கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு
Page 1
ஈழத்துப் புனேகதைகள்
॥
甲
Page 2
Page 3
ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு
伊。 வன்னியகுலம், எம். ஏ.
முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் யாழ்ப்பாணம்
1986
Page 4
முதற் பதிப்பு 1986-06-25
உரிமை : திருமதி பர்வதாமணி வன்னியகுலம், B. A. (Hons)
*மணிமாளிகை"
அல்வாய் தெற்கு அல்வாய்
COLLOOUAL, USAGE IN SRI LANKA TAMIL FICTION
by
S. WANNYA KULAM, M. A,
சாதாரண பதிப்பு :
ssaan tsun 25-)O
நூலகப் பதிப்பு :
of?sú Gusr 3D-C0
Publishers :
Muththamizh Welliyeeddu Kazhgam, Jaffna.
Printers :
Aseervatham Press, 50, Kandy Road, Jaffna.
காணிக்கை
ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காகத் தமது எழுந்தையும் வாழ்வையும் ஆயுதமாக்கிய அமரர் கே. டானியல் அவர்களுக்கு
Page 5
பேராசிரியர் சு. வித்தியானந்தன் துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ஆசியுரை
இலக்கியம் மொழியாலானது. இலக்கியத்தைத் திற குய்வு செய்பவர்கள், அதற்கு அடிப்படையாக அமையும் மொழியினையும் விமரிசனம் செய்வது பயனுள்ள நெறி யாகும். அத்தகைய பயனுள்ள ஆய்வு நெறியினே மேற் கொண்டவர் திரு. சி. வன்னியகுலம். முதுகலைமாணிப் பட் டத்துக்காக அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பித்த ஆய்வேடு யாழ்ப்பாணம் முத்தமிழ் வெளியீட் டுக் கழகத்தின் ஆதரவில் நூலாக வெளிவருவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பித்த ஆய்வேடுகளுள், திருமதி மனேன்மணி சண்முகதாஸ் அவர் களுடைய சி. வை. தாமோதரம்பிள்ளை ஒர் ஆய்வு நோக்கு என்பதே முதன்முறையாக நூல்வடிவம் பெற்றது. அதைத் தொடர்ந்து, திரு. வன்னியகுலத்தின் ஆய்வேடு தற்போது நூல்வடிவம் பெற்றுள்ளது. இரண்டுமே முத்தமிழ் வெளி யீட்டுக் கழகத்தின் வெளியீடுகளாயமைந்தமை இங்குக் குறிப்பிடற்பாலதாகும்,
திரு. வன்னியகுலத்தின் ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு என்னும் இந்நூல் நான்கு இயல்களைக் கொண் டமைகின்றது. முதலாவது இயலிலே இலக்கியத்துக்கும் மொழிக்குமுள்ள தொடர்பு பற்றியும், பேச்சு மொழியின்
Page 6
νi
முக்கியத்துவம், ஈழத்துப் பேச்சுவழக்கின் பொதுப் பண் புகள், அவை இந்தியப் பேச்சுவழக்குடன் வேறுபடும் தன் மைகள் ஆகியன பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் கூறப்பட்டுள்ளன. இரண்டாவது இயலிலே ஈழத்துப் புனை கதைகளிற் பேச்சுவழக்குக் கையாளப்பட்ட வரலாறு கூறப் பட்டுள்ளது. மூன்ருவது இயலிலே பிரதேசக் கிளைமொழிகள் எவ்வாறு அவ்வப் பிரதேசங்களில் எழுந்த புனைகதைகளிலே கையாளப்பட்டுள்ளன என விவரணஞ் செய்யப்பட்டுள்ளது.
நான்காவது இயலில், எத்தகைய புனைகதைகளுக்கு எத் தகைய கிண்மொழி உபயோகிக்கப்படவேண்டுமென ஓரளவு வரையறை செய்யும் ஆசிரியர் தான் தரவுகளாகக் கொண்ட புனைகதைகளிலே அவற்றின் உபயோகம் எவ்வாறமைந்துள் ளது என்பதை விமரிசிக்கின்முர். அத்துடன் பேச்சு வழக் கினை இலக்கியத்திலே கையாளுமிடத்து எழுத்தாளர்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளும் தெளிவாக முன்வைக் கப்பட்டுள்ளன.
ஈழத்துப் புண்கதைகளின் மொழி என்னும் புதிய விடயத்தை, வேண்டிய தரவுகள் - சான்ருதாரங்கள் ஆகி யவற்றுடனும், ஆய்வு மனப்பாங்குடனும், நுணுகிய நோக் குடனும் இந்நூலிலே தந்துள்ள ஆசிரியரைப் பாராட்டி அவருடைய இந் நூலுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் ஆதரவு நல்கும் என எதிர்பார்க்கின்முேம், நூலாசிரியருக்கு என்னுடைய ஆசிகளே வழங்குவதுடன், இந்நூலை வெளி யிட்டுவைக்கும் முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் பணி மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்.
Page 7
viii
"பேச்சுவழக்கு" என்பது 'கொச்சையானது", "இழிந் திது", "மொழியின்பாற் படாதது", "கொடியது" என்ற கருத்து, பண்டைக்காலமுதல் கற்ருேரிடத்தும் கற்ருேரின் தத்துவ ஊடுருவல்களால் சாதாரண மக்களிடத்தும் காணப் படுகின்றது. இதனைத் தொல்காப்பியரிடத்தும் அவரது உரையாசிரியர்களிடத்தும் "செந்தமிழ் - கொடுந்தமிழ்' என்ற பாகுபாட்டிலிருந்து அறியமுடிகின்றது.
மொழியியல் துரித வளர்ச்சியை அடைந்த இந்த யுகத் திலே, தாய்மொழியிலாயினும் வேற்றுமொழியிலாயினும் பேச்சுமொழியின் முக்கியத்துவம் பல நாட்டு மக்களால் உணரப்படும் இக்காலகட்டத்திலே, நமது நாட்டில் பாட சாகீல நூல்களிற்பேச்சுமொழிப் பிரயோகம் காணப்படாமை வினேதமானதன்றே ! ஆழும் வகுப்பிற்குரிய தமிழ்ப் பாட நூலிலே பேச்சுமொழி அறிமுகப்படுத்தப் பட்டிருப்பினும் அந்நூலிற்கூட "உரையாடல் மொழி எழுத்து வழக்கையே கொண்டிருப்பது கவலை தருவது. தமிழிற் பாடநூல்களை எழுதுவோரிடம் காணுத இவ்வுணர்வு மொழியியலையே கற்கைநெறியாகக் கொள்ளாத நிரு. சி. வன்னியகுலத்திடம் காணப்படுவது அவரைச் சிறந்த ஸ்தானத்திற்கு உயர்த்து கின்றது இவரது "பேச்சுமொழி பற்றிய சிந்தனையிற் தெளிவான பாதையைக் காட்டிவைத்த அ. சண்முகதாஸ் அவர்களின் திறமையும் பாராட்டப்பட வேண்டியதாகும். தமிழ் இலக்கியத்திலும் மொழியியலிலும் பேராசிரியர் சண்முகதாஸ் கொண்ட புலமை இலக்கியங் களில் பேச்சுவழக்கின் முக்கியத்துவம் பற்றிய தெளிவான கருத்துப்போக்கினை வன்னியகுலம் விளங்கிக்கொள்வதற்கு ரதுவாயிற்று. "புனைகதைதளிற் பேச்சுவழக்குப் பற்றி ஆராய முற்பட்ட வன்னியகுலம் பொருத்தமான வழிகாட் டியைத் தேர்ந்தெடுத்தமையும் அவருடைய கூரிய சிந்தனைத் திறனைக் காட்டுவதாயுள்ளது.
பாடசாலைக் கல்வியை ஒன்ரு கப் பயின்ற காரணத்தால் வன்னியகுலத்திடம் இளமைதொட்டே கா ண ப் பட்ட "வாசிக்கும் ஆற்றலை நினைவு கூர்கின்றேன். முற்போக்கு இலக்கியக் கூட்டங்களிலெல்லாம் வன்னியகுலத்தையும்
іх
காணலாம். இளமையிலிருந்தே இலக்கியங்களைச் சுவைப் பதிலும், விமர்சிப்பதிலும் ஆர்வமிக்க இவர் அவ்வார்வ மிகுதியால் மேற்படிப்பையும் விமர்சனத்துறையிலேயே மேற்கொண்டுள்ளார். மொழியியலில் நாட்டம் காட்டும் வன்னியகுலம் மொழியியலிற் குறிப்பாகச் சமூக மொழி யியலில் தெளிவான விளக்கத்தைப் பெற்றுக் கொண்டால் "பேச்சுவழக்குத் தொடர்பாக தர்க்கரீதியிலமைந்த ஆணித் தரமான கருத்துக்களை மொழி விமர்சனத்தில் கூறிவிட முடியும்.
எப்பிரதேசத்தை மனதில் வைத்து இலக்கியம் எழுதப் படுகின்றதோ அப்பிரதேசத்தின் பேச்சுவழக்கு அவ்விலக்கிய உரையாடலிலே பிரயோகிக்கப்படுதல் வேண்டும். இவற் றைப் படிப்பதன் மூலம் பிரதேச மொழிவழக்குகனே ஏனைய பிரதேச மக்களும் அறிந்துகொள்ளும் ஆற்றலையும், புரிந்துகொள்ளும் மஞேபக்குவத்தையும் பெற்று விடுகின் றனர். இந்நூலின் மூன்ருவது இயல், கதைகளிற் பிரதேச தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் மொழிவழக்குகளைப் பற்றி யும் அவற்றைக் கையாளும் ஆசிரியர்களின் சிறப்பையும் துலக்கமாகக் காட்டுகின்றது; மக்களின் வாழ்க்கை முறை யிற் காணப்படும் பிரதேச வேறுபாடுகளே மொழிவழக்குகள் பிரதிபலிக்குமாற்றை இங்கே அறிந்து கொள்ளலாம்.
1950 ன் பின் எழுந்த புனைகதைகளிற் காலத்தால் முற்பட்டனவே உரையாடலின்போது உயர்வழக்கு (High Variety) தாழ்வழக்கு (Low Variety) ஆகிய இரு வகை களையும் கொண்டுள. உயர் வழக்கு என்பது படித்தவர்கள் சம்பிரதாய பூர்வமான சில சந்தர்ப்பங்களிற் பயன்படுத்தும் வழக்கு ஆளும். தாழ்வழக்கு என்பது படித்தவர்களாலும் படியாதவர்களாலும் பயன்படுத்தும் வகையாகும். படியா தோர் இவ்வழக்கையே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன் படுத்துகின்றனர்; படித்தோர் இவ்வழக்கைத் தமது குடும் பத்தவர், நண்பர், வேலைக்காரர் போன்ருேருடன் மாத்திரம் பயன்படுத்துவர். சமயபோதண், கற்பித்தல், சொற் பொழிவு போன்றன உயர்வழக்கில் அமையும். ஆனல் 1950 ற்குப் பிற்பட்ட நாவல்களில் காலத்தால் முற்பட்டவை
Page 8
Χ
குறிப்பாக அறுபதுகளில் வெளிவந்த முற்போக்கு நாவல் களில் முக்கியபாத்திரங்கள் பாமரமக்களுடன் தத்துவார்த் தத் தொடர்பு கொள்ளும்போது உயர்வழக்கில் தொடர்பு கொள்வதைப் போர்க்கோலம், நீதியே நீ கேள் போன்ற வற்றில் காணமுடிகின்றது. இப்போக்கு மாற்றப்படவேண் டியது என்பதை இந்நூலாசிரியர் விளக்கமாக உணர்த்தி யுள்ளார் ; உயர்வழக்கையும் தாழ்வழக்கையும் கலந்து பேசும் பாத்திரங்களையும் கண்டித்துள்ளார். இ ைஆசிரி யரின் புனேகதைப் பாத்திரங்களின் பேச்சுவழக்குப் பற்றிய தெளிந்த சித்தனையைக் காட்டுவதாக உள்ளது.
இந்நூல் புனைகதை புனைவோர்க்கும், வாசகர்க்கும் பேச்சுமொழி பற்றிய உணர்வையும் அதன் பிரயோகத் திறத்தையும் பிரயோகச் சீர்கேட்டால் வாசகர்க்கு ஏற்ப டும் இடையூறுகளையும் கோடிட்டுக் காட்டுகின்றது.
கலாநிதி பார்வதி கந்தசாமி மொழி - பண்பாட்டுத் துறை, யாழ். பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
1986-06-11
வெளியீட்டுரை
1977 ஆம் ஆண்டிலே, ஈழத்து அறிஞர்களுடைய ஆய்வு நூல்களை வெளியிடும் பணியின் முன்வைத்து யாழ்ப் பாணம் மூத்தமிழ் வெளியீட்டுக் கழகம் தொடங்கப் பெற்றது. தனது ஒன்பதாவது வயதினை அண்மித்துக் கொண்டிருக்கும் கழகம் இந்நூலுடன் சேர்த்து எட்டு நூல்களை வெளியீட்டுத் தமிழியல் ஆய்வுக்கு உதவி வரு கின்றது. தமிழ் நாட்டிலே வெளியிடப்படும் ஈழத்தவரின் நூல்கள் இங்கு எம் கைகளுக்குக் கிட்டுவது அருமையாக வுள்ளது. இந்நிலையை ஒரளவு போக்குவதும், எவரும் அச்சிடுவதற்கு முன்வராத ஆய்வேடுகண் நூல்களாக வெளிக்கொணர முயற்சிப்பதுமே முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் நோக்குகளாகும்.
இன்று வெளியாகும் ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு என்னும் ஆய்வு நூல் எமது நாட்டிலே 1950 ஆம் ஆண்டுக்கும் 1979 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத் திலே எழுந்த தமிழ்ப் புனைகதைகளின் மொழியினைத் திற குய்வு செய்கின்றது. ஈழத்துப் பேச்சுமொழி பற்றி மொழி யியல் விஞ்ஞான அடிப்படையிலே ஏற்கெனவே பல ஆய்
வுகள் மேற்கொள்ளப் பட்டன. இவ்வாய்வுகளை மேற் கொண்டவர்கள் தத்தம் பேச்சினை அடிப்படையாகக்
கொண்டு அல்லது வெளிக்கள ஆய்விலே தாம் பெற்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டே ஈழத்துப் பேச்சு வழக்கினை ஆராய்ந்தனர். ஆணுல், ஈழத்து நவீன இலக் கியங்களிலே பிரதிபலித்துள்ள பேச்சு மொழியினை இலக்காக வைத்து எவருமே விரிவான ஆய்வினை மேற்கொள்ளவில்லை,
Page 9
xii
இந்த வகையில், இந்நூல், இத்துறையிலே முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக அமையுஞ் சிறப்பினைப் பெற்றுள்ளது.
அன்றியும் இந்நூல் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச் சியின் ஒரு முக்கிய காலகட்டத்தின் போக்கினைச் சுட்டுவ துடன், அக்காலகட்டத்து முக்கிய நிகழ்வொன்றின் விவரங் களை ஆவணப்படுத்துவதாகவும் அமைகின்றது. அது இந் நூலின் இரண்டாவது இயலிலே விவரமாகக் கூறப்பட் டுள்ள மரபுப் போராட்டம் பற்றியதாகும். ஈழத்து இலக் கிய வரலாற்றிலும் மொழி வரலாற்றிலும் இம்மரபுப் போராட்டம் ஒரு குறிப்பிடப்பட வேண்டிய நிகழ்வாகும். இம்மரபுப் போராட்டக் காலத்திலே பலரும் தத்தம் கருத்துக்களைப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைளிலும் வெளி யிட்டனர். இவற்றையெல்லாம் தொகுத்து அளித்தது மாத்திரமன்றி, மதிப்பீடு செய்தும் ஆசிரியர் எழுதி யுள்ளார். இரு தசாப்தங்களுக்கு முன் நடந்த இலக் கிய மொழி மரபுக் கருத்துப் பரிமாறல்களை ஒரிடத்திலே ஆவணப்படுத்தித் தந்துள்ளமை இந்நூலின் இன்னெரு சிறப்பாகும்.
இந்நூல் ஆய்வுக் கட்டுரை வடிவில் "1950 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட ஈழத்துத் தமிழ்ப் புனேகதைகளிற் பேச்சு வழக்கு’ என்னும் தலைப்பிலே யாழ்ப்பாணப் பல் கலைக் கழகத்து முதுகலைமாணித் தேர்வுக்கு 1979இல் சமர்ப் பிக்கப்பட்டதாகும். தற்போது நூல் வடிவுக் கேற்றபடி சில திருத்தங்களும் மாற்றங்களும் பெற்று வெளிவருகின்றது. ஆக, இலக்கிய ஆய்வு தொடர்பான புதியதொரு பரிணு மத்தைத் தோற்றுவிக்கும் ஆராய்ச்சி நூலொன்றினைத் தனது எட்டாவது வெளியீடாக வெளிக்கொணருவதில் முந்தமிழ் வெளியீட்டுக் கழகம் உவகையடைகின்றது.
இந்நூலின் ஆசிரியரான திரு. சி. வன்னியகுலம் கமத் தொழில் திணைக்களத்திலே பணியாற்றி வருகிருர், பேரா த8ணப் பல்கலைக் கழகத்தின் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்ற அவர், அப்பல்கலைக் கழக முதுகலைமாணித் தகுதித் தேர்விலும் சித்தியடைந்தார். பின்னர் யாழ்ப்பாணப்
xiii
பல்கலைக் கழகம் நடாத்திய முதுகலைமாணித் தேர்வில் 1979 இல் சித்தியடைந்து பட்டம் பெற்ருர். தமிழ் இலக் கியங்களைப் படிப்பதிலும் விமரிசிப்பதிலும் ஆர்வங்கொண்ட திரு. வன்னியகுலம் முற்போக்கு எழுத்தாளர்களுடைய இலக்கியங்களை விமரிசிப்பதிலே அதிக ஆர்வங்காட்டி வந் துள்ளார்.
இந்நூல் வெளிவருவதற்குக் கழகத்தின் பொதுச் செயலர் திரு. க. சொக்கலிங்கம் (சொக்கன்) ஆற்றியுள்ள பணி அளப்பரியது. 1977 இல் முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் உருவாவதற்குக் காரணமாயிருந்தவர் திரு. சொக்க லிங்கம் அவர்களேயாவர். அன்று தொடக்கம் எட்டு ஆண்டுகளாக எட்டு நூல்கள் வெளிவருவதற்கு அவருடைய gju LT figs உழைப்பும் ஆர்வமும் காரணங்களாயமைந் தமையை இவ்விடத்திலே சுட்டுதல் என்னுடைய கடனுகும். அவர் இந்நூல் பிழையற வெளிவருதற்குப் படிகள் திருத்தி யும் ஆலோசனைகள் நல்கியும் உதவியுள்ளார்.
முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் தோன்றுவதற்குக் காலாயிருந்தோருள் ஒருவரான திரு. மு. வி. ஆசீர்வாதம் அவர்கள் இன்று நம்மிடை இல்லை. எனினும், அவருடைய மகள் திருமதி சமத்தர் அவர்களும், அச்சக முகவர் இரு. ருேக் யோசவ், அச்சக ஊழியர்களான திருவாவாளர்கள் ஆ. கோவிந்தராஜா, ஜெ. சேகர் ஆகியோரும் ஏனையோகும் இந்நூல் செவ்வனே வெளிவருவதற்கு உறுதுணை புரித் துள்ளனர். அவர்களுக்குக் கழகத்தின் சார்பில் நன்றி கூறுகிறேன்.
தமிழ்த்துறை, பேராசிரியர் அ. சண்முகதாஸ்
யாழ்ப்பாணப் பல்கலைக் தலைவர்
கழகம் முத்தமிழ் வெளியீட்டுக் கழகம்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
1Ꮽ86-06-11
Page 10
என்னுரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுல் தடத்தப்பட்ட முதுகலைமாணித் (எம். ஏ.) தேர்வின் ஒரு பகுதித் தேவை யைப் பூர்த்தி செய்யுமுகமாக எழுதப்பட்ட ஆய்வுக் கட் டுரை. இன்று நூல் வடிவம் பெற்றுள்ளது. இவ்வாய்வுக் 5ட்டுரை 1979 ஆம் ஆண்டு எழுதி முடிக்கப்பட்டு ஏழு ஆசண்டுகளின் பின்னர் நூலாக வெளிவருகின்றது.
ஈழத்துப் புனைகதைக்கும் எனக்கும் உள்ள தொடர்பு இவ்வாய்வுக் கட்டுரையை எழுதுவதற்காக மட்டும் வலிந்து மேற்கொள்ளப்பட்ட ஓர் இணைப்பு முயற்சியன்று. இயல் பாகவே புனைகதைத் துறையில் எனக்கிருந்த ஈடுபாடே, முதுகலைமாணித் தேர்வின் பொருட்டு இவ்வாய்வுக் கட்டு ரையைச் சமர்ப்பிப்பதற்குத் தூண்டுகோலாயமைந்தது. 1965 ஆம் ஆண்டிலிருந்து கணிசமான அளவு சிறுகதைகளே நான் ஈழத்துப் பத்திரிகைகளில் எழுதி வந்திருக்கின்றேன். இவற்றிற் சில அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட போட்டிகளிலே பரிசிலேயும் பாராட்டையும் பெற்றிருக் கின்றன.
பட்டப்படிப்பை மேற்கொள்ளத் தொடங்கியபோது இத் தடத்தினின்றும் நான் விலகிச் செல்லலானேன். எதையும் தர்க்க ரீதியாகவும், இயங்கியல் ரீதியாகவும் ஆராயும் மனப்பக்குவத்தை அக்கல்விமுறை என்னில் உரு வாக்கியது. இந்தப் புதிய துறையிலான நட்டத்தை இனங்கண்டு, அதனை ஆற்றுப்படுத்திச் செழுமைப்படுத் தியவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள். 19 4 ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் அவர் இலங்கை வானெலியிலே
XV
கலைக்கோலம் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். அந் நிகழ்ச்சிகளிலே ஈழத்து நாவல், சிறுகதை நூல்கள் பல வற்றை விமரிசனம் செய்வதற்கான சந்தர்ப்பங்களை அவர் எனக்கு வழங்கிஞர். எனது விமரிசன ஆர்வம் அரும்பு கட்டத் தொடங்கியது இக்காலப் பகுதியிலேயே என்பது குறிப்பிடற்குரியது. இவ்வார்வத்தின் காரணமாவே முது கலைமாணித் தேர்வுக்கான ஆராய்ச்சிக் கட்டுரையாக ஈழத் துத் தமிழ்ப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு என்ற விட யத்தை நான் தேர்ந்தெடுத்தேன்.
இந் நூலினப் படிக்கத் தொடங்குவதன் முன்னர், இவ்வாய்வுக் கட்டுரை எழுதப்பட்ட நோக்கத்தையும் காலத்தையும் மனதிலிருத்திக் கொள்வது இன்றியமை பாதது.
கட்டுரையின் பிரதான நோக்கம், ஈழத்துப் புனைகதை களிற் கையாளப்பட்டுள்ள பேச்சுவழக்கின் தன்மைபற்றி ஆராய்வதே. இவ்வாய்வினுக்கு அடிப்படையாக மனித வாழ்வியலிலும் இலக்கிய உருவாக்கத்தினும் பேச்சுமொழி யின் தொடர்புநிலை சுட்டிக்காட்டப்பட்டு, அதன் முக்கியத்து வம் உணர்த்தப்பட்டுள்ளது. மக்கள் பேச்சுவழக்கின் ஈழத்துப் புனைகதைகளிலே பிரயோகிக்க முற்பட்டபோது எழுந்த வாதப் பிரதிவாதங்கள் விரிவாகவே தொகுக்கப்பட்டு ஆரா யப்பட்டுள்ளன. ஈழத்துத் தமிழ்ப் புனைகதைகளின் வரலாறு வளர்ச்சிபற்றி இங்கு விரிவாக ஆராயப்படாது, அவற்றின் வளர்ச்சிக்கட்டங்கள் மட்டுமே சுருக்கமாகச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. புனைகதை எழுத்தாளர் பலரின் பெயர்கள் இக் கட்டுரையில் இடம்பெருதிருத்தல் கூடும். பொதுவாகத் தமது படைப்புக்களிலே பேச்சுவழக்கினுக்கு முக்கியத்துவம் கொடுத்த எழுத்தாளர்களின் ஆக்கங்களே, இக் கட்டுரை யில் முதன்மைத்துவம் கொடுக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத் தப்பட்டுள்ளன. 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எழுத் துலகப் பிரவேசஞ் செய்த படைப்பாளிகளின் பெயர்கள் இக் கட்டுரையில் இடம்பெற்றிருக்க நியாயமில்லே.
Page 11
என்னுரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுல் தடத்தப்பட்ட முதுகலைமாணித் (எம். ஏ.) தேர்வின் ஒரு பகுதித் தேவை பேப் பூர்த்தி செய்யுமுகமாகி எழுதப்பட்ட ஆய்வுக் கட் டுரை, இன்று நூல் வடிவம் பெற்றுள்ளது. இவ்வாய்வுக் கட்டுரை 1979 ஆம் ஆண்டு எழுதி முடிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளின் பின்னர் நூலாக வெளிவருகின்றது.
ஈழத்துப் புனைகதைக்கும் எனக்கும் உள்ள தொடர்பு இவ்வாய்வுக் கட்டுரையை எழுதுவதற்காக மட்டும் வலிந்து மேற்கொள்ளப்பட்ட ஓர் இனப்பு முயற்சியன்று. இயல் பாகவே புனே கதைத் துறையில் எனக்கிருந்த ஈடுபாடே, முதுகலைமாணித் தேர்வின் பொருட்டு இவ்வாய்வுக் கட்டு ரையைச் சமர்ப்பிப்பதற்குத் தூண்டுகோலாயமைந்தது. 1965 ஆம் ஆண்டிலிருந்து கணிசமான அளவு சிறுகதைகளே நான் ஈழத்துப் பத்திரிகைகளில் எழுதி வந்திருக்கின்றேன். இவற்றிற் சில அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட போட்டிகளிலே பரிசிலேயும் பாராட்டையும் பெற்றிருக் கின்றன.
பட்டப்படிப்பை மேற்கொள்ளத் தொடங்கியபோது இத் தடத்தினின்றும் நான் விலகிச் செல்லலானேன். எதையும் தர்க்க ரீதியாகவும், இயங்கியல் ரீதியாகவும் ஆராயும் மனப்பக்குவத்தை அக்கல்விமுறை என்னில் உரு வாக்கியது. இந்தப் புதிய துறையிலான நட்டத்தை இனங்கண்டு, அதனை ஆற்றுப்படுத்திச் செழுமைப்படுத் தியவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள். 19 4 ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் அவர் இலங்கை வாஞெலியிலே
XV
கலேக்கோலம் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். அந் நிகழ்ச்சிகளிலே ஈழத்து நாவல், சிறுகதை நூல்கள் பல வற்றை விமரிசனம் செய்வதற்கான சந்தர்ப்பங்களை அவர் எனக்கு வழங்கிஞர். எனது விமரிசன ஆர்வம் அரும்பு கட்டத் தொடங்கியது இக்காலப் பகுதியிலேயே என்பது குறிப்பிடற்குரியது. இவ்வார்வத்தின் காரணமாவே முது கலைமாணித் தேர்வுக்கான ஆராய்ச்சிக் கட்டுரையாக ஈழத் துத் தமிழ்ப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு என்ற விட யத்தை நான் தேர்ந்தெடுத்தேன்.
இந் நூலினப் படிக்கத் தொடங்குவதன் முன்னர், இவ்வாய்வுக் கட்டுரை எழுதப்பட்ட நோக்கத்தையும் காலத்தையும் மனதிலிருத்திக் கொள்வது இன்றியமை un ASSY..
கட்டுரையின் பிரதான நோக்கம், ஈழத்துப் புனைகதை களிற் கையாளப்பட்டுள்ள பேச்சுவழக்கின் தன்மைபற்றி ஆராய்வதே. இவ்வாய்வினுக்கு அடிப்படையாக மனித வாழ்வியலிலும் இலக்கிய உருவாக்கத்தினும் பேச்சுமொழி யின் தொடர்புநிலை சுட்டிக்காட்டப்பட்டு, அதன் முக்கியத்து வம் உணர்த்தப்பட்டுள்ளது. மக்கள் பேச்சுவழக்கின் ஈழத்துப் புனைகதைகளிலே பிரயோகிக்க முற்பட்டபோது எழுந்த வாதப் பிரதிவாதங்கள் விரிவாகவே தொகுக்கப்பட்டு ஆரா யப்பட்டுள்ளன. ஈழத்துத் தமிழ்ப் புனைகதைகளின் வரலாறு, வளர்ச்சிபற்றி இங்கு விரிவாக ஆராயப்படாது, அவற்றின் வளர்ச்சிக்கட்டங்கள் மட்டுமே சுருக்கமாகச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. புனைகதை எழுத்தாளர் பலரின் பெயர்கள் இக் கட்டுரையில் இடம்பெரு திருத்தல் கூடும். பொதுவாகத் தமது படைப்புக்களிலே பேச்சுவழக்கினுக்கு முக்கியத்துவம் கொடுத்த எழுத்தாளர்களின் ஆக்கங்களே, இக் கட்டுரை யில் முதன்மைத்துவம் கொடுக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத் தப்பட்டுள்ளன. 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எழுத் துலகப் பிரவேசஞ் செய்த படைப்பாளிகளின் பெயர்கள் இக் கட்டுரையில் இடம்பெற்றிருக்க நியாயமில்லே.
Page 12
Xνί
மொழியியல் ஆய்வின் இன்றியமையாமை உணரப்பட் டதன் காரணமாகப் பல்கலைக்கழகங்களிலே இத்துறை இன்று வளர்ச்சி பெற்றுக் காணப்படுகின்றது. இலக்கிய மொழி, பேச்சுமொழி பற்றிய ஆய்வுகளை இத்துறை சார்ந்த அறஞர்களே மேற்கொண்டு வருகின்றனர். மொழியியற் தத்துவங்களைக் கற்று, அவற்றை இலக்கியத்திலும் சமுதாய மொழிவழக்கிலும் பிரயோகம் செய்யவும் அவற்றின் படி முறை வளர்ச்சியை இனங்காணவும் வல்லவர்கள் அவர் களே. தான் மொழியியலைச் சிறப்புப் பாடமாகக் கற்றவன் அல்லன் அதனல், மொழியியலின் தத்துவங்களை முட்டறத் தெரிந்து கொண்டவனுமல்லன். ஆயினும், இக் காலகட்டம் வரை ஈழத்துப் புனைகதை இலக்கியத்தின் மொழிபற்றி மொழியியல் அறிஞர்கள் மேற்கொள்ளத் தவறிய ஆய்வறிவு முயற்சியை நான் மேற்கொள்ளத் துணிந்தேன். மொழியின் தத்துவங்களை அளவுகோலாகக் கொண்டு தான் புனேகதை கண் மதிப்பீடு செய்ய முற்படவில்லை. புனேகதைகளிற் கையாளப்பட்ட பேச்சுவழக்கினை வகைப்படுத்தி ஆய்வதன் மூலம் ஒரு மொழியியற் கோட்பாட்டை உருவாக்க முடியுமா என்பதே இக் கட்டுரையின் தேடுதலாக அமைந்தது.
ஈழத்துப் புனைகதை இலக்கியத்திலே பேச்சுவழக்கினைக் கையாள்வதற்கான மரபு எதிர்ப்புப் போராட்டத்தை நிகழ்த்தியவர்களும், அம் முயற்சியிலே வெற்றி கண்டவர் களும் முற்போக்கு எழுத்தாளர்களே. எனவே அவர்களது படைப்புக்களே பெருமளவுக்கு எனது ஆய்வுக்குட்படுத்தப் பட்டுள்ளன. ஆய்வு என்பது முகம் பார்த்தோ, கட்சி சார்ந்தோ, உணர்ச்சி நிலைகளுக்கு ஆட்பட்டோ செய்து விடக் கூடிய ஒன்றன்று. அவ்வாறு செய்ய முற்படின் அது ஆய்வுத் தடத்தினின்றும் வழிதவறிச் சென்றுவிடுதல் கூடும். இந்தப் பற்றுநிலைக்கு அப்பாற்பட்டதே எனது ஆய்வுமாகும். எனவே, இக் கட்டுரையிலே எனது மதிப் பிற்குரிய எழுத்தாள நண்பர்கள் பலரின் படைப்புக்களை நான் நேர் நின்று ஆராய்ந்திருக்கிறேன்; விமரிசித்திருக் கிறேன். இந்த விமரிசனம், அவர்களது படைப்புக்களிலே கையாளப்பட்ட பேச்சுமொழியின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவதனை நோக்கமாகக் கொண்டதன்று. பிரக்ஞை
xvii
பூர்வமாக, எதிர்காலத்திலே பேச்சுமொழி கையாளப்பட வேண்டும் என்பதன் வலியுறுத்துவதே எனது நோக் கமாகும்,
ஒரு படைப்பாளியின் அரசியல், சமூகவியல் சார்ந்த விளக்கம், அவனது ஆக்கங்களிலே மிகத் தெளிவான கருத் துக்களை முன்வைக்கத் தூண்டுகின்றது. இவையே அற்புத மான படைப்பின் ஊற்றுக்கண்ணுய் அமைந்து விடுகின்றன. இவ்வாரு?ன ஒரு படைப்பாளியிஞலேயே மக்களுடன் இரண் டறக் கலக்கவும், அவர்தம் பேச்சுமொழியினை இயல்பாகத் தன் படைப்புக்களில்" வடித்துவிடவும் முடிகிறது. இவ்வா முன ஒரு படைப்பாளியாக இக் கட்டுரையிலே கே. டாணி யல் இனங்காணப்படுகிருர். யாழ்ப்பாணத்தின் பண் பாட்டுக் கோலங்களையும், சமூகப் படிநிலை அமைப்புகளேயும், அவற்றினுக்கிடையேயான தொடர்பு நிலைகளையும் தமது ஆக்கங்களிலே யதார்த்த பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டு மென்ற ஆர்வமே, அம்மக்களின் மொழிவழக்கும் அவரது சிருஷ்டிாளிலே இயல்புற அமைவதற்குக் காரண மாயிற்று. பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலகாகவும் இவ்வுண்மை இவ்வாய்விலே நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனலேயே அமரர் கே. டானியலுக்கு இந்நூலிக்னச் சமர்ப்பணம் செய்துள்ளேன்.
இந்நூலின் அச்சிடுவதற்கு என்னத் தூண்டியவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் என்று சொல்வதை விட, திருமதி மஞேன்மணி சண்முகதாஸ் அவர்களெனக் குறிப்பிடுவதே சாலவும் பொருத்தமானது. யப்பான் நாட்டி லிருந்தபோதும், அவ்வப்போது அவர் எனக்களித்த ஆக்க மும் ஊக்கமுமே இந்நூல அச்சேற்றுவதற்குத் தோன்ருத் துணையாக நின்றன. முதுகலைமாணித் தேர்வுக்காக இக் கட்டுரையை எழுதுவதற்கு வழிகாட்டியாகவும், மேற் பார்வையாளராகவும் விளங்கியவர் பேராசிரியர் அ. சண்முக தாஸ் அவர்களாவர். இந் நூலின உருவாக்குவதற்கு அவர் மேற்சுொண்ட சிரமங்கள் அளப்பில. எழுத்தறிவித்த இவர்களுக்கு தான் கூறும் நன்றி தினத்துணையேயாகும்.
Page 13
zviii
இக் கட்டுரையை எழுதும்போது என் மனத்தெழுந்த சந்தேகங்களையும், பிரச்சினைகளையும் பொறுமையுடன் கேட் டறிந்து அவற்றைத் தெளிவுபடுத்தியவர்கள் பேராசிரியர் க. கைலாசபதி அவர்களும் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுமாவர். சிரமங்களைப் பொருட்படுத்தாது இவ் வாய்வுத்துறை தொடர்பாக அவர்கள் வழங்கிய உதவி கட்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
பல்வேறு வேலைப்பழுவின் மத்தியிலும் இந் நூலுக்கான ஆசியுரையை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் வழங்கியுள் ளார்கள். அவர்களுக்கும் சானது நன்றி உரியது. இந் நூலுக்கான அறிமுக உரையைக் கலாநிதி பார்வதி கந்தசாமி வழங்கியுள்ளார். கலாநிதி பார்வதி கந்தசாமியும் தானும் பள்ளிப் பருவமுதல் பல்கலைக் கழகம் வரை ஒன்ருகப் பயின் றவர்கள். அவரது அறிமுக உரை இந்நூலே அணிசெய்வது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கும் என் நன்றி உரியது
இந்நூலினை அச்சேற்றும் முயற்சியிலே எனது மனைவி பர்வதாமணியும் மைத்துனர் த. கலாமணி அவர்களும் வழங்கிய ஒத்தாசைகள் அளப்பில. அவர்களுக்கும் எனது நன்றி.
இந்நூலினைப் பதிப்பித்து உதவியவர்கள் முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தினர், பல்வேறு நெருக்கடிகளின் மத்தி யிலும் இந்நூலைப் பதிப்பித்து வெளியிடும் இக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களுக்கும், செயலாளர் க. சொக்கலிங்கம் அவர்களுக்கும் நான் என்றும் நன்றியுடையேன். படிதிருத்துதல் முதற்கொண்டு நூலே வெளியிட்டு வைத்தலீருக அவர்களது முயற்சி பரந்துபட்ட தாக அமைந்துவிட்டது. is
இந்நூலே மிகக் குறுகிய காலத்தில் அழகாக அச்சிட்டு உதவிய ஆசீர்வாதம் அச்சக ஊழியர்களுக்கும், குறிப்பாக அச்சமைப்பு முகவர் திரு. ருேக் யோசவ் அவர்களுக்கும் நான் மிகுந்த நன்றியுடையேன்.
மணிமாளிகை" 9。 வன்னியகுலம் அல்வாய் தெற்கு, அல்வாய்.
11-06-1986
பெ ாருளடக்கம்
ஆசியுரை V அறிமுகவுரை νii
வெளியீட்டுரை Χί
என்னுரை Xiw
இலக்கியமும் மொழியும் - முன்னுரை 1-28 இலக்கியமும் மொழியும் பேச்சுவழக்கின் முக்கியத்துவம் 5
ஈழத்துப் பேச்சுவழக்கின் சில பொதுவான
இயல்புகள் 17 இந்திய, ஈழந்துப் பேச்சு வழக்கிலே ஒலியமைப்பு 22
ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்குப் பிரயோகமும் - வரலாறு 29-75 ஈழத்துத் தமிழ்ப் புண்கதை இலக்கிய
வரலாற்றுச் சுருக்கம் 29 ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் 30 ஈழத்துச் சிறுகதை இலக்கியம் 36 ஈழத்துப் புனேகதைகளிற் பேச்சுவழக்குப்
பிரயோக வரலாறு 43 மரபுப் போராட்டம் 50
Page 14
ΚΧ
3. புனைகதைகளிற் கையாளப்பட்ட
பிரதேசப் பேச்சுவழக்கு - விவரணம் 76-12 பேச்சுவழக்கின் சில பண்புகள் 76 பிரதேசக் கிளை மொழிகள் 78 யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழி 8. மட்டக்களப்புப் பிரதேசக் கிளேமொழி 93 மலைநாட்டுப் பிரதேசக் கிளைமொழி 1694 தென்மாகாணப் பிரதேசக் கிளை மொழி 109 மன்னர், முல்லைத்தீவுப் பிரதேசக் கிளைமொழி 117 கொழும்புப் பிரதேசக் கிளைமொழி 1 8
4. ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்கும்
-affioffrid 122-154 கதை நிகழ் களமும் பேச்சுவழக்கும் 1 22 கதைப் பொருளும் பேச்சுவழக்கும் 95 புனைகதை வகையும் பேச்சுவழக்கும் 27
பேச்சுவழக்குப் பயன்பாடும் பிரச்சினைகளும் 141 முடிவுரை 155-16 உசாத்துணை நூல்விவர பட்டியல் 162-171
இலக்கியமும் மொழியும்முன்னுரை
இலக்கியமும் மொழியும்
Dனிதன், தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஏனையோருடன் பரிமாறிக்கொள்வதற்கான கருத்துப் பரி மாற்ற ஊடகமாக மொழி விளங்குகின்றது அக் கருத்துப் பரிமாற்றம் ஒலிவடிவிலே இயலும்போது 'பேச்சுமொழி' யெனவும் ஒழுங்கான வரிவடிவிலமையும்போது 'எழுத்து மொழி யெனவும் அழைக்கப்படும். இவை தவிர, சைகை யாலும் அங்க அசைவுகளாலும் கருத்துக்கள் உணர்த்தப் படுவதும் உண்டு. எனினும், மொழியியலாளர் இவற்றை மொழியென இன்னும் அங்கீகரிக்கவில்லை ; குறியீடு அல்லது சைகை என்ற அளவிலேயே அவை ஏற்றுக்கொள்ளப் படுகின்றன.
இலக்கியத்தின் மூலாதாரமாக விளங்குவது மொழியே. ஒவியம், சிற்பம், நடனம் போன்ற கலைகள் மொழியாற்ற லின்றி இயங்கவல்லன. ஆயின், இலக்கியமோவெனின் மொழியை அடிப்படையாகக் கொண்டே இயங்கவல்ல தாகிறது. எனவேதான், 'இலக்கியம் பற்றிய விளக்க மென்பதெல்லாம் அடிப்படையில் :ொழியியல்பேயாகும் "2 ன்பர் ஸ்ரைநர். மொழியின் வாழ்வு, வளம், வளர்ச்சி, ரலாறுபற்றிய ஆய்வுகட்கு ஆதாரமாக விளங்குணை இலக்கியங்களேயாகும். கல்ட்ெடுக்கள், செப்பேடுகள் ஆகியன மிகச் சிறிய அளவிலேயே மொழிபற்றிய தகவல்களை
Page 15
2 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
எமக்குத் தரவல்லன. ஆயின், இலக்கியங்களோலெனின் அவை எழுந்த காலத்தின் மொழிவழக்கையும் அதன் வளர்ச்சியையும் செம்மையான முறையிலே தரவல்லனவா யுள்ளன.
காலத்துக்குக் காலம் அரசியல், சமூகநிலைமைகளின் மாற்றங்களுக்கேற்ப இலக்கியப் பொருளும் இலக்கிய வடிவங்களும் வேறுபட்டு வந்துள்ளன. இவை.ோன்றே இலக்கிய மொழியும் சொற்பிரயோகங்களும் காலத்துக்குக் காலம் வேறுபட்டு வந்துள்ளன. சங்ககாலப் பகுதியிலும் பல்லவர் காலப்பகுதியிலும் எழுந்த இலக்கியங்கண் ஒப் பிடுவதன் மூலம் இவற்றினை நாம் விளங்கிக்கொள்ளலாம்.
சங்ககாலத் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டிய ரெனப்படும் மூவேந்தரும் பாரி, காரி முதலான குறுநில மன்னர்களும் ஆட்சிசெய்தனர். சிறுநிலப் பரப்புக்களை ஆண்ட மன்னர்களுக்கு உலகம் முழுவதிலும் தமது ஆணை யைச் செலுத்த வேண்டும் என்ற ஆசை மட்டும் மிதமிஞ்சி இருந்திருக்கிறது. அதனலேயே, அக்காலத் தமிழக மெங்கும் போர்கன் தொடர்ந்து நடைபெற்றிருக்கின்றன. வென்று மேம்படும் ஆசையால் உந்தப்பட்ட மன்னர் மோத, அவராட்சியிலடங்கிய மக்களும் மோதினர்.
புறநானூற்றுக் காலத்திற் புகழும் பெருமையும் வீரத்தின் வழிவந்தன. “வெற்றி அல்லது வீரமரணம் என்ற நிலைக்கு ஒரு தனிக் கவர்ச்சியிருந்ததாகத் தெரிகிறது. மன்னர் தலைமையில் ஒன்றுகூடி ஒற்றுமையாக நின்று போராடுவதிலும் மன்னனுக்குத் தம் சேவை தேவையென் றுணர்வதிலும் புறநானூற்றுக்கால மக்கள் மகிழ்ந்தனர். எனவே மன்னருக்கிடையில் ஏற்பட்ட போரில் மக்களும் முழுமனதோடு ஈடுபட்டனர். ' ? இதனல், இக்கால மக்களின் வாழ்க்கையிலே போரும் வீரமும் தவிர்க்கமுடியா தனவாயின. சங்ககாலப் புறத்திணைப் பாடல்களின் பொருளாகப் போரும் வீரமுமே அமைந்துள்ளமையால், இவற்றேடு தொடர்புடைய சொற்களே பாடல்களிலும் இடம்பெற்றுவிடுகின்றன, போர், வீரம், வெற்றி, தோல்வி,
இவ*கியமும் மொழியும்-முன்னுரை 3
இழப்பு, அழிவு. புகழ், கொள்ளை, அறிவுறுத்தல், ஆற்றுப் படுத்தல் ஆகியவற்றைச் சுட்டும் சொற்களே மீண்டும் மீண்டும் இப்பாடல்களில் இடம்பெறுவதனை நாம் காண
Utrdb.
அகத்திணேப் பாடல்கள், சங்ககால மக்களின் அக வாழ்வினைச் சித்திரிப்பன, சங்ககால மக்கட் பாகுபாடும் வாழ்க்கையும் ஒழுக்கமும் இயற்கையோடு ஒன்றியனவாகவே அமைந்தன. 4 எனவேதான், இக்கால அகத்திணைப் பாடல் கள் மக்களின் ஒழுக்கங்களான புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகியவற்றினேப் பொருளாகக் கொண் டன. இப்பாடல்களிற் காமம், உறவு, பிரிவு, ஊடல், இரங்கல், கழிவிரக்கம், ஆற்ருமை போன்ற நிலைகளைப் புலப்படுத்துஞ் சொற்களையே பெருமளவினவாக நாம் காணமுடிகிறது.
பல்லவர்காலம் அரசியல், சமூக நிலைமைகளிலே சங்ககால நிலைமைகளினின்றும் வேறுபட்டதாகும். கி. பி. 6ஆம் நூற்ருண்டின் பிற்பகுதி தொடக்கம் கி. பி. 9ஆம் நூத் ருண்டின் பிற்பகுதிவரை உள்ள காலம் பல்லவர்காலமாகும்.8 பல்லவரென்பார் தமிழ்நாட்டிற்கு வடக்கே சாதவாகன வமிசத்தினர் சிறப்புடன் விளங்கிய காலத்திலே அவர்தம் ஆட்சிக்குட்பட்டிருந்த சில மாகாணங்களுக்குத் தலைவரா யிருந்து வந்த ஒரு வகுப்பினர். சாதவாகனப் பேரரசு நிலைகுலையத் தொடங்கியபோது, இப் பல்லவ வகுப்பினர் தாம் தலைமை வகித்த மாகாணங்களுக்குத் தம்மையே மன்னராக்கிக் கொண்டனர். அப்போது, தமிழ்நாட்டை ஆண்டுவத்த களப்பிரரின் ஆட்சியும் வலிகுன்றியதை அறிந்து, அவருடன் போரிட்டு முதலில் தொண்டைமண்ட லத்தையும் பின்னர் சோழமண்டலத்தையும் கைப்பற்றி இவர்கள் ஆட்சிசெய்யலாயினர்.8
சங்கமருவிய காலத்திற் சமரசம் பூண்டிருந்த அகச் சமயங்களான சைவமும் வைணவமும் இக்காலத்திற் புறச் சமயங்களான சமண, பெளத்த மதங்களுடன் உக்கிரமாகப் போராட வேண்டிய நிலைக்குள்ளாயின. ஒவ்வொரு சமய
Page 16
4. ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
மும்; தனது கொள்கைகளேப் பரப்பவும், ஏனைய சமயங்களை நசுக்கவும் முனைந்தது, பல்லவ அரசன் மகேந்திரவர்மன், பாண்டியமன்னன் நின்றசீர் நெடுமாறன் போன்ற மன்னர் களையே மதம்மாறச் செய்யுமளவுக்குச் சமயப்போராட்டம் தீவிரமடைந்திருந்தது. எனவே, பல்லவராட்சிக் காலத்திற் சமயப்போராட்டமே சமூக நிகழ்வுகளிலே முதன்மை பெற லாயிற்று. இதஞற் பத்தி அநுபவப் புலப்பாடே பல்லவர் கால இலக்கியங்களின் உயிர்நாடியாயமைந்தது 7
சங்ககாலத்திலே, மன்னரையும் மக்களையும் நாயகராகக் கொண்டமைந்த இலக்கியங்கள் பல்லவர் காலத்திற் கடவு ளரையே இலக்கிய நாயகராகக் கொள்கின்றன. 8 இதனுல், பல்லவர்கால இலக்கியங்களிற் பத்தி அநுபவங்கனைப் புலப் படுத்துஞ் சொற்களே மிகுந்துவரக் காணலாம். இறைவன், அவனது தோற்றப்பொலிவு, அவனது அருட்செயல்கள், அவன் எழுந்தருளியிருக்கும் தலங்கள். தலமகிமைகன், பக்தி அநுபவ வெளிப்பாடு, பிறமதக் கண்டனம் பற்றிய சொற்களே இக்கால இலக்கியங்களில் மீண்டும் மீண்டும் இடம்பெறுதலே நாம் காணலாம். அத்துடன் , யாப்பமை தியிலும் பல்லவர்கால இலக்கியம் சங்ககால இலக்கியத்தி னின்றும் வேறுபடுவதனே நாம் அவதானிக்கலாம். சங்க காலப் பாடல்கள் அகவல், வஞ்சி யாப்பிலமைந்தவை. அதவல்யாப்பு ஒரு பொருளினையோ, காட்சியினையோ நேர் நின்று விபரிப்பதற்குகந்தது ; எடுத்துக்கொண்ட விடயத் தினைச் செட்டாகக் கூறிச்செல்ல வாய்ப்பானது. ஆயின் பல்லவர் காலத்திலே பெருவழக்காயிருந்த பாவினங்களோ, கற்பனைக் காட்சிகளைப் புனைந்துரைக்க வல்லனவாயும் பத்தி அநுபவங்களேப் புலப்படுத்தவல்லனவாயும் இசைத்தன்மை கொண்டனவாயும் அமைந்தன. எனவேதான், பல்லவர் காலப் பத்தி அநுபவத்தைப் புலப்படுத்தும் பாடல்கள் பாவினவடிவிலே அமைந்து விட்டன.
இவ்வாறு, இலக்கியத்தின் பொருள், உருவம், மொழி, என்பன, சமுதாய நிலைமைகளுக்கேற்ப மாறுபடும் என்னும் போது, இவை யாவுமே வர்க்கச் சார்பானவையா என்ற விஞவும் எழுகின்றது. ஆராய்ச்சியாளர், இலக்கியம்
இலக்கியமும் மொழியும் - முன்னுரை
魏 (Մծ -முனனு
வர்க்கச் சார்பானது என்னுங் கருத்தினைக் கொண்டுள்ள போதும், மொழி அந்நிலைக்கு அப்பாற்பட்டது என்றே முடிபுகொண்டனர். இதுபற்றி ஜே. வி. ஸ்ராலின் பின்வரு மாறு கூறிஞர் :
**மொழி ஒரு குறிப்பிட்ட பொருளாதார அடித் தளத்தின் - அது புதிய அடித்தளமாகவோ பழைய அடித்தளமாகவோ இருக்கலாம் - பெறுபேறு அன்று; அது அச் சமுதாயத்தின் வரலாற்றுக் காலம் முழுவதினதும், பல நூற்ருண்டுகள் காலமாக (அச் சமுதாயத்தினரிடையே காணப்பட்ட) பல்வேறு பொருளாதார அடித்தளங்களின் வரலாறு முழு வதினதும் பெறுபேறு ஆகும். இது குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினுலே தோற்றுவிக்கப்பட்டதன்று. அது முழுச் சமுதாயத்திஞலும் அச் சமுதாயத்திலுள்ள சகல வர்க்கங்களினுலும் நூற்றுக்கணக்கான பரம்பரை களின் முயற்சிகளினுலும் தோற்றுவிக்கப்பட்ட தாகும். "" ?
尋高f了。 சிவத்தம்பி இலக்கியத்திற்கும் மொழிக்கும் இடையே உள்ள தொடர்புபற்றி விளக்குகையில்,
"இலக்கியம் மேற்கட்டுமானத்தைச் சார்ந்தது என்பது பலவிடங்களிலும் பலராலும் எடுத்துக் கூறப்படும் உண்மையாகும் மொழியின் நிலை வேறு
பட்டது. மொழி குறிப்பிட்ட ஒரு அடிக் தளத்துக்கோ அன்றேல் இன்னென்றுக்கோ உரிய தாகாது. . 9 s 10
என்பர்.
பேச்சுவழக்கின் முக்கியத்துவம்.
மொழி ஒரு முக்கியமான முதன்மையான செய்திப் பரிமாற்றச் சாதனந்தான் எனினும், மொழி யினைத் தனித்துப் பார்ப்பதென்பது இயற்கையானதாக இயல்பானதாகத் தோன்றவில்ஃல. ஏனெனில் மொழி
Page 17
6 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
மனிதனின் உள்மனதோடு எப்பொழுதுமே ஒன்றிச் செல்கிறது, செயல்படுகிறது என்பதாலேயே மொழி மனிதனின் உள்ளக்கிடக்கையைப் பேச்சு வடிவில் வெளிக்கொணர்ந்து அவனது ஆசைகளே, எண்ணங்களை sp 6oorrijoglasakr, கொள்கைகளே, Gmml LunG)g;&T வெளிப்படுத்துகின்றது. " 1 இவ்வாறு மனிதமனங்களின் வெளிப்பாடான மொழியிற் பேச்சுவழக்கே முதன்மையானதாகக் கொள்ளப்படுகின்றது.
**பேச்சுமொழி, எவ்வளவு தேவையான ஒலிகள் போதுமோ அவ்வளவு ஒலிகளேக் கொண்டு இயங்கு கிறது. பேசும்பொழுது வாயின் அசைவும், குரலின் ஏற்றத்தாழ்வும், சைகைச் செய்கையும், சூழ்நிலையும், சொல்லும் சந்தர்ப்பமும் பேசும் ஒலிகட்குத் துணை செய்கின்றன. அதனல், குறைந்த ஒலிகள் போதும். மேலும், பேசும்போது கருத்து வேகம்மிகுதி. அதஞல் சொற்சிதைவுகளைப்பற்றிப் பொருட்படுத்துவதில்லை. தேவைக்கு மீறிய ஒலிகள் சிலசமயத்தில் வெறுப்பை உண்டாக்கிவிடும். அதஞல் பேச்சில் தேவைக்கு வேண்டிய அளவே ஒலிக்கப்படுகின்றன. ' 12
ஆயின் வரிவடிவிலான எழுத்துமொழி தன்னியல்பிலே மாற்ற முரு நிலைபேறுடையது. அதற்கெனத் தேர்ந்தெடுத்த சொற்கள் வேண்டும்; முயற்சி வேண்டும். பேச்சு மொழி யோவெனின் இக்கட்டுக்கோப்புகளுளடங்காது, மனத்தின் உடனடியான, முயற்சியற்ற வெளிப்பாடாக அமைந்து விடுகிறது13 என்பர் மு. வரதராசன் , எனவே தான், எழுத்து மொழியிலும் பேச்சு மொழியே மனித மனங்களைப் படம் பிடித்துக் காட்டும் தெளிவான, விளக்கமான சருவியாகக் கொள்ளப்படுகிறது. இதனையே பாரதியாரும், 'உள்ள இல் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண் டாகும்" 14 என்ருர்,
மனிதனது பரிணும வளர்ச்சியிலே, அவனது முதலாவது
கருத்துப் பரிமாற்ற ஊடகமான 'சைகையை" அடுத்து, மொழியென்ற வகையில் முதன்மை பெறுவது பேச்சு
இலக்கியமும் மொழியும்-முன்னுரை 7
மொழியே 15 சைகையாலே தனது கருத்துக்களைத் தெளி வாகவும் விரிவாகவும் தொடர்ச்சியாகவும் உணர்த்த முடியாத இடர்ப்பாடு தோன்றவே, ஒலிகளை எழுப்புவதன் மூலம் மனிதன் தனது கருத்துக்களைப் பரிமாறிக் கொண் டான். தான் கருதிய எண்ணங்கள் யாவற்றையும், யாவர் முன்னிலையிலும் ஒலியெழுப்பிக் கூற முடியாததும் நேர்நின்று உணர்த்த முடியாததுமான நிலையிலே, மனிதன் வரிவடி வத்தைக் கைக்கொள்ளத் தொடங்கிளுன் எனவே மனித எண்ணங்களைப் பிரதிபலிப்பதிற் பேச்சுவழக்கிற்கு அடுத்த படியாகவே எழுத்துவழக்கு அமைந்து காணப்படுகிறது, "மொழி என்பது ஒலிவடிவத்தையே உணர்த்தும். வரி வடிவம் ஒலிவடிவத்தின் நிழற்படம் போன்றது. கருத்துக்கு ஒலிவடிவம் அறிகுறி, ஒலிவடிவத்தின் அறிகுறி வரிவடிவம்' 6了●T ஒலிவடிவிற்கும் வரிவடிவத்திற்கும் இடையே யுள்ள தொடர்பினை விளக்கிச் செல்வர் ரா. சீனிவாசன். இதனையே, மு. வரதராசன் இன்னெருவகையிலே, “மொழி யின் உயிர் வாய்க்கும் செவிக்கும் இடையே உள்ளது. எழுது கோலுக்கும் கண்ணுக்கும் இடையே இல்லே ' 17 என விளக்கமாகக் கூறுவர்.
இலக்கண நூலார் பலரும், சங்ககாலத் தொட்டு எழுத்து மொழிக்கே இலக்கணம் வகுத்து வந்துள்ளனர். பேச்சு மொழி எவ்வாறமைதல் வேண்டுமென யாருமே இலக்கணம் செய்ததில்லை. ஒரு மொழியின் இயல்புகளுக்கு இலக்கண விதிகள் கூறுமிடத்து குறிப்பாகப் பேச்சுவழக்கு, எழுத்து வழக்கு ஆகிய இருவழக்குகளுள்ள தமிழ் மொழியிலே எழுத்து மொழிக்கு மாத்திரம் இலக்கணம் வகுப்பின் அது பூரணமான இலக்கணமாகி விடமாட்டாது.18
ஏனெனில், படிக்காத பாமரனது பேச்சுமொழியிலும் பச்சைக் குழந்தையின் பேச்சுமொழியிலுங்கூட அடிப்படை மொழி இலக்கணம் அமைத்து கிடக்கிறது. பாமரனும் பச்சைக் குழந்தையும் படித்தவன் பேசுவது போலவே மொழியிலக்கண அமைதியைக் கையாளுகின்றனர். படித் தவன், "அம்மா சோறு தந்தாள்' எனச் சொல்வது போன்றே சிறு குழந்தையும் தன்னுடைய மொழியறிவிற்
Page 18
8 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
கேற்ப அவ் வாக்கியத்தினைக் கூறிவிடுகின்றது. ஆனல், 'அம்மா சோறு தந்தான்' என்று பாமரனே பச்சைக் குழந்தையோ இலக்கண வழுவாகப் பேசுவதில்லை. அவ்வாறு இலக்கண வழுவாகப் பேசுமிடத்து மொழியானது எவருக் குமே புரியாததொன்ருகிவிடுகிறது. குழந்தை தான் கற்கும் அடிப்படை வாக்கியங்கள் சிலவற்றைத் தனது மனதிலே பதிய வைத்துக்கொண்டு அவற்றைப் போன்ற பல்வேறு வாக்கியங்களையும் அமைத்துக்கொள்கிறது. குழந்தைகள் பேசுகின்ற சில வாக்கியங்களே இங்கு உதா ரணமாகக் காட்டலாம்
'மழையுது" , " வெடிச்சதார்' என்ற சொற்களை நாம் பேச்சு வழக்கிலே பயன்படுத்தாவிடத்தும் குழந்தை யானது மொழியின் அடிப்படை இலக்க என அமைதியை மனதிற்கொண்டே இச் சொற்களைக் கையாளுகின்றது. ' 19
சாதாரண வாக்கியம் பெரியவர்களின் குழந்தைகளின்
பேச்சுவழக்கு பேச்சுவழக்கு
அ. நெருப்பு எரிகிறது. எரியுது. எரியுது. ஆ. மழை பெய்கிறது. மழை பெய்யுது. மழையுது இ. வெடி சுட்டது யார். வெடிசுட்டதார். வெடிச்சதார்.
ஆகவே, எழுத்துமொழிக்கு மட்டுமன்றிப் பேச்சு மொழிக்கும் இலக்கணம் உண்டு என்பதையும், அவ்விலக் கணமும் தொன்றுதொட்டு வரும் பேச்சு வழக்கை அடிப் படையாகக் கொண்டே அமைந்தது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ளலாம் இதனையே வெண்டிறியே என்பார்: 'பேச்சுமொழி ஒடும் ஆறுபோன்றது; எழுத்துமொழி அந்த ஆற்றில் மிதக்கும் பணிக்கட்டிபோன்றது' 20 என்றர். அதாவது, எழுத்துமொழிக்கு அடிப்படையாக அமைவது பேச்சுமொழியென்பதே அவர்தம் கருத்தாகும்.
மனிதனது சருத்துக்களை விரைவாசப் புலப்படுத்தும் ஆற்றலும் பேச்சுமொழிக்கே உண்டு. மனிதன் எண்ணும் கருத்துக்கு நேரடியாக, விரைவாக ஒலியுருவங் கொடுப் பதாற் கருத்துக்கள் விரைவாகப் புலப்படுத்தப்படுவது
இலக்கியமும் மொழியும்-முன்னுரை 9
மல்லாமல், பேசுஞ் சொற்களும் மிகவும் சுருங்கியவையாக அமைந்து விடுகின்றன. சொற்கள் சுருங்கியவையாக இருப்பது போலவே வாக்கியங்களும் பேச்சுவழக்கிலே சுருங்கியவையாக அமைகின்றன.21
"நான் நினைக்கின்றபோது அம்மா வருகிருள்' என்பது எழுத்து வழக்கு. இதே கருத்தினைப் பேச்சுமொழியிலே மிக எளிதாகவும் சுருக்க பாகவும் கூறி விடலாம். ‘நினைக்க அம்மா வாரு' என்பது பேச்சு மொழி. எழுத்து மொழி யைவிடப் பேச்சு மொழியிலே விரைவுப் புலப்பாடு மிக்கி ருப்பது கண்கூடு இவ்வாக்கியத்திலே "நான்' என்ற தன்மைச் சுட்டும் 'கிற' "கின்ரு' என்னும் இடைச் சொற்களும் ஸ்' என்ற பால்விகுதியும் 'போது' என்ற வினையெச்சமும் இல்லாமலேயே பேச்சுமொழி கருத்தைப் புலப்படுத்திவிடுகின்றது. இது போன்றே, "நீ இங்கே வருவாய்' என்ற எழுத்துமொழி வாக்கியமானது பேச்சு வழக்கிலே 'வா" என்ற முன்னிலை ஏவலொருமையோடு வாக்கியமாகிக் கருத்தைப் புலப்படுத்திவிடுகின்றது. இதஞலேதான், 'பேச்சுமொழியின் வாக்கியம் சுருங்கியது, எளியது, நேரானது, இயற்கையானது, தெளிவானது. எழுத்து மொழியின் வாக்கியம் பெரும்பாலும் அதைவிட நீண்டது, செயற்கையானது, சிக்கல் Ք-Փու - ԱյՖ]. தமிழில் பேச்சுவழக்குச் சராசரி இரண்டு சொற்கள் உடையது, எழுத்து வாக்கியம் நான்கு அல்லது ஐந்து சொற்கள் உடையது. '' ? என்று கூறுவர் முத்துச் சண்முகன்.
பேச்சுவழக்கிலே, ஒலியமைப்பின் தன்மைக்கேற்ப குறித்த ஒரு சொல் பல்வேறு கருத்துக்களைப் புலப்படுத்தி விடுகின்றது. ஒலியின் ஏற்றத்தாழ்வுகட்கேற்பச சொல்பவ னின் தன்மையும், நிலையும், கருத்தின் வலுவும் புலப்படுத் தப்பட்டுவிடுகின்றன. "உனக்கு வேண்டாம்” என்ற வாக்கியம் எழுத்துNழக்கிலும் சாதாரண பேச்சுவழக்கிலும் ஒத்த பொருளையே குறிக்கின்றது. “உனக்குத் தேவையில்லை'
2
Page 19
O ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
என்பது இதன் பொருள். இதே சொல், பேச்சுவழக்கிலே ஒலி மாற்றம்பெறும்போது பொருளிலும் வேறுபட்டுவிடு கின்றது. இவ் வாக்கியத்திலே வரும் "டாம்' எள்ற எழுத்தின் ஒலியை எடுத்தலோசையிலே விஞவாகக் கையா ளும்போது, முன்னைய பொருளைவிட வேருெரு பொருளையே அது புலப்படுத்திவிடுகின்றது இங்கு 'வேண்டாம்' என்பது ‘'வேணுமா?" என்ற கருத்தையே புலப்படுத்துவதாயுள்ளது.
"வா பாப்பம்’ என்ற பேச்சுமொழி சாதாரணமாக 'வா பார்த்துக்கொள்வோம்’ என்னுங் கருத்தையே புலப் படுத்துகின்றது. ஆயின், 'வாபாப்பம்' என ‘பாபம்" என்னுஞ் சொல்லை அழுத்தி ஒலிக்கும்போது, <别曼丹 வேருெரு பொருளைக் குறிப்பதாகிறது. "வந்தால் ஆபத்து" என்பதே இதன் பொருள். இவ் வாக்கியத்தை அழுத்தமாக ஒலிக்கையிலே, எமது சுட்டுவிரலே முன்னிறுத்தி எச்சரிக்கை காட்டும்போது இவ் வாக்கியம். முதலில் உணர்த்திய பொருளைவிட வேருெரு பொருளைக் குறித்து விடுகின்றது.
நடைமுறையிலே, இலக்கிய வழக்குகள் காலஞ் செல்லச் செல்ல வழக்கிறந்து போவதண்யும், அவ்விடத்தைப் பேச்சு மொழிச் சொற்கள் நிறைவு செய்வதனையும் நாம் காணக் கூடியதாக உள்ளது. சங்ககால இலக்கியச் சொற்கள் பல இன்று வழக்கிறந்துவிட்டன. யாருமே அச்சொற்களிற் பெரும்பாலானவற்றை எழுத்து வழக்கிலோ அன்றிப் பேச்சு வழக்கிலோ பயன்படுத்துவதில்லை. ஆயின், சங்ககால இலக்கியங்களிலே இடம்பெருத எத்தனையோ சொற்களையும், சொல் இலக்கணங்களேயும் இன்றைய தமிழ்மொழியிலே நாம் பயன்படுத்துகின்ருேம்.
ஒருமைப் பெயர்ச்சொற்களுக்குக் 'கள்' விகுதி சேர்ப்பதன் மூலம் அவற்றைப் பன்மைப் பெயர்ச்சொற்க ளாக்கலாம் என்பது இலக்கண விதி. 23
உதாரணம் :
மரம் + கள் = மரங்கள்
கிளை + கள் : கிளைகள்
இலக்கியமும் மொழியும்-முன்னுரை
ஆயின், இன்று இவ்விலக்கண விதியைவிடப் புதிய பிரயோகம் ஒன்றினைப் பேச்சுவழக்சிலே நாம் பயன்படுத்து கின்ருேம். ஒருமைப் பெயர்ச்சொல்லின் முன் எண்ணிக்கை களைச் சேர்ப்பதன்மூலம் 'கள்' விகுதி தவிர்க்கப்படுவதுடன் பன்மைநிலையும் உணர்த்தப்படுகின்றது. உதாரணம் :
இலக்கண வழக்கு பேச்சு வழக்கு
மரம் + கள் க மரங்கள் மூன்று + மரம் = மூன்று மரம் கிளே + கள் = கிளைகள் மூன்று + கிளை க மூன்று கிளை
பேச்சுவழக்கில் மட்டுமன்றி, எழுத்துவழக்கிலும் இன்று மேற்குறித்தவாறே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவை யாவும், பேச்சுமொழி செல்வாக்கு மிகுந்தது என்பதை யும், அதன் செல்வாக்கு மொழியின் இலக்கண விதிகளிலும் செறிந்துவிடும் என்பதையும் வலியுறுத்துகின்றன.
தமிழ்மொழியிலே, காலத்துக்குக் காலம் பெருந் தொகையான பிறமொழிச் சொற்கள் வந்து கலந்துள்ளன. சிறப்பாகத், தமிழ்நாடு ஐரோப்பியராட்சியின் கீழ் இருந்த காரணத்தினலே, ஐரோப்பியமொழிச் சொற்கள் பெருமளவினவாகக் கலந்து வழங்கப்படுகின்றன. எழுத்து வழக்கிலும் பார்க்கப் பேச்சுவழக்கிலேயே இவ்வாரு ன வேற்றுமொழிச் சொற்கள் இலகுவாகக் கலந்துவிடுகின்றன.
ந்ன்னூல், பிறமொழிச் சொற்கள் தமிழ்மொழியிலே இடம்பெறும் வகையின வரையறுத்துள்ளது. 24 ஆயினும், சாதாரண பாமரமகன் ஒருவன் இவ்விலக்கண விதிகளை அறியாமலே பிறமொழிச் சொற்களை மிக இலகுவாகப் பேச்சுமொழியிற் கையாண்டுவிடுகிருன், எழுத்துவழக்கிலே மொழிபெயர்ப்பு வேண்டப்படும் பிறமொழிச் சொற்களை யும் வாய்மொழி வழக்கிலே சிறிய ஒலிமாற்றத்துடன் அவன் கையாண்டு விடுகிமுன்.
Page 20
2 ஈழத்துப் புனைகதைகளும் பேச்சுவழக்கு
"மொழிபெயர்க்கமுடியாத வேற்றுமொழிச் சொற் களைத் தம்மொழிச் சாயலாக ஆக்குவதில், பாண்டித் தியம் நிறைந்த மக்களிலும் சாதாரண மக்கள் சிறந்த
வர்கள் என்பது பிழையாகாது.
25
என்று கூறுவதுடன் பின்வரும் உதாரணங்களைபும் எடுத்துக் காட்டுவர் மட்டுநகர் செ. நடராசா :
போர்த்துக்கீசச் சொற்கள்
l. Sapato
Mesa
Banco Chava
Carate Arratal Сора Tombo
Alavanca
Cmento
2
தமிழ் வடிவம்
&7Luftës மேசை
வாங்கு சாவி
கரத்தை இருத்தல் கோப்பை தோம்பு அலவாங்கு சீமெந்து
பேச்சுமொழியில் வழங்கும் ஆங்கிலச் சொற்கள் சில :
ஆங்கிலச் சொற்கள்
Boat Quart Advocate Funnel
Warrent
Coffee
தமிழ் வடிவம்
வத்தை கொத்து அப்புக்காத்து புனல் விருந்து G5s, Til
வல்லெழுத்தை இறுதியாசவுடைய சொற்கள் தமிழ் மொழியிலே இல்லை. இவ்வாறன பிறமொழிச் சொற்கள்
பேச்சுவழக்கிலே
இடம்பெறும்போது ஈறு.
குற்றுகரம்
பெற்றுத் தமிழ் இலக்கணவிதிப்படி ஆகிவிடுகின்றது.
இலக்கியமும் மொழியும்-முன்னுரை 13
உதாரணம் :
பிறமொழிச் சொல்
1. Court 2. Troup 3. Salad 4° Algos 5. State
uniwm
தமிழ் வடிவம்
கோடு துருப்பு
dramTV அலுகோசு சிலேற்று
ஒரு மொழியிலே தோன்றும் ஆரம்பகால இலக்கியங்கள் வற்றிலும் பேச்சுமொழியின் செல்வாக்கு மிகுந்து காணப்படுவதனை ஆராய்ச்சியாளர் பலரும் நிறுவியுள்ளனர். மக்களின் பேச்சுமொழியானது பண்டு. இலக்கியமொழி யாகப் பயன்படுத்தப்படுகையிலே ஓசை, அசை, சீர், யாப்புக் கட்டுக்கோப்பினுக்கேற்ப அவை செம்மை செய்யப் Lullay. Sailo Tool, ''G. Foll libsp'' (Hightened Language) ஒருவகைப் பேக்சுமொழியே பண்டைய இலக்கியங்களிற் பயன்படுத்தப்பட்டுள்ளதென்பர் காண்ட்வெல். 26
கிரேக்க அறிஞரான மில்மன் பரி என்பார், வீரயுகத் திற்குரியதாகக் கருதப்படும் ஆதிக் கிரேக்க காவியங்கள் யாவும், எழுத்தறிவில்லாத வாய்மொழிக் கவிஞராற் குல மரபுத் தொழிலாகப் பாடப்பட்டன என்பர், 27 ஜே. ஆர். மார் என்பாரும் பண்டைய கிரேக்கப் பாடல்களைப்போலவே
பழந்தமிழ்ச் செய்யுள்கள் இருந்திருக்கலாமென்பர் 28
வாய்மொழி இலக்கியமாக
க. கைலாசபதி, ஆதித் தமிழ் இலக்கியங்களிலே வழங்கிய தோல், குழை, யாப்பு போன்ற காரணப் பெயர்கள் - அக் காரணங்கள் இன்று வலுவிழந்த போதும் - நிலைத்து நிற்பதனை எடுத்துக்காட்டி, வாய் மொழிச் சொற்களின் ஆதிக்கம் இலக்கியத்திலே நிலையானது என்பதனை நிறுவியுள்ளார். 29
இன்றும், புனைகதை, நாடகம், சினிமா போன்ற கலை இலக்கிய வடிவங்களிற் பேச்சுவழக்கானது பெருத் தாக்கத் தினை ஏற்படுத்தி வருவதனை நாம் அவதானிக்கலாம். புனே கதை இலக்கியத்தைப் பொறுத்தவரையில் "இருவழக்குப்
Page 21
14 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
பண்பு” நடைமுறையிலே பயன்படுத்தப்பட்டு வருகின்றது, ஆசிரியர் கூற்றுக்களும், விவரணங்களும் இலக்கியத் தமிழிலே அமையப், பாத்திர உரையாடல்கள் மட்டும் பெரும்பாலும் பேச்சுவழக்கில் அமைகின்றன. 30
ஈழத்து மேடை, வானெலி நாடகங்களைப் பொறுத்த வரையிலே ஆரம்பகால நாடகங்கள் யாவும் - அவை சரித்திர நாடகமாயினுஞ்சரி, சமூக நாடகமாயினுஞ்சரி - இலக்கியத் தமிழிலேயே நடிக்கப்பட்டு வந்தன. இலக்கியவழக்கு மொழி யில் எழுதப்பட்ட நாடகங்களே போற்றவும்பட்டன ஆனல், இந் நூற்ருண்டின் நடுப்பகுதியிலிருந்து, நகைச் சுவைக்காக மட்டுமே யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் மேடை களிற் பயன்படுத்தப்பட்டது. தரகர்மாரோ, நகைச்சுவை நடிகர்களோ ஹாஷ்ய உணர்வினை மிகுவிப்பதற்காக மேடை களிலே யாழ்ப்பாணப் பேச்சு வழக்கினேப் பயன்படுத்தினர்;31 லண்டன் கந்தையா' , 'அடங்காப்பிடாரி' போன்ற வானெலி, மேடை நாடகங்களே இதற்கு உதாரணமாகக்
35 IT LI L-Gol) s TLD .
ஆனல் இன்று, பேச்சுத்தமிழானது நாடகங்களிலே அதன் பயன்பாடு புலப்படும் வயிைலே பயன்படுத்தப் படுகிறது. பிரதேச மண்வாசனையை ஊட்டவல்ல ஆற்றல் பேச்சுவழக்கிற்கே உண்டென்பது அநுபவ பூர்வமாக உணரப் பட்டுவிட்டது. குறித்தவொரு பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் யாவற்றையும் அவர்தம் வாழ்க்கைச் சூழ்நிலையையும் பேச்சுவழக்கே சிறப்பாகச் சித்திரிக்க வல்லது, என்பதை இன்றைய நாடகங் கள் எமக்கு விளக்குவனவாக உள்ளன. ஈழத்து நாடகங் களிலே பிரதேசப் பேச்சுத் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற முயற்சியின் முன்ளுேடியாக விளங்கியவர் பேராசிரி யர் கணபதிப்பிள்ளையாவார். தாம் எழுதிய நானுடகம் இருநாடகம் ஆகிய நாடக நூல்களிலே யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழை ஆற்றல் மிக்க ஒரு கருவியாக அவர் பயன் படுத்தினர். 32 நாடகத்திலே பேச்சுத்தமிழைப் பயன்படுத் துவதுபற்றி,
லக்கியமும் மொழியும்-முன்னுரை 15
CA Ավ (Լp
"அன்றியும் நாடகம் என்பது உலக இயல்பை உள்ளது உள்ளபடி காட்டுவது. ஆகவே, வீட்டிலும் வீதியிலும் பேசுவதுபோலவே அரங்கிலும் ஆடுவார் பேசல்வேண்டும். . .33
என்று அவர் தமது உறுதியானகொள்கையைப் பிரகடனப் படுத்திஞர். அவரது காலத்தின் பின்னரே ஈழத்து வானெலி, மேடை நாடகங்களிற் பேச்சுத் தமிழானது ஆற்றல்மிக்க ஒரு கருலியாக கொள்ளப்பட்டுப் பயன் படுத்தப்பட்டுவருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் நடிக்கப் பட்ட ‘தணியாத தாகம்” என்ற இலங்கை வாஞெலி நாடகம் பெரும் வெற்றியை ஈட்டியமைக்கு அதன் பேச்சு மொழி வழக்கினேயே பிரதான காரணமாகக் கொள்ள வேண்டும்.
தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களின் உரையாடல் களும் ஆரம்ப காலத்திலே இலக்கியப் பேச்சுநடையிலேயே அமைந்தன. கதாநாயகன், கதாநாயகி, ஏனைய பாத்தி ரங்கள் யாவும் இலக்கியத் தமிழிலேயே உரையாடின. இ83டக்காலத்திலே, நகைச்சுவைப் பாத்திரங்கள் மட்டும் சாதாரண பேச்சு வழக்கில் உரையாடின.
*பராசக்தி, வேலைக்காரி, ராணி முதலிய படங் களேப் பார்த்தால் இழ்வுண்மை புலப்படும். ராணி என்ற படத்தில் கதாநாயகி தான் ராணி என்று உணராது கள்வர் கூட்டத்தில் இருக்கும்போது மக்கள் தமிழில் பேசுகிருள். ஆளுல், காதலிக்கும்பொழுது இலக்கியத் தமிழிலேயே பேசுகிருள். கதாநாயகன் எப்பொழுதும் இலக்கியத்தமிழிலேயே பேசுகிருன். ஆனல் இன்று தமிழ்ப் படங்களின் தடை எவ்வளவே மாறிவிட்டது. சமூகப் படங்கள் எல்லாம் மக்கள் தமிழிலேயே அமைகின்றன. தலைவனும் தலேவியும் மக்கள் தமிழிலேயே பேசுகின்றனர். 1964 தொடக் கத்தில் வெளிவந்த படம் காதலிக்க நேரமில்லை என்பது. பெரும் வெற்றியுடன் அநேக இடங்களில் பலநாட்கள்
Page 22
16 ஈழத்துப் புண்க்தைகளிற் பேச்சுவழக்கு
ஒடிய படம் இது. இதில் மருந்துக்குக்கூட இலக்கியத் தமிழ் கிடையாது. அனைவரும் மக்கள் தமிழிலேயே பேசுகின்றனர்.* 34
என்ருர் முத்துச் சண்முகன்.
திரைப்படங்களின் வெற்றிக்கும் அப்படங்களின் மொழி வழக்கிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்பதே இவரது கருத்து. இவர் கூறுவதுபோலத் தென்னிந்திய சமூகத் தமிழ்த் திரைப்படங்கள் யாவற்றிலும் பேச்சுவழக்கு இன்று பயன்படுத்தப்பட்டு வருவது உண்மையே. ஆணுல், அது இயல்பான மக்கள் தமிழ் அல்ல என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். தென்னிந்தியத் தமிழ் மக்களின் பேச்சு வழக்கினை மருவிய ஒருவகையான வழக்கே தமிழ்த் திரைப் படங்களிலே இன்று பயன்படுத்தப்படுகிறது. இதனை மக்கள் தமிழெனவோ, இலக்கியத் தமிழெனவோ கொள் ளாது தராதரப் பேச்சுத்தமிழ் அல்லது, தமிழ்த் திரைப் படங்களுக்கே பிரத்தியேகமான பேச்சுவழக்கு எனக் கொள்வதே பொருந்தும். தென்னிந்திய மக்கள் சொற்க ளுக்கிடையிலே ஒலியினை அழுத்தியும் நீட்டியும் ஒலிப்பது போன்று திரைப்படங்களிலே ஒலிப்பது இல்லை. படங்களிற் பேசப்படுஞ் சொற்களும், அவை பேசப்படும் முறையும் இயல்பான பேச்சு வழக்கினேவிடச் சற்று நெகிழ்ச்சியுடையன வாகத், தமிழ்பேசும் மக்கள் யாவரும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளன. தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங் களின் உரையாடலை இலகுவாக விளங்கிக்கொள்ளும் யாழ்ப் பாணத் தமிழரொருவர், தென்னிந்தியத் தமிழ் மகன் ஒருவரது உரையாடலை (நேரில் உரையாடும்போது) இலகுவிலே விளங்கிக்கொள்ள முடியாதிருப்பது கவனிக்க வேண்டியதாகும். எவ்வாறயினும், தமிழ்த்திரைப்படத் துறையைப் பொறுத்தவரையிலே, இவ்வகை உரைநடையே ஆதிக்கஞ்செலுத்துவதாயுள்ளது.
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை யிலும் இப்பாதிப்பினை நாம் தெளிவாகக் காணமுடிகிறது. யாழ்ப்பாணப் பேச்சுத் தமினேழ உரையாடல்களுக்குப் பயன் படுத்தித் தயாரிக்கப்பட்ட "பொன்மணி" என்னும் திரைப்
இலக்கியமும் மொழியும்-முன்னுரை 17
படம் வசூலினைப் பொறுத்தவரையில் தோல்விகண்டமைக் கும், தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படப் பேச்சுவழக்கினேப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட காத்திருப்பேன் உனக்காக, நான் உங்கள் தோழன் ஆகிய படங்கள் வசூலினைப் பொறுத்தவரையிலே ஒரளவு வெற்றி கண்டமைக்குமான மொழியியற் காரணங்களை தாம் நோக்கலாம். தென்னிந் தியத் தமிழ்ப்பட உரையாடல் ஈழத்துத் தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமானதொன்ருகும். திரைப்பட உலகிலே கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டுப்போய்விட்ட தென்னிந் தியப் பேச்சுவழக்கிற்கு மாருகத் திரைப்பட உலகிற்கு முற்றிலும் புதியதான யாழ்ப்பாணப் பேச்சு மொழியைப் பொன்மணியிற் பயன்படுத்தியமையே அதன் தோல்விக் கான மொழியியற் காரணமாக அமைந்தது. ஆனல் காத்திருப்பேன் உனக்காக, நான் உங்கள் தோழன் ஆகிய திரைப்படங்கள் நன்கு பரிச்சயமான தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படப் பேச்சுவழக்கிலே தயாரிக்கப்பட்டமை இரசிகர்களின் மனத்தினைத் திருப்திப்படுத்துவதாக இருந் தது. எனவே, பேச்சுவழக்கானது ஆற்றல் வாய்ந்ததாக இருப்பினும், அதனைப் பொருளுக்கும் . இடத்திற்குமேற்பப் பயன்படுத்தும்போதே ஏற்றம் பெறுகிறது என்பதனை நாம் விளங்கிக்கொள்ளலாம்.
ஈழத்துப் பேச்சுவழக்கின் சில பொதுவான இயல்புகள்
ஈழத்துத் தமிழ்ப் பேச்சுவழக்கினை வரையறுத்துக் காட்டுவதிலே பல்வேறு இடர்ப்பாடுகள் உள்ளன. அவற் லே முதன்மையானது, ஈழம்வாழ் தமிழ் மக்கள் ஒரு ழுவினராகவன்றி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் ரந்து வாழ்வதாகும். இதனல், இம் மக்களின் பேச்சு வழக் கானது இடத்திற்கும், சூழலுக்கு மேற்ப வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஆணுல், தென்னிந்தியத் தமிழ் மக்களின் பேச்சு வழக்கினேடு ஒப்பிடுகையிற் பல்வேறு நிலைகளிலே ஈழத்துத் தமிழ்ப் பேச்சுவழக்கு வேறுபட்டு விளங்குவதனை நாம் அவதானிக்கலாம்.
3
Page 23
18 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
சிறப்பாகச் சொற்களைப் பிரயோகிப்பதில் மட்டுமன்றி உச்சரிப்பு, ஒலி, அசை மாற்றங்கள் ஆகியவற்றிலும் ஈழத்துப் பேச்சுத் தமிழ் இந்தியத் தமிழ்ப் பேச்சு வழக்குடன் வேறுபட்டு நிற்கின்றது. அரசியல், சமூக, வரலாற்று. பெளதீக காரணிகள் சில இந் நிலைமைக்குக் காரணங்
களாயமைந்தன.
ஒரு மொழி தான் தோன்றிய இடத்திலே அதிக அளவு மாற்றங்களைப் பெறுவதனையும் புகுத்த இடத்திற் பெரு மளவு மாற்றங்களின்றி விளங்குவதனையுமே நாம் இதற்குக் காரணமாகக் கொள்ளலாம். இன்று இங்கிலாந்திலே பேசப்படும் ஆங்கிலம் ஒருவர்க்கொருவர் புரிந்துகொள்ள முடியாத அளவு இடந்தோறும் மாறுபட்டிருப்பதனையும், அமெரிக்கர் பேசும் ஆங்கிலத்திலே அதிக அளவான வேறு பாடுகள் இல்லாதிருப்பதனையும் இதற்குச் சான்ருகக் காட் டுவர் முத்துச் சண்முகம்.38
ஈழத்துப் பேச்சுத் தமிழ் இந்தியப் பேச்சுத் தமிழைப் போன்று பல்வேறு மொழிகளின் தாக்கத்திற்கு உட்பட்ட தொன்றல்ல. ஆங்கில, சிங்கள மொழிகளின் தாக்கமே ஈழத்துப் பேச்சுவழக்கிலே நேரடி ஆதிக்கஞ் செலுத்து கின்றது. இவற்றின் தாக்கமுங் கூடப் பெருமளவிற்குக் கற்ருேரின் பேச்சு வழக்கிலேயே காணப்படுகின்றது. சாதா ரண கிராமிய மக்களின் பேச்சுவழக்கிலே இம் மொழிகளின் ஆதிக்கம் அருகியே காணப்படுகின்றது. ஆளுல், இந்தியத் மிழோவெனின் ஆங்கில மொழியோடு வடமொழி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு, மராத்தி போன்ற பல்வேறு மொழிகளுடனும் நெருங்கிய உறவு சொண்டது. இதனல், இம்மொழிகளினின்றும் சாத்தனையோ சொற்களும், ஒலிகளும் இந்தியத் தமிழிலே கலந்தன. இந்தியத் தமிழிற் காணப்படுகின்ற ஒலிப்புடை அடைப்பொலிகள் (Voiced Stops) இப் பிறமொழிகளின் ஆதிக்கத்தினலே ரற்பட் டவையே. யாழ்ப்பாணத் தமிழிலே மொழி முதலிலே இன்றும் ஒலிப்புடை ஒலிகள் வருவதில்லை.38
இலக்கியமும் மொழியும்-முன்னுரை I9
சாதி அமைப்பும் பேச்சுத் தமிழிற் பெரும் ஆதிக்கஞ் செலுத்துகின்றது. இந்தியாவிலே எத்தனேவகைச் சாதிகள் உண்டோ அத்தனைவகையான பேச்சுத்தமிழும் அங்கு காணப்படுகிறது. இந்தியக் கிராமங்களில் வாழும் ஒல்வொரு சாதியினரும் ஒவ்வொருவகைப் பேச்சுத்தமிழைப் பயன் படுத்துகின்றனர். இதஞல், இந்தியப் பேச்சுத்தமிழிற் slffii) FITS Glud 5 iss, slip (Tamil Caste Dialect) Qugish பங்கினை வகிக்கின்றது. 37 சிறப்பாகப் பிராமணர்கள், தம்மோடு ஒத்த சாதியிளருடன் பேசும் போது ஒருவகைத் தமிழையும், ஏனைய சாதியினருடன் பேசும்போது இன்னுெரு வதைத் தமிழையும் கையாளுகின்றனர். இந்திய, முஸ்லிம் தமிழ்ப் பேச்சுவழக்குகளைத் தவிர அடிப்படையிலே சாதிப் பேச்சுத்தமிழ் வேறுபாடுகள் ஈழத்தில் உணரப்படுவது மிக அரிதாகும். w
பிரதேசங்கட்கிடையிலான தொடர்பு முறைமைகளும் ஈழத்துப் பேச்சுவழக்கின் சில தனியியல்புகளுக்குக் காரண மாயமைகின்றன. ஈழத்திலே பிரதேசப் பொதுப் பேச்சுத் sLf6gb (Reg onal Standared Tamil Dialect) Bauplu fra Gir உணரப்படவே செய்கின்றன. யாழ்ப்பாணம், மன்னர், வவுனியா, முல்லேத்தீவு, மட்டக்களப்பு, கொழும்பு போன்ற பிரதேசங்களிற் பேசப்படும் மொழிகளுக்கிடையே வேறு பாடுகள் உணரப்படுகின்றபோதும், இவையாவற்றினதும் இயல்பும் அடிப்படையிலே ஒரே தன்மைத்தானவையே. ஆஞல், இந்தியப் பேச்சுத் தமிழ் பிரதேசத்திற்குப் பிர தேசம் விகற்பம் மிகுந்து காணப்படுகின்றது, குமரித்தமிழ், நெல்லைத்தமிழ், மதுரைத்தமிழ், கோயம்புத்தூர்த்தமிழ், தஞ்சைத்தமிழ், வடஆரிக்காட்டுத்தமிழ், சென்னைத்தமிழ் ஆகியன மிகத் துல்லியமாகப் புலப்படும் வேறுபாடுகள் கொண்டவை. 38
இவ்வாறு, பிரதேசப் பேச்சுமொழியானது, இந்திய விலும் ஈழத்திலும் வேறுபட்ட அளவிலே அமைந்தி குப்பதற்கு இரு நாடுகளின் பிரதேச அமைவினையே காரண மாகக் கூறலாம். இந்தியா மிகப் பரந்த நாடு. தமிழ் நாட்டிலே தமிழ்மக்கள் வாழும் பகுதிகள் மிகப் பரந்தவை;
Page 24
2O ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
இடைத்தூரமும் மிக அதிகம். அத்துடன் போக்குவரவு வசதிகளும் குறைவாகும். இதனல், ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நாளாந்தம் ஏனேய பிரதேசப் பொதுமக்களுடன் தொடர்புகொள்ள முடிவதில்லை எனவே, ஒரு பிரதேசப் பேச்சுமொழியானது இ ஞெரு பிரதேசப் பேச்சுமொழியின்மீது ஆதிக்கஞ் செலுத்துவதும் அருகியே காணப்படுகின்றது.
ஈழத்தைப் பொறுத்தவரையிலே நிலைமை மமரு னது. "ஈழம் மிகச்சிறிய நாடு தமிழ்ப்பேசும் மக்கள் நாளாந்தம் ஏஜனய பிரதேச மக்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உள்னன. எனவே, ஒரு பிரதேசத்தின் பேச்சுவழக்கு இன்னெரு பிரதேசத்தின் பேச்சுவழக்கினைப் பாதிப்பதாகக் காணப்படுகிறது. இதனுலேயே, ஈழத்துப் பிரதேசப் பேச்சுத்தமிழானது அடிப்படை இயல்புகளிலே ஒற்றுமையுடையதாகக் காணப்படுகின்றது.
ஈழத்துத் தமிழ்ப் பேச்சுவழக்கிலே, தென்னிந்தியப் பேச்சுத் தமிழில் இல்லாத அளவுக்குச் சிங்களச் சொற்களின் செல்வாக்கினைக் காணக் கூடியதாக உள்ளது. சிறப்பாக, மட்டக்களப்பு, மலைநாட்டுப் பேச்சு வழக்கிலும், முஸ்லிம் மக்களது பேச்சு வழக்கிலும் சிங்களச் சொற்கள் பயின்று வருகின்றன மட்டக்களப்பு மாவட்டம் நீண்ட காலம் சிங்கள மன்னர்களின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. மலை ராடும், தொன்று தொட்டுச் சிங்கள மன்னரின் ஆட்சியின் இழ் இருந்து வந்ததுடன், சிங்கள மக்களையே பெரும்பான்மை யினராகவுங் கொண்டது. முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்கு மாகாணங் ளில் மட்டுமன்றி, சிங்கள மக்கள் வாழும் பகுதிகளிலும் செறிந்து வாழுகின்றனர். இவர்கள், வியாபாரத்தினையே டிதான தொழிலாகக் கொண்டவர்கள். சிங்கள மக்கள் மத்தியிலே நாளாந்தம் தமது நடவடிக்கைகளே மேற்கொண்டு வருவதஞல், சிங்கள மொழியினையே வர்த்தகமொழியாக இவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இலக்கியமும் மொழியும்-முன்னுரை 2.
1960ஆம் ஆண்டின் பின்னர், சிங்களம் அரசகரும மொழி யாக்கப் பட்டமையாலும், அளவிறந்த சிங்களச் சொற்கள் தமிழ் மொழியிற் கலந்து விட்டன. லக்சல, சலுசல, ஜன வசம, போயா, பிரீதி, மித்துறி, மஹாஜனசம்பத, ஜாதிக சம்பத போன்ற பொதுமக்கள் தொடர்புடைய சொற்கள் சிங்கள மொழியினின்றும் தமிழ் மொழியிலே இன்று பரவ லாகப் பயன்படுத்தப்படுஞ் சொற்களாகும், இதன் காரண மாக ஈழத்துத் தமிழ்ப் பேச்சு வழக்கிலே சிங்களச் சொற் களின் ஆதிக்கத்தினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. * மலையாளம் இந்தியத் தமிழிலிருந்து வேருன மொழி யென்ருல் . ஈழத்துப் பேச்சுத் தமிழையும் வேறு மொழி யெனக் கொள்ளலாமோவென்ற ஐயம் இந்திய மொழியிய லாளரிடையே தோன்றியுள்ளது. 39 ஏனெனில் மலையாளம் போலவே பேச்சு வழக்கிலே, ஈழத்துத் தமிழும் இந்தியத் தமிழினின்றும் வேறுபடுகின்றது. இந்தியத் தமிழையும் ஈழத்துத் தமிழையும் ஒரே மொழியாக இணைப்பது ஒரே வடிவிலான எழுத்து மொழியேயாகும்
35, Gollun gü G3_1 & Griss Ló) (Standard Spo* en Tamil) என்ற வகையிலேயே, இந்தியப் பேச்சுத்தமிழுடன் ஈழத்துப் பேச்சுத்தமிழ் ஒத்திகுப்பதனை நாம் காணலாம். இது, சாதிப் பேச்சுத்தமிழ், பிரதேசப் பொதுப் பேச்சுத் தமிழ் ஆகியவற்றின் பண்பிலிருந்தும் வேறுபட்டது. கற்றவர்-கல்லாதவர், சாதி, பிரதேசம், என்னும் வேறு பாடுகளின் இயல்புகளேக் கைக்கொள்ளாது மக்கள் யாவரும் விளங்கக்கூடிய வகையிற் பேசுவதே பொதுப் பேச்சுத் தமிழ். சதாரணமாகப் படித்த மக்கள் தங்கள் நாட்டில் மட்டுமன்றி ஏனைய நாட்டு மக்களுடனும் உரையாடுகையிற் பொதுப் பேச்சுத்தமிழையே கையாளுகின்றனர் இது, ஒரளவுக்கு மேடைப் பேச்சுத் தமிழையும் எழுத்துவழக்குத் தமிழையும் ஒத்ததாகவே காணப்படுகிறது.
ஈழத்துப் பேச்சுவழக்கின் இயல்பினைத் தெரிந்துகொள் வதற்கு அதனை இந்தியப் பேச்சுத்தமிழுடன் ஒப்பிட்டு நோக்கல் பொருத்தமானது. பின்வரும் உதாரணங்கள் மூலம் இரு நாடுகட்கிடையிலான பேச்சுமெரழி வேறு பாட்டை விளங்கிக் கொள்ளலாம்.
Page 25
22 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
இந்திய, ஈழத்துப் பேச்சுவழக்கிலே ஒலியமைப்பு
உயிர் எழுத்துக்களில் ஒலியமைப்பு.
மெல்லின ஈற்றுச் சொற்களின் இறுதி மெல்லினங்கள் இந்தியப் பேச்சுவழக்கிலே உச்சரிக்கப்படுவதில்லை. இவற் றுக்குப் பதிலாக மூக்குயிர்களே உச்சரிக்கப்படுகின்றன. ஆளுல், ஈழத்துப் பேச்சுத்தமிழிலே இறுதி மெல்லினங்கள் உள்ளவாறே உச்சரிக்கப்படுகின்றன.
உதாரணம்:
இலக்கிய வழக்கு ஈழத்துப் இந்தியப்
பேச்சு வழக்கு பேச்சு வழக்கு
Մ) அவன் --- அவன் -- அவெ
இவன் nus {heນວບໍ່? Kimmsw இவெ
A குடம் - குடம் கொட
Üስ வந்தோம் - வந்தம் - வந்தோ
இந்தியப் பேச்சுத்தமிழிலே முதலசையில் வரும் இகர உகரங்களே அடுத்து அகரம் வகும்போது முறையே ளகரமாகவும் ஒகரமாகவும் மாறும். ஈழத்துப் பேச்சு வழக்கிலே இம்மாற்றம் இடம்பெறுவதில்லை.
உதாரணம் :
இலக்கிய வழக்கு ஈழத்துப் இந்தியப்
பேச்சுவழக்கு பேச்சுவழக்கு
இடம் இடம் mewn arl-lb திறப்பு திறப்பு - தெறப்பு உலகம் உலகம் - ஒலகம்
குடை geal- imp Gd5(Toul
இலக்கியமும் மொழியிம்-முன்னுரை 23
இந்தியப் பேச்சுத் தமிழிலே இரண்டாவது அசையில் நிற்கும் உயிர் மறைந்து விடும். ஈழத்துப் பேச்சு வழக்கிலே இவ்வாறு மறைவதில்லை.
உதாரணம் :
இலக்கிய வழக்கு ஈழத்துப் இந்தியப்
பேச்சுவழக்கு பேச்சுவழக்கு பாக்கியம் - பாக்கியம் - பாக்யம் ஓடினன் - ஓடினன் - ஒட்ணு எவ்வளவு - எவ்வளவு - எவ்ளவு
மெய்யெழுத்துக்களில் ஒலியமைப்பு
இந்தியப் பேச்சுவழக்கிற் குறிலே அடுத்துவரும் யகர மெய் இகரம் பெறும். ஈழத்துப் பேச்சுவழக்கிலே இயல் பாயிருக்கும்.
உதாரணம் :
இலக்கிய வழக்கு ஈழத்துப் இந்தியப்
பேச்சுவழக்கு பேச்சுவழக்கு
நெப் nnnw நெய் - - நெய்யி செய் - செய் செய்யி பெப் - பெய் un பெய்யி மெய் - மெய் amo- மெய்யி
இந்தியப் பேச்சுவழக்கிற் குற்ருெற்றிறுதிச் சொற்கள் உகரம் பெறும் ஈழத்துப் பேச்சுவழக்கிலே இயல்பாயிருக்கும்.
உதாரணம் ;
இலக்கிய வழக்கு ஈழத்துப் இந்தியப்
பேச்சுவழக்கு பேச்சுவழக்கு
பெண் - பெண் --- பொண்ணு கண் -- asignior கண்ணு
umTai) Lunti) " دسمه Lוע6."חו
தயிர் · தயிர் - தயிரு
Page 26
14 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
ன்ற் என்ற மெய்ம்மயக்கம் இந்தியப் பேச்சுவழக்கிலே ண்ண் எனவும், ஈழத்துப் பேச்சு வழக்கிலே ண்ட் எனவும் வரும்.
உதாரணம் :
இலக்கிய வழக்கு ஈழத்துப் இந்தியப்
பேச்சுவழக்கு பேச்சுவழக்ரு கன்று ыхы as TGS assivt go) ஒன்று - ஒண்டு - ஒண்ணு நின்ருன் re நிண்டான் - நிண்ணு தின்முன் MMX திண்டான் - திண்ணு
வேற்றுமைச் சொற்கள்.
ஆரும் வேற்றுமையைப் பொறுத்தமட்டிலேயே இந்தி யப் பேச்சுவழக்கிற்கும் ஈழத்துப் பேச்சுவழக்கிற்குமிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆரும் வேற்றுமை உருபுகள் அது, ஆது, அ என்பன. இந்தியப் பேச்சுவழக் கிற் பெயர்ச்சொல் ஆரும் வேற்றுமை உருபினை ஏற்றுக் கொள்வதில்லை. மாருகப் பெயர்ச்சொல்லின் ஈறு கெட்டு விடுகிறது. ஈழத்துப் பேச்சுவழக்கிலே அது, ஆது, அ என்னும் உருபுகளுக்குப் பதிலாக ரை, எடெ ஆகிய உருபுகளே வழக்கிலுள்ளன.
உதாரணம் :
இலக்கிய வழக்கு ஈழத்துப் இந்தியப்
பேச்சுவழக்கு பேச்சுவழக்கு
அவனது - அவன்ரை - அவெ
அவனெட - அவெ
ழகரம் இந்தியப் பேச்சுவழக்கிலே இயல்பாக உச்சரிக் கப்பட ஈழத்துப் பேச்சுவழக்கிலே ளகரமாக ஒலிக்கப் படுகின்றது.
இலக்கியமும் மொழியும்-முன்னுரை 25
உதாரணம் :
இலக்கிய வழக்கு ஈழத்துப் இந்தியப்
பேச்சுவழக்கு பேச்சுவழக்கு கொழும்பு - கொளுப்பு - கொயும்பு பழம் — L_fair Lb --- ւ աւb
மேற்காட்டப்பட்ட உதாரணங்களை ஆராயும்போது, இர் தியப் பேச்சு வழக்கிற்கும் ஈழத்துப் பேச்சு வழக்கிற்கு மிடையேயான பின்வரும் பிரதான வேறுபாடுகள் சில வற்றை நாம் அவதானிக்கலாம் :
(1) இத்தியப் பேச்சுத் தமிழ் ஈழத்துப் பேச்சுத் தமிழை விடப் பெருமளவுக்குச் சொற் குறுக்கத்தைப் பெறுகின்றது. பெரும்பாலான பெயர், வினேச் சொற்களின் ஈற்றுமெய் கெட்டுச் சொல் குறுக்கம் பெற்று விடுகிறது;
உதாரணம் :
Մ) அவன - - - அவெ
. Մ) வந்தான் - வநதா
(2) இந்தியப் பேச்சுத்தமிழிற் பெருமளவுக்கு இசைத் தன்மை பேணப்படுகின்றது. பேச்சுவழக்கிலே 6h)ulu !!) முறிந்துபோகாது சொற்களுக்கு அசைநிறைகள் சேர்க் :ப்படுகின்றன.
உதாரணம் :
பெண் வந்த"யிற்று - பெண்ணு வந்தாச்சு நெய் மணக்கிறது - நெய்யி மணக்குது
(3) இந்தியப் பேச்சுத்தமிழ் இலக்கியத் தமிழைவிடப் பல்வேறு நிலைகளிலும் திரிபுபட்டுள்ளது. ஆணுல், ஈழத்துப் பேச்சுத்தமிழ் முற்றுமுழுவதாக இல்லாவிடினும் ஒரளவுக் கேனும் இலக்கியத் தமிழின் இயல்புகள் கொண்டதாக அமைந்துள்ளது
Page 27
26 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு
இவ்வியலில் இலக்கியத்திற்கும் மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு, சமூகரீதியாகவும் இலக்கியரீதியாகவும் பேச்சுமொழியின் முதன்மைத்துவம், இந்தியப் பேச்சுவழக்கி ணுேடு ஈழத்துப் பேச்சுவழக்கினை ஒப்பிட்டு. ஈழத்துப் பேச்சுவழக்கின் தனிச் சிறப்பியல்புகள் ஆகியன குறிப்பிடப் பட்டுள்ளன. புனைகதை இலக்கியத் துறையிலே, பேச்சு வழக்கின் பங்குபற்றி ஆராயப் புகும்போது, மேற்குறித் விடயங்கள் பற்றி அறிதல் இன்றியமையாததாகும்.
சான்றதாரம்
1. வரதராசன், மு. மொழி வரலாறு, பக். 6
2. Steiner George, “ Linguistics and Literature” Linguistics
at Large, . 15.
3. வேலுப்பிள்ளே, ஆ, தமிழ் இலக்கியத்தில் காலமும்
கருத்தும், பக். 14. வித்தியானந்தன், சு. தமிழர் சால்பு, பக், 180. செல்வநாயகம், வி. , தமிழ் இலக்கிய வரலாறு, பக். 96
4.
5 6. மேற்படி, பக். 96.
7. மேற்படி பக், 98. M 8 வேலுப்பிள்ளை, ஆ , மு. கு. நூ. பக். 67.
9
. Stalin, J. W., Marxism and the Problems of Linguistics,
P. 9.
10 சிவத்தம்பி, கா., வானமாமலை மணிவிழா ம்ல்ர், பக். 7 11. கருணுகரன், கி , சமுதாய மொழியியல், பக். 2 12. சீனிவாசன், ரா. , மொழியியல், பக். 292 13. வரதர: சன், மு. மு. கு. நூ. பக். 7 14. பாரதியார் கவிதைகள், தேசிய கீதங்கள், தமிழ், 15. வரதராசன் மு , மு. கு. நூ. பக், 234 16. சீனிவாசன், ரா. மு கு. நூ. பக், 7
17 வரதராசன் மு. மு. கு. நூ. பக் 15.
இலக்கியமும் மொழியும் - முன்னுரை 27
18. சண்முகதாஸ், அ. , நமது மொழியின் இயல்புகள்,
L14. 3
19. சனமுகதாஸ், அ, ‘குழந்தை மொழி' , பசறைத்
தமிழ் வித்தியாலய மலர், 1973
20. Vandreys, Language
21. வரதராசன், மு. மு. கு. நூ. , பக். 14
22. மு துச் சண்முகன், இக்காலத் தமிழ், பக். 9
23. நன்னூல், கு. 278,
24. மேற்படி, கு. 273, 274.
25. நடராசா. செ. மட்டுநகர், "செந்தமிழ்ச் சாயல் தழீஇய அந்நியமொழிச் சொற்கள்', இளங்கதிர்,
1949一50” 26. Christopher Grand well, A Study of the Sources of
Poetry, p 4.
27. கைலாசபதி, க. ஒப்பியல் இலக்கியம், பக். 69. 28. மேற்படி, பக். 68. 29. மேற்படி, பக். 76. 30. சண்முகதாஸ். அ. , 'ஆக்க இலக்கியமும் மொழியிய லும்', ஆக்க இலக்கியமும் அறிவியலும், பக். 57. 31. சண்முகதாஸ் , அ , 'ஈழத்து நாடக வரலாற்வில் ஒரு
தமிழ்ப் பேராசிரியர்", இளங்கதிர், பக். 67-8. 32. சொக்கலிங்கம், க., ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய
வளர்ச்சி (விரிவான தகவல்களுக்கு) , 33. கணபதிப்பிள்ளை, க., நாளுடகt , முன்னுரை, பக். 5-8 31. முத்துச் சண்முகன், மு கு. நூ. , பக். 9 35. மேற்படி, பக். 22 36. மேற்படி, பக். 32 37. முத்துச் சண்முகன், இக்கால மொழியியல, பக். 243 38. மேற்படி. பக். 235.
Page 28
8
39.
40.
ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
முத்துச் சண்முகன், இக்காலத் தமிழ், பக், 17 இவ்விடயத் தொடர்பாகப் பார்க்க : முத்துச் சண்முகன், "யாழ்ப்பாணத் தமிழ்' இக்காலத் தமிழ், பக். 15
Suse endirarajah, S. , A Descriptive study of Ceylon Tamil (With special reference to Jaffaa Tamil), Unpublished thesis, Annamalai University, 1967. Shanmugampillai, M., “A Tamil Dialect in Ceylon', IL. 23 (1962) pp. 90-98. Sanmugadas, A. The Phonology of Verbal Forms in Colloquial Ceylon Tamil, Unpublished Ph. D. thesis, University of Edinburgh, 1972,
2 ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்குப் பிரயோகமும் -வரலாறு
qALLLSA SAAAAA ALqLSLSLSLSLEELLS SqL LqS qLSLekLS qLLSSA LS Aq SLq qALqLqSLAqSAq S
ஈழத்துத் தமிழ்ப் புனைகதை இலக்கிய வரலாற்றுச்
சுருக்கம்
19ஆம் நூற்ருண்டின் ஆரம்ப காலத்திலே ஈழத்தின் அரசியல், சமூக அமைப்புகளிலேற்பட்ட மாற்றங்கள், அக்காலத்தெழுந்த ஈழத்து இலக்கியங்களிலும் பிரதிபலித் தன. சுதேச மன்னர்களின் ஆட்சிபீடங்கள் ஐரோப்பியர் கைகளுக்கு மாறியமை, ஈழத்தின் சமூக அடித்தனத்தினையே ஆட்டங்காணச் செய்தது. ஐரோப்பியர் வருகையோடு இடம் பெற்ற அரசியல் மாற்றங்கள், சமூக நிலைமைகளிற் பாரிய விளைவுகளை ஏற்படுத்தின.
கோட்டை, கண்டி, யாழ்ப்பாண அரசுகளின் வீழ்ச்சி யானது, நிலமானிய சமூக அமைப்பின் அடித்தளங்களை வலுவிழக்கச் செய்தது. இவ்வமைப்பிற் சிக்குண்டு கிடந்த சுதேசிகளே, ஐரோப்பியர் வகுத்த புதிய ஜனநாயகப் பாதையானது புதியதொரு சமூக அமைப்பினுக்கு இட்டுச் சென்றது. அரசியல், கல்வி, கலாசாரம், மொழி, தொழில் வாய்ப்புக்களிலே புதிய பாதைகள் வகுக்கப்பட்டன.
விவசாய நிலத்தோடு கட்டுண்டு கிடந்த மக்கள், புதிய தொழில் துறைகளிலே நாட்டங் கொண்டனர். விவசாய அடிப்படை மாற்றம் பெற்றது, உணவுப் பயிர்ச் செய்கை
Page 29
30 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
பணப்பயிர்ச் செய்கையாக மாறியது, சமூகத்தின் உயரந் தஸ்தை நிலை நிறுத்துவதான கல்வி முறை, சாதாரண மகனுக்கும் அறிவு புகட்டு: ஒரு பொதுத் துறையாக மாற்றம் பெற்றது. சாதி அமைப்புக்களும் சமய வகுப்புக் களும் ஆட்டங்காணலாயின. புதிய வீதிகள் திறக்கப் பட்டமை, கிராமத்தோடு கட்டுண்டு கிடந்த மனிதனைப் பரந்து விரிந்த ஓர் உலகிலே முன்னிறுத்துவதாயிற்று. இம் மாற்றங்கள், ஈழத்துச் சமூக அமைப்புகளிற் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாயின. ஈழத்து இலக்கியங்களும் இவ்வாரு ன மாற்றங்களினலே தாக்கப்பட்டதன் விளைவே, ஈழத்துத் தமிழ்ப் புனைகதைகளின் தோற்றமாயமைந்தது
இம்மாற்றங்களினல், நிலமானிய அமைப்பினைப் புலப் படுத்திவந்த இலக்கியங்கள் சிறிதே புதிய ஜனநாயகவழி திசை திரும்பலாயின. இதுவரைகாலமும், கடவுளும் மன்ன னும் நிலக்கிழானுமே இலக்கிய நாயகர்களாயினர். அத்துடன், அவர்களைப் பாடுவதற்குச் செய்யுள் : ழக்கே பயன்படுத்தப்பட்டுவந்தது. இந்நிலை 19ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியிலே செல்வாக்கினை இழக்க, அதன் விளைவாகச் சாதாரண மனிதன் அவ்விடத்தை ஆக்கிரமித்துக் கொண்டான். அவனைப் பாடும் இலக்கிய உருவமும் மற்றம் பெற்றது. செய்யுள் வடிவத்துக்குப் பதிலாக உரைநடை செல்வாக்குப் பெற்றது. இவ்வுரைநடையுடன் பின்னிப் பிஃந்ைது நிற்கும் ஓர் இலக்கிய வ60கயே புனைகதை இலக் கியமாகும். புனைகதை இலக்கியம், தாவல், சிறுகதை ஆகிய இருவகை இலக்கிய வடிவங்களையும் உள்ளடக்கியது. ஐரோப்பியர் வருகையினலே ஈழத்தின் சமூக மாற்றங் களோடு உருவான புனைகதை இலக்கியம் , பின்னர் அம் மாற்றங்களின் விளைவுகளைப் பிரதிபலிப்பதாயும், அம் மாற்றங்களின் விளைவுகளே நெறிப்படுத்துவதாயும் அமை யலாயிற்று
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தின் தோற்றம் வளர்ச்சிபற்றி நா. சுப்பிரமணியம் (1978) விரிவாக ாழுதியுள்ளார். இது தொடர்பான ஏண்ய ஆய்வுகள்
ஈழத்துப் புனே சதையும் பேச்சுவழக்கு 3.
அந் நூலிலே குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இக் கட்டுரை யிலே, இவை பற்றி விரிவாக ஆராயாது ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சிப்போக்கே சுருக்கமாகத் தரப்படுகின்றது. ஆய்வு வசதி கருதி, ஆரம் பகால நாவல்கள் (கி. பி. 1900 வரை), இடைக்கால நாவல்கள் (கி. பி. 1901 - 1950 வரை) இக்கால நாவல்கள் (கி. பி 1951 ன் பின்னர்) என மூன்று பிரிவுகளாக வகுத்து ஆராயப்படுகின்றது.
ஆரம்பகால நாவல்கள் (1885 - 1900 வரை)
ஈழத்தின் ஆரம்பகாலத் தமிழ் நாவலாக . 1885 இல் வெளியிடப்பட்ட முகம்மது கா சிம் சித்திலெவ்வை எழுதிய அசன்பே கதை கொள்ளப்படுகின்றது. இந்நாவல் வெளியீடப் பட்டுப் பத்து ஆண்டுகளின் பின்னர் திருக்கோணமலை த சரவணமுத்துப்பிள்ளை மோகனுங்கி என்ற நாவலை எழுதினர். இவ்விரு நாவல்களுமே ஈழத்தின் ஆரம்பகாலத் தமிழ் நாவல்களாக இங்கு கொள்ளப்படுகின்றன. அசன்பே கதை, எகிப்து தேச அரச வம்சத்தைச் சேர்த்த அசன் என்னும் இளைஞனின் வாழ்க்கையைச் சித்திரிக்கின்றது. மர்மங்கள் நிறைந்த அற்புதக் கதை இது. உண்மையே வெல்லும் என்ற சத்திய நெறியை இக்கதை போதிக் கின்றது. மோகனுங்கி, தஞ்சை நாயக்க வம்ச வரலாற்றினைப் பொருளாகக் கொண்டது. இது காதல், வீரம், சூழ்ச்சி என்பன கிபாருத்திய அரசகுடும்பக் கதையாகும்.
எனவே, ஆரம்ப காலத்துத் தமிழ் நாவல்களின் ז68% נ_ו பினைப் பின்வருவனவாக நாம் கொள்ளலாம்.
(அ) முதலாவது தமிழ் நாவலான மாயூரம் வேத நாயகம்பிள்ளையின் பிரதாபமுதலியார் சரித்திரம் போலவே, ஈழத்திலே தோன்றிய அசன்பே கதையும், மோகளுங்கியும் ஒழுக்க நெறியை வற்புறுத்துவன. -
(马) ஆரம்பகால ஈழத்துத் தமிழ் நாவல்கள், பழமைப் பிடியினின்றும் இலகுவிலே மீளமாட்டாதன வாய்ச் சமூகத்
Page 30
岔2 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
தின் உயரந்தஸ்திலிருந்த அரசவம்சத்தினரின் சரித்திரங் களேயே பொருளாகக் கொண்டன.
(இ) இந்நாவல்கள் ஈழத்தவரால் எழுதப்பட்டிருப் பினும் அவை ஈழத்தினைக் களமாகக் கொண்டனவல்ல.
(ஈ) இந் நாவல்களின் மொழிநடை காவியப்பண்பு வாய்ந்தது.
இடைக்கால நாவல்கள் (1901 - 1950 வரை)
இக்காலப்பகுதியில் இயற்றப்பட்ட நாவல்களிலே, ஈழத்தினைக் களமாகக்கொண்டு இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்ற பூனைப்பின் வெளிப்பாட்டினை அவதானிக்3 முடிகிறது, 1936ல் சி. வே. தாமோதரம்பிள்ளே எழுதிய காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி என்ற நாவலுக்குப் பதிப்புரை எழுதிய சி. இ. இரகுநாதையர் பின்வருமாறு குறிப்பிட்டார் :
*மேலைத்தேசங்களில் கற்பனை நூல்கள் மித அதிசயிக்கத்தக்க விதமாக முன்னேற்றமடைந்துள்ளன. உயர் கற்பன சரித்திரங்களே எழுதும் ஆசிரியர் களும் மிகவும் கீர்த் திபெற்றவர்களாய்ப் பலர் இருக் ன்ெறனர். நமது தாய்நாடாகிய இந்தியாவிலும் அனேக கற்பணு சரிதங்கள் வெளிவந்திருக்கின்றன. கீர்த்திபெற்ற ஆசிரியர்களாகவும் பலர் விளங்குகின் றனர்.’’
இக் கூற்ருனது, இடைக்காலத்து ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய பல்வேறு தகவல்களை எமக்குத் தருகின்றது. அவை :
(அ) இடைக்காலத்தெழுந்த ஈழத்துத் தமிழ் நாவல் களுக்கும் ஆதரிசமாயமைந்தவை மேலைத்தேய நாவல்களே. (ஆ) நாவல்களின் பொதுப்பண்பு, அவை கற்பஞ சரிதங்கள ப் இருக்கவேண்டுமென்பதாகும் காவியங்கள், மனிதனேக் கற்பனை உலகிலே சஞ்சரிக்க ஃைப்பது போன்று, நாவலும் கற்பனுரசம் மிக்கதாய் இருக்கவேண்டும்.
ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்கு . 33
(இ) நாவல்கள், காவியப்பாங்குடன் வீாங்குவதுடன் சரித்திரங் கூறுவனவாயும் இருக்கவேண்டும். நாடு, நகர வருணனை, கதாநாயகன், நாயகியரின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு ஆகியன நாவலிலே இடம்பெறவேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
(ஈ) கற்பனுசரித்திரம் எழுதுவதாற் பெருங்கீர்த்தியைப் பெற்றுவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இக்காலத் தெழுந்த நாவல்கள் பலவும், ஆங்கில நாவல்களைப் படித்த மத்தியதர வர்க்கத்தினராலே இந்நோக்கத்துடனேயே எழு தப்பட்டன.
இவ்விடைக்காலத்து நாவல்கள், சமயமாற்றம், சமய போதனை, சமூக சீர்திருத்தம், ஒழுக்கம், காதல், கணவன் மனைவி உறவுநிலை போன்றவற்றைச் சமுதாய நடப்பியல் போடொட்டிச் சித்திரிக்கத் தலைப்பட்டன. இவை, ஈழத் திண்க் களமாகக் கொண்டமைந்ததோடு ஈழம் வாழ் மக்க ளின் சமூக நிலப்பாடு, வாழ்க்கைப் பின்னணி ஆகியவற்றை யும் வருணிப்பனவாயிருந்தன. 1905ல் சி. வை. சின்னப்பா பிள்ளை எழுதிய வீரசிங்கன் கதை மேற்குறித்த பண்புகள் பலவற்றைக்கொண்டதாகும்.
இக்கால கட்டத்திலெழுந்த தாவல்கள், ஐரோப்பி யர் வருகையினுலே ஏற்பட்ட சமூக முரண்பாடுகளைச் சித்திரிப்பனவாக மட்டுமன்றி, அம்மாற்றங்களின் விளைவு களே மேலெழுந்தவாரியாக ஆராயவுந் தலைப்பட்டன. 1925ல் இடைக்காடர் எழுதிய சித்த குமாரன், நீலகண்டன் ஒரு சாதிவேளாளன் ஆகிய நாவல்கள் முறையே சைவசித் தாந்த தத்துவங்களையும், சொத்துடமைக்கான போட்டி, சாதிப்பிரச்சினை ஆகியவற்றையுஞ் சித்திரிக்கின்றன. எஸ் தம்பிமுத்துப்பிள்ளை எழுதிய சுந்தரன் செய்த தந்திரம் (1918) அழகவல்லி (1926) ஆகிய நாவல்கள் முறையே, நேர்மை, சாதிப்பிரச்சினை ஆகியவற்றைச் சித்திரிக்கின்றன. 1938ல் ஸ்ரிக்னி சார்ள்ஸ் இயற்றிய சோமாவதி அல்லது இலங்கை இந்தியர் நட்பு என்ற நாவல், இலங்கை இந்திய தட்புறவை வளர்ப்பதனை நோக்கமாகக் கொண்டிருப்பதுடன்
*。
Page 31
34 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
சிங்கள தமிழ் இனங்களின் ஐக்கியத்தினையும் வலியுறுத்து கின்றது. இவை தவிர, மங்களநாயகம் தம்பையா எழுதிய அநுபவக் களஞ்சியம், நொறுங்குண்ட இருதயம் (1914) அரியமலர் (1926) ஆகிய நாவல்களும், ம. வே. திருஞான சம்பந்தம்பிள்ளை எழுதிய காசிநாதன் நேசமலர் (1924) கோபால நேசரத்தினம் (1926 - 27), துரைரத்தினம் நேசமணி (1927 - 28) ஆகிய நாவல்களும் இக்காலகட்டத்தெழுத்த சமூக நாவல்களாகும்.
ஈழத்து நாவல் இயக்கியப் பரப்பிலே இன்னெரு வகையான நாவல்களின் தோற்றத்தினையும் அவதானிக்க முடிகிறது. 1900 - 1950ம் ஆண்டுகட்கிடைப்பட்ட காலப் பகுதியிலே இந்தியாவில் அரசியல், வரலாறு, சமூக நாவல் களைக் கல்கி எழுதிக்கொண்டிருக்க, ஆரணி குப்புசாமி வடுவூர் துரைசாமி ஐயங்கார் போன்ருேர் துப்பறியும் மர்மநாவல்களை எழுதியமை போல, ஈழத்திலும் இக்காலப் பகுதியிற் பெருமளவு மர்மராவல்கள் தோற்றம்பெற்றன.
எஸ். கே. சுப்பிரமணியம் எழுதிய நீலாகழி (1918) திருமதி செல்பொற்சோதீஸ்வரர் செல்லம்மாளின் இராசதுரை (1924), இடைக்காடரின் நீலகண்டன் ஒரு சாதிவேளாளன் (1985), அ. நாகலிங்கம்பிள்ளையின் சாம்பசிவ ஞானுமிர்தம் அல்லது நன்னெறிக்களஞ்சியம் (1927), வண்ணை மா. சிவ ராமலிங்கம் பிள்ளையின் பூங்காவனம் (1930), வ. மு. சின்னத் தம்பியின் வீராம்பாள் அல்லது விபரீத மங்கை (1930), சார்ள்ஸ் ஸ்ரிக்னியின் தேம்பாமலர் (1929), ஞானபூரணி (1933), சி. வே. தாமோதரம்பிள்ளையின் காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (1936) , மூத்ததம்பி செல்லப்பாவின் சுந்தர வதணு அல்லது இன்பக காதலர் (1938), வரணியூர் ஏ. சி இராசையாவின் பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் (1932), அருணுேதயம் அல்லது சிம்மக்கொடி (1923), ஆகியனவும் வீரகேசரிப் பத்திரிசையிலே அதனுசிரியர் எச். நெல்லையா எழுதிய ஏறத்தாழப் பத்துத் தொடர் நாவல்களும் இக்காலப்பகுதியிலெழுந்த மர்மப்பண்பு நாவல் களென்பர் நா. சுப்பிரமணிம்ம் (1978 : 39).
ஈழத்துப் புண் கதையும் பேச்சுவழக்கு 35
இக்கால நாவல்கள் (1950 இன் பின்னர்)
1948 ஆம் ஆண்டு ஈழம் சுதந்திரமடைந்த சிறிது காலத்திலேயே அரசியற் சித்தாந்தம் பற்றிய கொள்கை களும் விளக்கம்பெறத் தொடங்கி விட்டன. இதகுல், 1950 ஆம் ஆண்டுக்குப் பிந்திய காலத்து இலக்கியங்களின் போக்கிலும் குறிப்பிடக்கூடிய மாற்றங்கள் நிகழ்ந்துள் ளமையை நாம் அவதானிக்கலாம். சிறப்பாக, இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சியானது ஈழத்து இலக்கியங்களின் உள்ளடக்கத்தினை வெகுவாகப் பாதிக்கலாயிற்று. இத் தாக்கங்களுடன், 1956இல் ஏற்பட்ட அரசாங்க மாற்றமும் மொழிப்பிரச்சினையும் ஈழத்துத் தமிழ் நாவல்களையும் பாதித்தன. இக் காலகட்டத்திலேயே, சமூகத்தின் பல்வேறு அம்சங்களையும் பிரதிபலிக்கும் நாவல்கள் உருவாக ஆரம் பித்தன. புரட்சிகர நாவல்கள், அரசியல் பொருளாதார நாவல்கள், சமூக நாவல்கள், குடும்ப நாவல்கள், வரலாற்று நாவல்கன், துப்பறியும் நாவல்கள் எனப் பல்வேறு கிளேக ளாக ஈழத்து நாவல் இலக்கியப் பரப்பு விரிவடைகின்றது.
1950 ஆம் ஆண்டுக் காலம்வரை, மேலெழுந்தவாசியாக வருணிக்கப்பட்ட சில சமூகப் பிரச்சினைகள், ஆழமாகவும், விரிவாகவும் அணுகப்பட்டன. இவ்வ:ாருள நோக்கிலே முதன் முதலில் நாவல் எழுதத் தொடங்கியவர் இளங்சீரனே! 1956இல் இவர் எழுதிய தென்றலும் புயலும் என்ற நாவலே, வர்க்கம், சாதிப்பிரச்சினை போன்றவற்றை யதார்த்தமாகச் சித்திரிக்கலாயிற்று, இதுபோன்றே, 1962இல் இவர் எழுதிய நீதியே நீ கேள் நாவலும் பொருள் முதல்வாத நோக்கிலே வர்க்கம், சாதி, இனப்பிரச்சினைகளைச் சித்திரிப்பதாயிற்று.
சணேசலிங்கம், டானியல், பெனடிக்ற் பாலன், அகஸ் தியர், தெணியான் ஆகியோரது நாவல்களும் பொருள் முதல்வாத நோக்கிலே சமூகப் பிரச்சனைகளை அணுகியவை யாகும். கணேசலிங்கனின் நீண்டபயணம், சடங்கு, செவ் வானம், தரையும் தாரகையும், போர்க்கோலம், மண்ணும் மக்களும் ஆகியன, வர்க்கப்போராட்டத்தை ஆழமான நோக்கிலே சித்திரிப்பனவாகும். பெனடிக்ற் பாலனின்
Page 32
36 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
சொந்தக்காரன், கோகிலம் சுப்பையாவின் தூரத்துப் பச்சை ஆகியன தோட்டத் தொழிலாளரின் வர்க்கப் போராட்ட முனைப்பினப் படம்பிடித்துக் காட்டுபவை, டானியலின் பஞ்சமர் நாவலும், தெணியானின் விடிவைநோக்கி நாவலும் சாதிக்கொடுமையின் கொடூரத்தையும் அதற்கெதிரான போராட்டங்களையும் சித்திரிப்பனவாகும்.
தெளிவத்தை ஜோசப், பாலமனேகரன், கே. வி. எஸ். வாஸ், எஸ் பொன்னுத்துரை, அருள் சுப்பிரமணியம், செங்கை ஆழியான், நா. பாலேஸ்வரி, கணகசெந்திநாதன், சொக்கன் ஆகியோர் காதல், ஆண்பெண் உறவுநிலைகள், அவற்றிலேற்படும் பிறழ்வு நிலகள் போன்றவற்றைச் சித்திரிக்கும் குடும்ப நாவல்களே எழுதுகின்றனர். வ. அ. இராசரத்தினம் கிரெளஞ்சப் பறவைகள் என்ற வர லாற்றுக் கற்பனை நாவலை எழுதியுள்ளார்.
ஈழத்துச் சிறுகதை இலக்கியம்
புனேகதை இலக்கியத்தின் ஒரம்சமான சிறுகதை இலக்கியம், நாவல் இலக்கியத்தின் பின்னரேயே தோற்றம் பெற்றதெனினும் புனைகதை இலக்கியத் துறையிலே அதன் தாக்கம் மிகுதியாகவும் உணரப்படுகின்றது. தனியே சமூக சீர்கிருத்தக் கருத்துக்களைப் பொருளாகக் கொண்ட ஈழத்து நாவல்களுக்குப் பெருமளவு வழிகாட்டியாய் அமைந்தது சிறுகதை இலக்கியமே. அரசியல், சமூக, பொளாதாரப் பிரச் சினேகள் முதன்முதலிலே முனப்புடன் எழுத்தாளப்பட்டது சிறுகதை இலக்கியத்திலேயாகும். இப்பிரச்சினைகளே ஆரணத்துவமாக ஆராய்ந்து தீர்வுகாணும் 'சஞ்சீவியாக” சிறுகதைகள் இல்லாவிடினும், இவற்றை இலக்கியப் பொருளாக எடுத்தாளலாம் என்பதனை நாவலாசிரியர் களுக்கு உணர்த்தியது சிறுகதை இலக்கியமே. இதஞலே தான், ஈழத்தின் ஆரம்பகாலச் சிறுகதை ஆசிரியர்கள் பலரும் பிற்காலத்திலே சிறந்த நாவலாசிரியர்களாகத் திகழ்வதை நாம் அவதானிக்கலாம். பாரிய அரசியல் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளைச் சிறுகதை வடிவத் தினுள் சிறப்பாகச் சித்திரிக்கமுடியாது போகவே, நாவல்
ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்கு , 37
இலக்கிய முயற்சியில் அவர்கள் ஈடுபடுவதனை நாம் காணலாம். அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகளிற் பல்வேறு நிலைகளிலே இவ்வெழுத்தாளர்கள் வேறுபட்டிருப் பினும், இவர்களிற் பலர் ஆரம்பகாலத்திலே சிறுகதை எழுத்தாளர்களாய் இருந்தோரே என்பதை நாம் Grygiši; கொள்ள வேண்டும். கணேசலிங்கம், டானியல், தெணியான், பெனடிக்ற் பாலன், அகஸ்தியர், எஸ். பொன்றுத்துரை, சொக்கன், கனக செந்திநாதன், தெளிவத்தை ஜோசப் போன்ற பலரும் இவ்வாறு உருவான நாவலாசிரியர்களே.
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றம், வளர்ச்சி பற்றி க அருளுசலம் (1980) விரிவாக ஆராய்ந்துள்ளார். ஈழத்தின் சிறுகதை வரலாற்றினே, ஆரம்பகாலச் சிறுகதைகள் 1950ஆம் ஆண்டின் பின்னருள்ள இடைக்காலச் சிறுகதைகள் 1960ஆம் ஆண்டின் பின்னருள்ள இக்காலச் சிறுகதைகள் என மூன்று பிரிவுகளாக வகுத்து தோக்கலாம்.
ஆரம்பகாலச் சிறுகதைகள்
ஈழத்தின் சிறுகதை இலக்கிய முன்ளுேடிகளாகச் சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகி யோர் கொள்ளப்படுகின்றனர். இருப்பினும் இவர்களின் காலத்திற்கு முன்னரேயே சந்தியாகோ சந்தியவர்ணம் பிள்ளையின் கதாசிந்தாமணி செ. சந்திரபால கணேசனின் நற்பவளத்திரட்டு ஆகிய சிறுகதைத் தொகுதிகள் ஈழத்திலே வெளிவந்துவிட்டன. இத்தொகுதிகளிலுள்ள கதைகள் இக்காலச் சிறுகதைகள் போன்ற உருவம், உள்ளடக்கம், உத்தி முறைகளைக் கொண்டு விளங்காமையால், அவை சிறுகதைகளாகக் கொள்ளப்படுவதில்லை என அருணுசலம் (1980) குறிப்பிடுகின்ருர். எனவே, ஈழத்தின் சிறுகதை வரலாற்றைத் தொடக்கி வைத்தோர் சி வைத்திலிங்கம் இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகிய மூவரே என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது. இவர்களுடன் சோ. சிவபாத சுந்தரம், குலசபாநாதன், சோ. நடராசன் ஆகியோரையும் ஆரம்பகாலச் சிறுகதை எழுத்தாளராகக் கொள்ளலாம்.
Page 33
38 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
இவர்களின் படைப்புக்களுக்குக் களமமைத்துக் கொடுத்தது ஈழகேசரிப் பத்திரிகையாகையால், இவர்கள் 'ஈழகேசரிக் குழுவினர்' என்றும் அழைக்கப்பட்டனர். *
சிறுகதை முயற்சியில் இவர்கள் ஈடுபடத் தொடங்கிய போது, இந்தியாவிலே மணிக்கொடிப் பத்திரிகையிற் கு. ப. ரா. மெளனி, புதுமைப்பித்தன், சிதம்பர சுப்பிர மணியன் ஆகியோர் பல்வேறு உத்திகளைக் கையாண்டு சிறுகதைக%ள எழுதி வந்தனர். இக்கால கட்ட ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களுக்கு முன்னேடிகளாக விளங்கி யோரும் இவர்களேயாவர். பொதுவாக, மணிக்கொடி எழுத்தாளர்களது நேரடித் தாக்கம் ஈழகேசரிக் குழுவி னரைப் பாதித்துள்ளதாகக் கருதப்படுவதுண்டு. சி. வைத் தியலிங்கம், இலங்கையர்கோன் ஆகியோாது ஆக்கங்களிற் கு, ப. ரா. எழுத்தின் நேரடித் தாக்கத்னேயும், சம்பந் தனின் கதைகளிலே மெளணியின் தாக்கத்தையும் காணக் கூடியதாக உள்ளது. ஆரம்பகால ஈழத்து எழுத்தாளர்கள் பலரும், தென்னிந்தியத் தமிழ்ச் சஞ்சிகைகளிலே தமது ஆக்கங்கள் பிரசுரமாவதனையே அவாவி நின்றனர், கலை மகளிலும், ஆனந்தவிகடனிலும் பிரரசு மாகும் சிறுகதை க்ளே தரமானவை என்ற எண்ணமும், அவற்றில் எழுதுபவனே சிறந்த எழுத்தாளன் என்ற மயக்கமும் இக்கால ஈழத்து எழுத்தாளர்களை வெதுவாகப் பாதிக்கலாயின. இம் மோக மானது, ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கத்திறனையும் மலினப்படுத்துவதாயிற்று கலைமகளையும் ஆனந்த விகட னேயும் இலடசியப் பத்திரிகைகளாக வைத்துக்கொண்டு எழுதிய தன்மையைக் கவனிக்க முடிகிறது. யதார்த்த இலக்கிய சாரரின் பொருளாகிவிட்ட பசி, முதலாளி தொழி லாளிப் போராட்டங்கள் சூசகமாகவே கையாளப்பட்டன. பிரசாரத்தின் வேகம் கலைக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக் கின்றது. * 3 என இம் மோகத்தின் விளவுபற்றிக் கண்க செந்திநாதன் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. இதஞலே தான், அரசியற் கருத்துக்களையோ, வர்க்கப் போராட்டங் கண்யோ, புரட்சிகரக் கருத்துக்களையோ இவர்களாலே வெளிப்படையாகவோ தெளிவாகவோ கூறமுடியாது போய் விட்டது. சமூக நோக்கிலும் ஆழமான அகலமான நோக்
ஈழத்துப் புனே கதையும் பேச்சுவழக்கு . 39
கின்மை இவர்தம் கதைகளின் ஊறுபாடாயமைந்தது உருவம் மட்டுமே இக்காலக் கதைகளிற் சிறப்புற அமைந்து காணப்பட்டது.
அத்துடன், வரலாற்றுச் சம்பவங்களும், இதிகாச புராணக் கதைகளும், காதல், கழிவிரக்கம், ஆண் பெண் உறவு நிலைகளிலேற்படும் பிறழ்வுச் சிக்கல்கள் ஆகியனவே இவர்தம் கதைகள் பலவற்றின் கருப்பொருளாயமைந்தன. இந்தியாவினதும், ஈழத்தினதும் சமூக அடிப்படைப் பிரச்சினைகள் வேறு வேரு னவையே இருப்பினும் இக்கால கட்ட ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர் பலரின் கதைகளிலும், இரு நாடுகட்கும் பொதுவான பிரச்சினைகளே சித்திரிக்கப் பட்டுள்ளன. தென்னிந்தியச் சஞ்சிகைகளிலே தமது படைப்புக்கள் பிரசுரமாக வேண்டும் என்ற ஆர்வம், இவர்தம் கதைகளிலே ஈழத்தின் தனித்துவமான பிரச்சினைகள் சித்திரிக்கப்படுவதற்கு இடையூருயமைத்தது.
இவ்வாறு தென்னிந்தியத் தமிழ்ச் சஞ்சிகைகளின் தயவை எதிர்பார்த்து நின்ற ஈழத்து எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாயமைந்தது 1942 ஆம் ஆண்டு ஈழத்தி லமைக்கப்பட்ட மறுமலர்ச்சிச் சங்கமாகும். பழமையை அத்திவாரமாகக் கொண்டு புதுமையைக் கட்டி எழுப்பு வதும், பழமையை மட்டும் புதுப்பித்துக் கொண்டிருக்காமற் புத்துயிரும், புத்தழகும் கொண்ட புதுப்புது முறைகளிலே தமிழ் இலக்கியப் பரப்பி ன விரிவடையச் செய்ய வேண்டும் என்பதே இச் சங்கத்தினரது நோக்கமாயமைந்தது. இந் நோக்கங்களை அடி நாதமாகக் கொண்டு இவர்களாலே நடாத்தப்பட்ட மறுமலர்ச்சி என்ற கையெழுத்துப் பிரதி ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர் தம் பார்வையைக் கூர்மைப் படுத்துவதாக அமைந்தது. சமுதாயப் பிரச்சினைகள் பலவும் துணிந்து ஆராயப்படுவதற்கு, இக் கையெழுத்துப் பிரதி பெரிதும் உதவுவதாயிற்று. ஈழத்து மக்களின் எண்ணங்கள் சிந்தனைகள் பிரச்சினைகள் முதன் முதலிலே இக் கையெழுத் துப் பிரதியிலேயே சிறுகதைகளாகப் பரிணமித்தன. இக் காலகட்டத்திலேயே, ஈழத்தின் ஈழகேசரியும் தென்னிந்திய சஞ்சிகைகளான கலைமகள், ஆனந்த விகடன், ரோம ஊழியன்
Page 34
40 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
சரஸ்வதி ஆகிய பத்திரிகைகளும் பிரக்ஞைபூர்வமாக ஈழத்து ஆக்கங்களுக்கு முதன்மைத்துவம் தரலாயின. இதனுலேயே, 1940 ஆம் ஆண்டு காலப் பகுதியிலே வீறுகொண்ட ஓர் "சிேத்தாளர் பரம்பரை ஈழத்தில் உருவாக முடிந்ததை ம"வைதானிக்கலாம்.
அ. செ. முருகானந்தம், தி. ச. வரதராசன், வ. அ. இராசரத்தினம், சு. வேலுப்பிள்ளை, கனக செந்தி த"Aன், தாளையடி, சபாரத்தினம், அ. ந. கந்தசாமி, செக்கன், இராஜநாயகன் ஆகிய முதிர்ந்த எழுத்தா 6Tifar இக்காலகட்டத்திலே உருவானவர்களாவர். சி. செ. முருகானந்தம் தமது சிறுகதைகளிலே கிராமியச் குPலே அழகாகப் படம்பிடித்துள்ளார். தி. ச. வரதராசன், காAற்கதைகளே ஆக்கிஞர். சு. வேறுப்பிள்ளே உருவகக் YEESL LLTLLLLLTTTS TTTTTT tTLTTLLL SS LLLLLS LL LLTL TT ttTTT யுள்ளனர். இராஜராயகன் நனவே rடை உத்தியிலான கAதகளை எழுதி வெற்றிபெறலாஞர். 4
இடைக்காலச் சிறுகதைகள் (1950 - 60 வரை)
1950 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தின, ஈழத்துச் சிறுசிதை இலக்கியத்தின் அதிதீவிர வளர்ச்சிக் காலம், எலி"லாம். வரலாறு, கற்பனை ஆகிய குறுகிய வட்டத்தினுள் மு->ங்கிக்கிடத்த சிறுகதை இலக்கியப் பாப்பானது, தேசியம் மண்வாசனை, யதார்த்தம், அரசியற் சித்தாந்தம், தத்துவம், சமூA சீர்திருத்தம் ஆகிய பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி பெறுவதும் இக் காலப் பகுதியிலே யாகும். சிறப்பாக, இக் காலப் பகுதியிலெழுந்த சிறுகதைகளிலே அரசியல் நிலைமை களில் தாக்கத்தினைத் தெளிவாக இனங்காண முடிகிறது
இந்தியாவிலே மகாத்மா காந்தி தொடங்கிய அகிம் சைட் போராட்டமும், அண்ணுத்துரையின் திராவிட நாட் டுக் Sகாரிக்கையும் ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களை வெகு வாகிக் கவர்ந்தன. மேலைநாட்டுக் கல்வியும் ரூசியப் புரட் சியும் அந் நாட்டின் தீவிர வளர்ச்சியும் சாம் நாட்டிலே கொம்யூனிச சித்தாந்தத்தின் வளர்ச்சிக்கு வித் திட்டன
ஈழத்துப் புண்கதையும் பேச்சுவழக்கு. 41
1956 இல் ஈழத்திலேற்பட்ட இனக்கலவரமானது மொழி, இனம் பற்றிய நோக்குகளே மேலும் கூர்மைப்படுத்தியது. இக்காலப்பகுதியிலெழுந்த சிறுகதைகள் பலவற்றிலும் இவற்றின் தாக்கத்தினை உணரமுடிகிறது.
இக்காலப்பகுதியில் உருவாகிய எழுத்தாளர்களான செ. கணேசலிங்கம், என். கே. ரகுநாதன், கே. டானியல், டொமினிக் ஜீவா, நீர்வை பொன்னையன், அகஸ்தியர், பெனடிக்ற் பாலன் போன்ருேர் தத்துவார்த்த நோக்கிலே பிரச்சினைகளை அணுகவும், அவற்றைச் சிறுகதைகளிலே வடிக்கவும் முயன்றனர். எஸ். பொன்னுத்துரை. அ. முத்து லிங்கம், பித்தன், உதயணன், அருள். செல்வநாயகம், தெளிவத்தை ஜோசப், சில்லையூர் செல்வராசன், சிற்பி போன்ருேர் பாலியல், சமூக சீர்திருத்தம் தொடர்பான சிறுகதைகளை எழுதினர்.
இக்காலப் பகுதியிலேயே, ஈழத்தின் பிரசுர களமும் சற்று விரிவடைவதனை நாம் அவதானிக்கலாம். தினகரன், வீர கேசரி, சுதந்திரன் போன்ற பத்திரிகைகள் வாரந்தோறும் சிறுகதைகள் பலவற்றைப் பிரசுரித்தன. சிறுகதைத் தொகுப்புக்கள் பல வெளிவரலாயின. செ. கணேசலிங்கனின் நல்லவன், ஒரே இனம், சங்கமம் கே. டானியலின் டானியல் கதைகள், டொமினிக் ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும், பாதுகை ஆகிய தொகுதிகளில் வெளியான சிறுகதைகள் இக்காலத்தனவே.
இக்காலச் சிறுகதைகள் (1960 இன் பின்னர்)
1960 ஆம் ஆண்டுக் காலப் பகுதியிலே நந்தி, மு. தளைய சிங்கம், செ. கதிர்காமநாசன், செ. யோகநாதன், செம் பியன் செல்வன், செள்கை ஆழியான், குந்தவை, பவானி, தெணியான், புதுமைப்பிரியை, சாந்தன், நெல்லை க. பேரன், அ. யேசுராசா, குப்பிளான் ஐ. சண்முகன், மூ. நித்தி யானந்தன், மருதூர்க் கொத்தன், திக்வல்லை கமால், மண்டூர் அசோகா, காவலூர் ஜெகநாதன், மல்லிகை சி. குமார், எம். ஏ. நுஃமான், பரிபூரணன், திமிலைத்துமிலன்,
6
Page 35
42 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
ச. முருகானந்தன், டானியல் அன்ரனி, எம். எச். எம். சமீம், அன்பு ஜவஹர்ஷா அன்புடீன் ஆகியோர் சிறுகதை ஆக்க முயற்சியிலே ஈடுபடுகின்றனர்.
1960 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலச் சிறுகதைசள், முன்னைய காலச் கிறுகதைகளின் பண்புகளினின்றும் முற்றி லும் வேறுபட்டவையாகும் , தமது சிறுகதைப் படைப்புக் கண்ப் பற்றிக் காலஞ்சென்ற செ. கதிர்காமநாதன் பின் வருமாறு கூறிஞர் :
'கலேயும் இலக்கியமும் மக்களுக்காகவே என்ற கோட்பாட்டை உடையவன் நான். ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்க்கையின் பிரதிபலிப்புக்களும், விளைவு களுமே என் கதைகளின் உள்ளடக்கம், வாழ்க்கை, தாங்கொணுத-அழுத்திக் கொல்கிற சுமையாக ஏன் இருக்கிறது என்பதைத் துருவித் துருவி ஆராயும் உளப் பாங்கே எனது கதைகளின் ஊற்றுக்கண். ஆதலின் சுலை கலைக்காகவும் அழகுக்காகவும் எப்படியும் எழுத லாம் என்ற இலக்கியக் கோட்பாடுகளின் அடியொற்றி வாழ்க்கைக்கு முரணுன கற்பனைக் கதைகளேத் தழுவி நிற்கும் சமத்காரம் என் கதைகளுக்குக் கிடையா.’ 5
இவை, இவர்தம் கதைகளுக்கே பிரத்தியேகமாக அமைந்த பண்பன்று. இக்காலகட்ட எழுத்தாளர் பலரின் கதை களிலும் இப் பண்பே மேலோங்கி நிற்கக் காணலாம்.
சமூகசீர்திருத்தக் கருத்துக்கள், இக்காலகட்டச் சிறு கதைகளிலே மிக ஆழமான ஆய்வுகட்குட்பட்டன. மனித னது இன்னல்களுக்குக் காரணங்கள் யாவை, அவர்கள் படும் வேதனைகள் எவை, இவ்வின்னல்களை வென்று செல்லும் மார்க்கங்கள் யாவை எனத் துருவித்துருவி ஆராய்ந்து செல்வதும், அவற்றை மக்களுக்குத் தெளிவாக எடுத்துக்காட்டுவதுமே இக்காலச் சிறுகதைகளின் இயல்பா யமைந்தன. சமுக நிலைமைகளினதும், சம்பவங்களினதும் ஒவ்வொரு கோணமும் சிறுகதைகளிலே மிக நுணுக்கமாக ஆராயப்படுகின்றது.
ஈழத்துப் புண்கதையும் பேச்சுவழக்கு. . 43
இதஞலேதான், இக்காலகட்டச் சிறுகதைகள், புரட்சி கரமானவையாய், சமூகக் கொடுமைகளின்மீது சீற்றம் கொண்டனவாய், ஏழை எளிய மக்களின்மீது தோழமைப் பண்பு பூண்டனவாய் அமைந்திருப்பதை நாம் காணலாம். சிறப்பாக, அரசியல் சமூக நோக்கிலே இடதுசாரி எழுத் தாளர்களின் எழுத்துக்கள் மிகவும் வேகமும் விறுவிறுப்பும் Glas rrabri Grount tij அமைகின்றன, இதனைப்போன்றே, சாதாரண மேல் மட்ட உணர்வுகளேயும், அவற்றின் விளைவு களேயும் விபரிக்கத் துணிந்த எழுத்தாளர்களும் அவற்றினை மிக நுணுக்கமாகவும், விளக்கமாகவும் சித்திரிக்க முனைகின்
றனர்.
ஈழத்துப் புனே கதைகளிற் பேச்சுவழக்குப் பிரயோக வரலாறு.
'ஒரு குறிப்பிட்ட சமூகத்தினைப் பிரதிபலித்து ஆக்க இலக்கியங்கள் படைக்க முனைபவர்கள், அச் சமூகத்தின் ரோக்குகளையும் போக்குகளையும் புலப்படுத் தும் வாழ்வு நிலைகளையும் கருத்துத் தொடர்புக்கு இன்றியமையாத மொழியின் நிலையையும் தன்ருள் அறிந்திருத்தல் அவசியமாகும், அச் சமூகத்தின் எண் ணக் கருத்துக்களை அச் சமூகத்தினர் பேசும் மொழி தான் சாமிக்குப் புலப்படுத்துகின்றது ஆகவே, அவர்க ளுடைய பேச்சுமொழியை நன்குணர்தல் அவசிய மானதாகும். " 5
எனவே, ஈழத்திலே எப்போது எமது சமூகத்தினைப் பிரதி பலிக்கும் இலக்கியங்கள் தோன்றினவோ, அப்போதே அவ் விலக்கியங்களிற் பேச்சுமொழியும் இடம்பெறத் தொடங்கி விட்டது. தமிழ் இலக்கியத்தினைப் பொறுத்தவரையிலே, ஆக்க இலக்கியங்களிற் பேச்சு வழக்குப் பிரயோகத்தினைத் தொடக்கி வைத்தோரி ஆங்கிலப் பாதிரிமாரே.
கீழைத் தேசங்களிலே தமது அரசியல், பொருளாதார நடவடிக்கைகளை நிலைப்படுத்துதற்குச் சுதேசிகளின் மத மாற்றம் இன்றியமையாதது என்பதை ஐரோப்பியர் நன்கு
Page 36
44 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
ணர்ந்து கொண்டனர். எனவே, சுதேசிகளை மதமாற்றம் செய்வதன்பொருட்டு, அவர்தம் மொழிகளே ஐரோப்பியப் பாதிரிமார் பயில்வராயினர். மிகச் சாதாரண மக்களை அவர் களின் மொழியிலேயே பயிற்றுதல் சுலபமானதெனக் கண்டு கொண்ட இவர்கள், பேச்சுமொழி கலந்த மொழி தடை யிலே தமது மதப் பிரசாரத்தினையும், பிரசங்கங்களையும், நூல்களையும், துண்டுப் பிரசுரங்களைபும் செய்யத் தலைப் பட்டனர். இவர்களிற் சிலர், மதப்பிரசார வேலைகளில் மட்டுமன்றி, ஆக்க இலக்கிய முயற்சியிலும் ஈடுபடலாயினர். அங்கும், பேச்சு மொழி கலந்த ஒரு மொழி நடையினையே அவர்கள் கையாளலாயினர். தமிழ்ச் சிறுகதையின் தந்தை யெனக் கருதப்படும் வீரமாமுனிவர் இயற்றிய பரமார்த்த குரு கதை இத்தகைய மொழி நடையிலே இயற்றப்பட்ட தொன்றே. பின்வரும் பகுதி பரமார்த்தகுரு கதையினின்றும் தரப்படுகின்றது :
"அப்புறம் போகையில் வழுக்கு நிலத்திலிரமாகக் கொள்ளத் தளர்ந்த நடையாய்ப் போகிற நொண்டிக் காற் குதிரை தவறி விழுந்ததாம். அந்தண்டையி லிருந்த குழியிற் குருவுந் தலே கீழுங் கால் மேலுமாக விழுந்து கோவென்றலறி யென்னையெடுக்கவோடி வாருங்கோளென்று கூப்பிட்டார். சீடருமோடிவந்து முன்னெழுதித் தந்த வோலையை யெடுத்தொருவன் வாசிக்க விழுந்த தஃலப்பாகெடுக்கவும், விழுந்த சோமன் வேஷ்டியெடுக்கவும், விழுந்த சட்டை யுன் ளுடை யெடுக்கவுமென்றவன் வாசித்தபடி ஒன்முென்ரு பெல்லாத்தையுமெடுத்து வைக்கக் குகுக்கள் நிரு வாணமா யங்கே கிடந்தார், ’’
இவ்வுரை தடைப் பகுதியிற் பாத்திர உரையாடல் மட்டுமன்றி, ஆசிரியரின் வருணனைப் பகுதியும் பேச்சு வழக்குக் கலந்த மொழிநடையிலே 6 முதப்பட்டுள்ளமை art 60376) frth.
ஈழத்துப் புனைகதை இலக்கியங்களிற் பேச்சுவழக்குப் ரேயோக வரலாறு பின்வரும் நான்கு காலப்பகுதிகளாக வகுக்கப்பட்டு ஆராயப்படுகின்றது;
ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்கு . 45
1875 - 1917 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதி 2. 1918 - 1940 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதி 3. 1941 - 1960 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதி 4. 1960 ஆம் ஆண்டின் பின்னருள்ள காலப்பகுதி
1875 - 1975 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதி
ஈழத்தைப் பொறுத்தவரையிலே, புனைகதை வரலாறு 1875 இல் சந்தியாகோ சத்தியவர்ணம்பிள்ளை எழுதிய சிறு கதைத் தொகுப்பான கதாசிந்தாமணியுடன் ஆரம்பமாகிறது. இதன் பின்னர் 1885 இல் சித்திலெவ்வை எழுதிய அசன்பே கதையுடன் நாவல் இலக்கியம் தோற்றம் பெறுகிறது.7
ஆரம்பகால ஈழத்துச் சிறுகதைகளும், நாவல்களும் ஈழத்துச் சமூக அமைப்பினைச் சித்திரித்தனவல்ல. அவை, மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளையோ, போரtட்டங் களையோ பொருளாகக் கொண்டவையல்ல. மாமுக வரலாற்று நிகழ்ச்சிகளையும், நல்லுபதேசங்களையுமே அவை காவியப்பாங்குடன் சித்திரித்தன. ஆரம்பகால நாவல் களான அசன்பே கதையோ, மோகனுங்கியோ ஈழத்தினைக் களமாகக் கொண்டதல்ல.
இப்புனைகதைகளிலே இடம்பெறும் கதாபாத்திரங்களும் இயல்பிகந்த மானிடப் பண்பு கொண்ட, அற்புத சிருஷ்டி Frra, G36, 3. rTawri Lu LLGUT. அவை யாவும், சாதாரண மனிதன் பார்த்துப் பின்பற்றுமளவுக்கு அமானுஷ்யத் தன்மைகள் கொண்டனவாக உருவாக்கப்பட்டன. எனவே, கதைப் பொருளிலும் பாத்திரவார்ப்பிலும் இக்காலகட்டப் புனைகதைகள் சமகால சமூக நிலைமைகளே எவ்வகையிலும் சித்திரிப்பனவாக அமையவில்லை. இதஞல், இக்காலப் புனை கதைகளின் மொழிநடையும் இயல்பானதாகவன்றிக் காவி யப்பண்பு வாய்ந்ததாகவே காணப்பட்டது. புனைகதை களிலே, ஆசிரியர் கூற்றுக்கள் மட்டுமன்றிப் பாத்திர உரை யாடல்களும் செந்தமிழ் நடையிலேயே அமையலாயின.
Page 37
46 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
1918 - 1940 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதி
1918 ஆம் ஆண்டளவிலே எஸ், தம்பிமுத்துப்பிள்ளை யிஞல் எழுதப்பட்ட சுந்தரன் செய்த தந்திரம் என்ற நாவலிலே பேச்சுமொழி ஒரளவுக்கேனும் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. இவரின் பின்னர், ம. வே. திருஞான சம்பந்தபிள்ளை தமது நாவல்களிற் பேச்சுவழக்கினைப் பரவலான அடிப்படையிற் பிரயோகிக்க முனேற்தார். 1929 இல் இவரியற்றிய காசிநாதன் நேசமலர். 1931 இல் இயற்றிய துரைரத்தினம் நேசமணி ஆகிய நாவல்களிலே பேச்சு வழக்குக் குறிப்பிடக்கூடிய அளவுக்குப் பயன்படுத்தப்பட் டுள்ளது. சிறப்பாக, இப்புனைகதைகளிலான பேச்சுவழக்கு இன்ன பிரதேசத்திற்குரியது என வரையறை செய்து கொள்ள முடியாத வகையிலே அமைந்திருப்பினும், பொது வாக யாழ்ப்பாணப் பேச்சுவழக்கினே நிகர்த்தகாகக் காணப் படுகின்றது. சாதாரண பேச்சுவழக்குச் சொற்களும், பழ மொழிகள் மரபுச்சொற்ருெடர்கள் என்பனவும் இவர்தம் கதைகளிற் பயன்படுத்தப்பட்டுள்ளன. வர ணி யூ ர் ஏ. சி. இராசையாவும், தாம் இயற்றிய பவளகாந்தன் அல்லது கேசரிவிஜயம் என்ற நாவலிலே யாழ்ப்பாணப் பிர தேசப் பேச்சுவழக்கினை ஒரளவு கையாண்டுள்ளார். இந் நாாவல்கள் தவிர்ந்த ஏனைய நாவல்கள் யாவும், செந்தமிழ் நடையிலோ தராதர ஈழத்துத் தமிழிலோ எழுதப்பட்ட வையாகும். இந் நாவல்களிற் பிரதேசப் பேச்சுவழக்கானது, வேண்டுமென்றே. தவிர்க்கப்பட்டுள்ளமை கவனிக்கற்பால தாகும்.
1940 - 1960 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதி
இக்காலப் பகுதியிலான ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்குப் பிரயோகம் பரவலாக இடம்பெறுகின்றது. இக்காலப் பகுதியிலே, இந்தியாவில் வெளிவந்துகொண்டி ருத்த மணிக்கொடிப் பத்திரிகை ஈழத்து எழுத்தாளர்களுக்கு ஓர் ஆதரிசமாயமைந்தது. சிறப்பாகப் புதுமைப்பித்தன், கு. ப. ரா , ஆகியோர், பேச்சுமொழி கலந்த சிறு கதைகள் பலவற்றை எழுதி வெற்றி கண்டனர்.
ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்கு . 47
இவர்கள், பிரதேசப் பேச்சுமொழியிலே எழுதிய மண் வாசனை இலக்கியங்கள் பலவும் இலக்கிய உலகிற் பெரும் வரவேற்பைப் பெறலாயின. எனவேதான், இவர்களது நேரடித் தாக்கத்திற்குள்ளான ஈழத்து எழுத்தாளர்களும் தமது புனைகதைகளிலே பேச்சுவழக்கினைக் Gomoss uu rrestrata mr Dr Tugorri.
"ஈழத்து இலக்கிய உலகின் முன்குேடிகள்" எனக் கனக செந்திநாதஞல் வருணிக்கப்படும், சி. வைத்தி லிங்கம், இலங்கையர்கோன், G3yrrr. சிவபாதசுந் தரம், சம்பந்தன் ஆகியோரும் 'மறுமலர்ச்சி எழுத் தாளர்களென’ வருணிக்கப்படும் அ. செ. முருகானந்தம், சு. வேலுப்பிள்ளை, அ. ந. கந்தசாமி, தி ச. வரதராசன் சு. இராஜநாயகன், தாழையடி சபாரத்தினம்; சொக்கன் ஆகியோரும் தமது புனைகதைகளிற் பேச்சு வழக்கினைக் கையாளலாயினர். பிரக்ஞைபூர்வமாகப் பேச்சு வழக்கினைக் கையாளவேண்டும் என்ற கொள்கை இவர்களிடையே இல்லையாயினும், அதனைப் புனைகதை இலக்கியத்திற் பயன்படுத்தவேண்டும் என்ற முனைப்புப் பெருமளவிலே காணப்பட்டது.
இவ்வெழுத்தாளர்களது ஆக்கங்களிலே, பொருளுக் கேற்பப் பல்வேறு அளவிலும், வகையிலும் பேச்சுவழக் கானது பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக, இவர்களது கதைகள் வரலாறு, கற்பண், காதல், மன அவசங்கள் ஆகியவற்றினைப் பொருளாகக் கொண்டமையாற் பிர தேசப் பேச்சுவழக்கினைப் பிரக்ஞைபூர்வமாகக் கையாள வேண்டிய தேவை ஏற்படவில்லை. பிரதேசப் பண்புகளை யும், பிரச்சினைகளையும் சித்திரிக்கின்ற கதைகளில் மட்டுமே ஆங்காங்கு பிரதேசப் பேச்சுவழக்குகள் கையாளப்பட்டு வந்தன. இங்கும், ஆசிரியர் கூற்றும் விவரணப் பகுதி களும் செந்தமிழிலே அமையப், பாத்திர உரையாடல்கள் மட்டுமே பிரதேசப் பேச்சுவழக்கில் அமையலாயின. இவ்வாறன கதைகள் பலவற்றை எழுதி வெற்றிகண்டவர் இலங்கையர்னோன். இவர், புனேகதை இலக்கியத்துறையில் டபட்டுமன்றி நாடகத்துறையிலும் ஆர்வங்காட்டியமை
Page 38
48 ஈழத்துப் புனேகதைகளிற் பேச்சுவழக்கு
இவர்தம் புனைகதைப் படைப்பாற்றலின் வெற்றிக்குக் காரணமாகின்றது. இவரது 'வெள்ளிப் பாதசரம்' என்ற கதையிலிருந்து எடுக்கப்பட்ட ஒர் உரையாடற் பகுதியை நாம் நோக்கலாம் :
"ஐயோ 1 கால் சங்கிலியைக் காணயில்லை. . " * "ான்ன, வடிவாகப் பார் 1 ** "ஒரு காலான் எங்கையோ மணலுக்குள்ளே கழண்டு விழுந்துபோச்சு. " 'கொஞ்சம் கவனமாக வாறதுக்கென்ன ? உனக்கு ஆட்டம் மேத்திப்போச்சு, ஊதாரி நாய் ! "
"போதும் உங்களோடை கோவிலுக்கு வந்த வண்ட வாளம். இனி நடையைக் கட்டுவம். '
**நல்ல ஆத்திரத்திலை சொல்லிப்போட்டன். இஞ்சை பார். . . "* 8
இவ்வுரையாடற் பகுதியிலே, யாழ்ப்பாணத்து மக்களின் பேச்சுவழக்கினை இயல்பான வகையிலே ஆசிரியர் உபயோ கித்துள்ளமைனேய நாம் அவதானிக்க முடிகிறது.
1960 இன் பின்னர் உள்ள காலப்பகுதி
1960 ஆம் ஆண்டுகாலப்பகுதியில், ஈழத்திலே இடம் பெற்ற மரபுப் போராட்டமானது, புண்கதைகளில் எந்த வகையிலே, எந்த அளவுக்குப் பேச்சுவழக்குப் பயன்படுத்தப் பட வேணடும் என்பதை உறுதிப்படுத்தியது. இக்காலப்பகுதி யிலே, எழுத்தாளர் பலரும் தம்மாலியன்ற அளவுக்குப் புனைகதைகளிலே பிரக்ஞைபூர்வமாகப் பேச்சுவழக்கைக் கையாளலாயினர். பிரதேசப் பேச்சுத் தமிழைப் பிரக்ஞை பூர்வமாகக் கையாண்ட முன்ளுேடிகளாக, டானியல், டொமினிக் ஜீவா, இளங்கீரன், அகஸ்தியர், கணேசலிங்கன், எஸ். பொன்னுத்துரை, அ. செ. முருகானந்தம், கனக செந்திநாதன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்கு . 49
இவர்கள் யாவரும், புண்கதை இலக்கியத்திலே பேச்சு வழக்கின் எந்த அளவுக்குப் பயன்படுத்தவேண்டும் என்பதில் ஒத்தகருத்தினரல்லர். பேச்சுவழக்கினைக் கையாள்வதுபற்றி இளங்கீரன் பின்வருமாறு கூறினர் :
"கதைகளிலே வரும் பாத்திரங்கள் எவ்வாறு பேசுகின்றனவோ அதேவகையில்தான் கொச்சைத் தமிழ் உபயோகப்படுத்தப்படுகின்றது. சிறுகதைகளில் பாத்திரங்களே அமைக்கின்றபொழுது ஒரே நடையைக் கையாளமுடியாது. அப்படிக் கையாண்டால் அது சோபைதராது. சாதாரண மக்களுக்கு விளங்கக்கூடிய வகையில் அவர்களுக்கு ஏற்றமாதிரியான முறையில் வசனநடையை அமைக்கண்ேடும். ? ? 9
கனக செந்திநாதன், எஸ். பொன்னுத்துரை ஆகி யோர், பேச்சுபெ9ாழிப் பிரயோகம்பற்றி இன்னுெரு வகை யான கருத்தினையே கொண்டிருந்தனர். வெண்சங்கு என்ற தமது சிறுகதை நூலின் முகவுரையிலே கனக. செந்திநாதன் பின்வருமாறு குறிப்பிடுகின்ருர் :
'வெறும் நாட்டுப்புறச் சொற்களால், பாமர வார்த்தைகளால் மாத்திரம் மண்வாசனையைக் காட்ட முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்தப் பிராந்தியத்தின் சிறப்புற்ற கருவை அந்த அந்தப் பிராந் தியத்தின் நடையில் எழுதுதல் வேண்டும் என்பதிலும், கிராமியக் கொச்சை மொழி கதையை வாசித்து விளங்க இடைஞ்சலாக இருத்தல்கூடாது என்பதிலும் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது. "'
அந்நூலின் முன்னீட்டிலே எஸ். பொன்னுத்துரை,
"ஈழத்து இலக்கிய உலகில் "மண்வாசனை' என்ற கோஷம் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளரால் முன்வைக்கப்பட்டது. பிராந்தியங்களிற் பயிலப்படும் கொச்சைச் சொற்கள் சிலவற்றைக் கோவை செய்தால், அஃது இயல்பாகவே மண்வாசனை இலக்கியமாகிவிடும் என்ற தப்பித எண்ணத்தைக் காமித்து, அத்தகைய
7
Page 39
50 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
கதைகளை எழுதிச் சலித்தவர்களும் நம்மத்தியில் வாழ் கின்ருர்கள். ஒரு பகுதியான மண்ணிற்கே உரித்தான கலாசாரத்திலே பிறக்கும் கதைக்கருவை அந்த மண் தனித்துவமாக ஒலிக்கும் தொனிப்பொருளைப் பிரச விக்கும் வண்ணம் கலவி நெறியிற் பொருத்துவதே "மண்வாசனை' இலக்கியத்திற்கான சிறப்பம்சமாகும்'
என்று கூறுவது பிரதேசப் பேச்சுத்தமிழைப் புனைகதை இலக்கியத்திலே கையாள்வது பற்றிய அவர்தம் கொள்கையைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது.
அண்மைக் காலத்திலே, ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்குப் பிரயோகமானது ஒரு புதிய பரிணுமத்தினை அடைந்துள்ளது. சிறப்பாக, வீரகேசரி வெளியீடுகளிற் பேச்சுவழக்கானது ஒரு புதிய பாணியிலமைந்து காணப் படுகிறது. காதல், துப்பறிதல், வரலாறு போன்றவற்றைச் சித்திரிக்கும் புனைகதைகளிற் பாத்திர உரையாடல் செந் தமிழிலேயே அமைந்து விடுகிறது. பிரதேசப் பண்பு வாய்த்த புனைகதைகளிலும், அப்பிரதேசத்திற்குச் சிறப்பாகவுள்ள பேச்சுவழக்குக் கையாளப்படுவதில்லை. வியாபார நோக்கங் கருதி வீரகேசரிப் பிரசுTக் கதைகளிலே தராதர ஈழத்துப் பேச்சு வழக்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பேச்சு வழக்கானது கனக. செந்திநாதன் குறிப்பிட்ட பேச்சு வழக்கினை நிகர்த்ததாகக் காணப்படுகின்றது. ஆனல், வியாபார நோக்கமற்ற தனியார் வெளியீடுகளிலே பிர தேசப் பண்பு விதந்து கூறப்படுமளவிற்குப் பேச்சு வழக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதனைக் காணமுடிகிறது.
மரபுப் போராட்டம்
1955 ஆம் ஆண்டுக்காலப் பகுதிவரை, தென்னிந்தியத்
தமிழ் இலக்கியங்களே மேன்மையான இலக்கியங் களென்றும், தென்னிந்தியத் தமிழ்ப் பத்திரிகைகளிலே பிரசுரமாகும் படைப்புக்களே தரமான படைப்புக்
களென்றும் ஈழத்தவராற் கருதப்பட்டு வந்தது. இலக்கியத் தினைப் பொறுத்தவரையிலே தென்னிந்தியப் பாரம்பரியமே
ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்கு. . 5.
ஈழத்துப் பாரம்பரியமாகவும் கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையினை மாற்றி, ஈழத் தமிழ் மக்களுக்கெனத் தனியான தோர் இலக்கியப் பாரம்பரியம் உண்டென்பதனை வலியுறுத் தியதும், புனைகதைகளிலே பாத்திர உரையாடல்கள் செத் தமிழிலன்றிப் பாமரமக்களின் பேச்சுவழக்கிலேயே இடம் பெற வேண்டும் என்பதனைத் தீர்க்கமாக ஈழத்து எழுத் தாளர்களுக்கு உணர்த்தியதும் மரபுப் போராட்டமே. எனவே, ஈழத்துத் தமிழ்ப் புனைகதை இலக்கியத்திற் பேச்சு வழக்குப்பற்றி ஆராய முற்படும்போது, மரபுப் போராட் டம் பற்றி எடுத்துக் கூறுவதும் இன்றியமையாததாகும். இம் மரபுப் போராட்டம் பற்றிய தகவல்கள், அவ்வப்போது நாளிதழ்களிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெற்றனவேயன்றி அவற்றைத் தொகுத்துக் கூறும் முயற்சிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, மரபுப்போராட்டம் பற்றிய தகவல்கள் இங்கு விரிவான வகையிலே தரப்படு கின்றன.
மரபுப் போராட்ட வரலாறு
1960 ஆம் ஆண்டுக்காலப் பகுதியிலே ஈழத்து இலக்கிய ர்த்தாக்களிடையே இலக்கிய மரபு பற்றி நடைபெற்ற போராட்டமே மரபுப் போராட்டமாகும். இலக்கியப் பொருள், இலக்கிய வடிவம், உரைநடை, இலக்கணவமைதி ஆகியவற்றிலே தொன்று தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளை மீறலாமா. மீறலாகாதா என்பதே இவர் தம் வாதப்பிரதிவாதங்களுக்கு இலக்காயமைந்தவையாகும் இலக்கியத்தின் நோக்கம், அதன் பயன், அது யாராற் படைக்கப்படவேண்டும், இலக்கியத்திலே இழிசினர் வழக் கைப் பயன்படுத்தலாமா, செந்தமிழைப் பயன்படுத்தலாமா என்பன இவர்தம் போராட்டக் கருவாயமைந்தன. இத் தகைய போராட்டத்திற்குக் களம் அமைத்துக் கொடுத் தவை தினகரன், வீரகேச போன்ற நாளிதழ்கழும் அக் காலத்தில் வெளியான சஞ்சிகைகளுமாகும்.
1958 ஆம் ஆண்டுக்காலப் பகுதியிலே, ஈழத்தின் அர சியல், சமூக நிறுவனங்களிடையே உருவான விழிப்புணர்ச்சி போல, இலக்கியத் துறையிலும் புரட்சிகரமான மாற்றங்கள்
Page 40
52 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
உருவாகலாயின. இலக்கியம் கற்றேர்க்கு மட்டுமே உரியது என இறுமாந்திருந்த பண்டிதப் பரம்பரையினர்க்கு எதி ாக, இக்காலத்திலே ஒரு குழுவினர் இயங்கலாயினர். இவர்கள், இலக்கியம் கற்ருேர்க்கு மட்டுமன்றி மற்ருேர்க்கும் உரியது என்றும், அது பண்டிதர்களால் மட்டுமன்றிப் பாமரர்களாலும் படைக்கப்படலாம் என்றும் இலக்கிய உலகிலே 'ஊடுருவல்' 19 செய்தனர். "இலக்கிய ஊடுருவல் ாரர்?" எனப் பண்டித வர்க்கத்தினராலே வருணிக்கப் படோர், இலங்கை முற்போக்கு எழுத்தானர் சங்கத்தினைச் (இனி வருமிடங்களிலே இ. மு. எ. ச) சேர்ந்தோராவார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர் களாக விளங்கிய கே. இராமநாதன், கே. கணேசு ஆகி டு யாரால் 1946 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது இ. மு. எ. சங்கம். இச் சங்கம், ஈழத்து இலக்கிய உலகு இதுவரை அறிந்திராத புரட்சிகரக் கொள்கைகள் பலவற்றை முன்வைத்தமை, அவ்விலக்கிய உலகிற் புதியதொரு உத் வேகத்தினை ஏற்படுத்துவதாயமைந்தது.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற் பேச்சுவழக்குப் பிர யோகம் பரவலடைய, இ. மு. 7. சங்கம் பெரிதும் கார ணமாயிருத்ததினலே அதன் நோக்கங்களை ஒரளவேனும் விவரமாகப் பார்ப்பது அவசியமானதாகும். இச் சங்கத்தின் ஏடாகிய புதுறை இலக்கியத்திலே (1975) இ. மு. எ சங்கத்தின் ஆரம்ப0ால நோக்கங்கள் வெளிப்படுத்தப்பட் முள்ளன. "எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாருமில்லை உடையாருமில்லை' என்றும் எல்லாரும் இன்புற்றிருத்தலன்றி வேருென்றறியேன்' என்றும் சங்கம் அறைகூவல் விடுத்தது.
'மனித வர்க்கம் யுகபுகாந்தரமாகக் கண்ட இலட் சியக் கனவைச் சாதனையிலாக்க, வர்க்க பேதமற்ற ஒப்பிலா சமுதாயத்தைச் சிருஷ்டிக்க மனிதப் பெருங் குடி மக்கள் நடத்தும் போராட்டத்தையும் அதில் தோன்றும் புதிய சமுதாய அமைப்பையும் பிரதிபலிக் கும் சோசலிஸ்ட் யதார்த்தவாதம் என்ற இலக்கிய தத்துவத்தை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது இறுதி இலட்சியமாக ஏற்றுக்கொண்டது”
ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்கு. 53
"மக்களின் சகல பகுதிகளையும் பிரதிபலித்து, நிரந்தர உலக சமாதானம், தேசிய விமோசனம், உண்மை ஜனநாயகம், உயர்ந்த வாழ்க்கைத்தரம், சிறந்த கலாசாரம், நாட்டின் அரசியல் பொருளாதார சமுதாய முன்னேற்றம், இவற்றிற்காக மக்கள் நடத் தும் போராட்டங்களைக் கருவூலமாகக் கொண்ட மக்கள் இலக்கியமே சங்கத்தின் உடனடி இலட்சியமாக அமைந்தது.
‘முற்போக்கு எண்ணங்கொண்ட சகல எழுத்தா ளர்களையும் ஓர் அணியில் திரட்டி மக்கள் கலாசாரம் உயர்ந்த மனிதவர்க்கத்திற்குமான இலக்கினைப் படைப் பதும், சம அடிப்படையில் சகல தேசிய இனங்களின் மொழி கலாசார முன்னேற்றத்திற்காக உழைப்பதும், எழுத்தாளரின் நலன்களுக்காகவும் உரிமைக்காகவும் பாடுபடுவதும்,' சங்கத்தின் குறிக்கோளாயமைந்தது.
இச் சங்கத்தின் இலக்கியக் கோட்பாடுபற்றி கா, சிவத் தம்பி (1975 : 29) பின்வருமாறு குறுப்பிடுகிருர் :
*இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயல் வேகத்துடன் கருமமாற்றத் தொடங்கியபோது, முக்கிய இலக்கிய கோஷமாக அமைந்தது ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்னும் கோட்பாடேயாகும். ஈழத்தின் நவீன தமிழ் இலக்கியம் தென்னிந்தியத் தமிழ் இலக்கியத்தின் பிரதியாக அமையாது, ஈழத்தின், மண்வாசண்யைப் பிரதிபலிப்பதாக இருத்தல் வேண் டுமென அறிவுறுத்தப்பட்டது.'
"மண்வாசனை என்னும் கோஷம் தேசிய இலக் கியம் என்னும் கோஷத்துடனும் இந்தியத் தமிழ் இலக்கியம் பற்றிய நோக்குடனும் சம்பந்தப்பட்டு தின்றதாகும். ஆனல், அடிப்படையிற் பார்க்கும் போது மண்வாசனை என்னும் கோஷமே முக்கியமான தாகும்.'
Page 41
54 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
'ஈழத்திலே தோன்றும் தமிழ் இலக்கியம், ஈழத்து மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட வேண்டுமென்ற கருத்து முன் வைக்கப்பட்டது. ஈழத்து வாழ்க்கைப் பிரச்சினை இலக்கியப் பொருளாகச் சிறுகதை நாவல்களில் இடம் பெற்றபொழுது ஈழத்துப் பல்வேறு பிரதேசங்களின் வர்ணனை, வாழ்க்கை முறை விவரணம், பேச்சு வழக்கு ஆகியன இடம்பெற வேண்டுவது அத்தியாவசிய மாயிற்று.'
இ. மு. எ. சங்கத்தின் மேற்குறிப்பிட்ட இலட்சியங் களும் நடவடிக்கைகளும். மரபுவழி இலக்கிய கர்த்தாக் களுக்குப் பாரிய பிரச்சினைகளாயின. இரு முது எ. சங்கம் சோஷ்லிச யதார்த்தவாத இலக்கியத்தை முன்வைக்கவே, நாட்டின் அடிப்பட்ட சமூகத்திலுள்ள பல்வேறு தரத்தின ரும் அதன் உறுப்பினராயினர். இவ்வியக்கத்திலே உள்ள கற்ருேர் மட்டுமன்றி மற்றேரும் இலக்கிய சிருஷ்டி முயற்சி யிலே ஈடுபடலாயினர்.
சாதாரண தொழிலாள வர்க்கத்தினர் ஆக்க இலக்கிய முயற்சியிலே "ஊடுருவல்' செய்தது மட்டுமன்றிச், சாதாரண பாமரமக்களின் பேச்சுவழக்கினையும் தமது டனே கதைகளிற் பயன்படுத்தலாயினர். 'இழிசினர் வழக்கு' என ஒதுக்கப்பட்ட பேச்சுவழக்கு இலக்கிய அந்தஸ்துப் பெறலாயிற்று. செந்தமிழ் இருந்த இடத்திற் கொடுந் தமிழ் குடிபுகலாயிற்று. இச் சாதாரண தொழிலாளவர்க்க எழுத்தாளர்கள் 'இழிசினர் வழக்கைத் தமது புண் கதைகளிற் கையாண்டதோடமையாது, சாதி, மதம், வர்க்கம் போன்றவை தொடர்பாகப் புரட்சிகரமான கருத் துக்களையு: இலக்கியத்திற் புகுத்தலாயினர். எனவே, ஈழத்து இலக்கியமானது முற்றிலும் புதிய ஒரு தடத்திலே கால்பதிக்கலாயிற்று.
இச் சந்தர்ப்பத்திலே, ஈழத்துப் பத்திரிகைகள் பலவும் சோஷலிச யதார்த்தவாத இலக்கியங்களுக்கு முதன்மைத் துவம் தந்ததோடு பிரசுர களமமைத்தும் கொடுத்தன. க. கைலாசபதி தினகரனில் ஆசிரியராக இருந்தபோது,
பழத்துப் புனகதையும் பேச்சுவழக்கு. 55
அப் பத்திரிகை மண்வாசனை இலக்கியங்களின் பிரசுர கள மாயமைந்தது இ. மு எ. சங்கத்தின் 'ஊதுகுழல்’ என வருணிக்கப்படுமளவுக்கு அஃது ஈழத்து முற்போக்கு இலக் கியங்களுக்கு மதன்மை தொடுக்கலாயிற்று. இளங்கீரன் நடாத்திய மரகதம் இ. மு. எ. சங்கத்தின் கோட்பாட்டு விளக்கமாயமைத்தது சிற்பி (சரவணபவன்) பதிப்பித்த கலைச்செல்வி, ஈழத்துச் சிருஷ்டி இலக்கியங்களைப் பிரசுரித்த தோடமையாது, இழிசினர் வழக்கைக் கையாண்டு இலக் கியம் படைத்த இலங்கையர்கோன் மறைந்தபோது, அவ ருக்கு மார்கழி 1961 இல் நினைவு இதழும் வெளியிட்டது. சிருஷ்டி இலக்கியம் பற்றிய விமர்சனங்கள் பலவும் இச் சஞ்சிதைகளிலே அவ்வப்போது இடம்பெறலாயின. விமர் சனக் கூட்டங்கள் பலவும் ஆங்காங்கு நடத்தப்படலாயின. இக்கால கட்டத்திலே இ. மு. எ. சங்கம் தனது உறுப்பி னர் பலரின் ஆக்க இலக்கிய நூல்கள் பலவற்றை வெளி யிட்டுவைத்ததுடன் விமர்சனக் கூட்டங்களும் நடத்தலா யிற்று. இரண்டு வருட காலத்துள் அது, காவலூர் இராச துரையின் குழந்தை ஒரு தெய்வம் (1961), நீர்வை பொன் னேயனின் மேடும் பள்ளமும், (1962) இளங்கீரனின் நீதியே நீகேள் (1963), என். கே. ரகுநாதனின் நிலவிலே பேசு வோம் (1963) போன்ற நூல்களுக்குக் கொழும்பிலும், பெனடிக்ற் பாலனின் குட்டி (1963) நாவலுக்குக் கொழும்பு யாழ்ப்பாணம் ஆகிய இரு இடங்களிலும் வெளியீட்டு விழாவும் அறிமுகவிழாவும் எடுத்தது.
அத்துடன், இ. மு ன. சங்கத்தினுலே தொடக்கப் பட்ட எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகமானது அதன் உறுப்பினர் பலரின் நூல்களைப் பதிப்பித்து வெளியிட லாயிற்று, கே. டானியலின் டானியல் கதைகளையும், டொமினிக் ஜீவாவின் சாலையின் திருப்பத்தையும், பெனடிக்ற் பாலனின் குட்டியையும் அது பதிப்பித்து வெளியிட்டது.
இச் சந்தர்ப்பத்திலேயே டொமினிக் ஜிவாவின் தண் னிரும் கண்ணிரும் என்ற சிறுகதை நூலுக்கு 1961 ஆம் ஆண்டுச் சாகித்தியமண்டலப் பரிசு வழங்கப்பட்டது. இத்துடன், இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின்
Page 42
56 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
ஆதரவாளரான கி. லஷ்மணனின் இந்திய தத்துவ ஞானம் சான்ற நூலுக்கும் அவ்வாண்டு சாகித்தியமண்டலப் பரிசு வழங்கப்பட்டது
இவை யாவும், ஈழத்து மரபுவழி இலக்கியகர்த்தாக்களே விழித்தெழச் செய்தன. ஈழத்தின் தமிழ் இலக்கியப் பாரம் பரியம் தங்கள் கைகளிலிருந்து பிடுங்கப்படுவதையும், எதிர் காலத்திலும் தமது முதன்மைத்துவம் பறிக்கப்பட்டுவிடும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டனர். எனவே தான், தமது மரபுவழி இலக்கியப் பாரம்பரியத்தைப் பேணுவதற்காகப் பண்டிதவர்க்கத்தினர், சோ. இளமுரு கணுர் தலைமையிலே ஒன்றுசேர்ந்து மரபுப் போராட்ட அணியொன்றை உருவாக்கினர்.
தூய்மையும், பேருமையும். பல்லாயிரமாண்டு காலவர லாறும் கொண்ட தமிழ் இலக்கியப் பரப்பிலே, முற்போக்கு எழுத்தாளர்களின் அத்துமீறிய பிரவேசம் இலக்கியத் தூய்மையை மாசுபடுத்திவிடுமோ என மரபுவழி இலக்கிய கர்த்தாக்கள் அஞ்சினர். இதுவரை காலமும் ‘எம்சொத்து என இறுமாந்திருந்த பண்டித வர்க்கத்தினருக்கு மிகச் சாதாரணமானவர்களான இலங்கை முற்போக்கு எழுத் தாளர்களின் இலக்கியப் பிரவேசம் ஒருபெரும் சவாலாக அமைந்தது, அகநானூறு, புறநானூற்றுப் பொருண்மைகளை இரசித்துக் கற்று மகிழ்ந்த இப் பண்டித வர்க்கத்தினர், சாதாரண மனிதன் இலக்கியப் பொருளாக அமைவதை ஏற்ருரல்லர், யாப்பிலும் அணியிலும் கண்ணுங் கருத்துமா யிருந்த இவர்கள், பேச்சுவழக்கினை நிகர்ந்த உாைநடையைத் துச்சமென மதித்தனர் மன்னனதும், மாண்புமிகு இலக்கியக் கதாபாத்திரங்களதும் உரையாடல்களுக்குப் பதில், இழி சினர் உரையாடல் இலக்கியத்திலேயே இடம் பெறுவதை இவர்கள் ஏற்ருரல்லர். நக்கீரரும். கம்பனும், திருஞானசம்பந்தரும் இயற்றிய இலக்கியங்களே நயந்து கற்ற இவர்கள், கே. டானியலேயும், டொமினிக் ஜீவாவையும் இலக்கியகர்த்தாக்களாக ஏற்றுக்கொண்டாரல்லர்.
எனவே, ஈழத்து இலக்கிய அணியானது. இருபெரும் யிரிவுகளாகிப் பிரிந்துநின்று மரபுப் போராட்டம நிகழ்த்த
கழத்துப் புனைகதையும் பேச்சுவழக்கும். 57
வேண்டியதாயிற்று. பண்டித வர்க்கத்தினர் மரபு மீறப் ாடலாகாது என்றனர். படைப்பிலக்கிய கர்த்தாக்கள் 6ாலத்திற்கேற்ப மரபுகள் மீறப்படவேண்டுமென்றனர். இவ்விரு பகுதியினருக்குமிடையிலே சிலர் மரபு அறிந்தே மீறப்படவேண்டும் என்றனர்.
மரபு மீறப்படலாகாது என்போர் அணியிலே சோ. இளமுருகளுர், தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை, ச. சுப்பிரமணியன், பண்டிதர் வ நடராசன், புதுமைப் பண்டிதன் ஆகியோர் இடம்பெற்றனர். இவர்கள் யாவரும் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கினர்.
மரபு மீறப்படவேண்டும் என்போர் அணியிலே சிருஷ்டி இலக்கியகர்த்தாக்களான இளங்கீரன், கே. டானியல், டொமினிக் ஜீவா, அ. ந. கந்தசாமி, சொக்கன், செ. கணே சலிங்கம் ஆகியோர் தீவிர பங்காற்றினர். இவர்களின் பக்க பலமாகக் கல்விமான்களான பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை, கலாநிதி சு. வித்தியானந்தன், திரு. க. கைலாசபதி, திரு. கா. சிவத்தம்பி ஆகியோர் விளங்கினர். இவர்கள் யாவரையும் இ. மு. எ. சங்கமானது ஒன்றுசேர்த்துப் பலம்வாய்ந்த ஒர் இயக்கமாக விளங்கியது.
இவ்விரு கொள்கையினரையும் ஏற்றுக்கொள்ளாது, தமக்கென ஒரு புதிய அணியை எஸ். பொன்னுத்துரை வகுத்துக் கொண்டார். இவரது அணி, "தற்போக்கு இலக்கிய அணி’ என அழைக்கப்பட்டது. இவர்கள் மரபு அறிந்தே மீறப்படவேண்டும் என்ற கொள்கையை முன் வைத்தனர்.
ஈழத்தின் மரபுப் போராட்டம் போன்ற ஒரு போராட் டம், சுமார் 60 ஆண்டு காலங்களின் முன்னர் வங்காள மொழியிலும் தோன்றி, அம்மொழியின் தீவிர வளர்ச்சிக்கு வித்திட்டது. எமது புனைகதைகளிலே, செந்தமிழ் வழக்குப் பேச்சுவழக்கென இரு பிரிவுகள் இருப்பதுபோல, வங்காள மொழியிலும் சாதுபாஷை, சலித் பாஷை என இரு பிரிவுகள் இருந்தன. சாது பாவுை எழுதுவதற்கும்,
8
Page 43
60 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
தொல்காப்பியளுகும், நக்கீரர், பரணர், திருவள்ளுவர் முதலாம் கடைச்சங்கப் புலவரும்..." எனத் தொடங்கி நயிஞமுகமதுப் புலவர்வரை கூறிச்செல்வர் சோ. இள முருகளுர். *
மேற்கூறப்பட்ட தன்மைத்தாராலேயே இக்கால இலக் கியங்களும் படைக்கப்படவேண்டும்; அவரல்லாதார் இலக் கியம் செய்யத் தகுதியற்ருர் என்பது இவர்தம் வாதமா யமைத்தது. இலக்கியத்திகின ஆக்கவும், அநுபவிக்கவும் அதனே வளர்க்கவும், வளம்படுத்தவும் வல்லார் பண்டித வர்க்கத்தினரே. பாடசாலைப் பிள்ளைகனாயினும், பல்கலைக் கழகப் பேராசிரியர்களாயினும் முறைப்படி இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தோரே தமிழ் இலக்கியம் படைக்கவல்லார் என்பதே இவர்தம் கருத்தாகும்.
1 - 12 - 1962 ஆம் திகதிய தினகரனிலே கா. சிவத் தம்பி, "குட்டை நீரல்ல மரபு' என்ற கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இக் கடடுரை பழைமைவாதிகளின் போலி வாதங்களேச் சாடியதோடமையாது, மரபுமாற்றத்தை வற்புறுத்துவதாயும் அமைந்தது. இவரது கருத்துக்கள், பண்டித வர்க்கத்தினரின் காரசாரமான கண்டனங்களுக்கு இலக்காகின.
'இலக்கண நெறிப்பட்ட செந்தமிழ் நடையைப் பேணி இலக்கியஞ் செய்து தமிழை வளர்த்தும், இலக்கியஞ் செய்வோர்க்குத் துணைபுரிந்தும், தமிழ்க் கல்வியை நாடெங்கணும் பரப்பிப் பண்டுபோலச் செந்தமிழ் மரபினைப் பாதுகாத்தும் வருகின்ற பண்டிதர் மாரைப் பழித்துரைப்பவை. "" என்றும்,
"இக்காலத்திற் கல்வியறிவில்லாத புரட்சி எழுத் தாளர் தாந்தாம் விரும்பியபடி சான்ருேர் வழக்கைத் தகர்த்தெறிந்துவிட்டுப் புதிய வழிகளில் எழுதத் துணிந்துகொண்டனர். அத் துணிவே பேதைமையால் எழுந்த துணிவாம். ' என்றும்
சோ. இளமுருகளுர், மரபுவழி இலக்கிய கர்த்தாக்களின் கருத்தின வலியுறுத்துகின்ருசி. 13
ஈழத்துப் புனே கதையும் பேச்சுவழக்கும். 61
\ஆ) கல்லாதார்க்கு இலக்கியத்திலே இடமில்லை
1960 ஆம் ஆண்டுக்காலப் பகுதியிலே, இலக்கிய ஆக்க மரபை மீறிச் சாதாரண, கல்வியறிவற்ற தொழிலாள வர்க்கத்தினரும் சிருஷ்டி இலக்கிய முயற்சியிலே முன்னின் றுழைத்தனர். இவர்தம் சிருஷ்டிகளை இலக்கியங்களாகவோ இவர்களை இலக்கிய கர்த்தாக்களாகவோ ஏற்றுக்கொள்ளப் பண்டித வரிக்கத்தினர் ஒருப்படவில்லை. எனவே, பல்வேறு கோணங்களினின்றும் இத் தொழிலாள வர்க்கத்தினரின் இலக்கிய ஊடுருவலை அவர்கள் விமர்சிக்கலாயினர்.
‘'நேற்றுப்பெய்த மழைக்கு முளைத்த காளான்கள் போலும் புதுமை எழுத்தாளர் தமிழ்ச் சொற்களையும் வேற்றுமொழிச் சொற்களையும் உருவந் திரித்தும், அவற்றின் இலக்கண அமைதியை அழித்தும் தாத்தாம் விரும்பியபடி எழுதிக்கொண்டு அதனை மரபென்று கூறுதல் வெற்ருரவார வெறும் போலியுரையாம்."
என்று ச. சுப்பிரமணியனும், (தினகரன் 15 - 12 - 1962)
‘இனி எழுத்தாளராக வர விரும்புவோர் ராவலர் செய்த இலக்கணச் சுருக்கத்தையும், நளவெண்பா, திருக்குறள் முதலிய இலக்கிய நூல்களையும், நாவலர், நச்சிஞர்க்கினியர், பரிமேலழகர், மறைமலையடிகள், முதலியோர் உரைநடைகளேயும் கட்டாயம் படிக்கக் கடவர். அப்பொழுதுதான் தமிழ்மொழியின் அமைப் பையும், சொல்வழக்கையும், தமிழ் நாட்டுக்குரிய இலக்கியப் பொருண்மைகளையும், சிறந்த உரைநடை அமைப்பையும் முட்டறத் தெரிந்துகொள்வர், அத் துணைச் சிறிய எல்லையாயினும் நின்று பயின்றுகொள் ளாதார், தம்மை எழுத்தாளர் என்றும், சிருஷ்டி கர்த்தாக்கள் என்றும், புதிய பிரமதேவர் என்றும் கூக்குரல் இடுவதில் பொருள் இல்லை."
என்று சோழ இளமுருகஞரும் 18 கூறுவது கவனத்திற்குரியது
Page 44
58 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
சலித் பாஷை பேசுவதற்கும் பயன்படுத்தப்பட்டன. முன் னேய வங்காள மொழி இலக்கியங்களிற் கதாபாத்திரங்கள் யாவும் சாதுபாஷையிலேயே உரையாடின ஆணுல், மாபெ ரும் எழுத்தாளரான தாகூர், பாத்திர உரையாடல்கள் சலித் பாஷையிலேயே அமையவேண்டுமென்றர். வங்கா ளத்தின் பெரும்பான்மையான கல்விமான்கள் இவர்தம் போராட்டத்தை ஆதரித்தனரல்லர். ஆயினும், தாகூர் தமது தலைசிறந்த இலக்கியங்களிலெல்லாம் சாது பாஷையை யும் சலித் பாஷையையும் கலந்தே எழுதிவந்தார். இவ்விரு பாஷையும் கலந்த மொழிநடையிலே ஏராளமான நூல்களே அவர் இயற்றிஞர். இன்று, வங்கத்தின் தலைசிறந்த எழுத் தாளரென வருணிக்கப்படும் புத்ததேவ போஷ், முற்றிலும் சலித் பாஷையிலேயே இலக்கியம் அமையவேண்டும் என்கிருர், வங்கதேசத்திலே இன்று, சாது பாஷையை ஆதரிப்பார் யாரும் இல்லை. கதையோ, கட்டுரையோ, ஏனைய படைப்புக்களோ, யாவும் சலித் பாஷ்ையிலேயே எழுதப்படுகின்றன. 12
ஈழத்திலும், இம் மரபுப் போராட்டத்திலே வெற்றி பெற்றது மரபு மீறப்படவேண்டும் என்ற வாதமே. புனை கதை இலக்கியத்திலே பாத்திர உரையாடல்கள் பேச்சு வழக்கிலும், ஆசிரியர் கூற்றுக்கள், வர்ணனைகள் செந்தமி ழிலும் அமைவதற்கான பாதையை வகுத்துக்கொடுத்ததும் இம் மரபுப் போராட்டமேயாகும்.
இலக்கிய மரபு பற்றிய கோட்பாடுகள்
1960 ஆம் ஆண்டுகாலப் பகுதிகளிலே, ஈழத்து இலக் கிய மரபு பற்றி மூன்று வகையான சுருத்துக்கள் நிலவின. ஒன்று தொன்றுதொட்டு வழங்கிவரும் இலக்கியமரபானது மீறப்படலாகாது. இரண்டு, காலத்துக்குக் காலம் இடத் துக்கேற்ப இலக்கியமரபானது மாற்றமடையவேண்டும் மூன்று, நற்போக்கு இலக்கியம் சான்ற கோட்பாடு.
ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்கும. 59 இலக்கியமரபு மீறப்படலாகாது
‘எப்பொருள் எச்சொல்லின் எவ்வா றுயர்த்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே** 13
என்பதும்,
'மரபானது தொன்றுதொட்டு வரும் முறைமை' என்பதும் இக் கொள்கையினரின் கருத்தாகும். எனவே, இலக்கிய ஆக்கமரபோ, பொருள் மரபோ, வடிவ மரபோ மீறப்படலாகாது என்பது இவர்தம் வாதமாக அமைந்தது.
இவர்கள், மரபு பற்றிப் பின்வரும் கருத்துக்களுடை (Burrg rreth 6farë 36eri :
(அ) தமிழ் இலக்கியத்தினதும், தமிழ் மொழியினதும்
பாதுகாவலர் பண்டித வர்க்கத்தினரே,
(ஆ) கல்லாதார்க்கு இலக்கியத்திலே இடமில்லை.
(இ) கற்ருர் கூழக்கே செந்தமிழ் வழக்கு.
(ஈ) கொடுந் தமிழ் வழக்கினுலே மொழி அழித்துவிடும் ,
(உ) கொடுந்தமிழ் வழக்கு சிருஷ்டி இலக்கியத்திலே
சிறுபங்கே இடம்பெற வேண்டும்
* (ஊ) சிருஷ்டி இலக்கிய கர்த்தாக்கள் கல்வியறிவற் றவர்கள், அவர்கள் யாவரும் மார்க்சிசவாதிகள்,
(எ) புனைகதை வடிவம் இலக்கிய வடிவமாகாது.
(அ) தமிழ் இலக்கியத்தினதும்,
தமிழ் மொழியினதும் பாதுகாவலர் பண்டித வர்க்கத்தினரே
தமிழ் இலக்கிய ஆக்க உரிமை, மரபுவழியானதே என் பதனைத் தீவிரமாக விசுவாசித்தவர்கள் இவர்கள். "அவ் வாருயின் மொழித்திறமுணர்ந்து, இலக்கணமும் இலக்கிய முஞ் செய்து, பல்கலை வளர்த்தார் யாவரெனின், ஆசிரியர்
Page 45
62 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
(இ) கற்றர் வழக்கே செந்தமிழ் வழக்கு
தமிழ் இலக்கியம் பண்டிதவர்க்கத்தினரின் தனிச் சொத்து என்றும் கல்லாதார்க்கு இலக்கியத்திலே இட மில்லை என்றும் வாதாடியோர், தமது வாதத்திற்கு வலு வூட்டுவதற்காகக் 'கற்ருர் வழக்கே செந்தமிழ் வழக்கு' என்னும் வாதத்தையும் முன்வைக்கலாயினர்.
"வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாகலான்' 17
என்னுஞ் சூத்திரம், அவர்தம் வாதத்தினை வலுவூட்டுவதற் காகப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாதம், கல்லாது சிருஷ்டி இலக்கிய முயற்சியிலே ஈடுபட்ட தொழிலாள வர்க்கத்தின ரையும், அவர்தம் சமூகப் பின்னணி (சாதி) யையும் விமர்சிப்பதாயிற்று, கற்ருர் வழக்கே செந்தமிழ் வழக்கு என வாதாடிய பண்டித வர்க்கத்தினர் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, கலாநிதி சு. வித்தியானந்தன், திரு. க. கைலாசபதி, திரு. கா. சிவத்தம்பி போன்றேரின் வழக் கையும் செந்தமிழ் வழக்கெனக் கொள்ளாது இழிசினர் வழக்கெனவே கொண்டனர். அத்துடன், இழிசினர் வழக் கைக் கையாண்ட இலங்கையர்கோன், சம்பந்தன், வரதர் ஆகியோரின் சிருஷ்டி இலக்கியங்களை இவர்கள் பாரதூரமாக விமர்சித்தாருமில்லை. எனவேதான், இவ்வ) தம் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிருஷ்டி இலக்கிய கர்த்தாக்களை இலக்கிய உலகினின்றும் விரட்டுவதற்காக முன்வைக்கப் பட்டதொன்று எனக் கண்ட கா. சிவத்தம்பி (1975 :42)
'இழிசினர் வழக்கு என்னும் வாதமும், தமிழ் இலக்கண இலக்கிய அறிவின்மை என்னும் வாதமும் நவீன இலக்கிய ஆக்க எழுத்தாளர்களுள் பலரின் சமூகப் பின்னணியைத் தாக்குவதாகவும் அமைந்த படியால், இவ்வாதத்திற்கு இலக்கிய வரலாற்றடிப்ப டையிலும் இ. மு. எ. சங்கம் பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்தது.'
என்று கூறுகிருர்,
ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்கும். 63
(ஈ) கொடுந்தமிழ் வழக்கினுலே மொழி அழிந்துவிடும்.
ஒரு மொழியிலே பேச்சுவழக்குச் சொற்கள் மிகுதியாக வந்து கலப்பின், அம்மொழி காலப்போக்கிலே வேருெரு மொழியாகிவிடும் . இதற்குச் சான்முக தமிழ் மொழியினி ன்றும் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் தோன்றின என வாதிட்டனர் மரபுவழிப் பண்டிதர்கள். தமிழ் மொழியிலே, கொடுந்தமிழ் வழக்கு மிகுந்தே இம் மொழிகள் தோன்றின என்பதும், எதிர்காலத்திலும் கொடுத்தமிழ் வழக்கு மிகுமாயின் தமிழ் மொழியே அழிந்து விடும் என்பதும் இவர்தம் வாதமாகும். இதஞலேதான்,
இவ்வகைத் தமிழ்க் கொலேக்குக் காரணம், ஒன்றையும் படித்தறிய மாட்டாமையாற் கல்லாதார் பேசுவதுபோல எழுதிப் பிழைக்கலாம் என்னும் பாழுங்
கொள்கை, புதுமிை எழுத்தாளர் உள்ளத்திற் புகுத்து கொண்டமையேயாகும். இம் மயக்கவுணர்ச்சி நீங்கிய வழியே, யாழ்ப்பாணத்துக்குச் சிறப்பாய் அமைந்த செந்தமிழ் நடையும், வழக்கும் மரபும் வளமுறும். அது நீங்காவழி தமிழ் மொழிக்குரிய இனிமையும், எளிமையும், இலக்கண வரம்பும், வழக்கும், மரபும் நாளடைவில் அழியும், அழியவே ஆ1 செந்தமிழ் கொடுத்தமிழாகிவிடும்!"
என்று சோ. இளமுருகளுர் 18 கூறுகின்ருர், இக் கருத்தினைத் 25 DJ செந்தமிழ் வழக்கு என்ற சிறிய நூலிற் பதிஞன்குக் கும் மேற்பட்ட இடங்களிலே அவர் வலியுறுத்திச் செல் கின்ருர், அத்துடன்,
இப் புதுவழக்கு வளம்பட்ட மொழிகளில் பாண் டும் இல்லை. உருசிய நாட்டிலுள்ள மொழிகளிற் சிலர் எழுதத் தொடங்கி ஆய்வுநிலையில் விட்டிருக்கின்றனர்; அது பயன்படுமென்று யாரும் துணியவில்லே என்பர் ஆராய்ச்சியாளர்.' 9
Page 46
64 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
ான்றும் இவர் பிறமொழி வழக்குகளிலிருத்து உதாரணம் காட்டுவது தமிழின் மொழித்தூய்மையை வற்புறுத்துவதற் காகவேயாகும்.
(உ) இழிசினர் வழக்கு சிருஷ்டி இலக்கியத்தில் சிறு
பங்கே இடம்பெற வேண்டும்.
தமிழ் மொழியிலே, கொடுந்தமிழ் வழக்கு மிகுமாயின் அம்மொழியே நாளடைவில் பிறிதொரு மொழியாகத் திரிந்துவிடும் என வாதாடிய மரபுவழி இலக்கியகர்த்தாக்கள், தமது வாதம் அடிப்படையிலேயே பலமிழந்து போவதனை உணர்ந்து பின்வருமாறு சமாதானமும் கூறலாயினர் :
"இனிக் கொடுந்தமிழ்ப் பேச்சைப்பற்றிச் சிறிது கருதுவாம். நாடகத்திற் பல்வேறு நாடக மாந்தர் வருவர். அவருட் சிலர் கல்லாதாராயுமிருப்பர். அவர் பேச்சுக் கல்லாதான் பேச்சாகவே அமைதல் வேண்டும். அங்ஙனம் அமையாவழி, அந் நாடக மாந்தரின் தனிப் பண்பு வெளிப்படமாட்டாது. ஆதலின், அவர் பேச்சு இலக்கணமற்றதாய் அமைவது முறையாம் ! அவ்வா முயீன், கொடுந்தமிழ் பேசுவதும் நாடகத் தமிழிலே இடம்பெறும். கல்லாத நாடக மாந்தர், அத் தமிழிலே பேசவரன்றி, தூய செந்தமிழிற் பேசுதல் நகைப்புக் கிடமாகும். அதுபோலச் சிறுகதைகளில் வரும் உரை யாடல்களும் அங்ங்ணம் அமையலாமோவெனின் அமைய லாம் என்க. ஆயின் அக் கதையில் வரும் எல்லாப் பாத்திரங்களையும் கல்லாதாராகியும் அமையக் கதை முழுமையையும் கொடுந்தமிழில் எழுதுவது எத்துணைப் பேதமையாகும் ! 1 ஆகவே, கொடுத்தமிழ்ப் பேச்சு நாடகங்களிலே சிறுபான்மை அமையும் என்பதுஉம், அதுபோலக் கசேத நூல்களிலும் அச் சிறுபான்மை யளவே யமையவேண்டுமென்பதுஉம் பெறப்படும்." 20
என்று சோ. இளமுருகளுர் கூறுவது கவனத்திலே கொள் ளத்தக்கது. முதலில், இலக்கியத்திலே இழிசினர் வழக்கைக் கண்டித்த இவர்கள் பின்னர், கல்லா மாத்தரின் உரை
ரழத்துப் புண்கதையும் பேச்சுவழக்கும். . 65
பாடல் இலக்கணமற்றதாய் இடம்பெறலாம் என வாதிடுவது இவர்தம் கொள்கை முரண்பாட்டினை வெளிப்படுத்துவ தாகவே காணப்படுகின்றது.
(ஊ) சிருஷ்டி இலக்கிய கர்த்தாக்கள் யாவரும்
பொதுவுடைமைவாதிகள்
மரபுவழி இலக்கிய கர்த்தாக்கள் சிலர், சிருஷ்டி இலக்கிய கர்த்தாக்கள் யாவரும் பொதுவுடமைவாதிகள் ான மயங்கியதாலும் அவர்தம் இலக்கியப் பிரவேசத்தினை அங்கீகரித்தனரல்லர். கொம்யூனிச சித்தாந்தம், எமது நாட்டிலே பேசப்படுவது அர்த்தமற்றது, அச் சித்தாந்த மானது எமது மரபுவழிக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்து விடும் என்றும் இவர்கள் நம்பினர்.
'தற்கால இலக்கிய கர்த்தாக்கள் தமிழ் மொழியின் தனித்தன்மையை, தமிழ் இலக்கியத்தின் குளுதி சயத்தை மீறுவதைத்தான் நாம் கண்டிக்கிருேம்; எதிர்க்கிருேம். ஒழுங்கான தமிழ் வசனங்களே எழுதத் தெரியாதவர்கள், ஆங்கில இலக்கியத்தின் புதிய உத்தி களேயும் உருவ அமைப்புக்களையும் தமிழ்மொழியில் கொண்டுவர வேண்டும் என்ற நல்லெண்ணத்திஞல், புதுமை இலக்கிய கர்த்தாக்கள் என்ற பொய்ம்மைப் போர்வைக்குள் புகுந்துகொண்டு பட்டிப்பகலில் தமிழ்க் கொலை புரிவதையும் வேறுமொழி இலக்கியங்களிலிருந்து தாராளமாகக் கொள்ளையடிப்பதையுமே நாம் எதிர்க் கின்ருேம். தமிழ் இலக்கிய இலக்கணப் பயிற்சியற்ற இத்தகைய எழுத் (துத்) தோழர்கட்குத் தங்களின் சிகப்புச் சாயத்தை அவர்களும் பூசிவிட்டார்களே என்பதற்காக, தமிழ் மரபிலும் ஆங்கில இலக்கியக் கடலிலும் மூழ்கித் திளைத்த சில தரம்வாய்ந்த விமர் சகர்”ள், மிண்டுகொடுக்க முயல்வதையும் நாம் கண் டிக்கிருேம், வெறுக்கிருேம்.
எனப் புதுமைப் பண்டிதனும் (தினகரன் 8-12-1962)
9
Page 47
66 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
“ரூசிய மொழியில் எழுதப்பட்ட புரட்சி நூல்களிற் சிலவற்றைப் படித்த இண்ஞர் சிலர் தமிழ் மரபு மாற்றத்தைப்பற்றிப் பேசிவருவது விந்தையாக இருக்கிறது . . ’’
என ஆ. சதாசிவமும் (தின்கரன், 5-3-1963) கூறுவது காண்க,
(எ) புனகதை, இலக்கிய வடிவமாகாது.
புறநானூற்றையும், சிலப்பதிகாரத்தையும் தேவார திவ்வியப் பிரபந்தங்களையுமே இலக்கியங்களாக ஏற்றுக் கொண்ட மரபுவழி இலக்கிய கர்த்தாக்கள், புனைகதைகளே இலக்கியமாக ஏற்றுக்கொண்டாரல்லர், இலக்கியம், செய் யுள் வடிவிலேயே அமையவேண்டும் என்றும், அது உயர் பொருளே உள்ளிடாகக் கொள்ள வேண்டுமெனவும் எதிர்பார்த்த இவர்கள், சாதாரண மனிதனின் வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சித்திரிப்பதுமல்லாமல், அவனது பேச்சு மொழியையும் சித்திரிப்பதால் புண்கதை இலக்கிய வடி வத்தினேயே வன்மையாகக் கண்டிக்கலாயினர்.
“சிறுகதைகளும் வசன கவிதையும் இலக்கியமாகா, இன்றைய சிறுகதைப் படைப்பில் இழிசினர் வழக்கே அதிகரித்துவிட்டது. பேச்சுத் தமிழுக்கு இடமளிக்கும் பொதுவுடைமைவாதிகள் தமிழைக் கொலை செய் கிருரர்கள்.
என்று ஆ. சதாசிவம் (தினகரன், 05-8-1963) குறிப் பிடுவது கவனத்திற் கொள்ளத்தக்கது.
I. இலக்கிய மரபு மீறப்படவேண்டும்.
இலக்கியமானது காலத்துக்கும் சமூக மாற்றங்களுக்கு மேற்ப மாற்றமடையும் பெற்றிவாய்ந்தது ; அது அசையாத குட்டை நீரல்ல என்பதே இரண்டாவது கொள்கை. பொதுவாக, இக் கொள்கையை வரவேற்ருேரும் கடைப்
பிடித்தோரும் முற்போக்கு எழுத்தாளரே, இ. மு. சா. சங்கம்
ஈழத்துப் புண்கதையும் பேச்சுவழக்கும் . 67
ான்ற நிறுவனத்தின்கீழ் ஒர் அணியிலே இவர்கள் இயங் கினர். இச் சங்கம் மாக்சிய தத்துங்களையும் கொம்யூனிச சித்தாந்தங்களையும் முன்வைத்து இயங்கினும், அதன் உறுப்பினர் யாவரும் இத் தத்துவங்களையும் சித்தாந்தங் களேயும் முற்றுமுழுதாக ஏற்றுக்கொண்டோரல்லர். மாக்சிய தத்துவங்களையும் கொம்யூனிச சித்தாந்தங்களையும் ஏற்றுக் கொள்ளாத முற்போக்கு எழுத்தாளர் சிலரும் இச் சங்கத் திலே அங்கம் வகித்தனர். அரசியல், சித்தாந்த நோக்கிலே வெவ்வேறு அபிப்பிரா யமுடையோராய்க் காணப்படினும், இலக்கிய நெறியிலே இவர்கள் யாவரும் முற்போக்குக் கோட்பாடுகளை ஆதரித்தோரே. இவர்கள், இலக்கியப் பொருள், வடிவம், ஆக்க உரிமை யாவற்றிலுமே மரபு மீறப்பட வேண்டும் என்னும் கொள்கை உடையோராவர்.
’ ‘தமிழ் இலக்கிய வடிவத்திலே, இலக்கியப் பொருளிலே, கவிதை யாப்பிலே, உரைநடையிலே, இலக்கணத்திலே காலத்துக்கு ஏற்ற வளர்ச்சியை இறந்த காலத்திலே கொண்டிருக்கிருேம். நிகழ் காலத் திலே காணுகின்ருேம்; எதிர்காலத்தில் காண இருக் கின்ருேம். பாகத, சங்கத, அராபிய, இந்துஸ்தானி போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரெஞ்சு, ஆங்கிலச் சொற்கள் ஏராளமாகத் தமிழிலே வந்து புகுத்து விட்டன. தமிழ் பலகாலமாகத் தனித்தியங்கும் ஆற்றலுள்ள மொழியாக இருந்தும், இன்று பிற மொழிகளின் அன்பளிப்பையும் ஏற்று இயங்குகின்றது. தமிழ்மொழி மக்களது அறிவு வளர்ச்சிக்கும் சமுதாயத் தின் நிலைமைக்கும் சூழ்நிலைக்கும் தக்கவாறு காலத்துக் குக் காலம் வேறுபட்டுக்கொண்டு வந்திருக்கிறது. ஈழத்திலே தமிழ்மொழி ஒரு நூதன உயிராற்றல் அமைந்து உரம்பெற்று வளரத் தொடங்கிவிட்டது. இதற்குக் காரணம் உயர்தரக் கல்வி தமிழ் மொழி மூலம் புகட்டப்படுவதே. தமிழ்மொழி பல புதிய துறைகளிற் புதிய முறையில் வளர்ச்சியடைய வேறெந்த நாட்டிலுமில்லாத வாய்ப்பு ஈழத்திலுண்டு."
Page 48
68 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
எனச் சு. வித்தியானத்தன் (ஊற்று, தொகுதி 1, இல, 1) மரபுமாற்றம்பற்றிக் கருத்துத் தெரிவித்திருப்பது மரபு மாற்றத்தின் இன்றியமையாமையை வற்புறுத்துவதாய் உள்ளது.
இக் கொள்கையினைப் பின்பற்றியோர் பின்வரும் வாதங்களே சிடுத்துக்காட்டி, முற்போக்கு அணிக்கு ஆதரவு தேடிக்கொண்டனர் :
(அ) மக்களுக்காகவே இலக்கியம். (ஆ) புனைகதை இலக்கியமே ஆற்றல்வாய்ந்த சாதனம் (இ) புனைகதை இலக்கியத்திலே இழிசினர் வழக்குத்
தவிர்க்க முடியாதது. (ஈ) முற்போக்கு எழுத்தாளர் யாவரும் பொது
வுடைமைவாதிகள். (உ) தேசிய, மண்வாசனைக்கு இலக்கிய முதன்மை அளித்தல்.
(அ) மக்களுக்காகவே இலக்கியம்.
ஐரோப்பியர் வருகையுடன் நிலமானிய சமுதாயம் ஆட்டங்காணத் தொடங்க நமது நாட்டிலே, நிலமானிய அமைப்பின மிண்டுகொடுத்துக் காத்துவந்த இலக்கி யங் களும் தம் முக்கியத்துவத்தினை இழக்கலாயின. சமூக வாழ்க்கையிலே மன்னன் வகித்த இடத்தை மக்கள் வகிக் கலாயினர். மனித சமுதாயத்தின் அத்திவாரம் மக்களே என்பது, கொள்கைரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவே, இலக்கியத்திலே மக்கள் இடம்பெறுவதும், அவர்களுக்காகவே இலக்கியம் படைக் கப்படுவதும், அவர்களின் மொழியிலேயே இலக்கியம் அமை வதும் தவிர்க்கவியலாததாகியது.
"யாம் அநபாய சோழன் காலத்திலோ, பாலே பாடிய பெருங்கடுங்கோ காலத்திலோ, குலோத்துங்கன் காலத்திலோ வாழவில்லை. புரவலர், புலவர், இழிசினர் என்று மக்களிலே பாகுபாடு செய்திட எமக்கு
ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்கும். 69
எவ்வித உரிமையும் கிடையாது. எம் இன்றைய புரவலர் மக்கள்தாம் ! அவர்களுக்கு விளங்காவகையில், மரபினைக் காக்க எண்ணிக் கடுந் தமிழிலே, வழக் கொழிந்த மொழி நடையிலே இலக்கியம் சமைத்தல் பேதைமையாகும் மக்களிலிருந்து ஒதுங்கியும், மக்களை ஒதுக்கியும் வாழ்வோரின் இலக்கிய வாழ்வு என்று ம் நீடித்து நில்லாது. s
எனச் சொக்கன் (தினகரன், 05-01-1963) கூறுவது காண்க.
(ஆ) புனைகதை இலக்கியமே ஆற்றல்வாய்ந்த
சாதனம். *Vik
புனைகதை இலக்கியம், மணிதனது எண்ணங்களையும், சிந்தனைகளையும், அபிலாகூைடிகளையும் சித்திரிக்கின்றது. அது மனிதனேச் செயலூக்கத்திற்குத் தூண்டுகிறது; புரட்சிகர சமுதாயத்தின் ஆக்கத்திற்கு வழி சமைக்கின்றது. எனவே, வாழ்க்கைப் போராட்டத்தை வென்றெடுப்பதற்குப் புனை கதை இலக்கியமும் ஓர் ஆயுதமாகும் என்பது இவர்கள் கருத்து.
* 'இன்று உலகிற்கே பொதுவான இலக்கியக் கோட்பாடு ஒன்று உருவாகியிருக்கிறது. அக்கோட்பாட் டின்படி நாடகமும், கதையும், கவிதையுமே மிக முக்கிய மான உருவங்களாகக் கருதப்படுகின்றன. இந்நிலையில் எவர்தான் கதைகள் இலக்கியமாகா என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியும் ?’’
என வினவும் அ. ந. கந்தசாமி, (தினகரன், 2, 2 1963) நோபல் பரிசுபெற்ற இலக்கிய எழுத்தாளர் பலரும் சிறுகதை, நாவல் ஆசிரியர்களே எனத் தமது வாதத்தினை ஆதாரபூர்வமாகநிறுவ முயன்றர்.
Page 49
70 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
(இ) இலக்கியத்திலே இழிசினர் வழக்குத் தவிர்க்க
முடியாதது.
மனிதனது உணர்ச்சிகளை நேரடியாகப் பிரதிபலிப்பது, அவனது பேச்சுமொழி. எனவே, மனிதனைப் பொருளாகக் கொண்ட இலக்கியங்களிலே, அவனது பேச்சுமொழி கையாளப்படும்போதே இலக்கியமும் உயிர்த்துடிப்புடைய தாகிறது. இப் பேச்சுமொழியை இழிசினர் வழக்கென ஒதுக்கி வைப்பதிலே அர்த்தமில்லை என்று இவர்கள் வாதாடினா. V.
'காளிதாசன்கூட இதற்கு விதிவிலக்கல்ல. சாகுந் தலத்தில் செம்படவர் பாத்திரங்கள் செம்படவர்க் குரிய பேச்சுவழக்கான பிராகிருத மொழியிலேயே உரையாடுவதாக வடமொழியாளர் வாயிலான அறி கிருேம், நமது நாட்டிலும் கலாநிதி க. கணபதிப் பிள்ளையவர்கள் நானுடகம் என்னும் அரிய நூலைப் பேச்சுத் தமிழிலே யாத்திருக்கின்ருர், நாடகத்திலும், கதைகளிலும் பலதிறப்பட்ட பாத்திரங்களும் வருதல் வழக்கம் இந் நிலையில் பேச்சுத் தமிழை விடுத்து இவற்றை வளங்கொண்ட இலக்கியச் சுவை கொண்ட வையாக அமைத்தல் முடியாது. உலகப் பேரறிஞரும், சிறந்த இலக்கிய கருத்தருமான பேர்ணுட்ஷ்ா தமது பிக்மாலியன் நாடகத்தை முழுக்க முழுக்க இழிசினர் வழக்கிலேயே அமைத்திருக்கிருர், '
ான அ. ந. கந்தசாமி (தினகரன், 2, 2. 1983) கூறுவது, இலக்கியத்திலே இழிசினர் வழக்கு இடம்பெறுவது புதுமை யானதாகாது என்பதை விளக்குதற்காகவாகும்.
(ஈ) முற்போக்கு எழுத்தாளர் யாவரும்
சிபாதுவுடைமைவாதிகள்
முற்போக்கு எழுத்தாளர் யாவரும் பொதுவுடைமை வாதிகளே என்ற மயக்கம், மரபுவழி இலக்கிய கர்த்தாக்க ளிடம் மட்டுமல்ல, முற்போக்கு அணியைச் சேர்ந்த எழுத்
ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்கும். 71
தாளர் பலரிடமுங் கூடக் காணப்பட்டது. பொதுவுடைமை வாதிகளல்லாத எழுத்தாளர்களும் இ. மு. எ. சங்க உறுப் பினர்களாக இருந்தனர். இருப்பினும், முற்போக்கு அணியி லுள்ளோர் யாவரும் பொதுவுடைமை வாதிகள், அவர்கள் யாவரும் தலைசிறந்த எழுத்தாளர்கள் என்ற மயக்கம் ஈழத்து இலக்கிய உலகிலே வேரூன்றி விட்டது.
"மக்கள் இலக்கியத்தை நாம் மதித்து அதற்கு மதிப்பளிக்கிழுேம். மக்களின் அன்றைய பிரச்சினைகளை எழுதக்கூடியவர்கள்தான் முற்போக்கு எழுத்தாளர்கள். உலகில் சிறந்த எழுத்தாளர்கள் என்று கருதப்படுபவர் கள் எல்லாரும் அதிகமாகப் பொதுவுடமை வாதிகளே. ”*
என டொமினிக் ஜீவா (தினகரன், 14-01-1963) குறிப் பிடுவது கவனத்தில் கொள்ளத்தக்கது.
(உ) தேசீய மண்வாசனைக்கு இலக்கிய முதன்மை.
ஆரம்பகால ஈழத்துப் புனைகதை எழுத்தாளர்களுக்குப் போதிய பிரசுரகளம் இங்கு இன்மையால், அவர்கள் யாவரும் தென்னிந்தியத் தமிழ்ச் சஞ்சிகைகளையே பிரசுரத் தின்பொருட்டு எதிர்நோக்க நேர்ந்தது. இதனுல் அவர்தம் கதைகளிலே தென்னிந்தியத் தமிழ் இலக்கியப் பண்பு மேலோங்கி நிற்பதாயிற்று, ஈழத்து மண்வாசண்யை அவற்றிலே நுகர முடியவில்லே. மேலும், ஈழத்தை நல்ல தொரு சந்தையாக ஆக்கிக்கொண்ட இச் சஞ்சிகைகள், ஈழத்து எழுத்தாளர்களுக்குப் போதிய சந்தர்ப்பமுக் கொடுக்க முன்வரவில்லை. ஈழத்திலே மண்வாசனை இலக் கியம், பிரதேச இலக்கியம் ஆகிய கோட்பாடுகள் உரு வாவதற்கு மேற்கூறிய காரணங்கள் போதுமானவையாக அமைந்தன. بر
தென்னிந்தியச் சஞ்சிகைகளின் தயவை எதிர்நோக்காது நாமாகவே ஈழத்திற் பிரசுர வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்; ஈழத்து மக்களின் வாழ்க்கை முறையை எமது இலக்கியங்களிலே இதயபூர்வமாகத் தரிசிக்கவேண்டும்
Page 50
72 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
என்ற கோஷம் 1960 ஆம் ஆண்டுக்காலப் பகுதிகளிலே மேலோங்குவதாயிற்று. ஈழத்து மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் இலக்கியப் பொருளாகும்போது, ஈழத்தின் பிரதேச வருணனைகளும், வாழ்க்கைமுறை விவரணங்களும், பிரதேசப் பேச்சுவழக்கு ஆகியனவும் ஈழத்து ஆக்கங்களிலே இடம்பெறுவது தவிர்க்கவியலாததாயிற்று. இதனுலேயே, ஈழத்து ஆக்க இலக்கியங்களிலே முதலில் தேசீய இலக்கியக் கோட்பாடும், பின்னரே மண்வாசனைக் கோட்பாடும் இடம்பேற்றன. நற்போக்கு இலக்கியம்
இப் புதிய இலக்கியக் கொள்கையின் "பிதாமகர்’ எஸ். பொன்னுத்துரையாவார். 1963 ஆம் ஆண்டுவரை, இ. மு. எ. சங்கத்துடன் இணைந்து, அதன் கொள்கைகளை ஏற்று இயங்கி வந்தவர் இவர். 1963 மே மாதம் 7 ஆம் 8 ஆம் திகதிகளிலே, முறையே பருத்தித்துறையிலும் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்ற இ. மு. எ. சங்க இரண்டாவது மகாநாட்டிலே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, எஸ். பொன்னுத்துரையை இ. மு. எ. சங்க அணியினின் றும் பிரிப்பதாயிற்று. இவ்வாறு பிரிந்து, தமக்கென ஓரணியை வகுத்துக்கொண்ட எஸ். பொன்னுத்துரை, 09.08.1964 ஆம், 18-09-1964 ஆம் திகதிய தினகரன் பத்திரிகையிலே தனது கொள்கை விளக்கத்தை முன் வைத்தார்.
இலக்கியத்திலே, தனிமனிதவாதம் முதன்மையானது என்பது இவர்தம் கோட்பாடு, எனவே, இயக்க நெறியிலே கட்டுப்பாட்டுடன் இயங்கிவந்த இ. மு. எ. சங்கத்துடன் இவரால் இணைந்து செயற்பட முடியவில்லே. இதுவே இ. மு. எ. சங்கத்தினின்றும் இவர் வெளியேறுவதற்குக் காரணமாகும் என்பர் கா. சிவத்தம்பி (1975),
ஈழத்துப் புனைகதைகளிலே மரபுப் போராட்டத்தின் தாக்கம்
மரபுப் போராட்டமானது, ஈழத்து இலக்கியம் எதிர் காலத்திலே எவ்வாறமைதல் வேண்டும் என்பதனைத் தீர்
ஈழத்துப் புனேகதையும் பேச்சுவழக்கும். 73
மானிப்பதாயிற்று. இப் போராட்டம் வகுத்த வழியிலே, ஈழத்து இலக்கியம் தனக்கென ஒரு தனித்துவமான பாதையை வகுக்கலாயிற்று மரபுப் போராட்டத்தினலே ஈழத்து இலக்கியத்திலேற்பட்ட விளைவுகளாகப் பின் வருவன வற்றை நாம் கொள்ளலாம்
(அ) புனைகதை இலக்கியம் ஆற்றல் இலக்கியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. செய்யுள் இலக்கியத்திலும் பார்க்க, உரைநடையாலான புனைகதை இலக்கியமே மக்களை நேரடியாகச் சென்றடையக் கூடியது என் பதும், இப் புண்கதை இலக்கியத்திலே சமூக மாற்றங் களைப் பிரதிபலிக்க முடிவதுடன், அம் மாற்றங்களே ஊக்குவிக்க முடியும் என்பதும் ஏற்றுக்கொள்ளப் பட்டன.
(ஆ) தேசீய இலக்கியம். மண்வாசனை இலக்கியம் ஆகியன ஈழத்திலே வளம்பெறலாயின. ஈழத்து இலக்கியம் ஈழத்து மக்களின் சமூக நிலைமைகளைப் பிரதிபலிக்க வேண்டும்; அவ்வப் பிரதேச மக்களது சிறப்புற்ற கருப்பொருளை அச் சமூகப் பின்னணியிலே சித்திரிக்க வேண்டும்; மொழியும் அவ்வப் பிரதேச மக்களின் வழக்கினை ஒட்டியதாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்கள் இலக்கிய உலகிலே உறுதிப்படுத்தப் பட்டன. இதனலே, பிரதேசப் பேச்சுத் தமிழின் செல்வாக்கு ஈழத்துப் புனைகதைகளிலே தவிர்க்க முடியாதவாறு இடம்பெறுவதாயிற்று.
(இ) சாதாரண தொழிலாள வர்க்கத்தினர் பலர் பிரக்ஞை பூர்வமாகச் சிருஷ்டி இலக்கியத் துறையிலே பங்களிப் புதற்கும் மரபுப் போராட்டமானது வழிவகுக்க லாயிற்று. இதுவரை, பண்டித வர்க்கத்தினரே இலக்கிய கர்த்தாக்கள் என இறுமாந்த நிலை மாறி, சாதாரண கல்வியறிவற்ற தொழிலாள வகுப்பினரும் சிருஷ்டி இலக்கியத் துறையிலே ஈடுபடலாயினர்.
O
Page 51
74
(FF)
ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
தென்னிந்தியத் தமிழ்ச் சஞ்சிகைகளின் தொகைக் கட்டுப்பாடு கோட்பாட்டுரீதியாக ஏற்றுக்கொள்ளப் பட்டதுடன், செயல்ரீதியாகவும் நடைமுறைப்படுத் தப்பட்டது. கணக்கற்று வந்துகுவிந்த தென்னிந்தியத் தமிழ்ச் சஞ்சிகைகட்கு இறக்குமதிக் கட்டுப்பாடு விதிக்கப்படவே அவ் வெற்றிடத்தை நிரப்புவதற்காக உள்நாட்டிலே சஞ்சிகைகள் பல தோன்றின. இவை ஈழத்திலே புதிய எழுத்தாளர்கள் பலர் உருவாவதற் குக் காரணமாயமைந்தன.
எனவே, ஈழத்துப் புனைகதை இலக்கியத்தின் தனித்
துவத்திற்கும், அதன் செழுமைக்கும் தூண்டுகோலா யமைந்தது மரபுப் போராட்டமே என்பது கண்கூடாகும்.
அடிக்குறிப்புக்கள்.
l.
感。
3.
4.
5
6
7.
9.
10.
ll.
சுப்பிரமணியம், நா. ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்,
Lu. 67
கனக. செந்திநாதன், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு, மேற்படி, பக். 36
மேற்படி, பக். 44
. கதிர்காமநாதன், செ. , “ான்னுரை', கொட்டும்பனி . சண்முகதாஸ், அ. "ஆக்க இலக்கியமும் மொழியும்'
ஆக்க இலக்கியமும் அறிவியலும், பக். 59. சுப்பிரமணியம், நா, ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்,
10 . *14_ו
. இலங்கையர்கோன், வெள்ளிப் பாதசரம்,
சுபைர் இளங்கீரன், தினகரன், 14-1-1963
இளமுருகனுர், சோ., செந்தமிழ் வழக்கு, பக். 5
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க இலட்சியங்களும்
அமைப்பு விதிகளும், 1954
ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்கும். 75
18.
18.
14.
15.
1.
17.
18.
19.
20.
முத்துச் சண்முகம், இக்காலத் தமிழ் பக். 12 நன்னூல், பொதுவியல், சூத், 388 இளமுருகளுர், சோ., செந்தமிழ் வழக்கு பக். 12 மேற்படி, பக். 1-2; 57
மேற்படி, பக். 5-6 தொல்காப்பியம், மரபியல், சூத், 638 இளமுருகளுர், சோ., செந்தமிழ் வழக்கு பக். மேற்படி, பக். 3
மேற்படி, பக். 8
Page 52
3 ஈழத்துப் புனகதைகளிற்
Son 86 u J MT6mTÜ) LI LIL பிரதேசப் பேச்சுவழக்கு
-விவரணம்
பேச்சுவழக்கின் சில பண்புகள்
கிடந்த இரு தசாப்தங்களாக, ஈழத்து ஆக்க இலக்கி யங்களிற் பிரதேசப் பண்பும், மண்வாசனைப் பண்பும் முதன்மை பெற்று விளங்குகின்றன. புனைகதை இலக்கி யத்திற் பிரதேசப் பேச்சுவழக்கின் இன்றியமை பாமையை, எழுத்தாளர்கள் போலவே வாசகர்களும் உணருகின்றனர். ஒரு பிரதேசத்தின், அல்லது மக்கள் குழுவின் இயல்புகளேத் தெளிவுறச் சித்திரிப்பது அவர்களுடைய பேச்சு மொழியே என்பதை இன்று யாவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனல் பிரதேசப் பேச்சுமொழிகள் அல்லது கிளைமொழிகள் யாவும், இடத்துக்கிடமும் மக்களின் இயல்பிற்கேற்பவும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. தேசியரீதியாகவும். மாவட்ட ரீதியாகவும், கிராமிய மட்டத்திலும் சாதி யடிப்படையிலும் பேச்சுமொழியானது தன்னியல்பிலே வேறுபடுகின்றது. இந்தியத் தமிழர் பேச்சு வழக்கிற்கும் இலங்கைத் தமிழர் பேச்சுவழக்கிற்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிற்கும் மட்டக்களப்புப் பேச்சு வழக்கிற்குமிடையே பல்வேறு
ஈழத்துப் புனைகதைகளிற் கையாளப்பட்ட . 77
நுட்பபேதங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்திலும், புத்தூர்க் கிராமவாசிகளின் பேச்சு வழக்கும் வதிரிக் கிராம வாசிகளின் பேச்சு வழக்கிற்குமிடையே பல நுண்ணிதான வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒரே கிராமத்திலேயே, சாதியடிப்படையிலும், தொழிலடிப்படையிலும் பேச்சு வழக்கானது வேறுபட்டுச் செல்கின்றது. எனவே, இக் காலகட்டத்திலே, பிரதேசக் கிளைமொழிகள் பற்றிய ஆய்வு இன்றியமையாத தொன்முகிவிட்டது. இன்று, பிரதேசச் கிளே மொழிகள் பற்றிய தெளிவான அறிவுள்ள ஒரு வாசக ஞலேயே ஈழத்து மண்வாசனை இலக்கியங்களை நயந்து கற்க முடிகிறது, விமர்சிக்க முடிகிறது.
பிரதேசக் கிண்மொழிகள், பின்வரும் மூன்று சத்தர்ப்பங் களிலே இடத்திற்கிடம் வேறுபடுகின்றன. முதலாவது, ஒலியமைப்பிலே இடத்துக்கிடம் ஏற்படும் வேறுபாடு ஆகும். பன்றி என்னுஞ் சொல்லில் உள்ள ண்ற் என்னும் ஒலிகள் ன்ன் என ஒலிக்க பன்னி என்று இந்தியத் தமிழி லும், ண்ட் என ஒலிக்க பண்டி என யாழ்ப்பாணத் தமிழி லும் அமைகின்றன. எனவே, ஒலிமாற்றம் அல்லது ஒலித் திரிபு, பிரதேசக் கிளைமொழிகளின் வேறுபாட்டுக்குக் காரண மாக அமைந்துவிடுகிறது.
இரண்டாவது, ஒரு குறிப்பிட்ட பொருளினை அழைப் பதற்கு, ஒருபகுதி மக்கள் வழங்குஞ் சொல்லை எல்லாப் பகுதி மக்களும் வழங்குவதில்லை. அவர்கள், அச் சொல் லுக்குப் பதிலாக வேருெரு சொல்லைப் பயன்படுத்து கின்றனர். நெல்லு, அரிசி முதலிய தானியங்கள் புடைக்கும் கருவியை யாழ்ப்பாண மக்கள், தமது இல்லங்களிலே சுளகு ான்பர். இதே பொருளினை, விவசாயக் களத்திலே குல்லம் என அழைப்பர். யாழ்ப்பாணத்திலே குரக்கன் என அழைக்கப்படும் தானியத்தைத் தென்னுட்டிலே கேள்வரகு ான்றும், சேலத்திலே ஆரியம் என்றும், பாண்டி நாட்டிலே கேப்பை என்றும், திருச்சிராப்பள்ளியிலே ராகி என்றும் சித்தூரிலே கேவுரு என்றும் வழங்குகின்றனர்.
Page 53
78 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
மூன்முவது, ஒரிடத்திலே வாழ்கின்ற மக்கள், ஒரு சொல்லுக்கு வழங்கும் பொருளிண்ப், பிறிதோர் இடத்திலே வாழும் மக்கள் பெரும்பாலும் வழங்குவதில்லை. இரு திறத்தினரும், அச் சொல்லின வெவ்வேறு பொருளிலும் அர்த்தத்திலுமே வழங்குகின்றனர். தென்னித்தியாவிலே, தவறிவிட்டார் என்ற சொல், இறந்துவிட்டார் என்ற பொருளை உணர்த்துகின்றது. இதே சொல், யாழ்ப் பாணத்திலே பிழை செய்துவிட்டார் என்ற பொருளிலே லழங்கப்படுகின்றது.
பிரதேசக் கிளைமொழிகள்
ஈழத்தினைப் பொறுத்தவரையிலே, தமிழ்பேசும் மக்கள் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் மட்டும் வாழ்பவரல்லர். ஈழத்தின் சகல பிரதேசங்களிலும், அவர்கள் பரந்து வாழ் கின்றனர். இதனுல், அவர்கள் வாழும் ஒவ்வொரு பிரதே சத்தின் பேச்சுவழக்கினையும் வகுத்துக் காட்டுவது இயலாத தாகும். ஈழத்துப் பிரதேசக் கிளைமொழிகள் பற்றி, அறி ஞர்கள் பலர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளபோதும், அவை பரந்த அடிப்படையிலும் ஆழமாகவும் அமையாமைக்கு இதுவே காரணமாகும். அதிலும், புனைகதைகளிலே இடம் பெறும் பேச்சுவழக்கினை ஆராயும் இப்பணி இன்னும் சிக்கலானதாகவே அமைந்துள்ளது.
சுவாமி விபுலாநந்தர், ாவ். எக்ஸ். சீ. நடராசா, க. கணபதிப்பிள்ளை, எம். சண்முகம்பிள்கின, எஸ். தனஞ் செயராசசிங்கம், எஸ். சுசீந்திரராசா, அ. சண்முகதாஸ், கமில் ஸ்வெலபில், ராவ். பீ. ஜே. குய்ப்பர் ஆகியோர் ஈழத்துப் பிரதேசக் கிளைமொழிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் 1 கமில் ஸ்வெலபில் (1959 - 28-36) மிகவும் பரந்த ஒர் அடிப்படையிலே ஈழத்துப் பிரதேசக் கிளைமொழிகளைப் பின்வருமாறு வகுத்துள்ளார்:
(அ) வடபகுதிப் பிரதேசக் கிண்மொழி. (ஆ) வடகிழக்குப் பிரதேசக் கிளைமொழி.
ஈழத்துப் புனைகதைகளிற் கையாளப்பட்ட. 79
(இ) தென்கிழக்குப் பிரதேசக் கிளைமொழி. (ஈ) கொழும்புப் பிரதேசக் கிளைமொழி.
அ. சண்முகதாஸ், (1976)
*மாவட்ட அடிப்படையிலே, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, மேற்குக் கரை, மலை நாடு எனும் பாகுபாட்டிகின அமைக்க முடியும். இன அடிப்படையில், இந்தியத் தமிழர், இஸ்லாமியர் இலங்கைத் தமிழர் என்ருெரு பாகுபாடு செய்ய வேண் டியுள்ளது'
எனக் கூறுவதுடன், தொழில் முறைகளுக்கு ஏற்றவகையி லும் மொழியானது வேறுபட்டுச் செல்கின்றது என்பர்.
இவ்வாய்வின் பொகுட்டுப் பிரதேசக் கிளைமொழிகள் பின்வருமாறு வகுக்கப்படுகின்றன :
(அ) பிரதேச அடிப்படையில். (ஆ) தொழில் அடிப்படையில் (இ) இன அடிப்படையில், (ஈ) கருத்துத்தொடர்பு முறைமை அடிப்படையில்,
பிரதேச அடிப்படையிலே பின்வருமாறு நோக்கலாம் :
(அ) யாழ்ப்பாணப் பிரதேசக் கிளே மொழி. (ஆ) மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழி (இ) மலைநாட்டுப் பிரதேசக் கிளைமொழி. (ஈ) ஏனைய பிரதேசக் கிளைமொழி.
ஏனைய பிரதேசக் கிளைமொழிகளைப் பின்வருமாறுவகுக்கலாம்:
(அ) தென்மாகாணப் பிரதேசக் கிளைமொழி. (ஆ) மன்ஞர்ப் பிரதேசக் கிளைமொழி (இ) முல்லைத்தீவுப் பிரதேசக் கிளைமொழி. (FF) கொழும்புப் பிரதேசக் கிளைமொழி.
Page 54
80 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
தொழில் அடிப்படையிலே, ஒவ்வொரு தொழிலுக்கும் அத் தொழிலுக்கே பிரத்தியேகமான சொற்கள் வழங்கப் படுவதை நாம் அவதானிக்கலாம். கடற்ருெழில் செய்வோர் ஒரு குறிப்பிட்டவகைச் சொற்களைத் தமது தொழில் நட வடிக்கையின்போது பயன்படுத்துகின்றனர். இதே சொற் களே, விவசாயம் செய்வோரோ வியாபாரிகளோ பயன் படுத்துவதில்லே. எனவே, தொழில் அடிப்படையிலே பல்வேறு வகையான பேச்சுமொழி வகைகளை நாம் இனங் காணமுடிகிறது. அவற்றுள் சில :
(அ) அரச கூட்டுத்தாபன ஊழியர் கிளைமொழி (ஆ) உழவுத் தொழில் சொய்வோர் கிளைமொழி. (இ) கடற்ருெழிலாளர் கிளைமொழி. (ஈ) வியாபாரிகள் கிளைமொழி. (உ) தோட்டத் தொழிலாளர் கி3ளமொழி. (ஊ) ஏனேய தொழில்கள் செய்வோர் கிளைமொழி.
கருத்துத் தொடர்பு முறைமை அடிப்படையிலே, ஒரே பிரதேசத்திலேயே பேச்சுவழக்குகள் வேறுபடும்.
விற்பனையாளன் - வாங்குபவன் பெற்ருேர் - குழந்தைகள் மருத்துவர் - நோயாளி ஆசிரியர் - மாணவர் சட்டத்தரணி - வழக்காளி, சாதிரி
எனத் தொடர்பு முறைமைக்கேற்பப் பேச்சுமொழியும் வேறு பட்டுச் செல்லும். அத்துடன், சந்தர்ப்பத்திற்கேற்பவும் பேச்சுமொழியானது வேறுபட்டுச் செல்வதுனே நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட ஒருவரே கல்விகற்றேர் மத்தியிலே ஒருவிதமாகவும், கல்லாதார் மத்தியிலே இன்னெருவிதமாகவும் பேசுவதனை நாம் காணலாம்.
ஈழத்துப் புண்கதைகளிற் கையாளப்பட்ட. 81
யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழி.
யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழி பற்றிப் பல் வேறு அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. யாழ்ப் பாணப் பிரதேச மக்களின் பேச்சுவழக்குச் செந்தமிழ் வழக்கினை அண்மித்தது என ஒரு சாராரும், அது செந் தமிழ் வழக்கினை அண்மியதல்ல, அதுவும் ஒரு வகைக் கிளைமொழியே என இன்னுெரு சாராரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்தியத் தமிழ்மக்கள், புனைகதைகளிலே இடம்பெறும் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கின விளங்கிக் கொள்ள முடியாதிருப்பதாகவும், அவற்றுக்கு அடிக்குறிப்புத் தேவைப்படுவதாகவும் கூறுகின்றனர். இன்னுெருசாரார் யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழியானது மலையாள மொழிபோல அமைந்துள்ளது என்பர். ச. தனஞ்செய рт тау бАлiusub (1965 - 66) :
"பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கும் செந்தமிழ்ச் சொற்களில் பல யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் வழங்கப்பட்டு வருகின்றன. அவ் வழக்குகள், யாழ்ப் பாணத்தவர் பண்டைத் தமிழின் சிறப்பியல்புகளைப் பேணி வளர்த்தமைக்குச் சான்று பகருகின்றன’’ என்று கூறுவர்.
'தமிழ் மொழியின் தூய்மை, உச்சரிப்பு இவை பற்றி யாழ்ப்பாணத்தவர்கள் அக்கறை கொண் டுள்ளனர். தமது மொழிக்கு மிகுதியாகப் பணி செய்யாவிட்டாலும் அவர்கள் பழைமையைப் பாது காத்து வருகின்றனர். ' என்று இலக்குமணன் செட்டியார் (1956) குறிப்பிடுவர்.
"இதுவரை காட்டிய இயல்புகள் நம் தமிழைவிட யாழ்ப்பாணத் தமிழே புத்தகத் தமிழோடு மிகவும் ஒத்துவருகிறது என்பதைக் காட்டுகின்றன. . . நம் தமிழில் காணப்படாத பழந்தமிழ் இயல்புகள் பல வற்றை யாழ்ப்பாணத் தமிழில் காண்கிருேம்." என்பர் முத்துச் சண்முகன். (1987 : 32) .
1
Page 55
82 ஈழத்துப் புண் கதைகளிற் பேச்சுவழக்கு
“இலங்கைத் தமிழர் சாழுதுவது போலத்தான் பேசு கிருர்கள் என்றும், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ் செந்தமிழ் என்று மேலை நாட்டவர் கூறிய பிழையான கூற்றுக்களை எம்மிற் பலர் உண்மையென நம்பிக்கொண் டனர். மேலே நாட்டிலிருந்து வத்து தென்னிந்தியப் பண்டி தர்கள்சிலரிடம் இலக்கியத் தமிழைக் கற்ற சிலர், வீதி களிலும் சந்தைகளிலும் உள்ள சாதாரண மக்களுடன், தாம் படித்த தமிழிலே உரையாட முடியாததை அனு
பவ முலமாக க் கண்டனர். ஆனல், பழத்தமிழ்ச் சொற்கள் சிலவற்றையும், இந்தியப் பேச்சு நடையை விட வேறுபட்ட அமைப்பையும் கிகாண்ட Այո փւն
பாணத் தமிழை அவர்கள் கேட்டபோது, அது இலக் கியத் தமிழே சான்று பிழையாக முடிவு கொண்டனர். '8
ான, முன்னர் குறிப்பிடப்பட்டவர்கள் கூறிய கூற்றுக்களே மேலும் விளக்கியுரைப்பர் அ. சண்முகதாஸ் (1977 : 55). எவ்வாருரயினும், மேற்காட்டிய கூற்றுக்கள் வாயி லாக, இன்றும் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே பெருமளவு பழந்தமிழ்ச் சொற்கள் வழக்கிலுள்ளன என்பதை நாம் அவதானிக்கலாம்.
பிரதேசக் கிளை மொழிகள் ஒவியமைப்பிலும் பொரு ளமைப்பிலும் இடத்துக்கிடம் வேறுபடுவனவாகும் யாழ்ப் பாணக் கிளைமொழியைப் பொறுத்தவரையிலே, அதன் ஒலியமைப்பு இயல்பானதாகவே காணப்படுகிறது. ஒருசில மட்டும் மாறி வழங்கும். 2
ஈழத்துப் புனை கதைகளிற் பெரும்பாலன யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை முறையினைச் சித்திரிப்பனவாகும். இப் புனைகதைகள் யாவற்றிலும், யாழ்ப்பாணப் பேச்சு வழக்கானது செம்மையானதாக அமைந்துள்ளது எனக் கூறுதற்கில்லே. எனவே, யாழ்ப்பாணப் பிரதேசத்தினைக் களமாகக் கொண்ட புனைகதைகள் யாவற்றையும் இவ்வாய் வின்பொருட்டு எடுத்துக்கொள்ளாது, அப் பிரதேசத்தின் மண்வாசனையைச் சிறப்பாகப் புலப்படுத்தும் பஞ்சமர், போர்க் கோலம், பிரளயம், வாடைக்காற்று, முற்றத்து ஒற்றைப்பனை,
ஈழத்துப் புனே கதைகளிற் கையாளப்பட்ட. 83
போன்ற நாவல்களும், மூவர் கதைகள், வீ, அக்கா, யாழ்ப் பாணக் கதைகள், கொட்டும்பனி போன்ற சிறுகதை நூல் களுமே பயன்படுத்தப்படுகின்றன.
யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழிக்கும் செந் தமிழ் வழக்குக்குமிடையேயுள்ள ஒலி வேறுபாடுகள்
Í
மொழியிறுதியிலே வரும் ஏகாரம் ஐகாரமாகத் திரியும்.
அங்கே - அங்கை இதிலே - இதிலே வேறே - வேறை
ழகரம் ளகரமாகவே ஒலிக்கப்படுகின்றது. பேராசிரியர் க. கணபதிப்பிள்ளயின் நாடகங்களிலே "கொழும்பு' சான்ற சொல் "கொளும்பு’’ என்றே பேச்சுத் தமிழிற் பயன்படுத்தப்பட்டுள்ளது.
s கழுத்து - களுத்து
தமிழ் - தமிள் பழக்கம் - பளக்கம்
?, ன்ற் என்ற மெய் மயக்கம் எண்ட் ஆக மாறிவரும்.
கன்று - கண்டு ஒன்று - ஒண்டு தின்முன் - திண்டான்
செந்தமிழ்ச் சொற்களிலே, இரட்டித்து வரும் றகரம் - த்த் - ஆக மாற்றமடைகின்றது.
தேற்று - நேத்து வெற்றிலை - வெத்திலே afjöCydbr - aršas Todir
5. மொழியின் இடைநிலையிலே, -ற்ப்- ஒலிக்கூட்டம்
-ப்ப்- ஆக மாற்றமடைகின்றது.
நாற்பது - நாப்பது
Page 56
84
0.
1.
ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
வடமொழி எழுத்துக்களான, ஷ ஜ போன்றவை யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே ஒலிக்கப்படுவதில்லை. இச் சொற்கள், தமிழ் ஒலிமரபிற்கேற்ப மாறி ஒலிக் கப்படுகின்றன
கஷ்டம் - கயிட்டம் விஷயம் - வியளம் போஜனம் - போசனம்
செந்தமிழ்ச் சொற்களிலே சில உருமாறி ஒலிக்கப்படும்.
LDK air - மோன் தகப்பன் - தேப்பன், தோப்பன்
ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் ஒன்றுசேர்ந்து ஒரே சொல்லாக ஒலிக்கப்படும்.
இங்கே பார் - இஞ்சார் கொண்டு வந்தான் - கொண்டத்தான்
ஏழாம் வேற்றுமை உருபான இடம் என்றும் விகுதி இட்ட எனவும், ட்டை எனவும் ஒலிக்கப்படும்.
உன்னிடம் - உன்னிட்ட, உன்னிட்டை
அவனிடம் - அவனிட்ட, அவனிட்டை
ந்த், த்த ஆகிய இடை நிலைகள், பேச்சுவழக்கிலே
முறையே - ஞ்ச்-, - ச்ச் - ஆக ஒலிக்கும்
முடிந்தது - முடிஞ்சுது படித்தது - படிச்சது
யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழிலே பெயர்ச்சொல்லினை
அடுத்து உடைய என்னும் உருபுக்குப் பதிலாக - ரை
என்னும் உருபே பயன்படுத்தப்படுகிறது.
அவனுடைய, - அவன் ரை என்னுடைய - என்ரை
ஈழத்துப் புணகதைகளிற் கையாளப்பட்ட. . 85
12. சில வினைச்சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே,
முயற்சிச் சுருக்கங் கருதிக் குறுகி ஒலிக்கப்படும்.
செய்கிறது - செய்யுது கதைக்கிறீர்கள் - கதைக்கிறியள் Gurio "Tri - GBurt "Ln ri
3. யாழ்ப்பாணப் பேச்சுவழக்சிலே, கேள்வி கேட்கும் போது ஒ அல்லது ஏ என்னும் இடைச்சொல்லை இறுதியிலே ஒலிப்பர். தென்னிந்தியாவிலே, அ அல்லது ஆ என்னும் இடைச்சொற்களே வழங்கப்படுகின்றன:
தென்னிந்தியப் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு பேச்சுவழக்கு வாறியா? வாறியோ? afrtuus, "Liq turr? சாப்பிட்டியே? இருங்க இருங்கோ
சில பிரதேசங்களிலே, ஒ என்ற இடைச் சொல்லின் பின்னர் ஏ காரத்தையும் சேர்த்தும் போறியோவே, வாறியோவே எனவும் ஒலிப்பர்.
4. யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே உறவுமுறைப் பெயர்
கள் சில பின்வருமாறு ஒலிக்கப்படுகின்றன:
உன் அப்பன் - கொப்பன் உன் அண்ணன் - கொண்ணன் உன் ஆத்தை - கோத்தை உன் அம்மா - கொம்மா a-sir AéS - கோச்சி
உன் அத்தான் - கொத்தான்
Page 57
86 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
யாழ்ப்பாணப் பிரதேசக் கிளமொழியிற் பொருள் மாற்றம்.
சொற்களின் பொருள் காலத்துக்குக் காலம் வேறு பட்டுவருகின்றது. குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியிலே வழங் கிய சொல்லின் பொருள், இன்ஞெரு காலப்பகுதியிற் பொருள்நிலையிலே வேறுபட்டுவிடுகின்றது. சொல்வின் பொருளானது, மக்களின் வாழ்க்கைமுறைக்கும், தேவைக் குமேற்ப, குன்றியும், திரிந்தும், விரிந்தும், 19ாறுபட்டும் விடுகிறது. சில சொற்கள் பழைய பொருளிலன்றிப் புதிய ஒரு பொருளை உணர்த்தவல்லனவாகக் 3ாணப்படுகின்றன. சில சொற்கள், முற்முக வழக்கிறத்துவிடுகின்றன. இவ்வா முன பொருள் மாற்றங்கள் பேச்சுவழக்கிலன்றி, எழுத்து வழக்கிலும் காணப்படுகின்றன. ஆஞல், பேச்சுவழக்கி லேயே அதன் பொருள் மாற்றம் மிகுந்து காணப்படுகின்றது யாழ்ப்பாணப் பேச்சுவழக்கும் மேற்கூறப்பட்ட LJawl dig; ளினின்றும் வேறுபட்டதல்ல. அதுவும் பொருள்நிலையிலே காலத்துக்குக் காலம் வேறுபட்டே வந்துள்ளது. யாழ்ப் பாணப் பிரதேசத்தினைக் களமாகக் கொண்ட புண்கதை களினின்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்வரும் சொற்கள் அவை முன்னர்க் குறித்த இயல்பான பொருளையன்றிப் பிறி தொரு பொருளையோ, அதளுேடு தொடர்புடைய பொரு ளையோ உணர்த்தி நிற்பதை நாம் காணலாம்.
1. ஞான்றுகொண்டிருத்தல் அல்லது நான்றுகொன்டிருத்தல்
இச் சொல் கழுத்திற் சுருக்கிட்டுக் கொள்ளலக் குறிக் கும். "ஞான்றுகொள்வேனேயன்றி யாது செய்வேன்" என இராமலிங்கம் வள்ளலாரின் அருட்பாவிலே இச் சொல் இப்பொருளிலே வழங்குகின்றது. யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே இச்சொல் சிறிய ஒலி மாற்றத்துடன் "நாண்டு கொண்டிருத்தல்" என வழங்கப்படுகிறது. இங்கு விடாப் பிடியாக ஒரு செயலைச் செய்யத் தூண்டுவதண் இச்சொல் குறித்துநிற்கின்றது: "அந்தப் பொடியன் அவளைத்ான் கட்டுவனெண்டு நாண்டுகொண்டிருக்கிமுன்" என்ற au Talg) யத்திலே, விடாப்பிடியாக நிற்கிருன் என்று கருத்தினை இச்சொல் குறிக்கின்றது.
*ழத்துப் புனைகதைகளிற் கையாளப்பட்ங். 87
இச்சொல், ஒரு பொருளின் பெறுமதியைக் குறிக்ரும்.
யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே இச்சொல், வழமையான
பெறுமதியைவிடக் கூடிய பெறுமதியைச் சுட்டுவதற்கே
பயன் படுத்தப்படுகின்றது. 'சாமான் எல்லாம் இப்ப விலே’ என்னும்போது இச்சொல் குறித்த பொருளின் வழமையான பெறுமதியிலும் பார்க்கக் கூடுதலான
பெறுமதி என்பதனைக் குறிப்பதாகின்றது.
3: $ջglմւկ:
இச்சொல், தண்டனை, கடிந்து பேசுதல், வெறுப்பு. அடக்குதல், குறைவு என்பவற்தைக் குறிக்கும். ஆஞல், யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே, இச்சொல் தட்டுப்பாட்டி ல்ை ஏற்பட்ட அதிகவிலை அல்லது நட்டம் என்ற பொருளிலே 1ழங்கப்படுகின்றது. "இப்ப எல்லாச் சாமானும் சரியான ஒறுப்பு' என்னும்போது ஒறுப்பு இப்பொருளையே குறிக் கின்றது.
4. விடுதல்:
இச்சொல், நீங்குதல், பிரிதல், அனுமதித்தல், கட்ட விழ்தல் முதலியவற்றைக் குறிக்கும். யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே இச்சொல், செலுத்துதல் என்னும் பொருளிலேயும் வழங்கப்படுகின்றது. ‘கார்விடுதல்', ' வண்டில் விடுதல்’ போன்ற வழக்குகள் கிராமப் பகுதிகளிலே காணப்படு கின்றன.
5. உதவாக்கரை:
இச்சொல், வெற்றிலை, புகையிலை ஆகியவற்றின் பய னற்ற பகுதிகளைக் குறிக்கும். யாழ்ப்பாணப் பேச்சுவழக் கிலே இச்சொல் தேவையற்ற ஒரு மனிதனைக் குறிப்ப தற்குப் பயன்படுத்தப் படுகிறது. மனித சமுதாயத் திற்குப் பயன்படாத ஒரு மனிதனை யாழ்ப்பாண மக்கள் 'உதவாக்கரை" என்று கூறுகின்றனர்.
Page 58
88 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
6. Gulmun.L-
இச்சொல், சங்க இலக்கியங்களிலே பேடு என்ற பொரு ளைத் தந்தது. பேடு, பெடை ஆகியன ஒருபொருட் பல சொற்கள். யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே இச் சொல், பேட்டினே (பெட்டைக் குருவியை) இன்று குறிப்பதில்லை. பெண்பிள்ளே என்ற பொருளையே இச்சொல் இன்று குறிக் கின்றது. இச் சொல்லுக்குப் பதிலாகப் பொடிச்சி", "பெடிச்சி ஆகிய சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு பெருந்தொகையான சொற்கள், யாழ்ப் பாணப் பேச்சுவழக்கிலே பண்டு தாம் குறித்த பொரு ளிலன்றி வேறு பொருளிலேயே இன்று வழங்கப்பட்டு வரு கின்றன.
யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழியிற் செந்தமிழ்ச் சொற்கள்.
யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழியிலே, அரிய பல பழந்தமிழ்ச் சொற்கள் இன்றும் கையாளப்படுகின்றன. இச் சொற்கள் செந்தமிழ்ச் சொற்கள் என்ற பிரக்ஞை யின்றிச் சாதாரண பேச்சுவழக்குச் சொற்களாகக் கருதப் பட்டுப் பேச்சுவழக்கிலே பயன்படுத்தப்படுகின்றன. புனை கதைகளிலும், பாத்திர உரையாடல்களின்போது இச் சொற்கள் மிகச் சாதாரண பேச்சுவழக்குச் சொற்களாகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றன. பின்வரும் எடுத்துக்காட் டுக்களே இதற்குச் சான்ருக நாம் காட்டலாம் :
1. கொள்ளை என்னும் பெயர்ச்சொல் சங்க இலக்கியங்க ளிலே, மிகுதி, கூட்டம், நோய், வில், பயன் போன்ற பல்வேறு பொருள்களை உணர்த்தியது. யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே இச்சொல். மிகுந்த என்ற பொருளிலும் மற்றையோரை வைவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. கொள்ளை மலிவு' என்னும்போது மிகுதல் என்பதனைப்
ஈழத்துப் புனைகதைகளிற் கையாளப்பட்ட. 89
குறிக்கவும், 'கொள்னையிலை போவான்’ என்னும்போது ஒருவனை வைவதற்கும் பயன்படுகின்றது. இரண்டாவதிலே கொள்ளை” என்பது ஒரு நோயைக் குறிப்பது காண்க.
2. பையப்பைய என்ற சொல், மெல்ல என்ற பொரு ளிலே யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே இன்றும் வழங்கப் படுகின்றது. கொல்லிப் பாவையன்ன தலைவியொருத்தி, காளையோடு மெல்ல நடந்து சென்றது, 'காளையொடு பையவியலி பாவையன்ன' என ஐங்குறுநூற்றில் (389) வருணிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே விரைவாக நடக்கமுடியாத ஒருவரை விளித்து, "நான் கெதியாப்போறன் நீ பையப்பைய வா’ என்னும்போது, மெதுவாக வா என்ற பொருளிலே இச்சொல் இங்கு எதிரொலிச் சொல்லாக உபயோகப்படுத்தப்படுகின்றது.
3. வாங்கல் என்னும் சொல், பண்டு வளைத்தல், இழுத் தல், ஏற்றல், விலைப்பொருட்டாற் கொள்ளுதல், ஒதுக்குதல் எனப் பல பொருள்களை உணர்த்தியது. யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே ‘கழுத்த வாங்கிப்போட்டுது' என்று கூறும்போது, கழுத்து ஒருபக்கம் இழுபட்டுவிட்டது என் பதைக் குறிக்கின்றது. தேர்வடத்தினைப் பற்றி இழுப்பது, யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே 'வடம் வாங்கல்' என அழைக்கப்படுகிறது.
4. முடை என்னுஞ் சொல், புலால், கெட்ட மணம், புளித்த மோர் முதலியவற்றின் வீச்சம், தவிடு முதலிய பொருள்களில் பண்டு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே கெட்ட மணத்தினைக் குறிப்பதற்கு * முடை நாத்தம்" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
5. பாறு என்ற தொழிற் பெயர், சிறுத்தல், நிலை கெட்டோடுதல், கிழிபடுதல், அடிபறிதல், ஒழுங்கற்றுப் பரத்து கிடத்தல் ஆகிய பொருள்களில் பண்டு வழங்கியது. இன்று, யாழ்ப்பாணப் பேச்க வழக்கிலே மரம் ஒன்று சுய நிலையினின்றும் அடிபறிந்து நிற்பதனைக் குறிக்க, இச்சொல்
2
Page 59
90 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழகு
பயன்படுத்தப் படுகிறது. 'மரம் பாறிப்போய் நிக்குது' என்ற வழக்கினை யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே இன்றும் காணமுடிகிறது.
6. சுடச்சுட என்னும் சொல், எரித்தல், பணிகாரம் முத லியன செய்தல், சூடடித்தல் முதலிய செயல்களை உணர்த்தப் பண்டு பயன் படுத்தப்பட்டது. யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே இச்சொல், சூடு ஆருது அருந்துதல், உண்ணல் என்ற பொருளிலே வழங் ப்படுகிறது. காரசாரம் என்ற பொருனையும் இச்சொல் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே குறிக்கின்றது. rraFrto fras ஒருவரை வைவதனைச் "சுடச் சுடக் குடுத்தன்' என்பர்.
8, வெறுங்கை என்பது, வெறுமையான கை என்ப தனைக் குறிக்கும். யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே, இடருற்ற ஒருவரையோ, நண்பர் ஒருவரையோ சந்திக்கப் போகும் போது "வெறுங்கையோடை போகக்கூடாது' என்பர். வெறுங்கை என்பது, இங்கு வெறுமனே எனப் பொருள்
படும்.
யாழ்ப்பாண மக்களின் பேச்சுவழக்கிலே, இப்படியான செந்தமிழ்ச் சொற்கள் மிகச் சதாரனமானவையாக நாளாந்தம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழியிற் பிறமொழிச் சொற்கள். 9
மனித இனங்களிடையே தொடர்புகள் மிகும்போது, அவர்கள் வழங்கும் மொழிகளிடையேயும் பல்வேறு வகை யிலும் அளவிலும் தொடர்புகள் நிகழ்கின்றன. கருத்துப் பரிமாற்றம் நிகழும்போது சொற்பரிமாற்றமும் நிகழ்ந்து விடுகிறது. ஒரு மொழி தனக்கல்லாத வேற்றுமொழிச் சொற்களையும் அச் சந்தர்ப்பத்திலே ஏற்றுக் கொண்டுவிடு கிறது. அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்ட அப் பிற மொழிச் சொற்களிற் சில நாளடைவிலே தமக்குரிய பொருள்களே உணர்த்தாது, வேறு பொருள்களை உணர்த்த
ஈழத்துப் புனைகதைகளிற் கையாளப்பட்ட. 9 I
வல்லனவாகிவிடுகின்றன. யாழ்ப்பாணத் தமிழிலே வட மொழி, பிராகிருதமொழி, போர்த்துக்கேயமொழி, அரபு மொழி, ஆங்கிலமொழி, சிங்கள மொழிச் சொற்கள் பல }ன்று தமிழ் மொழியினின்றும் வேறுபடுத்திக் காண வியலாத அளவுக்கு இரண்டறக் கலந்துள்ளன. யாழ்ப் பாணப் பேச்சு வழக்கிலே காணப்படும் பிறமொழிச் சொற்கள் சிலவும், அவை இன்று குறிக்கும் பொருளும் ேேழ தரப்படுகின்றன.
(அ) மச்சம் என்ற சொல், வடமொழியிலே மீண்க் குறிக்கும். யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே இச் சொல் மீன், இறைச்சி, இருல், நண்டு போன்ற அசைவ உணவு வகையைக் குறிக்கின்றது. பொதுவாக இச் சொல், யாழ்ப் பாணப் பேச்சுவழக்கிலே விரதம் என்ற சொல்லுக்கு எதிர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. 'நாங்கள் போன கிழமை முழுக்க விரதம். இண்டைக்குத்தான் மச்சம்' என்ற வாக்கியம், மச்சம் என்ற சொல்லின் பொருளைத் தெளிவுறுத்துவதாக உள்ளது.
(ஆ) மோசம் என்ற சொல், வடமொழியிலே வஞ்சனை அபாயம், களவு, பிசகு எனப் பொருள்படும். ஆனல், யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே 'அவன் மோசம்போட் டான்' என்பது, அவன் இறந்துவிட்டான் எனப் பொருள் படுகின்றது,
(இ) கலாதி என்ற சொல், வடமொழி இலக்கியங் களிலே, கலகம் என்ற பொருளைக் குறிக்கும். யாழ்ப்பா னப் பேச்சுவழக்கிலும் இச் சொல், கலகம் என்ற பொரு ளிலே வழங்கப்படுகின்றது. அத்துடன் சிறப்பு, கவர்ச்சி போன்ற பொருள்களையும் இது குறிக்கின்றது. “திருவிழா இண்டைக்குக் கலாதி' என்னும் போது சிறப்பையும் அல்லது விசேடத்தையும், "அவள் கலாதியா உடுத்திருக்கிருள்' என்னும்போது கவர்ச்சியையும் இச்சொல் குறிக்கின்றது.
Page 60
92 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
கட்டை என்ற சொல், பிராகிருத மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது இச்சொல், விறகு, குற்றி, உடல், பிரேதம், குறைவு முதலிய பொருள்களைக் குறிக்கும். இன்று, யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே, மைல் (mile) என்ற பொருளிலே இச் சொல் வழங்கப்படுகிறது. மைல் என்ற சொல் குறிப்பிட்ட அளவு தூரம் ஒன்றனைக் குறிக்கின்றது.
(உ) பரிகாரம் என்ற வடசொல், நீக்குகை, பிராயச்சித் தம், வைத்தியம் போன்ற பொருள்களைக் குறிக்கும். பண்டு, மயிர்வினைஞன் தன் கத்தியாற் சிறுபுண்களுக்குப் பரிகாரம் (வைத்தியம்) செய்ததஞலே அவனைப் பரிகாரி என அழைத்தனர். பரிகாரி என்ற சொல், யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே பரியாரி என மருவி வழங்குகின்றது. இன்று, மயிர்வினைஞனையும் நாட்டு வைத்தியனையும் இச் சொல் குறிக்கின்றது.
(ஊ) பரதேசி என்ற வடசொல், பிறநாட்டிலிருந்து வந்து யாத்திரை செய்வோனைக் குறித்தது. இவர்கள் பிச்சை ஏற்றுக் காலங்கழித்தனர். இன்று, யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே இச்சொல், பிறநாட்டு யாத்திரீகர்களைக் குறிக்காமல், அவன் பிச்சையேற்ற தன்மையை விளக்குவ தாய் பிச்சைக்காரன், நாதியற்றவன் ஆகிய பொருள்களைத் தருகின்றது. யாழ்ப்பாண மக்கள் கோபங்கொண்டு ஒரு வரை வையும்போது "பரதேசி நாய்' என்று குறிப்பிடு கின்றனர்.
(எ) பராக்கு என்ற வடசொல், யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே, பிராக்கு, பிலாக்கு எனவும் வழங்கப் படுகிறது. இச்சொல், கவனமின்மை, மறகி, சாக் கிரதை எனப் பொருள்படும். யாழ்ப்பாணப் பேச்சு வழக் கிலே, வேறு விடயத்தில் மனத்தைத் திருப்புதல் என்ற பொருளிலே இச்சொல் வழங்கப்படுகிறது. ருேட்டிலை நடக்கேக்கை பிராக்குப் பார்த்துக் கொண்டு நடக்காதை' என்னும்போது இச்சொல் வேறுவிடயத்திலே கவனத்தைச் செலுத்தக்கூடாது என்றே பொருள்படுகின்றது
ஈழத்துப் புனைகதைகளிற் கையாளப்பட்ட. 93
இவை தவிர ஆங்கில, போர்த்துக்கேய, ஒல்லாந்த மொழிகளினின்றும் பெருமளவு சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கிலே ன்று நாளாந்தம் வழங்கப்பட்டு வரு கின்றன 4
மட்டக்களப்புப் பிரதேசக் கிளை மொழி.
ஈழத்தின் கிழக்கு மாகாணமானது, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, ஆகிய மாவட்டங்களேத் தன்னகத்தே கொண்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோண மலை மாவட்டங்கள் பண்டுதொட்டுத் தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களாகக் கொள்ளப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்திலே, நெடுங்காலமாகத் தமிழ் மக்களே பெரும் பான்மையினராக இருந்து வந்திருப்பினும் இன்று, சிங்கள மக்களே அங்கு பெரும்பான்மையினராவர். கிழக்கு மாகா ணத் தமிழ் மக்களின் பண்பாடு, பாரம்பரியங்கள் யாழ்ப் பாண மக்களின் வாழ்க்கை நிலையினின்றும் வேறுபட்டவை யாகும். மொழியியல் ரீதியாகவும், இரு பகுதியினரிடை யேயும் பரந்த ஓரிடைவெளி காணப்படுகிறது, 3
சொற்களின் ஒலியமைப்பினும், பொருள் வழக்கிலும் இரு பகுதியினரிடையேயும் மிகுந்த வேறுபாடுகள் காணப் படுகின்றன. மொழி வழக்கிலான இவ்வேறுபாடுகளுக்குப் பின்வரும் காரணங்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன.
(அ) மட்டக்களப்புப் பிரதேசத்திலே வாழும் பழத் தமிழ்க் குடிகளுடன் பழமையான சோனகச் சாதியினரும் வாழ்ந்து வருகின்றனர். 8 இவர்கள், நீண்ட காலமாக ஒருங்கிணைந்தே வாழ்ந்து வருகின்றனர்; விவசாயம், மீன்பிடி போன்ற தொழில் துறைகளிலும், கலாசாரத் தொழில் துறைகளிலும், கலாசாரத் தொடர்புகளிலும் ஒரு வருடன் ஒருவர் தோழமையுடன் ஒத்துழைத்து வருகின்ற னர். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இவ்விரு இனத்தினரும் அருகருகே நெருக்கமாகக் குடிய
Page 61
94 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
மர்ந்துள்ளனர். இதனல், இங்குள்ள மக்கள் தமிழ்மொழி யையே தமது தாய்மொழியாகவும் கொண்டுள்ளனர். அவர்கள், தமது இஸ்லாம் மிதித்துடன் தொடர்பான அரபுச்சொற்கள் பலவற்றை நாளாந்தம் பேச்சுவழக்கிலே பயன்படுத்தி வருகின்றனர். இதஞறல் ய"ழ்ப்பாணத் தமிழிலே இல்லாத அளவிற்கு மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழியிலே அரபுச் சொற்கள் பெருமளவிணவாகக் காணப்படுகின்றன.
(ஆ) மட்டக்களப்பு குறிப்பிட். சிலகாலங்களிலே பண்டைய சிங்கள மன்னரின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்த ஒரு பிரதேசமாகும். இகளுல், -di T. Gig வழக்கிலே பெருமளவு சிங்களச் சொற்கள் கலந்து வழங்கு கின்றன. இச் சிங் 7ளச் சொற்கள் ஒலிமாற்றம் இன்றியும் ஒலித்திரிபுடனும் பொருள் வேறுபாட்டுடனும் மட்டக் களப்பு மக்களால் வழங்கப்படுகின்றன. "
(இ) ஈழத்தினை ஆண்ட சோழமன்னர்கள், கடைசியாக ஈழத்தைவிட்டு வெளியேறிய | th பட்ட க்களப்பாகும். எனவே மட்டக்களப்புத் தமிழிலே இந்தியத் தமிழின் செல் வாக்கு மிக நீண்டகாலம் இடம்பெற்றிருக்கவேண்டும் இதனலேயே. இப்பகுதி மக்களின் பேச்சு வழக்கானது பெரு மளவுக்கு இந்தியத் தமிழ்ப் பேச்சுவழக் 1 -ன் ஒத்திருப் பதாகக் கருதப்படுகிறது. யாழ்ப்பான, தமிழை விட மட்டக்களப்புத் தமிழின் பல ஒலியியற் பண்புகள் இந்தியத் தமிழுடன் ஒத்திருப்பதைச் சண்முகதாஸ் (1983) எடுத்துக் காட்டியுள்ளார்.
மட்டக்களப்புப் பிரதேசக் கிண்மொழியின் இயல்புபற்றி கமில் சுவெலபில் (1966 , 125-3) என்ற மேஞட்டறி ஞர் கூறியிருக்கும் கருத்து இங்கு தோக்கத்தக்கது.
* தமிழ்ப் பேச்சுவழக்குகள் யாவற்றுள்ளும் மட் டக்களப்புப் பேச்சுவழக்கு வடிவமே இவக்கிய வழக்கினை ஒத்திதாகக் காணப்படுகிறது. அது, அம்மொழியின்
ஈழத்துப் புனைகதைகளிற் கையாளப்பட்ட. 95
அதி உயர்ந்த எல்லைப் பேச்சுவழக்காக அமைவதால்
பண்டைய பண்புகளைப் பேணுவதாக உள்ளது. அத்
துடன், அது இலக்கிய வடிவுக்கு அண்மையானதாக
அமைந்தது ஒருபுறமிருக்க, மறு புறத்தில் குறிப்பிடத்
தக்க சில புதுத் தன்மைகளையும் தன்னகத்தே வளர்த்து
வந்துள்ளது”*
என்று கூறுவார் அவர். எனவே மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழியானது, பழந்தமிழ் இலக்கிய வழக்கினை ஒத்தி }ப்பது மட்டுமன்றி, அது பல்வேறு புத்தியியல்புகள் கொண்டு வளம்பெற்று விளங்குவதையும் நாம் அவதானிக்க முடிகிறது.
மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழியின் பூரண மான சிறப்பியல்புகளைப் பிரதிபலிக்கக்கூடிய புனைகதை இலக்கியங்கள் இன்றும் எம்மத்தியிலே அருகியே காணப் படுகின்றன. அம்மொழியின் சிறப்பியல்புகளை ஒரளவு விரிவாக ஆராய்வதற்கு அப்பிரதேசப் புனைகதைகளுடன் தாட்டார் பாடல்கள். நாட்டுக் கூத்துக்கள், நாடகங்கள் ஆகியவற்றிலுள்ள பேச்சுவழக்கினையும் நாம் ஆராய்தல் வேண்டும் இவ் வாய்வின்பொருட்டு, எஸ் பொன்னுத் நுரையின் வீ மண்டூர் அசோகாவின் கொன்றைப் பூக்கள் ஆகிய புனே கதை நூல்களும், சு வித்தியானந் தன் பதிப்பித் 5 அலங்காரரூபன் நாடகம், வி சீ. கந்தையா பதிப் பித்த இராம நாடகம் ஆகிய நாடகங்களும், சு. வித்தியானந்தன் தொகுத்த மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் நூலும், வி. சீ. கந்தையா எழுதிய மட்டக்களப்புத் தமிழகம் விபுலானந்தர் எழுதிய ஈழமண்டலத் தமிழும் சோழமண்டலத் தமிழும் ஆகிய கட்டு ரைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன மட்டக்களப்புப் பிரதேசக் கிண்மொழியிலே ஒலிமாற்றங்கள். 9
மட்டக்களப்புப் பேச்சுவழக்கின் ஒலியமைப்பானது யாழ்ப்பாணப் பேச்சு வழக்கின் ஒலியமைப்பினைவிட வேறு பட்டதாகக் காணப்படுகிறது. மட்டக்களப்புப் பிரதேசத் தினைச் சேர்ந்த ஒருவர் உரையாடும்பொழுது, அப் பேச்சு
Page 62
96 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
வழக்கின் தனித்துவங்களைக் கொண்டு அதனை நாம் இனங் கண்டுகொள்ள முடிகிறது. யாழ்ப்பாணப் பிரதேசக் கிளை மொழியிலே இல்லாத பல சொற்கள், மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழியிலேகாணப்படுகின்றன. அத்துடன் சொற்களின் ஒலியமைப்பிலும் பல்வேறு ஒலசநுட்பங்களை அவதானிக்க முடிகிறது. இவ்வாரு ன சிறப்பியல்புகளுக்கு மட்டக்களப்பு மக்கள் தொன்றுதொட்டு விவசாயத்தினே' மேற்கொண்டு வருவதும், அவர்கள் அரபுச் சொற்களையும் சிங்களச் சொற்களையும் பேச்சுவழக்கிலே பயன்படுத் துவதுமே காரணமெனலாம். மட்டக்களப்புப் பேச்சு வழக் கிலே பின்வரும் ஒலிமாற்றங்கள் சிலவற்றை நாம் அவதா ணிக்கமுடிகிறது.
1. மட்டக்களப்புப் பேச்சு வழக்கிலே சொல்வின் இறுதியில் அல்லது இடை நிலையில் இடம்பெறும் உ கரம் இ கர மாக வழங்குகின்றது. யாழ்ப்பானப் பேச்சுவழக்கிலே உகரம் இயல்பாக இருக்கும்.
மட்டக்களப்புப் பேச்சுவழக்கு யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு
gif mo ସ୍ଥି ଓ பஞ்சி -a- பஞ்சு புதிசி புதிக உருக்கி உருக்கு வழிசல் வழுசல் பசிப்பால் ܚܝܝܚ பசுப்பால்
2
மொழியீற்றிலே வரும் உகரம் இகரமாகத் திரிபு பெற்ற வினைச்சொற்கள், திரிபடைந்த வினைப் பகுதி யுடன் - க் - என்னும் நிகழ்கால இடை நிலையும் பால் காட்டும் விகுதியும் சேர்ந்து வழங்குகின்றன. இருக் கிருன்" என்பது இரு + க் + ஆன் - இரிக்கான் என வரும். இதுபோன்றே குளிக்கான், தேய்க்கான் வை கான் போன்ற வழக்குகளும் மட்டக்களப்புப் பேச்' வழக்கிலே காணப்படுகின்றன.
ஈழத்துப் புண்கதைகளிற் கையாளப்பட்ட. . 7
3.
முதனிண்டு ஒலிக்கும் சொற்கள் சில, மட்டக்களப்புப் பேச்சு வழக்கிலே, முதனிகல குறுகியே ஒலிக்கப்படு இன்றன.
போய் விட்டான் என்பது பெய்த்தான் என வழங் குகின்றது, டகரம் த கரமாகத் திரிபடைந்தது.
மட்டக்களப்புப் பேச்சு விழக்கிலே ஃல, 59Lー。 Gö)QT
என்னும் இடையின எழுத்துக்கள், முறையே லெ, டெ, ரெ எனவே வழங்குகின்றன.
தலையிலே M- தலெயிலெ உடையுது - உடெயிதி அரை - 3 يويgr
லை, னை என்னும் எழுத்துக்கள் ல, ண எனச் ଔଜସ୍ବ இடங்களிலே ஒலிக்கப்படுகின்றன.
மஇரவி Nswarm மனவி அவனைப்போல - அவனப்போல தலைப்பா sw தலப்பா
மட்டக்களப்பு வாவிக்கு மேற்குப்பகுதிப் பிரதேசக் கிளை மொழியிலே மொழிக்கு முதலில் வரும் அகரம் இ கரம் ஆகியன எ கரமாக ஒலிக்கப்படுகின்றன.
அரிசி - * Tig இடத்திலே - எடத்தில கிடக்கு ---- கெடக்கு இறு செலெ
உ கரம் ஒ கரமாக ஒலிக்கப்படுகின்றது.
குரவை கொர வெ குறைவு - கொறவு உடனே ஒடனே குரக்கன் கொரக்கன்
3
Page 63
98
8.
0.
11.
丑2。
13.
ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
கரம் உ கரமாக மாறும். இதழ்கள் மூடி ஒலிக் கப்படும் சொற்கள் மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலே இதழ்கள் குவிந்தே ஒலிக்கப்படுகின்றன.
sity - புள்ளே பிடிச்சான் - புடிச்சான்
எ கரம் ஒ கரமாக மாறும்.
பெட்டி - பொட்டி பெண்சாதி - பொஞ்சாதி
வி, வீ ஆகிய எழுத்துக்களே முதலாக 6 م ?یگر{{|lس }H{ சொற்கள் முறையே உ ஊ ஆக மாறும்.
விடு - உடு விடு - ஊடு
மொழியிடையிலே ர கரம் ல கரமாகும்.
குரவை ~~ع- குலவெ yg MMA - சலவெ
மொழியிடையிலே u - awgrth yr asprit OfTestub.
si Jil - அசறு
ti - பசறு வியாதி - விசாதி
யாழ்ப்பாணப் பேச்சுவழக்ேெல, மொழியிடையில் ற கரம் ப தரமாகவும், வ கரம் க கரமாகவும், மொழியீற்றிலே ற்று, த்து ஆகவும் த்து ச்சு ஆகவும் ஒலிக்கப்படுவதுபோலவே மட்டக்களப்புப் பேச்சுவழக்கி லும் ஒலிக்கப்படுகின்றது. “gyar” 65g “Jayar” 685 தியாக ஒலிக்கப்படுகின்றது.
ஈழத்துப் புனைகதைகளிற் கையாளப்பட்ட. 99
தாற்பது - நாப்பது சிவப்பு - செகப்பு பெற்று - பெத்து எரித்து - எரிச்சு வந்தேன் - வந்தன்
மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழியிலுள்ள சிறப்புச் சொற்கள்.
மட்டக்களப்புப் பேச்சுவழக்கானது, சிறப்பாகச் சில
ஒலியியல் புகளைக் கொண்டுள்ளமைபோலவே, அப் பிரதே சத்தில் மட்டுமே வழங்கப்படும் தனித்துவமான பல சொற் களையும் கொண்டுள்ளது. அவற்றிற் சில :
1.
கிறுகி என்ற சொல், திரும்பி என்ற இறந்த கால வினை யெச்சப் பொருளிலே வழங்கப் படுகிறது. திரும்புதல் என்ற தொழிற் பெயர், கிறுகுதல் என வழங்கப் படு கிறது. புண்கதைகளிலே பாத்திர உரையாடல்களில் மட்டுமன்றி நாட்டுப் பாடல்களிலும் இச்சொல்லே பயன்படுகின்றது,
**ஆக்லயிலே சோலையிலே ஆலம்பாடிச் சந்தையிலே கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுகி அடிக்கம் பாலாறு பாலாறு .'
என வரும் நாட்டுப்பாடல் கவனிக்கத்தக்கது
எலுவா என்ற சொல் அல்லவா என்ற உடன்பாட்டு விஞவின் திரிபு நிலையாகும் மட்டக்களப்பு பேச்சு வழக்கிலே, "நீங்க கோயிலுக்குப் போன எலுவா?? என்ற வினவாக்கியம், 'நீங்கள் கோயிலுக்குப் போனிர்கள் அல்லவா?’ என்ற வாக்கியத்தின் சிதைந்த நிலேயிலானதாகும்.
Page 64
1 OO ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
3. மறுகா என்ற சொல் மறுகால் என்ற சொல்லின் ல கர மெய்கெட்டு வழங்கப்படுகிறது, மறுபடி, பின்னர் என் பது இச் சோல்லின் பொருள். இவ்வாறு மொழியீற்று ல கர மெய் கெட்டு வருஞ் சொற்கள் பல மட்டக் களப்புப் பேச்சுவழக்கிலே காணப்படுகின்றன.
போளுல் - போன வந்தால் - வந்தா கேட்டால் - கேட்டா இருந்தால் - இருந்தா
4. ஒள்ளுப்பம் என்ற சொல் எள்ளுப் போல என்ற பொரு ளிலே வழங்கப்படுகிறது. "ஒள்ளுப்பந்தா', 'ஒள்ளத் தா' ஆகி வழக்குகள் மட்டக்களப்புப் பேச்சுவழக் கிலே காணப்படுகின்றன. யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே, எப்பன், ஒருத்தினை, கொஞ்சம் போன்ற சொற்கள் வழக்கிலுள்ளன.
5. கா அசைச் சொல்லாக வழங்கப்படுகிறது, பொது வாகப் பெண்கள் உரையாடும்போது, அவர்கள் தம் முள் ஒத்தாரையும் முதிர்ந்தாரையும் அன்பாய் அழைக்கும்போது இந்த அசைச் சொல்லைப் பயன் படுத்துகின்றனர். *என்ன கா எங்கே போருகா", “வாகா' போன்ற வழக்கு 4ள் பெருமளவு காணப்படு கின்றன. இந்த அசைச் சொல்லானது மட்டக் களப்புப் பேச்சு வழக்கிலே நீக்கமற நிறைத்திருப்பதனை "ஆடவர் தோவிலுங்கா அரிவையர் நாவிலுங்கா" எனக் கல்லடி வேலுப்பிள்ளை அழகாக வருணிப்பர்,
6. அங்கே, இங்கே ஆகிய சொற்கள் ஈறுதிரிந்து பல வாறு பயன் படுத்தப்படுகின்றன. அங்கே என்ற சொல் அங்க, அங்கிட்டு, அங்கால, அவடத்த, அயின என வும், இங்கே என்ற சொல் இங்க, இங்கிட்டு, இங்க: ல இஞ்சிற்று, இஞ்ச,3இஞ்ச1ல, இவடத்த, இயன, ஈன, இந்தா எனவும் வழங்கப்படுகின்றன.
ழத்துப் புனைகதைகளிற் கையாளப்பட்ட. 10,
சுட்டுப் பெயர்களுடன் கள் விருதி இணையும் போது, அவற்றினிடையே உ கர இடைநிலை இடம் பெறுவதால் அவன், அவள் ஆகிய சொற்கள், முறையே அவனுகள், அவளுகள் என வழங்கப்படு கின்றன. முஸ்லிம் பெண்கள் தமது கணவனே அவக அவகள் என்றே அழைக்கின்றனர்.
மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழியிலே பிறமொழிச் சொற்கள்.
மட்டக்களப்புப் பிரதேசக் கிளைமொழியிலே வழங்கும் பிறமொழிச் சொற்களில், இக் கட்டுரையிலே சிறப்பாக ஆராயப்படுபவை அரபுச் சொற்களும் சிங்களச் சொற் 5ளுமாகும். ஆங்கில, போர்த்துக்கேய, ஒல்லாந்த மொழிச் சொற்கள் ஏனைய பிரதேசங்களில் வழங்குவதுபோலவே இங்கும் பயன்படுத்தப்படுகின்றன.
அரபுச் சொற்கள்
1. அசறு என்ற சொல், பிற்பகல் 3 - 5 மணிவரையுள்ள காலத்தைக் குறிக்கும். ‘அசருப்போச்சி' எனப் பாடசாலையிலிருந்து திரும்பும் பிள்ளைகள் பேசிக் கொள்வதை சாதாரணமாகக் கேட்கமுடியும்.
2. மகரி என்ற சொல் பிற்பகல் 5 - 6 மணிவரையுள்ள காலத்தைக் குறிக்கும். பொழுதுபடுவதன இங்கு * மகரி பட்டுப்போச்சு' என்பர்.
3. வறக்கத்து என்ற சொல், செல்வத்தைக் குறிக்கும். *அவன் பெரிய வறக்கத்துடையவன்" என்ற வழக்கு, செல்வன் என்பதனேக் குறிப்பதாகும்.
செய்த்தான் என்பது சாத்தான் என்பதனைக் குறிக்கும். மிக வேகமாக ஒடிச்செல்லும் ஒருவனை “செய்த்தான் மாதிரிப் போனன்' என்பர்.
Page 65
102 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
5. ராகத்து ,என்பது, அகவுணர்வு என்ற போருளிலே வழங்கப்படுகிறது. இதற்கு ஆறுதல் என்ற கருத்தும் உண்டு. 'நல்ல ராகத்தாக இருக்குதுகா’ என்பது ஆறுதலாக இருக்கிறது என்பதனைக் குறிக்கும்.
6. ஹறம் என்பது இல்லை என்பதனைக் குறிக்கும். ' என் னிடம் காசு ஹரும்' என்பது என்னிடம் காசு இல்லை ாணப் பொருள்படும்.
சிங்களச் சொற்கள்
1. அயின இயின ஆகிய செற்கள் சிங்களமொழிச் சொற் களாகும். "அயின தியென்ன’ (4862ல மி002லில) அங்கு வை என்பதையும், இயின தியென்ன” (குஇைை விeS232ல) என்பது இங்கு வை என்பதையும், குறிக்கும் சிங்களச் சொற்களாகும். இச் சொற்கள், மட்டக்களப்புப் பேச்சு வழக்கிலும் இதே பொருளிலே பயன்படுத்தப்படு
கின்றன. "அயின வை’ என்பது அங்கே வை என்ப தையும், "இயின வை" என்பது இங்கே வை இன்பதையும் குறிக்கின்ற?
களைபுளை என்ற சொல் "கலபல குைகளு என்ற சிங்க ளச் சொல்லின் திரிபாகும். இச் சொல் சிங்கள மொழி யிலே குழப்பத்தினைக் குறிக்கின்றது. மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலும் குழப்பத்தினைக் களைபுளை என்றே வழங்குகின்றனர். மக்கள் அமளிது மளிப்படுவதை
ஒரே களபுளையாக் கிடக்கு' என்பர்.
2
3. கணகாட்டு என்ற சொல், "கணகாட்டுவ" (இை&ெ002) என்ற சிங்களச் சொல் தரும் பொருளிலேயே மட்டக் களப்புப் பேச்சுவழக்கிலும் பயன்படுத்தப்படுகிறது. சிங்களத்தில் இச் சொல் துக்கம், தொல்லை என்பவற் றைக் குறிக்கிறது. மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலும் பெரிய தொல்லையாகிவிட்டது ன்பதனைப் 'பெரிய கணகாட்டாப்போச்சி' என வழங்குகின்றனர்.
ஈழத்துப் புனைகதைகளிற் கையாளப்பட். 103
4.
அமாறு என்ற சொல் ‘அமாறுவ" (#இ938) என்ற சிங்களச் சொல் தரும் பொருளிலேயே மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலே பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் சிங்கள மொழியிலே கஷ்டம் என்ற பொருளைத் தரு கின்றது. மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலே, 'பெரிய கஷ்டமாகப் போய்விட்டது' என்பதனை, “பெரிய அமாருப் போச்சி' என்றே வழங்குகின்றனர்.
கொளப்பத்த என்ற சொல் கொளப்பத்த" (குலைகுக)ை என்ற சிங்களச் சோல் தரும் பொருளிலேயே வழங்கப் படுகிறது, கமுகமடலைச் சிங்களத்திலே கொளப்பத்து என்பர். மட்டக்களப்பிலும் அதிகாலையிலே வயல் நிலங்களுக்ருத் தமது மதியபோசனத்தைக் கட்டிச் செல்லப் பயன்படும் கமுகமடலையே இப்படிக் குறிப் பிடுகின்றனர்.
நிக்கங்கார பன்பது (விeை0ை3) வயலிலே வேலைசெய் வோரைக் குறிக்கின்றது. "நிக்கங்" (கிeை) என்ற சிங்களச் சொல் சும்மா என்ற பொருளைத் தரும். இந்த 'திக்கங்’ என்ற சிங்களச் சொல்லுடன் "கார' என்ற விகுதியையும் இணைத்து வயலிலே சும்மா (கூலியின்றி) வேலைசெய்வோரை நீக்கங்கார" என அழைக்கின்றனர். கரைச்சல் என்ற சொல், "கரைச்சலய" (3ை99Goo) என்ற சிங்களச் சொல் தரும் பொருளிலேயே மட்டக் களப்புப் பேச்சுத் தமிழிலும் வழங்கப்படுகிறது. சிங்க சாத்தில் இச்சொல் தொல்லேயைக் குறிக்கின்றது. மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் ஓயாத தொல் லையைச் "சரியான கரைச்சல்' என்றே பேச்சுத்தமிழில் வழங்குகின்றனர்.
கபடா என்ற சொல் 'கபடாவ’ (மூல0ெ8) என்ற சிங் களச் சொல்லின் திரிபாகும். இச்சொல் சிங்களத்திலே களஞ்சியத்தைக் குறிக்கும். மட்டக்களப்புப் பேச்சுத் தமிழிலே களஞ்சியங்களுள் ஒன்ரு ன மடைப்பள்ளியைக் குறிப்பதற்கு இச்சொல் வழங்கப்படுகிறது.
Page 66
104 ஈழத்துப் புனே கதைகளிற் பேச்சுவழக்கு மலைநாட்டுப் பிரேதசக் கிளைமொழி
இலங்கையின் மத்திய மாகாணமும், ஊவா மகாண மும், இவற்றினேச் சூழ உள்ள பிரதேசங்களும் மலை நாடா கக் கொள்ளப்படுகின்றன. இப் பிரதேசங்களிலே, 19ஆம் நூற்ருண்டின் நடுப்பகுதியிற் பெருந்தோட்டப் பயிர்ச்செய் கையின் பொருட்டுப் பெருமளவு தென்னிந்தியத் தமிழ் மக்கள் கூலிகளாகக் கொண்டுவந்து குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு, தென்னிந்தியாவினின்றும் 5 குவிக்கப்பட்டு, மலே நாட்டுப் பெரு ந் தோட்டங்களிலே குடியமர்த்தப்பட்ட தமிழ் மக்கள், தமது மொழி, பண்பாடு, கலை ஆகியவற்றின் தனித்துவங்களேக் கைநெகிழவிட்டாரல்லர், சிங்களமக்கள் மத்தியிலே, இவர்கள் வாழ்க்கை நடாத்திவரினும், தம் இனத்துக்கே உரித்தான தனித்துவங்களை இன்னும் பேணிக் காத்து வருகின்றர்ை. ஆயினும், சிங்கள மொழி, பண்பாடு ஆகியவற்றின் தாக்கங்களும் இவர்களின் வாழ்வியல்புகளைப் பாதிக்கவே செய்தன.
மொழியைப் பொறுத்தமட்டிலே, இவர்கள் தமது தாய் மொழியாகிய தென்னிந்தியத் தமிழ் மொழியையே பயன் படுத்துகின்றனர். இம் மொழி, மட்டக்களப்பு, யாழ்ப்பா ணப் பேச்சுத் தமிழ் போலன்றித் தனித்துவமான பல பண் புகள் கொண்டு விளங்குகிறது. மலே நாட்டிலே வசிக்கும் சிம்கள மக்களின் சொற்பிரயோகங்கள், வாக்கிய அமைப் புக்கள் ஆகியன மலை நாட்டுப் பேச்சுத் தமிழிலே ஆங் தாங்கு ஆதிக்கஞ் செலுத்தியிருப்பதனை நாம் அவதானிக்க முடிகிறது. மலைநாட்டுப் பிரதேசங்களிலே, தென்னிந்தி யத் தமிழ் மக்கள், முஸ்லிம் மக்களுடன் இணைத்து வாழ் கின்றனர். இதனல், முஸ்லிம் மக்கள் பயன்படுத்தும் அர புச் சொற்களும் இவர்களது மொழியின் தனித்துவத்தைப் பாதிப்பதாயமைந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட சமுதாயக் சூழலிலே, தமக்கென வகுத்துக்கொண்ட பண்பாடு, மொழி என்பவற்றைக்கொண்ட மக்கள் இன்னெரு சமூகத்தினகுடன் நெருங்கிப் பழகும்போது அவர்களது பண்பாடு, மொழி ான்பன நிச்சயம் ஒன்றை யொன்று பாதிக்கவே செய்யும் என்பதற்கு, மலேநாட்டுத் தமிழ்மக்களின் வாழ்க்கை சிறந்த தொரு எடுத்துக்காட்டாகும்.
ஈழத்துப் புனைகதைகளிற் கையாளப்பட்ட. I 05
19 ஆம் நூற், ன்டின் நடுப்பகுதியிலிருந்து புதியவொரு பண்பாட்டுச் சூழல் லே உருவாகிக்கொண்ட இத் தோட்டத் தொழிலாளரது வாழ்க்கை முறை பற்றியோ, அவர்தம் மொழியியல்புகள் பற்றியோ இது காலவரை விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை, சிறப்பாக, இவர் களது மொழிபற்றிய ஆய்வுகள் அறிஞர்களாலே மேற் கொள்ளப்படாமையால், புண்கதைகளிலே உபயோகிக்கப் படும் அம் மொழியின் இயல்புசளே யாவரும் விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது. இருப்பினும் அவ்வப்போது லைநாட்டுப் பிரதேசங்களிலே உருவான புனைகதைகளில், }வர்களது பேச்சுமொழியின் சிற்சில இயல்புகளை யாவது ளேங்கிக்கொள்ள முடிகிறது. இவ்வாய்விற்கு, வீரகேசரி, தின்கரன் போன்ற நாளிதழ்களிலும், மல்லிகை, குமரன், நதி போன்ற சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ள புனைகதை களின் பேச்சுவழக்கும், கோகிலம் சுப்பையாவின் தூரத்துப் பச்சை, தெளிவத்தை ஜோசப்பின் காலங்கள் சாவதில்லை. யோ. பெனடிக்ற்பாலனின் சொந்தக்காரன் போன்ற நாவல் களின் பேச்சுவழக்குகளும் மூலாதாரமாகும்.
பேச்சுமொழியின் கருத்துப் புலப்பாடு எழுத்து மொழியைவிட விரைவானது ஆகும், அதுபோன்றே, எழுத்து மொழியைவிடப் பேச்சுமொழி முயற்சிச் சுருக்க மானது. பேச்சு மொழியிலே முயற்சிச் சிக்கனத்துக்காகச் சில ஒலிகள் நீக்கப்பட்டுச் சொல் குறுக்கம் பெறுகிறது. இப் பண்பினை, மலைநாட்டுப் பிரதேசக் கிளை மொழியிலே ஆாம் பரக்கக் காணலாம். பேசப்படும் ஒவ்வொரு சொல் லும், ஏதோவொரு வகையிலே எழுத்து வழக்கைவிட முயற்சிச் சுருக்க முடையதாகவே காணப்படுகின்றது. நாவுக்குக் கடினமற்ற முறையிலே, சொற்களின் ஒலிகள் ^லகுபடுத்தப்படுகின்றன. இதனுற் பெருமளவு ஒலித் திரிபுகளே மலைநாட்டுப் பிரதேசக் கிளைமொழியிலே அவதா னிக்க முடிகிறது. பின்வரும் எடுததுக்காட்டுக்கள் இதற்குச் சான்ருகும்.
பண்ணிவிட்டேன் - பண்ணிட்டேன் (வ கரம் கெட்டது) GLIrruia () - போய்ட்டு (வ கரம் கெட்டது)
14
Page 67
106 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
நாங்கள் - நாம்ப (கள் கெட்டது) பார்க்கிருயா - பாக்கியா (ர காமும் ற கரமும்
கெட்டன)
இவ்வாறு, மலைநாட்டு மக்களின் பேச்சுவழக்கிலே ஒவ்வொரு சொல்லும் முயற்சிச் சுருக்கமுடையதாகவே காணப்படுகின்றது. இதனல், இவர்களது பேச்சிலே, ஒலித்திரிபு தவிர்க்கமுடியாததொன்முகிவிடுகிறது.
மலைநாட்டுப் பிரதேசக் கிளைமொழியிலே ஒலிமாற்றம்.
மலேநாட்டுப் பிரதேசப் பேச்சுவழக்கிலே, ஒலிமாற்ற மானது மொழியின் முதல், இடை, கடை ஆகிய மூன்று நிலைகளிலும் இடம்பெறுகிறது. அத்துடன், ஏனைய பிர தேசங்களிலே வழக்கிலில்லாத பல சொற்களும், சொல் லுருபுகளும் மலேநாட்டுப் பிரதேசப் பேச் $ வழக்கிலே இடம்பெறுகின்றன.
மொழி முதலில் ஒலிமாற்றம் பெறும் சொற்கள்"
1. வ கரம் ப கரமாகும்.
au Ganunt - படுவா விடுவோம் - (ஒதைச்சி) பிடுவோம்
2. இ கரம் எ கரமாகும்
இறங்கி - எறங்கி விபரம் - வெவரம் சிவப்பு - செகப்பு
3. உ, கரம் ஒ கரமாகும்
உனக்கு - ஒனக்கு துரை ைதொரை உழைத்த - ஒழைச்ச
ஈழத்துப் புனைகதைகளிற் கையாளப்பட்ட. O7
4. இ காரம் ஒ கரமாகும்
திறப்பு - தொறப்பு திற - தொற
5. ஒ கரம் உ கரமாகும்
கொடு - குடு
8. இ கரம் உ கரமாகும்
பிடி - புடி பிள்ளை - புள்ளை
7. அ கரம் எ கரமாகும்
சலாம் - செலாம்
மொழியியிடையே ஒலிமாற்றம்.
1. ற கரம் த கரமாகும்
குற்றம் - குத்தம்
சுற்றம் -- சுத்தம்
2. க கரம் வ கரமாகும்
மகள் مس Ln 6nd GiT
போகட்டும் - போவட்டும்
3. ய தரம் ச கரமாகும்
உயிர் - உசிர் uuri - LiSri
4. ண கரம் ம கரமாகும்
எண்பது - எம்பது செண்பகம் - செம்பகம்
5. ய்த், ஞ்ச் ஆகும்
பெய்த - பெஞ்ச செய்த - செஞ்ச
Page 68
08 ஈழத்துப் புனேகதைகளிற் பேச்சுவழக்கு
மொழியீற்றிலே ஒலிமாற்றம்.
1. ள்b, ன்ன் ஆகவும் எண்ண் ஆகவும் மாறும்.
கொன்முன் - கொன்ன, கொண்ணுட்டா
இன்றைக்கு - இன்னேக்கு, இண்ணைக்கு
2. உ கரம் இ கரமாகும்.
நாளைக்கு - நாளைக்கி
செய்து - செஞ்சி
3. ஆய் விருதி ர ஆகும்.
வருகிருய் - வர்றே
போகிருய் - போறே
4. ஈற்று மெய்யெழுத்து அ கரச் சாரியை பெறும்.
வாங்குகையில் - வாங்கயில
போகையில் - போகயில
5. ஈற்று மெய் உ கரம் பெறும்
நான் - தானு கேள் - கேளு உயிர் - உசிரு Lurdi) -- Lisr.C) கண் - கண்ணு
சொல்லுருபுகள்
1. "விட்டது" என்ற சொல்லுருபுக்குப் பதிலாக இருச்சி"
என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
வந்துவிட்டது - வந்திரிச்சி போய்விட்டது - போயிரிச்சி
2. கொண்டு’ என்ற சொல்லுருபுக்குப் பதிலாக "கிட்டு?
என்ற சொல்லுருபு வழங்கப்படுகிறது.
அவிழ்த்துக்கொண்டு - அவுத்துக்கிட்டு பிடித்துக்கொண்டு - பிடிச்சிக்கிட்டு
ஈழத்துப் புனைகதைகளிற் கையாளப்பட்ட. 09
இடம்' என்ற சொல்லுருபுக்குப் பதிலாக "கிட்ட என்ற சொல் வழங்கப்படுகிறது.
உங்களிடம் - ஓங்கிட்ட என்னிடம் - ஏங்கிட்ட
4. ‘என்முல்" என்ற சொல்லுருபுக்குப் பதிலாக "ஞ"
என்ற எழுத்து வழங்கப்படுகிறது.
நடந்தாயென்றல் - நடந்திஞ கலியான மென்முல் - கலியாணம்ஞ
தென்மாகாணப் பிரதேசக் கிளே மொழி
காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட் டங்களை உள்ளடக்கியது தென்மாகாணம். சிங்களமக்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் இப் பகுதியிலே, தமிழ் மக்கள் சிறு தொகையினராயும், தமிழ் பேசும் முஸ்லிம் இனத்தவர்கள் கணிசமான அளவினராயும் வாழுகின்றனர். சிறப்பாக இப் பிரதேசங்களிலே வாழும் முஸ்லிம் மக்கள், ஈழத்தின் ஏனைய பகுதி முஸ்லிம்களைவிடத் தனித்துவங்கள் பல நிறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். தென்மாகா ணத்திலும் , திக்குவல்லைப் பிரதேசமே முஸ்லிம் மக்களின் பண்பாட்டுக் களமாக விளங்குகிறது.
'கிழக்கே வரண்ட மலைக் குன்றமும், மேற்கே ஸியபலா வாவியும் (மின்ஹாத் மஹாவித்தியாலயத் தின் அண்மையிலுள்ள நிலம்) தெற்கே இந்து சமுத்தி ரமும் எல்லையாகக்கொண்ட திக்குவல்லேயில் அன்றைய தெவிநுவரைக் குடிமக்களின் சந்ததியினர் வாழும் யோனகபுரம் இன்று வளர்ச்சி பெற்ற கிராமமாக இலங்குகின்றது.
சிங்களக் கிராமங்களின் மத்தியில் அமைந்துள்ள யோனகபுரம் சுமார் 160 ஏக்கர் ரிலைப்பரப்பினைக் கொண்டது. 3,500 க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வாழ்கிறர்கள். நேய்தல் நிலச் சார்புள்ள யோனகபுரத்
Page 69
O ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
தில் குடியேறிய முஸ்லிம்கள் மீன்பிடித்தொழிலை அறிந்தி ருக்கவில்லை. விவசாயம் செய்வதற்குப் பரந்த இட வசதி கிடைக்காத, கடலோடு நசுக்கப்பட்ட ஒரு பிர தேசத்துள் வாழத் தலைப்பட்டதால் தமது சீவளுேபா யத்தின் பொருட்டு மூதாதையர் காட்டிய வாணிபத் தையே கைக்கொண்டனர். இவ் வர்த்தகப் பெருமக் களுள் பெரும் பகுதியினர் தமது மனைவிமார்களைக் கிராமத்தில் வாழவிட்டு நெடுந்தூரத்திலுள்ள சிங்களச் சீழை (ஊவா மாகாணத்தின் தென்கிழக்குப் பிரதே சம்) கிரவபத்துக் கிராமங்கள்தோறும் சென்று வியா பரஞ்செய்து பொருள் திரட்டினர். 11
என யோனகபுர ஹம்ஸா குறிப்பிடுவது, இப் பிரதேசத்தின் அமைவு, அதன் தன்மை, மக்ாளின் வாழ்க்கைமுறை, தொழில் முயற்சிகள், பண்பாடு ஆகியவற்றை விளக்குவ தோடு, அப்பிரதேசத்தின் மொழிவழக்கினையும் உய்த்தறியச் செய்வதாக உள்ளது
இப்பகுதி மக்கள், சிங்களக் கிராமங்களின் மத்தியிலே வாழ்க்கை நடாத்துவ நாற் பெருமளவு சிங்களச் சொற்கள் இவர்தம் பேச்சு வழக்கிலே இடம்பிடித்துக்கொள்கின்றன. இவர்கள், வியாபாரத்திண் மூலாதாரமாகக் கொண்டிருப் பதனல் பேச்சு மொழியிலே வியாபாரத்தினடு சம்பந்தப் பட்ட சொற்கள் பெருமளவு ஆதிக்கஞ் செலுத்துகின்றன. தென்மாகாணத்தின் பிரதேசக் கிளைமொழிபற்றிய ஆய்வுக்குப் போதிய மூலாதாரங்கள் கிடைக்காமையிஞலே, அவ்வப்போது தினசரிகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுர மான இப்பிரதேசம் சார்ந்த புனைகதைகளும், லெ. முருக பூபதியின் சுமையின் பங்காளிகள் என்ற நூலுமே ஆதார மாகக் கொள்ளப்படுகின்றன.
தென்மாகாணப் பிரதேசக் கிளைமொழியிலே
ஒலி மாற்றம்.
எழுத்துவழக்கிலுள்ள உச்சரிப்புக் கடினமும், அவசர
மாகச் சொற்களேப் பேசிமுடிக்கவேண்டும் என்ற ஒருவகை
ஈழத்துப் புனைகதைகளிற் கையாளப்பட்ட. --
உந்தலுமே திக்குவல்லைப் பிரதேச மக்களின் Guggaga) ஒலித் திரிபுகள் ஏற்படக் காரணமேன்பர் எஸ். ஐ. சாம் . ஹம்ஸா, 12
மொழிமுதலிலே ஒலிமாற்றம்
I.
மட்டக்களப்புப் ’பேச்சுவழக்கில் உள்ளதுபோலவே
இப்பிரதேசப் பேச்சுவழக்கிலும், ஒ கரம் உ கரமாகும்,
கொடுப்பார்களா - குடுப்பாங்களா கொடுக்கிறர் - குடுக்கியார்
மலைநாட்டுப் பேச்சுவழக்கிலே, உ கரம் ஒ கரமாவது போலத் தென்மாகாணப் பேச்சுவழக்கிலும் ஆகும்.
சுதமில்லை - சொகமில்லை
முதலில் - மொதல்ல
உனக்கு - ஒனக்கு மலைநாட்டு, மட்டக்களப்புப் பேச்சுவழக்கு களிலே
காணப்படுவதுபோல * தென்மாகாணப் பேச்சுவழக் கிலும் இ கரம் உ கரமாகவும், ஒ சரமாகவும் ஒலிக் கப்படும்.
Slug - L|l- பிட்டு - புட்டு பிறகால - பொறகால பிரட்டல் - பொறட்டல்
இ) கரம் ஈ கரமாகும்.
இருத்து - ஈந்து ஆசையிருந்தால் - ஆசையீத்தால்
5. வ கரம் நீண்டொலிப்பதுடன் மொழியீறு திரித்தும்
குறைந்தும் விடுகிறது.
வருகிற - an TT வருகிருய் - வாற
"சொன்ஞய்' என்பது "செல்லிய" என வழங்கப்படுகிறது.
Page 70
12 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு மொழியிடையே ஒலிமாற்றம்
.கீரமும் ய கரமும் வ. கரமாகும் נL .1
68?urtu 17 prob - யாவாரம்
மரியாதை - மருவாதை
2. ஏ. காரம் ஓ காரமாகும்.
முடியகே.ணும் - முடியவோணும் போகவேணும் - போகோணும்
3. க கரம் வ கரமாகும்
Լoծeir — иосист
D5 air - மவன்
4. அ கரம் உ கரமாகும்.
lufTTL-nr -- Lurrunt
Ag
5. ர கர ற கரங்கள் ய கரமாகும்.
இருக்கிறதா - ஈக்கியா வைக்கிறதில்லையா - வெக்கில்லையா உரிக்கிற - உரிக்கிய பேசுகிற - பேசிய
மொழியீற்றிலே ஒலிமாற்றம்
1 ன கரமெய் உ கரச் சாரியை பெறும்.
பெற்றுவிட்டான் + கள் - பெத்துட்டானுகள் சொன்ஞன் +'கள் - சொன்னறுகள்
2. ன கர மெய் கெடும்.
வாவேன் - வாவே போவேன் - போவே
ஈழத்துப் புண்கதைகளிற் கையாளப்பட்ட. 113
3.
0.
ll.
மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலே காணப்படுவதுபோல உ கரம் இ கரமாகும்
இருக்கு - இரிக்கி
அண்டைக்கு - அண்டைக்கி
க்க ச்ச வாகும்.
கவனிக்க - கவனிச்ச
இருக்கும் - இரிச்சும்
போல என்பது பில வாகும்
காட்டினுற்போல - காட்டினப்பில
செய்தாற்போல - செஞ்சாப்பில
விட்டது என்ற விகுதிக்குப் பதிலாக இரிச்சி என்ற விகுதி பயன்படுத்தப்படுகிறது.
பட்டுவிட்டது - பட்டிரிச்சி
நடந்துவிட்டது - நடந்திரிச்சி
உடைய என்ற சொல்லுருபுக்குப் பதிலாக ட, டே போன்ற விகுதிகள் வழங்கப்படுகின்றன.
அவர்களுடைய - அவங்கட - அவங்கடே
ஆண்டவருடைய - ஆண்டவர்ட - ஆண்டவர்டே மட்டக்களப்புப் பேச்சுவழக்கிலே காணப்படுவதுபோல, அல்லவா என்ற விஞவுக்குப் பதிலாக எலா சான்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
G&m sit arg) gøvGvar - சென்னாலா
மாயவேண்டாமல்லவா - மாயவேணுனலா
அளவு என்ற சொல்லுக்குப் பதிலாக, இட்டு என்ற சொல் வழங்கப்படுகிறது.
அவ்வளவு - அம்புட்டு இவ்வளவு - இம்புட்டு 15
Page 71
ll 4 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
12. அங்கு, இங்கு, எங்கு என்ற சுடடுப் பெயர்களிடன்
கிட்டு என்ற விகுதியும் சேர்த்து வழங்கப்படுகிறது.
அங்கு - அங்கிட்டு இங்கு - இங்கிட்டு எங்கு - எங்கிட்டு
13. கொள் என்ற சொல்லுருபுக்குப் பதிலாக, கிட் என்ற இடையெழுத்துப் பயன்படுத்தப்படுகிறது.
காட்டிக்கொண்டான் . காட்டிக்கிட்டான் சொல்லிக்கொண்டான் - சொல்லிக்கிட்டான்
மேற்குறித்த ஒலிமாற்றம், ஒலித்திரிபுகட்கு அமையா மல், சில சொற்கள், விசேட ஒலிமாற்றம் பெற்று விளங் குகின்றன. சிறப்பாக, இரு சொற்களை ஒன்றுடன் ஒன்று கூட்டிச் சொல்லும்போதே இவ்வாருன ஒலிமாற்றங்கள் நிகழ்கின்றன.
என்று சொன் ரூன் - என்டியான் இல்லாமல் போய்விட்டது - இல்லாப் பெய்த்து வாங்கவேணும் - வாய்கோணும்
தென்மாகாணப் பிரதேசக் கிளைமொழியிலே சிறப்புச் சொற்கள்
தென்மாகாணப் பிரதேசக் கிளைமொழியிலே வழங்கப் படும், அப்பிரதேசத்திற்கே தனித்துவமான சில சொற்கள்
arrau(jLADAT gpy :
1. அருப்பணத்தில விரைவாக என்னும் பொருளிலே இச்சொல் வழங்கப்படுகிறது. "சுருக்கா" என்பதன் திரிபே 'அருப்பணத்தில” என்ருயது
2. புள்ளகாலி ; பிள்ளைகள் என்ற பொருளிலே வழங்கா படுகிறது. யாழ்ப்பாணப் பிரதேசக் கிளைமொழியிலே (ச்சொல் 'பிள்ளைகுட்டி" எனப் பயன்படுத்தப்படுகிறது.
ஈழத்துப் புனைகதைகளிற் கையாளப்பட்ட. 15
به قرخ
5
Y
0.
பயினமன் : தடவை என்னும் பொருளிலே இச்சொல் வழங்கப்படுகிறது. எத்தனே தடவை' என்பது
எத்தின பயினமன்' என்று வழங்கப்படுகிறது.
பாரஞ்சாட்டுதல் : பாரங்கொடுத்தல் என்னும் பொரு ளிலே வழங்கப்படுகிறது.
. காலமாகுதல் : இச்சொல், மரணமாதல் என்னும்
பொதுப் பொருளையும், பெண்கள் பருவமடைதல் என்ற சிறப்புப் பொருளேயும் இங்கே தருகிறது.
ஊட்டுக்காகுதல் : இச்சொல், வீட்டையடைதல் என்ற பொதுப் பொருளையும், பெண்கள் பருவமெய்தல் என்ற சிறப்புப் பொருளேயும் தருகின்றது.
சரயும் : முறையும் என்ற பொருளிலே வழங்கப்படு கின்றது. இந்தமுறையும் என்பதனை 'இந்தச் சரயும்” என்றே வழங்குகின்றனர்.
மறுவாதை : மரியாதை என்ற பொருளிலே வழங்கப் படுகின்றது.
பொலக்கடக்கி போற வேண்டிட்டுது ஆகிய சொற்கள் மலங்களித்தலேக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
சிறுக்கன், சிறுக்கி, புழுக்கச்சி, GsFmJanuar, LDFLOTg5 கொலுவன், மோலன், பரப்பாதத போன்ற சொற்கள், மற்றையோரை வைதற்காகப் பயன்படுத்தப்படு கின்றன.
தென்மாகாணப் பிரதேசக் இ2மொழியிலே பிறமொழிச் சொற்கள்.
இப்பிரதேச மக்களின் பேச்சுவழக்கிலே, ஏனைய பிர
தேச மக்கள் வழங்கும் போர்த்துக்கீச, ஒல்லாந்த, ஆங்கிலச் சொற்களும், பெருமளவு சிங்கள, அரபுச் சொற்களும் காணப்படுகின்றன.
Page 72
1 6 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
சிங்களச் சொற்கள்.
கசால் -- Sengrjir
சவுத்து பிரயோசனமற்றது ஜூவால் - கோபம் கொலுவன் - மடையன் மோலன் - ஊமையன் செவலயன் - பரப்பாத த - வையும் சொற்கள் LDFR stgs -
அரக்கு - Frrrruu b
கோணி - சாக்கு புட்டுவம் - கதிரை
restrar u frau - GITT L DF 6sot u
வீதுறு கண்ணுடி
கோப்ப - கோப்பை
இவை தவிர, தமிழ்ச் கொற்களுடன் சேர்ந்த சிங்களச் சொற்களும் பல, வசைச்சொற்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. பரநாய், பங்குஸாத்து நாய் போன்றவையும், * கவுறுத் யன்னே தேவாலே அபித் யன்னே ஏவாலே?" போன்ற சிங்களப் பழமொழிகளும் இப்பகுதி மக்களாலே பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன.
அரபுச் சொற்கள்.
திரிபுபட்ட தனிச்சொற்களாசவும். தமிழுடன் கலந்த திரிபுச் சொற்களாகவும் பெருமளவு அரபுச் சொற்கள் இப் பிரதேசப் பேச்சுவழக்கிலே காணப்படுகின்றன.
கிப்லா, மையத்து, எத்தீன், ஆலிம்சா, ஹாஜி, மெளத்து, பரக்கத்து, வைவாத்து, ஸ்லாம் என்பன திரிபுபட்ட தனி அரபுச் சொற்களாகும்.
துணியாதொங்கல, தக்பீர் மொழக்கம் முதலியன விகுதி யிலே தமிழ்மொழி சேர்ந்து திரிபுபட்ட அரபுச் சொற்கள்.
ஈழத்துப் புனகதைகளிற் கையாளப்பட்ட. . 17
பலாய், முஸிபத்து, நஜீஸ" ஆகியன தனி அரபுச் சொற் களாலான வசைமொழிகளாகவும் அல்லஹ்ரஸ7ல், கத்தம், பாத்திஹா, ஏஸ்"வா ஆகியன பக்தி உணர்வை வெளிப் படுத்தும் சொற்களாகவும் தென்மாகாணப் பிரதேசக் கிளைமொழியிலே வழங்கப்படுகின்றன.
மன்ஞர் முல்லைத்தீவுப் பிரதேசக் கிளைமொழி
மன்னர், முல்லைத்தீவுப் பிரதேசக் கிளைமொழிகள் விதந்து கூறப்படுமளவுக்குத் தனித்துவங்கள் நிறைந்தன வல்ல. அவை அடிப்படையிலே யாழ்ப்பாணக் கிளேமொழி யின் பண்புகளை ஒத்தனவாகக் காணப்படுகின்றன. ஒலிய மைப்பிலும், பொருள் வழக்கிலும், வேற்றுமொழிச் சொற் பிரயோத்திலும் இவை யாழ்ப்பாணப் பிரதேசக் கிளை மொழியின் இயல்புகள் பலவற்றைப் பெற்றுள்ளன. சில நுண்ணிய வேறுபாடுகள் இப் பிரதேசக் கிளை மொழி களிலே இல்லாமலில்லை. மன்னர்ப் பிரதேசத்தில் பெரு மளவு முஸ்லிம் மக்கள் வாழ்வதாலே, அவர்களது பேச்சு வழக்கு, யாழ்ப்பாணப் பேச்சுவழக்கினின்றும் அப்பிரதேசப் பேச்சுவழக்கினை வேறுபடுத்துவதாக உள்ளது. மன்னர், :0ல்லைத்தீவுப் பிரதேசங்கள் மீன்பிடியையும், தெல் வேளாண் மயையும் அடிப்படைத் தொழில்களாகக் கொண்டிருப்ப தனலே, இத் தொழில்களுடன் தொடர்புடைய சொற்பிர யோகங்களே இப் பிரதேசக் கினைமொழியீற் பெருமளவு ஆதிக்கஞ் செலுத்துகின்றன.
மன்ஞர் முல்லைத்தீவுப் பிரதேசங்களிலிருந்து குறிப்பிடற் குரிய அளவு மண்வாசனை இலக்கியங்கள் எழுந்ததாகக் கூறு தற்கில்லை, ஆ. பாலமணுேகரனின் நிலைக்கிளி செங்கையாழி யானின் காட்டாறு போன்ற நாவல்கள், முல்லைத்தீவு, வன்னிப்பிரதேசத்தினக் களமாகக் கொண்டிருப்பினும் அவற்றிலுள்ள பேச்சுமொழி வழக்கினை யாழ்ப்பாணப் பேச்சுவழக்கினின்றும் வேறுபடுத்திக் கூற முடியாதுள்ளது. பேச்சுவழக்கிலே, இப்பிரதேசத்துக்கே தனித்துவமான சில
Page 73
18 ஈழத்துப் புனே கதைகளிற் பேச்சுவழக்கு
சொற்கள் கையாளப்பட்டுவரினும், புனைகதைகளிலிடம் பெறும் பேச்சுவழக்குகளிலே அவ்வாறன சொற்கள் பயன் படுத்தப்படுவதனை அவதானிக்க முடியவில்லை.
கொழும்புப் பிரதேசக் கிளைமொழி,
மேல்மாகாணத்திலே வாழும் தமிழ்பேசும் மக்களின் பேச்சுவழக்கே இங்கு கொழும்புப் பிரதேசக் கிளைமொழி எனக் குறிப்பிடப்படுகின்றது கொழும்புப் பிரதேசக் கிளைமொழி என்னும்போது, இப் பிரதேசத்திலே வாழும் மக்கள் யாவரும் ஒரேவகையான பேச்சுமொழியையே கையாளுகின்றனர் என்பது அர்த்தமாகாது. இங்கும், இடத்திற்கிடம் பேச்சுவழக்கிலே பல்வேறு நுண்ணியல்பு மாற்றங்களை நாம் அவதானிக்க முடிகிறது, கோட்டை, மரு தானைப் பகுதியிலுள்ள பேச்சுவழக்கு ஒரு வகையாகவும், கொட்டாஞ்சேண், முத்துவாள், நீர்கொழும்புப் பகுதி மக் களின் பேச்சுவழக்கு இன்ஞெரு வகையாகவும், பம்பலப் பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளைப் பகுதி மக்களின் பேச்சுவழக்கு இவற்றினின்றும் வேறுபட்டதாகவும் காணப் படுகிறது. இவ்வாறு, பிரதேசப் பேச்சுமொழி இங்குப் பகுதிக்குப் பகுதி வேறுபடுவதற்கு இங்குள்ள தொழில் வசதி, பொருளாதார அமைப்பு ஆகியவையே காரண மாகும்.
கொழும்புப் பிரதேசம் யாழ்ப்பாணம், மட்டக்களப்புப் போன்று தனித்துவமான பொருளாதாரப் பண்பாட்டு இயல்புகளைக் கொண்டதன்று. ஆங்கிலேயராட்சியின்போது கொழும்பு இலங்கையின் தலைநகராக்கப்பட்டமை, இப் பகுதியிலே பல்லினப் பண்புகொண்ட ஒரு பொருளாதார அமைப்பினுக்கு வழிகோலிற்று. கொழும்புத் துறைமுகம், மக்களுக்குப் பெருமளவு வேலை வாய்ப்பினை நல்கியது இத் துறைமுகத்திலே கூலிவேலை செய்யும் தொழிலாளர் பலரும் கொட்டாஞ்சேனையை அண்டிய பகுதிகளிலே குடியேறினர். பண்பாடு பழக்க வழக்கங்களிலே பெரிதும் பின்தங்கிய இக் கூலித் தொழிலாளரின் பேச்சுவழக்கிலே,
ஈழத்துப்பு புனைகதைகளிற் கையாளப்பட்ட." 119
பெருமளவு கொச்சை வழக்குகளே அவதானிக்கலாம்: கோட்டை, மருதானைப் பகுதிகள் வர்த்தக நிலையங்களேப் பெருமளவினவாகக் கொண்டன. இப்பகுதிகளின் உயிர் நாடியான தொழில் வர்த்தகமாகும். இப்பகுதிகளிலே, பெருமளவு கடைச் சிப்பந்திகளும், அங்காடி வியாபாரி களும் வதிவதால், இவர்தம் பேச்சு வழக்கிலே அத்தொழி லுடன் சம்பந்தப்பட்ட சொற்களே பெருமளவு பயன்படுத் தப்படுகின்றன. பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகி வளைப் பகுதிகளிலே அரசாங்க கூட்டுத்தாபன ஊழியர்கள் பெருமளவினராகக் காணப்படுகின்றனர். இதஞல், அப் பகுதி மக்களின் பேச்சுவழக்கிலே மத்தியதர வர்க்கத்தினரின் சொற்பிரயோகங்களைக் காணக்கூடியதாக உள்ளது. கறுவாக்காடு செல்வர்களும், நாகரிக மாந்தரும் ஆடம் பர வாழ்க்கை நடாத்தும் ஒரு பகுதியாகும். இதனல், இப்பகுதி மக்கள் அவர்தம் நாகரிக இயல்புகளைப் புலப்படுத் துவதான ஒருவகைப் பேச்சுவழக்கினைக் கையாளுகின்றனர். முத்துவாள், நீர்கொழும்புப் பகுதி மக்கள், முஸ்லிம் மக்களுடனும், சிங்கள மக்களுடனும், இரண்டறக் கலந்து வாழ்கின்றனர். இதனல், இப்பகுதி மக்களின் பேச்சு வழக்கிலே அரபு, சிங்களச் சொற்கள் மிகுந்து காணப் படுகின்றன.
இவ்வாறு, கொழும்பின் ஒவ்வொருபகுதி மக்களினது பேச்சுவழக்கும் இயல்பிலே வேறுபட்டிருப்பினும், அப்பிர தேசத்திற்கே தனித்துவமான சில பண்புகளும் இல்லாம லில்லை. யாழ்ப்பாணம், மட்டக்களப்புப் பிரதேசங்களின் பேச்சுமொழியினின்றும், கொழும்புப் பிரதேசப் பேச்சு மொழி தனித்துவமான சில இயல்புகள் கொண்டதாகவே அமைந்துள்ளது.
இப் பிரதேசப் பேச்சுவழக்கில் பிரதான இயல்பாகக் கொள்ளக்கூடியது, ஏனெய பிரதேசக் கிளைமொழிகளிலும் பார்க்கச் செறிவான அந்நியமொழிச் சொற்பிரயோக மாகும். நவீனமயப்பட்ட தலைநகரிலே வாழ்கின்றமையால், இப்பகுதி மக்கள், அந் நவீனமயச் சூழலுக்கேற்றவாறு தங்கள் பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அமைத்
Page 74
20 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
துள்கொள்ள வேண்டியவரானர்கள். நவீன சாதனங்கள், கருத்துக்கள் ஆகியவற்றின் வருகையும், அவற்றின் பெருக்க மும் மக்கள் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்தன இவற் றினைப்பற்றிய கருத்துப் பரிமாற்றத்தின்போது அவை தொடர்பான நவீன சொற்களும் பயன்படுத்தப்படலாயின அத்துடன், இப் பிரதேசத்திலே வாழும் தமிழ் மக்கள் முஸ் விம், சிங்கள மக்களுடன் இணந்து வாழவேண்டியிருப்பதும், சிங்கள மொழியே வர்த்தக மொழியாகவும், அரசகரும மொழியாகவும் இருப்பதும் இப் பிரதேச மக்களின் பேச்சு வழக்கிலே சிங்கள மொழி பின் ஆதிக் கத்திற்கு வழி கோலுவனவாயின. எனவேதான், கொழும்புப் பிரதேசத் தமிழ்ப் பேச்சுமொழியின் தனி இயல்பாகப் போர்த்துக்கீச, ஒல்லாந்து, ஆங்கில, அரபு சிங்களமொழிக் கலப்பினை நாம் கொள்ளலாம். இவ்வாறு பல்வேறு மொழிச் சொற்கள் பேச்சுவழக்கிலும் எழுத்துவழக்கிலும் வந்து கலப்பினும் அவையாவும் பெயர்ச் சொற்களாகவே அமைந்திருப்பதை யும் நாம் அவதானிக்கமுடிகிறது.
இவ்வாறு, சிறப்பியலபுகள் சிலவற்றைக் கொண்டிருப் பினும், கொழும்புப் பிரதேசக் கிளைமொழியின் தனி யியல்புகளேத் தெளிவாகத் தரவல்ல புனைகதைகள் இன்றும் அருகியே காணப்படுகின்றன. தனியே, கொழும்புப் பிரதேசத்தின் பண்பாட்டினையும், அப்பிரதேசப் பேச்சுத் தமிழையும் சித்திரிக்கும் புனைகதைகள் போதிய அளவு கிடைக்காமையிஞறல், அப்பிரதேசப் பேச்சுமொழிச் சொற்கள் பற்றிய ஆய்வு இங்கு மேற்கொள்ளப்படவில்லை.
அடிக்குறிப்பு
1. ஈழத்துப் பிரதேசக் கிளைமொழி பற்றிய ஆய்வுகளின் விவரங்களுக்குப் பார்க்கவும் : Sanmugadas (1983)
2. கணபதிப்பிள்ளை (1949-50)
3. தனஞ்செயராசசிங்கம் (1967-68)
ஈழத்துப் புனைகதைகளிற் கையாளப்பட்ட. 2.
4.
5.
O.
ll.
l2.
நடராசா, மட்டுநகர் Gy. (1949-50)
Sanmugadas (1983)
பாலசுந்தரம் (1967-68)
சற்குணம் (1965-66)
(9) Sanmugadas (1983) (ஆ) பாலசுந்தரம் (1967-68)
(இ) நவசோதி (1976)
மேலும் பல சொற்களுக்குரிய விவரங்களுக்குப் urrritë கவும், சண்முகதாஸ், அ. (1980)
ஹல்ஸா, யோனகபுர. (1976)
ஹம்லா, எஸ். ஐ. எம். (1976)
16
Page 75
4 ஈழத்துப் புனைகதையும் பேச்சுவழக்கும்விமரிசனம்
கதைநிகழ்களமும் பேச்சுவழக்கும்
கிதை நிகழ்களம் என்பது இங்குக் குறித்த ஒரு சமூகக் குழு வதியும் பகுதியைக் கருதுகின்றது. ஒவ்வொரு சமூ"க் குழுவுக்கும். வெவ்வேறுபட்ட வதிவிடமும், ஒழுக்கமும், தொழில் முறையும் பண்பாடும் உண்டு. இக்காலப் புனை கதைகள் சித்திரிக்கும் சமூகக்குழு அல்லது கதைநிகழ் களத்தின் தன்மைக்கேற்ப அவற்றின் இயல்பு அமைந்து விடுவது போல, அவற்றிலிடம்பெறும் பேச்சு வழக்கும் வேறு படுகின்றது. இதஞலேயே, எல்லாவகையான புனைகதை களிலும் எல்லாப் பேச்சு வழக்குகளேயும் வரம்பின்றிக் கையாள முடிவதில்லை பிரதேசத்துக்குப் பிரதேசம் பேச்சு மொழி பேறுபடுவதுபோல கதைநிகழ் களத்திற்கும் கதைப் பொருளுக்குமேற்பவும் பேச்சு வழக்குப் பிரயோகம் வேறு பட்டு இடம்பெறும்.
ஒரு களத்திலே உபயோகப்படுத்தப்படும் பேச்சுவழக் கினை இன்னெரு களத்திற் பயன்படுத்த முடிவதில்லை, மலே நாட்டுக் கிராமம் ஒன்றினைக் களமாகக் கொண்ட புளே கதையின் பேச்சு வழக்கும், விவசாயக் களம் ஒன்றினைச் சித்திரிக்கும் புனைகதையின் பேச்சுவழக்கும் ஒரே தன்மைத் தாய் இருக்க முடிவதில்லை. இருவகைப் பேச்சுவழக்
ஈழத்துப் புனைகதையும். 123
கிலும் பயன்படுத்தப்படும் சொற்களும், சொற்பொருளும், சொற்களின் ஒலியமைப்பும், அவற்றின் ஒழுங்கும் வெவ் வேருனவையாகவே இருக்கும். மலைநாட்டுக் களத்தி னைச் சித்திரிக்கின்ற புனைகதையின் பேச்சுவழக்கிலே அத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட சொற்பிரயோகங்களே மிகுந்திருக்கும். இச் சொற்பிரயோகங்கள், விவசாயக் களத்தினைச் சித்திரிக்கும் புனைகதைகளின் பேச்சு வழக்கிலே இடம்பெற முடிவதில்லை. மலைநாட்டுக் களத்தினையும், விவசாயக் களத்தினையும் சித்திரிக்கும் இருவேறு புண்கதை களினின்றும் கீழே தரப்படும் உரையாடற் பகுதிகளினின்றும் இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
'ஏன் வேலா கேட்டியா சேதியே ? நம்ப கோப்பித் தோட்டத்திலே போனவருசம் பூச்சி விழுந்து நட்டம்னு இத்த வருசம் தேயிலேச் செடி நடப்போருங்களாம். புதுக்காடு வெட்டறதிலேயும் தேயிலைதான் போடப் போருங்களாம்.'
'அவனுங்க எக்கேடாவது கெட்டு நாசமாப் போகட்டும். தமக்கு ஒழுங்காகக் கூலி கொடுத்தாப் பத்தாதா?’’
"அப்புறம் புதுசா ஒரு துரை வரப்போருன்னு சீமைக்கு எழுதியிருக்கிதாக சின்னக்கணக்கன் ஆபீஸிலே சொன்ஞனும், "'
'அய்யா கீ மலை வழியா நாட்டுக்கு ஒரு பாதை வச்சிருக்கான், அந்த வழியா தான் கூட்டியாரான்னு சொல்லுருங்க."
மேற்குறிப்பிட்ட உரையாடற் பகுதி, கோகிலம் சுப்பையா எழுதிய தூரத்துப் பச்சை (பக். 68-69) என்ற நாவலினின்றும் கொடுக்கப்பட்டதாகும். இவ்வுரையாடற் பகுதியிலே இடம்பெறும் கோப்பித்தோட்டம், தேயிலைச் செடி, துரை, சின்னக்கணக்கன், கீ மலை போன்ற சொற்கள் கதைநிகழ் பிரதேசத்தினை இனங்காட்டுவனவாகும். சேதி,
Page 76
丑24 ஈழத்துப் புனைகதைசளிற் பேச்சுவழக்கு
நம்ப, நட்டம்னு அவனுங்க, பத்தாது சொல்ருங்க, சீமை, வச்சிருக்கான், வழியாதான், கூட்டியாரான்னு போன்ற சொற்கள் கதைநிகழ்களத்து மாந்தரை இனங்காட்டுவன வாகும். இவ்வாறு, மலைநாட்டுக் களத்தினையும், மாந்த ரையும், அவர் செய்கின்ற தொழிலையும் சித்திரிக்கும் புண் கதை. ஒன்றின் பேச்சுவழக்கினை அக் களத்தினைத் தவிர்ந்த வேறெக் களத்திற்கும் நாம் பொருத்திப் பார்ப்பது இய லாததாகும்.
பின்வரும் உரையாடற் பகுதி செங்கை ஆழியான் எழுகிய காட்டாறு (பக். 182) என்ற நாவலினின்றும் தரப்படுகின்றது. இந் நாவல் விவசாயக் களம் ஒன்றனைச் சித்திரிப்பதாகும்.
**இப்ப பெய்யிற மழை காணுமே வாணன் குளம் நிரம்ப?*
*" விசரி. விசரி . வாணன் குளத்தின்ர நிலம் நனேயக் காணுது அதனுலதான் இந்தத் தடவை புழுதியில விதைக்கிறதெண்டு பயிர்ச்செய்கைக் கூட் டத்தில முடிவெடுத்திருக்கிறம் . சாண்டாலும் சில பங்காளர் சேத்து விதைப்புச் செய்யிறதெண்டு இருக் கினம். . அதனுல ருேட்டிற்குக் கிழக்கில இருக்கிற காரைப்பிட்டி வயல்காரர் புழுதிவிதைக்கிறதெண்டும் முேட்டிற்கு மேற்கால இருக்கிற கமக்காரர் மயில் பிட் டிக் கமக்காரர் சேத்துவிதைப்புச் செய்யிறதெண்டும் கூட்டத்தில முடிவெடுத்திருக்கினம், எங்களுக்குக் காரைப்பிட்டி வயல்வெளியில் ஒரு ஏக்கர் இருக்குது . புழுதியிலும் விதைத்து சேத்திலும் விதைக்க வேணும்'
இவ்வுரையாடற் பகுதியிலே வரும் மழை, குளம், வயல்வெளி, புழுதி விதைப்பு சேத்து விதைப்பு, பயிர்ச் செய்கைக் குழு என்பன விவசாயக் களத்தினுக்குப் பிரத் தியேகமான சொற்களாகும் இச் சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு இக் கதைநிகழ்களம் ஒரு விவசாயக் களமாக இருக்க வேண்டும் என்பதனை நாம் ஊகித்துக் கொள்ளலாம் காணுமே, குளத்தின்ர. இருக்கினம்,
ஈழத்துப் புனேகதையும். 25
மேற்கால, செய்யிறதெண்டு போன்ற சொற்கள் இக் கதைக்கள மாந்தர் யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழோ டொட்டிய வன்னிப் பேச்சுத் தமிழைப் பேசுபவர் என இனங்காட்டுகின்றன.
கதைப் பொருளும் பேச்சுவழக்கும்
களத்திற்குக் களம் பேச்சுவழக்கு வேறுபடுவது போலப் பொருளுக்கேற்பவும் அது வேறுபடுகின்றது. ஒரு களத் திலேயே இருவேறு பொருள்களை அடிப்படையாகக் கொண் டெழும் கதைகளும் உண்டு. அவ்வாறு, இரு வேறு பொருள் களை அடிப்படையாகக் கொண்டெழும் புனைகதைகளின் பேச்சுவழக்கும் , சொற்பிரயோகங்களும் பெரும்பாலும் வேறுவேழு ன தன்மை கொண்டனவாய் அமைந்திருக்கும்.
'நான் துரதிர்ஷ்டம் பிடித்தவள் நாகம். சண்மு கத்தான் சொன்னதிலே என்ன பிழை? அவர் ஏன் இனி இங்கு வரப்போகிருர், அவர் வரமாட்டார். நாகம் என் அண்ணன் சூசை இருக்குமட்டும் செமியோன் வரவேமாட்டார். தேடிவந்த அதிர்ஷ்டத்தைக் கைதவற விட்டேன். மீண்டும் வரவாடி போகுது நாகம்? அவர் ஒரு மானஸ்தர் . நான் கோழை. தாய் தேப்பனுக்கும், அண்ணனிற்கும் பயந்த ஒரு கோழை. கோழைகளுக்கு ஆசைகள் இருக்கக்கூடாதடி **
மேற்குறிப்பிட்ட உரையாடல், செங்கை ஆழியான் எழுதிய வாடைக்காற்று (பக். 7) என்ற நாவலினின்றும் தரப்பட் டதாகும். இந் நாவல் மீனவக் களம் ஒன்றினைச் சித்திரிக் கின்றது. தனது காதலனின் பிரிவாற்ருது துன்புறும் ஒரு கன்னிப்பெண் கழிவிரக்கத்துடன் தன் தோழிக்கு மேற்கண் டவாறு கூறுகின்ருள், இவ்வுரையாடற் பகுதியானது, மீனவக் களத்தினை எவ்வகையிலும் சித்தரிப்பதாக அமைய வில்லை. இவ்வகை உரையாடல் மீனவக் களத்தில் மட்டு மன்றி வேறெக் களத்திலுங்கூட இடம்பெற முடியும். பொதுவாகக், காதல் உணர்வினைச் சித்திரிக்கும் புனை கதை களின் பேச்சுவழக்கானது, எக்களத்தினை அடிப்படையாகக்
Page 77
126 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
கொண்டிருப்பினும் அக்களத்தின் சிறப்பு வழக்கினைப் புலப் படுத்துவதில்லை. பொதுவான ஒரு பேச்சுவழக்கினையே காதலைப் பொருளாகக் கொண்டெழும் புனை கதைகளிலே நாம் காணக்கூடியதாக உள்ளது.
இங்கு தரப்படும் இன்னுெரு உரையாடற்பகுதி, கே. டானியல் எழுதிய போராளிகள் காத்திருக்கின்றனர் (பக். 84) என்ற நாவலிலே இடம்பெறுவதாகும். இந் நாவல் மீனவக் களம் ஒன்றினைச் சித்திரிக்கின்றது.
**னட பொடி கருங்கண்ணியடா பட்டிருக்கு : கூட்டமா வந்திருக்கு. கடிப்பு வலையை எடு."
*மச்சம் மீளப்போகுது இறங்கடா இறங்கு' என்று கூறிவிட்டு கிழவன் பட்டிவலைக்குள் குதித்துவிட்டான். பட்டிக்குள் கடிப்பு வலேயைப் போட்டு வளைத்து நிமிர்த்தியபோது அப்பாடி எத்தண் கருங்கண்ணிப்
பாரைகள் 1’’
இவ்வுரையாடற் பகுதியானது, கதைநிகழ்களம் மீனவக் களம் என்பத'த் தெளிவாக உணர்த்திவிடு கின்றது. மீன்பிடித் தொழிலைப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட இப் புண்கதையின் மேற் குறிப்பிடப்பட்ட பகுதி, தொழில் நுணுக்கங்களே எடுத்துக் காட்டுகின்றது. தொழில் நுணுக்கங்களைச் சித்திரிக்கும்போது, அத் தொழி லோடு சம்பந்தப்பட்ட சொற்களேயும் கையாள்வது தவிர்க்க வியவாததாகிவிடுகின்றது. எனவேதான், இவ்வுரையாடற் பகுதியிலே கருங்கண்ணி படுதல், கடிப்புவலே , பட்டிவலை, மச்சம்மீளல் போன்ற அக்களத்தினுக்கே பிரத்தியேகமான சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலே குறிப்பிடப்பட்ட இரு உரையாடற் பகுதிகளும், மீனவக் களத்தினை அடிப்படையாகக் கொண்டெழுந்த புனே கதைகளினின்றும் தரப்பட்டவை. ஆளுல், இரண்டினது பேச்சு வழக்கும் சொற்பிரயோகமும் வேறுபட்டிருப்பதனை நாமவதானிக்கலாம். முன்னையது காதலேப் பொருளாகக் கொண்ட உரையாடல் அது சாக்களத்தினுக்கும் பொது
ஈழத்துப் புனைகதையும். 127
வான ஒர் உரையாடல். பின்னேயது தொழிலைப் பொரு ளாகக் கொண்டது. அது குறிப்பிட்ட அத் தொழிலுக்கும் களத்திற்கும் உரிய சிறப்பு வழக்கினையும் சொற்களையுமே கொண்டது. இவ்வுரையாடற் பகுதி இரண்டும். பொரு ளுக்கேற்பச் சொல்லும், பேச்சுவழக்கும் வேறுபடும் என்ப தனை நன்கு விளக்குவனவாகும்.
புனைகதை வகையும் பேச்சுவழக்கும்.
ஈழத்தின் இக்காலப் புனைகதை இலக்கியங்களே, அவற்றின் பொருளே அடிப்படையாகக் கொண்டு பின்வரு மாறு வகுக்கலாம்.
(அ) துப்பறியும் புனைகதைகள்,
(ஆ) வரலாற்றுப் புனைகதைகள்.
(இ) மேல்மட்ட உணர்வுப் புனேகதைகள்.
(ஈ) மிகை உணர்வுப் புனைகதைகள்.
(உ) மண்வாசனைப் புனைகதைகள்.
இப் புனைகதை வகைகள் ஒவ்வொன்றும், பொருளிலே வேறுபட்டிருப்பதுபோல நடை, பேச்சுவழக்கு ஆகியவற் றிலும் வெவ்வேறியல்புடையனவாகக் காணப்படுகின்றன. இவற்றிலே, முன்னிரண்டுவகைப் புண்கதைகளிலும் சாதா ரண மக்களின் பேச்சுவழக்கு இடம்பெறுவதில்லை. இவ்விரு வகைப் புண்கதைகளிலும் இடம்பெறும் உரைநடையினை உரையாடல் நடை, விவரண நடையெனப் பிரித்து நோக்கவேண்டிய அவசியமேற்படுவதில்லை. ஏனெனில், இவ்வகைப் புனைகதைகளிலே விவரணமன்றி உரையாடலும் செந்தமிழ்ப் பாங்காகவே அமைந்துவிடுகின்றது. அத்துடன், சாதாரண மக்கள் உபயோகிக்கும் சொற்களோ, சொற் ருெடர்களோ, மரபு வழக்குகளோ, பழமொழிகளோ பயன் படுத்தப்படுவதில்லை விவரணப் பாங்காகவே பேச்சுவழக்கும் அமைத்துவிடுகிறது. ஆஞல், பிற்கூறப்பட்ட மூன்றுவகைப்
Page 78
8 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
புனேகதைகளும் பொருளிலே வேறுபடுவன போல நடை, பேச்சுவழக்கு ஆகியவற்றிலும் முன்னிருவகைப் புனைகதை களினின்றும் வேறுபட்டவையாகும். இம் மூவகைக் கதை களிலும், அடிப்படையிலே ஒரே வகைத்தான பேச்சு வழக்கே கையாளப்படுகின்றது. ஆசிரியர் கூற்றும் விவ ரணங்களும் செந்தமிழிலே அமையப் பாத்திர உரையா டல்கள் மட்டும் பேச்சுவழக்கிலே அமைகின்றன சாதா ரணமாக, மக்கள் பயன்படுத்துஞ் சொற்களும், சொல்ல மைதிகளும் உரையாடல்களிலே பயன்படுத்தப்படுகின்றன. இம் மூவகைப் புண்கதைகளிலும் அடிப்படையிற் பேச்சு வழக்கே கையாளப்படுவதாயினும், ஒவ்வொரு வகையிலும் அவற்றின் இயல்பும், பண்பும் வேறுபட்டிருப்பதனை நாம் காணமுடிகிறது. எனினும் மேற்குறிப்பிட்ட ஐவகைப் புனைகதைகளிலே இடம்பெறும் உரையாடற் பாங்கின் பண்புகள் பொதுவாகவும், அவ்வைந்து வகைகளுட் பின் மூன்றிலும் இடம்பெறும் பேச்சுவழக்கின் பண்புகள் சிறப் பாகவும் இவ்வியலிலே ஆராயப்படுகின்றன.
(அ) துப்பறியும் புனைகதைகளின் உரையாடற் பாங்கு
துப்பறியும் புனைகதைளின் உரையாடல் செந்தமிழ்ப் பாங்கானது என்பதை மேலே கண்டோம். ஆளுல், அது வரலாற்றுப் புனைகதைகளின் பேச்சுவழக்கினை விடப் பல்வேறு அம்சங்களிலும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது.
*இன்ஸ்பெக்டர், சுகி. சி" என். எஸ் ஹோஸ்டலில் எந்த அறையில் தங்கி இருந்தாள் கூறுவீர்களா ? “ * 2b sy amp.’”
“உங்களுக்கு என்னைப்பற்றித் தகவல் கொடுத்தவரின் Guturi ST 6ireeTP
* மாலா- மிஸ் மாலா ஆறுமுகம்.'
"எந்த அறை ??
'இருபத்தி ஒராம் அறை" 'சுகி இறந்ததுபற்றி அவளுக்குத் தெரியுமா?
ஈழத்துப் புனைகதையும். 12
‘தெரியும்' "அப்போ உடலை அடையாளம் காண அவளை ஏன் அழைக்கவில்லே?"
"'உங்கள் தங்கையின் உடல் கிடந்த நிகிலயை அவர் கண்டால் மயக்கம்போட்டு விழுந்துவிடக்கூடும்.""
'ஒகே இன்ஸ்பெக்டர். மிக்க நன்றி’?
மேலே தரப்பட்டது, ஷர்மிலா எழுதிய அன்பே என்ஆருயிரே (பக் 9) என்ற துப்பறியும் நாவலிலிருந்து எடுக்கப்பட்ட உரையாடற் பகுதியாகும். இவ்வகைப் புனைகதைகளிலே உரையாடல், நேரடியான கருத்துப் பரிமாற்றத்தைச் செய்வதாயும், விரைவுத்தன்மை கொண்டதாயும், சுருங்கிய வாக்கியங்களை உடையதாயும் அமைந்து விடுகிறது. இரண் டொரு சொற்களின் சேர்க்கையிலேயே வசனம் ஒன்று அமைந்து விடுவதுடன் கருத்தும் புலப்படுத்தப்படுவதனைக் காணலாம். இவ்வாரு ன உரையாடல் துப்பறியும் நாவல் களுக்கே பிரத்தியேகமானதாகும். உரையாடல் செத்தமிழ் நடையிலேயே அமைந்தபோதும் ஆங்காங்கே சில பேச்சு வழக்குச் சொற்களும் இடம் பெற்றுவிடுகின்றன. உதார ணமாக, தப்பிப்பது, மயக்கம் போட்டு ஆகிய பேச்சுவழக் கிற்குரிய தொடர்கள் மேற்படி உரையாடலிலே இடம் பெற்றுள்ளதை நாமவதானிக்கலாம்.
(ஆ) வரலாற்றுப் புனைகதைகளின்
உரையாடற் பாங்கு.
ஈழத்தைப் பொறுத்த அளவிலே, வரலாற்றுப் புனைகதை கள், ஏனைய கதைவகைகள் விருத்தியடைத்த அளவுக்கு இன் னும் விருத்தியடையவில்லை என்றே கூறவேண்டும். ஆரம்ப கால ஈழத்துச் சிறுகதைகள் பலவும், வரலாற்றுச் சம்பவங்க ளேக் கதைப் பொருளாகக் கொண்டவையே. ஆஞல், தேசிய இலக்கியம், மண்வாசனை இலக்கியம் போன்ற கோஷங்கள் ஈழத்திலே தலைதூக்கியதும் அவை இரண்டாந்தரப் புனை கதைகளாகக் கொள்ளப்படலாயின. இதனலே, 1960 க்குப்
17
Page 79
130 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
பின்னர், இவ்வகைப் புனைகதைகளின் தோற்றம் அருகியே காணப்பட்டது. மிக நீண்டகால இடைவெளியின் பின்னர் வ. அ. இராசரத்தினம் எழுதிய கிரெளஞ்சப் பறவைகள் என்ற சரித்திர நவீனமே அண்மைக்காலத்தில் வெளிவந் துள்ளது. இச் சரித்திர நவீனத்தினின்றும் காட்டப்படும் பின்னரும் உரையாடற் பகுதி (பக். 81) வரலாற்றுப் புனேகதையின் உரையாடற் பண்புக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
'உங்களுக்கு ராமாயணக் கதை தெரியுமா ???
*தெரியாமலென்ன ? காட்டிலே இன்பமாகக் குல விக்கொண்டிருந்த கிரெளஞ்சப் பட்சிகளில் ஒன்றை வேடன் ஒருவன் அம்பெய்து கொன்ருன் ஆணை இழந்த சோகத்தில் பெண் பறவை கூவியழுதது. அப் பெண் பறவையின் சோகக் குரல் கொடுத்த உணர்வின் உந்துதலால் முற்றும் துறந்த மகா முனிவஞன வால்மீகி, மனிதமணத்தின் சந்து பொத்துகளிலெல்லாம் பிரவா கித்துப் பாய்ந்து உணர்வூட்ட வல்லதாய் எழுதிய அந்த அமர காவியத்தை நான் ரசித்துப் படித்திருக்கிறேன்"
'அக் காவியத்தை நான் தொட்டுப் பார்த்தது கூட இல்லை. ஆளுல், அக் காவிய நாயகியான சீதை தன் நாயகனேடு காட்டுக்குச் சென்ருள் என்பது மட்டும் எனக்குத் தெரியும் வாருங்கள் இப்போதே போக Gorf b. ””
““ arri G3 pr. Lurr ?” ”
"நீங்கள் போகவேண்டிய இடத்துக்குத்தான்.""
"இன்னமும் அதற்குக் காலம் வரவில்லே,'
'அப்படியானுல் இங்கேயே இருந்துவிடலாம்.'
வரலாற்றுப் புனைகதைகள் அரசவமிசத்தையும், அவர்
தம் வரலாற்று நிகழ்ச்சிகளையும் சித்திரிப்பதாலே, அவற்றின் உரையாடல் சாதாரண பேச்சுவழக்காகவன்றி நாடகப்
ஈழத்துப் புனைகதையும். 131
பேசுகின்றன. புனேகதையின் நடை, காவியப்பாங்கான தாக இருப்பது போலவே உரையாடலும் கவர்ச்சிகரமான திாகக் காவிய நடையிலே அமைந்து விடுகிறது.
இவ்வகை உரையாடல்களிலே இன்னெரு முக்கிய அம் சத்தையும் நாம் அவதானிக்கலாம், ஆசிரியர், L1fT,ğö,5ôgt aQ gopat "I_t frt-6ì) 9, ằrrẻ சேந்தமிழிலே அமைக்கவேண்டுமென பிரக் சஞபூர்வமாக முயன்றிருப்பினும், நவீனம் எழுதப்பட்ட காலத்திலே வழங்கப்படும் பேச்சுமொழிச் சொற்களும், மரபுத் தொடர்களும் go-69g unt L6)ssiC36) இடம்பெற்று விடுகின்றன. மேற்காட்டப்பட்ட உரையாடற் பகுதியிலே சந்துபொந்து, ரசித்து ஆகிய இக்காலப் பேச்சுவழக்குச் சொற்கள் இடம்பெற்றுள்ளமையைக் காண்க,
(இ) மேல்மட்ட உணர்வுப் புனைகதைகளிற்
பேச்சுவழக்கு.
உயர்வர்க்க சிந்தனையுடைய *திாபாத்திரங்களில் திட வடிக்கைகளையும், அவர்தம் சிந்தனை வெளிப்பாடுகளையும் சித்திரிக்கும் கதைகளே இங்கு மேல்மட்ட உணர்வுப் புஜன கதைகள் எனப்படுகின்றன. உயர்வு சிந்தனை என்பது, மனித அடிப்படைத் தேவைகளுக்கு அப்பாற்பட்ட விட யங்கள் பற்றிய சிந்தனைகளைக் குறிக்கின்றது. பிறழ்வு நிலையிலான காதல், பாலியல் உணர்வுச் சிக்கல்கள், asiðav, இலக்கியம், களியாட்டுக்கள், ஆடம்பரங்கள், நவீன சாத னங்கள், பொழுதுபோக்குகள் பற்றிய சிந்தனைகளே UDaMAS அடிப்படைத் தேவைகட்கு அப்பாற்பட்ட சிந்தனைகள் எனக் கருதப்படுகின்றன. இவ்வாருண சிந்த&னகளின் Anrádané தினுலே, இடருண்டு தவிக்கும் மாந்தர் பலதரத்தினராயும் உளர். சாதாரண ஏழை முதல் கோடீஸ்வரன் AuOunpr மனதின் வெறியாட்டினலே அல் லற்பட்டு அழுந்துகின்றனர். எனவே, இம் மேல்மட்ட உணர்வுப் புண்கதைகளிடு
Page 80
32 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
இடம்பெறும் கதாபாத்திரங்களும், பல்வேறு நிலைகளில் உள்ளனவாகக் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் தத்தமது இயல்புக்கேற்ப இயங்கவும் உரையாடவுஞ் செய்கின்றன. இதனுலே, இவ்வகைப் புனைகதைகளின் பேச்சுவழக்கு, இவ்வாறுதான் அமைந்திருக்கும் எனத் திட்டவட்டமாகக் கூறுவதற்கில்லை. உயர் தகுதிகொண்ட வோர் பாத்திரம் செந்தமிழிலேயே உரையாடுதல்கூடும்; சாதாரண மகன் ஒருவன் சாதாரண பேச்சுவழக்கையே கையாளவுங்கூடும் .
ஆணுலும், இவ்வகைப் புனைகதைகளிற் பேச்சுவழக் கானது, நாம் இனங்கண்டு கொள்ளுமளவுக்குச் சாதாரண பேச்சு வழக்கினை ஒத்ததாயே காணப்படுகின்றது. சாதா ரண பேச்சுவழக்கு இவ்வசைக் கதைகளிலே திரிந்தும், சிதைந்தும். வேறுபட்டும் கையாளப்படுகின்றது.
* சீ. போடா மூதேவி | செய்யிறதையும் செய்து போட்டு, சமாதானப்படுத்த வந்திட்டார் நீதாண்டா இதுக்கெல்லாம் துரண்டுகோல். நீ வளந்திட்டாபாரு, இனி நான் என்னத்துக்கு இந்தக் கிழட்டுக்கட்ட எப் சாகுதெண்டு பார்த்திற்று இருக்கயள் நான். சாகத்தாண்டா போறன். இனி நான் எப்பிடி நாலு பேர்ர கண்ணில முழிச்சிச் சீவிப்பன் ???
‘அப்பா ! பணக்காரன் . உத்தியோகமுள்ளவன் சாதிக்காரன் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தா பெண்களெல்லாம் அப்படியப்படியே இருக்க வேண்டி யது தான், எல்லே ரும் பணத்தையும் பெரிய உத்தி யோகத்தையும் விரும்பினு, ஏழைகளே. சிறிய உத்தி யோகத்தனை மணக்கிறது ஆரப்பா ? வரட்டுக் கெளர வம் ஒன்றையே பார்த்துக்கொண்டிருந்தா இருக்கிற பெண்களெல்லாம் கன்னிகளாகவே சாகவேண்டியது தான்."" மேற் குறிப்பிடப்பட்ட உரையாடற் பகுதி, மண்டூர் அசோகா எழுதிய கொன்றைப்பூக்கள் பக். 140) என்ற சிறுகதைத் தொகுப்பினின்றும் தரப்பட்டதாகும். இவ்வுரையாடல் இடம்பெறும் இலட்சியம்' என்ற சிறுகதை, ஒரு கெளரவப்
ஈழத்துப் புனைகதையும். 133
பிரச்சினையைச் சித்திரிக்கின்றது. கெளரவம் உயர் வர்க்கத் தினரின் அசைக்கமுடியாத சொத்தாகும். இல்வாறு உயர் வர்க்க சிந்தனையின் வெளிப்பாட்டின்போது, பேச்சு மொழி யானது இயல்பான நிலையினின்றும் திரிந்து விடுகின்றது. இவ்வுரையாடற் பகுதியிலே தந்தையின் பேச்சுவழக்கு ஓரள விற்குச் சாதாரண பேச்சு வழக்கினை ஒத்ததாகக் காணப் படுகின்றது. சொற்களும் அவற்றின் ஒலியமைப்பும் சாதாரண பேச்சு வழக்குத் தன்மை கொண்டனவாயுள்ளன. ஆளுல், மகன் பேசும்போது இயல்பிகந்த பேச்சுவழக்கினேயே கையாளுகின்ரூன், அவனது பேச்சு வழக்கிலே இடம் பெறும் என்றெல்லாம், ஒன்றையே, அப்படியப்பிடியே, ஆகிய சொற்கள் முறையே எண்டெல்லாம், ஒண்டையே, அப்பிடிஅப்பிடியே எனவே இடம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் உரையாடும் பாணியும் சாதாரண பேச்சு வழக்கைவிட வேறுபட்டுக் காணப்படுகின்றது.
மேல்மட்ட உணர்வுப் புனைகதைகளின் இன்னெரு சிறப் பம்சம், அவற்றின் கதாபாத்திரங்கள் புத்திபூர்வமாய் (Intellectual) இயங்குவனவாக அமைவதாகும். சமூகத்தின் உயர்வர்க்க உணர்வுகளைத் தமது அறிவாற்றலினலும், மதி நுட்பத்தினுலும் அளந்தறிந்து அவற்றுக்கேற்ப இயங்குவன வாகவே இவ்வகைக் கதைகளிலே இடம்பெறும் கதா பாத்திரங்கள் அமைகின்றன. எனவே இவர்களது மதி நுட்பத்தினைப் புலப்படுத்தும் பாங்கிலேயே பேச்சுவழக்கும் கையாளப்பட வேண்டி உள்ளது. இதனலே, இவ்வகைப் புனைகதைகளிற் பேச்சுவழக்கானது இயல்பாகவன்றிச் செந் தமிழோடு இயைபான வகையிலே அமைந்து விடுகிறது. பின்வரும் உரையாடற் பகுதி, ஐ. சண்முகன் எழுதிய *தடங்கள்' (கோடுகளும் கோலங்களும், பக். 47) என்ற ஒறுகதையிலே இடம் பெறுவதாகும்.
"கலைகளின் பிறப்பின் அடிப்படை அழகு இயல் புகள்தான். அழகுகளின் வசீகரங்களே மனித மனங் களை சிறுசிறுக்கச்செய்து, உணர்ச்சிவசப்படவைத்து, அவனை, கலைக் கோலங்களை ஆக்கத் தூண்டுகின்றது: g)69Süllsbsó sá sor er sér sor fðvráasöfssir ?'''
Page 81
134 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
"அழகுதான் கலையின் அடிப்படை என்ற வாதத்தை ஏற்கமுடியாது. மணிதமனத்தின் உணர்ச்சிக் குமுறல் களும், கொந்தளிப்புகளும், சோகங்களும்கூட உயர்ந்த படைப்புக்களின் கருப்பொருளாகின்றதுதானே!"
னக் கலையின் மூலாதாரம் எது என்பதுபற்றி இரு கதா பாத்திரங்கள் செந்தமிழில் உரையாடுவது, இவ்வகைக் கதைகளின் பேச்சுவழக்கிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
(ஈ) மிகை உணர்வுப் புனேகதைகளிற் பேச்சுவழக்கு
மண்வாசனை இலக்கியச் சிருஷ்டிகர்த்தாக்கள் யாவரும், இலக்கியத்தின் மூலதாரம் மக்கள் வாழ்க்கை என்பதை ஏற்றுக்கொண்டோராவர். ஆனலும், இவர்கள் யாவரும் தத் தமது இயல்புக்கும், ஆளுமைக்கும் ஏற்பவே மக்கள் வாழ்க்கைமுறையை நோக்கினர். சிலர், மக்கள் வாழ்க்கை பையும் அவர்தம் பிரச்சினைகளையும் தூர நின்று மூன்ரு வராகவே அவதானித்தார். இன்னும் சிலர், மக்கள் வாழ்க் யையும் அவர்தம் பிரச்சினைகளையும் கற்பனையிலேயே ாலாயினர். தொலைநின்று மக்கள் வாழ்க்கையை நோக்கி இருக்கு, வாழ்க்கையின் உள்ளார்ந்த பிரச்சினைகள் தெளி க முடியவில்லை; அப் பிரச்சினைகளின் அழகியல்புகளே பும், விகாரங்களையும் அவர்களாலே உய்த்துணர முடிய ஒல்2ல. இதஞல், அவர்தம் புனைகதைகளிலே வாழ்க்கை டி இயல்புகளைத் தெளிவாகத் தரிசிக்க முடியவில்லை. இவ்வாறு வாழ்க்கையின் உள்ளர்த்தங்கனை விளங்இக் (Sள்ள முடியாத இவர்தம் புனைகதைகளிலே, மக்களின் பேச்சுவழக்கும் இயல்பா சி அமையமுடியாது போயிற்று.
மக்களோடு இரண்டறக் கலந்து, அவர்தம் இயல்புகளே அநுபவித்து உணரமுடியாது. கற்பனை உலகிலே மக்கள் வாழ்க்கையை அவதானித்த சில முற்போக்கு எழுத் தாளர்கள், கற்பனையிலேயே மக்களின் பிரச்சினைகளைச் இத்திரிக்கலாயினர் : தீர்வும் காணலாயினர் இதஞலே, இவ்வகைப் புண்கதைகள் இயல்பிகந்தனவாயும் மக்களின் ருச்சினைகளை மிகைப்படுத்திக் காட்டுவனவாயும், யதார்த்த
ஈழத்துப் புண்கதையும். 135
மற்ற முடிபுகளே முன்வைப்பனவாயும் அமைத்துவிடு கின்றன. பேச்சு வழக்கும் இவ்வகைக் கதைகளிலே மிகை உணர்ச்சிப் பாங்கான நடையிலே அமைந்து விடுகிறது.
டொமினிக் ஜீவாவின் "தண்ணீரும் கண்ணிரும்' (தண்ணிரும் கண்ணிரும் பக் 57 - 58) என்ற சிறுகதையிலிடம் பெறும் உரையாடலை இவ்வகைப் பேச்சுவழக்கினுக்குத் தக்க சான்முகக் காட்டலாம். இக் கதைநிகழ் களம் , யாழ்ப்பாணக் கரையோரக் கிராமமான குருநகர், சாமி நாதன், உயர்சாதியைச் சேர்ந்தவன், பஸ்கொண்டக்ரர் பண்டாரி, கீழ் சாதி; ரிக்ஷாத் தொழிலாளி. பண்டாரி, ஒருநாள் தண்ணிர் விடாய் தாங்கமாட்டாது அம்மன் கோவில் நல்லதண்ணீர்க் கிணற்றிலே தண்ணீர் அள்ளினுன். சாமிநான் ஊரைக்கூட்டி அவனே அடித்து நொருக்கினன். சில நாட்களின் பின்னர், சாமிநாதன் பஸ் விபத்திலே சிக்குண்டு உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தபோது, பண்டாரியே அவனை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று தனது இரத்தத்தையும் கொடுத்து அவனது உயிரைக் காப்பாற்றுகிறன். கண்விழித்து, நடந்ததை 'அறிந்ததும் சாமிநாதன் திருந்திவிடுகிறன். அவன் பண்டாரியைக் கண்டதும்,
*சொல்லு பண்டாரி, ஏன் எனக்கு உயிர்ப் பிச்சை தந்தாய்? நான் கொடியவன் தீயவன். உன்னை மிரு கமாக அடித்தேன்; நீ இருந்த வீட்டை எரித்தேன். நான் நாயினும் கடையன். '
எனச் செந்தமிழிலே வினவுகிமுன் அதற்குப் பண்டாரி
"நானும் மனிதன், நீயும் மனிதன். நீயும் நானும் தொழிலாளிகள்'
என இலக்கண சுத்தமான தமிழிலே பதிலி க்கிருன். குரு நகரைச் சேர்ந்த இரண்டு பாத்திரங்கள் இலக்கண சுத்தி யாகவும், கருத்தாளமாகவும் இங்கு உரையாடுகின்றன. ஆணுல், முதலிலே,
Page 82
36 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
"நேசம்மா, ரத்தமில்லாட்டி என்ர ரத்தத்தைத் தாறன் குடுக்கிறியளா அம்மா'
எனச் சாதாரண பேச்சுத் தமிழிலே கேட்கும் பண்டாரி யைப் பின்னர் செந்தமிழிலே தத்துவம் பேச வைக்கிருர் ஆசிரியர். வாழ்வின் நடப்பியல்புகளை மாற்றியமைக்க வேண்டும் என்ற மனேவேகத்திஞலே ஏற்படும் மிகை உணர்ச்சியானது, புனைகதையிலே இடம்பெறும் ஒவ்வோ ரிடத்தும், அதன் பேச்சுவழக்கும் இயல்பிகத்து செல் கின்றது; சேயற்கையானதாக அமைந்து விடுகிறது. இவ்வாறன பேச்சுவழக்கின, மிகை உணர்வுப் பாங்கான புனைகதைகளிலே தாம் பரக்கக் காணலாம்.
கீழ்மட்ட மக்கள் வாழ்க்கையையே இலக்கியப் பொரு ளாக வரித்துக் கொண்டவரும், அவர்களின் கொச்சைப் பேச்சு வழக்கே புனைகதைகளில் இடம்பெற வேண்டும் என வாதாடியதுடன், அவ்வாறன மண்வாசனைப் பாங்கான புனைகதைகள் பலவற்றைச் சிருஷ்டித்தவருமான செ. கதிர் காமநாதன் எழுதிய சிறு கதைகளுள் ஒன்று ஒரே குடிசை களைச் சேர்ந்தவர்கள் என்பது.
தாழ்வுற்று வறுமை மிஞ்சி நைந்துபோன ஒரு வண் ஞரக் கிராமம்; எப்போதோ வாழ்வின் "இடுக்கிப் பிடிப்யைத் தாங்கிக்கொள்ள முடியாது அக் கிராமத்தை விட்டு ஒடிப்போனன் சிதம்பரி என்ற சிறுவன். அவன், மலைநாட்டிலே லோண்டறி ஒன்றிலே வேலை செய்தான். அரசியல், பொருளாதார, சமூக அறிவியலிலே அவன் அங்கு "புடம்போடப்பட்டான்?. ஒருநாள் திடீரென்று அவன் தனது கிராமத்துக்கு வந்தான். தனது சக தொழிலாளர், உறவினர்க்கு “ஞாளுேபதேசஞ் செய்தான். அக் கிராமத்திலே, திடீரெனப் புரட்சிகரமான மாற்றங்கள் உருவாயின. சாதாரணமாக அடிமைப்பட்டுக் கிடந்த கூணனும் நிமிர்ந்து நின்றன் ; வேளாள ‘நயினர்'மாருடன் நியாயம் கதைத்தான்.
ஈழத்துப் புனைகதையும். 17
'கிழவன்! நீ சொல்லுகிறது சரி! நாங்கள் குடி மையாக இருக்கமுடியாது எண்டு கூறி உயர்ந்த வர்க் கத்துக்கு எதிராக இந்தச் சின்னஞ்சிறு கிராமத்துள் போராடியதுடன் எய்எடை கடமை முடியவில்லை. நாட்டிலே பொருளாதார நெருக்கடி வரவர தீவிர மடைஞ்சுகொண்டு வருகுது. எங்களாலை வாழ்க்கை நிலையை தாங்கமுடியாத அளவுக்கு செலவு கூடியிட்டிது. கடையளிலே போனல் செத்தல் மிளகாய் இல்லை. உள்ளி இல்லை. புளி இல்லை. தலைக்குமேலை எல்லாச் சாமானும் விலையாயிருக்கு. தொழிலாளி களான எங்கள் மத்தியில் தலையெடுத்துவிட்ட புரட்சி கர உணர்வை இனி எந்த அரசாங்கமும் ஒண்டுஞ் செய்துவிட முடியாது. மக்களை அடக்குகிற, மக்கள் எதிரிகளை நாங்கள் இனம் கண்டுவிட்டோம். அவங்களை ஒழிச்சுக்கட்ட நாங்கள் உறுதிபூண்டுவிட்டோம் .." 2
எனப் பேசுகின்றது ஒரு பாத்திரம், தாழ்த்தப்பட்ட சமூ கத்திலே அடிமைப்பட்டுக் கிடந்த மக்களைத் தனியொரு வணுண சிதம்பரி இவ்வளவு வேகமாக மாற்றியமைத்துப் புரட்சியாளராகத் தூண்டி விடுகிறன், கதையிலே காணப் படும் இம் மிகை உணர்வானது, பாத்திர உரையாடல் களிலும் மிகைப் பண்பினை உருவாக்கிவிடுகின்றது. இப் பாத்திரம் தான் கூறவந்த விடயத்தைச் சாதாரண பேச்சு வழக்கிலே எடுத்துக் கூறமுடியாது, செந்தமிழ்ச் சொற்களேயும் பயன்படுத்துகின்றது. இவ்வுதாரணம், மிகைஉணர்வுப் புனை கதைகளிற் பேச்சுவழக்கு ஒருபோதும் இயல்பானதாக அமையமாட்டாது என்பதை வலியுறுத்துகின்றது.
(உ) மண்வாசனைப்பாங்கான புனைகதைகளிற்
பேச்சுவழக்கு.
1960 ஆம் ஆண்டுக்காலப் பகுதியிலே ஈழத்து இலக்கிய உலகில் முன்வைக்கப்பட்ட மண்வாசனை என்ற கோட்பாடு, பல்வேறு விளக்கங்கட்கு உட்படுவதாயிற்று. எழுத்தாளர் சிலர், அவ்வப் பிரதேச மக்களின் பேச்சு வழக்கினே அட்சரம் பிசகாது புனைகதைகளிலே வடித்துவிட்டால் அது மண்
18
Page 83
138 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
வாசனை இலக்கியமாகிவிடும் எனக் கொண்டனர். இவர்கள்? அவ்வப்பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகளை உயிர்த் துடிப்புடன் சித்திரிப்பதிலும் பார்க்க அப் பிரதேசப் பேச்சு வழக்கினுக்கே முதன்மைத்துவம் வழங்கினர், சிறப்பாக, 1960 ஆம் ஆண்டினை அடுத்துவரும் காலப்பகுதிகளிலே, இலங்கை வானெலியில் ஒலிபரப்பப்பட்ட நாடகங்களில் இப் பண்பினை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு, பொருத்தமற்ற இடங்களிலெல்லாம் நகைச் சுவை உணர்வினை ஊட்டுவதற்காகக் கையாளப்பட்டு வந்தது. பேச்சுவழக்கென்பது யாழ்ப்பாணப் பேச்சுவழக்கே சான்று கருதப்பட்டது. தரகர், சலியாணத்தரகர், சோதிடர் போன்ற பாத்திரங்களின் நகைச் சுவைப் பண்பினை வெளிப் படுத்துவதற்காகவே இந் நாடகங்களிலே பேச்சுவழக்குப் பயன்படுத்தப்பட்டது.
இலக்கிய அணியின் இன்ஞெருசாரார், பேச்சுவழக்கு மட்டும் மண்வாசனை இலக்கியமாகிவிட முடியாது; அல்வப் பிரதேச மக்களின் தொழில் முறைகள், பழக்கவழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை இயல்பான நிலையிற் சித்திரிப்பனவே மண்வாசனை இலக்கிய மெனக் கெrண்டனர்.
"ஈழத்து இலக்கிய உலகில் மண்வாசனை என்ற கோஷம் சில ஆண்டுகட்கு முன்னர் எழுத்தாளர் சிலரால் முன்வைக்கப்பட்டது. பிராந்தியம்களில் பயி லப்படும் கொச்சைச் சொற்கள் சிலவற்றைக் கோவை செய்தால், அஃது இயல்பாகவே மண்வாசனை இலக் கியமாகிவிடும் என்ற தப்பித எண்ணத்தைக் காமித்து அத்தகைய கதைகளை எழுதிச் சலித்தவர்களும் நம் மத்தியில் வாழ்கின்றனர். ஒரு பகுதியான மண்ணிற்கே உரித்தான கலாச்சாரத்திலே பிறக்கும் கதைக்கருவை, அந்தமண் தனித்துவமாக ஒலிக்கும் தொனிப்பொருளைப் பிரசவிக்கும்வண்ணம் கலவிநேறியிற் பொருத்துவதே மண்வாசனை இலக்கியத்திற்கான சிறப்பம்சமாகும்.’’ 3
ான எஸ். பொன்னுத்துரை குறிப்பிடுவது இங்குக் கவனத் திற்குரியது.
ஈழத்துப் புனைகதையும். 139
ஆரம்ப காலத்திலிருந்து மண்வாசனை இலக்கியம் என்ப தனைக் கொள்கை ரீதியாகவும் ஏற்றுக்கொண்டவர்கள் முற்போக்கு அணியினர். இவர்கள் யாவரும் புண்கதை களிலே மண்வாசனையின் இன்றியமையாமையை உணர்ந்து, தமது ஆக்கங்களிலே தம்மாலியன்ற அளவுக்கு அப் பண்பினைப் புலப்படுத்த முயன்றனர். இருப்பினும், அவர்கள் யாவரது புனைகதைகளிலும் மண்வாசனைப் பண்பானது செவ்வையாக அமைந்தது எனக் கூறுவதற்கில்லை. குறித்த ஒரு பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகளையும் தொழில் முறைகளையும் அவர்களது பண்பாடு பழக்கவழக்கங்களையும், அவர்தம் நம்பிக்கைள், சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை யும் அப்பிரதேசத்திற்கேயுரிய பேச்சு வழக்குடன் இணைத்து யார் கையாண்டார்களோ அவர்களின் புனைகதைகளிலேயே மண்வாசனைப் பண்பினைச் செவ்விதிற் காணமுடிகிறது. எழுத்தாளன், குறித்த பிரதேச மக்களுடன் இரண்டறக் கலந்து பழகி அவர்களின் இன்பதுன்பங்களிலே பங்குகொண்டு அவற்றினலே தான்பெற்ற உணர்வினை உயிர்த்துடிப்புடன், புனைகதைகளிற் சித்திரிக்கும்போதே மண்வாசனைப் பண் பானது சிறப்புற அமைகின்றது.
*இண்டு முழுக்கச் சரியான வேலே பிள்ளை. முந்த நாள் வ3ளஞ்ச வெள்ளாவி; நேத்துப் பெ ய்காட் டுக்கை ஒரு துடக்குக் கழிவுக்குப் போட்டுவந்ததினுலை துறைக்குக் கொண்டுபோக முடியவில்லை. உடம்பும் அவ்வளவு சரியில்லை. இப்ப பத்துமணிபோலைதான் துறைக்குப் போனன். அதுக்கிடையில் சின்குச்சிப் பெட்டை வந்து பிள்ளை வரட்டாமென்று புடியாளா நிண்டாள். அதுதான் மகுமோனைப் பிடிச்சு விட்டுட்டு ஒடியாறன். சரியான வெயிலும் கொழுத்து தன. "
"அரிவி வெட்டெல்லாம் முடிஞ்சுதே பிள்ளே? சிங்கன் கண்டி எப்பிடிப் பொலிஞ்சுதே???
"ஒமோம்: நீர் எங்கைளட துணிய8ள ஒழுங்காக
வெழுத்த வெழுவையிலே நெல்லு வேண்ட வந்திட்டி
யாக்கும்'
Page 84
140 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
**ானை அப்பு சும்மா கிடவணை, உடுப்பு வெளுக் காட்டி என்ன குடிமேனுக்குக் குடுக்கிறதைக் குடுக்கத் தாக்னயெணை வேணும். நீ பேசாமல் கிடவணை.”*
கே, டானியலின் பஞ்சமர் (பக். 1-2) என்ற நாவலி னின்றும் காட்டப்பட்ட மேற்படி உரையாடலானது, மண் வாசனை இலக்கியத்தின் பேச்சுவழக்கிற்கு நல்லதோர் எடுத் துக்காட்டாகும். மக்களுடன் ஆசிரியர் இரண்டறக் கலந்து பழகிய தன்மையையும், மக்களின் தொழில்முறை நுணுக் கங்களை அவதானித்து அவற்றைத் தமது படைப்பிலே சிறப் புறக் கையாளவேண்டும் என முனைந்தமையையும் மேற்படி உரையாடலிலே அவதானிக்கமுடிகிறது. யாழ்ப்பாணப் பிர தேசக் கிளைமொழியிலே இடம்பெறும் இண்டுமுழுக்க, சரி யான, வளைஞ்ச, வெள்ளாவி, துடக்குக்கழிவு, துறை, பெட்டை, பிள்ளை, மருமோன், ஒடியாறன், குடிமேன் போன்ற சொற்களே ஆசிரியர் பிரக்ஞைபூர்வமாகப் பயன் படுத்தியுள்ளமையையும் நாம் அவதானிக்கலாம்.
லெ. முருகபூபதியின், சுமையின் பங்காளிகள் (பக். 1) என்ற சிறுகதைத் தொகுப்பினின்றும் கீழே கொடுக்கப் படும் உரையாடற் பகுதியிலே மண்வாசனைப் பண்பானது செவ்விதில் அமைந்திருப்பதன அவதானிக்க முடிகிறது.
*செவஸ்தியான் புறகால புடிடா. ம். ஏலோ ம் ஏலோ .. ம்ம்.. மத்த அலை வரட்டும் ஆ. வந்திட்டுது. . பிடி. ஏலோ.”*
‘அடியேய் . கருப்பணத்தில வாவே. . ւյսյ6ն) கோப்பில வாற சிறுக்கிமாதிரி . ஆட்டி ஆட்டி வா."
இண்டைக்கும் மட்டச்சாலையா பட்டிரிச்சீ. சூசை அப்புட வலையிலயும் மட்டச்சாலைதான்."
'இந்தா செவஸ்தியான் நீயும் குடி. இந்தச் சிறுக்கன்களுக்கும் குடு. Lih... ... இந்தா..."
ஈழத்துப் புனைகதையும். 141
*ஏண்டா.. அந்தோணி. நீயும் ஒரு ஜோன்சன் எஞ்சின் வாங்கின என்ன? எஞ்சினை வாங்கிட்டு இப்படி துடுப்பு போட்டு வலிச்சு மாயவேணு
6T6)nr... ... ?'"
*என்னடா செல்லிய . நீ. ? எஞ்சின் வாங்கிய தெண்ணுப்பில லேசாயிரிச்சா. .? தம்மட்ட அம் மட்டுக் காசா. ரிச்சுது ..?’’
மேற்படி உரையாடற் பகுதியினின்றும் குறித்த பிர தேச மக்களின் தொழில் முறைகளை நாம் அறியமுடிகிறது. அவர்களின் மதுவருந்தும் பழக்கத்தினையும், சினிமாவிலே அவர்களுக்கிருக்கும் மோகத்தினையும், அவர்கள் பின்பற்றும் மதக்கோட்பாட்டையும், கல்வி நிலையிலே அவர்களின் தாழ்வான நிலையையும், ஜோண்சன் எஞ்சின் வாங்கித் தமது எதிர்கால வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினையும் இச் சிறு உரையாடற் பகுதிமூலம் அறியமுடிகிறது. இவ்வாரு?ன ஒரு வாழ்க்கைப் பின்னணியுடன் அப்பகுதி மக்களின் பிரத்தியேக வழக்குகளான புறகால, புடிடா, மத்து, கருப்பணத்தில, வாவே, பயஸ்கோப், சிறுக்கன், சிறுக்கி, பட்டிரிச்சி மாயவேணு, எலா, செல்லிய, எண்டாப்பில ஆகிய சொற்பிரயோகங்களை ஆசிரியர் இரண்டறக் கலந்து தரும்போது, ஒரு பூரணமான மண்வாசனை இலக்கியத்தின் நறுமணத்தினை நாம் நுகரமுடிகிறது.
புனைகதை இலக்கியத்திற் பேச்சுவழக்கைப் பயன்படுத்துவதால் உருவாகும் பிரச்சினைகள்
புனைகதை இலக்கியத்திற் பேச்சுவழக்குப் பயன்பாட்டினை இன்று எதிர்ப்போர் யாருமிலர். புனைகதை இலக்கியப் படைப்பாளிகள் யாவரும் தமது ஆக்கங்களிலே தமது இயல்பினுக்கேற்றவாறு பேச்சுவழக்கினைக் கையாளுகின் றனர். கதைப் பொருளின் தன்மைக்கேற்பவும், கதை நிகழ் களத்தின் வேறுபாட்டிற்கேற்பவும், படைப்பிலக்கிய கர்த்தாவின் மொழியாற்றலுக்கேற்பவும் பல்வேறு அளவி
Page 85
142 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
லும் வகையிலும் பேச்சு வழக்கானது கையாளப்பட்டு வருகின்றது. ஆணுலும், பேச்கவழக்கினைப் புனைகதை இலக்கி யத்திலே எவ்வாறு, சாத்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய ஒரு கோட்பாடு இன்னும் ஈழத்து எழுத் தாளர்களிடையே உருவாகவில்லையென்றே கூறலாம். ஏனெனில் பேச்சுவழக்கினைப் புனைகதை இலக்கியத்திற் கையாளவேண்டும் என வாதிட்டு, அதனை நடைமுறை, பிலும் கைக்கொண்ட எழுத்தாளர்கள் கூடப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பேச்சுவழக்கினைக் கையாளும்போது ஒரு சீராக அதனைப் பயன்படுத்தினரல்லர். இவ்வாறு பேச்சு வழக்கினை வழுவின்றி இலக்கியகர்த்தாக்கள் பயன் படுத்தத் தவறியமைக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவையாவன :-
(அ) மொழியின் இருவழக்குப் பண்பு.
(ஆ) பிரக்ஞைபூர்வமாகப் பேச்சுவழக்கினைப் பிர
யோகிப்பதிலே ஆர்வமின்மை.
(இ) சொற்களின் ஒலியமைப்பு வேறுபாடுகள்.
لم
(ஈ) உபதேசங்கள், தத்துவங்களை விவரிக்கையிலே
ஏற்படும் முரண்பாடுகள்.
(அ) மொழியின் இருவழக்குப் பண்பு.
புனைகதை இலக்கியத்திலே பேச்சுவழக்குப் பயன்பாடு ஆரம்பமான காலமுதல், அல்விலக்கிய மொழியிலே இரு வழக்குப் பண்பும் இடம்பெறத் தொடங்கியது. இருவழக் குப் பண்பெனப்படுவது, புனைகதை இலக்கியத்திலே இரு வகையான மொழிநடை கையாளப்படுவதனைச் குறிக்கிறது. இக்காலப் புனைகதைகளிலே, ஆசிரியர் கூற்றும் விவரணப் பகுதிகளும் செந்தமிழில் அமையப் பாத்திர உரையாடல் கள் பேச்சுவழக்கிலே அமைத்துவிடுகின்றன. செந்தமிழ், பேச்சுவழக்கு ஆகிய இருவகை நடையும் புண்கதைகளிலிடம் பெறுவதே இருவழக்குப் பண்பு எனப்படுகிறது. * இவ்வாறு செந்தமிழும் பேச்சுத்தமிழும் ஓர் இலக்கியவடிவத்திலே
ஈழத்துப் புனைகதையும். 43
கையாளப்படும்போது செந்தமிழானது பேச்சுவழக்கிலும் பேச்சுவழக்குச் செந்தமிழிலும் ஆதிக்கஞ் செலுத்துவது தவிர்க்க முடியாததாசி விடுகின்றது. ஆரம்பகாலப் புனை கதைகளிலே, விவரணப் பகுதிகளும் உரையாடல்களும் செந்தமிழிலேயே அமைந்திருத்தமையால் இருவழக்குப் பண்பு அவற்றிலே இடம்பெறும் சந்தர்ப்பம் இல்லா திருந்தது.
உரையாடற் பகுதியிற் செந்தமிழ்ச் சாயல்
புனைகதைகளிலே, ஆசிரியர் கூற்றும் விவரணப் பகுதி களும் செந்தமிழிலே அமையும்போது பாத்திர உரையா டல்கள் மட்டுமே பேச்சுவழக்கிற் கையாளப்படுகின்றன. இவ்வாறு உரையாடல்களிற் பேச்சுவழக்கு இடம்பெறும் போது, அவற்றிலே செந்தமிழின் சாயலும் இடம்பெற்று விடுகின்றது. இதஞற். பேச்சு வழக்கின் தனித்துவம் பாதிக் கப்படுகின்றது. ஈழத்தின் பல்வேறு புனைகதைகளிலும் இவ் வாருண பண்பு இடம்பெற்றிருப்பதனை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
"ஜானகி. சாதிகுலம் என்று சம்பிரதாயங்கள் சும்மா வரேல்லை. அவை தெய்வம் அருளியவை எண்டு அப்பா சோன்னது பொய்யில்லே. சம்பிரதாய விதிகளை யும் வைதீக நெறிகளையும் நாங்க மறுத்தாலும் நீங்கள் மறக்கப்படாது. அதுவும் நீ ஒருநாளும் அதுகளே மீறி ரடக்கப்படாது,
செ. யோகநாதன் எழுதிய, ஒளி நமக்கு வேண்டும் (பல், 47) என்ற சிறுகதை நூலிலே இடம் பெறும் மேற்குறிப்பிடப் பட்ட உரையாடற் பகுதியிலே, பேச்சு மொழியிலே செந்த மிழின்சாயல் படிந்திருப்பதனை நன்கு அவதானிக்கமுடிகிறது. மேற்படி உரையாடற் பகுதியிலே இடம்பெற்றுள்ள என்ற, அதுவும், விதிகள், நெறிகள், ஆகிய செந்தமிழ்ச் சொற்கள், முறையே எண்ட, அதுகும், விதியள், நெறியள், எனவே பேச்சுவழக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும். அத்து டன், சாதாரண மக்களினலே பேச்சுவழக்கிற் பயன்படுத் தப்படாத அருளியவை, சம்பிரதாய விதிகள், வைதீக
Page 86
144 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
நெறிகள் போன்ற சொற்களும், சொற்ருெடர்களும் இவ் வுரையாடற் பகுதியிலே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ் வாறு, பேச்சுவழக்கிலே அமையவேண்டிய சொற்களைச் செந்தமிழ்ப்பாங்கிற் பயன்படுத்துவதும் சாதாரண மனிதன் பேச்சுவழக்கிற் பயன்படுத்தாத சொற் ளைப் பயன்படுத்து வதும் மொழியின் இருவழக்குப் பண்பின் தாக்கமெனக் G)smørestav frth.
விவரணப் பகுதியிற் பேச்சுவழக்குச் சாயல்
ஈழத்து மண்வாசனைப் புனைகதைகளின் நடையிலே பேச்சுவழக்கானது, பேரளவு ஆதிக்கஞ் செலுத்துகின்றது. பேச்சு வழக்கிற் கையாளப்படும் சொற்கள் பல, அமைப் பிலோ, ஒலியிலோ திரிபின்றி விவரணப் பகுதியிலும் கையாளப்பட்டு வருகின்றன. ஈழத்துப் புனைகதைகளின் நடையைப்பற்றி எம். ஏ. நுஃமான் பின்வருமாறு கூறினர் :
"ஈழத்துப் பேச்சுவழக்குச் சொற்களும், சொற் ருெடர்களும், மரபுத் தொடர்களும் , போர்த்துக்கீஸ், டச்சு, சிங்களம் முதலிய மொழிகளில் இருந்து கடன் வாங்கிய சொற்களும் ஈழத்தவர்களின் சடங்கு சம்பிர தாயங்களில் வழங்கும் பண்பாட்டுச் சொற்ருெகுதியும், தொழில்துறை, அரசதுறைச் சொற்களும் நாவல் விவரணத்தில் கலந்து ஈழத்து நாவலாசிரியர்களின் நடையைத் தனித்துவப்படுத்துகின்றன. " 5
கே. டானியல், கணேசலிங்கம், எஸ். பொன்னுத்துரை, யோ. பெனடிக்ற்பாலன் ஆகியோரின் நாவல்கள், சிறு கதைகளிலே மேற்குறிப்பிட்ட இயல்புகளை நாம் தெளி வாகக் காணலாம். கே. டானியலின் பஞ்சமர் என்னும் நாவலிலே சங்கடப்படலே, தேங்காய்ப்பரவல், கமக்காரி, சட்டம்பியார், சாங்கோபாங்கம், குறிச்சி (நித்திரை), வில்லங்கம், மாராப்புப் போடுதல், மைமல், நனைக்கிறது (குடிக்கிறது), மட்டுமட்டு, சமசியம். இடைஞ்சல், வெள் ளென, குலைக்கிறது, அருட்டுதல் போன்ற பேச்சுவழக்குச் சொற்கள், ஆசிரியரின் விவரணப் பகுதிகளிலே பேச்சு
ஈழத்துப் புனைகதையும். 145
வழக்கில் உள்ளவாறே கையாளப்பட்டுள்ளன பின்வரும் ஒரு சிறு விவரணப் பகுதியிலே இப் பண்பினை நாம் அவதா னிக்கலாம்.
*சின்னச்சி தோய்த்து வைத்திருந்த புடவையை அவனுக்குப் போர்த்துவதற்காகக் கொடுத்திருந்தான். அந்தப் போர்வையை மிஞ்சிக்கொண்டு அவனுக்குக் குலைப்பன் வந்து விட்டது. அவன் அணுக்கத்துடன் நடுங்கிருண். 6
மேற்காட்டப்பட்ட விவரணப் பகுதியிலே, மிஞ்சிக் கொண்டு, குலப்பன், அணுக்கம் ஆகிய பேச்சுவழக்குச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், பேச்சுவழக்குப் போன்றே ஆசிரியர் வாக்கிய அமைப்பினைப் பேணியிருப் பதையும் நாம் காணமுடிகிறது.
(ஆ) பேச்சுவழக்கினைச் சிராகக் கையாளவேண்டும்
என்ற ஆர்வமின்மை.
மண்வாசனை இலக்கியம் படைக்க முனைவோர், தமது எண்ணங்கள் புலப்படுத்தப்படும் மொழியின் இயல்பினைச் செவ்வனே அறிந்திருத்தல் வேண்டும். மொழியின் இயல் புகளே விளங்கிக்கொள்ளாது, மண்வாசனை இலக்கியம் படைக்க முயல்வது அவ்விலக்கியத்தின் அடிப்படைப் பண்பினையே பிரதிபலிக்கமுடியாது செய்துவிடுகின்றது. ஈழத்து மண்வாசனை இலக்கியங்கள் யாவற்றிலும், இப் பண்பினைப் பரவலாகக் காணமுடிகிறது. எழுத்தாளர் பலரும், மக்களின் பேச்சுவழக்கினைக் கூர்ந்து நோக்காது தத்தமது இயல்பினுக்கேற்ற வகையிலே அதனைப் பயன் படுத்துகின்றனர். இதனுற், பேச்சுவழக்கிலே செந்தமிழ்ச் சொற்கள் கலந்துவிடுகின்றன. பேச்சு மொழியைக் கூர்ந்து நோக்கும் ஆசிரியன், அம் மொழியின் சொற்களைப் பிறழ் வின்றி ஒரு சீராகக் கையாளுவான்.
செங்கை ஆழியானின் முற்றத்து ஒற்றைப்பனை (பக். 3) என்ற புனைகதையினின்றும் ஓர் உரையாடற் பகுதி கீழே தரப்படுகின்றது.
19
Page 87
146 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
'விஷர் கதை கதையாதை. இத்தப் பண்யைத் தறிச்சால் ரான் எங்க விட்டம் போடுறது?"
"விசயம் விளங்காமல் கதைக்கிருய் ! . ஒருக்கா ஏற்றிய கொடியை ஐந்தாறு நாளுக்கு நான் கீழை இறக்கிறதில்லை. வயல் வெளியிலை போய் ஏத்திப் போட்டு வீட்டிலை கொண்டுவந்து கட்டலாமே ? எத்தனை வரியமா இந்தப் பனையை நான் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வருகிறன் ."
மேற்படி பந்தியிலே பேச்சுவழக்குச் சொற்கள் தவரு ன வகையிலே கையாளப்பட்டுள்ளமையை நாம் அவதானிக்க லாம். பேச்சுவழக்கிலமைந்த மேற்படி பந்தியிலே, ஏற்றிய, ஐந்தாறு, நாளுக்கு, இறக்கிறதில்லை, கொண்டுவந்து, எத்தனை, வருகிறன் ஆகிய செந்தமிழ் வழக்குச் சொற் 7 களும், திருந்திய பேச்சுமொழிச் செ ற்களும் பயன்படுத் தப்பட்டுள்ளன. இச் சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் முறையே, ஏத்தின, ஐஞ்சாறு. நாளைக்கு, இறக் கிறேல்ல, கொண்டந்து, சாத்தினை, வாறன் எனவே பயன் படுத்தப்படுவதனை ஆசிரியர் அறிவர். அறிந்தே ஆசிரியர் பேச்சுவழக்குச் சொற்களே இவ்வாறு திருத்தமாகக் கையாண்டார் என்று கொண்டாலும், ஒரு சொல்லினேயே வெவ்வேறுவிதமாக அவர் கையாண்டமைக்கான கார ணத்தை நாம் ஆராயவேண்டும். பேச்சுமொழி பற்றிய கூர்ந்த நோக்கின்மையும், பிரக்ஞைபூர்வமாக அதனைப் புனைகதையிலே கையாளவேண்டும் என்ற ஆர்வமின்மையுமே இதற்கான காரணங்களாம். மேற்படி பந்தியிலே, விசர் என்ற சொல்லுக்குப் பதிலாக விஷர் என்ற சொல்லே ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். ஆயின், விசயம் என்ற சொல்லை விஷயம் எனப் பயன்படுத்தினரல்லர். ஏற்றிய கொடி என முதலில் குறிப்பிடும் ஆசிரியர் பின்னர், ஏத்திப்போட்டு எனக் கையாளுகின்ருர். இவ்வாறு, முன்பின் மு:ணுன வகையிலே பேச்சுவழக்குச் சொற்களைப் பயன் படுத்தும் பண்பினை ஈழத்துப் புனைகதைகள் பலவற்றிலும் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு, மொழிபற்றிய நோக்கினுக்கு ஆசிரியர்கள் முதன்மைத்துவம் வழங் காமையே காரணமாகும்.
ஈழத்துப் புனைகதையும். 147
(இ) ஒலியமைப்பு வேறுபாடுகள்
ஒலிகள் பல்லாயிரக் கணக்கானவை. இவ்வோலிகள் யாவற்றையும் எழுத்திலே வடித்துவிட முடிவதில்லை. ஏனெனில், எழுத்துக்கள் வரம்புடையனவே. வரையறுக் கப்பட்ட அளவு எழுத்துக்களாலே, எண்ணற்ற ஒலிகளுக்கு உருவங்கொடுக்க முடிவதில்லை மிருகங்கள், பறவைகள் எழுப்பும் ஒலிகள் யாவற்றையுமோ வாத்திய இசைக் கருவிகளின் இனிய இசையினையோ எழுத்திலே வடிக்க முடிவதில்லை. இவ்வொலிகள் யாவற்றையும் வரிவடிவிலே அமையக்கூடிய அளவுக்கு எழுத்தாக்கம் இன்னும் வளர்ச்சி யடையவில்லை.
இவைபோன்றே, மனிதன் எழுப்பும் ஒலிகள் யாவற் றுக்கும் இன்னும் வரிவடிவம் கண்டுபிடிக்கப்படவில்லை. மனித எண்ணங்கள், உணர்ச்சிகள் யாவற்றையும் எழுத் திலே சிறைப்பிடித்துவிட முடிவதில்லை. அந்த அளவுக்கு எழுத்து மொழியானது இன்னும் வளர்ச்சியடையாத ஒன்ருகவே காணப்படுகின்றது. பேச்சொலிகள் யாவற் றுக்கும் எழுத்துக்கள் இல்லாமையால் புனைகதைகளிலே பேச்சுவழக்குச் சொற்களே ஒவ்வோராசிரியரும் வெவ்வேறு விதமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
அ. யேசுராசாவின் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் என்ற சிறுகதைத் தொகுதியினின்றும் சில எடுத் துக்காட்டுக்களை நாம் ஆராயலாம்.
'உங்கட மாமா செல்வநாயகம் உம்மட்டக் கதைக்கச் சொன்னேர்'
'உம்மட விருப்பத்தக் கேக்கச் சொன்னேர்'
‘புறத்தியிப் பெடியனெண்டா என்ர பங்கப் பிரி,
அப்பிடியெண்டெல்லாம் சொத்துக்கு கரச்சல் குடுப் பானெண்ட கவலை போல...' ܫ
இவ்வுதாரணங்களிலே தரப்பட்டுள்ள பேச்சுவழக்குச் சொற் கள் பலவற்றை ஈழத்து எழுத்தாளர்கள் பலரும் சற்று
Page 88
148 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
வேறுபட்ட வகையிலேயே கையாண்டுள்ளனர். அவற்றிற் சில பின்வருமாறு அமைந்துள்ளன.
a-Iă 5 l- - உங்கடை
உம்மட்ட - உம்மட்டை சொன்னேர் - சொன்ஞர் விருப்பத்த - விருப்பத்தை sredirT - என்ரை
பங்க - LIăiesă கரச்சல் - கரைச்சல் போல - போலே
டை, தை, சை, கை, வை, பை, றை போன்ற எழுத் துக்களின் ஒலியானது, எழுத்திலே உள்ளவாறு உச்சரிக் கப்படுவதில்லை. அவற்றின் ஈற்ருெலி சிற்சில இடங்களில் குறுகியும், அழுத்தம் பெற்றும் பெருமலும் ஒலிக்கப்படு கின்றன.
உம்மட்டை, உம்மட்ட ஆகிய இரு சொற்களையும் ாடுத்துக்கொண்டால், இவ்விரு சொற்களிலுமுள்ள டை, ட ஆகிய எழுத்துக்களை ஐகார அகர ஒலிகட்கிடைப்பட்ட ஒருவகை அகர "ஒலிகொண்டே உச்சரிக்கிருேம். இதஞ லேயே, எழுத்தாளர் பலரும் இவ்வெழுத்தை டை எனவும் ட எனவும் பயன்படுத்துகின்றனர்.
அ. யேசுராசாவின் மேற்காட்டிய உதாரணப் பகுதி தியிலிருந்தே இதனை ஆதாரப்படுத்தலாம். முதலாவது சுற்றிலே, கதைக்க என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது கூற்றிலே, விருப்பத்த என்ற சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. இங்கு, கதைக்க் என்ற சொல்லிலும் விருப்பத்த என்ற சொல்லிலும் எழுத்து வழக்கில் தை என்னும் எழுத்தே இடம்பெறுகின்றது (கதைக்க, விருப் பத்தை) . ஆஞல், அவ்வெழுத்து பேச்சுவழக்கில் இடம் பெறும்போது, அதிலுள்ள ஐ கார உயிரொலி எய் எனக் கதைக்க என்ற சொல்லிலும், அ என விருப்பத்தை என்ற
ஈழத்துப் புனைகதையும். . 49
சொல்லிலும் உச்சரிக்கப்படுகின்றது. ஆனல், பேச்சொலிகள் யாவற்றுக்கும் எழுத்துருவம் இன்மையால், அவ்வேறு பாட்டை உணர்த்த முடியாதுள்ளது.
ஈ) உபதேசங்கள் த்துவங்களை விவரிக்க்ையிலே
马 莎岛 உண்டாகும் முரண்பாடுகள்
உபதேசங்கள், புத்திமதிகள், தத்துவக் கருத்துக்கள் ஆகி யன பெரும்பாலும் சமூகத்தின் உயர்நிலையிலுள்ள, அறிவும் அநுபவமும் ஆற்றலும் உள்ளவர்களிஞலேயே வழங்கப்படு கின்றன. மேடைப்பேச்சுக்களும் இவ்வாறனவர்களினலேயே ஆற்றப்படுகின்றன. இவ்வாறு, சமூகத்தின் உயர்நிலையி லுள்ளோர் தாம் உபதேசஞ் செய்யும்போது, ஏனையோர் தம்மை உயர்நிலையிலே வைத்து எண்ணவேண்டுமென்பதா லும், செந்நெறிப்பாங்கான விடயத்தினத் தராதரமுடைய ஒரு மொழியிலே விளக்கவேண்டுமென்ற அவாவினுலும், பெரும்பாலும் செந்தமிழையே கையாண்டு வருகின்றனர். பாடசாலையிலே ஆசிரியன் மாணவனுக்குப் போதிக்கும் மொழி தொடக்கம் வரலாறு அரசியல், கலே, சமயச் சார் பான சொற்பொழிவுகள் வரை யாவும் செந்தமிழிலேயே ஆற்றப்படுகின்றன. இதனைப் பின்வரும் அட்டவணை தெளி வாக விளக்குகின்றது. 7
சந்தர்ப்பங்கள் பேச்சு வழக்கு எழுத்துவழக்கு
1. உறவினர், [56ö7 Lurto
ஆகியோருடனுன உரை
யாடலின்போது × 2. விரிவுரை, சமய, இலக்கி
யச்சொற்பொழிவுகளின்
போது Χ 3. கடிதம் : படித்தவர்கள்
எழுதும்போது Χ
படியாதவர்கள் எழுதும் போது . х
Page 89
} ፵0 ஈழத்துப் புனேகதைகளிற் பேச்சுவழக்கு
4. பத்திரிகை, சஞ்சிகைஆகி யனவற்றில் கட்டுரை, ஆசிரியர் தலையங்கம், செய்திகள் ஆதியன . x
5. வாஞெலியிலே செய் திகள், தொகுப்பாளர் அறிவிப்பு . . . X கிராமிய நிகழ்ச்சிகள் சிலவும், சமூகநாடகங்க 55th ... ... ... Χ
6. தற்காலச் சிறுகதை,
கவிதை, தாவல், நாட கம் ஆதியன . . . X X
அரசாங்க வர்த்தமானி விளம்பரங்கள் X
7
ஈழத்துப் புனைகதைகளிலே உபதேசங்கள், புத்திமதிகள், மேடைப்பேச்சுக்கண் ஆகியன இடம்பெறும்போது, இயல் பாகச் சாதாரண மக்களின் பேச்சுவழக்சிஜனக் கைக்தொன் ளும் பாத்திரங்கள் செந்தமிழிலேயே அவற்றினை ஆற்று கின்றன. விறுவிறுப்பும் ஆழமும், செறிவானவுமான விடயங்களை விளக்குவதற்குச் செந்தமிழ் மொழியே பயன் படுத்தப்படுகிறது. இவ்வியல்பினை ஈழத்துப் புனைகதைகள் யாவற்றிலும் காணக் கூடியதாக உள்ளது. பின்வரும் எடுத்துக்காட்டுக்களை நாம் இங்கு நோக்கலாம்.
(அ) உரையாடல்கள் யாவும் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே அமையுமாறு எழுதப்பட்டது செ. கணேசலிங் கனின் போர்க்கோலம் என்ற நாவல் இந் நாவலிலே இடம் பெறும் வடிவேலு என்ற பாத்திரம் சாதாரணமாக யாழ்ப் பாணப் பேச்சுவழக்கிலே உரையாடுகின்றது. ஆஞன், அப் பாத்திரம் புரட்சிபற்றிய ஒரு கொள்கை விளக்கத்தினப் பின்வருமாறு செந்தமிழிலேயே ஆற்றுகின்றது.
ஈழத்துப் புனைகன்தயும். 5.
*ஆகக்கூடியது அவர்களால் நாட்டில் கிடைக்கக் கூடியதை வரியாகக் கறந்து ஓரளவு பகிர்ந்து கொடுக்க லாம், அவ்வளவுதான். சோஷலிசம் என்ருல் நாட்டி லுள்ள வறுமையைப் பகிர்வதல்ல, உற்பத்திச் சாதனங் கக்ளயெல்லாம் அரசு உடமையாக்கி உற்பத்தியைப் பெருக்க வேண்டும். தற்போதய அரசியலமைப்பையும் அதன்கீழ் ஆட்சிசெலுத்தும் வர்க்கத்தையும் எவைத்துக் கொண்டு எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. ஆயுதப்புரட்சி இல்லாமல் தற்போது ஆளும் வர்க்கத்தை ஒழித்து விடலாம் என்று நினைப்பது பகற்கனவு." *
இவ்வுரையாடற் பகுதியிலே பேச்சுவழக்குச் சொல் ஒன் றேனும் இடம்பெருமை அவனிக்கத்தக்கது.
(ஆ) இன்ஞேர் எடுத்துக்காட்டை இங்கு நோக்கலாம். இளங்கீரனின் நீதியே நீ கேன் என்ற நாவல் 1958 ஆம் ஆண்டளவிலே எழுதப்பட்டது. தனது படைப்புகளிலே பேச்சு வழக்கினைக் கையாள வேண்டும் என்ற இலட்சியம் உடையவர் இளங்கீரன். இந் நாவலிலும் பாத்திர உரை யாடல்களைப் பேச்சுவழக்கிலே அவர் அமைத்துள்ளார். கணேஷ் என்ற ஒரு பாத்திரம் இந் நாவலிலே இடம்பெறு கிறது. கணேஷ் ஒரு பட்டதாரி. உயர்ந்த எண்ணம்கள், இலட்சியங்கள் கொண்டவன், சாதாரண வேளைகளிலே, அவன் பேச்சு வழக்கினையே தன் உரையாடல்களின்போது பயன்படுத்துகிருன். ஆனல், மற்றவர்களுக்கு உபதேசம் செய்கையிலே தான் ஒரு படித்தவன், பட்டதாரி என்ற உயர்வுச் சிக்கலினுற் போலும் செத்தமிழிலேயே உரையாடு கிருன், அவன் உபதேசஞ் செய்யும் ஒரு பகுதியே கீழே தரப்படுகின்றது.
'நேர்மை, நீதி, நாணயம், மனச்சாட்சி, என் றெல்லாம் சொல்கிறீர்களே, அவையெல்லாம் உங்களி டமிருந்தால் இருவது வருஷங்களாக உங்களுக்கு உழைத்த மனுஷனை இப்படி நிர்க்கதியா விடுவீர்களா? உங்களால்தானே அவருடைய குடும்பம் ஒருவேளைச் சோற்றுக்கும் கதியற்றுக் கண்ணிரும் கம்பலையுமாகத்
Page 90
152 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
திண்டாடுகிறது ? உங்களுக்காக வருஷக்கணக்காக உழைத்த மனுஷனுக்கு என்ன பரிசு கொடுத்தீர்கள் ? பசி, பட்டினி, காசநோய், கவலே, கண்ணிர் இவை களைத்தானே கொடுத்தீர்கள் ?? 9
இவ்வுரையாடற் பகுதியும் செந்தமிழ்ச் சாயலிலே அமை கின்றது.
(இ) புனைகதை ஆசிரியர்கள் சிலர், பாத்திர உரையாடல் களின்போது செந்தமிழ், பேச்சுவழக்குத் தமிழ் ஆகிய இரண்டும் சேர்ந்த ஒருவகைக் கலப்பு நடையையே கையா ளுகின்றனர். கதாபாத்திரங்கள் உபதேசங்களை, புத்திமதி களை, வழங்கும்போதும் மேடைப்பேச்சுக்களை ஆற்றும் போதும் பேச்சுவழச்குச் சொற்கள் சில கலந்துவருவதுண்டு. செங்கை ஆழியானின் பிரளயம் என்ற நாவலினின்றும் பின் வரும் பகுதி உதாரணங் காட்டப்படுகின்றது.
'இதோபார் பொன்னு, படிப்பின் பெருமையை இன்றைக்கு உணர்ந்திருக்கிறேன். விதானையார் தம்பிப்பிள்ளையைப் பார். . நான் துணி எடுக்கப் போறவேளையெல்லாம் என்ன சொல்லுகிருர், ஏன் வேலுப்பிள்ளை பிள்ளேயளையெல்லாம் படிப்பிக்கிருய். சும்மா மறிச்சுப்போட்டு தொழிலைக் கற்றுக்கொடுக் கிறது தானே.. படிச்சாப்போலே ஏதோ கிடைக்கப் போகிறதே என்று சொல்கிருரர்.' 10
மேற்குறிப்பிட்ட உரையாடற் பகுதியிலே போற, மறிச்டிப் போட்டு, படிச்சாப்போலை, சும்மா ஆகிய சொற்கள் மாத் திரமே பேச்சுவழக்கு வடிவிலே அமைந்தவை. ஏனைய சொற்கள் யாவும் செந்தமிழ்ச் சொற்களாகும்.
இவ்வாறு ஒரே பாத்திரம் ஓரிடத்திலே பேச்சுத்தமிழை யும், இன்னேரிடத்திலே செந்தமிழையும், சில விடங் களிலே இரண்டும் சேர்ந்த கலப்பு தடையையும் பயன்படுத் துவது, புனைகதையின் சீரான உணர்வோட்டத்தினுக்கு ஊறுபயப்பதாயுள்ளது. அத்துடன், பூரணமான பாத்திர வார்ப்பினுக்கும் இடையூருக உள்ளது. இதுபற்றி, துரை ராஜா மனேகரன்,
FIFpġġ L' L-Irwana Asu lb... ... 153
"ஈழத்துத் தமிழ் நாவல்களின் கதைத் தலைவர்கள் சிலவேளைகளிலே முழுமையான பாத்திரங்களாக அமை யமுடியாமற் போவதற்குக் காரணம், அவர்கள் ஒரே திரான முறையிலே பேச்சுமொழியைப் ւսայ6ծr படுத்தாமையே. ’ 11
எனக் குறிப்பிடுகின்ருரர். எனவே, பாத்திரங்களின் பூரணத் துவமான வார்ப்பிலும் பேச்சுவழக்குப் பிரயோகம் பெரும் பங்கு வகிக்கின்றது என்பதனை இங்கு நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இதுவரை கூறியவற்றைத் தொகுத்து நோக்கும்போது, ஈழத்துப் புனைகதை இலக்கியங்களிலே பேச்சுவழக்கானது இக்காலவரையிற் செம்மையான முறையிலே கையாளப் படவில்லை என்பது தெளிவாகும். எனவே, புனேகதை இலக்கியத்திலே பேச்சுவழக்கினைப் பயன்படுத்துவது பற்றிய புதிய கோட்பாடு ஒன்று உருவாக்கப்படுதல் இன்றியமை யாததாகும். அக் கோட்பாட்டினடிப்படையிலே பேச்சு வழக்கானது பயன்படுத்தப்படும்போது, ஈழத்துப் புனை கதை இலக்கியம் மேலும் செழுமையான ஒரு வளர்ச்சிக் கட்டத்தினை அடையும் என்பது திண்ணம்.
அடிக்குறிப்பு
1. கதிர்காமநாதன், செ. கொட்டும்பனி, முன்னுரை
2. கதிர்காமதாதன் செ, , மூவர் கதைகள், பக் 9
3. எஸ்.பொன்னுத்துரை, வெண்சங்கு, (முன்னிடு)
4. உலகமொழிகள் சிலவற்றிலே காணப்படும் ஒரமிசமாகிய இருவழக்குப் பண்பு பற்றிய விவரங்களுக்குப் பார்க்க வும் : "ஆக்கவிலக்கியமும் மொழியியலும்”, ஆக்கவிலக் யேமும் அறிவியலும், பக். 57
20
Page 91
54
10.
ll.
ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
நுஃமான், எம், ஏ., "ஈழத்துத் தமிழ் நாவல்களின் மொழி', தமிழ் நாவல் நூற்றண்டு விழா ஆய்வரங்கு 1977.
டானியல், கே, பஞ்சமர், பக். 1 - 2.
சண்முகதாஸ், அ. நமது மொழியின் இயல்புகள், பக் 9.
'கணேசலிங்கம், செ., போர்க்கோலம், பக். 175.
இளங்கீரன், நீதியே நீ கேள், பக். 101.
செங்கை ஆழியான். பிரளயம், பக். 22.
மளுேகரன், து, 'ஈழத்துத் தமிழ் நாவல்களிற் கதைத் தலேவன் பாத்திரப் பண்பு", பக். 218.
முடிவுரை
இவ்வாய்வுக் கட்டுரையின் நான்கு இயல்களிலும் பொதுவாக இலக்கியத்துக்கும் மொழிக்கும் இடையேயுள்ள தொடர்புபற்றியும், சிறப்பாக ஈழத்துப் புண்கதைகளிலே பேச்சுவழக்குப் பயன்பாடு பற்றியும் ஆராயப்பட்டுள்ளது. முதலாவது இயல், இலக்கியமும் மொழியும், பேச்சு வழக்கின் முக்கியத்துவம், ஈழத்துப் பேச்சுவழக்கின் பொது வான இயல்புகள், இந்திய ஈழத்துப் பேச்சுவழக்கிலே ஒலி யமைப்பு ஆகியன பற்றி ஆராய்கின்றது. இரண்டாவது இயலிலே, ஈழத்துப் புண்கதைகளின் வரலாற்றுச் சுருக்கம், ஈழத்துப் புண்கதைகளில் பேச்சு வழக்குப் பிரயோக வர லாறு, மரபுப் போராட்டம் ஆகியன பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது, மூன்ருவது இயலில் பேச்சு வழக்கின் சில பண்புகள், பிரதேசக் கிளைமொழிகள் ஆகியன பற்றியும், நான்காவது இயல், கதை நிகழ் களமும் பேச்சுவழக்கும், கதைப்பொருளும் பேச்சுவழக்கும், புனைகதை வகையும் பேச்சு வழக்கும், புனைகதை இலக்கியத்திற் பேச்சு வழக்கைப் பயன் படுத்துவதால் உருவாகும் பிரச்சினைகள் ஆகியன பற்றியும் விளக்குகின்றன. முதலாவது இயலிலே பின்வருங் கருத் துக்கள் கூறப்பட்டுள்ளன :
(அ). இலக்கியத்தின் மூலாதாரமாக விளங்குவது மொழியே. ஒரு மொழியின் வாழ்வு, வளம் வளர்ச்சி பற்றிய தகவல்களைச் செம்மையானதாகத் தரவல்லது இலக்கியமேயாகும்.
Page 92
156
(4)
(@)
(FF)
(R)
(ஊ)
ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
காலத்துக்குக் காலம் அரசியல், சமூக மாற்றங்களுக் கேற்ப இலக்கியப் பொருளும், இலக்கிய சிடிவமும் இலக்கிய மொழியும் வேறுபட்டு வருகின்றன.
இலக்கியம் சமூக நிலமைகனைப் பிரதிபலிப்பதஞல், அது வரிக்கச் சார்பானதாகும். ஆணுல், மொழி
வர்க்கச் சார்பானதாகவன்றி மனித இனத்தின் கூட்டு
முயற்சியிஞலே தோற்றுவிக்க ப்பட்டதாகும்.
எழுத்து மொழிசுயவிடப் பேச்சு மொழியே இலகு வானது; ஆற்றல்மிக்கது; வளர்ச்சி டையது ; பிற மொழிச் சொற்கண்யும் மிக இயல்பாகத் தமிழ் வடிவத்துக்கேற்ப ஏற்றுக்கொள்கிறது. w
புனேகதை நாடகம், திரைப்படம் போன்ற துறை களிலே பேச்சுவழக்கானது பெருந் தாக்கத்தினை ஏற்படுத்திவருகிறது. ஈழத்து மேடை நாடகங்கள், வாஞெலி நாடகங்கள், தமிழ்த் திரைப்படங்கள் ஆகியன உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளன.
ஈழத்துப் பேச்சுவழக்கு இந்தியப் பேச்சுவழக்கி னின்றும் பல்வேறு நிலைகளிலும் வேறுபட்டுள்ளது.
இந்தியப் பேச்சுத் தமிழ் போலன்றி, ஈழத்துப் பேச்சுத் தமிழிலே குறித்த சில பிறமொழிகளின் செல்வாக்கு அருகியே காணப்படுகிறது. சிங்கள மொழியின் செல்வாக்கினை மட்டக்களப்பு மலேநாடு, முஸ்லிம் மக்களது பேச்சு வழக்கிலே அவதானிக்க முடிகிறது.
இந்தியாவிலே சாதியமைப்பு (அதாவது பிராமணர்பிராமணரல்லாதோர் பேச்சுவழக்கு) பேச்சுவழக்கிலே வகிக்கும் செல்வாக்கினை ஈழத்துப் பேச்சு வழக்கிலே காண முடியவில்ல். இந்திய், முஸ்லிம் பேச்சு வழக்கைத் தவிரச் சாதிப் பேச்சு வழக்கு வேறுபாடுகள் ஈழத்திலே அவ்வளவாக உணரப்படுவதில்லே.
முடிவுரை 57
3.
(ST)
இத்தியா பரந்த தேசமாகையிஞலே பிரதேசங்களுக் கிடையிலான தொடர்புகள் குறைவு. இதஞற் பிரதேச மோழிகளுக்கிடையே விகற்பங்களுமதிகம். ஆஞல், இலங்கை சிறிய நாடாகையால், பிரதேசத் தொடர்பு நெருக்கங் காரணமாகப் பிரதேச மொழி விகற்பங்கள் குறைவாகவே காணப்படுகின்றன.
ஆக, பொதுப்பேச்சுத்தமிழ் என்ற வகையிலேயே இந்தியத் தமிழ் பேச்சுவழக்கும் ஈழத்துத் தமிழ்ப் பேச்சுவழக்கும் ஒற்றுமையுடையனவாகக் காணப் படுகின்றன.
இந்திய ஈழத்துத் தமிழ்ப் பேச்சுவழக்குகளின் ஒலிய மைப்பினை ஒப்பிட்டாராய்கையிலே, பின்வரும் முடி புகள் பெறப்பட்டன.
இந்தியப் பேச்சுத் தமிழிற் பெருமளவு இசைத்தன்மை பேணப்படுகிறது.
இந்தியப் பேச்சுத்தமிழ் இலக்கியத் தமிழைவிடப்
பல்வேறு நில்களிலும் திரிபுபட்டுள்ளது. ஆளுரல், ஈழத்துத் தமிழ்ப் பேச்சுவழக்கு ஓரளவுக்கேனும் இலக்கியத் தமிழின் இயல்புகள் கொண்டுள்ளது.
இரண்டாவது இயலிலே பின்வரும் கருத்துக்கள் கூறப்பட் (SeitouTar.
(அ)
கீழைத்தேசங்களிலே ஐரோப்பியர் வகுகையுடன் நிலமானிய அமைப்பு ஆட்டங்கானத் தொடங்க
அவ்வமைப்பினைப் போற்றிய இலக்கிய வடிவங்களும்
இலக்கியப் பொருளும் மாற்றமுறுகின்றன. செய்யுள் வழக்குச் சமூகத்திலே வகித்த முக்கியத்துவத்தினை உரைநடை பெறுவதாயிற்று. இவ்வுரைநடையுடன் பின்னிப்பிணைந்த ஓர் இலக்கியவடிவமே புனைகதை இலக்கியமாகும்.
Page 93
158
(马)
(இ)
(FF)
(s-)
(261)
ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
ஈழத்தின் ஆரம்பகால தமிழ்ப் புனேகதைகள், அரச வம்சத்தினரின் சரித்திரங் கூறுவனவாகவும் ஒழுக்க நெறியை வற்புறுத்துவனவாகவும், காவியப்பாங் கான மொழிநடை கொள்வனவாகவும், ள்ழத்தினைக் களமாகக் கொள்ளாதனவாகவும் காணப்படுகின்றன.
இடைக்கால ஈழத்துப் புண்கதைகளுக்கு ஆதர் சமாயமைந்தவை மேலைத்தேயப் புனைகதைகளே. ஆணுலும், அவை ஈழம் வாழ் மக்களின் சமூகநிலைப் பாடு, வாழ்க்கைப் பின்னணி ஆகியவற்றையும் சித்தி ரிக்கத் தலைப்பட்டன.
இக்கால ஈழத்துப் புனேகதைகள், இந் நாட்டின் சமூக, அரசியற் பிரச்சினைகளேத் தத்துவார்த்த நோக்கிலே ஆழமாக அணுக முற்படுகின்றன.
ஈழத்தின் ஆரம்பகாலச் சிறுகதை எழுத்தாளர்கள் பலரும் பாரிய அரசியல், சமூக, பொருளாதாரக் கருத்துக்களைச் சிறுகதை வடிவத்திலே கூறமுடியாது போகவே நாவலிலக்கிய முயற்சியிலே ஈடுபடுகின் றனர்.
ஈழத்தின் ஆரம்பகால எழுத்தாளர்களுக்கு முன்ளுே டியாக மணிக்கொடிக் குழுவினர் விளங்கியபோதும், 1950ஆம் ஆண்டின் பின்னர் ஈழத்துப் புனைகதை இலக்கியம் தனித்துவமான, புரட்சிகரமான ஒரு பாதையை வகுத்துக்கொண்டது
ஈழத்துப் புண் கதைகளிலே சமுதாயச் சித்திரிப்பின் அடிப்படையிலேயே பேச்சுவழக்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது.
1960 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் ஈழத்திலிடம் பெற்ற மரபுப் போராட்டம், ஈழத்துக்குத் தனியா னதோர் இலக்கியப் பாரம்பரியம் உண்டென்பதை யும் பிரதேச மண்வாசனை இலக்கியங்களின் இன்றி யமையாத பண்பு என்பதனையும் உணர்த்திற்று. அது
முடிவுரை 59
தொழிலாள வர்க்கத்தினரின் ஆக்க இலக்கியப் பிர வேசத்துக்கு வழிவகுத்தது. ஈழத்துப் புனைகதைக ளிலே பேச்சுவழக்குப் பிரயோகத்தின் இன்றியமை யாமையை விளக்கியதோடு, தற்கால ஈழத்துப் புனை கதைகளின் தத்துவார்த்த நோக்கிலான வளர்ச்சிக்கும் அது வித்திட்டது.
மூன்ருவது இயலிலே பின்வரும் கருத்துக்கள் கூறப்பட் டுள்ளன.
(அ) பேச்சுவழக்கானது தேசீயரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும், கிராமிய மட்டத்திலும், இனம், சாதி, தொடர்பு முறைமை, தொழிலடிப்படையிலும் இடத்திற்கிடம் வேறுபடுகின்றது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலைநாடு, தென்மாகாணம், மன்னுர், முல்லைத்தீவு, கொழும்பு ஆகியவற்றின் பிரதேசக் கிண்மொழிகள்பற்றி ஆராயப்பட்டுள்ளன.
(ஆ) மேலே குறிப்பிட்ட பிரதேசக் கிண்மொழிகளின் ஒலியமைப்பு வேறுபாடுகள், பொருள்மாற்றம், செந்தமிழ்ச் சொற்கள், பிறமொழிச் சொற்கள் பற்றி ஒரளவு ஆராயப்பட்டுள்ளன.
(இ) மன்ஞர், முல்லைத்தீவு, கொழும்புப் பிரதேசக் கிளை மொழிகளின் சிறப்பியல்புகளே விரிவாகத் தரவல்ல ஆதாரங்கள் போதிய அளவு கிடைக்காமையினலே, அவைபற்றிய ஆய்வும் சுருக்கமாகவே அமைந் avelrengy.
நான்காவது இயலிலே பின்வரும் கருத்துக்கள் கூறப்பட்
GBQsiramTeesr.
(அ) கதைநிகழ் களத்திற்கேற்பப் புண்கதையின் பேச்சு
வழக்கும் வேறுபடும்.
(ஆ) கதைப் பொருளின் தன்மைக்கேற்ப அக்கதையிலே
இடம்பெறும் பேச்சுமொழி வேறுபடும்.
Page 94
160
(இ)
(FF)
(ر سهیم )
ஈழத்துப் புனேகதைகளிற் பேச்சுவழக்கு
ஈழத்துப் புனைகதைகள், இக்கட்டுரையிலே துப்பறி யும் புண்கதைகள். வரலாற்றுப் புண்கதைகள், மேல்மட்ட உணர்வும் புண்கதைகள், மிகை உணர்வுப் புனைகதைகள், மண்வாசனைப்பாங்கான புனைகதைகள் என வகுக்கப்பட்டு ஒவ்வொரு வகைப் புனே கதையின்
பேச்சுவழக்கும் தனித்தனியே ஆராயப்பட்டுள்ளது:
துப்பறியும் புனே கதைகளினதும் வரலாற்றுப் புனை கதைகளினதும் பேச்சுவழக்குகள் செத்தமிழ்ப் பாங்காணவையென்பதும், மேல்மட்ட உணர்வுப் புண்கதைகளினதும், மிசிசிகஉணர்வுப் புண்கதை களினதும் பேச்சுவழக்குகள் செந்தமிழ்ச் சொற்களும் பேச்சுவழக்குச் சொற்களும் விரவி வருவன என்பதும், மண்வாசனைப் பாங்கான புனேகதைகளினது பேச்சு வழக்கு இயல்பாக அமைந்துள்ளது என்பதும் எடுத் துக்காட்டுக்களுடன் நிறுவப்பட்டுள்ளன.
ஈழத்து இலக்கிய கர்த்தாக்கள் பலரும், செம்மையான வகையிலே புனைகதைகளிலே பேச்சுவழக்கிணைப் பயன்
படுத்தத் தவறியுள்ளனர். இதற்கான காரணங் களாகப் பின்வருவன எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
மொழியின் இருவழக்குப் பண்பு: புனைகதைகளிலே பாத்திர உரையாடல்கள் பேச்சுவழக்கிலும், விவர ணப் பகுதிகள் செந்தமிழிலும் அமைகின்றன. இவ் விருவகை தடையையும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் போது, அவை ஒன்றையொன்று பாதிக்கின்றன.
பேச்சுவழக்கினைச் சீராகக் கையாளவேண்டுமென்ற ஆர்வம் எழுத்தாளர்களிடையே இல்லே மண்வா சனே இலக்கியம் படைக்க முனேற்த எழுத்தாளர் சிலர். பேச்சுமொழியைப் பயன்படுத்தும் வகையிலே இரத் தையற்றவர்களாகவே காணப்படுகின்றனர். பேச்சு வழக்கிலான குறித்த ஒரு சொல்லேயே வெவ்வேறு விதமாகப் பயன்படுத்துவது இவர்களின் சிரத்தையின் மையையே புலப்படுத்துகின்றது.
முடிவுரை 161
3.
ஒலியமைப்பு வேறுபாடுகள் : தமிழ்மொழியைப் பொறுத்தவரையிலே, பேச்சொலிகள் யாவற்றுக்கும் இன்னும் எழுத்துருவம் கண்டுபிடிக்கப்படவில்லே. இதஞற் குறித்த சில சொற்களை எழுத்தாளர்கள் பலரும் வெவ்வேறுவிதமாகப் பயன்படுத்துகின்றனர்.
உபதேசங்கள், தத்துவங்கள் மேடைப்பேச்சுத் தொடர்பாக ஏற்படும் முரண்பாடுகள் : சாதாரண பேச்சுவழக்கினைப் பயன்படுத்தும் பாத்திரங்களும், உபதேசங்கள் செய்யும்போதும் தத்துவங்கள் கூறும் போதும் மேடைப்பேச்சுகளை ஆற்றும்போதும் செந்
தமிழையே பயன்படுத்துகின்றன. பிரக்ஞை பூர்வ
மாகப் பேச்சுவழக்கினைப் பயன்படுத்த வேண்டும் எனக் கருதும் எழுத்தாளர்களும் மேற் கூறப்பட்ட சந்தர்ப்பங்களிலே சேத்தமிழையே கையாண்டு வருகின்றனர்.
நான்காம் இயலின் முடிவிலே, இதுவரை ஈழத்துப் புனே கதைகளிலே செம்மையான வகையிலே பேச்சுவழக்கானது பயன்படுத்தப்படவில்லை என்பதும், இதுபற்றிய புதிய கோட் பாடு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
21
Page 95
உசாத்துணை நூல்விபரப் பட்டியல்
அருளுசலம், க.,
அசோகா, மண்டூர்.
இலங்கையர்கோன்,
இலக்குமணன் செட்டி
umrf
இளங்ரேன்,
es se se si se o a ese a 8 o los es
இளமுருகனர்,
*ஈழத்திலே தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்' (பதிப்பிக்கப்படாத ஆய்வுக் கட்டுரை) பேராதனப் பல்கலைக் கழகம்.
கொன்றைப் பூக்கள், தாய்நாடு பதிப்பகம், கொழும்பு, 1976.
வேள்ளிப் கா சரம்,
பூணி சண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம், 1962.
வளரும் தமிழ் பாரி நிலயம், Ggsräber, 1966.
நீதியே நீ கேள், பாரி நிலையம், (voir&r, 1952 தினகரன், 14-01-1963
செந்தமிழ் வழக்கு தமிழ்ப் பாதுகாப்புக் கழக வெளியீடு 18,
யாழ்ப்பாணம், 1963
உசாத்துணை நூல்விபரப் பட்டியல் 65
இராசரத்தினம், வ:அ. கிரெளஞ்சப் பறவைகன்,
வீரகேசரிப் பிரசுரம், கொழும்பு, 1975
கருளுகரன், கி. சமுதாய மொழியியல்
பாரி நிலயம், GsFairw, 1975
கணபதிப்பிள்ளை, க., “ஊருக்கொரு பேச்சு", இளங்கதிர், 1946 - 50
கதிர்காமநாதன், செ, கொட்டும்பனி
கொழும்பு, 1968
கந்தசாமி, அ. த. gBarras gallu, 03-02-1963
கற்தையா, வி. சி. , இராமநாடகம்,
கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு, 1969
கணேசலிங்கம், செ. வோர்க்கோலம், பாரி நிலையம், Gigfairfawr, 1969
கோகிலம் சுப்பையா, தூரத்துப் பச்சை,
தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1964 மறுபிரசுரம் : வீரகேசரி வெளியீடு, கொழும்பு, 1973
கைலாசபதி, க. ஒப்பியல் இலக்கியம்,
பாட்டாளிகள் வெளியீடு, Gyaiyar, 1969
சதாசிவம், ஆ , "ஒரு மொழிக்கு ஒரே
இலக்கணம்", தினகரன், 05-03-1963
Page 96
64
சற்குணம், ம.
சண்முகன், ஐ. ,
சண்முகதாஸ், அ.,
LL LSLS SSLL0LLLL LLLLLLLLS S LLLL S LLL LL LLL LLL 0L0
» aux» ve a v r «» ? » ab es « s p a
சிவத்தம்பி, கா,
ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
"மட்டக்களப்புத் தமிழகத்திற் சிங்கள வழக்கு", இளர்கதிர், 1955 - 56
கோடுகளும் கோலங்களும், அலை வெளியீடு. யாழ்ப்பாணம் 1976
நமது மொழியின் இயல்புகள், பாவ லர் தெ. அ. துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை - 2. மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை 1976
"குழந்தை மொழி', பசறைத் 5.Lfijd afišču Nauju provů, Luaravoso, 1976.
‘ஈழத்து நாடக வரலாற்றில் ஒரு தமிழ்ப் பேராசிரியர்' இளங்கதிர் இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம், பேராதனை, 1965-69
*"ஆக்க இலக்கியமும் மொழியிய லும்", மல்லிகை, ஆகஸ்ட், 1978
**ஆக்க இலக்கியமும் மொழியிய லும்", ஆக்க இலக்கியமுல் அறிவியலும் (பதிப்பாசிரியர்: அ. சண்முகதாஸ்) யாழ்ப்பாண வளாகத் தமிழ்த்துறை வெளியீடு, யாழ்ப்பாணம், 1977
நாவலும் வாழ்க்கையும், தமிழ்ப் புத்தகாலயம். சென்னே, 1978
"சொல்லிலக்கணம் சுட்டும் சமூக உற்பத்தி உறவுகள்", வானமாமலை மணிவிழா மலர், GFairur, 1978
t
*ாத்துணை நூல்விபரப் பட்டியல் I65
' ' ' to a . . . . . . “இலங்கை முற்போக்கு
சிாழுத்தாளர் சங்கமும் ஈழத்தின் தமிழிலக்கிய வளர்ச்சியும்?? புதுமை இலக்கியம், தேசீய ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மகாதாட்டு மலர், 1975
சிவநேசச் செல்வன், ஆ, "ஈழத்துத் தமிழ் நாவல்களின்
தோற்றம்", ஈழத்து தமிழ் நாவல் நூற்ருண்டு ஆய்வரங்குக் கிட்டுரை, இலங்கைப் பல்சுலைக்கழகம், யாழ்ப்பாணம், 1977 சீனிவாசன், ரா. மொழியியல்,
பாரி நிலையம், சென்னை, 1960
சுப்பிரமணியம், நா. *ழத்துத் தமிழ் நாவல் நூல் விவரப் பட்டியல், நூலகம், இலங்கைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பான வளாகம், 1976
a a *சிந்துத் தமிழ் நாவல் இலக்கியம், முத்தமிழ் வெளியீட்டுத் கழகம், யாழ்ப்பாணம், 1978
ர்ப்பிரமணியம், ச, “இதுதாஞ தமிழ் மரபு",
தினகரன், Ꭴ5-01--1 968
சல்வநாயகம், வி. , தமிழ் இலக்கிய வரலாறு,
பூரீ லங்கா அச்சகம்,
யாழ்ப்பாணம் 196து
சங்சரசு seÁlumair, வாடைக்காற்று, விரதே சரிவெளியீடு,
கொழும்பு, 1973 22
Page 97
J 66 ஈழத்துப் புனேகதைகளிற் பேச்சுவழக்கு
, o s s s s pro iu a o p 0 0 & 10 de ol 2 e * பிரளயம், வீரகேசரி வெளியீடு,
கோழும்பு, 1975
. . . so as a so see காட்டாறு. வீரகேசரி வெளியீடு,
கொழும்பு, 1977
as sa de . . . os e a 8. மூற்றத்து ஒற்றைப்பனே, சிரித்திரன் பிரசுரம், யாழ்ப்பாணம், 1972
செந்திநாதன், கனசு, ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, அரசு வெளியீடு, கொழும்பு, 1964
a & 8 w a - 8 & 6 8 வெண்சங்கு யாழ். இலக்கியவட்ட வெளியீடு, யாழ்ப்பாணம், 1967
சொக்கலிங்கம், க. ஈழத்துத் தமிழ் தாடக இலக்கிய
வளர்ச்சி, முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ்ப்பாணம், 1977
a es as so ess *காலம் மாறிவிட்டது',
தினகரன், 05-01-1963
டானியல், கே., போராளிகள் காத்திருக்கின்றனர்
வீரகேசரி வெளியீடு, கொழும்பு 1975
e s -" பஞ்சமர்,
தாரகை வெளியீடு,
Austbiuntaris, 1978
டொமினிக் ஜீவா, தண்ணீரும் கண்ணீரும்
தமிழ்ப் புதுதகாலயம்,
Gefeiriw, 1960
sos o es a a e es o * 8 o s o lo தினகரன், 14-01-1963
தனஞ்செயராசசிங்கம், ச. "யாழ்ப்பாணப் பேச்சுவழக் கில் சொல்லும் பொருளும்' இளங் கதிர், 1967-68
உசாத்துணை நூல்விபரப் பட்டியல் 167
oooooo " o o s a lo o a la a se ses "பேச்சுத் தமிழில் இலக்கிய
வழக்கு' இளங்கதிர் 1665-66
தெளிவத்தை ஜ்ோசப், காலங்கள் சாவதில்லை, வீரகேசரி
வெளியீடு, கொழும்பு, 1974
தொல்காப்பியம் (புலியூர்க்கேசிகன் தெளிவுரையுடன்)
பாரி நிலயர், சென்னை, 1964
நவசோதி, க., "மட்டக்களப்பு வழக்குத் தமிழ்", மட்டக்களப்புத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் வாசிக்கப்பட்ட கட் டுரை, 1976
நடராசா, மட்டுநகர், "செந்தமிழ்ச் சாயல் தழுவிய
அந்நிய மொழிச் சொத்கள் • இளங்கதிர் 1, 49 - 50
நடராசன், கே. வி. யாழ்ப்பாணக் கதைகள்,
யாழ் இலக்கிய வட்ட வெளியீடு, யாழ்ப்பாணம், 1985
நுஃமான், எம். ஏ., “ஈழத்துத் தமிழ் நாவல்களின்
மொழி?, தமிழ் நாவல் நூற்ருண்டு ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை. யாழ்ப்பாணம், 1977
தன்னூல் (பூரீலழறீ ஆறுமுகநாவலரால்
புதுக்கியது) ஆறுமுகநாவலர் வி. அச்சகம், சென்னை, 1988 .-
பாலசுத்தரம், இ., “மட்டக்களப்புப் பேச்சுத்
தமிழிலே சிதைந்த aupágaror''' இளங்கதிர் 1967 - 68
Page 98
168 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
பாலமனேகரன், நிலக்கிளி,
வீரகேசரி வெளியீடு, கொழும்பு, 1973
புதுமைப் பண்டிதன், "ஒடும் சாக்கடை நீருமல்ல மரபு",
தினகரன், 08-12-1962
பெனடிக்ற் பாலன், யோ, சொந்தக்காரன்.
பாரி நிலையம், சென்னை, 1968
பொன்னுத்துரை, எஸ்., வி
அரசு வெளியீடு, கொழும்பு, 1966
மகுே கரன், து, "ஈழத்துத் தமிழ் ாவல்களிற் கதைத் தலைவன் பாத் ப் பண்பு”, இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப் பாண வளாகத் தமிழ் முதுமாணிப் பட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப் பட்ட கட்டுரை, 1978
முத்துச் சண்முகன். இக்காலத் தமிழ்,
சீயோன் பதிப்பகம், மதுரை, 1967
0 & w8 a இக்கால மொழியியல்
திருவகுள் அச்சகம், மதுரை, 1971
முத்துலிங்கம், அ. , அக்கா,
பாரி நிலையம், Gafsirot, 1964
முருகபூபதி, லெ, சுமையின் பங்காளிகள், 1975
யேசுராசா, அ., தொலைவும் இருப்பும் ஏனைய
கதைகளும்,
ஆசிரியரின் வெளியீடு, யாழ்ப்பாணம், 1974
உசாத்துணை நூல்விபரப் பட்டியல் I 69
யோகநாதன், செ, ஒளி நமக்கு வேண்டும்,
மலர் வெளியீடு, மட்டக்களப்பு, 1973
வரதராசன் CUP, மொழி வரலாறு,
தீருநெல்வேலி சைவசித்தாந்த நூற் பதிப்பகம், சென்னை, 1944
வித்தியானந்தன், ལོ་ 5t5gpr *TájL! (FIÉis areoli)
தமிழ் மன்றம், (56thrig, 1954
o « é o s a as e se மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்
as Gisig, 1962
* * * * * see . . . . r. . . . . . அலங்காரரூபன் நாடகம், கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு, 1962
at Lorgpøshauff, பரமார்த்தகுரு கதை வேலுப்பிள்ளே, ஆ, தமிழ் இலக்கியத்தில் காலமும்
கருத்தும்,
சென்னை, 1969
ஹம்சா, யோனகபுர, “திக்குவல்லையின் வரலாற்றுப்
பின்னிணைப்போடு பொருளாதாரப் பங்களிப்பு", மல்லிகை, பெப்ரவரி, 1976
ஹம்சா, எஸ். அய்.எம்., 'திக்குவலையின் பேச்சுத்தமிழும்
படைப்பிலக்கியப் பிரவேசமும்" மல்லிகை, பெப்ரவரி, 1976
ஊர்மிளா, -asór(Gu srsöT ஆருயிரே,
வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
Page 99
70 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
Sanmugadas, A.,
a wo e F set
shanmugampillai, M.,
Sussendirarajah, S.,
Steiner George.
Stalin, J. V.,
Vaadreys, J.,
“Some Aspects of the Tamil Spoken in Sri Lanka”
Proceedings of the Tamil IV th International Tamil Conference) Seminar, Vol II Nov. 6th 1974
“The Phonology of Verbal Forms in colloquial Ceylon Tamil', Unpublished Ph. D. thesis University of Edinburgh, 1971
“Separation of Sri Lanka Tamil frem the Centinental Tamil”,
Tamil Civilization Vol. 1. No. 2, Tamil University, Tanjavur, 1983
“A Tamil Dialect in Ceylon', Indian Linguistics, Vol. 23, 1962
“A Descriptive Study of Ceylon Tamil (with special reference to Jaffna Tamil), Unpublished Ph. D. thesis, Annamalai University, 1967
'Linguistics and Literature',
Linguistics at Large, Vietor Gellanez Ltd., London, 1971
Marxism and the Problems of Linguistics, Mescow, 1954
Language, (English Translation)
London, 1951
உசாத்துணை நூல்விபரப் பட்டியல்
Christopher Candwell,
Zvelebil, K.,
171
“Illusion and Reality', A Study of the Sources of Peetry,
London.
“Some Features of Ceylon Tamil',
Indo-Iranian Journal, Vel. 9. 2., 1966
Page 100
ஆசீர்வாதம் அசசகம யாழ்ப்பாணம்
Page 101
Page 102
ஈழத்துத் քthց, ETT
திரு. ரொக்கலிங்
2 முத்துத் թthլի քի:
ஆப்பிரம்
தமிழியற் சிந்த
போசிரியர் , வித் indaria, 2 Urteurri :=
4. கம்பராமாயணக் காட்
இந்திய கலாநிதி :ே நீரகப் பதிப்பு 5. தமிழ்மொழி இலக்க அண்மு பிரதிகள் இல் சி. வை. தாமோதரம்
சாதார பதிப்பு
நூலகம் பதிப் F, S, Lily Ggy Es
பதிப்பாசிரிப்ர் ரோயே சே
குேன்மவிாடு “သိင်္ဂီal to * 蠱 l。 ,*、
*
s
,
வுெளியிட்டுக்
வெளியிடுகள்
இலக்கிய வளர்ச்சி கம் E. {{{ܢܕܬܐ வல் இலக்கியம்
ம்ம்
தியானந்தன் PhD
சிகள்
பதிப்பிள்ள * : ցանկեր եթյուն :
பிள்ள ஓர் ஆய்வு நோக்கு கதாஸ் மாம். ஏ. * ELIT 22:50,
* '''
t Ph.D.
WAT リア 。
Page 103
202 மெய்யுள்
தாலும் விநாயகதாஸைப் பொறுத்தவரையில் அன்றுதான் ஆரம்ப முதல் முடிவுவரை புத்திபூர்வமாகச் சுயவுணர்வுடன் நடைபெற்ற அத்தகைய ஓர் அனுபவம் கிட்டியிருந்தது. அது மிக அற்பமான விடயமாகவிருந்தாலுங்கூட அந்த வகையிற் பார்க்கும்போது அது அவனைப் பொறுத்தவரை யில் சந்திரனில் முதன்முதலாகக் கால் வைத்த ஆம்ஸ்ட் ரோங்கின் அனுபவத்தைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பட்டது.
சகல மக்களுக்கும் பழக்கமான சடவுலகத்துக்கும் அதற் குரிய புலனுணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட அனுபவத் தளங் களும் வாழ்க்கை நிலைகளும் உண்மைய்ாகவே இருக்கின் றனதானு?
இருக்கின்றன என்றுதான் காலங்காலமாய்ச் சமயங்கள் கூறி வருகின்றன. அனுபூதிமான்கள் என்பவர்கள் அந்தத் தளங்களுக்கும் வாழ்க்கை நிலைகளுக்குமுரிய விஞ்ஞானிகள் தான்.
விநாயகதாஸ் அவற்றைக் கருத்தளவில் அதுவரை ஏற்றுக்கொண்டிருக்கிருன். ஆனல், அனுபவரீதியில் அன்று போல் எதையும் அத்தனை அழுத்தத்தோடும் சுயவுணர் வோடும் கண்டதில்லை.
ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு முன்பே ஆத்மீகத் தேட்டத்தை விரும்பி, அதற்குரிய குருவையும் சந்தித்த காலத்தில் அந்தப் பிரச்னைகளும் அவனது சிந்தனைக்குரிய விருந்துகளாக முன்வைக்கப்பட்டதுண்டு. ஆனல், அப்போது அவற்றை அவன் அந்தளவு பெரிதாக எடுத்துக்கொண்ட தில்லை. ஆணித்தரமாக நம்பியதுமில்லை. அதனுல் அவற்றில் அவன் அதிகம் கவனஞ் செலுத்தியதும் இல்லை.
அண்டை வீடுகள் 203
ஆத்மீக முக்தி என்பதுதான் அவனுக்குரிய முக்கிய விடய மாகப்பட்டது அப்போது. ஆணுல், அவனுக்குத்தியானப் பயிற்சி அளித்த அவனது குரு ஆத்மீக விளக்கங்களுடன் வேறு பல விபரங்களையும் இடைத்தளங்களின் எண்ணற்ற கோலங்களையும் பட்டும் படாமலும் பலவகைகளிற் காட்டவே முயன்ருர், w
ஆத்மநிலை என்ற இலட்சிய நிலையையும் தியானத்தின் மூலம் அந்த நிலையை அடையலாம் என்ற கொள்கையை யும், அதற்காகக் குரு என்ற ஒரு வழிகாட்டியையும் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருந்த விநாயகதாஸாக்கு அவையல்லாத அடுத்த விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது அப் போது, அவை வெறும் கற்பனைகளாகவே அவனுக்குப் பட் டன. உண்மையாகவே அவை இருந்தன என்று ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலைகளிற்கூட அவை அவனுக்கு அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தெரிந்ததில்லை. மாருக ஆபத்தான ஏமாற்றங்களுக்குரிய மருட்சித் தளங்களாகவே அவற்றை எடுத்துக்கொண்டான். அதனுல் அவனது அக் கறையை அந்த விடயங்கள் அதிகம் ஈர்த்ததில்லை.
குருவை அவன் சந்தித்த ஆரம்பகாலத்தில் அவன் வாசிப்பதற்காக அவர் கொடுத்த நூல்களில் சூக்கும உலகங் களைப் பற்றிய விளக்கங்களைக் கொண்ட நூல்களும் இருந்தன. குறிப்பாக " லொப்சாங்றம்பா" எழுதிய பல நூல்கள் முக் கியமானவை.
ஆத்மீக அனுபவத்தை உடனடியாகப் பெற்றுவிட வேண்டு மென்று துடித்த அன்றைய ஆரம்பகாலத்து அரை வேக் காட்டு அவதியில் அந்தவகை நூல்களையெல்லாம் அவன் மனம் விரும்பிப் படிக்க முயன்றதில்லை. அதேபோல் குருவும் " அன்னையும் பற்றிக் கதைத்த வேளைகளிலெல்லாம் அவற்றைப் பொய்ப்
சூக்கும ஆன்மீக உலக அனுபவங்களைப்
Page 104
204 மெய்யுள்
புழுகுகளைக் கேட்டிருப்பது போல் வேடிக்கையாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ' புதிய விஞ்ஞானக் கற்பனைகள் " அல்லது ' சமயக் கற்பனைகள் " என்ற தலைப்புக்களில் தனது நாட்குறிப்பிற் குறித்து வைக்கவும் அவன் முயன்றதுண்டு.
அவற்றில் பரிசோதனை செய்து பார்க்க அவன் முயன்ற தில்லை. அந்த முயற்சி பின்புதான் வந்தது.
மேற்கத்தைய மனுேவியல் கொள்கைகளிலும், சமூக பொருளாதாரச் சித்தாந்தங்களிலும் அவனுக்கிருந்த பற்றுக் கள் மெல்ல மெல்ல இற்று விழத் தொடங்கிய பின்புதான் அப்புதுவகைப் பரிசோதனைகளின் அவசியத்தையும் அவன் உணரவந்தான்.
ஆத்மீகத் தேட்டம் என்பது ஆத்மாவோடும் சடவுலக வாழ்க்கையோடும் மட்டும் தொடர்பு கொண்டதாக இருக் காமல், அவற்றுக்கு இடைப்பட்ட சகல மனநிலைகளுக்குள் ளும் ஊடுருவிப்பரவும் ஓர் பூரணத் தேட்டம் என்பதை அதற்குப் பின்புதான் அவளுல் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அத்துடன் இன்றைய மனித பரிணுமக்கட்டம் அத்தகைய விடயங்களைப் பற்றிய அறிவையும் அவசியமாக்குகிறது என்றும், அவனது குரு அதையும் அழுத்த முயன்ற அவ தாரமே தான் என்றும் மெல்ல மெல்லத்தான் அவனுக்குத் தெரிய வந்தது.
ஆனல், அந்தப் பக்குவம் வருவதற்குமுன் ஏறக்குறைய ஏழு வருடங்களாகி விட்டன. ஆத்மீக முதிர்ச்சிக்கு ஏறக் குறைய இடையருத பன்னிரண்டு வருட காலப் பயிற்சி அவசியமென்ருல், அதில் பாதிக்காலம் முடிந்த பின்புதான் அவனுக்கு அந்த இடைத்தள அனுபவங்களையும் அதே ஆத் மீகத் தேட்டத்துக்குரிய வகையில் பயன்படுத்தும் பக்குவம் கைவரத் தொடங்கியது. அதற்குள் அவனது குருவும் சடவு லகக் கட்புலனுக்குத்தெரியாத தளத்துக்குச் சென்று விட்டார்.
அண்டை வீடுகள் 205
அதுவரை கட்புலனுக்குத் தெரியாத தளங்களைப் பற்றி விநாயகதாஸடுக்கிருந்த அனுபவங்கள் "அசாதாரணக் கன வுகள்" "தியான நித்திரைக் காட்சிகள்" "சிறு சூக்குமப் போக்குவரத்துக்கள்" என்ற வகையிலேயே இருந்தன. அவையெல்லாம் அடுத்த தளங்களுக்குரிய அனுபவங்கள் என்ற புத்தி பூர்வமான உணர்வு அவற்றை அனுபவிக்கும் போதே அதிகம் இருந்ததில்லை. எப்போதாவது இடைக்கிடை வரும் மெல்லிய சுயவுணர்வுக் குறுக்கீடுகள் அதிக நேரம் நிலைத்திருக்காது, அமிழ்ந்துவிடும். விழித்துக் கொண்டபின்பு தான் அவற்றின் நினைவுகள் திரும்பவும் புத்திபூர்வமாக விரியும்.
அவைதான் அன்றுவரை அந்தத் தளங்களைப்பற்றி அவனுக்கிருந்த அனுபவங்கள்.
ஆனல் அதே சமயம் அவற்றைப் பற்றிய அறிவு விளக் கங்களை முன்பைவிட இப்போ அவன் அதிக ஆவலோடு கேட்டும் வாசித்தும் தெரிந்து வைத்திருந்தான். தெரிந்த வற்றைத் தனது வசதிக்காகவும் எதிர்கால ஆராய்ச்சிக்காக வும் வகைப்படுத்தியும் வைத்திருந்தான்.
முழுப் பிரபஞ்சத்திலும் காணப்படும் எண்ணற்ற உலகங் களை நான்கு அல்லது ஐந்து வகையாக வசதிக்காகப் பிரிக் கலாம் என்று விநாயகதாஸ் நம்பினுன்,
1. மனித கண்ணுக்குப் புலப்படக்கூடிய சடவுலகங்கள், இவை கோளங்களாக அமைந்தவை.
2. தட்டையான சூக்கும உலகங்கள், எண்ணற்ற தர வித்தியாசங்களைக் கொண்ட இவை மனித கட்புலனுக்குத் தெரியாதவை. இவை பலவகைப்பட்ட மன வளர்ச்சியைக் காட்டும் சூக்கும உயிரினங்கள் வாழும் தளங்களாக இருக் கின்றன. சூக்கும உயிர்களால் சூக்கும. உலகங்களையும்
Page 105
206 மெய்யுள்
சடவுலகங்களையும் பார்க்க முடியும். ஆன்மீக உலகங் களைப் பார்க்க முடியாது.
3. ஆன்மீக உலகங்கள், முக்தி அல்லது விடு தலைக்குரிய ஆனந்தத்தையும் ஞானத்தையும் அனுபவிக்கும் நித்தியவுலகங்கள் என்றும் அழியாதவை, ஆன்மீகவுலகங் களில் இருப்போருக்கு சடவுலகங்களையும் பார்க்கும் சக்தி உண்டு. w
4. சட - சூக்கும - ஆன்மீக உலகங்களற்ற வெறும் விண் வெளி.
5. எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி எல்லாவற்றுக் கும் அப்பால் பட்டதாகவும் எல்லாமே தானுகவும் இருக்கும் நாமரூபங்களைக் கடந்த பேரானந்தப் பரம் பொருளான எல் லையற்ற ஏகப்பேரறிவு. இப்பேரறிவு ஆன்மீக உலகங்களில் அங்குள்ளோரின் வழிபாட்டிற்குரிய சில நித்திய திருஉருவங் களாகவும் காட்சியளிக்கும். அதேபோல் சடவுலகமான நமது பூமியில் அவதாரங்களாகவும் உருவெடுக்கும். எல்லா வேளைகளிலும் எல்லா வடிவங்களிலும் * அது" தன்னை கட்டுப்படுத்தாத எல்லையற்ற ஏகப்பேரறிவாகவேயிருக்கும்.
6. இந்தப் பல்வேறு வகைப்பட்ட நிலைகளெல்லாம் பூமியில் வாழும் மனிதனுக்கு அடையக்கூடியவையாகவே இருக்கின்றன. அவனது சடஉடலுக்கு உள்ளும் புறமுமாக அடுத்த சூக்கும - ஆன்மீக உருவங்களும் பேரறிவு நிலையும் காணப்படுகின்றன. மனதை அவற்றின் திசையில் விரித்து வளர்த்து ஆன்மீக பேரறிவு நிலையை அனுபவிப்பதே அவ னது விடுதலையும் நித்தியஞான ஆனந்த நிலையாகவும் இருக்கும்.
7. பூமியில் நடைபெறும் மனித வாழ்க்கைக்குரிய அர சியல், பொருளாதாரம், சமூகம், கல்வி, கலை, இலக்கியம் போன்ற சகல துறைகளும் இந்தத் திசைகளில் முற்ருகத்
அண்டை வீடுகள் 207
திருத்தி வளர்க்கப்படவேண்டும். மனித பரிணுமம் இந்தத் திசைகளையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
அயல் உலக விடயங்களைப்பற்றி விநாயகதாஸ் சேகரித்து வைத்திருந்த கருத்துக்களில் சுருக்கமானவைகள் இவை. இவையேதான், படுக்கையில் கிடந்தவாறே அன்றைய அனு பவத்தை மீட்டிப் பார்க்க முயன்று கொண்டிருந்த விநாயக தாஸின் சிந்தனைப் படுக்கையாகவும் இருந்தன.
இவற்றின் பின்னணியில்தான் அன்றைய அவனது அனுபவத்தையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.
2
வெளி விருந்தையில் வாசலுக்கருகில் போடப்பட்டிருந்த நான்கு சாய்வு நாற்காலிகளில் வடக்கு மூலைப்பக்கமாக இருந்த ஒன்றில் விநாயகதாஸ் உட்கார்ந்திருந்தான்.
மங்கலான இருள். ஆணுல். அதே சமயம் பார்வைக் குப் பொருட்களும் உருவங்களும் தெரியாமல் இல்லை.
உட்கார்ந்திருந்த அந்த வேளையில்தான் திடீரென்று அந்த உணர்வு விநாயகதாஸாக்கு ஏற்பட்டது. தான் சூக்கும - ஆன்மீக உடலில் உட்கார்ந்திருந்தான் என்ற புத்திபூர்வமான சுயவுணர்வு.
அந்த உணர்வு வந்தவுடன் ஒருவித தடுமாற்றமும் அவ சரமும் அவனை ஆட்கொள்ளத் தொடங்கின. உடலுக்குச் சடுதியாகச் திரும்பிவிடலாம் என்ற பயத்தோடு புதியவுலகில் நிற்கிருேம் என்ற மெல்லிய திகிலும் கலந்திருந்தன.
விண்வெளிக்கப்பலில் இருந்து வெளிப்பட்டு விண்ணில் மிதப்பது, சந்திரக் கலத்தில்
Page 106
208. மெய்யுள்
இருந்து வெளிப்பட்டு சந்திரத்தரையில் நடப் பது போன்ற நிலைகளில் விண்வெளி வீரர்
களுக்கு இதே உணர்வு இருக்கலாம்.
சந்திரக் கலத்தை சடவுடலாகவும் அதில் இருந்து இறங்கிச் சந்திரத்தரையில் நடக்கும் வீரனைச் சூக்கும உடலாகவும் நினைத்துப் பார்த் தால், இரு உடல்களுக்கும் உள்ள தொடர் பையும் உணர்வையும் உணரலாம். ஆபத்து வரும் வேளைகளில் உடனே சந்திரகலத்துக் குத் திருப்பிவிடத் தயாராகவிருக்கும் விண் வெளி வீரனைப் போலே சூக்கும உடலும் சதா நேரமும் சடவுலகுக்குத் திரும்பிவிடும் தயார் நிலையில் இருக்கும். சட உடலுடன் அது ஒர் வெள்ளிமயமான கொடியால் இணைக்கப்பட்டிருக் கும். அது விரும்பியமாதிரி நீண்டு கொடுக்கும். அது அறும்போதே மரணம் ஏற்படுகிறது.
விநாயகதாஸாக்கு ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனுக்கு இருந்த அப்போதைய அவதி யில் அவனது உருவம் எப்படி இருந்தது, என்ன மாதிரி அவன் உடுத்திருந்தான் என்பவற்றை அவனுல் அவதானிக்க முடியவில்லை.
அடுத்தமுறை அவற்றை நிச்சயமாக அவ தானிக்க வேண்டும் என்று அதை மீட்டிப் பார்க்கும்போது நிச்சயப்படுத்திக் கொண்டான் விநாயகதாஸ். ஆணுல், அதே தீர்மானத்தை ஏற்கனவே பல தடவைகள் எடுத்திருந்தான் என்பதும் அவனுக்கு நினைவில் இருந்தது. அந்தளவு சுயவுணர்வு பெரும்பாலும் சடவுலக வாழ்க்கையில்கூட இருப்பதில்லை. ஆடை
அண்டை வீடுகள் 209
மாற்றும்போதும், கண்ணுடிக்கு முன்னுல்நிற்கும் போதும் மனிதன் தன் தோற்றத்தையும் ஆடை யையும் நினைக்கிற அளவுக்கு மற்ற நேரங்களில் நினைப்பதில்லை. அவை பற்றிய உணர்வு அதி கம் இருப்பதும் இல்லை. அதேபோல் சூக்கும நிலையிலும் வழமையான ‘நான்" என்ற உணர்வு இருக்குமளவுக்கு அதன் அம்சங்களை அறிந்த சுயவுணர்வு இருப்பதில்லை. அந்தச் சுயவுணர்வின் வளர்ச்சியே பக்குவ வளர்ச்சி யாக இருக்கும்.
சிறிது நேர தடுமாற்றத்துக்குப் பின் வாசலால் இறங்கி வெளியே செல்லமுயன்ருன் விநாயகதாஸ். அந்த வேளையில் அவனுக்குப் பழக்கமான காளிதாசனின் குரலை ஒத்த ஓர் குரல் எங்கிருந்து வந்ததென்று தெரியாமல் எங்கும் மெல் லப் பரவி வந்து கேட்டது.
" வெளிச்சம் தெரிகிறதா? வெளிச்சம் தெரிகிறதா?" ஆணுல், யாரையும் காணவில்லை. வெளிச்சம் எதுவும் வந்ததாகவும் தெரியவில்லை. அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நின்றபோது திடிரென்று ஒரு யோசனை ஏற்பட்டது விநாயகதாஸாக்கு.
" காளிதாசனின் அறை க்குப் போய் பார்த்தால் என்ன ?”*
அடுத்த கணம் அந்த அறையை நோக்கி அவன் நகரத் தொடங்கினன். மிதப்பதற்கும் நடப்பதற்கும் இடைப்பட்ட இலகு இயக்கம்.
காளிதாசன் நித்திரையாகி இருக்கலாம், அல்லது விழிப்பாக இருக்கலாம். அதை விநாயகதாஸால் அவதானிக்க முடிகிறதா
Page 107
210 மெய்யுள்
என்று சோதிக்கலாம். நித்திரை ஆகி அவனும் சூக்கும-ஆன்மீக உடலில் உலாவிக்கொண் டிருந்தால் சில விடயங்களைக் கதைத்துவிட்டு விழித்தெழுந்து அவை ஞாபகம் இருக்கிறதா என்று அவனைக் கேட்டுப் பார்க்கலாம். ஏற்கனவே அத்தகைய சோதனைகளை விநாயக தாஸ் செய்து பார்த்திருக்கிருன். ஆனூல், பூரண ஒருமைப்பாடு இன்னும் கண்டதில்லை.
காளிதாசனின் அறையை நோக்கி நகர்ந்த வேளையில் வேறு ஓர் பக்கம் அவன் இழுபட்டதை விநாயகதாஸால் உணர முடிந்தது. சுயமான விருப்பத்துக்கு எதிராகவரும் ஈர்ப்பு, குருவாகிய " அது " வின் அழைப்பாக இருக்கலாம் என்று ஏற்கனவே விநாயகதாஸ் தெரிந்திருந்தபடியால் அந்த ஈர்ப்புக்கு அவன் தன்னை விட்டுக் கொடுத்தான். விட்டுக் கொடுத்ததுடன் அது 'வையே இலக்காகக் கொண்டு மனதை ஒருமுகப்படுத்தி தியானிக்கவும் தொடங்கினுன்.
அடுத்த கணம் மிக வேகமாக எங்கோ ஒரு திசையில் பறந்து செல்வதை அவனுல் உணர முடிந்தது.
சூக்கும - ஆன்மீக உலகங்களில் உடல் வலு வால் இயக்கம் ஏற்படாமல் மனுேவலுவிலேயே ஏற்படுகின்றது. விரும்பிய இடத்திற்கு மனுே வலுமூலம் மிக வேகமாகச் செல்லலாம். போகும் வழியில் பழைய குரலைவிட தொனி கூடிய ஒரு புதுக்குரலில் பாடல் ஒன்று கேட்டது. அந்தப் பாடல் மூலம் பலவித அறிவுரைகள் அவனுக்கு வழங்கப்பட்டன.
பாடல்களின் முக்கியத்துவம் அழுத்தப்படு கிறது.
அண்டை வீடுகள் 211
அந்த அறிவுரைகளைக் கேட்டு முடிந்தபோது " அது " வைத் தரிசித்த திருப்தியும் விநாயகதாஸிடம் குடிகொள்ளத் தொடங்கியது. திருப்தியோடு அவன் திரும்பிவிட விரும் பினுன். ஆணுல் அதேசமயம் இன்னும் சடவுடலுக்குரிய விழிப்பு நிலைக்கு வருவதற்கு அவகாசம் இருந்தது என்ற உணர்வும் ஏற்பட்டதால் தொடர்ந்து 'அது'வை இலக்காகக் கொண்டு மனதை ஒருமுகப்படுத்தித் துரிதமாக நடந்தான்.
இறுதியாக " அது " திருவுருவோடு இருந்த ஓர் இடத்தை அண்மித்துவிட்ட உணர்வு ஆட்கொள்ளத் தொடங் கியது. அப்படியே அவ்வேளையில் கட்டிடங்கள், அறைகள் எல்லாம் காட்சியாய் இருக்க ஓர் இடத்தில் " அது " முன்பு அவன் சடவுலகில் சந்தித்த கோலத்தில் தரிசனம் தந்தது.
விநாயகதாஸ் ஓடிப்போய் * அது "வின் பாதங்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு எழுந்தான். ' அது ' வின் ஆணையும் கிடைத்தது. S.
அதை ஏற்றுக்கொண்ட விநாயகதாஸ் திருப்தியோடு அங் கிருந்து அகலத் தொடங்கினன். அடுத்த கணம் சடவுலக வீட்டில் உள்ள தனது படுக்கையில் கிடந்தவாறே திடீரென்று விழித்துக்கொண்டதை அவனுல் உணர முடிந்தது. 1 ܝ ܀
வேகமாகத் திரும்பி வந்த உடலுக்குள் நுழையும் அதிர்ச்சி சடுதியான விழிப்பை ஏற்படுத்தும்.
அறைச்சுவரின் கூரைப்பக்கத்து நீக்கல் வழியாக அடுத்த அறையில் இருந்து வெளிச்சம் வந்ததை அவதானித்தபோது அங்கு காளிதாசன் இன்னும் தூங்காமல் இருந்தான் என்பதை அவனுல் யூகிக்க முடிந்தது.
Page 108
212 மெய்யுள்
3
படுக்கையை விட்டெழுந்து தண்ணிர் அருந்துவதற்காகக் குசினுக்குச் சென்றிருந்தான் விநாயகதாஸ். காளிதாசனின் அறையின் வாசல் திரைக்குள்ளால் மெல்லிதாக ஒளிக்கீற்று கள் வந்துகொண்டிருந்தன.
திரையை நீக்கி உள்ளே நோக்கியபோது காளிதாசன் வாசித்துக்கொண்டிருந்தான். மணி இரவு பதினென்றரை.
பேசாமல் தலையசைத்துவிட்டுச் சென்று தண்ணிர் குடித்து விட்டு, பின் படுக்கைக்குத் திரும்பியபோது பல பிரச்னை களுக்கு இன்னும் தெளிவு காண வேண்டியிருந்தது என்பதை விநாயகதாஸால் உணர முடிந்தது. w
" வெளிச்சம் தெரிகிறதா?" என்ற குரல் காளிதாசனின் அறைக்குள் இருந்து வந்த வெளிச்சத்தைக் குறித்ததா? அதனுல்தான அவனது குரலை ஒத்த குரலாகக் கேட்டது? அது யாருடைய குரல் ? 'அது' வை நோக்கி அவன் விரைந்தபோது வந்த பாடலின் குரல் யாருடையது? எல் லாமே ' அது " வின் வெளிக்காட்டல்கள் தானு? 'அது' வை அவன் தரிசித்த இடம் எது? " அது ' எந்த ஆன்மீக உலகம் ?
எந்தளவுக்கு அவற்றுக்குள் அவனது கற்பனைகள் புகுந் திருந்தன? எந்தளவுக்கு அவை அந்த அனுபவத்தின் முழு மைக்கு எதிரான தடைகளாக இருந்தன?
எதிர்கால ஆராய்ச்சிகளுக்குரிய திசைகளைக் குறித்துக் கொள்ளும் ஒரு விஞ்ஞானியைப்போல் அவற்றை மனதில் பதித்தவாறு, அன்றைய அனுபவத்தினுல எழுந்த சந்தோ சத்தின் அலைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிம்மதியாக நித்திரை கொள்ள முயன்ருன் விநாயகதாஸ்.
Page 109
வாழ்ந்தத
முழுவீச்சே நம்மிடைே
நூற்குண்
surf, LGT
மற்ருெவர் (3) ir Garso
எழுப்ப மு போனதை
அந்த வ தளேயசிங்
விடவும்
שTנוני "חוויווחו הדקו
பாதியின் திற்கு கெ திரத்திற்:
கஃள அள் என்று ெ
நூலாசிரியர் பற்றி.
"இருபதி ம் நூற்ருண்டில் ற்கான சாய Issa, u இவரைப்போல்
ாடு வெளிப்படுத்திய ஆளுமைகள் மே வேறு உள்ளனவா? இந்த என் முதல் பாதியில் இரண்டு கிடைக்கின்றன. ஒருவர் பாரதி புதுமைபித்தன். பாரதி தாழ்ந்து க்கு துக்கித்து மேலான ஒன்றை பன்ருர், புதுமைப்பித்தன் தாழ்ந்து வெட்ட வெளிச்சமாக்கினும், ரிசையில் முன்ருவதாக வருபவர்
III. iii .
பாரதியின் கருத்துலகத்தை
தஃாயசிங்கத்தின் கருத்துலகம் முழு து. மற்ருெரு விதத்தில் சொன்னுல் சிந்தனேயை, இவர் தம் காலத் ாண்டு வந்து, இடைக்கால சரித் தம் எதிர்வினை தந்து, இடைவெளி டைந்து முழுமைப்படுத்த முயன்ருர்,
-சுந்தர ராமசாமி
T
து ஒரு சமுதாயம் வெளியிடு ()
Page 110
210 நற்சிந்தனை
நல்லூராசான் கலிவிருத்தம்
உலகமு முயிரும் உம்பர் பிரானும் கலகஞ் செய்யும் நடனங் கண்டால் உலகில் பிறந்திறந் துழலா ரென்று நலஞ்சேர் நல்லூ ராசான் நவின்ருன்.
மலர்மிசை யோனும் மாலுங் காணு அலகிலா வாட லுடைய அப்பன் மலர்தலை யுலகத்து மானிடன் போல நலமிகு நல்லூரில் நாடியாட் கொண்டான். 2
குலநலம் பாராக் கொள்கை யுடையான் சலன மில்லாத் தத்துவா தீதன் பலரும் பைத்திய காரனென் றேச நலமிகு நல்லையில் நாடக மளித்தான். 3
கற்றவர் விழுங்குங் கருணை யாளன் மற்றவ ரறியா மாணிக்க மாமலை சிற்றறி வுடையார் தேருச் செல்வன் நற்றவர் வணங்கும் நல்லூ ரானே. 4
விருப்பு வெறுப்பை வேரறப் பறித்தோன் திருவடி மறவாச் சீருடை யாளன் ஒருபொல் லாப்பு மில்லையென் றுரைத்தோன் குருவடி வாகக் கோலங்கொண் டானே. 5
உண்மை முழுதுமென் ருேயா துரைப்பவன் நன்மை தீமையைக் கடந்த நாதன் என்னையுந் தன்னையு மொன்ருய்க் காண்பவன் . சென்னியில் சேவடி சூட்டினன் அன்பால். 6.
ஆரறி வாரென அடிக்கடி ஒதும் பேரறி வாளன் பேர்செல் லப்பன் பாரறி யாத பயித்திய காரன் தேரடிப் படியில் தினமு மிருப்பான். 7
நற்சிந்தனை 2
கார்நிற வண்ணன் கைதலை யணையாய்ப் பார்மிசை யுறங்கும் பண்பை யுடையான் நீர்வளம் நிலவளங் குறையா நல்லூர் சீர்பெற வாழ்ந்த தேசிக மூர்த்தி. 8 நாமறி யோமெனும் நல்ல மந்திரம் சேமமுண் டாகச் செப்புந் திறத்தோன் காமங் குரோத மோகங் கழிந்தவன் நாமமோ செல்லப்பன் நல்லூ ரானே. 9 எப்பவோ முடிந்ததென் றெடுத்தெடுத் துரைக்கும் ஒப்பிலா மாமணி உன்மத்த னெவரும் இப்படி யென்று இயம்பவொண் ணுதவன் எப்போதும் முருகன்சந் நிதியில் வாழ்பவன். 10 பாவலர் நாவலர் பணியும்நல் லூரில் சாவதும் பிறப்பதுந் தவிர்த்தென யாண்ட காவலன் நல்லூர்க் கந்தன் பதியில் சேவகஞ் செய்யுஞ் செல்லப்ப மூர்த்திகாண். 1
வேடிக்கை செய்கிருனே
பல்லவி வேடிக்கை செய்கிருனே -பரமபிதா வேடிக்கை செய்கிருனே.
அநுபல்லவி வேடிக்கை செய்கிருன் கூட இருக்கிருன். வேருய் இருப்பதுபோற் பாசாங்கு பண்ணுகிருன். (வேடி)
சரணம் و --س-.... பாடுகிறன் படிக்கிருன் பக்தரினம் சேர்கிருன் நாடுகிருன் நன்மைதீமை நாமல்ல வென்கிருன்
ஓடும் இருநிதியும் ஒன்ருகக் காண்கிருன். ஒன்றே விரண்டோவென ஓதி யறியவொண்ணுன். (வேடி)
Page 111
212
நற்சிந்தனை
சிவசிவ என்னச் சிவகதியாமே கலிவிருத்தம்
தந்தி முகத்தனைச் சங்கரன் மைந்தனைத் தொந்தி வயிறனைத் தோடணி செவியனை இந்திர னுக்கரு ஸ்ரீந்த இறைவனை மந்திர ரூபனை நான் மற வேனே.
ஒருவ ஞலே உலக முதித்தது ஒருவ ஞலே உலகம் நிலைத்தது ஒருவ ஞலே உலகம் ஒடுங்கிடும் ஒருவ னேயென் உயிர்த்துணை யாமே. 2
ஒருவ னேயொரு மூவரு மானன் ஒருவ னேயெல்லா வுயிர்களு மானுன் ஒருவ னேயெல்லா வுலகமு மானுன் ஒருவ னேயென்னை உய்யவைத் தானே. 3
அண்ட சராசர மவன்வடி வாகும் அண்ட சராசர மவனே யாகும் அண்ட சராசரத் ததிசயந் தன்னை அண்டரு மறியா ததிசயித் தாரே. 4
சிவபக்தி யாலே சிந்தை குவிந்தது சிவபக்தி யாலே சிந்தை தெளிந்தது சிவபக்தி யாலே சிந்தை யிறந்தது சிவபக்தி யாலே சீவன் முத்தியே. 5
சிவனையல் லாமல் தேவரு மில்லை சிவனையல் லாமல் சீவரு மில்லை சிவனையல் லாமல் தேகமு மில்லை சிவனையென் சித்தத்துட் கண்டுகொண் sேனே 6
நகரத் துள்ளே நான்முக ஞனுன் மகரத் துள்ளே மாலவ ஞணுன் சிகரத் துள்ளே சிவனப் நின்றன் வகரத் துள்ளே யருள்வடி வானனே5 7
நற்சிந்தனை
சிவசிவ என்று சிந்திப்பர் தேவர் சிவசிவ என்று சிந்திப்பர் சீவர் சிவசிவ என்று சிந்திப்பர் முனிவர் சிவசிவ என்னச் சிவகதி யாமே.
பக்தி செய்து பந்தத்தை நீக்கினேன் பக்தி செய்து பரமனைக் கண்டேன் பக்தி செய்யும் பாக்கியம் பெற்றேன் பக்திக் கடலில் படிந்திருந் தேனே,
ஒன்றை நினைந்தென் னுள்ள மொடுங்கிற்று ஒன்றை நினைந்தென் னுள்ளங் களித்தது ஒன்றை நினைந்தென் சிந்தை யுயர்ந்தது ஒன்றை நினைந்து ஒன்ரு னேனே.
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
தாலே ஆக்கை பிறந்தது தாலே ஆன்மா சிறந்தது தாலே ஆனந்த மாயிற்று துள்ளே அடங்கிநின் றேனே.
தாலே சஞ்சல மழிந்தது தாலே பஞ்ச மொழிந்தது தாலே ஆனந்த மாயிற்று துள்ளே அடங்கிநின் றேனே.
தாலே அரனடி காணலாம் தாலே அகிலத்தை யாளலாம் தாலே அகவினை தீர்க்கலாம்
அஞ்செ முத்துமென் நெஞ்சம் புகுந்ததே.
ஆருறுக் கப்பால் ஆனந்தக் கூத்து ஆருறுக் கப்பால் ஆனந்த வீடு ஆருறுக் கப்பால் ஆர்தான் ஈடு ஆறறுக் கப்பால் சென்ருேரைக் கூடு.
2 13
10
Page 112
214 நற்சிந்தனை தன்னை யறிந்தேன் தானவ ஞனேன்
கலிவிருத்தம் அகண்ட வெளியிலே அப்பனு மம்மையும் அகண்ட வெளியிலே யாருயி ரெல்லாம் அகண்ட வெளியிலே யஞ்சுபூ தங்களும் அகண்ட வெளியிலே யானிருந் தேனே. I அண்டமும் பிண்டமு மகத்திற் கண்டேன் அண்டமும் பிண்டமு மகமாய்க் கண்டேன் அண்டமும் பிண்டமு மகத்திற் கண்டிலேன் அண்டமும் பிண்டமு மாயிருந் தேனே. 2 அன்னை பிதாக்குரு வாகிய வமலன் என்னை வளர்த்தா னென்னே டிருந்தான் முன்னை வினையெலாம் முடித்த முதல்வன் தன்னை யறிந்தேன் தானவ ஞனேன். 3
அருந்தவர் நெஞ்சி லிருக்கு மமிர்தம் இருந்த படியே யிருக்கு மின்பம் பொருந்திய வல்வினை போக்கும் மருந்து அருந்துயர் நீக்கி யறிந்தேன் யானே. 4 அருவமு முருவமு மாகிய வமலன் குருவாய் வந்தே குறித்தெனை யாண்டான் இருபதும் நாலு மில்லா விடத்தில் கருவாகி நின் முன் காரணன் ருனே. 5 அச்சந் தீர்த்தெனை யாண்ட சோதி பொய்த்தவர் நெஞ்சிற் போகா நீதி மெய்ச்சம யத்தில் விளங்கு மாதி வைச்சனன் திருவடி வாழ்ந்தேன் யானே. 6 அறுபதும் நாலு மறியா வாதி உறுதுயர் தீர்க்கு முயர்ந்த சோதி குறுமுனிக் கருள்முனங் கொடுத்த வாதி மறுவிலா வென்மனம் வாழ்ந்திருந் தானே. 7 அஞ்சின் வழியை யடைத்தோ ரகத்தில் பஞ்சின் மெல் லடியாள் பாக னரிருக்கும் வெஞ்சினம் வேட்ட வெறிய ரகத்தில் அஞ்செழுத் துட்பொரு ளடையா தாமே. 8
நற்சிந்தனை 215
திங்கள் வணக்கம் ۔۔۔۔
கலிவிருத்தம் செய்ய மேனிய னேசிவ னேயுனைக் கையு மெய்யுங் கருத்திற் கிசையவே வைய கந்தனில் வாழ்த்தி வணங்கிடத் தையில் வந்தருள் தான் செய்ய வேண்டுமே.
மாசில் மாதவர் மனத்திற் கினிமையே பேசில் இன்பம் விளைக்கும் பெருமையே வாசி யாம்பரி ஏறும் வலவனே மாசி மாதம் வருக வருகவே. 2
பங்கில் மங்கையை வைத்த பராபர! இங்கு மங்கும் இருக்கு மிறைவனே துங்க மால்விடை யேறுநற் சோதியே பங்கு னிதனிற் பாங்கின் வருகவே. 3
செத்தா ரென்பு திகழ்திரு மார்பனே அத்தா வென்றடி போற்றுவார்க் கன்பனே கத்தா வுன்னைநான் கண்டு களித்திடச் சித்தி ரைதனிற் சீக்கிரம் வருகவே, 4
தேகா திதனை மெய்யெனச் சிந்தைசெய் மோகா திபதி யாகிய மூர்க்கனை ஏகா திபதி நீயெனை யாளுவான் வைகா சியெனும் மாதம் வருகவே, 5
ஆனி ரைதனை மேய்க்கு மரியொடு நாணி லந்தரு நாதனுங் காண்கிலர் வானு லாவும் மதிவைத்த அப்பனே ஆனி மாதம் வருக வருகவே. 6
பாடி யாடிப் பணியு மடியவர் கூடிக் கூடிக் கும்பிடு வாரவர் வாடிப் பின்னர் மகிழச்செய் வள்ளலே ஆடி மாதம் வருகவன் பாகவே.
7
Page 113
21 6 நற்சிந்தனை
பாவ ணிசெய்து பாடு மடியவர் நாவ ணிசெய்து நிற்கும் நலஞ்சுடர் பூவ ணிசெய்து போற்றுவார் சிந்தையில் ஆவ ணியருள் மாதம் வருகவே. . 8
அரற்று மன்பர்க் கருள்செ யிறையவன் அரக்க லுக்கருள் செய்தவன் என்னையும் புரக்கு மாறடி யேன்புகழ் போற்றிடப் புரட்டா சிதனில் புண்ணியன் நண்ணுமே. 9
துப்பி சைந்த இதழ்மடத் தோகையான் அப்பி சைந்த அணிமுடி யாண்டவன் செப்பி சைந்து திறலுடன் என்முனம் ஐப்ப சியெனு மாதம் அணுகவே. 10
கார்த்தி கேயனைக் கண்ணுத லிற்றரு கீர்த்தி வாய்ந்த கிருபா சமுத்திரம் தோத்திரஞ் செய்வார் துன்பந் துடைத்திடக் கார்த்தி கையெனும் மாதத்திற் காணும்ே.
மார்க்க நன்னெறி சென்றிடு மாந்தர்கள் மூர்க்க மான குணத்தை முனிந்திடும் போர்க்கு றிப்புடைப் புங்கவன் புண்ணிய மார்க பூழியினில் வருக வருகவே. 2
ஐயம்வை யாதேநெஞ்சே யரனடி தினம்பணி தெய்வமா லோனல்லால் வேருெரு தெய்வமில்லை செய்வன திருந்தச்செய் சேரிடம் அறிந்துசேர் உய்யவ பூழியிதுவே உனக்குண்மை யாய்நட.
நற்சிந்தனை 21 7
குருதரிசனம் வெண்பா
கருத்தில் நினைந்துருகிக் கைகூப்புந் தொண்டர் வருத்தமெலாந் தீர்க்கும் வடிவேல்-திருத்தலத்தில் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் v ஆரடாநீ யென்ருன் அவன். தன்னை யறியத் தவமுஞற்றும் மாதவரை அன்னையைப்போ லாதரிக்கு மாறுமுகன்- சந்நிதியில் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தேரடாவுள் ளென்ருன் சிரித்து. 2 வண்டுபண் செய்யும் வளம்பெருகு நல்லூரில் மிண்டு மனத்தவரை மேனிலைக்குக்-கொண்டுவரும் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தீரடாபற் றென்ருன் சிரித்து. − 3 கன்னலொடு செந்நெல் கதலிபலா மாவர்க்கந் துன்னு நல்லூர்ச் சாமி திருமுன்றில் மன்னுசீர்த் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் சீரடியார் சூழ்ந்துநின்றர் தேர். 4 அயலறியா வந்தணர்க ளான்ற நல் லூர்ப்பதியிற் கயற்கணுர் காமவலை சேரா-வியல்புடைய செல்லப்ப னென்னுஞ் சிவகுருவை நான்கண்டேன் நல்லதப்பா வென்ருன் நயந்து. 5 ஒன்ருே விரண்டோ வொருமூன்றே வென்றெவரும் அன்றுதொட் டின்றுவரை யாராய-ஒன்றுக்கும் எட்டாமல் நின்ரு னெழிற்குருவாய் நல்லூரிற் பட்டமளித் தானெனக்குப் பார். 6 நீராய் நெருப்பாய் நெடுநிலனுய்க் காற்ருகி ஆராலுங் காணு வமலனங்கே - நேராகச் சற்குருவாய் வந்தேயென் சந்தேகந் தீர்த்தாண்டான் நிர்க்குணம் பூண்டேன் நினை. 7 புனலொழுகப் புள்ளிரியும் பொன்னிழ நாட்டில் அனலேந்து வான்றன் புதல்வன்-மனமார வாழ்நல்லை யம்பதியில் வாழ்வளிக்கச் சற்குருவாய்த் தாள்காட்டி யாண்டான் தனி. 8
Page 114
218 நற்சிந்தனை
மறப்பேனே குருநாதன் தன்னை
நேரிசை வெண்பா
இல்லையென் னமல் இரப்போர்க்கொன் றிவரேல் தொல்வினை யெல்லாந் தொலைந்துபோம்-நல்லைக் குருநாதன் கூறினன் பொல்லாப்பிங் கில்லை உருகாதோ நெஞ்ச முவந்து. I
உண்மை முழுதுமென் ருேதுங் குருநாதன் தன்னை மறப்பேனே தாரணியில் - பின்னையினித் துஞ்சல் பிறப்புண்டோ சோர்வச்சந் தாமுண்டோ கஞ்சமலர்த் தாளென்றுங் காப்பு. 2
காக்குந் திருவடிகள் எந்நாளு மென்மனத்தில் பூக்கும் பொறிவழியே போகாமல் - நோக்குமென்றும் தேக்குஞ் சிவானந்தத் தேனமுதை யுண்டுமனம் நீக்கமின்றி நிற்கும் நினை. 3
நினைக்கு மடியாரை நீயேநா னென்றே அணைக்குந் திருக்கரந்தா னென்னே - கனக்குங் கடல்சூழ் கவினிலங்கைக் கார்சூழ்நல் லூரான் தொடுக்கும்வல் வேலைத் துதி. 4
துதிக்க மதிதந்த தூயோன்றன் பாதம் துதிக்க வினைகள் துகளாம்-மதிக்கருளும் ஐயன் திருமதலை ஆறுமுகன் வீதியிலே தெய்வமென நின்ருன் தெளி. 5
ஒன்பது வாசலா லாயவோர் உறுப்பில் அன்பு வைத்துநீ அலையாதே வீணில் அன்பர் பணிசெய் வதுஅற மென்றறி இன்பவீ டளிக்கும் எல்லாக் கதியும்வரும் என்பதை மறவாதே இதுவுனக் குறவாமே.
நற்சிந்தனை 219
அன்னையொத்த செல்வன் அறி நேரிசை வெண்பா
ஒருபொல்லாப் பில்லையென் ருேதுந் திருவாக்கால் உருகி யுருகி யுணர்வற் -றிருநிலத்தில் இன்பதுன்ப மென்னுமவை யென்றுமொப்பாந்
தன்மைகண்டேன் என்னப்பன் செல்லப்ப னென்று.
உண்மை முழுதுமென வோதுந் திருமொழியின் தன்மையினைக் கண்டேன் தலைப்பட்டேன்-பின்னைப் பிறப்பு மிறப்புமிலைப் பேதை மட நெஞ்சே மறப்பின்றி யேத்தி மதி. 2
முடிந்த முடிபென்று முன்னின்று சொல்லப் படிந்ததென் னுள்ளம் பதியில் -முடிந்ததே மாயவிருள் மந்திரமுந் தந்திரமும் நான்மறந்தேன் தாயனைய செல்லப்பன் தான். 3 நாமறியோ மென்று நகைத்தென்னை நோக்கியே காமங் கடந்தோன் கழறினன்-சேமமுடன் சிந்தித்துச் சிந்தித்துச் சேவடியே தஞ்சமென்று வந்தித்து நின்றேன் மகிழ்ந்து. 4 ஆரறிவா ரென்றே அடிக்கடி யேநகைக்கும் பேரறி வாளனையும் பித்தனென்றே-பாரிற் பலரே இகழுவார் சில்லோர் புகழ்வர் சலனமற்று வாழுவார் தாம். 5
கரைகாணு வின்பக் கடலாடு வானை உரையாட யாருக்கிங் கொல்லுந் -தரைமீது நால்வேதங் காண்கிலவே நற்றவத்தோர் தாமறியார் மால்பிரமன் தேரார் மதி. 6
ஆசைக் கடலி லலைந்து திரிவார்கள் ஆசை கடந்தவனை யாரறிவார்-மாசற்ற மேகத்தைச் சந்திரனை மின்மிணிதான் மூடுமோ மோகத்தை யின்றே முனி, 7
Page 115
220 நற்சிந்தனை
உயர்ந்ததிருக் கோபுரமு மோங்கெயிலுங் கண்டு வியந்து விழுந்தெழுந்து விம்மி-அயர்ந்துநிற்கும் ஆடவரும் மங்கையரும் மற்றுள்ள அன்பர்களும் பாடவரு வார்தினமும் பார்.
எட்டு மிரண்டும் அறியாத வென்னையும் நட்டஞ்செய் செல்லப்பன் நல்லூரில்-திட்டமுடன் நீயேநா னென்று நினைந்துருக வைத்தனனே
தாயே யனையா னவன். 9
ஆதியந்த மில்லையென்று சொல்லாமற்
சொன்னன்காண் நீதி நெறிவிளங்கும் நல்லூரில்-வீதியிலே என்னைத்தா னுக்கி எடுத்தாண்டான் யாரென்னின் அன்னையொத்த செல்வன் அறி. 10
தம்பி கேளடா
தா வித்தாவிச் செல்லும் மனத்தைத் தம்பிகேளடா கூவிக்கூவி யழைத்துக் கூடக் குடியிருத்தடா.
சேவித்துஞ் சென்றிரந்துந் தம்பி கேளடா சிவமேநா மென்றுதினஞ் சிந்தை செய்யடா 2 பாவித்தும் பாட்டிசைத்துந் தம்பி கேளடா மூவிதமாம் ஆசைதன்னை முனிந்து வெல்லடா. 3
வாவியாறு சேரிலங்கை நல்ல நாடடா
பாவியென்ற நாமந்தன்னைப் பகைத்து நில்லடா. 4
தூவிமயி லேறும்வேலைத் துதித்துக் கொள்ளடா நாவினில் நமச்சிவாயம் நவின்று நில்லடா. 5
நற்சிந்தனை 22
ஆசானக் கண்டேன் நேரிசை வெண்பா
ஆசானக் கண்டேன் அருந்தவர்வாழ் நல்லூரிற் பேசா தனவெல்லாம் பேசினன் -கூசாமல் நின்றேன்நீ யாரடா வென்றே யதட்டினன் அன்றேயான் பெற்றே னருள்.
அருளொளிக்குள் ளேபுகுந்து சென்றேன்யான் ஆங்கே இருள்சூழ்ந் திருப்பதைக் கண்டேன்-பொருளறியேன் ஒர்பொல்லாப் பில்லையென வோதினன்
கேட்டுநின்றேன் மர்மந்தே ராது மலைத்து. 2
மலைத்துநின்ற வென்னை மனமகிழ நோக்கி அலைத்துநின்ற மாயை யகலத் -தலைத்தலத்திற் கைகாட்டிச் சொல்லலுற்ருன் கந்தன் திருமுன்றில் மெய்ம்மறந்து நின்றேன் வியந்து. 3
வியந்துநின்ற வென்றனக்கு வேதாந்த வுண்மை பயந்தீரும் வண்ணமவன் பண்பாய்-நயந்துகொள் அப்படியே யுள்ளதுகாண் ஆரறிவார் என்ருனல் ஒப்பில்லா மாதவத்தோன் உற்று. 4
உற்ருரும் போனுர் உடன்பிறந்தார் தாம்போனர் பெற்ருரும் போனர்கள் பேருலகில்-மற்ருரும் தன்னுெப்பார் இல்லாத் தலைவன் திருவருளால் என்னெப்பா ரின்றியிருந் தேன்.
ஒடும்பு விரியம்பழ மும்போலும் உலகத்தை நாடுதல் சீலமன்று ஞானிகள் முன்சொன்னர் கோடுதல் இல்லாமல் குரைகழல் அடிபணி வீடுனக் குண்டாகும் விருப்பமா யிதைப்படி,
Page 116
223 நற்சிந்தனை
நல்லமழை பெய்யாதோ நேரிசை வெண்பா நல்லமழை பெய்யாதோ நாடு சிறவாதோ எல்லவரும் இன்புற்று வாழர்ரோ - நல்லூரான் ஆசானுய் வந்தே யடியேனை யாண்டுகொண்டான் பேசானு பூதியென் பேறு. I நற்சிந் தனையென்னும் நல்லமுதம் உண்டக்கால் கற்கும் நெறியுண்டோ காசினியில் - விற்றுரண் ஒன்றுமே யில்லாத உன்மத்தன் யோகனுக்(கு) என்றுமின்ப மென்றே யிசை, 2 பாட வறியான் பலகலையுந் தானறியான் தேட வறியான் சிவயோகன்-நாடறியப் பிச்சைச்சோ றுண்டு பிறவிப் பிணிதீர்ந்தான் அச்சமிவற் கில்லை யறி. 3 இச்சையில் லோரே யிடும்பைக் கிடும்பையை நிச்சய மாய்ப்படுப்பர் நீயறியாய்-அச்சமற்று வாழ்சிவ யோகனமுன் வந்துவவிந் தாண்டுகொண்டான் கேள்கிளைகள் நீங்கக் கிளர்ந்து. 4 எழுவாய் பயனிலைகள் இல்லாமற் பாடித் தொழுவான் சிவயோகன் சொல்லின்-அழுவான் விழுவான் விதிர்விதிர்ப்பான் ஆரறிவார் என்று தழுவுவான் தன்னையுன்னித் தான். 5
ஞானதேசிகன் பல்லவி ஞான தேசிகனே சரணம் நற்றவனே நல்லூர் வித்தகனே வருக.
அநுபல்லவி ஈனப் பிறவி நீக்கு மெழிலது கண்டேன் என்னை யென்னலறிந் தானந்தங் கொண்டேன் (ஞான)
w சரணம்
காமக் குரோதமோகக் கடலைக் கடந்தேன் கங்குல் பகலற்ற காட்சியைக் கண்டேன் கருதுஞ் சுவாமியோக நாதனுன் தொண்டன் தருமொரு வரமுண்டு அதுவெங்கும் மங்களம் தங்கும்படி யருள்தந்து இரட்சி. (ஞான)
நற்சிந்தனை 223
சின்னத்தங்கம்
தெய்வத்துக்குத் தெய்வம் சிந்தையிலே தானிருக்க
வையகத்தி லேனலைந்தாய்-சின்னத்தங்கம் வாட்டமெல்லாம் விட்டிடடி. l
ஆழித் துரும்பெனவே யங்குமிங்கு மாயலைந்து பாரில் தவியாதே -சின்னத்தங்கம் பார்த்து மகிழ்ந்திடடி. 2
அங்குமிங்கு மெங்குமந்த ஆண்டவன் தானிருக்க அங்குமிங்கு மலையாதே - சின்னத்தங்கம் ஆடிப்பாடி மகிழ்ந்திடடி. V− 3.
கங்குல்பகல் காணுத கருணைதனை வேண்டிக்கொண்டு செங்கமல மடமாதே-சின்னத்தங்கம் சீராக வாழ்ந்திடடி. 4
ஆடம் பரமெல்லாம் அடியோடே நீக்கிவிட்டு கேடறியாத் திருவடியைச்-சின்னத்தங்கம் கிட்டநீ கண்டிடடி. 5
வேடமொன்றும் போடாதே வீணருடன் கூடாதே தேடவேண்டாந் திகைக்கவேண்டாஞ்-சின்னத்தங்கம் சீவன்சிவன் ஆச்சுதடி. . 6
தொழுது வணங்கிடுவாய் துரியநிலை சாருமட்டும் அழுதழுது ஆண்டவணைச்-சின்னத்தங்கம் ஆன்மலாபம் தேடிடடி. 7
முழுதுமுண்மை யென்றுமுன்னள் மோனகுரு சொன்னரடி பழுதொன்று மில்லையடி-சின்னத்தங்கம்
பவுத்திரமாய் வாழ்ந்திடடி. 8 காண்பானுங் காட்சியும்போய்க் காட்சிப் பொருளுமற்று
மாண்புடனே நின்றிடுவாய்-சின்னத்தங்கம் மரணபய மில்லையடி. 9
Page 117
224 நற்சிந்தனை
சேண்பொலியுந் திருவடியே சித்தத்திலெப் போதுமுண்டு வீண்காலம் போக்காதே - சின்னத்தங்கம் வேண்டிப் பணிந்திடுவாய். 10
மானபி மானம்விட்டு மண்ணும்விண்ணுந் தெரியாமல் தானுன தன்னிலையில் - சின்னத்தங்கம் தனியே யிருந்திடடி. 11
தானுன தானேயல்லால் தனக்குதவி யாருமில்லை மோன நிலைதனிலே -சின்னத்தங்கம் மூழ்கி யிருந்திடடி. 12
புத்தியைநீ நாட்டாதே புன்னெறியைச் சூட்டாதே வெற்றியுனக் குண்டாகுஞ்-சின்னத்தங்கம் விருப்பும் வெறுப்பும்விடு. 13
எத்திக்கு மீசனடி இருந்தபடி யேயிருந்து பத்திசெய்து பார்த்திடுவாய்-சின்னத்தங்கம் பழிபாவ மில்லையடி. 14
தத்துவப் பேயோடு தான் தழுவிக் கொள்ளாதே சுத்தபரி பூரணத்தில்- சின்னத்தங்கம் சுகித்துநீ வாழ்ந்திடடி. 15
வித்தகம்நீ பேசாதே வேறென்றை நாடாதே செத்தாரைப் போல்திரிவாய்-சின்னத்தங்கம் தெய்வம்நீ கண்டிடடி. 6 .
மெத்தக்கதை பேசாதே மேன்மக்களை யேசாதே
சத்துருவும் மித்துருவுஞ்-சின்னத்தங்கம் தானென்ருய்ப் போகுமடி. 17
நற்சிந்தனை - 225
நீகரில்லாத இன்பம் நிறையுமே
அன்று மின்று மென்று முள்ளவன்
என்று மெங்க ளகத்துள் நிறையுமே. I ஆக்கையே கோவில் அகஞ்சிவ லிங்கம் பூக்கைக் கொண்டு பொன்னடி போற்றுதும். 2 இல்லை யுண்டென்று சொல்லவொண் ணுதவன் நல்லூரில் வாழும் நற்றவ ராசனே. 3.
உம்பர் தலைவ னுயர்கை லாயன் R செம்பொ னம்பலத்தே திருநடனம் புரியுமே. 4 ஊரும் பேரு மில்லா வொருவன் சீருந் திருவுமாயென் சிந்தையுள் நிற்குமே. 5
எண்ணு மெழுத்துமாய் நின்றிடு மெந்தை கண்ணுக்குக் கண்ணுய்க் கலந்து நிற்குமே. 6
ஏகம்பம் மேவி ஏந்திழை கலக்கம் போக வருள்செய்தான் புண்ணிய மூர்த்தியே. 7 ஐங்கரத் தொருகோட் டானையைத் தந்தவன் அங்கு மிங்கு மெங்குமாய் நிற்கும். 8
ஒருபொல் லாப்பு மில்லையென் ருேதினுன் , திருவாழும் நல்லைத் தேசிக மூர்த்தியே. 9 ஓங்கா ரத்தில் உதித்த வுலகெலாம் ஓங்கா ரத்தில் ஒடுங்கு முண்மையே. IJ
ஒளவனத் தில்லையில் ஆடல் உகந்தவன்
நவ்வியைப் பாகம் வைத்த நம்பனே. I
அஃகுத லில்லா அறிவினை யுடையவன்
நஃகும் நம்வஞ்ச வேடங் கண்டே. 12
கட்டுப் படாத மனத்தைக் கட்டினுல்
எட்டுணை யேனும் இடுக்கண் இல்லையே. 1 3
15 -
Page 118
226 - நற்சிந்தனை
ங்கரம் போல நாங்கள் வாழ்ந்தால் நிகரில் லாத இன்பம் நிறையுமே. 14
சந்ததம் சாதனை தவருது செய்யின் -
சிந்துார முரித்த சிவனடி சேர்வோம். 15 ஞான யோகம் நாங்கள் புரிந்தால்
மோனவீ டடைவோம் முழுது முண்மையுே. 6
இடத்து மடந்தையை வைத்த பெருமான் நடத்தைக் கண்டால் நாமுய்ந் தோமே. 17
அணங்கு தந்தெமை ஆட்டும் மனத்தை இணங்காம லெந்தை யிணையடி பணிகுதும். 18
தன்னைத் தன்னு லறிந்த ஞானிகள் ۔ விண்ணில் விளங்கும் வெய்யவன் போல்வார். 19
நன்றுதீ தென்று நாடாமல் நாடினல் குன்றின் மேல் வைத்த விளக்கின் கொள்கையே. 20
பத்மா சனத்தில் பரிவுட னிருந்து சித்த விருத்தியைத் தீர்த்திடு வோமே. 21
மணிவா சகந்தரு மந்திர மோதினல் பிணிமூப் பில்லாப் பிரம மாகுதும் . 22
யவனர் சோனகர் தமிழர்சிங் களவர் எவரும் வணங்குவார் எந்தைதன் தாளே. 23
அரவார் செஞ்சடை அண்ணல் தன் பாதம்
விரவி நிற்பவர் வீடுபெற் றனரே. 24
இலது உளதென வெவருமே மாறக் 1. கலந்து நிற்பவன் கண்ணுத லாமே. 25
வஞ்ச நெஞ்சினர் காணு வள்ளலை அஞ்செழுத் தோதி அர்ச்சிப் போமே. - 26
நற்சிந்தனை
அழகா ரரியும் அம்புயா சனனும் தொழுதிட நின்றவன் சுத்த சிவமே. இளமை மூப்பிலா னெம்பி ரானெனத் தொழுதிட நின்றவன் சோதிசொ ரூபனே. இறப்பும் பிறப்பு மெமக்கில்லை யென்றவன் அறமார் நல்லூ ராசா ஞமே.
அனங்க ணுகத்தை யன்றெரி செய்தவன் கணங்கொள் பேயோ டாடிய கள்வனே.
ரங்கநின் திருவருள் தரலாகாதா இராகம்-காபீ; தாளம்-ஆதி
பல்லவி
ரங்கநின் திருவருள் தரலாகாதா
obufiivsus
தேசகாலம் யாவும் மறந்து தேவா உன்றனருள் நிறைந்து
சரணங்கள்
பாதகன் கஞ்ச னனுப்பிய பூதகி பாரில் மாளவே செய்தாய்
அதுபோல் அடியேன் ஆணவமொழிய அருள்நீ தருவாய் ஐய.
வேத புராணம் காணவொண் ணுத வித்தகனே பக்தர் வேண்டும் விமலா அமலா கமலக் கண்ணு விரைவாய் நீ வருவாயே.
2
2
7
27
28
29
30
(பூg) "
(பூg)
(பூனி) 1
(பூரி) 2
Page 119
228 நற்சிந்தனை
அன்பே வடிவாய் அமைந்த துறவி
ஆசிரியப்பா ܫ
அன்பே வடிவாய் அமைந்த துறவீ! அன்பே யன்றி யாற்றலு முண்டோ? இன்பமா முலகி லெங்கணுஞ் செறிக துன்பமாம் மாயை தொடரா தொழிக எல்லியு மல்லு மீசனைப் போற்றுக கல்லுங் கரையக் கவிமழை சொரிக கங்குல் பகலற்ற காட்சி பெறுக; எங்குஞ் சிவத்தைக் கண்டின் புறுக மங்குவார் செல்வம் மதியா தொழுகுக இங்கு நீ, இருந்த படியே யிருந்து வாழுதி அருந்துய ருன்னை யடையா வன்றே. V l
வஞ்சகம் நீக்கி வாழுந் துறவீ! அஞ்செழுத் துட்பொரு ளாகிய வமலனை நெஞ்சத் துள்நீ வைத்து வணங்குதி கஞ்சத் தேவனுங் கண்ணனுங் காணுர் தன் போற் பிறரைத் தானி னந்திடு உன் போற் பிறரிவ் வுலகி லுண்டோ
முன்பு நீ, செய்த வல்வினை தீர்ந்திடுந் தியானஞ் செய்தினஞ் சீவன் சிவனே யன்ருே. 2
ஒருமைமனம் படைத்த வுத்தமத் துறவீ! இருமையு மளிக்கு மிறைவன் திருவடி அந்தியுஞ் சந்தியு மகலாது போற்றிப் பந்தித்து நின்ற பாவம் போக்குதி சிந்தித்துச் சிந்தித்துச் சீவபோத நீக்குதி நிந்திப் பார்களை நேசத்தால் வெல்லுதி சந்தேகமில்லை, - நீயோ நித்தியன் நினக்கயல் கற்பனை நீயோ நிராமயன் நினைவொழிந்து வாழுதி, 3.
நற்சிந்தனை 229
ஈழநாடு வாழவந்த சிவதொண்டன்
ஈழநாடு வாழவந்த எழில்மிகுந்த தொண்டன் எளியவர்க்கும் பெரியவர்க்கும் ஏவல்செய்யுந் தொண்டன் தாளமேள மில்லாமலே தான் வளருந் தொண்டன் தன்னைப்போல அயலவரைத் தான்நினையுந் தொண்டன் காளகண்ட னடியவர்க்குக் காவலான தொண்டன் கங்குல்பகல் காணுமற் கருமமாற்றுந் தொண்டன் நீளநினை நித்தியன் நீ யென்றுரைக்குந் தொண்டன் நிட்டையிலே யெந்நாளும் நிலைத்துநிற்குந் தொண்டன். 1
ஈழநாடு வாழ்வந்த எங்கள் சிவ தொண்டன் ஏழைகட்கும் பெரியவர்க்கும் ஏவல்செய்யுந் தொண்டன் காளகண்ட னடியவர்க்குக் காவலான தொண்டன் காமக்கு ரோதமோகம் நீக்கிவிடுந் தொண்டன் வாழவெண்ணும் அடியவர்க்கு வழிகாட்டுந் தொண்டன் மறுபிறப்பை யிப்பிறப்பில் நீக்கிவிடுந் தொண்டன் தாளமேள மில்லாமலே தான் வளருந் தொண்டன் தாயாகி யனைத்துலகுந் தாங்கிநிற்குந் தொண்டன். 2
சூழமிக நினைத்துவினை யாற்றுமெங்கள் தொண்டன் சோம்பலே பாவமென்று சொல்லுகின்ற தொண்டன் கூழெனினும் கூடிக்குடி யென்றுசொல்லுந் தொண்டன் கூச்சமின்றி யுலகத்திலே குடியிருக்குந் தொண்டன் ஆழநினை யகம்பாவம் போகுமெனுந் தொண்டன் அடியவர்கள் திருவடியைச் சிரசில்வைக்குந் தொண்டன் வாழிமிக வாணிச்சிக்கா மண்சுமந்த மாறன் மாபெருமை வழுத்துகின்ற மாண்புமிக்க தொண்டன், 3
நானென்னும் ஆணவத்தை நலியவைக்குந் தொண்டன் நன்மைக்குந் தீமைக்கும் நடுவில் நிற்குந் தொண்டன் தேனென்ன இதயத்தில் தித்திக்குந் தொண்டன் சிவாயநம வென்றுதினஞ் செப்புகின்ற தொண்டன் ஆணென்றும் பெண்ணென்றும் அறியாத தொண்டன் அடியவரைத் தானக ஆக்கிவிடுந் தொண்டன் பேணுத மாந்தரையும் பிரியாத தொண்டன் பெரியோர்கள் கருத்திலென்றும் பொருந்திவளர்
தொண்டன். 4
Page 120
230 நற்சிந்தனை தொண்டு செய்வார்
தொண்டுசெய் வாருக் குண்டே ஞானம் தொண்டுசெய் வாருக் குண்டே மோனம் தொண்டுசெய் வாருக் குண்டே தானம் தொண்டுசெய் வாருக் குண்டே கானம்.
எல்லா ரிடத்தும் அடியேன் வாழ்வேன் எல்லா ரிடத்தும் அடியேன் தாழ்வேன் எல்லார்க்கு மென்றும் அடியேன் கேள்வன் சொல்லாற் பயனிலை யென்றே சூழ்வன். 2
எல்லா ருருவமு மென்னுரு வாகும் எல்லார் நலன்களு மென்னல மாகும் எல்லார் பலமு மென்பல மாகும் நல்லோர் என்னுரை நயந்துகொள் வாரே. 3.
வருவன வெல்லாம் வந்தே யேகுக கருதுவ வெல்லாங் கருதித் தீருக ஒருவரு மறியா வொண்செஞ் சீறடி குருபரன் திருவடி கொண்டா டுதுமே. 4.
ஒன்றிரண் டென்றே யுரையார் பெரியார் கன்றும் மனத்தைக் கண்டாற் பரிவார் கொன்றுயிர் வாழக் குறியார் திரிவார் நன்றிது தீதென நலியார் அரிஓம். 5
எல்லா ரிடத்தும் உள்ளாய் தூயாய் எல்லா எழிலும் நீயே யானுய் கல்லாய் மலையாய்க் கவின்பெறு மரமாய்ப் புல்லாய்ப் பூடாய்ப் பொலிவாய் நீயே. 6
உன்துணை யன்றி யுயிர்த்துணை காணேன் பின்னை யென்னைப் பிரியா துறைவாய் அன்னையுந் தந்தையும் ஆசா னும்நீ முன்னைப் பொருட்கெலாம் முன்னைப் பொருள்நீ. 7
நற்சிந்தனை 231
உடல்பொருள் ஆவி யுன்னதே இறைவா! திடம்பெற ஞானத் தெளிவை நல்குதி கண்ணே கருத்தே யெண்ணே எழுத்தே விண்ணே விண்ணில் விளங்கும் மதியே. 8
பண்ணே பண்ணிற் கணியே பரம! எண்ணேன் இனிப்பிற தெய்வம் நாயேன் ஏத்தி யேத்தி யிணங்கி வணங்கச் சாற்றிய கவியை யேற்றிடு வாயே. 9
wr-a-minas
ஒன்றே தெய்வம் ஒன்றே உலகம்
உலக முவக்கவும் உன் மனங் களிக்கவும் கழறும் வாசகங் கருத்தி லிருத்துக ஒன்றே தெய்வ மொன்றே யுலகம் நன்றே யென்றும் நாடிப் புரிவாய் நீசடப் பொருளல நிறைதரு சித்து பேச வரிதுன் பெருமையெவ ராலும் ஆதலா லுன்னை யங்கி சுடாது காதல்சேர் காற்றும் உலர்த்தா கவலல் மாதிரந் தானும் வருத்த முடியாது ஒதிடு மப்புவுங் குளிரச்செய் யாதுனை ஈறிலாப் பொருணி யெள்ளள வேனும் மாறிலா மகிழ்ச்சி மனத்திடைக் கொள்வாய் சாதி சமயம் யாவுமுனக் கில்லை நீதி யொன்றை நெஞ்சிடை வைத்திடு உபாதி செய்யும் புலன்வழி யுருதே அபாய மொன்று மென்று முனக்கிலை செய்ய வேண்டிய செவ்வனே செய்வாய் உய்ந்தாய் முன்னர் யுலகமுன் கைவசம் சந்தேக மில்லைச் சாற்றினன் கேணி சற்குரு உன்துணை சாட்சிநீ யாவாய் அற்புத னடியிணை யென்றும் வாழ்கவே.
Page 121
232
கூத்தாடுதே மனமென்ன கொடுமை
பல்லவி
கூத்தாடுதே மனமென்ன கொடுமை
கும்பிட்டேன் குருநாதா உன்னடிமை.
அநுபல்லவி
நற்சிந்தனை
தீர்த்தங்க ளாடினேன் யாத்திரை செய்தேன் w சித்தந் தெளியவில்லை என்னநான் செய்வேன். (கூத்)
பார்த்த விடமெங்கும் நீயல்லா தில்லை பாராமல் நானும் பட்டேன் தொல்லை காத்தெனை யாள்வ துன்றன் கடமை
சரணங்கள்
கருணைக் கடலே நானுன் உடைமை.
பத்திசெய் யோக சுவாமி பாட்டைப்
பாடிப் படிப்பவர் பல்லூழி காலம் உத்தம ராக உலகினில் வாழ்ந்து வித்தகன் சேவடி விரவிநிற் பாரே.
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ ஓம் ஓம்
செல்வக் கணபதி செல்வவே லாயுதன் w செல்வச் சிவதொண்டன் செல்வச் சிவனடியார்
எம்முள் திருவருள் செல்வத் திருமால் அயன்முதல் தேவர்கள் ஐம்பெரும் பூதங்கள் சிவ சிவ ஐம்பொறி சிவ சிவ ஐம்புலன் சிவ தச நாடிகள் சற்குரு நாதன்
(கூத்) 1
(கூத்) 2
ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம்
ழ் ஒம்
ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம் ஓம்
நற்சிந்தனை. 233
அரகர சிவசிவ மறையோனே
அன்பர்தஞ் சிந்தையில் உறைவோனே அரகர சிவசிவ மறையோனே. . 1
பொன்னே மணியே பூங்கோவே புலவரெல் லாம்புகழ் எங்கோவே. 2
காணுங் கண்ணிற் கலந்தவனே கதிரொளி போலெங்கும் நிறைந்தவனே. m 3
ஆணும் பெண்ணும் ஆனவனே அடியவர் பேணும் வானவனே. 4
கோணிய பிறையை முடித்தவனே கொல்புலித் தோலை யுடுத்தவனே. 5
வேணியிற் கங்கை தரித்தவனே வேழத்தின் தோலை யுரித்தவனே. 6
பாற்கடல் தன்னை அழைத்தவனே பாரொடு விண்ணுய்ப் பரந்தவனே. 7
நூற்பொருள் தன்னை விரித்தவனே நுண்ணிடை யாள்தன் இடத்தவனே. 8
தில்லையில் ஆடிய சிற்பரனே சிவசிவ சிவசிவ தற்பரனே. 9
எல்லையில் லாவருள் தந்தவனே என்போல் நல்லையில் வந்தவனே. IO
Page 122
நற்சிந்தனை
கும்மி
கும்மியடி பெண்ணே கும்மியடி குரு நாதனைப் பாடிக் கும்மியடி
இம்மை மறுமைக்கும் எங்களை யாட்கொண்ட
எழிலைப் பாடிக் கும்மியடி. I
சிவனெ ருத்தனே தெய்வமடி தோழி சென்னியிற் கங்கை பாயுதடி
அவனி டத்தினிற் பெண்ணை நீ பாரடி
எண்ணியெண் ணிக்கடைத் தேறடி. 2
அவனன்றி யொன்றும் இல்லையடி பெண்ணே
அங்கையி லங்கியெ ரியுதடி
அவன்ற ஞகத்தில் நாகமடி பெண்ணே
அரையி லேபுலி யுடையடி. , 3
அடிக்கீ ழரக்கன் கிடக்கி முனடி
அங்கையி லேமழு மானடி
துடியொ ருகையில் தோன்றுதடி பெண்ணே
சூலமுங் கையிற் றுலங்குதடி. 4
குடிமு முதையும் ஆண்டுகொண் டானடி
கொல்லும் நமன யுதைத்தான்டி
அடிமு டியொன்று மில்லையடி பெண்ணே
ஆனந்த மாய்க்கும்மி பாடடி. 5
தூக்கிய பாதத்தின் தோற்றத்தைப் பாரடி
தொந்தோந் தோமென்ற நாதத்தைக் கேளடி
ஆக்கி யழிக்கவும் வல்லவ னவனடி p
ஆனந்த மாய்க்கும்மி பாடுமடி. 6
பாம்பும் புலியும் பார்த்திருந் தாரடி
பாரளந் தோனயன் பாடுபட் டாரடி
நாம்பு கழ்ந்திட நற்றரு ணமடி
நங்கைய ரேகும்மி பாடுமடி. 7
நற்சிந்தனை 235
மாறிப் புலன்வழி போகா தேயடி மதிக்குள் ளேரவி சேர்த்திடடி
ஆறி யிருந்து பாரடி பெண்ணே
அவனை நீகண்டு தேறடி. 8
சித்தத்துள் நித்தந் தித்திக்குந் தேனடி
தீராப் பிணியைத் தீர்க்கும் மருந்தடி
பத்தர்கள் கண்டு பரவு வாரடி
பாவைய ரேகும்மி பாடுமடி. 9
இலங்கை என் திருநாடு
எல்லார்க்குந் தம்பிரா னென்னைவந் தாண்டுகொண்டான் கொல்லேன் பொய் சொல்லேன்யான் குருமொழியை
மறக்கிலேன் நில்லாத காயத்தை நிலையெனவே யெண்ணுகிலேன் செல்லாரும் பொழில்குழு மிலங்கையென் திருநாடே. 1 என்னைவிட் டகலாம லெப்போது மிருக்கின்ற அன்னையொப் பானவனை யடியேன்யான் மறப்பேனே முன்னைநா ஸ்ரீராவணன்றன் முடிபத்தும் நெரித்தவன் தென்னைபனை சேரிலங்கை சிறியேன்றன் திருநாடே. 2 நீர்நிலந்தீ கால்வானுய் நின்றபிரான் சிறியேன ஒர்கணமும் பிரிவறியான் உத்தமர்தஞ் சிந்தையான் கார்நிற மேனியனுங் கமலனுங் காண்கிலான் சீர்பெறுரஉ மிலங்கையென் திருநாடு கண்டுகொளே. 3
பொறிவழிபோ யலையாமற் பூவுலகிற் காத்தபிரான் அறிவுக் கறிவானன் ஆரணமு மறியகில்லான் குறிகுணங்க ளற்றவொன்றைக் கும்பிடுவோ மெப்போதும் செறிபொழில்குழிலங்கையே சிறியேன்றன் திருநாடே. 4 முற்ருத பின்மதியம் முடிதனிலே வைத்தபிரான் அற்ருர்க்கு மலந்தார்க்கு மருள்புரியு மம்பலவன் நற்ரும ரைப்பாதம் நாள்தோறுங் கைதொழுவார் வற்ருத வளஞ்செறியு மிலங்கையென் திருநாடே. 5
Page 123
236 நற்சிந்தனை திங்கட் சடையாய் எங்களை யுடையாய் சிவனே ஓம்
திங்கட் சடையாய் எங்களை யுடையாய் சிவனே ஒம்
சீரிய அடியார் சிந்தையி லுறையுஞ் செல்வா ஓம் மங்கையை யுடையாய் மழவிடை யானே மாதவனே ஓம்
மண்ணும் விண்ணும் ஒன்ருய் விளங்கும் மணியே ஒம் அங்கையி லங்கி தங்கிய பரனே யரனே ஒம்
ஆருயி ரெல்லாம் நீயே யாகி யமர்ந்தாய் ஒம் கங்குலும் பகலும் இல்லாக் காட்சி தருவாய் ஒம்
கருதும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம்.
சிறையார் வண்டறை கொன்றைப் போதனே சிவனே ஒம்
சீவன் சிவனுய்ப் பாவனை செய்வார் திருவே ஒம் குறையா வன்பு தரவே வருவாய் குருவே ஒம்
கூடிக்கூடி யுன்னடி பாடல் கொடுப்பாய் ஒம் . பிறையார் சடையாய் பேரா யிரமே யுடையாய் ஒம் பேசப் பேச வின்பம் பெருகும் பிரானே ஒம் அறையார் கழலே யல்லாற் சிறியே னறியேன் ஒம்
அன்புசெய் யடியரை யென்றும் ஆளக் கடவாய் ஒம். 2
கல்லாப் பிழையுங் கருதாப் பிழையும் பொறுப்பாய் ஒம்
காலனைக் காலாற் முக்கிய பரனே யரனே ஒம் எல்லாஞ் செய்ய வல்லபம் உடையாய் எந்தாய் ஒம்
எழில்சேர் நல்லை வாழும் குருவே யிறைவா ஒம் பொல்லா வினைகள் போகும் வண்ணம் புரிவாய் ஒம்
பூவார் மலர்கொண் டடியார் போற்றும் பொருளே ஓம் எல்லா முன்செய லாமெனும் எண்ணந் தருவாய் ஒம்
ஏத்தும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம். 3
மாறிப் பொறிவழி போகா மனத்தார் இனத்தாய் ஒம் மாலோ டயனுங் காணு ஒளியே மணியே ஒம் ஆறும் பிறையுஞ் சூடிய ஐயா மெய்யா ஓம்
ஆதியு மந்தமு மில்லாய் உள்ளாய் அறிவே ஒம் தேறித் தெளிவார் சிந்தையி லூறும் அமுதே ஒம்
செயசெய வென்று பணியும் தேவர்கள் தேவா ஓம் கூரிய சூலப் படையினை யுடையாய் கோவே ஒம்
கும்பிடும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம், 4
நற்சிந்தனை 237
போற்றியென் வாழ்முத லாய பொருளே யருளே ஓம்
புண்ணியர் நண்ணும் பூரண வடிவே புகலே ஓம் தோற்ற மறைக்குங் காரண மாகிய தொல்லோய் ஒம்
சோதிச் சுடரே தோகைக் கிடமி துணையே ஓம் நீற்ருெடு பொலியும் நெற்றிக் கண்ணு நிமலா ஓம்
நீதி வழுவா மாதவர் தங்கள் நெறியே ஒம் ஆற்ருெடு தும்பை யம்புலி சூடிய யரனே ஓம்
அன்புசெய்யடியரை யென்றும் ஆளக் கடவாய் ஒம். 5
ஆநந்த நடனம் ஆடினன் பல்லவி ஆநந்த நடனம் ஆடினன் அல்லும் பகலும் நல்லூர் வீதியிற் செல்லப்பன்.
அநுபல்லவி
மோனந் திகழுஞ்சிவ யோகியர்தா மறியார் முழுவது முண்மையென முகமலர்ந் தோதுவான். (ஆநந்த)
சரணங்கள்
ஈனந் தரும்பிறவி யெடுத்தெடுத் துழலாமல் என்னைவந் தாண்டுகொண்டான் இன்பத்தில் மாண்டு
கொண்டேன்
தானந் தவமிரண்டுஞ் சரியை கிரியைவிண்டும் சதுர்வித வுபாயத்தாலே தானுக வென்னைச்செய்தான்.
(ஆநந்த) 1
முன்னிலை யில்லையென்றும் முழுவது முண்மையென்றும் மூடிய மாயவிருள் ஒட வருள்புரிந்தான் அந்நிலையி லேயுட லாவியவன் வசமாச்சு . . ஆகா அதையறிவார் ஆர்தானிவ் வையகத்தில் (ஆநந்த) 2
Page 124
238 நற்சிந்தனை
ஒளவையார் திருமொழி அறஞ்செய விரும்பென ஒளவையார் தந்த
சிறந்த திருமொழி தீவினை தெறுமே. 1 ஆறுவது சினமெனு மரிய மந்திரங் கூறுவார் நாவிற் குலவுஞ்சொல் லணங்கே. 2 .
இயல்வது கரவே லெவரே யாயினும் பயில்வுறப் பயில்வுறப் பாவங் கெடுமே. 3
ஈவது விலக்கே லெல்லாந் தந்து ܚ சேவைகள் செய்யத் திறங்கொடுக் கும்மே. 4 உடையது விளம்பே லுணர்வார்க் கெல்லாந் தடையிலா வான்ம சக்தியீ னும்மே. 5 ஊக்கமது கைவிடே லூழ்வினை நீக்கும் தேக்குமா னந்தஞ் சித்தியுந் தருமே. 6
"Чыгымы
LGOofluGIT 6TsiT LOGDSLO
நித்தியர்நா மென்னும் நினைவுதடு மாருமற் பத்திபண்ணிப் பாடிப் பணியவா என்மனமே.
முத்திக்கு வித்தை முனையில்வைத்துச் சீராட்டித் தித்திக்குந் தேனருந்தச் சீக்கிரம்வா என்மனமே, 2 அத்துவி தப்பொருளை யருந்தவர்கட் காரமுதைச் சித்தத்துட் கண்டு தெளியவா என்மனமே. 3 எத்திக்கு மாகி என்னிதயத் தேவாழும் தத்துவத்தைக் கண்டு சலிப்பறவா என்மனமே. 4 சித்திதருந் தேவாய்த் திகழும் பரம்பொருளின் வித்தகத்தாள் வாழ்த்த விரைந்துவா என்மனமே, 5 உத்தமர்கள் போற்றும் ஓங்காரத் துட்பொருளைப் பத்தியொடு பாடிப் பணியவா என்மனமே. 6
நற்சிந்தனை 239 ܀
தன்னை யறிந்தோமே
தன்னை யறிந்தோமே-கிளியே தவத்தி லுயர்ந்தோமே பின்ன மிறந்தோமே -கிளியே பெருமா னருளாலே எம்மை நிகராவார் - கிளியே எவரு முலகிலில்லை செம்மை மனத்துடனே-கிளியே சிவன்பாதம் நினைப்போமே இம்மை மறுமைக்கும் - கிளியே எவரும் இணையில்லை அம்மையு மப்பனுமே - கிளியே ஆம்துணை நீயறியே.
நல்லூர் வெளியில்
நல்லூர் வெளியிலே பொதுநடம் புரிகிருன்
நங்கள்குரு நாதன் வாங்கும் பிரகாசன்
எல்லாரை யுந்தன் னிடத்திலே காண்பவன்
இயம நியமங்களில் எள்ளளவு மோபிசகான்.
பொல்லாப்பிங் கில்லையென்று போதனை செய்வான் புகழ்ச்சியு மிகழ்ச்சியு மொன்ருகக் காண்பவன்
செல்லப்ப னென்னுந் திருப்பெய ருடையான்
சிங்கார நடையொடு சிரிப்பினை யுடையான்.
ஆரறி வாரென அடிக்கடி சொல்லுவான்
தேரடிப் படியிலே சிங்கார மாய்க்கிடப்பான்
பேரறி வாளனெனப் பிறரெவரு மோவறியார் பித்தனென் றுலகோர் பேசுவா ரேசுவார்.
Page 125
240. , நற்சிந்தனை ஆராதனைசெய் தறிவாய் G2GOT
ஆதியு மந்தமு மில்லான்-தம்பி ஆதியு மந்தமு முள்ளான். I சாதி சமயங்க ளில்லான்-தம்பி சாதி சமயங்க ளுள்ளான். 2
ஒதி யுணர முடியான்-தம்பி ஒதி யுணரும் வடிவான். 3.
நீதி குருபர ஞனுன்-தம்பி நீர்நிலந் தீகால் வானமு மானன். 4
சந்திர சூரிய ராணுன்-தம்பி தாரா , கணங்களு மானன். 5
மந்திர தந்திர மானன்-தம்பி மருந்து மருந்து மவர்களு மானன். 6
இந்திர ராதியோ ராணுன்-தம்பி எல்லா வுலகமுந் தானே யானன். 7
இந்த வுயிருட லானன்-தம்பி இருக்கு முதலிய வேதங்க ளானன். 8 பந்தமும் வீடும் படைப்பான்-தம்பி பந்தமும் வீடுந் துடைப்பான். 9
அந்தியுஞ் சந்தியு மிதனைத்-தம்பி ஆரா தனைசெய் தறிவாய் சிவனை. 10
நற்சிந்தனை r 24
அன்னபிதாக் குருவானுன்-அரன்
அன்னை பிதாக்குரு வானன் - அரன் ஆகாய மாதி பூதங்க ளானன் என்னையுந் தன்னையும் பிரியான் --அரன் ஏக னநேகன் என்பார் பெரியோர் முன்னைப் பொருட்கெல்லாம் முன்னேன்.--அரன் மூர்த்தி தலந்தீர்த்த மாதற் குரியோன் அண்ட சராசர மெல்லாம்-அரன் ஆடலைக் கண்டு தொண்டுசெய் வோமே சண்டை யிடும்போதுஞ் சலியான்-அரன் தன்னி லையினிற் சற்றுஞ் சலியான் ஆணென்றும் பெண்ணென்று மறியான்-அரன் அப்போதைக் கப்போ தாடல் புரிவான் வீண்புகழ் தன்னை விரும்பான்-அரன் வேதாந்த சித்தாந்த சமரசந் தருவான் கூறும் நா முதலாக யாவும்-அரன் கொண்டாடு மிடமென்று கண்டுகொள் வோமே நித்திய வாழ்வினைத் தந்தான் --அரன் நீநா னென்பதை நீங்கினன் ருனே.
F6L91 GG)
மார்க்கஞ் சன்மார்க்கம் மகரிஷிகள் கண்டமார்க்கம் மார்க்கம் 1
மூர்க்கமான குணம்போக்கும் முழுதும்உண்மை யெனவாக்கும் மார்க்கம் 2 பார்க்கப்பார்க்க இன்பந்தேக்கும் பரமானந்த நிலையைநோக்கும் மார்க்கம் 3 ஆர்க்குஞ்சுதந்தி ரத்தையாக்கும் அனைவரையும் முத்தியிலேசேர்க்கும் மார்க்கம் 4 பக்திசெய்யோக சுவாமிபாட்டு படிப்பவருக்குநல்ல வழிகாட்டும் மார்க்கம் 5
6
Page 126
242 | | நற்சிந்தனை
இன்பமாய் வாழ்ந்திடடி
அங்கிங்கென் றெண்ணுதே அவனிவ்னென் றுன்னதே எங்குஞ் சிவத்தைக்கண்டு-தங்கமே இன்பமாய் வாழ்ந்திடடி. ஆசை வலையிற்சிக்கி-ஆண்டவனை நீமறந்தாய் பூசைசெய்து பொன்னடியைத்-தங்கமே பூரணமாய் வாழ்ந்திடடி. இல்லையென்றும் உண்டென்றும் எடுத்துச்சொல்ல
|- வொண்ணுத நல்லூரான் திருவடியை -தங்கமே நாடோறும் போய்வணங்கு. ஈடேற வேண்டுமென்றல் எல்லாஞ் சிவன்செயலாய் நாடோறும் வேண்டிப்பணி-தங்கமே நல்லூரான் கிருபையுண்டு.
உண்மை முழுதுமென்ற வுயர்ந்த திருவாக்கை எண்ணுமல் எண்ணிப்பணி-தங்கமே எல்லாங்கை கூடுமடி.
ஊரும்பேரு மில்லாத உத்தமனைச் சித்தத்தில் சேரும்வண்ணம் நாள்தோறும்-தங்கமே தியானஞ்செய்து வாழுவமே. என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கு மீசனென்று சொன்ன திருவாக்கே-தங்கமே சுந்தரமென் றெண்ணியிரு.
ஏழுலகும் தொழுதேத்தும் எம்பெருமான் திருவடியை
நாளும் மறவாதே - தங்கமே நானுமில்லை நீயுமில்லை.
ஐம்பூதம் நீயல்லை அறிந்திதனைக் கொள்ளுவாய்
ஆன்மாநீ மறந்திடாதே-தங்கமே ஆட்சிசெய்ய வேண்டாமடி.
2
நற்சிந்தனை X 243
ஒன்பது வாயிலுள்ள வுடம்பு சிவன்கோயில் என்பதை மறந்திடாதே -தங்கமே
ஏத்தியேத்திப் பணிந்திடடி. * . 9 ஒதுவதொ ழியேலென்ற உண்மையைநீ மறவாதே ஏதுக்கு மஞ்சாதே -தங்கமே n எல்லாஞ் சிவமயமே.
ஒளவியம் பேசாதே ஆவியுள்ள மட்டும்நீ தெய்வம் ஒருவனென்று-தங்கமே திடமுடன் வாழ்ந்திடடி. 12.
அஃகமும் காசுந்தேடி அம்புவியி லலையாதே வெஃகாதே பிறன்பொருளைத் -தங்கமே வீடுனக்குச் சொந்தமடி. 3
திருநாமத்தைச் செபித்திடடா
அனைத்துயிரும் நீயேதம்பி அதையறிந்து வாழ்ந்திடடா தினைத்துணையும் மறந்திடாமல் திருநாமத்தைச்
செபித்திடடா, 1
வினைப்பகையை வென்றிடுவாய் வேறுபொரு ளில்லையடா முனைத்துவருஞ் சினத்தை வென்றல் மூவர்களும்
a. ஏவல்செய்வார். 2
உனைப்போலே யுத்தமர்கள் உலகத்தினி லில்லையடா நினைத்தபடி நடந்திடடா நிட்டையிலே
பொருந்திடடா, 3
ஆவதில்லா அழிவதில்லா ஆன்மாவை யறிந்திடடா தேவர்களும் முனிவர்களுஞ் சித்தத்திலே திகழுகின்றர். 4
ஒருபொல்லாப்பு மில்லைத்தம்பி உண்மையே முழுதுமடா குருநாதன் கூற்றிதடா கும்பிட்டுக்கொண் டாடிடடா. 5
Page 127
244 நற்சிந்தனை எல்லாம் கடவுள் கண்டீரே கலித்தாழிசை காணுங் கண்ணிற் கலந்து நிற்பது கடவுள் கண்டீரோ ஆணும் பெண்ணு மலியு மானது அதுநீர் குறியீரோ. 1
பாரும் விண்ணு மாகி நிற்பது அதுநீர் பாரீரோ சீருந் திருவு மாகி நிற்பது அதுநீர் தெரியீரோ, 2
தாயுந் தந்தையு மாகி நிற்பது தானு வறியீரோ நீயும் நானு மாகி நிற்பது நினைந்து பாரீரோ. 3 ܢ
காயுங் கனியு மாகி நிற்பது கண்டு களியீரோ தேயு வாயு வாகித் திகழ்வது சிந்தித் துணர்வீரோ. 4
மாயும் மனிதரை மாயாது வைக்கும் மருந்தை யுண்ணீரோ பேயொடு காட்டி லாடும் பிரானைய பேதமாய்ப் பாரீரோ. 5
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ـیے
ஆன்மா நித்தியம்
ஐம்புலன் வழிபோம் ஆசை தனைத்தடுப்போம் ஆன்மா நித்தியம் என்று படிப்போம் வெம்பகையை வென்று வெற்றி எடுப்போம் வேறுபொருள் இல்லை என்றுதிடப் படுவோம் நம்பிக்கை யென்னும் கையைநாம் நீட்டுவோம் நாதாந்த நிலையில் நாம்முடி சூட்டுவோம் சும்மா இருக்குஞ் சுகத்தினைக் காட்டுவோம் சுருதி நிலையில் நிற்குஞ் சுகங்காட்டுவோம் இம்மை மறுமைதனை யிங்கு காட்டுவோம் ஏகாந்த வெளியிலே நம்மை நாட்டுவோம் தம்மைத் தாமாக உய்யவழி காட்டுவோம் சஞ்சலமில் லா வழியில் நம்மை நாட்டுவோம் தும்பிமுகன் பாதத்தைத் தோத்திரஞ் செய்வோம் சுவாமி தரிசனஞ் சூத்திரம் என்போம்.
நற்சிந்தனை 245
ஓம் தத் சத்
இருவருந் தேடிக் காணு இறைவ னென்போ
லுருத்தாங்கி இணங்கி யெவரும் வணங்கும் நல்லையில் இன்ன
னிவனென்ன ஒருவரு மறியா தோடியுலாவி யுவகை பூத்த
முகத்தினராய் ۔•
ஒருநா ளென்றனை யுற்று நோக்கிஓர் பொல்லாப்பு
மிலையென்று کیمیایی அருவமுங் காட்டி யுருவமுங் காட்டி யப்பாற் -- கப்பாலாம்
அருள்நிலை காட்டிக் காட்டிக் காட்டி யந்த மாதி
s யில்லாச்
சொரூபமுங் காட்டிச் சும்மா விருக்கும் சூட்சத்தில்
மாட்டி விட்டான்
துன்ப மிறந்தன வின்ப மிறந்தன சோதிசோதி
சிவசோதி. 1
சிவத்தினை வளர்க்கும் பாக்கிய மெமக்குச் சித்தித்த
திணிமேலே தெய்வம் வேறே யுண்டென வெண்ணுஞ் சிந்தையு
மிறந்ததுவே
அவத்தினிற் செல்லும் மனத்தினை வெல்வோம்
ஐம்பொறி வழிச்செல்லேம் அழியா மெய்ப்பொரு ளாகிய ஆன்மா அறிவோம்
w நாம் நன்ருய் தவவழிச் செல்வோம் குருமொழி கொள்வோம்
தன்னைத் தானறிவோம் சாந்தம் பொறுமை யேய்ந்த நற்பணி சந்தத
மணிந்துகொள்வோம் உவத்தலுங் காய்தலு மோடி யொளித்தன ஒன்றுங்
குறைவில்லேம் உண்மை முழுதும்நீ ஓதுக தினமும் ஓம்தத் சத்ஓம். 2
Page 128
246 நற்சிந்தனை
கதிரவ னெழுமுன் காலை யெழுந்து கைகால் முகங்கழுவு கடிமல ரெடுத்து மாலை தொடுத்துக் கடவுளைப்
பூசனைசெய் அதிர வராமுன் மனத்தினை யடக்கி ஐம்பொறி
- வழிச்செல்லாது ஆண்டவன் திவ்விய பாதத்தை வேண்டி ஆசையை
வென்றிடலாம் முதிர முதிர முழுவது முண்மை யெனமுனி
சொன்னமொழி முகமுக மாகக் கண்டு தெளிந்து முத்தியிற்
சேர்ந்திடலாம் இதிலே ஐயமில்லை யில்லை யெல்லா மவன் செயலே இரவும் பகலு மிதய வெளிக்குள் ஏத்துக ஒம்தத்சத், 3
எண்ணி யெண்ணிப் பணிவார் நெஞ்சே யீசன்
உறைகோயில் இருந்துங் கிடந்தும் நடந்துந் தொடர்ந்தும்
ஏத்திப் பணிவோமே புண்ணிய பாவ மிரண்டுங் கற்பனை போக்கொடு
வரவில்லாப் பொருளே நாங்கள் அருள்கொண் டறிநீ புத்தியை
நாட்டாதே மண்ணில் வந்து பிறந்ததும் வாழ்ந்ததும்
மாமா யையிதனை மாதவ ரறிவார் மற்றவ ரறியார் மதியா தேயிதனை எண்ணில் காலம் உயிரோ டிருப்போம் ஏதுக்கு
மஞ்சாதே இயைந்த படிநீ நடந்துகொ ளென்றும் ஏத்துக
ஓம்தத் சத் , 4
நற்சிந்தனை 247 தன்னைத் தன்னு லறிந்திடடா
அன்பேசிவ மறிந்திடடா அதுவே நாமெனத் தெரிந்திடடா என் புருகப் பாடிடடா எழுந்திரடா நடந்துவாடா எல்லாஞ்சிவ ரூபமடா.
விண்ணைப்போல விளங்கிடடா வீணுசையை விட்டிடடா கண்ணைப்போலக் காத்திடடா கருமத்தைச் செய்திடடா கலங்காமல் நடந்திடடா இலங்கையெங்கள் நாடிதடா. 2
பெண்ணுமாணு மில்லையடா பேதா பேத மில்லையடா மண்ணும்விண்ணுமொன் ருச்சுதடா மகத்துக்களின் பேச்சிதடா மகிழ்ந்துவாடா நடந்துவாடா மாநிலத்தை யாள்வோமடா . 3
தன்னைத்தன்னு லறிந்திடடா தானேதானென் றிருந்திடடா அன்னைபோல வந்தானடா அழகாரும்நல் லூரிலடா பின்னைப்பேச் சில்லையடா பெருமைசிறுமை தொல்லையடா. 4
உறுதி தருவது சிவமே உள்ளத் துணர்வது சிவமே பொறுதி தருவது சிவமே பூரண மானது சிவமே
இறுதி யிலாதது சிவமே என்னை யுடையது சிவமே கருத வினியது சிவமே காசினி யெல்லாஞ் சிவமே,
Page 129
248 நற்சிந்தனை ஒரு பொல்லாப்புமில்லை
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் உண்மை
முழுதுமென்பான் ஒருவருக்குந் தெரியாதென்பான்-சின்னத்தங்கம் ஓவியம்போல் இருந்தானடி. 4. l
அப்படியே யுள்ளதென்பான் ஆரறிவா ரென்றுசொல்வான் செப்படி வித்தையென்பான்-சின்னத்தங்கம் செல்லப்பன் என்னுஞ்சீமான். 2
கந்தைத் துணியணிவான் கந்தன்திரு முன்றில்நிற்பான் வந்தாரைப்போ வாரைவாயில் - சின்னத்தங்கம் வந்தபடி யேசிடுவான். " 3 سے
அப்படியே யுள்ளதென்பான் அங்குமிங்கு மாயலைவான் செப்படி வித்தையென்பான்-சின்னத்தங்கம் V தேரடியி லிருப்பான டி. - 4
சாதி சமயமென்னுஞ் சங்கடத்துக் குள்ளாகான் சேதியொன்றுஞ் சொல்லகில்லான்-சின்னத்தங்கம் சித்தப் பிரமையென்பார் (எல்லோரும்). 5
நீதி யநீதியென்னும் நிலைமையொன்று மில்லாதான் மாதிரிகள் ஒன்றுஞ்செய்யான்-சின்னத்தங்கம் மத்தனைப்போல் திரிவான டி. 6
நீறு மணியான் நெற்றியிலே பொட்டுமிடான் கூறிய தைக்கூருன்-சின்னத்தங்கம் குணமொன்று மில்லான டி. 7
ஆறுதலா யிருமென்னன் ஆணவத்தை நீக்குமென்னன் மாறுபாடாய்ப் பேசிடுவான்-சின்னத்தங்கம் மதியிழந்தான் என்பாரடி. 8
நற்சிந்தனை 249
சின்னத் தனமாய்த் தெருவாலே போவாரை என்னப்பன் பேசிடுவான்-சின்னத்தங்கம் - இவன்விசரன் என்பாரடி h 9 உல்லாச நடையனடி ஊரூராய்த் திரிவனடி எல்லோரு மிவனைக்கண்டு - சின்னத்தங்கம் ஏளனஞ் செய்வாரடி. 10
பத்துப்பாட்டுப் படிப்போரும் கேட்போரும் பாரினிலே வித்தகராய் வாழ்ந்துபின்னே - சின்னத்தங்கம் விதேகமுத்தி சேர்வாரடி. 11
அங்கு மிங்கு மெங்கும் ஓடாதே
அங்கு மிங்கு மெங்கு மோடாதே
ஆன்மாநித் தியமதைத் தேடாதே. பொங்கும் காமக் குரோதமதம் போக்காயோ பூரண நிட்டையிலே தேக்காயோ. - 2 தங்குஞ் சிவயோ கத்தைத் தேராயோ தன்னைத்தன் ஞலறியப் பாராயோ . 3 மங்கள மான வார்த்தை பேசாயோ மன்னுயிரைத் தன்னுயிர்போற் பாராயோ . 4 உன்னை யுனக்கொரு போதும் ஒளியாதே ஒருபொல் லாப்புமில்லை யறிவாயே. 5 செந்நெலுடன் கன்னல் எங்கும் மல்கும் சீர்பெருகும் நல்லூரில் கல்லும். 6 கரைய வொருசொற் சொல்லுஞ் செல்வன் கழலடியை மறவாமற் சொல்லு, 7
செல்வம் அது பெரிய செல்வம் சிவசிவ என்றுநீ சொல்லு , 8 துள்ளும் மனத்தை யென்றும் வெல்லு சும்மா விருக்கும்நிலை நில்லு. 9
Page 130
250 நற்சிந்தனை Guoli Liquiffe,6ir Qib
கடவுளை யெங்குங் கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம் காமக் குரோத மோகம் நீக்குவர்
மெய்யடியார்கள் ஓம். 1
திடமுடன் தியானஞ் செய்து களிப்பார்
.” . மெய்யடியார்கள் ஒம்
தீவினை நல்வினை கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம். 2
படமுடியாத துயரம்வரினும் கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம்
பாரும்விண்ணு மொன்ருய்ப் பரவுவர்
மெய்யடியார்கள் ஒம், 3
நடமிடுந் திருவடி கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம்
நமச்சிவாய வாழ்க வென்று நவில்வர்
மெய்யடியார்கள் ஓம். 4
ஆதியு மந்தமும் நமக்கிலை யென்பார்
மெய்யடியார்கள் ஓம் அன்புசெய் பத்தரை யென்றும் மறவார்
சிவனடியார்கள் ஒம். 5
சாதி சமயப் பற்றினை விட்டார்
மெய்யடியார்கள் ஒம்
சந்ததம் மோன நிலைதவ ருதார்
மெய்யடியார்கள் ஒம். 6
மாதிரி யொன்றுஞ் செய்யா ருலகில்
மெய்யடியார்கள் ஒம்
மன்ன இளமை யென்றும் மகிழார்
மெய்யடியார்கள் ஓம். 7
நற்சிந்தனை 251
ஒதி யோதி யுன்மத்த ராவார் *
மெய்யடியார்கள் ஓம் உண்மை முழுதும் என்று சொல்வார்
மெய்யடியார்கள் ஒம் . 8
ஆணும் பெண்ணு மலியு மறியார்
. மெய்யடியார்கள் ஓம் அரகர சிவசிவ வென்று மகிழ்வார். . . . . .
சிவனடியார்கள் ஒம். 9
காணுங் கண்ணிற் கலந்த தென்பர்
சிவனடியார்கள் ஒம்
கங்குல் பகலற்ற கரட்சியைக் காண்பார்
சிவனடியார்கள் ஓம். 10
பேணும் பிறப்பிறப் பில்லை யென்பார்
மெய்யடியார்கள் ஒம் பேயர் பித்தர் போல விருப்பார்
மெய்யடியார்கள் ஒம், 11
நாணும் நன்னெஞ்சில் வஞ்சகந் தீர்ப்பார்
மெய்யடியார்கள் ஒம் நாதன் நாம நமச்சி வாயவென்பார்
மெய்யடியார்கள். ஓம், 12
ஆவதும் மழிவதும் இல்லை யென்பார்
- மெய்யடியார்கள் ஒம் அஞ்சும் மூன்று மொன்ரு யறிவார் . .
மெய்யடியார்கள் ஒம், 13
போவதும் வருவது மில்லை யென்பார்
மெய்யடியார்கள் ஒம் புன்னெறி செல்லும் மனத்தை வெல்வார் ”
14 .மெய்யடியார்கள் ஒம் ۔۔۔۔
தேவரும் முனிவருஞ் சித்தரு மறியார்
மெய்யடியார்கள் ஒம்
சிவசிவ வென்று தினமுந் துதிப்பார்
மெய்யடியார்கள் ஓம். 15
Page 131
252 நற்சிந்தனை
தேவ தேவனை யென்றுந் துதிப்பார்
சிவனடியார்கள் ஒம்
தீவினை செய்வார் தம்மையு மிகழார்
சிவனடியார்கள் ஒம், 16
ஐம்பொறி வழிபோ யவனியி லலையார்
மெய்யடியார்கள் ஒம் ஆணவந் தன்னை யழித்திடு வார்கள்
மெய்யடியார்கள் ஓம். 17
ஐந்து மடக்கா வறிவு பெற்ருர்
மெய்யடியார்கள் ஓம்
ஆசை வழிபோய் மோசம் போகார்
மெய்யடியார்கள் ஓம். 18
வந்தது போனது மனத்தே வையார்
மெய்யடியார்கள் ஓம்
வாணுள் ஆசை, பேணு திருப்பார்
மெய்யடியார்கள் ஓம். 19
நைந்துநைந் துருகி நமனை வெல்வார்
சிவனடியார்கள் ஒம் நாளுங் கோளும் மனத்தில் வையார்
சிவனடியார்கள் ஓம். 20
அந்த விதமே தோற்றின னுலகில்
அறிவார் சிவதொண்டன் ஒம் அவனியில் நாளும் வளர்மதி போல
வாழ்க சிவதொண்டன் ஓம். 21
எந்தச் செயலுஞ் சிவன்செயல் என்பார்
சிவனடியார்கள் ஒம் எளிதா யெவர்க்கு மின்னுரை சொல்வார்
எழிலார் சிவதொண்டர் ஒம். 22
நற்சிந்தனை 253
காயமே கோயில்
நிலைமண்டல ஆசிரியப்பா காயமே கோயில் கடிமன மடிமை நேயமே பூசை நீயிதை யறிந்தே உபாயமாய் நடந்தா லுனக்கொரு குறைவிலை ஆயநான் மறையும் இப்படி யறையும் எள்ளள வேனும் பிரியா இறைவனைக் கள்ள மனத்தவர் காண மாட்டார் உள்ளமே கோயில் உயிரே விளக்கு உள்ள வுள்ள உண்மை யுதிக்கும் பகைவ ருறவோ ரென்று பகரும் வகையை நீக்கிச் சிவசிவா வென்ன உவகை யுன்னை விழுங்கிக் கொள்ளும் தகைமை யிதுவே சாதனை செய்யே சாதனை செய்வோர் தன்னை யறிவார் பேதபுத் தியைப் பெம்மா னருளால் நீர்மேற் குமிழியில் வாக்கை வாழ்வே ஆதலா லன்பர் பணியே யறமாம் பணியப் பணியப் பாவ மகலும் அணிமா வாதியாம் சித்திக ளெய்தும் பிணியு மகலும் பேரின்பம் வாய்க்கும் துணிவுண் டாகும் சொல்லொணுச் சுகமே எல்லா வுயிரையுஞ் சிவனென வெண்ணி நல்லறம் புரிவோர் நாடுவார் பரகதி அல்ல லறுப்பார் ஆனந்தம் பெறுவார் தில்லை நடேசனைச் சேருவார் திண்ணமே உடல்பொரு ளாவியுன் னடைக்கல மென்றே திடமுட னெப்புக் கொடுப்போர் தமக்கு நடராஜ வள்ளல் நளினபொற் பதத்தை உடனே கொடுக்கு முண்மை யிதுவே ஒடவும் வேண்டாம் உலரவும் வேண்டாம் பாடவும் வேண்டாம் பணியவும் வேண்டாம் தேடவும் வேண்டாஞ் சிந்திக்க வேண்டாம் ஆடகப் பொன்னடி சூடிய காலை ஒழுக்க முயிரினு மோம்பப் படுமென வழுத்திய பெரியவன் மறைமொழி தன்னை அழுத்த வழுத்த ஆனந்த வீசுரன் வழுத்தொணு மலரடி நாடிவாழ் வோமே
Page 132
254 - நற்சிந்தனை
மோன நிலை நீங்காதே
அங்கிங் கலையாதே-அகப்பேய் ஆண்டவன் அருள்பெறவே எங்குமவன் காணடி-அகப்பேய் ஏத்தியேத்தித் துதிப்பாய்.
பொன்னுசை மண்ணுசை-அகப்பேய் புத்தி சிதைக்குமடி மன்னன மன்னவனை - அகப்பேய் . மனத்து நினைத்திடடி. 2
கொஞ்சம் கொஞ்சமாய் மனத்தைக் கொண்டுவா சித்தப்படி
அஞ்சாதே யொருவருக்கும் - அகப்பேய்
ஆண்டவன் உன்னுளடி.
துஞ்சாதே தூங்காதே - அகப்பேய் துரியநிலை சாரடி ஒன்றுமற நில்லடி-அகப்பேய் ஒமென்று செபித்திடடி. 4.
பண்டுசெய் வல்வினைநோய்-அகப்பேய் பாரில் பறக்குமடி மிண்டு மனம்விடடி-அகப்பேய் வேதாந்த நெறிநில்லடி. 5
என்று மிருந்தபடி-அகப்பேய் இருந்தபொருள் நீதான்டி குருநாதன் சொல்லை - அகப்பேய் தூய்மையாய்ப் போற்றிடடி. 6
தானன தத்துவன - அகப்பேய் சார்ந்து நீ வாழ்ந்திடடி மோனநிலை நீங்காதே - அகப்பேய் முத்தியுன் கைவசமே. 7
நற்சிந்தனை 255
நன்றென்றுந் தீதென்றும்-அகப்பேய் நாட்டிமலை யாதேயடி கொன்றென்றும் புசியாநே- அகப்பேய் குருபாதம் போற்றிடடி. 8
கண்டாரு மில்லையடி அகப்பேய் காணுரு மில்லையடி முன்னுமில்லைப் பின்னுமில்லை-அகப்பேய் மூவரில்லைத் தேவரில்லை. 9
கஞ்சாஅபின் தின்னதே-அகப்பேய்
கருணை அகத்தேயடி பஞ்சாட்சரத்தை நெஞ்சில்-அகப்பேய்
பக்குவமாய்ப் போற்றிடடி. 10
குரு பக்தி
குருபக்தி யேபெரும் பேறு கொண்டாடிக் கொண்டாடி ஆறு. தரும நிலையிலே ஏறு சங்கர சிவனேயென்று கூறு. : 2 ஒருபொல்லாப்பு மில்லையென்று தேறு உண்மை முழுதுமென்று கூறு 3
திருவருளை நாடிநீ செல்லு சிவாயநம வென்றுநீ சொல்லு, 4 தன்னைத்தன் ஞலறிய வேண்டும் சாந்தம் பொறுமையுன்னில் தோன்றும் . 5 பின்னை யுனக்குத்துணை நீயே பேதா பேதமெல்லாம் அணையே. 6
முன்னைவினை யென்றும்நினை யாதே மூவாசை போக்கநிலை வாயே. 7
Page 133
256
w நற்சிந்தனை ஆனந்தக் கூத்தாடினன்
பல்லவி ஆனந்தக் கூத்தாடினன் தொண்டன் ஆனந்தக் கூத்தாடினன் தொண்டன்.
அநுபல்லவி தானதாம் என்றுபாடி சாந்தம் பொறுமைகூடி. (ஆனந்த)
சரணங்கள்
மோனந் தனைத்தேறி
முழுதுமுண்மை யென்றுகூறி. (ஆனந்த) 1 வேதாந்த நிலைமேவி . . வேறில்லை யெனக்கூவி (ஆனந்த) 2 தாதா தரிகிடதோம் ஜனதஜனத தீமென்று. (ஆனந்த) 3
ஒடுங்குவதாங்கே
உலக முதித்தது மாங்கே-இந்த உலக முதித்து ஒடுங்குவ தாங்கே. . . . I சலன முதிப்பது மாங்கே-இந்தச் சலன முதித்து ஒடுங்குவ தாங்கே. s நீர்நிலம் தீகாற்று மாங்கே-நெடு வானெடு சந்திர சூரியர் ஆங்கே. 3. சீர்பெறு சித்தரும் ஆங்கே-நல்ல தேவரும் முனிவரும் பக்தரும் ஆங்கே.
இல்லையுண் டென்பது மாங்கே-எங்கும் ஏது மறியாமல் நிற்பது மாங்கே. 5 வல்லாரும் மாட்டாரும் ஆங்கே-வளம் வாய்ந்த இலங்கையில் வாழ்வாரும் ஆங்கே, 6
நற்சிந்தனை 257
அவனே நான் இராகம்-பைரவி. தாளம்-ஆதி
su sübsbwâ
அவனேநா னென்று சொல்லித் தியானஞ்செய்
வாய்தினமும் ஆசையெல் லாமொழியும் ஈசனருள் பொழியும்
அநுபல்லவி
அஞ்சாதே அஞ்சாதே பஞ்சாய்ப் பறக்கும் பாவம் பஞ்சாட்சரத்தை நெஞ்சில் துஞ்சாமலே செபி. (அவனே)
சரணங்கள்
கொஞ்சங் கொஞ்சமாய் மனத்தைக்
கூடுமட்டு மடக்கு குருநாதன் திருவடியைக் கும்பிட்டு நீதொடக்கு கோபம் பொருமை தள்ளு கொலை களவை எள்ளு கூடிப் பாடி யாடு சிவனடி யாரோடு. (அவனே)
ஆதியோ டந்தமில் லாதவான் மாவென்று அடிக்கடி நீபடி துடிதுடிப் பாய்நடி அயலுனக் கில்லை ஆரறி வார்நல்லை ஆசான் சொன்னமொழி முழுவது முண்மை. (அவனே)
பலபல வானசித்தி பாரினிற் கைகூடும் பத்திநெறி விட்டிடாதே பத்தர்சொல்லைத் தட்டிடாதே பைரவி ராகம்பாடிப் பணிசெய்யும் யோகசுவாமி பாவமெல் லாமோடப் பாரினில் ஈடேற. (அவனே)
17
Page 134
258 நற்சிந்தனை எல்லாகும் வாழியடா
ஒருபொல் லாப்பு மில்லையடா-தம்பி உண்மை முழுதும் அறிந்திடடா வருவதைக் கண்டு மகிழாதே-தம்பி வஞ்சகப் பேச்சைத் தழுவாதே. -
கருமத் தைக்கை நெகிழாதே-தம்பி கவலை கொண்டு கலங்காதே தரும நெறியில் வழுவாதே-தம்பி தன்னை யறிய எழுவாயே. 2
அகர முதல எழுத்தெல்லாந்-தம்பி அதுபோல் ஆதி யுலகுக்கடா பகரில் அவனே ஒருவனடா-தம்பி பலபல வாகச் சொல்வாரடா. 3
கற்றதனற் பயன் இல்லையடா-தம்பி கழல் அடியிணை கண்டிடடா வெற்றிப் பேச்செல்லாம் விட்டிடடா-தம்பி விதியை மதியால் வென்றிடடா. 4
பொறி வழியினிற் செல்லாதே-தம்பி போனதை யெண்ணிக் கொள்ளாதே கிறியுங் கீழ்மையுஞ் செய்யாதே-தம்பி கெட்டவர் மேல்நட்பு வையாதே. 5
புத்தியை ஒன்றிலும் நாட்டாதே-தம்பி புகழும் இகழுஞ் சூட்டாதே - எத்தொ ழிலைநீ செய்தாலுந் -தம்பி
ஈசனுக் கர்ப்பணம் பண்ணிடடா. 6
வித்தாரப் பேச்சையும் விட்டிடடா - தம்பி விருப்பு வெறுப்பை யகற்றிடடா செத்தாரைப் போலத்தி ரிந்திடடா -தம்பி சீவன் சிவனென்ற நிந்திடடா, 7
நற்சிந்தனை 259
நிகரொ ருவரும் இல்லையடா-தம்பி நின்ற நிலையிற் பிரியாதே
ஆன்மா நாங்கள் அறிந்திடடா தம்பி ஆக்கை நாமன்று தெரிந்திடடா- 8
வீண்பா வனையெல்லாம் விட்டிடடா-தம்பி வேத நெறியிலே தொட்டிடடா காண்பான் காட்சியு மில்லையடா-தம்பி காணப் படும்பொரு ஸ்ரில்லையடா. 9
வாழி குருநாதன் வாழியடா - தம்பி வாய்மை யடியாரும் வாழியடா கேளிருஞ் சுற்றமும் வாழியடா -தம்பி கேட்டவ ரெல்லாரும் வாழியடா. 1. )
--a
பார்க்கு மிடமெங்கு மந்தப் பரமவஸ்து பாவியென்று சொல்லாதே எவரையும் - நீ பார்க்கு மிடமெங்கு மந்தப் பரமவஸ்து கூவியழைத் திடுவாய் என்றுஞ்-சிறு குழந்தையைப் போலநின்று கும்பிட்டுக் கொள்வாய் கோபம் பொருமையை நீதள்ளு-பொல்லாக் குடிவெறியை மோகத்தை நீயெள்ளு தாபதர்தம் சங்கத்தை நீநாடு-தன்னைத் தன்னு லறிந்த பெரியோரைக் கூடு குருவான நல்லூரிற் செல்வன்-உள்ளங் குளிர வைத்தான் நாணுெரு புல்லன் வெட்ட வெளியில் என்னை விட்டான்-நல்லூர் வீதியிலே தன் கரத்தால் தொட்டான் அட்டாங்க யோகமெல்லாம் விட்டேன்-அங்கே அடியார்க் கடியனய் ஆட்பட்டேன்.
Page 135
260 நற்சிந்தனை
தங்கப்பாட்டு
காயமே கோயிலடி தங்கமே தங்கம் கடவு னிருப்பிடங்காண் தங்கமே தங்கம் மாயம னத்தைவெல்லு தங்கமே தங்கம் மற்றுப்பற்றை நீக்கிவிடு தங்கமே தங்கம் உபாய மதுவாகுந் தங்கமே தங்கம் உண்மை முழுதுமடி தங்கமே தங்கம் ஒருபொல்லாப்பு மில்லையடி தங்கமே தங்கம் உறுதி யெழுதிக்கொள் தங்கமே தங்கம் அப்படி யுள்ளதடி தங்கமே தங்கம் ஆரறிவார் பாரினில் தங்கமே தங்கம் எப்பவோ முடிந்ததடி தங்கமே தங்கம் ஏகாந்த மாயிரடி தங்கமே தங்கம் செப்ப முடியாதடி தங்கமே தங்கம் செல்லப்பன் திருவாக்குத் தங்கமே தங்கம் ஒப்பற்ற வாக்கடி தங்கமே தங்கம் உடம்பை மறந்துவிடு தங்கமே தங்கம் அப்பிலுப்புச் சேர்ந்தாற்போல் தங்கமே தங்கம் ஆண்டவனில் கரைந்துவிடு தங்கமே தங்கம் வெப்பந்தட்ப மில்லையடி தங்கமே தங்கம் வேதாந்த நெறிநில் தங்கமே தங்கம் அப்பனு மம்மையுந் தங்கமே தங்கம் அகத்திலே வாழ்கின்ருர் தங்கமே தங்கம் ஒப்புரவாய் நடந்திடடி தங்கமே தங்கம் ஒருகுறையு மில்லையடி தங்கமே தங்கம் கைப்போது மலர்கொண்டு தங்கமே தங்கம் கழலடியைப் போற்றிடடி தங்கமே தங்கம் முப்போதும் முடிசாய்த்துத் தங்கமே தங்கம் மூர்த்தியைப் பணிந்திடடி தங்கமே தங்கம் அப்போதைக் கப்போது தங்கமே தங்கம் அருள்வடிவங் காட்டுவான் தங்கமே தங்கம் தப்பேதுஞ் செய்யாதே தங்கமே தங்கம்
நற்சிந்தனை 261
தனித்திருந்து பார்த்திடடி தங்கமே தங்கம் அப்பாலுக் கப்பாலே தங்கமே தங்கம் ஆருமறி யாரடி தங்கமே தங்கம் அப்புசுவாமி தன்சொல்லைத் தங்கமே தங்கம் அகத்தில் மற வாதேயடி தங்கமே தங்கம்
சிவ சிவா
சீரான வடியரொடு கூடு - சிவசிவா செல்லப்பன் தந்த மந்திரம் நாடு. (ரோ) ལ་ ஆராய்ந்து கருமத்தை யாற்று - சிவசிவா
அனைவரையு மன்பாய் உலகத்தில் போற்று. (சீரா) ஆரென்ன சொன்னலும் வாது-சிவசிவா - ஆணவத்தை யுண்டாக்குந் தீது, (சீரா)
பாரெல்லாம் பகைத்தாலுஞ் சிறிதும் - சிவசிவா பதையாம லிருப்பதே மிகவும் பெரிது. (gèrnr)
3.
சீவனே சிவமென்று பெரியோர் -சிவசிவா செப்பிய மொழியை ஒப்புக்கொள் ளறிவாய். (சீரா)
ஆவது மழிவதும் உண்டோ - சிவசிவா ஐம்புலனை வென்றவர்கள் நன்முக அறிவார். (சீரா)
கருமஞ் சிதையாமல் உலகில்-சிவசிவா கண்ணுேட வேண்டும்நீ கருது. (gitnr ,
அருமையி லருமையெங்க ளான்மா--சிவசிவா அதையறிந்து வாழ்வதே மாண்பாம். (சீரா) அங்கிங் கென தபடி நாங்கள்--சிவசிவா அம்புவியில் வாழ்வதே பாங்கு. , (சீரா)
காங்குநீ யங்குநா னென்று-சிவசிவா எங்கள்குரு ஒதினுன் நன்கு. m (go trT).
Page 136
262 நற்சிந்தனை
மெய்ப்பொருளை ஒன்றெனக் கும்பிடுவாய் இராகம்-கமாஸ். தாளம்- ஆதி
பல்லவி ஒன்றெனக் கும்பிடுவாய் மனமே யிந்த உலகுயிர் பரமென ஒளிரும்மெய்ப் பொருளை
- ஒன்றெனக் கும்பிடுவாய்.
அநுபல்லவி உண்டில்லை யென்றெவரும் ஒதமுடி யாததாய் பண்டுமின்றும் என்றும் அப்படி யுள்ளதாய்
-ஒன்றெனக் கும்பிடுவாய்.
சரணம் V நன்றுக்குந் தீதுக்கும் நடுவாய் உள்ளதாய் ஞான யோக தியானத்தில் வருவதாய் கன்றிய காமனக் கண்ணுல் எரித்ததாய் கால காலனைக் காலால் உதைத்ததாய்
- ஒன்றெனக் கும்பிடுவாய்"
எங்கு தேடினுய் இறைவனை
பல்லவி
எங்குதேடினய் இறைவனைநீ இங்கு காணுமல் (எங்கு)
சரணங்கள்
அங்குமிங்கும் ஒடியே அவதிப்படுகிருய் பங்குபோட்டுப் பார்க்கிருய் பரிதவித்து வாடுகிருய் (எங்கு) எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றுவாதுபேசுகிருய் சாதி சமயமென்று சண்டைப் படுகிருய் தத்துவத்தை யறியாமல் சங்கடப்படுகிருய் ஒதியு முணராமல் உண்மை யறிந்தவன்போல் ஊரெங்குஞ் சென்றுநீ பிரசங்கம் பண்ணுகிருய் எங்கு)
நற்சிந்தனை
சற்குரு தரிசனம்
garnt sub - FrLDIt தாளம்-ஆதி
பல்லவி
சற்குரு தரிசனம் சகலபாக்கிய சுகம்
தாளினை பணிநீ தினம். - அநுபல்லவி தாந்தன்னை யறியுமே சாந்தமுஞ் செறியுமே
சரணங்கள் பேரன்பு பெருகிவிடும் பேதைமை கருகிடும்
பிரியாப் பிரியமெல்லாம் பேசாம லகன்றிடும்.
ஆகம விதிமுறை அகத்தினில் பொருந்திடும் ஆசாபாச மகலும் நேசானு பூதிவரும். தேவாதி தேவர்களுஞ் செய்வார் பணிவந்து
சீவன் சிவனென்னுந் தெளிவுமுண் டாகுமே.
ஆநந்தக் களிப்பு
சங்கர சங்கர சம்பு-சிவ சங்கர சங்கர சங்கர சம்பு.
ஒருபொல் லாப்பு மில்லையெனவே-முன்னுள்
ஒதினன் உண்மை முழுது மெனவே பருவத்தில் மழைபெய்தாற் போல-ஐயன் பந்தத்தை நீக்கி வளர்த்தானன் பாலே அருவமு முருவமு மானன்-என்னை ஆட்கொள்ள வந்தான் நல்லூரிற் ருஞய் கருவிக ரணங்க ளெல்லாம்-தத்தம் கருமத்தை விட்டுக் காவலுக் குள்ளாய் வருவதும் போவது மின்றித்-தூய மெளன நிலையில் நிலைத்தது தானே ஆரு மறியா ரெனவே-அப்பன் அப்படி யுள்ளதென் முனறி வாயே.
263
(சற்குரு)
(சற்குரு)
(சற்குரு)
(சற்குரு)
(சங்கர)
(சங்கர)
(σε Ιάι 5μ)
(சங்கர) (சங்கர)
(சங்கர :
Page 137
264 நற்சிந்தனை சும்மா விருந்துபார் தம்பி
நல்ல சமயமிது தம்பி w நம்மைநா மறிந்துகொள்ளத் தம்பி. எல்லார்க்கும் நன்மைசெய் தம்பி இறைவனுன் னிடமுண்டு தம்பி. 2 கொல்லாதே கோபம்வை யாதே
கும்பிடு காலைமாலை தம்பி. 3.
சொல்லாலே பயனில்லைத் தம்பி சும்மா விருந்துபார் தம்பி. 4 கண்ணல்லக் காதல்லத் தம்பி கண்ணுக்குக் கண்ணெடா தம்பி. 5 எண்ணிலடங் காதெடா தம்பி எல்லா மதுவெடா தம்பி. 6
மண்ணுசை வையாதே தம்பி மற்றிரண்டும் அப்படியே தம்பி. 7
ஒன்றுக்கு மஞ்சாதே தம்பி ஒடி ஒளியாதே தம்பி. 8
பண்டுமின்றும் உள்ளதெடா தம்பி பாடிப் பணியெடா தம்பி. 9
அகம்பிர மாஸ்மியென்று தம்பி அனுதினமுஞ் சாதனைசெய் தம்பி. 10
இகலோகம் பரலோகந் தம்பி இங்கேரீ கண்டுகொள்வாய் தம்பி, 11
நற்சிந்தனை 265
அங்கும் இங்கும் எங்கும் நான்
அங்கும் இங்கும் எங்கும் நான் அதை யறியும் விசரன் நான் (1)
பங்கு போட்டு வணங்க மாட்டேன் பாவ புண்ணியம் அறிய மாட்டேன் (2)
மங்கள மாகப் பேச மாட்டேன் மாய வாழ்வை மதிக்க மாட்டேன் . (3)
பொங்கல் பூசை செய்ய மாட்டேன் போனதை யெண்ணிக் கலங்க மாட்டேன் (4)
மங்குவார் செல்வம் மதிக்க மாட்டேன் மாய வித்தை காட்ட மாட்டேன் (5)
சிங்கக் குட்டி போல நடப்பேன் தீயா ரோடு கூட மாட்டேன் (6)
எங்கும் என்றன் தங்கும் வீடு ஏற்ப திகழ்ச்சி என்ன மாட்டேன் (7)
சிங்களவர் தமிழரைக் காண மாட்டேன் சின்னம் ஒன்றும் போட மாட்டேன் (8)
தங்கப் பொம்மை போல விருப்பேன் சாம்ப சிவசிவ என்று சொல்வேன் w (9)
மங்கைமார் சூழ்ந்து கும்பிடும் நல்லூரான் என்னப்பன் செல்லப்பனை மறக்க மாட்டேன் (10)
Page 138
266 நற்சிந்தனை
ஆடு பாம்பே 8.
ஆடு பாம்பே பணிந்தாடு பாம்பே ஆன்மாநித் தியமென்று ஆடுபாம்பே
மாடுமக்கள் சுற்றமெல்லாம் மயக்க மென்றே மாதவர்தம் இயக்கத்தை மகிழ்ந்து கொண்டே தோடுடைய செவியனைத் தோத்திரஞ் செய்தே சும்மா விருந்துகண்ணைத் திறந்து கொண்டே
(ஆடு பாம்பே.) 1 வீடு நமக்கென்றுஞ் சொந்த மென்றே வீணசைப் படுவதெல்லாம் பந்தம் என்றே தேடும்பொரு ளெல்லாஞ்சிவ தொண்டுக் கென்றே தேசமெங்குஞ் சென்றுண்மை பேசிக் கொண்டே
(ஆடு பாம்பே.) 2 பாடு படும்போதும் ஆதிபதம் நினைந்தே பாடிப் பாடித் திருவருளைப் புகழ்ந்துகொண்டே ஒடு மிருநிதியும் ஒன்ருகக் கண்டே உண்மை முழுதுமென மன்ருடிக் கொண்டே
(ஆடு பாம்பே.) 3
திருவருள் கைகூடுது இராகம்-சாவேரி. தாளம்- ஆதி.
- . பல்லவி திருவருள் கைகூடுது சிந்தை களிகூருது
அநுபல்லவி ஒருவரும் எதிரில்லாத உண்மை முதிருது. (திருவருள்)
சரணங்கள் ஒன்ருே விரண்டோ வென்னுஞ் சந்தேகந் தெளியுது ஒம்சிவாய நமவென்ன உள்ளங் குளிருது. (திருவருள்)
அதிர வரும்நமனும் அஞ்சியே பணிசெய்யும் அஞ்சுவ தொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை. (திருவருள்)
நற்சிந்தனை 26 。 வரந் தருவார்
வருவார்வ ருவார்வரந் தருவார் சுவாமி
வஞ்சம்பொருமைகோபம் நெஞ்சினில் நீவையாதே (வரு) 1
ஒருவரு மிருவரும் மூவரு மானவர் ஓங்காரத் துட்பொருள் ஆகியே நிற்பவர் (வரு) 2
கருமத்தைச் செய்பலன் கருதாம லுலகத்தில் காயமே கோயிலாய்க் கண்டு வணக்கஞ்செய் (வரு) 3
தருமநெறி பிசகாமல் தாரணி தனில்வாழ் தன்னைத்தன் னலறியத் தியானத்தில் நீரூமுழ்கு (வரு) 4
மரும மறிந்தவர்கள் மண்ணிற்பிற வாரென்ற மகத்துக்கள் வாக்கியத்தை மறவாமல் நினைத்துக்கொள்
(வரு) 5
திருவாரும் நல்லூரில் செல்லப்பன் மாணக்கன் திருவாளன் சொன்ன சொல்லைச் சிந்திக்கச் சீவன்முக்தி
(வரு) 8
GTUIGLOTO &ğßgå GeisTuf6)
காயமொரு சித்திரக் கோயில் - அது கண்ணுதல்பெண் ணுமைவாழ் கோயில் மாய மெனமதி யாதே - அடடா மகத்துவஞ்சொல்ல மதிபோ தாதே தூய குருவரு ளாலே-நானும் சொல்லுவேன் கேள்மருள் போமே மாய னயன்மக பதியும்-அடடா மற்றுமுள்ள தேவர்களும் அரக்கர்களும் தேயுவுடன் வாய் வப்பு-மண்விண் சேர்ந்திருக்குஞ் சித்திரக் கோயில் ஆதித்தனுஞ் சந்திரனும் இங்கே-இன்னும் அளவற்ற அண்டங்களும் இங்கே வேதியருஞ் சூத்திரரும் இங்கே-விளங்கும் வேதமுஞ் சூத்திரமும் இங்கே. (காயமொரு)
Page 139
268 நற்சிந்தனை
ஆண்டவன் திருவடி இராகம்-தன்னியாசி. தாளம்-ஆதி
பல்லவி
ஆண்டவன் திருவடி வேண்டிக்கொண் டாலென்றும் ஆறுதல் உண்டாகும்.
அநுபல்லவி
காண்பதெல் லாம்நிலை யன்றெனக் காட்டும் காயத்தை வெல்லுமு பாயத்தை யூட்டும். (ஆண்டவன்)
சரணங்கள்
பஞ்சப் புலன்வழி போம்மனத் தினவெல்லும் பஞ்சாட் சரத்தை யனுதினஞ் சொல்லுங் கொஞ்சங்கொஞ் சமாகச் சினத்தினைக் கொல்லுங் குற்றம் யாவையுங் குணமாகக் கொள்ளும். (ஆண்டவன்)
பொன்னசை மண்ணுசை பெண்ணுசை போக்கும் போக்கு வரவற்ற பொன்னடி நோக்கும் எந்நாளும் சும்மா விருப்பதைக் காக்கும் ஏழைகள் பேரில் இரக்கத்தை யாக்கும். (ஆண்டவன்)
வெட்ட வெளியிலே நின்றிடர் தீர்க்கும் வேதாந்த சித்தாந்தம் ஒன்றென்று நோக்கும் கட்டுப் படாத மனத்தினைக் கட்டும் கங்குல் பகலற்ற காட்சியுண் டாக்கும். (ஆண்டவன்)
சுவாமி யோகநாதன் சொல்லிய பாட்டு சுந்தர மான வழிதனைக் காட்டும் ஆவி யுள்ளளவும் அமுதத்தை யூட்டும் அகம்பிர மாஸ்மி யெனமுடி சூட்டும். (ஆண்டவன்)
நற்சிந்தனை 269
uTij8LON GJ
ஐம்பூதம் நீவிரல்லீர் பாங்கிமாரே ஐம்பொறியும் நீவிரல்வீர் பாங்கிமாரே ஐம்புலனும் நீவிரல்லீர் பாங்கிமாரே அந்தக்கரணம் நீவிரல்லீர் பாங்கிமாரே 1
ஆதியந்த முங்கட்கில்லைப் பாங்கிமாரே ஆன்மாவே நீவிர்காணும் பாங்கிமாரே வந்ததிலும் போனதிலும் பாங்கிமாரே மனம்வையாமல் வாழ்ந்திடுவீர் பாங்கிமாரே.
2
ஆதார மாறும்விட்டுப் பாங்கிமாரே அப்பனை வணங்கிடுவீர் பாங்கிமாரே பாதார விந்தங்காண்பீர் பாங்கிமாரே பகலு மிரவுமில்லைப் பாங்கிமாரே. 3
முன்னிலை யுங்கட்கில்லைப் பாங்கிமாரே முனையில்வைத்துச் சீராட்டும் பாங்கிமாரே அன்னிய முங்கட்கில்லைப் பாங்கிமாரே ஆச்சரிய மொன்றுமில்லைப் பாங்கிமாரே. 4.
நீயேநீ யாயிருக்கப் பாங்கிமாரே நித்தியத்தைத் தேடுவதேன் பாங்கிமாரே தாயைப்போ லிருக்கவேண்டும் பாங்கிமாரே சங்கற்பம் விட்டிடுவீர் பாங்கிமாரே. 5 -
வையகம் முழுதும்நீங்கள் பாங்கிமாரே வார்த்தையொன்றும் பேசாதீர் பாங்கிமாரே கையில்நெல்லிக் கனிபோலப் பாங்கிமாரே கடவுள்நம் மிடமுண்டு பாங்கிமாரே. 6
Page 140
270. - நற்சிந்தனை
தாலாட்டு
அன்னைபிதாக் குருவாகி யடியேனை யாட்கொண்ட தன்னிகரில் லாதசற் குருவேநீ கண்வளராய்.
என்னையினிப் பிறவாமல் ஈடேற்றி வைத்தவனே உண்மை முழுதுமென்ற வுத்தமனே கண்வளராய்.
நாமறியோ மென்று நல்லூரிற் சொன்னவனே சேமமுட னென்னகத்தில் சீமானே கண்வளராய்.
அப்படியே யுள்ளதென வடிக்கடியே சொல்லியென்னை இப்படியில் வாழவைத்த எந்தையே கண்வளராய்.
காணுங் கண்ணிற் கலந்தவனே கார்வண்ணு நானும்நீயு மென்றுரைக்க நாணுவேன் கண்வளராய்.
சீராரும் நல்லூரில் தேரடியி லேயிருந்து
ஆரறிவா ரென்றுசொன்ன அப்பனே கண்வளராய்.
எப்பவோ முடிந்ததென எனக்குப தேசஞ்செய்த ஒப்பிலா மாமணியே யுறவோனே கண்வளராய்.
ஒருபிடி சோற்றுக்காய் ஊரூராய் நானலையத் திருவருள் தந்தவனே செல்லப்பனே கண்வளராய்.
எட்டாத கொப்பில் இருக்குமுனை யாரறிவார் மட்டில்லா மாமணியே மாதவனே கண்ாவளராய்.
கண்ணே யுறங்குறங்கு கார்வண்ணு நீயுறங்கு எண்ணேன் பிறதெய்வமென் னிதயத்தே நீயுறங்கு.
10
நற்சிந்தனை 271
சிந்தை தெளிந்தேனே
uნს6სიf:
தேடித் தேடித் திரிந்தலைந்து நான் சிந்தை தெளிந்தேனே.
சரணங்கள்
சிந்தையிற் கண்டேயென் தீவினை போச்சுது சிவபெரு மான்தன் னிணையடி வாய்ச்சுது இந்த வுலகம் கனவாய்ப் போச்சுது எல்லாம் என்தன் கைக்குள்ளே யாச்சுது. (தேடி) 1
கருவி கரணங்கள் ஒய்ந்து போச்சுது காணுத காட்சிகள் காண லாச்சுது ஒருவரு மெதிரில் லாமற் போச்சுது ஒஓ மாயை பறந்து போச்சுது (தேடி) 2
நில்லென்று சொல்லி மனத்தை நிறுத்துவேன் நேர்மை யான வழியிற் செலுத்துவேன் வல்லபம் பேசி யாரையும் வெல்லுவேன் வாணு ளாசை வீணெனச் சொல்லுவேன். (தேடி) 3
யாழ்ப்பாணத்தானே
அன்பி ஞற்பணிந் தேத்து மடியவர் துன்பம் யாவும் துடைத்தருள் செய்தவன் பொன்னர் மேனியன் போர் விடை யூர்தியன் இன்பந் தங்கும் யாழ்ப்பாணத் தானே.
ஆதி யந்தமும் அற்றவன் மெய்த்தவர் ஒதி நாளும் உவந்திடும் உத்தமன் பாதி மேனியில் பாவையை வைத்தவன் நீதி நின்றிடும் யாழ்ப்பாணத் தானே. இன்ன தன்மைய னென்றறி வொண்ணுன் முன்னர் இராவணன் முடிபத்தும் நெரித்தான் மன்னர் மன்னவன் மதிதவழ் சென்னியன் நன்ன லஞ்சேர் யாழ்ப்பாணத் தானே.
Page 141
272 நற்சிந்தனை சிவத்தியானஞ் செய்
சிவத்தியா னத்தைச் செய்யும் மாந்தர்கள் அவத்தில் பாரினில் அலைவ தில்லையே. I தவத்தை யாற்றிடில் தன்னை யறியலாம் அவத்தை யாற்றிடில் வீழ்வர் நரகினில். 2 தில்லை யம்பலத் தாடுஞ் சேவடி எல்லை யற்றநல் லின்பம் நல்குமே. உள்ளத் தூய்மையாய் ஒருவன் பாதத்தை உந்து வார்தமக் குணர்வு வந்திடும். 4. அல்லும் எல்லியும் இறைவன் பாதத்தைச் சொல்ல வல்லவர் தூய்மை யாவரே. 5 எங்கு மீசனை யேத்துவார் தம்மைப் பொங்கும் வல்வினை பொருந்த லில்லையே. 6 தெய்வ மொன்றெனத் தெரியும் மாந்தர்கள்
உய்வர் வையத்தில் யுண்மை உண்மையே. 7
எந்த நேரமும் இறைவன் பாதத்தைச் சிந்தை செய்திடில் தீரும் வல்வினை 8
அடியவர் பாதத் தன்பு செய்திடில் கொடிய கூற்றுவன் மடியுந் திண்ணமே 9
சீலஞ் சேர்சிவ ஞானத் தேனினை ஞாலத் துண்பவர் நமன வெல்லுவார். 10
வாலை வணக்கமாய் மகிழ்ந்த பாவினைக் காலையும் மாலையும் ஒதக் கவலைபோம்.
நற்சிந்தனை 27
நாதாந்த முடிவில் நடனம் புரிவது
கண்ணுலே காணுெணுதது கண்ணுக்குக் கண்ணுயுள்ளது காதாலே கேட்கொணுதது காதுக்குக் காதாயுள்ளது கையாலே எடுக்கொணுதது கைக்குக்கை யாயிருப்பது காலாலே நடக்கொணுதது காலுக்குக்கா லாயுள்ளது வாயாலே பேசொனதது வாய்க்குவா யாயிருப்பது மனத்தாலே எண்ணுெணுதது மனத்துள்மன தாயிருப்பது மூக்காலே முகரொணுதது மூக்குக்குமூக் காயிருப்பது முன்னெடுபின் னில்லாமுதலது மூப்புப்பிணியில்லாவடிவது தாயுந்தந்தையு மானவுருவது தானே தானுய்த்
தழைத்துநிற்பது عر ஒன்றிரண்டென ஒதவொண்ணுதது ஓவியராலும்
எழுதவொண்ணுதது நன்று தீதிற்கு நடுவாய்நிற்பது ஞானியர்
நெஞ்சில் என்றுமுள்ளது வேதாந்த சித்தாந்தம் வேருெளுதது
நாதாந்த முடிவில் நடனம்புரிவது.
ஏற்குமோ
பல்லவி ஏற்குமோ திருவருளுக் கேற்குமோ
அநுபல்லவி என்னையும் உன்னையும் வேருய் எண்ணிப் பணிவதற்கு (ஏற்குமோ)
சரணங்கள் கண்ணே கண்ணின் மணியே கனியே கனிரசமே எண்ணேன் பிறதெய்வம் எல்லாம் உனது செயல்
(ஏற்குமோ) விண்ணுதி பூதமே வேதவே தாந்தமே பெண்ணே ஆணே அலியே பேதமில்லாப் பெம்மானே
(ஏற்குமோ) 18
Page 142
274 நற்சிந்தனை ஆன்மா நீத்தியம்
ஆன்மா நித்தியம் ஆன பொருளென ஆசான் சொல்லக் கேட்டிருந்தோம் அதையே மறந்தோம் பிறந்தோம் இனிநாம் அதுவே நாமென எண்ணிடுவோம். அநுதினம் சாதனை செய்யச் செய்ய ஆனந்த மான மோட்ச வீட்டை w அடைவோம் இதிலோர் ஐயமும் இல்லை-ஆனல் அடக்கமும் பொறுமையும் வேண்டுதுமே. 2 குழந்தை யன்பொடு குருவின் பாதத்தைக் கும்பிடும் பாக்கியம் உண்டானல் கோடா கோடி பாவத்தைப் போக்கும் நாட்டத்தைச் சிவத்தில் வைப்போமே. 3 கெளரியை யிடத்தில் வைத்தவன் பாதம் கைதொழும் அடியார்கள் காலனை வென்று ஞாலந் தன்னில் கவலையை நீங்கி வாழ்வாரே. 4
அருள் நீ தா இராகம்-கரஹரப்பிரியா தாளம்-ஆதி பல்லவி அருள்நீ தாதாவே - எனக் கார்தான் துணை வேறே
அநுபல்லவி இருள்சேர் வினையாலே யிடரே படலாமோ. (அருள்) சரணம் ஆசாபாச தோஷம் நீக்கி-ஆரவார மார போத தந்திர ரூபனே-நேச வாசம் தந்து வீடருள் தேவ -தேவ சாலஞ் செய்யலாமோ அநுகூல கோல கால லீல விநோத-ராஜராஜநீ- வளர்த்தி வளர்த்தி உண்டி யூட்டி முழுதும் உண்மை. (அருள்).
நற்சிந்தனை
நானே கோனே
வானே தேனே
ஊனே மீனே
ஆனே கானே
ағлтC36рат ஆணே
தூணே ஊனே
பொன்னே
எண்ணே
நானே தானே
பூதம்
வேதம்
காதல் <翌应
d5 *;
Gl)
T
ல்
அறிவார்
275
நானே நீ
வஞ்சித்துறை
நீயே குருவே
ன்
மண்ணே
தெருளே
2-uGr வெண்மதி
அடல்விடை
கடலே
சதுரே பெண்ணே
துரும்பே உடையே
பொருளே எழுத்தே
நன்மதி தானே
பொறியும் வேதியன்
தி
f
ன்.
8
;
9
கருத்தும்
10
f
fi
Page 143
276 நற்சிந்தனை
அவரடியே தஞ்சமெடி
பிறியென்முன் பிறியாமற் பிறியென்றன் பேசாமல் நெறிநின்று பாரென்முன்- கிளியே நீயேநா னென்றுரைத்தான். l
ஒருபொல் லாப்புமில்லை யென்றே யுரைத்தான் உண்மை முழுதுமென்ருன்-கிளியே ஊமைபோ லிருந்தானெடி, m 2
முடிந்த முடிபென்ருன் முன்னும்பின்னு மில்லையென்றன் இடிபோ லுரைத்தானெடி-கிளியே இனியென்ன சொல்வேனடி. 3
அப்படியே யுள்ளதென்றன் ஆரறிவா ரென்முன் ஒப்புவமை காணேனெடி-கிளியே ஒவியம்போ லானேனடி. 4.
நாமறியோ மென்றுசொன்னன் ஞான குரவனெடி சேமமாய் வாழவைத்தான்-கிளியே தீவினைகள் போச்சுதெடி, 5
அண்டபிண்ட மனத்தும் ஒன்ருகக் கண்டேனடி கண்டவெனைக் காணேனெடி-கிளியே காரணமும் போச்சுதெடி. 6
நல்லைநகர் வாசனெடி நாட்டிலவன் திருநாமம் செல்லப்ப னென்றுசொல்வார் - கிளியே தேரடியி லிருப்பானெடி. 7
சொல்லித் துதிக்குந்தொண்டர் சுயநல மற்றவர்கள் அல்லும் பகலுங்காணுர்-கிளியே அவரடியே தஞ்சமெடி. 8
நற்சிந்தனை 277.
தன்னைத் தன்னல் அறிவார் சான்றேர் கலிவிருத்தம்
நம்மிட மெல்லா நலனு முண்டு நம்மிட மெல்லா வுலகமு முண்டு நம்மிட மெல்லாக் கலகமு முண்டு நம்மிட மெம்மைக் காண்பது தொண்டு. I
நம்மிட ம்ென்றுங் கடவு ஞண்டு நம்மிடம் நன்மை தீமை யுண்டு நம்மிடம் பிறப்பு மிறப்பு முண்டு நம்மிடம் நரக மோட்சமு முண்டு.
2
தன்னைத் தன்னல் அறிவார் சான்றேர் தன்னைத் தன்னல் பணிவார் சான்றேர் தன்னைத் தன்னல் பிறிவார் சான்றேர் தன்னைத் தன்னுல் தேடுவார் சான்றேர். 3. கண்ணைக் கண்ணுல் பார்ப்பார் சான்றேர் பண்ணைப் பாடிப் பணிவார் சான்றேர் விண்ணை நோக்கி விழிப்பார் சான் முேர் மண்ணைக் கிண்டி வாழ்வார் சான்றேர். 4
wanymawit
6Ts66T (LOT6óT அன்னைபிதாக் குருவானன் எங்கள் பெருமான் ஆதியந்த மில்லாதான் எங்கள் பெருமான் இருவரோ டொருவரானன் எங்கள் பெருமான் ஈசனனன் அனைவருக்கும் எங்கள் பெருமான் உண்மை முழுதுமென்ருன் எங்கள் பெருமான் ' ஊரும்பேரும் உள்ளானில்லான் எங்கள் பெருமான் எண்ணுக் கடங்காதான் எங்கள் பெருமான் ஏவலாளாய் மண்சுமந்தான் எங்கள் பெருமான் ஐம்பூதமைம் பொறியானன் எங்கள் பெருமான் ஒருபொல்லாப்பு மில்லையென்றன் எங்கள் பெருமான் ஒமென் றுறுதிதந்தான் எங்கள் பெருமான் ஒளவனத்தில் ஆடுகின்ருன் எங்கள் பெருமான் அஃது மிஃதுமானன் எங்கள் பெருமான்
Page 144
278 நற்சிந்தனை சாதனையால் வேதனையைத் தீர்க்கிருேமில்லை
நித்தியம் நாமென்று சொன்னல் நினைக்கிருேமில்லை நீநான் அவனென்று சண்டைபோட்டுக் கொள்ளுகிருேம் பத்தி செய்து வாழவழி தேடுகிருேமில்லைப் பத்தரினத் தோடுநாம் கூடுகிருேமில்லை. l
எத்திசைக்கும் ஈசனென்று எண்ணுகிருேமில்லை இரப்பவர்க்கு ஈயாமல் தேடுகிருேம் ஐயே முத்திக்கு வழிதேட முயல்கிருேமில்லை மூவாசை யாலேமனம் கோணுகிருேம் ஐயே. 2
வித்தார மாகக் கதைபேசிக் கொள்ளுவோம் வீணருடன் கூடி விளையா டுகிருேம் சத்திசிவம் ஒன்ருன தன்மையைக் காணுேம் சாதனையால் வேதனையைத் தீர்க்கிருேமில்லை. 3
குழந்தை யன்போடுநாம் கும்பிடமாட்டோம்
கூக்குரல் போட்டுநாம் கும்பிட்டுக் கொள்ளுவோம் தளர்ந்துபோன அடியவரைத் தாங்குகி ருேமில்லைச் சற்குரு பாதத்தை வணங்குகி ருேமில்லை. 4 .
மதிக்குமதி கொடுப்பவனை மதிக்கிருேமில்லை மண்ணுசை பெண்ணுசையால் மாய்கிருேமையே விதியினை வெல்லவழி காண்கிருேமில்லை விதிவிதி யென்றுசொல்லி விளங்குகிருேமையே. 5
கண்ணுக்குக் கண்ணநாம் காண்கிருேமில்லைக் காதுக்குக் காதுதன்னைக் கருதுகிருேமில்லை உன்னைப்போல் உலகத்தில் விளங்குகிருேமில்லை வேதாந்த சித்தாந்தம் படிக்கிருேமில்லை. 6
அலங்கார மாக ஆடை அணிந்துகொள்ளுவோம்
அங்கு மிங்கும் நாம்திரிந்து அலைகிருேம்
கலங்காத நன்னெறியிற் செல்கிருேமில்லைக் கந்தா முருகா என்று கத்திக்கொள்ளுவோம். 7
நற்சிந்தனை 279:
ஓடிவாடா தொண்டா
ஒடிவாடா தொண்டா ஒடிவாடா
ஒருபொல்லாப்பு மில்லையென்று ஓடிவாடா, 1
தேடிவாடா தொண்டா தேடிவாடா
சிவனடியார் மனங்களிக்கத் தேடிவாடா.
2
பாடிவாடா தொண்டா பாடிவாடா
பரமபதி யொன்றென்று பாடிவாடா, 3.
நாடிவாடா தொண்டா நாடிவாடா
நாங்கள் சிவ மென்றுசொல்லி நாடிவாடா, 4
கூடிவாடா தொண்டா கூடிவாடா
குழந்தைக ளோடுசேர்ந்து கூடிவாடா, 5
சூடிவாடா தொண்டா சூடிவாடா
தூயநீறு சூடிக்கொண்டு ஓடிவாடா. 6
ஆடிவாடா தொண்டா ஆடிவாடா
அஞ்செழுத்தை நாவிற்கொண்டு ஆடிவாடா. 7
சொல்லச் சொல்லச் சுவைக்குமே செல்லப்பன் திருநாமம்
சொல்லச்சொல்லச் சுவைக்குமே செல்லப்பன் திருநாமம் அல்லும் பகலுமற்ற ஆனந்தந் தருமோனம் வெல்லவரும் மாந்தர்தம் வாயடக்குஞ் சிவஞானம் கொல்லவரும் யமனுங் குடியோடிப் போய்விடுவான் கல்லை யுருக்கிவிடுங் கருணைவெள்ளம் பெருகிவிடும் இல்லையென்னுஞ் சொல்லை யில்லாமல் ஆக்கிவிடும். (1)
நல்லூரில் தேரடியில் நாங்கண்ட சிவயோகம் சொல்ல முடியாத சுகத்தினைக் காட்டிவிடும் வில்லை விடத்தையஞ்சா வீரசாந்தம் ஊட்டிவிடும் பல்லைக்காட்டித் திரியாமல் பரலோகங் கூட்டிவிடும் பத்துப்பாட்டுப் படிப்பவருங் கேட்டுச் சுவைப்பவரும்
வித்தக ராகவாழ்ந்து விதேகமுத்தி சேர்வாரே. (2)
Page 145
280 நற்சிந்தனை வேண்டிப் பணிந்திடடி
அவனன்றி யோரணுவும் அசையா தெனும்பெரிய சிவனடியார் தம்மைக்கண்டு-சின்னத்தங்கம் சிவனென்று வணங்கிடடி.
அங்கிங் கெனதபடி யானந்தமாய்க் கூத்தாடும் சங்கரனை நீவணங்கிச்-சின்னத்தங்கம் சந்தேகந் தீர்த்திடடி. 2
அத்து விதப்பொருளை அறிவுக்கறி வானதொன்றைச் சித்தத்தி லேநீவைத்து சின்னத்தங்கம் சிந்தை தெளிந்திடடி. 3
அருவா யுருவாகி யம்பலத்தே கூத்தாடும் குருபரனை நீவாழ்த்திச்-சின்னத்தங்கம் கும்பிட்டுக்கொண் டாடிடுவாய். М 4
அகம்பிர மாஸ்மியென்னும் அரியதிரு மந்திரத்தை அகத்திலே நீசெபித்துச்-சின்னத்தங்கம் ஆறுதலாய் இருந்திடடி. அந்தியுஞ் சந்தியும்நீ ஆசானைச் சிந்தித்து வந்தனை செய் திருந்திடுவாய் சின்னத்தங்கம் மதியிரவி யுள்ளமட்டும். 6
ஆவது மில்லையடி அழிவது மில்லையடி தேவரு மில்லையடி-சின்னத்தங்கம் சிவனே முழுதுமுண்மை. 7
ஆசையை விட்டிடடி அதுவேசிவ பூசையடி காசைக் கருத்தில்வைத்துச்-சின்னத்தங்கம் கவலைநீ கொள்ளாதே.
ஆன்மாவுக் கயலில்லை யப்படியே யுள்ளதடி வீண்வாதம் விட்டிடடி- சின்னத்தங்கம் வேண்டிப் பணிந்திடடி. 9
நற்சிந்தனை 28
அடுக்குமோ வின
இராகம்-நாட்டை தாளம் - ரூபகம்
பல்லவி அடுக்குமோ வினை நம்மைக்-கெடுக்குமோ
அநுபல்லவி ஆன்மா அழியாதென்ன
ஆசான்பால் கேட்டபின். (அடுக்குமோ)
சரணங்கள் அடுத்தடுத்துச் சொல்வதினுல்
ஆம்பயன் ஒன்றுமில்லை அன்பேசிவ மென்றடியார் o
அருள்வாக்கை மறவாதே. (அடுக்குமோ) ஒன்ருே விரண்டோவெனுஞ் சந்தேகந் தனநீக்கி ஓம்சிவாய நமவென
உள்ளத்துட் டெளிந்துகொள். (அடுக்குமோ) தவஞ்செய்யும் யோகநாதன்
சாற்றும்நாட் டையைக்கேட்டு சஞ்சலமில் லாமல்நெஞ்சில்
தானுன தன்னையறி. (அடுக்குமோ)
சிவதொண்டன் நடந்துவரும் சிங்காரம்
பல்லவி
சிங்காரந் தனைப்பாரீர் சிவதொண்டன் நடந்துவரும் (சிங்)
அநுபல்லவி சிங்காரந் தனைப்பாரீர் சீவனே சிவனென்று திங்கள் தோறுஞ்சிவ தொண்டர்கள் வீடுவரும் (சிங்)
சரணம் நற்சிந்த னையெனும் நல்ல மருந்தை யூட்டி நல்லூரான் திருவடியை நாளும் மற வாமலேற்றிக் கற்பனை கடந்தவனைக் காணுமல் கண்டுகொண்டு காலமொரு மூன்றுங் கடவாமல் கடந்துநிற்கும் (சிங்)
Page 146
282 நற்சிந்தனை
சிவனடி
சிவனடியைச் சிந்தை செய்வோமே இந்தச் சீவன் சிவனென்று தெரிந்துகொள் வோமே, I
அவனரு ளாலே யவன்ருள்-நாங்கள் ஆரா தனைசெய்து சீராய்வாழ் வோமே. 2
உவமை கடந்தபே ரின்பம் - எங்கள் உள்ளத்தி லுண்டொரு பொல்லாப்பு மில்லை. 3
சிவனடி யாரொடுங் கூடி -நாங்கள் சிவபுரா ணந்தினம் படித்துவரு வோமே. 4
ஐம்பூதம் நாமல்லக் காணும்-நாங்கள் ஐம்பொறியும் ஐம்புலனும் நாமல்ல அறியும், 5
அந்தக்கரண நாமல்லப் பேணும் - இந்த ஆன்மாவே நாமென் றறிந்திட வேணும். 6
வாழிசிவ னடியார்கள் வாழி-இந்த வையகத்தில் வாழும் உயிரெல்லாம் வாழி. 7
ஆழிசூழ் இலங்கையும் வாழி-எங்கள் அப்பணு மம்மையும் எந்நாளும் வாழி. 8
ஆரறிவார் என்றப்பன் சொல்வான்
ஆரறிவார் என்றப்பன் சொல்வான் -தன்னை அணைந்துவந்த பேர்களையே யாதரித்துக் கொள்வான்.
பாரறியார் இவருடைய தன்மை -பலர் பைத்திய காரனென்று பரிகாசஞ் செய்வார். 2
தேரடியில் எந்நாளும் இருப்பான்-ஆசான் தெருவாலே வருவாரைப் போவாரை வைவான். 3
ஆரடா நீயென்றே யதட்டி-ஆசான் அன்பிலான் போலவே துன்புறுத்தி நிற்பான். 4.
メ
நற்சிந்தனை
அப்படியே யுள்ளதெனச் சொல்லி-ஆசான் அந்தரங்க மாகவே பேசிக்கொண் டிருப்பான். எப்படி யிவன்றன்மை யென்று-எவரும் எண்ண முடியாமல் சும்மா இருப்பான்.
பாவலர் நாவலர்கள் தாமும் -ஆசான் பரிபாஷை யறியாமல் பதறியே போவார். மூவர்களும் ஒன்ருகச் சேர்ந்த-நல்ல மூர்த்த மிதுவென்று முகமலர்ந்து நிற்பார்.
மருந்து கண்டேனே
மருந்து கண்டேனே நல்லூரில் நான்-மருந்து கண்டே மருந்துகண்டேன் மாருப் பிறவியை நீக்கும் மாருத நோயைத் தீர்த்துடல் காக்கும்- மருந்து
கண்டேனே.
அருந்த வர்தம் மோடுற வாக்கும் ஆமில்லை யென்று சொல்லாமற் காக்கும் - மருந்து
கண்டேனே.
திருந்து மடியவ ரோடுற வாக்கும்
கண்டேனே.
குருந்த மரத்தடியில் குருவாக வந்து கும்பிட்ட மாணிக்கற்குத் தீட்சைவைத் தாண்டன
மருந்துகண்டேனே.
அப்பர்க்குச் சமணர்செய் யாபத்துத் தீர்த்து
283
னே
அப்பூதி யடிகள்தம் பிள்ளைக்குயிர் கொடுத்த-மருந்து
கண்டேனே.
மார்க்கண்டற் காக மறலியை யுதைத்து மாயா மருந்தை அவன்றனக் கீந்த-மருந்து
கண்டேனே.
wazuhuippur
5
Page 147
284 நற்கிந்தன
அனைவருக்குந் தெய்வம் ஒன்றே
அனைவருக்குந் தெய்வம் ஒன்றே-அதை அறிந்துலகில் வாழ்வது தொண்டே.
முனைந்துநிற்கும் காமக்குரோதம் போக்கிப்-பின்பு மூவரையுந் தேவரையும் ஏவலாக்கு. 2
நெஞ்சுருகு மடியார்கள் கூட்டம்-இந்த நீணிலத்தில் நன்மையெல்லாங் கூட்டும். 3
வினைப்பகையை வெல்வதற்கு மார்க்கங்-குரு வேந்தன் தந்ததிரு வாக்கு. 4
தினைத்தனைப் போதும்மற வாமல்-சிவத் தியானத்தில் தினந்தினம் மூழ்கு. 5
மனத்துயரை நீக்கநல்ல மருந்து-குரு வாக்கியமொரு பொல்லாப்பு மில்லை. 6
நினைத்தபடி நீணிலத்தில் வாழ்வோம்-நாங்கள் நித்தியரா மென்பதை நாளும்மறவோம். 7
அயலுனக் கில்லையென்று பெரியோர்-சொன்ன அந்தரங்க மறிந்துநீ திரிவாய். 8
முயல முயலவின்பந் தேக்கும்-பொல்லா மூவித ஆசைகளை நீக்கும். 9
சுயநல மடியோடே மடியும்-சுருதி சொன்ன சுவானுபவம் படியும். 10.
warsaawaange
ஆனந்த மாநந்த மானந்தந் தானே அங்கு மிங்கு மெங்கும் நானே
நற்சிந்தனை 285
கணமேனுஞ் சும்மா விருக்குங் கருத்திலார்
மனச்சாட்சி மனச்சாட்சி யென்று மருட்டினர்
தனதாட்சி செய்யத் தலைநி மிர்த்தினர். 1 பணமாட்சி வேணுமென்று பறை யறைகிருர் கணமேனுஞ் சும்மா விருக்குங் கருத்திலார். 2 மனமாட்சி வேணுமென்று மனம் பதைக்கிருர் குணமாட்சி யில்லாமல் தினங்கு ரைக்கிருர், 3.
மனமாட்சி யுள்ளார் போல் தம்மை மதிக்கிருர் இனமாட்சி யுள்ளோமெனத் தம்மைத் துதிக்கிருர் 4 வணக்கம் வணக்கமென்று வாயால் பதிக்கிருர்
இணக்க மறிந்து இணங்க எதிர்க்கிருர், 5 சினத்தை மனத்தில் வைத்துச் சிரிக்கிருர் கனக்கக் கதைத்துத் தம்மை வியக்கிருர் . 6 நனைத்து உலர்ந்த உடையு டுக்கிருர் வினைப்பய னென்று வீணுய்ப் பதைக்கிருர், 7 தினைத்தனைப் போதும்மற வோமெனச் செபிக்கிருர் மனத்துயர் வந்த போது தவிக்கிறர். 8
&sïGalib LSybLD LDUJub பிருதுவியப்புத் தேயுவாயு ஆகாசம் - அவை பிரம மயமென்று பேசுவார் கருமை வெண்மை செம்மையை-அது கலந்து நிற்கும் காரணம் − காமக் குரோதமற்ற பெரியோர்கள்-அவர் கண்டு கொண்டனர் உண்மையை எள்ளுக்குள் எண்ணெய்போல் நிறைந்திடும்-அது எல்லா ரிடத்தும் இருந்திடும் சொல்லும் பொருளுமாய்த் தொடர்ந்திடும்-அது சூக்கும ரூபமாய்ப் படர்ந்திடும் செப்படி வித்தை காட்டிடும் -அது செய்தி யறியாமல் மாட்டிடும் கண்ணுக்குக் கண்ணுய்க் கண்டிடும் - அது காதுக்குக் காதாய்க் கேட்டிடும் காலுக்குக் காலாய் நடந்திடும்- அது கைக்குக் கையாய் எடுத்திடும்.
Page 148
286 `ሩ நற்சிந்தனை இசைந்து வா என்மனமே 1
கண்டொன்று சொல்லாதே கடவு ளொருவன் உண்டென் றுறுதி கொள்ளவா என்மனமே.
அண்டர் முனிவர்நரர் அன்புசெய்யும் பெருமானைக் கண்டு களிக்கக் கருதிவா என்மனமே.
பண்டுசெய்த வல்வினையால் பலபிறவி நாமெடுத்துத் திண்டாட்டப் பட்டோம் சீக்கிரம்வா என் மனமே. எட்டுணையும் தாழ்ச்சியில்லா இறைவன் திருவடியைச்
சுட்டாமற் சுட்டிச் சுகம்பெறவா" என் மனமே.
பட்டுக் குடைபிடித்துப் பரியேறித் திரிவாரை எட்டுணையும் நம்பாமல் என்பின்னே வாமனமே.
விட்டகுறை தொட்டகுறை யிரண்டும்விட் டேகாந்த நட்டணையில்* நிற்க நயந்துவா என்மனமே.
முட்டாத பூசைபண்ணி முழுமணமாய் நாம்வணங்கத் திட்டமிட் டென்பின்னே சேர்ந்துவா என்மனமே.
சிட்டர் பரவுஞ் சிவதொண்டன் நிலையத்தே கிட்டாமற் கிட்டிநிற்கக் கிருபையுடன் வாமனமே.
அட்டாங்க யோகம் அவத்தையைந்தும் விட்டேகி மட்டற்று நிற்க மகிழ்ந்துவா என்மனமே. எட்டாத கொப்பில் இருக்கின்ற தேனமுதை
இட்ட முடன் புசிக்க எட்டிவா என்மனமே.
எட்டும் இரண்டும் இசைந்துவந்த பாமாலை தட்டாமல் நாம்படிக்கத் தாவிவா என்மனமே.
நற்சிந்தனை
இசைந்து வா என்மனமே 11
அல்லும் பகலும் அறிவாக நிற்பவர்க்கு எல்லையில்லா வின்பமுண்டு என்பின்னே வாமனமே.
ஆறுவது சினமென்னும் ஒளவைமொழி கண்டார்க்கு ஆறுதல் வேறுமுண்டோ அதிவிரைவாய் வாமனமே.
இடும்பைக்கு இடும்பை படுப்பார் இடும்பைக்கு இடும்பை படாதவர் என்பின் வாமனமே.
ஈசன் ஒருவனென எண்ணிப் பணிவார்க்குப் பூசைசெய்ய வேண்டுமோ புகலவா என்மனமே.
உண்மை முழுதுமென்னும் உத்தமனைக் கண்டார்க்கு என்னகுறை வுண்டு இசைந்துவா என்மனமே.
ஊக்கத் தைப்போல உறுதுணைவே றுண்டாமோ பூக்கை யிலேந்திப் போற்றவா என்மனமே.
எல்லாஞ் சிவன்செய லென்றேத்திப் பணிவார்க்குப் பொல்லாங்கு முண்டோ புத்தியுடன் வாமனமே.
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்கவென்று தேகம் விழுமுன்னே செப்பவா என்மனமே,
ஐயமிட் டுண்ணென்னும் ஒளவை திருவாக்கே துய்ய வழிகாட்டும் சொல்லக்கேள் என்மனமே.
ஒருபொல்லாப்பு மில்லையெனு முத்தமனர் திருவாக்குத்
தருமநெறி காட்டுஞ் சடுதியில்வா என்மனமே.
ஒம்சிவாய நமவென்று உறுதியுடன் செபித்தால் நாம் சிவமே ஆவோம் நயந்துவா என்மனமே.
Page 149
288 நற்சிந்தனை
ஒளவியம் பேசுதல் ஆக்கத்துக் கழிவென்னும் ஒளவைசொல் நாமறிய அன்புடன் வாமனமே. 12
அஃகமுங் காசுஞ் சிக்கெனத்தே டென்றமொழி அஃகு தலில்லா அறிவுதரும் என்மனமே. 13
இசைந்து வா என்மணமே III
ஒருபொல்லாப்பு மில்லையென்றென் னுள்ளங் குளிரவைத்த குருநாதன், திருவடியைக் கும்பிடவா என்மனமே.
உண்மை முழுதுமென வுறுதி யெனக்களித்த அண்ணலை நான் வணங்க அதிவிரைவாய் வாமனமே. 2
நாமறியோ மென்று நல்லூரிற் சொன்னவனைச் சேம முடன் காணச் சீக்கிரம்வா என்மனமே. 3
அப்படியே யுள்ளதென அடிக்கடியே சொல்லுஞ்செல் லப்பனை யான்காண அதிவிரைவாய் வாமனமே. 4.
ஆரறிவா ரென்றென் னகங்களிக்கத் தேரடியிற் பாரறியச் சொன்னவனைப் பாடவா என்மனமே. 5
தவராச சிங்கத்தைச் சற்குருவை நல்லூரில் எவருமறி யாதவனை யேத்தவா என்மனமே. 6
கந்தைத் துணியணிந்து காமங் குரோதமற்ற எந்தை தனக்காண இசைந்துவா என்மனமே. 7
மந்திர தந்திரமும் மானபி மானமில்லாச் சுந்தரனைக் காணத் தொடர்ந்துவா என்மனமே. 8 பிச்சைக்கே யிச்சித்துப் பித்தனைப் போற்றிரிந்த அச்சமில்லா வாசானை யன் புசெய்ய வாமனமே. 9
ஆருறு தத்துவத்துக் கப்பாலே யுள்ளவனை மாருக் கருணையனை மருவவா என்மனமே. 10
நற்சிந்தனை 289
இசைந்து வா என்மனமே IV
அன்பே சிவமென்ற அடியார் திருவாக்கை இன்பமென்று போற்ற இசைந்துவா என்மனமே. I
ஆரறிவா ரென்னும் ஆசான் திருவாக்கைப் பாரறியச் சொல்லிப் பணியவா என்மனமே. 9.
இதுவதுவென் றெண்ணமல் எல்லாஞ் சிவமயமாய்ப் பொதுவில் நடங்காணப் புகழ்ந்துவா என்மனமே. 3
ஈச ஞெருவனென எண்ணியெண்ணி யேயுருகிப் பூசைசெய்ய வென்பின் புறப்படுவாய் என்மனமே. 4
உன்மத்தன் போல வுலகறிய நல்லூரில் என்னப்பன் வாழ்ந்தவிடம் போகவா என்மனமே. 5
26TCD5lb பேருமில்லா வொருவனே நல்லூரில் சீருடனே வாழ்ந்ததிறம் தெரியவா என்மனமே. 6 எண்ணிப் பணிவார் இடரகற்ற நல்லூரில் கண்ணியமாய் வாழ்ந்த கழல் காணவா என் மனமே. 7 ஏதுமற நில்லென் றெனக்குரைத்த செல்வன்தாள் போதுகொண்டு போற்றப் புறப்படுவாய் என்மனமே, 8
ஐயமெலாந் தீர அன்புடனே நோக்கியென வையகத்தில் வாழவைத்த வரங்காணவா என்மனமே. 9 ஒருபொல்லாப்பு மில்லையென உவந்தெனக்குச் சொன்னகுரு திருவாக்கைக் காணச் சிறந்துவா என்மனமே. 1) ஒடு மிருநிதியும் ஒன்ருகக் காணவைத்த கேடுபடாத் திருவடியைக் கிட்டவா என்மனமே. Il ஒளவியத்தை நீக்கி அகந்தூய்மை யாக்கிவைத்த திவ்விய பாதந் தெரிசிக்கவா என்மனமே. 12 அஃகமுங் காசுந் தேடி யலையாமல்
நஃகுதல் செய்தநல்லான் நண்ணவா என்மனமே. 13
19
Page 150
290 நற்சிந்தனை
எங்கள் நாடு
அன்பர்பணிந் தேத்திநிற்கும் நாடெங்கள் நாடு அறஞ்செய்ய விரும்பென்னும் நாடெங்கள் நாடு ஆதியந்த மில்லாத நாடெங்கள் நாடு ஆறுவது சினமென்னும் நாடெங்கள் நாடு இயல்வது கரவேலென்னும் நாடெங்கள் நாடு இன்பதுன்ப மில்லாத நாடெங்கள் நாடு ஈவது விலக்கேலென்னும் நாடெங்கள் நாடு ஈச ஞெருவனென்னும் நாடெங்கள் நாடு உடையது விளம்பேலென்னும் நாடெங்கள் நாடு உண்மை முழுதுமென்னும் நாடெங்கள் நாடு ஊக்கத்தைக் கைவிடாத நாடெங்கள் நாடு ஒருபொல்லாப்பு மில்லையென்னும் நாடெங்கள் நாடு எண்ணிக்கைக் கடங்காத நாடெங்கள் நாடு ஏவாது பணிசெய்யும் நாடெங்கள் நாடு ஐயமிட் டுண்ணென்னும் நாடெங்கள் நாடு ஐயஞ்சற்று மில்லாத நாடெங்கள் நாடு ஒப்புர வொழுகென்னும் நாடெங்கள் நாடு உத்தமர்கள் வாழ்கின்ற நாடெங்கள் நாடு ஒதுவ தொழியேலென்னும் நாடெங்கள் நாடு ஒருவனே தெய்வமென்னும் நாடெங்கள் நாடு ஒளவிய மில்லாத நாடெங்கள் நாடு ஒளவைசொல் மறவாத நாடெங்கள் நாடு அஃகஞ்சுருக் கேலென்னும் நாடெங்கள் நாடு ஆரறிவார் என்றுசொல்லும் நாடெங்கள் நாடு ஆணவத்தை நீக்குவிக்கும் நாடெங்கள் நாடு. கண்டொன்று சொல்லேலெனனும் நாடெங்கள் நாடு நப்போல் வளையென்னும் நாடெங்கள் நாடு நாங்கள்சிவ மென்றுசொல்லும் நாடெங்கள் நாடு ஞயம்பட வுரையென்னும் நாடெங்கள் நாடு தந்தைதாய் பேனென்னும் நாடெங்கள் நாடு நன்றி மறவேலென்னும் நாடெங்கள் நாடு பருவத்தே பயிர்செய்யென்னும் நாடெங்கள் நாடு மன்றுபறித் துண்ணேலென்னும் நாடெங்கள் நாடு.
நற்சிந்தனை 291 அன்பாய்ப் பணிந்திடடி
வடிவ மிலாதவனே-கிளியே! வடிவ மெடுத்தான்டி
அடிமுடி யில்லையடி-கிளியே! அன்பாய்ப் பணிந்திடடி. I
கடிவது மறந்திடடி-கிளியே! காப்பது விரதமடி மடியும்நாள் வருமுன்னே-கிளியே! மாதவஞ் செய்திடடி. 2
முடியாப் பிறப்பிறப்பைக் கிளியே! முற்றும் அழித்திடடி துடியிடை பாகனடி-கிளியே! சோமசுந்தர சுவாமியடி. 3
கொடிய வசுரர்புரங்-கிளியே! கோபித் தெரித்தான்டி படியில் மனிதனுகக்-கிளியே! பரிவுடன் வந்தான்டி. 4.
வடிவுடை வணிகளுகக்-கிளியே! மதுரையில் வந்தான்டி கொடியிடை பாகனடி-கிளியே! கொண்டாட நல்லதடி. 5
விடியுமுன் எழுந்திடடி-கிளியே! விமலனப் போற்றிடடி பொடியணி மேனியனைக்- கிளியே!
புகழ்ந்துநீ பாடிடடி. 6
Page 151
292
நற்சிந்தனை
ஓம்சிவாய நமவெனத் துதிப்போம்
ஒம்சிவாய நமவெனத் துதிப்போம் நாம்சிவ மென்றுநெஞ்சில் பதிப்போம் l
வீம்பிடும்பை யகங்காரம் விடுவோம் போம்வினை யென்றுசொல்லித் தடுப்போம் 2
ஐம்பொறி வழிசெல்லாமல் தடுப்போம் ஐம்பூதம்நா மல்லவென்று தொடுப்போம் 3
வெம்பகை விளையாமல் மடுப்போம்
நம்பொருள் சிவமெனப் படிப்போம் 4
தும்பிமுகன் அடிக்கீழ்ப் படுப்போம் அம்மையப்பன் பாதத்தில் கிடப்போம் 5
ஆறுவது சினமென நடிப்போம்
நாறுமுடல் நா மல்லவென்று முடிப்போம் 6
தேறித் தெளிந்தவரை அடுப்போம்
ஊறிவரும் அமுதத்தை உண்போம் 7
வாழ்கசிவ தொண்டனெனக் களிப்போம்
ஊழ்வினையை முற்ருக அழிப்போம். 8
ஆசான் வாசகம்
ஆசிரியத் தாழிசை
முழுவது முண்மை யெனமுன் சொன்ன பழுதில் வாக்கியம் பரகதி காட்டும் தொழுது வணங்கிச் சுகமாய் வாழுதி. I அப்படி யுள்ளதென் ருசான் சொன்ன ஒப்பில் வாக்குநல் லுணர்வை யளிக்குங் கைப்போது தூவி எப்போதும் வாழுதி. 2
நற்சிந்தனை 293
வெண்செந்துறை
ஆரறிவா ரென்ற ஆசான் வாசகம் பேரறி வைத்தரும் பேணி வாழு தி.
நாமறியோ மென்ற நலந்திகழ் வாக்குச் சேம மளித்துச் சிவகதி யாக்குமே தாமத மின்றிச் சார்ந்து வாழுதி. 4 முடிந்த முடிபென்னும் முனிவன் வாக்கு படிந்த மனத்தில் பரகதி காட்டும் விடிந்ததும் மலரிட்டு விரும்பி வாழுதி. 5
ஆசான் மலரடி மறவா அடியவன் பேசுஞ் செந்தமிழ் பிறவிநீக் கும்மே. 6
நாம் எங்கே நாதன் எங்கே
பல்லவி
ஆதார வாதேயம் முழுதுமான அப்பனுக்குப் பாதார விந்தமெங்கே பார்த்துப் பணிவதெங்கே.
அநுபல்லவி பூதாதி ஐந்துமவன் பொறிபுலன்க ளெல்லாமவன் தாதாவும் பெற்றெடுத்த தாய்தந்தை தானுமவன் (ஆதா)
சரணங்கள்
தாம் தீமி திமிதீமி ததிங்கிணதோ மென்று தானேதா னய்நின்று சலிப்பற நடஞ்செய்யும் (ஆதா)
வாளுளை வீணுகக் கழியாதே என்றுசொல்வார் நானுரோ இதைக்கேட்டு நாமெங்கே நாதனெங்கே.
(ஆதா)
தேனரும் நல்லூரில் சீவன்முத்த ஞய்வாழ்ந்த கோனுகுஞ் செல்லப்பனைக் கும்பிடும் மாணுக்கன். (ஆதா)
Page 152
294 நற்சிந்தனை
எக்காலம் 1
அல்லும் பகலும் அப்பன் திருவடியைச் சொல்லாமற் சொல்லிச் சுகம்பெறுவ தெக்காலம் (II)
நில்லா வுலகையும் நிலையென வெண்ணிமனஞ் செல்லாமல் திருவடியைச் சிந்திப்ப தெக்காலம் (2)
காண்பான் காட்சியுங் காட்சிப் பொருளுமற்றுத் தூண்போ லிருந்து சுகம்பெறுவ தெக்காலம் . (3)
பொன்னுசை மண்ணுசை பெண்ணு சையைநீக்கிப் பொன்னர் திருவடியைப் போற்றுவது மெக்காலம் (4)
வேதாந்தம் பேசி வீண் காலம் போக்காமல்
நாதாந்த மோனநிலை நண்ணுவது மெக்காலம் (5) எள்ளுக்கு ளெண்ணெய்போ லெங்கும் நிறைந்தவனைத் தெள்ளுதமிழ் பாடிச் சேவிப்ப தெக்காலம் (6)
ஆருறு தத்துவத்துக் கப்பாலா யிப்பாலாய் வேரு யுடனய் நினைப்பதுவு மெக்காலம் (7) நினைவுக்கு நினைவாய் நிலைத்திருக்கும் மெய்ப்பொருளை அனைத்துக்குங் காரணனை யறிவதுவு மெக்காலம் (8)
முனைத்துவரும் மூர்க்கக் குணமெல்லாம் நீக்கித் தினைத்தனையும் மறவாமல் சேவிப்ப தெக்காலம் (9)
பத்தும் படிப்போர்கள் கேட்போர்க ளெல்லாரும் வித்தகன்றன் திருவடியை விரவிநிற்பர் நிச்சயமே. (10)
III
அன்பு சிவமென்ற ஆன்ருேர் திருவாக்கை இன்பமுடன் போற்றி யிருப்பதுவு மெக்காலம்.
ஆதியந்த மில்லாத ஆன்மாவே நாமென்ற சேதி யறிந்து தெரிவிப்ப தெக்காலம். 2
நற்சிந்தனை 295
இம்மையிலும் மறுமையிலு மெம்மைவிட்டு நீங்காத செம்மலர்த் தாள்கண்டு சீவிப்ப தெக்காலம். 3
ஈசன் திருவடியை யென்றும் மறவாமல் வாச மலர்கொண்டு வணங்குவது மெக்காலம். 4
உருகி யுருகி உணர்வழிந்து நின்று பெருகி வருமமிழ்தைப் பருகுவது மெக்காலம். 5
வளரும் பேருமில்லா ஒருவன் திருவடியை நீரும் பூவும்போட்டு நெக்குநிற்ப தெக்காலம். 6
எல்லா வுயிரினும் நில்லாமல் நிற்பவனை நினைந்து நினைந்துருகி நிற்பதுவு மெக்காலம். 7
ஏக னநேக னரிறைவனடி வாழ்கவெனும் மோக மறுக்குமொழி கண்டுய்வ தெக்காலம். 8
ஐந்து புலன்வென்ற ஆன்ருேர் திருவடிக்கீழ் நைந்துருகி நின்று நயம்பெறுவ தெக்காலம். 9
ஒன்றென் றிருதெய்வம் உண்டென் றிருவென்று அன்றுசொன்ன பட்டினத்தா ரடிபணிவ தெக்காலம். 10
ஒமெனு மெழுத்தினுள்ளே ஒளியதாய் விளங்குகின்ற சோமசுந் தரத்தின் அடிதொழுவ தெக்காலம். II
அரியதி லரியது ஆன்மா வதுதான் பெரியதிற் பெரியது சிறியதிற் சிறியது பிரிவறி யாதது பேதாபேத மற்றது குறியுங் குணமு முள்ள தற்றது நெறிவழி வழாதது நிரஞ்சன மானது துரியா தீதத்தில் தூங்காமல் தூங்குவது.
Page 153
296 நற்சிந்தனை
தன்மை முன்னிலை படர்க்கை அற்றவன் * -
தன்மை முன்னிலை படர்க்கை யற்றவன்
தன்னை யுணர்ந்தவச் சற்குரு வாமே (I) பின்னைப் பிறப்பிறப் பவனுக் கில்லை முன்னை வினையின் முடிச்சவிழ்த் தானே (2) அன்னை பிதாகுரு தெய்வம் அவனே
அவனை வணங்கினர் அருந்தவத் தோரே (3) பூதங்க ளில்லைப் பொறிபுல னில்லை
வேதங்க ளில்லை விளங்குசாத் திரமில்லை (4)
சந்திரனில்லைச் சூரியனில்லை தாரகா கணங்களில்லை இந்திரன்முதலிய தேவருமில்லை இருடிக ணங்களுமில்லை (5) வாசித்துக் காணுெணுதபொருள், வாய்விட்டுச்
சொல்லொணுதபொருள் மாயத்துக்கு அப்பாலுள்ளது மாதவர்க் கெட்டொனது. (6)
8px; wrthwwwwwww.
எந்நாளோ
ஒருபொல்லாப்பு மில்லையென வுரைத்த குருநாதன் திருவடியைச் சேவிக்கு மருள்பெறுவ தெந்நாளோ உண்மை முழுதுமென வோதுந் திருவாக்கு என்னை விழுங்கி யிருப்பதுவு மெந்நாளோ ஆரறி வாரென்று அடிக்கடியே சொல்லும் சீரறிந்து வாழும் செயலறிவ தெந்நாளோ அப்படியே யுள்ளதென அடிக்கடியே பேசும் அப்பனைக் காணும் அருள்பெறுவ தெந்நாளோ முடிந்த முடிபென்று முகமலர்ந்து சொன்னவன்றன் அடிபணிந்து நிற்குநாள் இந்நாளோ எந்நாளோ சீராரும் நல்லூர்த் தேரடியிலே யிருக்குங் காராரும் மேனியனைக் காணும்நாள் எந்நாளோ பித்தனென எல்லோரும் பேசுவதைக் கேட்டிருந்தும் சித்தங்கலங் காதவனைச் சிந்திப்ப தெந்நாளோ
நற்சிந்தனை 297
இலங்கைவாழ் தெய்வம்
எல்லாஞ்செய வல்லதெய்வம் எல்லார்க்குந் தெய்வம்
இதையறிந்து வாழுவார் எல்லாருந் தெய்வம் நில்லாத நீர்சடைமேல் நிற்கவைத்த தெய்வம்
நிலமேழுந் தாண்டிநின்ற நின்மலஞ்சேர் தெய்வம் கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காணுத காட்சியெல்லாங் காட்டுகின்ற தெய்வம் செல்லாரும் மலைசூழு மிலங்கைவாழ் தெய்வம்
சிவனென்ற நாமமுள்ள தெய்வமிதே தெய்வம். 1
இருநிலன யிரவிமதி யாகிநிற்குந் தெய்வம்
இன்னதன்மை யென்றெவரும் சொல்லவொண்ணுத்
தெய்வம் கருவிகர ணங்களெல்லாங் கலந்துநிற்குந் தெய்வம்
காவலனுய் மதுரைநகர் ஆண்டுகொண்ட தெய்வம் ஒருவணு யுலகேத்த ஓங்கிநின்ற தெய்வம்
உத்தமிக்குக் கூலியாளாய் மண்சுமந்த தெய்வம் திருவரைசேர் இலங்கைநகர் வாழுகின்ற தெய்வம்
சிவனென்ற நாமமுள்ள தெய்வமிதே தெய்வம். 2
பண்டயனும் மாலுமடி பரவவருள் தெய்வம்
பரியெல்லாம் நரியாகப் பணித்தபர தெய்வம் மண்டலத்தி லுயிரெல்லாம் வணங்கவருள் தெய்வம்
மருவியென் சிந்தையிலே புகுந்துறையுந் தெய்வம் கண்டெவரும் சொல்லவொணுக் கதிசேருந் தெய்வம்
காதலிக்கும் மெய்யடியார்க் கருள்செய்யுந் தெய்வம் தண்டரளம் விளங்கிலங்கை நகர்வாழுந் தெய்வம்
தானுக விருக்கின்ற தெய்வமிதே தெய்வம். 3
Page 154
298 நற்சிந்தனை நில்லடா நிலையிலென்று சொல்லுது
ஒம்நாம் நாமென்று ஒலிக்குது
ஞாதுருஞானம் போயோடி ஒளிக்குது I நமக்குநாமே துணையென்று விழிக்குது நாதாந்த முடியிலேறிக் குளிக்குது 2
வேதாந்தசித்தாந்தஞ் சமமென்று களிக்குது
மாதாபிதாவை மறவாதிருக்க மதிக்குது 3 மூதாதைமார் சொல்நெஞ்சில் மதிக்குது சூதான வார்த்தைதன்னைத் தொலைக்குது 4 நில்லடா நிலையிலென்று சொல்லுது நீயேநான் என்றுசொல்லி வெல்லுது 5 உல்லாச மாயெங்குஞ் செல்லுது - உண்மை முழுதுமென்று சொல்லுது 6 நல்லூரில் செல்லப்பன் என்னப்பன் நானவரைக் கேட்கும் விண்ணப்பம் 7
mrrassemwimb
6L6ìồIIằ 5ff6üIIffijff
தலையை நிலத்தில் நிறுத்திப் பார்த்தா லிறைவனுவீரோ காலை மேலே யேற்றிப் பார்த்தால் கடவுளைக்காண்பீரோ. 1 மலைமே லேறி மவுனஞ் செய்தால் மகாதேவனைக்
காண்பீரோ சிலைபோ லிருந்து சிந்தித்துப் பார்த்தால் தேவனைக்
காண்பீரோ, 2
கலைகள் பலவுங் கற்றுவிட்டால் கங்கா தரனைக் காண்பீரோ விலைக்குப் புத்தகம் வேண்டிப் படித்தால் விமலனைக்
காண்பீரோ. 3. பாலைக் குடித்துப் பட்டினி கிடந்தால் பரமனைக் காண்பீரோ வேலைசெய் யாமல் வீதியில் திரிந்தால் வேந்தனைக்
காண்பீரோ. 4 மூலையி லிருந்து முணுமுணுத்தால் முதல்வனைக்
காண்பீரோ சாலப் பசிக்கொரு போது புசித்தால் சாமியாவிரோ. 5
நற்சிந்தனை
ஆசான் அருளால் ஆசான் ஆயினேன்
சிவதொண்டு செய்வார் தீநெறிச் செல்லார் சிவதொண்டு செய்வார் புலனைந்தும் வெல்வார்
சிவதொண்டு செய்வார் பிறன்பொருள் வெஃகார்
சிவதொண்டு செய்வார் சிவமே யாவர்.
ஆதியு மந்தமும் அரனர்க் கில்லை ஆதியு மந்தமும் ஆன்மாவுக் கில்லை சாதி சமயமுஞ் சற்குரவர்க் கில்லை ஒதி யுணர்ந்தா னுரைத்தான் நல்லூரில் .
அருளா லறிந்தேன் ஐம்பூதத் தியக்கம் அருளா லறிந்தேன் ஐம்பொறி மயக்கம் அருளா லறிந்தேன் ஐம்புலன் தயக்கம் அருளா லறிந்தேன் ஆன்ம வியப்பே.
சிவமே தாமெனச் சிந்திப்பார் பெரியோர் சிவமே வேருகச் சிந்திப்பர் சிறியோர் தவநெறி நிற்பின் தன்னை யறியலாம் அவநெறி நிற்பின் பின்ன முறலாம்.
ஆசா னருளால் அகந்தை யழிந்தது ஆசா னருளால் அருண்மழை பொழிந்தது ஆசா னருளால் ஆனந்தம் விளைந்தது ஆசா னருளால் ஆசா னயினேன்.
சிவத்தை மறைத்தது தீநெறிச் சேறல் சிவத்துள் மறைந்தது தீநெறிச் சேறல் அவத்தை யைந்தும் அருளை மறைத்தன அவத்தை யைந்தும் அருளால் மறைந்தன.
299
Page 155
300 ۔۔۔۔ நற்சிந்தனை
ஒருவனே தெய்வமென்னும் உண்மையைக் கண்டோம்
ஒருவனே தெய்வமென்னும் உண்மையைக்
கண்டோம் -இந்த உலகமெல்லாம் நமக்குற வாகவே கொண்டோம் தரும நெறிசற்றும் பிசக மாட்டோம் தாய்தந்தை சொல்லையினித் தட்ட மாட்டோம் வருவதையும் போவதையும் எண்ண மாட்டோம் வாணுளில் ஆசையைப் பேண மாட்டோம் சாந்தம் பொறுமை யென்னும் பணியணிவோம் சற்குரு பாதத்தை இனிம றவோம் வேந்தர் விதியையொரு காலத்துந் தட்டோம் வீணிலே காலத்தைக் கழிக்க மாட்டோம் அச்சமொடு கோபத்தை யகற்றி விட்டோம் ஆருக்கு மினிநாம் ஆட்பட மாட்டோம் பொய்ச்சமய நெறிசொல்லும் போதனை கேளோம் எச்சமயத் தோரையும் ஏளனஞ் செய்யோம் பஞ்சப் புலன்வழியிற் செல்ல மாட்டோம் பழியோடு பாவத்தைக் கொள்ள மாட்டோம் மந்திரங் கற்போம்வினைத் தந்திரங் கற்போம் மனத்தைக் கொல்வோம் பொல்லாச் சினத்தை
வெல்வோம் உழுதுண்ணு வோமினிப் பழுதெண் ணிடோம் ஊரெங்குஞ் செல்லுவோம் நல்ல வேதங்கள்
சொல்லுவோம் வான மளப்போம் இந்த மண்ணையளப்போம் சிவஞான முவப்போந் திரிகால முணர்வோம் தானங் கொடுப்போம் பொல்லா ஈனம் விடுப்போம் சகல சமயத்துக்குஞ் சம்மதங் கொடுப்போம்.
நற்சிந்தனை - 301
ஊக்க முள்ளவர் ஏக்க முற்றிடார்
அந்தியுஞ் சந்தியும் ஆசான் திருவடி சிந்தை செய்பவர் சீவன் முத்தரே. I
ஆன்மா நித்தியம் என்று அறிந்தவர் அங்கு மிங்கு மாய லைந்திடார். 2
இல்லை யுண்டென எடுத்துச் சொல்லொணு இறைவ னிதயத்தில் என்று முள்ளவன். 3
ஈசன் திருவடி யென்றும் ஏத்துவார் இறந்து பிறந்திடார் இவர்கள் முத்தரே 4 உலகமே கோயிலாய் உணர்ந்து கொண்டவர் உண்மை முழுவதும் என்று காண்பரே 5
ஊக்க முள்ளவர் ஏக்க முற்றிடார்
உதய பானுபோல் உலகில் வாழ்வரே. 6
எல்லாஞ் சிவமயம் என்று கண்டவர் எங்கு இருப்பிலென் என்ன செய்யிலென் . 7
ஏக மாகிய இறைவன் பாதத்தை எண்ணு வார்தினம் நண்ணு வாரவர். 8
ஐயப் பாடின்றி யகத்தது உணர்பவர் ஆப்தர் வாக்கியம் என்று கூறுவார். 9
ஒருபொல் லாப்பு மில்லை யென்றவர் உயர்ந்த நல்லூர் இருந்த மாதவர். 10
ത്തങ്ങ,
அடியா ருள்ளக் கமலத்தே யணையா தெரியும்
t ரு 5 زھوقا த ணிேவிளக்கே முடியா முதலே முக்கண்ணு மூவர் போற்றும் முழுமுதலே முடியாப் பிறவிக் கடலிடத்தே மூழ்கா தென்ன
யாண்டுகொள்வாய் அடியே னுன்றன் குடியன்ருே அரசே யுனக்கே
யடைக்கலமே.
Page 156
302 நற்சிந்தனை
5TGITC I
(உயிர் வருக்கக் கோவை)
அரியும் பிரமாவும் அடிமுடியுந் தேடித் ሶ தெரிவரி தாய்நின்ற தெய்வமே கண்வளராய். I
ஆராயும் வேதமுதல் ஆகமங்கள் தாமறியாப் பேரா யிரமுடைய பெம்மானே கண்வளராய். 2
இரவும் பகலுமுன்னை ஏத்தித்துதிப் போர்க்குவரந் தரவல்ல தெய்வமே சங்கரனே கண்வளராய். ".. 3
ஈசனே எவ்வுயிர்க்கு முயிராய் விளங்குகின்ற தேசனே செல்வக் கொழுந்தேநீ கண்வளராய். 4 உன்னையல்லால் வேறுதெய்வ முள்ளத்திற் கொள்ளாத பொன்னப் பனைக்காக்கும் பூரணனே கண்வளராய். 5
ஊரும் பேருமில்லா வுத்தமனே சிவனடியார்
சாருந் தவக்கொழுந்தே சம்புவே கண்வளராய். 6
எல்லைசொல்ல வல்லார் எவருமில்லா மெய்ப்பொருளே அல்லலெல்லாம் நீக்கும் அரனே நீ கண்வளராய். 7
-. ܇ ܐܸܐܹܵ
ஏழைக்காய் வந்திரங்கி எழில்வைகை யாறடைத்த தாளைமற வாமலருள் தந்தவனே கண்வளராய். 8
ஐயனே யாரூரில் ஆரூரன் தனையாண்ட r. தெய்வமே சிந்தா மணியேநீ கண்வளராய். 9
ஒன்பதுவாய்த் தோற்பைக்கு ளுயிரடங்கி நிற்கும்வண்ணம் அன்புசெய்த வண்ணலே ஆருயிரே கண்வளராய். 10 ஓம்சிவாய நமவென்று ஒதுகின்ற அன்பருக்கு ஆம்என் றுறுதிதந்த அத்தனே கண்வளராய், 11 ஒளவியம் G81 18FIT அறிவுதந்த ஆண்டவனே
நவ்வி மழுவேந்தும் நாயகமே கண்வளராய். 12
நற்சிந்தனை
அஃகுக லில்லா அறிவுடைய அன்பரகம் வெஃகுத லில்லா விமலனே கண்வளராய்.
பன்ெ மூன்று பாடல்களும் படிப்போருங் கேட்போரும்
க'யுண்மை யுடன்வாழ வுறுதிசெய்வோய்
303
13
கண்வளராய், 14
gösT6IVTLIGB II
Grா ரிலங்கைநகர் சிறக்கவந்த செல்வமே பேரார் பிறைசூடும் பெருமானே கண்வளராய்.
ஆராயும் வேதம் அறியாத மெய்ப்பொருளே பேராயி ரம்படைத்த பெம்மானே கண்வளராய்.
ஆருத காதல்சேர் அடியார் அகத்தூறும் மாருத வின்பமே மகாதேவனே கண்வளராய்.
நீmர் திருமேனி நிமலா வுனையல்லால் வேழுர் துணைசொல் விமலனே கண்வளராய்.
என்ன ருயிரே எனக்கினிய மெய்ப்பொருளே பின்னர் துணையாவார் பெருமானே கண்வளராய்.
அக்கைநிலை யாதெனவே யறிந்து பிரிந்திருந்த நீக்கமற்ற அன்பர் நிறைவேநீ கண்வளராய்.
ாங்கெங்கே பார்த்தாலும் எல்லாம்நீ யென்றுகண்ட துங்க வடியார்தந் துணைவனே கண்வளராய்,
வித்தத்தி லூறுந் தெவிட்டாத தெள்ளமுதே அத்தனே யாருயிரே ஆண்டவனே கண்வளராய்.
மத்தம் மதிசூடி மழவிடையின் மீதேறி எத்திசையுஞ் செல்லும் இறைவனே கண்வளராய்.
கருத்திற் கருத்தேயென் கண்ணுக் கினியவனே நிருத்தமிடுஞ் சோதியே நின்மலனே கண்வளராய்.
10
Page 157
364 நற்சிந்தனை
வருத்தமற்ற மெய்யடியார் மனத்திற் குடியிருக்கும் ஒருத்தனே புன்னையன்றி உண்டோநீ கண்வளராய். 11
காமக் கடல்கடந்து காட்சிபெற்ற நல்லடியார் சேம நிதியே சிவனே நீ கண்வளராய். 12
அன்பிற் குழைந்து குழைந்தையா வெனவரற்றும் அன்பர்க் குகந்த அரசேநீ கண்வளராய். 13
மண்ணுதி பூதமெல்லாம் வகித்த வுனையன்றி எண்ணவே றுண்டோ இறைவனே கண்வளராய். 14
ஆதார மாறு மகன்ற பழம்பொருளே பேருன செல்வப் பிரானே நீ கண்வளராய். 15
எட்டுத் திசையுமற் றெள்விடத்தும் நின்னையன்றிச் சுட்டவே றுண்டோ சுவாமிநீ கண்வளராய். 16
அந்திசந்தி யுன்னடியை வந்திக்கும் மெய்யடியார் சிந்தனையி லூற்றே செழுஞ்சுடர்நீ கண்வளராய். 17
குற்றமெல்லாம் போக்கிக் குணமாக்கி யெனையாண்ட தற்பரனே யென்குருவே சாமிநீ கண்வளராய். 1 8
ஆருக் கவலையெல்லாம் நீருக்கி யடிமையெனப் பேருக்கி வைப்பாய் பிரானேநீ கண்வளராய். 19
உள்ளத் தினுள்ளே யொளிருஞ் சிவக்கொழுந்தைக் கள்ள மனத்தவருங் காண்பரோ பராபரமே.
எல்லாஞ் சிவன்செயலென் றெண்ணுத மாந்தருக்கு உல்லாச மானகுணம் வருமோ பராபரமே.
நற்சிந்தனை V− 305 உண்மை முழுது மறிந்திடெடா
ஒருபொல் லாப்பு மில்லையெடா தம்பி உண்மை முழுது மறிந்திடெடா வருவது வந்து போகட்டுஞ் சாட்சியாய் வையகத்தில் நீ வாழுவாய் மாட்சியாய்.
சர்வம் பிரம மயமெடா தம்பி சந்தேக மில்லை நம்புநீதம்பி மர்ம மிதுபெரும் மர்மமெடா மகத்துக்கள் கண்ட மர்மமெடா. 2
அப்படியே யுள்ள பொருளெடா தம்பி ஆசையை நீக்கி யறிவாய்நீ நம்பி ஒப்புவமையு மில்லாப் பொருளெடா உள்ளும் புறம்பு முள்ளதெடா. 3
எல்லாச் சமயமுஞ் சொல்லுமெடா தம்பி ஏத்தி ஏத்தி வணங்கிடெடா உல்லாச மாகத் திரிந்திடெடா தம்பி ஒம்சிவாய நமவென் ருேதெடா. 4.
குணங்க டந்தது குணத்தில் கிடந்தது கும்பிட்டுக் கொண்டாடிப் போற்றிடெடா கணப்பொ முதும்மற வாதே தம்பி காமக் குரோதத்தை நீக்கிடெடா, 5
கூறும் நாமுதல் எல்லா மதுவெடா கூர்ந்து பார்த்துக் கும்பிடெடா ஆறுமுகமும் ஐந்து முகமும் ஐம்பெரும் பூதமும் அதன்வடிவே. 6
நல்லூரில் வாசன் செல்லப்பன் சொல்லை
எல்லோருங் கேட்டு மகிழ்ந்திடுவீர்
பொல்லாப்பு மிங்கில்லைப் புதுமையு மிங்கில்லைப்
பூரண சுதந்திரம் எம்மிடமே. 7
20 /
Page 158
306 w நற்சிந்தனை
திருவடி துணை
கண்ணபிரானுங் காணுக் கழலிணை என்றும் எந்துணை ஒம் விண்ணும் மண்ணும் ஒன்ருய்நின்ற மெய்யடி எந்துணை ஒம் எண்ணு மெண்ண மெல்லா மறியு மிணையடி
-- எந்துணை ஓம் நண்ணு மடியார் நாவில் நிற்கும் நல்லடி எந்துணை ஒம். 1 பண்டுமின்றும் என்றுமுள்ள பரனடி எந்துணை ஒம் மண்டுபேயோ டாடும்மலரடி என்றும் எந்துணை ஒம் நன்றுந்தீதுந் தான காத நல்லடி எந்துணை ஒம் மன்றுளாடும் மலரடி யிணைகள் என்றும் எந்துணை ஒம். 2
அந்த மாதி யில்லா வடியிணை என்றும் எந்துணை ஒம் வந்த கால னுயிரை வாங்கிய மலரடி எந்துணை ஒம் பந்த பாசம் நீக்கி யாண்ட பரனடி எந்துணை ஒம் தந்தை தாயாய் நின்ற தாளிணை என்றும் எந்துணை ஒம். 3
நினைக்கு மடியரை உருக்கு மடியிணை என்றும் எந்துணை ஒம் சினத்த காலனைச் செறுக்கு மடியிணை என்றும்
எந்துணை ஒம் தனத்த தனதன தாண்டவத் தாளிணை என்றும்
எந்துணை ஒம் அனைத்துந் தான யாடிய அடியிணை என்றும்
4 .எந்துணை ஒம் ܗܝ
--- சிவனடி துண
ஓம் சிவசிவ சிவனடி துணைஒம் ஓம் சிவசிவ கணபதி துணைஒம் ஓம் சிவசிவ சிவகுரு துணைஒம் ஓம் சிவசிவ அடியார் துணைஒம்,
அரகர சிவசிவ ஆடும் அடிதுணைஒம் சுரர்நரர் துதிசெய் தூய அடிதுணைஒம் பரவும் அடியார் பாடும் அடிதுணைஒம் கரவுடை நெஞ்சினர் காணுக் கழல்துணைஒம்
நற்சிந்தனை 367
தில்லையம்பலத் தாடுஞ் சேவடி துண்ைஒம் எல்லையில் லாவருள் அருளிய அடிதுணைஒம் வல்லை வந்தெனை ஆண்டவன் அடிதுணைஒம் கல்லை நேர்மனங் கரைத்த வனடி துணைஒம்
அம்மை யப்பன் அழகிய அடிதுணைஒம் இம்மைநற் பயன்தரு மீச னடிதுணைஒம் செம்மை சேர்சிவன் திருவடி துணைஒம் எம்மை யாண்ட எங்கோன் அடிதுணைஒம்
தேசம் புகழுஞ் சிவன்திரு வடிதுணைஒம் வாசம் மருவும் மலரடி எந்துணைஒம் பாசம் அகலும் பரன்திரு வடிதுணைஒம் ஈச னெந்தை எம்பிரா னடிதுணைஒம்.
" ஓம் நமோ நாராயணு " இராகம்-மத்தியமாவதி தாளம்-ஆதி
பல்லவி
ஓம் நமோ நாராயணு உத்த மனே பூரீராமா அநுபல்லவி நாம் வேருே நீ வேருே நல்ல வாக்குத் தாராயோ. (ஒம்)
சரணங்கள் ஏங்குவதே நாமையா எழில்சேரும் ராமையா தாங்குவா யினிராமச் சந்திரனே தருணமிது. (ஒம்) அசோதைகுல பாலனே யசுரர்குல காலனே தசாவ தாரனே தமியேனுக் காதரவே. (ஓம்)
எந்தவே ளையுமுன்னை ஏத்திநீநா னேயென்று சிந்திக்கவரந் தாராய் சீமானே பூரீராமா. (ஒம்)
Page 159
308 நற்சிந்தனை எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவான் ஈசன்
அன்னை பிதாக்குரு தெய்வந் தன்னை அறிந் தேனடி-தங்கமே
சற்குருவி னருளாலே
தானதாம் தானதாம் தனதாம் தனதாம். 1.
ஆரறி வாரென்று சொல்லும் பேரறிவைக் கண்டேனடி-தங்கமே பேசாதேவாய் நேசமாய்நில் ஆசாபாச மனைத்தையும்வெல், 2
இம்மையிலும் மறுமையிலும் எம்மைவிட்டு நீங்கானடி -தங்கமே இறப்புப் பிறப்பில்லையடி ஏத்தியேத்தித் தோத்திரஞ்செய் சூத்திரத்தைக் கண்டுதொழு. 3.
ஈயாத புல்லரை நீ ん வாயாரப் பாடாதே -தங்கே
வாணுளைநீ பேணுதே நாணுதேமனங் கோணுதே காணுதேபணம் பேணுதே. 4.
. உண்மை முழுதுமென்ற
கண்ணைத் திறந்துவிடு-தங்கமே காட்சியைவிடு சூட்சியைத்தொடு சாட்சியையடு மாட்சிமைப்படு. - 5
ஊனயுயிராய்க் கலந்த கோனரைநீ கொண்டாடு-தங்கமே
கூவிக்கூவி யழைத்திடுவாய் கும்பிட்டுக்கொள் நம்பிக்கைவை
கூடாதகூட்டங் கூடாதே. - V− 6
நற்சிந்தனை 309
எண்ணுவார் நெஞ்சிலீசன் நண்ணுவான் நீயறிந்துகொள்-தங்கமே நானுமில்லை நீயுமில்லை நாடிக்கொள் தேடிக்கொள் கூடிக்கூடிப் பாடிக்கொள். 7
ஏகன நேகனென்று மோகமறச் சொன்னசொல்லைத்-தங்கமே மொழியாமல் மொழிந்துகொள் மூட்டிக்கொள் அங்கி
கூட்டிக்கொள் அருள். ん 8
ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறிநீ யல்லையடி-தங்கமே அந்திசந்தி கும்பிடடி ஆதாரமவன் ஆதேயமவன் நிராதாரமாய் ஆராதனைசெய். 9
ஒன்றிரண்டென் றெண்ணுதே நன்றுதீதென்று நாடாதே-தங்கமே நாதாந்தமென்று நாடிடடி நந்தாவிளக்கது சிந்தாமணி நொந்தாரைவந்து ஆதரிக்கும். 10
-ஒவியம்போ லிருந்திடடி
பாவியென்றநாமம் படையாதே-தங்கமே * சேவித்துச்சீவன் முத்தியடைந்திடு
சிந்தித்திடுதினம் வந்தித்திடு பந்தபாசம் வெந்துவிடும். m 1
ஒளவியநெஞ்சம் படையாதே திவ்வியமாக வாழ்ந்திடடி-தங்கமே அக்குமாலை யணிந்திடடி அஞ்சாதேசென்று கெஞ்சாதே அஞ்செழுத்தைநெஞ்சிற் கொஞ்சிடடி. 12
Page 160
3 10 °
நற்சிந்தனை
கண்டேன்
நில்லாத நீர்சடைமேல் வைத்த நிமலனை நினைக்கு மடியவர் மனங்கோயில் கொண்டானை 1
எல்லாமு மல்லவு மாயிருப் பானை என்ன ரமுதினை எளிவந்த பிரான 2
கொல்லானை யின்னுரி போர்த்துகந் தானக் கூடலிற் பரியெல்லாம் நரியாக்கி னனை 3
செல்லார் வரைகளும் அருவியும் பொழில்களும் தேங்கும் இலங்கை மாநக ரானை 4
எண்வகை யொருவனை யேந்திழை பாகனை மண்முதற் பூதங்கள் வகுத்த பிரான 5
கண்ணுக் குக்கண் ஞய கடவுளை மன்னு மிலங்கை மாநகர் கண்டேன் 6
தித்திக்கு மமுதினைத் தெளிந்த தேறலை
எத்திக்கு மாகிய என்ன ருயிரினை 7
பத்திக்கு மடியவர் பாட்டிற் குகந்தானை முத்துக்கள் சேர்முது இலங்கையிற் கண்டேன் 8 சாந்தம் பொறுமையன்பு தாங்கொண்ட 6(JLg_חחש மாய்ந்துபோ காவண்ண மருள்தரும் ஒருவனை 9
காந்தள் முல்லை கானர் மல்லிகை ஏந்திருக்கும் நல்ல இலங்கையிற் கண்டேன் 10 பொன்னர் மேனி புரிசடை யண்ணலைப் பூதங்க ளைந்தும் பொருந்திநிற் பானை l
தென்ன தென்ன வெனவண்டு பாடும் சீரார் இலங்கை மாநகர் கண்டேன். 12
நற்சிந்தனை 311 வேண்டும். வேண்டாம்
நாங்கள் சிவமென் றெண்ண வேண்டும் தூங்காமல் தூங்கிச் சுகிக்க வேண்டும் ஆங்காரந் தன்னை யகற்ற வேண்டும் நீங்காத நிட்டையில் நிலைக்க வேண்டும் மாங்காய்ப்பா லுண்டு மகிழ வேண்டும் தேங்காமல் தேங்கி யிருத்தல் வேண்டும் ஏங்காமல் வையத்தி லிருக்க வேண்டும் உல்லாச மாக வுலாவல் வேண்டும் எல்லா ரிடத்தும் அன்பு வேண்டும் மேலோரைக் கண்டால் வணங்க வேண்டும் பொல்லாப் பில்லையெனச் சொல்ல வேண்டும் வல்லமை பேசி மகிழ வேண்டும் அல்லாகூ என்று அரற்ற வேண்டும் சில்லாலைப் பாட்டுப் பாட வேண்டும் தில்லாலைக் கள்ளுக் குடிக்க வேண்டும் கல்லானை கன்னல் உண்ணல் வேண்டும் மல்லாகத் தானை மதிக்க வேண்டும் தன்னைத் தன்ன லறிய வேண்டும் முன்னை வினையைக் களைய வேண்டும் சென்னைப் பட்டினஞ் செல்ல வேண்டும் அன்னை போல அன்பு வேண்டும் பொன்னை மாதரைப் போக்க வேண்டும் பின்னைப் பிறவியை நீக்க வேண்டும்.
Χ X Σζ சாங்காலம் வந்தால் திகைக்க வேண்டாம் வாங்காமல் வாசியில் தூங்க வேண்டாம் பாங்காக வாழ விரும்ப வேண்டாம் வேங்கைப் புலிவந்தா லோட வேண்டாம் ஆங்கென்றும் ஈங்கென்றும் அலைய வேண்டாம் போங்காலம் வந்தால் புலம்ப வேண்டாம்.
Page 161
32". நற்சிந்தனை
ஆசான் கூசான் பேசான்
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் ஆசான்-அவன் உன்மத்தன் போற்றிரிவான் கூசான். 1 -
வருவாரைப் போவாரை ஆசான் - வாயில் வையாமல் வைதுவிடக் கூசான். 2
உண்மை முழுதுமென்பான் ஆசான் - அவன் உறங்காம லுறங்குவான் பேசான். 3.
நன்மைதீமை யறியாதான் ஆசான் - அவன் நாமறியோம் என்றுசொல்லக் கூசான். 4.
அப்படியே யுள்ளதென்பான் ஆசான்-சொல்லி
ஆரறிவா ரென்றுநகை செய்வான். 5
முப்போதுந் தேரடியி லிருப்பான்-ஆசான் முகமலர்ந்து தன்னிலே சிரிப்பான். 6
விற்றுாணுென் றறியாதான் ஆசான்-என்றும் விசரனைப் போற்றிரிவான் கூசான். vn 7
கற்ருேரும் அறியாத சீரான்-அவனைக் s கைதொழுது நின்ருலும் பாரான், 8
இன்னணிவ னென்றெவரு மறியார்-இவனை ஏற்றித் தொழுதவரைக் குறியான். 9
பன்னட் பழக்கத்தினுற் சிலபேர்-இவனைப் பாரிற் குருவாகக் கொண்டார். 10
நற்சிந்தனை . 313
. 36öTLOT sŠšŠL LosLOlg
அக்கக் காவடி அம்மம் மாவடி ஆன்மாநித்திய மாமடி Ι முக்குறுணிப்பிள்ளையாரை வேண்டி மூலமந்திரஞ் செபியடி 2 பக்குவமாய்ப் பேணடி
பத்தரினத்தொடு கூடடி 3
அக்குமணிதனைக் கட்டடி مح۔ ஆசைமூன்றும் நீக்கடி 4
திக்குத்திகாந்தமுங் கைவசமாச்சடி சீவன்சிவனென்று சிந்தித்துக்கொள்ளடி 5 முக்குணமாயைக் கப்பாலேசெல்லடி முன்னும்பின்னும் பாராதேயடி 6
பக்குவகால மித்தருணமடி பாராதிபூத மெல்லாநீயடி 7
விக்கினமொன்றும் இல்லையடி விண்போலிலங்கி நின்றிடடி 8 துக்கஞ்சுகம் இல்லையடி
சும்மாவிருந்து பாரடி 9 தர்க்கஞ்செய்யப் போகாதேயடி தானேதான யிருந்திடடி Va 10
செக்கச்சிவந்த கழற்பாதம் சிரசிற்சுமந் தேத்திடடி,
Page 162
314
நற்சிந்தன.
ஒளவை வாக்கி னருமை காண்க
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் தன்னையும் பிறரையுந் தானே காண்க
ஆலயந் தொழுவது சாலவும் நன்று சீலமு டைமையைச் சிந்தையிற் காண்க
இல்லற மல்லது நல்லற மன்றெனுஞ் செல்வ வாக்குத் திசைதொறுங் காண்க
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் ஓயாது பேசி யுவந்து காண்க
உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகெனும் ஒண்டொடி ஒளவை தன்னுரை காண்க
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடுமெனுஞ்
சீருடை நன்மொழி சிறப்பே காண்க
6
எண்ணு மெழுத்துங் கண்ணெனத் தகுமெனும்
வண்ணச் செய்யுளின் வளத்தினைக் காண்க ஏவா மக்கள் மூவா மருந்தெனுந் தேவா மிர்தஞ் சிந்தையிற் காண்க
ஐயம் புகினுஞ் செய்வன செய்யெனும் பொய்யில் வாசகம் புந்தியிற் காண்க ஒருவனைப் பற்றி யோரகத் திருவெனுந் திருமொழி தன்னைத் தேடிக் காண்க ஒதாதார்க் கில்லை யுணர்வோ டொழுக்கம் வேதா கமத்தின் விதியினைக் காண்க
ஒளவியம் பேசல் ஆக்கத்திற் கழிவெனுந் திவ்விய வாக்கைத் தினமுமே காண்க அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடெனும் அஃகுத லில்லா வரும்பொருள் காண்க.
7
10
12
13
நற்சிந்தனை 3 I5。 கூறுவார் கோடிபாவம் நீறுமே
வஞ்சி விருத்தம் கூறுவார் கோடி பாவம் நீறுமே நெஞ்சி லெண்ண ஆறுவா ரகத்தி லீசன் சேருமே சிந்திப் பாயே. − சிந்தித்துத் தெளிந்தார் தம்மைப் பந்திக்க மாட்டா பாவம்
பொறிவழி போகார் நல்லோர்
அறிவினு ரறிவார் திண்ணம். 2 இருவினை சேரா தீசன் திருவடி சேர்வார் தம்மைக் குருவருள் கொண்டார் தம்மைத் திருவருள் சேரும் மெய்யே. 3
இருவருங் காண வீசன் அருவமு முருவு மாவான் இணங்கியே யேத்து வாரை வணங்குமே மண்ணும் விண்ணும். 4
வேண்டும்
நமச்சிவாய வாழ்கவென நயந்து பாடவேண்டும்
-நயந்து பாடவேண்டும்
நமனுக்கிட மில்லையென வியந்து கூறவேண்டும்
இமைப்பொழுதும் மறவாமல் ஏத்தி விடவேண்டும்
ஏத்தி விடவேண்டும் -- ۔
எமக்குக்குறை வில்லையென வாழ்த்தி விடவேண்டும். 1.
சமயநெறி கடவாமல் தான்வாழ வேண்டும்
-தான் வாழ வேண்டும் தன்னைப்போற் பிறரையெல்லாம் நேசித்திட வேண்டும் உமையம்மை திருவடியைக் கும்பிட்டிடவேண்டும்
... . . . -~கும்பிட்டிடவேண்டும் உடன்பிறந்தா ரோடுறவு கொண்டாட வேண்டும். 2
Page 163
36 நற்சிந்தனை
பட்டதுபட்டேற்றும் கண்டவரும் விண்டதில்லை விண்டவருங் கண்டதில்லைத் - தங்கம் வேறுபொரு வில்லையெடி. பண்டயனும் மாலுந்தேடிப் பார்க்கொணுது நின்றரெடி-தங்கம் என்றுமே யுள்ளதெடி, 2 பட்டதுபட் டேற்றுமென்று பட்டினத்தார் சொன்னுரெடி-தங்கம் இருந்தபடி யிருக்குதெடி. 3. பொறியஞ்சும் வென்றவர்தம் பூஷணமா யுள்ளதெடி -தங்கம் நெறியா யிருந்திடெடி. 4 சித்தத்திலே தித்திக்குந் தேனைநீ யுண்டிடெடி-தங்கம் தீராநோய் தீருமெடி. 5 அட்டாங்க யோகத்திற்கும் அப்பாலே யுள்ளதெடி-தங்கம் ஆரறிவா ரென்ருரெடி. 6 கட்டுப்ப டாமனத்தைக் கட்டிவிட்டால் பூமியிலே-தங்கம் தட்டுப்பா டில்லையெடி. .7 வலமிடமா யோடுகின்ற வாசியின் நிலையறிந்தால்-தங்கம் வாழ்வுனக் குண்டாமெடி. 8 தச்சன்கட்டா வீட்டிலே தாவுபரி கட்டிவிட்டால்-தங்கம் w அச்சமினி யில்லையெடி. 9 பிறப்பிறப் பில்லாத பெருமான் திருவடியைத்-தங்கம் மறக்க முடியுமோடி. 10
நற்சிந்தனை - 317
ஐந்தெழுத்தை நெஞ்சகத்தில் துஞ்சாமல் சொல்லுமவர்-தங்கம் துரியத்தில் வாழ்வாரெடி.
இன்சொல் விளைநிலனய் ஈதலே வித்தானுல்-தங்கம் இன்பம் பெருகுமெடி, 12
துட்டச் சமணர்கள்தம் துடுக்கை யடக்கினவன்-தங்கம் மட்டில்லாத் தெய்வமெடி, 13
நன்மையுந் தீமையும் நாமல்ல வென்றுகண்டால்-தங்கம் மயக்க மொழியுமெடி. 4
சுருதியோ டாகமங்கள் சொல்லமுடி யாதபொருள்-தங்கம்
கருத்தி லிருத்திடெடி, 15 விருத்தணுய்ப் பாலணுகி வேடிக்கை செய்தவனைத்-தங்கம் வேண்டிப் பணிந்திடெடி. 16
፵፭
அறிவை அறிவாலே அறி இராகம்-பைரவி தாளம்-ஆதி
usis)
பொறிவழிப் புகுத்துதே பொல்லாத மனமையோ போக்கு வரவில்லாப் புண்ணியனே கண்பாராய்.
அநுபல்லவி அறிவை யறிவாலே அறியெனப் பெரியோர்தாம் அன்றுசொன் ஞரதை ஐயை யோமறந்து. (பொறி)
. சரணம்
கிறியுங்கீழ் மையுஞ்செய்து கீழும்மே லுஞ்சென்று நெறிவழிச் செல்லாமல் நெஞ்சு கலங்குதே நீயேநா னெனவெண்ணி நேசிக்க எனக்குன்றன் நிசசொட் ரூபங்காட்டி நேரில்முன் வாராயோ. (பொறி)
Page 164
818 நற்சிந்தனை குருமணி
புலனவென்ற பெரியோர்க ளுளம்பூத்த மணி
பொள்ளாமணி யென்றும் புதுமணி இலமென்று வந்தடைந்தா ரிடும்பை கெடுக்கும்மணி
எவராலும் விலைமதிக்க வொண்ணு மணி பலநிறமாய்ப் பாரினிடைத் தோற்றும் மணி பச்சைமால் மெச்சிப் பணியும் மணி இலங்கையிலே யெங்கு மிருக்கும் மணி
என்னைப் பணிகொண்ட குருமா மணி.
கசிந்துருகிப் பாடுவார் காணும் மணி
கண்மூன் றுடைய கதிர்மா மணி − வலிந்தென்னைப் பணிகொண்ட வண்ண மணி
மலரோனும் மாலவனுங் காணு மணி இந்தோடு கங்கைசென்னி யேந்தும் மணி
இளநாகம் -மேனியிலே சாத்தும் மணி அந்தமணி இலங்கையிலே வாழும் மணி ,
ஆரேனும் தேடுவார்க் ககப்படுந் தெய்வமணி. 2
பந்தமெனும் பாழிருளைக் கிழிக்கும் மணி
பரவுவார்க் கிலவசமாய்க் கிடைக்கும் மணி அந்தமுட னதியில்லா அரும்பொன் மணி
அதிசயங்க ளநேகமெல்லாங் காட்டும் மணி முந்திய மணிக்கெல்லாம் முதலான மணி
மூவர்களுந் தேவர்களும் பணியும் மணி இந்தவளஞ் சேரிலங்கை வந்த மணி
எனையாண்ட குருமணியென் சொந்த மணியே. 3
ஓம் சிவாயநம
ஓம் சிவாயநம என்று சொல்லு , உண்மை முழுது மென்று வெல்லு நாம் நாம் நாம் என்று நில்லு நரக மோட்சம் நாடாமல் தள்ளு போம் போம் வினையென்று கொள்ளு பூரண நிட்டையிலே நில்லு - - - - - வீம்பிடும்பை யகங்காரம் கல்லு - விண்ணும் மண்ணும் கைவசமாய்த் துள்ளு. 1
நற்சிந்தனை 39
சற்குருவின் பாதத்தைப் போற்று தன்னைத் தன்னல் அறிந்து தேற்று நிர்க்குண நிட்டையிலே யேற்று நீநான் என்பதை மாற்று மல்லாகத்தில் சுன்னகத்தான் வீற்று மாசற் றிருப்பா னென்று சாற்று பொல்லாப் பிங்கில்லையென்று போற்று போக போக்கியம் எல்லாம் மாற்று. 2
அன்பருடன் கூடிநீ வாழ்த்து புண்ணிய பாவத்தை வீழ்த்து போக்குவர வில்லையென்று தேற்று எல்லாரி டத்து மன்பு காட்டு ஏகனநேகன் என்று நாட்டு நல்லூரான் திருவடியே பாட்டு நமச்சிவாய வாழ்க வென்று சூட்டு. 3
போக்கும் வரவு முள்ளா னில்லான்
போக்கும் வரவு முள்ளா னில்லான்
பூத கணங்கள் சூழப் பொலிவான்
தேக்கு மடியார் சிந்தையி லுள்ளான்
திருவே யுருவாய்ச் செறிந்த சீமான்
காக்குந் தலைவன் கருணை யுடையான்
கண்மூன் றுடையான் கால காலன்
பூக்கும் பொழில்சே ரிலங்கை வாழ்வான் 2:ዶ , -
பொன்ன ரடியைப் போற்ருய் மனனே
என்று மினியான் ஏத்து மடியார்
இடர்சே ராமே விடைமேல் வருவான் நன்றுந் தீது முள்ளா னில்லான்
நாரி பாகன் ஞான வுருவான் அன்று மின்று மென்று மாகி
யந்த மாதி யில்லாப் பெருமான் குன்றும் மலையும் பொலியு மிலங்கை
குடியாய்க் கொண்டா னடிகள் போற்றுதுமே 2
Page 165
320 நற்சிந்தனை
தம்மையன்றி வேறென்றுங் காணுர்
தம்மைத்தம் மாலறிந்த சாலப் பெரியோர்கள் தம்மையன்றி வேறென்றுந் தாங்காணுர்-பின்னைப் பிறப்பும் இறப்புமில்லைப் பேய்பித்தர் போல்வார் மறப்பின்றி வாழ்வார் மகிழ்ந்து.
மதியு மிரவியும் மன்னுஞ் சமாதி பதியும் படியாக்கிப் பாழ்த்த-விதிவென்று வாழ்வாரை வாழ்த்தி வளரு மடியவர்க்குத் தாழ்வுண்டோ தம்பிநீ சாற்று. 2
சாந்தம் பொறுமை தயைதவந் தானமிகு மாந்தருக்குத் துன்பம் மருவுமோ-சாந்தனையும் அன்னர்பா லன்புவைத்து ஆரறிவார் என்றகுரு தன்னுணை போற்றல் தவம். 3.
தவத்திற் சிறந்தார் தமதுயிர் போல உவப்புடனே யோம்பியொரு பொல்லாப்பு-மில்லென்ருன் தாளிணையைப் போற்றிச் சகத்துடன் கூடியே வாழக் கருதுவதே மாண்பு. 4
மாண்டார் மனத்தானை மண்விண்ணு மொன்முகி நீண்டான நெஞ்சமே நீநினைப்பாய்-வேண்டாமை வேண்டுவோர் வீடு பெறுவாரே வையத்தை ஆண்டாலு மென்ன மறி. 5 . سه
அப்படி யுள்ளதென் றன்பாகச் சொல்லியே அப்பன்செல் லப்ப னருள்தந்தான்-இப்பார் இருள்கடிந் துள்ளத் தெழுந்தவெல் லென்றன் அருள்சேர் மாதவத்தோ னன்று. 6
நற்சிந்தனை v 32
தேவாதி தேவ இராகம்-மோகனம் தாளம்-ஆதி
தேவாதி தேவ அடியார் இடர் பொடிபட அருள் தரு. (தேவாதி)
அநுபல்லவி −
ஆபாச மாபாச ஆழி வீழாவடிய வரும் கோபாலனும் மற்றுங் கோகனகத்தானுந் துதி. (தேவாதி)
சரணங்கள்
காலும் புன லணலும் வானும் நெடுநிலனும் சசி ரவியுமான மாவடிவா மேலை யெழுவிடத்தை மிடற்றி லடக்கிவைத்த விகிர்தன் எனையுடையான். (தேவாதி)
கலகஞ் செய்யும் இருண்ட காலனும் நெஞ்சமஞ்ச உலகங்களும் நடுங்க நடனமிடும் துதிமிகு யோகசுவாமி சொன்ன கீதம் விளங்கச் சதுர்வேத முழங்கத் தாண்டவமாடும். (தேவாதி)
செல்வன் சீரடிகள் காப்பு ஒருபொல்லாப்பு மில்லை யென்னு மோசையோடுவந்து
. . . நோக்கித் திருவருள் தீக்கை செய்த செல்வன்சீ ரடிகள் காப்பு. 1 ஆரறி வாரென் றுன்னு மரியமந் திரத்தைத் தந்த ,
பேரறி வுடைய செல்வன் பெய்கழ லென்றுங் காப்பு. 2
முழுவது முண்மை யென்று முகமலர்ந் v
- தெனக்குச் சொல்லிப் பழுதற வாண்டு கொள்ளும் பாதபங் கயமே காப்பு. - 3 பாராதி -பூத மெல்லாம் பரமன்றன் வடிவ மென்றே சீராக வெடுத்துச்சொன்ன செல்வன் தாளென்றுங் காப்பு.4 காயமே கோவிலாகக் கண்டுபா வனைசெய் யென்று நேயமா யெனக்குச் சொன்ன நிமலன்தா ளென்றுங்
. . காப்பு." 5 பற்றினற் பிறந்திறந்து பாரினில் சுழன்ரு யந்தப் ? பற்றிலை விடுவாயென்ற பரமன்தா ளென்றுங் காப்பு. 6
2.
Page 166
322 நற்சிந்தனை
வந்தனை செய்திடடா தம்பி
உண்ணுதே யுறங்காதே யூரூராய்த் திரியாதே பெண்ணுசை வையாதே-தம்பி!
பிரமத்தை யறிந்திடடா- 1
கண்ணுரக் கண்டிடடா காலமே லேற்றிடடா விண்ணுணம் பேசாதே-தம்பி! வேறுபொரு வில்லையடா. 2
எண்ணும லெண்ணிடடா இயைந்தபடி நடந்திடடா மண்ணுசை வையாதே -தம்பி! மலரடியைப் போற்றிடடா. 3
சுன்னகத் தானையென்றுந் தோத்திரம்நீ செய்திட்டா அன்னை பிதாக்குருவை-தம்பி! அன்புடனே போற்றிடடா, 4.
வலமிடமாய்ச் செல்லுகின்ற வாயுவைநீ தம்பியடா பலமுனக்கு வந்துவிடுந்->தம்பி! பற்றற்று நின்றிடடா, 5
குலநலம் பாராதே கோபம்நெஞ்சில் வையாதே தலமாறுந் தாண்டிடடா-தம்பி! தனிமையைநீ நாடிடடா. 6
உண்டில்லை யென்றுசொல்லி யுரையாட வேண்டாமடா கண்டு களித்திடடா-தம்பி! கருணைவெள்ளம் பெருகுமடா. 7
பண்டுசெய்த வல்வினைநோய் பாரிற் பறக்குமடா நன்றென்றுந் தீதென்றுந்-தம்பி!
நடுவாக நின்றிடடா. - - 8 கொன்ருென்றும் புசியாதே குருவாக்கை மறவாதே அன்றுமின்று மென்றுந்-தம்பி! அப்படியே யுள்ளதடா. 9
நற்சிந்தனை 323
மன்றுபறித் துண்ணுதே மாயத்திற் சிக்காதே குன்றுபோல் நின்றிடடா தம்பி! குறைவொன்று மில்லையடா. 10
இந்தப்பத்துப் பாடலையும் இரவும்பக லுஞ்சொல்லி வந்தனை செய்திடடா-தம்பி! வறுமைபிணி தீருமடா.
நினைமின் மாந்தர்காள்
நினைமின் மாந்தர்காள் நினைமின் மாந்தர்காள் நீடூழி சிவதொண்டன் வாழ்க. (நினைமின்) 1
அனைவரு மொன்றப்க் கூடி யவன ஆதரித் தன்பு பாராட்டிப் - , புனைந்து பூமாலை சூட்டிப் புகழ்ந்து (நினைமின்) 2 தினைத்துணைப் போதும் மறவாது சிந்தித்துத் தேவாரம் திருவாசக மோதி. (நினைமின்) 3
முனைத்து வரும்பெருங் கூற்றை யுதைத்த முதல்வனைத் திங்கள் தோறும் நும்மணம். (நினைமின்) 4
அணைந்து வந்து ஆசான் செப்பிய அரிய வாசகந் தருஞ்சிவ தொண்டன. (நினைமின்) 5 கனைக்குங் கடல்சூழ் இலங்கைத் தீவில் கதிரொளி போலொளி பரப்புந் தொண்டனை. (நினைமின்) 6
வினேப்பகை வெல்ல விருது கட்டிய வேத மோதும் வித்தகத் தொண்டன. (நினைமின்) 7
சுனைக்கும் நல்லூர் தூயசற் குருவின் துணையடிமற வாத தொண்டன. (நினைமின்) 8
Page 167
昭24 நற்சிந்தனை
சிவனடி வாழ்க
உலகெலா முணர்ந்த வொருவ னடிவாழ்க அலகிலா நாத னடியிணை வாழ்க ஈருய் முதலா யிருந்தோ னடிவாழ்க மாருக் கருணை வள்ளலடி வாழ்க சிவனெனும் நாமத் திருவுடையான் தாள்வாழ்க என்னை விலகா விறைவனடி வாழ்க அன்னைபோல் வந்த வவனடி வாழ்க பின்னைப் பிறவிப் பெருமா னடிவாழ்க முன்னைவினை தீர்த்த முதல்வனடி வாழ்க எல்லாமா யல்லவுமா யிருந்தோ னடிவெல்க கொல்லான யுரிபோர்த்த குழக னடிவெல்க தில்லையிற் கூத்தன் திருவடிகள் மிகவெல்க எல்லையில் லாத இறைவ னடிவெல்க கல்லான கன்னல் கறிக்கவைத்தோ னடிபோற்றி நல்லோரை நாளும் பிரியா னடிபோற்றி நாரணனுங் காணுத நாத னடிபோற்றி ஆரணமுங் காணு வடியிணைகள் தாம்போற்றி பூரண மான புண்ணியன்றன் தாள்போற்றி எல்லையில் லாம லிறந்து பிறந்தேனை எல்லையில் லாத கருணையின லாண்டபின்பு கண்டேன் களித்தேன் கலங்காத சித்தமின்று கொண்டேன் குளித்தேன் குவலயத்தி லாசையெல்லாம் விண்டேன் வெளிப்பட்டேன் வேறென்றி லிச்சையுமே அண்டாத வண்ண மடிமைகொண்ட பெம்மானே பொன்னன மேனியனே போக்குவர வில்லானே எந்நாளு மென்னை மறவாப் பெருமானே அடியார்த முள்ளமே யாலயமாய்க் கொண்டோனே கடியார் புரமூன்றுங் கண்ணழலாற் செற்றேனே முடியா முதலே முதலீறு மானவனே அடியேனை யாட்கொண்ட வையா பெருமானே பொடியாரும் மேனியனே பூங்குழலாள் பாகனே படிமீதில் வேடனிட்ட பன்றியூ னுண்டானே
நற்சிந்தனை Y 325
அடியார்க் கடியனே யானந்தக் கூத்தனே பாண்டியனுய் வந்துமண்ணிற் பாராண்ட பெம்மானே வேண்டுவார் வேண்டுவதை விரும்பிக் கொடுப்போனே இருநிலனய்த் தீயா யிருந்த விறையோனே மருவார் குழலியொடு மகிழ்ந்தங் கிருந்தவனே அப்பருக்குப் பொற்கா சளித்த பெருமானே ஒப்பிலா வொன்றே யொளியே யெனவழுத்தி எப்பொழுது முன்னை யிறைஞ்சத் தப்பிலாத் தண்ணருளைத் தந்தாள் தனிப்பொருளே.
ஆள வேண்டுமே
இராகம்- சங்கராபரணம் தாளம்- திரிபுடை
sis)
சஞ்சல மிகவும் மிஞ்சுதே சற்குருநாதா தமியேனை யாள வேண்டும். (சஞ்சல)
அநுபல்லவி
வஞ்சம் பொருமை கோபம் வரவர நெருக்குதே வாணு வினசை மிகமிகப் பெருக்குதே. (சஞ்சல)
gy Goto
எப்படிச் சொன்னலும்நீ யேனென்று கேளாமல் செப்படி வித்தை செய்தல் திருவருட் காகுமோ ஒப்புவமை யில்லாத அப்பனே செல்லப்பனே உன்றுணே யல்லாம லொருவரு மில்லை ஐயா. (சஞ்சல)
Page 168
326 நற்சிந்தனை தீருவருள் தருவாயே
இராகம்-மோகனம் தாளம் -ஆதி
பல்லவி தெய்வமே திருவருள் தருவாயே நீ.
அநுபல்லவி வையக மீதில் வணங்க அறியேன் பொய்யும் புலையுங் கொலையுந் தவிரேன். (தெய்வமே)
சரணங்கள்
கையும் மெய்யுங் கருத்துக் கிசைய ஐயா தந்தனை யதையா னறியேன் மெய்யா யுன்றன் மெல்லடிக் கபயம்
மேலும் மேலும் உனையான் வேண்டுவன். (தெய்வமே) செந்நெலுங் கன்னலுஞ் செறியும்நல் லூரில் dh
தேசிகன் தாசன் யோகசுவாமி சொல்லுங் கீதம் சொல்லுவார் கேட்பார் துன்பம் நீங்கி யின்ப மோங்கும். (தெய்வமே)
தாளம் பேர்டு தாளம்போடு தாளம்போடு தாளம்போடு தன்னையறிந்தோ மென்றுசொல்லித் தாளம்போடு 1 ஆழநீள மில்லையென்று தாளம்போடு அவனேநா மென்றுசொல்லித் தாளம்போடு 2 வாழுவோ மென்றுவென்று தாளம்போடு மாளமாட்டோ மென்றுசொல்லித் தாளம்போடு 3 நாம்நாம்நாம் என்றுசொல்லித் தாளம்போடு / நம்மையறிந் தோமென்று தாளம்போடு 4. போம்போம் வினையென்று தாளம்போடு பெம்மானுக் கடிமையென்று தாளம்போடு 5 ஒம்ஓம் என்றுசொல்லித் தாளம்போடு உள்பொருள்நாம் என்றுசொல்லித் தாளம்போடு. 6
நற்சிந்தனை 3.27
சமயங் கடந்த சங்கரா வடைக்கலம்
நேரிசையாசிரியப்பா
உவமையொன் றில்லா வொன்றே யடைக்கலஞ் சமயங் கடந்த சங்கரா வடைக்கலம் அமையு மடியா ரன்பே யடைக்கலம் உமையாள் மகிழு மொருவா வடைக்கலம் எந்தா யடைக்கல மிறைவா வடைக்கலஞ் சிந்தனைக் கரிய சிவமே யடைக்கலம் அந்தமு மாதியு மில்லாய் போற்றி அந்தமு மாதியு முள்ளாய் போற்றி ஒடும் பொன்னும் ஒன்ருய் நோக்குவார் தேடும் பொருளே செல்வமே போற்றி பாடு மடியார் பரனே போற்றி வாடு மடியார் மழையே போற்றி தேடக் கிடையாச் சிவமே போற்றி ஆடகத் தில்லை யரனே போற்றி குழைத்தெனை யாண்ட கோவே போற்றி மழவிடை யேறும் மாதவ போற்றி பிழைத்த வெல்லாம் பொறுப்பாய் போற்றி தழைத்தநற் கொன்றைச் சடையாய் போற்றி வரம்பி லின்ப வடிவே வாழ்க கரத்தி லங்கி கலந்தாய் வாழ்க சிரத்திற் றண்மதி தரித்தாய் வாழ்க புரத்தை யெரித்த புங்கவ வாழ்க வாழ்க வாழ்க நின்னடி வாழ்க வாழ்க வாழ்க வையகம் வாழ்க வாணுதல் மங்கையும் மகிழ்ந்தே.
Page 169
32& நற்சிந்தனை
அடைக்கலம் அடைக்கலம் 1
அளவிலா வொன்றே யன்பர்க ளன்பே உலகெலாம் நிறைந்த வொண்சுட ரொளியே மலமிலா முதலே மாசிலா மணியே பலரும் புகழ்ந்துரை பரம தயாளுவே நிலம்நீர் தீகால் வானப் நின்ற அலகிலா வாட லுடைய வப்பனே அழுதபிள் ளைக்காய்ப் பாற்கட லழைத்தாய் தொழுதசுந் தரர்க்காய்த் தூயபொன் வழங்கினய் வழுதிபோல் வந்து மாமுடி தாங்கிப் பழுதி லாத பார்தனை யாண்டாய் அந்தணன் வேண்ட வரிய கூற்றினை வெந்திறற் ருளால் வீழச் செய்தனை கண்ணப்ப னுானைக் கலந்து புசித்தாய் என்பது கேட்டுன் னிணையடி யடைந்தேன் என் பிழை யெல்லாம் பொறுப்பதுன் கடனே பொன் போல் மதியம் பொதிந்த சடையாய் அடைக்கலம் அடைக்கலம் அப்பனே படைக்கலம் நின்திருப் பஞ்சாக் கரமே.
அடைக்கலம் அடைக்கலம் 11
அடைக்கல மடைக்கல மரனே யடைக்கலம் விடைக்கல னுகந்த வேதாந்த விளக்கே ஆறும் பிறையுஞ் சூடிய வரசே கூறு மடியார் தங்கள் குருவே உருகி யுருகி யடியே னுணரப் பெருவரந் தருவாய் பேரரு ளாளர மாசிலா மணியே மன்னர்தம் மன்னவா காசி வாழும் கண்ணுதற் பரனே பூசிக்கும் யோக நாதன் பொற்பே வாசித்துக் காண வொண்ணு மறையே இந்திரன் முதலோ ரறியா விறையே சந்திரன் தயங்குஞ் சடையுடை யோனே அந்தமு மாதியு மில்ல3 வமலா சந்தத முன்பதஞ் சாற்றுவார் தமக்குச் சாலோக பதவி வீற்றிருக்க வைத்த விமலா வடைக்கலம்.
நற்சிந்தனை 329
அப்படியே உள்ளது
ஒருகறியும் ஒருசோறும் ஆக்கியுண்ணும் ஆசான்
ஒருபொல்லாப்பு மில்லையென்றன் உணர்.
ஒதாமல் வேதம் உணர்ந்த குருநாதன் உண்மை முழுதுமென்ருன் உணர். 2
நாமறியோம் என்ற நல்ல திருவாக்கை நாமறியச் சொன்னன் நய. 3 முடிந்த முடிவென்று முன்னளில் ஆசான் அடியவர்முன் சொன்னு னறி. 4.
அப்படியே யுள்ளதென அத்து விதப்பொருளைச் செப்பினன் செல்லப்பன் தேர். 5 நீறணியான் காவி யுடையணியான் நீணிலத்தில் தேறவைத்தான் என் முன் சிரித்து. 6 சிரித்துப் புரமெரித்த சிவனேயொப் பானென்ன மரித்துப்பிறவாத மாண்பளித்தான் மதி. 7 பாசத்தால் வெந்துநொந்து பாழாகப் போகாமல் நேசத்தால் ஆக்கினன் என்னை நினை. 8 தேரடியில் வீற்றிருப்பான் சிரிப்பான் சினத்திடுவான் ஆரறிவார் என்பா னவன். 9 பித்தனென்றும் பேசுவார் பேயனென்றுஞ்
சொல்லுவார் சித்தனென்றுஞ் சொல்லுவார் சிலர். 10
ஆர்கொடுக்க வாசையுடன் வந்தாரோ வவரைச் சீர்கேடாய்ப் பேசுவான் தேர்.
நரிபோல் உழலுவான் நாய்போல் திரிவான் பெரியவனென்னும் பேர்படையான் பித்தன். 12
மாருட்ட மாகவே வந்த படிபிதற்றித்
தேருமற் செய்வான் சிரித்து. 13
Page 170
330 . நற்சிந்தனை jTLOTÄ குடியுமல்லேம் நாகநாதன் குடிகானும்
நானென நீயென வேறில்லை யென நகையால் . தானெனைச் செய்தபிரான் அவன் சமர்த் தாரறிவார் கோனெனை யாண்டுகொண்டா னென்றுங் குறைவில்லைத் தேனெனச் சிந்தையுள்ளே யெந்தநாளுந் தித்திக்குமே. 1
பாரவன் விண்ணவன்காண் பன்னும்வேத
மொழியவன்காண் காரவன் கடலவன்காண் கறைக்கண்ட முடையவன்காண் சீரவன் திறலவன் காண் சிரம்பத் துடையானமுன் தேர நெரித்தவன்காண் தேவதேவர் தம்பெருமானே. 2
நாமார் குடியுமல்லேம் நாகநாதன் குடிகாணும் ஏமாந்து போவோமல்லே மினிமறலி தானுமஞ்சேம் சாமாறுந் தணிவிடையன் திருப்பாத மல்லாமல் நாமார்க்குந் தொண்டுசெய்யேம் இனிநாளை நினையோமே 3
போக்கொடு வரவுமில்லைப் பூமிவான மிங்கில்லை நீக்கற வோங்கிநிற்கும் நின்மலன் றன்னையன்றிக் காக்குமோர் தேவுமில்லைக் காலநே ரமுமில்லை நோக்குவார் தங்கட்கெல்லாம் நுணுக்கமாய்த்
t தெரியுமன்றே. 4
எத்திக்குமாகி யிருக்குந் தெய்வமே இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி பல்லவி முத்திக்கு வழிகாட்டும் -என்றன் மூட புத்தியை யோட்டும் k அநுபல்லவி எத்திக்கு மாகி யிருக்குந் தெய்வமே ஏழையடி யார்க்கு இரங்கு முய்யவே (முத்தி)
syGrotto சித்தத்துட் டித்திக்குந் தீங்கரும்பே தெளிந்த தேனே சீனியே பாகே பத்த ருள்ளத்தில் பாக்கிய வானே பாவ மனத்தும் நீக்கியாள் கோனே. (முத்தி)
நற்சிந்தனை 33 I. கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வம்
இராகம்-எதுகுலகாம்போதி தாளம்-மிஸ்ரம்
uრსის6მ. ኔ கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வமே கடைக்கண் பார்நீ தெய்வமே.
அநுபல்லவி ஒருத்தர் துணையுமில்லை யுன்றுணை யல்லாமல் உலகுயிர் பரமாகி நடிக்கின்ற செல்வமே. (கருத்தில்)
சரணம் எங்கெங்கு சென்ருலும் அங்கெங்கும் நீயே ஈசா மதுராபுரி வாசா மீனுட்சி -- நேசனே சொக்கநாதா யோகனுக்கருள் தாதா நின்று மிருந்துமுனை யென்றென்றும்
போற்றநான். (கருத்தில்)
அரகர சிவசிவ இராகம்-சுத்தபங்களா தாளம்-ஆதி
பல்லவி - . . அடியா ருள்ளத்தே வாழும் பரனே அஞ்சுவ தகற்றி யாள்வதும் பரமே
அநுபல்லவி
அரகர சிவசிவ சம்போ சங்கர
அறிஞரு மறிவரி தாகிய பொருளே (அடியா)
சரணம் " ... .
அறிவாருளரோ அகம்பிர மாஸ்மி
வெகுபலம்வாசி சமாதிநீ யோசி
வேண்டும் வேண்டும் அருள்நீ தாதா விக்ந விநாயக விமலா நமோ நமோ (அடியா)
Page 171
332 நற்சிந்தனை
இடர்படாதிருக்கத் தயவுவை - இராகம்-நளினகாந்தி தாளம்-ஆதி
- ubຄbຄທີ எனதுயானெனும் இடர்படா(து) இருக்கத்தயவுவை எம்பிரான்
அநுபல்லவி கண்ணுதலே கறைக்கண்ட நீ கருணுணந்த காமாட்சி பாகா வா (எனது)
Freyyub எந்நேரமும் உன்றன் பொன்னரடி ஏத்தித்தொழ வேழைக் கேயருள் அன்னே யுன்னை யல்லால்துணை இம்மாநிலம் எவரு மில்லையே. (எனது)
நிஜமா மான்மா தெளி இராகம்-உமாபரணம் தாளம்-ஆதி
பல்லவி
நிஜமா மான்மா தெளி அரகர சிவ நெஞ்சே யஞ்சேல் நீ வரோதய
V அநுபல்லவி தசமுகன் நெரிதரத் தனதடி யூன்றிய சாமிநாத பாதமே ஒதுமந்திரம் நீதமே (நிஜமா)
சரணம் சுதிரச பூரண பரப்பிரம தாரக தூய அற்புத சுகமார மாரண சுரசேவித தொந்தத்தசி சுந்தரா னந்தனே துய்யா மெய்யா சுபானுபவ.
(நிஜமா)
நற்சிந்தனை W 333
ஓங்கார நாதமே
இராகம்- ஹரிகாம்போதி தாளம்- ஏகம்
பல்லவி ஓங்கார நாதமே யோதவொண்ணுப் பிரமாதமே
அநுபல்லவி தாந் தாந் தோம் என்றிடு மோசை அற்புத விற்பன நிர்க்குண நேயம் (ஓங்கா)
சரணங்கள் உத்திக்கும் எத்திக்கும் அவரவர் சத்திக்கும் பத்திக்கும் அதிரச (ஓங்கார) ஒதும் வேதம் இதமுடன் - அன்றும் இன்றும் ஒருவிதம் (ஓங்கார) உம்பர்களு மிம்பர்களும் தினசரி எண்ணரிய சித்தர்களும் மிகவேத்தும் (ஓங்கார) ஒதிடவே யருள் பாலிக்குமே நன்மை பூரிக்குமே மனஞ் சேவிக்குமே யருள் (ஓங்கார) உயிரை யெழுப்பிச் சிவத்தி லேமனம் பயிலப் பயிலச் சுவைக்கு மேதினம் (ஓங்கார) ஆதரித் திணிமேற் சுகித்திட நீநினைத்திடு ஆசைவைத்திடு (ஓங்கார)
தொகையற நீங்காது எந்தநாளு மினிது முடிந்து இளந்தென்றலும் வீச விபுதர் பலர் ஒன்றுகூடி அஞ்சலஞ்சலென்று செஞ்சொல் மிஞ்ச நீங்காரம்பாட வருள்கூட நல்ல சித்தர்கள் பக்தர்கள் தித்தி மத்தளம் தத்தித் தகு தகு. -
Page 172
334 நற்சிந்தனை
திருவருட் செய லெப்படியோ இராகம் - காப்பி தாளம்-சதுர்சஜாதி ஏகம்
பல்லவி திருவருட் செய லெப்படியோ சீமானே கோமானே
அநுபல்லவி திருவளர் நல்லூர் மேவிய தேவே செல்லப்பா v (திரு)
சரணங்கள் வரவர மனத்திற் கவலைகள் மிஞ்சி வலிந்துகவரும் மாய வாழ்வினுக் கஞ்சி அரகரசிவனே சங்கராவென்று போற்றினேன் புகழ் சாற்றினேன் (திரு) இரவும் பகலு மிணையடி மறவேன் இனியடியேன் மண்ணிற் பிறவேன் பரவும் யோக சுவாமிகட் கன்பு
காட்டுமோ வொளி சூட்டுமோ! (திரு)
நீ வா தா அருள்
இராகம்-ஹம்சத்வனி தாளம்-ஆதி
Y. பல்லவி -, -,
நீ வா தா அருள் பத்திசெய்வோம் சிவ
நித்திய ஆனந்தம் நிர்மல சகிதம்
அநுபல்லவி ஆசாபாசம் ஆகிய விசனம் , நாசமாகவுன் ஞானப் பிரகாசம்
தாதா தொம்தொம் தகுதகு தகுதகு தளங்கு தரிகிட தக்கிட கிடஜாம் (நீவா)
நற்சிந்தனை 3.35
SFDJGTo
பாராய் என்முகம் பரமயோகப் பரப்பிரவேசந் தாராய் சகலலோக வஸ்ய சம்மதம் பராபர பரிபூரணம்
கோலாகல குமாரி கவுரி கும்பிடும் புராரி பிரமாதிதேவர் கொண்ட கோடி பழிவிண்ட விபுதன் குஞ்சிதாம் புயமலர் நெஞ்சில் வைத்திடு குற்ற மற்றசிவ யோக நற்றவன் குருகுல வாசந் தருமொரு வசனங் கருது மவர்மிடி காணு தோடுங் காவாய் அடியனைப் பூணு யன்பு ஹம்சத்வனி பேசிடு பேரின்பம் (நீவா)
' ennsnamu!
மறவாதே என்மனசே!
இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி
பல்லவி
குருராஜ ராஜ பரசிவ பக்தி தன்னைநீ மறவாதே யென்மனசே
சரணங்கள்
அச்சுதன் அயன்முதல் அமரருங் காண்கிலர் அடிமுடி யில்லை யறி அண்டசரா சரங்கள் அவையனைத்தும் அவனே தானென வறியென் மனசே (குருராஜ)
தவஞ் செய்வோர்க் கனுகூலன் சர்வ சாட்சிப் பிரதாபன் அவனிவன் என்னும் மாயம் அனைத்து மில்லாத சிவயோக நாதன் விசுவாசன் சிவராசன் (குருராஜ)
Page 173
336 நற்சிந்தன்ை
தர்மமெங்குந் தங்க அருளையா V இராகம்-காம்போதி தாளம்-ஆதி
பல்லவி
ஐம்பொறி மாட்டு மனசுபோய் அலைந்திடிலோ பழி பழி
அநுபல்லவி நம்பினேன் நானே நடராஜ நீவாகா நியாயந்தானே கைவிடச் சற்குருநாதா (ஐம்)
சரணம் t சர்வகுணுதி சசிதவழ் சேகர சாமுண்டி சமேத சாமி சர்வாலங்கிர்த சகள நிஷ்கள மங்கள சுரசேவிதபானு சித்தம்வைத்து ஆண்டிடு சின்மய ஜெகசோதி சாயுச் சியமும் வேண்டினேன் ஆண்டி சர்வதியாகந் தந்தேன் தாளைத் தலையிற் சூட்டிடு தர்மமெங்குந் தங்கக் குறைகள் மங்க அருளையா (ஐம்)
www-Wawa wanamwikhawhnw
அருவமு முருவமு மானுன் ஒரு பொல்லாப்பு மில்லையெனவே-முன்னுள்
ஒதினன் உண்மை முழுது மெனவே பருவத்தில் மழைபெய்தாற் போல-ஐயன் பந்தத்தை நீக்கி வளர்த்தா னன்பாலே 2 அருவமு முருவமு மானன்- என்னை ஆட்கொள்ள வந்தான் நல்லூரிற் றணுய் 3 கருவிக ரணங்க ளெல்லாந்-தத்தம் கருமத்தை விட்டுக் காவலுக் குள்ளாய் 4. வருவதும் போவது மின்றித்-தூய மெளன நிலையில் நிலைத்தது தானே 5
ஆரு மறியா ரெனவே - அப்பன் "அப்படி யுள்ளதென் முனறி வாயே. -x 6
நற்சிந்தனை 337
உன்னடிமை நான் ஐயனே
இராகம்-கானடா தாளம்-திஸ்ரம்
பல்லவி
உன்னடிமை நான் ஐயனே உளமகிழ்ந்து பார் மெய்யனே
சரணங்கள்
பொன்னடி மாதவர் சேர்பெரு முத்தனே
பூங்கொடியாள் பங்கா
உன்னடி யென்முடி வைத்தினி யாளுவாய்
ஓங்காரத்துட் பொருளே (உன்)
ஓயாமற் பொய்பேசி உழைக்கின்ற வுலுத்தரை
உறவென்றிருந்து விட்டேன் வாயார வாழ்த்தி வணங்கு மடியாரை
மனசாரப் போற்ற வைப்போய் (உன்)
சித்தத்துட் டித்திங்குந்தேனே பாலென்று
சிந்தனை செய்த டியேன் இனியுத் தமரோடு பிரியாமல் வாழ
உன்னருள் தாருமையா (உன்)
நீயே நானென்று நினைக்கும்மெய் யடியாரை
நேயத்தொடு வணங்கிடுவார் தாயே யனைய சங்கரனே வந்து
தண்ணருள் தாருமையா (உன்)
22
Page 174
338 நற்சிந்தனை
நீ அருளாவிடிற் கதியேது
இராகம்-அடாணு தாளம்-ஆதி
பல்லவி
நீ யருளா விடிற் கதியேது-ராமா நீ ரவிகுல திலகம் உலகுக் கெல்லாம்
அநுபல்லவி
தாயுந் தந்தையுஞ் சகலமும் நீயே தமியேன் உயிருக்குயி ராகிய பரனே (நீயரு)
agFJRRTo
பாற்கடல் தன்னிற் பள்ளி கொள்வோனே பாக்கிய லட்சுமி தன்மண வாளா ஆர்க்கு முணர்வரி தாகிய பொருளே அடியேன் மனத்தைக் கொள்ளை கொண்டவனே நீக்கமற் றெங்கும் நிறையும் நின்மலனே நினையும் யோக சுவாமிதன் துணையே போக்கும் வரவு மில்லாப் பொருளே பூதலத் துள்ளோர் போற்றும் அருளே (நீயரு)
சிவசிவ வென்றுசொல்லிப் பேணேனே இராகம்-செஞ்சுருட்டி தாளம்-ஆதி
பல்லவி.
தில்லையம்பலத்தைக் கண்ணுற் காணேனே சிவசிவ வென்று சொல்லிப் பேணேனே
அநுபல்லவி
நல்லவர் கூட்டத்தைத் தேடிநா டேனே அல்லும் பகலும் பாடியா டேனே (தில்லை)
நற்சிந்தனை 339
சரணங்கள்
கல்லை நிகர்த்த மனமுரு காதோ காமக்குரோத மோகங் கருகாதோ (தில்லை) எல்லை யில்லாத வின்பம் பெருகாதோ ஏழைகள்மே லிரக்கம் வாராதோ (தில்லை) நில்லாத காயத்தை நான்வெல் லேனே நீயேநா னென்றுசொல்லி நில்லேனே (தில்லை) உல்லாச மாக வெங்குஞ் செல்லேனே உண்மையைச் சொல்லிச்செல் கில்லேனே (தில்லை) இல்லையென் றெவர்க்கும் நான் சொல்வேனே இனிய செஞ்சுருட்டியைக் கல்லேனே (தில்லை)
சிவனே உன் தரிசனந் தாராயோ இராகம்- ஆனந்தபைரவி தாளம் -ஆதி
u sibsna சிவனே யுன்தரிசனந் தாராயோ தேவாதி தேவர்தொழும் பெருமானே
அநுபல்லவி தரிசனந் தாராய் தமியேனைக் காவாய் தத்துவா தீதனே சங்கர சிவசம்போ (சிவனே)
சரணங்கள்
அரிய விருவரும் அறியாத விமலனே கரியுரி போர்த்த கருணைக் கடலே திரிபுர தகனனே தில்லையில் வாசனே சிவகாமி யம்மை பூசிக்கு மீசனே (சிவனே) வரவர மனசு சங்கடப்படுகுதே வாராய் துயர்தீராய்: கண்பாராய் என்னைக்காவாய் இரவும் பகலுமுன்றன் இணையடி மறவாமல் பரவி யானந்த பைரவி ராகம் பாடி. (சிவனே)
Page 175
340 நற்சிந்தனை
எல்லாஞ் சிவன்செயலென்றிருப்போம் தோன்ருத் துணையை யென்றுந் துதிப்போம் தூயதிருப் பாதத்தைப் பதிப்போம் ஈன்ருளையு மப்பனையும் மதிப்போம் எல்லாஞ் சிவன்செயலென் றிருப்போம் ஆன்ருேர் விதித்தபடி நடப்போம் அந்திசந்தி மந்திரத்தைப் படிப்போம் நான் ரு னெனுமிரண்டுந் தடுப்போம் நாதனடி யிணைக்கீழ்க் கிடப்போம் வஞ்சம் பொருமை நெஞ்சில் வையேம் சஞ்சலத் தால் மிஞ்சி நாங்கள் நையேம் கொஞ்சம் கொஞ்ச மாய்மனத்தை வெல்வோம் கூடாத கூட்டத்தில் நாங்கள் செல்லோம்
வாரா வரவினில் வந்த சஞ்சீவியே
தோடுடைச் செவியனே தோன்றத் துணையே பீடுடைப் பெரியோர் பெட்டகத் தணியே தந்தையுந் தாயும் மைந்தருந் தமரும் எந்தையே நீயென் றெண்ணியெப் போதும் விந்தைசே ரவர்பணி வேண்டியா னுற்றி இவ்வுல கத்தி லிறுமாப் புடனே சந்ததம் வாழத் தயைபுரி யுமையாள் வந்தனை புரியும் வண்ணமே ணியனே கந்தமுங் காயுங் கடும்பசி மூடியே வந்திடி னுண்ணும் மாசிலா மனத்தர் சிந்தையிற் குடிகொள் தேசிக மூர்த்தி தீராக் கோபமுஞ் சித்தக் குரோதமுஞ் நீரா யுருக்கும் நெறியிது காணெனத் தாரா விடில்யான் தளையுண் டுழல்வேன் வாரா வரவினில் வந்தசஞ் சீவியே , பழியொன்று பூணு வழிபடு தெய்வமே
ஒழியா வின்பமாய் நின்று − தெளியாவென் சிந்தை தெளிந்திடச் செய்யே
நற்சிந்தனை 341 நல்லூரில் ஆட்டக்காரன்
நல்லூரில் ஆட்டக்காரன் நான்வணங்கும் குருநாதன் கல்லைக்க ரைக்குஞ்சித்தன் கருணைபூத்த திருமுகத்தான்
இல்லை யென்னுஞ்சொல்லை இல்லாம லாக்கிடுவான் அல்லும் பகலுமென்றன் அகத்தினிலே வாழ்ந்திடுவான்
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் உண்மை
முழுதுமென்பான் கருப்பையிலே வாராமல் காத்தென்னையாண்டுகொண்டான்
தேரடியில் வீற்றிருப்பான் செல்லப்பனென்னும் பெயரா 7 ஆரறிவா ரென்றுசொல்வான் அன்னையைப்போல்
அன்புடையான்
பொய்சொல் லாதேயென்பான் மெய்யுஞ்சொல்
லாதேயென்பான்
வல்லபங்கள் பேசிவந்தோர் வாயை யடக்கிடுவான்
வித்தையொன்றுஞ் செய்துகாட்டான் விவேகமற்றேர்
போலிருப்பான் அத்துவா மார்க்கம்விட்டு ஆறியி ருந்திடுவான்
*** --W*-.*W*A*a*l*ið
சிவசிவ என்றிடத் தீரும் பாவம்
சிவசிவ என்றிடும் போதினிலே செய்த
பாவமெல்லாம் ஒடும் பாரினிலே அவனிவன் என்கின்ற வார்த்தையெல்லாம் போக்கி
ஐயன் திருப்பாதம் உண்மையதாய் நோக்கி தவம்செய்வார்தமைத் தானக நோக்கிச்
சச்சி தானந்தம் தன்னிடத்தே தாக்கில் உவமையில் லாமுத்தி நிலையிலே போக்கும்
உண்மை யறிந்து சொன்னேன் யோகசுவாமி.
Page 176
344 நற்சிந்தனை
இதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய்
பல்லவி w
என்னிதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய் ஏகாம்பர நாதனே சிவனே
அநுபல்லவி
பதசாரி தோறும் உன்னதி சிலம்பொலி கேட்டுப் பரமானந்தம் பெறுவேன் சிற்ச பேசனே -என்னிதய
சரணங்கள் எனதென்ற கங்கரிக்கும் மனதுப னரிந்துவர இருவினைக் கட்டுகள் இற்றுச் சுயேச்சைபெற அனவரதமு முன்னை நினைந்து கசிந்துருகி அத்தாவுன் மலரடிப் பித்தணுய் வாழ்ந்திட-என்னிதய ஹரஹர வென்று அரவங்கள் கோஷிக்க அன்பு மகரவீணை தும்தும் என வாசிக்க சிரசி லானந்தஞ் சிலிர்த்து நடமாடச் செந்தமிழ் வாணியுமுன் மந்திரப் பொருள்பாட
- என்னிதய
GFA Gig) LOGOof எல்லை யெமக் கில்லையென்று சொல்லு மணியே எல்லாஞ் சிவன் செயலாய்ச் சொல்லு மணியே இல்லையென் ருெருபோதுஞ் சொல்லாய் மணியே ஈச ஞெருவ னென்று சொல்லு மணியே அன்னைதந்தை சுற்றத்தைப் பேணு மணியே அயலவர் தம்முறவு வேணு மணியே பின்னைப்பொய் சொல்லாமல் காணு மணியே பிறர் பொருள்மே லாசையின்றி வாழு மணியே என்னையினி மறவாமல் பாடு மணியே ஈச னடியவரைத் தேடு மணியே
முன்னை வினையெல்லாமோடு மணியே முருகன் திருவடியைக் கூடு மணியே.
நற்சிந்தனை 345 சிவனடியைச் சிந்திநெஞ்சே
அன்பிலா ரோடுறவு கொள்ளாதே அடுத்தோருக்குத் துன்பத்தைச் செய்யாதே சூதும்வாதும் பேசாதே இன்பத்தில் துன்பத்தில் ஏகமன சாயிருந்து தென்புடனே யரன்பாத மந்திசந்தி சிந்திநெஞ்சே.
ஆரோடும் பகையாதே ஆசைதனைக் கொள்ளாதே ஊரோடே ஒத்து நட உண்மையைத் தேடிக்கொள் நீரோடே வெகுநேரம் நீந்திவிளை யாடாதே
சீரோடே. சிவன்பாத மெப்போதுஞ் தேடுநெஞ்சே,
இடுவதை மறவாதே ஏழைகளை இகழாதே கெடுவது நினையாதே கேளிரைப் பிரியாதே சுடுவது சொல்லாதே துணையின்றிச் செல்லாதே படுதலையிற் பலிகொள்ளும் பரமனைப் பாடுநெஞ்சே.
ஈவது விலக்காதே யிழிதொழில்கள் செய்யாதே சாவது வந்தாலுஞ் சத்தியத்தை மறவாதே ஆவதும் அழிவதும் நமக்கில்லை யெனவறிந்து vn தேவர்கள் தொழுதேத்துஞ் சிவனடியைச் சிந்திநெஞ்சே.
அன்பாய் இருப்போமே
அன்பே சிவமென்று கிளியே! ஆன்ருே ருரைத்தார்கள் ஆனமையால் நாங்கள் கிளியே! அன்பாய் இருப்போமே இரப்பவர்க் கில்லையென்று கிளியே! எடுத்துநீ
சொல்லாதே
ஈவது நன்மையெனக் கிளியே! எடுத்தவ்வை சொன்னரே. சாவது வந்தாலுங் கிளியே! சத்தியம் மறவாதே தேவர்கள் வந்தாலுங் கிளியே! சித்தங் கலங்காதே தாய்சொல்லைத் தட்டாதே கிளியே! தந்தைசொல்
.மந்திரமே ۔
Page 177
346 ܪ f நற்சிந்தனை
இலங்கை என்னூர்
எல்லாமென் னுரர்எல்லா மென்சுற்றத் தார்களே எல்லா மெனக்குதவி யென்றறிந்தேன்-நில்லாத நீர்சடைமேற் கொண்ட நிமல னெனக்கன்பன் சீரிலங்கை யென்னுரர் தெரி.
நாமார்க்கும் ஆளல்லேம் நாளை வருவதெண்ணேம் ஆமா றறம்புரிவே மார்க்குமஞ்சேங்-கோமாற்கே மீளா வடிமையாய் மேதினிமேல் வாழுவோம் தாளா ரிலங்கையென்னுடர் தான்.
மெய்யுரைப்போம் மேன்மக்கள் நட்பை விரும்புவோம் செய்வன வெல் லாந்திருந்தச் செய்குவோம்- வையகத்தில் தாமரைமேல் நீர்போற் ருனியைந்து வாழுவேம் காம ரிலங்கை யென்னுரர் காண்.
சூரியன் தோன்றுதற்கு முன்ன ரெழுந்திருப்பேம் சீரியவா யாற்சிவனைப் பாடுவேம்-பாரினிலே தண்ணுர் பொழிலுந் தடவரையு மாறுகளும் நண்ணிலங்கை யென்னுரர் நய.
புன்சொல் புறங்காப்பேம் போன வகையெண்ணேம் எஞ்செயலா லொன்றுமில்லை யென்னுவேம் - வன்சொற் களை வேம் கனமேகங் கண்ணுறங் கின்பப் பழவிலங்கை யென்னுரரே பார்.
சித்தி பெறலாம் திருவெல்லாஞ் சேரலாம் பத்தியின்றேல் என்ன பலனிவற்ருல் - எத்திசையும் மெச்சு புகழிலங்கை மேலோர்கள் வந்துதினம் நச்சு மிலங்கையென்னுரர் நாடு.
நாடி யொருகருமம் நாடோறு மாற்றுவார் வாடி மெலிவதில்லை மாநிலத்தில்-நீடியசீர் கொண்ட விலங்கையிலே கோடிசனம் வந்துபணம் கொண்டுசெல்வார் என்னுரர் குறி.
கருங்குயில்கள் பாடுங் கரியினங்கள் கூடும் நெருங்குங் கதலிபலா தென்னை - ஒருங்குதிரை
கொண்டுவந்து முத்தங் கொடுக்கும் வளநாடு கண்டுகொண் டேனிலங்கை காண்.
நற்சிந்தனை 347 ܕ
மாது பங்கனை மறக்கவு மாமோ
ஒப்பில்லாத இலங்கைநகர் ஒருவன் றிருவடியைத் தப்பில்லாமற் போற்றுவார்கள் சாகார் பிறவாரே கொப்பில் மந்தியோடு குயில்பயிலும் பொழில்நீழல் எய்ப்பிலாத விளமான் மரைமேதி துயில்கொள்ளும்.
கடல்சூ Nலங்கைநகர் மேவிய கடவுள்பாதம் திடமோ டெந்தநாளுஞ் சிந்திப்பார்கள் மிடியாலே புடிவிதனில் துயரால் நொந்துபோகார் வரைமீது அடவிதனில் ஆமா புலியான துயில்கொள்ளும் கரையு மன்பர்தங் கருத்தி னனையே உரைசெய் வார்க்கொரு குறையு மில்லையே.
ஆடு பாம்பணிந் தாடு வான் கழல் பாடு வார்களே பரம யோகிகள்
அறஞ்செய்வார் தங்க ளகமே கோவிலாய் நிறைஞ்சு நிற்குமே நிமலன் நாடொறும் புறத்திற் கூறுவர் புகழைப் பெற்றிடார் அறத்தைக் கூறுவா ராக்கஞ் சேர்வரே.
காலை மாலையுங் கடவுள் பாதத்தைச் சால வேதொழு வார்க ளன்பரே.
ஒது மன்பர்க ளுள்ளத் துளான மாது பங்கனை மறக்கவு மாமோ
பாது காவெனைப் பகலு மிரவும்
மோதுங் கரைசேர் முதுலங்கை யானே.
கூடலி லன்று குதிரையை நரியாய் நர்ட வைத்த நம்பனை யல்லால் பாட்ட வும்வேறு பரம்பொரு ஞண்டோ மாடமலி யும்மிலங்கை மாநக ரானே.
Page 178
348 நற்சிந்தனை.
கரையு மன்பர்கள் கண்டுகந் தானும் வரையை யெடுத்த மன்னநெரித் தானும் மரையும் மானும் மயிலினமுங் குயிலும் நிரைநிரையாய் நிற்கு மிலங்கைமா நகரானே.
மத்தம் மதியொடு மாநா கத்தை வைத்த சென்னியன் வாணுதல் கணவன் புத்தஞ் சமணம் போயக லும்படி சித்தத்திற் கொண்ட சீரிலங்கை யானே.
சிவ சிவ சிவ
அன்பரன்பது சிவசிவசிவ ஆசையற்றது சிவசிவ சிவ இன்பமயமது சிவசிவசிவ ஈசனுயிர்தொறுஞ் சிவசிவசிவ முன்பின் அற்றது சிவசிவசிவ மோனமுதலது சிவசிவசிவ தன்வயத்தது சிவசிவசிவ சர்வவல்லபஞ் சிவசிவசிவ.
பொன்னிறத்தது சிவசிவசிவ போக்கிலாதது சிவசிவசிவ என்னிடத்தது சிவசிவசிவ எங்குமுள்ளது சிவசிவசிவ மண்ணிடத்தது சிவசிவசிவ மந்திர ரூபஞ் சிவசிவசிவ விண்ணிடத்தது சிவசிவசிவ வேதமானது சிவசிவசிவ. 2
மட்டிலாதது சிவசிவசிவ மங்கைபங்கது சிவசிவசிவ முட்டிலாதது சிவசிவசிவ மூவராவது சிவசிவசிவ கிட்டொனதது சிவசிவசிவ கிருபையுள்ளது சிவசிவசிவ எட்டிலானது சிவசிவசிவ ஏகமாவது சிவசிவசிவ. 3
அன்னையாவது சிவசிவசிவ அப்பணுவது சிவசிவசிவ முன்னையுள்ளது சிவசிவசிவ முனிவர்புகழ்வது சிவசிவசிவ என்னையாள்வது சிவசிவசிவ எடுத்த திருவடி சிவசிவசிவ பின்னையென் பிழை சிவசிவசிவ பேதாபேதஞ் சிவசிவசிவ. 4
3. 4.
நற்சிந்தனை s - 849
இலங்கை நகரானே
சிந்தை செய்கதிர் வேலனைத் தந்த எந்தையை யெந்த நாளும் மறந்திடார் பந்தங்க ளற்றுப் பரமவி டெய்துவர் கந்தம் பொலியு மிலங்கைக் கடிநகரானே.
கண்மூன் றுடைய கடவுளை நாளும் பண்முறை தப்பாது பாடு மடியார் மண்ணுள வளவும் மனக்கவலை எய்தார்கள் விண்டொடு வரைமே விலங்கைமா நகரானே. 2
மண்முதற் பூதங்கள் வகுத்த வொருவனை எண்முத லெல்லா மாயிருப் பானைப் பெண்ணுமை யாளைப் பிரியாப் பெருமானை விண்ணுேர் விரும்பு மிலங்கை நகர்கண்டேன். 3.
ஒதுபல் வேத முரைசெய்த நாவானே போது கங்கை சூடிய புனிதனே தீதுசேர் தக்கன் வேள்வி சிதைத்தானே மீதுவண் டார்க்கு மிலங்கை மேவியபரனே, 4
கமல நான்முகன் கண்ணனுங் காணு தமல னேயென வாரருள் செய்தானே , பவன மனலம் பாராகிய பரமனே உவமைசொல் லவொண்ணு லங்கை நகரானே.
பாலனுக் காகப் பாற்கடலை யழைத்தானை ஞாலம் புகழ்ஞான சம்பந்தன் தந்தையை ஆல மரத்தின்கீ ழன்றற முரைத்தானைக் கோலக் குயில்கூவு மிலங்கையிற் கண்டேனே. 6
சூதான வெளியிலே சும்மாவிருப்போம்
ஒம்நம சிவாயவென உருவேற்றுவோம் உருகி யுருகிநாம் உணர்வவிழ்வோம் வீம்பிடும்பை யகங்காரம் விட்டுவிடுவோம் வேதாந்த வீட்டிலே குடியிருப்போம்
Page 179
350 நற்சிந்தனை
நாம்நாம் நாமென நடமிடுவோம் நல்லவிருளை நல்ல வொளியாக்குவோம் போம்போம் வினையெனப் போற்றிசெய்குவோம் பூரண மானநிட்டை புகுந்திடுவோம் ஆம்ஆம் நமக்கெல்லாம் ஆய்விடுமென்போம் அவனேநா மென்றுசொல்லி யானந்தங்கொள்வோம் சந்திரனைச் சூரியனை ஒன்றுசெய்குவோம் சச்சிதா னந்தத்தேனைத் தானருந்துவோம் இடைகலை பிங்கலை யிரண்டுமடைப்போம் எழிலாருஞ் சுழுமுனைக்குள் ஒடுங்கிநிற்போம் பஞ்சவர்ணப் பரிமேலே பவனிசெல்வோம் பாரும்விண்ணும் ஒன்ருகப் பண்புசெய்குவோம் ஆதார மாறுக்கு மப்பாலேசெல்வோம் அங்கே திருநடனங் கண்டுகளிப்போம் சூதான வெளியிலே சும்மாவிருப்போம் சுகம்சுகம் எந்நாளு முற்றிடாதோ.
9ILIT Liguodalib
இராகம்-புன்னுகவராளி தாளம்-ஆதி
பல்லவி அப்பா பரமசிவம் (அப்பா)
சரணங்கள்
அன்றுதொட்டு இன்றுமட்டும் அடியேனுந் தேவரீரும்
அத்துவித மாயிருந்த
வித்தைதனை யாரறிவார் (அப்பா) ஒப்பாரும் மிக்காரு மில்லா வொருபொருளே தப்பேது யான்செயினும் அப்பா பொறுத்தருள்வாய் அப்பாலுக் கப்பாலா யாருமறி யாதவண்ணம் ஆடுந் திருநடனங் காண வருள்புரிவாய் (அப்பா)
நற்சிந்தனை
அத்துவிதப் பொருள் காப்பாம்
அத்துவி தப்பொருள் காப்பாம்-எனக் கடியார்க ளென் றென்றுங் காப்பாம்
சித்தருந் தேவருங் காப்பாம் என்றன் சித்தத் திலங்குந் திருவருள் காப்பாம்.
அட்ட வசுக்களுங் காப்பாம் - எனக் கானந்த மான பராபரன் காப்பாம் எட்டுத் திசைகளுங் காப்பாம் - எனக் கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம்.
பிராண னபானனுங் காப்பாம் - என்னைப் பிரியா திருக்கும் பிரணவங் காப்பாம் அராவணி வேணியன் காப்பாம்-எனக் கருளை யளிக்குங் குருபரன் காப்பாம்.
பஞ்சப் புலன்களுங் காப்பாம் என்னைப் பரவு மடியவ ரனுதினங் காப்பாம் குஞ்சர முகத்தவன் காப்பாம் - நல்ல
குழந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம்.
சந்திர சூரியர் காப்பாம்- எங்குந் தங்கு முயிர்க ளனைத்துமென் காப்பாம் மந்திரந் தந்திரங் காப்பாம் - நான்கு மறைகள் சிவாகமம் மாநிலங் காப்பாம்.
351
(அத்து) 1
(அத்து) 2
(அத்து) 3
(அத்து) 4
(அத்து) 5
Page 180
352
நற்சிந்தனை
எல்லாஞ்சிவமே
அப்பனும் அம்மையுஞ் சிவமே அரிய சகோதரருஞ் சிவமே ஒப்பில் மனைவியுஞ் சிவமே ஒதரும் மைந்தருஞ் சிவமே செப்பில் அரசருஞ் சிவமே தேவாதி தேவருஞ் சிவமே இப்புவி யெல்லாஞ் சிவமே என்னை யாண்டதுஞ் சிவமே.
usm -4
மங்களம் ஜெய மங்களம் 1
அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம் அத்துவித வஸ்துவுக்கு மங்களம் ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம் உத்தம பத்தருக்கு மங்களம் முப்பொழுதுந் தொழுவார்க்கு மங்களம் மூவாசை வென்றவர்க்கு மங்களம் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம் முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம் தன்னைத்தன்னு லறிந்தவர்க்கு மங்களம் ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம் ஐயமில்லாச் சாதுக்கட்கு மங்களம் ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம் சீர்காழித் தேவருக்கு மங்களம் திருநாவுக் கரசருக்கு மங்களம் சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் திவ்விய மாணிக்கர்க்கு மங்களம் எங்குந்தங்கும் உயிர்களுக்கு மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
நற்சிந்தனை 353
மங்களம் ஜெய மங்களம் 11
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
ஆதியந்த மில்லா அப்பனுக்கு மங்களம் சோதிவடி வாயுள்ள சுவாமிக்கு மங்களம்.
ஆன்மா நித்தியமென்ற ஆன்ருேர்க்கு மங்களம் தேன்போ லுருசிக்குஞ் சிவனுர்க்கு மங்களம். 2
காண்பதெல்லாங் கடவுளாய்க் காண்பார்க்கு மங்களம் நாண்மல ரெடுத்துப்பூசை பண்ணுவோர்க்கு மங்களம், 3
பொறிவழிபோ யலையாத புண்ணியர்க்கு மங்களம் நெறிவழியே செல்லுகின்ற நிருபருக்கு மங்களம். 4.
நாமறியோ மென்றுசொல்லும் நாதனுக்கு மங்களம் உண்மை முழுதுமென்ற வுத்தமர்க்கு மங்களம். , 5
தன்னைத் தன்னலறிந்த தாபதர்க்கு மங்களம் அன்னைபிதாக் குருவான அப்பனுக்கு மங்களம். 6
மண்ணைப்பெண்ணை மதியாத மாதவர்க்கு மங்களம் வண்ணநகர் வாழும்வைத் தீசனுக்கு மங்களம். 7
திண்ணனென்ற பேர்கொண்ட அப்பனுக்கு மங்களம் சண்முக நாதனுக்குஞ் சங்கரற்கும் மங்களம், 8
விண்ணில் விளங்குஞ் சூரிய சந்திரர்க்கும் மங்களம் எண்ணிலடங் காவுயிர்கள் அத்தனைக்கும் மங்களம். 9 நித்தியகர்மந் தவருத நின்மலர்க்கு மங்களம் பத்துப்பாட்டும் படிப்போர்க்குங் கேட்போர்க்கும்
A. மங்களம், 10
மங்களம் ஜெய மங்களம் محي மங்களம் ஜெய மங்கள்ம் ,
23
Page 181
பகுதி II
உரைநடைப் பகுதித் திரட்டு
Page 182
6
குருநாதன் அருள்வாசகம்
ஒரு குறைவுமில்லை
நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே. ஆகையால் நாம் அவருடைய உடைமை.
அவருடைய அடிமை. நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே. நாம் அவரை ஒருபோதும் மறந்திருக்க முடியாது.
நமக்கு ஒரு குறைவுமில்லை.
நாம் என்று முள்ளோம்.
எங்கு மிருக்கிருேம்.
எல்லா மறிவோம். இப்படியே நாம் இடையருது சிந்தித்துச் சிந்தித்துக்
கீழ்மையான குணங்களைப் போக்கி மேலான தெய்வ தத்து வத்தை அடைவோமாக.
*சந்ததமு மெனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மை
நினையன்றி யில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த
சமரச சுபாவமிதுவே."
என்னுந் தாயுமானவர் அருமைத் திருவாக்கே இதற்குப்போதிய சான்று.
நற்சிந்தனை V, 357
சிவதொண்டு I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு செய்வதே எங்கள் தொழில். அதற் காகவே நாங்கள் பூமியில் வாழுகிருேம்.
சந்திரன் சிவதொண்டு ஆற்றுகின்றது. சூரியனும் ஏனைய கிரகங்களும் அத்திருப்பணியையே செய்கின்றன. தேவர் களும் அசுரர்களும் கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர் களும் அப்படியே தொண்டாற்றி வருகின்றனர்.
அனைத்துஞ் சிவன் செயல்; அவனன்றி அணுவும் அசை யாது. நாம் இழந்து போவதுமொன்றுமில்லை. ஆதாய மாக்கிக் கொள்வதும் ஒன்றுமில்லை. இருந்தபடியே இருக் கின்ருேம்.
நமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லை. நமக்கு இதம் அகிதம் இல்லை. மரணம் பிறப்பில்லை. வேண்டுதல் வேண்டாமை இல்லை. மண்ணுதி ஆசை யில்லை. மனமான பேய் இல்லை. காலதேச வர்த்தமானம் நமக்கில்லை. நாம் அனைத்துக்குஞ் சாட்சியாக விளங்குகின்ருேம்.
ஓம் தத் சத் ஒம்
I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு ஆற்றுவதே எங்கள் தொழில். அதற். காகவே நாம் உயிரோடிருக்கிருேம். உண்பதும் உறங்குவ தும் அதற்காகவே. எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத் தைப் பட்டாலும் எல்லாம் அதற்காகவே செய்கிருேம். நமக்கு ஆதியுமில்லை அந்தமுமில்லை. பிறப்புமில்லை இறப்பு மில்லை. நாம் விளையாட்டுக்காகினும் பிறர்பொருளைக் கவ ரோம். பிறர்வசை உரையோம். எல்லாஞ் சிவன்செய
Page 183
g58 நற்சிந்தனை
லென்பதை மறவோம். பசித்தாற் புசிப்போம். பிறர்செய் யும் நிட்டூரத்தையாவது, கிருபையையாவது பொருளாகக் கருதமாட்டோம். எப்பொழுதும் தூய்மை உடையோம். துன்பத்திலும் இன்பத்திலும் கவலை அடையோம். முழு தும் உண்மை.
ஓம் தத் சத் ஓம்.
II
நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார். இது சரியை; இது கிரியை; இது யோகம்; இது ஞானம்; இது மந்திரம்; இது தந்திரம் இது மருந்து.
இந்தத் தியானத்தில் நிலைத்தலே நிட்டை இந்த நிட்டையுடையோர்க்குச் சீலமில்லை; தவமில்லை; விரத மில்லை; ஆச்சிரமச் செயலில்லை.
இவர்கள் தாம் விரும்பிய வண்ணம் மண்ணில் வாழ்ந் தார்கள்; வாழுகிருர்கள்; வாழ்வார்கள். இவர் பெருமை யாவருமறியார்; கற்கண்டின் இனிமை கற்கண்டை உமிப வர்க்கே தெரியும்.
ஒரு பொல்லாப்பு மில்லை. எப்பவோ முடிந்த காரியம். நாமறியோம். முழுதும் உண்மை.
நற்சிந்தனை" 359
ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்தது. ஒழுக்க முடையார் எல்லாமுடையார். ஒழுக்கங்களாவன கொல்லாமை, கள் ளாமை, பிறர் வசை உரையாமை, பிறர் பொருள் கவ ராமை, தாழ்மை, பொய்யுரையாமை முதலியனவாம்.
எக்கருமத்தைச் செய்யும் பொழுதும் ஊக்கத்தோடுஞ் சிரத்தையோடும் மனமகிழ்ச்சியோடுஞ் செய்து பழகுதல் வேண்டும். அப்படிச் செய்து பழகிவந்தால் மன உறுதி உண்டாகும். அஃதாவது மனம் ஏகாக்கிர சித்தத்தைப் பொருந்தும். பொருந்தவே ஆன்மசக்தி அதிகரிக்கும். நினைத்தகாரியம் நினைத்த மாத்திரத்திலே உண்டாகும். இவர் பகைவர், இவர் உறவினர் என்ற பாகுபாடு சித்தத் திற் புகுந்து கவலையை உண்டாக்காது.
எல்லாம் என்னிடத்தே உண்டாகின்றன; எல்லாம் என் னிடத்தே நிலைத்திருக்கின்றன; எல்லாம் என்னிடத்தே ஒடுங்குகின்றன என்ற தூய்மையான எண்ணம் உடைய வராய் இருத்தல் வேண்டும். மேலும் எனக்கொரு குறைவு மில்லை; என்னிடத்திலே எல்லோரும் அன்பாய் இருக்கி ருர்கள்; நானும் எல்லாரிடத்திலும் அன்பாய் இருக்கிறே னென்று அடிக்கடி நினைந்து நினைந்து சாதிக்க வேண்டும். இப்படியே இடைவிடாமற் பழகிவந்தால் எல்லாமறியும் ஆற்றலும் எல்லாஞ் செய்யும் வல்லமையும் எளிதிற் கைவரும்.
'ஓம் தத் சத் ஓம்"
Page 184
360 நற்சிந்தனை
சன்மார்க்கம்
குரங்குபோல் மனங்கூத்தாடுகின்றதே.
இதன் கூத்தை எப்படி யடக்குவதென்று தெரியவில் லையே. நன்று சொன்னய். இதற்கு நல்ல மருந்துன்னிட முண்டு. நீ அதை மறந்து போனுய். சொல்லுகிறேன் கேள்.
சிவத்தியான மென்னும் மருந்தைத் தினந்தோறுஞ் சாப்பிட்டுவா. மனக்குரங்கின் பிணி மாறும்.
அதைச் சாப்பிடும்போது அனுபானத்தைக் கூட்டிச் சாப்பிடு. அதுவுமுன்னிடமுண்டு.
அது என்னவென்றல்; நாவடக்கம், இச்சையடக்க மென்னுஞ் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு.
இதுவும் போதாது. பத்திய பாகத்திலே தான் முற் றுந் தங்கியிருக்கிறது. அதுவு முன்னிட முண்டு.
அது என்னவென்முல்; மிதமான ஊண், மிதமான நித்திரை. மிதமான தேக அப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம். ஆன்ம இலாபத்தின் பொருட்டிதைச் செய். vn
மனத்தை ஒருவன் அடக்கி வெற்றி கொள்ள முழு மனத்தோடு விரும்புவானனல் சிவத்தியானத்தைத் தினந் தோறுஞ் செயது வரக் கடவன். -
படிப்படியாக அவன் மனமொடுங்கி வருவதை அவன் கண் கூடாகக் காணுவான்.
சாந்தம், பொறுமை, அடக்கம் முதலிய நற்குணங் கள் அவனிடத் துதிக்கும். γ.
அவன் மனமெந்த நேரமும் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். இகழ் புகழிரண்டினலும் இழிவடையான்.
நற்சிந்தனை 36.
அந்தராத்மாவிலே சுகிப்பான். பிறர் சுகந் தன் சுக மென்ற எண்ணம் பெருகும்.
கைவிளக்கை யொருவன் கொண்டு செல்வானுணுல் இராக்காலத்தில் அவன் மனங் கலங்குவான? கலங்கான். அப்படியே சிவத்தியானத்தைச் செய்து வருவானனல் மாய விருள் அவனை அடையுமா? அடையா. V
போதனையிலுஞ் சாதனை சிறந்தது. ஒரு பொல்லாப்பு மில்லை.
ஆன்ம இலாபமே பொருளெனக்கண்ட அறிஞர் அநித் தியமான இந்த உலக இன்ப துன்பத்தின் மயங்காது தாமரையிலையில் நீர் போற் சகத்துடன் கூடிவாழ்வார். ஆன்ம இலாபத்தைப் பெற நினையாதவர் இந்த உலகத் துன்ப இன்பத்தினுற் கலங்கித் தியங்கித் திரிவார்கள். ஆன்ம இலாபத்தையே குறிக்கோளாகக்கொண்டு நன்மை தீமை யைவென்று நான் எனதென்னும் அகங்கார மமகாரங் களைக்களைந்த அறிஞர் இறைவன் திருவடி நிழலில் பிறப் பிறப்பற்றுப் பேரின்பத்துடன் வாழ்வார்.
அஃதறியா அறிவிலிகளே துன்பக் கடலிலே வீழ்ந்து எரிவாய் நிரயத்துக் காளாவார்.
வண்டுகள் பூவைக்கிண்டித் தேனை உண்டு ஒன்று மறி யாது கிடப்பது போல் பக்தனும் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத்தினுல் கிண்டி ஆங்குவரு மானந்தத்தேனை யுண்டு ஒன்று இரண்டு, நன்று தீதென்றறியாமற் தேக் கிக் கிடக்கிருன்.
ஒரு கமக்காரன் தன்னுடைய நிலத்திலே நல்ல வித்தை யிட்டு அதிலுண்டாகுங் களையைக் களைந்து, விளையுந் தானியத்தை யொன்று சேர்க்கிறன்.
அதுபோலப் பக்தனும் சிவமாகிய நிலத்திலே பக்தி யென்னும் வித்தை வித்திக் காமக்குரோத மோக மதமாச்
Page 185
362 நற்சிந்தனை சரியமென்னுங் களையைக் களைந்து சிவபோக மென்னுந் தானியத்தைச் சேர்த்து வைத்துப் புசிக்கிருன்.
பூலோகமாகிய நந்தன வனத்திலே சீவர்களாகிய மலர்கள் மலர்ந்து கிடக்கின்றன. சிவன் அதைக்கண்டு மகிழ்கிறன்.
பொற்கொல்லன் பொன்னை யெடுத்துப் பல பூண் களைப் படைக்கிருன்.
சிவனகிய பெரிய பொற்கொல்லன் ஆன்மாவாகிய
பொன்னை யெடுத்துச் சீவர்களாகிய பலபணிகளையு மாக்கு கிருன். 8.
வைத்தியன் பல மூலிகளையு மெடுத்து ஒன்ருக்கி நோய்க்கு மருந்து கொடுத்து நோயை மாற்றுகிருன்.
பெரிய ஞான வைத்தியனும் தனு கரண புவன போகங் களை ஆன்மாவுக்குக் கொடுத்து அதன் நோயை மாற்றி இன்ப வீட்டில் வைக்கிருன்.
தாய் தனது குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான் களைக் கொடுத்து மகிழ்விக்கிருள்.
சிவபெருமானுந் தன் குழந்தைகளாகிய எங்களுக்குப் பல விதமான இன்பங்களையுந் தந்து மகிழ்விக்கிருன்.
பொறி வழியே போந்து மனம் அலைய அறிஞர் இடங் கொடார். ஏனெனில் ஆத்மாவே தானென அறிந்தவர்கள்; ஆசை நோய்க்கு இடங்கொடுப்பாரா? அன்று.
அவர்தம் பெருமையை வேத சிவாகமங்களும் புகழ் கின்றன. இவர்களைக் கண்டால் கல்லுங் கரையும்
அனைத்தினும் வெற்றி யுண்டு.
நற்சிந்தனை 3 SB
W சிவத்தியானம்
ஒ மனிதனே! நீ உண்மைப் பொருள். கேடற்றவன். உனக்கு ஒருவருங் கேடு விளைவிக்க முடியாது.
நீ இங்கும் அங்கும் எங்கும் உள்ளவன். நித்தியன். உறுதியுடனே சிங்கங் கானகத்தில் திரிவதுபோல் உலக மாகிய கானகத்தில் திரி. எந்த விதத்திலுந் தளர்வடை
யாதே. ஒரு நூதனமு மிங்கில்லை. முழுதுமுண்மை. ஒரு பொல்லாப்புமில்லை.
ஒ மனிதனே! வானம் வந்தாலும் பூமி வந்தாலும் ஆட்சிசெய்யக் கருதாதே. சாட்சியாயிரு. மாட்சி உன் பிறப்புரிமை.
அது என்ன வுபாயத்தாலு மடையப்படுவதொன் றன்று. அப்படியுள்ள காரியம். மற்றனைத்துஞ் செப்படி வித்தை, அறிவு, அறியாமை உன்னிடமில்லை. நீ பர LDfTjöLorr.
l ஓம் தத் சத் ஒம் |
ஒ மனிதனே! சற்றுப் பொறுமையாயிருந்து பார். நீ யாரெனத் தெரிந்து கொள்வாய். துயருறத் தகாத காரியங்களில் துயருருதே. துன்பமும் இன்பமும் உலக
நடவடிக்கைகள். நீ சித்துப் பொருள்.
உன்னை ஒன்றுந் தாக்கமாட்டாது. எழுந்திரு. விழித் துக்கொள். சிவத்தியான மென்னுந் திறவுகோலால் மோகூடிவீட்டின் கதவைத்திறந்து பார். எல்லாம் வெளி யாகும். VK.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஓ நண்பனே! உன்னை யார்தான் பாவியென்று சொல்ல வல்லான், ஏன்?
Page 186
364 நற்சிந்தனை
" நீ சிவத்தின் அம்சமல்லவா? மறந்து போனுய். ஓம் தத் சத் ஒம் என்று ஓயாமற் சொல்லு, உன் முழுமனத் தோடும் இறைவனுக்கு உன்னை ஒப்புக்கொடு. சிவத்தியா னத்தை அசட்டை பண்ணுதே. ஈற்றில் யாவும் நன் மையாய் முடியும். சோம்பலுக்குஞ் சோம்பலின்மைக்கும் நீ கட்டுப் படாதே, h
அதிகப் பேச்சில் என்ன பயன். பண்படுத்தப்பட்ட தரையிலன்றே நல்ல பயன் வரும். அஞ்சாதே.
நாங்கள் சிவனடியார். சிவபெருமான் என்றுள்ள வரோ அன்று நாமுமுள்ளோம்.
வெப்பந் தட்பம், இன்பந் துன்பம், இளமை முதுமை இயற்கையின் குணங்கள்.
இவைகளின் தீண்டுதலால் நாமேன் கவலைப்படுவான்.
இவைகள் தோன்றி மறைவன. நாமோ தோன்றுவது மில்லை. மறைவதுமில்லை.
உண்மை இன்மை யாகாது. இன்மை உண்மை யாகாது.
எல்லாஞ் சிவன் செயலென்ற எங்களுக்குக் குறைவு முண்டோ? நிறைவு முண்டோ? நாம் சிவபெருமானென்ற நூலிலே கோக்கப்பட்ட பல நிற முள்ள மணிகளை யொப் பவர். நூலறுவதுமில்லை. நாங்கள் சிதறிப்போவதுமில்லை. பலபடக் கூறுவதால் பயனில்லை. . . . . . .
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஒ சினேகிதா! நீ சிவனடியானென்று முழுமனத் தோடும் நினை. எல்லா வெற்றியு முன்னிடமுண்டு. அதற்கு மேல் வேருென்று மில்லை. யாவுமுன் காலடியில்.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
நற்சிந்தனை s 365
குரு வாசகம்
ஆத்துமா நித்தியமானது. பிரிவில்லாதது. பூரணமா னது. சரீரமோ அழியுந் தன்மையுள்ளது. பிரிவுள்ளது. இப்படி யிருக்கையில் நாங்கள் இவ்விரண்டையுஞ் சரி யென்று சொல்ல முடியுமா? அப்படி நாங்கள் சொன்னல் இதிலும் பெரிய பாவமும் பழியும் வேறுண்டோ?
ஆத்துமா எல்லாவற்றுக்கு மாதியாயுள்ளது. யாவை யும் ஆளுகின்றது.
சரீரமோ தொடக்கமுடையது. ஆளப்படுந் தன்மை (1460)L-Ugbl.
இப்படி யிருக்கையில் நாங்களில்விரண்டையும் ஒன்ருே டொன்று ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? அப்படி யொப் பிட்டால் இதிலும் வேறு பழி கிடையாது.
இயற்கையிலே ஆத்துமா அறிவுடையது. தூய்மையா னது. சரீரமோ அறியாமை யுடையது. தூய்மை யற்றது. இவ்விரண்டையும் ஒப்பிட்டால் இதிலும் அஞ்ஞானம் பிறி துண்டோ?
ஆத்துமா பிரகாசமுடையது. அதாவது சுயம்பிரகாச முடையது. சரீரமோ இயற்கையிலே இருள் மயமானது. இவ்விரண்டையு மொப்பிடலாமா?
யாரொருவன் தன்னைச் சரீரியென்று நினைக்கிருனே ஐயோ, அவனிலுங் கீழ்மகன் யார்?
யார் ஒருவன் தன்னுடைய சரீரமென்று சொல்லு , கிருனே அவன் மட்பிண்டத்தைத் தன்னுடையது என்று சொன்னது போலிருக்கும்.
யார் ஒருவன் தன்னைப் பூரணனென்றும், நித்தியன் என்றும், இயற்கை அறிவுடையவனென்றும் நினைக்கிருனே அவன் உண்மை யறிவாளி. அவனுக்கிணையாக ஒரு தெய் வமுமில்லை.
Page 187
366 நற்சிந்தனை
யார் ஒருவன் தன்னை ஓர் அழுக்கும் பற்றமாட்டா
தென்றும், மாறுபாடில்லாதவனென்றும், தூய்மையிலுத்
தூய்மை யென்றும் நினைக்கிருணுே அவனை அறிவாளிகள் ஞானி யென்று சொல்லுவார்கள்.
வேதம் ஆகமம் யாவும் இந்த உலகம் முழுவதுந் தெய்வமே நிறைந்திருக்கிற தென்றும் அதைவிட வேறு யாதுமில்லை யென்றும் முறையிட நாங்கள் எப்படி உலக மிருக்கிறது சரீர மிருக்கிறதென்று நினைக்கலாகும். அப்படி உலகஞ் சரீரம் வேருயிருக்கிறதென்றல் இதைவிடப் பழி பிறிதுண்டோ? ஆன்ருேரும் நின்னவார் பிறரன்றி நீயே ஆணுய்" என்று சொல்லி யிருக்கிருர்கள்.
இன்னேரன்ன பல காரணங்களாலுங் கடவுளைத் தவிர வேறென்றுமில்லை. யாவு மவன் செயல்.
சொல்லெல்லாம் மோனம் தொழிலாதியும் மோனம் எல்லாம் நன்மோன நிறைவே.
சிவபக்தி
சிவபக்தி மாத்திரந்தான் மனிதனைப் பாக்கியவானக் கும். மற்றையவனத்தும் பிரயோசனமற்றவை. ஆகை யால் இடைவிடாமற் சிவத்தியானம் பண்ணு. ஒன்றுக்கும் பயப்படாதே. வெற்றியுன் சொந்தம். எத்தனைமுறை தவ றினலுந் தைரியத்தைக் கைவிடாதே. தவறுதல் சடசம் பந்தமானது. நீயோ சித்துப்பொருள் (அதாவது அறிவுப் பொருள்). நீயொரு நாளும் அழிய மாட்டாய். எழுந் திரு! விழித்துக் கொள்! காரியங் கைகூடுமட்டும் வழி யிலே தங்கிவிடாதே! உற்சாகத்தோடு முன்னேறிச் செல். உனக்குச் சகல சத்தியுங் கட்டுப்படுவதைக் காண். வீண் வாத தர்க்கத்திலே நாளைப் போக்காதே. நீ எங்கே போகிருயோ அங்கே உன்னுடன் பகவான் வருவார்.
வெளிமாதிரி யொன்றுஞ் செய்யாதே. உனக்குள் நீ பெலத்துக்கொள். சமயமென்பது ஒரு மாதிரியுமற்ற தனித்த நிலை. உடல் பொருள் ஆவி மூன்றையும் பகவா னுக்கு ஒப்படை. அதன்பின் உன்னைப் பற்றிய காரியங் களைக் கைவிட்டுவிடு. அனைத்தும் அவனே பார்.
நற்சிந்தனை 367 தவம்
தவத்திலே மேம்பட்டவர்களைக்கூட இந்திரியங்கள் வரம்பு கடந்து இழுத்துச் செல்கின்றன. ஆதலால் அவற்றை வெல்வதற்குச் சிவத்தியானஞ் செய்க. அதனல் மாத்திரந் தான் புலன்களைத் தன்வசப்படுத்தத்தக்கது. ஆகவே இடை விடாமற் சிவத்தியான ஞ் செய். மனிதன் விடயங்களைக் கருதும் போதெல்லாம் பற்றுண்டாகிறது. பற்றுதலால் விருப்பம் உண்டாகிறது. விருப்பத்தாற் சினம் பிறக்கிறது. சினத்தால் மயக்கம். அம்மயக்கத்தால் தவறுதல் உண்டா கும். ஆதலால் உன்னைச் சிவத்தியானத்தால் காத்துக் கொள்.
நாங்கள் எங்கள் சிறுமைக் குணத்தினல் இயல்பழிந்து தரும வழியினின்று தவறுகிருேம். தவறுதல் நீங்கித் திட முண்டாகச் சிவத்தியானமே சிறந்த கருவியாகும். இந்த உலகத்தில் மிகுந்த செல்வமிருப்பினும், வானுேரை ஏவல் கொள்ளக்கூடிய வல்லமையிருப்பினும் நாங்கள் புலன்களை அடக்கியாளுதல் முடியாது. ஆதலால் திருவருளை முன்னிட்டு மனத்தைப் புலன்வழிச் செல்லாமல் அடக்கியாள். இது தான் தவமென்று பெரியோர் சொல்வர். அதைவிடுத்து இடம்பமான வேள்வி முதலியவை செய்வதால் திடமுண் டாக மாட்டாது.
நானே நீ
என்னுடைய இராச்சியத்தில் இராப்பகலில்லை; நன்மை தீமையில்லை; நீ நானில்லை; இன்றைக்கு நாளைக்கு இல்லை; பெரிது சிறிது இல்லை; நீயுமிந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டுமாகில், அங்கு முழுமனத்தோடு வெளியேறக் கடவை; புகையிரதம் வேண்டியதில்லை; மாட்டுவண்டி தேவையில்லை; பின் என்ன வேண்டுமாகில் வைராக்கிய மென்னும் புதுக்காத வண்டிலும், சாந்தம் என்னும் இரண்டு வெள்ளை எருதுகளும், மனப்பாக்கிய மென்னுஞ் சமையாத சாதமும், யாசகமென்னும் அங்கவஸ்திரமும், ஞானமென்னும் மூக்குக் கண்ணுடியும் எடுத்துக்கொண்டு பின் முன் நாடாமல் வரக்கடவை. அப்பொழுது நீ காண விருக்கும் காட்சிகளை என்னுற் சொல்ல முடியாது. கட வுளே சாட்சி.
Page 188
368 நற்சிந்தனை
866).T6th UTG).260T
தெய்வத்தை நம்பு, முழுமனத்தோடு நம்பு; உலகில் உனக்கினியதெனத் தோன்றும் எவற்றிலும் இனியதாக நினை. அதைவிட வேறில்லை என்று நினை. இருக்கும் போதும் நிற்கும்போதும், நடக்கும்போதும், கிடக்கும்போதும் நினை. உனது நரம்பிலும் தசையிலும் இரத்தத்திலுந் தெய்வ மென்னும் நினைவே நிறைவதாக. நானில்லை, கடவுளே இருக்கிருரென எண்ணு. கடவுளைக் கும்பிடுதலே வாழ்வின்' இலக்காக வைத்துக்கொள். எவன் எதை நினைக்கிருனே அவன் அதுவாகிறன். கடவுளை உனது உள்ளத்தில் வைத்து வளர்ப்பாயாக. எல்லாம் அவருடைய செயலாகுக. ஈற் றில் எல்லாம் அவனுகவே காணப்படும்.
சிவபெருமான் அத்துவிதமாக இருக்கிருர், அடியேன் அவரே எனத் தியானிக்கும் மகிமை எனக்குண்டு. ஒருவன் எப்படிப் பாவனை செய்கிருனே அவன் அப்படி ஆகிறன். ஆகையால் "நான் அவனே' என்று தியானஞ் செய். அப் போது உன் செய்கைகள் அனைத்தும் அவன் செய்கையே யாகும். அவனைத் தவிர வேறு பொருள் இல்லை. அவனே அனைத்தும். அப்படியான அவனே தன்னைப் பல கோலங் களாக்கி விளையாடுகிருன்,
அவனுக்குப் பிறப்பிறப்பில்லை. ஆதியந்தமில்லை. ஒரு மாறுதலுமில்லை. முழுதுமுண்மை.
ஓம் சாந்தி.
நற்சிந்தனை : 369
66.60TiguTf
நாங்கள் சிவனடியார்
ஆதியுமந்தமும், இறப்பும் பிறப்பும், இரவும் பகலும், சுகமுந் துக்கமும் எங்களுக் கில்லை யென்னும் திருமந்தி ரத்தை எவனெருவன் மறவாமல் தியானஞ் செய்கிருனே அவனுக்கு ஒரு குறையும் வராது.
எதை நீ பாவனை செய்கிறயோ அது நீ யாவாய்.
இதற்கெல்லாம் விடாமுயற்சி, அதாவது சலியாமை வேண்டும் .
பாடுபட அஞ்சுபவனுக்கு ஒரு பிரயோசனமு முண்டா காது; பாடின்றிப் பட்டங் கிடையா தென்பது உலக வழக்கு.
காரியசித்தி எய்தும் வரையும் விடாமுயற்சி செய். நீ ஏன் ஓயாமல் கெட்ட காரியங்களைச் சிந்திக்கிருய்? அச் சிந்தனையை விட்டு முழு மனத்தோடு தெய்வத்தை வணங்கு. உனக்கு விதிவசத்தாற் பொருந்துவனவற்றை உவகையோடு ஏற்று நடத்து. இறுதியில் யாவும் ஜெயமாகும்.
அது அப்படி யுள்ள காரியம் என்பதைச் சதா நெஞ் சிற் பதித்துக் கொண்டு இயல்பாய் உனக்கு வரும் வேலை களையுங் கடமைகளையுஞ் செய்து கொண்டிரு. அல்லது அவற்றை விட்டிரு. எதுவுஞ் சரியே.
செய்தலிலுஞ் செய்யாமையிலும் அது தங்கியிருக்க வில்லை. கருமம் இல்லாமையை விரும்பாதே. கருமத்தைப் பற்றதே. செய்தல் செய்யாமை இவற்றுள் இயல்பாய் எது உனக்கு அமைகின்றதோ அதையே பற்றி நில்.
24
Page 189
370 நற்சிந்தனை
இன்பவிறையே
ஒரு பிதா தனது குழந்தையினது மழலைமொழியைக் கேட்டு மகிழ்வானன்றிச் சிறிதுமிகழமாட்டான்.
அவ்வண்ணமே, தேவரீர் அடியேனுடைய விண்ணப் பத்தைக் கேட்டருள்வீராக. இவ்வுலகத்திலே எத்தனையோ சாதிகளுண்டு. அவைகளின் பழக்கவழக்கங்கள் ஒன்ருே டொன் ருெவ்வாது முரண்படுகின்றன. ஒவ்வொரு சாதி யுந் தத்தம் பழக்க வழக்கங்களே மேம்பாடுடைத்த தெனக் கூக்குரலிடுகின்றது. சமயங்களுமப்படியே. இவைகள் யாவும் உலகத்தின் சிறப்புக்களேயன்றி வேறல்ல. இந்த வித்தியாசமான போராட்டங்களெல்லாம் முன்னு முள் ளன. நூதனமான காரியங்களல்ல. இவைதாம் இந்தப் பிரகிருதியின் தோற்றங்கள். இவை வேறு தான் வேறு என்றறிந்த அறிவாளி இவைகளுடன் கூடியுங் கூடாது மிருப்பன். எத்தனையோ முறைகளில் பெரிய பெரிய அவ தாரங்கள் வந்து எவ்வளவோ வேலைகளைச் செய்தும் மீட் டும் இந்த உலகம் அப்படியே யிருக்கின்றது. இது ஒரு பெரிய இரகசியம்.
தேவரீர் இவைகள் எல்லாம் நன்கறிவீர். நானென் றுமறியேன். என்னை மன்னித்துக் கொள்ளும்.
pamahagið
ஆண்டவனை யன்றி வேருெரு பொருளுமில்லை. அனைத் தும் அவன்செயல். உனது சுமைமுழுவதையுந் திருவடிக் கீழ் இறக்கி வைத்து இளைப்பாறு. கவலைக்கிடங்கொடாதே. நான் செய்தேன், அவன்செய்தானென்று நலியாதே. விழித்திரு.
நற்சிந்தனை " , 371 ·
சுகவாழ்வு
கடவுளை மனம் வாக்குக் காயத்தாலே காலை, உச்சி, மாலை என்னும் மூன்று காலத்திலும் வழிபடுதல் வேண் டும்.
சரீரத்தையும் மனத்தையும் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சரீரத்திலாவது மனத்திலாவது ஏதுங் குழப்படி ஆரம் பிக்கும்போது அந்த கூடிணமே சாப்பாட்டை நிறுத்தி, ஆலய வழிபாடு, அடியார் வழிபாடு, அல்லது இயன்ற தானதருமங்கள் செய்யவேண்டும். w வரவுக்கேற்ற செலவு செய்யவேண்டும்.
தனிமையாக இருந்து கொண்டு அல்லது நடந்து கொண்டு, தன் வாழ்நாளை நடாத்தும் வகையைச் சிந் திக்கவேண்டும்.
மிஞ்சிய போகத்திலாவது, போசனத்திலாவது, வைத் திருக்கு மாசையை அடியோடு தவிர்க்கவேண்டும்.
இறைச்சி மீன் குடி முதலியவைகளை விடவேண்டும்.
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புள்ளவனுக இருக்க வேண்டும். م s
தான் மிகவும் பரிசுத்தன் என்றுந் தனக்கு ஒரு குறை வில்லை யென்றும் அமைதியாகச் சிந்தித்தல் வேண்டும்.
மேலே சொல்லிய வண்ணம் இவ்வாறு ஒருவன் சாதித் துப் போதித்து வருவானுயின், யோகமும், ஞானமும், சர்வசித்தியும் ஈற்றில் முத்தியும் லபிக்கும்.
Page 190
US6 III
திருமுகங்கள்
Page 191
374 . . . நற்சிந்தனை
நான் யார்
நீ உடம்பன்று, மணமன்று, புத்தியன்று, சித்த மன்று, நீ ஆத்மா.
ஆத்மா ஒரு நாளும் அழியாது. இது மகான்க ளுடைய அநுபவ சித்தாந்தம். இந்த, உண்மை உனது உள்ளத்தில் நன்ருய்ப் பதியக் கடவது.
ஆனல் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு, அதா வது தருமநெறியிற் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் திருமுன்னிலை என்று சாதனை செய். கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளவர்.
இப்படிக்கு அவனே நானே.
~~
ஓம் தத் சத் ,
கொல்லம், ஆணி 17, 1938
அகமுக மாகு. அப்போதே ஆனந்தமுண்டாம்.
எதனல் கண் காணுகிறது? எதனுல் காது கேட்கின்றது? எதனல் மூக்கு முகருகின்றது? எதனுல் வாய் பேசு கின்றது? அதுதான் ஆத்துமா அல்லது கடவுள். எவ் வளவு சுலபமான வழி! நினைத்துப் பார். அனைத்துமுன் கைவசம். ஒரு கணம் நீ ஊன்றி யோசிப்பாயானல், நீ அதுவென உனக்கு நன்கு புலணுகும். உன்னுள்ளே தெய் வீகத்தன்மையை உணர். நீயே உனக்குத் தலைவன். நீயே உன்னை நடத்துபவன். நீயே உலகத்துக் கேகசக்கராதிபதி. இந்தத் தூய எண்ணத்தை மறந்தால் இறப்புப் பிறப் பாகிய சமுத்திரத்திற் கிடந்து திக்குமுக்குப்படுவாய்.
எழுந்திரு, விழித்துக்கொள். உன்னை இனி ஒன்றும் வெற்றியெடுக்க முடியாது. விளக்கு எரியவேண்டுமாயின் திரியும் எண்ணெயும் வேண்டும். நீ பிரகாசமடைய வேண்டினல் ஓயாமல் ஒம் தத் சத் என உணர்ச்சியோடு (அதாவது உயிரை எழுப்பி) பிரார்த்தனைசெய். சீக்கிரம் புத்தகத்தை முடி. h−
நற்சிந்தனை ‘ - 375 உத்தம இரகசியம்
நாங்களெல்லாம் ஒரே சமயத்தையும் ஒரே சாதியை யும் சார்ந்தவர்கள்; எங்களுக்குள் ஒருமாறுதலும் இல்லை. நாங்கள் பரிசுத்தரும், தெய்வத்துவத்துள் வைக்கப்பட்ட வர்களாகவும் இருக்கின்ருேம். வித்தியாசம் வித்தியாச மான மாறுதல்கள் யாவும் உண்மைச் சுபாவத்தின் சிறப் புக்களாக இருக்கின்றன. இவைகளை மாயை எனப் பெரி யோர் சொல்வர், ஒழுக்கத்தினுல் வசீகரப்படுத்தப்பட் டோர்க்கன்றி மற்றையோர்க்கு இவ்வுண்மை புலப்படாது. அதுபற்றியே தன்னுயிர்போல் மன்னுயிர் யாவையும் நேசித்தல் வேண்டுமென்று மகத்துக்களால் திரும்பத் திரும்ப வற்புறுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால் யாவும் ஒழுக்கத்திலேயே தங்கியிருக்கின்றன. இவ் வொழுக்கவழியில் நின்று எல்லாம் நாம் என்று பாவனை செய்து வரவர அற்புதமான அநுபவங்கள் மூலமாக நாங்கள் சடப்பொருள் அல்ல, சித்துப் பொருளென்று தெளியலாகும்.
அஞ்சேல்
14-11-33
'அஞ்சுவ தியாதொன்றுமில்லை, அஞ்ச வருவதியா தொன்றுமில்லையென்னு மான்றேர் மெய்ம்மொழி நம்மைப் பிறப்பிறப்பாகிய கடலைக் கடப்பிக்குந் தெப்பம்". இதைத் துணையாகக் கொண்ட வெமக்கென்னகுறை? ஆதலால் நிறைந்த மனத்துடன் இந்தப் பெரும் பிரயாணத்தைச் செய்வோமாக.
'அகர வுயிர்போ லறிவாகி யெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து'
இப்படிக்கு என்றும் மறவாதவன்.
Page 192
376 நற்சிந்தனை
காசியிலிருந்து எழுதிய கடிதம்
தேடித்திரிந்து காசிக்கு வந்து கண்டேன் விசுவநாதனை என்னுள். வாடித்திரிந்து வருந்த வேண்டாம். தேடிய பூடு காலுக்குள்ளே என்ற தெவிட்டா வாசக மொன் றுண்டு. இவ்விடத்திலும் மனிதர்களெல்லாம் எங்களைப் போலே தானிருக்கிறர்கள், நூதனமான காரணமொன் றும் பூதலமீதிலில்லவே இல்லை. இருந்த இருக்கிற இருக் கும் யாழ்ப்பாணத்தா ரெல்லாருக்குமாகக் கருமாதிகளெல் லாஞ் செய்து முடிந்து விட்டன. இனிமே லுங்களுக் கியைந்தபடி அன்பாக உலகில் நடந்து ஆண்டவன் அடிக்
கீழ் அமர்ந்து வாழ்க.
30- 1 - 40
Gl Glouubub
இதோபார். நான் உனக்கு மிகவும் அணித்தாயிருக் கிறேன். என்னைக் காண்கிருயா? நல்ல கூர்மையாய்ப் பார், உள்ளேயிருக்கிறேன். இன்னுந் தெளிவாய்ச் சொல் லில் நான் நீயாயிருக்கிறேன். பின் நீயேன் என்னை உனக்கு வேருய் நினைக்கிருய்?
நீயொரு கெட்டிக்காரனல்லவா? உனக்கு என்ன குறை? ஒரு குறைவுமில்லையல்லவா? உனது கடமையை நீ நல்லாய்ச் செய். யாவரிடத்தும் அன்பாயிரு. அதா வது உன்னைப்போல எவரையும் பார். பின்னல் வருவன வற்றைப் பாடம் பண்ணு.
'அரும்பிய கொன்றை அணிந்த சென்னியன்
ஆறும் பிறையும் சூடிய அழகன் இறையவன் மறையவன் ஏழுல காளி ஈசன் மழுப்படை தாங்கிய கையன் உம்பர் தலைவன் உயர்கை லாயனே'.
-ஈசுரமாலே ஒளவையார்.
நற்சிந்தனை 377.
β) - சிவமயம்
பகைத்தலும் விரும்புதலும் இல்லாதவன் சந்நியாசி யாயினுஞ் சரி, இல்லறத்தானுயினுஞ் சரி, அவனே பரம புருடன். அதாவது அவன் சீவன் முத்தனென்று பெரி யோர் சொல்லுகிருர்கள். இயற்கையோடு அளவளாவி வாழுதல்தான் பேரின்பம். அது ஒரு மாதிரியல்ல; உண்மை உணர்ச்சி. தனக்குத் தான் உண்மையாக விருந்தால் யாவும் விளங்கும். தன்னைப்போல மற்றவர்களையும் நேசித் தலே ‘தவம்'. அதுவே அறம்.
எங்குஞ் சிவம்
.ெ
சிவமயம்
யாவும் நமது ஊர். யாவரும் நமது கேளிர். நன்மை தீமை நாம்தர வருவன. பிறராலன்று. பிறர் காய்ந்த வழிக் காய்கிலம்; உவந்தவழி உவக்கிலம். யாவும் திரு வருளென்பது நன்கு அறிவேம். நம்மைச் சூழவரவிருக் கும் மலைகள் திருமாலைப்போல் பச்சைப் பசேலெனக் காணப்படுகின்றன. இரைந்து விரைந்து செல்லு மருவி களின் இனிய சத்தம் திருமாலின் கரத்திலிருந்து இடை விடாது ஒலித்துக்கொண்டிருக்கும் பாஞ்ச சன்னியத்தை ஒத்தன. சந்திரனுஞ் சூரியனு மிருபாரிக ளிருபக்கத்தும் விளங்குவதுபோல் விளங்குகின்றன. மரக்கொம்பரிலிருந்து தீங்குரலாற் பாடும் பட்சிகள் அக் கண்ணன் புல்லாங் குழல் பாடுவதை ஒத்திருக்கின்றன. தேயிலை கொய்யும் மகளிர் திருமாலின் இனிய பத்தரான கோபிகாஸ்திரீகளை நேர்வர். இவ்விடத்துக் கறங்கும் முரசம் துரியோதன னுடனே போருக்குச் சென்ற பஞ்சபாண்டவரின் தேரின் மீது அடிக்கப்படும் பேரிகையை இசைந்தது. எப்படித். திருமால் சகல வளங்களுடனுந் துவாரகையில் விளங்கி ஞனே அப்படியே இம்மலை இவ்விடத்து மிளிர்கின்றது. கண்ணனுடைய விருந்தினராக நாம் இவணிருக்கிறேம். ஒன்று கூறுதும். உவந்து கேட்குதி. நன்று தீதென நாட் கழிந்தன. என்று காணுவல் என்ற எண்ணமே இன்றும் எம்மை இசைந்து வாட்டிற்று.
என்றும் மறவாதவன். 17-3-32
Page 193
378 u நற்சிந்தனை
சிவமயம்
சொல்வதை மிகவும் கவனமாகக்கேள். நீ யார்? உடம்பா? மனமா? அன்றிக் கண், காது, வாய் மூக்கு முதலிய அவயவங்களா? இல்லை. ஏன்? எனது உடம்பு எனது கையென்று சொல்லுகிறதனுல் நான் உடம்பை விட வேறு பொருளல்லவா? ஆம்? பின்னை நான் எப் படிப்பட்டவன்? அழிவில்லாதவன். ஆகையால் எனக்குப் பயம் முதலியன விரலாமா? இல்லை. ஆனல், சரீர மன தர்மத்தையொட்டிப் பாவத்திற்குப் பயப்பட வேண்டும். புண்ணியத்தைச் செய்யவேண்டும். புத்திமான்கள் இப்படி நினைந்தும், செய்தும் பேரின்பத்திற்கு இம்மையிலும் மறு மையிலும் பாத்திரமுள்ளோராகின்றனர். நிலம், காற்று, தண்ணிர், நெருப்பு, வானம் இவைகளா லாக்கப்பட்ட வீட்டில் பகவான் வசிக்கிருர். ஆனபடியால், வீட்டைச் சுத்தமாயும், மனத்தைச் சுத்தமாயும் வைத்து அமைதி யாய் நட.
என்றும் மறவாதவன்.
842ے 18 سے87
6.
Soul Duth
உனக்குச் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. நாங்க ளெல்லாம் தேவ சந்நிதானத்தில் இருக்கிருேம். இது ஒரு பெரும் சத்தியம். யாவும் இருந்தபடியே நடந்து வருகின் றது. கிலேசமோ, அன்போ, பகையோ, இவையாவும் பகவானுடைய விளையாட்டு. இவை என்றும் இப்படியே. நாமும் அப்படியே. பிறப்பைப் போல இறப்பு. புகழைப் போல இகழ். நன்மையைப்போலத் தீமை. முழுதும் உண்மை. முன்னிலை இன்றித் தன்னிலையில் யாவும். இயங் காமல் இயங்கு. முடிவைக் காணுேம். அதுதான்
சுற்றிச் சுற்றிச் சுப்பருடைய கொல்லை.
என்றும் மறவாதவன்
நற்சிந்தனை 379
வ. &laյւՃամ)
நான், நீ, ஐயா, அம்மா, அண்ணர், அக்காமார், அத்தை, அப்பாச்சி, பெரியையா, சீனியையா, சின்னையா, கந்தசாமி, கணபதி, வைரவர், வீரபத்திரர், காளி, கூளி, கிருஷ்ணன், கிறிஸ்து, புத்தன், முகம்மது, இராச ரத்தின மாமா, சோமா மாமா, செல்லத்துரை மாமா, கன்று, பசு, ஆடு, குதிரை, சந்திரன், சூரியன், நட்சத் திரங்கள், மேடம். இடபம், மிதுனங் கர்க்கடகம், சிங் கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம், ஊர்வன, பறப்பன, கிடப்பன, நடப்பன, மலை, கடல், வாவி, குளம், கொடி, செடி என்று அளவிடக் கூடாமல் விரிந்து நிற்கிற ஒன்றுதான் கடவுள். இதை விட வேறில்லை யென்று தியானிக்கிறவன்தான் உண்மை யான பக்தனென்று சொல்லப்படுகிருன். இவனுக்கு இந்த உலகில் வெறுப்பானவர்களும் பிரியமானவர்களுமில்லை.
என்றும் பிறவாதவன்
60 -. சிவமயம்
வருடப்பிறப்பாய் விட்டது. நீங்கள் நல்ல பலகார வகைகள் செய்வீர்கள். பட்டுவேட்டி கட்டுவீர்கள். வீடு வெள்ளையடிப்பீர்கள். கோவிலுக்குப் போவீர்கள். சுவா மிக்கு நைவேத்தியமயிடேகம் முதலியவைகள் செய்விப்பீர் கள். நானே சாந்தமென்னும் புனலாடிப் பொறுமை என் கிற உத்தரீயம் பூண்டு வறுமையென்று சொல்லப்படுங் குருவின் போதனை கேட்டு மாசற்ற மனத்தைத் தரும் வெண்ணிறனிந்து, வேண்டாமையென்னும் விழுச் செல் வத்தையே மேலும் மேலும் தருமாறு பணிந்து அஞ் சாமை யென்கின்ற கேடகத்தை யுடையவனுய்ச் சுப்பிர மணிய சுவாமியினுடைய நெஞ்சிலே மிதித்து விளையாடு வேன்.
என்றும் மறவாதவன்
Η Α.- 4- 32
Page 194
380 நற்சிந்தனை
டெ சிவமயம்
பார். எல்லாம் சிவமயமாய் இருக்கின்றன. அப்போது நீ யார்? நான் யார்? ஐயா யார்? மற்றும் எல்லாம் என்ன? சிவமல்லவா? இன்னுஞ் சந்தேகமா? பயமா? பார். நான் உன்னுடனும் நீ என்னுடனும், எல்லாம் ஒன்ருகவும், ஒன்று எல்லாமாகவும் ஒருவிதமான மாறு தலும் அடையாமல் இருந்தபடியே இருக்கின்றது. எழுந் திரு. வரவரப் படி.
காலமில்லை. சுகம். சுகம். சுகம்.
பிறவாதவனிறவாதவன்
шаважами
, 29-5-33 இயாழ்ப்பாணம்
உலகமு முயிரு மாகியு மாகா அலகில் சோதி யடிமலர் பரவி ஒன்று சொற்றுது முவந்து கேண்மதி என்றும் நாங்க ளெல்லாஞ் சிவன்செயல் ஒன்றுக்கு மஞ்சேல் ஒருவனே தெய்வம் நன்று தீதென நாடிநீ கவலலை இன்று தொட்டுப் பணமெனக் கனுப்பாதே தொன்று தொட்டுப் பணந்தொல்லை யென்பர் முன்னும் பின்னு மெண்ணிமலை யாதே உன்னுள்ளு மென்னுள்ளு மிருப்ப தொன்றே சொன்ன வாசகஞ் சித்த சுத்தியைத்தரும் ஒன்னலர் தம்மை யுவந்துகொள் என்ன புதுமை யீண்டுண் டெனவறி.
ஒருநாளுமறவா யோகசுவாமி
நற்சிந்தனை " 881
.ெ சிவமயம்
நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றுண்டு. நீங் கள் உங்கள் கடமையை வழுவாது செய்யுங்கள். உங்க ளுக்குப் பகவான் நல்லருள்புரிவார்.
எல்லாருக்கும் என் அன்பார்ந்த வணக்கத்தைச் செய் கிறேன். ... । ‘’
இப்படிக்கு அவனே தானே
"செய்வன திருந்தச்செய்
மூத்தோர் வார்த்தை அமிர்தம்'.
Page 195
நாம் கடவுளை உள்ளத்தில் வளர்க்கிருேம். நாம் அவருடைய தாய். நமக்கு மவருக்குமொரு குறைவுமில்லை. நம்மை அவர் பிரிய முடியாது.
முழுதும் உண்மை.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
v
Jfr "G8 அஃகமுங் காசும் அதிகம் அஃகமுங் காசும் தேடி அலேந்து நான். அஃகமுங் காசுஞ் சிக்கென அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடெனும் அஃகமும் காசுக் தேடி அம்புவியில் அஃகமுங் காசுக்தேடி அலையும் அஃகமும காசுக் தேடிடில் Q b (y அஃகமுங் காசுந்தேடி யலையாமல் அஃகா மனத்தா அஃகுதலில்லா அறிவினை Y. அஃகுதலில்லா அறிவுடைய அன்பரகம் . அஃகுதலில்லா அறிவுடைய பெரியோர் . அஃதை யறிவோ அகண்ட வெளியிலே அகந் தூய்மை அகம் பிரமாஸ்மியென்று அகம் பீரமாஸ்மியென்னும் அகரத்திலுகர மகர st அகரத்தில் உகரமும் o Y அகரமாம் எழுத்துப்போல அகரமுதல் எழுத்தெலாம் அகல நீளங் sh அகலிடத்தாசான் அகலிகை கல்லானுள் அக்கினறுமாலை அக்கக்காவடி அக்கு மனிதனைக் அங்கிங் கல்யாதே அங்கிங் கென்றெண்ணுதே அங்கிங் கெனுதபடி ஆனந்தமாய் அங்கிங் கெனுதபடி யெங்குஞ் es a அங்கிங் கெனுமல் அங்கிங் கெனுமலெங்குமான அங்கும் இங்கும் எங்கும் நான் 峰姆曾 அங்குமிங்குமாக அங்குமிங்கு மெங்கும் ஓடாதே A அங்குமிங்கு மெங்கும் திருக்கூத்து . அங்குமிங்கு மெங்குமந்த அங்கு மிங்கு மோடி அங்கையிலே பூவெடுத்து அங்கையிற் போது அச்சம் தீர்த்து அச்சமும் கோபமும் அச்சமொடு கோபத்தை
பக்கம் 343 56 288 314 243 187 115 289 157 225 303 185 16S 214 17 264 280 156 209 57 258 166 209 102 05 33 313 254 242 280 55 105 164 265 129 249 95 223 121
85 214
25 196
6. பாட்டு முதற்குறிப் பகராதி
அ
us0 அச்ச மொழியும் அஞ்சடுக்குத் தீபமுதல் அஞ்சின் வழியை அஞ்சும் மூன்றும் அஞ்சுகங்காள் அஞ்சுபூதம் யேல்ல அஞ்சு மடக்கு
அஞ்செழுத்தாலே அனைத்தும்
அஞ்செழுத்தாலே ஆக்கை அஞ்செழுத்தாலே சஞ்சல அஞ்செழுத்தாலே அரனடி அஞ்செழுத்தின அஞ்செழுத்துப் அஞ்செழுத்துள்ளே அனைத்தையுங் அஞ்செழுத்துள்ளே அஞ்செழுத்தை நெஞ்சில் அஞ்செழுத்தை வழுத்திடேன் அஞ்சென ஆறென அஞ்ஞான் விருளை அடிக்கடி மிடியால் அடிக்கீழ் அரக்கன்
spp. uu fi g LS 6TTàs asubsoġ5(8gb அடியார்க் கடியானென்று அடியவர் பாதத் தன்பு செய்திடில் அடியவர் மனத்தை அடியா ருள்ளத்தே அடுக்குமோவின அடைக்கல மடைக்கல மரனே அட்டவசுக்களும் அட்டாங்க யோகம் அவத்தை அட்டாங்க யோகத்திற்கும் அட்டாங்க யோகமெலாம் அட்டாங்க யோகமெல்லாம் அட்டாங்க யோகம் விட்டேன் அட்டாங்கயோக மறிந்து அணங்கு தந்தெமை அனேக்து வந்து அண்டசராசரம் அவன் அண்டசரா சரமவன் வடிவாகும் sı6örlerger a0 GLDü6)Tû அண்டமும் பிண்டமும் அகத்திற் அண்டமும் பிண்டமும் ஒன்ருே அண்டமும் பிண்ட மடங்கலு அண்ட பிண்ட மனத்தும்
பக்கம் . 133
214
始
多
6
134 94 102
26 . 213 23 23 10 151. 44 112 186 137 2O7 177 159 234 301
272 40 33 281 328 35 286 316 341
155 67 226 323 26 212 18 214 13 169 276
Page 196
பாட்டு
அண்ட பிண்ட மெல்லாம் அண்ட பிண்ட மெல்லா மடக்கி அண்டர் முனிவர் கரர் அண்ணன் மாரே அதுங்ானென்னு அதுவிது வென்றவன் அத்த சாமப் பூசைக்கு அத்துவா மார்க்கமாறும் அத்துவிதப் பொருள் அத்துவிதப் பொருளை அருந்தவர்கட் அத்துவிதப் பொருளை அறிவுக் அநுதினம் சாதனை அந்தக் கரண நாமல்ல அந்தம் ஆதி
அந்தமும் ஆதியும் அகன்றேன் வருக .
அந்தமும் ஆதியும் அறியொன அந்தமும் ஆதியும் இல்லான் அந்தமும் ஆதியு மில்லா அந்தமு மாதியு மில்லா ஒருவனே அந்த வாக்கும்
அந்த விதமே அக்தி சந்தி உன் அடியை அந்தி சந்தியும் சிந்திக்கு அந்தியுஞ் சந்தியும் அன்பினி அக்தியுஞ் சந்தியும் ஆசான் அந்தியுஞ் சந்தியும் இதனே அந்தியுஞ் சந்தியும் நீ அப்படி யுள்ள தென் அப்படியே உள்ள தென்பான் அங்கு அப்படியே உள்ள தென்பான் ஆசான்
su
es ve
·4· ·
அப்படியே உள்ள தென்பான் ஆரறிவார்
அப்டடியே அப்படியே அப்படியே அப்படியே அப்படியே
உள்ள தென்றன் உள்ள தென்று உள்ள தென அடிக்கடி
உள்ளதென அன்றசான் அப்படியே உள்ளதெனச் சொல்லி அப்படியே யுள்ளதென அத்து அப்படி யுள்ளதென்று அன்பாக அப்படியே உள்ள பொருளெடா அப்பர்க்கு சமணர் செய் அப்பர் சுநதரா அப்பனுக்கும் அம்மைக்கும் அப்பனும் அம்மையும் அப்பனும் அம்மையுஞ் சிவமே அப்பனே ஆகுயிரே
a as
oe
a.
உள்ளதென அடிக்கடியே
. . .
På asb
162 63 286 55 16 204
56 351 238 280 274 282 306
34
14 I87 100 88 252 304 199 159 301 240 280 292 248 312 248 276 163 270 288 86 283 329 320 305 283 38 352 47
352
130
i
i
பாட்டு
அப்பா பரமசிவம் அம்மையப்பன் அம்மை யப்பனரிய அம்மையு மப்பனுமாய் அம்மையப்பன
அயலறியா
அயலறியாத அயலுனக்கில்லே அயணு மரியும் அரகர சிவசிவ அாகரவென்று அரவரைக் கசைத்த அரவார் செஞ்சடை அரவுசேர் பேணியெம் அரற்று மன்பர்க்கு அரனு முமையு அரியதி லரியது ஆன்மா வதுதான் அரியதி லரியது ஆன்மா அரியயனுந்தேடி அரியும் பிரமாவும் அருந்தவர்தம் அருந்தவர் கெஞ்சிலிருக்கும் அருந்தவர் கெஞ்சில் ருசிக்குங் அருமருந் தொரு ჰotტნისტყ) ტყიტნllტყ) அருவமு முருவமு மானுன் அருவாகி நின்றவன் அருவாவுருவா அருவா யுருவாகி அருவென்றும் உருவென்றும் அருளா லறிந்தேன் அருளொளிக்குள்ளே அருள்நீ தாதாவே அலகிலாச் சோதியை அலகில் உயிர்களை அலங்காரமாக அலேயும் மனத்தை அல்லலற்று வாழ வழி அல்லலெல்லாம் நீக்கி அல்லும் எல்லியும் இறைவன் அல்லும் பகலும் அறிவாக அல்லும பகலும் அப்பன் அல்லும் பகலும் அறிவாகி அல்லும் பகலுமற அவமானப் படுவதில் அவனருளாலே
பக்கம்
350 307 203 49 32 217 208 284 39 306 39 178 226 1 C6 216 103 35 295 128 302 283 214 132
214 336 108 100 280 209 299
274 106
26 278 C4
65 121 272 287 294
44 190
77 282
t_jRL".(B -
அவனவ ளதுவெனு - 。 அவனன்றி யணுவும் அசைய
அவனன்றி ஓரணுவும் அவனி வனுரென் அவனிவ னென்றதை அவனன்றி யொன்றும் அs னன்றி யோரணுவுமசை அவனே நானென்று அவைக் கஞ்சா அழகாரரியும் அழகாருமமயுலியும் அழல்சேர் கையு அளந்தேன் அருளால் அளவிலா மதங்தொறு அளவிலா வொன்றே அளவில் மதங்தோறும் அளவுக்காகாரம் அளவுக்குப் போசனத்தை அரஞ்செய விரும்னெ அறஞ்செய்வார் தங்களகமே அறத்தோடு பூசை அறமே யாற்றுதும் தினமே அறம்புரி வோர்கள் திறம் அறம் பொருள் இன்பமும் அறவாழி அந்தணன் அறவோ ரெனப்படுவார் அறி சதி யறிவிகுலே அறிவறி யாமை
அறிவுக கறிவாகி யப்பாற்கப்பாலா .
அறிவுககறி வாகிகின்றப் அறிவுக்கறி வாகியங்கு அறிவுக்கறிவாக் யப்பாலுக் அறிவுக்கறிவாகி யப்பாற் அறிவுடையார் எல்லா அறியும் பொருளும் அறுபதும் காலுமறியா அறையும் மறை அனங்கணுகத்தை அனைத்து மவனே அவன்செயலே அனைத்தும் ஒன்றாய் அ*னத்தும் சிவன அனைத்தும சிவன் செயல் அனைத்து யிரும்நீயே அ*ன வருக்கும தெய்வம் அனைவரும் ஒன்ருய்
25
iii
பக்கம்
170 170 280 120 77 234 55 257 198 227 106 179 203 170 328 106
58. 238 347 101 170 179 106 109 1)2 133
61 161
51 100 193
104 106 214 198 227 343
55
36
61 243 284 323
uT"(B பக்கம்
அன்பரன்பது சிவசிவசிவ 348 அன்பருடன் கூடி நீ ..., 319. அன்பர் தம் சிந்தை 233 அன்பர் பணி 21 அன்பர் பணிந் தேத்தி நிற்கும் 290 அன்பிலா ரோடுறவு ... 345 அன்பில்லேன் இரக்கமில்லேன் 149 அன்பிலேன் பொறுமையிலேன் ..., 148 அன்பிற் கரைந்துருகி 188 அன்பிற் குழைந்து 304 அன்பினுற் பணி ... 271 அன்பினுருகி 191 அன்பு சிவமெனல் --- 7 அன்பு சிவமென் 33 ۔۔۔ அன்பு சிவமென்ற ஆன்றேர் ... 294 அன்புடனே ஐந்தெழுத்தை ... 94 அன்புடையோர் 107 அன்பு நெறியும் ... 64 அன்பே கடவுள் ... 26 அேைப சிவ ரி கக் 114. அன்பே சிவமென அறிவார் ... 97 அ* பே சிவமென * ... 23 அன்பே சிவமெனு ... 118 அன்பே சிவமெனற 289 அன்பேசிவம் அறிந்திடடா 247 அன்பே சிவமென்று கிளியே ... 345 அன்பே சிவமென் றறைந்த 170 அன்பேயுருவாய் ... 93 அன்பே வடிவாய் 228 அன்று மின்று 225 அன்னத்தோடாடை 106 அன்னே தந்தை சுற்றம் ... 185 அன்னை தந்தை சுற்றத்தை ... 344 அன்னை தந்தையர் ... 150 அன்னை பிதாக் குருவாய் 20 அன்னை பிதாக் குருவாகி 29 அ*னை பிதாக் குருவானுன் 241 அன்னை பிதாக் குருவானுன் எங்கள் . 277 அன்னை பிதா குரு ... 296 அன்னை பிதாக் குருவாகி அடியேனே . 270 அன்னை பிதாக் குரு தெய்வம் 38 அன்னை பிதாக் குருவாகிய 214 ..ه அன்னையாவது சிவசிவசிவ ... 348 அன்னையும் பிதாவும் 314
Page 197
LTG ஆக்கி னுனெ?ன ஆக்கை கிலேபல்ல శిరీ60 tడి ஆக்கை நிலையில்லே ஆக்கை நீ பல்லே ஆக்கையே கோயில் அகஞ்சிவ ஆக்கையே கோயில் அகமே ஆக்கையே கோயிலாக ஆங்காரம் போச்சுது ஆசா?னக் கண்டேன் ஆசான் லுருளால் ஆசான் அருளால் அகந்தை ஆசான் மலரடி ஆசுகவி மதுரகவி ஆசைக் கடலில் அலைந்து ஆசை கிகளத்தினை
ஆசைடாம் ஆசையை விட்டிடடி ஆசைேைலயிற் சிக்கி ஆச்சு தென்று ஆடம்பர மெல்லாம் ஆட வெடுத்த
bę. Nuo T (o: FrgisT UT ஆபொம் ப7ரிங் ஆடுபாப் பணிந் ஆரியாம் பணிந்தாடுவான ஆடுபாம்பே ஆகி மயிலே ஆடுவர் பாரிவர் ஆனில் பெண்ணும் ஆணு ^ாய்ப் பெண்ணுமாகி
ஆணும் பெண்ணும் அலியும் ஆணும் பெண்ணும் ஆனவனே ஆண்டவன் திருவடி ஆதார வாதேய ஆதாரக்தாலே ஆதாரத்தால் ஆதார மாறு க ஆகார மாறும் அகன்ற ஆதாரமாறும் அவத்தையோ ஆதார வாதேய முழுது ஆதாரம் ஆறும்விட்டுப் ஆதார வாதேய மாணவப் ஆதியந்த ம ன்மாவுக் ஆதியந்த மில்லாத ஆன்மா ஆதியந்த மில்லாத நாடெங்கள் ஆதியந்த மில்ல
OO
ν
293
ويت
udäöd uT (R பக்கம் 54 ஆதியந்தமும் அற்றவன் 271 342 ஆகியங்தம் இல்லையென்று 80 303 ஆதியந்த மில்லையென்றன் 3 171 ஆதிபந்தம் உங்கட்கில்லேப் 269 56 ஆதியு மந்தமூ ம ன்மாவுக்கில்லை 343 225 ஆதியு மந்தமு மில்லா 111 185 ஆதியு மந்தமுமில்லான் 240 140 ஆகியு மருதமு மில்ல நமக்கு 196 113 ஆதியந்தமில்லா அப்பனு 353 221 ஆதியு மில்லே 9 208 ஆதியும அந்தமும் அானுர்க்க 299 299 ஆதியும் அந்தமும் இல்லா ... 26 ஆகியும் அக்தமும நமக்கிலே ... 250
152 ஆமைபோல வைந்து 170 219 ஆயிரங் திருநாம * ... 142 108 ஆயுகான் ... 65 - 164 ஆாகத்தினும 54 280 ஆரடா நீ யென்றே 282 242 ஆாறிபவ ரென்ன 39 ܚܚܗ 153 ஆாறிவாரென அடிககடி சொல்லுவான். 239 223 ஆாறிவாரென அடிக்கடி ஒதும் 210 128 ஆரறிவாரென அன்று 52 279 ஆரறிவாரென்ற அருமைத் 187 199 ஆரறிவாரென்ற ஆசான் ... 293 14 ஆரறிவா ரென்று சொல்லிக் • • • 82 347 ஆாறிவா ரென்று சொல்லும் ... 308 266 ஆரறிவா சென்றுன்னுமரிய ... 321 60 ஆாறிவா ரென்றெனக 288 25 ஆரறிவா ரென்றே ... 219 208 ஆரறிவா ரென்ன • .163 م 57 ஆரறிவார் என்றப்பன் 232 --مه 251 ஆாறிவார் என்று முன்னுள் 186 233 ஆரறிவார் என்னும் ... 289 . 268 ஆராயும் வேதமுதல் ... 302 293 ஆராயும் வேதம் அறியாத ... 33 44 ஆராய்ந்து நற்கருமம் ... 107 204 ஆராய்ந்து பார்த்தாலறிவே 171 141 ஆராரென்ன வறைந்த ... 171 304 ஆருமறியாமல் ... 129 113 ஆாமறியா ரெனவே ... 336 156 ஆருமறியா ரென்று ... 80 269 ஆருயிர்கள் தோறு ... 93 168 ஆருயிர் தோறு ... 100 114 ஆரையனே . 46 294 ஆரோடும் பகையாதே 345 21 ஆர் கொடுக்க . 329 220 ஆர்க்குங் கடல்சூழ்ந்த 207 ماهه
LJTUG ஆர்க்கும் சுதந்திரத்தை ஆலயக் தொழுவது ஆவதில்லா அழிவதில்லா ஆவது அழிவதுதான் ஆவதும் அழிவதும் இல்லே ஆவதும் அழிவது அறியா ஆவதும் இல்ல ஆவதும் இல்லையடி ஆவதொன்று மறிகில்லேன் ஆவதோ ஒன்றுமில்லை ஆவிக்குளாவி ஆழ fள மில்ல ஆழிதழ் இலங்கை ஆழிததுரும்பெனவே ஆளான அன்பர் ஆளான மெய்யடியார் ஆளும பெருமான் ஆறணி சடையினனே ஆறணிக்த திருச்சடையா ஆறத் துவாக்களுக்கும் ஆருக்கவலை யெல்லாம் ஆருத காதல்சேர் ஆருய்க் கண்ணிர் ஆருறுக் கபபால் ஆறறு தத்துவத்துக் கப்பா லா ஆறறுத உதுவத்துக் கப்பாலே ஆறியாறி ஆறுகுளமேரி
இகலோகம் டரலோகம் இகழ்ச்சி புகழ்ச்சியென இசையும் பொருண் ඹුණී ශාකd tuff.0’ 6කකl இச்சையில்லோரே இடத்து மடந்தையை இட பந்தனிலேறு இடமக ைற ஞாலத்தே இடம் வலமோடி இருககண்கள் பலபல இ.ே லயக கிடும்பை இவே த மறவாதே இடு துவே சிறிதுமிலேன்
SOL. Y ħl h * இ. பிங்கல இரண்டுஞ் சேர்ந்து இடையா என் பென இ. ட யிடையே
Li u ܚܝܝܐ -: S8
છx . R : , (3.-7ř
பக்கம் utu (8 பக்கம்
241 ஆறுகுடிய
314 ஆறுதலாய் இருமென்னன் 243 ஆறுதல் பெற 104 ஆறுபடி தாண்டு 251 ஆறுபிறைகொண றை pe 167 ஆறும் பிறையுஞ் சூடிய - - - 208 ஆறும் குளனும் A lev 280 ஆறு வருடமவன் 149 ஆறுவது சினமென கடி ·· · 133 ஆறுவது சினமெனு மரிய I65 ஆறுவது சினமென்னு 8 326 ஆறு வைத்ததும −− − 282 ஆனந்தக்கூத் தாடினுன்
223 ஆனந்த மாந்த மனந்தங் a A
50 ஆகந்த கடனம் ஆடினுன
131 ஆனிரைதனை
202 ஆன்மா அழியா - 149 ஆன்மா அழியாதென்று - - - 145 ஆன்மா ஒருபோதும்
154 ஆன்மா நித்தியமான 304 ஆன்மா நித்தியமென்று
303 ஆன்மா கித்தியமென்ற
188 ஆன்மாவக் கயலில்&ல
213 ஆன்மாவே காமென்று
294 ஆன் மாவே நாமென் றுாதூது 288 ஆன் மாவே நாமென்னும்
17 ஆன்மாவை
101 ஆணே நீ அடல்விடைநீ
264 இட்டுண்டு வாழ்வார் 207 இணக்கமாயிருந்து
98 இணங்கிவாழ் மாந்தர் 137, ജൂഞ്ഞ് ധ്യ பணிவார் MA () 222 இது அது என்றெண்ணுமல் a
226 இந்தப் பத்து
O5 இந்தவுயிர் உடல் ஆனுன் 161 இந்திரராதி யோரானுன் 177 இந்திரனுதியோர்
159 இப்பிறவி தீர்ப்பான
287 இம்மைக்கும்
345 இம்மை மறுமை இரண்டின் 149 இம்மை மறும்ை
152 இம்மையிலும
95 இம்மையிடிம் மறுமையிலும் 207 இயககர் முனிவர்கள்
30 இயமன் வருணன் குபேரன் weww. 55 இல்வ5, கரவேல்
155 இல்லை யென்னும சொல்
3. 248 138 52 130 171 27 18 292 238 287 147 256 284 237 215 13 69 81 274 301 353 280 8O 190 36 89. 275
Page 198
LTG இரவு பகலற்ற ஏகாந்தம் இரவுபகலற்ற தனி இரவு பகலில்லாத இரவும் பகலுமற்ற இரவும் பதலுமுன்னை இராஜ திராஜன் இருநிலனுய்த் இரு நிலனுய் இரவிமதி இருநிலனுேடிாவி இருந்த படியே யிருக்கும் பொருளை
இருந்த படியே யிருப்பதனைக் கான .
இருந்துபார் என்றென இருப்பார் பொருப்பி லிறைவி இருப்பினும் நடந்து இருப்பு நெருப்புப் இருவருங் காணு வீசன் இருவி%ன சேரா இருவினை பணு மிடுக்கணெய் இருவருந்தேடி
இருவழியை
இருவாசல்
இருவினைகளென இருவினை நீககி இருவினையான் இருவினையால் கட்டுண்டு இருவினையை நீக்கி இருவினை சுய நீக்கி இரவுபக இருவி%னயின் கட்டழித்து இருவினை வந்தெனை இருளை நீக்கி இலங்கைவாழ் தெய்வம் இலது உளதென இல்லறத்தில் நின்றெளிரும் இல்லற மல்லது இல்லற மென்பதியார்க்கும் இல்ல*ளுக் தானும் இல்லே உண்டென்னு
இல்லை உண்டென்பது
Firsof 200rut. ஈசனே எம்மை நீங்கா ஈசனே எவ்வுயிர்க்கும் அவ் ஈசனே எவ்வுயிர்க்கும் உயிராய் ஈசனே நல்லூர் ஈசனே நல்ல வாசனே ஈசனே யெங்கு மென
ν
பக்கம்
125 102
152
36 302
41 130 297 143 172 343
56 72ן 203 100 315 315 172 245
160 204 57 124 185 187 188 129 199
197 226 03 314 103 103 100 256
31 140 187
... 302
99 188
இல்லை
பாட்டு உண்டென்று இயம்ப உண்டென எடுத்து
உண்டென்று உண்டென்று சொல்ல யென்னு மலே யென்று சொல்லுவார் யென்று சொல்கிலோ இல்லை யென்னுமல் இல்ல யென்றும உண்டென்று; இல்லயென் ருெருடோதுஞ் இள ை இன்பத்தில் இள ை0 கிலேயாதென
இல்க் இல்ல இல்க் @6სზა இல்ல
ଦ୍ରୁ, ଶ୍ୱେତ ଅଲି)
இளமையுமூ இளம் பிரை அணிந்த இளம்பிறை சூடி
இளமை மூப்பிலான் இளமையும் மூப்பும் இளமை முப்பிலான் இறப்பும் பிறப்பும் இனிப் பிறவா இனிய அருள் இனிய திலினியது இனியவனே இனியேதெனக்குன் . வருமோ இனி யேதெனக்குள் இன்சொல் விளை நிலனுய் இன்சொற்றவருர் இன்ப துன்பம் இன்பமே யல்லாமல் இன்ருகி நா?ளயாய் இன்றிருளை நீக்கி இன்றுளோர் நா8ள இன்றென நா?ள யென்றே இன்றைக்கோ நா?ளக்கோ இன்ன தன்மை என்று நம்மை இன்னதன்மைய னிவனென இன்ன தன்மையனென் இன்னு னிவனென் றெவரும்
ஒருவனென ஈசன் ஒருவனெண்ணிப் ஈசன் ஒருவனென எண்ணி ஈசன் திருவடி ஈசன் திருவடியை ஈசன் மேல் நேசமாய் ஈசனை எல்லாவுயிர்க்கு
FF伊守
Y
பக்கம்
317
108 301 225 114 104 93 196 218 242 344 32 75 179 43 119 14 43 227 227 194 93 166 50 85 192
103
126
UT"08 ஈசனை யெல%லயில் ஈடேற வேண்டுமென்றல் ஈடேற்ற முண்டாமே ஈன்றளுமா யெமக் ஈயாத புல்லர் தங்கள் ஈயாத புல்லர் இடந்தோறும் ஈயாத புல்லரை நீ ஈயாத மாந்தர் Ffu (T gb ffîääsioàs) ஈயார் தேட்டைத் ஈயு மெறும்பு ஈரவார்சடை ஈரவார் சடையான ஈரவார் செஞ்சடையா
உகந்து மணங்குவிந்து உடல் பொருளாவி உடையது விளம்பேலு உணர்ந்தார்க்கு உணர்வரிய உணர்ந்தார்க்கு முணர உண்னவே உண்ண உண்ணுதே உறங்காதே உண்ணு துறங்கா திருந்த உண்டான போதுகா உண்டி சுருங்குதல் உண்டில்&ல யென்று சொல்ல உண்டில்?ல யென்றுசொல்லி உண்டோதானுன உண்மை முழுது மெனவுறுதி உண்மை முழுது மெனவோ உண்மை முழுதுமென ஒது உண்மை முழுதுமென்றல் உண்மை முழுது மென்றேத்தி உண்மை முழுது மென்பான் உண்மை முழுதுன்ெற உயர்ந்த உண்மை முழுது மென்ற ஒரு உண்மை முழுது மென்று சாற்று உண்மை முழுதுமென்றேயா உண்மை முழுது மென்னும் உண்மை முழுது மென்ருேதுங் உண்மை முழுதும் என்ற உண்மை முழுவதும் என்றுரை உண்மையும் இன்மையும் உத்தம நட்பை உத்தமர்கள் போற்றும் உம்பர் தலைவனை
vii
பக்கம் பாட்டு டக்கம் 104 ஈர்த்தென்னை யாண்டவன் ... 108 242 ஈர்த்தென ஜன யாட்கொண்ட ... 29 343 ஈவது கடைப்பிடி ... 199 93 Fr6aug Mesir seo 345 سعه - - 56 ஈவது விலக்காதே ... 345 185 ஈவது விலக்கே லென் ... 238 308 ஈவோரிரக்கவு 173 ماهه 156 ஈழநாடு வாழவந்த ... 229 172 ஈழநாடு வாழவந்த எங்கள்சிவ ... 229 3I4 ஈவாரே எல்லாம் ... 107 172 ஈறில்லாதவன் ... 147 14 ஈனருளு மாயென் ... I73 126 ஈன்றிடு தந்தை ... 57 130
2
19 உம்பர் தலைவனுயர் ... 225 231 உம்பர் தல்வனை யூழி ... 173 238 உயர்ந்த திருக்கோபுரமும் ... 220 33 உயிருக்குயிராகி 129 57 உயிரெலாம் தன்னுயிர் ... 166 163 உயிரெல்லா மாகியும் ... 130 322 உருக்கு மொழியால் 79 173 உருகி உருகி ... 187 199 உருகி உருகி உணர்வழிந்து 295 314 உருகியுருகி உணர்ந்தேன் ... 18 10 உருவேறவே செபிக்க 24 322 உருவேறவே செபித்து ... 153 64 உலகத்தோடொட்ட 167 288 உலகமும் உயிரும் ... 20 29 உலகமே கோயிலாய் ... 301 127 உலகம் உதித்ததுமாங்கே . . . 256 343 உலகம் உவக்கவும ... 231 114. உலகம் யாவையும் ... 14 312 உலகுமுயிரு மாயொன்றி 104 242 உலகெலா முணர்ந்த ... 324 36 உல்லாச கடையனடி , 249 96 உல்லாச மாயெங்குஞ் . . 298 210 உவந்து வருவான் ஓம் ... 192 287 உவமானம் கடந்த ... 77 218 உவமை ஒன்றில்ல ... 327 308 உவமை கடந்த . எல் - 92 120 உவமை கடந்த பேரின்பம ... 282 147 உவமை கடந்த வின்பம் ... 61 61 உளவறிக் தெல்லாம் ... 108 238 உள்குவாருள்ளத் ... 140 156 உள்ளத்தி னுள்ளே யுலாவு --- 173
Page 199
Lr-G உள்ளத்தினுள்ளே யொளிருஞ் உள்ளத்தூய்மையாய் உள்ளமே கோயில் உள்ள வுள்ள உறவு மிதுவே உறுதி தருவது சிவழே உறுதி யுண்ட குமுண்மை உற்றர் பெற்றருடன் உற்றரும் போனுர் உனைப்போல உத்தமர்கள் உன் துணை யன்றி
ஊக்கத்தைப்போல ஊக்கமது கைவிடேல் ஊக்கமுள்ளவர்
DGIJá (po Tu - - ஊசிமேல் நுனி - - ஊட்டி வளர்க்க
"ஊண்பொருளு ஊதியமாவதும் நீயே ஊதூது சங்கே ஒளதுாது ஒவதூது சங்கே ஊதூது ஊமத்தை கொன்றை யுவந்த ஊமை, போலிருந்தே ஊரார் சிறக்க ஊருடன் பலகக்கின் ஊருமில்லாய் பேருமில்லாய் ஊருமில்லான் பேருமில்லான் ஊரும் துணையில்* ஊரும் பேருமில்லா உத்தமனே ஊரும் பேருமில்லா ஒருபொருளை ஐவரும் .ோமில்லா ஒருவருக்குச் ஊரும்பேருமில்லா ஒருவனே ஊரும் ருேமில்லா ஒருவனை
எங்களை ஆள் குருகாதா எங்கw விட்டுப் எங்கள் குருநாதன் எங்குக் திருவிழி எங்கு தேடினுய்
1ங்கு மீசனே யேத்துவார் ww எங்கு முள்ளவன் எங்கும் ஈசனை எங்கும் என்றன் தங்கும் எங்கு சிவனடியை எங்கும் மாதவர்
பக்கம்
304 272 107 115 169 247 174 173 221 243 230
9G.
287 238 301 174
57
, 104
81 147 189 190 174 140 107 314 130 154
46 302
36 114 289 156
59 114 53 175 262 272 204 10 265 38 206
viii
பாட்டு உ நினைவல்லால் உன்மத்தங் கொண்டு உன்மத்தன் போல உன்மத்தன் போலே உன்னடிமை உன்னைப் பிரிவனுே உன்னை மறப்பேனுே உன்னை முழுவதும் உன்னே யல்லால் உன்?ன யுனக்கொரு உன்?ன உணர்ந்தவர்கள்
பேருமில்லா ஒருவன் பேருமில்லா ஒருவன் திரு பேருமில்லா வொருவன் பேருமில்வாத உத்தம?னச் பேருமில்லா னுள்ளான் ஊரும் பேரும் இல்லையென்று ஊரும் பேரும் இல்லான் ஊரூராய்த் திரிந்து ஊழிக் காலத்து மொருவர் ஊழ்வினைபோக ஊனு (புணர்வா யுயிருக் ஊணு யுயிராய்க் ஊணு யுயிராகி யுட்கலந்த ஊணு யுயிரா யுலகாயோ ஊஞய் உயிராய் உளத்திற் ஊனுய் உயிராய் உடலாய் ஊனுய் யுயிரா யுடலாய் உறுப்பாய் ஊனுமவனே உயிருமவனே ஊஜமாய் உயிருமாகி ஊனே நீ உயிரே நீ ஊன் பொதிந்த
ஊரும் ஊரும் ஊரும் ஊரும் ஊரும்
எங்கெங்கு சென்ருலும் எங்கெங்கே எங்கே காம் அங்கே எங்கே நீ அங்கே நான் எட்டாத கொப்பிலிருக்கின்ற எட்டாத கொப்பிலிருககுந் தேனுக்கு எட்டாத கொப்பில் எட்டாத கொப்பினிலே எட்டாத கொப்புக்கு எட்டாத பேரின்பம்
எட்டுத் தரம்
t க்கம் 122 129 289
56. 337 185 93 165 302 249 88
185 295 225 242 174 80 108 187 174 120 74 308 188 343 93 186 199 106 56 275 14
115 303 162
63 286 175 27. 155 155 155 152
ix
பாட்டு பக்கம் பாட்டு பக்கம் எட்டுத் திசையுமற் . 304 எல்லா மாயல்லவுமா . திருவரு ... 187 எட்டும் இரண்டும் அறியாத . 220 எல்லாமாய் அல்லவுமாய் இருப் ... 185 எட்டு மிரண்டு மறியா எனக்கொரு . 52 எல்லாமாய் அல்லவுமாயிருக்கும் . 63 எட்டு மிரண்டு மறியா எனக்குகல் . 125 எல்லாமு மல்லவும் ... 310 எட்டுமிரண்டு மிசைந்து ... 286 எல்லாமென் ... 18 எட்டுணையும் தாழ்ச்சி ... 286 எல்லாமென்னூர் ... 346 எண்ண மெலாம் ... 102 எல்லாம் அவனே 62 எண்வ்கை ஒருவனே .. 310 எல்லாம் சிவமயம் ... 301 என ணமல் எண்ணிடடா . 322 எல்லாம் சிவன் செயலே 13 ۔ ۔۔ எண்ணிப் பணிவார் ... 289 எல்லாம் சிவன்செயல் 53 ۔۔۔ எண்ணிய வண்ணம ... 56 எல்லாம் செய " ... 40 எண்ணி யெண்ணிப் ... 246 எல்லாம் நினது செயலென் 188 ••۔ எண்ணி யெண்ணி ... 201 எல்லாம் நீ யென . 205 م எண்ணி லடங்காதடா ... 264 எல்லாம் நீயே ... 175 எண்ணு மெழுத்துங் ... 314 எல்லாம் வல்ல திருப்பாதம் 202 ۔۔۔ எண்ணு மெழுத்துமாய் ... 225 எல்லா ரகத்தும் ... 161 எண்ணுவார் எண்ணங் . 140 எல்லாரிடதது முள்ளாய் -- 230 எண் ணுவார் நெஞ்சில் 309 எல்லா ரிடத்தும் . ... 230 எத்திக்குமாகி . 238 எல்லாரு ருவமும் ... 230 எ திக்கு மீசனடி ... 224 எல்லா ருள்ளத்தினும் ... 24 எத்திசைக்கும் ... 273 எல்லாரையு ... 89 எத்தொழிலச் - ... 69 எல்லார்க்கு மன்பு ... 24 எந்தச் செயலுஞ் ... 252 எல்லார்க்கும் தம்பிரான் . . . 235 எந்த நேரமும் ... 31 எல்லார்க்கும் நன்மைசெய் ... 264 எந்த நேரமும இறைவன் ... 272 எல்லார்க்குமாங் கடவுள் ... 197 எந்த வேளையும் 54 எல3லசொலல ... 302 எந்தையே எந்தையே 50 எல்லேயிலாக் கருணை ... 110 எந்தையே எம பெரு ... 46 எல்லேயிலாவருள் .233 م.م எந்நாளும் நல்லூரை 66 எல்லே பெமக்கில்லே ... 344 எப்டடி இவன்றன்மை ... 283 எவரேனும் ... 166 எப்பவோ முடிந்ததென எங்தை 186 எவ்வுயிருந் தன்னுயிர்போல் - 60 எப்பவோ முடிந்ததென எனக்கு ... 270 எழுக புலருமுன் OO 8 எப்பவோ முடிந்த தென்றெடுத் ... 211 எழுதவே யொண்ணு ... 104 எப்பவோ முடிவான" ... 39 எழுவாய் பயனிலைகள் ... 222 எமன் வருமுன்னே ... 105 ஏள்ளப்படா ரறிஞர் ... 107 எல்லாஞ் சிவன் செயலென்பர் ... 165 எள்ளுக்கு ளெண்ணெய் ... 115 எல்லாஞ் சிவன்செயலென்றெண் ... 304 எள்ளுக்குள் ளெண்ணெய்போலெங்கும் . 343 எல்லாஞ் சிவன் செய . 287 எள்ளுக்குள் எண்ணெய்போல் 12 எல்லாஞ் செயவல்ல இறைவனே . 130 எள்ளும் எண்ணெய்யும்போல ... 136 எல்லாஞ் செயவல்ல தெய்வம 297 எள்ளுக்குள் எண்ணெய் == 294 எல்லாஞ் செயவல்ல சித்தர் ... 142 எள்ளு மெண்ணெயும் ... 14 எல்லா வுயிரினு ... 295 எனக் கினியாள் ... 203 எல்லா உலகமுமான ... 108 எனக்கின்பமே வா ... 68 எல்லாச் சமயமும் ... 305 எனக்கும் தனக்கும் ... 36 எல்லந் தருங் தெய்வம் . 197 எனக்குள்ளே as 121 எல்லாப் பொருள்களும் ... 147 என்செயலாவதில்லை ... 175 எல்லா மாயல்லவுமாய் . ... 93 எனது யான் எனும் ... 332
எல்லாமாய் அன்றி . 162 என் செயல் ... 168
Page 200
TG என் பிழைகள் எனபு பூண்டவன் என்று நீயன்று நாம் என்றும் மறவா என்று மிருந்தபடி
என்று மினியான் w
என்னப்ப னெம்பிரான் - - - என்னாசை ஆரமுதை
என்னுருயிரே as a என்னிதய வெளியினிலே so என்னுயிருக் குயிரானை
என்னு ளொளியை என&னக்கணமுடி பியா
6j&ኔ Ibffሀ Jö8mኽr
ஏகமனதாகிக்
ஏக மாசிய ஏகமாகிய இறைவன் ஏகம்பம் மேவி ஏகப மேவியந்த ஏகன கேகனுயுறற ஏகனகே கணிாறவனடி ஏகனகே கனிறைவனடி வாழ்க 6JaST (Brb a GigaST 6T ,) ஏகனனேக னென்று சொல்லும் ஏகனநேக னெல்லார்க்கு ஏகன் அநேகன் ஏகனனே கனிறைவனடி ஏக னனேகனென்றுமிமைய ஏடவிழ் கோதை
ஐங்கரத்தொ ருகோட் ஐஞ்சு பூகமும் ஐஞ்சு மாறுமான ஐந்தாண்டு விழாவத&ன ஐந்து பலன்வென்ற ஐந்தும் அடக்கா ஐந்தெழுத்துள்ளே ஐ*தெழுத்தை ஐம்புல பந்தனை ஐம்புல ஆனந்தையும் ஐம்புலன் தன்?ன வென்ற
ஐ பலன் வழிபோம் e 8
ஐம்பூதt ஐம்பொறியும்
ஐம்பூதம் காமல்லக்காணும் de
பக்கம்
126 47 186 89 54 319 242 126 303 344 127 156 175
157
168 301 225 14り 104. 295
93 300 185
175
287 343 131 .
56
225 11 111
58 2n5 252 167 317 205 1s8 114 244 343 282
பாட்டு
பக்கம் என்?ன நீ வேரு 57 என்னேயறிவித்தென ... 53 என்னை யன்றி 125 என்&னயினிப் பிறவாமல் 270 என்?ன பிணி மறவாமல் 344 எ**னயுடையானவன் 154 என்?ன யெனக் - 1 என்னையெனக் கென்னுலே ... 134 என்னையெனக் கென்னலே அறிவித்த 149 என்?ன யென்னுல் 204 என்?ன யென்னு லெனக்கறி 204 என்னே விட்டகலாம 235 என்னுேடு 121
ஏட்டிலெழுதிக் 108 ஏதும் அவன் செயலென்று 114 எது சிவன் செயல் 36 ஏதுமற நில் 289 ஏதுமறியாத 188 ஏது மொன்ாற 57 ஏலாது செய்பவரை 107 ஏவா மக்கள் 314 - ஏழுலகங் கொழுதேத்தும் 242 எrழக்காய் வந்திரங்கி 302 ஏழை பங்கன் 15. ஏறுவாம் பரி ... 31 ஏற்கமோ திருவுருளுக் 273 ஏற்றில் வருவது 148 ஏனையவ றங்களினு 103
ஐம்பூதம் நாமல்லவென்று கூவு 80 ஐம்பூதம் நாமல்லவென்று ஊது 190 ஐம்பூதம் நீயல்?ல அறிந்திதனை 242 ஐம்பூதம் நீயல்?ல ஐம்பொறி நீ 309 ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறியு 191 ஐப் பூதம் நீயல்ல ஐம்பொறியும் 154 ஐம்பூதம் நீவீரல்லீர் 269 ஐம்பொறி மாட்டு 336 ஐtபொறியும் மனமும் ... 185 ஐம் ெஈறியை அடக் ... 12 ஐம்பொறி வழிசெல்லாமல் ... 292 ஐம்பொறி வழிபோய் is ... 252 ஐம்பொறி வழியினிற் 120 ممن ஐயந் தீர்த்தடியேன் 140
u"(B 3ut Lifs ஐயப்படாமல் ஐயப்பாடின்றி ஐயமிட்டுண் ஐயமில்லா ஐயமெலாம் தீர அன்புடனே ஐயமெலாம் ஐயமே னென்றுரைத்த ஐயமேன் காணு ஐயங்கொடுப்பது ஐயமபுகார்
ஒடுங்கு மனத்தில் ஒண்டொடியே ஒப்பற்ற தெய்வமே ஒப்பில்லாத ஒப்புயர்வற்றவன் ஒரு கறியும் ஒரு சொல்லா ஒரு தெய்வம் ஒருலகம்
நாமம் ஒருருவம் பிடிசோற்றுக்காய் கோந் நெல்லரிசி பொல்லாப்புமில்லையெடா பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு டொல்லாப்பு பொல்லாப்பு பால்லாப்பு பொல்லாபபு பொல்லாப்பு பொல்டிாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு
Lfüsiაზo
uჩ6სზდა மில்லேயென் Lfleobo gir Lfléსზეა மில்8லயென்றவர் மில்லையென்னும் மில்லத்தம்பி tfsöådu JLIr மில்லயுணர்வீர் மில்லையென
மில்லயென மில்லையென மில்லயெனும் மில்லேயென்றே மில்லயென்டான்
பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல லாப்பு பொல லாட பு ,ெ எல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு ெஎல்லாப்பு ஒருவ: மிருவரும் ஒருமை மனம்படைத்த ஒரு மொழியதணு ஒரு ஏமாழியா லென்றன்*
26
மில்லையென்று மில்லையென்றே
y pw ah
.ொல்லாப்பு மில்லையென்று ஒது .
ow a
a
மில்லையென்றென் . மில்லையென்ற மருந்து மில்லையென்ற வாக்கு
bapa
xi
பக்கம் 1( 4. 187 301 287 15 289 36 93 56 148 107
166 83
347 109 329 18 186 188 270 121 305 39
276 248 185 186 301 321 243 258 120 207 219 296 289 287 225 312 288
87
255 163 267 228
93
பாட்டு ஐயம் புகினுஞ் ஐயம் புகுத்து ஐயம்வையாதே ஐயனே ஆரூரில் ஐயனே சறகுருகாதா ஐயனே யழகன ஐயாற கலாத ஐயுந் தொடர்ந்து ஐவருமுன் ஏவல் செய்வார் ஐவர் செய்வினையில்
ஒரு மொழியாலே உணர்தற்கு ஒருவனுலே உலகம ஒருவனுலே உல*மூ ஒருவனே தெய்வமெனும் ஒருவனே தெய்வமென்னும் ஒருவனே யொரு ஒருவ%னப்பற்றி ஒவ்வாதன சொல்லி ஒழுக்க விழுப்பந்தருய் ஒளிக் கொளியை ஒற்றுமை பிந்தவூரிடை ஒன்பது வாய்ததோற்பைக்குளு ஒன்பது வாய்க்தோற்பைக்கு ஒன்பது வாயிலுள்ள ஒன்பது வாயிலும் ஒன்பது வாய்ததோற்பைக்காயி ஒன்பது வாயில் உடைய ஒன்பது வாய்த்தோற்பையு ஒன்பது வாய்த்தோற்பை தன்னில் ஒன்ரு யிரண்டாகி ஒன்ருய் யிரண்டாய் மூன்றயோ ஒன்ருகக் கண்ட ஒன்ரு யிருப்பதும் ஒன்றப் இரண்டாயொரு ஒன்ருய் இரண்டாய் ஒன்றிரண்டென்று ஒன்றிரண்டென்றே ஒன்றிரண்டென்னு ஒன்றிலொன்றி ஒன்றுக்கு மஞ்சாதே ஒன்றும் இரண்டும் ஒன்றென இாண்டெனளண் ஒன்றெனக் கும்பிடுவாய் ஒன்றென ரண்டென ஒத ஒன் றிரண்டென்று ஒன்றென்றிரு தெய்வம் ஒன்றை நினைக்தென் ஒன்க்ரு இரண்டோ
uàsasůd
wwat
3 4. 131 216 302. 51 176 199 188 153 157
163 15 212 37 3CO 212 314 85 123
136 302 187 243 157 131
1C4 140 153 176 114 148
63
33 112 230 343
10 264
207 262 113 309 295 雯13 217
Page 201
LuMGB ஓங்காரக் கம்பத்தினுள் ஓங்காரக் கம்பத்தின் ஓங்காரத்தி ஓங்காரத்தினுள்ளே ஓங்கார நாதமே ஓங்காரத்தாலே ஓங்காரத்தில் உதித்த ஓங்காரததின் ஓங்காரத்துட்பொருளான ஓங்கார மேடையின் ஓடாதே வழுக்குமடி ஓடி யோடி ஓடிவாடா தொண்டா ஓடு கங்கையுடன் ஓடும் இருநிதியும் ஒம்ே புளியம்பழமும ஓடும் புளியம்பழமும்போலும் ஒதாதஈர்க்கில்ஸ் ஓதாமல் வேதம் ஒதியுணர முடியான் ஒதியோதி.மீரமே ஒதியோதி .தனனையே ஒதியோதி யுன்மத்த ஒதுபல் வேதமூரைசெய்த
ஒளவனத் தில்லையில் ஒளவா நல்ல ஒளவியம் செல்வம் ஒளவியத்தை நீக்கி அகக் ஒளவியத்தை நீக்கியறத்தை ஒளவிய நெஞ்சத்தார் ஒளவிய நெஞ்சததால் ஒளவிய நெஞ்சப ஒளவிய நெஞ்சை ஒளவிய மனத்தின ரறியா ஒளவிய மில்லாமன
கங்குலும் பகலுமில்லாக் கங்குல் பகலற்ற கங்கல் பகலகாணுத கங்கைச் சடை கங்கையொடு கசடுதீர்த்தறங் _ கசிந்துஈகி
கஞ்சனும்
கஞ்சமலர் கஞ்சா அபின் கடலகுழிலங்கை
xii
Q பக்கம் பாட்டு பக்கம் 157 ஒது மன்பர்களுள்ளத்து ... 347 187 ஒதும் பொருளும் ... 107 15 ஒதுவ தொழியே லென்ற . 243 37 ஒதுவார் தீவினை ... 200 333 ஒதுவார் நெஞ்சில் ... 50 185 ஒமெனும் ஒண்பொருள் ... 148 225 ஒமெனுந் தாரகம் ... 116 109 ஒமெனு மெழுத்தினுள்ளே ... 295 176 ஒமெனும் எழுத்தினுள்ளே உல - S6 113 ஓம் ஓம் என்று 326 هـه 84 ஓம் சிவ சிவ ... 306 17 ஓம் சிவாயநம வென்றுசொல்லு ... 318 279 ஓம் சிவாயாகமவெனத் 292 138 ஓம் சிவாயநமவென்று சொல்லுவோர். 115 289 ஓம் சிவாய நமவென்று உறுதி 287 س 104 ஓம் சிவாய நமவென்று ஒது 302 .س 221 ஓம் நமசிவாயவென உருவேற ... 93 314 ஓம் நமசிவாயவென உருவேற்று ... 349 329 6th b(3ot nito rug09 ... 307 240 ஓம் நாம் நாமென்று ... 298 12 ஓயாமல் உள்குவார் தம் 43 ۔۔۔ 17 ஒருரு வானுன் ஈருரு ... 111 251 ஒவியம் போலி 309 349 ஓவியம் போலிருந்து ... 343
ஒள 225 ஒளவிய மில்லா வறிவு ... 37 56 ஒளவிய மில்லா அறிவை ... 15 105 ஒளவிய மில்லாதார் 187 مصم 289 ஒளவியம் பேசல் - 314 343 ஒளவியம் பேசா 302 ۔ 185 ஒளவியம் பேசாதே 243 ماهه 109 ஒளவியம் பேசி ... 93 309 ஒளவியம் பேசுதல் 288 سسه 157 ஒளவை உறுவை .107 مم 176 ஒளவியமறறதும் ... 148 200
176 all 681T Syrigh ... 250 157 கடிவது மறந்திடடி .291 سم 223 கட்டாத மனத்தைக் ... 155 38 கட்டுருமன் ... 21 105 கட்டுப்படாதமனத்தைக் ... 225
5 கட்ப்ேபடா மனத்தைக் கட்டத் 186 سمي 318 கட்டுப்படாமனத்தை • 316 مه 52 கட்டுப்பாடில்லாதார் ... 161 94 கண்டவாரும் ... 316 255 s6irl Gut sirtuou98o ... 83 347 கண்டுசர்க்கரை -- 153
uTGB கண்டாரு மில்லயடி கண்டார் ககை கண்டொன்று சொல்லாதே கண்ணல்லக் காதல்லத் கண்ணபிரானுங் காணுக் கண்ணுரக் கண்டிடடா கண்ணுலே காணுெணுதது கண்ணிறைந்த செல்வத்தை கண்ணிறைந்த ஆண்ணுக்கு அணிகலன் கண்ணுக்குக் கண்ணுயிருக்கும் கண்ணுககுக் கண்ணுயிருக்கின்ற கண்ணுக்குக் கண்ணுகிகின்றய் கண்ணுக்குக் கண்ணைங்ாம் கண்ணுக்குக் கண்ணுய கடவுளை கண்ணேயுறங்குறங்கு கண்னைப் போலறங் கண்ணையிமை கண்ணைக் கண்ணுல் பார் கண்மூன்றுடைய கதிரவன்னெழுமுன் கங்தைத்துணியணிந்து கங்தைத்துணியணிவான் கமலாகான்முகன் கமலநான்முகன் கண்ணனுங் கருங்குயில்கள் கருததிற் கருத்தாயிருக்கும் கருத்திலிருக்கும் கதிர்காமத்தோனே கருத்தில் நினைந்துருகிக் கருத்தில் கருத்தாகி கருத்திற் கருத்தே
காக்குந் திருவடிகள் காட்டகத்தே வாழுங் காட்டிலே காளியுடன் காணுகின்ற கண்ணிற் கலந்த காணுகின்ற கண்ணிற் கலந்துள்ள காணுங்கண்ணிற்
காணுங் கண்ணிற் கலந்த கண்ணது . காணுங் கண்ணிற் கலந்ததென்பர் .
காணுங் கண்ணிற் கலந்தவனே
காணுங் கண்ணிற் கலந்தவனேகார் .
காணும் கண்ணிற் கலந்து காணுவார் தொண்டர் காண்பதெல்லாம் காண்டான் காட்சி காண்பான் காட்சி காட்சிப் காண்பான் காட்சியுங் காட்சிப்
xiii
பக்கம் பாட்டு பக்கம் 255 கருமத்தைக்கை ... 258 82 கருமததைச் செய்யலன் ... 267 286 கருவி கரணங்களெல்லாங் 336 ۔۔۔ . 264 கருவிகரணங்களெல்லாங் கலந்து . 297 306 கருவூரில் வாராமை 24 . . ۔ ۔ 322 கரைகாணு வின்பக் ... 219 273 கரையவொரு சொற்சொல்லுஞ் ... 249 33 கரையுமன்பர்கள் ... 348 33 கர்ப்பூரப் பெட்டிகளும் ... 83 23 கல்லார் கற்ருர்க்கும் ... 100 112 கல்லார்க்குங் கற்றவர்க்குங் ... 29 113 கல்லாதார்பாற் A sw 7 146 கல்லாப் பிழையுங் 236 278 கலேகள் பலவுங் ... 298 310 கல்ல நிகர்த்த ... 89 270 கல்லை நிகர்த்தமனங் ... 121 12 கல்லான கன்னலுண்ணச் ... 146 118 கல்லொத்திடு மனங் 67 277 கவனமாய் கருமத்தை ... 77 349 களிபெருகுங் காமக் 195 .م 246 கறங்குபோலக் கலங்கு 176 288 கறுத்திருண்ட கண்டத்தின் ... 145 248 கற்பனை கடந்த வற்புதன் ..... 179 47 கற்றதனுற் பயன் 258 ۔۔۔ 349 கற்றவர் விழுங்கும்கருணை 210 معه 346 கற்ருேரும் அறியாத 312 86 கனைக்குங் கடல்சூழ் ... 323 79 கன்னலொடு செந்நெல் ... 217 27 கன்னலுடன் செந்நெல் .164 مم 331 கன்னலொடு செந்நெல் கதலி 127 33
As 218 காண்பானும் காட்சியும் ... 81 134 காண்பானுங் காட்சியும் போய் 223 124 காதலாற் பாடி 134 162 காதலிக்கு மெய்யடியார் 63 163 காதல் நீ கருத்தும் 75 55 влi,5si (psyaso 310 168 காமக்கடல் கடந்து 304 251 காமமுதலாறுங் கடிந்து 75 233 காமமுதலாறுங் களைந்த 102 270 காமாதி குணமெல்லாங் 40 244 காயமே கோயில் கடிமணமடிமை . 253 195 காயமே கோயிலடி தங்கமே ... 260 195 காயமே கோவிலாகக் கண்டிடும் 141 10 காயமே கோயிலாகக் கண்டு பாவனே . 321 203 காயமொரு 267 294 காயம அழிந்து 13
Page 202
LmtG காயுங் கனியுமாகி காராரானவக் கார்த்தி கேயனைக் &ff tập காவார் குயில் காலனே கோலிக் காலமுமில்ல காலனு மணுகான் are)? is ass systs) காலனக் காலாலுதைத்தான்
கிஞ்சுக வாயுமை
கீரன் சொன்ன
குடிப்பிறந்தாரோடு குடி முழுதையும் குணங்கடந்தது குணமிலலா மூர்க்கரோடுங் கும்பிடுவார் தம்மனத்தைக் ஆம்பிடுவார் நன் மனத்தை கும் மியடி பெண்ணே குருசீடம் முறை
குருந்த மரத்தடியில் குருவாக வந்தவன்
குருந்த மரத்தடியில் குருவாக வந்து
குருபக்தியே குருபரன் அடியின
கூசும் கொலைகள் era LL66 60637 go e.g. suffusf கூத்தாடுதே கூவியழைத்திடுவாய்
Basudio Lo6oř
கொச்சை மக்கள் கொச்சை மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சம கொஞ்சம ய் மனத்தைக்
கொடிய வசுரர் கொடுத்தார்க்கு கொண்டுங் கொடுத்துங் கொத்தார் குழலுமை
p.
209
xiv .
L0âkastb 244 179 216
211
92 160 9 69 72 162
கி 18O
ó 180
(ඊ) 58 234 305 149 161
63 234
10 283 255 205
s 206 347 279 232 259
uTü"CB asTe)6T as கா% க் கட்டித் காகித்தூக்கி கால நீ தூக்கியாடும் கால மா8லயுங் கால யெழுந்திருந்து காலை யெழுந்து asp akA) (éeQuèsT காணக்குறத்தி
கிட்ட நெருங்கையிலே
குருபாதம்
குருவடியொரு குருவான கல்லூரிற் செல்வன் குருராஜ
56Nobsao p6OOTT Tås esorb6bú Um Trá குலாகலம் பாராதே ۔۔۔۔ குழந்தை யன்போடு குருவின்
குழந்தை யன்போடு நாம் குழந்தை வேலா குற்றமெல்லாம்
கூவுகுயிலே கூறுவார் கோடி கூறும் நாமுதல் எல்லா கூறும் நாவே
கையையுங் காலையு
கொல்லாதே கோபம் கொல்லாமை கள்ளாமை கொல்லாமை பெரிதென்று கொல்லார் பொய் கொல்லா வரமெனக்கு கொல்லானே கொன்றை மத்தம் கொன்றென்றும்
ιμάταιο
92 16 72 141 347 19 169 37 68
82
61 259 335 167 210 322 274 278
78 304
80 315 305 153
180
264 24
1(3
89 310 180 322
untG கோகனகத்தானுங் கோணுதசிந்தையுடன் கோணிய பிறையை கோபம் பொருமையை
கெளரியை யிடத்தில்
hlasrüe (Burao
да ато சங்கர சங்கர சம்பு சங்கரன் தானினே சங்கரன் திருப்பாதம் சங்கோசை சஞ்சலத்தை சஞ்சலம் மிகவும் சணடக மரத்தடி பிற் சத்தி சிவமாகித் சத்தி சிவ மொன்றன சத்தியம் பொறுமை சகதியுஞ்சிவமும் சந்ததம் சாதனை
சாங் காலம் Ժր (3600 t சாதலும் பிறத்தலுக் சாதி சமயங்களில்லான் சாதி சமயமென்னுஞ் சாதி சமயப் பற்றினை
சிங்கக் குட்டி சிங்களவர்
சிங்காரங் சிட்டர் பரவுஞ் சிததத்தினுள்ளே சிவ சித்தததினுள்ளே தித்திக்குங் சித்தக துள் கித்தம் சித்தததி லூறுக் சித்த திலே தித்திக்குங் சிததத்துள் தித்திக்கக் சித்திர காரன்தீட்டிய சிகதி தருங் தேவாய் சித்தி பெறலாம் சிகதி மயிலேறு சிங்க% க் கெட்டாத
XV
Vä dobT
பக்கம் பாட்டு 180 கோல மாமலர்
82 கோல மொன்றும்
233 கோலா கல 259
கெள
274
226
ሪፓ 180 சந்திர சூரியர் காப்பாம் 263 சந்திர சூரியரானுன் 105 சந்திரன் தவழ்தரும்
95 சந்திரனில்லச் 81 சமய தீக்கையைப் 154 சமய நெறி 325 சர்வம் பிரம
81 சலன முதிப்பது 33 சற்குருதரிசனம் 38 சற்குருவின் 66 சற்றுஞ் சந்தேகங் 177 சற்குருவைப் போற்றித் 226 சனகர்
FA 311 சாந்தம் உபசாந்தம் 275 சாந்தம் பொறுமை 181 சாந்தம் பொறுமை யன்பு 240 சார்ந்தவர்க்கு சாவா 248 சாவதும் பிறப்பதுங்
. 250
265 , சிந்திக்க நெஞ்சும் 265 சிந்தித்துச் சிந்தித்துச் 28 சிங்கி சிந்தி சிக்கி 286 சிந்தித்துத் தெளிந்தார்
89 சிந்தையிலன்பு
167 சிந்தை செய்கதிர் 235 சிந்தையில் வெந்துயர் 303 சரித்டிப்புரமெரித்த 316 சிரித்து கலலூர்
33 சிரித்து முப்புர
181 சிரித்துப் புரமூன்றுஞ் 238 சவ சீவு என்றிடும் 346 சிவ சிவ என்று
70 சிவ சிவ வென்றெந்த 191 சிவ சிவ என்று சிந்திப்பர்
பக்கம்
32 54 72
35 240
25 296 203 315 305 256 263 319 168 192 179
320 31s) 164 167
196 187
169
315 46 349
329 54 47 142 341 77
213
Page 203
Luri CB சிவ சிவ செல்வக் கணபதி சிவ தொண்டு செய்வார்க்குச் சிவ தொண்டனென்னும் சிவ தொண்டன் சிவ தொண்டு செய்தல் சிவத்தியானஞ் சிவதொண்டு செய்வார் சிவத்தைக் கண்டிடர் சிவத்தை நோக்கித் சிவத்தினை வளர்க்கும் சிவத்தியானத்தைச் செய்யும் சிவத்தை மறைத்தது சிவத்தை விடத்தெய்வம் சிவநாமமைந்தெழுத்தும் \ சிவ நாமஞ் சொல்லி சிவ நெறிச் செல்வர் சிவபக்தியாலே சிந்தை சிவமே தாமெனச் சிந்திப்பார் சிவனடியார்கள்
&Lot?gTL
சீரகமுள்ள சீராரிலங்கை சீராரும் நல்லூரில் சீரார்மேனியுடையாய் doroT aligu(BartGB a.8
சுகதுக்கம் சுட்டாமல் சுந்தரற்கு சுந்தரற்குப் பெண்
56)
5 g6 flT குதானதற்ற சூதானவெளியில் சூரியன் தோன்று
செக்கச் சிவந்த செக்கர் போலும் செத்தார் என்பு செந்நெலுடன் கன்னல் செந்நெல்லும் கன்னலும் செப்பந்தரமோ செய்யமேனியனே செல்லப்ப &ன *தினம் செல்லப்பன் என்னுக் செல்லார் செல்வக்குருகாதா
as Y 8
po
s.As
*K. dia o
4 UA to
xvi
பக்கம் uTG 232 சிவமே நாமென்று சிந்திக்கச்
42 சிவனடியாருடன்கூடி
48 சிவனடியாரை
120 சிவனடிக்கன்பு செய்குவர் 208 சிவனடியாரொடுங்கூடி 135 சிவனடியைச் சிந்தை 299 சிவன் சிவனென்று
12 சிவனேயுன் தரிசனங் 17 சிவனையல்லாமல் தேவரு 245 சிவனுெருத்தனே 272 சிவாய நமவென்று
299 சிறப்பு மிதுவே
198 சிறையார் வண்டறை
58 சிறப்புக் குறைவிடமே 61 சிறப்புஞ் செலவமும்
141 சிற்றம பலவன்
212 சினத்தை மனத்தில்
299 சினத்தைக் கொல்லுவோம் 109 சின்னத்தனமாய்த்
153 சீருந் துணையில்&லச்
181 சீர் பெறுஞ்சித்தரும் ஆங்கே 303 சீலஞ்சேர்
270 சீலமு மதுவே
135 சீவன் சிவனெனல்
26 சீவன் சிவனென்று
62 er (5508uur 155 öጽጨfftß 111 சுழி முனைக்குள்
12 சுனைக்கும் கல்லூர் 284 சுன்னுகத்தான
279 சூரியன் வருவது 168 தலபாணியைத் 141 26.) JusÐLULJETÜ 346 சூழமிகநினைத்து
செ
313 செல்வச் சிவதொண்டன் 202 செல்வச் செருக்கினுற் 25 செல்வகிலே யாதென்று 249 செல்வம் அது
59 செலவர்க்கழகு 51 செல்வர் பின் சென்று 25 செழுமலர்த்திருவடி
67 சென்னிக்கணி
16 சென்றன சென்றன 310 சென்றன வாணுட்கள் 12
o
168 285
47 249
46 256 272 169
45
37
11 323 322
160
132 229
16
9) 197 249 127 18
97 193
22 162
LTG சேணிடை சேண்பொலியுக் சேர்ந்தவர்க்குத்
சைவனேயுன்னத்
Garres (Sur (8s சொல்லச் சொல்லச் சொல்லமுடியாத தீர்ப்பு சொல்லமுடியாதபொருள் சொல்லாமற்சொன்ன சொல்லாலே பயனில்லை
சோடிழந்த சோதிப்பிழம்
ஞானதேசிகனே
தக்கன் வேள்வி தங்கப் பொம்மை தங்குஞ் சிவ தச்சன் கட்டா வீட்டிலே
தச்சன் கட்டா வீட்டிலே தாவும்பரி
தட்டா னிடத்துச் தண்ணிர்க் கடவுள் தண்ணிர் குளிருமோ தத்தாதித் தோம் தத்து பரி தத்து வங்களாருறும் தத்துவந் தொண்ணுற்றறுஞ் தத்துவப்பே தத்துவம் ஆருறும் தத்துவ மெல்லாம் தத்துவம் யாவுஞ் சடமென தத்துவம் யாவுஞ் சடமென்று தந்திமுகத்தனச் தந்தை தாய் மற்றுங் தந்தை தாய் மைந்தர் தந்தைதாயும் தமஞ்சம மிரண்டின் தம்மைத்தம் மாலறிந்த
is List (Bu தருமநிலையிலே தருமநெறி பிசகாமல் தருமமு மில்லத்
xvii
Lånd
v Kej
(35戸
tă atb பாட்டு 181 சேவித்துஞ் சென்றிரந்துஞ் சீவன் . 224 சேவித்துஞ் சென்றிரந்துந் தம்பி 164
சை 81
சொ 24 சொல்லாலே வாய்த்த 279 சொல்லால்வருங்
95 சொல்லித்துதிக்குக் 40 சொல்லிற் கலந்த 16S சொல்லுகிவமே 264 (des s676TUIT scorés
@于阿 82 சோமசுந்தரன் 131
(6. 222 ஞானயோகம்
த் 111 தர்க்கஞ் செய்யப் 265 த&லயிலிரந்து 249 தலையை நிலத்தில் 316 தவஞ் செய்து 342 தவத்திற் சிறந்தார் I55 தவத்தை யாற்றிடில் 101 தவராச சிங்கத்தை 102 தனக்குத் தானிகரான
46 த*னலம் வீந்திடத் 105 தன்மை முன்னிலே 162 தன்னே அறிந்தால் 141 தன்னை அறிந்துவிட்டால் 224 தன்னைத் தன்னுல்
40 தன்னைத் தன்னுலறிந்த 1^2 தன்னைத் தன்னுலறிவார்
61 தன்னத் தன்னுலறிந்திடடா 44 தன்னைத் தன்னுலறியடா 212 தன்னைத் தன்னுலறியவேண்டும் 184 தன்னை மறந்தருளில் 124 தன்?ன யறிந்தார் 182 தன்னே யறிதல்
66 தன்னே யறியத் தவத்தை 320 தன்னை யறியத் தவமுயற்றும் 85 தன்னை யறியத் தனக்கொரு 255 தன்னை யறிந்தோமே 267 தன்னை யறிந்தோர்க்குத் 168 தன்னுெப் பாரில்லாத
192 220
18 13 276 51 65 182
226
313 16 298
7. 320 272 288
32 205 296
19
226
247 342 255
59 161 198 177 27 91 239
38
33
Page 204
UT" (8 தாபதர்தம் தாமரையில் நீர் தாயினு மன்பு தாயுங் தந்தையுமாகி தாரகத்தனி தாவித் தாவிச் தாவும் வேங்கை தாளம் போடு
திக்குத் திகாந்த மெல்லாம் திக்குத் திகாந்தமும் திக்குத் திகாந்தமும் கைவச திங்கட் சடையாய் திங்களும் கங்கையுஞ் சீறும் திங்களும் கங்கையும்
திங்களும் கங்கையுஞ் சென்னியில்
திங்கள் கங்கை திங்கள் தங்கிய திடமுட்ன் தியானஞ் தித்திக்கும் அமுதே தித்திக்கும் அமுதினேத் தித்திக்கும் ஒரு
தீமையெவர்
துக்கம் சுகம் துஞ்சாதே தூங்காதே துட்டச் சமணர் துண்டப் பிறையாய் துதிக்க மதிதந்த
தூக்கியபாதத்தின் தூங்காமல் தூங்குஞ் தூண்டு சுடர் தூது சுந்தரர்க்
தெய்வத்துக்குத் தெய்வமே திருவருள் தெய்வமே யடினென தெய்வம் எல்லோர் தெய்வம் ஒன்றெனத் தெரிந்து செயலாற்றும்
தேகம் நீயல்ல வென்றன் தேகம் நீயல்ல வென்றதிட
χνiii
தா பக்கம் Jr" (B 259 தானதருமங்கள் 184 தானந் தவமிரண்டுக் தானுற்ற 85 தானர் தவமிரண்டுஞ் சற்று 244 தானுன சற்குருவைத் 117 தானுன தத்துவன 220 தானுன தன்மை 182 தானுன தானேயல்லால் 326
தி
2 திருந்து மடியவரொடு 44 திருநீறும் ஐந்தெழுத்தும் 3.13 திரு நீறுஞ் சந்தனமும் 236 திருவருட் செயல் 209 திரு ருள் கைகூடுது
37 திருவருளை நாடி 44 திருவாரும் நல்லூரில் 182 தில3லயம்பலத் தாடும் 136 தில்லையம்பலத்தைக் கண்ணுற் 250 தில்லயிலாடிய 135 தினத்தனைப்போது மறவாமல் 310 தி&னத்தனப்போதும் மறவோம் 3 தினத்துணைப்போதும் மறவாது
தீ
196 தீவினைகெஞ்சத்
து 33 துப்பி சைந்த 254 தும்பி முகன் 317 துள்ளித்திரியும் 183 துள்ளும் மனத்தை 218
து 234 தூலதுக்கும
113 தூவி மயிலேறும் 196 தூணே நீ
83
தெ 223 தெரிந்து வினையாற்றும் 326 தெளியுமே நின் சிங்தை
32 தெளிய வழிகாட்டும்
7 தென்னவன் தீப்பினி 272 தென்னு தென்னுவென 191
தே 1 தேகம் விழுமுன் 141 தேகமே மெய்யென்று
»eo
... 284
பக்கம் 165 103
117 254
224
283
334 266
267 307 338 233
285 323
182
26 292 115 249
169 220 275
198
86 117 183 310
168 124
பாட்டு தேகாதிதனை தேங்காயி லிளநீர் Ο ΣΚΣ தேசகாலம் யாவையும் ob தேசம் புகழுஞ் சிவன் w
தேசம் புகழுந்திரு ops தேடாமல் தேடென்ரு to a தேடித் தேடித் pov தேடி நான்காணும் தேடிகின் திருவடியே தேடிவாடாதொண்டா (3g (Bs. Tñ um. (Bé apud தேர்முட்டிப்படி o தேரடியில எங்காளும் 4. தேரடியிற் சென்று way
தையலார் மையலிற்ருன் o O
தொண்டர் நாங்களே தொண்டு செய்வாருக்கு தொந்தோ மென்ருடும்
தோடுடைச் செவியனே A a தோளாமுத்தே
நகரத்துள்ளே Fasa நஞ்சணி நஞ்சை a de гъt-ti (Bie OO நட்டா ·· bഞ്ഞ് ഇ obes (5 LDé(ğ ΑΑΟ το நமச்சி வாயவே நாம்சொல்லும்
நமச்சி வாய வாழ்கவென நமச்சி வாயவே நான்மறை
கமனு 8 நபமிடமெல்லா w a w ந1 மிடமென்றுங் s நம்பன்
bi 3560bas bel960T (ur Qe p ur நயப்பார் நரிபோல் bora நரியை 8 நலமறிய oе நல்லசமயமிது 8 wo நல்ல தெய்வானை Wh நல்ல மருந்தொரு - - - நல்ல மலரெடுத்து opp நல்ல மழை - கல்லன m நல்லூரான் கிருபை.காம் as a நல்லூரான் கிருபைவேண்டும்-வேறெ. கல்லூரான் திருபபாதம் Op நல்லூரான் திருமுன்பு was
27
பக்கம் பாட்டு 215 தேரடியில் வீற்றிருப்பான் 115 தேவதேவனே என்றுந்
60 தேவரும் முனிவரும் 307 தேவர்கடம்
41 தேவர் சிறை
2 தேவர் பிரான், 271 தேவாதி தேவ 141 தேறிததெளிந்த
45 தேனுந்துகொன்றை 279 தேனுந்துசோலேத்
7 தேனுந்து முக்கணித்
81 தேனும் பாலினுமினிய 282 தேன் சொரியுஞ்
86
தை
90 தையல் வேட்டுச்
தொ
4. தொல்லாகா னிருவர்காணு 230 தொழுது வணங்கிடுவாய்
41 தொழுது வணங்கிநின் தோ 340 தோன்ருத்துணையை 184
b
212 நல்லூரான் திருவடியைப்பாடு 167 நல்லூரான் திருவடியை நான் 149 நல்லூரான் வீதியிற்போய் 250 கல்லூரில் செல்லப்பன் 155 நல்லூரில் தேரடியில் 306 நல்லூரில் வாசன் 293 நல்லுரைக் கும்பிட்டு 177 நல்லூர் ஆட்டக்காரா 315 நல்லூர்பதியிலே 58 நல்லூர் வாசனே
38 நடு லூர் வெளியிலே 277 நல்லோரி 277 fò sobombs 144 நல்லப்பதிக்கு
80 நல்லப் பதிக்கரசே
29 நல்& யில் வாசா
79 நவாகவமாய் 329 நவிலுமறை
16 நற்சிங்தை யெனும். நறுமலர் 86 நற்சிந்தை யெனும்.கல்லமுதம் 264 நனந்து
7 நன்மை
98 நன்மையுந் தீமையும் நாமல்ல 86 நன்மையும் தீமையும் நாடா 222 நனமையும் தீமையும் கங் 2O6 நன்றியை
91 நன்று தீதை
73 கன்று தீதென்று
95 நன்றென்றுக் தீதென்றும் 190 நன்றெனத் தீதெனத்
பக்கம்
329 252 251 153
183 321 292
134 142
43
83
183 223 193
340
255 113
Page 205
LTG நாங்கள் சிவமென் காசிதுணி
DETSATT & காடியொரு கருமம் is si mb|Tig,68LLum நாடுவார் நாதன் நானும் காமஞ் நமந்தி நாமறியோமெனச் சொலு நாமறியோ மெனும் நாமறியோ மெனும் நல்லமந்திரம் நாமறியோ மென்னும் நல்வாக்கு நாமறியோ மெனும் கறியதிரு நாமறியோ மென்ற கலந்திகழ் - நாமறியோ மென்று கல்லூரிற்சொன்ன . நாமறியோ மென்று 8 8 நாமறியோ மென்று சொன்னுன் நாமறியோ மென்று நகைத்தென்னே. நாமறியோ மென்று நல்லூரிற்
கிகரொ ருவரும் நிஜமா மான்மா கிததியம கித்திரையை நித்தியர்
நிலனுகிக்
நில்லடா நில்லன் பொடு நினைந்து கில்லாத காயத்தை கில்லாத நீர் நில்லாத செல்வத்தை நிற்பனவும்
:
நீக்கமற்று நீங்காத நீங்காது
நீதிகுருபரன் &
திே அநீதியென்னும் நீதி நெறியைச் நீயருளாப்டிற் கீயும் நானும் நீயே நான் என்றுநேர் நீயே நான் என்று நீயே கான் என்னும் நீயே நீயாயிருக்கப் நீராய் கெருப்பாய் ரோனுய் நிலனுணுய் ருேங் காலும்
KK
நா LIä3úb 311 152 279 346 141 117 158 251 47 92 39 S2 21. 163 161 293 288 82 276 219 270
259 332 278 162 238. 197 298
235 30
90 146
342 113 333 240 248 80 338 58 63 87 2 269 27 12S 2O1
uTB நாமறியோ மென்று முன்னுள் நாமறியோம என்ற நல்லதிருவாக்கை . நாமாாககுங் was நமோர்குடியுமல்லேன் நாமார்க்கும் ஆளல்லேம் நாமுமே நாமாக நாமும் காமாக நாமே நாமென்றுரைத்தான் - a a நாமே நாமென்றுசொல்லிச் re. nbrüd büd blid 66 காவலரும் நாவுக் நாற்றிசையுஞ் நான் உன்ன நான படும் நானுரென் கானென்னும் நானே நீ நன்மதி நானேநீ நீயோநான் நானென {B୩ (କ୍ରୋଥି) ଓ
Tâb(8urû
ßoT é a rấgrăso
ißጿ0] õÖ [filgulgDU நினைககு மடியாரை நீயே 8 நினைககு மடியார் கெஞ்சத்துள்ளே கினைத்தபடி AO ARO V t6]3%All their • ** به நினைவில் நினைவாகி
நினவுக்கு நிஜனவாய்
கின்னு வார்
நீர்நிலம் தீகாற்று
ក៏ពុំ ឯសb ឆ្នាំ
நீல கண்டன
நீவா தா
நீள நினைக்கும்
நீறணி நின்மலா - நீறணிந்த 8 நீறணிமேனியினும்
நீறணியான் < Ad• «O நீரு திருமேனி கீறாமேனி as கீறு பூசிய As a 0 நீறு மணியான்
பக்கம்
186 329 184 330 346 153 38 3. 80 326 43 43 117 71 43 124 29 275 275 330 167
197 164 306 218 201 284. 323 194 158 294 184
256 235
32 334 111 201
25 145 151 329 303 135
3. 248
UT'09
நுண்ணிடை 48 r.
நூதன
நூலறி
கெஞ்சகம் -8 கெஞ்சுருகும்
நேசயோகத்தார் asp
கைந்து
நொந்தவர் a Neae
பகருவார் நெஞ்சம்
பக்குவகால பக்குவாய்ப் a பக்தர்கள் எல்லாம் 4 பக்கிசெய்து பந்தத்தை d பக்திசெய் யோகசுவாமி 0.
uங்கில் மங்கையை பச்சை நிறப்புற்றரை பச்சைப் பசுங்கிளியே பச்சை மாமயிலோடு பச்சைப்புரவி பஞ்சப்புலன்களுங் பஞ்சப் லன்வழி - பஞ்சம் படை வந்தாலும் a y பஞ்சம் படை வந்த LJL-&plaus 5 guð b பட்டது பட்டேற்று பட்டால் பாவாடை பட்டுக்குடைபிடித்து பணித8லக் கொள்ளல் - பணிபவர் கெஞ்சினுனே meAO பண்ணவன் பண்ணே பண்ணிற் - பண்டையனும் மாலுந்தேடிப் - பண்டையனும் மாலுமடி பண்டு செய்த வல்வினை நோய் பண்டு செய்த வல்வினையால் பண்டுசெய் வல்விண்நோய் பண்டு செய்வின யெல்லாம் பறந்து பண்டு செய்வினை யெல்லாம் பரிந்தன. பண்டு மின்றம் என்றுமுள்ள பரனடி , பண்டு மின்றுமென்றும் பண்டுமின்றும் உள்ள பதமலர் போற்று
8 v 8
பாசத்தால் வெந்து நொந்து பாடல்பத்தும் படிப்போர்கள் . . . பாடவறியான் பலகலையுந் தானறியான்
xxi
டு
பக்கம்
158
T
158 169
நெ
167
284
நே
1.59
நை
252
நொ
159
50 313 313 120 23 24 25 342 83 137 342 351 186 69 94 250 316 155 286 206 139 144 231 316 297 322 286 254 4. 169 306 38 264 85
329 41 222
பாட்டு
நூற் பெர்ருள்
@Bທູ (ມ நெற்றி
நேசத்தால் oo
கையும்
பதின்மூன்று பாடல்கள் பத்திககு மடியவர்
பத்தி செய்யும் es •
பத்தியுடன் பத்துப்பாட்டா மிவற்றைக் பத்துப்பாட்டும் படிப்பவர் பத்துப் பாட்டுப்படிப்போகும் பத்தும் காலும் பத்தும் படிப்போர்க்குப் பாக்கியமுஞ் பத்தும் படிப்போர்கள் --- பத்தும் படிப்போர்கள் கேட்போர்கள் . பத்மாசனத்தில் 4 பந்தஞ்செய் பாசமே - பந்தமும் வீடும் -- பந்தமெனும் பந்தி பக்தியாயிருந்து
பயமுண்டோ
U06junigun fids o 4 பரவு வார்க்கருளுவாய் - a பரிந்தன்பர் பாதத்தில் பரிந்து பணியாற்றி e பருவத்தில் மழை a- - -
6) LU606us iš
பல்வினே போக்கி
பவ நெறிகடக்கப்
பவம் நீங்கும்
பவவருடத்துப்
பவவருடம் மார்கழியிற் பழம் பாக்கு வெற்றிலே பற்றற்ருர் பற்றும் பரமகுரு பற்றற்றர் பற்றும் பரமபொரு பற்றினுற் பிறந்திறந்து டன்னுட் பழக்கத்தினுட் பன்னிரண்டு காற்
பாடி மகிழும் சிவபாக்கியம் UT gtUTigtj USOoflub பாடிவாடா தொண்டா o
a
233
46 158
202
159
279
Page 206
Luar LGB பாதாரவிந்தத்தைக் காணுமற் ܝ ܝ பாதிச் சாமததின் பாதி மதிசூடிப் பவளம்போல் பாம்பும் புலியும் பாமர மக்கட் பணிசெயல் பாரவன் விண்ணவன் காண் பாரறியார் இவருடையதன்மை பாராதி பூதமெல்லாம் urg" (Bur. G6.6ö73öT பாாம் விண்ணுமாகி நிற்பது பாசையனே கடைக்கண்ணுல் பாரையனே மனம் பாரொடு பூதங்களாகிப் பரிதிமதி பாரொடு விண்ணுய்ப் பரந்தான் பார்க்கப் பார்க்க பார்க்கு மிடமெங்குஞ்
பார்ப்பதெல்லாஞ்சிவ
Słgpayäfia v 9:35 (dsGoTeirg Lumok pas பித்தனென்றவர் பிறவி · sa பித்தனென்றும் பேசுவார்
பித்தனெனப் பலபேரும் an A பிராண னபானனுங் காப்பாம் waபிருதுவியப்புத் பிறப்பிறப்பற்ற பெருமான் பிறுப் பிறப்பில்லாத
புகல்வதற் கொன்று புத்தியை நீநாட்டாதே புத்தியை ஒன்றிலும் காட்டாதே புலன்வழிச் செல்லும் பொல்லாப் புல%னவென்ற ெரியோர்களுளம் புள்ளிக் கலாப மயிலேறும்
பூக்கைகொண்டு போற்றடா பூக்கைகொண்டு போற்றுமடியார் பூதங்கள் ஐந்தான
பூதங்களில்&லப் பொறிபுல பூதங்களைந்தாகிப்
பெண்ணுமானு மில்லையடா vo பெரிதானுய் சிறிதானுய் · · · பெரியதிற் பெரியது waw
இபசரிய சிர்ச்சனகன் பேசாத மந்திரத்தின் பெருமை Yoo பேணும் பிறபபிறப்பில்ல யென்பார் .
36
XXii
பக்கம்
113 54 128 234 206 330 282 321 86 244 46 46 151 145 24 2O7
194
288 59 31 329 82 351 285 166
133 224 258 141 38
85
342 132 4.
296
126
sou
247 125 99
பே 103
12 251
Lumu" (8 LuTuTfuULe?ST பாலகற்குப் பாற்கடலைப்பாரி பாலன் மார்க்கண்டன் பாலனுக்காகப் பாலும் பழமுக் பாலக்குடித்துப் பாவணி செய்துபாடு பாவம்போம் பொல்லாப் Luñ any sa)ñf (5 fT6QJ6)ñi பாவலர் நாவலர்கள்
பாவலர் நாவலர் பணியும் நல்லூரில்
பாவனை யொன்று டாவிகளறியார் பாவிகதும் பாட்டிசைத்துங் பாவியென்று uTpG Fuqua Lor uLuT பாற்கடல் தன்ன
வீறப்பிறப்பில்லாப். யெங்கள்
பிறப்பிறப்பில்லாப் பெருமானே நீ
பிறவார்கள் இறவார்கள் பிறியென்றன் பிறியாமற் பின்ன ரெனக்குப் பின்னுமுன்னு மில்லே பின்னைப் பிறப்பிறப் பின்னேப் பொய் பின்னே யுனக்குத்துணை
புறத்தில*லபாதே புனலொழுகப் புன்னகையாலே புன்சொல் புன்னுனிமேல் நீர்போல் புன்னேறி செலும்
பூதம் நீ பொறியும் பூப்பொலியுங் பூவின் மனம்போற் பூவும் மணமும் போலப்
பெரியவன் சிறியவனென்பது பெருமான்காண்
பெருமை சிறுமையில்லாப்
பேதங்களெல்லா மாயினும் பேராயிர முடையான்
296
255
62 217 110 346
75.
203
275 134 165 208
16S 144 100
167 150
ur.09 பொங்கல் பூசை பொங்கிவரும் அமிர்தத்தை பொங்கிவரும் காமமே பொங்கும் காமக்குரோத பொய்யை மெய்யென பொல்லாப் பிங்கில்லையென்று பொல்லாப் புழுமலியும் பொழில் வாழும் பொறியஞ்சும் வென்றவர்தம் பொறியைந்தும் வென்றவர் பொறிவழிச்செல்லும் பொல்லா பொறிவழிபோம் பொறிவழிபோய் பொறிவழிப் புகுத்துதே பொறிவழிமனத்தை பொறிவழி மனம் போயல் பொறிவழியினிற் செல்லாதே பொறிவழியே பொறிவழியே போய்ப்புகுந்து பொறிவழிபோயலயாமல் பொறிவழியே போயலயும்
போக்கும் வரவும் இல்லாப்புனிதன் போக்கும் வரவுமுள்னானில்லான் போக்குவரவில்லாத
BLJOT óGolest G8 QU6qfiio?bo போகபோக்கியம் எல்லாம் போதுகொண்டு போற்றேன் போதுமளவும்
diis 6TT as roaTas L0äl č56T aš0 LDTsor மங்களம் ஜெய மங்களம் 1 மங்களம் ஜெய மங்களம் 11 L) bi 36ITLDI és L) மங்களமான வார்த்தை மங்குவார்
udělspasuoTř
மங்கையொரு மடைதிறந்தாற் மட்டிலாதது
மணிவாசகங்
மண்டலங்கள் மண்டலம் முழுவதும் மண்டலம் மூன்றும்
цовбот (В மண்ணுகிய பூதமைந்தும் மண்ணுசை பெண்ணுசை
xxiii
GUIT
பக்கம் uT'GB ιμά δύο 265 பொறிவாயிலந்தவித்தான் ... 109 95 பொறிவென்றர் தாமும் 103 95 பொறுமையுமடக்கமும் 166 249 பொறுமையைப் பறங்காப்பது ... 12 138 பொன்போல்மேனியர் ... 160 239 பொன்போலும் திருமேனி உடையார் . 143 90 பொன்போலும்-மேனியனே ... 33 31 பொன்னுணுய் மணியானுய் 125 316 போன்னுசை பெண்ணுசை ... 20 30 பொன்னுசை முண்ணுசை அகப்பேய் . 254 165 பொன்னுசை மண்ணுசை பெண்ணுசையை 294 60 பொன்னுர் மேனி 30 91 பொன்னுருடலிற் பொடியைப் பூசிப் 32 317 பொன்னிறத்தது சிவ சிவ சிவ 348 61 பொன்னின் குடத்துக்கெவர் 154 202 பொன்னும் பொருளும் ... 101 258 பொன்னும் பொருளும் புகழுந்தருவான். 201 13 பொன்னே மணியே ... 233 124 பொன்னே நீ பொருளே 275 235 பொன்னே யன்றி 9
19
(3 it
20 போமே போம்வின 80 319 போம்போம் வினையென்று 326 13 போவதும் வருவதுமில்லை யென்பார் . 251 330 போற்றி யென்வாழ் முதலா
168 போற்றி யொரு பெரில்லாப்பு ... 64 192 போன காலத்தை யெண்ணிப் 203 19 போன நாட் கிரங்கும் 165
O
95 மண்ணுசை வையாதே .264 م ه 53 மணணுதி பூதமெல்லாம் .. 30Ꮞ 352 மண்ணுணுய் விண்ணுணுய் 125 353 மணனினுசை 16 265 மண்ணையும் விண்ணையும் 52 249 மண்ணுெடு விண்ணும் 101. 265 மண்தீகால் 143 265 மண்புகுந்த - 33 39 மண்முதற் ... 349 95 மதிககு மதி ... 278 348 மதிக்கு மதியீ ... 62 226 மதிககும் மதி 195 سم 154 மதிதவழ் சடையாய் ... 132 169 மதியிலேரவி 204 ۔۔۔ 162 மதியும் கதியும் ... 20
4. மதியு மிரவியும் 320 150 மத்த மாமலர் ... 32 164 மததம் மதியொடு ... 348
237
Page 207
பாட்டு மத்தம் மதிதடி மத்தர் பேயர் மந்திர தந்திர மானுன் o மந்திர தந்திரமும் M osgop மந்திரமாய்த தந்திரமாய் மந்திரமுங் தந்திரமும் ஆளுர் மந்திரமுந் தந்திரமும் வேண்டா மரகத மயின் மரத்திலே மல மருந்து கண்டேனே மருமத்தில் மருமமறிந்தவர்கள் மருவாருங் மலர் மிசை யோனும் மலைத்து கிணற மலமேலேறி மழை யென்னும் Op.
toTov opp மாசில்லா மாதவர் மாசில் மாதவர் மனத்திற் es மாண்டார் மனத்தானே மாண்டு போனவர் மாண்புடனே a O மாதம் மும்முறை o மாதிரி யொன்றுஞ் மாதுமை பங்க up to மாமதுரைத் - - LOTLDusio
மாமனுய் வந்து
LOTULUusisoofiu a6o
முக்குன மாயைக் முக்குறுணிப் a முச்சந்திக் குப்பையிலே முச்சந்திக் குப்பை முடிந்தமுடிபென்னும் முனிவன் முடிந்த முடிபென்ருன் முன்னும் பின்னு முடிந்த முடிபென்று முன்னின்று முடிந்த முடின்ெறு முன்னுளிற் முடிந்த முடிபெணறு முன்னுளில் ஆசான் முடியப் பிறப்பிறப்பைக்
ههولى F5-لا-الول முண்டக மலர்ததாள் os ab M முததமிழ்ச் சங்கம் ” ܚ - முதத்திக்கு வழியை u upan முத்திக்கு வழிகாட்டும் a
XXίν
பக்கம் 303 178 240 288 126 143 162 66 123 283
210
136 250 190 110
74 110
89
313
33
342 293 276 219 161
329 29
286 69 206
330
urt'(B பக்கம் மறந்தாலும் பிறந்தாலும் ... 153 மறவாதே யெெைறன்றும் ... 164 மறவாமல் போற்றும் ... 112 மனச் சாட்சி - 285 மனத்தில் வஞ்சகம் 32 மன சுதுக்கண் 109 மனத்துயரம் மாற்ற 79 மனத்துயரைநீக்க ... 284 மனமாட்சி உள்ளார் ... 285 மனமாட்சி வேணுமென்று 285 மனவாசகங்கடந்த ... 63 மன்னவகுகி ... 44 மன்னுதவ ... 101 மன்னுயிரெல்லாம் ... 205 மன்று பறித் 323 محیه மன்றுள்ளேயாடு 05
மாயும் மனிதரை 244 மாரியுலகை 101 மாருட்ட ... 329 tDafléaÉ; ... 241 மார்க்கண்டற்காக ... 283 மார்க்கத்தை ... 342 மார்க்க நன்நெறி ... 216 மாலயனும் 124 மாறிப்புலன் 235 மாறிப்பொறிவழியோகா 236 மாறிப் பொறிவழிபோய் 81 மாற்றறியாத 111 மானுயி மானம் ... 224
முத்திக்கு வித்தான ... 33 முத்திக்கு வித்தை ... 238 முத்திக்கு வித்தை மூனயிலிட்டுச் 162 மு போதுங் 312 முயல முபல 284 முருகா வோ 76 முழுது மூண்மையென 39 முழுது முண்மை ஆச்சுதெடி 154 முழுது முண்மையென்று முனிவனவன். 161 முழுது முண்மையென்று முன்னுள் 223 முழுவது முண்மையென்று முகமலர்ந் . 321 முழுவது முண்மை யெனமுன் ... 292 முழுதும் முண்மையென்ற 63 முழுவது உண்மைஎன மொழிந்தான் 163 முழுவதும் உண்மையென்று 200
UFC முற்ருத (UዎይD£D] முனியே முனைத்து வரும்
முனை ததுவரும் மூர்க்ககுனமெல்லாம் .
முனைந்துநிற்கும்
மூண்ட வல்வின மூதாதைமார் மூர்க்க குணமில்லே மூர்க்கமான குணம்போக்கும் மூலநிலத்தின்
மெத்தக்கதை பேசாதே மெய்யரும்பி விதிர்
மொழிக்கு கற்றுனே
மோனத்தாழுதல்
ususti
யாவரும் சமமென
s
வஞ்சம்
வஞ்சியர் வஞ்சகம் வஞ்சநெஞ்சினர் வடிவ மில்லாதவனே வடிவுசேர் 6.J.g.6460L. வடியார் சூலம் வணக்கினுன்மா வணக்கம்
வண்டு வண்டார்க்குங்
ങ്ങuങ്ങ് வந்தது போனது வந்திபபார்
auTösesso QTFONJoç. வாசம்பொருந்திய வாசித்துக் வாசியோகங் தேர் வாணிச்சிககாக வாதம் பேசி DMT uuKgÚ வாய்மையும்
வால்
DU
XXV.
பக்கம் 235 168
323
294 284
27 .
UTB முன்செய்த முன்னில் முன்னேவின்வந்து மூண்டுதே முன்னேவினயென்றும் நினையாதே முன்னைவினையெல்லாமோடு
மூலயிலிருந்து Sypavo uLuar மூவர்களும் மூன்று மொன்ருன மூன்று மொன்ருய்
மெய்யுரைப்போம்
வந்துன்னடி
வருக முருக
வருத்தமறற
வருவதும்
வருவன வருவாரைப் போவாரை ஆசான் வருவாரைப் வருவார் வருவார் வலமிடமாய்ச் செல்கின்ற வலமிடமாய் ஓடுகின்ற வலமிடமோடும் வாசியை வலப்பட்டமான் வல்லாரும் வழிகள் இரண்டையும் வழுத்துதறகு ஒன்றுமில்ல வறுமைப்பிணிக்கு
agresíduuT
வாழிகுருநாதன் su ji daете штiadi வாழுவோமென்றுவென்று வாழ்க சிவதொண்டன் ഖമ ീഖങ്ങ
RTb
auterih IT RNGR ANaval
asTar
uassà
16 29 154 255 344
298
283 161
346
326
101 16S 275
Page 208
urruC) 63> விஞ்சுபிறப் விடத்தை விடியுமூன் விடையேறு விட்டகுறை விண்ணவர் விண்ணுணம் விண்ணும் மண்ணும் eßsöI00(BLff60 விண்ணுட்டாரும் வித்தகம் நீபேசாதே வித்தாரப் பேச்சையும் வித்தாரமாகக் கதை வித்தார விடையேறி
வீடுசேர்வதில் வீடுகமக் 66 Turrar வீதிக்கு வீதி
வெட்டவெளியில் வெம்பகை வெய்யபுவிப்பார்வை வெய்யகாமம்
வெளியிலேயொளி
வேடமொன்றும்
வேடிக்கை
வேணியிற் வேண்டில் வேண்டாமை வேண்டுதல் வேண்டாமையில்லான் வேண்டுதல் வேண்டாமை யில்லா வேண்டுவார் வினே வேதகீதத்தன்
வேதசாத்திரம் வேத மந்திரம் சொல்லும் வேதியர் வேதமறியாத பொருள்
வையகம்
sa
崇钴象
Χχνί
வி
பக்கம் 313
22 38 291 128 286 163 20 154 247 132 224 58 278 46
வீ
31 60 259
71
வெ
259 292 2. 166 16
வே
223 211 233
196 102 31 136 10 151 40
269
பாட்டு வியக்கவொன்று வியந்து நின்ற விரிந்த வறிவுடைய விருத்தணுய்ப் விரும்புவார் » விருப்பு வெறுப்பின விருப்பும் வெறுப்பும் விருப்பு வெறுப்பை வேரற விரை மலரை விரைவாய் கடந்து விளையுமிச்சையெல்லாம் விற்றுாண் வினைப்பகையை
YA
வி%னப்பகையை வெல்வதற்குமார்க்க .
வினைப்பகை வெல்ல
േന്ദ്രബ வீம்பிடும்பை அகங்காரம் வீரமாமயில்
வெள்விடைமேல் ெள்ளம் பள்ளத்தை வெறும் வீணன் வெற்றிதரும்
வேதமோ டாகம மறியா வேதம் வகுத்தான வேதாந்த சித்தாந்தம் வேருக வேதாந்த சித்தாந்தம் கற்ற வேதாந்த சித்தாந்தம் சமமென்று வேதாந்தம்பேசி வேதோபதேச வேலனக் கொண்டாடுவோம் வேலைத்துக்கி வேள்படச் செய்த வேருய் உடனுய்