கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மெய்யுள்
Page 1
ய்யுள்
யசிங்கம்
Page 2
மெய்யுள்
Page 3
மெய்யுள் (உலக விடுதலை இலக்கியம்)
O
மு. தளையசிங்கம்
சமுதாயம் பிரசுராலயம்
கோவை - 15
Page 4
1985 - செப்டம்பர்
பதிப்புரிமை : மு. பொன்னம்பலம்
ஜேஜ்ஜி
தளையசிங்கத்தின் நூல்கள்
1 ஒரு தனி வீடு ரூ. 152 புதுயுகம் பிறக்கிறது ரூ. 10/- 3 போர்ப்பறை es. 25/- 4 மெய்யுள் e5. 5/- 5 கலைஞனின் தாகம் ab. 1 O, - 6 கல்கி புராணம் அச்சில் 1 யாத்திரை அச்சில்
O is also 5. 15/-
பாரிஜாதம் அச்சகம், க்ோயமுத்தூர் -641 015.
曲
ܓ
么
qu
み
27 Wy
எழுச்சியுறும் பேரறிவே உன் தாளில் வீழும் என் அழைப்பு இது உனக்கே இது
F d i u Lu 6OOT id
Page 5
மெய்யுள் பற்றி ஒரு மெய்யுள்
இப்போ நீ என்னென்ன எழுதுகிருய்?
இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய் கிருய் என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. எழுத் தில் எழுதியவையும், இலக்கியத்தில் செய்யும் புது முயற்சி ளும் வாழ்க்கையில் இருக்கிறதா? வாழ்க்கையில் நடை பெறுகின்றனவா? என்று கேட்கும் புதுச் சூழல் இன்று.
உனது வாழ்க்கையைப் பொது வாழ்க்கையாய் மாற்ற என்னென்ன புது முயற்சிகள் செய்கிருய்? என்ற பார்வை
உனது வாழ்க்கையை எப்படிக் காண்கிருய்?
வலுப்பெறும் யுகம் இன்று. அந்தப் பார்வையின் வலு புதுக் கலை இலக்கியங்களைக் கோரி நிற்கிறது.
\
அந்தப் புது முயற்சிகள் வாழ்க்கையாகவே மாறுகின் றன். வாழ்க்கையே கலை: வாழ்க்கையே பேர் இலக்கியம். இதை ஆற்றுப்படுத்துகிறது இன்றைய மெய்முதல்வாதப் பெருந் தத்துவம்.
இந்த மெய் முதல் வாதப் போக்கின் பிரகடனமாகவே திரு மு. தளையசிங்கம் அவர்களின் இம் மெய்யுள் தொகுப்பு வெளிவருகிறது.
இது அவரின் மூன்ருவது நூல். முதலாவது 1965 இல் வெளியான "புதுயுகம் பிறக் கிறது."
Page 6
இரண்டாவது 1970 இல் வெளியான " போர்ப்பறை".
மெய்யுள் ' 1974 இல் வெளியாகிறது,
இம் மூன்று நூல்களுக்கிடையே உள்ள முக்கியத்துவம் சுவையானது.
மூன்றுமே மெய்யை - சத்தியத்தை - அழுத்திய நூல்கள் தான்.
ஆணுல், அழுத்தம் பெற்ற விதங்கள் ஒவ்வொன்றிலு வேருகியும், தொடர்புபட்டும் ஒரு தத்துவ முழுமையாகி பரிணமிக்கின்றன.
தன்னில் மட்டும் மெய்யை அழுத்திய உள்ளெதுங்கிய போக்கு ‘புதுயுகம் பிறக்கிறதின் கடைசிக் கதையா “வெளி" க்குரியதென்ருல், சகலதையும் மெய்யில் அழுத்தி விரியும் தத்துவ வார்ப்பு "போர்ப்பறை" நூலுக்குரித்தாகிறது.
"மெய்யுளோ" சகலதின் இயக்கங்களையும், அவற்றின் இயக்க விதிகளையும் மெய்யின் பின்னணியில் வைத்து அழுத்தி காட்டுகிறது. "போர்ப்பறை "விரித்த தத்துவத்தின் பிரயேfகப் படுத்தலுக்கான விதிகள் இதிலே (கலைஞனின் தாகம்) போடப்படுகின்றன.
இந்தப் பார்வையில் வர்க்கவியல் என்பது அற்பமாக, குணவியலே எல்லா இயக்கங்களுக்கும் எக்காலத்துக்கும் உரிய உண்மைப் பின்னணி என்பது விளக்கப்படுகிறது.
குணக் கலவைகளின் வார்ப்புக்கேற்ப " நான் " நடத் தும் இயக்கங்களே அன்றிலிருந்து இன்றுவரை தேவ - அசுர, தர்ம - அதர்ம, நல்ல - தீய, தொழிலாளி - மு லாளி போக்குகளாக மாறி மாறிக் காலத்துக்கேற்ற கோலங் களில் தோன்றுகின்றன.
குணவியலை அறியாத வரைக்கும் தொழிலாளருக்குள் இருக்கும் முதலாளிகளையும், முதலாளிகளுக்குள் இருக்கும்
9 w
தொழிலாளிகளையும் பொதுவுடமை வாதிகள் அறியப் போவ தில்லை.
அதனுல் தான் தொழிலாளர் புரட்சி துரைத்தனமாகத் தேங்குவதற்கும், தொழிலாளர் சர்வாதிகாரம் சோலலிசத்தை விட்டு நகராமைக்கும் உரிய காரணங்களைப் பொதுவுடைமை வாதிகள் அறிவதில்லை.
பொதுவுடைமைப் போக்கின் இன்றைய தேக்கமே அதன் அறியாமையிலேயே ஆரம்பிக்கிறது.
மெய்யுளின் வருகை பொதுவுடைமைப் போக்கின் தேக்கத்தை உடைக்கும் அதே வேளையில், அதன் தேக்கத் துக்குரிய அடிப்படைக் கோளாறுகளான லோகாயத வர்க்க - இயக்கவியல் வரையறைகளையும் தகர்த்துவிடுகிறது.
இதன் மூலம் பொதுவுடைமைப் போக்கே விடுதலை பெறு கிறது.
விடுதலை பெறும் பொதுவுடைமைப் போக்கு, பூரண சர்வோதய எழுச்சிக்குரிய முக்கிய அம்சங்களில் ஒன்ருக மெய்முதல்வாதத்தின் மூலம் முன்னெடுத்துச் செல்லப்படு கிறது.
மு. த. தனக்கும் தன்னைப் போன்ற சிலருக்கும் ஆத் மீகத் தீட்சை கொடுத்தவரையும், தீட்சை கொடுக்கப்பட்ட தினத்தையும் அடிக்கடி நினைவுகூருவார்.
தீட்சை கொடுத்தவர் இருபதாம் நூற்ருண்டின் பேரவ தாரமான பகவான் பூணூரி நந்தகோபாலகிரி,
தீட்சை கொடுக்கப்பட்ட தினம் அரவிந்தர் தினம். கூடவே இந்தியா விடுதலை பெற்ற தினமுமாகும். (1966August 15)
இந்திய விடுதலைப் போராட்டம் சாதாரண தேசிய விடு தலைப் போராட்டம் அல்ல. ஞானிகளால் முன்னின்று நடத்
Page 7
10
தப்பட்ட அப்போராட்டம், " உலகின் ஆன்மீக விடுதலைக் காக இந்தியா நடத்திய முதல் புரட்சி ‘' என்றே அரவிந்
தர் அதைக் குறிக்கிருர்,
காந்தியின் வருகைக்கு முன், இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய அரவிந்தருக்குச் சிறை யில் விவேகானந்தர் தோன்றி "பேர்மனம்" பற்றி விளக்கு கிருர்,
வெளியே சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருக்க, அதன் ஆன்மீகக் கொள்கை விளக்கம் அரவிந்தருக்கு உள்ளே நடைபெறுகிறது.
உடல், உயிர், மனம் என்று வளர்ந்துவிட்ட இன்றைய மனித பரிணுமம் பேர்மனம் ஆகிற அடுத்த கட்டத்தை எட்டி விட்டதை அரவிந்தர் சிறையை விட்டு விடுதலை பெற்று வெளியே வந்து பிரகடனப் படுத்துகிருர்,
அந்தப் பேர்மன வளர்ச்சியின் பரவலான எழுச்சிக்குச் சர்வமத ஞானமே அடிப்படை என்பதன் வலியுறுத்தலே நந்த கோபாலகிரி என்ற பேர் அவதாரமாகும். விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண அவதாரம் அருட்டிவிட்டுச் சென்ற சர்வமத ஐக்கியத்தின் முற்றிய தொடர்ச்சி.
‘சர்வ மதங்களும் சமமானவையல்ல, எல்லாம் ஒன்றே" என்ற ஞானம், சகல மக்களினதும் இன, மத, மொழி, கலாசார ஆணவத் தடைகளை அறுப்பதோடு, அதன் இடத் தில் எழுகின்ற புது யுகத்தின் எல்லாப் பொதுமைகளை நிலை நாட்டவும், சகல மக்களையும் மெய்யை நோக்கி ஆற்றுப் படுத்தவும் அது தானுகவே தூண்டுகிறது.
இத்தூண்டுதலின் கலை ஒலிப்பே பாரதி கண்ட கிருத யுகம். பாரதி விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா வின் சீடன். அரவிந்தரோடு உறவாடியவன்.
11
இந்த ஆன்மீகச் சூழ லி ன் தரிசன வார்ப்பாகவே மு. தளையசிங்கம் திகழ்கிருர்.
அவர் நூலின் முக்கியத்துவத்தையும், இதன் அடிப் படையிலேயே நோக்கவேண்டும்.
அரவிந்தர் மனதின் அடுத்தகட்ட பரிணும வளர்ச்சி பற் றியும் பேர்மன உச்சங்கள், அதன் கீழ் இடைத்தர உட்சுழி வுகள் பற்றியும் எழுதியுள்ள அளவுக்கு, இன்றைய இடைப் பட்ட நிலையில் பேர்மனதை நோக்கி மனித குலத்தை ஆற் றுப்படுத்துவதற்குரிய சமூக, பொருளாதார, அரசியல் தத் துவ இயக்கவியல் பற்றி எழுதுவதைத் தன் பணியாகக் கொள்ளவில்லை.
அந்தப் பணிக்குரிய தத்துவ வார்ப்பாகவே மு. த. வின் “போர்ப்பறையும்", "மெய்யுளும்" வெளிக்காட்டப் படுகின்
றன. -
அதனுல்தான் மு. த. வின் பூரண சர்வோதயக் கோட் பாட்டை இன்றைய நியோமார்க்ஸிய, எக்லெட்டிச போக்கு களோடு ஒப்பிடும் சில மார்க்ஸிய வாதிகளின் அர்த்தமற்ற பார்வை சிரிப்புக்கிடமானதாக அமைகிறது.
மத ஸ்தாபனங்களை மத உண்மைகளாக மாருட்டம் செய்து புறுடன், போர்ப்பாச், ஹெகல் என்று பலரின் சிந் தனைகளைத் தனது மாருட்ட அறியாமைக்கேற்றவாறு ஒத் திசைவித்த மார்க்ஸின் தத்துவம் ஒருவேளை எக்லெட்டிசத் துக்குக் கிட்டே வந்தாலும் "உடல், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணுமம் இனிப் பேர்மனமாக வளரப் போகி றது" என்ற பேர்ஞான உண்மையின் அடிப்படையில் தனது தத்துவத்தை நிறுவி, அந்த உண்மையை நோக்கிச் சமூக இயக்கங்கள் அனைத்தையும் வளர்த்துக் காட்டும் பூரண சர்
Page 8
12
வோதயக் கோட்பாட்டை அப்படி நினைப்பது தத்துவம் பற் றிய அறியாமையேயாகும்.
● X
சகலவற்றையும் மெய்யின் எழுச்சிக்குரிய பூரண சர் வோதய மாற்றத்துக்கு ஆற்றுப்படுத்துவதே மெய் முதல் வாதம்.
அந்தச் சகல மாற்றங்களும் ஆரம்பத்தில் கலை, இலக் கிய, கலாசாரப் புரட்சிகளோடேயே தொடங்குவதால், மெய் , யுள் உருவம் அப்புரட்சியைத் தொடக்கி வைக்கிறது.
அப்புரட்சி எழுத்தில் மட்டும் உன்னத இலட்சியங்களை யும், கலைப்பரவசத்தையும் படைத்து " விட்டு வாழ்க்கை யில் அவற்றுக்கு முற்றும் மாருக வாழும் இன்றைய கலை இலக்கிய கர்த்தாக்களின் போக்கைத் தகர்த்துவிடுகிறது.
இத்தகர்ப்பு வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படாத இலட் சியங்களின் கூடாரமாக, வாழ்க்கையின் போலிப் பிரதிப் பொருளாக அமைந்துள்ள கலை இலக்கியம் என்ற தனியான ஸ்தாபனத்தையும் தகர்த்துவிடுகிறது.
இதன்மூலம் கதை, கட்டுரை, கவிதை என்ற இலக்கிய கர்த்தாக்களின் கற்பனைச் சிறையிலிருந்து கலை இலக்கியமே விடுதலை பெறுகிறது.
இந்த விடுதலை சகலரையும் கலைஞர்ஆக்குவதோடு அவர் புரியும் சகல தொழிலையும் கலையாக்குகிறது, இலக்கிய மாக்கிறது.
இந்த நோக்கின் உன்னத சிருஷ்டியாகவே கலைஞனின் தாகம் ' மெய்யுள் அமைகிறது.
இத்தரிசனத் தேவைகளின் நிகழ்வான மெய்யுள் உருவம்
இன்றைய இலக்கியத்தை அழிக்கும் இலக்கியமாகவும், கலையை அழிக்கும் கலையாகவும் செயற்படும் அதேவேளை
13
யில் வாழ்க்கையையே கலையாகக் காணவைக்கும் சாதன மாகவும் அச்சாதனையின் மூலம் கலை இலக்கியத்தின் உச் தரிசன வெளிக்காட்டலாகவும் அமைகிறது.
அதனுற்ருன் மெய்யுள் உருவம் பழைய இலக்கிய உரு வங்களின் உடைப்பாகவும். அதே வேளை அவற்றின் கலப்பா கவும் அவைக்கும் அப்பாற்பட்ட மெய் - றியலிச (மெய். Realism), பிரபஞ்ச யதார்த்த வார்ப்பாகவும் அமையும்.
இம் மெய்யுள் தொகுப்பிற் காணப்படும் ' மெய்யும் உள் ளும் மெய் ”, “ பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் " ஆகிய இரண்டும் மெய்யுள்களைத் தவிர மற்றவை எல்லாம் 1972 இன் கடைசிக் காலங்களில் எழுதப்பட்டவையாகும். * மெய்யுள் உள்ளும் மெய் " 72 ஜூன் மல்லிகை” யில் வெளி வந்தது. பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் 71 சத் தியம்’ இதழில் வெளிவந்தது. , வர்க்கவியலும் குணவியலும், என்பது கலை, தொழுகை, விடுதலை, சத்தியம் " என்ற தலைப் பில் சிறு நூலாக எழுதப்படவிருந்த மெய்யுளின் ஆரம்பக் குறிப்பே, “ கலைஞனின் தாகத்தின் கடைசிப்பகுதி (அதாவது A-2 வின் குணங்களை ஆராயும் இடத்திலிருந்து) ஆசிரியரால் விரித்து எழுதப்படவிருந்தும் அது நிறைவேற்றப்படாததால் அதற்கு ஆசிரியர் போட்டிருந்த குறிப்புகளோடேயே அது நிறைவு பெறுகிறது.
மு. த.வின் மெய்யுள்களில் காணப்படும் நல்லசிவம் ஒரு கற்பனைப் பாத்திரமல்ல. அவரது வெளி மனதுக்கு அகத்தின் ஆன்மீக உந்துதல் தூதனுப்பிய தூய உள்ளுணர்வே நல்ல சிவம். அரவிந்தரின் வார்த்தையில் சொல்வதானுல் அந்தஉள் ளுணர்வை " Over Mind" என்று அழைக்கலாம்.
அதனல், நல்லசிவம் ஆத்மீக உண்மைக் கெதிரான எந்தச் சிறுமைகளையும், தடைகளையும், மாயைகளையும் உடைக்கும் நித்திய இயக்கமாகவே திகழ்கிருன்.
Page 9
14
அந்த நல்லசிவத்தின் குரல் உங்களுக்குள்ளேயும் கேட் கிற காலம் தொடங்கிவிட்டது. இதோ அவன் உங்களுக் குள்ளே குரல் எழுப்புகிருன்.
சத்தியச் செங்காவலர் வருகிருர், தயார்ப்படுங்கள், தயார்ப்படுங்கள் ! உங்கள் கட்டுக்களைக் கலைக்கத் தயார்ப்படுங்கள் ! காலங்காலமாய் கலை இலக்கியமென்றும், கட்டுரை யென்றும், கட்டுக்கதை, கவிதை என்றும் எழுதியும் அவை உங்கள் -
சுயநலக் கட்டுக்களை அறுக்கவில்லை. தூக்கத்தைப் போக்கவில்லை. கனவுகளைக் கலைக்கவில்லை. s மாருகக் கட்டுக்களோடு இன்னுெரு கட்டு கலை இலக்கியக் கட்டு ! இவற்றைக் கலைக்கச் செங்காவலர் வருகிருர், எழுதியபடியும் சொன்னபடியும் வாழாத நீங்கள் சத்தி யத்துக்கெதிரான திரிபுவாதிகள்.
'நான் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள். உங்களை விசாரிக்கக் கலை இலக்கியச் செங்காவலர் வரு கிருர்,
அவர் நடத்தும் ஆத்ம கலாசாரப் புரட்சியில் உங்கள் கலை இலக்கியக் கறுப்புச் சந்தைத்தனம் கலைபடப் போகிறது. அந்தக் கலைப்புத்தான் இனிவரும் இலக்கியம். கலையை அழிக்கும் கலை. இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம்.
தயார்ப்படுங்கள் ! தயார்ப்படுங்கள் !!
மு. பொன்னம்பலம் புங்குடுதீவு 9-இலங்கை.
சசி
1966 ன் நடுப்பகுதியிற்தான் இப்பிறப்பில் நான் ஈஸ் வரனின் முக்கிய பக்தர்களில் ஒருவரைச் சந்தித்தேன்.
அவர் தன்னுடைய பெயரைத் தளையசிங்கம் என்று எனக்கு அறிவித்தார். அவர் சொன்ன அந்தப் புதுப்பெயரை ஞாபகத்தில் வைத்திருக்க முயன்று தோல்வியுற்றபோது இந்தப் பெயரைவிட அவரது முன் ஜன்மத்தின் பெயரா லேயே தொடர்ந்து அழைப்பதை நான் விரும்புகிறேன் என்று கூறினேன்.
சிறிது காலத்துக்குப் பின்னர், அவரது குருதேவர் பகவான் பூணூரீ நந்தகோபாலகிரி அவருக்கு விநாயகதாஸ் என்ற ஆச்சிரமப் பெயரை வழங்கினுர், ஆணுல், நானுே. அவரை அவரது மகா சமாதியின் இறுதிவரை சசி என்றே அழைத்து வந்தேன்.
யார் இந்தச் சசி?
இவர் வேறு யாருமல்ல, பூரீ இராமகிருஷ்ணரின் பெரும் பக்தராக முன்பிருந்த இராமகிருஷ்ணுனந்தாவே தான். இவருக்கிருந்த அளவுகடந்த குரு பக்தியினுல் குருவின் பெயரே இவருக்கு வழங்கப்பட்டது. இதைப் பற்றி விவேகானந்தரே, சசியைத் தவிர அளவு கடந்த குரு பக்தி யுள்ளவர் யாருமில்லை, ஆகவே இராமகிருஷ்ணுனந்தா என்ற பெயர் இவருக்கே அதிக பொருத்தமானது என்று கூறியுள்ளார்.
Page 10
16
"ஈஸ்வர கோஷ்டி " என்று சுருதிகளிற் கூறப்படும் தனி யான பக்தர் கூட்டத்தைச் சேர்ந்தவரே சசி. அவதாரத்தோடு பிறப்புப் பிறப்பாகத் தொடர்ந்து வந்து அவரது மெய்விளக் கத்தை அழுத்த வரும் ஜீவன் முக்தர் கூட்டத்தைச் சேர்ந்த வரே அவர்.
முன்பு இதே சசி மகா சமாதியடைந்ததைக் கேள்வியுற்ற போது, புனித அன்னை சாரதா தேவியார் சோகந்தொனிக் கப் பின்வருமாறு கூறினர்: "என்னுடைய சசி போய்விட் டார். என்னுடைய முதுகெலும்பு முறிந்துவிட்டது."
அவற்றை நான் இன்று மீட்டொலித்துப் பார்க்கும் அதே வேளையில், பின்வருவனவற்றையும் சேர்த்துக் கொள் கிறேன்.
சசி தனது ஸ்தூல உருவத்தை, இற்றுப்போன அணி கலன் ஒன்றை ஒதுக்கியது போல் ஒதுக்கி விட்டாலும், அவர் தொடர்ந்து ஆத்மீக உருவத்தில் வாழவே செய்கிருர், அவர் இவ்வுலகத்தில் நடமாடியபோது செய்ததைவிட அதி கப்படியான அக்கறையோடும் வேட்கையோடும் ஆத்மீக சாதகர்களையும், சமூக சேவையாளர்களையும் வழிப்படுத்து வார்.
- அன்னை
சர்வமத சங்கம்
தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்
- சுந்தர ராமசாமி
மு. தளையசிங்கம் தமிழகத்தில் போதிய அறிமுகம் பெருதவர். இவருடைய மூன்று புத்தகங்கள் அச்சேறியுள் ளன. " புதுயுகம் பிறக்கிறது " - பதினுேறு சிறு கதைகளின் தொகுப்பு. முதல் பதிப்பு 1965. " போர்ப்பறை' -கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றின் தொகுப்பு. முதற் பதிப்பு 1970. ' மெய்யுள் " கட்டுரைகள், -சம்பாஷணைகள் , கவிதைகள், நாவல் ஆகியவற்றின் தொகுப்பு. தளையசிங் கத்தின் மறைவுக்குப் பின் 1974 இல் வெளிவந்தது. இவை தவிர அச்சில் வந்தவையாகவும், கையெழுத்துப் பிரதி களாகவும் வேறு எழுத்துக்களும் உள்ளன. " ஒரு தனி வீடு",
* யாத்திரை", "கல்கி புராணம் " ஆகிய நாவல்கள் முழுமை பெற்றவை. ஒளியை நோக்கி ' என்ற நாவல் குறையாக நிற்கிறது. " குருசஷத்திரம் ’, ‘ எதிரிகள்', 'ஓமாக்கினி'
ஆகிய முயற்சிகளும் உள்ளன. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி - சில அவசரக் குறிப்புகள்" என்ற தலைப்பில் ஈழத்து நவீன இலக்கியத்தை விமர்சிக்கும் கட்டுரைகள் செய்திப் பத்திரிகையில் அவர் வாழ்நாளிலேயே தொடர் கட்டுரை களாக வந்து முழுமை அடைந்துள்ளன. இன்னும் புத்தக உருவம் பெறவில்லை. மல்லிகை ”, “ பூரணி " , " சத்தியம் " ஆகியவற்றில் வெளிவந்து தொகுக்கப்பட்டுள்ள எழுத்துக் களும் புத்தக வடிவம் பெறவில்லை.
தளையசிங்கம் 1935 இல் பிறந்தார். 1957ல் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது ‘சுதந்திரம்" என்ற பத்திரிகையில் இவருடைய முதல் சிறுகதையான தியாகம்" வெளிவந்தது. முதல் நாவலான "ஒரு தனி விடு?
Page 11
18
1960ல் எழுதப்பட்டது. இரத்தின புரியில் தான் படித்து வந்த கல்லூரியிலேயே இவர் ஆசிரியரானுர், விமர்சனத்தில் தீவிர ஆர்வம்கொண்டார். ‘விமர்சன விக்கிரகங்கள்" கட் டுரைத் தொடர் 'தினகர னில் வந்தபோது சர்ச்சைக்கு உள் ளாயிற்று. இக்காலத்தில் முற்போக்கு, நற்போக்கு இரண் டினது குறைகளையும் எடுத்துக் காட்டும் கட்டுரைகளை எழுதி யிருக்கிருர். 1963ல் இவர் எழுதிய "ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி : சில அவசரக் குறிப்புகள்" தமிழ் இலக்கிய விமர் சனத் துறையில் ஒரு மைல் கல் என்று கருதப்படத் தக்கது. 1966ல் இவர் தனது குருவான பூரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியில் சந்தித்தார். இக்காலத்தில் இவருடைய வேலை புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாறிற்று. புங் குடுதீவில் பல ஆத்மீகப் பயிற்சிகளை மேற் கொண்டு ஆத்மீக வகுப்புகள் நடத்தினர். 1968ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்தார். 1969ல் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற் றத்திற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். 1970ல் ‘சத்தியம்" பத்திரிகையை வெளியிட்டார். தேர்தலில் சர்வோதய அர சியல் முன்னணியை உருவாக்கினர். 1971ல் புங்குடுதீவு கண்ணகியம்மன் கோவிலில் நன்நீர்க் கிணறுகளில் தாழ்த் தப்பட்டவர்களுக்கு இடம் அளிக்கும்படி போராட, போலீ சாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 1972ல் "மெய் யுள் என்ற புதிய இலக்கிய உருவம் போடப்பட்டது. 1973ல் இரண்டு மாதம் நோய்வாய்பட்டு ஏப்ரல் 2 ஆம் தேதி மறைந்தார்.
நான் என் கட்டுரையை தமிழக வாசகர்களின் வசதி யைக் கருதி அச்சேறியுள்ள இவரது மூன்று புத்தகங்களைச் சார்ந்து எழுதியிருக்கிறேன். முதற் பகுதி தளையசிங்கத் தின் கருத்துலகம் பற்றி, அதிகமும் அவர் வார்த்தை களைப் பயன்படுத்தியே கூறுகிறேன். இரண்டாவது பகுதி, இவருடைய சிந்தனைகளைப் பற்றி எனது எதிர்வினைகள்.
9
தளைய சிங்கம் தனது கலைப் பார்வையை, "பிரபஞ்ச யதார்த்தம்" என்று அழைக்கிருர். " பிரபஞ்ச யதார்த்தம் என்ருல் என்ன? இதைத் தெரிந்து கொள்வதற்கான முயற்சிதான் இந்தக் கட்டுரை. கலைப் பார்வை வாழ்க்கைப் பார்வையின் ஒரு பகுதி. வாழ்க்கை பார்வையைத் தெரிந்து கொள்ளாமல் கலைப் பார்வையை முழுமையாக அறிய முடி யாது. ஆகவே தளையசிங்கத்தின் வாழ்க்கைப் பார்வையை மிகச் சுருக்கமாக பார்ப்போம்.
உலகெங்கும் மனிதன் அதிப்தியில் ஆழ்ந்து கிடக்கிருன். அதிருப்தியின் வெளிமுகங்கள் பல. பயனற்ற பொழுது போக்குகளில் காலத்தை வீணடித்தல், போதைப் பொருட் களில் விழுந்து கிடத்தல், போலிக் கலைகள் எழுப்பும் கனவு களில் தன்னை மறந்து நிற்றல், வாழ்க்கையில் ஆர்வமின்மை, சோம்பல், வன்முறை இவ்வாருண எதிர்மறைச் செயல்கள் ஒருபக்கம். மறுபக்கம் வெவ்வேறு தளங்களில் சமூக மாற் றத்திற்கான முயற்சிகள், போராட்டங்கள். இந்த வெளிப் பாடுகளில் பிரச்னையின் ஆழத்தை உணர முடிகிறதா ? முடிய வில்லை. விஞ்ஞானம் பாய்ச்சல்கள் நிகழ்த்திக் கொண்டுவரு கிறது. மனம் கசந்த மனிதன் சமூகத்தை உதறி வெளி யேறிக் கொண்டிருக்கிருன். உலகெங்கும் வெவ்வேறு வித மான சமூக அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. அவற்றை நாம் எப்பெயர் இட்டு அழைப்பினும் அங்கு அதிருப்தி மிஞ்சுகிறது. சமூக மாற்ற ங் கள் எவற்றைக் குறிக் கோளாகக் கொள்ள வேண்டும்? மெய்யான வளர்ச்சி எது? கட்சிகள் அரசுகள், நிறுவனங்கள் ஆகியவை தம் குறிக்கோள் பற்றித் தெளிவாக இருக் கின்றன வா? சமூக பொருளாதார மாற்றங்கள் பொருளாதாரக் காரணங் களுக்காகவே கொண்டு வரும்போது மேலான வாழ்வு மல ருமா ? இவற்றைத் தாண்டி மற்ருெரு எழுச்சிக்குரிய தள
Page 12
20
மாக இம்மாற்றங்கள் நிகழ்த்த்ப்படுகின்றனவா? பெளதிக, சமூக, பொருளாதார அரசியல் நிலைக்கும் அப்பாற்பட்ட உண்மை என்று ஒன்று இருக்கிறதா? இருக்கிறது. அது தான் சத்திய நிலை. இதை உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொண்டு எந்த நாட்டு அரசாங்கமும் இன்று நிருவாகத்தை நடத்தவில்லை. கடவுள் என்பது மாற்றமற்ற சத்தியம். கடவுளை ஏற்றுக்கொள்ள விரும்பாதோர் புத்தர் கூறிய நிர் வாணத்தை ஏற்றுக் கொள்ளலாம். பெளத்தர்கள் கடவுளை மறுப்பினும், கடவுளை ஏற்பவர்கள் நிர்வாணத்தை ஏற்றுக் கொள்வர். நிர்வாண நிலைதான் திருப்தியை அளிக்கக் கூடி ய்து. இந்த சத்திய நிலை முழுச் சமூகத்திலும் பரவாதவரை யிலும் அதிருப்திகள் தொடரும்.
சடம், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணுமம் இன்று மனத்தையும் தாண்டிச் செல்ல முயல்கிறது. மனத்தைத் தாண்டிய நிலையில்தான் சத்தியத்தின் பூரணப் பிரவாகம், உட்புக முடியும். இன்று வரையிலும் ஞானிகளே இந் நிலையை அடைந்திருக்கின்றனர். கடுமையான பயிற்சிகள் மூலம் இந்நிலையை இவர்கள் அடைந்தனர். ஞானிகளி டம் தோன்றிய சத்திய எழுச்சியை எங்கும் நீக்கமற நிறை யச் செய்ய வேண்டும். ஆகவே இன்றைய பிரச்னைகளை ஆாாயும்போது அவற்றை அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதாரத் தளத்தில் மட்டும் வைத்து ஆராயாமல் பூரண பரிணுமத் தேவையான சத்திய எழுச்சிக்குரிய ஆழம் வரை யிலும் விரித்துப் பார்க்கவேண்டும். அதிருப்தியாளனே போராட முன் வருவான். அதிருப்தியாளர்களில் கலைஞர் க்ள் நுட்பமான உணர்வுகளும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்ட பரி ணும வளர்ச்சிக்குரிய சமிக்ஞையின் அலைகள், ஞானிகளை விட்டுவிட்டால் கலைஞர்களிடமே அதிக அளவில் தட்டுப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த அலைகளுக்கு உருவம் கொடுக்க
21
வேண்டிய பொறுப்பில் இன்றைய கலைஞன் இருக்கிருன். ஞானிகளின் மேலான நிலைக்கு முழு மனித குலத்தையும் உயர்த்த வேண்டும். இந்தத் தாண்டல் நிறைவேறு வதற்கு முன் சிறு சிறு கூட்டங்கள் இணைந்து பெருங் கூட்டமாக மலர வேண்டியுள்ளது. இது கலைஞர்களின் கூட்டமாகவும் சிந்தனையாளர்களின் கூட்டமாகவும் இருக் கும்.
மெய்யான மதத்திற்கும், மெய்யான விஞ்ஞானத்திற்கும் முரண்பாடு எதுவும் இல்லை. ஒன்று உண்மைக்கு உள்ளு ணர்வுகளை நாட, மற்ருென்று புற உலகைச் சார்ந்து நிற் கிறது. ஒன்று அனுபவம். மற்ருென்று ஆராய்ச்சி, சீர ழிந்த மதமும் சீரழிந்த விஞ்ஞானமும், பொது ஒற்றுமைகளைக் கொண்டவை. வாழ்க்கையையும் சமூகத்தையும் துறக்கத் தூண்டிய மதத்தைக் கேலி செய்தது விஞ்ஞானம். மேற்கே அதே விஞ்ஞானம் முதலாளித்துவத்திற்கு தன் ஆத்மாவை விற்று வாழ்வை அழித்தது. நீக்ரோக்களை ஒதுக்கி வைக்கும் சமூகம் எந்த அளவு விஞ்ஞான பூர்வமானது? மனிதத் தன் மைகளை பண நாயகம் விழுங்கிக் கொண்டிருப்பது வரையி லும், உலக சர்வாதிகாரத்திற்கு கனவுகள் கண்டு கொண் டிருப்பது வரையிலும், சந்திர யாத்திரைக்கும் காசி யாத்தி ரைக்கும் அதிக வேற்றுமை இல்லை.
முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடைமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களுக்கு வழி வகுக்கவேண்டும். முதலாளித்துவ அமைப்பு பொது உடமை அமைப்பு வழி யாகத் தான் சத்திய எழுச்சிக்குரிய தளத்துக்கு செல்ல வேண்டும் என்பதில்லை. முதலாளித்துவ அமைப்புத் தோன்று வதற்கு முன்னரே நிலவுடமை அமைப்பிலிருந்தே நேராக பொதுவுடமை அமைப்புக்குப் போக முடியுமென்ருல், முத லாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப்பைத் தாண்டி
Page 13
22 சத்திய எழுச்சிக்குரிய தளத்திற்குச் செல்ல முடியும். ஒவ் வொரு சமூக அமைப்பும் மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. சமூகம் மாற மதிப்பீடுகள் மாறுகின்றன. இம்மாற்றத்தை விஞ்ஞான ரீதியாக உணர்ந்த மார்க்சீயவாதிகள், முமுமையை நோக்கி சமுதாயத்தை துரிதப்படுத்தி வளர்க்க முயன்று கொண்டிருக்கிருர்கள். சத்தியத்தைப்பற்றிய தரிசனங்கள் அறிவுக்குள் சீராக இறக்கப்பட்டு அறிவின் உதவி மூலம் வியாக்கியானப்படுத்தப்படும் போதுதான் மனித வளர்ச்சிக்கு உதவும் பார்வை விரிவடையும்,
இன்று நடைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரிய தத்துவம் மார்க்சியம் மட்டும் தான். வாழ்வின் அன்ருடப் பிரச்னைகளை விளக்கிக் கொள்ளவும், அந்த விளக்கத்தின் மூலம் சமூகத்தின் பிற துறைகளுக்குரிய செயல்களை நிர்ண யிக்கவும் எந்தத் தத்துவம் மக்களால் பயன்படுத்தப்படுகிறதோ அது வாழும் தத்துவமாக அமைகிறது. மற்றச் சிந்தனை களால் முழுச் சமூகத்தையும் அரசியல், பொருளாதாரம், கலை போன்ற பிற துறைகளையும் ஸ்பரிசித்துப் பேச முடியாது. ஆகவே, இன்றைய நிலையில் கலைஞன் தனது கலையின் ஆட்சியை இன்னும் கூர்மையாகவும், வலுவாகவும் செலுத்த வேண்டும் என்ருல் ஒன்று அவன் மார்க்சிய வாதியாக இருக்க வேண்டும். அல்லது மார்க்சீயத்தை வெல்லும் மற் ருெரு பார்வையைத் தேடிக்கண்டுபிடிப்பவனுக இருக்கவேண் டும். மார்க்சியத்தை இன்னும் யாரும் முழுமையாக வென்று விடவில்லை. வெல்ல முயன்றவர்கள் பூரண வெற்றி பெறவு மில்லை. மார்க்சியம் தோற்கும் இடத்தில் கூட, அது கொண்டு வந்த நன்மைகளை எடுத்துச் செல்லும் விசாலப் பார்வை வேண்டும்.
மார்க்சீயத்தின் மறு பக்கத்தையும் பார்ப்போம். சரித் திரத்தின் புதிய தேவையை மார்க்சீயம் நிறைவேற்ற முடி
23
யாத நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. சரித்திர வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களின் தத்துவப் பார்வை வளர வேண்டுமென்ருல், அந்த தத்துவத்தின் அடிப்படையாகக் கருதப்படும் சில அம்சங்களை தகர்க்க வேண்டியதாக இருக்கிறது. ஆணுல் மார்க்சியவாதிகள் இதனை உணர முடியாதவர்களாக இருக்கிருர்கள். மார்க்சியத்தை மறுப் பவர்கள் மார்க்சியத்தின் நியாயமான நன்மைகளை ஒப் புக் கொள்ள மறுப்பதுபோல், இந்த மார்க்சியவாதிகளும் தங்களது இறுக்கமான தத்துவத்தையும் மீறிக்கொண்டு புதுப் பார்வைக்குரிய 56) கட்டம் வந்துவிட்டது என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிருர்கள். சத்தியத்தின் ஒரு கால கட்ட சரித்திர வளர்ச்சிக்கு எவ்வளவுதான் 'ஒரு தத்துவப்பார்வை உதவினுலும், அக்கால கட்டத்தில் எவ்வளவுதான் அப்பார்வை பூரணமாக இருந்தாலும், பரி பூரணமான சத்தியத்தின் முழுப்போக்கையும் அது அடைந்து விடப் போவதில்லை. எல்லாத் தத்துவங்களும், தத்துவங் களையும் கடந்த ஒரு நிரந்தரமான சத்தியத்தின் அந்தந்தக் கால வெளிக்காட்டல்களை அல்லது தர்ம வளர்ச்சியை படம் பிடிக்க முயலும் தற்காலிகப் பார்வை அழுத்தங்களேதான்" எனவே அந்தந்தக் காலத் தத்துவப் பார்வைகளை அந்தந்தக் காலத் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் போதுகூட, அதே தத்துவங்களையும் மீறி சத்தியத்தில் தன்னை நிறுத்திக் கொள் பவன்தான் சார்புநிலையில் தர்ம வளர்ச்சிக்கு ஏற்றவாறு சரி யாக மாறக் கூடியவனுகவும் போராடக் கூடியவனுகவும் இருக்கிருன்.
வர்க்க வேறுபாடுகளைத் தாண்டிய பொதுவுடமை சோஷ லிசத்தை மட்டும் அடைந்தால் போதாது. அதைத் தனி யாகக் கொண்டு வரவும் இயலாது. பொதுவுடமைப் போராட்டத்தோடு அகத்தே காணும் வேறுபாடுகளையும், முழுச் சமூகத்தையும் தாண்டினுல் தான் உண்மையான
Page 14
24
சோஷலிசமும் உண்மையான ஞான எழுச்சியும், அடுத்த கட்ட மனிதப் பரிணுமமும் காணமுடியும். இனிவரும் காலத் தில் கலைத்துறைகள் மட்டுமே பரவசத்தையும், மன அமைதி யையும், தெளிவையும், நிறைவையும் தந்து நோயைப் போக்கும் மருந்தாக இருக்கப் போவதில்லை. இனிமேல் எல்லாத் தொழில்களுமே கலையாகவும் யோகமாகவும் தொழு கையாகவுமிருக்குமாறு செய்யவேண்டும். ஃப்பிராயிடு கூறிய மனச் சிக்கல்களும் மார்க்ஸ் கூறிய மனப்பிறழ்வும் நீங்கிய முழுமையான மனிதனை உருவாக்க வேண்டும். இன்றைய எழுத்தாளன் அரசியலோடு மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருக்க வேண்டும். சகல துறைகளையும் ஒன்றே டொன்று தொடர்பு படுத்தி அவற்றை முழுமை அடையச் செய்வதற்கும் சகல துறை களை யும் திட்ட மிட்
சம வேகத்தில் புதுமையை நோக்கி வளர்ப்பதற்கும் அரசியல் அதிகாரமே நேரிடையான வழியைக் காட்டுகிறது. ஜன நாயக அமைப்பு சமூக மாற்றத்திற்குப் பூரணமாக உதவாத அமைப்பாகவே இருக்கிறது. சமூகத்தின் சகல துறைகளும் பிரி வுற்று, குறியற்றுத் தாமத நடை போட, தடுமாற்றங்களும் சிதறல்களும் தோன்றுகின்றன. மத்தியிலிருந்து அதிகாரம் குவிக்கப்படும் பொதுவுடமை அமைப்பிலோ பொருள் உற் பத்தி நிச்சய பலன்களை தரும்போதும், ஜனநாயக மன உணர்வுகள் பலியாகி, அதிருப்தி மிஞ்சுகிறது. சமய ஞானம் மறுக்கப்படுவதால் முழுமையற்ற ஒரு பார்வையைக் கொண்டே முழுமையை எட்ட முயற்சிகள் செய்யப்படுகின் றன. சமயமும் சமயவாதிகளும் இதுகாலம் வரையிலும் பிற்போக்கு வாதத்தின் தூண்களாக இருந்தார்கள் என்பதற் காக சமய ஞானத்தை மறுக்கத் தேவையில்லை. முற் போக்கை விரும்புகிறவர்கள் தங்களது லட்சியத்திற்காக இதைப் புரட்சிகரமாகப் பயன்படுத்தலாம். மார்க்சியவாதி கள் இதை இன்னும் உணராதவர்களாகவே இருக்கிருர்கள். ஆளுல் சமய ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பூரண பொது
25
வுடமையை ஏற் று க் கொள்வதா ஸ் மட்டும் சர்வாதி காரத்தின் இறுக்கம் தளர்ந்து, சுதந்திர மலர்ச்சி வந்து விடும் என்று சொல்வதற்கில்லை. ஓரளவுக்காவது மத்தியில் அதிகாரம் திரட்டப்படாமல் முழுமைப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள முடியாது. ஆணுல் அது தேவைக்கு அதிக மான சர்வாதிகாரமாக. தனிப்பட்டவர்களின் குறைகளையும் தீர்க்கதரிசனமின்மையையும் மறைக்கும் சர்வாதிகாரமாக மாரு மல் இருப்பதற்கு சமய ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பூரணத்துவம் மட்டும் வழி தரப்போவதில்லை. நடைமுறைப் படுத்துபவர்களின் மன வளர்ச்சியையும் பக்குவத்தையும் பொறுத்தும் இது இருக்கும். அதனுல் தான் கலைஞர்களும் எழுத்தாளர்களும் - அந்த பூரண விரிவை வெளிப்படுத்தும் பக்குவத்தை வளர்க்கக் கூடியவர்களாக இருப்பதால் - அரசியலில் அதிகமாக பங்கு பற்ற வேண்டியவர்களாக இருக்கிருர்கள். ஒவ்வொருவரும் தன் அக ஆழத்தை கண்டு பிடிக்காதவரைக்கும் முழுமையின் பூரணத்துவம் பெறப் போவதில்லை. ஆகவே சமய ஞானிகளின் கண்டுபிடிப்பைப் பூரணமாகப் பயன்படுத்த இன்றைய எழுத்தாளர்கள்தான் முன்வரவேண்டும்.
சமய ஞானத்திடமிருக்கும் உண்மையை சமூக வளர்ச்சிக்கு உதவும் வகையில் எல்லாத் துறைகளிலும் பிரவேசிக்கச் செய்ய வேண்டும். அதற்காக முதலில் ஒவ்வொருவரும் தனது அகத்திலேயே அந்த ஞானத்தை எழுப்ப வேண்டும். வர்க்க வேறுபாடுகளும் குண வேறுபாடுகளும் அங்குதான் புதைந்து கிடக்கின்றன. அவையே பிற்போக்குக் கோட்டை யாகவும் பிறப்பு பிறப்பாய் வரும் இயல்புகளின் மறைவிடங் களாகவும் இருக்கின்றன. அவற்றைக் கைப்பற்றி அங்கு புரட்சியை கொண்டு சென்று முழுமையின் மலர்ச்சியை ஏற் படுத்தாத வரைக்கும் புறச் சூழலில் மட்டும் புரட்சியை நடத்தி பூரண இலக்கியத்தையும் சரி, ழுமுமையான வாழ்க்
Page 15
26
கையையும் சரி கொண்டு வரமுடியாது. எழுத்தாளர்கள் இனியேனும் இதை உணர வேண்டும். இவ்வாறு இலக் கியத்தில் ஆரம்பமாகும் இந்த ஞான அலை - பிரபஞ்ச யதார்த் தம் - முழுச் சமூகத்திலும் "பரவுவதே சர்வோதயம்."
இன்றைய சமூகத்தில் காணப்படும் கலைஞர்களை - படைப் பாளிகளை - நான்கு வகையினருகப் பிரிக்கலாம்:
1. மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளும் படைப்பாளிகள். 2. மார்க்சியத்தை மறுத்து அதை வெல்லக் கூடிய திட்ட வட்டமான தத்துவப் பார்வை ஏதும் இன்றி - தங்கள் உள்ளுணர்வுகளின் உந்தல்களுக்கு கலையுரு வம் கொடுப்பவர்கள். 3. கட்டுப் பெட்டிகளும், போலிகளும். 4. வியாபாரிகள். மார்க்சியத்தை மறுப்பவர்களில் சிலர் உள்ளுணர்வுகளின் மூலம் ஆழமான கலையுருவத்தைத் தேடி போயிருக்கின்றனர். புதுமைப்பித்தன், மெளனி, சி. சு. செல்லப்பா போன்றவர் களுக்குத் திட்டவட்டமான பார்வை ஏதும் இல்லாததால் தர்ம வளர்ச்சிக்காகத் தீவிரமாகப் போராட முடியவில்லை. இவர்கள் மார்க்சிய சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களை விடவும் சிறப்பாக எழுதியிருக்கிருர்கள் என்ருல் அச்சித்தாந் தத்தை இவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் மேலும் சிறப்பாக எழுதியிருப்பார்கள் என்பதைத் தான் காட்டுகிறது. மார்க்சியச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தோல்வி அடைந் திருக்கிருர்கள் என்ருல் அவர்களின் பார்வை விரிவுக்கு ஏற்ப கலைத் திறமையும் அவர்களுக்கு இல்லை என்றே அர்த்தமா கிறது. நம் பின்னணியில் திறமை மிகுந்த கலைஞர்கள் பெரும்பாலும் மார்க்சியத்தால் கவரப்படுவதில்லை. இந்தியப் பண்பாட்டின் ஆழம் அதிகம். மார்க்சியத்தை விடவும் அதி கம். அதனுல் இந்திய பண்பாட்டையே சார்ந்து நின்று
27.
திறமை மிகுந்த கலைஞர்கள் அதன் பழந்தேர்ற்றத்துடனேயே திருப்தியடைந்து விடுகின்றனர். .
கட்டுப்பெட்டிகளுக்கு உதாரணமாக பண்டிதமணி கண பதிப் பிள்ளை முதல் மு. வ. வரைப் பலரைச் சொல்லலாம். இன்று வரையிலும் சமூகம் கண்டுபிடித்த உண்மைகளை கட் டிக்காத்து வருகின்றனர் என்ற அளவுக்குத் தான் சமூகம் இவர்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறது. இந்த அளவுக்கு இவர்கள் அவசியமானவர்களே. போலிகளுக்கு உதாரண மாக அகிலன் முதல் நா. பார்த்தசாரதி வரை இருக்கின்றனர். போலிகளிலும் ஒத்தோட மறுப் ப் வர் கள் அண்ணு, மு. கருணுநிதி போன்றவர்கள். கட்டுப் பெட்டிகளும் போலி களும் மலிந்த ஒரு சமூகத்தில் இவர்கள் புரட்சிவாதிகளாகத் தெரிவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவர்கள் காட்டும் வளர்ச்சி வெறும் மாயைதான்.
பிறந்து கொண்டிருக்கும் புது யுகத்திற்குரிய இலக்கிய வார்ப்புகள் எப்படி இருக்கும்?
இவை அடிப்படையான உருவ உள்ளடக்க மாற்றங் களைக் காட்டும் என்பதை இப்போதே நிச்சயமாகக் சொல்லி விடலாம். ஐரோப்பிய அறிவு வாதத்திற்கு முந்திய இலக் கியப் படைப்புகள் உள்ளுணர்வு செறிந்த கற்பனைக் காவி யங்களாக இருப்பதுபோல் 'அறிவு வாதத்திற்குப் பிந்திய படைப்புகள் ஐம்புலன்கள் சார்ந்த அறிவும் செறிந்த யதார்த்த இலக்கியங்களாக இருக்கின்றன. முந்தியவற்றில பிரபஞ்ச உணர்வு இருந்தது. பிந்தியவற்றில் இந்த உலகத்து உணர். வும் குறிப்பாக பிரதேச, சமூக, பொருளதார நிலைகளுக்குரிய உணர்வுகளும் அதிகமாக இருக்கின்றன. இனிவரும் படைப்பு களில் மீண்டும் பிரபஞ்ச உணர்வு தலைதூக்கும். ஆனல் அறிவு வாதத்தாலும் அதற்குரிய விஞ்ஞானத்தாலும் பெறப் பட்ட யதார்த்த உணர்வுகளும் கூடவே நிற்கும். இதனை
Page 16
28
பிரபஞ்ச யதார்த்தம் " என்று கூறலாம். விஞ்ஞானமும் ஆத்ம ஞானமும் கலந்த பேரறிவு இது.
பிறக்கப் போகும் இலக்கியத்தில் உருவமும் உள்ளடக் கமும் புதிய தளத்துக்குரிய உருவ உள்ளடக்கத்தைப் பெறும். இதுதான் மெய்யுள். இது ஒரு புதிய இலக்கிய உருவம். இது ஒரு பூரண உருவமாகவும் இருப்பதினுல் சிறுகதை. நாவல், கவிதை, கட்டுரை என்ற பாகுபாடுகளை உடைத் தும், கடந்தும் செல்லும் ஒரு உருவமாகவும் இருக்கும். செய்யுள், உரைநடை என்ற வித்தியாசங்களை இது ஏற் காது. இதுகால வரையிலுமுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக்குரியவையே. * மெய்யுள் " கற்பனைக் கோலங்களைத் துறந்து அவற்றின் தளங்களையும் தகர்த்துக்கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவ ரீதியான ஊடுருவல்களுக்குரிய இலக்கிய உருவமாகும். அதன் உள்ளும் புறமும் உள்ளடக் கமும் மெய்யாகவே இருக்கும். அதனுல் இது இதுகால வரையுள்ள கலை இலக்கியங்களை அழிக்கும் கலை இலக் கியமாகவும் இருக்கும். அதேபோல் தத்துவ, சரித்திர, விஞ்ஞான உருவங்களாகவும் இருக்கும். சமூக, பொருளா தார, அரசியல், ஆத்மீக மெய் வாழ்க்கை அனுபவங்களா கவும் அமையும்.
இன்றைய இலக்கியத்தைப் பார்க்கும்போது ஞான அலை யின் உந்துதல்களை பெரிய அளவில் உணர்ந்து செயல்பட்டவர் பாரதி. புதுமைப்பித்தன் கத்ைகள் நடைமுறையிலுள்ள ஆத்மீக வீழ்ச்சியை கேலி செய்யும் முயற்சிகள்தான். புதுயுக ஞான அலைகளின் ஆரம்பம் இவரிடம் இல்லை. மார்க்சீய முற் போக்கு எமுத்தாளர்கள் இந்த அலையை உணர்ந்தாலும் அதற்குப் பிழையான அர்த்தம் கொடுத்து இடை இடையே அதைத் திருகி சாகடித்து கொன்று விடுகின்றனர். அவர்கள் காட்டும் இலக்கோடு அந்த அலை நின்றுவிடப் போவதில்லை.
29
அத்துடன் அவர்கள் ஆதரிக்கும் சர்வாதிகாரம் இதே நேர் மாருனது. புதுமைப்பித்தனிடம் காணப்படும் கேலி உணர்ச்சி யும், இயலாமை உணர்வும் இவர்களது சர்வாதிகாரத்திற்குப் பின்னல் பெருமளவு மறைந்து கிடக்கின்றன. புதுயுக ஞான அலை பிறப்பிக்கப் போகும் வீரத்திற்கும் செயல் வேகத்திற்கும் முன்னுல் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் மார்க்சியத் தின் இயலாமையும் தாழ்வு உணர்ச்சிகளும் தெரிய வரும்.
I
மு. தளையசிங்கம் பெருமளவுக்கு தன்னில் இருபதாம் நூற் ருண்டிற்குரிய பிரச்னைகளையும் ஓரளவு இருபது நூற்ருண்டு களின் சாரத்தையும் - வெளிப்படுத்த முயன்ற ஒரு சிந்தனை யாளர். உடல்கள் இருபதாம் நூற்ருண்டில் கிடந்து உழல, பிரக்ஞை முந்திய நூற்ருண்டு ஒன்றிலோ அல்லது பலவற் றிலோ கூறுபட்டுக்கிடக்க, பிரச்னைகளுக்கு எதிர் வினையாக வாய்க்கு வரும் சொற்களை உதிர்க்கும் நம் 'சிந்தனையாளர்" களின் மத்தியில் விதி விலக்காக வந்து சேர்ந்தவர் தளையசிங்கம். இருபதாம் நூற்ருண்டின் முக்கால் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கும் போது இவருடைய சிந்தனைகள் கருக்கொண்டுள்ளன என்று சொல்லலாம். ருஷ்யப் புரட்சிக்கு ஏகதேசமாக ஐம்பது ஆண்டுகள் பிந்திய காலப்பகுதி இது. தான் பிறந்து வளர்ந்த மண்ணையும், கலாசாரத்தையும் சார்ந்தும், கடல் தாண்டிய தேசங்களைச் சார்ந்தும், இவ்வு லகின் முழுமை சார்ந்தும், பிரபஞ்சம் சார்ந்தும் அவர் சிந் திக்க முற்பட்டார். இப்பிரச்னைகளைப் புரிந்து கொள்ளும் பொருட்டு, சுய வாழ்வின் அனுபவ ஆய்வுகளுக்கு மேலாக உலகத் தளத்தைச் சார்ந்த -கிழக்கிலும் மேற்கிலுமான -படைப்புகளையும் அறிவுகளையும் திரட்டி தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருக்கிருர், தத்துவம், சமயம், இலக்கியம் ஆகியவற்றில் விசேஷ ஈடுபாடும், விஞ்ஞானத்தில் ஆர்வமும்
Page 17
30
இவர் கொண்டிருப்பதை இவரது எழுத்து நமக்குக் காட்டு கிறது. பிரச்னைகளுக்கு விடைகள் தேடிச்செல்லும்போது தனது தேசம், தனது மொழி, தனது சமயம், தனது இலக் கியம் ஆகியவற்றின் வட்டங்களிலிருந்து விடுதலை பெற்று, முன் தீர்மானங்களின் சொச்சங்களை சுமக்காமல் உண்மை களைத் தேடிச் செல்வதை உணர முடிகிறது. பிரச்னைகள் , அவற்றைப் புரிந்து கொள்வதற்கான தயாரிப்பு, " விருப்பு வெறுப்பற்ற ஆராய்ச்சிகள் ', உணர்வு நிலைகள் தாண்டி தருக்க மொழியில் தன் எண்ணங்களை தெளிவாகக் கூறல். இவைதான் தளையசிங்கத்தின் அடிப்படையான பண்புகள்.
இருபதாம் நூற்ருண்டில் வாழ்ந்ததற்கான சாயல்களை இவரைப்போல் முழுவீச்சோடு வெளிப்படுத்திய ஆளுமைகள் நம்மிடையே வேறு உள்ளனவா ? இந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இரண்டு பெயர்கள் கிடைக்கின்றன. ஒருவர் பாரதி, மற்ருெருவர் புதுமைப்பித்தன். பாரதி தாழ்ந்து போனமைக்கு துக்கித்து மேலான ஒன்றை எழுப்ப முயன்ருர், புதுமைப்பித்தன் தாழ்ந்து போனதை வெட்ட வெளிச்சமாக் கினர். இந்த வரிசையில் மூன்ருவதாக வருபவர் தளையசிங்கம். பாரதியின் கருத்துலகத்தை விடவும் தளையசிங்கத்தின் கருத் துலகம் முழுமையானது. மற்ருெரு விதத்தில் சொன்னல் பாரதியின் சிந்தனையை, இவர் தம் காலத்துக்கு கொண்டு வந்து, இடைக்கால சரித்திரத்திற்கும் எதிர்வினை தந்து இடை வெளிகளை அடைத்து முழுமைப்படுத்த முயன்ருர் என்றே சொல்லலாம் "
( ' இலக்கு" கருத்தரங்கில் வாசித்தது)
உள் ஒளி
பக்கம் மெய்யுள் பற்றி ஒரு மெய்யுள் w 7
pis vO e a 5
தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம் at a o 17
- சுந்தர ராமசாமி
1 பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் o gy 35
2 மெய்யும் உள்ளும் மெய் 56
3 புதுயுகமும் அதை நோக்கிய மாற்றங்களும் . 69
4 வர்க்கவியலும் குணவியலும் to 76
5 பரிணுமம் -
அதன் தூக்க, கனவு, விழிப்பு தூரிய நிலைகள் . 88
6 கலப்பு வலயம் e a w v0 voop 95
7 மெய் முதல் வாதம் go e eo ... 130
8 ஒளிபடைத்த கண்ணினுய் . ... 194
9 " நான் " நாகரிகத்தின் அழிவும்
" நாம் " நாகரிகத்தின் எழுச்சியும் ... 196
10 வந்துவிட்டது சத்திய யுகம்
விழிந்தெழுங்கள் a w 0. 199
11 அண்டை வீடுகள் ... 201
Page 18
மெய்யுள்
Page 19
" எப்போது மனிதன் உண்மையின் - சத்தியத்
தின் - அழகைத் தரிசிக்க ஆரம்பிக்கிருனுே அப் பொழுதுதான் உண்மையான கலையும் உதயமா கிறது.
வாழ்க்கை எல்லாக் கலைகளிலும் உயர்ந்தது. பூர ணத்துவத்துக்கு சமீபித்துவிட்ட மனிதனே உயர்ந்த கலைஞன். உயர்ந்த வாழ்க்கை பற்றிய எல்லை களும். அவை பற்றிய உரமான அடிப்படையுமற்ற கலை எதற்காக ?"
- மகாத்மா காந்தி
ஒரு புதிய இலக்கிய உருவ மாகும் அது பூரண உருவமாகவும் இருப்ப தால் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்ற பாகுபாடுகளை உடைத்தும் கடந்தும் செல்லும் ஓர் உருவமாகவும் இருக்கும், செய் யுள், உரைநடை என்ற வித்தியாசங்களையும் அது மதிப்பதில்லை. இதுகாலவரையுள்ள இலக்கிய உரு வங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங் களுக்குரியவையே. "மெய்யுள்" கற்பனைக் கோலங் கள் சகலவற்றையும் குலைத்துக்கொண்டு அவற்றின் தளங்களைத் தகர்த்துக் கொண்டு நித்திய சத்தி யத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுரு வல்களுக்குரிய கலை, இலக்கிய உருவமாகும். அதன் உள்ளும் புறமும், உருவமும் உள்ளடக்கமும், மெய் யாகவே இருக்கும். அதனுல் அது இதுகால வரை யுள்ள கலை இலக்கியங்களை அழிக்கும் கலை, இலக் கியமாகவும் இருக்கும். அதேபோல் அது தத்துவ, சரித்திர, விஞ்ஞான உருவங்களாகவும் சமூக, பொரு ளாதார, அரசியல், ஆத்மீக மெய்வாழ்க்கை அனு பவங்களாகவும் அமையும். பூரண சர்வோதயத்துக் குரிய பிரபஞ்ச யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும்.
-- p. 8.
*" மெய்யுள்
பூரண இலக்கியமும் அதன் தேவைகளும்
இன்றைய இலக்கியவளர்ச்சிக்கு என்னென்ன தேவைப் படுகிாறன?
அப்படி ஒரு கேள்வியை அடிப்படையாக வைத்து ஒரு கணக்கெடுப்பை நடத்தும்போது முதலில் தேவைப்படுவது, இலக்கியம் எதற்காகத் தேவைப்படுகிறது என்ற கேள்விக் குரிய பதில்தான்.
இலக்கியம் எதற்காகத் தேவைப்படுகிறது ?
இதற்கு நாம் என்னென்ன காரணங்களைக் காட்டுகி ருேமோ, அந்தந்தக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இலக்கிய வளர்ச்சிக்குரியதாக நாம் காட்டக்கூடிய தேவைகளும் இருக்கும். அந்தக் காரணங்கள் குறுகிய எல்லைகளையுடையவையாய் இருந்தால் இலக்கியத் தேவை களும் - அதாவது இலக்கிய வளர்ச்சிக்குரிய தேவைகளும் - குறுகியே இருக்கும். காரணங்கள் விரிந்து வேறு துறை கஃாயும் அணைக்கக்கூடியவையாக இருக்குமானுல், தேவை களும் விரிந்து வேறு துறைகளின் வளர்ச்சிக்குரிய தேவை களாகவும் விசாலித்து நிற்கும். -
இலக்கியம் எதற்காகத் தேவைப்படுகிறது?
பொழுதுபோக்குக்காக என்றிருக்க முடியாது. பொழுது போக்குக்காக இருப்பவை இலக்கியமாகவும் இருக்க முடி யாது. அது மட்டுமல்ல, பொழுதுபோக்கு என்பதே - அதா வது பயனற்ற விதத்தில் நேரத்தைப் பாழடிப்பது என்பதே - இனிமேல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு வளர்ச்சிக் கட்டத்திலும் ஒரு புதுயுகப் பிரவாகத்தின் நெருக்கடிக் கட் டத்திலும் இன்று மனித சரித்திரமும் பரிணுமமும் நின்று கொண்டிருக்கின்றன.
Page 20
36 மெய்யுள்
அப்படியானுல், வாழ்க்கையின் பல்வேறு பிரச்னைகளால் சஞ்சலப்படும் மனிதனின் மன அமைதிக்கும் ஓய்வுக்கும் ஏதாவது வேண்டாமா என்ற எதிர்க்கேள்வி எழுப்பலாம், சிலர். " பொழுதுபோக்கு வாதம் ' ஆணுல், அது பிழை யானது. காரணம் அந்த எதிர்க்கேள்வியால் இலக்கியம், கலை ஆகியவற்றைப் பற்றிய அறியாமைதான் நிற்கிறது. தரமான இலக்கியங்களும் கலையுந்தான், உண்மையான நிரந்தரமான அமைதிக்கும் மன ஓய்வுக்கும் பரவசத்துக்கும் வழிவகுக்கும். அவை தான் அதேசமயம் வாழ்க்கைப் பிரச் னைகளைத் தீர்ப்பதற்குரிய சிந்தனைத் தெளிவையும் கொடுக் கும். அந்தச் சிந்தனைத் தெளிவு எதிர்காலப் பிரச்சனை களைச் சந்திக்கக்கூடிய ஆற்றலையும், அதனுல் நிரந்தர அமை திக்குரிய வழியையும் காட்டுபவையாக இருக்கும். தரமற்ற கதைகளும் படைப்புக்களும் மனிதனைக் கனவில் ஆழ்த்தி மயக்குமேயொழிய தெளிவோடு சேர்ந்த பரவசத்தையும் அமைதியையும் கொடுத்து, வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் உதவமாட்டா. அதனுல் சாதாரண மனிதனின் மன அமைதிக்கும் ஓய்வுக்கும் ஏதாவது தேவைப்படுகின்றன வென்ருல் அவை தரமான இலக்கியமும் கலையுந்தான். பொழுதுபோக்கும் போலிகளும் கனவுகளுமல்ல.
ஆணுல், கனவும் மயக்கமும் ஓரளவுக்கு மனித வாழ்க் கைக்குத் தேவையல்லவா? சாதாரண மனிதனின் உடல் நிலையையும் மனநிலையையும் சமநிலையில் வைத்திருக்க அவையும் ஓரளவுக்குத் தேவையல்லவா? அதனுல் அத்தகைய வசதிகளை நீக்குவது ஆபத்தாகாதா?
அப்படியும் கேட்கலாம். அதில் மணுேவியல் - வைத்திய உண்மையும் இருக்கிறது. அந்தப் பார்வையில் மனிதன் ஒருவித நோயாளியாக இருக்கிறன் என்ற உண்மையும் வெளிப்படுத்தப்படுகிறது. அது மறுக்க முடியாத ஒர் உண் மையாகும். இங்கு நோய் என்பது மனிதனின் வளர்ச்சி
பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் 37 .
மின்மையைக் காட்டுகிறது. அதாவது மனிதனின் வளர்ச்சி அதள் பூரணத்துவத்தை இன்னும் தொடவில்லை என்பதைக் குறிக்கிறது. அத்தகைய பூரணமின்மையே அவனது நோயாகும்.
பூரணமின்மை என்ற அந்த நோய் எப்படிப்பட்டது சான்பதைப் பின்பு பார்க்கலாம். ஆணுல், இப்போதைய சரித் திாக்கட்டத்தில் மனிதன் பரவலாகத் தனது நோயை உணர வந்திருக்கிருன் என்பதும், அதை மாற்றித் தனது நிலை யைப் பூரணத்துவப்படுத்தப் போராடுகிருன் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. -
அத்தகைய போராட்டக்கட்டத்தில் நிற்கும் இன்றைய மனிதனுக்கு அவனது நோயைக் கடத்தி நீடிக்கவைக்கும் கனவுகளும் மயக்கமும் தேவையா ?
இந்தக் கேள்வியை எழுப்பும்போதுதான் " பொழுது போக்கு இலக்கியம் ' என்ற பெயரில் கனவுகளுக்கும் போலி மயக்கங்களுக்குமாக வாதாடுபவர்கள் இன்றைய மனிதனின் பரிணுமக் கட்டத்தையும் சரித்திர நிலையையும் உணராதவர் களாக இருக்கிருர்கள் என்பதும், தங்களைக் காலங்கடந்த ஒரு சமூக பொருளாதார அமைப்பில் நிரந்தரமாகப் பொருத் திப் பார்ப்பவர்களாக இருக்கிருர்கள் என்பதும், அந்த அமைப் பில் வசதி படைத்த எந்த வர்க்கம் இந்த மயக்கத்தையும் கனவுகளையும் தனது நன்மைக்காகப் பயன்படுத்துகிறதோ அந்த வர்க்கத்தோடு தங்களை இணைத்துக்கொள்கிருர்கள் என் பதும் தெரியவரும். அத்துடன், அந்த அமைப்பும் அதற் குரிய முக்கிய வர்க்கமுந்தான் இலக்கியத்தையும் கலையையும் மனித சரித்திரத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெறுங் கனவாகவும் மயக்கப்போலியாகவும் மாற்றி வளர்த்திருக்கின் றன என்பது தெரியவரும்.
Page 21
38 மெய்யுள்
காரணம், மனிதனின் நோயைத் தீர்க்கும் - அதாவது, மனிதனின் அகத்தையும் அவன் வாழும் சமூகத்தையும் பூரணப்படுத்தும் - முக்கிய மருந்துகளில் ஒன்ருக இந்த இலக் கியமும் கலையுந்தான் காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. கலையும் இலக்கியமுந்தான் சமயத் தோடு சேர்த்துக் காலங்காலமாய் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த முதலாளித்துவ அமைப்பில்தான் அவை நோயைக் கடத்தும் மயக்கப் பொருளாகவும் கனவாகவும் மாற்றப்பட்டு, வெறும் வியாபாரத்துக்குரியவையாக வளர்க்கப்பட்டு வரு கின்றன. " பொழுதுபோக்கு ’ என்பது அந்த வியாபாரத் துக்குரிய நாகரிகமான பெயர்தான்.
இருப்பினும், பொழுதுபோக்குக்காக - அதாவது வியா பாரத்துக்காக - கலையும் சினிமாவும் இலக்கியமும் இருக்க வேண்டுமென்று கூறுபவர்கள்கூடத் தங்களை அறியாமலேயே இலக்கியத்தினதும் கலையினதும் முக்கியத்துவத்தையும் பயனையும் ஓரளவுக்கு உணர்ந்துதான் சொல்கிருர்கள். ஆணுல், தங்களின் அறியாமையினுலும் வியாபார நோக்கினு லும் அதன் பெயரைத்தான் மாற்றிக் கூறுகின்றனர். அத ஞல் இலக்கியத்தின் அர்த்தத்தையும் மாற்றிவிடுகின்றனர்.
நோய் போக்கும் இலக்கியம் என்பதைப் பொழுது போக்கு இலக்கியம் என்கின்றனர். இலக்கியமும் கலையும் மனிதனின் நோய்போக்க உதவுபவைதான். இலக்கியம் எனும்போதே " நோய்போக்கு ' என்பது அதில் தொக்கி நிற்கிறது எனலாம். அந்த உண்மை மறக்கப் பட்டு, அத ணுல் தரங்கெட்டு, உருவாக்கப்படுப்வைதான் " பொழுது போக்கு" என்ற அடைமொழியைப் பெறுகின்றன. மனி தனின் நோயைப் போக்காமல், அவனை மயக்கியும் கனவு காணவைத்தும் நோயைக் கடத்தி வளர்த்துக்கொண்டு மனி தனின் பொழுதையும் வாழ்க்கையையும் போக்குபவை, பாழடிப்பவை.
பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் 39 இவ்வாறு நோயைப் போக்குவதற்குப் பதிலாகப்பொழு தைப் போக்குவதற்குத்தான் இலக்கியம் இருக்கிறது என்று கருதப்படுவதே ஒன்றை மற்றதுக்காக மாருட்டஞ் செய்யும் மனநோயாளியின் குணந்தான். இடம்மாறிப் பொருத்தப் ut'.t- Lisbgúb Fspýþ61b ( disp'aced attachment ). (yS6ðr எரித்துவ அமைப்பு வளர்த்துவரும் நோய்க்குணங்களில் அது முக்கியமானது. அதனுல் "பொழுதுபோக்கு இலக்கியம்' என்பது இலக்கியம் எதற்காக, எப்படி இருக்கவேண்டுமோ அதற்கு எதிராக இருப்பதுதான் என்ருகியுள்ளது. இலக்கி யம் எந்த நோயை நீக்கமுயல்கிறதோ அந்த நோயை நீடிக்க வைப்பதுதான் பொழுதுபோக்கு இலக்கியமாக மாறி யுள்ளது. அதாவது, பொழுதுபோக்கு இலக்கியம் என்பதே இலக்கியம் நீக்கவேண்டிய நோய்களில் ஒன்ருகிவிட்டது. அந்த நோயை நோயாக உணராத, அதையே நோய்தீர்க் கும் மருந்தாகக் காண்பது நோயின் முற்றிய நிலையைத் தான் குறிக்கிறது. அதை முறியடிக்கும் கட்டந்தான் இன் றைய மனிதனின் சரித்திரக்கட்டமாகும்.
பொழுதுபோக்கு இலக்கியம் என்பது இலக்கியத்தின் இலட்சியத்துக்கு எதிர்மாருன திரிபாக இருக்கும் போது, ' கலை கலைக்காக " என்பதும், " கலை கட்சிக்காக " என்பதும் இலக்கியத்தின் இலட்சியத்தை உணர்ந்தும் அதன் வழியில் பூரணமாகச் செல்லாத இடைத் தரிப்புக்கள்தான். அழகுணர்ச்சி மட்டுந்தான் அல்லது அர்த்தங் காணமுடியா தவை மட்டு ந் தா ன் இ லக் கி ய த் தை உருவாக் குபவை என்று நினைத்து, விளக்கில் விழுந்த பூச்சிகள் போல் இடையில் அழிந்தார்கள் கலை கலைக்காக என்று வாதாடியவர்களில் பெரும்பாலோர், கலை கட்சிக்காக என் பவர்கள் கலையை வெறும் சித்தாந்த அறிவுவழியில் மட்டும் அந்த அறிவும் இறுதியில் சிதைந்து திருகிச்செல்லும் வழி
Page 22
40 மெய்யுள்
யில் மட்டும், காட்டி இலக்கியத்தை வெறும் யந்திரமுயற்சி யாக நிறுத்தி விடுகின்றனர்.
எல்லாவற்றுக்கும் காரணம் இல்லாமலில்லை. இலக்கி யம் நோய் தீர்ப்பதென்ருல், அந்த நோயின் முழுமையை யும் உணராத வரைக்கும் அதைத் தீர்ப்பதற்குரிய பூரணி வழியையும் உணரமுடியாதுதான். அந்தந்தக்காலக்கட்டத் தில், அந்தந்தச் சமூகக்கட்டத்தில் அவனவன் அந்த நோயை எவ்வாறு கண்டானுே அவ்வாறே இலக்கியமும் படைத்திருக்கிருன்.
இன்று முன்பு எப்போதும் இருந்திராத அளவுக்கு நோயையும் முழுமையாக உணரக்கூடிய கட்டம் வந்திருக் கிறது. அதனுல் அதற்குரிய வழியையும் பூரணமாகக் காணக்கூடிய கட்டமும் வந்துள்ளது. இலக்கியமும் அதன் காரணமாக முழுமையடையும் கட்டம் வந்து விட்டது. பூரணயோகம் என்ருரே அரவிந்தர், அதைப்போல் பூரண இலக்கியம் உருவாகும் கட்டம் இன்று வந்துள்ளது. அதற் குரிய கோட்பாட்டையே பிரபஞ்ச யதார்த்தம் என்று நான் " போர்ப்பறை "" யில் குறிப்பிட்டுள்ளேன்.
2
இலக்கியத் தேவைகள் எவை என்ற கேள்வி, எதற்காக இலக்கியம் தேவை என்ற கேள்வியாக மாறியது. அதற் குரிய பதில் நோயைத் தீர்ப்பதற்கென்ருல், அந்த நோய் என்ன என்ற கேள்வி எழுகிறது. அதை முழுமையாகக் கண்டுபிடித்தால்தான். முழுமையான வாழ்க்கையும் முழு மையான இலக்கியமும் உருவாக முடியும்.
நோய் என்ன ?
பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் , 41
மனிதர்கள் எல்லாருமே நோயாளிகள்தான் என்கிருர் பிராய்ட். ஆனல், அவர் கண்ட நோய்க்குரிய காரணங் கள் அடிமன இயல்புகளோடேயே நின்று விடுகின்றன.
வர்க்க வேறுபாடுகளுக்குட்பட்ட சமூகத்தில் வாழும் மணி தனை ஒருவித நோயாளியாகவே மார்க்ஸாம் கருதுகிருர்,
சமயஞானியோ, ஞானமடையாது சம்சார வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள எல்லாரையுமே முக்குண நோய்க்குள் உட்பட்ட வர்களாகவே கருதுகிருன்.
இவைதான் அவரவர் காட்டும் மனிதநோயும் அதன் காரணங்களுமென்ருல், அவற்றைத் தீர்ப்பதற்கு அவர்கள் காட்டும் வழிகளும் அதே வகையில் அதே கோணங்களுக் குரியவையாகவே இருக்கின்றன.
அடிமன இயல்புகளைக் கண்டுபிடித்துச் சீர்படுத்து வதை யே நோய்க்குரிய மருந்தாகக் காண்கிருன் பிராய்ட். முரண் பட்ட வர்க்க இயக்கங்களை அடிப்படையாக வைத்து நடத்தப் படும் போராட்டத்தையும், அது தரக்கூடிய பொதுவுடைமை மலர்ச்சியையுமே மார்க்ஸ் மனிதனின் நோய் தீர்க்கும் மருந் தாகக் காண்கிருன். இவ்விரு வழிகளையும் விஞ்ஞானம் காட் டும் வழிகளுக்குரிய முக்கிய உதாரணங்களாகக் கூறலாம். அப்படிக் கூறுவது விசயத்தை மிகவும் இலகுபடுத்திக் கூறு வதாகும். இவை இரண்டுக்குமிடைபட்ட, இவை இரண்டுக் கும் முரண்பட்ட எத்தனையோ விஞ்ஞானப் பார்வைகள் இரு ப்பினும், எல்லாம் இவ்விரு எல்லைகளையும் ஏதோ ஓர் அள வுக்காவது ஏற்றுக்கொள்ளவே செய்கின்றன. அதனுல் இவ ற்றையே விஞ்ஞானத்துக்குரிய முக்கிய உதாரணங்களாகக்கூற லாம். (இவற்றிலிருந்து வேறுபடும் நவீன விஞ்ஞானப் பார் வையைச் சமய ஞானத்துக்குரியதாகச் சேர்த்துக்கொள்ள லாம்.)
Page 23
42 மெய்யுள்
ஆணுல் இன்றைய சமயஞானி இவற்ருேடு மட்டும் திருப் திப்பட முடியாது. இவ்வுலகத்தை மறுத்து, மறுவுலகத் தையும் முத்தியையுமே அழுத்திய பழையமுறைச் சமய போக்கில் விஞ்ஞானம் எவ்வாறு அதிருப்திப்பட்டதோ, அவ் வாறேதான் இன்றைய சமயஞானமும் மனிதனின் அக ஆழ த்தையும் அதன் பிரபஞ்ச விரிவுகளையும் மறுக்கும் விஞ்ஞானத் தில் அதிருப்திப்படுகிறது. w V
அந்த அதிருப்தியையும் அதைத் தீர்க்கும் புதுத்திசை யையும் காட்டுபவராக அரவிந்தர் நிற்கிருர்,
ஆணுல், அரவிந்தரின் முயற்சிகள் தற்காலச் சமூக, பொரு ளாதார அரசியல் இயக்கங்களுக்குப் பூரணமாக வழிகாட்டும் வகையில், மார்க்சீயத்தையும் விஞ்ஞானத்தின் மனிதாபி − மான மக்கள் நலவாதத்தையும் வென்று செல்லும் வகையில் இன்னும் விரித்து வளர்க்கப் பட்டதுமில்லை, நடைமுறைப் படுத்தப்பட்டதுமில்லை.
எனது " போர்ப்பறை'யில் அந்த முயற்சியின் ஆரம்பம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
வர்க்க வேறுபாடுகளைத் தாண்டிய பொதுவுடமைச் சோஸ லிஸத்தைமட்டும் அடைந்தால் போதாது. அதைத் தனியாகக் கொண்டு வருவதும் முடியாது. பொதுவுடைமைப் போராட் டத்தோடு அகத்தே காணப்படும் குணவேறுபாடுகளையும், அதேசமயம் முழுச்சமூகமும் தாண்டினுல்தான் உண்மையான சோஸலிஸமும் உண்மையான ஞான எழுச்சியும் - சர்வோதய மும் - அடுத்தகட்ட மனிதப் பரிணுமும் வரமுடியும் என்பதே எனது கருத்தின் முக்கிய அம்சமாகும். அவற்றுக்கிணங்கவே சமூகத்தின் வாழ்கைத் துறைகள் ஒவ்வொன்றும் ஆற்றுப்படுத் தப்பட வேண்டும். மனித பரிணும வளர்ச்சியைச் சுழல்முறை யில் அளவிடலாம். பழைய வேதங்கள் கூறிய யுகச்சுழல். ஒரு சுழல் நான்கு கட்டங்களைக் கொண்டது. கிருத, துவா பர, திரேத, கலி யுகங்கள். கலியின் முடிவோடு ஒரு சுழல்
பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் 43
முடிந்து அடுத்த சுழல் வளர்ச்சி ஆரம்பமாகிறது எனலாம். ஆஞல், அடுத்த சுழல் வளர்ச்சி முந்தியதைப்போல் ஒரேதளத் தில் இருக்காமல் வேறு ஓர் உயர்ந்த தளத்தில் அதற்குரிய தடத்தில் வளரலாம். அந்தத் தளநிலையின் வேறுபாடுகளும் முரண்பாடுகளும் படிப்படியாய் ஒவ்வோரு யுகத்திலும் அதிக மாகி, ஈற்றில் அவற்றின் காரணமாக எற்படும் போராட்டமும் அழிவும் ஒரு முழுமையை ஏற்படுத்துவதுடன், பழைய சுழல் வளர்ச்சிக்கு ஒரு முடிவையும் கொண்டுவந்து புதுச்சுழலை ஆரம் பித்து வைக்கலாம். பழைய வேதங்களின் யுகப்பாகுபாட்டை இவ்வாறுதான் இன்று வியாக்கியானப்படுத்த வேண்டும். அதனுல் நமது பார்வை விரிவடையவே செய்கிறது. உதா ரணமாக, பரிணுமமானது சடநிலையிலிருந்து உயிர்நிலையை இவ்வுலகத்தில் தொடும்வரையுள்ள காலத்தை ஒரு சுழலாக வும், உயிர்நிலையிலிருந்து மனநிலை உருவாகும் வரையுள்ள காலத்தை அடுத்த வளர்ச்சிச் சுழலாகவும் வசதிக்காகக் கொள் , ளலாம். பரிணுமத்தில் அன்னமயகோசமும் பிராணமயகோச மும் வெளிப்படுத்தப்பட்ட காலங்கள். விஞ்ஞான ரீதியாகச் சொல்லப்போனுல், உலக பரிணுமத்தின் அன்னமயகோசத்தை " eேosphere " என்றும், (சடநிலையும் அதன் வலயமும் ) பிராணமயகோசத்தை (உயிர்நிலையும் அதன் வலயமும் ) * Biosphere' என்றும் சொல்லாம். இன்று அவற்றுக்குரிய குணங்களாக மு க் குண ங் களி ல் தாமதகுணத்தையும் (அன்னமயகோசம்), ரஜதகுணத்தையும் (பிராணமயகோ சம் ) குறிப்பிடலாம். மனிதனிலும் இயற்கைச் செயல்பாட்டில் இவ்வலயங்கள் மட்டுமல்ல இவற்றுக்குரிய குணங்களும் இருக் கின்றன. இன்றைய வளர்ச்சிச்சுழல் மனதிலிருந்து பேர் மனதுக்கு தாவும் நிலையில், அந்த சுழலின் முடிவான கலி யுகத்தில், நிற்கிறது. மனேமயகோசத்துகுரிய (Noosphere) சுழல், அதற்குரிய குணமாகச் சாத்வீக குணத்தைக் குறிப்பிட லாம், இனி வருபவை சமய ஞானம் குறிப்பிடும் விஞ்ஞான ஆனந்தமயகோசங்களுக்குரிய சுழல்களாக இருக்கும். விஞ்
Page 24
44 மெய்யுள்
ஞானம் இனித்தான் அந்தத் திசையில் கவனஞ் செலுத்த வேண்டியிருக்கிறது, ஆணுல், நவீன விஞ்ஞானம் ஏற்கனவே அதை உணரத் தொடங்கிவிட்டது என்பதை மறுக்க Фрі; யாது, மனுேவலயத்துக்கு மிக அழகாக " Noosphere " என்று பெயர் சூட்டிய ரேஹா டி சாடன் (Teihard de Chardin ) சமய ஞானம் ஏற்கனவே கண்டு அனுபவித்து விட்ட விஞ்ஞான மயகோசத்துக்கும் ஆனந்தமயகோசத்துக் கும், எதிர் காலத்தில் எல்லாருக்குமுரிய அனுபவமாக இருக் கப்போகும் வளர்ச்சி முயற்சிக்கும், (** Christogenesis " ) என்று பெயர் சூட்டியுள்ளார். கிறிஸ்துவின் பேரறிவான நிலை, அரவிந்தர் கூறிய பேர்மனிதநிலை. அதை நோக்கித் தான் இன்றைய பரிணுமமும் சரித்திர வளர்ச்சியும் முழுமை யடைய முயன்று கொண்டிருக்கின்றன. அந்த முழுமையில் தான் இன்றைய வளர்ச்சிச் சுழல் முடிவடைந்து அடுத்த சுழல் ஆரம்பமாக வேண்டியிருக்கிறது.
இத்தகைய சுழல் எல்லைக்குள் நடைபெறும் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிப் போராட்டத்தையும் மார்க்சீயப் பார்வையில் வர்க்கப் போராட்டமாகக் கொள்ளலாம். ஆணுல், உண்மை யில் அது பழைய இதிகாசங்கள் குறிப்பிட்ட தேவ - அசுர, ஞான - அஞ்ஞானப் போராட்டமேதான். அதேபோல் அந்தப் போராட்டத்தையும் அதன் மூலம் பெறப்படும் வளர்ச்சியை யும் எகலிய மும்முனை இயக்கமாகவும் கொள்ளலாம். என வே, மார்க்ஸோடும் எகலோடும் நின்றுவிடாமல், அவர்களது பார்வையை அரவிந்தர் புதுப்பித்த பழைய சமயஞானப் பார்வையோடும், இன்றைய விஞ்ஞானிகளான ஜாலியன் ஹக்ஸ்லி, ரேஹா ஆகியோரது கருத்துக்களோடும் இணைத் துப் புது அடிவானங்களைத் தொடும்வகையில் விரித்து வளர்ப் பதே இன்றைய சரித்திர, பரிணும வளர்ச்சிச்சுழலை அதன் முடிவுக்கும் அடுத்த சுழல் தளத்துக்கும் கொண்டுவரக்கூடிய முழுமையான பூரண தத்துவமாகவும் பூரண வாழ்க்கை முறை
பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் 45
யாகவும் இருக்கும். அதையே " போர்ப்பறை "" மூலம் நான் தெரிவிக்க முயன்றேன். அதையே சர்வோதயப் பொது வுடமை என்றும் அழைக்கின்றேன்.
இன்றைய மனித பரிணமநிலையில், மனிதனின் நோய்க்கு - அவனது பூரணமின்மைக்கு - விஞ்ஞான ரீதியான விளக் கங்களும் அதைத் தீர்ப்பதற்குரிய விஞ்ஞான ரீதியான வழி களும் இவ்விதச் சர்வோதயப் பொதுவுடமை வழியிலேயே பெறப்படவேண்டியிருக்கின்றன. இவற்றை ஏற்றுக்கொள்ள முடியுமானுல், இன்றைய இலக்கியம் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதையும், அதன் வளர்ச்சிக்கு எவையெவை தேவைப்படுகின்றன என்பவற்றையும் கணக்கெடுப்பது கஷ்ட மாக இருக்காது.
3
முன்பு குறிப்பிட்டவற்றைக் கொண்டு பார்க்கும் போது இலக்கியத்தைப்பற்றியும் அதன் இலட்சியத்தைப் பற்றியும் ஒவ்வொருவனுக்கும் இருக்கவேண்டிய சீரான பார்வைதான் இன்றைய இலக்கிய வளர்ச்சிக்குரிய முக்கிய தேவையாக இருக்கிறது. இலக்கியத்தின் நோய் தீர்க்கும் இலட்சியத்தை பற்றிய உணர்வு.
ஆனல், அதுமட்டும் போதாது. இலக்கியம் மட்டுந்தான் (கலைமட்டுந்தான்) சமயமுயற்சியாக, பரவசத்தையும், மன அமைதியையும் தெளிவையும் நிறைவையும் தந்து நோயைப் போக்கும் மருந்தாக இனி இருக்கப் போவதில்லை. இனி மேல் எல்லாத் தொழில்களுமே கலையாக, யோகமாக. தொழு கையாக இருக்கப்போகின்றன; இருக்கச்செய்ய வேண்டும்.
பிராய்ட் கூறிய மனச்சிக்கல்களும், மார்க்ஸ் கூறிய மனப் பிறழ்வும் நீங்கிய முழுமையை மனிதன் செய்யும் சகல தொழில்
Page 25
46 மெய்யுள் களாலும் பெறக்கூடிய காலக் கட்டத்தையும், சமூக பொருளா தாரக் கட்டத்தையும் நோக்கி இன்றையச் சரித்திரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. மார்க்ஸ் குறிப்பிடும் பொதுவுடமை யமைப்பில் தன்னிலிருந்து தன்னைப் பிரித்துக் காணும் பிறழ் வும் (alienati0ம), அதற்குக் காரணமான வர்க்க வேறுபாடுக ளையுடைய சமூக, பொருளாதாரச் சூழலும் இருக்கமுடிய்ாத படியால் அந்த பொதுவுடமையமைப்பில் கலை இலக்கியம்மட்டு மல்ல எல்லாத் தொழில்களுமே பரவசத்தையும், மனஅமைதி யையும் நிறைவையும் தரும் தொழில்களாக மாறிவிடும் எல் லாத் தொழில்களுமே ஆத்மீகத் தன்மை பெற்றவையாய் மாறி விடும். அப்படித்தான் மார்க்ஸ் கருதுகிருர்,
சமயஞானியும் அதைத்தான் வேறு ஆழமான கோணத் திலிருந்து சொல்கிறன். அதனுல் அவன் தான் மார்க்ஸ் குறிப்பிடும் அந்த நோய் தீர்ந்த மனிதனின் முழுமை நிலை யின் பூரணத்துவத்தைக் காட்டுகிருன், அத்துடன் அவனைப் பொறுத்தவரையில் அந்தப் பூரண நிலையைத் தனிப்பட்ட ஒருவன் - சமூகமல்ல - எந்தக் காலக்கட்டத்திலும், எந்தச் சமூக, பொருளாதாரக் கட்டத்திலும் அடையக்கூடியவனுய் இருக்கிருன். எல்லாத் தொழில்களையும் ஒருவன் விரும்பினுல் எந்தக் காலக்கட்டத்திலும் சரி, எந்தச் சமூகக்கட்டத்திலும் சரி பரவசத்தைத் தரும் கலையாக, நோய்தீர்க்கும் வழியாக, கர்மயோகமாக மாற்றலாம் என்று கூறுகிருன் சமயஞானி. அதே சமயஞானி, இன்று அந்தக் கர்மயோக வாழ்க்கை தனிப்பட்ட சிலருக்குரியதாக மட்டும் இருக்காமல் முழுச் சமூகத்துக்கும் அதன் சகல துறைகளின் செயல்களுக்கும் உரியதாக மாறும் காலக்கட்டம் வந்துவிட்டது என்று கூறு பூரண சர்வோதயம்", என நான் கூறு
கின்ருன் . அதையே கிறேன். - - - ... " . . s.
எனவே, வாழ்க்கையின் சகல துறைகளுக்குரிய தொழில் களும் கலையாகவும் நோய்தீர்க்கும் மருந்தாகவும் மாற்றப்
பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் 47
படலாம் என்று எல்லா மார்க்கங்களும் இன்று கருதுகின்றன அந்த நிலையே எல்லா மக்களுக்குமுரிய வாழ்க்கை முறையாக அடுத்துவரக் காத்திருக்கிறது என்றும் அவை கூறுகின்றன. அதைக் கவனிக்கும்போது இலக்கியத்தையும் கலையை யும் நோய்தீர்க்கும் சமயமுயற்சியாக உயர்த்துகிருேமே என்று யாரும் ஆச்சிரியப்படவும் தேவையில்லை, கேலிபண்ணவும் தேவையில்லை. ஏற்கனவே ஆங்காங்கு அடுத்த கட்டச் சமூக, பொருளாதார அமைப்புக்காகப் புரட்சிப் போராட்டம் நடத் திக்கொண்டிருக்கும் கொரில்லாத் "துறவி ' சகல துறை களையும், சகல தொழில்களையும், சகல வழிகளையும் தனது இலட்சியத்துக்குரிய தன்னை முழுமைப்படுத்துவதற்குரிய மார்க்கங்களாகவும் கலையாகவும் யோகமாகவும் கண்டுகொண் டிருக்கிருன். அது போலவே சர்வோதய எழுச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ள தீவிரவாத ஜிவதானி ஒவ்வொரு வனும் (சர்வசமய ஞானி) அவ்வாறே ஒவ்வொரு கணத்துக் குரிய அலுவலையும் நோய்தீர்க்கும் மருந்தாக, யோக மாக, கலையாக மாற்றிக்கொண்டிருக்கிருன்.
எனவே, இலக்கியத்தைமட்டும் நோய்தீர்க்கும் மருந் தாக ஏற்றுக்கொண்டால் போதாது. தன்னளவில்மட்டும் அது அவ்வாறு நின்ருல் போதாது. இனிமேல் எல்லாத் தொழில்களையுமே அது இலக்கியமாகவும் கலையாகவும் மாற் றப் போராட வேண்டும். சகல துறைகளுக்குமுரிய சகல தொழில்களும் சகல மக்களுக்கும் பூரண யோகமாக மாற வேண்டுமானல், சகல துறைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். அத்தகைய சமூக, பொருளாதார, அரசியல், கலாசார, சமய மாற்றத்துக்காக இன்றைய கலையும் இலக் கியமும் தங்களை அர்ப்பணித்தாக வேண்டும்.
அதையும் இன்றைய ஒவ்வோர் எழுத்தாளனும் உணர வேண்டும். அப்போதுதான் அவனுல் பூரண் இலக்கியத் தைப் படைக்க முடியும். அது இரண்டாவது தேவை.
Page 26
48 மெய்யுள்
இலக்கியத்தைப்பற்றிய இத்தகைய ஒரு பார்வை முழு வாழ்க்கையையும் பற்றி ஒரு பூரண தத்துவமாகவும் பூரண சித்தாந்தமாகவும் வளர்வது தவிர்க்கமுடியாத ஒன்ருகி விடுகிறது. அல்லது வாழ்க்கையைப் பற்றியஒரு பூரண சித் தாந் த மே தா ன் இலக்கியம், கலை ஆகியவற் றைப்பற்றி இந்தளவுக்கு ஒருவனை உணர்ந்துகொள்ளத் தூண்டும். எப்படிச் சொன்னுலும் சரிதான். எனவே, அடுத்த தேவை - மூன்ருவது தேவை, அதுவே முதலாவது தேவையாகவும் இருக்கலாம் - அத்தகைய பூரண சித்தாந் தத்தின் தேவைதான். இன்றைய எழுத்தாளன், இன்றைய காலக்கட்டத்துக்கும் சமூக, பொருளாதார, அரசியல் கட் டத்துக்குமுரிய ஒரு பூரண தத்துவத்தை, சதா தன்னைத் திருத்தி வளர்க்கும் நிரந்தரத் தத்துவத்தை, கண்டவனுக வும் இருக்கவேண்டும். " போர்ப்பறை" யில் அதையே நான் குறிப்பிட்டுள்ளேன்.
அத்தகை பூரண தத்துவத்துக்கேற்ப எழுதப்படும் இலக் கியம் அதேசமயம் விஞ்ஞானமாகவும் சமயமாகவும், அரசி யல் பொருளாதாரக் கோட்பாடாகவும் சரித்திரமாகவும், உண்மையான கலையாகவும் அமையும். ஆனல், அதற்கா கத் தனது தனித்தன்மையை இழக்காது. முழுமைக்குத் தன்னை அர்ப்பணிப்பதால் முழுமையின் பூரண விரிவுகளை யெல்லாம் தன்னிலும் ஏற்றித் தனது தனித்தன்மையைப் பூரணமாக - முழுமைக்கு உதவும் வகையில் - வளர்த்துக் கொள்ளும். உதாரணமாக, ஆர்த்தர் கிளார்க்கின் விஞ் ஞானக் கதைகளே ஓரளவுக்கு வருங்காலத்தின் விஞ்ஞானக் கோட்பாடுகளாகவும் இருக்கவில்லையா? பொதுவுடமைக்குப் பிந்திய ரஷ்யாவின் கலையும் இலக்கியமும் அதன் அரசியல் சரித்திரமாகவும்; பொருளாதார சமூக மாற்றங்களினதும், அவற்றுக்குரிய கோட்பாடுகளின் நடைமுறை இயக்கங்களி னதும் பதிவுகளாகவும் இருக்கின்றன. அவற்றைப் படிக் காமல் ரஷ்ய நாட்டின் இன்றைய சரித்திரத்தையே படிகக்
W
பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் 49
முடியாது; சமூக, பொருளாதாரத் திட்டங்களின் போக்கையே புரியமுடியாது. இவை எதிர்காலப் பூரண இலக்கியம் மற்ற துறைகளோடு எவ்வாறு பின்னிப் பிணைந்து முழு ைம ய டையும் என்பதையும், மற்றவற்றை எவ்வாறு முழுமை யடையச் செய்யும் என்பதையும் இப்போதே ஒரளவுக்காவது காட்டுகின்றன. அத்துடன் அத்தகைய பூரண இலக்கியத்துக் காகத் தன்னை அர்ப்பணித்த ஓர் எழுத்தாளன் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலுமே அதே வேளையில் அக்கறை கொண் டவனுகவும் தன் திறமைக்கும் நேரத்துக்கும் இயன்றளவு அவற்றின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்தவனுகவும் இருப்பான். அதனுல் கலைஞனே இனிவரும் பூரண யோகியின் முன்னுேடியாக அமையலாம். உதாரணம் அரவிந்தர்.
பூரண இலக்கிய வளர்ச்சி சமூகத்தின் சகல துறைகளின் வளர்ச்சியாகவும் பரிணமிக்கும். அதனுல் இன்றைய எழுத் தாளன் அரசியலோடு மிக நெருக்கமான தொடர்புடையவனுக இருக்க வேண்டும். காரணம், சகல துறைகளையும் ஒன் ருேடு ஒன்ருக நெருக்கமாகத் தொடர்புபடுத்தி அவற்றை முழுமையடையச் செய்வதற்கும், சகல துறைகளையும் திட்ட மிட்டுச் சம வேகத்தில் முழுமையை நோக்கி வளர்ப்பதற் கும் அரசியல் அதிகாரமே நேரடியான வழியைக் காட்டு கிறது. அதனுல் பூரண இலக்கியத்தை விரும்புபவன் பூரண மாக அரசியலில் ஈடுபாடுடையவனுகவும் அதைத் தன் பூரண வழியில் திருப்புபவனுகவும் இருக்கவேண்டும்.
இந்த வகையில் பார்க்கும்போது இன்றைய சனநாயக
அமைப்பு, பூரணமாக உதவாத அரசியல் அமைப்பாகவே இருக்கிறது. சனநாயக நாடுகளில் தனித்தனியாய் விடுபட்டு
Page 27
50 மெய்யுள்
இயங்கும் சமூகத்தின் சகல துறைகளின் பிரிவும், அந்தப் பிரிவையே பொரும்பாலும் சுதந்திரமாகக் கருதும் சன நாயக அமைப்பும், மனித சரித்திரம் இன்று தவிர்க்க முடி யாத வகையில் கோரும் பொதுவுடமைச் சர்வோதய பூரண வாழ்க்கைக்கும் அதன் முழுமைக்கும் வேகமாக உதவுவ தாகத் தெரியவில்லை. அது மிகத் தாமதமாகவே நடை போடுகிறது, அந்தத் தாமதம் திசைகெட்ட தடுமாற்றத் துக்கும் சிதறலுக்கும் வழிவகுக்கக் கூடியதாகவும் இருக் கிறது. மார்க்சீயப் பொதுவுடமை நாடுகளில் சமூகத்தின் சகல துறைகளும், மத்தியிலிருந்து திட்டமிடப்பட்டு ஆற்றுப் படுத்தப்படுவதால், ஒன்ருேடு ஒன்று இணைந்து முழுமையை நோக்கி வளரும் அளவுக்குச் சனநாயக அமைப்பு வளர்ச்சி யைக் காட்டுவதில்லை. எல்லாச் சக்திகளும் ஒன்ருகத் திரட் டப்பட்டு, திட்டவட்டமான பூரணப் பொது இலட்சியத்துக் காகத் துரிதமாக அர்ப்பணிக்கப்பட்டு ஆற்றுப் படுத்தப்படு வதே இனி மனித சமூகத்தின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும் என்பதை மார்க்சீய நாடுகள் காட்டி நிற்கின்றன. ஆணுல், அதே நாடுகள் சமய ஞானத்தை மறுப்பதால் முழுமையற்ற ஒரு பார்வையைக் கொண்டே முழுமையை எட்ட முயல்கின்றன. சமயமும் சமயவாதிகளும் இதுகாலி" வரை பிற்போக்குவாதத்தின் தூண்களாக இருந்தார்கள் என்பதற்காகச் சமய ஞானத்தை மறுக்கத் தேவையில்லை. அதை, முற்போக்கை விரும்புபவர்கள் தங்களது இலட்சியத் துக்காகப் புரட்சிகரமாகப் பயன்படுத்தலாம். அதை மார்க் சீயவாதிகள் இன்னும் உணராதவர்களாகவே இருக்கின்றனர். அதனுல் பொதுவுடமை நாடுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஏற்படும் அரசியல் சர்வாதிகாரம் சில சமயங் களில் தவிர்க்க முடியாத வகையில் இலட்சியத்திலிருந்து பிறழ்ந்தும் திரிந்தும் போய்விடக்கூடிய ஆபத்தைக் காட்டு கிறது. சகல துறைகளும் முழுமையடைவதற்குப் பதிலாக அரசியல் துறையே சகல துறைகளிலும் அவற்றின் தனித்
பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் 51
தன்மையை நசுக்கி, சர்வாதிகாரம் செய்யும் ஆபத்தும் ஏற் படுகிறது. சமூகத்தின் சகல துறைகளும் பொது இலட்சி யத்தின் முழுமையை நோக்கி இணைக்கப்பட்டு ஆற்றுப்படுத் தப்படும் அதேவேளையில், ஒவ்வொரு துறையும் அந்த முழுமையின் அடிவான எல்லைகளைப் புதுத் திசையில் விரித்து அகலமாக்கி வளர்க்கக்கூடிய வகையில் சுதந்திரம் பெற்ற வையாகவும் இருக்கவேண்டும், அவற்றின் கண்டு பிடிப் புகள் முன்னிலும் புதுமையாக இருக்கும்போது அவை பொது இலட்சியத்தையே, அது வரித்துக் கொண்ட தத்து வத்தையே பூரண வழியில் திருப்பக் கூடிய வகையில் இருக்க வேண்டும். ஆணுல், மார்க்சீய நாடுகளில் மத்திய கண் காணிப்பு ஒருமைப்பாட்டை அழுத்தி வளர்க்குமளவுக்கு பொது வுட ைமச் சர்வோதயம் கொண்டுவரக்கூடிய சகல துறைகளின் பூரண மலர்ச்சியாகவும், முழுமையைப் பலபக்கமாக விரிக்கும் முழுமைக்கு எதிராகாத தனித்துவச் சுதந்திரமாகவும் வளர்வதாக இல்லை. அது மார்க்சீயப் பொதுவுடமை காலப்போக்கில் தான் கொண்டுவரக்கூடிய நிலையாக இருக்கும் என்று கூறுவது சரியான காரணமா காது. அதுவரைக்கும் சர்வாதிகாரம் அவசியம் என்று கூறுவதும் உண்மையான காரணமாகாது. உண்மையான காரணம், அது வரித்துள்ள தத்துவத்தில் பூரணமின்மை இருப்பதேதான். அத ஞ ல் தான் அந்தளவுக்கு இறுக் கமான சர்வாதிகாரம் தேவைப்படுகிறது.
ஆளுல், அதற்காகச் சமயஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பூரணப் பொதுவுடமைத் தத்துவத்தை ஏற்றுக்கொள்வதால் மட்டும் சர்வாதிகாரத்தின் இறுக்கம் தளர்ந்து, சுதந்திர மலர்ச்சி வந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. ஏதோ ஒரளவுக்காவது மத்தியில் அதிகாரம் திரட்டப்படாமல் முழு மைப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள முடியாதுதான். ஆனல், அது தேவைக்கதிகமான சர்வாதிகாரமாக தனிப்
Page 28
52 மெய்யுள்
பட்டவர்களின் குறைகளையும் தீர்க்கதரிசனமின்மையையும் மறைக்கும் சர்வாதிகாரமாக மாருமல் இருப்பதற்குச் சமய ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பூரணதத்துவம் மட்டும் உத வப்போவதில்லை. அதை நடைமுறைப்படுத்துபவர்களின் பூரண வளர்ச்சியையும் பக்குவத்தையும் பொறுத்ததாகவும் அது அதேசமயம் இருக்கும். அதனுல்தான் கலைஞர்களும் எழுத்தாளர்களும், அந்தப் பூரண விரிவைக் காட்டக்கூடிய பக்குவத்தை வளர்க்கக் கூடியவர்களாய் இருப்பதால், அர சியலில் அதிகமாகப் பங்குபற்ற வேண்டியவர்களாக இருக் கிருர்கள். லெனினின் மேதாவிலாசமும் எழுத்துவன்மையும், ட்ருெட்ஸ்கியின் கலையுணர்வும் தீர்க்கதரிசனமும் ஸ்டாலினி டம் இல்லாத காரணத்தினுலேயே ஸ்டாலினிசத்தின் விளைவு அந்தளவு கொடூரமாக இருந்தது என்பதும் ஒரு காரணந் தான். அதை மறுக்க முடியாது. அதனுல்தான் அரசியல் வாதிகளின் கைப்பொம்மைகளாக எழுத்தாளர்களும் கலைஞர் களும் இருக்காமல், அவர்களே அரசியல்வாதிகளாகவும் இருக்கவேண்டும். ஒரு நாட்டின் மந்திரிசபையில் குறைந் தது இரண்டொரு அரசியல்வாதிகளான கலைஞர்களும் எழுந் தாளர்களும் இனிமேல் இருந்தால்தான், பூரண முழுமைக் காக மத்தியில் ஒப்படைக்கப்படும் அதிகாரம் பயங்கரமான சர்வாதிகாரமாக மாருமல் இருக்கும். கலைஞன் மட்டுமல்ல, பூரண சமயஞானியே அரசியலுக்குத் தலைமை தாங்கும் இறுதிக்கட்டம் ஒரு சுழல் வட்ட முழுமையின் முடிவுக்கட் டமாக இன்று வந்துள்ளது. அதை ஒவ்வோர் எழுத்தாள னும் இனிமேல் உணரவேண்டும்.
5
சகல துறைகளும் ஒன்ருேடு ஒன்று இணைந்து முழுமை யடையும்வேளையில், நாட்டின் சகல எழுத்தாளர்களும் ஒரு பேரவையில் அங்கம் வகித்துப் படைப்பாளிகள் இயக்கத் தையே ஆரம்பிப்பது அவசியமாகும். எந்த நாட்டில் நாடு முழுவதுக்குமுரிய ஓர் எழுத்தாளர் பேரவை இல்லாதிருக் கிறதோ, அந்த நாடு இன்னும் காலத்தை உணராது பின் தங்கிக் கிடக்கிறது என்பதுதான் அர்த்தம், தனிப்பட்ட கொள்கைகள், இன, மத, மொழி வேறுபாடுகள் ஆகியவற் றைக் கடந்து, எல்லாரும் அங்கம் வகிக்கும் ஒர் எழுத்தா ளர் பேரவை அவசியம். அத்துடன் எழுத்தாளர்கள் என்று கூறும்போது கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் எழுது பவர்களை மட்டும் கருதக்கூடாது. அத்தகைய பார்வை முழு மையான இலக்கியம் வளர்வதற்குத் தடையாகவே இருக்கும். விஞ்ஞானம், பொருளாதாரம், கலை, கல்வி, அரசியல், இலக் கியம் போன்ற சகல துறைகளிலும் திறமையும் ஆக்கமுயற் சியும் உள்ள எல்லா எழுத்தாளர்களும் பங்குபற்றும் ஒரு பேரவை இருக்க வேண்டும். அது CUPU நாட்டினதும் அறிவாளி வர்க்கத்தைத் தன்னுள் அடைப்பதாக அப்போது அமையும். அதனுல் ஒவ்வொரு துறையிலும் ஏற்படும் வளர்ச்சியும் கண்டுபிடிப்பும் பிற துறைகளின் வளர்ச்சியை யும் கண்டுபிடிப்பையும் தூண்டுவதாகவும், எல்லாம் (UPC மையை நோக்கிய முற்போக்குக்கு வழிவகுப்பதாகவும் அமை யும். இன, மத, மொழி வேறுபாடுகளுடன் துறை வேறு பாடுகளும் அதனுல் நீங்கும். ஒவ்வொரு துறைக்குமுரிய புதிய கண்டு பிடிப்புக்கள் சாதாரண மக்களைத் தொடுமள வுக்குக் கருத்துப் பரிமாறல், பிரசாரம், வெளியீடு ஆகிய வற்றை அது சீராகச் செய்வதற்கும் உதவும். அத்தகைய பேரவையும் அது நடத்தும் படைப்பாளிகள் இயக்கமும் பல்வேறு வழிகளிலும் பொதுமக்களோடு தொடர்புடையதாக
Page 29
54 மெய்யுள்
இயங்கவேண்டும். அரசியல் வாதிகளைக் கொண்ட நாட்டின் பாரளுமன்றத்துக்குச் சமமாகப் பொறுப்பும் பங்கும் தனக்கும் உண்டு எனக்கருதிச் செயல்படும் எழுத்தாளர் பேரவையே முழுச்சமூகத்தையும் முற்போக்காக முழுமையை நோக்கி வளர்க்கமுயலும் ஓர் அரசாங்கத்தின் உண்மையான மேற் சபையாக, மூதவையாக இயங்குவதாக இருக்கும்.
6
பூரண இலக்கியமும் பூரண வாழ்க்கையும் இவற்ருேடு மட்டும் மலராது. ஒவ்வொருவனும் தன் அக ஆழத்தைக் கண்டுபிடிக்காதவரைக்கும் முழுமையும் பூரணத்துவமும் வரப் போவதில்லை. அதனுல் சமய ஞானிகளின் கண்டுபிடிப்பைப் பூரணமாகப் பயன்படுத்த இனிமேல் இந்த எழுத்தாளர்கள் தான் முன்வரவேண்டும். சமய ஸ்தாபனங்கள் மிகக் குறுகிய வட்டங்களுக்குள் நிற்கின்றன. அவற்றின் குறுகிய போக்கைத் தகர்த்தெறிந்து, சர்வ சமய ஞானப்புரட்சியையும், அது கொடுத்துதவும் பொதுவுடைமை மலர்ச்சியையும் எழுத்தாளர் களும் கலைஞர்களுமே இனிமேல் கொண்டுவர வேண்டும். பழைய சமயஞானத்திடமிருக்கும் உண்மையை சமூக வளர் ச்சிக்கு உதவும் வகையில் எல்லாத் துறைகளிலும் பிரவேசிக் கச் செய்யவேண்டும். அதற்காக முதலில் ஒவ்வொருவனும் தனது அகத் தி லே யே அந்த ஞானத்தை எழுப்ப வேண்டும். வர்க்க வேறுபாடுகளும் குணவேறுபாடுகளும் அங்குதான் பொதிந்து கிடக்கின்றன. அவையே பிற்போக் குக் கோட்டைகளாகவும், பிறப்புப் பிறப்பாய் வரும் இயல் புகளின் மறைவிடங்களாகவும் இருக்கின்றன. அவற்றைக் கைப்பற்றி, அங்கு புரட்சியைக் கொண்டுசென்று முழுமையின் மலர்ச்சியை ஏற்படுத்தாதவரைக்கும் புறச்சூழலில் மட்டும் புரட்சி நடத்திப் பூரண இலக்கியத்தையும் சரி முழுமையான
பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் 55
வாழ்க்கையையும்சரி கொண்டுவரமுடியாது. எழுத்தாளர்கள் இனிமேல் அதையும் உணரவேண்டும்.
7
இவை பொதுப்படையான தேவைகள். பூரண இலக்கி யம் மலர்வதற்கு எல்லா நாட்டுக்குமுரிய பொதுத் தேவை கள். இவற்றின் அடிப்படையிலேயே ஈழத்தின் தனித் தேவைகளை, முழு உலகின் முழுமை வளர்ச்சிக்கு முரணுகா மல், கண்டுபிடித்துத் தீர்க்கவேண்டும். அவற்றைப்பற்றிய கணக்கெடுப்பு இன்றைய ஈழத்து எழுத்தாளன் ஒவ்வொரு வனுக்குமுரிய பொறுப்பாகும்.
Page 30
O O மெய்யும் உள்ளும் மெய்
நல்லசிவம் தான் படித்த சஞ்சிகைச் செய்தி ஒன்றை எனக்கு காட்டினுன். நானும் படித்தேன்.
* வளர்ச்சியடைந்த விஞ்ஞானத் தொழில்நுட்ப நாகரிகங் கள் நமக்கு அண்மையிலுள்ள பால்வழி ஞாயிற்றுத் தொகு திக் கூட்டங்களிற் சில பகுதிகளிலிருந்து நமது பூமியுடன் தொடர்புகொள்ள முயன்று கொண்டிருக்கலாமெனப் பிரசித்தி பெற்ற சோவியத் - அமெரிக்க விஞ்ஞானிகளைக் கொண்ட கூட்டமொன்று முடிவுசெய்துள்ளது. பூமிக்கு அப்பாற்பட்ட அறிவுலகங்களுடன் தொடர்பு கொள்வதுபற்றிக் கூட்டப்பட்ட முதல் சோவியத் - அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டம் இது வாகும். இம்மகாநாடு சோவியத் - அமெரிக்க நாடுகளின் தேசிய விஞ்ஞான சபைகளின் கூட்டாதரவில் சோவியத் ஆர் மீனியாவில் நடைபெற்றது. நம்மைவிட வளர்ச்சியடைந்த நாகரிகங்களிடமிருந்து பெறக்கூடிய பயன்கள் முழு மனித இனத்துக்கும் பெறும் நன்மையளிக்குமென்பதால், விண்வெளி யிலிருந்து வரும்செய்திகளைக் கண்டுபிடித்துத் தொடர்புகொள் வதற்காகச் சர்வதேச ஒத்துழைப்பு அவசியமென அங்கு கூடிய விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். வலு வான ரே டி யோத் துர ர நோக்கிகளால் விண்வெளியை ஆராய்ந்து, அத்தகைய வெளி அறிவுலகத்துடன் தொடர்பு கொள்வதற்குத் தற்போதைய நமது தொழில் நுட்ப விஞ்ஞான அறிவு வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித் தனர்."
செய்தியைப் படித்துவிட்டு நான் அவனைப் பார்த்த போது நல்லசிவம் கூறினுன் -
இந்தச் செய்தி ஒன்றே ஆயிரம் சிறுகதைகள், கவிதை களுக்குச் சமம். சமம் என்றுகூடச் சொல்ல முடியாது.
மெய்யும் உள்ளும் மெய் 5t
உங்களுடைய இந்தக் காலத்துச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எதுவாலும் தரமுடியாத பரவசத்தை இந்தச் சிறு செய்தி தருகிறது எனக்கு. இதைப் படிக்கப் படிக்க வரும் பரவசத் தாக்கம் மனதை ஒரு நிலையில் நிற்கவிடாது கிளறிக்கொண்டிருக்கிறது. வேலையொன்றும் செய்யமுடியா மற்கூட இருக்கிறது."
செய்தியைத் திரும்பவும் பார்த்தவாறே நான் கேட் டேன் - அப்படியென்ருல், சிறுகதை, கவிதை, நாவல் எல்லாவற்றையும்விட இந்தச் செய்தித்துண்டு சிறப்பான அல்லது அவற்றுக்குச் சமமான ஒரு கலைச்சிருஷ்டி என்று கூறுகிறீர்?"
அவன் சிரித்தான். சிரித்துக்கொண்டே கூறிஞன்.
* கலை என்ருல் என்ன? உண்மையான பரவச விடுதலை யைத் தருவதுதான் கலை. உண்மையான பரவச விடுதலை மாற்றமுருத நிரந்தர உண்மைத் தளத்தை அடிப்படையாக கொண்டது. கற்பனையை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாற்றமுருத நிரந்தர உண்மைத்தளம் ஞானிகள் கண்ட அனுபவத் தளமாகும். உங்களுடைய இந்தக் காலத்துச் சிறுகதைகள், கவிதைகள், நாவல்களை நான் படிப்பதில்லை; என்னுல் படிக்கமுடிவதில்லை. அவற்றைப் படித்து மகிழ்ந்த காலம் போய்விட்டது. அவையெல்லாம் வெறும் பொய்யும் கற்பனைகளுந்தான். காலத்துக்கு உதவாத கற்பனைகள். அப்படிப்பட்டவற்றை என்னல் இப்போ படிக்கமுடியாமலிருக் கின்றது. அவற்றைவிட, வியட்னும் போர் முதல் எங்கள் யாழ்பாணத்துக் கள்ளுத் தவறணவரை சகல சாதாரண நடைமுறை விடயங்களும் மிகச் சுவையாகவும் அக்கறை யைக் கோருபவையாகவும் இருக்கின்றன. அவற்றைவிட வேறு என்ன கலை வேண்டும்? சாதாரண மனிதன் சில பத்திரி கைகளின் கடைசிப்பக்கங்களில் வரும் கடத்தல், கொலை,
Page 31
58 மெய்யுள்
களவு பற்றிய விடயங்களை உங்கள் கதைகள், கவிதைகளிற் காட்டாத அக்கறையோடு படிப்பதற்கும் அதுதான் ஓரளவு காரணம். அவை உண்மையானவையாக, நடைமுறை விட யங்களாக இருக்கின்றன. இப்போ என்னை ஆச்சரியப்படவைக் கும் விடயம் இதுதான். இத்தனை ஆயிரம் கதைகள், கவிதை கள், நாவல்கள் என்று தேவையற்று, அர்த்தமற்று இவர்கள் எழுதிக்கொண்டும் பிரசுரித்துக் கொண்டும் படித்துக்கொண் டும் இருக்கிருர்களே, அதுதான் என். ஆச்சரியத்துக்குரிய விடயமாக இருக்கிறது. ஏன் எழுதுகிருர்கள்? எப்படி எழுது கிருர்கள்? அது அவர்களுக்கே தெரிவதில்லை. சும்மா ஒரு பழக்கமாகி விட்டது.
y
* நடைமுறையிலுள்ள சாதாரண விடயங்கள் தரும் ஆழ மான அனுபவங்களைத் தானே சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் காட்டுகின்றன ? இன்னும் அழகாகவும் கலை யோடும் தருகின்றன? நடைமுறை விடயங்கள் சுவையாக இருக்கின்றனவென்ருல், அவற்றை விட இன்னும் சுவை யாகவும் பரவசமூட்டுபவையாகவும் இருக்கும் இலக்கியத் தையும் கலையையும் எப்படித் தேவையற்றவை என்று சொல்லலாம் ? நான் திருப்பிக் கேட்டேன்
நல்லசிவம் -
* அவை உண்மையைப்போல எழுதப்பட்ட கற்பனை விடயங்கள். உண்மையல்ல. அந்த வித்தியாசம் இனி மேல் அவற்றைத் தேவையில்லாமல் ஆக்கிவிடுகிறது. இதுகால வரை உண்மையை விளக்க அத்தகைய கற்பனைகள் உதவின தான். ஆணுல், இனிமேல் உண்மையை உள்ளபடியே மணி தன் நாடி அனுபவிக்க ஆரம்பித்து விட்ட் காலத்தில் அந்த யதார்த்தக் கற்பனைகள் தேவையில்லை. உதாரணமாக, ரஷ் யப் புரட்சியைப் பற்றிச் சுடச்சுட எழுதிய ஜோன் றீட்டின் உலகத்தை உலுக்கிய பத்து நாட்கள் இருக்கிறதே,
மெய்யும் உள்ளும் மெய் 59
அதன் பரவசம் நிலையானது. என்னைப் பொறுத்தவரையில் இப்போ டோஸ்டொவ்ஸ்கியின் நாவல்கள் கூட அத்தனை பரவசம் அளிப்பதில்லை. காரணம், அது உண்மை; இது கற்பனை என்ற உணர்வு படிக்கமுன்னே வந்து விடுகிறது. டோஸ்டொவ்ஸ்கிகூட ரஷ்யப் புரட்சிக்கு முந்திய கால வரலாற்றை அப்படியே மாற்ருமல் கொள்ளாமல் தர்ம வளர்ச் சிப் பக்கம் தன்னை நிறுத்திக் கொண்டு தன் கலையுணர்வோடு நீட் எழுதியது போல் எழுதியிருந்தால் இன்னும் எவ்வளவு அழகாகவும் சுவையாகவும் இருந்திருக்கும் என்று இப்போ நினைக்கத் தோன்றுகிறது. அப்படி உண்மையான வர லாற்று நிகழ்ச்சிகளையே இலக்கியமாக ஒவ்வோர் எழுத் தாளனும் தன் திறமையோடு எழுதியிருந்தால் உலகம் எவ் வளவோ முன்னேறியிருக்கும். கலையைப்பற்றிய கொள்கையும் ஒரு புதுப் பரிணுமத்தைக் காட்டும் வகையில் வளர்ச்சி யடைந்திருக்கும். உண்மை நிலையில் அலுப்புத் தட்டினுல் அதை மாற்ற வேண்டுமென்ற போராட்ட வேகமும் கலை ஞர்களிடம் எழுந்திருக்கும். இன்றைய நம் எழுத்தாளர்கள் நம் நாட்டுப் பிரச்னைகளை இன்றைய பூரண சர்வோதய ச பொதுவுடமைத் தர்மப்போக்குப் பக்கம் நின்றுகொண்டு மாற்ருமல் கொள்ளாமல் கலையோடு எழுதுவதுதான் உண்மை யான கலைச்சேவையாகும். மாற்றப்படாத உண்மைதான் கலையின் உள்ளடக்கமாக இருக்கவேண்டும். எந்தவிதக் கற்பனையும், எந்தவிதச் சிறுமாற்றமும் சேராத உள்ளடக்கம் " அதற்கேற்ற உண்மையான உருவம் - அவைதான் இன்றைய கலைக்கொள்கையாக இருக்கவேண்டும். இந்தச் செய்தித் துண்டில் காணப்படும் உண்மைதான் எனக்குப் பரவசத்தை ஏற்படுத்துகிறது. அதாவது, அடுத்த கோளங்களில் பெரும் நாகரிகங்கள் காணப்படும் என்றும், அவற்ருேடு தொடர்பு கொள்வது அவசியம் என்றும் நம்பும் விஞ்ஞானிகளின் உண் மையான மன நிலை. அதை வைத்து ஒரு விஞ்ஞானக் கற்பனைக் கதையாக எழுதியிருந்தால், அத்தனை பரவசம்
Page 32
60 மெய்யுள்
வந்திருக்காது எனக்கு. இந்த உண்மைகளை உண்மையான போக்கில் கூறவேண்டும். அப்படியே ஒவ்வோர் எழுத்தாளனும் சங்கற்பம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றைப் படிப்பதே சரியானது என்று ஒவ்வொரு வாசகனும் பழகிக் கொள்ள வேண்டும். ஆணுல், இன்றைய இலக்கியங்களும் கலைமுயற்சி களும் அப்படியா இருக்கின்றன ? தெரிந்தவற்றையே அவை திருப்பித் திருப்பிக் கற்பனை பூசிச் சொல்கின்றன. சிந்தனைக் கதவைத் தட்டிக் கொண்டும், செயல் தடத்தில் தட்டுப் பட்டுக் கொண்டும் இருக்கின்ற எத்தனையோ புதிய அனு ய்வங்களை அவை சொல்வதில்லை. அப்படிப்பட்ட புது அனு பவங்கள் இருக்கும்போது கற்பனையாகக் கலையும் இலக்கிய மும் எதற்கு? "
" அப்படியென்ருல், சாதாரண சரித்திரப் புத்தகமும் ஒரு சிறந்த நாவல் அல்லது கவிதை நூலும் சரி, சமம் என் கிறீரா? " என்றேன் நான்.
" சரியுமல்ல, சமனுமல்ல " என்ருன் நல்லசிவம். சாதாரண சரித்திரத்தின் தரத்துக்கு ஒரு சிறந்த நாவலால் அல்லது கவிதையால் உயரமுடியாது என்கிறேன் நான்."
கலை, இலக்கியங்களின் உருவ - உள்ளடக்கங்கள் இன் றைய காலத்துத் தேவைகளுக்கேற்ப மாற்றப்பட வேண்டு மென்பது உண்மைதான். ஆணுல், அதற்காக கலை, இலக் கியம் என்ற துறைகளே அழிக்கப்பட வேண்டுமென்ற அளவுக்கு மாற்றப்படலாமா ? எனக்கு நல்ல சிவத்தின் கதை பைத்தியக்காரத்தனமாகத்தான் பட்டது.
" எப்படியென்று சொல்ல முடியுமா ? " என்று சிரித்துக் கொண்டே கேட்டேன் நான்.
அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்" என்ருன் அவன்.
மெய்யும் உள்ளும் மெய் 61.
காரணம் இதுதான், சரித்திரத்தில் உண்மை இயன் றளவு மறைக்கப்படாது இருக்கிறது. கதைகளிலும் கவிதை களிலும் அப்படி இருப்பதில்லை. உண்மை போல இருக்க 6Nd T tid...... ஆணுல், அவை அப்படியே உண்மையாக எங்கும் நடந்திருக்காது. அதை எழுதுபவனின் கற்பனையில் தவிர அது பெரும் வித்தியாசத்தைத் தருகிறது. அந்த வித்தி யாசம் இருக்கும் வரைக்கும் இனிமேல், அதாவது எதிர் காலத்தில் கலை, இலக்கியம் என்பதில் எந்தவிதப் பிரயோ சனமுமில்லை. அவற்றை எதிர்கால மனவளர்ச்சி ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
நான் -
* ஐயா, அப்படிக் கற்பனை கலந்து இருப்பதுதானே கலை, இலக்கியத்தின் உண்மையான தன்மையாகும் ? இது காலவரை மனித வரலாற்றில் அப்படித்தானே அவை இருந்தன ? சரித்திரத்தை விரும்புபவர்கள் வெறும் சரித்தி ரத்தைப் படிக்கட்டும். ஆணுல், கலை, இலக்கியத்தை விரும் பும் நுண்ணுணர்வுள்ள பண்பட்ட மனங்கள் இருக்கின்றனவே, அவற்றுக்குச் சரித்திரத்தையும் பத்திரிகைச் செய்திகளையும் கொடுக்க முடியுமா? அத்துடன் கலை, இலக்கியம் இல்லா விட்டால் மனித கலாசாரத்தின் நிலையை நினைத்துப் பாரும். மனிதனுக்கும் மிருகத்துக்கும் அல்லது மனிதனுக்கும் யந்தி ரத்துக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது."
இதுகாலவரை இருந்தது இருக்கட்டுமையா, இனி மேல் இருக்கத்தேவையில்லை" என்ருன் நல்லசிவம். இனி மேல் நுண்ணுணர்வுள்ள பண்பட்ட மனம் என்பது கற்பனை யில் கலையையும் அழகையும் பரவசத்தையும் காணுமல், சாதாரண நடைமுறை உண்மையில் தான் கலையையும் பரவசத்தையும் காணும். நான் சொல்வது உமக்கு இன் னும் விளங்கவில்லை. சரி, இதுகாலவரை மிருகத்திலிருந்தும் யந்திரத்திலிருந்தும் வித்தியாசப்பட்டிருந்த மனிதனுக்கு எந்த
Page 33
62 மெய்யுள்
வகையில் கலை, இலக்கியம் உதவிற்று? எந்த வகையில் அவனை அப்படி வித்தியாசப்பட அவை வளர்த்தன? அதா வது, இதுகாலவரை கலை, இலக்கியங்களின் தொழில் அல் லது பயன் எப்படிப்பட்டதாக இருந்தது என்று சொல்லும் பார்ப்பம் ?"
அதைச் சொல்லுவது சற்றுக் கஷ்டமாகத்தான் இருந் தது. காரணம், நான் சொல்பவை நல்லசிவத்தின் வாதத் துக்கே உதவக்கூடும் என்ற ஓர் உணர்வு என்னை அருட்டத் தொடங்கியது.
* இதுகாலவரை. " நான் இழுத்துக்கொண்டு ஆரம் பித்தேன். "இதுகாலவரை கலை, இலக்கியங்கள் தான் மனிதனது சாதாரண நடைமுறை வாழ்க்கை வெறும் யந் திரப் போக்காக்வும் மிருகப் போக்காகவும் மாருமல், அதன் ஆழமான அனுபவ உண்மைகளை வெளிக்காட்டியும் இலக் கியப் போக்கில் எப்படி வாழவேண்டுமென்று எடுத்துக் காட் டியும் வழிப்படுத்தியும் ஆற்றுப்படுத்தியும் வந்திருக்கின்றன. மனிதனது சிந்தனையை வளர்த்திருக்கின்றன. வாழ்க்கையிற் பரவசத்தையும் சந்தோசத்தையும் புகுத்தியிருக்கின்றன. சொல்லப் போனுல், அவனது பண்பாட்டின் முக்கிய அத்தி வாரமாகவும் இருந்திருக்கின்றன."
நல்லசிவம் •
"சிந்தனையையும் பண்பாட்டையும் தந்தவை பெரும் பாலும் அந்தந்தக் காலத்துத் தொழில் முறைகளும் தத்து வங்களும் சமயங்களுந்தான். அவற்றின் நிழலில்தான் கலை, இலக்கியம் வளர்ந்துள்ளன. அவை இல்லாத இடங்க ளிலும் காலங்களிலுந்தான் கலை, இலக்கியங்கள் தனியாக வாழ்க்கைக்கு வழிகாட்ட உதவியுள்ளன. ஆனல் அப்போ து ங் கூட அவை தத்துவங்களுக்கும் சம ய ங்களுக்கும் முன்னுேடிகளாகவே செயற்பட்டுள்ளன, பின்பு, அதே
மெய்யும் உள்ளும் மெய் 63
தத்துவங்களினதும் சமயங்களினதும் நிழல்தான் அவை வளரும் சூழலாகியுள்ளன. தத்துவங்களும் சமயங்களும் காட் டிய வாழ்க்கையின் இலட்சியப் போக்கைத்தான் கலை, இலக் கியம் எடுத்துக்காட்டியுள்ளன. அந்த வகையில் கலை, இலக்கி யம் பரவசத்தையும் சந்தோசத்தையும் பண்பாட்டையும் வாழ்க் கைக்குள் புகுத்தியிருக்கின்றனவென்ருல், அந்தச் சந்தோசமும் பண்பாடும் அந்தந்தக் காலத்துத் தொழில் முறையாலும் தத்துவத்தாலும் சமயத்தாலும் தரக்கூடியதாய் இருந்த பண்பாடும் பரவசமுந்தான். குறிப்பாகச் சமயங்கள் தான் மனிதன் இதுவரை கண்ட பரவச எல்லைகளைக் காட்டி யுள்ளன. அந்த எல்லைகளைச் சாதாரண மக்களுக்கும் எடுத் துக்காட்டும் வகையில் கலை, இலக்கியம் இது வரை செயற் பட முயன்றன என்பது உண்மைதான். ஆணுல், அதே சமயம் அவை வாழ்க்கைக்குரிய இலட்சியப் படமாகவும், சாதாரண மக்களின் சமயத்துக்குரிய பிரதிப் பொருளாகவும் இருந்தனவேயொழிய உண்மையான சமயமாகவும் இருக்க வில்லை. உண்மை யான வாழ்க்கையாகவும் இருக்க வில்லை, இந்த இரண்டுங் கெட்டநிலை மனிதன் மிருகமாக வீழாமலும், தேவனுக வளராமலும் இருந்த இரண்டுங் கலந்த நிலைக்குப் பொருந்தியிருக்கலாம். ஆணுல், இனிமேல் பொருந்தாது. இனி மனிதன் தேவனுகிருன். பேர் மனித ணுகிருன், சாதாரண நடைமுறை வாழ்க்கையே கலையாக வும் தொழுகையாகவும் மாறவேண்டிய வேளையில், வாழ்க் கையுமற்று சமயமுமற்று இரண்டுங்கெட்ட நிலைக்குரிய தனி யான கலை, இலக்கியம் என்ற போலிப் பிரிவு இருக்க முடி யாது. "
" எனக்கு விளங்கவில்லை."
* சாதாரண தொழிலே பரவசத்தைத் தரும் கலையாக வும் தொழுகையாகவும் மாறவேண்டும். அப்படி மாறவேண் டிய வேளையில் அவற்றுக்குப் பதிலான ஒரு போலிப் பிரதிப்
Page 34
64 மெய்யுள்
பொருளாக, மதுபானமாக, தனிப்பட்டகலை, இலக்கியம் என்ற பிரிவு எதற்கு? அதாவது, நான் சொல்வது இதுதான் -
"கலை, இலக்கியம் சிருஷ்டிப்பவன் தான் செய்யும் தொழி லையே, தன் வாழ்க்கையையே கலையாகவும் இலக்கியமாகவும் மாற்றினுல்என்ன? ஏதும் எழுதவேண்டுமென்ருல் நடைமுறை யிலிருக்கும் சமகாலச் சரித்திரவிடயங்களையும், தன் சொந்த உண்மையான அனுபவங்களையும். அப்படியே ஏதும் மாற்ரு மல் கலையாக எழுதினுல் என்ன? ஓர் அணுவின் இயக்க நிகழ்ச்சியே அத்தனை கலையோடு நடைபெறும்போது தனி யாகக் கற்பனை கலந்து நடக்காதவற்றை யதார்த்தமாக " எழுத வேண்டுமா? இனிமேல் உண்மையாக நடப்பவற் றைக் கலையோடு எழுதுவதுதான் இலக்கியம். அதேபோல் ஒவ்வோர் நிமிட வாழ்க்கையையும் தொழிலையும் கலையாக்கு வதுதான் கலை , இலக்கியக்காரனின் வேலை. ஒவ்வோர் எழுத்தாளனும் இப்படி ஒரு சங்கற்பத்தை எடுத்துக் கொண்டு வாழ்கிருன் என்று வைத்து கொள்ளும். அதேபோல், அவன் வாழும் நாட்டிலுள்ள மக்களினதும் தனிப்பட்டவர் களினதும் நல்ல சேவையையும் அதன் வரலாற்றையும் அவற்றுக்கு உதவும் ஆராய்ச்சிகளையுமே கலையாகவும் இலக் கியமாகவும் ஒவ்வேரர் எழுத்தாளனும் படைத்து வெளியிடு கிருன் என்று வைத்துக்கொள்ளும். ஒரு பத்து வருடங்களுள் ஒரு பெரும் சிந்தனைப் புரட்சியும், கலாசார, அரசியல், பொ ளாதார, சமூகப் புரட்சியும் தோன்றிவிடும். உண்மைப்மடி வாழ்வும், உண்மைப்படி சிந்திக்கவும் ஒவ்வொருவரும் முய லும் யுகம் ஒன்று தோன்றிவிடும், வாழ்க்கையே கலையாக வும் தொழுகையாகவும் மாறிப் பரவசமளிக்கும் யுகம். அப்படியென்றல், ஏன் அந்த மாற்றத்தைக் கொண்டுவரக் கூடாது?"
* இது வெறும் இலட்சியக் கற்பனையாக இருக்க முடி யாதா?’ என்றேன் நான் சந்தேகத்துடன். நுட்பமான
Yn
மெய்யும் உள்ளும் மெய் 65
தர்க்க நியாயந்தான், ஆனல், நடைமுறையில் வராத கற் பனை, அப்படித்தான் எனக்குப் படுகிறது."
காலங்காலமாய் கற்பனையில் ஈடுபட்டிருக்கும் கலை, இலக்கியக்காரர்களுக்கு எல்லாமே கற்பனையாகத்தான் படும். நல்லசிவம் சிரித்துக்கொண்டு சொன்னன். ஆணுல், மனித இனம் இனிமேல் கலை, இலக்கியக்காரர்களிடமிருந்து கற் பனையை எதிர்பார்க்கப் போவதில்லை. வாழ்க்கையையே கலை, இலக்கியமாக்கும் பெரும் பணியையே எதிர்பார்க்கிறது. அதற்கு முதற்படியாக இப்போதிருக்கும் கலை, இலக்கிய முறையையே முற்ருக அழிக்க வேண்டும். ஆமாம் ; முற் ருக அழிக்க வேண்டும். அதை அழிப்பதற்கு அதே கலை, இலக்கியத்தையே பயன்படுத்த வேண்டும். மாற்றத்துக்கு முந்திய இடைப்பருவம் அதுதான். கலையை அழிக்கும் கலை, இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம். '
நான் பதில் கூருமல் பேசாமல் இருந்தேன். " என்ன உனக்கு இதில் நம்பிக்கையில்லையா ? " என் ருன் நல்லசிவம்.
நான் சிரித்தேன். அவன் தொடர்ந்தான்.
* நீ நம்பினுலென்ன, நம்பாவிட்டாலென்ன உண்மையை மறைத்துவிட முடியாது. நம்பமுடியாத பல விடயங்கள் இனிமேல் நடக்கப்போகின்றன. பார் இந்தச் செய்தியை. முந்தி இந்த விஞ்ஞானிகளே இதை நம்பினுர்களா? இல்லை. ஆணுல், இன்று நம்பினதோடு அதற்குரிய ஆராய்ச்சிகளை யும் முயற்சிகளையும் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். ஆணுல், இந்த விஞ்ஞானிகள் கூட எவ்வளவு குழந்தைப் பிள்ளைத் தனமாகச் சிந்திக்கிருர்கள். அடுத்த ஞாயிற்றுத் தொகுதிகளிலிருந்து தொடர்புகளை எதிர்பாக்கும் இந்த விஞ் ஞானிகள், அங்கிருப்பவற்றையும் வளர்ச்சியடைந்த விஞ் ஞானத் தொழில் நுட்ப நாகரிகங்களாகத்தான் எதிர்பார்க்
Page 35
66 மெய்யுள்
கிருர்கள். ஏன், அதைவிட வேறு விதமாக இருக்க முடி யாதா? வேறு தளங்களில், வேறு சிந்தனை நிலைகளில் வாழும் அதி உன்னத இனங்களாக இருக்க முடியாதா? நிச்சயமாக அப்படி எத்தனையோ இருக்கின்றன. ஆணுல், இவர்களால் தான் அவற்றைச் சிந்தித்துப் பார்க்க முடியாமல் இருக் கின்றது. சடத்தள உலகங்கள் மட்டுமல்ல, சூக்குமத்தள உலகங்கள், ஆத்மீகத்தள உலகங்கள் எத்தனையோ இருக் கின்றன. அவற்றைப்பற்றியெல்லாம் எப்போது விஞ்ஞானம் அக்கறைப்படுமோ தெரியாது. இருந்தாலும் இந்தளவுக்கு முன்னேறியுள்ளார்களே, அதுவே பெரும் பரவசத்தையூட்டு கிறது. அத்தனை பெருந்தள உலகங்களோடும் தொடர்பு கொண்டது போன்ற பரவசம் எனக்கு ஏற்பட்டது ".
உண்மையாகவே நீ சொல்வதில் உனக்கு நம்பிக்கை யிருக்கிறதா ? " என்று வேடிக்கையாகக் கேட்டேன் நான். * நம்பிக்கையா? " அவன் திருப்பிக் கேட்டுவிட்டுச் சிரித் தான். ‘இது வெறும் நம்பிக்கையல்ல. நிச்சயமான ஆதா ரங்கள் இருக்கின்றன. அடுத்த உலகங்களிலிருந்து எத் தனையோ தடவை அவர்கள் வந்துவிட்டுப் போயுள்ளார்கள். நிச்சயமாக ஆதாரங்கள் தாராளமாக இருக்கின்றன. "
* எவர்கள் வந்தார்கள் ? " அடுத்தவுலகக்காரர்கள்." * எப்போது வந்தார்கள் ? எங்கு வந்தார்கள் ?" " மனித நாகரிகம் தோன்றிய காலந்தொட்டு ( தோன்று வதற்கு முன்புங்கூட வந்திருக்கலாம்) இன்றைய விஞ்ஞான யுகத்தின் தற்காலம்வரை அவர்கள் வந்து போய்க்கொண்டு தான் இருக்கிருர்கள். தனித்தனியாய் வந்துள்ளார்கள். கூட்டங் கூட்டமாய் வந்துள்ளார்கள். அவர்களது வருகை யால் மனித நாகரிக வளர்ச்சியிலும், சிந்தனை வளர்ச்சி யிலும், வாழ்க்கை முறையிலும் அடிப்படையான மாற்றங்
மெய்யும் உள்ளும் மெய் 67
கள் ஏற்பட்டுள்ளன. வட இந்தியாவில், இஸ்ரேலில், அரே பியாவில் அவர்கள் புகுத்திய புது இயக்கங்கள்தான் இன்று வரை மனிதனை மனிதனுக வளர்த்து வரும் உலக பண் பாட்டு இரகசியங்களாக இருக்கின்றது. ஆணுல். இந்த விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பதுபோல் விண்வெளிக் கப்பல்களி லும், பறக்கும் தட்டுகளிலும், ரேடியோச் செய்திகளிலுந் தான் அவர்களின் வருகை தெரிவிக்கப்படும் என்ற கட்டாய மில்லை. அவர்களின் உள்நுழைவு மிக மிக நுட்பமானது. உண்மையில் உள்நுழைவு, அதாவது " இன்பில்ட்ரேஷன் " என்பது அவர்களிடமிருந்துதான் தெரிந்துகொள்ளப்பட வேண்டிய கலையாகும். அத்தனை நுட்பமாக அவர்கள் நுழைந்திருக்கிருர்கள். உட்புகுந்து முழு நாகரிகங்களையே மாற்றி வளர்த்துள்ளார்கள்."
* நீ எதைச் சொல்கிருய்?" என்றேன் ஆச்சரியத்தோடு.
* நீ எதை நினைக்கிருய்? " என்று திருப்பிக் கேட்டான் அவன். கேட்டுவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் அவனே சொன்னுன்.
வேறு யாருமல்ல, எல்லாருக்கும் தெரிந்த நமது சமய ஞானிகள்தான் அவர்கள். அவர்களிற் பெரும்பாலோனேர் அடுத்த உலகிலிருந்து இங்கு வேண்டுமென்றே திட்ட மிட்டு மனிதரைப் போலவே பிறந்து, வளர்ந்து, உட்புகுந்த புரட்சிக்காரர்கள்தான். தனித் தனியாகவும் கூட்டங் கூட் டமாகவும் வந்திருக்கிருர்கள். இப்போதும் நம்முடனே இருந்து கொண்டுமிருப்பார்கள்."
எல்லாருக்கும் தெரிந்ததைத்தான் அவன் சொன்னன். ஆணுல், அவன் அதைச் சொன்னவிதம் சுவையாக இருந்தது. அவன் தொடர்ந்தான்
நம்ப முடியாதவைகள்தான் இனி நடக்கப்போகின்றன. உண்மையைவிட ஆச்சரியமானதும் அற்புதமானதும்
Page 36
68 மெய்யுள்
வேருென்றுமில்லை. முன்பு அங்குமிங்கும் வந்தவர்கள் இனி ஒன்ருகி வருகிற காலம். அங்குமிங்கும் சிறு நடந்த புரட்சிகள் முழுமையடைந்து பெருந்தள வாழ்க்கை பிறக்கிற காலம். அதற்குரிய பெரும்படை உட்புகும் காலம், கலை, இலக்கியமும் இனிச்சாகிற காலம். முழு வாழ்க்கையே கலையாகவும் தொழு கையாகவும் பெரும் பரவசத் தொழிலாகவும் வளரும் போது போலியான ஒரு கலை, இலக்கியம் என்ற தனிப் பிரிவு எதற்கு?
அதைச் சொல்லிவிட்டு நல்லசிவம் வழக்கம்போலச் சிரித் தான்.
எனக்கோ வேதனையாக இருந்தது. நானே சாவது போ லிருந்தது. ஆணுல், அதே வேளை அந்த வேதனைக்குள்ளேயும் ஒருவித விடுதலை உணர்வு ஓடிப் பரவுவதை என்னுல் உணர முடிந்தது.
புதுயுகமும் அதை நோக்கிய
மாற்றங்களும்
தற்காலம் ஒரு புதுயுகத்தை நோக்கி மாறிக்கொண்டி ருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிருேம். ஒன்று செத்துக் கொண்டி ருக்கிறது; மற்றது பிறக்கத் துடிக்கிறது; பிறந்து கொண்டி ருக்கிறது.
இன்று இது பெரும்பரலாரும் ஏற்றுக்கொள்ளும் கருத் தாகும். ஆல்ை, பிறந்து கொண்டிருக்கும் புது யுகத்தின் தன்மைகளைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பவர்கள் மிகச்சிலரே தான்.
பிறந்து கொண்டிருக்கும் புதுயுகத்தைப் பொருள் முதல் வாத அடிப்படையில் பார்த்து சடம், உயிர், மனம் ஆகிய முத்தளங்களுக்குள்ளேயே முழுவதையும் காண முயல்பவர்கள்தான் பெரும்பாலான இன்றைய புரட்சிக் காரர்களாய் இருக்கின்றனர். மார்க்ஸியவாதிகளை இவர்க ளுக்கு உதாரணமாய்க் காட்டலாம்.
சடம், உயிர், மனம் ஆகிய தளங்களுக்கு அப்பாலும் உண்மை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்பவர்கள்கூட, புதுயுகமாற்றத்தை அந்த முத்தளங்களுக்குள்ளேயே காண முயல்கின்றனர். பெரும்பாலான சமயவாதிகளும் காந்தீய வாதிகளும் இந்த ரகத்தினரேதான்.
பிறந்து கொண்டிருக்கும் புதுயுகம் சடம், உயிர், மனம் ஆகிய முத்தளங்களுக்கும் அவற்றிற்குரிய தாமத, ரஐத, சாத்வீக முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு தளத் துக்கும், குணத்துக்குமுரிய வாழ்க்கை முறையைக் கோரு கிறது என்பதைப் புரிந்து கொள்பவர்கள் தான் பிறந்து
Page 37
70 மெய்யுள்
கொண்டிருக்கும் புதுயுகத்துக்கு உண்மையான உருவம்
கொடுப்பவர்களாய் இருப்பர்.
மார்க்ஸிய சித்தாந்தம் புதுயுகத்துக்குரிய பெருந்தத்துவ மல்ல. அப்படி அதை மாருட்டஞ் செய்பவர்கள் சரித்திர வளர்ச்சியைப் பற்றியும், அது காட்டும் சான்றுகளைப் பற் றியும் சீராகத் தெரிந்து கொள்ளாதவர்களேதான்.
மார்க்ஸிய சித்தாந்தம் பதினைந்தாம் பதினரும் நூற் ருண்டுகளில் ஆரம்பமான விஞ்ஞான ரீதியான லோகாயுத அறிவுவாதத்தின் இறுதி க் கோ லமே தா ன், இதைப் போர்ப்பறை ' யில் “ புதிய வார்ப்புகள் " என்ற கட்டுரை யில் விரிவாக நான் விளக்க முயன்றுள்ளேன். அந்த வகையில் பார்க்கும் போது இன்றைய மார்க்ஸியவாதம்
காலங்காலமாகச் சமயஞானத்துக்குப் போட்டியாக வளர்ந்து வந்துள்ள லோகாயத வாதத்தின் இன்றைய இறுதிக் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும். அதனுல் உடல், உயிர், மனம் ஆகிய முத்தளங்களுக்கு அப்பால் செல்ல முய லும் புதுயுகத்தின் பிறப்புக்கு மார்க்ஸிய சித்தாந்தம் வழி வகுக்கப்போவதில்லை. இதுகாலவரை மனவளர்ச்சியடைந் துள்ள மனித இனத்தின் ஒரு பகுதியினர் முழு உண்மை யாக நம்பிய லோகாயத வாழ்க்கை முறையை அதன் விஞ் ஞான ரீதியான சீரான கோணத்தில் வளர்த்துக் காட்டி யுள்ள ஒரு சித்தாந்தமே தான் மார்க்ஸியவாதம். அந்த வகையில் புதுயுகப் பிறப்புக்குரிய சித்தாந்தமாயிருக்காமல் பழைய யுகவாழ்க்கையின், செத்துக் கொண்டிருக்கும் யுக வாழ்க்கையின் முடிவுக்குரிய இலக்கணமும் சிந்தாந்தமு மாகவே மார்க்ஸியவாதம் இருக்கிறது.
ஆணுல், அந்த முடிவைக்கூட அதனுல் தனியாகவே கொண்டுவர முடியாது.
புதுயுகமும் அதை நோக்கிய மாற்றங்களும் 71
காரணம், மனத் தளத்தில் இதுவரை ஒன்ருேடொன்று போட்டியாகவும், அந்தப் போட்டி மூலமே ஒன்றுக்கொன்று உதவியும் பக்கபலமாகவும், வளர்ந்துவந்துள்ள இருபெரும் பார்வைப் போக்குகளுள் ஒன்ருன லோகாயத வாதத்தின் இறுதிக் கோலமாக அது இருக்கிறதேயொழிய, மனத்தளத் தின் அடுத்த முக்கிய பார்வைப் போக்கான சமய சித்தாந் தப் பார்வையின் முடிவாகவும் அது இல்லை.
மார்க்ஸிய சித்தாந்தத்துக்கு விளக்கந்தர முயல்பவர்கள் மனத்தளத்துக்குரிய இந்த இரண்டு போக்குகளான லோகா யதவாதப் பார்வையும் (Materialist outlook) , சமயவாதப் Urf66)Jub ( Metaphysical outlook) 96öt g2b psit pJä கொன்று முரண்பட்டதாகவும் வேறுபட்டதாகவுமே காண்கின் றனர்: விளக்கின்றனர்.
அந்நிலையில், செத்துக் கொண்டிருக்கும் பழைய யுக வாழ்க்கை மனத்தளத்தையே அதன் இறுதி வளர்ச்சித் தள மாகக் கொண்டிருக்கும் வாழ்க்கையென்ருல், அதன் சாவுக் குக்கூட மார்க்ஸிய சித்தாந்தத்தால் பூரணமாக இலக்கணம் வகுத்து வழிகாட்ட முடியாதிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
பழைய வாழ்க்கையின் முடிவைக் காட்டும் சித்தாந்தம், இதுவரை கண்ட பரிணுமத்தின் இறுதித்தளமாயுள்ள மனத் தளத்தின் இருபெரும் போக்குகளான லோகாயதப் போக் கையும் சமயப்போக்கையும் ஒரே வாக்கில் இணைக்கும் சித் தாந்தமாகவே இருக்கவேண்டும்.
இங்கு குறிப்பிடப்படும் யுகமாற்றம் என்பது சாதாரண சிறுகாலக் கட்ட மாற்றங்களைக் குறிப்பிடவில்லை. உயிரினங் களின் பரிணும வளர்ச்சியில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவந்த பழைய யுகமாற்றங்களை ஒத்த ஒரு பெருங் காலமாற்றமே இங்கு குறிக்கப்படுகிறது. சாதாரண வர லாற்று மாற்றங்களுமல்ல.
Page 38
72 மெய்யுள்
மனித பரிணும வளர்ச்சியில் இன்று ஒரு புதுப் பரி
மாணம் ஏற்படப் போகிறது.
சடவுலகம் தோன்றி உயிர் தோன்றும் . வரைக்கு ஒரு காலப் பிரிவு பல கோடி வருடங்களைக் கொண்டதாக இருந் தது. அது சடத்தளம் உருவாகிய காலம் அது முழுமை யடையும்போது உயிர் தோன்றுகிறது. ஆணுல், உயிர் இனங் களின் வளர்ச்சியோடு சடத்தளத்திலும் திரும்பவும் வளர்ச்சி ஏற்படுகிறது. எனவே, ஒவ்வொரு தள வளர்ச்சியையும் ஒரு சுழல் வளர்ச்சியாகக் கொள்ள வேண்டும். சடத்தளச் சுழல் முழுமையடையும்போது உயிர்த்தளச் சுழல் தொடங்குகிறது. அந்த உயிர்த்தள வளர்ச்சி திரும்பவும் சடத்தளத்திலும் வளர்ச் சியை ஏற்படுத்தும் ஒரு சுழலாக இருக்கிறது. உயிர்த்தள வளர்ச்சி மனத்தள வளர்ச்சியில் முழுமையடைகிறது. ஆனல், மனத்தன வளர்ச்சி என்பது முந்திய சடத்தளத்திலும், பிந்திய உயிர்த்தளத்திலும் திரும்பவும் ஒரு புது வளர்ச்சியைப் புகுத் திய சுழல் வளர்ச்சியாகவே இருக்கிறது. மனத்தளம் வளர்ச்சி யடைந்துள்ள மனிதனில், சடமும் உயிரும் ஒரு புதுப் பரி மாணங்களைக் காட்டும் பரிணும வளர்ச்சியாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, அப்படிப்பட்ட ஒரு புது வளர்ச்சியைக் காட் டும் மனிதன், தனது புறச் சூழலிலுள்ள சடத்தளத்தையும் உயிர் தளத்தையும் புதுப்போக்கில் மாற்றியுள்ளான். இன்றைய நாகரிக வளர்ச்சி, மனிதனின் மன வளர்ச்சி யானது புறச்சூழலுக்குரிய சடத்தளத்திலும் உயிர்த்தளத்தி லும் மனத் தளத்திலும் ஏற்படுத்தியுள்ள பலகோண மாற் றங்களைக் காட்டுகிறது.
சடத்தளத்துக்குரிய குணந்தான் தாமத குணம். வேக மற்ற மந்தக் குணம்.
உயிர்த் தளத்துக்குரிய குணந்தான் ரஜத குணம். இச்
சையை வெளிப்படுத்தும் குணம். வேகம் பிறக்கும் குணம்.
பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் 73;
செயல் வெளிப்படையாகத் தெரியும் குணம். அதனுல் வளர்ச்சி மாற்றங்களும் துரிதமாகத் தூண்டப்படும் குணம்.
மனத்தளத்துக்குரிய குணந்தான் சாத்வீக குணம். உயி ரின் இச்சைகளுக்குரிய வேகம் அறிவாலும், சீரிய சிந்தனை யாலும் கட்டுப்படுத்தப்பட்டு அமைதி காணும் குணம். சீரிய செயலைத் தூண்டும் குணம்.
மனிதன் உடல், உயிர், மனம் ஆகிய மூன்று தளங் களுக்குமுரியவனுக இன்று இருக்கிருன், அதனுல் அந்த மூன்று தளங்களுக்குரிய குணங்களும் அவனிடம் காணப்படு கின்றன.
இன்று மனத்தளம் முழுமையடைந்து மனதையும் கடந்த புதுத் தளம் மனித வளர்ச்சியில் வெளிப்படப் போகிறது. மனித இனமே உயிரினங்களின் உச்சப் பரிணும வளர்ச்சியைக் காட்டுகிறது. அந்த இனத்திடமே அடுத்த தளம் வெளிப் படப் போகிறது. -
மனதையும் கடந்த புதுத் தளம் புதிதாக உருவாக்கப் பட வேண்டிய ஒரு தளமல்ல. சடவுலகப் பார்வைக்குப் புலனுகாவிட்டாலும் ஏற்கனவே அது இருக்கிறது, அதற் கும் அப்பாற்பட்ட தளங்களும் இருக்கின்றன. இனி வரும் வளர்ச்சியில்தான் சகல மக்களும் அவற்றைக் கண்டு அனுபவிக்கும் நிலை ஏற்படும்.
இனி வரும் தளம் பேரறிவுத் தளமாகும். மனத்தளத் துக்கும் அப்பாற்பட்ட விஞ்ஞான மயகோசத்துக்குரிய பேரறிவு. அது வெளிப்படும்போது அதன் மூலம் திரும் பவும் உடல், உயிர், மனம் ஆகிய தளங்கள் புது வளர்ச் சிக்குள்ளாகும் ஒரு சுழல் ஆரம்பமாகும். அந்தச் சுழல் வளர்ச்சிக்குரிய யுகத்தில் உடலுடன், உயிருடன், மனதுடன் அவற்றைத் தனது பேராட்சிக்குட்படுத்தும் பேரறிவு (விஞ் ஞானமயகோசம்) எல்லாவற்றிலும் பேராட்சி நடத்தும்.
Page 39
74 மெய்யுள்
அதாவது, புறச்சூழலும் அதற்கேற்றவாறு நிச்சயமாக மாற் றப்படும்.
பழைய யுகம் செத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கும், புதிய யுகம் பிறக்க முயன்றுகொண்டிருக்கிறது என்பதற்குரிய உண்மையான அர்த்தம் இதுதான்.
உடல், உயிர், மனம் ஆகிய மூன்று நிலைகளுக்கும். அவற்றுக்குரிய தாமத, ரஜத, சாத்வீக முக்குணங்களுக்கும் உரிய சுழல் முடிவடைந்து, அந்த மூன்று நிலைகளையும் முக் குணங்களையும் தனது பேராட்சிக்குட்படுத்தும் வெளிப்படை யான பேரறிவின் ஆட்சிக்குரிய யுகச் சுழல் ஆரம்பித்துக் கொண்டிருக்கிறது. நான்காவது நிலைக்கும் நான்காவது குணத்துக்குமுரிய யுகச் சுழல்.
பேரறிவுத் தளம். பேரறிவுக்குரிய, முக்குணங்களைக் கடந்த சத்திய குணம்.
மனத்தளத்தின் வளர்ச்சியும் அதன் சாத்வீக குணத்தின் எழுச்சியும் ஏற்பட்ட காலத்திலிருந்தே மனிதனின் தாகரீக வளர்ச்சியும் சமயங்களின் எழுச்சியும் தோன்றின எனலாம். நாடோடிக் கூட்டங்களாய் வேட்டையாடித் திரிந்த பழைய கற்காலக் கட்டத்திலிருந்து நதிக்கரைகளில் நிலை யாகக் குடியேறி விவசாயம் மேற்கொண்ட காலம் வரை யுள்ள இடைப்பகுதியில்தான் மனிதன் பூரணமாகத் தன்னை வெளியுலக வாழ்க்கையில் மிருக நிலையிலிருந்து விடுவித்துக் கொண்டான். அந்த இடைப்பட்ட காலப்பகுதியில்தான் மனிதனுக்குரிய உண்மையான மனத்தளம் என்பது உருவா கிற்று. அந்தக் காலப்பகுதியில்தான் மனிதனுக்கும் அவனது மனத்தளத்துக்கு முரிய விசேஷ குணமான சாத்வீக குண மும் எழுச்சி பெற்றது.
ஆயுதங்களின் உதவியையும் பொருட்களின் பயனையும் உணர வந்த மனம், இன்றைய பொருளை அடிப்படையாகக்
புதுயுகமும் அதை நோக்கிய மாற்றங்களும் 75
கொண்ட நாகரீக வளர்ச்சிக்கு வித்திட்டது. அதே மனத் தளத்தின் முதிர் ந் த குணமான எழுச்சியுற்ற சாத் வீக குணம் சமய ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை மனிதனிடம் வளர்த்தது.
அதனுல் இந்த மனத்தள - சாத்வீக குண மனித நாக கத்தினதும் வாழ்க்கையினதும் பெரும் பார்வைப் போக்குக ளாக இரண்டு போக்குகள் வளர்ச்சியடைந்துள்ளன.
முதலாவது பொருள் முதல்வாதம், இரண்டாவது, சமயத்தை ஏற்றுக்கொள்ளும் கருத்து முதல்வாதம்.
இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டியாக வளர்ந்து வந்திருந்தாலும், ஒன்றுக்கொன்று பக்கபலமாக நின்று உதவியுந்தான் வந்துள்ளன.
இன்று செத்துக் கொண்டிருக்கும் யுகம் மனத்தளத்துக்கு உரிய யுகமென்ருல், மனத்தளத்துக்குரிய இந்த இரண்டு சித்தாந்தப் போக்குகளும் மாற்றமுற்றுத்தான் ஆகவேண்டும். அது மட்டுமல்ல, பிறக்கவிருக்கும் பேரறிவுப் பெருந்தளத்தி லிருந்தும் அதற்குரிய பெருந்தத்துவப் போக்கிலிருந்தும் பார்க்கும்போது இந்த இரண்டு சித்தாந்தப் போக்குகளும் ஒரே தளத்துக்குரிய இரு சகோதரப் போக்குகளேதான்.
இன்று இந்த இரண்டையும் ஒன்றையொன்று எதிர்த்த போக்குகளாகப் பார்ப்போர் காலத்தை உணராதவர்களாகவே இருப்பர். பிறக்கவிருக்கும் பெருந்தத்துவத்துக்கு உருவங் கொடுக்க விரும்புவோர் முதலில் இந்த இரண்டும் ஒன்றை யொன்று தழுவி முழுமை அடையும் கோலத்தைக் காண வேண்டும். அந்த முழுமையிலேயே அவற்றின் அழிவுக்கும் அடுத்த பேரறிவுத் தளத்துக்குரிய பெருந்தத்துவத்தின் பிறப் புக்கும் வித்திருப்பதையும் கண்டு, அதைப் புத்திபூர்வமாகச் சிந்தனையாலும் செயலாலும் வளர்க்க வேண்டும்.
Page 40
வர்க்கவியலும் குணவியலும்
- ஒரு பரிணும வரலாற்றுக் கண்ணுேட்டம்
"மெய்யுள்" உருவம் ஓர் எழுத்தாளனின் வித்துவச் செருக்கு, ஆணவம் தன்னை நிறுவுவதற்காகக் கண்டு பிடித் துள்ள பம்மாத்தல்ல. இன்று பல எழுத்தாளர்கள் மிகமிகச் செயற்கையாக உருவாக்கும் கற்பணுவாதக் கோலங்களில் இருந்து மெய்யுள் முற்ருக மாறுபட்டது. மெய்யுள் ஓர் எழுத்தாளனின் ஆணவ அறுப்பு முயற்சியின் உருவமாகும். இன்றைய தத்துவ வளர்ச்சியின் தவிர்க்க முடியாத இலக்கிய வெளிப்பாடாகும். அந்தத் தத்துவ வளர்ச்சி இன்றைய சிந் தனை, செயல் சரித்திர வளர்ச்சியின் தவிர்க்க முடியாத குர லாகும், இன்றைய வரலாறு தனிப்பட்ட மனிதனதும், முழு மனித இனத்தினதும் அறிவுத் தளத்துக்குரிய தனிப்பட்ட ஆணவத்தையும் கூட்டு ஆணவத்தையும் அறுத்து, மனி தனைப் பேரறிவுத் தளத்துக்குள் இறக்கும் நிலையை எட்டி யுள்ளது. மனிதனைப் பரவலாகப் பரம்பொருளான சத்தியத் தின் நேரடித் தரிசனத்திற்குத் தயார்ப்படுத்துகிறது. அதற் குரிய பெருந்தத்துவம் அறிவுத்தளத்திற்குரிய சகல சிறு தத் துவங்களினதும் சமயங்களினதும் கூட்டு ஆணவத்தைக் குலைக்கும் தரிசன விளக்கமாக இருக்கிறது. அந்தப் பெரும் த்த்துவத்திற்குரிய இலக்கியம் அதேவகையில் இலக்கி தத்தையே அழிக்கும் இலக்கியமாக மாற்றப்பட்டு, இது வரையில் இருந்த இலக்கியத்தின் கற்பனைக் கோலங்களை எல்லாம் குலைக்கும் கூட்டுத்தியானமாக வளர வேண்டி யிருக்கிறது. ( அது ஒரு பெரும் சத் தி ய இ லக் கி ய கிய வளர்ச்சியைத் தோற்றுவிக்கும். ) அதனுல் அதை எழுதும் எழுத்தாளனும் தனது ஆணவத்தை அறுத்து " நானை "" க் கடந்தவனுகவே பேரறிவின் நேரடி இயக்கத் தைத் தன் மூலம் வெளிக்காட்ட விட்டுக்கொடுப்பவனுகவே
வர்க்கவியலும் குணவியலும் 77
இருப்பான் ; இருக்க வேண்டும். அந்த வகையில் புதிய மெய்யுளுக்குரிய உருவம், உள்ளடக்கம், மொழி நடையெல் லாம் கற்பனை அறுப்புக்கம் ஒழிப்புக்குமுரிய சாதனமாகவும் சாதனையாகவுமே நிற்கும். ( ' போர்ப்பறை யில் ' கலை பற்றிய ஒரு விஞ்ஞானக் கணக்கெடுப்பு ' ) . எனவே, மெய் யுள் இன்றைய தவிர்க்க முடியாத Anti இலக்கியம். Anti இலக்கியம் என்றும் வேண்டுமானுல் சொல்லிக் கொள் ளலாம்.
எனவே, இவற்றை விளக்க இன்றைய பெருந்தத்து
வத்தின் சில வெரிக்கோடுகளையும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகும்.
பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற பாகு பாடு இன்று விஞ்ஞான ரீதியாகத் தன்னை நிறுவ முடியாத குருட்டுப் பார்வையாகி விட்டது. சடம், உயிர், நினைவு (எண்ணம்)என்பவை வெவ்வேறு தளத்தோற்றங்களாக இருப்பினும், அடிப்படையில் அத்வைதக் கலப்பையே காட்டு கின்றன என்பதை விஞ்ஞானம் இன்று மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்டுள்ளது. சடத்தை ஆராயும்போது, சடமானது சடத்தின் உருவத்தைக் கடந்த சக்தி ஒளி அலையாகவும் அவற்றிக்கு அப்பாற்பட்டதாகவும் மாறுகிறது. அப்படி யென்ருல், சடத்தை அல்லது பொருளை முதலாக எப்படிக் கணிப்பது? உண்மையில் சடம் (பொருள்) என்பது நிலை யான ஓர் அடித்தளமல்ல. -
இன்றைய மனித நினைவு நிலையின் உச்ச வளர்ச்சி (பரிணுமம்) சடத்தைக் கடப்பதோடு மட்டும் நிற்காது முழுச் சடத்தையும் கரைத்து, அதன் நிலையான நிரந்தர அடித் தளத்தில் நிறுவலாம் என்றும், அந்த நிலையான சடத்தின் அடித்தளம் மிகப் பிரமாண்டமான பேர்ஞான (சாதாரண நினைவு நிலையைக் கடந்த ) தளமாக இருக்கும் என்ற கோட்
Page 41
78 மெய்யுள்
பாட்டை விஞ்ஞானம் இன்று மிகத் துணிச்சலாக முன் வைக்க வந்துள்ளது. (ஆர்தர் சி. கிளார்க்கின் 2001 ஒடிசி)
இந்த நிலையில் பொருளை முதலாகக் கொள்வது எப்படி ? இன்றைய சாதாரண மனிதன் அறிந்த கருத்தை அல்லது அறிவு நிலையை அல்லது நனவு நிலையை முதலாகக் கொள் வது எப்படி ?
இரண்டும் பிழையே. பிழை என்பதைவிட இரண்டும் பாதிப் பாதி விளக்கங்கள் என்று சொல்வதே சரி. இரண் டையும் இணைத்த அதே சமயம் இரண்டையும் கடந்த புதிய பார்வை தேவைப்படுகிறது. அதுவே மெய்முதல்வாதம்.
அந்தப் புதிய பார்வையைப் பழைய சமயங்கள் ஏற் கனவே முன் வைத்துவிட்டன.
பிரம்மமே சக்தி. சக்தியே பிரம்மம். முழுப் பிரபஞ்ச சக்தியும் அதன் உருவ வெளிப்பாடு களும் அடிப்படையில் மாற்றமற்ற பிரம்மமே (எல்லையற்ற நித்திய பேர்ஞான நிலையே ) என்று வேதாந்தம் கூறு கின்றது.
சடத்திற்கும் உயிருக்கும் நினைவுக்கும் அப்பாற்பட்ட தாகவும், அவற்றை இணைப்பதாகவும் நிற்கும் அந்த நித்திய பேர்ஞான விடுதலை நிலையை அனுபவித்தவாறே, அதில் நின்றவாறே, அந்த அனுபூதி மகான்கள் கூறியுள்ளனர். அவர்கள் மாபெரும் விஞ்ஞானிகள்.
அந்த நிலையை இன்றைய விஞ்ஞானிகள் இன்னும் அனுபவிக்கவில்லை. அந்த நிலையை அளக்கும் கருவிகளோ மனப்பக்குவமோ அவர்களிடம் இல்லை. இருப்பினும், அந்த நிலையை யூகிக்கும் கட்டத்திற்கு அவர்கள் வந்துவிட்டனர். அந்த யூகத்தை எதிர்காலத்திற்குரிய கோட்பாடாகவும் முன் வைக்கத் தொடங்கியுள்ளனர்.
வர்க்கவியலும் குணவியலும் 79
இந்த நிலையில், தனிப்பட்ட சமய ஸ்தாபனங்களையும் அவற்றின் தவருண பழக்கங்களையும் ஒதுக்குவது வேறு. அவற்றுக்குக் காரணமாயிருந்த சடத்தையும் நினைவையும் தாண்டிய பேர்ஞான நிலையை ஒதுக்குவது வேறு. பின் னதை ஒதுக்க முடியாது. அது நிரந்திரமானது. மார்க்ஸ் அதையுமே அபின் என்று ஒதுக்கிவிட முயன்ருர், ஆணுல், இன்றைய விஞ்ஞானம் அந்த அடித்தளப் பேர்ஞான விடுதலை நிலையை நோக்கியே அடியெடுத்து வைக்க முயல்கிறது.
மனித சமூகத்தின் வளர்ச்சியை அறிய ஆதிப் பொது வுடமை நிலையிலிருந்து சரித்திரத்தை ஆராய்ந்தால் போதாது என்றும், அதன்மூலம் பெறப்படும் உண்மைகள் இன்றைய பிரச்னைகளைத் தீர்க்க முடியாது என்றும் இன் றைய விஞ்ஞானி உணரத் தலைப்பட்டுள்ளான். மனித சமூ கத்தின் ஆரம்ப நிலைக்கும் முந்திய உயிரின பரிணுமத்தின் வரலாற்றிற்குரிய இயக்கவியல் என்ன ? அதற்கும் முந்திய சடநிலை வளர்ச்சிக்குரிய இயக்கவியல் என்ன ? சடத்துக்கும் முந்திய நிலையின் இயக்கவியல் என்ன ?
இன்றைய சமூகவியல் ஆராய்ச்சி, மார்க்ஸாம் ஏங்கல் சும் கருதியதுபோல் வெறும் பொருளியல் அரசியல் ஆராய்ச்சி மட்டுமல்ல. அது அடிப்படையில் உயிரியல், பெளதிகவியல் ஆராய்ச்சியாகவும் அதற்கு அப்பாற்பட்ட ஆன்மீக விசாரமாகவும் உருமாற வேண்டிய நிலைக்கு வந்து விட்டது. மார்க்சையும் ஏங்கல்சையும் விட Julian Huxley, Teirhard, Aurobind0 போன்றவர்கள் இன்றைய தேடலுக்கு உருவங் கொடுப்பவர்களாவர். அந்தத் தேடல் திரும்பவும் பழைய நான்கு முக்கிய சமயங்களினதும் அடிப்படையை உணரும் விஞ்ஞான - ஆன்மீகத் தேடலாகவே இருக்கமுடி யும். ஒருவகையில், மார்க்சீய பொதுவுடமையும் அதற் குரிய அகவிடுதலையும் ஆன்மீக விடுதலையேதான். ஆனல், - உற்பத்திச் சாதனங்களையும் அதற்குரிய உறவு முறைகளை
Page 42
80 மெய்யுள்
யும் மாற்றுதலால் மட்டும் அந்த அகவிடுதலை வரப்போவ தில்லை. அப்படி வரலாம் என்று நினைப்பது சடம், உயிர் மனத் தளங்களுக்குள்ளேயே அவற்றிற்கு அப்பாற்பட்ட விடு தலையைக் காணலாம் என்று கனவு காண்பதாகும். அது இன்றைய விஞ்ஞானத்துக்கே முரணுனது. சடத்தின் தளமே நிலையற்று வழுவிக்கொண்டோடும் போது, நிரந் தர அகவிடுதலையை வெறும் உற்பத்திச் சாதன - உறவு முறையால் மட்டும் எப்படி நிரந்திரமாக நிறுவலாம் ?
எனவே, புதிய பெருந்தத்துவம் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற பாகுபாடுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பொருளையும் நினைவையும் கடந்த சத்தியம் அல்லது உண்மை நிலை சத்தாகவும் சித்தாகவும் இருக்கிற படியால் பாகுபாட்டுக்கு இடம் இல்லை. புதிய தத்துவம் அடிப்படையில் ஆன்மீகத் தத்துமமாகவே இருக்கும். அத ணுல் இதுவரை நிலவிய சமயங்களினதும் அடிப்படை ஒருமை நிலைநாட்டப்படும். சகலதும் சத்தியமே என்ற அடிப்படை உண்மை சகல வேலைகளிலும், சகல சமூக இயக்கங்களிலும் தெரியவரும்.
அடிப்படைச் சத்திய அத்வைத நிலையைச் சகலதிலும் தெரிய வைப்பதே புதிய பெருத் தத்துவத்தின் நோக்காக இருக்கும். சகலதிலும் எழுச்சியடைவது சத்தியமே. அந்த எழுச்சியையே " சர்வோதயம் " என்பது குறிக்கின்றது.
ஆணுல், இந்தத் தத்துவத்தின் பூரணமான உருவம் இனி மேல்தான் வரவேண்டியுள்ளது. மனித சமூகத்துக்குரிய வரலாற்றை சடம், உயிர், மனம் முதலிய தளங்களின் தோற் றங்களின் வரலாற்ருேடு இணைத்துப் பார்க்கவும், ஒவ்வொரு கட்டத்திலும் வரலாற்று இயக்கம் எவ்வாறு இருந்தது என்ப தனையும், இனிமேல் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை யும் ஆன்மீக -விஞ்ஞான ரீதியாக விளக்க வேண்டியுள்ளது.
வர்க்கவியலும் குணவியலும் 81.
சகல கோட்பாடுகளையும் மதிப்பீடுகளையும் தகர்த்துக் கொண்டு எழும் ஒரு பிரமாண்டமான சிந்தனை - செயல் எழுச்சிக்குரிய ஒரு தத்துவ உருவமாக அது அமையப் போகிறது.
குறிப்பாக வர்க்கவியல் என்பது அற்பமான விடயமாகி விடும். இனிமேல் குணவியல்தான் முக்கியத்துவம் பெறும், குணங்களைப்பற்றிக் கூறிய சமயங்கள் எவற்றின் அடிப்படை யில் அவை வந்தன என்று கூறவில்லை. உண்மையில் அவை பரிணுமக் கட்டங்களுக்குரிய குணங்களாகும். சடநிலைவெளிப் பாட்டின் குணமே தாமத குணமாகும் (சடத்துக்குரிய மந்தம் - அசைவின்மைப் பண்பு). உயிர்நிலை வெளிப்பாட்டின் குணமே ரஜதகுணமாகும் (உயிருக்குரிய வேகம், அசைவுப் பண்பு), மன நிலை வெளிப்பாட்டின் குணமே சாத்வீக குணமாகும். (மனதுக்குரிய பண்புகளான அறிவு, அன்பு, பண்பாடு இவற் றைக் குறிப்பது). மனித வரலாறு இந்தக் குணங்களைக் கடக்கும் பரிணுமத்தின் வரலாருகும். குணங்களுக்குட்பட்ட உருவங்களிலும், தளங்களிலும் குணங்களைக் கடந்த சத்தி யத்தை வெளிப்படுத்த முயலும் வரலாருகும். குணங்களைக் கடக்கும் அம்முயற்சி சமூகமளவில் நடக்கும்போது படிப்படி யாக சமூக எழுச்சியையும் அதற்குரிய போராட்டங்களையும் காட்டுகிறது.
பழைய இந்து மரபின் சாதிப் பிரிவுக்கள் எந்த அடிப் படையில் நிறுவப்பட்டன என்பதற்குரிய பூரண விளக்கங்கள் இதுவரை காட்டப்பட்டதில்லை. ஆணுல், உண்மையில்பழைய நான்கு வர்ணங்களும் சமூகத்தின் அளவில் மனிதன் இலகு வாகக் குணங்களைக் கடந்து வளர்வதற்கு வகுக்கப்பட்ட பிரிவு கள்தான். தனிப்பட்ட மனிதன் தன்னளவில் குணங்களைக் கடந்து வாழ்வதற்கு நான்கு ஆச்சிரமங்கள் இருந்தன. பிரமச் சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், சந்நியாசம். அதேபோல் சமூகமளவில் பரிணும முன்னேற்றத்திற்காக வகுக்கப்பட்ட
Page 43
82 மெய்யுள்
பிரிவுகள்தான் பிராமண சத்திரிய, வைசிய, சூத்திர வர்ணங் களாகும்.
முழு உயிரினங்களினதும் வளர்ச்சியை விஞ்ஞான ரீதி யாகக் கணக்கெடுத்து, அந்தக் கணக்கெடுப்புக்கு ஏற்ப மனித பரிணுமத்தைச் சத்திய உச்சத்தை நோக்கித் துரிதப் படுத்தி வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டவையே அந்த ஆச்சிரம - வர்ணப்பாகுபாடுகளாகும். மறுபிறப்புக் கொள் கையோடு அவை பொருத்தப்பட்டு, " தத்துவம் ஆசி' என்ற இலட்சிய நிலையைச் சதா முன்வைத்து சமூக இயக் கமே பிரமிக்கும் வகையில் ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கிறது.
உயிரினம் தனது பரிணுமப் பிரயாணத்தில் நனவு நிலைக் குரிய மனத்தளத்தில் ஏறியபோது மனித நாகரீக வளர்ச் சியும் ஆரம்பமாகிறது எனலாம். பழைய கல்லாயுத காலம் முதல் நதிக்கரை நாகரீக எழுச்சிவரை மனித இனம் அந்த மனத்தளத்துக்கு ஏற நடத்திய தயாரிப்புக் காலமே மிருகத் துக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட கலப்புநிலை. அந்தக் கலப்பு நிலைக்குரிய மனநிலையை உண்மையான மனித மன நிலையாக - உண்மையான மனத்தளத்துக்குரிய நிலையாகக் - கொள்ளாமல் மிருக - மனித மாற்றுவலயத்துக்குரிய ஆதி மன நிலையாகவே கொள்ள வேண்டும்.
அதற்குப்பின் வந்த எழுச்சியில் மனித அறிவுநிலை உண் மையான மனித மனத்தளத்துக்கு ஏறியபோது நான்கு முக்கிய வர்க்க வித்தியாசங்களைக் காட்டிற்று.
முதலாவது, மனம் மனத்தளத்திலேயே லயித்த நிலை. மனமானது தன்நினைவின் தளத்திலேயே அதாவது அறிவி லேயே அதிகம் வாழ்ந்தநிலை. அதனுல் அது உண்மையான மனத்தளத்திற்குரிய சாத்வீக குணத்தில் வாழ்ந்தநிலை. அன்பு, அறிவு, அகிம்சை மேலிட்ட நிலை. மனத்தளத்துக் கும் அப்பாற்பட்ட பேரறிவுத் தளத்தின் எல்லைகளையும்
வர்க்கவியலும் குணவியலும் 83
தொட்டும் ஊடுருவியும் பாய்ந்த நிலை, பேரறிவுக்கசிவும் மெல்ல மெல்ல உட்புகுந்தநிலை.
அந்த நிலைக்குரிய குணம் சாத்வீக குணமென்ருல், அந்தக் குணத்துக்குரியதாகச் சமூகத்தில் தெரிந்த வர்க்கமே பிராமண வர்ணமாகும். மனித மனம் மனத்தளத்தில் வாழ்ந்தவாறு அதற்கப்பாற்பட்ட பேரறிவுத் தளத்துள்ளும் ஊடுருவ முயன்ற போக்கை வெளிப்படுத்திய வர்க்கம்.
மனித மனம் மனத்தளத்தில் லயித்து அதற்குரிய சாத்வீக குணத்தில் நிற்காமல் உயிர்த் தளத்துக்குரிய ரஜத குணத்துக்குட்பட்டு நின்ற நிலை இரண்டாவது. உயிர்த் தளத்தின் வேகம், கோபம், ஆசை ஆகிய ரஜத குணப் பண்புகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த மனித மனநிலையைப் பிரதிபலித்த வர்க்கமே சத்திரிய வர்ணமாகும். அது இரண் டாவது வர்க்கம்.
மூன்ருவதாக, மனித மனமானது உண்மையான மனத் தளத்துக்குரிய குணமான சாத்வீக குணத்திலும் லயிக்காது, உயிர்தளத்துக்குரிய (மன வளர்ச்சியற்ற உயிர்களுக்குரிய) ரஜத குணத்திலும் லயிக்காது உயிரினத்துக்கு முந்திய சடத்திற்குரிய குணமான தாமதகுணத்தில் நின்றபோது அது மந்தப் போக்காகவும் சடமான பொருட்களில் உள்ள ஆசையாகவுமே வெளிப்பட்டது.
சமூகத்தில் அதை வெளிப்படுத்திய வர்க்கமே வைசிய வர்க்கமாகும்.
மிருக - மனித மாற்று வலயமான ஆதிக் கலப்பு நிலையில் இருந்து (கல்லாயுத காலம் முதல் நதிக்கரை நாகரீகம் வரை) உண்மையான மனத் தளத்துக்கு எழுச்சி யுற்ற மனித குலம் இந்த மூன்று மனப்போக்குகளுடன் இன்னுமொன்றைக் காட்டிற்று,
Page 44
84 மெய்யுள்
மனத் தளத்துக்கு மனிதகுலம் எழுச்சியுற்ற காலத்துக் குப் பின்பும் ஆதி - மிருக மனித மாற்று வலயத்துக்குரிய இடைத்தளத்தில் நிற்கும் மிருக - மனித கலப்புப் போக்கு. மனித மனமானது சாத்வீக, ரஜத, தாமத குணங்களில் லயிக்காது அவற்றுக்கும் கீழ்ப்பட்ட ஆதி இடைத்தள இயல்பைக் காட்டும் நிலை. அந்த மிருக - மனித இடை யறிவுக்குரிய சமூக வர்க்கமே சூத்திர வர்க்கமாகும்.
பழைய பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர சமூக வர் ணங்களின் அர்த்தங்கள் இவைதான். இவை உண்மையில் பிறப்பை அடிப்படையாகக் கொண்டவையல்ல. இவை குணங் களை அடிப்படையாகக் கொண்டவை. உடலை அடிப்படை யாகக் கொண்டவையல்ல. மனத்தளங்களின் நினைவுகளை அடிப்படையாகக் கொண்டவை.
குணமும் நினைவுகளும் நிலையானவையல்ல. மாறுபடக் கூடியவை. சடம், உயிர், மனம் ஆகிய பெருந்தளங்களே மாறிக் கொண்டிருக்கும் பெருந்தளப் போக்குகளாக இருக்கும் போது மனத்தளத்தின் நினைவுகளும், அவை வெளிப்படுத்தும் குணச்சாயல்களும் எப்படி மாற்றமுருமல் இருக்கும்?
அவை மாறுபவை, அதுமட்டுமல்ல, புத்திபூர்வமாக மாற் றப்பட வேண்டியவை. அவற்றைக் கடந்து மாற்றமற்ற சத்திய நிலையை அடையவேண்டும் என்பதே அந்த வர்ணங் களை வகுத்த சமூக மரபின் நோக்கமாகும்.
ஒரு மனிதன் தனது ஒரு பிறப்பிலேயே வர்ணங்களைக் கடக்க வழிவகைகள் இருந்தன. அவை பிரமச்சாரிய, கிரகஸ்த, வனப்பிரஸ்த, சந்நியாச ஆச்சிரமங்களாகும். சந்நியாசி குணங்களைத் தாண்டியவன். அதனுல் சகல வர்ணங் களினதும் வழிபாட்டிற்குரியவன். மனத்தளத்தையும் தாண் டிப் பேரறிவுக்குள் நிற்பவன். .
வர்க்கவியலும் குணவியலும் 85
பிறப்பால் கட்டுப்படுத்தப்படாத இந்த வர்ணுசிரம வழி வகைகள் பிராமண, சத்திரிய வர்க்கங்களுக்குமட்டுமே உரி யவை என்றும் குற்றஞ் சாட்டப்படலாம். ஆனல் மறுபிறப்பு, கர்மமுயற்சி என்ற கொள்கைகளின் அடிப்படையிற் பார்க்கும் போது, சத்திய விடுதலைக்குரிய குணப்பக்குவத்தைக் கொண்ட வன் அதற்குரிய சரியான வர்ணத்திலேயே பிறப்பான் என்பதையும் மறுக்க முடியாது.
இருப்பினும், சூத்திரன் ஒருவனுக்குக்கூட உண்மையான விடுதலையை விரும்பி, வர்ணக் கட்டுப்பாடுகளில் இருந்து தப்பி ஓடி சந்நியாசியாக வாழும் துணிவும் தேடலும் இருந் திருந்தால் அவனுங்கூட சகல வர்ணங்களினதும் மரியாதை யையும் ஆதரவையும் பெற்றுத்தான் இருப்பான்.
எனவே, தனிப்பட்டவனின் விடுதலைக்குச் சதா நேரமும் வழி இருந்தது. பிறப்பும் அதற்குரிய உடலும் ஒரு தடையல்ல. ஆணுல், தனிப்பட்டவனைப்போல் முழுச் சமூகமும் வளரவேண்டி யிருந்தது. முழுச் சமூகத்தையும் ஒரு தனி மனிதனுக எடுத் தால், அந்தச் சமூகம் தாண்ட வேண்டிய பிரமச்சாரிய, கிரகஸ்த, வனப்பிரஸ்த, சந்நியாச நிலைகளே சூத்திர, வைசிய, சத்திரிய, பிராமண வர்ணங்களாகும். முழுச் சமூகத்தையும் பிராமண நிலைக்கு உயர்த்துவதும் பேரறிவுக் குத் திசை திருப்புவதுமே பிராமண வர்க்கத்துக்குரிய தர்ம மாகும்.
தனி மனிதனைப்போல் முழுச் சமூகமும் அவ்வாறு வள ரவே செய்தது; செய்கிறது.
பிராமண உச்சத்தை நோக்கிச் சத்திரிய வர்க்கம் எழுச் சியுற்றது. சமூகத்தினதும் தனி மனிதனதும் வளர்ச்சிக்குத் திசை காட்டவும், மனத் தளத்துக்கும் அப்பாற்பட்ட பேரறி வுத் தளத்துக்கு வழிகாட்டவும் பிராமண வர்க்கத்தைப்போல் சத்திரிய வர்க்கமும் உரிமை பெற்றது. அந்த எழுச்சி சத்
Page 45
86 மெய்யுள் திரிய வர்ணத்துக்குக் கீழ்ப்பட்ட வர்ணங்களின் வளர்ச்சியை யும் துரிதப்படுத்தியது. வர்ணப் பிரிவுகளின் எல்லைகளிலும் முதல் தகர்ப்பை ஏற்படுத்திற்று. (புத்தர் - மோஸஸ் காலத்தை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். )
அதுபோல் அடுத்ததாக வைசிய குலம் பிராமண நிலைக்கு எழுச்சியுற்றது. ஒரு காலத்தில் பிராமண வர்க்கமும் பின்பு பிராமண - சத்திரிய குலங்களும் சமூகத்தில் பெற்றிருந்த அதிகாரத்தையும் தகுதியையும் வைசியரும் பெற்றுக்கொண் டனர். அவர்களின் எழுச்சி சூத்திரரின் எழுச்சியையும் துரிதப் படுத்துகிறது. அதேபோல், முந்திய வர்க்கங்களின் எல்லை களை இன்னும் தளர்த்திக் கலக்க வைத்தது. ( கிறிஸ்து முதல் முகம்மது ஊடாக ராமகிருஷ்ணர் வரையுள்ள காலம்.)
இன்று சூத்திரர் எழுச்சியடைந்துவிட்ட காலமாகும். இராமகிருஷ்ணருக்குப் பிந்திய இந்த இருபதாம் நூற்ருண்டு, மனித வரலாறு சமூகத்தின் சகலரும் பிராமணராகிய வரலாற்றையே குறிக்கிறது எனலாம். .வர்ண எல்லைகள் முற்ருகக் கலந்து கரைந்துவிட்டன. சகலரதும் மனமும் மனத் தளத்திலேயே லயிக்கவும், அதன் சாத்வீக குணத் திலேயே நிற்கவும், அதற்குரிய அறிவு வீச்சைக் காட்டவும் ஆரம்பித்துள்ள காலம். மேரறிவுத் தளமான அடுத்த பெருந்தளத் தாக்கத்தின் அருட்டலைச் சகலரும் ஏதோ ஒரு வகையில் உணரத் தொடங்கியுள்ள காலம்.
மனித குலம் முழுவதும் மனத் தளத்தில் ஏறி, அதற் குரிய உண்மையான சாத்வீக குணத்திலேயே (அறிவு, அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், பொதுவுடைமை ) பெரும்போக்காக லயிக்கத் தொடங்கி விட்டதென்ருல், மனத் தளத்துக்கு அடுத்த பெருந்தளமான பேரறிவுத் தளத்துக்குப் பரிணுமம் ஏறத் தொடங்கும் காலமும் வந்துவிட்டது என்ற Cro தர்க்கரீதியானது.
வர்க்கவியலும் குணவியலும் 87
அதை உணரும்போதே அதற்குரிய தயாரிப்பும் தொடங்கிவிடுகிறது.
அந்த உணர்வையும் தயாரிப்பையும் ஆரம்பித்துவைக் கிறது சர்வமத சங்க - பூரண சர்வோதய இயக்க ஸ்தாபக ரான பகவான் பூணிலழறf நந்தகோபாலகிரியின் காலம்.
உடல் - மனத் தளங்களுக்கு இடைப்பட்ட மிருக - மனித மாற்று வலயமான இடைத்தளக் கலப்புக் காலம் ஆதி மனித காலமாக இருந்தது. உயிர்த் தளத்துக்குரிய கலி யுகம் முடிந்து, மனத் தளத்துக்குரிய சத்திய யுகம் ஆரம் பித்த மாற்று வலயக்காலம் வரலாற்றில் கல்லாயுதம் முதல் நதிக்கரை நாகரீகம் வரை நீடித்த காலம்.
அந்தக் கலப்புக் காலத்தைப் போல் புதிய தளத்துக் குரிய புதிய சூழலில் மனத்தள - பேரறிவுத்தள மாற்று வலயக் கலப்புக் காலம் இப்போ ஆரம்பித்துள்ளது. மனத் தளத்துக்குரிய கலியுகம் மு டி ந் து பே ர றி வுக் குரிய சத்திய யுகம் ஆரம்பிக்கும் மாற்று வலயக் காலம். மனிதக் பெரு மனிதக் கல்ப்பு. மனித - தேவக் கலப்பு, அறிவு - பேரறிவுக் கலப்பு.
இது அடுத்த பெருந்தள எழுச்சிவரை நீடிக்கும். ஆணுல், முன்பைப்போல் இது நீண்ட காலமாக இருக்காது. மனித அறிவு மூலம் பரிணுமப் போக்கானது தன்னையே புத்தி பூர்வமாக உணர்ந்துகொண்டு, பேரறிவுக்குத் தன்னை அர்ப்பணித்துச் சரணுகதியடைந்து நடக்கும் தயாரிப்பானது மிக மிகச் சுருக்கமாகவே இருக்கும்.
அந்தத் தயாரிப்புக்குரிய தத்துவமே சர்வமத -சர்வோ தயமாகும் அல்லது பூரண சர்வோதயமாகும். அடுத்த பெருந்தளத்துக்குரிய எழுச்சி சகல துறைகளிலும் அதன் மூலமே ஆற்றுப்படுத்தப்படும்.
Page 46
பரிணுமம் -
அதன் தூக்க, கனவு,
விழிப்பு, துரிய நிலைகள்
திரியில் நெருப்பேறுகிற காலம். மனதை அமுக்கிய தாமதப் பாறை பிளவுபட்டுச் சிதறுகிற காலம். அந்தப் பாறையில் ஒட்டி வாழ்ந்த ரஜத, சாத்வீக குணங்கள் தகர்த் தெறிபடுகிற காலம்.
அது வந்துவிட்டது. கற்பாறையைப் பிளக்கத் திரியில் நெருப்பேற்றி விட்டுத் தொழிலாளி கத்துவான்.
" கல்பொறே. i
பாறைவெடி !
பாறை வெடிக்கப்போகிறது, தயாராகுங்கள் என்ற கூப்பாடு. மனதை அமுக்கியுள்ள முக்குணங்களைத் தகர்த் தெறிவதற்குக் காலங் காலமாக வந்த சமய ஞானிகளும் இவ்வாறுதான் எச்சரித்து வந்துள்ளனர். காலங்காலமாய்த் திரியில் நெருப்பேறி வந்துள்ளது. இன்று பாறை வெடிக் கப்போகிறது.
அந்த எச்சரிக்கைக் குரல்களுள் இன்று ஒன்றுமட்டும் அதிக வலுப்பெற்றுக் கேட்கிறது. அது யேசுவின் குரல் -
தேவராச்சியம் அண்மித்துவிட்டது, தயாராகுங்கள் !
8 *
உண்மையில் தேவராச்சியம் என்ற ஒன்று ஏற்படுமா? தேவராச்சியம் என்ருல் எது?
பரிணும-தூரிய நிலைகள் 89
அதை யேசு தெளிவாகச் சொன்னதில்லை. ஆணுல், அதற்காக அது விளங்காமல் போனதுமில்லை. தேவராச்சி யம் என்பது ஞானராச்சியமேதான். அது அன்றும் இருந் தது. இப்போதும் இருக்கிறது, என்றும் இருக்கும்.
ஆணுல், இன்னும் அது எல்லாருக்கும் உரியதாக, பொது ராச்சியமாக, ஞானப் பொதுவுடமையாக வரவில்லை. இனித்தான் வரவேண்டும். இதுவரை தனிப்பட்ட சிலர் அனுபவித்த ஞான அனுபவம் இனிமேல் தான் சகலருக்கு முரியதாக வரவேண்டியிருக்கிறது. அவ்வாறு சகலருக்கு முரியதாக வளரும் சர்வோதயக் கட்டத்தைத்தான் தேவராச் சியம் இங்கு நிறுவப்படும் கட்டமாகக் கூறலாம். யேசுவின் கூற்றின் உண்மையான அர்த்தம் அதுதான்.
யேசுவின் காலத்ததவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம்பியது இன்று நடைமுறையில் வரப்போகிறது. அவர்கள் கண்ட கனவு நனவாகும் கட்டம் இன்று வந்து கொண்டிருக்கின்றது.
அல்லது அப்படிக் கூறுவதுதான் கனவோ? எப்படி இதை நம்புவது? அப்படியும் சில கேள்விகள் இங்கு எழலாம்.
ஆணுல், உண்மையில் இனித்தான் கனவு அழியும் காலம் வந்துகொண்டிருக்கிறது. இதுவரை விழிப்புநிலை என் றும், விஞ்ஞானநிலை என்றும், நாம் பெருமிதப்பட்டுக் கூறி வந்த காலந்தான் உண்மையில் தூக்கக் கனவுக்காலம். கூடிப்போனுல் கனவு கலந்த விழிப்பாக இருக்கிறதேயொழிய, தூக்கம் - கனவு - விழிப்பு ஆகிய மூன்று நிலைகளைத் தாண்டிய உண்மையான பேர்விழிப்பாக, ஞானவிழிப்பாக, இல்லை இனிமேல்தான் கனவு அழிந்து உண்மையான பேர்விழிப்பு வரப்போகிறது.
தூக்கம், கனவு விழிப்பு, தூரிய என்று நான்கு நிலைகள் இருப்பதாக வேதசாஸ்திரங்கள் கூறுகின்றன. தாமதம், ரஜஸ், சாத்வீகம் ஆகிய முக்குணங்களுக்கு உட்
Page 47
90 மெய்யுள்
பட்ட சாதாரண மனிதன் தூக்கம், கன்வு, விழிப்பு ஆகிய மூன்று நிலைகளுக்கு அப்பாற்போக முடியாதவனுகவே வாழ் கிருன் என்றும், ஞானிமட்டுந்தான் அவற்றையும் கடந்த தூரிய என்ற சத்திய ஞானநிலைக்குரியவனுக வாழ்கிருன் என்றும் சாத்திரங்கள் கூறுகின்றன.
என்றும் இருப்பதும், எல்லாமாக இருப்பதும் - இருப்பு - பேரறிவு - ஆனந்தம் என்ற சத் - சித் - ஆனந்த பிரம்மமே தான். அதை உணர்ந்த ஞானவிழிப்பு நிலைதான் தூரிய நிலையாகும். அதை உணர்ந்து அதுவாகவே இருக்கும்நிலை. தனிப்பட்ட ஞானிகள் அந்தத் தூரிய நிலையை ஏற் கனவே தொட்டுவிட்டனர். உபநிடத ரிஷிகள், புத்தர், யேசு, முகம்மது ஆகியோரும் அவர்களைப் பின்பற்றிய ஞானிகளும் ஏற்கனவே அந்தத் தூரிய நிலையை அனுப வித்துவிட்டனர். ஆணுல், மனித இனம் முழுதும் பரவலாக அதை இன்னும் தொட்டதில்லை. இனித்தான் அதைத் தொடக்கூடிய கட்டம் வருகிறது. அதைத் தவிர்க்க முடி
• IT39Jנש
1. உலகத்தின் பரிணும வளர்ச்சியில் சடநிலையாய் இருந்த காலத்தையும் கட்டத்தையும் தூக்கம் எனலாம், தாமத குணத்தின் ஆட்சிக்காலம். சடராச்சியம்.
2. உயிரினம் வளர்ச்சியுற்ற கட்டத்தை உலக வளர்ச் சியின் கனவுக்காலம் எனலாம். ரஜத குணத்தின் ஆட்சிக் காலம். மிருகராச்சியம்.
3. மனித மனம் தோன்றிய காலத்தில்தான் உயிரினத் திற்கு விழிப்புத் தோன்றிற்று எனலாம். சாத்வீக குணத் தின் ஆட்சிக்காலம். சமயம் முதல் விஞ்ஞானம் வரை வளர்ந்த காலம், மனித ராச்சியம்.
4. இனிமேல் பரிணுமப்போக்கில், அதாவது மனதையும் அதன் சாத்வீக குணத்தையும் தொட்டுவிட்ட மனித இனத்
பரிணுமம்-தூரிய நிலைகள் 91
தின் பரிணுமத்தில், தூரியநிலை வளர்ச்சியுறும் கட்டம் வந்து விட்டது. மனதையும் கடந்த ஞானவிழிப்பான தூரியநிலை முக் குணங்களையும் கடந்த சத்தியநிலையாகும். உடலோடும், மன தோடும், உயிரோடும் மனிதன் இனிமேல் சத்தியஞான உணர் வையும் தனது சகஸநிலையாக மாற்றிக்கொள்ளப்போகிருன். அதன் ஆட்சியே தேவராச்சியம் மனதின் பரிணுமச்சுழலுக்குரிய கலியுகம் முடிந்தபின் மனதையும் தாண்டிய சுழலுக்குரிய சத்தியயுகம் பிறக்கப்போகிறது. அதுவே கிறிஸ்து குறிப்பிட்ட தேவராச்சியமாகும்.
இது கனவுமல்ல கற்பனையுமல்ல. தர்க்கரீதியான பரிணும வளர்ச்சி பற்றிய விஞ்ஞான வியாக்கியானமாகும். இந்த நிலை யை இன்றைய உயிரியல் விஞ்ஞானியான ஜூலியன் ஹக்ஸ்லி மனித நிலையைத் தாண்டிய நிலை என்கிருர் (Transhயmanism). கிறிஸ்தவ விஞ்ஞானியான ரேஹா (Teihard) மனிதன் கிறிஸ்துவாகும் நிலை என்கிருர் (Christogenesis). காந்தி ராமராச்சியம் என்கிருர். ஆணுல், அதைத் தன் னளவிற் பூரணமாக அனுபவித்து, அதற்குரிய விஞ்ஞான ரீதியான விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் பிரமிக்க வைக்கும் கலைச்செறிவோடு போட்டுள்ளவர் இதுவர்ை அரவிந்தர் ஒருவரேதான். இன்று மார்க்ஸை ஏற்றிப்போற்று வதுபோல் அரவிந்தரை, மார்க்ஸைவிடப் பன்மடங்கு பெரி தாக, ஏற்றிப்போற்றி இயக்கம் நடத்தும் காலம் வந்து கொண்டிருக்கிறது. இந்தப் புதிய பரிணும நிலையை அரவிந்தர் பேர்மனிதப் பிறப்பு என்றும், பேரறிவின் இறக் கம் என்றும் கூறுகிருர்.
அது அண்மித்துவிட்டது; தயாராகுங்கள் !
அதைத் தவிர்க்க முடியாது, தடுக்க முடியாது, தாமதப்
படுத்தவும் முடியாது. பேரறிவின் பாய்ச்சலை யார் தடுக்க லாம்? யார் எதிர்க்கலாம்? அதனிடம் மனித இனம் பூரண
Page 48
92 மெய்யுள்
மாகத் தன்னை அர்ப்பணித்துச் சரணுகதியடைவதே சரியான
செயலாகும்.
எப்படிச் சரணுகதியடைவது? எப்படித் தயார்ப்படுத்து
வது ?
யார் சரணுகதியடைவது ? யார் தயார்ப்படுத்துவது ?
யார் இதை முதலில் உண்மையாக உணர்கிருர்களோ அவர்கள்தான் தயாராக வேண்டும். எந்த இனம், எந்தச் சமயம், எந்த மொழிக்கூட்டம் இதை உணர்கிறதோ அந்த இனம், அந்தச் சமயம், அந்த மொழிக் கூட்டந்தான் தயாராக
வேண்டும்.
இதுவரை தனிப்பட்ட ஞானிகள் செய்ததை இனிமேல் ஒரு முழு இனமே, ஒரு முழு நாடே செய்ய வேண்டும். அப்போதுதான் முழு மனித குலத்தையும் அடுத்த பரிணுமக் கட்டத்துக்குள் இறக்குவதற்கு வேகமாக வழி பிறக்கும்.
யார் தயார்ப்படுகிருர்களோ, யார் மற்றவர்களையும் தயார்ப்படுத்துகிருர்களோ அவர்கள் மனித குலத்துக்கே தலைமை தாங்குபவர்களாக மாறிவிடுவர். அவர்கள் மனிதரில் தேவர்களாகின்றனர். அவர்களது மொழி தெய்வமொழியா கிறது. அவர்களது சமயம் சமய முக்தியைப் பெறுகிறது.
தேவராச்சியத்தை நிலைநாட்டுபவர்கள் தேவர்களாகத் தானே வேண்டும் ? அவர்களது மொழி தேவமொழியாகத் தானே வேண்டும்? அவர்களது சமயம் முக்திபெற்ற சமய மாகத்தானே வேண்டும்? யார் இதைச் செய்யப் போகிருர் கள்? யார் இந்தப் பெரும் பதவியை அடையப்போகிருர் கள் ?
எவர் அடுத்த வளர்ச்சிக் கட்டத்தின் தேவையை உணர்ந்து அதற்குரிய வழியையும் கண்டு பிடிக்கிருர்களோ அவர்கள் இதைச் செய்யத்தான் போகிருர்கள்.
பரிணுமம்-தூரிய நிலைகள் 93
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே தேவராச்சியம் அண்மித்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனல், அந்த அறிவித்தலை நம்பியவர்கள், ஊசித்துவாரத்தால் ஒட் டகம் நுழைந்தாலும் பணக்காரனுல் சுவர்க்கத்துக்குள் நுழைய முடியாது என்ற உண்மையை, இவ்வுலகத்தில் நிறுவப்பட வேண்டிய தேவராச்சியத்துக்குரிய பொதுவுடமை வழியை, இதுவரை நம்பியதில்லை. அதேபோல் வழியை நம்பிய இன் றைய பொதுவுடமை வாதிகளோ இதுவரை இறைவனை நம்பியதில்லை. அதனுல் இரண்டும் பூரணமாக வென்றதில்லை. ஆமாம் : ஞானப்பொதுவுடமையும் பொருளாதாரப் பொது வுடமையும் ஒன்றையொன்று தழுவிவர வேண்டும். அப் போதுதான் இரண்டும் வெற்றியடையும். இல்லாவிட்டால் ஞானப்பொதுவுடமை கீழிறங்குவதற்குரிய சரியான தளம் கிடையாது. பொருளாதாரப் பொதுவுடமை சீராக வளர்ச்சி யடைவதற்குரிய சரியான தலைமை கிடையாது. அதனுல் இரண்டும் தோல்வியடையவே செய்யும்.
இன்று தீவிர வழியையும் கண்டு, இறைவனையும் நம்பு பவர்கள் எவர்களோ அவர்கள்தான் நிச்சயமாக இங்கு தேவ ராச்சியத்தை நிறுவக்கூடியவர்கள். அவர்கள்தான் உண் மைான பொதுவுடமையையும் ஸ்தாபிப்பவர்களாக இருப்பர். வர்க்கங்களைத் தாண்டிய பொருளாதாரப் பொதுவுடடையுடன், குணங்களைத் தாண்டிய பேர்மனித ஞானப் பொதுவுடமையரசு பூரண சர்வோதய அரசு !
8 «Х• X
நான்கு மதங்களும் வளர்ந்துள்ள இலங்கையில் இந்தப் போராட்டத்துக்குரிய நல்ல சூழல் நிலவுகிறது. அந்த நிலை யில் இலங்கையில் நிலவும் எல்லா வகை அதிருப்தியையும் போராட்டத்தையும் இப்பேர்மனிதப் பிறப்புக்குரிய பெரும் போ ராட்டமாக ஏன் மாற்றி வளர்க்கக்கூடாது?
Page 49
“தொடங்குவது எங்கு ?" “எது செய்யப்படவேண்டும்?” என்று லெனின் எழுதிய நிலையிலிருந்து இப்போது வரை வந்துள்ள வளர்ச்சி * முடிவது எங்கு ?? (அதற்கு) * எது செய்யப்பட வேண்டும்?" என்ற புதுக் கேள்விகளை எழுப்பும் ஒரு சூழலுக்கும், சரித்திர கால கட்டத்துக்கும் வந்துவிட்டதாகவே நாம் கருதுகிருேம் -
மு. த. " சத்தியம்”
கலப்பு வலயம்
* மல்லிகை " இதழில் திரு. மு. பொ, எழுதிய கவிதை நாடகம் - இருதளப் பார்வை” என்னும் கட்டுரையைப் படித்துவிட்டுப் பிரபல முற்போக்குக் கவிஞரும் விமர்சகருமான அன்பர் ஒருவர் பின்வருமாறு மு. பொவுக்கு (நேரடியாக ஒரு கடிதம் எழுதியிருந்தார் :-
அன்புக்குரிய மு. பொ.
உங்கள் மல்லிகைக் கட்டுரை கண்டேன். சில கருத் துக்கள் எனக்கும் உடன்பாடே.
இரண்டாவது தளத்தில் நின்று நீங்கள் சொல்லி யிருப்பன சில எனக்கு அப்பாற்பட்டவை ; சிலவற்றில் எனக்குச் சந்தேகம் உண்டு ; சிலவற்றில் நம்பிக்கை இல்லை.
குறிப்பாக, அன்னமயகோசம், பிராணமயகோசம் விஞ்ஞானமயகோசம், முக்குணம், பேர்ஞானம் - இவை யெல்லாம் வெறும் பெயர்களாகவே எனக்கு ஒலிக்கின் றன. பெளதீகப் புலப்பாடுகளிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று கருத்துக் கட்டுகளை நிர்மாணித்து அவற் றைக் கையாண்டு வாதிக்கும்போதும், சிந்திக்கும்போதும், கற்பனை செய்யும்போதும், இல்லாத வெறுமைகளின் பிர தேசத்தில் இறங்கி அலையநேரும் அபாயம் உண்டு. இதனை நான் அநுபவத்திலே கண்டிருக்கிறேன்.
Page 50
96
மெய்யுள்
1965-gi) TGT is Schizophrenia 6Tsir D LD60T நோய் உண்டாயிற்று. மனப்பிளவு எனப்படும் அந்த நிலையில், அறிவிலும் ஆற்றலிலும் உச்சத்திற்கே சென்று விட்டதாக ஒரு பிரமை எனக்கு இருந்தது. அந்தச் சமயத்தில், பேர்ஞான நிலையை எய்திவிட்டவணுகவே என்னைப் பாவித்துக் கொண்டேன். சிவபெருமானும், யோகர் சுவாமியும், எட்மன்ட் சமரக்கொடியும், திரு ஞானசம்பந்தரும், ஷேக்ஸ்பியரும் நானே என நம்பி னேன். றேடியோவும், Television உம், ருெக்கெற்று களும் மிகவும் பிற்போக்கான கருவிகள் என்று நினைத் தேன். தியானிப்பினுல் மட்டுமே தொலைவில் நடப்பவற் றைக் கண்டேன். கேட்டேன் இப்பிரபஞ்சத்தின் நிழல் போல . இதன் பிரதியாக இன்னுெரு பிரபஞ்சம் இருந் தது ; அதற்குள் நான் நுழைந்து விட்டேன்; அல்லா மலும், ஒரு பெண்ணின் உடம்பினுள் நுழைந்ததோடு அப்பெண்ணின் உயிரையே என் உடலினுள் நுழைய விட்டேன். புகைவண்டிப் பெட்டியின் ஒரப்பலகையை உற்றுப் பார்ப்பதனுல், அங்கு வேண்டிய உருவங்க பிறந்து வளருமாறு செய்தேன். தீப்பொறிப் பத்திரி கைப்பிரதியொன்றை விலைக்கு வாங்கி, அதைப் பல்வேறு விதங்களில் மடித்தும் விரித்தும் திருப்பியும் பார்த்தபோது அதே பத் திரிகை யி ல், "சுதந்திரன்," "நாவேந்தன்", "நக்கீரன்" முதலான பல பத்திரிகைகளையும் கண்டேன். அவற்றிலிருந்து செய்திகளை வாசித்து மற்றவர்களுக்குக் கூறினேன்.
இன்னும் செல்லுவேன் உழுத்தம் மாவினுற் செய்த உருண்டை ஒன்றினுள் என் சுக்கிலத்தை அடைத்துக் கடலுள் வீசினுல், ஈழத்தினைக் காப்பாற்றும் போர் வீரர் கள் கடலிலே பிறந்து வளர்வார்கள் என்று நினைத்தேன். எங்கள் வீட்டிலுள்ள தூண் ஒன்றைச் சுற்றி வருவதனல்
கலப்பு வலயம் 97
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் நானே நடத்தினேன். அப் போது ஆனையிறவைக் கடந்து யாழ்ப்பாணத்துள் நுழைந்த எல்லோரும் பழம் பிறவி ஒழிந்து புப்து பிறவி எடுத்தவர்கள் ஆயினர் : யாழ்ப்பாணத்திற் புதிய சத்திய யுகம் ஒன்று உதயமாகி விட்டது.
இன்னும் பல அற்புதக் காட்சிகளை அந்த இரண்டு வாரங்களுள்ளும் நான் கண்டேன். நிதரிசன மாக - எந்த ஐயப்பட்டுக்கும் இடமில்லாமல் நான் கண் டேன்.
மனநோய் மாறியபோது, ஓர் உண்மை என்னுள் உறுதியாயிற்று. பெளதீக மெய்மைகளிலிருந்து வெகு தூரம் விலகிச் சென்று உருவாக்கப்பட்ட கருத்துக் கட் டுகளை மிகுந்த சந்தேகத்துடன் பார்த்தல் வேண்டும் என்பதே அந்த உண்மை. விஞ்ஞானத்தின் அணுகு முறைகளும், பொருள் முதல்வாதப் பார்வைகளும் இந்த நோக்குடன் மிகநெருங்கிப் போவதை நான் உணர்கிறேன். அதனுல் இவற்றில் இருந்த பற்று வளாநதது.
ஆணுல், விஞ்ஞானம் என்றதும் பழைய பத்தொன் பதாம் நூற்ருண்டின் யாந்திரிக மொடலைச் சொல்வ தாக நினைக்க வேண்டாம். தடைமுடைகளையும் பொருட்படுத்தாத உண்மையான சுயாதீனமுள்ள விஞ் ஞானத்தையே இங்கு குறிப்பிடுகிறேன்.
என்ருலும், திரு. மு. த. வேதாந்தம், பெளத்தம், சர்வமதம், விஞ்ஞானம் முதலான சகலவற்றையும் பூரணமாகக் கிரகித்து விட்டதாகக் கருதுவது வெறும்
பிரமை என்பதில் எனக்கு ஐயமில்லை. புதிய விஞ்ஞா h−
னம் ஆன்மீகமானது என்று அவர் நம்பி எழுதும்போது அது அரைவேக்காட்டுத் தகவல்களிலிருந்து பெறப்பட்ட
Page 51
98
மெய்யுள்
அவசர முடிபே ஆகும். வாதங்கள் நுட்பமாக உள்ளன.
9,606i, 91 g).ju6) sylliu60 l (Empirical basis) ஆகிய தரவுகள் குறைபாடுடையவை. அதனுல். திரு. மு. த. அவர்களின் பிரமைகளுட் பெரும் பகுதி தங்களுக்கும் உண்டு. அதனுலேதான் அவற்றை இங்கு குறிப்பிட நேரிட்டது.
இப்படியெல்லாம் நான் எழுதுவது, உங்கள் அபிப் பிராயங்களை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கையினல் அல்ல. என் நிலையைத் தெளிவாக்கும் பொருட்டே'
ஆகும்.
வணக்கம்,
syster . . . . . . . . . .o.o.o. -- அந்த அன்பரின் இக்கடிதத்திற்கு மு. பொ. பின் வருமாறு பதில் எழுதி அனுப்பினுர் :- e6th66T. . . . . . . . . . . . . . . ...
தங்கள் கடிதம் கிடைத்தது. தங்களின் அனுபவத்
தைப்பற்றி எழுதியிருந்தீர்கள். அந்தளவுக்காவது நாம்
கூறவிரும்பும் மனித பரிணுமத்தின் தன்மையைப்பற்றி அனுபவரீதியில் நீங்கள் உணர்ந்திருப்பது விஷயத்தை
விளக்குவதற்குப் பெரிதும் உதவியாய் இருக்கிறது.
மனிதனின் மனம் சாதாரண அனுபவ எல்லைகளுக்கு அப்பாற்பட்ட விரிவுகளையும் காட்டக்கூடியதாய் இருக் கிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். ஆணுல், அதை விளங்கிக்கொள்ளும் விதமும், அதை வழிப்படுத் தும் முறையுந்தான் உங்களுக்கு தெரியாததாக இருக் கிறது.
Schizophrenia 9665 Split Personality 6T6irus இவ்விடயங்களைப்பற்றி விளங்கிக் கொள்ளாத பொருள் முதல்வாத விஞ்ஞானக் கருத்துகளுக்கு உரிய ஒரு
கலப்பு வலயம் a 99
வார்த்தைப் பிரயோகம் என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும். பிளவுபட்ட மனம் என்பதைவிட, நான் கட்டுரையில் கூறிய விதத்தில், இரு மனத்தளங் களின் கலப்பு என்று சிந்தித்துப் பார்த்தால் அதன் முற்பீோக்கான வளர்ச்சி மாற்றத்துக்குரிய தன்மையைங் காணலாம். அந்தத் தன்மையை வடிவாகப் பயன்படுத்து வதற்கு அவைபற்றிச் சீராகத் தெரிந்த சமயஞானங் களுக்குரிய யோகமுறையை நாடவேண்டுமே ஒழிய, திரும்பவும் பொருள்முதல்வாத பெளதிக விஞ்ஞானத் திடம் சரண்புகுவது புத்திசாலித்தனமல்ல. மேற்கத்தைய விஞ்ஞானம் மனித இனத்துக்குக் கொடுத்துள்ள வலு வான அறிவுத்தளம் அவசியமேதான். ஆணுல், அதையே இறுதி நிலையாக நினைத்து விடக்கூடாது. அந்த அறிவுத் தளத்தை அடிப்படையாக வைத்து அடுத்த எல்லைகளுக் குப் போக முயல வேண்டுமேயொழிய அடுத்த எல்லை களை மறுக்கக்கூடாது.
அதுவும் அநுபவ ரீதியாக அந்த எல்லைகளை ஏதோ ஒரு விதத்தில் கண்டபின்பும், அவற்றைப் பற்றி அதே வலுவான அறிவோடு ஆராய்ந்து பார்க்க முயலவேண் டும். பேய் பிசாசுகளைக் கண்டு வெருள்வதுபோல் அவற் றைக் கண்டு பயந்து ஒதுங்குவது விஞ்ஞானமுமாகாது அறிவுவாதமுமாகாது. அது பரிணுமத்துக்கு உதவுவ தாகவும் இருக்காது. நீரில் இருந்து தரைக்கு ஏறிய உயிரினம்வெருண்டு தடுமாறித் திரும்பவும் நீருக்குள் அமுங்கித் திருப்தி காணும். தேக்கத்தை ஒத்ததாகவே தங்களின் அநுபவத்துக்குத் தாங்கள் கண்ட முடிவு இருக்கிறது. பைத்தியம், Schiz0-phrenia என்ற சொற் றொடர்கள் அதை நியாயமாக்குபவையாகத் தெரிந்தா லும், அதே சொற்றொடர்களே பரிணுமத்துக்கு எதி ரான பூச்சாண்டி வெருட்டல்களாகவும் உள்ளன. அந்த
Page 52
100
மெய்யுள்
- வெருட்டலிடம் தாங்கள் தஞ்சம் புகுந்தவர் போலவே
காணப்படுகிறீர்கள். பிளவுபட்ட அல்லது கலப்பு மன நிலையத்தாண்ட முடியாத நிரந்தர மனக்குழப்பங்க ளைக் காட்டும் பைத்தியங்கள் கூட பரிணும வளர்ச்சி யில் எதிர்பார்க்க வேண்டிய breaks வகையேதான்.
உங்கள் சிறு அனுபவமே அடுத்த மனத்தள எல்லை களில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டிய வேளை யில், நீங்களோ அந்த அனுபவத்தை வைத்துக் கொண்டே மாபெரும் அவதாரங்களான புத்தர், யேசு,
முகம்மது, ராமகிருஷ்ணர் போன்றேரினதும், ஆன்மீக
மேதாவிகளான விவேகானந்தர், அரவிந்தர், ரமணர் ஆகியோரினதும் அனுபவங்களை எல்லாம் பொய்க்கதை களும், பூச்சாண்டிக்கதைகளும் என்று ஒதுக்கி விடுபவர் கள் போல் எழுதுகிறீர்கள். இதை விஞ்ஞானமாகவும் அறிவு வாதமாகவும் நீங்கள் எடுத்துக்கொண்டாலும், நாங்கள் எடுத்துக்கொள்ளத் தயாராய் இல்லை.
ஒரு தத்துவஞானி உலகத்தின் சகல விஷயங்களை
யும் கற்றுத் தெரிந்தவனுக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தனது சிந்தனைக்கு அவன் உருவம் கொடுக்க முயலும்போது அதையொத்த வேறு கருத் துக்களைக் கொண்ட, வேறு துறைகளுக்குரிய சிந்தனை வாதிகளின் கூற்றுக்களைப் பக்கபலமாகக் காட்டலாம் இருப்பினும், எதிர் காலச் சரித்திர வளர்ச்சிதான் அவ னது பார்வையின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். மு. த. வின் கருத்துக்களும் அவ்வாறேதான். அவரது கருத்துக்களின் முதிர்ச்சிக் கோலத்தையும் முழுமைக் கோலத்தையும் இனிவரும் நூல்களில்தான் பார்க்க வேண்டும். ஆணுல், இப்போதைக்குப் '' போர்ப் பறை ' யே போதுமானதாக இருக்கின்றது. அவற் றைத் தர்க்கரீதியாகவும் அறிவுரீதியாகவும் வெல்லக்
கலப்பு வலயம் 101
கூடிய வேறு கருத்துக்களைக் காட்டாத வரைக்கும், அர்த்தங் காணப்படாத சிறு அனுபவங்கள் மூலம் மறுத்து விட முடியாது. குறை கூறுபவர்கள் தங்கள் நிலையைத் தர்க்கரீதியாகவும், தத்துவரீதியாகவும் வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் குறை கூறுபவர்கள்தான் அரை வேக்காட்டு நம்பிக்கைகளின் அர்த்தமற்ற கலப் புக்களாக இருப்பர்.
இனி அனுபவங்களுக்கு வரலாம். நீங்கள் குறிப் பிடும் அனுபவங்களுக்குச் சமமான அனுபவங்களை மேற் கிலுள்ள பலர் மெஸ்கலின், எல். எஸ். டி. போன்ற மருந்துகள் மூலம் பரவலாகக் காணத் தலைப்பட்டுள்ளனர். ஹக்ஸ்லி, கொலின் வில்சன், சாத்தர் போன்ற எழுத் தாளர்கள் அந்த அனுபவங்களை முற்போக்காகவே பயன் படுத்தினர். பரவலான இந்த அனுபவங்களே புதிய Empirical evidence ஆகவும் அமைகிறது. இன்று விஞ் ஞானத்தின் எல்லைகளே புதிய தளத்துக்கேற்ற வகையில் விரிக்கப்படவேண்டியுள்ளன என்ற வலுவான கருத்து மேற்கில் வளர்வதற்கும் இந்த அனுபவங்களே காரண DTS o soubésip60T. Para Psychology, Transcendental Meditation, E. S. P., Transhumanism போன்ற துறைகள் விஞ்ஞானத்தின் புதிய எல்லை
விரிவுகளாகும்.
நீங்கள் கூறும் ஒத்த அனுபவங்களைக் காட்டும் Case Histories பலவற்றை நாம் வாசித்தும் இருக்கி ருேம்; நேரில் பழகும் பலரிடம் அதனைக் கண்டும் இருக் கிருேம். அத்துடன், சீரான முறையில் அந்த அப்பாற் பட்ட மனத்தளங்களுக்குள் நாமும் புகுந்து பார்த்துமிருக் கிருேம். அவற்றில் வளர்ச்சியடைந்து, அந்த அனு பவங்களையே சகசமாகப் பெறும் நிலையை அடைவதே நமது இலட்சியமாகவும் இருக்கிறது. இவை பிரமை
Page 53
102 மெய்யுள்
கள் அல்ல. மு. த. மட்டுமல்ல, நானும் இன்னும் வேறு பலரும் (எழுத்தாளர் உட்பட) இவற்றில் தீவிரமான பயிற்சிபெற்று வருகிருேம். த்ாங்களும் இதில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், விஞ்ஞான ரீதியான பரிசோதனைக்காவது சர்வமத சங்கத்துக்குப் பொறுப்பாகவுள்ள Mother ஐச் சந்திப்பது அவசியம் என்று கருதுகிருேம். அவர் புங்குடுதீவிலேயே இருக்கிருர், யாழ்ப்பாணம் வரும்போது தயவுசெய்து புங்குடுதீவுக்கும் வந்துபோங்கள். எதிர்பார்ப்போம். У
அன்புடன் மு. பொ அதற்குப்பின் அந்த நண்பர் மெளனம்ாகிவிட்டார்.
அந்தக் கடிதத்திற்கு திரும்பி எந்தப் பதிலும் வரவில்லை.
அந்த இரண்டு கடிதங்களையும் படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. "
படித்தபின் நல்லசிவத்திடம் அபிப்பிராயம் கேட்டேன்.
" எதைப் பற்றிய அபிப்பிராயம்?" அவன் திருப்பிக் கேட்டான். “இந்தக் கடிதங்களைப் பற்றியா? அல்லது அந்த நண்பரைப் பற்றியா? அல்லது அவருடைய இலக் கிய முயற்சிகளைப் பற்றியா? அல்லது நமது புதிய தத் துவம் பற்றியா? '
" எல்லாவற்றையும் பற்றித்தான் ' என்றேன் நான். நல்லசிவம் ஆரம்பித்தான். NWA * பதில் வராததின் அர்த்தம் என்னவாக இருக்கலாம் தெரியுமா?" -
. " என்னவாக இருக்கலாம் ? "
கலப்பு வலயம் 103
" ஒன்று, அவர் இன்னும் யோசிக்கலாம் யோசித்துத் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வராத வரைக்கும் இதுகளைப் பற்றி இனி அவசரப்பட்டு எதுவும் எழுதக் கூடாது என்று யோசிக்கலாம். அப்படியே எழுதாமல் விட்டிருக்கலாம். அப்படி யென்ருல், அவர் ஒருவேளை எதிர்காலத்தில் எம் பக் கமும் சேரலாம். பேரறிவின் எழுச்சிக்காக வாழவும் செய்ய Gimtib. ””
** இரண்டாவது ?" "இரண்டு, சுத்தப் பனியன்கள் அல்லது பைத்தியகாரக் கற்பனுவாதக்காரங்கள் என்று நினைத்து நம்மிடமிருந்து மெல்ல ஒதுங்க முயலலாம். அப்படியென்ருல், அவருக்குத் தான் பணி பிடித்திருக்கிறது என்பது அர்த்தம். பேரறிவு ஏறிய தத்துவ விளக்கங்களுக்கும் மனத்தின் கற்பணுவாதத் துக்கும் வித்தியாசம் காணமுடியாத பணி கடைசியில் நம் மிடமிருந்து ஒதுங்கவும், நம்மை ஒதுக்கவும் நினைத்துப் புதிய எழுச்சியால் முற்ருகத் தாமே ஒதுக்கப்படலாம்."
"" அல்லது?"
" அல்லது நமது விளக்கங்களின் " நுட்பமான "" தன் மையை அவர் உணர்ந்தும் அதை ஏற்றுக்கொள்ள விருப்ப மில்லாமல் இருக்கலாம். ஏற்றுக்கொண்டால் எத்தனையோ வற்றை இழக்கவேண்டும் என்ற பயம் இருக்கலாம். உதா ரணமாகக் கவிதை, சிறுகதை, நாவல் என்ற தற்கால இலக்கிய உருவங்கள் செத்துவிட்டன என்ற நமது கருத்து கவிதைக்காரர்களுக்கும் கதைக்காரர்களுக்கும் பெரும் வேதனை தரும் கருத்தாகவே இருக்கும். தம்மை ஏற்கனவே சமுதா யத்தில் நிறுவிவிட்ட கவிஞராக அல்லது கதாசிரியராக நினைத்துக் கொள்பவர்கள் அந்த இடத்தை, அந்த அந்தஸ்தை இலகுவில் இழக்க விரும்பமாட்டார்கள். அதனல் அவர்கள் எதிர்க்கலாம், மூர்க்கத்தனமாக எதிர்க்கலாம். முதலில் நசிந்து நசிந்து இரகசியமாகவும், பின்பு சந்தர்ப்பம் கிடைக்கும்
Page 54
104. மெய்யுள்
போது வெளிப்படையாகப் பலாத்காரமாகவும் எதிர்க்க முயலலாம். நமது நண்பரும் அந்தரகமாக இருக்கலாம். அவர் உண்மையில் எந்த ரகம் என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்."
" ஒருவேளை அவர் சொல்வதுதான் சரியாக இருந்துவிட் டால்?’ நான் வேண்டுமென்றே தர்க்கத்துக்காகக் கேட்டேன்.
" அதற்குரிய சரித்திர கட்டம் போய்விட்டது" என்ருன் நல்லசிவம்.
"எதற்குரிய சரித்திர கட்டம்?" "அவர்களுக்குச் சரியாகத் தெரிந்த சரித்திர கட்டம்."
எப்படி?" " எப்படியா?" நல்லசிவம் விளக்கத் தொடங்கினன். " இவர்கள் எல்லாரும் அடிப்படையில் பொருள் முதல்வாதக் காரர்கள்தான் வெறும் சிற்றின்பவாதிகள், சடம், பொருள், உடல், உயிர், மனம் ஆகிய தளங்களிடையே நிலையாக நின்றுவிடலாம் என்று கற்பனை செய்த பொருள்முதல்வாதி கள். இவர்களுடைய காலம் முடிந்து விட்டது. அதனுல் அந்த நண்பரின் வாதம் இனிமேல் சரியாக இருக்க முடி யாது." s
" அப்படியென்ருல், கருத்துமுதல்வாதமா இனிமேல் சரி வரும்?" நான் திருப்பிக் கேட்டேன்.
" அது பிழையான ஒரு சொற்பிரயோகம் கருத்து முதல்வாதம் என்ருல் என்ன?"
அவன் என்னைத் திருப்பிக் கேட்டான். திருப்பிக்கேட்டு விட்டுப் பதிலுக்குக் காத்திராமல் தானே தொடர்ந்து விளக் கத் தொடங்ணுன்.
" கருத்துமுதல்வாதம் என்ருல், சாதாரண மனிதனுக்கு இன்று உரித்தாகவுள்ள சிந்தனை நிலையையே எல்லாவற்றுக்
கலப்பு வலயம் 105
கும் முதலாக அல்லது காரணமாகக் கொள்ளும் வாதமா? அப்படியென்ருல், பொருள்முதல்வாதம்போல் அதுவும் பிழை தான். அதாவது பிழையென்றில்லாவிட்டாலும் அவை இரண்டும் சிறுசிறு விதமளவுதான் சரியாகும். அதைவிட்டு கருத்துமுதல்வாதம் என்ருல் சமயங்கள் கூறும் மாற்றமற்ற அடித்தளச் சத்தியத்தை முதலாகக் கொள்ளும் வாதமா? அப்படியென்ருல், அதை விளக்குவதற்குக் கருத்துமுதல்வாதம் என்ற சொற்ருெடர் போதாது."
" அப்போ சரியானது எது ?"
* சரியானது பொருளுமல்ல, கருத்துமல்ல. சரியானது அவை இரண்டுக்கும் அப்பாற்பட்டது. சரியான, நிலையான நிலை மனிதன் காணும் பொருளுக்கும் அப்பாற்பட்டது. மனிதன் காணும் சிந்தனை அல்லது கருத்துக்கும் அப்பாற்பட் டது. இரண்டுக்கும் அப்பாற்பட்ட அதுதான் அதே சமயம் இரண்டுக்கும் காரணமாகவும் இருக்கிறது. அதுவே இரண் டையும் இணைப்பதாகவும் இருக்கிறது. அதைத்தான் சமயங் கள், சத்தியம் என்றன. அது பரம்பொருளாகவும், அதே சம யம் பேர்ஞானமாகவும் இருக்கிறது. சத்தும், சித்தும் அதுவே தான். அதை அடிப்படையாகக் கொண்டு இன்றைய காலத் துக்குரியதாக வரும் தத்துவமே பூர்ண சர்வோதய தத்துவ மாகும். சகலவற்றிலும் அந்தச் சத்தியம் வெளிப்படையாக , எழுகின்ற இன்றைய காலத்துக்குரிய தத்துவம் அதுதான்."
" அதற்குரிய ஆதாரங்கள் என்ன?' என்றேன் நான்.
"ஆதாரங்களா? அவற்றைக் கேட்டு விளங்கக்கூடிய பொறுமை இருக்கிறதா? ஆதாரங்கள் காட்டும் வழியைத் தடை செய்யாத முடிவு எப்படி வருகிறதோ, அப்படி எடுப்பதே விஞ்ஞானப் போக்காகும் என்று திறந்த மனத்தோடு ஆராயும் பக்குவம் இருக்கிறதா? இருந்தால் கேட்டுக்கொள் ; நான்
Page 55
106 மெய்யுள்
நான் சொல்கிறேன்" என்று விளக்கத் தொடங்கினுன் நல்ல சிவம்.
"சடம், உயிர், நினைவு அல்லது எண்ணம் (மனம்) என்பவை வெவ்வேறு தளத் தோற்றங்களாக இருப்பினும், அடிப்படையில் அவை இரண்டற்ற அத்வைதத் தன்மை யையே காட்டுகின்றன என்பதை இருபதாம் நூற்ருண்டு இன் றைய விஞ்ஞானம் மறுக்க முடியாதவாறு ஒப்புக்கொள்கிறது என்பதை முதலில் நீர் விளங்கிக் கொள்ளவேண்டும்."
" அப்படியென்ருல் அர்த்தம் என்ன?
" அதாவது, பொருள் அல்லது சடம் என்று நீ காண் பவை, நினைப்பவை எல்லாம் அடிப்படையில் (Energy) சக்தி யாகவும் இருக்கின்றன. பொருள் என்பது உருப்பெற்ற சக்தி யாகும். உயிர், நினைவு என்பவைகளும் அந்த வகையில் சக்தியின் வெவ்வேறு நிலைகளேதான். அந்த வகையில் அடிப் படையில் எல்லாம் இரண்டற்ற, ஒருமையான அத்வைதத் தன்மையையே காட்டுகின்றன. சடத்திலிருந்து உயிர் எழுச்சி யற்ற விதத்தை விளக்க முடியாமல் இருக்கலாம் இன்றைய விஞ்ஞானம். ஆணுல், அதற்காக அவை இரண்டும் அடிப் படையில் முற்ருக மாறுபட்டவை என்று அது நம்புவதில்லை. அடிப்படையில் அவை ஒரு போக்கின் இரண்டு வெவ்வேறு நிலைகளைக் காட்டுகின்றன என்றுதான் விஞ்ஞானம் இன்று கூறுகிறது."
"சரி, அப்படியென்ருல், அதன் முக்கியத்துவம் என்ன?" - நான் கேட்டேன்.
நல்லசிவம் தொடர்ந்தான்.
" முக்கியத்துவம் சுவையானது. சடத்தை, அதாவது நீ பொருள் என்று கூறும் சடத்தை ஆராயும் போது அது,
கலப்பு Ouaouih 107
அப்பொருளுக்குரிய உருவமானது நம் புலன்களுக்குத் தெரி யாத சக்திப் போக்காகவும், ஒளித்துகள் அணுக்களின் அலையா கவும் இருக்கிறது, அத்துடன் அவற்றுக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒன்ருகவும் அவை இருக்கலாம் என்றும் நம்பவேண்டி யிருக்கிறது. அப்படியென்ருல், நீ காணும் சடநிலை அல்லது அந்தப் பொருள் நிலை உண்மைான, நிரந்தரமான அடித்தள நிலையல்ல என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒப்புக்கொள் figuu TT ? ”” М
" சரி ஒப்புக்கொள்கிறேன். ' " ஒப்புக்கொண்டால், நிலையான நிரந்தர அடித்தள மாகாத அந்தப் பொருளை அல்லது சடத்தை எப்படி எல்லா வற்றுக்கும் முதலாவதாக அல்லது காரணமாகக் கொள்ள 6th 2 '' w ܫ
ஆமாம், அப்படி எடுத்துக்கொள்ள முடியாதுதான்."
* அப்படியென்ருல், பொருளை முதலாகக் கொள்ளும் பொருள்முதல்வாதம் என்பது உண்மையான நிரந்தர அடித் தளமற்ற வாதந்தான். விளங்குகிறதா ?"
" அதாவது.? " நான் இழுத்தேன். " அதாவது, பொருள் என்பது உண்மையான ஒரு நிலையான உருவமாக அல்லது அடித்தளமாக இல்லை. அதனுல், பொருள்முதல்வாதமும் நிலையான அடித்தளமற்ற வாதமாகும். அதாவது, பொருள்முதல்வாதம் என்று சொல் வதைவிட, சக்திமுதல்வாதமாக அல்லது ஒளிமுதல்வாதமாகக் கொள்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்."
** ஒ, இப்போ விளங்குகிறது. அருமையாகவும் இருக் கிறது. ஆனல், அதேசமயம் சக்தியையும் சரி, ஒளியையும் சரி ஒருவித பொருள்நிலையாகவும் கொள்ளலாந்தானே ? ' -நான் கூறினேன்.
Page 56
108 மெய்யுள்
* கொள்ளலாந்தான் " என்று ஒப்புக்கொண்டான் நல்லசிவம். " கொள்ளலாந்தான். ஆணுல், அதேமாதிரி சக்திமுதல்வாதமாகவும் ஒளிமுதல்வாதமாகவும் கருத்து அல் லது நினைவுமுதல்வாதமாகவும் கொள்வது சரியானதாகவே இருக்கும்.'
" ஆமாம், சரிதான்.""
சரியென்று நீ கூறும்போது முந்திய சமயங்களின் கொள்கைகளுக்குக் கிட்டே வருகிருய், சகலதையும் அடித் தள உண்மையான சத்தியத்தின் சக்தி என்று சில சமயங் கள் கூறுகின்றன. வாக்கிலிருந்து (சத்தியத்தளத்துக்குரிய நாதத்திலிருந்து) உருவம் எழுந்தபோது முதல் முதலாக வந்த " பொருள் " அல்லது உருவம் என்பது ஒளிநிலை தான் என்றும் சமயங்கள் கூறியுள்ளன. அதேபோல் கருத்து முதல்வாதம் என்பதுகூடப் பிழையாக, வெறும் நினைவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும்போதுகூட பொருள் முதல்வாதம் என்பதைவிட அதிகம் பொருந்துவதாக அல்லது . எதிர்கால ஆராய்ச்சிக்கு உதவுவதாக இருக்கிறது."
" அப்போ இதில் எது சரி? " என்று நான் கேட்டேன். * சக்திமுதல்வாதமா? ஒளிமுதல்வாதமா ? பொருள்முதல் வாதமா? கருத்துமுதல்வாதமா ?"
எதுவும் பூரணமாகச் சரியல்ல. மாற்றமற்ற நிலையான அடித்தள உண்மைநிலை எதுவோ, அதை முதலாகக் கொள் ளும்போதுதான் பூரணமான தத்துவம் வரும். அதற்குமுன் இவற்றில் எது அந்த அடித்தள நிலையை நோக்கி ஆராய் வதற்கு அல்லது முன்னேறுவதற்கு உதவலாம் என்று தீர் மானிப்பதே சரியானது "
* எது அதிகமாக உதவுகிறது? " நான் கேட்டேன்.
கலப்பு வலயம் - 109
எது அதிகமாக உதவாமல் இருக்கிறது என்று கேட்
p :
பதுதான் அதற்குரிய சரியான வழியாகும் ' என்ருன் நல்ல
சிவம்.
* ஆமாம், அதுவும் சரிதான் ; எது அதிகமாகத் தடை யாக நிற்கிறது ?"
‘ அதிக தடையாக நிற்பது பொருள்முதல்வாதம் என்ற கோட்பாடுதான். பொருள் அல்லது சடம் என்பதற்குரிய , புலன்கள் காட்டும் உருவநிலையோடு மனித மனம் பழக்க தோசத்தால் விடுபடாது ஒட்டிக்கொண்டு நிற்கிறது. அந்தச் சடத்தின் அல்லது பொருளின் உருவத்தைத்தான் மனம் நிலையான ஒரு தளமாக நினைத்துக் கொண்டிருக்கிறது. சடத்தின் உருவம் என்பது உருவம் காட்டாத நிலையற்ற போக்குகளாக அதாவது மாற்றங்களாக (சக்தி - ஒளி மாற்றங்களாக ) இருக்கிறது என்ற விடயத்துக்கு மனம் பழக்கப்பட வேண்டுமானுல், பொருளின் உருவத்தோடு ஒட்டி நிற்கும் அதன் பழக்கதோசத்தை அறுக்கவேண்டும். பொருள் முதல்வாதம் என்பதை முற்ருகப் பழக்கத்திலிருந்து ஒழிப்பது அதற்கு அவசியமாகும். அதற்குப்பின் மனம் திடீரென்று ஒரு பெரும் தளையிலிருந்து, பற்றிலிருந்து, கட்டிலிருந்து விடுதலையடையும். "
" ஆமாம், விடுதலையடையும். ஆனல், அதேசமயம் அது மாற்றமற்ற அடித்தள நிலையைக் கண்டுவிடாது."
கண்டுவிடாது. ஆணுல், கண்டுவிடவேண்டும் என்ற அவதி அதிகரிக்கும். ஆராய்ச்சி வேகம் பெறும். அதாவது பரிணுமம் துரிதமடையும்." *
" அப்போ இப்போதைக்கு ஒளிமுதல்வாதம், சக்தி
முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்பவை பொருள்முதல் வாதம் என்பதைவிட மனத்தின் விடுதலைக்கும் புதிய விஞ்
Page 57
110 மெய்யுள்
ஞான ஆராய்ச்சிக்கும் அதிகம் உதவும் என்கிறீர்? " - நான் கேட்டேன்.
" ஆம்; அதிகம் உதவும் அந்த அத்தகைய விஞ்ஞான ஆராய்ச்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதாவது, அதன் மூலம் ஏற்கனவே பொருள்முதல்வாதம் என்பது வழக்கொழி யத் தொடங்கிவிட்டது என்பது அர்த்தமாகிறது. சரி தானே ? "
" ஆம்; சரிதான் '' - நான் ஒப்புக்கொண்டேன்.
" சரி; இனி அடுத்த கட்டம் " - நல்லசிவம் தொடர்ந் தான். " ஒளியின், சக்தியின், பொருளின், உயிரின், கருத் தின் அடித்தள உண்மையை நோக்கிய விஞ்ஞானத்தின் புதிய அத்வைத ஆராய்ச்சி தொடங்கும்போது சகல பார்வை களும் ஓரிடத்தில் கலந்து, சகலத்தையும் கடந்த அடித்தள உண்மையை நோக்கி ஆராய்ச்சி தொடங்குகின்றது என்பது தான் அர்த்தம்."
" எனக்கு விளங்கவில்லை " - என்றேன் நான்.
“ இப்போ கருத்துமுதல்வாதம், பொருள் முதல்வாதம், உயிர்முதல்வாதம், நினைவுமுதல்வாதம் என்று எப்படிக்கூறினு லும் அவை எல்லாம் அடிப்படையில் ஒன்று தான் என்ற பார்வைக் கலப்பு நிலைக்கு வந்திருக்கிருேம். காரணம், எல்லா நிலைகளும் இரண்டற்ற, ஒருமையான அத்வைதத் தன்மையைக் காட்டுகின்றன. அதேபோல் அவை எதுவும் நிரந்தரமான அடித்தளங்களல்ல என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டியுமுள்ளது. அதனுல் அவை எல்லாம் ஒன்ருகக்கலந்து, அடித்தள உண்மையை நோக்கி ஆராய வேண்டியவையாய் உள்ளன. சரிதானே?"
"சரி; விளங்குகிறது" - நான் ஆமோதித்தேன். 'சரி இனி அடுத்த கட்டம். இந்தப்புதிய விஞ்ஞான அத்வைத ஆராய்ச்சி தொடங்கும்போது. பழைய மெய்ஞான
கலப்பு வலயம் 111
அத்வைத ஆராய்ச்சிக்கு அது கிட்டே வருகிறது. பிரம்மமே சக்தி, சக்தியே பிரம்மம்; நிர்வாண சம்போதியே சம்சாரம். சம்சாரமே நிர்வாண சம்போதி என்ற மெய்ஞான அத்வைத நிலையை நாம் அண்மிக்கின்ருேம்."
“ o stůu ? "" " எப்படியா? சரி சொல்கிறேன். விஞ்ஞானம் இப்போது கண்டுபிடித்துள்ள ஒளி, சக்தி, உயிர், பொருள், நினைவு ஆகிய சகல நிலைகளும் மாற்றமுறும் நிலையற்ற போக்குகள் என்று சொல்கிறதுதானே?"
* ஆம் ; சொல்கிறது." " அதே சமயம் அவை எல்லாம் இரண்டற்ற ஒருமை யான அத்வைதத் தன்மையை அடிப்படையில் காட்டுகின்றன என்றும் ஒப்புக்கொள்கிறதுதானே?"
* ஆம் ; ஒப்புக்கொள்கிறது." " ஒப்புக்கொண்டவாறே அவற்றுக்குரிய மாற்றமற்ற ஓர் அடித்தள உண்மை நிலையை, நிரந்தர சத்திய நிலையைத் தேடுகிறது."
" ஆம் ; தேடுகிறது என்று வைத்துக் கொள்வோம்." " அப்படித் தேடும்போது அந்த மாற்றமற்ற அடித்தள சத்திய நிலையும், மாற்றமுறும் அதன்மேல்தள நிலைகளும் அடிப் படையில் இரண்டற்ற ஒருமையான அத்வைதத் தன்மையை உடையனவாகவே இருக்க வேண்டும் என்பதையும் நம்ப வேண்டியுள்ளது. அதாவது, அடித்தளச் சத்திய நிலையே மேல் தளத்தின் சகல நிலைகளும் என்ற அத்வைத நம்பிக்கை, கோட் பாடு, இப்போ விளங்குகிறதா? "'
" விளங்கிறது."
" விஞ்ஞானத்தின் இந்த அத்வைதக் கோட்பாட்டைத் தான் ஏற்கனவே சமய மெய்ஞானம் நிரூபித்து வலியுறுத்தி
Page 58
112 மெய்யுள்
யுள்ளது. சத்தியமே (பிரம்மமே) சக்தி : சக்தியே சத்தியம் (பிரம்மம்); சம்சாரமே நிர்வாண சம்போதி; நிர்வாண arb போதிய்ே சம்சாரம்.'
" அப்படியென்ருல், இன்று விஞ்ஞானம் முன்வைக்கும் நம்பிக்கையை அல்லது கோட்பாட்டை ஏற்கனவே சமய ஞானம் நிரூபித்துள்ளது."
* ஆம். அதனுல் இன்று விஞ்ஞானம் மெய்ஞானமாகும் காலகட்டம் வந்துள்ளது. இந்து சமயத்தின் பரப்பிரம்மம், புத்த சமயத்தின் நிர்வாண சம்போதி: இஸ்லாத்தின் அல்லாஹ் ,கிறிஸ்தவ சமயத்தின் புனித ஆவி அத்தனையும் ஒரே அடிதளச் சத்தியத்தின் பெயர்கள்தான்.சமய மெய்ஞானத்தின் அந்தச் சத்தியத்தை நோக்கி ஆராயும் விஞ்ஞானம் இன்று வந்துள்ளது. விஞ்ஞானம், மெய்ஞானம் - இரண்டும் இன்று அத்துவிதமாகி விட்டன.”
நான் சிரித்தேன். நல்லசிவத்தின் விளக்கம் மிகவும் சுவை யாக இருந்தது .
*" விடயம் இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்."
நான் சிரிப்பதை அவதானித்த நல்லசிவம் மிக அவசர மாகக் குறுக்கிட்டான். * இனித்தான் மிகப் | TLDMrGoTLATOT 6T விடயங்கள் ஆரம்பமாகப் போகின்றன. அதை உணர்ந்தால் தான் இன்றைய காலகட்டத்தின் முக்கியத்துவத்தை உணர லாம்.'
* ரன்ன விடயங்கள்?' - நான் கேட்டேன். கேட்ட வாறே அடுத்த கட்டத்துக்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன். *
* முதலில் இன்றையக் காலகட்டத்தின் முக்கியத்து வத்தை மனதுக்கு உணர்த்தி, மனத்தின் பழக்கதோசங்களி லிருந்து விடுதலை பெறுவதற்காக நமது மொழியில் சில மாற்
கலப்பு வலயம் 13
றங்களை ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக, பொருள் முதல் வாதம் என்பது இன்றையச் சிந்தனைக்குப் பொருந்தா ததைப்போல் விஞ்ஞானம் என்ற சொல்லும் பொருந்தாது” அது வெறும் சட, உயிர்த்தள ஆராய்ச்சியை மட்டும் குறிப்ப தாக நம்மை நினைக்கவைக்கிறது, அது பழைய பழக்கத் தோசம்; இன்று சத்தியத் தளத்தை நாடும் விஞ்ஞானத்தை விஞ்ஞான - மெய்ஞானம் என்று கூறவேண்டும். அல்லது வெறுமனே மெய்ஞானம் என்று சொன்னுலும் பரவாயில்லை. அதேபோல் பெளதிக (மெய்) ஞானம், உயிரியல் (மெய்) ஞானம், அரசியல் (மெய்) ஞானம், சமூக (மெய்) ஞானம், பொருள் (மெய்) ஞானம் என்று சகல துறைகளிலும் புதிய சிந்தனைக்குரிய அர்த்தப்பிரயோகம் வரவேண்டும். மனம் அப் போதுதான் புதிய விடுதலையை உணரக்கூடியதாயிருக்கும். ’’
நல்லசிவத்தின் விளக்கத்துக்குரிய வித்தியாசங்களை விளங்கிக் கொண்டாலும், அந்த விளக்கங்களில் வேறு ஓர் ஆபத்தும் இருப்பதை என்னுல் உணரமுடிந்தது.
“அது சரியாக இருக்கலாம்" - நான் எதிர்க் கேள்வியை ஆணுல், மனம் அதே சமயம் திரும்பவும் பழைய சமய மூடநம்பிக்கைகளுக்குள் விழுந்துவிட அவை உதவாதா? சமயங்களின் தேக்கத்துக்கே திரும்பவும் நாம் போவதாகத் தெரியவில்லையா ?"
எழுப்பினேன்.
* அது மிக அருமையான கேள்வி" நல்லசிவம் ஒப்புக் கொண்டான். "ஆணுல், அதில் அதேசமயம் பழைய மனத் தின் செல்வாக்கும் நிற்கிறது."
* எப்படி?"
" இதற்குப் பதிலளிக்க முயல்கையில் நாம் பரிணும வளர்ச்சியின் இயக்கங்களை ஆராய வெளிக்கிடுகிருேம் " நல்லசிவம் தொடர்ந்தான். “பரிணும வளர்ச்சி என்ருல் உலகில், பிரபஞ்சத்தில் சடம், உயிர், மனம் ஆகிய தளங்
Page 59
114 மெய்யுள்
களின் படிப்படியான எழுச்சியையும், அவற்றுக்குரிய வளர்ச்சி மாற்றங்களையும் குறிப்பிடுகிறேன். மனித மனம் வளர்ச்சி அடைந்தபின். அதாவது பரிணுமக் கட்டமானது மனத்தளத் துக்கு ஏறியபின் கண்டுபிடிக்கப்பட்ட அதிஉன்னத உண்மை தான் சமயங்கள் வெளிப்படுத்திய அத்வைதக் கருத்தாகும். அந்தக் கருத்துக்குரிய அடித்தள நிலையான பிரம்மம், நிர் வாண சம்போதி நிலை, புனித ஆவி, அல்லாஹ் என்ற மாற்ற மற்ற சக்திய நிலைதான் இன்றைய விஞ்ஞானம் கண்டு பிடிக்க முயலும் இலட்சிய நிலையாக இருக்கிறது. சரி தானே?"
"" ஆம்; சரி. "
" அப்படியென்ருல், தேங்கிக் கிடந்த சமயங்கள் காரணத்தோடேயே, அவசியத்தின் பேரிலேயே தேங்கிக் கிடந்திருக்கின்றன."
8
என்ன காரணம் ? என்ன அவசியம் ?"
" அவை கூறிய அதி உன்னத உண்மையைச் சகல மனித மனநிலைகளும் உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரும் வரைக்கும் அவை தேங்கிக் கிடப்பது பரிணும வளர்ச் சிக்கு அவசியம். அதுதான் காரணம். சகலரும் அந்த உன்னத நிலையை உணர்வதற்குமுன் அடுத்த வளர்ச்சிக் கட்டத்துக்குப் போவது ஆபத்தானது மட்டுமல்ல, அவசிய மற்றதுமாகும். சரிதானே ?"
" சரி.??
‘ அதனுல் சமயங்கள் வெளிப்படுத்திய உன்னத உண்மையை, மனித மனத்துக்குரிய சகல பார்வைகளும் பரவலாக ஏற்றுக்கொள்ளக்கூடிய காலகட்டம் வரும்வரைக் கும் சமயங்கள் தேங்கிக் கிடந்தன. அந்தத் தேக்க காலத்தில் முன்பு தாமதப்பட்டிருந்த பல்வேறு மனநிலைகள் படிப்படி யாக வளர்ச்சியடைந்து, சமயஞானத்தைப் பரவலாக உண
கலப்பு வலயம் 115
ரும் பக்குவத்துக்கு வந்துள்ளன. விஞ்ஞானம் அதற்கு உதவியுள்ளது.'
* எப்படி?"
" சமயங்கள் சகலதுக்குமுரிய அடித்தள நிலையான சத்தியத்தை முதலாகக்கொண்டு சகலதையும் விளக்கின. விஞ்ஞானம் அந்த அடித்தளச் சத்திய நிலையை ஏற்றுக் கொள்ளாது, மேல்தளத்திலிருந்து ஆரம்பித்துப் படிப்படியாக அந்த மாற்றமுருத அடித்தளச் சத்தியத்தைத் தேடும் கட்டத்துக்கு வந்துள்ளது. அதாவது, ஒரே சத்தியத்தை இரண்டு கோணங்களிலிருந்தும் மனிதமனம் ஆராய்ந்திருக் கிறது. சமயங்களின் அடித்தளப் பார்வையிலிருந்தும், விஞ்ஞானத்தின் மேல்தளப்பார்வையிலிருந்தும் ஆராய்ந்து ஒரே முடிவுக்கு வந்துள்ளன. அதனுல் சகல பார்வைகளும் ஒரே சமத்தளத்துக்கு உயர்த்தப்பட்டுக் கலப்புப் பெற்றுள் ளன. இன்று முன்பு சமயஞானம் கூறிய உண்மையை ஏற்றுக்கொள்ளாத அத்தனை மனநிலைகளும், அவற்றுக்குரிய பார்வைகளும் இன்று சமயஞானத்தைச் சமமாக அண்மித் துக் கலக்கின்றன. அந்தக் கலப்புக்கு விஞ்ஞான ஆராய்ச்சி உதவியுள்ளது."
** அதை இன்னும் தெளிவாக விளக்கினுல் நல்லது" என்றேன் நான்.
* அதாவது, அடித்தளச் சத்தியத்தை ஏற்றுக்கொள் ளாது பொருளில் நின்ற மனநிலை, உயிரில் நின்ற மனநிலை, ஒளியில் நின்ற மனநிலை, சக்தியில் நின்ற மனநிலை, கருத் தில் நின்ற மனநிலை - அத்தனை மனநிலைகளுக்குமுரிய பார் வைப் போக்குகளும் விஞ்ஞான ஆராய்ச்சியால் அத்துவிதத் தன்மைபெற்றுக் கலப்படைந்து, சமயங்கள் கூறிய அடித் தளச் சத்தியத்தைத் தேடும் பக்குவத்தைப் பெற்றுள்ளன. விளங்கிறதா ?"
Page 60
116 மெய்யுள்
*" ஒ, இப்போ விளங்கிறது; விளங்கிறது."
"" அந்தப் பக்குவத்தை விஞ்ஞான ஆராய்ச்சி கொண்டு வந்துள்ளது. அந்தப் பக்குவம் சகல மனநிலைகளுக்கும் ஏற்படும் வரையும் சமயங்கள் தேங்கிக்கிடந்தன."
* ஒ, அருமையான விளக்கம்."
* இன்னும் தெளிவாக்க வேண்டுமானல் இப்படிக் கூறலாம். ஒரு கட்டிடத்தை எடுக்கலாம். அதன் கீழ்த் தளம் முடிந்துவிட்டது, அது சடத்தளம். அதன் அடுத்த மாடியும் முடிந்துவிட்டது அது உயிர்த்தளம். அடுத்த மாடி ஆரம்பிக்கப்பட்டது. மூன்ருவது தட்டு. அது மனத்தளம். அந்த மனத்தள மாடியின் உச்ச எல்லையைக் காட்டும் நான்கு பக்கத் தூண்கள் தான் நான்கு சமயங்கள் கூறிய பிரம்மம், நிர்வாண சம்போதி, புனித ஆவி, அல்லாஹ் என்ற உண் மையாகும். ஒரே உண்மை என்ற உயரத்தைத் தொட்ட நான்கு தூண்கள். அந்த நான்கு தூண்களும் எழுப்பப் பட்டபின் அந்தத் தூண்களுக்குச் சமமாகச் சகல பக்கச் சுவர் களும் உயர்த்தப்பட்டன. அதாவது சகல மனநிலைகளும் உயர்த்தப்பட்டன. அதனுல் தூண்கள் தேங்கிக் கிடந்தன என்று நாம் நினைக்கிருேம். ஆணுல், அது தவறு. மூன்ரு வது மாடி முடிந்து நான்காவது மாடி எழுப்பப்படவேண்டு மானுல், மூன்ருவது கட்டிடத்துக்குரிய தூண்களுக்குச் சம மாகச் சகல சுவர்களும் எழுப்பப்பட வேண்டும். இப்போது தான் மூன்ருவது மாடிக்குரிய சகல சுவர்களும் அதன் தூண்களின் உச்சத்தைத் தொடுமளவுக்கும், அவற்றேடு ஒன்ருக இணையுமளவுக்கும் வந்துள்ளன. மனத்தள மாடியில் சகல பக்கச் சமயத் தூண்களும், இடைப்பட்ட மனநிலைச் சுவர்களும் ஒன்ருகக் கலக்கும் கட்டம் இப்போது வந்து விட்டது. இனித்தான் அடுத்த மாடிக்குரிய தளமும் அதற் குரிய தூண்களும் எழும்பப்போகின்றன.'
கலப்பு வலயம் 117
"சமயங்கள் கூறிய சத்தியத்தை ஏற்றுக்கொண்ட அத் வைதப் பார்வைக்குச் சமமாகப் பொருள் முதல் வாதம், சக்தி முதல்வாதம், சிந்தனை முதல்வாதம் ஆகிய சகல பார் வைக் கோணங்களும் வளர்ந்துள்ளன. அப்படித்தானே?"
"ஆணுல், இனிமேல் வரப்போகும் புதிய தளமும் புதிய தூ ண் களும் ப ைழ ய சமயத் தூண்களல்ல. மாருகப் பழைய சமயங்களையும் கடந்த நான்காவது மாடிக்குரிய தரிசனத் தூண்கள். அவற்றை விஞ்ஞான - மெய்ஞானத் தூண்கள் என்று கூறலாம். அல்லது ஆன்மீகத் தூண்கள் எனலாம். எனவே, திரும்பவும் பழைய தேக்கத்துக்கு நாம் போகவில்லை. ஏற்கெனவே சமய ஞானம்போட்ட உச்ச எல்லையைப் பரவலாகத் தொட் டு வளர்ச்சியடைந்து கொண்டே, புதிய தளத்துக்குரிய புதிய சமயத் தரிசனத் தளத்துக்கும் அதன் தூண்களுக்கும் போகிருேம். பேரறிவுத் தளம், இனிவரப்போகும் சமயமானது அப்பேரறிவுத் தளத்துக் குரிய பெருந்தள ஆன்மீகம் அல்லது சத்தியஞானம், விளங் கிறதா?"
* இன்றைய மனித மனவளர்ச்சி அந்தச் சத்திய தளத் துக்குத் தாவும் கலப்புக் கட்டத்தில் - அல்லது சம நிலையில் நிற்கிறது, அப்படித்தானே ? " நான் கேட்டேன்.
*" ஒ, இப்போ நீ என்னுடைய வார்த்தைகளில் பேசு கிருய். இப்போ எனக்கும் உனக்கும் ஒரு கலப்பு அல்லது சமநிலை உண்டாகியுள்ளது. அப்படித்தானே ? ' நல்லசிவம் சிரித்துக்கொண்டே கேட்டான்.
நானும் சிரித்துக் கொண்டே ஒப்புக்கொண்டேன். " எனக்கும் உனக்குமிடையே ஒரு கலப்பு: அறிவுப் பேர றிவுக் கலப்பு; விஞ்ஞான மெய்ஞானக் கலப்பு."
" ஆமாம்; அந்தக் கலப்பு ታë6ጊ) மனநிலைகளுக்குமுரிய கலப்பாகும். அதை மறந்துவிடக்கூடாது. பொருள் முதல்
Page 61
118 மெய்யுள்
வாதம், ஒளிமுதல்வாதம், சக்திமுதல்வாதம், கருத்துமுதல் வாதம் ஆகிய சகல பார்வைக் கோணங்களும் அத்வைத மாகக் கலந்து, அவற்றுக்கும் அப்பாற்பட்ட அடித்தள சத்திய எழுச்சியைக் கோரும் கலப்பாகும். அந்தக் கலப்புக்கும், அது சகலதிலும் கோரும் சத்திய எழுச்சிக்கும், அந்த எழுச்சி சகலதிலும் தரக்கூடிய விடுதலைக்குமுரிய தத்துவமேதான் பூரண சர்வோதயப் பெருந்தத்துவமாகும். இப்போதைக்கு அந்தளவுக்கு விளங்கிக்கொண்டால் போதும்; மற்றவற்றைப் பின்பு ஆராய்வோம்."
அத்துடன் நல்லசிவம் தன் விளக்கத்தை முடித்துக் கொண்டான்.
அதற்குமேல் அப்போதைக்கு என்னுலும் போக முடிய வில்லை.
XX..X..X.O. KM. 0xx x0 x
திரும்பவும் அவன் கதைக்கத் தொடங்கியபோது நான் எழுப்பவேண்டிய கேள்வியை அவனே எழுப்பிக் கொண்டு ஆரம்பித்தான்.
" மாற்றமுறும் மேல்தளங்களின் சகல நிலைகளையும் அதாவது ஒளி, சக்தி, பொருள், உயிர், சிந்தனை ஆகிய சகல நிலைகளையும் அத்துவிதமாக ஏற்றுக்கொள்ளும் விஞ் ஞானம், அவற்றுக்குரிய அடித்தளமான மாற்றமற்ற சக்தி யம் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அல்லது அதைக் கண்டுபிடிக்கத் துணியாவிட்டால் என்ன் செய் வது ?"
அப்போதுதான் எனக்கும் அது ஞாபகத்துக்கு வந்தது. ஞாபகத்துக்கு வந்த பிறகுதான் அது ஒரு முக்கிய பிரச்னை என்பதையும் என்னுல் உணர முடிந்தது.
" என்று நானும் ஒத்துக்கொண்டேன். “ எல்லாவற்றையும் மாற்றமுறும் நிலைகளாகவே அது தீர்க்க மாகவே முடிவு கட்டிவிட்டால் ? "'
" ஆமாம்
" இனிமேல் அப்படி முடிவுகட்ட முடியாது ' என்று ஆணித்தரமாக அடித்துக் கூறினன் நல்லசிவம்.
" அதற்குரிய சரித்திர காலகட்டம் முடிந்துவிட்டது " நல்லசிவம் தொடர்ந்தான். " இனிமேல் அந்த அரைகுறை முடிவுகள் எல்லாம் முற்ருக ஒதுக்கப்படும் கட்டம் வந்து விட்டது. மு. பொ. வுக்கு முன்பு கடிதம் எழுதிய நண்பர் நம்மை எதிர்த்தால் எப்படிப் புது எழுச்சியால் ஒதுக்கப்படு
Page 62
120 மெய்யுள்
வாரோ, அப்படி இந்த விஞ்ஞானமும் அதன் அரைகுறை
இடைத்தரிப்புகளும் இனிமேல் செல்லாதவையாகிவிடும்."
* எப்படி ? ?" ** அப்படிப்பட்ட நிலையைப் புதிய பூரண சர்வோதயப்
பார்வையும் அதற்குரிய இயக்கமும் உருவாக்கிவிடும்."
எப்படி உருவாக்கும் ?"
" புதிய சிந்தனைக் கலப்பையும் அது கோரும் சத்திய எழுச்சியையும் உன்னைப் போன்றவர்கள் உணரும் போதே, நீங்கள் உங்கள் செயல்களையும் சிந்தனைகளையும் மாற்றிக் கொள்வீர்கள். அது மற்றவர்களையும் பாதிக்கும். சமூகத் தையும் பாதிக்கும். புதிய மாற்றம் இயக்க பூர்வமாக நடத்தப்படும்போது மிக வேகமாக மாற்றம் வரும். உதா ரணமாக, இலக்கியத்துறையில் நீ புதிய சிந்தனைக்கேற்ற விதத்தில் ' மெய்யுள் " உருவங்களைப் புகுத்தும்போது பழைய உருவங்கள், உள்ளடக்கங்கள் எப்படி வழக்கொழியத் தொடங்குமோ அப்படியே பழைய விஞ்ஞானமும் இனி வழக்கொழியும். பொருள்முதல்வாதம் என்ற சொற்ருெ டரைப்போல் விஞ்ஞானம் என்ற சொற்ருெடரும் ஒதுக்கப் படவிருக்கும்போது விஞ்ஞானிகள் என்பவர்கள் எப்படி எதிர்த்து நிற்பது ? மெய்ஞானிகள் பரவலாகப் பல துறை களிலும் எழுவர். அதன் பின்பு சகல துறைகளிலும் சத்தி யத்தை எழுப்பும் முயற்சிகளே நடைபெறும்."
" அப்படி நடக்காவிட்டால் ?"
"நடக் காம ல் இருக்க முடி யாது. கா ர ணம், சகலதையும் சகலதுக்கும் பின்னலுள்ள பேரறிவே செய்விக்கிறது. அதைத் தடுக்கக்கூடிய வலு சிற்றறிவுக்கு இல்லை. விளங்கிறதா. ?
*" விளங்கிறது."
கலப்பு வலயம் 岚21
" சரி; அதை விளங்கிக்கொண்டே பிறகு, சும்மா தர்க் கத்துக்காக அதற்கு எதிராக விவாதிப்போமா ? " - நல்ல சிவம் கேட்டான்.
* எப்படி "
** மாற்றமற்ற அடித்தளச் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளா மல், சகலதையும் மாற்றமுறும் நிலைகளாகவே விஞ்ஞானமும் எடுத்துக்கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம்.'
Ff.''
" அப்படி வைத்துக் கொண்டால், அந்த மாற்றமுறும் நிலைகளில் எதை முக்கிய நிலையாக விஞ்ஞானம் இனி எடுத் துக்கொள்ளும் ? ஒளி நிலையா? சக்தி நிலையா? உயிர் நிலையா? பொருள் நிலையா? சிந்தனை நிலையா? ""
எதை???
** சிந்தனை நிலையைத்தான்."
** ஏன்
** பரிணுமப் போக் கி ன் கடைசி வளர்ச்சி சிந்தனை வளர்ச்சியாக இருப்பதால் அடுத்த கட்ட வளர்ச்சியும் அதை அடிப்படையாகக் கொண்டே வரவேண்டியிருக்கிறது. அத் துடன், சிந்தனை வளர்ச்சி வந்து பரிணுமப் போக்கும் புத்தி பூர்வமாக உணரப்பட்டபின், பரிணுமமே தன்னைப் பற்றிப் புத்திபூர்வமாக உணர்ந்திருக்கிறது என்று விஞ்ஞானி சொல் கிருன். எனவே, இனிமேல் சிந்தனைப் போக்கை எப்படி வளர்ப்பது என்பதுதான் முக்கிய பிரச்னையாக இருக்கும்? அத்துடன், சிந்தனை என்பது சடம், சக்தி ஆகியவற்றிலிருந்து அடிப்படையில் வேறுபடாத அத்துவித நிலையாக இருக்கிற தென்ருல், அவற்றுள்ளிருந்து எழுச்சியடைந்த சிந்தனையை, மனத்தை ஆராய்வதுதான் சடம், உயிர், ஒளி, சக்தி ஆகிய இவற்றின் உட்தன்மையைக் கண்டு பிடிக்கவும் உதவும்.
Page 63
122 மெய்யுள்
எனவே, எல்லா வகையிலும் சிந்தனை வளர்ச்சிக்கே இனிமேல் விஞ்ஞானம் முதலிடம் கொடுக்கும்.'
** அதன்மூலம் என்ன வந்துவிடப் போகிறது?" - நான் கேட்டேன்.
** அதன்மூலம் விரிஞ்ஞானத்திற்கே ஆபத்து வந்து விட்டது."
* எப்படி?"
" சிந்தனை நிலையை மற்ற நிலையில் இருந்து அடிப்படை யில் வேறுபடாத அத்துவீதத் தன்மையுடையதாக விஞ்ஞானம் எடுத்துக் கொள்கிறதுதானே?"
** ஆம் ; எடுத்துக் கொள்கிறது."
* அப்படி எடுத்துக்கொண்டால், எதிர்காலச் சிந்தனை வளர்ச்சி அதிலிருந்து அடிப்படையில் வேறுபடாத மற்றை நிலைகளையெல்லாம் உறிஞ்சிவிடும் அல்லது கரைத்துவிடும் பிரமாண்டமான ஏக சிந்தனை வளர்ச்சியாக ஏன் மாறமாட் டாது? " ஏன் மாற்றப்படமுடியாது?"
*" எனக்கு விளங்கவில்லை."
* எதிர்காலத்தில் சிந்தனையென்பது சடம், சத்தி, ஒளி என்பவற்றை யெல்லாம் முற்ருகக் கரைத்து, அவற்றையெல் லாம் உருவம் கடந்த ஒரே ஒரு ஏக சிந்தனை நிலையாக ஏன் மாற்றமுடியாது? சடம் இல்லை; உருவம் இல்லை ; உயிர் இல்லை ; பல்வேறு மாறுபட்ட நினைவுகள் இல்லை. ஒரே ஒர் ஏகநிலையும் பொருளுமாக உருவமற்ற சிந்தனை நிலையே எல்லாம் ஆக, எங்குமாக ஏன் நிற்க முடியாது? அந்த ஏக சிந்தனைநிலை தனக்குப்பிடித்தமான வேறு சிந்தனைகளையும் செயல்களையும் உருவங்களையும் ஏன் கொண்டுவரமாட்டாது?”
* ஒ, இது வெறும் கருத்து. அதாவது கற்பனை" என்ற ஒதுக்கிக்கட்ட முயன்றேன் நான்,
கலப்பு வலயம் 23
** வேறு கல்லாக இருக்க வேண்டும் என்ரு சொல்கிருய்?" என்று திருப்பியடித்தான் நல்லசிவம். " கல்லும் கற்பனையும் எல்லாம் கரைந்து, கரைக்கப்பட்டு ஏக நினைவுநிலை மட்டும் எங்கும் பரவி நிற்கும் கட்டம் எதிர்காலச் சிந்தனை வளர்ச்சிக்கு முடியுமா? முடியாதா? அதுதான் கேள்வி.'
* முடியலாம். ஆணுல் எந்தக் காலத்தில் ?" ** எந்தக் காலத்தில் என்பதல்ல பிரச்னை. பிரபஞ்சம் எல்லையற்றது. கால வேறுபாடுகள் உன்னை மையமாக வைத் தவை. எனவே, அந்தப் பிரச்னை வேண்டாம், இப்போ முடியுமா? முடியாதா? என்பதுதான் முக்கியம்."
** முடியும்
* ஆம் முடியும். அதையும் ஏற்கனவே இன்றைய விஞ் ஞானம் ஒரு கோட்பாடாக வைத்துவிட்டது."
* எங்கு ?"
நான் ஒப்புக்கொண்டேன்.
"g fissir sirl G. Arthur Clarksir 2001 Space Odyssey அந்தக் கோட்பாட்டின் அல்லது தத்துவத்தின் கதைதான்." நான் யோசித்தேன், நல்லசிவம் சொல்வது சரியாகவே யிருந்தது.
**ஆம் ; அது உண்மைதான். ஆணுல், அதனுல் இப்போ என்ன வந்து விட்டது? " - யோசித்தவாறே கேட்டேன்.
** அந்தக் கோட்பாடு தவிர்க்க முடியாதது. அதைப் போலவே அது பிறப்பிக்கும் வேறு கருத்துக்களும் தவிர்க்க முடியாதவை."
எவை எவை?" ** கோடி சூரியன்களும் கோள்களும் உள்ள எல்லையற்ற இப்பிரபஞ்சத்தில் ஏற்கனவே அப்படியொரு நிலை, ஏக சிந்தனை நிலை எங்காவது ஓர் இடத்தில் வளர்ந்திருக்காதா?’’ ** இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம்.'"
Page 64
124 மெய்யுள்
**ஆம் ; இருக்கலாம் என்பதற்கும் இடம் விட்டுத்தான் ஆக வேண்டும், சரி, அடுத்த கேள்வி : எல்லை காணுத இப் பிரபஞ்சத்தின் தோற்றம் எப்போது ஏற்பட்டது என்று நிச்சய மாகச் சொல்ல முடியாது. அப்படித்தானே?"
* ஆம்
" அதன் தோற்றம் அநாதியானது என்ருல் பிழை யில்லை.”*
P. p.
y po
*ஆம். " அப்படியென்ருல், எங்காவது ஓர் இடத்தில் (அல்லது பல இடங்களில்) வளர்ந்திருக்கக்கூடிய அந்த ஏக சிந்தனை நிலையின் தோற்றமும் எப்போதோ ஏற்பட்டிருக்கலாம்."
" இருக்கலாம். இல்லாமல் இருக்கலாம்." **ஆம் ; இருக்கலாம் என்பதற்கும் இடம் விட்டுத்தான் ஆகவேண்டும். அப்படியென்ருல், அந்த ஏகசிந்தனை நிலையின் தோற்றமும் அநாதியானதே என்பதே பொருத்தம்."
" இருக்கலாம். இல்லாமல் இருக்கலாம்."
*" ஆம் ; இருக்கலாம் என்பதற்கும் இடம் விட்டுத்தான் ஆகவேண்டும். இனி அடுத்த கேள்வி :- அந்த ஏக சிந்தனை நிலை ஏதோ ஒரு தனி இடத்தில் வளர்ச்சியுற்றுப் பரவியிருந் தாலும் அது சகல பிரபஞ்ச இயக்கங்களையும் கட்டுப்படுத்தவும், ஆற்றுப்படுத்தவும் கூடிய வல்லமை வாய்ந்ததாகவும் இருக் கலாம். நானும் நீயும்கூட அந்த ஏகசிந்தனை நிலையின் கட்டுப் பாட்டுக்குட்பட்டவர்களாகவே நம்மை அறியாமலேயே வாழ்ந்து கொண்டு இருக்கலாந்தானே? ஒருவேளை இன்று வரையும் அத்தனை உருவங்களும், தோற்றங்களும், செயல் களும், சிந்தனைகளும் அதனுலேயே உருவாக்கப்பட்டன வாயும் இருக்கலாம்."
" இருக்கலாம். இல்லாமல் இருக்கலாம்."
கலப்பு வலயம் 125
* ஆம் : அப்படிச் சொல்வதுதான் சரியான விஞ்ஞானி யின் பதில். இருக்கலாம் என்பதற்கும் இடம் விட்டுத்தான் ஆகவேண்டும். அப்படியென்ருல், எங்கோ ஒரு தெய்வ கோளத்திலிருந்து சர்வ வல்லமை பொருந்திய இறைவன் எல்லாவற்றையும் செய்வித்துக் கொண்டிருக்கிருன் என்ற பழைய சமயங்களின் வளர்ச்சியுருத துவைதப் பார்வைக்கும். புதிய விஞ்ஞானத்தின் கோட்பாட்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?"
நல்லசிவத்தின் கேள்வித்தொடர்கள் எழுப்பிய அதிர்வு கள் என் மனதின் பல கோண எல்லைகளையும் உடைத்துக் கொண்டு எல்லையற்று விரிந்து கொண்டிருந்தன. ஒருவித விடுதலைப் பரவசம் என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது. என்னுல் அவனது கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை.
*" வித்தியாசம் இல்லை; விளங்கிறதா ?' நல்லசிவம் என் பதிலை எதிர்பார்க்காமல் தொடர்ந்தான். “ புதிய விஞ்ஞானத்தின் அத்வைத கோட்பாட்டைத்தான் வளர்ச்சி யடைந்த சமயஞானத்தின் அத்வைதப் பார்வை பிரம்மமே சக்தி, சக்தியே பிரம்மம் என்று ஏற்கனவே கண்டுபிடித்து நிரூபித்தும் விட்டது." -
“ புதிய அத்வைத சிந்தனைமூலம் எங்கோ ஓரிடத்தில் வளர்ச்சியடைந்திருக்கக் கூடிய ஏகசிந்தனை நிலையை மறுக்க முடியாது இருக்கும் விஞ்ஞானம் தவிர்க்கமுடியாத வகையில் இந்தப் பழைய அத்வைத சமய ஞானத்தைக் காலப் போக்கில் ஏற்றுத்தான் ஆகவேண்டும். எப்படிப்பார்த்தாலும் விஞ்ஞானம் இனிமேல் சமய ஞானத்தால் விழுங்கப்படவே போகிறது. எப்போது அத்வைதப் பார்வையை விஞ்ஞானம் ஏற்றுக் கொண்டதோ, அப்போதே அதன் காலம் முடியத் தொடங்கி விட்டது,
Page 65
126 மெய்யுள்
"விஞ்ஞான அறிவு அந்தளவு உச்சத்திற்கு வளர்ந்தபின் அது அடுத்தகட்டப் பேரறிவின் பேர்ஞான ஈர்ப்புக்குள்விழுந்து கரைவது தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. இனிமேல் அந்தக் கரைவினதும் கலப்பினதும் காலம், விஞ்ஞானம் என்ற சொல்லே வழக்கொழியும் காலம்."
நான் பேசாமல் உட்கார்ந்திருந்தேன். என் நினைவு கள் பிரபஞ்சத்தின் பெரும் பெரும் வெளிகளில் எல்லாம் ஒடிக்கொண்டிருந்தன. சனிக்கோளத்தின் சந்திரனுக்கப்பால் அந்தக் காட்சிகள் தெரிந்தன. ஆர்தர் கிளார்க்கின் Space odyssey காட்சிகள் 1 பரிணுமம் வளர்ச்சியுற்று ஏக விஞ் ஞான சிந்தனையானது உருவங்களைக் கடந்து, எண்ணற்ற சூரியன்களையும் கோளங்களையும் கரைத்தும் உருவாக்கியும் தனது பெரும் லீலையை நடத்திக்கொண்டிருந்தது. இருப் பினும், அது இன்னும் தன்னைப் பிரபஞ்சம் எங்கும் வியா பித்த, சகலவற்றிலும் ஊடுருவிய ஏக சிந்தனையாக வளர்க் காமலே இருந்தது. அந்த வகையில் ஆர்தர் கிளார்க்கின் பேரறிவு உருவத்துக்குட்பட்டதாகவும், எல்லைக்குட்பட்ட தாகவுமே இருந்தது.
நல்லசிவத்தின் விளக்கங்களைக் கேட்டபின் எனக்கு அந்த விஞ்ஞானக் கதைகள் எல்லாம் வெறும் அற்பங்களா கவே தெரிந்தன.
அந்தளவுக்கு ஏக சிந்தனையை வளர்க்க முடியுமானுல் ஏன் இன்னும், அதற்கப்பாலும் போகமுடியாது?
நமது விஞ்ஞானிகள் தமது மனங்களின் பழக்க தோஷங் களால் கட்டுப்பட்டவர்களாகவே தெரிந்தார்கள். அதனுல், அந்த ஏகசிந்தனை வளர்ச்சியை அதன் பூரண எல்லைவரை விடுவிக்க முடியாதவர்களாகவே தெரிந்தனர்.
ஏகசிந்தனை வளர்ச்சியின் பூரண எல்லை எது?
க்லப்பு வலயம் 127
எல்லையற்று எங்கும் வியாபித்து, எல்லாவற்றிலும் ஊடுருவி, எல்லாவற்றையும் உருவாக்கியும் கரைத்தும் நர்த்தனம் செய்யும் நிலைதான் அதன் எல்லையற்ற எல்லை யாக இருக்கமுடியும்.
அது இனிமேல்தான் வரவேண்டுமென்று இல்லை. ஏற்கனவே அது வந்துவிட்டு இருக்கலாம். பிரபஞ்சத்தின் தோற்றம் அநாதியானதுபோல் அதன் தோற்றமும் அநாதி யாக இருக்கலாம். அது இன்று நாம் காணும் பிரபஞ் சத்தை உருவாக்கியிருக்கலாம். பிரபஞ்சமும் அதுவும் பிரிக்க முடியாத அத்வைதப் பொருளாக ஆதியாய், அநாதியாய் என்றுமேயிருக்கலாம்.
விஞ்ஞானம் அதை மறுக்கமுடியாது. இருக்கலாம்; இல்லாமல் இருக்கலாம் என்று மட்டும் சொல்லலாம்.
ஆனல், சனிக்கோளத்திற்கப்பால் கண்ணுக்குப் புலப் படாத விண்வெளி மூலையில் ஏகசிந்தனையானது உருவத் தைக் கடந்த புதிய லீலையில் இறங்கிவிட்டு இருப்பதாக விஞ்ஞானம் கற்பனை பண்ண முடியுமானல், இந்த எங்கும் வியாபித்த சத்தியம் பற்றிய சமய ஞானக்கருத்து அதை விட விஞ்ஞானமாகவும் உண்மையான பிரபஞ்ச யதார்த்த மாகவும் தெரியவில்லையா?
அடுத்த கோளங்களிலிருந்து வளர்ச்சியடைந்த விஞ் ஞானிகள் இங்கு வருவார்கள் அல்லது செய்தி அனுப்பு வார்கள் என்று கருதி, அதற்குரிய கருவிகளோடு பூமியில் விஞ்ஞானிகள் இனிமேல் காலம் காலமாகத் தவமியற்றவும் கூடத் தயாராய் இருக்கிருர்கள். அந்த நிலையில் அடுத்த உலகப் பேரறிவு உனது அகத்திற்குள்ளும் இருக்கிறது. அதை முதலில் அடைவதற்குத் தவமியற்றவும் என்று சொல்லும் சமயஞானம் விஞ்ஞானத்தையும் கடந்த விஞ்ஞான மாகத் தெரியவில்லையா ?
Page 66
128 . மெய்யுள்
** எதிர்காலச்சிந்தனை வளர்ச்சி ஏகசிந்தனை நிலை வளர்ச் சியாக மாறி எல்லாவற்றையும் ஆக்கி அழித்து லீலை நடத்த முடியும் என்று ஏற்றுக்கொள்ள முடியுமானுல், ஏற் கனவே அந்த நிலை வந்துவிட்டது என்பதையும் மறுக்க முடியாது."
நான் என்பாட்டில் சொல்லிக் கொண்டிருந்தேன். ** இருப்பவையெல்லாம் அதன் படைப்பேதான் என் பதையும் மறுக்க முடியாது. இருப்பவையெல்லாம் அதன் படைப்பேதான் என்ருல் இருப்பவற்றுக்கும் அதுக்கும் அடிப்படையில் இரண்டற்ற ஒருமையான அத்துவிதத்தன்மை இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. அத்துடன், இனிமேல் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் என்றும் விஞ்ஞானம் பதிலளிக்க முடியாது."
" காரணம்? " - இப்போ நல்லசிவம் கேட்டான்.
" காரணம் " - நான் கூறினேன். " காரணம், அப்படித் தான் அது இருக்கிறது என்று அதைப்பற்றி ஆராய்ந்த மெய்ஞானிகள் ஏற்கனவே கூறியுள்ளனர். அவர்களின் ஆதாரங்களை ஆராயாமல் எதையும் இனி விஞ்ஞானத்தால் மறுக்கவும் முடியாது. "
" சரியான முடிவு " என்று என்னைப் பாராட்டினுன் நல்லசிவம்.
" சரியான முடிவு. நீ அந்த முடிவை எடுக்கும் வரைக் கும்தான் நானும் காத்திருந்தேன். இனிமேல் சமூகத்தின் சகல சிந்தனைகளையும் செயல்களையும் அந்த வழியில் ஆற்றுப் படுத்துவதுதான் நமது வேலை. எந்த விதக் கற்பனைகளுக் கும் இனி இடமில்லை. விஞ்ஞானம் அதையும் இனி மறுத் தால், அதைவிடப் பிழையான கற்பணுவாதம் வேறு ஒன்றும் இருக்கமுடியாது"
கலப்பு வலயம் 129
* சகல கற்பனைகளையும் நாம் இனி அழிப்போம் " என்று சபதமெடுத்தேன் நான்.
** அழிப்பது அவசியம்தான். ஆணுல், நாம் அழிப்பதற் காக மட்டும் வரவில்லை. நமது அடிப்படை வேலை ஆக்க வேலைதான்.
நமது பாதை இனி மெய்முதல்வாதம். அடித்தள சத் தியமும் மேல்தளமற்ற நிலைகளும் அடிப்படையில் ஒரே மெய் நிலையே என்பதே மெய்முதல்வாதம்."
என்னிடம் அவன் எழுப்பிய பரவச அலைகள் என்னை முற்ருக ஆட்கொள்ளத் தொடங்கியது. அவனை நான் இறுக அணைத்துக்கொண்டேன்.
Page 67
விடுதலை என்ற இலட்சியத்துக்குரிய வழிகளும் விடுதலை பயப்பதாக இருக்க வேண்டும்.
ஈழத்தமிழரும் உலக விடுதலை இலக்கியமும் இயக்கமும்
மெய்முதல்வாதம்
இன்று உலகின் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் காணமுடியாத அளவுக்கு ஈழத்துத் தமிழ் இலக்கியப்போக்கு ஒரு துரித வளர்ச்சியையும் பாய்ச்சலையும் காட்டுகிறது. முழு உலக இலக்கிய வளர்ச்சிக்கும் இன்று ஈழத்தமிழ் இலக்கியப் போக்கே தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறது. அதுவே முழு உலகத்துக்குமுரிய விடுதலை இலக்கியமாக இருக்கிறது.
இது உண்மை. ஆணுல், பலருக்கு இதை நம்புவது கஷ்டமாக இருக்கும். எப்படி நம்புவது? எல்லா வெளித் தோற்றங்களும் இந்த உண்மையை மறைக்கும் திரைகளாக இருக்கும்போது எப்படி நம்புவது ?
தமிழ் இனத்தையும் அதன் மொழியையும் பிரதி பலிப் பதாகக் கூறும் ஈழத்துப் பெரும்பான்மைத் தமிழ் அரசியல் கட்சிகள் எல்லாம் தனித்தனியாகவும் கூட்டாகவும் இன்றைய உலகப்போக்குக்குத் தடையாகவே எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருக்கின்றன. கனவுகள், கற்பனைகள், பொய்கள் எல்லாவற்றையும் கிழித்துக்கொண்டு உலக சமூகத்தின் யதார்த்தப் போக்கைக் காண முயலும் அரசியல் விழிப்பு
மெய்முதல்வாதம் 131
அடுத்த நாடுகளில் எழுச்சியுற்றுக்கொண்டிருக்கும் இன்றைய சூழுலில் நம் கட்சிகளோ அண்டைத் " தாய்த் தமிழ்நாடு " வளர்த்து வரும் சினிமா - பிஸ்னஸ் - அரசியல் கனவுகளில், கற்பனைகளில், பொய்களில் தம் கொள்கைகளையும் கொடி களையும் நிறுவியவாறே போராட முயல்கின்றன.
அந்த நிலையில் உலகத்துக்குத் தலைமை தாங்கும் இலக் கியப்போக்கை ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் எவ் வாறு எதிர்பார்க்கலாம் ?
ஈழத்துத் தமிழரின் கல்வித்தரம் மிக உயர்வானது. ஆணுல், அந்தக் கல்வியோ வயிற்றை வளர்க்கும் உத்தி யோகக் கல்வியாக மட்டும் இருக்கிறது. " டொக்டர்", ** என்ஜினியர் ", " புருெக்டர் " என்ற பெயர்களில் படித்த யந்திரங்களாக வாழும் போக்குத்தான் பெரும்பாலான ஈழத் துத் தமிழர்களின் இலட்சிய வாழ்க்கைப் போக்காக இருக் கிறது. மனதை வளர்க்கும் கல்வியையும், சிந்தனையை வளர்க் கும் வாழ்க்கைப் போக்கையும் அவர்களால் இன்னும் நாட முடியவில்லை.
அந்த நிலையில் எவ்வாறு உலக இலக்கியத் தலைமையை ஈழத்துத் தமிழ் இலக்கியத்திடம் எதிர்பார்க்கலாம் ?
நெற்றியில் விபூதிப் பூச்சு வாயில், அன்பே சிவம் என்ற பேச்சு, போதாததற்குக் கோயில்கள், கோபுரங்கள், தேர்கள், திருவிழாக்கள் வேறு. மார்கழி விரத காலங்களில் கோலம் போட்ட வீட்டு முற்றங்களின் அழகுபோல் நம் சைவத் தமிழர் களின் தோற்றமும், அவர்கள் வாழும் சமூகத்தின் சம்பிரதா யங்களும் அழகாகத்தான் இருக்கின்றன. ஆணுல், அத்தனை யும் எத்தனை கோரமான ஏமாற்றுப் பூச்சுக் கோலங்கள் அத்தனை வெளிப்பூச்சுகளின் மறைவிலும் உலகத்தின் பழம், பெரும் பிற்போக்குப் பலாத்காரமும் ஆக்கிரமிப்பும் சுரண்ட
Page 68
132 மெய்யுள்
லும் இன்னும் மரியாதையாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் நிறத்தைச் சொல்லி, மொழியைச் சொல்லி, இனத்தை. சொல்லி, வர்க்கத்தைச் சொல்லி, கட்சியைச் சொல்லி நடத்தப் படும் பலாத்கார ஆக்கிரமிப்பும் சுரண்டல்களும் மனிதக் குறைகளின் வெளிப்பாடுகள் என மன்னிக்கப்படக் கூடியவை. ஆணுல், சமயத்தைச் சொல்லி நடத்தப்படும் பலாத்கார ஆக் கிரமிப்பும் சுரண்டலும் இறைவனையே குற்றங்களுக்குரிய வணுக ஆக்கிவிடுகின்றன. மனிதனையல்ல, அந்தக் கெட்டித் தனமான காரியத்தைப் பெரும்பாலான இந்துக்கள் நீண்ட காலமாகச் செய்து வருகின்றனர். அவர்களில் முன்னுக்கு நிற்பவர்கள் நம் யாழ்ப்பாணத்துச் சைவர்கள். தம் சொந்தக் குறைகளையும், கூட்டு ஆசைகளையும், ஆணவத்தையும், அறி யாமையையும் இறைவனிலும் சமயத்திலும் ஏற்றிவிட்டுத் தம்மளவில் ஒன்றும் அறியாத நிரபராதிகள்போல், பண் பட்ட சாத்வீகவாதிகள்போல் நடித்துக்கொள்ளும் நமது ஈழத் துச் சைவர்களைப் போன்ற வேடதாரிகளை உலகில் வேறு எங்கும் காணமுடியாது என்றுகூடச் சொல்லலாம். சாதிப் பாகுபாடு என்ற பெயரில் அவர்கள் காலங்காலமாக நடத்தி வரும் பலாத்கார ஆக்கிரமிப்பும் சுரண்டலும் உலகில் காணப் படும் வேறு எல்லா வகையான ஆக்கிரமிப்புகளையும் சுரண் டல்களையும் விடக் கோரமானவை, காட்டுமிராண்டித்தன மானவை. ஆணுல், அந்தக் காட்டுமிராண்டித்தனத்தின் கோரத்தை அதன் நிர்வாணக் கோலத்தில் வெளியே தெரிய விடாமல், அதன் மேல் பூச்சுச் சாத்விக வேடம் மறைத்துவிடுகி றது மறைந்துவிடுவதோடு அதன் கோரத்தையும் நோவையும் உணரவிடாது, அங்கு வாழும் பல நல்ல மனிதர்களின்உணர்வு கவையுங்கூட மழுங்கடித்து விடுகிறது. அதனல் எந்தவிதக் குற்ற உணர்வும் முரண்பாட்டுணர்வுறின்றி அவர்களாலும் "அன்பே சிவம்' என்றும், * கடமை, கண்ணியம், கட்டுப் பாடு" என்றும் ஒத்துப்பாட முடிகிறது. சாதிப்பிரச்னையின் கோரத்தைப் புட்டுக்காட்ட முயல்பவர்களை, ஏதோ தன்பாட்
மெய்முதல்வாதம் 33
டில் சாகப் போகும் ஒன்றுக்கு உயிரூட்ட முயல்பவர்களாகவும், தேவையற்ற சின்னப் பிரச்னைகளைச் சின்னத்தனமாக, தமிழர் களைக் காட்டிக்கொடுக்கும் துரோகத்தனமாகக் கிளறிவிட முயல் பவர்களாகவும் குற்றஞ்சாட்டி ஒதுக்கிவிட அவர்களால் முடி கிறது. சில சமயம் அந்த வெளிவேடக் கலாசாரத்தின் இல் லாத கற்பையும் தூய்மையையும் இருப்பதாக நிரூபிப்பதற்கும் இல்லாத அந்த மாயையைப் பாதுகாப்பதற்கும் அவர்களால் கலையாட்டம் போடவும் முடிகிறது.
இதுதான் ஈழத்தமிழ்ச் சமூகம். குறிப்பாக யாழ்ப் பாணத்துச் சைவத் தமிழ்ச் சமூகம். இதனிடம் முழு உல குக்குமே தலைமை தாங்கும் இலக்கியப் போக்கை எப்படி எதிர்பார்க்கலாம் ?
தமிழ் என்ற பெயரிலும், பண்பாடு என்ற பெயரிலும் தென்னிந்தியாவிலிருந்து வியாபாரத்துக்காக இறக்குமதி செய்யப்பட்ட தமிழ்ச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், திரைப் படங்கள் என்ற நோய்க் கிருமிகள் ஈழத்துத் தமிழ்ப் பொது மக்களின் கலை, இலக்கிய ரசனையை அரித்துவிட்டு அதனி டத்தில் கனவுகள், கற்பனைகள், வரலாற்றுப் பொய்கள் என்ற புற்றுக்களை எழுப்பியுள்ளன . அந்தப் புற்று நோயை எதிர்ப்பதிலேயே தரமான ஈழத்துத் தமிழ் எழுத்தாளன் தன் முழு நேரத்தையும் செலவழிக்க வேண்டியவனுய் இருக் கிருன். அந்த நோயின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இன்று ஒருவாறு வெற்றியைக் கண்டுள்ள அவன், அது விட்டுள்ள இடத்தில் உயிருள்ள கலை, இலக்கியக் கலங் களை எழுப்புவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிருன் , அதில் அவன் பூரணமாக வெற்றி கண்டவனுக இல்லை.
அந்த நிலையில் அவனல் எப்படி முழு உலகத்துக்கும் வழிகாட்ட முடியும் ?
Page 69
134 மெய்யுள்
ஒருவகையில் அந்தச் சந்தேகங்கள் நியாயமானவையே. ஆணுல், அவற்றுக்குக் காரணமாகவுள்ள முரண்பாடுகள் தான் நம்பிக்கையையும் எழுப்புகின்றன. எந்தெந்தக் காரணங் கள், எந்தெந்தச் சமூக, அரசியல், கலாசார, சமய யதார்த்த நிலைகள் உலகப் போக்குக்கு எதிரான முரண் பாடுகளாகத் தெரிகின்றனவோ, அவையே தான் புதிய சிந்தனை எழுச்சிக்கும், அது தரக்கூடிய தலைமைக்கும் காரண மாகவும் இருக்கின்றன.
உலகின் மிகமிகப் பிற்போக்கான அரசியல், சமூக, கலாசார, சமயச் சூழலில்தான் உலக வரலாற்றின் அடுத்த கட்ட எழுச்சிக்குரிய சிந்தனையும் செயலும் பிறக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனல், வேறு காரணி களும் கூடிக் காணப்பட்டால், அதைவிட அருமையான வேறு சூழல் இருக்கவும் முடியாது.
அந்த வேறு காரணிகள் எவை? முதலாவதாக, இன்றைய ஈழத் தமிழர்களில் பெரும் பாலானுேர் ஏதோ ஒருவகையில் அதிருப்திப்பட்டவர் களாகவே இருக்கின்றனர். அநியாயத்தையும் அதர்மத் தையும் எதிர்த்து, அரசியல் துறையில் போராடவேண்டிய வர்களாகவே தம்மைக் கருதிக்கொள்கின்றனர்.
அந்த அதிருப்தியும், போராட்ட உணர்வும் வரலாற் றின் அடுத்த கட்ட எழுச்சிக்கு மிகமிக அவசியமாகக் தேவைப்படும் மனச்சூழல் ஆகும். அதிருப்தியும் தேடலும் அவற்றுக்குரிய போராட்ட உணர்வும் இல்லாத ஒரு சூழலில் புதிய எழுச்சி பிறப்பது இயலாத காரியமாகும்.
அத்துடன் அரசியல் துறையில் அதிருப்தியுற்ற கார ணத்தினுல் போராட்டத்தின் அவசியத்தை உணரும் ஈழத் துத் தமிழ்ச் சமூகம் அதே போராட்டத்தின் மூலம் தன் வெளிவேடச் சமூக, கலாசார அமைப்பைக் காப்பற்றவும், அதற்கு எதிராக ஓர் அடிப்படைப் போராட்டத்தின் அவசி
மெய்முதல்வாதம் 135
யத்தை மறைக்கவும் திசை திருப்பவும் முயல்கிறது என் பதை உணர்ந்து, அந்த மேல்தளப் போராட்டத்தை முழு மைப்படுத்த முயல்பவர்களும் அதே அமைப்பில் இருக்கின் றனர்.
ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலோனுர் அந்த ரகத்தினராகவே இருக்கின்றனர். வெளிவேட அமைப்பு நடத்தும் வெளிவேடப் போராட்டத்தையும், அதற்குக் காரண மாகவுள்ள அரசியல்துறை அதிருப்தியையும், அதே வெளி வேட அமைப்பின் சகல அம்சங்களையும் தகர்த்தெறியும் முழுப் போராட்டமாக மாற்ற வேண்டுமென்பதையும், அந்த மாற்றத் தின் மூலமே அந்தப் போராட்டத்தை முழு உலகத்துக்கும் வழி காட்டும் போராட்டமாக வளர்க்கவேண்டுமென்பதையும் ஒத்து உணர்ந்தவர்களாக அவர்கள் இருக்கின்றனர். உதாரண மாகத் தென்னிந்தியாவிலிருந்து கட்டற்றமுறையில் இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற சஞ்சிகைகளைக் கட்டுப் படுத்த அவர்கள் எடுத்த முயற்சிக்குரிய அர்த்தம் வெறும் இலக்கியத் துறையோடு நின்றுவிடுவதில்லை. அம்முயற்சியை ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார, சமயத்துறைகளுக்குரிய கனவுகளையும், பொய்களை யும் வெளிவேடப் பூச்சுகளையும் அழிக்க உதவும் ஒரு பெரும் போக்கின் சிறு அம்சமாகவே பார்க்கவேண்டும். அப்படியே தான் அவர்கள் பார்க்கின்றனர். அது அவர்களின் இலக்கியப் போராட்டம் மட்டுமல்ல. அதுவே சாதிக் கொடுமைக்கும், அரசியல் ஏமாற்றங்களுக்கும், சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கும் எதிரான ஆரம்பப் போராட்டமாகவும் இருக் கிறது. எழுச்சியுற்றுக் கொண்டிருக்கும் உலக சமூகத்தின் முற்போக்குச் சக்திகளோடு ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தையும் பிணைக்கும் ஓர் பேர் முயற்சியின் "" போர்க்கோலம்."
அதை உணரும்போது, உலக இலக்கிய வளர்ச்சிக்கு நம் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் எவ்வாறு தலைமை தாங்க
Page 70
1.36 மெய்யுள்
லாம் என்று முன்பு எழுந்த சந்தேகங்கள் மெல்ல மெல்லக் கரையத் தொடங்கிவிடும்.
ஆளுல், முற்ருகக் கரைந்துவிடா, அவற்றை முற்ருகக் கரைப்பதற்கு வேறு ஆதாரங்களும் வேண்டும்.
உலகத்தின் பழப்பெரும் பலாத்கார ஆக்கிரமிப்பையும் சுரண்டலையும் தன் வெளிவேடச் சாத்வீகப் பூச்சுக்களால் மறைத்துக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம், அதே வேளையில் உலகத்தின் ஒரு பழம்பெரும் சமூகமாகவும், பழம்பெரும் இலக் கிய, கலாசார, சமய வரலாற்றைக் கொண்டதாகவும் இருக்கிறது. அதனுல் இன்றைய உலகப் பிரச்னைகளுக்கு வழிகாட்டக்கூடிய அனுபவ முதிர்ச்சியும். அந்த அனுபவம் இட்டுச் சென்று தொட்டுக் காட்டிய ஞானப்படுக்கையும் அத னிடம் இல்லாமலில்லை. அந்த அனுபவ முதிர்ச்சியையும், அது தொட்ட ஞான ஊற்றையுமே இன்று நம் தமிழ்ச் சமூ கம் தன் சாத்வீக வெளிப்பூச்சுக்களாக மாற்றியுள்ளது. அந்த அனுபவமும் ஞானமும் எந்த அக்கிரமங்களையும் அறியாமை யையும் பலாத்காரத்தையும் எதிர்த்தனவோ, அவற்றையே தன் உள்ளடக்கமாகவும் அந்தரங்க வாழ்க்கைப் பண்புகளாக வும் மாற்றி, இன்றைய தமிழ்ச் சமூகம் மாருட்டம் செய் கிறது. முருகனின் கோயிலுக்குள் சூரன் கொலுவேறிய கதை. கண்ணகியின் கற்பை வெறும் வாயளவிற் பேசிக்கொள்ளும் வெளிவேட வியாபார விபச்சார வாழ்க்கை. இருந்தாலும் சண்ணகியும் சரி முருகனும் சரி நம் பழம்பெரும் தமிழ் சமூகத்துக்கு அந்நியமானவர்களல்லர். அவர்களில்தான் நம் கலாசாரத்தின் அடித்தளம் தங்கியுள்ளது.
அந்த வகையில் பார்க்கும்போதுதான் நாம் சந்திக்கும் முரண்பாடுகளின் உண்மையான தன்மை தெரிய வரும். தம் பின்தங்கிய நிலையிலிருந்து எழுச்சியுறப் போராடிக்கொண் டிருக்கும் ஆப்பிரிக்கச் சமூகங்களைப்போல் நம் ஈழத்துத் தமிழ்ச் சமூகம் பொருளாதார வறுமையோடு கலாசார, சமய
மெய்முதல்வாதம் 137
வறுமையையும் காட்டும் ஒரு சமூகமல்ல. தன் முரண்பாடு களிலுருந்து விடுதலை பெற முயன்றுகொண்டிருக்கும் நம் ஈழத்துத்தமிழ்ச் சமூகம், அமெரிக்கச் சமூகத்தைப்போல் அண் மைக்கால வரலாற்றையும் அனுபவத்தையும் கொண்டுள்ள ஒரு புதுச் சமூகமுமல்ல. அடியில் இன்னும் ஞான உயிர்த் துடிப்புடன் வாழும் உலகத்தின் மிகப் பெரும் பழமை வாய்ந்த கலாசாரத்தைக் கொண்பு, சமூகங்களில் நமது சமூ கமும் ஒன்று.
அத்தகைய ஒரு சமூகத்தின் உயிர்த்துடிப்பை, அதன் உண்மையான மரபுத் துடிப்பைத் தொடும் எழுத்தாளர்கள் இன்று ஈழத் தமிழ்ச் சமூகத்திற் காணப்படுகின்றனர். அவர்கள் தம் சொந்தச் சமூகப் பிரச்னைகளுக்கும், முழு உலகப் பிரச்னைகளுக்கும் வழி காணும் துணிவைக் கொண்ட வர்களாகவும் இருக்கின்றனர். சமகால ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை அறிந்தவர்கள் அந்தப் பழந்தமிழ் மரபின் உயிர்துடிப்பையும் அது காட்டும் ஞானத் துணிவையும் புதிய தரிசன வழியையும் நிச்சயமாகக் காண்பர்.
ஈழத்தமிழர்களின் வெளிவேடப் " போராட்டப் " பூச்சுக் குள்ளிருந்து இன்னுெரு பெரும் போராட்டத்திற்குரிய *" போர்க்கோலம் ' எழுவதையும், அந்தப் போர்க்கோலத் தையும் அடித்தளச் சத்தியத்தில் நிறுவி, உலக பரிணும வளர்ச்சியின் அடுத்த தளத்துக்கு உயர்த்தும் இன்னுேர் எழுச்சியின் "" போர்ப்பறை ' அதற்குள் கேட்பதையும் இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை அறிந்தவர்கள் கண்டிருப்பார்கள், கேட்டிருப்பார்கள்.
அவற்றைக் கண்டவர்களுக்கும் கேட்டவர்களுக்கும் இன் றைய உலக இலக்கிய வளர்ச்சிக்கு ஈழத் தமிழ் எழுத்தாளர் கள் எவ்வாறு தலைமை தாங்கலாம் என்ற சந்தேகம் இருக்க
முடியாது.
&
Page 71
சுழல் : ஒன்று
தளம் : சமூகம்
“ GCሀጢ፴`ጠrር ̊.t -db ”
Gurfi (66. '
" போர்ப்பறை"
வளர்ச்சி மாற்றத்தைக் கோரி ஈழத்துத் தமிழ்ச் சமூகத் தில் எழும் மூன்று குரல்கள் அவை. அவை ஏறக்குறைய ஒரே அர்த்தத்தோடு வந்தாலும் மூன்றும், மூன்று வெவ் வேருண தளங்களிலிருந்து வருகின்றன.
"போராட்டம் " -”மேல்தளத்தின் குரல்.
" போர்க்கோலம் " - இடைத்தளத்தின் குரல்.
" போர்ப்பறை " - அடித்தளத்தின் குரல்.
மேல்தளம் வெறும் வெளிப்பூச்சுக்களுக்கும், போலியான தாமத சாத்வீக ஆசாரங்களுக்குமுரிய தளமாகும். ஈழத் தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மையினர் உண்மைகள் என்று நம்பி மாருட்டம் செய்யும் பூச்சுக்களுக்கும் ஆசாரங்களுக்கு முரிய தளமாகும். அந்தத் தளத்தில் வாழும் பெரும்பான்மை ஈழத்தமிழரைப் பிரதிபதிக்கும் தமிழ்க் கூட்டணிக் கட்சிகளின் போராட்டமும் வெறும் மொழியுரிமையோடு நின்றுவிடும்
மெய்முதல்வாதம் 139
தூய " அரசியல் போராட்டமாகவும், தமிழ்ச் சமூகத்தின் மேற்பூச்சுக்களைக் கிழித்துக்கொண்டு கீழே செல்லாத ஆசாரப் போராட்டமுமாகவே இதுவரை தடுமாறி வருகிறது. அதன் உண்மையான அடித்தள வேர்களை இன்னும் உணராமல் இருக்கிறது.
*" போர்க்கோலம்" என்பது மார்க்சீய முற்போக்கு எழுத்தாளரான செ. கணேசலிங்கனின் நாவல் ஒன்றின் பெயர். நமது தமிழ்ச் சமூகத்தின் மேல் பூச்சுகளுக்குப் பின்னலுள்ள சாதிக்கொடுமைகளையும், பிற்போக்குப் பலாத் காரச் சுரண்டலையும் ஆக்கிரமிப்பையும் எதிர்த்து எழும் மார்க்சீயப் போராட்டத்தை அழுத்துகிறது அது. மேல் பூச்சு மொழிப்போராட்டத்தை இன்னும் கீழே ஆழமாக இறக்கி, சாதிக் கொடுமைக்கு எதிரான போராட்டத் தோடும் உலக நிலமானிய - முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான பொதுவுடமைப் போராட்டத்தோடும் பிணைத்துப் பார்க்கத் தூண்டும் மார்க்சீய கோணத்தின் போர்க்கோலம். "" போர்ப்பறை" மு தளையசிங்கத்தின் நூலொன்றின் பெயர். பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்துசமயம் ஆகிய நான்கு சமயங்களும் வெளிப்படுத்தும் ஒரே உண் மையான சத்தியம், சகலதிலும் எழுச்சியுறும் பூரண சர்வோ தய மலர்ச்சிக்குக் கட்டியங்கூறும் புதுயுகத் தர்மப் பறை அது. முழு மனிதகுலமும் உடல், உயிர் மனம் ஆகிய தளங்களைத் தாண்டிப் பேரறிவுக்குள் காலடி வைக்கும் பரிணுமப் பெரும் போராட்டத்துக்கு உதவும் வகையிலும் அதன்மூலம் உதவி பெறும் வகையிலும், சகல சிறு போராட்டங்களும் அதனுேடு ஒன்ருகப் பிணைக்கப்பட்டு உரு மாற்றப்பட வேண்டுமென்று அறைகூவும் அடித்தள ஆத் மாவின் ஞானக்குரல்.
மூன்றும் வெவ்வேருன தளங்களிலிருந்து எழுபவை. மூன்றையும் எல்லாரும் ஒருங்கே கேட்காவிட்டாலும்
Page 72
140 மெய்யுள்
மூன்றில் ஏதாவது ஒன்றையாவது ஈழத்துத் தமிழர் எல்லோரும் பெரும்பாலும் இன்று கேட்பவர்களாகவே இருக் கின்றனர்.
வளர்ச்சி மாற்றத்தைக் கோரும் மூன்று பார்வைக் கோணங்களும் மூன்று வெவ்வேருண மனத்தளங்களுக்குரிய நிலைகளாக இருந்தாலும், அவை மூன்றும் வெவ்வேருன சமூகங்களுக்கு உரியவையல்ல. அதாவது, சிங்களச் சமூகம், தமிழர் சமூகம், பறங்கியர் சமூகம், போன்ற மூன்று வெவ், வேருண சமூகங்களுக்கு உரியவையல்ல. அதைக் கவனிப்பது அவசியம். மூன்று வெவ்வேருண மனத்தள நிலைகளும் ஒரே இனத்தில், ஒரே சமூகத்தின், ஒரே கூட்டுமனதின் வெவ் வேருண தளங்களிலேயே காணப்படுகின்றன.
அதனுல் ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் கூட்டுமனம் எல்லா நிலைகளிலும் ஏதோ ஒர் அளவில், ஏதோ ஒர் அர்த் தத்தில் இன்று "போர்" என்ற ஒன்றுக்குத் தயார்படுத்துவ தாகவே இருக்கிறது. அதன் கூட்டுமனத்தின் மேல்தளத்தில் , இடைத்தளத்தில், அடித்தளத்தில் எங்கும் ஏதோ வகையில் "போர்" என்ற ஒன்று உருப்பெற்றுக் கொண்டிருக்கிறது. அதனுல் பெரும்பாலும் அக்கூட்டு மனத்துக்குரிய ஒவ்வொரு தனிமனிதனும், ஒவ்வொரு தனிப்பட்ட தமிழனும் ஏதோ ஓர் அளவில் அதை ஆமோதிப்பவனுகவும் இருக்கிருன்.
இதைவிட உலக சரித்திர வளர்ச்சிக்கு ஓர் நல்ல சூழல் இருக்கமுடியாது. ஒரு முழுச் சமூகமும், ஒரு முழு இனமும் ஒரு தனிமனிதனைப்போல ஏதோ ஒரு வகையில் அதிருப்திப்பட்டு, நடைமுறையில் இருக்கிற சமூக நிலை யில் மாற்றங்காண விழைந்துகொண்டிருக்கிறது. அத்துடன் அதன் கூட்டுமனத் தின் இடைத்தள இயக்கமும் அடித்தள இயக்கமும் இன்னும் மேல் தளத்தின் பெரும்பான்மைப் பலத்தை பெருதிருந்த போ திலும் அவையே சமூக, இன, மொழி, சமயப் பிரிவுகளைக் கடந்து, சர்வ தேசமெங்கும் வாழும் சகல மக்களினதும் இயக்
மெய்முதல்வாதம் 141
கங்களாக வளரக்கூடியவையாக இருக்கின்றன. காரணம், இன, மொழி வித்தியாசங்கள் மேல் தளத்துக்குமட்டும் உரியவையாக இருக்கும் போது அடித்தளச் சத்தியநிலை உலக மக்கள் சகலருக்கும் உரியதாக இருக்கிறது. ஏற் கனவே அத்தகைய சர்வதேசத் தொடர்புகளும் தெரிய வந்துள்ளன.
அதேபோல் மேல்தள மனநிலை மெல்ல மெல்ல அதற்குக் கீழுள்ள இடைத்தள இயக்கத்தாலும், இடைத்தள இயக்கம் அதற்கும் கீழுள்ள அடித்தள இயக்கத்தாலும் மெல்ல மெல்ல ஊடுருவப்பட்டு ஒன்ருேடு ஒன்று எல்லைகளற்றுக் கலந்து உரு மாறும் பூரணப் போக்குக்குரிய அறிகுறிகளும், அதற்குரிய கருத்துச் சர்ச்சைகளும், உட்போராட்டங்களும் ஆரம்பத்தி லிருந்தே வெளியே தெரியவந்துள்ளன.
உண்மையில் இந்த மூன்று மனநிலைகளும் அடிப்படையில் வெவ்வேருனவையல்ல. சரித்திர வளர்ச்சியின் சத்திய வெளிக் காட்டல் என்ற ஏக காரணத்தால் தூண்டப்படும் சிந்தனை - செயல் சூழல் மாற்றத்தை ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தன் மூன்று மனத்தள நிலைகளுக்கு ஏற்றவாறு மூன்றுவிதமாகப் புரிந்து கொண்டுள்ளது, அவ்வளவுதான். அவை மூன்றும் வெவ்வே ருகத் தெரியினும், அடிப்படையில் அவை ஒரே பெரும்போக் காகவே இருக்கின்றன. காரணம், சரித்திர வளர்ச்சி தற்செய் லாக நடைபெறுவதில்லை. சரித்திர வளர்ச்சிக்குப் பின்னல் சகலதையும் நடத்துவிக்கும் சத்தியப் பேரறிவு நிற்கிறது" அந்த ஏக காரணமான சத்தியப் பேரறிவு சரித்திர வளர்ச்சி யையும், மனிதப் பரிணுமத்தையும் இன்று ஒரு புதிய பெருந் தளத்துக்கு உயர்த்திக் கொண்டிருக்கிறது. அதற்குரிய மாற் றங்கள் இன்று ஈழத்தில் மட்டுமல்ல. முழு உலகமெங்கும் உரு வாகிக் கொண்டிருக்கின்றன.
Page 73
142 மெய்யுள்
அந்த உலகளாவிய மாற்றங்களைத்தான் ஈழத் தமிழ்ச் சமூகமும், குறிப்பாக அதன் இலக்கிய வளர்ச்சிப் போக்கும் வெளிப்படுத்துகின்றன.
ஈழத்தைப் பொறுத்தவரையில் அந்த மாற்றங்களைக் குறிப்பதற்கு வசதிக்காக ஒரு குறிப்பிட்ட ஆண்டைத் தெரிவு செய்ய வேண்டுமானுல், 1956 ஐயே தெரிவு செய்ய வேண்டும். சர்வதேச ரீதியிலும் அந்த ஆண்டு முக்கிய பெரும் மாற்றங்களைக் குறிப்பதாக இருக்கிறது.
2
1956-ம் ஆண்டு ஈழத்தின் சமகாலச் சரித்திரத்தில் ஒரு முக் கிய ஆண்டாகும். பண்டார நாயக்கா குறிப்பிட்ட மாற்றுவல யக் காலக்கட்டம் இலங்கையில் ஆரம்பித்த ஆண்டு அது; சிங். களப் பொதுமக்கள் தமது விடுதலையை ஓரளவுக்குப் பரவலாக உணரவந்த காலம் அது. தனிச் சிங்களச் சட்டம் தோன் றிய காலம்.
ஈழத் தமிழ் மக்களிடையேயும் அதன் பாதிப்பு இன மொழி எதிர் விழிப்பாகவும் அவற்றுக்குரிய அரசியல் எதிர் விழிப்பாக வும் இருந்தன. அரசியலில் தமிழரசுக் கட்சி வலுவடைந்தது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்திலும் அந்த விழிப்புணர்வு தெரிய வந்தது.
1956-ஐ ஒட்டிய காலத்திலேயே ஈழத்துத் தமிழ் எழுத் தாளர்களிடையே மார்க்சீய முற்போக்கு இயக்கம் உருவாகி வலுவடைந்தது.
அதே காலத்தில் உலகத்தில் பலவிடங்களிலும் ஏற்பட்ட பலவித மாற்றங்களுள் முக்கியமானவையாக இரண்டு நிகழ்ச்சி களைக் குறிப்பிடலாம்.
ஒன்று ஹங்கேரிய போலிஸ் புரட்சி.
மெய்முதல்வாதம் 143
இரண்டு, எகிப்து நாட்டால் சூயஸ் கால்வாய் தேசிய மயமாக்கப்பட்ட சம்பவமும் அதைத் தொடர்ந்து எகிப்து மீது பிரித்தானியா நடத்திய விமானத் தாக்குதலும் ஆக்கிர மிப்பும்.
பல்வேறு வகைப்பட்ட இத்தகைய நிகழ்ச்சிகள் அடிப் படையில் சில ஒற்றுமையைக் காட்டுகின்றன. அந்த ஒற்று மையை இனங்காண்பதற்கு ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறையையே உதாரணமாக எடுக்கலாம்.
1956 க்குப் பின்பு ஏற்பட்ட தமிழுணர்வும் இலக்கிய விழிப்பும் படிப்படியாக மூன்று இலக்கியப் போக்குகளைக் காட்டத் தொடங்கின.
ஒன்று, மரபுவாதமும், தன்னை உணராது அதனுேடு ஒட்டிக்கொண்ட "நற்போக்கு " இலக்கியப் பார்வையும்.
இரண்டு, மார்க்சீய முற்போக்கு இலக்கியப் பார்வை.
மூன்று, அவை இரண்டிலும் அதிருப்தியுற்று அவற்றுள் அடங்காது வெளியே நின்ற மூன்ரும் பக்கப் பார்வை. காலப் போக்கில் அதுவே 1970 லிருந்து பூரண சர்வோதயப் பார் 66 is வளர்ந்துள்ளது.
இவை மூன்று மோக்குகளும் 1956 க்குப் பின்பு உலகில் வலுப்பெற்றும், வலுவிழந்தும் காணப்படும் மூன்று சர்வ தேச அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார சிந்தனைப் போக்குகளை ஒத்திருக்கின்றன.
ஒன்று, முதலாளித்துவ ஏகாதிபத்தியம். சூயஸ் நெருக் கடியும் எகிப்துமீது விமானத் தாக்குதல் நடத்திய பிரித்தா னியாவின் போக்கும் சர்வதேச முதலாளித்துவ ஏகாதிபத்தி யத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியைக் காட்டுகின்றன; அதன் ஸ்தம்பிதத்தைக் காட்டுகின்றன.
Page 74
144 மெய்யுள்
இரண்டு, சோஸலிஸ ஏகாதிபத்தியம். ஹங்கேரி, போலிஷ் புரட்சிகள் சர்வதேச சோஸலிஸ் ஏகாதிபத்தியத் துக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலையைக் காட்டுகின்றன: அதன் ஸ்தம்பிதத்தைக் காட்டுகின்றன.
மூன்று, இவை இரண்டிலும் அதிருப்தியுற்று அவற்றுள் அடங்காது வெளியே நின்ற ஆசிய, ஆப்பிரிக்க, தென்ன மெரிக்க நாடுகளைக் கொண்ட மூன்ரும் உலகமும் அதன் நடுநிலை வழியும். முதலாளித்துவத்துக்குள்ளும் மார்க்சீய சோஸலிஸத்துக்குள்ளும் அடங்காத மூன்ரும் வழியின் பூரண அர்த்தத்தை இன்னும் மூன்ரும் உலகம் காணவில்லை என்பது உண்மைதான். ஆணுல், சர்வதேச ரீதியில் அப்படி ஒன்று உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இன்று காணப்படும் இளம் பரம்பரையினரின் அதிருப்தியா னது அந்த மூன்ரும் பக்கத்துக்குரிய புதுவழித் தேடல் முதலாளித்துவ நாடுகளுக்குள்ளும் சோஸலிஸ நாடுகளுக்குள் ளும் ஊடுருவி வருவதைக் காட்டுவதாகவே இருக்கிறது.
1956 க்குப் பின்பு ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தனது கலை, இலக்கியத் துறைகளில் தீவிரமாக வெளிக்காட்டிய மூன்று சிந்தனைப் போக்குகளும் அதே காலத்தில் சர்வதேச சமூக, பொருளாதார, அரசியல், கலாசாரத் துறைகளில் வெளிப்ப டுத்தப்பட்ட மூன்று பெரும் சர்வதேசப் போக்குகளை ஏறக் குறைய ஒத்திருந்தன. அதாவது ஈழத்து ஆசார மரபுவாத மும் அதனுேடு இணைந்த நற்போக்கு இலக்கியப் பார்வை யும் சர்வதேச முதலாளித்துவப் போக்கையும் அதற்கு உத வும் சமய ஆசாரத்தையும் ஒத்திருந்தன. ஈழத்து மார்க்சீய முற்போக்கு இலக்கியப் பார்வை சர்வதேச சோஸலிஸப் போக்கை ஒத்திருந்ததுடன், நேரடியாகவே அதிலிருந்து தன தும் பலத்தைப் பெறுவதாகவும் இருந்தது. அதே போல் ஈழத்து மூன்ரும் பக்க இலக்கியப் பார்வை சர்வதேச அரங் கில் காணப்படும் மூன்ரும் உலகத்தின் நடுநிலைக் கொள்கை
மெய்முதல்வாதம் 45
யையும் சகல நாடுகளிலுமுள்ள இளம் பரம்பரையினரின் புதுவழித் தேடலையும் ஒத்திருப்பதுடன் காலப்போக்கில் அவற்றுக்கு தத்துவார்த்த ரீதியாக அர்த்தம் கொடுத்து ஆற் றுப்படுத்துவதாகவும் வளர்ந்துள்ளது.
இம்மூன்று போக்குகளையும் தத்துவார்த்த ரீதியில் சொல்லவேண்டுமானுல், இப்படித்தான் சொல்லவேண்டும் -
ஒன்று, கருத்துமுதல்வாதம். இரண்டு, பொருள்முதல்வாதம். மூன்று, இரண்டிலும் அடங்காது, இரண்டையும் அணைத் தும் கடந்தும் திருத்தியும் நிற்கும் புதுச் சித்தாந்தம். அதை மெய்முதல்வாதம் எனலாம்.
ox & 令
சுழல் : இரண்டு தளம் 1 சத்தியம்
கருத்துமுதல்வாதம் என்ருல் என்ன ?
கடவுளை அல்லது இலட்சியரீதியான சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வுலக வாழ்க்கைக்கு விளக் கங் காணும் போக்கைக் கருத்துமுதல்வாதம் எனலாம். சடத்தையும் பொருளையும் அடிப்படையாகக் கொண்ட பொருள்முதல்வாதப் பார்வைக்கு இது எதிர்மாருனதாகக் கருதப்படுகிறது.
கருத்துமுதல்வாதம், கடவுளை ஏற்றுக்கொள்ளாத சிந் தனைப் பார்வையாக இருக்கும்போது நடைமுறை வாழ்க் கைக்கு அதிகம் உதவாத இலட்சிய சித்தாந்தங்களாகவும், கற்பணு வாதங்களாகவும் நின்றுவிடுகிறது. கடவுளை ஏற்றுக் கொள்ளும்போது பெரும்பாலும் எல்லாச் சமயங்களும் வளர்த்துள்ள ஆசார மரபாகவே நிற்கிறது.
Page 75
146 மெய்யுள்
சகல சமயங்களினதும் அடிப்படையான ஞானப்பார்வை அதாவது ஆத்ம மரபு, இதற்குள் அடங்காது.
இதுதான் கருத்துமுதல்வாதத்தின் அர்த்தமாகும். இன்று அது இவ்வாறுதான் விளங்கிக்கொள்ளப்படுகிறது. இவ்வுலக வாழ்க்கையை அதிகம் ஆமோதிக்காத போக்கு, சமூக பொருளாதார - அரசியல் வளர்ச்சி மாற்றங்களுக்கு விட்டுக்கொடுக்காமை, நடைமுறை அமைப்பைப் பாதுகாத் தல், விசாரணையற்ற பக்தி, கட்டுப்பெட்டித்தனம் ஆகிய வற்றை இந்தப் பார்வையின் முக்கிய பண்புகளாகக் கூற லாம்.
பதினைந்தாம், பதினரும் நூற்ருண்டுகளில் ஐரோப் பாவில் கிறிஸ்தவ சமயம் வளர்த்திருந்த ஆசார மரபு இந்த வகையானதாகவே இருந்தது. அதனுல் தான் அதே காலத் தில் அதற்கு எதிரான அறிவுவாதமாக விஞ்ஞானம் வளர்ச்சியடைந்தது. அந்த விஞ்ஞான அறிவுவாதத்தின் ஒரு போக்கு பொருள் முதல்வாதமான இன்றைய மார்க் சிய சோஸலிஸப் பார்வையாக வளர்ச்சியடைந்துள்ளது. அடுத்த போக்கு, கருத்தை அழுத்தும் இலட்சியரீதியான பல சிறு சித்தாந்தங்களாகவும் சமய ஆசாரப் பூச்சுக் களோடு வளர்ந்துள்ள இன்றைய முதலாளித்துவ ஏகாதி பத்தியப் போக்காகவும் உருமாறியுள்ளது. முதலாளித்து வத்தின் முற்றிய சர்வாதிகாரமான பாஸிஸத்தில் தவிர வேறு நிலைகளில் மேற்கத்தைய முதலாளித்துவம் சமய ஆசாரத்தை மறுத்ததில்லை. •
மொத்தத்தில் கருத்துமுதல்வாதம் என்பது சமயத்தின் பெயரிலும் கருத்தின் பெயரிலும் வெறும் சமய ஆசார மர பாகவும் முதலாளித்துவ ஏகாதிபத்தியமாகவும் இருப்பதால் உண்மையில் அது ஆன்மீகப் பூச்சுக்களுக்குள் வாழும் பச் சையான பொருளாசையாகவே இருக்கிறது. அல்லது அதிக மாகப் பொருளாசைக்கே விட்டுக்கொடுக்கிறது. அதனுல்
மெய்முதல்வாதம் 47
உண்மையான சமயஞானம், அதாவது ஆத்மமரபு எவை யெவற்றை இலட்சியங்களாகக் கொண்டுள்ளதோ அவற் றுக்கு அது தடையாகவே நிற்கிறது. அன்பு, சமத்துவம் விடுதலை என்பவை உண்மையான சமயஞானத்தின் பண்பு களாகும். ஆத்மமரபு அவற்றையே சமூகத்துக்குரிய இலட் சியங்களாக முன்வைக்கிறது. அவற்றை ஏற்றுக்கொள்வது போல் கருத்துமுதல்வாதம் நடித்துக் கொண்டாலும் உண் மையில் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் அவற்றுக்குத் தடையாகவே இருக்கிறது. •
அன்பு, சமத்துவம், விடுதலை என்பவை ஏக சத்தியத் துக்குரிய தவிர்க்கமுடியாத பண்புகளாகும். காரணம், சகல ருக்கும் சகலதுக்கும் உரிய அடித்தளச் சத்திய நிலையான ஆத்ம நிலை எல்லாவற்றுக்குரிய இரண்டற்ற ஒன்ருக, அத் வைத நிலையாக நிற்கிறது. அதனுல் அடிப்படையில் எல் லாரும் ஒரே ஆத்ம சுயமாக இருக்கும்போது சமத்துவம், அன்பு என்பவை அதன் சுய பண்புகளாக இருக்கின்றன. அவற்றையும் அவற்றுக்குரிய சுயத்தையும் அனுபவிப்பதே உண்மையான விடுதலையாக இருக்கிறது.
எல்லாச் சமயங்களுக்குமுரிய ஆத்மமரபு, அந்தப் பண்பு களையே சமூகத்தின் இலட்சியங்களாக முன்வைக்கிறது. உபநிடதங்களின் மகாவாக்கியங்கள் அந்த ஆத்மமரபின் * உண்மையான அர்த்தத்தை விளக்குகின்றன.
அதுவே நீ. (சத்தியநிலையான பிரம்மமே f5) அகம் பிரம்மம். சர்வமும் பிரம்மம். (சத்தியநிலை) இந்தச் சத்தியநிலையை அனுபவிக்கும்போதே உண்மை யான விடுதலை ஏற்படும். அந்த விடுதலைமூலமே உண்மை யான சமத்துவத்தையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தலாம். இன, மொழி, சாதி, சமய, வர்க்க,
Page 76
148 மெய்யுள்
நிற வேறுபாடுகள் சகலவற்றையும் அவற்றுக்குரிய சுரண்ட லையும் பலாத்காரத்தையும் அப்போதுதான் வேரோடு களைய லாம். ஆணுல், அந்த விடுதலையைப் பெறுவதற்கு வெளி யுலகப் பொருட்களின் பற்றுக்களிலிருந்தும் உடல், உயிர், மனத்தளங்களின் கட்டுக்களிலிருந்தும் விடுபடவேண்டும். சத் திய விடுதலை என்பது அதுவேதான்.
சகல மதங்களுக்குமுரிய ஆத்மமரபு வெளிப்படுத்தும் இலட்சிய விடுதலை இதுதான். ஆணுல், அந்த விடுதலை யானது மனித வாழ்க்கையைப் புதிய பெருந்தளமான பேர றிவுப் பொதுவுடமையிலிருந்துத இவ்வுலகத்திலேயே அனுப விக்க வழிகாட்டும். அடுத்த உலகத்துக்குரிய விடுதலையல்ல. அதுவும் உண்டு. அது வேறு விடயம்.
ஆணுல், இந்த இலட்சியத்தை முன்வைத்துள்ள சர்வ சமய ஆத்மமரபு அதற்குரிய பக்குவம் சகலரிடமும் வரும் வரைக்கும் காத்திருக்கவும் தயாராய் இருந்தது. நதிக்கரை நாகரிகம் முதலாகப் பழைய வேத - உபநிடத காலம் ஊடாக இன்றுவரை அது காத்திருக்கவே செய்கிறது. இதுவே மனித மனத்தள வளர்ச்சிக்குரிய சுழலாகும். அந் தந்தக் காலங்களில் அந்தந்த இடங்களில் நடைமுறையிலி ருந்த சமூக பொருளாதார கலாசார அரசியல் அமைப்புகளை மாற்றியமைத்த சமய எழுச்சிகள் எல்லாம் இந்த விடுதலைக் குரிய வகையில் மனிதனைத் தயார்ப்படுத்தவே முயன்றன. இந்த விடுதலை பரவலாக எல்லோருக்கும் உரியதாக வரும் போது மனித குலத்தின் பரிணுமப்போக்கு பேரறிவுக்குள் இறங்குவதாக முடியும். ஆனல், அதற்கு முன் சகல மனத் தளங்களும் அதற்குத் தயார்படுத்தப்பட வேண்டும்.
இந்த விடுதலைக்குத் தடையாக இருந்த முக்கிய சக்தி கள் பொருளாசையும் அதனுேடு சம்பந்தப்பட்ட சிற்றின்ப ஆசைகளுமே. அந்த ஆசைகள்தான் கருத்து முதல்வாதத்துக்
மெய்முதல்வாதம் 149
குரிய சமய ஆசாரமாகவும் முதலாளித்துவமாகவும் இன்று நிற்கின்றன. ஆணுல் அவை வெளிப்படையாக ஆத்ம மரபு கூறும் விடுதலையை மறுக்காதவை. அதனுல் அடித் தள ஆத்ம மரபுக்கும் மேல்தள ஆசார மரபுக்கும் தொடர்பும் கலப்பும் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் இன்னும் இருக்கவே செய்கின்றன. அத்துடன் மேல் தள ஆசார மரபும் முதலா ளித்துவமும் இன்று சர்வதேசமெங்கும் ஸ்தம்பித நிலையில் பலமிழந்து கொண்டிருக்கின்றன. அப்படியானுல் ஆத்ம விடுதலைக்குப் பதிலாகப் பொருள் தேடுவதில் அக்கறை காட் டிய மனித குலத்தின் பொருளாசை இன்று பரவலாக ஸ்தம் பிதமடைந்து வலுவிழந்து வருகிறது என்பது அர்த்தமாகும். அந்த தேக்கமும் அதனேடு கூடிய வலுவிழப்பும் சீர் குலைவும் வரும்வரையுமே உண்மையான சமய ஞானத்துக் குரிய ஆத்மமரபு அதன் பரவலான விடுதலைப் போராட்டத் துக்குக் காத்துக் கொண்டிருந்தது. அந்த விடுதலைக் காலம் இன்று வந்து விட்டது.
அந்த ஆத்ம மரபின் புதுத்தள எழுச்சியைத்தான் இன்று மெய் முதல்வாதம் பிரதிபலிக்கிறது. பூரண சர்வோதயம் என்பது புதுயுகத்துக்குரிய மெய்முதல்வாதப் பெருந் தத்துவ மாகும். கருத்தும் பொருளும் அடிப்படையில் ஏக ஆத்மா வான சத்தியமாக இருக்கும் போது (பெளத்த சமயம் விளக்கிய நிர்வாண விடுதலைக்குரிய சம்போதி ஞான நிலையாக இருக் கும்போது) கருத்தை வேருகவும் பொருளை வேருகவும் கருது வது தவருகும். முதலில் கருத்து வந்ததா அல்லது பொருள் வந்ததா என்ற தர்க்கமும் பிழையானதாகும். கருத்தும் பொ ருளும் அடிப்படையில் கருத்துக்கும் பொருளுக்கும் காரண மாகவுள்ள சத்தியமாக, மெய்யாக நிற்கின்றன.
பிரம்மமே சக்தி, சக்தியே பிரம்மம். நிர்வாணமே சம்சா சம், சம்சாரமே நிர்வாணம், அடித்தளச் சத்திய நிலை உண்
Page 77
150 மெய்யுள்
மையான சத்தாகவும் (உண்மைப்பொருள்), உண்மையான சித்தாகவும் (பேர்ஞானம்), உண்மையான ஆனந்தமாகவும் (விடுதலைப்பரவசம்) இருக்கிறது.
இதுதான் பழைய ஆத்ம மரபின் தீர்ப்பாகும். இந்த உண்மையை வெளிப்படுத்தும் மெய் முதல் வாத மானது, கருத்து முதல்வாதம் பொருள் முதல்வாதம் என்ற பாகுபாடுகளை நீக்கி, எல்லாவற்றையும் திருத்தி முழுமைப் படுத்திப் பூரணப்போக்காக மாற்றிப் பரவலான விடுதலைப் போராட்டத்துக்கு இன்று மனிதகுலத்தைத் தயார்ப்படுத்த எழுந்து கொண்டிருக்கிறது. y
பொருள்-உடல், உயிர், மனம் ஆகிய தளங்களிலிருந்து அடுத்த பேரறிவுத் தளத்துக்கு எழுச்சியுறும் விடுதலைப் போராட் டத்தை அதுவே கொண்டு வரக் கூடியதாக இருக்கிறது.
இதற்குப் பொருள் முதல்வாதமான மார்க்சீய சித்தாந் தம் எந்தளவுக்கு உதவுகிறது?
பொருள்முதல்வாதமான மார்க்சீய சித்தாந்தம் சமய ஆசாரத்தையும் நிலமானிய -முதலாளித்துவத்தையும் பிரதி பலிக்கும் கருத்துமுதல்வாதத்துக்குமுரணுக எழுந்த போக்கே யொழிய, அடித்தள ஆத்மமரபுக்கு முரணுனதல்ல. அதை முத லில் அவதானிக்க வேண்டும். உண்மையில் ஆத்மமரபை அது அறிந்திருக்கவில்லை. அன்பு, சமத்துவம், விடுதலை என்பவற்றை வெறும் அர்த்தமற்ற சுலோகங்களாக ஆக்கி விட்டு, பொருளாசைக்கு இடம் விட்டுவந்த சமய ஆசார மரபைத் தான் அது உண்மையாக அறிந்திருந்தது, அத ஞல் அதற்கு எதிராகவும், அதோடு கூடிய நிலமானிய - முதலாளித்துவப் போக்குக்கு எதிராகவும் உண்மையான அன்பு, விடுதலை, சமத்துவம் ஆகியவற்றுக்காக அது பொருள் மூலமே போராட முயல்கிறது. உற்பத்திச் சக்திகள், உற்
மெய்முதல்வாதம் 151.
பத்தி முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சமூக வர லாற்றை ஆராயும் மார்க்சீய சித்தாந்தம் உற்பத்திப் பெருக் கம், தேவைக்கேற்ற பங்கீடு ஆகியவை நிலவும் பொருளா தாரப் பொதுவுடமை அமைப்பிலேயே ஒவ்வொரு தனிமனி தனும் உண்மையான அக விடுதலையையும் சமத்துவத்தை யும் அனுபவிப்பான் என்று கருதுகிறது.
அந்த வகையில் பார்க்கும்போது மார்க்சீய பொருள் முதல்வாதம் பொருள் - உடல், உயிர், மனத்தளங்களுக்குள் ளேயே நின்றுகொண்டு அவற்றுக்குள்ளேயே ஒரு சமய ஞானத்தையும் பொதுவுடமைக்குரிய ஆன்மீக விடுதலையை யும் உருவாக்கிவிட முயல்கிறது. அது நடைமுறையில் வெல்லக்கூடிய ஒன்றல்ல என்பது ஆத்மமரபின் அனுபவமா கும். இருப்பினும் பொருளை அழுத்துவதாகத் தெரியினும் அடிப்படையில் அக விடுதலையை நாடுவதாகவே மார்க்சீய பொருள்முதல்வாதம் செயல்படுகிறது என்பதை மறுக்க முடியாது.
அதனுல் ஆத்மமரபை வெளிப்படையாக மறுக்க முடியாத கருத்துமுதல் வாதத்தைப்போல் பொருள்முதல்வாதமும் ஆத்ம மரபுடன் அடிப்படையில் கலக்கக்கூடியதாகவே இருக்கிறது.
அத்துடன் அக விடுதலைக்காக ஏங்கும் பொருள்முதல் வாத மார்க்சீய சித்தாந்தமும் 1956க்குப் பின் சர்வதேச அரங்கில் நெருக்கடிக்குள்ளாகி ஸ்தம்பிதமடைந்து சீர்குலைந்து வருகிறது. அதன் காரணமாக அதைவிட வேகமாக விடு தலைக்கு உதவக்கூடிய வகையில் வேருேர் போக்கு வளரு மானுல், அதனுள் அது விழுங்கப்படக்கூடியதாகவும் இருக் கிறது.
கருத்துமுதல்வாத முதலாளித்துவமும் இன்று தேங்கிச் சீர்குலையத் தொடங்கியுள்ளது. பொருள்முதல்வாத மார்க் சீயமும் இன்று தேங்கிச் சீர்குலையத் தொடங்கியுள்ளது. இரு
Page 78
52 மெய்யுள்
பெரும் போக்குகளும் மெய்முதல்வாதம் என்ற மூன்ரும் போக்கால் விழுங்கப்பட்டுப் பூரணபோக்காக வளரும் சூழலே இன்று சர்வதேசமெங்கும் வலுப்பெற்று வருகிறது.
FLDulu E5 T60Tb இதுகாலவரை எந்தப் பக்குவத்தைப் பரவ லாக எல்லாரிடமும் எதிர்பார்த்துக் காத்திருந்ததோ அந்தப் பக்குவத்தை மனிதகுலத்தின் கூட்டு மனம் தனது சகல தளங்களிலும் வெளிப்படுத்தும் கலப்புக் கட்டம் இன்று எழுச் சியடைந்து வருகிறது. பொருள் - உடல், உயிர், மனம் ஆகியவற்ருேடு அவற்றுக்கு அப்பாற்பட்ட பேரறிவும் அதற் குரிய விடுதலையும் சகலருக்குமுரிய சகஸ நிலையாக வளரும் பூரண சர்வோதய மலர்ச்சிக்குரிய பொதுவுடமை - பாரதி பாடிய கிருதயுகம் - இன்று பிறந்து கொண்டிருக்கிறது.
o
சுழல் : மூன்று தளம் : உலகம்
இந்த விளக்கங்களை ஆதாரங்களோடு நிரூபிப்பதும் அவ சியம். அதன்பின்பே ஈழத்தமிழர்களின் விடுதலை இலக்கி யத்தையும் இயக்கத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளவும் அவற்றின் சர்வதேச முக்கியத்துவத்தையும் உணர முடியும்
1958 க்குப் பிறகு சர்வதேச முதலாளித்துவமும் சர்வதேச மார்க்சீய சோஸலிஸமும் சரி நெருக்கடிக்குள்ளாகி ஸ்தம்பித மடைந்து வருகின்றன என்பது உண்மைதானு ? அதற்குரிய ஆதாரங்கள் எவை?
வியட்நாம் யுத்தம் அதைச் சந்தேகத்துக்கிடமின்றி நிரூ பிக்கிறது. வருடக்கணக்காக நடைபெற்றுவரும் அந்த யுத் தமே சர்வதேச முதலாளித்துவத்தினதும் சர்வதேச மார்க்சீய
மெய்முதல்வாதம் 153
சோஸலிஸத்தினதும் பலப்பரீட்சைக்குரிய தளமாக இருந்து வருகிறது. இருசாராரிலும் எவரும் பூரணமான வெற்றியை காணமுடியாமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் சமா தானம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இன் றைய சர்வதேச சூழலில் முதலாளித்துவமும் சரி சோஸலிஸ் மும் சரி நேரடிப் போராட்டத்தில் ஈடுபடமுடியாது என்பதை யும், அப்படி ஈடுபட்டால் எந்த ஒரு பக்கமும் பூரணமாகத் தனித்து வெல்ல முடியாது என்பதையும் அது நிரூபிக் கிறது.
இந்த யுத்தத்தில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுங்கூட அதனுல் வெல்லமுடியவில்லை என்பது எவ்வளவு முக்கியமா னதோ அவ்வளவுதூரம் கொரியா யுத்தத்தில் போல் சீனு அதில் நேரடியாக ஈடுபடவில்லை என்பதும் முக்கியமானதா கும். சீனுவும் ரஷ்யாவும் அதில் நேரடியாகத் தம் படைகளை இறக்கி ஈடுபட்டால் தமக்கு ஆபத்து ஏற்படும் என்று கரு தின என்பது அதன்மூலம் புலனுகிறது.
இது ஒரு ஸ்தம்பித நிலையாகும்.
இந்த ஸ்தம்பித நிலையையே உடனிருந்து வாழும் நிலை யாகக் கூறிக்கொண்டு அமெரிக்காவும், சோஸலிஸ் நாடுக ளும் இன்று சமாதரன ஒப்பந்தஞ் செய்துகொள்கின்றன. சீனுவுக்கு நிக்ஸன் பயணம் செய்தபின் சீனுவும் இந்த உடனிருந்து வாழும் நிலைக்காகவே உண்மையில் இதுகால வரை ஏங்கிக்கொண்டிருந்தது என்பது தெரியவருகிறது. உண்மையில் 1949 க்குப் பின் சீனு அதைத்தான் விரும்பி வந்திருக்கிறது. ஆணுல், அமெரிக்கா அதற்கு விட்டுக்கொடுக் காமல் வெருட்ட முயன்றதால் சீனுவும் தன் பங்குக்கு " கடுதாசிப் புலி " என்று புலுடா விட்டுவந்தது. அது வெறும் புறுடாத்தான் என்பது கொரியா யுத்தத்தில் நேரடி யாக இறங்கியதுபோல் வியட்நாமில் அது இறங்கத் தயா
Page 79
154 மெய்யுள்
ராக இருக்கவில்லை என்பதாலும், போமோசாவைக் கைப் பற்ற முயலாமல் இருந்ததாலும் ஹொங்கொங்கைத் தொடர்ந்து விட்டுவைப்பதாலும் தெரிய வருகிறது.
எனவே, ரஷ்யாவும் சரி, சீனுவும் சரி முதலாளித்துவ நாடுகளுடன் உடனிருந்து வாழும் சமாதானத்தை இன்றைய தேவைக்குரிய தந்திரமாக ஏற்றுக்கொள்கின்றன. அதன் மூலம் அதற்குரிய ஸ்தம்பிதத்தையும் நேரடியாகப் போர் தொடுக்கமுடியாத தமது பலவீனத்தையும் ஒப்புக்கொள் கின்றன.
ஆணுல், சமாதான ஸ்தம்பிதம் என்பது மார்க்சீய சோஸலிஸ் வியாக்கியானப்படி அடுத்த கட்டத்துக்குரிய தயாரிப்பாகவே இருக்கமுடியும். அந்தத் தயாரிப்பு எப்படிப் பட்டதாக இருக்கும் என்று அவை எதிர் பார்க்கின்றன?
i. உற்பத்திப் பெருக்கம் சோஸலிஸ நாடுகளில் வளர்ச் சியடைந்த தொழில்நுட்ப நாடுகளின் தரத்துக்குச் சமமாகவும், மேலாகவும் வந்து பொதுவுடமைக் கட்டம் மலரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
2. அந்தப் பொதுவுடமைக் கட்டத்தின் மலர்ச்சிக்குரிய உற்பத்திப் பெருக்கத்தாலும் அது அளிக்கும் வசதி களாலும் உள்நாட்டு அடக்குமுறை தளர்த்தப்படு வதுடன் வெளியுலக மக்களுக்கும் வழிகாட்டப்படும். முதலாளித்துவ நாட்டுத் தொழிலாளிகளும் மூன்ரும் உலக நாடுகளும் சோஸலிஸ வழியிலும் சோஸலிஸ் நாடுகளின் தலைமையிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு போராடத் தலைப்படுவர்.
3. சமாதானம் ஏற்படுவதால் முதலாளித்துவ நாடு களில் உட்சண்டைகளுக்கு இடமளிக்கப்படும். அதன் காரணமாக முதலாளித்துவத்தின் சீரழிவு
மெய்முதல்வாதம் 155
வலுவடையும். அப்போது அது தோற்கடிக்கப் படக்கூடியதாக பலவீனப்படும்.
4. மூன்ரும் உலகநாடுகள் வரவர அதிகமாக சோஸ் லிஸ் நாடுகள் பக்கம் கூட்டுச்சேரும். அதன்மூலம் உலகில் சோஸலிஸ் முற்போக்குச் சக்திகள் பல மடையும். .
இவைதான் மார்க்சீய வியாக்கியானத்தின் எதிர் பார்ப் பாகும். ஆணுல் இவை நடைபெறும் என்று நிச்சயமில்லை. நிச்சயமில்லை என்பதற்கு ஆதாரங்களும் இருக்கின்றன. உண்மையில் இந்தச் சமாதான ஸ்தம்பித நிலை என்பது மார்க்சீய பொருள்முதல்வாதத்தினதும் சமய ஆசார முத லாளித்துவத்தினதும் ஸ்தம்பித நிலையே தான். இனிமேல் வரும் நிகழ்ச்சிகள் அவை நினைப்பது போல் நடக்கப்போவ தில்லை. மாருக அவற்றை அழிப்பவையாகவே அமையும்" அதன்மூலம் முதலாளித்துவ நாடுகளும் சோஸலிஸ் நாடு களும் புதிய முறையில், பூரண வழியில் உருமாற்றப்படும்.
முதலாவதாகச் சமாதான காலத்தில் உற்பத்திப் பெருக் கம் அதிகரித்து சோஸலிஸ் நாடுகளில் பொதுவுடமை விடு தலை மலர்ந்து மற்ற நாடுகளுக்கு வழிகாட்டவும், தலைமை தாங்கவும் கூடிய தொழில்நுட்பப் பொதுவுடமைக் கலா சாரச் சூழல் மலரும் என்பது ஏற்கனவே இன்றைய சரித் திர வளர்ச்சியால் நிராகரிக்கப்பட்டு வருகிறது.
முதலாளித்துவத் தொழில்நுட்ப நாடுகளைச் சோஸலிஸ் நாடுகள் உற்பத்திப் பெருக்கத்தில் வென்று விடுதலைக்கு வழிகாட்டுமுன், முதலாளித்துவத் தொழில் நுட்ப நாடு களின் உற்பத்திப் பெருக்கத்தின் காரணமாகப் புதுயுக விடு தலைக்குரிய போராட்டமும், அதற்குரிய புதுப்பாம்பரையும் ஏற்கனவே அதே முதலாளித்துவத் தொழில்நுட்ப நாடுகளி
Page 80
156 மெய்யுள்
லேயே தோன்றிவிட்டன. அவற்றையே சோஸலிஸ் நாடு களும் பின்பற்ற வேண்டிய நிலை வரவர வளர்ந்து வருகிறது.
காரணம், சீரழிய வேண்டிய முதலாளித்துவ நாடுகளில் வளர்ந்துவரும் புதிய ஆன்மீக விடுதலை நாட்டம் சோஸலிஸ நாடுகளைப் பின்பற்றுவதாக அமையாமல், சோஸலிஸ் நாடுகளையும் சீர்படுத்தும் நாட்டமாகவே இருக்கிறது.
தொழில்நுட்ப முதலாளித்துவ நாடுகளில் வெறும் ஆசாரப் பூச்சுக்களாகவும் ஜனநாயகச் சுலோகங்களாகவும் மட்டும் நிற்கும் "அன்பு", * சுதந்திரம் " " விடுதலை ", ‘' சமத்துவம் ', ", சகோதரத்துவம் ' என்பவை உண்மை யில் நடைமுறைக்குரிய அனுபவ உண்மைகளாகவும் இருக்க வேண்டுமென்று புதுப்பரம்பரை போராடத் தொடங்கியிருப் பதுபோலவே சோஸலிஸ் நாடுகளிலும், புது விழிப்பு அருட் டத் தொடங்கியுள்ளது. 1956 ல் ஏற்ப்ட்ட ஹங்கேரிய, போலிஷ் புரட்சிகளின் அர்த்தங்கள் அவைதான், ரஷ்யா வின் இன்றைய தலைசிறந்த நாவலாசிரியன் சொல்லொன்ஸ் டைன் அதற்குத்தான் குரல் கொடுக்கிருர்,
"சோஸலிஸம் என்பது, குற்றஞ் செய்யாமலே வீட்டில் ஒருநாள் போலிஸ்காரனை எதிர்பார்த்துப் பயந்திருப்பதல்ல, நோயாளியைப் பராமரிக்கும் தாதிகளை விட உளவாளிகள் அதிகமாகவுள்ள இடமல்ல, ஆஸ்பத்திரிகளைவிடச் சிறைச்சாலைகளில் அதிக மானுேர் காணப்படுவதல்ல, பொய் சொல்லவும் , களவு செய்யவும் கற்பிக் கப்படுவதல்ல,
சுயமாகச் சிந்திக்காமல் இருப்பதே சுகமாக வாழ் வதற்குரிய வழியாக இருப்பதல்ல .
மெய்முதல்வாதம் 157
சகல துறைகளிலும் சகலருக்கும் ஒரே அபிப்பிராயமே உரியதாக இருப்பதல்ல."
என்று பேயின் தத்துவாசிரியன் Iezek Kolakowski கூறும் போது மார்க்சீய சித்தாந்தத்தின் முக்கிய அம்சமான "தொழி லாளர் சர்வாதிகாரம் "" என்பது உண்மையில் பொதுவுடமை யின் "" விடுதலை "" என்ற இலட்சியத்துக்கு வழி வகுக்காது
என்பது புலப்படுகிறது.
விடுதலை என்ற இலட்சியத்துக்குரிய வழிமுறைகளும் விடுதலை பயப்பதாக இருக்கவேண்டுமென்ற மெய்முதல்வாதத் துக்குரிய புதுப்பரம்பரையின் குரலாகவே இது கேட்கிறது.
எனவே, இவை உடனிருந்து வாழும் சமாதானத்தால் மார்க்சீய சோஸலிஸமே, முதலாளித்துவ நாடுகளால் (அங் குள்ள புதுப்பரம்பரையால்) ஆற்றுப்படுத்தப்படவிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
அதேபோல் உடனிருந்துவாழும் சமாதானம் முதலாளித் துவத் தொழில்நுட்ப நாடுகளின் உள்வட்டச் சீரழிவைக் கொண்டுவருமென்பது உண்மையானுல், அதை விட ஆபத்து சீன - சோவியத் நாடுகளின் எல்லைகளில் காணப்படுகிறது என்பதும் உண்மையேதான். சீனுவுக்கும் ரஷ்சியாவுக்கும் உள்ள உள்வட்டப் போட்டியே ஓர் உலக மகாயுத்தமாக மாறிவிடுமோ என்ற பயமும் இன்று காணப்படுகிறது. சகல சோஸலிஸ நாடுகளும் தமக்குரிய ஒரு பொதுச் சமஷ்டியை உருவாக்கவேண்டிய நேரத்தில், ஒவ்வொன்றும் தத்தம் எல்லைகளில் படைகளைக் குவித்துப் பயமுறுத்தி வருவது அவற்றுக்கும் முதலாளித்துவ நாடுகளுக்கும் அடிப்படையில் வித்தியாசமில்லை என்பதைக் குறிக்கவில்லையா? புதிய மெய் முதல்வாதத்தின் அவசியத்தை உணர்த்த வில்லையா ?
Page 81
1.58 மெய்யுள்
அந்த அவசியத்தைத்தான் மூன்ரும் உலக நாடுகள் இன்று உணர்ந்து வருகின்றன. மூன்ரும் உலக நாடுகள் படிப்படியாக மார்க்சீய சோஸலிஸத்தை நாடும் என்று எதிர் பார்ப்பதும் பிழையான கணிப்பாகவே இருக்கிறது என்பது அதன்மூலம் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
இதை வலியுறுத்தும் வேறு சில ஆதாரங்களும் உண்டு. மூன்ரும் உலகத்தின் "நடுநிலை ' வழி என்பதன் உண்மை யான அர்த்தம் நேருகால இந்தியாவுக்குரிய காந்திய மரபி லிருந்தே வருகிறது. அதாவது காந்தி காட்டிய ஆத்மமரபு. அந்த மரபு இந்தியாவுக்குரிய ஒரு விசேட மரபாகும். அசோகனின் ஆட்சியிலும், அக்பரின் ஆட்சியிலும் நின்ற அதே ஆத்மமரபு. அந்த மரபுதான் இன்றைய "நடுநிலை "க் குப் பின்னுலும் நிற்கிறது.
மூன்ரும் உலகம் என இன்று அழைக்கப்படும் அபிவிருத் தியடையும் ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமரிக்க நாடுகள் மார்க் சீய சோஸலிஸ் வழியையும் விட்டு முதலாழித்துவ ஜனநாயக வழியையும் விட்டு ஜனநாயக சோசலிஸ் வழியிலான நடுநி லைக் கலப்பு வழியில் முன்னேற முயல்வதும் குறிப்பிடத்தக்கது
மார்க்சீய வியாக்கியானப்படி இந்தப் பாராளுமன்ற வழி இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த முதலாளித்துவ கைத்தொழில் நாடுகளுக்கே பொருத்தமாயிருக்கும். அப்படி அவரே ஒப்புக்கொண்டும் இருக்கிருர். ஆனல் இன்ருே அதே பாராளுமன்ற வழியை முதலாளித்துவ நாடுகளையும், சோஸ லிஸ நாடுகளையும் விட வளர்ச்சியடையாத மூன்ரும் உலகத் துப் பின் தங்கிய நாடுகளான இலங்கை, இந்தியா, சிலி போன்றவையே (இங்கிலாந்து போன்ற வள்ர்ச்சியடைந்த நாடுகளைவிட) தீவிரமாகக் கடைப்பிடித்து வருகின்றன. இது மார்க்சீய வியாக்கியானங்களிலிருந்து அதிக தூரம் விலகிச் செல்வதையே காட்டுகிறது.
மெய்முதல்வாதம் 159
மார்க்ஸின் கருத்துப்படி வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் வரவேண்டிய பொதுவுடமைப் புரட்சி முதலாளித் துவம் வளர்ச்சியடையாத ரஷ்சியாவிலும், சீனுவிலுமே நிறுவப்பட்டது.
லெனின் உருவாக்கிய கட்சியும், அதன் தலைமைத் தகுதிக் காக அவர் காட்டும் காரணங்களும் சிந்தனையையே அதிகமாக அழுத்துகின்றன.
அபிவிருத்தியடைந்த முதலாளித்துவ நாடுகளைவிட அபி விருத்தியடையாத மூன்ரும் உலகத்து நிலமானிய அமைப்பு நாடுகளே சோஸலிச நாடுகள் உருவாகிய பின்பும் உலகப் பொதுவுடமைப் புரட்சிக்குரிய புதுப் பிராந்தியங்களாக சோஸ் லிஸ் வாதிகளால் இன்று நம்பப்படுகின்றன. இவை எல்லாம். பொருளாதாரக் காரணிகளைப் பெரிதாக அழுத்திய மார்க்சீயத் துக்கு முரண்படுவதாகத் தெரிந்தாலும் மார்க்சீயத்தைத் திருத் துவதாகவே இருக்கிறது.
ஆணுல், இந்த மூன்ரும் உலகம் பொருள் முதல்வாதத் தைக் கருத்துமுதல்வாதமாக மாற்றுவதாக நின்றுவிடாமல் இரண்டையும் அடித்தள ஆத்மமரபுக்குரிய மெய்முதல்வாதத் தோடு இணைத்து ஆழமாக்கி முழுமைப்படுத்தவும் முயல்கிறது. அதாவது, மூன்ரும் உலக நாடுகள் முதலாளித்துவப் பாராளு மன்ற ஜனநாயகத்தையும், மார்க்சீய சோஸலிஸத்தையும் இணைப்பதோடு நின்றுவிடாமல் அவற்றைச் சமய ஞானத்தின் ஆத்மமரபோடும் இணைக்க முயல்கின்றன.
மார்க்சீயத்தின் கருத்துப்படி அபிவிருத்தி குன்றிய மூன் ரும் உலக நாடுகள், பொதுவுடமை விடுதலையை அனுபவிப் பதற்கு நீண்டகால தொழிலாளர் சர்வாதிகாரத்துக்குட்பட்ட அடக்குமுறை கைத்தொழில் வளர்ச்சிக்குள்ளாக்கப்பட வேண் டும் அந்த அடக்குமுறைக்குப் பின்பே விடுதலை வரலாம். ஆனல்
Page 82
16U மெய்யுள்
அதை விரும்பாத இந்தியா, இலங்கை போன்ற மூன்ரும் உலக நாடுகளில் அடக்குமுறையில்லாமலே விடுதலையையும், பொதுவுடமையையும் பொருளாதார அபிவிருத்தியின் ஒவ் வொரு கட்டத்திலும் காணப்பட முடியும் என்றும் அதற்கு அந்த நாடுகளின் சமய கலாச்சாரத்துக்குரிய அடித்தள ஆத்ம மரபு உதவுமென்றும் இப்போ புதிய தத்துவம் போடப்பட்டு வருகிறது. சர்வோதயம் என்பது அதுவேதான்.
அப்படியானுல் இங்கிலாந்தின் முதலாளித்துவ பாராளு மன்ற வளர்ச்சியின் காரணமாகப் பாராளுமன்ற முறைப்படி சோஸலிஸம் அங்கு வரலாம் என்று மார்க்ஸால் ஏற்றுக்கொள் ளப்பட்டதுபோல் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் ஆத்மமரபு காரணமாக அந்தமரபுக்குரிய வகையில் விடுதலையும் பொதுவுடமையும் அபிவிருத்தியோடு இரண்டறக் கலந்து, அடக்குமுறை ஏதுமில்லாது புதியமுறையில், சர்வோதய வழி யில் வரலாம் என்று ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது? ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளும்போது பொருளாதாரக் காரணிகளும் சிந்தனையும் ஒருங்கே அடித்தள மெய்யிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
பொருள்முதல்வாதமும், கருத்துமுதல்வாதமும் மெய் முதல்வாதமாகப் பூரணமடைகின்றன. w
அந்தப் பூரணப்போக்கின்படி மார்க்சீய வியாக்கியானங் களும் மாற்றப்படுகின்றன.
முதலாளித்துவ நாடுகளும், சோஸலிஸ நாடுகளும் இன் றைய இருபெரும் வர்க்கங்களாகும். ஆனல், வர்க்கங்கள் என்பவை குணங்களையே பிரதிபலிப்பவை. அந்தக் குணங் களின் வெளிப்பாடுதான் கருத்துமுதல்வாதமும், பொருள் முதல்வாதமும். அந்தக் குணங்களுக்குரிய சர்வதேசப் போராட் டம் இன்று இரண்டும் ஒன்ருகிய உடனிருந்து வாழும் சமா தானக் கலப்பு நிலையில் ஸ்தம்பித்து நிற்கிறது.
மெய்முத்ல்வாதம் 161
அந்த ஸ்தம்பித்த கலப்பிலிருந்து பொதுவுடமை விடு தலையை எழுப்புவதற்குரிய சாதனமாகத் தொழிலாளர் வர்க் கத்தை எதிர்பார்க்கக் கூடாது. முதல்ாளித்துவத்துடன் உடனிருந்து வாழமுயலும் தொழிலாளர் குணக் கலப்புக் குள்ளாகியவர்களேயொழிய குணங்களைத் தாண்டுவதாய் இல்லை, பொதுவுடமை" விடுத்லை என்பதோ, குணங்களைக் கடந்த பேரறிவு, ஆத்ம விடுதலையாகவே இருக்கும். அத ஞல் குணங்களைக் கடந்த பூரணர்களின் கூட்டமே புதிய ஸ்தம்பித்த கலப்பு நிலையை விளக்கவும் அடுத்த எழுச்சிக்கு வழிவகுக்கவும் ஆற்றலுள்ளவர்களாக இருப்பர்.
அத்தகைய கூட்டத்தின் ஓரளவு புத்திபூர்வமான வளர்ச்சி அரும்பலை ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இந்தி யச் சர்வோதய இயக்கம் , ஓரளவு காட்டி வருகிறது. ஆனல், அதில்கூட அதன் பூரண வலு இல்லை. அதன் பூரண வலுவையும் உருவ உள்ளடக்க முழுமையையும் இன்று இலங்கையிலுள்ள சர்வமதசங்கமும் அதன் அங்கத் தவர்களான ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் சிலருமே காட்டி வருகின்றனர்,
அவர்களின் பூரணப் போக்கின்" வலுவைத்தான் இன் றைய மூன்ரும் உலகு என்ற பிரிவிலும் அதன் நடுநிலை என்ற கொள்கையிலும் நாம் காணவேண்டும்.
இந்தியாவின் ஆதரவுடன் நிறைவேறிய பங்களாதேஷ் சுதந்திரப் போரின் வெற்றியில் இதே போக்கின் வெற்றி யையே பார்க்கவேண்டும்.
முதலாளித்துவ நாடுகளிலும் சோஸலிஸ நாடுகளிலும் ஒருங்கே தெரியும் இன்றைய புதுப் பரம்பரையின் விழிப்புப் போராட்டமுங்கூட இப்புதிய விடுதலை இயக்கத்தின் முதல் அலையேயாகும். ܀ . . . .
Page 83
162 மெய்யுள்
மார்க்சீய சித்தாந்தச் சுயவுணர்வுள்ள தொழிலாள வர்க்கத்தின் புரட்சிக்குரிய தலைமை இடத்தை இன்று மூன் ரும் உலகமும் புதுப்பரம்பரையும் அவற்றை புத்திபூர்வ மாக விளங்கிக்கொண்ட பூரணர் கூட்டமும் எடுத்துக்கொள் கின்றனர் என்ருல், அந்த மூன்ரும் பண்புகளும் ஒருமித்துக் காணப்படும் இலங்கையின் பங்கு உலகில் மிக முக்கிய மாகிறது.
o t
சுழல் : நான்கு தளம் : தேசம்
மூன்ரும் உலகத்து முக்கிய நாடுகளில் இலங்கையும். ஒன்று.
புதுப்பரம்பரையின் புரட்சி ஒன்றும் இங்கு நடந்திருக் கிறது.
அடக்குமுறையில்லாத வகையில் ஆரம்பத்திலிருந்தே விடுதலையைக் காட்டலாம் என்ற தெம்பைத்தரும் ஆத்ம மரபு இலங்கையில் இருக்கிறது. பிறநாடுகளை விட இங்கு நான்கு முக்கிய சமயங்களும் இணைந்து வளர்கின்றன.
அத்துடன் மூன்ரும் உலகத்தின் ஆத்மீக - அரசியல் பலமுள்ள நாடான இந்தியாவும் அதற்கருகிலேயே இருக் கிறது. அங்கிருந்து எழுந்த காந்தீய மரபும் அதன் தத்து வார்த்த இயக்கமான சர்வோதயமும் இலங்கையில் வேரூன் றத் தொடங்கியிருப்பதுடன் அதன் சிறுவட்டத் துறைக் குரிய இயக்கவேலை சர்வதேச ரீதியில் பாராட்டப்பட்டுப் பரிசைப் பெற்று வளர்வதாகவும் இருக்கிறது.
மெய்முதல்வாதம் 163
இலங்கை கருணையின் உருவமும், ஞானத்தின் ஒளியு மான புத்தர் பகவானின் புனித கொள்கைகளால் ஆரம்ப காலத்திலிருந்தே வளம்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
இலங்கையிலேயே அதே புத்தரின் வழியில் வந்த இந்த இருபதாம் நுற்ருண்டின் மாபெரும் சத்திய அவதாரமான பூரீலபூரீ நந்தகோபாலகிரி இலைமறை கனியாய் இருந்து அடுத்த யுகத்தின் எழுச்சிக்குரிய பேரியக்கமான சர்வமத சங்கத்தை நிறுவிவிட்டு மறைந்திருக்கிறது. அது இருக்கும் போது ஒலித்துவிட்டுச் சென்ற சில மகா வாக்கியங்கள் கீழே தரப்படுகின்றன.
"புத்த சமயத்தவர் சரண்புகும் போதிஞான நிலையும், கிறிஸ்தவர் வணங்கும் பரிசுத்த ஆவியும், இஸ்லாமியர் வணங்கும் அல்லாஹ்வும், இந்துக்கள் வணங்கும் பரப்பிரம்ம்மும் பெயரற்ற உருவமற்ற ஒரே நிலையைக் குறிக்கிறது.
eه
0.
X.
அன்பும் அமைதியும் உன்னிடமிருந்தால், சுய நோக்கி ன் றிச் சமூக முன்னேற்றத்துக்காக நீ சேவை செய்தால் எந்தச் சமயத்தைச் சேர்ந் திருக்காவிட்டாலும் நீயும் ஓர் உண்மையான சமய வாதியே.
-- (x- «XVe
ஒவ்வொரு பேரியக்கமும் ஆரம்பத்தில் சிறிய தாகவே தெரிகிறது. சிந்திக்கத் தெரிந்த எவனும் இதை அறிவான்.
•S
காலங்களும் நிலையும் இயற்கையும் மாறும் போது உண்மையாகவே நாமும் நம் கொள்கை
Page 84
164 மெய்யுள்
களும் மாறியாக வேண்டும். இல்லையெனில் நாம் அந்தச் சூழ்நிலையில் சீவிப்பது கஷ்டம். இதைத்தான் யுகமாற்றம் என்கிருேம்.
திருப்பணி என்ற பேரில் இன்னும் நாம் மூலைக்கு மூலை கோவில்களைக் கட்டி எழுப்புவது சரியா? அவற் றுக்குச் செலவிடும் பணத்தைக்கொண்டு ஆயிரம் ஏழைகள் வாழ வழி வகுப்பது இன்று நாம் செய்யும் அதி உன்னத திருப்பணி ஆகாதா? உண்மையான இறை வழிபாட்டுக்குக் காசு வேண்டுமா?
«Х•
கிருதயுகத்தில் கோவில்களோ, திருவிழாக்ளோ, காணிக்கைகளோ இருக்கப்போவதில்லை, எல்லாரும் சமவெளியில் ஒன்றி மானசீகமாக இறைவனைப் பிரார்த்திப்பார்கள் (தமக்குரிய சத்திய நிலையை அவர்களே தரிசிப்பர்.)
Kd
0x ●” இந்தப் பிராமணரும், குருமாரும் மக்களைச் சுரண்டி வாழும் முதலாளிமார்கள் வளர்த்து வரும் பெருச்சாளிகள்தான். இத்தகைய பத்தாம் பசலிகளை நாம் தொந்தி கொழுக்க வைப்பது - அதுவும் கண் ணிர் விட்டு வேர்வை சிந்தத் தேடிய பணத்தைக் கொண்டுபோய்க் கொடுத்து - தொந்தி கொழுக்க வைப்பது நியாயமா? இதைத் திருப்பணி என்று
சொல்லலாமா ?
d o
சர்வ மதங்களை ஒன்ருக இணைத்தும், ஆசார மரபைக் கிழித்து ஆத்ம மரபை அழுத்தியும் கருத்துமுதல்வாதத்தையும், பொருள்முதல்வாதத்தையும் பூரண மெய்முதல்வாதத்தின் சத் தியத்தில் முழுமைப் படுத்தியும், உண்மையான பொருள்முதல்
மெய்முதல்வாதம் 165
வாதப் பொதுநல சேவைகளையும் சத்தியத்தின் ஒரே ஆன்மீக வாதி என்று நிரூபித்தும் வளர்ச்சி மாற்றத்தின் அவசி யத்தை அழுத்தி புதுயுக மாற்றத்திற்கு வழிகாட்டியும் சென் றுள்ள அந்த மாபெரும் சத்திய அவதாரத்தின் பூரண சர்வோ தயக் குரலை இன்றுதான் பூரீ லங்கா சர்வதேச நாடுகளிட மும் முன்வைக்கிறது.
அந்தப் புதுயுக தர்மத்துக்கேற்ப ஆரம்பத்திலிருந்தே அடக்கு முறையற்று விடுதலையையும் பொதுவுடமையையும் தம்மளவில் அனுபவிக்கவும் சமூகத்திடம் பரப்பவும் பயின்று வரும் பூரண வீரர்களும் அதே பூரீலங்காவில்தான் இன்று காணப்படுகின்றனர்.
அதனுல் சகல விதத்திலும் இன்று பூரீலங்காவே சர்வ தேசங்களுக்குமுரிய சத்திய எழுச்சிக்குமுரிய மூலஸ்தானமாக விளங்குகிறது.
அந்த முக்கியத்துவத்தை இன்று பூரீலங்காவில் அதன் பிள்ளைகளில் ஒரு பகுதியினரான தமிழ் மக்களில் ஒரு சிறு வட்டம் அதிகமாக உணர்ந்ததாகக் காணப்படுகிறது.
அதை அவர்களது இலக்கியப் போக்குகள் பிரதிபலிக் கின்றன.
8 (X
சரித்திர வளர்ச்சியின் சத்திய வெளிக்காட்டலுக்குரிய உண்மையான எதிர்காலத்திசை எந்தப்பக்கம் இருக்கிறது என்பதை 1956 முதல் 1972 வரையுள்ள ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி நிச்சயமாகக் காட்டவே செய்கிறது.
இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் மரபுப் போக்க்ை முதலில் ஆராயலாம்.
ஆறுமுகநாவலர் முதல் பண்டிதமணி கணபதிப் பிள்ளை யூடாக ஈழகேசரிப்பரம்பரைக்குரிய கனகசெந்திநாதன் வரை வளர்த்த மரபுப் போக்கு1956 க்குப்பின் வந்த மொழியுணர்ச்சி
Page 85
66 -, மெய்யுள்
நிறைந்த அரசியல் சூழலில் புதிய வலுப்பெற்றதோடு பல்புதுப் பண்டிதர்களையும் ஆற்றல் இலக்கிய எழுத்தாளர்களையும் கூட்டு சேர்த்துக் கொண்டது,
'மரபு" "மத்தாப்பு'க்குரிய வண்ணங்கள் பல வகைப் பட்டவை. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, இலங்கையர்கோன் சம்பந்தன், வைத்திலிங்கம், கனகசெந்திநாதன், மகாகவி, நீலவாணன், ரகுமான், எஸ். பொன்னுத்துரை, F. X, C நடராஜா, சிற்பி, யாழ் இலக்கிய வட்ட எழுத்தாளர் போன் றவர்கள் எல்லாரும் இந்த மரபு மத்தாப்பின் பல்வகைப்பட்ட வர்ணங்கள்தான்.
கலைச்செல்வி, இளம்பிறை போன்ற சஞ்சிகைகளும், அரசு பதிப்பகம் போன்ற ஸ்தாபனங்களும், யாழ் இலக்கிய வட்டம் போன்றசங்கங்களும், 'நற்போக்கு இலக்கியம்’, ‘தேசீய இலக் கியம்" என்ற சித்தாந்தமற்ற சுலோகங்களும் இந்த மரபை நியாயப்படுத்த எழுந்த சித்தாந்தமற்ற சஞ்சிகைகளும், ஸ்தாபனங்களும் சுலோகங்களுந்தான்.
இந்த மரபின் சாதனைகள் பலவுண்டு. ஆறுமுகநாவலர் தொட்டு -எஸ்.பொன்னுத்துரை வரையுள்ள அந்த இலக்கியச் சாதனைகளைப் பலரும் அறிவர். ஆனல், சாதனைகளைவிட அதன்பலவீனங்கள் பெரியவை அதைப்பலரும் அறிவதில்லை.
இந்த மரபின் ஆரம்பமே பலவந்தமாகக் குறுக்கப்பட்ட ஒரு கட்டுப்பெட்டிப்பார்வையோடுதான் தொடங்கியது. சங்க காலம் முதல் திருவள்ளுவர், திருமூலர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், சேக்கிழார், தாயுமானவர், இராமலிங்க சுவாமிகள், பாரதியார் ஊடாக இன்றுவரை வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத்தினதும் கலாசாரத்தினதும் அடிநாத வேதப் பெரும் மரபைப்பலவந்தமாகவும், கட்டுப்பெட்டித்தனமாகவும் குறுக்கிப் பிதுக்கியெடுத்த ஞானமற்ற பண்டிதப் போக்குத் தான் இது.
மெய்முதல்வாதம் 167
அதன் வித்துக்கள் சைவசித்தாந்தம் என்ற சித்தாந்தம் வகுக்கப்பட்ட காலத்திலேயே தூவப்பட்டுவிட்டனவென்ருலும் அப்போது அவை அடிநாத ஞான அனுபவத்தை விளக்க எழுந்த சித்தாந்த முயற்சிகளாகவே இருந்தன. அடிநாத ஞான அனுபவத்தையே புறக்கணித்து, அதற்குப்பதிலாக ஞான அனுபவமற்ற சித்தாந்தப் பண்டிதத் தனத்தை அதன் மேல் திணிக்கும் மேல்தள கட்டுப்பெட்டித்தனமாகக் குறுகி விடவில்லை. அடித்தள ஞான மரபுக்கும் மேல்தள ஆசார மரபுக்கும் அதுவரை தொடர்பு இருக்கவே செய்தது. அந் தத் தொடர்பு இருக்கும்வரை அடிநாத ஞான அனுபவ வளர்ச்சிக்கேற்ப மேல்தள சமூக ஆசாரங்களும் மாற்றி வளர்க் கப்படக்கூடியவையாய் இருந்தன. அப்பர், சம்பந்தர் ஆகிய அனுபூதிமான்கள் தம்கால அரசியல் சித்தாந்த நிலைகளையே மாற்றியமைக்கக்கூடியவர்களாய் இருந்தனர்.
அதுதான் உண்மையான தமிழ்க் கலாசாரத்தின் அடி நாத ஞான மரபு.
அது ஆறுமுகநாவலர் காலத்தில்தான் அறுபட்டது. அடிநாத ஞான மரபிற்கும் மேல்தள சமய, சமூக ஆசார மரபுக்கும் தொடர்பற்றுபோனதுமல்லாமல் அந்தத் தொடர்பு தேவையில்லையென்ற விதத்தில் வேண்டுமென்றே புறக்கணிக் கப்பட்டது. அடிநாத ஞான அருள் மரபை மருள் மரபாகத் திரிபு படுத்திக்காட்டி, மேல்த்தள ஆசார மரபே தன்னை ஞானமரபாக நடித்துக் கொண்டது.
அந்த மரபு நடிப்பில் ஆறுமுகநாவலர் பெரும்பங்கெடுத் துக்கொண்டார். இராமலிங்க சுவாமிகளின் ஞானப்பாடல் கள் திருமூலர் முதல் தாயுமானவர் வரை வளர்ந்து வந்த அடிநாத வேதஞான மரபை வளர்ப்பவையாகவும் தமிழ்க் கலாசாரத்தையும், இலக்கியத்தையும் உலகப்பெருங் கலாசா
Page 86
168 மெய்யுள்
ரத்துக்குத் தலைமை தாங்கச் செய்பவையாகவும் இருந்த போதுங்கூட அவை 'மருட்பாக்களாக", மருட்போக்காக மாருட்டம் செய்யப் பட்டன. அந்த மாருட்டத்தின் மூலமே மேல்தள ஆசார மரபு தன்னை அடிநாத ஞான மரபாக, வெளிப்படையாக உத்தியோக ரீதியாக நிறுவிக் கொண்டது.
"அதுவே நீ"
** அகம் பிரம்மம்"
"சர்வமும் பிரம்மமே"
என்ற முப்பெரும் , மகாவாக்கியங்கள் அடிநாதஞான மரபின் அனுபவமாக இருக்கும்போது, அதில் தன்னைத் திணித்து 'அது' வைத் தன் "நான்" னல் மறைத்த பண்டிதச் சித் தாந்தந்தான். - -
'பசு, பதி, பாசம்' என்ற மூன்று சுருக்கங்களை அடிநாத அனுபவ மரபாக மாருட்டம் செய்தது. ஆத்மாவும் பிரம்மமும் ஒன்றே என்ற மகா வாக்கியங்களின் ஞான அனுபவ அத்துவிதம் "பசு" -வும், ‘பதியும் ஒன்ருக முடியாத சித்தாந்தப் பண்டித அத்துவிதமாக மாருட்டம் செய்யப்பட்டது. அந்த மாருட் டத்தில் "பசு" வுக்கும் "பதி க்கும் உண்மையான வேதாந்த அத்துவிதக் கலப்பு இல்லாமல் போனதுபோல், அடிநாத ஞான அனுப மரபுக்கும் மேல்த்தளச் சமூக, சமங் ஆசாரத் துக்கும் தொடர்பும் கலப்பும் இல்லாமல் போய்விட்டன. திரும்பவும் அந்த மேல்த்தள மரபு நடிப்பையும் மாருட் டத்தையும் உடைக்க முயன்றவர்கள் இருவர். ஒருவர் பார தியார், மற்றவர் ரமணர்.
ஆணுல், அதற்குள் மேல்தள ஆசார மரபு தன்னை வலு வாக நிறுவிக்கொண்டுவிட்டது. பாரதியாரை அது வாயள
மெய்முதல்வாதம் 169
வில் மட்டும் ஏற்றுக்கொண்டது. அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோரின் இருபதாம் நூற்ருண்டின் உருவமாக அவரை அந்தப் பண்டிதச் சித்தாந்தத்தால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. அத்துவிதத்தின் முழு உருவமாகவும் வாழ்ந்துகாட் டிய ரமணரையோ அது முற்ருக இருட்டடிப்புச் செய்து விட்டது.
இவைதான் இந்த மரபின் பெரும் பலவீனங்களாகும். எது பலத்தின் மூலக்காரணமாகவும் அடித்தளமாகவும் இருக் கிறதோ அதையே புறக்கணித்தும் மறைத்தும் தன்னையே அதுவாகக் காட்டியும் நடிக்கும் ஒரு போக்குக்குரிய பல வீனங்கள் என்று சொல்வதைவிட, அந்தப் போக்கையே "பல வீனம்", "போலி" என்பவற்றின் முழு உருவங்களாகக் காண்பதே சரியாக இருக்கும்.
ஆறுமுகநாவலர் முதல் பண்டிதமணி கணபதிப்பிள்ளை யூடாக கணகசெந்திநாதன் எஸ். பொன்னுத்துரை, யாழ் இலக்கிய வட்ட எழுத்தாளர்கள்வரை வளர்ந்து காணப்படும் இன்றைய தமிழ் இலக்கியப்போக்கு தன்னைச் சைவசித்தாந்த மரபாகவும், தமிழ் மரபாகவும், நற்போக்காகவும் நடித்துக் கொண்டாலும் உண்மையில் அது தமிழ் மரபுக்கு எதிரான நபுஞ்சகப் போக்கும் பொய்ப் போக்குமேதான். வெறும் உள்ளுழுத்த மேல் பூச்சு ஆசார வளர்ச்சியேதான்.
இப்படிக் கூறுவது பலருக்குக் கோபத்தை மூட்டலாம். ஆணுல், உண்மையான தமிழ்க் கலாசாரத்தினதும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் ஞானிகளினது அனுபவத்தினதும் அடிநாத வேத மரபையும் அதற்குரிய ஆத்ம சக்தியைபும் தரிசித்தவர்களுக்கு இந்த மேல்த்தள பண்டிதக் கட்டுப்பெட் டித்தன ஆசார மரபு வெறும் மேல்பூச்சு மாயையாகவே தெரியும்.
Page 87
170 மெய்யுள்
விசித்திரமென்னவென்ருல், மாயாவாதத்தை எதிர்ப்ப தாகக் கூறிக்கொள்ளும் நம் சித்தாந்தப் பண்டிதர்கள் உண் மையில் மாயையான மரபொன்றையே உருவாக்கியுள்ளனர். அடித்தளச் சத்தியத்தோடு தொடர் பற்ற வேரனுந்த ஆசார மாயை.
இந்த வேரறுந்த மேல்தள ஆசாரம் எழுப்பும் சித்தாந் தங்களெல்லாம் உண்மையான சித்தாந்தத்துக்கு எதிரான சித்தாந்தங்களாகவே இருக்கும். அது எழுப்பும் தத்துவ மெல்லாம் உண்மையான அடிநாதத் தத்துவத்துக்கு எதிரான தாகவே இருக்கும். அப்படிக்கூடச் சித்தாந்தம் எழுப்பப்பட முடியாதபோது, அது வெறும் சுலோகங்களோடு மட்டும்
திருப்திப்பட்டுக் கொள்ளும். " நற்போக்கு", " கடமை, கண்ணியம், கட்டுபாடு", "ஜனநாயகம்", "சுதந்திரம்", "சமத்துவம்", "அன்பு' என்பவை வெறும் சுலோகங்கள்.
ஆணுல், எதனடிப்படையில் கடமையைச் செய்வது, எதன் அடிப்படையில் நற்போக்கைத் தீர்மானிப்பது என்ற ஆழமான வி ள க்க மும், அந்த விளக்கத்துக்குரிய தர்க்க ரீதி யான தத்துவமும் அதன்படி வாழப்படும் ஆழமான வாழ்க்கை "முறையும் இருக்கமாட்டன. அந்த நிலையில் "சுதந்தரம்", "ஜனநாயகம்", "அன்பு", "கடமை, கண்ணியம்", "நற்போக்கு" என்பவை வெறும் சுலோகப் பூச்சுக்களாக வெளியே திரைபோட, அகத்தேயும் சமூகத்துக்குள்ளேயும் கட்டுப்பாடற்ற ஆசைகளும் அவற்றின் பலாத்கார ஆக்கிர மிப்புமே அன்பும் இரக்கமுமற்ற ஆட்சி நடத்திக்கொண் டிருக்கும். -
உண்மையான சமய வளர்ச்சியும் பண்பாட்டு வளர்ச்சி யும் இதுகாலவரை என்னென்ன அசுர சக்திகளை எதிர்த்து என்னென்ன ஒழுக்க இலட்சியங்களை முன் வைத்தனவோ அதே இலட்சியங்கள் அவற்றின் எதிரிகளான அதே அசுர
மெய்முதல்வாதம் 171
சக்திகளின் முகமூடிகளாகவும் மேற்போர்வைகளாகவும் புகலி டங்களாகவும் மாற்றப்பட்டு விடுகின்றன.
முருகன் கோயில் அதே பெயரில் சூரனின் கோட்டை யாகி விடுகிறது. அடிநாத மரபின் பெயர் அதே மரபை அழிக்கும் ஆசார நடிப்பு மரபாகி விடுகிறது. சமயமும் பண்பாடும் சமயத்துக்கும் பண்பாட்டுக்கும் எதிரிகளாகி விடு கின்றன. கருத்துமுதல்வாதம் கருத்தின் பெயரிலும் கட வுளின் பெயரிலும் கருத்துக்கும் கடவுளுக்கும் எதிரான ஆசைகளினதும் ஆணவத்தினதும் பொருள்வாதமாகி விடு கிறது.
இந்தப் பச்சைப் பொருளாசைக்காரர்களான போலிச் čFI) I --மரபு வாதிகள் சமூக மாற்றத்தை ஒருபோதும் விரும்புவதில்லை. அது அவரவர் வைத்திருக்கும் தேட்டத் தையும் அதற்குரிய அதிகாரத்தையும் முற்ருக அழித்துவிடும் என்ற பயத்தால் சமதர்மத்தை நோக்கிய எல்லாவகைச் சமூக மாற்றத்துக்கும் எதிராகவே இருப்பர். சகல வகை யான பாகுபாடுகளையும் நிரந்தரமாக்கவே தர்க்க நியாயங் களைக் கண்டுபிடித்துக் கொண்டிருப்பர்.
சமதர்மத்தை நோக்கியும் சகலரும் பெருமனிதப் பிரம்ம ஞானிகளாகும் இலட்சியத்தை நோக்கியும் துரிதமாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மனதின் சிந்தனைக்குரிய குணத்தின் அடிப்படையில் வடிக்கப்பட்ட வேதகால வர்ணுசிரமமுறை பிறப்பையும் தொழிலையும் அடிப்படையாகக் கொண்ட நிரந் தரச் சாதிப்பாகுபாடுகளாக மாற்றப்படும். செயலுக்குரிய சிந்தனையும், அதற்குரிய அர்த்தத்தையும் அழுத்திய * கர்மம் "" என்ற கோட்பாடு சிந்தனையற்ற செயலாகவும் மாற்றத்துக்கெதிரான " விதி" யாகவும் மாற்றப்படும். அதேபோல் மொழி, இனம், நிறம் போன்ற எல்லாவகை யான புறப்பொருட்களும், காட்சிகளும் அகக்கருத்துக்கும் ஆத்மாவுக்கும் எதிரான ஆதாரங்களாக ஆக்கப்பட்டுவிடும்
Page 88
72 மெய்யுள்
சமயக் கருத்துமுதல்வாதமும் அதன் அடிநாத மரபும் வெறும் வெளிவேஷ ஆசார மரபாகிப் படிப்படியாகப் பச் சையான பொருள் வாதமாகவும் அதன் பலாத்கார ஆக்கிர மிப்புச் சர்வாதிகாரமாகவும் வளரும் போக்கு இதுதான்.
அந்த நிலையில் உண்மையான அன்பையும் அதற்குரிய அகப்புறப் பண்பாட்டையும், சமூக சமத்துவத்தையும், சுதந் திரத்தையும் தேடும் அறிவு ஜீவிகளும் ஆன்ம ஜீவிகளும் அதாவது சகல உண்மை விரும்பிகளும் இத்தகைய மரபு'க் கும், சமயத்துக்கும், அதன் கடவுளுக்கும், கலாசாரத்துக்கும் எதிரானவர்களாகவே தம்மைப் பிரகடனப் படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகின்றனர். அவர்கள் தம்மைச் சமயத் துக்கெதிரான பொருள்முதல்வாதிகளாகப் பிரகடனப்படுத் திக் கொண்டாலும் உண்மையில் அவர்களது பொருள்முதல் வாதம் அன்பையும், சமத்துவத்தையும், விடுதலையையும் அவற்றை நோக்கிய அக - புற வளர்ச்சியை விரும்பும் விஞ்ஞான ரீதியான இலட்சிய வாதமாகவே இருக்கிறது. அந்தவகையில் அவர்களது பொருள்முதல்வாதமே அந்தச் சூழலுக்குரிய உண்மையான கருத்து முதல்வாதமாகவும், ஆன்மீக வாதமாகவும் அடிப்படையில் செயல்படுகிறது.
ஒருவகையில் இத்தகைய எதிர்மாற்றங்கள் வெளிப் படையாகத் தெரியாத ஒரு கருத்துக் கலப்பையும் ஏற்படுத்து கிறது. சமயப் பொருள்முதல்வாதம் தனது வெளிப்பூச்சு இலட்சியமாக எதைக் காட்டுகிறதோ அதையே தனது உள்ளடக்கமாகக் கொண்டு சமயத்தை எதிர்க்கும் சமதர்மப் பொருள்முதல்வாதம் வேறுவகையில் விஞ்ஞான ரீதியாக நடைமுறைப் படுத்த முயல்கிறது.
இரண்டும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாக இருப் பினும், ஒரு வகையில் வேறு ஓர் ஆழக்கோணத்திலிருந்து
மெய்முதல்வாதம் 173
இரண்டும் திருத்தப்பட்டு இணைக்கப்பட்டு பூரணப்படுத்தப் படக்கூடியவையாகவும் இருக்கின்றன. அந்தப் பண்புதான் மூன்ரும் பக்கத்துப் பார்வையை அவசியமாக்குகிறது.
இத்தகைய எதிர்மாற்றங்களும், அவற்ருல் ஏற்படும் கலப்பும், கலப்புக்குரிய போராட்டங்களும், சமய கலாசாரத்தை ஏற்றுக்கொண்டுள்ள சகல சமூகங்களும் சந்தித்துத்தான் இருக் கின்றன.
அவையே 15-ம், 16-ம் நூற்ருண்டுகளுக்குப் பின்பு வந்த இருபெரும் சர்வதேசப் போக்குகளாகவும் மாறியுள்ளன. ஒன்று, சமயத்தை மறுக்காமல் சமயப் பூச்சுக்களையே தன் இலட்சியப் பூச்சுக்களாக கொண்டு பச்சையான பொருள் வாதமாகச் செயற்படும் மேற்கத்தைய முதலாளித்துவ ஏகாதி பத்தியப் போக்கு. இரண்டு, சமயத்தை மறுத்துக்கொண்டே பழைய சமயங்களின் ஆன்மீக அடிப்படை இலட்சியங்கள்ான அன்பு, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றைத் தனது இலட் சியமாகக் கொண்டு செயல்படும் பொருள்முதல்வாத சர்வ தேச சோஸலிஸ் ஏகாதிபத்தியப் போக்கு, .
இந்த இரு பெரும் சர்வதேசப் போக்குகளின் தன்மை களை அறியும்போது நமது இன்றைய ஈழத்துத் தமிழ் இலக் கியத்தின் மரபுவாத -நற்போக்கு எப்படிச் சர்வதேச ஏகாதி பத்திய முதலாளித்துவப் போக்குடன் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை அறியலாம். ஆறுமுகநாவலர் காலந்தொட்டு இறுக்கமடைந்து வந்துள்ள நமது வெளிப்பூச்சு ஆசார மரபு இன்றைய மேற்கத்தைய முதலாளித்துவ ஏகாதிபத்திய மர போடு முரண் பட்டதாக ஆரம்பத்திற் காட்டிக்கொண்டாலும் அடிப்படையில் இரண்டும் ஒரே பெரும் மேல்பூச்சு மரபின் இரு வண்ணங்களாகவே இருக்கின்றன.
ஆரம்பகால முரண்பாடுகள் - கிறிஸ்தவ கால முரண்பாடு கள் - மழுங்கிய பின் இன்று அவற்றின் அடிப்படை ஒருமை
Page 89
174 * மெய்யுள்
தெரிகிறது, அதை ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் அரசியற் போக்கு அப்பட்டமாகத் தெரிவிக்கிறது. அதாவது காந்தி யத்தை அரசியலில் புகுத்துவதாக நடிக்கும் போக்கு.
உண்மையான காந்தீயப் போக்கோ அடிநாத ஆன்மீக ஞான மரபைத் திரும்பவும் மேல்தளச் சமூக ஆசாரங் களோடும், இயக்கங்களோடும் தொடர்பு கொள்ள ச் செய்து அந்த மேல்தளச் சக ல துறைகளையும் முற்ருகச் சத்திய வெளிப்பாட்டுக்கேற்ற வகையில் மாற்றி யமைக்க முயன்ற போக்காகும். காந்தி மகானே மூன்ரும் பக்கத்தின் எழுச்சியைப் பிரதிபலித்த இராமகிருஷ்ணரின் வழிவந்த முன்னேடிகளான விவேகானந்தர், ரமணர், அர விந்தர், பாரதி ஆகியோரின் தொடர்வரிசைக்குரிய ஒருவர். அவரது அரசியல் போராட்டம் சமூக மேல்பூச்சு ஆசாரங் களையும், மூடக்கொள்கைகளையும் கிழித்துக்கொண்டு அடித் தளம் வரை செல்ல முயன்ற சர்வதேசங்களுக்குமுரிய ஆன்ம
விடுதலைப் போராட்டமாகும்.
அப்படிப்பட்ட மகானின் பெயரைச் சொல்லிக் கொண்டு சமூகத்தில் சாதிக் கொடுமைகளையும், வர்க்கச் சுரண்டலையும் மறைத்திருக்கும் மேல்பூச்சு ஆசாரங்களைக் கிழிக்காமலும், அவை எழுப்பும் கனவுகளைக் குலைக்காமலும் போராட்டம் நடத்தலாம் என்று நினைப்பது காந்தியின் பெயரால் உண் 66 காந்தீயத்தையே சாகடிக்கும் அரசியல் ஆசாரப் பூச்சொன்றை வளர்ப்பதாகவே இருக்கும்.
அதைத்தான் தமிழர் கூட்டணியினர் செய்கின்றனர். அந்தவகையில் அவர்களது அரசியல் ஆசாரமும் ஆறுமுக நாவலர் காலந்தொட்டு வளர்ந்துவந்துள்ள தமது கலை, இலக்கிய, சமய, மரபுவாத - நற்போக்கும் ஒன்றையொன்று தழுவியவையேதான். ஆன்மீகத்தின் பெயரில் பச்சையாக தடைபெறும் பொருள்வாதப் போக்கேதான், பொருள்வாதப்
மெய்முதல்வாதம் 175
போக்கு சமூக மாற்றங்களை விரும்புவதில்லை. அப்படியென் ருல், இன்று அந்த மேல்தளப் போக்கும் போராடத் தொடங்கியிருக்கிறதென்ருல் அது தன் நிலையான அந்தஸ் தாகக் கருதிக் கொண்ட உத்தியோக - வியாபார உரிமை களுக்குத் தனிச் சிங்கள மொழிச்சட்டத்தால் வந்த ஆபத்தே தான் காரணமாகும். உண்மையான சமூக மாற்றத்துக்காக அது போராடவில்லை. ஆசாரங்களுக்குப் பின்னுலுள்ள ஆக்கிரமிப்புகளையும், பலாத்காரங்களையும் எதிர்த்து அது போராடவில்லை.
காந்தியின் காந்தீயத்துக்கும் தமிழர் கூட்டணியினரின் காந்தீயத்துக்குமுள்ள வேறுபாடு அதுதான். வேதகாலம் முதல் பாரதியார் ஊடாக வளர்ந்துவரும் தமிழ்க் கலாசாரத் தின் ஞானமரபுக்கும், ஆறுமுகநாவலர் முதல் வளர்ந்து வரும் மேல்பூச்சு பண்டித ஆசாரமரபுக்கும் உள்ள வேறுபா டும் அதுவேதான். உண்மையான சமயஞானக் கருத்துமுதல் வாதத்துக்கும் சமயப்பூச்சுகளோடு நடத்தப்படும் முதலாளித் துவ ஏகாதிபத்திய பொருள்வாதத்துக்குமுள்ள வேறுபாடும் அதுவேதான்.
அதுதான் அமெரிக்க முதலாளித்துவ ஏகாதிபத்திய "ஜனநாயகம்", "சுதந்திரம்" சொற்ருெடர்களும், ஈழத்துத் தமிழ் இலக்கிய மரபுவாதத்தின் நற்போக்கு "தேசிய இலக் கியம்" என்ற சொற்ருெடர்களும், தமிழர் கூட்டணியினரின் -தி. மு. க. செல்வாக்குள்ள- "கடமை, கண்ணியம், கட்டுப் பாடு" என்பவையும் உண்மையான, ஆழமான தத்துவப் பின்னணி சேராத அர்த்தமற்ற வெளிப்பூச்சுச் சுலோகங்களாக நிற்கின்றன.
காரணம் அவை மூன்றும் ஒன்றேதான்.
மேற்கத்தைய முதலாளித்துவப் போக்கும், ஈழத்து இலக்கியத்தின் மரபுவாத நற்போக்கும், ஈழத் தமிழர் ,
Page 90
176. O மெய்யுள்
கூட்டணியின் காந்தீய ஆசாரப் போராட்டமும் ஒரே மேல் பூச்சு "மரபு", "மத்தாப்பு" புஸ்வாணங்களேதான்.
1956 க்குப்பின் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் வலுவ டையத் தொடங்கிய இப்போக்கு வெகுசீக்கிரமே அந்த வலுவை இழக்கவும் தொடங்கியது. அந்த வலுவிழப்பு 1956 க்குப்பின் தெரியவரும் சர்வதேச முதலாளித்துவ ஏகாதி பத்தியப் போக்கின் நெருக்கடியோடும் தேய்வோடும் ஒத் திருப்பதைக் கவனிக்க வேண்டும்.
அந்த வலுவிழப்பினதும் தேய்வினதும் காரணங்களாக அடுத்த போக்குகள் உள்நுழைகின்றன. அதுதான்.
மார்க்சீயப் போக்கும் மூன்ரும் பக்கப் பார்வையும்.
இந்த ஆசார மரபுவாதத்துக்கும் அதன் முதலாளித்துவப் போக்குக்கும் எதிராக 1956 க்குப் பின் ஈழத்தில் மார்க்சீய முற்போக்கு இலக்கிய இயக்கம் வளர்ச்சியடையத் தொடங்கி
Ugl.
வழி வழி ஆசார மரபுவாதம் சமூகத்தின் உன்ழல்களையும் பிரச்னைகளையும் தீர்க்க முடியாமல் அவற்றைப் பூசி மெழுகு வதையும், அவற்றுக்கு எதிரான போராட்டங்களைத் திசை திருப்புவதையும் கண்ட சீர்திருத்தவாதிகள் வேறு வழியின்றி மார்க்சீய நாஸ்திகப் பொருள்முதல்வாதப் பக்கம் திரும்பினர். அது தமிழ்க் கலாசாரத்தின் அடிநாத ஞானமரபுக்கு முரண் பட்டதாகத் தெரியினும், உண்மையில் அதுவே மேல்தளச் சமய ஆசாரப் பூச்சு மரபை விட அதற்கு அண்மித்ததாக இருக்கிறது.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பழைய சங்கப் பாடல் முதல் இராமலிங்க சுவாமிகளின் சர்வ சமய
மெய்முதல்வாதம் 77
சன்மார்க்க சமரசத்தின் சர்வதேசப் போக்குக் கூடாக " இடிபட்ட சுவர்போல கலி விழுந்தான் கிருதயுகம் எழுக மாதோ " என்று ரஷ்ஷியப் புரட்சியைப் பற்றிய பாரதி பாடல்வரை ஊடுருவி நிற்கும் தமிழன் கண்ட சர்வதேச சத்திய ஒருமைக்குப் புதிய உருவங்கொடுக்க விரும்பிய இன் றைய சீர்திருத்தவாதிகளால் மேல்தள ஆசாரமரபோடு திருப்திப்பட்டிருக்க முடியாது. அந்தளவுக்கு அவர்களுக்குப் பார்வையும் கலையுணர்வு ஆத்ம உந்தலும் மழுங்கிக்கிடக்க வில்லை. அதேசமயம் அவர்களிற் பலர் அடித்தள ஞான மர போடு மேல்தள ஆசாரமரபையும் ஒன்ருக நினைத்து மாருட்டம் செய்துகொண்டாலும், மாருட்டம் செய்யாத வேளைகளிலுங் கூட அடித்தள ஞான மரபிலிருந்து புதுயுகச் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் த த் துவ மொன்றைக் கண்டுபிடிக்க முடியாத தரிசனமின்மையாலும் அவர்களுக்குச் சோஸலிஸ் சமதர்மத்தை இலட்சிய நோக்காக கொண்ட மார்க்சீய சித்தாந்தமே சரியான புதுமார்க்கமாகத் தெரிந்தது. அத்துடன் சாதிக்கொடுமைகளிலிருந்து தப்ப முயன்ற பெரும்பாலான ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களுக்கு அந்தக் கொடுமைகளையும் அதையொத்த வேறு கொடுமை களையும் நியாயப்படுத்துவதாகத் தெரிந்த சமயங்களிட மிருந்து எந்தவித சமூக தர்மத்தையும் எதிர்பார்க்க முடி யாது என்ற எண்ணம் எழுந்ததிலும் தப்பொன்றுமில்லை. சாதிப் பிரிவுகள், வர்க்கப் பிரிவுகள் என்ற பாகுபாடுகளும் அவற்றுக்குரிய மறைமுகப் பலாத்கார ஆக்கிரமிப்பும் சுரண் டலும் அவற்றை மறைக்கும் ஆசார வெளிப் பூச்சுகளும் இல் லாது உண்மையான அன்பும், சகோதரத்துவமும், சமத் துவமும், சமதர்மமும் உள்ள ஒரு சமூக அமைப்பை விரும்பி அவர்கள் மார்க்சீய அரசியல் கட்சிகளில் சேர்ந்தனர் அல்லது அவற்றுக்கு அனுதாபிகளாக இருந்தனர். அவர் களுடைய இயக்கந்தான் ஈழத்தமிழர் இலக்கியத்துறையில்
Page 91
78 மெய்யுள்
1956 க்குப் பின் வளர்ச்சியடையத் தொடங்கிய " முற் போக்கு " எழுத்தாளர் இயக்கமாகும். அது ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இன்றைய மூன்று பெரும் சர்வதேசப் போக்குகளில் இரண்டாவது போக்குக்குரிய ஈழத்து இலக் கிய வெளிக்காட்டலாக இருக்கிறது.
அந்தவகையில் அது மேல்தள முதலாளித்துவப் பண் டித ஆசார மரபைவிட அடித்தள ஆன்மீக ஞான மரபுக் குக் கிட்டே இருக்கிறது. அடித்தள ஆன்மீக மரபுக்கும் மேல்தள ஆசார மரபுக்கும் இடைப்பட்டு நிற்கிறது.
ஈழத்தமிழ் இலக்கியத்துறையில் 1956 க்குப் பின் வலு வடையத் தொடங்கிய அப்போக்கு இந்த 72 க்குள் பழைய மேலோட்ட ஆசார மரபு வாதத்தைவிடக் குறிப்பிடப்படக் கூடிய பல சாதனைகளை ஆற்றியுள்ளது. ஜீவாவின் " தண்ணி ரும் கண்ணிரும் ‘’ முதலாக செ. கணேசலிங்கனின் நாவல்கள், யோ. பெனடிக் பாலனின் சொந்தக்காரன்", நீர்வை பொன்னையனின் "உதயம்", க. கைலாசபதியின் சில விமர் சனங்கள், காவலூர் ராசதுரையின் " வீடு யாருக்கு", டானி யலின் பஞ்சமர் ” வரையுள்ள பல்வேறு ஆக்கங்களைப் படிப் போர் அந்த உண்மையை உணர்வர். *
ஆணுல், இவர்களை ஆற்றலில்லாது வெறும் அர்த்தமற்ற சுலோகங்களை முன் வைத்தவர்கள் என்றும், இவர்களின் "சோஸலிஸ யதார்த்தம் ' என்ற் கோட்பாடு காலத்துக் கொவ்வாதது எனக்கூறி அதற்குப் பதிலாக "தேசிய இலக் கியம் ' என்ற "கோட்பாட்டை முன்வைத்தவர்களும் இருக் கின்றனர். எஸ். பொன்னுத்துரை அவர்களில் முக்கிய மானவர், அதன் காரணமாக ஏற்பட்ட கருத்து முரண் பாடு எஸ். பொ. வை முற்போக்கு அணியிலிருந்து வெளியே அகற்றியது. அந்த விசயத்தில் இருசாராரும் தவறிழைத் தவர்களாகவே இருக்கின்றனர். அவரையொத்த ஒருவரை ஆரம்பத்தில் முற்போக்கு இயக்கம் இழக்க முன்வந்திருக்கக்
மெய்முதல்வாதம் 179
கூடாது. அந்தத் தீவிரம் கூடாது என்பதை 64க்குப் பிறகு தான் அரசியல் துறையில் உணர்ந்து சமரசம் செய்ய முன் வந்த இடதுசாரிகள் பலர் அதை உணர்ந்தவர்களாய் இல்லை. அதேபோல் வெளியேற்றப்பட்ட பின்பு எஸ். பொன்னுத்துரை யும் தன்னளவிலாவது மார்க்சீய முற்போக்குஇலக்கியப் போக் குக்கு வளமளித்திருக்க வேண்டும். ஆணுல், அவர் அதைச் செய்யாததோடு அதற்கு நேர் மா ரு ன ஆசார மரபோடு தான் சமரசம் செய்துள்ளார். அதனுல் அவரது “வீ " என்ற சிறுகதைத் தொகுதி அவரது "தேசிய இலக்கியம் " என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தும் சில தரமான சிறுகதை களைக் கொண்டதாக அமைந்திருந்தாலும் அவர் காணும் தேசியமும் நற்போக்கும் முதலாளித்துவ மேல்தள ஆசார மரபுக்குரிய தேசிய - நற்போக்காகவே இருக்கிறது. அத ஞரல் தான் மேல்தள பண்டித ஆசாரமரபு இன்று அவரைத் தன் எதிர்ப்புரட்சிக்குரிய முன்னணி வீரராகப் பயன்படுத்தி வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் கிளர்ச்சிகளை ஒடுக்கு வதற்கும், நசுக்குவதற்கும், உயர்சாதிக்காரர்கள் தாழ்த்தப் பட்ட சமூகத்திலிருந்தே உடல் ஆற்றலுள்ள சில கையாட் களைப் பயன்படுத்துவதுண்டு. எழுத்தாற்றல் உள்ள எஸ். பொ. மேல்தள ஆசார மரபால் இன்று அப்படியே பயன்படுத்தப்பட்டு வருகிருர், தனது தத்துவ பார்வையின் மையை மறைக்க மரபின் பெயரில் இவர் வார்த்தை களால் சிலம்பாட்டமும், வாணவேடிக்கைகளும் காட்டுவ துண்டு. அருளற்ற இன்றைய கோயில் திருவிழாக்களின் ஆசார மரபுக்குரிய சிலம்பாட்டமும், வாணவேடிக்கைகளும் போலவே அவையும் இன்று தோற்று வருகின்றன.
மேல்தள வெளிவேட ஆசார மரபு ஈழத்து இலக் கியத்துறையில் எஸ். பொன்னுத்துரை மூலம் வைத்ததடை களையும் உடைத்துக்கொண்டு (தனக்குள்ளே அது பீக்கிங்,
Page 92
180 மெய்யுள்
மொஸ்கவ் என்று பிரிந்துள்ள போதும்) இன்று முற்போக்கு இயக்கம் வளரவே செய்துள்ளது.
முற்போக்குவாதிகள் “சோஸலிஸ் யதார்த்தம்", "பிரதேச இலக்கியம்" என்பன போன்ற சுலோகங்களை முன்வைத்தாலும் அவை ஆசார மரபுக்குரிய நற்போக்கு", "தேசியம்", * கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ' போன்ற தத்துவ ஆழமும் அர்த்தமுமற்ற சுலோகங்களல்ல. அவற்றுக்குப் பின்னுல் மார்க்சீய சித்தாந்தமும் அதற்குரிய வியாக்கியானங் களும் இயக்கமும் இருப்பதால் மெல்லமெல்ல முற்போக்கு எழுத்தாளர்கள் சுலோகங்களின் தத்துவ அர்த்தங்களை விளக் கிக் கொண்டு, அவற்றுக்கேற்ற வகையில் சீராக எழுதுவ தில் வெற்றி கொள்ளவும் செய்தனர்.
இவர்களது இலக்கியம் தரமுடையதாகக் கொள்ளப் படுவதற்குரிய மதிப்பீடு என்ன?
சுருங்கச் சொன்னுல், மேல் பூச்சு ஆசார மரபு எப்படி இருக்கிற பிரதேச, சர்வதேச சமூக அமைப்பையும், மனித வாழ்க்கை முறையையும் மாற்றியமைக்காமல் இருக்கிற அமைப்புக்குள்ளேயே கலை இலக்கிய இன்பத்தை அனு பவிக்க முயல்கிறதோ, அப்படிப்பட்ட போக்குக்கு எதிராக மனித சரித்திரத்தை முற்போக்காக வளர்க்ககூடியதாய் இவர்களது சிருஷ்டிகள் உள்ளன. அதாவது, இலக்கியம் ரசனைக்கு மட்டும் உரியதல்ல. அது விடுதலைக்கும் செயலுக் கும் உரியது. அந்த விடுதலை தனி மனித விடுதலையாக மட்டும் நின்றுவிடாமல் முழுச் சமூகத்தின் விடுதலைக்கும் வழிகாட்டுவதாக இருக்க வேண்டும். இவையே முற்போக்கு எழுத்தாளர்களின் அளவுகோல்கள் எனலாம்.
அதனுல் அவர்களது படைப்புகள் இன்றைய ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் ஆசாரப் பூச்சுகளுக்கிடையே உள்ள சாதிக்
மெய்முதல்வாதம் 181
கொடுமைகளையும், வர்க்கச் சுரண்டலையும் பச்சையாகக் கிழித் துக்காட்டுவதோடு உலகமெங்கும் காணப்படும் அதேவகைப் பலாத்கார ஆக்கிரமிப்பையும் சுரண்டலையும் அவற்ருேடு தொடர்புபடுத்தியும் காட்டுகின்றன. அவற்றைக் காட்டுவதன் மூலம் அவற்றிலிருந்து விடுதலைபெறும் மார்க்கத்தையும் தம் கோணத்திலிருந்து வெளிப்படுத்த முயல்கின்றன.
ஆணுல், அவர்களின் முயற்சிக்கு ஏற்றவாறு அவர்களது விமர்சகர்கள் தீவிரமாக வழிகாட்டி விமர்சிக்க முடியாமல் இருக்கிருர்கள். அது பெருங் குறைபாடாகும். அதோடு முற்போக்கு விமர்சகர்களிலும் எழுத்தாளர்களிலும் சிலர் பழைய ஆசாரவாதிகளுக்குச் சமமான புதிய பண்டிதச் சாதிப் டோக்கை வெளிக்காட்டுபவர்களாக இருப்பதும், பழைய முதலாளிகளையும்விட தீவிரமாகப் பணஞ் சம்பாதிக்கும் கறுப் புச் சந்தைக் காரர்களாக இருப்பதும் புதுப் பரம்பரையின ரைக் கவரமுடியாத அம்சங்களாக நிற்கின்றன. அது மார்க் சீய சோஸலிஸம் என்ற பெயரிற் புதிய துரைத்தனச் சாதிக் காரரிடமும் புதிய முதலாளிச் சுரண்டல்காரரிடமும் அதிகா ரத்தை ஒப்படைப்பதாக இருக்காதா என்ற சந்தேகங்களைப் புதுப் பரம்பரையினரிடம் எழுப்புவதாகத் தெரிகிறது.
சோஸலிஸ் நாடுகளில் 1956 க்குப் பின் தீவிர மடைந்து வரும் புது விழிப்புக்கு இது சமமாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. தொழிலாளர்களின் சர்வாதிகாரம் என்ற பெயரில் உளவாளிகள், சிறைச் சாலைகள் ஆகியவற்றை அதிகமாகக் கொண்ட ஆட்சிக்குப் பதிலாகப் பொருளுற்பத்தி யும் விடுதலையும் ஒருங்கே கிடைக்க வேண்டும்; இல்லாவிட் டால் தொழில் நுட்ப சோஸலிஸ் நாடுகளின் துரைத்தனக் காரரின் கொடுமைகளுக்கும் வித்தியாசமில்லை என்ற புதிய சிந்தனை விழிப்பை ஒத்திருக்கிறது. அதாவது முடிவுமட்டு மல்ல வழியுங்கூடத் தூய்மையாக இருக்க வேண்டுமென்ற ஆன்மீக விசாரத்துக்குரிய சிந்தனை
Page 93
182 மெய்யுள்
ஈழத்து இளம் எழுத்தாளர்களும் சர்வதேசப் புதுப் பரம் பரையினரைப் போல் ஆசார மரபில் அதிருப்திப்படுபவர்கள் போலவே இன்று மார்க்சீய முற்போக்கிலும் அதிருப்திப்படு பவர்களாக இருக்கின்றனர்.
அத்துடன் மார்க்சீய தமிழ் எழுத்தாளர்களின் எண் ணிக்கை அதிகமாக இருந்தும் அவர்களது சிருஷ்டிகளின் தரம் அதிகரித்து வருவதாக இருந்தும் இன்னும் ஈழத்துத் தமிழ் மக்களின் பெரும்பான்மையினரைத் தொட்டுத் திசை திருப்ப முடியாதவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர். காரணம், அவர்களது மார்க்சீய சித்தாந்தம் தமிழ்ப் பொது மக்களிடம் ஊடுருவக்கூடிய அரசியல் பொருளாதாரச் சூழல் இன்னும் பிறக்கவில்லை என்பதல்ல அர்த்தம். மக்களோடு அவர்களாற் பழக முடியாமல் இருக்கிறது என்பதும், தமிழ்க் கலாசார அடித்தளம் அவர்களது சித்தாந்தம் மக்களோடு கலக்கக்கூடிய வகையில் இடமளிக்கவில்லை என்பதுமே முக்கிய காரணங்களாகும். அதனுல் தாமாகவே தம் பகுதிகளிற் சரித் திரத்தை வளர்க்க உதவுவதை விடத் தென்னிலங்கையில் ஏற்படும் சரித்திர மாற்றங்களுக்காக அவர்கள் காத்திருப்பவர் களாகவே இருக்கின்றனர்.
அந்த வகையில் ஆசார மரபுவாதிகள் எவ்வாறு ஆத்ம மரபை வளர்க்க முடியாமல் ஸ்தம்பித்துக் கிடக்கிருர்களோ, அவ்வாறே புதிய புரட்சி மரபை ஒர் எல்லைக்கு அப்பால் வளர்க்க முடியாமல் முற்போக்கு எழுத்தாளர்களும் ஸ்தம்பித் துக் கிடக்கின்றனர். இரு சாரரினது ஸ்தம்பிதமும் சர்வதேச முதலாளித்துவ சோஸலிஸ சக்திகளின் ஸ்தம்பிதத்தையே ஒத் திருக்கிறது.
ox «X» ` ex
மெய்முதல்வாதம் 183
3
1956 க்குப் பின் ஈழத்து இலக்கியத்தில் முற்போக்கு எழுத்தாளர் இயக்கம் வலுவடையத் தொடங்கிய காலத்தில், அதன் சர்வதேசப் பெரும்போக்கான சோஸலிஸ் ஏகாதிபத் திய முற்போக்கு தனக்குள்ளேயே ஒரு நெருக்கடிக் கட்டத் தைச் சந்தித்துக் கொண்டிருந்தது. ஸ்டாலினிஸக் கொடுமை கள் அம்பலப் படுத்தப்பட்ட 22-ம் கட்சி மாநாட்டிலிருந்து ஹங்கேரி, போலிஷ் புரட்சி வரையுள்ள பல நிகழ்ச்சிகளை அதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
மேற்கத்தைய முதலாளித்துவப் போக்குக்குள்ளும், சோஸ லிஸ் ஏகாதிபத்தியப் போக்குக்குள்ளும் அடைபட்டு விடாத ஒரு மூன்ரும் பார்வை அவசியமென்பதை இவை சர்வதேச ரீதியில் அழுத்துபவையாக அமைந்தன. இரண்டுக்குள்ளும் அடங்காது வெளியே நின்ற மூன்ரும் உலகத்தின் நடுநிலைக் கொள்கையை சுயஸ், அல்ஜீரிய, வியட்னும் நெருக்கடிகள் எவ்வாறு வலியுறுத்தினவோ, அவ்வாறே ஹங்கேரிய, போலிஷ் புரட்சிகள் வலியுறுத்தின.
மூன்றம் நாடுகளின் நடுநிலைக் கொள்கை வெறும் பொருளாதார அரசியல் காரணங்களால் உருவாக்கப் பட்ட தாகவே முதலாளித்துவ நாடுகளும் சோஸலிஸ நாடுகளும் நினைத்துக்கொள்கின்றன. ஆனல், அது அடிப்படையில் அப்படிப்பட்டதல்ல. இந்த நடுநிலைக் கொள்கைக்கு நேரு கால இந்தியா தலைமை தாங்கியது. காந்தி காட்டிய இந் திய ஆத்ம மரபின் உந்துதலின் காரணமாக நேருவின் இந்தியா, நேருவே புத்தி பூர்வமாக உணராத அளவுக்கு உலக நாடுகளிடையே ஒரு புதுப் பாதையை முன் வைத் துக்கொண்டிருந்தது. அந்தப் புதுப் பாதையின் அவசியத்தை சுயஸ், அல்ஜீரியப் பிரச்னைகள் மட்டுமல்ல, ஹங்கேரிய, போலிஷ் பிரச்னைகள்கூட அழுத்துபவையாகவே இருந்தன.
Page 94
i84 மெய்யுள் "
அவற்றின் காரணமாக மூன்ரும் உலகத்தால் முழுக்க முழுக்க முதலாளித்துவப் பக்கமும் சாரமுடியவில்லை; முழுக்க முழுக்க சோஸலிஸ பக்கமும் சாரமுடியவில்லை. ஒரு தனிப்பெரு வட்டமாகவே அது இயங்கி வருகிறது.
இந்த மூன்ரும் உலக நடுநிலைக் கொள்கைகளுக்குரிய தத்துவம் இன்னும் சர்வதேச ரீதியாக வெளிப்படுத்தப் பட வில்லை. ஆணுல், இதுவரையுள்ள இரண்டு பெரும் சர்வதேசப் போக்குகளுக்குரிய சித்தாந்தப் பார்வையால் இதை அடைந்து S. விட முடியாது என்பதை இன்று உலகமெங்கும் காணப்படும் இளம் பரம்பரையின் போராட்டங்கள் நிரூபித்து வருகின்றன. காந்தி கால இந்தியா காட்டிய சில உண்மைகளுக்கும், நேரு கால இந்தியா கடைப்பிடித்த நடுநிலைக் கொள்கை களுக்கும், இந்திரா கால பங்களாதேஷ் போருக்கும், இன் றைய ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மூன்ரும் உலக நாடுகளின் நடுநிலைக் கொள்கைகளுக்கும், அகில உலகமெங் கும், (குறிப்பாக அமெரிக்காவிலும்) காணப்படும் புதிய பரம்பரையின் புரட்சிகரப் போக்குகளுக்கும் மானசீகமான தொடர்புகள் பல இருக்கின்றன என்பதை உணர்பவர்கள் இன்றைய இளம் பரம்பரையின் "மூன்ரும் பக்கப் வையை " ஓரளவுக்காவது உணர்ந்து கொள்வதோடு எதிர் கால மெய்முதல்வாதமான பூரண சர்வோதயத்தின் முக்கியத்து வத்தையும் இவற்றேடு தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடிய வர்களாய் இருப்பர்.
இன்றைய ஈழத்து எழுத்தாளர்களிற் சிலர் அப்படிப் பட்டவர்களாய் உள்ளனர். அப்படிப்பட்ட போக்கை ஈழத் துத் தமிழ் இலக்கியத்தில் பார்க்கும் போது மு. தளையசிங் கத்தின் எழுத்துக்கள் பற்றிய ஆய்வும் சிறிது அவசியமா கிறது.
i956 ge ஒட்டிய காலத்திலேயே எழுத்துத் துறைக்குள் அவரும் பிரவேசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 60
மெய்முதல்வாதம் 185
லிருந்து ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறையில் உக்கிரமடை யத் தொடங்கிய முற்போக்கு - எதிர்முற்போக்கு வாதப் பிரதி வாதங்களில் அவரும் ஈடுபடத் தொடங்கியபோது ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறைக்குரிய மூன்ரும் பக்கப் பார்வை முன் வைக்கப் படலாயிற்று. அத்தகைய சர்ச்சைகள் தினகரனில் இடம்பெற்றபோது "மூன்ரும் பக்கம் ' என்று மகுடமிட்டே அவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. கலைச்செல்வி யில் வெளியான "முற்போக்கு இலக்கியம் " என்ற கட்டு ரையில் முற்போக்கு இயக்கத்தின் குறைகளைச் சாடியபோதுங் கூட, எதிர்முற்போக்குக்கு எதிராகவும் அது இருந்தது. ஆணுல், உண்மையான மூன்ரும் பக்கத்தின் தரமான கருத் துக்கள் 63 - 64 ல் எழுதப்பட்ட அவரது " ஏழாண்டு இலக் கிய வளர்ச்சி - அவரசரக் குறிப்புகள்" என்ற தொடரில்தான் வெளிவரத் தொடங்கின. மரபுவாத நற்போக்கையும், மார்க் சீய முற்போக்கையும் மூன்ரும் கோணத்திலிருந்து திருத்தி இணைத்துப் பூரணப்படுத்துவது என்ற இன்றைய கருத்தின் ஆரம்ப வித்துக்கள் அதில் தான் முதன்முதலாக முன்வைக் கப்பட்டன. அத்துடன் முற்போக்கு இளம் எழுத்தாளர்கள் எஸ். பொன்னுத்துரையின் வார்த்தை மாயையில் சிக்கிக் கிடந்த கோலத்தையும் ("குட்டி" யோ. பெனடிக் பாலன்) வாழ்க்கையை மறுக்கும் போக்கில் உடல் நிலையாமை பற் றிய வார்த்தைகளைச் சோஸலிஸ யதார்த்த நடை என நம்பி ஏமாறிய விதத்தையும் புட்டுக்காட்டிப் புதுப்பரம்பரை யினரை உண்மையான முற்போக்குப் பாதையில் போகத் தூண்டிய முதற்கட்டுரையாகவும் அது அமைந்தது. மரபு வாதிகளின் இயலாத் தனத்தை வெளிப்படுத்தியதுபோல் முற்போக்கு விமர்சகர்களின் நழுவல், நிழல் விமர்சனங்களை யும் மார்க்சீயப் பார்வையைப் பூரணமாக அவர்கள் அறிந் திருக்காததையும் வெளிப்படுத்திய கட்டுரைத் தொடரும் அதுவாகவே அமைந்தது.
Page 95
186 மெய்யுள் )
1965 -ல் வெளிவந்த இவரது ‘புதுயுக்ம் பிறக்கிறது" சிறுகதைத் தொகுதி இதை இன்னும் வேறு கோணங்களில் வளர்த்துக் காட்டியது. யந்திர நாகரிக வளர்ச்சியைக் காட்டும் உலக சமுதாயத்தின் " வீழ்ச்சி' யிலிருந்து விடு தலைபெற மனிதன் எடுக்கும் பல்வேறுவகைப் புரட்சிகளை அது படம் பிடிக்கிறது. உண்மையான் விடுதலை ஆத்மீகம் மூலமே கிட்டும் என்பதை வலியுறுத்தியபோதும் அது மேல் தள ஆசார மரபுக்கு எதிரானதாகவே இருக்கிறது என்பதை அவர் அக் கதைத்தொகுதியின் பிற்குறிப்பாக " கதைத் தொகுதி முழுவதும் ஓர் Anti மரபு, Anti உருவம் Anti அமைப்புத்தொனி அடிநாதமாகப் பின்னுல் நின்ருல் ஆச் சரியப்படத் தேவ்ையில்லை " என்று எழுதியதில் அறியலாம்.
1970 ல் இவரது " போர்ப்பறை' வெளிவந்ததோடு ஈழத்து இலக்கியத்தின் மூன்ரும் பக்கம், அடித்தள ஞான மரபுக்குரிய பூரண சர்வோதயப் பார்வையாகப் பரிணமித்தது. அத்தோடு இன்று ஒரு தனிவட்டமாக நிற்கும் மூன்ரும் உலக நாடுகளும் உலகமெங்குமுள்ள இளம் பரம்பரையும் தெளிவுப்படுத்த முயலும் போக்கை இப்பார்வையே ஆற்றுப் படுத்தச் கூடியதாய் நிற்கிறது.
சர்வோதயம் என்ருல் என்ன ?
சகல மக்களினது எழுச்சியையும் சகல துறைகளினது வளர்ச்சியையுமே குறிக்கிறது.
சகலரினதும், சகலதினதும் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் சாதி, சமய, இன, வர்க்க, நிற, மொழி வேறுபாடுகள் தடை 565 இருக்கின்றன. அதஞல் அத்தகைய சகல தடைகளை யும் கடந்த ஒரு சமதர்ம சமுதாய எழுச்சியையும் சர்வோதயம் குறிக்கிறது.
இத்தகைய தடைகளையும், குறைபாடுகளையும் கருத்து முதல்வாதம் எனப்படும் மேல்தள சமய ஆசாரமும் முதலாளித்
மெய்முதல்வாதம் 87
துவப் போக்கும் பூசி மறைத்துக்கொண்டு "அன்பு" என் றும், " சுதந்திரம் ' என்றும், "ஜனநாயகம் " என்றும் " கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்றும் போலிச் சுலோகங்களை எழுப்பி மனித சிந்தனையை அவற்றிலிருந்து வேறுபக்கம் திசை திருப்பி ஏமாற்றப் பார்க்கிறது. அந்தச் சமூகக் குறைபாடுகளையும், பாகுபாடுகளையும் அடிப்படையாக வைத்தே அவை தம்மை வளர்க்க முயல்கின்றன.
இடைத்தள மார்க்சீய சோஸலிஸப் போக்கோ இச் சமூகப் பாகுபாடுகளையும், குறைபாடுகளையும் அவற்றை அடிப்படை யாக வைத்து நடத்தப்படும் மறைமுகப் பலாத்கார ஆக்கிரமிப் பையும் சுரண்டலையும் நிலமானிய முதலாளித்துவ சமூக - பொருளாதார அமைப்புகளுக்குரிய பண்பாகவே காண்கிறது. அவற்றை நீக்குவதற்கு அந்த அமைப்புகளையே மாற்றி அமைக்கவேண்டும் என்று கருதுகிறது, அதாவது உற்பத்திச் சக்திகள், அவற்றின் உறவு முறைகள், அவற்றின் அடிப்படை யில் வளரும் வர்க்க வேறுபாடுகள் ஆகிய பொருளாதார அடிப் படைகளிலேயே இக்குறைபாடுகளும் பாகுபாடுகளும் தங்கி யுள்ளன என்றும், அவற்றை அகற்றுவதற்கு அரசியல் போராட்டத்தையே ஒரே ஒரு வழியாக நம்பியும் அதற்கேற் பவே போராட்டங்களையும், புரட்சிகளையும் நடத்தி வருகிறது. இவற்றின்மூலம் ஒவ்வொருவனது தேவைகளுக்கும் ஏற்ற வகையில் சகல பொருள் வசதிகளையும் வர்க்கச் சுரண்டலற்று அளிக்கும் பொதுவுடமைச் சமதர்ம அமைப்பு ஏற்படுமென்றும் அந்த அமைப்பில் பொருளாதாரத் தேவைகளிலிருந்தும் அவற்ருல் ஏற்படும் கட்டாய உற்பத்தியிலிருந்தும் மனித சமூகம் விடுதலை அடைந்து தன் சுயத்தை அடைகிறதென்றும் அது நம்புகிறது.
இதுதான் மார்க்சீயப் பார்வையின் முடிவென்றல், அந்த முடிவும் சர்வோதய முடிவாகத்தானே இருக்கிறது? எவ்வித
Page 96
188 மெய்யுள்
பாகுபாடுமற்ற சகலரும் விடுதலை எழுச்சியுற்று, சகல துறை களும் சமமாக வளர்ச்சியடையும் (Մ) էգճյ சர்வோதயந்தானே
அப்படித்தான் தெரிந்தாலும் வித்தியாசம் இல்லாமல் இல்லை.
மார்க்சீயவாதப் பொதுவுடமையின் "ஆன்மீக விடுதலை" பொருள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது.
பொதுவுடமைச் சமதர்ம அமைப்பில் பொருளாதாரத் தேவைகளிலிருந்தும் அவற்ருல் ஏற்படும் கட்டாய உற்பத்தியி லிருந்தும் விடுதலை பெறும் மனிதன், சமயங்கள் கூறும் புண் ணிய உலகங்களின் சொர்க்க வாழ்க்கையை அனுபவிப்பவனுக மாறுகிருன். ஆணுல், புண்ணிய லோக வாழ்க்கை போக வாழ்க்கையாக இருக்கலாமேயொழிய ஞான வாழ்க்கையாக இருக்கமுடியாது என்றும், அதே சமயங்கள் அழுத்தந் திருத்த மாகக் கூறுகின்றன. பொருளாதார வசதிகள் அகவிடுதலையை அல்லது ஆன்மீக முழுமையைத் தரவல்லன எனக் கூறுவது ஒருவித பொருளாதாரச் சமயத்தில் நம்பிக்கை வைக்கும்படி கூறுவதாக இல்லையா?
ஆணுல், அந்த நம்பிக்கை நிறைவேறும் என்ற ஆதாரங்கள் தெரிவதாக இல்லை. ஏற்கனவே தேவைக்கதிகமாகப் பொரு ளாதார வசதிகளை அனுபவித்தாளும் வர்க்கங்கள் நிலமானிய -முதலாளித்துவ அமைப்புக்குரிய ஆளும் வர்க்கங்கள், அக விடுதலையை, ஆன்மீக முழுமையைக் காட்டுபவையாக இருந் தனவா ? சுரண்டலற்ற பொருளாதாரப் பொதுவுடமைச் சொர்க்கம் எந்தக் காலத்தில் வரும்? வந்தாலும் அது முழுமை யான ஆன்மீக விடுதலையைத் தரும் என்ற நிச்சயம் என்ன?
நிச்சயமில்லாத ஒன்றில் நம்பிக்கை வைக்கவேண்டுமென் பது சமயங்களின் பக்தி மார்க்கத்தைவிட மோசமான பக்தி மார்க்கமல்லவா ?
மெய்முதல்வாதம் 1.89
அந்தக் கேள்விகள் எழும்போதுதான் அடிப்படை வித்தி யாசங்களும் அடிப்படை உண்மைகளும் தெரிய வரும்.
கருத்துமுதல்வாத ஆசார மரபும் மார்க்சீய சோஸலிசப் போக்கும் ஒன்றுக்கொன்று எதிர்ப் போக்குடையவையாகத் தெரியினும், அடிப்படையில் அவை இரண்டுக்குமிடையே முரண்பாடுகள் இல்லை.
ஒன்று, ஆன்மீகத்தை வாயளவில் ஏற்றுக் கொண்டு பொருளை நாடுகிறது.
மற்றது. பொருள் மூலம் ஆன்மீகத்தை நாடுகிறது.
இந்த மறைமுக உண்மைகளை வெளிப்படுத்தி, அந்த உண்மைகளின் முழு அடி ஆழத்தைக் காட்டி, அந்த அடிஆழத் தளத்தில் வைத்து அவை இரண்டையும் ஒருங்கே திருத்தி, இணைத்து முழுமைப்படுத்தும் போக்குத்தான் மூன்ரும் போக் காகும். அதுவே சர்வோதய மெய்முதல்வாதப் போக்காகும்
மேல்தள சமய ஆசார கருத்துமுதல்வாத ஆன்மீகத்துக் கும், இடைத்தள மார்க்சீய பொருள்முதல்வாத ஆன்மீகத் துக்கும் பொதுவான அடித்தளமாக இருப்பது சர்வசமய அடித் தளமான சத்தியமாகும். அந்தச் சத்தியமே இரண்டு போக் குக்குமுரிய மெய்யாகு
அதனுல் சர்வோதயம் என்பது சகலரிடத்திலும் சகல துறைகளிலும் ஏற்படும் எழுச்சியும் வளர்ச்சியும் என்ருல், அந்த எழுச்சியும் வளர்ச்சியும் சத்திய வளர்ச்சியாகவும் இருக் கும்.
ダ இந்த மெய்முதல் போக்குக்குரிய சர்வோதய எழுச்சி இராமகிருஷ்ணர், காலத்திலிருந்து வளர்ச்சியடையத் தொடங் கியது. அவர் வழியில் விவேகானந்தர், அரவிந்தர், காந்தி, ரமணர் ஆகியோர் அதை வளர்த்தனர். அதன் பூரண, கோலத்தை ஈழத்தில் வாழ்ந்து மறைந்த அடித்தளச் சத்தியத்
Page 97
90 மெய்யுள்
தின் பேரவதாரமான பூரீலபூரீ நந்தகோபாலகிரி நிறுவிய சர்வ மத சங்கம் இன்று வெளிக்காட்டியும் வளர்த்தும் வருகிறது.
சர்வோதயம் என்ற பெயறிற் சிரம தானத்தோடும் சமூக சேவைகளோடும் திருப்திப்பட்டுக்கொண்டு திரும்பவும் மேல் தள ஆசார மரபின் பூச்சுக்குப் பலியாகும் வேறுசில இந்திய -இலங்கை முயற்சிகளிலிருந்து இது தனியாகவும், ஆழமாக வும் இருப்பதால், ‘பூரண சர்வோதயம் ' என்று இதைக் கூற வேண்டியுள்ளது.
பூரண சர்வோதய எழுச்சி சகலரிடத்திலும், சகல துறை களிலும் சத்திய எழுச்சியை ஏற்படுத்த இருப்பதால், பழைய துறைகளும் அவற்றின் உருவங்களும் புதிய எழுச்சிக்கேற்ற வாறு, அந்தப் புதிய எழுச்சியைக் கொள்வனவு செய்யக் கூடிய, மெய்ப் பாத்திரங்களாக, மெய் ஊடகங்களாக, மெய்
யுள்களாகவும் மாற்றப்பட வேண்டியுள்ளன.
இலக்கியத்தில் அதற்குரிய பிரகடனமாக மு. த. வின் ' மெய்யும் உள்ளும் மெய் " விளங்குகிறது.
சத்திய உருமாற்றங்கள் மேல்தள, அடித்தள, இடைத் •ر தளக் கலப்புகளாலும், கருத்துமுதல்வாதம், பொருள்முதல் வாதம் என்ற பார்வைக் கோணங்கள் மெய்முதல்வாதத்தில் பூரணத்துவம் பெறும் இணைவிலுைம் ஏற்படவேண்டியுள்ளன. அதனல் பூரண சத்திய எழுச்சிக்கு முன் அதன் வருகைக்குத் தயார்ப்படுத்தும் கலப்புப் போக்கும், அந்தப் போக்குக்குரிய கலப்புக் காலக்கட்டமும், கலப்புச் சிந்தனை நிலையும் ஏற்படு வதும் தவிர்க்க முடியாததாகும். "கலப்புவலயம் " என்ற மெய்யுள் இதை விளக்கும்.
இந்த உருவ உள்ளடக்க மாற்றங்கள் இன்றைய கால கட்டத்தின் தேவையாலும் அது கோரும் தத்துவ வீச்சாலும் உந்தப்பட்டு உருவாக்கப்படுபவையாக இருப்பதால், அதை உ ரு வா க் கு ப வர் களும் அதற்குரிய உதாரண புரு
மெய்முதல்வாதம் 91
ஷர்களாக வாழ வேண்டியவர்களாயும், புதிய பேரறிவு வாழ்க் கையைத் தம்மளவில் அனுபவிப்பவர்களாகவும் இருக்க வேண் டும். சர்வமத சங்கத்தைச் சேர்ந்த சகல அங்கத்தவர்களும் அவ்வாறே வாழ்பவர்களாகவும் இருக்கின்றனர்.
● t Xo t
இதுவரை குறிப்பிட்டவற்றிலிருந்து குறிப்பாக ஓர் உண் மையை அறிந்து கொள்வது அவசியமாகும். அதாவது, இன்றைய உலகப் பிரச்னைகள் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்னைகளாக மட்டும் நின்றுவிடாமல் அடிப்படையில் உயிரி னத்தின், குறிப்பாக மனித குலத்தின் பரிணுமப் பிரச்னைக ளாக இருக்கின்றன என்பதுதான் النتائج *
பொருள் உற்பத்திக்குள்ளும் உடல், உயிர், மனத்தளங் களுக்குள்ளும் அமைந்த வாழ்க்கை அடுத்த தளமான சத்தி யப் பேரறிவுக்குள் இறங்க முயல்கிறது. சமயத்தை ஏற் றுக்கொள்ளும் மேல்தள ஆசார மரபும் சமயத்தை மறுக்கும் பொருள்முதல்வாதமும் " ஆன்மீக " அடிப்படையிற் கலக் கும் இன்றைய காலகட்டம் சகல மக்களும் ஞானிகளாகும் பரிணுமப் போக்குப் பரவலாகப் வந்துவிட்டது என்பதையே குறிக்கின்றது.
அதை நிரூபிக்க உலகெங்கும் இன்று காணப்படும் இளம் பரம்பரையினரின் அதிருப்தியும் புதிய தேடலுமே போது மாக இருக்கின்றன. மாணவர்களினதும் இளம் பரம்பரை யினரதும் போராட்டங்கள் வெறும் பரம்பரை வித்தியாசத் தால் உருவாகுவதல்ல. புதிய சிந்தனை எழிச்சியின் முன் னணி அலைகளாக இளம் பரம்பரையினர் இருக்கின்றனர் என்பதே முக்கிய காரணமாகும். இலங்கையிலுள்ள LOTiš சீயக் கட்சிகளில் ஒன்ருன L SSP யின் இளம் வட்டத்தி னர் இலங்கையில் தோன்றியுள்ள தீவிரவாதிகளான புதுப் பரம்பரையினரை விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும்
Page 98
192 மெய்யுள்
இடைப்பட்ட ஓர் உபவர்க்கமாகக் காணவேண்டிய நிலைக்குள் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதே பழைய தத்துவங்களின் குறிப் பாக மார்க்சீயத்தின் போதாத் தன்மையை வெளிப்படுத்து வதாக அமைகிறது. புரட்சிகரமான இப்புதிய உப வர்க்கம் பிரான்சில் மார்க்சீய தத்துவத்தையே தலைகீழாக்கும் வகை யில் "பொருளாதாரப் பண்டங்கள்தான் மக்களின் அபின்" என்ற புதிய சுலோகங்களை முன் வைத்து வருகிறது. இலங் கையில் "முதுபெரும் மார்க்சீயக் கட்சிகளையும் முதலாளித் துவக் கட்சிகளையும் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட முயல்கிறது. அமெரிக்காவில் 'மலர் மக்கள்","கிப்பீஸ்" என்ற நாமங்களில் எல்லாப் பலாத்காரங்களையுமே - முதலா ளித்துவ - சோஸலிஸ பலாத்காரங்கள் - எதிர்ப்பதாக வளர்ந்து வருகிறது. சீனுவில் மார்க்சீய புதிய கலாசாரப் புரட்சிக்குரிய செங்காவலராகத் திசை திருப்பப்பட்டு வரு கிறது. பங்களாதேஷில் சுதந்திரக் கொரில்லாக்களாகப் போரிட்டது. பிலிப்பைன்ஸில் ஆயுதம் ஏந்திய கொரில்லாக் களாக மார்க்கோஸ் ஆட்சியை எதிர்த்து வருகிறது. தமிழ் நாட்டில் அ. தி. மு. க. அனுதாபிகளாக கருணுநிதியின் தமிழ் நாட்டு வெளி ஆசார நவபாஸிஸ் ஆட்சியை எதிர்த்து வருகிறது.
பரவலாகப் பேரறிவுத் தளத்துக்கு ஏறும் மனித பரிணு மத்தின் முதல் அலை இவ்வாறு பலவிடங்களிலுமுள்ள கலை, கலாசார, பொருளாதார வரையறுப்புக்கும், தரைத் தோற் றத்துக்கும் ஏற்றவாறு சிதைப்பட்டு, திசை திருப்பப்பட்டும், தடம் புரண்டும், அணிதிரண்டும் உள் நுழைந்து கொண்டி ருக்கிறது.
அந்த உள் நுழைவைக் கண்டு அசெளகரியப்படும் மேல் தள ஆசாரப் போக்கு என்ன செய்வதென்று தெரியாது அங் கலாய்க்கிறது. ஆபத்து என உணரும் போது சிறைகளுக் குள் அடைத்துவிட முயல்கிறது,
மெய்முதல்வாதம் 193
மார்க்சீயப் பொருள்முதல்வாதப் போக்கு "தீவிர இடது சாரித்தனம்", " கொள்கைக் குழப்பம் " என்று கேலி செய்து ஒதுக்கிவிடப் பார்க்கிறது. ஆபத்து வரும் போது பச்சையாக அதற்குத் துரோகம் இழைக்கிறது; முடியுமானுல் சுட்டுத்தள்ளிவிடவும் முயல்கிறது.
ஆனல், உள் நுழையும் புதிய அலையோ சுட்டுத்தள்ளு பவர்களையும் சிறையிலடைப்பவர்களையும் தம்கட்டுகளிலிருந்து விடுவிக்கவும் சிறை மீட்கவுமே உள்நுழைகிறது. அதை இனங் காணக்கூடிய தரிசன விளக்கம் இரு சாராரிடமும்
ஈழத்துத் தமிழ் இளம் எழுத்தாளர்கள் சிலர் உள்நுழை யும் அந்த அலையை எல்லாச் சமூகங்களுக்குமுரிய, எல்லாக் கலாசாரங்களுக்குமுரிய, எல்லா மக்களுக்குமுரிய, எல்லா உயிரினங்களுக்கும், எல்லாச் சடத் தோற்றங்களுக்குமுரிய அடித்தள மெய்நிலையான சத்திய அலையாக, எழுச்சியுறும் பேர்ஞான விடுதலை அலையாக இனங் கண்டவர்களாக வர வேற்கின்றனர்.
உள் நுழையும் அப்பேர்ஞானப் பேர்அலையைத் தமக் குள் நுழைய விட்டு; தம் உடல், உயிர், மனத்தளங்களின் சகல மூலை முடுக்குகளுக்குள்ளும் பாயவிட்டுத் தம் செயலை யும் சிந்தனையையும் அதன் ஆணைக்குள் அடக்கி, தம்மில் அதுவை ஏற்றி அப்பூரண மெய்அலை எழுப்பும் பூரணர் களாக அவர்கள் தான் வாழ முயல்கின்றனர்.
இவர்கள்தான் மூன்ரும் உலகம் முழு உலகத்துக்கும் வழி காட்டவும், புதுப் பரம்பரையினரையும் பழம் பரம்பரையினரை யும் ஆற்றுப்படுத்தவும், அடித்தள ஞானம் இடைத்தள, மேல் தள எல்லைகளுக்குள் நுழையவும், "போர்ப்பறை' யின் அடி நாதம் " போர்க்கோலம் ", " போராட்டம்’, ’ ஆகியவற்றுக் குள் கேட்கவும் செய்யக்கூடிய முன்னுேடிகளாகவும் இருப்பர்.
O
Page 99
* இதுகாலவரை ஒரு சில தனிப்பட்ட ஞானி கள் மட்டும் சத்திய எழுச்சி பெற்ற ஞானிகளாய் அங்குமிங்குமாய் இருந்தனர்; இனி ஒரு முழுச் சமூகமுமே ஞான சமூகமாக வேண்டும். ஒரு முழு இனமுமே ஞான இனமாக வேண்டும். ஒரு முழு நாடுமே ஞான நாடாக வேண்டும். முழு உலக முமே ஞான பூமியாக வேண்டும்.
- மு. த. (சுயாட்சி-போர்ப்பறை)
ஒளி படைத்த கண்ணினுய்
கற்பனையில், கனவில், தூக்கத்தில் - எதிலும் உன்னுல் அதேசமயம் விழித்திருக்க முடிகிறதா ? அப்படியென்ருல், நீ சத்தியத்தைத் தரிசிக்கின்ருய், நீ துறவி, கற்பனையை, கனவை, தூக்கத்தைத் துறந்த துறவி. நீயே புதுயுகத்தைச் சிருஷ்டிக்கும் போர்வீரன் ! தூக்கத்திலும் விழித்திருக்கும் உனக்கே, கற்பனையிலும் நிசத்தைக் காணும் உனக்கே எல்லைகள் எதிலுமே இல்லை.
அதஞல் நீயே
வர்க்கங்களைக் களைபவன்
சாதிகளை அழிப்பவன்
குணங்களை வெல்பவன் தனியுடமைகளை மாற்றுபவன் நீயே புதுயுகத்தைச் சிருஷ்டிக்கும் போர்வீரன் !
ஒளிபடைத்த கண்ணினய் 195
கற்பனையில் நிசத்தையும் தூக்கத்தில் விழிப்பையும் தன்னுள் அதுவையும் காணும் நீயே சகலதிலும் சத்தியத்தை எழுப்பும் பெருமனிதன் ஆவாய், பொய்யை அழிக்கும் போர்வீரன் நீயே !
நிசத்தில் பொய்யைக் காண்பவன் மனிதன் நித்திய சத்தியத்தில் பேதங்கள் - சமயம், அரசியல் கலை, இலக்கியம், பொருளாதாரம், சமூகம், விஞ்ஞானம் தத்துவம், சரித்திரம் அத்தனை பிரிவுகளும் அவனுக்கே,
அவனுக்கே விழிப்பும் கனவும் தூக்கமும் துயரும் நிசத்தில் கற்பனையும் வாழ்க்கையில் போலிக் கலையும் பொதுவுடமையில் தனியுடமையும் அவன் காணும் அற்பங்கள். அந்த மனிதனை மாற்றும் பேர்மனிதன் f. உன் போர்ப்பறை கேட்கிறது உன் அணியில் "நாம் " சேர்ந்தேன் இப்போ என்னில் "நான்" இல்லை.
Ο
Page 100
"நான்" நாகரிகத்தின் அழிவும் "நாம்’ நாகரிகத்தின் எழுச்சியும்
சகல நிலைகளிலும் சகல வேலைகளிலும் சத்தியத்தில் நிலைத்திருக்கும் சரணுகதி; , நான் கட்டிய கோட்டைகள், நான் வைத்த காவல்கள், நான் எடுத்த பாதுகாப்புகள் அத்தனையும் கைவிடப்படல்;
நான் ஒளிக்க இடமில்லை;
கற்பனையில், கனவில், நித்திரையில் - அத்தனையிலும் நித்திய சத்திய உணர்வு உள்நுழைகிறது. அத்தனையும் நான் வளர்த்த தளங்கள். உடலில், உயிரில், மனதில் - அத்தனையிலும் உள்ளம் ஊடுருவுகிறது. அத்தனையும் நான் வாழும் குணக் கோட்டைகள்;
அரசியல், சமயம், விஞ்ஞானம், இலக்கியம் தத்துவம், சரித்திரம், கலை, காட்சி, பொருளாதாரம் சமூகம் - நான் நிறுவிய அத்தனை வரம்புகளையும் சத்தியப் பிரவாகம் தகர்க்கிறது ; சகலதிலும் நான் சரணுகதி,
நான் வளர்த்த கலாசாரம் கரைகிறது, நான் வளர்த்த நாகரிகம் அழிகிறது, நான் வளர்த்த தத்துவங்கள் சிதைகின்றன: நான் வளர்த்த சகலதுமே நானை வளர்த்தவையே - அதனுல் நானை வளர்த்தவை சிதைய
நாகரிகத்தின் அழிவும் எழுச்சியும் 197
நானும் அழிகின் (றேன் :) றது; பால் இச்சை, பண ஆசை, ஆளுமைப் போட்டி அத்தனை சிற்றின்பப் படுக்கைகளும் அதனுேடு அழிகின்றன. . . . . ۰۰ به بین .
என்னைக் கைப்பற்றும் சத்தியம் என்னைத் தானுக்கிறது. என் கலாசாரத்தின் அழிவில் அதன் கலாசாரம் எழுகிறது; என் நாகரிகத்தின் அழிவில் அதன் நாகரிகம் எழுகிறது; என் தத்துவத்தின் சிதைவில் அதன் தக்துவம் எழுகிறது : "நான் அழிகின்றன ; நாம் எழுகின்றேன்.
அங்கு கற்பனையில்லை கனவில்லை : நித்திரையில்லை, விழிப்பில்லை - அத்தனையும் பேர்விழிப்பே ;
அங்கு உடலில்லை, உயிரில்லை, மனமில்லை அத்தனையும் சத்திய உருவங்களே
அங்கு குணமில்லை : சாதியில்லை; வர்க்கமில்லை சகலதும் எல்லையற்ற சத்திய ஒட்டமே ; அங்கு அரசியல் இல்லை, இலக்கியம் இல்லை, சமயம் இல்லை
சரித்திரமில்லை, தத்துவமில்லை, விஞ்ஞானமில்லை - அத்தனையும் சத்திய மெய்யுள்களே: அங்கு பிறப்பில்லை, இறப்பில்லை, துயரில்லை, தவிப்பில்லை பேரறிவும் பேரானந்தமுமான நித்திய இருப்பே என்றும் இருக்கிறது:
பரவலாக இதுவரை மனித சரித்திரத்தில் எப்போதும் நடக்காத புரட்சி இது. உண்மையில் இது புரட்சியல்ல. இதுகாலவரை சகலதிலும் நான் நடத்திய போர்களால் வந்த புரட்சியல்ல இது.
Page 101
98 மெய்யுள்
போராட்டமற்று நான் நடத்திய சரணுகதியால் வரும் பேர் எழுச்சி இது உடல் உயிர் மனத்தளங்களில் அறியாமைக்கு எதிராக நான் " அறிவு நடத்தியவையே போராட்டங்களும் புரட்சிகளுமாகும், அவை ஒன்றுக்கு எதிராக மற்றது நடத்தும் போரும் புரட்சியுமாகும்.
இது, ஒன்று தன்னை மற்றதிடம் தானகவே அர்ப்பணித்து தன்னை அதுவாக்குவது. "நான் " அறிவு, ' நாம் இருக்கின்றேன் ? பேரறிவிடம் தானகவே சரணுகதியடைந்து தன்னைப் பலியிட்டு தான் அதுவாக எழுச்சியுறுவது அந்த எழுச்சி சகலதிலுமுள்ள சத்தியத்தின் எழுச்சி, பூரண சர்வோதப் பேர்மனிதப்
பிறப்பு
வந்துவிட்டது சத்திய யுகம்
விழித்தெழுங்கள்
சத்தியயுக எழுச்சிக்காய்த் தயார்ப்படுங்கள் பேர்மனிதப் பாதையிலே புறப்படுங்கள்
கணக்கெடுங்கள் - நீங்கள் செய்பவை சரியா? பேசுபவை உண்மையா? வாழுவது வாழ்க்கையா? கணக்கெடுங்கள்!
வந்துவிட்டது சத்தியயுகம்,
விழித்தெழுங்கள் !
விழித்தெழுங்கள் 1 கணக்கெடுங்கள் !
கிணற்றடியில் தாழ்த்தப்பட்டவர் தவமிருப்பது சரியா? கோயில்களில், திருக்குலத்தாரைத் தள்ளிவைத்தல் முறையா? தெருவடியில், மனித இறைவன் பிச்சையெடுக்க கோயில்களில் கல்லுக்கடவுளுக்கு கற்பூரம் சாம்பிராணி, பிரசாதம் படையல் பூசை திருவிழா, மின்சாரம் வாத்தியம் தேரோட்டம் சப்பறம், ஆலவட்டம் அலங்காரம் - ஐயோ இவை அடுக்குமா?
கணக்கெடுங்கள், !
வந்துவிட்டது சத்தியயுகம், விழித்தெழுங்கன், கணக்கெடுங்கள் !
Page 102
200 மெய்யுள்
காலடியில்
காணி, கடல் காத்திருக்க போதாப்படிப்போடு ' உத்தியோகத்துக்காய்ப் பார்த்திருப்பது புத்தியா ? தேசிய உணர்வின்றி
பொதுவுடமைப் போக்கின்றி சிங்களவரைச் சுரண்டிக்கொண்டு தமிழுரிமை கேட்பது தர்மமா ? இரும்புப் பெட்டியில் பதுக்கிவைப்பது நியாயமா? வீட்டை மறைக்க வேலிகட்டுவது தேவையா? சீதனத்துக்காய்ச் சாவதுதான் உழைப்பா? காசுத்தாளுக்குத் தாலிகட்டுவதா கல்யாணம்? கணக்கெடுங்கள் ! r p கணக்கெடுங்கள் தகர்த்திடுங்கள் தகர்த்திடுங்கள் தயார்ப்படுங்கள் ! தனியுடமை தனிப்போக்கு தனிமதங்கள் ஸ்தாபனங்கள் தனிச்சிங்களம் தனித்தமிழ் தாழ்த்தப்பட்டோர் உயர்குலத்தோர் . முதலாளி தொழிலாளி
சிங்களவர் தமிழர்கள் - தகர்த்திடுங்கள் இந்தத் தடைகளை தகர்த்திடுங்கள், புறப்படுங்கள் ! பொதுவுடமை, பொதுச்சொத்து முழுச்சமயம் முழுஞானம் புறப்படுங்கள் இப்புதுவழியில் 1 சத்தியயுக எழுச்சிக்காய் தயார்ப்படுங்கள், பேர்மனிதப் பாதையிலே புறப்படுங்கள் 1
O
அறிவும் அனுபவமும் இதுவரை காட்டாத புதுப் பிராந் தியங்களுக்குள் நாம் புகப்போகிருேம். சந்திர மண்டலத்தில் மனிதன் வெளிப்படையாகக் கால்வைக்கும் அதே காலத்தில், ஒவ்வொருவனும் தனக்குள்ளே அக்கினி மண்டலத்தையும் துளைத்துச் சென்று சிரசிலுள்ள சந்திர மண்டல சகஸ்ராரத் திலும் அடிவைக்கும் காலம் ஆரம்பிக்கிறது.
(போர்ப்பாறை - புதியவார்ப்புகள்)
அண்டை வீடுகள்
அடுத்த அறையில் இன்னும் விளக்கு எரிந்துகொண் டிருந்தது. இரவு பன்னிரண்டு மணிகூட ஆகியிருக்காது போல் இருந்தது.
விநாயகதாஸ் சிந்தித்தவாறே படுக்கையில் கிடந்தான்.
அடுத்த அறையில் காளிதாசன் இன்னும் நித்திரை கொள்ளாமல் வாசித்துக் கொண்டோ அல்லது எழுதிக் கொண்டோ இருக்கவேண்டும். அவனிடம் போய் அந்தக் கணமே எல்லாவற்றையும் சொல்லலாமா என்று யோசித் தான் விநாயகதாஸ். ஆணுல், அடுத்த கணம் அது பைத் தியகாரத்தனமாக்கப்பட்டது. அத்தனை பிரமாதப்படுத்த அது அந்தளவு பெரிய அனுபவமல்ல. சங்கத்திற் சேர்ந் திருந்த அவனது சகாக்கள் சிலரினது அனுபவங்களுக்கு முன்னல் அது மிக மிக அற்பமான விடயம். ஏதோ ஓர் அளவில் காளிதாசனும் விநாயகதாஸாம் கூட அந்த வகை யான அனுபவங்களை ஏற்கனவே அறிந்திருந்தனர். இருந்
Page 103
202 மெய்யுள்
தாலும் விநாயகதாஸைப் பொறுத்தவரையில் அன்றுதான் ஆரம்ப முதல் முடிவுவரை புத்திபூர்வமாகச் சுயவுணர்வுடன் நடைபெற்ற அத்தகைய ஓர் அனுபவம் கிட்டியிருந்தது. அது மிக அற்பமான விடயமாகவிருந்தாலுங்கூட அந்த வகையிற் பார்க்கும்போது அது அவனைப் பொறுத்தவரை யில் சந்திரனில் முதன்முதலாகக் கால் வைத்த ஆம்ஸ்ட் ரோங்கின் அனுபவத்தைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பட்டது.
சகல மக்களுக்கும் பழக்கமான சடவுலகத்துக்கும் அதற் குரிய புலனுணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட அனுபவத் தளங் களும் வாழ்க்கை நிலைகளும் உண்மைய்ாகவே இருக்கின் றனதானு?
இருக்கின்றன என்றுதான் காலங்காலமாய்ச் சமயங்கள் கூறி வருகின்றன. அனுபூதிமான்கள் என்பவர்கள் அந்தத் தளங்களுக்கும் வாழ்க்கை நிலைகளுக்குமுரிய விஞ்ஞானிகள் தான்.
விநாயகதாஸ் அவற்றைக் கருத்தளவில் அதுவரை ஏற்றுக்கொண்டிருக்கிருன். ஆனல், அனுபவரீதியில் அன்று போல் எதையும் அத்தனை அழுத்தத்தோடும் சுயவுணர் வோடும் கண்டதில்லை.
ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு முன்பே ஆத்மீகத் தேட்டத்தை விரும்பி, அதற்குரிய குருவையும் சந்தித்த காலத்தில் அந்தப் பிரச்னைகளும் அவனது சிந்தனைக்குரிய விருந்துகளாக முன்வைக்கப்பட்டதுண்டு. ஆனல், அப்போது அவற்றை அவன் அந்தளவு பெரிதாக எடுத்துக்கொண்ட தில்லை. ஆணித்தரமாக நம்பியதுமில்லை. அதனுல் அவற்றில் அவன் அதிகம் கவனஞ் செலுத்தியதும் இல்லை.
அண்டை வீடுகள் 203
ஆத்மீக முக்தி என்பதுதான் அவனுக்குரிய முக்கிய விடய மாகப்பட்டது அப்போது. ஆணுல், அவனுக்குத்தியானப் பயிற்சி அளித்த அவனது குரு ஆத்மீக விளக்கங்களுடன் வேறு பல விபரங்களையும் இடைத்தளங்களின் எண்ணற்ற கோலங்களையும் பட்டும் படாமலும் பலவகைகளிற் காட்டவே முயன்ருர், w
ஆத்மநிலை என்ற இலட்சிய நிலையையும் தியானத்தின் மூலம் அந்த நிலையை அடையலாம் என்ற கொள்கையை யும், அதற்காகக் குரு என்ற ஒரு வழிகாட்டியையும் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருந்த விநாயகதாஸாக்கு அவையல்லாத அடுத்த விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது அப் போது, அவை வெறும் கற்பனைகளாகவே அவனுக்குப் பட் டன. உண்மையாகவே அவை இருந்தன என்று ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலைகளிற்கூட அவை அவனுக்கு அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தெரிந்ததில்லை. மாருக ஆபத்தான ஏமாற்றங்களுக்குரிய மருட்சித் தளங்களாகவே அவற்றை எடுத்துக்கொண்டான். அதனுல் அவனது அக் கறையை அந்த விடயங்கள் அதிகம் ஈர்த்ததில்லை.
குருவை அவன் சந்தித்த ஆரம்பகாலத்தில் அவன் வாசிப்பதற்காக அவர் கொடுத்த நூல்களில் சூக்கும உலகங் களைப் பற்றிய விளக்கங்களைக் கொண்ட நூல்களும் இருந்தன. குறிப்பாக " லொப்சாங்றம்பா" எழுதிய பல நூல்கள் முக் கியமானவை.
ஆத்மீக அனுபவத்தை உடனடியாகப் பெற்றுவிட வேண்டு மென்று துடித்த அன்றைய ஆரம்பகாலத்து அரை வேக் காட்டு அவதியில் அந்தவகை நூல்களையெல்லாம் அவன் மனம் விரும்பிப் படிக்க முயன்றதில்லை. அதேபோல் குருவும் " அன்னையும் பற்றிக் கதைத்த வேளைகளிலெல்லாம் அவற்றைப் பொய்ப்
சூக்கும ஆன்மீக உலக அனுபவங்களைப்
Page 104
204 மெய்யுள்
புழுகுகளைக் கேட்டிருப்பது போல் வேடிக்கையாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ' புதிய விஞ்ஞானக் கற்பனைகள் " அல்லது ' சமயக் கற்பனைகள் " என்ற தலைப்புக்களில் தனது நாட்குறிப்பிற் குறித்து வைக்கவும் அவன் முயன்றதுண்டு.
அவற்றில் பரிசோதனை செய்து பார்க்க அவன் முயன்ற தில்லை. அந்த முயற்சி பின்புதான் வந்தது.
மேற்கத்தைய மனுேவியல் கொள்கைகளிலும், சமூக பொருளாதாரச் சித்தாந்தங்களிலும் அவனுக்கிருந்த பற்றுக் கள் மெல்ல மெல்ல இற்று விழத் தொடங்கிய பின்புதான் அப்புதுவகைப் பரிசோதனைகளின் அவசியத்தையும் அவன் உணரவந்தான்.
ஆத்மீகத் தேட்டம் என்பது ஆத்மாவோடும் சடவுலக வாழ்க்கையோடும் மட்டும் தொடர்பு கொண்டதாக இருக் காமல், அவற்றுக்கு இடைப்பட்ட சகல மனநிலைகளுக்குள் ளும் ஊடுருவிப்பரவும் ஓர் பூரணத் தேட்டம் என்பதை அதற்குப் பின்புதான் அவளுல் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அத்துடன் இன்றைய மனித பரிணுமக்கட்டம் அத்தகைய விடயங்களைப் பற்றிய அறிவையும் அவசியமாக்குகிறது என்றும், அவனது குரு அதையும் அழுத்த முயன்ற அவ தாரமே தான் என்றும் மெல்ல மெல்லத்தான் அவனுக்குத் தெரிய வந்தது.
ஆனல், அந்தப் பக்குவம் வருவதற்குமுன் ஏறக்குறைய ஏழு வருடங்களாகி விட்டன. ஆத்மீக முதிர்ச்சிக்கு ஏறக் குறைய இடையருத பன்னிரண்டு வருட காலப் பயிற்சி அவசியமென்ருல், அதில் பாதிக்காலம் முடிந்த பின்புதான் அவனுக்கு அந்த இடைத்தள அனுபவங்களையும் அதே ஆத் மீகத் தேட்டத்துக்குரிய வகையில் பயன்படுத்தும் பக்குவம் கைவரத் தொடங்கியது. அதற்குள் அவனது குருவும் சடவு லகக் கட்புலனுக்குத்தெரியாத தளத்துக்குச் சென்று விட்டார்.
அண்டை வீடுகள் 205
அதுவரை கட்புலனுக்குத் தெரியாத தளங்களைப் பற்றி விநாயகதாஸடுக்கிருந்த அனுபவங்கள் "அசாதாரணக் கன வுகள்" "தியான நித்திரைக் காட்சிகள்" "சிறு சூக்குமப் போக்குவரத்துக்கள்" என்ற வகையிலேயே இருந்தன. அவையெல்லாம் அடுத்த தளங்களுக்குரிய அனுபவங்கள் என்ற புத்தி பூர்வமான உணர்வு அவற்றை அனுபவிக்கும் போதே அதிகம் இருந்ததில்லை. எப்போதாவது இடைக்கிடை வரும் மெல்லிய சுயவுணர்வுக் குறுக்கீடுகள் அதிக நேரம் நிலைத்திருக்காது, அமிழ்ந்துவிடும். விழித்துக் கொண்டபின்பு தான் அவற்றின் நினைவுகள் திரும்பவும் புத்திபூர்வமாக விரியும்.
அவைதான் அன்றுவரை அந்தத் தளங்களைப்பற்றி அவனுக்கிருந்த அனுபவங்கள்.
ஆனல் அதே சமயம் அவற்றைப் பற்றிய அறிவு விளக் கங்களை முன்பைவிட இப்போ அவன் அதிக ஆவலோடு கேட்டும் வாசித்தும் தெரிந்து வைத்திருந்தான். தெரிந்த வற்றைத் தனது வசதிக்காகவும் எதிர்கால ஆராய்ச்சிக்காக வும் வகைப்படுத்தியும் வைத்திருந்தான்.
முழுப் பிரபஞ்சத்திலும் காணப்படும் எண்ணற்ற உலகங் களை நான்கு அல்லது ஐந்து வகையாக வசதிக்காகப் பிரிக் கலாம் என்று விநாயகதாஸ் நம்பினுன்,
1. மனித கண்ணுக்குப் புலப்படக்கூடிய சடவுலகங்கள், இவை கோளங்களாக அமைந்தவை.
2. தட்டையான சூக்கும உலகங்கள், எண்ணற்ற தர வித்தியாசங்களைக் கொண்ட இவை மனித கட்புலனுக்குத் தெரியாதவை. இவை பலவகைப்பட்ட மன வளர்ச்சியைக் காட்டும் சூக்கும உயிரினங்கள் வாழும் தளங்களாக இருக் கின்றன. சூக்கும உயிர்களால் சூக்கும. உலகங்களையும்
Page 105
206 மெய்யுள்
சடவுலகங்களையும் பார்க்க முடியும். ஆன்மீக உலகங் களைப் பார்க்க முடியாது.
3. ஆன்மீக உலகங்கள், முக்தி அல்லது விடு தலைக்குரிய ஆனந்தத்தையும் ஞானத்தையும் அனுபவிக்கும் நித்தியவுலகங்கள் என்றும் அழியாதவை, ஆன்மீகவுலகங் களில் இருப்போருக்கு சடவுலகங்களையும் பார்க்கும் சக்தி உண்டு. w
4. சட - சூக்கும - ஆன்மீக உலகங்களற்ற வெறும் விண் வெளி.
5. எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி எல்லாவற்றுக் கும் அப்பால் பட்டதாகவும் எல்லாமே தானுகவும் இருக்கும் நாமரூபங்களைக் கடந்த பேரானந்தப் பரம் பொருளான எல் லையற்ற ஏகப்பேரறிவு. இப்பேரறிவு ஆன்மீக உலகங்களில் அங்குள்ளோரின் வழிபாட்டிற்குரிய சில நித்திய திருஉருவங் களாகவும் காட்சியளிக்கும். அதேபோல் சடவுலகமான நமது பூமியில் அவதாரங்களாகவும் உருவெடுக்கும். எல்லா வேளைகளிலும் எல்லா வடிவங்களிலும் * அது" தன்னை கட்டுப்படுத்தாத எல்லையற்ற ஏகப்பேரறிவாகவேயிருக்கும்.
6. இந்தப் பல்வேறு வகைப்பட்ட நிலைகளெல்லாம் பூமியில் வாழும் மனிதனுக்கு அடையக்கூடியவையாகவே இருக்கின்றன. அவனது சடஉடலுக்கு உள்ளும் புறமுமாக அடுத்த சூக்கும - ஆன்மீக உருவங்களும் பேரறிவு நிலையும் காணப்படுகின்றன. மனதை அவற்றின் திசையில் விரித்து வளர்த்து ஆன்மீக பேரறிவு நிலையை அனுபவிப்பதே அவ னது விடுதலையும் நித்தியஞான ஆனந்த நிலையாகவும் இருக்கும்.
7. பூமியில் நடைபெறும் மனித வாழ்க்கைக்குரிய அர சியல், பொருளாதாரம், சமூகம், கல்வி, கலை, இலக்கியம் போன்ற சகல துறைகளும் இந்தத் திசைகளில் முற்ருகத்
அண்டை வீடுகள் 207
திருத்தி வளர்க்கப்படவேண்டும். மனித பரிணுமம் இந்தத் திசைகளையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
அயல் உலக விடயங்களைப்பற்றி விநாயகதாஸ் சேகரித்து வைத்திருந்த கருத்துக்களில் சுருக்கமானவைகள் இவை. இவையேதான், படுக்கையில் கிடந்தவாறே அன்றைய அனு பவத்தை மீட்டிப் பார்க்க முயன்று கொண்டிருந்த விநாயக தாஸின் சிந்தனைப் படுக்கையாகவும் இருந்தன.
இவற்றின் பின்னணியில்தான் அன்றைய அவனது அனுபவத்தையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.
2
வெளி விருந்தையில் வாசலுக்கருகில் போடப்பட்டிருந்த நான்கு சாய்வு நாற்காலிகளில் வடக்கு மூலைப்பக்கமாக இருந்த ஒன்றில் விநாயகதாஸ் உட்கார்ந்திருந்தான்.
மங்கலான இருள். ஆணுல். அதே சமயம் பார்வைக் குப் பொருட்களும் உருவங்களும் தெரியாமல் இல்லை.
உட்கார்ந்திருந்த அந்த வேளையில்தான் திடீரென்று அந்த உணர்வு விநாயகதாஸாக்கு ஏற்பட்டது. தான் சூக்கும - ஆன்மீக உடலில் உட்கார்ந்திருந்தான் என்ற புத்திபூர்வமான சுயவுணர்வு.
அந்த உணர்வு வந்தவுடன் ஒருவித தடுமாற்றமும் அவ சரமும் அவனை ஆட்கொள்ளத் தொடங்கின. உடலுக்குச் சடுதியாகச் திரும்பிவிடலாம் என்ற பயத்தோடு புதியவுலகில் நிற்கிருேம் என்ற மெல்லிய திகிலும் கலந்திருந்தன.
விண்வெளிக்கப்பலில் இருந்து வெளிப்பட்டு விண்ணில் மிதப்பது, சந்திரக் கலத்தில்
Page 106
208. மெய்யுள்
இருந்து வெளிப்பட்டு சந்திரத்தரையில் நடப் பது போன்ற நிலைகளில் விண்வெளி வீரர்
களுக்கு இதே உணர்வு இருக்கலாம்.
சந்திரக் கலத்தை சடவுடலாகவும் அதில் இருந்து இறங்கிச் சந்திரத்தரையில் நடக்கும் வீரனைச் சூக்கும உடலாகவும் நினைத்துப் பார்த் தால், இரு உடல்களுக்கும் உள்ள தொடர் பையும் உணர்வையும் உணரலாம். ஆபத்து வரும் வேளைகளில் உடனே சந்திரகலத்துக் குத் திருப்பிவிடத் தயாராகவிருக்கும் விண் வெளி வீரனைப் போலே சூக்கும உடலும் சதா நேரமும் சடவுலகுக்குத் திரும்பிவிடும் தயார் நிலையில் இருக்கும். சட உடலுடன் அது ஒர் வெள்ளிமயமான கொடியால் இணைக்கப்பட்டிருக் கும். அது விரும்பியமாதிரி நீண்டு கொடுக்கும். அது அறும்போதே மரணம் ஏற்படுகிறது.
விநாயகதாஸாக்கு ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனுக்கு இருந்த அப்போதைய அவதி யில் அவனது உருவம் எப்படி இருந்தது, என்ன மாதிரி அவன் உடுத்திருந்தான் என்பவற்றை அவனுல் அவதானிக்க முடியவில்லை.
அடுத்தமுறை அவற்றை நிச்சயமாக அவ தானிக்க வேண்டும் என்று அதை மீட்டிப் பார்க்கும்போது நிச்சயப்படுத்திக் கொண்டான் விநாயகதாஸ். ஆணுல், அதே தீர்மானத்தை ஏற்கனவே பல தடவைகள் எடுத்திருந்தான் என்பதும் அவனுக்கு நினைவில் இருந்தது. அந்தளவு சுயவுணர்வு பெரும்பாலும் சடவுலக வாழ்க்கையில்கூட இருப்பதில்லை. ஆடை
அண்டை வீடுகள் 209
மாற்றும்போதும், கண்ணுடிக்கு முன்னுல்நிற்கும் போதும் மனிதன் தன் தோற்றத்தையும் ஆடை யையும் நினைக்கிற அளவுக்கு மற்ற நேரங்களில் நினைப்பதில்லை. அவை பற்றிய உணர்வு அதி கம் இருப்பதும் இல்லை. அதேபோல் சூக்கும நிலையிலும் வழமையான ‘நான்" என்ற உணர்வு இருக்குமளவுக்கு அதன் அம்சங்களை அறிந்த சுயவுணர்வு இருப்பதில்லை. அந்தச் சுயவுணர்வின் வளர்ச்சியே பக்குவ வளர்ச்சி யாக இருக்கும்.
சிறிது நேர தடுமாற்றத்துக்குப் பின் வாசலால் இறங்கி வெளியே செல்லமுயன்ருன் விநாயகதாஸ். அந்த வேளையில் அவனுக்குப் பழக்கமான காளிதாசனின் குரலை ஒத்த ஓர் குரல் எங்கிருந்து வந்ததென்று தெரியாமல் எங்கும் மெல் லப் பரவி வந்து கேட்டது.
" வெளிச்சம் தெரிகிறதா? வெளிச்சம் தெரிகிறதா?" ஆணுல், யாரையும் காணவில்லை. வெளிச்சம் எதுவும் வந்ததாகவும் தெரியவில்லை. அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நின்றபோது திடிரென்று ஒரு யோசனை ஏற்பட்டது விநாயகதாஸாக்கு.
" காளிதாசனின் அறை க்குப் போய் பார்த்தால் என்ன ?”*
அடுத்த கணம் அந்த அறையை நோக்கி அவன் நகரத் தொடங்கினன். மிதப்பதற்கும் நடப்பதற்கும் இடைப்பட்ட இலகு இயக்கம்.
காளிதாசன் நித்திரையாகி இருக்கலாம், அல்லது விழிப்பாக இருக்கலாம். அதை விநாயகதாஸால் அவதானிக்க முடிகிறதா
Page 107
210 மெய்யுள்
என்று சோதிக்கலாம். நித்திரை ஆகி அவனும் சூக்கும-ஆன்மீக உடலில் உலாவிக்கொண் டிருந்தால் சில விடயங்களைக் கதைத்துவிட்டு விழித்தெழுந்து அவை ஞாபகம் இருக்கிறதா என்று அவனைக் கேட்டுப் பார்க்கலாம். ஏற்கனவே அத்தகைய சோதனைகளை விநாயக தாஸ் செய்து பார்த்திருக்கிருன். ஆனூல், பூரண ஒருமைப்பாடு இன்னும் கண்டதில்லை.
காளிதாசனின் அறையை நோக்கி நகர்ந்த வேளையில் வேறு ஓர் பக்கம் அவன் இழுபட்டதை விநாயகதாஸால் உணர முடிந்தது. சுயமான விருப்பத்துக்கு எதிராகவரும் ஈர்ப்பு, குருவாகிய " அது " வின் அழைப்பாக இருக்கலாம் என்று ஏற்கனவே விநாயகதாஸ் தெரிந்திருந்தபடியால் அந்த ஈர்ப்புக்கு அவன் தன்னை விட்டுக் கொடுத்தான். விட்டுக் கொடுத்ததுடன் அது 'வையே இலக்காகக் கொண்டு மனதை ஒருமுகப்படுத்தி தியானிக்கவும் தொடங்கினுன்.
அடுத்த கணம் மிக வேகமாக எங்கோ ஒரு திசையில் பறந்து செல்வதை அவனுல் உணர முடிந்தது.
சூக்கும - ஆன்மீக உலகங்களில் உடல் வலு வால் இயக்கம் ஏற்படாமல் மனுேவலுவிலேயே ஏற்படுகின்றது. விரும்பிய இடத்திற்கு மனுே வலுமூலம் மிக வேகமாகச் செல்லலாம். போகும் வழியில் பழைய குரலைவிட தொனி கூடிய ஒரு புதுக்குரலில் பாடல் ஒன்று கேட்டது. அந்தப் பாடல் மூலம் பலவித அறிவுரைகள் அவனுக்கு வழங்கப்பட்டன.
பாடல்களின் முக்கியத்துவம் அழுத்தப்படு கிறது.
அண்டை வீடுகள் 211
அந்த அறிவுரைகளைக் கேட்டு முடிந்தபோது " அது " வைத் தரிசித்த திருப்தியும் விநாயகதாஸிடம் குடிகொள்ளத் தொடங்கியது. திருப்தியோடு அவன் திரும்பிவிட விரும் பினுன். ஆணுல் அதேசமயம் இன்னும் சடவுடலுக்குரிய விழிப்பு நிலைக்கு வருவதற்கு அவகாசம் இருந்தது என்ற உணர்வும் ஏற்பட்டதால் தொடர்ந்து 'அது'வை இலக்காகக் கொண்டு மனதை ஒருமுகப்படுத்தித் துரிதமாக நடந்தான்.
இறுதியாக " அது " திருவுருவோடு இருந்த ஓர் இடத்தை அண்மித்துவிட்ட உணர்வு ஆட்கொள்ளத் தொடங் கியது. அப்படியே அவ்வேளையில் கட்டிடங்கள், அறைகள் எல்லாம் காட்சியாய் இருக்க ஓர் இடத்தில் " அது " முன்பு அவன் சடவுலகில் சந்தித்த கோலத்தில் தரிசனம் தந்தது.
விநாயகதாஸ் ஓடிப்போய் * அது "வின் பாதங்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு எழுந்தான். ' அது ' வின் ஆணையும் கிடைத்தது. S.
அதை ஏற்றுக்கொண்ட விநாயகதாஸ் திருப்தியோடு அங் கிருந்து அகலத் தொடங்கினன். அடுத்த கணம் சடவுலக வீட்டில் உள்ள தனது படுக்கையில் கிடந்தவாறே திடீரென்று விழித்துக்கொண்டதை அவனுல் உணர முடிந்தது. 1 ܝ ܀
வேகமாகத் திரும்பி வந்த உடலுக்குள் நுழையும் அதிர்ச்சி சடுதியான விழிப்பை ஏற்படுத்தும்.
அறைச்சுவரின் கூரைப்பக்கத்து நீக்கல் வழியாக அடுத்த அறையில் இருந்து வெளிச்சம் வந்ததை அவதானித்தபோது அங்கு காளிதாசன் இன்னும் தூங்காமல் இருந்தான் என்பதை அவனுல் யூகிக்க முடிந்தது.
Page 108
212 மெய்யுள்
3
படுக்கையை விட்டெழுந்து தண்ணிர் அருந்துவதற்காகக் குசினுக்குச் சென்றிருந்தான் விநாயகதாஸ். காளிதாசனின் அறையின் வாசல் திரைக்குள்ளால் மெல்லிதாக ஒளிக்கீற்று கள் வந்துகொண்டிருந்தன.
திரையை நீக்கி உள்ளே நோக்கியபோது காளிதாசன் வாசித்துக்கொண்டிருந்தான். மணி இரவு பதினென்றரை.
பேசாமல் தலையசைத்துவிட்டுச் சென்று தண்ணிர் குடித்து விட்டு, பின் படுக்கைக்குத் திரும்பியபோது பல பிரச்னை களுக்கு இன்னும் தெளிவு காண வேண்டியிருந்தது என்பதை விநாயகதாஸால் உணர முடிந்தது. w
" வெளிச்சம் தெரிகிறதா?" என்ற குரல் காளிதாசனின் அறைக்குள் இருந்து வந்த வெளிச்சத்தைக் குறித்ததா? அதனுல்தான அவனது குரலை ஒத்த குரலாகக் கேட்டது? அது யாருடைய குரல் ? 'அது' வை நோக்கி அவன் விரைந்தபோது வந்த பாடலின் குரல் யாருடையது? எல் லாமே ' அது " வின் வெளிக்காட்டல்கள் தானு? 'அது' வை அவன் தரிசித்த இடம் எது? " அது ' எந்த ஆன்மீக உலகம் ?
எந்தளவுக்கு அவற்றுக்குள் அவனது கற்பனைகள் புகுந் திருந்தன? எந்தளவுக்கு அவை அந்த அனுபவத்தின் முழு மைக்கு எதிரான தடைகளாக இருந்தன?
எதிர்கால ஆராய்ச்சிகளுக்குரிய திசைகளைக் குறித்துக் கொள்ளும் ஒரு விஞ்ஞானியைப்போல் அவற்றை மனதில் பதித்தவாறு, அன்றைய அனுபவத்தினுல எழுந்த சந்தோ சத்தின் அலைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிம்மதியாக நித்திரை கொள்ள முயன்ருன் விநாயகதாஸ்.
Page 109
வாழ்ந்தத
முழுவீச்சே நம்மிடைே
நூற்குண்
surf, LGT
மற்ருெவர் (3) ir Garso
எழுப்ப மு போனதை
அந்த வ தளேயசிங்
விடவும்
שTנוני "חוויווחו הדקו
பாதியின் திற்கு கெ திரத்திற்:
கஃள அள் என்று ெ
நூலாசிரியர் பற்றி.
"இருபதி ம் நூற்ருண்டில் ற்கான சாய Issa, u இவரைப்போல்
ாடு வெளிப்படுத்திய ஆளுமைகள் மே வேறு உள்ளனவா? இந்த என் முதல் பாதியில் இரண்டு கிடைக்கின்றன. ஒருவர் பாரதி புதுமைபித்தன். பாரதி தாழ்ந்து க்கு துக்கித்து மேலான ஒன்றை பன்ருர், புதுமைப்பித்தன் தாழ்ந்து வெட்ட வெளிச்சமாக்கினும், ரிசையில் முன்ருவதாக வருபவர்
III. iii .
பாரதியின் கருத்துலகத்தை
தஃாயசிங்கத்தின் கருத்துலகம் முழு து. மற்ருெரு விதத்தில் சொன்னுல் சிந்தனேயை, இவர் தம் காலத் ாண்டு வந்து, இடைக்கால சரித் தம் எதிர்வினை தந்து, இடைவெளி டைந்து முழுமைப்படுத்த முயன்ருர்,
-சுந்தர ராமசாமி
T
து ஒரு சமுதாயம் வெளியிடு ()
Page 110
210 நற்சிந்தனை
நல்லூராசான் கலிவிருத்தம்
உலகமு முயிரும் உம்பர் பிரானும் கலகஞ் செய்யும் நடனங் கண்டால் உலகில் பிறந்திறந் துழலா ரென்று நலஞ்சேர் நல்லூ ராசான் நவின்ருன்.
மலர்மிசை யோனும் மாலுங் காணு அலகிலா வாட லுடைய அப்பன் மலர்தலை யுலகத்து மானிடன் போல நலமிகு நல்லூரில் நாடியாட் கொண்டான். 2
குலநலம் பாராக் கொள்கை யுடையான் சலன மில்லாத் தத்துவா தீதன் பலரும் பைத்திய காரனென் றேச நலமிகு நல்லையில் நாடக மளித்தான். 3
கற்றவர் விழுங்குங் கருணை யாளன் மற்றவ ரறியா மாணிக்க மாமலை சிற்றறி வுடையார் தேருச் செல்வன் நற்றவர் வணங்கும் நல்லூ ரானே. 4
விருப்பு வெறுப்பை வேரறப் பறித்தோன் திருவடி மறவாச் சீருடை யாளன் ஒருபொல் லாப்பு மில்லையென் றுரைத்தோன் குருவடி வாகக் கோலங்கொண் டானே. 5
உண்மை முழுதுமென் ருேயா துரைப்பவன் நன்மை தீமையைக் கடந்த நாதன் என்னையுந் தன்னையு மொன்ருய்க் காண்பவன் . சென்னியில் சேவடி சூட்டினன் அன்பால். 6.
ஆரறி வாரென அடிக்கடி ஒதும் பேரறி வாளன் பேர்செல் லப்பன் பாரறி யாத பயித்திய காரன் தேரடிப் படியில் தினமு மிருப்பான். 7
நற்சிந்தனை 2
கார்நிற வண்ணன் கைதலை யணையாய்ப் பார்மிசை யுறங்கும் பண்பை யுடையான் நீர்வளம் நிலவளங் குறையா நல்லூர் சீர்பெற வாழ்ந்த தேசிக மூர்த்தி. 8 நாமறி யோமெனும் நல்ல மந்திரம் சேமமுண் டாகச் செப்புந் திறத்தோன் காமங் குரோத மோகங் கழிந்தவன் நாமமோ செல்லப்பன் நல்லூ ரானே. 9 எப்பவோ முடிந்ததென் றெடுத்தெடுத் துரைக்கும் ஒப்பிலா மாமணி உன்மத்த னெவரும் இப்படி யென்று இயம்பவொண் ணுதவன் எப்போதும் முருகன்சந் நிதியில் வாழ்பவன். 10 பாவலர் நாவலர் பணியும்நல் லூரில் சாவதும் பிறப்பதுந் தவிர்த்தென யாண்ட காவலன் நல்லூர்க் கந்தன் பதியில் சேவகஞ் செய்யுஞ் செல்லப்ப மூர்த்திகாண். 1
வேடிக்கை செய்கிருனே
பல்லவி வேடிக்கை செய்கிருனே -பரமபிதா வேடிக்கை செய்கிருனே.
அநுபல்லவி வேடிக்கை செய்கிருன் கூட இருக்கிருன். வேருய் இருப்பதுபோற் பாசாங்கு பண்ணுகிருன். (வேடி)
சரணம் و --س-.... பாடுகிறன் படிக்கிருன் பக்தரினம் சேர்கிருன் நாடுகிருன் நன்மைதீமை நாமல்ல வென்கிருன்
ஓடும் இருநிதியும் ஒன்ருகக் காண்கிருன். ஒன்றே விரண்டோவென ஓதி யறியவொண்ணுன். (வேடி)
Page 111
212
நற்சிந்தனை
சிவசிவ என்னச் சிவகதியாமே கலிவிருத்தம்
தந்தி முகத்தனைச் சங்கரன் மைந்தனைத் தொந்தி வயிறனைத் தோடணி செவியனை இந்திர னுக்கரு ஸ்ரீந்த இறைவனை மந்திர ரூபனை நான் மற வேனே.
ஒருவ ஞலே உலக முதித்தது ஒருவ ஞலே உலகம் நிலைத்தது ஒருவ ஞலே உலகம் ஒடுங்கிடும் ஒருவ னேயென் உயிர்த்துணை யாமே. 2
ஒருவ னேயொரு மூவரு மானன் ஒருவ னேயெல்லா வுயிர்களு மானுன் ஒருவ னேயெல்லா வுலகமு மானுன் ஒருவ னேயென்னை உய்யவைத் தானே. 3
அண்ட சராசர மவன்வடி வாகும் அண்ட சராசர மவனே யாகும் அண்ட சராசரத் ததிசயந் தன்னை அண்டரு மறியா ததிசயித் தாரே. 4
சிவபக்தி யாலே சிந்தை குவிந்தது சிவபக்தி யாலே சிந்தை தெளிந்தது சிவபக்தி யாலே சிந்தை யிறந்தது சிவபக்தி யாலே சீவன் முத்தியே. 5
சிவனையல் லாமல் தேவரு மில்லை சிவனையல் லாமல் சீவரு மில்லை சிவனையல் லாமல் தேகமு மில்லை சிவனையென் சித்தத்துட் கண்டுகொண் sேனே 6
நகரத் துள்ளே நான்முக ஞனுன் மகரத் துள்ளே மாலவ ஞணுன் சிகரத் துள்ளே சிவனப் நின்றன் வகரத் துள்ளே யருள்வடி வானனே5 7
நற்சிந்தனை
சிவசிவ என்று சிந்திப்பர் தேவர் சிவசிவ என்று சிந்திப்பர் சீவர் சிவசிவ என்று சிந்திப்பர் முனிவர் சிவசிவ என்னச் சிவகதி யாமே.
பக்தி செய்து பந்தத்தை நீக்கினேன் பக்தி செய்து பரமனைக் கண்டேன் பக்தி செய்யும் பாக்கியம் பெற்றேன் பக்திக் கடலில் படிந்திருந் தேனே,
ஒன்றை நினைந்தென் னுள்ள மொடுங்கிற்று ஒன்றை நினைந்தென் னுள்ளங் களித்தது ஒன்றை நினைந்தென் சிந்தை யுயர்ந்தது ஒன்றை நினைந்து ஒன்ரு னேனே.
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
தாலே ஆக்கை பிறந்தது தாலே ஆன்மா சிறந்தது தாலே ஆனந்த மாயிற்று துள்ளே அடங்கிநின் றேனே.
தாலே சஞ்சல மழிந்தது தாலே பஞ்ச மொழிந்தது தாலே ஆனந்த மாயிற்று துள்ளே அடங்கிநின் றேனே.
தாலே அரனடி காணலாம் தாலே அகிலத்தை யாளலாம் தாலே அகவினை தீர்க்கலாம்
அஞ்செ முத்துமென் நெஞ்சம் புகுந்ததே.
ஆருறுக் கப்பால் ஆனந்தக் கூத்து ஆருறுக் கப்பால் ஆனந்த வீடு ஆருறுக் கப்பால் ஆர்தான் ஈடு ஆறறுக் கப்பால் சென்ருேரைக் கூடு.
2 13
10
Page 112
214 நற்சிந்தனை தன்னை யறிந்தேன் தானவ ஞனேன்
கலிவிருத்தம் அகண்ட வெளியிலே அப்பனு மம்மையும் அகண்ட வெளியிலே யாருயி ரெல்லாம் அகண்ட வெளியிலே யஞ்சுபூ தங்களும் அகண்ட வெளியிலே யானிருந் தேனே. I அண்டமும் பிண்டமு மகத்திற் கண்டேன் அண்டமும் பிண்டமு மகமாய்க் கண்டேன் அண்டமும் பிண்டமு மகத்திற் கண்டிலேன் அண்டமும் பிண்டமு மாயிருந் தேனே. 2 அன்னை பிதாக்குரு வாகிய வமலன் என்னை வளர்த்தா னென்னே டிருந்தான் முன்னை வினையெலாம் முடித்த முதல்வன் தன்னை யறிந்தேன் தானவ ஞனேன். 3
அருந்தவர் நெஞ்சி லிருக்கு மமிர்தம் இருந்த படியே யிருக்கு மின்பம் பொருந்திய வல்வினை போக்கும் மருந்து அருந்துயர் நீக்கி யறிந்தேன் யானே. 4 அருவமு முருவமு மாகிய வமலன் குருவாய் வந்தே குறித்தெனை யாண்டான் இருபதும் நாலு மில்லா விடத்தில் கருவாகி நின் முன் காரணன் ருனே. 5 அச்சந் தீர்த்தெனை யாண்ட சோதி பொய்த்தவர் நெஞ்சிற் போகா நீதி மெய்ச்சம யத்தில் விளங்கு மாதி வைச்சனன் திருவடி வாழ்ந்தேன் யானே. 6 அறுபதும் நாலு மறியா வாதி உறுதுயர் தீர்க்கு முயர்ந்த சோதி குறுமுனிக் கருள்முனங் கொடுத்த வாதி மறுவிலா வென்மனம் வாழ்ந்திருந் தானே. 7 அஞ்சின் வழியை யடைத்தோ ரகத்தில் பஞ்சின் மெல் லடியாள் பாக னரிருக்கும் வெஞ்சினம் வேட்ட வெறிய ரகத்தில் அஞ்செழுத் துட்பொரு ளடையா தாமே. 8
நற்சிந்தனை 215
திங்கள் வணக்கம் ۔۔۔۔
கலிவிருத்தம் செய்ய மேனிய னேசிவ னேயுனைக் கையு மெய்யுங் கருத்திற் கிசையவே வைய கந்தனில் வாழ்த்தி வணங்கிடத் தையில் வந்தருள் தான் செய்ய வேண்டுமே.
மாசில் மாதவர் மனத்திற் கினிமையே பேசில் இன்பம் விளைக்கும் பெருமையே வாசி யாம்பரி ஏறும் வலவனே மாசி மாதம் வருக வருகவே. 2
பங்கில் மங்கையை வைத்த பராபர! இங்கு மங்கும் இருக்கு மிறைவனே துங்க மால்விடை யேறுநற் சோதியே பங்கு னிதனிற் பாங்கின் வருகவே. 3
செத்தா ரென்பு திகழ்திரு மார்பனே அத்தா வென்றடி போற்றுவார்க் கன்பனே கத்தா வுன்னைநான் கண்டு களித்திடச் சித்தி ரைதனிற் சீக்கிரம் வருகவே, 4
தேகா திதனை மெய்யெனச் சிந்தைசெய் மோகா திபதி யாகிய மூர்க்கனை ஏகா திபதி நீயெனை யாளுவான் வைகா சியெனும் மாதம் வருகவே, 5
ஆனி ரைதனை மேய்க்கு மரியொடு நாணி லந்தரு நாதனுங் காண்கிலர் வானு லாவும் மதிவைத்த அப்பனே ஆனி மாதம் வருக வருகவே. 6
பாடி யாடிப் பணியு மடியவர் கூடிக் கூடிக் கும்பிடு வாரவர் வாடிப் பின்னர் மகிழச்செய் வள்ளலே ஆடி மாதம் வருகவன் பாகவே.
7
Page 113
21 6 நற்சிந்தனை
பாவ ணிசெய்து பாடு மடியவர் நாவ ணிசெய்து நிற்கும் நலஞ்சுடர் பூவ ணிசெய்து போற்றுவார் சிந்தையில் ஆவ ணியருள் மாதம் வருகவே. . 8
அரற்று மன்பர்க் கருள்செ யிறையவன் அரக்க லுக்கருள் செய்தவன் என்னையும் புரக்கு மாறடி யேன்புகழ் போற்றிடப் புரட்டா சிதனில் புண்ணியன் நண்ணுமே. 9
துப்பி சைந்த இதழ்மடத் தோகையான் அப்பி சைந்த அணிமுடி யாண்டவன் செப்பி சைந்து திறலுடன் என்முனம் ஐப்ப சியெனு மாதம் அணுகவே. 10
கார்த்தி கேயனைக் கண்ணுத லிற்றரு கீர்த்தி வாய்ந்த கிருபா சமுத்திரம் தோத்திரஞ் செய்வார் துன்பந் துடைத்திடக் கார்த்தி கையெனும் மாதத்திற் காணும்ே.
மார்க்க நன்னெறி சென்றிடு மாந்தர்கள் மூர்க்க மான குணத்தை முனிந்திடும் போர்க்கு றிப்புடைப் புங்கவன் புண்ணிய மார்க பூழியினில் வருக வருகவே. 2
ஐயம்வை யாதேநெஞ்சே யரனடி தினம்பணி தெய்வமா லோனல்லால் வேருெரு தெய்வமில்லை செய்வன திருந்தச்செய் சேரிடம் அறிந்துசேர் உய்யவ பூழியிதுவே உனக்குண்மை யாய்நட.
நற்சிந்தனை 21 7
குருதரிசனம் வெண்பா
கருத்தில் நினைந்துருகிக் கைகூப்புந் தொண்டர் வருத்தமெலாந் தீர்க்கும் வடிவேல்-திருத்தலத்தில் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் v ஆரடாநீ யென்ருன் அவன். தன்னை யறியத் தவமுஞற்றும் மாதவரை அன்னையைப்போ லாதரிக்கு மாறுமுகன்- சந்நிதியில் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தேரடாவுள் ளென்ருன் சிரித்து. 2 வண்டுபண் செய்யும் வளம்பெருகு நல்லூரில் மிண்டு மனத்தவரை மேனிலைக்குக்-கொண்டுவரும் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தீரடாபற் றென்ருன் சிரித்து. − 3 கன்னலொடு செந்நெல் கதலிபலா மாவர்க்கந் துன்னு நல்லூர்ச் சாமி திருமுன்றில் மன்னுசீர்த் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் சீரடியார் சூழ்ந்துநின்றர் தேர். 4 அயலறியா வந்தணர்க ளான்ற நல் லூர்ப்பதியிற் கயற்கணுர் காமவலை சேரா-வியல்புடைய செல்லப்ப னென்னுஞ் சிவகுருவை நான்கண்டேன் நல்லதப்பா வென்ருன் நயந்து. 5 ஒன்ருே விரண்டோ வொருமூன்றே வென்றெவரும் அன்றுதொட் டின்றுவரை யாராய-ஒன்றுக்கும் எட்டாமல் நின்ரு னெழிற்குருவாய் நல்லூரிற் பட்டமளித் தானெனக்குப் பார். 6 நீராய் நெருப்பாய் நெடுநிலனுய்க் காற்ருகி ஆராலுங் காணு வமலனங்கே - நேராகச் சற்குருவாய் வந்தேயென் சந்தேகந் தீர்த்தாண்டான் நிர்க்குணம் பூண்டேன் நினை. 7 புனலொழுகப் புள்ளிரியும் பொன்னிழ நாட்டில் அனலேந்து வான்றன் புதல்வன்-மனமார வாழ்நல்லை யம்பதியில் வாழ்வளிக்கச் சற்குருவாய்த் தாள்காட்டி யாண்டான் தனி. 8
Page 114
218 நற்சிந்தனை
மறப்பேனே குருநாதன் தன்னை
நேரிசை வெண்பா
இல்லையென் னமல் இரப்போர்க்கொன் றிவரேல் தொல்வினை யெல்லாந் தொலைந்துபோம்-நல்லைக் குருநாதன் கூறினன் பொல்லாப்பிங் கில்லை உருகாதோ நெஞ்ச முவந்து. I
உண்மை முழுதுமென் ருேதுங் குருநாதன் தன்னை மறப்பேனே தாரணியில் - பின்னையினித் துஞ்சல் பிறப்புண்டோ சோர்வச்சந் தாமுண்டோ கஞ்சமலர்த் தாளென்றுங் காப்பு. 2
காக்குந் திருவடிகள் எந்நாளு மென்மனத்தில் பூக்கும் பொறிவழியே போகாமல் - நோக்குமென்றும் தேக்குஞ் சிவானந்தத் தேனமுதை யுண்டுமனம் நீக்கமின்றி நிற்கும் நினை. 3
நினைக்கு மடியாரை நீயேநா னென்றே அணைக்குந் திருக்கரந்தா னென்னே - கனக்குங் கடல்சூழ் கவினிலங்கைக் கார்சூழ்நல் லூரான் தொடுக்கும்வல் வேலைத் துதி. 4
துதிக்க மதிதந்த தூயோன்றன் பாதம் துதிக்க வினைகள் துகளாம்-மதிக்கருளும் ஐயன் திருமதலை ஆறுமுகன் வீதியிலே தெய்வமென நின்ருன் தெளி. 5
ஒன்பது வாசலா லாயவோர் உறுப்பில் அன்பு வைத்துநீ அலையாதே வீணில் அன்பர் பணிசெய் வதுஅற மென்றறி இன்பவீ டளிக்கும் எல்லாக் கதியும்வரும் என்பதை மறவாதே இதுவுனக் குறவாமே.
நற்சிந்தனை 219
அன்னையொத்த செல்வன் அறி நேரிசை வெண்பா
ஒருபொல்லாப் பில்லையென் ருேதுந் திருவாக்கால் உருகி யுருகி யுணர்வற் -றிருநிலத்தில் இன்பதுன்ப மென்னுமவை யென்றுமொப்பாந்
தன்மைகண்டேன் என்னப்பன் செல்லப்ப னென்று.
உண்மை முழுதுமென வோதுந் திருமொழியின் தன்மையினைக் கண்டேன் தலைப்பட்டேன்-பின்னைப் பிறப்பு மிறப்புமிலைப் பேதை மட நெஞ்சே மறப்பின்றி யேத்தி மதி. 2
முடிந்த முடிபென்று முன்னின்று சொல்லப் படிந்ததென் னுள்ளம் பதியில் -முடிந்ததே மாயவிருள் மந்திரமுந் தந்திரமும் நான்மறந்தேன் தாயனைய செல்லப்பன் தான். 3 நாமறியோ மென்று நகைத்தென்னை நோக்கியே காமங் கடந்தோன் கழறினன்-சேமமுடன் சிந்தித்துச் சிந்தித்துச் சேவடியே தஞ்சமென்று வந்தித்து நின்றேன் மகிழ்ந்து. 4 ஆரறிவா ரென்றே அடிக்கடி யேநகைக்கும் பேரறி வாளனையும் பித்தனென்றே-பாரிற் பலரே இகழுவார் சில்லோர் புகழ்வர் சலனமற்று வாழுவார் தாம். 5
கரைகாணு வின்பக் கடலாடு வானை உரையாட யாருக்கிங் கொல்லுந் -தரைமீது நால்வேதங் காண்கிலவே நற்றவத்தோர் தாமறியார் மால்பிரமன் தேரார் மதி. 6
ஆசைக் கடலி லலைந்து திரிவார்கள் ஆசை கடந்தவனை யாரறிவார்-மாசற்ற மேகத்தைச் சந்திரனை மின்மிணிதான் மூடுமோ மோகத்தை யின்றே முனி, 7
Page 115
220 நற்சிந்தனை
உயர்ந்ததிருக் கோபுரமு மோங்கெயிலுங் கண்டு வியந்து விழுந்தெழுந்து விம்மி-அயர்ந்துநிற்கும் ஆடவரும் மங்கையரும் மற்றுள்ள அன்பர்களும் பாடவரு வார்தினமும் பார்.
எட்டு மிரண்டும் அறியாத வென்னையும் நட்டஞ்செய் செல்லப்பன் நல்லூரில்-திட்டமுடன் நீயேநா னென்று நினைந்துருக வைத்தனனே
தாயே யனையா னவன். 9
ஆதியந்த மில்லையென்று சொல்லாமற்
சொன்னன்காண் நீதி நெறிவிளங்கும் நல்லூரில்-வீதியிலே என்னைத்தா னுக்கி எடுத்தாண்டான் யாரென்னின் அன்னையொத்த செல்வன் அறி. 10
தம்பி கேளடா
தா வித்தாவிச் செல்லும் மனத்தைத் தம்பிகேளடா கூவிக்கூவி யழைத்துக் கூடக் குடியிருத்தடா.
சேவித்துஞ் சென்றிரந்துந் தம்பி கேளடா சிவமேநா மென்றுதினஞ் சிந்தை செய்யடா 2 பாவித்தும் பாட்டிசைத்துந் தம்பி கேளடா மூவிதமாம் ஆசைதன்னை முனிந்து வெல்லடா. 3
வாவியாறு சேரிலங்கை நல்ல நாடடா
பாவியென்ற நாமந்தன்னைப் பகைத்து நில்லடா. 4
தூவிமயி லேறும்வேலைத் துதித்துக் கொள்ளடா நாவினில் நமச்சிவாயம் நவின்று நில்லடா. 5
நற்சிந்தனை 22
ஆசானக் கண்டேன் நேரிசை வெண்பா
ஆசானக் கண்டேன் அருந்தவர்வாழ் நல்லூரிற் பேசா தனவெல்லாம் பேசினன் -கூசாமல் நின்றேன்நீ யாரடா வென்றே யதட்டினன் அன்றேயான் பெற்றே னருள்.
அருளொளிக்குள் ளேபுகுந்து சென்றேன்யான் ஆங்கே இருள்சூழ்ந் திருப்பதைக் கண்டேன்-பொருளறியேன் ஒர்பொல்லாப் பில்லையென வோதினன்
கேட்டுநின்றேன் மர்மந்தே ராது மலைத்து. 2
மலைத்துநின்ற வென்னை மனமகிழ நோக்கி அலைத்துநின்ற மாயை யகலத் -தலைத்தலத்திற் கைகாட்டிச் சொல்லலுற்ருன் கந்தன் திருமுன்றில் மெய்ம்மறந்து நின்றேன் வியந்து. 3
வியந்துநின்ற வென்றனக்கு வேதாந்த வுண்மை பயந்தீரும் வண்ணமவன் பண்பாய்-நயந்துகொள் அப்படியே யுள்ளதுகாண் ஆரறிவார் என்ருனல் ஒப்பில்லா மாதவத்தோன் உற்று. 4
உற்ருரும் போனுர் உடன்பிறந்தார் தாம்போனர் பெற்ருரும் போனர்கள் பேருலகில்-மற்ருரும் தன்னுெப்பார் இல்லாத் தலைவன் திருவருளால் என்னெப்பா ரின்றியிருந் தேன்.
ஒடும்பு விரியம்பழ மும்போலும் உலகத்தை நாடுதல் சீலமன்று ஞானிகள் முன்சொன்னர் கோடுதல் இல்லாமல் குரைகழல் அடிபணி வீடுனக் குண்டாகும் விருப்பமா யிதைப்படி,
Page 116
223 நற்சிந்தனை
நல்லமழை பெய்யாதோ நேரிசை வெண்பா நல்லமழை பெய்யாதோ நாடு சிறவாதோ எல்லவரும் இன்புற்று வாழர்ரோ - நல்லூரான் ஆசானுய் வந்தே யடியேனை யாண்டுகொண்டான் பேசானு பூதியென் பேறு. I நற்சிந் தனையென்னும் நல்லமுதம் உண்டக்கால் கற்கும் நெறியுண்டோ காசினியில் - விற்றுரண் ஒன்றுமே யில்லாத உன்மத்தன் யோகனுக்(கு) என்றுமின்ப மென்றே யிசை, 2 பாட வறியான் பலகலையுந் தானறியான் தேட வறியான் சிவயோகன்-நாடறியப் பிச்சைச்சோ றுண்டு பிறவிப் பிணிதீர்ந்தான் அச்சமிவற் கில்லை யறி. 3 இச்சையில் லோரே யிடும்பைக் கிடும்பையை நிச்சய மாய்ப்படுப்பர் நீயறியாய்-அச்சமற்று வாழ்சிவ யோகனமுன் வந்துவவிந் தாண்டுகொண்டான் கேள்கிளைகள் நீங்கக் கிளர்ந்து. 4 எழுவாய் பயனிலைகள் இல்லாமற் பாடித் தொழுவான் சிவயோகன் சொல்லின்-அழுவான் விழுவான் விதிர்விதிர்ப்பான் ஆரறிவார் என்று தழுவுவான் தன்னையுன்னித் தான். 5
ஞானதேசிகன் பல்லவி ஞான தேசிகனே சரணம் நற்றவனே நல்லூர் வித்தகனே வருக.
அநுபல்லவி ஈனப் பிறவி நீக்கு மெழிலது கண்டேன் என்னை யென்னலறிந் தானந்தங் கொண்டேன் (ஞான)
w சரணம்
காமக் குரோதமோகக் கடலைக் கடந்தேன் கங்குல் பகலற்ற காட்சியைக் கண்டேன் கருதுஞ் சுவாமியோக நாதனுன் தொண்டன் தருமொரு வரமுண்டு அதுவெங்கும் மங்களம் தங்கும்படி யருள்தந்து இரட்சி. (ஞான)
நற்சிந்தனை 223
சின்னத்தங்கம்
தெய்வத்துக்குத் தெய்வம் சிந்தையிலே தானிருக்க
வையகத்தி லேனலைந்தாய்-சின்னத்தங்கம் வாட்டமெல்லாம் விட்டிடடி. l
ஆழித் துரும்பெனவே யங்குமிங்கு மாயலைந்து பாரில் தவியாதே -சின்னத்தங்கம் பார்த்து மகிழ்ந்திடடி. 2
அங்குமிங்கு மெங்குமந்த ஆண்டவன் தானிருக்க அங்குமிங்கு மலையாதே - சின்னத்தங்கம் ஆடிப்பாடி மகிழ்ந்திடடி. V− 3.
கங்குல்பகல் காணுத கருணைதனை வேண்டிக்கொண்டு செங்கமல மடமாதே-சின்னத்தங்கம் சீராக வாழ்ந்திடடி. 4
ஆடம் பரமெல்லாம் அடியோடே நீக்கிவிட்டு கேடறியாத் திருவடியைச்-சின்னத்தங்கம் கிட்டநீ கண்டிடடி. 5
வேடமொன்றும் போடாதே வீணருடன் கூடாதே தேடவேண்டாந் திகைக்கவேண்டாஞ்-சின்னத்தங்கம் சீவன்சிவன் ஆச்சுதடி. . 6
தொழுது வணங்கிடுவாய் துரியநிலை சாருமட்டும் அழுதழுது ஆண்டவணைச்-சின்னத்தங்கம் ஆன்மலாபம் தேடிடடி. 7
முழுதுமுண்மை யென்றுமுன்னள் மோனகுரு சொன்னரடி பழுதொன்று மில்லையடி-சின்னத்தங்கம்
பவுத்திரமாய் வாழ்ந்திடடி. 8 காண்பானுங் காட்சியும்போய்க் காட்சிப் பொருளுமற்று
மாண்புடனே நின்றிடுவாய்-சின்னத்தங்கம் மரணபய மில்லையடி. 9
Page 117
224 நற்சிந்தனை
சேண்பொலியுந் திருவடியே சித்தத்திலெப் போதுமுண்டு வீண்காலம் போக்காதே - சின்னத்தங்கம் வேண்டிப் பணிந்திடுவாய். 10
மானபி மானம்விட்டு மண்ணும்விண்ணுந் தெரியாமல் தானுன தன்னிலையில் - சின்னத்தங்கம் தனியே யிருந்திடடி. 11
தானுன தானேயல்லால் தனக்குதவி யாருமில்லை மோன நிலைதனிலே -சின்னத்தங்கம் மூழ்கி யிருந்திடடி. 12
புத்தியைநீ நாட்டாதே புன்னெறியைச் சூட்டாதே வெற்றியுனக் குண்டாகுஞ்-சின்னத்தங்கம் விருப்பும் வெறுப்பும்விடு. 13
எத்திக்கு மீசனடி இருந்தபடி யேயிருந்து பத்திசெய்து பார்த்திடுவாய்-சின்னத்தங்கம் பழிபாவ மில்லையடி. 14
தத்துவப் பேயோடு தான் தழுவிக் கொள்ளாதே சுத்தபரி பூரணத்தில்- சின்னத்தங்கம் சுகித்துநீ வாழ்ந்திடடி. 15
வித்தகம்நீ பேசாதே வேறென்றை நாடாதே செத்தாரைப் போல்திரிவாய்-சின்னத்தங்கம் தெய்வம்நீ கண்டிடடி. 6 .
மெத்தக்கதை பேசாதே மேன்மக்களை யேசாதே
சத்துருவும் மித்துருவுஞ்-சின்னத்தங்கம் தானென்ருய்ப் போகுமடி. 17
நற்சிந்தனை - 225
நீகரில்லாத இன்பம் நிறையுமே
அன்று மின்று மென்று முள்ளவன்
என்று மெங்க ளகத்துள் நிறையுமே. I ஆக்கையே கோவில் அகஞ்சிவ லிங்கம் பூக்கைக் கொண்டு பொன்னடி போற்றுதும். 2 இல்லை யுண்டென்று சொல்லவொண் ணுதவன் நல்லூரில் வாழும் நற்றவ ராசனே. 3.
உம்பர் தலைவ னுயர்கை லாயன் R செம்பொ னம்பலத்தே திருநடனம் புரியுமே. 4 ஊரும் பேரு மில்லா வொருவன் சீருந் திருவுமாயென் சிந்தையுள் நிற்குமே. 5
எண்ணு மெழுத்துமாய் நின்றிடு மெந்தை கண்ணுக்குக் கண்ணுய்க் கலந்து நிற்குமே. 6
ஏகம்பம் மேவி ஏந்திழை கலக்கம் போக வருள்செய்தான் புண்ணிய மூர்த்தியே. 7 ஐங்கரத் தொருகோட் டானையைத் தந்தவன் அங்கு மிங்கு மெங்குமாய் நிற்கும். 8
ஒருபொல் லாப்பு மில்லையென் ருேதினுன் , திருவாழும் நல்லைத் தேசிக மூர்த்தியே. 9 ஓங்கா ரத்தில் உதித்த வுலகெலாம் ஓங்கா ரத்தில் ஒடுங்கு முண்மையே. IJ
ஒளவனத் தில்லையில் ஆடல் உகந்தவன்
நவ்வியைப் பாகம் வைத்த நம்பனே. I
அஃகுத லில்லா அறிவினை யுடையவன்
நஃகும் நம்வஞ்ச வேடங் கண்டே. 12
கட்டுப் படாத மனத்தைக் கட்டினுல்
எட்டுணை யேனும் இடுக்கண் இல்லையே. 1 3
15 -
Page 118
226 - நற்சிந்தனை
ங்கரம் போல நாங்கள் வாழ்ந்தால் நிகரில் லாத இன்பம் நிறையுமே. 14
சந்ததம் சாதனை தவருது செய்யின் -
சிந்துார முரித்த சிவனடி சேர்வோம். 15 ஞான யோகம் நாங்கள் புரிந்தால்
மோனவீ டடைவோம் முழுது முண்மையுே. 6
இடத்து மடந்தையை வைத்த பெருமான் நடத்தைக் கண்டால் நாமுய்ந் தோமே. 17
அணங்கு தந்தெமை ஆட்டும் மனத்தை இணங்காம லெந்தை யிணையடி பணிகுதும். 18
தன்னைத் தன்னு லறிந்த ஞானிகள் ۔ விண்ணில் விளங்கும் வெய்யவன் போல்வார். 19
நன்றுதீ தென்று நாடாமல் நாடினல் குன்றின் மேல் வைத்த விளக்கின் கொள்கையே. 20
பத்மா சனத்தில் பரிவுட னிருந்து சித்த விருத்தியைத் தீர்த்திடு வோமே. 21
மணிவா சகந்தரு மந்திர மோதினல் பிணிமூப் பில்லாப் பிரம மாகுதும் . 22
யவனர் சோனகர் தமிழர்சிங் களவர் எவரும் வணங்குவார் எந்தைதன் தாளே. 23
அரவார் செஞ்சடை அண்ணல் தன் பாதம்
விரவி நிற்பவர் வீடுபெற் றனரே. 24
இலது உளதென வெவருமே மாறக் 1. கலந்து நிற்பவன் கண்ணுத லாமே. 25
வஞ்ச நெஞ்சினர் காணு வள்ளலை அஞ்செழுத் தோதி அர்ச்சிப் போமே. - 26
நற்சிந்தனை
அழகா ரரியும் அம்புயா சனனும் தொழுதிட நின்றவன் சுத்த சிவமே. இளமை மூப்பிலா னெம்பி ரானெனத் தொழுதிட நின்றவன் சோதிசொ ரூபனே. இறப்பும் பிறப்பு மெமக்கில்லை யென்றவன் அறமார் நல்லூ ராசா ஞமே.
அனங்க ணுகத்தை யன்றெரி செய்தவன் கணங்கொள் பேயோ டாடிய கள்வனே.
ரங்கநின் திருவருள் தரலாகாதா இராகம்-காபீ; தாளம்-ஆதி
பல்லவி
ரங்கநின் திருவருள் தரலாகாதா
obufiivsus
தேசகாலம் யாவும் மறந்து தேவா உன்றனருள் நிறைந்து
சரணங்கள்
பாதகன் கஞ்ச னனுப்பிய பூதகி பாரில் மாளவே செய்தாய்
அதுபோல் அடியேன் ஆணவமொழிய அருள்நீ தருவாய் ஐய.
வேத புராணம் காணவொண் ணுத வித்தகனே பக்தர் வேண்டும் விமலா அமலா கமலக் கண்ணு விரைவாய் நீ வருவாயே.
2
2
7
27
28
29
30
(பூg) "
(பூg)
(பூனி) 1
(பூரி) 2
Page 119
228 நற்சிந்தனை
அன்பே வடிவாய் அமைந்த துறவி
ஆசிரியப்பா ܫ
அன்பே வடிவாய் அமைந்த துறவீ! அன்பே யன்றி யாற்றலு முண்டோ? இன்பமா முலகி லெங்கணுஞ் செறிக துன்பமாம் மாயை தொடரா தொழிக எல்லியு மல்லு மீசனைப் போற்றுக கல்லுங் கரையக் கவிமழை சொரிக கங்குல் பகலற்ற காட்சி பெறுக; எங்குஞ் சிவத்தைக் கண்டின் புறுக மங்குவார் செல்வம் மதியா தொழுகுக இங்கு நீ, இருந்த படியே யிருந்து வாழுதி அருந்துய ருன்னை யடையா வன்றே. V l
வஞ்சகம் நீக்கி வாழுந் துறவீ! அஞ்செழுத் துட்பொரு ளாகிய வமலனை நெஞ்சத் துள்நீ வைத்து வணங்குதி கஞ்சத் தேவனுங் கண்ணனுங் காணுர் தன் போற் பிறரைத் தானி னந்திடு உன் போற் பிறரிவ் வுலகி லுண்டோ
முன்பு நீ, செய்த வல்வினை தீர்ந்திடுந் தியானஞ் செய்தினஞ் சீவன் சிவனே யன்ருே. 2
ஒருமைமனம் படைத்த வுத்தமத் துறவீ! இருமையு மளிக்கு மிறைவன் திருவடி அந்தியுஞ் சந்தியு மகலாது போற்றிப் பந்தித்து நின்ற பாவம் போக்குதி சிந்தித்துச் சிந்தித்துச் சீவபோத நீக்குதி நிந்திப் பார்களை நேசத்தால் வெல்லுதி சந்தேகமில்லை, - நீயோ நித்தியன் நினக்கயல் கற்பனை நீயோ நிராமயன் நினைவொழிந்து வாழுதி, 3.
நற்சிந்தனை 229
ஈழநாடு வாழவந்த சிவதொண்டன்
ஈழநாடு வாழவந்த எழில்மிகுந்த தொண்டன் எளியவர்க்கும் பெரியவர்க்கும் ஏவல்செய்யுந் தொண்டன் தாளமேள மில்லாமலே தான் வளருந் தொண்டன் தன்னைப்போல அயலவரைத் தான்நினையுந் தொண்டன் காளகண்ட னடியவர்க்குக் காவலான தொண்டன் கங்குல்பகல் காணுமற் கருமமாற்றுந் தொண்டன் நீளநினை நித்தியன் நீ யென்றுரைக்குந் தொண்டன் நிட்டையிலே யெந்நாளும் நிலைத்துநிற்குந் தொண்டன். 1
ஈழநாடு வாழ்வந்த எங்கள் சிவ தொண்டன் ஏழைகட்கும் பெரியவர்க்கும் ஏவல்செய்யுந் தொண்டன் காளகண்ட னடியவர்க்குக் காவலான தொண்டன் காமக்கு ரோதமோகம் நீக்கிவிடுந் தொண்டன் வாழவெண்ணும் அடியவர்க்கு வழிகாட்டுந் தொண்டன் மறுபிறப்பை யிப்பிறப்பில் நீக்கிவிடுந் தொண்டன் தாளமேள மில்லாமலே தான் வளருந் தொண்டன் தாயாகி யனைத்துலகுந் தாங்கிநிற்குந் தொண்டன். 2
சூழமிக நினைத்துவினை யாற்றுமெங்கள் தொண்டன் சோம்பலே பாவமென்று சொல்லுகின்ற தொண்டன் கூழெனினும் கூடிக்குடி யென்றுசொல்லுந் தொண்டன் கூச்சமின்றி யுலகத்திலே குடியிருக்குந் தொண்டன் ஆழநினை யகம்பாவம் போகுமெனுந் தொண்டன் அடியவர்கள் திருவடியைச் சிரசில்வைக்குந் தொண்டன் வாழிமிக வாணிச்சிக்கா மண்சுமந்த மாறன் மாபெருமை வழுத்துகின்ற மாண்புமிக்க தொண்டன், 3
நானென்னும் ஆணவத்தை நலியவைக்குந் தொண்டன் நன்மைக்குந் தீமைக்கும் நடுவில் நிற்குந் தொண்டன் தேனென்ன இதயத்தில் தித்திக்குந் தொண்டன் சிவாயநம வென்றுதினஞ் செப்புகின்ற தொண்டன் ஆணென்றும் பெண்ணென்றும் அறியாத தொண்டன் அடியவரைத் தானக ஆக்கிவிடுந் தொண்டன் பேணுத மாந்தரையும் பிரியாத தொண்டன் பெரியோர்கள் கருத்திலென்றும் பொருந்திவளர்
தொண்டன். 4
Page 120
230 நற்சிந்தனை தொண்டு செய்வார்
தொண்டுசெய் வாருக் குண்டே ஞானம் தொண்டுசெய் வாருக் குண்டே மோனம் தொண்டுசெய் வாருக் குண்டே தானம் தொண்டுசெய் வாருக் குண்டே கானம்.
எல்லா ரிடத்தும் அடியேன் வாழ்வேன் எல்லா ரிடத்தும் அடியேன் தாழ்வேன் எல்லார்க்கு மென்றும் அடியேன் கேள்வன் சொல்லாற் பயனிலை யென்றே சூழ்வன். 2
எல்லா ருருவமு மென்னுரு வாகும் எல்லார் நலன்களு மென்னல மாகும் எல்லார் பலமு மென்பல மாகும் நல்லோர் என்னுரை நயந்துகொள் வாரே. 3.
வருவன வெல்லாம் வந்தே யேகுக கருதுவ வெல்லாங் கருதித் தீருக ஒருவரு மறியா வொண்செஞ் சீறடி குருபரன் திருவடி கொண்டா டுதுமே. 4.
ஒன்றிரண் டென்றே யுரையார் பெரியார் கன்றும் மனத்தைக் கண்டாற் பரிவார் கொன்றுயிர் வாழக் குறியார் திரிவார் நன்றிது தீதென நலியார் அரிஓம். 5
எல்லா ரிடத்தும் உள்ளாய் தூயாய் எல்லா எழிலும் நீயே யானுய் கல்லாய் மலையாய்க் கவின்பெறு மரமாய்ப் புல்லாய்ப் பூடாய்ப் பொலிவாய் நீயே. 6
உன்துணை யன்றி யுயிர்த்துணை காணேன் பின்னை யென்னைப் பிரியா துறைவாய் அன்னையுந் தந்தையும் ஆசா னும்நீ முன்னைப் பொருட்கெலாம் முன்னைப் பொருள்நீ. 7
நற்சிந்தனை 231
உடல்பொருள் ஆவி யுன்னதே இறைவா! திடம்பெற ஞானத் தெளிவை நல்குதி கண்ணே கருத்தே யெண்ணே எழுத்தே விண்ணே விண்ணில் விளங்கும் மதியே. 8
பண்ணே பண்ணிற் கணியே பரம! எண்ணேன் இனிப்பிற தெய்வம் நாயேன் ஏத்தி யேத்தி யிணங்கி வணங்கச் சாற்றிய கவியை யேற்றிடு வாயே. 9
wr-a-minas
ஒன்றே தெய்வம் ஒன்றே உலகம்
உலக முவக்கவும் உன் மனங் களிக்கவும் கழறும் வாசகங் கருத்தி லிருத்துக ஒன்றே தெய்வ மொன்றே யுலகம் நன்றே யென்றும் நாடிப் புரிவாய் நீசடப் பொருளல நிறைதரு சித்து பேச வரிதுன் பெருமையெவ ராலும் ஆதலா லுன்னை யங்கி சுடாது காதல்சேர் காற்றும் உலர்த்தா கவலல் மாதிரந் தானும் வருத்த முடியாது ஒதிடு மப்புவுங் குளிரச்செய் யாதுனை ஈறிலாப் பொருணி யெள்ளள வேனும் மாறிலா மகிழ்ச்சி மனத்திடைக் கொள்வாய் சாதி சமயம் யாவுமுனக் கில்லை நீதி யொன்றை நெஞ்சிடை வைத்திடு உபாதி செய்யும் புலன்வழி யுருதே அபாய மொன்று மென்று முனக்கிலை செய்ய வேண்டிய செவ்வனே செய்வாய் உய்ந்தாய் முன்னர் யுலகமுன் கைவசம் சந்தேக மில்லைச் சாற்றினன் கேணி சற்குரு உன்துணை சாட்சிநீ யாவாய் அற்புத னடியிணை யென்றும் வாழ்கவே.
Page 121
232
கூத்தாடுதே மனமென்ன கொடுமை
பல்லவி
கூத்தாடுதே மனமென்ன கொடுமை
கும்பிட்டேன் குருநாதா உன்னடிமை.
அநுபல்லவி
நற்சிந்தனை
தீர்த்தங்க ளாடினேன் யாத்திரை செய்தேன் w சித்தந் தெளியவில்லை என்னநான் செய்வேன். (கூத்)
பார்த்த விடமெங்கும் நீயல்லா தில்லை பாராமல் நானும் பட்டேன் தொல்லை காத்தெனை யாள்வ துன்றன் கடமை
சரணங்கள்
கருணைக் கடலே நானுன் உடைமை.
பத்திசெய் யோக சுவாமி பாட்டைப்
பாடிப் படிப்பவர் பல்லூழி காலம் உத்தம ராக உலகினில் வாழ்ந்து வித்தகன் சேவடி விரவிநிற் பாரே.
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ ஓம் ஓம்
செல்வக் கணபதி செல்வவே லாயுதன் w செல்வச் சிவதொண்டன் செல்வச் சிவனடியார்
எம்முள் திருவருள் செல்வத் திருமால் அயன்முதல் தேவர்கள் ஐம்பெரும் பூதங்கள் சிவ சிவ ஐம்பொறி சிவ சிவ ஐம்புலன் சிவ தச நாடிகள் சற்குரு நாதன்
(கூத்) 1
(கூத்) 2
ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம்
ழ் ஒம்
ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம் ஓம்
நற்சிந்தனை. 233
அரகர சிவசிவ மறையோனே
அன்பர்தஞ் சிந்தையில் உறைவோனே அரகர சிவசிவ மறையோனே. . 1
பொன்னே மணியே பூங்கோவே புலவரெல் லாம்புகழ் எங்கோவே. 2
காணுங் கண்ணிற் கலந்தவனே கதிரொளி போலெங்கும் நிறைந்தவனே. m 3
ஆணும் பெண்ணும் ஆனவனே அடியவர் பேணும் வானவனே. 4
கோணிய பிறையை முடித்தவனே கொல்புலித் தோலை யுடுத்தவனே. 5
வேணியிற் கங்கை தரித்தவனே வேழத்தின் தோலை யுரித்தவனே. 6
பாற்கடல் தன்னை அழைத்தவனே பாரொடு விண்ணுய்ப் பரந்தவனே. 7
நூற்பொருள் தன்னை விரித்தவனே நுண்ணிடை யாள்தன் இடத்தவனே. 8
தில்லையில் ஆடிய சிற்பரனே சிவசிவ சிவசிவ தற்பரனே. 9
எல்லையில் லாவருள் தந்தவனே என்போல் நல்லையில் வந்தவனே. IO
Page 122
நற்சிந்தனை
கும்மி
கும்மியடி பெண்ணே கும்மியடி குரு நாதனைப் பாடிக் கும்மியடி
இம்மை மறுமைக்கும் எங்களை யாட்கொண்ட
எழிலைப் பாடிக் கும்மியடி. I
சிவனெ ருத்தனே தெய்வமடி தோழி சென்னியிற் கங்கை பாயுதடி
அவனி டத்தினிற் பெண்ணை நீ பாரடி
எண்ணியெண் ணிக்கடைத் தேறடி. 2
அவனன்றி யொன்றும் இல்லையடி பெண்ணே
அங்கையி லங்கியெ ரியுதடி
அவன்ற ஞகத்தில் நாகமடி பெண்ணே
அரையி லேபுலி யுடையடி. , 3
அடிக்கீ ழரக்கன் கிடக்கி முனடி
அங்கையி லேமழு மானடி
துடியொ ருகையில் தோன்றுதடி பெண்ணே
சூலமுங் கையிற் றுலங்குதடி. 4
குடிமு முதையும் ஆண்டுகொண் டானடி
கொல்லும் நமன யுதைத்தான்டி
அடிமு டியொன்று மில்லையடி பெண்ணே
ஆனந்த மாய்க்கும்மி பாடடி. 5
தூக்கிய பாதத்தின் தோற்றத்தைப் பாரடி
தொந்தோந் தோமென்ற நாதத்தைக் கேளடி
ஆக்கி யழிக்கவும் வல்லவ னவனடி p
ஆனந்த மாய்க்கும்மி பாடுமடி. 6
பாம்பும் புலியும் பார்த்திருந் தாரடி
பாரளந் தோனயன் பாடுபட் டாரடி
நாம்பு கழ்ந்திட நற்றரு ணமடி
நங்கைய ரேகும்மி பாடுமடி. 7
நற்சிந்தனை 235
மாறிப் புலன்வழி போகா தேயடி மதிக்குள் ளேரவி சேர்த்திடடி
ஆறி யிருந்து பாரடி பெண்ணே
அவனை நீகண்டு தேறடி. 8
சித்தத்துள் நித்தந் தித்திக்குந் தேனடி
தீராப் பிணியைத் தீர்க்கும் மருந்தடி
பத்தர்கள் கண்டு பரவு வாரடி
பாவைய ரேகும்மி பாடுமடி. 9
இலங்கை என் திருநாடு
எல்லார்க்குந் தம்பிரா னென்னைவந் தாண்டுகொண்டான் கொல்லேன் பொய் சொல்லேன்யான் குருமொழியை
மறக்கிலேன் நில்லாத காயத்தை நிலையெனவே யெண்ணுகிலேன் செல்லாரும் பொழில்குழு மிலங்கையென் திருநாடே. 1 என்னைவிட் டகலாம லெப்போது மிருக்கின்ற அன்னையொப் பானவனை யடியேன்யான் மறப்பேனே முன்னைநா ஸ்ரீராவணன்றன் முடிபத்தும் நெரித்தவன் தென்னைபனை சேரிலங்கை சிறியேன்றன் திருநாடே. 2 நீர்நிலந்தீ கால்வானுய் நின்றபிரான் சிறியேன ஒர்கணமும் பிரிவறியான் உத்தமர்தஞ் சிந்தையான் கார்நிற மேனியனுங் கமலனுங் காண்கிலான் சீர்பெறுரஉ மிலங்கையென் திருநாடு கண்டுகொளே. 3
பொறிவழிபோ யலையாமற் பூவுலகிற் காத்தபிரான் அறிவுக் கறிவானன் ஆரணமு மறியகில்லான் குறிகுணங்க ளற்றவொன்றைக் கும்பிடுவோ மெப்போதும் செறிபொழில்குழிலங்கையே சிறியேன்றன் திருநாடே. 4 முற்ருத பின்மதியம் முடிதனிலே வைத்தபிரான் அற்ருர்க்கு மலந்தார்க்கு மருள்புரியு மம்பலவன் நற்ரும ரைப்பாதம் நாள்தோறுங் கைதொழுவார் வற்ருத வளஞ்செறியு மிலங்கையென் திருநாடே. 5
Page 123
236 நற்சிந்தனை திங்கட் சடையாய் எங்களை யுடையாய் சிவனே ஓம்
திங்கட் சடையாய் எங்களை யுடையாய் சிவனே ஒம்
சீரிய அடியார் சிந்தையி லுறையுஞ் செல்வா ஓம் மங்கையை யுடையாய் மழவிடை யானே மாதவனே ஓம்
மண்ணும் விண்ணும் ஒன்ருய் விளங்கும் மணியே ஒம் அங்கையி லங்கி தங்கிய பரனே யரனே ஒம்
ஆருயி ரெல்லாம் நீயே யாகி யமர்ந்தாய் ஒம் கங்குலும் பகலும் இல்லாக் காட்சி தருவாய் ஒம்
கருதும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம்.
சிறையார் வண்டறை கொன்றைப் போதனே சிவனே ஒம்
சீவன் சிவனுய்ப் பாவனை செய்வார் திருவே ஒம் குறையா வன்பு தரவே வருவாய் குருவே ஒம்
கூடிக்கூடி யுன்னடி பாடல் கொடுப்பாய் ஒம் . பிறையார் சடையாய் பேரா யிரமே யுடையாய் ஒம் பேசப் பேச வின்பம் பெருகும் பிரானே ஒம் அறையார் கழலே யல்லாற் சிறியே னறியேன் ஒம்
அன்புசெய் யடியரை யென்றும் ஆளக் கடவாய் ஒம். 2
கல்லாப் பிழையுங் கருதாப் பிழையும் பொறுப்பாய் ஒம்
காலனைக் காலாற் முக்கிய பரனே யரனே ஒம் எல்லாஞ் செய்ய வல்லபம் உடையாய் எந்தாய் ஒம்
எழில்சேர் நல்லை வாழும் குருவே யிறைவா ஒம் பொல்லா வினைகள் போகும் வண்ணம் புரிவாய் ஒம்
பூவார் மலர்கொண் டடியார் போற்றும் பொருளே ஓம் எல்லா முன்செய லாமெனும் எண்ணந் தருவாய் ஒம்
ஏத்தும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம். 3
மாறிப் பொறிவழி போகா மனத்தார் இனத்தாய் ஒம் மாலோ டயனுங் காணு ஒளியே மணியே ஒம் ஆறும் பிறையுஞ் சூடிய ஐயா மெய்யா ஓம்
ஆதியு மந்தமு மில்லாய் உள்ளாய் அறிவே ஒம் தேறித் தெளிவார் சிந்தையி லூறும் அமுதே ஒம்
செயசெய வென்று பணியும் தேவர்கள் தேவா ஓம் கூரிய சூலப் படையினை யுடையாய் கோவே ஒம்
கும்பிடும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம், 4
நற்சிந்தனை 237
போற்றியென் வாழ்முத லாய பொருளே யருளே ஓம்
புண்ணியர் நண்ணும் பூரண வடிவே புகலே ஓம் தோற்ற மறைக்குங் காரண மாகிய தொல்லோய் ஒம்
சோதிச் சுடரே தோகைக் கிடமி துணையே ஓம் நீற்ருெடு பொலியும் நெற்றிக் கண்ணு நிமலா ஓம்
நீதி வழுவா மாதவர் தங்கள் நெறியே ஒம் ஆற்ருெடு தும்பை யம்புலி சூடிய யரனே ஓம்
அன்புசெய்யடியரை யென்றும் ஆளக் கடவாய் ஒம். 5
ஆநந்த நடனம் ஆடினன் பல்லவி ஆநந்த நடனம் ஆடினன் அல்லும் பகலும் நல்லூர் வீதியிற் செல்லப்பன்.
அநுபல்லவி
மோனந் திகழுஞ்சிவ யோகியர்தா மறியார் முழுவது முண்மையென முகமலர்ந் தோதுவான். (ஆநந்த)
சரணங்கள்
ஈனந் தரும்பிறவி யெடுத்தெடுத் துழலாமல் என்னைவந் தாண்டுகொண்டான் இன்பத்தில் மாண்டு
கொண்டேன்
தானந் தவமிரண்டுஞ் சரியை கிரியைவிண்டும் சதுர்வித வுபாயத்தாலே தானுக வென்னைச்செய்தான்.
(ஆநந்த) 1
முன்னிலை யில்லையென்றும் முழுவது முண்மையென்றும் மூடிய மாயவிருள் ஒட வருள்புரிந்தான் அந்நிலையி லேயுட லாவியவன் வசமாச்சு . . ஆகா அதையறிவார் ஆர்தானிவ் வையகத்தில் (ஆநந்த) 2
Page 124
238 நற்சிந்தனை
ஒளவையார் திருமொழி அறஞ்செய விரும்பென ஒளவையார் தந்த
சிறந்த திருமொழி தீவினை தெறுமே. 1 ஆறுவது சினமெனு மரிய மந்திரங் கூறுவார் நாவிற் குலவுஞ்சொல் லணங்கே. 2 .
இயல்வது கரவே லெவரே யாயினும் பயில்வுறப் பயில்வுறப் பாவங் கெடுமே. 3
ஈவது விலக்கே லெல்லாந் தந்து ܚ சேவைகள் செய்யத் திறங்கொடுக் கும்மே. 4 உடையது விளம்பே லுணர்வார்க் கெல்லாந் தடையிலா வான்ம சக்தியீ னும்மே. 5 ஊக்கமது கைவிடே லூழ்வினை நீக்கும் தேக்குமா னந்தஞ் சித்தியுந் தருமே. 6
"Чыгымы
LGOofluGIT 6TsiT LOGDSLO
நித்தியர்நா மென்னும் நினைவுதடு மாருமற் பத்திபண்ணிப் பாடிப் பணியவா என்மனமே.
முத்திக்கு வித்தை முனையில்வைத்துச் சீராட்டித் தித்திக்குந் தேனருந்தச் சீக்கிரம்வா என்மனமே, 2 அத்துவி தப்பொருளை யருந்தவர்கட் காரமுதைச் சித்தத்துட் கண்டு தெளியவா என்மனமே. 3 எத்திக்கு மாகி என்னிதயத் தேவாழும் தத்துவத்தைக் கண்டு சலிப்பறவா என்மனமே. 4 சித்திதருந் தேவாய்த் திகழும் பரம்பொருளின் வித்தகத்தாள் வாழ்த்த விரைந்துவா என்மனமே, 5 உத்தமர்கள் போற்றும் ஓங்காரத் துட்பொருளைப் பத்தியொடு பாடிப் பணியவா என்மனமே. 6
நற்சிந்தனை 239 ܀
தன்னை யறிந்தோமே
தன்னை யறிந்தோமே-கிளியே தவத்தி லுயர்ந்தோமே பின்ன மிறந்தோமே -கிளியே பெருமா னருளாலே எம்மை நிகராவார் - கிளியே எவரு முலகிலில்லை செம்மை மனத்துடனே-கிளியே சிவன்பாதம் நினைப்போமே இம்மை மறுமைக்கும் - கிளியே எவரும் இணையில்லை அம்மையு மப்பனுமே - கிளியே ஆம்துணை நீயறியே.
நல்லூர் வெளியில்
நல்லூர் வெளியிலே பொதுநடம் புரிகிருன்
நங்கள்குரு நாதன் வாங்கும் பிரகாசன்
எல்லாரை யுந்தன் னிடத்திலே காண்பவன்
இயம நியமங்களில் எள்ளளவு மோபிசகான்.
பொல்லாப்பிங் கில்லையென்று போதனை செய்வான் புகழ்ச்சியு மிகழ்ச்சியு மொன்ருகக் காண்பவன்
செல்லப்ப னென்னுந் திருப்பெய ருடையான்
சிங்கார நடையொடு சிரிப்பினை யுடையான்.
ஆரறி வாரென அடிக்கடி சொல்லுவான்
தேரடிப் படியிலே சிங்கார மாய்க்கிடப்பான்
பேரறி வாளனெனப் பிறரெவரு மோவறியார் பித்தனென் றுலகோர் பேசுவா ரேசுவார்.
Page 125
240. , நற்சிந்தனை ஆராதனைசெய் தறிவாய் G2GOT
ஆதியு மந்தமு மில்லான்-தம்பி ஆதியு மந்தமு முள்ளான். I சாதி சமயங்க ளில்லான்-தம்பி சாதி சமயங்க ளுள்ளான். 2
ஒதி யுணர முடியான்-தம்பி ஒதி யுணரும் வடிவான். 3.
நீதி குருபர ஞனுன்-தம்பி நீர்நிலந் தீகால் வானமு மானன். 4
சந்திர சூரிய ராணுன்-தம்பி தாரா , கணங்களு மானன். 5
மந்திர தந்திர மானன்-தம்பி மருந்து மருந்து மவர்களு மானன். 6
இந்திர ராதியோ ராணுன்-தம்பி எல்லா வுலகமுந் தானே யானன். 7
இந்த வுயிருட லானன்-தம்பி இருக்கு முதலிய வேதங்க ளானன். 8 பந்தமும் வீடும் படைப்பான்-தம்பி பந்தமும் வீடுந் துடைப்பான். 9
அந்தியுஞ் சந்தியு மிதனைத்-தம்பி ஆரா தனைசெய் தறிவாய் சிவனை. 10
நற்சிந்தனை r 24
அன்னபிதாக் குருவானுன்-அரன்
அன்னை பிதாக்குரு வானன் - அரன் ஆகாய மாதி பூதங்க ளானன் என்னையுந் தன்னையும் பிரியான் --அரன் ஏக னநேகன் என்பார் பெரியோர் முன்னைப் பொருட்கெல்லாம் முன்னேன்.--அரன் மூர்த்தி தலந்தீர்த்த மாதற் குரியோன் அண்ட சராசர மெல்லாம்-அரன் ஆடலைக் கண்டு தொண்டுசெய் வோமே சண்டை யிடும்போதுஞ் சலியான்-அரன் தன்னி லையினிற் சற்றுஞ் சலியான் ஆணென்றும் பெண்ணென்று மறியான்-அரன் அப்போதைக் கப்போ தாடல் புரிவான் வீண்புகழ் தன்னை விரும்பான்-அரன் வேதாந்த சித்தாந்த சமரசந் தருவான் கூறும் நா முதலாக யாவும்-அரன் கொண்டாடு மிடமென்று கண்டுகொள் வோமே நித்திய வாழ்வினைத் தந்தான் --அரன் நீநா னென்பதை நீங்கினன் ருனே.
F6L91 GG)
மார்க்கஞ் சன்மார்க்கம் மகரிஷிகள் கண்டமார்க்கம் மார்க்கம் 1
மூர்க்கமான குணம்போக்கும் முழுதும்உண்மை யெனவாக்கும் மார்க்கம் 2 பார்க்கப்பார்க்க இன்பந்தேக்கும் பரமானந்த நிலையைநோக்கும் மார்க்கம் 3 ஆர்க்குஞ்சுதந்தி ரத்தையாக்கும் அனைவரையும் முத்தியிலேசேர்க்கும் மார்க்கம் 4 பக்திசெய்யோக சுவாமிபாட்டு படிப்பவருக்குநல்ல வழிகாட்டும் மார்க்கம் 5
6
Page 126
242 | | நற்சிந்தனை
இன்பமாய் வாழ்ந்திடடி
அங்கிங்கென் றெண்ணுதே அவனிவ்னென் றுன்னதே எங்குஞ் சிவத்தைக்கண்டு-தங்கமே இன்பமாய் வாழ்ந்திடடி. ஆசை வலையிற்சிக்கி-ஆண்டவனை நீமறந்தாய் பூசைசெய்து பொன்னடியைத்-தங்கமே பூரணமாய் வாழ்ந்திடடி. இல்லையென்றும் உண்டென்றும் எடுத்துச்சொல்ல
|- வொண்ணுத நல்லூரான் திருவடியை -தங்கமே நாடோறும் போய்வணங்கு. ஈடேற வேண்டுமென்றல் எல்லாஞ் சிவன்செயலாய் நாடோறும் வேண்டிப்பணி-தங்கமே நல்லூரான் கிருபையுண்டு.
உண்மை முழுதுமென்ற வுயர்ந்த திருவாக்கை எண்ணுமல் எண்ணிப்பணி-தங்கமே எல்லாங்கை கூடுமடி.
ஊரும்பேரு மில்லாத உத்தமனைச் சித்தத்தில் சேரும்வண்ணம் நாள்தோறும்-தங்கமே தியானஞ்செய்து வாழுவமே. என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கு மீசனென்று சொன்ன திருவாக்கே-தங்கமே சுந்தரமென் றெண்ணியிரு.
ஏழுலகும் தொழுதேத்தும் எம்பெருமான் திருவடியை
நாளும் மறவாதே - தங்கமே நானுமில்லை நீயுமில்லை.
ஐம்பூதம் நீயல்லை அறிந்திதனைக் கொள்ளுவாய்
ஆன்மாநீ மறந்திடாதே-தங்கமே ஆட்சிசெய்ய வேண்டாமடி.
2
நற்சிந்தனை X 243
ஒன்பது வாயிலுள்ள வுடம்பு சிவன்கோயில் என்பதை மறந்திடாதே -தங்கமே
ஏத்தியேத்திப் பணிந்திடடி. * . 9 ஒதுவதொ ழியேலென்ற உண்மையைநீ மறவாதே ஏதுக்கு மஞ்சாதே -தங்கமே n எல்லாஞ் சிவமயமே.
ஒளவியம் பேசாதே ஆவியுள்ள மட்டும்நீ தெய்வம் ஒருவனென்று-தங்கமே திடமுடன் வாழ்ந்திடடி. 12.
அஃகமும் காசுந்தேடி அம்புவியி லலையாதே வெஃகாதே பிறன்பொருளைத் -தங்கமே வீடுனக்குச் சொந்தமடி. 3
திருநாமத்தைச் செபித்திடடா
அனைத்துயிரும் நீயேதம்பி அதையறிந்து வாழ்ந்திடடா தினைத்துணையும் மறந்திடாமல் திருநாமத்தைச்
செபித்திடடா, 1
வினைப்பகையை வென்றிடுவாய் வேறுபொரு ளில்லையடா முனைத்துவருஞ் சினத்தை வென்றல் மூவர்களும்
a. ஏவல்செய்வார். 2
உனைப்போலே யுத்தமர்கள் உலகத்தினி லில்லையடா நினைத்தபடி நடந்திடடா நிட்டையிலே
பொருந்திடடா, 3
ஆவதில்லா அழிவதில்லா ஆன்மாவை யறிந்திடடா தேவர்களும் முனிவர்களுஞ் சித்தத்திலே திகழுகின்றர். 4
ஒருபொல்லாப்பு மில்லைத்தம்பி உண்மையே முழுதுமடா குருநாதன் கூற்றிதடா கும்பிட்டுக்கொண் டாடிடடா. 5
Page 127
244 நற்சிந்தனை எல்லாம் கடவுள் கண்டீரே கலித்தாழிசை காணுங் கண்ணிற் கலந்து நிற்பது கடவுள் கண்டீரோ ஆணும் பெண்ணு மலியு மானது அதுநீர் குறியீரோ. 1
பாரும் விண்ணு மாகி நிற்பது அதுநீர் பாரீரோ சீருந் திருவு மாகி நிற்பது அதுநீர் தெரியீரோ, 2
தாயுந் தந்தையு மாகி நிற்பது தானு வறியீரோ நீயும் நானு மாகி நிற்பது நினைந்து பாரீரோ. 3 ܢ
காயுங் கனியு மாகி நிற்பது கண்டு களியீரோ தேயு வாயு வாகித் திகழ்வது சிந்தித் துணர்வீரோ. 4
மாயும் மனிதரை மாயாது வைக்கும் மருந்தை யுண்ணீரோ பேயொடு காட்டி லாடும் பிரானைய பேதமாய்ப் பாரீரோ. 5
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ـیے
ஆன்மா நித்தியம்
ஐம்புலன் வழிபோம் ஆசை தனைத்தடுப்போம் ஆன்மா நித்தியம் என்று படிப்போம் வெம்பகையை வென்று வெற்றி எடுப்போம் வேறுபொருள் இல்லை என்றுதிடப் படுவோம் நம்பிக்கை யென்னும் கையைநாம் நீட்டுவோம் நாதாந்த நிலையில் நாம்முடி சூட்டுவோம் சும்மா இருக்குஞ் சுகத்தினைக் காட்டுவோம் சுருதி நிலையில் நிற்குஞ் சுகங்காட்டுவோம் இம்மை மறுமைதனை யிங்கு காட்டுவோம் ஏகாந்த வெளியிலே நம்மை நாட்டுவோம் தம்மைத் தாமாக உய்யவழி காட்டுவோம் சஞ்சலமில் லா வழியில் நம்மை நாட்டுவோம் தும்பிமுகன் பாதத்தைத் தோத்திரஞ் செய்வோம் சுவாமி தரிசனஞ் சூத்திரம் என்போம்.
நற்சிந்தனை 245
ஓம் தத் சத்
இருவருந் தேடிக் காணு இறைவ னென்போ
லுருத்தாங்கி இணங்கி யெவரும் வணங்கும் நல்லையில் இன்ன
னிவனென்ன ஒருவரு மறியா தோடியுலாவி யுவகை பூத்த
முகத்தினராய் ۔•
ஒருநா ளென்றனை யுற்று நோக்கிஓர் பொல்லாப்பு
மிலையென்று کیمیایی அருவமுங் காட்டி யுருவமுங் காட்டி யப்பாற் -- கப்பாலாம்
அருள்நிலை காட்டிக் காட்டிக் காட்டி யந்த மாதி
s யில்லாச்
சொரூபமுங் காட்டிச் சும்மா விருக்கும் சூட்சத்தில்
மாட்டி விட்டான்
துன்ப மிறந்தன வின்ப மிறந்தன சோதிசோதி
சிவசோதி. 1
சிவத்தினை வளர்க்கும் பாக்கிய மெமக்குச் சித்தித்த
திணிமேலே தெய்வம் வேறே யுண்டென வெண்ணுஞ் சிந்தையு
மிறந்ததுவே
அவத்தினிற் செல்லும் மனத்தினை வெல்வோம்
ஐம்பொறி வழிச்செல்லேம் அழியா மெய்ப்பொரு ளாகிய ஆன்மா அறிவோம்
w நாம் நன்ருய் தவவழிச் செல்வோம் குருமொழி கொள்வோம்
தன்னைத் தானறிவோம் சாந்தம் பொறுமை யேய்ந்த நற்பணி சந்தத
மணிந்துகொள்வோம் உவத்தலுங் காய்தலு மோடி யொளித்தன ஒன்றுங்
குறைவில்லேம் உண்மை முழுதும்நீ ஓதுக தினமும் ஓம்தத் சத்ஓம். 2
Page 128
246 நற்சிந்தனை
கதிரவ னெழுமுன் காலை யெழுந்து கைகால் முகங்கழுவு கடிமல ரெடுத்து மாலை தொடுத்துக் கடவுளைப்
பூசனைசெய் அதிர வராமுன் மனத்தினை யடக்கி ஐம்பொறி
- வழிச்செல்லாது ஆண்டவன் திவ்விய பாதத்தை வேண்டி ஆசையை
வென்றிடலாம் முதிர முதிர முழுவது முண்மை யெனமுனி
சொன்னமொழி முகமுக மாகக் கண்டு தெளிந்து முத்தியிற்
சேர்ந்திடலாம் இதிலே ஐயமில்லை யில்லை யெல்லா மவன் செயலே இரவும் பகலு மிதய வெளிக்குள் ஏத்துக ஒம்தத்சத், 3
எண்ணி யெண்ணிப் பணிவார் நெஞ்சே யீசன்
உறைகோயில் இருந்துங் கிடந்தும் நடந்துந் தொடர்ந்தும்
ஏத்திப் பணிவோமே புண்ணிய பாவ மிரண்டுங் கற்பனை போக்கொடு
வரவில்லாப் பொருளே நாங்கள் அருள்கொண் டறிநீ புத்தியை
நாட்டாதே மண்ணில் வந்து பிறந்ததும் வாழ்ந்ததும்
மாமா யையிதனை மாதவ ரறிவார் மற்றவ ரறியார் மதியா தேயிதனை எண்ணில் காலம் உயிரோ டிருப்போம் ஏதுக்கு
மஞ்சாதே இயைந்த படிநீ நடந்துகொ ளென்றும் ஏத்துக
ஓம்தத் சத் , 4
நற்சிந்தனை 247 தன்னைத் தன்னு லறிந்திடடா
அன்பேசிவ மறிந்திடடா அதுவே நாமெனத் தெரிந்திடடா என் புருகப் பாடிடடா எழுந்திரடா நடந்துவாடா எல்லாஞ்சிவ ரூபமடா.
விண்ணைப்போல விளங்கிடடா வீணுசையை விட்டிடடா கண்ணைப்போலக் காத்திடடா கருமத்தைச் செய்திடடா கலங்காமல் நடந்திடடா இலங்கையெங்கள் நாடிதடா. 2
பெண்ணுமாணு மில்லையடா பேதா பேத மில்லையடா மண்ணும்விண்ணுமொன் ருச்சுதடா மகத்துக்களின் பேச்சிதடா மகிழ்ந்துவாடா நடந்துவாடா மாநிலத்தை யாள்வோமடா . 3
தன்னைத்தன்னு லறிந்திடடா தானேதானென் றிருந்திடடா அன்னைபோல வந்தானடா அழகாரும்நல் லூரிலடா பின்னைப்பேச் சில்லையடா பெருமைசிறுமை தொல்லையடா. 4
உறுதி தருவது சிவமே உள்ளத் துணர்வது சிவமே பொறுதி தருவது சிவமே பூரண மானது சிவமே
இறுதி யிலாதது சிவமே என்னை யுடையது சிவமே கருத வினியது சிவமே காசினி யெல்லாஞ் சிவமே,
Page 129
248 நற்சிந்தனை ஒரு பொல்லாப்புமில்லை
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் உண்மை
முழுதுமென்பான் ஒருவருக்குந் தெரியாதென்பான்-சின்னத்தங்கம் ஓவியம்போல் இருந்தானடி. 4. l
அப்படியே யுள்ளதென்பான் ஆரறிவா ரென்றுசொல்வான் செப்படி வித்தையென்பான்-சின்னத்தங்கம் செல்லப்பன் என்னுஞ்சீமான். 2
கந்தைத் துணியணிவான் கந்தன்திரு முன்றில்நிற்பான் வந்தாரைப்போ வாரைவாயில் - சின்னத்தங்கம் வந்தபடி யேசிடுவான். " 3 سے
அப்படியே யுள்ளதென்பான் அங்குமிங்கு மாயலைவான் செப்படி வித்தையென்பான்-சின்னத்தங்கம் V தேரடியி லிருப்பான டி. - 4
சாதி சமயமென்னுஞ் சங்கடத்துக் குள்ளாகான் சேதியொன்றுஞ் சொல்லகில்லான்-சின்னத்தங்கம் சித்தப் பிரமையென்பார் (எல்லோரும்). 5
நீதி யநீதியென்னும் நிலைமையொன்று மில்லாதான் மாதிரிகள் ஒன்றுஞ்செய்யான்-சின்னத்தங்கம் மத்தனைப்போல் திரிவான டி. 6
நீறு மணியான் நெற்றியிலே பொட்டுமிடான் கூறிய தைக்கூருன்-சின்னத்தங்கம் குணமொன்று மில்லான டி. 7
ஆறுதலா யிருமென்னன் ஆணவத்தை நீக்குமென்னன் மாறுபாடாய்ப் பேசிடுவான்-சின்னத்தங்கம் மதியிழந்தான் என்பாரடி. 8
நற்சிந்தனை 249
சின்னத் தனமாய்த் தெருவாலே போவாரை என்னப்பன் பேசிடுவான்-சின்னத்தங்கம் - இவன்விசரன் என்பாரடி h 9 உல்லாச நடையனடி ஊரூராய்த் திரிவனடி எல்லோரு மிவனைக்கண்டு - சின்னத்தங்கம் ஏளனஞ் செய்வாரடி. 10
பத்துப்பாட்டுப் படிப்போரும் கேட்போரும் பாரினிலே வித்தகராய் வாழ்ந்துபின்னே - சின்னத்தங்கம் விதேகமுத்தி சேர்வாரடி. 11
அங்கு மிங்கு மெங்கும் ஓடாதே
அங்கு மிங்கு மெங்கு மோடாதே
ஆன்மாநித் தியமதைத் தேடாதே. பொங்கும் காமக் குரோதமதம் போக்காயோ பூரண நிட்டையிலே தேக்காயோ. - 2 தங்குஞ் சிவயோ கத்தைத் தேராயோ தன்னைத்தன் ஞலறியப் பாராயோ . 3 மங்கள மான வார்த்தை பேசாயோ மன்னுயிரைத் தன்னுயிர்போற் பாராயோ . 4 உன்னை யுனக்கொரு போதும் ஒளியாதே ஒருபொல் லாப்புமில்லை யறிவாயே. 5 செந்நெலுடன் கன்னல் எங்கும் மல்கும் சீர்பெருகும் நல்லூரில் கல்லும். 6 கரைய வொருசொற் சொல்லுஞ் செல்வன் கழலடியை மறவாமற் சொல்லு, 7
செல்வம் அது பெரிய செல்வம் சிவசிவ என்றுநீ சொல்லு , 8 துள்ளும் மனத்தை யென்றும் வெல்லு சும்மா விருக்கும்நிலை நில்லு. 9
Page 130
250 நற்சிந்தனை Guoli Liquiffe,6ir Qib
கடவுளை யெங்குங் கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம் காமக் குரோத மோகம் நீக்குவர்
மெய்யடியார்கள் ஓம். 1
திடமுடன் தியானஞ் செய்து களிப்பார்
.” . மெய்யடியார்கள் ஒம்
தீவினை நல்வினை கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம். 2
படமுடியாத துயரம்வரினும் கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம்
பாரும்விண்ணு மொன்ருய்ப் பரவுவர்
மெய்யடியார்கள் ஒம், 3
நடமிடுந் திருவடி கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம்
நமச்சிவாய வாழ்க வென்று நவில்வர்
மெய்யடியார்கள் ஓம். 4
ஆதியு மந்தமும் நமக்கிலை யென்பார்
மெய்யடியார்கள் ஓம் அன்புசெய் பத்தரை யென்றும் மறவார்
சிவனடியார்கள் ஒம். 5
சாதி சமயப் பற்றினை விட்டார்
மெய்யடியார்கள் ஒம்
சந்ததம் மோன நிலைதவ ருதார்
மெய்யடியார்கள் ஒம். 6
மாதிரி யொன்றுஞ் செய்யா ருலகில்
மெய்யடியார்கள் ஒம்
மன்ன இளமை யென்றும் மகிழார்
மெய்யடியார்கள் ஓம். 7
நற்சிந்தனை 251
ஒதி யோதி யுன்மத்த ராவார் *
மெய்யடியார்கள் ஓம் உண்மை முழுதும் என்று சொல்வார்
மெய்யடியார்கள் ஒம் . 8
ஆணும் பெண்ணு மலியு மறியார்
. மெய்யடியார்கள் ஓம் அரகர சிவசிவ வென்று மகிழ்வார். . . . . .
சிவனடியார்கள் ஒம். 9
காணுங் கண்ணிற் கலந்த தென்பர்
சிவனடியார்கள் ஒம்
கங்குல் பகலற்ற கரட்சியைக் காண்பார்
சிவனடியார்கள் ஓம். 10
பேணும் பிறப்பிறப் பில்லை யென்பார்
மெய்யடியார்கள் ஒம் பேயர் பித்தர் போல விருப்பார்
மெய்யடியார்கள் ஒம், 11
நாணும் நன்னெஞ்சில் வஞ்சகந் தீர்ப்பார்
மெய்யடியார்கள் ஒம் நாதன் நாம நமச்சி வாயவென்பார்
மெய்யடியார்கள். ஓம், 12
ஆவதும் மழிவதும் இல்லை யென்பார்
- மெய்யடியார்கள் ஒம் அஞ்சும் மூன்று மொன்ரு யறிவார் . .
மெய்யடியார்கள் ஒம், 13
போவதும் வருவது மில்லை யென்பார்
மெய்யடியார்கள் ஒம் புன்னெறி செல்லும் மனத்தை வெல்வார் ”
14 .மெய்யடியார்கள் ஒம் ۔۔۔۔
தேவரும் முனிவருஞ் சித்தரு மறியார்
மெய்யடியார்கள் ஒம்
சிவசிவ வென்று தினமுந் துதிப்பார்
மெய்யடியார்கள் ஓம். 15
Page 131
252 நற்சிந்தனை
தேவ தேவனை யென்றுந் துதிப்பார்
சிவனடியார்கள் ஒம்
தீவினை செய்வார் தம்மையு மிகழார்
சிவனடியார்கள் ஒம், 16
ஐம்பொறி வழிபோ யவனியி லலையார்
மெய்யடியார்கள் ஒம் ஆணவந் தன்னை யழித்திடு வார்கள்
மெய்யடியார்கள் ஓம். 17
ஐந்து மடக்கா வறிவு பெற்ருர்
மெய்யடியார்கள் ஓம்
ஆசை வழிபோய் மோசம் போகார்
மெய்யடியார்கள் ஓம். 18
வந்தது போனது மனத்தே வையார்
மெய்யடியார்கள் ஓம்
வாணுள் ஆசை, பேணு திருப்பார்
மெய்யடியார்கள் ஓம். 19
நைந்துநைந் துருகி நமனை வெல்வார்
சிவனடியார்கள் ஒம் நாளுங் கோளும் மனத்தில் வையார்
சிவனடியார்கள் ஓம். 20
அந்த விதமே தோற்றின னுலகில்
அறிவார் சிவதொண்டன் ஒம் அவனியில் நாளும் வளர்மதி போல
வாழ்க சிவதொண்டன் ஓம். 21
எந்தச் செயலுஞ் சிவன்செயல் என்பார்
சிவனடியார்கள் ஒம் எளிதா யெவர்க்கு மின்னுரை சொல்வார்
எழிலார் சிவதொண்டர் ஒம். 22
நற்சிந்தனை 253
காயமே கோயில்
நிலைமண்டல ஆசிரியப்பா காயமே கோயில் கடிமன மடிமை நேயமே பூசை நீயிதை யறிந்தே உபாயமாய் நடந்தா லுனக்கொரு குறைவிலை ஆயநான் மறையும் இப்படி யறையும் எள்ளள வேனும் பிரியா இறைவனைக் கள்ள மனத்தவர் காண மாட்டார் உள்ளமே கோயில் உயிரே விளக்கு உள்ள வுள்ள உண்மை யுதிக்கும் பகைவ ருறவோ ரென்று பகரும் வகையை நீக்கிச் சிவசிவா வென்ன உவகை யுன்னை விழுங்கிக் கொள்ளும் தகைமை யிதுவே சாதனை செய்யே சாதனை செய்வோர் தன்னை யறிவார் பேதபுத் தியைப் பெம்மா னருளால் நீர்மேற் குமிழியில் வாக்கை வாழ்வே ஆதலா லன்பர் பணியே யறமாம் பணியப் பணியப் பாவ மகலும் அணிமா வாதியாம் சித்திக ளெய்தும் பிணியு மகலும் பேரின்பம் வாய்க்கும் துணிவுண் டாகும் சொல்லொணுச் சுகமே எல்லா வுயிரையுஞ் சிவனென வெண்ணி நல்லறம் புரிவோர் நாடுவார் பரகதி அல்ல லறுப்பார் ஆனந்தம் பெறுவார் தில்லை நடேசனைச் சேருவார் திண்ணமே உடல்பொரு ளாவியுன் னடைக்கல மென்றே திடமுட னெப்புக் கொடுப்போர் தமக்கு நடராஜ வள்ளல் நளினபொற் பதத்தை உடனே கொடுக்கு முண்மை யிதுவே ஒடவும் வேண்டாம் உலரவும் வேண்டாம் பாடவும் வேண்டாம் பணியவும் வேண்டாம் தேடவும் வேண்டாஞ் சிந்திக்க வேண்டாம் ஆடகப் பொன்னடி சூடிய காலை ஒழுக்க முயிரினு மோம்பப் படுமென வழுத்திய பெரியவன் மறைமொழி தன்னை அழுத்த வழுத்த ஆனந்த வீசுரன் வழுத்தொணு மலரடி நாடிவாழ் வோமே
Page 132
254 - நற்சிந்தனை
மோன நிலை நீங்காதே
அங்கிங் கலையாதே-அகப்பேய் ஆண்டவன் அருள்பெறவே எங்குமவன் காணடி-அகப்பேய் ஏத்தியேத்தித் துதிப்பாய்.
பொன்னுசை மண்ணுசை-அகப்பேய் புத்தி சிதைக்குமடி மன்னன மன்னவனை - அகப்பேய் . மனத்து நினைத்திடடி. 2
கொஞ்சம் கொஞ்சமாய் மனத்தைக் கொண்டுவா சித்தப்படி
அஞ்சாதே யொருவருக்கும் - அகப்பேய்
ஆண்டவன் உன்னுளடி.
துஞ்சாதே தூங்காதே - அகப்பேய் துரியநிலை சாரடி ஒன்றுமற நில்லடி-அகப்பேய் ஒமென்று செபித்திடடி. 4.
பண்டுசெய் வல்வினைநோய்-அகப்பேய் பாரில் பறக்குமடி மிண்டு மனம்விடடி-அகப்பேய் வேதாந்த நெறிநில்லடி. 5
என்று மிருந்தபடி-அகப்பேய் இருந்தபொருள் நீதான்டி குருநாதன் சொல்லை - அகப்பேய் தூய்மையாய்ப் போற்றிடடி. 6
தானன தத்துவன - அகப்பேய் சார்ந்து நீ வாழ்ந்திடடி மோனநிலை நீங்காதே - அகப்பேய் முத்தியுன் கைவசமே. 7
நற்சிந்தனை 255
நன்றென்றுந் தீதென்றும்-அகப்பேய் நாட்டிமலை யாதேயடி கொன்றென்றும் புசியாநே- அகப்பேய் குருபாதம் போற்றிடடி. 8
கண்டாரு மில்லையடி அகப்பேய் காணுரு மில்லையடி முன்னுமில்லைப் பின்னுமில்லை-அகப்பேய் மூவரில்லைத் தேவரில்லை. 9
கஞ்சாஅபின் தின்னதே-அகப்பேய்
கருணை அகத்தேயடி பஞ்சாட்சரத்தை நெஞ்சில்-அகப்பேய்
பக்குவமாய்ப் போற்றிடடி. 10
குரு பக்தி
குருபக்தி யேபெரும் பேறு கொண்டாடிக் கொண்டாடி ஆறு. தரும நிலையிலே ஏறு சங்கர சிவனேயென்று கூறு. : 2 ஒருபொல்லாப்பு மில்லையென்று தேறு உண்மை முழுதுமென்று கூறு 3
திருவருளை நாடிநீ செல்லு சிவாயநம வென்றுநீ சொல்லு, 4 தன்னைத்தன் ஞலறிய வேண்டும் சாந்தம் பொறுமையுன்னில் தோன்றும் . 5 பின்னை யுனக்குத்துணை நீயே பேதா பேதமெல்லாம் அணையே. 6
முன்னைவினை யென்றும்நினை யாதே மூவாசை போக்கநிலை வாயே. 7
Page 133
256
w நற்சிந்தனை ஆனந்தக் கூத்தாடினன்
பல்லவி ஆனந்தக் கூத்தாடினன் தொண்டன் ஆனந்தக் கூத்தாடினன் தொண்டன்.
அநுபல்லவி தானதாம் என்றுபாடி சாந்தம் பொறுமைகூடி. (ஆனந்த)
சரணங்கள்
மோனந் தனைத்தேறி
முழுதுமுண்மை யென்றுகூறி. (ஆனந்த) 1 வேதாந்த நிலைமேவி . . வேறில்லை யெனக்கூவி (ஆனந்த) 2 தாதா தரிகிடதோம் ஜனதஜனத தீமென்று. (ஆனந்த) 3
ஒடுங்குவதாங்கே
உலக முதித்தது மாங்கே-இந்த உலக முதித்து ஒடுங்குவ தாங்கே. . . . I சலன முதிப்பது மாங்கே-இந்தச் சலன முதித்து ஒடுங்குவ தாங்கே. s நீர்நிலம் தீகாற்று மாங்கே-நெடு வானெடு சந்திர சூரியர் ஆங்கே. 3. சீர்பெறு சித்தரும் ஆங்கே-நல்ல தேவரும் முனிவரும் பக்தரும் ஆங்கே.
இல்லையுண் டென்பது மாங்கே-எங்கும் ஏது மறியாமல் நிற்பது மாங்கே. 5 வல்லாரும் மாட்டாரும் ஆங்கே-வளம் வாய்ந்த இலங்கையில் வாழ்வாரும் ஆங்கே, 6
நற்சிந்தனை 257
அவனே நான் இராகம்-பைரவி. தாளம்-ஆதி
su sübsbwâ
அவனேநா னென்று சொல்லித் தியானஞ்செய்
வாய்தினமும் ஆசையெல் லாமொழியும் ஈசனருள் பொழியும்
அநுபல்லவி
அஞ்சாதே அஞ்சாதே பஞ்சாய்ப் பறக்கும் பாவம் பஞ்சாட்சரத்தை நெஞ்சில் துஞ்சாமலே செபி. (அவனே)
சரணங்கள்
கொஞ்சங் கொஞ்சமாய் மனத்தைக்
கூடுமட்டு மடக்கு குருநாதன் திருவடியைக் கும்பிட்டு நீதொடக்கு கோபம் பொருமை தள்ளு கொலை களவை எள்ளு கூடிப் பாடி யாடு சிவனடி யாரோடு. (அவனே)
ஆதியோ டந்தமில் லாதவான் மாவென்று அடிக்கடி நீபடி துடிதுடிப் பாய்நடி அயலுனக் கில்லை ஆரறி வார்நல்லை ஆசான் சொன்னமொழி முழுவது முண்மை. (அவனே)
பலபல வானசித்தி பாரினிற் கைகூடும் பத்திநெறி விட்டிடாதே பத்தர்சொல்லைத் தட்டிடாதே பைரவி ராகம்பாடிப் பணிசெய்யும் யோகசுவாமி பாவமெல் லாமோடப் பாரினில் ஈடேற. (அவனே)
17
Page 134
258 நற்சிந்தனை எல்லாகும் வாழியடா
ஒருபொல் லாப்பு மில்லையடா-தம்பி உண்மை முழுதும் அறிந்திடடா வருவதைக் கண்டு மகிழாதே-தம்பி வஞ்சகப் பேச்சைத் தழுவாதே. -
கருமத் தைக்கை நெகிழாதே-தம்பி கவலை கொண்டு கலங்காதே தரும நெறியில் வழுவாதே-தம்பி தன்னை யறிய எழுவாயே. 2
அகர முதல எழுத்தெல்லாந்-தம்பி அதுபோல் ஆதி யுலகுக்கடா பகரில் அவனே ஒருவனடா-தம்பி பலபல வாகச் சொல்வாரடா. 3
கற்றதனற் பயன் இல்லையடா-தம்பி கழல் அடியிணை கண்டிடடா வெற்றிப் பேச்செல்லாம் விட்டிடடா-தம்பி விதியை மதியால் வென்றிடடா. 4
பொறி வழியினிற் செல்லாதே-தம்பி போனதை யெண்ணிக் கொள்ளாதே கிறியுங் கீழ்மையுஞ் செய்யாதே-தம்பி கெட்டவர் மேல்நட்பு வையாதே. 5
புத்தியை ஒன்றிலும் நாட்டாதே-தம்பி புகழும் இகழுஞ் சூட்டாதே - எத்தொ ழிலைநீ செய்தாலுந் -தம்பி
ஈசனுக் கர்ப்பணம் பண்ணிடடா. 6
வித்தாரப் பேச்சையும் விட்டிடடா - தம்பி விருப்பு வெறுப்பை யகற்றிடடா செத்தாரைப் போலத்தி ரிந்திடடா -தம்பி சீவன் சிவனென்ற நிந்திடடா, 7
நற்சிந்தனை 259
நிகரொ ருவரும் இல்லையடா-தம்பி நின்ற நிலையிற் பிரியாதே
ஆன்மா நாங்கள் அறிந்திடடா தம்பி ஆக்கை நாமன்று தெரிந்திடடா- 8
வீண்பா வனையெல்லாம் விட்டிடடா-தம்பி வேத நெறியிலே தொட்டிடடா காண்பான் காட்சியு மில்லையடா-தம்பி காணப் படும்பொரு ஸ்ரில்லையடா. 9
வாழி குருநாதன் வாழியடா - தம்பி வாய்மை யடியாரும் வாழியடா கேளிருஞ் சுற்றமும் வாழியடா -தம்பி கேட்டவ ரெல்லாரும் வாழியடா. 1. )
--a
பார்க்கு மிடமெங்கு மந்தப் பரமவஸ்து பாவியென்று சொல்லாதே எவரையும் - நீ பார்க்கு மிடமெங்கு மந்தப் பரமவஸ்து கூவியழைத் திடுவாய் என்றுஞ்-சிறு குழந்தையைப் போலநின்று கும்பிட்டுக் கொள்வாய் கோபம் பொருமையை நீதள்ளு-பொல்லாக் குடிவெறியை மோகத்தை நீயெள்ளு தாபதர்தம் சங்கத்தை நீநாடு-தன்னைத் தன்னு லறிந்த பெரியோரைக் கூடு குருவான நல்லூரிற் செல்வன்-உள்ளங் குளிர வைத்தான் நாணுெரு புல்லன் வெட்ட வெளியில் என்னை விட்டான்-நல்லூர் வீதியிலே தன் கரத்தால் தொட்டான் அட்டாங்க யோகமெல்லாம் விட்டேன்-அங்கே அடியார்க் கடியனய் ஆட்பட்டேன்.
Page 135
260 நற்சிந்தனை
தங்கப்பாட்டு
காயமே கோயிலடி தங்கமே தங்கம் கடவு னிருப்பிடங்காண் தங்கமே தங்கம் மாயம னத்தைவெல்லு தங்கமே தங்கம் மற்றுப்பற்றை நீக்கிவிடு தங்கமே தங்கம் உபாய மதுவாகுந் தங்கமே தங்கம் உண்மை முழுதுமடி தங்கமே தங்கம் ஒருபொல்லாப்பு மில்லையடி தங்கமே தங்கம் உறுதி யெழுதிக்கொள் தங்கமே தங்கம் அப்படி யுள்ளதடி தங்கமே தங்கம் ஆரறிவார் பாரினில் தங்கமே தங்கம் எப்பவோ முடிந்ததடி தங்கமே தங்கம் ஏகாந்த மாயிரடி தங்கமே தங்கம் செப்ப முடியாதடி தங்கமே தங்கம் செல்லப்பன் திருவாக்குத் தங்கமே தங்கம் ஒப்பற்ற வாக்கடி தங்கமே தங்கம் உடம்பை மறந்துவிடு தங்கமே தங்கம் அப்பிலுப்புச் சேர்ந்தாற்போல் தங்கமே தங்கம் ஆண்டவனில் கரைந்துவிடு தங்கமே தங்கம் வெப்பந்தட்ப மில்லையடி தங்கமே தங்கம் வேதாந்த நெறிநில் தங்கமே தங்கம் அப்பனு மம்மையுந் தங்கமே தங்கம் அகத்திலே வாழ்கின்ருர் தங்கமே தங்கம் ஒப்புரவாய் நடந்திடடி தங்கமே தங்கம் ஒருகுறையு மில்லையடி தங்கமே தங்கம் கைப்போது மலர்கொண்டு தங்கமே தங்கம் கழலடியைப் போற்றிடடி தங்கமே தங்கம் முப்போதும் முடிசாய்த்துத் தங்கமே தங்கம் மூர்த்தியைப் பணிந்திடடி தங்கமே தங்கம் அப்போதைக் கப்போது தங்கமே தங்கம் அருள்வடிவங் காட்டுவான் தங்கமே தங்கம் தப்பேதுஞ் செய்யாதே தங்கமே தங்கம்
நற்சிந்தனை 261
தனித்திருந்து பார்த்திடடி தங்கமே தங்கம் அப்பாலுக் கப்பாலே தங்கமே தங்கம் ஆருமறி யாரடி தங்கமே தங்கம் அப்புசுவாமி தன்சொல்லைத் தங்கமே தங்கம் அகத்தில் மற வாதேயடி தங்கமே தங்கம்
சிவ சிவா
சீரான வடியரொடு கூடு - சிவசிவா செல்லப்பன் தந்த மந்திரம் நாடு. (ரோ) ལ་ ஆராய்ந்து கருமத்தை யாற்று - சிவசிவா
அனைவரையு மன்பாய் உலகத்தில் போற்று. (சீரா) ஆரென்ன சொன்னலும் வாது-சிவசிவா - ஆணவத்தை யுண்டாக்குந் தீது, (சீரா)
பாரெல்லாம் பகைத்தாலுஞ் சிறிதும் - சிவசிவா பதையாம லிருப்பதே மிகவும் பெரிது. (gèrnr)
3.
சீவனே சிவமென்று பெரியோர் -சிவசிவா செப்பிய மொழியை ஒப்புக்கொள் ளறிவாய். (சீரா)
ஆவது மழிவதும் உண்டோ - சிவசிவா ஐம்புலனை வென்றவர்கள் நன்முக அறிவார். (சீரா)
கருமஞ் சிதையாமல் உலகில்-சிவசிவா கண்ணுேட வேண்டும்நீ கருது. (gitnr ,
அருமையி லருமையெங்க ளான்மா--சிவசிவா அதையறிந்து வாழ்வதே மாண்பாம். (சீரா) அங்கிங் கென தபடி நாங்கள்--சிவசிவா அம்புவியில் வாழ்வதே பாங்கு. , (சீரா)
காங்குநீ யங்குநா னென்று-சிவசிவா எங்கள்குரு ஒதினுன் நன்கு. m (go trT).
Page 136
262 நற்சிந்தனை
மெய்ப்பொருளை ஒன்றெனக் கும்பிடுவாய் இராகம்-கமாஸ். தாளம்- ஆதி
பல்லவி ஒன்றெனக் கும்பிடுவாய் மனமே யிந்த உலகுயிர் பரமென ஒளிரும்மெய்ப் பொருளை
- ஒன்றெனக் கும்பிடுவாய்.
அநுபல்லவி உண்டில்லை யென்றெவரும் ஒதமுடி யாததாய் பண்டுமின்றும் என்றும் அப்படி யுள்ளதாய்
-ஒன்றெனக் கும்பிடுவாய்.
சரணம் V நன்றுக்குந் தீதுக்கும் நடுவாய் உள்ளதாய் ஞான யோக தியானத்தில் வருவதாய் கன்றிய காமனக் கண்ணுல் எரித்ததாய் கால காலனைக் காலால் உதைத்ததாய்
- ஒன்றெனக் கும்பிடுவாய்"
எங்கு தேடினுய் இறைவனை
பல்லவி
எங்குதேடினய் இறைவனைநீ இங்கு காணுமல் (எங்கு)
சரணங்கள்
அங்குமிங்கும் ஒடியே அவதிப்படுகிருய் பங்குபோட்டுப் பார்க்கிருய் பரிதவித்து வாடுகிருய் (எங்கு) எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றுவாதுபேசுகிருய் சாதி சமயமென்று சண்டைப் படுகிருய் தத்துவத்தை யறியாமல் சங்கடப்படுகிருய் ஒதியு முணராமல் உண்மை யறிந்தவன்போல் ஊரெங்குஞ் சென்றுநீ பிரசங்கம் பண்ணுகிருய் எங்கு)
நற்சிந்தனை
சற்குரு தரிசனம்
garnt sub - FrLDIt தாளம்-ஆதி
பல்லவி
சற்குரு தரிசனம் சகலபாக்கிய சுகம்
தாளினை பணிநீ தினம். - அநுபல்லவி தாந்தன்னை யறியுமே சாந்தமுஞ் செறியுமே
சரணங்கள் பேரன்பு பெருகிவிடும் பேதைமை கருகிடும்
பிரியாப் பிரியமெல்லாம் பேசாம லகன்றிடும்.
ஆகம விதிமுறை அகத்தினில் பொருந்திடும் ஆசாபாச மகலும் நேசானு பூதிவரும். தேவாதி தேவர்களுஞ் செய்வார் பணிவந்து
சீவன் சிவனென்னுந் தெளிவுமுண் டாகுமே.
ஆநந்தக் களிப்பு
சங்கர சங்கர சம்பு-சிவ சங்கர சங்கர சங்கர சம்பு.
ஒருபொல் லாப்பு மில்லையெனவே-முன்னுள்
ஒதினன் உண்மை முழுது மெனவே பருவத்தில் மழைபெய்தாற் போல-ஐயன் பந்தத்தை நீக்கி வளர்த்தானன் பாலே அருவமு முருவமு மானன்-என்னை ஆட்கொள்ள வந்தான் நல்லூரிற் ருஞய் கருவிக ரணங்க ளெல்லாம்-தத்தம் கருமத்தை விட்டுக் காவலுக் குள்ளாய் வருவதும் போவது மின்றித்-தூய மெளன நிலையில் நிலைத்தது தானே ஆரு மறியா ரெனவே-அப்பன் அப்படி யுள்ளதென் முனறி வாயே.
263
(சற்குரு)
(சற்குரு)
(சற்குரு)
(சற்குரு)
(சங்கர)
(சங்கர)
(σε Ιάι 5μ)
(சங்கர) (சங்கர)
(சங்கர :
Page 137
264 நற்சிந்தனை சும்மா விருந்துபார் தம்பி
நல்ல சமயமிது தம்பி w நம்மைநா மறிந்துகொள்ளத் தம்பி. எல்லார்க்கும் நன்மைசெய் தம்பி இறைவனுன் னிடமுண்டு தம்பி. 2 கொல்லாதே கோபம்வை யாதே
கும்பிடு காலைமாலை தம்பி. 3.
சொல்லாலே பயனில்லைத் தம்பி சும்மா விருந்துபார் தம்பி. 4 கண்ணல்லக் காதல்லத் தம்பி கண்ணுக்குக் கண்ணெடா தம்பி. 5 எண்ணிலடங் காதெடா தம்பி எல்லா மதுவெடா தம்பி. 6
மண்ணுசை வையாதே தம்பி மற்றிரண்டும் அப்படியே தம்பி. 7
ஒன்றுக்கு மஞ்சாதே தம்பி ஒடி ஒளியாதே தம்பி. 8
பண்டுமின்றும் உள்ளதெடா தம்பி பாடிப் பணியெடா தம்பி. 9
அகம்பிர மாஸ்மியென்று தம்பி அனுதினமுஞ் சாதனைசெய் தம்பி. 10
இகலோகம் பரலோகந் தம்பி இங்கேரீ கண்டுகொள்வாய் தம்பி, 11
நற்சிந்தனை 265
அங்கும் இங்கும் எங்கும் நான்
அங்கும் இங்கும் எங்கும் நான் அதை யறியும் விசரன் நான் (1)
பங்கு போட்டு வணங்க மாட்டேன் பாவ புண்ணியம் அறிய மாட்டேன் (2)
மங்கள மாகப் பேச மாட்டேன் மாய வாழ்வை மதிக்க மாட்டேன் . (3)
பொங்கல் பூசை செய்ய மாட்டேன் போனதை யெண்ணிக் கலங்க மாட்டேன் (4)
மங்குவார் செல்வம் மதிக்க மாட்டேன் மாய வித்தை காட்ட மாட்டேன் (5)
சிங்கக் குட்டி போல நடப்பேன் தீயா ரோடு கூட மாட்டேன் (6)
எங்கும் என்றன் தங்கும் வீடு ஏற்ப திகழ்ச்சி என்ன மாட்டேன் (7)
சிங்களவர் தமிழரைக் காண மாட்டேன் சின்னம் ஒன்றும் போட மாட்டேன் (8)
தங்கப் பொம்மை போல விருப்பேன் சாம்ப சிவசிவ என்று சொல்வேன் w (9)
மங்கைமார் சூழ்ந்து கும்பிடும் நல்லூரான் என்னப்பன் செல்லப்பனை மறக்க மாட்டேன் (10)
Page 138
266 நற்சிந்தனை
ஆடு பாம்பே 8.
ஆடு பாம்பே பணிந்தாடு பாம்பே ஆன்மாநித் தியமென்று ஆடுபாம்பே
மாடுமக்கள் சுற்றமெல்லாம் மயக்க மென்றே மாதவர்தம் இயக்கத்தை மகிழ்ந்து கொண்டே தோடுடைய செவியனைத் தோத்திரஞ் செய்தே சும்மா விருந்துகண்ணைத் திறந்து கொண்டே
(ஆடு பாம்பே.) 1 வீடு நமக்கென்றுஞ் சொந்த மென்றே வீணசைப் படுவதெல்லாம் பந்தம் என்றே தேடும்பொரு ளெல்லாஞ்சிவ தொண்டுக் கென்றே தேசமெங்குஞ் சென்றுண்மை பேசிக் கொண்டே
(ஆடு பாம்பே.) 2 பாடு படும்போதும் ஆதிபதம் நினைந்தே பாடிப் பாடித் திருவருளைப் புகழ்ந்துகொண்டே ஒடு மிருநிதியும் ஒன்ருகக் கண்டே உண்மை முழுதுமென மன்ருடிக் கொண்டே
(ஆடு பாம்பே.) 3
திருவருள் கைகூடுது இராகம்-சாவேரி. தாளம்- ஆதி.
- . பல்லவி திருவருள் கைகூடுது சிந்தை களிகூருது
அநுபல்லவி ஒருவரும் எதிரில்லாத உண்மை முதிருது. (திருவருள்)
சரணங்கள் ஒன்ருே விரண்டோ வென்னுஞ் சந்தேகந் தெளியுது ஒம்சிவாய நமவென்ன உள்ளங் குளிருது. (திருவருள்)
அதிர வரும்நமனும் அஞ்சியே பணிசெய்யும் அஞ்சுவ தொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை. (திருவருள்)
நற்சிந்தனை 26 。 வரந் தருவார்
வருவார்வ ருவார்வரந் தருவார் சுவாமி
வஞ்சம்பொருமைகோபம் நெஞ்சினில் நீவையாதே (வரு) 1
ஒருவரு மிருவரும் மூவரு மானவர் ஓங்காரத் துட்பொருள் ஆகியே நிற்பவர் (வரு) 2
கருமத்தைச் செய்பலன் கருதாம லுலகத்தில் காயமே கோயிலாய்க் கண்டு வணக்கஞ்செய் (வரு) 3
தருமநெறி பிசகாமல் தாரணி தனில்வாழ் தன்னைத்தன் னலறியத் தியானத்தில் நீரூமுழ்கு (வரு) 4
மரும மறிந்தவர்கள் மண்ணிற்பிற வாரென்ற மகத்துக்கள் வாக்கியத்தை மறவாமல் நினைத்துக்கொள்
(வரு) 5
திருவாரும் நல்லூரில் செல்லப்பன் மாணக்கன் திருவாளன் சொன்ன சொல்லைச் சிந்திக்கச் சீவன்முக்தி
(வரு) 8
GTUIGLOTO &ğßgå GeisTuf6)
காயமொரு சித்திரக் கோயில் - அது கண்ணுதல்பெண் ணுமைவாழ் கோயில் மாய மெனமதி யாதே - அடடா மகத்துவஞ்சொல்ல மதிபோ தாதே தூய குருவரு ளாலே-நானும் சொல்லுவேன் கேள்மருள் போமே மாய னயன்மக பதியும்-அடடா மற்றுமுள்ள தேவர்களும் அரக்கர்களும் தேயுவுடன் வாய் வப்பு-மண்விண் சேர்ந்திருக்குஞ் சித்திரக் கோயில் ஆதித்தனுஞ் சந்திரனும் இங்கே-இன்னும் அளவற்ற அண்டங்களும் இங்கே வேதியருஞ் சூத்திரரும் இங்கே-விளங்கும் வேதமுஞ் சூத்திரமும் இங்கே. (காயமொரு)
Page 139
268 நற்சிந்தனை
ஆண்டவன் திருவடி இராகம்-தன்னியாசி. தாளம்-ஆதி
பல்லவி
ஆண்டவன் திருவடி வேண்டிக்கொண் டாலென்றும் ஆறுதல் உண்டாகும்.
அநுபல்லவி
காண்பதெல் லாம்நிலை யன்றெனக் காட்டும் காயத்தை வெல்லுமு பாயத்தை யூட்டும். (ஆண்டவன்)
சரணங்கள்
பஞ்சப் புலன்வழி போம்மனத் தினவெல்லும் பஞ்சாட் சரத்தை யனுதினஞ் சொல்லுங் கொஞ்சங்கொஞ் சமாகச் சினத்தினைக் கொல்லுங் குற்றம் யாவையுங் குணமாகக் கொள்ளும். (ஆண்டவன்)
பொன்னசை மண்ணுசை பெண்ணுசை போக்கும் போக்கு வரவற்ற பொன்னடி நோக்கும் எந்நாளும் சும்மா விருப்பதைக் காக்கும் ஏழைகள் பேரில் இரக்கத்தை யாக்கும். (ஆண்டவன்)
வெட்ட வெளியிலே நின்றிடர் தீர்க்கும் வேதாந்த சித்தாந்தம் ஒன்றென்று நோக்கும் கட்டுப் படாத மனத்தினைக் கட்டும் கங்குல் பகலற்ற காட்சியுண் டாக்கும். (ஆண்டவன்)
சுவாமி யோகநாதன் சொல்லிய பாட்டு சுந்தர மான வழிதனைக் காட்டும் ஆவி யுள்ளளவும் அமுதத்தை யூட்டும் அகம்பிர மாஸ்மி யெனமுடி சூட்டும். (ஆண்டவன்)
நற்சிந்தனை 269
uTij8LON GJ
ஐம்பூதம் நீவிரல்லீர் பாங்கிமாரே ஐம்பொறியும் நீவிரல்வீர் பாங்கிமாரே ஐம்புலனும் நீவிரல்லீர் பாங்கிமாரே அந்தக்கரணம் நீவிரல்லீர் பாங்கிமாரே 1
ஆதியந்த முங்கட்கில்லைப் பாங்கிமாரே ஆன்மாவே நீவிர்காணும் பாங்கிமாரே வந்ததிலும் போனதிலும் பாங்கிமாரே மனம்வையாமல் வாழ்ந்திடுவீர் பாங்கிமாரே.
2
ஆதார மாறும்விட்டுப் பாங்கிமாரே அப்பனை வணங்கிடுவீர் பாங்கிமாரே பாதார விந்தங்காண்பீர் பாங்கிமாரே பகலு மிரவுமில்லைப் பாங்கிமாரே. 3
முன்னிலை யுங்கட்கில்லைப் பாங்கிமாரே முனையில்வைத்துச் சீராட்டும் பாங்கிமாரே அன்னிய முங்கட்கில்லைப் பாங்கிமாரே ஆச்சரிய மொன்றுமில்லைப் பாங்கிமாரே. 4.
நீயேநீ யாயிருக்கப் பாங்கிமாரே நித்தியத்தைத் தேடுவதேன் பாங்கிமாரே தாயைப்போ லிருக்கவேண்டும் பாங்கிமாரே சங்கற்பம் விட்டிடுவீர் பாங்கிமாரே. 5 -
வையகம் முழுதும்நீங்கள் பாங்கிமாரே வார்த்தையொன்றும் பேசாதீர் பாங்கிமாரே கையில்நெல்லிக் கனிபோலப் பாங்கிமாரே கடவுள்நம் மிடமுண்டு பாங்கிமாரே. 6
Page 140
270. - நற்சிந்தனை
தாலாட்டு
அன்னைபிதாக் குருவாகி யடியேனை யாட்கொண்ட தன்னிகரில் லாதசற் குருவேநீ கண்வளராய்.
என்னையினிப் பிறவாமல் ஈடேற்றி வைத்தவனே உண்மை முழுதுமென்ற வுத்தமனே கண்வளராய்.
நாமறியோ மென்று நல்லூரிற் சொன்னவனே சேமமுட னென்னகத்தில் சீமானே கண்வளராய்.
அப்படியே யுள்ளதென வடிக்கடியே சொல்லியென்னை இப்படியில் வாழவைத்த எந்தையே கண்வளராய்.
காணுங் கண்ணிற் கலந்தவனே கார்வண்ணு நானும்நீயு மென்றுரைக்க நாணுவேன் கண்வளராய்.
சீராரும் நல்லூரில் தேரடியி லேயிருந்து
ஆரறிவா ரென்றுசொன்ன அப்பனே கண்வளராய்.
எப்பவோ முடிந்ததென எனக்குப தேசஞ்செய்த ஒப்பிலா மாமணியே யுறவோனே கண்வளராய்.
ஒருபிடி சோற்றுக்காய் ஊரூராய் நானலையத் திருவருள் தந்தவனே செல்லப்பனே கண்வளராய்.
எட்டாத கொப்பில் இருக்குமுனை யாரறிவார் மட்டில்லா மாமணியே மாதவனே கண்ாவளராய்.
கண்ணே யுறங்குறங்கு கார்வண்ணு நீயுறங்கு எண்ணேன் பிறதெய்வமென் னிதயத்தே நீயுறங்கு.
10
நற்சிந்தனை 271
சிந்தை தெளிந்தேனே
uნს6სიf:
தேடித் தேடித் திரிந்தலைந்து நான் சிந்தை தெளிந்தேனே.
சரணங்கள்
சிந்தையிற் கண்டேயென் தீவினை போச்சுது சிவபெரு மான்தன் னிணையடி வாய்ச்சுது இந்த வுலகம் கனவாய்ப் போச்சுது எல்லாம் என்தன் கைக்குள்ளே யாச்சுது. (தேடி) 1
கருவி கரணங்கள் ஒய்ந்து போச்சுது காணுத காட்சிகள் காண லாச்சுது ஒருவரு மெதிரில் லாமற் போச்சுது ஒஓ மாயை பறந்து போச்சுது (தேடி) 2
நில்லென்று சொல்லி மனத்தை நிறுத்துவேன் நேர்மை யான வழியிற் செலுத்துவேன் வல்லபம் பேசி யாரையும் வெல்லுவேன் வாணு ளாசை வீணெனச் சொல்லுவேன். (தேடி) 3
யாழ்ப்பாணத்தானே
அன்பி ஞற்பணிந் தேத்து மடியவர் துன்பம் யாவும் துடைத்தருள் செய்தவன் பொன்னர் மேனியன் போர் விடை யூர்தியன் இன்பந் தங்கும் யாழ்ப்பாணத் தானே.
ஆதி யந்தமும் அற்றவன் மெய்த்தவர் ஒதி நாளும் உவந்திடும் உத்தமன் பாதி மேனியில் பாவையை வைத்தவன் நீதி நின்றிடும் யாழ்ப்பாணத் தானே. இன்ன தன்மைய னென்றறி வொண்ணுன் முன்னர் இராவணன் முடிபத்தும் நெரித்தான் மன்னர் மன்னவன் மதிதவழ் சென்னியன் நன்ன லஞ்சேர் யாழ்ப்பாணத் தானே.
Page 141
272 நற்சிந்தனை சிவத்தியானஞ் செய்
சிவத்தியா னத்தைச் செய்யும் மாந்தர்கள் அவத்தில் பாரினில் அலைவ தில்லையே. I தவத்தை யாற்றிடில் தன்னை யறியலாம் அவத்தை யாற்றிடில் வீழ்வர் நரகினில். 2 தில்லை யம்பலத் தாடுஞ் சேவடி எல்லை யற்றநல் லின்பம் நல்குமே. உள்ளத் தூய்மையாய் ஒருவன் பாதத்தை உந்து வார்தமக் குணர்வு வந்திடும். 4. அல்லும் எல்லியும் இறைவன் பாதத்தைச் சொல்ல வல்லவர் தூய்மை யாவரே. 5 எங்கு மீசனை யேத்துவார் தம்மைப் பொங்கும் வல்வினை பொருந்த லில்லையே. 6 தெய்வ மொன்றெனத் தெரியும் மாந்தர்கள்
உய்வர் வையத்தில் யுண்மை உண்மையே. 7
எந்த நேரமும் இறைவன் பாதத்தைச் சிந்தை செய்திடில் தீரும் வல்வினை 8
அடியவர் பாதத் தன்பு செய்திடில் கொடிய கூற்றுவன் மடியுந் திண்ணமே 9
சீலஞ் சேர்சிவ ஞானத் தேனினை ஞாலத் துண்பவர் நமன வெல்லுவார். 10
வாலை வணக்கமாய் மகிழ்ந்த பாவினைக் காலையும் மாலையும் ஒதக் கவலைபோம்.
நற்சிந்தனை 27
நாதாந்த முடிவில் நடனம் புரிவது
கண்ணுலே காணுெணுதது கண்ணுக்குக் கண்ணுயுள்ளது காதாலே கேட்கொணுதது காதுக்குக் காதாயுள்ளது கையாலே எடுக்கொணுதது கைக்குக்கை யாயிருப்பது காலாலே நடக்கொணுதது காலுக்குக்கா லாயுள்ளது வாயாலே பேசொனதது வாய்க்குவா யாயிருப்பது மனத்தாலே எண்ணுெணுதது மனத்துள்மன தாயிருப்பது மூக்காலே முகரொணுதது மூக்குக்குமூக் காயிருப்பது முன்னெடுபின் னில்லாமுதலது மூப்புப்பிணியில்லாவடிவது தாயுந்தந்தையு மானவுருவது தானே தானுய்த்
தழைத்துநிற்பது عر ஒன்றிரண்டென ஒதவொண்ணுதது ஓவியராலும்
எழுதவொண்ணுதது நன்று தீதிற்கு நடுவாய்நிற்பது ஞானியர்
நெஞ்சில் என்றுமுள்ளது வேதாந்த சித்தாந்தம் வேருெளுதது
நாதாந்த முடிவில் நடனம்புரிவது.
ஏற்குமோ
பல்லவி ஏற்குமோ திருவருளுக் கேற்குமோ
அநுபல்லவி என்னையும் உன்னையும் வேருய் எண்ணிப் பணிவதற்கு (ஏற்குமோ)
சரணங்கள் கண்ணே கண்ணின் மணியே கனியே கனிரசமே எண்ணேன் பிறதெய்வம் எல்லாம் உனது செயல்
(ஏற்குமோ) விண்ணுதி பூதமே வேதவே தாந்தமே பெண்ணே ஆணே அலியே பேதமில்லாப் பெம்மானே
(ஏற்குமோ) 18
Page 142
274 நற்சிந்தனை ஆன்மா நீத்தியம்
ஆன்மா நித்தியம் ஆன பொருளென ஆசான் சொல்லக் கேட்டிருந்தோம் அதையே மறந்தோம் பிறந்தோம் இனிநாம் அதுவே நாமென எண்ணிடுவோம். அநுதினம் சாதனை செய்யச் செய்ய ஆனந்த மான மோட்ச வீட்டை w அடைவோம் இதிலோர் ஐயமும் இல்லை-ஆனல் அடக்கமும் பொறுமையும் வேண்டுதுமே. 2 குழந்தை யன்பொடு குருவின் பாதத்தைக் கும்பிடும் பாக்கியம் உண்டானல் கோடா கோடி பாவத்தைப் போக்கும் நாட்டத்தைச் சிவத்தில் வைப்போமே. 3 கெளரியை யிடத்தில் வைத்தவன் பாதம் கைதொழும் அடியார்கள் காலனை வென்று ஞாலந் தன்னில் கவலையை நீங்கி வாழ்வாரே. 4
அருள் நீ தா இராகம்-கரஹரப்பிரியா தாளம்-ஆதி பல்லவி அருள்நீ தாதாவே - எனக் கார்தான் துணை வேறே
அநுபல்லவி இருள்சேர் வினையாலே யிடரே படலாமோ. (அருள்) சரணம் ஆசாபாச தோஷம் நீக்கி-ஆரவார மார போத தந்திர ரூபனே-நேச வாசம் தந்து வீடருள் தேவ -தேவ சாலஞ் செய்யலாமோ அநுகூல கோல கால லீல விநோத-ராஜராஜநீ- வளர்த்தி வளர்த்தி உண்டி யூட்டி முழுதும் உண்மை. (அருள்).
நற்சிந்தனை
நானே கோனே
வானே தேனே
ஊனே மீனே
ஆனே கானே
ағлтC36рат ஆணே
தூணே ஊனே
பொன்னே
எண்ணே
நானே தானே
பூதம்
வேதம்
காதல் <翌应
d5 *;
Gl)
T
ல்
அறிவார்
275
நானே நீ
வஞ்சித்துறை
நீயே குருவே
ன்
மண்ணே
தெருளே
2-uGr வெண்மதி
அடல்விடை
கடலே
சதுரே பெண்ணே
துரும்பே உடையே
பொருளே எழுத்தே
நன்மதி தானே
பொறியும் வேதியன்
தி
f
ன்.
8
;
9
கருத்தும்
10
f
fi
Page 143
276 நற்சிந்தனை
அவரடியே தஞ்சமெடி
பிறியென்முன் பிறியாமற் பிறியென்றன் பேசாமல் நெறிநின்று பாரென்முன்- கிளியே நீயேநா னென்றுரைத்தான். l
ஒருபொல் லாப்புமில்லை யென்றே யுரைத்தான் உண்மை முழுதுமென்ருன்-கிளியே ஊமைபோ லிருந்தானெடி, m 2
முடிந்த முடிபென்ருன் முன்னும்பின்னு மில்லையென்றன் இடிபோ லுரைத்தானெடி-கிளியே இனியென்ன சொல்வேனடி. 3
அப்படியே யுள்ளதென்றன் ஆரறிவா ரென்முன் ஒப்புவமை காணேனெடி-கிளியே ஒவியம்போ லானேனடி. 4.
நாமறியோ மென்றுசொன்னன் ஞான குரவனெடி சேமமாய் வாழவைத்தான்-கிளியே தீவினைகள் போச்சுதெடி, 5
அண்டபிண்ட மனத்தும் ஒன்ருகக் கண்டேனடி கண்டவெனைக் காணேனெடி-கிளியே காரணமும் போச்சுதெடி. 6
நல்லைநகர் வாசனெடி நாட்டிலவன் திருநாமம் செல்லப்ப னென்றுசொல்வார் - கிளியே தேரடியி லிருப்பானெடி. 7
சொல்லித் துதிக்குந்தொண்டர் சுயநல மற்றவர்கள் அல்லும் பகலுங்காணுர்-கிளியே அவரடியே தஞ்சமெடி. 8
நற்சிந்தனை 277.
தன்னைத் தன்னல் அறிவார் சான்றேர் கலிவிருத்தம்
நம்மிட மெல்லா நலனு முண்டு நம்மிட மெல்லா வுலகமு முண்டு நம்மிட மெல்லாக் கலகமு முண்டு நம்மிட மெம்மைக் காண்பது தொண்டு. I
நம்மிட ம்ென்றுங் கடவு ஞண்டு நம்மிடம் நன்மை தீமை யுண்டு நம்மிடம் பிறப்பு மிறப்பு முண்டு நம்மிடம் நரக மோட்சமு முண்டு.
2
தன்னைத் தன்னல் அறிவார் சான்றேர் தன்னைத் தன்னல் பணிவார் சான்றேர் தன்னைத் தன்னல் பிறிவார் சான்றேர் தன்னைத் தன்னுல் தேடுவார் சான்றேர். 3. கண்ணைக் கண்ணுல் பார்ப்பார் சான்றேர் பண்ணைப் பாடிப் பணிவார் சான்றேர் விண்ணை நோக்கி விழிப்பார் சான் முேர் மண்ணைக் கிண்டி வாழ்வார் சான்றேர். 4
wanymawit
6Ts66T (LOT6óT அன்னைபிதாக் குருவானன் எங்கள் பெருமான் ஆதியந்த மில்லாதான் எங்கள் பெருமான் இருவரோ டொருவரானன் எங்கள் பெருமான் ஈசனனன் அனைவருக்கும் எங்கள் பெருமான் உண்மை முழுதுமென்ருன் எங்கள் பெருமான் ' ஊரும்பேரும் உள்ளானில்லான் எங்கள் பெருமான் எண்ணுக் கடங்காதான் எங்கள் பெருமான் ஏவலாளாய் மண்சுமந்தான் எங்கள் பெருமான் ஐம்பூதமைம் பொறியானன் எங்கள் பெருமான் ஒருபொல்லாப்பு மில்லையென்றன் எங்கள் பெருமான் ஒமென் றுறுதிதந்தான் எங்கள் பெருமான் ஒளவனத்தில் ஆடுகின்ருன் எங்கள் பெருமான் அஃது மிஃதுமானன் எங்கள் பெருமான்
Page 144
278 நற்சிந்தனை சாதனையால் வேதனையைத் தீர்க்கிருேமில்லை
நித்தியம் நாமென்று சொன்னல் நினைக்கிருேமில்லை நீநான் அவனென்று சண்டைபோட்டுக் கொள்ளுகிருேம் பத்தி செய்து வாழவழி தேடுகிருேமில்லைப் பத்தரினத் தோடுநாம் கூடுகிருேமில்லை. l
எத்திசைக்கும் ஈசனென்று எண்ணுகிருேமில்லை இரப்பவர்க்கு ஈயாமல் தேடுகிருேம் ஐயே முத்திக்கு வழிதேட முயல்கிருேமில்லை மூவாசை யாலேமனம் கோணுகிருேம் ஐயே. 2
வித்தார மாகக் கதைபேசிக் கொள்ளுவோம் வீணருடன் கூடி விளையா டுகிருேம் சத்திசிவம் ஒன்ருன தன்மையைக் காணுேம் சாதனையால் வேதனையைத் தீர்க்கிருேமில்லை. 3
குழந்தை யன்போடுநாம் கும்பிடமாட்டோம்
கூக்குரல் போட்டுநாம் கும்பிட்டுக் கொள்ளுவோம் தளர்ந்துபோன அடியவரைத் தாங்குகி ருேமில்லைச் சற்குரு பாதத்தை வணங்குகி ருேமில்லை. 4 .
மதிக்குமதி கொடுப்பவனை மதிக்கிருேமில்லை மண்ணுசை பெண்ணுசையால் மாய்கிருேமையே விதியினை வெல்லவழி காண்கிருேமில்லை விதிவிதி யென்றுசொல்லி விளங்குகிருேமையே. 5
கண்ணுக்குக் கண்ணநாம் காண்கிருேமில்லைக் காதுக்குக் காதுதன்னைக் கருதுகிருேமில்லை உன்னைப்போல் உலகத்தில் விளங்குகிருேமில்லை வேதாந்த சித்தாந்தம் படிக்கிருேமில்லை. 6
அலங்கார மாக ஆடை அணிந்துகொள்ளுவோம்
அங்கு மிங்கும் நாம்திரிந்து அலைகிருேம்
கலங்காத நன்னெறியிற் செல்கிருேமில்லைக் கந்தா முருகா என்று கத்திக்கொள்ளுவோம். 7
நற்சிந்தனை 279:
ஓடிவாடா தொண்டா
ஒடிவாடா தொண்டா ஒடிவாடா
ஒருபொல்லாப்பு மில்லையென்று ஓடிவாடா, 1
தேடிவாடா தொண்டா தேடிவாடா
சிவனடியார் மனங்களிக்கத் தேடிவாடா.
2
பாடிவாடா தொண்டா பாடிவாடா
பரமபதி யொன்றென்று பாடிவாடா, 3.
நாடிவாடா தொண்டா நாடிவாடா
நாங்கள் சிவ மென்றுசொல்லி நாடிவாடா, 4
கூடிவாடா தொண்டா கூடிவாடா
குழந்தைக ளோடுசேர்ந்து கூடிவாடா, 5
சூடிவாடா தொண்டா சூடிவாடா
தூயநீறு சூடிக்கொண்டு ஓடிவாடா. 6
ஆடிவாடா தொண்டா ஆடிவாடா
அஞ்செழுத்தை நாவிற்கொண்டு ஆடிவாடா. 7
சொல்லச் சொல்லச் சுவைக்குமே செல்லப்பன் திருநாமம்
சொல்லச்சொல்லச் சுவைக்குமே செல்லப்பன் திருநாமம் அல்லும் பகலுமற்ற ஆனந்தந் தருமோனம் வெல்லவரும் மாந்தர்தம் வாயடக்குஞ் சிவஞானம் கொல்லவரும் யமனுங் குடியோடிப் போய்விடுவான் கல்லை யுருக்கிவிடுங் கருணைவெள்ளம் பெருகிவிடும் இல்லையென்னுஞ் சொல்லை யில்லாமல் ஆக்கிவிடும். (1)
நல்லூரில் தேரடியில் நாங்கண்ட சிவயோகம் சொல்ல முடியாத சுகத்தினைக் காட்டிவிடும் வில்லை விடத்தையஞ்சா வீரசாந்தம் ஊட்டிவிடும் பல்லைக்காட்டித் திரியாமல் பரலோகங் கூட்டிவிடும் பத்துப்பாட்டுப் படிப்பவருங் கேட்டுச் சுவைப்பவரும்
வித்தக ராகவாழ்ந்து விதேகமுத்தி சேர்வாரே. (2)
Page 145
280 நற்சிந்தனை வேண்டிப் பணிந்திடடி
அவனன்றி யோரணுவும் அசையா தெனும்பெரிய சிவனடியார் தம்மைக்கண்டு-சின்னத்தங்கம் சிவனென்று வணங்கிடடி.
அங்கிங் கெனதபடி யானந்தமாய்க் கூத்தாடும் சங்கரனை நீவணங்கிச்-சின்னத்தங்கம் சந்தேகந் தீர்த்திடடி. 2
அத்து விதப்பொருளை அறிவுக்கறி வானதொன்றைச் சித்தத்தி லேநீவைத்து சின்னத்தங்கம் சிந்தை தெளிந்திடடி. 3
அருவா யுருவாகி யம்பலத்தே கூத்தாடும் குருபரனை நீவாழ்த்திச்-சின்னத்தங்கம் கும்பிட்டுக்கொண் டாடிடுவாய். М 4
அகம்பிர மாஸ்மியென்னும் அரியதிரு மந்திரத்தை அகத்திலே நீசெபித்துச்-சின்னத்தங்கம் ஆறுதலாய் இருந்திடடி. அந்தியுஞ் சந்தியும்நீ ஆசானைச் சிந்தித்து வந்தனை செய் திருந்திடுவாய் சின்னத்தங்கம் மதியிரவி யுள்ளமட்டும். 6
ஆவது மில்லையடி அழிவது மில்லையடி தேவரு மில்லையடி-சின்னத்தங்கம் சிவனே முழுதுமுண்மை. 7
ஆசையை விட்டிடடி அதுவேசிவ பூசையடி காசைக் கருத்தில்வைத்துச்-சின்னத்தங்கம் கவலைநீ கொள்ளாதே.
ஆன்மாவுக் கயலில்லை யப்படியே யுள்ளதடி வீண்வாதம் விட்டிடடி- சின்னத்தங்கம் வேண்டிப் பணிந்திடடி. 9
நற்சிந்தனை 28
அடுக்குமோ வின
இராகம்-நாட்டை தாளம் - ரூபகம்
பல்லவி அடுக்குமோ வினை நம்மைக்-கெடுக்குமோ
அநுபல்லவி ஆன்மா அழியாதென்ன
ஆசான்பால் கேட்டபின். (அடுக்குமோ)
சரணங்கள் அடுத்தடுத்துச் சொல்வதினுல்
ஆம்பயன் ஒன்றுமில்லை அன்பேசிவ மென்றடியார் o
அருள்வாக்கை மறவாதே. (அடுக்குமோ) ஒன்ருே விரண்டோவெனுஞ் சந்தேகந் தனநீக்கி ஓம்சிவாய நமவென
உள்ளத்துட் டெளிந்துகொள். (அடுக்குமோ) தவஞ்செய்யும் யோகநாதன்
சாற்றும்நாட் டையைக்கேட்டு சஞ்சலமில் லாமல்நெஞ்சில்
தானுன தன்னையறி. (அடுக்குமோ)
சிவதொண்டன் நடந்துவரும் சிங்காரம்
பல்லவி
சிங்காரந் தனைப்பாரீர் சிவதொண்டன் நடந்துவரும் (சிங்)
அநுபல்லவி சிங்காரந் தனைப்பாரீர் சீவனே சிவனென்று திங்கள் தோறுஞ்சிவ தொண்டர்கள் வீடுவரும் (சிங்)
சரணம் நற்சிந்த னையெனும் நல்ல மருந்தை யூட்டி நல்லூரான் திருவடியை நாளும் மற வாமலேற்றிக் கற்பனை கடந்தவனைக் காணுமல் கண்டுகொண்டு காலமொரு மூன்றுங் கடவாமல் கடந்துநிற்கும் (சிங்)
Page 146
282 நற்சிந்தனை
சிவனடி
சிவனடியைச் சிந்தை செய்வோமே இந்தச் சீவன் சிவனென்று தெரிந்துகொள் வோமே, I
அவனரு ளாலே யவன்ருள்-நாங்கள் ஆரா தனைசெய்து சீராய்வாழ் வோமே. 2
உவமை கடந்தபே ரின்பம் - எங்கள் உள்ளத்தி லுண்டொரு பொல்லாப்பு மில்லை. 3
சிவனடி யாரொடுங் கூடி -நாங்கள் சிவபுரா ணந்தினம் படித்துவரு வோமே. 4
ஐம்பூதம் நாமல்லக் காணும்-நாங்கள் ஐம்பொறியும் ஐம்புலனும் நாமல்ல அறியும், 5
அந்தக்கரண நாமல்லப் பேணும் - இந்த ஆன்மாவே நாமென் றறிந்திட வேணும். 6
வாழிசிவ னடியார்கள் வாழி-இந்த வையகத்தில் வாழும் உயிரெல்லாம் வாழி. 7
ஆழிசூழ் இலங்கையும் வாழி-எங்கள் அப்பணு மம்மையும் எந்நாளும் வாழி. 8
ஆரறிவார் என்றப்பன் சொல்வான்
ஆரறிவார் என்றப்பன் சொல்வான் -தன்னை அணைந்துவந்த பேர்களையே யாதரித்துக் கொள்வான்.
பாரறியார் இவருடைய தன்மை -பலர் பைத்திய காரனென்று பரிகாசஞ் செய்வார். 2
தேரடியில் எந்நாளும் இருப்பான்-ஆசான் தெருவாலே வருவாரைப் போவாரை வைவான். 3
ஆரடா நீயென்றே யதட்டி-ஆசான் அன்பிலான் போலவே துன்புறுத்தி நிற்பான். 4.
メ
நற்சிந்தனை
அப்படியே யுள்ளதெனச் சொல்லி-ஆசான் அந்தரங்க மாகவே பேசிக்கொண் டிருப்பான். எப்படி யிவன்றன்மை யென்று-எவரும் எண்ண முடியாமல் சும்மா இருப்பான்.
பாவலர் நாவலர்கள் தாமும் -ஆசான் பரிபாஷை யறியாமல் பதறியே போவார். மூவர்களும் ஒன்ருகச் சேர்ந்த-நல்ல மூர்த்த மிதுவென்று முகமலர்ந்து நிற்பார்.
மருந்து கண்டேனே
மருந்து கண்டேனே நல்லூரில் நான்-மருந்து கண்டே மருந்துகண்டேன் மாருப் பிறவியை நீக்கும் மாருத நோயைத் தீர்த்துடல் காக்கும்- மருந்து
கண்டேனே.
அருந்த வர்தம் மோடுற வாக்கும் ஆமில்லை யென்று சொல்லாமற் காக்கும் - மருந்து
கண்டேனே.
திருந்து மடியவ ரோடுற வாக்கும்
கண்டேனே.
குருந்த மரத்தடியில் குருவாக வந்து கும்பிட்ட மாணிக்கற்குத் தீட்சைவைத் தாண்டன
மருந்துகண்டேனே.
அப்பர்க்குச் சமணர்செய் யாபத்துத் தீர்த்து
283
னே
அப்பூதி யடிகள்தம் பிள்ளைக்குயிர் கொடுத்த-மருந்து
கண்டேனே.
மார்க்கண்டற் காக மறலியை யுதைத்து மாயா மருந்தை அவன்றனக் கீந்த-மருந்து
கண்டேனே.
wazuhuippur
5
Page 147
284 நற்கிந்தன
அனைவருக்குந் தெய்வம் ஒன்றே
அனைவருக்குந் தெய்வம் ஒன்றே-அதை அறிந்துலகில் வாழ்வது தொண்டே.
முனைந்துநிற்கும் காமக்குரோதம் போக்கிப்-பின்பு மூவரையுந் தேவரையும் ஏவலாக்கு. 2
நெஞ்சுருகு மடியார்கள் கூட்டம்-இந்த நீணிலத்தில் நன்மையெல்லாங் கூட்டும். 3
வினைப்பகையை வெல்வதற்கு மார்க்கங்-குரு வேந்தன் தந்ததிரு வாக்கு. 4
தினைத்தனைப் போதும்மற வாமல்-சிவத் தியானத்தில் தினந்தினம் மூழ்கு. 5
மனத்துயரை நீக்கநல்ல மருந்து-குரு வாக்கியமொரு பொல்லாப்பு மில்லை. 6
நினைத்தபடி நீணிலத்தில் வாழ்வோம்-நாங்கள் நித்தியரா மென்பதை நாளும்மறவோம். 7
அயலுனக் கில்லையென்று பெரியோர்-சொன்ன அந்தரங்க மறிந்துநீ திரிவாய். 8
முயல முயலவின்பந் தேக்கும்-பொல்லா மூவித ஆசைகளை நீக்கும். 9
சுயநல மடியோடே மடியும்-சுருதி சொன்ன சுவானுபவம் படியும். 10.
warsaawaange
ஆனந்த மாநந்த மானந்தந் தானே அங்கு மிங்கு மெங்கும் நானே
நற்சிந்தனை 285
கணமேனுஞ் சும்மா விருக்குங் கருத்திலார்
மனச்சாட்சி மனச்சாட்சி யென்று மருட்டினர்
தனதாட்சி செய்யத் தலைநி மிர்த்தினர். 1 பணமாட்சி வேணுமென்று பறை யறைகிருர் கணமேனுஞ் சும்மா விருக்குங் கருத்திலார். 2 மனமாட்சி வேணுமென்று மனம் பதைக்கிருர் குணமாட்சி யில்லாமல் தினங்கு ரைக்கிருர், 3.
மனமாட்சி யுள்ளார் போல் தம்மை மதிக்கிருர் இனமாட்சி யுள்ளோமெனத் தம்மைத் துதிக்கிருர் 4 வணக்கம் வணக்கமென்று வாயால் பதிக்கிருர்
இணக்க மறிந்து இணங்க எதிர்க்கிருர், 5 சினத்தை மனத்தில் வைத்துச் சிரிக்கிருர் கனக்கக் கதைத்துத் தம்மை வியக்கிருர் . 6 நனைத்து உலர்ந்த உடையு டுக்கிருர் வினைப்பய னென்று வீணுய்ப் பதைக்கிருர், 7 தினைத்தனைப் போதும்மற வோமெனச் செபிக்கிருர் மனத்துயர் வந்த போது தவிக்கிறர். 8
&sïGalib LSybLD LDUJub பிருதுவியப்புத் தேயுவாயு ஆகாசம் - அவை பிரம மயமென்று பேசுவார் கருமை வெண்மை செம்மையை-அது கலந்து நிற்கும் காரணம் − காமக் குரோதமற்ற பெரியோர்கள்-அவர் கண்டு கொண்டனர் உண்மையை எள்ளுக்குள் எண்ணெய்போல் நிறைந்திடும்-அது எல்லா ரிடத்தும் இருந்திடும் சொல்லும் பொருளுமாய்த் தொடர்ந்திடும்-அது சூக்கும ரூபமாய்ப் படர்ந்திடும் செப்படி வித்தை காட்டிடும் -அது செய்தி யறியாமல் மாட்டிடும் கண்ணுக்குக் கண்ணுய்க் கண்டிடும் - அது காதுக்குக் காதாய்க் கேட்டிடும் காலுக்குக் காலாய் நடந்திடும்- அது கைக்குக் கையாய் எடுத்திடும்.
Page 148
286 `ሩ நற்சிந்தனை இசைந்து வா என்மனமே 1
கண்டொன்று சொல்லாதே கடவு ளொருவன் உண்டென் றுறுதி கொள்ளவா என்மனமே.
அண்டர் முனிவர்நரர் அன்புசெய்யும் பெருமானைக் கண்டு களிக்கக் கருதிவா என்மனமே.
பண்டுசெய்த வல்வினையால் பலபிறவி நாமெடுத்துத் திண்டாட்டப் பட்டோம் சீக்கிரம்வா என் மனமே. எட்டுணையும் தாழ்ச்சியில்லா இறைவன் திருவடியைச்
சுட்டாமற் சுட்டிச் சுகம்பெறவா" என் மனமே.
பட்டுக் குடைபிடித்துப் பரியேறித் திரிவாரை எட்டுணையும் நம்பாமல் என்பின்னே வாமனமே.
விட்டகுறை தொட்டகுறை யிரண்டும்விட் டேகாந்த நட்டணையில்* நிற்க நயந்துவா என்மனமே.
முட்டாத பூசைபண்ணி முழுமணமாய் நாம்வணங்கத் திட்டமிட் டென்பின்னே சேர்ந்துவா என்மனமே.
சிட்டர் பரவுஞ் சிவதொண்டன் நிலையத்தே கிட்டாமற் கிட்டிநிற்கக் கிருபையுடன் வாமனமே.
அட்டாங்க யோகம் அவத்தையைந்தும் விட்டேகி மட்டற்று நிற்க மகிழ்ந்துவா என்மனமே. எட்டாத கொப்பில் இருக்கின்ற தேனமுதை
இட்ட முடன் புசிக்க எட்டிவா என்மனமே.
எட்டும் இரண்டும் இசைந்துவந்த பாமாலை தட்டாமல் நாம்படிக்கத் தாவிவா என்மனமே.
நற்சிந்தனை
இசைந்து வா என்மனமே 11
அல்லும் பகலும் அறிவாக நிற்பவர்க்கு எல்லையில்லா வின்பமுண்டு என்பின்னே வாமனமே.
ஆறுவது சினமென்னும் ஒளவைமொழி கண்டார்க்கு ஆறுதல் வேறுமுண்டோ அதிவிரைவாய் வாமனமே.
இடும்பைக்கு இடும்பை படுப்பார் இடும்பைக்கு இடும்பை படாதவர் என்பின் வாமனமே.
ஈசன் ஒருவனென எண்ணிப் பணிவார்க்குப் பூசைசெய்ய வேண்டுமோ புகலவா என்மனமே.
உண்மை முழுதுமென்னும் உத்தமனைக் கண்டார்க்கு என்னகுறை வுண்டு இசைந்துவா என்மனமே.
ஊக்கத் தைப்போல உறுதுணைவே றுண்டாமோ பூக்கை யிலேந்திப் போற்றவா என்மனமே.
எல்லாஞ் சிவன்செய லென்றேத்திப் பணிவார்க்குப் பொல்லாங்கு முண்டோ புத்தியுடன் வாமனமே.
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்கவென்று தேகம் விழுமுன்னே செப்பவா என்மனமே,
ஐயமிட் டுண்ணென்னும் ஒளவை திருவாக்கே துய்ய வழிகாட்டும் சொல்லக்கேள் என்மனமே.
ஒருபொல்லாப்பு மில்லையெனு முத்தமனர் திருவாக்குத்
தருமநெறி காட்டுஞ் சடுதியில்வா என்மனமே.
ஒம்சிவாய நமவென்று உறுதியுடன் செபித்தால் நாம் சிவமே ஆவோம் நயந்துவா என்மனமே.
Page 149
288 நற்சிந்தனை
ஒளவியம் பேசுதல் ஆக்கத்துக் கழிவென்னும் ஒளவைசொல் நாமறிய அன்புடன் வாமனமே. 12
அஃகமுங் காசுஞ் சிக்கெனத்தே டென்றமொழி அஃகு தலில்லா அறிவுதரும் என்மனமே. 13
இசைந்து வா என்மணமே III
ஒருபொல்லாப்பு மில்லையென்றென் னுள்ளங் குளிரவைத்த குருநாதன், திருவடியைக் கும்பிடவா என்மனமே.
உண்மை முழுதுமென வுறுதி யெனக்களித்த அண்ணலை நான் வணங்க அதிவிரைவாய் வாமனமே. 2
நாமறியோ மென்று நல்லூரிற் சொன்னவனைச் சேம முடன் காணச் சீக்கிரம்வா என்மனமே. 3
அப்படியே யுள்ளதென அடிக்கடியே சொல்லுஞ்செல் லப்பனை யான்காண அதிவிரைவாய் வாமனமே. 4.
ஆரறிவா ரென்றென் னகங்களிக்கத் தேரடியிற் பாரறியச் சொன்னவனைப் பாடவா என்மனமே. 5
தவராச சிங்கத்தைச் சற்குருவை நல்லூரில் எவருமறி யாதவனை யேத்தவா என்மனமே. 6
கந்தைத் துணியணிந்து காமங் குரோதமற்ற எந்தை தனக்காண இசைந்துவா என்மனமே. 7
மந்திர தந்திரமும் மானபி மானமில்லாச் சுந்தரனைக் காணத் தொடர்ந்துவா என்மனமே. 8 பிச்சைக்கே யிச்சித்துப் பித்தனைப் போற்றிரிந்த அச்சமில்லா வாசானை யன் புசெய்ய வாமனமே. 9
ஆருறு தத்துவத்துக் கப்பாலே யுள்ளவனை மாருக் கருணையனை மருவவா என்மனமே. 10
நற்சிந்தனை 289
இசைந்து வா என்மனமே IV
அன்பே சிவமென்ற அடியார் திருவாக்கை இன்பமென்று போற்ற இசைந்துவா என்மனமே. I
ஆரறிவா ரென்னும் ஆசான் திருவாக்கைப் பாரறியச் சொல்லிப் பணியவா என்மனமே. 9.
இதுவதுவென் றெண்ணமல் எல்லாஞ் சிவமயமாய்ப் பொதுவில் நடங்காணப் புகழ்ந்துவா என்மனமே. 3
ஈச ஞெருவனென எண்ணியெண்ணி யேயுருகிப் பூசைசெய்ய வென்பின் புறப்படுவாய் என்மனமே. 4
உன்மத்தன் போல வுலகறிய நல்லூரில் என்னப்பன் வாழ்ந்தவிடம் போகவா என்மனமே. 5
26TCD5lb பேருமில்லா வொருவனே நல்லூரில் சீருடனே வாழ்ந்ததிறம் தெரியவா என்மனமே. 6 எண்ணிப் பணிவார் இடரகற்ற நல்லூரில் கண்ணியமாய் வாழ்ந்த கழல் காணவா என் மனமே. 7 ஏதுமற நில்லென் றெனக்குரைத்த செல்வன்தாள் போதுகொண்டு போற்றப் புறப்படுவாய் என்மனமே, 8
ஐயமெலாந் தீர அன்புடனே நோக்கியென வையகத்தில் வாழவைத்த வரங்காணவா என்மனமே. 9 ஒருபொல்லாப்பு மில்லையென உவந்தெனக்குச் சொன்னகுரு திருவாக்கைக் காணச் சிறந்துவா என்மனமே. 1) ஒடு மிருநிதியும் ஒன்ருகக் காணவைத்த கேடுபடாத் திருவடியைக் கிட்டவா என்மனமே. Il ஒளவியத்தை நீக்கி அகந்தூய்மை யாக்கிவைத்த திவ்விய பாதந் தெரிசிக்கவா என்மனமே. 12 அஃகமுங் காசுந் தேடி யலையாமல்
நஃகுதல் செய்தநல்லான் நண்ணவா என்மனமே. 13
19
Page 150
290 நற்சிந்தனை
எங்கள் நாடு
அன்பர்பணிந் தேத்திநிற்கும் நாடெங்கள் நாடு அறஞ்செய்ய விரும்பென்னும் நாடெங்கள் நாடு ஆதியந்த மில்லாத நாடெங்கள் நாடு ஆறுவது சினமென்னும் நாடெங்கள் நாடு இயல்வது கரவேலென்னும் நாடெங்கள் நாடு இன்பதுன்ப மில்லாத நாடெங்கள் நாடு ஈவது விலக்கேலென்னும் நாடெங்கள் நாடு ஈச ஞெருவனென்னும் நாடெங்கள் நாடு உடையது விளம்பேலென்னும் நாடெங்கள் நாடு உண்மை முழுதுமென்னும் நாடெங்கள் நாடு ஊக்கத்தைக் கைவிடாத நாடெங்கள் நாடு ஒருபொல்லாப்பு மில்லையென்னும் நாடெங்கள் நாடு எண்ணிக்கைக் கடங்காத நாடெங்கள் நாடு ஏவாது பணிசெய்யும் நாடெங்கள் நாடு ஐயமிட் டுண்ணென்னும் நாடெங்கள் நாடு ஐயஞ்சற்று மில்லாத நாடெங்கள் நாடு ஒப்புர வொழுகென்னும் நாடெங்கள் நாடு உத்தமர்கள் வாழ்கின்ற நாடெங்கள் நாடு ஒதுவ தொழியேலென்னும் நாடெங்கள் நாடு ஒருவனே தெய்வமென்னும் நாடெங்கள் நாடு ஒளவிய மில்லாத நாடெங்கள் நாடு ஒளவைசொல் மறவாத நாடெங்கள் நாடு அஃகஞ்சுருக் கேலென்னும் நாடெங்கள் நாடு ஆரறிவார் என்றுசொல்லும் நாடெங்கள் நாடு ஆணவத்தை நீக்குவிக்கும் நாடெங்கள் நாடு. கண்டொன்று சொல்லேலெனனும் நாடெங்கள் நாடு நப்போல் வளையென்னும் நாடெங்கள் நாடு நாங்கள்சிவ மென்றுசொல்லும் நாடெங்கள் நாடு ஞயம்பட வுரையென்னும் நாடெங்கள் நாடு தந்தைதாய் பேனென்னும் நாடெங்கள் நாடு நன்றி மறவேலென்னும் நாடெங்கள் நாடு பருவத்தே பயிர்செய்யென்னும் நாடெங்கள் நாடு மன்றுபறித் துண்ணேலென்னும் நாடெங்கள் நாடு.
நற்சிந்தனை 291 அன்பாய்ப் பணிந்திடடி
வடிவ மிலாதவனே-கிளியே! வடிவ மெடுத்தான்டி
அடிமுடி யில்லையடி-கிளியே! அன்பாய்ப் பணிந்திடடி. I
கடிவது மறந்திடடி-கிளியே! காப்பது விரதமடி மடியும்நாள் வருமுன்னே-கிளியே! மாதவஞ் செய்திடடி. 2
முடியாப் பிறப்பிறப்பைக் கிளியே! முற்றும் அழித்திடடி துடியிடை பாகனடி-கிளியே! சோமசுந்தர சுவாமியடி. 3
கொடிய வசுரர்புரங்-கிளியே! கோபித் தெரித்தான்டி படியில் மனிதனுகக்-கிளியே! பரிவுடன் வந்தான்டி. 4.
வடிவுடை வணிகளுகக்-கிளியே! மதுரையில் வந்தான்டி கொடியிடை பாகனடி-கிளியே! கொண்டாட நல்லதடி. 5
விடியுமுன் எழுந்திடடி-கிளியே! விமலனப் போற்றிடடி பொடியணி மேனியனைக்- கிளியே!
புகழ்ந்துநீ பாடிடடி. 6
Page 151
292
நற்சிந்தனை
ஓம்சிவாய நமவெனத் துதிப்போம்
ஒம்சிவாய நமவெனத் துதிப்போம் நாம்சிவ மென்றுநெஞ்சில் பதிப்போம் l
வீம்பிடும்பை யகங்காரம் விடுவோம் போம்வினை யென்றுசொல்லித் தடுப்போம் 2
ஐம்பொறி வழிசெல்லாமல் தடுப்போம் ஐம்பூதம்நா மல்லவென்று தொடுப்போம் 3
வெம்பகை விளையாமல் மடுப்போம்
நம்பொருள் சிவமெனப் படிப்போம் 4
தும்பிமுகன் அடிக்கீழ்ப் படுப்போம் அம்மையப்பன் பாதத்தில் கிடப்போம் 5
ஆறுவது சினமென நடிப்போம்
நாறுமுடல் நா மல்லவென்று முடிப்போம் 6
தேறித் தெளிந்தவரை அடுப்போம்
ஊறிவரும் அமுதத்தை உண்போம் 7
வாழ்கசிவ தொண்டனெனக் களிப்போம்
ஊழ்வினையை முற்ருக அழிப்போம். 8
ஆசான் வாசகம்
ஆசிரியத் தாழிசை
முழுவது முண்மை யெனமுன் சொன்ன பழுதில் வாக்கியம் பரகதி காட்டும் தொழுது வணங்கிச் சுகமாய் வாழுதி. I அப்படி யுள்ளதென் ருசான் சொன்ன ஒப்பில் வாக்குநல் லுணர்வை யளிக்குங் கைப்போது தூவி எப்போதும் வாழுதி. 2
நற்சிந்தனை 293
வெண்செந்துறை
ஆரறிவா ரென்ற ஆசான் வாசகம் பேரறி வைத்தரும் பேணி வாழு தி.
நாமறியோ மென்ற நலந்திகழ் வாக்குச் சேம மளித்துச் சிவகதி யாக்குமே தாமத மின்றிச் சார்ந்து வாழுதி. 4 முடிந்த முடிபென்னும் முனிவன் வாக்கு படிந்த மனத்தில் பரகதி காட்டும் விடிந்ததும் மலரிட்டு விரும்பி வாழுதி. 5
ஆசான் மலரடி மறவா அடியவன் பேசுஞ் செந்தமிழ் பிறவிநீக் கும்மே. 6
நாம் எங்கே நாதன் எங்கே
பல்லவி
ஆதார வாதேயம் முழுதுமான அப்பனுக்குப் பாதார விந்தமெங்கே பார்த்துப் பணிவதெங்கே.
அநுபல்லவி பூதாதி ஐந்துமவன் பொறிபுலன்க ளெல்லாமவன் தாதாவும் பெற்றெடுத்த தாய்தந்தை தானுமவன் (ஆதா)
சரணங்கள்
தாம் தீமி திமிதீமி ததிங்கிணதோ மென்று தானேதா னய்நின்று சலிப்பற நடஞ்செய்யும் (ஆதா)
வாளுளை வீணுகக் கழியாதே என்றுசொல்வார் நானுரோ இதைக்கேட்டு நாமெங்கே நாதனெங்கே.
(ஆதா)
தேனரும் நல்லூரில் சீவன்முத்த ஞய்வாழ்ந்த கோனுகுஞ் செல்லப்பனைக் கும்பிடும் மாணுக்கன். (ஆதா)
Page 152
294 நற்சிந்தனை
எக்காலம் 1
அல்லும் பகலும் அப்பன் திருவடியைச் சொல்லாமற் சொல்லிச் சுகம்பெறுவ தெக்காலம் (II)
நில்லா வுலகையும் நிலையென வெண்ணிமனஞ் செல்லாமல் திருவடியைச் சிந்திப்ப தெக்காலம் (2)
காண்பான் காட்சியுங் காட்சிப் பொருளுமற்றுத் தூண்போ லிருந்து சுகம்பெறுவ தெக்காலம் . (3)
பொன்னுசை மண்ணுசை பெண்ணு சையைநீக்கிப் பொன்னர் திருவடியைப் போற்றுவது மெக்காலம் (4)
வேதாந்தம் பேசி வீண் காலம் போக்காமல்
நாதாந்த மோனநிலை நண்ணுவது மெக்காலம் (5) எள்ளுக்கு ளெண்ணெய்போ லெங்கும் நிறைந்தவனைத் தெள்ளுதமிழ் பாடிச் சேவிப்ப தெக்காலம் (6)
ஆருறு தத்துவத்துக் கப்பாலா யிப்பாலாய் வேரு யுடனய் நினைப்பதுவு மெக்காலம் (7) நினைவுக்கு நினைவாய் நிலைத்திருக்கும் மெய்ப்பொருளை அனைத்துக்குங் காரணனை யறிவதுவு மெக்காலம் (8)
முனைத்துவரும் மூர்க்கக் குணமெல்லாம் நீக்கித் தினைத்தனையும் மறவாமல் சேவிப்ப தெக்காலம் (9)
பத்தும் படிப்போர்கள் கேட்போர்க ளெல்லாரும் வித்தகன்றன் திருவடியை விரவிநிற்பர் நிச்சயமே. (10)
III
அன்பு சிவமென்ற ஆன்ருேர் திருவாக்கை இன்பமுடன் போற்றி யிருப்பதுவு மெக்காலம்.
ஆதியந்த மில்லாத ஆன்மாவே நாமென்ற சேதி யறிந்து தெரிவிப்ப தெக்காலம். 2
நற்சிந்தனை 295
இம்மையிலும் மறுமையிலு மெம்மைவிட்டு நீங்காத செம்மலர்த் தாள்கண்டு சீவிப்ப தெக்காலம். 3
ஈசன் திருவடியை யென்றும் மறவாமல் வாச மலர்கொண்டு வணங்குவது மெக்காலம். 4
உருகி யுருகி உணர்வழிந்து நின்று பெருகி வருமமிழ்தைப் பருகுவது மெக்காலம். 5
வளரும் பேருமில்லா ஒருவன் திருவடியை நீரும் பூவும்போட்டு நெக்குநிற்ப தெக்காலம். 6
எல்லா வுயிரினும் நில்லாமல் நிற்பவனை நினைந்து நினைந்துருகி நிற்பதுவு மெக்காலம். 7
ஏக னநேக னரிறைவனடி வாழ்கவெனும் மோக மறுக்குமொழி கண்டுய்வ தெக்காலம். 8
ஐந்து புலன்வென்ற ஆன்ருேர் திருவடிக்கீழ் நைந்துருகி நின்று நயம்பெறுவ தெக்காலம். 9
ஒன்றென் றிருதெய்வம் உண்டென் றிருவென்று அன்றுசொன்ன பட்டினத்தா ரடிபணிவ தெக்காலம். 10
ஒமெனு மெழுத்தினுள்ளே ஒளியதாய் விளங்குகின்ற சோமசுந் தரத்தின் அடிதொழுவ தெக்காலம். II
அரியதி லரியது ஆன்மா வதுதான் பெரியதிற் பெரியது சிறியதிற் சிறியது பிரிவறி யாதது பேதாபேத மற்றது குறியுங் குணமு முள்ள தற்றது நெறிவழி வழாதது நிரஞ்சன மானது துரியா தீதத்தில் தூங்காமல் தூங்குவது.
Page 153
296 நற்சிந்தனை
தன்மை முன்னிலை படர்க்கை அற்றவன் * -
தன்மை முன்னிலை படர்க்கை யற்றவன்
தன்னை யுணர்ந்தவச் சற்குரு வாமே (I) பின்னைப் பிறப்பிறப் பவனுக் கில்லை முன்னை வினையின் முடிச்சவிழ்த் தானே (2) அன்னை பிதாகுரு தெய்வம் அவனே
அவனை வணங்கினர் அருந்தவத் தோரே (3) பூதங்க ளில்லைப் பொறிபுல னில்லை
வேதங்க ளில்லை விளங்குசாத் திரமில்லை (4)
சந்திரனில்லைச் சூரியனில்லை தாரகா கணங்களில்லை இந்திரன்முதலிய தேவருமில்லை இருடிக ணங்களுமில்லை (5) வாசித்துக் காணுெணுதபொருள், வாய்விட்டுச்
சொல்லொணுதபொருள் மாயத்துக்கு அப்பாலுள்ளது மாதவர்க் கெட்டொனது. (6)
8px; wrthwwwwwww.
எந்நாளோ
ஒருபொல்லாப்பு மில்லையென வுரைத்த குருநாதன் திருவடியைச் சேவிக்கு மருள்பெறுவ தெந்நாளோ உண்மை முழுதுமென வோதுந் திருவாக்கு என்னை விழுங்கி யிருப்பதுவு மெந்நாளோ ஆரறி வாரென்று அடிக்கடியே சொல்லும் சீரறிந்து வாழும் செயலறிவ தெந்நாளோ அப்படியே யுள்ளதென அடிக்கடியே பேசும் அப்பனைக் காணும் அருள்பெறுவ தெந்நாளோ முடிந்த முடிபென்று முகமலர்ந்து சொன்னவன்றன் அடிபணிந்து நிற்குநாள் இந்நாளோ எந்நாளோ சீராரும் நல்லூர்த் தேரடியிலே யிருக்குங் காராரும் மேனியனைக் காணும்நாள் எந்நாளோ பித்தனென எல்லோரும் பேசுவதைக் கேட்டிருந்தும் சித்தங்கலங் காதவனைச் சிந்திப்ப தெந்நாளோ
நற்சிந்தனை 297
இலங்கைவாழ் தெய்வம்
எல்லாஞ்செய வல்லதெய்வம் எல்லார்க்குந் தெய்வம்
இதையறிந்து வாழுவார் எல்லாருந் தெய்வம் நில்லாத நீர்சடைமேல் நிற்கவைத்த தெய்வம்
நிலமேழுந் தாண்டிநின்ற நின்மலஞ்சேர் தெய்வம் கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காணுத காட்சியெல்லாங் காட்டுகின்ற தெய்வம் செல்லாரும் மலைசூழு மிலங்கைவாழ் தெய்வம்
சிவனென்ற நாமமுள்ள தெய்வமிதே தெய்வம். 1
இருநிலன யிரவிமதி யாகிநிற்குந் தெய்வம்
இன்னதன்மை யென்றெவரும் சொல்லவொண்ணுத்
தெய்வம் கருவிகர ணங்களெல்லாங் கலந்துநிற்குந் தெய்வம்
காவலனுய் மதுரைநகர் ஆண்டுகொண்ட தெய்வம் ஒருவணு யுலகேத்த ஓங்கிநின்ற தெய்வம்
உத்தமிக்குக் கூலியாளாய் மண்சுமந்த தெய்வம் திருவரைசேர் இலங்கைநகர் வாழுகின்ற தெய்வம்
சிவனென்ற நாமமுள்ள தெய்வமிதே தெய்வம். 2
பண்டயனும் மாலுமடி பரவவருள் தெய்வம்
பரியெல்லாம் நரியாகப் பணித்தபர தெய்வம் மண்டலத்தி லுயிரெல்லாம் வணங்கவருள் தெய்வம்
மருவியென் சிந்தையிலே புகுந்துறையுந் தெய்வம் கண்டெவரும் சொல்லவொணுக் கதிசேருந் தெய்வம்
காதலிக்கும் மெய்யடியார்க் கருள்செய்யுந் தெய்வம் தண்டரளம் விளங்கிலங்கை நகர்வாழுந் தெய்வம்
தானுக விருக்கின்ற தெய்வமிதே தெய்வம். 3
Page 154
298 நற்சிந்தனை நில்லடா நிலையிலென்று சொல்லுது
ஒம்நாம் நாமென்று ஒலிக்குது
ஞாதுருஞானம் போயோடி ஒளிக்குது I நமக்குநாமே துணையென்று விழிக்குது நாதாந்த முடியிலேறிக் குளிக்குது 2
வேதாந்தசித்தாந்தஞ் சமமென்று களிக்குது
மாதாபிதாவை மறவாதிருக்க மதிக்குது 3 மூதாதைமார் சொல்நெஞ்சில் மதிக்குது சூதான வார்த்தைதன்னைத் தொலைக்குது 4 நில்லடா நிலையிலென்று சொல்லுது நீயேநான் என்றுசொல்லி வெல்லுது 5 உல்லாச மாயெங்குஞ் செல்லுது - உண்மை முழுதுமென்று சொல்லுது 6 நல்லூரில் செல்லப்பன் என்னப்பன் நானவரைக் கேட்கும் விண்ணப்பம் 7
mrrassemwimb
6L6ìồIIằ 5ff6üIIffijff
தலையை நிலத்தில் நிறுத்திப் பார்த்தா லிறைவனுவீரோ காலை மேலே யேற்றிப் பார்த்தால் கடவுளைக்காண்பீரோ. 1 மலைமே லேறி மவுனஞ் செய்தால் மகாதேவனைக்
காண்பீரோ சிலைபோ லிருந்து சிந்தித்துப் பார்த்தால் தேவனைக்
காண்பீரோ, 2
கலைகள் பலவுங் கற்றுவிட்டால் கங்கா தரனைக் காண்பீரோ விலைக்குப் புத்தகம் வேண்டிப் படித்தால் விமலனைக்
காண்பீரோ. 3. பாலைக் குடித்துப் பட்டினி கிடந்தால் பரமனைக் காண்பீரோ வேலைசெய் யாமல் வீதியில் திரிந்தால் வேந்தனைக்
காண்பீரோ. 4 மூலையி லிருந்து முணுமுணுத்தால் முதல்வனைக்
காண்பீரோ சாலப் பசிக்கொரு போது புசித்தால் சாமியாவிரோ. 5
நற்சிந்தனை
ஆசான் அருளால் ஆசான் ஆயினேன்
சிவதொண்டு செய்வார் தீநெறிச் செல்லார் சிவதொண்டு செய்வார் புலனைந்தும் வெல்வார்
சிவதொண்டு செய்வார் பிறன்பொருள் வெஃகார்
சிவதொண்டு செய்வார் சிவமே யாவர்.
ஆதியு மந்தமும் அரனர்க் கில்லை ஆதியு மந்தமும் ஆன்மாவுக் கில்லை சாதி சமயமுஞ் சற்குரவர்க் கில்லை ஒதி யுணர்ந்தா னுரைத்தான் நல்லூரில் .
அருளா லறிந்தேன் ஐம்பூதத் தியக்கம் அருளா லறிந்தேன் ஐம்பொறி மயக்கம் அருளா லறிந்தேன் ஐம்புலன் தயக்கம் அருளா லறிந்தேன் ஆன்ம வியப்பே.
சிவமே தாமெனச் சிந்திப்பார் பெரியோர் சிவமே வேருகச் சிந்திப்பர் சிறியோர் தவநெறி நிற்பின் தன்னை யறியலாம் அவநெறி நிற்பின் பின்ன முறலாம்.
ஆசா னருளால் அகந்தை யழிந்தது ஆசா னருளால் அருண்மழை பொழிந்தது ஆசா னருளால் ஆனந்தம் விளைந்தது ஆசா னருளால் ஆசா னயினேன்.
சிவத்தை மறைத்தது தீநெறிச் சேறல் சிவத்துள் மறைந்தது தீநெறிச் சேறல் அவத்தை யைந்தும் அருளை மறைத்தன அவத்தை யைந்தும் அருளால் மறைந்தன.
299
Page 155
300 ۔۔۔۔ நற்சிந்தனை
ஒருவனே தெய்வமென்னும் உண்மையைக் கண்டோம்
ஒருவனே தெய்வமென்னும் உண்மையைக்
கண்டோம் -இந்த உலகமெல்லாம் நமக்குற வாகவே கொண்டோம் தரும நெறிசற்றும் பிசக மாட்டோம் தாய்தந்தை சொல்லையினித் தட்ட மாட்டோம் வருவதையும் போவதையும் எண்ண மாட்டோம் வாணுளில் ஆசையைப் பேண மாட்டோம் சாந்தம் பொறுமை யென்னும் பணியணிவோம் சற்குரு பாதத்தை இனிம றவோம் வேந்தர் விதியையொரு காலத்துந் தட்டோம் வீணிலே காலத்தைக் கழிக்க மாட்டோம் அச்சமொடு கோபத்தை யகற்றி விட்டோம் ஆருக்கு மினிநாம் ஆட்பட மாட்டோம் பொய்ச்சமய நெறிசொல்லும் போதனை கேளோம் எச்சமயத் தோரையும் ஏளனஞ் செய்யோம் பஞ்சப் புலன்வழியிற் செல்ல மாட்டோம் பழியோடு பாவத்தைக் கொள்ள மாட்டோம் மந்திரங் கற்போம்வினைத் தந்திரங் கற்போம் மனத்தைக் கொல்வோம் பொல்லாச் சினத்தை
வெல்வோம் உழுதுண்ணு வோமினிப் பழுதெண் ணிடோம் ஊரெங்குஞ் செல்லுவோம் நல்ல வேதங்கள்
சொல்லுவோம் வான மளப்போம் இந்த மண்ணையளப்போம் சிவஞான முவப்போந் திரிகால முணர்வோம் தானங் கொடுப்போம் பொல்லா ஈனம் விடுப்போம் சகல சமயத்துக்குஞ் சம்மதங் கொடுப்போம்.
நற்சிந்தனை - 301
ஊக்க முள்ளவர் ஏக்க முற்றிடார்
அந்தியுஞ் சந்தியும் ஆசான் திருவடி சிந்தை செய்பவர் சீவன் முத்தரே. I
ஆன்மா நித்தியம் என்று அறிந்தவர் அங்கு மிங்கு மாய லைந்திடார். 2
இல்லை யுண்டென எடுத்துச் சொல்லொணு இறைவ னிதயத்தில் என்று முள்ளவன். 3
ஈசன் திருவடி யென்றும் ஏத்துவார் இறந்து பிறந்திடார் இவர்கள் முத்தரே 4 உலகமே கோயிலாய் உணர்ந்து கொண்டவர் உண்மை முழுவதும் என்று காண்பரே 5
ஊக்க முள்ளவர் ஏக்க முற்றிடார்
உதய பானுபோல் உலகில் வாழ்வரே. 6
எல்லாஞ் சிவமயம் என்று கண்டவர் எங்கு இருப்பிலென் என்ன செய்யிலென் . 7
ஏக மாகிய இறைவன் பாதத்தை எண்ணு வார்தினம் நண்ணு வாரவர். 8
ஐயப் பாடின்றி யகத்தது உணர்பவர் ஆப்தர் வாக்கியம் என்று கூறுவார். 9
ஒருபொல் லாப்பு மில்லை யென்றவர் உயர்ந்த நல்லூர் இருந்த மாதவர். 10
ത്തങ്ങ,
அடியா ருள்ளக் கமலத்தே யணையா தெரியும்
t ரு 5 زھوقا த ணிேவிளக்கே முடியா முதலே முக்கண்ணு மூவர் போற்றும் முழுமுதலே முடியாப் பிறவிக் கடலிடத்தே மூழ்கா தென்ன
யாண்டுகொள்வாய் அடியே னுன்றன் குடியன்ருே அரசே யுனக்கே
யடைக்கலமே.
Page 156
302 நற்சிந்தனை
5TGITC I
(உயிர் வருக்கக் கோவை)
அரியும் பிரமாவும் அடிமுடியுந் தேடித் ሶ தெரிவரி தாய்நின்ற தெய்வமே கண்வளராய். I
ஆராயும் வேதமுதல் ஆகமங்கள் தாமறியாப் பேரா யிரமுடைய பெம்மானே கண்வளராய். 2
இரவும் பகலுமுன்னை ஏத்தித்துதிப் போர்க்குவரந் தரவல்ல தெய்வமே சங்கரனே கண்வளராய். ".. 3
ஈசனே எவ்வுயிர்க்கு முயிராய் விளங்குகின்ற தேசனே செல்வக் கொழுந்தேநீ கண்வளராய். 4 உன்னையல்லால் வேறுதெய்வ முள்ளத்திற் கொள்ளாத பொன்னப் பனைக்காக்கும் பூரணனே கண்வளராய். 5
ஊரும் பேருமில்லா வுத்தமனே சிவனடியார்
சாருந் தவக்கொழுந்தே சம்புவே கண்வளராய். 6
எல்லைசொல்ல வல்லார் எவருமில்லா மெய்ப்பொருளே அல்லலெல்லாம் நீக்கும் அரனே நீ கண்வளராய். 7
-. ܇ ܐܸܐܹܵ
ஏழைக்காய் வந்திரங்கி எழில்வைகை யாறடைத்த தாளைமற வாமலருள் தந்தவனே கண்வளராய். 8
ஐயனே யாரூரில் ஆரூரன் தனையாண்ட r. தெய்வமே சிந்தா மணியேநீ கண்வளராய். 9
ஒன்பதுவாய்த் தோற்பைக்கு ளுயிரடங்கி நிற்கும்வண்ணம் அன்புசெய்த வண்ணலே ஆருயிரே கண்வளராய். 10 ஓம்சிவாய நமவென்று ஒதுகின்ற அன்பருக்கு ஆம்என் றுறுதிதந்த அத்தனே கண்வளராய், 11 ஒளவியம் G81 18FIT அறிவுதந்த ஆண்டவனே
நவ்வி மழுவேந்தும் நாயகமே கண்வளராய். 12
நற்சிந்தனை
அஃகுக லில்லா அறிவுடைய அன்பரகம் வெஃகுத லில்லா விமலனே கண்வளராய்.
பன்ெ மூன்று பாடல்களும் படிப்போருங் கேட்போரும்
க'யுண்மை யுடன்வாழ வுறுதிசெய்வோய்
303
13
கண்வளராய், 14
gösT6IVTLIGB II
Grா ரிலங்கைநகர் சிறக்கவந்த செல்வமே பேரார் பிறைசூடும் பெருமானே கண்வளராய்.
ஆராயும் வேதம் அறியாத மெய்ப்பொருளே பேராயி ரம்படைத்த பெம்மானே கண்வளராய்.
ஆருத காதல்சேர் அடியார் அகத்தூறும் மாருத வின்பமே மகாதேவனே கண்வளராய்.
நீmர் திருமேனி நிமலா வுனையல்லால் வேழுர் துணைசொல் விமலனே கண்வளராய்.
என்ன ருயிரே எனக்கினிய மெய்ப்பொருளே பின்னர் துணையாவார் பெருமானே கண்வளராய்.
அக்கைநிலை யாதெனவே யறிந்து பிரிந்திருந்த நீக்கமற்ற அன்பர் நிறைவேநீ கண்வளராய்.
ாங்கெங்கே பார்த்தாலும் எல்லாம்நீ யென்றுகண்ட துங்க வடியார்தந் துணைவனே கண்வளராய்,
வித்தத்தி லூறுந் தெவிட்டாத தெள்ளமுதே அத்தனே யாருயிரே ஆண்டவனே கண்வளராய்.
மத்தம் மதிசூடி மழவிடையின் மீதேறி எத்திசையுஞ் செல்லும் இறைவனே கண்வளராய்.
கருத்திற் கருத்தேயென் கண்ணுக் கினியவனே நிருத்தமிடுஞ் சோதியே நின்மலனே கண்வளராய்.
10
Page 157
364 நற்சிந்தனை
வருத்தமற்ற மெய்யடியார் மனத்திற் குடியிருக்கும் ஒருத்தனே புன்னையன்றி உண்டோநீ கண்வளராய். 11
காமக் கடல்கடந்து காட்சிபெற்ற நல்லடியார் சேம நிதியே சிவனே நீ கண்வளராய். 12
அன்பிற் குழைந்து குழைந்தையா வெனவரற்றும் அன்பர்க் குகந்த அரசேநீ கண்வளராய். 13
மண்ணுதி பூதமெல்லாம் வகித்த வுனையன்றி எண்ணவே றுண்டோ இறைவனே கண்வளராய். 14
ஆதார மாறு மகன்ற பழம்பொருளே பேருன செல்வப் பிரானே நீ கண்வளராய். 15
எட்டுத் திசையுமற் றெள்விடத்தும் நின்னையன்றிச் சுட்டவே றுண்டோ சுவாமிநீ கண்வளராய். 16
அந்திசந்தி யுன்னடியை வந்திக்கும் மெய்யடியார் சிந்தனையி லூற்றே செழுஞ்சுடர்நீ கண்வளராய். 17
குற்றமெல்லாம் போக்கிக் குணமாக்கி யெனையாண்ட தற்பரனே யென்குருவே சாமிநீ கண்வளராய். 1 8
ஆருக் கவலையெல்லாம் நீருக்கி யடிமையெனப் பேருக்கி வைப்பாய் பிரானேநீ கண்வளராய். 19
உள்ளத் தினுள்ளே யொளிருஞ் சிவக்கொழுந்தைக் கள்ள மனத்தவருங் காண்பரோ பராபரமே.
எல்லாஞ் சிவன்செயலென் றெண்ணுத மாந்தருக்கு உல்லாச மானகுணம் வருமோ பராபரமே.
நற்சிந்தனை V− 305 உண்மை முழுது மறிந்திடெடா
ஒருபொல் லாப்பு மில்லையெடா தம்பி உண்மை முழுது மறிந்திடெடா வருவது வந்து போகட்டுஞ் சாட்சியாய் வையகத்தில் நீ வாழுவாய் மாட்சியாய்.
சர்வம் பிரம மயமெடா தம்பி சந்தேக மில்லை நம்புநீதம்பி மர்ம மிதுபெரும் மர்மமெடா மகத்துக்கள் கண்ட மர்மமெடா. 2
அப்படியே யுள்ள பொருளெடா தம்பி ஆசையை நீக்கி யறிவாய்நீ நம்பி ஒப்புவமையு மில்லாப் பொருளெடா உள்ளும் புறம்பு முள்ளதெடா. 3
எல்லாச் சமயமுஞ் சொல்லுமெடா தம்பி ஏத்தி ஏத்தி வணங்கிடெடா உல்லாச மாகத் திரிந்திடெடா தம்பி ஒம்சிவாய நமவென் ருேதெடா. 4.
குணங்க டந்தது குணத்தில் கிடந்தது கும்பிட்டுக் கொண்டாடிப் போற்றிடெடா கணப்பொ முதும்மற வாதே தம்பி காமக் குரோதத்தை நீக்கிடெடா, 5
கூறும் நாமுதல் எல்லா மதுவெடா கூர்ந்து பார்த்துக் கும்பிடெடா ஆறுமுகமும் ஐந்து முகமும் ஐம்பெரும் பூதமும் அதன்வடிவே. 6
நல்லூரில் வாசன் செல்லப்பன் சொல்லை
எல்லோருங் கேட்டு மகிழ்ந்திடுவீர்
பொல்லாப்பு மிங்கில்லைப் புதுமையு மிங்கில்லைப்
பூரண சுதந்திரம் எம்மிடமே. 7
20 /
Page 158
306 w நற்சிந்தனை
திருவடி துணை
கண்ணபிரானுங் காணுக் கழலிணை என்றும் எந்துணை ஒம் விண்ணும் மண்ணும் ஒன்ருய்நின்ற மெய்யடி எந்துணை ஒம் எண்ணு மெண்ண மெல்லா மறியு மிணையடி
-- எந்துணை ஓம் நண்ணு மடியார் நாவில் நிற்கும் நல்லடி எந்துணை ஒம். 1 பண்டுமின்றும் என்றுமுள்ள பரனடி எந்துணை ஒம் மண்டுபேயோ டாடும்மலரடி என்றும் எந்துணை ஒம் நன்றுந்தீதுந் தான காத நல்லடி எந்துணை ஒம் மன்றுளாடும் மலரடி யிணைகள் என்றும் எந்துணை ஒம். 2
அந்த மாதி யில்லா வடியிணை என்றும் எந்துணை ஒம் வந்த கால னுயிரை வாங்கிய மலரடி எந்துணை ஒம் பந்த பாசம் நீக்கி யாண்ட பரனடி எந்துணை ஒம் தந்தை தாயாய் நின்ற தாளிணை என்றும் எந்துணை ஒம். 3
நினைக்கு மடியரை உருக்கு மடியிணை என்றும் எந்துணை ஒம் சினத்த காலனைச் செறுக்கு மடியிணை என்றும்
எந்துணை ஒம் தனத்த தனதன தாண்டவத் தாளிணை என்றும்
எந்துணை ஒம் அனைத்துந் தான யாடிய அடியிணை என்றும்
4 .எந்துணை ஒம் ܗܝ
--- சிவனடி துண
ஓம் சிவசிவ சிவனடி துணைஒம் ஓம் சிவசிவ கணபதி துணைஒம் ஓம் சிவசிவ சிவகுரு துணைஒம் ஓம் சிவசிவ அடியார் துணைஒம்,
அரகர சிவசிவ ஆடும் அடிதுணைஒம் சுரர்நரர் துதிசெய் தூய அடிதுணைஒம் பரவும் அடியார் பாடும் அடிதுணைஒம் கரவுடை நெஞ்சினர் காணுக் கழல்துணைஒம்
நற்சிந்தனை 367
தில்லையம்பலத் தாடுஞ் சேவடி துண்ைஒம் எல்லையில் லாவருள் அருளிய அடிதுணைஒம் வல்லை வந்தெனை ஆண்டவன் அடிதுணைஒம் கல்லை நேர்மனங் கரைத்த வனடி துணைஒம்
அம்மை யப்பன் அழகிய அடிதுணைஒம் இம்மைநற் பயன்தரு மீச னடிதுணைஒம் செம்மை சேர்சிவன் திருவடி துணைஒம் எம்மை யாண்ட எங்கோன் அடிதுணைஒம்
தேசம் புகழுஞ் சிவன்திரு வடிதுணைஒம் வாசம் மருவும் மலரடி எந்துணைஒம் பாசம் அகலும் பரன்திரு வடிதுணைஒம் ஈச னெந்தை எம்பிரா னடிதுணைஒம்.
" ஓம் நமோ நாராயணு " இராகம்-மத்தியமாவதி தாளம்-ஆதி
பல்லவி
ஓம் நமோ நாராயணு உத்த மனே பூரீராமா அநுபல்லவி நாம் வேருே நீ வேருே நல்ல வாக்குத் தாராயோ. (ஒம்)
சரணங்கள் ஏங்குவதே நாமையா எழில்சேரும் ராமையா தாங்குவா யினிராமச் சந்திரனே தருணமிது. (ஒம்) அசோதைகுல பாலனே யசுரர்குல காலனே தசாவ தாரனே தமியேனுக் காதரவே. (ஓம்)
எந்தவே ளையுமுன்னை ஏத்திநீநா னேயென்று சிந்திக்கவரந் தாராய் சீமானே பூரீராமா. (ஒம்)
Page 159
308 நற்சிந்தனை எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவான் ஈசன்
அன்னை பிதாக்குரு தெய்வந் தன்னை அறிந் தேனடி-தங்கமே
சற்குருவி னருளாலே
தானதாம் தானதாம் தனதாம் தனதாம். 1.
ஆரறி வாரென்று சொல்லும் பேரறிவைக் கண்டேனடி-தங்கமே பேசாதேவாய் நேசமாய்நில் ஆசாபாச மனைத்தையும்வெல், 2
இம்மையிலும் மறுமையிலும் எம்மைவிட்டு நீங்கானடி -தங்கமே இறப்புப் பிறப்பில்லையடி ஏத்தியேத்தித் தோத்திரஞ்செய் சூத்திரத்தைக் கண்டுதொழு. 3.
ஈயாத புல்லரை நீ ん வாயாரப் பாடாதே -தங்கே
வாணுளைநீ பேணுதே நாணுதேமனங் கோணுதே காணுதேபணம் பேணுதே. 4.
. உண்மை முழுதுமென்ற
கண்ணைத் திறந்துவிடு-தங்கமே காட்சியைவிடு சூட்சியைத்தொடு சாட்சியையடு மாட்சிமைப்படு. - 5
ஊனயுயிராய்க் கலந்த கோனரைநீ கொண்டாடு-தங்கமே
கூவிக்கூவி யழைத்திடுவாய் கும்பிட்டுக்கொள் நம்பிக்கைவை
கூடாதகூட்டங் கூடாதே. - V− 6
நற்சிந்தனை 309
எண்ணுவார் நெஞ்சிலீசன் நண்ணுவான் நீயறிந்துகொள்-தங்கமே நானுமில்லை நீயுமில்லை நாடிக்கொள் தேடிக்கொள் கூடிக்கூடிப் பாடிக்கொள். 7
ஏகன நேகனென்று மோகமறச் சொன்னசொல்லைத்-தங்கமே மொழியாமல் மொழிந்துகொள் மூட்டிக்கொள் அங்கி
கூட்டிக்கொள் அருள். ん 8
ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறிநீ யல்லையடி-தங்கமே அந்திசந்தி கும்பிடடி ஆதாரமவன் ஆதேயமவன் நிராதாரமாய் ஆராதனைசெய். 9
ஒன்றிரண்டென் றெண்ணுதே நன்றுதீதென்று நாடாதே-தங்கமே நாதாந்தமென்று நாடிடடி நந்தாவிளக்கது சிந்தாமணி நொந்தாரைவந்து ஆதரிக்கும். 10
-ஒவியம்போ லிருந்திடடி
பாவியென்றநாமம் படையாதே-தங்கமே * சேவித்துச்சீவன் முத்தியடைந்திடு
சிந்தித்திடுதினம் வந்தித்திடு பந்தபாசம் வெந்துவிடும். m 1
ஒளவியநெஞ்சம் படையாதே திவ்வியமாக வாழ்ந்திடடி-தங்கமே அக்குமாலை யணிந்திடடி அஞ்சாதேசென்று கெஞ்சாதே அஞ்செழுத்தைநெஞ்சிற் கொஞ்சிடடி. 12
Page 160
3 10 °
நற்சிந்தனை
கண்டேன்
நில்லாத நீர்சடைமேல் வைத்த நிமலனை நினைக்கு மடியவர் மனங்கோயில் கொண்டானை 1
எல்லாமு மல்லவு மாயிருப் பானை என்ன ரமுதினை எளிவந்த பிரான 2
கொல்லானை யின்னுரி போர்த்துகந் தானக் கூடலிற் பரியெல்லாம் நரியாக்கி னனை 3
செல்லார் வரைகளும் அருவியும் பொழில்களும் தேங்கும் இலங்கை மாநக ரானை 4
எண்வகை யொருவனை யேந்திழை பாகனை மண்முதற் பூதங்கள் வகுத்த பிரான 5
கண்ணுக் குக்கண் ஞய கடவுளை மன்னு மிலங்கை மாநகர் கண்டேன் 6
தித்திக்கு மமுதினைத் தெளிந்த தேறலை
எத்திக்கு மாகிய என்ன ருயிரினை 7
பத்திக்கு மடியவர் பாட்டிற் குகந்தானை முத்துக்கள் சேர்முது இலங்கையிற் கண்டேன் 8 சாந்தம் பொறுமையன்பு தாங்கொண்ட 6(JLg_חחש மாய்ந்துபோ காவண்ண மருள்தரும் ஒருவனை 9
காந்தள் முல்லை கானர் மல்லிகை ஏந்திருக்கும் நல்ல இலங்கையிற் கண்டேன் 10 பொன்னர் மேனி புரிசடை யண்ணலைப் பூதங்க ளைந்தும் பொருந்திநிற் பானை l
தென்ன தென்ன வெனவண்டு பாடும் சீரார் இலங்கை மாநகர் கண்டேன். 12
நற்சிந்தனை 311 வேண்டும். வேண்டாம்
நாங்கள் சிவமென் றெண்ண வேண்டும் தூங்காமல் தூங்கிச் சுகிக்க வேண்டும் ஆங்காரந் தன்னை யகற்ற வேண்டும் நீங்காத நிட்டையில் நிலைக்க வேண்டும் மாங்காய்ப்பா லுண்டு மகிழ வேண்டும் தேங்காமல் தேங்கி யிருத்தல் வேண்டும் ஏங்காமல் வையத்தி லிருக்க வேண்டும் உல்லாச மாக வுலாவல் வேண்டும் எல்லா ரிடத்தும் அன்பு வேண்டும் மேலோரைக் கண்டால் வணங்க வேண்டும் பொல்லாப் பில்லையெனச் சொல்ல வேண்டும் வல்லமை பேசி மகிழ வேண்டும் அல்லாகூ என்று அரற்ற வேண்டும் சில்லாலைப் பாட்டுப் பாட வேண்டும் தில்லாலைக் கள்ளுக் குடிக்க வேண்டும் கல்லானை கன்னல் உண்ணல் வேண்டும் மல்லாகத் தானை மதிக்க வேண்டும் தன்னைத் தன்ன லறிய வேண்டும் முன்னை வினையைக் களைய வேண்டும் சென்னைப் பட்டினஞ் செல்ல வேண்டும் அன்னை போல அன்பு வேண்டும் பொன்னை மாதரைப் போக்க வேண்டும் பின்னைப் பிறவியை நீக்க வேண்டும்.
Χ X Σζ சாங்காலம் வந்தால் திகைக்க வேண்டாம் வாங்காமல் வாசியில் தூங்க வேண்டாம் பாங்காக வாழ விரும்ப வேண்டாம் வேங்கைப் புலிவந்தா லோட வேண்டாம் ஆங்கென்றும் ஈங்கென்றும் அலைய வேண்டாம் போங்காலம் வந்தால் புலம்ப வேண்டாம்.
Page 161
32". நற்சிந்தனை
ஆசான் கூசான் பேசான்
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் ஆசான்-அவன் உன்மத்தன் போற்றிரிவான் கூசான். 1 -
வருவாரைப் போவாரை ஆசான் - வாயில் வையாமல் வைதுவிடக் கூசான். 2
உண்மை முழுதுமென்பான் ஆசான் - அவன் உறங்காம லுறங்குவான் பேசான். 3.
நன்மைதீமை யறியாதான் ஆசான் - அவன் நாமறியோம் என்றுசொல்லக் கூசான். 4.
அப்படியே யுள்ளதென்பான் ஆசான்-சொல்லி
ஆரறிவா ரென்றுநகை செய்வான். 5
முப்போதுந் தேரடியி லிருப்பான்-ஆசான் முகமலர்ந்து தன்னிலே சிரிப்பான். 6
விற்றுாணுென் றறியாதான் ஆசான்-என்றும் விசரனைப் போற்றிரிவான் கூசான். vn 7
கற்ருேரும் அறியாத சீரான்-அவனைக் s கைதொழுது நின்ருலும் பாரான், 8
இன்னணிவ னென்றெவரு மறியார்-இவனை ஏற்றித் தொழுதவரைக் குறியான். 9
பன்னட் பழக்கத்தினுற் சிலபேர்-இவனைப் பாரிற் குருவாகக் கொண்டார். 10
நற்சிந்தனை . 313
. 36öTLOT sŠšŠL LosLOlg
அக்கக் காவடி அம்மம் மாவடி ஆன்மாநித்திய மாமடி Ι முக்குறுணிப்பிள்ளையாரை வேண்டி மூலமந்திரஞ் செபியடி 2 பக்குவமாய்ப் பேணடி
பத்தரினத்தொடு கூடடி 3
அக்குமணிதனைக் கட்டடி مح۔ ஆசைமூன்றும் நீக்கடி 4
திக்குத்திகாந்தமுங் கைவசமாச்சடி சீவன்சிவனென்று சிந்தித்துக்கொள்ளடி 5 முக்குணமாயைக் கப்பாலேசெல்லடி முன்னும்பின்னும் பாராதேயடி 6
பக்குவகால மித்தருணமடி பாராதிபூத மெல்லாநீயடி 7
விக்கினமொன்றும் இல்லையடி விண்போலிலங்கி நின்றிடடி 8 துக்கஞ்சுகம் இல்லையடி
சும்மாவிருந்து பாரடி 9 தர்க்கஞ்செய்யப் போகாதேயடி தானேதான யிருந்திடடி Va 10
செக்கச்சிவந்த கழற்பாதம் சிரசிற்சுமந் தேத்திடடி,
Page 162
314
நற்சிந்தன.
ஒளவை வாக்கி னருமை காண்க
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் தன்னையும் பிறரையுந் தானே காண்க
ஆலயந் தொழுவது சாலவும் நன்று சீலமு டைமையைச் சிந்தையிற் காண்க
இல்லற மல்லது நல்லற மன்றெனுஞ் செல்வ வாக்குத் திசைதொறுங் காண்க
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் ஓயாது பேசி யுவந்து காண்க
உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகெனும் ஒண்டொடி ஒளவை தன்னுரை காண்க
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடுமெனுஞ்
சீருடை நன்மொழி சிறப்பே காண்க
6
எண்ணு மெழுத்துங் கண்ணெனத் தகுமெனும்
வண்ணச் செய்யுளின் வளத்தினைக் காண்க ஏவா மக்கள் மூவா மருந்தெனுந் தேவா மிர்தஞ் சிந்தையிற் காண்க
ஐயம் புகினுஞ் செய்வன செய்யெனும் பொய்யில் வாசகம் புந்தியிற் காண்க ஒருவனைப் பற்றி யோரகத் திருவெனுந் திருமொழி தன்னைத் தேடிக் காண்க ஒதாதார்க் கில்லை யுணர்வோ டொழுக்கம் வேதா கமத்தின் விதியினைக் காண்க
ஒளவியம் பேசல் ஆக்கத்திற் கழிவெனுந் திவ்விய வாக்கைத் தினமுமே காண்க அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடெனும் அஃகுத லில்லா வரும்பொருள் காண்க.
7
10
12
13
நற்சிந்தனை 3 I5。 கூறுவார் கோடிபாவம் நீறுமே
வஞ்சி விருத்தம் கூறுவார் கோடி பாவம் நீறுமே நெஞ்சி லெண்ண ஆறுவா ரகத்தி லீசன் சேருமே சிந்திப் பாயே. − சிந்தித்துத் தெளிந்தார் தம்மைப் பந்திக்க மாட்டா பாவம்
பொறிவழி போகார் நல்லோர்
அறிவினு ரறிவார் திண்ணம். 2 இருவினை சேரா தீசன் திருவடி சேர்வார் தம்மைக் குருவருள் கொண்டார் தம்மைத் திருவருள் சேரும் மெய்யே. 3
இருவருங் காண வீசன் அருவமு முருவு மாவான் இணங்கியே யேத்து வாரை வணங்குமே மண்ணும் விண்ணும். 4
வேண்டும்
நமச்சிவாய வாழ்கவென நயந்து பாடவேண்டும்
-நயந்து பாடவேண்டும்
நமனுக்கிட மில்லையென வியந்து கூறவேண்டும்
இமைப்பொழுதும் மறவாமல் ஏத்தி விடவேண்டும்
ஏத்தி விடவேண்டும் -- ۔
எமக்குக்குறை வில்லையென வாழ்த்தி விடவேண்டும். 1.
சமயநெறி கடவாமல் தான்வாழ வேண்டும்
-தான் வாழ வேண்டும் தன்னைப்போற் பிறரையெல்லாம் நேசித்திட வேண்டும் உமையம்மை திருவடியைக் கும்பிட்டிடவேண்டும்
... . . . -~கும்பிட்டிடவேண்டும் உடன்பிறந்தா ரோடுறவு கொண்டாட வேண்டும். 2
Page 163
36 நற்சிந்தனை
பட்டதுபட்டேற்றும் கண்டவரும் விண்டதில்லை விண்டவருங் கண்டதில்லைத் - தங்கம் வேறுபொரு வில்லையெடி. பண்டயனும் மாலுந்தேடிப் பார்க்கொணுது நின்றரெடி-தங்கம் என்றுமே யுள்ளதெடி, 2 பட்டதுபட் டேற்றுமென்று பட்டினத்தார் சொன்னுரெடி-தங்கம் இருந்தபடி யிருக்குதெடி. 3. பொறியஞ்சும் வென்றவர்தம் பூஷணமா யுள்ளதெடி -தங்கம் நெறியா யிருந்திடெடி. 4 சித்தத்திலே தித்திக்குந் தேனைநீ யுண்டிடெடி-தங்கம் தீராநோய் தீருமெடி. 5 அட்டாங்க யோகத்திற்கும் அப்பாலே யுள்ளதெடி-தங்கம் ஆரறிவா ரென்ருரெடி. 6 கட்டுப்ப டாமனத்தைக் கட்டிவிட்டால் பூமியிலே-தங்கம் தட்டுப்பா டில்லையெடி. .7 வலமிடமா யோடுகின்ற வாசியின் நிலையறிந்தால்-தங்கம் வாழ்வுனக் குண்டாமெடி. 8 தச்சன்கட்டா வீட்டிலே தாவுபரி கட்டிவிட்டால்-தங்கம் w அச்சமினி யில்லையெடி. 9 பிறப்பிறப் பில்லாத பெருமான் திருவடியைத்-தங்கம் மறக்க முடியுமோடி. 10
நற்சிந்தனை - 317
ஐந்தெழுத்தை நெஞ்சகத்தில் துஞ்சாமல் சொல்லுமவர்-தங்கம் துரியத்தில் வாழ்வாரெடி.
இன்சொல் விளைநிலனய் ஈதலே வித்தானுல்-தங்கம் இன்பம் பெருகுமெடி, 12
துட்டச் சமணர்கள்தம் துடுக்கை யடக்கினவன்-தங்கம் மட்டில்லாத் தெய்வமெடி, 13
நன்மையுந் தீமையும் நாமல்ல வென்றுகண்டால்-தங்கம் மயக்க மொழியுமெடி. 4
சுருதியோ டாகமங்கள் சொல்லமுடி யாதபொருள்-தங்கம்
கருத்தி லிருத்திடெடி, 15 விருத்தணுய்ப் பாலணுகி வேடிக்கை செய்தவனைத்-தங்கம் வேண்டிப் பணிந்திடெடி. 16
፵፭
அறிவை அறிவாலே அறி இராகம்-பைரவி தாளம்-ஆதி
usis)
பொறிவழிப் புகுத்துதே பொல்லாத மனமையோ போக்கு வரவில்லாப் புண்ணியனே கண்பாராய்.
அநுபல்லவி அறிவை யறிவாலே அறியெனப் பெரியோர்தாம் அன்றுசொன் ஞரதை ஐயை யோமறந்து. (பொறி)
. சரணம்
கிறியுங்கீழ் மையுஞ்செய்து கீழும்மே லுஞ்சென்று நெறிவழிச் செல்லாமல் நெஞ்சு கலங்குதே நீயேநா னெனவெண்ணி நேசிக்க எனக்குன்றன் நிசசொட் ரூபங்காட்டி நேரில்முன் வாராயோ. (பொறி)
Page 164
818 நற்சிந்தனை குருமணி
புலனவென்ற பெரியோர்க ளுளம்பூத்த மணி
பொள்ளாமணி யென்றும் புதுமணி இலமென்று வந்தடைந்தா ரிடும்பை கெடுக்கும்மணி
எவராலும் விலைமதிக்க வொண்ணு மணி பலநிறமாய்ப் பாரினிடைத் தோற்றும் மணி பச்சைமால் மெச்சிப் பணியும் மணி இலங்கையிலே யெங்கு மிருக்கும் மணி
என்னைப் பணிகொண்ட குருமா மணி.
கசிந்துருகிப் பாடுவார் காணும் மணி
கண்மூன் றுடைய கதிர்மா மணி − வலிந்தென்னைப் பணிகொண்ட வண்ண மணி
மலரோனும் மாலவனுங் காணு மணி இந்தோடு கங்கைசென்னி யேந்தும் மணி
இளநாகம் -மேனியிலே சாத்தும் மணி அந்தமணி இலங்கையிலே வாழும் மணி ,
ஆரேனும் தேடுவார்க் ககப்படுந் தெய்வமணி. 2
பந்தமெனும் பாழிருளைக் கிழிக்கும் மணி
பரவுவார்க் கிலவசமாய்க் கிடைக்கும் மணி அந்தமுட னதியில்லா அரும்பொன் மணி
அதிசயங்க ளநேகமெல்லாங் காட்டும் மணி முந்திய மணிக்கெல்லாம் முதலான மணி
மூவர்களுந் தேவர்களும் பணியும் மணி இந்தவளஞ் சேரிலங்கை வந்த மணி
எனையாண்ட குருமணியென் சொந்த மணியே. 3
ஓம் சிவாயநம
ஓம் சிவாயநம என்று சொல்லு , உண்மை முழுது மென்று வெல்லு நாம் நாம் நாம் என்று நில்லு நரக மோட்சம் நாடாமல் தள்ளு போம் போம் வினையென்று கொள்ளு பூரண நிட்டையிலே நில்லு - - - - - வீம்பிடும்பை யகங்காரம் கல்லு - விண்ணும் மண்ணும் கைவசமாய்த் துள்ளு. 1
நற்சிந்தனை 39
சற்குருவின் பாதத்தைப் போற்று தன்னைத் தன்னல் அறிந்து தேற்று நிர்க்குண நிட்டையிலே யேற்று நீநான் என்பதை மாற்று மல்லாகத்தில் சுன்னகத்தான் வீற்று மாசற் றிருப்பா னென்று சாற்று பொல்லாப் பிங்கில்லையென்று போற்று போக போக்கியம் எல்லாம் மாற்று. 2
அன்பருடன் கூடிநீ வாழ்த்து புண்ணிய பாவத்தை வீழ்த்து போக்குவர வில்லையென்று தேற்று எல்லாரி டத்து மன்பு காட்டு ஏகனநேகன் என்று நாட்டு நல்லூரான் திருவடியே பாட்டு நமச்சிவாய வாழ்க வென்று சூட்டு. 3
போக்கும் வரவு முள்ளா னில்லான்
போக்கும் வரவு முள்ளா னில்லான்
பூத கணங்கள் சூழப் பொலிவான்
தேக்கு மடியார் சிந்தையி லுள்ளான்
திருவே யுருவாய்ச் செறிந்த சீமான்
காக்குந் தலைவன் கருணை யுடையான்
கண்மூன் றுடையான் கால காலன்
பூக்கும் பொழில்சே ரிலங்கை வாழ்வான் 2:ዶ , -
பொன்ன ரடியைப் போற்ருய் மனனே
என்று மினியான் ஏத்து மடியார்
இடர்சே ராமே விடைமேல் வருவான் நன்றுந் தீது முள்ளா னில்லான்
நாரி பாகன் ஞான வுருவான் அன்று மின்று மென்று மாகி
யந்த மாதி யில்லாப் பெருமான் குன்றும் மலையும் பொலியு மிலங்கை
குடியாய்க் கொண்டா னடிகள் போற்றுதுமே 2
Page 165
320 நற்சிந்தனை
தம்மையன்றி வேறென்றுங் காணுர்
தம்மைத்தம் மாலறிந்த சாலப் பெரியோர்கள் தம்மையன்றி வேறென்றுந் தாங்காணுர்-பின்னைப் பிறப்பும் இறப்புமில்லைப் பேய்பித்தர் போல்வார் மறப்பின்றி வாழ்வார் மகிழ்ந்து.
மதியு மிரவியும் மன்னுஞ் சமாதி பதியும் படியாக்கிப் பாழ்த்த-விதிவென்று வாழ்வாரை வாழ்த்தி வளரு மடியவர்க்குத் தாழ்வுண்டோ தம்பிநீ சாற்று. 2
சாந்தம் பொறுமை தயைதவந் தானமிகு மாந்தருக்குத் துன்பம் மருவுமோ-சாந்தனையும் அன்னர்பா லன்புவைத்து ஆரறிவார் என்றகுரு தன்னுணை போற்றல் தவம். 3.
தவத்திற் சிறந்தார் தமதுயிர் போல உவப்புடனே யோம்பியொரு பொல்லாப்பு-மில்லென்ருன் தாளிணையைப் போற்றிச் சகத்துடன் கூடியே வாழக் கருதுவதே மாண்பு. 4
மாண்டார் மனத்தானை மண்விண்ணு மொன்முகி நீண்டான நெஞ்சமே நீநினைப்பாய்-வேண்டாமை வேண்டுவோர் வீடு பெறுவாரே வையத்தை ஆண்டாலு மென்ன மறி. 5 . سه
அப்படி யுள்ளதென் றன்பாகச் சொல்லியே அப்பன்செல் லப்ப னருள்தந்தான்-இப்பார் இருள்கடிந் துள்ளத் தெழுந்தவெல் லென்றன் அருள்சேர் மாதவத்தோ னன்று. 6
நற்சிந்தனை v 32
தேவாதி தேவ இராகம்-மோகனம் தாளம்-ஆதி
தேவாதி தேவ அடியார் இடர் பொடிபட அருள் தரு. (தேவாதி)
அநுபல்லவி −
ஆபாச மாபாச ஆழி வீழாவடிய வரும் கோபாலனும் மற்றுங் கோகனகத்தானுந் துதி. (தேவாதி)
சரணங்கள்
காலும் புன லணலும் வானும் நெடுநிலனும் சசி ரவியுமான மாவடிவா மேலை யெழுவிடத்தை மிடற்றி லடக்கிவைத்த விகிர்தன் எனையுடையான். (தேவாதி)
கலகஞ் செய்யும் இருண்ட காலனும் நெஞ்சமஞ்ச உலகங்களும் நடுங்க நடனமிடும் துதிமிகு யோகசுவாமி சொன்ன கீதம் விளங்கச் சதுர்வேத முழங்கத் தாண்டவமாடும். (தேவாதி)
செல்வன் சீரடிகள் காப்பு ஒருபொல்லாப்பு மில்லை யென்னு மோசையோடுவந்து
. . . நோக்கித் திருவருள் தீக்கை செய்த செல்வன்சீ ரடிகள் காப்பு. 1 ஆரறி வாரென் றுன்னு மரியமந் திரத்தைத் தந்த ,
பேரறி வுடைய செல்வன் பெய்கழ லென்றுங் காப்பு. 2
முழுவது முண்மை யென்று முகமலர்ந் v
- தெனக்குச் சொல்லிப் பழுதற வாண்டு கொள்ளும் பாதபங் கயமே காப்பு. - 3 பாராதி -பூத மெல்லாம் பரமன்றன் வடிவ மென்றே சீராக வெடுத்துச்சொன்ன செல்வன் தாளென்றுங் காப்பு.4 காயமே கோவிலாகக் கண்டுபா வனைசெய் யென்று நேயமா யெனக்குச் சொன்ன நிமலன்தா ளென்றுங்
. . காப்பு." 5 பற்றினற் பிறந்திறந்து பாரினில் சுழன்ரு யந்தப் ? பற்றிலை விடுவாயென்ற பரமன்தா ளென்றுங் காப்பு. 6
2.
Page 166
322 நற்சிந்தனை
வந்தனை செய்திடடா தம்பி
உண்ணுதே யுறங்காதே யூரூராய்த் திரியாதே பெண்ணுசை வையாதே-தம்பி!
பிரமத்தை யறிந்திடடா- 1
கண்ணுரக் கண்டிடடா காலமே லேற்றிடடா விண்ணுணம் பேசாதே-தம்பி! வேறுபொரு வில்லையடா. 2
எண்ணும லெண்ணிடடா இயைந்தபடி நடந்திடடா மண்ணுசை வையாதே -தம்பி! மலரடியைப் போற்றிடடா. 3
சுன்னகத் தானையென்றுந் தோத்திரம்நீ செய்திட்டா அன்னை பிதாக்குருவை-தம்பி! அன்புடனே போற்றிடடா, 4.
வலமிடமாய்ச் செல்லுகின்ற வாயுவைநீ தம்பியடா பலமுனக்கு வந்துவிடுந்->தம்பி! பற்றற்று நின்றிடடா, 5
குலநலம் பாராதே கோபம்நெஞ்சில் வையாதே தலமாறுந் தாண்டிடடா-தம்பி! தனிமையைநீ நாடிடடா. 6
உண்டில்லை யென்றுசொல்லி யுரையாட வேண்டாமடா கண்டு களித்திடடா-தம்பி! கருணைவெள்ளம் பெருகுமடா. 7
பண்டுசெய்த வல்வினைநோய் பாரிற் பறக்குமடா நன்றென்றுந் தீதென்றுந்-தம்பி!
நடுவாக நின்றிடடா. - - 8 கொன்ருென்றும் புசியாதே குருவாக்கை மறவாதே அன்றுமின்று மென்றுந்-தம்பி! அப்படியே யுள்ளதடா. 9
நற்சிந்தனை 323
மன்றுபறித் துண்ணுதே மாயத்திற் சிக்காதே குன்றுபோல் நின்றிடடா தம்பி! குறைவொன்று மில்லையடா. 10
இந்தப்பத்துப் பாடலையும் இரவும்பக லுஞ்சொல்லி வந்தனை செய்திடடா-தம்பி! வறுமைபிணி தீருமடா.
நினைமின் மாந்தர்காள்
நினைமின் மாந்தர்காள் நினைமின் மாந்தர்காள் நீடூழி சிவதொண்டன் வாழ்க. (நினைமின்) 1
அனைவரு மொன்றப்க் கூடி யவன ஆதரித் தன்பு பாராட்டிப் - , புனைந்து பூமாலை சூட்டிப் புகழ்ந்து (நினைமின்) 2 தினைத்துணைப் போதும் மறவாது சிந்தித்துத் தேவாரம் திருவாசக மோதி. (நினைமின்) 3
முனைத்து வரும்பெருங் கூற்றை யுதைத்த முதல்வனைத் திங்கள் தோறும் நும்மணம். (நினைமின்) 4
அணைந்து வந்து ஆசான் செப்பிய அரிய வாசகந் தருஞ்சிவ தொண்டன. (நினைமின்) 5 கனைக்குங் கடல்சூழ் இலங்கைத் தீவில் கதிரொளி போலொளி பரப்புந் தொண்டனை. (நினைமின்) 6
வினேப்பகை வெல்ல விருது கட்டிய வேத மோதும் வித்தகத் தொண்டன. (நினைமின்) 7
சுனைக்கும் நல்லூர் தூயசற் குருவின் துணையடிமற வாத தொண்டன. (நினைமின்) 8
Page 167
昭24 நற்சிந்தனை
சிவனடி வாழ்க
உலகெலா முணர்ந்த வொருவ னடிவாழ்க அலகிலா நாத னடியிணை வாழ்க ஈருய் முதலா யிருந்தோ னடிவாழ்க மாருக் கருணை வள்ளலடி வாழ்க சிவனெனும் நாமத் திருவுடையான் தாள்வாழ்க என்னை விலகா விறைவனடி வாழ்க அன்னைபோல் வந்த வவனடி வாழ்க பின்னைப் பிறவிப் பெருமா னடிவாழ்க முன்னைவினை தீர்த்த முதல்வனடி வாழ்க எல்லாமா யல்லவுமா யிருந்தோ னடிவெல்க கொல்லான யுரிபோர்த்த குழக னடிவெல்க தில்லையிற் கூத்தன் திருவடிகள் மிகவெல்க எல்லையில் லாத இறைவ னடிவெல்க கல்லான கன்னல் கறிக்கவைத்தோ னடிபோற்றி நல்லோரை நாளும் பிரியா னடிபோற்றி நாரணனுங் காணுத நாத னடிபோற்றி ஆரணமுங் காணு வடியிணைகள் தாம்போற்றி பூரண மான புண்ணியன்றன் தாள்போற்றி எல்லையில் லாம லிறந்து பிறந்தேனை எல்லையில் லாத கருணையின லாண்டபின்பு கண்டேன் களித்தேன் கலங்காத சித்தமின்று கொண்டேன் குளித்தேன் குவலயத்தி லாசையெல்லாம் விண்டேன் வெளிப்பட்டேன் வேறென்றி லிச்சையுமே அண்டாத வண்ண மடிமைகொண்ட பெம்மானே பொன்னன மேனியனே போக்குவர வில்லானே எந்நாளு மென்னை மறவாப் பெருமானே அடியார்த முள்ளமே யாலயமாய்க் கொண்டோனே கடியார் புரமூன்றுங் கண்ணழலாற் செற்றேனே முடியா முதலே முதலீறு மானவனே அடியேனை யாட்கொண்ட வையா பெருமானே பொடியாரும் மேனியனே பூங்குழலாள் பாகனே படிமீதில் வேடனிட்ட பன்றியூ னுண்டானே
நற்சிந்தனை Y 325
அடியார்க் கடியனே யானந்தக் கூத்தனே பாண்டியனுய் வந்துமண்ணிற் பாராண்ட பெம்மானே வேண்டுவார் வேண்டுவதை விரும்பிக் கொடுப்போனே இருநிலனய்த் தீயா யிருந்த விறையோனே மருவார் குழலியொடு மகிழ்ந்தங் கிருந்தவனே அப்பருக்குப் பொற்கா சளித்த பெருமானே ஒப்பிலா வொன்றே யொளியே யெனவழுத்தி எப்பொழுது முன்னை யிறைஞ்சத் தப்பிலாத் தண்ணருளைத் தந்தாள் தனிப்பொருளே.
ஆள வேண்டுமே
இராகம்- சங்கராபரணம் தாளம்- திரிபுடை
sis)
சஞ்சல மிகவும் மிஞ்சுதே சற்குருநாதா தமியேனை யாள வேண்டும். (சஞ்சல)
அநுபல்லவி
வஞ்சம் பொருமை கோபம் வரவர நெருக்குதே வாணு வினசை மிகமிகப் பெருக்குதே. (சஞ்சல)
gy Goto
எப்படிச் சொன்னலும்நீ யேனென்று கேளாமல் செப்படி வித்தை செய்தல் திருவருட் காகுமோ ஒப்புவமை யில்லாத அப்பனே செல்லப்பனே உன்றுணே யல்லாம லொருவரு மில்லை ஐயா. (சஞ்சல)
Page 168
326 நற்சிந்தனை தீருவருள் தருவாயே
இராகம்-மோகனம் தாளம் -ஆதி
பல்லவி தெய்வமே திருவருள் தருவாயே நீ.
அநுபல்லவி வையக மீதில் வணங்க அறியேன் பொய்யும் புலையுங் கொலையுந் தவிரேன். (தெய்வமே)
சரணங்கள்
கையும் மெய்யுங் கருத்துக் கிசைய ஐயா தந்தனை யதையா னறியேன் மெய்யா யுன்றன் மெல்லடிக் கபயம்
மேலும் மேலும் உனையான் வேண்டுவன். (தெய்வமே) செந்நெலுங் கன்னலுஞ் செறியும்நல் லூரில் dh
தேசிகன் தாசன் யோகசுவாமி சொல்லுங் கீதம் சொல்லுவார் கேட்பார் துன்பம் நீங்கி யின்ப மோங்கும். (தெய்வமே)
தாளம் பேர்டு தாளம்போடு தாளம்போடு தாளம்போடு தன்னையறிந்தோ மென்றுசொல்லித் தாளம்போடு 1 ஆழநீள மில்லையென்று தாளம்போடு அவனேநா மென்றுசொல்லித் தாளம்போடு 2 வாழுவோ மென்றுவென்று தாளம்போடு மாளமாட்டோ மென்றுசொல்லித் தாளம்போடு 3 நாம்நாம்நாம் என்றுசொல்லித் தாளம்போடு / நம்மையறிந் தோமென்று தாளம்போடு 4. போம்போம் வினையென்று தாளம்போடு பெம்மானுக் கடிமையென்று தாளம்போடு 5 ஒம்ஓம் என்றுசொல்லித் தாளம்போடு உள்பொருள்நாம் என்றுசொல்லித் தாளம்போடு. 6
நற்சிந்தனை 3.27
சமயங் கடந்த சங்கரா வடைக்கலம்
நேரிசையாசிரியப்பா
உவமையொன் றில்லா வொன்றே யடைக்கலஞ் சமயங் கடந்த சங்கரா வடைக்கலம் அமையு மடியா ரன்பே யடைக்கலம் உமையாள் மகிழு மொருவா வடைக்கலம் எந்தா யடைக்கல மிறைவா வடைக்கலஞ் சிந்தனைக் கரிய சிவமே யடைக்கலம் அந்தமு மாதியு மில்லாய் போற்றி அந்தமு மாதியு முள்ளாய் போற்றி ஒடும் பொன்னும் ஒன்ருய் நோக்குவார் தேடும் பொருளே செல்வமே போற்றி பாடு மடியார் பரனே போற்றி வாடு மடியார் மழையே போற்றி தேடக் கிடையாச் சிவமே போற்றி ஆடகத் தில்லை யரனே போற்றி குழைத்தெனை யாண்ட கோவே போற்றி மழவிடை யேறும் மாதவ போற்றி பிழைத்த வெல்லாம் பொறுப்பாய் போற்றி தழைத்தநற் கொன்றைச் சடையாய் போற்றி வரம்பி லின்ப வடிவே வாழ்க கரத்தி லங்கி கலந்தாய் வாழ்க சிரத்திற் றண்மதி தரித்தாய் வாழ்க புரத்தை யெரித்த புங்கவ வாழ்க வாழ்க வாழ்க நின்னடி வாழ்க வாழ்க வாழ்க வையகம் வாழ்க வாணுதல் மங்கையும் மகிழ்ந்தே.
Page 169
32& நற்சிந்தனை
அடைக்கலம் அடைக்கலம் 1
அளவிலா வொன்றே யன்பர்க ளன்பே உலகெலாம் நிறைந்த வொண்சுட ரொளியே மலமிலா முதலே மாசிலா மணியே பலரும் புகழ்ந்துரை பரம தயாளுவே நிலம்நீர் தீகால் வானப் நின்ற அலகிலா வாட லுடைய வப்பனே அழுதபிள் ளைக்காய்ப் பாற்கட லழைத்தாய் தொழுதசுந் தரர்க்காய்த் தூயபொன் வழங்கினய் வழுதிபோல் வந்து மாமுடி தாங்கிப் பழுதி லாத பார்தனை யாண்டாய் அந்தணன் வேண்ட வரிய கூற்றினை வெந்திறற் ருளால் வீழச் செய்தனை கண்ணப்ப னுானைக் கலந்து புசித்தாய் என்பது கேட்டுன் னிணையடி யடைந்தேன் என் பிழை யெல்லாம் பொறுப்பதுன் கடனே பொன் போல் மதியம் பொதிந்த சடையாய் அடைக்கலம் அடைக்கலம் அப்பனே படைக்கலம் நின்திருப் பஞ்சாக் கரமே.
அடைக்கலம் அடைக்கலம் 11
அடைக்கல மடைக்கல மரனே யடைக்கலம் விடைக்கல னுகந்த வேதாந்த விளக்கே ஆறும் பிறையுஞ் சூடிய வரசே கூறு மடியார் தங்கள் குருவே உருகி யுருகி யடியே னுணரப் பெருவரந் தருவாய் பேரரு ளாளர மாசிலா மணியே மன்னர்தம் மன்னவா காசி வாழும் கண்ணுதற் பரனே பூசிக்கும் யோக நாதன் பொற்பே வாசித்துக் காண வொண்ணு மறையே இந்திரன் முதலோ ரறியா விறையே சந்திரன் தயங்குஞ் சடையுடை யோனே அந்தமு மாதியு மில்ல3 வமலா சந்தத முன்பதஞ் சாற்றுவார் தமக்குச் சாலோக பதவி வீற்றிருக்க வைத்த விமலா வடைக்கலம்.
நற்சிந்தனை 329
அப்படியே உள்ளது
ஒருகறியும் ஒருசோறும் ஆக்கியுண்ணும் ஆசான்
ஒருபொல்லாப்பு மில்லையென்றன் உணர்.
ஒதாமல் வேதம் உணர்ந்த குருநாதன் உண்மை முழுதுமென்ருன் உணர். 2
நாமறியோம் என்ற நல்ல திருவாக்கை நாமறியச் சொன்னன் நய. 3 முடிந்த முடிவென்று முன்னளில் ஆசான் அடியவர்முன் சொன்னு னறி. 4.
அப்படியே யுள்ளதென அத்து விதப்பொருளைச் செப்பினன் செல்லப்பன் தேர். 5 நீறணியான் காவி யுடையணியான் நீணிலத்தில் தேறவைத்தான் என் முன் சிரித்து. 6 சிரித்துப் புரமெரித்த சிவனேயொப் பானென்ன மரித்துப்பிறவாத மாண்பளித்தான் மதி. 7 பாசத்தால் வெந்துநொந்து பாழாகப் போகாமல் நேசத்தால் ஆக்கினன் என்னை நினை. 8 தேரடியில் வீற்றிருப்பான் சிரிப்பான் சினத்திடுவான் ஆரறிவார் என்பா னவன். 9 பித்தனென்றும் பேசுவார் பேயனென்றுஞ்
சொல்லுவார் சித்தனென்றுஞ் சொல்லுவார் சிலர். 10
ஆர்கொடுக்க வாசையுடன் வந்தாரோ வவரைச் சீர்கேடாய்ப் பேசுவான் தேர்.
நரிபோல் உழலுவான் நாய்போல் திரிவான் பெரியவனென்னும் பேர்படையான் பித்தன். 12
மாருட்ட மாகவே வந்த படிபிதற்றித்
தேருமற் செய்வான் சிரித்து. 13
Page 170
330 . நற்சிந்தனை jTLOTÄ குடியுமல்லேம் நாகநாதன் குடிகானும்
நானென நீயென வேறில்லை யென நகையால் . தானெனைச் செய்தபிரான் அவன் சமர்த் தாரறிவார் கோனெனை யாண்டுகொண்டா னென்றுங் குறைவில்லைத் தேனெனச் சிந்தையுள்ளே யெந்தநாளுந் தித்திக்குமே. 1
பாரவன் விண்ணவன்காண் பன்னும்வேத
மொழியவன்காண் காரவன் கடலவன்காண் கறைக்கண்ட முடையவன்காண் சீரவன் திறலவன் காண் சிரம்பத் துடையானமுன் தேர நெரித்தவன்காண் தேவதேவர் தம்பெருமானே. 2
நாமார் குடியுமல்லேம் நாகநாதன் குடிகாணும் ஏமாந்து போவோமல்லே மினிமறலி தானுமஞ்சேம் சாமாறுந் தணிவிடையன் திருப்பாத மல்லாமல் நாமார்க்குந் தொண்டுசெய்யேம் இனிநாளை நினையோமே 3
போக்கொடு வரவுமில்லைப் பூமிவான மிங்கில்லை நீக்கற வோங்கிநிற்கும் நின்மலன் றன்னையன்றிக் காக்குமோர் தேவுமில்லைக் காலநே ரமுமில்லை நோக்குவார் தங்கட்கெல்லாம் நுணுக்கமாய்த்
t தெரியுமன்றே. 4
எத்திக்குமாகி யிருக்குந் தெய்வமே இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி பல்லவி முத்திக்கு வழிகாட்டும் -என்றன் மூட புத்தியை யோட்டும் k அநுபல்லவி எத்திக்கு மாகி யிருக்குந் தெய்வமே ஏழையடி யார்க்கு இரங்கு முய்யவே (முத்தி)
syGrotto சித்தத்துட் டித்திக்குந் தீங்கரும்பே தெளிந்த தேனே சீனியே பாகே பத்த ருள்ளத்தில் பாக்கிய வானே பாவ மனத்தும் நீக்கியாள் கோனே. (முத்தி)
நற்சிந்தனை 33 I. கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வம்
இராகம்-எதுகுலகாம்போதி தாளம்-மிஸ்ரம்
uრსის6მ. ኔ கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வமே கடைக்கண் பார்நீ தெய்வமே.
அநுபல்லவி ஒருத்தர் துணையுமில்லை யுன்றுணை யல்லாமல் உலகுயிர் பரமாகி நடிக்கின்ற செல்வமே. (கருத்தில்)
சரணம் எங்கெங்கு சென்ருலும் அங்கெங்கும் நீயே ஈசா மதுராபுரி வாசா மீனுட்சி -- நேசனே சொக்கநாதா யோகனுக்கருள் தாதா நின்று மிருந்துமுனை யென்றென்றும்
போற்றநான். (கருத்தில்)
அரகர சிவசிவ இராகம்-சுத்தபங்களா தாளம்-ஆதி
பல்லவி - . . அடியா ருள்ளத்தே வாழும் பரனே அஞ்சுவ தகற்றி யாள்வதும் பரமே
அநுபல்லவி
அரகர சிவசிவ சம்போ சங்கர
அறிஞரு மறிவரி தாகிய பொருளே (அடியா)
சரணம் " ... .
அறிவாருளரோ அகம்பிர மாஸ்மி
வெகுபலம்வாசி சமாதிநீ யோசி
வேண்டும் வேண்டும் அருள்நீ தாதா விக்ந விநாயக விமலா நமோ நமோ (அடியா)
Page 171
332 நற்சிந்தனை
இடர்படாதிருக்கத் தயவுவை - இராகம்-நளினகாந்தி தாளம்-ஆதி
- ubຄbຄທີ எனதுயானெனும் இடர்படா(து) இருக்கத்தயவுவை எம்பிரான்
அநுபல்லவி கண்ணுதலே கறைக்கண்ட நீ கருணுணந்த காமாட்சி பாகா வா (எனது)
Freyyub எந்நேரமும் உன்றன் பொன்னரடி ஏத்தித்தொழ வேழைக் கேயருள் அன்னே யுன்னை யல்லால்துணை இம்மாநிலம் எவரு மில்லையே. (எனது)
நிஜமா மான்மா தெளி இராகம்-உமாபரணம் தாளம்-ஆதி
பல்லவி
நிஜமா மான்மா தெளி அரகர சிவ நெஞ்சே யஞ்சேல் நீ வரோதய
V அநுபல்லவி தசமுகன் நெரிதரத் தனதடி யூன்றிய சாமிநாத பாதமே ஒதுமந்திரம் நீதமே (நிஜமா)
சரணம் சுதிரச பூரண பரப்பிரம தாரக தூய அற்புத சுகமார மாரண சுரசேவித தொந்தத்தசி சுந்தரா னந்தனே துய்யா மெய்யா சுபானுபவ.
(நிஜமா)
நற்சிந்தனை W 333
ஓங்கார நாதமே
இராகம்- ஹரிகாம்போதி தாளம்- ஏகம்
பல்லவி ஓங்கார நாதமே யோதவொண்ணுப் பிரமாதமே
அநுபல்லவி தாந் தாந் தோம் என்றிடு மோசை அற்புத விற்பன நிர்க்குண நேயம் (ஓங்கா)
சரணங்கள் உத்திக்கும் எத்திக்கும் அவரவர் சத்திக்கும் பத்திக்கும் அதிரச (ஓங்கார) ஒதும் வேதம் இதமுடன் - அன்றும் இன்றும் ஒருவிதம் (ஓங்கார) உம்பர்களு மிம்பர்களும் தினசரி எண்ணரிய சித்தர்களும் மிகவேத்தும் (ஓங்கார) ஒதிடவே யருள் பாலிக்குமே நன்மை பூரிக்குமே மனஞ் சேவிக்குமே யருள் (ஓங்கார) உயிரை யெழுப்பிச் சிவத்தி லேமனம் பயிலப் பயிலச் சுவைக்கு மேதினம் (ஓங்கார) ஆதரித் திணிமேற் சுகித்திட நீநினைத்திடு ஆசைவைத்திடு (ஓங்கார)
தொகையற நீங்காது எந்தநாளு மினிது முடிந்து இளந்தென்றலும் வீச விபுதர் பலர் ஒன்றுகூடி அஞ்சலஞ்சலென்று செஞ்சொல் மிஞ்ச நீங்காரம்பாட வருள்கூட நல்ல சித்தர்கள் பக்தர்கள் தித்தி மத்தளம் தத்தித் தகு தகு. -
Page 172
334 நற்சிந்தனை
திருவருட் செய லெப்படியோ இராகம் - காப்பி தாளம்-சதுர்சஜாதி ஏகம்
பல்லவி திருவருட் செய லெப்படியோ சீமானே கோமானே
அநுபல்லவி திருவளர் நல்லூர் மேவிய தேவே செல்லப்பா v (திரு)
சரணங்கள் வரவர மனத்திற் கவலைகள் மிஞ்சி வலிந்துகவரும் மாய வாழ்வினுக் கஞ்சி அரகரசிவனே சங்கராவென்று போற்றினேன் புகழ் சாற்றினேன் (திரு) இரவும் பகலு மிணையடி மறவேன் இனியடியேன் மண்ணிற் பிறவேன் பரவும் யோக சுவாமிகட் கன்பு
காட்டுமோ வொளி சூட்டுமோ! (திரு)
நீ வா தா அருள்
இராகம்-ஹம்சத்வனி தாளம்-ஆதி
Y. பல்லவி -, -,
நீ வா தா அருள் பத்திசெய்வோம் சிவ
நித்திய ஆனந்தம் நிர்மல சகிதம்
அநுபல்லவி ஆசாபாசம் ஆகிய விசனம் , நாசமாகவுன் ஞானப் பிரகாசம்
தாதா தொம்தொம் தகுதகு தகுதகு தளங்கு தரிகிட தக்கிட கிடஜாம் (நீவா)
நற்சிந்தனை 3.35
SFDJGTo
பாராய் என்முகம் பரமயோகப் பரப்பிரவேசந் தாராய் சகலலோக வஸ்ய சம்மதம் பராபர பரிபூரணம்
கோலாகல குமாரி கவுரி கும்பிடும் புராரி பிரமாதிதேவர் கொண்ட கோடி பழிவிண்ட விபுதன் குஞ்சிதாம் புயமலர் நெஞ்சில் வைத்திடு குற்ற மற்றசிவ யோக நற்றவன் குருகுல வாசந் தருமொரு வசனங் கருது மவர்மிடி காணு தோடுங் காவாய் அடியனைப் பூணு யன்பு ஹம்சத்வனி பேசிடு பேரின்பம் (நீவா)
' ennsnamu!
மறவாதே என்மனசே!
இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி
பல்லவி
குருராஜ ராஜ பரசிவ பக்தி தன்னைநீ மறவாதே யென்மனசே
சரணங்கள்
அச்சுதன் அயன்முதல் அமரருங் காண்கிலர் அடிமுடி யில்லை யறி அண்டசரா சரங்கள் அவையனைத்தும் அவனே தானென வறியென் மனசே (குருராஜ)
தவஞ் செய்வோர்க் கனுகூலன் சர்வ சாட்சிப் பிரதாபன் அவனிவன் என்னும் மாயம் அனைத்து மில்லாத சிவயோக நாதன் விசுவாசன் சிவராசன் (குருராஜ)
Page 173
336 நற்சிந்தன்ை
தர்மமெங்குந் தங்க அருளையா V இராகம்-காம்போதி தாளம்-ஆதி
பல்லவி
ஐம்பொறி மாட்டு மனசுபோய் அலைந்திடிலோ பழி பழி
அநுபல்லவி நம்பினேன் நானே நடராஜ நீவாகா நியாயந்தானே கைவிடச் சற்குருநாதா (ஐம்)
சரணம் t சர்வகுணுதி சசிதவழ் சேகர சாமுண்டி சமேத சாமி சர்வாலங்கிர்த சகள நிஷ்கள மங்கள சுரசேவிதபானு சித்தம்வைத்து ஆண்டிடு சின்மய ஜெகசோதி சாயுச் சியமும் வேண்டினேன் ஆண்டி சர்வதியாகந் தந்தேன் தாளைத் தலையிற் சூட்டிடு தர்மமெங்குந் தங்கக் குறைகள் மங்க அருளையா (ஐம்)
www-Wawa wanamwikhawhnw
அருவமு முருவமு மானுன் ஒரு பொல்லாப்பு மில்லையெனவே-முன்னுள்
ஒதினன் உண்மை முழுது மெனவே பருவத்தில் மழைபெய்தாற் போல-ஐயன் பந்தத்தை நீக்கி வளர்த்தா னன்பாலே 2 அருவமு முருவமு மானன்- என்னை ஆட்கொள்ள வந்தான் நல்லூரிற் றணுய் 3 கருவிக ரணங்க ளெல்லாந்-தத்தம் கருமத்தை விட்டுக் காவலுக் குள்ளாய் 4. வருவதும் போவது மின்றித்-தூய மெளன நிலையில் நிலைத்தது தானே 5
ஆரு மறியா ரெனவே - அப்பன் "அப்படி யுள்ளதென் முனறி வாயே. -x 6
நற்சிந்தனை 337
உன்னடிமை நான் ஐயனே
இராகம்-கானடா தாளம்-திஸ்ரம்
பல்லவி
உன்னடிமை நான் ஐயனே உளமகிழ்ந்து பார் மெய்யனே
சரணங்கள்
பொன்னடி மாதவர் சேர்பெரு முத்தனே
பூங்கொடியாள் பங்கா
உன்னடி யென்முடி வைத்தினி யாளுவாய்
ஓங்காரத்துட் பொருளே (உன்)
ஓயாமற் பொய்பேசி உழைக்கின்ற வுலுத்தரை
உறவென்றிருந்து விட்டேன் வாயார வாழ்த்தி வணங்கு மடியாரை
மனசாரப் போற்ற வைப்போய் (உன்)
சித்தத்துட் டித்திங்குந்தேனே பாலென்று
சிந்தனை செய்த டியேன் இனியுத் தமரோடு பிரியாமல் வாழ
உன்னருள் தாருமையா (உன்)
நீயே நானென்று நினைக்கும்மெய் யடியாரை
நேயத்தொடு வணங்கிடுவார் தாயே யனைய சங்கரனே வந்து
தண்ணருள் தாருமையா (உன்)
22
Page 174
338 நற்சிந்தனை
நீ அருளாவிடிற் கதியேது
இராகம்-அடாணு தாளம்-ஆதி
பல்லவி
நீ யருளா விடிற் கதியேது-ராமா நீ ரவிகுல திலகம் உலகுக் கெல்லாம்
அநுபல்லவி
தாயுந் தந்தையுஞ் சகலமும் நீயே தமியேன் உயிருக்குயி ராகிய பரனே (நீயரு)
agFJRRTo
பாற்கடல் தன்னிற் பள்ளி கொள்வோனே பாக்கிய லட்சுமி தன்மண வாளா ஆர்க்கு முணர்வரி தாகிய பொருளே அடியேன் மனத்தைக் கொள்ளை கொண்டவனே நீக்கமற் றெங்கும் நிறையும் நின்மலனே நினையும் யோக சுவாமிதன் துணையே போக்கும் வரவு மில்லாப் பொருளே பூதலத் துள்ளோர் போற்றும் அருளே (நீயரு)
சிவசிவ வென்றுசொல்லிப் பேணேனே இராகம்-செஞ்சுருட்டி தாளம்-ஆதி
பல்லவி.
தில்லையம்பலத்தைக் கண்ணுற் காணேனே சிவசிவ வென்று சொல்லிப் பேணேனே
அநுபல்லவி
நல்லவர் கூட்டத்தைத் தேடிநா டேனே அல்லும் பகலும் பாடியா டேனே (தில்லை)
நற்சிந்தனை 339
சரணங்கள்
கல்லை நிகர்த்த மனமுரு காதோ காமக்குரோத மோகங் கருகாதோ (தில்லை) எல்லை யில்லாத வின்பம் பெருகாதோ ஏழைகள்மே லிரக்கம் வாராதோ (தில்லை) நில்லாத காயத்தை நான்வெல் லேனே நீயேநா னென்றுசொல்லி நில்லேனே (தில்லை) உல்லாச மாக வெங்குஞ் செல்லேனே உண்மையைச் சொல்லிச்செல் கில்லேனே (தில்லை) இல்லையென் றெவர்க்கும் நான் சொல்வேனே இனிய செஞ்சுருட்டியைக் கல்லேனே (தில்லை)
சிவனே உன் தரிசனந் தாராயோ இராகம்- ஆனந்தபைரவி தாளம் -ஆதி
u sibsna சிவனே யுன்தரிசனந் தாராயோ தேவாதி தேவர்தொழும் பெருமானே
அநுபல்லவி தரிசனந் தாராய் தமியேனைக் காவாய் தத்துவா தீதனே சங்கர சிவசம்போ (சிவனே)
சரணங்கள்
அரிய விருவரும் அறியாத விமலனே கரியுரி போர்த்த கருணைக் கடலே திரிபுர தகனனே தில்லையில் வாசனே சிவகாமி யம்மை பூசிக்கு மீசனே (சிவனே) வரவர மனசு சங்கடப்படுகுதே வாராய் துயர்தீராய்: கண்பாராய் என்னைக்காவாய் இரவும் பகலுமுன்றன் இணையடி மறவாமல் பரவி யானந்த பைரவி ராகம் பாடி. (சிவனே)
Page 175
340 நற்சிந்தனை
எல்லாஞ் சிவன்செயலென்றிருப்போம் தோன்ருத் துணையை யென்றுந் துதிப்போம் தூயதிருப் பாதத்தைப் பதிப்போம் ஈன்ருளையு மப்பனையும் மதிப்போம் எல்லாஞ் சிவன்செயலென் றிருப்போம் ஆன்ருேர் விதித்தபடி நடப்போம் அந்திசந்தி மந்திரத்தைப் படிப்போம் நான் ரு னெனுமிரண்டுந் தடுப்போம் நாதனடி யிணைக்கீழ்க் கிடப்போம் வஞ்சம் பொருமை நெஞ்சில் வையேம் சஞ்சலத் தால் மிஞ்சி நாங்கள் நையேம் கொஞ்சம் கொஞ்ச மாய்மனத்தை வெல்வோம் கூடாத கூட்டத்தில் நாங்கள் செல்லோம்
வாரா வரவினில் வந்த சஞ்சீவியே
தோடுடைச் செவியனே தோன்றத் துணையே பீடுடைப் பெரியோர் பெட்டகத் தணியே தந்தையுந் தாயும் மைந்தருந் தமரும் எந்தையே நீயென் றெண்ணியெப் போதும் விந்தைசே ரவர்பணி வேண்டியா னுற்றி இவ்வுல கத்தி லிறுமாப் புடனே சந்ததம் வாழத் தயைபுரி யுமையாள் வந்தனை புரியும் வண்ணமே ணியனே கந்தமுங் காயுங் கடும்பசி மூடியே வந்திடி னுண்ணும் மாசிலா மனத்தர் சிந்தையிற் குடிகொள் தேசிக மூர்த்தி தீராக் கோபமுஞ் சித்தக் குரோதமுஞ் நீரா யுருக்கும் நெறியிது காணெனத் தாரா விடில்யான் தளையுண் டுழல்வேன் வாரா வரவினில் வந்தசஞ் சீவியே , பழியொன்று பூணு வழிபடு தெய்வமே
ஒழியா வின்பமாய் நின்று − தெளியாவென் சிந்தை தெளிந்திடச் செய்யே
நற்சிந்தனை 341 நல்லூரில் ஆட்டக்காரன்
நல்லூரில் ஆட்டக்காரன் நான்வணங்கும் குருநாதன் கல்லைக்க ரைக்குஞ்சித்தன் கருணைபூத்த திருமுகத்தான்
இல்லை யென்னுஞ்சொல்லை இல்லாம லாக்கிடுவான் அல்லும் பகலுமென்றன் அகத்தினிலே வாழ்ந்திடுவான்
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் உண்மை
முழுதுமென்பான் கருப்பையிலே வாராமல் காத்தென்னையாண்டுகொண்டான்
தேரடியில் வீற்றிருப்பான் செல்லப்பனென்னும் பெயரா 7 ஆரறிவா ரென்றுசொல்வான் அன்னையைப்போல்
அன்புடையான்
பொய்சொல் லாதேயென்பான் மெய்யுஞ்சொல்
லாதேயென்பான்
வல்லபங்கள் பேசிவந்தோர் வாயை யடக்கிடுவான்
வித்தையொன்றுஞ் செய்துகாட்டான் விவேகமற்றேர்
போலிருப்பான் அத்துவா மார்க்கம்விட்டு ஆறியி ருந்திடுவான்
*** --W*-.*W*A*a*l*ið
சிவசிவ என்றிடத் தீரும் பாவம்
சிவசிவ என்றிடும் போதினிலே செய்த
பாவமெல்லாம் ஒடும் பாரினிலே அவனிவன் என்கின்ற வார்த்தையெல்லாம் போக்கி
ஐயன் திருப்பாதம் உண்மையதாய் நோக்கி தவம்செய்வார்தமைத் தானக நோக்கிச்
சச்சி தானந்தம் தன்னிடத்தே தாக்கில் உவமையில் லாமுத்தி நிலையிலே போக்கும்
உண்மை யறிந்து சொன்னேன் யோகசுவாமி.
Page 176
344 நற்சிந்தனை
இதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய்
பல்லவி w
என்னிதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய் ஏகாம்பர நாதனே சிவனே
அநுபல்லவி
பதசாரி தோறும் உன்னதி சிலம்பொலி கேட்டுப் பரமானந்தம் பெறுவேன் சிற்ச பேசனே -என்னிதய
சரணங்கள் எனதென்ற கங்கரிக்கும் மனதுப னரிந்துவர இருவினைக் கட்டுகள் இற்றுச் சுயேச்சைபெற அனவரதமு முன்னை நினைந்து கசிந்துருகி அத்தாவுன் மலரடிப் பித்தணுய் வாழ்ந்திட-என்னிதய ஹரஹர வென்று அரவங்கள் கோஷிக்க அன்பு மகரவீணை தும்தும் என வாசிக்க சிரசி லானந்தஞ் சிலிர்த்து நடமாடச் செந்தமிழ் வாணியுமுன் மந்திரப் பொருள்பாட
- என்னிதய
GFA Gig) LOGOof எல்லை யெமக் கில்லையென்று சொல்லு மணியே எல்லாஞ் சிவன் செயலாய்ச் சொல்லு மணியே இல்லையென் ருெருபோதுஞ் சொல்லாய் மணியே ஈச ஞெருவ னென்று சொல்லு மணியே அன்னைதந்தை சுற்றத்தைப் பேணு மணியே அயலவர் தம்முறவு வேணு மணியே பின்னைப்பொய் சொல்லாமல் காணு மணியே பிறர் பொருள்மே லாசையின்றி வாழு மணியே என்னையினி மறவாமல் பாடு மணியே ஈச னடியவரைத் தேடு மணியே
முன்னை வினையெல்லாமோடு மணியே முருகன் திருவடியைக் கூடு மணியே.
நற்சிந்தனை 345 சிவனடியைச் சிந்திநெஞ்சே
அன்பிலா ரோடுறவு கொள்ளாதே அடுத்தோருக்குத் துன்பத்தைச் செய்யாதே சூதும்வாதும் பேசாதே இன்பத்தில் துன்பத்தில் ஏகமன சாயிருந்து தென்புடனே யரன்பாத மந்திசந்தி சிந்திநெஞ்சே.
ஆரோடும் பகையாதே ஆசைதனைக் கொள்ளாதே ஊரோடே ஒத்து நட உண்மையைத் தேடிக்கொள் நீரோடே வெகுநேரம் நீந்திவிளை யாடாதே
சீரோடே. சிவன்பாத மெப்போதுஞ் தேடுநெஞ்சே,
இடுவதை மறவாதே ஏழைகளை இகழாதே கெடுவது நினையாதே கேளிரைப் பிரியாதே சுடுவது சொல்லாதே துணையின்றிச் செல்லாதே படுதலையிற் பலிகொள்ளும் பரமனைப் பாடுநெஞ்சே.
ஈவது விலக்காதே யிழிதொழில்கள் செய்யாதே சாவது வந்தாலுஞ் சத்தியத்தை மறவாதே ஆவதும் அழிவதும் நமக்கில்லை யெனவறிந்து vn தேவர்கள் தொழுதேத்துஞ் சிவனடியைச் சிந்திநெஞ்சே.
அன்பாய் இருப்போமே
அன்பே சிவமென்று கிளியே! ஆன்ருே ருரைத்தார்கள் ஆனமையால் நாங்கள் கிளியே! அன்பாய் இருப்போமே இரப்பவர்க் கில்லையென்று கிளியே! எடுத்துநீ
சொல்லாதே
ஈவது நன்மையெனக் கிளியே! எடுத்தவ்வை சொன்னரே. சாவது வந்தாலுங் கிளியே! சத்தியம் மறவாதே தேவர்கள் வந்தாலுங் கிளியே! சித்தங் கலங்காதே தாய்சொல்லைத் தட்டாதே கிளியே! தந்தைசொல்
.மந்திரமே ۔
Page 177
346 ܪ f நற்சிந்தனை
இலங்கை என்னூர்
எல்லாமென் னுரர்எல்லா மென்சுற்றத் தார்களே எல்லா மெனக்குதவி யென்றறிந்தேன்-நில்லாத நீர்சடைமேற் கொண்ட நிமல னெனக்கன்பன் சீரிலங்கை யென்னுரர் தெரி.
நாமார்க்கும் ஆளல்லேம் நாளை வருவதெண்ணேம் ஆமா றறம்புரிவே மார்க்குமஞ்சேங்-கோமாற்கே மீளா வடிமையாய் மேதினிமேல் வாழுவோம் தாளா ரிலங்கையென்னுடர் தான்.
மெய்யுரைப்போம் மேன்மக்கள் நட்பை விரும்புவோம் செய்வன வெல் லாந்திருந்தச் செய்குவோம்- வையகத்தில் தாமரைமேல் நீர்போற் ருனியைந்து வாழுவேம் காம ரிலங்கை யென்னுரர் காண்.
சூரியன் தோன்றுதற்கு முன்ன ரெழுந்திருப்பேம் சீரியவா யாற்சிவனைப் பாடுவேம்-பாரினிலே தண்ணுர் பொழிலுந் தடவரையு மாறுகளும் நண்ணிலங்கை யென்னுரர் நய.
புன்சொல் புறங்காப்பேம் போன வகையெண்ணேம் எஞ்செயலா லொன்றுமில்லை யென்னுவேம் - வன்சொற் களை வேம் கனமேகங் கண்ணுறங் கின்பப் பழவிலங்கை யென்னுரரே பார்.
சித்தி பெறலாம் திருவெல்லாஞ் சேரலாம் பத்தியின்றேல் என்ன பலனிவற்ருல் - எத்திசையும் மெச்சு புகழிலங்கை மேலோர்கள் வந்துதினம் நச்சு மிலங்கையென்னுரர் நாடு.
நாடி யொருகருமம் நாடோறு மாற்றுவார் வாடி மெலிவதில்லை மாநிலத்தில்-நீடியசீர் கொண்ட விலங்கையிலே கோடிசனம் வந்துபணம் கொண்டுசெல்வார் என்னுரர் குறி.
கருங்குயில்கள் பாடுங் கரியினங்கள் கூடும் நெருங்குங் கதலிபலா தென்னை - ஒருங்குதிரை
கொண்டுவந்து முத்தங் கொடுக்கும் வளநாடு கண்டுகொண் டேனிலங்கை காண்.
நற்சிந்தனை 347 ܕ
மாது பங்கனை மறக்கவு மாமோ
ஒப்பில்லாத இலங்கைநகர் ஒருவன் றிருவடியைத் தப்பில்லாமற் போற்றுவார்கள் சாகார் பிறவாரே கொப்பில் மந்தியோடு குயில்பயிலும் பொழில்நீழல் எய்ப்பிலாத விளமான் மரைமேதி துயில்கொள்ளும்.
கடல்சூ Nலங்கைநகர் மேவிய கடவுள்பாதம் திடமோ டெந்தநாளுஞ் சிந்திப்பார்கள் மிடியாலே புடிவிதனில் துயரால் நொந்துபோகார் வரைமீது அடவிதனில் ஆமா புலியான துயில்கொள்ளும் கரையு மன்பர்தங் கருத்தி னனையே உரைசெய் வார்க்கொரு குறையு மில்லையே.
ஆடு பாம்பணிந் தாடு வான் கழல் பாடு வார்களே பரம யோகிகள்
அறஞ்செய்வார் தங்க ளகமே கோவிலாய் நிறைஞ்சு நிற்குமே நிமலன் நாடொறும் புறத்திற் கூறுவர் புகழைப் பெற்றிடார் அறத்தைக் கூறுவா ராக்கஞ் சேர்வரே.
காலை மாலையுங் கடவுள் பாதத்தைச் சால வேதொழு வார்க ளன்பரே.
ஒது மன்பர்க ளுள்ளத் துளான மாது பங்கனை மறக்கவு மாமோ
பாது காவெனைப் பகலு மிரவும்
மோதுங் கரைசேர் முதுலங்கை யானே.
கூடலி லன்று குதிரையை நரியாய் நர்ட வைத்த நம்பனை யல்லால் பாட்ட வும்வேறு பரம்பொரு ஞண்டோ மாடமலி யும்மிலங்கை மாநக ரானே.
Page 178
348 நற்சிந்தனை.
கரையு மன்பர்கள் கண்டுகந் தானும் வரையை யெடுத்த மன்னநெரித் தானும் மரையும் மானும் மயிலினமுங் குயிலும் நிரைநிரையாய் நிற்கு மிலங்கைமா நகரானே.
மத்தம் மதியொடு மாநா கத்தை வைத்த சென்னியன் வாணுதல் கணவன் புத்தஞ் சமணம் போயக லும்படி சித்தத்திற் கொண்ட சீரிலங்கை யானே.
சிவ சிவ சிவ
அன்பரன்பது சிவசிவசிவ ஆசையற்றது சிவசிவ சிவ இன்பமயமது சிவசிவசிவ ஈசனுயிர்தொறுஞ் சிவசிவசிவ முன்பின் அற்றது சிவசிவசிவ மோனமுதலது சிவசிவசிவ தன்வயத்தது சிவசிவசிவ சர்வவல்லபஞ் சிவசிவசிவ.
பொன்னிறத்தது சிவசிவசிவ போக்கிலாதது சிவசிவசிவ என்னிடத்தது சிவசிவசிவ எங்குமுள்ளது சிவசிவசிவ மண்ணிடத்தது சிவசிவசிவ மந்திர ரூபஞ் சிவசிவசிவ விண்ணிடத்தது சிவசிவசிவ வேதமானது சிவசிவசிவ. 2
மட்டிலாதது சிவசிவசிவ மங்கைபங்கது சிவசிவசிவ முட்டிலாதது சிவசிவசிவ மூவராவது சிவசிவசிவ கிட்டொனதது சிவசிவசிவ கிருபையுள்ளது சிவசிவசிவ எட்டிலானது சிவசிவசிவ ஏகமாவது சிவசிவசிவ. 3
அன்னையாவது சிவசிவசிவ அப்பணுவது சிவசிவசிவ முன்னையுள்ளது சிவசிவசிவ முனிவர்புகழ்வது சிவசிவசிவ என்னையாள்வது சிவசிவசிவ எடுத்த திருவடி சிவசிவசிவ பின்னையென் பிழை சிவசிவசிவ பேதாபேதஞ் சிவசிவசிவ. 4
3. 4.
நற்சிந்தனை s - 849
இலங்கை நகரானே
சிந்தை செய்கதிர் வேலனைத் தந்த எந்தையை யெந்த நாளும் மறந்திடார் பந்தங்க ளற்றுப் பரமவி டெய்துவர் கந்தம் பொலியு மிலங்கைக் கடிநகரானே.
கண்மூன் றுடைய கடவுளை நாளும் பண்முறை தப்பாது பாடு மடியார் மண்ணுள வளவும் மனக்கவலை எய்தார்கள் விண்டொடு வரைமே விலங்கைமா நகரானே. 2
மண்முதற் பூதங்கள் வகுத்த வொருவனை எண்முத லெல்லா மாயிருப் பானைப் பெண்ணுமை யாளைப் பிரியாப் பெருமானை விண்ணுேர் விரும்பு மிலங்கை நகர்கண்டேன். 3.
ஒதுபல் வேத முரைசெய்த நாவானே போது கங்கை சூடிய புனிதனே தீதுசேர் தக்கன் வேள்வி சிதைத்தானே மீதுவண் டார்க்கு மிலங்கை மேவியபரனே, 4
கமல நான்முகன் கண்ணனுங் காணு தமல னேயென வாரருள் செய்தானே , பவன மனலம் பாராகிய பரமனே உவமைசொல் லவொண்ணு லங்கை நகரானே.
பாலனுக் காகப் பாற்கடலை யழைத்தானை ஞாலம் புகழ்ஞான சம்பந்தன் தந்தையை ஆல மரத்தின்கீ ழன்றற முரைத்தானைக் கோலக் குயில்கூவு மிலங்கையிற் கண்டேனே. 6
சூதான வெளியிலே சும்மாவிருப்போம்
ஒம்நம சிவாயவென உருவேற்றுவோம் உருகி யுருகிநாம் உணர்வவிழ்வோம் வீம்பிடும்பை யகங்காரம் விட்டுவிடுவோம் வேதாந்த வீட்டிலே குடியிருப்போம்
Page 179
350 நற்சிந்தனை
நாம்நாம் நாமென நடமிடுவோம் நல்லவிருளை நல்ல வொளியாக்குவோம் போம்போம் வினையெனப் போற்றிசெய்குவோம் பூரண மானநிட்டை புகுந்திடுவோம் ஆம்ஆம் நமக்கெல்லாம் ஆய்விடுமென்போம் அவனேநா மென்றுசொல்லி யானந்தங்கொள்வோம் சந்திரனைச் சூரியனை ஒன்றுசெய்குவோம் சச்சிதா னந்தத்தேனைத் தானருந்துவோம் இடைகலை பிங்கலை யிரண்டுமடைப்போம் எழிலாருஞ் சுழுமுனைக்குள் ஒடுங்கிநிற்போம் பஞ்சவர்ணப் பரிமேலே பவனிசெல்வோம் பாரும்விண்ணும் ஒன்ருகப் பண்புசெய்குவோம் ஆதார மாறுக்கு மப்பாலேசெல்வோம் அங்கே திருநடனங் கண்டுகளிப்போம் சூதான வெளியிலே சும்மாவிருப்போம் சுகம்சுகம் எந்நாளு முற்றிடாதோ.
9ILIT Liguodalib
இராகம்-புன்னுகவராளி தாளம்-ஆதி
பல்லவி அப்பா பரமசிவம் (அப்பா)
சரணங்கள்
அன்றுதொட்டு இன்றுமட்டும் அடியேனுந் தேவரீரும்
அத்துவித மாயிருந்த
வித்தைதனை யாரறிவார் (அப்பா) ஒப்பாரும் மிக்காரு மில்லா வொருபொருளே தப்பேது யான்செயினும் அப்பா பொறுத்தருள்வாய் அப்பாலுக் கப்பாலா யாருமறி யாதவண்ணம் ஆடுந் திருநடனங் காண வருள்புரிவாய் (அப்பா)
நற்சிந்தனை
அத்துவிதப் பொருள் காப்பாம்
அத்துவி தப்பொருள் காப்பாம்-எனக் கடியார்க ளென் றென்றுங் காப்பாம்
சித்தருந் தேவருங் காப்பாம் என்றன் சித்தத் திலங்குந் திருவருள் காப்பாம்.
அட்ட வசுக்களுங் காப்பாம் - எனக் கானந்த மான பராபரன் காப்பாம் எட்டுத் திசைகளுங் காப்பாம் - எனக் கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம்.
பிராண னபானனுங் காப்பாம் - என்னைப் பிரியா திருக்கும் பிரணவங் காப்பாம் அராவணி வேணியன் காப்பாம்-எனக் கருளை யளிக்குங் குருபரன் காப்பாம்.
பஞ்சப் புலன்களுங் காப்பாம் என்னைப் பரவு மடியவ ரனுதினங் காப்பாம் குஞ்சர முகத்தவன் காப்பாம் - நல்ல
குழந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம்.
சந்திர சூரியர் காப்பாம்- எங்குந் தங்கு முயிர்க ளனைத்துமென் காப்பாம் மந்திரந் தந்திரங் காப்பாம் - நான்கு மறைகள் சிவாகமம் மாநிலங் காப்பாம்.
351
(அத்து) 1
(அத்து) 2
(அத்து) 3
(அத்து) 4
(அத்து) 5
Page 180
352
நற்சிந்தனை
எல்லாஞ்சிவமே
அப்பனும் அம்மையுஞ் சிவமே அரிய சகோதரருஞ் சிவமே ஒப்பில் மனைவியுஞ் சிவமே ஒதரும் மைந்தருஞ் சிவமே செப்பில் அரசருஞ் சிவமே தேவாதி தேவருஞ் சிவமே இப்புவி யெல்லாஞ் சிவமே என்னை யாண்டதுஞ் சிவமே.
usm -4
மங்களம் ஜெய மங்களம் 1
அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம் அத்துவித வஸ்துவுக்கு மங்களம் ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம் உத்தம பத்தருக்கு மங்களம் முப்பொழுதுந் தொழுவார்க்கு மங்களம் மூவாசை வென்றவர்க்கு மங்களம் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம் முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம் தன்னைத்தன்னு லறிந்தவர்க்கு மங்களம் ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம் ஐயமில்லாச் சாதுக்கட்கு மங்களம் ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம் சீர்காழித் தேவருக்கு மங்களம் திருநாவுக் கரசருக்கு மங்களம் சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் திவ்விய மாணிக்கர்க்கு மங்களம் எங்குந்தங்கும் உயிர்களுக்கு மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
நற்சிந்தனை 353
மங்களம் ஜெய மங்களம் 11
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
ஆதியந்த மில்லா அப்பனுக்கு மங்களம் சோதிவடி வாயுள்ள சுவாமிக்கு மங்களம்.
ஆன்மா நித்தியமென்ற ஆன்ருேர்க்கு மங்களம் தேன்போ லுருசிக்குஞ் சிவனுர்க்கு மங்களம். 2
காண்பதெல்லாங் கடவுளாய்க் காண்பார்க்கு மங்களம் நாண்மல ரெடுத்துப்பூசை பண்ணுவோர்க்கு மங்களம், 3
பொறிவழிபோ யலையாத புண்ணியர்க்கு மங்களம் நெறிவழியே செல்லுகின்ற நிருபருக்கு மங்களம். 4.
நாமறியோ மென்றுசொல்லும் நாதனுக்கு மங்களம் உண்மை முழுதுமென்ற வுத்தமர்க்கு மங்களம். , 5
தன்னைத் தன்னலறிந்த தாபதர்க்கு மங்களம் அன்னைபிதாக் குருவான அப்பனுக்கு மங்களம். 6
மண்ணைப்பெண்ணை மதியாத மாதவர்க்கு மங்களம் வண்ணநகர் வாழும்வைத் தீசனுக்கு மங்களம். 7
திண்ணனென்ற பேர்கொண்ட அப்பனுக்கு மங்களம் சண்முக நாதனுக்குஞ் சங்கரற்கும் மங்களம், 8
விண்ணில் விளங்குஞ் சூரிய சந்திரர்க்கும் மங்களம் எண்ணிலடங் காவுயிர்கள் அத்தனைக்கும் மங்களம். 9 நித்தியகர்மந் தவருத நின்மலர்க்கு மங்களம் பத்துப்பாட்டும் படிப்போர்க்குங் கேட்போர்க்கும்
A. மங்களம், 10
மங்களம் ஜெய மங்களம் محي மங்களம் ஜெய மங்கள்ம் ,
23
Page 181
பகுதி II
உரைநடைப் பகுதித் திரட்டு
Page 182
6
குருநாதன் அருள்வாசகம்
ஒரு குறைவுமில்லை
நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே. ஆகையால் நாம் அவருடைய உடைமை.
அவருடைய அடிமை. நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே. நாம் அவரை ஒருபோதும் மறந்திருக்க முடியாது.
நமக்கு ஒரு குறைவுமில்லை.
நாம் என்று முள்ளோம்.
எங்கு மிருக்கிருேம்.
எல்லா மறிவோம். இப்படியே நாம் இடையருது சிந்தித்துச் சிந்தித்துக்
கீழ்மையான குணங்களைப் போக்கி மேலான தெய்வ தத்து வத்தை அடைவோமாக.
*சந்ததமு மெனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மை
நினையன்றி யில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த
சமரச சுபாவமிதுவே."
என்னுந் தாயுமானவர் அருமைத் திருவாக்கே இதற்குப்போதிய சான்று.
நற்சிந்தனை V, 357
சிவதொண்டு I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு செய்வதே எங்கள் தொழில். அதற் காகவே நாங்கள் பூமியில் வாழுகிருேம்.
சந்திரன் சிவதொண்டு ஆற்றுகின்றது. சூரியனும் ஏனைய கிரகங்களும் அத்திருப்பணியையே செய்கின்றன. தேவர் களும் அசுரர்களும் கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர் களும் அப்படியே தொண்டாற்றி வருகின்றனர்.
அனைத்துஞ் சிவன் செயல்; அவனன்றி அணுவும் அசை யாது. நாம் இழந்து போவதுமொன்றுமில்லை. ஆதாய மாக்கிக் கொள்வதும் ஒன்றுமில்லை. இருந்தபடியே இருக் கின்ருேம்.
நமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லை. நமக்கு இதம் அகிதம் இல்லை. மரணம் பிறப்பில்லை. வேண்டுதல் வேண்டாமை இல்லை. மண்ணுதி ஆசை யில்லை. மனமான பேய் இல்லை. காலதேச வர்த்தமானம் நமக்கில்லை. நாம் அனைத்துக்குஞ் சாட்சியாக விளங்குகின்ருேம்.
ஓம் தத் சத் ஒம்
I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு ஆற்றுவதே எங்கள் தொழில். அதற். காகவே நாம் உயிரோடிருக்கிருேம். உண்பதும் உறங்குவ தும் அதற்காகவே. எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத் தைப் பட்டாலும் எல்லாம் அதற்காகவே செய்கிருேம். நமக்கு ஆதியுமில்லை அந்தமுமில்லை. பிறப்புமில்லை இறப்பு மில்லை. நாம் விளையாட்டுக்காகினும் பிறர்பொருளைக் கவ ரோம். பிறர்வசை உரையோம். எல்லாஞ் சிவன்செய
Page 183
g58 நற்சிந்தனை
லென்பதை மறவோம். பசித்தாற் புசிப்போம். பிறர்செய் யும் நிட்டூரத்தையாவது, கிருபையையாவது பொருளாகக் கருதமாட்டோம். எப்பொழுதும் தூய்மை உடையோம். துன்பத்திலும் இன்பத்திலும் கவலை அடையோம். முழு தும் உண்மை.
ஓம் தத் சத் ஓம்.
II
நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார். இது சரியை; இது கிரியை; இது யோகம்; இது ஞானம்; இது மந்திரம்; இது தந்திரம் இது மருந்து.
இந்தத் தியானத்தில் நிலைத்தலே நிட்டை இந்த நிட்டையுடையோர்க்குச் சீலமில்லை; தவமில்லை; விரத மில்லை; ஆச்சிரமச் செயலில்லை.
இவர்கள் தாம் விரும்பிய வண்ணம் மண்ணில் வாழ்ந் தார்கள்; வாழுகிருர்கள்; வாழ்வார்கள். இவர் பெருமை யாவருமறியார்; கற்கண்டின் இனிமை கற்கண்டை உமிப வர்க்கே தெரியும்.
ஒரு பொல்லாப்பு மில்லை. எப்பவோ முடிந்த காரியம். நாமறியோம். முழுதும் உண்மை.
நற்சிந்தனை" 359
ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்தது. ஒழுக்க முடையார் எல்லாமுடையார். ஒழுக்கங்களாவன கொல்லாமை, கள் ளாமை, பிறர் வசை உரையாமை, பிறர் பொருள் கவ ராமை, தாழ்மை, பொய்யுரையாமை முதலியனவாம்.
எக்கருமத்தைச் செய்யும் பொழுதும் ஊக்கத்தோடுஞ் சிரத்தையோடும் மனமகிழ்ச்சியோடுஞ் செய்து பழகுதல் வேண்டும். அப்படிச் செய்து பழகிவந்தால் மன உறுதி உண்டாகும். அஃதாவது மனம் ஏகாக்கிர சித்தத்தைப் பொருந்தும். பொருந்தவே ஆன்மசக்தி அதிகரிக்கும். நினைத்தகாரியம் நினைத்த மாத்திரத்திலே உண்டாகும். இவர் பகைவர், இவர் உறவினர் என்ற பாகுபாடு சித்தத் திற் புகுந்து கவலையை உண்டாக்காது.
எல்லாம் என்னிடத்தே உண்டாகின்றன; எல்லாம் என் னிடத்தே நிலைத்திருக்கின்றன; எல்லாம் என்னிடத்தே ஒடுங்குகின்றன என்ற தூய்மையான எண்ணம் உடைய வராய் இருத்தல் வேண்டும். மேலும் எனக்கொரு குறைவு மில்லை; என்னிடத்திலே எல்லோரும் அன்பாய் இருக்கி ருர்கள்; நானும் எல்லாரிடத்திலும் அன்பாய் இருக்கிறே னென்று அடிக்கடி நினைந்து நினைந்து சாதிக்க வேண்டும். இப்படியே இடைவிடாமற் பழகிவந்தால் எல்லாமறியும் ஆற்றலும் எல்லாஞ் செய்யும் வல்லமையும் எளிதிற் கைவரும்.
'ஓம் தத் சத் ஓம்"
Page 184
360 நற்சிந்தனை
சன்மார்க்கம்
குரங்குபோல் மனங்கூத்தாடுகின்றதே.
இதன் கூத்தை எப்படி யடக்குவதென்று தெரியவில் லையே. நன்று சொன்னய். இதற்கு நல்ல மருந்துன்னிட முண்டு. நீ அதை மறந்து போனுய். சொல்லுகிறேன் கேள்.
சிவத்தியான மென்னும் மருந்தைத் தினந்தோறுஞ் சாப்பிட்டுவா. மனக்குரங்கின் பிணி மாறும்.
அதைச் சாப்பிடும்போது அனுபானத்தைக் கூட்டிச் சாப்பிடு. அதுவுமுன்னிடமுண்டு.
அது என்னவென்றல்; நாவடக்கம், இச்சையடக்க மென்னுஞ் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு.
இதுவும் போதாது. பத்திய பாகத்திலே தான் முற் றுந் தங்கியிருக்கிறது. அதுவு முன்னிட முண்டு.
அது என்னவென்முல்; மிதமான ஊண், மிதமான நித்திரை. மிதமான தேக அப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம். ஆன்ம இலாபத்தின் பொருட்டிதைச் செய். vn
மனத்தை ஒருவன் அடக்கி வெற்றி கொள்ள முழு மனத்தோடு விரும்புவானனல் சிவத்தியானத்தைத் தினந் தோறுஞ் செயது வரக் கடவன். -
படிப்படியாக அவன் மனமொடுங்கி வருவதை அவன் கண் கூடாகக் காணுவான்.
சாந்தம், பொறுமை, அடக்கம் முதலிய நற்குணங் கள் அவனிடத் துதிக்கும். γ.
அவன் மனமெந்த நேரமும் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். இகழ் புகழிரண்டினலும் இழிவடையான்.
நற்சிந்தனை 36.
அந்தராத்மாவிலே சுகிப்பான். பிறர் சுகந் தன் சுக மென்ற எண்ணம் பெருகும்.
கைவிளக்கை யொருவன் கொண்டு செல்வானுணுல் இராக்காலத்தில் அவன் மனங் கலங்குவான? கலங்கான். அப்படியே சிவத்தியானத்தைச் செய்து வருவானனல் மாய விருள் அவனை அடையுமா? அடையா. V
போதனையிலுஞ் சாதனை சிறந்தது. ஒரு பொல்லாப்பு மில்லை.
ஆன்ம இலாபமே பொருளெனக்கண்ட அறிஞர் அநித் தியமான இந்த உலக இன்ப துன்பத்தின் மயங்காது தாமரையிலையில் நீர் போற் சகத்துடன் கூடிவாழ்வார். ஆன்ம இலாபத்தைப் பெற நினையாதவர் இந்த உலகத் துன்ப இன்பத்தினுற் கலங்கித் தியங்கித் திரிவார்கள். ஆன்ம இலாபத்தையே குறிக்கோளாகக்கொண்டு நன்மை தீமை யைவென்று நான் எனதென்னும் அகங்கார மமகாரங் களைக்களைந்த அறிஞர் இறைவன் திருவடி நிழலில் பிறப் பிறப்பற்றுப் பேரின்பத்துடன் வாழ்வார்.
அஃதறியா அறிவிலிகளே துன்பக் கடலிலே வீழ்ந்து எரிவாய் நிரயத்துக் காளாவார்.
வண்டுகள் பூவைக்கிண்டித் தேனை உண்டு ஒன்று மறி யாது கிடப்பது போல் பக்தனும் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத்தினுல் கிண்டி ஆங்குவரு மானந்தத்தேனை யுண்டு ஒன்று இரண்டு, நன்று தீதென்றறியாமற் தேக் கிக் கிடக்கிருன்.
ஒரு கமக்காரன் தன்னுடைய நிலத்திலே நல்ல வித்தை யிட்டு அதிலுண்டாகுங் களையைக் களைந்து, விளையுந் தானியத்தை யொன்று சேர்க்கிறன்.
அதுபோலப் பக்தனும் சிவமாகிய நிலத்திலே பக்தி யென்னும் வித்தை வித்திக் காமக்குரோத மோக மதமாச்
Page 185
362 நற்சிந்தனை சரியமென்னுங் களையைக் களைந்து சிவபோக மென்னுந் தானியத்தைச் சேர்த்து வைத்துப் புசிக்கிருன்.
பூலோகமாகிய நந்தன வனத்திலே சீவர்களாகிய மலர்கள் மலர்ந்து கிடக்கின்றன. சிவன் அதைக்கண்டு மகிழ்கிறன்.
பொற்கொல்லன் பொன்னை யெடுத்துப் பல பூண் களைப் படைக்கிருன்.
சிவனகிய பெரிய பொற்கொல்லன் ஆன்மாவாகிய
பொன்னை யெடுத்துச் சீவர்களாகிய பலபணிகளையு மாக்கு கிருன். 8.
வைத்தியன் பல மூலிகளையு மெடுத்து ஒன்ருக்கி நோய்க்கு மருந்து கொடுத்து நோயை மாற்றுகிருன்.
பெரிய ஞான வைத்தியனும் தனு கரண புவன போகங் களை ஆன்மாவுக்குக் கொடுத்து அதன் நோயை மாற்றி இன்ப வீட்டில் வைக்கிருன்.
தாய் தனது குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான் களைக் கொடுத்து மகிழ்விக்கிருள்.
சிவபெருமானுந் தன் குழந்தைகளாகிய எங்களுக்குப் பல விதமான இன்பங்களையுந் தந்து மகிழ்விக்கிருன்.
பொறி வழியே போந்து மனம் அலைய அறிஞர் இடங் கொடார். ஏனெனில் ஆத்மாவே தானென அறிந்தவர்கள்; ஆசை நோய்க்கு இடங்கொடுப்பாரா? அன்று.
அவர்தம் பெருமையை வேத சிவாகமங்களும் புகழ் கின்றன. இவர்களைக் கண்டால் கல்லுங் கரையும்
அனைத்தினும் வெற்றி யுண்டு.
நற்சிந்தனை 3 SB
W சிவத்தியானம்
ஒ மனிதனே! நீ உண்மைப் பொருள். கேடற்றவன். உனக்கு ஒருவருங் கேடு விளைவிக்க முடியாது.
நீ இங்கும் அங்கும் எங்கும் உள்ளவன். நித்தியன். உறுதியுடனே சிங்கங் கானகத்தில் திரிவதுபோல் உலக மாகிய கானகத்தில் திரி. எந்த விதத்திலுந் தளர்வடை
யாதே. ஒரு நூதனமு மிங்கில்லை. முழுதுமுண்மை. ஒரு பொல்லாப்புமில்லை.
ஒ மனிதனே! வானம் வந்தாலும் பூமி வந்தாலும் ஆட்சிசெய்யக் கருதாதே. சாட்சியாயிரு. மாட்சி உன் பிறப்புரிமை.
அது என்ன வுபாயத்தாலு மடையப்படுவதொன் றன்று. அப்படியுள்ள காரியம். மற்றனைத்துஞ் செப்படி வித்தை, அறிவு, அறியாமை உன்னிடமில்லை. நீ பர LDfTjöLorr.
l ஓம் தத் சத் ஒம் |
ஒ மனிதனே! சற்றுப் பொறுமையாயிருந்து பார். நீ யாரெனத் தெரிந்து கொள்வாய். துயருறத் தகாத காரியங்களில் துயருருதே. துன்பமும் இன்பமும் உலக
நடவடிக்கைகள். நீ சித்துப் பொருள்.
உன்னை ஒன்றுந் தாக்கமாட்டாது. எழுந்திரு. விழித் துக்கொள். சிவத்தியான மென்னுந் திறவுகோலால் மோகூடிவீட்டின் கதவைத்திறந்து பார். எல்லாம் வெளி யாகும். VK.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஓ நண்பனே! உன்னை யார்தான் பாவியென்று சொல்ல வல்லான், ஏன்?
Page 186
364 நற்சிந்தனை
" நீ சிவத்தின் அம்சமல்லவா? மறந்து போனுய். ஓம் தத் சத் ஒம் என்று ஓயாமற் சொல்லு, உன் முழுமனத் தோடும் இறைவனுக்கு உன்னை ஒப்புக்கொடு. சிவத்தியா னத்தை அசட்டை பண்ணுதே. ஈற்றில் யாவும் நன் மையாய் முடியும். சோம்பலுக்குஞ் சோம்பலின்மைக்கும் நீ கட்டுப் படாதே, h
அதிகப் பேச்சில் என்ன பயன். பண்படுத்தப்பட்ட தரையிலன்றே நல்ல பயன் வரும். அஞ்சாதே.
நாங்கள் சிவனடியார். சிவபெருமான் என்றுள்ள வரோ அன்று நாமுமுள்ளோம்.
வெப்பந் தட்பம், இன்பந் துன்பம், இளமை முதுமை இயற்கையின் குணங்கள்.
இவைகளின் தீண்டுதலால் நாமேன் கவலைப்படுவான்.
இவைகள் தோன்றி மறைவன. நாமோ தோன்றுவது மில்லை. மறைவதுமில்லை.
உண்மை இன்மை யாகாது. இன்மை உண்மை யாகாது.
எல்லாஞ் சிவன் செயலென்ற எங்களுக்குக் குறைவு முண்டோ? நிறைவு முண்டோ? நாம் சிவபெருமானென்ற நூலிலே கோக்கப்பட்ட பல நிற முள்ள மணிகளை யொப் பவர். நூலறுவதுமில்லை. நாங்கள் சிதறிப்போவதுமில்லை. பலபடக் கூறுவதால் பயனில்லை. . . . . . .
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஒ சினேகிதா! நீ சிவனடியானென்று முழுமனத் தோடும் நினை. எல்லா வெற்றியு முன்னிடமுண்டு. அதற்கு மேல் வேருென்று மில்லை. யாவுமுன் காலடியில்.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
நற்சிந்தனை s 365
குரு வாசகம்
ஆத்துமா நித்தியமானது. பிரிவில்லாதது. பூரணமா னது. சரீரமோ அழியுந் தன்மையுள்ளது. பிரிவுள்ளது. இப்படி யிருக்கையில் நாங்கள் இவ்விரண்டையுஞ் சரி யென்று சொல்ல முடியுமா? அப்படி நாங்கள் சொன்னல் இதிலும் பெரிய பாவமும் பழியும் வேறுண்டோ?
ஆத்துமா எல்லாவற்றுக்கு மாதியாயுள்ளது. யாவை யும் ஆளுகின்றது.
சரீரமோ தொடக்கமுடையது. ஆளப்படுந் தன்மை (1460)L-Ugbl.
இப்படி யிருக்கையில் நாங்களில்விரண்டையும் ஒன்ருே டொன்று ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? அப்படி யொப் பிட்டால் இதிலும் வேறு பழி கிடையாது.
இயற்கையிலே ஆத்துமா அறிவுடையது. தூய்மையா னது. சரீரமோ அறியாமை யுடையது. தூய்மை யற்றது. இவ்விரண்டையும் ஒப்பிட்டால் இதிலும் அஞ்ஞானம் பிறி துண்டோ?
ஆத்துமா பிரகாசமுடையது. அதாவது சுயம்பிரகாச முடையது. சரீரமோ இயற்கையிலே இருள் மயமானது. இவ்விரண்டையு மொப்பிடலாமா?
யாரொருவன் தன்னைச் சரீரியென்று நினைக்கிருனே ஐயோ, அவனிலுங் கீழ்மகன் யார்?
யார் ஒருவன் தன்னுடைய சரீரமென்று சொல்லு , கிருனே அவன் மட்பிண்டத்தைத் தன்னுடையது என்று சொன்னது போலிருக்கும்.
யார் ஒருவன் தன்னைப் பூரணனென்றும், நித்தியன் என்றும், இயற்கை அறிவுடையவனென்றும் நினைக்கிருனே அவன் உண்மை யறிவாளி. அவனுக்கிணையாக ஒரு தெய் வமுமில்லை.
Page 187
366 நற்சிந்தனை
யார் ஒருவன் தன்னை ஓர் அழுக்கும் பற்றமாட்டா
தென்றும், மாறுபாடில்லாதவனென்றும், தூய்மையிலுத்
தூய்மை யென்றும் நினைக்கிருணுே அவனை அறிவாளிகள் ஞானி யென்று சொல்லுவார்கள்.
வேதம் ஆகமம் யாவும் இந்த உலகம் முழுவதுந் தெய்வமே நிறைந்திருக்கிற தென்றும் அதைவிட வேறு யாதுமில்லை யென்றும் முறையிட நாங்கள் எப்படி உலக மிருக்கிறது சரீர மிருக்கிறதென்று நினைக்கலாகும். அப்படி உலகஞ் சரீரம் வேருயிருக்கிறதென்றல் இதைவிடப் பழி பிறிதுண்டோ? ஆன்ருேரும் நின்னவார் பிறரன்றி நீயே ஆணுய்" என்று சொல்லி யிருக்கிருர்கள்.
இன்னேரன்ன பல காரணங்களாலுங் கடவுளைத் தவிர வேறென்றுமில்லை. யாவு மவன் செயல்.
சொல்லெல்லாம் மோனம் தொழிலாதியும் மோனம் எல்லாம் நன்மோன நிறைவே.
சிவபக்தி
சிவபக்தி மாத்திரந்தான் மனிதனைப் பாக்கியவானக் கும். மற்றையவனத்தும் பிரயோசனமற்றவை. ஆகை யால் இடைவிடாமற் சிவத்தியானம் பண்ணு. ஒன்றுக்கும் பயப்படாதே. வெற்றியுன் சொந்தம். எத்தனைமுறை தவ றினலுந் தைரியத்தைக் கைவிடாதே. தவறுதல் சடசம் பந்தமானது. நீயோ சித்துப்பொருள் (அதாவது அறிவுப் பொருள்). நீயொரு நாளும் அழிய மாட்டாய். எழுந் திரு! விழித்துக் கொள்! காரியங் கைகூடுமட்டும் வழி யிலே தங்கிவிடாதே! உற்சாகத்தோடு முன்னேறிச் செல். உனக்குச் சகல சத்தியுங் கட்டுப்படுவதைக் காண். வீண் வாத தர்க்கத்திலே நாளைப் போக்காதே. நீ எங்கே போகிருயோ அங்கே உன்னுடன் பகவான் வருவார்.
வெளிமாதிரி யொன்றுஞ் செய்யாதே. உனக்குள் நீ பெலத்துக்கொள். சமயமென்பது ஒரு மாதிரியுமற்ற தனித்த நிலை. உடல் பொருள் ஆவி மூன்றையும் பகவா னுக்கு ஒப்படை. அதன்பின் உன்னைப் பற்றிய காரியங் களைக் கைவிட்டுவிடு. அனைத்தும் அவனே பார்.
நற்சிந்தனை 367 தவம்
தவத்திலே மேம்பட்டவர்களைக்கூட இந்திரியங்கள் வரம்பு கடந்து இழுத்துச் செல்கின்றன. ஆதலால் அவற்றை வெல்வதற்குச் சிவத்தியானஞ் செய்க. அதனல் மாத்திரந் தான் புலன்களைத் தன்வசப்படுத்தத்தக்கது. ஆகவே இடை விடாமற் சிவத்தியான ஞ் செய். மனிதன் விடயங்களைக் கருதும் போதெல்லாம் பற்றுண்டாகிறது. பற்றுதலால் விருப்பம் உண்டாகிறது. விருப்பத்தாற் சினம் பிறக்கிறது. சினத்தால் மயக்கம். அம்மயக்கத்தால் தவறுதல் உண்டா கும். ஆதலால் உன்னைச் சிவத்தியானத்தால் காத்துக் கொள்.
நாங்கள் எங்கள் சிறுமைக் குணத்தினல் இயல்பழிந்து தரும வழியினின்று தவறுகிருேம். தவறுதல் நீங்கித் திட முண்டாகச் சிவத்தியானமே சிறந்த கருவியாகும். இந்த உலகத்தில் மிகுந்த செல்வமிருப்பினும், வானுேரை ஏவல் கொள்ளக்கூடிய வல்லமையிருப்பினும் நாங்கள் புலன்களை அடக்கியாளுதல் முடியாது. ஆதலால் திருவருளை முன்னிட்டு மனத்தைப் புலன்வழிச் செல்லாமல் அடக்கியாள். இது தான் தவமென்று பெரியோர் சொல்வர். அதைவிடுத்து இடம்பமான வேள்வி முதலியவை செய்வதால் திடமுண் டாக மாட்டாது.
நானே நீ
என்னுடைய இராச்சியத்தில் இராப்பகலில்லை; நன்மை தீமையில்லை; நீ நானில்லை; இன்றைக்கு நாளைக்கு இல்லை; பெரிது சிறிது இல்லை; நீயுமிந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டுமாகில், அங்கு முழுமனத்தோடு வெளியேறக் கடவை; புகையிரதம் வேண்டியதில்லை; மாட்டுவண்டி தேவையில்லை; பின் என்ன வேண்டுமாகில் வைராக்கிய மென்னும் புதுக்காத வண்டிலும், சாந்தம் என்னும் இரண்டு வெள்ளை எருதுகளும், மனப்பாக்கிய மென்னுஞ் சமையாத சாதமும், யாசகமென்னும் அங்கவஸ்திரமும், ஞானமென்னும் மூக்குக் கண்ணுடியும் எடுத்துக்கொண்டு பின் முன் நாடாமல் வரக்கடவை. அப்பொழுது நீ காண விருக்கும் காட்சிகளை என்னுற் சொல்ல முடியாது. கட வுளே சாட்சி.
Page 188
368 நற்சிந்தனை
866).T6th UTG).260T
தெய்வத்தை நம்பு, முழுமனத்தோடு நம்பு; உலகில் உனக்கினியதெனத் தோன்றும் எவற்றிலும் இனியதாக நினை. அதைவிட வேறில்லை என்று நினை. இருக்கும் போதும் நிற்கும்போதும், நடக்கும்போதும், கிடக்கும்போதும் நினை. உனது நரம்பிலும் தசையிலும் இரத்தத்திலுந் தெய்வ மென்னும் நினைவே நிறைவதாக. நானில்லை, கடவுளே இருக்கிருரென எண்ணு. கடவுளைக் கும்பிடுதலே வாழ்வின்' இலக்காக வைத்துக்கொள். எவன் எதை நினைக்கிருனே அவன் அதுவாகிறன். கடவுளை உனது உள்ளத்தில் வைத்து வளர்ப்பாயாக. எல்லாம் அவருடைய செயலாகுக. ஈற் றில் எல்லாம் அவனுகவே காணப்படும்.
சிவபெருமான் அத்துவிதமாக இருக்கிருர், அடியேன் அவரே எனத் தியானிக்கும் மகிமை எனக்குண்டு. ஒருவன் எப்படிப் பாவனை செய்கிருனே அவன் அப்படி ஆகிறன். ஆகையால் "நான் அவனே' என்று தியானஞ் செய். அப் போது உன் செய்கைகள் அனைத்தும் அவன் செய்கையே யாகும். அவனைத் தவிர வேறு பொருள் இல்லை. அவனே அனைத்தும். அப்படியான அவனே தன்னைப் பல கோலங் களாக்கி விளையாடுகிருன்,
அவனுக்குப் பிறப்பிறப்பில்லை. ஆதியந்தமில்லை. ஒரு மாறுதலுமில்லை. முழுதுமுண்மை.
ஓம் சாந்தி.
நற்சிந்தனை : 369
66.60TiguTf
நாங்கள் சிவனடியார்
ஆதியுமந்தமும், இறப்பும் பிறப்பும், இரவும் பகலும், சுகமுந் துக்கமும் எங்களுக் கில்லை யென்னும் திருமந்தி ரத்தை எவனெருவன் மறவாமல் தியானஞ் செய்கிருனே அவனுக்கு ஒரு குறையும் வராது.
எதை நீ பாவனை செய்கிறயோ அது நீ யாவாய்.
இதற்கெல்லாம் விடாமுயற்சி, அதாவது சலியாமை வேண்டும் .
பாடுபட அஞ்சுபவனுக்கு ஒரு பிரயோசனமு முண்டா காது; பாடின்றிப் பட்டங் கிடையா தென்பது உலக வழக்கு.
காரியசித்தி எய்தும் வரையும் விடாமுயற்சி செய். நீ ஏன் ஓயாமல் கெட்ட காரியங்களைச் சிந்திக்கிருய்? அச் சிந்தனையை விட்டு முழு மனத்தோடு தெய்வத்தை வணங்கு. உனக்கு விதிவசத்தாற் பொருந்துவனவற்றை உவகையோடு ஏற்று நடத்து. இறுதியில் யாவும் ஜெயமாகும்.
அது அப்படி யுள்ள காரியம் என்பதைச் சதா நெஞ் சிற் பதித்துக் கொண்டு இயல்பாய் உனக்கு வரும் வேலை களையுங் கடமைகளையுஞ் செய்து கொண்டிரு. அல்லது அவற்றை விட்டிரு. எதுவுஞ் சரியே.
செய்தலிலுஞ் செய்யாமையிலும் அது தங்கியிருக்க வில்லை. கருமம் இல்லாமையை விரும்பாதே. கருமத்தைப் பற்றதே. செய்தல் செய்யாமை இவற்றுள் இயல்பாய் எது உனக்கு அமைகின்றதோ அதையே பற்றி நில்.
24
Page 189
370 நற்சிந்தனை
இன்பவிறையே
ஒரு பிதா தனது குழந்தையினது மழலைமொழியைக் கேட்டு மகிழ்வானன்றிச் சிறிதுமிகழமாட்டான்.
அவ்வண்ணமே, தேவரீர் அடியேனுடைய விண்ணப் பத்தைக் கேட்டருள்வீராக. இவ்வுலகத்திலே எத்தனையோ சாதிகளுண்டு. அவைகளின் பழக்கவழக்கங்கள் ஒன்ருே டொன் ருெவ்வாது முரண்படுகின்றன. ஒவ்வொரு சாதி யுந் தத்தம் பழக்க வழக்கங்களே மேம்பாடுடைத்த தெனக் கூக்குரலிடுகின்றது. சமயங்களுமப்படியே. இவைகள் யாவும் உலகத்தின் சிறப்புக்களேயன்றி வேறல்ல. இந்த வித்தியாசமான போராட்டங்களெல்லாம் முன்னு முள் ளன. நூதனமான காரியங்களல்ல. இவைதாம் இந்தப் பிரகிருதியின் தோற்றங்கள். இவை வேறு தான் வேறு என்றறிந்த அறிவாளி இவைகளுடன் கூடியுங் கூடாது மிருப்பன். எத்தனையோ முறைகளில் பெரிய பெரிய அவ தாரங்கள் வந்து எவ்வளவோ வேலைகளைச் செய்தும் மீட் டும் இந்த உலகம் அப்படியே யிருக்கின்றது. இது ஒரு பெரிய இரகசியம்.
தேவரீர் இவைகள் எல்லாம் நன்கறிவீர். நானென் றுமறியேன். என்னை மன்னித்துக் கொள்ளும்.
pamahagið
ஆண்டவனை யன்றி வேருெரு பொருளுமில்லை. அனைத் தும் அவன்செயல். உனது சுமைமுழுவதையுந் திருவடிக் கீழ் இறக்கி வைத்து இளைப்பாறு. கவலைக்கிடங்கொடாதே. நான் செய்தேன், அவன்செய்தானென்று நலியாதே. விழித்திரு.
நற்சிந்தனை " , 371 ·
சுகவாழ்வு
கடவுளை மனம் வாக்குக் காயத்தாலே காலை, உச்சி, மாலை என்னும் மூன்று காலத்திலும் வழிபடுதல் வேண் டும்.
சரீரத்தையும் மனத்தையும் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சரீரத்திலாவது மனத்திலாவது ஏதுங் குழப்படி ஆரம் பிக்கும்போது அந்த கூடிணமே சாப்பாட்டை நிறுத்தி, ஆலய வழிபாடு, அடியார் வழிபாடு, அல்லது இயன்ற தானதருமங்கள் செய்யவேண்டும். w வரவுக்கேற்ற செலவு செய்யவேண்டும்.
தனிமையாக இருந்து கொண்டு அல்லது நடந்து கொண்டு, தன் வாழ்நாளை நடாத்தும் வகையைச் சிந் திக்கவேண்டும்.
மிஞ்சிய போகத்திலாவது, போசனத்திலாவது, வைத் திருக்கு மாசையை அடியோடு தவிர்க்கவேண்டும்.
இறைச்சி மீன் குடி முதலியவைகளை விடவேண்டும்.
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புள்ளவனுக இருக்க வேண்டும். م s
தான் மிகவும் பரிசுத்தன் என்றுந் தனக்கு ஒரு குறை வில்லை யென்றும் அமைதியாகச் சிந்தித்தல் வேண்டும்.
மேலே சொல்லிய வண்ணம் இவ்வாறு ஒருவன் சாதித் துப் போதித்து வருவானுயின், யோகமும், ஞானமும், சர்வசித்தியும் ஈற்றில் முத்தியும் லபிக்கும்.
Page 190
US6 III
திருமுகங்கள்
Page 191
374 . . . நற்சிந்தனை
நான் யார்
நீ உடம்பன்று, மணமன்று, புத்தியன்று, சித்த மன்று, நீ ஆத்மா.
ஆத்மா ஒரு நாளும் அழியாது. இது மகான்க ளுடைய அநுபவ சித்தாந்தம். இந்த, உண்மை உனது உள்ளத்தில் நன்ருய்ப் பதியக் கடவது.
ஆனல் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு, அதா வது தருமநெறியிற் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் திருமுன்னிலை என்று சாதனை செய். கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளவர்.
இப்படிக்கு அவனே நானே.
~~
ஓம் தத் சத் ,
கொல்லம், ஆணி 17, 1938
அகமுக மாகு. அப்போதே ஆனந்தமுண்டாம்.
எதனல் கண் காணுகிறது? எதனுல் காது கேட்கின்றது? எதனல் மூக்கு முகருகின்றது? எதனுல் வாய் பேசு கின்றது? அதுதான் ஆத்துமா அல்லது கடவுள். எவ் வளவு சுலபமான வழி! நினைத்துப் பார். அனைத்துமுன் கைவசம். ஒரு கணம் நீ ஊன்றி யோசிப்பாயானல், நீ அதுவென உனக்கு நன்கு புலணுகும். உன்னுள்ளே தெய் வீகத்தன்மையை உணர். நீயே உனக்குத் தலைவன். நீயே உன்னை நடத்துபவன். நீயே உலகத்துக் கேகசக்கராதிபதி. இந்தத் தூய எண்ணத்தை மறந்தால் இறப்புப் பிறப் பாகிய சமுத்திரத்திற் கிடந்து திக்குமுக்குப்படுவாய்.
எழுந்திரு, விழித்துக்கொள். உன்னை இனி ஒன்றும் வெற்றியெடுக்க முடியாது. விளக்கு எரியவேண்டுமாயின் திரியும் எண்ணெயும் வேண்டும். நீ பிரகாசமடைய வேண்டினல் ஓயாமல் ஒம் தத் சத் என உணர்ச்சியோடு (அதாவது உயிரை எழுப்பி) பிரார்த்தனைசெய். சீக்கிரம் புத்தகத்தை முடி. h−
நற்சிந்தனை ‘ - 375 உத்தம இரகசியம்
நாங்களெல்லாம் ஒரே சமயத்தையும் ஒரே சாதியை யும் சார்ந்தவர்கள்; எங்களுக்குள் ஒருமாறுதலும் இல்லை. நாங்கள் பரிசுத்தரும், தெய்வத்துவத்துள் வைக்கப்பட்ட வர்களாகவும் இருக்கின்ருேம். வித்தியாசம் வித்தியாச மான மாறுதல்கள் யாவும் உண்மைச் சுபாவத்தின் சிறப் புக்களாக இருக்கின்றன. இவைகளை மாயை எனப் பெரி யோர் சொல்வர், ஒழுக்கத்தினுல் வசீகரப்படுத்தப்பட் டோர்க்கன்றி மற்றையோர்க்கு இவ்வுண்மை புலப்படாது. அதுபற்றியே தன்னுயிர்போல் மன்னுயிர் யாவையும் நேசித்தல் வேண்டுமென்று மகத்துக்களால் திரும்பத் திரும்ப வற்புறுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால் யாவும் ஒழுக்கத்திலேயே தங்கியிருக்கின்றன. இவ் வொழுக்கவழியில் நின்று எல்லாம் நாம் என்று பாவனை செய்து வரவர அற்புதமான அநுபவங்கள் மூலமாக நாங்கள் சடப்பொருள் அல்ல, சித்துப் பொருளென்று தெளியலாகும்.
அஞ்சேல்
14-11-33
'அஞ்சுவ தியாதொன்றுமில்லை, அஞ்ச வருவதியா தொன்றுமில்லையென்னு மான்றேர் மெய்ம்மொழி நம்மைப் பிறப்பிறப்பாகிய கடலைக் கடப்பிக்குந் தெப்பம்". இதைத் துணையாகக் கொண்ட வெமக்கென்னகுறை? ஆதலால் நிறைந்த மனத்துடன் இந்தப் பெரும் பிரயாணத்தைச் செய்வோமாக.
'அகர வுயிர்போ லறிவாகி யெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து'
இப்படிக்கு என்றும் மறவாதவன்.
Page 192
376 நற்சிந்தனை
காசியிலிருந்து எழுதிய கடிதம்
தேடித்திரிந்து காசிக்கு வந்து கண்டேன் விசுவநாதனை என்னுள். வாடித்திரிந்து வருந்த வேண்டாம். தேடிய பூடு காலுக்குள்ளே என்ற தெவிட்டா வாசக மொன் றுண்டு. இவ்விடத்திலும் மனிதர்களெல்லாம் எங்களைப் போலே தானிருக்கிறர்கள், நூதனமான காரணமொன் றும் பூதலமீதிலில்லவே இல்லை. இருந்த இருக்கிற இருக் கும் யாழ்ப்பாணத்தா ரெல்லாருக்குமாகக் கருமாதிகளெல் லாஞ் செய்து முடிந்து விட்டன. இனிமே லுங்களுக் கியைந்தபடி அன்பாக உலகில் நடந்து ஆண்டவன் அடிக்
கீழ் அமர்ந்து வாழ்க.
30- 1 - 40
Gl Glouubub
இதோபார். நான் உனக்கு மிகவும் அணித்தாயிருக் கிறேன். என்னைக் காண்கிருயா? நல்ல கூர்மையாய்ப் பார், உள்ளேயிருக்கிறேன். இன்னுந் தெளிவாய்ச் சொல் லில் நான் நீயாயிருக்கிறேன். பின் நீயேன் என்னை உனக்கு வேருய் நினைக்கிருய்?
நீயொரு கெட்டிக்காரனல்லவா? உனக்கு என்ன குறை? ஒரு குறைவுமில்லையல்லவா? உனது கடமையை நீ நல்லாய்ச் செய். யாவரிடத்தும் அன்பாயிரு. அதா வது உன்னைப்போல எவரையும் பார். பின்னல் வருவன வற்றைப் பாடம் பண்ணு.
'அரும்பிய கொன்றை அணிந்த சென்னியன்
ஆறும் பிறையும் சூடிய அழகன் இறையவன் மறையவன் ஏழுல காளி ஈசன் மழுப்படை தாங்கிய கையன் உம்பர் தலைவன் உயர்கை லாயனே'.
-ஈசுரமாலே ஒளவையார்.
நற்சிந்தனை 377.
β) - சிவமயம்
பகைத்தலும் விரும்புதலும் இல்லாதவன் சந்நியாசி யாயினுஞ் சரி, இல்லறத்தானுயினுஞ் சரி, அவனே பரம புருடன். அதாவது அவன் சீவன் முத்தனென்று பெரி யோர் சொல்லுகிருர்கள். இயற்கையோடு அளவளாவி வாழுதல்தான் பேரின்பம். அது ஒரு மாதிரியல்ல; உண்மை உணர்ச்சி. தனக்குத் தான் உண்மையாக விருந்தால் யாவும் விளங்கும். தன்னைப்போல மற்றவர்களையும் நேசித் தலே ‘தவம்'. அதுவே அறம்.
எங்குஞ் சிவம்
.ெ
சிவமயம்
யாவும் நமது ஊர். யாவரும் நமது கேளிர். நன்மை தீமை நாம்தர வருவன. பிறராலன்று. பிறர் காய்ந்த வழிக் காய்கிலம்; உவந்தவழி உவக்கிலம். யாவும் திரு வருளென்பது நன்கு அறிவேம். நம்மைச் சூழவரவிருக் கும் மலைகள் திருமாலைப்போல் பச்சைப் பசேலெனக் காணப்படுகின்றன. இரைந்து விரைந்து செல்லு மருவி களின் இனிய சத்தம் திருமாலின் கரத்திலிருந்து இடை விடாது ஒலித்துக்கொண்டிருக்கும் பாஞ்ச சன்னியத்தை ஒத்தன. சந்திரனுஞ் சூரியனு மிருபாரிக ளிருபக்கத்தும் விளங்குவதுபோல் விளங்குகின்றன. மரக்கொம்பரிலிருந்து தீங்குரலாற் பாடும் பட்சிகள் அக் கண்ணன் புல்லாங் குழல் பாடுவதை ஒத்திருக்கின்றன. தேயிலை கொய்யும் மகளிர் திருமாலின் இனிய பத்தரான கோபிகாஸ்திரீகளை நேர்வர். இவ்விடத்துக் கறங்கும் முரசம் துரியோதன னுடனே போருக்குச் சென்ற பஞ்சபாண்டவரின் தேரின் மீது அடிக்கப்படும் பேரிகையை இசைந்தது. எப்படித். திருமால் சகல வளங்களுடனுந் துவாரகையில் விளங்கி ஞனே அப்படியே இம்மலை இவ்விடத்து மிளிர்கின்றது. கண்ணனுடைய விருந்தினராக நாம் இவணிருக்கிறேம். ஒன்று கூறுதும். உவந்து கேட்குதி. நன்று தீதென நாட் கழிந்தன. என்று காணுவல் என்ற எண்ணமே இன்றும் எம்மை இசைந்து வாட்டிற்று.
என்றும் மறவாதவன். 17-3-32
Page 193
378 u நற்சிந்தனை
சிவமயம்
சொல்வதை மிகவும் கவனமாகக்கேள். நீ யார்? உடம்பா? மனமா? அன்றிக் கண், காது, வாய் மூக்கு முதலிய அவயவங்களா? இல்லை. ஏன்? எனது உடம்பு எனது கையென்று சொல்லுகிறதனுல் நான் உடம்பை விட வேறு பொருளல்லவா? ஆம்? பின்னை நான் எப் படிப்பட்டவன்? அழிவில்லாதவன். ஆகையால் எனக்குப் பயம் முதலியன விரலாமா? இல்லை. ஆனல், சரீர மன தர்மத்தையொட்டிப் பாவத்திற்குப் பயப்பட வேண்டும். புண்ணியத்தைச் செய்யவேண்டும். புத்திமான்கள் இப்படி நினைந்தும், செய்தும் பேரின்பத்திற்கு இம்மையிலும் மறு மையிலும் பாத்திரமுள்ளோராகின்றனர். நிலம், காற்று, தண்ணிர், நெருப்பு, வானம் இவைகளா லாக்கப்பட்ட வீட்டில் பகவான் வசிக்கிருர். ஆனபடியால், வீட்டைச் சுத்தமாயும், மனத்தைச் சுத்தமாயும் வைத்து அமைதி யாய் நட.
என்றும் மறவாதவன்.
842ے 18 سے87
6.
Soul Duth
உனக்குச் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. நாங்க ளெல்லாம் தேவ சந்நிதானத்தில் இருக்கிருேம். இது ஒரு பெரும் சத்தியம். யாவும் இருந்தபடியே நடந்து வருகின் றது. கிலேசமோ, அன்போ, பகையோ, இவையாவும் பகவானுடைய விளையாட்டு. இவை என்றும் இப்படியே. நாமும் அப்படியே. பிறப்பைப் போல இறப்பு. புகழைப் போல இகழ். நன்மையைப்போலத் தீமை. முழுதும் உண்மை. முன்னிலை இன்றித் தன்னிலையில் யாவும். இயங் காமல் இயங்கு. முடிவைக் காணுேம். அதுதான்
சுற்றிச் சுற்றிச் சுப்பருடைய கொல்லை.
என்றும் மறவாதவன்
நற்சிந்தனை 379
வ. &laյւՃամ)
நான், நீ, ஐயா, அம்மா, அண்ணர், அக்காமார், அத்தை, அப்பாச்சி, பெரியையா, சீனியையா, சின்னையா, கந்தசாமி, கணபதி, வைரவர், வீரபத்திரர், காளி, கூளி, கிருஷ்ணன், கிறிஸ்து, புத்தன், முகம்மது, இராச ரத்தின மாமா, சோமா மாமா, செல்லத்துரை மாமா, கன்று, பசு, ஆடு, குதிரை, சந்திரன், சூரியன், நட்சத் திரங்கள், மேடம். இடபம், மிதுனங் கர்க்கடகம், சிங் கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம், ஊர்வன, பறப்பன, கிடப்பன, நடப்பன, மலை, கடல், வாவி, குளம், கொடி, செடி என்று அளவிடக் கூடாமல் விரிந்து நிற்கிற ஒன்றுதான் கடவுள். இதை விட வேறில்லை யென்று தியானிக்கிறவன்தான் உண்மை யான பக்தனென்று சொல்லப்படுகிருன். இவனுக்கு இந்த உலகில் வெறுப்பானவர்களும் பிரியமானவர்களுமில்லை.
என்றும் பிறவாதவன்
60 -. சிவமயம்
வருடப்பிறப்பாய் விட்டது. நீங்கள் நல்ல பலகார வகைகள் செய்வீர்கள். பட்டுவேட்டி கட்டுவீர்கள். வீடு வெள்ளையடிப்பீர்கள். கோவிலுக்குப் போவீர்கள். சுவா மிக்கு நைவேத்தியமயிடேகம் முதலியவைகள் செய்விப்பீர் கள். நானே சாந்தமென்னும் புனலாடிப் பொறுமை என் கிற உத்தரீயம் பூண்டு வறுமையென்று சொல்லப்படுங் குருவின் போதனை கேட்டு மாசற்ற மனத்தைத் தரும் வெண்ணிறனிந்து, வேண்டாமையென்னும் விழுச் செல் வத்தையே மேலும் மேலும் தருமாறு பணிந்து அஞ் சாமை யென்கின்ற கேடகத்தை யுடையவனுய்ச் சுப்பிர மணிய சுவாமியினுடைய நெஞ்சிலே மிதித்து விளையாடு வேன்.
என்றும் மறவாதவன்
Η Α.- 4- 32
Page 194
380 நற்சிந்தனை
டெ சிவமயம்
பார். எல்லாம் சிவமயமாய் இருக்கின்றன. அப்போது நீ யார்? நான் யார்? ஐயா யார்? மற்றும் எல்லாம் என்ன? சிவமல்லவா? இன்னுஞ் சந்தேகமா? பயமா? பார். நான் உன்னுடனும் நீ என்னுடனும், எல்லாம் ஒன்ருகவும், ஒன்று எல்லாமாகவும் ஒருவிதமான மாறு தலும் அடையாமல் இருந்தபடியே இருக்கின்றது. எழுந் திரு. வரவரப் படி.
காலமில்லை. சுகம். சுகம். சுகம்.
பிறவாதவனிறவாதவன்
шаважами
, 29-5-33 இயாழ்ப்பாணம்
உலகமு முயிரு மாகியு மாகா அலகில் சோதி யடிமலர் பரவி ஒன்று சொற்றுது முவந்து கேண்மதி என்றும் நாங்க ளெல்லாஞ் சிவன்செயல் ஒன்றுக்கு மஞ்சேல் ஒருவனே தெய்வம் நன்று தீதென நாடிநீ கவலலை இன்று தொட்டுப் பணமெனக் கனுப்பாதே தொன்று தொட்டுப் பணந்தொல்லை யென்பர் முன்னும் பின்னு மெண்ணிமலை யாதே உன்னுள்ளு மென்னுள்ளு மிருப்ப தொன்றே சொன்ன வாசகஞ் சித்த சுத்தியைத்தரும் ஒன்னலர் தம்மை யுவந்துகொள் என்ன புதுமை யீண்டுண் டெனவறி.
ஒருநாளுமறவா யோகசுவாமி
நற்சிந்தனை " 881
.ெ சிவமயம்
நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றுண்டு. நீங் கள் உங்கள் கடமையை வழுவாது செய்யுங்கள். உங்க ளுக்குப் பகவான் நல்லருள்புரிவார்.
எல்லாருக்கும் என் அன்பார்ந்த வணக்கத்தைச் செய் கிறேன். ... । ‘’
இப்படிக்கு அவனே தானே
"செய்வன திருந்தச்செய்
மூத்தோர் வார்த்தை அமிர்தம்'.
Page 195
நாம் கடவுளை உள்ளத்தில் வளர்க்கிருேம். நாம் அவருடைய தாய். நமக்கு மவருக்குமொரு குறைவுமில்லை. நம்மை அவர் பிரிய முடியாது.
முழுதும் உண்மை.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
v
Jfr "G8 அஃகமுங் காசும் அதிகம் அஃகமுங் காசும் தேடி அலேந்து நான். அஃகமுங் காசுஞ் சிக்கென அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடெனும் அஃகமும் காசுக் தேடி அம்புவியில் அஃகமுங் காசுக்தேடி அலையும் அஃகமும காசுக் தேடிடில் Q b (y அஃகமுங் காசுந்தேடி யலையாமல் அஃகா மனத்தா அஃகுதலில்லா அறிவினை Y. அஃகுதலில்லா அறிவுடைய அன்பரகம் . அஃகுதலில்லா அறிவுடைய பெரியோர் . அஃதை யறிவோ அகண்ட வெளியிலே அகந் தூய்மை அகம் பிரமாஸ்மியென்று அகம் பீரமாஸ்மியென்னும் அகரத்திலுகர மகர st அகரத்தில் உகரமும் o Y அகரமாம் எழுத்துப்போல அகரமுதல் எழுத்தெலாம் அகல நீளங் sh அகலிடத்தாசான் அகலிகை கல்லானுள் அக்கினறுமாலை அக்கக்காவடி அக்கு மனிதனைக் அங்கிங் கல்யாதே அங்கிங் கென்றெண்ணுதே அங்கிங் கெனுதபடி ஆனந்தமாய் அங்கிங் கெனுதபடி யெங்குஞ் es a அங்கிங் கெனுமல் அங்கிங் கெனுமலெங்குமான அங்கும் இங்கும் எங்கும் நான் 峰姆曾 அங்குமிங்குமாக அங்குமிங்கு மெங்கும் ஓடாதே A அங்குமிங்கு மெங்கும் திருக்கூத்து . அங்குமிங்கு மெங்குமந்த அங்கு மிங்கு மோடி அங்கையிலே பூவெடுத்து அங்கையிற் போது அச்சம் தீர்த்து அச்சமும் கோபமும் அச்சமொடு கோபத்தை
பக்கம் 343 56 288 314 243 187 115 289 157 225 303 185 16S 214 17 264 280 156 209 57 258 166 209 102 05 33 313 254 242 280 55 105 164 265 129 249 95 223 121
85 214
25 196
6. பாட்டு முதற்குறிப் பகராதி
அ
us0 அச்ச மொழியும் அஞ்சடுக்குத் தீபமுதல் அஞ்சின் வழியை அஞ்சும் மூன்றும் அஞ்சுகங்காள் அஞ்சுபூதம் யேல்ல அஞ்சு மடக்கு
அஞ்செழுத்தாலே அனைத்தும்
அஞ்செழுத்தாலே ஆக்கை அஞ்செழுத்தாலே சஞ்சல அஞ்செழுத்தாலே அரனடி அஞ்செழுத்தின அஞ்செழுத்துப் அஞ்செழுத்துள்ளே அனைத்தையுங் அஞ்செழுத்துள்ளே அஞ்செழுத்தை நெஞ்சில் அஞ்செழுத்தை வழுத்திடேன் அஞ்சென ஆறென அஞ்ஞான் விருளை அடிக்கடி மிடியால் அடிக்கீழ் அரக்கன்
spp. uu fi g LS 6TTàs asubsoġ5(8gb அடியார்க் கடியானென்று அடியவர் பாதத் தன்பு செய்திடில் அடியவர் மனத்தை அடியா ருள்ளத்தே அடுக்குமோவின அடைக்கல மடைக்கல மரனே அட்டவசுக்களும் அட்டாங்க யோகம் அவத்தை அட்டாங்க யோகத்திற்கும் அட்டாங்க யோகமெலாம் அட்டாங்க யோகமெல்லாம் அட்டாங்க யோகம் விட்டேன் அட்டாங்கயோக மறிந்து அணங்கு தந்தெமை அனேக்து வந்து அண்டசராசரம் அவன் அண்டசரா சரமவன் வடிவாகும் sı6örlerger a0 GLDü6)Tû அண்டமும் பிண்டமும் அகத்திற் அண்டமும் பிண்டமும் ஒன்ருே அண்டமும் பிண்ட மடங்கலு அண்ட பிண்ட மனத்தும்
பக்கம் . 133
214
始
多
6
134 94 102
26 . 213 23 23 10 151. 44 112 186 137 2O7 177 159 234 301
272 40 33 281 328 35 286 316 341
155 67 226 323 26 212 18 214 13 169 276
Page 196
பாட்டு
அண்ட பிண்ட மெல்லாம் அண்ட பிண்ட மெல்லா மடக்கி அண்டர் முனிவர் கரர் அண்ணன் மாரே அதுங்ானென்னு அதுவிது வென்றவன் அத்த சாமப் பூசைக்கு அத்துவா மார்க்கமாறும் அத்துவிதப் பொருள் அத்துவிதப் பொருளை அருந்தவர்கட் அத்துவிதப் பொருளை அறிவுக் அநுதினம் சாதனை அந்தக் கரண நாமல்ல அந்தம் ஆதி
அந்தமும் ஆதியும் அகன்றேன் வருக .
அந்தமும் ஆதியும் அறியொன அந்தமும் ஆதியும் இல்லான் அந்தமும் ஆதியு மில்லா அந்தமு மாதியு மில்லா ஒருவனே அந்த வாக்கும்
அந்த விதமே அக்தி சந்தி உன் அடியை அந்தி சந்தியும் சிந்திக்கு அந்தியுஞ் சந்தியும் அன்பினி அக்தியுஞ் சந்தியும் ஆசான் அந்தியுஞ் சந்தியும் இதனே அந்தியுஞ் சந்தியும் நீ அப்படி யுள்ள தென் அப்படியே உள்ள தென்பான் அங்கு அப்படியே உள்ள தென்பான் ஆசான்
su
es ve
·4· ·
அப்படியே உள்ள தென்பான் ஆரறிவார்
அப்டடியே அப்படியே அப்படியே அப்படியே அப்படியே
உள்ள தென்றன் உள்ள தென்று உள்ள தென அடிக்கடி
உள்ளதென அன்றசான் அப்படியே உள்ளதெனச் சொல்லி அப்படியே யுள்ளதென அத்து அப்படி யுள்ளதென்று அன்பாக அப்படியே உள்ள பொருளெடா அப்பர்க்கு சமணர் செய் அப்பர் சுநதரா அப்பனுக்கும் அம்மைக்கும் அப்பனும் அம்மையும் அப்பனும் அம்மையுஞ் சிவமே அப்பனே ஆகுயிரே
a as
oe
a.
உள்ளதென அடிக்கடியே
. . .
På asb
162 63 286 55 16 204
56 351 238 280 274 282 306
34
14 I87 100 88 252 304 199 159 301 240 280 292 248 312 248 276 163 270 288 86 283 329 320 305 283 38 352 47
352
130
i
i
பாட்டு
அப்பா பரமசிவம் அம்மையப்பன் அம்மை யப்பனரிய அம்மையு மப்பனுமாய் அம்மையப்பன
அயலறியா
அயலறியாத அயலுனக்கில்லே அயணு மரியும் அரகர சிவசிவ அாகரவென்று அரவரைக் கசைத்த அரவார் செஞ்சடை அரவுசேர் பேணியெம் அரற்று மன்பர்க்கு அரனு முமையு அரியதி லரியது ஆன்மா வதுதான் அரியதி லரியது ஆன்மா அரியயனுந்தேடி அரியும் பிரமாவும் அருந்தவர்தம் அருந்தவர் கெஞ்சிலிருக்கும் அருந்தவர் கெஞ்சில் ருசிக்குங் அருமருந் தொரு ჰotტნისტყ) ტყიტნllტყ) அருவமு முருவமு மானுன் அருவாகி நின்றவன் அருவாவுருவா அருவா யுருவாகி அருவென்றும் உருவென்றும் அருளா லறிந்தேன் அருளொளிக்குள்ளே அருள்நீ தாதாவே அலகிலாச் சோதியை அலகில் உயிர்களை அலங்காரமாக அலேயும் மனத்தை அல்லலற்று வாழ வழி அல்லலெல்லாம் நீக்கி அல்லும் எல்லியும் இறைவன் அல்லும் பகலும் அறிவாக அல்லும பகலும் அப்பன் அல்லும் பகலும் அறிவாகி அல்லும் பகலுமற அவமானப் படுவதில் அவனருளாலே
பக்கம்
350 307 203 49 32 217 208 284 39 306 39 178 226 1 C6 216 103 35 295 128 302 283 214 132
214 336 108 100 280 209 299
274 106
26 278 C4
65 121 272 287 294
44 190
77 282
t_jRL".(B -
அவனவ ளதுவெனு - 。 அவனன்றி யணுவும் அசைய
அவனன்றி ஓரணுவும் அவனி வனுரென் அவனிவ னென்றதை அவனன்றி யொன்றும் அs னன்றி யோரணுவுமசை அவனே நானென்று அவைக் கஞ்சா அழகாரரியும் அழகாருமமயுலியும் அழல்சேர் கையு அளந்தேன் அருளால் அளவிலா மதங்தொறு அளவிலா வொன்றே அளவில் மதங்தோறும் அளவுக்காகாரம் அளவுக்குப் போசனத்தை அரஞ்செய விரும்னெ அறஞ்செய்வார் தங்களகமே அறத்தோடு பூசை அறமே யாற்றுதும் தினமே அறம்புரி வோர்கள் திறம் அறம் பொருள் இன்பமும் அறவாழி அந்தணன் அறவோ ரெனப்படுவார் அறி சதி யறிவிகுலே அறிவறி யாமை
அறிவுக கறிவாகி யப்பாற்கப்பாலா .
அறிவுககறி வாகிகின்றப் அறிவுக்கறி வாகியங்கு அறிவுக்கறிவாக் யப்பாலுக் அறிவுக்கறிவாகி யப்பாற் அறிவுடையார் எல்லா அறியும் பொருளும் அறுபதும் காலுமறியா அறையும் மறை அனங்கணுகத்தை அனைத்து மவனே அவன்செயலே அனைத்தும் ஒன்றாய் அ*னத்தும் சிவன அனைத்தும சிவன் செயல் அனைத்து யிரும்நீயே அ*ன வருக்கும தெய்வம் அனைவரும் ஒன்ருய்
25
iii
பக்கம்
170 170 280 120 77 234 55 257 198 227 106 179 203 170 328 106
58. 238 347 101 170 179 106 109 1)2 133
61 161
51 100 193
104 106 214 198 227 343
55
36
61 243 284 323
uT"(B பக்கம்
அன்பரன்பது சிவசிவசிவ 348 அன்பருடன் கூடி நீ ..., 319. அன்பர் தம் சிந்தை 233 அன்பர் பணி 21 அன்பர் பணிந் தேத்தி நிற்கும் 290 அன்பிலா ரோடுறவு ... 345 அன்பில்லேன் இரக்கமில்லேன் 149 அன்பிலேன் பொறுமையிலேன் ..., 148 அன்பிற் கரைந்துருகி 188 அன்பிற் குழைந்து 304 அன்பினுற் பணி ... 271 அன்பினுருகி 191 அன்பு சிவமெனல் --- 7 அன்பு சிவமென் 33 ۔۔۔ அன்பு சிவமென்ற ஆன்றேர் ... 294 அன்புடனே ஐந்தெழுத்தை ... 94 அன்புடையோர் 107 அன்பு நெறியும் ... 64 அன்பே கடவுள் ... 26 அேைப சிவ ரி கக் 114. அன்பே சிவமென அறிவார் ... 97 அ* பே சிவமென * ... 23 அன்பே சிவமெனு ... 118 அன்பே சிவமெனற 289 அன்பேசிவம் அறிந்திடடா 247 அன்பே சிவமென்று கிளியே ... 345 அன்பே சிவமென் றறைந்த 170 அன்பேயுருவாய் ... 93 அன்பே வடிவாய் 228 அன்று மின்று 225 அன்னத்தோடாடை 106 அன்னே தந்தை சுற்றம் ... 185 அன்னை தந்தை சுற்றத்தை ... 344 அன்னை தந்தையர் ... 150 அன்னை பிதாக் குருவாய் 20 அன்னை பிதாக் குருவாகி 29 அ*னை பிதாக் குருவானுன் 241 அன்னை பிதாக் குருவானுன் எங்கள் . 277 அன்னை பிதா குரு ... 296 அன்னை பிதாக் குருவாகி அடியேனே . 270 அன்னை பிதாக் குரு தெய்வம் 38 அன்னை பிதாக் குருவாகிய 214 ..ه அன்னையாவது சிவசிவசிவ ... 348 அன்னையும் பிதாவும் 314
Page 197
LTG ஆக்கி னுனெ?ன ஆக்கை கிலேபல்ல శిరీ60 tడి ஆக்கை நிலையில்லே ஆக்கை நீ பல்லே ஆக்கையே கோயில் அகஞ்சிவ ஆக்கையே கோயில் அகமே ஆக்கையே கோயிலாக ஆங்காரம் போச்சுது ஆசா?னக் கண்டேன் ஆசான் லுருளால் ஆசான் அருளால் அகந்தை ஆசான் மலரடி ஆசுகவி மதுரகவி ஆசைக் கடலில் அலைந்து ஆசை கிகளத்தினை
ஆசைடாம் ஆசையை விட்டிடடி ஆசைேைலயிற் சிக்கி ஆச்சு தென்று ஆடம்பர மெல்லாம் ஆட வெடுத்த
bę. Nuo T (o: FrgisT UT ஆபொம் ப7ரிங் ஆடுபாப் பணிந் ஆரியாம் பணிந்தாடுவான ஆடுபாம்பே ஆகி மயிலே ஆடுவர் பாரிவர் ஆனில் பெண்ணும் ஆணு ^ாய்ப் பெண்ணுமாகி
ஆணும் பெண்ணும் அலியும் ஆணும் பெண்ணும் ஆனவனே ஆண்டவன் திருவடி ஆதார வாதேய ஆதாரக்தாலே ஆதாரத்தால் ஆதார மாறு க ஆகார மாறும் அகன்ற ஆதாரமாறும் அவத்தையோ ஆதார வாதேய முழுது ஆதாரம் ஆறும்விட்டுப் ஆதார வாதேய மாணவப் ஆதியந்த ம ன்மாவுக் ஆதியந்த மில்லாத ஆன்மா ஆதியந்த மில்லாத நாடெங்கள் ஆதியந்த மில்ல
OO
ν
293
ويت
udäöd uT (R பக்கம் 54 ஆதியந்தமும் அற்றவன் 271 342 ஆகியங்தம் இல்லையென்று 80 303 ஆதியந்த மில்லையென்றன் 3 171 ஆதிபந்தம் உங்கட்கில்லேப் 269 56 ஆதியு மந்தமூ ம ன்மாவுக்கில்லை 343 225 ஆதியு மந்தமு மில்லா 111 185 ஆதியு மந்தமுமில்லான் 240 140 ஆகியு மருதமு மில்ல நமக்கு 196 113 ஆதியந்தமில்லா அப்பனு 353 221 ஆதியு மில்லே 9 208 ஆதியும அந்தமும் அானுர்க்க 299 299 ஆதியும் அந்தமும் இல்லா ... 26 ஆகியும் அக்தமும நமக்கிலே ... 250
152 ஆமைபோல வைந்து 170 219 ஆயிரங் திருநாம * ... 142 108 ஆயுகான் ... 65 - 164 ஆாகத்தினும 54 280 ஆரடா நீ யென்றே 282 242 ஆாறிபவ ரென்ன 39 ܚܚܗ 153 ஆாறிவாரென அடிககடி சொல்லுவான். 239 223 ஆாறிவாரென அடிக்கடி ஒதும் 210 128 ஆரறிவாரென அன்று 52 279 ஆரறிவாரென்ற அருமைத் 187 199 ஆரறிவாரென்ற ஆசான் ... 293 14 ஆரறிவா ரென்று சொல்லிக் • • • 82 347 ஆாறிவா ரென்று சொல்லும் ... 308 266 ஆரறிவா சென்றுன்னுமரிய ... 321 60 ஆாறிவா ரென்றெனக 288 25 ஆரறிவா ரென்றே ... 219 208 ஆரறிவா ரென்ன • .163 م 57 ஆரறிவார் என்றப்பன் 232 --مه 251 ஆாறிவார் என்று முன்னுள் 186 233 ஆரறிவார் என்னும் ... 289 . 268 ஆராயும் வேதமுதல் ... 302 293 ஆராயும் வேதம் அறியாத ... 33 44 ஆராய்ந்து நற்கருமம் ... 107 204 ஆராய்ந்து பார்த்தாலறிவே 171 141 ஆராரென்ன வறைந்த ... 171 304 ஆருமறியாமல் ... 129 113 ஆாமறியா ரெனவே ... 336 156 ஆருமறியா ரென்று ... 80 269 ஆருயிர்கள் தோறு ... 93 168 ஆருயிர் தோறு ... 100 114 ஆரையனே . 46 294 ஆரோடும் பகையாதே 345 21 ஆர் கொடுக்க . 329 220 ஆர்க்குங் கடல்சூழ்ந்த 207 ماهه
LJTUG ஆர்க்கும் சுதந்திரத்தை ஆலயக் தொழுவது ஆவதில்லா அழிவதில்லா ஆவது அழிவதுதான் ஆவதும் அழிவதும் இல்லே ஆவதும் அழிவது அறியா ஆவதும் இல்ல ஆவதும் இல்லையடி ஆவதொன்று மறிகில்லேன் ஆவதோ ஒன்றுமில்லை ஆவிக்குளாவி ஆழ fள மில்ல ஆழிதழ் இலங்கை ஆழிததுரும்பெனவே ஆளான அன்பர் ஆளான மெய்யடியார் ஆளும பெருமான் ஆறணி சடையினனே ஆறணிக்த திருச்சடையா ஆறத் துவாக்களுக்கும் ஆருக்கவலை யெல்லாம் ஆருத காதல்சேர் ஆருய்க் கண்ணிர் ஆருறுக் கபபால் ஆறறு தத்துவத்துக் கப்பா லா ஆறறுத உதுவத்துக் கப்பாலே ஆறியாறி ஆறுகுளமேரி
இகலோகம் டரலோகம் இகழ்ச்சி புகழ்ச்சியென இசையும் பொருண் ඹුණී ශාකd tuff.0’ 6කකl இச்சையில்லோரே இடத்து மடந்தையை இட பந்தனிலேறு இடமக ைற ஞாலத்தே இடம் வலமோடி இருககண்கள் பலபல இ.ே லயக கிடும்பை இவே த மறவாதே இடு துவே சிறிதுமிலேன்
SOL. Y ħl h * இ. பிங்கல இரண்டுஞ் சேர்ந்து இடையா என் பென இ. ட யிடையே
Li u ܚܝܝܐ -: S8
છx . R : , (3.-7ř
பக்கம் utu (8 பக்கம்
241 ஆறுகுடிய
314 ஆறுதலாய் இருமென்னன் 243 ஆறுதல் பெற 104 ஆறுபடி தாண்டு 251 ஆறுபிறைகொண றை pe 167 ஆறும் பிறையுஞ் சூடிய - - - 208 ஆறும் குளனும் A lev 280 ஆறு வருடமவன் 149 ஆறுவது சினமென கடி ·· · 133 ஆறுவது சினமெனு மரிய I65 ஆறுவது சினமென்னு 8 326 ஆறு வைத்ததும −− − 282 ஆனந்தக்கூத் தாடினுன்
223 ஆனந்த மாந்த மனந்தங் a A
50 ஆகந்த கடனம் ஆடினுன
131 ஆனிரைதனை
202 ஆன்மா அழியா - 149 ஆன்மா அழியாதென்று - - - 145 ஆன்மா ஒருபோதும்
154 ஆன்மா நித்தியமான 304 ஆன்மா நித்தியமென்று
303 ஆன்மா கித்தியமென்ற
188 ஆன்மாவக் கயலில்&ல
213 ஆன்மாவே காமென்று
294 ஆன் மாவே நாமென் றுாதூது 288 ஆன் மாவே நாமென்னும்
17 ஆன்மாவை
101 ஆணே நீ அடல்விடைநீ
264 இட்டுண்டு வாழ்வார் 207 இணக்கமாயிருந்து
98 இணங்கிவாழ் மாந்தர் 137, ജൂഞ്ഞ് ധ്യ பணிவார் MA () 222 இது அது என்றெண்ணுமல் a
226 இந்தப் பத்து
O5 இந்தவுயிர் உடல் ஆனுன் 161 இந்திரராதி யோரானுன் 177 இந்திரனுதியோர்
159 இப்பிறவி தீர்ப்பான
287 இம்மைக்கும்
345 இம்மை மறுமை இரண்டின் 149 இம்மை மறும்ை
152 இம்மையிலும
95 இம்மையிடிம் மறுமையிலும் 207 இயககர் முனிவர்கள்
30 இயமன் வருணன் குபேரன் weww. 55 இல்வ5, கரவேல்
155 இல்லை யென்னும சொல்
3. 248 138 52 130 171 27 18 292 238 287 147 256 284 237 215 13 69 81 274 301 353 280 8O 190 36 89. 275
Page 198
LTG இரவு பகலற்ற ஏகாந்தம் இரவுபகலற்ற தனி இரவு பகலில்லாத இரவும் பகலுமற்ற இரவும் பதலுமுன்னை இராஜ திராஜன் இருநிலனுய்த் இரு நிலனுய் இரவிமதி இருநிலனுேடிாவி இருந்த படியே யிருக்கும் பொருளை
இருந்த படியே யிருப்பதனைக் கான .
இருந்துபார் என்றென இருப்பார் பொருப்பி லிறைவி இருப்பினும் நடந்து இருப்பு நெருப்புப் இருவருங் காணு வீசன் இருவி%ன சேரா இருவினை பணு மிடுக்கணெய் இருவருந்தேடி
இருவழியை
இருவாசல்
இருவினைகளென இருவினை நீககி இருவினையான் இருவினையால் கட்டுண்டு இருவினையை நீக்கி இருவினை சுய நீக்கி இரவுபக இருவி%னயின் கட்டழித்து இருவினை வந்தெனை இருளை நீக்கி இலங்கைவாழ் தெய்வம் இலது உளதென இல்லறத்தில் நின்றெளிரும் இல்லற மல்லது இல்லற மென்பதியார்க்கும் இல்ல*ளுக் தானும் இல்லே உண்டென்னு
இல்லை உண்டென்பது
Firsof 200rut. ஈசனே எம்மை நீங்கா ஈசனே எவ்வுயிர்க்கும் அவ் ஈசனே எவ்வுயிர்க்கும் உயிராய் ஈசனே நல்லூர் ஈசனே நல்ல வாசனே ஈசனே யெங்கு மென
ν
பக்கம்
125 102
152
36 302
41 130 297 143 172 343
56 72ן 203 100 315 315 172 245
160 204 57 124 185 187 188 129 199
197 226 03 314 103 103 100 256
31 140 187
... 302
99 188
இல்லை
பாட்டு உண்டென்று இயம்ப உண்டென எடுத்து
உண்டென்று உண்டென்று சொல்ல யென்னு மலே யென்று சொல்லுவார் யென்று சொல்கிலோ இல்லை யென்னுமல் இல்ல யென்றும உண்டென்று; இல்லயென் ருெருடோதுஞ் இள ை இன்பத்தில் இள ை0 கிலேயாதென
இல்க் இல்ல இல்க் @6სზა இல்ல
ଦ୍ରୁ, ଶ୍ୱେତ ଅଲି)
இளமையுமூ இளம் பிரை அணிந்த இளம்பிறை சூடி
இளமை மூப்பிலான் இளமையும் மூப்பும் இளமை முப்பிலான் இறப்பும் பிறப்பும் இனிப் பிறவா இனிய அருள் இனிய திலினியது இனியவனே இனியேதெனக்குன் . வருமோ இனி யேதெனக்குள் இன்சொல் விளை நிலனுய் இன்சொற்றவருர் இன்ப துன்பம் இன்பமே யல்லாமல் இன்ருகி நா?ளயாய் இன்றிருளை நீக்கி இன்றுளோர் நா8ள இன்றென நா?ள யென்றே இன்றைக்கோ நா?ளக்கோ இன்ன தன்மை என்று நம்மை இன்னதன்மைய னிவனென இன்ன தன்மையனென் இன்னு னிவனென் றெவரும்
ஒருவனென ஈசன் ஒருவனெண்ணிப் ஈசன் ஒருவனென எண்ணி ஈசன் திருவடி ஈசன் திருவடியை ஈசன் மேல் நேசமாய் ஈசனை எல்லாவுயிர்க்கு
FF伊守
Y
பக்கம்
317
108 301 225 114 104 93 196 218 242 344 32 75 179 43 119 14 43 227 227 194 93 166 50 85 192
103
126
UT"08 ஈசனை யெல%லயில் ஈடேற வேண்டுமென்றல் ஈடேற்ற முண்டாமே ஈன்றளுமா யெமக் ஈயாத புல்லர் தங்கள் ஈயாத புல்லர் இடந்தோறும் ஈயாத புல்லரை நீ ஈயாத மாந்தர் Ffu (T gb ffîääsioàs) ஈயார் தேட்டைத் ஈயு மெறும்பு ஈரவார்சடை ஈரவார் சடையான ஈரவார் செஞ்சடையா
உகந்து மணங்குவிந்து உடல் பொருளாவி உடையது விளம்பேலு உணர்ந்தார்க்கு உணர்வரிய உணர்ந்தார்க்கு முணர உண்னவே உண்ண உண்ணுதே உறங்காதே உண்ணு துறங்கா திருந்த உண்டான போதுகா உண்டி சுருங்குதல் உண்டில்&ல யென்று சொல்ல உண்டில்?ல யென்றுசொல்லி உண்டோதானுன உண்மை முழுது மெனவுறுதி உண்மை முழுது மெனவோ உண்மை முழுதுமென ஒது உண்மை முழுதுமென்றல் உண்மை முழுது மென்றேத்தி உண்மை முழுது மென்பான் உண்மை முழுதுன்ெற உயர்ந்த உண்மை முழுது மென்ற ஒரு உண்மை முழுது மென்று சாற்று உண்மை முழுதுமென்றேயா உண்மை முழுது மென்னும் உண்மை முழுது மென்ருேதுங் உண்மை முழுதும் என்ற உண்மை முழுவதும் என்றுரை உண்மையும் இன்மையும் உத்தம நட்பை உத்தமர்கள் போற்றும் உம்பர் தலைவனை
vii
பக்கம் பாட்டு டக்கம் 104 ஈர்த்தென்னை யாண்டவன் ... 108 242 ஈர்த்தென ஜன யாட்கொண்ட ... 29 343 ஈவது கடைப்பிடி ... 199 93 Fr6aug Mesir seo 345 سعه - - 56 ஈவது விலக்காதே ... 345 185 ஈவது விலக்கே லென் ... 238 308 ஈவோரிரக்கவு 173 ماهه 156 ஈழநாடு வாழவந்த ... 229 172 ஈழநாடு வாழவந்த எங்கள்சிவ ... 229 3I4 ஈவாரே எல்லாம் ... 107 172 ஈறில்லாதவன் ... 147 14 ஈனருளு மாயென் ... I73 126 ஈன்றிடு தந்தை ... 57 130
2
19 உம்பர் தலைவனுயர் ... 225 231 உம்பர் தல்வனை யூழி ... 173 238 உயர்ந்த திருக்கோபுரமும் ... 220 33 உயிருக்குயிராகி 129 57 உயிரெலாம் தன்னுயிர் ... 166 163 உயிரெல்லா மாகியும் ... 130 322 உருக்கு மொழியால் 79 173 உருகி உருகி ... 187 199 உருகி உருகி உணர்வழிந்து 295 314 உருகியுருகி உணர்ந்தேன் ... 18 10 உருவேறவே செபிக்க 24 322 உருவேறவே செபித்து ... 153 64 உலகத்தோடொட்ட 167 288 உலகமும் உயிரும் ... 20 29 உலகமே கோயிலாய் ... 301 127 உலகம் உதித்ததுமாங்கே . . . 256 343 உலகம் உவக்கவும ... 231 114. உலகம் யாவையும் ... 14 312 உலகுமுயிரு மாயொன்றி 104 242 உலகெலா முணர்ந்த ... 324 36 உல்லாச கடையனடி , 249 96 உல்லாச மாயெங்குஞ் . . 298 210 உவந்து வருவான் ஓம் ... 192 287 உவமானம் கடந்த ... 77 218 உவமை ஒன்றில்ல ... 327 308 உவமை கடந்த . எல் - 92 120 உவமை கடந்த பேரின்பம ... 282 147 உவமை கடந்த வின்பம் ... 61 61 உளவறிக் தெல்லாம் ... 108 238 உள்குவாருள்ளத் ... 140 156 உள்ளத்தி னுள்ளே யுலாவு --- 173
Page 199
Lr-G உள்ளத்தினுள்ளே யொளிருஞ் உள்ளத்தூய்மையாய் உள்ளமே கோயில் உள்ள வுள்ள உறவு மிதுவே உறுதி தருவது சிவழே உறுதி யுண்ட குமுண்மை உற்றர் பெற்றருடன் உற்றரும் போனுர் உனைப்போல உத்தமர்கள் உன் துணை யன்றி
ஊக்கத்தைப்போல ஊக்கமது கைவிடேல் ஊக்கமுள்ளவர்
DGIJá (po Tu - - ஊசிமேல் நுனி - - ஊட்டி வளர்க்க
"ஊண்பொருளு ஊதியமாவதும் நீயே ஊதூது சங்கே ஒளதுாது ஒவதூது சங்கே ஊதூது ஊமத்தை கொன்றை யுவந்த ஊமை, போலிருந்தே ஊரார் சிறக்க ஊருடன் பலகக்கின் ஊருமில்லாய் பேருமில்லாய் ஊருமில்லான் பேருமில்லான் ஊரும் துணையில்* ஊரும் பேருமில்லா உத்தமனே ஊரும் பேருமில்லா ஒருபொருளை ஐவரும் .ோமில்லா ஒருவருக்குச் ஊரும்பேருமில்லா ஒருவனே ஊரும் ருேமில்லா ஒருவனை
எங்களை ஆள் குருகாதா எங்கw விட்டுப் எங்கள் குருநாதன் எங்குக் திருவிழி எங்கு தேடினுய்
1ங்கு மீசனே யேத்துவார் ww எங்கு முள்ளவன் எங்கும் ஈசனை எங்கும் என்றன் தங்கும் எங்கு சிவனடியை எங்கும் மாதவர்
பக்கம்
304 272 107 115 169 247 174 173 221 243 230
9G.
287 238 301 174
57
, 104
81 147 189 190 174 140 107 314 130 154
46 302
36 114 289 156
59 114 53 175 262 272 204 10 265 38 206
viii
பாட்டு உ நினைவல்லால் உன்மத்தங் கொண்டு உன்மத்தன் போல உன்மத்தன் போலே உன்னடிமை உன்னைப் பிரிவனுே உன்னை மறப்பேனுே உன்னை முழுவதும் உன்னே யல்லால் உன்?ன யுனக்கொரு உன்?ன உணர்ந்தவர்கள்
பேருமில்லா ஒருவன் பேருமில்லா ஒருவன் திரு பேருமில்லா வொருவன் பேருமில்வாத உத்தம?னச் பேருமில்லா னுள்ளான் ஊரும் பேரும் இல்லையென்று ஊரும் பேரும் இல்லான் ஊரூராய்த் திரிந்து ஊழிக் காலத்து மொருவர் ஊழ்வினைபோக ஊனு (புணர்வா யுயிருக் ஊணு யுயிராய்க் ஊணு யுயிராகி யுட்கலந்த ஊணு யுயிரா யுலகாயோ ஊஞய் உயிராய் உளத்திற் ஊனுய் உயிராய் உடலாய் ஊனுய் யுயிரா யுடலாய் உறுப்பாய் ஊனுமவனே உயிருமவனே ஊஜமாய் உயிருமாகி ஊனே நீ உயிரே நீ ஊன் பொதிந்த
ஊரும் ஊரும் ஊரும் ஊரும் ஊரும்
எங்கெங்கு சென்ருலும் எங்கெங்கே எங்கே காம் அங்கே எங்கே நீ அங்கே நான் எட்டாத கொப்பிலிருக்கின்ற எட்டாத கொப்பிலிருககுந் தேனுக்கு எட்டாத கொப்பில் எட்டாத கொப்பினிலே எட்டாத கொப்புக்கு எட்டாத பேரின்பம்
எட்டுத் தரம்
t க்கம் 122 129 289
56. 337 185 93 165 302 249 88
185 295 225 242 174 80 108 187 174 120 74 308 188 343 93 186 199 106 56 275 14
115 303 162
63 286 175 27. 155 155 155 152
ix
பாட்டு பக்கம் பாட்டு பக்கம் எட்டுத் திசையுமற் . 304 எல்லா மாயல்லவுமா . திருவரு ... 187 எட்டும் இரண்டும் அறியாத . 220 எல்லாமாய் அல்லவுமாய் இருப் ... 185 எட்டு மிரண்டு மறியா எனக்கொரு . 52 எல்லாமாய் அல்லவுமாயிருக்கும் . 63 எட்டு மிரண்டு மறியா எனக்குகல் . 125 எல்லாமு மல்லவும் ... 310 எட்டுமிரண்டு மிசைந்து ... 286 எல்லாமென் ... 18 எட்டுணையும் தாழ்ச்சி ... 286 எல்லாமென்னூர் ... 346 எண்ண மெலாம் ... 102 எல்லாம் அவனே 62 எண்வ்கை ஒருவனே .. 310 எல்லாம் சிவமயம் ... 301 என ணமல் எண்ணிடடா . 322 எல்லாம் சிவன் செயலே 13 ۔ ۔۔ எண்ணிப் பணிவார் ... 289 எல்லாம் சிவன்செயல் 53 ۔۔۔ எண்ணிய வண்ணம ... 56 எல்லாம் செய " ... 40 எண்ணி யெண்ணிப் ... 246 எல்லாம் நினது செயலென் 188 ••۔ எண்ணி யெண்ணி ... 201 எல்லாம் நீ யென . 205 م எண்ணி லடங்காதடா ... 264 எல்லாம் நீயே ... 175 எண்ணு மெழுத்துங் ... 314 எல்லாம் வல்ல திருப்பாதம் 202 ۔۔۔ எண்ணு மெழுத்துமாய் ... 225 எல்லா ரகத்தும் ... 161 எண்ணுவார் எண்ணங் . 140 எல்லாரிடதது முள்ளாய் -- 230 எண் ணுவார் நெஞ்சில் 309 எல்லா ரிடத்தும் . ... 230 எத்திக்குமாகி . 238 எல்லாரு ருவமும் ... 230 எ திக்கு மீசனடி ... 224 எல்லா ருள்ளத்தினும் ... 24 எத்திசைக்கும் ... 273 எல்லாரையு ... 89 எத்தொழிலச் - ... 69 எல்லார்க்கு மன்பு ... 24 எந்தச் செயலுஞ் ... 252 எல்லார்க்கும் தம்பிரான் . . . 235 எந்த நேரமும் ... 31 எல்லார்க்கும் நன்மைசெய் ... 264 எந்த நேரமும இறைவன் ... 272 எல்லார்க்குமாங் கடவுள் ... 197 எந்த வேளையும் 54 எல3லசொலல ... 302 எந்தையே எந்தையே 50 எல்லேயிலாக் கருணை ... 110 எந்தையே எம பெரு ... 46 எல்லேயிலாவருள் .233 م.م எந்நாளும் நல்லூரை 66 எல்லே பெமக்கில்லே ... 344 எப்டடி இவன்றன்மை ... 283 எவரேனும் ... 166 எப்பவோ முடிந்ததென எங்தை 186 எவ்வுயிருந் தன்னுயிர்போல் - 60 எப்பவோ முடிந்ததென எனக்கு ... 270 எழுக புலருமுன் OO 8 எப்பவோ முடிந்த தென்றெடுத் ... 211 எழுதவே யொண்ணு ... 104 எப்பவோ முடிவான" ... 39 எழுவாய் பயனிலைகள் ... 222 எமன் வருமுன்னே ... 105 ஏள்ளப்படா ரறிஞர் ... 107 எல்லாஞ் சிவன் செயலென்பர் ... 165 எள்ளுக்கு ளெண்ணெய் ... 115 எல்லாஞ் சிவன்செயலென்றெண் ... 304 எள்ளுக்குள் ளெண்ணெய்போலெங்கும் . 343 எல்லாஞ் சிவன் செய . 287 எள்ளுக்குள் எண்ணெய்போல் 12 எல்லாஞ் செயவல்ல இறைவனே . 130 எள்ளும் எண்ணெய்யும்போல ... 136 எல்லாஞ் செயவல்ல தெய்வம 297 எள்ளுக்குள் எண்ணெய் == 294 எல்லாஞ் செயவல்ல சித்தர் ... 142 எள்ளு மெண்ணெயும் ... 14 எல்லா வுயிரினு ... 295 எனக் கினியாள் ... 203 எல்லா உலகமுமான ... 108 எனக்கின்பமே வா ... 68 எல்லாச் சமயமும் ... 305 எனக்கும் தனக்கும் ... 36 எல்லந் தருங் தெய்வம் . 197 எனக்குள்ளே as 121 எல்லாப் பொருள்களும் ... 147 என்செயலாவதில்லை ... 175 எல்லா மாயல்லவுமாய் . ... 93 எனது யான் எனும் ... 332
எல்லாமாய் அன்றி . 162 என் செயல் ... 168
Page 200
TG என் பிழைகள் எனபு பூண்டவன் என்று நீயன்று நாம் என்றும் மறவா என்று மிருந்தபடி
என்று மினியான் w
என்னப்ப னெம்பிரான் - - - என்னாசை ஆரமுதை
என்னுருயிரே as a என்னிதய வெளியினிலே so என்னுயிருக் குயிரானை
என்னு ளொளியை என&னக்கணமுடி பியா
6j&ኔ Ibffሀ Jö8mኽr
ஏகமனதாகிக்
ஏக மாசிய ஏகமாகிய இறைவன் ஏகம்பம் மேவி ஏகப மேவியந்த ஏகன கேகனுயுறற ஏகனகே கணிாறவனடி ஏகனகே கனிறைவனடி வாழ்க 6JaST (Brb a GigaST 6T ,) ஏகனனேக னென்று சொல்லும் ஏகனநேக னெல்லார்க்கு ஏகன் அநேகன் ஏகனனே கனிறைவனடி ஏக னனேகனென்றுமிமைய ஏடவிழ் கோதை
ஐங்கரத்தொ ருகோட் ஐஞ்சு பூகமும் ஐஞ்சு மாறுமான ஐந்தாண்டு விழாவத&ன ஐந்து பலன்வென்ற ஐந்தும் அடக்கா ஐந்தெழுத்துள்ளே ஐ*தெழுத்தை ஐம்புல பந்தனை ஐம்புல ஆனந்தையும் ஐம்புலன் தன்?ன வென்ற
ஐ பலன் வழிபோம் e 8
ஐம்பூதt ஐம்பொறியும்
ஐம்பூதம் காமல்லக்காணும் de
பக்கம்
126 47 186 89 54 319 242 126 303 344 127 156 175
157
168 301 225 14り 104. 295
93 300 185
175
287 343 131 .
56
225 11 111
58 2n5 252 167 317 205 1s8 114 244 343 282
பாட்டு
பக்கம் என்?ன நீ வேரு 57 என்னேயறிவித்தென ... 53 என்னை யன்றி 125 என்&னயினிப் பிறவாமல் 270 என்?ன பிணி மறவாமல் 344 எ**னயுடையானவன் 154 என்?ன யெனக் - 1 என்னையெனக் கென்னுலே ... 134 என்னையெனக் கென்னலே அறிவித்த 149 என்?ன யென்னுல் 204 என்?ன யென்னு லெனக்கறி 204 என்னே விட்டகலாம 235 என்னுேடு 121
ஏட்டிலெழுதிக் 108 ஏதும் அவன் செயலென்று 114 எது சிவன் செயல் 36 ஏதுமற நில் 289 ஏதுமறியாத 188 ஏது மொன்ாற 57 ஏலாது செய்பவரை 107 ஏவா மக்கள் 314 - ஏழுலகங் கொழுதேத்தும் 242 எrழக்காய் வந்திரங்கி 302 ஏழை பங்கன் 15. ஏறுவாம் பரி ... 31 ஏற்கமோ திருவுருளுக் 273 ஏற்றில் வருவது 148 ஏனையவ றங்களினு 103
ஐம்பூதம் நாமல்லவென்று கூவு 80 ஐம்பூதம் நாமல்லவென்று ஊது 190 ஐம்பூதம் நீயல்?ல அறிந்திதனை 242 ஐம்பூதம் நீயல்?ல ஐம்பொறி நீ 309 ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறியு 191 ஐப் பூதம் நீயல்ல ஐம்பொறியும் 154 ஐம்பூதம் நீவீரல்லீர் 269 ஐம்பொறி மாட்டு 336 ஐtபொறியும் மனமும் ... 185 ஐம் ெஈறியை அடக் ... 12 ஐம்பொறி வழிசெல்லாமல் ... 292 ஐம்பொறி வழிபோய் is ... 252 ஐம்பொறி வழியினிற் 120 ممن ஐயந் தீர்த்தடியேன் 140
u"(B 3ut Lifs ஐயப்படாமல் ஐயப்பாடின்றி ஐயமிட்டுண் ஐயமில்லா ஐயமெலாம் தீர அன்புடனே ஐயமெலாம் ஐயமே னென்றுரைத்த ஐயமேன் காணு ஐயங்கொடுப்பது ஐயமபுகார்
ஒடுங்கு மனத்தில் ஒண்டொடியே ஒப்பற்ற தெய்வமே ஒப்பில்லாத ஒப்புயர்வற்றவன் ஒரு கறியும் ஒரு சொல்லா ஒரு தெய்வம் ஒருலகம்
நாமம் ஒருருவம் பிடிசோற்றுக்காய் கோந் நெல்லரிசி பொல்லாப்புமில்லையெடா பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு டொல்லாப்பு பொல்லாப்பு பால்லாப்பு பொல்லாபபு பொல்லாப்பு பொல்டிாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு
Lfüsiაზo
uჩ6სზდა மில்லேயென் Lfleobo gir Lfléსზეა மில்8லயென்றவர் மில்லையென்னும் மில்லத்தம்பி tfsöådu JLIr மில்லயுணர்வீர் மில்லையென
மில்லயென மில்லையென மில்லயெனும் மில்லேயென்றே மில்லயென்டான்
பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல லாப்பு பொல லாட பு ,ெ எல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு ெஎல்லாப்பு ஒருவ: மிருவரும் ஒருமை மனம்படைத்த ஒரு மொழியதணு ஒரு ஏமாழியா லென்றன்*
26
மில்லையென்று மில்லையென்றே
y pw ah
.ொல்லாப்பு மில்லையென்று ஒது .
ow a
a
மில்லையென்றென் . மில்லையென்ற மருந்து மில்லையென்ற வாக்கு
bapa
xi
பக்கம் 1( 4. 187 301 287 15 289 36 93 56 148 107
166 83
347 109 329 18 186 188 270 121 305 39
276 248 185 186 301 321 243 258 120 207 219 296 289 287 225 312 288
87
255 163 267 228
93
பாட்டு ஐயம் புகினுஞ் ஐயம் புகுத்து ஐயம்வையாதே ஐயனே ஆரூரில் ஐயனே சறகுருகாதா ஐயனே யழகன ஐயாற கலாத ஐயுந் தொடர்ந்து ஐவருமுன் ஏவல் செய்வார் ஐவர் செய்வினையில்
ஒரு மொழியாலே உணர்தற்கு ஒருவனுலே உலகம ஒருவனுலே உல*மூ ஒருவனே தெய்வமெனும் ஒருவனே தெய்வமென்னும் ஒருவனே யொரு ஒருவ%னப்பற்றி ஒவ்வாதன சொல்லி ஒழுக்க விழுப்பந்தருய் ஒளிக் கொளியை ஒற்றுமை பிந்தவூரிடை ஒன்பது வாய்ததோற்பைக்குளு ஒன்பது வாய்க்தோற்பைக்கு ஒன்பது வாயிலுள்ள ஒன்பது வாயிலும் ஒன்பது வாய்ததோற்பைக்காயி ஒன்பது வாயில் உடைய ஒன்பது வாய்த்தோற்பையு ஒன்பது வாய்த்தோற்பை தன்னில் ஒன்ரு யிரண்டாகி ஒன்ருய் யிரண்டாய் மூன்றயோ ஒன்ருகக் கண்ட ஒன்ரு யிருப்பதும் ஒன்றப் இரண்டாயொரு ஒன்ருய் இரண்டாய் ஒன்றிரண்டென்று ஒன்றிரண்டென்றே ஒன்றிரண்டென்னு ஒன்றிலொன்றி ஒன்றுக்கு மஞ்சாதே ஒன்றும் இரண்டும் ஒன்றென இாண்டெனளண் ஒன்றெனக் கும்பிடுவாய் ஒன்றென ரண்டென ஒத ஒன் றிரண்டென்று ஒன்றென்றிரு தெய்வம் ஒன்றை நினைக்தென் ஒன்க்ரு இரண்டோ
uàsasůd
wwat
3 4. 131 216 302. 51 176 199 188 153 157
163 15 212 37 3CO 212 314 85 123
136 302 187 243 157 131
1C4 140 153 176 114 148
63
33 112 230 343
10 264
207 262 113 309 295 雯13 217
Page 201
LuMGB ஓங்காரக் கம்பத்தினுள் ஓங்காரக் கம்பத்தின் ஓங்காரத்தி ஓங்காரத்தினுள்ளே ஓங்கார நாதமே ஓங்காரத்தாலே ஓங்காரத்தில் உதித்த ஓங்காரததின் ஓங்காரத்துட்பொருளான ஓங்கார மேடையின் ஓடாதே வழுக்குமடி ஓடி யோடி ஓடிவாடா தொண்டா ஓடு கங்கையுடன் ஓடும் இருநிதியும் ஒம்ே புளியம்பழமும ஓடும் புளியம்பழமும்போலும் ஒதாதஈர்க்கில்ஸ் ஓதாமல் வேதம் ஒதியுணர முடியான் ஒதியோதி.மீரமே ஒதியோதி .தனனையே ஒதியோதி யுன்மத்த ஒதுபல் வேதமூரைசெய்த
ஒளவனத் தில்லையில் ஒளவா நல்ல ஒளவியம் செல்வம் ஒளவியத்தை நீக்கி அகக் ஒளவியத்தை நீக்கியறத்தை ஒளவிய நெஞ்சத்தார் ஒளவிய நெஞ்சததால் ஒளவிய நெஞ்சப ஒளவிய நெஞ்சை ஒளவிய மனத்தின ரறியா ஒளவிய மில்லாமன
கங்குலும் பகலுமில்லாக் கங்குல் பகலற்ற கங்கல் பகலகாணுத கங்கைச் சடை கங்கையொடு கசடுதீர்த்தறங் _ கசிந்துஈகி
கஞ்சனும்
கஞ்சமலர் கஞ்சா அபின் கடலகுழிலங்கை
xii
Q பக்கம் பாட்டு பக்கம் 157 ஒது மன்பர்களுள்ளத்து ... 347 187 ஒதும் பொருளும் ... 107 15 ஒதுவ தொழியே லென்ற . 243 37 ஒதுவார் தீவினை ... 200 333 ஒதுவார் நெஞ்சில் ... 50 185 ஒமெனும் ஒண்பொருள் ... 148 225 ஒமெனுந் தாரகம் ... 116 109 ஒமெனு மெழுத்தினுள்ளே ... 295 176 ஒமெனும் எழுத்தினுள்ளே உல - S6 113 ஓம் ஓம் என்று 326 هـه 84 ஓம் சிவ சிவ ... 306 17 ஓம் சிவாயநம வென்றுசொல்லு ... 318 279 ஓம் சிவாயாகமவெனத் 292 138 ஓம் சிவாயநமவென்று சொல்லுவோர். 115 289 ஓம் சிவாய நமவென்று உறுதி 287 س 104 ஓம் சிவாய நமவென்று ஒது 302 .س 221 ஓம் நமசிவாயவென உருவேற ... 93 314 ஓம் நமசிவாயவென உருவேற்று ... 349 329 6th b(3ot nito rug09 ... 307 240 ஓம் நாம் நாமென்று ... 298 12 ஓயாமல் உள்குவார் தம் 43 ۔۔۔ 17 ஒருரு வானுன் ஈருரு ... 111 251 ஒவியம் போலி 309 349 ஓவியம் போலிருந்து ... 343
ஒள 225 ஒளவிய மில்லா வறிவு ... 37 56 ஒளவிய மில்லா அறிவை ... 15 105 ஒளவிய மில்லாதார் 187 مصم 289 ஒளவியம் பேசல் - 314 343 ஒளவியம் பேசா 302 ۔ 185 ஒளவியம் பேசாதே 243 ماهه 109 ஒளவியம் பேசி ... 93 309 ஒளவியம் பேசுதல் 288 سسه 157 ஒளவை உறுவை .107 مم 176 ஒளவியமறறதும் ... 148 200
176 all 681T Syrigh ... 250 157 கடிவது மறந்திடடி .291 سم 223 கட்டாத மனத்தைக் ... 155 38 கட்டுருமன் ... 21 105 கட்டுப்படாதமனத்தைக் ... 225
5 கட்ப்ேபடா மனத்தைக் கட்டத் 186 سمي 318 கட்டுப்படாமனத்தை • 316 مه 52 கட்டுப்பாடில்லாதார் ... 161 94 கண்டவாரும் ... 316 255 s6irl Gut sirtuou98o ... 83 347 கண்டுசர்க்கரை -- 153
uTGB கண்டாரு மில்லயடி கண்டார் ககை கண்டொன்று சொல்லாதே கண்ணல்லக் காதல்லத் கண்ணபிரானுங் காணுக் கண்ணுரக் கண்டிடடா கண்ணுலே காணுெணுதது கண்ணிறைந்த செல்வத்தை கண்ணிறைந்த ஆண்ணுக்கு அணிகலன் கண்ணுக்குக் கண்ணுயிருக்கும் கண்ணுககுக் கண்ணுயிருக்கின்ற கண்ணுக்குக் கண்ணுகிகின்றய் கண்ணுக்குக் கண்ணைங்ாம் கண்ணுக்குக் கண்ணுய கடவுளை கண்ணேயுறங்குறங்கு கண்னைப் போலறங் கண்ணையிமை கண்ணைக் கண்ணுல் பார் கண்மூன்றுடைய கதிரவன்னெழுமுன் கங்தைத்துணியணிந்து கங்தைத்துணியணிவான் கமலாகான்முகன் கமலநான்முகன் கண்ணனுங் கருங்குயில்கள் கருததிற் கருத்தாயிருக்கும் கருத்திலிருக்கும் கதிர்காமத்தோனே கருத்தில் நினைந்துருகிக் கருத்தில் கருத்தாகி கருத்திற் கருத்தே
காக்குந் திருவடிகள் காட்டகத்தே வாழுங் காட்டிலே காளியுடன் காணுகின்ற கண்ணிற் கலந்த காணுகின்ற கண்ணிற் கலந்துள்ள காணுங்கண்ணிற்
காணுங் கண்ணிற் கலந்த கண்ணது . காணுங் கண்ணிற் கலந்ததென்பர் .
காணுங் கண்ணிற் கலந்தவனே
காணுங் கண்ணிற் கலந்தவனேகார் .
காணும் கண்ணிற் கலந்து காணுவார் தொண்டர் காண்பதெல்லாம் காண்டான் காட்சி காண்பான் காட்சி காட்சிப் காண்பான் காட்சியுங் காட்சிப்
xiii
பக்கம் பாட்டு பக்கம் 255 கருமத்தைக்கை ... 258 82 கருமததைச் செய்யலன் ... 267 286 கருவி கரணங்களெல்லாங் 336 ۔۔۔ . 264 கருவிகரணங்களெல்லாங் கலந்து . 297 306 கருவூரில் வாராமை 24 . . ۔ ۔ 322 கரைகாணு வின்பக் ... 219 273 கரையவொரு சொற்சொல்லுஞ் ... 249 33 கரையுமன்பர்கள் ... 348 33 கர்ப்பூரப் பெட்டிகளும் ... 83 23 கல்லார் கற்ருர்க்கும் ... 100 112 கல்லார்க்குங் கற்றவர்க்குங் ... 29 113 கல்லாதார்பாற் A sw 7 146 கல்லாப் பிழையுங் 236 278 கலேகள் பலவுங் ... 298 310 கல்ல நிகர்த்த ... 89 270 கல்லை நிகர்த்தமனங் ... 121 12 கல்லான கன்னலுண்ணச் ... 146 118 கல்லொத்திடு மனங் 67 277 கவனமாய் கருமத்தை ... 77 349 களிபெருகுங் காமக் 195 .م 246 கறங்குபோலக் கலங்கு 176 288 கறுத்திருண்ட கண்டத்தின் ... 145 248 கற்பனை கடந்த வற்புதன் ..... 179 47 கற்றதனுற் பயன் 258 ۔۔۔ 349 கற்றவர் விழுங்கும்கருணை 210 معه 346 கற்ருேரும் அறியாத 312 86 கனைக்குங் கடல்சூழ் ... 323 79 கன்னலொடு செந்நெல் ... 217 27 கன்னலுடன் செந்நெல் .164 مم 331 கன்னலொடு செந்நெல் கதலி 127 33
As 218 காண்பானும் காட்சியும் ... 81 134 காண்பானுங் காட்சியும் போய் 223 124 காதலாற் பாடி 134 162 காதலிக்கு மெய்யடியார் 63 163 காதல் நீ கருத்தும் 75 55 влi,5si (psyaso 310 168 காமக்கடல் கடந்து 304 251 காமமுதலாறுங் கடிந்து 75 233 காமமுதலாறுங் களைந்த 102 270 காமாதி குணமெல்லாங் 40 244 காயமே கோயில் கடிமணமடிமை . 253 195 காயமே கோயிலடி தங்கமே ... 260 195 காயமே கோவிலாகக் கண்டிடும் 141 10 காயமே கோயிலாகக் கண்டு பாவனே . 321 203 காயமொரு 267 294 காயம அழிந்து 13
Page 202
LmtG காயுங் கனியுமாகி காராரானவக் கார்த்தி கேயனைக் &ff tập காவார் குயில் காலனே கோலிக் காலமுமில்ல காலனு மணுகான் are)? is ass systs) காலனக் காலாலுதைத்தான்
கிஞ்சுக வாயுமை
கீரன் சொன்ன
குடிப்பிறந்தாரோடு குடி முழுதையும் குணங்கடந்தது குணமிலலா மூர்க்கரோடுங் கும்பிடுவார் தம்மனத்தைக் ஆம்பிடுவார் நன் மனத்தை கும் மியடி பெண்ணே குருசீடம் முறை
குருந்த மரத்தடியில் குருவாக வந்தவன்
குருந்த மரத்தடியில் குருவாக வந்து
குருபக்தியே குருபரன் அடியின
கூசும் கொலைகள் era LL66 60637 go e.g. suffusf கூத்தாடுதே கூவியழைத்திடுவாய்
Basudio Lo6oř
கொச்சை மக்கள் கொச்சை மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சம கொஞ்சம ய் மனத்தைக்
கொடிய வசுரர் கொடுத்தார்க்கு கொண்டுங் கொடுத்துங் கொத்தார் குழலுமை
p.
209
xiv .
L0âkastb 244 179 216
211
92 160 9 69 72 162
கி 18O
ó 180
(ඊ) 58 234 305 149 161
63 234
10 283 255 205
s 206 347 279 232 259
uTü"CB asTe)6T as கா% க் கட்டித் காகித்தூக்கி கால நீ தூக்கியாடும் கால மா8லயுங் கால யெழுந்திருந்து காலை யெழுந்து asp akA) (éeQuèsT காணக்குறத்தி
கிட்ட நெருங்கையிலே
குருபாதம்
குருவடியொரு குருவான கல்லூரிற் செல்வன் குருராஜ
56Nobsao p6OOTT Tås esorb6bú Um Trá குலாகலம் பாராதே ۔۔۔۔ குழந்தை யன்போடு குருவின்
குழந்தை யன்போடு நாம் குழந்தை வேலா குற்றமெல்லாம்
கூவுகுயிலே கூறுவார் கோடி கூறும் நாமுதல் எல்லா கூறும் நாவே
கையையுங் காலையு
கொல்லாதே கோபம் கொல்லாமை கள்ளாமை கொல்லாமை பெரிதென்று கொல்லார் பொய் கொல்லா வரமெனக்கு கொல்லானே கொன்றை மத்தம் கொன்றென்றும்
ιμάταιο
92 16 72 141 347 19 169 37 68
82
61 259 335 167 210 322 274 278
78 304
80 315 305 153
180
264 24
1(3
89 310 180 322
untG கோகனகத்தானுங் கோணுதசிந்தையுடன் கோணிய பிறையை கோபம் பொருமையை
கெளரியை யிடத்தில்
hlasrüe (Burao
да ато சங்கர சங்கர சம்பு சங்கரன் தானினே சங்கரன் திருப்பாதம் சங்கோசை சஞ்சலத்தை சஞ்சலம் மிகவும் சணடக மரத்தடி பிற் சத்தி சிவமாகித் சத்தி சிவ மொன்றன சத்தியம் பொறுமை சகதியுஞ்சிவமும் சந்ததம் சாதனை
சாங் காலம் Ժր (3600 t சாதலும் பிறத்தலுக் சாதி சமயங்களில்லான் சாதி சமயமென்னுஞ் சாதி சமயப் பற்றினை
சிங்கக் குட்டி சிங்களவர்
சிங்காரங் சிட்டர் பரவுஞ் சிததத்தினுள்ளே சிவ சித்தததினுள்ளே தித்திக்குங் சித்தக துள் கித்தம் சித்தததி லூறுக் சித்த திலே தித்திக்குங் சிததத்துள் தித்திக்கக் சித்திர காரன்தீட்டிய சிகதி தருங் தேவாய் சித்தி பெறலாம் சிகதி மயிலேறு சிங்க% க் கெட்டாத
XV
Vä dobT
பக்கம் பாட்டு 180 கோல மாமலர்
82 கோல மொன்றும்
233 கோலா கல 259
கெள
274
226
ሪፓ 180 சந்திர சூரியர் காப்பாம் 263 சந்திர சூரியரானுன் 105 சந்திரன் தவழ்தரும்
95 சந்திரனில்லச் 81 சமய தீக்கையைப் 154 சமய நெறி 325 சர்வம் பிரம
81 சலன முதிப்பது 33 சற்குருதரிசனம் 38 சற்குருவின் 66 சற்றுஞ் சந்தேகங் 177 சற்குருவைப் போற்றித் 226 சனகர்
FA 311 சாந்தம் உபசாந்தம் 275 சாந்தம் பொறுமை 181 சாந்தம் பொறுமை யன்பு 240 சார்ந்தவர்க்கு சாவா 248 சாவதும் பிறப்பதுங்
. 250
265 , சிந்திக்க நெஞ்சும் 265 சிந்தித்துச் சிந்தித்துச் 28 சிங்கி சிந்தி சிக்கி 286 சிந்தித்துத் தெளிந்தார்
89 சிந்தையிலன்பு
167 சிந்தை செய்கதிர் 235 சிந்தையில் வெந்துயர் 303 சரித்டிப்புரமெரித்த 316 சிரித்து கலலூர்
33 சிரித்து முப்புர
181 சிரித்துப் புரமூன்றுஞ் 238 சவ சீவு என்றிடும் 346 சிவ சிவ என்று
70 சிவ சிவ வென்றெந்த 191 சிவ சிவ என்று சிந்திப்பர்
பக்கம்
32 54 72
35 240
25 296 203 315 305 256 263 319 168 192 179
320 31s) 164 167
196 187
169
315 46 349
329 54 47 142 341 77
213
Page 203
Luri CB சிவ சிவ செல்வக் கணபதி சிவ தொண்டு செய்வார்க்குச் சிவ தொண்டனென்னும் சிவ தொண்டன் சிவ தொண்டு செய்தல் சிவத்தியானஞ் சிவதொண்டு செய்வார் சிவத்தைக் கண்டிடர் சிவத்தை நோக்கித் சிவத்தினை வளர்க்கும் சிவத்தியானத்தைச் செய்யும் சிவத்தை மறைத்தது சிவத்தை விடத்தெய்வம் சிவநாமமைந்தெழுத்தும் \ சிவ நாமஞ் சொல்லி சிவ நெறிச் செல்வர் சிவபக்தியாலே சிந்தை சிவமே தாமெனச் சிந்திப்பார் சிவனடியார்கள்
&Lot?gTL
சீரகமுள்ள சீராரிலங்கை சீராரும் நல்லூரில் சீரார்மேனியுடையாய் doroT aligu(BartGB a.8
சுகதுக்கம் சுட்டாமல் சுந்தரற்கு சுந்தரற்குப் பெண்
56)
5 g6 flT குதானதற்ற சூதானவெளியில் சூரியன் தோன்று
செக்கச் சிவந்த செக்கர் போலும் செத்தார் என்பு செந்நெலுடன் கன்னல் செந்நெல்லும் கன்னலும் செப்பந்தரமோ செய்யமேனியனே செல்லப்ப &ன *தினம் செல்லப்பன் என்னுக் செல்லார் செல்வக்குருகாதா
as Y 8
po
s.As
*K. dia o
4 UA to
xvi
பக்கம் uTG 232 சிவமே நாமென்று சிந்திக்கச்
42 சிவனடியாருடன்கூடி
48 சிவனடியாரை
120 சிவனடிக்கன்பு செய்குவர் 208 சிவனடியாரொடுங்கூடி 135 சிவனடியைச் சிந்தை 299 சிவன் சிவனென்று
12 சிவனேயுன் தரிசனங் 17 சிவனையல்லாமல் தேவரு 245 சிவனுெருத்தனே 272 சிவாய நமவென்று
299 சிறப்பு மிதுவே
198 சிறையார் வண்டறை
58 சிறப்புக் குறைவிடமே 61 சிறப்புஞ் செலவமும்
141 சிற்றம பலவன்
212 சினத்தை மனத்தில்
299 சினத்தைக் கொல்லுவோம் 109 சின்னத்தனமாய்த்
153 சீருந் துணையில்&லச்
181 சீர் பெறுஞ்சித்தரும் ஆங்கே 303 சீலஞ்சேர்
270 சீலமு மதுவே
135 சீவன் சிவனெனல்
26 சீவன் சிவனென்று
62 er (5508uur 155 öጽጨfftß 111 சுழி முனைக்குள்
12 சுனைக்கும் கல்லூர் 284 சுன்னுகத்தான
279 சூரியன் வருவது 168 தலபாணியைத் 141 26.) JusÐLULJETÜ 346 சூழமிகநினைத்து
செ
313 செல்வச் சிவதொண்டன் 202 செல்வச் செருக்கினுற் 25 செல்வகிலே யாதென்று 249 செல்வம் அது
59 செலவர்க்கழகு 51 செல்வர் பின் சென்று 25 செழுமலர்த்திருவடி
67 சென்னிக்கணி
16 சென்றன சென்றன 310 சென்றன வாணுட்கள் 12
o
168 285
47 249
46 256 272 169
45
37
11 323 322
160
132 229
16
9) 197 249 127 18
97 193
22 162
LTG சேணிடை சேண்பொலியுக் சேர்ந்தவர்க்குத்
சைவனேயுன்னத்
Garres (Sur (8s சொல்லச் சொல்லச் சொல்லமுடியாத தீர்ப்பு சொல்லமுடியாதபொருள் சொல்லாமற்சொன்ன சொல்லாலே பயனில்லை
சோடிழந்த சோதிப்பிழம்
ஞானதேசிகனே
தக்கன் வேள்வி தங்கப் பொம்மை தங்குஞ் சிவ தச்சன் கட்டா வீட்டிலே
தச்சன் கட்டா வீட்டிலே தாவும்பரி
தட்டா னிடத்துச் தண்ணிர்க் கடவுள் தண்ணிர் குளிருமோ தத்தாதித் தோம் தத்து பரி தத்து வங்களாருறும் தத்துவந் தொண்ணுற்றறுஞ் தத்துவப்பே தத்துவம் ஆருறும் தத்துவ மெல்லாம் தத்துவம் யாவுஞ் சடமென தத்துவம் யாவுஞ் சடமென்று தந்திமுகத்தனச் தந்தை தாய் மற்றுங் தந்தை தாய் மைந்தர் தந்தைதாயும் தமஞ்சம மிரண்டின் தம்மைத்தம் மாலறிந்த
is List (Bu தருமநிலையிலே தருமநெறி பிசகாமல் தருமமு மில்லத்
xvii
Lånd
v Kej
(35戸
tă atb பாட்டு 181 சேவித்துஞ் சென்றிரந்துஞ் சீவன் . 224 சேவித்துஞ் சென்றிரந்துந் தம்பி 164
சை 81
சொ 24 சொல்லாலே வாய்த்த 279 சொல்லால்வருங்
95 சொல்லித்துதிக்குக் 40 சொல்லிற் கலந்த 16S சொல்லுகிவமே 264 (des s676TUIT scorés
@于阿 82 சோமசுந்தரன் 131
(6. 222 ஞானயோகம்
த் 111 தர்க்கஞ் செய்யப் 265 த&லயிலிரந்து 249 தலையை நிலத்தில் 316 தவஞ் செய்து 342 தவத்திற் சிறந்தார் I55 தவத்தை யாற்றிடில் 101 தவராச சிங்கத்தை 102 தனக்குத் தானிகரான
46 த*னலம் வீந்திடத் 105 தன்மை முன்னிலே 162 தன்னே அறிந்தால் 141 தன்னை அறிந்துவிட்டால் 224 தன்னைத் தன்னுல்
40 தன்னைத் தன்னுலறிந்த 1^2 தன்னைத் தன்னுலறிவார்
61 தன்னத் தன்னுலறிந்திடடா 44 தன்னைத் தன்னுலறியடா 212 தன்னைத் தன்னுலறியவேண்டும் 184 தன்னை மறந்தருளில் 124 தன்?ன யறிந்தார் 182 தன்னே யறிதல்
66 தன்னே யறியத் தவத்தை 320 தன்னை யறியத் தவமுயற்றும் 85 தன்னை யறியத் தனக்கொரு 255 தன்னை யறிந்தோமே 267 தன்னை யறிந்தோர்க்குத் 168 தன்னுெப் பாரில்லாத
192 220
18 13 276 51 65 182
226
313 16 298
7. 320 272 288
32 205 296
19
226
247 342 255
59 161 198 177 27 91 239
38
33
Page 204
UT" (8 தாபதர்தம் தாமரையில் நீர் தாயினு மன்பு தாயுங் தந்தையுமாகி தாரகத்தனி தாவித் தாவிச் தாவும் வேங்கை தாளம் போடு
திக்குத் திகாந்த மெல்லாம் திக்குத் திகாந்தமும் திக்குத் திகாந்தமும் கைவச திங்கட் சடையாய் திங்களும் கங்கையுஞ் சீறும் திங்களும் கங்கையும்
திங்களும் கங்கையுஞ் சென்னியில்
திங்கள் கங்கை திங்கள் தங்கிய திடமுட்ன் தியானஞ் தித்திக்கும் அமுதே தித்திக்கும் அமுதினேத் தித்திக்கும் ஒரு
தீமையெவர்
துக்கம் சுகம் துஞ்சாதே தூங்காதே துட்டச் சமணர் துண்டப் பிறையாய் துதிக்க மதிதந்த
தூக்கியபாதத்தின் தூங்காமல் தூங்குஞ் தூண்டு சுடர் தூது சுந்தரர்க்
தெய்வத்துக்குத் தெய்வமே திருவருள் தெய்வமே யடினென தெய்வம் எல்லோர் தெய்வம் ஒன்றெனத் தெரிந்து செயலாற்றும்
தேகம் நீயல்ல வென்றன் தேகம் நீயல்ல வென்றதிட
χνiii
தா பக்கம் Jr" (B 259 தானதருமங்கள் 184 தானந் தவமிரண்டுக் தானுற்ற 85 தானர் தவமிரண்டுஞ் சற்று 244 தானுன சற்குருவைத் 117 தானுன தத்துவன 220 தானுன தன்மை 182 தானுன தானேயல்லால் 326
தி
2 திருந்து மடியவரொடு 44 திருநீறும் ஐந்தெழுத்தும் 3.13 திரு நீறுஞ் சந்தனமும் 236 திருவருட் செயல் 209 திரு ருள் கைகூடுது
37 திருவருளை நாடி 44 திருவாரும் நல்லூரில் 182 தில3லயம்பலத் தாடும் 136 தில்லையம்பலத்தைக் கண்ணுற் 250 தில்லயிலாடிய 135 தினத்தனைப்போது மறவாமல் 310 தி&னத்தனப்போதும் மறவோம் 3 தினத்துணைப்போதும் மறவாது
தீ
196 தீவினைகெஞ்சத்
து 33 துப்பி சைந்த 254 தும்பி முகன் 317 துள்ளித்திரியும் 183 துள்ளும் மனத்தை 218
து 234 தூலதுக்கும
113 தூவி மயிலேறும் 196 தூணே நீ
83
தெ 223 தெரிந்து வினையாற்றும் 326 தெளியுமே நின் சிங்தை
32 தெளிய வழிகாட்டும்
7 தென்னவன் தீப்பினி 272 தென்னு தென்னுவென 191
தே 1 தேகம் விழுமுன் 141 தேகமே மெய்யென்று
»eo
... 284
பக்கம் 165 103
117 254
224
283
334 266
267 307 338 233
285 323
182
26 292 115 249
169 220 275
198
86 117 183 310
168 124
பாட்டு தேகாதிதனை தேங்காயி லிளநீர் Ο ΣΚΣ தேசகாலம் யாவையும் ob தேசம் புகழுஞ் சிவன் w
தேசம் புகழுந்திரு ops தேடாமல் தேடென்ரு to a தேடித் தேடித் pov தேடி நான்காணும் தேடிகின் திருவடியே தேடிவாடாதொண்டா (3g (Bs. Tñ um. (Bé apud தேர்முட்டிப்படி o தேரடியில எங்காளும் 4. தேரடியிற் சென்று way
தையலார் மையலிற்ருன் o O
தொண்டர் நாங்களே தொண்டு செய்வாருக்கு தொந்தோ மென்ருடும்
தோடுடைச் செவியனே A a தோளாமுத்தே
நகரத்துள்ளே Fasa நஞ்சணி நஞ்சை a de гъt-ti (Bie OO நட்டா ·· bഞ്ഞ് ഇ obes (5 LDé(ğ ΑΑΟ το நமச்சி வாயவே நாம்சொல்லும்
நமச்சி வாய வாழ்கவென நமச்சி வாயவே நான்மறை
கமனு 8 நபமிடமெல்லா w a w ந1 மிடமென்றுங் s நம்பன்
bi 3560bas bel960T (ur Qe p ur நயப்பார் நரிபோல் bora நரியை 8 நலமறிய oе நல்லசமயமிது 8 wo நல்ல தெய்வானை Wh நல்ல மருந்தொரு - - - நல்ல மலரெடுத்து opp நல்ல மழை - கல்லன m நல்லூரான் கிருபை.காம் as a நல்லூரான் கிருபைவேண்டும்-வேறெ. கல்லூரான் திருபபாதம் Op நல்லூரான் திருமுன்பு was
27
பக்கம் பாட்டு 215 தேரடியில் வீற்றிருப்பான் 115 தேவதேவனே என்றுந்
60 தேவரும் முனிவரும் 307 தேவர்கடம்
41 தேவர் சிறை
2 தேவர் பிரான், 271 தேவாதி தேவ 141 தேறிததெளிந்த
45 தேனுந்துகொன்றை 279 தேனுந்துசோலேத்
7 தேனுந்து முக்கணித்
81 தேனும் பாலினுமினிய 282 தேன் சொரியுஞ்
86
தை
90 தையல் வேட்டுச்
தொ
4. தொல்லாகா னிருவர்காணு 230 தொழுது வணங்கிடுவாய்
41 தொழுது வணங்கிநின் தோ 340 தோன்ருத்துணையை 184
b
212 நல்லூரான் திருவடியைப்பாடு 167 நல்லூரான் திருவடியை நான் 149 நல்லூரான் வீதியிற்போய் 250 கல்லூரில் செல்லப்பன் 155 நல்லூரில் தேரடியில் 306 நல்லூரில் வாசன் 293 நல்லுரைக் கும்பிட்டு 177 நல்லூர் ஆட்டக்காரா 315 நல்லூர்பதியிலே 58 நல்லூர் வாசனே
38 நடு லூர் வெளியிலே 277 நல்லோரி 277 fò sobombs 144 நல்லப்பதிக்கு
80 நல்லப் பதிக்கரசே
29 நல்& யில் வாசா
79 நவாகவமாய் 329 நவிலுமறை
16 நற்சிங்தை யெனும். நறுமலர் 86 நற்சிந்தை யெனும்.கல்லமுதம் 264 நனந்து
7 நன்மை
98 நன்மையுந் தீமையும் நாமல்ல 86 நன்மையும் தீமையும் நாடா 222 நனமையும் தீமையும் கங் 2O6 நன்றியை
91 நன்று தீதை
73 கன்று தீதென்று
95 நன்றென்றுக் தீதென்றும் 190 நன்றெனத் தீதெனத்
பக்கம்
329 252 251 153
183 321 292
134 142
43
83
183 223 193
340
255 113
Page 205
LTG நாங்கள் சிவமென் காசிதுணி
DETSATT & காடியொரு கருமம் is si mb|Tig,68LLum நாடுவார் நாதன் நானும் காமஞ் நமந்தி நாமறியோமெனச் சொலு நாமறியோ மெனும் நாமறியோ மெனும் நல்லமந்திரம் நாமறியோ மென்னும் நல்வாக்கு நாமறியோ மெனும் கறியதிரு நாமறியோ மென்ற கலந்திகழ் - நாமறியோ மென்று கல்லூரிற்சொன்ன . நாமறியோ மென்று 8 8 நாமறியோ மென்று சொன்னுன் நாமறியோ மென்று நகைத்தென்னே. நாமறியோ மென்று நல்லூரிற்
கிகரொ ருவரும் நிஜமா மான்மா கிததியம கித்திரையை நித்தியர்
நிலனுகிக்
நில்லடா நில்லன் பொடு நினைந்து கில்லாத காயத்தை கில்லாத நீர் நில்லாத செல்வத்தை நிற்பனவும்
:
நீக்கமற்று நீங்காத நீங்காது
நீதிகுருபரன் &
திே அநீதியென்னும் நீதி நெறியைச் நீயருளாப்டிற் கீயும் நானும் நீயே நான் என்றுநேர் நீயே நான் என்று நீயே கான் என்னும் நீயே நீயாயிருக்கப் நீராய் கெருப்பாய் ரோனுய் நிலனுணுய் ருேங் காலும்
KK
நா LIä3úb 311 152 279 346 141 117 158 251 47 92 39 S2 21. 163 161 293 288 82 276 219 270
259 332 278 162 238. 197 298
235 30
90 146
342 113 333 240 248 80 338 58 63 87 2 269 27 12S 2O1
uTB நாமறியோ மென்று முன்னுள் நாமறியோம என்ற நல்லதிருவாக்கை . நாமாாககுங் was நமோர்குடியுமல்லேன் நாமார்க்கும் ஆளல்லேம் நாமுமே நாமாக நாமும் காமாக நாமே நாமென்றுரைத்தான் - a a நாமே நாமென்றுசொல்லிச் re. nbrüd büd blid 66 காவலரும் நாவுக் நாற்றிசையுஞ் நான் உன்ன நான படும் நானுரென் கானென்னும் நானே நீ நன்மதி நானேநீ நீயோநான் நானென {B୩ (କ୍ରୋଥି) ଓ
Tâb(8urû
ßoT é a rấgrăso
ißጿ0] õÖ [filgulgDU நினைககு மடியாரை நீயே 8 நினைககு மடியார் கெஞ்சத்துள்ளே கினைத்தபடி AO ARO V t6]3%All their • ** به நினைவில் நினைவாகி
நினவுக்கு நிஜனவாய்
கின்னு வார்
நீர்நிலம் தீகாற்று
ក៏ពុំ ឯសb ឆ្នាំ
நீல கண்டன
நீவா தா
நீள நினைக்கும்
நீறணி நின்மலா - நீறணிந்த 8 நீறணிமேனியினும்
நீறணியான் < Ad• «O நீரு திருமேனி கீறாமேனி as கீறு பூசிய As a 0 நீறு மணியான்
பக்கம்
186 329 184 330 346 153 38 3. 80 326 43 43 117 71 43 124 29 275 275 330 167
197 164 306 218 201 284. 323 194 158 294 184
256 235
32 334 111 201
25 145 151 329 303 135
3. 248
UT'09
நுண்ணிடை 48 r.
நூதன
நூலறி
கெஞ்சகம் -8 கெஞ்சுருகும்
நேசயோகத்தார் asp
கைந்து
நொந்தவர் a Neae
பகருவார் நெஞ்சம்
பக்குவகால பக்குவாய்ப் a பக்தர்கள் எல்லாம் 4 பக்கிசெய்து பந்தத்தை d பக்திசெய் யோகசுவாமி 0.
uங்கில் மங்கையை பச்சை நிறப்புற்றரை பச்சைப் பசுங்கிளியே பச்சை மாமயிலோடு பச்சைப்புரவி பஞ்சப்புலன்களுங் பஞ்சப் லன்வழி - பஞ்சம் படை வந்தாலும் a y பஞ்சம் படை வந்த LJL-&plaus 5 guð b பட்டது பட்டேற்று பட்டால் பாவாடை பட்டுக்குடைபிடித்து பணித8லக் கொள்ளல் - பணிபவர் கெஞ்சினுனே meAO பண்ணவன் பண்ணே பண்ணிற் - பண்டையனும் மாலுந்தேடிப் - பண்டையனும் மாலுமடி பண்டு செய்த வல்வினை நோய் பண்டு செய்த வல்வினையால் பண்டுசெய் வல்விண்நோய் பண்டு செய்வின யெல்லாம் பறந்து பண்டு செய்வினை யெல்லாம் பரிந்தன. பண்டு மின்றம் என்றுமுள்ள பரனடி , பண்டு மின்றுமென்றும் பண்டுமின்றும் உள்ள பதமலர் போற்று
8 v 8
பாசத்தால் வெந்து நொந்து பாடல்பத்தும் படிப்போர்கள் . . . பாடவறியான் பலகலையுந் தானறியான்
xxi
டு
பக்கம்
158
T
158 169
நெ
167
284
நே
1.59
நை
252
நொ
159
50 313 313 120 23 24 25 342 83 137 342 351 186 69 94 250 316 155 286 206 139 144 231 316 297 322 286 254 4. 169 306 38 264 85
329 41 222
பாட்டு
நூற் பெர்ருள்
@Bທູ (ມ நெற்றி
நேசத்தால் oo
கையும்
பதின்மூன்று பாடல்கள் பத்திககு மடியவர்
பத்தி செய்யும் es •
பத்தியுடன் பத்துப்பாட்டா மிவற்றைக் பத்துப்பாட்டும் படிப்பவர் பத்துப் பாட்டுப்படிப்போகும் பத்தும் காலும் பத்தும் படிப்போர்க்குப் பாக்கியமுஞ் பத்தும் படிப்போர்கள் --- பத்தும் படிப்போர்கள் கேட்போர்கள் . பத்மாசனத்தில் 4 பந்தஞ்செய் பாசமே - பந்தமும் வீடும் -- பந்தமெனும் பந்தி பக்தியாயிருந்து
பயமுண்டோ
U06junigun fids o 4 பரவு வார்க்கருளுவாய் - a பரிந்தன்பர் பாதத்தில் பரிந்து பணியாற்றி e பருவத்தில் மழை a- - -
6) LU606us iš
பல்வினே போக்கி
பவ நெறிகடக்கப்
பவம் நீங்கும்
பவவருடத்துப்
பவவருடம் மார்கழியிற் பழம் பாக்கு வெற்றிலே பற்றற்ருர் பற்றும் பரமகுரு பற்றற்றர் பற்றும் பரமபொரு பற்றினுற் பிறந்திறந்து டன்னுட் பழக்கத்தினுட் பன்னிரண்டு காற்
பாடி மகிழும் சிவபாக்கியம் UT gtUTigtj USOoflub பாடிவாடா தொண்டா o
a
233
46 158
202
159
279
Page 206
Luar LGB பாதாரவிந்தத்தைக் காணுமற் ܝ ܝ பாதிச் சாமததின் பாதி மதிசூடிப் பவளம்போல் பாம்பும் புலியும் பாமர மக்கட் பணிசெயல் பாரவன் விண்ணவன் காண் பாரறியார் இவருடையதன்மை பாராதி பூதமெல்லாம் urg" (Bur. G6.6ö73öT பாாம் விண்ணுமாகி நிற்பது பாசையனே கடைக்கண்ணுல் பாரையனே மனம் பாரொடு பூதங்களாகிப் பரிதிமதி பாரொடு விண்ணுய்ப் பரந்தான் பார்க்கப் பார்க்க பார்க்கு மிடமெங்குஞ்
பார்ப்பதெல்லாஞ்சிவ
Słgpayäfia v 9:35 (dsGoTeirg Lumok pas பித்தனென்றவர் பிறவி · sa பித்தனென்றும் பேசுவார்
பித்தனெனப் பலபேரும் an A பிராண னபானனுங் காப்பாம் waபிருதுவியப்புத் பிறப்பிறப்பற்ற பெருமான் பிறுப் பிறப்பில்லாத
புகல்வதற் கொன்று புத்தியை நீநாட்டாதே புத்தியை ஒன்றிலும் காட்டாதே புலன்வழிச் செல்லும் பொல்லாப் புல%னவென்ற ெரியோர்களுளம் புள்ளிக் கலாப மயிலேறும்
பூக்கைகொண்டு போற்றடா பூக்கைகொண்டு போற்றுமடியார் பூதங்கள் ஐந்தான
பூதங்களில்&லப் பொறிபுல பூதங்களைந்தாகிப்
பெண்ணுமானு மில்லையடா vo பெரிதானுய் சிறிதானுய் · · · பெரியதிற் பெரியது waw
இபசரிய சிர்ச்சனகன் பேசாத மந்திரத்தின் பெருமை Yoo பேணும் பிறபபிறப்பில்ல யென்பார் .
36
XXii
பக்கம்
113 54 128 234 206 330 282 321 86 244 46 46 151 145 24 2O7
194
288 59 31 329 82 351 285 166
133 224 258 141 38
85
342 132 4.
296
126
sou
247 125 99
பே 103
12 251
Lumu" (8 LuTuTfuULe?ST பாலகற்குப் பாற்கடலைப்பாரி பாலன் மார்க்கண்டன் பாலனுக்காகப் பாலும் பழமுக் பாலக்குடித்துப் பாவணி செய்துபாடு பாவம்போம் பொல்லாப் Luñ any sa)ñf (5 fT6QJ6)ñi பாவலர் நாவலர்கள்
பாவலர் நாவலர் பணியும் நல்லூரில்
பாவனை யொன்று டாவிகளறியார் பாவிகதும் பாட்டிசைத்துங் பாவியென்று uTpG Fuqua Lor uLuT பாற்கடல் தன்ன
வீறப்பிறப்பில்லாப். யெங்கள்
பிறப்பிறப்பில்லாப் பெருமானே நீ
பிறவார்கள் இறவார்கள் பிறியென்றன் பிறியாமற் பின்ன ரெனக்குப் பின்னுமுன்னு மில்லே பின்னைப் பிறப்பிறப் பின்னேப் பொய் பின்னே யுனக்குத்துணை
புறத்தில*லபாதே புனலொழுகப் புன்னகையாலே புன்சொல் புன்னுனிமேல் நீர்போல் புன்னேறி செலும்
பூதம் நீ பொறியும் பூப்பொலியுங் பூவின் மனம்போற் பூவும் மணமும் போலப்
பெரியவன் சிறியவனென்பது பெருமான்காண்
பெருமை சிறுமையில்லாப்
பேதங்களெல்லா மாயினும் பேராயிர முடையான்
296
255
62 217 110 346
75.
203
275 134 165 208
16S 144 100
167 150
ur.09 பொங்கல் பூசை பொங்கிவரும் அமிர்தத்தை பொங்கிவரும் காமமே பொங்கும் காமக்குரோத பொய்யை மெய்யென பொல்லாப் பிங்கில்லையென்று பொல்லாப் புழுமலியும் பொழில் வாழும் பொறியஞ்சும் வென்றவர்தம் பொறியைந்தும் வென்றவர் பொறிவழிச்செல்லும் பொல்லா பொறிவழிபோம் பொறிவழிபோய் பொறிவழிப் புகுத்துதே பொறிவழிமனத்தை பொறிவழி மனம் போயல் பொறிவழியினிற் செல்லாதே பொறிவழியே பொறிவழியே போய்ப்புகுந்து பொறிவழிபோயலயாமல் பொறிவழியே போயலயும்
போக்கும் வரவும் இல்லாப்புனிதன் போக்கும் வரவுமுள்னானில்லான் போக்குவரவில்லாத
BLJOT óGolest G8 QU6qfiio?bo போகபோக்கியம் எல்லாம் போதுகொண்டு போற்றேன் போதுமளவும்
diis 6TT as roaTas L0äl č56T aš0 LDTsor மங்களம் ஜெய மங்களம் 1 மங்களம் ஜெய மங்களம் 11 L) bi 36ITLDI és L) மங்களமான வார்த்தை மங்குவார்
udělspasuoTř
மங்கையொரு மடைதிறந்தாற் மட்டிலாதது
மணிவாசகங்
மண்டலங்கள் மண்டலம் முழுவதும் மண்டலம் மூன்றும்
цовбот (В மண்ணுகிய பூதமைந்தும் மண்ணுசை பெண்ணுசை
xxiii
GUIT
பக்கம் uT'GB ιμά δύο 265 பொறிவாயிலந்தவித்தான் ... 109 95 பொறிவென்றர் தாமும் 103 95 பொறுமையுமடக்கமும் 166 249 பொறுமையைப் பறங்காப்பது ... 12 138 பொன்போல்மேனியர் ... 160 239 பொன்போலும் திருமேனி உடையார் . 143 90 பொன்போலும்-மேனியனே ... 33 31 பொன்னுணுய் மணியானுய் 125 316 போன்னுசை பெண்ணுசை ... 20 30 பொன்னுசை முண்ணுசை அகப்பேய் . 254 165 பொன்னுசை மண்ணுசை பெண்ணுசையை 294 60 பொன்னுர் மேனி 30 91 பொன்னுருடலிற் பொடியைப் பூசிப் 32 317 பொன்னிறத்தது சிவ சிவ சிவ 348 61 பொன்னின் குடத்துக்கெவர் 154 202 பொன்னும் பொருளும் ... 101 258 பொன்னும் பொருளும் புகழுந்தருவான். 201 13 பொன்னே மணியே ... 233 124 பொன்னே நீ பொருளே 275 235 பொன்னே யன்றி 9
19
(3 it
20 போமே போம்வின 80 319 போம்போம் வினையென்று 326 13 போவதும் வருவதுமில்லை யென்பார் . 251 330 போற்றி யென்வாழ் முதலா
168 போற்றி யொரு பெரில்லாப்பு ... 64 192 போன காலத்தை யெண்ணிப் 203 19 போன நாட் கிரங்கும் 165
O
95 மண்ணுசை வையாதே .264 م ه 53 மணணுதி பூதமெல்லாம் .. 30Ꮞ 352 மண்ணுணுய் விண்ணுணுய் 125 353 மணனினுசை 16 265 மண்ணையும் விண்ணையும் 52 249 மண்ணுெடு விண்ணும் 101. 265 மண்தீகால் 143 265 மண்புகுந்த - 33 39 மண்முதற் ... 349 95 மதிககு மதி ... 278 348 மதிக்கு மதியீ ... 62 226 மதிககும் மதி 195 سم 154 மதிதவழ் சடையாய் ... 132 169 மதியிலேரவி 204 ۔۔۔ 162 மதியும் கதியும் ... 20
4. மதியு மிரவியும் 320 150 மத்த மாமலர் ... 32 164 மததம் மதியொடு ... 348
237
Page 207
பாட்டு மத்தம் மதிதடி மத்தர் பேயர் மந்திர தந்திர மானுன் o மந்திர தந்திரமும் M osgop மந்திரமாய்த தந்திரமாய் மந்திரமுங் தந்திரமும் ஆளுர் மந்திரமுந் தந்திரமும் வேண்டா மரகத மயின் மரத்திலே மல மருந்து கண்டேனே மருமத்தில் மருமமறிந்தவர்கள் மருவாருங் மலர் மிசை யோனும் மலைத்து கிணற மலமேலேறி மழை யென்னும் Op.
toTov opp மாசில்லா மாதவர் மாசில் மாதவர் மனத்திற் es மாண்டார் மனத்தானே மாண்டு போனவர் மாண்புடனே a O மாதம் மும்முறை o மாதிரி யொன்றுஞ் மாதுமை பங்க up to மாமதுரைத் - - LOTLDusio
மாமனுய் வந்து
LOTULUusisoofiu a6o
முக்குன மாயைக் முக்குறுணிப் a முச்சந்திக் குப்பையிலே முச்சந்திக் குப்பை முடிந்தமுடிபென்னும் முனிவன் முடிந்த முடிபென்ருன் முன்னும் பின்னு முடிந்த முடிபென்று முன்னின்று முடிந்த முடின்ெறு முன்னுளிற் முடிந்த முடிபெணறு முன்னுளில் ஆசான் முடியப் பிறப்பிறப்பைக்
ههولى F5-لا-الول முண்டக மலர்ததாள் os ab M முததமிழ்ச் சங்கம் ” ܚ - முதத்திக்கு வழியை u upan முத்திக்கு வழிகாட்டும் a
XXίν
பக்கம் 303 178 240 288 126 143 162 66 123 283
210
136 250 190 110
74 110
89
313
33
342 293 276 219 161
329 29
286 69 206
330
urt'(B பக்கம் மறந்தாலும் பிறந்தாலும் ... 153 மறவாதே யெெைறன்றும் ... 164 மறவாமல் போற்றும் ... 112 மனச் சாட்சி - 285 மனத்தில் வஞ்சகம் 32 மன சுதுக்கண் 109 மனத்துயரம் மாற்ற 79 மனத்துயரைநீக்க ... 284 மனமாட்சி உள்ளார் ... 285 மனமாட்சி வேணுமென்று 285 மனவாசகங்கடந்த ... 63 மன்னவகுகி ... 44 மன்னுதவ ... 101 மன்னுயிரெல்லாம் ... 205 மன்று பறித் 323 محیه மன்றுள்ளேயாடு 05
மாயும் மனிதரை 244 மாரியுலகை 101 மாருட்ட ... 329 tDafléaÉ; ... 241 மார்க்கண்டற்காக ... 283 மார்க்கத்தை ... 342 மார்க்க நன்நெறி ... 216 மாலயனும் 124 மாறிப்புலன் 235 மாறிப்பொறிவழியோகா 236 மாறிப் பொறிவழிபோய் 81 மாற்றறியாத 111 மானுயி மானம் ... 224
முத்திக்கு வித்தான ... 33 முத்திக்கு வித்தை ... 238 முத்திக்கு வித்தை மூனயிலிட்டுச் 162 மு போதுங் 312 முயல முபல 284 முருகா வோ 76 முழுது மூண்மையென 39 முழுது முண்மை ஆச்சுதெடி 154 முழுது முண்மையென்று முனிவனவன். 161 முழுது முண்மையென்று முன்னுள் 223 முழுவது முண்மையென்று முகமலர்ந் . 321 முழுவது முண்மை யெனமுன் ... 292 முழுதும் முண்மையென்ற 63 முழுவது உண்மைஎன மொழிந்தான் 163 முழுவதும் உண்மையென்று 200
UFC முற்ருத (UዎይD£D] முனியே முனைத்து வரும்
முனை ததுவரும் மூர்க்ககுனமெல்லாம் .
முனைந்துநிற்கும்
மூண்ட வல்வின மூதாதைமார் மூர்க்க குணமில்லே மூர்க்கமான குணம்போக்கும் மூலநிலத்தின்
மெத்தக்கதை பேசாதே மெய்யரும்பி விதிர்
மொழிக்கு கற்றுனே
மோனத்தாழுதல்
ususti
யாவரும் சமமென
s
வஞ்சம்
வஞ்சியர் வஞ்சகம் வஞ்சநெஞ்சினர் வடிவ மில்லாதவனே வடிவுசேர் 6.J.g.6460L. வடியார் சூலம் வணக்கினுன்மா வணக்கம்
வண்டு வண்டார்க்குங்
ങ്ങuങ്ങ് வந்தது போனது வந்திபபார்
auTösesso QTFONJoç. வாசம்பொருந்திய வாசித்துக் வாசியோகங் தேர் வாணிச்சிககாக வாதம் பேசி DMT uuKgÚ வாய்மையும்
வால்
DU
XXV.
பக்கம் 235 168
323
294 284
27 .
UTB முன்செய்த முன்னில் முன்னேவின்வந்து மூண்டுதே முன்னேவினயென்றும் நினையாதே முன்னைவினையெல்லாமோடு
மூலயிலிருந்து Sypavo uLuar மூவர்களும் மூன்று மொன்ருன மூன்று மொன்ருய்
மெய்யுரைப்போம்
வந்துன்னடி
வருக முருக
வருத்தமறற
வருவதும்
வருவன வருவாரைப் போவாரை ஆசான் வருவாரைப் வருவார் வருவார் வலமிடமாய்ச் செல்கின்ற வலமிடமாய் ஓடுகின்ற வலமிடமோடும் வாசியை வலப்பட்டமான் வல்லாரும் வழிகள் இரண்டையும் வழுத்துதறகு ஒன்றுமில்ல வறுமைப்பிணிக்கு
agresíduuT
வாழிகுருநாதன் su ji daете штiadi வாழுவோமென்றுவென்று வாழ்க சிவதொண்டன் ഖമ ീഖങ്ങ
RTb
auterih IT RNGR ANaval
asTar
uassà
16 29 154 255 344
298
283 161
346
326
101 16S 275
Page 208
urruC) 63> விஞ்சுபிறப் விடத்தை விடியுமூன் விடையேறு விட்டகுறை விண்ணவர் விண்ணுணம் விண்ணும் மண்ணும் eßsöI00(BLff60 விண்ணுட்டாரும் வித்தகம் நீபேசாதே வித்தாரப் பேச்சையும் வித்தாரமாகக் கதை வித்தார விடையேறி
வீடுசேர்வதில் வீடுகமக் 66 Turrar வீதிக்கு வீதி
வெட்டவெளியில் வெம்பகை வெய்யபுவிப்பார்வை வெய்யகாமம்
வெளியிலேயொளி
வேடமொன்றும்
வேடிக்கை
வேணியிற் வேண்டில் வேண்டாமை வேண்டுதல் வேண்டாமையில்லான் வேண்டுதல் வேண்டாமை யில்லா வேண்டுவார் வினே வேதகீதத்தன்
வேதசாத்திரம் வேத மந்திரம் சொல்லும் வேதியர் வேதமறியாத பொருள்
வையகம்
sa
崇钴象
Χχνί
வி
பக்கம் 313
22 38 291 128 286 163 20 154 247 132 224 58 278 46
வீ
31 60 259
71
வெ
259 292 2. 166 16
வே
223 211 233
196 102 31 136 10 151 40
269
பாட்டு வியக்கவொன்று வியந்து நின்ற விரிந்த வறிவுடைய விருத்தணுய்ப் விரும்புவார் » விருப்பு வெறுப்பின விருப்பும் வெறுப்பும் விருப்பு வெறுப்பை வேரற விரை மலரை விரைவாய் கடந்து விளையுமிச்சையெல்லாம் விற்றுாண் வினைப்பகையை
YA
வி%னப்பகையை வெல்வதற்குமார்க்க .
வினைப்பகை வெல்ல
േന്ദ്രബ வீம்பிடும்பை அகங்காரம் வீரமாமயில்
வெள்விடைமேல் ெள்ளம் பள்ளத்தை வெறும் வீணன் வெற்றிதரும்
வேதமோ டாகம மறியா வேதம் வகுத்தான வேதாந்த சித்தாந்தம் வேருக வேதாந்த சித்தாந்தம் கற்ற வேதாந்த சித்தாந்தம் சமமென்று வேதாந்தம்பேசி வேதோபதேச வேலனக் கொண்டாடுவோம் வேலைத்துக்கி வேள்படச் செய்த வேருய் உடனுய்