவுக்குப் போசனத்தை அரஞ்செய விரும்னெ அறஞ்செய்வார் தங்களகமே அறத்தோடு பூசை அறமே யாற்றுதும் தினமே அறம்புரி வோர்கள் திறம் அறம் பொருள் இன்பமும் அறவாழி அந்தணன் அறவோ ரெனப்படுவார் அறி சதி யறிவிகுலே அறிவறி யாமை
அறிவுக கறிவாகி யப்பாற்கப்பாலா .
அறிவுககறி வாகிகின்றப் அறிவுக்கறி வாகியங்கு அறிவுக்கறிவாக் யப்பாலுக் அறிவுக்கறிவாகி யப்பாற் அறிவுடையார் எல்லா அறியும் பொருளும் அறுபதும் காலுமறியா அறையும் மறை அனங்கணுகத்தை அனைத்து மவனே அவன்செயலே அனைத்தும் ஒன்றாய் அ*னத்தும் சிவன அனைத்தும சிவன் செயல் அனைத்து யிரும்நீயே அ*ன வருக்கும தெய்வம் அனைவரும் ஒன்ருய்
25
iii
பக்கம்
170 170 280 120 77 234 55 257 198 227 106 179 203 170 328 106
58. 238 347 101 170 179 106 109 1)2 133
61 161
51 100 193
104 106 214 198 227 343
55
36
61 243 284 323
uT"(B பக்கம்
அன்பரன்பது சிவசிவசிவ 348 அன்பருடன் கூடி நீ ..., 319. அன்பர் தம் சிந்தை 233 அன்பர் பணி 21 அன்பர் பணிந் தேத்தி நிற்கும் 290 அன்பிலா ரோடுறவு ... 345 அன்பில்லேன் இரக்கமில்லேன் 149 அன்பிலேன் பொறுமையிலேன் ..., 148 அன்பிற் கரைந்துருகி 188 அன்பிற் குழைந்து 304 அன்பினுற் பணி ... 271 அன்பினுருகி 191 அன்பு சிவமெனல் --- 7 அன்பு சிவமென் 33 ۔۔۔ அன்பு சிவமென்ற ஆன்றேர் ... 294 அன்புடனே ஐந்தெழுத்தை ... 94 அன்புடையோர் 107 அன்பு நெறியும் ... 64 அன்பே கடவுள் ... 26 அேைப சிவ ரி கக் 114. அன்பே சிவமென அறிவார் ... 97 அ* பே சிவமென * ... 23 அன்பே சிவமெனு ... 118 அன்பே சிவமெனற 289 அன்பேசிவம் அறிந்திடடா 247 அன்பே சிவமென்று கிளியே ... 345 அன்பே சிவமென் றறைந்த 170 அன்பேயுருவாய் ... 93 அன்பே வடிவாய் 228 அன்று மின்று 225 அன்னத்தோடாடை 106 அன்னே தந்தை சுற்றம் ... 185 அன்னை தந்தை சுற்றத்தை ... 344 அன்னை தந்தையர் ... 150 அன்னை பிதாக் குருவாய் 20 அன்னை பிதாக் குருவாகி 29 அ*னை பிதாக் குருவானுன் 241 அன்னை பிதாக் குருவானுன் எங்கள் . 277 அன்னை பிதா குரு ... 296 அன்னை பிதாக் குருவாகி அடியேனே . 270 அன்னை பிதாக் குரு தெய்வம் 38 அன்னை பிதாக் குருவாகிய 214 ..ه அன்னையாவது சிவசிவசிவ ... 348 அன்னையும் பிதாவும் 314

Page 197
LTG ஆக்கி னுனெ?ன ஆக்கை கிலேபல்ல శిరీ60 tడి ஆக்கை நிலையில்லே ஆக்கை நீ பல்லே ஆக்கையே கோயில் அகஞ்சிவ ஆக்கையே கோயில் அகமே ஆக்கையே கோயிலாக ஆங்காரம் போச்சுது ஆசா?னக் கண்டேன் ஆசான் லுருளால் ஆசான் அருளால் அகந்தை ஆசான் மலரடி ஆசுகவி மதுரகவி ஆசைக் கடலில் அலைந்து ஆசை கிகளத்தினை
ஆசைடாம் ஆசையை விட்டிடடி ஆசைேைலயிற் சிக்கி ஆச்சு தென்று ஆடம்பர மெல்லாம் ஆட வெடுத்த
bę. Nuo T (o: FrgisT UT ஆபொம் ப7ரிங் ஆடுபாப் பணிந் ஆரியாம் பணிந்தாடுவான ஆடுபாம்பே ஆகி மயிலே ஆடுவர் பாரிவர் ஆனில் பெண்ணும் ஆணு ^ாய்ப் பெண்ணுமாகி
ஆணும் பெண்ணும் அலியும் ஆணும் பெண்ணும் ஆனவனே ஆண்டவன் திருவடி ஆதார வாதேய ஆதாரக்தாலே ஆதாரத்தால் ஆதார மாறு க ஆகார மாறும் அகன்ற ஆதாரமாறும் அவத்தையோ ஆதார வாதேய முழுது ஆதாரம் ஆறும்விட்டுப் ஆதார வாதேய மாணவப் ஆதியந்த ம ன்மாவுக் ஆதியந்த மில்லாத ஆன்மா ஆதியந்த மில்லாத நாடெங்கள் ஆதியந்த மில்ல
OO
ν
293
ويت
udäöd uT (R பக்கம் 54 ஆதியந்தமும் அற்றவன் 271 342 ஆகியங்தம் இல்லையென்று 80 303 ஆதியந்த மில்லையென்றன் 3 171 ஆதிபந்தம் உங்கட்கில்லேப் 269 56 ஆதியு மந்தமூ ம ன்மாவுக்கில்லை 343 225 ஆதியு மந்தமு மில்லா 111 185 ஆதியு மந்தமுமில்லான் 240 140 ஆகியு மருதமு மில்ல நமக்கு 196 113 ஆதியந்தமில்லா அப்பனு 353 221 ஆதியு மில்லே 9 208 ஆதியும அந்தமும் அானுர்க்க 299 299 ஆதியும் அந்தமும் இல்லா ... 26 ஆகியும் அக்தமும நமக்கிலே ... 250
152 ஆமைபோல வைந்து 170 219 ஆயிரங் திருநாம * ... 142 108 ஆயுகான் ... 65 - 164 ஆாகத்தினும 54 280 ஆரடா நீ யென்றே 282 242 ஆாறிபவ ரென்ன 39 ܚܚܗ 153 ஆாறிவாரென அடிககடி சொல்லுவான். 239 223 ஆாறிவாரென அடிக்கடி ஒதும் 210 128 ஆரறிவாரென அன்று 52 279 ஆரறிவாரென்ற அருமைத் 187 199 ஆரறிவாரென்ற ஆசான் ... 293 14 ஆரறிவா ரென்று சொல்லிக் • • • 82 347 ஆாறிவா ரென்று சொல்லும் ... 308 266 ஆரறிவா சென்றுன்னுமரிய ... 321 60 ஆாறிவா ரென்றெனக 288 25 ஆரறிவா ரென்றே ... 219 208 ஆரறிவா ரென்ன • .163 م 57 ஆரறிவார் என்றப்பன் 232 --مه 251 ஆாறிவார் என்று முன்னுள் 186 233 ஆரறிவார் என்னும் ... 289 . 268 ஆராயும் வேதமுதல் ... 302 293 ஆராயும் வேதம் அறியாத ... 33 44 ஆராய்ந்து நற்கருமம் ... 107 204 ஆராய்ந்து பார்த்தாலறிவே 171 141 ஆராரென்ன வறைந்த ... 171 304 ஆருமறியாமல் ... 129 113 ஆாமறியா ரெனவே ... 336 156 ஆருமறியா ரென்று ... 80 269 ஆருயிர்கள் தோறு ... 93 168 ஆருயிர் தோறு ... 100 114 ஆரையனே . 46 294 ஆரோடும் பகையாதே 345 21 ஆர் கொடுக்க . 329 220 ஆர்க்குங் கடல்சூழ்ந்த 207 ماهه

LJTUG ஆர்க்கும் சுதந்திரத்தை ஆலயக் தொழுவது ஆவதில்லா அழிவதில்லா ஆவது அழிவதுதான் ஆவதும் அழிவதும் இல்லே ஆவதும் அழிவது அறியா ஆவதும் இல்ல ஆவதும் இல்லையடி ஆவதொன்று மறிகில்லேன் ஆவதோ ஒன்றுமில்லை ஆவிக்குளாவி ஆழ fள மில்ல ஆழிதழ் இலங்கை ஆழிததுரும்பெனவே ஆளான அன்பர் ஆளான மெய்யடியார் ஆளும பெருமான் ஆறணி சடையினனே ஆறணிக்த திருச்சடையா ஆறத் துவாக்களுக்கும் ஆருக்கவலை யெல்லாம் ஆருத காதல்சேர் ஆருய்க் கண்ணிர் ஆருறுக் கபபால் ஆறறு தத்துவத்துக் கப்பா லா ஆறறுத உதுவத்துக் கப்பாலே ஆறியாறி ஆறுகுளமேரி
இகலோகம் டரலோகம் இகழ்ச்சி புகழ்ச்சியென இசையும் பொருண் ඹුණී ශාකd tuff.0’ 6කකl இச்சையில்லோரே இடத்து மடந்தையை இட பந்தனிலேறு இடமக ைற ஞாலத்தே இடம் வலமோடி இருககண்கள் பலபல இ.ே லயக கிடும்பை இவே த மறவாதே இடு துவே சிறிதுமிலேன்
SOL. Y ħl h * இ. பிங்கல இரண்டுஞ் சேர்ந்து இடையா என் பென இ. ட யிடையே
Li u ܚܝܝܐ -: S8
છx . R : , (3.-7ř
பக்கம் utu (8 பக்கம்
241 ஆறுகுடிய
314 ஆறுதலாய் இருமென்னன் 243 ஆறுதல் பெற 104 ஆறுபடி தாண்டு 251 ஆறுபிறைகொண றை pe 167 ஆறும் பிறையுஞ் சூடிய - - - 208 ஆறும் குளனும் A lev 280 ஆறு வருடமவன் 149 ஆறுவது சினமென கடி ·· · 133 ஆறுவது சினமெனு மரிய I65 ஆறுவது சினமென்னு 8 326 ஆறு வைத்ததும −− − 282 ஆனந்தக்கூத் தாடினுன்
223 ஆனந்த மாந்த மனந்தங் a A
50 ஆகந்த கடனம் ஆடினுன
131 ஆனிரைதனை
202 ஆன்மா அழியா - 149 ஆன்மா அழியாதென்று - - - 145 ஆன்மா ஒருபோதும்
154 ஆன்மா நித்தியமான 304 ஆன்மா நித்தியமென்று
303 ஆன்மா கித்தியமென்ற
188 ஆன்மாவக் கயலில்&ல
213 ஆன்மாவே காமென்று
294 ஆன் மாவே நாமென் றுாதூது 288 ஆன் மாவே நாமென்னும்
17 ஆன்மாவை
101 ஆணே நீ அடல்விடைநீ
264 இட்டுண்டு வாழ்வார் 207 இணக்கமாயிருந்து
98 இணங்கிவாழ் மாந்தர் 137, ജൂഞ്ഞ് ധ്യ பணிவார் MA () 222 இது அது என்றெண்ணுமல் a
226 இந்தப் பத்து
O5 இந்தவுயிர் உடல் ஆனுன் 161 இந்திரராதி யோரானுன் 177 இந்திரனுதியோர்
159 இப்பிறவி தீர்ப்பான
287 இம்மைக்கும்
345 இம்மை மறுமை இரண்டின் 149 இம்மை மறும்ை
152 இம்மையிலும
95 இம்மையிடிம் மறுமையிலும் 207 இயககர் முனிவர்கள்
30 இயமன் வருணன் குபேரன் weww. 55 இல்வ5, கரவேல்
155 இல்லை யென்னும சொல்
3. 248 138 52 130 171 27 18 292 238 287 147 256 284 237 215 13 69 81 274 301 353 280 8O 190 36 89. 275

Page 198
LTG இரவு பகலற்ற ஏகாந்தம் இரவுபகலற்ற தனி இரவு பகலில்லாத இரவும் பகலுமற்ற இரவும் பதலுமுன்னை இராஜ திராஜன் இருநிலனுய்த் இரு நிலனுய் இரவிமதி இருநிலனுேடிாவி இருந்த படியே யிருக்கும் பொருளை
இருந்த படியே யிருப்பதனைக் கான .
இருந்துபார் என்றென இருப்பார் பொருப்பி லிறைவி இருப்பினும் நடந்து இருப்பு நெருப்புப் இருவருங் காணு வீசன் இருவி%ன சேரா இருவினை பணு மிடுக்கணெய் இருவருந்தேடி
இருவழியை
இருவாசல்
இருவினைகளென இருவினை நீககி இருவினையான் இருவினையால் கட்டுண்டு இருவினையை நீக்கி இருவினை சுய நீக்கி இரவுபக இருவி%னயின் கட்டழித்து இருவினை வந்தெனை இருளை நீக்கி இலங்கைவாழ் தெய்வம் இலது உளதென இல்லறத்தில் நின்றெளிரும் இல்லற மல்லது இல்லற மென்பதியார்க்கும் இல்ல*ளுக் தானும் இல்லே உண்டென்னு
இல்லை உண்டென்பது
Firsof 200rut. ஈசனே எம்மை நீங்கா ஈசனே எவ்வுயிர்க்கும் அவ் ஈசனே எவ்வுயிர்க்கும் உயிராய் ஈசனே நல்லூர் ஈசனே நல்ல வாசனே ஈசனே யெங்கு மென
ν
பக்கம்
125 102
152
36 302
41 130 297 143 172 343
56 72ן 203 100 315 315 172 245
160 204 57 124 185 187 188 129 199
197 226 03 314 103 103 100 256
31 140 187
... 302
99 188
இல்லை
பாட்டு உண்டென்று இயம்ப உண்டென எடுத்து
உண்டென்று உண்டென்று சொல்ல யென்னு மலே யென்று சொல்லுவார் யென்று சொல்கிலோ இல்லை யென்னுமல் இல்ல யென்றும உண்டென்று; இல்லயென் ருெருடோதுஞ் இள ை இன்பத்தில் இள ை0 கிலேயாதென
இல்க் இல்ல இல்க் @6სზა இல்ல
ଦ୍ରୁ, ଶ୍ୱେତ ଅଲି)
இளமையுமூ இளம் பிரை அணிந்த இளம்பிறை சூடி
இளமை மூப்பிலான் இளமையும் மூப்பும் இளமை முப்பிலான் இறப்பும் பிறப்பும் இனிப் பிறவா இனிய அருள் இனிய திலினியது இனியவனே இனியேதெனக்குன் . வருமோ இனி யேதெனக்குள் இன்சொல் விளை நிலனுய் இன்சொற்றவருர் இன்ப துன்பம் இன்பமே யல்லாமல் இன்ருகி நா?ளயாய் இன்றிருளை நீக்கி இன்றுளோர் நா8ள இன்றென நா?ள யென்றே இன்றைக்கோ நா?ளக்கோ இன்ன தன்மை என்று நம்மை இன்னதன்மைய னிவனென இன்ன தன்மையனென் இன்னு னிவனென் றெவரும்
ஒருவனென ஈசன் ஒருவனெண்ணிப் ஈசன் ஒருவனென எண்ணி ஈசன் திருவடி ஈசன் திருவடியை ஈசன் மேல் நேசமாய் ஈசனை எல்லாவுயிர்க்கு
FF伊守
Y
பக்கம்
317
108 301 225 114 104 93 196 218 242 344 32 75 179 43 119 14 43 227 227 194 93 166 50 85 192
103
126

UT"08 ஈசனை யெல%லயில் ஈடேற வேண்டுமென்றல் ஈடேற்ற முண்டாமே ஈன்றளுமா யெமக் ஈயாத புல்லர் தங்கள் ஈயாத புல்லர் இடந்தோறும் ஈயாத புல்லரை நீ ஈயாத மாந்தர் Ffu (T gb ffîääsioàs) ஈயார் தேட்டைத் ஈயு மெறும்பு ஈரவார்சடை ஈரவார் சடையான ஈரவார் செஞ்சடையா
உகந்து மணங்குவிந்து உடல் பொருளாவி உடையது விளம்பேலு உணர்ந்தார்க்கு உணர்வரிய உணர்ந்தார்க்கு முணர உண்னவே உண்ண உண்ணுதே உறங்காதே உண்ணு துறங்கா திருந்த உண்டான போதுகா உண்டி சுருங்குதல் உண்டில்&ல யென்று சொல்ல உண்டில்?ல யென்றுசொல்லி உண்டோதானுன உண்மை முழுது மெனவுறுதி உண்மை முழுது மெனவோ உண்மை முழுதுமென ஒது உண்மை முழுதுமென்றல் உண்மை முழுது மென்றேத்தி உண்மை முழுது மென்பான் உண்மை முழுதுன்ெற உயர்ந்த உண்மை முழுது மென்ற ஒரு உண்மை முழுது மென்று சாற்று உண்மை முழுதுமென்றேயா உண்மை முழுது மென்னும் உண்மை முழுது மென்ருேதுங் உண்மை முழுதும் என்ற உண்மை முழுவதும் என்றுரை உண்மையும் இன்மையும் உத்தம நட்பை உத்தமர்கள் போற்றும் உம்பர் தலைவனை
vii
பக்கம் பாட்டு டக்கம் 104 ஈர்த்தென்னை யாண்டவன் ... 108 242 ஈர்த்தென ஜன யாட்கொண்ட ... 29 343 ஈவது கடைப்பிடி ... 199 93 Fr6aug Mesir seo 345 سعه - - 56 ஈவது விலக்காதே ... 345 185 ஈவது விலக்கே லென் ... 238 308 ஈவோரிரக்கவு 173 ماهه 156 ஈழநாடு வாழவந்த ... 229 172 ஈழநாடு வாழவந்த எங்கள்சிவ ... 229 3I4 ஈவாரே எல்லாம் ... 107 172 ஈறில்லாதவன் ... 147 14 ஈனருளு மாயென் ... I73 126 ஈன்றிடு தந்தை ... 57 130
2
19 உம்பர் தலைவனுயர் ... 225 231 உம்பர் தல்வனை யூழி ... 173 238 உயர்ந்த திருக்கோபுரமும் ... 220 33 உயிருக்குயிராகி 129 57 உயிரெலாம் தன்னுயிர் ... 166 163 உயிரெல்லா மாகியும் ... 130 322 உருக்கு மொழியால் 79 173 உருகி உருகி ... 187 199 உருகி உருகி உணர்வழிந்து 295 314 உருகியுருகி உணர்ந்தேன் ... 18 10 உருவேறவே செபிக்க 24 322 உருவேறவே செபித்து ... 153 64 உலகத்தோடொட்ட 167 288 உலகமும் உயிரும் ... 20 29 உலகமே கோயிலாய் ... 301 127 உலகம் உதித்ததுமாங்கே . . . 256 343 உலகம் உவக்கவும ... 231 114. உலகம் யாவையும் ... 14 312 உலகுமுயிரு மாயொன்றி 104 242 உலகெலா முணர்ந்த ... 324 36 உல்லாச கடையனடி , 249 96 உல்லாச மாயெங்குஞ் . . 298 210 உவந்து வருவான் ஓம் ... 192 287 உவமானம் கடந்த ... 77 218 உவமை ஒன்றில்ல ... 327 308 உவமை கடந்த . எல் - 92 120 உவமை கடந்த பேரின்பம ... 282 147 உவமை கடந்த வின்பம் ... 61 61 உளவறிக் தெல்லாம் ... 108 238 உள்குவாருள்ளத் ... 140 156 உள்ளத்தி னுள்ளே யுலாவு --- 173

Page 199
Lr-G உள்ளத்தினுள்ளே யொளிருஞ் உள்ளத்தூய்மையாய் உள்ளமே கோயில் உள்ள வுள்ள உறவு மிதுவே உறுதி தருவது சிவழே உறுதி யுண்ட குமுண்மை உற்றர் பெற்றருடன் உற்றரும் போனுர் உனைப்போல உத்தமர்கள் உன் துணை யன்றி
ஊக்கத்தைப்போல ஊக்கமது கைவிடேல் ஊக்கமுள்ளவர்
DGIJá (po Tu - - ஊசிமேல் நுனி - - ஊட்டி வளர்க்க
"ஊண்பொருளு ஊதியமாவதும் நீயே ஊதூது சங்கே ஒளதுாது ஒவதூது சங்கே ஊதூது ஊமத்தை கொன்றை யுவந்த ஊமை, போலிருந்தே ஊரார் சிறக்க ஊருடன் பலகக்கின் ஊருமில்லாய் பேருமில்லாய் ஊருமில்லான் பேருமில்லான் ஊரும் துணையில்* ஊரும் பேருமில்லா உத்தமனே ஊரும் பேருமில்லா ஒருபொருளை ஐவரும் .ோமில்லா ஒருவருக்குச் ஊரும்பேருமில்லா ஒருவனே ஊரும் ருேமில்லா ஒருவனை
எங்களை ஆள் குருகாதா எங்கw விட்டுப் எங்கள் குருநாதன் எங்குக் திருவிழி எங்கு தேடினுய்
1ங்கு மீசனே யேத்துவார் ww எங்கு முள்ளவன் எங்கும் ஈசனை எங்கும் என்றன் தங்கும் எங்கு சிவனடியை எங்கும் மாதவர்
பக்கம்
304 272 107 115 169 247 174 173 221 243 230
9G.
287 238 301 174
57
, 104
81 147 189 190 174 140 107 314 130 154
46 302
36 114 289 156
59 114 53 175 262 272 204 10 265 38 206
viii
பாட்டு உ நினைவல்லால் உன்மத்தங் கொண்டு உன்மத்தன் போல உன்மத்தன் போலே உன்னடிமை உன்னைப் பிரிவனுே உன்னை மறப்பேனுே உன்னை முழுவதும் உன்னே யல்லால் உன்?ன யுனக்கொரு உன்?ன உணர்ந்தவர்கள்
பேருமில்லா ஒருவன் பேருமில்லா ஒருவன் திரு பேருமில்லா வொருவன் பேருமில்வாத உத்தம?னச் பேருமில்லா னுள்ளான் ஊரும் பேரும் இல்லையென்று ஊரும் பேரும் இல்லான் ஊரூராய்த் திரிந்து ஊழிக் காலத்து மொருவர் ஊழ்வினைபோக ஊனு (புணர்வா யுயிருக் ஊணு யுயிராய்க் ஊணு யுயிராகி யுட்கலந்த ஊணு யுயிரா யுலகாயோ ஊஞய் உயிராய் உளத்திற் ஊனுய் உயிராய் உடலாய் ஊனுய் யுயிரா யுடலாய் உறுப்பாய் ஊனுமவனே உயிருமவனே ஊஜமாய் உயிருமாகி ஊனே நீ உயிரே நீ ஊன் பொதிந்த
ஊரும் ஊரும் ஊரும் ஊரும் ஊரும்
எங்கெங்கு சென்ருலும் எங்கெங்கே எங்கே காம் அங்கே எங்கே நீ அங்கே நான் எட்டாத கொப்பிலிருக்கின்ற எட்டாத கொப்பிலிருககுந் தேனுக்கு எட்டாத கொப்பில் எட்டாத கொப்பினிலே எட்டாத கொப்புக்கு எட்டாத பேரின்பம்
எட்டுத் தரம்
t க்கம் 122 129 289
56. 337 185 93 165 302 249 88
185 295 225 242 174 80 108 187 174 120 74 308 188 343 93 186 199 106 56 275 14
115 303 162
63 286 175 27. 155 155 155 152

ix
பாட்டு பக்கம் பாட்டு பக்கம் எட்டுத் திசையுமற் . 304 எல்லா மாயல்லவுமா . திருவரு ... 187 எட்டும் இரண்டும் அறியாத . 220 எல்லாமாய் அல்லவுமாய் இருப் ... 185 எட்டு மிரண்டு மறியா எனக்கொரு . 52 எல்லாமாய் அல்லவுமாயிருக்கும் . 63 எட்டு மிரண்டு மறியா எனக்குகல் . 125 எல்லாமு மல்லவும் ... 310 எட்டுமிரண்டு மிசைந்து ... 286 எல்லாமென் ... 18 எட்டுணையும் தாழ்ச்சி ... 286 எல்லாமென்னூர் ... 346 எண்ண மெலாம் ... 102 எல்லாம் அவனே 62 எண்வ்கை ஒருவனே .. 310 எல்லாம் சிவமயம் ... 301 என ணமல் எண்ணிடடா . 322 எல்லாம் சிவன் செயலே 13 ۔ ۔۔ எண்ணிப் பணிவார் ... 289 எல்லாம் சிவன்செயல் 53 ۔۔۔ எண்ணிய வண்ணம ... 56 எல்லாம் செய " ... 40 எண்ணி யெண்ணிப் ... 246 எல்லாம் நினது செயலென் 188 ••۔ எண்ணி யெண்ணி ... 201 எல்லாம் நீ யென . 205 م எண்ணி லடங்காதடா ... 264 எல்லாம் நீயே ... 175 எண்ணு மெழுத்துங் ... 314 எல்லாம் வல்ல திருப்பாதம் 202 ۔۔۔ எண்ணு மெழுத்துமாய் ... 225 எல்லா ரகத்தும் ... 161 எண்ணுவார் எண்ணங் . 140 எல்லாரிடதது முள்ளாய் -- 230 எண் ணுவார் நெஞ்சில் 309 எல்லா ரிடத்தும் . ... 230 எத்திக்குமாகி . 238 எல்லாரு ருவமும் ... 230 எ திக்கு மீசனடி ... 224 எல்லா ருள்ளத்தினும் ... 24 எத்திசைக்கும் ... 273 எல்லாரையு ... 89 எத்தொழிலச் - ... 69 எல்லார்க்கு மன்பு ... 24 எந்தச் செயலுஞ் ... 252 எல்லார்க்கும் தம்பிரான் . . . 235 எந்த நேரமும் ... 31 எல்லார்க்கும் நன்மைசெய் ... 264 எந்த நேரமும இறைவன் ... 272 எல்லார்க்குமாங் கடவுள் ... 197 எந்த வேளையும் 54 எல3லசொலல ... 302 எந்தையே எந்தையே 50 எல்லேயிலாக் கருணை ... 110 எந்தையே எம பெரு ... 46 எல்லேயிலாவருள் .233 م.م எந்நாளும் நல்லூரை 66 எல்லே பெமக்கில்லே ... 344 எப்டடி இவன்றன்மை ... 283 எவரேனும் ... 166 எப்பவோ முடிந்ததென எங்தை 186 எவ்வுயிருந் தன்னுயிர்போல் - 60 எப்பவோ முடிந்ததென எனக்கு ... 270 எழுக புலருமுன் OO 8 எப்பவோ முடிந்த தென்றெடுத் ... 211 எழுதவே யொண்ணு ... 104 எப்பவோ முடிவான" ... 39 எழுவாய் பயனிலைகள் ... 222 எமன் வருமுன்னே ... 105 ஏள்ளப்படா ரறிஞர் ... 107 எல்லாஞ் சிவன் செயலென்பர் ... 165 எள்ளுக்கு ளெண்ணெய் ... 115 எல்லாஞ் சிவன்செயலென்றெண் ... 304 எள்ளுக்குள் ளெண்ணெய்போலெங்கும் . 343 எல்லாஞ் சிவன் செய . 287 எள்ளுக்குள் எண்ணெய்போல் 12 எல்லாஞ் செயவல்ல இறைவனே . 130 எள்ளும் எண்ணெய்யும்போல ... 136 எல்லாஞ் செயவல்ல தெய்வம 297 எள்ளுக்குள் எண்ணெய் == 294 எல்லாஞ் செயவல்ல சித்தர் ... 142 எள்ளு மெண்ணெயும் ... 14 எல்லா வுயிரினு ... 295 எனக் கினியாள் ... 203 எல்லா உலகமுமான ... 108 எனக்கின்பமே வா ... 68 எல்லாச் சமயமும் ... 305 எனக்கும் தனக்கும் ... 36 எல்லந் தருங் தெய்வம் . 197 எனக்குள்ளே as 121 எல்லாப் பொருள்களும் ... 147 என்செயலாவதில்லை ... 175 எல்லா மாயல்லவுமாய் . ... 93 எனது யான் எனும் ... 332
எல்லாமாய் அன்றி . 162 என் செயல் ... 168

Page 200
TG என் பிழைகள் எனபு பூண்டவன் என்று நீயன்று நாம் என்றும் மறவா என்று மிருந்தபடி
என்று மினியான் w
என்னப்ப னெம்பிரான் - - - என்னாசை ஆரமுதை
என்னுருயிரே as a என்னிதய வெளியினிலே so என்னுயிருக் குயிரானை
என்னு ளொளியை என&னக்கணமுடி பியா
6j&ኔ Ibffሀ Jö8mኽr
ஏகமனதாகிக்
ஏக மாசிய ஏகமாகிய இறைவன் ஏகம்பம் மேவி ஏகப மேவியந்த ஏகன கேகனுயுறற ஏகனகே கணிாறவனடி ஏகனகே கனிறைவனடி வாழ்க 6JaST (Brb a GigaST 6T ,) ஏகனனேக னென்று சொல்லும் ஏகனநேக னெல்லார்க்கு ஏகன் அநேகன் ஏகனனே கனிறைவனடி ஏக னனேகனென்றுமிமைய ஏடவிழ் கோதை
ஐங்கரத்தொ ருகோட் ஐஞ்சு பூகமும் ஐஞ்சு மாறுமான ஐந்தாண்டு விழாவத&ன ஐந்து பலன்வென்ற ஐந்தும் அடக்கா ஐந்தெழுத்துள்ளே ஐ*தெழுத்தை ஐம்புல பந்தனை ஐம்புல ஆனந்தையும் ஐம்புலன் தன்?ன வென்ற
ஐ பலன் வழிபோம் e 8
ஐம்பூதt ஐம்பொறியும்
ஐம்பூதம் காமல்லக்காணும் de
பக்கம்
126 47 186 89 54 319 242 126 303 344 127 156 175
157
168 301 225 14り 104. 295
93 300 185
175
287 343 131 .
56
225 11 111
58 2n5 252 167 317 205 1s8 114 244 343 282
பாட்டு
பக்கம் என்?ன நீ வேரு 57 என்னேயறிவித்தென ... 53 என்னை யன்றி 125 என்&னயினிப் பிறவாமல் 270 என்?ன பிணி மறவாமல் 344 எ**னயுடையானவன் 154 என்?ன யெனக் - 1 என்னையெனக் கென்னுலே ... 134 என்னையெனக் கென்னலே அறிவித்த 149 என்?ன யென்னுல் 204 என்?ன யென்னு லெனக்கறி 204 என்னே விட்டகலாம 235 என்னுேடு 121
ஏட்டிலெழுதிக் 108 ஏதும் அவன் செயலென்று 114 எது சிவன் செயல் 36 ஏதுமற நில் 289 ஏதுமறியாத 188 ஏது மொன்ாற 57 ஏலாது செய்பவரை 107 ஏவா மக்கள் 314 - ஏழுலகங் கொழுதேத்தும் 242 எrழக்காய் வந்திரங்கி 302 ஏழை பங்கன் 15. ஏறுவாம் பரி ... 31 ஏற்கமோ திருவுருளுக் 273 ஏற்றில் வருவது 148 ஏனையவ றங்களினு 103
ஐம்பூதம் நாமல்லவென்று கூவு 80 ஐம்பூதம் நாமல்லவென்று ஊது 190 ஐம்பூதம் நீயல்?ல அறிந்திதனை 242 ஐம்பூதம் நீயல்?ல ஐம்பொறி நீ 309 ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறியு 191 ஐப் பூதம் நீயல்ல ஐம்பொறியும் 154 ஐம்பூதம் நீவீரல்லீர் 269 ஐம்பொறி மாட்டு 336 ஐtபொறியும் மனமும் ... 185 ஐம்  ெஈறியை அடக் ... 12 ஐம்பொறி வழிசெல்லாமல் ... 292 ஐம்பொறி வழிபோய் is ... 252 ஐம்பொறி வழியினிற் 120 ممن ஐயந் தீர்த்தடியேன் 140

u"(B 3ut Lifs ஐயப்படாமல் ஐயப்பாடின்றி ஐயமிட்டுண் ஐயமில்லா ஐயமெலாம் தீர அன்புடனே ஐயமெலாம் ஐயமே னென்றுரைத்த ஐயமேன் காணு ஐயங்கொடுப்பது ஐயமபுகார்
ஒடுங்கு மனத்தில் ஒண்டொடியே ஒப்பற்ற தெய்வமே ஒப்பில்லாத ஒப்புயர்வற்றவன் ஒரு கறியும் ஒரு சொல்லா ஒரு தெய்வம் ஒருலகம்
நாமம் ஒருருவம் பிடிசோற்றுக்காய் கோந் நெல்லரிசி பொல்லாப்புமில்லையெடா பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு டொல்லாப்பு பொல்லாப்பு பால்லாப்பு பொல்லாபபு பொல்லாப்பு பொல்டிாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு
Lfüsiაზo
uჩ6სზდა மில்லேயென் Lfleobo gir Lfléსზეა மில்8லயென்றவர் மில்லையென்னும் மில்லத்தம்பி tfsöådu JLIr மில்லயுணர்வீர் மில்லையென
மில்லயென மில்லையென மில்லயெனும் மில்லேயென்றே மில்லயென்டான்
பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல லாப்பு பொல லாட பு ,ெ எல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு  ெஎல்லாப்பு ஒருவ: மிருவரும் ஒருமை மனம்படைத்த ஒரு மொழியதணு ஒரு ஏமாழியா லென்றன்*
26
மில்லையென்று மில்லையென்றே
y pw ah
.ொல்லாப்பு மில்லையென்று ஒது .
ow a
a
மில்லையென்றென் . மில்லையென்ற மருந்து மில்லையென்ற வாக்கு
bapa
xi
பக்கம் 1( 4. 187 301 287 15 289 36 93 56 148 107
166 83
347 109 329 18 186 188 270 121 305 39
276 248 185 186 301 321 243 258 120 207 219 296 289 287 225 312 288
87
255 163 267 228
93
பாட்டு ஐயம் புகினுஞ் ஐயம் புகுத்து ஐயம்வையாதே ஐயனே ஆரூரில் ஐயனே சறகுருகாதா ஐயனே யழகன ஐயாற கலாத ஐயுந் தொடர்ந்து ஐவருமுன் ஏவல் செய்வார் ஐவர் செய்வினையில்
ஒரு மொழியாலே உணர்தற்கு ஒருவனுலே உலகம ஒருவனுலே உல*மூ ஒருவனே தெய்வமெனும் ஒருவனே தெய்வமென்னும் ஒருவனே யொரு ஒருவ%னப்பற்றி ஒவ்வாதன சொல்லி ஒழுக்க விழுப்பந்தருய் ஒளிக் கொளியை ஒற்றுமை பிந்தவூரிடை ஒன்பது வாய்ததோற்பைக்குளு ஒன்பது வாய்க்தோற்பைக்கு ஒன்பது வாயிலுள்ள ஒன்பது வாயிலும் ஒன்பது வாய்ததோற்பைக்காயி ஒன்பது வாயில் உடைய ஒன்பது வாய்த்தோற்பையு ஒன்பது வாய்த்தோற்பை தன்னில் ஒன்ரு யிரண்டாகி ஒன்ருய் யிரண்டாய் மூன்றயோ ஒன்ருகக் கண்ட ஒன்ரு யிருப்பதும் ஒன்றப் இரண்டாயொரு ஒன்ருய் இரண்டாய் ஒன்றிரண்டென்று ஒன்றிரண்டென்றே ஒன்றிரண்டென்னு ஒன்றிலொன்றி ஒன்றுக்கு மஞ்சாதே ஒன்றும் இரண்டும் ஒன்றென இாண்டெனளண் ஒன்றெனக் கும்பிடுவாய் ஒன்றென ரண்டென ஒத ஒன் றிரண்டென்று ஒன்றென்றிரு தெய்வம் ஒன்றை நினைக்தென் ஒன்க்ரு இரண்டோ
uàsasůd
wwat
3 4. 131 216 302. 51 176 199 188 153 157
163 15 212 37 3CO 212 314 85 123
136 302 187 243 157 131
1C4 140 153 176 114 148
63
33 112 230 343
10 264
207 262 113 309 295 雯13 217

Page 201
LuMGB ஓங்காரக் கம்பத்தினுள் ஓங்காரக் கம்பத்தின் ஓங்காரத்தி ஓங்காரத்தினுள்ளே ஓங்கார நாதமே ஓங்காரத்தாலே ஓங்காரத்தில் உதித்த ஓங்காரததின் ஓங்காரத்துட்பொருளான ஓங்கார மேடையின் ஓடாதே வழுக்குமடி ஓடி யோடி ஓடிவாடா தொண்டா ஓடு கங்கையுடன் ஓடும் இருநிதியும் ஒம்ே புளியம்பழமும ஓடும் புளியம்பழமும்போலும் ஒதாதஈர்க்கில்ஸ் ஓதாமல் வேதம் ஒதியுணர முடியான் ஒதியோதி.மீரமே ஒதியோதி .தனனையே ஒதியோதி யுன்மத்த ஒதுபல் வேதமூரைசெய்த
ஒளவனத் தில்லையில் ஒளவா நல்ல ஒளவியம் செல்வம் ஒளவியத்தை நீக்கி அகக் ஒளவியத்தை நீக்கியறத்தை ஒளவிய நெஞ்சத்தார் ஒளவிய நெஞ்சததால் ஒளவிய நெஞ்சப ஒளவிய நெஞ்சை ஒளவிய மனத்தின ரறியா ஒளவிய மில்லாமன
கங்குலும் பகலுமில்லாக் கங்குல் பகலற்ற கங்கல் பகலகாணுத கங்கைச் சடை கங்கையொடு கசடுதீர்த்தறங் _ கசிந்துஈகி
கஞ்சனும்
கஞ்சமலர் கஞ்சா அபின் கடலகுழிலங்கை
xii
Q பக்கம் பாட்டு பக்கம் 157 ஒது மன்பர்களுள்ளத்து ... 347 187 ஒதும் பொருளும் ... 107 15 ஒதுவ தொழியே லென்ற . 243 37 ஒதுவார் தீவினை ... 200 333 ஒதுவார் நெஞ்சில் ... 50 185 ஒமெனும் ஒண்பொருள் ... 148 225 ஒமெனுந் தாரகம் ... 116 109 ஒமெனு மெழுத்தினுள்ளே ... 295 176 ஒமெனும் எழுத்தினுள்ளே உல - S6 113 ஓம் ஓம் என்று 326 هـه 84 ஓம் சிவ சிவ ... 306 17 ஓம் சிவாயநம வென்றுசொல்லு ... 318 279 ஓம் சிவாயாகமவெனத் 292 138 ஓம் சிவாயநமவென்று சொல்லுவோர். 115 289 ஓம் சிவாய நமவென்று உறுதி 287 س 104 ஓம் சிவாய நமவென்று ஒது 302 .س 221 ஓம் நமசிவாயவென உருவேற ... 93 314 ஓம் நமசிவாயவென உருவேற்று ... 349 329 6th b(3ot nito rug09 ... 307 240 ஓம் நாம் நாமென்று ... 298 12 ஓயாமல் உள்குவார் தம் 43 ۔۔۔ 17 ஒருரு வானுன் ஈருரு ... 111 251 ஒவியம் போலி 309 349 ஓவியம் போலிருந்து ... 343
ஒள 225 ஒளவிய மில்லா வறிவு ... 37 56 ஒளவிய மில்லா அறிவை ... 15 105 ஒளவிய மில்லாதார் 187 مصم 289 ஒளவியம் பேசல் - 314 343 ஒளவியம் பேசா 302 ۔ 185 ஒளவியம் பேசாதே 243 ماهه 109 ஒளவியம் பேசி ... 93 309 ஒளவியம் பேசுதல் 288 سسه 157 ஒளவை உறுவை .107 مم 176 ஒளவியமறறதும் ... 148 200
176 all 681T Syrigh ... 250 157 கடிவது மறந்திடடி .291 سم 223 கட்டாத மனத்தைக் ... 155 38 கட்டுருமன் ... 21 105 கட்டுப்படாதமனத்தைக் ... 225
5 கட்ப்ேபடா மனத்தைக் கட்டத் 186 سمي 318 கட்டுப்படாமனத்தை • 316 مه 52 கட்டுப்பாடில்லாதார் ... 161 94 கண்டவாரும் ... 316 255 s6irl Gut sirtuou98o ... 83 347 கண்டுசர்க்கரை -- 153

uTGB கண்டாரு மில்லயடி கண்டார் ககை கண்டொன்று சொல்லாதே கண்ணல்லக் காதல்லத் கண்ணபிரானுங் காணுக் கண்ணுரக் கண்டிடடா கண்ணுலே காணுெணுதது கண்ணிறைந்த செல்வத்தை கண்ணிறைந்த ஆண்ணுக்கு அணிகலன் கண்ணுக்குக் கண்ணுயிருக்கும் கண்ணுககுக் கண்ணுயிருக்கின்ற கண்ணுக்குக் கண்ணுகிகின்றய் கண்ணுக்குக் கண்ணைங்ாம் கண்ணுக்குக் கண்ணுய கடவுளை கண்ணேயுறங்குறங்கு கண்னைப் போலறங் கண்ணையிமை கண்ணைக் கண்ணுல் பார் கண்மூன்றுடைய கதிரவன்னெழுமுன் கங்தைத்துணியணிந்து கங்தைத்துணியணிவான் கமலாகான்முகன் கமலநான்முகன் கண்ணனுங் கருங்குயில்கள் கருததிற் கருத்தாயிருக்கும் கருத்திலிருக்கும் கதிர்காமத்தோனே கருத்தில் நினைந்துருகிக் கருத்தில் கருத்தாகி கருத்திற் கருத்தே
காக்குந் திருவடிகள் காட்டகத்தே வாழுங் காட்டிலே காளியுடன் காணுகின்ற கண்ணிற் கலந்த காணுகின்ற கண்ணிற் கலந்துள்ள காணுங்கண்ணிற்
காணுங் கண்ணிற் கலந்த கண்ணது . காணுங் கண்ணிற் கலந்ததென்பர் .
காணுங் கண்ணிற் கலந்தவனே
காணுங் கண்ணிற் கலந்தவனேகார் .
காணும் கண்ணிற் கலந்து காணுவார் தொண்டர் காண்பதெல்லாம் காண்டான் காட்சி காண்பான் காட்சி காட்சிப் காண்பான் காட்சியுங் காட்சிப்
xiii
பக்கம் பாட்டு பக்கம் 255 கருமத்தைக்கை ... 258 82 கருமததைச் செய்யலன் ... 267 286 கருவி கரணங்களெல்லாங் 336 ۔۔۔ . 264 கருவிகரணங்களெல்லாங் கலந்து . 297 306 கருவூரில் வாராமை 24 . . ۔ ۔ 322 கரைகாணு வின்பக் ... 219 273 கரையவொரு சொற்சொல்லுஞ் ... 249 33 கரையுமன்பர்கள் ... 348 33 கர்ப்பூரப் பெட்டிகளும் ... 83 23 கல்லார் கற்ருர்க்கும் ... 100 112 கல்லார்க்குங் கற்றவர்க்குங் ... 29 113 கல்லாதார்பாற் A sw 7 146 கல்லாப் பிழையுங் 236 278 கலேகள் பலவுங் ... 298 310 கல்ல நிகர்த்த ... 89 270 கல்லை நிகர்த்தமனங் ... 121 12 கல்லான கன்னலுண்ணச் ... 146 118 கல்லொத்திடு மனங் 67 277 கவனமாய் கருமத்தை ... 77 349 களிபெருகுங் காமக் 195 .م 246 கறங்குபோலக் கலங்கு 176 288 கறுத்திருண்ட கண்டத்தின் ... 145 248 கற்பனை கடந்த வற்புதன் ..... 179 47 கற்றதனுற் பயன் 258 ۔۔۔ 349 கற்றவர் விழுங்கும்கருணை 210 معه 346 கற்ருேரும் அறியாத 312 86 கனைக்குங் கடல்சூழ் ... 323 79 கன்னலொடு செந்நெல் ... 217 27 கன்னலுடன் செந்நெல் .164 مم 331 கன்னலொடு செந்நெல் கதலி 127 33
As 218 காண்பானும் காட்சியும் ... 81 134 காண்பானுங் காட்சியும் போய் 223 124 காதலாற் பாடி 134 162 காதலிக்கு மெய்யடியார் 63 163 காதல் நீ கருத்தும் 75 55 влi,5si (psyaso 310 168 காமக்கடல் கடந்து 304 251 காமமுதலாறுங் கடிந்து 75 233 காமமுதலாறுங் களைந்த 102 270 காமாதி குணமெல்லாங் 40 244 காயமே கோயில் கடிமணமடிமை . 253 195 காயமே கோயிலடி தங்கமே ... 260 195 காயமே கோவிலாகக் கண்டிடும் 141 10 காயமே கோயிலாகக் கண்டு பாவனே . 321 203 காயமொரு 267 294 காயம அழிந்து 13

Page 202
LmtG காயுங் கனியுமாகி காராரானவக் கார்த்தி கேயனைக் &ff tập காவார் குயில் காலனே கோலிக் காலமுமில்ல காலனு மணுகான் are)? is ass systs) காலனக் காலாலுதைத்தான்
கிஞ்சுக வாயுமை
கீரன் சொன்ன
குடிப்பிறந்தாரோடு குடி முழுதையும் குணங்கடந்தது குணமிலலா மூர்க்கரோடுங் கும்பிடுவார் தம்மனத்தைக் ஆம்பிடுவார் நன் மனத்தை கும் மியடி பெண்ணே குருசீடம் முறை
குருந்த மரத்தடியில் குருவாக வந்தவன்
குருந்த மரத்தடியில் குருவாக வந்து
குருபக்தியே குருபரன் அடியின
கூசும் கொலைகள் era LL66 60637 go e.g. suffusf கூத்தாடுதே கூவியழைத்திடுவாய்
Basudio Lo6oř
கொச்சை மக்கள் கொச்சை மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சம கொஞ்சம ய் மனத்தைக்
கொடிய வசுரர் கொடுத்தார்க்கு கொண்டுங் கொடுத்துங் கொத்தார் குழலுமை
p.
209
xiv .
L0âkastb 244 179 216
211
92 160 9 69 72 162
கி 18O
ó 180
(ඊ) 58 234 305 149 161
63 234
10 283 255 205
s 206 347 279 232 259
uTü"CB asTe)6T as கா% க் கட்டித் காகித்தூக்கி கால நீ தூக்கியாடும் கால மா8லயுங் கால யெழுந்திருந்து காலை யெழுந்து asp akA) (éeQuèsT காணக்குறத்தி
கிட்ட நெருங்கையிலே
குருபாதம்
குருவடியொரு குருவான கல்லூரிற் செல்வன் குருராஜ
56Nobsao p6OOTT Tås esorb6bú Um Trá குலாகலம் பாராதே ۔۔۔۔ குழந்தை யன்போடு குருவின்
குழந்தை யன்போடு நாம் குழந்தை வேலா குற்றமெல்லாம்
கூவுகுயிலே கூறுவார் கோடி கூறும் நாமுதல் எல்லா கூறும் நாவே
கையையுங் காலையு
கொல்லாதே கோபம் கொல்லாமை கள்ளாமை கொல்லாமை பெரிதென்று கொல்லார் பொய் கொல்லா வரமெனக்கு கொல்லானே கொன்றை மத்தம் கொன்றென்றும்
ιμάταιο
92 16 72 141 347 19 169 37 68
82
61 259 335 167 210 322 274 278
78 304
80 315 305 153
180
264 24
1(3
89 310 180 322

untG கோகனகத்தானுங் கோணுதசிந்தையுடன் கோணிய பிறையை கோபம் பொருமையை
கெளரியை யிடத்தில்
hlasrüe (Burao
да ато சங்கர சங்கர சம்பு சங்கரன் தானினே சங்கரன் திருப்பாதம் சங்கோசை சஞ்சலத்தை சஞ்சலம் மிகவும் சணடக மரத்தடி பிற் சத்தி சிவமாகித் சத்தி சிவ மொன்றன சத்தியம் பொறுமை சகதியுஞ்சிவமும் சந்ததம் சாதனை
சாங் காலம் Ժր (3600 t சாதலும் பிறத்தலுக் சாதி சமயங்களில்லான் சாதி சமயமென்னுஞ் சாதி சமயப் பற்றினை
சிங்கக் குட்டி சிங்களவர்
சிங்காரங் சிட்டர் பரவுஞ் சிததத்தினுள்ளே சிவ சித்தததினுள்ளே தித்திக்குங் சித்தக துள் கித்தம் சித்தததி லூறுக் சித்த திலே தித்திக்குங் சிததத்துள் தித்திக்கக் சித்திர காரன்தீட்டிய சிகதி தருங் தேவாய் சித்தி பெறலாம் சிகதி மயிலேறு சிங்க% க் கெட்டாத
XV
Vä dobT
பக்கம் பாட்டு 180 கோல மாமலர்
82 கோல மொன்றும்
233 கோலா கல 259
கெள
274
226
ሪፓ 180 சந்திர சூரியர் காப்பாம் 263 சந்திர சூரியரானுன் 105 சந்திரன் தவழ்தரும்
95 சந்திரனில்லச் 81 சமய தீக்கையைப் 154 சமய நெறி 325 சர்வம் பிரம
81 சலன முதிப்பது 33 சற்குருதரிசனம் 38 சற்குருவின் 66 சற்றுஞ் சந்தேகங் 177 சற்குருவைப் போற்றித் 226 சனகர்
FA 311 சாந்தம் உபசாந்தம் 275 சாந்தம் பொறுமை 181 சாந்தம் பொறுமை யன்பு 240 சார்ந்தவர்க்கு சாவா 248 சாவதும் பிறப்பதுங்
. 250
265 , சிந்திக்க நெஞ்சும் 265 சிந்தித்துச் சிந்தித்துச் 28 சிங்கி சிந்தி சிக்கி 286 சிந்தித்துத் தெளிந்தார்
89 சிந்தையிலன்பு
167 சிந்தை செய்கதிர் 235 சிந்தையில் வெந்துயர் 303 சரித்டிப்புரமெரித்த 316 சிரித்து கலலூர்
33 சிரித்து முப்புர
181 சிரித்துப் புரமூன்றுஞ் 238 சவ சீவு என்றிடும் 346 சிவ சிவ என்று
70 சிவ சிவ வென்றெந்த 191 சிவ சிவ என்று சிந்திப்பர்
பக்கம்
32 54 72
35 240
25 296 203 315 305 256 263 319 168 192 179
320 31s) 164 167
196 187
169
315 46 349
329 54 47 142 341 77
213

Page 203
Luri CB சிவ சிவ செல்வக் கணபதி சிவ தொண்டு செய்வார்க்குச் சிவ தொண்டனென்னும் சிவ தொண்டன் சிவ தொண்டு செய்தல் சிவத்தியானஞ் சிவதொண்டு செய்வார் சிவத்தைக் கண்டிடர் சிவத்தை நோக்கித் சிவத்தினை வளர்க்கும் சிவத்தியானத்தைச் செய்யும் சிவத்தை மறைத்தது சிவத்தை விடத்தெய்வம் சிவநாமமைந்தெழுத்தும் \ சிவ நாமஞ் சொல்லி சிவ நெறிச் செல்வர் சிவபக்தியாலே சிந்தை சிவமே தாமெனச் சிந்திப்பார் சிவனடியார்கள்
&Lot?gTL
சீரகமுள்ள சீராரிலங்கை சீராரும் நல்லூரில் சீரார்மேனியுடையாய் doroT aligu(BartGB a.8
சுகதுக்கம் சுட்டாமல் சுந்தரற்கு சுந்தரற்குப் பெண்
56)
5 g6 flT குதானதற்ற சூதானவெளியில் சூரியன் தோன்று
செக்கச் சிவந்த செக்கர் போலும் செத்தார் என்பு செந்நெலுடன் கன்னல் செந்நெல்லும் கன்னலும் செப்பந்தரமோ செய்யமேனியனே செல்லப்ப &ன *தினம் செல்லப்பன் என்னுக் செல்லார் செல்வக்குருகாதா
as Y 8
po
s.As
*K. dia o
4 UA to
xvi
பக்கம் uTG 232 சிவமே நாமென்று சிந்திக்கச்
42 சிவனடியாருடன்கூடி
48 சிவனடியாரை
120 சிவனடிக்கன்பு செய்குவர் 208 சிவனடியாரொடுங்கூடி 135 சிவனடியைச் சிந்தை 299 சிவன் சிவனென்று
12 சிவனேயுன் தரிசனங் 17 சிவனையல்லாமல் தேவரு 245 சிவனுெருத்தனே 272 சிவாய நமவென்று
299 சிறப்பு மிதுவே
198 சிறையார் வண்டறை
58 சிறப்புக் குறைவிடமே 61 சிறப்புஞ் செலவமும்
141 சிற்றம பலவன்
212 சினத்தை மனத்தில்
299 சினத்தைக் கொல்லுவோம் 109 சின்னத்தனமாய்த்
153 சீருந் துணையில்&லச்
181 சீர் பெறுஞ்சித்தரும் ஆங்கே 303 சீலஞ்சேர்
270 சீலமு மதுவே
135 சீவன் சிவனெனல்
26 சீவன் சிவனென்று
62 er (5508uur 155 öጽጨfftß 111 சுழி முனைக்குள்
12 சுனைக்கும் கல்லூர் 284 சுன்னுகத்தான
279 சூரியன் வருவது 168 தலபாணியைத் 141 26.) JusÐLULJETÜ 346 சூழமிகநினைத்து
செ
313 செல்வச் சிவதொண்டன் 202 செல்வச் செருக்கினுற் 25 செல்வகிலே யாதென்று 249 செல்வம் அது
59 செலவர்க்கழகு 51 செல்வர் பின் சென்று 25 செழுமலர்த்திருவடி
67 சென்னிக்கணி
16 சென்றன சென்றன 310 சென்றன வாணுட்கள் 12
o
168 285
47 249
46 256 272 169
45
37
11 323 322
160
132 229
16
9) 197 249 127 18
97 193
22 162

LTG சேணிடை சேண்பொலியுக் சேர்ந்தவர்க்குத்
சைவனேயுன்னத்
Garres (Sur (8s சொல்லச் சொல்லச் சொல்லமுடியாத தீர்ப்பு சொல்லமுடியாதபொருள் சொல்லாமற்சொன்ன சொல்லாலே பயனில்லை
சோடிழந்த சோதிப்பிழம்
ஞானதேசிகனே
தக்கன் வேள்வி தங்கப் பொம்மை தங்குஞ் சிவ தச்சன் கட்டா வீட்டிலே
தச்சன் கட்டா வீட்டிலே தாவும்பரி
தட்டா னிடத்துச் தண்ணிர்க் கடவுள் தண்ணிர் குளிருமோ தத்தாதித் தோம் தத்து பரி தத்து வங்களாருறும் தத்துவந் தொண்ணுற்றறுஞ் தத்துவப்பே தத்துவம் ஆருறும் தத்துவ மெல்லாம் தத்துவம் யாவுஞ் சடமென தத்துவம் யாவுஞ் சடமென்று தந்திமுகத்தனச் தந்தை தாய் மற்றுங் தந்தை தாய் மைந்தர் தந்தைதாயும் தமஞ்சம மிரண்டின் தம்மைத்தம் மாலறிந்த
is List (Bu தருமநிலையிலே தருமநெறி பிசகாமல் தருமமு மில்லத்
xvii
Lånd
v Kej
(35戸
tă atb பாட்டு 181 சேவித்துஞ் சென்றிரந்துஞ் சீவன் . 224 சேவித்துஞ் சென்றிரந்துந் தம்பி 164
சை 81
சொ 24 சொல்லாலே வாய்த்த 279 சொல்லால்வருங்
95 சொல்லித்துதிக்குக் 40 சொல்லிற் கலந்த 16S சொல்லுகிவமே 264 (des s676TUIT scorés
@于阿 82 சோமசுந்தரன் 131
(6. 222 ஞானயோகம்
த் 111 தர்க்கஞ் செய்யப் 265 த&லயிலிரந்து 249 தலையை நிலத்தில் 316 தவஞ் செய்து 342 தவத்திற் சிறந்தார் I55 தவத்தை யாற்றிடில் 101 தவராச சிங்கத்தை 102 தனக்குத் தானிகரான
46 த*னலம் வீந்திடத் 105 தன்மை முன்னிலே 162 தன்னே அறிந்தால் 141 தன்னை அறிந்துவிட்டால் 224 தன்னைத் தன்னுல்
40 தன்னைத் தன்னுலறிந்த 1^2 தன்னைத் தன்னுலறிவார்
61 தன்னத் தன்னுலறிந்திடடா 44 தன்னைத் தன்னுலறியடா 212 தன்னைத் தன்னுலறியவேண்டும் 184 தன்னை மறந்தருளில் 124 தன்?ன யறிந்தார் 182 தன்னே யறிதல்
66 தன்னே யறியத் தவத்தை 320 தன்னை யறியத் தவமுயற்றும் 85 தன்னை யறியத் தனக்கொரு 255 தன்னை யறிந்தோமே 267 தன்னை யறிந்தோர்க்குத் 168 தன்னுெப் பாரில்லாத
192 220
18 13 276 51 65 182
226
313 16 298
7. 320 272 288
32 205 296
19
226
247 342 255
59 161 198 177 27 91 239
38
33

Page 204
UT" (8 தாபதர்தம் தாமரையில் நீர் தாயினு மன்பு தாயுங் தந்தையுமாகி தாரகத்தனி தாவித் தாவிச் தாவும் வேங்கை தாளம் போடு
திக்குத் திகாந்த மெல்லாம் திக்குத் திகாந்தமும் திக்குத் திகாந்தமும் கைவச திங்கட் சடையாய் திங்களும் கங்கையுஞ் சீறும் திங்களும் கங்கையும்
திங்களும் கங்கையுஞ் சென்னியில்
திங்கள் கங்கை திங்கள் தங்கிய திடமுட்ன் தியானஞ் தித்திக்கும் அமுதே தித்திக்கும் அமுதினேத் தித்திக்கும் ஒரு
தீமையெவர்
துக்கம் சுகம் துஞ்சாதே தூங்காதே துட்டச் சமணர் துண்டப் பிறையாய் துதிக்க மதிதந்த
தூக்கியபாதத்தின் தூங்காமல் தூங்குஞ் தூண்டு சுடர் தூது சுந்தரர்க்
தெய்வத்துக்குத் தெய்வமே திருவருள் தெய்வமே யடினென தெய்வம் எல்லோர் தெய்வம் ஒன்றெனத் தெரிந்து செயலாற்றும்
தேகம் நீயல்ல வென்றன் தேகம் நீயல்ல வென்றதிட
χνiii
தா பக்கம் Jr" (B 259 தானதருமங்கள் 184 தானந் தவமிரண்டுக் தானுற்ற 85 தானர் தவமிரண்டுஞ் சற்று 244 தானுன சற்குருவைத் 117 தானுன தத்துவன 220 தானுன தன்மை 182 தானுன தானேயல்லால் 326
தி
2 திருந்து மடியவரொடு 44 திருநீறும் ஐந்தெழுத்தும் 3.13 திரு நீறுஞ் சந்தனமும் 236 திருவருட் செயல் 209 திரு ருள் கைகூடுது
37 திருவருளை நாடி 44 திருவாரும் நல்லூரில் 182 தில3லயம்பலத் தாடும் 136 தில்லையம்பலத்தைக் கண்ணுற் 250 தில்லயிலாடிய 135 தினத்தனைப்போது மறவாமல் 310 தி&னத்தனப்போதும் மறவோம் 3 தினத்துணைப்போதும் மறவாது
தீ
196 தீவினைகெஞ்சத்
து 33 துப்பி சைந்த 254 தும்பி முகன் 317 துள்ளித்திரியும் 183 துள்ளும் மனத்தை 218
து 234 தூலதுக்கும
113 தூவி மயிலேறும் 196 தூணே நீ
83
தெ 223 தெரிந்து வினையாற்றும் 326 தெளியுமே நின் சிங்தை
32 தெளிய வழிகாட்டும்
7 தென்னவன் தீப்பினி 272 தென்னு தென்னுவென 191
தே 1 தேகம் விழுமுன் 141 தேகமே மெய்யென்று
»eo
... 284
பக்கம் 165 103
117 254
224
283
334 266
267 307 338 233
285 323
182
26 292 115 249
169 220 275
198
86 117 183 310
168 124

பாட்டு தேகாதிதனை தேங்காயி லிளநீர் Ο ΣΚΣ தேசகாலம் யாவையும் ob தேசம் புகழுஞ் சிவன் w
தேசம் புகழுந்திரு ops தேடாமல் தேடென்ரு to a தேடித் தேடித் pov தேடி நான்காணும் தேடிகின் திருவடியே தேடிவாடாதொண்டா (3g (Bs. Tñ um. (Bé apud தேர்முட்டிப்படி o தேரடியில எங்காளும் 4. தேரடியிற் சென்று way
தையலார் மையலிற்ருன் o O
தொண்டர் நாங்களே தொண்டு செய்வாருக்கு தொந்தோ மென்ருடும்
தோடுடைச் செவியனே A a தோளாமுத்தே
நகரத்துள்ளே Fasa நஞ்சணி நஞ்சை a de гъt-ti (Bie OO நட்டா ·· bഞ്ഞ് ഇ obes (5 LDé(ğ ΑΑΟ το நமச்சி வாயவே நாம்சொல்லும்
நமச்சி வாய வாழ்கவென நமச்சி வாயவே நான்மறை
கமனு 8 நபமிடமெல்லா w a w ந1 மிடமென்றுங் s நம்பன்
bi 3560bas bel960T (ur Qe p ur நயப்பார் நரிபோல் bora நரியை 8 நலமறிய oе நல்லசமயமிது 8 wo நல்ல தெய்வானை Wh நல்ல மருந்தொரு - - - நல்ல மலரெடுத்து opp நல்ல மழை - கல்லன m நல்லூரான் கிருபை.காம் as a நல்லூரான் கிருபைவேண்டும்-வேறெ. கல்லூரான் திருபபாதம் Op நல்லூரான் திருமுன்பு was
27
பக்கம் பாட்டு 215 தேரடியில் வீற்றிருப்பான் 115 தேவதேவனே என்றுந்
60 தேவரும் முனிவரும் 307 தேவர்கடம்
41 தேவர் சிறை
2 தேவர் பிரான், 271 தேவாதி தேவ 141 தேறிததெளிந்த
45 தேனுந்துகொன்றை 279 தேனுந்துசோலேத்
7 தேனுந்து முக்கணித்
81 தேனும் பாலினுமினிய 282 தேன் சொரியுஞ்
86
தை
90 தையல் வேட்டுச்
தொ
4. தொல்லாகா னிருவர்காணு 230 தொழுது வணங்கிடுவாய்
41 தொழுது வணங்கிநின் தோ 340 தோன்ருத்துணையை 184
b
212 நல்லூரான் திருவடியைப்பாடு 167 நல்லூரான் திருவடியை நான் 149 நல்லூரான் வீதியிற்போய் 250 கல்லூரில் செல்லப்பன் 155 நல்லூரில் தேரடியில் 306 நல்லூரில் வாசன் 293 நல்லுரைக் கும்பிட்டு 177 நல்லூர் ஆட்டக்காரா 315 நல்லூர்பதியிலே 58 நல்லூர் வாசனே
38 நடு லூர் வெளியிலே 277 நல்லோரி 277 fò sobombs 144 நல்லப்பதிக்கு
80 நல்லப் பதிக்கரசே
29 நல்& யில் வாசா
79 நவாகவமாய் 329 நவிலுமறை
16 நற்சிங்தை யெனும். நறுமலர் 86 நற்சிந்தை யெனும்.கல்லமுதம் 264 நனந்து
7 நன்மை
98 நன்மையுந் தீமையும் நாமல்ல 86 நன்மையும் தீமையும் நாடா 222 நனமையும் தீமையும் கங் 2O6 நன்றியை
91 நன்று தீதை
73 கன்று தீதென்று
95 நன்றென்றுக் தீதென்றும் 190 நன்றெனத் தீதெனத்
பக்கம்
329 252 251 153
183 321 292
134 142
43
83
183 223 193
340
255 113

Page 205
LTG நாங்கள் சிவமென் காசிதுணி
DETSATT & காடியொரு கருமம் is si mb|Tig,68LLum நாடுவார் நாதன் நானும் காமஞ் நமந்தி நாமறியோமெனச் சொலு நாமறியோ மெனும் நாமறியோ மெனும் நல்லமந்திரம் நாமறியோ மென்னும் நல்வாக்கு நாமறியோ மெனும் கறியதிரு நாமறியோ மென்ற கலந்திகழ் - நாமறியோ மென்று கல்லூரிற்சொன்ன . நாமறியோ மென்று 8 8 நாமறியோ மென்று சொன்னுன் நாமறியோ மென்று நகைத்தென்னே. நாமறியோ மென்று நல்லூரிற்
கிகரொ ருவரும் நிஜமா மான்மா கிததியம கித்திரையை நித்தியர்
நிலனுகிக்
நில்லடா நில்லன் பொடு நினைந்து கில்லாத காயத்தை கில்லாத நீர் நில்லாத செல்வத்தை நிற்பனவும்
:
நீக்கமற்று நீங்காத நீங்காது
நீதிகுருபரன் &
திே அநீதியென்னும் நீதி நெறியைச் நீயருளாப்டிற் கீயும் நானும் நீயே நான் என்றுநேர் நீயே நான் என்று நீயே கான் என்னும் நீயே நீயாயிருக்கப் நீராய் கெருப்பாய் ரோனுய் நிலனுணுய் ருேங் காலும்
KK
நா LIä3úb 311 152 279 346 141 117 158 251 47 92 39 S2 21. 163 161 293 288 82 276 219 270
259 332 278 162 238. 197 298
235 30
90 146
342 113 333 240 248 80 338 58 63 87 2 269 27 12S 2O1
uTB நாமறியோ மென்று முன்னுள் நாமறியோம என்ற நல்லதிருவாக்கை . நாமாாககுங் was நமோர்குடியுமல்லேன் நாமார்க்கும் ஆளல்லேம் நாமுமே நாமாக நாமும் காமாக நாமே நாமென்றுரைத்தான் - a a நாமே நாமென்றுசொல்லிச் re. nbrüd büd blid 66 காவலரும் நாவுக் நாற்றிசையுஞ் நான் உன்ன நான படும் நானுரென் கானென்னும் நானே நீ நன்மதி நானேநீ நீயோநான் நானென {B୩ (କ୍ରୋଥି) ଓ
Tâb(8urû
ßoT é a rấgrăso
ißጿ0] õÖ [filgulgDU நினைககு மடியாரை நீயே 8 நினைககு மடியார் கெஞ்சத்துள்ளே கினைத்தபடி AO ARO V t6]3%All their • ** به நினைவில் நினைவாகி
நினவுக்கு நிஜனவாய்
கின்னு வார்
நீர்நிலம் தீகாற்று
ក៏ពុំ ឯសb ឆ្នាំ
நீல கண்டன
நீவா தா
நீள நினைக்கும்
நீறணி நின்மலா - நீறணிந்த 8 நீறணிமேனியினும்
நீறணியான் < Ad• «O நீரு திருமேனி கீறாமேனி as கீறு பூசிய As a 0 நீறு மணியான்
பக்கம்
186 329 184 330 346 153 38 3. 80 326 43 43 117 71 43 124 29 275 275 330 167
197 164 306 218 201 284. 323 194 158 294 184
256 235
32 334 111 201
25 145 151 329 303 135
3. 248

UT'09
நுண்ணிடை 48 r.
நூதன
நூலறி
கெஞ்சகம் -8 கெஞ்சுருகும்
நேசயோகத்தார் asp
கைந்து
நொந்தவர் a Neae
பகருவார் நெஞ்சம்
பக்குவகால பக்குவாய்ப் a பக்தர்கள் எல்லாம் 4 பக்கிசெய்து பந்தத்தை d பக்திசெய் யோகசுவாமி 0.
uங்கில் மங்கையை பச்சை நிறப்புற்றரை பச்சைப் பசுங்கிளியே பச்சை மாமயிலோடு பச்சைப்புரவி பஞ்சப்புலன்களுங் பஞ்சப் லன்வழி - பஞ்சம் படை வந்தாலும் a y பஞ்சம் படை வந்த LJL-&plaus 5 guð b பட்டது பட்டேற்று பட்டால் பாவாடை பட்டுக்குடைபிடித்து பணித8லக் கொள்ளல் - பணிபவர் கெஞ்சினுனே meAO பண்ணவன் பண்ணே பண்ணிற் - பண்டையனும் மாலுந்தேடிப் - பண்டையனும் மாலுமடி பண்டு செய்த வல்வினை நோய் பண்டு செய்த வல்வினையால் பண்டுசெய் வல்விண்நோய் பண்டு செய்வின யெல்லாம் பறந்து பண்டு செய்வினை யெல்லாம் பரிந்தன. பண்டு மின்றம் என்றுமுள்ள பரனடி , பண்டு மின்றுமென்றும் பண்டுமின்றும் உள்ள பதமலர் போற்று
8 v 8
பாசத்தால் வெந்து நொந்து பாடல்பத்தும் படிப்போர்கள் . . . பாடவறியான் பலகலையுந் தானறியான்
xxi
டு
பக்கம்
158
T
158 169
நெ
167
284
நே
1.59
நை
252
நொ
159
50 313 313 120 23 24 25 342 83 137 342 351 186 69 94 250 316 155 286 206 139 144 231 316 297 322 286 254 4. 169 306 38 264 85
329 41 222
பாட்டு
நூற் பெர்ருள்
@Bທູ (ມ நெற்றி
நேசத்தால் oo
கையும்
பதின்மூன்று பாடல்கள் பத்திககு மடியவர்
பத்தி செய்யும் es •
பத்தியுடன் பத்துப்பாட்டா மிவற்றைக் பத்துப்பாட்டும் படிப்பவர் பத்துப் பாட்டுப்படிப்போகும் பத்தும் காலும் பத்தும் படிப்போர்க்குப் பாக்கியமுஞ் பத்தும் படிப்போர்கள் --- பத்தும் படிப்போர்கள் கேட்போர்கள் . பத்மாசனத்தில் 4 பந்தஞ்செய் பாசமே - பந்தமும் வீடும் -- பந்தமெனும் பந்தி பக்தியாயிருந்து
பயமுண்டோ
U06junigun fids o 4 பரவு வார்க்கருளுவாய் - a பரிந்தன்பர் பாதத்தில் பரிந்து பணியாற்றி e பருவத்தில் மழை a- - -
6) LU606us iš
பல்வினே போக்கி
பவ நெறிகடக்கப்
பவம் நீங்கும்
பவவருடத்துப்
பவவருடம் மார்கழியிற் பழம் பாக்கு வெற்றிலே பற்றற்ருர் பற்றும் பரமகுரு பற்றற்றர் பற்றும் பரமபொரு பற்றினுற் பிறந்திறந்து டன்னுட் பழக்கத்தினுட் பன்னிரண்டு காற்
பாடி மகிழும் சிவபாக்கியம் UT gtUTigtj USOoflub பாடிவாடா தொண்டா o
a
233
46 158
202
159
279

Page 206
Luar LGB பாதாரவிந்தத்தைக் காணுமற் ܝ ܝ பாதிச் சாமததின் பாதி மதிசூடிப் பவளம்போல் பாம்பும் புலியும் பாமர மக்கட் பணிசெயல் பாரவன் விண்ணவன் காண் பாரறியார் இவருடையதன்மை பாராதி பூதமெல்லாம் urg" (Bur. G6.6ö73öT பாாம் விண்ணுமாகி நிற்பது பாசையனே கடைக்கண்ணுல் பாரையனே மனம் பாரொடு பூதங்களாகிப் பரிதிமதி பாரொடு விண்ணுய்ப் பரந்தான் பார்க்கப் பார்க்க பார்க்கு மிடமெங்குஞ்
பார்ப்பதெல்லாஞ்சிவ
Słgpayäfia v 9:35 (dsGoTeirg Lumok pas பித்தனென்றவர் பிறவி · sa பித்தனென்றும் பேசுவார்
பித்தனெனப் பலபேரும் an A பிராண னபானனுங் காப்பாம் waபிருதுவியப்புத் பிறப்பிறப்பற்ற பெருமான் பிறுப் பிறப்பில்லாத
புகல்வதற் கொன்று புத்தியை நீநாட்டாதே புத்தியை ஒன்றிலும் காட்டாதே புலன்வழிச் செல்லும் பொல்லாப் புல%னவென்ற  ெரியோர்களுளம் புள்ளிக் கலாப மயிலேறும்
பூக்கைகொண்டு போற்றடா பூக்கைகொண்டு போற்றுமடியார் பூதங்கள் ஐந்தான
பூதங்களில்&லப் பொறிபுல பூதங்களைந்தாகிப்
பெண்ணுமானு மில்லையடா vo பெரிதானுய் சிறிதானுய் · · · பெரியதிற் பெரியது waw
இபசரிய சிர்ச்சனகன் பேசாத மந்திரத்தின் பெருமை Yoo பேணும் பிறபபிறப்பில்ல யென்பார் .
36
XXii
பக்கம்
113 54 128 234 206 330 282 321 86 244 46 46 151 145 24 2O7
194
288 59 31 329 82 351 285 166
133 224 258 141 38
85
342 132 4.
296
126
sou
247 125 99
பே 103
12 251
Lumu" (8 LuTuTfuULe?ST பாலகற்குப் பாற்கடலைப்பாரி பாலன் மார்க்கண்டன் பாலனுக்காகப் பாலும் பழமுக் பாலக்குடித்துப் பாவணி செய்துபாடு பாவம்போம் பொல்லாப் Luñ any sa)ñf (5 fT6QJ6)ñi பாவலர் நாவலர்கள்
பாவலர் நாவலர் பணியும் நல்லூரில்
பாவனை யொன்று டாவிகளறியார் பாவிகதும் பாட்டிசைத்துங் பாவியென்று uTpG Fuqua Lor uLuT பாற்கடல் தன்ன
வீறப்பிறப்பில்லாப். யெங்கள்
பிறப்பிறப்பில்லாப் பெருமானே நீ
பிறவார்கள் இறவார்கள் பிறியென்றன் பிறியாமற் பின்ன ரெனக்குப் பின்னுமுன்னு மில்லே பின்னைப் பிறப்பிறப் பின்னேப் பொய் பின்னே யுனக்குத்துணை
புறத்தில*லபாதே புனலொழுகப் புன்னகையாலே புன்சொல் புன்னுனிமேல் நீர்போல் புன்னேறி செலும்
பூதம் நீ பொறியும் பூப்பொலியுங் பூவின் மனம்போற் பூவும் மணமும் போலப்
பெரியவன் சிறியவனென்பது பெருமான்காண்
பெருமை சிறுமையில்லாப்
பேதங்களெல்லா மாயினும் பேராயிர முடையான்
296
255
62 217 110 346
75.
203
275 134 165 208
16S 144 100
167 150

ur.09 பொங்கல் பூசை பொங்கிவரும் அமிர்தத்தை பொங்கிவரும் காமமே பொங்கும் காமக்குரோத பொய்யை மெய்யென பொல்லாப் பிங்கில்லையென்று பொல்லாப் புழுமலியும் பொழில் வாழும் பொறியஞ்சும் வென்றவர்தம் பொறியைந்தும் வென்றவர் பொறிவழிச்செல்லும் பொல்லா பொறிவழிபோம் பொறிவழிபோய் பொறிவழிப் புகுத்துதே பொறிவழிமனத்தை பொறிவழி மனம் போயல் பொறிவழியினிற் செல்லாதே பொறிவழியே பொறிவழியே போய்ப்புகுந்து பொறிவழிபோயலயாமல் பொறிவழியே போயலயும்
போக்கும் வரவும் இல்லாப்புனிதன் போக்கும் வரவுமுள்னானில்லான் போக்குவரவில்லாத
BLJOT óGolest G8 QU6qfiio?bo போகபோக்கியம் எல்லாம் போதுகொண்டு போற்றேன் போதுமளவும்
diis 6TT as roaTas L0äl č56T aš0 LDTsor மங்களம் ஜெய மங்களம் 1 மங்களம் ஜெய மங்களம் 11 L) bi 36ITLDI és L) மங்களமான வார்த்தை மங்குவார்
udělspasuoTř
மங்கையொரு மடைதிறந்தாற் மட்டிலாதது
மணிவாசகங்
மண்டலங்கள் மண்டலம் முழுவதும் மண்டலம் மூன்றும்
цовбот (В மண்ணுகிய பூதமைந்தும் மண்ணுசை பெண்ணுசை
xxiii
GUIT
பக்கம் uT'GB ιμά δύο 265 பொறிவாயிலந்தவித்தான் ... 109 95 பொறிவென்றர் தாமும் 103 95 பொறுமையுமடக்கமும் 166 249 பொறுமையைப் பறங்காப்பது ... 12 138 பொன்போல்மேனியர் ... 160 239 பொன்போலும் திருமேனி உடையார் . 143 90 பொன்போலும்-மேனியனே ... 33 31 பொன்னுணுய் மணியானுய் 125 316 போன்னுசை பெண்ணுசை ... 20 30 பொன்னுசை முண்ணுசை அகப்பேய் . 254 165 பொன்னுசை மண்ணுசை பெண்ணுசையை 294 60 பொன்னுர் மேனி 30 91 பொன்னுருடலிற் பொடியைப் பூசிப் 32 317 பொன்னிறத்தது சிவ சிவ சிவ 348 61 பொன்னின் குடத்துக்கெவர் 154 202 பொன்னும் பொருளும் ... 101 258 பொன்னும் பொருளும் புகழுந்தருவான். 201 13 பொன்னே மணியே ... 233 124 பொன்னே நீ பொருளே 275 235 பொன்னே யன்றி 9
19
(3 it
20 போமே போம்வின 80 319 போம்போம் வினையென்று 326 13 போவதும் வருவதுமில்லை யென்பார் . 251 330 போற்றி யென்வாழ் முதலா
168 போற்றி யொரு பெரில்லாப்பு ... 64 192 போன காலத்தை யெண்ணிப் 203 19 போன நாட் கிரங்கும் 165
O
95 மண்ணுசை வையாதே .264 م ه 53 மணணுதி பூதமெல்லாம் .. 30Ꮞ 352 மண்ணுணுய் விண்ணுணுய் 125 353 மணனினுசை 16 265 மண்ணையும் விண்ணையும் 52 249 மண்ணுெடு விண்ணும் 101. 265 மண்தீகால் 143 265 மண்புகுந்த - 33 39 மண்முதற் ... 349 95 மதிககு மதி ... 278 348 மதிக்கு மதியீ ... 62 226 மதிககும் மதி 195 سم 154 மதிதவழ் சடையாய் ... 132 169 மதியிலேரவி 204 ۔۔۔ 162 மதியும் கதியும் ... 20
4. மதியு மிரவியும் 320 150 மத்த மாமலர் ... 32 164 மததம் மதியொடு ... 348
237

Page 207
பாட்டு மத்தம் மதிதடி மத்தர் பேயர் மந்திர தந்திர மானுன் o மந்திர தந்திரமும் M osgop மந்திரமாய்த தந்திரமாய் மந்திரமுங் தந்திரமும் ஆளுர் மந்திரமுந் தந்திரமும் வேண்டா மரகத மயின் மரத்திலே மல மருந்து கண்டேனே மருமத்தில் மருமமறிந்தவர்கள் மருவாருங் மலர் மிசை யோனும் மலைத்து கிணற மலமேலேறி மழை யென்னும் Op.
toTov opp மாசில்லா மாதவர் மாசில் மாதவர் மனத்திற் es மாண்டார் மனத்தானே மாண்டு போனவர் மாண்புடனே a O மாதம் மும்முறை o மாதிரி யொன்றுஞ் மாதுமை பங்க up to மாமதுரைத் - - LOTLDusio
மாமனுய் வந்து
LOTULUusisoofiu a6o
முக்குன மாயைக் முக்குறுணிப் a முச்சந்திக் குப்பையிலே முச்சந்திக் குப்பை முடிந்தமுடிபென்னும் முனிவன் முடிந்த முடிபென்ருன் முன்னும் பின்னு முடிந்த முடிபென்று முன்னின்று முடிந்த முடின்ெறு முன்னுளிற் முடிந்த முடிபெணறு முன்னுளில் ஆசான் முடியப் பிறப்பிறப்பைக்
ههولى F5-لا-الول முண்டக மலர்ததாள் os ab M முததமிழ்ச் சங்கம் ” ܚ - முதத்திக்கு வழியை u upan முத்திக்கு வழிகாட்டும் a
XXίν
பக்கம் 303 178 240 288 126 143 162 66 123 283
210
136 250 190 110
74 110
89
313
33
342 293 276 219 161
329 29
286 69 206
330
urt'(B பக்கம் மறந்தாலும் பிறந்தாலும் ... 153 மறவாதே யெெைறன்றும் ... 164 மறவாமல் போற்றும் ... 112 மனச் சாட்சி - 285 மனத்தில் வஞ்சகம் 32 மன சுதுக்கண் 109 மனத்துயரம் மாற்ற 79 மனத்துயரைநீக்க ... 284 மனமாட்சி உள்ளார் ... 285 மனமாட்சி வேணுமென்று 285 மனவாசகங்கடந்த ... 63 மன்னவகுகி ... 44 மன்னுதவ ... 101 மன்னுயிரெல்லாம் ... 205 மன்று பறித் 323 محیه மன்றுள்ளேயாடு 05
மாயும் மனிதரை 244 மாரியுலகை 101 மாருட்ட ... 329 tDafléaÉ; ... 241 மார்க்கண்டற்காக ... 283 மார்க்கத்தை ... 342 மார்க்க நன்நெறி ... 216 மாலயனும் 124 மாறிப்புலன் 235 மாறிப்பொறிவழியோகா 236 மாறிப் பொறிவழிபோய் 81 மாற்றறியாத 111 மானுயி மானம் ... 224
முத்திக்கு வித்தான ... 33 முத்திக்கு வித்தை ... 238 முத்திக்கு வித்தை மூனயிலிட்டுச் 162 மு போதுங் 312 முயல முபல 284 முருகா வோ 76 முழுது மூண்மையென 39 முழுது முண்மை ஆச்சுதெடி 154 முழுது முண்மையென்று முனிவனவன். 161 முழுது முண்மையென்று முன்னுள் 223 முழுவது முண்மையென்று முகமலர்ந் . 321 முழுவது முண்மை யெனமுன் ... 292 முழுதும் முண்மையென்ற 63 முழுவது உண்மைஎன மொழிந்தான் 163 முழுவதும் உண்மையென்று 200

UFC முற்ருத (UዎይD£D] முனியே முனைத்து வரும்
முனை ததுவரும் மூர்க்ககுனமெல்லாம் .
முனைந்துநிற்கும்
மூண்ட வல்வின மூதாதைமார் மூர்க்க குணமில்லே மூர்க்கமான குணம்போக்கும் மூலநிலத்தின்
மெத்தக்கதை பேசாதே மெய்யரும்பி விதிர்
மொழிக்கு கற்றுனே
மோனத்தாழுதல்
ususti
யாவரும் சமமென
s
வஞ்சம்
வஞ்சியர் வஞ்சகம் வஞ்சநெஞ்சினர் வடிவ மில்லாதவனே வடிவுசேர் 6.J.g.6460L. வடியார் சூலம் வணக்கினுன்மா வணக்கம்
வண்டு வண்டார்க்குங்
ങ്ങuങ്ങ് வந்தது போனது வந்திபபார்
auTösesso QTFONJoç. வாசம்பொருந்திய வாசித்துக் வாசியோகங் தேர் வாணிச்சிககாக வாதம் பேசி DMT uuKgÚ வாய்மையும்
வால்
DU
XXV.
பக்கம் 235 168
323
294 284
27 .
UTB முன்செய்த முன்னில் முன்னேவின்வந்து மூண்டுதே முன்னேவினயென்றும் நினையாதே முன்னைவினையெல்லாமோடு
மூலயிலிருந்து Sypavo uLuar மூவர்களும் மூன்று மொன்ருன மூன்று மொன்ருய்
மெய்யுரைப்போம்
வந்துன்னடி
வருக முருக
வருத்தமறற
வருவதும்
வருவன வருவாரைப் போவாரை ஆசான் வருவாரைப் வருவார் வருவார் வலமிடமாய்ச் செல்கின்ற வலமிடமாய் ஓடுகின்ற வலமிடமோடும் வாசியை வலப்பட்டமான் வல்லாரும் வழிகள் இரண்டையும் வழுத்துதறகு ஒன்றுமில்ல வறுமைப்பிணிக்கு
agresíduuT
வாழிகுருநாதன் su ji daете штiadi வாழுவோமென்றுவென்று வாழ்க சிவதொண்டன் ഖമ ീഖങ്ങ
RTb
auterih IT RNGR ANaval
asTar
uassà
16 29 154 255 344
298
283 161
346
326
101 16S 275

Page 208
urruC) 63> விஞ்சுபிறப் விடத்தை விடியுமூன் விடையேறு விட்டகுறை விண்ணவர் விண்ணுணம் விண்ணும் மண்ணும் eßsöI00(BLff60 விண்ணுட்டாரும் வித்தகம் நீபேசாதே வித்தாரப் பேச்சையும் வித்தாரமாகக் கதை வித்தார விடையேறி
வீடுசேர்வதில் வீடுகமக் 66 Turrar வீதிக்கு வீதி
வெட்டவெளியில் வெம்பகை வெய்யபுவிப்பார்வை வெய்யகாமம்
வெளியிலேயொளி
வேடமொன்றும்
வேடிக்கை
வேணியிற் வேண்டில் வேண்டாமை வேண்டுதல் வேண்டாமையில்லான் வேண்டுதல் வேண்டாமை யில்லா வேண்டுவார் வினே வேதகீதத்தன்
வேதசாத்திரம் வேத மந்திரம் சொல்லும் வேதியர் வேதமறியாத பொருள்
வையகம்
sa
崇钴象
Χχνί
வி
பக்கம் 313
22 38 291 128 286 163 20 154 247 132 224 58 278 46
வீ
31 60 259
71
வெ
259 292 2. 166 16
வே
223 211 233
196 102 31 136 10 151 40
269
பாட்டு வியக்கவொன்று வியந்து நின்ற விரிந்த வறிவுடைய விருத்தணுய்ப் விரும்புவார் » விருப்பு வெறுப்பின விருப்பும் வெறுப்பும் விருப்பு வெறுப்பை வேரற விரை மலரை விரைவாய் கடந்து விளையுமிச்சையெல்லாம் விற்றுாண் வினைப்பகையை
YA
வி%னப்பகையை வெல்வதற்குமார்க்க .
வினைப்பகை வெல்ல
േന്ദ്രബ வீம்பிடும்பை அகங்காரம் வீரமாமயில்
வெள்விடைமேல்  ெள்ளம் பள்ளத்தை வெறும் வீணன் வெற்றிதரும்
வேதமோ டாகம மறியா வேதம் வகுத்தான வேதாந்த சித்தாந்தம் வேருக வேதாந்த சித்தாந்தம் கற்ற வேதாந்த சித்தாந்தம் சமமென்று வேதாந்தம்பேசி வேதோபதேச வேலனக் கொண்டாடுவோம் வேலைத்துக்கி வேள்படச் செய்த வேருய் உடனுய்