கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தத்தை விடு தூது
Page 1
நடி பாலேஸ்வரி
சுமார் 12 நாவல் களும், 200க்கு மேற் பட்ட சிறு கதைகளும் எழுதியவர் ஈழத்து இலக்கிய முன்னோடி களில் ஒருவர். பெண் மையின் தனித்துவத் நன்மை பிரதிபலிக்கும் ஆக்கங்களை அளித்த வர். ஈழத்து முதலா வது பெண் நாவலாசிரியை மட்டுமல்லாது, அதிகமான நாவல்களை எழுதிய ஈழத்துப் பெண் எழுத்தாளர் என்ற பெருமையும் இவருக்குண்டு.
கணவன், மனைவி என்ற பந்தமே தமிழ்ப் பெண் ணுக்கு மகிமை அளிப்பது எனக் கருதும் இவர், திரு கோணமலை மெதடித்த மகளிர் வித்தியாலயத்தில் பல வருடங்கள் பணியாற்றி இளைப்பாறியவர். பல மாணவ, மாணவிகளை உருவாக்கியவர். இவ்வாண்டு (1992) இந்து சமய, கலாசார அமைச்சு கொழும்பில் நடத்திய சாகித்திய விழாவில் 'தமிழ்மணி" விருது பெற்ற ஒரேயொரு திருமலை எழுத்தாளர் திருகோணமலை மகளிர் நலன் புரி மன்றத்தினூடாகவும், திருகோணமலை தட்சின கான சபா மூலமும் காத்திரமான, சமூக, சமய, காவா சாரப் பணிகளைப் புரிந்தவர்.
அன்புமணி
ܥܠ
சென், ஜோசப் கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு
Page 2
தத்தை விடு தூது
(குறுநாவல்)
தமிழ்மணி ந. பாலேஸ்வரி
வெளியீடு: மகளிர் நலன்புரி மன்றம், திருகோணமலை. 1992
Page 3
நூல் விபரம்
நூற்பெயர் : தத்தை விடு தூது (குறுநாவல்) ஆசிரியை : திருமதி ந. பாலேஸ்வரி. பிரசுரத் தேதி : 22-7-1992.
Luis fišius 6řit 120.
பிரதிகள் : 1000.
வெளியீடு ": மகளிர் நலன்புரி மன்றம்,
திருகோணமலை,
அச்சமைப்பு : புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்,
மட்டக்களப்பு.
அட்டை : டாக்டர் வேலாயுதபிள்ளை (வேலு)
உரிமை ஆசிரியை.
விலை : Փ. 401
Bibiliographical Data
Title . : “Thaththai Vidu Thoothu”
(Short Novel) Author : Mrs. N. Baleswari. Date of Publication: 22-7-1992. Pages : 120. Copies .. : 1000, Publishers : Women's Welfare Society, w Trincomalee. Printers : St. Joseph's Catholic Press,
Batticaloa. Cover : Dr. Velauthapillai (Velu) Copyright : Author.
Price : Rs.. 40/-
எனது சகோதரர்
திரு. பாலசுப்பிரமணியம் விஜயநாதன்
அவர்களுக்கு
சமர்ப்பணம்
Page 4
வெளியீட்டாளர் உரை
திருக்கோணமலை மகளிர் நலன்புரி மன்றம் கடந்த 1986ம் ஆண்டு வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட வித வைப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சேவை செய்வதற் காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு அரசாங்க சார்பற்ற நிறுவன மாகும். கடந்த ஆறு ஆண்டுகளாக இச்சேவையில் நாம் பல பணிகளைச் செய்துள்ளோம். எமது அலுவலகம் இல, 257, டொக்யாட் வீதியில் அமைந்துள்ளது. அநா தரவான பெண்களுக்காக எமது அலுவலகத்தில் ஒரு தையல் நிலையம் இயங்கி வருகிறது.
இதைவிட இல. 175/2, நீதிமன்ற வீதியில் போஷா காரம்" என்னும் சத்துணவுத் தொழிற்சாலை ஒன்றும் முழுக்க முழுக்கப் பெண்களினால் இயக்க்ப்பட்டு வருகின் றது. இத்துடன் அரிசிமா, குரக்கன்மா, உழுத்தம்மா, சிற் றுண்டி வகைகள், உணவுப் பொதிகள் போன்றவற்றை யும் பெண்கள் தயாரித்து சந்தைப்படுத்துகிறார்கள். இத னால் வன்செயலினால் பாதிக்கப்பட்ட ஏராளமான பெண் கள் தாம் வாழ்வதற்கும், தமது குழந்தைகளைப் பாது காப்பாக வளர்க்கவும் வழிவகுத்துள்ளோம்.
இதைவிட தையல் இயந்திரங்கள், சுய தொழில் வாய்ப்புப் போன்ற உதவிகளும் வழங்கப்படுகின்றன. இவ் வளவும் நாம் விளம்பரமின்றிச் செய்யும் உளமார்ந்த சேவை,
ஆனால் எமது மன்றம் இவற்றுக்கெல்லாம் புறம் பான மாறுபட்ட ஒரு இலக்கியப் பணியைச் செய்ய இன்று முன்வந்துள்ளது. அதன் அடிப்படையை விளக்க இதோ ஓர் சிறுகதை,
திருமதி பாலேஸ்வரி நல்லரெட்னசிங்கத்தின் இலக் கியச் சேவையைக் கெளரவிக்கும் வகையில் இந்துக் கலாச் சார அமைச்சினால் கடந்த மே மாதம் 10ம் திகதி கொழும் பில் நடைபெற்ற தமிழ் சாகித்திய விழாவில் மாண்புமிகு
Page 5
பிரதமர் அவர்களால் 'தமிழ்மணி" என்ற பட்டமும், விருதும் வழங்கி இவர் கெளரவிக்கப்பட்டார்.
அதையடுத்து 16-05-92ல் எமது மன்றம் அவருக்குத் திருக்கோணமலையில் ஒரு பாராட்டு விழா நடாத்தி விரு தும் வழங்கியது. அவ்விழாவுக்குத் தலைமை வகித்த மதிப் புக்குரிய மேலதிக அரசாங்க அதிபர் திரு நா. புவனேந் திரன் அவர்கள் தமது உரையின் நடுவே தமிழ்மணி பாலேஸ்வரிக்குப் பாராட்டு மட்டும் வைத்தால் போதாது . வெளியிடமுடியாமல் தேங்கிக் கிடக்கும் அவர் ஆக்கங்களை யாராவது வெளியிட முன்வந்தால் அதுவே அவருக்குச் செய்யும் சிறந்த நன்றிக்கடன் என்று ஒரு போடு போட் டார். அது எமக்குச் சற்று உறைக்கவே ஒரு அசட்டுத் துணி வுடன் அவரது வேண்டுகோளை நாம் நிறைவேற்றுவோம் என அந்த மேடையிலேயே வாக்குறுதியளித்தோம்.
வாக்குறுதியளித்த ஒரு மாதமும், ஆறு நாட்களும் இன்று முடிவுறும் வேளையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம். இல்லை! நிவைவேற்ற சகல ஏற் பாடுகளையும் செய்த சூத்திரதாரி யார் என்பது உங்க ளுக்கும் புரியும். புரியாவிட்டால் யாரிடமாவது கேளுங்கள் என்று விட்டுவிடுகிறேன்.
இது எமது மன்றத்தின் புதிய பணி. ஆனால் இந்த உதவியைத் தமிழ்மணி அவர்களுக்கு நாம் வழங்கியுள்ளோம். காரணம் மன்ற சட்டதிட்டங்களில் இப்படியான பணி களுக்கு பண உதவியளித்தல்பற்றி எதுவும் கூறப்படாததே காரணம்.
இருந்தாலும் இந்த நூலை திருக்கோணமலை மக ளிர் நலன்புரி , மன்றத்தின் வெளியீடாக வெளியிடுவதில் நாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றோம்.
வாழ்க தமிழ்மணியின் பணி!
திருமதி பாலசிங்கம்
தலைவி, 257, டொக்யாட் வீதி, திருக்கோணமலை மகளிர் திருக்கோணமலை. . நலன்புரி மன்றம்.
22-07-1992.
முன்னுரை
திருக்கோணமலை இலக்கியச் சோலையில் மலர்ந்த மூத்த பெண் எழுத்தாளர் தமிழ் மணி ந. பாலேஸ்வரி கடந்த பல ஆண்டுகளாக இலக்கியச் சேவை புரிந்து வரு கின்றார். திரு. சி. வை. தாமோதரம்பிள்ளை, மகாம கோபாத்தியாய உ. வே. சாமிநாத ஐயர் ஆகியோருடன் பழைய தமிழ் இலக்கியங்களை மறு பதிப்புச் செய்து அச்சு வாகனமேற்ற உதவிய திரு. தி. த. கனசுந்தரம் பிள்ளையினதும், அவரது சகோதரரும், ஈழ்த்தின் முதல் நாவலான மோகனாங்கியை எழுதிய சரவணமுத்துப் பிள்ளையினதும் பரம்பரையில் வந்த பாலேஸ்வரி பலமான இலக்கிய பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டவர். தனது ஒன்பதாவது வயதில் பூரீ சண்முக வித்தியாலயத் தில் படிக்கும்போது எழுதத்தொடங்கிய இவர் இன்னும் தன் பேனாவைக் கீழே வைத்துவிடவில்லை. இருநூற்றுக்கு மேற்பட்ட சிறு கதைகளை ஏற்கனவே எழுதி முடித்த இவர் இலங்கையில் ஆகக்கூடிய சிறுகதைகளை எழுதிய பெண் எழுத்தாளர் என்ற பெருமையயுைம் பெற்றுக்கொள் கின்றார். அது மட்டுமன்றி இலங்கையில் முதல் முதல் தமிழ் நாவலை வெளியிட்ட பெண் எழுத்தாளர் என்ற பெருமையும் இவருக்கே போய்ச் சேருகின்றது. இத்தகைய பிறப்புக்கள் வாய்ந்த இவரின் தத்தை விடு தூது குறு நாவல் ஒரு நூற்றாண்டு காலப் பாரம்பரியத்தைக் கொண்டது. சரவணமுத்துப்பிள்னை எழுதிய அழியாப் புகழ்கொண்ட தமிழ்க் கவிதைகளைத் தன் இயல்பான, இனிமையான வசனநடையோடு சேர்த்து உருவாக்கித் கரும் இந்தக் கற்பனைப் பூங்கா உண்மையிலேயே எம்மை கலை இலக்கியப் பூங்காவுக்கு அழைத்துச் சென்று மெய் மறக்க வைக்கின்றது. இந்நூல் உங்களையும் மெய்மறக்க வைக்குமென நம்புகிறேன்.
நா. புவனேந்திரன் மேலதிக அரசாங்க அதிபர், திருக்கோணமலை,
Page 6
ஆசிரியர் உரை
எனது படைப்புக்களுக்கு எப்போதும் ஊக்கமும், ஆதர வும் அளித்த உங்கள் கைகளில் தற்சமயம் ‘தத்தைவிடு தூது’ என்ற இந்நூல் தவழ்ந்துகொண்டிருக்கும். இது ஒரு புதுவிதமான ஆக்கம். w
இதுபற்றிக் கூறுவதானால். யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஆறுமுகநாவலர் மட்டக்களப்புக்கு ஒரு விபுலானந்தர். திருக்கோணமலைக்கு திரு.தி.த.கனகசுந்தரம்பிள்ளையென்று நாம் பெருமையுடன் கூறிக்கொள்ளலாம். அன்னாரின் இளைய சகோதரரும், 'மோகனாங்கி’ என்ற ஈழத்தின் முதல் நாவலை எழுதியவருமான திரு. தி. த. சரவண முத்துப்பிள்ளை எழுதிய ‘தத்தை விடு தூது’ என்ற பாடற் தொகுதியின் செய்யுள்களை உள்ளடக்கிய புனைகதையே இந்நூல். ... "
நான் சற்றும் எதிர்பாராத விதத்தில் திருக்கோண மலை மகளிர் நலன்புரி மன்றத்தினர் இந்நூலை வெளியிட எனக்கு முற்பணம் தந்துதவியுள்ளனர். அதற்காக இறைவ னுக்கு முதற்கண் என் நன்றி.
எனக்குத் ‘தமிழ்மணி’ப் பட்டம் கிடைத்ததைக் கெளர விக்குமுகமாகத் திருக்கோணமலை மகளிர் நலன்புரி மன்றத் தினர் என்க்கு அளித்த பாராட்டு வைபவத்தின்போது உரையாற்றிய திருக்கோணமலை மேலதிக அரசாங்க அதி பர் திரு. ந. புவநேந்திரன் தன் பேச்சினிடையே ‘பாலேஸ் வரியின் ஆக்கங்கள் பல வெளியிடப்படவேண்டியுள்ளன. நீங்கள் அவரின் ஒரு ஆக்கத்தையாவது வெளியிட்டுக் கொடுக்க முன்வந்தால் அதுவே நீங்கள் அவருக்குச் செய் யும் நன்றிக்கடனாகும்" என்று ஒரு சர்ச்சையைக் கிளப்பி னார். . .
மாபெரும் இக்கட்டான நிலையில் மன்றத் தலைவி திருமதி இறஞ்சி பாலசிங்கம் அவர்கள் திடமனதுடன் அவ
m | −
Page 7
ரது சவாலை ஏற்று மகளிர் மன்றம் அப்பணியைச் செய் யும் எனத் தனது உன்ரயின்போது கூறிவைத்தார். ஆகவே இந்நூல் வெளியிடப்படுவதற்கு முதற் காரணகர்த்தாவாக இருந்த மேலதிக அரசாங்க அதிபர் திரு. ந. புவநேந்திரன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக. -
இந்நூலை மனமுவந்து வெளியிட முன்வந்த திருக் கோணமலை மகளிர் நலன்புரி மன்றத் தலைவி, மன்ற உறுப்பினர் ஆகியோருக்கும் நன்றி கூறக் கடப்பாடுடை யேன்.
இந்நூலை மட்டக்களப்பு சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடத் தன்னாலான உதவிகள் அனைத் தை யும் செய்த தமிழ்மணி இரா. நாகலிங்கம் (அன்புமணி) அவர்களுக்கும், இந்நூலை எழுத்துப்பிழை களின்றி ‘சரவை' பார்த்த மட்டக்களப்பு ஆசிரியர் சிரோண் மணி திரு. த. செல்வநாயகம், மாவட்ட கலாசார உத்தி யோகத்தர் தங்கை தங்கேஸ்வரி கதிராமன் ஆகியோருக்கும், சிறந்த முறையில் அச் சிட் டு தவிய மட்டக்களப்பு சென், ஜோசப் கத்தோலிக்க அச்சகத்தினருக்கும், நூலை அழகு செய்யும் விதத்தில் அட்டைப்படம் வரைந்துதவிய தம்பி டாக்டர் வேலாயுதபிளளை அவர்களுக்கும், ஆழம், சிறப்பு, தரம், அழகுதமிழ் கலந்து பல வேலைகளின் மத்தியிலும் மதிப்புரை வழங்கிய கிழக்குப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் தம்பி செ. யோகராசா அவர்களுக்கும், மேல திக அரசாங்க அதிபர் திரு. ந. புவநேந்திரன் அவர்களுக் கும், வேறு பல வழிகளிலும் எனக்குதவிய அனைவருக்கும், இந்நூலை வாங்கி எனக்கு மேலும் ஊக்கமும், உற்சாகமும் அளக்கப்போகும் உங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.
தமிழ்மணி
Ꮷ பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன். டைக் வீதி, - திருகோணமலை.
- 7-92.
سس--- 11 سسسه
மதிப்புரை
உங்கள் கரங்களிலே தவுழ்கின்ற ‘தத்தை விடு தூது" தொடர் நவீனமாக வெளிவந்ததொரு படைப்பாகும். ஆயி ணும், வழக்கமான நவீனங்களிலிருந்து மாறுபட்டுள்ளது இப்படைப்பு. இதுபற்றி நன்கு விளங்கிக்கொள்வதற்கு இப்படைப்பின் 'ரிஷிமூலம்’பற்றி அறியவேண்டியது அவசிய மென்று கருதுகின்றேன்.
தத்தை விடு தூது நவீனத்திலே ஆங்காங்கே செய்யுட் கள் இடம்பெறுவதனை அவதானிப்பீர்கள். அவை தத்தை விடு தூது என்ற பிரபந்தத்திலே இடம்பெற்றிருப்பவை. அப்பிரபந்தம் 'திருக்கோணமலை தி. த. சரவணமுத்துப் பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டு 1892இல் வெளியிடப் பட்டது. அவர் திருக்கோணமலை தந்த அறிஞர் தி. த. கனகசுந்தரம்பிள்ளையின் சகோதரர்; மோகனாங்கி (1895) என்ற முதல் வரலாற்று நாவலை தமிழ் நாவல் உலகிற்கு வழங்கியவர். இவர்களது நெருங்கிய உறவினரே இப்படைப் பின் ஆசிரியையான திருமதி ந. பாலேஸ்வரி அவர்கள். (5. Lunt.)
தத்தை விடு தூதுப் பிரபந்தச் செய்யுட்கள் விரவி வரு மாறு ந. பா. இந்நவீனத்தை எழுதியமை உறவினர் என் பதனாலன்று. அதற்கான காரணம்பற்றி அவரே குறிப் பிட்டுள்ளார்:- -
‘இந்நோக்கமெல்லாம் இந்த அரும் பெரும் காவி யத்தை உலகம் படிக்கவேண்டும், ரசிக்கவேண்டும் என்பதே. அதை வெறும் பாடலாகத் தந்தால் கவர்ச்சி இருக்காது என்ற நினைவில் இதைக் கவர்ச்சி யாகத் தர முயன்றேன்.'
இக்கூற்றின் பொருத்தப்பாடுபற்றிச் சிந்திப்பது பய னுடைய முயற்சியென்று எண்ணுகின்றேன். இதற்கு அனு
- iii -
Page 8
சரணையாக, தமிழ்த் தூதுப் பிரபந்த மரபுபற்றிய RC5 சில விடயங்களைப் பொது வாசகர்களுக்காகக் கூறவேண்டி யுள்ளது.
தமிழிலுள்ள தொண்ணுாற்றாறு வகைப் பிரபந்தங்க ளுள் தூதுப் பிரபந்தமும் ஒனறாகும். (இன்றுள்ள இலக் கிய ஆய்வாளர் சிலர் இவ்வெண்ணிக்கைபற்றி ஐயமெழுப்பு வர்). "தலைவன் தலைவியர்களுள் ஒருவர் மற்றொருவர் பால் தமது காதலைப் புலப்படுத்தித் தமது கருத்திற்கு உடன்ப்ட்டமைக்கு அறிகுறியாக மாலையை வாங்கிவரு மாறு அன்னம், வண்டு, கிளி முதலியவற்றைத் தூது விடுவ தாகக் க்விவெண்பாவால் இயற்றப்படுவதே" தூதுப் பிர பந்தமாகும். இத்தகைய இயல்புகள் கொண்ட தூதுப் பிர பந்தமானது தமிழ் இலக்கிய வரலாற்றின் வெவ்வேறு பட்ட கால ஓட்டத்திற்கேற்ப அவ்வப்போது மாற்றங் களையும் கண்டுகொணுகிறது. முதற் தூதுப் பிரபந்தமான (14ம் நூற்றாண்டு) நெஞ்சு விடு தூதுகூட (உமாபதி சிவா சாரிடார்), சைவ சித்தாந்தப் பொருண்மை கொண்ட தாக அமைந்துவிடுகின்றதனறோ ! இவ்வாறான தூதுப் பிரபந்த இலக்கிய மரபிலே ஒன்றாக ஈழத்திலே எழுந்தது, தத்தை விடு தூது. நோகதிலும், டோக்கிலும், அமைப் பிலும் முனனைய தூதுப் பிரபந்தங்களிலிருந்து இப்பிர பந்தம் வேறுபட்டிருப்பதை தமிழ் இலக்கிய வரலாற்றாய் வாளர் அறிவர். ஆயினும், அது பற்றி விரிவாக ஆராய்வ தற்கு ஏற்ற இடம் இதுவன்று. எனினும், அத்தகைய ஒரு சில விடயங்களையாவது எடுத்துக்கூறுவது ந. பா. இவ்வா றான நவீனம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டதற்கான நோக் கம்பற்றித் தெளிந்துகொள்வதற்கு உதவுமெனலாம்.
"இந்த அரும்பெரும் காவியத்தை உலகம் படிக்க வேண்டும்; ரசிக்கவேண்டும்” என்று ந. பா. கூறுவது ஏன் என்ற வினா எழுவது இயல்பே. இப்பிரபந்தம் பல்வேறு சிறப்பியல்புகளைப் பெற்றுள்ளது என்பதே அதற்குரிய விடையாகின்றது. அவை எவை?
- ίν -
காதலிலே தோல்வியுற்ற தலைவன் ஒருவனது மன உணர்வுகளின் வடிகாலாக வெளிப்படுவதே தத்தை விடு து துப் பிரபந்தம், தலைவன் தத்தைக்கு எடுத்துரைப்பன வற்றினூடாக அவனது காதலின் ஆழம், ஏக்கம், பாசம், ஏமாற்றம், வேதனை, குமுறல் என்பன நுணுக்கமான விதத்திலும், நளினமான முறையிலும் வெளியாகின்றன. அத்தகு செய்யுட்களை நீங்கள் வாசிக்கும்போது அவற்றிலே லயித்துவிடுவீர்களென்பது உண்மை. அவ்வாறாயின், புலவ ரது ‘தான் கலந்து பாடும் தன்மையே அதற்குக் காரண மாகின்றது. கவித்துவப் பண்பு வாய்ந்த இத்தகைய செய் யுட்கள் இடம்பெற்றிருப்பது பிரபந்தத்தின் சிறப்பியல்பு களுள் ஒன்றாகின்றது.
புலவர் 'தான் கலந்து பாடியதற்குப் பிறிதொரு காரணத்தையும் கூற முடியும். 'இவர் ஒரு பெண்ணைக் காதலித்து அதிற் தோல்வியுற்றதால் அப்பெண்ணிற்குத் தூது விடுவதுபோன்று இப்பாடல்களை இயற்றினாராம்." இக் கதை" உண்மையாயின், புலவரது செய்யுட்களிலே மேற்கூறிய பண்பு அமைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற் படுத்தாது; யதார்த்த தளத்தை அடிப்படையாகக் கொண் டெழுந்த காதற் பிரபந்தம் என்ற சிறப்பினையும் பெற்று விடும்.
"காதலிற் தோல்வி', ஈழத்து இலக்கிய உலகிற்கு ஒரு விதத்திலே நன்மையாகிவிட்டதென்றே கூறவேண்டும். ஏனெனில், பெண் விடுதலைபற்றிய சிந்தனையின் ஊற்று ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிலே தத்தைவிடுதூதுப் பிர பந்தத்திலிருந்தே ஆரம்பிக்கின்றதெனலாம். இப்பிரபந்தம் வெளிவருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே (முதற் தமிழ் நாவலாசிரியரான) மாயூரம் வேதநாயகம்பிள்ளை "பெண்மதி மாலை இயற்றுகின்றார் (1869). பாரதி பெண் விடுதலைபற்றி முழங்க இன்னும் சில ஆண்டுகள் வேண்டி யிருந்தன. இத்தகையோர் வரிசையில் - இப்பின்னணியில் - ஈழத்தவரான சரவணமுத்துப்பிள்ளையும் முக்கிய இடம் பெறுகின்றார். பெண் விடுதலைபற்றிப் பேச முற்படும் முதற்
–— V =no
Page 9
தமிழ்ப் பிரபந்தம் என்ற சிறப்பினைப் பெற்றுவிடுகின்றது தத்தைவிடு தூது.
இன்னொரு முக்கிய விடயமும் இவ்விடத்தில் எனக்கு நினைவுக்கு வருகின்றது. பெண் விடுதலைபற்றிய சிந்தனை நீண்டகாலமாகத் திருக்கோணமலை மண்ணிலே சுவறி வந்துள்ளது என்பதே அதுவாகும். எமது இலக்கியச் சகோ தரர் இருவரதும் உறவினரான திருமதி. தையல்நாயகி சுப்பிரமணியம் என்பவர் 'திருக்கோணமலை மாதர் ஐக்கிய சங்கம்” என ஒன்றினை ஏறத்தாழ இருபதுகள் அளவில் நிறுவி, அதன் காரியதரிசியாக விளங்கி பெண்கள் முன் னேற்றம் தொடர்பாக, பல இடர்கள் மத்தியிலும் நற் பணிகள் புரிந்துவந்துள்ளார். "மாதர் மதி மாலிகை" (1927) என்றொரு பெண்கள் ச ஞ் சி கை யை யும் ஆரம்பித்து தொடர்ந்து சிலவாண்டுகள் வெளியிட்டுவந்துள்ளார். இத் தகைய பணிகளின் அறுவடையினை - எதிரொலியினை-- ந. பா. வின் முயற்சிகளிலும் இன்று இனங்காணமுடிகின் றது; தத்தைவிடு தூாதிலும் கண்டுகொள்ளமுடிகின்றது.
தத்தைவிடு தூதுப் பிரபந்தத்தின் சில செய்யுட்கள் 'காதலித்த பெண்ணின் பரம்பரைக்கு வசைபாடியிருப்பது போல் தொனிப்பதால் ந. பா. அவ்வசையை நீக்கும் நோக்குடன் நவீனத்தின் ஈற்றில் சில பாடல்களை இயற்றிச் சேர்த்துள்ளார். தாம் இயற்றிய கடவுள் வணக்கத்திலும் சிந்தனைக்குரிய சில வினாக்களை எழுப்பியுள்ளார். இத் தகு முயற்சிகள் வியப்புக்குரியனவல்ல. ஏனெனில், திருக் கோணமலை மண்ணின் வளம் அத்தகையதல்லவா?
ந. பா. மேற்கூறிய தமிழ் இலக்கிய குடும்பப் பாரம் பரியத்திலே வந்தவராதலாலும், சாதாரண வாசகரை ஈர்க்கக்கூடிய விதத்திலே சுவையாக நாவல்களை எழுது வதில் கைதேர்ந்தவராதல்ாலும், புலவரின் நெருங்கிய உற வினராதலாலும் (சரவணமுத்துப்பிள்ளை போன்றே)தத்தை விடுதூது நவீனத்தையும் "தான் கலந்து எழுத முயன் றிருக்கின்றார். அம்முயற்சியில் ஒரளவு வெற்றியும் பெற்
- vi -
றிருக்கின்றார். அவ்வாறே, செய்யுட்களின் பொருளை நன்கு கிரகித்துக்கொண்டு அநாயாசமான முறையிலே அவற்றை விபரித்துச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.
தத்தைவிடு தூது நவீனத்திலே சிற்சில குறைபாடுகள் காணப்படுமாயின் அவை தவிர்க்கவியலாதவை என்பேன். அவற்றிற்கு 'வழுவமைதியுண்டு. செய்யுட்கள் ஆங்காங்கு இடம்பெறுவது நாவலின் தங்குதடையற்ற ஓட்டத்திற்கு குந்தகம் ஏற்படுத்துவது உண்மை. எனின், ந. பா. வின் நோக்கம், தந்தைவிடுதூதுப் பிரபந்தத்தை பலரும் படிக் சுச் செய்வதல்லவா? சரவணனின் மன உணர்வுகள் வெளிப் படுத்துவதுபோல், சிவகாமியின் மன உணர்வுகள் வெளிப் படுத்தப்படவில்லை என்று ஒருசிலர் கூறலாம். நவீனத்தின் வடிவம் கச்சிதமாக அமையவில்லை என்றும் சிலர் கருத லாம். அவ்வாறெனில், தத்தை விடு தூதுப் பிரபந்தத்தை அடியொற்றி அத்தடத்திலேயே இந்நவீனம் அமைகின்றது என்பதனை அத்தகையோர் மறுபடியும் நினைவுகூரவேண் டியதுதான்.
இறுதியாக ஒன்று: தத்தைவிடு தூதுப் பிரபந்தத்தைக் கவர்ச்சிகரமான முறையிலே இவ்வாறு தந்துள்ளதாக ந. பா. குறிப்பிட்டுள்ளார் அல்லவா? எமது இக்கால வாச கரை மனதில் கொண்டே இவ்வாறு கூறியிருக்கவேண்டும். மூலை முடுக்கெல்லாம் தினந்தோறும் உதயமாகிக்கொண் டிருக்கும் வீடியோ நிலையங்களையும், பட்டுக்கோட்டைப் பிரபாகர், ராஜேஸ்குமார் முதலானோரை விற்றுத் தள்ளும் புத்தகக் கடைகளையும் மொய்த்துக்கொள்ளும இன்றைய வாசகர் கூட்டம் - பெரும்பாலான மாணவர்களும், ஆசிரி யருமுட்பட - இத்தகைய செய்யுள் நூல்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்களென்பதில் சந்தேகத்திற்கிடமில்லை இவ் வாறான ஆரோக்கியமற்ற பின்னணியில் இத்தகைய ஒரு விதத்தில், பரிசோதனை ரீதியிலான - முயற்சி பெரிதும் வரவேற்கத்தக்கது; பாராட்டப்படவேண்டியது. இம்முயற் சிக்கு வாசகராகிய உங்களது பேராதரவு கிடைக்குமென்றே நம்புகின்றேன். மொழித்துறை, செ. யோகராசா, எம்.ஏ. கிழக்குப் பல்கலைக் கழகம், மட்டக்களப்பு. 098-06-23,
- vii
Page 10
அன்பார்ந்த வாசக நேயர்களே,
திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக்கொண்ட திரு. தி. த. கனகசுந்தரம்பிள்ளை, திரு. தி. த. சரவணமுத்துப் பிள்ளையாகிய இரு சகோதரர்களும் ஈழத்துப் புலவர்கள் வரிசையில் இட்ம்பெற்றுள்ளார்கள். இவர்களில் திரு. தி.த. சரவணமுத்துப்பிள்ளை மோகனாங்கி" என்ற முதற் தமிழ் நாவலையும் "த த் தை விடுதூது’ முத்துக்குமார்சாமி 'இரட்டைமணிமாலை போன்ற பல கவிதைகளையும் எழுதியுள்ளார். இவற்றில் தத்தைவிடுதூது என்ற கவிதைத் தொகுதி தமிழ்நாட்டில் லிப்பன் அச்சியந்திரசாலையில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் வெளியாகியது.
மோகனாங்கி என்ற இவரது நாவல் 1919ம் ஆண்டு தமிழ்நாட்டில் வெளியாகிக் கணிசமான வரவேற்பைப் பெற்று இதன் சுருக்கம் அதே ஆண்டு சொக்கநாதநாயக்கர் என்ற பெயரில் சென்னையில் பாட நூலாகப் பிரசுரிக்கப் பட்டது. ,
தத்தைவிடுதூது என்ற கவிதை நூல் சிறந்த கவிதை களை உள்ளடக்கியுள்ளன. -
இக்கவிதையின் பின்னணி காதல். ஆம். திரு. தி. த. சரவணமுத்து திருகோணமலையைச் சேர்ந்த ஒரு பெண் ணைக் காதலித்து தோல்வியுற்றதால் மனம் நொந்து தத்தையை (கிளி) தூது விடுவதுபோல் இந்நூலை இயற்றி uj si 617 Tri.
அவரது நெருங்கிய உறவினரான எனக்கு இந்தப்
பாடல்களின் வரலாறு தெரிந்தபடியால் இக்கவிதைகளை
ஆதாரமாகவைத்து ஒரு தொடர் கதைபோல் இடையே அவரது பாடல்கள்ை அமைத்து இந்நூலை ஆக்கியுள்ளேன்.
- viii -
எனது நோக்கம் இந்த அரிய பாடல்களை நீங்களும் பார்த்து சுவைக்க வேண்டும். அத்துடன் பாடல்களில் பிறப்பதற்கான பின்னணியை நீங்கள் அறியவேண்டாத ஒன்றை அறியவேண்டும் என்பதே.
குறிப்பு:
ವ್ಹೀಲ್ಡ್ರ படித்துச் சுவைக்கப்போகும் நேயர் க்ளுக்கு என் நன்றி.
காதல் தோல்வியுற்றமையாற் பாடப்பட்ட இக்கவிதை களில் சில காதலித்த கன்னியவள் பரம்பரைக்கு வசை பாடுவதுபோல் அமைந்துள்ளதால் அதே பரம்பரையைச் சேர்ந்த நான் அதற்குப் பிராயச்சித்தமாக ஒரு சில பாடல் களை இயற்றித் தந்துள்ளேன். இவற்றையும் தயவுசெய்து படிக்கும்படி உங்களை வேண்டுகிறேன்."
Page 11
Alst pg55 UT
ஐந்து முக விநாயகனே ஆறுதல் அளிக்கும் கணபதியே உங்களிடம் கேட்கும் வரம் தந்தருளும் ஐங்கரனே.
ー★ー
மங்கை என் செய்வாள் இந் நிகழ்வின் காலமதைக் கருத்திற் கொண்ட்ால் கால் விலங்கு பூட்டப்பட்டிருந்திருப்பாள் வாயாடியாய் மாறி வசைமாரி பொழிந்த நீர் போராடிப் பெண்ணவளுக்கு பொற்றாலி பூண்டிருக்கலாம்.
புலவர் சரவணமுத்துப் பிள்ளை தாம் காதலித்த கன்னி அவள் கரம் பற்றும் வாய்ப்பை இழந்து துயருறும் உம் மனம் எமக்கும் புரிகிறது உம் நிலைக்காக கவல்கின்றோம்.
முதற் தமிழ் நாவல் மோகனாங்கியை ஈழத்துக்களித்தோய் நன்றி பல உமக்கு காதலிற் தோல்வியுற்று அதன் பயனாய் அருமைக் கவி படைத்தாய் காதலித்த கன்னியவள் வாரிசுகள் வாழக்கூடாது என்று கவி பாடியதும் தகுமோ? .
உமது உயர்ந்த காதலின் தாக்கமதனால் ஏற்பட்ட உணர்ச்சிக் கவிதையாய் இருந்தும் வருங்கால சந்ததியை வாழாமற் பாடுவதும் அழகோ? மூதறிஞர் தமக்குத்தான் தகுமோ?
உம்முடைய பரம்பரையின் வாரிசாக இறையருளால் தமிழ் எழுத்துலகில் நிலையாக ஓரிடம் பெற்றுள்ள நான் நீர் செய்த தவற்றிற்குப் பிராயச்சித்தமாக இக்கவிதை பாடி வாழ்த்துகிறேன் கன்னியவள் பரம்பரை தழைத்தோங்க என.
சீர்மேவு விநாயகனே கோணயம் பதியில் உதித்த சிவகாமி முத்துக்குமரன் வழிவந்த வாரிசுகள் வாழையடி வாழையாய் சீரும் சிறப்பும் பெற்று என்றென்றும் நிலைபெற்று நிம்மதியாய் நீடுழி வாழ்க!
- xi l
Page 12
1.
ஆகாயத்தின் அழகை நிமிர்ந்து பார்த்தான். பூமி யைப் பார்த்தான். ஆனால் அவன் கண்களுக்கு எதுவுமே புலப்படாத சூன்யந்தான் தோற்றமளித்தது. உலகமே அஸ் த மித்து விட்டது போன்ற பிரமையில் அடர்ந்து செழித்து வளர்ந்திருந்த தேமாமரத்தின் அடியில் அமர்ந்து விண்வெளியையே பார்த்துக்கொண்டிருக்கிறான் சரவணன். சில நாட்களுக்கு முன்பாக இருந்திருந்தால் இந்தத் தேமா மரம் அவனுக்குக் கதை கதையாகக் கூறியிருக்கும். ஆனால் இன்று. ஆமாம்! இன்று அந்தத் தேமாமரம் கூடப் பேசா மடந்தையாகிவிட்டதுபோற் காட்சியளித்தது அவனுக்கு,
தம்பி. தம்பி. சரவணா சாப்பிடடா. எத்தனை நாளைக்குத்தான் இப்படிச் சாப்பிடாமல் உன் உடலை வருத்தப்போகிறாய். அந்தப் பெண்ணையே தினம் தினம் நினைத்துக் கவலைப்படுவதால் அவள் வந்துவிடவா போகி றாள். அவள் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் உனக்கு வேறு பெண்ணே கிடைக்காமலா போய்விடுவாள். உன் னைப்போன்ற அழகனுக்குச் சுண்டிச் சுண்டிப் பெண் எடுக் கலாம். ம். எழுந்திருடா ராஜா! தகப்பன் மகனிடம் கெஞ்சுவதையும், அவன் நடைப்பிணமாக உட்கார்ந்திருப்
Page 13
பதையும் பார்த்த எவரும் கண்ணீர் வடிக்காமல் இருக் சுவே முடியாது. அத்தனை உருக்கமாகவும், சோகமாகவும் இருந்தது அந்தக் காட்சி,
“டேய் கனகு. நீயுங்கூட ஏன் பட்டினி கிடந்து சாகி றாய்? அவன்தான் சிவகாமியை நினைத்து நினைத்துக் கண்ணீர் வடிக்கிறான். இரண்டு பேருமே தேவலைத்தான். தம்பிக்குப் புத்தி சொல்லிச் சாப்பிட வைக்கிறதை விட்டுப் போட்டுப் பெண்பிmளை மாதிரி நீயும் அழலாமாடா? எழுந்திரு. தம்பியையும் கூட்டிப்போய்ச் சாப்பிடு.” தம்பி முத்துப்பிள்ளையின் கண்கள் மூத்த மகன் கனகசுந்தரத்தை நோக்குகின்றன.
சரவணமுத்து வைவிட இரண்டு, மூன்று வயது பெரிய வன்தான் கனகசுந்தரம். ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவனுக்கும் விவாகப்பதிவு ஆகியிருந்தது. சிவகாமிக்கும், சரவணனுக்கும் விவாகப் பதிவைச் செய்துவிட்டு ஒரே மணவறையில் இருவரின் திருமணத்தையும் நடத்தவேண் டும் என்றுதான் திட்டம் போட்டிருந்தார் தம்பிமுத்துப் பிள்ளை.
"சாப்பாடாம் சாப்பாடு ஆருக்கு வேண்டுமாம் இப் போது சாப்பாடு. பசிக்குதென்று சாப்பிட்டாப்போல அது உடல்ல ஒட்டிக்கொள்ளவா போகிறது. அப்பப்பா இந்த வயதுபோனவர்களுக்கு இதெல்லாம் புரியவா போகி றது. ஒருவேளை இவர்கள் திருமணஞ் செய்து, குழந்தை குட்டி பெற்று அனுபவப்பட்டுவிடுவதால் மற்றவர்களின் மன வேதனை புரிவதில்லையாக்கும். அண்ணன் பாவம்! அவன் வாழ்க்கையை இன்னும் அனுபவிக்கத் தொடங்காத தால் என் வேதனையை உணர்கிறான். அப்பாவுக்குக் காதலைப்பற்றி என்ன தெரியப்போகிறது. சிவகாமியின் காதலைப் பெறுவதற்கு நான் எடுத்துக்கொண்ட முயற்சி கள் எனக்குத்தானே தெரியும். அவளைத் தனிமையிற் சந்திக்க நான் எடுத்த முயற்சிகள்...? அவளைச் சந்திக்க அவள் வீட்டுக்கு எத்தனை முறை போயிருப்பேன். என் னைக் கண்டதும் அவள் அடையும் மகிழ்ச்சி.!
2
கைநிறைய வேலையிருந்தாலுங்கூட அதையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு என்னுடன் பேசி மகிழ அவள் துடிக்கும் துடிப்பு வேண்டுமென்றே நான் சிறிது தாமத மாகிச் சென்றால் அவள் அடையும் ஆத்திரம். அவளுக்கு என்மீது அத்தனை அன்பு! ஏன் நாங்கள் அவ்வளவு அன் பாகப் பேசி மகிழ்வதை அவள் அப்பாகூடத்தான் பார்த் துக்கொண்டிருப்பாரே. எனக்காகத்தான் சிவகாமி பிறந் துள்ளாள் என்பது ஊரறிந்த செய்தியாச்சே, நாங்கள் இருவரும் மணிக்கணக்காகப் பேசிச் சிரிப்போம். நேரம் போவதே தெரியாது. "சிவகாமி பசிக்குது" என்று அவள் அப்பா குரல் கொடுத்தபின்புதான் பிறிதோர் உலகமும் உண்டு என்பதை நாம் அறிவோம். சரவணா, நீ நன்றாகப் படிக்கவேண்டும். படித்து முன்னேறினாற்தான் சிவகாமிக்கு உன்னால் சோறுபோட முடியும் என்பார் அவர் என்னைப் பார்த்து. அந்த ஒரு வசனம் என்னைப் பொறுப்புள்ள மனிதனாக்கிவிடும். நான் ஒட்டமும் நடையுமாகச் சென்று வீட்டில் படிக்க ஆரம்பிப்பேன்.
இப்படியெல்லாம் எங்கள் காதல் வளர உறுதுணை யாக இருந்த அவள் அப்பா இராஜவரோதயம் ஏன் இப் படி மாறினார். என்னிடம் திடீர் என என்ன குறையைக் கண்டுவிட்டார். அவர் மகள் சிவகாமிக்கு நான்தான் தக்க மணாளன் என்பதை எப்படி மறந்தார்? கொடுத்த வாக்கை மீறுவது அவர்போன்ற பெரியவர்களுக்கு நல்லதா? இது தான் நீதியா? அப்படியாயின் தர்மம் எங்கே? காத்திருந்த வன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டுபோன கதை யாகவா என் கதையும் முடியவேண்டும்? கடவுளே எனக்கு என் சிவகாமியைக் கொடுத்துவிடு. அல்லது நான் இப்படி அழுதழுதே இறந்துவிடுவேன்.
சிவகாமி கடைசியில் நீ கூடவா என்னை மறந்துவிட் பாய் சிறு பிராயத்தில் உன் வீட்டு முன்றிலில் என்னோடு கைகோர்த்து விளையாடியதைக் கூடவா மறந்துவிட்டாய்? இவற்றையெல்லாம் எடுத்து உன் அப்பாவிடம் சொல். அவர் மனதை மாற்றிவிடு சிவகாமி.
3
Page 14
தனக்குள்ளாகவே பொருமிய சரவணன் மீண்டுந் தலை நிமிர்த்தித் தேமாமரத்தைப் பார்க்கிறான். அங்கே ஒரு பசுங்கிளி சிறகடித்து மரக்கிளையொன்றில் அமர்ந்திருக் கிறது. அதைப் பார்த்த அவன் உள்ளத்தில் எழுந்த கற் பனை காவியமாக உருவெடுக்கிறது.
தேனோங்கு பூம்பொதும்பர்ச்
செறிந்து பசுந் தழைபரப்பி வானோங்கு தேமாவில்
வாழுமிளம் பைங்கிளியே நானேங்கு மைவிழியென்
வஞ்சியிடைப் பைந்தொடிபால் நானிங்கு புகலுமொழி
நற்கிளியே கூறாயே நங்கையவள் பாற்சென்று
நலம் பெற நீ கூறாயே,
சரவணனின் கண்களில் அவனையறியாமலே நீர் சுரக் கிறது. மனம் நிறைந்த வேதனை. அற்புதமான கவிதை கள் எல்லாம் துன்பத்தின் மத்தியிற்தான் உதயமாகி இருக்க வேண்டும் என்ற நினைவில் அந்தக் கிளியைப் பார்த்துப் பன்முறை தன் கவிதையைப் பாட விடுகிறான். அவன் பாடுவதைக் கேட்ட கிளி தன் கொண்டையைச் சிலுப்பி விட்டு சிறிது ஒய்யாரமாக அமர்ந்துகொள்கிறது. அதைப் பார்த்த சரவணனின் மனக்கண்ணில் சிவகாமி தோன்று கிறாள்.
இந்து நுதற் சந்தவளைச் ༤
சுந்தரியென் னின்னுயிர்பாற் சந்து நடந்திளங்கிளியே
தமியேன் சொற் கூறுதியால் முந்திருவ ருஞ்சிறியேம்
முன்றிலிலா டுங்காலந் தந்தை மொழிந்திட்டதனைத்
தவறுவதேன் வினவுதியால் தானு மெனை மறந்தனளோ
தத்தா அய் வினவுதியால்
சிவகாமியின் பெற்றோர் சரவணனுக்குப் பெண் தர மறுத்தபோது அவன் தந்தை தம்பிமுத்துப்பிள்ளை அவர் களிடங் கேட்ட கேள்விகளெல்லாம் அவனுக்கு ஞாபகம் வருகின்றன. தான் கொடுத்த வாக்கை அவர் மறந்துவிட்ட தாகக் கூறலாம். ஆனால் சிவகாமிகூட மறந்துவிட்டதாக நடித்தால். அன்று அவன் மனதில் எழுந்த நினைவுகள் அந்தத் தந்தையை மையமாக வைத்து அவனைப் பாடி விடத் தூண்டிவிடுகின்றன. இயற்கையாகவே கவி புனை வதில் அவனுக்கு ஒரு தனியார்வம்.
சின்ன வயதில் பாடப்புத்தகங்களில் வரும் கவிதை களைப் படித்துவிட்டு அவற்றுடன் ஒன்றியேவிடுவான் சர வணன். அவற்றின் இனிமையை நுகரும்போது தானும் அவைபோன்ற கவிதை புனையவேண்டும் என்று ஆசைப் படுவான். அப்படி ஆசை எழும்போது தன் கற்பலகையில் எதையாவது கிறுக்கிவிட்டுத் தன் தாயாரிடம் காட்டு வான். அவள் அதைப் படித்துவிட்டு நம்ம சரவணன் பிற் காலத்தில் ஒரு சிறந்த கவிஞனாகப் போகிறான் என்று தன் கணவனிடங் கூறிச் சிரித்துக்கொள்ளும்போது அவ னுக்குப் பெருமையாக இருக்கும். ஆயின் இதுவரை அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்று கூறலாமா?
அப்படியும் இருக்கலாம்! ஆயினும் இது அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை. போயும் போயும் இப்படியொரு சோதனையிற்தானா கவிதை பிறக்கவேண்டும்?
Page 15
零
கவிதை பிறந்த பிற்பாடுங்கூட சரவணனின் துன்பம் ஒழிந்தபாடாக இல்லை. மல்லிகை, சண்டகம், கோங்கு, மந்தாரை, வெட்சி மலர்களுடன் கூடிய புல்பூண்டுகள் நிறைந்த தோட்டம் அவன் கண்ணுக்கு விருந்தாகியுளது. அந்தத் தோட்டத்திலே அவன் சகோதரன் கனகசுந்தரமும், அவனும், சிவகாமியும் கூடி விளையாடியதும், பந்தடித்த தும் அவன் நினைவுக்கு வருகின்றன. சிவகாமி பந்தைக் கனகசுந்தரத்திற்கு எறிவதுபோற் பாவனை செய்துவிட்டு தனக்கு எறிவதும், அதனால் கனகசுந்தரம் சிவகாமியைக் குட்டுவதற்காகத் துரத்துவதும், அவள ஓடி ஒளிந்துகொள் வதும் திரும்பி அதுவே ஒரு புதுவித விர் எயாட்டாக மாறிவிடுவதையும் நினைத்தபோது அவனுக்குச் சிரிப்பாக இருந்தது.
கனச சுந்தரம் அனேகமாகத் தனித்துத்தான் விளை யாடுவான். சரவணனும் சிவகாமியும் வற்புறுத்தினால் மட் டும் சேர்ந்துகொள் வான். மற்ற வேளைகளில் சரவணனும் சிவகாமியும் தனித்தே விளையாடுவார்கள். அதுதான் அவர் களுக்குப் பிடிக்கும். அப்பா, அம்மா விளையாட்டு, சின்னச் சோறு கறி சமைத்தல். இடையில் கனகசுந்தரம் புகுந்து
6
ஏதாவது, குழப்பத்தை உண்டுபண்ணிவிடுவான். அவர்கள் கட்டும் வீட்டை உடைத்தோ, சோறுகறியைத் தின்றோ, பொம்மைகளைத் திருடியோ சரவணனின் ஆத்திரத்தைக் கிளப்பிவிடுவான். அவன் அழுதுகொண்டே சென்று தன் தாயிடம் முறையிடுவான். தாய் அவனை அணைத்துச் சமாதானஞ் செய்து, கனகா நீ ஏன் போய் அவர்கள் விளை யாட்டைக் குழப்புகிறாய். பிற்கால வாழ்க்கைக்கு அவர் கள் இப்பவே ஒத்திகை பார்க்கிறார்கள் என்று கூறிச் சிரிப்
T Gff
சிலவேளைகளில் மல்லிகைச் செடி நிறைய மலர்ந் திருக்கும். கனகசுந்தரம் அவற்றைப் பொறுக்கி எடுத்துத் தன் தாயாரிடங் கொடுப்பான். அவள் அதை அழகான மாலைகட்டி சிவகாமி அங்கு வரும்போது அவள் தலை யிற் சூடிவிடுவாள். சரவணனுக்கும் அப்படிச் செய்யவேண் டும்போற் தோன்றும். தானும் பூக்களைப் பறித்து தனக் குத் தெரிந்த மாதிரி ஒரு மாலைகட்டி அதைச் சிவகாமி யிடம் ஆசையோடு கொண்டுபோய்க் கொடுப்பான். சிறு வர்கள் தானே! விபரம் தெரியாத வயது. அவன் எவ்வளவு ஆசையோடு அதைக்கொடுப்பானோ அவ்வளவு நிஷ்டூரத் தோடு அவள் அதன் மதிப்பை இகழ்வாள். அத்துடன் நில்லாது அதை அவன் மொட்டத் தலையிலேயே சூடவும் முற்படுவாள். அப்போது அந்த டிலர்கள் எல்லாம் உதிர்ந்து பூமியிற் சிதறும். அதைப் பார்த்த கனகசுந்தரம் கைகொட் டிச் சிரிப்பான். சரவணனுக்கு அழவேண்டும்போல் இருக் கும். அவன் ஒடிச்சென்று தன் தாயிடம் முறையிடுவான். அவள் அங்கிருந்தபடியே, கனகா, தம்பியைக் கேலி செய் யாதே என்று குரல் கொடுப்பாள். அத்துடன் அவன் கோபந் தண்ந்துவிடும்.
அந்த இனிய நினைவுகள் நிறைந்த தோட்டம் அவன் மனதில் ஒரு கவிதையைப் பிறக்கச் செய்துவிடுகிறது. அவன் வாய்விட்டே அதைப் பாடுகிறான்.
Page 16
மல்லிகை சண்பகங் கோங்கு மந்தாரை வெட்சியுடன் புல்லினமும் பலவளரும்
பூம்பொழி லிலக்காலம் மெல்ல மெல்ல பந்து கொடு விளையாடும் காலவாடாய் சொல்லியதும் மறந்தனளோ சுகமே வினவுதியால் தோகையெனைத் துறந்தனளோ
சுகமே வினவுதியால்,
திடீர் என ஏதோ நினைத்துக்கொண்ட சரவணன் தன் வீட்டின் அடிவளவில் இருக்கும் ஈரப்பலா மர நிழலிற் சென்று அமர்ந்துகொள்கிறான். அகன்று வானோங்கி வளர்ந்திருந்த அம்மர நிழல் குளிர்ச்சியாக இருந்தது. அவன் மனதுக்கும் சிறிது இதமாக இருந்தது. பக்கத்திலிருந்த மல்லிகை, செம்பக மரங்களிலிருந்து நறுமணம் வீசிக் கொண்டிருந்தது. உடனே பழைய நினைவுகள் அவன் மன தில் மீட்கப்படுகின்றன. எப்போதோ ஒருநாள் சிவகாமி பொறுக்கி எடுத்த பூக்களையெல்லாம் சரவணன் விளை யாட்டாகக் கீழே தட்டிவிடுகிறான். அதைத் தூரத்தி லிருந்து பார்த்துக்கொண்டிருந்த கனகசுந்தரம் அவ்விடத் திற்கு வந்து சரவணனை அடிக்கக் கையோங்கும்போது அவனைத் தடுத்து நிறுத்திவிடுகிறாள் சிவகாமி. அப்போது அவன் அவளை நன்றிப் பெருக்கோடு பார்க்கிறான். உடனே கீழே சிதறிய மலர்களை எல்லாம் ஒன்று சேர்த்து மாலை யாக்கி அவள் எதிர்பாராதவிதமாக அவள் கழுத்தில் அணிந்துவிடுகிறான். சிவகாமியும் மல்லிகைச் செடியின் ஒரு துண்டைப் பிய்த்து அவன் கழுத்தில் மாலையாக அணிந்துவிடுகிறாள். அப்போது இருவரும் கைகொட்டிச் சிரித்த சத்தங்கேட்டு சரவணனின் தாயாகிய வள்ளியம் மையே அங்கு வந்துவிடுகிறாள்.
குழந்தைகள் இருவரையும் அளவு கடந்த மகிழ்ச்சி யுடன் அணைத்துக்கொண்டு டேய் கனகா. உன்ர தம்பி
8
மாப்பிள்ளைக் கோலத்தில் இருக்கிறான். கெட்டி மேளங்
கொட்டடா என்று மகிழ்ச்சிமேலீட்டாற் கூற, ஏதோ செய்து கொண்டிருந்த கனகசுந்தரம் ஓடோடி வந்து பக்கத்துப் பூவரசமரத்தில் ஒரு இலையைப் பிய்த்து குழல் செய்து ஊதிக்கொண்டே இரண்டு கையாலும் ஒரு தகரத்தில் அடித்து மேளங் கொட்டினான். எங்கோ போய்விட்டு அப் போதுதான் திரும்பிவந்துகொண்டிருந்த தம்பிமுத்துப் பிள்ளை இந்தக் காட்சியைக் கண்டு அப்படியே சொக்கிப் போய் நின்றுவிட்டார்.
'அப்பா, மாப்பிள்ளையையும், பெண்ணையும் ஆசீர் வாதம் பண்ணுங்கப்பா' என்று கனகசுந்தரம் வேடிக்கை யாகக் கூற, அவர்கள் இருவரையும் கணவனிடம் அழைத்து வந்தாள் வள்ளியம்மை, போக்கிரிக் குட்டிகள் என்று செல்ல மாகக் கூறிவிட்டு இருவரையும் இரண்டுபக்க இடுப்பிலும் தூக்கிவைத்துக்கொண்டார் தம்பிமுத்து. பெண்ணும் மாப் பிள்ளையும் பல்லக்கில் போறாங்க அம்மோவ் என்று பல மாகக் குரல் கொடுத்தான் கனகசுந்தரம். சரவணனின் கண்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. இளமைப் பரு வத்து எந்த நிகழ்ச்சியை மறந்தாலுங்கூட இதை மறக்க முடியுமா? அல்லது இது மறக்கக்கூடிய ஒன்றா? அவன் ஒரு ஆண் மகனாக இருந்தும் அவனால் இந்த சம்பவத்தை மறக்கமுடியவில்லையானால் ஒரு பெண்ணாக இருக்கும் அவளால் இவற்றையெல்லாம் எளிதில் எப்படி மறக்க முடிந்ததோ? இந்த இனிய நினைவுகள் அவள் உள்ளத்தில் பசுமையாக இருக்குமாக இருந்தால் முத்துக்குமரனை மணக்க அவள் ஒருபோதுஞ் சம்மதித்திருக்கமாட்டாள். சம்மதித்திருக்கவும் முடியாது. இன்னும் சின்னாளில் அவள் திருமணஞ் செய்து கொள்ளப்போகிறாளே. அப்படியாயின் அவளது பூரண சம்மதமின்றி இந்தத் திருமணம் எப்படி நிறைவேற முடியும்? இதிலிருந்து அவன் கண்கள் கலங்கின. தன் சோகத்தை யாரிடமாவது எடுத்துக்கூறினாற்தான் நிம்மதியேற்படும் என்ற எண்ணம் உண்டாக அவன் அந்த மரக்கிளையை உற்றுநோக்குகிறான். அந்தக் கிள்ளை
9
Page 17
அவனையே பார்த்துக்கொண்டிருப்பதுபோன்ற Lourenn ஏற்படுகின்றது. உடனே தன் துன்பத்தை அந்தப் பறவை யிடஞ் சொல்லி மனம் ஆறுகிறான்.
தீம் பலவி னிழலின்கட்
டெரிவையவட் கியானறியேன் ஆம்பள்மலர் மாலை
யணிந்தேன் மகிழ்ந்தனளால் சாம்பொழுதும் யான் மறவேன் h− தையலவளிக்காலம்
வீம்பான் மறந்தனளோ
வினவாய் பசுங்கிளியே வீணே புலம் புவதென்
விதியோ பசுங்கிளியே,
சிவகாமி! எனது உடல் இந்த மண்ணோடு மண்ணா கும்வரை என்னால் உன்னை மறக்சமுடியாது. என்றெல் லாம் எண்ணி எண்ணி ஏங்குகிறது அவன் உள்ளம்.
சிவகாமியின் அன்பு முகத்தைப் பார்க்க முடியாமல் சரவணமுத்து தடைசெய்யப்பட்ட நாள் அவன் மனதிலே இன்னும் பசுமையாக இருக்கிறது. அப்போது சரவணனுக்கு பதினான்கு வயதிருக்கலாம். அவன் ஏதோ படித்துக் கொண்டிருந்தான். சிவகாமி பருவமடைந்துவிட்ட செய் தியை யாரோ தம்பிமுத்துப்பிள்ளையின் காதோடு காதா கக் கூறிவிட்டுச் செல்கின்றனர். சில நிமிடங் கழித்து அதே செய்தியை சிவகாமியின் அப்பாவே நேரடியாக வந்து தம்பி முத்துப்பிள்ளையிடம் நேரடியாகக் கூறிவிட்டுச் செல்கின் றார். தம்பிமுத்துப்பிள்ளைக்கு உள் ள ங் கொள்ளாத மகிழ்ச்சி. என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அவர் திக்கு முக்காடிப்போய் விடுகிறார். ஆயினும் அவர் உள் மனதில் இதுகால வரை நீறுபூத்த நெருப்புப்போல் இருந்த ாதோ ஒரு துன்பம் மறைந்திருந்த இட த் தி லி ரு ந் து வெளிப்பட்டு அவரை வாட்டுகிறது.
ஆமாம்! கடந்த வருடம் திடீர் எனக் காலன் கைப் பட்டு அவரைவிட்டுப் பிரிந்த அவர் மனைவி வள்ளியம்மை பின் ஞாபகம் அவருக்கு வந்துவிடுகிறது. அவள் இறப் பதற்கு இரண்டு மூன்று மாதங்கள் முன்கூட்டியே இதை
Page 18
எதிர்பார்த்திருந்தாள். ஆனால் இந்த மங்களகரமான நிகழ்ச்சியில் பங்குகொள்ள அவளுக்குக் கொடுத்து வைக் காமற் போய்விட்டது.
இந்த நிகழ்ச்சியைப்பற்றி அவள் பற்பல மனக்கோட்டை கள் கூடக் கட்டி எழுப்பியிருந்தாள். தன் வருங்கால மரு மகள் என்ற கோதாவில் சிவகாமிக்குக் கொடுப்பதற் கென்று தனது விலையுயர்ந்த முத்து மாலையைக்கூட ஒரு பெட்டியில் இட்டுப் பத்திரப்படுத்தியிருந்தாள். ஒரு நாள் அதை அவரிடம் கூறவுஞ் செய்தாள். அப்போது அவர் "அப்பாடா பருவம் அடையும்போது கொடுப்பதற்கே இவ் வளவு உயர்ந்த பரிசென்றால் நாளைக்கு நம்ம சரவணன் அவளைக் கைப்பிடிக்கும்போது நீ வீட்டுச் சாவியையே அவளிடம் ஒப்புவித்துவிடுவாயாக்கும்” என்று குறும்புசெய்ய, "கனகனுக்கும் திருமணம் முடிந்து சரவணனுக்கு ஏற்ற மனைவியாக நம்ம சிவகாமி வீட்டுக்கு வந்தப்புறம் நமக் கேன் வீட்டுச்சாவி? இரு மருமக்களும் அறுசுவை உணவு போடுவார்கள். நாம் நேரத்திற்கு நேரம் வயிற்றை நிரப்பி விட்டு சிவா! சிவா! பாராயணந் தொடங்க வேண்டியது தான்” என்று அவள் கூற இருவருமே வாய்விட்டுச் சிரிப் பார்கள்.
அந்த நிகழ்ச்சி அவர் உள்ளத்தை நெகிழவைத்து விடு கிறது. அவர் கண்களில் இரண்டு துளி நீர் பெருக்கெடுத் தோட அதைத் தன் சுண்டுவிரலால் தெறித்து விட்டபடி பெருமூச்செறிகிறார். w−
இந்த மகிழ்ச்சியில் பங்குகொள்ளத் தன் மனைவி இல்லையே என அவர் மனம் வேதனைப்படுகிறது. ஆயி னும் அவர் தன் உள்ளத்தைத் தேற்றிக்கொள்கிறார். ஏதோ நினைத்துக்கொண்டவராய் வீட்டுக்குட் சென்று அலுமாரியைத் திறந்து அதற்குள் வள்ளியம்மையால் பத் திரப்படுத்தி வைக்கப்ப்ட்டிருந்த அந்த முத்துமாலைப் பெட்டியைத் தூக்கி தன் சட்டைப்பைக்குட் திணித்துக் கொண்டு வேகமாக வெளியே செல்கிறார். அவர் கால்
2.
கள் சிவகாமி வீட்டை நோக்கித் துரித நடைபோடுகின் றன. அவர் செல்வதைப் பார்த்த சரவணன் அவர் பின் னால் ஓடோடிச் சென்று, எங்கே அப்பா இந்த அதிகாலை யிற் செல்கிறீர்கள்? என்று இடைமறிக்கிறான். அவன் கண் களில் ஆவல் ததும்பி வழிகிறது. தம்பிமுத்துப்பிள்ளை இப்படித்தான் சில வேளைகளில் ஏதோ நினைத்துக் கொண்டு திடீர் எனப் புறப்பட்டுச் சிவகாமி வீட்டுக்குப் போவார். அதே சாட்டைவைத்து சரவணனும் அவருடன் தொற்றிக்கொள்வான். அவனது வினா தம்பிமுத்துப் பிள்ளைக்குச் சிரிப்பை வரவழைக்கிறது. அவர் தன் கொடுப் புக்குட் சிரித்தபடியே, நீ போய்ப்படி நான் வரோதய மாமா வீடு வரை போய் வருகிறேன் என அவன் முதுகில் தட்டிக் கொடுக்கிறார். ‘நான் எல்லாம் படிச்சு முடிச்சாச்சு. இப்போ நானும் உங்ககூட வரப்போறன். நீங்க வரோதய மாமா வைப் பாருங்க. நான் சிவகாமியைப் பார்க்கப்போறன்."
அவனது சாதுரியப் பேச்சால் தம்பிமுத்து ஒருமுறை தத்தளித்து விடுகிறார். இருந்தும் அவனை எப்படியாவது சமாளித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் இப்போ சிவகாமியைத்தான் பார்க்கப் போகிறேன் சரவணா. நீ ஆறுதலாகப் பார் அப்பா" என்கிறார்.
'நானும் உங்களுடன்தான் வருகிறேன் அப்பா. விடாப் பிடியாகத் தொடருகிறான் சரவணன். தம்பிமுத்துப் பிள்ளையின் நிலை தர்மசங்கடமாய் விடுகிறது. இனி அவனிடம் உள்ளதைச் சொல்லித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் இனி நீ சிவகாமியை அடிக்கடி பார்க்கமுடியாது. அவள் பெரியவளாகிவிட்டாள் என்று கூறிவிட்டு மகனைப் பார்க்கக் கூச்சப்பட்டவர்போல் பக்கத்தில் முகிழ் அவிழ்ந் திருந்த முல்லை மலர்களின்மேல் தன் பார்வையைப் பதித்துக்கொள்கிறார்.
சரவணன் மறுபேச்சின்றி வீட்டுக்குத் திரும்பிச் செல் லக். காலடி எடுத்துவைப்பது அவர் கண்களில் படுகிறது. அவர் மெதுவாக நிமிர்ந்து சென்றுகொண்டிருக்கும் அவ
3
Page 19
னையே கண் வெட்டாமற் பார்க்கிறார். திடீர் எனச் சர வணன் தன்னைவிடப் பல்லாண்டுகள் முதிர்ந்துவிட்டது போன்ற உணர்வு தோன்றுகிறது அவரிடத்தில். இப்போது சிவகாமியைப்பற்றி நான் கூறியதில் இவனுக்கு என்ன விளங்கியிருக்கும். முப்பது வயது மனிதனைப்போல நடந்து செல்கிறானே. அவனுக்குப்போய் நான் என்னத்தைக் கூறு வது. எனக்கே அவனுடன் பேச வெட்கமாயிருக்கிறது. ம்! ஒருவேளை இப்போது அவனுடைய அம்மா இருந்திருந் தால் அவனுடன் மனம்விட்டுப் பேசியிருப்பாளாக்கும்!
அவர் தனக்குள்ளாகப் பேசிச் சிரித்துக்கொண்டே சிவ காமியின் வீட்டை நோக்கி நடக்கிறார். சிவகாமியின் அலு வல்கள் எல்லாம் ஒருவாறு முடிவடைகின்றன. இப்போது அவள் வீட்டைவிட்டே வெளியேறுவதில்லை. அவளுக்கு அத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சரவண னுக்கு அவளைப் பார்க்காமல் பசியே எடுப்பதில்லை. அவளை எப்படியாவது பார்த்தாற் தான் மனம் ஆறுதல் அடையும் போன்றதோர் தவிப்பு. அந்தத் தவிப்பின் தாக் கத்தினால் உந்தப்பட்டவனாய் துணிவு பெற்றுச் சிவகாமி யின் வீட்டை நோக்கி நடக்கிறான். ஆனால் அவனுக்குத் தான் என்ன ஏமாற்றம்! பாவம்! அவன் அங்கே காலடி எடுத்துவைக்கும்போத அவர்கள் வீட்டுக் கதவு அடைபடு கிறது. உள்ளம் உடைந்த நிலையில் தாளாத துயரத் துடன் வீடு திரும்பிப் புலம்புகிறான்.
பன்னிரு யாண்டவ ளொடுயான்
பயின்றிருந்து மிக்காலம் கன்னிமுக நோக்கவிடார்
கதவடைத்தார் கருணையிலார் என்னிரு கண் மணியனையா
ளெனக்குரிய ளென்றிருந்தேன் என்ைேயெனதெண்ண
மின்றுபட்ட வாறந்தோ ஏதிலனாயிங்கே
யிரங்குவன்யான் பைங்கிளியே
4.
யாருடைய துன்பத்திற்கும், இன்பத்திற்குங் காத்திரா மல் காலச்சக்கரஞ் சுழல்கிறது. சரவணன் மணப்பருவத்தை அடைந்துவிடுகிறான். சிவகாமி வீட்டுக்கு அவள் அப்பா விடம் முறைப்படி பெண் கேட்கத் தம்பிமுத்துப்பிள்ளை செல்கிறார்.
is
Page 20
4.
எத்தனை எத்தனையோ மனக் கோட்டைகளுடன் சென்ற தம்பிமுத்துப்பிள்ளை அந்த எண்ணக் குவியல்களை யெல்லாம் சிவகாமி வீட்டு வாயிலிலேயே சிதறடித்துவிட்டு, உடைந்த உள்ளத்துடன் மனம் நிறைந்த துயரத்துடன் தன் வீட்டை நோக்கித் திரும் பிக் கொண்டிருக்கிறார். ஆமாம்! சரவணனுக்குச் சிவகாமியைத் தரமுடியாது என அழுத்தந் திருத்தமாக ஆணியறைந்ததுபோற் கூறிவிடு கிறார் அவள் அப்பா. பஞ்சவர்ணக் கிளிபோன்ற தன் பெண் சிவகாமியை மணப்பதற்குச் சரவணனுக்கு எந்த விதத் தகுதியும் இல்லையென்று மனந் துணிந்தே கூறிவிடு கிறார் இராஜவரோதயம்.
பிறந்த நாளிலிருந்தே தன் மகளுக்குச் சரவணன்தான் கணவன் என்று தம்பட்டம் அடித்துத் திரிந்த இராஜ வரோதயம் எதிரில் அவன் இப்போது நாதியற்றவனாய் விடுகிறான். இத்தனைக்கும் அவன் தன் பட்டப்படிப்பை முடித்து ஒரு பி. ஏ. பட்டதாரியாகத் திகழ்கிறான். ஆயி னும் அந்தப் பட்டத்துக்கும், கல்விக்கும் இப்போது மதிப் பில்லை. கல்வியைவிடச் செல்வத்தின் தரம் உயர்ந்து விடுகிறது. சகடக்கால் போன்றது, நீர்க்குமிழிக்கு ஒப்பா
6
னது என்றெல்லாம் பெரியோர்களாற் பழித்துக் கூறப்பட்ட செல்வத்தைப் பெரிதாக மதித்துத் தன்னை இகழ்ந்துவிடும் விவகாமியின் அப்பாமேல் சரவணனுக்கு ஆத்திரம் பிறக் கிறது. ஆனால் இதையெல்லாம் அவன் யாரிடங் கூறி அழமுடியும்?
கடந்த பன்னிரெண்டாண்டுகளாக உனக்குத்தான் என் பெண் எனக் கூறியிருந்தவர் திடீர் எனப் பணத்தாசை பிடித்து இப்படி மாறிக்கொள்வார் என அவன் எதிர் பார்க்கவேயில்லைதான். இதையெல்லாம் நினைத்தபோது அவனுக்கு வாய்விட்டு அழவேண்டும்போலத் தோன்றுகிறது. அதனால் தான் ஒரு ஆண்பிள்ளை என்பதைக்கூட மறந்து வாய்விட்டே அழுகிறான். அந்தக் கண்ணிரில் பிறக்கிறது ஒரு கவிதை.
செல்வமில்லை யென்றுரைப்பார் சிந்தியார் மற்றொன்றுங் கல்வியெனுஞ் செல்வங் கருதார் கருதாரால் செல்வமோ வின்றிருக்குஞ் சென்றிடுமா னாளைமற்றக் கல்வியொரு காலுமண்மேற் கற்றோர்ப் பிரிவிலதால் கல்வி சிறந்ததன்றோ கழறாய் பசுங் கிளியே,
கல்வியைப்பற்றிப் பெரியோர்கள் கூறிவைத்ததெல் லாம் பொய்த்துவிட்டது போன்ற பிரமை ஏற்படுகிறது அவனுக்கு. தம்பிமுத்துப்பிள்ளை தன் தள்ளாத வயதில் கனகசுந்தரனையும், தன்னையும் கடல் கடந்து பாரதம் சென்று படிக்கவைத்துப் பட்டதாரியாக்கியதெல்லாம் வீண் ான நினைத்து உள்ளம் நைகிறான். தங்களைப் படிக்க வைக்க அவர் பட்ட கஷ்டங்களையும், இன்னல்களையும் நினைந்து ஏங்குகிறான். சிவகாமியின் அப்பாமீது அவனுக்கு ஆந்திரம் பீறிடுகிறது.
7
Page 21
தன் மனம் ஆறும் பொருட்டு முற்றத்தைப் பார்த்த படி காற்றோட்டமான ஓர் இடத்தில் அவன் அமர்ந்து கொள்கிறான். அப்போது ஒரு அழகான பேட்டுக் கோழி ஒன்று நிலத்தைத் தன் காலால் கிளறி இரை பொறுக்கித் தின்றுகொண்டிருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஒரு இளஞ் சேவல் ஒன்று தன் அடித் தொண்டையால் கொக்கரித்து உணவு இருக்கும் இடங்களைத் தன் காற் பெரு விரலால் கிளறிக் காட்டிக்கொண்டிருக்கிறது. அதே நேரம் திடீர் என எங்கிருந்தோ வந்த ஒரு கிழட்டுச் சேவல் விரைவாகப் பறந்துவந்து இளஞ் சேவலைக் கொத்தித் துரத்திவிட்டுப் பேட்டை அணைந்துகொள்ள அந்த இளஞ் சேவல் ஒதுங் கிக்கொள்கிறது. ஆயின் அதற்குள் பேட்டுக் கோழியும் அந்தக் கிழட்டுச் சேவலிடம் இருந்து தப்புவதற்காகப் பக் கத்தில் இருந்த பலா மரத்திற்குப் பாய்ந்து கிளைக ளிடையே ஒதுங்கிக்கொள்கிறது.
ஏதோ சிந்தனையில் ஊறிப்போயிருந்த சரவணனின் கண்களில் அந்தக் காட்சி பட்டுவிடுகிறது. அவனுக்குச் சிவகாமியின் நினைவு வந்துவிடுகிறது. ஆமாம்! சிவகாமிக் கும் வேறோர் இடத்தில் திருமணம் நிச்சயமாகிவிட் செய்தி தம்பிமுத்துப்பிள்ளை வீட்டுக்கும் எட்டிவிடுகிற சிவகாமிக்குப் பேசியிருந்த மாப்பிள்ளையைப்பற்றிப் புல ரும் பலவிதமாகப் பேசிக்கொள்கின்றனர். சிவகாமிக்குக் கூட அந்தத் திருமணத்தில் ஒரு துளியும் விருப்பமில்லை என்ற கதையும் அடிபடுகிறது. அப்படித்தான் அவள் திரு மணஞ் செய்துகொண்டாலும் அவள் சந்தோஷமாக வாழ மாட்டாள் என்று ஊரார் பலமாதிரியெல்லாம் பேசிக் கொள்கின்றனர்.
இவற்றையெல்லாம் நினைத்து நினைத்து சரவணனும் மனங்குமுறிக்கொண்டிருக்கிறான். இந்தத் திருமணத்திற் குச் சிவகாமி ஒரு போதும் உடன்பட்டிருக்கமாட்டாள். அவளை ஏமாற்றித்தான் இதைச் செய்யப்போகிறார்கள். கடைசிவரை அவள் இந்தத் திருமணத்தால் மகிழ்ச்சியடை யப்போவதில்லை. கருத்தொருமிக்காத இருவர் எப்படித்
8
திருமணஞ் செய்து சதிபதிகளாய் வாழ முடியும் ? அப்படி வாழ முடியாது. வாழவே முடியாதப்பா. இதனால் மூவரின் வாழ்க்கை பலியாகப்போகிறது. இது வெறும் அநியாயம். நீதி இல்லை, நியாயம் இல்லை. கடைசியில் மனச்சாட்சி கூட அற்றுவிட்டது. தருமதேவதைகூட வாய் மூடி மெளனி யாய்விட்டாளா? என்ற சரவணனின் குரல் கேட்ட அவன் தந்தையின் விழிகளில் நீர் முட்டியது. துன்பத்தைச் சகிக்க முடியாத அவர் ஒரு மூலையிற் சென்று ஒடிந்துபோய் அமர்ந்திருந்தார். கனகசுந்தரமும் ஒரு பக்கத்திலிருந்து கண்ணீர் பெருக்கினான்.
சரவணனின் உள்ளம் பொருமியது. உடல் துடித்தது அவன் மட்டும் நினைத்திருந்தால் துணிந்துசென்று சிவ காமியைக் கையைப் பிடித்தே இழுத்து வந்திருக்கமுடியும். ஆனால் குடும்ப கெளரவம் என்ற ஒன்று அவனைப் பிடித் துத் தடுத்து நிறுத்திவிட்டது. இரண்டு நிமிடத்தில் சிவ காமியோடு தன் திருமணத்தை நடத்தி இழந்த நிம்மதியை மீட்டிருக்கலாம். ஆயின் நாளை தொடக்கம் இன்னும் வரப்போகும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஈறாக அந்த வசை அவன் சந்ததியைப் பாதித்துக்கொண்டேயிருக்கும். அப்படி யொரு ஈனந் தன் குடும்பத்தைப் பாதிப்பதை அவன் விரும்பவில்லை, அதைவிடத் தான் அழுதழுதே சாவது மேல் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் அவன். அதனால் மீண்டும் ஒரு கவிதை பாடுகிறான் அவன்.
கல்வி மிக விருந்தென் கணக்கில செல்வம் மிருந்தென் மெல்லியற்கு நாயகன் மேல் விருப்பிலதேற் பைங்கிளியே சொல்லரிய காதறுகடயவுள் ளொன்றினன்றோ நல்லார் மணம் புரிவர் நலம் பெறுவார் ருண்மகிழ்வார் நாரியர்பா லிம்மாற்றம் நவில் வாயிருஞ் சுகமே.
9
Page 22
அவனுக்கு இப்போது தன் துன்பத்தைவிடச் சிவகாமி மீதுதான் அதிக பரிதாபம் உண்டாகிறது. மனம் விரும் பாத ஒருவனுடன் அவள் எப்படிச் சென்று வாழ்க்கை நடத்தப்போகிறாள்? அவள் உள்ளம் ரோஜா மலர்போன் றதே. சிறிது ஊன்றி மணந்தாலும் கசங்கிவிடும் இதழ் போன்ற மென்மையான உள்ளம் படைத்தவள் சிவகாமி. அவள் எப்படித்தான் இப்படியொரு பெரிய துன்பத்தைச் சகிக்கப்போகிறாளோ என்றெல்லாம் ஏங்கித் தவிக்கிறான் அவன்.
20
5
"தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்று கூறிப் போந்துள்ளார்கள் எம் பெரியோர். ஆயின் அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக அவர்கள் செய்வது சுத்தத் தவறு என்று தெரிந்தபின்பும் அதற்குச் செவிசாய்ப்பது சுத்த முட்டாள்தனமாகும். பெற்றோரும் தம் குழந்தை களின் நலன் கருதி அவர்களுக்காக ச் சிறிது விட்டுக் கொடுத்து நடப்பார்களானால் பிள்ளைகளும் அவர்கள் வாக்கைத் தேவ வாக்காகக் கொள்ளலாம். அதை விட்டு ஒரு அப்பாவிப் பெண்ணின் முன் யாரோ ஒரு புதிய நப ரைக் கொண்டுவந்து கட்டாயத்திற்காக மாலை போடு என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? இது எவ்வளவு பாதகமான செயல். சிறு வயது முதற்கொண்டு ஒன்றாகப் பேசிப் பழகி ஆடிப் பாடிக் கூடித் திரிந்தவர்களைப் பிரிப் பது எவ்வளவு கொடுமை நிறைந்த செயல். இவ்வளவு வயதும் அனுபவமும் முதிர்ந்துங்கூட இவர்கள் மனம் ஏன் இப்படிப் பேதலித்துப்போகிறது? பெற்ற பிள்ளைகள் வடிக் குங் கண்ணிரில் இன்பங் காண்பது தா ன் பெற்றோர் செயலா? இறைவா, சிவகாமியின் உள்ளத்திற்கு நிம்மதி யைக் கொடுக்க அவள் அப்பாவைக் கருணையுள்ளவராக்கி விடு. அவர் மனம் மாறட்டும். எமது வாழ்வு மலரட்டும். சரவணன் சிந்தித்துக்கொண்டேயிருக்கிறான்.
2
Page 23
மல்லிகைப் பந்தலின் கீழ் அமர்ந்த படி பைத்தியம் பிடித்தவன் நிலையில் கேசங்கலைந்துகிடக்க உணவும், உறக்கமும் இன்றி உடல் வாடி வதங்கியிருக்க கீழே கிடந்த மல்லிகைப் பூக்களைப் பொறுக்கி மாலை தொடுத்து அதை மடியில் வைத்துக் கலங்கிய கண் களு டன் பார்த்துக் கொண்டேயிருக்கிறான் அவன்.
அப்படியான மாலைகள் செய்து சிவகாமிக்கு அணி வித்த நாட்கா அவன் மனதுக்கு வருகின்றன. அவன் அவள் தலையில் அணிவிக்கும் மாலை அடுத்த நாள் விடி யும்வரை அவள் கூந்தலை அழகு செய்யும். தலை சீவும் போது வலோற்காரமாக அவள் தாய் அதை எடுத்து எறிந்தாற்தான் உண்டு. நாளாந்தம் சரவணன் புத்தம் புதிய மலரெடுத்து அவளுக்கு அணிவித் துவிடுவான். அதில் அவர்கள் இருவருக்குமே ஒரு மகிழ்ச்சி. அந்த மாலை இன்று அவன் மடியில் மலாச்சியற்று, மணமற்றுத் தேடுவா ரற்றுக் கிடந்தது. அதை மிருதுவாக வாத்ஸல்யத்துடன் தடவி விட்டுக்கொள்கிறான் அவன். அதில் ஒரு மகிழ்ச்சி கலந்த நிம்மதி அவனுக்கு. ஆயினும் அவனையறியாமலே அவன் கண்கள் பனிக்கின்றன. உள்ளத்தில் விம்மி வெடிக் கும் வேதனையைக் கட்டுப்படுத்த முடியாதவனாய் மாலை யைக் கையில் எடுத்துக்கொண்டு அழுகிறான் அவன். திடீர் என ஒரு சிந்தனை. அப்படியே அந்த மாலையை ஒரு மரக்கொம்பரில் அணிவித்துவிட்டுத் த்லையைப் பிடித்துக் கொண்டு எங்கோ செல்கிறான். அவன் நிலையைப் பார்த்த கனகசுந்தரம் அவனைப் பின்தொடர்கிறான்! தம்பி. . இப்படியே நீ கவலைப்பட்டு அழுதுகொண்டிருந்தால் உன் நிலை என்னாவது.? நடந்ததை மறந்து மனதைத் தேற் றிககொள் என்கிறான்.
எப்படியண்னா என் மனம் ஆறமுடியும்? சிவகாமி கூடவா என்னை மறந்துவிட்டாள்? தாம் பெற்றெடுத்த குழந்தையின் நன்மையிது, தீமையிது என்பதை உணராத பெற்றோரின் வார்த்தைகளை அவளால் மீறமுடியாதா என்ன? தாய் தந்தையருக்கும் ஓரளவுக்குக் கீழ்ப்படிய்த்
22
தான் வேண்டும். ஆனால் அதுவே தன் வாழ்க்கைக்குக் கூற்றுவனாக அமையும் என உணர்ந்துகொண்டும் கண் மூடித்தனமாக நடக்கக்கூடாது. அதற்காக அவளை யாருங் குற்றஞ் சொல்லமுடியாது. இதையெல்லாம் நான் அவ ளுக்கு எப்படித் தெரியப்படுத்துவது. தன் மனத்தாக் கத்தைக் கனகசுந்தரத்திடம் கூறியதில் ஒரு நிம்மதி உண் டாக அவன் மனதில் ஒரு கவிதை பிறக்கிறது.
தந்தை மொழி தலைவகித்துத்
தாய்சொல் மொழியுளம் பேணி நந்தமக்குத் தீங்கிழைத்த
னலமோ பசுங்கிளியே மைந்கர் துயர் நோக்கார்
மனமெழுந்தவாறுரைக்கில் அந்தோ மறுத்த
லவசியமாம் பைங்கிளியே ஆருங் குறை சொல்லா
ரறிவாய் பகங்கிளியே
தான் பாடுகின்ற அரிய கருத்துக்கள் நிறைந்த கவிதை களைச் சிவகாமியிடம் யார் எடுத்துக்கூறுவ்து. ? இந்தப் பைங்கிளி சென்று கூறுமா ? அதற்கு அவ்வளவு சக்தி யுண்டா? என்றெல்லாம் சிந்திக்க அவன் தயாராக இல்லை. அவன் நோக்கமெல்லாம் தன் உள்ளத்து உணர்ச்சிகளை யும், தன் துன்பத்தையும் வெளிப்படுத்தும் வாய்க்காலாகக் கவிதைகளை அமைத்தலே. அதில் அவனுக்கு ஒரு திருப்தி, ஒரு நிம்மதியுங்கூட.
சர்வணனுக்கு "ரிச்சல் எரிச்சலாக வருகிறது. உள்ளே யிருக்கப் பைத்தியம் பிடித்துவிடுமோ என்ற மனக் கிலேசம் ஏற்பட "அவன் மெதுவாகத் தெருவாயிலுக்குப் போகி றான். வாயிலில் தன்னை மறந்து நிற்கும்போது ஏதோ
அவன் காலில் தட்டுப்படுகிறது. அது என்னவாக இருக்கும் என அவன் குனிந்து எடுத்துப் பார்த்தான். அதில் அழகிய
23
Page 24
பெண் ஒருத்தியின் படம் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தது. அந்த ஒவியத்தையே கண் மூடாமற் பார்த்துக்கொண் டிருந்த அவனது கண்களில் சிவகாமி தோற்றமளிக்கிறாள். செந்தாமரையைவிட அழகிய கண்கள் அவளுக்கு. அந்தக் கருவிழிகளில் எப்போதும் ஒளி நிறைந்திருக்கும். குங்குமம் போன்ற சிவந்த மேனி. திருக்கோணமலையில் அப்போது வாழ்ந்த பெண்களில் அழகி என்றே கூறலாம். அந்த அழகுதான் தன்னையும் அடிமைப்படுத்தியது என்று நினைக்க அவனுக்கு அப்படத்தின்மீதே ஆத்திரம் வந்தது. அதனால் காற்றோடு காற்றாகப் பறக்கும்படி அதைக் கைநழுவ விட்டான். அதன்பின் தெருவில் நிற்கக்கூட விரும்பாதவனாய் உள்ளே போகத் திரும்பியபோது எதிர், வீட்டுப் பொன்னையா அவனைக் கை அசைத்து நிறுத்தித் தெருவைக் கடந்து வந்துகொண்டிருந்தார்.
'தம்பி நான் எல்லாங் கேள்விப்பட்டேன் அப்பா. அந்த இராஜவரோதயம் இவ்வளவு கொடுமை செய்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. உம்! இனி என்ன செய்வது? பேசாமல் மனதைத் தேற்றிக்கொள் அப்பா.” பொன்னையா அவனைத் தேற்ற முயன்றார். சிறு பராயத் தில் இருந்தே பொன்னையாவுக்கு அவன்மீது அப்படி ஒரு ப்ாசம். அவனைத் தன் மார்பிலுந் தோளிலும் சுமந்து வளர்த்து ஆளாக்கியவர் அவர். அவன் என்னுடைய மகன் என்று பி , ளையில்லாத அவர் அடிக்கடி கூறித் தன் மன தைத் தேற்றிக்கொள்வார். அவனுக்குத் திருமணம் நடக் கும்போது சிவகாமியை நான்தான் தத்தம் பண்ணி வேண் டிக்கொள்வேன் என்று பெருமையுடனும், உரிமையுடனுங் கூறிக்கொள்வார். அப்படிப்பட்ட அன்புள்ளம் படைத்த ஒருவர் கேட்கும்போது அவன் மெளனமாக இருக்கமுடி யுமா? அதனால், ஆமாம் மாமா! ஏதோ விதிப்படி நடந்து விட்டது. மனதைச் சமாதானப்படுத்திக்கொள்ளத்தானே வேண்டும் மாமா! அல்லது வேறு வழி? என்று அவன் பதில் கூறியபோது அவன் குரல் சாடையாகக் கம்மிக் கொண்டது. ኣ
24
உனக்காக நான் ரொம்பவும் பரிதாபப்படுகிறேன் தம்பி. இப்படி நடக்கும் என்று யார் எதிர்பார்த்தார்கள்? சிவ காமிக்கு இப்படி ஒரு விதியா வரவேண்டும்? அவளது அழ குக்கும் குணத்துக்கும் இப்படி ஒரு கணவன்தானா வாய்க்க வேண்டும்? என்று அவர் கூறியபோது சரவணன் மிகவும் ஆவலுடன் அவரைப் பார்த்தான். சிவகாமியின் கணவரைப் பற்றி அவர் தொடர்ந்து என்ன கூறப்போகிறார் என அவன் உள்ளம் ஏங்கியது.
25
Page 25
ES
விதி வலிமையுடையது எனச் சரவணன் கேள்விப் பட்டிருந்தானே தவிர அதைப்பற்றிய நம்பிக்கை அவனுக்கு ஏற்பட்டது மில்லை. அதைப்பற்றி ஆராய அவன் முற் பட்டதுமில்லை. ஆயினும் இன்றைய நிலையில் இராமா யணத்தின் ஒரு கட்டத்தில் இலக்குவணன் கூறியதுபோல விதியொன்று இருக்கத்தான் செய்கிறது என அவனும் நம்பி னான். அதனாற்தான் தனக்கும் சிவகாமிக்குங்கூட இப் படியானதோர் அவல நிலை ஏற்பட்டதாக அவன் எண்ணி னான்.
அப்போது பொன்னையா தான் நிறுத்திய பேச்சைத் தொடர்ந்தார். கிளி போன்ற சிவகாமியைக் கைபிடிக்க அந்த மனிதனுக்கு என்ன தகுதியிருக்கோ..? உத்தியோகம் ஒன்றுதான் உன்னைவிட அவரை உயர்த்திவிட்டது. சிவ காமிக்கு இப்பத்தான்ே பதினான்கு வ்யது முடிஞ்சிருக்கு. அவருக்கு வயது என்னெண்டு நினைக்கிறாய்...? சரியாக முப்பத்திமூன்று வயதாம், சிவகாமியின்ர வயதைப்போல இரு மடங்கு பெரியவர். அவளைவிட பதினெட்டு வயது மூத்தவர். இது எவ்வளவு பெரிய அநியாயம் எண்டு நினைக் கிறாய்...? எல்லாரும் இதைப்பற்றித்தான் பேசிக்கெர்ள்ளி னம். ஆனால் இதை எடுத்துச் சொல்லுந் துணிவுதான்
26
யாருக்குமில்லை. அந்த மனிதனோட யாரப்பா கதை : கிறது? சிவகாமியின்ர அம்மாவுக்கு இதில அவ்வளவு விருப்ப மில்லையாம். மாப்பிள்ளையை நான் கண்டனான். ஆள் நல்ல நெடுப்பம். சிவகாமியோட் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அப்பாவும் மகளும் என்றுதான் சொல்லுவார்க".
இவற்றையெல்லாம் கேட்சக் கேட்க சரவணனின் உள்
ளம் எரிமலைபோற் குமுறியது. இப்படியொரு அநீதியை
எதிர்க்காமல் பொறுத்துக்கொண்டிருக்க அவனால் முடிய
வில்லை. யாரிடமாவது போய் முறையிட வேண்டும்போல் அவன் உள்ளம் உந்தியபேர்தும் மிகுந்த சிரமத்துடன்
அவன் தன்னை அடக்கிக்கொள்கிறான். பொன்னையா
தொடர்ந்து ஏதோ பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனால்
சரவணனின் உள்ளம் அதில் இப்போது ஈடுபாடு கொள்ள
வில்லை. அவன் சிந்த 3ன முழுவதும் வெகாமியைச் சுற்றியே
வட்டமிட்டது. . . . .
சிவகாமியும் தானும் இனி ஒன்றுசேர முடியுமா? அவ னது அப்பா கூடத்தான் தன் மானத்தையும் மரியாதையை யும் விட்டுக்கொடுத்து சிவகாமி வீட்டுக்குச் சென்று இரண்டு முறை பெண் கேட்டு அவமானப்பட்டுவிட்டார். சரவண னுக்காக அவர் இன்னும் பலமுறை சென்று கேட்கவும் ஆயத்தமாக இருந்தார். ஆனால் அவன்தான் அவரைத் தடுத்துவிட்டான். எனக்குச் சிவகாமி கிடைக்காது விட்டா லும் பாதக்மில்லை. அவள். அப்பாவிடம் மட்டும் நீங்கள் சென்று அவமானப்படவேண்டாம். நாங்கள் மானஸ்தர் என்பதை அவர்கள் உணரட்டும். சிவகாமியை நினைக்கும் போதுதான் எனக்கு மனவருத்தமாக இருக்கிறது. பாவம்! அந்த முத்துக்குமரனுடன் அவள் எப்படித்தான் போய்க் குடும்பம் நடாத்தப் போகிறாளோ தெரியாது. அவளது மலர்போன்ற மென்மையான மனம் நோகாமல் நடந்து கொள்ள அந்த மனிதனுக்குத் தெரிகிறதோ..? அவள் மனதைப் பூரணமாக அறிந்துவைத்திருப்பவன் நான்தானே. அவளது ஆசைகள் மனப்போக்குகள், அவ்ன் விரும்பி உண் ணும் உணவு, பிடித்த நிறம் விரும்பிச் சூடிக்கொள்ளும்
27
Page 26
மலர், அவளுக்குப் பிடித்த பாட்டுக்கூட எனக்குத்தானே தெரியும். அப்படியிருக்கும்போது வேற்று மனிதனாகிய முத்துக்குமரனோடு அவள் எப்படித்தான் வாழப்போகி றாளோ? அவள் மனம் நோகும்படி நான் என்றுமே நடந்து கொண்டதில்லை. அவனிடம் அடி அல்லது குட்டுப்பட்டாற் கூடப் பொறுத்துக்கொள்ளும் சக்தி எனக்குமட்டுந்தான் உண்டு.
ஆமாம்! அன்றொருநாள் என்னிடம் மல்லிகைப்பூ மாலை வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தாள். என் னால் முடியாது என்று சவால் விட்டேன் நான். அவளுக் குக் கோபம் வந்துவிட்டது. தானாகவே சென்று உதிர்ந்த மலர்களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து மாலை கோர்த்துக் கூந்தலில் அவள். அணிந்துகொள்ளப்போன சமயம் பின்னாற் பூனைபோற் சென்ற நான் அம்மாலை யைப் பிடித்து இழுக்க மலர்கள் எல்லாம் சிதறிக் கீழே சிந்தின. அதனால் மேலும் ஆத்திரமடைந்த அவள் கையோங்கி என் கன்னத்தில் பளார் என அறைந்து விட்டாள். அந்த அறை என் கன்னத்தில் சுளிர் எனப் பட்டபோது நான் சிறிது நிலை தடுமாறிவிட்டேனாயினும் பொறுத்துக்கொண்டேன். அவள் என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள். நான் அவளிடம் 'எனது இடக்கன்னத்தையும் நீட்டி 'உம்! இதிலும் அடி சிவகாமி’ என்றேன். அவ்வளவு தான் அவள் வாய்விட்டுக் கதறி அழுதுவிட்டாள். அடுத்த நிமிடம் அவளது பஞ்சுபோன்ற மென்கரம் என் சிவந்த கன்னத்தைத் தடவிக்கொடுக்க நான் அவள் சிந்திய கண் ணிர் முத்துக்கல்ளைத் துடைத்துவிட்டேன். அந்த ஒரு உணர் வில் இருவரும் நடந்ததை மறந்து சிரித்துக்கொண்டோம். அந்தச் சிரிப்பு இன்னும் என் மனதைவிட்டு அகலவில்லை.
இப்படியெல்லாம் நினைத்து நினைத்துக் கண்ணிர் உகுத்தான் சரவணன். அந்தக் கண்ணிரில் பிறந்தன இரு கவிதைகள்.
செங்கமல வாள் விழியாட்
சேர்க்கக் கருதுமுவன்
28
மங்கை தனக்கேற்ற
மணவாளனோ புகலாய் நங்கை நிலைக்கேற்க P
நடக்கவல னோபுவியிற் கொங்குமலர் மாலை
குரங்கிற் களிப்பாரோ கோதையிட மிம்மாற்றங்
. கூறுதியாற் பைங்கிளியே மூடருக்கும் வேடருக்கும்
முதியோர் மெலியோர்க்குந் தேடருநல் லிரத்தினம்போற்
றெரிவையரைச் சேர்த்து வரேற் பீடுடைய கல்வி நலம்
பெற்றிருக்கும் வாலிபர் யாம் வேடுவரை வேட்போமோ
விளம்பாய் பசுங்கிளியே விரும்புவமோ சந்நியாசம்
விளம்பாய் பசுங்கிளியே
பாடல் பாடி முடிந்ததும் அவன் தன் உருவத்தை மேலிருந்து கீழ்வரை பார்த்துக்கொள்கிறான். கடந்த இரண்டு வாரங்களாகச் சவரஞ் செய்துகொள்ளாத முகத் தோடு முற்றுந் துறந்த முனிவர்போல் இருந்தான் அவன். எப்படிப்பட்ட வியாதிக்கும் மருந்துண்டு. ஆனால் மன வியாதிக்கு மட்டும் மருந்தில்லை என்று யாரோ கூறி வைத்தது அவன் வரையில் மெய்யாகிவிட்டது. அவனுக் கும் யார் யாரோ எல்லாம் எப்படி எப்படியெல்லாமோ புத்தி புகட்டியும் அவன் சமாதானம் அடையவில்லை. அவன் சீராக உண்டு, உறங்கி நாட்கள் பலவாகிவிட்டன. எதிர் வீட்டுப் பொன்னையாகூட அவன் அருகில் மணிக் கணக் கில் அமர்ந்து, அவனைத் தன் மகனிலும் மேலாக நேசித்து எவ்வளவோ புத்திகள் கூறிப்பார்த்தார். அவனைச் சமா தானப்படுத்தவே அவரால் முடியவில்லை.அதனால் அவனை வளர்த்த குற்றத்திற்காக அவன் நிலைக்குப் பரிந்து அவரே
29
Page 27
சிவகாமியின் அப்பாவிடம் தூது சென்றார். அங்கு சர வணனது மனநிலையைப் புகைப்படம் பிடித்தாற்போல் எடுத்துக்கூறியும் பயனின்றித் தோல்வியுடன் திரும்பி வந் 岛n T·
தம்பிமுத்துப்பிள்ளைகூடத் தன் மகனுக்கு எவ்வளவோ ஆறுதல் கூறியும் அவன் கேட்கத் தவறிவிட்டான். அவனது மன்நின்ல்யை மாற்ற யாராலும் முடியவில்ல்ை. இதன் காரணமாக அவன் தேகநிலை பாதிக்கப்பட்டது. பார்த் திருக்க அவன் துரும்புபோல் இள்ைத்துவந்தான். "உனக்கு வருத்தம், வர்ப்போகிறது சரவணா! ஏதாவது சாப்பிட்டுக் கொள, என்று யாராவது கெஞ்சினால் எதுவும் வேண் டாம். என்னை நிம்மதியாகச் சாகவிடுங்கள், சிவகாமி இல்லாத வாழ்க்க்ை எனக்குச் சந்திரனற்ற வானம்போல் இருக்கும். அவளது நினைவு என் நெஞ்சைவிட்டு ஒரு போதும் நீங்காது. அந்த நினைவு அக்கினி ஜுவாலை போல் என் உள்ளத்தை நாளாந்தம் பொசுக்கிக்கொண்டே யிருக்கும். அந்த வேதனையைச் சுமந்துகொண்டு சிறுகச் சிறுக நாளாந்தம் செத்துக்கொண்டிருப்பதைவிட இப்படிப் பட்டினி கிடந்தாவது என் உயிரை மாய்த்துக்கொள்வது மேல். இனிமேல் நான் யாருக்காகத்தான் வாழவேண்டும்? நான் வாழ்வதால் யாருக்கு என்ன லாபம்? இந்த நன்றி கெட்ட உலகத்தில் நான் இருக்க விரும்பவில்லை. என் உள்ளத்தில் சிறு வயது முதற்கொண்டே குடிகொண்டிருந்த தெய்வமே என்னைவிட்டு நீங்கிவிட்டபோது இனி எனக்கு வாழ்வும், சாவும் ஒன்றுதான். எனக்கென்றே வாழ்ந்த சிவகாமியே என்னை மறந்து முன்பின் அறிமுகமில்லாத மாற்றான் ஒருவனை மணக்கச் சம்மதித்து விட்டாளாம். இத்தனையும் நடந்த பின்பும் எனக்கு வாழ்வு ஒரு Gs, LIT? என் வாழ்க்கை அஸ்தமித்துவிட்டது. என் வாழ்க்கையில் இனி விடிவே இல்லை. சிவகாமியைப் பிரிந்து என்னால் வாழமுடியாது. வாழவே முடியாது. என்று சரவணன் அரற் றியபோது அங்கு நின்றவர்களின் கண்களில் எல்லாம் நீர் நிறைந்தது. அவர்கள் அவனைத் தட்டிப் பேச முடியாத வர்களாய் குனிந்த தலை நிமிராமல் நின்றனர்.
30
சிவகாமியின் நினைவு சிறுக்க் சிறுகச் சரவணனை வாட்டிக்கொண்டேயிருந்தது. அவனது மன நிலையில் எது வித மாற்றமும் ஏற்படவில்லை. சிவகாமியின் திருமணம் அநேகமாக நிச்சயமாகிவிட்டதாகப் பலரும் கதைத்தது அவன் காதிலும் விழத்தான் செய்தது. மாப்பிள்ளைகூட அங்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருப்பதாகப் பேசிக் கொண்டனர். ஆயினும் அவன் மட்டும் இன்னும் அவரைத்
தன் கண்ணாற் காணவில்லை. W
ஒருநாள் இப்படித்தான் அவன் அழுது புலம்பிக்கொண் டிருந்தபோது கனகசுந்தரம் அவன் பக்கத்தில் அமர்ந்து. அவனைத் தேற்றிக்கொண்டிருந்தான். அந்நேரம் பார்த்து
எதிர் வீட்டுப் பொன்னையா அவர்களை நோக்கி மிகவும்
விரைவாக வந்துகொண்டிருந்தார். என்ன செய்தி கொண்டு வருகிறாரோ என்ற ஆவலில் இருவரும் அவரையே பார்த்து நின்றனர். "அவர்களை நெருங்கிய அவர் அவர்கள் காதோடு காதாக அவர்களுக்கு மட்டுங் கேட்கும்படியாக தெருப் படலையில் ஓடிப்போய்ப் பாருங்கள் என்றார். கனகசுத் கரம் அவர் வாய் மூடுவதற்குள்ளேயே அங்குபோய்விட் டான். ஆனால் உடல் நலிந்து உள்ளங் குழம்பியிருந்த
3
Page 28
சரவணனோ ஒரு அடிகூடப் பெயர்த்தெடுத்துவைக்க முடி யாதவனாய் ' என்ன விடயம்."? என்பதுபோல அவரைப் பார்த்தான். 'ஓடு சரவணா. ஒடிப்போய் பார் மாப் பிள்ளை சிவகாமி வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறார்" என்று சொல்லிமுடித்தபோது சரவணனுக்குக் கதறி அழ வேண்டும் போலிருந்தது. ஆயினும் தன் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு தற்போது தன்னை நடைப்பிணமாக்கி விட்டிருச கும் அழகி சிவகாமியை மணக்கப் போகிறவரை ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்று மனந் துடி யாய்த் துடித்தது. அதனால் மெதுவாக எழுந்து இடுப்பில் இருந்த வேடடியை இறுக்கிக்கொண்டே தெருப்படலையை நோக்கித் தன்னால் இயன்றவரை வேகமாக நடந்தான்.
அவன் தெருவாயிலை அடைவதற்கும் முத்துக்குமரன் அவர்கள் தெருப்படலையைக் கடப்பதற்கும் சரியாக இருந் தது. சிவகாமிக்கு மாப்பிள்ளையாக வரப்போகிறவர் இவர் தானா? என்ற வினா அவன் மனதில் எழுந்தபோது அவ னுக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. ஐயோ! பார்ப் பதற்கே முரடன் போற் தோற்றமளிக்கிறாரே! இவ ரிடமா என் செல்லக்கிளி சிவகாமி சென்று வாழ்க்கைப் படப்போகிறாள்..? இவரைப் பார்த்தாலே அவளது அமுத கலசம்போன்ற அழகிய விழிகள் அச்சத்தில் அல்லற்படும். எவ்வளவு அருமையாக வளர்த்து இப்படியொரு பெண் ணருமை தெரியாத ஒருவனிடம் அவளை அளிக்கப்போகும் அவள் அப்பா நிச்சயமாக நரகலோகத்திற்குத்தான் உரிய வராவர். நரகத்தில் இருந்து அவர் தப்பவே முடியாது என்று கதறி அழும் சரவணனைத் தேற்றி விடுகிறார் பொன்னையா.
சரவணன் வாயிலில் நின்றபடி சென்றுகொண்டிருக்கும் முத்துக்குமரனையே பார்த்துக்கொண்டிருக்கிறான். அவர் மேல் அவன் கோபந் திரும்புகிறது. ஆத்திரம் அழுகை யாகப் பிரலாபித்துவிடுமோ என்ற பீதியில் தன் உணர்ச் சிக்கு அணைபோட்டுவிடுகிறான். ஆயினும் அவன் உணர்ச்சி ஒரு கவிதையாக உருவாகிறது.
32
பெண்ணருமை தானறியாப் பேதையர்க்குப் பெண் கொடுத்தார் மண்ணிலுள்ள காலம் வருந்துதற்கே பெற்றெடுத்தார் கண்ணிலரித் தந்தைதமர் கடுநரகிற் கேயுரியர் எண்ணி யினைந்தேங்கி யிருந்த பெரும் பயனென் என்னுயிரை மாய்த்த லியைவதாம் பைங்கிளியே
உடைந்த உள்ளத்துடனும், கலங்கிய கண்களுடனும் வீட்டுக்குள் வந்த சரவணனுக்கு எதிலுமே மனஞ் செல்ல வில்லை. எஞ்சியிருந்த சிறு நிம்மதியும் அவனைவிட்டு அகன்றுவிட்டது. இதுகாலவரை படுக்கையிலாவது சிறு துளி நிம்மதி பெற்ற அவனுக்கு இப்போது படுக்கைகூட முள்ளாக இருப்பதுபோன்ற பிரமையேற்பட்டது. அத னால் அவன் கால்போன திசையெல்லாம் நடந்து சென் றான். ஆயின் இழந்த நிம்மதி மட்டும் அவனுக்குக் கிடைப்ப தாக இல்லை. அதனால் தனது அறைக்குட் சென்று ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். அதிலே சில சிறந்த ஒவியங்கள் காணப்பட்டன. அதிலே மனதைப் பதிக்க முயற்சித்தான். அவற்றிலே காணப்பட்ட ஒவியங் களில் ஒன்று அவன் கவனத்தை ஈர்த்தது. அந்த ஒவியத் திற் காணப்பட்ட காட்சியை உற்றுப்பார்த்தான்.
அப்போது அங்கே வந்துகொண்டிருந்த பொன்னையா விடம் அந்த ஓவியத்தைக் காட்டினான். பொன்னையா வுக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது. சரவணன் மனம் மாறிவிட்டானோ என்றுகூட்டச் சிந்தித்தார். அல்லது தன் னிடம் ஒவியத்தைக் காட்டிக் கருத்துப் பரிமாறிக்கொள் ளும் அளவுக்கு அவனுக்கு என்ன வந்துவிட்டது? ஒருவேளை இவன் மனம்மாறும் விதமாகச் சிவகாமி ஏதாவது கூறி அனுப்பியிருப்பாளோ.. ? என்னவாக இருக்கும் என்ற எண் ணத்தில் அவனிடம் இருந்த ஒவியத்தை வாங்கி அதிற் தன்
33
Page 29
விழிகளைப் பதித்தார். அதிலே, கண்ட ஓவியம் அவரை அதிர்ச்சியடையச் செய்தது. எவ்வளவு தூரம் சரவணனின் மனம் புண்பட்டுப்போயுள்ளது? என்பதை அந்த ஒவியம் உள்ளங்கை நெல்லிக்கனிபோற் காட்டியது.
இந்த ஒவியத்தில் அப்படி என்னதான் விசித்திரமாக இருக்கிறது? என்று அவனைப் பார்த்து ஒன்றும் புரியாத வர்போற் கேட்டார் பொன்னையா. சரவணன் அவர் கேள்வியைக் கேட்டுச் சிரித்தான். -
அவன் கண்கள் மீண்டும் இந்த ஒவியத்தின்மீது பதிந்து கொண்டன. அதில் இருக்கும் புலியின் வாயில் அகப்பட்ட மானைப் பார்க்கும்போது எனக்கு சிவகாமியின் நினைவு தான் வருகிறது. அவளது வாழ்க்கையும் வெம்புலியின் வாயில் அகப்பட்ட மானின் கதைபோல் ஆகிவிட்டது என்று கூறி அவரைப் பார்த்தான்.
அடர்ந்த காடொன்றில் வெம்புலியின் வாயில் அழகிய புள்ளிமான் ஒன்று அகப்பட்டுச் சித்திரைவதைப்படுவதை ஒரு ஓவியர் தத்ரூபமாக விளக்கியிருந்தார். சரவணனின் கண்களுக்கு அந்தப் புலி முத்துக்குமரனைப்போலவும், புள்ளி மான் சிவகாமி போலவும் காட்சியளித்தனர். சிவகாமியின், வாழ்க்கை பாழாகிவிட்டது என நினைத்து நினைத்துப் புலம்பினான் சரவணன். அவனாற் தன் துன்பத்தை ஆற் றவே முடியவில்லை. தன் துயரையெல்லாஞ் சேர்த்து கவிதையாக்கிப் பாடுகிறான் அவன்,
தம்பெருமை தாமறியாத் தஞ்சமிலாப் பெண் கடமை வெம்புலிவாய் மானென்ன வீணேகொடுத்திடுவார் செம்பொனிலாவின்பஞ் சிறந்ததெனக் கூறுதியால் தெரிவையவட் கிம்மாற்றஞ் சிர்க்கிளியே கூறுதியால்
34
பக்கத்து வீட்டுக் குழந்தை பகீரதி தம்பிமுத்துப்பிள்ளை யிடம் தமிழ் கேட்டுப் படிப்பதற்காக வந்திருக்கிறாள். அவ ரும் அவளை மிகவும் அன்புடன் பக்கத்தில் அமர்த்திப் பாடஞ் சொல்லித்தருகிறார். இடையிடையே அவள் கேட் கும் சில வினாக்கள் அவரைத் திணறவைக்கின்றன. ஆயி ஒனும் அவர் சிரித்துக்கொண்டே மிகுந்த உற்சாகத்தோடு அவளுக்கு விளக்கந்தருகிறார். அப்போது புதிதான தந்திக் கம்பி இணைக்கப்பட்ட வீணையில் இருந்து எழுகின்ற நாதம் போல பகீரதியின் சிரிப்புக் கேட்கிறது. .
இந்தக் காட்சி சரவணனின் உள்ளத்தில் பழை ய நினைவுகளை மீட்கின்றன. அவர்கள் சிறுவர்களாக இருக் கும்போதும் இப்படித்தான். தம்பிமுத்துப்பிள்ளை அவர்கள் இருவரையும் பக்கத்தில் இருத்தி அன்புடன் பாடஞ்சொல் லித்தருவார். சிவகாமிகூடப் பாடங்கேட்க அங்குதான் வருவாள். அவளும் ப கீர தி யை ப்போலத்தான். திடீர் திடீர் என ஏதாவது வினாக்கள் கேட்டுக்கொண்டேயிருப் பாள். அவரும் அலுக்காமல் அவளுடைய வினாக்களுக் கெல்லாம் ஆணித்தரமான பதில் கொடுப்பார். கனகசுந்த ரம் சிவகாமியின் குறும்புத்தனத்தைப் பார்த்துச் சிரித்துக்
35
Page 30
கொள்வான். ஆனால் சரவணனுக்கு மட்டும் போபங் கோபமாக வரும். தம்பிமுத்துப்பிள்ளையிடம் மட்டும் ஒரு கொள்கையுண்டு. பாடந் தொடங்கும்போதும் மூவரை யும் ஒருமித்துத்தான் வைத்துத் தொடங்குவார். முடியும் போதும் ஒருமித்துத்தான் விடுவார். சரவணன் சிறுவனாக வும், வீட்டுக்குச் செல்லப்பிள்ளையாகவும் இருந்ததால் அவ னுக்கு நேரத்தோடு தூக்கம் வந்து விடும். அவன் தூங்கி வழிந்துகொண்டே சிவகாமியை முறைத்துப் பார்ப்பான்.
சிவகாமி அவனை அலட்சியஞ் செய்யவேமாட்டாள். போதுமப்பா இனி நாளைக்குப் படிக்கலாம் என்பான் சரவணன் கொட்டாவி விட்டுக்கொண்டே கொ ஞ் சம் • பொறுமையாக இரு சரவணா, சிவகாமியின் சந்தேகங்களை முதலில் தீர்த்துவிடுகிறேன். அதற்குப்பின் நீ நிம்மதியாகப் படுக்கப்போகலாம் என்பார் அவன் அப்பா. அவனுக்கு ஆத்திரம் எல்லை கடந்துவிடும். அடுப்பூதும் பெண்ணுக்கு எதுக்கப்பா படிப்பு.? சிவகாமி எப்படியும் சமையல் வேலை தானே பர்ர்க்கப்போகிறாள். விடுங்கள் அப்பா என்பான் அலுத்துக்கொண்டே.
"டேய். உனக்கு யார் அப்படிச் சொல்லிக்கொடுத் தது.? உன் அம்மாகூடச் சமையல் வேலைதானே செய் தாள். இருந்தும் உனக்கும், அண்ணனுக்கும், சிவகாமிக்கும் பாடஞ்சொல்லித்தருபவள் அவள்தானே. அவள் படித் திருந்தபடியாற்தான் உங்களையெல்லாம் ஒழு க்க மாக வளர்க்க முடிந்தது. பெண்கள் எப்போதும் படித்திருக்க வேண்டும். நாளைக்குச் சிவகாமிகூட நம்ம வீட்டுக்கு மரு மகளாக வரும்போதும் எனக்கு ஒரு படித்த பெண் மரு மகளாகக் கிடைக்கிறாளே என்று நான் எவ்வளவு பெரு மைப்படுவேன் தெரியுமா?’ என்று அவர் திருப்பிக் கேட் கும்போது சரவணன் மிகுந்த சிரமத்தோடு தன் ஆத்தி ரத்தை அடக்கிக்கொள்வான்.
அப்படியெல்லாம் எத்தனையோ பெரிய மனக்கோட்டை கள் கட்டி தமிழறிவூட்டிப் பாசத்தோடும், நேசத்தோடும்
36
வளர்த்தெடுத்த சிவகாமி இன்று மாற்றான் ஒருவனுக்கு மாலை குடப்போகிறாள் என்பதைக் கேட்கும்போதெல் லாம் அவன் உள்ளம் கொதித்தது. பெண்ணினது பெரு மையையும் அருமையையும் அறியமுடியாத ஒருவனுக்குச் விவகாமி வாழ்க்கைப்பட்டு என்ன சுகத்தை அனுபவிக்க முடியும் என்று எண் 6ணி எண்ணி ஏங்குகிறான். அந்த எண்ணக் குவியல் கவிதையாக உருவெடுக்கிறது.
கல்வி நலம் பெற்றனரேற்
காரிகையர் காதலர்க்குச்
சொல்லருநற் துணையன்றோ
தொல்லுலகு சிறக்குமன்றோ
மெல்லியர்பாற் கல்வி
விரும்பாத வீணரெல்லாம்
எல்லையிலாவின் படைதற்
கிடையூறென் Gipuihuu ii urtu
என்னிரு கண் மணியனையாட்
இயம்பாய் பசுங்கிளியே.
சிவகாமிக்குக் கணவனாகப் போகும் முத்துக்குமரனைப் பற்றிப் பலரும் பலமாதிரிப் பேசிக்கொள்கின்றனர். அவ ரைத் திருமணஞ் செய்துகொள்வதால் அவளுக்கு எந்தவித சுகமும் கிடைக்கப்போவதில்லை என்று ஊர் பேசிக்கொள் கிறது. கூட்டிலே அடைத்து சுதந்திரம் பறிக்கப்படப்போகும் பசுங்கிளிபோல சிவகாமியும் வீட்டிற்குள் அடைக்கப்பட்டு விடுவாள் என்று சிலர் கூறுகிறார்கள். சிவகாமியைப்போன்ற அழகான மாம்பழம்போன்ற பெண் அந்த முத்துக்குமர னுக்கு எங்கே கிடைக்கப்போகிறது.? என்னவோ அவன் அதிர்ஷ்டம் சிவகாமி கிடைத்துவிட்டாள். அவள் பாவம். இனி எங்குமே செல்லமுடியாது. அவன் அவளைப் பூட்டித் தான் வைப்பான்" என்றுதான் எல்லோரும் கதைக்கிறார் கள் தம்பி, என்று ஒருநாள் எதிர்வீட்டுப் பொன்னையா கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.
37
Page 31
உடனே பழைய நிகழ்ச்சி ஒன்றும் அவன் கண்முன்னே தோற்றமளிக்கின்றது. அவர்க .7 சிறுவர்களாக இருக்கும் போது ஒருநாள் சிவகாமியும் இவர்களோடு சேர்ந்து ஏதோ விளையாடிககொண்டிருந்தாள். அப்போது சிவகாமியை அவளது தாயார் கூவி அழைத்துக்கொண்டு வந்தாள். தாயின் குரல் கேட்ட சிவகாமி போவதற்குத் துடித்தாள். ஆனால் சரவணனோ அவளை விடுவதாக இல்லை. இரு வரும் வாக்குவாதப்பட்டு ஈற்றில் சிவகாமியை தன் விருப் பப்படியே போவதற்கு அடியெடுத்து வைத்தபோது சர வணன் அவள் கையைப் பிடித்து இழுத்து அவர்கள் வீட் டின் முன்புறத்தில் இருந்த சிறிய அறைக்குட்போட்டு э55ерөш அடைத்துவிட்டான். சிவகாமிக்குப் பொதுவாக இருள், தனிமை இரண்டுமே பிடிக்காது. அதனால் தனிமையில் அறைக்கு அடைபட்ட சிவகாமி சத்தமிட்டுப் பெரிதாக அழுதாள். அவள் குரல் கேட்டு ஓடோடிவந்த சரவணனின் தாய் அவனைக் கண்டித்துவிட்டுக் கதவைத் திறந்து சிவ காமியை வெளியேற்றியபோது அவளது முகம் அழுதழுது குங்குமம்போற் சிவந்திருந்தது.
அதற்குள் சிவகாமியின் தாயாரும் அங்கு வர கண்க சுந்தரம் நடந்ததைக் கூறினான். அவள் வாய்விட்டுச் சிரித்து விட்டு சரவணா உனக்குச் சிவகாமிமேல் அவ்வளவு பிரியமென்ற ல் அவள் அப்பாவிடம் கேட்டு அவளை உன் வீட்டிலேயே வைத்துக்கொள்,என்று கூறியதெல்லாம் நேற்று நடந்ததுபோல ஞாபகத்திற்கு வந்தது.
இவ்வளவு நிகழ்ச்சிகளையும் அவனாற்கூட மறக்கமுடியா
திருந்தால் சிவகாமியால் எப்படிச் சுலபமாக மறக்க முடிந் தது? என்று ஏங்கித் தவித்தான். அவளுடன் சேர்ந்து பழ கிய நாட்களை அவனால் மறக்கவே முடியவில்லை. அவன் உள் ளத்தில் அவள் நிரந்தரமான ஓர் இடத்தைப் பெற் றிருந்தாள். சிறியவர்களின் உறவு இந்தவகையில் மலர் வதற்குப் பெரியவர்களே பாலமமைத்துக் கொடுத்தார்கள் என்றால் அது மிகையாகாது.
38
இந்த 'நினைவுகளில் திளைத்திருந்த சரவணனைப் ‘போயிட்டு வாரன் மாமா' என்ற பிஞ்சுக் குரல் திடுக் கிடவைத்தது. பகீரதி பாடஞ்சொல்லி முடிந்துபோய்க் கொண்டிருந்தாள். அவளையும் அவள் சுமக்கமுடியா மற் சுமந்துகொண்டு சென்ற புத்தகங்களையும் பார்த்தபோது அவன் கவிதா உள்ளம் கற்பனை செய்கிறது.
கூட்டிற் பசுங்கிளிபோற் கோதையரை எப்பொழுதும் வீட்டி லடைத்துவைக்கும் விரகிலருக் கியாதுரைப்போம் பூட்டித் திறந்தெடுக்கும் பொருளாக் கருதினரோ
- கேட்டோர் நகைப்பதுவுங்
கேட்டிலரோ பைங்கிளியே கிஞ்சுகவாய் பைந்தொடிபாற் கிளத்தாய் பசுங்கிளியே.
பகீரதியைப் பார்த்தபோது சரவணனுக்குத் துக்கமாக இருந்தது. இவள் வளர்ந்தால் இவளும் சிவகாமியைப்போற் கவலையும், அல்லலும்படவேண்டி ஏற்படுமே என்று எண்ணிப் பார்க்கிறான். பொதுவாகப் பெண்ணாகப் பிறப்பதே பாவம் என்ற முடிவுக்கு வருகிறான். பெண்களுக்காக அவன் மனம் இரங்கிக்கொள்கிறது.
உண்பதுவு முறங்குவது மூர்க்கதைகள் பேசுவதும் பெண்க டொழிலா மென்றே பேசிடுவா ரொருசாரார் பெண்களுக்குத் தம்பதியே பெருந் தெய்வ மென்பார் சிலர் பெண்களுக்கும் அடிமைகட்கும் பேதமில்லை யென்பார் சிலர் பேதமை காணிவர் கொள்கை பேர்த்தறிவாய் பசுங்கிளியே
Page 32
மாதரார் தாமிலரேல் மனையும் வனமா நல்ல மாதரார் தாமுளரேல் வனமும் வள மனையாம் மாதாரான்றோவில் வாழ்விற் கருங்கலமாம் மாதரா ரன்றோ வருந்துரிைம் மாநிலத்தில் மாது சிரோன் மணிக்கிவை நீ வகுப்பாய் பசுங்கிளியே.
பெண்களைப்பற்றி அவன் தொடர்ந்து பாடி முடிக்
கிறான். பெண்கள் இல்லாவிடில் வீடும் வனமாகும். பெண் கள் இருந்தால் வனமும் வீடாகும் என்ற கருத்துப்படப் பாடுகின்றான்.
40
9
தம்பிமுத்துப்பிள்ளைக்கு மகனைப் பார்க்கும்போதெல் லாம் கண்களில் நீர் சுரந்தது. தான் உயிருக்குயிராக அன் புடன் பெற்றுவளர்த்த பிள்ளை தன் கண்முன்னாலேயே கண்ணிர் விடுவதைப் பார்த்துக்கொண்டிருக்கமுடியவில்லை. அதனாற் தான் தன் கெளரவத்தைக்கூடப் பொருட்படுத் தாமல் சிவகாமியின் அப்பாவிடம் இரண்டுமுறை தூது சென்றார். ஆனால் அவரது முகத்தைக்கூட அந்த மணி தன் பார்க்கவில்லை. அதை நினைத்துப்பார்க்க அவர் உள் ளம் வேதனைப்பட்டது. அவர்தன் மனைவியை இழந்த துயரை ஓரளவுக்கு மறந்துவந்துகொண்டிருந்தபோது இந்த நிகழ்ச்சி அவருக்கு இன்னும் பேரிடியாக இருந்தது.
இந்தத் துன்பத்தில் இருந்து அவரால் விடுபடவே முடியவில்லை. அதனாற் தன் மனதை ஒரு நிலைப்படுத்து வதற்காகத் தேவாரப் புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு தன் படுக்கையிற் சாய்ந்து வாய்விட்டுப்பாடத் தொடங்கினார். நமச்சிவாய பதிகத்தில்வரும் புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்" லாய் மனிதராய். அவர் தன் பாட்டுக்குப் பாடிக்கொண் டிருந்தார்.
4.
Page 33
அவரது பாட்டில் லயித்தபடி சரவணன் வெளித் திண்ணையில் அமர்ந்திருந்தான். அவர் பாடிய இந்த அடி கள் அவன் மனதில் திருப்பித் திருப்பி ஒலித்துக்கொண்டே யிருந்தன. அவற்றில் ஆழமான பொருள் பொதிந்திருப்பது போலவும் தோன்றின. மாணிக்கவாசகர் எவ்வளவு அழ காகப் பாடியிருக்கிறார் என்று தன் மனதிற்குள்ளேயே கூறிக்கொண்ட அவன் மனித வாழ்வைப்பற்றி ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கினான். பேசும் சக்தியையும் பகுத்தறிவை யும் கொண்டு இயங்கும் ஒரேயொரு உயிர்ஜாதி மனிதனே. அவனாற் தான் சிந்திக்கமுடிகிறது. அப்படியான வல்லமை கள் பெற்றிருந்தும் சிலவேளைகளில் மனிதன் மிருகமாகி றான். இன்னும் சில சந்தர்ப்பங்களில் மனிதன் ஊமை யாகியும் விடுகிறான். பேசவேண்டிய இடத்திற் பேசவும் சிந்திக்கவேண்டிய இடத்திற் சிந்திக்கவும் தவறிவிடுகிறான். தன்.துன்பங்களை வெளியிட முடியாமல் மனதுக்குள்ளேயே புதைத்துச் சிறுகச் சிறுகத் தன்னை அழித்துக்கொள்கிறான்.
இன்னும் சில சந்தர்ப்பங்களில் ஒருசிலர் பேசுவதற்கு
ஆசைப்பட்டாலுங்கூட அவர்களுக்குப் பேச்சுத் சுதந்திரம்
அளிக்கப்படுவதில்லை. மிருகங்களைவிடக் கேவலமான அடிமைகளாய் நடாத்தப்படுகிறார்கள். இப்படியெல்லாம் நடைபெறுவதற்குக் காரணந்தான் என்ன? அந்த வகை யில் சிவகாமியையும் இவர்களில் ஒரு சாராருடன் ஒப்பிட லாம், என அவன் எண்ணிப் பார்த்தான். ஆம்! சிவகாமிக்
குக்கூடப் பேச்சுரிமை மறுக்கப்பட்டுள்ளது. அவளை எங் களுடன் பேசவிடாமற் தடுத்துவிட்டார்கள் பாதகர்கள்.
என்னுடைய முகத்தைக்கூடப் பார்க்கப் பயப்படும் அள வுக்கு அவள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளாள். மனவிருப்பம்
இல்லாமல் இருந்துங்கூட அவள் மாற்றான் ஒருவனுக்கு மாலையிடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளாள்.
இதையெல்லாம் நினைக்க நினைக்க அவன் உள்ளம் பற்றி எரிந்தது. இதை பாரிடமாவது சொல்லி ஆறவேண் டும்போல மனதில் ஒரு தவிப்பு. ஆயின் இதை எப்படிப்
4.
பிறரிடம் கூறமுடியும்.? ஆகவே அவன் கவிதையாகவே பாடிவிடுகிறான்.
அத்தி முதற் சிற்றெறும்பீ
றானவுயிர் யாவதிலும் உத்தமராம் மாந்த
ரொருவரே பேசவலார் சித்த மகிழ்ந் தேபிறர்பாற்
றெரிவையரைப் பேச விடார் எத்தான் மறுத்தனரோ
விசையா யிளங்கிளியே ஏது குற்றஞ் செய்தனர்க
ளிசைவாய் பசுங்கிளியே,
எதைச் சிந்தித்துத்தான் என்ன? தாம் செய்வது தீங்கு என்று உணர்ந்துகொண்டும் செய்யும்போது அதை யாராற் றான் தடுக்கமுடியும்.? உணராவிட்டாலுங்கூடப் பிறர் எடுத்துக்கூறும்போது எதையும் ஆராய்ந்து செய்யப் பழகிக் கொள்ளவேண்டும். மற்றவர்கள் கூறுவது நன்மைக்குத்தான் என்ற உணர்ச்சி ஏற்படவேண்டும். அதை விடுத்து நான் செய்வது தான் சரியென ஒற்றைக்காலில் நின்று வாதாடு பவர்களிடம் என்னத்தைப் பேசமுடியும்? பெண் என்றாற் பேயும் இரங்கும் என்பார்கள். இங்கே பெற்றவர்கள் கூட இரங்குகிறார்கள் இல்லை. எத்தனையோ பேர் எடுத்துக் கூறியுங்கூட அவர்களுக்குப் பெண்ணைவிடப் பணமும் பதவியுந்தான் பெரிதாகப் போய்விட்டது. மகளின் எதிர் கால் வாழ்வைப்பற்றி அவர்கள் ஒரு துளிகூட அக்கறைப் படவில்லை.
அவர்களுக்கு இப்படியான ஒரு நிலை ஏற்பட்டால் எப்படித்தான் பொறுப்பார்களோ..? ஒவ்வொன்றும் அவ. ரவர்களுக்கு வந்தாற்தான் தெரியும். ஆண்மகன் ஒருவனுக் குச் சிவகாமியின் நிலை வந்திருந்தால் அவன் நிசசயமாக அதைப் பொறுத்திருக்கமாட்டான். அப்பா மட்டும் நீ விவகாமியைத் திருமணஞ் செய்துகொள்ளக் கூடாது என்று
43
Page 34
எனக்கு கட்டளையிட்டிருந்தால் அவர் சொல்லுக்கு நான் அடிபணிந்திருக்கவே மாட்டேன். என் உயிர் போவதாக இருந்தாலுங்கூட நான் சிவகாமியையே திருமணஞ் செய் திருப்பேன். நான் மட்டும் என்ன? எந்த ஆண்மகனும் இதைத்தான் செய்திருப்பான். செய்யவும் வேண்டும்.
சிறு வயதில் ஒருநாட்கூட என்னைப்பார்க்காமல் இருக்க முடியாத சிவகாமிக்கு இப்போது எப்படித்தான் வாரக் கணக்காக என்னைப் பார்க்காமல் இருக்கமுடிகிறதோ. ஒருவேளை அவள் கூடப் பணத்திலும் பதவியிலும் மயங்கி விட்டாளோ..? சந்தர்ப்பத்திற்கு ஏற்றவிதமாக நிறம் மாற்றிக்கொள்ளும் பச்சோந்தி வர்க்கத்தைச் சேர்ந்தவளல்ல சிவகாமி என்பதும் அவனுக்கு நன்கு தெரியும், 'ஆயினும் இன்றைய நிலையில் எதைத்தான் நிச்சயமாகக் கூறமுடி கிறது. இருந்தாலும் சிவகாமி கொஞ்சமாவது கருணை காட்டியிருந்தால் விஷயங்கள் இவ்வளவு தூரத்திற்குச் சென்றிருக்க முடியாது என்பது அவன் சித்தாந்தம்.
இப்படியெல்லாம் அவன் தன் பாட்டுக்கு நினைத்து ஏங்குவதுபோல சிவகாமி கவலைப்படுகிறாளோ என்னவோ? அப்படியாக இருந்தால் அவள் நிலை எப்படியிருக்கும். அவனாவது கவிதைமூலம் தன் துன்பத்தையெல்லாம் தீர்த் துக்கொள்கிறான். அதற்காக அவன் கடவுளுக்கு நன்றி செலுத்தினான், தான் எழுதும் கவிதைகளை அவன் தனக் குள்ளாகவே வாசித்து மகிழ்வான். அவன் கவிதைக்ளைப் பிறர் போற்றியதில்லை. அதையிட்டு அவன் கவலைப் படவும் இல்லை. எப்படியாவது ஒருநாள் என் கவிதை களையும் உலகம் புகழத்தான்போகிறது என்ற தெம்பு அவ னுக்கு. உலகக் கவி, ஷேக்ஸ்பியர், மில்ரன் பாரதிபோன்ற வர்களின் அரும்பெருங் கவிதைகளையெல்லாம் அவன் விரும் பிப் படித்திருக்கிறான். அப்போது அந்தக் கவிதைகள் மேல் உண்டான அபிமானம் அவனை அந்தக் கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தூண்டியது. அந்தப் பெயர்போன கவிஞர்களெல்லாம் உயிரோடிருக்கும்வரை அவர்களையோ அவர்களது படைப்புக்களையோ எவரும்
44.
போற்றவில்லையென்றும் அவர்கள் இறந்த பின்புதான் அவர்களைப் புகழேணியின் உச்சிப்படியில் ஏற்றிவைத்தனர் என்பதையும் அவனால் அறியமுடிந்தது. அதற்காக அவன் கவலைப்படவில்லை. புகழை விரும்பி அவன் எழுதவும் இல்லை. கவிதை கற்பனையாக ஊற்றெடுக்கும்போதெல் லாம் அழகு தமிழில் தேன் சொட்டச்சொட்டப் புனைந்து விடுவான். அதே வேகத்தில் அவன் எழுதிய கவிதைகள் எண்ணிக்கையற்றவை.
சிவகாமியைப் பிரிய நேர்ந்ததிலிருந்து அவன் உள்ளத் துயரையெல்லாம் கவிதையாகப் புனைவதில் அவனுக்கு 905 திருப்தி. அவன் உள்ளத்திற்கோர் நிம்மதி.
அந்தோ விசைப்பதெனை
யரிவையர்க்குத் தீங்குபல சிந்தை மகிழ்ந்தே புரிவார்
சிந்தியா ரொரு சிறிதும் பைந்தொடியார் தம்பாற்
பரிதாபஞ் சற்று மிலார் அந்த நிலை தமக்காமே
விருப்பரோ வாடவர்தாம் இறை சகியா ரிறை
சகியா ரெழிலார் பசுங்கிளியே.
அவனையறியாமலே அடுத்த பாட்டும் ஊற்றெடுத்து விட்டது. அவனுக்கு வாய்விட்டுக் கதறியழவேண்டும்போல இருந்தது. ஆயினும் ஆண்பிள்ளை அழுதால் அது ஆண் மைக்கே இழுக்கு என்ற எண்ணத்தில் தன் சோகத்தை யெல்லாம் மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டான்.
45
Page 35
1O
அன்று விடிந்து வெகு நேரமாகியும் சரவணன் தன் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை. அதனால் கண்க சுந்தரமும் எழுந்திருக்கவில்லை. கனகசுந்தரம் அயர்ந்த நித்திரையில் இருந்தான். ஆனால் சரவணனோ தலையை யுயர்த்தித் தமையனைப் பார்ப்பதும் படுப்பதுமாக இருந் தான். அப்போது பின் திண்ணையில் பேச்சரவங் கேட் டது. அவன் தன் காதைக் கொடுத்துக் கேட்கிறான். குரலில் இருந்து பக்கத்துப் பொன்னையாதான் தன் தந்தை யுடன் பேசிக்கொள்வதாக உணர்கிறான்.
*"என்ன பொன்னையா . அதிகாலையில் இந்தப் பக் கம் . என்ன ஏதாவது புதினமே . தப் பிமுத்துப்பிள்ளை அவரை வரவேற்கிறார்.
"புதினமோ. இதைவிட இனி இந்தத் திருகோணமலை யில் வேறு என்ன புதினமிருக்கப்போகிறது? சிவகாமிக்கு முத்துக்குமாரை. நிச்சயம் செய்ததே ஒரு புதினந்தானே. நல்ல காலம்; பொடியள் இரண்டுமே நல்ல நித்திரையாகக் கிடக்குதுகள். இனி இந்தப் பேச்சையே இந்த வீட்டில் எடுக்
46
கக்கூடாது என்று இருந்தனான். என்னவோ எனக்கு இந்த வீட்டுப் படியை மிதிச்சா வேறு எந்த நினைவுமே வாற தில்லை. ஒரு பாடாக மனந்தேறியிருக்கிறதுகளை ஏன் கவலைப்படுத்தவேண்டும்? எப்படியோ பேச்சு என்னையும் மீறி வந்திட்டுது. நல்ல காலம் அதுகள் நித்திரை..!
நான் ஏன் விடிய வந்தனான் தெரியுமே...? நேற்று ஒரு இறாத்தல் குடைeன் மலிவாக வாங்கினனான் என்றெல்லே சொன்னனான். என்ர மனுசி அதை நல்லாப் பொரித்து இன்று காலை பிட்டுக்குச் சாப்பிடலாம் எண்டு பத்திரப் படுத்திவைச்சுது. ஆனால் விடியப்புறம் 'படார்" என்றொரு சத்தங் கேட்டுது. நான் திடுக்கிட்டு எழுந்து சத்தங்கேட்ட திக்கை நோக்கிப்போனேன். என்னெண்டு நினைக்கிறாய். பூனையொண்டு ஓடிக்கொண்டிருந்தது. நான் அவசர அவ சரமாக ஒடிப்போய் அடுக்களையைத் திறந்துபார்த்தன். என்னத்தைச் சொல்ல மீன் பொரியல் வைத்து மூடியிருந்த சட்டியுங் கறிமுடியும் உடைஞ்சு சுக்கு நூறாக நிலத்தில் கிடக்க, பொரியல் எல்லாம் மாயமாய் மறைஞ்சுபோச்சு."
'அப்ப பூனை திண்டிட்டுச் சட்டியையும் உடைச்சுப் போட்டுது எண்டு சொல்லன்."" தம்பிமுத்துப்பிள்ளை இடைமறித்துக் கூறிவிட்டுச் சிரித்துக்கொண்டார். பல நாட் களுக்குப்பின் அவர் மனம்விட்டுச் சிரித்தசிரிப்பாக இருந்த தால் அது உள்ளத்தைத் தொடுவதாக இருந்தது.
'ஒ அதைத்தானே சொல்லவந்தனான். எனக்கு வந்த ஆத்திரத்தில் பூனையை அந்த இடத்திலேயே கொன்றிருப் பன். என்ன செய்வது மனுசி விடமாட்டன் எண்டிட்டுது. ஒரு பூனையைக் கொன்றால் ஒன்பது பிராமணர்களைக் கொன்ற பாவமே. பின்ன விடிய எழுந்ததும் முதல் வேலையா என்ன செய்தனான் தெரியுமே. ? அந்தப் பூனையைத் தேடிப் பிடித்து ஒரு குட்டிச் சாக்கிலைபோட்டு ஒரு மைல் தூரம் நடந்துபோய் சுண்டங்காட்டுப் பக்கம் விட்டுப் போட்டுவந்தனான். வந்த கையோட மனுசி தந்த கோப்பி யைக் குடித்துப்போட்டு அப்படியே இங்க வாறன். அதுசரி
47
Page 36
ஏன் இன்றைக்குப் பொடியன்கள் இன்னும் எழுந்திருக்கல்ல. இரவு வெகு நேரம் முழிச்சிருந்தவங்களே..?"
' என்ர பொடியனுகள் இப்ப சரியா நித்திரைகொண்டு எத்தினை நாளாச்சுத் தெரியுமே ? என்னவோ இன்றைக் காவது நிம்மதியாகப் படுக்குதுகள். படுக்கட்டும் அப்பவா வது சரவணன் சிவகாமியைக் கொஞ்சநேரம் மறந்திருப் பான். மூத்தவன் இளையவனை மறந்திருப்பான். உம் என்ன செய்யட்டும். எல்லாம் விதி, பொன்னையா விதி..!"
பொன்னையாவின் வினாவுக்குத் தம்பிமுத்துக் கூறிய பதில் சரவணனன அப்படியே உலுப்பிவிடுகிறது. சிவகாமி யின் அப்பாவையும் தனது தந்தையையும் அவன் ஒப்பிட்டுப் பார்க்கிறான். அப்பாவின் காற் தூசிக்குக்கூட அந்தக்கிழவன் ஒப்பாகமாட்டான் என்ற முடிவுக்கு வந்து தனது தலையை நிமிர்த்தி கனகசுந்தரனை பார்க்கிறான். கனகசுந் தரத்தின் கால் அசைவது தெரிகிறது. அவன் இன்னும் விழிப்போடு தான் இருக்கிறான் என்ற எண்ணத்தில் மெதுவாக எழுந்து கொள்கிறான். இதுவரை பொன்னையா கூறிய அத்தனை யும் அவனது சிந்தையில் நிழலாடுகின்றன. அந்தப் பூனையை யும் சிவகாமியையும் அவனது உள்ளம் ஒப்பிட்டுப்பார்க் கிறது. பூனையைக் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போலத்தான் சிவகாமி யையும் இப்போது விட்டிருக்கிறார் கள். கண்ணால் கண்டிராத ஒருவனைக் காதல் மொழிபேசிக் கலந்துரையாடிக்கொள்ளாத ஒருவனை சிவகாமி மணந்து கொள்ளப்போகிறாள். இதைவிடக் கொடுமையான செயல் வேறு என்ன தான் இருக்கமுடியும்? சிவகாமியின் நிலை ஒரு பாடலாகவே உருவெடுக்கிறது அவன் உள்ளத்தில்.
கண்ணை மறைத்தே கொண்டுபோய்க்
காட்டில்விடும் பூனையைப்போல்
பெண்ணை மனை யடைத்துவைத்துப்
பின்னொருவர் கைக்கொடுப்பர்
கண்ணுன்முன் கண்டுமிலர்
காதலர் சொற் கேட்டுமிலர்
48
எண்ணாது மெண்ணி
யிருந்தயர்வர் மங்கையர்கள்
இக்கொடுமைக் கியாது
செய்வ திசையாய் பசுங்கிளியே.
சரவணன் கவிதையைத் திருப்பித் திருப்பிக் கூறிப்பார்க் கிறான். கவிதை நன்றாக அமைந்துவிட்டதில் ஒரு திருப்தி அவனுக்கு. அப்போது கனகசுந்தரனும் எழுந்து படுக்கையில் அமர்ந்துகொள்கிறான். சரவணன் அவனைப் பார்த்துவிட்டு ஏதோ நினைத்துக்கொண்டவனாய், 'அண்ணா! நேற்றிரவு நான் ஓர் சொப்பனங் கண்டேன்' என்று கூறுகிறான். ஆச் சரியத்தோடு கனகசுந்தரம் அவனைப் பார்த்த பார்வை; "அது என்ன கனவு?’ என்று கேட்பதுபோல் இருக்கிறது.
அவனது பார்வையைப் புரிந்துகொண்டு "சிவகாமியை நான் இரவு கண்டேன். ஒருநாட்கூடப் பேசிப் பழகாத அந்த முத்துக்குமாரனுடன் நான் எப்படித்தான் என் வாழ் நாளைக் கழிக்கப்போகிறேனோ தெரியாது. உங்களைத் தவிர நான் வேறு யாரைத்தான் திருமணஞ் செய்துகொண் டாலும் அவர்களுடன் ஒரு கணப்பொழுதேனும் இன்பமாகக் கழிக்கப்போவதில்லை. இதை ஏன் அப்பா உணரமாட்டேன் என்கிறார். என் மனதை நன்றாக உணர்ந்த பின்பும் ஏன் இவ்வளவு கொடூரமான ஒரு காரியத்தைச் செய்கிறார் என எனக்கே தெரியவில்லை. இதிலிருந்து என்னை எப்படியா வது காப்பாற்றுங்கள் என்று அவள் மண்டியிட்டு என்னி டங் கேட்டதுபோலிருந்தது. இந்தக் கனவைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் அண்ணா?” என்ற அவனது வினா கனகசுந்தரனைச் சிறிது சிந்திக்கவைத்தது.
"இவன் கனவில் சிவகாமி தோன்றிவிட்டாள். சிறிது மனந்தெளிந்திருந்தவனின் நிம்மதி மீண்டுங் குலையப் போகிறது. அதனால் அவனது நினைவை இந்தக் கனவில் இருந்து ஈர்ந்து விடவேண்டும்" என்ற எண்ணத்தில் 'சர வணா, சிவகாமி உன்னிடங் கனவில் மட்டுந்தான் வரு வாள். நினைவில் நேராக உன்னிடம் வந்து இவற்றைக்
49
Page 37
கூற அவளுக்குத் துணிவில்லை. அவள் ஒரு முழுக் கோழை. நீ இப்படி இரவும் பகலும் அவள் நினைவில் இருந்து உருகுவதுபோல அவள் மட்டும் ஒரு சிறிதாவது உருகி யிருந்தால் நிச்சயமாக அவள் எப்படியாவது உன்னிடம் வந்திருப்பாள். அவள் உன்னை மறந்துவிட்டாள். அவளுக்கு உன் நினைவு அற்றுவிட்டது. ஆதலால் நீயும் அவளை இனி மறந்துவிடு" "என்று கனகசுந்தரம் தன்னை மறந்து பேசினான்.
'அண்ணா! என்னை வேண்டுமானால் நீ திட்டு, வசை கூறு. அதற்கு உனக்குப் பூரண உரிமையுண்டு. ஆனால் சிவகாமி ஒன்றுமறியாத பேதைப் பெண். அதனால் அவ ளைப்பற்றிக் குறைவாக என்முன் பேசாதே. அவள் எங்கா வது சந்தோஷமாக வாழட்டும்' என்று இடைமறித்துப் பேசிய சரவணன் காலமெல்லாம் கணவனுடன் வாழப் போகிறவள் பெண். அப்படியிருக்கும்போது மனம் ஒத்துப் போகாத கணவனுடன் சிவகாமி எப்படித்தான் காலங் கழிக்கப்போறாளோ என்று சிந்திக்கிறான். அதற்கு விடை கவிதையாகவே பிறக்கிறது.
ஒரிருவன் னோர்பகலன்
றுயிருள்ள நாளளவுங் காரிகையா ருடன் வாழ்வார்
கணவரே யாமாயின் ஓரிறையு மவ்விருவ
ருள்ளமதை வினவாதே பாரிலே மணம் புரிவோர்
பாதகர் காண் பைங்கிளியே பாவை தனக் கிம்மாற்றம்
பகர்வாய் பசுங்கிளியே.
சரவணனின் உள்ளம் ஓர் உயர்ந்த உள்ளம். இவ்வளவு நடந்த பின்பும் சிவகாமியைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பிறர் தீமையாகப் பேசுவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனது உள்ளத்திலே சிவகாமி நீக்கமற நிறைந்துவிட்டாள். அவனது அன்பு தூய்மையானது, விசு வசமானது, சாசுவதமானது. சரவணனின் நினைவில் இருந்து சிவகாமியை இனி யாராலும் பிரிக்கவே முடியாது.
50
11
அன்று காலையிலிருந்து மழை சோனாவாரியாகப் பெய்துகொண்டிருந்தது. மழை பெய்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் சரவணன். அவன் கண்கள் பூமியில் பதி கின்றன. மழை பரவலாக வெள்ளமிட்டு நிற்க அதிலே தோன்றும் நீர்க்குமிழிகளைப் பார்த்து அவன் அதரங்களில் ஒரு விரக்திப் புன்னகை மலர்கிறது. ஒருவேளை வாழ்க் கையே நீர்க்குமிழி என்று நினைத்துவிட்டானோ? அந்தத் தத்துவம் அவனுக்குப் புரிந்ததோ புரியவில்லையோ தெரி யாது. ஆனால் அவனுக்குச் சற்றுத் தூரத்தில் ஏதோ சிந் தனையில் ஆழ்ந்திருந்த கனகசுந்தரனுக்குப் புரிந்துதான் இருந்தது.
வெவ்வேறு உலகங்களில் சஞ்சரித்துக்கொண்டிருந்த இரு வரது சிந்தனையையும் கலைப்பதுபோல் தெருக்கதவு திறக் கப்படும் சத்தங் கேட்கிறது. இருவரும் ஏக காலத்தில் நிமிர்ந்து பார்க்கின்றனர். அங்கே பொன்னையா ஒட்டைக் குடையொன்றில் வந்துகொண்டிருக்கிறார். இந்தக் கொட் டும் மழையில் அவர் வருவதாக இருந்தால் ஏதாவது விஷேடமான செய்தி இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு எழுந்து உட்பக்கம் செல் கிறான் கனகசுந்தரம். சரவணனின் முன்னிலையில் அவ
5
Page 38
ரோடு மனம்விட்டுப் பேச முடியாது என்ற பயம் அவ னுக்கு.
சரவணன் எதிலுமே பற்றற்றவன்போல் ஒட்டைக் குடையில் வரும் பொன்னையாவையே பார்த்தபடி இருக் கிறான். அந்த ஒட்டைக்குடை அவன் மனதில் பழைய சம்பவம் ஒன்றைக் கிளறி விடுகிறது. அப்போதும் ஒரு நாள் இப்படித்தான் மழை கொட்டிக்கொண்டிருந்தது. அன்று முழுநாளும் சிவகாமி அவன் வீட்டுக்கு வரவில்லை. அதற்கு மேலும் அவனால் பொறுக்சமுடியவில்லை. தனது தந்தையின் ஒட்டைக் குடையை எடுத்துக்கொண்டு சிவகாமி வீட்டுக்குப் புறப்பட்டுவிடுகிறான். அவனது தாயார் அவ னைப் பலமுறை அழைத்தும் அவன் திரும்பிப் பார்க்கா மலே சென்றுவிடுகிறான்.
அவன் ஒட்டைக் குடையோடு தன் வீடு நோக்கி வரு வதைக் கண்ட சிவகாமி கைகொட்டி அவனைக் கேலி செய் கிறாள். 'ஓட்டைக் குடை ஓய். ஓட்டைக் குடை." அவள் போட்ட சத்தம் மழையின் சத்தத்தைவிடப் பலமாகக் கேட்கிறது.
* 'இந்த ஓட்டைக்குடையின் உதவியினாற் தான் உன்னைப் பார்க்கவந்தனான். அதுக்குள்ள நீ என்னைக் கேலி செய் கிறாயே . உனக்கென்ன..? பணக்காரப்பிள்ளை. நாங்கள் ஏழைகள்தானே." அவன் குரலில் ஆற்றாமை இழையோடு கிறது. உடலில் ஒரு பக்கம் நனைந்திருக்கத் தலையில் இருந்து நீர் சொட்டச் சொட்ட அவன் சிவகாமி வீட்டுத் திண்ணைப்படியில் ஏறிக்கொள்கிறான். ஒட்டைக் குடையை மடித்து ஒரு மூலையில் வைத்துவிட்டு அவன் சுற்றுப் புறத்தை ஒரு நோட்டம் விடுகிறான். அங்கே வேறு யாரு மில்லையெனக் கண்டதும் ஒரு நாற்காலியில் அமர்ந்து சிவகாமியை முறைத்துப் பார்க்கிறான்.
'அடேயப்பா. நான் ஏதோ ஆசையோடு கேலி செய்ய உங்களுக்குக் கோபம் வந்திட்டுதாக்கும். என் ஆசை அத்
தான் இல்லையா..?'கூறிக்கொண்டே அவள் அவனை அன்
52
போடு பார்க்கிறாள். அப்போது பார்த்துக் குடை "படா' ரெனக் கீழே விழுகிறது. சிவகாமி ஓடிச்சென்று விழுந்த குடையை எடுத்துவைக்கிறாள்.
'விடு சிவகாமி. ஒட்டைக் குடையை நீ தொடக்கூடாது. என்னுடைய ஓட்டைக் குடை என்னுடனேயே இருக்கட் டும்." அவன் கோபந் தீராமல் பதிலளிக்கிறான்.
"ஓட்டைக் குடை உங்கள் உடமையென்றால் அது எனக்கும் சொந்தம்தானே. பெரிய கோபம் வந்திட்டுது என்ர குட்டி அத்தானல்ல! சிரியுங்கள். உம். ஒருமுறை ஒரேயொருமுறை மட்டும் சிரியுங்கள். நீங்கள் சிரிக்காட்டி நான் அழுவன்." அவள் கூறி முடிக்கவில்லை. அவன் சிரித்து விடுகிறான். அவனுடன் கூடச் சேர்ந்து அவளும் சிரிக்க அந்த வீடே அவர்கள் சத்தத்தில் அதிர்கிறது. இந்த நினைவு சரவணனின் உள்ளத்திற் புத்துயிர் பெறுகிறது.
'தம்பி, (ண்றைக்குக் காலையில் சிவகாமியைக் கண்ட னான்."" பொன்னையா மிகவும் மெதுவாகக் கனகசுந்தர னுக்கு மட்டுங் கேட்கும்படியாகக் கூறுகிறார். ஆனால் , சரவணனும் தன் காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு அந்த சம்பாஷணையைத்தான் கேட்கிறான் என்பது அவ் ருக்கோ, கனகசுந்தரனுக்கோ தெரியாது. தெரிந்திருக்க நியாயமுமில்லை.
'உண்மையாகவா!' என்று தன் கேள்வியில் ஆச்சரியந் தொனிக்கக் கேட்கிறான். கனகசுந்தரம்,
'பின்ன என்ன? பொய் சொல்றன் என்று நினைத் தாயே..? தம்பியாணா அவளைக் கண்டனான். முத்துக் குமரனைத் திருமணஞ் செய்துகொள்ள விருப்பமா? என்று கேட்டன். விருப்பமோ விருப்பமில்லையோ தன் தந்தை யின் ஆணையைத் தட்டமுடியாமல் இருக்காம் என்றுகூறிக் கண்ணீர் விட்டது. அதைப்பார்த்த எனக்கும் கண்ணில் "பொலபொல' என்று கண்ணிர் வடியத் தொடங்கிவிட்
53
Page 39
டது. நான் பின்ன வேறொன்றும் பேசாமற் திரும்பிவிட் டன்" என்று அவர் கூறி முடித்தபோது சரவணனின் உள் ளம் கொதித்தது. அந்தக் கொதிப்பு ஒரு கவிதையாக மலர்கிறது.
தந்தைதா யார் மகட்குத்
தலைவற் றெரிவரெனும் இந்த மொழிக் கியாது ரைப்பா
யென்னிலிவர்தாம் வேண்டும் அந்த ம ன் றன்னைமக
ளந்தோ விரும்பிலளேள் தந்தைதா யார்க்கென்னாந்
தவப்ப தவனன்றோ சார்ந்து நீ தோகையிடஞ்
சாற்றுதியற் பைங்கிளியே.
அதே நேரத்தில் அவன் உள்ளம் பலதையும் சிந்திக் கிறது. ஒரு ஆண்மகன் சிவகாமியைப்போல் மூடத்தன மாக நடந்துகொள்ளமாட்டான். அவனைப் பார்த்து அவ. னது பெற்றோர்கள் நீ இன்னாரைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தால் கண்டிப்பாக அவன் திருமணஞ் செய்துகொள்ளப்போவது நானா? நீங்களா? எனக்கேட்டே இருப்பான். சிவகாமிக்கு மட்டும் ஏன் இப் படி ஒரு துணிவு ஏற்படமாட்டேன் என்கிறது. சிவகாமிக்கு மட்டுந்தான் இந்தத் துணிவில்லையா? அல்லது பெண்க ளாகப் பிறந்த அத்தனை பேருக்குமே துணிவில்லையா. ? என்றெல்லாம் சிந்தித்துக்கொண்டேயிருக்கிறான்.
மழை இடைவிடாமற் பெய்துகொண்டே இருக்கிறது. பொன்னையா கனகசுந்தரனுடன் ஏதோ பேசிவிட்டுத் திரும் பிச் செல்கிறார். சரவணன் அவர் ஏன் வந்தார் என்று கூடக் கவனிக்காமல் தன் சிந்தனையிலேயே ஈடுபட்டிருக் கிறான். கனகசுந்தரம் அவனைக் குழப்பாமல் தன்பாட்டுக்கே போய் அமர்ந்துகொள்கிறான்.
சிவகாமியின் கோழைத்தனத்தை நினைக்க நினைக்க அவன் உள்ளங் கொதிக்கிறது. சீ! இவ்வளவு அடிமைத் தனமான வாழ்க்கை வாழ்வதைவிட இறந்துவிடுவது எவ்
54
வளவோ தேவலை என மனதிற்குட் பொருமிக்கொள் கிறான். ‘சிவகாமி கொஞ்சந் துணிவு பெற்று உன் பெற் றோரிடம் முத்துக்குமரனைத் திருமணஞ் செய்துகொள்ள முடியாது என்று கூறிவிடு. அதனால் இருவரின் வாழ்வை மலர்வித்த பெருமை உன்னைச் சாரும் என்று தனக்குள் ளேயே பேசிக்கொள்கிறான். அந்த நிலையில் அதைக் கவிதை யாகப் பாடவேண்டும் என்ற எண்ணம் உதிக்கிறது அவ னுக்கு. நினைத்தவுடன் கவிதை பாட முடிகிறதா..? அப் படியே சிறிது நேரம் அமர்ந்திருந்து சிந்தித்துவிட்டுப் பாடத் தொடங்குகிறான்.
தந்தை யொருவன் மகற்குத்
தான் விரும்புமோர் மகளை
மைந்த மணவெனலும்
மைந்தன் வணங்கி யெழுந்
தெந்தாயான் வேண்டே
னிவளை விரும்புதியேல்
தந்தாய் மணத்தியெனச்
சாற்றினனென் றேயுரைப்பர்
தையலிட மிக்கதை நீ
சாற்றுதியாற் பைங்கிளியே.
கவிதையைத் திருப்பித் திருப்பிப் பாடிக்கொண்டே எழுந்து உள்ளே செல்கிறான் சரவணன். அவன் உள்ளத் தில் அமைதியில்லை. சிந்தனைக்கு இடமிருக்கவில்லை. அப்போது அது வெறும் சூன்யமாகவேயிருந்தது.
55
Page 40
12
மூன்று நாட்கள் இடைவிடாது பெய்த மழை ஒரு படி ஓய்ந்தபின் எங்கும் கதிரவனின் ஒளிக் கதிருக்காக ஏங்கி நின்ற மக்கள் கூட்டம் அதில் இன்பங்காணத் துடித்து வெளிவந்தபோது சரவணனும் மெதுவாகத் தெருவாயிலை நோக்கி நடக்கிறான். சூரியனின் செங்கதிர்கள் அவன் மேனி யிற் பட்டுத் தெறித்தபோது அவனது உடலுக்கும் உள் ளத்துக்கும் அது இதமாக இருந்தது. அந்த மகிழ்ச்சியில் அவன் தன் மேனியை ஒருமுறை சிலுப்பிக்கொள்கிறான். அந்த மெல்லிய காலை வெயில் இடைவிடாது பெய்த மழைக் குளிரால் விறைத்திருந்த உடலுக்கு ஒத்தணம் போடுவதுபோன்று அமைந்திருந்தது.
அவன் வாயிலில் நின்றபோது அவனது தூரத்து உற வினர் வேலுப்பிள்ளை அவன் வாயிலைக் கடந்து சென் றார். அவன் நிற்பதைப் பார்த்துவிட்டு ஏதாவது பேசி வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் 'என்ன தம்பி எப் Լյւգ, மழை?" என்று வினவினார். சரவணன் பதிலுக்குச் சிரித்துவைத்தான். 'தம்பிக்கு இப்ப பேசக்கூட இயக்க மில்லை வீணா மனதைப்போட்டு அலட்டிக்கொள்ளாதே. நேற்று வரை சிவகாமியோட கைகோர்த்து விளையாடித்
56
திரிந்த உனக்கு இது பெரிய தண்டனைதான் ராசா. எண்டாலும் என்ன செய்யறது.மனதைத் தேற்றிக்கொள்.'" வேலுப்பிள்ளை தன் பாட்டுக்கே பேசிக்கொண்டுபோனார். இட்ையில் ஏதாவது பேசித் தடுக்காவிட்டால் மனுசனிடம் இருந்து தப்பமுடியாதென்பதை உணர்ந்துகொண்ட சர வணன் 'அதுசரி அண்ணே. நீங்கள் எங்க வெள்ளனயோட இந்தப்பக்கம். '' என்று கேட்டுவைத்தான்.
* யாரைத் தம்பி என்னையே கேட்கிறாய்..? என்ர மகளுக்கு ஒரு பொடியன் பிறந்தது தெரியுமல்லே. அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் போதவில்லைத் தம்பி. பரியாரி. யார் பசும்பால் கொடுக்கட்டாம். பசும்பால் எண்டால் கண்டவரிடத்தும் வாங்கிக் கொடுக்கலாமே தம்பி .? அது தான் எங்கேயோ அண்மையில் கன்றை ஈன்ற பசுவொன்று விலைக்கிருக்காம். ஒரு நேரத்துக்கு ஒன்றரைப் போத்தல் கறக்குமாம். பின்னத்தான் பொன்னையா அண்ணனை அழைத்துச் சென்று காட்டிப்பார்க்கலாம் என்று வந்த னான். எனக்குப் பசுவைப்பற்றி அவ்வளவு தெரியாது. காசைக்கொடுத்து வாங்கிற பொருளல்லே. கண்ணை மூடிக்கொண்டு உன்ர மாமா மருமகனை வாங்கியதுபோல வாங்கலாமே..? அதுதான் இன்றைக்கு மழை வெளிச் சிருக்கெண்டு வெள்ளனயோடவந்தனான். எனக்கும் நேர மாகுது. அப்ப வரட்டே தம்பி.?' −
கூறிவிட்டுச் செல்லும் வேலுப்பிள்ளையையே பார்த்துக் கொண்டிருக்கிறான் சரவணன். அவர் கூறியதும் நியாய மாகவே பட்டது அவனுக்கு. ஆயினும் அவர் பேசிய விதம் அவனுக்குப் பிடிக்கவில்லை. சிவகாமியின் பெறுமதியைவிடப் பசுவின் பெறுமதி உயர்ந்துவிட்டதுபோற் தோற்றுகிறது அவனுக்கு. சிவகாமியிடம் அவனுக்கு ஒரு ஆழ்ந்த அணு தாபம் தோற்றுகிறது. கடந்த பிறப்பில் அவள் என்ன கொடுமை செய்தாளோ என்று மனம் உருகுகிறான்.
முத்துக்குமரனைப்பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசிய தில் இருந்து அவருடன் சிவகாமி சந்தோஷமாக வாழ
57
Page 41
முடியாது என்ற முடிவுக்கு அவன் எப்போதோ வந்துவிட டான். வீட்டுக்குத் தேவையான ஒரு பசுவை வாங்குவதற்கே மனிதர்கள் பிறரது உதவியை நாடுகிறார்களென்றால் ஒரு பெண்ணுக்குத் தேவையான கணவனைத் தேர்ந்தெடுக்கும் போது நாலு பேரைக் கலந்தாலோசிக்க வேண்டாமா? சிவ காமியின் திருமணம் அவனுக்குப் பெரும் புதிராகவேயிருந் தது. சின்னக் குழந்தைகள் வீடுகளில் செய்து விளையாடும் பொம்மைக்கலியாணம் போன்றதுதான் அது என நினைக் கிறான். குழந்தைகளும் அப்படித்தான் திடீர் என ஒரு எண்ணம் பிறந்தால் பொம்மைக் கல்யாணம் வைத்துவிடு வார்கள். சிவகாமிக்கும் அப்படித்தான் ஒன்று நடக்கப் போகிறது. ஆகையால் அவளும் பொம்மையாகிவிட் டாளா ? அல்லது பொம்மை ஆக்கப்பட்டுவிட்டாளா? என்ற கேள்வியில் எழுகிறது ஒரு கவி. V
தம்மனைக்கோர் பசு வேண்டிற் றாம் பலகாற் பார்த்திருந்தும் பின்னுந் துணிவிலராய்ப் பேதுறுதன் மாந்தர் குணம்
என்னே மணவினையே விமைப் பொழுதி லேமுடிப்பார்
சின்னப் பதிமைகொடு சிறார் செய்மணம் போலுமரோ
தெரிவையவட் கிம்மாற்றஞ் சீர்க்கிளியே கூறுதியால்,
சிவகாமிமேல் ஒருபுறம் ஆத்திரம் இருந்தாலும் மறு புறம் அவனுக்கு அனுதாபம் பிறக்கிறது. சிவகாமி தனக் குக் கிடைக்கவில்லையே என்ற துன்பத்தைவிட சிவகாமிக் குக் கிடைக்கப்போகும் கணவன் அவளுக்கு ஏற்றவனில்லையே என்பதுதான் அவன் கவலை. முத்துக்குமரனுக்கும் அவளுக்
கும் உள்ள வயது வித்தியாசத்தை நினைத்துப் பார்க்
கிறான். ஒன்று இரண்டு வயதல்ல. பதினாறு, பதினேழு வயதுக்கு மூத்தவனான ஒருவனைச் சிவகாமி மணந்து கொள்ளப்போகிறாள் என்பதே புற்றுநோய்போல அவனை
S8
வாட்டுகிறது. ஆண் என்னும் உருவத்தில் ஒரு அரசாங்க உத்தியோகமும் வகித்துக்கொண்டால் அதை இந்தப் பெண் கள் ஒரு தராதரமாகக் கருதிக்கொள்கிறார்களோ தெரி யாது. முத்துக்குமரனுக்கும் அந்த இரண்டு தராதரத்தை யும்விட வேறு எந்தத் தராதரமும் கிடையாது சிவகாமி யைக் கைப்பற்ற.
சிவகாமியையும் முத்துக்குமரனையும் சரவணன் மன தில் ஒப்பிட்டுப்பார்க்கிறான். அப்போது அவர்களது சிறு பராயத்தில் நடந்த சம்பவம் ஒன்று அவனுக்கு ஞாபகம் வருகிறது. சரவணனும் கனகசுந்தரமும் பாடசாலையில் சிறார்களாகப் படித்துக்கொண்டிருந்த காலம் அது. அப் போது பாடசாலை நாடகத்தில் அவர்கள் இருவரும் முக் கிய பங்கெடுத்து நடிக்கவேண்டி ஏற்பட்டது. சரவணன் தசரதனாகவும், கனகசுந்தரன் கைகேயியாகவும் நடித்தனர். கனகசுந்தரம் சரவணனைவிடச் சிறிது குட்டையாகவும் பெண்மைத்தன்மை உள்ளவனாகவும் இருந்ததால் அவன் பெண் பாகமேற்கவேண்டி ஏற்பட்டது. அவர்களது நடிப் பைப் புகழாதவர்களே இல்லையெனலாம்.
உலகத்தில் உள்ள அத்தன்ை பேர் புகழ்ந்தாலும் சிவ காமியின் வாயிலிருந்து வரும் ஒரு புகழுரைக்கீடாகுமா அவையெல்லாம்? ஆகவே சரவணன் தன் நாடக பாத்திர வேடத்தைக் களையாமலே தன் தாயாருக்குக் காட்டும் சாட்டுடன் வீட்டுக்குச் சென்றான். அங்கே சிவகாமியும் அவனது வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள். தம்பி முத்துப்பிள்ளையும் அவரது பாரியாரும் தங்களது புத்திரச் செல்வங்களுக்கு எங்கே திருஷ்டிபட்டுவிட்டுவிடுமோ எனப் பயந்து திருஷ்டிகழித்தனர். சிவகாமி மட்டும் மெளனமாக இருந்தாள். அதனால் சரவணனே அவளிடஞ் சென்று 'எப் படி என் வேடம்?' என்று வினவியதற்கு. "ஐயே இந்தக் கிழட்டு வேடத்தில் உங்களைப் பார்க்க எனக்குப் பிடிக் கவேயில்லை' என்று கூறியது அவன் இதயத்தில் ஒலிக்கிறது.
59
Page 42
கிழட்டு வேடத்தையே விரும்பாத அவள் இப்போது ஒரு கிழவனுக்கே மாலைகுடவேண்டி ஏற்பட்டது யாரு டைய துரதிர்ஷ்டமோ என நினைத்துப் பாடுகிறான் ஒரு கவிதை,
ஆணாய்ப் பிறந்த லவசியம் வேறோர் குணமும் பேணார்த மின்னுயிராம்
பெண்ணைக் கொடுத்திடுவார் நானார் மதியார்
நகைத்தே களித்திடுவார் In resor T ir Lu Friumf (uu
மடலாக கழித்திவரே வாள்விழியென் மங்கையிடம்
மருங்கிளியே கூறுதியால்.
கவிதையைப் பாடி முடித்த சரவணனின் கண்கள் கலங்கு கின்றன. சிவகாமியை நினைத்து அவன் இதயங் குமுறு கிறது.
60
13
சரவணன் இப்போதெல்லாம் நடைப்பிணமாகிவிட் டான். அவனால் எதிலுமே ஈடுபடமுடிவதில்லை. அவனது நிலையைப் பார்த்த அவர்கள் வீட்டு நாய் அவன் அருகில் அமர்ந்து அவனது காலை நக்கிக்கொண்டிருக்கிறது. அதன் தலையை வருடிக்கொடுத்தபடி அதன் அன்பொழுகும் கண்ணை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறான் சர வணன். அந்த நாய் சிவகாமியை விட அதிக விசுவாச முள்ளதாகப் பட்டிருக்கவேண்டும் அவனுக்கு. அந்த நாய் அவன் காலையே சுற்றிக்கொண்டிருப்பதை அவதானித்த தம்பிமுத்து அதைச் சத்தமிட்டு அழைக்கிறார். அவர் குர லைக் கேட்டவுடன் அது வாலைக் குழைத்துக்கொண்டு ஓடிவருகிறது. அதைப் பிடித்துச் சங்கிலியில் பிணைத்து அது படுப்பதற்காக ஒரு விரிப்பையும் போட்டுவிட்டு அப் பால் நகருகிறார் தம்பிமுத்து. ஆனால் நாயோ படுக்கை விரிப்பைத் தன் காலால் மறுபுறந் தட்டிவிட்டு வெறு நிலத்தில் உடலைக் குறுகிப் படுத்துக்கொள்கிறது.
அதைப் பார்த்த சரவணன், தனக்குள்ளேயே சிரித்துக்
கொள்கிறான். காட்டில்கூட இப்படித்தான். குளிர்ச்சி பொருந்திய சோலைக் காட்டை விட்டுச் சில யானைகள்
6
Page 43
பாலைவனத்தை நோக்கிப் படையெடுத்து அங்கு சென்ற பின் அந்தச் சூட்டைத் தாங்கமுடியாமல் அவதிப்படுமாம். இப்படி அவன் சிறுவயதாக இருக்கும்போது யாரோ சொல் லக் கேள்விப்பட்டிருக்கிறான். அது எவ்வளவு உண்மை யான தத்துவம் என்பதைத் தற்போது அநுபவரீதியாக உணர்ந்துகொண்டான்.
திருமணம் என்றால் என்ன? தன்னைத்தானே பல முறை கேட்டுக்கொள்கிறான் சரவணன். திருமணஞ் செய்து கொள்வதால் ஏற்படுவது இன்பமாக இருந்தால் அது எப் படியான இன்பமாக இருக்கவேண்டும் என்று சிந்திக்கிறான். சிறு வயதில் படித்த ஒரு பாடல் அவனுக்குக் கைகொடுக் கிறது. W
"காதலர் இருவர் கருத்தொருமித்து
ஆதரவுபட்டதே யின்பம்"
அந்த இரண்டு அடிகளும் சிவகாமியையும், அவனையும் நினைவூட்டுகின்றன. அவர்கள்தான் எவ்வளவு அன்பாகப் பழகினார்கள். சின்னக் குழந்தைகளாக இருக்கும்போதே அம்மா - அப்பா விளையாடி அதை நிஜவாழ்க்கையிலும் நிரூபித்துக்காட்டக் கஷ்டப்பட்டவர்கள், மனம் ஒத்த இவர் கள் இருவரையும் பிரிப்பதால் 'எவருக்கும் எந்தவித நன்மை யும் ஏற்படப்போவதில்லை என்பது சரவணனுக்குத் தெரி யும் ஆயினும் தனக்குத் தெரிந்ததை அவன் யாருக்கு எடுத்துக்கூற முடியும? அவன் கூறுவதை யார் காது கொடுத் துக் கேட்கப் போகிறார்கள்? w w
அவன் நித முங் கண்கலங்குவதைப் பார்த்து அவனது சகோதரனும் தந்தையுந்தான் துன்பப்படுகிறார்கள். அவ னுக்காக அனுதாபப்பட வேறு யார் இருக்கிறார்கள்? ஒரு வேளை சிவகாமி வீட்டில் இருந்தபடி யாருக்குந் தெரி யாமல் அவனுக்காக அனுதாபப்படலாம். இன்னும் எதிர் வீட்டுப் பொன்னையா போன்றவர்கள் இரண்டு ஆறுதல் வார்த்தை கூறலாம். ஏனையோர் அவனுக்காக அனுதாபப்
62
பட்டாலும் அது அவர்கள் நெஞ்சின் ஆழத்தில் இருந்து வருகிறதா என்பது சந்தேகத்திற்குரியது.
இங்கே சரவணன் அழுதுகொண்டிருக்கும் அதே வேளை யில் அங்கே சிவகாமி கண்ணீர் சிந்திக் கதறிக்கொண்டிருப் பாள். பிள்ளை யொருபக்கமும் பெண் மறுபக்கமுமாக அழுதுகொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு திருமணம்..! இந்தத் திருமணத்தால் யார் என்ன சுகத்தை அநுபவிக்கப் போகிறார்களோ..?
வண்ண விளம் பைங்கிளியே
வையகத்து மணமினிதேற் பெண்ணொருபால் விம்மியழப் பிள்ளையொரு பாலலறத் தண்ணறு பூஞ்சோலை விட்டுத் தாங்கரிய வெஞ்சுரமே நண்ணிய வெங்கரியதுபோல்
நாயகன் துன் புறுவதெனை நாரியர்பா லிம்மாற்ற
நவில்வாய் பசுங்கிளியே!
சிந்தனையில் அவனகத்தே கவிதை உருவெடுக்கிறது.
திடீர் எனத் தபால் என்ற குரல் அவன் சிந்தனை யைக் குலைக்கிறது. அவன் மெதுவாக எழுந்து சென்று காகிதத்தைப் பெற்றுக்கொள்கிறான். அது அவன் அப்பா வின் முகவரிக்கு வந்துள்ள கடிதம். அதில் பூசப்பட்டிருக் கும் மஞ்சள் அது ஒரு திருமண அழைப்பிதழ் என்பதை அவனுக்கு நினைவூட்டுகிறது. பிரித்துப் படித்துவிடலாமா என்ற சபலம் தோன்றியபோதும் தந்தைக்கு முகவரியிடப் பட்டிருக்கும் ஒரு கடிதத்தைப் பிரிப்பது நாகரீகமல்ல என்ற எண்ணத்தில் அதைத் தன் தந்தையாரிடம் கொண்டு நீட் டுகிறான். அவன் முன்னிலையிலேயே அதைப் பிரித்துப்
63
Page 44
படித்த அவன் தந்தை தன் நண்பன் சுப்பிரமணியத்தின் மகளுக்குத் திருமணமென்பதைக் கூறுகிறார்.
சுப்பிரமணியத்தின் மகள் கமலாவை அவனுக்கு நன்கு தெரியும். அவளுக்கும் அவனுக்கும் ஒரே வயதுதான் இருக் கும். அவளும் அவன் மைத்துனனைத்தான் சிறுவயதிலி ருந்தே விரும்பியும் வந்தாள். சிவகாமியையும் அவனையும் போலவே அவர்களும் மணல் வீடு கட்டி விளையாடி இப் போது நிஜமாகவே வீடு கட்டி வாழப்போகிறார்கள். அவர் களை நி0 னக்க அவனுக்குப் பெருமையாக இருந்தாலும் அவர்களுடன் சிவகாமியையும் தன்னையும் ஒப்பிட்டுப் பார்க் கும்போது அவனுக்கு மனம் நிறைந்த வேதனையாக இருந்தது.
தங்களது காதலும் இப்படி மலர்ந்திருந்தால் இன்று அவனது அப்பாகூடப் பெருமையோடு அவர்களுக்கு ஒரு திருமண அழைப்பிதழ் அனுப்பியிருக்கலாமே என்று சிந்திக் கின்றான் - அவர்களது காதல் நிறைவேறமுடியாது என்பது தெரிந்தும் அதையிட்டு அவன்ால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. உலகிற் பிறந்த ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்துக் கருத்தொருமித்துத் திரு மணஞ் செய்துகொள்ள முடியாவிட்டால் அதைவிடப் பெரிய துன்பம் வேறு என்னதான் இருக்கமுடியும்? மண் ணிற் பிறந்து உண்மையான இன்பத்தை நுகராமல் வாழ் வது அத்தனை பெரிய துரதிர்ஷ்டம் என ஏங்குகிறான். உள்ளத்தால் ஒன்றுபட்ட இருவர் செய்துகொள்ளும் திரு மணமே உண்மையான இன்பம். உலகத்திலுள்ள துன்பங் கள் அனைத்தையும் களைந்தெறியக்கூடிய சக்தி அதற்கு மட்டுந்தான் உண்டு என எண்ணிப் பாடுகிறான்.
மண்ணுலகில் யாம்பிறந்து
வாழ்வதினா லாம் பயனென்
எண்ணரும் வெந்துயர்நோக்கி
யின்பஞ் சுகியேமேல்
பெண்ணா னிருவருமே
பேரன் பொடு வாழின்
நண்ணாது வெந்துயரம்
நற்கிளியே கூறுதியால்
நணுகுமா லின்பமெலாம்
நற்கிளியே கூறுதியால்,
'பெண்ணாணிருவருமே பேரன் பொடு வாழின் நுண் ணாது வெந்துயரம்" இந்த அடிகள் அவன் உதடுகளில் திருப்பித்திருப்பி அசை போடுகின்றன. ஒரு பெண்ணும். ஆணும் மனமொருமித்து இல்லறத்தில் ஈடுபட்டால் அவர் களை எந்தவித துன்பமும் அணுகமுடியாது. அவர்கள் இன்பத்துக்கு எந்தவிதமான சுகத்தையும் நிகராகக் கூறவும் முடியாது. அப்படியான அமைதி நிறைந்த இன்ப வாழ்வு கிடைப்பது மிகவும் அரிது. கைக்கெட்டியது வாய்க்கெட்ட வில்லை என்று கூறுவார்கள். அதே நிலைதான் சரவண னுக்கும் வந்துள்ளது. தனக்குரியவள் தான் சிவகாமி எனக் கணவு கண்டுகொண்டிருந்தவனுக்கு இப்படியொரு பேரிடி வந்திருக்கவேண்டாம். இப்படியெல்லாம் சிந்திக்கின்றான் சரவணன்.
6S
Page 45
14
சரவணனது நிலை வரவர மோசமாகிக்கொண்டே வந்தது. இப்போது மற்றவர்களுடன் பேசுவதைக்கூட அவன் சிறுகச் சிறுகக் குறைத்துக்கொண்டான். யாராவது வலிந்து பேசினாற்கூட ஒரு வார்த்தை அல்லது இரு வார்த்தையிற் பதில் கூறப் பழகியிருந்தான். அவ்வளவுக்கு அவன் உள்ளம் விரக்தியடைந்திருந்தது. அவனது நிலை மற்றவர்களைக் கவலைக்குள்ளாக்கியது. தன் அருமந்த மகன், குடும்பத்தின் தலைப்பிள்ளை, செல்லமாக வளர்ந்த பையன் இப்படி நடைப்பிணமாகிவிட்டானே என்று நினைக்க நினைக்க தம்பிமுத்துப்பிள்ளையின் வயோதிப இதயம் வேதனையாற் சாம்பியது.
சரவணனோடு பேசுவதிற் பலனில்லை என்பது அவ ருக்குப் புரிந்ததால் அவர் அவனுக்கு ஆறுதல் கூறுவதைக் கூட நிறுத்திக்கொண்டார். நடப்பது நடக்கட்டும் என்ற அலட்சிய மனப்பான்மை அவரை வாய்மூடி மெளனியாக் கியது. தள்ளாத வயதில் அவருக்கு இந்தச் சோதனை மிகுந்த வேதனையாகவே இருந்தது. எதையும் தாங்கக் கூடிய சக்தியை அவர் இதயம் எப்போதோ இழந்துவிட் டிருந்தது. அதனால் அவரும் ஒரு முதிர்ந்த நோயாளியைப் போன்று தன் பொழுதையெல்லாம் படுக்கையிலேயே கழிக் கத் தொடங்கினார்.
66
மலையே வந்தாலும் தலையே சுமக்கக்கூடிய வலிமை யான வாலிப இதயத்தோடு இருந்த கனகசுந்தரனுக்கும் இவர்களைப் பார்க்கப் பார்க்க தன்னிடம் இருக்கும் சிறு
தென்புகூட விடைபெற்றுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்
டது. அவனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. எங் காவது கண் காணாத இடத்திற்குப் " போய்விட்டாற் தேவலைப்போல இருந்தது. அவன் யாருக்கு ஆறு த ல் கூறமுடியும்? தம்பிமுத்துப்பிள்ளையைப் பார்க்கும் ஒ வ் வொரு நிமிடமும் அவன் இதயம் பாகாய் உருகிய்து. இந்த வயோதிபப் பருவத்தில் அவருக்கு இப்படி ஒரு பேரிடி வந்திருக்கவே வேண்டாம் என ஏங்கியது உள்ளம்.
மனவருத்தம் அவர் உயிரைக் குடித்துவிடுமோ என அஞ்சினான் சரவணன். அப்படியான அசம்பாவிதங்கள் அவனாற் தாங்க முடியாது. தாங்கவே முடியாது. மணி தன் பிறக்கும்போதே இறப்பு என்ற ஒன்று நிச்சயம் என் பதை அவன் உணர்ந்துதான் இருந்தான். அதற்காக நிம் மதியின்றி இப்படி நடைப்பிணமாக நாளாந்தம் அணுஅணு வாகத் தன் தந்தையின் உயிர் பிரிவதை அவன் விரும்ப வில்லை. தள்ளாத வயதில் பெற்றோர் நிம்மதியாகச், சந் தோசமாக தம் வாழ்நாளைக் கழிக்க உதவி செய்வது தனயரின் தலையாய கடன் மட்டுமல்ல, அது கடமையுங் கூட என்பதில் அசையாத நம்பிக்கை வைத்திப்பவன் அவன். இதுவரை தன்னையும், சிவகாமியையும்பற்றியே சிந்தித் துக்கொண்டிருந்தவன் இப்போது தம்பிமுத்துப்பிள்ளை யைப்பற்றியும் தீர்க்கமாகச் சிந்திக்கத் தொட்ங்கினான்.
ஆயினும் சிவகாமியின் நினைவு அவனைவிட்டு அகல் வதாக இல்லை. எவ்வளவுக்கெவ்வளவு அவளை மறக்க அவன் முயற்சித்தானோ அதைவிட அதிகமாக அவளது நினைவு அவனைக் கொன்றுகொண்டே வந்தது. தன் மனதுக்கு எவ்வளவு ஆறுதல் கூற முயன்றாலும் அது அவன் பேச்சு எதையுமே சட்டை செய்ய விரும்பவில்லை. சிவ காமியின் தாமரை வதனத்தைக் காணாது வாழமுடியாது என்று திட்டவட்டமாக நம்பினான். இந்நிலையில் அவன்
67
Page 46
இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்தான். அந்தத் துடிப்பிலுங்கூட அழகான் கவிதை ஒன்று பிறக்கிறது.
அன்ன நடை மைவிழியா
ளம்பொன் மலர்க் கொம்பனையாள் என்னிதய தாமரைக்கோ
ரிலக்குமியாம் பெண்ணரசி கன்னல் மொழி கேளாது
கஞ்சமுக நோக்காது மண்ணிலத்து வாழேன்
மடிந்திடுவன் மங்கையர்க்கு மற்றிப்பழி சேருமென
மாழ்குவேன் பைங்கிளியே. முன்னொருநாள் சிவகாமியின் முகத்தைத் தாமரைக் கும், குரலைக் கற்கண்டுக்கும் உவமித்துக் குறும்பு செய்தது ஞாபகத்திற்கு வரவே சரவணன் இப்படி உவமித்துப் பாடி னான். தன்னைத் தாமரையாகவும், சிவகாமி அதில் வதி யும் இலக்குமியாகவும் உருவகித்துப் பாடியதில் அவனுக் கொரு திருப்தி. அவளது பிரிவின் வேதனையைத் தாங்க முடியாமல் அவன் மரணமடைய நேரிட்டால் அந்தப் பழி அவளையே சாரும் என்ற கருத்துப் படவே அவன் அப் படிப் பாடினான்.
அவனுக்கு இறைவன் அளித்த இயற்கை வளத்தால் பாடல்கள் மலர்ந்துகொண்டேயிருந்தன. ஆயினும் அத னால் அவனுக்கு எந்தவித ஆத்ம திருப்தியும் ஏற்பட்ட தாக இல்லை. அவனது இதயத்தைச் சிவகாமி ஆக்கிரமித் துக்கொண்டிருந்தாள். அதனால் திரும்பத் திரும்ப அவ ளைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தான் அவன். பெண் கள் சாந்தமான குணம் படைத்தவர்கள். மென்மையான இதயம் உள்ளவர்கள் என்றெல்லாம் அவன் கேள்விப்பட் டிருக்கிறான். அதைச் சிவகாமியிடம் கண்டுமிருக்கிறான். ஆயின் அந்த மென்மையான பண்பு இப்போது எங்கே போய்விட்டது.? ஒருவேளை சிவகாமி வேண்டுமென்றே தன் இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டாளா?
இதுகாலவரை கொடுத்த வாக்கை ஆண்கள் மீறிய தாகத்தான் அவன் கேள்விப்பட்டிருந்தான். வரலாறுகள்
68
காதற் காவியங்கள் எல்லாங்கூட அப்படித்தான் கூறியும் இருக்கின்றன. ஆண்கள் பச்சோந்தி போன்றவர்கள். சேறு கண்ட இடத்தில் மிதித்துச் தண்ணீர் கண்ட இடத்திற் கழுவுவது அவர்களுக்குக் சர்வ சாதாரணமான ஒன்று எனப் பலர் பேசுவதை அவன் கேள்விப்பட்டிருக்கிறான். அதை ஏற்றுக்கொள்ளவும் அவன் தயாராக இருந்தான். ஆனால் ஒரு பெண் தன் காதலனை ஏமாற்றினாள் என அவன் கேட்டதுமில்லை படித்ததுமில்லை. பெண்கள் சமூகத்திற்கே சிவகாமியால் இழுக்கு ஏற்பட்டுவிட்டது என எண்ணிப் புழுங்கினான். அதற்காகச் சிவகாமியை அவனால் மன்னிக்க முடியாது! மன்னிக்கவே முடியாது!!
சிவகாமியின் மனதில் ஈவிரக்கமில்லையா? அல்லது சிறு வயது முதற்கொண்டே தன் உள்ளத்தில் நிரம்பியிருந்த இரக்க சிந்தையைக் கொன்றுவிட்டாளா ? அவள் செய்கை கொடுமை நிறைந்ததாகப் புலப்பட்டது அவனுக்கு. சில வேளை தான் செய்வது கொடுமை நிறைந்த செயல் என் பதை அவன் உணரவில்லையோ? சிவகாமி நீ எனக்குச் செய்தது கொடுமை. அதை நான் உன்னிடம் கூறமாட் டேன் - கூறமுடியாது. ஆயினும் என் உள்ளத்து உணர்ச்சி களை எல்லாம் கவிதைமூலம் உனக்கு எடுத்துச்சொல் கிறேன் கேள். ஒ. அதைக் கேட்கமுடியாத தூரத்தில் அல்லவா நீ அகப்பட்டுவிட்டாய். என் உணர்ச்சிகளை யெல்லாம் எப்படி நான் உனக்கு எடுத்துச் சொல்வது? இதோ என் பைங்கிளிமூலம் உனக்குத் தூதனுப்புகிறேன்.
என்னிதயந் தனதாக்கி
என்னுயிருந் தானேயாய் என்னையிவண் வருத்துதனா
னிவட்கழகோ பைங்கிளியே மன்னிதுவோ பெண்கள் குண மாற்றா ரினியரன்றே என்னே யிரங்கா
ளிரங்காள் பசுங்கிளியே ஈது கொடி தீது கொடி
திசையாய் பசுங்கிளியே. சரவணன் தன்னை மறந்த பைத்தியக்காரனைப்போற்
பாடுகிறான்.
69
Page 47
15
காலம் என்ற வாடாமலரில் இருந்து நாட்கள் என்ற நறும் இதழ்கள் யாருக்கும் கவலைப்படாமல் உதிர்ந்து கொண்டேயிருந்தன. சரவணன் தன் தலையில் விழுந்த பேரிடியில் இருந்து மீட்சி பெற்றதாகத் தெரியவில்லை. சவரம் செய்யப்படாமல் தன் இச்சைக்கு நீண்டு வளர்ந்த தாடியுடன், கலைந்த கேசத்துடனும் திண்ணைக் குந்தில் அமர்ந்திருக்கிறான் சரவணன். அவன் இருந்த இடத்தில் இருந்து பார்க்கும்போது அடுத்த வீட்டு ஈரப்பலா மிகவும் நன்றாகத் தெரியும். பாலர்களாக இருந்தபோது சிவகாமியும் அவனும் விளையாடிய காட்சிகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அவன் நினைவுக்கு வருகின்றன. நினைவுக்கு வரா தவற்றைக்கூட அவன் வலிந்து நினைவுபடுத்திக்கொண் டான். அவற்றைத் திரும்பத் திரும்பத் தன் உள்ளத்திரை யிற் பதித்துப் பார்த்து அந்த நினைவில் இன்பமடைவதில் ஒரு தனிப் பிரியம் அவனுக்கு.
அன்றும் அப்படித்தான் அவன் எண்ணம் என்ற இரையை அசைபோட்டுக்கொண்டிருந்தான். சிறிது தள் ளிப் படுக்கையில் தன் உடலுக்கு மட்டும் சிறிது ஆறுத லைக் கொடுத்து உள்ளத்தை ஆறுதற்படுத்த முடியாத நிலையில் அவனையே உற்றுப் பார்த்தபடி படுத்திருந்தார்
70
தம்பிமுத்துப்பிள்ளை. தெரு வாயிலில் நின்று கனகசுந்தரம் மட்டும் புதினம் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது திடீர் எனச் சரவணனின் பார்வை சுவரின் மேற்பாகத்திற் பதிகிறது. அங்கே மாட்டப்பட்டிருந்த படங்களில் ஒன்று அவன் கவனத்தை ஈர்க்கிறது.
அந்தப் படத்தில் இருப்பது சிவகாமியும் அவனுந் தான். அவள் கூந்தலில் இருந்து இடதுபுறத்தோள் வழி யாகத் தவழ்ந்துகொண்டிருகிறது அவன் தன் கைபடப் பொறுக்கிக் கோர்த்துக் கொடுத்த மல்லிகைச்சரம், அந் தப் படத்தை அவர்கள் இருவரின் தலையிடி தாங்க முடி யாமல் தம்பிமுத்துப்பிள்ளை யாரிடமோ வாங்கிவந்த புகைப்படக் கருவியால் எடுத்திருந்தார். அதே படம் ஒன்று சிவகாமி வீட்டுச் சுவரிற்கூடத் தொங்கிக்கொண்டிருக்கும். அவளும் அவனும் இந்தப் படத்தின் கீழ் நின்று தங்கள் எதிர்கால வாழ்வைப்பற்றி எப்படியெல்லாமோ கற்பனை செய்திருக்கிறார்கள். இன்று அது கற்பனையாகவே முடி வடைந்துவிட்டது. v
சிவகாமி. படத்தில் இருந்த அவளை அவன் மான சீகமாக அழைத்தான். நீ என்னை மறந்துவிட்டாயா சிவகாமி? உன்னால் என்னை எப்படி மறக்க முடிந்தது? அப்படி என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நம்பவுந்தான் முடியவில்லை. உன்னால் என்னை மறக்க முடியாது சிவகாமி. என்னைப் பார்க்கமுடியாமல் என்னு டன் பேச முடியாமல் நீ வலோத்காரமாகத் தடை செய் யப்பட்டுள்ளாய். அதற்குக் காரணம் உன் பெற்றோராக இருந்தாலும் தனிப்பட்டவர்களை மட்டும் குற்றஞ்சாட்ட முடியாது. ஆயிரமிருந்தாலும் உன் சம்மதமின்றி இந்தத் திருமணம் நிச்சயமாக முடிவாகியிருக்க முடியாது. இருக் கவே முடியாது. ஆகவேதான் எனக்கு நீ துரோகஞ் செய் கிறாய் என்று என் மனங் குமுறுகிறது. ஏன்? என் அண் ணாவும் அப்பாவும்கூட உள்ளம் குமுறுகிறார்கள். நானும் அப்படித்தான் நினைக்கிறேனே தவிர என்னால் அதை நம்ப முடியவில்லை. பொருளில்லை என்ற ஒரேயொரு
7
Page 48
காரணத்திற்காக அறியாப் பருவத்தில் இருந்து அன்பு காட்டி வந்த என்னை வெறுத்து ஒதுக்கிவிட்டாயா..? முத்துக்குமாரனுடன் நீ இன்பமாக வாழமுடியுமா சிவ காமி..? வாழமுடியுமா? சரவணன் மனப்போராட்டத்தின் மத்தியில் துயரைத் தாங்கமுடியாது தலையை மடியிற் புதைத்தபோது படார்" என ஒரு சத்தங் கேட்டது.
அவன் ஆச்சரியத்தோடு தன் தலையை நிமிர்த்திப் பார்த்தபோது கனகசுந்தரனும் தம்பிமுத்துப்பிள்ளையும் நிலத்தில் எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந் தனர். அவனும் அவர்கள் பார்த்த திசையில் தன் கண் ணோட்டத்தைச் செலுத்தினான். அடுத்த கணம் அவன் கண்கள் சுவரின் மேற்புறத்தை அண்ணாந்து பார்த்தது. அங்கே படம் இருந்த இடம் வெறுமையாக இருக்கக் கண் ணாடிச் சட்டமிடப்பட்டிருந்த அந்தப் படம் அவன் உள் ளத்தைப்போல் நிலத்தில் சுக்குநூறாகிக் கிடந்தது. அவன் எழுந்து சென்று தரையில் சுக்குநூறாகக் கிடந்த அந்தப் படத்தை எடுத்துப் பார்த்தான்.
*சிவகாமி! உன் மென்மையான இதயம் இதைத் தாங் கிக்கொள்ளாது என்பது தெரிந்தும் உன்னைத் திட்டி விட்டேன். உன் மனம் நோகக்கூடாது. நீ மட்டும் என்னு டன் வாழச் சம்மதித்தால் இந்த உலகத்தில் வேறு எந்தத் துன்பமும் என்னை வாட்டாது. அவன் கண்கள் கலங்க வாய்விட்டுக் கதறுவதைக் கண்ட தம்பிமுத்துப்பிள்ளை அவ் விடத்தைவிட்டு மெதுவாக அகன்றார்.
கனகசுந்தரமும் தம்பியின் துயரைப் பார்த்துச் சகிக்க முடியாமல் வெளிப்பக்கஞ் சென்றான். சரவணன் மட்டும் தனியாக அந்தப் படத்தை வெறித்துப் பார்த்துக்கொண் டேயிருந்தான்.
அப்போது அவன் உள்ளத்துத் துன்பமெல்லாம் கவிதை யாக உருவெடுக்கிறது.
72
அந்தோ தவறுதவ றறியா
துரைத்தனன் யான்
பைந்தார்ப் பசுங்குழலாள்
பாவமறியாள் கிளியே
தந்தைதா யாரிலரேற்
றரியாளென் பாங்கருடன்
வந்தாள் மகிழ்ந்தாள்
வதிந்தாள் பகங்கிளியே
வானுலகி லின்பமெலாம்
வந்தனவாற் பைங்கிளியே.
சிவகாமி மட்டும் சரவணனுக்கு கிடைத்துவிட்டால் இந்த உலகத்தில் வேறு எதையுமே அவன் விரும்பமாட் டான். உலகத்திலுள்ள சகல பொருட்களுக்கும் நிகராக அவன் சிவகாமியை நேசித்தான்; அதனால் அவள் இல் லாமல் அவன் வாழமாட்டான். வாழவும் முடியாது.
அதனால் சிவகாமியின் உள்ளத்தை, அவள் விருப் பத்தை அறிய அவன் துடிதுடித்தான். சிவகாமியின் வாயி னால் அவள் விருப்பத்தை அறிந்துகொண்டால் அவளை அவள் பாட்டுக்கே விட்டுவிடலாம் என்பது அவன் நினைவு. ஆனால் அவளை எப்படிச் சந்திப்பது? எங்கே சந்திப்பது? என்பது இன்னுங் கேள்விக்குறியாகவே இருந்தது. அவ னைப் பொறுத்தவரை அவளிடம் செல்ல அவன் தயாராக இல்லை. இந்த நிலையில் அவனுக்கு வேறு வழி எதுவுமே புலப்படவில்லை.
அப்போது திடீர் என அவன் கண்கள் மரத்திற் பதி கின்றன. அன்றொரு நான் அவன் கண்ட அதே பைங்கிளி மரக்கொம்பரில் இருந்து அவனைப் பார்த்தபடியே இருந் தது. ஏன் இந்தப் பைங்கிளியைச் சிவகாமியிடந் தூதனுப் பக்கூடாது? சிந்தித்துப் பார்க்கிறான். அது கவிதையாகவே பிறக்கிறது.
み3
Page 49
74
பெண்மணியை யான் பெறுநாட்
பெற்றனளாற் செல்வமெலாம் மண்ணிதனுட் பிறிதொர் பொருள்
மதியேன் மதியேனால் ஒண்ணுதறன் னுடனேயா
னோருயிர் ருடலாகி மண்ணுலகின் மகிழ்ச்சியுடன் வாழ்வேன் பசுங்கிளியே மங்கையவள் மணமறிந்து
வருவாய் பசுங்கிளியே.
16
விரும்பிய ஒரு பொருள் கிடைக்காதபோதுதான் கவ லையும், துன்பமும் அதிகமாகின்றது. கிடைத்துவிட்டாலோ அதன் அருமை சில நாட்களில் அருகி அது வேண்டாத பொருளாகிய நிலைமையே எதிர்மாறாய்விடுகிறது. ஒன்று கிடைக்காதபோது உயிரைப் பணயம் வைத்தாவது அதைப் பெற்றுவிடவேண்டும் என்று துடிக்கும் உள்ளத்தைக் கட் டுப்படுத்தவே முடிவதில்லை அந்த நிலைக்குத்தான் வந் திருந்தான் சரவணன்.
கீழே விழுந்த கண்ணாடி சிதறிய நிலையில் தேடுவா ரற்றுக்கிடந்த அந்தப் புகைப்படத்தைச் சரவணன் உற்றுப் பார்த்தபடியிருந்தான். அந்தப் பார்வை அவளது ஒவ்வொரு அங்கத்தையும் அவன் பரிசீலனை செய்வதுபோலிருந்தது. அவளது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்வரை அவன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அவனது நிலை பார்ப்பதற்குப் பரிதாபமாகப்பட்டது.
அவனையே நீண்ட நேரமாக மறைந்து நின்று பார்த் துக்கொண்டிருந்த கனகசுந்தரனின் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணிர் வழிந்தோடி நிலத்திற் பட்டுத் தெறித் தது. அந்த நீர்த்துளியில் சரவணனும், சிவகாமியும் சேர்ந்து
75
Page 50
அப்படத்தை எடுத்துக்கொண்ட நாள் அவன் கண்முன்னே காட்சியளிக்கிறது. சிவகாமியை அவள் அப்பா இராஜ வரோதயந்தான் அவர்கள் வீட்டுக்கு அழைத்துவந்திருந் தார். அவள் அவர்கள் வீட்டு வாயிலில் நுழைந்ததுமே அவள் தன் தந்தையின் கைப்பிடியில் இருந்து நழுவிச் சரவணனைத் தேடி உள்ளே சென்றாள்.
அப்போது அவளது அப்பா சரவணனின் தாயாரைப் பார்த்து “என்ன வள்ளி, என் மகள் உன் வீட்டு மருமக ளாக வருமுன்பே இப்படி என்னை உதறிவிட்டு ஓடுவதைப் பார்த்தால் உன் வீட்டு மருமகளாகியபின் என்னைக் கவ னிப்பாளோ என்பது சந்தேகமாயிருக்கிறது' என்ற வார்த் தைகள் இன்னும் பசுமையாக அவன் மனதில் பதிந்துவிட் டிருந்தது. அப்போது அவனும் கனகசுந்தரனும் சிறுவர்கள். அவன் தாய் மர ண தேவதை யின் வாயில் அகப்பட்டுப் பிழைத்தெழுந்திருந்த சமயம் என்று சாடையான ஞாபகம். அவனது தாயாரின் உடல் நோய்வாய்ப்பட்டு மிகவும் நலிந் திருந்ததால் அவள் மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த் திருந்தாள் என்றுகூடச் சொல்லலாம். ஆயினும் சிவகாமி சரவணனின் திருமணத்தைப் பார்த்தபின்பே சாகவேண்டும் என்றொரு சிறு சபலம் அவள் உள்ளத்திற் தேங்கியிருந் தது. ஆனால் அதுவரை உயிரோடு இருக்கமுடிகிறதோ என்றொரு அவநம்பிக்கை. இவையெல்லாம் சேர்ந்துதான் அன்று அந்தப் புகைப்படத்தை எடுக்கவைத்தது.
சரவணனையும், சிவகாமியையும் உண்மையான மண மக்கள்போல அலங்கரித்து அழகுபார்த்தாள். சரவணன் காலையில் கோர்த்து வைத்திருந்த முல்லை மல்லிகை மாலையை அவளாகவே எடுத்துவந்து சிவகாமியின் தலை யிற் சூட்டியும் விட்டாள். அப்போது, அவள் தன் மகன் சரவணனிைப் பெருமையோடு பார்த்த பார்வை சரவண னின் நெஞ்சைவிட்டு அகலவேயில்லை.
அதே நேரத்தில் அந்த நினைவுகள் சரவணனின் உள். ளத்திலும் ஊற்றெடுக்கின்றதென்பதை அவன் முகபாவங்
76
காட்டுகிறது. அவனுக்குத் திடீரெனத் தன் தாயாரின் நினைவு வந்திருக்கவேண்டும். 'அம்மா நீ ஒரு தீர்க்கதரி சியோ..? உன் மகன் சரவணனுக்குச் சிவகாமி கிடைக்க மாட்டாள் என்று நினைத்துத்தான் எங்களைப் படத்தில் ஒன்றாக்கி இப்போது ஏற்பட்டிருக்கும் பிரிவு நிலையைப் பார்க்கச் சகியாமற் தான் அப்போதே எம்மிடம் இருந்து நிரந்தர விடைபெற்றுச் சென்றாயோ..? இவற்றையெல் லாம் சிவகாமியும் அவள் பெற்றோரும் எப்படியம்மா மறந் தார்கள்? அவர்கள் மறந்தாலும் நிச்சயமாக இந்தப் படம் அவர்களுக்கு அதை நினைவூட்டாமல் இருக்கமுடியாது" என்று தனக்குத்தானே கூறிவிட்டுப் பாடுகிறான்.
கன்னல் மொழிக் காரிகையாள் கமலவிழி யான் மறவேன் கன்னத் தொளி மறவேன்
கனி வா யிதழ் மறவேன் பின்னற் சடை மறவேன்
பிடரி னெழின் மறவேன் பன்னற் கருநகையும்
மறவேன் பசுங்கிளியே பாவையுரு வென் மனத்தே
பதிந்துளதாற் பைங்கிளியே.
பாடிவிட்டும் அவன் அந்தப் படத்தையே பார்க்கிறான். நிச்சயமாக அவன் சிவகாமியை மறக்கப்போவதில்லை. அவளது நடை, உடை, பாவனை, இனிய பேச்சு, கனிய பார்வை எதையுமே அவனால் மறக்கமுடியாது. அவன் மட்டுமென்ன...? சிவகாமியைப் பார்க்கும் எவருமே அவளை மறக்கமுடியாது." அவ்வளவு அழகுவாய்ந்தவள் அவள். திரு கோணமலையில் அழகி என்று பலராலும் போற்றப்பட்ட வள். அத்துடன் பவளம் போன்ற சிவந்த மேனியாள். அவள் சிரிக்கும்போது அவள் சிவந்த கன்னங்களைப் பார்க் கும் எந்தக் கவிஞனாலும் அவளைப் பாடாமல் இருக்க
77
Page 51
முடியாது. அவளைச் சிரிக்கவிட்டு அந்த அழகை நாள் முழு தும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதனாற்தான் சிவகாமியின் அப்பா இராஜவரோதயத்திற்கு அப்படி ஒரு கர்வம் என நினைத்துக்கொண்டான் சரவணன்,
“என்ன சரவணா? அந்தப் படத்தை எவ்வளவு நேர மாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாய். எங்கே படத்தை இப்படி என்னிடந் தா. உன்மேல் அன்பில்லாதவளிடம் நீ மட்டும் எதற்காக அளவுக்குமீறி அன்பு செலுத்தவேண்டும். உன் உள்ளத்தை நீ வீணாக அலட்டிக்கொள்கிறாய். சிவ காமியை இனிமேலாவது மறந்துவிடு. அப்போதுதான் நீ வாழமுடியும்"என்ற குரல் கேட்டுத் திரும்புகிறான் சரவணன். அங்கே தம்பிமுத்துப்பிள்ளை தள் ளாடியபடியே நின்று கொண்டிருக்கிறார்.
"அப்பா கூறியது கேட்டதா சரவணா..? சிவகாமியை மறந்துவிடு” என்கிறான் கனகசுந்தரன்.
“மறப்பதா..? அது வும் என் சிவகாமியை. முடியுமா அண்ணா? அவளை நீ காண நேர்ந்தால் என் நிலையை எடுத்துக் கூறு. உன்னைக் காதலித்து, உன் நினைவால் என் தம்பி நாளாந்தம் செத்துக்கொண்டே இருக்கிறான் என்று சொல்லு' என்ற வார்த்தைகளைக் கேட்ட கண்க சுந்தரம் கண்ணிர் மல்க வெளியேறுகிறான். அவன் செல்வ தைப் பார்த்த சரவணன் விரக்தியோடு பாடுகிறான்.
அன்ன மெனு மென்னடையு
மஞ்சிறைய மயிலெ யிலுஞ் சின்னக் கொடியிடையுஞ்
செவ்வாய்க் கிளிமொழியுஞ் சன்னச் சிலம்பொலியுந்
தளவ னறுமணமும் நன்னர்ப் பசுங்கிளி ய
நானோ மறவேனால்
78
நங்கைவடி வங்கிளியே
நானோ மறவேனால் கொங்கலர் பூஞ் சோலைவளர் மாங்கிளியே கோதையிடம் நங்காய் நிற் காதலித்தே
நலிவான் மெலிவானால் தங்காதுயிரென்றான் தானின்
சரனென்றாள் நங்காயிரங் கெனவே
நவில்வாய் பசுங்கிளியே நாரியர் பா லென்னிலையை
நவில்வாய் பசுங்கிளியே
அவன் பாடலைக் கேட்ட கனக சுந்தரம் கண்ணீர் வடித்தான். தம்பிமுத்துப்பிள்ளை தன் மகனின் கவித் திறமையை நினைத்து வியந்துகொண்டார். சரவணன் இவ்வளவு சிறப்பாகக் கவி இயற்றுவான் என்று அவர் எண்ணிப்பார்க்கவேயில்லை. யாரையும் இலட்சியம் செய் யாமல் சரவணன் பாடிக்கொண்டேயிருக்கிறான். அதில் ஒரு ஆத்ம திருப்தி அவனுக்கு.
படித்தவன், பட்டம் பெற்றவன், பா இயற்றும் ஆற் றல் படைத்தவன். ஆயினும் எல்லா வரப்பிரசாதங்களும் இருந்தும் என்ன..? பணம் ஒன்று இல்லாத குறை இந்த நிறைகளையெல்லாம் திரைபோட்டு மூடிவிட்டது. இந்தக் குறையை நிவர்த்திக்க எவராலும் முடியவில்லை. தனக் காக வளர்க்கப்பட்ட பைங்கிளி பறந்துபோய்விட்ட பிரமை யில் அவன் ’மனம் வெதும்பினான். அம்பிகாவதி, அமரா வதி, லைலா மஜ்னு, றோமியர் ஜூலியட் இவர்கள் கூடத்தான் காதலிற் தோல்வி கண்டார்கள், ஆனால் அந் தத் தோல்விதான் அவர்கள் சரிதையை உலகம் போற்றும் உன்னத காதற் காவியங்களாக வாழ்ந்துகொண்டிருக்கச்
79
Page 52
செய்கிறது. எங்கள் காதலும் படுதோல்வியிற்தான் முடிந்து விட்டது. எங்கள் வாழ்வு இத்துடன் முடிவுறக்கூடாது. எங்கள் கர்தலும் காவியமாக வேண்டும். சிவகாமியின் காதலைப் பற்றி இந்த உலகம் படிக்கவேண்டும். எனக்காக அல்லாவிட்டாலும் அவளுக்காக ஓரிரு சொட்டுக் கண்ணி ராவது சிந்தவேண்டும். அப்போதுதான் என் காதல் அம ரத்துவம் அடையும். r
“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையான்' என்ற பாடல்கூடத்தான் என்னளவிற் பொய்த்துவிட்டது. அப்பாவுக்கு இது நேரத்துடனேயே தெரிந்திருந்தால் தன் னிடம் உள்ள பணத்தையெல்லாங் கொட்டி என்னைப் படிக்க வைத்திருக்கமாட்டார். அவர் மனக்கோட்டையெல் லாம் தவிடுபொடியாகிவிட்டது. அந்தத் தாக்கத்திலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள வழி தெரியாத அப்பா அப்படியே படுக்கையிற் தஞ்சம் புகுந்துவிட்டார். அவருக்கு எப்போது நிப மதி கிடைக்கப்போகிறது.? எதுவுமே புரியாத நிலை யில் அவன் கண்ணயர்கிறான்.
- முற்றும் -
; f &* י
80
உள்ளத்தில் ஒரு உறுத்தல்
அன்று ஒரு சனிக்கிழமை. திருக்கோணமலைத் திரே சம்மாள் மடத்தில் வழக்கத்திற்கு மாறாக அன்று அமைதி நிலவுகின்றது. எங்கும் ஒரே நிசப்தம். மடத்திற் தங்கி யிருக்கும் அநாதைக் குழந்தைகள் சனி, ஞாயிற்றுக்கிழமை களில் வழமையாகப் போடும் சத்தமும், கலகலப்பும் அந்த மடத்திற்கே ஒரு தனி மெருகூட்டும். ஆயின் இன்று அந்த மடத்தில் இப்படி நிசப்தம் நிலவுவதற்கு என்னதான் நடந்து விட்டது?
மடத்தில் தாயார் மாகிறெற்றைச் சந்திக்க வரும் விருந்தினர்கள் தங்கிப் பேசும் அறையான "பா லரி ல்" தாயார் மாகிறெற் அமர்ந்து ஏதோ கடிதங்களைப் பரி சீலனை செய்துகொண்டிருக்கிறார். பக்கத்தில் சகோதரி றோ சலீனா வேறோர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டிருக் கின்றார். "பாலர் அறைக்கு வெளியே மரியம்மாள் அழுது சிவந்த கண்களுடனும், சிந்திய மூக்குடனும், உடல் பதற, உள்ளம் விம்ம அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற பீதியுடன் கைதிக்கூண்டில் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கும் ஒரு குற்றவாளியைப்போல் நின்றுகொண்டிருக்கின்றாள். சற்றுத் தூரத்தில் ஏனைய மாணவியர் கூட்டங்கூட்டமாக நின்று விளையாடும் பாவனையில் ஏதோ குசுகுசுத்துக் கொள்கின்றார்கள். ஆயினும் அவர்கள் முகத்தில் ஏதோ ஒரு சோகம் நிலவியது. அவர்கள் பேச்சும், சிந்தனையும் மரியம்மாளைச் சுற்றியே வட்ட்மிடுகின்றன.
அந்த மடத்தின் தலைவியான தாயார் மாகிறெற் தொடக்கம் அங்கு கூலிவேலை செய்யும் தோட்டி வரை
8
Page 53
யில் உள்ள சகலருக்கும் மரியம்மாள் என்றால் உயிர். அவள் நடந்துகொண்ட விதத்தில் அவர்கள் அவளிடம் அப்படியொரு தனியன்பைக் காட்டிவந்தனர். மடத்தின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடந்து சகலரின் அன்புக் கும் பாத்திரமான அப்பெண் துறவு பூண்டு கன்னியாஸ் திரியாக சேவை செய்வாள் என்றுதான் எல்லோரும் எண் ணியிருந்தார்கள். அவளை அடுத்த வருடம் கன்னியாஸ்திரி மடத்திற்கு அனுப்புவதற்கான சகல ஒழுங்கையும் தாயார் மாகிறெற் திட்டம் போட்டு செயற்படுத்தி வைத்திருந் தாள். ஆனால் மரியம்மாளோ இப்போது எல்லோர் கண் ணிலும் மண்ணைத் தூவிவிட்டாள். உண்மையில் எது நடக்கக் கூடாது என்று விரும்பினார்களோ அது நடந்து விட்டது.
இந்நிலையில் 'பாலருக்கு வெளியே பதற்றத்துடன் நின்ற மரியம்மாளின் மனதில் ஒராயிரம் எண்ணக் குவி யல் ஒடி மறைந்தன. அவள் கூடத் தான் ம ன தா ர விரும் பி கன்னியாஸ்திரியாக வரவேண்டும் என்றொரு எண்ணத்தை மனதில் வளர்த்து வந்தாள். ஆனால் அந்த எண்ணம் கடந்த ஆறு மாத காலத்துள் அவள் மனதில் ஒரு சபலத்தை உண்டாக்கி விட்டிருந்தது. சுருங்கச் சொன் னால் அந்த எண்ண்ம் அவள் மனதைவிட்டு அடியோடு அற்றுவிடும் நிலைக்கு வந்திருந்தது. அது எப்படி நிகழ்ந் தது என்று அவளுக்கே தெரியாது. ஆயினும் நிச்சயமாகத் தன் மனம் மாறிவிட்டதென்பதை மட்டும் அவளால் உணர முடிந்தது.
அதற்குக் காரணம்.? ஆமாம், காரணம் ஜோர்ஜ் என்று மட்டும் கூற அவள் விரும்பவில்லை. ஒரு கையை மட்டும் அடித்துச் சத்தத்தை உண்டாக்க முடியாது என் பதைப் புரிந்துகொள்ள முடியாத குழந்தையல்ல அவள். ஜோர்ஜ்", அவன் அறிமுகமானதே ஒரு கதைதான். மடத் தில் வருடாந்த நவீன விற்பனை நடந்து கொண்டிருந்த போதுதான் ஜோர்ஜ் அவளுக்கு முதன்முதலில் அறிமுக மானான். மடத்திற்கு வந்து விற்பனை சம்பந்தமான சகல
82
விடயங்களிலும் கலந்துகொண்டு அதை வெற்றிகரமாக நடாத்த உதவியவனே அவன்தான். மரியம்மாள் தையல் நிலையத்தின் பொறுப்பாக நின்றாள். அதற்குப் பக்கத்தில் இருந்த "ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்தின் பொறுப்பாக ஜோர்ஜ் நியமிக்கப்பட்டிருந்தான்.
இருவருக்கும் இடையில் சாதாரணமாக ஆரம்பித்த பேச்சுப் பழக்கம் இரண்டு, மூன்று நாட்களில் ஏதோ பல காலம் பழகியது போன்றதோர் உறவை அவர்களிடையே வளர்த்துவிட்டது. இப்படி ஆரம்பித்த சாதாரண இந்த உறவு வைரம் பாய்ந்த தன் மடத்து வாழ்க்கையைப் பொசுக்கிவிடும் என்று மரியம்மாள் எதிர்பார்க்கவேயில்லை.
விற்பனை நினைத்ததைவிட நல்லபடியாக முடிந்ததும் இரண்டு நாட்கள் இரவுபகல் என்றில்லாமல் சக ல பொருட்களையும் உரிய இடத்திற் சேர்க்கும் பொறுப்பை யும் ஜோர்ஜ் முன்னின்று செய்து முடித்தான். அவனுக்கு உதவியாக இரண்டொரு பெண்கள் நியமிக்கப்பட்டிருந் தார்கள். அவர்களில் ஒருத்தி மரியம்மாள். அவள்மேல் தாயார் மாகிறெற் வைத்திருந்த பூரண நம்பிக்கைதான் அவளை ஜோர்ஜ் உடன் இரவுபகலாக நின்று உதவி செய்ய வழிவகுத்தது என்று கூறினால் மிகையாகாது. அந்த நம் பிக்கையால் இப்படியான அசம்பாவிதங்கள் எதுவும் நடை பெறும் என்று தாயார் மாகிறெற் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
மேலே சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியின் காற்றுக் குப் படபடத்த காகிதங்களை தாயார் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த சில சம்ப வங்கள் அவருக்கு அருவருப்பாக இருந்திருக்கவேண்டும் என்பதை அவருடைய முகச்சுழிப்புக் காட்டியது. இந்தக் கடிதங்களைத் தொடுவதற்கே வெறுப்புற்றவர்போல் அவற்றை இரண்டு விரல்களால் பிடித்து மேசைமேல் விட்டெறிந்தார். ஒருபடியாகக் கடிதப் பரிசீலனை முடிந்
83
Page 54
தது. தாயார் மாகிறெற் இப்போது சகோதரி றோசலினா வின் முகத்தை அர்த்தபுஷ்டியுடன் பார்க்கின்றார்.
அவரது பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாதவர்போல் சகோதரி றோசலினா தலைகுனிந்து கொள்கின்றாள். "சிஸ்டர் மரியம்மாளைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அவளுக்கு இப்போது நாம் கொடுக்கக்கூடிய சரியான தண்டனை என்ன?”
சிஸ்டர் றோசலினா வுக்கு தாயாரின் கேள்விகள் சற் றுத் துணிவை ஏற்படுத்திவிடுகின்றன.
'மரியம்மாளைப்பற்றி ந1ங்கள் வைத்திருந்த உயர்ந்த அபிப்பிராயம் தவிடுபொடியாகி விட்டது. அவள் இப்படிக் கீழ்த்தரமாக நடந்துகொள்வாள் என நாங்கள் எதிர் பார்க்கவேயில்லை. இப்போ நாங்கள் செய்யக்கூடிய ஒன்று அவளை உடனடியாகக் கன்னியாஸ்திரி மடத்திற்கு அனுப்பி விடுவதுதான். இனி உங்கள் விருப்பம் தாயார்.” சிஸ்டர் றோசலினா தன் அபிப்பிராயத்தை கூறிவிட்டு "பாலரை
விட்டு வெளியேறினாள்.
தாயார் மாகிறெட் கன்னத்தில் கையை வைத்துச் சிந்தித்தபடி அப்படியே சில நிமிட நேரம் அமர்ந்திருந்தாள். அவள் முன் பரந்து காற்றில் படபடத்த கடிதங்கள் அவ ளைப் பார்த்துச் சிரிப்பது போன்ற பிரமையேற்பட்டது. அவள் தன் வாழ்க்கையை இருபது வருடங்கள் பின்னோக் கிப் பார்த்தாள்.
அப்போது அவளும் மரியம்மாளின் வயதை ஒட்டித் தான் இருந்திருப்பாள். ஆனால் படிப்பில் விவேகியாக இருந்தாள். மரியம்மாள் இப்போது பத்தாம் வருப்புப் படித்துக்கொண்டிருக்கிறாள். இந்த வயதில் றோ ஸி என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்ட தாயார் மாகி றெற் பத்தாம் வகுப்பில் திறமைச் சித்தி டெற்று க. பொ. த. உயர்தர வகுப்பில் காலடி எடுத்து வைத்திருந்தாள்.
84
ஆயினும் அவளது எதிர்காலம்பற்றிய எந்த முடிவும் உறுதியாக எடுக்கப்படவில்லை. மேற்கொண்டு படிக்க வேண்டும் என றோஸி விரும்பியபோதும் வீட்டில் உள்ள வர்கள் அவள் துறவு வாழ்க்கையில் ஈடுபட்டு கன்னியாஸ் திரியாக வேண்டுமென்றே விரும்பினர். றோஸிக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தாலும் கன்னியாஸ்திரி ஆவ தற்கு அவள் எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. ஆயினும் ஏனோ சில நாட்களாக அவள் !!னதில் ஏற்பட்ட ஒரு சிறு சபலம் அவள் மனதைக் குழப்பி சிறிது சங்கடப் படுத்தியது. அவளுக்குத் தூரத்து உறவுமுறையான பையன் டேவிட் சில நாட்களாக அவளைப் பின்தொடர்ந்து அவள் மனதைக் குழப்பிவிட்டிருந்தான். அவன்மீது அவளுக்கு எந்தவித வெறுப்பும் ஏற்படவில்லை. அதேசமயம் அவனை அவள் விரும்பவில்லை என்று கூறித் தன்னை ஏமாற்றிக் கொள்ளவும் தயாராகவில்லை. ஏதோ ஒரு பாசம் இரு வரையும் இணைத்தது உண்மை. ஆனால் திடீர் என டேவிட்டிடம் இருந்து வந்த ஒரு கடிதம் அவள் மனதில் ஒரு அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. அவள் அதற்குப் பதில் எழுதவில்லை.
ஆயின் டேவிட் ஒருநாள் அவளைப் பின்தொடர்ந்து அக்கடிதம்பற்றி கேட்டபோது அது கிடைத்ததை அவள் ஒப்புக்கொள்ளவே செய்தாள். அது பற்றிச் சிந்திப்பதற் குத் தனக்கு சில நாள் அவகாசம் தரும்படியும் வேண்டி னாள். அதன் பின்பும் டேவிட் அவளை வழிமறித்துத் தன் காதலை வெளியிட்டிருந்தான். ஆனால் றோஸி எந்தவித உறுதிமொழியும் அவனுக்கு கொடுக்கவில்லை. றோஸியின் மனம் எந்தவித முடிவும் எடுக்கமுடியாமல் தத்தளித்தது. டேவிட்டோ றோ ஸி தன்னைக் காதலிப்பதாகக் கோட்டை கட்டினான்.
இந்நிலையில் கூடிய விரைவில் றோஸி கன்னியாஸ் திரி ஆக மடத்திற்குச் செல்வதென வீட்டில் முடிவெடுக் கப்பட்டது. றோலி தன் பெற்றோரின் ஆசைக்குக் குறுக்கே நிற்க வில்லை. அவள் போவதற்கு ஆயத்த மானாள். ஆயினும் அவள் அடிமனதில் ஒரு போராட்டம்.
85
Page 55
றோ ஸி கன்னியாஸ்திரி வாழ்க்கையை மேற்கொள்ள கொன்வெற் செல்லப்போகின்றாள் என்பதை அறிந்த டேவிட் அவள் தினமும் அதிகாலையில் கோயிலுக்குச் செல்லும் வழியில் அவளுக்காகக் காவல் நின்றான்.
றோ ஸி, அவன் நின்ற இடத்தை அண்மித்ததும் அவன் அவளைப் பார்த்துத் தான் கேள்விப்பட்டது உண்மையா என்று கேட்டதை அவளால் மறக்கமுடியாது. அந்த வினா எத்தனை வருடங்கள் பின்பும் அவள் மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது. “ஆம் டேவிட் கடவுளுக்கும், மக்க ளுக்கும் சேவை செய்ய என் வாழ்க்கையை அர்ப்பணிக் கத் தீர்மானித்துவிட்டேன்” என்றாள் அவள். سمبر
"றோ ஸி கடவுளுக்கும், மக்களுக்கும் சேவைசெய்ய உன் னைப்போல் ஆயிரமாயிரம் பேர் வருவார்கள். ஆனால் எனக்கு? ஆமாம், றே ஸி எனக்கு நீ ஒருத்திதான் வாழ் வளிக்க முடியும். என்று அவன் பரிதாபமாகக் கேட்டது அவள் நெஞ்சை வருடியது. ஆயினும் தன் மன வைராக் கியம் குலைந்துவிடாமல், 'என்னை மன்னித்துவிடுங்கள் டேவிட். நான் எடுத்த முடிவு மாற்றமுடியாதது" " கூறி விட்டு விறுக்கென அவள் நடந்து சென்றுவிட்டாள். அன்று நடந்த சாதாரண சம்பவம் அவள் இந்தப் புனிதமான வாழ்க்கையில் இத்தனை வருடங்கள் ஊறித்திளைத்த பின் னரும் கூட மாறாத வடுவாக அவள் உள்ளத்தை உறுத் திக்கொண்டிருந்தது.
அவள் டேவிட்டை மறந்து பல வருடங்களாகிவிட்டன. ஆயினும் இப்படியான சந்தர்ப்பங்களின்போது அது அவளை அறியாமலே அவள் உள்ளத்தை உறுத்த ஆரம் பித்துவிடும். டேவிட்டின் கடிதத்தை உடனேயே அவள் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பியனுப்பியிருந்தால் அவள் மனதில் இப்படி ஒரு உறுத்தல் ஏற்பட்டிருக்கமுடியாது என்பதை அவள் உணர்ந் தாள். திடீர் என அவள் சிந்தனை அறுபட அவள் தன் கன்னத்தில் இருந்த கையை அகற்றி விட்டு "மரியம்மாள்”என்று சற்று கண்டிப்புடன் அழைத்தாள்.
86
தாயாரின் ‘கணிர்" என்ற குரல் கேட்டதும் மரியம்மாள் ஏதோ பிரளயம் நடக்கப் போகிறது என்ற பயத்துடன் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தாள். அவள் உடல் பதறியது.
“இப்படி என் அருகில் வந்து நில்' மீண்டும் அதே கண்டிப்பு.
மரியம்மாள் தாயாருக்கு அண்மையில் சென்று நின்றாள்.
'இத்தனை கடிதங்களுக்கும் நீ பதில் எழுதினாயா'.?”
மரியம்மாள் நடுங்கினாள். அவள் உதடுகள் பயத்தினால் இறுக மூடிக்கொண்டன.
'நான் கேட்டதற்குப் பதில் சொல்." நீ திருப்பிப்
பதில் எழுதினாயா..?
'ஆம் தாயார்”. 'அப்போ நீ ஜோர்ஜைக் காதலிக் கின்றாய்."
a w is 0 to 8 · · · · ·
'மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று எண்ணு கின்றேன், நீ இப்போது போகலாம்.”
இடியும், மின்னலும் சேர்ந்து புயலாக உருவெடுக்கப் போகின்றது என்று எண்ணிப் போ ன மரியம்மாளுக்கு தாயாரின் விசாரணை ஒரேயொரு வினாவுடன் முடி வடைந்தது வெறும் மழைத் தூற்றல்போலிருந்தது. தப்பி னேன் பிழைத்தேன் என்று தெய்வத்துக்கு நன்றி சொல்லிய படியே அவள் மெதுவாக வெளியே சென்றாள்.
ஆனால் அன்றுடன் "ஜோர்ஜை' மறந்துவிட்டு கன்னி யாஸ்திரி வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டிய சகல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவள் மனம்
உறுதிபூண்டது.
87 ـــــــــــــــــــ
Page 56
ஆயின் இரண்டு வாரங்களின் பின் அவள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் திருகோணமலை புனித சூசை யப்பர் தேவாலயத்தில் அவளுக் கும், ஜோர்ஜுக்கும் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணம் முடிந்து தன்னிடம் ஆசி பெறவந்த மணமக்களைத் தாயார் மாகிறெட் ஆனந்தக் கண்ணிருடன் ஆசீர்வதித்தாள்.
தாயாரின் இந்த செயலுக்கு அர்த்தம் புரியாத சிலர் அவளைப் போற்றியபோதும் ஒரு சில ர் அவளைத் தூற்றவும் செய்தனர். ஆனால் தாயார் மாகிறெற்றின் மனதில் பல வருடங்களாக இருந்த உறுத்தல் மறைந்து ஒரு நிம்மதி ஏற்பட்டது.
88
தேடிக்கொண்டிருக்கிறேன்
அன்று ஒரே புழுக்கம். என் உள்ளத்தில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டிருந்த உள்ளப் புழுக்கத்துடன் உடற் புழுக்கமும் சேரவே அதைத் தணிப்பதற்காக நான் பின் கட்டில் சற்றுக் காற்று வாங்க நின்றேன். மணி பன்னி ரெண்டைத் தாண்டிவிட்டதால் என் மனைவி என்னை உணவுக்காக அழைத்துக் களைத்த நிலையில் தனது உண வுத் தட்டுடன் வந்து என் பக்கத்தில் அமர்ந்துகொள் கிறாள். அவளது அவசரத்தைப் பார்த்துவிட்டு மேலும் அவளைத் தவிக்கவிடக்கூடாதென்ற எண்ணத்தில் நானும் உள்ளே சென்று எனது உணவுத் தட்டை எடுத்துவந்து அவள் பக்கத்தே அமர்ந்துகொள்கிறேன்.
முதல் வாயை நான் உள்ளே வைக்க இருந்த வேளை யில் எதிரே சுவரில் இருந்த நாட்குறிப்பேடு என் கண் களிலே படுகிறது. அது காட்டிய தேதியைப் பார்த்தவுடன் என் வாய்க்குள் திணிக்கப்பட்ட உணவை மெல்லவும் முடி யாமல், விழுங்கவும் முடியாமல் நான் திண்டாடுகிறேன்.
என் கண்களை நீர் திரையிட்டு மறைக்கிறது. என் நிலையை மனைவி கவனித்துவிடக் கூடாதென்பதற்காக நான் வாயை மெல்வதுபோற் பாவனை செய்துகொள் கிறேன்.
என் மனத்திரையில் ஆறு மாதங்களுக்கு முன் இதே தேதியில் நடைபெற்ற சம்பவம் நிழற்படம்போல் ஓடுகிறது.
韵 ஆமாம். அன்றும் இப்படித்தான். நான் மதிய உணவிற் கை வைக்கப்போன வேளை என் மருமகன் தலைதெறிக்க ஓடோடி வந்து என் முன்னே நிற்கிறான்.
89
Page 57
அவன் முகம் பேயறைந்ததுபோற் காட்சியளிக்கிறது. அவன் பேசும் திராணியற்று என் முகத்தைப் பார்த்த படியே நிற்கிறான். அவன் விழிகளில் கரைகட்டிய நீர் எனக்கு அவன் நிலையை விளக்கியதோடு ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டது என்பதையும் புரியவைக்கிறது.
என்னடா பாலு. என்ன நடந்தது. ஏன் இப்படிப் பேச்சு மூச்சற்று நிற்கிறாய். என்று கேட்டதுதான் தாம தம் அவன் தன் துன்பத்தைக் கூறமுடியாதவனர்ய் ‘ஓ’ வெனக் கத்தி ‘நேற்று மதியம் வெளியே சென்ற பெரிய மாமா இன்னும் வீடு திரும்பவில்லை" என்று முடித்து விம்முகிறான்.
என் கரங்கள் நடுங்க என் உணவுத்தட்டு என் கைப் பிடியில் இருந்து நழுவிக் கீழே விழுகிறது. என் நெஞ்சு வரண்டு என் நாவில் உள்ள உமிழ்நீர் வற்றிய நிலையில் பேசும் சக்தியற்று அவனையே பார்த்தபடி நிற்கிறேன். இதுவரை ஊராருக்கு ஆறுதல் கூறிய என்போன்றவர்கள் எமது உணர்ச்சிகளை வெளிக்காட்ட உரிமையற்றவர்கள் தானே.
அவரது நேர்மையான போக்குக்கு இப்படியான ஒன்று நடக்கும் என அவரது உறவினர் வட்டத்தில் பலபேர் மன துக்குள் நினைத்துக்கொண்டிருந்தனர். அவர்மேல் அதிகம் பற்று வைத்த சிலர்) தீர்க்கதரிசிகள் போல் இதை நேரே அவரிடம் கூறியும் இருந்தனர். ஆனால் இப்படியொரு கேவலம்! இப்படிக் கோழைத்தனமாக நடைபெறும் என்ப தைத்தான் எவரும் எதிர்பார்க்கவில்லை எதிர்பார்க்கவே யில்லை. நேருக்கு நேர் பகிரங்கமாகப் பலரது முன்னிலை யிலும் என்றோ ஒருநாள் நடக்கும் என்பதை உறவினர்கள் மட்டுமல்ல அந்த மனிதர்கூட எதிர்பார்த்திருந்தார். அவர் தன்னுடன் பழகிய மனிதர்கள் மத் தி யில் ஒரு யூதோ இருக்கக்கூடும் என்பதையும் தெளிவாக அறிந்திருந்தார்.
ஆயினும் அதற்கு நேர்மாறான முறையில் ஒரு சம்ப வம் நடந்து விட்டதை அறிந்தபோது என் இதயம் குமுறி
90
யது. அவருக்கு நேர்ந்ததை எண்ணுந்தோறும் மகாபார தத்தில் தர்மத்தைச் சிறப்பிக்க வரும் கர்ணன் பாத்திரம் பொய்யானதா..? 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்ற பழந்தமிழ் இலக்கியப் பாடலின் அடிகூடப் பொய்த்து விட்டதா...? என்றெல்லாம் என் உள்ளத்திலே எத்த னையோ கேள்விக்குறிகள்!
என் மனதில் எத்தனையோ சிந்தனை அலைகள். கோணேசா. நான் நினைக்கும்படி எதுவும் நடந்துவிடக் கூடாது. இதுவரை என்னைக் கைவிடாத நீ இனிமேலும் என்னைக் கைவிடமாட்டாய். என்று மனதாரப் பிரார்த் தித்து என்னை நானே சமாதானம் செய்துகொள்கிறேன்.
அந்த மனிதனின் நேர்மையும், துணிவும், அறிவும், அயராத உழைப்பும், பொதுநலத் தொண்டும், கடமை உணர்ச்சியும், தியாகப் பண்பும் இந்தப் பூமியில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலருக்கே இருக்கமுடியும். தனக்கென வாழாது பிறர்க்காகவே வாழ்ந்த மனித தெய்வம்.
மக்களை மாக்களாக நினைத் து அடித்து அள்ளிக் கொண்டு சென்றடைத்த வேளையிலும், எலும்பெலும்பாகத் தட்டி முறித்த காலத்திலும், பறிகொடுத்தவர்கள் தட்டிக் கேட்கத் தலைவர்கள் எவரும் எம் மத்தியில் இல்லையே என்று ஏங்கித் தவித்த நேரத்தில், அந்தத் தர்மசங்கடமான நிலையிற்கூடத் தனித்து நின்று, தவித்தோர்க்குத் தக்க துணையாகச் சென்று, தட்டிக் கேட்கவேண்டியவர்களைத் தட்டிக் கேட்டு, நன்றாக உண்டு, வேளைக்குத் தூங்கி வீட் цg-Gi) ஒய்வெடுக்க வசதியிருந்தும் அதைத் துச்சமெனத் தூக்கி எறிந்து ஒரு இளைஞனைவிடத் துடிப்புடன் மக்க ளுக்குச் சேவை செய்த ஒரு தனி மனிதன் மறைந்துவிட் டான். இல்லை மறைக்கப்பட்டான் என்ற செய்தியை என் னால் ஜீரணிக்க முடியவில்லை! ஜீரணிக்கவே முடியவில்லை!!
எந்த இனத்தின் விமோசனத்திற்காக உற்றவர்களின் சொல்லைத் தட்டி சேவை செய்ய விழைந்தாரோ அந்த
9
Page 58
இனமே அவருக்குக் கோடரிக்காம்பாக வந்த வினையை எண்ணும்போது இன்று அதே தேதியில் என் உள்ளங் குமுறுவதில் அர்த்தமில்லையா?
தர்மம் எங்கே .? தெய்வம் எங்கே...? நீதி எங்கே..? கேட்கிறேன். கேட்கிறேன். என் இறுதி மூச்சுவரை கேட் டுக்கொண்டேயிருப்பேன்!
என்னை மறந்து என் உதடுகளின் வழியே வெளிவந்த என் வார்த்தைகளைக் கேட்ட என் மனைவி என்னைப் Luntri šGsprr Gia .
நான் தொடர்ந்தும் சாப்பிடமுடியாத நிலையில் என் கையை உதறிவிட்டுக் குழாயடிக்குச் செல்கிறேன்.
என் பின்னால் ஒரு காலடிச் சத்தம். திரும்புகிறேன். என் ஒன்பது வயதுப் பெண் என் பின்னால் நிற்கிறாள். அவள் கையில் பூக்கள் நிறைந்த ஒரு வெள்ளித்தட்டு. அப்பா. இன்றாவது கோயிலுக்குப் போக வருகிறீர் களா..? பெரியப்பாவுக்கு அர்ச்சனை செய்ய.
அவள் குரலில் ஒரு குழைவு. கோயிலுக்காம்மா. சரி நீ அம்மாவோடு போய் வா. அப்பா நீங்கள். ஆண்டவன் ஒருவன் இருக்கிறானா என்ற சந்தேகம் தீர்த்து வைக்கப்படும்போது நானாகவே சென்றுகொள்
வேன்.
A.
9yüur அதுவரை. நான் அவனைத் தேடிக்கொண்டிருப்பேன். மகளே. என் பதில் கேட்டு "எதை" என்று கேட்டுக்கொண்டே என் அருகில் வரும் என் மனைவியின் விழிகளைச் சந்திக் கும் துணிவற்று நான் வீட்டினுள்ளே செல்கிறேன்.
92
நூலறுந்த காற்றாடி
என் கணவரின் உடலில் உயிர் ஊசலாடிக்கொண்டிருக் கிறது. அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் என் கண்களில் இருந்து நீர் ஆறாய்ப் பெருகுகிறது. என் இதயமே நின்று விடுமோ என்றொரு பயம் என் உள்ளுணர்வை அச்சுறுத் திக்கொண்டிருந்த வேளையில் அவர் கேசத்தை என் கரங் கள் மெதுவாகக் கோதிவிடுகின்றன. அந்த ஸ்பரிசத்தில் அவர் கண்கள் ஒருமுறை திறந்து மூடிக்கொள்கின்றன.
மணம் பரப்பும் வெறும் சந்தனக் குச்சாய், வெளிச்சந் தந்து உருகி மடியும் மெழுகுவர்த்தியாய்க் கடந்த பதினைந்து வருடங்களும் எனக்குக் கவசமாய் இருந்து இன்று தீராத வியாதியால் பீடிக்கப்பட்டு மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் அவர் கண்மூடினால் என் நிலை.? அதுவே என் உள்ளத்தில் பெரியதோர் கேள்விக் குறியாக எழுந்து நிற்க அதற்குப் பதில் காணமுடியாமற் துடித்துத் தவிக் கும் என் நிலை அவருக்குப் புரிகிறதோ இல்லையோ. ஆனால் எனக்கு.?
அவர் போனபின் நான் யாரை நம்பி வாழ்வது. யாருக்காக வாழ்வது..?
இப்படி ஒரு கேள்வி எழும்போது ஏன் நீங்கள் மல்லி காவிற்காக" வாழ்ந்துதானே ஆகவேண்டும் என்று இந்த சமுதாயம் கூறலாம். ஆமாம்! சமுதாயத்திற்கு எதை எப் படி வேண்டுமானாலும் திரித்தும், விரித்தும் கூறக்கூடிய துணிவும், சுதந்திரமும் உண்டு. எதையும் ஆராய்ந்து கூறும் பழக்கம்தான் அதனிடம் கிடையாதே.
9.
Page 59
மல்லிகா.: ஆம் அந்தப் புதுமலரின் சுசந்தத்தைத்தான் அவள் முகந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அந்த மலர் ஒரு கொழுகொம்பைத் தேடிப் படர்ந்து மணம் வீசிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.
மலர்! ஆமாம். அது கசங்கிவிடாமல் உரிய இடத் தில் இருப்பது நீதியானதும், நியாயமானதுந்தான்!
மல்லிகா என் வயிற்றில் உதித்த மலர்தான். இளமை யில் என்னை அழகி என்று பலர் புகழ்வார்கள். அப்படி யானால், மல்லிகாவை ஒரு அப்ஸரஸ் என்று சொல்ல லாமா ? அவள் பத்து வயதாக இருக்கும்போதே பதி னைந்து வயது பருவ மங்கையாகத் தோற்றமளித்தாள். மல்லிகாவை அழகு ராணிப் போட்டிக்கு அனுப்பினால் நிச்சயமாக முதலாம் இடம் அவளுக்குத்தான் என்று அவள் அப்பா பெருமையுடன் அடிக்கடி கூறுவார்.
அவ்வேளைதான் அவள் அப்ப்ா காத்திராப்பிரகாரம் யாழ் நகரில் நடந்த ஷெல் தாக்குதலுக்குள்ளாகி அவ்விடத்தி லேயே தடிக்கத் துடிக்க உயிர் நீத்தார். அப்போது எனக்கு வயது இருபத்தாறு.
எதிர்பாராமல் விதியின் சதிக்கு ஆளாகிய நான் என்னையும் பாதுகாத்து மலர்ந்து மணம் பரப்பும் நிலை யில் அரும்பாக இருந்த என் பத்து வயது மகளையும் uit 3 காத்து வழிநடத்தவேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
என் கணவரின் பென்ஷன் தொகை ஓரளவுக்கு என் ஜீ னோபாயத்துக்கு வழிசெய்ததாயினும் முற்றாக அது எம் இருவரின் செலவினத்தையும் நிரப்பப் போதுமான தாய் இருக்கவில்லை.
இந்நிலையில் ஒரு சிலர் எம் பரிதாப நிலைக்குப் பரிந்து கைகொடுக்க முன்வந்தனராயினும் அதற்குப்பதிலாக அவர்
94
கள் எதையெல்லாமோ எம்மிடம் இருந்து எதிர்பார்த்த தாகத் தோன்றியது.
அப்படியான ஒரு சிலரில் எந்தப் பிரதிபலனும் கருதா மல் எமக்கு உதவ முன்வந்த ஒருவர்தான் வேணுதாஸ். அவரை அநேகமாக எல்லோரும் தாஸ் என்றே அழைப் பார்கள்; அவர் என் கணவரின் மதிப்புக்குரிய நண்பருமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மிகவும் அன்பாகவும், கண்ணியமாகவும் பழகியதால் அவருடன் பல விடயங்களை என்னால் மன்ந்திறந்து பேசமுடிந்தது.
பொதுவாக இக்குறுகிய காலத்தில் நான் பெற்ற அனு பவங்களை அவருடன் மனந்திறந்து பேசி உள்ளேன். ஒரு இளம்பெண் ஒரு ஆண் துணையின்றி வாழ்வது மிகவும் கஷ்டம் என்று என் அனுபவத்தைக்கொண்டு கூறினேன்.
தங்களைக் கண்ணியவான்கள் என்று உலகுக்கு பறை சாற்றும் ஒரு சிலர் என் கற்பைக் கூலியாகப் பெறும் நோக் கத்துடன் எனக்கு உதவ முன்வந்ததைக்கூடச் சொல்லி யுேைளன். அப்படியானவர்களில் ஒரு கயவனின் பெயரை யும் வெளியிட்டேன்.
என் பரிதாப நிலைக்கு இரங்கியோ, அன்றி உண்மை யான அன்பினாலோ அவர் எனக்கு மறுவாழ்வு அளிக்க என் சம்மதம் கேட்டார். ஆரம்பத்தில் அதற்குச் சம்மதம் அளிக்க மறுத்த நான் ஒரு சில வாரங்களில் அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு நிர்ப்பந் தத்துக்கு ஆளாக்கப்பட்டேன்.
எமது இருவர் உள்ளங்களும், பல வகைகளிலும் ஒரு மித்தபோதும் இடையே மல்லிகா என்ற மலர் வாடி வதங்கி விடாமற் பாதுகாக்கவேண்டிய பெரும் பொறுப்பும் என்
னைச் சார்ந்திருந்தது.
இதுபற்றி தாஸிடமும் கலந்துரையாடினேன். மல்லிகா விடம் மிகவும் நாசுக்காக இவ்விடயத்தைத் தானே போடுவ
தாக அவர் கூறினார்.
- 95
Page 60
ஒரு சனிக்கிழமை! மல்லிகாவுக்கு அன்று விடுதலை நாள். அத்துடன் டியூஷனும் இல்லை. தாஸ் அன்று அதி காலையிலேயே எங்கள் வீட்டுக்கு வந்தார்.
மல்லிகாவுக்கு மிகவும் பிடித்தமான மல்கோவா மாம் பழங்கள் சிலவற்றைக் கொண்டுவந்து அவளிடம் கொடுத் தார். அவரிடம் "ராங்ஸ் அங்கிள்” என்று கூறி அவற்றில் ஒன்றைக் கடித்தத் தின்ன அவள் ஆரம்பித்தபோது அவர் என்னிடம் கத்தி ஒன்று கேட்டு வேண்டி அப்பழத்தை அவளிடம் இருந்து பெற்றுத் தோலைச் சீவி, சிறு துண் டங்களாக நறுக்கி நீட்டியபடியே "மல்லிகா அப்பா இல்லா மல் நீயும் அம்மாவும் மிகவும் கஷ்டப்படுகிறீர்கள் இல்லையா..?” என்று ஆரம்பிக்க,
“ஆம் அங்கிள் இப்ப அப்பா இருந்தால் அவரே வெட்
டிக் கொடுத்திருப்பார் இல்ல. அம்மா பாவம். எப்பவும் அப்பாவை நினைச்சு அழுது கொண்டே இருக்கிறாங்க."
‘ஓ! அப்ப நான் சொன்னது சரிதான். ஆமாம் மல்லிகா. இந்தக் கவலையை நீங்கள் இருவரும் மறக்க நான் ஒரு வழி கூறட்டுமா..?”
“என்ன வழி அங்கிள் , !”
'அம்மா இன்னும் ஒரு திருமணஞ் செய்துகொண்டால்” மல்லிகா முகத்தைச் சுழித்தபடி அவனைப் பார்த்தாள்.
(. . . . . . . . . . . . . . . . . . . . . ) அங்கே நிலவிய மெளனத்தை நீடிக்க விடாமல் 'நீ என்ன சொல்கிறாய் மல்லிகா." என்றார் தாஸ்,
'அம்மாட்டக் கேளுங்கள் அங்கிள்"
"ஓ கே. அம்மாவைக் கூப்பிடு.”
“அம்மோவ் "அவள் அழைப்பைக்கேட்டு வாசுகி அங்கே வந்ததும். "உங்களிடம் மல்லிகா ஒரு கேள்வி கேட்கட்டு
96
மாம். கேட்கட்டுமா ?’ என்று அவளைப் பார்த்துக் கண் ணைச் சிமிட்டினார் அவர், ‘என்ன கேட்கப்போகிறீர்கள்?” என்று வாசுகியும் ஒன்றும் நடக்காதது டோற் கேட்க “அதா வது நீங்கள் திரும்பவும் ஒரு திருமணஞ் செய்து கொண் டால் என்ன? என்று மல்லிகாவும் நானும் சிந்திக்கிறோம்” என்று சிரித்துக்கொண்டே கூறினார் தாஸ்,
“நல்ல கேள்விதான். உண்மையில் மல்லிகாவுக்கும் எனக்கும் ஒரு நல்ல துணை தேவைதான். ஆயினும் இதற்கு என் சம்மதத்தைவிட மல்லிகாவின் சம்மதம்தான் முக்கியம்’
என்று கூறி வாசுகி அவளைப் பார்க் ,
“இரண்டாம் தாரமாக உங்களை யார்கட்டப்போறாங்க”
என்று மல்லிகா வினா எழுப்ப, 'ஏன் நானே உன் அம்
மாவைத் திருமணஞ் செய்துகொள்கிறேன். அப்போ
- سمبر
எனக்கு நீ மகள் உனக்கு நான் அப்பர். இல்லையா
மல்லிக்குட்டி" என்று அவன் கூறிமுடிக்கவும்,
மல்லிகாவின் கையில் எஞ்சியிருந்த மாம்பழத் துண்டங் கள் அவன் முகத்திற்போய் விழவும் சரியாக இருந்தது.
தாஸ் திடீர் அதிர்ச்சியினாற் தாக்கப்பட்டுத் திரும்ப வும் தன் நிலைக்கு வந்தபோது அந்த இடத்தில் மல்லிகா வைக் காணவில்லை.
வாசுகியின் கண்களில் இருந்து நீர் ஆறாய்ப் பெருகி யது. தாஸ் மட்டும் கலங்காமல் "இப்பதானே ஆரம்பம் போகப்போக எல்லாம் சரியாகிவிடும்” என்று கூறி அவ் விடத்தைவிட்டு நகர்ந்தார். அதன்பின் தாஸ் வரும்போ தெல்லாம் அவருடன் ப்ேசுவதைத் தவிர்ப்பதற்காக மல்லிகா எங்காவது"ஓடி மறைந்துவிடுவாள்.
இப்பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்று வாசுகி சிந்தித்து, சிந்தித்து அழுதபடி இருக்கையில் ஒருநாள். மல்லிகா அவள் பக்கத்தில் வந்து அவள் கழுத்தைக் கட்டிப்
97
Page 61
பிடித்தபடி 'அம்மா தாஸ் அங்கிளைத் திருமணஞ் செய்து கொள்ள உங்களுக்கு விருப்பமா..? என்று திடீர் எனக் கேட்டாள்.
வாசுகிக்கு உடலெல்லாம் நடுங்கியது. அவள் பேச முடியாதபடி உதடுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்
“என்னம்மா. விருப்பமா..?” மல்லிகா சற்று அதட்ட
லாகக் கேட்டாள்.
‘விருப்பமோ இல்லையோ. எங்களுக்கு ஒரு துணை தேவைப்படுகிறது மிகள் . உனக்கே தெரியும். நாம் தனி யாக இருக்கும்போது "செக்கிங்' அப்படி இப்படியென்று இராணுவ உடையில் மனிதர்கள் வரும்போது நாம் எவ் வளவு நடுங்குகிறோம் என்று.அதுதான் தாஸ் அங்கிளை."
'ஓ.கே . அம்மா நீங்கள் தாஸ் அங்கிளைத் திரு மணஞ் செய்துகொள்ளலாம்.'
வாசுகிக்குத் தன் காதுகளை நம்பவேமுடியவில்லை. நிஜமா மனப்பூர்வமாகச் சொல்கிறாயா மல்லிகா - ??
மல்லிகாவின் பூரண சம்மதத்துடன் ஒருசில தினங் களில் வாசுகி-தாஸ் திருமணம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மல்லிகா ஒரே பிடிவாதமாகத் தன்னை பாடசாலை ஹாஸ்டலிற் சேர்க்கும்படி வாசுகி யிடம் வேண்ட வேறு வழியின்றி மல்லிகாவை ஹாஸ்டலிற் சேர்த்தாள் வாசுகி. w- as
அதன்பின் மல்லிகா அவர்கள் வீடு ஒன்று இருப்பதையே மறந்துவிட்டமாதிரி நடந்தாள். வீட்டுப்பக்கமே அவள் வர விரும்பவில்லை. வாசுகி தாசுடனும், சிலவேளை தனியாக வும் சென்று அவளைக் கெஞ்சிக் கேட்டும் அவள் வரவே யில்லை.
98.
இதனால் வாசுகியின் உள்ளம் உடைந்தது. எதையோ காவந்து பண்ண எண்ணி எதையோ இழந்துவிட்ட நிலை யில் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாத ஒரு நிலையில் நடைப்பிணமாக உலவவேண்டிய ஒரு நிர்ப்பந் தத்துக்கு ஆளானாள். வாசுகி ஒரு நாள் தனியாக மல்லி காவைச் சந்திக்கச் சென்றபோது 'ஏன் மகள் உனக் கொரு வீடு இருக்கிறதே. லீவுக்காவது நீ அங்கு வந்து எங்களை மகிழ்விக்கக் கூடாதா?’ என்று கேட்க,
"நீங்கள் இரண்டாம் திருமணஞ் செய்தபின் அது என் வீடாத இருக்க முடியாது. யாரோ ஒருவரை நீங்கள் திரு மணஞ் செய்துகொண்டதால் அவர் என் அப்பாவாகவும் முடியாது. சும்மா நடிப்புக்கு அவரை நான் அப்பா என்று அழைக்கலாம். அவரும் என்னை மகள் என்று அழைக்க லாம். ஆனால் அந்தப் பாசம். இல்லை உறவு. எம் மிருவருக்குமிடையே எப்பவும் வரமுடியாது. அப்படியான ஒரு போலி உறவை நான் விரும்பவும் இல்லை, ஆகவே தயவுசெய்து என்ன்ை வற்புறுத்தாதீர்கள்.” என்று கூறிய அந்தப் பன்னிரெண்டு வயது மகளைப் பார்த்து வாயடைத்து நின்றாள் வாசுகி. இவள் உண்மையில் பன்னிரெண்டு வய துப் பெண் தானா. என்ற சந்தேகம் அவளுக்கே ஏற்பட் டது.
அந்த சந்தர்ப்பத்தின் பின் இந்தப் பேச்சையே மல்லிகா வுடன் எடுத்ததில்லை வாசுகி. அவள் அப்பாவின் ஓய்வூதி யப் பணத்தின் ஒரு பகுதியை மல்லிகாவின் ஹாஸ்டற் செலவுக்கும், மிகுதியை அவளது பெயரில் வங்கியில் போட் டும் வந்தாள். a
காலச்சக்கரம் வழமைபோல் யாருக்கும் காத்திராமல் சுழன்றுகொண்டேயிருந்தது. இடையில் ஐந்தாறு வருடங் கள் பல மர் ற்றங்களோடு ஓடிவிட்டன ஆயினும் மல்லிகாவாசுகி உறவில் வியக்கத்தக்க எந்த மாற்றமும் நிகழவில்லை.
மல்லிகா தன் விருப்பத்துக்கு பாடசாலை அதிபரின் அனுமதியோடு யாரையோ திருமணம் செய்துகொண்டு
வசதியாக வாழ்வதாகக் கேள்வி.
ች* 99
Page 62
திருமணம் பதிவுத் திருமணமாக கோயிற் கிரியைகள் இன்றி நடைபெற்றது. கோயிற் கிரியை இடம்பெற்றால் அதில் தாசும் கலந்து கொள்ளவேண்டிவரும் என்று முன் னெச்சரிக்கையாகவே அவள் நடத்தியதாகப் பின்னர் யாரோ கூறினர். அவள் கணவன் ஒரு செல்வந்தர் என அறிய முடிந்தது. அதனால் பதிவு ஒரு ஒட்டலில் நடைபெற்றது. அதற்கு மட்டும் தாசும், வாசுகியும் சென்றுவந்தனர். அத் துடன் உறவுசரி. மல்லிகா இவர்களை அழைக்கவும் இல்லை. இவர்கள் அங்கு போகவும் இல்லை.
மல்லிகாவுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கேள்வி. ஆனால் குழந்தைகளின் நிழலைக்கூட இவர்கள் காணவில்லை. காண விரும்பவும் இல்லை. மல்லிகா திரு மணமாகிச் சென்றதும் வாசுகி தாசின் சொந்த இடமாகிய மட்டக்களப்புக்கே வந்துவிட்டாள்.
இத்தனை நிகழ்வுகளையும் சகித்துக்கொண்டு அவளைக் கண்கலங்கவிடாமல் தன் வாழ்வயே அர்ப்பணித்து இது வரை காலமும் அவளைக் காப்பாற்றிவிட்டான் தாஸ்.
மல்லிகாவின் செய்கை ஏற்படுத்திய தாக்கத்தினால் புண்பட்ட தாஸ் அவள் உடலைத் தீண்டாமல் உள்ளத்தி னாலேயே அவளோடு வாழ்ந்தும்விட்டான்.
திடீர் என தாஸ் போட்ட சத்தம் வாசுகியின் சிந் தனையைக் கலைக்க அவள் எழுந்து அவன் மார்பைத் தடவிக்கொடுக்கிறாள். அவன் மூச்சுவிடமுடியாமற் திணறு கிறான். வாசுகி ஓ .' என ஒலமிடுகிறாள். அக்கம்பக்கத் தவர் வருமுன் தாஸின் ஆவி பிரிந்துவிடுகிறது.
வந்தவர்களால் வாசுகிக்கு ஆறுதல் மட்டுமே கூற முடிந்தது. அவர்கள் உதவியுடன் வாசுகி அவனை மாப் பிளளைபோல் அலங்கரித்து வளர்த்துகிறாள்.
உள்ளே சென்ற அவள் தானும் ஆடைமாற்றி அவன் பக்கத்தில் அமர்ந்து தன் துன்பம் போகும் வரை கதறி
100
அழுகிறாள். அவள் அழுது தன் துன்பத்தைத் தீர்க்கட்டும் என்று சிலர் கூறியதால் அவள் களைத்து ஒயும் வரை யாரும் அவளைத் தடுக்கவில்லை.
திடீர் என அவள் மயங்கிக் கீழே விழுந்தபோதுதான் பக்கத்தில் இருந்தவர்கள் அவளைத் தாங்கிப்பிடிக்க ஓடி னர். அப்போது அவள் கண்கள் மயங்கி வாயில் இருந்து நுரை கக்கவே 'வாசுகி வாசுகி!” என்று அவளை அழைக்கு முன் அவள் தலை சாய்ந்து அவர்கள் மடியில் வீழ்ந்தது. அவள் கைகள் விரிய அதற்குள் இருந்த ஒரு காகிதம் நிலத்தில் வீழ்ந்தது. -
அதை அவர்களுள் ஒரு பெரியவர் எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.
"மல்லிகா. உன் விருப்பப்படியே என் கணவருடன் அதாவது உனக்கு எதுவித உறவுமற்ற ஒருவருடன் என் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன். சுவாமிப் படத்தின் அடியில் ஒரு வங்கிப் புத்தகம் உள்ளது. அதில் உனக்கு இருந்த ஒரே உறவான உன் அப்பாவின் பென்ஷன் பணம் முழுதும் அதாவது உன்னிடம் இருந்து எம் உறவு பிரிக்கப் பட்ட நாள் முதலாக உன் செலவுக்கு அளித்தது போக மிகுதிப் பணம் அத்தனையும் உன் பெயருக்கே தாஸ் அதா. வது என் கணவர் போட்டுவைத்துள்ளார்.
மல்லிகா! என் உயிர் பிரியுமுன் உன்னிடம் ஒன்று கூற ஆசைப்படுகிறேன். நீ நினைத்தபடி அவருடன் நான் சுகித்து வாழவேண்டும் என்ற நோக்கில் அவரை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. உனக்கும் எனக்கும் அவர் ஒரு அரணாக இருப்பார் என்ற எண்ணத்தில் உன் பூரண சம் மதத்துடன்தான் நான் அவருடன் இணைந்தேன். இவற் றைப் புரியாமல் இருக்க நீ இன்னும் குழந்தையல்ல. அத னால் நீ வெட்டிவிட்டுப்போன உறவை நானும் அவருட னேயே முடித்துக்கொள்கிறேன். இனியாவது இது உன் வீடு என நினைத்து இவற்றைப் பொறுப்பேற்பாய் என
நம்புகிறேன்.
O
Page 63
உன் அப்பாவுக்கும், உனக்கும் நாம் மனதாற்கூடத் துரோசஞ் செய்யவில்லை. உன் வாழ்வில் எதுவித தாக்க மும் ஏற்படக்கூடாது. உன் அப்பாவின் ஓய்வூதியம் அப் படியே உனக்கு வரவேண்டும் என்பதற்காக நாம் பதிவுத் திருமணமும் செய்துகொள்ளவில்லை. - வாசுகி தாஸ்."
வாசுகியின் உயிரற்ற உடலும் தாஸிசின் பக்கத்தில் கிடத்தப்பட்டது.
அவ்வேளை காகிதத்தின் பின்புறமிருந்த சில வரிகள் ஒருவரின் கவனத்தை ஈர்த்தன.
“உயரப் பறந்துகொண்டிருந்த 'தாஸ்" என்ற காற்றாடி யின் உறவை அறுப்பதற்காக நீ அந்நூலைக் கத்தரித்தாய், இன்று காற்றாடியுடன் சேர்ந்து நூலும் போய்க்கொண் டிருக்கிறது. காற்றாடியும் நூலும் எங்குபோய்ச் சேருமோ தெரியாது. அது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். நூலைக் கத்தரித்த உன்னிடம் இருந்து எதிர்த்திசையிற்தான் சென்றுகொண்டிருக்கின்றன" காற்றாடியும் நூலும் என்பதை மட்டும் புரிந்துகொள்."
02.
Page 64
126
வடிவங்கள் பற்றியவான அழுத்தங்கள், முற்கற்பிதங் -களின்றி சந்தித்துக் கொள்ளுதல் ஒரு தனித்தன்மையான தும், படைப்பிற்கான பிரசவவேதனையுடனும் கூடிய அந்தக்கணத்தில், எந்தவிடயம் பற்றிய தயாரிப்பிலீடுபடப் போகிறார்களோ அந்த விடயம் பற்றிய ஆழமான, உருவ மற்ற உள்ளுணர்வோடு சந்தித்துக் கொள்வார்கள். இந்தக் கணத்திலிருந்து தயாரிப்பு நடைமுறையை ஆரம் பிக்கும்போது எண்ணற்ற வடிவங்கள் வெளிவரும். கலைஞர்களின் பண்பாட்டு, அரங்கப் பரிசய அடிப்படை யிலிருந்து இப்புதிய வடிவங்கள் எழும். v
இந்தத் தயாரிப்புக் காலம் கலைஞர்கள் மிகவும் சுயாதீனத்தை உணரக்கூடியதான சூழ்நிலையாக அமை தல் வேண்டும். இந்தக் கட்டம் மிகவும் திறந்ததாக இருத்தல் வேண்டும். கலைஞர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களின் சொந்த ஆற்றல், வளம் உண்டு ஒருவருமே வெற்றுத் தாளாக இருக்கமாட்டார்கள். இது பங்குபற்று கிற ஒவ்வொரு கலைஞராலும் உணரப்பட வேண்டும். மதிக்கப்படவேண்டும். இந்த நிலையில் ஒவ்வொரு கலைஞரும் தம்மால் முடிந்த அனைத்தையும் நாடகத்திற்கு வழங்கக் கூடியதர் க இருக்கும். கலைஞர்களின் மரபு பெறு மதிமிக்க புதியபுதியகலைச் சாதனங்களை அரங்கஉருவாக் கத்திற்கு வழங்கும். மேலும் கலைஞர்கள் அரங்கக் குறி முறைமைகளின்-உ-ம் அசைவு, காட்சி, ஒளி, நிறங்கள், வேடமுகம்.வெவ்வேறு புதிய புதிய சாதக தன்மைகளை நாடியறிய வேண்டும். இவ்வாறு நாடியறிவதற்கான வளங்களாக நாட்டார் மரபுகளையும் கருதலாம். உதாரணமாக மண்சுமந்த மேனியர் நாடகபாடத்தில் ம. சண்முகலிங்கன் பல நாட்டார் பாடல்களைப் பொருத் தங்கருதிச் சேர்ந்திருந்தார். இங்கு நாடக பாடம் படைப் பாக்கத்திற்குப் பொருந்தமாக நாட்டார் பாடல் சேர்க்கப் பட்டதேயன்றி ஏற்கனவே கருதப்பட்ட நாட்டார் பாடல்
五27
களிற்குப் பொருத்தமாக நாடக பாடம் எழுதப்பட வில்லை. தயாரிப்பில் பங்குபற்றுகின்ற ஒவ்வொரு கலை ஞனும் புதிய, புதிய கலைச்சாதனங்களை நாடியறிந்து தயாரிப்பில் இணைக்கிறபோது அத்தயாரிப்பு வளம் மிகுந்ததாக மிளிரும். இத்தகைய தயாரிப்பில் நெறியாளர் எதையும் திணிப்பவனாக அமையமாட்டான். கலைஞர் களின் ஆற்றலை வெளிக்கொணர ஊக்குவிப்பவனாக விளங்கி அக்கலைச்சாதனங்கள் மூலம் ஓர் அழகியல் முழுமையை உருவாக்குபவனாக விளங்குவான்.
இந்நிலையானது, ஆரம்பத்திலேயே நெறியாளர் நாடகத்தைப் பற்றியும், அது எவ்வாறு அமையும் என்பதைப் பற்றியும் விரிவுரை நடத்துவதுடன் ஆரம் பிக்கும் எமது நவீன அரங்கத் தயாரிப்பு முறையிலிருந்து மாறுபட்டதாகும். அரங்கை உருவாக்குவது ஒரு கூட்டு தடவடிக்கை என்று கூறப்பட்டாலும் அங்கு நெறியாளன் சர்வ அதிகாரமும் உடையவர் என்றும் ஏனையவர்கள் அங்கு சமமான நிலையில் இல்லை என்றதுமான எண்ணக் கருவே எமது நவீன அரங்கப் பயில்வாளர்களிடையே நன்றாக ஊறிப்போயுள்ளது. இங்கு நடிகர்கள், விதானிப் பாளர், இசையமைப்பாளர், கட்புலக் கன்லஞர் போன்ற ஏனைய கலைஞர்கள், நெறியாளர் தான் எண்ணியதை எண்ணியவாறு சொல்வதற்காகப் பாவிக்கப்படும் கருவி களாகவே கருதப்படுகிறார்கள். சர்வாதிகாரியாகிய நெறியாளன் அரங்கின் பல்வேறு குறிமுறைமைகளை நடிகன், ஒளி, நிறங்கள், காட்சி, வேடஉடுப்பு, ஒப்பனை. தனது கையில் எடுத்துக் கொண்டு தான் எண்ணியபடி அவற்றைச் செயல்புரிய வைப்பான். நெறியாளன் சர்வாதிகாரி என்ற நிலையே இன்று எம்மிடை யே நிலவும் அரங்கப்பயில்வில் பெருமளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. நவீன அரங்கு, புதிய அரங்கு, போன்றவற்றில் இத்தகைய நிலைதான்.
Page 65
128
அண்மையில் பிரான்ஸிஸ் ஜெனத்தால் நெறியால்கை செய்யப்பட்டு மேடையேறிய சண்முகலிங்கத்தின் 'திரிசங்கு சொர்க்கம்' நாடகபாடத்தில் பின்வருமாறு ஒரு குறிப்பு உள்ளது. "மேடையில் நெறியாளர் என்ற படைப்பாளி பயன்படுத்தும் மூலப்பொருள் நடிகனே. நடிகன் வெறும் சடப்பொருடல்ல; அவன் உயிரும் உணர்வும் உள்ளவன், அவனது உயிரும் உணர்வும் (அனுபவ எல்லையும்) மேடையில் நெறியாளனின் சர்வாதிகாரத்துக்கு ஏதோவொரு வகையில் எல்லை வகுத்தே தீரும்'.
இவ்வாறு சண்முகலிங்கம் கூறவேண்டி வந்ததே எமது புதிய அரங்கப் பயில்வில் கூட நெறியாளன் சர்வாதிகாரி என்ற நிலை எவ்வளவு தூரம் ஆதிக்கஞ் செலுத்தி வந்ததென்பதைக் காட்டுகிறது.
நெறியாளர் ஆதிக்கம் செலுத்தும் இத்தகைய நிலை யானது அரங்கில் மறைந்து கிடக்கும் அதன் உண்மையான வளத்தை அசட்டை செய்யும் ஒரு நிலையாகும். அரங் கானது மற்றெந்தக் கலைகளிலும் இல்லாதளவிற்கு ஒரு தனிப்பார்வைக்குப் பதிலாகப் பல பரிமானங்களை யுடைய பார்வையை உருவாக்கும் ஆற்றலுடையதாக இருக்கிறது. ஒரு ஓவியத்தில் அதை வரைந்த ஓவிய னொருவனின் பார்வையே வெளிப்படுத்துகிறது. ஆனால் அரங்கில் அப்படியல்ல. பல பரிமாணங்களையுடைய பார்வை வெளிப்படுகிறது. ஒரு நாடகபாட எழுத் தாளனினதோ அன்றி ஒரு நெறியாளனினதோ பார்வை மட்டுமல்ல நடிகர்களின், விதானிப்பாளர்களின், இசை யமைப்பாளர்களின். இவ்வாறு பலரின் பார்வை அரங்கில் வெளிப்படலாம். உண்மையில் நாடக ஆக்கவியலில் நெறியாளன், நடிகன், விதானிப்பாளன். மட்டுமன்றி பார்வையாளரும் பங்குபெற வேண்டுமென்பதே எமது நிலையாகும். நாடக ஆக்கத்தில் பார்வையாளரும் பங்கு,
129
பற்றுகின்ற போதுதான், பார்வையாளரின் பலவித பெறுதற் செயற்பாடுகளையும் இணைத்துக் கொண்டு ஆற்றுகை பாடம் முழுமை பெறுகின்றபோதுதான் அவ்வாற்றுகை பாடம் தாக்க வன்மையுடையதாயிருக்கும் என்பதை முன்னரே பார்த்தோம். இங்கு ஏற்படுகின்ற தொடப்பு ஆற்றலுடையதாயிருக்கும். இவ்வாறு உருவா கின்ற அரங்கு உண்மையிலேயே ஒரு கூட்டுத்த்யாரிப்பாக இருக்கும். அதாவது அந்த அரங்க நிகழ்வில் பங்குகொள் கின்ற அனைவரினதுமாக இருக்கும்.
அரங்கத் தயாரிப்பிற்கான முதற் சந்திப்பு கலைஞர் கள்-பார்வையாளர்கள் ஒன்றுகூடலாகவே இருக்க, வேண் மென்ற அளவிற்கு இப்போது நாம் விரும்புகிறோம். இச்சந்திப்பிலிருந்தே அரங்கம் ஆரம்பிக்கப்படவேண்டும். இச்சந்திப் பின் முன் ஒத்திகையேதும் நடைபெறமுடியாது. கலைஞர்களும், பார்வையாளரும் சந்திக்குமிடத்தில் அரங்கு தோன்ற ஆரம்பிக்கும். கலைஞர்களும், பார்வை யாளருஞ் சேர்த்து புதிதளித்தல் மூலம் இவ்வரங்கை வளர்த்துச் செல்வர். சில வேளைகளில் பார்வையாள ருக்கு அங்கு நடைபெறுவது அரங்கு என்பது தெரியாமலே அதில் கலந்து கொள்வதும் உண்டு. முடிவில்தான் அங்கு நடைபெற்றது அரங்கென்பது அவர்களுக்குப் புரியும். இத்தகைய நிலை பார்வையாளர்கள் தடையேதுமின்றி தாமாகவே முன்வந்து அரங்க நிகழ்வில் ஈடுபட அதை வழிநடத்த வழிவகுக்கும். நடத்தப்படுவது அரங்கென்று தெரிந்திருந்து, ஆற்றுபவர்களால் பார்வையாளர்களைப் பங்குபற்ற வருமாறு அழைக்கப்படுகின்றபோது பார்வை யாளர்களுக்கு இருக்கக்கூடிய தயக்கம் இங்கு இருக்காது. இவ்வாறு பார்வையாளர்கள் தாமாகவே முன்வந்து அரங்க நிகழ்ச்சியில் பங்குபற்றக் கூடியதாக நாம் அரங்க வடிவங்களை உருவாக்க முயலவேண்டும்.
பார்வையாளரும், அரங்க நிகழ்ச்சியில் பங்குகொள்ள, வேண்டுமென்ற எமதுநிலை வெறுமனே பூச்சியத்திலிருந்து
ቃ –9
Page 66
130
எழுந்ததல்ல. இன்றைய எமது அழகியற் தேவையும், சமூகத்தேவையும் இத்தகைய நிலைக்கே எம்மை வழி
காட்டுகின்றன. 'ஜனரஞ்சகப் பார்வையாளர்கள் "மூடப்பட்ட" அரங்கை வெறுக்கிறார்கள், என்று ஒகஸ்ரா போல் குறிப்பிடுகின்றார். எவ்வளவு தான். கவர்ச்சியான அரங்காக இருப்பினும் அது "மூடப்
பட்டதாய்" அமையும் போது பொதுப்பார்வையாளர் களால் வெறுக்கப்படுகிறது.
மரபுரீதியான எமது பார்வையாளர்கள் ஆற்றுகை களை பல்வேறு அரங்க வெளியமைப்புகளில் (கோயில் வீதிகள், தெருவெளி) வெவ்வேறு மட்டங்கள், கோணங் களிலிருந்து பார்த்துப் பழக்கமுள்ளவர்கள். மேலும் இத்தகைய ஆற்றுகைகளில் பார்வையாளர் பலவித பெறுதற் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுப் பழக்கமுள்ள வர்கள், இவ்வாறு ஒரு தளர்வான நிலையில் கலந்து பரிச்சியப்பட்டவர்களை, தளர்வற்ற நிலையில் வைத்து கட்டாய கவனிப்பைக் கோருகின்ற ஆற்றுகைகளை நாம் மேற்கொள்கிறபோது அவர்கள் அவ் ஆற்றுகை களில் இனம் புரியாத வெறுப்பையே அடைகிறார்கள். எனவே இங்கு மேற்கொள்ளப்படும் தொடர்பு ஒரு அழகியல் தொடர்பாக அமைவதில்லை தொடர்பு இருவழித் தொடர்பாக அமைகிற அதாவது பார்வை யாளரும் பங்குபற்றுகிற தொடர்பாக அமைகிறபோதே ஆற்றலுடையதாகிறது.
மேலும் மக்களிடம் கருத்தைத் திணிக்க முயலும் முயற்சி சாத்தியமற்ற ஒன்றே. திணிக்க முயல்பவன் மீதுள்ள அச்சம் காரணமாக மக்கள் அவனது திணிப்பைப் பார்த்தபடி பேசாதிருக்கலாம்; அல்லது திணிக்கும் முயற்சியை நடத்துகின்ற முறைமையின் கவர்ச்சி காரணமாக மக்கள் அதனைப் பார்த்தபடி பேசா திருக்கலாம். ஏன் தற்காலிகமாக அதன் வசப்படலாம்
131
கூட ஆனால் "சொல்லப்பட்ட" விடயம் மக்கள் மனதில் ஆழமான உணர்வை தூண்டிவிட்டதென்றோ அல்லது அந்த நிகழ்ச்சியிலிருந்து திரும்பிச் சென்ற பின்னும் அவர்களின் மனதில் அந்த உணர்வலைகள் நீடித்து நிலைக்கின்றன வென்றோ சொல்ல (Մ)ւգաn é). ஆற்றலுடைய தொடர்பாக அது மிளிர்வதில்லை.
இன்று அறிவுத்துறைகள் வளர்ச்சியடைந்து "கணணி" யுகத்தில் வாழ்கிறோம். உலகம் சுருங்கிவிட்டது. தகவல் பரிமாற்றம் ஓர் உயர்ந்த கட்டத்திற்கு வளர்ச்சியடைந்து விட்டது. சமூக முன்னேற்றம் பற்றியும் சமூகமாற்றம் பற்றியும் ஒவ்வொருவரும் கருத்துக்களை வைத்திருக் கிறார்கள். அவற்றை பகிரங்கமாக விவாதிப்பதற்கு உள்ளூர விரும்புகிறார்கள். ஆனால் எமது சமூக மேலோங்கிகளின் அச்சுறுத்தல் காரணமாக விவாதிக்கும் வலிமையை இழந்துள்ளார்கள். இதனை முதலாவது அலகிலேயே விளக்கியுள்ளோம். தமது கருத்துக்களை விவாதிப்பதற்கான களத்தை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவேண்டும். இன்று நமக்குத் தேவையான அரங்கில் வடிவத்தைத் தீர்மானிக்கின்ற சமூகத்தேவை இதுதான்.
நமக்குத் தேவைப்படும் அரங்கு பரந்துபட்ட மக்களை தன்பால் கவர்ந்திழுக்கும் கவர்ச்சி வன்மையுடையதான ஜனரஞ்சக அரங்காக இருக்கவேண்டும். அவ்வாறு வருகின்ற மக்கள் சுயாதினமான முறையில் தாமாகவே முன்வந்து அரங்கில் செயற்படவும் விவாதிக்கவுமான முறையில் அரங்கு திறந்ததாக இருக்கவேண்டும். நாம் அலகு 2இல் கூறிய அரங்கில் நிலவ வேண்டிய சமநிலைப் புள்ளி பார்வையாளர் செயல்முனைப்பான நிலையில் அரங்கிற் பங்குபற்றல் என்ற முனைக்கோடியை நோக்கி நகரவேண்டும் செயல்முனைப்பற்ற நிலையிலிருக்கும் நமது மக்களை அரங்கு தனது நண்டமுறையில் படிப்படி
Page 67
132
யாக விடுவித்து ஒரு விவாதக்கள அரங்காக மாற வேண்டும். அதாவது அரங்கு ஒரு கருத்தாடலாக மாற வேண்டும். இத்தகைய அரங்கு ஒரு தனித்துவமான கலைவடிவமாக மேற்கிளம்பும்,
இந்தப் பின்னணியில் நாம் எமது அண்மைக்கால அரங்க அனுபவங்கள் பற்றிப் பார்ப்போம். 'கடந்த மூன்று மாத காலத்துள் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏறத்தாள 150 இடங்களில் ஒரே இடத்தில் இரண்டு, மூன்று காட்சிகள் என மேடையேற்றப்பட்டு பொதுசன (வெகுசன) பாராட்டு ஆர்ப்பினை மண்சுமந்த மேனியர்' என்ற நாடகம் பெற்றுக்கொண்டது'. 'மண் சுமந்த மேனியர்' அது நிகழ்த்தப்பட்ட காலத்தில் ஒரு முக்கிய படைப்பாகக் கருதப்பட்ட்து. 'மண்சுமந்த மேனியரில் மக்கள் பெருவிருப்புக் கொண்ட்னர். "இது எவ்வாறு." என்று அதிசயப்பட்டனர்; அதிர்ச்சியடைந்தனர். மண் சுமந்த மேனியரில் அவர்கள் தம் நாளாந்த வாழ்க்கையில் கண்டவையும் கேட்டவையும், அனுபவித்தலையும் அதாவது அவர்களுக்குப் பரிச்சியமான விடயங்கள் ஒர் புதிய விதத்தில் அளிக்கப்பட்டபோது அவர்கள் வியப் படைந்தனர்; மகிழ்ச்சியடைந்தனர். இது கதையாய்ப் பரவிற்று மக்கள் பெருவாரியாக மண் சுமந்த மேனியரைக் காணக் காத்து நின்றனர். சூழ்ந்துகொண்டனர். கண்ட வர்கள் மீண்டும் காண்பதற்காய் கலைஞர்களுடனேயே அல்லது அவர்களுக்குப் பின்னாலேயே தொடர்ந்து சென் றனர். இந்நாடகம் தமிழ் அரங்க வரலாற்றில் ஒரு குறிப் பிடத் தகுந்த சாதனையை நிலை நாட்டியது என்று கூறுவது மிகையல்ல."
மண் சுமந்த மேனியர் தன் சாதனையைச் செய்யு மாற்றை கா. சிவத்தம்பி பின்வருமாறு கூறுகிறார்: 'நமக்குத் தெரிந்த அரங்கப் பண்பாட்டினைத் தளமாகக் கொண்டு (ஆட்டம், இசை, அசைவு, கூற்று) இது நிகழ்த்,
33
தப்படுகிறது. நமது நாட்டார் மரபு நிமிர்த்தி வைக்கப் படுகிறது 8 -
மண் சுமந்த மேனியர் எம்முடையதாக, எமது மண்ணிலிருந்து மேற்கிளம்பியதாக இருந்தது என்பது தான் இவரின் கருத்து. இது அக்காலச் சூழலில் ஒரு புதிய வடிவமாகவும் இருந்தது. இதை கா. சிவத்தம்பி பின்வரு மாறு கூறுகிறார்: "இந்தக் கலைக்கலவைக்குள் கூத்தின் ஆட்டங்கள், விலாசத்தில் பாடல்கள், திரெஜடியின் 'கோரல்", கொமெடியின் அங்கவீச்சுகள், பிரெக்றின் 'தொலைப்படுத்தல்" உத்தி ஆகியன ஒன்று சேர்ந்து தனித்தனியே நிற்காமல் ஒரு புதிய நாடக வடிவத்தைத் தோற்றுவித்தன. அந்த நாடக வடிவத்தின் சந்தேகமற்ற உருவகம் "மண்சுமந்த மேனியர்” ஆகும் 4.
இவ்வாறு ‘மண் சுமந்த மேனியர்" அக்காலகட்ட அழகியல் தேவையை பூர்த்தி செய்த ஒன்றாக இருந்தது. தனக்கு முந்திய நாடக வடிவங்களில் சலிப்படைந்து ‘போயிருந்த மக்கள் மத்தியில் ‘மண் சுமந்த மேனியர்' என்ற புதிய வடிவத்தின் வருகை ஒரு குதூகலத்தை, மகிழ் வலிப்பை ஏற்படுத்தியது.
புதிய வடிவமாகத் தோற்றம் பெற்று மண்சுமந்த மேனியர் தனக்கு முந்திய ஈழத்தமிழ் அரங்க மரபைத் தன்னுள் செரித்துக்கொண்டு மேற்கிளம்பிய ஒரு படைப் பாக இருந்தது தனக்கு முந்திய அரங்க மரபை நல்லது, கெட்டது என்று வகைப்படுத்தாமல் அவை அனைத்தி லிருந்தும் கற்றுக்கொண்டது. 'வித்தியானந்தன், தாசீ சியஸ், சுந்தரலிங்கம், மெளனகுரு முதலியோரின் நாடகப் பணிகளை தன்வயப்படுத்திப் புதிய ஒரு நாடகத் தளத் திற்கு எம்மை சண்முகலிங்கம் இட்டுச் செல்கிறார்"; என்றும் "பேராசிரியர் கணபதிப் பிள்ளையின் பின்னர் யாழ்ப்பாண வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை நன்கு சித்தரிப்பவராக சண்முகலிங்கம் மேற்கிளம்புகிறார்"
Page 68
丑34
என்றும் சிவத்தம்பி கூறுவதிலிருந்து, மண்சுமந்த மேனியர் எவ்வாறு தனக்கு முந்திய அரங்க மரபைத் தன்வயப் படுத்தியது என்பது புரிகிறது, இவ்வாறு வெளிக்கிளம்பிய "மண் சுமந்த மேனியர்' தனக்கு பிந்திய ஈழத்தமிழ் அரங்கச் செந்நெறியிலும் ஆழமான பாதிப்பைச் செலுத்தியது.
அரங்கம் என்பது கல்விக்குரியது என்றும் இதில் ஈடு படுவதற்கு ஆழமான பயிற்சி தேவையென்பதும் இதன் பின் பரவலாக உணரப்பட்டது. 'மண்சுமந்த மேனி யரைப்" போல் நாடகங்கள் தோன்ற ஆரம்பித்தன. இது ஒரு ஆரோக்கியமான போக்கில்லையென்றாலும் தவிர்க்க முடியாமல் இதுவும் விளைந்தது. 'மண் சுமந்த மேனியர்” ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக ஒரு தெருவெளி அரங்க இயக்கமும் அப்போது தொழிற் பட்டு வந்தது.
"மண்சுமந்த மேனியரை' ஆற்றிய யாழ் பல்கலைக் கழக கலாசார குழுவினர் 'மாயமான்' என்ற ஒரு தெரு வெளிக் தயாரிப்பை நிகழ்த்தினார்கள். 'மண்சுமந்த மேனியர்' போகாத போகமுடியாத இடங்களுக்குக் கூட "மாயமான்" போனது. பனை வெளிகளுக்குள்ளும், ஆல்ய வீதிகளிலும் இது நிகழ்த்தப்பட்டது. பார்வையாளரின் அறிவு மட்டத்திற்கேற்ப 'மாயமான்' தன்னை மாற்றிக் கொண்டது. அந்தளவிற்கு வளைந்து கொடுக்கக்கூடிய வடிவமாக அது இருந்தது 'மாயமானின்’ நாடக பாடத்தின் பருமட்டான வரைபு சேரனால் போடப் பட்டாலும் ‘மாயமானின்" இறுதிவடிவம் பார்வை யாளர்களுடனான வடாட்டத்தின் போதே முற்றுப் பெற்றது. இந்த வகையில் குறிப்பிடத்தக்களவிற்கு ‘மாயமான்' ஒரு “புதிதளிப்பு" அரங்காகவே இருந்தது. மேலும் ‘மாயமான்’ ‘மண் சுமந்த மேனியரை விட மறைபொருட் பண்பு குறைந்தாகவும், புலமைப்பண்பு
135
நீக்கப்பட்டதாகவும் இருந்தபடியால் கிராமத்துப் பார்வை யாளரை நெருங்கக் - கூடியதாகவும் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது.
இவ்வரங்குகள் பார்வையாளரை உணர்ச்சிவசப் படுத்தாமல் புறவயமாக நின்று ஆற்றுகையைப் பார்க்க வைத்தன. இவ் ஆற்றுகைகளில் பார்வையாளர் விமர்சன பூர்வமாகச் சிந்திக்க முடிந்தது. அதற்கான உத்திகளை இவை மேற்கொண்டிருந்தன. இதன் மூலம் இவ் அரங்க ஆற்றுகைகளின் பார்வையாளர் குறிப்பிடத்தகுந்த அள வில் தளர்வான நிலையில் கலந்து கொண்டனர்.
இவ் அரங்குகள் மருட்கை விளைவைப் பெரும்பாலும் தவிர்த்துக் கொண்டன. நிகழ்த்தப்படுவது ஒரு அரங்க நிகழ்வு தான் என்பதைப் பார்வையாளர் உணரும் வகை யிலே இவ் அரங்குகள் ஆற்றப்பட்டன. பல சந்தர்ப்பங் களில் பார்வையாளர்கள் மத்தியிலே ஆற்றுகை நிகழ்த்தப் பட்டது. நடிகர்கள் பார்வையாளர்கள் மத்தியிலேயே இருந்து தேவையானபோது நடிக்கச் சென்றனர். தட்டு முட்டுகள் பார்வையாளர் பார்வையில் படும்படியே வைக்கப்பட்டிருந்தன. தேவையானபோது அவை எடுக்கப் பட்டு நடிகர்களால் பாவிக்கப்பட்டன. ஆற்றுகையின் செயலானது ஒவ்வொரு முறையும் பார்வையாளரின் கண் முன்னாலேயே புதிது புதிதாக நிகழ்த்தப்படுவதாக இருந்தது. 'உயிர்த்த மனிதர்- கூத்தில்' நிலையான உயர்ந்தளவிலே தனிப்படுத்தப்பட்ட பாத்திரம் என்று எதுவுமே இருக்கவில்லை. மனித இயல்பின், நடத்தை களின் வகைமாதிரிகள் நடிகர்களால் "செய்து காட்டப் பட்டன". இந்த வகையில் ஒரே பாத்திரம் ஒன்றுக்கு மேற்பட்ட நடிகர்களால் நடிக்கப்பட்டது.
இவ்வாறு பல வழிகளில் அரங்கியல் மருட்கை விளைவை அரங்குகள் தமது வளர்ச்சிப் போக்கில் படிப் படியாக மீறி "உயிர்த்த மனிதர் கூத்தில்" முற்றாகவே
Page 69
136
உடைத்தெரியும் நிலைக்கு வந்துள்ளன. எமது பார்வை யில், இந்த அரங்கியல் மருட்கை நிலையானது கைவிடப் பட்டமை ஒன்றே 'அரிஸ்டோட்டேலிய" அரங்கு எம்மில் திணித்திருந்து பல விரும்பத்தகாத விளைவுகளை அகற்றி விட்டது. பார்வையாளன் நடிகனோடு தன்னை இனங் கண்டு அவனது உணர்ச்சிக்கே முழுமையாக வசப்பட்டுப் போகும் நிலை தேவையின்றி, நடிகன் நிகழ்த்துபவற்றை புறவயமாக நின்று விமர்சன ரீதியாகப் பார்க்கின்ற தன் மைக்கு வழிவிட்டது.
மேலும் இவ் அரங்க ஆற்றுகைகளின் கதைப்பின்னல் அமைக்கப்பட்ட முறையானது, 'நன்றாக செய்யப்பட்ட நாடகத்தின்" கதைப்பின்னல் அமைப்பினை நிராகரித்தது. எதிர்பார்ப்பையும், திடீர் திருப்பத்தையும் ஏற்படுத்த வேண்டு மென்ற நோக்கத்தை இது கைவிட்டது. மாறாக "சம்பவக் கோர்வை'த் தன்மையுடையதாக கதைப் பின்னலை அமைத்தன ஒரு உச்சக்கட்டத்திற்கு வளர்த்துச் செல்வதை விடுத்து ஆற்றுகையை வெவ்வேறு சம்பவங் கள், நிலைமைகளின் தொகுப்பாக வெளிக்காட்டியது. அடுத்தடுத்து வருகின்ற ஒன்றையொன்று முரண்பட்டு நிற்கின்ற சம்பவங்களின் இணைப்பின் மூலமே ஆற்றுகை யில் முழுவிளைவும் வெளிக்கொணரப்பட்டது, இதில் வருகின்ற வெவ்வேறு சம்பவங்கள் தம்மளவில் முழுமை யான துண்டுகளாகவும் இருந்தன. இது இராமாயண மகாபாரத கதைகளில் வரும் கிளைக்கதைகளைப் டோல இவ்வாறு கதைப்பின்னல் அமைக்கப்படுவதன் காரண மாக பார்வையாளர் கட்டாயக் கவனிபபிற்கு உட்படுதல் தேவையற்றிருந்தது.
இவ் அரங்குகளில் மேற்கொள்ளப்பட்ட நடிப்பு முறை. நடிகன் தன்னை இன்னொரு பாத்திரமாக மாற்றிக் கொள்வதை கடைப்பிடிக்கவில்லை மாறாச நடிகன் கடந்த காலத்தில் தான் கண்டதைச் . "செய்து
1.37
காட்டுகின்ற'தாகவே இருந்தது. தான் செய்து காட்டு கின்ற பாத்திரம் பற்றிய முழு விளக்கத்தைப் பார்வை
யாளர் பெறக்கூடிய வகையிலே, அப் பாத்திரத்தின்
தன்மைகளை அதாவது அப்பாத்திரம் பேசும் முறையை,
அசைவுகளை, முகபாவங்களை, செய்து காட்டினான்,
*அப்பாத்திரம் இவ்வாறுதான் நடந்து கொண்டது'
என்பதைச் செய்து காட்டுவதாக இந்த நடிப்பு முறை
விளங்கியது. இதன் காரணமாகப் பார்வையாளர் அப்
பாத்திரத்தின் செயல்களை மதிப்பிட்டுக்கொள்ள முடிந்
திது.
அரங்கின் ஏனைய குறிமுறைமைகள் - காட்சி, இசை அசைவுகள் வெறுமனே துணைச் சாதனங்களாக அமை யாமல் தம்மளவிலேயே தனித்துவமானவையாக நின்றன. இவை அரங்கியல் மருட்கை நிலையைத் தோற்றுவிக்க வேண்டிய அவசியமற்றவையாக இருந்தன.
இவ்வாறு பல்வேறு முறைகளில் இவ் அரங்குகள் மேற் கொண்ட உத்திமுறைகள் மூலம் பார்வையாளன் ஆற்றுகையை புறவயமாக நின்று பார்க்க முடிந்தது. எனினும் இவ் அரங்குகள், ஒரு தளை நீக்கத்துக்கான பொருத்தமர்ன அரங்காக இருக்கவில்லை. இவ்வரங்குகள் கருத்துச் சொல்லும் வடிவங்களாகவே இருந்தன. கலைஞர்கள் தமது கருத்துகளை கலைப்படிமங்களூடு பார்வையாளர் முன் வைத்தனர். ஆற்றுகையின் செயல் ஆற்றுபவர்களினாலேயே தீர்மானிக்கப்பட்டது. பார்வை யாளர் ஆற்றுகையின் செயலை விமர்சன பூர்வமாக பார்த்தாலும், செயலைத் தீர்மானிப்பதில் பார்வை யாளரின் பங்கு இருக்கவில்லை, போதனைப் பண்பே மேலோங்கி இருந்தது.
இனி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிப் பார்வையாளர்களுடன் விவாதிக்கப்படவில்லை. மாறாக
Page 70
138
**தானையும் ஏகுவீரே" என்று பார்வையாளரிடம் அறைகூவல் விடுக்கப்பட்டது.
ஆனால் இந்த அரங்குகள் நமக்குத் தேவைப்படும் அரங்கின் வளர்ச்சி நிலைகளைச் சுட்டி நிற்பவை இதை மனங்கொண்டுதான் நாம் மேலும் முன்செல்ல வேண்டும். தளைநீக்கத்திற்கான அரங்கை உருவாக்க வேண்டும்.
மக்கள் செயல்முனைப்பான பங்குவகிக்கும் ஒரு வித்தியாசமான கலைவடிவமாக அரங்கை ஆக்க நாம் முயற்சி செய்கிறோம். ஆனால் ஒடுக்குமுறைச் சமூகத் தின் தொடர்பு சாதனங்களினால் மக்கள் செயல் முனைப் பற்ற நிலையிலேயே பேணப்படுகின்றனர். இத்தகைய சாதனங்களினுள் சினிமாவும், தொலைக்காட்சியும் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இவை தமது தொழில் நுட்பச் சிறப்பு காரணமாகவும், படைப்புச் செம்மை காரணமாகவும் மக்களை இலகுவில் தம்பால் கவரும் வன்மை பெற்றவையாக விளங்குகின்றன. ஆனால் இச்சாதனங்கள் மூலம் மேலோங்கிகள் மக்களைச் செயல் முனைப்பற்றவர்களாகப் பேணி அவர்களிடம் தமது மேலாண்மையைச் செலுத்த முயல்கின்றனர்.
மேலாண்மை செலுத்த முயலும் இந்த வடிவங்களு டன் தளை நீக்க அரங்கு பகைமுரண்பாட்டைக் கொண் டுள்ளது என்பதைச் சொல்லித் தெரியவேண்டுமென் றில்லை. மேலாண்மை செலுத்த விரும்பும் அரங்கினதும் தளை நீக்க அரங்கினதும் நடைமுறைகள் ஒன்றிற் கொன்று எதிரெதிரானவையாகவே விளங்க முடியும். இரண்டினதும் தோக்கங்கள் வித்தியாசமானவை. எனவே நடைமுறைகளும் வித்தியாசமானவையே. இதில் நாம் திட்டவட்டமான கவனத்தைச் செலுத்தி னால் மட்டுமே ஒரு நீண்டகால நடைமுறையில் மக்க, ளைச் செயல்முனைப்புள்ளோர்களாக மாற்ற முடியும்.
39
தளை நீக்கத்திற்கான அரங்கு, மக்களை செயல் முனைப்புள்ளோர்களாக மாற்றல் ஓர் இயந்திர ரீதியான செயற்பாடு என்று கருதக்கூடாது. மக்கள் விடயங்களை அறிகின்ற ஆற்றல் அற்றவர்கள் என்று இந்த அரங்கு கருதக்கூடாது. மக்களின் ஆற்றலில் நம்பிக்கையை இழக்கக் கூடாது. உலகை மாற்றுவதற்கும், மீள்படைப் பாக்கஞ் செய்வதற்குமான வழிவகைகள் பற்றிய இடர்மிகுந்த தேடலில் மக்களும் தம்மை ஒரு பங்குதாரர் களாகக் கருதுகின்ற நடைமுறையை உள்ளடக்கியதாகவே ஓர் உண்மையான சமூகமாற்ற அரங்கத் திட்டமானது அமைய வேண்டும். அதாவது அந்தத் தேடல் நடைமுறையில் மக்களும் பொறுப்புடையவர் என்ற பங் கினை வகிக்க வேண்டும்
இந்த அரங்கு, மக்கள் மீது மேலாண்மை செலுத்த விழைகின்ற, அவர்களை அச்சுறுத்துகின்ற மேலோங்கி களின் அரங்கைவிட தான் எவ்வாறு தீவிரமாக வேறு படுகின்றது என்பதை மேலும் மேலும் வெளிப்படுத்த வேண்டும். மேலோங்கிகளின் அதிகாரத்துவ ‘மனோ பாவத்தைத் தாக்கினால், கேலிசெய்தல் மட்டும் போதாது. இந்த அரங்கு மக்கள் மீதான தனது மரியா தையை நிரூபிக்க வேண்டும். இது தந்திரோபாய ரீதியான நடவடிக்கையாக அமையாமல் உண்மையான தாக, விசுவாசமானதாக அமைய வேண்டும். இந்த அரங்கின் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்க முடியாது. அரங்கு மக்களை நம்பவேண்டும்; மக்கள் அரங்கை நம்பவேண்டும். கலைஞர்களும், பார்வையாளர்களும் தமது உண்மையான உணர்ச்சி களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய ஒரு அரங்கின் ஆற்றுகையின் இறுதியில் ஆற்றுபவர்களும், பார்வையாளர்களும் ஒன்றிணைந்து, ஓர் உடலின் அங்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும்
Page 71
140
எவ்வாறு ஒருடலாக இயங்குமோ அவ்வாறு இயங்குகின்ற ஒரு நிலை தோன்ற வேண்டும். ஒரு சங்கமம் ஏற்பட வேண்டும். சுதந்திரத்திற்கான பண்பாட்டுச் செயற்பாட் டில் இச்சங்கமம் ஏற்படுவது மிகவும் அத்தியாவசியமான அம்சமாகும்.
அடிக் குறிப்புகள் 1. Boal Auguesto (1979). Theatre of the Oppresseca
Pluto Press, London. P. 142.
2. கா. சிவத்தம்பி (1985), 'மண் சுமந்த மேனியர்' நாடகம் பற்றி ஒரு விமர்சனம், மல்லிகை, 1985 ஆகஸ்ட்-செப்டம்பர் பக். 56-60 மே. கு. பக். 56.60.
4. கா. சிவத்தம்பி (1987), கலைத்துறையொன்று
கல்வி முறையாகின்றது,
(முன்னுரை), ஏழு நாடகங்கள்-ஒரு தொகுப்பு, தமிழ் மன்றம் சுண்டிக்குறி மகளிர் கல்லூரி,
5. கா. சிவத்தம்பி, மு. கு. பக். 56-60. 6. கா. சிவத்தம்பி, மு. கு. பக். 56-60.
gó4),
மக்கள் தமது குரலை, பேசும் சக்தியை இழந்து விட்டார்கள். ஒரு மெளனப் பண்பாட்டில் கிடந்து வருந்துகிறார்கள். எமது நியமமான கல்விமுறையும், ஒடுக்குமுறைச் சூழலும் அவர்களை இத்தகைய முடமான நிலைக்குத் தள்ளிவிட்டது இத்தகைய நிலையிலிருந்து மெளனப் பண்பாட்டிலிருந்து அவர்களைத் த்ளை நீக்கி தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடவும், செயற் படவுமான ஒரு நிலைக்கு எழுச்சியடையச் செய்வதற். கான ஒரு மாற்று ஏற்பாடாக அரங்கை நாம் சிந்தித் தோம். அதற்குரிய அரங்கு உருவாக்கப்பட வேண்டு மெனவும் இந்த அரங்கு ஒரு ஜனரஞ்சக அரங்காக இருக்க வேண்டுமெனவும் திடசித்தம் கொண்டோம்.
ஆனால் இதே வேளை அரங்கின் அழகியல், வன்மைக்கு குறைவேற்படாமல் அரங்கு மீள் கண்டு. பிடிப்புச் செய்யப்பட வேண்டுமெனவும் உணர்ந்தோம். இதற்காக அரங்கின் அச்சாணி அமிசங்களை தேடியபோது அரங்கு பல குறிமுறைமைகளால் பின்னப்பட்டு ஒரு “ஒன்றிணைந்து ஒருமை" ஆக உருவாக்கப்படுவதையும் இந்த ஆற்றுகைப் பாடத்தை பார்வையாளன் பெறுகின்ற போது பலவித பெறுதற் செயற்பாடுகளில் ஈடுபடுவதற் கான சாத்தியம் உண்டு என்பதையும் பார்த்தோம். உண்மையில் ஆற்றுகைபாடம் அவனில் வரையறையை" ஏற்படுத்துகின்றதும், அவனின் பெறுதற் செயற்பாடு களுக்கு சுயாதீனம் வழங்குகின்றதுமான சம நிலையில்
Page 72
142
தான் அழகியல் அனுபவம் ஏற்படுகிறதென்றும் எடுத்துக் காட்டப்பட்ட-து. −
ஆனால் சர்வதேச அரங்கில் ஆரம்பத்தில் பார்வை யாளர் பெறுதல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இருந்த சுதந்திரம் பறிக்கப்பட்டு அவர்கள்மீது வேளாண்மை செலுத்துகின்ற 'அரிஸ்டோட்டேலிய" அரங்கின் அறிமுகமும், பின்னர் மனித உரிமைப் போராட்டங் களினூடு எழுந்த தளை நீக்க அரங்க இயக்கங்கள் பார்வையாளர் பெறுதற் செயற்பாடுகளில் ஈடுபடுவதற் குரிய சுதந்திரத்தை மீள அடைந்தமை பற்றியும் கூறப்பட்டது. அத்துடன் கவன ஈர்ப்புக் கவர்ச்சி போதியளவு கவனிக்கப்படாமல் போனமை பற்றியும் எடுத்துக்காட்டப்பட்டது.
இந்தப் பின்னணியில் நம்மிடையே இன்று பயிலப் படும் அரங்குகளின் இயல்பு, அவற்றின் போதாமை பற்றி ஆராய்ந்து உணர்ந்து கொண்டோம். நம்மிடையே உள்ள எந்த ஒரு அரங்கும் பரந்துபட்ட மக்களை தன்பால் கவர்ந்திழுக்கும் தன்மையற்றிருப்பதையும் (இது மண் சுமந்த மேனியருக்கு முந்திய நிலைமை) ஒரளவு அழகியல் வன்மையுடைய புதிய அரங்கு கூட மேற்கின் மேலாண்மையிலிருந்து முற்றிலும் விடுபடாதிருத்தலை யும், "பார்வையாளர்களை செயலூக்கமான நிலைக்கு உற்சாகப்படுத்துகிற தளை நீக்க அரங்காக இல்லாதிருப் பதையும் கண்டோம்.
பெறப்பட்ட அனுபவங்களிலிருந்து இன்று நமக்குத் தேவைப்படும் அரங்கின் தன்மைக் கூறுகள் பற்றிச் சிந்தித் தோம். அரங்கின் வெவ்வேறு சாதனங்களில் ஆற்றலுள்ள கலைஞர்கள் அரங்கக் குறிமுறைமைகளை நாடியறிந்து தமக்குள் ஒரு கூட்டு மனப்பானமையோடு சுயாதீனமாக வும், தன்னெழுச்சியாகவும் படைப்பாக்க, நடைமுறை யிலீடுபட்டு அதில் பார்வையாளரையும் ஒன்றினைக்கிற
143
போது நமக்கு இன்று தேவைப்படுகிற அரங்கு ஒரு தனித்துவமான கலை வடிவமாக மேற்கிளம்பும் எனக் கூறினோம். அதாவது அரங்கு ஒரு கருத்தாடலாக: உண்மையைத் தேடுகின்ற ஒரு விவாதக் களமாக; உணர்ச்சிப் பகிர்வாக இருத்தல் வேண்டும்.
ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி இந்தப் பிரச்சினையை மனங்கொண்டு தான் மேற்செல்ல வேண்டும்.
Page 73
நூற்பட்டியல் Austin J. L., (1975), ''How To Do Things with Words” Oxford Uni. Press.
Bent Eric. (Eb) (R. P 1986), 'The Theory of the Modern Stage' An Introduction to Modern theatre and Drama, Penguin Books.
Bergcr. John, (RP 1987) Ways of Seeing
B. B. C and Penguin Books.
19.
11.
Berlyne Daniel E. “ “ Confliet, Arousal and . Curiosity McGraw-Hill NY.
Boal-Auguseto (1979), ''Theatre of the oppressed Pluto press.
Bowers Faubion, (1974), ''Japanese Theatre' Tuttle Company, Japan.
Bradby. David, Williams. David, (1986).
“Director's theatre' Macmillan.
Brook. Peter, (R. P. 1972), The Empty Space, Penguin Books.
Brook. Peter, (1989) The Shiffing Point-Methuen.
Burton. Peter and Lane. John. (R. P.1972) ''New
Directions; Ways of advance for' the amateur Theatre, Methuen.
Chiu, Tu Mok (Ed), (1976), ''The Revolution is. dead long Live Revolution' Hong Kong.
12.
i3。
14.
15.
6.
17.
18.
9.
145
Devilin Diana, (1989) “Mask and scene An Introduction to & world View of Theatre' Macmillan. Erven Eugene Van, (1988), 'Radical People Theatre'', Indian a Uni. Press. Erven Eugene Vari, (1989), “Stages of People Power : The Philippines Educational Theatre Association'' CESO Esslin Martin, (1980) 3rd Rived, “Brecht-A Choise of Evils”, Methuen. Esslin Martin, (R. P 1984), An “Anatomy of Drama” ” Hill & Wang. w Esslin. Martin, (R. P 1988) “The field of Drama.' Methuen. I Fajardo, Brenda, V. Pambid Manuel, and Velasco Joven, (Ed), (1984) “Caildren's” Theatre, PETA, Philippines. Fajardo Brenda V, (1985), The Aesthetics of
Powerty, PETA Theatre studies, Quezon.
20.
21.
22.
23.
24.
Forgoes. David & Nowell-Smith. Geoffrey, (Ed) (1985) Antonio Gramsci; Selections from Cultural Writings, Lawrence and wishart. Freire. Paulo. (1972) Ramos. Myra Bergman. (Trns), Pedagogy of the Oppressed, Penguin. Freire Paulo, (1985) Macedo. Donaldo (Trns) The Politics of Education, Macmillan. : Gaskill. William, (1988) A Sense of Direction. Faber and Faber. Goldberg. Roselee, (1988) (Rev & Enlarged Edition), "Performance Arts' Thames and Huds on.
af-10
Page 74
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
34。
35.
36.
37。
146
Goodlad J R (1971), “A Sociology of Popular Drama'', Heineman, NY. Gutierrez Gustavo, (1973), A Theology of Liberation; Orbis, New York. - Martnoll. Phylis, (1987 edition) “The Theater'
Thames and Hudson.
Innes. Christopher, (1983) “Edward Gordon Craig Cambridge. r× Kabalevsky, Omitri: B, (1988). “Music and Education: a Composer Writes” about Musical Education, Unesco Kailasapathy K (1986), ''On Art and Literature' N. C. BH. - Khrapcheko Mikhail, (1986), “Artistic. Creativity Reality and Man', Kaduga Publishers, Moscow. Komissarzhevsky. Victor, (Comp & Prefaces) (1977) 'Nine Modern Soviet Plays', Progress Publishers Moscow.
Lawton. Denis (R.P 1978) “Class culture and the curriculam', Routledge & Kegan Paul.
Lenin. V.I. (1966 edition), ''On Culture and Cul
. tural Revolution” Progress Publishers, Moscow.
Lenin.V.I. (Rev.ed 1975), “On Socialist Ideology and Culture', Progress Publishers, Moscow. Linklater. Kristin, (1976) “Freeing the Natural Voice', Drama Book Publishers, New York. Mahmood. Hameednddin, (1974) “The Kàleidos
copeof Indian Cinema', Affiliated East-West Press, New Delhi. VA
147
38. Majejka, Ladislav and Titunik. Irwin. R, (Ed),
(1984) ' Semiotics of Art”, MTT. 39. Makarevich. Irina, (1981). 'Soviet Theatre' , Novosti Press, Moscow. . 40. Mao Tse-Tung, (1967 edition) ““Five Documents on Literature and Art', Foreign Language press, Peking. - 41. Mao Tse-Tung (1967 3rd edition) “Literature and
Art,” Foreign Language press, Peking. 42. Mao Tse-Tung (R.P 1967). On New Democracy'
Foreign Language press, Peking. 43. Mao Tse Tung (1968 edition) ''The United front in Cultural work' Foreign Language press, peking 44. McGrath John (1981), ''A Good Night Cut'
Methuen. 45. McGregor. Lynn, Tate. Maggie & Robin Son, Ken (R. P. 1984), ''Learning through Drama' Heineman: 46. Nettle ford, Rex.M., (1979), ''Cultural Action and Social Change: The case of Jamaica'', I. D. R. C. Canada. 47. Pandeya. G.A.C. (1943), ''The Art of Kathakali'
Kitabistan, Allahabad. 48. Ramachandran. T. P., (1979) “The Indian Philosophy of Beauty, Part one'' university of Madras. 49. Roose-Evans James, (1989 4th edition) ''Experimental Theatre From Stanislavsky To Peter Brook'', Routledge. . 50. Sauter. Willmar (Ed) (1988), ''New Directions in
Audience. Research,' I.C.R.A.R
Page 75
51.
52.
53.
148
Sivathamby. K. (1981) 'Drama in Ancient Tamil Society'', N.C.B.H., Madras.
Smiles. Sam, (1987), ''Theatre, Tae Human Art' Harper & Row.
Spolin. Viola (R P 1987) “Improvisation For the
. Theater’ North Western Uni. press.
54.
55.
56.
57.
58.
59.
60,
... 61.
62:
岱3,
Taylor. John Russell, (RP. 1968) ''The Penguin Dictionary of the Theatre', Penguin. Wilson. Edwin, (19853rd edition), ''The Theater Experience' McGraw-Hill. அகதோவ், ஜி. (1980), ‘கலாசாரம் உண்மையும் போலியும்' சோவியத் நாடு பிரசுரம். அகஸ்தியர், எஸ். (1981), பூந்தான்யோசேப்பின் கலையுலக வாழ்க்கை வரலாறு', நவரச நாட்டுக். கூத்துக் கலாமன்றம் யாழ்ப்பாணம். அம்பலத்தாடிகள் (1964) 'கந்தன் கருணை" யாழ்ப்பாணம். அரிஸ்டோட்டில், ‘கவிதை இயல்" (மொ. பெ.) மணவாளன் அ. அ. (1976) சென்னை. sஆவ்னர் ஸிஸ் (1984), "மார்க்ஸிய அழகியலின் அடிப்படைகள்" என். சி. பி. எச். சென்னை. **ஆறு நாடகங்கள்' (1979) தமிழ் இலக்கியமன்ற வெளியீடு, யாழ். பல்கலைக்கழகம், யாழ்ப் turt 3007 it. & ❖ነ இரத்தினம், இ. (1969) 'மன்னன் ஈடிப்பசு’ செய்யுள்ளை வெளியீடு, கொழும்பு. இராசரத்தினம் நா. (1990) 'இதுதான் முடிவு' ஜெயந்தி வெளியீடு, யாழ்ப்பாணம்.
(64.
-65.
66.
67.
%9。
70.
° 2Wi.
72
73.
149
‘ஏழு நாடகங்கள்" (1984) சுண்டிக்குளி மகளிர் கல்லூரி தமிழ்மன்றம், யாழ்ப்பாணம். ஃபெடின், கான்ஸ்டான்டின், 'கலையும் மொழி யும்", (மொ. பெ.) நடராஜன் டி. எஸ். (1978) என். சி. பி. எச், சென்னை. கணபதிப்பிள்ளை, க. (1952) "இருநாடகம்', சாவகச்சேரி, யாழ்ப்பாணம். கரவைக்கிழார், (1968) ‘தணியாத தாகம்", யாழ்ப்பாணம்.
. கணேசர், கார்த்திகா, (1969) தமிழர் வளர்த்த
ஆடற்கலைகள், சென்னை. கணேசர், கார்த்திகா (1979) *காலந்தோறும் , நாட்டியக்கலை", கொழும்பு.
கணேசலிங்கன், செ. (1982) "கலையும் சமுதாய மும்". பரதன் பதிப்பகம், சென்னை. கமலா வி. எஸ். (1981) "குழந்தைகள் நாட்டின் செல்வக்களஞ்சியம்" என். சி பி. எச். சென்னை. கனகரட்னா ஏ. ஜே. (1981) "மாக்சியமும் இலக் கியமும்' அலை வெளியீடு, யாழ்ப்பாணம். கார்க்கி, மாக்ஸிம், "லெனினுடன் சில நாட்கள்"
(மொ. பெ.) அழகிரிசாமி கு. (1985, 2ம் பதிப்பு)
74.
75.
76.
தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.
கிருஷ்ணராஜா சோ. (1989) "விமரிசன மெய்யி
யல்" நான் வெளியீடு, யாழ்ப்பாணம்.
குணசேகரன் கே. ஏ. (1987) 'தமிழ் நாடகமும் சங்கரதாஸ் சுவாமிகளும்" அன்னம். குமாரசுவாமி ஆனந்த, 'சிவானந்த நடனம்",
(மொ. பெ. நடராசன் சோ, (1980) தமிழ் நாட்டுப்பாடநூல் நிறுவனம், சென்னை.
Page 76
150
77. கேசவன் கோ. (1984) "இலக்கிய விமர்சனம்",
அன்னம். 78. கைலாசபதி க. (1966) ‘பண்டைத் தமிழர்
வாழ்வும் வழிபாடும்', சென்னை. 79 கைலாசபதி க. (1981, 3 ம் பதிப்பு) ‘இலக்கியமும்
திறனாய்வும்' சென்னை புக்ஸ், சென்னை. 80. கைலாசநாதக் குருக்கள், கா. (1986) "இந்துப் பண்பாடு சில சிந்தனைகள்', தமிழியல். · 81. கோதண்டராமன், பி. (19871 'இந்தியக்கலை
கள்', என். சி. பி. எச், சென்னை, 82. சங்கர் ரர்ய், அன்னதா, "கலை" (மொ பெ
கிருஷ்ணமூர்த்தி க, (1989) சென்னை புக்ஸ். 83. சண்முகம் டீ கே. (1967) 'நாடகக்கலை சென்னை
84. சண்முகம் டீ கே. (1972) *எனது நாடக
வாழ்க்கை" சென்னை." 85. சண்முகம் டீ. கே. நாடகச் சிந்தனைகள்
(தொகுப்பு) சுப்பிரமணியம் ரா. (1978) சென்னை. 86. சம்பந்த முதலியார், பம்மல், (1933) ‘தமிழ்
நாடகம்', சென்னை. . w 87. " gt fj; gir fir, tliTg56), 'பிறகொரு இந்திரஜித்’,
(மொ பெ) ராஜாராம் ஜி. (1978) அன்னம். 88. சிவகாமி வி. (19891 ‘சமஸ்கிருத இலக்கியச்
சிந்தனைகள்', யாழ்ப்பாணம். 89. சிவத்தம்பி, கார்த்திகேசு, (19872ஆம் திருத்திய பதிப்பு) ஈழ்த்தில் ‘தமிழ் இலக்கியம்" என். சி. பி. எச். சென்னை, w 90. சிவத்தம்பி கா. (1983) 'தமிழ்ச்சமூகமும் அதன்
சினிமாவும்', சென்னை புக் ஹவுஸ்.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
நானும்', யாழ்ப்பர்ணம். ஞாநி, (1981), பலூன் நாடகம்" கட்டியங்காரன்
99.
100.
(மொ.பெ) நடராஜன். டி.எஸ் , (1978), என்.சி.பி.எச், சென்னை. 8
101. தாம்ஸன் ஜார்ஜ், மனித சமூகசாரம் (மொ. பெ)
102.
03.
151
சிவானந்தன், இ. (1979) 'இலங்கைப் ப்ல்கலைக் கழகத் தமிழ்நாடக அரங்கம்’ நடிகர் ஒன்றியம் கொழும்பு. a சுகோம் லின்ஸ்கி வி, 'கல்வி" (மொ. பெ) வைத்தன்னா. (1982), என்.சி.பி.எச், சென்னை.
சுந்தரம்பிள்ளை. ந, (1976) 'பொலிடோலே கதி" சரஸ்வதி நாடக மன்றம், யாழ்ப்பாணம்.
சுந்தரம்பிள்ளை. ந, (1977), 'பணமோ பணம்'
சரஸ்வதி நாடக மன்றம், யாழ்ப்பாணம். சூசைப்பிள்ளை, வ.ம, (1962), "எஸ்தாக்கியர். நாடகம்', யாழ்ப்பாணம். செல்வராசன். சில்லையூர், (1971) ‘தணியாத தாகம்", நவகலா மன்றம், கொழும்பு. சொக்கலிங்கம். க, (1977) "ஈழத்துத் தமிழ்நாடக இலக்கிய வளர்ச்சி', முத்தமிழ் வெளியீடு,
யாழ்ப்பாணம்.
சொர்ணலிங்கம். க, (1968) "ஈழத்தில் நாடகமும்
வெளியீடு, சென்னை. டால்ஸ்டாய். அலெக்ஸி, 'எழுதும் கலை",
கேசவன். கோ, (1988), சென்னை புக்ஸ். துரைக்கண்ணன். நாரண, (1976), 'தமிழில்
நாடகம்', சென்னை.
நம்பூதிரிபாட், ஈ.எம் எஸ், (1975) 'மார்க்சியமும் இலக்கியமும் கம்யூனிஸ்ட் கட்சி வெளியீடு சென்னை. .
Page 77
04.
05.
106.
07.
108.
109.
10.
11.
112,
113.
114.
115.
152
நவநீத கிருட்டிணன். மா, குணசேகரன் கே.ஏ, (1982), "கரகாட்டம்", அகரம் வெளியீடு. 'நாடகம் நான்கு", (1980), நடிகர் ஒன்றியம், கொழும்பு. நிவேதிதார். சாரு, (1985), "லத்தீன் அமெரிக்க சினிமா”, பாண்டிச்சேரி. நுஃமான்.எம்.ஏ., (1987), "மார்க்சியமும் இலக் கியத் திறனாய்வும்', அன்னம். ப்ரோக்கர். குலாப்தாஸ், (தொ.ஆ), 'குஜராத்தி ஓரங்க நாடகங்கள்", (மொ.ர்) ஹரிஹரசர்மா, (1962), சாகித்திய அக்கடமி, புதுதில்லி. பத்மாவதி, ஏ.எஸ், (பதிப்] (1987), "என்றும் வாழும் தெருக்கூத்து", சமுதாய முன்னேற்ற நிறுவனம், சென்னை. . . பாருலேகர். கோதாவரி, 'மனிதர்கள் விழிப்படை யும் போது", (மொ.பெ ராமசந்திரன், ஜானகி, (1987), சென்னை புக்ஹவுஸ். பிரெக்ட். பெர்டோல்ட், 'தாடகக்கலை" (மொ, பெ இராமசுவாமி. மு, (1985), தமிழ்ப்பல்கலைக்
கழகம்.
பிரெக்ட். பெர்டோல்ட், 'பெர்டோல்ட் ப்ரக்டின் கவிதைகள்", (மொ.பெ) பிரம்மராஜன், தன்யா,
(1987), பிரம்மா வெளியீடு.
பூலோகசிங்கம். பொன், சுகுமார். கனக, (1985), "தேன் பொழுது", சிரித்திரன் வெளியீடு, யாழ்ப்பாணம். பெருமாள்.எ.என். (1978), 'உலக அரங்கில் நாடகம்', சென்னை. - பெருமாள்.எ.என். 1979), "தமிழ்நாடகம்" ஓர் ஆய்வு, சென்னை.
116.
1 Ι7.
l 18.
19
120.
21.
丑22。
123.
124.
I25.
26.
53
மரியசேவியர். நீ, (1981), "கன்லைமுகம்' திறை மறைக்கலாமன்ற வெளியீடு, யாழ்ப்பாணம்.
மரியாம்பிள்ளை. வெ. (1968), விசயமனோகரன்' யாழ்ப்பாணம். மகாகவி "கோடை" கவிஞன் வாசகர் வெளியூடு (1970), யாழ்ப்பாணம்.
மா ஒ சே துங் "சுயேச்சை வாதத்திற்கு எதிராக போரிடுக" (தேர்ந்த கட்டுரைகள் 2ஆம் பாகம்) (1982) பிரஜா பிரசுராலயம் கொழும்பு. மா ஓ சேதுங், "கலையும் இலக்கியமும்” (மொ பெ. ராஜமாணிக்கம், முகவை (4ஆம் பதிப்பு 1988) தமிழ்ப் புத்தகாலயம், சென்னை. V முத்துசாமி. த. (1974) "நாற்காலிக்காரர்" க்ரியா, சென்னை. மூத்துசாமி. ந. (1980) "சுவரொட்டிகள்' க்ரியா, சென்னை. "
முத்துசாமி. ந. (1982) "அன்று பூட்டிய Guary.' மதுரை. மோகன்தம். பி. ஜி. பி. "மார்க்சீய இலக்கியக் கொள்கை" (மொ. பெ.) மார்க்ஸ் அ (1984)
சிலிக்குயில், 'சென்னை.
மெளனகுரு. சி. சித்திரலேகா, மெள. நுஃமான் எம். ஏ. (1979) 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்" வாசகர் சங்கம், கல்முனை.
மெளனகுரு. சி. (1983) "மட்டக்களப்பு மரபு மழி
நாடகங்கள்" (கலாநிதிப் பட்டத்துக்குரிய ஆய்வு,
தட்டச்சுப் பிரதி), யாழ் பல்கலைக்கழகம்.
Page 78
127.
128.
120.
130.
131.
132.
133.
134.
135.
136.
137.
138.
154
மெளனகுரு. சி. (1987) 'மெளனகுருவின் மூன்று நாடகங்கள்' நாடக அரங்கக் கல்லூரி, யாழ்ப் L JIT 600T D. .
மெளனகுரு, சி. (1987) 'தப்பி வந்த தாடி ஆடு' நாடக அரங்கக் கல்லூரி, யாழ்ப்பாணம். மெளனகுரு. சி. (1988) 'சடங்கிலிருந்து நாடகம் வரை' தெல்லிப்பனை, இலங்கை.
ராஜதுரை. எஸ். வி. (1989) "ரஷ்யப் புரட் g
இலக்கிய சாட்சியம்' அன்னம்.
லெனின் வி. இ. “கலாசாரமும், கலாசாரப் புரட்சியும்" (மொ.பெ விருத்தகிரி ப. (19791 என். சி. பி. எச், சென்னை. வல்லிக்கண்ணன், (1985) 'மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்' சென்னை. வித்தியானந்தன். சு. (1954) 'தமிழர் சாயல்பு' கண்டி. − வித்தியானந்தன். சு. (1990 "தமிழர் சிந்தனை கள்" யாழ்ப்பாணம். வித்தியானந்தன், சு, 1990) 'நாடகம் நாட் டாரியற் சிந்தனைகள்" தமிழகம் வெளியீடு,
தெல்லிப்பளை.
வெங்கட்சாமிநாதன். 1985) "அன்றையவறட்சி யிலிருந்து இன்றைய முயற்சி வரை' அன்னம்.
ஸியோன்ஸ் பெர்க். எல்ஸெ 'இன்னுமொரு
ஜாதி" (மொ பெ.1, (1989) பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்ப்பாணம். ஜெயராசா. சபா. (19891 ‘அழகியல்' அம்மா, இணுவில்.
சஞ்சிகைகள்
1. அலை இல, 25 பங்குனி 1985
2 இல. 33 மார்கழி 1988 3. ஆராய்ச்சி மலர் 4 இதழ் 2 ஜனவரி 1974
4. தமிழ்க்கலை தமிழ் 2 கலை 4 திசம்புர் 1984
5. நாட்டார் வழக்
காற்றியல் தொகுதி I எண் / 2
6. மல்லிகை ஒகஸ்ட் 1978
7. o s o ஜனவரி 1979 8. மல்லிகை ஒகஸ்ட் 1978
9. ஜனவரி 1979 10. '' ஆகஸ்ட் 1979 ll. நவம்பர் 1979 12 ዶ›r : '' ஜனவரி, பெப்ரவரி 1980 13. '' Lord 1980
I4. *9 ஆகஸ்ட் 1980 5. நவம்பர் 1980 16. மார்ச் 1981 17. பெப்ரவரி 1983
18. y ஒகஸ்ட் 1984 1985 பெப்ரவரி יי .19 20. '' மார்ச், ஏப்ரல் 1985.
Page 79
56
.21. (up 1985 . 22. ** யூன் 1985
23, 爱新 ஒகஸ்ட் 1985 24. நவம்பர் 1995 25. ' ஏப்ரல் 1986
26, 缘副 ஜனவரி 1990 37. Dialogue Vol 10 1977 No. 4 28. '' . Vol 11 1978 No. 1
, 29. Journal of Aesthetics
and Art Criticism Vol xxxix. No. 3 Spring 1981
30. '' Vol xliii No. 3 Spring 1985 3. vol xlv. No. 1 Fall 1986 32. ' Vol xlv. No. 2 Winter 1986 .33. Vol xlv. No. 4 Summer 1987 34. Vol 47 No. 2 Spring 1989 35. Journal of Art &
dess i October-December 1986
36. July-September 1983 37. No. 6 January-March 1989 38. Journal of Philosophy
of Education Vol 18 No. 2 1984
39, Vol 19 No. 2 1985
40. p Vol 21 No. 2 1987 41. Quest No. 31 Autumn 1961.
42. No. 87 Spring 1968
43. Sangeet Natak
157
44. The Drama Review Vol 15
.45. , , 46. 9
47. p.
48. 9 p. 49. , , 50.
51. yo 52.
53.
Wol
* VO
Vol.
Wol
Wol
Wol
Vo
Voi
Wol
25。
30
30
31
32
32
33
34
34
No 21 July-Sept 1971.
No 3 Spring 1971 No. 4 Winter 1981.
No 1 Spring 1986. No 3 , Fall 1986 No 2 Summer 1987 No. 4 Winter 1987
No 3 Fall 1988.
No. 4 Winter 1989 No 3 Fall 1990 No 4 Winter 1990s
Page 80
எமது பிற வெளியீடுகள்
2 1 00
சங்காரம்
ஆற்றுகையும் தாக்கமும் கலாநிதி சி. மெளனகுரு
புத்தகம் பேசுது 16 00
பாடல்கள்-நாடகங்கள்-இசைச்சிற்பங்கள் அறிவியல்-அறிவொளி இயக்கக் கலைபடைப்புகள்
சினிமா கோட்பாடு 65 00
டெல பெலாஸ்,
திரைப்பட மேதை செர்கப் ஐஸன்ஸ்டின் 18 00
18 00
ரித்விக் கட்டக்
இந்திய சினிமாவின் மேகம் கவிந்த தாரகை
Page 81
134 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
"அழகுதான் கலையின் அடிப்படை என்ற வாதத்தை ஏற்கமுடியாது. மணிதமனத்தின் உணர்ச்சிக் குமுறல் களும், கொந்தளிப்புகளும், சோகங்களும்கூட உயர்ந்த படைப்புக்களின் கருப்பொருளாகின்றதுதானே!"
னக் கலையின் மூலாதாரம் எது என்பதுபற்றி இரு கதா பாத்திரங்கள் செந்தமிழில் உரையாடுவது, இவ்வகைக் கதைகளின் பேச்சுவழக்கிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
(ஈ) மிகை உணர்வுப் புனேகதைகளிற் பேச்சுவழக்கு
மண்வாசனை இலக்கியச் சிருஷ்டிகர்த்தாக்கள் யாவரும், இலக்கியத்தின் மூலதாரம் மக்கள் வாழ்க்கை என்பதை ஏற்றுக்கொண்டோராவர். ஆனலும், இவர்கள் யாவரும் தத் தமது இயல்புக்கும், ஆளுமைக்கும் ஏற்பவே மக்கள் வாழ்க்கைமுறையை நோக்கினர். சிலர், மக்கள் வாழ்க்கை பையும் அவர்தம் பிரச்சினைகளையும் தூர நின்று மூன்ரு வராகவே அவதானித்தார். இன்னும் சிலர், மக்கள் வாழ்க் யையும் அவர்தம் பிரச்சினைகளையும் கற்பனையிலேயே ாலாயினர். தொலைநின்று மக்கள் வாழ்க்கையை நோக்கி இருக்கு, வாழ்க்கையின் உள்ளார்ந்த பிரச்சினைகள் தெளி க முடியவில்லை; அப் பிரச்சினைகளின் அழகியல்புகளே பும், விகாரங்களையும் அவர்களாலே உய்த்துணர முடிய ஒல்2ல. இதஞல், அவர்தம் புனைகதைகளிலே வாழ்க்கை டி இயல்புகளைத் தெளிவாகத் தரிசிக்க முடியவில்லை. இவ்வாறு வாழ்க்கையின் உள்ளர்த்தங்கனை விளங்இக் (Sள்ள முடியாத இவர்தம் புனைகதைகளிலே, மக்களின் பேச்சுவழக்கும் இயல்பா சி அமையமுடியாது போயிற்று.
மக்களோடு இரண்டறக் கலந்து, அவர்தம் இயல்புகளே அநுபவித்து உணரமுடியாது. கற்பனை உலகிலே மக்கள் வாழ்க்கையை அவதானித்த சில முற்போக்கு எழுத் தாளர்கள், கற்பனையிலேயே மக்களின் பிரச்சினைகளைச் இத்திரிக்கலாயினர் : தீர்வும் காணலாயினர் இதஞலே, இவ்வகைப் புண்கதைகள் இயல்பிகந்தனவாயும் மக்களின் ருச்சினைகளை மிகைப்படுத்திக் காட்டுவனவாயும், யதார்த்த
ஈழத்துப் புண்கதையும். 135
மற்ற முடிபுகளே முன்வைப்பனவாயும் அமைத்துவிடு கின்றன. பேச்சு வழக்கும் இவ்வகைக் கதைகளிலே மிகை உணர்ச்சிப் பாங்கான நடையிலே அமைந்து விடுகிறது.
டொமினிக் ஜீவாவின் "தண்ணீரும் கண்ணிரும்' (தண்ணிரும் கண்ணிரும் பக் 57 - 58) என்ற சிறுகதையிலிடம் பெறும் உரையாடலை இவ்வகைப் பேச்சுவழக்கினுக்குத் தக்க சான்முகக் காட்டலாம். இக் கதைநிகழ் களம் , யாழ்ப்பாணக் கரையோரக் கிராமமான குருநகர், சாமி நாதன், உயர்சாதியைச் சேர்ந்தவன், பஸ்கொண்டக்ரர் பண்டாரி, கீழ் சாதி; ரிக்ஷாத் தொழிலாளி. பண்டாரி, ஒருநாள் தண்ணிர் விடாய் தாங்கமாட்டாது அம்மன் கோவில் நல்லதண்ணீர்க் கிணற்றிலே தண்ணீர் அள்ளினுன். சாமிநான் ஊரைக்கூட்டி அவனே அடித்து நொருக்கினன். சில நாட்களின் பின்னர், சாமிநாதன் பஸ் விபத்திலே சிக்குண்டு உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தபோது, பண்டாரியே அவனை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று தனது இரத்தத்தையும் கொடுத்து அவனது உயிரைக் காப்பாற்றுகிறன். கண்விழித்து, நடந்ததை 'அறிந்ததும் சாமிநாதன் திருந்திவிடுகிறன். அவன் பண்டாரியைக் கண்டதும்,
*சொல்லு பண்டாரி, ஏன் எனக்கு உயிர்ப் பிச்சை தந்தாய்? நான் கொடியவன் தீயவன். உன்னை மிரு கமாக அடித்தேன்; நீ இருந்த வீட்டை எரித்தேன். நான் நாயினும் கடையன். '
எனச் செந்தமிழிலே வினவுகிமுன் அதற்குப் பண்டாரி
"நானும் மனிதன், நீயும் மனிதன். நீயும் நானும் தொழிலாளிகள்'
என இலக்கண சுத்தமான தமிழிலே பதிலி க்கிருன். குரு நகரைச் சேர்ந்த இரண்டு பாத்திரங்கள் இலக்கண சுத்தி யாகவும், கருத்தாளமாகவும் இங்கு உரையாடுகின்றன. ஆணுல், முதலிலே,
Page 82
36 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
"நேசம்மா, ரத்தமில்லாட்டி என்ர ரத்தத்தைத் தாறன் குடுக்கிறியளா அம்மா'
எனச் சாதாரண பேச்சுத் தமிழிலே கேட்கும் பண்டாரி யைப் பின்னர் செந்தமிழிலே தத்துவம் பேச வைக்கிருர் ஆசிரியர். வாழ்வின் நடப்பியல்புகளை மாற்றியமைக்க வேண்டும் என்ற மனேவேகத்திஞலே ஏற்படும் மிகை உணர்ச்சியானது, புனைகதையிலே இடம்பெறும் ஒவ்வோ ரிடத்தும், அதன் பேச்சுவழக்கும் இயல்பிகத்து செல் கின்றது; சேயற்கையானதாக அமைந்து விடுகிறது. இவ்வாறன பேச்சுவழக்கின, மிகை உணர்வுப் பாங்கான புனைகதைகளிலே தாம் பரக்கக் காணலாம்.
கீழ்மட்ட மக்கள் வாழ்க்கையையே இலக்கியப் பொரு ளாக வரித்துக் கொண்டவரும், அவர்களின் கொச்சைப் பேச்சு வழக்கே புனைகதைகளில் இடம்பெற வேண்டும் என வாதாடியதுடன், அவ்வாறன மண்வாசனைப் பாங்கான புனைகதைகள் பலவற்றைச் சிருஷ்டித்தவருமான செ. கதிர் காமநாதன் எழுதிய சிறு கதைகளுள் ஒன்று ஒரே குடிசை களைச் சேர்ந்தவர்கள் என்பது.
தாழ்வுற்று வறுமை மிஞ்சி நைந்துபோன ஒரு வண் ஞரக் கிராமம்; எப்போதோ வாழ்வின் "இடுக்கிப் பிடிப்யைத் தாங்கிக்கொள்ள முடியாது அக் கிராமத்தை விட்டு ஒடிப்போனன் சிதம்பரி என்ற சிறுவன். அவன், மலைநாட்டிலே லோண்டறி ஒன்றிலே வேலை செய்தான். அரசியல், பொருளாதார, சமூக அறிவியலிலே அவன் அங்கு "புடம்போடப்பட்டான்?. ஒருநாள் திடீரென்று அவன் தனது கிராமத்துக்கு வந்தான். தனது சக தொழிலாளர், உறவினர்க்கு “ஞாளுேபதேசஞ் செய்தான். அக் கிராமத்திலே, திடீரெனப் புரட்சிகரமான மாற்றங்கள் உருவாயின. சாதாரணமாக அடிமைப்பட்டுக் கிடந்த கூணனும் நிமிர்ந்து நின்றன் ; வேளாள ‘நயினர்'மாருடன் நியாயம் கதைத்தான்.
ஈழத்துப் புனைகதையும். 17
'கிழவன்! நீ சொல்லுகிறது சரி! நாங்கள் குடி மையாக இருக்கமுடியாது எண்டு கூறி உயர்ந்த வர்க் கத்துக்கு எதிராக இந்தச் சின்னஞ்சிறு கிராமத்துள் போராடியதுடன் எய்எடை கடமை முடியவில்லை. நாட்டிலே பொருளாதார நெருக்கடி வரவர தீவிர மடைஞ்சுகொண்டு வருகுது. எங்களாலை வாழ்க்கை நிலையை தாங்கமுடியாத அளவுக்கு செலவு கூடியிட்டிது. கடையளிலே போனல் செத்தல் மிளகாய் இல்லை. உள்ளி இல்லை. புளி இல்லை. தலைக்குமேலை எல்லாச் சாமானும் விலையாயிருக்கு. தொழிலாளி களான எங்கள் மத்தியில் தலையெடுத்துவிட்ட புரட்சி கர உணர்வை இனி எந்த அரசாங்கமும் ஒண்டுஞ் செய்துவிட முடியாது. மக்களை அடக்குகிற, மக்கள் எதிரிகளை நாங்கள் இனம் கண்டுவிட்டோம். அவங்களை ஒழிச்சுக்கட்ட நாங்கள் உறுதிபூண்டுவிட்டோம் .." 2
எனப் பேசுகின்றது ஒரு பாத்திரம், தாழ்த்தப்பட்ட சமூ கத்திலே அடிமைப்பட்டுக் கிடந்த மக்களைத் தனியொரு வணுண சிதம்பரி இவ்வளவு வேகமாக மாற்றியமைத்துப் புரட்சியாளராகத் தூண்டி விடுகிறன், கதையிலே காணப் படும் இம் மிகை உணர்வானது, பாத்திர உரையாடல் களிலும் மிகைப் பண்பினை உருவாக்கிவிடுகின்றது. இப் பாத்திரம் தான் கூறவந்த விடயத்தைச் சாதாரண பேச்சு வழக்கிலே எடுத்துக் கூறமுடியாது, செந்தமிழ்ச் சொற்களேயும் பயன்படுத்துகின்றது. இவ்வுதாரணம், மிகைஉணர்வுப் புனை கதைகளிற் பேச்சுவழக்கு ஒருபோதும் இயல்பானதாக அமையமாட்டாது என்பதை வலியுறுத்துகின்றது.
(உ) மண்வாசனைப்பாங்கான புனைகதைகளிற்
பேச்சுவழக்கு.
1960 ஆம் ஆண்டுக்காலப் பகுதியிலே ஈழத்து இலக்கிய உலகில் முன்வைக்கப்பட்ட மண்வாசனை என்ற கோட்பாடு, பல்வேறு விளக்கங்கட்கு உட்படுவதாயிற்று. எழுத்தாளர் சிலர், அவ்வப் பிரதேச மக்களின் பேச்சு வழக்கினே அட்சரம் பிசகாது புனைகதைகளிலே வடித்துவிட்டால் அது மண்
18
Page 83
138 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
வாசனை இலக்கியமாகிவிடும் எனக் கொண்டனர். இவர்கள்? அவ்வப்பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகளை உயிர்த் துடிப்புடன் சித்திரிப்பதிலும் பார்க்க அப் பிரதேசப் பேச்சு வழக்கினுக்கே முதன்மைத்துவம் வழங்கினர், சிறப்பாக, 1960 ஆம் ஆண்டினை அடுத்துவரும் காலப்பகுதிகளிலே, இலங்கை வானெலியில் ஒலிபரப்பப்பட்ட நாடகங்களில் இப் பண்பினை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு, பொருத்தமற்ற இடங்களிலெல்லாம் நகைச் சுவை உணர்வினை ஊட்டுவதற்காகக் கையாளப்பட்டு வந்தது. பேச்சுவழக்கென்பது யாழ்ப்பாணப் பேச்சுவழக்கே சான்று கருதப்பட்டது. தரகர், சலியாணத்தரகர், சோதிடர் போன்ற பாத்திரங்களின் நகைச் சுவைப் பண்பினை வெளிப் படுத்துவதற்காகவே இந் நாடகங்களிலே பேச்சுவழக்குப் பயன்படுத்தப்பட்டது.
இலக்கிய அணியின் இன்ஞெருசாரார், பேச்சுவழக்கு மட்டும் மண்வாசனை இலக்கியமாகிவிட முடியாது; அல்வப் பிரதேச மக்களின் தொழில் முறைகள், பழக்கவழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை இயல்பான நிலையிற் சித்திரிப்பனவே மண்வாசனை இலக்கிய மெனக் கெrண்டனர்.
"ஈழத்து இலக்கிய உலகில் மண்வாசனை என்ற கோஷம் சில ஆண்டுகட்கு முன்னர் எழுத்தாளர் சிலரால் முன்வைக்கப்பட்டது. பிராந்தியம்களில் பயி லப்படும் கொச்சைச் சொற்கள் சிலவற்றைக் கோவை செய்தால், அஃது இயல்பாகவே மண்வாசனை இலக் கியமாகிவிடும் என்ற தப்பித எண்ணத்தைக் காமித்து அத்தகைய கதைகளை எழுதிச் சலித்தவர்களும் நம் மத்தியில் வாழ்கின்றனர். ஒரு பகுதியான மண்ணிற்கே உரித்தான கலாச்சாரத்திலே பிறக்கும் கதைக்கருவை, அந்தமண் தனித்துவமாக ஒலிக்கும் தொனிப்பொருளைப் பிரசவிக்கும்வண்ணம் கலவிநேறியிற் பொருத்துவதே மண்வாசனை இலக்கியத்திற்கான சிறப்பம்சமாகும்.’’ 3
ான எஸ். பொன்னுத்துரை குறிப்பிடுவது இங்குக் கவனத் திற்குரியது.
ஈழத்துப் புனைகதையும். 139
ஆரம்ப காலத்திலிருந்து மண்வாசனை இலக்கியம் என்ப தனைக் கொள்கை ரீதியாகவும் ஏற்றுக்கொண்டவர்கள் முற்போக்கு அணியினர். இவர்கள் யாவரும் புண்கதை களிலே மண்வாசனையின் இன்றியமையாமையை உணர்ந்து, தமது ஆக்கங்களிலே தம்மாலியன்ற அளவுக்கு அப் பண்பினைப் புலப்படுத்த முயன்றனர். இருப்பினும், அவர்கள் யாவரது புனைகதைகளிலும் மண்வாசனைப் பண்பானது செவ்வையாக அமைந்தது எனக் கூறுவதற்கில்லை. குறித்த ஒரு பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகளையும் தொழில் முறைகளையும் அவர்களது பண்பாடு பழக்கவழக்கங்களையும், அவர்தம் நம்பிக்கைள், சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை யும் அப்பிரதேசத்திற்கேயுரிய பேச்சு வழக்குடன் இணைத்து யார் கையாண்டார்களோ அவர்களின் புனைகதைகளிலேயே மண்வாசனைப் பண்பினைச் செவ்விதிற் காணமுடிகிறது. எழுத்தாளன், குறித்த பிரதேச மக்களுடன் இரண்டறக் கலந்து பழகி அவர்களின் இன்பதுன்பங்களிலே பங்குகொண்டு அவற்றினலே தான்பெற்ற உணர்வினை உயிர்த்துடிப்புடன், புனைகதைகளிற் சித்திரிக்கும்போதே மண்வாசனைப் பண் பானது சிறப்புற அமைகின்றது.
*இண்டு முழுக்கச் சரியான வேலே பிள்ளை. முந்த நாள் வ3ளஞ்ச வெள்ளாவி; நேத்துப் பெ ய்காட் டுக்கை ஒரு துடக்குக் கழிவுக்குப் போட்டுவந்ததினுலை துறைக்குக் கொண்டுபோக முடியவில்லை. உடம்பும் அவ்வளவு சரியில்லை. இப்ப பத்துமணிபோலைதான் துறைக்குப் போனன். அதுக்கிடையில் சின்குச்சிப் பெட்டை வந்து பிள்ளை வரட்டாமென்று புடியாளா நிண்டாள். அதுதான் மகுமோனைப் பிடிச்சு விட்டுட்டு ஒடியாறன். சரியான வெயிலும் கொழுத்து தன. "
"அரிவி வெட்டெல்லாம் முடிஞ்சுதே பிள்ளே? சிங்கன் கண்டி எப்பிடிப் பொலிஞ்சுதே???
"ஒமோம்: நீர் எங்கைளட துணிய8ள ஒழுங்காக
வெழுத்த வெழுவையிலே நெல்லு வேண்ட வந்திட்டி
யாக்கும்'
Page 84
140 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
**ானை அப்பு சும்மா கிடவணை, உடுப்பு வெளுக் காட்டி என்ன குடிமேனுக்குக் குடுக்கிறதைக் குடுக்கத் தாக்னயெணை வேணும். நீ பேசாமல் கிடவணை.”*
கே, டானியலின் பஞ்சமர் (பக். 1-2) என்ற நாவலி னின்றும் காட்டப்பட்ட மேற்படி உரையாடலானது, மண் வாசனை இலக்கியத்தின் பேச்சுவழக்கிற்கு நல்லதோர் எடுத் துக்காட்டாகும். மக்களுடன் ஆசிரியர் இரண்டறக் கலந்து பழகிய தன்மையையும், மக்களின் தொழில்முறை நுணுக் கங்களை அவதானித்து அவற்றைத் தமது படைப்பிலே சிறப் புறக் கையாளவேண்டும் என முனைந்தமையையும் மேற்படி உரையாடலிலே அவதானிக்கமுடிகிறது. யாழ்ப்பாணப் பிர தேசக் கிளைமொழியிலே இடம்பெறும் இண்டுமுழுக்க, சரி யான, வளைஞ்ச, வெள்ளாவி, துடக்குக்கழிவு, துறை, பெட்டை, பிள்ளை, மருமோன், ஒடியாறன், குடிமேன் போன்ற சொற்களே ஆசிரியர் பிரக்ஞைபூர்வமாகப் பயன் படுத்தியுள்ளமையையும் நாம் அவதானிக்கலாம்.
லெ. முருகபூபதியின், சுமையின் பங்காளிகள் (பக். 1) என்ற சிறுகதைத் தொகுப்பினின்றும் கீழே கொடுக்கப் படும் உரையாடற் பகுதியிலே மண்வாசனைப் பண்பானது செவ்விதில் அமைந்திருப்பதன அவதானிக்க முடிகிறது.
*செவஸ்தியான் புறகால புடிடா. ம். ஏலோ ம் ஏலோ .. ம்ம்.. மத்த அலை வரட்டும் ஆ. வந்திட்டுது. . பிடி. ஏலோ.”*
‘அடியேய் . கருப்பணத்தில வாவே. . ւյսյ6ն) கோப்பில வாற சிறுக்கிமாதிரி . ஆட்டி ஆட்டி வா."
இண்டைக்கும் மட்டச்சாலையா பட்டிரிச்சீ. சூசை அப்புட வலையிலயும் மட்டச்சாலைதான்."
'இந்தா செவஸ்தியான் நீயும் குடி. இந்தச் சிறுக்கன்களுக்கும் குடு. Lih... ... இந்தா..."
ஈழத்துப் புனைகதையும். 141
*ஏண்டா.. அந்தோணி. நீயும் ஒரு ஜோன்சன் எஞ்சின் வாங்கின என்ன? எஞ்சினை வாங்கிட்டு இப்படி துடுப்பு போட்டு வலிச்சு மாயவேணு
6T6)nr... ... ?'"
*என்னடா செல்லிய . நீ. ? எஞ்சின் வாங்கிய தெண்ணுப்பில லேசாயிரிச்சா. .? தம்மட்ட அம் மட்டுக் காசா. ரிச்சுது ..?’’
மேற்படி உரையாடற் பகுதியினின்றும் குறித்த பிர தேச மக்களின் தொழில் முறைகளை நாம் அறியமுடிகிறது. அவர்களின் மதுவருந்தும் பழக்கத்தினையும், சினிமாவிலே அவர்களுக்கிருக்கும் மோகத்தினையும், அவர்கள் பின்பற்றும் மதக்கோட்பாட்டையும், கல்வி நிலையிலே அவர்களின் தாழ்வான நிலையையும், ஜோண்சன் எஞ்சின் வாங்கித் தமது எதிர்கால வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினையும் இச் சிறு உரையாடற் பகுதிமூலம் அறியமுடிகிறது. இவ்வாரு?ன ஒரு வாழ்க்கைப் பின்னணியுடன் அப்பகுதி மக்களின் பிரத்தியேக வழக்குகளான புறகால, புடிடா, மத்து, கருப்பணத்தில, வாவே, பயஸ்கோப், சிறுக்கன், சிறுக்கி, பட்டிரிச்சி மாயவேணு, எலா, செல்லிய, எண்டாப்பில ஆகிய சொற்பிரயோகங்களை ஆசிரியர் இரண்டறக் கலந்து தரும்போது, ஒரு பூரணமான மண்வாசனை இலக்கியத்தின் நறுமணத்தினை நாம் நுகரமுடிகிறது.
புனைகதை இலக்கியத்திற் பேச்சுவழக்கைப் பயன்படுத்துவதால் உருவாகும் பிரச்சினைகள்
புனைகதை இலக்கியத்திற் பேச்சுவழக்குப் பயன்பாட்டினை இன்று எதிர்ப்போர் யாருமிலர். புனைகதை இலக்கியப் படைப்பாளிகள் யாவரும் தமது ஆக்கங்களிலே தமது இயல்பினுக்கேற்றவாறு பேச்சுவழக்கினைக் கையாளுகின் றனர். கதைப் பொருளின் தன்மைக்கேற்பவும், கதை நிகழ் களத்தின் வேறுபாட்டிற்கேற்பவும், படைப்பிலக்கிய கர்த்தாவின் மொழியாற்றலுக்கேற்பவும் பல்வேறு அளவி
Page 85
142 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
லும் வகையிலும் பேச்சு வழக்கானது கையாளப்பட்டு வருகின்றது. ஆணுலும், பேச்கவழக்கினைப் புனைகதை இலக்கி யத்திலே எவ்வாறு, சாத்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய ஒரு கோட்பாடு இன்னும் ஈழத்து எழுத் தாளர்களிடையே உருவாகவில்லையென்றே கூறலாம். ஏனெனில் பேச்சுவழக்கினைப் புனைகதை இலக்கியத்திற் கையாளவேண்டும் என வாதிட்டு, அதனை நடைமுறை, பிலும் கைக்கொண்ட எழுத்தாளர்கள் கூடப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பேச்சுவழக்கினைக் கையாளும்போது ஒரு சீராக அதனைப் பயன்படுத்தினரல்லர். இவ்வாறு பேச்சு வழக்கினை வழுவின்றி இலக்கியகர்த்தாக்கள் பயன் படுத்தத் தவறியமைக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவையாவன :-
(அ) மொழியின் இருவழக்குப் பண்பு.
(ஆ) பிரக்ஞைபூர்வமாகப் பேச்சுவழக்கினைப் பிர
யோகிப்பதிலே ஆர்வமின்மை.
(இ) சொற்களின் ஒலியமைப்பு வேறுபாடுகள்.
لم
(ஈ) உபதேசங்கள், தத்துவங்களை விவரிக்கையிலே
ஏற்படும் முரண்பாடுகள்.
(அ) மொழியின் இருவழக்குப் பண்பு.
புனைகதை இலக்கியத்திலே பேச்சுவழக்குப் பயன்பாடு ஆரம்பமான காலமுதல், அல்விலக்கிய மொழியிலே இரு வழக்குப் பண்பும் இடம்பெறத் தொடங்கியது. இருவழக் குப் பண்பெனப்படுவது, புனைகதை இலக்கியத்திலே இரு வகையான மொழிநடை கையாளப்படுவதனைச் குறிக்கிறது. இக்காலப் புனைகதைகளிலே, ஆசிரியர் கூற்றும் விவரணப் பகுதிகளும் செந்தமிழில் அமையப் பாத்திர உரையாடல் கள் பேச்சுவழக்கிலே அமைத்துவிடுகின்றன. செந்தமிழ், பேச்சுவழக்கு ஆகிய இருவகை நடையும் புண்கதைகளிலிடம் பெறுவதே இருவழக்குப் பண்பு எனப்படுகிறது. * இவ்வாறு செந்தமிழும் பேச்சுத்தமிழும் ஓர் இலக்கியவடிவத்திலே
ஈழத்துப் புனைகதையும். 43
கையாளப்படும்போது செந்தமிழானது பேச்சுவழக்கிலும் பேச்சுவழக்குச் செந்தமிழிலும் ஆதிக்கஞ் செலுத்துவது தவிர்க்க முடியாததாசி விடுகின்றது. ஆரம்பகாலப் புனை கதைகளிலே, விவரணப் பகுதிகளும் உரையாடல்களும் செந்தமிழிலேயே அமைந்திருத்தமையால் இருவழக்குப் பண்பு அவற்றிலே இடம்பெறும் சந்தர்ப்பம் இல்லா திருந்தது.
உரையாடற் பகுதியிற் செந்தமிழ்ச் சாயல்
புனைகதைகளிலே, ஆசிரியர் கூற்றும் விவரணப் பகுதி களும் செந்தமிழிலே அமையும்போது பாத்திர உரையா டல்கள் மட்டுமே பேச்சுவழக்கிற் கையாளப்படுகின்றன. இவ்வாறு உரையாடல்களிற் பேச்சுவழக்கு இடம்பெறும் போது, அவற்றிலே செந்தமிழின் சாயலும் இடம்பெற்று விடுகின்றது. இதஞற். பேச்சு வழக்கின் தனித்துவம் பாதிக் கப்படுகின்றது. ஈழத்தின் பல்வேறு புனைகதைகளிலும் இவ் வாருண பண்பு இடம்பெற்றிருப்பதனை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
"ஜானகி. சாதிகுலம் என்று சம்பிரதாயங்கள் சும்மா வரேல்லை. அவை தெய்வம் அருளியவை எண்டு அப்பா சோன்னது பொய்யில்லே. சம்பிரதாய விதிகளை யும் வைதீக நெறிகளையும் நாங்க மறுத்தாலும் நீங்கள் மறக்கப்படாது. அதுவும் நீ ஒருநாளும் அதுகளே மீறி ரடக்கப்படாது,
செ. யோகநாதன் எழுதிய, ஒளி நமக்கு வேண்டும் (பல், 47) என்ற சிறுகதை நூலிலே இடம் பெறும் மேற்குறிப்பிடப் பட்ட உரையாடற் பகுதியிலே, பேச்சு மொழியிலே செந்த மிழின்சாயல் படிந்திருப்பதனை நன்கு அவதானிக்கமுடிகிறது. மேற்படி உரையாடற் பகுதியிலே இடம்பெற்றுள்ள என்ற, அதுவும், விதிகள், நெறிகள், ஆகிய செந்தமிழ்ச் சொற்கள், முறையே எண்ட, அதுகும், விதியள், நெறியள், எனவே பேச்சுவழக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும். அத்து டன், சாதாரண மக்களினலே பேச்சுவழக்கிற் பயன்படுத் தப்படாத அருளியவை, சம்பிரதாய விதிகள், வைதீக
Page 86
144 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
நெறிகள் போன்ற சொற்களும், சொற்ருெடர்களும் இவ் வுரையாடற் பகுதியிலே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ் வாறு, பேச்சுவழக்கிலே அமையவேண்டிய சொற்களைச் செந்தமிழ்ப்பாங்கிற் பயன்படுத்துவதும் சாதாரண மனிதன் பேச்சுவழக்கிற் பயன்படுத்தாத சொற் ளைப் பயன்படுத்து வதும் மொழியின் இருவழக்குப் பண்பின் தாக்கமெனக் G)smørestav frth.
விவரணப் பகுதியிற் பேச்சுவழக்குச் சாயல்
ஈழத்து மண்வாசனைப் புனைகதைகளின் நடையிலே பேச்சுவழக்கானது, பேரளவு ஆதிக்கஞ் செலுத்துகின்றது. பேச்சு வழக்கிற் கையாளப்படும் சொற்கள் பல, அமைப் பிலோ, ஒலியிலோ திரிபின்றி விவரணப் பகுதியிலும் கையாளப்பட்டு வருகின்றன. ஈழத்துப் புனைகதைகளின் நடையைப்பற்றி எம். ஏ. நுஃமான் பின்வருமாறு கூறினர் :
"ஈழத்துப் பேச்சுவழக்குச் சொற்களும், சொற் ருெடர்களும், மரபுத் தொடர்களும் , போர்த்துக்கீஸ், டச்சு, சிங்களம் முதலிய மொழிகளில் இருந்து கடன் வாங்கிய சொற்களும் ஈழத்தவர்களின் சடங்கு சம்பிர தாயங்களில் வழங்கும் பண்பாட்டுச் சொற்ருெகுதியும், தொழில்துறை, அரசதுறைச் சொற்களும் நாவல் விவரணத்தில் கலந்து ஈழத்து நாவலாசிரியர்களின் நடையைத் தனித்துவப்படுத்துகின்றன. " 5
கே. டானியல், கணேசலிங்கம், எஸ். பொன்னுத்துரை, யோ. பெனடிக்ற்பாலன் ஆகியோரின் நாவல்கள், சிறு கதைகளிலே மேற்குறிப்பிட்ட இயல்புகளை நாம் தெளி வாகக் காணலாம். கே. டானியலின் பஞ்சமர் என்னும் நாவலிலே சங்கடப்படலே, தேங்காய்ப்பரவல், கமக்காரி, சட்டம்பியார், சாங்கோபாங்கம், குறிச்சி (நித்திரை), வில்லங்கம், மாராப்புப் போடுதல், மைமல், நனைக்கிறது (குடிக்கிறது), மட்டுமட்டு, சமசியம். இடைஞ்சல், வெள் ளென, குலைக்கிறது, அருட்டுதல் போன்ற பேச்சுவழக்குச் சொற்கள், ஆசிரியரின் விவரணப் பகுதிகளிலே பேச்சு
ஈழத்துப் புனைகதையும். 145
வழக்கில் உள்ளவாறே கையாளப்பட்டுள்ளன பின்வரும் ஒரு சிறு விவரணப் பகுதியிலே இப் பண்பினை நாம் அவதா னிக்கலாம்.
*சின்னச்சி தோய்த்து வைத்திருந்த புடவையை அவனுக்குப் போர்த்துவதற்காகக் கொடுத்திருந்தான். அந்தப் போர்வையை மிஞ்சிக்கொண்டு அவனுக்குக் குலைப்பன் வந்து விட்டது. அவன் அணுக்கத்துடன் நடுங்கிருண். 6
மேற்காட்டப்பட்ட விவரணப் பகுதியிலே, மிஞ்சிக் கொண்டு, குலப்பன், அணுக்கம் ஆகிய பேச்சுவழக்குச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், பேச்சுவழக்குப் போன்றே ஆசிரியர் வாக்கிய அமைப்பினைப் பேணியிருப் பதையும் நாம் காணமுடிகிறது.
(ஆ) பேச்சுவழக்கினைச் சிராகக் கையாளவேண்டும்
என்ற ஆர்வமின்மை.
மண்வாசனை இலக்கியம் படைக்க முனைவோர், தமது எண்ணங்கள் புலப்படுத்தப்படும் மொழியின் இயல்பினைச் செவ்வனே அறிந்திருத்தல் வேண்டும். மொழியின் இயல் புகளே விளங்கிக்கொள்ளாது, மண்வாசனை இலக்கியம் படைக்க முயல்வது அவ்விலக்கியத்தின் அடிப்படைப் பண்பினையே பிரதிபலிக்கமுடியாது செய்துவிடுகின்றது. ஈழத்து மண்வாசனை இலக்கியங்கள் யாவற்றிலும், இப் பண்பினைப் பரவலாகக் காணமுடிகிறது. எழுத்தாளர் பலரும், மக்களின் பேச்சுவழக்கினைக் கூர்ந்து நோக்காது தத்தமது இயல்பினுக்கேற்ற வகையிலே அதனைப் பயன் படுத்துகின்றனர். இதனுற், பேச்சுவழக்கிலே செந்தமிழ்ச் சொற்கள் கலந்துவிடுகின்றன. பேச்சு மொழியைக் கூர்ந்து நோக்கும் ஆசிரியன், அம் மொழியின் சொற்களைப் பிறழ் வின்றி ஒரு சீராகக் கையாளுவான்.
செங்கை ஆழியானின் முற்றத்து ஒற்றைப்பனை (பக். 3) என்ற புனைகதையினின்றும் ஓர் உரையாடற் பகுதி கீழே தரப்படுகின்றது.
19
Page 87
146 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
'விஷர் கதை கதையாதை. இத்தப் பண்யைத் தறிச்சால் ரான் எங்க விட்டம் போடுறது?"
"விசயம் விளங்காமல் கதைக்கிருய் ! . ஒருக்கா ஏற்றிய கொடியை ஐந்தாறு நாளுக்கு நான் கீழை இறக்கிறதில்லை. வயல் வெளியிலை போய் ஏத்திப் போட்டு வீட்டிலை கொண்டுவந்து கட்டலாமே ? எத்தனை வரியமா இந்தப் பனையை நான் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வருகிறன் ."
மேற்படி பந்தியிலே பேச்சுவழக்குச் சொற்கள் தவரு ன வகையிலே கையாளப்பட்டுள்ளமையை நாம் அவதானிக்க லாம். பேச்சுவழக்கிலமைந்த மேற்படி பந்தியிலே, ஏற்றிய, ஐந்தாறு, நாளுக்கு, இறக்கிறதில்லை, கொண்டுவந்து, எத்தனை, வருகிறன் ஆகிய செந்தமிழ் வழக்குச் சொற் 7 களும், திருந்திய பேச்சுமொழிச் செ ற்களும் பயன்படுத் தப்பட்டுள்ளன. இச் சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் முறையே, ஏத்தின, ஐஞ்சாறு. நாளைக்கு, இறக் கிறேல்ல, கொண்டந்து, சாத்தினை, வாறன் எனவே பயன் படுத்தப்படுவதனை ஆசிரியர் அறிவர். அறிந்தே ஆசிரியர் பேச்சுவழக்குச் சொற்களே இவ்வாறு திருத்தமாகக் கையாண்டார் என்று கொண்டாலும், ஒரு சொல்லினேயே வெவ்வேறுவிதமாக அவர் கையாண்டமைக்கான கார ணத்தை நாம் ஆராயவேண்டும். பேச்சுமொழி பற்றிய கூர்ந்த நோக்கின்மையும், பிரக்ஞைபூர்வமாக அதனைப் புனைகதையிலே கையாளவேண்டும் என்ற ஆர்வமின்மையுமே இதற்கான காரணங்களாம். மேற்படி பந்தியிலே, விசர் என்ற சொல்லுக்குப் பதிலாக விஷர் என்ற சொல்லே ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். ஆயின், விசயம் என்ற சொல்லை விஷயம் எனப் பயன்படுத்தினரல்லர். ஏற்றிய கொடி என முதலில் குறிப்பிடும் ஆசிரியர் பின்னர், ஏத்திப்போட்டு எனக் கையாளுகின்ருர். இவ்வாறு, முன்பின் மு:ணுன வகையிலே பேச்சுவழக்குச் சொற்களைப் பயன் படுத்தும் பண்பினை ஈழத்துப் புனைகதைகள் பலவற்றிலும் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு, மொழிபற்றிய நோக்கினுக்கு ஆசிரியர்கள் முதன்மைத்துவம் வழங் காமையே காரணமாகும்.
ஈழத்துப் புனைகதையும். 147
(இ) ஒலியமைப்பு வேறுபாடுகள்
ஒலிகள் பல்லாயிரக் கணக்கானவை. இவ்வோலிகள் யாவற்றையும் எழுத்திலே வடித்துவிட முடிவதில்லை. ஏனெனில், எழுத்துக்கள் வரம்புடையனவே. வரையறுக் கப்பட்ட அளவு எழுத்துக்களாலே, எண்ணற்ற ஒலிகளுக்கு உருவங்கொடுக்க முடிவதில்லை மிருகங்கள், பறவைகள் எழுப்பும் ஒலிகள் யாவற்றையுமோ வாத்திய இசைக் கருவிகளின் இனிய இசையினையோ எழுத்திலே வடிக்க முடிவதில்லை. இவ்வொலிகள் யாவற்றையும் வரிவடிவிலே அமையக்கூடிய அளவுக்கு எழுத்தாக்கம் இன்னும் வளர்ச்சி யடையவில்லை.
இவைபோன்றே, மனிதன் எழுப்பும் ஒலிகள் யாவற் றுக்கும் இன்னும் வரிவடிவம் கண்டுபிடிக்கப்படவில்லை. மனித எண்ணங்கள், உணர்ச்சிகள் யாவற்றையும் எழுத் திலே சிறைப்பிடித்துவிட முடிவதில்லை. அந்த அளவுக்கு எழுத்து மொழியானது இன்னும் வளர்ச்சியடையாத ஒன்ருகவே காணப்படுகின்றது. பேச்சொலிகள் யாவற் றுக்கும் எழுத்துக்கள் இல்லாமையால் புனைகதைகளிலே பேச்சுவழக்குச் சொற்களே ஒவ்வோராசிரியரும் வெவ்வேறு விதமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
அ. யேசுராசாவின் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் என்ற சிறுகதைத் தொகுதியினின்றும் சில எடுத் துக்காட்டுக்களை நாம் ஆராயலாம்.
'உங்கட மாமா செல்வநாயகம் உம்மட்டக் கதைக்கச் சொன்னேர்'
'உம்மட விருப்பத்தக் கேக்கச் சொன்னேர்'
‘புறத்தியிப் பெடியனெண்டா என்ர பங்கப் பிரி,
அப்பிடியெண்டெல்லாம் சொத்துக்கு கரச்சல் குடுப் பானெண்ட கவலை போல...' ܫ
இவ்வுதாரணங்களிலே தரப்பட்டுள்ள பேச்சுவழக்குச் சொற் கள் பலவற்றை ஈழத்து எழுத்தாளர்கள் பலரும் சற்று
Page 88
148 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
வேறுபட்ட வகையிலேயே கையாண்டுள்ளனர். அவற்றிற் சில பின்வருமாறு அமைந்துள்ளன.
a-Iă 5 l- - உங்கடை
உம்மட்ட - உம்மட்டை சொன்னேர் - சொன்ஞர் விருப்பத்த - விருப்பத்தை sredirT - என்ரை
பங்க - LIăiesă கரச்சல் - கரைச்சல் போல - போலே
டை, தை, சை, கை, வை, பை, றை போன்ற எழுத் துக்களின் ஒலியானது, எழுத்திலே உள்ளவாறு உச்சரிக் கப்படுவதில்லை. அவற்றின் ஈற்ருெலி சிற்சில இடங்களில் குறுகியும், அழுத்தம் பெற்றும் பெருமலும் ஒலிக்கப்படு கின்றன.
உம்மட்டை, உம்மட்ட ஆகிய இரு சொற்களையும் ாடுத்துக்கொண்டால், இவ்விரு சொற்களிலுமுள்ள டை, ட ஆகிய எழுத்துக்களை ஐகார அகர ஒலிகட்கிடைப்பட்ட ஒருவகை அகர "ஒலிகொண்டே உச்சரிக்கிருேம். இதஞ லேயே, எழுத்தாளர் பலரும் இவ்வெழுத்தை டை எனவும் ட எனவும் பயன்படுத்துகின்றனர்.
அ. யேசுராசாவின் மேற்காட்டிய உதாரணப் பகுதி தியிலிருந்தே இதனை ஆதாரப்படுத்தலாம். முதலாவது சுற்றிலே, கதைக்க என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது கூற்றிலே, விருப்பத்த என்ற சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. இங்கு, கதைக்க் என்ற சொல்லிலும் விருப்பத்த என்ற சொல்லிலும் எழுத்து வழக்கில் தை என்னும் எழுத்தே இடம்பெறுகின்றது (கதைக்க, விருப் பத்தை) . ஆஞல், அவ்வெழுத்து பேச்சுவழக்கில் இடம் பெறும்போது, அதிலுள்ள ஐ கார உயிரொலி எய் எனக் கதைக்க என்ற சொல்லிலும், அ என விருப்பத்தை என்ற
ஈழத்துப் புனைகதையும். . 49
சொல்லிலும் உச்சரிக்கப்படுகின்றது. ஆனல், பேச்சொலிகள் யாவற்றுக்கும் எழுத்துருவம் இன்மையால், அவ்வேறு பாட்டை உணர்த்த முடியாதுள்ளது.
ஈ) உபதேசங்கள் த்துவங்களை விவரிக்க்ையிலே
马 莎岛 உண்டாகும் முரண்பாடுகள்
உபதேசங்கள், புத்திமதிகள், தத்துவக் கருத்துக்கள் ஆகி யன பெரும்பாலும் சமூகத்தின் உயர்நிலையிலுள்ள, அறிவும் அநுபவமும் ஆற்றலும் உள்ளவர்களிஞலேயே வழங்கப்படு கின்றன. மேடைப்பேச்சுக்களும் இவ்வாறனவர்களினலேயே ஆற்றப்படுகின்றன. இவ்வாறு, சமூகத்தின் உயர்நிலையி லுள்ளோர் தாம் உபதேசஞ் செய்யும்போது, ஏனையோர் தம்மை உயர்நிலையிலே வைத்து எண்ணவேண்டுமென்பதா லும், செந்நெறிப்பாங்கான விடயத்தினத் தராதரமுடைய ஒரு மொழியிலே விளக்கவேண்டுமென்ற அவாவினுலும், பெரும்பாலும் செந்தமிழையே கையாண்டு வருகின்றனர். பாடசாலையிலே ஆசிரியன் மாணவனுக்குப் போதிக்கும் மொழி தொடக்கம் வரலாறு அரசியல், கலே, சமயச் சார் பான சொற்பொழிவுகள் வரை யாவும் செந்தமிழிலேயே ஆற்றப்படுகின்றன. இதனைப் பின்வரும் அட்டவணை தெளி வாக விளக்குகின்றது. 7
சந்தர்ப்பங்கள் பேச்சு வழக்கு எழுத்துவழக்கு
1. உறவினர், [56ö7 Lurto
ஆகியோருடனுன உரை
யாடலின்போது × 2. விரிவுரை, சமய, இலக்கி
யச்சொற்பொழிவுகளின்
போது Χ 3. கடிதம் : படித்தவர்கள்
எழுதும்போது Χ
படியாதவர்கள் எழுதும் போது . х
Page 89
} ፵0 ஈழத்துப் புனேகதைகளிற் பேச்சுவழக்கு
4. பத்திரிகை, சஞ்சிகைஆகி யனவற்றில் கட்டுரை, ஆசிரியர் தலையங்கம், செய்திகள் ஆதியன . x
5. வாஞெலியிலே செய் திகள், தொகுப்பாளர் அறிவிப்பு . . . X கிராமிய நிகழ்ச்சிகள் சிலவும், சமூகநாடகங்க 55th ... ... ... Χ
6. தற்காலச் சிறுகதை,
கவிதை, தாவல், நாட கம் ஆதியன . . . X X
அரசாங்க வர்த்தமானி விளம்பரங்கள் X
7
ஈழத்துப் புனைகதைகளிலே உபதேசங்கள், புத்திமதிகள், மேடைப்பேச்சுக்கண் ஆகியன இடம்பெறும்போது, இயல் பாகச் சாதாரண மக்களின் பேச்சுவழக்சிஜனக் கைக்தொன் ளும் பாத்திரங்கள் செந்தமிழிலேயே அவற்றினை ஆற்று கின்றன. விறுவிறுப்பும் ஆழமும், செறிவானவுமான விடயங்களை விளக்குவதற்குச் செந்தமிழ் மொழியே பயன் படுத்தப்படுகிறது. இவ்வியல்பினை ஈழத்துப் புனைகதைகள் யாவற்றிலும் காணக் கூடியதாக உள்ளது. பின்வரும் எடுத்துக்காட்டுக்களை நாம் இங்கு நோக்கலாம்.
(அ) உரையாடல்கள் யாவும் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலே அமையுமாறு எழுதப்பட்டது செ. கணேசலிங் கனின் போர்க்கோலம் என்ற நாவல் இந் நாவலிலே இடம் பெறும் வடிவேலு என்ற பாத்திரம் சாதாரணமாக யாழ்ப் பாணப் பேச்சுவழக்கிலே உரையாடுகின்றது. ஆஞன், அப் பாத்திரம் புரட்சிபற்றிய ஒரு கொள்கை விளக்கத்தினப் பின்வருமாறு செந்தமிழிலேயே ஆற்றுகின்றது.
ஈழத்துப் புனைகன்தயும். 5.
*ஆகக்கூடியது அவர்களால் நாட்டில் கிடைக்கக் கூடியதை வரியாகக் கறந்து ஓரளவு பகிர்ந்து கொடுக்க லாம், அவ்வளவுதான். சோஷலிசம் என்ருல் நாட்டி லுள்ள வறுமையைப் பகிர்வதல்ல, உற்பத்திச் சாதனங் கக்ளயெல்லாம் அரசு உடமையாக்கி உற்பத்தியைப் பெருக்க வேண்டும். தற்போதய அரசியலமைப்பையும் அதன்கீழ் ஆட்சிசெலுத்தும் வர்க்கத்தையும் எவைத்துக் கொண்டு எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. ஆயுதப்புரட்சி இல்லாமல் தற்போது ஆளும் வர்க்கத்தை ஒழித்து விடலாம் என்று நினைப்பது பகற்கனவு." *
இவ்வுரையாடற் பகுதியிலே பேச்சுவழக்குச் சொல் ஒன் றேனும் இடம்பெருமை அவனிக்கத்தக்கது.
(ஆ) இன்ஞேர் எடுத்துக்காட்டை இங்கு நோக்கலாம். இளங்கீரனின் நீதியே நீ கேன் என்ற நாவல் 1958 ஆம் ஆண்டளவிலே எழுதப்பட்டது. தனது படைப்புகளிலே பேச்சு வழக்கினைக் கையாள வேண்டும் என்ற இலட்சியம் உடையவர் இளங்கீரன். இந் நாவலிலும் பாத்திர உரை யாடல்களைப் பேச்சுவழக்கிலே அவர் அமைத்துள்ளார். கணேஷ் என்ற ஒரு பாத்திரம் இந் நாவலிலே இடம்பெறு கிறது. கணேஷ் ஒரு பட்டதாரி. உயர்ந்த எண்ணம்கள், இலட்சியங்கள் கொண்டவன், சாதாரண வேளைகளிலே, அவன் பேச்சு வழக்கினையே தன் உரையாடல்களின்போது பயன்படுத்துகிருன். ஆனல், மற்றவர்களுக்கு உபதேசம் செய்கையிலே தான் ஒரு படித்தவன், பட்டதாரி என்ற உயர்வுச் சிக்கலினுற் போலும் செத்தமிழிலேயே உரையாடு கிருன், அவன் உபதேசஞ் செய்யும் ஒரு பகுதியே கீழே தரப்படுகின்றது.
'நேர்மை, நீதி, நாணயம், மனச்சாட்சி, என் றெல்லாம் சொல்கிறீர்களே, அவையெல்லாம் உங்களி டமிருந்தால் இருவது வருஷங்களாக உங்களுக்கு உழைத்த மனுஷனை இப்படி நிர்க்கதியா விடுவீர்களா? உங்களால்தானே அவருடைய குடும்பம் ஒருவேளைச் சோற்றுக்கும் கதியற்றுக் கண்ணிரும் கம்பலையுமாகத்
Page 90
152 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
திண்டாடுகிறது ? உங்களுக்காக வருஷக்கணக்காக உழைத்த மனுஷனுக்கு என்ன பரிசு கொடுத்தீர்கள் ? பசி, பட்டினி, காசநோய், கவலே, கண்ணிர் இவை களைத்தானே கொடுத்தீர்கள் ?? 9
இவ்வுரையாடற் பகுதியும் செந்தமிழ்ச் சாயலிலே அமை கின்றது.
(இ) புனைகதை ஆசிரியர்கள் சிலர், பாத்திர உரையாடல் களின்போது செந்தமிழ், பேச்சுவழக்குத் தமிழ் ஆகிய இரண்டும் சேர்ந்த ஒருவகைக் கலப்பு நடையையே கையா ளுகின்றனர். கதாபாத்திரங்கள் உபதேசங்களை, புத்திமதி களை, வழங்கும்போதும் மேடைப்பேச்சுக்களை ஆற்றும் போதும் பேச்சுவழச்குச் சொற்கள் சில கலந்துவருவதுண்டு. செங்கை ஆழியானின் பிரளயம் என்ற நாவலினின்றும் பின் வரும் பகுதி உதாரணங் காட்டப்படுகின்றது.
'இதோபார் பொன்னு, படிப்பின் பெருமையை இன்றைக்கு உணர்ந்திருக்கிறேன். விதானையார் தம்பிப்பிள்ளையைப் பார். . நான் துணி எடுக்கப் போறவேளையெல்லாம் என்ன சொல்லுகிருர், ஏன் வேலுப்பிள்ளை பிள்ளேயளையெல்லாம் படிப்பிக்கிருய். சும்மா மறிச்சுப்போட்டு தொழிலைக் கற்றுக்கொடுக் கிறது தானே.. படிச்சாப்போலே ஏதோ கிடைக்கப் போகிறதே என்று சொல்கிருரர்.' 10
மேற்குறிப்பிட்ட உரையாடற் பகுதியிலே போற, மறிச்டிப் போட்டு, படிச்சாப்போலை, சும்மா ஆகிய சொற்கள் மாத் திரமே பேச்சுவழக்கு வடிவிலே அமைந்தவை. ஏனைய சொற்கள் யாவும் செந்தமிழ்ச் சொற்களாகும்.
இவ்வாறு ஒரே பாத்திரம் ஓரிடத்திலே பேச்சுத்தமிழை யும், இன்னேரிடத்திலே செந்தமிழையும், சில விடங் களிலே இரண்டும் சேர்ந்த கலப்பு தடையையும் பயன்படுத் துவது, புனைகதையின் சீரான உணர்வோட்டத்தினுக்கு ஊறுபயப்பதாயுள்ளது. அத்துடன், பூரணமான பாத்திர வார்ப்பினுக்கும் இடையூருக உள்ளது. இதுபற்றி, துரை ராஜா மனேகரன்,
FIFpġġ L' L-Irwana Asu lb... ... 153
"ஈழத்துத் தமிழ் நாவல்களின் கதைத் தலைவர்கள் சிலவேளைகளிலே முழுமையான பாத்திரங்களாக அமை யமுடியாமற் போவதற்குக் காரணம், அவர்கள் ஒரே திரான முறையிலே பேச்சுமொழியைப் ւսայ6ծr படுத்தாமையே. ’ 11
எனக் குறிப்பிடுகின்ருரர். எனவே, பாத்திரங்களின் பூரணத் துவமான வார்ப்பிலும் பேச்சுவழக்குப் பிரயோகம் பெரும் பங்கு வகிக்கின்றது என்பதனை இங்கு நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இதுவரை கூறியவற்றைத் தொகுத்து நோக்கும்போது, ஈழத்துப் புனைகதை இலக்கியங்களிலே பேச்சுவழக்கானது இக்காலவரையிற் செம்மையான முறையிலே கையாளப் படவில்லை என்பது தெளிவாகும். எனவே, புனேகதை இலக்கியத்திலே பேச்சுவழக்கினைப் பயன்படுத்துவது பற்றிய புதிய கோட்பாடு ஒன்று உருவாக்கப்படுதல் இன்றியமை யாததாகும். அக் கோட்பாட்டினடிப்படையிலே பேச்சு வழக்கானது பயன்படுத்தப்படும்போது, ஈழத்துப் புனை கதை இலக்கியம் மேலும் செழுமையான ஒரு வளர்ச்சிக் கட்டத்தினை அடையும் என்பது திண்ணம்.
அடிக்குறிப்பு
1. கதிர்காமநாதன், செ. கொட்டும்பனி, முன்னுரை
2. கதிர்காமதாதன் செ, , மூவர் கதைகள், பக் 9
3. எஸ்.பொன்னுத்துரை, வெண்சங்கு, (முன்னிடு)
4. உலகமொழிகள் சிலவற்றிலே காணப்படும் ஒரமிசமாகிய இருவழக்குப் பண்பு பற்றிய விவரங்களுக்குப் பார்க்க வும் : "ஆக்கவிலக்கியமும் மொழியியலும்”, ஆக்கவிலக் யேமும் அறிவியலும், பக். 57
20
Page 91
54
10.
ll.
ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
நுஃமான், எம், ஏ., "ஈழத்துத் தமிழ் நாவல்களின் மொழி', தமிழ் நாவல் நூற்றண்டு விழா ஆய்வரங்கு 1977.
டானியல், கே, பஞ்சமர், பக். 1 - 2.
சண்முகதாஸ், அ. நமது மொழியின் இயல்புகள், பக் 9.
'கணேசலிங்கம், செ., போர்க்கோலம், பக். 175.
இளங்கீரன், நீதியே நீ கேள், பக். 101.
செங்கை ஆழியான். பிரளயம், பக். 22.
மளுேகரன், து, 'ஈழத்துத் தமிழ் நாவல்களிற் கதைத் தலேவன் பாத்திரப் பண்பு", பக். 218.
முடிவுரை
இவ்வாய்வுக் கட்டுரையின் நான்கு இயல்களிலும் பொதுவாக இலக்கியத்துக்கும் மொழிக்கும் இடையேயுள்ள தொடர்புபற்றியும், சிறப்பாக ஈழத்துப் புண்கதைகளிலே பேச்சுவழக்குப் பயன்பாடு பற்றியும் ஆராயப்பட்டுள்ளது. முதலாவது இயல், இலக்கியமும் மொழியும், பேச்சு வழக்கின் முக்கியத்துவம், ஈழத்துப் பேச்சுவழக்கின் பொது வான இயல்புகள், இந்திய ஈழத்துப் பேச்சுவழக்கிலே ஒலி யமைப்பு ஆகியன பற்றி ஆராய்கின்றது. இரண்டாவது இயலிலே, ஈழத்துப் புண்கதைகளின் வரலாற்றுச் சுருக்கம், ஈழத்துப் புண்கதைகளில் பேச்சு வழக்குப் பிரயோக வர லாறு, மரபுப் போராட்டம் ஆகியன பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது, மூன்ருவது இயலில் பேச்சு வழக்கின் சில பண்புகள், பிரதேசக் கிளைமொழிகள் ஆகியன பற்றியும், நான்காவது இயல், கதை நிகழ் களமும் பேச்சுவழக்கும், கதைப்பொருளும் பேச்சுவழக்கும், புனைகதை வகையும் பேச்சு வழக்கும், புனைகதை இலக்கியத்திற் பேச்சு வழக்கைப் பயன் படுத்துவதால் உருவாகும் பிரச்சினைகள் ஆகியன பற்றியும் விளக்குகின்றன. முதலாவது இயலிலே பின்வருங் கருத் துக்கள் கூறப்பட்டுள்ளன :
(அ). இலக்கியத்தின் மூலாதாரமாக விளங்குவது மொழியே. ஒரு மொழியின் வாழ்வு, வளம் வளர்ச்சி பற்றிய தகவல்களைச் செம்மையானதாகத் தரவல்லது இலக்கியமேயாகும்.
Page 92
156
(4)
(@)
(FF)
(R)
(ஊ)
ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
காலத்துக்குக் காலம் அரசியல், சமூக மாற்றங்களுக் கேற்ப இலக்கியப் பொருளும், இலக்கிய சிடிவமும் இலக்கிய மொழியும் வேறுபட்டு வருகின்றன.
இலக்கியம் சமூக நிலமைகனைப் பிரதிபலிப்பதஞல், அது வரிக்கச் சார்பானதாகும். ஆணுல், மொழி
வர்க்கச் சார்பானதாகவன்றி மனித இனத்தின் கூட்டு
முயற்சியிஞலே தோற்றுவிக்க ப்பட்டதாகும்.
எழுத்து மொழிசுயவிடப் பேச்சு மொழியே இலகு வானது; ஆற்றல்மிக்கது; வளர்ச்சி டையது ; பிற மொழிச் சொற்கண்யும் மிக இயல்பாகத் தமிழ் வடிவத்துக்கேற்ப ஏற்றுக்கொள்கிறது. w
புனேகதை நாடகம், திரைப்படம் போன்ற துறை களிலே பேச்சுவழக்கானது பெருந் தாக்கத்தினை ஏற்படுத்திவருகிறது. ஈழத்து மேடை நாடகங்கள், வாஞெலி நாடகங்கள், தமிழ்த் திரைப்படங்கள் ஆகியன உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளன.
ஈழத்துப் பேச்சுவழக்கு இந்தியப் பேச்சுவழக்கி னின்றும் பல்வேறு நிலைகளிலும் வேறுபட்டுள்ளது.
இந்தியப் பேச்சுத் தமிழ் போலன்றி, ஈழத்துப் பேச்சுத் தமிழிலே குறித்த சில பிறமொழிகளின் செல்வாக்கு அருகியே காணப்படுகிறது. சிங்கள மொழியின் செல்வாக்கினை மட்டக்களப்பு மலேநாடு, முஸ்லிம் மக்களது பேச்சு வழக்கிலே அவதானிக்க முடிகிறது.
இந்தியாவிலே சாதியமைப்பு (அதாவது பிராமணர்பிராமணரல்லாதோர் பேச்சுவழக்கு) பேச்சுவழக்கிலே வகிக்கும் செல்வாக்கினை ஈழத்துப் பேச்சு வழக்கிலே காண முடியவில்ல். இந்திய், முஸ்லிம் பேச்சு வழக்கைத் தவிரச் சாதிப் பேச்சு வழக்கு வேறுபாடுகள் ஈழத்திலே அவ்வளவாக உணரப்படுவதில்லே.
முடிவுரை 57
3.
(ST)
இத்தியா பரந்த தேசமாகையிஞலே பிரதேசங்களுக் கிடையிலான தொடர்புகள் குறைவு. இதஞற் பிரதேச மோழிகளுக்கிடையே விகற்பங்களுமதிகம். ஆஞல், இலங்கை சிறிய நாடாகையால், பிரதேசத் தொடர்பு நெருக்கங் காரணமாகப் பிரதேச மொழி விகற்பங்கள் குறைவாகவே காணப்படுகின்றன.
ஆக, பொதுப்பேச்சுத்தமிழ் என்ற வகையிலேயே இந்தியத் தமிழ் பேச்சுவழக்கும் ஈழத்துத் தமிழ்ப் பேச்சுவழக்கும் ஒற்றுமையுடையனவாகக் காணப் படுகின்றன.
இந்திய ஈழத்துத் தமிழ்ப் பேச்சுவழக்குகளின் ஒலிய மைப்பினை ஒப்பிட்டாராய்கையிலே, பின்வரும் முடி புகள் பெறப்பட்டன.
இந்தியப் பேச்சுத் தமிழிற் பெருமளவு இசைத்தன்மை பேணப்படுகிறது.
இந்தியப் பேச்சுத்தமிழ் இலக்கியத் தமிழைவிடப்
பல்வேறு நில்களிலும் திரிபுபட்டுள்ளது. ஆளுரல், ஈழத்துத் தமிழ்ப் பேச்சுவழக்கு ஓரளவுக்கேனும் இலக்கியத் தமிழின் இயல்புகள் கொண்டுள்ளது.
இரண்டாவது இயலிலே பின்வரும் கருத்துக்கள் கூறப்பட் (SeitouTar.
(அ)
கீழைத்தேசங்களிலே ஐரோப்பியர் வகுகையுடன் நிலமானிய அமைப்பு ஆட்டங்கானத் தொடங்க
அவ்வமைப்பினைப் போற்றிய இலக்கிய வடிவங்களும்
இலக்கியப் பொருளும் மாற்றமுறுகின்றன. செய்யுள் வழக்குச் சமூகத்திலே வகித்த முக்கியத்துவத்தினை உரைநடை பெறுவதாயிற்று. இவ்வுரைநடையுடன் பின்னிப்பிணைந்த ஓர் இலக்கியவடிவமே புனைகதை இலக்கியமாகும்.
Page 93
158
(马)
(இ)
(FF)
(s-)
(261)
ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
ஈழத்தின் ஆரம்பகால தமிழ்ப் புனேகதைகள், அரச வம்சத்தினரின் சரித்திரங் கூறுவனவாகவும் ஒழுக்க நெறியை வற்புறுத்துவனவாகவும், காவியப்பாங் கான மொழிநடை கொள்வனவாகவும், ள்ழத்தினைக் களமாகக் கொள்ளாதனவாகவும் காணப்படுகின்றன.
இடைக்கால ஈழத்துப் புண்கதைகளுக்கு ஆதர் சமாயமைந்தவை மேலைத்தேயப் புனைகதைகளே. ஆணுலும், அவை ஈழம் வாழ் மக்களின் சமூகநிலைப் பாடு, வாழ்க்கைப் பின்னணி ஆகியவற்றையும் சித்தி ரிக்கத் தலைப்பட்டன.
இக்கால ஈழத்துப் புனேகதைகள், இந் நாட்டின் சமூக, அரசியற் பிரச்சினைகளேத் தத்துவார்த்த நோக்கிலே ஆழமாக அணுக முற்படுகின்றன.
ஈழத்தின் ஆரம்பகாலச் சிறுகதை எழுத்தாளர்கள் பலரும் பாரிய அரசியல், சமூக, பொருளாதாரக் கருத்துக்களைச் சிறுகதை வடிவத்திலே கூறமுடியாது போகவே நாவலிலக்கிய முயற்சியிலே ஈடுபடுகின் றனர்.
ஈழத்தின் ஆரம்பகால எழுத்தாளர்களுக்கு முன்ளுே டியாக மணிக்கொடிக் குழுவினர் விளங்கியபோதும், 1950ஆம் ஆண்டின் பின்னர் ஈழத்துப் புனைகதை இலக்கியம் தனித்துவமான, புரட்சிகரமான ஒரு பாதையை வகுத்துக்கொண்டது
ஈழத்துப் புண் கதைகளிலே சமுதாயச் சித்திரிப்பின் அடிப்படையிலேயே பேச்சுவழக்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது.
1960 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் ஈழத்திலிடம் பெற்ற மரபுப் போராட்டம், ஈழத்துக்குத் தனியா னதோர் இலக்கியப் பாரம்பரியம் உண்டென்பதை யும் பிரதேச மண்வாசனை இலக்கியங்களின் இன்றி யமையாத பண்பு என்பதனையும் உணர்த்திற்று. அது
முடிவுரை 59
தொழிலாள வர்க்கத்தினரின் ஆக்க இலக்கியப் பிர வேசத்துக்கு வழிவகுத்தது. ஈழத்துப் புனைகதைக ளிலே பேச்சுவழக்குப் பிரயோகத்தின் இன்றியமை யாமையை விளக்கியதோடு, தற்கால ஈழத்துப் புனை கதைகளின் தத்துவார்த்த நோக்கிலான வளர்ச்சிக்கும் அது வித்திட்டது.
மூன்ருவது இயலிலே பின்வரும் கருத்துக்கள் கூறப்பட் டுள்ளன.
(அ) பேச்சுவழக்கானது தேசீயரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும், கிராமிய மட்டத்திலும், இனம், சாதி, தொடர்பு முறைமை, தொழிலடிப்படையிலும் இடத்திற்கிடம் வேறுபடுகின்றது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலைநாடு, தென்மாகாணம், மன்னுர், முல்லைத்தீவு, கொழும்பு ஆகியவற்றின் பிரதேசக் கிண்மொழிகள்பற்றி ஆராயப்பட்டுள்ளன.
(ஆ) மேலே குறிப்பிட்ட பிரதேசக் கிண்மொழிகளின் ஒலியமைப்பு வேறுபாடுகள், பொருள்மாற்றம், செந்தமிழ்ச் சொற்கள், பிறமொழிச் சொற்கள் பற்றி ஒரளவு ஆராயப்பட்டுள்ளன.
(இ) மன்ஞர், முல்லைத்தீவு, கொழும்புப் பிரதேசக் கிளை மொழிகளின் சிறப்பியல்புகளே விரிவாகத் தரவல்ல ஆதாரங்கள் போதிய அளவு கிடைக்காமையினலே, அவைபற்றிய ஆய்வும் சுருக்கமாகவே அமைந் avelrengy.
நான்காவது இயலிலே பின்வரும் கருத்துக்கள் கூறப்பட்
GBQsiramTeesr.
(அ) கதைநிகழ் களத்திற்கேற்பப் புண்கதையின் பேச்சு
வழக்கும் வேறுபடும்.
(ஆ) கதைப் பொருளின் தன்மைக்கேற்ப அக்கதையிலே
இடம்பெறும் பேச்சுமொழி வேறுபடும்.
Page 94
160
(இ)
(FF)
(ر سهیم )
ஈழத்துப் புனேகதைகளிற் பேச்சுவழக்கு
ஈழத்துப் புனைகதைகள், இக்கட்டுரையிலே துப்பறி யும் புண்கதைகள். வரலாற்றுப் புண்கதைகள், மேல்மட்ட உணர்வும் புண்கதைகள், மிகை உணர்வுப் புனைகதைகள், மண்வாசனைப்பாங்கான புனைகதைகள் என வகுக்கப்பட்டு ஒவ்வொரு வகைப் புனே கதையின்
பேச்சுவழக்கும் தனித்தனியே ஆராயப்பட்டுள்ளது:
துப்பறியும் புனே கதைகளினதும் வரலாற்றுப் புனை கதைகளினதும் பேச்சுவழக்குகள் செத்தமிழ்ப் பாங்காணவையென்பதும், மேல்மட்ட உணர்வுப் புண்கதைகளினதும், மிசிசிகஉணர்வுப் புண்கதை களினதும் பேச்சுவழக்குகள் செந்தமிழ்ச் சொற்களும் பேச்சுவழக்குச் சொற்களும் விரவி வருவன என்பதும், மண்வாசனைப் பாங்கான புனேகதைகளினது பேச்சு வழக்கு இயல்பாக அமைந்துள்ளது என்பதும் எடுத் துக்காட்டுக்களுடன் நிறுவப்பட்டுள்ளன.
ஈழத்து இலக்கிய கர்த்தாக்கள் பலரும், செம்மையான வகையிலே புனைகதைகளிலே பேச்சுவழக்கிணைப் பயன்
படுத்தத் தவறியுள்ளனர். இதற்கான காரணங் களாகப் பின்வருவன எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
மொழியின் இருவழக்குப் பண்பு: புனைகதைகளிலே பாத்திர உரையாடல்கள் பேச்சுவழக்கிலும், விவர ணப் பகுதிகள் செந்தமிழிலும் அமைகின்றன. இவ் விருவகை தடையையும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் போது, அவை ஒன்றையொன்று பாதிக்கின்றன.
பேச்சுவழக்கினைச் சீராகக் கையாளவேண்டுமென்ற ஆர்வம் எழுத்தாளர்களிடையே இல்லே மண்வா சனே இலக்கியம் படைக்க முனேற்த எழுத்தாளர் சிலர். பேச்சுமொழியைப் பயன்படுத்தும் வகையிலே இரத் தையற்றவர்களாகவே காணப்படுகின்றனர். பேச்சு வழக்கிலான குறித்த ஒரு சொல்லேயே வெவ்வேறு விதமாகப் பயன்படுத்துவது இவர்களின் சிரத்தையின் மையையே புலப்படுத்துகின்றது.
முடிவுரை 161
3.
ஒலியமைப்பு வேறுபாடுகள் : தமிழ்மொழியைப் பொறுத்தவரையிலே, பேச்சொலிகள் யாவற்றுக்கும் இன்னும் எழுத்துருவம் கண்டுபிடிக்கப்படவில்லே. இதஞற் குறித்த சில சொற்களை எழுத்தாளர்கள் பலரும் வெவ்வேறுவிதமாகப் பயன்படுத்துகின்றனர்.
உபதேசங்கள், தத்துவங்கள் மேடைப்பேச்சுத் தொடர்பாக ஏற்படும் முரண்பாடுகள் : சாதாரண பேச்சுவழக்கினைப் பயன்படுத்தும் பாத்திரங்களும், உபதேசங்கள் செய்யும்போதும் தத்துவங்கள் கூறும் போதும் மேடைப்பேச்சுகளை ஆற்றும்போதும் செந்
தமிழையே பயன்படுத்துகின்றன. பிரக்ஞை பூர்வ
மாகப் பேச்சுவழக்கினைப் பயன்படுத்த வேண்டும் எனக் கருதும் எழுத்தாளர்களும் மேற் கூறப்பட்ட சந்தர்ப்பங்களிலே சேத்தமிழையே கையாண்டு வருகின்றனர்.
நான்காம் இயலின் முடிவிலே, இதுவரை ஈழத்துப் புனே கதைகளிலே செம்மையான வகையிலே பேச்சுவழக்கானது பயன்படுத்தப்படவில்லை என்பதும், இதுபற்றிய புதிய கோட் பாடு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
21
Page 95
உசாத்துணை நூல்விபரப் பட்டியல்
அருளுசலம், க.,
அசோகா, மண்டூர்.
இலங்கையர்கோன்,
இலக்குமணன் செட்டி
umrf
இளங்ரேன்,
es se se si se o a ese a 8 o los es
இளமுருகனர்,
*ஈழத்திலே தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்' (பதிப்பிக்கப்படாத ஆய்வுக் கட்டுரை) பேராதனப் பல்கலைக் கழகம்.
கொன்றைப் பூக்கள், தாய்நாடு பதிப்பகம், கொழும்பு, 1976.
வேள்ளிப் கா சரம்,
பூணி சண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம், 1962.
வளரும் தமிழ் பாரி நிலயம், Ggsräber, 1966.
நீதியே நீ கேள், பாரி நிலையம், (voir&r, 1952 தினகரன், 14-01-1963
செந்தமிழ் வழக்கு தமிழ்ப் பாதுகாப்புக் கழக வெளியீடு 18,
யாழ்ப்பாணம், 1963
உசாத்துணை நூல்விபரப் பட்டியல் 65
இராசரத்தினம், வ:அ. கிரெளஞ்சப் பறவைகன்,
வீரகேசரிப் பிரசுரம், கொழும்பு, 1975
கருளுகரன், கி. சமுதாய மொழியியல்
பாரி நிலயம், GsFairw, 1975
கணபதிப்பிள்ளை, க., “ஊருக்கொரு பேச்சு", இளங்கதிர், 1946 - 50
கதிர்காமநாதன், செ, கொட்டும்பனி
கொழும்பு, 1968
கந்தசாமி, அ. த. gBarras gallu, 03-02-1963
கற்தையா, வி. சி. , இராமநாடகம்,
கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு, 1969
கணேசலிங்கம், செ. வோர்க்கோலம், பாரி நிலையம், Gigfairfawr, 1969
கோகிலம் சுப்பையா, தூரத்துப் பச்சை,
தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1964 மறுபிரசுரம் : வீரகேசரி வெளியீடு, கொழும்பு, 1973
கைலாசபதி, க. ஒப்பியல் இலக்கியம்,
பாட்டாளிகள் வெளியீடு, Gyaiyar, 1969
சதாசிவம், ஆ , "ஒரு மொழிக்கு ஒரே
இலக்கணம்", தினகரன், 05-03-1963
Page 96
64
சற்குணம், ம.
சண்முகன், ஐ. ,
சண்முகதாஸ், அ.,
LL LSLS SSLL0LLLL LLLLLLLLS S LLLL S LLL LL LLL LLL 0L0
» aux» ve a v r «» ? » ab es « s p a
சிவத்தம்பி, கா,
ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
"மட்டக்களப்புத் தமிழகத்திற் சிங்கள வழக்கு", இளர்கதிர், 1955 - 56
கோடுகளும் கோலங்களும், அலை வெளியீடு. யாழ்ப்பாணம் 1976
நமது மொழியின் இயல்புகள், பாவ லர் தெ. அ. துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை - 2. மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை 1976
"குழந்தை மொழி', பசறைத் 5.Lfijd afišču Nauju provů, Luaravoso, 1976.
‘ஈழத்து நாடக வரலாற்றில் ஒரு தமிழ்ப் பேராசிரியர்' இளங்கதிர் இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம், பேராதனை, 1965-69
*"ஆக்க இலக்கியமும் மொழியிய லும்", மல்லிகை, ஆகஸ்ட், 1978
**ஆக்க இலக்கியமும் மொழியிய லும்", ஆக்க இலக்கியமுல் அறிவியலும் (பதிப்பாசிரியர்: அ. சண்முகதாஸ்) யாழ்ப்பாண வளாகத் தமிழ்த்துறை வெளியீடு, யாழ்ப்பாணம், 1977
நாவலும் வாழ்க்கையும், தமிழ்ப் புத்தகாலயம். சென்னே, 1978
"சொல்லிலக்கணம் சுட்டும் சமூக உற்பத்தி உறவுகள்", வானமாமலை மணிவிழா மலர், GFairur, 1978
t
*ாத்துணை நூல்விபரப் பட்டியல் I65
' ' ' to a . . . . . . “இலங்கை முற்போக்கு
சிாழுத்தாளர் சங்கமும் ஈழத்தின் தமிழிலக்கிய வளர்ச்சியும்?? புதுமை இலக்கியம், தேசீய ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மகாதாட்டு மலர், 1975
சிவநேசச் செல்வன், ஆ, "ஈழத்துத் தமிழ் நாவல்களின்
தோற்றம்", ஈழத்து தமிழ் நாவல் நூற்ருண்டு ஆய்வரங்குக் கிட்டுரை, இலங்கைப் பல்சுலைக்கழகம், யாழ்ப்பாணம், 1977 சீனிவாசன், ரா. மொழியியல்,
பாரி நிலையம், சென்னை, 1960
சுப்பிரமணியம், நா. *ழத்துத் தமிழ் நாவல் நூல் விவரப் பட்டியல், நூலகம், இலங்கைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பான வளாகம், 1976
a a *சிந்துத் தமிழ் நாவல் இலக்கியம், முத்தமிழ் வெளியீட்டுத் கழகம், யாழ்ப்பாணம், 1978
ர்ப்பிரமணியம், ச, “இதுதாஞ தமிழ் மரபு",
தினகரன், Ꭴ5-01--1 968
சல்வநாயகம், வி. , தமிழ் இலக்கிய வரலாறு,
பூரீ லங்கா அச்சகம்,
யாழ்ப்பாணம் 196து
சங்சரசு seÁlumair, வாடைக்காற்று, விரதே சரிவெளியீடு,
கொழும்பு, 1973 22
Page 97
J 66 ஈழத்துப் புனேகதைகளிற் பேச்சுவழக்கு
, o s s s s pro iu a o p 0 0 & 10 de ol 2 e * பிரளயம், வீரகேசரி வெளியீடு,
கோழும்பு, 1975
. . . so as a so see காட்டாறு. வீரகேசரி வெளியீடு,
கொழும்பு, 1977
as sa de . . . os e a 8. மூற்றத்து ஒற்றைப்பனே, சிரித்திரன் பிரசுரம், யாழ்ப்பாணம், 1972
செந்திநாதன், கனசு, ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, அரசு வெளியீடு, கொழும்பு, 1964
a & 8 w a - 8 & 6 8 வெண்சங்கு யாழ். இலக்கியவட்ட வெளியீடு, யாழ்ப்பாணம், 1967
சொக்கலிங்கம், க. ஈழத்துத் தமிழ் தாடக இலக்கிய
வளர்ச்சி, முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ்ப்பாணம், 1977
a es as so ess *காலம் மாறிவிட்டது',
தினகரன், 05-01-1963
டானியல், கே., போராளிகள் காத்திருக்கின்றனர்
வீரகேசரி வெளியீடு, கொழும்பு 1975
e s -" பஞ்சமர்,
தாரகை வெளியீடு,
Austbiuntaris, 1978
டொமினிக் ஜீவா, தண்ணீரும் கண்ணீரும்
தமிழ்ப் புதுதகாலயம்,
Gefeiriw, 1960
sos o es a a e es o * 8 o s o lo தினகரன், 14-01-1963
தனஞ்செயராசசிங்கம், ச. "யாழ்ப்பாணப் பேச்சுவழக் கில் சொல்லும் பொருளும்' இளங் கதிர், 1967-68
உசாத்துணை நூல்விபரப் பட்டியல் 167
oooooo " o o s a lo o a la a se ses "பேச்சுத் தமிழில் இலக்கிய
வழக்கு' இளங்கதிர் 1665-66
தெளிவத்தை ஜ்ோசப், காலங்கள் சாவதில்லை, வீரகேசரி
வெளியீடு, கொழும்பு, 1974
தொல்காப்பியம் (புலியூர்க்கேசிகன் தெளிவுரையுடன்)
பாரி நிலயர், சென்னை, 1964
நவசோதி, க., "மட்டக்களப்பு வழக்குத் தமிழ்", மட்டக்களப்புத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் வாசிக்கப்பட்ட கட் டுரை, 1976
நடராசா, மட்டுநகர், "செந்தமிழ்ச் சாயல் தழுவிய
அந்நிய மொழிச் சொத்கள் • இளங்கதிர் 1, 49 - 50
நடராசன், கே. வி. யாழ்ப்பாணக் கதைகள்,
யாழ் இலக்கிய வட்ட வெளியீடு, யாழ்ப்பாணம், 1985
நுஃமான், எம். ஏ., “ஈழத்துத் தமிழ் நாவல்களின்
மொழி?, தமிழ் நாவல் நூற்ருண்டு ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை. யாழ்ப்பாணம், 1977
தன்னூல் (பூரீலழறீ ஆறுமுகநாவலரால்
புதுக்கியது) ஆறுமுகநாவலர் வி. அச்சகம், சென்னை, 1988 .-
பாலசுத்தரம், இ., “மட்டக்களப்புப் பேச்சுத்
தமிழிலே சிதைந்த aupágaror''' இளங்கதிர் 1967 - 68
Page 98
168 ஈழத்துப் புனைகதைகளிற் பேச்சுவழக்கு
பாலமனேகரன், நிலக்கிளி,
வீரகேசரி வெளியீடு, கொழும்பு, 1973
புதுமைப் பண்டிதன், "ஒடும் சாக்கடை நீருமல்ல மரபு",
தினகரன், 08-12-1962
பெனடிக்ற் பாலன், யோ, சொந்தக்காரன்.
பாரி நிலையம், சென்னை, 1968
பொன்னுத்துரை, எஸ்., வி
அரசு வெளியீடு, கொழும்பு, 1966
மகுே கரன், து, "ஈழத்துத் தமிழ் ாவல்களிற் கதைத் தலைவன் பாத் ப் பண்பு”, இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப் பாண வளாகத் தமிழ் முதுமாணிப் பட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப் பட்ட கட்டுரை, 1978
முத்துச் சண்முகன். இக்காலத் தமிழ்,
சீயோன் பதிப்பகம், மதுரை, 1967
0 & w8 a இக்கால மொழியியல்
திருவகுள் அச்சகம், மதுரை, 1971
முத்துலிங்கம், அ. , அக்கா,
பாரி நிலையம், Gafsirot, 1964
முருகபூபதி, லெ, சுமையின் பங்காளிகள், 1975
யேசுராசா, அ., தொலைவும் இருப்பும் ஏனைய
கதைகளும்,
ஆசிரியரின் வெளியீடு, யாழ்ப்பாணம், 1974
உசாத்துணை நூல்விபரப் பட்டியல் I 69
யோகநாதன், செ, ஒளி நமக்கு வேண்டும்,
மலர் வெளியீடு, மட்டக்களப்பு, 1973
வரதராசன் CUP, மொழி வரலாறு,
தீருநெல்வேலி சைவசித்தாந்த நூற் பதிப்பகம், சென்னை, 1944
வித்தியானந்தன், ལོ་ 5t5gpr *TájL! (FIÉis areoli)
தமிழ் மன்றம், (56thrig, 1954
o « é o s a as e se மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்
as Gisig, 1962
* * * * * see . . . . r. . . . . . அலங்காரரூபன் நாடகம், கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு, 1962
at Lorgpøshauff, பரமார்த்தகுரு கதை வேலுப்பிள்ளே, ஆ, தமிழ் இலக்கியத்தில் காலமும்
கருத்தும்,
சென்னை, 1969
ஹம்சா, யோனகபுர, “திக்குவல்லையின் வரலாற்றுப்
பின்னிணைப்போடு பொருளாதாரப் பங்களிப்பு", மல்லிகை, பெப்ரவரி, 1976
ஹம்சா, எஸ். அய்.எம்., 'திக்குவலையின் பேச்சுத்தமிழும்
படைப்பிலக்கியப் பிரவேசமும்" மல்லிகை, பெப்ரவரி, 1976
ஊர்மிளா, -asór(Gu srsöT ஆருயிரே,
வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
Page 99
70 ஈழத்துப் புண்கதைகளிற் பேச்சுவழக்கு
Sanmugadas, A.,
a wo e F set
shanmugampillai, M.,
Sussendirarajah, S.,
Steiner George.
Stalin, J. V.,
Vaadreys, J.,
“Some Aspects of the Tamil Spoken in Sri Lanka”
Proceedings of the Tamil IV th International Tamil Conference) Seminar, Vol II Nov. 6th 1974
“The Phonology of Verbal Forms in colloquial Ceylon Tamil', Unpublished Ph. D. thesis University of Edinburgh, 1971
“Separation of Sri Lanka Tamil frem the Centinental Tamil”,
Tamil Civilization Vol. 1. No. 2, Tamil University, Tanjavur, 1983
“A Tamil Dialect in Ceylon', Indian Linguistics, Vol. 23, 1962
“A Descriptive Study of Ceylon Tamil (with special reference to Jaffna Tamil), Unpublished Ph. D. thesis, Annamalai University, 1967
'Linguistics and Literature',
Linguistics at Large, Vietor Gellanez Ltd., London, 1971
Marxism and the Problems of Linguistics, Mescow, 1954
Language, (English Translation)
London, 1951
உசாத்துணை நூல்விபரப் பட்டியல்
Christopher Candwell,
Zvelebil, K.,
171
“Illusion and Reality', A Study of the Sources of Peetry,
London.
“Some Features of Ceylon Tamil',
Indo-Iranian Journal, Vel. 9. 2., 1966
Page 100
ஆசீர்வாதம் அசசகம யாழ்ப்பாணம்
Page 101
Page 102
ஈழத்துத் քthց, ETT
திரு. ரொக்கலிங்
2 முத்துத் թthլի քի:
ஆப்பிரம்
தமிழியற் சிந்த
போசிரியர் , வித் indaria, 2 Urteurri :=
4. கம்பராமாயணக் காட்
இந்திய கலாநிதி :ே நீரகப் பதிப்பு 5. தமிழ்மொழி இலக்க அண்மு பிரதிகள் இல் சி. வை. தாமோதரம்
சாதார பதிப்பு
நூலகம் பதிப் F, S, Lily Ggy Es
பதிப்பாசிரிப்ர் ரோயே சே
குேன்மவிாடு “သိင်္ဂီal to * 蠱 l。 ,*、
*
s
,
வுெளியிட்டுக்
வெளியிடுகள்
இலக்கிய வளர்ச்சி கம் E. {{{ܢܕܬܐ வல் இலக்கியம்
ம்ம்
தியானந்தன் PhD
சிகள்
பதிப்பிள்ள * : ցանկեր եթյուն :
பிள்ள ஓர் ஆய்வு நோக்கு கதாஸ் மாம். ஏ. * ELIT 22:50,
* '''
t Ph.D.
WAT リア 。
Page 103
202 மெய்யுள்
தாலும் விநாயகதாஸைப் பொறுத்தவரையில் அன்றுதான் ஆரம்ப முதல் முடிவுவரை புத்திபூர்வமாகச் சுயவுணர்வுடன் நடைபெற்ற அத்தகைய ஓர் அனுபவம் கிட்டியிருந்தது. அது மிக அற்பமான விடயமாகவிருந்தாலுங்கூட அந்த வகையிற் பார்க்கும்போது அது அவனைப் பொறுத்தவரை யில் சந்திரனில் முதன்முதலாகக் கால் வைத்த ஆம்ஸ்ட் ரோங்கின் அனுபவத்தைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பட்டது.
சகல மக்களுக்கும் பழக்கமான சடவுலகத்துக்கும் அதற் குரிய புலனுணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட அனுபவத் தளங் களும் வாழ்க்கை நிலைகளும் உண்மைய்ாகவே இருக்கின் றனதானு?
இருக்கின்றன என்றுதான் காலங்காலமாய்ச் சமயங்கள் கூறி வருகின்றன. அனுபூதிமான்கள் என்பவர்கள் அந்தத் தளங்களுக்கும் வாழ்க்கை நிலைகளுக்குமுரிய விஞ்ஞானிகள் தான்.
விநாயகதாஸ் அவற்றைக் கருத்தளவில் அதுவரை ஏற்றுக்கொண்டிருக்கிருன். ஆனல், அனுபவரீதியில் அன்று போல் எதையும் அத்தனை அழுத்தத்தோடும் சுயவுணர் வோடும் கண்டதில்லை.
ஏறக்குறைய ஏழு வருடங்களுக்கு முன்பே ஆத்மீகத் தேட்டத்தை விரும்பி, அதற்குரிய குருவையும் சந்தித்த காலத்தில் அந்தப் பிரச்னைகளும் அவனது சிந்தனைக்குரிய விருந்துகளாக முன்வைக்கப்பட்டதுண்டு. ஆனல், அப்போது அவற்றை அவன் அந்தளவு பெரிதாக எடுத்துக்கொண்ட தில்லை. ஆணித்தரமாக நம்பியதுமில்லை. அதனுல் அவற்றில் அவன் அதிகம் கவனஞ் செலுத்தியதும் இல்லை.
அண்டை வீடுகள் 203
ஆத்மீக முக்தி என்பதுதான் அவனுக்குரிய முக்கிய விடய மாகப்பட்டது அப்போது. ஆணுல், அவனுக்குத்தியானப் பயிற்சி அளித்த அவனது குரு ஆத்மீக விளக்கங்களுடன் வேறு பல விபரங்களையும் இடைத்தளங்களின் எண்ணற்ற கோலங்களையும் பட்டும் படாமலும் பலவகைகளிற் காட்டவே முயன்ருர், w
ஆத்மநிலை என்ற இலட்சிய நிலையையும் தியானத்தின் மூலம் அந்த நிலையை அடையலாம் என்ற கொள்கையை யும், அதற்காகக் குரு என்ற ஒரு வழிகாட்டியையும் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருந்த விநாயகதாஸாக்கு அவையல்லாத அடுத்த விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது அப் போது, அவை வெறும் கற்பனைகளாகவே அவனுக்குப் பட் டன. உண்மையாகவே அவை இருந்தன என்று ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலைகளிற்கூட அவை அவனுக்கு அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தெரிந்ததில்லை. மாருக ஆபத்தான ஏமாற்றங்களுக்குரிய மருட்சித் தளங்களாகவே அவற்றை எடுத்துக்கொண்டான். அதனுல் அவனது அக் கறையை அந்த விடயங்கள் அதிகம் ஈர்த்ததில்லை.
குருவை அவன் சந்தித்த ஆரம்பகாலத்தில் அவன் வாசிப்பதற்காக அவர் கொடுத்த நூல்களில் சூக்கும உலகங் களைப் பற்றிய விளக்கங்களைக் கொண்ட நூல்களும் இருந்தன. குறிப்பாக " லொப்சாங்றம்பா" எழுதிய பல நூல்கள் முக் கியமானவை.
ஆத்மீக அனுபவத்தை உடனடியாகப் பெற்றுவிட வேண்டு மென்று துடித்த அன்றைய ஆரம்பகாலத்து அரை வேக் காட்டு அவதியில் அந்தவகை நூல்களையெல்லாம் அவன் மனம் விரும்பிப் படிக்க முயன்றதில்லை. அதேபோல் குருவும் " அன்னையும் பற்றிக் கதைத்த வேளைகளிலெல்லாம் அவற்றைப் பொய்ப்
சூக்கும ஆன்மீக உலக அனுபவங்களைப்
Page 104
204 மெய்யுள்
புழுகுகளைக் கேட்டிருப்பது போல் வேடிக்கையாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ' புதிய விஞ்ஞானக் கற்பனைகள் " அல்லது ' சமயக் கற்பனைகள் " என்ற தலைப்புக்களில் தனது நாட்குறிப்பிற் குறித்து வைக்கவும் அவன் முயன்றதுண்டு.
அவற்றில் பரிசோதனை செய்து பார்க்க அவன் முயன்ற தில்லை. அந்த முயற்சி பின்புதான் வந்தது.
மேற்கத்தைய மனுேவியல் கொள்கைகளிலும், சமூக பொருளாதாரச் சித்தாந்தங்களிலும் அவனுக்கிருந்த பற்றுக் கள் மெல்ல மெல்ல இற்று விழத் தொடங்கிய பின்புதான் அப்புதுவகைப் பரிசோதனைகளின் அவசியத்தையும் அவன் உணரவந்தான்.
ஆத்மீகத் தேட்டம் என்பது ஆத்மாவோடும் சடவுலக வாழ்க்கையோடும் மட்டும் தொடர்பு கொண்டதாக இருக் காமல், அவற்றுக்கு இடைப்பட்ட சகல மனநிலைகளுக்குள் ளும் ஊடுருவிப்பரவும் ஓர் பூரணத் தேட்டம் என்பதை அதற்குப் பின்புதான் அவளுல் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அத்துடன் இன்றைய மனித பரிணுமக்கட்டம் அத்தகைய விடயங்களைப் பற்றிய அறிவையும் அவசியமாக்குகிறது என்றும், அவனது குரு அதையும் அழுத்த முயன்ற அவ தாரமே தான் என்றும் மெல்ல மெல்லத்தான் அவனுக்குத் தெரிய வந்தது.
ஆனல், அந்தப் பக்குவம் வருவதற்குமுன் ஏறக்குறைய ஏழு வருடங்களாகி விட்டன. ஆத்மீக முதிர்ச்சிக்கு ஏறக் குறைய இடையருத பன்னிரண்டு வருட காலப் பயிற்சி அவசியமென்ருல், அதில் பாதிக்காலம் முடிந்த பின்புதான் அவனுக்கு அந்த இடைத்தள அனுபவங்களையும் அதே ஆத் மீகத் தேட்டத்துக்குரிய வகையில் பயன்படுத்தும் பக்குவம் கைவரத் தொடங்கியது. அதற்குள் அவனது குருவும் சடவு லகக் கட்புலனுக்குத்தெரியாத தளத்துக்குச் சென்று விட்டார்.
அண்டை வீடுகள் 205
அதுவரை கட்புலனுக்குத் தெரியாத தளங்களைப் பற்றி விநாயகதாஸடுக்கிருந்த அனுபவங்கள் "அசாதாரணக் கன வுகள்" "தியான நித்திரைக் காட்சிகள்" "சிறு சூக்குமப் போக்குவரத்துக்கள்" என்ற வகையிலேயே இருந்தன. அவையெல்லாம் அடுத்த தளங்களுக்குரிய அனுபவங்கள் என்ற புத்தி பூர்வமான உணர்வு அவற்றை அனுபவிக்கும் போதே அதிகம் இருந்ததில்லை. எப்போதாவது இடைக்கிடை வரும் மெல்லிய சுயவுணர்வுக் குறுக்கீடுகள் அதிக நேரம் நிலைத்திருக்காது, அமிழ்ந்துவிடும். விழித்துக் கொண்டபின்பு தான் அவற்றின் நினைவுகள் திரும்பவும் புத்திபூர்வமாக விரியும்.
அவைதான் அன்றுவரை அந்தத் தளங்களைப்பற்றி அவனுக்கிருந்த அனுபவங்கள்.
ஆனல் அதே சமயம் அவற்றைப் பற்றிய அறிவு விளக் கங்களை முன்பைவிட இப்போ அவன் அதிக ஆவலோடு கேட்டும் வாசித்தும் தெரிந்து வைத்திருந்தான். தெரிந்த வற்றைத் தனது வசதிக்காகவும் எதிர்கால ஆராய்ச்சிக்காக வும் வகைப்படுத்தியும் வைத்திருந்தான்.
முழுப் பிரபஞ்சத்திலும் காணப்படும் எண்ணற்ற உலகங் களை நான்கு அல்லது ஐந்து வகையாக வசதிக்காகப் பிரிக் கலாம் என்று விநாயகதாஸ் நம்பினுன்,
1. மனித கண்ணுக்குப் புலப்படக்கூடிய சடவுலகங்கள், இவை கோளங்களாக அமைந்தவை.
2. தட்டையான சூக்கும உலகங்கள், எண்ணற்ற தர வித்தியாசங்களைக் கொண்ட இவை மனித கட்புலனுக்குத் தெரியாதவை. இவை பலவகைப்பட்ட மன வளர்ச்சியைக் காட்டும் சூக்கும உயிரினங்கள் வாழும் தளங்களாக இருக் கின்றன. சூக்கும உயிர்களால் சூக்கும. உலகங்களையும்
Page 105
206 மெய்யுள்
சடவுலகங்களையும் பார்க்க முடியும். ஆன்மீக உலகங் களைப் பார்க்க முடியாது.
3. ஆன்மீக உலகங்கள், முக்தி அல்லது விடு தலைக்குரிய ஆனந்தத்தையும் ஞானத்தையும் அனுபவிக்கும் நித்தியவுலகங்கள் என்றும் அழியாதவை, ஆன்மீகவுலகங் களில் இருப்போருக்கு சடவுலகங்களையும் பார்க்கும் சக்தி உண்டு. w
4. சட - சூக்கும - ஆன்மீக உலகங்களற்ற வெறும் விண் வெளி.
5. எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி எல்லாவற்றுக் கும் அப்பால் பட்டதாகவும் எல்லாமே தானுகவும் இருக்கும் நாமரூபங்களைக் கடந்த பேரானந்தப் பரம் பொருளான எல் லையற்ற ஏகப்பேரறிவு. இப்பேரறிவு ஆன்மீக உலகங்களில் அங்குள்ளோரின் வழிபாட்டிற்குரிய சில நித்திய திருஉருவங் களாகவும் காட்சியளிக்கும். அதேபோல் சடவுலகமான நமது பூமியில் அவதாரங்களாகவும் உருவெடுக்கும். எல்லா வேளைகளிலும் எல்லா வடிவங்களிலும் * அது" தன்னை கட்டுப்படுத்தாத எல்லையற்ற ஏகப்பேரறிவாகவேயிருக்கும்.
6. இந்தப் பல்வேறு வகைப்பட்ட நிலைகளெல்லாம் பூமியில் வாழும் மனிதனுக்கு அடையக்கூடியவையாகவே இருக்கின்றன. அவனது சடஉடலுக்கு உள்ளும் புறமுமாக அடுத்த சூக்கும - ஆன்மீக உருவங்களும் பேரறிவு நிலையும் காணப்படுகின்றன. மனதை அவற்றின் திசையில் விரித்து வளர்த்து ஆன்மீக பேரறிவு நிலையை அனுபவிப்பதே அவ னது விடுதலையும் நித்தியஞான ஆனந்த நிலையாகவும் இருக்கும்.
7. பூமியில் நடைபெறும் மனித வாழ்க்கைக்குரிய அர சியல், பொருளாதாரம், சமூகம், கல்வி, கலை, இலக்கியம் போன்ற சகல துறைகளும் இந்தத் திசைகளில் முற்ருகத்
அண்டை வீடுகள் 207
திருத்தி வளர்க்கப்படவேண்டும். மனித பரிணுமம் இந்தத் திசைகளையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
அயல் உலக விடயங்களைப்பற்றி விநாயகதாஸ் சேகரித்து வைத்திருந்த கருத்துக்களில் சுருக்கமானவைகள் இவை. இவையேதான், படுக்கையில் கிடந்தவாறே அன்றைய அனு பவத்தை மீட்டிப் பார்க்க முயன்று கொண்டிருந்த விநாயக தாஸின் சிந்தனைப் படுக்கையாகவும் இருந்தன.
இவற்றின் பின்னணியில்தான் அன்றைய அவனது அனுபவத்தையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.
2
வெளி விருந்தையில் வாசலுக்கருகில் போடப்பட்டிருந்த நான்கு சாய்வு நாற்காலிகளில் வடக்கு மூலைப்பக்கமாக இருந்த ஒன்றில் விநாயகதாஸ் உட்கார்ந்திருந்தான்.
மங்கலான இருள். ஆணுல். அதே சமயம் பார்வைக் குப் பொருட்களும் உருவங்களும் தெரியாமல் இல்லை.
உட்கார்ந்திருந்த அந்த வேளையில்தான் திடீரென்று அந்த உணர்வு விநாயகதாஸாக்கு ஏற்பட்டது. தான் சூக்கும - ஆன்மீக உடலில் உட்கார்ந்திருந்தான் என்ற புத்திபூர்வமான சுயவுணர்வு.
அந்த உணர்வு வந்தவுடன் ஒருவித தடுமாற்றமும் அவ சரமும் அவனை ஆட்கொள்ளத் தொடங்கின. உடலுக்குச் சடுதியாகச் திரும்பிவிடலாம் என்ற பயத்தோடு புதியவுலகில் நிற்கிருேம் என்ற மெல்லிய திகிலும் கலந்திருந்தன.
விண்வெளிக்கப்பலில் இருந்து வெளிப்பட்டு விண்ணில் மிதப்பது, சந்திரக் கலத்தில்
Page 106
208. மெய்யுள்
இருந்து வெளிப்பட்டு சந்திரத்தரையில் நடப் பது போன்ற நிலைகளில் விண்வெளி வீரர்
களுக்கு இதே உணர்வு இருக்கலாம்.
சந்திரக் கலத்தை சடவுடலாகவும் அதில் இருந்து இறங்கிச் சந்திரத்தரையில் நடக்கும் வீரனைச் சூக்கும உடலாகவும் நினைத்துப் பார்த் தால், இரு உடல்களுக்கும் உள்ள தொடர் பையும் உணர்வையும் உணரலாம். ஆபத்து வரும் வேளைகளில் உடனே சந்திரகலத்துக் குத் திருப்பிவிடத் தயாராகவிருக்கும் விண் வெளி வீரனைப் போலே சூக்கும உடலும் சதா நேரமும் சடவுலகுக்குத் திரும்பிவிடும் தயார் நிலையில் இருக்கும். சட உடலுடன் அது ஒர் வெள்ளிமயமான கொடியால் இணைக்கப்பட்டிருக் கும். அது விரும்பியமாதிரி நீண்டு கொடுக்கும். அது அறும்போதே மரணம் ஏற்படுகிறது.
விநாயகதாஸாக்கு ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனுக்கு இருந்த அப்போதைய அவதி யில் அவனது உருவம் எப்படி இருந்தது, என்ன மாதிரி அவன் உடுத்திருந்தான் என்பவற்றை அவனுல் அவதானிக்க முடியவில்லை.
அடுத்தமுறை அவற்றை நிச்சயமாக அவ தானிக்க வேண்டும் என்று அதை மீட்டிப் பார்க்கும்போது நிச்சயப்படுத்திக் கொண்டான் விநாயகதாஸ். ஆணுல், அதே தீர்மானத்தை ஏற்கனவே பல தடவைகள் எடுத்திருந்தான் என்பதும் அவனுக்கு நினைவில் இருந்தது. அந்தளவு சுயவுணர்வு பெரும்பாலும் சடவுலக வாழ்க்கையில்கூட இருப்பதில்லை. ஆடை
அண்டை வீடுகள் 209
மாற்றும்போதும், கண்ணுடிக்கு முன்னுல்நிற்கும் போதும் மனிதன் தன் தோற்றத்தையும் ஆடை யையும் நினைக்கிற அளவுக்கு மற்ற நேரங்களில் நினைப்பதில்லை. அவை பற்றிய உணர்வு அதி கம் இருப்பதும் இல்லை. அதேபோல் சூக்கும நிலையிலும் வழமையான ‘நான்" என்ற உணர்வு இருக்குமளவுக்கு அதன் அம்சங்களை அறிந்த சுயவுணர்வு இருப்பதில்லை. அந்தச் சுயவுணர்வின் வளர்ச்சியே பக்குவ வளர்ச்சி யாக இருக்கும்.
சிறிது நேர தடுமாற்றத்துக்குப் பின் வாசலால் இறங்கி வெளியே செல்லமுயன்ருன் விநாயகதாஸ். அந்த வேளையில் அவனுக்குப் பழக்கமான காளிதாசனின் குரலை ஒத்த ஓர் குரல் எங்கிருந்து வந்ததென்று தெரியாமல் எங்கும் மெல் லப் பரவி வந்து கேட்டது.
" வெளிச்சம் தெரிகிறதா? வெளிச்சம் தெரிகிறதா?" ஆணுல், யாரையும் காணவில்லை. வெளிச்சம் எதுவும் வந்ததாகவும் தெரியவில்லை. அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நின்றபோது திடிரென்று ஒரு யோசனை ஏற்பட்டது விநாயகதாஸாக்கு.
" காளிதாசனின் அறை க்குப் போய் பார்த்தால் என்ன ?”*
அடுத்த கணம் அந்த அறையை நோக்கி அவன் நகரத் தொடங்கினன். மிதப்பதற்கும் நடப்பதற்கும் இடைப்பட்ட இலகு இயக்கம்.
காளிதாசன் நித்திரையாகி இருக்கலாம், அல்லது விழிப்பாக இருக்கலாம். அதை விநாயகதாஸால் அவதானிக்க முடிகிறதா
Page 107
210 மெய்யுள்
என்று சோதிக்கலாம். நித்திரை ஆகி அவனும் சூக்கும-ஆன்மீக உடலில் உலாவிக்கொண் டிருந்தால் சில விடயங்களைக் கதைத்துவிட்டு விழித்தெழுந்து அவை ஞாபகம் இருக்கிறதா என்று அவனைக் கேட்டுப் பார்க்கலாம். ஏற்கனவே அத்தகைய சோதனைகளை விநாயக தாஸ் செய்து பார்த்திருக்கிருன். ஆனூல், பூரண ஒருமைப்பாடு இன்னும் கண்டதில்லை.
காளிதாசனின் அறையை நோக்கி நகர்ந்த வேளையில் வேறு ஓர் பக்கம் அவன் இழுபட்டதை விநாயகதாஸால் உணர முடிந்தது. சுயமான விருப்பத்துக்கு எதிராகவரும் ஈர்ப்பு, குருவாகிய " அது " வின் அழைப்பாக இருக்கலாம் என்று ஏற்கனவே விநாயகதாஸ் தெரிந்திருந்தபடியால் அந்த ஈர்ப்புக்கு அவன் தன்னை விட்டுக் கொடுத்தான். விட்டுக் கொடுத்ததுடன் அது 'வையே இலக்காகக் கொண்டு மனதை ஒருமுகப்படுத்தி தியானிக்கவும் தொடங்கினுன்.
அடுத்த கணம் மிக வேகமாக எங்கோ ஒரு திசையில் பறந்து செல்வதை அவனுல் உணர முடிந்தது.
சூக்கும - ஆன்மீக உலகங்களில் உடல் வலு வால் இயக்கம் ஏற்படாமல் மனுேவலுவிலேயே ஏற்படுகின்றது. விரும்பிய இடத்திற்கு மனுே வலுமூலம் மிக வேகமாகச் செல்லலாம். போகும் வழியில் பழைய குரலைவிட தொனி கூடிய ஒரு புதுக்குரலில் பாடல் ஒன்று கேட்டது. அந்தப் பாடல் மூலம் பலவித அறிவுரைகள் அவனுக்கு வழங்கப்பட்டன.
பாடல்களின் முக்கியத்துவம் அழுத்தப்படு கிறது.
அண்டை வீடுகள் 211
அந்த அறிவுரைகளைக் கேட்டு முடிந்தபோது " அது " வைத் தரிசித்த திருப்தியும் விநாயகதாஸிடம் குடிகொள்ளத் தொடங்கியது. திருப்தியோடு அவன் திரும்பிவிட விரும் பினுன். ஆணுல் அதேசமயம் இன்னும் சடவுடலுக்குரிய விழிப்பு நிலைக்கு வருவதற்கு அவகாசம் இருந்தது என்ற உணர்வும் ஏற்பட்டதால் தொடர்ந்து 'அது'வை இலக்காகக் கொண்டு மனதை ஒருமுகப்படுத்தித் துரிதமாக நடந்தான்.
இறுதியாக " அது " திருவுருவோடு இருந்த ஓர் இடத்தை அண்மித்துவிட்ட உணர்வு ஆட்கொள்ளத் தொடங் கியது. அப்படியே அவ்வேளையில் கட்டிடங்கள், அறைகள் எல்லாம் காட்சியாய் இருக்க ஓர் இடத்தில் " அது " முன்பு அவன் சடவுலகில் சந்தித்த கோலத்தில் தரிசனம் தந்தது.
விநாயகதாஸ் ஓடிப்போய் * அது "வின் பாதங்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு எழுந்தான். ' அது ' வின் ஆணையும் கிடைத்தது. S.
அதை ஏற்றுக்கொண்ட விநாயகதாஸ் திருப்தியோடு அங் கிருந்து அகலத் தொடங்கினன். அடுத்த கணம் சடவுலக வீட்டில் உள்ள தனது படுக்கையில் கிடந்தவாறே திடீரென்று விழித்துக்கொண்டதை அவனுல் உணர முடிந்தது. 1 ܝ ܀
வேகமாகத் திரும்பி வந்த உடலுக்குள் நுழையும் அதிர்ச்சி சடுதியான விழிப்பை ஏற்படுத்தும்.
அறைச்சுவரின் கூரைப்பக்கத்து நீக்கல் வழியாக அடுத்த அறையில் இருந்து வெளிச்சம் வந்ததை அவதானித்தபோது அங்கு காளிதாசன் இன்னும் தூங்காமல் இருந்தான் என்பதை அவனுல் யூகிக்க முடிந்தது.
Page 108
212 மெய்யுள்
3
படுக்கையை விட்டெழுந்து தண்ணிர் அருந்துவதற்காகக் குசினுக்குச் சென்றிருந்தான் விநாயகதாஸ். காளிதாசனின் அறையின் வாசல் திரைக்குள்ளால் மெல்லிதாக ஒளிக்கீற்று கள் வந்துகொண்டிருந்தன.
திரையை நீக்கி உள்ளே நோக்கியபோது காளிதாசன் வாசித்துக்கொண்டிருந்தான். மணி இரவு பதினென்றரை.
பேசாமல் தலையசைத்துவிட்டுச் சென்று தண்ணிர் குடித்து விட்டு, பின் படுக்கைக்குத் திரும்பியபோது பல பிரச்னை களுக்கு இன்னும் தெளிவு காண வேண்டியிருந்தது என்பதை விநாயகதாஸால் உணர முடிந்தது. w
" வெளிச்சம் தெரிகிறதா?" என்ற குரல் காளிதாசனின் அறைக்குள் இருந்து வந்த வெளிச்சத்தைக் குறித்ததா? அதனுல்தான அவனது குரலை ஒத்த குரலாகக் கேட்டது? அது யாருடைய குரல் ? 'அது' வை நோக்கி அவன் விரைந்தபோது வந்த பாடலின் குரல் யாருடையது? எல் லாமே ' அது " வின் வெளிக்காட்டல்கள் தானு? 'அது' வை அவன் தரிசித்த இடம் எது? " அது ' எந்த ஆன்மீக உலகம் ?
எந்தளவுக்கு அவற்றுக்குள் அவனது கற்பனைகள் புகுந் திருந்தன? எந்தளவுக்கு அவை அந்த அனுபவத்தின் முழு மைக்கு எதிரான தடைகளாக இருந்தன?
எதிர்கால ஆராய்ச்சிகளுக்குரிய திசைகளைக் குறித்துக் கொள்ளும் ஒரு விஞ்ஞானியைப்போல் அவற்றை மனதில் பதித்தவாறு, அன்றைய அனுபவத்தினுல எழுந்த சந்தோ சத்தின் அலைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு நிம்மதியாக நித்திரை கொள்ள முயன்ருன் விநாயகதாஸ்.
Page 109
வாழ்ந்தத
முழுவீச்சே நம்மிடைே
நூற்குண்
surf, LGT
மற்ருெவர் (3) ir Garso
எழுப்ப மு போனதை
அந்த வ தளேயசிங்
விடவும்
שTנוני "חוויווחו הדקו
பாதியின் திற்கு கெ திரத்திற்:
கஃள அள் என்று ெ
நூலாசிரியர் பற்றி.
"இருபதி ம் நூற்ருண்டில் ற்கான சாய Issa, u இவரைப்போல்
ாடு வெளிப்படுத்திய ஆளுமைகள் மே வேறு உள்ளனவா? இந்த என் முதல் பாதியில் இரண்டு கிடைக்கின்றன. ஒருவர் பாரதி புதுமைபித்தன். பாரதி தாழ்ந்து க்கு துக்கித்து மேலான ஒன்றை பன்ருர், புதுமைப்பித்தன் தாழ்ந்து வெட்ட வெளிச்சமாக்கினும், ரிசையில் முன்ருவதாக வருபவர்
III. iii .
பாரதியின் கருத்துலகத்தை
தஃாயசிங்கத்தின் கருத்துலகம் முழு து. மற்ருெரு விதத்தில் சொன்னுல் சிந்தனேயை, இவர் தம் காலத் ாண்டு வந்து, இடைக்கால சரித் தம் எதிர்வினை தந்து, இடைவெளி டைந்து முழுமைப்படுத்த முயன்ருர்,
-சுந்தர ராமசாமி
T
து ஒரு சமுதாயம் வெளியிடு ()
Page 110
210 நற்சிந்தனை
நல்லூராசான் கலிவிருத்தம்
உலகமு முயிரும் உம்பர் பிரானும் கலகஞ் செய்யும் நடனங் கண்டால் உலகில் பிறந்திறந் துழலா ரென்று நலஞ்சேர் நல்லூ ராசான் நவின்ருன்.
மலர்மிசை யோனும் மாலுங் காணு அலகிலா வாட லுடைய அப்பன் மலர்தலை யுலகத்து மானிடன் போல நலமிகு நல்லூரில் நாடியாட் கொண்டான். 2
குலநலம் பாராக் கொள்கை யுடையான் சலன மில்லாத் தத்துவா தீதன் பலரும் பைத்திய காரனென் றேச நலமிகு நல்லையில் நாடக மளித்தான். 3
கற்றவர் விழுங்குங் கருணை யாளன் மற்றவ ரறியா மாணிக்க மாமலை சிற்றறி வுடையார் தேருச் செல்வன் நற்றவர் வணங்கும் நல்லூ ரானே. 4
விருப்பு வெறுப்பை வேரறப் பறித்தோன் திருவடி மறவாச் சீருடை யாளன் ஒருபொல் லாப்பு மில்லையென் றுரைத்தோன் குருவடி வாகக் கோலங்கொண் டானே. 5
உண்மை முழுதுமென் ருேயா துரைப்பவன் நன்மை தீமையைக் கடந்த நாதன் என்னையுந் தன்னையு மொன்ருய்க் காண்பவன் . சென்னியில் சேவடி சூட்டினன் அன்பால். 6.
ஆரறி வாரென அடிக்கடி ஒதும் பேரறி வாளன் பேர்செல் லப்பன் பாரறி யாத பயித்திய காரன் தேரடிப் படியில் தினமு மிருப்பான். 7
நற்சிந்தனை 2
கார்நிற வண்ணன் கைதலை யணையாய்ப் பார்மிசை யுறங்கும் பண்பை யுடையான் நீர்வளம் நிலவளங் குறையா நல்லூர் சீர்பெற வாழ்ந்த தேசிக மூர்த்தி. 8 நாமறி யோமெனும் நல்ல மந்திரம் சேமமுண் டாகச் செப்புந் திறத்தோன் காமங் குரோத மோகங் கழிந்தவன் நாமமோ செல்லப்பன் நல்லூ ரானே. 9 எப்பவோ முடிந்ததென் றெடுத்தெடுத் துரைக்கும் ஒப்பிலா மாமணி உன்மத்த னெவரும் இப்படி யென்று இயம்பவொண் ணுதவன் எப்போதும் முருகன்சந் நிதியில் வாழ்பவன். 10 பாவலர் நாவலர் பணியும்நல் லூரில் சாவதும் பிறப்பதுந் தவிர்த்தென யாண்ட காவலன் நல்லூர்க் கந்தன் பதியில் சேவகஞ் செய்யுஞ் செல்லப்ப மூர்த்திகாண். 1
வேடிக்கை செய்கிருனே
பல்லவி வேடிக்கை செய்கிருனே -பரமபிதா வேடிக்கை செய்கிருனே.
அநுபல்லவி வேடிக்கை செய்கிருன் கூட இருக்கிருன். வேருய் இருப்பதுபோற் பாசாங்கு பண்ணுகிருன். (வேடி)
சரணம் و --س-.... பாடுகிறன் படிக்கிருன் பக்தரினம் சேர்கிருன் நாடுகிருன் நன்மைதீமை நாமல்ல வென்கிருன்
ஓடும் இருநிதியும் ஒன்ருகக் காண்கிருன். ஒன்றே விரண்டோவென ஓதி யறியவொண்ணுன். (வேடி)
Page 111
212
நற்சிந்தனை
சிவசிவ என்னச் சிவகதியாமே கலிவிருத்தம்
தந்தி முகத்தனைச் சங்கரன் மைந்தனைத் தொந்தி வயிறனைத் தோடணி செவியனை இந்திர னுக்கரு ஸ்ரீந்த இறைவனை மந்திர ரூபனை நான் மற வேனே.
ஒருவ ஞலே உலக முதித்தது ஒருவ ஞலே உலகம் நிலைத்தது ஒருவ ஞலே உலகம் ஒடுங்கிடும் ஒருவ னேயென் உயிர்த்துணை யாமே. 2
ஒருவ னேயொரு மூவரு மானன் ஒருவ னேயெல்லா வுயிர்களு மானுன் ஒருவ னேயெல்லா வுலகமு மானுன் ஒருவ னேயென்னை உய்யவைத் தானே. 3
அண்ட சராசர மவன்வடி வாகும் அண்ட சராசர மவனே யாகும் அண்ட சராசரத் ததிசயந் தன்னை அண்டரு மறியா ததிசயித் தாரே. 4
சிவபக்தி யாலே சிந்தை குவிந்தது சிவபக்தி யாலே சிந்தை தெளிந்தது சிவபக்தி யாலே சிந்தை யிறந்தது சிவபக்தி யாலே சீவன் முத்தியே. 5
சிவனையல் லாமல் தேவரு மில்லை சிவனையல் லாமல் சீவரு மில்லை சிவனையல் லாமல் தேகமு மில்லை சிவனையென் சித்தத்துட் கண்டுகொண் sேனே 6
நகரத் துள்ளே நான்முக ஞனுன் மகரத் துள்ளே மாலவ ஞணுன் சிகரத் துள்ளே சிவனப் நின்றன் வகரத் துள்ளே யருள்வடி வானனே5 7
நற்சிந்தனை
சிவசிவ என்று சிந்திப்பர் தேவர் சிவசிவ என்று சிந்திப்பர் சீவர் சிவசிவ என்று சிந்திப்பர் முனிவர் சிவசிவ என்னச் சிவகதி யாமே.
பக்தி செய்து பந்தத்தை நீக்கினேன் பக்தி செய்து பரமனைக் கண்டேன் பக்தி செய்யும் பாக்கியம் பெற்றேன் பக்திக் கடலில் படிந்திருந் தேனே,
ஒன்றை நினைந்தென் னுள்ள மொடுங்கிற்று ஒன்றை நினைந்தென் னுள்ளங் களித்தது ஒன்றை நினைந்தென் சிந்தை யுயர்ந்தது ஒன்றை நினைந்து ஒன்ரு னேனே.
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
அஞ்செழுத் அஞ்செழுத் அஞ்செழுத்
தாலே ஆக்கை பிறந்தது தாலே ஆன்மா சிறந்தது தாலே ஆனந்த மாயிற்று துள்ளே அடங்கிநின் றேனே.
தாலே சஞ்சல மழிந்தது தாலே பஞ்ச மொழிந்தது தாலே ஆனந்த மாயிற்று துள்ளே அடங்கிநின் றேனே.
தாலே அரனடி காணலாம் தாலே அகிலத்தை யாளலாம் தாலே அகவினை தீர்க்கலாம்
அஞ்செ முத்துமென் நெஞ்சம் புகுந்ததே.
ஆருறுக் கப்பால் ஆனந்தக் கூத்து ஆருறுக் கப்பால் ஆனந்த வீடு ஆருறுக் கப்பால் ஆர்தான் ஈடு ஆறறுக் கப்பால் சென்ருேரைக் கூடு.
2 13
10
Page 112
214 நற்சிந்தனை தன்னை யறிந்தேன் தானவ ஞனேன்
கலிவிருத்தம் அகண்ட வெளியிலே அப்பனு மம்மையும் அகண்ட வெளியிலே யாருயி ரெல்லாம் அகண்ட வெளியிலே யஞ்சுபூ தங்களும் அகண்ட வெளியிலே யானிருந் தேனே. I அண்டமும் பிண்டமு மகத்திற் கண்டேன் அண்டமும் பிண்டமு மகமாய்க் கண்டேன் அண்டமும் பிண்டமு மகத்திற் கண்டிலேன் அண்டமும் பிண்டமு மாயிருந் தேனே. 2 அன்னை பிதாக்குரு வாகிய வமலன் என்னை வளர்த்தா னென்னே டிருந்தான் முன்னை வினையெலாம் முடித்த முதல்வன் தன்னை யறிந்தேன் தானவ ஞனேன். 3
அருந்தவர் நெஞ்சி லிருக்கு மமிர்தம் இருந்த படியே யிருக்கு மின்பம் பொருந்திய வல்வினை போக்கும் மருந்து அருந்துயர் நீக்கி யறிந்தேன் யானே. 4 அருவமு முருவமு மாகிய வமலன் குருவாய் வந்தே குறித்தெனை யாண்டான் இருபதும் நாலு மில்லா விடத்தில் கருவாகி நின் முன் காரணன் ருனே. 5 அச்சந் தீர்த்தெனை யாண்ட சோதி பொய்த்தவர் நெஞ்சிற் போகா நீதி மெய்ச்சம யத்தில் விளங்கு மாதி வைச்சனன் திருவடி வாழ்ந்தேன் யானே. 6 அறுபதும் நாலு மறியா வாதி உறுதுயர் தீர்க்கு முயர்ந்த சோதி குறுமுனிக் கருள்முனங் கொடுத்த வாதி மறுவிலா வென்மனம் வாழ்ந்திருந் தானே. 7 அஞ்சின் வழியை யடைத்தோ ரகத்தில் பஞ்சின் மெல் லடியாள் பாக னரிருக்கும் வெஞ்சினம் வேட்ட வெறிய ரகத்தில் அஞ்செழுத் துட்பொரு ளடையா தாமே. 8
நற்சிந்தனை 215
திங்கள் வணக்கம் ۔۔۔۔
கலிவிருத்தம் செய்ய மேனிய னேசிவ னேயுனைக் கையு மெய்யுங் கருத்திற் கிசையவே வைய கந்தனில் வாழ்த்தி வணங்கிடத் தையில் வந்தருள் தான் செய்ய வேண்டுமே.
மாசில் மாதவர் மனத்திற் கினிமையே பேசில் இன்பம் விளைக்கும் பெருமையே வாசி யாம்பரி ஏறும் வலவனே மாசி மாதம் வருக வருகவே. 2
பங்கில் மங்கையை வைத்த பராபர! இங்கு மங்கும் இருக்கு மிறைவனே துங்க மால்விடை யேறுநற் சோதியே பங்கு னிதனிற் பாங்கின் வருகவே. 3
செத்தா ரென்பு திகழ்திரு மார்பனே அத்தா வென்றடி போற்றுவார்க் கன்பனே கத்தா வுன்னைநான் கண்டு களித்திடச் சித்தி ரைதனிற் சீக்கிரம் வருகவே, 4
தேகா திதனை மெய்யெனச் சிந்தைசெய் மோகா திபதி யாகிய மூர்க்கனை ஏகா திபதி நீயெனை யாளுவான் வைகா சியெனும் மாதம் வருகவே, 5
ஆனி ரைதனை மேய்க்கு மரியொடு நாணி லந்தரு நாதனுங் காண்கிலர் வானு லாவும் மதிவைத்த அப்பனே ஆனி மாதம் வருக வருகவே. 6
பாடி யாடிப் பணியு மடியவர் கூடிக் கூடிக் கும்பிடு வாரவர் வாடிப் பின்னர் மகிழச்செய் வள்ளலே ஆடி மாதம் வருகவன் பாகவே.
7
Page 113
21 6 நற்சிந்தனை
பாவ ணிசெய்து பாடு மடியவர் நாவ ணிசெய்து நிற்கும் நலஞ்சுடர் பூவ ணிசெய்து போற்றுவார் சிந்தையில் ஆவ ணியருள் மாதம் வருகவே. . 8
அரற்று மன்பர்க் கருள்செ யிறையவன் அரக்க லுக்கருள் செய்தவன் என்னையும் புரக்கு மாறடி யேன்புகழ் போற்றிடப் புரட்டா சிதனில் புண்ணியன் நண்ணுமே. 9
துப்பி சைந்த இதழ்மடத் தோகையான் அப்பி சைந்த அணிமுடி யாண்டவன் செப்பி சைந்து திறலுடன் என்முனம் ஐப்ப சியெனு மாதம் அணுகவே. 10
கார்த்தி கேயனைக் கண்ணுத லிற்றரு கீர்த்தி வாய்ந்த கிருபா சமுத்திரம் தோத்திரஞ் செய்வார் துன்பந் துடைத்திடக் கார்த்தி கையெனும் மாதத்திற் காணும்ே.
மார்க்க நன்னெறி சென்றிடு மாந்தர்கள் மூர்க்க மான குணத்தை முனிந்திடும் போர்க்கு றிப்புடைப் புங்கவன் புண்ணிய மார்க பூழியினில் வருக வருகவே. 2
ஐயம்வை யாதேநெஞ்சே யரனடி தினம்பணி தெய்வமா லோனல்லால் வேருெரு தெய்வமில்லை செய்வன திருந்தச்செய் சேரிடம் அறிந்துசேர் உய்யவ பூழியிதுவே உனக்குண்மை யாய்நட.
நற்சிந்தனை 21 7
குருதரிசனம் வெண்பா
கருத்தில் நினைந்துருகிக் கைகூப்புந் தொண்டர் வருத்தமெலாந் தீர்க்கும் வடிவேல்-திருத்தலத்தில் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் v ஆரடாநீ யென்ருன் அவன். தன்னை யறியத் தவமுஞற்றும் மாதவரை அன்னையைப்போ லாதரிக்கு மாறுமுகன்- சந்நிதியில் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தேரடாவுள் ளென்ருன் சிரித்து. 2 வண்டுபண் செய்யும் வளம்பெருகு நல்லூரில் மிண்டு மனத்தவரை மேனிலைக்குக்-கொண்டுவரும் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தீரடாபற் றென்ருன் சிரித்து. − 3 கன்னலொடு செந்நெல் கதலிபலா மாவர்க்கந் துன்னு நல்லூர்ச் சாமி திருமுன்றில் மன்னுசீர்த் தேரடியிற் றேசிகனைக் கண்டு தெரிசித்தேன் சீரடியார் சூழ்ந்துநின்றர் தேர். 4 அயலறியா வந்தணர்க ளான்ற நல் லூர்ப்பதியிற் கயற்கணுர் காமவலை சேரா-வியல்புடைய செல்லப்ப னென்னுஞ் சிவகுருவை நான்கண்டேன் நல்லதப்பா வென்ருன் நயந்து. 5 ஒன்ருே விரண்டோ வொருமூன்றே வென்றெவரும் அன்றுதொட் டின்றுவரை யாராய-ஒன்றுக்கும் எட்டாமல் நின்ரு னெழிற்குருவாய் நல்லூரிற் பட்டமளித் தானெனக்குப் பார். 6 நீராய் நெருப்பாய் நெடுநிலனுய்க் காற்ருகி ஆராலுங் காணு வமலனங்கே - நேராகச் சற்குருவாய் வந்தேயென் சந்தேகந் தீர்த்தாண்டான் நிர்க்குணம் பூண்டேன் நினை. 7 புனலொழுகப் புள்ளிரியும் பொன்னிழ நாட்டில் அனலேந்து வான்றன் புதல்வன்-மனமார வாழ்நல்லை யம்பதியில் வாழ்வளிக்கச் சற்குருவாய்த் தாள்காட்டி யாண்டான் தனி. 8
Page 114
218 நற்சிந்தனை
மறப்பேனே குருநாதன் தன்னை
நேரிசை வெண்பா
இல்லையென் னமல் இரப்போர்க்கொன் றிவரேல் தொல்வினை யெல்லாந் தொலைந்துபோம்-நல்லைக் குருநாதன் கூறினன் பொல்லாப்பிங் கில்லை உருகாதோ நெஞ்ச முவந்து. I
உண்மை முழுதுமென் ருேதுங் குருநாதன் தன்னை மறப்பேனே தாரணியில் - பின்னையினித் துஞ்சல் பிறப்புண்டோ சோர்வச்சந் தாமுண்டோ கஞ்சமலர்த் தாளென்றுங் காப்பு. 2
காக்குந் திருவடிகள் எந்நாளு மென்மனத்தில் பூக்கும் பொறிவழியே போகாமல் - நோக்குமென்றும் தேக்குஞ் சிவானந்தத் தேனமுதை யுண்டுமனம் நீக்கமின்றி நிற்கும் நினை. 3
நினைக்கு மடியாரை நீயேநா னென்றே அணைக்குந் திருக்கரந்தா னென்னே - கனக்குங் கடல்சூழ் கவினிலங்கைக் கார்சூழ்நல் லூரான் தொடுக்கும்வல் வேலைத் துதி. 4
துதிக்க மதிதந்த தூயோன்றன் பாதம் துதிக்க வினைகள் துகளாம்-மதிக்கருளும் ஐயன் திருமதலை ஆறுமுகன் வீதியிலே தெய்வமென நின்ருன் தெளி. 5
ஒன்பது வாசலா லாயவோர் உறுப்பில் அன்பு வைத்துநீ அலையாதே வீணில் அன்பர் பணிசெய் வதுஅற மென்றறி இன்பவீ டளிக்கும் எல்லாக் கதியும்வரும் என்பதை மறவாதே இதுவுனக் குறவாமே.
நற்சிந்தனை 219
அன்னையொத்த செல்வன் அறி நேரிசை வெண்பா
ஒருபொல்லாப் பில்லையென் ருேதுந் திருவாக்கால் உருகி யுருகி யுணர்வற் -றிருநிலத்தில் இன்பதுன்ப மென்னுமவை யென்றுமொப்பாந்
தன்மைகண்டேன் என்னப்பன் செல்லப்ப னென்று.
உண்மை முழுதுமென வோதுந் திருமொழியின் தன்மையினைக் கண்டேன் தலைப்பட்டேன்-பின்னைப் பிறப்பு மிறப்புமிலைப் பேதை மட நெஞ்சே மறப்பின்றி யேத்தி மதி. 2
முடிந்த முடிபென்று முன்னின்று சொல்லப் படிந்ததென் னுள்ளம் பதியில் -முடிந்ததே மாயவிருள் மந்திரமுந் தந்திரமும் நான்மறந்தேன் தாயனைய செல்லப்பன் தான். 3 நாமறியோ மென்று நகைத்தென்னை நோக்கியே காமங் கடந்தோன் கழறினன்-சேமமுடன் சிந்தித்துச் சிந்தித்துச் சேவடியே தஞ்சமென்று வந்தித்து நின்றேன் மகிழ்ந்து. 4 ஆரறிவா ரென்றே அடிக்கடி யேநகைக்கும் பேரறி வாளனையும் பித்தனென்றே-பாரிற் பலரே இகழுவார் சில்லோர் புகழ்வர் சலனமற்று வாழுவார் தாம். 5
கரைகாணு வின்பக் கடலாடு வானை உரையாட யாருக்கிங் கொல்லுந் -தரைமீது நால்வேதங் காண்கிலவே நற்றவத்தோர் தாமறியார் மால்பிரமன் தேரார் மதி. 6
ஆசைக் கடலி லலைந்து திரிவார்கள் ஆசை கடந்தவனை யாரறிவார்-மாசற்ற மேகத்தைச் சந்திரனை மின்மிணிதான் மூடுமோ மோகத்தை யின்றே முனி, 7
Page 115
220 நற்சிந்தனை
உயர்ந்ததிருக் கோபுரமு மோங்கெயிலுங் கண்டு வியந்து விழுந்தெழுந்து விம்மி-அயர்ந்துநிற்கும் ஆடவரும் மங்கையரும் மற்றுள்ள அன்பர்களும் பாடவரு வார்தினமும் பார்.
எட்டு மிரண்டும் அறியாத வென்னையும் நட்டஞ்செய் செல்லப்பன் நல்லூரில்-திட்டமுடன் நீயேநா னென்று நினைந்துருக வைத்தனனே
தாயே யனையா னவன். 9
ஆதியந்த மில்லையென்று சொல்லாமற்
சொன்னன்காண் நீதி நெறிவிளங்கும் நல்லூரில்-வீதியிலே என்னைத்தா னுக்கி எடுத்தாண்டான் யாரென்னின் அன்னையொத்த செல்வன் அறி. 10
தம்பி கேளடா
தா வித்தாவிச் செல்லும் மனத்தைத் தம்பிகேளடா கூவிக்கூவி யழைத்துக் கூடக் குடியிருத்தடா.
சேவித்துஞ் சென்றிரந்துந் தம்பி கேளடா சிவமேநா மென்றுதினஞ் சிந்தை செய்யடா 2 பாவித்தும் பாட்டிசைத்துந் தம்பி கேளடா மூவிதமாம் ஆசைதன்னை முனிந்து வெல்லடா. 3
வாவியாறு சேரிலங்கை நல்ல நாடடா
பாவியென்ற நாமந்தன்னைப் பகைத்து நில்லடா. 4
தூவிமயி லேறும்வேலைத் துதித்துக் கொள்ளடா நாவினில் நமச்சிவாயம் நவின்று நில்லடா. 5
நற்சிந்தனை 22
ஆசானக் கண்டேன் நேரிசை வெண்பா
ஆசானக் கண்டேன் அருந்தவர்வாழ் நல்லூரிற் பேசா தனவெல்லாம் பேசினன் -கூசாமல் நின்றேன்நீ யாரடா வென்றே யதட்டினன் அன்றேயான் பெற்றே னருள்.
அருளொளிக்குள் ளேபுகுந்து சென்றேன்யான் ஆங்கே இருள்சூழ்ந் திருப்பதைக் கண்டேன்-பொருளறியேன் ஒர்பொல்லாப் பில்லையென வோதினன்
கேட்டுநின்றேன் மர்மந்தே ராது மலைத்து. 2
மலைத்துநின்ற வென்னை மனமகிழ நோக்கி அலைத்துநின்ற மாயை யகலத் -தலைத்தலத்திற் கைகாட்டிச் சொல்லலுற்ருன் கந்தன் திருமுன்றில் மெய்ம்மறந்து நின்றேன் வியந்து. 3
வியந்துநின்ற வென்றனக்கு வேதாந்த வுண்மை பயந்தீரும் வண்ணமவன் பண்பாய்-நயந்துகொள் அப்படியே யுள்ளதுகாண் ஆரறிவார் என்ருனல் ஒப்பில்லா மாதவத்தோன் உற்று. 4
உற்ருரும் போனுர் உடன்பிறந்தார் தாம்போனர் பெற்ருரும் போனர்கள் பேருலகில்-மற்ருரும் தன்னுெப்பார் இல்லாத் தலைவன் திருவருளால் என்னெப்பா ரின்றியிருந் தேன்.
ஒடும்பு விரியம்பழ மும்போலும் உலகத்தை நாடுதல் சீலமன்று ஞானிகள் முன்சொன்னர் கோடுதல் இல்லாமல் குரைகழல் அடிபணி வீடுனக் குண்டாகும் விருப்பமா யிதைப்படி,
Page 116
223 நற்சிந்தனை
நல்லமழை பெய்யாதோ நேரிசை வெண்பா நல்லமழை பெய்யாதோ நாடு சிறவாதோ எல்லவரும் இன்புற்று வாழர்ரோ - நல்லூரான் ஆசானுய் வந்தே யடியேனை யாண்டுகொண்டான் பேசானு பூதியென் பேறு. I நற்சிந் தனையென்னும் நல்லமுதம் உண்டக்கால் கற்கும் நெறியுண்டோ காசினியில் - விற்றுரண் ஒன்றுமே யில்லாத உன்மத்தன் யோகனுக்(கு) என்றுமின்ப மென்றே யிசை, 2 பாட வறியான் பலகலையுந் தானறியான் தேட வறியான் சிவயோகன்-நாடறியப் பிச்சைச்சோ றுண்டு பிறவிப் பிணிதீர்ந்தான் அச்சமிவற் கில்லை யறி. 3 இச்சையில் லோரே யிடும்பைக் கிடும்பையை நிச்சய மாய்ப்படுப்பர் நீயறியாய்-அச்சமற்று வாழ்சிவ யோகனமுன் வந்துவவிந் தாண்டுகொண்டான் கேள்கிளைகள் நீங்கக் கிளர்ந்து. 4 எழுவாய் பயனிலைகள் இல்லாமற் பாடித் தொழுவான் சிவயோகன் சொல்லின்-அழுவான் விழுவான் விதிர்விதிர்ப்பான் ஆரறிவார் என்று தழுவுவான் தன்னையுன்னித் தான். 5
ஞானதேசிகன் பல்லவி ஞான தேசிகனே சரணம் நற்றவனே நல்லூர் வித்தகனே வருக.
அநுபல்லவி ஈனப் பிறவி நீக்கு மெழிலது கண்டேன் என்னை யென்னலறிந் தானந்தங் கொண்டேன் (ஞான)
w சரணம்
காமக் குரோதமோகக் கடலைக் கடந்தேன் கங்குல் பகலற்ற காட்சியைக் கண்டேன் கருதுஞ் சுவாமியோக நாதனுன் தொண்டன் தருமொரு வரமுண்டு அதுவெங்கும் மங்களம் தங்கும்படி யருள்தந்து இரட்சி. (ஞான)
நற்சிந்தனை 223
சின்னத்தங்கம்
தெய்வத்துக்குத் தெய்வம் சிந்தையிலே தானிருக்க
வையகத்தி லேனலைந்தாய்-சின்னத்தங்கம் வாட்டமெல்லாம் விட்டிடடி. l
ஆழித் துரும்பெனவே யங்குமிங்கு மாயலைந்து பாரில் தவியாதே -சின்னத்தங்கம் பார்த்து மகிழ்ந்திடடி. 2
அங்குமிங்கு மெங்குமந்த ஆண்டவன் தானிருக்க அங்குமிங்கு மலையாதே - சின்னத்தங்கம் ஆடிப்பாடி மகிழ்ந்திடடி. V− 3.
கங்குல்பகல் காணுத கருணைதனை வேண்டிக்கொண்டு செங்கமல மடமாதே-சின்னத்தங்கம் சீராக வாழ்ந்திடடி. 4
ஆடம் பரமெல்லாம் அடியோடே நீக்கிவிட்டு கேடறியாத் திருவடியைச்-சின்னத்தங்கம் கிட்டநீ கண்டிடடி. 5
வேடமொன்றும் போடாதே வீணருடன் கூடாதே தேடவேண்டாந் திகைக்கவேண்டாஞ்-சின்னத்தங்கம் சீவன்சிவன் ஆச்சுதடி. . 6
தொழுது வணங்கிடுவாய் துரியநிலை சாருமட்டும் அழுதழுது ஆண்டவணைச்-சின்னத்தங்கம் ஆன்மலாபம் தேடிடடி. 7
முழுதுமுண்மை யென்றுமுன்னள் மோனகுரு சொன்னரடி பழுதொன்று மில்லையடி-சின்னத்தங்கம்
பவுத்திரமாய் வாழ்ந்திடடி. 8 காண்பானுங் காட்சியும்போய்க் காட்சிப் பொருளுமற்று
மாண்புடனே நின்றிடுவாய்-சின்னத்தங்கம் மரணபய மில்லையடி. 9
Page 117
224 நற்சிந்தனை
சேண்பொலியுந் திருவடியே சித்தத்திலெப் போதுமுண்டு வீண்காலம் போக்காதே - சின்னத்தங்கம் வேண்டிப் பணிந்திடுவாய். 10
மானபி மானம்விட்டு மண்ணும்விண்ணுந் தெரியாமல் தானுன தன்னிலையில் - சின்னத்தங்கம் தனியே யிருந்திடடி. 11
தானுன தானேயல்லால் தனக்குதவி யாருமில்லை மோன நிலைதனிலே -சின்னத்தங்கம் மூழ்கி யிருந்திடடி. 12
புத்தியைநீ நாட்டாதே புன்னெறியைச் சூட்டாதே வெற்றியுனக் குண்டாகுஞ்-சின்னத்தங்கம் விருப்பும் வெறுப்பும்விடு. 13
எத்திக்கு மீசனடி இருந்தபடி யேயிருந்து பத்திசெய்து பார்த்திடுவாய்-சின்னத்தங்கம் பழிபாவ மில்லையடி. 14
தத்துவப் பேயோடு தான் தழுவிக் கொள்ளாதே சுத்தபரி பூரணத்தில்- சின்னத்தங்கம் சுகித்துநீ வாழ்ந்திடடி. 15
வித்தகம்நீ பேசாதே வேறென்றை நாடாதே செத்தாரைப் போல்திரிவாய்-சின்னத்தங்கம் தெய்வம்நீ கண்டிடடி. 6 .
மெத்தக்கதை பேசாதே மேன்மக்களை யேசாதே
சத்துருவும் மித்துருவுஞ்-சின்னத்தங்கம் தானென்ருய்ப் போகுமடி. 17
நற்சிந்தனை - 225
நீகரில்லாத இன்பம் நிறையுமே
அன்று மின்று மென்று முள்ளவன்
என்று மெங்க ளகத்துள் நிறையுமே. I ஆக்கையே கோவில் அகஞ்சிவ லிங்கம் பூக்கைக் கொண்டு பொன்னடி போற்றுதும். 2 இல்லை யுண்டென்று சொல்லவொண் ணுதவன் நல்லூரில் வாழும் நற்றவ ராசனே. 3.
உம்பர் தலைவ னுயர்கை லாயன் R செம்பொ னம்பலத்தே திருநடனம் புரியுமே. 4 ஊரும் பேரு மில்லா வொருவன் சீருந் திருவுமாயென் சிந்தையுள் நிற்குமே. 5
எண்ணு மெழுத்துமாய் நின்றிடு மெந்தை கண்ணுக்குக் கண்ணுய்க் கலந்து நிற்குமே. 6
ஏகம்பம் மேவி ஏந்திழை கலக்கம் போக வருள்செய்தான் புண்ணிய மூர்த்தியே. 7 ஐங்கரத் தொருகோட் டானையைத் தந்தவன் அங்கு மிங்கு மெங்குமாய் நிற்கும். 8
ஒருபொல் லாப்பு மில்லையென் ருேதினுன் , திருவாழும் நல்லைத் தேசிக மூர்த்தியே. 9 ஓங்கா ரத்தில் உதித்த வுலகெலாம் ஓங்கா ரத்தில் ஒடுங்கு முண்மையே. IJ
ஒளவனத் தில்லையில் ஆடல் உகந்தவன்
நவ்வியைப் பாகம் வைத்த நம்பனே. I
அஃகுத லில்லா அறிவினை யுடையவன்
நஃகும் நம்வஞ்ச வேடங் கண்டே. 12
கட்டுப் படாத மனத்தைக் கட்டினுல்
எட்டுணை யேனும் இடுக்கண் இல்லையே. 1 3
15 -
Page 118
226 - நற்சிந்தனை
ங்கரம் போல நாங்கள் வாழ்ந்தால் நிகரில் லாத இன்பம் நிறையுமே. 14
சந்ததம் சாதனை தவருது செய்யின் -
சிந்துார முரித்த சிவனடி சேர்வோம். 15 ஞான யோகம் நாங்கள் புரிந்தால்
மோனவீ டடைவோம் முழுது முண்மையுே. 6
இடத்து மடந்தையை வைத்த பெருமான் நடத்தைக் கண்டால் நாமுய்ந் தோமே. 17
அணங்கு தந்தெமை ஆட்டும் மனத்தை இணங்காம லெந்தை யிணையடி பணிகுதும். 18
தன்னைத் தன்னு லறிந்த ஞானிகள் ۔ விண்ணில் விளங்கும் வெய்யவன் போல்வார். 19
நன்றுதீ தென்று நாடாமல் நாடினல் குன்றின் மேல் வைத்த விளக்கின் கொள்கையே. 20
பத்மா சனத்தில் பரிவுட னிருந்து சித்த விருத்தியைத் தீர்த்திடு வோமே. 21
மணிவா சகந்தரு மந்திர மோதினல் பிணிமூப் பில்லாப் பிரம மாகுதும் . 22
யவனர் சோனகர் தமிழர்சிங் களவர் எவரும் வணங்குவார் எந்தைதன் தாளே. 23
அரவார் செஞ்சடை அண்ணல் தன் பாதம்
விரவி நிற்பவர் வீடுபெற் றனரே. 24
இலது உளதென வெவருமே மாறக் 1. கலந்து நிற்பவன் கண்ணுத லாமே. 25
வஞ்ச நெஞ்சினர் காணு வள்ளலை அஞ்செழுத் தோதி அர்ச்சிப் போமே. - 26
நற்சிந்தனை
அழகா ரரியும் அம்புயா சனனும் தொழுதிட நின்றவன் சுத்த சிவமே. இளமை மூப்பிலா னெம்பி ரானெனத் தொழுதிட நின்றவன் சோதிசொ ரூபனே. இறப்பும் பிறப்பு மெமக்கில்லை யென்றவன் அறமார் நல்லூ ராசா ஞமே.
அனங்க ணுகத்தை யன்றெரி செய்தவன் கணங்கொள் பேயோ டாடிய கள்வனே.
ரங்கநின் திருவருள் தரலாகாதா இராகம்-காபீ; தாளம்-ஆதி
பல்லவி
ரங்கநின் திருவருள் தரலாகாதா
obufiivsus
தேசகாலம் யாவும் மறந்து தேவா உன்றனருள் நிறைந்து
சரணங்கள்
பாதகன் கஞ்ச னனுப்பிய பூதகி பாரில் மாளவே செய்தாய்
அதுபோல் அடியேன் ஆணவமொழிய அருள்நீ தருவாய் ஐய.
வேத புராணம் காணவொண் ணுத வித்தகனே பக்தர் வேண்டும் விமலா அமலா கமலக் கண்ணு விரைவாய் நீ வருவாயே.
2
2
7
27
28
29
30
(பூg) "
(பூg)
(பூனி) 1
(பூரி) 2
Page 119
228 நற்சிந்தனை
அன்பே வடிவாய் அமைந்த துறவி
ஆசிரியப்பா ܫ
அன்பே வடிவாய் அமைந்த துறவீ! அன்பே யன்றி யாற்றலு முண்டோ? இன்பமா முலகி லெங்கணுஞ் செறிக துன்பமாம் மாயை தொடரா தொழிக எல்லியு மல்லு மீசனைப் போற்றுக கல்லுங் கரையக் கவிமழை சொரிக கங்குல் பகலற்ற காட்சி பெறுக; எங்குஞ் சிவத்தைக் கண்டின் புறுக மங்குவார் செல்வம் மதியா தொழுகுக இங்கு நீ, இருந்த படியே யிருந்து வாழுதி அருந்துய ருன்னை யடையா வன்றே. V l
வஞ்சகம் நீக்கி வாழுந் துறவீ! அஞ்செழுத் துட்பொரு ளாகிய வமலனை நெஞ்சத் துள்நீ வைத்து வணங்குதி கஞ்சத் தேவனுங் கண்ணனுங் காணுர் தன் போற் பிறரைத் தானி னந்திடு உன் போற் பிறரிவ் வுலகி லுண்டோ
முன்பு நீ, செய்த வல்வினை தீர்ந்திடுந் தியானஞ் செய்தினஞ் சீவன் சிவனே யன்ருே. 2
ஒருமைமனம் படைத்த வுத்தமத் துறவீ! இருமையு மளிக்கு மிறைவன் திருவடி அந்தியுஞ் சந்தியு மகலாது போற்றிப் பந்தித்து நின்ற பாவம் போக்குதி சிந்தித்துச் சிந்தித்துச் சீவபோத நீக்குதி நிந்திப் பார்களை நேசத்தால் வெல்லுதி சந்தேகமில்லை, - நீயோ நித்தியன் நினக்கயல் கற்பனை நீயோ நிராமயன் நினைவொழிந்து வாழுதி, 3.
நற்சிந்தனை 229
ஈழநாடு வாழவந்த சிவதொண்டன்
ஈழநாடு வாழவந்த எழில்மிகுந்த தொண்டன் எளியவர்க்கும் பெரியவர்க்கும் ஏவல்செய்யுந் தொண்டன் தாளமேள மில்லாமலே தான் வளருந் தொண்டன் தன்னைப்போல அயலவரைத் தான்நினையுந் தொண்டன் காளகண்ட னடியவர்க்குக் காவலான தொண்டன் கங்குல்பகல் காணுமற் கருமமாற்றுந் தொண்டன் நீளநினை நித்தியன் நீ யென்றுரைக்குந் தொண்டன் நிட்டையிலே யெந்நாளும் நிலைத்துநிற்குந் தொண்டன். 1
ஈழநாடு வாழ்வந்த எங்கள் சிவ தொண்டன் ஏழைகட்கும் பெரியவர்க்கும் ஏவல்செய்யுந் தொண்டன் காளகண்ட னடியவர்க்குக் காவலான தொண்டன் காமக்கு ரோதமோகம் நீக்கிவிடுந் தொண்டன் வாழவெண்ணும் அடியவர்க்கு வழிகாட்டுந் தொண்டன் மறுபிறப்பை யிப்பிறப்பில் நீக்கிவிடுந் தொண்டன் தாளமேள மில்லாமலே தான் வளருந் தொண்டன் தாயாகி யனைத்துலகுந் தாங்கிநிற்குந் தொண்டன். 2
சூழமிக நினைத்துவினை யாற்றுமெங்கள் தொண்டன் சோம்பலே பாவமென்று சொல்லுகின்ற தொண்டன் கூழெனினும் கூடிக்குடி யென்றுசொல்லுந் தொண்டன் கூச்சமின்றி யுலகத்திலே குடியிருக்குந் தொண்டன் ஆழநினை யகம்பாவம் போகுமெனுந் தொண்டன் அடியவர்கள் திருவடியைச் சிரசில்வைக்குந் தொண்டன் வாழிமிக வாணிச்சிக்கா மண்சுமந்த மாறன் மாபெருமை வழுத்துகின்ற மாண்புமிக்க தொண்டன், 3
நானென்னும் ஆணவத்தை நலியவைக்குந் தொண்டன் நன்மைக்குந் தீமைக்கும் நடுவில் நிற்குந் தொண்டன் தேனென்ன இதயத்தில் தித்திக்குந் தொண்டன் சிவாயநம வென்றுதினஞ் செப்புகின்ற தொண்டன் ஆணென்றும் பெண்ணென்றும் அறியாத தொண்டன் அடியவரைத் தானக ஆக்கிவிடுந் தொண்டன் பேணுத மாந்தரையும் பிரியாத தொண்டன் பெரியோர்கள் கருத்திலென்றும் பொருந்திவளர்
தொண்டன். 4
Page 120
230 நற்சிந்தனை தொண்டு செய்வார்
தொண்டுசெய் வாருக் குண்டே ஞானம் தொண்டுசெய் வாருக் குண்டே மோனம் தொண்டுசெய் வாருக் குண்டே தானம் தொண்டுசெய் வாருக் குண்டே கானம்.
எல்லா ரிடத்தும் அடியேன் வாழ்வேன் எல்லா ரிடத்தும் அடியேன் தாழ்வேன் எல்லார்க்கு மென்றும் அடியேன் கேள்வன் சொல்லாற் பயனிலை யென்றே சூழ்வன். 2
எல்லா ருருவமு மென்னுரு வாகும் எல்லார் நலன்களு மென்னல மாகும் எல்லார் பலமு மென்பல மாகும் நல்லோர் என்னுரை நயந்துகொள் வாரே. 3.
வருவன வெல்லாம் வந்தே யேகுக கருதுவ வெல்லாங் கருதித் தீருக ஒருவரு மறியா வொண்செஞ் சீறடி குருபரன் திருவடி கொண்டா டுதுமே. 4.
ஒன்றிரண் டென்றே யுரையார் பெரியார் கன்றும் மனத்தைக் கண்டாற் பரிவார் கொன்றுயிர் வாழக் குறியார் திரிவார் நன்றிது தீதென நலியார் அரிஓம். 5
எல்லா ரிடத்தும் உள்ளாய் தூயாய் எல்லா எழிலும் நீயே யானுய் கல்லாய் மலையாய்க் கவின்பெறு மரமாய்ப் புல்லாய்ப் பூடாய்ப் பொலிவாய் நீயே. 6
உன்துணை யன்றி யுயிர்த்துணை காணேன் பின்னை யென்னைப் பிரியா துறைவாய் அன்னையுந் தந்தையும் ஆசா னும்நீ முன்னைப் பொருட்கெலாம் முன்னைப் பொருள்நீ. 7
நற்சிந்தனை 231
உடல்பொருள் ஆவி யுன்னதே இறைவா! திடம்பெற ஞானத் தெளிவை நல்குதி கண்ணே கருத்தே யெண்ணே எழுத்தே விண்ணே விண்ணில் விளங்கும் மதியே. 8
பண்ணே பண்ணிற் கணியே பரம! எண்ணேன் இனிப்பிற தெய்வம் நாயேன் ஏத்தி யேத்தி யிணங்கி வணங்கச் சாற்றிய கவியை யேற்றிடு வாயே. 9
wr-a-minas
ஒன்றே தெய்வம் ஒன்றே உலகம்
உலக முவக்கவும் உன் மனங் களிக்கவும் கழறும் வாசகங் கருத்தி லிருத்துக ஒன்றே தெய்வ மொன்றே யுலகம் நன்றே யென்றும் நாடிப் புரிவாய் நீசடப் பொருளல நிறைதரு சித்து பேச வரிதுன் பெருமையெவ ராலும் ஆதலா லுன்னை யங்கி சுடாது காதல்சேர் காற்றும் உலர்த்தா கவலல் மாதிரந் தானும் வருத்த முடியாது ஒதிடு மப்புவுங் குளிரச்செய் யாதுனை ஈறிலாப் பொருணி யெள்ளள வேனும் மாறிலா மகிழ்ச்சி மனத்திடைக் கொள்வாய் சாதி சமயம் யாவுமுனக் கில்லை நீதி யொன்றை நெஞ்சிடை வைத்திடு உபாதி செய்யும் புலன்வழி யுருதே அபாய மொன்று மென்று முனக்கிலை செய்ய வேண்டிய செவ்வனே செய்வாய் உய்ந்தாய் முன்னர் யுலகமுன் கைவசம் சந்தேக மில்லைச் சாற்றினன் கேணி சற்குரு உன்துணை சாட்சிநீ யாவாய் அற்புத னடியிணை யென்றும் வாழ்கவே.
Page 121
232
கூத்தாடுதே மனமென்ன கொடுமை
பல்லவி
கூத்தாடுதே மனமென்ன கொடுமை
கும்பிட்டேன் குருநாதா உன்னடிமை.
அநுபல்லவி
நற்சிந்தனை
தீர்த்தங்க ளாடினேன் யாத்திரை செய்தேன் w சித்தந் தெளியவில்லை என்னநான் செய்வேன். (கூத்)
பார்த்த விடமெங்கும் நீயல்லா தில்லை பாராமல் நானும் பட்டேன் தொல்லை காத்தெனை யாள்வ துன்றன் கடமை
சரணங்கள்
கருணைக் கடலே நானுன் உடைமை.
பத்திசெய் யோக சுவாமி பாட்டைப்
பாடிப் படிப்பவர் பல்லூழி காலம் உத்தம ராக உலகினில் வாழ்ந்து வித்தகன் சேவடி விரவிநிற் பாரே.
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
சிவ சிவ ஓம் ஓம்
செல்வக் கணபதி செல்வவே லாயுதன் w செல்வச் சிவதொண்டன் செல்வச் சிவனடியார்
எம்முள் திருவருள் செல்வத் திருமால் அயன்முதல் தேவர்கள் ஐம்பெரும் பூதங்கள் சிவ சிவ ஐம்பொறி சிவ சிவ ஐம்புலன் சிவ தச நாடிகள் சற்குரு நாதன்
(கூத்) 1
(கூத்) 2
ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம்
ழ் ஒம்
ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஒம் ஓம் ஓம் ஒம் ஓம் ஓம் ஓம்
நற்சிந்தனை. 233
அரகர சிவசிவ மறையோனே
அன்பர்தஞ் சிந்தையில் உறைவோனே அரகர சிவசிவ மறையோனே. . 1
பொன்னே மணியே பூங்கோவே புலவரெல் லாம்புகழ் எங்கோவே. 2
காணுங் கண்ணிற் கலந்தவனே கதிரொளி போலெங்கும் நிறைந்தவனே. m 3
ஆணும் பெண்ணும் ஆனவனே அடியவர் பேணும் வானவனே. 4
கோணிய பிறையை முடித்தவனே கொல்புலித் தோலை யுடுத்தவனே. 5
வேணியிற் கங்கை தரித்தவனே வேழத்தின் தோலை யுரித்தவனே. 6
பாற்கடல் தன்னை அழைத்தவனே பாரொடு விண்ணுய்ப் பரந்தவனே. 7
நூற்பொருள் தன்னை விரித்தவனே நுண்ணிடை யாள்தன் இடத்தவனே. 8
தில்லையில் ஆடிய சிற்பரனே சிவசிவ சிவசிவ தற்பரனே. 9
எல்லையில் லாவருள் தந்தவனே என்போல் நல்லையில் வந்தவனே. IO
Page 122
நற்சிந்தனை
கும்மி
கும்மியடி பெண்ணே கும்மியடி குரு நாதனைப் பாடிக் கும்மியடி
இம்மை மறுமைக்கும் எங்களை யாட்கொண்ட
எழிலைப் பாடிக் கும்மியடி. I
சிவனெ ருத்தனே தெய்வமடி தோழி சென்னியிற் கங்கை பாயுதடி
அவனி டத்தினிற் பெண்ணை நீ பாரடி
எண்ணியெண் ணிக்கடைத் தேறடி. 2
அவனன்றி யொன்றும் இல்லையடி பெண்ணே
அங்கையி லங்கியெ ரியுதடி
அவன்ற ஞகத்தில் நாகமடி பெண்ணே
அரையி லேபுலி யுடையடி. , 3
அடிக்கீ ழரக்கன் கிடக்கி முனடி
அங்கையி லேமழு மானடி
துடியொ ருகையில் தோன்றுதடி பெண்ணே
சூலமுங் கையிற் றுலங்குதடி. 4
குடிமு முதையும் ஆண்டுகொண் டானடி
கொல்லும் நமன யுதைத்தான்டி
அடிமு டியொன்று மில்லையடி பெண்ணே
ஆனந்த மாய்க்கும்மி பாடடி. 5
தூக்கிய பாதத்தின் தோற்றத்தைப் பாரடி
தொந்தோந் தோமென்ற நாதத்தைக் கேளடி
ஆக்கி யழிக்கவும் வல்லவ னவனடி p
ஆனந்த மாய்க்கும்மி பாடுமடி. 6
பாம்பும் புலியும் பார்த்திருந் தாரடி
பாரளந் தோனயன் பாடுபட் டாரடி
நாம்பு கழ்ந்திட நற்றரு ணமடி
நங்கைய ரேகும்மி பாடுமடி. 7
நற்சிந்தனை 235
மாறிப் புலன்வழி போகா தேயடி மதிக்குள் ளேரவி சேர்த்திடடி
ஆறி யிருந்து பாரடி பெண்ணே
அவனை நீகண்டு தேறடி. 8
சித்தத்துள் நித்தந் தித்திக்குந் தேனடி
தீராப் பிணியைத் தீர்க்கும் மருந்தடி
பத்தர்கள் கண்டு பரவு வாரடி
பாவைய ரேகும்மி பாடுமடி. 9
இலங்கை என் திருநாடு
எல்லார்க்குந் தம்பிரா னென்னைவந் தாண்டுகொண்டான் கொல்லேன் பொய் சொல்லேன்யான் குருமொழியை
மறக்கிலேன் நில்லாத காயத்தை நிலையெனவே யெண்ணுகிலேன் செல்லாரும் பொழில்குழு மிலங்கையென் திருநாடே. 1 என்னைவிட் டகலாம லெப்போது மிருக்கின்ற அன்னையொப் பானவனை யடியேன்யான் மறப்பேனே முன்னைநா ஸ்ரீராவணன்றன் முடிபத்தும் நெரித்தவன் தென்னைபனை சேரிலங்கை சிறியேன்றன் திருநாடே. 2 நீர்நிலந்தீ கால்வானுய் நின்றபிரான் சிறியேன ஒர்கணமும் பிரிவறியான் உத்தமர்தஞ் சிந்தையான் கார்நிற மேனியனுங் கமலனுங் காண்கிலான் சீர்பெறுரஉ மிலங்கையென் திருநாடு கண்டுகொளே. 3
பொறிவழிபோ யலையாமற் பூவுலகிற் காத்தபிரான் அறிவுக் கறிவானன் ஆரணமு மறியகில்லான் குறிகுணங்க ளற்றவொன்றைக் கும்பிடுவோ மெப்போதும் செறிபொழில்குழிலங்கையே சிறியேன்றன் திருநாடே. 4 முற்ருத பின்மதியம் முடிதனிலே வைத்தபிரான் அற்ருர்க்கு மலந்தார்க்கு மருள்புரியு மம்பலவன் நற்ரும ரைப்பாதம் நாள்தோறுங் கைதொழுவார் வற்ருத வளஞ்செறியு மிலங்கையென் திருநாடே. 5
Page 123
236 நற்சிந்தனை திங்கட் சடையாய் எங்களை யுடையாய் சிவனே ஓம்
திங்கட் சடையாய் எங்களை யுடையாய் சிவனே ஒம்
சீரிய அடியார் சிந்தையி லுறையுஞ் செல்வா ஓம் மங்கையை யுடையாய் மழவிடை யானே மாதவனே ஓம்
மண்ணும் விண்ணும் ஒன்ருய் விளங்கும் மணியே ஒம் அங்கையி லங்கி தங்கிய பரனே யரனே ஒம்
ஆருயி ரெல்லாம் நீயே யாகி யமர்ந்தாய் ஒம் கங்குலும் பகலும் இல்லாக் காட்சி தருவாய் ஒம்
கருதும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம்.
சிறையார் வண்டறை கொன்றைப் போதனே சிவனே ஒம்
சீவன் சிவனுய்ப் பாவனை செய்வார் திருவே ஒம் குறையா வன்பு தரவே வருவாய் குருவே ஒம்
கூடிக்கூடி யுன்னடி பாடல் கொடுப்பாய் ஒம் . பிறையார் சடையாய் பேரா யிரமே யுடையாய் ஒம் பேசப் பேச வின்பம் பெருகும் பிரானே ஒம் அறையார் கழலே யல்லாற் சிறியே னறியேன் ஒம்
அன்புசெய் யடியரை யென்றும் ஆளக் கடவாய் ஒம். 2
கல்லாப் பிழையுங் கருதாப் பிழையும் பொறுப்பாய் ஒம்
காலனைக் காலாற் முக்கிய பரனே யரனே ஒம் எல்லாஞ் செய்ய வல்லபம் உடையாய் எந்தாய் ஒம்
எழில்சேர் நல்லை வாழும் குருவே யிறைவா ஒம் பொல்லா வினைகள் போகும் வண்ணம் புரிவாய் ஒம்
பூவார் மலர்கொண் டடியார் போற்றும் பொருளே ஓம் எல்லா முன்செய லாமெனும் எண்ணந் தருவாய் ஒம்
ஏத்தும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம். 3
மாறிப் பொறிவழி போகா மனத்தார் இனத்தாய் ஒம் மாலோ டயனுங் காணு ஒளியே மணியே ஒம் ஆறும் பிறையுஞ் சூடிய ஐயா மெய்யா ஓம்
ஆதியு மந்தமு மில்லாய் உள்ளாய் அறிவே ஒம் தேறித் தெளிவார் சிந்தையி லூறும் அமுதே ஒம்
செயசெய வென்று பணியும் தேவர்கள் தேவா ஓம் கூரிய சூலப் படையினை யுடையாய் கோவே ஒம்
கும்பிடும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஒம், 4
நற்சிந்தனை 237
போற்றியென் வாழ்முத லாய பொருளே யருளே ஓம்
புண்ணியர் நண்ணும் பூரண வடிவே புகலே ஓம் தோற்ற மறைக்குங் காரண மாகிய தொல்லோய் ஒம்
சோதிச் சுடரே தோகைக் கிடமி துணையே ஓம் நீற்ருெடு பொலியும் நெற்றிக் கண்ணு நிமலா ஓம்
நீதி வழுவா மாதவர் தங்கள் நெறியே ஒம் ஆற்ருெடு தும்பை யம்புலி சூடிய யரனே ஓம்
அன்புசெய்யடியரை யென்றும் ஆளக் கடவாய் ஒம். 5
ஆநந்த நடனம் ஆடினன் பல்லவி ஆநந்த நடனம் ஆடினன் அல்லும் பகலும் நல்லூர் வீதியிற் செல்லப்பன்.
அநுபல்லவி
மோனந் திகழுஞ்சிவ யோகியர்தா மறியார் முழுவது முண்மையென முகமலர்ந் தோதுவான். (ஆநந்த)
சரணங்கள்
ஈனந் தரும்பிறவி யெடுத்தெடுத் துழலாமல் என்னைவந் தாண்டுகொண்டான் இன்பத்தில் மாண்டு
கொண்டேன்
தானந் தவமிரண்டுஞ் சரியை கிரியைவிண்டும் சதுர்வித வுபாயத்தாலே தானுக வென்னைச்செய்தான்.
(ஆநந்த) 1
முன்னிலை யில்லையென்றும் முழுவது முண்மையென்றும் மூடிய மாயவிருள் ஒட வருள்புரிந்தான் அந்நிலையி லேயுட லாவியவன் வசமாச்சு . . ஆகா அதையறிவார் ஆர்தானிவ் வையகத்தில் (ஆநந்த) 2
Page 124
238 நற்சிந்தனை
ஒளவையார் திருமொழி அறஞ்செய விரும்பென ஒளவையார் தந்த
சிறந்த திருமொழி தீவினை தெறுமே. 1 ஆறுவது சினமெனு மரிய மந்திரங் கூறுவார் நாவிற் குலவுஞ்சொல் லணங்கே. 2 .
இயல்வது கரவே லெவரே யாயினும் பயில்வுறப் பயில்வுறப் பாவங் கெடுமே. 3
ஈவது விலக்கே லெல்லாந் தந்து ܚ சேவைகள் செய்யத் திறங்கொடுக் கும்மே. 4 உடையது விளம்பே லுணர்வார்க் கெல்லாந் தடையிலா வான்ம சக்தியீ னும்மே. 5 ஊக்கமது கைவிடே லூழ்வினை நீக்கும் தேக்குமா னந்தஞ் சித்தியுந் தருமே. 6
"Чыгымы
LGOofluGIT 6TsiT LOGDSLO
நித்தியர்நா மென்னும் நினைவுதடு மாருமற் பத்திபண்ணிப் பாடிப் பணியவா என்மனமே.
முத்திக்கு வித்தை முனையில்வைத்துச் சீராட்டித் தித்திக்குந் தேனருந்தச் சீக்கிரம்வா என்மனமே, 2 அத்துவி தப்பொருளை யருந்தவர்கட் காரமுதைச் சித்தத்துட் கண்டு தெளியவா என்மனமே. 3 எத்திக்கு மாகி என்னிதயத் தேவாழும் தத்துவத்தைக் கண்டு சலிப்பறவா என்மனமே. 4 சித்திதருந் தேவாய்த் திகழும் பரம்பொருளின் வித்தகத்தாள் வாழ்த்த விரைந்துவா என்மனமே, 5 உத்தமர்கள் போற்றும் ஓங்காரத் துட்பொருளைப் பத்தியொடு பாடிப் பணியவா என்மனமே. 6
நற்சிந்தனை 239 ܀
தன்னை யறிந்தோமே
தன்னை யறிந்தோமே-கிளியே தவத்தி லுயர்ந்தோமே பின்ன மிறந்தோமே -கிளியே பெருமா னருளாலே எம்மை நிகராவார் - கிளியே எவரு முலகிலில்லை செம்மை மனத்துடனே-கிளியே சிவன்பாதம் நினைப்போமே இம்மை மறுமைக்கும் - கிளியே எவரும் இணையில்லை அம்மையு மப்பனுமே - கிளியே ஆம்துணை நீயறியே.
நல்லூர் வெளியில்
நல்லூர் வெளியிலே பொதுநடம் புரிகிருன்
நங்கள்குரு நாதன் வாங்கும் பிரகாசன்
எல்லாரை யுந்தன் னிடத்திலே காண்பவன்
இயம நியமங்களில் எள்ளளவு மோபிசகான்.
பொல்லாப்பிங் கில்லையென்று போதனை செய்வான் புகழ்ச்சியு மிகழ்ச்சியு மொன்ருகக் காண்பவன்
செல்லப்ப னென்னுந் திருப்பெய ருடையான்
சிங்கார நடையொடு சிரிப்பினை யுடையான்.
ஆரறி வாரென அடிக்கடி சொல்லுவான்
தேரடிப் படியிலே சிங்கார மாய்க்கிடப்பான்
பேரறி வாளனெனப் பிறரெவரு மோவறியார் பித்தனென் றுலகோர் பேசுவா ரேசுவார்.
Page 125
240. , நற்சிந்தனை ஆராதனைசெய் தறிவாய் G2GOT
ஆதியு மந்தமு மில்லான்-தம்பி ஆதியு மந்தமு முள்ளான். I சாதி சமயங்க ளில்லான்-தம்பி சாதி சமயங்க ளுள்ளான். 2
ஒதி யுணர முடியான்-தம்பி ஒதி யுணரும் வடிவான். 3.
நீதி குருபர ஞனுன்-தம்பி நீர்நிலந் தீகால் வானமு மானன். 4
சந்திர சூரிய ராணுன்-தம்பி தாரா , கணங்களு மானன். 5
மந்திர தந்திர மானன்-தம்பி மருந்து மருந்து மவர்களு மானன். 6
இந்திர ராதியோ ராணுன்-தம்பி எல்லா வுலகமுந் தானே யானன். 7
இந்த வுயிருட லானன்-தம்பி இருக்கு முதலிய வேதங்க ளானன். 8 பந்தமும் வீடும் படைப்பான்-தம்பி பந்தமும் வீடுந் துடைப்பான். 9
அந்தியுஞ் சந்தியு மிதனைத்-தம்பி ஆரா தனைசெய் தறிவாய் சிவனை. 10
நற்சிந்தனை r 24
அன்னபிதாக் குருவானுன்-அரன்
அன்னை பிதாக்குரு வானன் - அரன் ஆகாய மாதி பூதங்க ளானன் என்னையுந் தன்னையும் பிரியான் --அரன் ஏக னநேகன் என்பார் பெரியோர் முன்னைப் பொருட்கெல்லாம் முன்னேன்.--அரன் மூர்த்தி தலந்தீர்த்த மாதற் குரியோன் அண்ட சராசர மெல்லாம்-அரன் ஆடலைக் கண்டு தொண்டுசெய் வோமே சண்டை யிடும்போதுஞ் சலியான்-அரன் தன்னி லையினிற் சற்றுஞ் சலியான் ஆணென்றும் பெண்ணென்று மறியான்-அரன் அப்போதைக் கப்போ தாடல் புரிவான் வீண்புகழ் தன்னை விரும்பான்-அரன் வேதாந்த சித்தாந்த சமரசந் தருவான் கூறும் நா முதலாக யாவும்-அரன் கொண்டாடு மிடமென்று கண்டுகொள் வோமே நித்திய வாழ்வினைத் தந்தான் --அரன் நீநா னென்பதை நீங்கினன் ருனே.
F6L91 GG)
மார்க்கஞ் சன்மார்க்கம் மகரிஷிகள் கண்டமார்க்கம் மார்க்கம் 1
மூர்க்கமான குணம்போக்கும் முழுதும்உண்மை யெனவாக்கும் மார்க்கம் 2 பார்க்கப்பார்க்க இன்பந்தேக்கும் பரமானந்த நிலையைநோக்கும் மார்க்கம் 3 ஆர்க்குஞ்சுதந்தி ரத்தையாக்கும் அனைவரையும் முத்தியிலேசேர்க்கும் மார்க்கம் 4 பக்திசெய்யோக சுவாமிபாட்டு படிப்பவருக்குநல்ல வழிகாட்டும் மார்க்கம் 5
6
Page 126
242 | | நற்சிந்தனை
இன்பமாய் வாழ்ந்திடடி
அங்கிங்கென் றெண்ணுதே அவனிவ்னென் றுன்னதே எங்குஞ் சிவத்தைக்கண்டு-தங்கமே இன்பமாய் வாழ்ந்திடடி. ஆசை வலையிற்சிக்கி-ஆண்டவனை நீமறந்தாய் பூசைசெய்து பொன்னடியைத்-தங்கமே பூரணமாய் வாழ்ந்திடடி. இல்லையென்றும் உண்டென்றும் எடுத்துச்சொல்ல
|- வொண்ணுத நல்லூரான் திருவடியை -தங்கமே நாடோறும் போய்வணங்கு. ஈடேற வேண்டுமென்றல் எல்லாஞ் சிவன்செயலாய் நாடோறும் வேண்டிப்பணி-தங்கமே நல்லூரான் கிருபையுண்டு.
உண்மை முழுதுமென்ற வுயர்ந்த திருவாக்கை எண்ணுமல் எண்ணிப்பணி-தங்கமே எல்லாங்கை கூடுமடி.
ஊரும்பேரு மில்லாத உத்தமனைச் சித்தத்தில் சேரும்வண்ணம் நாள்தோறும்-தங்கமே தியானஞ்செய்து வாழுவமே. என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கு மீசனென்று சொன்ன திருவாக்கே-தங்கமே சுந்தரமென் றெண்ணியிரு.
ஏழுலகும் தொழுதேத்தும் எம்பெருமான் திருவடியை
நாளும் மறவாதே - தங்கமே நானுமில்லை நீயுமில்லை.
ஐம்பூதம் நீயல்லை அறிந்திதனைக் கொள்ளுவாய்
ஆன்மாநீ மறந்திடாதே-தங்கமே ஆட்சிசெய்ய வேண்டாமடி.
2
நற்சிந்தனை X 243
ஒன்பது வாயிலுள்ள வுடம்பு சிவன்கோயில் என்பதை மறந்திடாதே -தங்கமே
ஏத்தியேத்திப் பணிந்திடடி. * . 9 ஒதுவதொ ழியேலென்ற உண்மையைநீ மறவாதே ஏதுக்கு மஞ்சாதே -தங்கமே n எல்லாஞ் சிவமயமே.
ஒளவியம் பேசாதே ஆவியுள்ள மட்டும்நீ தெய்வம் ஒருவனென்று-தங்கமே திடமுடன் வாழ்ந்திடடி. 12.
அஃகமும் காசுந்தேடி அம்புவியி லலையாதே வெஃகாதே பிறன்பொருளைத் -தங்கமே வீடுனக்குச் சொந்தமடி. 3
திருநாமத்தைச் செபித்திடடா
அனைத்துயிரும் நீயேதம்பி அதையறிந்து வாழ்ந்திடடா தினைத்துணையும் மறந்திடாமல் திருநாமத்தைச்
செபித்திடடா, 1
வினைப்பகையை வென்றிடுவாய் வேறுபொரு ளில்லையடா முனைத்துவருஞ் சினத்தை வென்றல் மூவர்களும்
a. ஏவல்செய்வார். 2
உனைப்போலே யுத்தமர்கள் உலகத்தினி லில்லையடா நினைத்தபடி நடந்திடடா நிட்டையிலே
பொருந்திடடா, 3
ஆவதில்லா அழிவதில்லா ஆன்மாவை யறிந்திடடா தேவர்களும் முனிவர்களுஞ் சித்தத்திலே திகழுகின்றர். 4
ஒருபொல்லாப்பு மில்லைத்தம்பி உண்மையே முழுதுமடா குருநாதன் கூற்றிதடா கும்பிட்டுக்கொண் டாடிடடா. 5
Page 127
244 நற்சிந்தனை எல்லாம் கடவுள் கண்டீரே கலித்தாழிசை காணுங் கண்ணிற் கலந்து நிற்பது கடவுள் கண்டீரோ ஆணும் பெண்ணு மலியு மானது அதுநீர் குறியீரோ. 1
பாரும் விண்ணு மாகி நிற்பது அதுநீர் பாரீரோ சீருந் திருவு மாகி நிற்பது அதுநீர் தெரியீரோ, 2
தாயுந் தந்தையு மாகி நிற்பது தானு வறியீரோ நீயும் நானு மாகி நிற்பது நினைந்து பாரீரோ. 3 ܢ
காயுங் கனியு மாகி நிற்பது கண்டு களியீரோ தேயு வாயு வாகித் திகழ்வது சிந்தித் துணர்வீரோ. 4
மாயும் மனிதரை மாயாது வைக்கும் மருந்தை யுண்ணீரோ பேயொடு காட்டி லாடும் பிரானைய பேதமாய்ப் பாரீரோ. 5
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ـیے
ஆன்மா நித்தியம்
ஐம்புலன் வழிபோம் ஆசை தனைத்தடுப்போம் ஆன்மா நித்தியம் என்று படிப்போம் வெம்பகையை வென்று வெற்றி எடுப்போம் வேறுபொருள் இல்லை என்றுதிடப் படுவோம் நம்பிக்கை யென்னும் கையைநாம் நீட்டுவோம் நாதாந்த நிலையில் நாம்முடி சூட்டுவோம் சும்மா இருக்குஞ் சுகத்தினைக் காட்டுவோம் சுருதி நிலையில் நிற்குஞ் சுகங்காட்டுவோம் இம்மை மறுமைதனை யிங்கு காட்டுவோம் ஏகாந்த வெளியிலே நம்மை நாட்டுவோம் தம்மைத் தாமாக உய்யவழி காட்டுவோம் சஞ்சலமில் லா வழியில் நம்மை நாட்டுவோம் தும்பிமுகன் பாதத்தைத் தோத்திரஞ் செய்வோம் சுவாமி தரிசனஞ் சூத்திரம் என்போம்.
நற்சிந்தனை 245
ஓம் தத் சத்
இருவருந் தேடிக் காணு இறைவ னென்போ
லுருத்தாங்கி இணங்கி யெவரும் வணங்கும் நல்லையில் இன்ன
னிவனென்ன ஒருவரு மறியா தோடியுலாவி யுவகை பூத்த
முகத்தினராய் ۔•
ஒருநா ளென்றனை யுற்று நோக்கிஓர் பொல்லாப்பு
மிலையென்று کیمیایی அருவமுங் காட்டி யுருவமுங் காட்டி யப்பாற் -- கப்பாலாம்
அருள்நிலை காட்டிக் காட்டிக் காட்டி யந்த மாதி
s யில்லாச்
சொரூபமுங் காட்டிச் சும்மா விருக்கும் சூட்சத்தில்
மாட்டி விட்டான்
துன்ப மிறந்தன வின்ப மிறந்தன சோதிசோதி
சிவசோதி. 1
சிவத்தினை வளர்க்கும் பாக்கிய மெமக்குச் சித்தித்த
திணிமேலே தெய்வம் வேறே யுண்டென வெண்ணுஞ் சிந்தையு
மிறந்ததுவே
அவத்தினிற் செல்லும் மனத்தினை வெல்வோம்
ஐம்பொறி வழிச்செல்லேம் அழியா மெய்ப்பொரு ளாகிய ஆன்மா அறிவோம்
w நாம் நன்ருய் தவவழிச் செல்வோம் குருமொழி கொள்வோம்
தன்னைத் தானறிவோம் சாந்தம் பொறுமை யேய்ந்த நற்பணி சந்தத
மணிந்துகொள்வோம் உவத்தலுங் காய்தலு மோடி யொளித்தன ஒன்றுங்
குறைவில்லேம் உண்மை முழுதும்நீ ஓதுக தினமும் ஓம்தத் சத்ஓம். 2
Page 128
246 நற்சிந்தனை
கதிரவ னெழுமுன் காலை யெழுந்து கைகால் முகங்கழுவு கடிமல ரெடுத்து மாலை தொடுத்துக் கடவுளைப்
பூசனைசெய் அதிர வராமுன் மனத்தினை யடக்கி ஐம்பொறி
- வழிச்செல்லாது ஆண்டவன் திவ்விய பாதத்தை வேண்டி ஆசையை
வென்றிடலாம் முதிர முதிர முழுவது முண்மை யெனமுனி
சொன்னமொழி முகமுக மாகக் கண்டு தெளிந்து முத்தியிற்
சேர்ந்திடலாம் இதிலே ஐயமில்லை யில்லை யெல்லா மவன் செயலே இரவும் பகலு மிதய வெளிக்குள் ஏத்துக ஒம்தத்சத், 3
எண்ணி யெண்ணிப் பணிவார் நெஞ்சே யீசன்
உறைகோயில் இருந்துங் கிடந்தும் நடந்துந் தொடர்ந்தும்
ஏத்திப் பணிவோமே புண்ணிய பாவ மிரண்டுங் கற்பனை போக்கொடு
வரவில்லாப் பொருளே நாங்கள் அருள்கொண் டறிநீ புத்தியை
நாட்டாதே மண்ணில் வந்து பிறந்ததும் வாழ்ந்ததும்
மாமா யையிதனை மாதவ ரறிவார் மற்றவ ரறியார் மதியா தேயிதனை எண்ணில் காலம் உயிரோ டிருப்போம் ஏதுக்கு
மஞ்சாதே இயைந்த படிநீ நடந்துகொ ளென்றும் ஏத்துக
ஓம்தத் சத் , 4
நற்சிந்தனை 247 தன்னைத் தன்னு லறிந்திடடா
அன்பேசிவ மறிந்திடடா அதுவே நாமெனத் தெரிந்திடடா என் புருகப் பாடிடடா எழுந்திரடா நடந்துவாடா எல்லாஞ்சிவ ரூபமடா.
விண்ணைப்போல விளங்கிடடா வீணுசையை விட்டிடடா கண்ணைப்போலக் காத்திடடா கருமத்தைச் செய்திடடா கலங்காமல் நடந்திடடா இலங்கையெங்கள் நாடிதடா. 2
பெண்ணுமாணு மில்லையடா பேதா பேத மில்லையடா மண்ணும்விண்ணுமொன் ருச்சுதடா மகத்துக்களின் பேச்சிதடா மகிழ்ந்துவாடா நடந்துவாடா மாநிலத்தை யாள்வோமடா . 3
தன்னைத்தன்னு லறிந்திடடா தானேதானென் றிருந்திடடா அன்னைபோல வந்தானடா அழகாரும்நல் லூரிலடா பின்னைப்பேச் சில்லையடா பெருமைசிறுமை தொல்லையடா. 4
உறுதி தருவது சிவமே உள்ளத் துணர்வது சிவமே பொறுதி தருவது சிவமே பூரண மானது சிவமே
இறுதி யிலாதது சிவமே என்னை யுடையது சிவமே கருத வினியது சிவமே காசினி யெல்லாஞ் சிவமே,
Page 129
248 நற்சிந்தனை ஒரு பொல்லாப்புமில்லை
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் உண்மை
முழுதுமென்பான் ஒருவருக்குந் தெரியாதென்பான்-சின்னத்தங்கம் ஓவியம்போல் இருந்தானடி. 4. l
அப்படியே யுள்ளதென்பான் ஆரறிவா ரென்றுசொல்வான் செப்படி வித்தையென்பான்-சின்னத்தங்கம் செல்லப்பன் என்னுஞ்சீமான். 2
கந்தைத் துணியணிவான் கந்தன்திரு முன்றில்நிற்பான் வந்தாரைப்போ வாரைவாயில் - சின்னத்தங்கம் வந்தபடி யேசிடுவான். " 3 سے
அப்படியே யுள்ளதென்பான் அங்குமிங்கு மாயலைவான் செப்படி வித்தையென்பான்-சின்னத்தங்கம் V தேரடியி லிருப்பான டி. - 4
சாதி சமயமென்னுஞ் சங்கடத்துக் குள்ளாகான் சேதியொன்றுஞ் சொல்லகில்லான்-சின்னத்தங்கம் சித்தப் பிரமையென்பார் (எல்லோரும்). 5
நீதி யநீதியென்னும் நிலைமையொன்று மில்லாதான் மாதிரிகள் ஒன்றுஞ்செய்யான்-சின்னத்தங்கம் மத்தனைப்போல் திரிவான டி. 6
நீறு மணியான் நெற்றியிலே பொட்டுமிடான் கூறிய தைக்கூருன்-சின்னத்தங்கம் குணமொன்று மில்லான டி. 7
ஆறுதலா யிருமென்னன் ஆணவத்தை நீக்குமென்னன் மாறுபாடாய்ப் பேசிடுவான்-சின்னத்தங்கம் மதியிழந்தான் என்பாரடி. 8
நற்சிந்தனை 249
சின்னத் தனமாய்த் தெருவாலே போவாரை என்னப்பன் பேசிடுவான்-சின்னத்தங்கம் - இவன்விசரன் என்பாரடி h 9 உல்லாச நடையனடி ஊரூராய்த் திரிவனடி எல்லோரு மிவனைக்கண்டு - சின்னத்தங்கம் ஏளனஞ் செய்வாரடி. 10
பத்துப்பாட்டுப் படிப்போரும் கேட்போரும் பாரினிலே வித்தகராய் வாழ்ந்துபின்னே - சின்னத்தங்கம் விதேகமுத்தி சேர்வாரடி. 11
அங்கு மிங்கு மெங்கும் ஓடாதே
அங்கு மிங்கு மெங்கு மோடாதே
ஆன்மாநித் தியமதைத் தேடாதே. பொங்கும் காமக் குரோதமதம் போக்காயோ பூரண நிட்டையிலே தேக்காயோ. - 2 தங்குஞ் சிவயோ கத்தைத் தேராயோ தன்னைத்தன் ஞலறியப் பாராயோ . 3 மங்கள மான வார்த்தை பேசாயோ மன்னுயிரைத் தன்னுயிர்போற் பாராயோ . 4 உன்னை யுனக்கொரு போதும் ஒளியாதே ஒருபொல் லாப்புமில்லை யறிவாயே. 5 செந்நெலுடன் கன்னல் எங்கும் மல்கும் சீர்பெருகும் நல்லூரில் கல்லும். 6 கரைய வொருசொற் சொல்லுஞ் செல்வன் கழலடியை மறவாமற் சொல்லு, 7
செல்வம் அது பெரிய செல்வம் சிவசிவ என்றுநீ சொல்லு , 8 துள்ளும் மனத்தை யென்றும் வெல்லு சும்மா விருக்கும்நிலை நில்லு. 9
Page 130
250 நற்சிந்தனை Guoli Liquiffe,6ir Qib
கடவுளை யெங்குங் கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம் காமக் குரோத மோகம் நீக்குவர்
மெய்யடியார்கள் ஓம். 1
திடமுடன் தியானஞ் செய்து களிப்பார்
.” . மெய்யடியார்கள் ஒம்
தீவினை நல்வினை கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம். 2
படமுடியாத துயரம்வரினும் கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம்
பாரும்விண்ணு மொன்ருய்ப் பரவுவர்
மெய்யடியார்கள் ஒம், 3
நடமிடுந் திருவடி கண்டு களிப்பார்
மெய்யடியார்கள் ஒம்
நமச்சிவாய வாழ்க வென்று நவில்வர்
மெய்யடியார்கள் ஓம். 4
ஆதியு மந்தமும் நமக்கிலை யென்பார்
மெய்யடியார்கள் ஓம் அன்புசெய் பத்தரை யென்றும் மறவார்
சிவனடியார்கள் ஒம். 5
சாதி சமயப் பற்றினை விட்டார்
மெய்யடியார்கள் ஒம்
சந்ததம் மோன நிலைதவ ருதார்
மெய்யடியார்கள் ஒம். 6
மாதிரி யொன்றுஞ் செய்யா ருலகில்
மெய்யடியார்கள் ஒம்
மன்ன இளமை யென்றும் மகிழார்
மெய்யடியார்கள் ஓம். 7
நற்சிந்தனை 251
ஒதி யோதி யுன்மத்த ராவார் *
மெய்யடியார்கள் ஓம் உண்மை முழுதும் என்று சொல்வார்
மெய்யடியார்கள் ஒம் . 8
ஆணும் பெண்ணு மலியு மறியார்
. மெய்யடியார்கள் ஓம் அரகர சிவசிவ வென்று மகிழ்வார். . . . . .
சிவனடியார்கள் ஒம். 9
காணுங் கண்ணிற் கலந்த தென்பர்
சிவனடியார்கள் ஒம்
கங்குல் பகலற்ற கரட்சியைக் காண்பார்
சிவனடியார்கள் ஓம். 10
பேணும் பிறப்பிறப் பில்லை யென்பார்
மெய்யடியார்கள் ஒம் பேயர் பித்தர் போல விருப்பார்
மெய்யடியார்கள் ஒம், 11
நாணும் நன்னெஞ்சில் வஞ்சகந் தீர்ப்பார்
மெய்யடியார்கள் ஒம் நாதன் நாம நமச்சி வாயவென்பார்
மெய்யடியார்கள். ஓம், 12
ஆவதும் மழிவதும் இல்லை யென்பார்
- மெய்யடியார்கள் ஒம் அஞ்சும் மூன்று மொன்ரு யறிவார் . .
மெய்யடியார்கள் ஒம், 13
போவதும் வருவது மில்லை யென்பார்
மெய்யடியார்கள் ஒம் புன்னெறி செல்லும் மனத்தை வெல்வார் ”
14 .மெய்யடியார்கள் ஒம் ۔۔۔۔
தேவரும் முனிவருஞ் சித்தரு மறியார்
மெய்யடியார்கள் ஒம்
சிவசிவ வென்று தினமுந் துதிப்பார்
மெய்யடியார்கள் ஓம். 15
Page 131
252 நற்சிந்தனை
தேவ தேவனை யென்றுந் துதிப்பார்
சிவனடியார்கள் ஒம்
தீவினை செய்வார் தம்மையு மிகழார்
சிவனடியார்கள் ஒம், 16
ஐம்பொறி வழிபோ யவனியி லலையார்
மெய்யடியார்கள் ஒம் ஆணவந் தன்னை யழித்திடு வார்கள்
மெய்யடியார்கள் ஓம். 17
ஐந்து மடக்கா வறிவு பெற்ருர்
மெய்யடியார்கள் ஓம்
ஆசை வழிபோய் மோசம் போகார்
மெய்யடியார்கள் ஓம். 18
வந்தது போனது மனத்தே வையார்
மெய்யடியார்கள் ஓம்
வாணுள் ஆசை, பேணு திருப்பார்
மெய்யடியார்கள் ஓம். 19
நைந்துநைந் துருகி நமனை வெல்வார்
சிவனடியார்கள் ஒம் நாளுங் கோளும் மனத்தில் வையார்
சிவனடியார்கள் ஓம். 20
அந்த விதமே தோற்றின னுலகில்
அறிவார் சிவதொண்டன் ஒம் அவனியில் நாளும் வளர்மதி போல
வாழ்க சிவதொண்டன் ஓம். 21
எந்தச் செயலுஞ் சிவன்செயல் என்பார்
சிவனடியார்கள் ஒம் எளிதா யெவர்க்கு மின்னுரை சொல்வார்
எழிலார் சிவதொண்டர் ஒம். 22
நற்சிந்தனை 253
காயமே கோயில்
நிலைமண்டல ஆசிரியப்பா காயமே கோயில் கடிமன மடிமை நேயமே பூசை நீயிதை யறிந்தே உபாயமாய் நடந்தா லுனக்கொரு குறைவிலை ஆயநான் மறையும் இப்படி யறையும் எள்ளள வேனும் பிரியா இறைவனைக் கள்ள மனத்தவர் காண மாட்டார் உள்ளமே கோயில் உயிரே விளக்கு உள்ள வுள்ள உண்மை யுதிக்கும் பகைவ ருறவோ ரென்று பகரும் வகையை நீக்கிச் சிவசிவா வென்ன உவகை யுன்னை விழுங்கிக் கொள்ளும் தகைமை யிதுவே சாதனை செய்யே சாதனை செய்வோர் தன்னை யறிவார் பேதபுத் தியைப் பெம்மா னருளால் நீர்மேற் குமிழியில் வாக்கை வாழ்வே ஆதலா லன்பர் பணியே யறமாம் பணியப் பணியப் பாவ மகலும் அணிமா வாதியாம் சித்திக ளெய்தும் பிணியு மகலும் பேரின்பம் வாய்க்கும் துணிவுண் டாகும் சொல்லொணுச் சுகமே எல்லா வுயிரையுஞ் சிவனென வெண்ணி நல்லறம் புரிவோர் நாடுவார் பரகதி அல்ல லறுப்பார் ஆனந்தம் பெறுவார் தில்லை நடேசனைச் சேருவார் திண்ணமே உடல்பொரு ளாவியுன் னடைக்கல மென்றே திடமுட னெப்புக் கொடுப்போர் தமக்கு நடராஜ வள்ளல் நளினபொற் பதத்தை உடனே கொடுக்கு முண்மை யிதுவே ஒடவும் வேண்டாம் உலரவும் வேண்டாம் பாடவும் வேண்டாம் பணியவும் வேண்டாம் தேடவும் வேண்டாஞ் சிந்திக்க வேண்டாம் ஆடகப் பொன்னடி சூடிய காலை ஒழுக்க முயிரினு மோம்பப் படுமென வழுத்திய பெரியவன் மறைமொழி தன்னை அழுத்த வழுத்த ஆனந்த வீசுரன் வழுத்தொணு மலரடி நாடிவாழ் வோமே
Page 132
254 - நற்சிந்தனை
மோன நிலை நீங்காதே
அங்கிங் கலையாதே-அகப்பேய் ஆண்டவன் அருள்பெறவே எங்குமவன் காணடி-அகப்பேய் ஏத்தியேத்தித் துதிப்பாய்.
பொன்னுசை மண்ணுசை-அகப்பேய் புத்தி சிதைக்குமடி மன்னன மன்னவனை - அகப்பேய் . மனத்து நினைத்திடடி. 2
கொஞ்சம் கொஞ்சமாய் மனத்தைக் கொண்டுவா சித்தப்படி
அஞ்சாதே யொருவருக்கும் - அகப்பேய்
ஆண்டவன் உன்னுளடி.
துஞ்சாதே தூங்காதே - அகப்பேய் துரியநிலை சாரடி ஒன்றுமற நில்லடி-அகப்பேய் ஒமென்று செபித்திடடி. 4.
பண்டுசெய் வல்வினைநோய்-அகப்பேய் பாரில் பறக்குமடி மிண்டு மனம்விடடி-அகப்பேய் வேதாந்த நெறிநில்லடி. 5
என்று மிருந்தபடி-அகப்பேய் இருந்தபொருள் நீதான்டி குருநாதன் சொல்லை - அகப்பேய் தூய்மையாய்ப் போற்றிடடி. 6
தானன தத்துவன - அகப்பேய் சார்ந்து நீ வாழ்ந்திடடி மோனநிலை நீங்காதே - அகப்பேய் முத்தியுன் கைவசமே. 7
நற்சிந்தனை 255
நன்றென்றுந் தீதென்றும்-அகப்பேய் நாட்டிமலை யாதேயடி கொன்றென்றும் புசியாநே- அகப்பேய் குருபாதம் போற்றிடடி. 8
கண்டாரு மில்லையடி அகப்பேய் காணுரு மில்லையடி முன்னுமில்லைப் பின்னுமில்லை-அகப்பேய் மூவரில்லைத் தேவரில்லை. 9
கஞ்சாஅபின் தின்னதே-அகப்பேய்
கருணை அகத்தேயடி பஞ்சாட்சரத்தை நெஞ்சில்-அகப்பேய்
பக்குவமாய்ப் போற்றிடடி. 10
குரு பக்தி
குருபக்தி யேபெரும் பேறு கொண்டாடிக் கொண்டாடி ஆறு. தரும நிலையிலே ஏறு சங்கர சிவனேயென்று கூறு. : 2 ஒருபொல்லாப்பு மில்லையென்று தேறு உண்மை முழுதுமென்று கூறு 3
திருவருளை நாடிநீ செல்லு சிவாயநம வென்றுநீ சொல்லு, 4 தன்னைத்தன் ஞலறிய வேண்டும் சாந்தம் பொறுமையுன்னில் தோன்றும் . 5 பின்னை யுனக்குத்துணை நீயே பேதா பேதமெல்லாம் அணையே. 6
முன்னைவினை யென்றும்நினை யாதே மூவாசை போக்கநிலை வாயே. 7
Page 133
256
w நற்சிந்தனை ஆனந்தக் கூத்தாடினன்
பல்லவி ஆனந்தக் கூத்தாடினன் தொண்டன் ஆனந்தக் கூத்தாடினன் தொண்டன்.
அநுபல்லவி தானதாம் என்றுபாடி சாந்தம் பொறுமைகூடி. (ஆனந்த)
சரணங்கள்
மோனந் தனைத்தேறி
முழுதுமுண்மை யென்றுகூறி. (ஆனந்த) 1 வேதாந்த நிலைமேவி . . வேறில்லை யெனக்கூவி (ஆனந்த) 2 தாதா தரிகிடதோம் ஜனதஜனத தீமென்று. (ஆனந்த) 3
ஒடுங்குவதாங்கே
உலக முதித்தது மாங்கே-இந்த உலக முதித்து ஒடுங்குவ தாங்கே. . . . I சலன முதிப்பது மாங்கே-இந்தச் சலன முதித்து ஒடுங்குவ தாங்கே. s நீர்நிலம் தீகாற்று மாங்கே-நெடு வானெடு சந்திர சூரியர் ஆங்கே. 3. சீர்பெறு சித்தரும் ஆங்கே-நல்ல தேவரும் முனிவரும் பக்தரும் ஆங்கே.
இல்லையுண் டென்பது மாங்கே-எங்கும் ஏது மறியாமல் நிற்பது மாங்கே. 5 வல்லாரும் மாட்டாரும் ஆங்கே-வளம் வாய்ந்த இலங்கையில் வாழ்வாரும் ஆங்கே, 6
நற்சிந்தனை 257
அவனே நான் இராகம்-பைரவி. தாளம்-ஆதி
su sübsbwâ
அவனேநா னென்று சொல்லித் தியானஞ்செய்
வாய்தினமும் ஆசையெல் லாமொழியும் ஈசனருள் பொழியும்
அநுபல்லவி
அஞ்சாதே அஞ்சாதே பஞ்சாய்ப் பறக்கும் பாவம் பஞ்சாட்சரத்தை நெஞ்சில் துஞ்சாமலே செபி. (அவனே)
சரணங்கள்
கொஞ்சங் கொஞ்சமாய் மனத்தைக்
கூடுமட்டு மடக்கு குருநாதன் திருவடியைக் கும்பிட்டு நீதொடக்கு கோபம் பொருமை தள்ளு கொலை களவை எள்ளு கூடிப் பாடி யாடு சிவனடி யாரோடு. (அவனே)
ஆதியோ டந்தமில் லாதவான் மாவென்று அடிக்கடி நீபடி துடிதுடிப் பாய்நடி அயலுனக் கில்லை ஆரறி வார்நல்லை ஆசான் சொன்னமொழி முழுவது முண்மை. (அவனே)
பலபல வானசித்தி பாரினிற் கைகூடும் பத்திநெறி விட்டிடாதே பத்தர்சொல்லைத் தட்டிடாதே பைரவி ராகம்பாடிப் பணிசெய்யும் யோகசுவாமி பாவமெல் லாமோடப் பாரினில் ஈடேற. (அவனே)
17
Page 134
258 நற்சிந்தனை எல்லாகும் வாழியடா
ஒருபொல் லாப்பு மில்லையடா-தம்பி உண்மை முழுதும் அறிந்திடடா வருவதைக் கண்டு மகிழாதே-தம்பி வஞ்சகப் பேச்சைத் தழுவாதே. -
கருமத் தைக்கை நெகிழாதே-தம்பி கவலை கொண்டு கலங்காதே தரும நெறியில் வழுவாதே-தம்பி தன்னை யறிய எழுவாயே. 2
அகர முதல எழுத்தெல்லாந்-தம்பி அதுபோல் ஆதி யுலகுக்கடா பகரில் அவனே ஒருவனடா-தம்பி பலபல வாகச் சொல்வாரடா. 3
கற்றதனற் பயன் இல்லையடா-தம்பி கழல் அடியிணை கண்டிடடா வெற்றிப் பேச்செல்லாம் விட்டிடடா-தம்பி விதியை மதியால் வென்றிடடா. 4
பொறி வழியினிற் செல்லாதே-தம்பி போனதை யெண்ணிக் கொள்ளாதே கிறியுங் கீழ்மையுஞ் செய்யாதே-தம்பி கெட்டவர் மேல்நட்பு வையாதே. 5
புத்தியை ஒன்றிலும் நாட்டாதே-தம்பி புகழும் இகழுஞ் சூட்டாதே - எத்தொ ழிலைநீ செய்தாலுந் -தம்பி
ஈசனுக் கர்ப்பணம் பண்ணிடடா. 6
வித்தாரப் பேச்சையும் விட்டிடடா - தம்பி விருப்பு வெறுப்பை யகற்றிடடா செத்தாரைப் போலத்தி ரிந்திடடா -தம்பி சீவன் சிவனென்ற நிந்திடடா, 7
நற்சிந்தனை 259
நிகரொ ருவரும் இல்லையடா-தம்பி நின்ற நிலையிற் பிரியாதே
ஆன்மா நாங்கள் அறிந்திடடா தம்பி ஆக்கை நாமன்று தெரிந்திடடா- 8
வீண்பா வனையெல்லாம் விட்டிடடா-தம்பி வேத நெறியிலே தொட்டிடடா காண்பான் காட்சியு மில்லையடா-தம்பி காணப் படும்பொரு ஸ்ரில்லையடா. 9
வாழி குருநாதன் வாழியடா - தம்பி வாய்மை யடியாரும் வாழியடா கேளிருஞ் சுற்றமும் வாழியடா -தம்பி கேட்டவ ரெல்லாரும் வாழியடா. 1. )
--a
பார்க்கு மிடமெங்கு மந்தப் பரமவஸ்து பாவியென்று சொல்லாதே எவரையும் - நீ பார்க்கு மிடமெங்கு மந்தப் பரமவஸ்து கூவியழைத் திடுவாய் என்றுஞ்-சிறு குழந்தையைப் போலநின்று கும்பிட்டுக் கொள்வாய் கோபம் பொருமையை நீதள்ளு-பொல்லாக் குடிவெறியை மோகத்தை நீயெள்ளு தாபதர்தம் சங்கத்தை நீநாடு-தன்னைத் தன்னு லறிந்த பெரியோரைக் கூடு குருவான நல்லூரிற் செல்வன்-உள்ளங் குளிர வைத்தான் நாணுெரு புல்லன் வெட்ட வெளியில் என்னை விட்டான்-நல்லூர் வீதியிலே தன் கரத்தால் தொட்டான் அட்டாங்க யோகமெல்லாம் விட்டேன்-அங்கே அடியார்க் கடியனய் ஆட்பட்டேன்.
Page 135
260 நற்சிந்தனை
தங்கப்பாட்டு
காயமே கோயிலடி தங்கமே தங்கம் கடவு னிருப்பிடங்காண் தங்கமே தங்கம் மாயம னத்தைவெல்லு தங்கமே தங்கம் மற்றுப்பற்றை நீக்கிவிடு தங்கமே தங்கம் உபாய மதுவாகுந் தங்கமே தங்கம் உண்மை முழுதுமடி தங்கமே தங்கம் ஒருபொல்லாப்பு மில்லையடி தங்கமே தங்கம் உறுதி யெழுதிக்கொள் தங்கமே தங்கம் அப்படி யுள்ளதடி தங்கமே தங்கம் ஆரறிவார் பாரினில் தங்கமே தங்கம் எப்பவோ முடிந்ததடி தங்கமே தங்கம் ஏகாந்த மாயிரடி தங்கமே தங்கம் செப்ப முடியாதடி தங்கமே தங்கம் செல்லப்பன் திருவாக்குத் தங்கமே தங்கம் ஒப்பற்ற வாக்கடி தங்கமே தங்கம் உடம்பை மறந்துவிடு தங்கமே தங்கம் அப்பிலுப்புச் சேர்ந்தாற்போல் தங்கமே தங்கம் ஆண்டவனில் கரைந்துவிடு தங்கமே தங்கம் வெப்பந்தட்ப மில்லையடி தங்கமே தங்கம் வேதாந்த நெறிநில் தங்கமே தங்கம் அப்பனு மம்மையுந் தங்கமே தங்கம் அகத்திலே வாழ்கின்ருர் தங்கமே தங்கம் ஒப்புரவாய் நடந்திடடி தங்கமே தங்கம் ஒருகுறையு மில்லையடி தங்கமே தங்கம் கைப்போது மலர்கொண்டு தங்கமே தங்கம் கழலடியைப் போற்றிடடி தங்கமே தங்கம் முப்போதும் முடிசாய்த்துத் தங்கமே தங்கம் மூர்த்தியைப் பணிந்திடடி தங்கமே தங்கம் அப்போதைக் கப்போது தங்கமே தங்கம் அருள்வடிவங் காட்டுவான் தங்கமே தங்கம் தப்பேதுஞ் செய்யாதே தங்கமே தங்கம்
நற்சிந்தனை 261
தனித்திருந்து பார்த்திடடி தங்கமே தங்கம் அப்பாலுக் கப்பாலே தங்கமே தங்கம் ஆருமறி யாரடி தங்கமே தங்கம் அப்புசுவாமி தன்சொல்லைத் தங்கமே தங்கம் அகத்தில் மற வாதேயடி தங்கமே தங்கம்
சிவ சிவா
சீரான வடியரொடு கூடு - சிவசிவா செல்லப்பன் தந்த மந்திரம் நாடு. (ரோ) ལ་ ஆராய்ந்து கருமத்தை யாற்று - சிவசிவா
அனைவரையு மன்பாய் உலகத்தில் போற்று. (சீரா) ஆரென்ன சொன்னலும் வாது-சிவசிவா - ஆணவத்தை யுண்டாக்குந் தீது, (சீரா)
பாரெல்லாம் பகைத்தாலுஞ் சிறிதும் - சிவசிவா பதையாம லிருப்பதே மிகவும் பெரிது. (gèrnr)
3.
சீவனே சிவமென்று பெரியோர் -சிவசிவா செப்பிய மொழியை ஒப்புக்கொள் ளறிவாய். (சீரா)
ஆவது மழிவதும் உண்டோ - சிவசிவா ஐம்புலனை வென்றவர்கள் நன்முக அறிவார். (சீரா)
கருமஞ் சிதையாமல் உலகில்-சிவசிவா கண்ணுேட வேண்டும்நீ கருது. (gitnr ,
அருமையி லருமையெங்க ளான்மா--சிவசிவா அதையறிந்து வாழ்வதே மாண்பாம். (சீரா) அங்கிங் கென தபடி நாங்கள்--சிவசிவா அம்புவியில் வாழ்வதே பாங்கு. , (சீரா)
காங்குநீ யங்குநா னென்று-சிவசிவா எங்கள்குரு ஒதினுன் நன்கு. m (go trT).
Page 136
262 நற்சிந்தனை
மெய்ப்பொருளை ஒன்றெனக் கும்பிடுவாய் இராகம்-கமாஸ். தாளம்- ஆதி
பல்லவி ஒன்றெனக் கும்பிடுவாய் மனமே யிந்த உலகுயிர் பரமென ஒளிரும்மெய்ப் பொருளை
- ஒன்றெனக் கும்பிடுவாய்.
அநுபல்லவி உண்டில்லை யென்றெவரும் ஒதமுடி யாததாய் பண்டுமின்றும் என்றும் அப்படி யுள்ளதாய்
-ஒன்றெனக் கும்பிடுவாய்.
சரணம் V நன்றுக்குந் தீதுக்கும் நடுவாய் உள்ளதாய் ஞான யோக தியானத்தில் வருவதாய் கன்றிய காமனக் கண்ணுல் எரித்ததாய் கால காலனைக் காலால் உதைத்ததாய்
- ஒன்றெனக் கும்பிடுவாய்"
எங்கு தேடினுய் இறைவனை
பல்லவி
எங்குதேடினய் இறைவனைநீ இங்கு காணுமல் (எங்கு)
சரணங்கள்
அங்குமிங்கும் ஒடியே அவதிப்படுகிருய் பங்குபோட்டுப் பார்க்கிருய் பரிதவித்து வாடுகிருய் (எங்கு) எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றுவாதுபேசுகிருய் சாதி சமயமென்று சண்டைப் படுகிருய் தத்துவத்தை யறியாமல் சங்கடப்படுகிருய் ஒதியு முணராமல் உண்மை யறிந்தவன்போல் ஊரெங்குஞ் சென்றுநீ பிரசங்கம் பண்ணுகிருய் எங்கு)
நற்சிந்தனை
சற்குரு தரிசனம்
garnt sub - FrLDIt தாளம்-ஆதி
பல்லவி
சற்குரு தரிசனம் சகலபாக்கிய சுகம்
தாளினை பணிநீ தினம். - அநுபல்லவி தாந்தன்னை யறியுமே சாந்தமுஞ் செறியுமே
சரணங்கள் பேரன்பு பெருகிவிடும் பேதைமை கருகிடும்
பிரியாப் பிரியமெல்லாம் பேசாம லகன்றிடும்.
ஆகம விதிமுறை அகத்தினில் பொருந்திடும் ஆசாபாச மகலும் நேசானு பூதிவரும். தேவாதி தேவர்களுஞ் செய்வார் பணிவந்து
சீவன் சிவனென்னுந் தெளிவுமுண் டாகுமே.
ஆநந்தக் களிப்பு
சங்கர சங்கர சம்பு-சிவ சங்கர சங்கர சங்கர சம்பு.
ஒருபொல் லாப்பு மில்லையெனவே-முன்னுள்
ஒதினன் உண்மை முழுது மெனவே பருவத்தில் மழைபெய்தாற் போல-ஐயன் பந்தத்தை நீக்கி வளர்த்தானன் பாலே அருவமு முருவமு மானன்-என்னை ஆட்கொள்ள வந்தான் நல்லூரிற் ருஞய் கருவிக ரணங்க ளெல்லாம்-தத்தம் கருமத்தை விட்டுக் காவலுக் குள்ளாய் வருவதும் போவது மின்றித்-தூய மெளன நிலையில் நிலைத்தது தானே ஆரு மறியா ரெனவே-அப்பன் அப்படி யுள்ளதென் முனறி வாயே.
263
(சற்குரு)
(சற்குரு)
(சற்குரு)
(சற்குரு)
(சங்கர)
(சங்கர)
(σε Ιάι 5μ)
(சங்கர) (சங்கர)
(சங்கர :
Page 137
264 நற்சிந்தனை சும்மா விருந்துபார் தம்பி
நல்ல சமயமிது தம்பி w நம்மைநா மறிந்துகொள்ளத் தம்பி. எல்லார்க்கும் நன்மைசெய் தம்பி இறைவனுன் னிடமுண்டு தம்பி. 2 கொல்லாதே கோபம்வை யாதே
கும்பிடு காலைமாலை தம்பி. 3.
சொல்லாலே பயனில்லைத் தம்பி சும்மா விருந்துபார் தம்பி. 4 கண்ணல்லக் காதல்லத் தம்பி கண்ணுக்குக் கண்ணெடா தம்பி. 5 எண்ணிலடங் காதெடா தம்பி எல்லா மதுவெடா தம்பி. 6
மண்ணுசை வையாதே தம்பி மற்றிரண்டும் அப்படியே தம்பி. 7
ஒன்றுக்கு மஞ்சாதே தம்பி ஒடி ஒளியாதே தம்பி. 8
பண்டுமின்றும் உள்ளதெடா தம்பி பாடிப் பணியெடா தம்பி. 9
அகம்பிர மாஸ்மியென்று தம்பி அனுதினமுஞ் சாதனைசெய் தம்பி. 10
இகலோகம் பரலோகந் தம்பி இங்கேரீ கண்டுகொள்வாய் தம்பி, 11
நற்சிந்தனை 265
அங்கும் இங்கும் எங்கும் நான்
அங்கும் இங்கும் எங்கும் நான் அதை யறியும் விசரன் நான் (1)
பங்கு போட்டு வணங்க மாட்டேன் பாவ புண்ணியம் அறிய மாட்டேன் (2)
மங்கள மாகப் பேச மாட்டேன் மாய வாழ்வை மதிக்க மாட்டேன் . (3)
பொங்கல் பூசை செய்ய மாட்டேன் போனதை யெண்ணிக் கலங்க மாட்டேன் (4)
மங்குவார் செல்வம் மதிக்க மாட்டேன் மாய வித்தை காட்ட மாட்டேன் (5)
சிங்கக் குட்டி போல நடப்பேன் தீயா ரோடு கூட மாட்டேன் (6)
எங்கும் என்றன் தங்கும் வீடு ஏற்ப திகழ்ச்சி என்ன மாட்டேன் (7)
சிங்களவர் தமிழரைக் காண மாட்டேன் சின்னம் ஒன்றும் போட மாட்டேன் (8)
தங்கப் பொம்மை போல விருப்பேன் சாம்ப சிவசிவ என்று சொல்வேன் w (9)
மங்கைமார் சூழ்ந்து கும்பிடும் நல்லூரான் என்னப்பன் செல்லப்பனை மறக்க மாட்டேன் (10)
Page 138
266 நற்சிந்தனை
ஆடு பாம்பே 8.
ஆடு பாம்பே பணிந்தாடு பாம்பே ஆன்மாநித் தியமென்று ஆடுபாம்பே
மாடுமக்கள் சுற்றமெல்லாம் மயக்க மென்றே மாதவர்தம் இயக்கத்தை மகிழ்ந்து கொண்டே தோடுடைய செவியனைத் தோத்திரஞ் செய்தே சும்மா விருந்துகண்ணைத் திறந்து கொண்டே
(ஆடு பாம்பே.) 1 வீடு நமக்கென்றுஞ் சொந்த மென்றே வீணசைப் படுவதெல்லாம் பந்தம் என்றே தேடும்பொரு ளெல்லாஞ்சிவ தொண்டுக் கென்றே தேசமெங்குஞ் சென்றுண்மை பேசிக் கொண்டே
(ஆடு பாம்பே.) 2 பாடு படும்போதும் ஆதிபதம் நினைந்தே பாடிப் பாடித் திருவருளைப் புகழ்ந்துகொண்டே ஒடு மிருநிதியும் ஒன்ருகக் கண்டே உண்மை முழுதுமென மன்ருடிக் கொண்டே
(ஆடு பாம்பே.) 3
திருவருள் கைகூடுது இராகம்-சாவேரி. தாளம்- ஆதி.
- . பல்லவி திருவருள் கைகூடுது சிந்தை களிகூருது
அநுபல்லவி ஒருவரும் எதிரில்லாத உண்மை முதிருது. (திருவருள்)
சரணங்கள் ஒன்ருே விரண்டோ வென்னுஞ் சந்தேகந் தெளியுது ஒம்சிவாய நமவென்ன உள்ளங் குளிருது. (திருவருள்)
அதிர வரும்நமனும் அஞ்சியே பணிசெய்யும் அஞ்சுவ தொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை. (திருவருள்)
நற்சிந்தனை 26 。 வரந் தருவார்
வருவார்வ ருவார்வரந் தருவார் சுவாமி
வஞ்சம்பொருமைகோபம் நெஞ்சினில் நீவையாதே (வரு) 1
ஒருவரு மிருவரும் மூவரு மானவர் ஓங்காரத் துட்பொருள் ஆகியே நிற்பவர் (வரு) 2
கருமத்தைச் செய்பலன் கருதாம லுலகத்தில் காயமே கோயிலாய்க் கண்டு வணக்கஞ்செய் (வரு) 3
தருமநெறி பிசகாமல் தாரணி தனில்வாழ் தன்னைத்தன் னலறியத் தியானத்தில் நீரூமுழ்கு (வரு) 4
மரும மறிந்தவர்கள் மண்ணிற்பிற வாரென்ற மகத்துக்கள் வாக்கியத்தை மறவாமல் நினைத்துக்கொள்
(வரு) 5
திருவாரும் நல்லூரில் செல்லப்பன் மாணக்கன் திருவாளன் சொன்ன சொல்லைச் சிந்திக்கச் சீவன்முக்தி
(வரு) 8
GTUIGLOTO &ğßgå GeisTuf6)
காயமொரு சித்திரக் கோயில் - அது கண்ணுதல்பெண் ணுமைவாழ் கோயில் மாய மெனமதி யாதே - அடடா மகத்துவஞ்சொல்ல மதிபோ தாதே தூய குருவரு ளாலே-நானும் சொல்லுவேன் கேள்மருள் போமே மாய னயன்மக பதியும்-அடடா மற்றுமுள்ள தேவர்களும் அரக்கர்களும் தேயுவுடன் வாய் வப்பு-மண்விண் சேர்ந்திருக்குஞ் சித்திரக் கோயில் ஆதித்தனுஞ் சந்திரனும் இங்கே-இன்னும் அளவற்ற அண்டங்களும் இங்கே வேதியருஞ் சூத்திரரும் இங்கே-விளங்கும் வேதமுஞ் சூத்திரமும் இங்கே. (காயமொரு)
Page 139
268 நற்சிந்தனை
ஆண்டவன் திருவடி இராகம்-தன்னியாசி. தாளம்-ஆதி
பல்லவி
ஆண்டவன் திருவடி வேண்டிக்கொண் டாலென்றும் ஆறுதல் உண்டாகும்.
அநுபல்லவி
காண்பதெல் லாம்நிலை யன்றெனக் காட்டும் காயத்தை வெல்லுமு பாயத்தை யூட்டும். (ஆண்டவன்)
சரணங்கள்
பஞ்சப் புலன்வழி போம்மனத் தினவெல்லும் பஞ்சாட் சரத்தை யனுதினஞ் சொல்லுங் கொஞ்சங்கொஞ் சமாகச் சினத்தினைக் கொல்லுங் குற்றம் யாவையுங் குணமாகக் கொள்ளும். (ஆண்டவன்)
பொன்னசை மண்ணுசை பெண்ணுசை போக்கும் போக்கு வரவற்ற பொன்னடி நோக்கும் எந்நாளும் சும்மா விருப்பதைக் காக்கும் ஏழைகள் பேரில் இரக்கத்தை யாக்கும். (ஆண்டவன்)
வெட்ட வெளியிலே நின்றிடர் தீர்க்கும் வேதாந்த சித்தாந்தம் ஒன்றென்று நோக்கும் கட்டுப் படாத மனத்தினைக் கட்டும் கங்குல் பகலற்ற காட்சியுண் டாக்கும். (ஆண்டவன்)
சுவாமி யோகநாதன் சொல்லிய பாட்டு சுந்தர மான வழிதனைக் காட்டும் ஆவி யுள்ளளவும் அமுதத்தை யூட்டும் அகம்பிர மாஸ்மி யெனமுடி சூட்டும். (ஆண்டவன்)
நற்சிந்தனை 269
uTij8LON GJ
ஐம்பூதம் நீவிரல்லீர் பாங்கிமாரே ஐம்பொறியும் நீவிரல்வீர் பாங்கிமாரே ஐம்புலனும் நீவிரல்லீர் பாங்கிமாரே அந்தக்கரணம் நீவிரல்லீர் பாங்கிமாரே 1
ஆதியந்த முங்கட்கில்லைப் பாங்கிமாரே ஆன்மாவே நீவிர்காணும் பாங்கிமாரே வந்ததிலும் போனதிலும் பாங்கிமாரே மனம்வையாமல் வாழ்ந்திடுவீர் பாங்கிமாரே.
2
ஆதார மாறும்விட்டுப் பாங்கிமாரே அப்பனை வணங்கிடுவீர் பாங்கிமாரே பாதார விந்தங்காண்பீர் பாங்கிமாரே பகலு மிரவுமில்லைப் பாங்கிமாரே. 3
முன்னிலை யுங்கட்கில்லைப் பாங்கிமாரே முனையில்வைத்துச் சீராட்டும் பாங்கிமாரே அன்னிய முங்கட்கில்லைப் பாங்கிமாரே ஆச்சரிய மொன்றுமில்லைப் பாங்கிமாரே. 4.
நீயேநீ யாயிருக்கப் பாங்கிமாரே நித்தியத்தைத் தேடுவதேன் பாங்கிமாரே தாயைப்போ லிருக்கவேண்டும் பாங்கிமாரே சங்கற்பம் விட்டிடுவீர் பாங்கிமாரே. 5 -
வையகம் முழுதும்நீங்கள் பாங்கிமாரே வார்த்தையொன்றும் பேசாதீர் பாங்கிமாரே கையில்நெல்லிக் கனிபோலப் பாங்கிமாரே கடவுள்நம் மிடமுண்டு பாங்கிமாரே. 6
Page 140
270. - நற்சிந்தனை
தாலாட்டு
அன்னைபிதாக் குருவாகி யடியேனை யாட்கொண்ட தன்னிகரில் லாதசற் குருவேநீ கண்வளராய்.
என்னையினிப் பிறவாமல் ஈடேற்றி வைத்தவனே உண்மை முழுதுமென்ற வுத்தமனே கண்வளராய்.
நாமறியோ மென்று நல்லூரிற் சொன்னவனே சேமமுட னென்னகத்தில் சீமானே கண்வளராய்.
அப்படியே யுள்ளதென வடிக்கடியே சொல்லியென்னை இப்படியில் வாழவைத்த எந்தையே கண்வளராய்.
காணுங் கண்ணிற் கலந்தவனே கார்வண்ணு நானும்நீயு மென்றுரைக்க நாணுவேன் கண்வளராய்.
சீராரும் நல்லூரில் தேரடியி லேயிருந்து
ஆரறிவா ரென்றுசொன்ன அப்பனே கண்வளராய்.
எப்பவோ முடிந்ததென எனக்குப தேசஞ்செய்த ஒப்பிலா மாமணியே யுறவோனே கண்வளராய்.
ஒருபிடி சோற்றுக்காய் ஊரூராய் நானலையத் திருவருள் தந்தவனே செல்லப்பனே கண்வளராய்.
எட்டாத கொப்பில் இருக்குமுனை யாரறிவார் மட்டில்லா மாமணியே மாதவனே கண்ாவளராய்.
கண்ணே யுறங்குறங்கு கார்வண்ணு நீயுறங்கு எண்ணேன் பிறதெய்வமென் னிதயத்தே நீயுறங்கு.
10
நற்சிந்தனை 271
சிந்தை தெளிந்தேனே
uნს6სიf:
தேடித் தேடித் திரிந்தலைந்து நான் சிந்தை தெளிந்தேனே.
சரணங்கள்
சிந்தையிற் கண்டேயென் தீவினை போச்சுது சிவபெரு மான்தன் னிணையடி வாய்ச்சுது இந்த வுலகம் கனவாய்ப் போச்சுது எல்லாம் என்தன் கைக்குள்ளே யாச்சுது. (தேடி) 1
கருவி கரணங்கள் ஒய்ந்து போச்சுது காணுத காட்சிகள் காண லாச்சுது ஒருவரு மெதிரில் லாமற் போச்சுது ஒஓ மாயை பறந்து போச்சுது (தேடி) 2
நில்லென்று சொல்லி மனத்தை நிறுத்துவேன் நேர்மை யான வழியிற் செலுத்துவேன் வல்லபம் பேசி யாரையும் வெல்லுவேன் வாணு ளாசை வீணெனச் சொல்லுவேன். (தேடி) 3
யாழ்ப்பாணத்தானே
அன்பி ஞற்பணிந் தேத்து மடியவர் துன்பம் யாவும் துடைத்தருள் செய்தவன் பொன்னர் மேனியன் போர் விடை யூர்தியன் இன்பந் தங்கும் யாழ்ப்பாணத் தானே.
ஆதி யந்தமும் அற்றவன் மெய்த்தவர் ஒதி நாளும் உவந்திடும் உத்தமன் பாதி மேனியில் பாவையை வைத்தவன் நீதி நின்றிடும் யாழ்ப்பாணத் தானே. இன்ன தன்மைய னென்றறி வொண்ணுன் முன்னர் இராவணன் முடிபத்தும் நெரித்தான் மன்னர் மன்னவன் மதிதவழ் சென்னியன் நன்ன லஞ்சேர் யாழ்ப்பாணத் தானே.
Page 141
272 நற்சிந்தனை சிவத்தியானஞ் செய்
சிவத்தியா னத்தைச் செய்யும் மாந்தர்கள் அவத்தில் பாரினில் அலைவ தில்லையே. I தவத்தை யாற்றிடில் தன்னை யறியலாம் அவத்தை யாற்றிடில் வீழ்வர் நரகினில். 2 தில்லை யம்பலத் தாடுஞ் சேவடி எல்லை யற்றநல் லின்பம் நல்குமே. உள்ளத் தூய்மையாய் ஒருவன் பாதத்தை உந்து வார்தமக் குணர்வு வந்திடும். 4. அல்லும் எல்லியும் இறைவன் பாதத்தைச் சொல்ல வல்லவர் தூய்மை யாவரே. 5 எங்கு மீசனை யேத்துவார் தம்மைப் பொங்கும் வல்வினை பொருந்த லில்லையே. 6 தெய்வ மொன்றெனத் தெரியும் மாந்தர்கள்
உய்வர் வையத்தில் யுண்மை உண்மையே. 7
எந்த நேரமும் இறைவன் பாதத்தைச் சிந்தை செய்திடில் தீரும் வல்வினை 8
அடியவர் பாதத் தன்பு செய்திடில் கொடிய கூற்றுவன் மடியுந் திண்ணமே 9
சீலஞ் சேர்சிவ ஞானத் தேனினை ஞாலத் துண்பவர் நமன வெல்லுவார். 10
வாலை வணக்கமாய் மகிழ்ந்த பாவினைக் காலையும் மாலையும் ஒதக் கவலைபோம்.
நற்சிந்தனை 27
நாதாந்த முடிவில் நடனம் புரிவது
கண்ணுலே காணுெணுதது கண்ணுக்குக் கண்ணுயுள்ளது காதாலே கேட்கொணுதது காதுக்குக் காதாயுள்ளது கையாலே எடுக்கொணுதது கைக்குக்கை யாயிருப்பது காலாலே நடக்கொணுதது காலுக்குக்கா லாயுள்ளது வாயாலே பேசொனதது வாய்க்குவா யாயிருப்பது மனத்தாலே எண்ணுெணுதது மனத்துள்மன தாயிருப்பது மூக்காலே முகரொணுதது மூக்குக்குமூக் காயிருப்பது முன்னெடுபின் னில்லாமுதலது மூப்புப்பிணியில்லாவடிவது தாயுந்தந்தையு மானவுருவது தானே தானுய்த்
தழைத்துநிற்பது عر ஒன்றிரண்டென ஒதவொண்ணுதது ஓவியராலும்
எழுதவொண்ணுதது நன்று தீதிற்கு நடுவாய்நிற்பது ஞானியர்
நெஞ்சில் என்றுமுள்ளது வேதாந்த சித்தாந்தம் வேருெளுதது
நாதாந்த முடிவில் நடனம்புரிவது.
ஏற்குமோ
பல்லவி ஏற்குமோ திருவருளுக் கேற்குமோ
அநுபல்லவி என்னையும் உன்னையும் வேருய் எண்ணிப் பணிவதற்கு (ஏற்குமோ)
சரணங்கள் கண்ணே கண்ணின் மணியே கனியே கனிரசமே எண்ணேன் பிறதெய்வம் எல்லாம் உனது செயல்
(ஏற்குமோ) விண்ணுதி பூதமே வேதவே தாந்தமே பெண்ணே ஆணே அலியே பேதமில்லாப் பெம்மானே
(ஏற்குமோ) 18
Page 142
274 நற்சிந்தனை ஆன்மா நீத்தியம்
ஆன்மா நித்தியம் ஆன பொருளென ஆசான் சொல்லக் கேட்டிருந்தோம் அதையே மறந்தோம் பிறந்தோம் இனிநாம் அதுவே நாமென எண்ணிடுவோம். அநுதினம் சாதனை செய்யச் செய்ய ஆனந்த மான மோட்ச வீட்டை w அடைவோம் இதிலோர் ஐயமும் இல்லை-ஆனல் அடக்கமும் பொறுமையும் வேண்டுதுமே. 2 குழந்தை யன்பொடு குருவின் பாதத்தைக் கும்பிடும் பாக்கியம் உண்டானல் கோடா கோடி பாவத்தைப் போக்கும் நாட்டத்தைச் சிவத்தில் வைப்போமே. 3 கெளரியை யிடத்தில் வைத்தவன் பாதம் கைதொழும் அடியார்கள் காலனை வென்று ஞாலந் தன்னில் கவலையை நீங்கி வாழ்வாரே. 4
அருள் நீ தா இராகம்-கரஹரப்பிரியா தாளம்-ஆதி பல்லவி அருள்நீ தாதாவே - எனக் கார்தான் துணை வேறே
அநுபல்லவி இருள்சேர் வினையாலே யிடரே படலாமோ. (அருள்) சரணம் ஆசாபாச தோஷம் நீக்கி-ஆரவார மார போத தந்திர ரூபனே-நேச வாசம் தந்து வீடருள் தேவ -தேவ சாலஞ் செய்யலாமோ அநுகூல கோல கால லீல விநோத-ராஜராஜநீ- வளர்த்தி வளர்த்தி உண்டி யூட்டி முழுதும் உண்மை. (அருள்).
நற்சிந்தனை
நானே கோனே
வானே தேனே
ஊனே மீனே
ஆனே கானே
ағлтC36рат ஆணே
தூணே ஊனே
பொன்னே
எண்ணே
நானே தானே
பூதம்
வேதம்
காதல் <翌应
d5 *;
Gl)
T
ல்
அறிவார்
275
நானே நீ
வஞ்சித்துறை
நீயே குருவே
ன்
மண்ணே
தெருளே
2-uGr வெண்மதி
அடல்விடை
கடலே
சதுரே பெண்ணே
துரும்பே உடையே
பொருளே எழுத்தே
நன்மதி தானே
பொறியும் வேதியன்
தி
f
ன்.
8
;
9
கருத்தும்
10
f
fi
Page 143
276 நற்சிந்தனை
அவரடியே தஞ்சமெடி
பிறியென்முன் பிறியாமற் பிறியென்றன் பேசாமல் நெறிநின்று பாரென்முன்- கிளியே நீயேநா னென்றுரைத்தான். l
ஒருபொல் லாப்புமில்லை யென்றே யுரைத்தான் உண்மை முழுதுமென்ருன்-கிளியே ஊமைபோ லிருந்தானெடி, m 2
முடிந்த முடிபென்ருன் முன்னும்பின்னு மில்லையென்றன் இடிபோ லுரைத்தானெடி-கிளியே இனியென்ன சொல்வேனடி. 3
அப்படியே யுள்ளதென்றன் ஆரறிவா ரென்முன் ஒப்புவமை காணேனெடி-கிளியே ஒவியம்போ லானேனடி. 4.
நாமறியோ மென்றுசொன்னன் ஞான குரவனெடி சேமமாய் வாழவைத்தான்-கிளியே தீவினைகள் போச்சுதெடி, 5
அண்டபிண்ட மனத்தும் ஒன்ருகக் கண்டேனடி கண்டவெனைக் காணேனெடி-கிளியே காரணமும் போச்சுதெடி. 6
நல்லைநகர் வாசனெடி நாட்டிலவன் திருநாமம் செல்லப்ப னென்றுசொல்வார் - கிளியே தேரடியி லிருப்பானெடி. 7
சொல்லித் துதிக்குந்தொண்டர் சுயநல மற்றவர்கள் அல்லும் பகலுங்காணுர்-கிளியே அவரடியே தஞ்சமெடி. 8
நற்சிந்தனை 277.
தன்னைத் தன்னல் அறிவார் சான்றேர் கலிவிருத்தம்
நம்மிட மெல்லா நலனு முண்டு நம்மிட மெல்லா வுலகமு முண்டு நம்மிட மெல்லாக் கலகமு முண்டு நம்மிட மெம்மைக் காண்பது தொண்டு. I
நம்மிட ம்ென்றுங் கடவு ஞண்டு நம்மிடம் நன்மை தீமை யுண்டு நம்மிடம் பிறப்பு மிறப்பு முண்டு நம்மிடம் நரக மோட்சமு முண்டு.
2
தன்னைத் தன்னல் அறிவார் சான்றேர் தன்னைத் தன்னல் பணிவார் சான்றேர் தன்னைத் தன்னல் பிறிவார் சான்றேர் தன்னைத் தன்னுல் தேடுவார் சான்றேர். 3. கண்ணைக் கண்ணுல் பார்ப்பார் சான்றேர் பண்ணைப் பாடிப் பணிவார் சான்றேர் விண்ணை நோக்கி விழிப்பார் சான் முேர் மண்ணைக் கிண்டி வாழ்வார் சான்றேர். 4
wanymawit
6Ts66T (LOT6óT அன்னைபிதாக் குருவானன் எங்கள் பெருமான் ஆதியந்த மில்லாதான் எங்கள் பெருமான் இருவரோ டொருவரானன் எங்கள் பெருமான் ஈசனனன் அனைவருக்கும் எங்கள் பெருமான் உண்மை முழுதுமென்ருன் எங்கள் பெருமான் ' ஊரும்பேரும் உள்ளானில்லான் எங்கள் பெருமான் எண்ணுக் கடங்காதான் எங்கள் பெருமான் ஏவலாளாய் மண்சுமந்தான் எங்கள் பெருமான் ஐம்பூதமைம் பொறியானன் எங்கள் பெருமான் ஒருபொல்லாப்பு மில்லையென்றன் எங்கள் பெருமான் ஒமென் றுறுதிதந்தான் எங்கள் பெருமான் ஒளவனத்தில் ஆடுகின்ருன் எங்கள் பெருமான் அஃது மிஃதுமானன் எங்கள் பெருமான்
Page 144
278 நற்சிந்தனை சாதனையால் வேதனையைத் தீர்க்கிருேமில்லை
நித்தியம் நாமென்று சொன்னல் நினைக்கிருேமில்லை நீநான் அவனென்று சண்டைபோட்டுக் கொள்ளுகிருேம் பத்தி செய்து வாழவழி தேடுகிருேமில்லைப் பத்தரினத் தோடுநாம் கூடுகிருேமில்லை. l
எத்திசைக்கும் ஈசனென்று எண்ணுகிருேமில்லை இரப்பவர்க்கு ஈயாமல் தேடுகிருேம் ஐயே முத்திக்கு வழிதேட முயல்கிருேமில்லை மூவாசை யாலேமனம் கோணுகிருேம் ஐயே. 2
வித்தார மாகக் கதைபேசிக் கொள்ளுவோம் வீணருடன் கூடி விளையா டுகிருேம் சத்திசிவம் ஒன்ருன தன்மையைக் காணுேம் சாதனையால் வேதனையைத் தீர்க்கிருேமில்லை. 3
குழந்தை யன்போடுநாம் கும்பிடமாட்டோம்
கூக்குரல் போட்டுநாம் கும்பிட்டுக் கொள்ளுவோம் தளர்ந்துபோன அடியவரைத் தாங்குகி ருேமில்லைச் சற்குரு பாதத்தை வணங்குகி ருேமில்லை. 4 .
மதிக்குமதி கொடுப்பவனை மதிக்கிருேமில்லை மண்ணுசை பெண்ணுசையால் மாய்கிருேமையே விதியினை வெல்லவழி காண்கிருேமில்லை விதிவிதி யென்றுசொல்லி விளங்குகிருேமையே. 5
கண்ணுக்குக் கண்ணநாம் காண்கிருேமில்லைக் காதுக்குக் காதுதன்னைக் கருதுகிருேமில்லை உன்னைப்போல் உலகத்தில் விளங்குகிருேமில்லை வேதாந்த சித்தாந்தம் படிக்கிருேமில்லை. 6
அலங்கார மாக ஆடை அணிந்துகொள்ளுவோம்
அங்கு மிங்கும் நாம்திரிந்து அலைகிருேம்
கலங்காத நன்னெறியிற் செல்கிருேமில்லைக் கந்தா முருகா என்று கத்திக்கொள்ளுவோம். 7
நற்சிந்தனை 279:
ஓடிவாடா தொண்டா
ஒடிவாடா தொண்டா ஒடிவாடா
ஒருபொல்லாப்பு மில்லையென்று ஓடிவாடா, 1
தேடிவாடா தொண்டா தேடிவாடா
சிவனடியார் மனங்களிக்கத் தேடிவாடா.
2
பாடிவாடா தொண்டா பாடிவாடா
பரமபதி யொன்றென்று பாடிவாடா, 3.
நாடிவாடா தொண்டா நாடிவாடா
நாங்கள் சிவ மென்றுசொல்லி நாடிவாடா, 4
கூடிவாடா தொண்டா கூடிவாடா
குழந்தைக ளோடுசேர்ந்து கூடிவாடா, 5
சூடிவாடா தொண்டா சூடிவாடா
தூயநீறு சூடிக்கொண்டு ஓடிவாடா. 6
ஆடிவாடா தொண்டா ஆடிவாடா
அஞ்செழுத்தை நாவிற்கொண்டு ஆடிவாடா. 7
சொல்லச் சொல்லச் சுவைக்குமே செல்லப்பன் திருநாமம்
சொல்லச்சொல்லச் சுவைக்குமே செல்லப்பன் திருநாமம் அல்லும் பகலுமற்ற ஆனந்தந் தருமோனம் வெல்லவரும் மாந்தர்தம் வாயடக்குஞ் சிவஞானம் கொல்லவரும் யமனுங் குடியோடிப் போய்விடுவான் கல்லை யுருக்கிவிடுங் கருணைவெள்ளம் பெருகிவிடும் இல்லையென்னுஞ் சொல்லை யில்லாமல் ஆக்கிவிடும். (1)
நல்லூரில் தேரடியில் நாங்கண்ட சிவயோகம் சொல்ல முடியாத சுகத்தினைக் காட்டிவிடும் வில்லை விடத்தையஞ்சா வீரசாந்தம் ஊட்டிவிடும் பல்லைக்காட்டித் திரியாமல் பரலோகங் கூட்டிவிடும் பத்துப்பாட்டுப் படிப்பவருங் கேட்டுச் சுவைப்பவரும்
வித்தக ராகவாழ்ந்து விதேகமுத்தி சேர்வாரே. (2)
Page 145
280 நற்சிந்தனை வேண்டிப் பணிந்திடடி
அவனன்றி யோரணுவும் அசையா தெனும்பெரிய சிவனடியார் தம்மைக்கண்டு-சின்னத்தங்கம் சிவனென்று வணங்கிடடி.
அங்கிங் கெனதபடி யானந்தமாய்க் கூத்தாடும் சங்கரனை நீவணங்கிச்-சின்னத்தங்கம் சந்தேகந் தீர்த்திடடி. 2
அத்து விதப்பொருளை அறிவுக்கறி வானதொன்றைச் சித்தத்தி லேநீவைத்து சின்னத்தங்கம் சிந்தை தெளிந்திடடி. 3
அருவா யுருவாகி யம்பலத்தே கூத்தாடும் குருபரனை நீவாழ்த்திச்-சின்னத்தங்கம் கும்பிட்டுக்கொண் டாடிடுவாய். М 4
அகம்பிர மாஸ்மியென்னும் அரியதிரு மந்திரத்தை அகத்திலே நீசெபித்துச்-சின்னத்தங்கம் ஆறுதலாய் இருந்திடடி. அந்தியுஞ் சந்தியும்நீ ஆசானைச் சிந்தித்து வந்தனை செய் திருந்திடுவாய் சின்னத்தங்கம் மதியிரவி யுள்ளமட்டும். 6
ஆவது மில்லையடி அழிவது மில்லையடி தேவரு மில்லையடி-சின்னத்தங்கம் சிவனே முழுதுமுண்மை. 7
ஆசையை விட்டிடடி அதுவேசிவ பூசையடி காசைக் கருத்தில்வைத்துச்-சின்னத்தங்கம் கவலைநீ கொள்ளாதே.
ஆன்மாவுக் கயலில்லை யப்படியே யுள்ளதடி வீண்வாதம் விட்டிடடி- சின்னத்தங்கம் வேண்டிப் பணிந்திடடி. 9
நற்சிந்தனை 28
அடுக்குமோ வின
இராகம்-நாட்டை தாளம் - ரூபகம்
பல்லவி அடுக்குமோ வினை நம்மைக்-கெடுக்குமோ
அநுபல்லவி ஆன்மா அழியாதென்ன
ஆசான்பால் கேட்டபின். (அடுக்குமோ)
சரணங்கள் அடுத்தடுத்துச் சொல்வதினுல்
ஆம்பயன் ஒன்றுமில்லை அன்பேசிவ மென்றடியார் o
அருள்வாக்கை மறவாதே. (அடுக்குமோ) ஒன்ருே விரண்டோவெனுஞ் சந்தேகந் தனநீக்கி ஓம்சிவாய நமவென
உள்ளத்துட் டெளிந்துகொள். (அடுக்குமோ) தவஞ்செய்யும் யோகநாதன்
சாற்றும்நாட் டையைக்கேட்டு சஞ்சலமில் லாமல்நெஞ்சில்
தானுன தன்னையறி. (அடுக்குமோ)
சிவதொண்டன் நடந்துவரும் சிங்காரம்
பல்லவி
சிங்காரந் தனைப்பாரீர் சிவதொண்டன் நடந்துவரும் (சிங்)
அநுபல்லவி சிங்காரந் தனைப்பாரீர் சீவனே சிவனென்று திங்கள் தோறுஞ்சிவ தொண்டர்கள் வீடுவரும் (சிங்)
சரணம் நற்சிந்த னையெனும் நல்ல மருந்தை யூட்டி நல்லூரான் திருவடியை நாளும் மற வாமலேற்றிக் கற்பனை கடந்தவனைக் காணுமல் கண்டுகொண்டு காலமொரு மூன்றுங் கடவாமல் கடந்துநிற்கும் (சிங்)
Page 146
282 நற்சிந்தனை
சிவனடி
சிவனடியைச் சிந்தை செய்வோமே இந்தச் சீவன் சிவனென்று தெரிந்துகொள் வோமே, I
அவனரு ளாலே யவன்ருள்-நாங்கள் ஆரா தனைசெய்து சீராய்வாழ் வோமே. 2
உவமை கடந்தபே ரின்பம் - எங்கள் உள்ளத்தி லுண்டொரு பொல்லாப்பு மில்லை. 3
சிவனடி யாரொடுங் கூடி -நாங்கள் சிவபுரா ணந்தினம் படித்துவரு வோமே. 4
ஐம்பூதம் நாமல்லக் காணும்-நாங்கள் ஐம்பொறியும் ஐம்புலனும் நாமல்ல அறியும், 5
அந்தக்கரண நாமல்லப் பேணும் - இந்த ஆன்மாவே நாமென் றறிந்திட வேணும். 6
வாழிசிவ னடியார்கள் வாழி-இந்த வையகத்தில் வாழும் உயிரெல்லாம் வாழி. 7
ஆழிசூழ் இலங்கையும் வாழி-எங்கள் அப்பணு மம்மையும் எந்நாளும் வாழி. 8
ஆரறிவார் என்றப்பன் சொல்வான்
ஆரறிவார் என்றப்பன் சொல்வான் -தன்னை அணைந்துவந்த பேர்களையே யாதரித்துக் கொள்வான்.
பாரறியார் இவருடைய தன்மை -பலர் பைத்திய காரனென்று பரிகாசஞ் செய்வார். 2
தேரடியில் எந்நாளும் இருப்பான்-ஆசான் தெருவாலே வருவாரைப் போவாரை வைவான். 3
ஆரடா நீயென்றே யதட்டி-ஆசான் அன்பிலான் போலவே துன்புறுத்தி நிற்பான். 4.
メ
நற்சிந்தனை
அப்படியே யுள்ளதெனச் சொல்லி-ஆசான் அந்தரங்க மாகவே பேசிக்கொண் டிருப்பான். எப்படி யிவன்றன்மை யென்று-எவரும் எண்ண முடியாமல் சும்மா இருப்பான்.
பாவலர் நாவலர்கள் தாமும் -ஆசான் பரிபாஷை யறியாமல் பதறியே போவார். மூவர்களும் ஒன்ருகச் சேர்ந்த-நல்ல மூர்த்த மிதுவென்று முகமலர்ந்து நிற்பார்.
மருந்து கண்டேனே
மருந்து கண்டேனே நல்லூரில் நான்-மருந்து கண்டே மருந்துகண்டேன் மாருப் பிறவியை நீக்கும் மாருத நோயைத் தீர்த்துடல் காக்கும்- மருந்து
கண்டேனே.
அருந்த வர்தம் மோடுற வாக்கும் ஆமில்லை யென்று சொல்லாமற் காக்கும் - மருந்து
கண்டேனே.
திருந்து மடியவ ரோடுற வாக்கும்
கண்டேனே.
குருந்த மரத்தடியில் குருவாக வந்து கும்பிட்ட மாணிக்கற்குத் தீட்சைவைத் தாண்டன
மருந்துகண்டேனே.
அப்பர்க்குச் சமணர்செய் யாபத்துத் தீர்த்து
283
னே
அப்பூதி யடிகள்தம் பிள்ளைக்குயிர் கொடுத்த-மருந்து
கண்டேனே.
மார்க்கண்டற் காக மறலியை யுதைத்து மாயா மருந்தை அவன்றனக் கீந்த-மருந்து
கண்டேனே.
wazuhuippur
5
Page 147
284 நற்கிந்தன
அனைவருக்குந் தெய்வம் ஒன்றே
அனைவருக்குந் தெய்வம் ஒன்றே-அதை அறிந்துலகில் வாழ்வது தொண்டே.
முனைந்துநிற்கும் காமக்குரோதம் போக்கிப்-பின்பு மூவரையுந் தேவரையும் ஏவலாக்கு. 2
நெஞ்சுருகு மடியார்கள் கூட்டம்-இந்த நீணிலத்தில் நன்மையெல்லாங் கூட்டும். 3
வினைப்பகையை வெல்வதற்கு மார்க்கங்-குரு வேந்தன் தந்ததிரு வாக்கு. 4
தினைத்தனைப் போதும்மற வாமல்-சிவத் தியானத்தில் தினந்தினம் மூழ்கு. 5
மனத்துயரை நீக்கநல்ல மருந்து-குரு வாக்கியமொரு பொல்லாப்பு மில்லை. 6
நினைத்தபடி நீணிலத்தில் வாழ்வோம்-நாங்கள் நித்தியரா மென்பதை நாளும்மறவோம். 7
அயலுனக் கில்லையென்று பெரியோர்-சொன்ன அந்தரங்க மறிந்துநீ திரிவாய். 8
முயல முயலவின்பந் தேக்கும்-பொல்லா மூவித ஆசைகளை நீக்கும். 9
சுயநல மடியோடே மடியும்-சுருதி சொன்ன சுவானுபவம் படியும். 10.
warsaawaange
ஆனந்த மாநந்த மானந்தந் தானே அங்கு மிங்கு மெங்கும் நானே
நற்சிந்தனை 285
கணமேனுஞ் சும்மா விருக்குங் கருத்திலார்
மனச்சாட்சி மனச்சாட்சி யென்று மருட்டினர்
தனதாட்சி செய்யத் தலைநி மிர்த்தினர். 1 பணமாட்சி வேணுமென்று பறை யறைகிருர் கணமேனுஞ் சும்மா விருக்குங் கருத்திலார். 2 மனமாட்சி வேணுமென்று மனம் பதைக்கிருர் குணமாட்சி யில்லாமல் தினங்கு ரைக்கிருர், 3.
மனமாட்சி யுள்ளார் போல் தம்மை மதிக்கிருர் இனமாட்சி யுள்ளோமெனத் தம்மைத் துதிக்கிருர் 4 வணக்கம் வணக்கமென்று வாயால் பதிக்கிருர்
இணக்க மறிந்து இணங்க எதிர்க்கிருர், 5 சினத்தை மனத்தில் வைத்துச் சிரிக்கிருர் கனக்கக் கதைத்துத் தம்மை வியக்கிருர் . 6 நனைத்து உலர்ந்த உடையு டுக்கிருர் வினைப்பய னென்று வீணுய்ப் பதைக்கிருர், 7 தினைத்தனைப் போதும்மற வோமெனச் செபிக்கிருர் மனத்துயர் வந்த போது தவிக்கிறர். 8
&sïGalib LSybLD LDUJub பிருதுவியப்புத் தேயுவாயு ஆகாசம் - அவை பிரம மயமென்று பேசுவார் கருமை வெண்மை செம்மையை-அது கலந்து நிற்கும் காரணம் − காமக் குரோதமற்ற பெரியோர்கள்-அவர் கண்டு கொண்டனர் உண்மையை எள்ளுக்குள் எண்ணெய்போல் நிறைந்திடும்-அது எல்லா ரிடத்தும் இருந்திடும் சொல்லும் பொருளுமாய்த் தொடர்ந்திடும்-அது சூக்கும ரூபமாய்ப் படர்ந்திடும் செப்படி வித்தை காட்டிடும் -அது செய்தி யறியாமல் மாட்டிடும் கண்ணுக்குக் கண்ணுய்க் கண்டிடும் - அது காதுக்குக் காதாய்க் கேட்டிடும் காலுக்குக் காலாய் நடந்திடும்- அது கைக்குக் கையாய் எடுத்திடும்.
Page 148
286 `ሩ நற்சிந்தனை இசைந்து வா என்மனமே 1
கண்டொன்று சொல்லாதே கடவு ளொருவன் உண்டென் றுறுதி கொள்ளவா என்மனமே.
அண்டர் முனிவர்நரர் அன்புசெய்யும் பெருமானைக் கண்டு களிக்கக் கருதிவா என்மனமே.
பண்டுசெய்த வல்வினையால் பலபிறவி நாமெடுத்துத் திண்டாட்டப் பட்டோம் சீக்கிரம்வா என் மனமே. எட்டுணையும் தாழ்ச்சியில்லா இறைவன் திருவடியைச்
சுட்டாமற் சுட்டிச் சுகம்பெறவா" என் மனமே.
பட்டுக் குடைபிடித்துப் பரியேறித் திரிவாரை எட்டுணையும் நம்பாமல் என்பின்னே வாமனமே.
விட்டகுறை தொட்டகுறை யிரண்டும்விட் டேகாந்த நட்டணையில்* நிற்க நயந்துவா என்மனமே.
முட்டாத பூசைபண்ணி முழுமணமாய் நாம்வணங்கத் திட்டமிட் டென்பின்னே சேர்ந்துவா என்மனமே.
சிட்டர் பரவுஞ் சிவதொண்டன் நிலையத்தே கிட்டாமற் கிட்டிநிற்கக் கிருபையுடன் வாமனமே.
அட்டாங்க யோகம் அவத்தையைந்தும் விட்டேகி மட்டற்று நிற்க மகிழ்ந்துவா என்மனமே. எட்டாத கொப்பில் இருக்கின்ற தேனமுதை
இட்ட முடன் புசிக்க எட்டிவா என்மனமே.
எட்டும் இரண்டும் இசைந்துவந்த பாமாலை தட்டாமல் நாம்படிக்கத் தாவிவா என்மனமே.
நற்சிந்தனை
இசைந்து வா என்மனமே 11
அல்லும் பகலும் அறிவாக நிற்பவர்க்கு எல்லையில்லா வின்பமுண்டு என்பின்னே வாமனமே.
ஆறுவது சினமென்னும் ஒளவைமொழி கண்டார்க்கு ஆறுதல் வேறுமுண்டோ அதிவிரைவாய் வாமனமே.
இடும்பைக்கு இடும்பை படுப்பார் இடும்பைக்கு இடும்பை படாதவர் என்பின் வாமனமே.
ஈசன் ஒருவனென எண்ணிப் பணிவார்க்குப் பூசைசெய்ய வேண்டுமோ புகலவா என்மனமே.
உண்மை முழுதுமென்னும் உத்தமனைக் கண்டார்க்கு என்னகுறை வுண்டு இசைந்துவா என்மனமே.
ஊக்கத் தைப்போல உறுதுணைவே றுண்டாமோ பூக்கை யிலேந்திப் போற்றவா என்மனமே.
எல்லாஞ் சிவன்செய லென்றேத்திப் பணிவார்க்குப் பொல்லாங்கு முண்டோ புத்தியுடன் வாமனமே.
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்கவென்று தேகம் விழுமுன்னே செப்பவா என்மனமே,
ஐயமிட் டுண்ணென்னும் ஒளவை திருவாக்கே துய்ய வழிகாட்டும் சொல்லக்கேள் என்மனமே.
ஒருபொல்லாப்பு மில்லையெனு முத்தமனர் திருவாக்குத்
தருமநெறி காட்டுஞ் சடுதியில்வா என்மனமே.
ஒம்சிவாய நமவென்று உறுதியுடன் செபித்தால் நாம் சிவமே ஆவோம் நயந்துவா என்மனமே.
Page 149
288 நற்சிந்தனை
ஒளவியம் பேசுதல் ஆக்கத்துக் கழிவென்னும் ஒளவைசொல் நாமறிய அன்புடன் வாமனமே. 12
அஃகமுங் காசுஞ் சிக்கெனத்தே டென்றமொழி அஃகு தலில்லா அறிவுதரும் என்மனமே. 13
இசைந்து வா என்மணமே III
ஒருபொல்லாப்பு மில்லையென்றென் னுள்ளங் குளிரவைத்த குருநாதன், திருவடியைக் கும்பிடவா என்மனமே.
உண்மை முழுதுமென வுறுதி யெனக்களித்த அண்ணலை நான் வணங்க அதிவிரைவாய் வாமனமே. 2
நாமறியோ மென்று நல்லூரிற் சொன்னவனைச் சேம முடன் காணச் சீக்கிரம்வா என்மனமே. 3
அப்படியே யுள்ளதென அடிக்கடியே சொல்லுஞ்செல் லப்பனை யான்காண அதிவிரைவாய் வாமனமே. 4.
ஆரறிவா ரென்றென் னகங்களிக்கத் தேரடியிற் பாரறியச் சொன்னவனைப் பாடவா என்மனமே. 5
தவராச சிங்கத்தைச் சற்குருவை நல்லூரில் எவருமறி யாதவனை யேத்தவா என்மனமே. 6
கந்தைத் துணியணிந்து காமங் குரோதமற்ற எந்தை தனக்காண இசைந்துவா என்மனமே. 7
மந்திர தந்திரமும் மானபி மானமில்லாச் சுந்தரனைக் காணத் தொடர்ந்துவா என்மனமே. 8 பிச்சைக்கே யிச்சித்துப் பித்தனைப் போற்றிரிந்த அச்சமில்லா வாசானை யன் புசெய்ய வாமனமே. 9
ஆருறு தத்துவத்துக் கப்பாலே யுள்ளவனை மாருக் கருணையனை மருவவா என்மனமே. 10
நற்சிந்தனை 289
இசைந்து வா என்மனமே IV
அன்பே சிவமென்ற அடியார் திருவாக்கை இன்பமென்று போற்ற இசைந்துவா என்மனமே. I
ஆரறிவா ரென்னும் ஆசான் திருவாக்கைப் பாரறியச் சொல்லிப் பணியவா என்மனமே. 9.
இதுவதுவென் றெண்ணமல் எல்லாஞ் சிவமயமாய்ப் பொதுவில் நடங்காணப் புகழ்ந்துவா என்மனமே. 3
ஈச ஞெருவனென எண்ணியெண்ணி யேயுருகிப் பூசைசெய்ய வென்பின் புறப்படுவாய் என்மனமே. 4
உன்மத்தன் போல வுலகறிய நல்லூரில் என்னப்பன் வாழ்ந்தவிடம் போகவா என்மனமே. 5
26TCD5lb பேருமில்லா வொருவனே நல்லூரில் சீருடனே வாழ்ந்ததிறம் தெரியவா என்மனமே. 6 எண்ணிப் பணிவார் இடரகற்ற நல்லூரில் கண்ணியமாய் வாழ்ந்த கழல் காணவா என் மனமே. 7 ஏதுமற நில்லென் றெனக்குரைத்த செல்வன்தாள் போதுகொண்டு போற்றப் புறப்படுவாய் என்மனமே, 8
ஐயமெலாந் தீர அன்புடனே நோக்கியென வையகத்தில் வாழவைத்த வரங்காணவா என்மனமே. 9 ஒருபொல்லாப்பு மில்லையென உவந்தெனக்குச் சொன்னகுரு திருவாக்கைக் காணச் சிறந்துவா என்மனமே. 1) ஒடு மிருநிதியும் ஒன்ருகக் காணவைத்த கேடுபடாத் திருவடியைக் கிட்டவா என்மனமே. Il ஒளவியத்தை நீக்கி அகந்தூய்மை யாக்கிவைத்த திவ்விய பாதந் தெரிசிக்கவா என்மனமே. 12 அஃகமுங் காசுந் தேடி யலையாமல்
நஃகுதல் செய்தநல்லான் நண்ணவா என்மனமே. 13
19
Page 150
290 நற்சிந்தனை
எங்கள் நாடு
அன்பர்பணிந் தேத்திநிற்கும் நாடெங்கள் நாடு அறஞ்செய்ய விரும்பென்னும் நாடெங்கள் நாடு ஆதியந்த மில்லாத நாடெங்கள் நாடு ஆறுவது சினமென்னும் நாடெங்கள் நாடு இயல்வது கரவேலென்னும் நாடெங்கள் நாடு இன்பதுன்ப மில்லாத நாடெங்கள் நாடு ஈவது விலக்கேலென்னும் நாடெங்கள் நாடு ஈச ஞெருவனென்னும் நாடெங்கள் நாடு உடையது விளம்பேலென்னும் நாடெங்கள் நாடு உண்மை முழுதுமென்னும் நாடெங்கள் நாடு ஊக்கத்தைக் கைவிடாத நாடெங்கள் நாடு ஒருபொல்லாப்பு மில்லையென்னும் நாடெங்கள் நாடு எண்ணிக்கைக் கடங்காத நாடெங்கள் நாடு ஏவாது பணிசெய்யும் நாடெங்கள் நாடு ஐயமிட் டுண்ணென்னும் நாடெங்கள் நாடு ஐயஞ்சற்று மில்லாத நாடெங்கள் நாடு ஒப்புர வொழுகென்னும் நாடெங்கள் நாடு உத்தமர்கள் வாழ்கின்ற நாடெங்கள் நாடு ஒதுவ தொழியேலென்னும் நாடெங்கள் நாடு ஒருவனே தெய்வமென்னும் நாடெங்கள் நாடு ஒளவிய மில்லாத நாடெங்கள் நாடு ஒளவைசொல் மறவாத நாடெங்கள் நாடு அஃகஞ்சுருக் கேலென்னும் நாடெங்கள் நாடு ஆரறிவார் என்றுசொல்லும் நாடெங்கள் நாடு ஆணவத்தை நீக்குவிக்கும் நாடெங்கள் நாடு. கண்டொன்று சொல்லேலெனனும் நாடெங்கள் நாடு நப்போல் வளையென்னும் நாடெங்கள் நாடு நாங்கள்சிவ மென்றுசொல்லும் நாடெங்கள் நாடு ஞயம்பட வுரையென்னும் நாடெங்கள் நாடு தந்தைதாய் பேனென்னும் நாடெங்கள் நாடு நன்றி மறவேலென்னும் நாடெங்கள் நாடு பருவத்தே பயிர்செய்யென்னும் நாடெங்கள் நாடு மன்றுபறித் துண்ணேலென்னும் நாடெங்கள் நாடு.
நற்சிந்தனை 291 அன்பாய்ப் பணிந்திடடி
வடிவ மிலாதவனே-கிளியே! வடிவ மெடுத்தான்டி
அடிமுடி யில்லையடி-கிளியே! அன்பாய்ப் பணிந்திடடி. I
கடிவது மறந்திடடி-கிளியே! காப்பது விரதமடி மடியும்நாள் வருமுன்னே-கிளியே! மாதவஞ் செய்திடடி. 2
முடியாப் பிறப்பிறப்பைக் கிளியே! முற்றும் அழித்திடடி துடியிடை பாகனடி-கிளியே! சோமசுந்தர சுவாமியடி. 3
கொடிய வசுரர்புரங்-கிளியே! கோபித் தெரித்தான்டி படியில் மனிதனுகக்-கிளியே! பரிவுடன் வந்தான்டி. 4.
வடிவுடை வணிகளுகக்-கிளியே! மதுரையில் வந்தான்டி கொடியிடை பாகனடி-கிளியே! கொண்டாட நல்லதடி. 5
விடியுமுன் எழுந்திடடி-கிளியே! விமலனப் போற்றிடடி பொடியணி மேனியனைக்- கிளியே!
புகழ்ந்துநீ பாடிடடி. 6
Page 151
292
நற்சிந்தனை
ஓம்சிவாய நமவெனத் துதிப்போம்
ஒம்சிவாய நமவெனத் துதிப்போம் நாம்சிவ மென்றுநெஞ்சில் பதிப்போம் l
வீம்பிடும்பை யகங்காரம் விடுவோம் போம்வினை யென்றுசொல்லித் தடுப்போம் 2
ஐம்பொறி வழிசெல்லாமல் தடுப்போம் ஐம்பூதம்நா மல்லவென்று தொடுப்போம் 3
வெம்பகை விளையாமல் மடுப்போம்
நம்பொருள் சிவமெனப் படிப்போம் 4
தும்பிமுகன் அடிக்கீழ்ப் படுப்போம் அம்மையப்பன் பாதத்தில் கிடப்போம் 5
ஆறுவது சினமென நடிப்போம்
நாறுமுடல் நா மல்லவென்று முடிப்போம் 6
தேறித் தெளிந்தவரை அடுப்போம்
ஊறிவரும் அமுதத்தை உண்போம் 7
வாழ்கசிவ தொண்டனெனக் களிப்போம்
ஊழ்வினையை முற்ருக அழிப்போம். 8
ஆசான் வாசகம்
ஆசிரியத் தாழிசை
முழுவது முண்மை யெனமுன் சொன்ன பழுதில் வாக்கியம் பரகதி காட்டும் தொழுது வணங்கிச் சுகமாய் வாழுதி. I அப்படி யுள்ளதென் ருசான் சொன்ன ஒப்பில் வாக்குநல் லுணர்வை யளிக்குங் கைப்போது தூவி எப்போதும் வாழுதி. 2
நற்சிந்தனை 293
வெண்செந்துறை
ஆரறிவா ரென்ற ஆசான் வாசகம் பேரறி வைத்தரும் பேணி வாழு தி.
நாமறியோ மென்ற நலந்திகழ் வாக்குச் சேம மளித்துச் சிவகதி யாக்குமே தாமத மின்றிச் சார்ந்து வாழுதி. 4 முடிந்த முடிபென்னும் முனிவன் வாக்கு படிந்த மனத்தில் பரகதி காட்டும் விடிந்ததும் மலரிட்டு விரும்பி வாழுதி. 5
ஆசான் மலரடி மறவா அடியவன் பேசுஞ் செந்தமிழ் பிறவிநீக் கும்மே. 6
நாம் எங்கே நாதன் எங்கே
பல்லவி
ஆதார வாதேயம் முழுதுமான அப்பனுக்குப் பாதார விந்தமெங்கே பார்த்துப் பணிவதெங்கே.
அநுபல்லவி பூதாதி ஐந்துமவன் பொறிபுலன்க ளெல்லாமவன் தாதாவும் பெற்றெடுத்த தாய்தந்தை தானுமவன் (ஆதா)
சரணங்கள்
தாம் தீமி திமிதீமி ததிங்கிணதோ மென்று தானேதா னய்நின்று சலிப்பற நடஞ்செய்யும் (ஆதா)
வாளுளை வீணுகக் கழியாதே என்றுசொல்வார் நானுரோ இதைக்கேட்டு நாமெங்கே நாதனெங்கே.
(ஆதா)
தேனரும் நல்லூரில் சீவன்முத்த ஞய்வாழ்ந்த கோனுகுஞ் செல்லப்பனைக் கும்பிடும் மாணுக்கன். (ஆதா)
Page 152
294 நற்சிந்தனை
எக்காலம் 1
அல்லும் பகலும் அப்பன் திருவடியைச் சொல்லாமற் சொல்லிச் சுகம்பெறுவ தெக்காலம் (II)
நில்லா வுலகையும் நிலையென வெண்ணிமனஞ் செல்லாமல் திருவடியைச் சிந்திப்ப தெக்காலம் (2)
காண்பான் காட்சியுங் காட்சிப் பொருளுமற்றுத் தூண்போ லிருந்து சுகம்பெறுவ தெக்காலம் . (3)
பொன்னுசை மண்ணுசை பெண்ணு சையைநீக்கிப் பொன்னர் திருவடியைப் போற்றுவது மெக்காலம் (4)
வேதாந்தம் பேசி வீண் காலம் போக்காமல்
நாதாந்த மோனநிலை நண்ணுவது மெக்காலம் (5) எள்ளுக்கு ளெண்ணெய்போ லெங்கும் நிறைந்தவனைத் தெள்ளுதமிழ் பாடிச் சேவிப்ப தெக்காலம் (6)
ஆருறு தத்துவத்துக் கப்பாலா யிப்பாலாய் வேரு யுடனய் நினைப்பதுவு மெக்காலம் (7) நினைவுக்கு நினைவாய் நிலைத்திருக்கும் மெய்ப்பொருளை அனைத்துக்குங் காரணனை யறிவதுவு மெக்காலம் (8)
முனைத்துவரும் மூர்க்கக் குணமெல்லாம் நீக்கித் தினைத்தனையும் மறவாமல் சேவிப்ப தெக்காலம் (9)
பத்தும் படிப்போர்கள் கேட்போர்க ளெல்லாரும் வித்தகன்றன் திருவடியை விரவிநிற்பர் நிச்சயமே. (10)
III
அன்பு சிவமென்ற ஆன்ருேர் திருவாக்கை இன்பமுடன் போற்றி யிருப்பதுவு மெக்காலம்.
ஆதியந்த மில்லாத ஆன்மாவே நாமென்ற சேதி யறிந்து தெரிவிப்ப தெக்காலம். 2
நற்சிந்தனை 295
இம்மையிலும் மறுமையிலு மெம்மைவிட்டு நீங்காத செம்மலர்த் தாள்கண்டு சீவிப்ப தெக்காலம். 3
ஈசன் திருவடியை யென்றும் மறவாமல் வாச மலர்கொண்டு வணங்குவது மெக்காலம். 4
உருகி யுருகி உணர்வழிந்து நின்று பெருகி வருமமிழ்தைப் பருகுவது மெக்காலம். 5
வளரும் பேருமில்லா ஒருவன் திருவடியை நீரும் பூவும்போட்டு நெக்குநிற்ப தெக்காலம். 6
எல்லா வுயிரினும் நில்லாமல் நிற்பவனை நினைந்து நினைந்துருகி நிற்பதுவு மெக்காலம். 7
ஏக னநேக னரிறைவனடி வாழ்கவெனும் மோக மறுக்குமொழி கண்டுய்வ தெக்காலம். 8
ஐந்து புலன்வென்ற ஆன்ருேர் திருவடிக்கீழ் நைந்துருகி நின்று நயம்பெறுவ தெக்காலம். 9
ஒன்றென் றிருதெய்வம் உண்டென் றிருவென்று அன்றுசொன்ன பட்டினத்தா ரடிபணிவ தெக்காலம். 10
ஒமெனு மெழுத்தினுள்ளே ஒளியதாய் விளங்குகின்ற சோமசுந் தரத்தின் அடிதொழுவ தெக்காலம். II
அரியதி லரியது ஆன்மா வதுதான் பெரியதிற் பெரியது சிறியதிற் சிறியது பிரிவறி யாதது பேதாபேத மற்றது குறியுங் குணமு முள்ள தற்றது நெறிவழி வழாதது நிரஞ்சன மானது துரியா தீதத்தில் தூங்காமல் தூங்குவது.
Page 153
296 நற்சிந்தனை
தன்மை முன்னிலை படர்க்கை அற்றவன் * -
தன்மை முன்னிலை படர்க்கை யற்றவன்
தன்னை யுணர்ந்தவச் சற்குரு வாமே (I) பின்னைப் பிறப்பிறப் பவனுக் கில்லை முன்னை வினையின் முடிச்சவிழ்த் தானே (2) அன்னை பிதாகுரு தெய்வம் அவனே
அவனை வணங்கினர் அருந்தவத் தோரே (3) பூதங்க ளில்லைப் பொறிபுல னில்லை
வேதங்க ளில்லை விளங்குசாத் திரமில்லை (4)
சந்திரனில்லைச் சூரியனில்லை தாரகா கணங்களில்லை இந்திரன்முதலிய தேவருமில்லை இருடிக ணங்களுமில்லை (5) வாசித்துக் காணுெணுதபொருள், வாய்விட்டுச்
சொல்லொணுதபொருள் மாயத்துக்கு அப்பாலுள்ளது மாதவர்க் கெட்டொனது. (6)
8px; wrthwwwwwww.
எந்நாளோ
ஒருபொல்லாப்பு மில்லையென வுரைத்த குருநாதன் திருவடியைச் சேவிக்கு மருள்பெறுவ தெந்நாளோ உண்மை முழுதுமென வோதுந் திருவாக்கு என்னை விழுங்கி யிருப்பதுவு மெந்நாளோ ஆரறி வாரென்று அடிக்கடியே சொல்லும் சீரறிந்து வாழும் செயலறிவ தெந்நாளோ அப்படியே யுள்ளதென அடிக்கடியே பேசும் அப்பனைக் காணும் அருள்பெறுவ தெந்நாளோ முடிந்த முடிபென்று முகமலர்ந்து சொன்னவன்றன் அடிபணிந்து நிற்குநாள் இந்நாளோ எந்நாளோ சீராரும் நல்லூர்த் தேரடியிலே யிருக்குங் காராரும் மேனியனைக் காணும்நாள் எந்நாளோ பித்தனென எல்லோரும் பேசுவதைக் கேட்டிருந்தும் சித்தங்கலங் காதவனைச் சிந்திப்ப தெந்நாளோ
நற்சிந்தனை 297
இலங்கைவாழ் தெய்வம்
எல்லாஞ்செய வல்லதெய்வம் எல்லார்க்குந் தெய்வம்
இதையறிந்து வாழுவார் எல்லாருந் தெய்வம் நில்லாத நீர்சடைமேல் நிற்கவைத்த தெய்வம்
நிலமேழுந் தாண்டிநின்ற நின்மலஞ்சேர் தெய்வம் கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காணுத காட்சியெல்லாங் காட்டுகின்ற தெய்வம் செல்லாரும் மலைசூழு மிலங்கைவாழ் தெய்வம்
சிவனென்ற நாமமுள்ள தெய்வமிதே தெய்வம். 1
இருநிலன யிரவிமதி யாகிநிற்குந் தெய்வம்
இன்னதன்மை யென்றெவரும் சொல்லவொண்ணுத்
தெய்வம் கருவிகர ணங்களெல்லாங் கலந்துநிற்குந் தெய்வம்
காவலனுய் மதுரைநகர் ஆண்டுகொண்ட தெய்வம் ஒருவணு யுலகேத்த ஓங்கிநின்ற தெய்வம்
உத்தமிக்குக் கூலியாளாய் மண்சுமந்த தெய்வம் திருவரைசேர் இலங்கைநகர் வாழுகின்ற தெய்வம்
சிவனென்ற நாமமுள்ள தெய்வமிதே தெய்வம். 2
பண்டயனும் மாலுமடி பரவவருள் தெய்வம்
பரியெல்லாம் நரியாகப் பணித்தபர தெய்வம் மண்டலத்தி லுயிரெல்லாம் வணங்கவருள் தெய்வம்
மருவியென் சிந்தையிலே புகுந்துறையுந் தெய்வம் கண்டெவரும் சொல்லவொணுக் கதிசேருந் தெய்வம்
காதலிக்கும் மெய்யடியார்க் கருள்செய்யுந் தெய்வம் தண்டரளம் விளங்கிலங்கை நகர்வாழுந் தெய்வம்
தானுக விருக்கின்ற தெய்வமிதே தெய்வம். 3
Page 154
298 நற்சிந்தனை நில்லடா நிலையிலென்று சொல்லுது
ஒம்நாம் நாமென்று ஒலிக்குது
ஞாதுருஞானம் போயோடி ஒளிக்குது I நமக்குநாமே துணையென்று விழிக்குது நாதாந்த முடியிலேறிக் குளிக்குது 2
வேதாந்தசித்தாந்தஞ் சமமென்று களிக்குது
மாதாபிதாவை மறவாதிருக்க மதிக்குது 3 மூதாதைமார் சொல்நெஞ்சில் மதிக்குது சூதான வார்த்தைதன்னைத் தொலைக்குது 4 நில்லடா நிலையிலென்று சொல்லுது நீயேநான் என்றுசொல்லி வெல்லுது 5 உல்லாச மாயெங்குஞ் செல்லுது - உண்மை முழுதுமென்று சொல்லுது 6 நல்லூரில் செல்லப்பன் என்னப்பன் நானவரைக் கேட்கும் விண்ணப்பம் 7
mrrassemwimb
6L6ìồIIằ 5ff6üIIffijff
தலையை நிலத்தில் நிறுத்திப் பார்த்தா லிறைவனுவீரோ காலை மேலே யேற்றிப் பார்த்தால் கடவுளைக்காண்பீரோ. 1 மலைமே லேறி மவுனஞ் செய்தால் மகாதேவனைக்
காண்பீரோ சிலைபோ லிருந்து சிந்தித்துப் பார்த்தால் தேவனைக்
காண்பீரோ, 2
கலைகள் பலவுங் கற்றுவிட்டால் கங்கா தரனைக் காண்பீரோ விலைக்குப் புத்தகம் வேண்டிப் படித்தால் விமலனைக்
காண்பீரோ. 3. பாலைக் குடித்துப் பட்டினி கிடந்தால் பரமனைக் காண்பீரோ வேலைசெய் யாமல் வீதியில் திரிந்தால் வேந்தனைக்
காண்பீரோ. 4 மூலையி லிருந்து முணுமுணுத்தால் முதல்வனைக்
காண்பீரோ சாலப் பசிக்கொரு போது புசித்தால் சாமியாவிரோ. 5
நற்சிந்தனை
ஆசான் அருளால் ஆசான் ஆயினேன்
சிவதொண்டு செய்வார் தீநெறிச் செல்லார் சிவதொண்டு செய்வார் புலனைந்தும் வெல்வார்
சிவதொண்டு செய்வார் பிறன்பொருள் வெஃகார்
சிவதொண்டு செய்வார் சிவமே யாவர்.
ஆதியு மந்தமும் அரனர்க் கில்லை ஆதியு மந்தமும் ஆன்மாவுக் கில்லை சாதி சமயமுஞ் சற்குரவர்க் கில்லை ஒதி யுணர்ந்தா னுரைத்தான் நல்லூரில் .
அருளா லறிந்தேன் ஐம்பூதத் தியக்கம் அருளா லறிந்தேன் ஐம்பொறி மயக்கம் அருளா லறிந்தேன் ஐம்புலன் தயக்கம் அருளா லறிந்தேன் ஆன்ம வியப்பே.
சிவமே தாமெனச் சிந்திப்பார் பெரியோர் சிவமே வேருகச் சிந்திப்பர் சிறியோர் தவநெறி நிற்பின் தன்னை யறியலாம் அவநெறி நிற்பின் பின்ன முறலாம்.
ஆசா னருளால் அகந்தை யழிந்தது ஆசா னருளால் அருண்மழை பொழிந்தது ஆசா னருளால் ஆனந்தம் விளைந்தது ஆசா னருளால் ஆசா னயினேன்.
சிவத்தை மறைத்தது தீநெறிச் சேறல் சிவத்துள் மறைந்தது தீநெறிச் சேறல் அவத்தை யைந்தும் அருளை மறைத்தன அவத்தை யைந்தும் அருளால் மறைந்தன.
299
Page 155
300 ۔۔۔۔ நற்சிந்தனை
ஒருவனே தெய்வமென்னும் உண்மையைக் கண்டோம்
ஒருவனே தெய்வமென்னும் உண்மையைக்
கண்டோம் -இந்த உலகமெல்லாம் நமக்குற வாகவே கொண்டோம் தரும நெறிசற்றும் பிசக மாட்டோம் தாய்தந்தை சொல்லையினித் தட்ட மாட்டோம் வருவதையும் போவதையும் எண்ண மாட்டோம் வாணுளில் ஆசையைப் பேண மாட்டோம் சாந்தம் பொறுமை யென்னும் பணியணிவோம் சற்குரு பாதத்தை இனிம றவோம் வேந்தர் விதியையொரு காலத்துந் தட்டோம் வீணிலே காலத்தைக் கழிக்க மாட்டோம் அச்சமொடு கோபத்தை யகற்றி விட்டோம் ஆருக்கு மினிநாம் ஆட்பட மாட்டோம் பொய்ச்சமய நெறிசொல்லும் போதனை கேளோம் எச்சமயத் தோரையும் ஏளனஞ் செய்யோம் பஞ்சப் புலன்வழியிற் செல்ல மாட்டோம் பழியோடு பாவத்தைக் கொள்ள மாட்டோம் மந்திரங் கற்போம்வினைத் தந்திரங் கற்போம் மனத்தைக் கொல்வோம் பொல்லாச் சினத்தை
வெல்வோம் உழுதுண்ணு வோமினிப் பழுதெண் ணிடோம் ஊரெங்குஞ் செல்லுவோம் நல்ல வேதங்கள்
சொல்லுவோம் வான மளப்போம் இந்த மண்ணையளப்போம் சிவஞான முவப்போந் திரிகால முணர்வோம் தானங் கொடுப்போம் பொல்லா ஈனம் விடுப்போம் சகல சமயத்துக்குஞ் சம்மதங் கொடுப்போம்.
நற்சிந்தனை - 301
ஊக்க முள்ளவர் ஏக்க முற்றிடார்
அந்தியுஞ் சந்தியும் ஆசான் திருவடி சிந்தை செய்பவர் சீவன் முத்தரே. I
ஆன்மா நித்தியம் என்று அறிந்தவர் அங்கு மிங்கு மாய லைந்திடார். 2
இல்லை யுண்டென எடுத்துச் சொல்லொணு இறைவ னிதயத்தில் என்று முள்ளவன். 3
ஈசன் திருவடி யென்றும் ஏத்துவார் இறந்து பிறந்திடார் இவர்கள் முத்தரே 4 உலகமே கோயிலாய் உணர்ந்து கொண்டவர் உண்மை முழுவதும் என்று காண்பரே 5
ஊக்க முள்ளவர் ஏக்க முற்றிடார்
உதய பானுபோல் உலகில் வாழ்வரே. 6
எல்லாஞ் சிவமயம் என்று கண்டவர் எங்கு இருப்பிலென் என்ன செய்யிலென் . 7
ஏக மாகிய இறைவன் பாதத்தை எண்ணு வார்தினம் நண்ணு வாரவர். 8
ஐயப் பாடின்றி யகத்தது உணர்பவர் ஆப்தர் வாக்கியம் என்று கூறுவார். 9
ஒருபொல் லாப்பு மில்லை யென்றவர் உயர்ந்த நல்லூர் இருந்த மாதவர். 10
ത്തങ്ങ,
அடியா ருள்ளக் கமலத்தே யணையா தெரியும்
t ரு 5 زھوقا த ணிேவிளக்கே முடியா முதலே முக்கண்ணு மூவர் போற்றும் முழுமுதலே முடியாப் பிறவிக் கடலிடத்தே மூழ்கா தென்ன
யாண்டுகொள்வாய் அடியே னுன்றன் குடியன்ருே அரசே யுனக்கே
யடைக்கலமே.
Page 156
302 நற்சிந்தனை
5TGITC I
(உயிர் வருக்கக் கோவை)
அரியும் பிரமாவும் அடிமுடியுந் தேடித் ሶ தெரிவரி தாய்நின்ற தெய்வமே கண்வளராய். I
ஆராயும் வேதமுதல் ஆகமங்கள் தாமறியாப் பேரா யிரமுடைய பெம்மானே கண்வளராய். 2
இரவும் பகலுமுன்னை ஏத்தித்துதிப் போர்க்குவரந் தரவல்ல தெய்வமே சங்கரனே கண்வளராய். ".. 3
ஈசனே எவ்வுயிர்க்கு முயிராய் விளங்குகின்ற தேசனே செல்வக் கொழுந்தேநீ கண்வளராய். 4 உன்னையல்லால் வேறுதெய்வ முள்ளத்திற் கொள்ளாத பொன்னப் பனைக்காக்கும் பூரணனே கண்வளராய். 5
ஊரும் பேருமில்லா வுத்தமனே சிவனடியார்
சாருந் தவக்கொழுந்தே சம்புவே கண்வளராய். 6
எல்லைசொல்ல வல்லார் எவருமில்லா மெய்ப்பொருளே அல்லலெல்லாம் நீக்கும் அரனே நீ கண்வளராய். 7
-. ܇ ܐܸܐܹܵ
ஏழைக்காய் வந்திரங்கி எழில்வைகை யாறடைத்த தாளைமற வாமலருள் தந்தவனே கண்வளராய். 8
ஐயனே யாரூரில் ஆரூரன் தனையாண்ட r. தெய்வமே சிந்தா மணியேநீ கண்வளராய். 9
ஒன்பதுவாய்த் தோற்பைக்கு ளுயிரடங்கி நிற்கும்வண்ணம் அன்புசெய்த வண்ணலே ஆருயிரே கண்வளராய். 10 ஓம்சிவாய நமவென்று ஒதுகின்ற அன்பருக்கு ஆம்என் றுறுதிதந்த அத்தனே கண்வளராய், 11 ஒளவியம் G81 18FIT அறிவுதந்த ஆண்டவனே
நவ்வி மழுவேந்தும் நாயகமே கண்வளராய். 12
நற்சிந்தனை
அஃகுக லில்லா அறிவுடைய அன்பரகம் வெஃகுத லில்லா விமலனே கண்வளராய்.
பன்ெ மூன்று பாடல்களும் படிப்போருங் கேட்போரும்
க'யுண்மை யுடன்வாழ வுறுதிசெய்வோய்
303
13
கண்வளராய், 14
gösT6IVTLIGB II
Grா ரிலங்கைநகர் சிறக்கவந்த செல்வமே பேரார் பிறைசூடும் பெருமானே கண்வளராய்.
ஆராயும் வேதம் அறியாத மெய்ப்பொருளே பேராயி ரம்படைத்த பெம்மானே கண்வளராய்.
ஆருத காதல்சேர் அடியார் அகத்தூறும் மாருத வின்பமே மகாதேவனே கண்வளராய்.
நீmர் திருமேனி நிமலா வுனையல்லால் வேழுர் துணைசொல் விமலனே கண்வளராய்.
என்ன ருயிரே எனக்கினிய மெய்ப்பொருளே பின்னர் துணையாவார் பெருமானே கண்வளராய்.
அக்கைநிலை யாதெனவே யறிந்து பிரிந்திருந்த நீக்கமற்ற அன்பர் நிறைவேநீ கண்வளராய்.
ாங்கெங்கே பார்த்தாலும் எல்லாம்நீ யென்றுகண்ட துங்க வடியார்தந் துணைவனே கண்வளராய்,
வித்தத்தி லூறுந் தெவிட்டாத தெள்ளமுதே அத்தனே யாருயிரே ஆண்டவனே கண்வளராய்.
மத்தம் மதிசூடி மழவிடையின் மீதேறி எத்திசையுஞ் செல்லும் இறைவனே கண்வளராய்.
கருத்திற் கருத்தேயென் கண்ணுக் கினியவனே நிருத்தமிடுஞ் சோதியே நின்மலனே கண்வளராய்.
10
Page 157
364 நற்சிந்தனை
வருத்தமற்ற மெய்யடியார் மனத்திற் குடியிருக்கும் ஒருத்தனே புன்னையன்றி உண்டோநீ கண்வளராய். 11
காமக் கடல்கடந்து காட்சிபெற்ற நல்லடியார் சேம நிதியே சிவனே நீ கண்வளராய். 12
அன்பிற் குழைந்து குழைந்தையா வெனவரற்றும் அன்பர்க் குகந்த அரசேநீ கண்வளராய். 13
மண்ணுதி பூதமெல்லாம் வகித்த வுனையன்றி எண்ணவே றுண்டோ இறைவனே கண்வளராய். 14
ஆதார மாறு மகன்ற பழம்பொருளே பேருன செல்வப் பிரானே நீ கண்வளராய். 15
எட்டுத் திசையுமற் றெள்விடத்தும் நின்னையன்றிச் சுட்டவே றுண்டோ சுவாமிநீ கண்வளராய். 16
அந்திசந்தி யுன்னடியை வந்திக்கும் மெய்யடியார் சிந்தனையி லூற்றே செழுஞ்சுடர்நீ கண்வளராய். 17
குற்றமெல்லாம் போக்கிக் குணமாக்கி யெனையாண்ட தற்பரனே யென்குருவே சாமிநீ கண்வளராய். 1 8
ஆருக் கவலையெல்லாம் நீருக்கி யடிமையெனப் பேருக்கி வைப்பாய் பிரானேநீ கண்வளராய். 19
உள்ளத் தினுள்ளே யொளிருஞ் சிவக்கொழுந்தைக் கள்ள மனத்தவருங் காண்பரோ பராபரமே.
எல்லாஞ் சிவன்செயலென் றெண்ணுத மாந்தருக்கு உல்லாச மானகுணம் வருமோ பராபரமே.
நற்சிந்தனை V− 305 உண்மை முழுது மறிந்திடெடா
ஒருபொல் லாப்பு மில்லையெடா தம்பி உண்மை முழுது மறிந்திடெடா வருவது வந்து போகட்டுஞ் சாட்சியாய் வையகத்தில் நீ வாழுவாய் மாட்சியாய்.
சர்வம் பிரம மயமெடா தம்பி சந்தேக மில்லை நம்புநீதம்பி மர்ம மிதுபெரும் மர்மமெடா மகத்துக்கள் கண்ட மர்மமெடா. 2
அப்படியே யுள்ள பொருளெடா தம்பி ஆசையை நீக்கி யறிவாய்நீ நம்பி ஒப்புவமையு மில்லாப் பொருளெடா உள்ளும் புறம்பு முள்ளதெடா. 3
எல்லாச் சமயமுஞ் சொல்லுமெடா தம்பி ஏத்தி ஏத்தி வணங்கிடெடா உல்லாச மாகத் திரிந்திடெடா தம்பி ஒம்சிவாய நமவென் ருேதெடா. 4.
குணங்க டந்தது குணத்தில் கிடந்தது கும்பிட்டுக் கொண்டாடிப் போற்றிடெடா கணப்பொ முதும்மற வாதே தம்பி காமக் குரோதத்தை நீக்கிடெடா, 5
கூறும் நாமுதல் எல்லா மதுவெடா கூர்ந்து பார்த்துக் கும்பிடெடா ஆறுமுகமும் ஐந்து முகமும் ஐம்பெரும் பூதமும் அதன்வடிவே. 6
நல்லூரில் வாசன் செல்லப்பன் சொல்லை
எல்லோருங் கேட்டு மகிழ்ந்திடுவீர்
பொல்லாப்பு மிங்கில்லைப் புதுமையு மிங்கில்லைப்
பூரண சுதந்திரம் எம்மிடமே. 7
20 /
Page 158
306 w நற்சிந்தனை
திருவடி துணை
கண்ணபிரானுங் காணுக் கழலிணை என்றும் எந்துணை ஒம் விண்ணும் மண்ணும் ஒன்ருய்நின்ற மெய்யடி எந்துணை ஒம் எண்ணு மெண்ண மெல்லா மறியு மிணையடி
-- எந்துணை ஓம் நண்ணு மடியார் நாவில் நிற்கும் நல்லடி எந்துணை ஒம். 1 பண்டுமின்றும் என்றுமுள்ள பரனடி எந்துணை ஒம் மண்டுபேயோ டாடும்மலரடி என்றும் எந்துணை ஒம் நன்றுந்தீதுந் தான காத நல்லடி எந்துணை ஒம் மன்றுளாடும் மலரடி யிணைகள் என்றும் எந்துணை ஒம். 2
அந்த மாதி யில்லா வடியிணை என்றும் எந்துணை ஒம் வந்த கால னுயிரை வாங்கிய மலரடி எந்துணை ஒம் பந்த பாசம் நீக்கி யாண்ட பரனடி எந்துணை ஒம் தந்தை தாயாய் நின்ற தாளிணை என்றும் எந்துணை ஒம். 3
நினைக்கு மடியரை உருக்கு மடியிணை என்றும் எந்துணை ஒம் சினத்த காலனைச் செறுக்கு மடியிணை என்றும்
எந்துணை ஒம் தனத்த தனதன தாண்டவத் தாளிணை என்றும்
எந்துணை ஒம் அனைத்துந் தான யாடிய அடியிணை என்றும்
4 .எந்துணை ஒம் ܗܝ
--- சிவனடி துண
ஓம் சிவசிவ சிவனடி துணைஒம் ஓம் சிவசிவ கணபதி துணைஒம் ஓம் சிவசிவ சிவகுரு துணைஒம் ஓம் சிவசிவ அடியார் துணைஒம்,
அரகர சிவசிவ ஆடும் அடிதுணைஒம் சுரர்நரர் துதிசெய் தூய அடிதுணைஒம் பரவும் அடியார் பாடும் அடிதுணைஒம் கரவுடை நெஞ்சினர் காணுக் கழல்துணைஒம்
நற்சிந்தனை 367
தில்லையம்பலத் தாடுஞ் சேவடி துண்ைஒம் எல்லையில் லாவருள் அருளிய அடிதுணைஒம் வல்லை வந்தெனை ஆண்டவன் அடிதுணைஒம் கல்லை நேர்மனங் கரைத்த வனடி துணைஒம்
அம்மை யப்பன் அழகிய அடிதுணைஒம் இம்மைநற் பயன்தரு மீச னடிதுணைஒம் செம்மை சேர்சிவன் திருவடி துணைஒம் எம்மை யாண்ட எங்கோன் அடிதுணைஒம்
தேசம் புகழுஞ் சிவன்திரு வடிதுணைஒம் வாசம் மருவும் மலரடி எந்துணைஒம் பாசம் அகலும் பரன்திரு வடிதுணைஒம் ஈச னெந்தை எம்பிரா னடிதுணைஒம்.
" ஓம் நமோ நாராயணு " இராகம்-மத்தியமாவதி தாளம்-ஆதி
பல்லவி
ஓம் நமோ நாராயணு உத்த மனே பூரீராமா அநுபல்லவி நாம் வேருே நீ வேருே நல்ல வாக்குத் தாராயோ. (ஒம்)
சரணங்கள் ஏங்குவதே நாமையா எழில்சேரும் ராமையா தாங்குவா யினிராமச் சந்திரனே தருணமிது. (ஒம்) அசோதைகுல பாலனே யசுரர்குல காலனே தசாவ தாரனே தமியேனுக் காதரவே. (ஓம்)
எந்தவே ளையுமுன்னை ஏத்திநீநா னேயென்று சிந்திக்கவரந் தாராய் சீமானே பூரீராமா. (ஒம்)
Page 159
308 நற்சிந்தனை எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவான் ஈசன்
அன்னை பிதாக்குரு தெய்வந் தன்னை அறிந் தேனடி-தங்கமே
சற்குருவி னருளாலே
தானதாம் தானதாம் தனதாம் தனதாம். 1.
ஆரறி வாரென்று சொல்லும் பேரறிவைக் கண்டேனடி-தங்கமே பேசாதேவாய் நேசமாய்நில் ஆசாபாச மனைத்தையும்வெல், 2
இம்மையிலும் மறுமையிலும் எம்மைவிட்டு நீங்கானடி -தங்கமே இறப்புப் பிறப்பில்லையடி ஏத்தியேத்தித் தோத்திரஞ்செய் சூத்திரத்தைக் கண்டுதொழு. 3.
ஈயாத புல்லரை நீ ん வாயாரப் பாடாதே -தங்கே
வாணுளைநீ பேணுதே நாணுதேமனங் கோணுதே காணுதேபணம் பேணுதே. 4.
. உண்மை முழுதுமென்ற
கண்ணைத் திறந்துவிடு-தங்கமே காட்சியைவிடு சூட்சியைத்தொடு சாட்சியையடு மாட்சிமைப்படு. - 5
ஊனயுயிராய்க் கலந்த கோனரைநீ கொண்டாடு-தங்கமே
கூவிக்கூவி யழைத்திடுவாய் கும்பிட்டுக்கொள் நம்பிக்கைவை
கூடாதகூட்டங் கூடாதே. - V− 6
நற்சிந்தனை 309
எண்ணுவார் நெஞ்சிலீசன் நண்ணுவான் நீயறிந்துகொள்-தங்கமே நானுமில்லை நீயுமில்லை நாடிக்கொள் தேடிக்கொள் கூடிக்கூடிப் பாடிக்கொள். 7
ஏகன நேகனென்று மோகமறச் சொன்னசொல்லைத்-தங்கமே மொழியாமல் மொழிந்துகொள் மூட்டிக்கொள் அங்கி
கூட்டிக்கொள் அருள். ん 8
ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறிநீ யல்லையடி-தங்கமே அந்திசந்தி கும்பிடடி ஆதாரமவன் ஆதேயமவன் நிராதாரமாய் ஆராதனைசெய். 9
ஒன்றிரண்டென் றெண்ணுதே நன்றுதீதென்று நாடாதே-தங்கமே நாதாந்தமென்று நாடிடடி நந்தாவிளக்கது சிந்தாமணி நொந்தாரைவந்து ஆதரிக்கும். 10
-ஒவியம்போ லிருந்திடடி
பாவியென்றநாமம் படையாதே-தங்கமே * சேவித்துச்சீவன் முத்தியடைந்திடு
சிந்தித்திடுதினம் வந்தித்திடு பந்தபாசம் வெந்துவிடும். m 1
ஒளவியநெஞ்சம் படையாதே திவ்வியமாக வாழ்ந்திடடி-தங்கமே அக்குமாலை யணிந்திடடி அஞ்சாதேசென்று கெஞ்சாதே அஞ்செழுத்தைநெஞ்சிற் கொஞ்சிடடி. 12
Page 160
3 10 °
நற்சிந்தனை
கண்டேன்
நில்லாத நீர்சடைமேல் வைத்த நிமலனை நினைக்கு மடியவர் மனங்கோயில் கொண்டானை 1
எல்லாமு மல்லவு மாயிருப் பானை என்ன ரமுதினை எளிவந்த பிரான 2
கொல்லானை யின்னுரி போர்த்துகந் தானக் கூடலிற் பரியெல்லாம் நரியாக்கி னனை 3
செல்லார் வரைகளும் அருவியும் பொழில்களும் தேங்கும் இலங்கை மாநக ரானை 4
எண்வகை யொருவனை யேந்திழை பாகனை மண்முதற் பூதங்கள் வகுத்த பிரான 5
கண்ணுக் குக்கண் ஞய கடவுளை மன்னு மிலங்கை மாநகர் கண்டேன் 6
தித்திக்கு மமுதினைத் தெளிந்த தேறலை
எத்திக்கு மாகிய என்ன ருயிரினை 7
பத்திக்கு மடியவர் பாட்டிற் குகந்தானை முத்துக்கள் சேர்முது இலங்கையிற் கண்டேன் 8 சாந்தம் பொறுமையன்பு தாங்கொண்ட 6(JLg_חחש மாய்ந்துபோ காவண்ண மருள்தரும் ஒருவனை 9
காந்தள் முல்லை கானர் மல்லிகை ஏந்திருக்கும் நல்ல இலங்கையிற் கண்டேன் 10 பொன்னர் மேனி புரிசடை யண்ணலைப் பூதங்க ளைந்தும் பொருந்திநிற் பானை l
தென்ன தென்ன வெனவண்டு பாடும் சீரார் இலங்கை மாநகர் கண்டேன். 12
நற்சிந்தனை 311 வேண்டும். வேண்டாம்
நாங்கள் சிவமென் றெண்ண வேண்டும் தூங்காமல் தூங்கிச் சுகிக்க வேண்டும் ஆங்காரந் தன்னை யகற்ற வேண்டும் நீங்காத நிட்டையில் நிலைக்க வேண்டும் மாங்காய்ப்பா லுண்டு மகிழ வேண்டும் தேங்காமல் தேங்கி யிருத்தல் வேண்டும் ஏங்காமல் வையத்தி லிருக்க வேண்டும் உல்லாச மாக வுலாவல் வேண்டும் எல்லா ரிடத்தும் அன்பு வேண்டும் மேலோரைக் கண்டால் வணங்க வேண்டும் பொல்லாப் பில்லையெனச் சொல்ல வேண்டும் வல்லமை பேசி மகிழ வேண்டும் அல்லாகூ என்று அரற்ற வேண்டும் சில்லாலைப் பாட்டுப் பாட வேண்டும் தில்லாலைக் கள்ளுக் குடிக்க வேண்டும் கல்லானை கன்னல் உண்ணல் வேண்டும் மல்லாகத் தானை மதிக்க வேண்டும் தன்னைத் தன்ன லறிய வேண்டும் முன்னை வினையைக் களைய வேண்டும் சென்னைப் பட்டினஞ் செல்ல வேண்டும் அன்னை போல அன்பு வேண்டும் பொன்னை மாதரைப் போக்க வேண்டும் பின்னைப் பிறவியை நீக்க வேண்டும்.
Χ X Σζ சாங்காலம் வந்தால் திகைக்க வேண்டாம் வாங்காமல் வாசியில் தூங்க வேண்டாம் பாங்காக வாழ விரும்ப வேண்டாம் வேங்கைப் புலிவந்தா லோட வேண்டாம் ஆங்கென்றும் ஈங்கென்றும் அலைய வேண்டாம் போங்காலம் வந்தால் புலம்ப வேண்டாம்.
Page 161
32". நற்சிந்தனை
ஆசான் கூசான் பேசான்
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் ஆசான்-அவன் உன்மத்தன் போற்றிரிவான் கூசான். 1 -
வருவாரைப் போவாரை ஆசான் - வாயில் வையாமல் வைதுவிடக் கூசான். 2
உண்மை முழுதுமென்பான் ஆசான் - அவன் உறங்காம லுறங்குவான் பேசான். 3.
நன்மைதீமை யறியாதான் ஆசான் - அவன் நாமறியோம் என்றுசொல்லக் கூசான். 4.
அப்படியே யுள்ளதென்பான் ஆசான்-சொல்லி
ஆரறிவா ரென்றுநகை செய்வான். 5
முப்போதுந் தேரடியி லிருப்பான்-ஆசான் முகமலர்ந்து தன்னிலே சிரிப்பான். 6
விற்றுாணுென் றறியாதான் ஆசான்-என்றும் விசரனைப் போற்றிரிவான் கூசான். vn 7
கற்ருேரும் அறியாத சீரான்-அவனைக் s கைதொழுது நின்ருலும் பாரான், 8
இன்னணிவ னென்றெவரு மறியார்-இவனை ஏற்றித் தொழுதவரைக் குறியான். 9
பன்னட் பழக்கத்தினுற் சிலபேர்-இவனைப் பாரிற் குருவாகக் கொண்டார். 10
நற்சிந்தனை . 313
. 36öTLOT sŠšŠL LosLOlg
அக்கக் காவடி அம்மம் மாவடி ஆன்மாநித்திய மாமடி Ι முக்குறுணிப்பிள்ளையாரை வேண்டி மூலமந்திரஞ் செபியடி 2 பக்குவமாய்ப் பேணடி
பத்தரினத்தொடு கூடடி 3
அக்குமணிதனைக் கட்டடி مح۔ ஆசைமூன்றும் நீக்கடி 4
திக்குத்திகாந்தமுங் கைவசமாச்சடி சீவன்சிவனென்று சிந்தித்துக்கொள்ளடி 5 முக்குணமாயைக் கப்பாலேசெல்லடி முன்னும்பின்னும் பாராதேயடி 6
பக்குவகால மித்தருணமடி பாராதிபூத மெல்லாநீயடி 7
விக்கினமொன்றும் இல்லையடி விண்போலிலங்கி நின்றிடடி 8 துக்கஞ்சுகம் இல்லையடி
சும்மாவிருந்து பாரடி 9 தர்க்கஞ்செய்யப் போகாதேயடி தானேதான யிருந்திடடி Va 10
செக்கச்சிவந்த கழற்பாதம் சிரசிற்சுமந் தேத்திடடி,
Page 162
314
நற்சிந்தன.
ஒளவை வாக்கி னருமை காண்க
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் தன்னையும் பிறரையுந் தானே காண்க
ஆலயந் தொழுவது சாலவும் நன்று சீலமு டைமையைச் சிந்தையிற் காண்க
இல்லற மல்லது நல்லற மன்றெனுஞ் செல்வ வாக்குத் திசைதொறுங் காண்க
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் ஓயாது பேசி யுவந்து காண்க
உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகெனும் ஒண்டொடி ஒளவை தன்னுரை காண்க
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடுமெனுஞ்
சீருடை நன்மொழி சிறப்பே காண்க
6
எண்ணு மெழுத்துங் கண்ணெனத் தகுமெனும்
வண்ணச் செய்யுளின் வளத்தினைக் காண்க ஏவா மக்கள் மூவா மருந்தெனுந் தேவா மிர்தஞ் சிந்தையிற் காண்க
ஐயம் புகினுஞ் செய்வன செய்யெனும் பொய்யில் வாசகம் புந்தியிற் காண்க ஒருவனைப் பற்றி யோரகத் திருவெனுந் திருமொழி தன்னைத் தேடிக் காண்க ஒதாதார்க் கில்லை யுணர்வோ டொழுக்கம் வேதா கமத்தின் விதியினைக் காண்க
ஒளவியம் பேசல் ஆக்கத்திற் கழிவெனுந் திவ்விய வாக்கைத் தினமுமே காண்க அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடெனும் அஃகுத லில்லா வரும்பொருள் காண்க.
7
10
12
13
நற்சிந்தனை 3 I5。 கூறுவார் கோடிபாவம் நீறுமே
வஞ்சி விருத்தம் கூறுவார் கோடி பாவம் நீறுமே நெஞ்சி லெண்ண ஆறுவா ரகத்தி லீசன் சேருமே சிந்திப் பாயே. − சிந்தித்துத் தெளிந்தார் தம்மைப் பந்திக்க மாட்டா பாவம்
பொறிவழி போகார் நல்லோர்
அறிவினு ரறிவார் திண்ணம். 2 இருவினை சேரா தீசன் திருவடி சேர்வார் தம்மைக் குருவருள் கொண்டார் தம்மைத் திருவருள் சேரும் மெய்யே. 3
இருவருங் காண வீசன் அருவமு முருவு மாவான் இணங்கியே யேத்து வாரை வணங்குமே மண்ணும் விண்ணும். 4
வேண்டும்
நமச்சிவாய வாழ்கவென நயந்து பாடவேண்டும்
-நயந்து பாடவேண்டும்
நமனுக்கிட மில்லையென வியந்து கூறவேண்டும்
இமைப்பொழுதும் மறவாமல் ஏத்தி விடவேண்டும்
ஏத்தி விடவேண்டும் -- ۔
எமக்குக்குறை வில்லையென வாழ்த்தி விடவேண்டும். 1.
சமயநெறி கடவாமல் தான்வாழ வேண்டும்
-தான் வாழ வேண்டும் தன்னைப்போற் பிறரையெல்லாம் நேசித்திட வேண்டும் உமையம்மை திருவடியைக் கும்பிட்டிடவேண்டும்
... . . . -~கும்பிட்டிடவேண்டும் உடன்பிறந்தா ரோடுறவு கொண்டாட வேண்டும். 2
Page 163
36 நற்சிந்தனை
பட்டதுபட்டேற்றும் கண்டவரும் விண்டதில்லை விண்டவருங் கண்டதில்லைத் - தங்கம் வேறுபொரு வில்லையெடி. பண்டயனும் மாலுந்தேடிப் பார்க்கொணுது நின்றரெடி-தங்கம் என்றுமே யுள்ளதெடி, 2 பட்டதுபட் டேற்றுமென்று பட்டினத்தார் சொன்னுரெடி-தங்கம் இருந்தபடி யிருக்குதெடி. 3. பொறியஞ்சும் வென்றவர்தம் பூஷணமா யுள்ளதெடி -தங்கம் நெறியா யிருந்திடெடி. 4 சித்தத்திலே தித்திக்குந் தேனைநீ யுண்டிடெடி-தங்கம் தீராநோய் தீருமெடி. 5 அட்டாங்க யோகத்திற்கும் அப்பாலே யுள்ளதெடி-தங்கம் ஆரறிவா ரென்ருரெடி. 6 கட்டுப்ப டாமனத்தைக் கட்டிவிட்டால் பூமியிலே-தங்கம் தட்டுப்பா டில்லையெடி. .7 வலமிடமா யோடுகின்ற வாசியின் நிலையறிந்தால்-தங்கம் வாழ்வுனக் குண்டாமெடி. 8 தச்சன்கட்டா வீட்டிலே தாவுபரி கட்டிவிட்டால்-தங்கம் w அச்சமினி யில்லையெடி. 9 பிறப்பிறப் பில்லாத பெருமான் திருவடியைத்-தங்கம் மறக்க முடியுமோடி. 10
நற்சிந்தனை - 317
ஐந்தெழுத்தை நெஞ்சகத்தில் துஞ்சாமல் சொல்லுமவர்-தங்கம் துரியத்தில் வாழ்வாரெடி.
இன்சொல் விளைநிலனய் ஈதலே வித்தானுல்-தங்கம் இன்பம் பெருகுமெடி, 12
துட்டச் சமணர்கள்தம் துடுக்கை யடக்கினவன்-தங்கம் மட்டில்லாத் தெய்வமெடி, 13
நன்மையுந் தீமையும் நாமல்ல வென்றுகண்டால்-தங்கம் மயக்க மொழியுமெடி. 4
சுருதியோ டாகமங்கள் சொல்லமுடி யாதபொருள்-தங்கம்
கருத்தி லிருத்திடெடி, 15 விருத்தணுய்ப் பாலணுகி வேடிக்கை செய்தவனைத்-தங்கம் வேண்டிப் பணிந்திடெடி. 16
፵፭
அறிவை அறிவாலே அறி இராகம்-பைரவி தாளம்-ஆதி
usis)
பொறிவழிப் புகுத்துதே பொல்லாத மனமையோ போக்கு வரவில்லாப் புண்ணியனே கண்பாராய்.
அநுபல்லவி அறிவை யறிவாலே அறியெனப் பெரியோர்தாம் அன்றுசொன் ஞரதை ஐயை யோமறந்து. (பொறி)
. சரணம்
கிறியுங்கீழ் மையுஞ்செய்து கீழும்மே லுஞ்சென்று நெறிவழிச் செல்லாமல் நெஞ்சு கலங்குதே நீயேநா னெனவெண்ணி நேசிக்க எனக்குன்றன் நிசசொட் ரூபங்காட்டி நேரில்முன் வாராயோ. (பொறி)
Page 164
818 நற்சிந்தனை குருமணி
புலனவென்ற பெரியோர்க ளுளம்பூத்த மணி
பொள்ளாமணி யென்றும் புதுமணி இலமென்று வந்தடைந்தா ரிடும்பை கெடுக்கும்மணி
எவராலும் விலைமதிக்க வொண்ணு மணி பலநிறமாய்ப் பாரினிடைத் தோற்றும் மணி பச்சைமால் மெச்சிப் பணியும் மணி இலங்கையிலே யெங்கு மிருக்கும் மணி
என்னைப் பணிகொண்ட குருமா மணி.
கசிந்துருகிப் பாடுவார் காணும் மணி
கண்மூன் றுடைய கதிர்மா மணி − வலிந்தென்னைப் பணிகொண்ட வண்ண மணி
மலரோனும் மாலவனுங் காணு மணி இந்தோடு கங்கைசென்னி யேந்தும் மணி
இளநாகம் -மேனியிலே சாத்தும் மணி அந்தமணி இலங்கையிலே வாழும் மணி ,
ஆரேனும் தேடுவார்க் ககப்படுந் தெய்வமணி. 2
பந்தமெனும் பாழிருளைக் கிழிக்கும் மணி
பரவுவார்க் கிலவசமாய்க் கிடைக்கும் மணி அந்தமுட னதியில்லா அரும்பொன் மணி
அதிசயங்க ளநேகமெல்லாங் காட்டும் மணி முந்திய மணிக்கெல்லாம் முதலான மணி
மூவர்களுந் தேவர்களும் பணியும் மணி இந்தவளஞ் சேரிலங்கை வந்த மணி
எனையாண்ட குருமணியென் சொந்த மணியே. 3
ஓம் சிவாயநம
ஓம் சிவாயநம என்று சொல்லு , உண்மை முழுது மென்று வெல்லு நாம் நாம் நாம் என்று நில்லு நரக மோட்சம் நாடாமல் தள்ளு போம் போம் வினையென்று கொள்ளு பூரண நிட்டையிலே நில்லு - - - - - வீம்பிடும்பை யகங்காரம் கல்லு - விண்ணும் மண்ணும் கைவசமாய்த் துள்ளு. 1
நற்சிந்தனை 39
சற்குருவின் பாதத்தைப் போற்று தன்னைத் தன்னல் அறிந்து தேற்று நிர்க்குண நிட்டையிலே யேற்று நீநான் என்பதை மாற்று மல்லாகத்தில் சுன்னகத்தான் வீற்று மாசற் றிருப்பா னென்று சாற்று பொல்லாப் பிங்கில்லையென்று போற்று போக போக்கியம் எல்லாம் மாற்று. 2
அன்பருடன் கூடிநீ வாழ்த்து புண்ணிய பாவத்தை வீழ்த்து போக்குவர வில்லையென்று தேற்று எல்லாரி டத்து மன்பு காட்டு ஏகனநேகன் என்று நாட்டு நல்லூரான் திருவடியே பாட்டு நமச்சிவாய வாழ்க வென்று சூட்டு. 3
போக்கும் வரவு முள்ளா னில்லான்
போக்கும் வரவு முள்ளா னில்லான்
பூத கணங்கள் சூழப் பொலிவான்
தேக்கு மடியார் சிந்தையி லுள்ளான்
திருவே யுருவாய்ச் செறிந்த சீமான்
காக்குந் தலைவன் கருணை யுடையான்
கண்மூன் றுடையான் கால காலன்
பூக்கும் பொழில்சே ரிலங்கை வாழ்வான் 2:ዶ , -
பொன்ன ரடியைப் போற்ருய் மனனே
என்று மினியான் ஏத்து மடியார்
இடர்சே ராமே விடைமேல் வருவான் நன்றுந் தீது முள்ளா னில்லான்
நாரி பாகன் ஞான வுருவான் அன்று மின்று மென்று மாகி
யந்த மாதி யில்லாப் பெருமான் குன்றும் மலையும் பொலியு மிலங்கை
குடியாய்க் கொண்டா னடிகள் போற்றுதுமே 2
Page 165
320 நற்சிந்தனை
தம்மையன்றி வேறென்றுங் காணுர்
தம்மைத்தம் மாலறிந்த சாலப் பெரியோர்கள் தம்மையன்றி வேறென்றுந் தாங்காணுர்-பின்னைப் பிறப்பும் இறப்புமில்லைப் பேய்பித்தர் போல்வார் மறப்பின்றி வாழ்வார் மகிழ்ந்து.
மதியு மிரவியும் மன்னுஞ் சமாதி பதியும் படியாக்கிப் பாழ்த்த-விதிவென்று வாழ்வாரை வாழ்த்தி வளரு மடியவர்க்குத் தாழ்வுண்டோ தம்பிநீ சாற்று. 2
சாந்தம் பொறுமை தயைதவந் தானமிகு மாந்தருக்குத் துன்பம் மருவுமோ-சாந்தனையும் அன்னர்பா லன்புவைத்து ஆரறிவார் என்றகுரு தன்னுணை போற்றல் தவம். 3.
தவத்திற் சிறந்தார் தமதுயிர் போல உவப்புடனே யோம்பியொரு பொல்லாப்பு-மில்லென்ருன் தாளிணையைப் போற்றிச் சகத்துடன் கூடியே வாழக் கருதுவதே மாண்பு. 4
மாண்டார் மனத்தானை மண்விண்ணு மொன்முகி நீண்டான நெஞ்சமே நீநினைப்பாய்-வேண்டாமை வேண்டுவோர் வீடு பெறுவாரே வையத்தை ஆண்டாலு மென்ன மறி. 5 . سه
அப்படி யுள்ளதென் றன்பாகச் சொல்லியே அப்பன்செல் லப்ப னருள்தந்தான்-இப்பார் இருள்கடிந் துள்ளத் தெழுந்தவெல் லென்றன் அருள்சேர் மாதவத்தோ னன்று. 6
நற்சிந்தனை v 32
தேவாதி தேவ இராகம்-மோகனம் தாளம்-ஆதி
தேவாதி தேவ அடியார் இடர் பொடிபட அருள் தரு. (தேவாதி)
அநுபல்லவி −
ஆபாச மாபாச ஆழி வீழாவடிய வரும் கோபாலனும் மற்றுங் கோகனகத்தானுந் துதி. (தேவாதி)
சரணங்கள்
காலும் புன லணலும் வானும் நெடுநிலனும் சசி ரவியுமான மாவடிவா மேலை யெழுவிடத்தை மிடற்றி லடக்கிவைத்த விகிர்தன் எனையுடையான். (தேவாதி)
கலகஞ் செய்யும் இருண்ட காலனும் நெஞ்சமஞ்ச உலகங்களும் நடுங்க நடனமிடும் துதிமிகு யோகசுவாமி சொன்ன கீதம் விளங்கச் சதுர்வேத முழங்கத் தாண்டவமாடும். (தேவாதி)
செல்வன் சீரடிகள் காப்பு ஒருபொல்லாப்பு மில்லை யென்னு மோசையோடுவந்து
. . . நோக்கித் திருவருள் தீக்கை செய்த செல்வன்சீ ரடிகள் காப்பு. 1 ஆரறி வாரென் றுன்னு மரியமந் திரத்தைத் தந்த ,
பேரறி வுடைய செல்வன் பெய்கழ லென்றுங் காப்பு. 2
முழுவது முண்மை யென்று முகமலர்ந் v
- தெனக்குச் சொல்லிப் பழுதற வாண்டு கொள்ளும் பாதபங் கயமே காப்பு. - 3 பாராதி -பூத மெல்லாம் பரமன்றன் வடிவ மென்றே சீராக வெடுத்துச்சொன்ன செல்வன் தாளென்றுங் காப்பு.4 காயமே கோவிலாகக் கண்டுபா வனைசெய் யென்று நேயமா யெனக்குச் சொன்ன நிமலன்தா ளென்றுங்
. . காப்பு." 5 பற்றினற் பிறந்திறந்து பாரினில் சுழன்ரு யந்தப் ? பற்றிலை விடுவாயென்ற பரமன்தா ளென்றுங் காப்பு. 6
2.
Page 166
322 நற்சிந்தனை
வந்தனை செய்திடடா தம்பி
உண்ணுதே யுறங்காதே யூரூராய்த் திரியாதே பெண்ணுசை வையாதே-தம்பி!
பிரமத்தை யறிந்திடடா- 1
கண்ணுரக் கண்டிடடா காலமே லேற்றிடடா விண்ணுணம் பேசாதே-தம்பி! வேறுபொரு வில்லையடா. 2
எண்ணும லெண்ணிடடா இயைந்தபடி நடந்திடடா மண்ணுசை வையாதே -தம்பி! மலரடியைப் போற்றிடடா. 3
சுன்னகத் தானையென்றுந் தோத்திரம்நீ செய்திட்டா அன்னை பிதாக்குருவை-தம்பி! அன்புடனே போற்றிடடா, 4.
வலமிடமாய்ச் செல்லுகின்ற வாயுவைநீ தம்பியடா பலமுனக்கு வந்துவிடுந்->தம்பி! பற்றற்று நின்றிடடா, 5
குலநலம் பாராதே கோபம்நெஞ்சில் வையாதே தலமாறுந் தாண்டிடடா-தம்பி! தனிமையைநீ நாடிடடா. 6
உண்டில்லை யென்றுசொல்லி யுரையாட வேண்டாமடா கண்டு களித்திடடா-தம்பி! கருணைவெள்ளம் பெருகுமடா. 7
பண்டுசெய்த வல்வினைநோய் பாரிற் பறக்குமடா நன்றென்றுந் தீதென்றுந்-தம்பி!
நடுவாக நின்றிடடா. - - 8 கொன்ருென்றும் புசியாதே குருவாக்கை மறவாதே அன்றுமின்று மென்றுந்-தம்பி! அப்படியே யுள்ளதடா. 9
நற்சிந்தனை 323
மன்றுபறித் துண்ணுதே மாயத்திற் சிக்காதே குன்றுபோல் நின்றிடடா தம்பி! குறைவொன்று மில்லையடா. 10
இந்தப்பத்துப் பாடலையும் இரவும்பக லுஞ்சொல்லி வந்தனை செய்திடடா-தம்பி! வறுமைபிணி தீருமடா.
நினைமின் மாந்தர்காள்
நினைமின் மாந்தர்காள் நினைமின் மாந்தர்காள் நீடூழி சிவதொண்டன் வாழ்க. (நினைமின்) 1
அனைவரு மொன்றப்க் கூடி யவன ஆதரித் தன்பு பாராட்டிப் - , புனைந்து பூமாலை சூட்டிப் புகழ்ந்து (நினைமின்) 2 தினைத்துணைப் போதும் மறவாது சிந்தித்துத் தேவாரம் திருவாசக மோதி. (நினைமின்) 3
முனைத்து வரும்பெருங் கூற்றை யுதைத்த முதல்வனைத் திங்கள் தோறும் நும்மணம். (நினைமின்) 4
அணைந்து வந்து ஆசான் செப்பிய அரிய வாசகந் தருஞ்சிவ தொண்டன. (நினைமின்) 5 கனைக்குங் கடல்சூழ் இலங்கைத் தீவில் கதிரொளி போலொளி பரப்புந் தொண்டனை. (நினைமின்) 6
வினேப்பகை வெல்ல விருது கட்டிய வேத மோதும் வித்தகத் தொண்டன. (நினைமின்) 7
சுனைக்கும் நல்லூர் தூயசற் குருவின் துணையடிமற வாத தொண்டன. (நினைமின்) 8
Page 167
昭24 நற்சிந்தனை
சிவனடி வாழ்க
உலகெலா முணர்ந்த வொருவ னடிவாழ்க அலகிலா நாத னடியிணை வாழ்க ஈருய் முதலா யிருந்தோ னடிவாழ்க மாருக் கருணை வள்ளலடி வாழ்க சிவனெனும் நாமத் திருவுடையான் தாள்வாழ்க என்னை விலகா விறைவனடி வாழ்க அன்னைபோல் வந்த வவனடி வாழ்க பின்னைப் பிறவிப் பெருமா னடிவாழ்க முன்னைவினை தீர்த்த முதல்வனடி வாழ்க எல்லாமா யல்லவுமா யிருந்தோ னடிவெல்க கொல்லான யுரிபோர்த்த குழக னடிவெல்க தில்லையிற் கூத்தன் திருவடிகள் மிகவெல்க எல்லையில் லாத இறைவ னடிவெல்க கல்லான கன்னல் கறிக்கவைத்தோ னடிபோற்றி நல்லோரை நாளும் பிரியா னடிபோற்றி நாரணனுங் காணுத நாத னடிபோற்றி ஆரணமுங் காணு வடியிணைகள் தாம்போற்றி பூரண மான புண்ணியன்றன் தாள்போற்றி எல்லையில் லாம லிறந்து பிறந்தேனை எல்லையில் லாத கருணையின லாண்டபின்பு கண்டேன் களித்தேன் கலங்காத சித்தமின்று கொண்டேன் குளித்தேன் குவலயத்தி லாசையெல்லாம் விண்டேன் வெளிப்பட்டேன் வேறென்றி லிச்சையுமே அண்டாத வண்ண மடிமைகொண்ட பெம்மானே பொன்னன மேனியனே போக்குவர வில்லானே எந்நாளு மென்னை மறவாப் பெருமானே அடியார்த முள்ளமே யாலயமாய்க் கொண்டோனே கடியார் புரமூன்றுங் கண்ணழலாற் செற்றேனே முடியா முதலே முதலீறு மானவனே அடியேனை யாட்கொண்ட வையா பெருமானே பொடியாரும் மேனியனே பூங்குழலாள் பாகனே படிமீதில் வேடனிட்ட பன்றியூ னுண்டானே
நற்சிந்தனை Y 325
அடியார்க் கடியனே யானந்தக் கூத்தனே பாண்டியனுய் வந்துமண்ணிற் பாராண்ட பெம்மானே வேண்டுவார் வேண்டுவதை விரும்பிக் கொடுப்போனே இருநிலனய்த் தீயா யிருந்த விறையோனே மருவார் குழலியொடு மகிழ்ந்தங் கிருந்தவனே அப்பருக்குப் பொற்கா சளித்த பெருமானே ஒப்பிலா வொன்றே யொளியே யெனவழுத்தி எப்பொழுது முன்னை யிறைஞ்சத் தப்பிலாத் தண்ணருளைத் தந்தாள் தனிப்பொருளே.
ஆள வேண்டுமே
இராகம்- சங்கராபரணம் தாளம்- திரிபுடை
sis)
சஞ்சல மிகவும் மிஞ்சுதே சற்குருநாதா தமியேனை யாள வேண்டும். (சஞ்சல)
அநுபல்லவி
வஞ்சம் பொருமை கோபம் வரவர நெருக்குதே வாணு வினசை மிகமிகப் பெருக்குதே. (சஞ்சல)
gy Goto
எப்படிச் சொன்னலும்நீ யேனென்று கேளாமல் செப்படி வித்தை செய்தல் திருவருட் காகுமோ ஒப்புவமை யில்லாத அப்பனே செல்லப்பனே உன்றுணே யல்லாம லொருவரு மில்லை ஐயா. (சஞ்சல)
Page 168
326 நற்சிந்தனை தீருவருள் தருவாயே
இராகம்-மோகனம் தாளம் -ஆதி
பல்லவி தெய்வமே திருவருள் தருவாயே நீ.
அநுபல்லவி வையக மீதில் வணங்க அறியேன் பொய்யும் புலையுங் கொலையுந் தவிரேன். (தெய்வமே)
சரணங்கள்
கையும் மெய்யுங் கருத்துக் கிசைய ஐயா தந்தனை யதையா னறியேன் மெய்யா யுன்றன் மெல்லடிக் கபயம்
மேலும் மேலும் உனையான் வேண்டுவன். (தெய்வமே) செந்நெலுங் கன்னலுஞ் செறியும்நல் லூரில் dh
தேசிகன் தாசன் யோகசுவாமி சொல்லுங் கீதம் சொல்லுவார் கேட்பார் துன்பம் நீங்கி யின்ப மோங்கும். (தெய்வமே)
தாளம் பேர்டு தாளம்போடு தாளம்போடு தாளம்போடு தன்னையறிந்தோ மென்றுசொல்லித் தாளம்போடு 1 ஆழநீள மில்லையென்று தாளம்போடு அவனேநா மென்றுசொல்லித் தாளம்போடு 2 வாழுவோ மென்றுவென்று தாளம்போடு மாளமாட்டோ மென்றுசொல்லித் தாளம்போடு 3 நாம்நாம்நாம் என்றுசொல்லித் தாளம்போடு / நம்மையறிந் தோமென்று தாளம்போடு 4. போம்போம் வினையென்று தாளம்போடு பெம்மானுக் கடிமையென்று தாளம்போடு 5 ஒம்ஓம் என்றுசொல்லித் தாளம்போடு உள்பொருள்நாம் என்றுசொல்லித் தாளம்போடு. 6
நற்சிந்தனை 3.27
சமயங் கடந்த சங்கரா வடைக்கலம்
நேரிசையாசிரியப்பா
உவமையொன் றில்லா வொன்றே யடைக்கலஞ் சமயங் கடந்த சங்கரா வடைக்கலம் அமையு மடியா ரன்பே யடைக்கலம் உமையாள் மகிழு மொருவா வடைக்கலம் எந்தா யடைக்கல மிறைவா வடைக்கலஞ் சிந்தனைக் கரிய சிவமே யடைக்கலம் அந்தமு மாதியு மில்லாய் போற்றி அந்தமு மாதியு முள்ளாய் போற்றி ஒடும் பொன்னும் ஒன்ருய் நோக்குவார் தேடும் பொருளே செல்வமே போற்றி பாடு மடியார் பரனே போற்றி வாடு மடியார் மழையே போற்றி தேடக் கிடையாச் சிவமே போற்றி ஆடகத் தில்லை யரனே போற்றி குழைத்தெனை யாண்ட கோவே போற்றி மழவிடை யேறும் மாதவ போற்றி பிழைத்த வெல்லாம் பொறுப்பாய் போற்றி தழைத்தநற் கொன்றைச் சடையாய் போற்றி வரம்பி லின்ப வடிவே வாழ்க கரத்தி லங்கி கலந்தாய் வாழ்க சிரத்திற் றண்மதி தரித்தாய் வாழ்க புரத்தை யெரித்த புங்கவ வாழ்க வாழ்க வாழ்க நின்னடி வாழ்க வாழ்க வாழ்க வையகம் வாழ்க வாணுதல் மங்கையும் மகிழ்ந்தே.
Page 169
32& நற்சிந்தனை
அடைக்கலம் அடைக்கலம் 1
அளவிலா வொன்றே யன்பர்க ளன்பே உலகெலாம் நிறைந்த வொண்சுட ரொளியே மலமிலா முதலே மாசிலா மணியே பலரும் புகழ்ந்துரை பரம தயாளுவே நிலம்நீர் தீகால் வானப் நின்ற அலகிலா வாட லுடைய வப்பனே அழுதபிள் ளைக்காய்ப் பாற்கட லழைத்தாய் தொழுதசுந் தரர்க்காய்த் தூயபொன் வழங்கினய் வழுதிபோல் வந்து மாமுடி தாங்கிப் பழுதி லாத பார்தனை யாண்டாய் அந்தணன் வேண்ட வரிய கூற்றினை வெந்திறற் ருளால் வீழச் செய்தனை கண்ணப்ப னுானைக் கலந்து புசித்தாய் என்பது கேட்டுன் னிணையடி யடைந்தேன் என் பிழை யெல்லாம் பொறுப்பதுன் கடனே பொன் போல் மதியம் பொதிந்த சடையாய் அடைக்கலம் அடைக்கலம் அப்பனே படைக்கலம் நின்திருப் பஞ்சாக் கரமே.
அடைக்கலம் அடைக்கலம் 11
அடைக்கல மடைக்கல மரனே யடைக்கலம் விடைக்கல னுகந்த வேதாந்த விளக்கே ஆறும் பிறையுஞ் சூடிய வரசே கூறு மடியார் தங்கள் குருவே உருகி யுருகி யடியே னுணரப் பெருவரந் தருவாய் பேரரு ளாளர மாசிலா மணியே மன்னர்தம் மன்னவா காசி வாழும் கண்ணுதற் பரனே பூசிக்கும் யோக நாதன் பொற்பே வாசித்துக் காண வொண்ணு மறையே இந்திரன் முதலோ ரறியா விறையே சந்திரன் தயங்குஞ் சடையுடை யோனே அந்தமு மாதியு மில்ல3 வமலா சந்தத முன்பதஞ் சாற்றுவார் தமக்குச் சாலோக பதவி வீற்றிருக்க வைத்த விமலா வடைக்கலம்.
நற்சிந்தனை 329
அப்படியே உள்ளது
ஒருகறியும் ஒருசோறும் ஆக்கியுண்ணும் ஆசான்
ஒருபொல்லாப்பு மில்லையென்றன் உணர்.
ஒதாமல் வேதம் உணர்ந்த குருநாதன் உண்மை முழுதுமென்ருன் உணர். 2
நாமறியோம் என்ற நல்ல திருவாக்கை நாமறியச் சொன்னன் நய. 3 முடிந்த முடிவென்று முன்னளில் ஆசான் அடியவர்முன் சொன்னு னறி. 4.
அப்படியே யுள்ளதென அத்து விதப்பொருளைச் செப்பினன் செல்லப்பன் தேர். 5 நீறணியான் காவி யுடையணியான் நீணிலத்தில் தேறவைத்தான் என் முன் சிரித்து. 6 சிரித்துப் புரமெரித்த சிவனேயொப் பானென்ன மரித்துப்பிறவாத மாண்பளித்தான் மதி. 7 பாசத்தால் வெந்துநொந்து பாழாகப் போகாமல் நேசத்தால் ஆக்கினன் என்னை நினை. 8 தேரடியில் வீற்றிருப்பான் சிரிப்பான் சினத்திடுவான் ஆரறிவார் என்பா னவன். 9 பித்தனென்றும் பேசுவார் பேயனென்றுஞ்
சொல்லுவார் சித்தனென்றுஞ் சொல்லுவார் சிலர். 10
ஆர்கொடுக்க வாசையுடன் வந்தாரோ வவரைச் சீர்கேடாய்ப் பேசுவான் தேர்.
நரிபோல் உழலுவான் நாய்போல் திரிவான் பெரியவனென்னும் பேர்படையான் பித்தன். 12
மாருட்ட மாகவே வந்த படிபிதற்றித்
தேருமற் செய்வான் சிரித்து. 13
Page 170
330 . நற்சிந்தனை jTLOTÄ குடியுமல்லேம் நாகநாதன் குடிகானும்
நானென நீயென வேறில்லை யென நகையால் . தானெனைச் செய்தபிரான் அவன் சமர்த் தாரறிவார் கோனெனை யாண்டுகொண்டா னென்றுங் குறைவில்லைத் தேனெனச் சிந்தையுள்ளே யெந்தநாளுந் தித்திக்குமே. 1
பாரவன் விண்ணவன்காண் பன்னும்வேத
மொழியவன்காண் காரவன் கடலவன்காண் கறைக்கண்ட முடையவன்காண் சீரவன் திறலவன் காண் சிரம்பத் துடையானமுன் தேர நெரித்தவன்காண் தேவதேவர் தம்பெருமானே. 2
நாமார் குடியுமல்லேம் நாகநாதன் குடிகாணும் ஏமாந்து போவோமல்லே மினிமறலி தானுமஞ்சேம் சாமாறுந் தணிவிடையன் திருப்பாத மல்லாமல் நாமார்க்குந் தொண்டுசெய்யேம் இனிநாளை நினையோமே 3
போக்கொடு வரவுமில்லைப் பூமிவான மிங்கில்லை நீக்கற வோங்கிநிற்கும் நின்மலன் றன்னையன்றிக் காக்குமோர் தேவுமில்லைக் காலநே ரமுமில்லை நோக்குவார் தங்கட்கெல்லாம் நுணுக்கமாய்த்
t தெரியுமன்றே. 4
எத்திக்குமாகி யிருக்குந் தெய்வமே இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி பல்லவி முத்திக்கு வழிகாட்டும் -என்றன் மூட புத்தியை யோட்டும் k அநுபல்லவி எத்திக்கு மாகி யிருக்குந் தெய்வமே ஏழையடி யார்க்கு இரங்கு முய்யவே (முத்தி)
syGrotto சித்தத்துட் டித்திக்குந் தீங்கரும்பே தெளிந்த தேனே சீனியே பாகே பத்த ருள்ளத்தில் பாக்கிய வானே பாவ மனத்தும் நீக்கியாள் கோனே. (முத்தி)
நற்சிந்தனை 33 I. கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வம்
இராகம்-எதுகுலகாம்போதி தாளம்-மிஸ்ரம்
uრსის6მ. ኔ கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வமே கடைக்கண் பார்நீ தெய்வமே.
அநுபல்லவி ஒருத்தர் துணையுமில்லை யுன்றுணை யல்லாமல் உலகுயிர் பரமாகி நடிக்கின்ற செல்வமே. (கருத்தில்)
சரணம் எங்கெங்கு சென்ருலும் அங்கெங்கும் நீயே ஈசா மதுராபுரி வாசா மீனுட்சி -- நேசனே சொக்கநாதா யோகனுக்கருள் தாதா நின்று மிருந்துமுனை யென்றென்றும்
போற்றநான். (கருத்தில்)
அரகர சிவசிவ இராகம்-சுத்தபங்களா தாளம்-ஆதி
பல்லவி - . . அடியா ருள்ளத்தே வாழும் பரனே அஞ்சுவ தகற்றி யாள்வதும் பரமே
அநுபல்லவி
அரகர சிவசிவ சம்போ சங்கர
அறிஞரு மறிவரி தாகிய பொருளே (அடியா)
சரணம் " ... .
அறிவாருளரோ அகம்பிர மாஸ்மி
வெகுபலம்வாசி சமாதிநீ யோசி
வேண்டும் வேண்டும் அருள்நீ தாதா விக்ந விநாயக விமலா நமோ நமோ (அடியா)
Page 171
332 நற்சிந்தனை
இடர்படாதிருக்கத் தயவுவை - இராகம்-நளினகாந்தி தாளம்-ஆதி
- ubຄbຄທີ எனதுயானெனும் இடர்படா(து) இருக்கத்தயவுவை எம்பிரான்
அநுபல்லவி கண்ணுதலே கறைக்கண்ட நீ கருணுணந்த காமாட்சி பாகா வா (எனது)
Freyyub எந்நேரமும் உன்றன் பொன்னரடி ஏத்தித்தொழ வேழைக் கேயருள் அன்னே யுன்னை யல்லால்துணை இம்மாநிலம் எவரு மில்லையே. (எனது)
நிஜமா மான்மா தெளி இராகம்-உமாபரணம் தாளம்-ஆதி
பல்லவி
நிஜமா மான்மா தெளி அரகர சிவ நெஞ்சே யஞ்சேல் நீ வரோதய
V அநுபல்லவி தசமுகன் நெரிதரத் தனதடி யூன்றிய சாமிநாத பாதமே ஒதுமந்திரம் நீதமே (நிஜமா)
சரணம் சுதிரச பூரண பரப்பிரம தாரக தூய அற்புத சுகமார மாரண சுரசேவித தொந்தத்தசி சுந்தரா னந்தனே துய்யா மெய்யா சுபானுபவ.
(நிஜமா)
நற்சிந்தனை W 333
ஓங்கார நாதமே
இராகம்- ஹரிகாம்போதி தாளம்- ஏகம்
பல்லவி ஓங்கார நாதமே யோதவொண்ணுப் பிரமாதமே
அநுபல்லவி தாந் தாந் தோம் என்றிடு மோசை அற்புத விற்பன நிர்க்குண நேயம் (ஓங்கா)
சரணங்கள் உத்திக்கும் எத்திக்கும் அவரவர் சத்திக்கும் பத்திக்கும் அதிரச (ஓங்கார) ஒதும் வேதம் இதமுடன் - அன்றும் இன்றும் ஒருவிதம் (ஓங்கார) உம்பர்களு மிம்பர்களும் தினசரி எண்ணரிய சித்தர்களும் மிகவேத்தும் (ஓங்கார) ஒதிடவே யருள் பாலிக்குமே நன்மை பூரிக்குமே மனஞ் சேவிக்குமே யருள் (ஓங்கார) உயிரை யெழுப்பிச் சிவத்தி லேமனம் பயிலப் பயிலச் சுவைக்கு மேதினம் (ஓங்கார) ஆதரித் திணிமேற் சுகித்திட நீநினைத்திடு ஆசைவைத்திடு (ஓங்கார)
தொகையற நீங்காது எந்தநாளு மினிது முடிந்து இளந்தென்றலும் வீச விபுதர் பலர் ஒன்றுகூடி அஞ்சலஞ்சலென்று செஞ்சொல் மிஞ்ச நீங்காரம்பாட வருள்கூட நல்ல சித்தர்கள் பக்தர்கள் தித்தி மத்தளம் தத்தித் தகு தகு. -
Page 172
334 நற்சிந்தனை
திருவருட் செய லெப்படியோ இராகம் - காப்பி தாளம்-சதுர்சஜாதி ஏகம்
பல்லவி திருவருட் செய லெப்படியோ சீமானே கோமானே
அநுபல்லவி திருவளர் நல்லூர் மேவிய தேவே செல்லப்பா v (திரு)
சரணங்கள் வரவர மனத்திற் கவலைகள் மிஞ்சி வலிந்துகவரும் மாய வாழ்வினுக் கஞ்சி அரகரசிவனே சங்கராவென்று போற்றினேன் புகழ் சாற்றினேன் (திரு) இரவும் பகலு மிணையடி மறவேன் இனியடியேன் மண்ணிற் பிறவேன் பரவும் யோக சுவாமிகட் கன்பு
காட்டுமோ வொளி சூட்டுமோ! (திரு)
நீ வா தா அருள்
இராகம்-ஹம்சத்வனி தாளம்-ஆதி
Y. பல்லவி -, -,
நீ வா தா அருள் பத்திசெய்வோம் சிவ
நித்திய ஆனந்தம் நிர்மல சகிதம்
அநுபல்லவி ஆசாபாசம் ஆகிய விசனம் , நாசமாகவுன் ஞானப் பிரகாசம்
தாதா தொம்தொம் தகுதகு தகுதகு தளங்கு தரிகிட தக்கிட கிடஜாம் (நீவா)
நற்சிந்தனை 3.35
SFDJGTo
பாராய் என்முகம் பரமயோகப் பரப்பிரவேசந் தாராய் சகலலோக வஸ்ய சம்மதம் பராபர பரிபூரணம்
கோலாகல குமாரி கவுரி கும்பிடும் புராரி பிரமாதிதேவர் கொண்ட கோடி பழிவிண்ட விபுதன் குஞ்சிதாம் புயமலர் நெஞ்சில் வைத்திடு குற்ற மற்றசிவ யோக நற்றவன் குருகுல வாசந் தருமொரு வசனங் கருது மவர்மிடி காணு தோடுங் காவாய் அடியனைப் பூணு யன்பு ஹம்சத்வனி பேசிடு பேரின்பம் (நீவா)
' ennsnamu!
மறவாதே என்மனசே!
இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி
பல்லவி
குருராஜ ராஜ பரசிவ பக்தி தன்னைநீ மறவாதே யென்மனசே
சரணங்கள்
அச்சுதன் அயன்முதல் அமரருங் காண்கிலர் அடிமுடி யில்லை யறி அண்டசரா சரங்கள் அவையனைத்தும் அவனே தானென வறியென் மனசே (குருராஜ)
தவஞ் செய்வோர்க் கனுகூலன் சர்வ சாட்சிப் பிரதாபன் அவனிவன் என்னும் மாயம் அனைத்து மில்லாத சிவயோக நாதன் விசுவாசன் சிவராசன் (குருராஜ)
Page 173
336 நற்சிந்தன்ை
தர்மமெங்குந் தங்க அருளையா V இராகம்-காம்போதி தாளம்-ஆதி
பல்லவி
ஐம்பொறி மாட்டு மனசுபோய் அலைந்திடிலோ பழி பழி
அநுபல்லவி நம்பினேன் நானே நடராஜ நீவாகா நியாயந்தானே கைவிடச் சற்குருநாதா (ஐம்)
சரணம் t சர்வகுணுதி சசிதவழ் சேகர சாமுண்டி சமேத சாமி சர்வாலங்கிர்த சகள நிஷ்கள மங்கள சுரசேவிதபானு சித்தம்வைத்து ஆண்டிடு சின்மய ஜெகசோதி சாயுச் சியமும் வேண்டினேன் ஆண்டி சர்வதியாகந் தந்தேன் தாளைத் தலையிற் சூட்டிடு தர்மமெங்குந் தங்கக் குறைகள் மங்க அருளையா (ஐம்)
www-Wawa wanamwikhawhnw
அருவமு முருவமு மானுன் ஒரு பொல்லாப்பு மில்லையெனவே-முன்னுள்
ஒதினன் உண்மை முழுது மெனவே பருவத்தில் மழைபெய்தாற் போல-ஐயன் பந்தத்தை நீக்கி வளர்த்தா னன்பாலே 2 அருவமு முருவமு மானன்- என்னை ஆட்கொள்ள வந்தான் நல்லூரிற் றணுய் 3 கருவிக ரணங்க ளெல்லாந்-தத்தம் கருமத்தை விட்டுக் காவலுக் குள்ளாய் 4. வருவதும் போவது மின்றித்-தூய மெளன நிலையில் நிலைத்தது தானே 5
ஆரு மறியா ரெனவே - அப்பன் "அப்படி யுள்ளதென் முனறி வாயே. -x 6
நற்சிந்தனை 337
உன்னடிமை நான் ஐயனே
இராகம்-கானடா தாளம்-திஸ்ரம்
பல்லவி
உன்னடிமை நான் ஐயனே உளமகிழ்ந்து பார் மெய்யனே
சரணங்கள்
பொன்னடி மாதவர் சேர்பெரு முத்தனே
பூங்கொடியாள் பங்கா
உன்னடி யென்முடி வைத்தினி யாளுவாய்
ஓங்காரத்துட் பொருளே (உன்)
ஓயாமற் பொய்பேசி உழைக்கின்ற வுலுத்தரை
உறவென்றிருந்து விட்டேன் வாயார வாழ்த்தி வணங்கு மடியாரை
மனசாரப் போற்ற வைப்போய் (உன்)
சித்தத்துட் டித்திங்குந்தேனே பாலென்று
சிந்தனை செய்த டியேன் இனியுத் தமரோடு பிரியாமல் வாழ
உன்னருள் தாருமையா (உன்)
நீயே நானென்று நினைக்கும்மெய் யடியாரை
நேயத்தொடு வணங்கிடுவார் தாயே யனைய சங்கரனே வந்து
தண்ணருள் தாருமையா (உன்)
22
Page 174
338 நற்சிந்தனை
நீ அருளாவிடிற் கதியேது
இராகம்-அடாணு தாளம்-ஆதி
பல்லவி
நீ யருளா விடிற் கதியேது-ராமா நீ ரவிகுல திலகம் உலகுக் கெல்லாம்
அநுபல்லவி
தாயுந் தந்தையுஞ் சகலமும் நீயே தமியேன் உயிருக்குயி ராகிய பரனே (நீயரு)
agFJRRTo
பாற்கடல் தன்னிற் பள்ளி கொள்வோனே பாக்கிய லட்சுமி தன்மண வாளா ஆர்க்கு முணர்வரி தாகிய பொருளே அடியேன் மனத்தைக் கொள்ளை கொண்டவனே நீக்கமற் றெங்கும் நிறையும் நின்மலனே நினையும் யோக சுவாமிதன் துணையே போக்கும் வரவு மில்லாப் பொருளே பூதலத் துள்ளோர் போற்றும் அருளே (நீயரு)
சிவசிவ வென்றுசொல்லிப் பேணேனே இராகம்-செஞ்சுருட்டி தாளம்-ஆதி
பல்லவி.
தில்லையம்பலத்தைக் கண்ணுற் காணேனே சிவசிவ வென்று சொல்லிப் பேணேனே
அநுபல்லவி
நல்லவர் கூட்டத்தைத் தேடிநா டேனே அல்லும் பகலும் பாடியா டேனே (தில்லை)
நற்சிந்தனை 339
சரணங்கள்
கல்லை நிகர்த்த மனமுரு காதோ காமக்குரோத மோகங் கருகாதோ (தில்லை) எல்லை யில்லாத வின்பம் பெருகாதோ ஏழைகள்மே லிரக்கம் வாராதோ (தில்லை) நில்லாத காயத்தை நான்வெல் லேனே நீயேநா னென்றுசொல்லி நில்லேனே (தில்லை) உல்லாச மாக வெங்குஞ் செல்லேனே உண்மையைச் சொல்லிச்செல் கில்லேனே (தில்லை) இல்லையென் றெவர்க்கும் நான் சொல்வேனே இனிய செஞ்சுருட்டியைக் கல்லேனே (தில்லை)
சிவனே உன் தரிசனந் தாராயோ இராகம்- ஆனந்தபைரவி தாளம் -ஆதி
u sibsna சிவனே யுன்தரிசனந் தாராயோ தேவாதி தேவர்தொழும் பெருமானே
அநுபல்லவி தரிசனந் தாராய் தமியேனைக் காவாய் தத்துவா தீதனே சங்கர சிவசம்போ (சிவனே)
சரணங்கள்
அரிய விருவரும் அறியாத விமலனே கரியுரி போர்த்த கருணைக் கடலே திரிபுர தகனனே தில்லையில் வாசனே சிவகாமி யம்மை பூசிக்கு மீசனே (சிவனே) வரவர மனசு சங்கடப்படுகுதே வாராய் துயர்தீராய்: கண்பாராய் என்னைக்காவாய் இரவும் பகலுமுன்றன் இணையடி மறவாமல் பரவி யானந்த பைரவி ராகம் பாடி. (சிவனே)
Page 175
340 நற்சிந்தனை
எல்லாஞ் சிவன்செயலென்றிருப்போம் தோன்ருத் துணையை யென்றுந் துதிப்போம் தூயதிருப் பாதத்தைப் பதிப்போம் ஈன்ருளையு மப்பனையும் மதிப்போம் எல்லாஞ் சிவன்செயலென் றிருப்போம் ஆன்ருேர் விதித்தபடி நடப்போம் அந்திசந்தி மந்திரத்தைப் படிப்போம் நான் ரு னெனுமிரண்டுந் தடுப்போம் நாதனடி யிணைக்கீழ்க் கிடப்போம் வஞ்சம் பொருமை நெஞ்சில் வையேம் சஞ்சலத் தால் மிஞ்சி நாங்கள் நையேம் கொஞ்சம் கொஞ்ச மாய்மனத்தை வெல்வோம் கூடாத கூட்டத்தில் நாங்கள் செல்லோம்
வாரா வரவினில் வந்த சஞ்சீவியே
தோடுடைச் செவியனே தோன்றத் துணையே பீடுடைப் பெரியோர் பெட்டகத் தணியே தந்தையுந் தாயும் மைந்தருந் தமரும் எந்தையே நீயென் றெண்ணியெப் போதும் விந்தைசே ரவர்பணி வேண்டியா னுற்றி இவ்வுல கத்தி லிறுமாப் புடனே சந்ததம் வாழத் தயைபுரி யுமையாள் வந்தனை புரியும் வண்ணமே ணியனே கந்தமுங் காயுங் கடும்பசி மூடியே வந்திடி னுண்ணும் மாசிலா மனத்தர் சிந்தையிற் குடிகொள் தேசிக மூர்த்தி தீராக் கோபமுஞ் சித்தக் குரோதமுஞ் நீரா யுருக்கும் நெறியிது காணெனத் தாரா விடில்யான் தளையுண் டுழல்வேன் வாரா வரவினில் வந்தசஞ் சீவியே , பழியொன்று பூணு வழிபடு தெய்வமே
ஒழியா வின்பமாய் நின்று − தெளியாவென் சிந்தை தெளிந்திடச் செய்யே
நற்சிந்தனை 341 நல்லூரில் ஆட்டக்காரன்
நல்லூரில் ஆட்டக்காரன் நான்வணங்கும் குருநாதன் கல்லைக்க ரைக்குஞ்சித்தன் கருணைபூத்த திருமுகத்தான்
இல்லை யென்னுஞ்சொல்லை இல்லாம லாக்கிடுவான் அல்லும் பகலுமென்றன் அகத்தினிலே வாழ்ந்திடுவான்
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் உண்மை
முழுதுமென்பான் கருப்பையிலே வாராமல் காத்தென்னையாண்டுகொண்டான்
தேரடியில் வீற்றிருப்பான் செல்லப்பனென்னும் பெயரா 7 ஆரறிவா ரென்றுசொல்வான் அன்னையைப்போல்
அன்புடையான்
பொய்சொல் லாதேயென்பான் மெய்யுஞ்சொல்
லாதேயென்பான்
வல்லபங்கள் பேசிவந்தோர் வாயை யடக்கிடுவான்
வித்தையொன்றுஞ் செய்துகாட்டான் விவேகமற்றேர்
போலிருப்பான் அத்துவா மார்க்கம்விட்டு ஆறியி ருந்திடுவான்
*** --W*-.*W*A*a*l*ið
சிவசிவ என்றிடத் தீரும் பாவம்
சிவசிவ என்றிடும் போதினிலே செய்த
பாவமெல்லாம் ஒடும் பாரினிலே அவனிவன் என்கின்ற வார்த்தையெல்லாம் போக்கி
ஐயன் திருப்பாதம் உண்மையதாய் நோக்கி தவம்செய்வார்தமைத் தானக நோக்கிச்
சச்சி தானந்தம் தன்னிடத்தே தாக்கில் உவமையில் லாமுத்தி நிலையிலே போக்கும்
உண்மை யறிந்து சொன்னேன் யோகசுவாமி.
Page 176
344 நற்சிந்தனை
இதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய்
பல்லவி w
என்னிதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய் ஏகாம்பர நாதனே சிவனே
அநுபல்லவி
பதசாரி தோறும் உன்னதி சிலம்பொலி கேட்டுப் பரமானந்தம் பெறுவேன் சிற்ச பேசனே -என்னிதய
சரணங்கள் எனதென்ற கங்கரிக்கும் மனதுப னரிந்துவர இருவினைக் கட்டுகள் இற்றுச் சுயேச்சைபெற அனவரதமு முன்னை நினைந்து கசிந்துருகி அத்தாவுன் மலரடிப் பித்தணுய் வாழ்ந்திட-என்னிதய ஹரஹர வென்று அரவங்கள் கோஷிக்க அன்பு மகரவீணை தும்தும் என வாசிக்க சிரசி லானந்தஞ் சிலிர்த்து நடமாடச் செந்தமிழ் வாணியுமுன் மந்திரப் பொருள்பாட
- என்னிதய
GFA Gig) LOGOof எல்லை யெமக் கில்லையென்று சொல்லு மணியே எல்லாஞ் சிவன் செயலாய்ச் சொல்லு மணியே இல்லையென் ருெருபோதுஞ் சொல்லாய் மணியே ஈச ஞெருவ னென்று சொல்லு மணியே அன்னைதந்தை சுற்றத்தைப் பேணு மணியே அயலவர் தம்முறவு வேணு மணியே பின்னைப்பொய் சொல்லாமல் காணு மணியே பிறர் பொருள்மே லாசையின்றி வாழு மணியே என்னையினி மறவாமல் பாடு மணியே ஈச னடியவரைத் தேடு மணியே
முன்னை வினையெல்லாமோடு மணியே முருகன் திருவடியைக் கூடு மணியே.
நற்சிந்தனை 345 சிவனடியைச் சிந்திநெஞ்சே
அன்பிலா ரோடுறவு கொள்ளாதே அடுத்தோருக்குத் துன்பத்தைச் செய்யாதே சூதும்வாதும் பேசாதே இன்பத்தில் துன்பத்தில் ஏகமன சாயிருந்து தென்புடனே யரன்பாத மந்திசந்தி சிந்திநெஞ்சே.
ஆரோடும் பகையாதே ஆசைதனைக் கொள்ளாதே ஊரோடே ஒத்து நட உண்மையைத் தேடிக்கொள் நீரோடே வெகுநேரம் நீந்திவிளை யாடாதே
சீரோடே. சிவன்பாத மெப்போதுஞ் தேடுநெஞ்சே,
இடுவதை மறவாதே ஏழைகளை இகழாதே கெடுவது நினையாதே கேளிரைப் பிரியாதே சுடுவது சொல்லாதே துணையின்றிச் செல்லாதே படுதலையிற் பலிகொள்ளும் பரமனைப் பாடுநெஞ்சே.
ஈவது விலக்காதே யிழிதொழில்கள் செய்யாதே சாவது வந்தாலுஞ் சத்தியத்தை மறவாதே ஆவதும் அழிவதும் நமக்கில்லை யெனவறிந்து vn தேவர்கள் தொழுதேத்துஞ் சிவனடியைச் சிந்திநெஞ்சே.
அன்பாய் இருப்போமே
அன்பே சிவமென்று கிளியே! ஆன்ருே ருரைத்தார்கள் ஆனமையால் நாங்கள் கிளியே! அன்பாய் இருப்போமே இரப்பவர்க் கில்லையென்று கிளியே! எடுத்துநீ
சொல்லாதே
ஈவது நன்மையெனக் கிளியே! எடுத்தவ்வை சொன்னரே. சாவது வந்தாலுங் கிளியே! சத்தியம் மறவாதே தேவர்கள் வந்தாலுங் கிளியே! சித்தங் கலங்காதே தாய்சொல்லைத் தட்டாதே கிளியே! தந்தைசொல்
.மந்திரமே ۔
Page 177
346 ܪ f நற்சிந்தனை
இலங்கை என்னூர்
எல்லாமென் னுரர்எல்லா மென்சுற்றத் தார்களே எல்லா மெனக்குதவி யென்றறிந்தேன்-நில்லாத நீர்சடைமேற் கொண்ட நிமல னெனக்கன்பன் சீரிலங்கை யென்னுரர் தெரி.
நாமார்க்கும் ஆளல்லேம் நாளை வருவதெண்ணேம் ஆமா றறம்புரிவே மார்க்குமஞ்சேங்-கோமாற்கே மீளா வடிமையாய் மேதினிமேல் வாழுவோம் தாளா ரிலங்கையென்னுடர் தான்.
மெய்யுரைப்போம் மேன்மக்கள் நட்பை விரும்புவோம் செய்வன வெல் லாந்திருந்தச் செய்குவோம்- வையகத்தில் தாமரைமேல் நீர்போற் ருனியைந்து வாழுவேம் காம ரிலங்கை யென்னுரர் காண்.
சூரியன் தோன்றுதற்கு முன்ன ரெழுந்திருப்பேம் சீரியவா யாற்சிவனைப் பாடுவேம்-பாரினிலே தண்ணுர் பொழிலுந் தடவரையு மாறுகளும் நண்ணிலங்கை யென்னுரர் நய.
புன்சொல் புறங்காப்பேம் போன வகையெண்ணேம் எஞ்செயலா லொன்றுமில்லை யென்னுவேம் - வன்சொற் களை வேம் கனமேகங் கண்ணுறங் கின்பப் பழவிலங்கை யென்னுரரே பார்.
சித்தி பெறலாம் திருவெல்லாஞ் சேரலாம் பத்தியின்றேல் என்ன பலனிவற்ருல் - எத்திசையும் மெச்சு புகழிலங்கை மேலோர்கள் வந்துதினம் நச்சு மிலங்கையென்னுரர் நாடு.
நாடி யொருகருமம் நாடோறு மாற்றுவார் வாடி மெலிவதில்லை மாநிலத்தில்-நீடியசீர் கொண்ட விலங்கையிலே கோடிசனம் வந்துபணம் கொண்டுசெல்வார் என்னுரர் குறி.
கருங்குயில்கள் பாடுங் கரியினங்கள் கூடும் நெருங்குங் கதலிபலா தென்னை - ஒருங்குதிரை
கொண்டுவந்து முத்தங் கொடுக்கும் வளநாடு கண்டுகொண் டேனிலங்கை காண்.
நற்சிந்தனை 347 ܕ
மாது பங்கனை மறக்கவு மாமோ
ஒப்பில்லாத இலங்கைநகர் ஒருவன் றிருவடியைத் தப்பில்லாமற் போற்றுவார்கள் சாகார் பிறவாரே கொப்பில் மந்தியோடு குயில்பயிலும் பொழில்நீழல் எய்ப்பிலாத விளமான் மரைமேதி துயில்கொள்ளும்.
கடல்சூ Nலங்கைநகர் மேவிய கடவுள்பாதம் திடமோ டெந்தநாளுஞ் சிந்திப்பார்கள் மிடியாலே புடிவிதனில் துயரால் நொந்துபோகார் வரைமீது அடவிதனில் ஆமா புலியான துயில்கொள்ளும் கரையு மன்பர்தங் கருத்தி னனையே உரைசெய் வார்க்கொரு குறையு மில்லையே.
ஆடு பாம்பணிந் தாடு வான் கழல் பாடு வார்களே பரம யோகிகள்
அறஞ்செய்வார் தங்க ளகமே கோவிலாய் நிறைஞ்சு நிற்குமே நிமலன் நாடொறும் புறத்திற் கூறுவர் புகழைப் பெற்றிடார் அறத்தைக் கூறுவா ராக்கஞ் சேர்வரே.
காலை மாலையுங் கடவுள் பாதத்தைச் சால வேதொழு வார்க ளன்பரே.
ஒது மன்பர்க ளுள்ளத் துளான மாது பங்கனை மறக்கவு மாமோ
பாது காவெனைப் பகலு மிரவும்
மோதுங் கரைசேர் முதுலங்கை யானே.
கூடலி லன்று குதிரையை நரியாய் நர்ட வைத்த நம்பனை யல்லால் பாட்ட வும்வேறு பரம்பொரு ஞண்டோ மாடமலி யும்மிலங்கை மாநக ரானே.
Page 178
348 நற்சிந்தனை.
கரையு மன்பர்கள் கண்டுகந் தானும் வரையை யெடுத்த மன்னநெரித் தானும் மரையும் மானும் மயிலினமுங் குயிலும் நிரைநிரையாய் நிற்கு மிலங்கைமா நகரானே.
மத்தம் மதியொடு மாநா கத்தை வைத்த சென்னியன் வாணுதல் கணவன் புத்தஞ் சமணம் போயக லும்படி சித்தத்திற் கொண்ட சீரிலங்கை யானே.
சிவ சிவ சிவ
அன்பரன்பது சிவசிவசிவ ஆசையற்றது சிவசிவ சிவ இன்பமயமது சிவசிவசிவ ஈசனுயிர்தொறுஞ் சிவசிவசிவ முன்பின் அற்றது சிவசிவசிவ மோனமுதலது சிவசிவசிவ தன்வயத்தது சிவசிவசிவ சர்வவல்லபஞ் சிவசிவசிவ.
பொன்னிறத்தது சிவசிவசிவ போக்கிலாதது சிவசிவசிவ என்னிடத்தது சிவசிவசிவ எங்குமுள்ளது சிவசிவசிவ மண்ணிடத்தது சிவசிவசிவ மந்திர ரூபஞ் சிவசிவசிவ விண்ணிடத்தது சிவசிவசிவ வேதமானது சிவசிவசிவ. 2
மட்டிலாதது சிவசிவசிவ மங்கைபங்கது சிவசிவசிவ முட்டிலாதது சிவசிவசிவ மூவராவது சிவசிவசிவ கிட்டொனதது சிவசிவசிவ கிருபையுள்ளது சிவசிவசிவ எட்டிலானது சிவசிவசிவ ஏகமாவது சிவசிவசிவ. 3
அன்னையாவது சிவசிவசிவ அப்பணுவது சிவசிவசிவ முன்னையுள்ளது சிவசிவசிவ முனிவர்புகழ்வது சிவசிவசிவ என்னையாள்வது சிவசிவசிவ எடுத்த திருவடி சிவசிவசிவ பின்னையென் பிழை சிவசிவசிவ பேதாபேதஞ் சிவசிவசிவ. 4
3. 4.
நற்சிந்தனை s - 849
இலங்கை நகரானே
சிந்தை செய்கதிர் வேலனைத் தந்த எந்தையை யெந்த நாளும் மறந்திடார் பந்தங்க ளற்றுப் பரமவி டெய்துவர் கந்தம் பொலியு மிலங்கைக் கடிநகரானே.
கண்மூன் றுடைய கடவுளை நாளும் பண்முறை தப்பாது பாடு மடியார் மண்ணுள வளவும் மனக்கவலை எய்தார்கள் விண்டொடு வரைமே விலங்கைமா நகரானே. 2
மண்முதற் பூதங்கள் வகுத்த வொருவனை எண்முத லெல்லா மாயிருப் பானைப் பெண்ணுமை யாளைப் பிரியாப் பெருமானை விண்ணுேர் விரும்பு மிலங்கை நகர்கண்டேன். 3.
ஒதுபல் வேத முரைசெய்த நாவானே போது கங்கை சூடிய புனிதனே தீதுசேர் தக்கன் வேள்வி சிதைத்தானே மீதுவண் டார்க்கு மிலங்கை மேவியபரனே, 4
கமல நான்முகன் கண்ணனுங் காணு தமல னேயென வாரருள் செய்தானே , பவன மனலம் பாராகிய பரமனே உவமைசொல் லவொண்ணு லங்கை நகரானே.
பாலனுக் காகப் பாற்கடலை யழைத்தானை ஞாலம் புகழ்ஞான சம்பந்தன் தந்தையை ஆல மரத்தின்கீ ழன்றற முரைத்தானைக் கோலக் குயில்கூவு மிலங்கையிற் கண்டேனே. 6
சூதான வெளியிலே சும்மாவிருப்போம்
ஒம்நம சிவாயவென உருவேற்றுவோம் உருகி யுருகிநாம் உணர்வவிழ்வோம் வீம்பிடும்பை யகங்காரம் விட்டுவிடுவோம் வேதாந்த வீட்டிலே குடியிருப்போம்
Page 179
350 நற்சிந்தனை
நாம்நாம் நாமென நடமிடுவோம் நல்லவிருளை நல்ல வொளியாக்குவோம் போம்போம் வினையெனப் போற்றிசெய்குவோம் பூரண மானநிட்டை புகுந்திடுவோம் ஆம்ஆம் நமக்கெல்லாம் ஆய்விடுமென்போம் அவனேநா மென்றுசொல்லி யானந்தங்கொள்வோம் சந்திரனைச் சூரியனை ஒன்றுசெய்குவோம் சச்சிதா னந்தத்தேனைத் தானருந்துவோம் இடைகலை பிங்கலை யிரண்டுமடைப்போம் எழிலாருஞ் சுழுமுனைக்குள் ஒடுங்கிநிற்போம் பஞ்சவர்ணப் பரிமேலே பவனிசெல்வோம் பாரும்விண்ணும் ஒன்ருகப் பண்புசெய்குவோம் ஆதார மாறுக்கு மப்பாலேசெல்வோம் அங்கே திருநடனங் கண்டுகளிப்போம் சூதான வெளியிலே சும்மாவிருப்போம் சுகம்சுகம் எந்நாளு முற்றிடாதோ.
9ILIT Liguodalib
இராகம்-புன்னுகவராளி தாளம்-ஆதி
பல்லவி அப்பா பரமசிவம் (அப்பா)
சரணங்கள்
அன்றுதொட்டு இன்றுமட்டும் அடியேனுந் தேவரீரும்
அத்துவித மாயிருந்த
வித்தைதனை யாரறிவார் (அப்பா) ஒப்பாரும் மிக்காரு மில்லா வொருபொருளே தப்பேது யான்செயினும் அப்பா பொறுத்தருள்வாய் அப்பாலுக் கப்பாலா யாருமறி யாதவண்ணம் ஆடுந் திருநடனங் காண வருள்புரிவாய் (அப்பா)
நற்சிந்தனை
அத்துவிதப் பொருள் காப்பாம்
அத்துவி தப்பொருள் காப்பாம்-எனக் கடியார்க ளென் றென்றுங் காப்பாம்
சித்தருந் தேவருங் காப்பாம் என்றன் சித்தத் திலங்குந் திருவருள் காப்பாம்.
அட்ட வசுக்களுங் காப்பாம் - எனக் கானந்த மான பராபரன் காப்பாம் எட்டுத் திசைகளுங் காப்பாம் - எனக் கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம்.
பிராண னபானனுங் காப்பாம் - என்னைப் பிரியா திருக்கும் பிரணவங் காப்பாம் அராவணி வேணியன் காப்பாம்-எனக் கருளை யளிக்குங் குருபரன் காப்பாம்.
பஞ்சப் புலன்களுங் காப்பாம் என்னைப் பரவு மடியவ ரனுதினங் காப்பாம் குஞ்சர முகத்தவன் காப்பாம் - நல்ல
குழந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம்.
சந்திர சூரியர் காப்பாம்- எங்குந் தங்கு முயிர்க ளனைத்துமென் காப்பாம் மந்திரந் தந்திரங் காப்பாம் - நான்கு மறைகள் சிவாகமம் மாநிலங் காப்பாம்.
351
(அத்து) 1
(அத்து) 2
(அத்து) 3
(அத்து) 4
(அத்து) 5
Page 180
352
நற்சிந்தனை
எல்லாஞ்சிவமே
அப்பனும் அம்மையுஞ் சிவமே அரிய சகோதரருஞ் சிவமே ஒப்பில் மனைவியுஞ் சிவமே ஒதரும் மைந்தருஞ் சிவமே செப்பில் அரசருஞ் சிவமே தேவாதி தேவருஞ் சிவமே இப்புவி யெல்லாஞ் சிவமே என்னை யாண்டதுஞ் சிவமே.
usm -4
மங்களம் ஜெய மங்களம் 1
அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம் அத்துவித வஸ்துவுக்கு மங்களம் ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம் உத்தம பத்தருக்கு மங்களம் முப்பொழுதுந் தொழுவார்க்கு மங்களம் மூவாசை வென்றவர்க்கு மங்களம் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம் முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம் தன்னைத்தன்னு லறிந்தவர்க்கு மங்களம் ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம் ஐயமில்லாச் சாதுக்கட்கு மங்களம் ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம் சீர்காழித் தேவருக்கு மங்களம் திருநாவுக் கரசருக்கு மங்களம் சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் திவ்விய மாணிக்கர்க்கு மங்களம் எங்குந்தங்கும் உயிர்களுக்கு மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
நற்சிந்தனை 353
மங்களம் ஜெய மங்களம் 11
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
ஆதியந்த மில்லா அப்பனுக்கு மங்களம் சோதிவடி வாயுள்ள சுவாமிக்கு மங்களம்.
ஆன்மா நித்தியமென்ற ஆன்ருேர்க்கு மங்களம் தேன்போ லுருசிக்குஞ் சிவனுர்க்கு மங்களம். 2
காண்பதெல்லாங் கடவுளாய்க் காண்பார்க்கு மங்களம் நாண்மல ரெடுத்துப்பூசை பண்ணுவோர்க்கு மங்களம், 3
பொறிவழிபோ யலையாத புண்ணியர்க்கு மங்களம் நெறிவழியே செல்லுகின்ற நிருபருக்கு மங்களம். 4.
நாமறியோ மென்றுசொல்லும் நாதனுக்கு மங்களம் உண்மை முழுதுமென்ற வுத்தமர்க்கு மங்களம். , 5
தன்னைத் தன்னலறிந்த தாபதர்க்கு மங்களம் அன்னைபிதாக் குருவான அப்பனுக்கு மங்களம். 6
மண்ணைப்பெண்ணை மதியாத மாதவர்க்கு மங்களம் வண்ணநகர் வாழும்வைத் தீசனுக்கு மங்களம். 7
திண்ணனென்ற பேர்கொண்ட அப்பனுக்கு மங்களம் சண்முக நாதனுக்குஞ் சங்கரற்கும் மங்களம், 8
விண்ணில் விளங்குஞ் சூரிய சந்திரர்க்கும் மங்களம் எண்ணிலடங் காவுயிர்கள் அத்தனைக்கும் மங்களம். 9 நித்தியகர்மந் தவருத நின்மலர்க்கு மங்களம் பத்துப்பாட்டும் படிப்போர்க்குங் கேட்போர்க்கும்
A. மங்களம், 10
மங்களம் ஜெய மங்களம் محي மங்களம் ஜெய மங்கள்ம் ,
23
Page 181
பகுதி II
உரைநடைப் பகுதித் திரட்டு
Page 182
6
குருநாதன் அருள்வாசகம்
ஒரு குறைவுமில்லை
நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே. ஆகையால் நாம் அவருடைய உடைமை.
அவருடைய அடிமை. நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே. நாம் அவரை ஒருபோதும் மறந்திருக்க முடியாது.
நமக்கு ஒரு குறைவுமில்லை.
நாம் என்று முள்ளோம்.
எங்கு மிருக்கிருேம்.
எல்லா மறிவோம். இப்படியே நாம் இடையருது சிந்தித்துச் சிந்தித்துக்
கீழ்மையான குணங்களைப் போக்கி மேலான தெய்வ தத்து வத்தை அடைவோமாக.
*சந்ததமு மெனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மை
நினையன்றி யில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த
சமரச சுபாவமிதுவே."
என்னுந் தாயுமானவர் அருமைத் திருவாக்கே இதற்குப்போதிய சான்று.
நற்சிந்தனை V, 357
சிவதொண்டு I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு செய்வதே எங்கள் தொழில். அதற் காகவே நாங்கள் பூமியில் வாழுகிருேம்.
சந்திரன் சிவதொண்டு ஆற்றுகின்றது. சூரியனும் ஏனைய கிரகங்களும் அத்திருப்பணியையே செய்கின்றன. தேவர் களும் அசுரர்களும் கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர் களும் அப்படியே தொண்டாற்றி வருகின்றனர்.
அனைத்துஞ் சிவன் செயல்; அவனன்றி அணுவும் அசை யாது. நாம் இழந்து போவதுமொன்றுமில்லை. ஆதாய மாக்கிக் கொள்வதும் ஒன்றுமில்லை. இருந்தபடியே இருக் கின்ருேம்.
நமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லை. நமக்கு இதம் அகிதம் இல்லை. மரணம் பிறப்பில்லை. வேண்டுதல் வேண்டாமை இல்லை. மண்ணுதி ஆசை யில்லை. மனமான பேய் இல்லை. காலதேச வர்த்தமானம் நமக்கில்லை. நாம் அனைத்துக்குஞ் சாட்சியாக விளங்குகின்ருேம்.
ஓம் தத் சத் ஒம்
I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு ஆற்றுவதே எங்கள் தொழில். அதற். காகவே நாம் உயிரோடிருக்கிருேம். உண்பதும் உறங்குவ தும் அதற்காகவே. எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத் தைப் பட்டாலும் எல்லாம் அதற்காகவே செய்கிருேம். நமக்கு ஆதியுமில்லை அந்தமுமில்லை. பிறப்புமில்லை இறப்பு மில்லை. நாம் விளையாட்டுக்காகினும் பிறர்பொருளைக் கவ ரோம். பிறர்வசை உரையோம். எல்லாஞ் சிவன்செய
Page 183
g58 நற்சிந்தனை
லென்பதை மறவோம். பசித்தாற் புசிப்போம். பிறர்செய் யும் நிட்டூரத்தையாவது, கிருபையையாவது பொருளாகக் கருதமாட்டோம். எப்பொழுதும் தூய்மை உடையோம். துன்பத்திலும் இன்பத்திலும் கவலை அடையோம். முழு தும் உண்மை.
ஓம் தத் சத் ஓம்.
II
நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார். இது சரியை; இது கிரியை; இது யோகம்; இது ஞானம்; இது மந்திரம்; இது தந்திரம் இது மருந்து.
இந்தத் தியானத்தில் நிலைத்தலே நிட்டை இந்த நிட்டையுடையோர்க்குச் சீலமில்லை; தவமில்லை; விரத மில்லை; ஆச்சிரமச் செயலில்லை.
இவர்கள் தாம் விரும்பிய வண்ணம் மண்ணில் வாழ்ந் தார்கள்; வாழுகிருர்கள்; வாழ்வார்கள். இவர் பெருமை யாவருமறியார்; கற்கண்டின் இனிமை கற்கண்டை உமிப வர்க்கே தெரியும்.
ஒரு பொல்லாப்பு மில்லை. எப்பவோ முடிந்த காரியம். நாமறியோம். முழுதும் உண்மை.
நற்சிந்தனை" 359
ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்தது. ஒழுக்க முடையார் எல்லாமுடையார். ஒழுக்கங்களாவன கொல்லாமை, கள் ளாமை, பிறர் வசை உரையாமை, பிறர் பொருள் கவ ராமை, தாழ்மை, பொய்யுரையாமை முதலியனவாம்.
எக்கருமத்தைச் செய்யும் பொழுதும் ஊக்கத்தோடுஞ் சிரத்தையோடும் மனமகிழ்ச்சியோடுஞ் செய்து பழகுதல் வேண்டும். அப்படிச் செய்து பழகிவந்தால் மன உறுதி உண்டாகும். அஃதாவது மனம் ஏகாக்கிர சித்தத்தைப் பொருந்தும். பொருந்தவே ஆன்மசக்தி அதிகரிக்கும். நினைத்தகாரியம் நினைத்த மாத்திரத்திலே உண்டாகும். இவர் பகைவர், இவர் உறவினர் என்ற பாகுபாடு சித்தத் திற் புகுந்து கவலையை உண்டாக்காது.
எல்லாம் என்னிடத்தே உண்டாகின்றன; எல்லாம் என் னிடத்தே நிலைத்திருக்கின்றன; எல்லாம் என்னிடத்தே ஒடுங்குகின்றன என்ற தூய்மையான எண்ணம் உடைய வராய் இருத்தல் வேண்டும். மேலும் எனக்கொரு குறைவு மில்லை; என்னிடத்திலே எல்லோரும் அன்பாய் இருக்கி ருர்கள்; நானும் எல்லாரிடத்திலும் அன்பாய் இருக்கிறே னென்று அடிக்கடி நினைந்து நினைந்து சாதிக்க வேண்டும். இப்படியே இடைவிடாமற் பழகிவந்தால் எல்லாமறியும் ஆற்றலும் எல்லாஞ் செய்யும் வல்லமையும் எளிதிற் கைவரும்.
'ஓம் தத் சத் ஓம்"
Page 184
360 நற்சிந்தனை
சன்மார்க்கம்
குரங்குபோல் மனங்கூத்தாடுகின்றதே.
இதன் கூத்தை எப்படி யடக்குவதென்று தெரியவில் லையே. நன்று சொன்னய். இதற்கு நல்ல மருந்துன்னிட முண்டு. நீ அதை மறந்து போனுய். சொல்லுகிறேன் கேள்.
சிவத்தியான மென்னும் மருந்தைத் தினந்தோறுஞ் சாப்பிட்டுவா. மனக்குரங்கின் பிணி மாறும்.
அதைச் சாப்பிடும்போது அனுபானத்தைக் கூட்டிச் சாப்பிடு. அதுவுமுன்னிடமுண்டு.
அது என்னவென்றல்; நாவடக்கம், இச்சையடக்க மென்னுஞ் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு.
இதுவும் போதாது. பத்திய பாகத்திலே தான் முற் றுந் தங்கியிருக்கிறது. அதுவு முன்னிட முண்டு.
அது என்னவென்முல்; மிதமான ஊண், மிதமான நித்திரை. மிதமான தேக அப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம். ஆன்ம இலாபத்தின் பொருட்டிதைச் செய். vn
மனத்தை ஒருவன் அடக்கி வெற்றி கொள்ள முழு மனத்தோடு விரும்புவானனல் சிவத்தியானத்தைத் தினந் தோறுஞ் செயது வரக் கடவன். -
படிப்படியாக அவன் மனமொடுங்கி வருவதை அவன் கண் கூடாகக் காணுவான்.
சாந்தம், பொறுமை, அடக்கம் முதலிய நற்குணங் கள் அவனிடத் துதிக்கும். γ.
அவன் மனமெந்த நேரமும் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். இகழ் புகழிரண்டினலும் இழிவடையான்.
நற்சிந்தனை 36.
அந்தராத்மாவிலே சுகிப்பான். பிறர் சுகந் தன் சுக மென்ற எண்ணம் பெருகும்.
கைவிளக்கை யொருவன் கொண்டு செல்வானுணுல் இராக்காலத்தில் அவன் மனங் கலங்குவான? கலங்கான். அப்படியே சிவத்தியானத்தைச் செய்து வருவானனல் மாய விருள் அவனை அடையுமா? அடையா. V
போதனையிலுஞ் சாதனை சிறந்தது. ஒரு பொல்லாப்பு மில்லை.
ஆன்ம இலாபமே பொருளெனக்கண்ட அறிஞர் அநித் தியமான இந்த உலக இன்ப துன்பத்தின் மயங்காது தாமரையிலையில் நீர் போற் சகத்துடன் கூடிவாழ்வார். ஆன்ம இலாபத்தைப் பெற நினையாதவர் இந்த உலகத் துன்ப இன்பத்தினுற் கலங்கித் தியங்கித் திரிவார்கள். ஆன்ம இலாபத்தையே குறிக்கோளாகக்கொண்டு நன்மை தீமை யைவென்று நான் எனதென்னும் அகங்கார மமகாரங் களைக்களைந்த அறிஞர் இறைவன் திருவடி நிழலில் பிறப் பிறப்பற்றுப் பேரின்பத்துடன் வாழ்வார்.
அஃதறியா அறிவிலிகளே துன்பக் கடலிலே வீழ்ந்து எரிவாய் நிரயத்துக் காளாவார்.
வண்டுகள் பூவைக்கிண்டித் தேனை உண்டு ஒன்று மறி யாது கிடப்பது போல் பக்தனும் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத்தினுல் கிண்டி ஆங்குவரு மானந்தத்தேனை யுண்டு ஒன்று இரண்டு, நன்று தீதென்றறியாமற் தேக் கிக் கிடக்கிருன்.
ஒரு கமக்காரன் தன்னுடைய நிலத்திலே நல்ல வித்தை யிட்டு அதிலுண்டாகுங் களையைக் களைந்து, விளையுந் தானியத்தை யொன்று சேர்க்கிறன்.
அதுபோலப் பக்தனும் சிவமாகிய நிலத்திலே பக்தி யென்னும் வித்தை வித்திக் காமக்குரோத மோக மதமாச்
Page 185
362 நற்சிந்தனை சரியமென்னுங் களையைக் களைந்து சிவபோக மென்னுந் தானியத்தைச் சேர்த்து வைத்துப் புசிக்கிருன்.
பூலோகமாகிய நந்தன வனத்திலே சீவர்களாகிய மலர்கள் மலர்ந்து கிடக்கின்றன. சிவன் அதைக்கண்டு மகிழ்கிறன்.
பொற்கொல்லன் பொன்னை யெடுத்துப் பல பூண் களைப் படைக்கிருன்.
சிவனகிய பெரிய பொற்கொல்லன் ஆன்மாவாகிய
பொன்னை யெடுத்துச் சீவர்களாகிய பலபணிகளையு மாக்கு கிருன். 8.
வைத்தியன் பல மூலிகளையு மெடுத்து ஒன்ருக்கி நோய்க்கு மருந்து கொடுத்து நோயை மாற்றுகிருன்.
பெரிய ஞான வைத்தியனும் தனு கரண புவன போகங் களை ஆன்மாவுக்குக் கொடுத்து அதன் நோயை மாற்றி இன்ப வீட்டில் வைக்கிருன்.
தாய் தனது குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான் களைக் கொடுத்து மகிழ்விக்கிருள்.
சிவபெருமானுந் தன் குழந்தைகளாகிய எங்களுக்குப் பல விதமான இன்பங்களையுந் தந்து மகிழ்விக்கிருன்.
பொறி வழியே போந்து மனம் அலைய அறிஞர் இடங் கொடார். ஏனெனில் ஆத்மாவே தானென அறிந்தவர்கள்; ஆசை நோய்க்கு இடங்கொடுப்பாரா? அன்று.
அவர்தம் பெருமையை வேத சிவாகமங்களும் புகழ் கின்றன. இவர்களைக் கண்டால் கல்லுங் கரையும்
அனைத்தினும் வெற்றி யுண்டு.
நற்சிந்தனை 3 SB
W சிவத்தியானம்
ஒ மனிதனே! நீ உண்மைப் பொருள். கேடற்றவன். உனக்கு ஒருவருங் கேடு விளைவிக்க முடியாது.
நீ இங்கும் அங்கும் எங்கும் உள்ளவன். நித்தியன். உறுதியுடனே சிங்கங் கானகத்தில் திரிவதுபோல் உலக மாகிய கானகத்தில் திரி. எந்த விதத்திலுந் தளர்வடை
யாதே. ஒரு நூதனமு மிங்கில்லை. முழுதுமுண்மை. ஒரு பொல்லாப்புமில்லை.
ஒ மனிதனே! வானம் வந்தாலும் பூமி வந்தாலும் ஆட்சிசெய்யக் கருதாதே. சாட்சியாயிரு. மாட்சி உன் பிறப்புரிமை.
அது என்ன வுபாயத்தாலு மடையப்படுவதொன் றன்று. அப்படியுள்ள காரியம். மற்றனைத்துஞ் செப்படி வித்தை, அறிவு, அறியாமை உன்னிடமில்லை. நீ பர LDfTjöLorr.
l ஓம் தத் சத் ஒம் |
ஒ மனிதனே! சற்றுப் பொறுமையாயிருந்து பார். நீ யாரெனத் தெரிந்து கொள்வாய். துயருறத் தகாத காரியங்களில் துயருருதே. துன்பமும் இன்பமும் உலக
நடவடிக்கைகள். நீ சித்துப் பொருள்.
உன்னை ஒன்றுந் தாக்கமாட்டாது. எழுந்திரு. விழித் துக்கொள். சிவத்தியான மென்னுந் திறவுகோலால் மோகூடிவீட்டின் கதவைத்திறந்து பார். எல்லாம் வெளி யாகும். VK.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஓ நண்பனே! உன்னை யார்தான் பாவியென்று சொல்ல வல்லான், ஏன்?
Page 186
364 நற்சிந்தனை
" நீ சிவத்தின் அம்சமல்லவா? மறந்து போனுய். ஓம் தத் சத் ஒம் என்று ஓயாமற் சொல்லு, உன் முழுமனத் தோடும் இறைவனுக்கு உன்னை ஒப்புக்கொடு. சிவத்தியா னத்தை அசட்டை பண்ணுதே. ஈற்றில் யாவும் நன் மையாய் முடியும். சோம்பலுக்குஞ் சோம்பலின்மைக்கும் நீ கட்டுப் படாதே, h
அதிகப் பேச்சில் என்ன பயன். பண்படுத்தப்பட்ட தரையிலன்றே நல்ல பயன் வரும். அஞ்சாதே.
நாங்கள் சிவனடியார். சிவபெருமான் என்றுள்ள வரோ அன்று நாமுமுள்ளோம்.
வெப்பந் தட்பம், இன்பந் துன்பம், இளமை முதுமை இயற்கையின் குணங்கள்.
இவைகளின் தீண்டுதலால் நாமேன் கவலைப்படுவான்.
இவைகள் தோன்றி மறைவன. நாமோ தோன்றுவது மில்லை. மறைவதுமில்லை.
உண்மை இன்மை யாகாது. இன்மை உண்மை யாகாது.
எல்லாஞ் சிவன் செயலென்ற எங்களுக்குக் குறைவு முண்டோ? நிறைவு முண்டோ? நாம் சிவபெருமானென்ற நூலிலே கோக்கப்பட்ட பல நிற முள்ள மணிகளை யொப் பவர். நூலறுவதுமில்லை. நாங்கள் சிதறிப்போவதுமில்லை. பலபடக் கூறுவதால் பயனில்லை. . . . . . .
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஒ சினேகிதா! நீ சிவனடியானென்று முழுமனத் தோடும் நினை. எல்லா வெற்றியு முன்னிடமுண்டு. அதற்கு மேல் வேருென்று மில்லை. யாவுமுன் காலடியில்.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
நற்சிந்தனை s 365
குரு வாசகம்
ஆத்துமா நித்தியமானது. பிரிவில்லாதது. பூரணமா னது. சரீரமோ அழியுந் தன்மையுள்ளது. பிரிவுள்ளது. இப்படி யிருக்கையில் நாங்கள் இவ்விரண்டையுஞ் சரி யென்று சொல்ல முடியுமா? அப்படி நாங்கள் சொன்னல் இதிலும் பெரிய பாவமும் பழியும் வேறுண்டோ?
ஆத்துமா எல்லாவற்றுக்கு மாதியாயுள்ளது. யாவை யும் ஆளுகின்றது.
சரீரமோ தொடக்கமுடையது. ஆளப்படுந் தன்மை (1460)L-Ugbl.
இப்படி யிருக்கையில் நாங்களில்விரண்டையும் ஒன்ருே டொன்று ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? அப்படி யொப் பிட்டால் இதிலும் வேறு பழி கிடையாது.
இயற்கையிலே ஆத்துமா அறிவுடையது. தூய்மையா னது. சரீரமோ அறியாமை யுடையது. தூய்மை யற்றது. இவ்விரண்டையும் ஒப்பிட்டால் இதிலும் அஞ்ஞானம் பிறி துண்டோ?
ஆத்துமா பிரகாசமுடையது. அதாவது சுயம்பிரகாச முடையது. சரீரமோ இயற்கையிலே இருள் மயமானது. இவ்விரண்டையு மொப்பிடலாமா?
யாரொருவன் தன்னைச் சரீரியென்று நினைக்கிருனே ஐயோ, அவனிலுங் கீழ்மகன் யார்?
யார் ஒருவன் தன்னுடைய சரீரமென்று சொல்லு , கிருனே அவன் மட்பிண்டத்தைத் தன்னுடையது என்று சொன்னது போலிருக்கும்.
யார் ஒருவன் தன்னைப் பூரணனென்றும், நித்தியன் என்றும், இயற்கை அறிவுடையவனென்றும் நினைக்கிருனே அவன் உண்மை யறிவாளி. அவனுக்கிணையாக ஒரு தெய் வமுமில்லை.
Page 187
366 நற்சிந்தனை
யார் ஒருவன் தன்னை ஓர் அழுக்கும் பற்றமாட்டா
தென்றும், மாறுபாடில்லாதவனென்றும், தூய்மையிலுத்
தூய்மை யென்றும் நினைக்கிருணுே அவனை அறிவாளிகள் ஞானி யென்று சொல்லுவார்கள்.
வேதம் ஆகமம் யாவும் இந்த உலகம் முழுவதுந் தெய்வமே நிறைந்திருக்கிற தென்றும் அதைவிட வேறு யாதுமில்லை யென்றும் முறையிட நாங்கள் எப்படி உலக மிருக்கிறது சரீர மிருக்கிறதென்று நினைக்கலாகும். அப்படி உலகஞ் சரீரம் வேருயிருக்கிறதென்றல் இதைவிடப் பழி பிறிதுண்டோ? ஆன்ருேரும் நின்னவார் பிறரன்றி நீயே ஆணுய்" என்று சொல்லி யிருக்கிருர்கள்.
இன்னேரன்ன பல காரணங்களாலுங் கடவுளைத் தவிர வேறென்றுமில்லை. யாவு மவன் செயல்.
சொல்லெல்லாம் மோனம் தொழிலாதியும் மோனம் எல்லாம் நன்மோன நிறைவே.
சிவபக்தி
சிவபக்தி மாத்திரந்தான் மனிதனைப் பாக்கியவானக் கும். மற்றையவனத்தும் பிரயோசனமற்றவை. ஆகை யால் இடைவிடாமற் சிவத்தியானம் பண்ணு. ஒன்றுக்கும் பயப்படாதே. வெற்றியுன் சொந்தம். எத்தனைமுறை தவ றினலுந் தைரியத்தைக் கைவிடாதே. தவறுதல் சடசம் பந்தமானது. நீயோ சித்துப்பொருள் (அதாவது அறிவுப் பொருள்). நீயொரு நாளும் அழிய மாட்டாய். எழுந் திரு! விழித்துக் கொள்! காரியங் கைகூடுமட்டும் வழி யிலே தங்கிவிடாதே! உற்சாகத்தோடு முன்னேறிச் செல். உனக்குச் சகல சத்தியுங் கட்டுப்படுவதைக் காண். வீண் வாத தர்க்கத்திலே நாளைப் போக்காதே. நீ எங்கே போகிருயோ அங்கே உன்னுடன் பகவான் வருவார்.
வெளிமாதிரி யொன்றுஞ் செய்யாதே. உனக்குள் நீ பெலத்துக்கொள். சமயமென்பது ஒரு மாதிரியுமற்ற தனித்த நிலை. உடல் பொருள் ஆவி மூன்றையும் பகவா னுக்கு ஒப்படை. அதன்பின் உன்னைப் பற்றிய காரியங் களைக் கைவிட்டுவிடு. அனைத்தும் அவனே பார்.
நற்சிந்தனை 367 தவம்
தவத்திலே மேம்பட்டவர்களைக்கூட இந்திரியங்கள் வரம்பு கடந்து இழுத்துச் செல்கின்றன. ஆதலால் அவற்றை வெல்வதற்குச் சிவத்தியானஞ் செய்க. அதனல் மாத்திரந் தான் புலன்களைத் தன்வசப்படுத்தத்தக்கது. ஆகவே இடை விடாமற் சிவத்தியான ஞ் செய். மனிதன் விடயங்களைக் கருதும் போதெல்லாம் பற்றுண்டாகிறது. பற்றுதலால் விருப்பம் உண்டாகிறது. விருப்பத்தாற் சினம் பிறக்கிறது. சினத்தால் மயக்கம். அம்மயக்கத்தால் தவறுதல் உண்டா கும். ஆதலால் உன்னைச் சிவத்தியானத்தால் காத்துக் கொள்.
நாங்கள் எங்கள் சிறுமைக் குணத்தினல் இயல்பழிந்து தரும வழியினின்று தவறுகிருேம். தவறுதல் நீங்கித் திட முண்டாகச் சிவத்தியானமே சிறந்த கருவியாகும். இந்த உலகத்தில் மிகுந்த செல்வமிருப்பினும், வானுேரை ஏவல் கொள்ளக்கூடிய வல்லமையிருப்பினும் நாங்கள் புலன்களை அடக்கியாளுதல் முடியாது. ஆதலால் திருவருளை முன்னிட்டு மனத்தைப் புலன்வழிச் செல்லாமல் அடக்கியாள். இது தான் தவமென்று பெரியோர் சொல்வர். அதைவிடுத்து இடம்பமான வேள்வி முதலியவை செய்வதால் திடமுண் டாக மாட்டாது.
நானே நீ
என்னுடைய இராச்சியத்தில் இராப்பகலில்லை; நன்மை தீமையில்லை; நீ நானில்லை; இன்றைக்கு நாளைக்கு இல்லை; பெரிது சிறிது இல்லை; நீயுமிந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டுமாகில், அங்கு முழுமனத்தோடு வெளியேறக் கடவை; புகையிரதம் வேண்டியதில்லை; மாட்டுவண்டி தேவையில்லை; பின் என்ன வேண்டுமாகில் வைராக்கிய மென்னும் புதுக்காத வண்டிலும், சாந்தம் என்னும் இரண்டு வெள்ளை எருதுகளும், மனப்பாக்கிய மென்னுஞ் சமையாத சாதமும், யாசகமென்னும் அங்கவஸ்திரமும், ஞானமென்னும் மூக்குக் கண்ணுடியும் எடுத்துக்கொண்டு பின் முன் நாடாமல் வரக்கடவை. அப்பொழுது நீ காண விருக்கும் காட்சிகளை என்னுற் சொல்ல முடியாது. கட வுளே சாட்சி.
Page 188
368 நற்சிந்தனை
866).T6th UTG).260T
தெய்வத்தை நம்பு, முழுமனத்தோடு நம்பு; உலகில் உனக்கினியதெனத் தோன்றும் எவற்றிலும் இனியதாக நினை. அதைவிட வேறில்லை என்று நினை. இருக்கும் போதும் நிற்கும்போதும், நடக்கும்போதும், கிடக்கும்போதும் நினை. உனது நரம்பிலும் தசையிலும் இரத்தத்திலுந் தெய்வ மென்னும் நினைவே நிறைவதாக. நானில்லை, கடவுளே இருக்கிருரென எண்ணு. கடவுளைக் கும்பிடுதலே வாழ்வின்' இலக்காக வைத்துக்கொள். எவன் எதை நினைக்கிருனே அவன் அதுவாகிறன். கடவுளை உனது உள்ளத்தில் வைத்து வளர்ப்பாயாக. எல்லாம் அவருடைய செயலாகுக. ஈற் றில் எல்லாம் அவனுகவே காணப்படும்.
சிவபெருமான் அத்துவிதமாக இருக்கிருர், அடியேன் அவரே எனத் தியானிக்கும் மகிமை எனக்குண்டு. ஒருவன் எப்படிப் பாவனை செய்கிருனே அவன் அப்படி ஆகிறன். ஆகையால் "நான் அவனே' என்று தியானஞ் செய். அப் போது உன் செய்கைகள் அனைத்தும் அவன் செய்கையே யாகும். அவனைத் தவிர வேறு பொருள் இல்லை. அவனே அனைத்தும். அப்படியான அவனே தன்னைப் பல கோலங் களாக்கி விளையாடுகிருன்,
அவனுக்குப் பிறப்பிறப்பில்லை. ஆதியந்தமில்லை. ஒரு மாறுதலுமில்லை. முழுதுமுண்மை.
ஓம் சாந்தி.
நற்சிந்தனை : 369
66.60TiguTf
நாங்கள் சிவனடியார்
ஆதியுமந்தமும், இறப்பும் பிறப்பும், இரவும் பகலும், சுகமுந் துக்கமும் எங்களுக் கில்லை யென்னும் திருமந்தி ரத்தை எவனெருவன் மறவாமல் தியானஞ் செய்கிருனே அவனுக்கு ஒரு குறையும் வராது.
எதை நீ பாவனை செய்கிறயோ அது நீ யாவாய்.
இதற்கெல்லாம் விடாமுயற்சி, அதாவது சலியாமை வேண்டும் .
பாடுபட அஞ்சுபவனுக்கு ஒரு பிரயோசனமு முண்டா காது; பாடின்றிப் பட்டங் கிடையா தென்பது உலக வழக்கு.
காரியசித்தி எய்தும் வரையும் விடாமுயற்சி செய். நீ ஏன் ஓயாமல் கெட்ட காரியங்களைச் சிந்திக்கிருய்? அச் சிந்தனையை விட்டு முழு மனத்தோடு தெய்வத்தை வணங்கு. உனக்கு விதிவசத்தாற் பொருந்துவனவற்றை உவகையோடு ஏற்று நடத்து. இறுதியில் யாவும் ஜெயமாகும்.
அது அப்படி யுள்ள காரியம் என்பதைச் சதா நெஞ் சிற் பதித்துக் கொண்டு இயல்பாய் உனக்கு வரும் வேலை களையுங் கடமைகளையுஞ் செய்து கொண்டிரு. அல்லது அவற்றை விட்டிரு. எதுவுஞ் சரியே.
செய்தலிலுஞ் செய்யாமையிலும் அது தங்கியிருக்க வில்லை. கருமம் இல்லாமையை விரும்பாதே. கருமத்தைப் பற்றதே. செய்தல் செய்யாமை இவற்றுள் இயல்பாய் எது உனக்கு அமைகின்றதோ அதையே பற்றி நில்.
24
Page 189
370 நற்சிந்தனை
இன்பவிறையே
ஒரு பிதா தனது குழந்தையினது மழலைமொழியைக் கேட்டு மகிழ்வானன்றிச் சிறிதுமிகழமாட்டான்.
அவ்வண்ணமே, தேவரீர் அடியேனுடைய விண்ணப் பத்தைக் கேட்டருள்வீராக. இவ்வுலகத்திலே எத்தனையோ சாதிகளுண்டு. அவைகளின் பழக்கவழக்கங்கள் ஒன்ருே டொன் ருெவ்வாது முரண்படுகின்றன. ஒவ்வொரு சாதி யுந் தத்தம் பழக்க வழக்கங்களே மேம்பாடுடைத்த தெனக் கூக்குரலிடுகின்றது. சமயங்களுமப்படியே. இவைகள் யாவும் உலகத்தின் சிறப்புக்களேயன்றி வேறல்ல. இந்த வித்தியாசமான போராட்டங்களெல்லாம் முன்னு முள் ளன. நூதனமான காரியங்களல்ல. இவைதாம் இந்தப் பிரகிருதியின் தோற்றங்கள். இவை வேறு தான் வேறு என்றறிந்த அறிவாளி இவைகளுடன் கூடியுங் கூடாது மிருப்பன். எத்தனையோ முறைகளில் பெரிய பெரிய அவ தாரங்கள் வந்து எவ்வளவோ வேலைகளைச் செய்தும் மீட் டும் இந்த உலகம் அப்படியே யிருக்கின்றது. இது ஒரு பெரிய இரகசியம்.
தேவரீர் இவைகள் எல்லாம் நன்கறிவீர். நானென் றுமறியேன். என்னை மன்னித்துக் கொள்ளும்.
pamahagið
ஆண்டவனை யன்றி வேருெரு பொருளுமில்லை. அனைத் தும் அவன்செயல். உனது சுமைமுழுவதையுந் திருவடிக் கீழ் இறக்கி வைத்து இளைப்பாறு. கவலைக்கிடங்கொடாதே. நான் செய்தேன், அவன்செய்தானென்று நலியாதே. விழித்திரு.
நற்சிந்தனை " , 371 ·
சுகவாழ்வு
கடவுளை மனம் வாக்குக் காயத்தாலே காலை, உச்சி, மாலை என்னும் மூன்று காலத்திலும் வழிபடுதல் வேண் டும்.
சரீரத்தையும் மனத்தையும் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சரீரத்திலாவது மனத்திலாவது ஏதுங் குழப்படி ஆரம் பிக்கும்போது அந்த கூடிணமே சாப்பாட்டை நிறுத்தி, ஆலய வழிபாடு, அடியார் வழிபாடு, அல்லது இயன்ற தானதருமங்கள் செய்யவேண்டும். w வரவுக்கேற்ற செலவு செய்யவேண்டும்.
தனிமையாக இருந்து கொண்டு அல்லது நடந்து கொண்டு, தன் வாழ்நாளை நடாத்தும் வகையைச் சிந் திக்கவேண்டும்.
மிஞ்சிய போகத்திலாவது, போசனத்திலாவது, வைத் திருக்கு மாசையை அடியோடு தவிர்க்கவேண்டும்.
இறைச்சி மீன் குடி முதலியவைகளை விடவேண்டும்.
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புள்ளவனுக இருக்க வேண்டும். م s
தான் மிகவும் பரிசுத்தன் என்றுந் தனக்கு ஒரு குறை வில்லை யென்றும் அமைதியாகச் சிந்தித்தல் வேண்டும்.
மேலே சொல்லிய வண்ணம் இவ்வாறு ஒருவன் சாதித் துப் போதித்து வருவானுயின், யோகமும், ஞானமும், சர்வசித்தியும் ஈற்றில் முத்தியும் லபிக்கும்.
Page 190
US6 III
திருமுகங்கள்
Page 191
374 . . . நற்சிந்தனை
நான் யார்
நீ உடம்பன்று, மணமன்று, புத்தியன்று, சித்த மன்று, நீ ஆத்மா.
ஆத்மா ஒரு நாளும் அழியாது. இது மகான்க ளுடைய அநுபவ சித்தாந்தம். இந்த, உண்மை உனது உள்ளத்தில் நன்ருய்ப் பதியக் கடவது.
ஆனல் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு, அதா வது தருமநெறியிற் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் திருமுன்னிலை என்று சாதனை செய். கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளவர்.
இப்படிக்கு அவனே நானே.
~~
ஓம் தத் சத் ,
கொல்லம், ஆணி 17, 1938
அகமுக மாகு. அப்போதே ஆனந்தமுண்டாம்.
எதனல் கண் காணுகிறது? எதனுல் காது கேட்கின்றது? எதனல் மூக்கு முகருகின்றது? எதனுல் வாய் பேசு கின்றது? அதுதான் ஆத்துமா அல்லது கடவுள். எவ் வளவு சுலபமான வழி! நினைத்துப் பார். அனைத்துமுன் கைவசம். ஒரு கணம் நீ ஊன்றி யோசிப்பாயானல், நீ அதுவென உனக்கு நன்கு புலணுகும். உன்னுள்ளே தெய் வீகத்தன்மையை உணர். நீயே உனக்குத் தலைவன். நீயே உன்னை நடத்துபவன். நீயே உலகத்துக் கேகசக்கராதிபதி. இந்தத் தூய எண்ணத்தை மறந்தால் இறப்புப் பிறப் பாகிய சமுத்திரத்திற் கிடந்து திக்குமுக்குப்படுவாய்.
எழுந்திரு, விழித்துக்கொள். உன்னை இனி ஒன்றும் வெற்றியெடுக்க முடியாது. விளக்கு எரியவேண்டுமாயின் திரியும் எண்ணெயும் வேண்டும். நீ பிரகாசமடைய வேண்டினல் ஓயாமல் ஒம் தத் சத் என உணர்ச்சியோடு (அதாவது உயிரை எழுப்பி) பிரார்த்தனைசெய். சீக்கிரம் புத்தகத்தை முடி. h−
நற்சிந்தனை ‘ - 375 உத்தம இரகசியம்
நாங்களெல்லாம் ஒரே சமயத்தையும் ஒரே சாதியை யும் சார்ந்தவர்கள்; எங்களுக்குள் ஒருமாறுதலும் இல்லை. நாங்கள் பரிசுத்தரும், தெய்வத்துவத்துள் வைக்கப்பட்ட வர்களாகவும் இருக்கின்ருேம். வித்தியாசம் வித்தியாச மான மாறுதல்கள் யாவும் உண்மைச் சுபாவத்தின் சிறப் புக்களாக இருக்கின்றன. இவைகளை மாயை எனப் பெரி யோர் சொல்வர், ஒழுக்கத்தினுல் வசீகரப்படுத்தப்பட் டோர்க்கன்றி மற்றையோர்க்கு இவ்வுண்மை புலப்படாது. அதுபற்றியே தன்னுயிர்போல் மன்னுயிர் யாவையும் நேசித்தல் வேண்டுமென்று மகத்துக்களால் திரும்பத் திரும்ப வற்புறுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால் யாவும் ஒழுக்கத்திலேயே தங்கியிருக்கின்றன. இவ் வொழுக்கவழியில் நின்று எல்லாம் நாம் என்று பாவனை செய்து வரவர அற்புதமான அநுபவங்கள் மூலமாக நாங்கள் சடப்பொருள் அல்ல, சித்துப் பொருளென்று தெளியலாகும்.
அஞ்சேல்
14-11-33
'அஞ்சுவ தியாதொன்றுமில்லை, அஞ்ச வருவதியா தொன்றுமில்லையென்னு மான்றேர் மெய்ம்மொழி நம்மைப் பிறப்பிறப்பாகிய கடலைக் கடப்பிக்குந் தெப்பம்". இதைத் துணையாகக் கொண்ட வெமக்கென்னகுறை? ஆதலால் நிறைந்த மனத்துடன் இந்தப் பெரும் பிரயாணத்தைச் செய்வோமாக.
'அகர வுயிர்போ லறிவாகி யெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து'
இப்படிக்கு என்றும் மறவாதவன்.
Page 192
376 நற்சிந்தனை
காசியிலிருந்து எழுதிய கடிதம்
தேடித்திரிந்து காசிக்கு வந்து கண்டேன் விசுவநாதனை என்னுள். வாடித்திரிந்து வருந்த வேண்டாம். தேடிய பூடு காலுக்குள்ளே என்ற தெவிட்டா வாசக மொன் றுண்டு. இவ்விடத்திலும் மனிதர்களெல்லாம் எங்களைப் போலே தானிருக்கிறர்கள், நூதனமான காரணமொன் றும் பூதலமீதிலில்லவே இல்லை. இருந்த இருக்கிற இருக் கும் யாழ்ப்பாணத்தா ரெல்லாருக்குமாகக் கருமாதிகளெல் லாஞ் செய்து முடிந்து விட்டன. இனிமே லுங்களுக் கியைந்தபடி அன்பாக உலகில் நடந்து ஆண்டவன் அடிக்
கீழ் அமர்ந்து வாழ்க.
30- 1 - 40
Gl Glouubub
இதோபார். நான் உனக்கு மிகவும் அணித்தாயிருக் கிறேன். என்னைக் காண்கிருயா? நல்ல கூர்மையாய்ப் பார், உள்ளேயிருக்கிறேன். இன்னுந் தெளிவாய்ச் சொல் லில் நான் நீயாயிருக்கிறேன். பின் நீயேன் என்னை உனக்கு வேருய் நினைக்கிருய்?
நீயொரு கெட்டிக்காரனல்லவா? உனக்கு என்ன குறை? ஒரு குறைவுமில்லையல்லவா? உனது கடமையை நீ நல்லாய்ச் செய். யாவரிடத்தும் அன்பாயிரு. அதா வது உன்னைப்போல எவரையும் பார். பின்னல் வருவன வற்றைப் பாடம் பண்ணு.
'அரும்பிய கொன்றை அணிந்த சென்னியன்
ஆறும் பிறையும் சூடிய அழகன் இறையவன் மறையவன் ஏழுல காளி ஈசன் மழுப்படை தாங்கிய கையன் உம்பர் தலைவன் உயர்கை லாயனே'.
-ஈசுரமாலே ஒளவையார்.
நற்சிந்தனை 377.
β) - சிவமயம்
பகைத்தலும் விரும்புதலும் இல்லாதவன் சந்நியாசி யாயினுஞ் சரி, இல்லறத்தானுயினுஞ் சரி, அவனே பரம புருடன். அதாவது அவன் சீவன் முத்தனென்று பெரி யோர் சொல்லுகிருர்கள். இயற்கையோடு அளவளாவி வாழுதல்தான் பேரின்பம். அது ஒரு மாதிரியல்ல; உண்மை உணர்ச்சி. தனக்குத் தான் உண்மையாக விருந்தால் யாவும் விளங்கும். தன்னைப்போல மற்றவர்களையும் நேசித் தலே ‘தவம்'. அதுவே அறம்.
எங்குஞ் சிவம்
.ெ
சிவமயம்
யாவும் நமது ஊர். யாவரும் நமது கேளிர். நன்மை தீமை நாம்தர வருவன. பிறராலன்று. பிறர் காய்ந்த வழிக் காய்கிலம்; உவந்தவழி உவக்கிலம். யாவும் திரு வருளென்பது நன்கு அறிவேம். நம்மைச் சூழவரவிருக் கும் மலைகள் திருமாலைப்போல் பச்சைப் பசேலெனக் காணப்படுகின்றன. இரைந்து விரைந்து செல்லு மருவி களின் இனிய சத்தம் திருமாலின் கரத்திலிருந்து இடை விடாது ஒலித்துக்கொண்டிருக்கும் பாஞ்ச சன்னியத்தை ஒத்தன. சந்திரனுஞ் சூரியனு மிருபாரிக ளிருபக்கத்தும் விளங்குவதுபோல் விளங்குகின்றன. மரக்கொம்பரிலிருந்து தீங்குரலாற் பாடும் பட்சிகள் அக் கண்ணன் புல்லாங் குழல் பாடுவதை ஒத்திருக்கின்றன. தேயிலை கொய்யும் மகளிர் திருமாலின் இனிய பத்தரான கோபிகாஸ்திரீகளை நேர்வர். இவ்விடத்துக் கறங்கும் முரசம் துரியோதன னுடனே போருக்குச் சென்ற பஞ்சபாண்டவரின் தேரின் மீது அடிக்கப்படும் பேரிகையை இசைந்தது. எப்படித். திருமால் சகல வளங்களுடனுந் துவாரகையில் விளங்கி ஞனே அப்படியே இம்மலை இவ்விடத்து மிளிர்கின்றது. கண்ணனுடைய விருந்தினராக நாம் இவணிருக்கிறேம். ஒன்று கூறுதும். உவந்து கேட்குதி. நன்று தீதென நாட் கழிந்தன. என்று காணுவல் என்ற எண்ணமே இன்றும் எம்மை இசைந்து வாட்டிற்று.
என்றும் மறவாதவன். 17-3-32
Page 193
378 u நற்சிந்தனை
சிவமயம்
சொல்வதை மிகவும் கவனமாகக்கேள். நீ யார்? உடம்பா? மனமா? அன்றிக் கண், காது, வாய் மூக்கு முதலிய அவயவங்களா? இல்லை. ஏன்? எனது உடம்பு எனது கையென்று சொல்லுகிறதனுல் நான் உடம்பை விட வேறு பொருளல்லவா? ஆம்? பின்னை நான் எப் படிப்பட்டவன்? அழிவில்லாதவன். ஆகையால் எனக்குப் பயம் முதலியன விரலாமா? இல்லை. ஆனல், சரீர மன தர்மத்தையொட்டிப் பாவத்திற்குப் பயப்பட வேண்டும். புண்ணியத்தைச் செய்யவேண்டும். புத்திமான்கள் இப்படி நினைந்தும், செய்தும் பேரின்பத்திற்கு இம்மையிலும் மறு மையிலும் பாத்திரமுள்ளோராகின்றனர். நிலம், காற்று, தண்ணிர், நெருப்பு, வானம் இவைகளா லாக்கப்பட்ட வீட்டில் பகவான் வசிக்கிருர். ஆனபடியால், வீட்டைச் சுத்தமாயும், மனத்தைச் சுத்தமாயும் வைத்து அமைதி யாய் நட.
என்றும் மறவாதவன்.
842ے 18 سے87
6.
Soul Duth
உனக்குச் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. நாங்க ளெல்லாம் தேவ சந்நிதானத்தில் இருக்கிருேம். இது ஒரு பெரும் சத்தியம். யாவும் இருந்தபடியே நடந்து வருகின் றது. கிலேசமோ, அன்போ, பகையோ, இவையாவும் பகவானுடைய விளையாட்டு. இவை என்றும் இப்படியே. நாமும் அப்படியே. பிறப்பைப் போல இறப்பு. புகழைப் போல இகழ். நன்மையைப்போலத் தீமை. முழுதும் உண்மை. முன்னிலை இன்றித் தன்னிலையில் யாவும். இயங் காமல் இயங்கு. முடிவைக் காணுேம். அதுதான்
சுற்றிச் சுற்றிச் சுப்பருடைய கொல்லை.
என்றும் மறவாதவன்
நற்சிந்தனை 379
வ. &laյւՃամ)
நான், நீ, ஐயா, அம்மா, அண்ணர், அக்காமார், அத்தை, அப்பாச்சி, பெரியையா, சீனியையா, சின்னையா, கந்தசாமி, கணபதி, வைரவர், வீரபத்திரர், காளி, கூளி, கிருஷ்ணன், கிறிஸ்து, புத்தன், முகம்மது, இராச ரத்தின மாமா, சோமா மாமா, செல்லத்துரை மாமா, கன்று, பசு, ஆடு, குதிரை, சந்திரன், சூரியன், நட்சத் திரங்கள், மேடம். இடபம், மிதுனங் கர்க்கடகம், சிங் கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம், ஊர்வன, பறப்பன, கிடப்பன, நடப்பன, மலை, கடல், வாவி, குளம், கொடி, செடி என்று அளவிடக் கூடாமல் விரிந்து நிற்கிற ஒன்றுதான் கடவுள். இதை விட வேறில்லை யென்று தியானிக்கிறவன்தான் உண்மை யான பக்தனென்று சொல்லப்படுகிருன். இவனுக்கு இந்த உலகில் வெறுப்பானவர்களும் பிரியமானவர்களுமில்லை.
என்றும் பிறவாதவன்
60 -. சிவமயம்
வருடப்பிறப்பாய் விட்டது. நீங்கள் நல்ல பலகார வகைகள் செய்வீர்கள். பட்டுவேட்டி கட்டுவீர்கள். வீடு வெள்ளையடிப்பீர்கள். கோவிலுக்குப் போவீர்கள். சுவா மிக்கு நைவேத்தியமயிடேகம் முதலியவைகள் செய்விப்பீர் கள். நானே சாந்தமென்னும் புனலாடிப் பொறுமை என் கிற உத்தரீயம் பூண்டு வறுமையென்று சொல்லப்படுங் குருவின் போதனை கேட்டு மாசற்ற மனத்தைத் தரும் வெண்ணிறனிந்து, வேண்டாமையென்னும் விழுச் செல் வத்தையே மேலும் மேலும் தருமாறு பணிந்து அஞ் சாமை யென்கின்ற கேடகத்தை யுடையவனுய்ச் சுப்பிர மணிய சுவாமியினுடைய நெஞ்சிலே மிதித்து விளையாடு வேன்.
என்றும் மறவாதவன்
Η Α.- 4- 32
Page 194
380 நற்சிந்தனை
டெ சிவமயம்
பார். எல்லாம் சிவமயமாய் இருக்கின்றன. அப்போது நீ யார்? நான் யார்? ஐயா யார்? மற்றும் எல்லாம் என்ன? சிவமல்லவா? இன்னுஞ் சந்தேகமா? பயமா? பார். நான் உன்னுடனும் நீ என்னுடனும், எல்லாம் ஒன்ருகவும், ஒன்று எல்லாமாகவும் ஒருவிதமான மாறு தலும் அடையாமல் இருந்தபடியே இருக்கின்றது. எழுந் திரு. வரவரப் படி.
காலமில்லை. சுகம். சுகம். சுகம்.
பிறவாதவனிறவாதவன்
шаважами
, 29-5-33 இயாழ்ப்பாணம்
உலகமு முயிரு மாகியு மாகா அலகில் சோதி யடிமலர் பரவி ஒன்று சொற்றுது முவந்து கேண்மதி என்றும் நாங்க ளெல்லாஞ் சிவன்செயல் ஒன்றுக்கு மஞ்சேல் ஒருவனே தெய்வம் நன்று தீதென நாடிநீ கவலலை இன்று தொட்டுப் பணமெனக் கனுப்பாதே தொன்று தொட்டுப் பணந்தொல்லை யென்பர் முன்னும் பின்னு மெண்ணிமலை யாதே உன்னுள்ளு மென்னுள்ளு மிருப்ப தொன்றே சொன்ன வாசகஞ் சித்த சுத்தியைத்தரும் ஒன்னலர் தம்மை யுவந்துகொள் என்ன புதுமை யீண்டுண் டெனவறி.
ஒருநாளுமறவா யோகசுவாமி
நற்சிந்தனை " 881
.ெ சிவமயம்
நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றுண்டு. நீங் கள் உங்கள் கடமையை வழுவாது செய்யுங்கள். உங்க ளுக்குப் பகவான் நல்லருள்புரிவார்.
எல்லாருக்கும் என் அன்பார்ந்த வணக்கத்தைச் செய் கிறேன். ... । ‘’
இப்படிக்கு அவனே தானே
"செய்வன திருந்தச்செய்
மூத்தோர் வார்த்தை அமிர்தம்'.
Page 195
நாம் கடவுளை உள்ளத்தில் வளர்க்கிருேம். நாம் அவருடைய தாய். நமக்கு மவருக்குமொரு குறைவுமில்லை. நம்மை அவர் பிரிய முடியாது.
முழுதும் உண்மை.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
v
Jfr "G8 அஃகமுங் காசும் அதிகம் அஃகமுங் காசும் தேடி அலேந்து நான். அஃகமுங் காசுஞ் சிக்கென அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடெனும் அஃகமும் காசுக் தேடி அம்புவியில் அஃகமுங் காசுக்தேடி அலையும் அஃகமும காசுக் தேடிடில் Q b (y அஃகமுங் காசுந்தேடி யலையாமல் அஃகா மனத்தா அஃகுதலில்லா அறிவினை Y. அஃகுதலில்லா அறிவுடைய அன்பரகம் . அஃகுதலில்லா அறிவுடைய பெரியோர் . அஃதை யறிவோ அகண்ட வெளியிலே அகந் தூய்மை அகம் பிரமாஸ்மியென்று அகம் பீரமாஸ்மியென்னும் அகரத்திலுகர மகர st அகரத்தில் உகரமும் o Y அகரமாம் எழுத்துப்போல அகரமுதல் எழுத்தெலாம் அகல நீளங் sh அகலிடத்தாசான் அகலிகை கல்லானுள் அக்கினறுமாலை அக்கக்காவடி அக்கு மனிதனைக் அங்கிங் கல்யாதே அங்கிங் கென்றெண்ணுதே அங்கிங் கெனுதபடி ஆனந்தமாய் அங்கிங் கெனுதபடி யெங்குஞ் es a அங்கிங் கெனுமல் அங்கிங் கெனுமலெங்குமான அங்கும் இங்கும் எங்கும் நான் 峰姆曾 அங்குமிங்குமாக அங்குமிங்கு மெங்கும் ஓடாதே A அங்குமிங்கு மெங்கும் திருக்கூத்து . அங்குமிங்கு மெங்குமந்த அங்கு மிங்கு மோடி அங்கையிலே பூவெடுத்து அங்கையிற் போது அச்சம் தீர்த்து அச்சமும் கோபமும் அச்சமொடு கோபத்தை
பக்கம் 343 56 288 314 243 187 115 289 157 225 303 185 16S 214 17 264 280 156 209 57 258 166 209 102 05 33 313 254 242 280 55 105 164 265 129 249 95 223 121
85 214
25 196
6. பாட்டு முதற்குறிப் பகராதி
அ
us0 அச்ச மொழியும் அஞ்சடுக்குத் தீபமுதல் அஞ்சின் வழியை அஞ்சும் மூன்றும் அஞ்சுகங்காள் அஞ்சுபூதம் யேல்ல அஞ்சு மடக்கு
அஞ்செழுத்தாலே அனைத்தும்
அஞ்செழுத்தாலே ஆக்கை அஞ்செழுத்தாலே சஞ்சல அஞ்செழுத்தாலே அரனடி அஞ்செழுத்தின அஞ்செழுத்துப் அஞ்செழுத்துள்ளே அனைத்தையுங் அஞ்செழுத்துள்ளே அஞ்செழுத்தை நெஞ்சில் அஞ்செழுத்தை வழுத்திடேன் அஞ்சென ஆறென அஞ்ஞான் விருளை அடிக்கடி மிடியால் அடிக்கீழ் அரக்கன்
spp. uu fi g LS 6TTàs asubsoġ5(8gb அடியார்க் கடியானென்று அடியவர் பாதத் தன்பு செய்திடில் அடியவர் மனத்தை அடியா ருள்ளத்தே அடுக்குமோவின அடைக்கல மடைக்கல மரனே அட்டவசுக்களும் அட்டாங்க யோகம் அவத்தை அட்டாங்க யோகத்திற்கும் அட்டாங்க யோகமெலாம் அட்டாங்க யோகமெல்லாம் அட்டாங்க யோகம் விட்டேன் அட்டாங்கயோக மறிந்து அணங்கு தந்தெமை அனேக்து வந்து அண்டசராசரம் அவன் அண்டசரா சரமவன் வடிவாகும் sı6örlerger a0 GLDü6)Tû அண்டமும் பிண்டமும் அகத்திற் அண்டமும் பிண்டமும் ஒன்ருே அண்டமும் பிண்ட மடங்கலு அண்ட பிண்ட மனத்தும்
பக்கம் . 133
214
始
多
6
134 94 102
26 . 213 23 23 10 151. 44 112 186 137 2O7 177 159 234 301
272 40 33 281 328 35 286 316 341
155 67 226 323 26 212 18 214 13 169 276
Page 196
பாட்டு
அண்ட பிண்ட மெல்லாம் அண்ட பிண்ட மெல்லா மடக்கி அண்டர் முனிவர் கரர் அண்ணன் மாரே அதுங்ானென்னு அதுவிது வென்றவன் அத்த சாமப் பூசைக்கு அத்துவா மார்க்கமாறும் அத்துவிதப் பொருள் அத்துவிதப் பொருளை அருந்தவர்கட் அத்துவிதப் பொருளை அறிவுக் அநுதினம் சாதனை அந்தக் கரண நாமல்ல அந்தம் ஆதி
அந்தமும் ஆதியும் அகன்றேன் வருக .
அந்தமும் ஆதியும் அறியொன அந்தமும் ஆதியும் இல்லான் அந்தமும் ஆதியு மில்லா அந்தமு மாதியு மில்லா ஒருவனே அந்த வாக்கும்
அந்த விதமே அக்தி சந்தி உன் அடியை அந்தி சந்தியும் சிந்திக்கு அந்தியுஞ் சந்தியும் அன்பினி அக்தியுஞ் சந்தியும் ஆசான் அந்தியுஞ் சந்தியும் இதனே அந்தியுஞ் சந்தியும் நீ அப்படி யுள்ள தென் அப்படியே உள்ள தென்பான் அங்கு அப்படியே உள்ள தென்பான் ஆசான்
su
es ve
·4· ·
அப்படியே உள்ள தென்பான் ஆரறிவார்
அப்டடியே அப்படியே அப்படியே அப்படியே அப்படியே
உள்ள தென்றன் உள்ள தென்று உள்ள தென அடிக்கடி
உள்ளதென அன்றசான் அப்படியே உள்ளதெனச் சொல்லி அப்படியே யுள்ளதென அத்து அப்படி யுள்ளதென்று அன்பாக அப்படியே உள்ள பொருளெடா அப்பர்க்கு சமணர் செய் அப்பர் சுநதரா அப்பனுக்கும் அம்மைக்கும் அப்பனும் அம்மையும் அப்பனும் அம்மையுஞ் சிவமே அப்பனே ஆகுயிரே
a as
oe
a.
உள்ளதென அடிக்கடியே
. . .
På asb
162 63 286 55 16 204
56 351 238 280 274 282 306
34
14 I87 100 88 252 304 199 159 301 240 280 292 248 312 248 276 163 270 288 86 283 329 320 305 283 38 352 47
352
130
i
i
பாட்டு
அப்பா பரமசிவம் அம்மையப்பன் அம்மை யப்பனரிய அம்மையு மப்பனுமாய் அம்மையப்பன
அயலறியா
அயலறியாத அயலுனக்கில்லே அயணு மரியும் அரகர சிவசிவ அாகரவென்று அரவரைக் கசைத்த அரவார் செஞ்சடை அரவுசேர் பேணியெம் அரற்று மன்பர்க்கு அரனு முமையு அரியதி லரியது ஆன்மா வதுதான் அரியதி லரியது ஆன்மா அரியயனுந்தேடி அரியும் பிரமாவும் அருந்தவர்தம் அருந்தவர் கெஞ்சிலிருக்கும் அருந்தவர் கெஞ்சில் ருசிக்குங் அருமருந் தொரு ჰotტნისტყ) ტყიტნllტყ) அருவமு முருவமு மானுன் அருவாகி நின்றவன் அருவாவுருவா அருவா யுருவாகி அருவென்றும் உருவென்றும் அருளா லறிந்தேன் அருளொளிக்குள்ளே அருள்நீ தாதாவே அலகிலாச் சோதியை அலகில் உயிர்களை அலங்காரமாக அலேயும் மனத்தை அல்லலற்று வாழ வழி அல்லலெல்லாம் நீக்கி அல்லும் எல்லியும் இறைவன் அல்லும் பகலும் அறிவாக அல்லும பகலும் அப்பன் அல்லும் பகலும் அறிவாகி அல்லும் பகலுமற அவமானப் படுவதில் அவனருளாலே
பக்கம்
350 307 203 49 32 217 208 284 39 306 39 178 226 1 C6 216 103 35 295 128 302 283 214 132
214 336 108 100 280 209 299
274 106
26 278 C4
65 121 272 287 294
44 190
77 282
t_jRL".(B -
அவனவ ளதுவெனு - 。 அவனன்றி யணுவும் அசைய
அவனன்றி ஓரணுவும் அவனி வனுரென் அவனிவ னென்றதை அவனன்றி யொன்றும் அs னன்றி யோரணுவுமசை அவனே நானென்று அவைக் கஞ்சா அழகாரரியும் அழகாருமமயுலியும் அழல்சேர் கையு அளந்தேன் அருளால் அளவிலா மதங்தொறு அளவிலா வொன்றே அளவில் மதங்தோறும் அளவுக்காகாரம் அளவுக்குப் போசனத்தை அரஞ்செய விரும்னெ அறஞ்செய்வார் தங்களகமே அறத்தோடு பூசை அறமே யாற்றுதும் தினமே அறம்புரி வோர்கள் திறம் அறம் பொருள் இன்பமும் அறவாழி அந்தணன் அறவோ ரெனப்படுவார் அறி சதி யறிவிகுலே அறிவறி யாமை
அறிவுக கறிவாகி யப்பாற்கப்பாலா .
அறிவுககறி வாகிகின்றப் அறிவுக்கறி வாகியங்கு அறிவுக்கறிவாக் யப்பாலுக் அறிவுக்கறிவாகி யப்பாற் அறிவுடையார் எல்லா அறியும் பொருளும் அறுபதும் காலுமறியா அறையும் மறை அனங்கணுகத்தை அனைத்து மவனே அவன்செயலே அனைத்தும் ஒன்றாய் அ*னத்தும் சிவன அனைத்தும சிவன் செயல் அனைத்து யிரும்நீயே அ*ன வருக்கும தெய்வம் அனைவரும் ஒன்ருய்
25
iii
பக்கம்
170 170 280 120 77 234 55 257 198 227 106 179 203 170 328 106
58. 238 347 101 170 179 106 109 1)2 133
61 161
51 100 193
104 106 214 198 227 343
55
36
61 243 284 323
uT"(B பக்கம்
அன்பரன்பது சிவசிவசிவ 348 அன்பருடன் கூடி நீ ..., 319. அன்பர் தம் சிந்தை 233 அன்பர் பணி 21 அன்பர் பணிந் தேத்தி நிற்கும் 290 அன்பிலா ரோடுறவு ... 345 அன்பில்லேன் இரக்கமில்லேன் 149 அன்பிலேன் பொறுமையிலேன் ..., 148 அன்பிற் கரைந்துருகி 188 அன்பிற் குழைந்து 304 அன்பினுற் பணி ... 271 அன்பினுருகி 191 அன்பு சிவமெனல் --- 7 அன்பு சிவமென் 33 ۔۔۔ அன்பு சிவமென்ற ஆன்றேர் ... 294 அன்புடனே ஐந்தெழுத்தை ... 94 அன்புடையோர் 107 அன்பு நெறியும் ... 64 அன்பே கடவுள் ... 26 அேைப சிவ ரி கக் 114. அன்பே சிவமென அறிவார் ... 97 அ* பே சிவமென * ... 23 அன்பே சிவமெனு ... 118 அன்பே சிவமெனற 289 அன்பேசிவம் அறிந்திடடா 247 அன்பே சிவமென்று கிளியே ... 345 அன்பே சிவமென் றறைந்த 170 அன்பேயுருவாய் ... 93 அன்பே வடிவாய் 228 அன்று மின்று 225 அன்னத்தோடாடை 106 அன்னே தந்தை சுற்றம் ... 185 அன்னை தந்தை சுற்றத்தை ... 344 அன்னை தந்தையர் ... 150 அன்னை பிதாக் குருவாய் 20 அன்னை பிதாக் குருவாகி 29 அ*னை பிதாக் குருவானுன் 241 அன்னை பிதாக் குருவானுன் எங்கள் . 277 அன்னை பிதா குரு ... 296 அன்னை பிதாக் குருவாகி அடியேனே . 270 அன்னை பிதாக் குரு தெய்வம் 38 அன்னை பிதாக் குருவாகிய 214 ..ه அன்னையாவது சிவசிவசிவ ... 348 அன்னையும் பிதாவும் 314
Page 197
LTG ஆக்கி னுனெ?ன ஆக்கை கிலேபல்ல శిరీ60 tడి ஆக்கை நிலையில்லே ஆக்கை நீ பல்லே ஆக்கையே கோயில் அகஞ்சிவ ஆக்கையே கோயில் அகமே ஆக்கையே கோயிலாக ஆங்காரம் போச்சுது ஆசா?னக் கண்டேன் ஆசான் லுருளால் ஆசான் அருளால் அகந்தை ஆசான் மலரடி ஆசுகவி மதுரகவி ஆசைக் கடலில் அலைந்து ஆசை கிகளத்தினை
ஆசைடாம் ஆசையை விட்டிடடி ஆசைேைலயிற் சிக்கி ஆச்சு தென்று ஆடம்பர மெல்லாம் ஆட வெடுத்த
bę. Nuo T (o: FrgisT UT ஆபொம் ப7ரிங் ஆடுபாப் பணிந் ஆரியாம் பணிந்தாடுவான ஆடுபாம்பே ஆகி மயிலே ஆடுவர் பாரிவர் ஆனில் பெண்ணும் ஆணு ^ாய்ப் பெண்ணுமாகி
ஆணும் பெண்ணும் அலியும் ஆணும் பெண்ணும் ஆனவனே ஆண்டவன் திருவடி ஆதார வாதேய ஆதாரக்தாலே ஆதாரத்தால் ஆதார மாறு க ஆகார மாறும் அகன்ற ஆதாரமாறும் அவத்தையோ ஆதார வாதேய முழுது ஆதாரம் ஆறும்விட்டுப் ஆதார வாதேய மாணவப் ஆதியந்த ம ன்மாவுக் ஆதியந்த மில்லாத ஆன்மா ஆதியந்த மில்லாத நாடெங்கள் ஆதியந்த மில்ல
OO
ν
293
ويت
udäöd uT (R பக்கம் 54 ஆதியந்தமும் அற்றவன் 271 342 ஆகியங்தம் இல்லையென்று 80 303 ஆதியந்த மில்லையென்றன் 3 171 ஆதிபந்தம் உங்கட்கில்லேப் 269 56 ஆதியு மந்தமூ ம ன்மாவுக்கில்லை 343 225 ஆதியு மந்தமு மில்லா 111 185 ஆதியு மந்தமுமில்லான் 240 140 ஆகியு மருதமு மில்ல நமக்கு 196 113 ஆதியந்தமில்லா அப்பனு 353 221 ஆதியு மில்லே 9 208 ஆதியும அந்தமும் அானுர்க்க 299 299 ஆதியும் அந்தமும் இல்லா ... 26 ஆகியும் அக்தமும நமக்கிலே ... 250
152 ஆமைபோல வைந்து 170 219 ஆயிரங் திருநாம * ... 142 108 ஆயுகான் ... 65 - 164 ஆாகத்தினும 54 280 ஆரடா நீ யென்றே 282 242 ஆாறிபவ ரென்ன 39 ܚܚܗ 153 ஆாறிவாரென அடிககடி சொல்லுவான். 239 223 ஆாறிவாரென அடிக்கடி ஒதும் 210 128 ஆரறிவாரென அன்று 52 279 ஆரறிவாரென்ற அருமைத் 187 199 ஆரறிவாரென்ற ஆசான் ... 293 14 ஆரறிவா ரென்று சொல்லிக் • • • 82 347 ஆாறிவா ரென்று சொல்லும் ... 308 266 ஆரறிவா சென்றுன்னுமரிய ... 321 60 ஆாறிவா ரென்றெனக 288 25 ஆரறிவா ரென்றே ... 219 208 ஆரறிவா ரென்ன • .163 م 57 ஆரறிவார் என்றப்பன் 232 --مه 251 ஆாறிவார் என்று முன்னுள் 186 233 ஆரறிவார் என்னும் ... 289 . 268 ஆராயும் வேதமுதல் ... 302 293 ஆராயும் வேதம் அறியாத ... 33 44 ஆராய்ந்து நற்கருமம் ... 107 204 ஆராய்ந்து பார்த்தாலறிவே 171 141 ஆராரென்ன வறைந்த ... 171 304 ஆருமறியாமல் ... 129 113 ஆாமறியா ரெனவே ... 336 156 ஆருமறியா ரென்று ... 80 269 ஆருயிர்கள் தோறு ... 93 168 ஆருயிர் தோறு ... 100 114 ஆரையனே . 46 294 ஆரோடும் பகையாதே 345 21 ஆர் கொடுக்க . 329 220 ஆர்க்குங் கடல்சூழ்ந்த 207 ماهه
LJTUG ஆர்க்கும் சுதந்திரத்தை ஆலயக் தொழுவது ஆவதில்லா அழிவதில்லா ஆவது அழிவதுதான் ஆவதும் அழிவதும் இல்லே ஆவதும் அழிவது அறியா ஆவதும் இல்ல ஆவதும் இல்லையடி ஆவதொன்று மறிகில்லேன் ஆவதோ ஒன்றுமில்லை ஆவிக்குளாவி ஆழ fள மில்ல ஆழிதழ் இலங்கை ஆழிததுரும்பெனவே ஆளான அன்பர் ஆளான மெய்யடியார் ஆளும பெருமான் ஆறணி சடையினனே ஆறணிக்த திருச்சடையா ஆறத் துவாக்களுக்கும் ஆருக்கவலை யெல்லாம் ஆருத காதல்சேர் ஆருய்க் கண்ணிர் ஆருறுக் கபபால் ஆறறு தத்துவத்துக் கப்பா லா ஆறறுத உதுவத்துக் கப்பாலே ஆறியாறி ஆறுகுளமேரி
இகலோகம் டரலோகம் இகழ்ச்சி புகழ்ச்சியென இசையும் பொருண் ඹුණී ශාකd tuff.0’ 6කකl இச்சையில்லோரே இடத்து மடந்தையை இட பந்தனிலேறு இடமக ைற ஞாலத்தே இடம் வலமோடி இருககண்கள் பலபல இ.ே லயக கிடும்பை இவே த மறவாதே இடு துவே சிறிதுமிலேன்
SOL. Y ħl h * இ. பிங்கல இரண்டுஞ் சேர்ந்து இடையா என் பென இ. ட யிடையே
Li u ܚܝܝܐ -: S8
છx . R : , (3.-7ř
பக்கம் utu (8 பக்கம்
241 ஆறுகுடிய
314 ஆறுதலாய் இருமென்னன் 243 ஆறுதல் பெற 104 ஆறுபடி தாண்டு 251 ஆறுபிறைகொண றை pe 167 ஆறும் பிறையுஞ் சூடிய - - - 208 ஆறும் குளனும் A lev 280 ஆறு வருடமவன் 149 ஆறுவது சினமென கடி ·· · 133 ஆறுவது சினமெனு மரிய I65 ஆறுவது சினமென்னு 8 326 ஆறு வைத்ததும −− − 282 ஆனந்தக்கூத் தாடினுன்
223 ஆனந்த மாந்த மனந்தங் a A
50 ஆகந்த கடனம் ஆடினுன
131 ஆனிரைதனை
202 ஆன்மா அழியா - 149 ஆன்மா அழியாதென்று - - - 145 ஆன்மா ஒருபோதும்
154 ஆன்மா நித்தியமான 304 ஆன்மா நித்தியமென்று
303 ஆன்மா கித்தியமென்ற
188 ஆன்மாவக் கயலில்&ல
213 ஆன்மாவே காமென்று
294 ஆன் மாவே நாமென் றுாதூது 288 ஆன் மாவே நாமென்னும்
17 ஆன்மாவை
101 ஆணே நீ அடல்விடைநீ
264 இட்டுண்டு வாழ்வார் 207 இணக்கமாயிருந்து
98 இணங்கிவாழ் மாந்தர் 137, ജൂഞ്ഞ് ധ്യ பணிவார் MA () 222 இது அது என்றெண்ணுமல் a
226 இந்தப் பத்து
O5 இந்தவுயிர் உடல் ஆனுன் 161 இந்திரராதி யோரானுன் 177 இந்திரனுதியோர்
159 இப்பிறவி தீர்ப்பான
287 இம்மைக்கும்
345 இம்மை மறுமை இரண்டின் 149 இம்மை மறும்ை
152 இம்மையிலும
95 இம்மையிடிம் மறுமையிலும் 207 இயககர் முனிவர்கள்
30 இயமன் வருணன் குபேரன் weww. 55 இல்வ5, கரவேல்
155 இல்லை யென்னும சொல்
3. 248 138 52 130 171 27 18 292 238 287 147 256 284 237 215 13 69 81 274 301 353 280 8O 190 36 89. 275
Page 198
LTG இரவு பகலற்ற ஏகாந்தம் இரவுபகலற்ற தனி இரவு பகலில்லாத இரவும் பகலுமற்ற இரவும் பதலுமுன்னை இராஜ திராஜன் இருநிலனுய்த் இரு நிலனுய் இரவிமதி இருநிலனுேடிாவி இருந்த படியே யிருக்கும் பொருளை
இருந்த படியே யிருப்பதனைக் கான .
இருந்துபார் என்றென இருப்பார் பொருப்பி லிறைவி இருப்பினும் நடந்து இருப்பு நெருப்புப் இருவருங் காணு வீசன் இருவி%ன சேரா இருவினை பணு மிடுக்கணெய் இருவருந்தேடி
இருவழியை
இருவாசல்
இருவினைகளென இருவினை நீககி இருவினையான் இருவினையால் கட்டுண்டு இருவினையை நீக்கி இருவினை சுய நீக்கி இரவுபக இருவி%னயின் கட்டழித்து இருவினை வந்தெனை இருளை நீக்கி இலங்கைவாழ் தெய்வம் இலது உளதென இல்லறத்தில் நின்றெளிரும் இல்லற மல்லது இல்லற மென்பதியார்க்கும் இல்ல*ளுக் தானும் இல்லே உண்டென்னு
இல்லை உண்டென்பது
Firsof 200rut. ஈசனே எம்மை நீங்கா ஈசனே எவ்வுயிர்க்கும் அவ் ஈசனே எவ்வுயிர்க்கும் உயிராய் ஈசனே நல்லூர் ஈசனே நல்ல வாசனே ஈசனே யெங்கு மென
ν
பக்கம்
125 102
152
36 302
41 130 297 143 172 343
56 72ן 203 100 315 315 172 245
160 204 57 124 185 187 188 129 199
197 226 03 314 103 103 100 256
31 140 187
... 302
99 188
இல்லை
பாட்டு உண்டென்று இயம்ப உண்டென எடுத்து
உண்டென்று உண்டென்று சொல்ல யென்னு மலே யென்று சொல்லுவார் யென்று சொல்கிலோ இல்லை யென்னுமல் இல்ல யென்றும உண்டென்று; இல்லயென் ருெருடோதுஞ் இள ை இன்பத்தில் இள ை0 கிலேயாதென
இல்க் இல்ல இல்க் @6სზა இல்ல
ଦ୍ରୁ, ଶ୍ୱେତ ଅଲି)
இளமையுமூ இளம் பிரை அணிந்த இளம்பிறை சூடி
இளமை மூப்பிலான் இளமையும் மூப்பும் இளமை முப்பிலான் இறப்பும் பிறப்பும் இனிப் பிறவா இனிய அருள் இனிய திலினியது இனியவனே இனியேதெனக்குன் . வருமோ இனி யேதெனக்குள் இன்சொல் விளை நிலனுய் இன்சொற்றவருர் இன்ப துன்பம் இன்பமே யல்லாமல் இன்ருகி நா?ளயாய் இன்றிருளை நீக்கி இன்றுளோர் நா8ள இன்றென நா?ள யென்றே இன்றைக்கோ நா?ளக்கோ இன்ன தன்மை என்று நம்மை இன்னதன்மைய னிவனென இன்ன தன்மையனென் இன்னு னிவனென் றெவரும்
ஒருவனென ஈசன் ஒருவனெண்ணிப் ஈசன் ஒருவனென எண்ணி ஈசன் திருவடி ஈசன் திருவடியை ஈசன் மேல் நேசமாய் ஈசனை எல்லாவுயிர்க்கு
FF伊守
Y
பக்கம்
317
108 301 225 114 104 93 196 218 242 344 32 75 179 43 119 14 43 227 227 194 93 166 50 85 192
103
126
UT"08 ஈசனை யெல%லயில் ஈடேற வேண்டுமென்றல் ஈடேற்ற முண்டாமே ஈன்றளுமா யெமக் ஈயாத புல்லர் தங்கள் ஈயாத புல்லர் இடந்தோறும் ஈயாத புல்லரை நீ ஈயாத மாந்தர் Ffu (T gb ffîääsioàs) ஈயார் தேட்டைத் ஈயு மெறும்பு ஈரவார்சடை ஈரவார் சடையான ஈரவார் செஞ்சடையா
உகந்து மணங்குவிந்து உடல் பொருளாவி உடையது விளம்பேலு உணர்ந்தார்க்கு உணர்வரிய உணர்ந்தார்க்கு முணர உண்னவே உண்ண உண்ணுதே உறங்காதே உண்ணு துறங்கா திருந்த உண்டான போதுகா உண்டி சுருங்குதல் உண்டில்&ல யென்று சொல்ல உண்டில்?ல யென்றுசொல்லி உண்டோதானுன உண்மை முழுது மெனவுறுதி உண்மை முழுது மெனவோ உண்மை முழுதுமென ஒது உண்மை முழுதுமென்றல் உண்மை முழுது மென்றேத்தி உண்மை முழுது மென்பான் உண்மை முழுதுன்ெற உயர்ந்த உண்மை முழுது மென்ற ஒரு உண்மை முழுது மென்று சாற்று உண்மை முழுதுமென்றேயா உண்மை முழுது மென்னும் உண்மை முழுது மென்ருேதுங் உண்மை முழுதும் என்ற உண்மை முழுவதும் என்றுரை உண்மையும் இன்மையும் உத்தம நட்பை உத்தமர்கள் போற்றும் உம்பர் தலைவனை
vii
பக்கம் பாட்டு டக்கம் 104 ஈர்த்தென்னை யாண்டவன் ... 108 242 ஈர்த்தென ஜன யாட்கொண்ட ... 29 343 ஈவது கடைப்பிடி ... 199 93 Fr6aug Mesir seo 345 سعه - - 56 ஈவது விலக்காதே ... 345 185 ஈவது விலக்கே லென் ... 238 308 ஈவோரிரக்கவு 173 ماهه 156 ஈழநாடு வாழவந்த ... 229 172 ஈழநாடு வாழவந்த எங்கள்சிவ ... 229 3I4 ஈவாரே எல்லாம் ... 107 172 ஈறில்லாதவன் ... 147 14 ஈனருளு மாயென் ... I73 126 ஈன்றிடு தந்தை ... 57 130
2
19 உம்பர் தலைவனுயர் ... 225 231 உம்பர் தல்வனை யூழி ... 173 238 உயர்ந்த திருக்கோபுரமும் ... 220 33 உயிருக்குயிராகி 129 57 உயிரெலாம் தன்னுயிர் ... 166 163 உயிரெல்லா மாகியும் ... 130 322 உருக்கு மொழியால் 79 173 உருகி உருகி ... 187 199 உருகி உருகி உணர்வழிந்து 295 314 உருகியுருகி உணர்ந்தேன் ... 18 10 உருவேறவே செபிக்க 24 322 உருவேறவே செபித்து ... 153 64 உலகத்தோடொட்ட 167 288 உலகமும் உயிரும் ... 20 29 உலகமே கோயிலாய் ... 301 127 உலகம் உதித்ததுமாங்கே . . . 256 343 உலகம் உவக்கவும ... 231 114. உலகம் யாவையும் ... 14 312 உலகுமுயிரு மாயொன்றி 104 242 உலகெலா முணர்ந்த ... 324 36 உல்லாச கடையனடி , 249 96 உல்லாச மாயெங்குஞ் . . 298 210 உவந்து வருவான் ஓம் ... 192 287 உவமானம் கடந்த ... 77 218 உவமை ஒன்றில்ல ... 327 308 உவமை கடந்த . எல் - 92 120 உவமை கடந்த பேரின்பம ... 282 147 உவமை கடந்த வின்பம் ... 61 61 உளவறிக் தெல்லாம் ... 108 238 உள்குவாருள்ளத் ... 140 156 உள்ளத்தி னுள்ளே யுலாவு --- 173
Page 199
Lr-G உள்ளத்தினுள்ளே யொளிருஞ் உள்ளத்தூய்மையாய் உள்ளமே கோயில் உள்ள வுள்ள உறவு மிதுவே உறுதி தருவது சிவழே உறுதி யுண்ட குமுண்மை உற்றர் பெற்றருடன் உற்றரும் போனுர் உனைப்போல உத்தமர்கள் உன் துணை யன்றி
ஊக்கத்தைப்போல ஊக்கமது கைவிடேல் ஊக்கமுள்ளவர்
DGIJá (po Tu - - ஊசிமேல் நுனி - - ஊட்டி வளர்க்க
"ஊண்பொருளு ஊதியமாவதும் நீயே ஊதூது சங்கே ஒளதுாது ஒவதூது சங்கே ஊதூது ஊமத்தை கொன்றை யுவந்த ஊமை, போலிருந்தே ஊரார் சிறக்க ஊருடன் பலகக்கின் ஊருமில்லாய் பேருமில்லாய் ஊருமில்லான் பேருமில்லான் ஊரும் துணையில்* ஊரும் பேருமில்லா உத்தமனே ஊரும் பேருமில்லா ஒருபொருளை ஐவரும் .ோமில்லா ஒருவருக்குச் ஊரும்பேருமில்லா ஒருவனே ஊரும் ருேமில்லா ஒருவனை
எங்களை ஆள் குருகாதா எங்கw விட்டுப் எங்கள் குருநாதன் எங்குக் திருவிழி எங்கு தேடினுய்
1ங்கு மீசனே யேத்துவார் ww எங்கு முள்ளவன் எங்கும் ஈசனை எங்கும் என்றன் தங்கும் எங்கு சிவனடியை எங்கும் மாதவர்
பக்கம்
304 272 107 115 169 247 174 173 221 243 230
9G.
287 238 301 174
57
, 104
81 147 189 190 174 140 107 314 130 154
46 302
36 114 289 156
59 114 53 175 262 272 204 10 265 38 206
viii
பாட்டு உ நினைவல்லால் உன்மத்தங் கொண்டு உன்மத்தன் போல உன்மத்தன் போலே உன்னடிமை உன்னைப் பிரிவனுே உன்னை மறப்பேனுே உன்னை முழுவதும் உன்னே யல்லால் உன்?ன யுனக்கொரு உன்?ன உணர்ந்தவர்கள்
பேருமில்லா ஒருவன் பேருமில்லா ஒருவன் திரு பேருமில்லா வொருவன் பேருமில்வாத உத்தம?னச் பேருமில்லா னுள்ளான் ஊரும் பேரும் இல்லையென்று ஊரும் பேரும் இல்லான் ஊரூராய்த் திரிந்து ஊழிக் காலத்து மொருவர் ஊழ்வினைபோக ஊனு (புணர்வா யுயிருக் ஊணு யுயிராய்க் ஊணு யுயிராகி யுட்கலந்த ஊணு யுயிரா யுலகாயோ ஊஞய் உயிராய் உளத்திற் ஊனுய் உயிராய் உடலாய் ஊனுய் யுயிரா யுடலாய் உறுப்பாய் ஊனுமவனே உயிருமவனே ஊஜமாய் உயிருமாகி ஊனே நீ உயிரே நீ ஊன் பொதிந்த
ஊரும் ஊரும் ஊரும் ஊரும் ஊரும்
எங்கெங்கு சென்ருலும் எங்கெங்கே எங்கே காம் அங்கே எங்கே நீ அங்கே நான் எட்டாத கொப்பிலிருக்கின்ற எட்டாத கொப்பிலிருககுந் தேனுக்கு எட்டாத கொப்பில் எட்டாத கொப்பினிலே எட்டாத கொப்புக்கு எட்டாத பேரின்பம்
எட்டுத் தரம்
t க்கம் 122 129 289
56. 337 185 93 165 302 249 88
185 295 225 242 174 80 108 187 174 120 74 308 188 343 93 186 199 106 56 275 14
115 303 162
63 286 175 27. 155 155 155 152
ix
பாட்டு பக்கம் பாட்டு பக்கம் எட்டுத் திசையுமற் . 304 எல்லா மாயல்லவுமா . திருவரு ... 187 எட்டும் இரண்டும் அறியாத . 220 எல்லாமாய் அல்லவுமாய் இருப் ... 185 எட்டு மிரண்டு மறியா எனக்கொரு . 52 எல்லாமாய் அல்லவுமாயிருக்கும் . 63 எட்டு மிரண்டு மறியா எனக்குகல் . 125 எல்லாமு மல்லவும் ... 310 எட்டுமிரண்டு மிசைந்து ... 286 எல்லாமென் ... 18 எட்டுணையும் தாழ்ச்சி ... 286 எல்லாமென்னூர் ... 346 எண்ண மெலாம் ... 102 எல்லாம் அவனே 62 எண்வ்கை ஒருவனே .. 310 எல்லாம் சிவமயம் ... 301 என ணமல் எண்ணிடடா . 322 எல்லாம் சிவன் செயலே 13 ۔ ۔۔ எண்ணிப் பணிவார் ... 289 எல்லாம் சிவன்செயல் 53 ۔۔۔ எண்ணிய வண்ணம ... 56 எல்லாம் செய " ... 40 எண்ணி யெண்ணிப் ... 246 எல்லாம் நினது செயலென் 188 ••۔ எண்ணி யெண்ணி ... 201 எல்லாம் நீ யென . 205 م எண்ணி லடங்காதடா ... 264 எல்லாம் நீயே ... 175 எண்ணு மெழுத்துங் ... 314 எல்லாம் வல்ல திருப்பாதம் 202 ۔۔۔ எண்ணு மெழுத்துமாய் ... 225 எல்லா ரகத்தும் ... 161 எண்ணுவார் எண்ணங் . 140 எல்லாரிடதது முள்ளாய் -- 230 எண் ணுவார் நெஞ்சில் 309 எல்லா ரிடத்தும் . ... 230 எத்திக்குமாகி . 238 எல்லாரு ருவமும் ... 230 எ திக்கு மீசனடி ... 224 எல்லா ருள்ளத்தினும் ... 24 எத்திசைக்கும் ... 273 எல்லாரையு ... 89 எத்தொழிலச் - ... 69 எல்லார்க்கு மன்பு ... 24 எந்தச் செயலுஞ் ... 252 எல்லார்க்கும் தம்பிரான் . . . 235 எந்த நேரமும் ... 31 எல்லார்க்கும் நன்மைசெய் ... 264 எந்த நேரமும இறைவன் ... 272 எல்லார்க்குமாங் கடவுள் ... 197 எந்த வேளையும் 54 எல3லசொலல ... 302 எந்தையே எந்தையே 50 எல்லேயிலாக் கருணை ... 110 எந்தையே எம பெரு ... 46 எல்லேயிலாவருள் .233 م.م எந்நாளும் நல்லூரை 66 எல்லே பெமக்கில்லே ... 344 எப்டடி இவன்றன்மை ... 283 எவரேனும் ... 166 எப்பவோ முடிந்ததென எங்தை 186 எவ்வுயிருந் தன்னுயிர்போல் - 60 எப்பவோ முடிந்ததென எனக்கு ... 270 எழுக புலருமுன் OO 8 எப்பவோ முடிந்த தென்றெடுத் ... 211 எழுதவே யொண்ணு ... 104 எப்பவோ முடிவான" ... 39 எழுவாய் பயனிலைகள் ... 222 எமன் வருமுன்னே ... 105 ஏள்ளப்படா ரறிஞர் ... 107 எல்லாஞ் சிவன் செயலென்பர் ... 165 எள்ளுக்கு ளெண்ணெய் ... 115 எல்லாஞ் சிவன்செயலென்றெண் ... 304 எள்ளுக்குள் ளெண்ணெய்போலெங்கும் . 343 எல்லாஞ் சிவன் செய . 287 எள்ளுக்குள் எண்ணெய்போல் 12 எல்லாஞ் செயவல்ல இறைவனே . 130 எள்ளும் எண்ணெய்யும்போல ... 136 எல்லாஞ் செயவல்ல தெய்வம 297 எள்ளுக்குள் எண்ணெய் == 294 எல்லாஞ் செயவல்ல சித்தர் ... 142 எள்ளு மெண்ணெயும் ... 14 எல்லா வுயிரினு ... 295 எனக் கினியாள் ... 203 எல்லா உலகமுமான ... 108 எனக்கின்பமே வா ... 68 எல்லாச் சமயமும் ... 305 எனக்கும் தனக்கும் ... 36 எல்லந் தருங் தெய்வம் . 197 எனக்குள்ளே as 121 எல்லாப் பொருள்களும் ... 147 என்செயலாவதில்லை ... 175 எல்லா மாயல்லவுமாய் . ... 93 எனது யான் எனும் ... 332
எல்லாமாய் அன்றி . 162 என் செயல் ... 168
Page 200
TG என் பிழைகள் எனபு பூண்டவன் என்று நீயன்று நாம் என்றும் மறவா என்று மிருந்தபடி
என்று மினியான் w
என்னப்ப னெம்பிரான் - - - என்னாசை ஆரமுதை
என்னுருயிரே as a என்னிதய வெளியினிலே so என்னுயிருக் குயிரானை
என்னு ளொளியை என&னக்கணமுடி பியா
6j&ኔ Ibffሀ Jö8mኽr
ஏகமனதாகிக்
ஏக மாசிய ஏகமாகிய இறைவன் ஏகம்பம் மேவி ஏகப மேவியந்த ஏகன கேகனுயுறற ஏகனகே கணிாறவனடி ஏகனகே கனிறைவனடி வாழ்க 6JaST (Brb a GigaST 6T ,) ஏகனனேக னென்று சொல்லும் ஏகனநேக னெல்லார்க்கு ஏகன் அநேகன் ஏகனனே கனிறைவனடி ஏக னனேகனென்றுமிமைய ஏடவிழ் கோதை
ஐங்கரத்தொ ருகோட் ஐஞ்சு பூகமும் ஐஞ்சு மாறுமான ஐந்தாண்டு விழாவத&ன ஐந்து பலன்வென்ற ஐந்தும் அடக்கா ஐந்தெழுத்துள்ளே ஐ*தெழுத்தை ஐம்புல பந்தனை ஐம்புல ஆனந்தையும் ஐம்புலன் தன்?ன வென்ற
ஐ பலன் வழிபோம் e 8
ஐம்பூதt ஐம்பொறியும்
ஐம்பூதம் காமல்லக்காணும் de
பக்கம்
126 47 186 89 54 319 242 126 303 344 127 156 175
157
168 301 225 14り 104. 295
93 300 185
175
287 343 131 .
56
225 11 111
58 2n5 252 167 317 205 1s8 114 244 343 282
பாட்டு
பக்கம் என்?ன நீ வேரு 57 என்னேயறிவித்தென ... 53 என்னை யன்றி 125 என்&னயினிப் பிறவாமல் 270 என்?ன பிணி மறவாமல் 344 எ**னயுடையானவன் 154 என்?ன யெனக் - 1 என்னையெனக் கென்னுலே ... 134 என்னையெனக் கென்னலே அறிவித்த 149 என்?ன யென்னுல் 204 என்?ன யென்னு லெனக்கறி 204 என்னே விட்டகலாம 235 என்னுேடு 121
ஏட்டிலெழுதிக் 108 ஏதும் அவன் செயலென்று 114 எது சிவன் செயல் 36 ஏதுமற நில் 289 ஏதுமறியாத 188 ஏது மொன்ாற 57 ஏலாது செய்பவரை 107 ஏவா மக்கள் 314 - ஏழுலகங் கொழுதேத்தும் 242 எrழக்காய் வந்திரங்கி 302 ஏழை பங்கன் 15. ஏறுவாம் பரி ... 31 ஏற்கமோ திருவுருளுக் 273 ஏற்றில் வருவது 148 ஏனையவ றங்களினு 103
ஐம்பூதம் நாமல்லவென்று கூவு 80 ஐம்பூதம் நாமல்லவென்று ஊது 190 ஐம்பூதம் நீயல்?ல அறிந்திதனை 242 ஐம்பூதம் நீயல்?ல ஐம்பொறி நீ 309 ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறியு 191 ஐப் பூதம் நீயல்ல ஐம்பொறியும் 154 ஐம்பூதம் நீவீரல்லீர் 269 ஐம்பொறி மாட்டு 336 ஐtபொறியும் மனமும் ... 185 ஐம் ெஈறியை அடக் ... 12 ஐம்பொறி வழிசெல்லாமல் ... 292 ஐம்பொறி வழிபோய் is ... 252 ஐம்பொறி வழியினிற் 120 ممن ஐயந் தீர்த்தடியேன் 140
u"(B 3ut Lifs ஐயப்படாமல் ஐயப்பாடின்றி ஐயமிட்டுண் ஐயமில்லா ஐயமெலாம் தீர அன்புடனே ஐயமெலாம் ஐயமே னென்றுரைத்த ஐயமேன் காணு ஐயங்கொடுப்பது ஐயமபுகார்
ஒடுங்கு மனத்தில் ஒண்டொடியே ஒப்பற்ற தெய்வமே ஒப்பில்லாத ஒப்புயர்வற்றவன் ஒரு கறியும் ஒரு சொல்லா ஒரு தெய்வம் ஒருலகம்
நாமம் ஒருருவம் பிடிசோற்றுக்காய் கோந் நெல்லரிசி பொல்லாப்புமில்லையெடா பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு டொல்லாப்பு பொல்லாப்பு பால்லாப்பு பொல்லாபபு பொல்லாப்பு பொல்டிாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு
Lfüsiაზo
uჩ6სზდა மில்லேயென் Lfleobo gir Lfléსზეა மில்8லயென்றவர் மில்லையென்னும் மில்லத்தம்பி tfsöådu JLIr மில்லயுணர்வீர் மில்லையென
மில்லயென மில்லையென மில்லயெனும் மில்லேயென்றே மில்லயென்டான்
பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல லாப்பு பொல லாட பு ,ெ எல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு ெஎல்லாப்பு ஒருவ: மிருவரும் ஒருமை மனம்படைத்த ஒரு மொழியதணு ஒரு ஏமாழியா லென்றன்*
26
மில்லையென்று மில்லையென்றே
y pw ah
.ொல்லாப்பு மில்லையென்று ஒது .
ow a
a
மில்லையென்றென் . மில்லையென்ற மருந்து மில்லையென்ற வாக்கு
bapa
xi
பக்கம் 1( 4. 187 301 287 15 289 36 93 56 148 107
166 83
347 109 329 18 186 188 270 121 305 39
276 248 185 186 301 321 243 258 120 207 219 296 289 287 225 312 288
87
255 163 267 228
93
பாட்டு ஐயம் புகினுஞ் ஐயம் புகுத்து ஐயம்வையாதே ஐயனே ஆரூரில் ஐயனே சறகுருகாதா ஐயனே யழகன ஐயாற கலாத ஐயுந் தொடர்ந்து ஐவருமுன் ஏவல் செய்வார் ஐவர் செய்வினையில்
ஒரு மொழியாலே உணர்தற்கு ஒருவனுலே உலகம ஒருவனுலே உல*மூ ஒருவனே தெய்வமெனும் ஒருவனே தெய்வமென்னும் ஒருவனே யொரு ஒருவ%னப்பற்றி ஒவ்வாதன சொல்லி ஒழுக்க விழுப்பந்தருய் ஒளிக் கொளியை ஒற்றுமை பிந்தவூரிடை ஒன்பது வாய்ததோற்பைக்குளு ஒன்பது வாய்க்தோற்பைக்கு ஒன்பது வாயிலுள்ள ஒன்பது வாயிலும் ஒன்பது வாய்ததோற்பைக்காயி ஒன்பது வாயில் உடைய ஒன்பது வாய்த்தோற்பையு ஒன்பது வாய்த்தோற்பை தன்னில் ஒன்ரு யிரண்டாகி ஒன்ருய் யிரண்டாய் மூன்றயோ ஒன்ருகக் கண்ட ஒன்ரு யிருப்பதும் ஒன்றப் இரண்டாயொரு ஒன்ருய் இரண்டாய் ஒன்றிரண்டென்று ஒன்றிரண்டென்றே ஒன்றிரண்டென்னு ஒன்றிலொன்றி ஒன்றுக்கு மஞ்சாதே ஒன்றும் இரண்டும் ஒன்றென இாண்டெனளண் ஒன்றெனக் கும்பிடுவாய் ஒன்றென ரண்டென ஒத ஒன் றிரண்டென்று ஒன்றென்றிரு தெய்வம் ஒன்றை நினைக்தென் ஒன்க்ரு இரண்டோ
uàsasůd
wwat
3 4. 131 216 302. 51 176 199 188 153 157
163 15 212 37 3CO 212 314 85 123
136 302 187 243 157 131
1C4 140 153 176 114 148
63
33 112 230 343
10 264
207 262 113 309 295 雯13 217
Page 201
LuMGB ஓங்காரக் கம்பத்தினுள் ஓங்காரக் கம்பத்தின் ஓங்காரத்தி ஓங்காரத்தினுள்ளே ஓங்கார நாதமே ஓங்காரத்தாலே ஓங்காரத்தில் உதித்த ஓங்காரததின் ஓங்காரத்துட்பொருளான ஓங்கார மேடையின் ஓடாதே வழுக்குமடி ஓடி யோடி ஓடிவாடா தொண்டா ஓடு கங்கையுடன் ஓடும் இருநிதியும் ஒம்ே புளியம்பழமும ஓடும் புளியம்பழமும்போலும் ஒதாதஈர்க்கில்ஸ் ஓதாமல் வேதம் ஒதியுணர முடியான் ஒதியோதி.மீரமே ஒதியோதி .தனனையே ஒதியோதி யுன்மத்த ஒதுபல் வேதமூரைசெய்த
ஒளவனத் தில்லையில் ஒளவா நல்ல ஒளவியம் செல்வம் ஒளவியத்தை நீக்கி அகக் ஒளவியத்தை நீக்கியறத்தை ஒளவிய நெஞ்சத்தார் ஒளவிய நெஞ்சததால் ஒளவிய நெஞ்சப ஒளவிய நெஞ்சை ஒளவிய மனத்தின ரறியா ஒளவிய மில்லாமன
கங்குலும் பகலுமில்லாக் கங்குல் பகலற்ற கங்கல் பகலகாணுத கங்கைச் சடை கங்கையொடு கசடுதீர்த்தறங் _ கசிந்துஈகி
கஞ்சனும்
கஞ்சமலர் கஞ்சா அபின் கடலகுழிலங்கை
xii
Q பக்கம் பாட்டு பக்கம் 157 ஒது மன்பர்களுள்ளத்து ... 347 187 ஒதும் பொருளும் ... 107 15 ஒதுவ தொழியே லென்ற . 243 37 ஒதுவார் தீவினை ... 200 333 ஒதுவார் நெஞ்சில் ... 50 185 ஒமெனும் ஒண்பொருள் ... 148 225 ஒமெனுந் தாரகம் ... 116 109 ஒமெனு மெழுத்தினுள்ளே ... 295 176 ஒமெனும் எழுத்தினுள்ளே உல - S6 113 ஓம் ஓம் என்று 326 هـه 84 ஓம் சிவ சிவ ... 306 17 ஓம் சிவாயநம வென்றுசொல்லு ... 318 279 ஓம் சிவாயாகமவெனத் 292 138 ஓம் சிவாயநமவென்று சொல்லுவோர். 115 289 ஓம் சிவாய நமவென்று உறுதி 287 س 104 ஓம் சிவாய நமவென்று ஒது 302 .س 221 ஓம் நமசிவாயவென உருவேற ... 93 314 ஓம் நமசிவாயவென உருவேற்று ... 349 329 6th b(3ot nito rug09 ... 307 240 ஓம் நாம் நாமென்று ... 298 12 ஓயாமல் உள்குவார் தம் 43 ۔۔۔ 17 ஒருரு வானுன் ஈருரு ... 111 251 ஒவியம் போலி 309 349 ஓவியம் போலிருந்து ... 343
ஒள 225 ஒளவிய மில்லா வறிவு ... 37 56 ஒளவிய மில்லா அறிவை ... 15 105 ஒளவிய மில்லாதார் 187 مصم 289 ஒளவியம் பேசல் - 314 343 ஒளவியம் பேசா 302 ۔ 185 ஒளவியம் பேசாதே 243 ماهه 109 ஒளவியம் பேசி ... 93 309 ஒளவியம் பேசுதல் 288 سسه 157 ஒளவை உறுவை .107 مم 176 ஒளவியமறறதும் ... 148 200
176 all 681T Syrigh ... 250 157 கடிவது மறந்திடடி .291 سم 223 கட்டாத மனத்தைக் ... 155 38 கட்டுருமன் ... 21 105 கட்டுப்படாதமனத்தைக் ... 225
5 கட்ப்ேபடா மனத்தைக் கட்டத் 186 سمي 318 கட்டுப்படாமனத்தை • 316 مه 52 கட்டுப்பாடில்லாதார் ... 161 94 கண்டவாரும் ... 316 255 s6irl Gut sirtuou98o ... 83 347 கண்டுசர்க்கரை -- 153
uTGB கண்டாரு மில்லயடி கண்டார் ககை கண்டொன்று சொல்லாதே கண்ணல்லக் காதல்லத் கண்ணபிரானுங் காணுக் கண்ணுரக் கண்டிடடா கண்ணுலே காணுெணுதது கண்ணிறைந்த செல்வத்தை கண்ணிறைந்த ஆண்ணுக்கு அணிகலன் கண்ணுக்குக் கண்ணுயிருக்கும் கண்ணுககுக் கண்ணுயிருக்கின்ற கண்ணுக்குக் கண்ணுகிகின்றய் கண்ணுக்குக் கண்ணைங்ாம் கண்ணுக்குக் கண்ணுய கடவுளை கண்ணேயுறங்குறங்கு கண்னைப் போலறங் கண்ணையிமை கண்ணைக் கண்ணுல் பார் கண்மூன்றுடைய கதிரவன்னெழுமுன் கங்தைத்துணியணிந்து கங்தைத்துணியணிவான் கமலாகான்முகன் கமலநான்முகன் கண்ணனுங் கருங்குயில்கள் கருததிற் கருத்தாயிருக்கும் கருத்திலிருக்கும் கதிர்காமத்தோனே கருத்தில் நினைந்துருகிக் கருத்தில் கருத்தாகி கருத்திற் கருத்தே
காக்குந் திருவடிகள் காட்டகத்தே வாழுங் காட்டிலே காளியுடன் காணுகின்ற கண்ணிற் கலந்த காணுகின்ற கண்ணிற் கலந்துள்ள காணுங்கண்ணிற்
காணுங் கண்ணிற் கலந்த கண்ணது . காணுங் கண்ணிற் கலந்ததென்பர் .
காணுங் கண்ணிற் கலந்தவனே
காணுங் கண்ணிற் கலந்தவனேகார் .
காணும் கண்ணிற் கலந்து காணுவார் தொண்டர் காண்பதெல்லாம் காண்டான் காட்சி காண்பான் காட்சி காட்சிப் காண்பான் காட்சியுங் காட்சிப்
xiii
பக்கம் பாட்டு பக்கம் 255 கருமத்தைக்கை ... 258 82 கருமததைச் செய்யலன் ... 267 286 கருவி கரணங்களெல்லாங் 336 ۔۔۔ . 264 கருவிகரணங்களெல்லாங் கலந்து . 297 306 கருவூரில் வாராமை 24 . . ۔ ۔ 322 கரைகாணு வின்பக் ... 219 273 கரையவொரு சொற்சொல்லுஞ் ... 249 33 கரையுமன்பர்கள் ... 348 33 கர்ப்பூரப் பெட்டிகளும் ... 83 23 கல்லார் கற்ருர்க்கும் ... 100 112 கல்லார்க்குங் கற்றவர்க்குங் ... 29 113 கல்லாதார்பாற் A sw 7 146 கல்லாப் பிழையுங் 236 278 கலேகள் பலவுங் ... 298 310 கல்ல நிகர்த்த ... 89 270 கல்லை நிகர்த்தமனங் ... 121 12 கல்லான கன்னலுண்ணச் ... 146 118 கல்லொத்திடு மனங் 67 277 கவனமாய் கருமத்தை ... 77 349 களிபெருகுங் காமக் 195 .م 246 கறங்குபோலக் கலங்கு 176 288 கறுத்திருண்ட கண்டத்தின் ... 145 248 கற்பனை கடந்த வற்புதன் ..... 179 47 கற்றதனுற் பயன் 258 ۔۔۔ 349 கற்றவர் விழுங்கும்கருணை 210 معه 346 கற்ருேரும் அறியாத 312 86 கனைக்குங் கடல்சூழ் ... 323 79 கன்னலொடு செந்நெல் ... 217 27 கன்னலுடன் செந்நெல் .164 مم 331 கன்னலொடு செந்நெல் கதலி 127 33
As 218 காண்பானும் காட்சியும் ... 81 134 காண்பானுங் காட்சியும் போய் 223 124 காதலாற் பாடி 134 162 காதலிக்கு மெய்யடியார் 63 163 காதல் நீ கருத்தும் 75 55 влi,5si (psyaso 310 168 காமக்கடல் கடந்து 304 251 காமமுதலாறுங் கடிந்து 75 233 காமமுதலாறுங் களைந்த 102 270 காமாதி குணமெல்லாங் 40 244 காயமே கோயில் கடிமணமடிமை . 253 195 காயமே கோயிலடி தங்கமே ... 260 195 காயமே கோவிலாகக் கண்டிடும் 141 10 காயமே கோயிலாகக் கண்டு பாவனே . 321 203 காயமொரு 267 294 காயம அழிந்து 13
Page 202
LmtG காயுங் கனியுமாகி காராரானவக் கார்த்தி கேயனைக் &ff tập காவார் குயில் காலனே கோலிக் காலமுமில்ல காலனு மணுகான் are)? is ass systs) காலனக் காலாலுதைத்தான்
கிஞ்சுக வாயுமை
கீரன் சொன்ன
குடிப்பிறந்தாரோடு குடி முழுதையும் குணங்கடந்தது குணமிலலா மூர்க்கரோடுங் கும்பிடுவார் தம்மனத்தைக் ஆம்பிடுவார் நன் மனத்தை கும் மியடி பெண்ணே குருசீடம் முறை
குருந்த மரத்தடியில் குருவாக வந்தவன்
குருந்த மரத்தடியில் குருவாக வந்து
குருபக்தியே குருபரன் அடியின
கூசும் கொலைகள் era LL66 60637 go e.g. suffusf கூத்தாடுதே கூவியழைத்திடுவாய்
Basudio Lo6oř
கொச்சை மக்கள் கொச்சை மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சம கொஞ்சம ய் மனத்தைக்
கொடிய வசுரர் கொடுத்தார்க்கு கொண்டுங் கொடுத்துங் கொத்தார் குழலுமை
p.
209
xiv .
L0âkastb 244 179 216
211
92 160 9 69 72 162
கி 18O
ó 180
(ඊ) 58 234 305 149 161
63 234
10 283 255 205
s 206 347 279 232 259
uTü"CB asTe)6T as கா% க் கட்டித் காகித்தூக்கி கால நீ தூக்கியாடும் கால மா8லயுங் கால யெழுந்திருந்து காலை யெழுந்து asp akA) (éeQuèsT காணக்குறத்தி
கிட்ட நெருங்கையிலே
குருபாதம்
குருவடியொரு குருவான கல்லூரிற் செல்வன் குருராஜ
56Nobsao p6OOTT Tås esorb6bú Um Trá குலாகலம் பாராதே ۔۔۔۔ குழந்தை யன்போடு குருவின்
குழந்தை யன்போடு நாம் குழந்தை வேலா குற்றமெல்லாம்
கூவுகுயிலே கூறுவார் கோடி கூறும் நாமுதல் எல்லா கூறும் நாவே
கையையுங் காலையு
கொல்லாதே கோபம் கொல்லாமை கள்ளாமை கொல்லாமை பெரிதென்று கொல்லார் பொய் கொல்லா வரமெனக்கு கொல்லானே கொன்றை மத்தம் கொன்றென்றும்
ιμάταιο
92 16 72 141 347 19 169 37 68
82
61 259 335 167 210 322 274 278
78 304
80 315 305 153
180
264 24
1(3
89 310 180 322
untG கோகனகத்தானுங் கோணுதசிந்தையுடன் கோணிய பிறையை கோபம் பொருமையை
கெளரியை யிடத்தில்
hlasrüe (Burao
да ато சங்கர சங்கர சம்பு சங்கரன் தானினே சங்கரன் திருப்பாதம் சங்கோசை சஞ்சலத்தை சஞ்சலம் மிகவும் சணடக மரத்தடி பிற் சத்தி சிவமாகித் சத்தி சிவ மொன்றன சத்தியம் பொறுமை சகதியுஞ்சிவமும் சந்ததம் சாதனை
சாங் காலம் Ժր (3600 t சாதலும் பிறத்தலுக் சாதி சமயங்களில்லான் சாதி சமயமென்னுஞ் சாதி சமயப் பற்றினை
சிங்கக் குட்டி சிங்களவர்
சிங்காரங் சிட்டர் பரவுஞ் சிததத்தினுள்ளே சிவ சித்தததினுள்ளே தித்திக்குங் சித்தக துள் கித்தம் சித்தததி லூறுக் சித்த திலே தித்திக்குங் சிததத்துள் தித்திக்கக் சித்திர காரன்தீட்டிய சிகதி தருங் தேவாய் சித்தி பெறலாம் சிகதி மயிலேறு சிங்க% க் கெட்டாத
XV
Vä dobT
பக்கம் பாட்டு 180 கோல மாமலர்
82 கோல மொன்றும்
233 கோலா கல 259
கெள
274
226
ሪፓ 180 சந்திர சூரியர் காப்பாம் 263 சந்திர சூரியரானுன் 105 சந்திரன் தவழ்தரும்
95 சந்திரனில்லச் 81 சமய தீக்கையைப் 154 சமய நெறி 325 சர்வம் பிரம
81 சலன முதிப்பது 33 சற்குருதரிசனம் 38 சற்குருவின் 66 சற்றுஞ் சந்தேகங் 177 சற்குருவைப் போற்றித் 226 சனகர்
FA 311 சாந்தம் உபசாந்தம் 275 சாந்தம் பொறுமை 181 சாந்தம் பொறுமை யன்பு 240 சார்ந்தவர்க்கு சாவா 248 சாவதும் பிறப்பதுங்
. 250
265 , சிந்திக்க நெஞ்சும் 265 சிந்தித்துச் சிந்தித்துச் 28 சிங்கி சிந்தி சிக்கி 286 சிந்தித்துத் தெளிந்தார்
89 சிந்தையிலன்பு
167 சிந்தை செய்கதிர் 235 சிந்தையில் வெந்துயர் 303 சரித்டிப்புரமெரித்த 316 சிரித்து கலலூர்
33 சிரித்து முப்புர
181 சிரித்துப் புரமூன்றுஞ் 238 சவ சீவு என்றிடும் 346 சிவ சிவ என்று
70 சிவ சிவ வென்றெந்த 191 சிவ சிவ என்று சிந்திப்பர்
பக்கம்
32 54 72
35 240
25 296 203 315 305 256 263 319 168 192 179
320 31s) 164 167
196 187
169
315 46 349
329 54 47 142 341 77
213
Page 203
Luri CB சிவ சிவ செல்வக் கணபதி சிவ தொண்டு செய்வார்க்குச் சிவ தொண்டனென்னும் சிவ தொண்டன் சிவ தொண்டு செய்தல் சிவத்தியானஞ் சிவதொண்டு செய்வார் சிவத்தைக் கண்டிடர் சிவத்தை நோக்கித் சிவத்தினை வளர்க்கும் சிவத்தியானத்தைச் செய்யும் சிவத்தை மறைத்தது சிவத்தை விடத்தெய்வம் சிவநாமமைந்தெழுத்தும் \ சிவ நாமஞ் சொல்லி சிவ நெறிச் செல்வர் சிவபக்தியாலே சிந்தை சிவமே தாமெனச் சிந்திப்பார் சிவனடியார்கள்
&Lot?gTL
சீரகமுள்ள சீராரிலங்கை சீராரும் நல்லூரில் சீரார்மேனியுடையாய் doroT aligu(BartGB a.8
சுகதுக்கம் சுட்டாமல் சுந்தரற்கு சுந்தரற்குப் பெண்
56)
5 g6 flT குதானதற்ற சூதானவெளியில் சூரியன் தோன்று
செக்கச் சிவந்த செக்கர் போலும் செத்தார் என்பு செந்நெலுடன் கன்னல் செந்நெல்லும் கன்னலும் செப்பந்தரமோ செய்யமேனியனே செல்லப்ப &ன *தினம் செல்லப்பன் என்னுக் செல்லார் செல்வக்குருகாதா
as Y 8
po
s.As
*K. dia o
4 UA to
xvi
பக்கம் uTG 232 சிவமே நாமென்று சிந்திக்கச்
42 சிவனடியாருடன்கூடி
48 சிவனடியாரை
120 சிவனடிக்கன்பு செய்குவர் 208 சிவனடியாரொடுங்கூடி 135 சிவனடியைச் சிந்தை 299 சிவன் சிவனென்று
12 சிவனேயுன் தரிசனங் 17 சிவனையல்லாமல் தேவரு 245 சிவனுெருத்தனே 272 சிவாய நமவென்று
299 சிறப்பு மிதுவே
198 சிறையார் வண்டறை
58 சிறப்புக் குறைவிடமே 61 சிறப்புஞ் செலவமும்
141 சிற்றம பலவன்
212 சினத்தை மனத்தில்
299 சினத்தைக் கொல்லுவோம் 109 சின்னத்தனமாய்த்
153 சீருந் துணையில்&லச்
181 சீர் பெறுஞ்சித்தரும் ஆங்கே 303 சீலஞ்சேர்
270 சீலமு மதுவே
135 சீவன் சிவனெனல்
26 சீவன் சிவனென்று
62 er (5508uur 155 öጽጨfftß 111 சுழி முனைக்குள்
12 சுனைக்கும் கல்லூர் 284 சுன்னுகத்தான
279 சூரியன் வருவது 168 தலபாணியைத் 141 26.) JusÐLULJETÜ 346 சூழமிகநினைத்து
செ
313 செல்வச் சிவதொண்டன் 202 செல்வச் செருக்கினுற் 25 செல்வகிலே யாதென்று 249 செல்வம் அது
59 செலவர்க்கழகு 51 செல்வர் பின் சென்று 25 செழுமலர்த்திருவடி
67 சென்னிக்கணி
16 சென்றன சென்றன 310 சென்றன வாணுட்கள் 12
o
168 285
47 249
46 256 272 169
45
37
11 323 322
160
132 229
16
9) 197 249 127 18
97 193
22 162
LTG சேணிடை சேண்பொலியுக் சேர்ந்தவர்க்குத்
சைவனேயுன்னத்
Garres (Sur (8s சொல்லச் சொல்லச் சொல்லமுடியாத தீர்ப்பு சொல்லமுடியாதபொருள் சொல்லாமற்சொன்ன சொல்லாலே பயனில்லை
சோடிழந்த சோதிப்பிழம்
ஞானதேசிகனே
தக்கன் வேள்வி தங்கப் பொம்மை தங்குஞ் சிவ தச்சன் கட்டா வீட்டிலே
தச்சன் கட்டா வீட்டிலே தாவும்பரி
தட்டா னிடத்துச் தண்ணிர்க் கடவுள் தண்ணிர் குளிருமோ தத்தாதித் தோம் தத்து பரி தத்து வங்களாருறும் தத்துவந் தொண்ணுற்றறுஞ் தத்துவப்பே தத்துவம் ஆருறும் தத்துவ மெல்லாம் தத்துவம் யாவுஞ் சடமென தத்துவம் யாவுஞ் சடமென்று தந்திமுகத்தனச் தந்தை தாய் மற்றுங் தந்தை தாய் மைந்தர் தந்தைதாயும் தமஞ்சம மிரண்டின் தம்மைத்தம் மாலறிந்த
is List (Bu தருமநிலையிலே தருமநெறி பிசகாமல் தருமமு மில்லத்
xvii
Lånd
v Kej
(35戸
tă atb பாட்டு 181 சேவித்துஞ் சென்றிரந்துஞ் சீவன் . 224 சேவித்துஞ் சென்றிரந்துந் தம்பி 164
சை 81
சொ 24 சொல்லாலே வாய்த்த 279 சொல்லால்வருங்
95 சொல்லித்துதிக்குக் 40 சொல்லிற் கலந்த 16S சொல்லுகிவமே 264 (des s676TUIT scorés
@于阿 82 சோமசுந்தரன் 131
(6. 222 ஞானயோகம்
த் 111 தர்க்கஞ் செய்யப் 265 த&லயிலிரந்து 249 தலையை நிலத்தில் 316 தவஞ் செய்து 342 தவத்திற் சிறந்தார் I55 தவத்தை யாற்றிடில் 101 தவராச சிங்கத்தை 102 தனக்குத் தானிகரான
46 த*னலம் வீந்திடத் 105 தன்மை முன்னிலே 162 தன்னே அறிந்தால் 141 தன்னை அறிந்துவிட்டால் 224 தன்னைத் தன்னுல்
40 தன்னைத் தன்னுலறிந்த 1^2 தன்னைத் தன்னுலறிவார்
61 தன்னத் தன்னுலறிந்திடடா 44 தன்னைத் தன்னுலறியடா 212 தன்னைத் தன்னுலறியவேண்டும் 184 தன்னை மறந்தருளில் 124 தன்?ன யறிந்தார் 182 தன்னே யறிதல்
66 தன்னே யறியத் தவத்தை 320 தன்னை யறியத் தவமுயற்றும் 85 தன்னை யறியத் தனக்கொரு 255 தன்னை யறிந்தோமே 267 தன்னை யறிந்தோர்க்குத் 168 தன்னுெப் பாரில்லாத
192 220
18 13 276 51 65 182
226
313 16 298
7. 320 272 288
32 205 296
19
226
247 342 255
59 161 198 177 27 91 239
38
33
Page 204
UT" (8 தாபதர்தம் தாமரையில் நீர் தாயினு மன்பு தாயுங் தந்தையுமாகி தாரகத்தனி தாவித் தாவிச் தாவும் வேங்கை தாளம் போடு
திக்குத் திகாந்த மெல்லாம் திக்குத் திகாந்தமும் திக்குத் திகாந்தமும் கைவச திங்கட் சடையாய் திங்களும் கங்கையுஞ் சீறும் திங்களும் கங்கையும்
திங்களும் கங்கையுஞ் சென்னியில்
திங்கள் கங்கை திங்கள் தங்கிய திடமுட்ன் தியானஞ் தித்திக்கும் அமுதே தித்திக்கும் அமுதினேத் தித்திக்கும் ஒரு
தீமையெவர்
துக்கம் சுகம் துஞ்சாதே தூங்காதே துட்டச் சமணர் துண்டப் பிறையாய் துதிக்க மதிதந்த
தூக்கியபாதத்தின் தூங்காமல் தூங்குஞ் தூண்டு சுடர் தூது சுந்தரர்க்
தெய்வத்துக்குத் தெய்வமே திருவருள் தெய்வமே யடினென தெய்வம் எல்லோர் தெய்வம் ஒன்றெனத் தெரிந்து செயலாற்றும்
தேகம் நீயல்ல வென்றன் தேகம் நீயல்ல வென்றதிட
χνiii
தா பக்கம் Jr" (B 259 தானதருமங்கள் 184 தானந் தவமிரண்டுக் தானுற்ற 85 தானர் தவமிரண்டுஞ் சற்று 244 தானுன சற்குருவைத் 117 தானுன தத்துவன 220 தானுன தன்மை 182 தானுன தானேயல்லால் 326
தி
2 திருந்து மடியவரொடு 44 திருநீறும் ஐந்தெழுத்தும் 3.13 திரு நீறுஞ் சந்தனமும் 236 திருவருட் செயல் 209 திரு ருள் கைகூடுது
37 திருவருளை நாடி 44 திருவாரும் நல்லூரில் 182 தில3லயம்பலத் தாடும் 136 தில்லையம்பலத்தைக் கண்ணுற் 250 தில்லயிலாடிய 135 தினத்தனைப்போது மறவாமல் 310 தி&னத்தனப்போதும் மறவோம் 3 தினத்துணைப்போதும் மறவாது
தீ
196 தீவினைகெஞ்சத்
து 33 துப்பி சைந்த 254 தும்பி முகன் 317 துள்ளித்திரியும் 183 துள்ளும் மனத்தை 218
து 234 தூலதுக்கும
113 தூவி மயிலேறும் 196 தூணே நீ
83
தெ 223 தெரிந்து வினையாற்றும் 326 தெளியுமே நின் சிங்தை
32 தெளிய வழிகாட்டும்
7 தென்னவன் தீப்பினி 272 தென்னு தென்னுவென 191
தே 1 தேகம் விழுமுன் 141 தேகமே மெய்யென்று
»eo
... 284
பக்கம் 165 103
117 254
224
283
334 266
267 307 338 233
285 323
182
26 292 115 249
169 220 275
198
86 117 183 310
168 124
பாட்டு தேகாதிதனை தேங்காயி லிளநீர் Ο ΣΚΣ தேசகாலம் யாவையும் ob தேசம் புகழுஞ் சிவன் w
தேசம் புகழுந்திரு ops தேடாமல் தேடென்ரு to a தேடித் தேடித் pov தேடி நான்காணும் தேடிகின் திருவடியே தேடிவாடாதொண்டா (3g (Bs. Tñ um. (Bé apud தேர்முட்டிப்படி o தேரடியில எங்காளும் 4. தேரடியிற் சென்று way
தையலார் மையலிற்ருன் o O
தொண்டர் நாங்களே தொண்டு செய்வாருக்கு தொந்தோ மென்ருடும்
தோடுடைச் செவியனே A a தோளாமுத்தே
நகரத்துள்ளே Fasa நஞ்சணி நஞ்சை a de гъt-ti (Bie OO நட்டா ·· bഞ്ഞ് ഇ obes (5 LDé(ğ ΑΑΟ το நமச்சி வாயவே நாம்சொல்லும்
நமச்சி வாய வாழ்கவென நமச்சி வாயவே நான்மறை
கமனு 8 நபமிடமெல்லா w a w ந1 மிடமென்றுங் s நம்பன்
bi 3560bas bel960T (ur Qe p ur நயப்பார் நரிபோல் bora நரியை 8 நலமறிய oе நல்லசமயமிது 8 wo நல்ல தெய்வானை Wh நல்ல மருந்தொரு - - - நல்ல மலரெடுத்து opp நல்ல மழை - கல்லன m நல்லூரான் கிருபை.காம் as a நல்லூரான் கிருபைவேண்டும்-வேறெ. கல்லூரான் திருபபாதம் Op நல்லூரான் திருமுன்பு was
27
பக்கம் பாட்டு 215 தேரடியில் வீற்றிருப்பான் 115 தேவதேவனே என்றுந்
60 தேவரும் முனிவரும் 307 தேவர்கடம்
41 தேவர் சிறை
2 தேவர் பிரான், 271 தேவாதி தேவ 141 தேறிததெளிந்த
45 தேனுந்துகொன்றை 279 தேனுந்துசோலேத்
7 தேனுந்து முக்கணித்
81 தேனும் பாலினுமினிய 282 தேன் சொரியுஞ்
86
தை
90 தையல் வேட்டுச்
தொ
4. தொல்லாகா னிருவர்காணு 230 தொழுது வணங்கிடுவாய்
41 தொழுது வணங்கிநின் தோ 340 தோன்ருத்துணையை 184
b
212 நல்லூரான் திருவடியைப்பாடு 167 நல்லூரான் திருவடியை நான் 149 நல்லூரான் வீதியிற்போய் 250 கல்லூரில் செல்லப்பன் 155 நல்லூரில் தேரடியில் 306 நல்லூரில் வாசன் 293 நல்லுரைக் கும்பிட்டு 177 நல்லூர் ஆட்டக்காரா 315 நல்லூர்பதியிலே 58 நல்லூர் வாசனே
38 நடு லூர் வெளியிலே 277 நல்லோரி 277 fò sobombs 144 நல்லப்பதிக்கு
80 நல்லப் பதிக்கரசே
29 நல்& யில் வாசா
79 நவாகவமாய் 329 நவிலுமறை
16 நற்சிங்தை யெனும். நறுமலர் 86 நற்சிந்தை யெனும்.கல்லமுதம் 264 நனந்து
7 நன்மை
98 நன்மையுந் தீமையும் நாமல்ல 86 நன்மையும் தீமையும் நாடா 222 நனமையும் தீமையும் கங் 2O6 நன்றியை
91 நன்று தீதை
73 கன்று தீதென்று
95 நன்றென்றுக் தீதென்றும் 190 நன்றெனத் தீதெனத்
பக்கம்
329 252 251 153
183 321 292
134 142
43
83
183 223 193
340
255 113
Page 205
LTG நாங்கள் சிவமென் காசிதுணி
DETSATT & காடியொரு கருமம் is si mb|Tig,68LLum நாடுவார் நாதன் நானும் காமஞ் நமந்தி நாமறியோமெனச் சொலு நாமறியோ மெனும் நாமறியோ மெனும் நல்லமந்திரம் நாமறியோ மென்னும் நல்வாக்கு நாமறியோ மெனும் கறியதிரு நாமறியோ மென்ற கலந்திகழ் - நாமறியோ மென்று கல்லூரிற்சொன்ன . நாமறியோ மென்று 8 8 நாமறியோ மென்று சொன்னுன் நாமறியோ மென்று நகைத்தென்னே. நாமறியோ மென்று நல்லூரிற்
கிகரொ ருவரும் நிஜமா மான்மா கிததியம கித்திரையை நித்தியர்
நிலனுகிக்
நில்லடா நில்லன் பொடு நினைந்து கில்லாத காயத்தை கில்லாத நீர் நில்லாத செல்வத்தை நிற்பனவும்
:
நீக்கமற்று நீங்காத நீங்காது
நீதிகுருபரன் &
திே அநீதியென்னும் நீதி நெறியைச் நீயருளாப்டிற் கீயும் நானும் நீயே நான் என்றுநேர் நீயே நான் என்று நீயே கான் என்னும் நீயே நீயாயிருக்கப் நீராய் கெருப்பாய் ரோனுய் நிலனுணுய் ருேங் காலும்
KK
நா LIä3úb 311 152 279 346 141 117 158 251 47 92 39 S2 21. 163 161 293 288 82 276 219 270
259 332 278 162 238. 197 298
235 30
90 146
342 113 333 240 248 80 338 58 63 87 2 269 27 12S 2O1
uTB நாமறியோ மென்று முன்னுள் நாமறியோம என்ற நல்லதிருவாக்கை . நாமாாககுங் was நமோர்குடியுமல்லேன் நாமார்க்கும் ஆளல்லேம் நாமுமே நாமாக நாமும் காமாக நாமே நாமென்றுரைத்தான் - a a நாமே நாமென்றுசொல்லிச் re. nbrüd büd blid 66 காவலரும் நாவுக் நாற்றிசையுஞ் நான் உன்ன நான படும் நானுரென் கானென்னும் நானே நீ நன்மதி நானேநீ நீயோநான் நானென {B୩ (କ୍ରୋଥି) ଓ
Tâb(8urû
ßoT é a rấgrăso
ißጿ0] õÖ [filgulgDU நினைககு மடியாரை நீயே 8 நினைககு மடியார் கெஞ்சத்துள்ளே கினைத்தபடி AO ARO V t6]3%All their • ** به நினைவில் நினைவாகி
நினவுக்கு நிஜனவாய்
கின்னு வார்
நீர்நிலம் தீகாற்று
ក៏ពុំ ឯសb ឆ្នាំ
நீல கண்டன
நீவா தா
நீள நினைக்கும்
நீறணி நின்மலா - நீறணிந்த 8 நீறணிமேனியினும்
நீறணியான் < Ad• «O நீரு திருமேனி கீறாமேனி as கீறு பூசிய As a 0 நீறு மணியான்
பக்கம்
186 329 184 330 346 153 38 3. 80 326 43 43 117 71 43 124 29 275 275 330 167
197 164 306 218 201 284. 323 194 158 294 184
256 235
32 334 111 201
25 145 151 329 303 135
3. 248
UT'09
நுண்ணிடை 48 r.
நூதன
நூலறி
கெஞ்சகம் -8 கெஞ்சுருகும்
நேசயோகத்தார் asp
கைந்து
நொந்தவர் a Neae
பகருவார் நெஞ்சம்
பக்குவகால பக்குவாய்ப் a பக்தர்கள் எல்லாம் 4 பக்கிசெய்து பந்தத்தை d பக்திசெய் யோகசுவாமி 0.
uங்கில் மங்கையை பச்சை நிறப்புற்றரை பச்சைப் பசுங்கிளியே பச்சை மாமயிலோடு பச்சைப்புரவி பஞ்சப்புலன்களுங் பஞ்சப் லன்வழி - பஞ்சம் படை வந்தாலும் a y பஞ்சம் படை வந்த LJL-&plaus 5 guð b பட்டது பட்டேற்று பட்டால் பாவாடை பட்டுக்குடைபிடித்து பணித8லக் கொள்ளல் - பணிபவர் கெஞ்சினுனே meAO பண்ணவன் பண்ணே பண்ணிற் - பண்டையனும் மாலுந்தேடிப் - பண்டையனும் மாலுமடி பண்டு செய்த வல்வினை நோய் பண்டு செய்த வல்வினையால் பண்டுசெய் வல்விண்நோய் பண்டு செய்வின யெல்லாம் பறந்து பண்டு செய்வினை யெல்லாம் பரிந்தன. பண்டு மின்றம் என்றுமுள்ள பரனடி , பண்டு மின்றுமென்றும் பண்டுமின்றும் உள்ள பதமலர் போற்று
8 v 8
பாசத்தால் வெந்து நொந்து பாடல்பத்தும் படிப்போர்கள் . . . பாடவறியான் பலகலையுந் தானறியான்
xxi
டு
பக்கம்
158
T
158 169
நெ
167
284
நே
1.59
நை
252
நொ
159
50 313 313 120 23 24 25 342 83 137 342 351 186 69 94 250 316 155 286 206 139 144 231 316 297 322 286 254 4. 169 306 38 264 85
329 41 222
பாட்டு
நூற் பெர்ருள்
@Bທູ (ມ நெற்றி
நேசத்தால் oo
கையும்
பதின்மூன்று பாடல்கள் பத்திககு மடியவர்
பத்தி செய்யும் es •
பத்தியுடன் பத்துப்பாட்டா மிவற்றைக் பத்துப்பாட்டும் படிப்பவர் பத்துப் பாட்டுப்படிப்போகும் பத்தும் காலும் பத்தும் படிப்போர்க்குப் பாக்கியமுஞ் பத்தும் படிப்போர்கள் --- பத்தும் படிப்போர்கள் கேட்போர்கள் . பத்மாசனத்தில் 4 பந்தஞ்செய் பாசமே - பந்தமும் வீடும் -- பந்தமெனும் பந்தி பக்தியாயிருந்து
பயமுண்டோ
U06junigun fids o 4 பரவு வார்க்கருளுவாய் - a பரிந்தன்பர் பாதத்தில் பரிந்து பணியாற்றி e பருவத்தில் மழை a- - -
6) LU606us iš
பல்வினே போக்கி
பவ நெறிகடக்கப்
பவம் நீங்கும்
பவவருடத்துப்
பவவருடம் மார்கழியிற் பழம் பாக்கு வெற்றிலே பற்றற்ருர் பற்றும் பரமகுரு பற்றற்றர் பற்றும் பரமபொரு பற்றினுற் பிறந்திறந்து டன்னுட் பழக்கத்தினுட் பன்னிரண்டு காற்
பாடி மகிழும் சிவபாக்கியம் UT gtUTigtj USOoflub பாடிவாடா தொண்டா o
a
233
46 158
202
159
279
Page 206
Luar LGB பாதாரவிந்தத்தைக் காணுமற் ܝ ܝ பாதிச் சாமததின் பாதி மதிசூடிப் பவளம்போல் பாம்பும் புலியும் பாமர மக்கட் பணிசெயல் பாரவன் விண்ணவன் காண் பாரறியார் இவருடையதன்மை பாராதி பூதமெல்லாம் urg" (Bur. G6.6ö73öT பாாம் விண்ணுமாகி நிற்பது பாசையனே கடைக்கண்ணுல் பாரையனே மனம் பாரொடு பூதங்களாகிப் பரிதிமதி பாரொடு விண்ணுய்ப் பரந்தான் பார்க்கப் பார்க்க பார்க்கு மிடமெங்குஞ்
பார்ப்பதெல்லாஞ்சிவ
Słgpayäfia v 9:35 (dsGoTeirg Lumok pas பித்தனென்றவர் பிறவி · sa பித்தனென்றும் பேசுவார்
பித்தனெனப் பலபேரும் an A பிராண னபானனுங் காப்பாம் waபிருதுவியப்புத் பிறப்பிறப்பற்ற பெருமான் பிறுப் பிறப்பில்லாத
புகல்வதற் கொன்று புத்தியை நீநாட்டாதே புத்தியை ஒன்றிலும் காட்டாதே புலன்வழிச் செல்லும் பொல்லாப் புல%னவென்ற ெரியோர்களுளம் புள்ளிக் கலாப மயிலேறும்
பூக்கைகொண்டு போற்றடா பூக்கைகொண்டு போற்றுமடியார் பூதங்கள் ஐந்தான
பூதங்களில்&லப் பொறிபுல பூதங்களைந்தாகிப்
பெண்ணுமானு மில்லையடா vo பெரிதானுய் சிறிதானுய் · · · பெரியதிற் பெரியது waw
இபசரிய சிர்ச்சனகன் பேசாத மந்திரத்தின் பெருமை Yoo பேணும் பிறபபிறப்பில்ல யென்பார் .
36
XXii
பக்கம்
113 54 128 234 206 330 282 321 86 244 46 46 151 145 24 2O7
194
288 59 31 329 82 351 285 166
133 224 258 141 38
85
342 132 4.
296
126
sou
247 125 99
பே 103
12 251
Lumu" (8 LuTuTfuULe?ST பாலகற்குப் பாற்கடலைப்பாரி பாலன் மார்க்கண்டன் பாலனுக்காகப் பாலும் பழமுக் பாலக்குடித்துப் பாவணி செய்துபாடு பாவம்போம் பொல்லாப் Luñ any sa)ñf (5 fT6QJ6)ñi பாவலர் நாவலர்கள்
பாவலர் நாவலர் பணியும் நல்லூரில்
பாவனை யொன்று டாவிகளறியார் பாவிகதும் பாட்டிசைத்துங் பாவியென்று uTpG Fuqua Lor uLuT பாற்கடல் தன்ன
வீறப்பிறப்பில்லாப். யெங்கள்
பிறப்பிறப்பில்லாப் பெருமானே நீ
பிறவார்கள் இறவார்கள் பிறியென்றன் பிறியாமற் பின்ன ரெனக்குப் பின்னுமுன்னு மில்லே பின்னைப் பிறப்பிறப் பின்னேப் பொய் பின்னே யுனக்குத்துணை
புறத்தில*லபாதே புனலொழுகப் புன்னகையாலே புன்சொல் புன்னுனிமேல் நீர்போல் புன்னேறி செலும்
பூதம் நீ பொறியும் பூப்பொலியுங் பூவின் மனம்போற் பூவும் மணமும் போலப்
பெரியவன் சிறியவனென்பது பெருமான்காண்
பெருமை சிறுமையில்லாப்
பேதங்களெல்லா மாயினும் பேராயிர முடையான்
296
255
62 217 110 346
75.
203
275 134 165 208
16S 144 100
167 150
ur.09 பொங்கல் பூசை பொங்கிவரும் அமிர்தத்தை பொங்கிவரும் காமமே பொங்கும் காமக்குரோத பொய்யை மெய்யென பொல்லாப் பிங்கில்லையென்று பொல்லாப் புழுமலியும் பொழில் வாழும் பொறியஞ்சும் வென்றவர்தம் பொறியைந்தும் வென்றவர் பொறிவழிச்செல்லும் பொல்லா பொறிவழிபோம் பொறிவழிபோய் பொறிவழிப் புகுத்துதே பொறிவழிமனத்தை பொறிவழி மனம் போயல் பொறிவழியினிற் செல்லாதே பொறிவழியே பொறிவழியே போய்ப்புகுந்து பொறிவழிபோயலயாமல் பொறிவழியே போயலயும்
போக்கும் வரவும் இல்லாப்புனிதன் போக்கும் வரவுமுள்னானில்லான் போக்குவரவில்லாத
BLJOT óGolest G8 QU6qfiio?bo போகபோக்கியம் எல்லாம் போதுகொண்டு போற்றேன் போதுமளவும்
diis 6TT as roaTas L0äl č56T aš0 LDTsor மங்களம் ஜெய மங்களம் 1 மங்களம் ஜெய மங்களம் 11 L) bi 36ITLDI és L) மங்களமான வார்த்தை மங்குவார்
udělspasuoTř
மங்கையொரு மடைதிறந்தாற் மட்டிலாதது
மணிவாசகங்
மண்டலங்கள் மண்டலம் முழுவதும் மண்டலம் மூன்றும்
цовбот (В மண்ணுகிய பூதமைந்தும் மண்ணுசை பெண்ணுசை
xxiii
GUIT
பக்கம் uT'GB ιμά δύο 265 பொறிவாயிலந்தவித்தான் ... 109 95 பொறிவென்றர் தாமும் 103 95 பொறுமையுமடக்கமும் 166 249 பொறுமையைப் பறங்காப்பது ... 12 138 பொன்போல்மேனியர் ... 160 239 பொன்போலும் திருமேனி உடையார் . 143 90 பொன்போலும்-மேனியனே ... 33 31 பொன்னுணுய் மணியானுய் 125 316 போன்னுசை பெண்ணுசை ... 20 30 பொன்னுசை முண்ணுசை அகப்பேய் . 254 165 பொன்னுசை மண்ணுசை பெண்ணுசையை 294 60 பொன்னுர் மேனி 30 91 பொன்னுருடலிற் பொடியைப் பூசிப் 32 317 பொன்னிறத்தது சிவ சிவ சிவ 348 61 பொன்னின் குடத்துக்கெவர் 154 202 பொன்னும் பொருளும் ... 101 258 பொன்னும் பொருளும் புகழுந்தருவான். 201 13 பொன்னே மணியே ... 233 124 பொன்னே நீ பொருளே 275 235 பொன்னே யன்றி 9
19
(3 it
20 போமே போம்வின 80 319 போம்போம் வினையென்று 326 13 போவதும் வருவதுமில்லை யென்பார் . 251 330 போற்றி யென்வாழ் முதலா
168 போற்றி யொரு பெரில்லாப்பு ... 64 192 போன காலத்தை யெண்ணிப் 203 19 போன நாட் கிரங்கும் 165
O
95 மண்ணுசை வையாதே .264 م ه 53 மணணுதி பூதமெல்லாம் .. 30Ꮞ 352 மண்ணுணுய் விண்ணுணுய் 125 353 மணனினுசை 16 265 மண்ணையும் விண்ணையும் 52 249 மண்ணுெடு விண்ணும் 101. 265 மண்தீகால் 143 265 மண்புகுந்த - 33 39 மண்முதற் ... 349 95 மதிககு மதி ... 278 348 மதிக்கு மதியீ ... 62 226 மதிககும் மதி 195 سم 154 மதிதவழ் சடையாய் ... 132 169 மதியிலேரவி 204 ۔۔۔ 162 மதியும் கதியும் ... 20
4. மதியு மிரவியும் 320 150 மத்த மாமலர் ... 32 164 மததம் மதியொடு ... 348
237
Page 207
பாட்டு மத்தம் மதிதடி மத்தர் பேயர் மந்திர தந்திர மானுன் o மந்திர தந்திரமும் M osgop மந்திரமாய்த தந்திரமாய் மந்திரமுங் தந்திரமும் ஆளுர் மந்திரமுந் தந்திரமும் வேண்டா மரகத மயின் மரத்திலே மல மருந்து கண்டேனே மருமத்தில் மருமமறிந்தவர்கள் மருவாருங் மலர் மிசை யோனும் மலைத்து கிணற மலமேலேறி மழை யென்னும் Op.
toTov opp மாசில்லா மாதவர் மாசில் மாதவர் மனத்திற் es மாண்டார் மனத்தானே மாண்டு போனவர் மாண்புடனே a O மாதம் மும்முறை o மாதிரி யொன்றுஞ் மாதுமை பங்க up to மாமதுரைத் - - LOTLDusio
மாமனுய் வந்து
LOTULUusisoofiu a6o
முக்குன மாயைக் முக்குறுணிப் a முச்சந்திக் குப்பையிலே முச்சந்திக் குப்பை முடிந்தமுடிபென்னும் முனிவன் முடிந்த முடிபென்ருன் முன்னும் பின்னு முடிந்த முடிபென்று முன்னின்று முடிந்த முடின்ெறு முன்னுளிற் முடிந்த முடிபெணறு முன்னுளில் ஆசான் முடியப் பிறப்பிறப்பைக்
ههولى F5-لا-الول முண்டக மலர்ததாள் os ab M முததமிழ்ச் சங்கம் ” ܚ - முதத்திக்கு வழியை u upan முத்திக்கு வழிகாட்டும் a
XXίν
பக்கம் 303 178 240 288 126 143 162 66 123 283
210
136 250 190 110
74 110
89
313
33
342 293 276 219 161
329 29
286 69 206
330
urt'(B பக்கம் மறந்தாலும் பிறந்தாலும் ... 153 மறவாதே யெெைறன்றும் ... 164 மறவாமல் போற்றும் ... 112 மனச் சாட்சி - 285 மனத்தில் வஞ்சகம் 32 மன சுதுக்கண் 109 மனத்துயரம் மாற்ற 79 மனத்துயரைநீக்க ... 284 மனமாட்சி உள்ளார் ... 285 மனமாட்சி வேணுமென்று 285 மனவாசகங்கடந்த ... 63 மன்னவகுகி ... 44 மன்னுதவ ... 101 மன்னுயிரெல்லாம் ... 205 மன்று பறித் 323 محیه மன்றுள்ளேயாடு 05
மாயும் மனிதரை 244 மாரியுலகை 101 மாருட்ட ... 329 tDafléaÉ; ... 241 மார்க்கண்டற்காக ... 283 மார்க்கத்தை ... 342 மார்க்க நன்நெறி ... 216 மாலயனும் 124 மாறிப்புலன் 235 மாறிப்பொறிவழியோகா 236 மாறிப் பொறிவழிபோய் 81 மாற்றறியாத 111 மானுயி மானம் ... 224
முத்திக்கு வித்தான ... 33 முத்திக்கு வித்தை ... 238 முத்திக்கு வித்தை மூனயிலிட்டுச் 162 மு போதுங் 312 முயல முபல 284 முருகா வோ 76 முழுது மூண்மையென 39 முழுது முண்மை ஆச்சுதெடி 154 முழுது முண்மையென்று முனிவனவன். 161 முழுது முண்மையென்று முன்னுள் 223 முழுவது முண்மையென்று முகமலர்ந் . 321 முழுவது முண்மை யெனமுன் ... 292 முழுதும் முண்மையென்ற 63 முழுவது உண்மைஎன மொழிந்தான் 163 முழுவதும் உண்மையென்று 200
UFC முற்ருத (UዎይD£D] முனியே முனைத்து வரும்
முனை ததுவரும் மூர்க்ககுனமெல்லாம் .
முனைந்துநிற்கும்
மூண்ட வல்வின மூதாதைமார் மூர்க்க குணமில்லே மூர்க்கமான குணம்போக்கும் மூலநிலத்தின்
மெத்தக்கதை பேசாதே மெய்யரும்பி விதிர்
மொழிக்கு கற்றுனே
மோனத்தாழுதல்
ususti
யாவரும் சமமென
s
வஞ்சம்
வஞ்சியர் வஞ்சகம் வஞ்சநெஞ்சினர் வடிவ மில்லாதவனே வடிவுசேர் 6.J.g.6460L. வடியார் சூலம் வணக்கினுன்மா வணக்கம்
வண்டு வண்டார்க்குங்
ങ്ങuങ്ങ് வந்தது போனது வந்திபபார்
auTösesso QTFONJoç. வாசம்பொருந்திய வாசித்துக் வாசியோகங் தேர் வாணிச்சிககாக வாதம் பேசி DMT uuKgÚ வாய்மையும்
வால்
DU
XXV.
பக்கம் 235 168
323
294 284
27 .
UTB முன்செய்த முன்னில் முன்னேவின்வந்து மூண்டுதே முன்னேவினயென்றும் நினையாதே முன்னைவினையெல்லாமோடு
மூலயிலிருந்து Sypavo uLuar மூவர்களும் மூன்று மொன்ருன மூன்று மொன்ருய்
மெய்யுரைப்போம்
வந்துன்னடி
வருக முருக
வருத்தமறற
வருவதும்
வருவன வருவாரைப் போவாரை ஆசான் வருவாரைப் வருவார் வருவார் வலமிடமாய்ச் செல்கின்ற வலமிடமாய் ஓடுகின்ற வலமிடமோடும் வாசியை வலப்பட்டமான் வல்லாரும் வழிகள் இரண்டையும் வழுத்துதறகு ஒன்றுமில்ல வறுமைப்பிணிக்கு
agresíduuT
வாழிகுருநாதன் su ji daете штiadi வாழுவோமென்றுவென்று வாழ்க சிவதொண்டன் ഖമ ീഖങ്ങ
RTb
auterih IT RNGR ANaval
asTar
uassà
16 29 154 255 344
298
283 161
346
326
101 16S 275
Page 208
urruC) 63> விஞ்சுபிறப் விடத்தை விடியுமூன் விடையேறு விட்டகுறை விண்ணவர் விண்ணுணம் விண்ணும் மண்ணும் eßsöI00(BLff60 விண்ணுட்டாரும் வித்தகம் நீபேசாதே வித்தாரப் பேச்சையும் வித்தாரமாகக் கதை வித்தார விடையேறி
வீடுசேர்வதில் வீடுகமக் 66 Turrar வீதிக்கு வீதி
வெட்டவெளியில் வெம்பகை வெய்யபுவிப்பார்வை வெய்யகாமம்
வெளியிலேயொளி
வேடமொன்றும்
வேடிக்கை
வேணியிற் வேண்டில் வேண்டாமை வேண்டுதல் வேண்டாமையில்லான் வேண்டுதல் வேண்டாமை யில்லா வேண்டுவார் வினே வேதகீதத்தன்
வேதசாத்திரம் வேத மந்திரம் சொல்லும் வேதியர் வேதமறியாத பொருள்
வையகம்
sa
崇钴象
Χχνί
வி
பக்கம் 313
22 38 291 128 286 163 20 154 247 132 224 58 278 46
வீ
31 60 259
71
வெ
259 292 2. 166 16
வே
223 211 233
196 102 31 136 10 151 40
269
பாட்டு வியக்கவொன்று வியந்து நின்ற விரிந்த வறிவுடைய விருத்தணுய்ப் விரும்புவார் » விருப்பு வெறுப்பின விருப்பும் வெறுப்பும் விருப்பு வெறுப்பை வேரற விரை மலரை விரைவாய் கடந்து விளையுமிச்சையெல்லாம் விற்றுாண் வினைப்பகையை
YA
வி%னப்பகையை வெல்வதற்குமார்க்க .
வினைப்பகை வெல்ல
േന്ദ്രബ வீம்பிடும்பை அகங்காரம் வீரமாமயில்
வெள்விடைமேல் ெள்ளம் பள்ளத்தை வெறும் வீணன் வெற்றிதரும்
வேதமோ டாகம மறியா வேதம் வகுத்தான வேதாந்த சித்தாந்தம் வேருக வேதாந்த சித்தாந்தம் கற்ற வேதாந்த சித்தாந்தம் சமமென்று வேதாந்தம்பேசி வேதோபதேச வேலனக் கொண்டாடுவோம் வேலைத்துக்கி வேள்படச் செய்த வேருய் உடனுய்