கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை

Page 1
---- |-■s.|-)sae |×習|----- %象%
|-|- |×%
|× |×|-:*|-
----|×|× :|- | : : : ,
|× |×%\,|×
 


Page 2

இலங்கைத் தமிழ்ச் சினிமாவின்
கதை
STORY OF
SRI LANKAN TAMIL CINEMA

Page 3

சமர்ப்பணம்
புங்குடுதீவு அமரர் கந்தையா தம்பிஐயா என்னைச் சபைகளில் முந்தியிருக்கச் செய்த எங்கள் அன்புத்தந்தை அமரர் கந்தையா தம்பிஐயா அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.

Page 4

இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை
தம்பிஐயா தேவதாஸ் (B.A.(Cey.), B.Ed. (Cey.), Diploma in Journalism.
&/žಶಿ
834,அண்ணா சாலை, 41, அஞ்சலக வீதி,
சென்னை 600 002 சாவகச்சேரி
தொலைபேசி: 853 4505 LSaigo765gay: sachiGgiasmd01.vsnl.net.in L6airgil blugub: www.tataniloo.com

Page 5
முதற் பதிப்பு: தி.பி. 2025 (கி.பி.1994) இரண்டாம் பதிப்பு: தி.பி. 2031 (கி.பி. 2000)
உரிமை: தம்பிஐயா தேவதாஸ்,
90/5 புதுச்செட்டித்தெரு, கொழும்பு 13, இலங்கை.
வெளியீடு: வி. எஸ்.துரைராஜா,
75 உவாட் பிளேஸ், கொழும்பு 7,இலங்கை. விலை: இந்திய ரூபாய்: 75/- இலங்கை ரூபாய். 2OO/- nankai Thamil Cinemavin Kathai (Story of Srilankan Tamil Films) by Mr. Thambyayah. Thevathas
90/5 NEW CHETTY STREET COLOMBO-13, SRI LANKA First Edition 1994.
VST Publication VS. Thurairajah, 75, Ward Place, Colombo-7. All Rights Reserved, Price: Ind. Rupees: 75/ =
ஒளிஅச்சுக்கோப்பு: பா.செல்வராஜ், பி.எஸ்ஸி, வ.சாந்தி, அ. ஜெயராஜசிங்கம், மூவை நா. சுந்தரராசன், ஓவியம், பக்கமாக்கல்: ஒவியர் பாலமுருகன், மெய்ப்பு: புலவர் வெற்றியழகன், அலுவலக இணைப்பு: செ.ரா.ஷோபனா, காந்தளகம், சென்னை எதிர்மறை: சக்தி வண்ண ஆய்வகம், சிந்தாதிரிப்பேட்டை அச்சு: ஜேசிபிடாட்ஸ், நுங்கம்பாக்கம்; கட்டுவேலை: பாலாஜி கட்டாளர், இராயப்பேட்டை அட்டை ஓவியம்: எஸ்.டி. சாமி, கொழும்பு; அட்டை அச்சு: பாலாஜி கிளாசிக்ஸ், சென்னை; அச்சிடல் தயாரிப்பு: மறவன்புலவு க. சச்சிதானந்தன், எம்.ஏ., எம்.எஸ்ஸி., காந்தனகம், 834, அண்ணாசாலை, சென்னை - 600 002.

அணிந்துரை
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சக்தி வாய்ந்த மீடியம் சினிமாதான் என்பதில் அபிப்பிராய பேதம் கிடையாது. ஏனைய ஊடகங்களை விட, இப்பொழுதுதான் நூறு வயதை எட்டிப் பிடித்திருக்கும் இந்த விஞ்ஞானம் சார்ந்த ஊடகத்தின் உடனடித் தாக்கம் மிக அதிகமானது. ஒரு சராசரிக் குடிமகனது அன்றாட வாழ்வில் அதிக அளவு இரண்டறக் கலந்து போய்விட்ட மீடியம் இதுதான். உலக உருண்டையின் பல்வேறு பாகங்களில் வாழும் பலதரப்பட்ட படைப்பாளிகள் இதை உற்சாகத்தோடு முன் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையின் சிங்கள சினிமா கூட, சிறிதளவாகச் சர்வதேச தரத்தில் வைத்துப் பேசக் கூடிய நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால், ஈழத்தின் தமிழ் சினிமா...?

Page 6

மிகமிகப் பின்தங்கிப் போய், இன்றும் அரிச் சுவடிக் கட்டத்திலேயே இருக்கிறது. இந்திய சினிமாவின் குறிப்பாகத் தென்இந்திய சினிமாவின் ஆதிக்கமும், அந்த சினிமாவே தங்கள் சினிமா என்று ஈழமக்கள் கொண்டாடியதும் இதற்கு முக்கிய காரணங்கள்.
சிங்கள சினிமாவின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அடிகோலியவர்களே தமிழர்கள்தான். சிங்கள சினிமாத் தயாரிப்பிலும், தென்னிந்திய சினிமா வினியோகத்திலும் தங்கள் நேரத்தை முடக்கி லாபம் சம்பாதித்த இலங்கைத் தமிழ் முதலாளிகள், தங்களுக் கென்று ஒரு ஈழத் தமிழ் சினிமாவை அதன் அடையாள முகவரிகளோடு வளர்க்கத் தவறிவிட்டார்கள் என்பதுதான் வருத்தமான உண்மை.
இவற்றிற்கு மத்தியில், தொழிற் நுட்பத்திலும் மீடிய ஆளுமையிலும் மிகச் சாதாரணமாய் இருந்த - ஆனால், ஈழ மண்ணின் மணத்தையும் இலங்கைத் தமிழரின் ஆத்மாவையும் ஒரளவு பிரதிபலிக்க முயன்ற ஒன்றிரண்டு தமிழ்ப் படங்களையும் பார்த்திருக்கிறேன்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் நடுவர் குழு அங்கத்தவனாகவும், விருந்தினனாகவும் கலந்து கொண்ட சமயங்களில், அதிகம் மக்கள் தொகையற்ற சின்னச் சின்ன நாடுகளிலிருந்து வந்த அற்புதமான
படங்களைப் பார்க்கும் போதெல்லாம்,
இலங்கையிலிருந்துகூட இப்படியொரு படம் - தமிழ்ப்படம் வரக்கூடாதா என்று நான்
அங்கலாய்ப்பதுண்டு.
இலங்கைத் தமிழ் சினிமா தனது தற்போதய தழ்நிலையின் ஊடாக உலக தரம் வாய்ந்த பல
அசாத்தியமான படங்களைத் தரமுடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். இது வெறும் உணர்ச்சி

Page 7
வசப்பட்ட நம்பிக்கையல்ல. சம்பந்தப்பட்டவாகள் மனசு வைத்தால், ஈழத்து இளைய தலைமுறையின் வீரிய வீச்சு அங்குள்ள சினிமாவிலும் பிரதிபலிக்கும். இது சத்தியம். சர்வதேச கலை இலக்கிய அரங்கில், தமிழ் மொழியின் முகத்தை ஈழத்து எழுத்துக்களே அடையாளம் காட்டப் போகின்றன என்ற உறுதியான விமர்சனம் வைக்கப்படும் இந்தக் காலகட்டத்தில், அந்த நம்பிக்கை திரைப்படங்களுக்கும் பொருந்த வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இலங்கையின் தமிழ் சினிமாவைப் பற்றி ஒர் அறிமுக நூல் வெளியாவது இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் பொருத்தமானதே. ஏனெனில் அவரவர் வரலாறு தான் அந்தந்த மக்களின் சாகித்தியங்ளைச் சாதனைகளாக வளர்க்கும்.
இந்தநூலின் ஆசிரியர் ஒரு சினிமா ஆர்வலர் என்று அறிகிறேன். அவரது இந்த முயற்சியை நான் மனமாரப் பாராட்டுகிறேன்.
இதன் பதிப்பாளர் கட்டிடக்கலைஞர் திரு. வி.எஸ். துரைராஜா என் நெடுநாளைய நண்பர். இலங்கைத் தமிழ் சினிமாவுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செய்திருப்பவர். அவரிடம் இது போன்ற இன்னும் பல ஊக்குதல்களை நான் எதிர்பார்க்கிறேன்.
نیپا ٹاٹا کھولا

என்னுரை இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதையை எதற்காகச் சொல்ல வேண்டும்? வேறு எந்தச் சினிமா வரலாற்றுக்கும் இல்லாத சோகக்கதை எமது இலங்கைத் தமிழ்ச் சினிமா வரலாற்றுக்கு இருக்கிறதே அதனால் சொல்ல வேண்டும்.
இந்தத் தமிழ்ச் சினிமாவின் கதையை நான் எவ்வாறு சொல்ல வந்தேன்? பெரும்பாலான இலங்கைத் தமிழ்ப் படங்களைப் பற்றிய தகவல்களை நான் சேர்த்து வைத் திருக்கிறேன். பல புகைப்படங்களைச் சேகரித்து வைத்துள்ளேன். பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவற்றுக்கு விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன். எங்கள் சினிமாவுக்குக்காக அரும்பாடுபட்ட பல கலைஞர்களுடன் பழகியிருக்கிறேன். அவர்கள் செய்த சாதனைகளுக்காக அவர்களிற் சிலரை ரூபவாஹினியில் பேட்டி கண்டிருக்கிறேன்.
இந்த அநுபவங்கள்தான் என்னை இப்படியானநூல் ஒன்றை எழுதத் தூண்டியது. இலங்கைச் சினிமா முன்னேற உழைத்த உன்னதக் கலைஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை இந்நூலில் எழுதியுள்ளேன். இந்நூலை நான் விமர்சன ரீதியாக எழுதவில்லை. வரலாற்றுப் பாங்காகவே எழுதியுள்ளேன்.
ஆனால், நமது தமிழ்ச் சினிமாவை ஆராயப்போகும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்நூல் அடிப்படையாக அமையும் என்று எண்ணுகிறேன். 3.
இந்நூலின் பெரும்பகுதி தினகரனில் வெளிவந்தது. சிறுபகுதி வீரகேசரியிலும் வந்திருக்கிறது. அதற்காக அவற்றின் ஆசிரியர்கள், திருவாளர்கள் ஆர். சிவகுருநாதன், ஆ. சிவநேசச் செல்வன், ஆர். ராஜகோபால் ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன்.
இந்நூல் சுருக்கமாக அமையவேண்டும் என்பதற்காக, சில சம்பவங்களைச் சுருக்கவேண்டி ஏற்பட்டுவிட்டது. இலங்கைஇந்தியக் கூட்டுத் தயாரிப்புகளின் கதையைத் தவிர்த்திருக்கிறேன். சினிமாச் சஞ்சிகைகளைப்பற்றிச் சொல்லவேயில்லை.
எனது அறியாமை காரணமாகச் சில தகவல்களை நான் தவறவிட்டிருக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் சுட்டிக்காட்டினால் அவற்றை அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்ளுவேன்.

Page 8
எனது தொடர் கட்டுரைகளை இவ்வாறு நூலுருவில் கொண்டுவருவதில் பிரபல கட்டடக் கலைஞரும், கலை அபிமானியுமான திரு.வி. எஸ். துரைராஜா பெரிதும் உதவியிருக்கிறார். எனது கனவை நனவாக்கிய அவரின் உதவிக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அழகிய முறையில் அச்சிட்ட காந்தளகம் உரிமையாளர் க. சச்சிதானந்தன் அவர்களுக்கும் நன்றி. அழகாக அட்டைப் படம் வரைந்த எஸ்.டி. சாமி அவர்களுக்கும் நன்றிகள். அணிந்துரை வழங்கிய பிரபல நெறியாளர் பாலு மகேந்திராவுக்கும் எனது நன்றி.
1993ஆம் ஆண்டுவரையான கதைதான் இது. இதுவரை இலங்கையில் திரைக்கு வந்த திரைப்படங்களின் வரலாற்றைச் சுருக்கமாகத்தான் எழுதியிருக்கிறேன்.
2000ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. இலங்கைத் தமிழ்ச் சினிமாவுக்கு உள்நாட்டில் மட்டுமன்றி உலகரீதியிலும் சந்தை வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இந்தச் சந்தை வாய்ப்புக்கு ஏற்ற விதத்திலே படங்களைத் தயாரித்தால் இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் எதிர்காலம் பிரகாசமாக அமையும் என்று நம்பலாம். எனது இந்நூலின் முதலாவது பதிப்பில் 1993ஆம் ஆண்டு வரையான கதையையே எழுதினேன். இவ்விரண்டாவது பதிப்பில் 2000ஆம் ஆண்டு வரையான கதையை எழுதியுள்ளேன். இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் வரலாற்றை எழுதப் போகின்றவர்களுக்கு எனது இந்நூல் ஆரம்பப்படியாக அமையும் என்று நம்புகிறேன்.
நான் அரும்பாடுபட்டுத் தேடிச் சேர்த்த தகவல்களையும் அவற்றுக்கு ஆதாரமான புகைப்படங்களையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். சினிமா என்ற கலைமீது ஆர்வம் கொண்ட அனைவரும் இப்புத்தகத்துக்கு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.
வாசகர்கள் அனைவரும் என் முயற்சிக்கு ஆதரவு தர வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன்.
90/5 புதுச்செட்டித்தெரு அன்புடன் கொழும்பு - 13 தம்பிஐயா தேவதாஸ் இலங்கை
O6.01.2OOO

அத்தியாயம்
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் ஆரம்பம்
. சமுதாயம்
தோட்டக்காரி
கடமையின் எல்லை
. Lu T3 GomT
டைக்ஷி டிறைவர் . நிர்மலா . மஞ்சள் குங்குமம் . வெண் சங்கு
குத்து விளக்கு . மீனவப்பெண்
புதிய காற்று . கோமாளிகள் . பொன்மணி . காத்திருப்பேன் உனக்காக . நான் உங்கள் தோழன் . வாடைக்காற்று
தென்றலும் புயலும் தெய்வம் தந்த வீடு . ஏமாளிகள்
. அநுராகம் . எங்களில் ஒருவன் . மாமியார் வீடு . நெஞ்சுக்கு நீதி . இரத்தத்தின் இரத்தமே . அவள் ஒரு ஜீவநதி
நாடு போற்ற வாழ்க . பாதை மாறிய பருவங்கள்
ஷர்மிளாவின் இதய ராகம் . தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப் படங்கள் 283
முடிவுரை
பக்கம்
9
7
29
4
44
52 60
68
7 8
95
1 O2 O 120
35
45
56 65
177
92
20 O
2O 9 27 228 237 245
25 6. 26
27 O

Page 9

1. இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் ஆரம்பம்
சினிமா என்பது ஒர் உன்னதக் கலைச் சாதனமாகும். எல்லாக் கலைகளையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரபலமான கலையாகும். வேடிக்கையாக ஆரம்பித்த சினிமாக்கலை வேகமாக உலகமெல்லாம் பரவி அனைத்து மக்களையும் ஈர்த்து நிற்கின்றது.
இந்தச் சினிமா, கலை ரீதியாகவும் தொழில் ரீதியாக வும் எமது இலங்கை நாட்டில் சளைத்துவிடவில்லை. சர்வ தேசப் பரிசில்களைப் பெறுமளவுக்குப் பல சிங்களப் படங்கள் இங்கிருந்து உருவாகியிருக்கின்றன. அந்தச் சிங் களப் படத்தொழிலை நம்பியே பல கலைஞர்கள் நிலைக்கத் தொடங்கி விட்டார்கள். அது பெரிய தொழிலாகவே மாறிவிட்டது.
இந்த உயர்ந்த நிலை இலங்கைத் தமிழ்த் திரைப்படங் களுக்கு மட்டும் ஏன் ஏற்படவில்லை? இலங்கையின் தமிழ்த் திரை உலகம் இறந்துவிட்டது போன்று காணப்படுவதற்குக் காரணம் என்ன? இவை போன்ற கேள்விகள் என் மனத் தில் உதித்தன; மனத்தை உறுத்தின.
1991ஆம் ஆண்டு ஜே.வி.பி.யினரின் அச்சுறுத்த லால் இலங்கையில் இந்தியப் படங்கள் சிலமாதங்கள்

Page 10
2 தம்பிஐயா தேவதாஸ்
திரையிடப்படாமல் இருந்தன. அப்பொழுது சில பழைய இலங்கைத் தமிழ்ப் படங்கள் கொழும்பில் மட்டும் காட்சி தந்து மறைந்தன. பல படங்கள் எங்கே என்று தெரிய வில்லை. பல தயாரிப்பாளர்கள் தம் படங்களை அரை குறையாக வைத்திருக்கிறார்கள். பல திரைப்படங்களைத் திரைப்படக் கூட்டுத் தாபனம் எரித்துவிட்டது.
எத்தனையோ வருடங்கள் அரும்பாடுபட்டு உருவாக் கப்பட்ட இத்திரைப்படங்களின் வரலாறே அழிந்துவிடும் போலிருக்கிறது!
அந்தக் கலைஞர்களின் பெயர்களை எல்லோருமே மறந்துவிடும் நிலை உருவாகிவிட்டது. இந்தக் கலைஞர் களின் கலையபிமானத்தை மற்றவர்களும் அறியவேண்டாமா?
இவ்வாறான பலத்த வேதனைகளாலும் உரத்த கேள் விக்கணைகளாலும் அந்த வரலாற்றைப் புரட்டிப் பார்ப் போமா என்று எண்ணத்தோன்றியது.
நான் எழுதுவது இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை மட்டுமல்ல; நம் நாட்டுச் சினிமாக் கலைமீது ஆசைகொண்ட அபிமானிகளின் சோக வரலாறும்கூட. இந்த வரலாறே எங்கள் ரசிகர்களின் மனத்தை ஆட்கொள்ளாதா?
தமிழ்த் திரைப்படங்கள் இந்தியா, இலங்கை, மலே சியா போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், தென்னிந்தியாவிலேயே அதிகமான தமிழ்ப் படங்கள் உருவாகியிருக்கின்றன. நெடுங்காலமாகவே இந்தியத் தமிழ்ப் படங்களை இலங்கை ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். ஆரம்ப காலச் சிங்களப் படங்கள்கூடத் தென்னிந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுவந்தன. 1956ஆம் ஆண்டின் பின்புதான் இலங்கையிலும் சிங்களப் படங் களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். இப்பொழுது ஆண்டுக்கு 25க்கு மேற்பட்ட சிங்களப் படங்கள் திரைக்கு வருகின்றன. அந்தளவுக்கு முன்னேறிவிட்டன.

இலங்கைத் தமிழ் சினிமாவின் ஆரம்பம்
1950 ஆம் ஆண்டிலேயே இலங்கையில் தமிழ்ப்படத் தயாரிப்பு முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டன. இதுவரை 50க்கு மேற்பட்ட தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும், அவற்றில் 36 படங்கள் மட்டுமே திரைக்கு வந்திருக்கின்றன.
t
سرور
முதலாவது சிங்களப் படத்தை (கடவுனு பொறந்துவ) தயாரித்த தமிழரான திரு.எஸ்.எம். நாயகம் அவர்கள்.
இலங்கையில் உருவான கதைத் தமிழ்த் திரைப்படங் களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன:- (1) குறுந் திரைப்படங்கள் (16 மில்லி மீட்டர்) (2) சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்
யப்பட்ட படங்கள் (டப் படங்கள்) (3) தமிழ் மொழியிலேயே தயாரிக்கப்பட்ட முழுநீளப்
படங்கள். (4) இலங்கை-இந்தியக் கூட்டுத் தயாரிப்புகள்.

Page 11
4. தம்பிஐயா தேவதாஸ்
‘சமுதாயம்’, ’பாசநிலா ஆகிய இரண்டு படங்களும் 16 மில்லி மீட்டரில் தயாரிக்கப்பட்ட குறுந் திரைப்படங் களாகும்.
'கலியுககாலம்', ‘நான்கு லட்சம்', 'யார்அவள்', 'சுமதி எங்கே 'ஒரு தலைக்காதல்', 'பனிமலர்கள்', 'இவளும் ஒருபெண்', 'அஜாசத்த போன்ற எட்டுப் படங்களும் சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்ட படங்களாகும்.
"தோட்டக்காரி’, ‘கடமையின் எல்லை', 'டாக்ஸி டிரைவர்', ‘நிர்மலா, "மஞ்சள் குங்குமம்', 'வெண்சங்கு, 'குத்து விளக்கு', 'மீனவப் பெண், ‘புதிய காற்று', "கோமாளிகள்', 'பொன்மணி, ‘காத்திருப்பேன் உனக் காக, "நான் உங்கள் தோழன், 'வாடைக்காற்று', 'தென்ற லும் புயலும்’, ‘தெய்வம் தந்த வீடு, ‘ஏமாளிகள்', 'அனு ராகம், ‘எங்களில் ஒருவன்’, ‘மாமியார் வீடு, 'நெஞ் சுக்கு நீதி, ‘இரத்தத்தின் இரத்தமே', 'அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க', 'பாதை மாறிய பருவங்கள்', 'ஷர்மிளாவின் இதயராகம் போன்ற 26 திரைப்படங் களும் முழுநீளப் படங்களாகும். அவற்றில் ‘தெய்வம் தந்த வீடு' என்ற படம் அகலத்திரையில் (70 மி.மீ) எடுக்கப்பட்ட தாகும்.
‘பைலட் பிரேம்நாத், தீ, நங்கூரம்', 'மோகனப் புன்னகை ’வசந்தத்தில் ஓர் வானவில் போன்ற படங்கள் இலங்கையில் எடுக்கப்பட்ட இந்தியப் படங்கள். இவற் றுடன் இலங்கைக் கலைஞர்களுக்குத் தொடர்பிருந்தாலும் தயாரிப்பு என்ற ரீதியில் இவை இந்தியப் படங்களே. இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்புகள் என்று சொல்ல 6ADITLD.
இலங்கையில் உருவான இத்தனை படங்களும் தர மானவையா? தரமற்றவையா? என்பது வேறு விடயம். இத்

இலங்கைத் தமிழ் சினிமாவின் ஆரம்பம்
தனை படங்களையும் உருவாக்க நம் கலைஞர்கள் எத் தனை பாடுபட்டிருப்பார்கள்? அவர்கள் எத்தனையோ தடைகளைத் தாண்டி வரவேண்டியிருந்தது. உண்மையான கலைஞர்கள் பலரின் கண்ணிர் வெள்ளத்தில் மிதந்து பிறந்தவைதாம் இந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள்.
ாவது இலங்கைத் தமிழ்ப்படமான ‘சமுதாயம் (16 மி.மீ) படத் 蠶 င်္ဂြိုးနှီ" ̈နှီးနိ{#if: திரு. ஹென்றி சந்திரவன்ஸ் JNeust 56T.
தமிழ்ச் சினிமா பிறந்த தென்னிந்தியாவிலேயே இன்று கூடத் தயாரிப்பாளர்கள் ரசிகர்களைப் புரிந்துகொள்ள முடியாமல் திண்டாடுகிறார்கள். கலை ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் வளர்ந்துவிட்ட அங்குகூட இப்படி யான ஒருநிலை.
வசதிகள் அதிகமற்ற அந்தக் காலத்திலேயே இலங் கையில் இத்தனை தமிழ்ப் படங்களை உருவாக்கியிருக் கிறார்கள் என்றால், இந்தக் கலைஞர்கள் எத்தனை பெரிய

Page 12
移 . . தம்பிஐயா தேவதாஸ்
கெட்டிக்காரர்கள் ஆத்ம திருப்திக்காக அவர்கள் ஈடுபட்ட மாபெரும் முயற்சிகள் எத்தனை பெருமை வாய்ந்தவை.
முதலாவது சிங்களப் பேசும் படம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பெயர் 'கடவுனு பொறந்துவ (உடைந்த உறுதிமொழி) என்பதாகும். இந்தப் படத்தைப் பொறுத்தவரை தமிழ் பேசும் மக்களாகிய நாம் பெருமைப் படலாம். ஏனெனில், அந்த முதலாவது சிங்களப் படத் தைத் தயாரித்தவர் தமிழரான எஸ்.எம். நாயகம் என் பவரே.
உண்மையான சிங்களக் கலாசாரத்தைப் பிரதிபலிக் காமலும் பிறமொழிப் படங்களை டப் செய்தும் ஆரம் பித்த சிங்களச் சினிமா, இன்று தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது. சிங்களச் சினிமாவை ஆரம்பித்து வைத்த வர்கள் மட்டுமல்ல, வளர்த்துவிட்டவர்களும் தமிழ் பேசும் கலைஞர்களே! இவர்கள் தான் சிங்களக் கலாசாரத்தையே சினிமாவில் சீரழித்தவர்கள் என்ற பெயரையும் பின் னாளில் பெற்றுக்கொண்டார்கள்.
இலங்கையின் முதலாவது சிங்களப் படத்தைத் தயாரித் தவர் தமிழர் என்பதுபோல முதலாவது தமிழ்ப்படத்தை (16 மி.மீ) தயாரித்தவர் ஒரு சிங்களவர்.
அன்றுமுதல் இன்றுவரை இலங்கையில் உருவாகும் அனைத்து சிங்கள, தமிழ்ப் படங்களிலும் சிங்கள தமிழ் முஸ்லீம் கலைஞர்கள் ஒற்றுமையாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இலங்கையில் தமிழ்ப்படத் தயாரிப்பு முயற்சிகள் 1951ஆம் ஆண்டுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டன.
முக்கியமாக 'குசுமலதா என்ற தமிழ்ப் படத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். இத்திரைப்படம் 1951-12-29 இல் திரையிடப்பட்டதாகக் குறிப்புகள் இருக்கின்றன. பி.ஏ.டபிள்யு. நிறுவனத்தினர் தயாரித்த இப்படத்தில் எடி

இலங்கைத் தமிழ் சினிமாவின் ஆரம்பம் 7
ஜெயமான, ருக்மணிதேவி ஜோடியாக நடித்தார்கள். இப் படத்தின் பாடல்கள் இடம்பெற்ற இசைத்தட்டொன்று இப்பொழுதும் இலங்கை வானொலி நிலையத்தில் இருக் கிறது.
1951ஆம் ஆண்டு இந்தியாவில் ‘சங்கவுனு பிலிதுற என்ற சிங்களப் படத்தைத் தயாரித்தார்கள். அப்படம் இலங்கையில் 1951-05-20 இல் திரையிடப்பட்டது. பி.ஏ.டபிள்யு. ஜெயமான்ன என்பவர் இப்படத்தைத் தயாரித்து நெறியாண்டார். இச்சிங்களப் படத்தையே தமிழுக்கு டப் செய்து ‘குசுமலதா என்ற பெயரை வைத் தார்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இச்சிங்களப்படத் துக்கு இந்தியக் கலைஞர்களைக் கொண்டே தமிழ்க்குரல் வழங்கப்பட்டிருப்பதால் குசுமலதாவை இலங்கைத் தமிழ்ப் படம் என்று முற்று முழுதாகச் சொல்லிவிட முடியாதே!
அக்காலத்தில் இலங்கையில் தமிழ்ப் படங்களை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் பல கலைஞர்களின் உள்ளத்தில் உருவாகியிருந்தது. திரைப்படத் தயாரிப்பு என்பது பணத்துடன் சம்பந்தப்பட்டது என்பதால் பலர் முன்வரவில்லை. கலையார்வம் கொண்ட செல்வந்தர்கள் குறைவாக இருந்தார்கள். சில செல்வந்தர்கள் இந்தியத் தமிழ்ப்படங்களை இங்கு இறக்குமதி செய்து திரையிட்டுப் பெருந் தொழிலாகவே மாற்றிக்கொண்டார்கள். இலங்கை ரசிகர்களும் அப்படங்களையே பார்த்து ரசிக்கப் பழகிக் கொண்டார்கள். இன்று ஒரு புதிய சிங்களப் படம் ஒரே நேரத்தில் 16 தியேட்டர்களில் ஒடுகிறது. இதைப் போலவே அந்தக் காலத்தில் ஒரு புதிய இந்தியத் தமிழ்ப் படம் 16 தியேட்டர்களில் ஒடியிருக்கிறது. காலப்போக்கில் இந் நிலை மாறி வந்தது.
இலங்கைத் தமிழ்ப் படங்களில் ஆர்வமும் தேசாபி மானமும் கொண்ட பலர் தலைநகரிலும் மலையகத்திலும்

Page 13
தம்பிஐயா தேவதாஸ்
வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் அடிக்கடி துளிர்விட்டுக் கொண்டேயிருந்தனர்.
1952ஆம் ஆண்டளவில் நாடக அனுபவமும் சினிமா ஆர்வமுமுள்ள இலங்கைக் கலைஞர்கள் சிலர் மலையகத் தில் கொஸ்லந்தை என்ற ஊரில் ஒன்றுகூடினார்கள். அந்தக் கலைஞர்கள்தாம் இலங்கையில் தமிழ்ச் சினிமாவை ஆரம்பித்து வைத்தவர்கள் என்ற பெருமையைத் தேடிக் கொண்டார்கள்.
அவர்கள்தாம் எம்.வி.ராமன், ஏ.அருணன், வி.தங்கவேலு, ஹென்றி சந்திரவன்ஸ் போன்ற கலைஞர்கள். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி என்பதால் இவர்கள் அனை வரும் ஒன்றுகூடி ஒரு முடிவுக்கு வந்தார்கள். எல்லோரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பதுதான் அந்த முடிவு. அந்த எண்ணங்களின் பிரதிபலனாகக் கலைஞர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ‘சினிமாக் கலா நிலையம்' என்ற மன்றத்தை உருவாக்கினார்கள்.
மன்றத்தின் முதல் முயற்சி ஆரம்பமாகிவிட்டது அவர்கள் கூட் டுறவு முறையில் கறுப்பு வெள்ளை நிறத்தில் தமிழ்த் திரைப்படமொன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்
TT9.5GT.

2. ‘சமுதாயம்
"சினிமாக் கலா நிலையம் தயாரிக்க இருக்கும் அப் படத்துக்கு ‘சமுதாயம்' என்று பெயர் சூட்டினார்கள். அந்த நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான வி. தங்க வேலு கதாநாயகனாகவும் தர்மதேவி என்ற நடிகை கதாநாயகியாகவும் தெரிவு செய்யப்பட்டார்கள். படப் பிடிப்பும் ஆரம்பமாகிவிட்டது. ‘சமுதாயம் திரைப்படம் 35 மி.மீட்டர் பிலிமில் சில ஆயிரம் அடிகள் வளர்ந்து விட்டது.
கலைஞர்களிடையே போட்டியும் பொறாமையும் இன்றுமட்டுமல்ல அன்றும் நிலவியது. அப்படியான இழுபறிநிலை இப்படத்துக்கும் ஏற்பட்டுவிட்டது. தயாரிப் பாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, 35 மி.மீட்டரில் உருவான கறுப்பு வெள்ளைப் படமான ‘சமுதாயம் ஆயிரம் அடி வளர்ச்சியுடன் நின்றுகொண்டது.
இத்திரைப்படம் இப்படியே நின்றுவிட்டதால் இந்தக் குழுவின் ஒரு அங்கத்தவரான ஹென்றி சந்திரவன்ஸ இன் னும் சில அங்கத்தவர்களுடன் ஒன்று சேர்ந்து நடிகர்களை மாற்றி ‘சமுதாயம்' என்ற பெயரிலேயே புதிதாகப் பட மொன்றை உருவாக்க முனைந்தார்.

Page 14
Η 0 தம்பிஐயா தேவதாஸ்
சந்திரவன்ஸவின் குழுவிலிருந்தும் சிலர் பிரிந்து சென் றனர். அவர்களில் முக்கியமானவர்கள் ஏ. அருணனும் வி.தங்கவேலுவுமாவார்கள். இவர்கள் இருவரும் கொஸ் லாந்தையில் நீண்ட காலம் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ‘புரட்சி' என்ற பெயரில் 35 மி.மீட்டரில் தமிழ்ப் படமொன்றை உருவாக்க முனைந் தார்கள். இப்படத்திலும் வி. தங்கவேலுவே கதாநாயகன். படம் 7000 அடி வளர்ந்துவிட்டது. போட்டியும் பொறா மையும் இந்தக் குழுவுக்குள்ளும் வளர்ந்துவிட்டன. தயாரிப் பாளர்களுக்குள்ளும் . கலைஞர்களுக்குள்ளும் பெரும் பிணக்குகள் ஏற்பட்டுவிட்டன. அவர்கள் செய்த புரட்சியில் ‘புரட்சி' என்ற படமும் நின்று கொண்டது.
ஒருபுறம் இந்நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்க கொழும்பில் வேறு ஒரு முயற்சியும் நடைபெற்றுக்கொண் டிருந்தது. முதலாவது சிங்களப் படத்தைத் தயாரித்தவ ரான எஸ்.எம். நாயகம் 'கடல் கடந்த தமிழர்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான தமிழ்ப் படமொன்றைத் தயாரிக்கப்போவதாக விளம்பரம் செய்தார். நடிகர் நடிகையர் தெரிவும் நடைபெற்றது. ஆனால், திரைப்படம் வெளிவரவில்லை.
ஹென்றி சந்திரவன்ஸ எப்படியாவது தமிழ்ப் பட மொன்றைத் தயாரித்தே ஆகவேண்டும் என்ற வெறியுடன் விடாப்பிடியாக நின்றார். அவர் ‘சமுதாயம்' படத்தை 16 மி.மீட்டரில் ரெக்னிக் கலரில் தயாரித்து அதை 35 மி.மீட்டருக்கு மாற்ற எண்ணியிருந்தார்.
இதற்கிடையில் அருணனுக்கும் தங்கவேலுவுக்கும் இடையில் மனஸ்த்தாபம் ஏற்பட்டது. தங்கவேலு அந்தக் காலத்தில் கொழும்பில் பிரபலம் பெற்று விளங்கிய நாடக நடிகர் ஒருவரிடம் போய்ச் சேர்ந்தார். அந்த நடிகர் தான் பி. எஸ். கிருஷ்ணகுமார். தங்கவேலுவும் கிருஷ்ணகுமாரும்

சமுதாயம் 11
ஒன்று சேர்ந்து 'தோட்டக்காரி' என்ற பெயரில் தமிழ்ப் படமொன்றை உருவாக்கினார்கள். ‘சமுதாயம்' படமும் "தோட்டக்காரி படமும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்தன.
லங்கையில் தமிழ்ச்சினிமாவை ஆரம்பித்து வைத்த முன்னோடிகளில்
லர். இடமிருந்து முதலாவதாக நிற்பவர் ஏ.எஸ். ர்ாஜா, 4-வதாக நிற்பவர் ஹென்றி சந்திரவன்ஸ 6-வதாக நிற்பவர் எஸ். தங்கவ்ேலு, 7-வதாக நிற்பவர் அருணன் மாஸ்டர்.
கலைஞர்கள் ஒவ்வொருவரிடமும் 10 ரூபா வாங்கியே சமுதாயத்தை வளர்த்தார்களாம். ஹென்றி சந்திரவன்ஸ் முதலாவது 16 மி.மீட்டர் தமிழ்ப் படத்தைத் தயாரித்தவர் என்ற பெருமையைத் தேடிக்கொண்டார். இப்படத்துக் கான நெறியாள்கையை அவரே கவனித்தார். பின்னாட் களில் பல படங்களில் தந்தை பாத்திரங்களில் தோன்றிய

Page 15
H 2 தம்பிஐயா தேவதாஸ்
அமரர் எஸ்.என். தனரெத்தினமே இப்படத்தின் கதாநாயகன். அப்போது தனரெத்தினத்துக்கு வயது 18. ஜெயகெளரி கதாநாயகி. ஏ.எஸ். ராஜா வில்லன். ஆர். காசிநாதன், ஆர்.வி. ராசையா, இரத்தினகுமாரி போன்றோரும் நடித் தார்கள். நடிகர் சந்திரபாபுவின் சகோதரியின் மகள்மார் இருவரும் இப்படத்தில். தோன்றியிருக்கிறார்கள். எம்.ஆர்.ராதாவின் இலங்கை மனைவி கீதாவும் இப்படத் தில் சில காட்சிகளில் தோன்றினார். கதை வசனம் பாடல்களை ஜீவா நாவுக்கரசன் எழுதினார். அக்காலத் தில் அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய வேலைக் காரி என்ற படம் புகழ்பெற்று விளங்கியது. அப்படத்தின் கதையையே சமுதாயமும் தழுவியிருந்தது.
படத் தயாரிப்புக்கு 10 ரூபா வேண்டியதற்கான பற்றுச் சீட்டுகளைச் சரிபார்ப்பதில் சில்லையூர் செல்வ
ராஜன், சந்திரவன்ஸவுக்கு உதவியிருக்கிறாராம்.
செலவுச் சுருக்கத்துக்காக இந்தப் படத்தின் எந்த வொரு காட்சியும் ஸ்ரூடியோவுக்குள் பிடிக்கப்படவில்லை. கொழும்பைச் சுற்றியுள்ள தனியார் வீடுகளிலேயே படப் பிடிப்புகள் நடைபெற்றன. வெளிப்புறக் காட்சிகளை பியசேன சிறிமான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி அநுராதபுரம், அம்பாறை போன்ற இடங்களில் ஒளிப் பதிவு செய்தார். அங்கொடையில் கொத்தட்டுவ என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் வீட்டிலேயே ஒலிப்பதிவு கள் செய்யப்பட்டனவாம்.
இசையமைப்பைத் திலக் கருணாதிலக கவனித்தார். வினோதினி, இந்திராணி செல்லத்துரை, அம்பிகா தாமோ தரம், முஹமட் பியாஸ் ஆகியோர் பின்னணி பாடியிருந் தார்கள். அப்போது புகழ்பெற்ற இலங்கை வானொலிப் பாடகியான வினோதினி பாடிய “இதுவா நீதி இதுவா நேர்மை" என்ற பாடல் சிறப்பாக விளங்கியதாகப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.

சமுதாயம் 3.
‘சமுதாயம் திரைப்படம் 16 மி.மீட்டரில் ரெக்னிக் கலரில் எடுக்கப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் எடுக்க முடியாத அமைப்பு முறை கொண்டது. இந்த ஒரு பிரதியைக்கூடத் திரையிடுவதற்குத் தியேட்டர்கள் கிடைக் காமல் பெரும்பாடு பட்டுவிட்டார்கள்,
இந்தியாவிலிருந்து படங்களை இறக்குமதி செய்து பெரும் பொருளிட்டிய வர்த்தகர்கள் சிங்களப் படங் களைத் தயாரிக்கத் தொடங்கினார்களே தவிர, இலங்கைத் தமிழ்ப் படங்களுக்கு ஆதரவு கொடுக்கப் பின்வாங்கினார் 95G.
கடைசியில் தியேட்டர் கிடைக்காமல் மண்டபமொன்றி லேயே ‘சமுதாயத்தைக் காட்டினார்களாம். 1962இல் பொரளை வை.எம்.பி.ஏ. மண்டபத்தில் விசேட ஏற் பாட்டின்பேரில் ‘சமுதாயம் திரையிடப்பட்டது. அப் போதைய ‘வீரகேசரி’ ஆசிரியர் எஸ்.டி. சிவநாயகம் விழாவை ஆரம்பித்து வைத்தார். அங்கு ஒரு வாரம் ஓடிய தாம். ஆனால், அதற்கு முன்பே கொழும்பு-15, புளு மென்டால் வீதியில் அமைந்துள்ள டொமினியன் தியேட் டரில் இப்படம் திரையிடப்பட்டதாக சில்லையூர் செல்வ ராஜன் சொல்லியிருக்கிறார்.
‘சமுதாயம் தொடர்ந்து பிற ஊர்களிலும் மன்றங்கள் பாடசாலைகள் சார்பிலும் திரையிடப்பட்டது. ஒரு வருடத்தின் பின்பு சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் தெமட்டகொடை மானெல் தியேட்டரில் திரையிடப் பட்டது. தமிழரசுத் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவ்வாரம்ப விழாவுக்குத் தலைமை தாங்கினார்
அந்தக் காலத்தில் இந்தியப் படங்களின் தாக்கத்தி னால் ‘சமுதாயம்' படத்திற்குத் தலைநகரில் அதிக வர வேற்புக் கிடைக்கவில்லையாம். ஆனாலும், மலையகத் திலும் வடக்கு கிழக்கிலும் அதிக வரவேற்புக் கிடைத்த

Page 16
1 A தம்பிஐயா தேவதாஸ்
தாம். வடபகுதியின் கல்லூரிகள் பலவற்றில் இப்படம் காண்பிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்
சந்திரவன்ஸவின் தளராத முயற்சியினாலும் கடும் உழைப்பினாலுமே இத்திரைப்படம் உருவானது. இலங் கையில் தமிழ்ச் சினிமா பிறப்பதற்கு அடியெடுத்துக் கொடுத்த பெருமை சந்திரவன்ஸவைச் சாரும்.
திரு. சந்திரவன்ஸ ‘சமுதாயம் தமிழ்ப் படத்தை உருவாக்கிய அதே சமயத்தில் ‘சமாஜய' என்னும் சிங்களத் திரைப் படத்தையும் உருவாக்கினார். ‘சமுதாயம்' படத் தின் தழுவலே அதுவாகும்.
திரு. சந்திரவன்ஸ் இவற்றைத் தொடர்ந்து பல சிங் களப் படங்களையும் உருவாக்கினார். 1974இல் வெளி வந்த 'சுமதி எங்கே (டப் படம்) இவர் உருவாக்கிய இரண் டாவது தமிழ்ப் படமாகும்.
ஆரம்ப காலம் முதலே இலங்கைத் தமிழ்ச் சினி மாவின் கதையை எழுதவேண்டும் என்பது என் ஆசை. 1978ஆம் ஆண்டளவில் திரு. சந்திரவன்ஸவை நான் அடிக்கடி சந்தித்து வந்தேன். கொழும்பு ஐந்து லாம்புச் சந்தியடியில் ஆதமல்லி பில்டிங்கில் மூன்றாவது மாடியில் அவரது அலுவலகம் அமைந்திருந்தது.
அலுவலகத்தின் ஒரு சுவரை ‘சமுதாயம்' படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அழகுபடுத்தின. மற்றச் சுவர்களில் வேறு சிங்களப் படங்களின் புகைப்படங்களும் தொங்கிக் கொண்டிருந்தன.
திரு. சந்திரவன்ஸவின் அலுவலகத்தில் எந்நேரமும் சினிமாக் கலைஞர்கள் கூடியிருப்பார்கள். நான் திரு. சந்திர வன்ஸ்வைச் சந்திக்கும் போதெல்லாம் தன் ஆரம்பகால சினிமா வரலாறுகளைக் கூறுவார்.

"PGypsraub V
சமுதாயம் படத்தில் ஒரு காட்சி (1982) “கீதாஞ்சலி என்ற பெயரில் தனது மூன்றாவது தமிழ்ப் படத்தை உருவாக்கிக் கொண்டிருந்த காலம் அது. இப் படத்துக்கான கதை, வசனம், பாடல்களைத் திருமதி இராஜம் புஷ்பவனம் எழுதியிருந்தார். எண் சாத்திரத்தின் படி இவரே இப்படத்துக்கு கீதாஞ்சலி என்ற பெயரைச் சூட்டினாராம். படம் தயாரிக்க ஆரம்பமானபோதுதான் அந்தச் சோகமயமான சம்பவம் நடைபெற்றது. ஆம்; 1979ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி திரு. சந்திாவன்ஸ் மாரடைப்பால் மரணமானார். “கீதாஞ்சலி படத்தில் நடிக்க வந்த பலர் இவருக்கு இறுதியஞ்சலி செலுத்த நேர்ந்துவிட்டது.
சமுதாயமும் தோட்டக்காரியும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்தன என்று முன்பு குறிப்பிட்டேன். அதில் சமுதாயமே முந்திக்கொண்டது.

Page 17
6 தம்பிஐயா தேவதாஸ்
இதே காலப்பகுதியிலே பல தமிழ்ப் படங்கள் உரு வாகியதாக செய்திகள் வெளிவந்தன. புரட்சி’, ‘மலை வாசல்', 'கடல்கடந்த தமிழர்”, “ஏன் பிறந்தாய் மகனே',
சரிந்த வாழ்வு' என்பனவே அவற்றின் பெயர்கள்.
இவற்றின் பெயர்கள் செய்திகளிலும் விளம்பரங் களிலும் வெளிவந்தனவே தவிர, படங்கள் திரைக்கு வரவில்லை.

3. "தோட்டக்காரி'
1960ஆம் ஆண்டளவில் ஏ. அருணனிட மிருந்து
பிரிந்து சென்ற வீ. தங்கவேலு, கலையார்வம் மிக்க
ளஞரான பி.எஸ். கிருஷ்ணகுமாருடன் இணைந்து TGRT LITT
இவர்கள் இருவரும் தமிழ்த் திரைப்படமொன்றை உருவாக்கத் திட்டமிட்டார்கள். பி.எஸ். கிருஷ்ணகுமார் பிரபல சிங்களச் சினிமா இயக்குநர் சிறிசேன விமல வீரவிடம் பயிற்சி பெற்றார்.
அந்தத் தமிழ்ப் படத்துக்கு நடிகர்-நடிகையர் தேவை என்று விளம்பரமும் வெளிவந்துவிட்டது. கிரிபத்கொட நவஜீவன ஸ்ரூடியோவில் இப்படத்துக்கான நடிகர் தேர்வு இடம் பெற்றது. இந்த நேர்முகப் பரீட்சைக்கு 20க்கு மேற் பட்ட கலைஞர்கள் வந்திருந்தார்கள்.
திரைப்படத்துக்கு ஏற்ற முகவெட்டும், நடிப்பாற்றலும், தமிழ்மொழித் தேர்ச்சியும் ஒருங்கே அமையப்பெற்ற கலைஞர்களை அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை.
இதே நவஜீவன ஸ்ரூடியோவில் ‘றொடி கெல்ல" சிங் களப் படத்திற்கான நடிகையர் தெரிவும் நடைபெற்றது.

Page 18
H 8 தம்பிஐயா தேவதாஸ்
அந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகை சந்தியாகுமாரி வந்திருந்தார். சந்தியா குமாரியுடன் சேபாலிகா குரூஸ்” என்ற பெண்ணும் வந்திருந்தார். அந்தப் பெண்ணின் அழகிலும், உருவத்திலும் விருப்பம் கொண்ட கிருஷ்ண குமார், ‘அவரையே தனது படத்தின் கதாநாயகியாகப் போடலாமா' என்று எண்ணினார். கிருஷ்ணகுமார் அந்தப் பெண்ணிடம் பேசிப்பார்த்தார்.
அவருக்கும் சினிமாவில் ஆர்வ்ம் இருந்தது. ‘அந்தப் பெண்ணின் உருவம் திரைப்படத்திற்கு பொருத்தமானதா என்று பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. அவர் தேறிவிட்டார். எல்லோரது அபிப்ராயங்களின்படியும் அந்தப் பெண்ணே கதாநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடிகைகளின் சொந்தப் பெயரை மாற்றுவது அப்பொழுதே ஆரம்ப மாகிவிட்டது. "சேபாலிகா குரூஸ்' என்ற அவரது பெயர் ‘ஜெயபூரீ என்று மாற்றப்பட்டது.
படப்பிடிப்பை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்ற காரணத்தினால் விமலவிரவின் வற்புறுத்தலின்படி இயக்குநர் பி.எஸ். கிருஷ்ணகுமாரே கதாநாயகனாக நடிக்கவேண்டி ஏற்பட்டுவிட்டது.
கிருஷ்ணகுமார் கதாநாயகனாகவும், ஜெயபூரீ கதாநாயகி யாகவும் நடிக்க படப்பிடிப்பு ஆரம்பமாகியது. அந்தத் திரைப்படத்தின் பெயர்தான் "தோட்டக்காரி".
1960ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஒருநாள், கம் பளையில் உள்ள "ரெவன்ஸ்கிறே" எஸ்ரேற்றில் ‘தோட்டக் காரி"யின் முதலாவது படப்பிடிப்பு ஆரம்பமாகியது. தொழிலாளர் தலைவர் அமரர் கே.ராஜலிங்கம் கமராவை முடுக்கி படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார்.
தயாரிப்பாளர் வீ. தங்கவேலுவும் இப்படத்தில் நடித் தார். 'கொழும்பு முன்னேற்ற நாடக மன்றக் கலைஞர் 356,TTGRT வீ.மோகன்ராஜ், ஆர்.வரதராஜன், கே.ஆர்.ஆறு

தொட்டக்காரி 9
முகம், ஜாபீர்குமார், தங்கையா, நல்லையா, பிரகாஷ், முத்துவேல், வீணைகுமாரி, சாந்தி, வசந்தி போன்றோரும் நடித்தனர்.
வெளிப்புறங்களிலும் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இவ்வேளையில் தயாரிப்பாளரும், இயக்குநரும் பணக் கஷ்டத்தினால் மிகவும் திண்டாடிப்போனார்கள்.
இலங்கையின் ಆ॰ಣ್ಣಿ 35 மி. மீட்டர் தமிழ்ப்படமான 'தோட்டக் காரி'யை இயக்கி கதாநாயகனாக நடித்த பி.எஸ்.கிருஷ்ணகுமார்.
இவர்கள் துன்பத்தைக் கண்டு இரங்கினார்கள் ஒரு கலைத் தம்பதியினர். இவர்களின் பண உதவியுடன் "தோட்டக்காரி தொடர்ந்து வளர்ந்தாள். தோட்டக் காரியை வளர்த்துவிட்ட அந்தக் கலைத் தம்பதியினர்தான் திரு. எஸ்.ஆர். முத்துவேலுவும், திருமதி. ரஞ்சனி முத்து வேலுவும் ஆவார்கள்.
பாடல்களை பி.எஸ்.கே. குமார், கணேசாள்(அங்கவை) ஆகியோர் இயற்றினர். கே.ஏ.சவாஹிர் இசை அமைத்த

Page 19
20 தம்பிஐயா தேவதாஸ்
பாடல்களை ஜி.எஸ்.பி.ராணி, புஷ்பராணி, வரதராசா, அருண்லந்தரா, கே. குமாரவேல், கெளரீஸ்வரி முதலி யோர் பாடினர். கதாநாயகியின் உரையாடல்களுக்கு செல்வம் பெனான்டோ பின்னணிக் குரல் வழங்கினார். தயானந்த விமலவிர ஒளிப்பதிவு செய்ய துவான்கபூர் படத்தொகுப்பைச் செய்தார்.
தேயிலை எஸ்ரேற் முதலாளி பூரீவேலு முதலியாருக் கும், வேலைக்காரி லட்சுமிக்கும் பிறந்தவள்தான் வள்ளி. முதலியாரின் தம்பி பூரீரங்கம், தன் அண்ணனின் சொத் துக்களை வஞ்சகத்தால் கவர முனைகிறான்; அதற்காக அவரைக் கொலை செய்கிறான். முதலியாரின் மகன் பூரீதரைப் பாதிரியார் ஒருவர் காப்பாற்றி சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கிறார். தோட்ட உரிமை பூரீரங்கத்துக்கு வருகிறது. அவன் தோட்ட மக்களைத் துன்புறுத்துகிறான்.
தோட்டக் கணக்கப்பிள்ளையின் மகன் சுந்தர் வள்ளி யைக் காதலிக்கிறான். வாக்குறுதிகள் பல கொடுத்து விட்டுக் கொழும்புக்குச் செல்கிறான். ஆடி வேல்விழா வைபவத்தில் பூரீரங்கம், வள்ளியைக் கண்டுவிடுகிறான். அவள் தப்பி ஓடிக் கொழும்பில் தன் காதலன் சுந்தரைத் தேடி அலைகிறாள். அப்பொழுது சிங்கப்பூரிலிருந்து திரும்பியிருக்கும் பூரீதரால் காப்பற்றப்படுகிறாள்.
அவள் தன் தங்கை என்பதை அறிந்து, சுந்தரைக் கண்டுபிடித்து அவளுக்கு வாழ்வளிக்க முனைகிறான். பூரீரங்கம் சட்டத்தின் கையில் அகப்படுகிறான். வள்ளி சுந்தர் திருமணம் நடைபெறுகிறது.
இதுதான் தோட்டக்காரி திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும்.
இலங்கையின் மலையகச் சூழலை வைத்தே கதை பின் னப்பட்டதால் அந்தக் காலத்தில் இந்தத் திரைப்படம் பிர

Ceyt' . 2.
தாகனமானதாகக் கணிக்கப்பட்டது. தென்னகப் படங் களைப் பார்த்தே பழக்கப்பட்டிருந்த எமது ரசிகர்கள், இ.டங்கைக் காட்சிகளை இத்திரைப்படத்தில் கண்டதும் புதுமைப்பட்டார்கள்.
தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு. எஸ்.தொண்டமான், ஜனநாயகத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஜனாப் ஏ.அசீஸ் ஆகியோரின் உரை களும் படத்தின் ஆரம்பத்தில் இணைக்கப்பட்டிருந்தன.
g
ရွံးဗူမျိုး முதலாவது 35 மி.மீட்டர் தமிழ்ப்படமான பூரீ கணபதி க்ஸர்ஸ் "தோட்டக்காரி"யில் ஒரு காட்சி. கதாநாயகன் பி.எஸ்.கிருஷ்ண குமாரும், கதாநாயகி ஜெயபூரீயும் இப்படித் தோன்றுகிறார்கள். (1963)
இது ஆரம்பப் படமாகையால் தொழினுட்பரீதியில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்தன. "தோட்டக் காரி 1963.09.27 இல் கொழும்பில் கிங்ஸ்லி உட்பட 9 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
இப்படம் மத்திய கொழும்பில் 2 வாரங்களும், தென் கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோண

Page 20
22 தம்பிஐயா தேவதாஸ்
மலை, பண்டாரவளை ஆகிய இடங்களில் தலா ஒரு வாரமும் கண்டி, நாவலப்பிட்டி, ஹட்டன் போன்ற இடங்களில் ஒருவாரத்திலும் குறைந்த தினங்களும் ஓடிய
தாம்.
அந்தக் காலத்தில் 4% இலட்சம் ரூபா செலவில் தயாரிக்கப்பட்ட ‘தோட்டக்காரி வருமானமாக 2% இலட்சம் ரூபாவை மட்டுமே தந்ததாம்.
"பணத்தைப் பொறுத்தவரை சிறிது இழப்புத் தானென் றாலும் எங்களாலும் இலங்கையில் தமிழ்ப் படம் தயாரிக்க முடியும் என்ற ஆத்ம திருப்தியை அப்பொழுதே பெற்று விட்டோம்' என்று கூறினார் பி.எஸ்.கிருஷ்ணகுமார்.
திரு கிருஷ்ணகுமார், கொழும்பு மில்வீதி, 10 ஆம் இலக்க இல்லத்தில் வாழ்ந்துவருகிறார். திரைப்பட வர லாற்றை அறிவதற்காக நான் அவரை அடிக்கடி சந்தித்து வந்தேன். தனது கலைவாழ்க்கையைப் பற்றி அழகழகாகச் சொல்லுவார். தான் நெறியாண்ட இரண்டு படங்களி னதும் (தோட்டக்காரி, மீனவப்பெண்) பட ஆல்பங்களை அழகாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்.
ரூபவாஹினியில் பல வருடங்களாக எஸ். விஸ்வ நாதன் ‘காதம்பரி" என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக நான் கிருஷ்ணகுமாரை முதன்முதலில் பேட்டி கண்டேன்.
அவர் "தோட்டக்காரி திரைப்படத்தின் றில்களை இன் னும் அழகாகப் பாதுகாத்துவருகிறார். 14 றில்கள் மொத்த மாக இருத்தல் வேண்டும். ஆனால், ஒன்று தவறிவிட்ட தால் தோட்டக்காரியை மீண்டும் பூரணமாகத் திரையிட முடியாமல் இருப்பதையிட்டுக் கவலை தெரிவித்தார்.
இலங்கைத் தமிழ்ச் சினிமாவை ஆரம்பித்து வைத்த வர்களின் பெயர்களில் திரு. கிருஷ்ணகுமாரின் பெயரும் விசேடமாகக் குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும்.

Q harr rif? 23
இ) - ங்கையில் உருவான "தோட்டக்காரி' திரைப்படத் துக்குப் பலரின் பாராட்டுகளும் கிடைத்தன.
禦 *籌義》舞。綫幕 வெள்ளி 4 f ங் ஸ் th :n : ։
‘தோட்டக்காரி' படத்திற்கான விளம்பர நோட்டீஸ்
அப்பொழுது தலைவர் எஸ்.தொண்டமானும் பாராட்டுச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். தின கரனில் (1963.08.25) ‘நியமன எம்.பி.தொண்டமானின் கருத்து' என்ற தலைப்பில் அந்தச் செய்தி வெளிவந் திருந்தது.
‘தோட்டக்காரி’ படம், தயாரிப்பாளர் தங்கவேலு வுக்குக் குறிப்பிடத்தக்க வெற்றியாகும். கலாசார அமைச்சர் பி.ஜி.ஜி.கலுகல்ல தலைமையில் காண்பிக்கப்பட்டபோது

Page 21
24 − தம்பிஐயா தேவதாஸ்
நானும் பார்த்தேன். இப்படம் தோட்டப்பகுதி மக்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பதால் சிருஷ்டிக் கலைஞனுக்குச் சவால் விடும் வகையிலான விஷயமொன்றை முன்னணிக் குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
தொழிலாளர்களும் அவர்களது முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களும் இப்படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும்' என்று அந்தச் செய்தியில் வேண்டு கோள் விடுத்திருந்தார்.
இந்தச் செய்தி வெளியான அதே மாதம், 16 ஆம் திகதி 'தினகரன்', 'தோட்டக்காரி' படத்துக்கு நீண்ட விமர்சனம் எழுதியது.
..இலங்கையின் முதலாவது 35 மி.மீட்டர் தமிழ்ப் படமான 'தோட்டக்காரியைத் தயாரித்த பூரீ கணபதி பிக்ஸர்சாரும், வீ. தங்கவேலுவும் பாராட்டுக்குரியவர்கள். இலங்கையிலேயே ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிப்பது என் றால் அதற்கு அசாத்தியமான தைரியம் வேண்டும்.
காதல், துழ்ச்சி, தொழிலாளர் போராட்டம் என்று ஒரு சாதாரண படத்துக்கு வேண்டிய அத்தனை அம்சங் களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஓரிரு பாடல்கள்கூட நன்றாக இருக்கின்றன. ஒலி-ஒளிப்பதிவுகள் திறமையாக இல்லை யானாலும் இது முதுல் முயற்சிதானே?
ஜெயபூரீயின் நடிப்பு நம்பிக்கையூட்டுகிறது. கதாநாயகன் கிருஷ்ணகுமாரும் பரவாயில்லை. தோட்டத் துரையாக வரும் மோகன்ராஜுன் நடிப்பு குறிப்பிடத்தக்கது.
‘தோட்டக்காரி முதல் முயற்சி. ஆனால், அதிகப் பிரயாசையுடன் எடுக்கப்பட்டது. இதை இந்தியப் படங் களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போர் பல குறைகளைக் காண லாம். அவர்கள் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ்ப் படம் எப்படி இருந்தது என்பதை

தொட்டக்காரி 25
யோசித்துப் பார்க்க வேண்டும். எந்தக் கலையும் படிப் படியாகத்தான் முன்னேற முடியும். அதனால், 'தோட்டக் காரி தயாரிப்பாளர்கள் நிச்சயம் ஊக்குவிக்கப்பட வேண் டியவர்கள், என்று தினகரன் விமர்சனம் எழுதியது. வீர கேசரி (11.08.63) யிலும் ‘ராஜ' என்பவர் விமர்சனம் σταρδουτπή.
*šşš, ž: శిక్ష '*',
வெள்ளவத்தை சபையார் தியேட்டரில் ‘தோட்டக்காரி விசேட காட்சி
யின்போது, அப்போது கலாசாரஅமைச்சராக இருந்த 蠶學醬 கல்ல ತಿಣ್ಣಕ್ಖಕಿಲ್ವ தயாரிப்பாளர் வி.தங்கவேலு மாலை அன்விக்
கிறார். உதவித் தயாரிப்பாளர் திரும்தி. ரஞ்சனி முத்துவேலுவும் காணப்படுகிறார். (1963)
முதலாவது திரைப்படத்தில் குறைகள் அதிகம், நிறைவுகள் சொற்பம் என்று எதிர்பார்ப்பது சகஜம். அந்த

Page 22
26 தம்பிஐயா தேவதாஸ்
எண்ணத்தடன் சென்ற எனக்கு ஏக காலத்தில் ஏமாற்றமும், மகிழ்ச்சியுமாக இருந்தது. "தோட்டக்காரி தரமான பட மாகத் தென்பட்டதே அதற்குக் காரணம். கலைஞர்களின் பெயர்கள் சிங்களத்திலும் காட்டப்படுகிறது.
பெண்கள் கொழுந்து பறிக்கும் காட்சி ‘தோட்டககாரி' யில் முதலாவதாக இடம் பெறுகிறது. ஜெயபூரீயும் கிருஷ்ண குமாரும் ரசிகர்கள் பாராட்டும் வகையில் நடித்துள்ளார் கள். தோட்டத் துரையாக வரும் மோகன்ராஜ் பண்பட்ட நடிகராக விளங்குகிறார்.
சவாஹிரின் இசை அமைப்பு அருமை. இலங்கையிலும் நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று நான் எண்ணிக் கொண்டிருக்கையில் "வணக்கம் சார்’ என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். வேட்டியும் சேட்டும் அணிந்திருந்த நடுத்தர வயதுள்ள மனிதர் ஒருவர் நின்றிருந்தார். அவர் தான் தயாரிப்பாளர் தங்கவேலு. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்று பாராட்டினேன்.
என்று அந்த விமர்சனம் முடிகிறது. "தோட்டக்காரி' யின் தயாரிப்பாளர்களில் பிரதானமானவர் வீ.தங்கவேலு. அவரது பேட்டியொன்றும் வீரகேசரியில் (25.09.63)
வெளிவந்திருந்தது.
இலங்கையில் ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்க வேண் டும் என்ற எண்ணம் எனக்கு என்றுமே இருந்ததில்லை. ஆனால், சந்தர்ப்பம் என்னை அந்த வழிக்கு இழுத்துச் சென்றுவிட்டது.
சிறுவயது முதல் நான் நாடகம் நடிப்பதில் ஆர்வங் கொண்டிருந்தேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் பிறந்தது. இதனால் தந்தையுடன் சண்டைபிடித் துக் கொண்டு அவரைப் பிரிந்து வந்தேன். இது 1950ஆம் ஆண்டில் நடந்தது.

தொட்டக்காரி . 27
பல காலம் கஷ்டப்பட்டு கண்டியிலும் ‘மாவனெல்ல' என்ற இடத்திலும் சில்லறைக் கடையும், சைவ ஹோட்ட லும் நடத்தி நல்ல முறையில் வாழ்ந்துவந்தேன்.
அப்பொழுது ‘நடிகர் தேவை' என்ற விளம்பரத்தைக் கண்டு மகிழ்ந்து விண்ணப்பம் அனுப்பினேன். நடிகராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டேன். சில காலத்தின் பின் ஏமாற்றப்பட்டேன். மற்றுமொரு படத்திலும் சேர்ந்தேன். அது படப்பிடிப்புடன் நின்றுவிட்டது.
அதன் பின்பே சொந்தத்தில் படம் தயாரிக்கலாம் என்று எண்ணினேன். சில்லறைக் கடையையும் சைவ ஹோட்டலையும் விற்றேன். சொந்த ஊரில் இருந்த நில புலன்களையெல்லாம் விற்றேன். அந்தப் பணங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘பூரீ கணபதி பிக்ஸர்ஸ்' சினிமா நிறுவனமாகும்.
இலங்கையின் வளத்துக்கும், வருமானத்துக்கும் இரவு பகல் என்று பாராது உழைப்பவர்கள் தோட்டத் தொழி லாளர்கள். அவர்களின் வாழ்க்கையைக் கதையாகக் கொண்டே படத்தைத் தயாரிக்கவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதோ என் மனதில் உருவாகியிருந்தது.
எனது நண்பர் சுமணதாசவுடன் பி.எஸ்.கிருஷ்ண குமாரைச் சந்தித்தேன். அவர் படத்துக்கான கதை வசனத்தை எழுதி டைரக்ஷன் செய்வதாக ஒப்புக்கொண்டார்.
அதன் பின் நவஜீவன ஸ்ரூடியோ அதிபர் சிறிசேன விமலவிரவின் அறிமுகம் ஏற்பட்டது. அவர் தனது ஸ்ரூடி யோவிலேயே முதலாவது தமிழ்ப் படம் உருவாக வேண் டும் என்று விரும்பினார். ‘தோட்டக்காரியை ரசிகர்களின் முன்னிலையில் கொண்டுவரவேண்டுமென்று கடுமையாக உழைத்தேன். முன் அனுபவம் இல்லாத எனக்குப் பல கஷ்டங்கள் ஏற்பட்டன. பொருளாதார நெருக்கடியால்

Page 23
28 தம்பிஐயா தேவதாஸ்
படம் வளர்வது தடைப்பட்டது. அப்போது திருமதி ரஞ்சனி முத்துவேலு பணஉதவி செய்தார்.
‘இலங்கையில் வாழும் ஒவ்வொருவரும் "தோட்டக் காரியைத் தங்கள் சொந்தப் படம் என்று கருதி ஆதரவு தரவேண்டும் என்று தயாரிப்பாளர் பேட்டி கொடுத் திருந்தார். -
தயாரிப்பாளர் கெஞ்சிக் கேட்கும் அளவுக்கு நம் நாட்டுச் சினிமா ரசிகர்கள் விளங்கினார்கள். ‘நம் நாட்டுத் தயாரிப்புக்களையும் நாம் பார்க்க வேண்டும்' என்ற தேசாபிமான உணர்வு அப்பொழுதே நம் ரசிகர் மனதில் ஏற்பட்டிருக்குமானால் இப்போதுள்ள நம் நாட்டுச் சினி மாக்கலை பெருமளவுக்கு முன்னேற்றங்களைக் கண்டிருக்கும்.

4. ‘கடமையின் எல்லை’ தமிழ்ப் படமாக மாறிய ஆங்கில நாடகம்
ஆங்கில நாடக மேதை மகாகவி சேக்ஷ்பியரின் துன் பியல் நாடகங்களில் ‘ஹம்லட் என்ற நாடகமும் ஒன் றாகும். யாழ்ப்பாண ஆசிரிய கலாசாலையொன்றில் கடமையாற்றிய ஆங்கில விரிவுரையாளர் ஒருவருக்கு இந்த நாடகத்தின்மீது தனிப்பிரியம். அவர் இந்த நாடகத்தை ஒரு தமிழ்ப் படமாக எடுத்தால் என்ன? என்று நீண்ட நாட் களாகவே எண்ணி வந்தார்.
அவரது எண்ணம் செயலுருவாகியது. இந்த நாடகத் தைத் தழுவித் தமிழ்ப் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கையில் முதன் முதலாகத் தமிழ்ச் சரித் திரப் படமொன்றை உருவாக்கத் தொடங்கிவிட்டார்.
படம் தயாரிப்பதற்குப் பட நிறுவனம் வேண்டுமே? ராஜா ஜோஷ சவா, கே. கதிர்காமத்தம்பி, ஏ.ஜே. சாள்ஸ், ஏ.எம். ஜோசப் போன்றோரின் உதவியுடன் 'கலாபவன பிலிம்ஸ்’ நிறுவனத்தை உருவாக்கினார்.
தமது படத்துக்குக் கடமையின் எல்லை' என்ற பெயரையும் தட்டினார்.

Page 24
தம்பிஐயா தேவதாஸ்
திரைக்கதை வசனம் பாடல்களை வித்துவான் ஆனந்த ராயர், எஸ். பஸ்தியாம்பிள்ளை, எம். விக்டர் ஆகி யோரைக் கொண்டு எழுதுவித்தார்.
நெறியாள்கையுடன் இசை அமைக்கும் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொண்டார். இப்படியான பொறுப்பு களை ஏற்றுக்கொண்ட அந்த விரிவுரையாளர் யார் தெரியுமா? அவர்தான் எம்.வேதநாயகம் (பி.ஏ.)
அந்த நாட்களில் நாடகங்களில் நடித்துப் புகழ் பெற் றிருந்த பலர் இப்படத்தில் நடிப்பதற்காகத் தெரிவு செய் யப்பட்டிருந்தார்கள். மன்னார் அரசியல்வாதி ஒருவரின் மகனுக்கு நாடகம் நடிப்பதில் பெரிதும் ஆர்வம். சினி மாவில் நடிக்க வேண்டுமென்று துடித்துக்கொண்டிருந் தான். பள்ளிப் பருவம் முடிந்து கொழும்புக்கு வேலைக் குப் போனபோது, நாடகத்தைப் போலவே சினிமாவும் அவனைத் தேடி வந்தது. ஆம். அவன் ‘கடமையின் எல்லை'யில் மன்னனாக நடிப்பதற்குத் தெரிவு செய்யப் பட்டான். அந்த நடிகன்தான் தேவன் அழகக்கோன்.
நவாலியைச் சேர்ந்த ஒர் இளைஞன, கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடகப் பண்ணையில் பயின்றுவந் தான். இவனுக்கும் ‘கடமையின் எல்லை'யில் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்த நடிகரின் பெயர் தான் ஏ.ரகுநாதன்.
இளவரசன் கமலநாதன்தான் கதையின் முக்கியப் பாத் திரம். இந்தப் பாத்திரத்திற்குக் கராட்டிச் சம்பியன் பொனி றொபட்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.
புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒர் இளைஞன், கொழும்புக்கு வந்து 15 வருடங்களாக மேடை நாடகங் களில் நடித்துவந்தான். இவனும் இப்படத்தில் நடிகராகத் தெரிவு செய்யப்பட்டான். இந்த நடிகரின் பெயர்தான் எம்.உதயகுமார்.

annual aviana 3.
ஏ.ஐராங்கனி, ஜி.நிர்மலா, எஸ்.பஸ்தியாம்பிள்ளை, ஆர்.அமிர்தவாசகம், எஸ்.ரி.அரசு, கே.துரைசிங்கம், ஆப்காசிநாதன், குமார், லூக்காஸ் போன்றோரும் நடிகர் கமாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
வி.முத்தையா, வீ.கமலலோஜனி, அம்பிகா தாமோ தரம், ரி.புவனேஸ்வரி போன்றோர் பாடல்களைப் பாடி suffy syst.
'கலாபவன பிலிம்ஸ்" 蠶 ‘கடமையின் எல்லை திரைப் படத்தை இயக்கிய ஆங்கில விரிவுரையாளர் எம்.வேதநாயகம்
எம்.ஏ.கபூரும் ஏ.ரீ.அரசும் கூட்டாக ஒளிப்பதிவை மேற்கொண்டார்கள். கொழும்பு 'சிலோன் ஸ்ரூடியோ' வுக்குள் முதன்முதலாக ஒரு தமிழ்ப்படம் உருவானது.
படத்துக்கான கலை நிர்மாணத்தை கே.ஏ.வின்சென்ற் கவனித்தார்.
‘கடமையின் எல்லை' (04.10.1966) 'சிலோன் தியேட்டர்ஸின்' 8 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

Page 25
32 தம்பிஐயா தேவதாஸ்
வேதனை என்னவென்றால் இத்தனை கஷ்டப்பட்டு உரு வாக்கிய இயக்குநரால் இப்படத்தைத் திரையில் பார்க்க முடியவில்லை. காரணம், ‘கடமையின் எல்லை திரைக்கு வருமுன்பே அதன் இயக்குநர் எம். வேதநாயகம் காலமாகி விட்டார்.
மணியோசை முழங்குகிறது. காக்கையினங்கள் ஆனந் தத்துடன் ஆரவாரித்தன. ஆழ்கடலின் பேரலைகள் கற் பாறைகளில் மோதி வெண்ணுரை பரப்புகின்றன. இந்தக் காட்சிகளுடனே கடமையின் எல்லை திரைப்படம் ஆரம்ப மாகியது.
உரையாடல்கள் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் இடம் பெற்றன. பொதுவாக நடிப்பில் எல்லோருமே நாடகப் பாணியைப் பின்பற்றியிருந்தார்கள்.
இன்பரசனாகத் தோன்றிய தேவன் அழகக்கோனின் நடிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்த்ாலும் தென் னிந்திய நடிகர் சிவாஜி பாணியைப் பின்பற்றியிருந்தார். இப்படத்தில் அறிமுகமான ஏ.ரகுநாதனும் பி.உதய குமாரும் பின்னாளில் சிறந்த திரை நாயகர்களாக உரு வாகினார்கள்.
கதாநாயகியாக ஜி.நிர்மலாவும், தாயாராக ஐராங் கனியும் நடித்தார்கள். அக்காலத்திலும் தமிழ் நடிகைகள் பஞ்சம் நிலவியிருக்கவேண்டும். பெண் பாத்திரத்தில்கூட ஆண் ஒருவர் நடித்தார். அதிகமான உப பாத்திரங்கள் தோன்றின. ஆரம்பகால முயற்சி என்பதால் தொழில் நுட்பத்துறையில் பல குறைபாடுகள் தெரிந்தன.
துள்ளி விளையாடும் புள்ளிமான் ரூபா காதல் வயப் பட்டாள். இளவரசன் கமலநாதனும் அவளை நேசித்தான். காதலர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்தார்கள். தம்மை இன்பரச னும் ரூபாவின் தந்தையும் மறைந்திருந்து பார்ப்பதை

a anna Tebena)
வாசன் கண்டுவிட்டான். அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் ரூபா தன்னைக் காதலிப்பதாக நடிக்கிறாள் என்று எண்ணி வெகுண்டான் கமலநாதன். அவன் எட்டி ம் தைக்கவே அவள் பதறிப்போய்விட்டாள்.
தலாபவன பிலிம்ஸ் ‘கடமையின் எல்லை" திரைப்ப்டத்தில் அரச
ಜ್ಗUTಅಫಿ தோன்றும் தேவன் அழகக்கோனும், ஏ.ஐராங்கனியும். (1966)
இப்படியான உணர்ச்சிகரமான பல காட்சிகள் இப் படத்தில் இடம்பெற்றன.
பல ஊர்களிலும் இத்திரைப்படம் இரண்டு வாரங் களுக்குமேல் ஓடவில்லை. இத்தனை பிரம்மாண்டமான தயாரிப்பு பொருளாதார ரீதியில் பெருந் தோல்விப்பட மாகியது.

Page 26
4 தம்பிஐயா தேவதாஸ்
ஆரம்ப நிலையிலிருந்த தமிழ்ப் படத்துறையில் இப் படியான பிரம்மாண்டமான கதையைத் திரைப்பட ஆக் கத்திற்குத் தெரிவு செய்ததே பெருந் தவறு என்று கூறப் பட்டது.
‘கடமையின் எல்லை" திரைப்படத்தைப் பற்றிப் பத்தி ரிகைகள் பலவாறு விமர்சனங்களை எழுதின. அந்தக்காலச் சூழ்நிலையை அறிந்த எவரும் குறைகளை அதிகமாக எழுதவில்லை. இயக்குநர், தயாரிப்பாளர்களின் துணி வைப் பாராட்டி எழுதினர்.
அக்காலத்தில் இலங்கையில் தமிழ்ப் படத் தயாரிப்பு என்பது எல்லா வகையிலும் தோல்வியிலேயே முடியும் என்பதை அறிந்திருந்தபோதிலும் சில தீவிர கலைஞர்கள் தம் திருப்திக்காக இவ்வாறு சில திரைப்படங்களை உரு வாக்கினார்கள். அவ்வாறான முயற்சியில் ‘கடமையின் எல்லை" திரைப்படமும் ஒன்றாகும்.
சினிமா என்ற கலை மீது கொண்ட காதலால் இவ் வாறான முயற்சியை திரு.வேதநாயகம் மேற்கொண்டார். இந்த வகையில் இலங்கைச் சினிமாவின் வரலாற்றை ஆரம்பித்து வைத்தவர்களின் பெயர்களில் திரு.வேத நாயகத்தின் பெயரும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெய ராகும்.
ஒரு பத்திரிகை இவ்வாறு எழுதியது.கோட்டையில் ஆவிவரும் காட்சிகள் ஆங்கிலப் படங்களைப் போல் அமைந்திருந்தன. வாட் சண்டைகள்முதல் குதிரைச் சவாரிகள்வரை எல்லாமே கஷ்டப்பட்டு எடுக்கப்பட் டிருந்தன. காதல் காட்சிகளுடன் இலங்கைப் பாடகர் களின் இன்னிசையும் யாழ். கலாக்ஷேத்திர மாணவிகளின் நடனங்களையும் கண்டு களிக்கலாம். என்று எழுதியது.
“... நடிகர்களில் பலர் நன்கு நடித்திருந்தாலும் தேவன் அழகக்கோன் எம் மனதில் ஒரு செய்தியை நிறுத்தினார்.

alonuduhair 6T6606) .3 5
இவர் கதாநாயகனைவிட எம்மனதில் முன்னிற்கிறார். அதற்குக் காரணம் அவரது திரைக்கு ஏற்ற முகவெட்டும் உடல் அமைப்பும்தான் என்று எண்ணமுடிகிறது. அவர் தென்னிந்திய நடிகர் ஒருவரின் பாணியை மட்டும் கைவிட வேண்டும்' என்று இன்னுமொரு பத்திரிகை புத்திமதி சொல்லியது.
நெறியாள்கையையும் இசை அமைப்பையும் வேத நாயகமே ஏற்றிருந்தாரல்லவா? சினிமாவைப் பொறுத்த வரை அவரது முதலாவது படைப்பு இது. ஆனாலும், அனுபவம் பெற்ற பலருடன் ஒப்பிடக்கூடியளவு தனது கடமையைச் செய்திருந்தார் என்பது உண்மையே.
அதிகமான காட்சிகள் வெளிப்புறங்களிலேயே எடுக் கப்பட்டன. ஒளிப்பதிவாளர்கள் கபூருக்கும் அரசுக்கும் தமது திறமைகளை காட்ட அதிக சந்தர்ப்பங்கள் கிடைத் துள்ளன.
'மனம் வைத்த தொன்று' என்ற பாடல் இனிமையாக இருந்தது.
'இப்படத்தைப் பற்றி கதாநாயகி ஜி.நிர்மலா தனது கருத்தைக் கூறியிருந்தார். இப்படத்தின் கலைஞர்கள் அனைவரும் அனுபவம் இல்லாதவர்கள். இதுவே இப் படத்தின் தோல்விக்குக் காரணம். படப்பிடிப்பின்போது டைரக்டர் மனம் போனபடி 'குதி’, ‘தொங்கு என்றெல் லாம் ஆட்டிப்படைத்தார். கட்டுப்பாடுகளை விதித்தார் களே தவிர, நடிக்க சந்தர்ப்பம் தரவில்லை. இப்படம் தோல்வி அடைந்தால் என் எதிர்காலம் பாதிக்கப்படுமோ? என்று அஞ்சுகிறேன்’ என்று பேட்டி கொடுத்திருந்தார். வேடிக்கை என்னவென்றால் அவர் நடித்த முதல் படமும் கடைசிப்படமும் ‘கடமையின் எல்லையேதான்.
படத்தின் உப கதாநாயகன் எம். உதயகுமார் என்ன கூறினார் தெரியுமா? நடிப்புத் திறனற்றவர்களை முக்கிய

Page 27
36 தம்பிஐயா தேவதாஸ்
பாத்திரத்தில் நடிக்க வைத்ததே படத்தின் தோல்விக்குக் காரணமாகும். சினிமாத் துறையின் வளர்ச்சியை அறிந்து புதுமையான முறையில் படத்தை உருவாக்கியிருக்கவேண் டும்.அதை விடுத்து பழமையைப் புகுத்துவதும் பழக்கமற்ற செயல்களில் ஈடுபடுத்துவதும் படுதோல்வியைத்தானே கொண்டுவரும். தயாரிப்பாளர்கள் பணத்தை விரயம் செய்து படம் டைரக் செய்யும் முறையைப் பயின்றுள் ளனர்' என்று எழுதினார்.
அந்தக் காலத்தில் நடிகராகவும் நாடகத் தயாரிப்பாள ராகவும் அறிமுகமாகியிருந்த ஏ. நெயினார் தன் கருத்தைத் தினகரனில் எழுதியிருந்தார். எத்தனையோ செல்வந் தர்கள் இருந்தும் துணிந்து முன்வந்த திரு. வேதநாயகம் அவர்களைக் கலைஞர்க்ளாகிய நாம் பாராட்டாமல் இருக்க முடியுமா?’ என்று கேட்டிருந்தார்.
அந்தக் காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த ‘சுதந் திரன்’ (06.10.1966) பத்திரிகையும் விமர்சனம் எழுதியது.
சேக்ஷ்பியரின் கதையைத் தமிழ்ப் படமாகச் செய் திருப்பதன் மூலம் இயக்குநரின் ஆற்றலையும் நம்பிக்கை யையும் காட்டுகிறது. தமிழ் மரபுடன் கதையை நடத்திச் செல்வதற்கு ஒரு பாராட்டு அருவக்காட்சிகள், போர்க் காட்சிகள், கதாநாயகியின் சமாதிக் காட்சி போன்றன டைரக்டரின் திறமையைக் காட்டுகின்றன. என்று எழு தியது.
வீரகேசரியும் (04.10.66) விமர்சனம் எழுதியது.
"சேக்ஷ்பியரின் கதைகள் எதுவும் தமிழில் முழுப்பட மாக வெளிவரவில்லை. அம்முயற்சியைத் துணிந்து மேற் கொண்டு சரித்திரப் படமாகத் தயாரித்திருப்பதை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. டைரக்ஷன் பொறுப்பை ஏற்றுள்ள வேதநாயகத்துக்கு இது முதற்படைப்பாக இருந்த போதிலும் அனுபவம் பெற்றுள்ள பலரோடு ஒப்பிடக்

R - Minufesör Giraid6Mav 37
கூடிய முறையில் தனது கடமையைத் திறமையாகச் செய் sysit Grt IT *T.
‘கடமையின் எல்லை'யில் எம். உதயகுமார் (1966)
இலங்கையில் இப்பொழுது சிங்களச் சினிமாத்துறை நன்கு வளர்ந்துவிட்டது. அங்கு தமிழ்க் கலைஞர்கள் பலர்

Page 28
98 தம்பிஐயா தேவதாஸ்
கடமையாற்றுகிறார்கள். அவர்கள் தமிழ்ப்பட உலகை முன்னேற்றும் ஒரு பணிக்குத் திரு. வேதநாயகம் தயார்ப் படுத்தும் அம்சமாக இப்படம் எடுக்கப்பட்டதையிட்டு நாம் மிகவும் பாராட்டுவோம்!” என்று விமர்சனம் எழுதியது.
‘கடமையின் எல்லை' திரையிடப்பட்டபோது எனக்கு வயது 15. அப்பொழுது நான் கொழும்பு விவேகானந்த மகாவித்தியாலயத்தில் 10 ஆம் வகுப்பில் படித்துக் கொண் டிருந்தேன்.
கொழும்பில் எல்பினிஸ்ரனிலும், ரொக்ஸியிலும் இப்படத்தைத் திரையிட்டிருந்தார்கள். எனது மாமா சிவ நாமம் என்னை அப்படத்தைப் பார்ப்பதற்கு அழைத்துச் சென்றார். எல்பினிஸ்ரன் தியேட்டரில் 2ஆம் வகுப்பு டிக்கெட் எடுத்துக் கொண்டோம். அப்போது ஒரு டிக்கெட்டின் விலை 1 ரூபா 10 சதம் மட்டும்தான்.
தியேட்டரில் மேல்வகுப்பு இருக்கைகளில் சிலர் இருந் தனர். இரண்டாம் வகுப்பு இருக்கைகளில் எங்களுடன் சேர்த்து எல்லோருமாக ஒரு 50 பேர் இருப்போம். கலரி மட்டும் நன்றாக நிறைந்திருந்தது. அப்போது கலரி டிக் கெட்டின் விலை 50 சதம் மட்டுமே.
படம் ஆரம்பமாகியது. திரையில் மணியோசை முழங் கியது; ஆழ்கடலின் நீள் அலைகள் கற்பாறைகளில் மோதி வெண்னுரை பரப்பின. யாழ்ப்பாணக் கோட்டை தெரிந்தது. அடுத்து சில பாத்திரங்கள் பேசின. யாழ்ப் பாணப் பேச்சுத் தமிழில் அந்த உரையாடல்கள் அமைந் திருந்தன. நான் மகிழ்ந்து போனேன். நான் பேசும் பேச் சுத்தமிழை முதன் முதலில் திரைப்படத்தில் கேட்டபோது மிகவும் மகிழ்ந்து போனேன். எனது மகிழ்ச்சி நீடிப்பதற்கு முன்பே கலரிப் பக்கத்திலிருந்து கூச்சல்கள் கிளம்பின.
‘என்ன விஷயம் என்று நான் மாமாவிடம் வினவி னேன். ‘இலங்கைப்படம் என்றால் கலரியில் உள்ளவர்கள்

அ மையின் எல்லை 39
அப்படித்தான் கூச்சல் போடுவார்கள். நீ பேசாமல் படத் தைப் பார்’ என்றார் மாமா. காட்சிக்குக் காட்சி கலரிக் காப்களின் கூக்குரல் அதிகரித்துக் கொண்டே வந்தது.
': s \ ‘கடமையின் எல்லை'யில் ரவீந்திரன், நாகராசா, ஏ.ரகுநாதன் ஆகி Ꮹuum fr ( 1 9 6 6 )
அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று அறிவதற் காக எனது காதுகளைக் கூர்மையாக்கினேன். பனங் கொட்டை.பனங்கொட்டை. பனங்கொட்டைப் படம் எங்களுக்கு வேண்டாம். இவைதான் அவர்களின் கூக் குரலின் அர்த்தம்.
நானும் ‘பனங்கொட்டை' என்பதால் அவர்கள் சொன்ன சொற்கள் எனக்கு வேதனையை ஏற்படுத்தின. அவர்கள் என்ன சொல்லிக் கூக்குரலிட்டாலும், அது பனங்கொட்டைப் படம்' என்பதால் படம் முடியும்வரை

Page 29
At 0 தம்பிஐயா தேவதாஸ்
இருந்து பார்த்துவிட்டுத்தான் நானும் மாமாவும் வீடு
திரும்பினோம்.
இப்படியெல்லாம் எமது இலங்கைத் தமிழ்த் திரைப்
படங்களின் வரலாறு வளர்ந்துவந்தது.
இப்படத்தின் மூலமே முதன் முதலில் யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் திரைப்படமொன்றில் அறிமுகமாகியது. ஆனாலும் இப்படியான சரித்திரப்படத்துக்கு யாழ்ப்பா ணப் பேச்சுத்தமிழ் பொருந்தவில்லை என்பது உண்மை தான். ஆனாலும் பின்பு வந்த பல தமிழ்ப்படங்களுக்கு யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் பொருந்தி விட்டன.

5. ‘பாச நிலா" கல்லூரிக்குள் உருவான திரைப்படம்
1965ஆம் ஆண்டளவில் வட்டுக்கோட்டை யாழ்ப் பாணக் கல்லூரியில் ஜோசப் தேவானந்தன் என்ற ஆசி ரியர் கல்வி கற்பித்துவந்தார். இவரும் இலங்கையில் தமிழ்ப் படமொன்றை உருவாக்க வேண்டுமென்று ஆசை கொண்டிருந்தார். சக ஆசிரியர் தேவகுலதுங்கத்துடன் சேர்ந்து திரைக்கதையை எழுதிவிட்டார்.
யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் ஏ.ஈ. மனோ கரன், ஜயேந்திரா போன்றோருடன் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் சிலரும், செல்வி ஐடா துரைசிங்கம் போன்றோரும், நடிகர்களாகத் தெரிவு செய் யப்பட்டார்கள்.
பலாலி ஆசிரிய கலாசாலை மாணவனாக இருந்த எம்.எச்.ஹக் இப்படத்துக்கான பாடல்களுக்கு இசை அமைத்தார்.
யாழ்ப்பாணப் பாடசாலைகள், பேராதனைப் பூங்கா,
தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை போன்ற இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்றன.

Page 30
A2 தம்பிஐயா தேவதாஸ்
16 மி.மீட்டரில் ரெக்னிக் கலரில் உருவான இப்படத் தின் கதையை மாணவர்களுக்கு ஏற்ற விதத்தில் எழுதி யிருந்தார்கள்.
வயது முதிர்ந்த தம்பதியொன்றுக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு பிள்ளைகள். கீதாவே மூத் தவள். மச்சான் முறையான குமார் என்ற இளைஞனும் இவர்களுடன் ஒன்றாகவே பாடசாலைக்குச் சென்று வரு GTGT.
জন্ম ܘ"
影 யாழ்ப்பாணக் கல்லூரிக்குள் உருவான ‘பாசநிலா திரைப்படத்தின் நெறியாளர் திரு.ஜோ.தேவானந்
ஒரு நாள் மூவரும் படகொன்றில் சுற்றுலா போகிறார் கள். குமார் கேலிக்காகப் பயம் காட்டுகிறான். அதிர்ச்சி யடைந்த கீதா ஊமையாகி விடுகிறாள். அவளது தம்பியும் படிக்காமல் குட்டிச் சுவராகி விடுகிறான்.
நான் உன் குடும்பத்துக்கு எத்தனையோ நன்மை களைச் செய்தேன். இறுதியில் உன் தம்பிகூட என்னை
 

பாச நிலா 43
அடித்துவிட்டான். இனி மேல் இந்த உலகத்தில் வாழ் வதில் பயனில்லை. எனவே, நான் தற்கொலை செய்யப் போகிறேன்!” என்று கூறிவிட்டு வைத்தியசாலையின் மேல் மாடியிலிருந்து குதித்துவிட ஓடினான். அதிர்ச்சியடைந்த கீதா வாய்விட்டு அலறிவிடுகிறாள்.
பரீட்சையில் சித்தியடைந்த குமார், கொழும்புக்கு வந்துவிடுகிறான். கீதாவுக்கும் கொழும்பிலேயே சிகிச்சை நடைபெறுகிறது. குமார், கீதாவின் தம்பியை நல்வழிப் படுத்த முனைந்தபோது, அவனால் தாக்கப்படுகிறான். குமார் தனக்கு நடைபெற்றவைகளைக் கீதாவுக்குக் கூறு கிறான்.
அந்த ஊமைப்பெண் வாய் பேசத் தொடங்கினாள். குமாருக்கும் கீதாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது.
இதுதான் ’பாசநிலா திரைப்படத்தின் கதைச் சுருக்க LoT (5ub.
குமாராக ஏ.ஈ. மனோகரனும், கீதாவாக ஜடாதுரை சிங்கமும், தம்பியாக ஜயேந்திராவும் பாத்திரமேற்றார்கள்.
1966 ஆம் ஆண்டில் ‘பாசநிலா திரையிடப்பட்டது. அக்காலத்தில் யாழ்ப்பாண நகர மண்டபத்தில் 5 நாட் களும், வேல்விழாவின்போது கொழும்பு சரஸ்வதி மண்ட பத்தில் 3 நாட்களும், காண்பிக்கப்பட்டதாம். தொடர்ந்து யாழ்ப்பாணப் பகுதியின் பல பாடசாலைகளிலும் தின மும் ஒரு காட்சியாக 50க்கும் மேற்பட்ட முறை காட்டப் பட்டதாம்.
லண்டனில் ‘வெஸ்ற் மினிஸ்ரர் சென்றல் ஹோலில் திரையிடப்பட்ட முதல் இலங்கைப் படம் ‘பாசநிலா தான்.

Page 31
44 தம்பிஐயா தேவதாஸ்
இதன் பின்பு ஜோ. தேவானந்த் பல சிங்கள தமிழ்ப் படங்களை இயக்கிவிட்டார். ஆனால், இந்தப் 'பாசநிலா வில் கிடைத்ததுபோன்ற ஆத்ம திருப்தி வேறு எதிலும் கிடைக்கவில்லை. எனது மூத்த பிள்ளை, இந்தப் பாச நிலா படறில்கள்தான் என்று சொல்லி மகிழ்கிறார்.

6. ‘டைக்ஷி டிறைவர்’ கலைத்தம்பதிகள் உருவாக்கிய படம்
1950ஆம் ஆண்டளவில், சுண்டிக்குளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல் லூரியில் படித்துக்கொண்டிருந்தார்.
இவ்விளைஞர் இலக்கிய ஆர்வம் காரணமாக 'லட்டு என்ற பத்திரிகையை வெளியிட்டு வந்தார்.
சுண்டிக்குளி பெண்கள் கல்லூரியில் படித்துவந்த மாணவி ஒருத்தியும் 'லட்டு பத்திரிகையை வாசித்துவந் தார். அதற்குக் கதை கட்டுரைகளையும் எழுதி அனுப்பி னார். பத்திரிகை ஆசிரியர் எழுத்தாளருக்கு நன்றிக் கடிதங்கள் எழுதினார். நாளடைவில் நன்றிக் கடிதங்கள் காதல் கடிதங்களாக மாறின. அவர்களது காதல் கல் யாணத்தில் முடிந்தது.
இந்தக் கலைத் தம்பதிகள்தான் சுண்டிக்குளி சோம சேகரனும் திருமதி மாலினிதேவி சோமசேகரனும் ஆவர்.
திரு.சோமசேகரன் 1955ஆம் ஆண்டு சென்னைக்குச் சென்று வாஹினி ஸ்ரூடியோவில் துணை ஒலிப்பதிவாள

Page 32
A 6 தம்பிஐயா தேவதாஸ்
ராகச் சேர்ந்து கொண்டார். அந்தக் காலத்தில் தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை' என்ற படம் வெளிவந்தது. அப்படத்தில் சிவாஜி கணேசன் நடித்த "பொற்கைப் பாண்டியன்' என்ற நாடகம் இடம்பெற்றது.
"டைக்ஷி டிறைவர்’ திரைப்படத்தை உருவாக்கிய கலைத் ::*
夺
சுண்டிக்குளி சோமசேகரனும் திருமதி மாலினிதேவி சேர்மசேகரனும்.
இந்தக் காட்சியில்தான், தனது கலைப்பணியைத் திறமையாக ஆரம்பித்திருப்பதாகப் பெருமையாகச் சொன் னார் சோமசேகரன்.
1960ஆம் ஆண்டு கொழும்பு சிலோன் ஸ்ரூடியோ இவரை வரவேற்றது. அங்கு 50க்கு மேற்பட்ட சிங்களப் படங்களுக்கு ஒலிப்பதிவு செய்தார்.
இவருக்கு இளமையிலிருந்தே இலங்கையில் தமிழ்ப் படமொன்றை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்துவந்தது. இவரது ஆசைக்கு மனைவியும் தூண்டு
 

டைக்ஷி டிறைவர் 47
கோலாக இருந்தார். தங்கள் படக் கொம்பனிக்குத் ‘தங்க மணி பிக்ஸர்ஸ்’ என்ற பெயரைச் சூட்டினார்கள். சோம சேகரன் சிறந்த ஒலிப்பதிவாளரல்லவா? எனவே, முதலில் பாடல்களை ஒலிப்பதிவு செய்தார். யூ.எல்.ஹமீட் எழுதிய பாடல்களுக்கு ஆர். முத்துசாமி இசை அமைத் தார். அன்ரனி, கெளரீஸ்வரி, ஏபிரஹாம் போன்றோர் பின்னணி பாடினர்.
லெனினின் மூலக்கதைக்கு பி.எஸ்.நாகலிங்கம் வசனம் எழுதினார்.
வானொலி நாடகத் துறையின் முன்னோடியான கலா ஜோதி எஸ். சண்முகநாதன் (சானா), எஸ். ராஜேஸ் வரன், தேவன் அழகக்கோன், ரொஸாரியோபீரிஸ், எம்.பி. பாலன், அரசு, பரமானந்தம், யோகா தில்லை நாதன், சந்திரகலா, இந்திரா, வசந்தா, ருத்ராணி மற்றும் பலர் நடிப்பதற்குத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
ஒளிப்பதிவில் எம்.ஏ. கபூருக்கு இது இரண்டாவது தமிழ்ப் படம். திரு. சோமசேகரன் இயக்குநர் பொறுப் பையும், திருமதி மாலினிதேவி தயாரிப்புப் பொறுப்பை யும் ஏற்றுக்கொண்டார்கள்.
‘டைக்ஷி டிறைவர்’ என்ற பெயரில் படம் 27.12.66 இல் திரைக்கு வந்துவிட்டது. கொழும்பில் சென்றல், முருகன் உட்பட 8 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. அன்றைய தியேட்டர் நிர்வாக அமைப்பு காரணமாக நகரப்பகுதி களில் 2 வாரங்களுக்குப் பின் கிராமப்புறத் தியேட்டர் களுக்கு மாற்றவேண்டி ஏற்பட்டுவிட்டது. ஆனாலும், பருத்தித்துறை போன்ற கிராமப்புறத்தில்கூட, தொடர்ந்து 3 வாரங்களுக்கு மேல் ஓடியது .
படித்த ஏழை இளைஞன் அசோக், ஒரு டைக்ஷி டிறைவர். இவனது உழைப்பிலேயே தாயாரும், ஊமைச் சகோதரி மீனாவும் வாழ்ந்து வருகிறார்கள்.

Page 33
48 தம்பிஐயா தேவதாஸ்
மேஜர் வரதநாதனின் மகள் பிறேமா, டைக்ஷி டிறை வரைக் காதலிக்கிறாள். தந்தை இதை எதிர்க்கிறார். மேஜரின் மருமகனும் பிறேமாவின் முறை மாப்பிள்ளையு மாகிய சங்கர், அசோக்கைப் பழிவாங்கும் நோக்குடன் ஊமைப் பெண் மீனாவைக் கெடுத்து விடுகிறான்.
ళ్ల 豹
சண்முகநாதன், ரொசாரி
டைக்ஷி டிறைவர்’ படத்தில் T్య r. (1 9 6 6 )
LTT.
யோபீரிஸ், யோகா தில்லைநாதன் ஆகி
தங்கையின் உயிர் பிரியுமுன்பாவது அவளைச் சுமங் கலியாக்கிவிட அசோக் முயல்கிறான். ஆனால், மீனா இறந்த பின்பே சங்கர் அவளுக்கு இரத்தத் திலகமிட்டு சுமங்கலியாக்குகிறான்.
«did
 
 
 
 
 

டைக்கூரி டிறைவர் 全9
இதுதான் ‘டைக்ஷி டிறைவர்’ திரைப்படத்தின் கதைச் சுருக்கம். தென்னிந்தியத் தமிழ்ப் படங்களில் இடம்பெறும் பல அம்சங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. சண் டைகள், கார் ஓட்டங்கள், நடனங்கள் என்று பல இருந்தன.
டைக்ஷி டிறைவர்’ படத்தில் கதாநாயகன் ராஜேஸ்வரனும் ஊமைப் பெண்ண்ாக்த்தோன்றும் சந்திரகலாவும் (1966
பெரியவராகத் தோன்றும் சண்முகநாதன் யாழ்ப் பாணப் பேச்சு வழக்கில் கேள்வி கேட்க, அவரது மரு மகனாகத் தோன்றும் தேவன் அழகக்கோன் இந்தியப் பேச்சுவழக்கில் பதில் அளிப்பார். இரண்டும் கலந்த உரையாடல்கள்.

Page 34
50 தம்பிஐயா தேவதாஸ்
1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தக் கலைத் தம்பதியரின் வீட்டுக்குச் சென்றேன். ஹவ்லக் றோட்டில் அவர்களது வீட்டைக் காணமுடியவில்லை. ஆம், அது 83 ஜூலை கலவரத்தில் எரிந்துவிட்டது. திரைப்படம் சம்பந்த மான தஸ்தாவேஜுகளும் அழிந்துவிட்டனவாம். தீ அரக்க னிடமிருந்து தப்பிய ஒரே ஒரு பொருள் எது தெரியுமா? அவர்கள் ஏற்கனவே தந்து எனது வீட்டில் அகப்பட்டு விட்ட ஒரு சினிமா அல்பம் மட்டும்தான்.
83ஆம் ஆண்டுக் கலவரத்தின் பின் சோமசேகரன் மத்தியகிழக்கு நாடொன்றுக்குத் தொழில் தேடிச் சென்று விட்டார். மாலினிதேவி தனது பிள்ளைகளுடன் யாழ்ப் பாணம் திருநெல்வேலியிலுள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
1987 ஆம் ஆண்டு வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு இந்திய ராணுவத்தினர் அமைதிப்படை என்ற பெயரில் வந்தபோது இவரது வீடும் தரைமட்டமாகியது. இதில் இவ ரது புதல்வர்களில் ஒருவரும் இறந்துவிட்டார்.
உயிர்தப்பிய பிள்ளைகளுடன் திருமதி மாலினிதேவி இந்தியாவுக்குச் சென்று திருச்சியில் குடியேறினார். இப் பொழுது அங்கேயே வாழ்ந்துவருகிறார்.

7. நிர்மலா
இலங்கையின் 'நாடகத் தந்தை' என்று அழைக்கப் படுபவர் அமரர் கலையரசு சொர்ணலிங்கம். இவரது நாட கப் பண்ணையில் நவாலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பயின்றுவந்தார். பின்பு கொழும்பு இராணுவத் தலைமை அலுவலகத்தில் எழுதுவினைஞராக நியமனம் பெற்றார். கொழும்பில் பல நாடகங்களை எழுதி மேடையேற்றி னார். ‘தேரோட்டி மகன்', 'நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற நாடகங்களில் இவர்தான் கதாநாயகன். ‘கடமையின் எல்லை' திரைப்படத்திலும் தோன்றினார். இந்த இளை ஞர்தான் நிர்மலாவைத் தயாரிப்பதில் முன்னின்ற ஏ.ரகு நாதன்.
இவர் 1967 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நாள் யாழ்ப்பாணம் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். அப் பொழுதெல்லாம் புகையிரதத்தில் சன நெருக்கடியாக இருக்கும். அதனால், இவர் கதவருகே நின்றுகொண்டு பிரயாணம் செய்தார். அவர் நிற்கிறாரே தவிர, அவரது எண்ணமெல்லாம் நாடகம், சினிமா பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.

Page 35
52 தம்பிஐயா தேவதாஸ்
‘என்ன பொங்கலுக்கு ஊரில் நாடகமோ" எதிரில் நின்றவர் அவரது சிந்தனையைக் கலைத்தார். ‘நாடகம் இல்லை ஒரு தமிழ்ப் படம் எடுக்கலாமா என்று யோசித் துக்கொண்டிருக்கிறேன்” என்று பதிலளித்தார் ரகுநாதன்.
’பணம் படைத்தவர்கள் நினைக்கவேண்டிய விஷய
ko-wy.x w
நிர்மலா படத்தைத் தயாரித்து அதில் நடித்த ஏ.ரகுநாதன்
“நம் நாட்டிலும் தமிழ்ச் சினிமா என்ற புதுத்தொழில் உருவானால் நம் இளைஞர்கள் எத்தனையோ பேருக்கு வேலை வழங்கலாம். அதுக்காகவாவது நாம் இதில் இறங் கக்கூடாதா?’ ஆதங்கப்பட்டார் ரகுநாதன்.
"அது சரி இலங்கையில் நடிகர்கள் இருக்கிறார்களா'? வந்தவர் கேலியாகக் கேட்டரர்.
ரகுநாதன் பதில் சொல்லவில்லை.
நடிகர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்' தனது மனதுக்குள் மட்டும் சொல்லிக்கொண்டார். இப்படித்தான் ஆரம்பமாகியது நிர்மலா படத் தயாரிப்பு.
 

1) ADAvnT 53
ரகுநாதனின் ஊரான நவாலியைச் சேர்ந்த இன் னொரு இளைஞர் கலைவேட்கையால் அலைந்துகொண் டிருந்தார். எப்படியாவது திரை உலகில் நுழையவேண்டும் என்ற அவாவில் தமிழகம் சென்றார். எம்.ஜி.ஆரின் உதவியால் சென்னை வாஹினி ஸ்ரூடியோவில் எடிட்டர் மகாலிங்கத்தின் கீழ் பயிற்சி பெற்றார். 'சபாஷ் தம்பி’, "நாம் மூவர்', 'உயிர்மேல் ஆசை', 'யாருக்காக அழுதான் "அாச கட்டளை’ போன்ற தென்னிந்தியப் படங்களுக்கு இந்த இளைஞர் உதவி எடிட்டராகப் பணியாற்றினார். அவர்தான் எம். அருமைநாயகம்.
நிர்மலா” படத்தை இயக்குவதற்காக அருமைநாயகம் இலங்கைக்கு அழைக்கப்பட்டார். இவரும் ரகுநாதனும் சேர்ந்து நிர்மலா படத்தை உருவாக்கினார்கள். கலையரசு சொர்ணலிங்கத்தின் இன்னுமொரு மாணவரான நவாலியூர் நடேசன், துறையூர் மூர்த்தியின் மூலக்கதையை வைத்துக் கொண்டு நிர்மலாவுக்கான கதை வசனங்களை எழுதினார்.
நடிகர்கள் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட் டார்கள். மட்டக்களப்பு ஆரையம்பதியைச் சேர்ந்த த.தங்கவடிவேல் சிறந்த மேடை நடிகர். இரா. நாகலிங்கம் (அன்புமணி) எழுதிய 'திரைகடற்தீபம்’ ‘தியாக பூமி" போன்ற நாடகங்களிலெல்லாம் இவர்தான் கதாநாயகன். இவரே நிர்மலா திரைப்படத்தில் கதாநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
சிறுமி பரீதா தாஜுதீன் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. கொட்டாஞ்சேனை குட் செப்பர்ட்கொண் வெண்டில் படித்துக்கொண்ருந்தாள். சிறு வயது முதலே படத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தாள். பாடசாலை நாடகங்களில் நடித்தாள். கலை நிகழ்ச்சிக் காகத் தன் பெயரைச் சந்திரகலா என்று மாற்றினார்.

Page 36
54 தம்பிஐயா தேவதாஸ்
‘சலோமியின் சபதம்’ என்னும் நாடகம் இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தது.
சில சிங்களப் படங்களில் நடனமாடியவர், 'மாத்துரு பூமி’ என்ற சிங்களப் படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். இவரே நிர்மலா படத்தில் கதாநாயகியாகத் தெரிவு செய் யப்பட்டார்.
கலாபவன பிலிம்ஸின் இரண்டாவது தயாரிப்பான ‘நிர்மலா”வில் கதாநாயகன் த.தங்கவடிவ்ேலுவும் கதாநாயகி சந்திரகலாவும். (1968)
ஏ.ரகுநாதன், கண்டி விஸ்வநாதராஜா, ஐசாக் செல்வ ரத்தினம், சிலோன்சின்னையா, எஸ். நாகராஜா ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.பிரான்சிஸ், ஏ.குணசேகரம், மகிந்தன், அரசு, பாலன், நாகேந்திரன், சஹாப்தீன், கோகிலா ராஜரட்ணம், ரமணி போன்றோர் நடிகர் களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
 

t s
கவிஞர் முருகையன் ஒரு பாடலை மட்டும் எழுத மிகுதியானவற்றைத் தான்தோன்றிக் கவிராயர் (சில்லையூர் செல்வராசன்) எழுதினார்.
1964ஆம் ஆண்டு ஓர் இளைஞர் தனது 22வது வயதில் 'திருகோணமலை இசைக் கழகம்' என்ற பெயரில் ஓர் இசைக் குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவின் மூலம் தனது இசையமைக்கும் திறமையை வெளியிட்ட அந்த இளைஞர்தான் திருகோணமலை ரீ.பத்மநாதன். இவரே நிர்மலா படத்துக்கு இசை அமைப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார். பேர்டினன்ட் லோப்பஸ் டாக்டர் சாந்தி காராளசிங்கம், சுகிர்சுதாகனகராஜா, துரைசிங்கம், எம். பி. பாலன் ஆகியோர் பின்னணி பாடினர்.
எம்.ஏ. கபூர் அப்பொழுது 20க்கும் மேற்பட்ட சிங் களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவிட்டார். அவர் ஒளிப்பதிவு செய்த 3வது தமிழ்ப் படம் நிர்மலாவாகும். ஒலிப்பதிவு - சுண்டிக்குளி சோமசேகரனுக்கும் ஒப்பனை சரவணபவானந்தனுக்கும் கலை-வின்சென்டுக்கும் வழங்கப் பட்டன.
கலாபவன பிலிம்ஸாரின் இரண்டாவது தயாரிப்பான நிர்மலா கொழும்பு சிலோன் ஸ்ரூடியோவில் வளர்ந்து கொண்டிருந்தாள்.
யாழ்ப்பாணத்தில் அப்பொழுதே ஆயிரம் தடவைகசூ மேல் மேடையேறிவிட்ட நாடகம்தான் அமரர் வீ.வீ.வைர முத்துவின் 'அரிச்சந்திர மயானகாண்டம் ஆகும். இந் நாடகம் ‘நிர்மலா மூலமே முதன் முதலாகத் திரைக்கு ஏறியது.
18 நாட்களில் ‘நிர்மலா எடுத்து முடிக்கப்பட்டு 15.07.1968இல் திரைக்கு வந்துவிட்டது. கொழும்பில் ஜெஸிமா, முருகன் உட்பட இலங்கையின் 6 தியேட்டர்

Page 37
56 தம்பிஐயா தேவதாஸ்
களில் திரையிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் 'அரச கட்டளை ரவிச்சந்திரனின் ‘நர்ன்', கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பணமா பாசமா’ போன்ற படங்களுடன் நிர்மலாவும் 9քLգ-աՖl.
சின்னையா, புலி மார்க் , தீப் பெட்டித் தொழிற்
சாலையில் வேலை பார்க்கிறார், ரகுநாதனும் சந்திர கலாவும் (நிர்மலா) இவருடைய பிள்ளைகள்.
‘நிர்மலா” படத்துக்கு இசையமைத்த'திருமலை ரி. பத்மநாதன்'
சந்திரகலாவை இளைஞர்கள் சிலர் கடத்திச் செல்லு கின்றனர். அவள் தப்பி வந்து விடுகிறாள். இந்தக் கதை யினால் நிர்மலாவின் திருமணப்பேச்சுகள் தடைபடுகின்றன.
கொழும்புக்கு வேலை தேடி வரும் தங்கவடிவேல் நண்பன் ரகுநாதன் வீட்டில் தங்குகிறான். தங்கவடிவேலு வுக்கும் சந்திரகலாவுக்கும் காதல் அரும்புகிறது. முதலாளிக் கும் சந்திரகலா மீது ஆசை இருக்கிறது. ரகுநாதன் தன் தங்கையைத் தங்கவடிவேலுவுக்கே கட்டிக்கொடுக்க விரும்பி கோயிலில் ஏற்பாடுசெய்கிறார்.
 

நிர்மலா 57
இதற்கிடையில் முதலாளியின் கையாட்கள் சின்னை யாவைக் கொலை செய்கிறார்கள். தந்தையைக் கொலை செய்தவன் மனேஜர்தான் என்று எண்ணிய ரகுநாதன் அவனைத் தாக்க ஒடுகிறான். ஏற்கனவே அங்கு மனேஜர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான். பழி ரகுநாதன் மீது விழவே அவன் சிறை செல்கிறான்.
சந்திரகலா தனிமைப்படுத்தப்படுகிறாள். கணவனைத் தேடிக் கண்டிக்குப் போகிறாள். அதே வீட்டுக்குத் தங்கை யைத் தேடி ரகுநாதனும் வருகிறார்.
அந்த வீடு அவர்களின் மாமி விடு என்று தெரிய வருகிறது. தங்கவடிவேலுவுக்கும் சந்திரகலாவுக்கும் திரு மணம் நடைபெறுகிறது. ரகுநாதனுக்கும் மாமியின் மகளுக் கும் திருமணம் நடைபெறுகிறது.
இதுதான் நிர்மலா திரைப்படத்தின் கதைச் சுருக்க மாகும். இதுவரை வந்த இலங்கைத் தமிழ்ப் படங்களை விட, நடிப்பிலும் தொழில்நுட்பத் துறையிலும் சிறந்து விளங்கியது. லோப்பஸ் பாடிய "கண்மணி ஆடவா" என்ற பாடல் புகழ் பெற்ற சினிமாப் பாடலாக விளங் கியது.
நிர்மலாவைப் பார்த்த அமரர் கலையரசு சொர்ண லிங்கம் அப்பொழுது தன் கருத்தை வெளியிட்டிருந்தார். ‘நிர்மலாவைத் தொடர்ந்து இனிமேல் அதிக தமிழ்ப்படங் கள் வரும்' என்பது தான் அவரது கருத்து.
இப்படத்தைப் பற்றி விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் வானொலியில் விமர்சனம் செய்தார். ‘நடிகர்கள் எல் லோருமே கதைக்கு ஏற்ற விதத்தில் நடித்துள்ளனர். படம் எடுக்கப்பட்ட முறையிலும் ஒரு சீர்ஒழுங்கு இருப்பதை உணர முடிகிறது” என்று குறிப்பிட்டார்.

Page 38
58 தம்பிஐயா தேவதாஸ்
கலையார்வமும் கலைத்தாகமும் மிக்க இரு இளைஞர் களின் நீண்டகாலக் கனவுதான் நிர்மலா. தமிழ்நாட்டிலும் திரையிடக்கூடிய நல்ல படமாக நிர்மலாவைத் தயாரித் திருக்கிறார்கள். இலங்கைத் தமிழ்ப்படங்களுக்கு எதிர் காலம் இருக்கிறது என்பதை இப்படம் நிரூபிக்கிறது. என்று எழுதியது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழ நாடு’ பத்திரிகை.
‘பிரபல நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இந்தியத் தயாரிப்புகள் என்ற திரைகளைக் கிழித்து எறிந்துவிட்டுப் பார்க்கும் ரசிகர்களுக்கு நிர்மலா நிச்சயம் மகிழ்ச்சியைத் தருவாள். இரண்டாந்தர தென்னிந்தியப் படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நிர்மலா நிச்சயம் உயர் வானது' என்று அப்போது வெளிவந்துகொண்டிருந்த "இளம்பிறை' என்ற சஞ்சிகை எழுதியது.
‘நிர்மலாவாக நடித்த சந்திரகலா பாத்திரத்துடனேயே ஒன்றிப்போய்விடுகிறார். வெளிப்புறக் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழ்ப் படங்கள் படிப் படியாக முன்னேறுகின்றன என்பதற்கு நிர்மலா எடுத்துக் காட்டாகும் என்று மித்திரன் (15.07.78) குறிப்பிட்டது.
‘நிர்மலாவில் புகுத்தப்பட்டுள்ள வி.வி. வைரமுத்து வின் ‘மயானகாண்டம்' நாடகம் ஒரு தனி எடுப்பாக இருக்கிறது. இந்நாடகத்தைச் சினிமாவில் காணும்போது ஒரு தனி அழகு தோன்றுகிறது என்று மதிவாணன் என் பவர் ராதா (20.07.68) சினிமா சஞ்சிகையில் எழுதி யிருந்தார்.
இலங்கைப் படம் என்றால் தரமற்றது என்று பலரும் இடும் கூச்சலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் தோன்றி யிருக்கிறது நிர்மலா ஒவ்வொருவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். சந்திரகலா தோன்றும் கட்டங் கள் இந்தியத் திரைப்படங்களின் சாயலை ஒத்திருக்கின்றன.

நிர்மலா 59
இலங்கைப் படம் என்று குறைத்துக் கணிக்க முடியாத அளவுக்குத் திறமையாக நடித்துள்ளார்' என்று அப் பொழுது வெளிவந்த பெண்கள் பத்திரிகையான ஜோதி (18.07.68) எழுதியது.
ళ 3. ‘நிர்மலா”வில் கதாநாயகியாகத் தோன்றும் சந்திரகலா,
‘நிர்மலாவுக்குப் பின்னர் ஒளிமயமான எதிர்காலம் இலங்கைத் தமிழ்ப் படங்களுக்கு உண்டு என்று நம்பலாம் என்றது கே.வி.எஸ். மோகனை ஆசிரியராகக் கொண்ட 'கதம்பம்'.
நிர்மலாவும் ஆரம்பகாலத் திரைப்படம் என்பதால் சில குறைகள் இருக்கவே செய்தன. ஆனாலும், தொடரும் படங்களுக்கு நிர்மலா வழிகாட்டியாக அமைந்தது.
திரைப்பட ஆர்வம் காரணமாகத் தன் தொழிலையே ராஜினாமா செய்தவர் கலைஞர் ஏ. ரகுநாதன். பின் னாளில் ‘தெய்வம் தந்த வீடு' என்ற படம் உருவாகக் காரணமாக இருந்தவர். 1983 ஆம் ஆண்டு ஜுலைக் கல

Page 39
60 − தம்பிஐயா தேவதாஸ்
வரம் ரகுநாதனையும் பாதித்தது. இந்தியா சென்றார். சிலகாலம் அஞ்ஞாதவாசம் செய்தார். இப்பொழுது பிரான்சில் இருக்கிறார்.
பிரான்ஸஸின் தலைநகர் பாரீஸில் இருந்து கொண்டு பல கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இலங்கைக் கலைஞர்கள் பலருடன் சேர்ந்து 'கலைமன்றம் அமைத்து பல நாடகங்களை மேடையேற்றிவருகிறார்.
இலங்கைத் திரைப்பட வரலாற்றில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய பெயர்களில் ஏ.ரகுநாதனின் பெய ரும் ஒன்றாகும்.

8. 'மஞ்சள் குங்குமம்' மேடை நாடகம் திரைப்படமாகியது
கொழும்பில் தமிழ்க் கலைநிகழ்ச்சிகள் எங்கு நடை பெறுகிறதோ அங்கெல்லாம் ஒரு புகைப்படக்கலைஞரைக் காணலாம். இவர் பிடித்த படங்கள் இடம்பெறாத தமிழ்ப் பத்திரிகைகள் இலங்கையில் இல்லையெனலாம். இவர் புகைப்படக்கலைஞர் மட்டுமல்ல நாடகத் தயாரிப்பாளரும் கூட. புகழ்பெற்ற பல்வேறு நாடகங்களைப் பல இடங் களில் மேடையேற்றிவந்தார். அவற்றில் ஒரு நாடகத்தைத் திரைப்படமாக்கலாமா என்று எண்ணினார். தனக்கு அறி முகமான கலை உலக நண்பர்களையும் கலை அபிமானி களையும் தேடி அலைந்தார்.
அப்படிக் கலைத்தாகத்துடன் விளங்கிய அந்தப் புகைப் படக்கலைஞர்தான் கிங்ஸ்லி எஸ். செல்லையா.
கலை அபிமானம் கொண்ட இளைஞர் ஒருவர் ஆயிரத்து ஐந்நூறு ரூபா சம்பளம் தரும் தொழிலையே தூக்கி ஏறிந்துவிட்டுக் கலை உலகுக்கு ஓடிவந்தார். தமிழகம் சென்று சிவாஜி கணேசனின் நண்பராகி ராஜ ராஜ சோழன்’ படத்தில் ஈழத்துப் புலவராகத் தோன்றி நடித்தார்.

Page 40
É ቋ தம்பிஐயா தேவதாஸ்
'கொள்ளைக்காரன்', 'ஒரு மனிதன் இரு உலகம்' போன்ற நாடகங்களைப் பருத்தித்துறையிலும் யாழ்ப் பாணத்திலும் பலமுறை மேடையேற்றினார். இலங்கையில் எப்படியும் ஒரு தமிழ்ப்படம் தயாரித்தே ஆகவேண்டும் என்று துடித்துக்கொண்டு நின்றார். அவர்தான் பருத்தித் துறையைச் சேர்ந்த வி.வைத்திலிங்கம். பூரீசங்கர் என்ற கலைஞரின் இயற்பெயர்தான் வைத்திலிங்கம்.
嵩、
-
# குங்குமம் திரைப்படத்தில் ரீசங்கரும் ஹெலன்குமாரியும்.
கிங்ஸ்லி செல்லையாவும் பூரீசங்கரும் ஒன்று சேர்ந்து கொண்டார்கள்.
இவர்களுடன் ஏ. சுந்தரஐயா, பதூர்தீன், பரஞ்சோதி ஆகியோரும் ஒன்று சேர்ந்து சிறந்த முறையில் தமிழ்ப் பட
 

மஞ்சள் குங்குமம்
மொன்றை உருவாக்கத் திட்டமிட்டார்கள். அதற்காக "கீதா லயம் மூவீஸ்' என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்தார்கள்.
1969ஆம் ஆண்டு முதல் கிங்ஸ்லி செல்லையாவின் ஆனந்தா புரடக்ஷன் மூலம் "மஞ்சள் குங்குமம்' என்ற நாடகத்தை மேடையேற்றிவந்தார்கள். இந்த நாடகத்தையே திரைப்படமாக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அந்த நாடகத்தை ஒர் இளைஞர் இயக்கி வந்தார். அவரையே திரைப்படத்தையும் இயக்கச் சொல்வோமா என்று எண்ணினார்கள்.
எட்டியாந்தோட்டையில் இங்கிரியவத்தையில் பிறந்து கலையார்வத்தின் காரணமாகக் கொழும்புக்கு வந்தவர் இந்த இளைஞர். அவருக்கு முதலில் பம்பலப்பிட்டி கிறீண் லண்ட்ஸ் ஹொட்டேலில் வேலை கிடைத்தது.
அந்த ஹோட்டலுக்கு சினிமாஸ் குணரத்தினம், எஸ். ராமநாதன், சுண்டிக்குளி சோமசேகரன் போன்ற கலை யுலகப் பிரமுகர்கள் வந்துபோவார்கள். இவர்களின் அறி முகம் இந்த இளைஞனுக்குக் கிடைத்தது.
ஏ.எஸ்.நாகராஜனின் உதவியால் சிங்களப் படங் களில் கோஷ்டி நடனம் ஆடத் தொடங்கினார். லெனின் மொறாயஸும், எஸ்.எஸ்.சந்திரனும் நாடகத்துறையை அறிமுகப்படுத்தினார்கள். சினிமாத் துறையில் இவரை டெக்னீஷியனாக்கியவர் சுண்டிக்குளி சோமசேகரனே.
காமினி பொன்சேகா ஆரம்பத்தில் புகைப்படப்பிடிப் பாளராகவே திரை உலகத்துக்கு வந்தார். காமினி நடிக னாக மாறி, பின்பு தயாரிப்பாளராக மாறியபோது தனது படத்தை (ஒப நெத்திநம்) இந்த இளைஞரைக் கொண்டே இயக்கினார்.
இந்த இளைஞர்தான் எம்.வி.பாலன். இவருக்கே மஞ்சள் குங்குமம் படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்

Page 41
54 தம்பிஐயா தேவதாஸ்
தது. எம்.உதயகுமாரும் பூரீசங்கரும் பிரதான நடிகர் களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
சிறுமி ஒருத்தி ஆறு வயதிலேயே அழகாக நடனமாடி னாள். நாடகத் தந்தை இராஜேந்திரம் மாஸ்டரின் ‘மனோரஞ்சித கானசபா'வில் நடிப்புப் பயிற்சி பெற்றாள். வளர்ந்ததும் ஸ்ரண்ட் மாஸ்டர் முத்துலிங்கத்திடம் வாட் பயிற்சியும் பெற்றாள். மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினாள். ‘ஒக்கொம ஹரி என்ற படத்தில் நடித்த தன் மூலம் சிங்களச் சினிமாவிலும் அறிமுகமானார். பல சிங்களப் படங்களில் நடன அமைப்பையும் கவனித்துக் கொண்டு நடனமும் ஆடினார்.
மஞ்சள் குங்குமம்' படத்தில் இரகசியப் பொலிஸ் அதிகாரியாகத் தோன்றும் எம். உதயகுமாரும் அவ்ர் காதலியாகத் தோன்றும் ஹெலன் குமாரியும் (1970)
இவரையே மஞ்சள் குங்குமம் படத்தில் கதாநாயகி யாகப் போடலாம் என்று எண்ணினார்கள்.
அவர்தான் ஹெலன் எஸ்தர் என்ற இயற்பெயர் கொண்ட ஹெலன்குமாரி. அக்காலத்தில் பல நாடகங் களை எழுதி மேடையேற்றிய ஓர் இளைஞர் இப்படத்துக்கு
 

மஞ்சள் குங்குமம் 65
உதவி இயககுநராகத் தெரிவு செய்யப்பட்டார். அவர் தான் அந்தனி ஜீவா.
ரொசாரியோ பீரீஸ், சிலோன் சின்னையா, ஏ. நெயினார் , ஏ. ஸ். ராஜா போன்றோர் நடிகர் களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள். லீலா நாராயண னின் பரதநாட்டியமும், பரீனா லையின் கவர்ச்சி நடன மும் இப்படத்தில் இடம்பெற்றன. மஞ்சுளா, ருத்ராணி, மணிமேகலை போன்றோரும் நடித்தனர்.
சில்லையூர் செல்வராஜனும், இக்னேஷியஸ் மொறாயஸ"ம் பாடல்களை எழுதினார்கள்.
இந்தியாவில் நாகர்கோவிலில் பிறந்த இசைக்கலைஞர் ஒருவர் இலங்கைக்கு வந்தார். நூற்றுக்கு மேற்பட்ட சிங் களப் படங்களுக்கு இசை அமைத்தார். இவரது இசைத் திறமையை அறிந்த இலங்கை அரசாங்கம் இவருக்குக் கெளரவப்பிரஜை அந்தஸ்தை வழங்கியது.
அவர் தான் இசையமைப்பாளர் ஆர்.முத்துசாமி. இவரே மஞ்சள் குங்குமம் திரைப்படத்துக்கான இசை அமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இசை அமைப்பில் ஏ.சுந்தரஐயரும் உதவி செய்தார். இந்த இரு இசையமைப்பாளர்களுமே தலா ஒவ்வொரு பாடலையும் பாடினார்கள். எம்.ஏ.குலசீலநாதன், மீனா மகாதேவன், சுஜாதா போன்றோரும் பின்னணி பாடினர்.
எம்.ஏ. கபூர் ஒளிப்பதிவு செய்த நான்காவது தமிழ்ப் படம் இது. சுண்டிக்குளி சோமசேகரன் ஒலிப்பதிவு செய்த மூன்றாவது தமிழ்ப்படமும் இதுவே.
கொழும்பு சிலோன் ஸ்ரூடியோவில் படம் வளர்ந்து வந்தது. பணக் கஷ்டத்தால் வேகம் குன்றியது. பிரபல வர்த்தகர் ஜி. நாராயணசாமியின் உதவியுடன் படம் தொடர்ந்து வளர்ந்தது.

Page 42
66 தம்பிஐயா தேவதாஸ்
கொழும்பு ஆடிவேல் விழாக் காட்சி, வெசாக் விழாக் காட்சி, 1969இல் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக் காட்சி போன்றவற்றை இப்படத்தில் இணைத் தனர்.
'மஞ்சள் குங்குமம்" 14.03.1970இல் கொழும்பில் கிங்ஸ்லி உட்பட இலங்கை எங்கும் திரையிடப்பட்டது. அப்போது தியேட்டர் நிர்வாகம் தனியாரின் கைகளில் இருந்தது. அதனால், இப்படத்துக்குப் போட்டியாக எம்.ஜி. ஆரின் அடிமைப்பெண், சிவாஜியின் தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களும் திரையிடப்பட்டன. ஆனாலும், மஞ்சள் குங்குமம் சுமாராக ஓடியது.
இளைஞன் சங்கர், நடன மங்கை ஜெயா மீது காதல் கொள்கிறான். அவளும் சங்கர்மீது அன்புள்ளவள் போலவே காட்டிக்கொள்கிறாள். சங்கரைத் தேடி குமார் வருகிறான். சங்கர் தன் மனோரதியக் காதலி ஜெயாவை அறிமுகப் படுத்துகிறான். ஜெயா குமாரை வரவேற்றுக் கட்டி அணைக்கிறாள். இதைக் கண்ட சங்கர் பதறிப்போனான். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஜெயா சங்கர் மீது அன்பு கொண்டவள் போல் நடந்துகொள்கிறாள். குமார் இவர் களைப் பிரிந்துசெல்ல முயலுகிறான். ஜெயா தனது நடத் தைக்கு விளக்கம் கூறுகிறாள்.
ஜெயாவுக்கு சங்கரைப்போலவே உருவமுடைய அண்ணன் ஒருவன் இருந்தானாம். அவன் கெட்ட கூட் டாளிகளுடன் சேர்ந்திருந்தான். தங்கை ஜெயாவின் புத்தி மதிகளுக்கு ஏற்ப வீடு திரும்பினான். இதை விரும்பாத அவனது கூட்டாளிகள், அவனைக் கொன்று விடுகிறார்கள். அதனால், சங்கரைத் தன் அண்ணனாக நினைத்துப் பழகு வதாக விளக்கம் கூறினாள்.
தன் நண்பன் ஒருவர் மரணப்படுக்கையில் இருந்து வேண்டிக்கொண்டதற்கிணங்க சங்கர் தன் முறைப் பெண்ணை மணக்கிறான்.

Ingeet குங்குமம் 67
இதுதான் மஞ்சள் குங்குமத்தின் கதைச் சுருக்கமாகும். சங்கராக பூரீசங்கரும், குமாராக உதயகுமாரும், ஜெயா வாக ஹெலன்குமாரியும் நடித்தார்கள். முறைப்பெண் ணாக மஞ்சுளாவும் மரணப்படுக்கையில் உள்ள நண்ப னாக டைரக்டர் எம்.வி.பாலனும் நடித்தார்கள்.
12
&SX&&
"மஞ்சள் குங்குமம்' படத்தில் நகைச்சுவைக் கட்டம். மணிமேகலை, இந்தீா ???? பீரிஸ் , சிலோன் சின்னையா ஆகியோர். (1970)
பூரீசங்கருக்கு இப்படத்தில் மூன்று வேடங்கள். 'தித்திப்பு செம்மாதுளம்பூ' என்ற பாடலை இசையமைப்பாளர் முத்துசாமி பாடினார். இனிமையான இப்பாடலுக்கு டைரக்டர் எம்.வி.பாலனும் உருக்கமாகவே வாயசைத்து நடித்திருந்தார்.

Page 43
台8 தம்பிஐயா தேவதாஸ்
மஞ்சள் குங்குமம் எட்டு வருடங்களின் பின் மீண்டும் திரையிடப்பட்டது. 10.10.78இல் தெமட்டகொடை சமந்தா தியேட்டரிலும் மேலும் நான்கு தியேட்டர்களிலும் திரையிட்டார்கள்.
கீதாலயம் மூவீஸ் என்று முன்பு ஆரம்பமாகிய படம் 'விநாயகர் பிலிம்ஸ்’ அளிக்கும் மஞ்சள் குங்குமம் என்று தொடங்கியது. பிரபல தொழிலதிபர் ஜி. நாராயணசாமி யின் திரைப்பட நிறுவனமே விநாயகா பிலிம்ஸ்’ ஆகும். பழைய காட்சிகள் சிலவற்றை நீக்கிவிட்டுப் புதிய ஆரம்பக் காட்சியைச் சேர்த்திருந்தார்கள்.
பூரீசங்கர் தோன்றும் பாடற்காட்சி, தமிழரசுக் கட்சி மாநாடு, தயாரிப்பாளர்கள் உரையாடும் காட்சிகள் போன்றவை நீக்கப்பட்டிருந்தன.
மஞ்சள் குங்குமம் சமந்தாவில் ஒரு வாரம் மட்டுமே ஓடியது. மற்றும் நான்கு ஊர்களிலும் தலா 3 தினங்களே நின்றுபிடித்தது.
எட்டு வருடங்களுக்குப் பின் மீண்டும் திரையிடப்பட்ட மஞ்சள் குங்குமம் எட்டு நாட்கள்கூட ஓடாததையிட்டுக் கலை உள்ளங்கள் கவலை கொண்டன.

9. “வெண் சங்கு சிங்களப் படத் தயாரிப்பாளரின் தமிழ்ப்படம் அது 1970ஆம் ஆண்டு. அதுவரை ஏழு இலங்கைத் தமிழ்த் திரைப்படங்கள் திரைக்கு வந்துவிட்டன. ஆனால், அவை அதிக நாட்கள் ஓடவில்லை. அடுத்த படத்தை ஆர் வத்துடன் தயாரிக்கும் மனவளத்தையோ பண வளத்
தையோ அவை மீண்டும் தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்க வில்லை.
"பணம் தரும் படமொன்றை என்னால் தயாரிக்க முடியாதா? என்ற கேள்வி புகழ்பெற்ற சிங்களப் படத் தயாரிப் பாளரான ஒரு தமிழரின் மனதில் எழுந்தது.
சினிமாவில் ஆர்வம் மிக்க யாழ்ப்பான இளைஞன் ஒருவன் சென்னை சென்றான். அங்கு தங்கியிருந்து திரை உலகின் நெளிவு சுளிவுகளையெல்லாம் அவதானித்தான். 1944ஆம் ஆண்டு சினிமா அபிமானி ஒருவருடன் சேர்ந்து ‘பிரபாவதி என்னும் தமிழ்ப் படத்தைத் தயாரித்தான். பின்பு தனித்தும் சில படங்களை உருவாக்கினான்.

Page 44

ைெவ சங்கு 71
எழுத்தாளரான சிறில் ஜே.பெர்னாண்டோ திரைக்கதை வசனம் எழுதினார். வசனம் எழுதுவதில் இவருக்கு சந் திரா கணேசானந்தனும் பரமானந்தனும் உதவி புரிந்தனர்.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் அராலியில் ஓர் இளைஞன் பல்வேறு நாடகங்களிலும் நடித்துப் புகழ் பெற்றிருந்தான். “புவனேந்திரன்’ என்ற அந்த இளை ஞனையே இப்படத்துக்குக் கதாநாயகனாகத் தெரிவு செய் தார்கள்.
சிறுவயது முதலே நாடக ஆர்வம்மிக்க ஓர் இளம்பெண் கொழும்பில் பல்வேறு மேடை நாடகங்களில் நடித்துவந் தார்.'தினகரன்' நாடக விழாவில் சிறந்த நடிகை என்ற விருதும் இவருக்குக் கிடைத்தது. அந்த நடிகையின் பெயர் தான் “குமாரி ராஜம் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கே கிடைத்தது.
இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர் அவர். நடிகர், நாடகாசிரியர், பாடலாசிரியர், பாடகர், வில்லிசை வேந்தர் இத்தனை சிறப்புமிக்க இவர், இப்படத்தில் வில்ல னாக நடிக்கத் தெரிவு செய்யப்பட்டார். அவர்தான் நடிக வேள் லடிஸ் வீரமணி.
இவர்களுடன் ஏ.எஸ்.ராஜா, ரொசாரியோ பீரிஸ், நவசிவாயம், எம்.ஏ. ஜபார், ஜி. பீட்டர் தேவன், ஒ.நாகூர், ரி.எஸ்.பிச்சையப்பா, சுந்தர்ராஜ், அல்பிரட் தம்பிராஜ், சாமுவேல், தங்கராஜா, தியாக ராஜா, கிஸ்மத், பாயிஸ் போன்றோர் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
திருகோணமலையில் பல நாடகங்களில் நடித்து அனுபவப்பட்டவர் பி. இந்திராணி. இவருக்கும் இப்படத் தில் சிறந்த பாத்திரம் வழங்கப்பட்டது. பல வானொலி நாடகங்களில் நடித்துவந்தவர் சுப்புலட்சுமி. இவர்களுடன்

Page 45
72 தம்பிஐயா தேவதாஸ்
நூர்ஜஹான், ருத்ராணி, வனஜா, மேரி கமலா, சந்திரா, மஞ்சுளா பேபிராணி, தேவி கணேசானந்தன் போன் றோர் நடிகைகளாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் அடங்காப் பிடாரி" என்ற நகைச்சுவை நாடகம் புகழ்பெற்று விளங் கியது. அப்பொழுதே அந்நாடகம் வடபகுதியில் 1000 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டு விட்டது.
"வெண்சங்கு திரைப்படத்தில் 'அடங்காப் பிடாரி' என்ற மேடை நாடகக் காட்சியில் னந்தராஜாவும் எஸ்.கே. நடராஜனும் (1970)
இந்நாடகத்தின் சில நகைச்சுவைக் காட்சிகள் இப்படத் தின் இடையிலே புகுத்தப்பட்டன. இதனால், சுண்டிக்குளி நாடக மன்றத்தின் 'அடங்காப் பிடாரி' நாடகத்தின் பிரதான நடிகர்களான வி.பரமானந்தராஜா, எஸ்.கே.நடராஜன், கனகையா, சிவனேசன், கீத பொன்கலன் போன்றோரும் சினிமா நடிகர்களானார்கள்.
 
 
 

வெண் சங்கு 73
இந்தப் படத்தின் இசையமைப்பில் விசேட கவனம் செலுத்தினார் தம்பு. இசையமைப்பாளர் முத்துசாமியை அழைத்துக்கொண்டு இந்தியா சென்றார். ரி.ஆர்.பாப் பாவின் உதவியுடன் சில பாடல்களை இசை அமைத்தார். ராஜு என்ற பாடகரும் கெளசல்யா என்ற பாடகியும் ரி.ஆர்.பாப்பாவின் இசைக்குழுவில் அறிமுகமாகியிருந் தார்கள். அவர்களே “வெண்சங்கு படத்தின் பாடல் களைப் பாடினார்கள்.
இலங்கையில் பல சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த தமிழ் இளைஞர்தான் எஸ்.தெய் வேந்திரா. இவரே இப்படத்துக்கான ஒளிப்பதிவைக் கவனித்தார். ஏ.எஸ்.பத்மநாதன் இவருக்கு உதவியாக இருந்தார். ஒலிப்பதிவு றிச்சட் டி சில்வாவுக்கு வழங்கப்
சிங்களத் திரை உலகின் சிறந்த “ஸ்ரண்ட் நடிகர் களான றொபின் பெர்னாண்டோ, அலக்சாண்டர் பெர் னாண்டோ ஆகியோர் சண்டைக் காட்சிகளை அமைத் தார்கள். நடனக் காட்சிகளுக்குப் பொறுப்பாக விளங் கியவர் ருத்ராணியாவார்.
கதிர்காமம், கீரிமலை, நல்லூர் போன்ற புனித இடங்களி லும் படப்பிடிப்புகள் நடைபெற்றன. இப்போது அழிந்து போய்விட்ட யாழ்நகர் பொதுசன நூல் நிலையம், சுப்பிர மணியம் பூங்கா, காரைநகர் கசோரினாபீச் போன்ற இடங் களில் எடுத்த காட்சிகளும் இப்படத்தில் இருக்கின்றன. திரைப்படத்தின் விளம்பரத்துக்குப் பொறுப்பாக கிங்ஸ்லி செல்லையா விளங்கினார்.
‘வெண்சங்கு 31.07.1970இல் திரைக்கு வந்தது.
தலைநகரில் செல்லமஹால், ஈரோஸ் உட்பட இலங்கை எங்கும் 6 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இக்காலத்

Page 46
74 தம்பிஐயா தேவ்தாஸ்
f
தில் இலங்கையில் கே.பாலச்சந்தரின் ‘இரு கோடுகள் சின்னப்பாதேவரின் 'துணைவன்’ எம்.ஜி.ஆரின் ‘நம் நாடு போன்ற படங்கள் திரையிடப்பட்டிருந்தன. “வெண் சங்கு சுமாராக ஓடியது.
நமசிவாய முதலியாருக்கு (ஏ.எஸ்.ராஜா) ஒரு மகளும் ஒரு மகனும் இருந்தார்கள். மகள் ராஜி (குமாரி ராஜம்) பட்டதாரியாவாள். தம்பலகாமம் தம்பிமுத்து (லடிஸ் வீரமணி) முதலியாரின் மகனைக் கடத்திச் சென்றுவிட்டு 25000 ரூபா பணம் கேட்கிறான்.
இன்ஸ்பெக்டர் ராஜன் (புவனேந்திரன்) சிறுவனைக் கண்டுபிடித்து முதலியாருக்குத் தெரிவிக்கிறான். ராஜனுக் கும் ராஜிக்கும் காதல் ஏற்படுகிறது. முதலியார் இந்தக் காதலுக்குத் தடை விதிக்கிறார். முதலியார் கொலை செய் யப்படுகிறார். பழி இன்ஸ்பெக்டர் ராஜன் மீது விழ, கைது செய்யப்படுகிறான். அநாதையாகிவிட்ட ராஜி, தம்பலகாமத்தில் ஆசிரியை வேலை செய்கிறாள். தம்பி முத்து ராஜியைக் கெடுக்க முயலுகிறான். தந்தை முதலி யாரைக் கொன்றவன் தான் என்றும், தன் ஆசைக்குச் சம்மதிக்காவிட்டால் அவளையும் கொலை செய்துவிடப் போவதாகப் பயமுறுத்துகிறான்.
விடுதலையான ராஜன், அப்போதுதான் தனது தந்தை, தம்பிமுத்துவைத் தேடி வருகிறான். இந்தச் சம்பவத்தை ராஜன் மறைந்திருந்து பார்க்கிறான். தந்தை என்றும் பாராமல் பொலிசுக்குத் தெரிவிக்கிறான். தம்பிமுத்து நஞ் சருந்துகிறான். அவன் இறக்கும் தறுவாயில் மகன் ராஜ னையும் ராஜியையும் ஒன்று சேர்த்து வைக்கிறான்.
இதுதான் "வெண்சங்கு திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும். இத்திரைப்படத்தைப் பற்றிப் பலரும் பல் வேறு விதமாக விமர்சனம் எழுதினார்கள்.

வெண் சங்கு 75
அப்பொழுது வெளிவந்து கொண்டிருந்த வாரப்பத்தி ரிகை ‘சுதந்திரன்' ஆகும். அதன் ஆசிரியர் கோவை மகேசன் விமர்சனம் எழுதினார்.
*教黏
& 4
தயாரிப்புடைாக்ஷன் aw. AMa.s. asıld L.
(
"வெண்சங்கு திரைப்படத்தின் விளம்பர நோட்டீஸ்,
இலங்கையில் தமிழ்ப் படங்கள் தயாரிக்க முடியுமா? என்ற நிலை இருந்துவந்தது. இதற்கான பதிலைத் தமது சாதனையின்மூலம் காண்பித்திருக்கிறார்கள் நம் நாட்டுக் கலைஞர்கள். 8வது தமிழ்ப் படமாக 'வெண்சங்கு வெளி வந்திருக்கிறது. தயாரிப்பாளர், நெறியாளர் டபிள்யூ.எம். எஸ்.தம்பு. சினிமாத் துறையில் அனுபவம் மிக்கவர்.
"வெண்சங்கு' படத்தின் கதை நன்றாக இருந்தாலும் படத்தின் ஒட்டம் விறுவிறுப்பாக இல்லை. பாத்திரங்கள்

Page 47
76 தம்பிஐயா தேவதாஸ்
உரையாடும்பொழுது ஏனோ இத்தனை மந்தகதி என்று தெரியவில்லை. லடிஸ் வீரமணியின் நடிப்பு நன்றெனி னும் சில இடங்களில் நாடக பாணியைக் கைக்கொள்ளு கிறார். புவனேந்திரனின் முகத்தில் உணர்ச்சியையே காணவில்லை. ராஜத்தின் நடிப்பு பரவாயில்லை. கெள சல்யா பாடும் "நீயும் யாரோ நானும் யாரோ' என்னும் பாடல் இனிமையானது. தம்பு தயாரிக்கும் அடுத்த தமிழ்ப் படம் தலை சிறந்த தமிழ்ப் படமாக அமையும் என்பதை "வெண்சங்கு எமக்குச் சொல்லாமல் சொல்லுகிறது என்று எழுதியிருந்தார். s
‘வீரகேசரி'யில் 'அருள்ராஜ்' என்பவரும் விமர்சனம் எழுதினார். தம்புவின் 'வெண்சங்கு அனைவரும் பார்த்து மகிழக்கூடிய படமாகும். தம்பு நீண்ட காலம் தமிழகத் திரையுலகுடன் தொடர்பு கொண்டிருந்தவர். "வெண்சங்கு இவரின் கன்னி முயற்சியாகும். இனிமையான பாடல்கள், சிறந்த நடிப்பு, கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கைக் காட்சிகள், காதல், ஹாசியம், சண்டை, நல்ல ஒலி, ஒளி அமைப்பு, சிறந்த டைரக்ஷன் அத்தனையும் கொண்ட படம் “வெண்சங்கு என்று பூசி மெழுகி எழுதினார்.
டபிள்யூ.எம்.எஸ்.தம்பு அவர்கள் 1992இல் கால மானார். இவரது விடு, கொழும்பு-7, ஹோட்டன் பிளேஸில் இருக்கிறது. அங்கு இவரது மகன் றொபின் தம்பு வாழ்கிறார். இவரது வீட்டிலேயே எடிட்டிங் அறை இருக்கிறது. அதற்கு எஸ்.நாதன் பொறுப்பாக இருக் கிறார். "வெண்சங்கு படத்தைப்பற்றிய தகவல்களை இவரே தந்துதவினார்.
கதாநாயகி குமாரி ராஜத்தை ரூபவாஹினியில் ‘காதம் பரிக்காக நான் பேட்டி கண்டேன். 'வெண்சங்கு படத் தில் கதாநாயகனுக்குப் பதிலாக வேறு இருவர் வில்லனை எதிர்த்துச் சண்டை செய்கிறார்கள். வில்லன் காதல் கீதம்

வெண் சங்கு 77
பாடுகிறான். இவ்வாறான காட்சிகள் இடம்பெற்றதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன்.
k
"வெண்சங்கு திரைப்படத்தில் குமாரி ராஜமும் லடிஸ் வீரமணியும்
ராஜம் சிரித்துவிட்டுப் பதில் சொன்னார், 'அந்தக் காட்சிகளுக்கு மறக்க முடியாத சில வரலாறுகள் உண்டு என்று சொல்லத் தொடங்கினார். 'வெண்சங்கு திரைப் படத்தில் கதாநாயகன் சம்பந்தமான 75 வீதக் காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டன. தயாரிப்பாளருக்கும் கதாநாயக னுக்கும் இடையில் சிறுசிறு பிரச்சினைகள் எழுந்தன.

Page 48
78 தம்பிஐயா தேவதாஸ்
மிகுதிப் பகுதியை நடித்துத் தரமாட்டேன் என்று அடம்
டித்தார் கதாநாயகன்.
நெறியாளர் அனுபவப்பட்ட மனுஷரல்லவா? இப் படியான பிரச்சனைகள் வரக்கூடும் என்ற காரணத்தி னால் முக்கியமான ஆரம்பக் காட்சிகளையும் இறுதிக் காட்சிகளையும் முன்கூட்டியே எடுத்து வைத்துவிடுவார். இப்படியான நிலை 'வெண்சங்குக்கும் வரவே கதாநாய கனை விட்டுவிட்டே மிகுதிப் பகுதியை எடுத்து முடித்தார்.
கதாநாயகன் பாடவேண்டிய பாடலை வில்லன் பாடு வதாக அமைத்தார். கதாநாயகனுக்குப் பதிலாக வேறு ஒருவரை வில்லனுடன் மோதவிட்டுப் படத்தை எடுத்து முடித்துவிட்டார்.
என்று பதில் சொன்னார் ராஜம். இப்படிப் பதில் சொன்ன நடிகை ராஜம், இப்பொழுது நம்மிடையே இல்லை. அவர் 02-11-1992 இல் காலமானார்.
இலங்கைத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ‘வெண் சங்கு படத்தைத் தயாரித்து நெறியாண்ட டபிள்யூ.எம். எஸ்.தம்பு அவர்களின் பெயரும் குறிப்பிடத்தக்க பெய ராகும்.

10:குத்துவிளக்கு மண்மணம் வீசிய திரைப்படம்
யாழ்ப்பாண நகரின் நவீன நாகரீகத்தை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு கட்டடங்கள் அங்கு உயர்ந்து நின்றன. ஆறு மாடிகள் கொண்ட வீரசிங்கம் மண்டபம், நவீன சந்தைக் கட்டடம், விளையாட்டரங்கம், தந்தை செல்வா நினைவுத்தூபி என்பன அவற்றில் சிலவாகும். இத்தனை கட்டடங்களையும் நிர்மானித்தவர் கட்டடக் கலைஞரும் கலை அபிமானியுமான வீ.எஸ் துரைராஜா அவர்களாவர். இவர் நிர்மாணித்த அழகுக்கட்டடங்கள் யாழ்நகரில் மட்டுமன்றி இலங்கையின் அனைத்து நகரங் களிலும் நிமிர்ந்து நிற்கின்றன.
கட்டடக்கலை, பல்கலைகளுக்கும் தாய்க்கலை என் பார்கள். சித்திரம் சிற்பம் போன்ற பழங்கலைகளுடன் சினிமா என்ற நவீனகலையும் அதனுள் அடங்கும். எனவே, திரைப்படக்கலையிலும் திரு. வீ.எஸ். துரைராஜா ஈடு பாடு கொண்டவராக விளங்கியதில் ஆச்சரியமில்லை.
திரு. துரைராஜாவை நான் ரூபவாஹினியில் பேட்டி கண்டபோது, அவர் சொன்னார். "இலங்கைத் தமிழ

Page 49
80 தம்பிஐயா தேவதாஸ்
ருக்குத் தனித்துவம் இருக்கிறது. அவர்களின் பேச்சுவழக்கு, பழக்கவழக்கங்கள் வாழ்க்கைமுறைகள் போன்றவை தனித்துவமானவை. இந்த இலங்கைத் தமிழ்க் கலாசாரத் தைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக் கலைஞர் களைக் கொண்டே இங்கு ஒரு தமிழ்ப்படம் உருவாக்கக் கூடாதா என்று எண்ணினேன்.
வி.எஸ்.ரீ பிலிம்ஸ் சார்பில் 'குத்து விளக்கு திரைப்படத்தைத் தயாரித்த பிரபல கட்டடக்கலைஞரும் கலை அபிமானியுமான வி.எஸ். துரை ராஜா அவர்கள்.
இலங்கைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொழில் நுட்பவல்லுனர்கள். போன்றோரை ஒன்றிணைத்து ஒரு உன்னதமான தமிழ்ப்படத்தை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் என் உள்ளத்தில் நீண்ட நாட்களாகவே நிலை கொண்டிருந்தது. அந்த எண்ணத்தின் உருவம்தான் இந்தக் "குத்து விளக்கு'என்று கூறினார் திரு.வி.எஸ்.துரைராஜா.
யாழ்ப்பாண மண்ணுக்குரிய ஒரு கதைக் கருவைக் கொண்ட மூலக்கதையை எழுதிவிட்டார். திரைக்கதை
வசனம் எழுதும் ஒருவரையும் இயக்குநர் ஒருவரையும் அவர் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.
 

தத்துவிளக்கு 8 Ι
அது 1971ஆம் ஆண்டு காலப்பகுதி. அப்போது இலங்கையரான பாலுமகேந்திரா இந்தியாவில் திரைப் படம் சம்பந்தமாகப் படித்துவிட்டு இலங்கை வந்தார். அவருடன் தொடர்பு கொண்டு குத்துவிளக்கை இயக்கும் படி கேட்டபொழுது மலையாளப்படமொன்றை இயக்க வேண்டி ஏற்பட்டதால் இந்தியா சென்றுவிட்டார்.
திரைக்கதை வசனங்களை எழுதுவதற்காக சினிமாவில் அனுபவம் பெற்ற எழுத்தாளர் ஈழத்து ரெத்தினம் தேர்ந் தெடுக்கப்பட்டார். இவர் சென்னை யுபீட்டர்ஸ் ஸ்ரூடியோவில் உதவி இயக்குநராகக் கடமையாற் றியவர். பாடல்கள் இயற்றுவதில் திறமை காட்டினார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைக் குருவாகக்கொண்டு பல பாடல்களை இயற்றினார். "எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்' என்ற படத்தில் "எல்லோரும் இந்நாட்டு மன் னர்கள்' என்று இவர் இயற்றிய பாடல் புகழ்பெற்று விளங்கியது. குத்து விளக்குத் திரைப்படத்துக்கான பாடல்களையும் இவரே எழுதினார்.
அன்று திரைப்படத்துறையில் பிரபலம் பெற்று விளங் கிய டபிள்யு.எஸ்.மகேந்திரன் ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அச்சுவேலியைச் சேர்ந்த நமசிவாயம் என்னும் இளைஞன் சிறுவயதுமுதலே சினிமாவில் ஆர்வம் கொண் டிருந்தான். 'பாராவழலு' என்ற சிங்களப் படத்தில் நடித்த போது தனது பெயரினை, “ஜெயகாந்' என்று விவசாயக் கொண்டான். 'குத்து விளக்குக் கதையில் விவசாயக் குடும்பத்தின் மூத்த மகன் ‘சோமு முக்கியப் பாத்திர மாகும். அந்தச் சோமு என்ற பாத்திரம் ஜெயகாந்துக்கு வழங்கப்பட்டது.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் பரதநாட்டியத் தில் புகழ்பெற்று விளங்கியவர் செல்வி லீலா நாராயணன்.

Page 50
32 தம்பிஐயா தேவதாஸ்
அவர் முகபாவங்களை அழகாகக் காட்டுவார் என்பதால் கதாநாயகியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இளைஞர் ஆனந்தன் பல மேடை நாடகங்களில் நடித்து அனுபவப்பட்டவர். இவர் கதக்களி நடனத்திலும் தேர்ச்சி பெற்றவர். இவர் கதாநாயகியின் காதலனாகத் தோன்றி னார்.
திருமலையில் பிறந்த பி. இந்திராதேவி நாடகத்திலும் சினிமாவிலும் ஆர்வமுள்ளவர். “வெண்சங்கு திரைப் படத்தில் நடித்து அனுபவப்பட்டவர். இவருக்குக் கதாநாய
ன் தாயாரான நாகம்மா பாத்திரம் வழங்கப்பட்டது.
எம்.எஸ்.இரத்தினம், பேரம்பலம், திருநாவுக்கரசு, நாகேந்திரன், நடராஜன், பரமானந்தன், பூரீசங்கர் போன் றோர் மேடைநாடக அனுபவ முள்ளவர்கள். இவர்கள் இப்படத்தின் மற்ற நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட் LTT 356T.
யோகா தில்லைநாதன், சாந்திலேகா, தேவிகா, பேபி பத்மா போன்றோர் நடிகைகளாகத் தெரிவு செய்யப் பட்டார்கள். பின்னாளில் ‘மரிக்கார்’ என்று புகழ்பெற்ற எஸ்.ராம்தாஸ் முதன் முதலில் நடித்த படம் ‘குத்துவிளக் குத்தான்.
1971ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 'குத்துவிளக்கு ஆரம்பவிழா நடைபெற்றது. கொழும்பு வீ.எஸ்.ரீ.கட்ட டத்தின் மேல் மாடியில் வீ.எஸ்.ரீ.பிலிம்ஸ் ஸ்தாபனத் தாரின் ஸ்ரூடியோவில் விழா ஆரம்பமாகியது. பிரபல தென்னிந்திய நட்சத்திரம் செளகார் ஜானகி கமறாவை முடுக்கி படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார்.
யாழ்ப்பாணப் பகுதிக் கோயில் குளங்களிலும், வயல் வெளிகளிலும், கொழும்பு, கண்டி, மாங்குளம் போன்ற பல்வேறு இடங்களிலும் படப்பிடிப்புகள் நடைபெற்றன.

குத்துவிளக்கு 8.
நல்லூர் முருகன் கோயில், செல்வச் சந்நிதி முருகன் கோயில் ஆகியவற்றின் திருவிழாக் காட்சிகளும் சேர்க்கப்
பட்டன.
'குத்துவிளக்கு திரைப்படத்தில் தாயாகத் தோன்றும் சாந்தி லேகாவும், மகளாகத் தோன்றும் லீலா நார்ாயணனும் (1972)
1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து திரைப்படங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யலாம். ஆனால், திரைப்பட இயக்குநர்களையோ, எழுத்தாளர், பாடலாசிரியர்களையோ, தொழில்நுட்பக்கலைஞர்களையோ இறக்குமதிசெய்யமுடியாது. அவர்களது சேவைகளை

Page 51
84 தம்பிஐயா தேவதாஸ்
எமது திரைப்படங்கள் பெறமுடியாது. அந்த அளவுக்கு இவைகளை இலங்கை அரசாங்கம் தடைசெய்திருந்தது. இதன் விளைவால் 'குத்துவிளக்கு நூற்றுக்கு நூறு வீதம் இலங்கைத் தயாரிப்பாக விளங்கியது.
குத்துவிளக்கு திரைப்படத்துக்காக மண்ணின் மணத்தை விளக்கும் பாடல் ஒன்றுக்கான கருவை திரு.துரைராஜா நினைத்து வைத்திருந்தார். இவரது கருத்தை வைத்து ஈழத்து ரெத்தினம் அழகான பாடல் ஒன்றை எழுதினார். இப்பாடல் பலராலும் பாராட்டப்பட்டது.
ஈழத் திருநாடே என்னருமைத் தாயகமே இருகரம் கூப்புகிறோம் வணக்கம் அம்மா வாழும் இனங்கள் இங்கு பேசும் மொழியிரண்டு
வழங்கிய உனக்கு நாங்கள் பிள்ளைகளம்மா
கங்கை மாவலியும் களனியும் எங்களுக்கு மங்கை நீ ஊட்டிவரும் அமுதமம்மா சிங்களமும் செந்தமிழும் செல்வியுன் இருவிழியாம் சேர்ந்திங்கு வாழ்வது உந்தன் கருணையம்மா
ஈழத்து கலைகள் தன்னை உலகுக்கு எடுத்தளித்த கலாயோகி ஆனந்தகுமாரசாமி தவழ்ந்தது உன்மடியிலமம்மா-யாழுக்கு நூல்வடித்து பாருக்கு காட்டியது விபுலானந்த அடிகளம்மா
பாட்டிற்கு பொருள்சொன்ன நாவலர் பிறந்தது யாழ்ப்பாண நாட்டிற்கு புகழல்லவா உந்தன் வீட்டில் பிறந்தவர்கள் நாட்டுக்காக வாழ்ந்தவர்கள் வீரர்கள் என்பது பெருமையல்லவா
புத்தமும் சைவமும் புனித இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்நாட்டின் உயிரம்மா இத்தனையும் என்றென்றும் இங்கிருக்கவேண்டும் என்று இதயத்தால் வேண்டுகிறேன் உன்னையம்மா

குத்துவிளக்கு & 5
பாடல் வரிகளிடையே பெரியார்கள், கோயில்கள், நதிகள் போன்ற பெயர்கள் வந்தன. அதைப்போலவே படத்தில் அவற்றின் உருவங்கள் தோன்றின. மண்ணின் மணத்தைச் சொல்லி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் இந்தப்பாடலின்ஆரம்பத்தில் 'ஈழம்' என்ற சொல் இருப்பதால், வானொலியில் ஒலிபரப்பத் தடை விதிக்கப்பட்டது.
A.NS A**
泛 s
திரைப்படத்தில் காதலர்கள் கிடுகுவேலி
அருகில் சந் க்கொள்கிறார்கள். ஆன்ந்தனும் லீலா நார்ாயணனும் 3
972)
இசை அமைப்பை ஆர்.முத்துசாமி ஏற்றுக்கொண் டார். சங்கீதபூசணம் குலசீலநாதன், மீனா மகாதேவன் ஆகியோர் பாடினர். "ஆதிசிவன் பெற்ற' என்ற பாடலை இசை அமைப்பாளரே பாடினார்.
கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் தேர்ந்தெடுக் கப்பட்டவர்கள் நாட்டியத்தில் அனுபவம் பெற்றவர்கள். ஆனால், இப்படத்தில் ஒரு நாட்டியந்தானும் இடம்பெற வில்லையே ஏன் என்று திரு.துரைராஜாவிடம் கேட்டேன்.

Page 52
86 தம்பிஐயா தேவதாஸ்
'இப்படத்தைக் கலைஅம்சங்களுடன் சத்தியஜித்ரேயின் பாணியில், தரமான படைப்பாக்குவதே எனது நோக்க மாக இருந்தது. அதனால், அநாவசியமான நடனங்களை யும், தெருச்சண்டைகளையும் புகுத்திப் படத்தின் தரத்தைக் குறைக்க விரும்பவில்லை' என்று பதில் சொன்னார் தயாரிப்பாளர்.
நல்ல விளம்பரத்தின்பின் 'குத்துவிளக்கு 24.02.1972 இல் திரைக்கு வந்தது. மத்திய கொழும்பு (செல்லமஹால்), தென்கொழும்பு (ஈரோஸ்), யாழ்ப்பாணம் (புதிய வின்ஸர்), திருகோணமலை (நெல்சன்), மட்டக்களப்பு (இம்பீரியல்), பதுளை (கிங்ஸ்) ஆகிய ஆறு இடங்களில் திரையிடப்பட்டது. .
யாழ்ப்பாணத்தில் புதிய வின்சர் தியேட்டரில் 'குத்து விளக்கு படத்தின் வெளியீட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல்நாள் படம் பார்க்க வந்திருந்த 'ஏகாம்பரம்' என்ற விவசாயியே குத்துவிளக்கேற்றி முதற் படக் காட்சியை ஆரம்பித்து வைத்தார். இந்த ஏற்பாட் டைத் தயாரிப்பாளர் செய்திருந்தார். இந்த விழாவை ஆரம்பிப்பதற்கு நகர மேயர் அல்லது அமைச்சர்கள் போன்றோரை ஏன் அழைக்கவில்லை' என்று தயாரிப் பாளரிடம் கேட்டபோது,
இத்திரைப்படத்தின் கதை ஒரு விவசாயியின் கதை யாகும். எனவே, இத்திரைப்பட விழாவின் ஆரம்பத்தை ஒரு விவசாயியின் மூலம் ஆரம்பித்து வைக்க விரும்பி னேன்' என்று கூறினார்.
வேலுப்பிள்ளை ஓர் ஏழை விவசாயி. அவர் மனைவி லட்சுமி. மூத்த மகள் மல்லிகா. இளைய மகள் ஜானகி. இவ்விரு சகோதரிகளுக்காகவும் வாழும் அண்ணன் சோமு. இவர்கள் எல்லோரும் யாழ்ப்பாண விவசாயியின் ஒரு குடும்பம்.

குத்துவிளக்கு 87
சிங்கப்பூர் பணக்காரர் குமாரசாமி, பணமே உலகம் என்று வாழும் மனைவி நாகம்மா. அவர்களின் செல்வ மகன் செல்வராஜா. கொழும்பில் வாழும் நாகரீக மகள் ஜெயா. இந்த இரண்டு குடும்பங்களுடனும் இணைந்து வாழும் இந்தியத் தொழிலாளி இராமசாமி. மற்றவர் களின் பிரச்சனைகளே தன் தொழில் என்று வாழும் தரகர் மணியத்தார். இவர்களைச் சுற்றியே கதை ஒடுகிறது.
கதாநாயகியின் ಕ್ಲಿಕ್ಗಿ பேரம்பலமும் கல்யாணப் புறோக்கர் ரத்தின மும் இவ்வாறு தோன்றுகிறார்கள் (1972)
மல்லிகாவுக்கும் செல்வராஜனுக்கும் காதல் மலரு கிறது. கஷ்டப்பட்டுப் படித்துக் கடன் வாங்கிப் பல்கலைக் கழகம் போகிறான் சோமு. ஏழை என்ற காரணத்தி னால், மல்லிகாவைச் செல்வராஜனுக்குக் கட்டிக் கொடுக்க மறுக்கிறார் நாகம்மா. பணக்காரப் பெண்ணொருத்திக்கு செல்வராஜனைத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதனால், நஞ்சருந்தித் தற்கொலை

Page 53
88 தம்பிஐயா தேவதாஸ்
செய்து கொள்கிறாள் மல்லிகா, குத்துவிளக்கு ஒளி இழக் கிறது.
இதுதான் 'குத்துவிளக்கு திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும்.
வானம் பார்த்த பூமியை நம்பி வாழும் ஏழை விவசாயி களின் பிரச்சினை, சீதனப் பிரச்சினை, படித்த இளைஞர் களின் தொழிலில்லாப் பிரச்சினை, யாழ்ப்பாணத்தில் வேரூன்றியிருந்த சாதிப் பிரச்சினை, ஏழைப் பெண்களின் உள்ளத்தில் உருவாகும் உண்மைக் காதல், பணக்கார இளைஞர்களின் பொழுதுபோக்குக் காதல் என்று பல் வேறு பிரச்சினைகளை இப்படம் எம்முன் எடுத்துக்காட்
9-tug.
யாழ்ப்பாணக் கிராமமொன்றின் கதையை முதன் முதலாக இப்படத்தின்மூலம் திரையில் காணமுடிந்தது. உரையாடல்கள் முற்றுமுழுதாக யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலேயே அமைந்திருந்தன.
‘இந்தியச் சினிமாவின் கவர்ச்சியில் ஊறியிருக்கும் இலங்கை ரசிகர்களின் மத்தியில் யாழ்ப்பாணத் தமிழ் எடுபடுமா? என்று கேட்டதற்கு ‘இது இலங்கையில் வாழும் யாழ்ப்பாண விவசாயியின் கதை. இதற்கு இந் தியப் பேச்சுவழக்கைப் புகுத்தி யதார்த்தத்தைக் கெடுக்க விரும்பவில்லை' என்றார் தயாரிப்பாளர்.
'குத்துவிளக்கைப் பற்றிப் பத்திரிகைகள் பல்வேறு விமர்சனங்கள் எழுதின. 'தினகரனில் பூரீரங்கன் பின் வருமாறு எழுதினார். இந்தியப் படங்களைப்போல் கும்கும் சண்டைகள் குத்துவிளக்கில் இல்லை. காதலர்கள் தொட்டு உறவாடாத அளவுக்குக் காதல் காட்சிகள் இயற்கை யாக அமைந்துள்ளன. சோமுவின் மனக்கொதிப்பைக் குமுறும் கடல் அலைகளாலும் உயிர் பிரிவதைப் புகை விடும் குத்துவிளக்காலும் காட்டுவது இயக்குநரின் திறமை

குத்துவிளக்கு 89
யாகும். 'ஈழத்திருநாடே என்ற பாடலும் அதற்காகப் படம்பிடித்திருக்கும் விதமும் நெஞ்சத்தைத் தொடுவன வாக அமைந்துள்ளன என்று எழுதினார்.
ஆண்ணனும் தங்கையும் பாசமொழி பேசுகிறார்கள். ஜெயகாந்தும் லீலா நர்ராயன்னும்
எஸ்.என்.தனரெத்தினம் ஆரம்ப முதலே இலங்கைத் தமிழ்ச் சினிமாவுடன் நெருங்கிய தொடர்புடையவர். அவர் அப்பொழுது ‘வீரகேசரி'யில் உதவியாசிரியராகக் கடமையாற்றினார். இவர் எழுதிய விமர்சனம் 'மித்திரன்' வாரமலரில் வெளிவந்தது.

Page 54
90 தம்பிஐயா தேவதாஸ்
"சீதனப்பேய் தலைவிரித்தாடும் யாழ்ப்பாணத்திலுள்ள இரு குடும்ப அங்கத்தவர்களையும், குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளையும் குத்துவிளக்கு அழகாகச் சித்திரிக்கிறது.
பணம் இல்லாவிட்டாலும் குணம் நிறைந்த வேலுப் பிள்ளை. பெயருக்கேற்ற உருவமும் குணமும் கொண்ட மனைவி லெட்சுமி. அடுத்த வீட்டு இளைஞனுடன் கண் களினால் காதல் செய்யும் மல்லிகா. தங்கைக்காக எதை யும் செய்யும் அண்ணன் சோமு.
சிங்கப்பூர் பணக்காரரானாலும் நல்ல மனிதர் குமார சாமி. பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற கூற்றை நம்பவைக்கும் நாகம்மா. மல்லிகாவின் மனத்தைக் கவர்ந்த பொறுப்பற்ற பணக்காரப்பிள்ளை செல்வராஜா. கொழும்பு நகரில் கல்வி கற்கச் சென்று நாகரீக மோகத் தில் நிலைதடுமாறும் ஜெயா. எந்நேரமும் இந்தியா செல்லத் துடித்துக் கொண்டிருக்கும் இந்தியத் தொழிலாளி ராமசாமி. தரகர் மணியத்தார்.
இப்படத்தில் இத்தனை பாத்திரங்களும் உயிர்பெற்று வந்துவிட்டன. மனிதனுக்கு அடிமையாக இருக்கவேண்டிய பணம் மனிதனை அடிமை கொள்கிறது, என்ற செய்தியை எமக்குத் தெரிவிக்கிறது.
‘ஈழத்திருநாடே என்ற பாடல் இலங்கையர்கள் அனை வரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒரே பார்வையில் இலங்கையின் இயற்கைக் காட்சிகளைக் காணும் பாக்கியம் எமக்குக் கிடைத்திருக்கிறது. தனியொரு மனிதர் முதலீடு செய்து ஒரு தமிழ்ப் படத்தை எடுத்திருக்கிறார் என்றால் அது திரு.வீ.எஸ்.துரைராஜா அவர்களாகத்தான் இருக் கும்.
தேசிய விழிப்புணர்ச்சியைத் தூண்டியுள்ள முதல் ஈழத்துத் தமிழ்ப்படைப்பு ‘குத்துவிளக்கு என்பதில் ஐய

குத்துவிளக்கு 9.
மில்லை. இப்படம் இலங்கையில் வெற்றித் தமிழ்ப் படங் களைத் தயாரிக்கமுடியும் என்பதை நிரூபித்துவிட்டது என்று எழுதினார்.
1972ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வின்ஸர் தியேட்டரில் குத்துவிளக்கு திரையிட்டபோது கலைஞர்கள் வ்வாறு மாலையுடன் நிற்பவர்கள் ருந்து வலமாக) நடிகர் ஜெயகாந், இயக்குநர் மகேந்திரன், தயாரிப்பாளர் வி.எஸ்.துரைர்ாஜா
'குத்துவிளக்கு திரையிட்டபொழுது கலையரசு சொர்ண லிங்கம் அவர்கள் பல பாடசாலைகளுக்கும் சென்று இப் படத்தைப்பற்றிப் பிரச்சாரம் செய்தார். வடபகுதி மாண வர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரின் வேண்டு கோளின்படி, இப்படம் பகல் வேளைகளில் மாணவர்

Page 55
92 தம்பிஐயா தேவதாஸ்
களுக்காகக் காட்டப்பட்டது. பல மாணவர்கள் பாட சாலைக் குழுக்களாகச் சென்று பார்த்து ஆதரவு வழங்கி னார்கள்.
ಟ್ಲಿ' ಕ್ಲೌಜ್ಜೈಣಾಕಿಣ್ಹTಳ- கலைஞர்கள். படப்
கொழும்பில் 'குத்துவிளக்கு திரைப்படத்தைத் தியேட்டர் உரிமையாளர்கள் 14 நாட்கள் மட்டுமே ஒட விட்டார்கள். ஆனால், யாழ்நகரில் தொடர்ந்து 40 நாட் கள் ஓடியது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இப்படம் 50வது தினத்தை சங்கானையிலும், 100 ஆவது தினத்தைச் சுன் னாகத்திலும் கொண்டாடியது. யாழ்ப்பாண மாவட்டத் தில் 100ஆவது தினத்தைக் கொண்டாடிய முதலாவது
 

குத்துவிளக்கு 93
இலங்கைத் தமிழ்ப்படம் ‘குத்துவிளக்குத்தான். இப்படத் தின் வெற்றிவிழா,அப்பொழுது தபால்துறை அமைச்சராக விருந்த திரு.செல்லையா குமாரதுரியர் தலைமையில் கொழும்பில் கொண்டாடப்பட்டது. கலைஞர்கள் அனை வருக்கும் தயாரிப்பாளர் திரு.துரைராஜா பரிசு வழங்கிக் கெளரவித்தார்.
1975ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் வர்த்தகப் பிரிவில் 'குத்துவிளக்கும் திரையிடப்பட்டது. இப்படம் சிங்கப்பூரிலும், மலேசியா விலும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபவாஹினி தொலைக்காட்சியில் ‘காதம்பரி நிகழ்ச் சிக்காக திரு.வீ.எஸ்.துரைராஜாவைப் பேட்டி காண ஆயத்தம் செய்வதற்காக அவரை நான் முதன் முதலில் சந்தித்தேன். குத்துவிளக்கின் றில்கள் சில தவறிவிட்டதாகச் சொன்னார். அதன் நெகடிவ்களைக் கொண்டு ஹெந் தளை, விஜயா ஸ்ரூடியோவில் புதிய ஹீல்களைச் செய்து கொடுத்தேன். குத்துவிளக்கின் சில காட்சிகள் திரு.துரை ராஜாவின் பேட்டியின்போது, போட்டுக் காட்டப்பட்டன. 1988ஆம் ஆண்டு இவரது பேட்டி ரூபவாஹினியில் ஒளிபரப்பானது. 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 'குத்துவிளக்கு ரூபவாஹினியில் முற்றுமுழுதாக ஒளிபரப் படுவதற்கு பி. விக்னேஸ்வரன் ஒழுங்குகள் செய்தார்.
வீரகேசரியில் (3.8-93) ஆ.சிவப்பிரியன் பின்வரு மாறு எழுதினார். “எமது மக்களின் இரசனையை மேம் படுத்தவும் தமிழ்ச் சினிமாவை உலகளாவிய தரத்துக்கு உயர்த்தவும் தென்னிந்திய சினிமாவை நம்பியிருப்பதில் பயனில்லை. இதற்கு ஒரே வழி எமது இலங்கைத் தமிழச் சினிமாவை வளர்த்தெடுப்பதே.
இன்று இங்கு எடுக்கப்படும் தொலைக்காட்சி நாடகமோ திரைப்படமோ அப்பட்டமாகத் தென்னிந்தியத் தமிழ்ச்

Page 56
94 தம்பிஐயா தேவதாஸ்
சினிமாவைப் பிரதிபண்ணுகின்றன. ஏராளமான தொழில் நுட்பக் குறைபாடுகள் வேறு.
ಅಜ್ಜಿ:* தி திரைப்படத்தில் கதாநாயகனின் பெற்றோர்களாகத்
ந
தோன்றும் ராவும் திருநாவுக்கரசுவும் 1972)
இலங்கைத் தமிழ் மக்களுக்கெனத் தனியான கலாசாரப் பண்பாடு உண்டென்பதை எமது கலைஞர்களே உணர்வ தில்லை. தரமான கதைகள் சரியான முறையில் திரைக் கதை அமைக்கப்பட்டு, நாடகமாகவோ , படமாகவோ எடுக்கப்படுவதில்லை.
 

குத்துவிளக்கு 95
எமது கலாசாரம், பண்பாடு, பேச்சுமொழி என்பவற் றுக்கு இசைவாகப் படைப்புகள் வெளிவரும்போது மக்கள் ஆதரவளிப்பார்கள். இதற்குச் சிறந்த உதாரணம் எம்நாட் டில் வீ.எஸ்.துரைராஜா தயாரித்து மகேந்திரன் இயக்கிய 'குத்துவிளக்கு படமாகும். யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் மண்வாசனையுடன் நல்ல தயாரிப்பு வசதிகளுடன் உரு வாக்கிய இப்படம் 100 நாட்கள்வரை ஓடியது ' என்று எழுதினார்.
ஆரம்ப காலத்தில் பல பிரச்சினைகளுக்கு எதிராக எதிர்நீச்சல்போட்டு தனித்து நின்று ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரித்தவர் என்ற ரீதியில் திரு.வீ.எஸ்.துரைராஜா அவர்களின் பெயரும் தமிழ்ச் சினிமா வரலாற்றில் குறிப் பிடவேண்டிய பெயராகும்.

Page 57
11. “மீனவப் பெண்'
பெயர் மாறிய படம் 'ஆழிக்கரையின் அன்புக் காணிக்கை என்றொரு தமிழ்ப் படம் நீண்ட நாட்களாகவே தயாரிப்பில் இருந்து வந்தது. இலங்கையின் முதலாவது தமிழ்ப் படத்தை (35 மி.மீ) உருவாக்கிய பி.எஸ்.கிருஷ்ணகுமாரே இப் படத்தையும் தயாரித்து நெறியாண்டார்.
1964ஆம் ஆண்டு கொழும்பு முன்னேற்ற நாடக மன் றத்தின் உதவியுடன் இப்படம் எடுக்கப்பட்டது. இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள கலைஞர்களை ஒன்று சேர்த்தே இப்படம் உருவாக்கப்பட்டது.
எம்.எல்.ஜெயகாந் (யாழ்ப்பாணம்), தேவன் அழகக் கோன் (மன்னார்), கே.தங்கையா (பதுளை), முத்தழகு (ஹட்டன்), சிலோன் சின்னையா (அம்பிட்டிய), சுசில் குமார் (தலவாக்கலை), ராஜலக்சுமி (திருகோணமலை), சுப்பையா, லீலாரஞ்சனி, கே.நல்லதம்பி, கே.வேலாயுதன், எஸ்.மாரிமுத்து, பெனடிக் லாசரஸ், கே. ஆப்தீன் ஆகி யோர் நடிகர், நடிகைகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். தோட்டக்காரியைப் போல் இப்படம் இயக்குநருக்கு அதிக

மீனவப் பெண் 97
கஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. எல்லோரும் உணர்ந்து நடித்தமையே அதற்குக் காரணமாகும். கதை வசனத்தை யும் கிருஷ்ணகுமாரே எழுதினார். தோட்டக்காரி படத் துக்கு இசை அமைத்த கே.எம்.சவாஹிர்தான் இப்படத் துக்கும் இசை அமைத்தார்.
'மீனவப்பெண்’ படத்திற்கான நடனக் காட்சியொன்றை டைரக்டர் பி.எஸ்.கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.
படம் 10 வருடங்கள் தயாரிப்பில் இருந்துவிட்டது. பணக்கஷ்டம் காரணமாக இத்தனை காலம் நீண்டுவிட்டது. சினிமா ஆர்வமிக்க வர்த்தகர் ஒருவர் கிருஷ்ணகுமாரின் கஷ்டத்தை உணர்ந்து உதவ முன்வந்தார். ‘ஒற்றுமை இருந்தால் தமிழ் நாட்டைவிடச் சிறந்த முறையில் இங்கும் தமிழ்ப் படம் தயாரிக்கலாம்' என்ற கருத்தைக் கொண்

Page 58
98 தம்பிஐயா தேவதாஸ்
டிருந்த இந்த வர்த்தகர்தான் ஜனாப். கே.காதர் மீரா (முத்தலிப்).
'ஆழிக்கரையின் அன்புக் காணிக்கை என்ற பெயர் அழகாக இருந்தாலும் அதிஷ்டம் இல்லாததாகிப் போய் விட்டது. அப்படம் 'மீனவப்பெண்’ என்று பெயர் மாற்றப் பட்டு கே.காதர் மீராவின் உதவியுடன் வளர்ந்துவந்தது. இத்தயாரிப்பில் பி.எஸ்.அருண்ராஜ் என்ற இளைஞரும் உதவி புரிந்தார். அந்தக் காலத்தில் 24000 ரூபா செலவு செய்து படம் முற்றுப்பெற்றது.
எம்.என்.எம்.புரடக்ஷன் 'மீனவப்பெண் 1973ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வந்தது. இலங்கை எங் கும் 5 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இக்காலத்தில் தான் ‘இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம்' ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர்த் திரைப்பட வளர்ச்சியை ஊக்குவிக்கவேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டுத்தாபனத்தால் 'மீனவப்பெண்ணுக்கு எதுவித உதவியும் கிடைக்காதது துரதிஷ்டமே.
தோணிக்கரை என்ற மீன்பிடிக் கிராமத்தில் ‘ராமையா' என்ற நேர்மையான மீனவன் வாழ்ந்து வந்தான். இவனுக் குப் பார்வதி' என்னும் மகளும் ‘ராஜு என்னும் மகனும் இருந்தார்கள். சங்கர் என்பவனும் ராமையாவுடன் தோணியோட்டி உழைத்துவரும் அநாதை இளைஞன். நாளாவட்டத்தில் பார்வதிக்கும் சங்கருக்கும் காதல் மலரு கிறது.
தோணிக்கரையின் வியாபார உரிமையை, முதலாளி ராஜப்பன் தனதாக்கியிருந்தான். இவனால் மீனவர்கள் கஷ்டப்பட்டனர். ராமையா குடும்பம் சொந்தத்தோணி வைத்திருந்ததால் இன்னல்களுக்கு ஆளாகவில்லை.
வருடா வருடம் இடம்பெறும் முருகன் திருவிழாவில் ராஜப்பன் பார்வதியைக் கண்டுவிட்டான். அவளை எப்

மீனவப் பெண் 99
படியும் அடையவேண்டுமென்பது அவனது ஆசை. பார்
வதியை ஒருமுறை அவன் இழுத்தபோது ஆவேசம் கொண்ட அவள் அவனது கன்னத்தில் அறைந்துவிட்டாள்.
மீனவப்பெண் படத்தில் வில்லனாகத் தோன்றும் தேவன் அழகக் கோனும் கதாநாயகிய்ாகத் தோன்றும் ராஜலக்சும்யும் (1973)
ஆத்திரம் கொண்ட ராஜப்பன் பழிவாங்கும் எண்ணத் துடன் ராமையாவின் தோணியைச் சதி செய்து தான் உடமையாக்கிக் கொண்டான். சங்கரையும் பார்வதியையும் கடத்திச் சென்று சித்திரவதை செய்தான். முடிவில் சங்கர் கொல்லப்பட்டான். பார்வதி தப்பியோடி மஞ்சுளா என்ற பெயருடன் டொக்டர் முரளியின் ஆஸ்பத்திரியில் நேர் சாக வேலை செய்கிறாள்.

Page 59
00 தம்பிஐயா தேவதாஸ்
டொக்டர் முரளியின் உதவியுடன் தோணிக்கரை வந்த மஞ்சுளாவுக்கு (பார்வதி) அதிர்ச்சி காத்திருக்கிறது. அவள் யாரை இறந்ததாக எண்ணியிருந்தாளோ அதே சங்கர் மீண்டும் தோணிக்கரையில் நின்றான். சி.ஐ.டி.சிவ ராம் சங்கரைப்போல் உருவமுள்ளவனாகையால் ரெளடி ராஜப்பனையும் அவன் கள்ளக் கடத்தல் செய்வதனையும் சங்கர் என்ற பெயரில் வந்து கண்டுபிடிக் கிறான். அதுவரை தனக்கு உதவிய மஞ்சுளாவை (பார் வதி) திருமணம் செய்கிறான். மஞ்சுளாவை விரும்பிய டொக்டர் முரளி உண்மையை உணர்ந்து அவர்களுக்கு உதவுகிறார்.
இதுதான் மீனவப்பெண் திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும். ராமையாவாக வீ.சுப்பையாவும், பார்வதி யாக ராஜலக்சுமியும், சங்கராக ஜெயகாந்தும், ராஜப் பனாக தேவன்அழகக்கோனும் டொக்டர் முரளியாக சுசில்குமாரும் தோன்றினார்கள்.
'மீனவப்பெண்’ திரைப்படத்தில் கதை அமைப்பு, தொழில் நுட்பம் போன்ற பல்வேறு அம்சங்களில் குறை கள் இருந்தனதான். அக்காலத்தில் திரையிடப்பட்டிருந்த பிரபலமான தென்னிந்தியப் படங்களுடன் மீனவப்பெண் ணும் ஓடியது. அந்த ஆரம்ப காலத்திலேயே இப்படியான துணிகர முயற்சியில் பி.எஸ்.கிருஷ்ணகுமார் ஈடுபட்டிருக் கிறார். முதன் முதலில் இரண்டு தமிழ்ப்படங்களை இயக்கிய பெருமை அவரையே சாரும்.
'மீனவப்பெண் பற்றிப் பத்திரிகைகளில் பல விமர் சனங்கள் வெளிவந்தன. அப்பொழுது வெளிவந்த ‘தேசாபிமானி' என்னும் பத்திரிகையும் வித்தியாசமான முறையில் விமர்சனம் எழுதியது.
இலங்கையின் அழகான ஒரு கடற்கரை ஊர் தோணிக் கரை. அங்கே ஒரு காடு இருக்கிறது. அந்தக் காட்டிலுள்ள

மீனவப் பெண் 0.
பயங்கரக் குகைகளில் ஒரு பெரிய கொள்ளைக் கோஷ்டி, அதற்குத் தலைவன் நன்றாகச் சிரிக்கத் தெரிந்த மீனவன். இன்னொரு மீனவன் பஞ்சாயத்துத் தலைவனாம். அவ னுக்கு ஒரு மகளும் ஒரு வளர்ப்பு மகனும் இருக்கிறார்கள்.
ஒருநாள் தேவன் அழகக்கோன், சுப்பையாவைத் தொழில் செய்யமுடியாமல் செய்துவிடுகிறார். மூவாயிரம் ரூபா சீதனத்துக்கு ஜெயகாந்தை காசநோய்க்காரிக்குக் கல் யாணம் பேசுகிறார்கள். மணவறையில் இரத்தவாந்தி எடுக்கும் மணப்பெண்ணுக்கு முதலுதவி செய்யாமல் ஜெயகாந் தாலி கட்டுகிறார்.
ஜெயகாந்தைக் குகைக்குக் கடத்திப்போய்க் கட்டி வைத்துச் சாட்டையால் அடிக்கிறார்கள். கடற்கரையில் வாழும் ராஜலக்சுமி விறகு பொறுக்க காட்டுக்குள்தான் போவாள். அவளையும் குகைக்குள் கொண்டுபோய்விடு கிறார்கள். அங்கு அவள் சோகமான பாடலொன்றைப் பாடுகிறாள். ஜெயகாந்தைக் கடற்கரையில் புதைத்துவிடு கிறார்கள்.
குகைக்குள்ளிருந்த ராஜலக்சுமி கடலில் குதித்துக் கோட்டைப் புகையிரத நிலையத்துக்கு முன்னால் வந்து மிதக்கிறார். அவருக்கு டொக்டர் ஒருவர் அடைக்கலம் தருகிறார்.ஜெயகாந்துக்கு மீண்டும் படத்தில் தோன்றும் லக் அடிக்கிறது. அவர் கராட்டி தெரிந்த சி.ஐ.டி. ஆகிவிடு கிறார். சுசில்குமார் மூக்கைப் பிடித்து ஒரு காதல்பாட்டு பாடுகிறார். ஜெயகாந் இதவரை பாடாததால் அதே பாடலுக்கு இன்னுமொரு கட்டுமரத்தில் நின்று ஒகோ' என்று அபினயம் பிடிக்கிறார். அதே பாடலுக்கு பற்றிக் ஆடை அணிந்த பெண்கள் கரையில் ஆடிக்காட்டுகிறார் 3.5GT.
வில்லன் பிடிபடுகிறான். மீனவப்பெண் முடிந்து விட்டது. ரொம்ப சுபம் இப்படி எழுதப்பட்ட அந்த விமர்

Page 60
02 தம்பிஐயா தேவதாஸ்
சனத்தின் இறுதிப் பகுதியில் பின்குறிப்பு என்று பின் வருமாறு சில வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தன.
இலங்கைத் தமிழ்ப் படம் என்றால் காசு கொடுத்துப் பார்ப்பது நமது கடமை என்று சொல்லப்படுகிறது. நான் எனது கடமையைச் செய்தேன். இலங்கையில் தமிழ்ப் படம் எடுக்கத் தொடங்கி ஏறக்குறைய 15 ஆண்டுகளாகி விட்டன. 15 ஆண்டுகள் என்பது லேசுபட்ட சங்கதியல்ல. எனவே, பத்தாவது படம் லேசுப்படாத சங்கதியாக இருக்க வேண்டும்' என்று அந்த பி.கு. முடிவடைகிறது.
மீனவப்பெண் சுமாராகவே இருந்தது. சுமாராகவே ஓடியது
இலங்கையில் முதலாவது (35 மி.மீ) தமிழ்ப்படத்தை நெறியாண்டவர் என்ற பெயருடன் முதன் முதலில் இர ண்டு தமிழ் படங்களை நெறியாண்டவர் என்ற பெயரும் பி.எஸ். கிருஷ்ணகுமாருக்கே கிடைக்கிறது.

12. "புதிய காற்று'
இலங்கையில் தயாரான ஆரம்பகாலத் திரைப்படங் கள் பல, ஏதோ காரணங்களுக்காகத் தோல்வியைத் தழுவி வந்தன. தொழில்நுட்பரீதியிலும் கலைத்துவரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவை வெற்றிபெறவில்லை. 'நான்குலெட்சம்', 'கலியுககாலம் போன்ற மொழி மாற்றுப் படங்களும் தமிழ் ரசிகர்களை வெற்றி கொள்ள வில்லை. இத்தோல்விகளுக்கெல்லாம் காரணம் தென் னிந்தியத் தமிழ்ப் படங்களின் ஆக்ரமிப்பே என்று கூறப் . لقــا الا
சில வருடங்கள் மெளனமாகக் கழிந்தன. 1975ஆம் ஆண்டும் பிறந்துவிட்டது. அப்பொழுது மலையக இளைஞன் ஒருவனுக்கு 35 வயதாகியது. அவர் மலையகத் தொழிற்சங்கமொன்றின் செயலாளராகவும் விளங்கினார். மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார்.
இந்த இளைஞருக்கு இலங்கையில் தமிழ்ப் படமொன் றைத் தயாரிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை. கண்ணிராலும் இரத்தத்தாலும் எழுதப்பட்ட மலையக

Page 61
04 தம்பிஐயா தேவதாஸ்
மக்களின் வாழ்க்கையை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும். அத் திரைப்படத்தின் மூலம் மலையக மக்க ளிடையே ஒரு மறுமலர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினார்.
புதியகாற்று திரைப்படத்தின் ஆரம்ப விழா டைரக்டர் எஸ்.ராம நாதன், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான வீ.பி. கணேசன், வீணா ஆகியோர். (1975)
எண்ணம் செயலாக மாறியது. தொழிலதிபரான அவ் விளைஞன் 'கணேஷ் பிலிம்ஸ்’ என்ற நிறுவனத்தையும் உருவாக்கினார். தனது முதலாவது தமிழ்ப் படத்துக்கு ‘புதியகாற்று' என்று பெயர் சூட்டினார். பல்வேறு சாதனங் களின் மூலமும் விளம்பரம் செய்தார். அந்த இளைஞரின் பெயர்தான் வீ.பி.கணேசன்.
 
 

புதிய காற்று Η Ο ό
புதிய காற்றுக்கான மூலக்கதையை வீ.பி.கணேசனே எழுதினார். அதற்கான திரைக்கதை வசனங்களைப் பிரபல எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பைக் கொண்டு எழுதுவித்தார். படத்தை இயக்க நல்ல நெறியாளர் வேண்டுமல்லவா ! அதற்குப் பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுத்தார். பல சிங்களப் படங்களை நெறியாண்ட அனுபவசாலிதான் எஸ்.ராமநாதன். மலையகத்தைச் சேர்ந்த இந்தக் கலைஞரே இப்படத்தின் இயக்குநராகத் தெரிவுசெய்யப்பட்டார். ஒளிப்பதிவை லினிடி கொஸ்த்தா பொறுப்பேற்றார்.
பல சிங்களத் திரைப்படங்களில் நடித்து அனுபவம் பெற்றவர் பரினாலை என்ற நடிகை. இவரும் வீ.பி.கணேச னும் பிரதான பாத்திரங்களில் நடித்தார்கள். இரண் டாவது கதாநாயகனாக டீன்குமார் என்ற இளம் நடிகரும், அவருக்கு ஜோடியாக வீணாகுமாரி என்ற புதிய நடிகை யும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இவர்களுடன் ஏற்கனவே சினிமா அனுபவமுள்ள எஸ்.என்.தனரெத்தினம், சிலோன் சின்னையா, எஸ்.ராம் தாஸ், கே.ஏ. ஜவாஹர், ஜோபுநஸிர், செல்வம் பெர் னாண்டோ ஆகியோரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட் LffT 375GT.
விமல்சொக்கநாதன், ஏ.ஈ.மனோகரன், ஏ.ரகுநாதன், சிவலிங்கம், சந்திரகலா ஆகியோரும் கெளரவப் பாத்திரங் களுக்காகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
‘புதியகாற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு 1975-04-20 இல் மலையகத்தில் ஆரம்பமாகியது. தொடர்ந்து யாழ்ப் பாணம், மட்டக்களப்பு, வவுனியா, கொழும்பு என்று பல பகுதிகளிலும் படப்பிடிப்பு இடம்பெற்றது.
இசை அமைக்கும் பொறுப்பு ரீ.எப். லதீப்புக்கு வழங் கப்பட்டது. அதுவரை வானொலியில் பாடி வந்த வீ.முத்தழகு

Page 62
06 தம்பிஐயா தேவதாஸ்
வும், சி.கலாவதியும் முக்கியப் பாடகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
‘புதியகாற்று' திரைப்படத்தின் கதாநாயகன் வீ.பி.கணேசனும் கதாநாயகி ப்ரீனாலையும் தோன்றும் காட்சி. (1975)
இவர்களுடன் சுஜாதா அத்தநாயக்க, சுண்டிக்குளி பாலச்சந்திரன், புத்தூர் கனகாம்பாள் சதாசிவம், ஏ.ஈ.மனோ கரன் ஆகியோரும் பாடினார்கள். சாது, கெளரி ஆகி யோர் பாடல்களை இயற்றினர். கவிஞர் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் ஆகியோர் பாடல்களை இயற்று வதில் துணை செய்திருககிறார்கள். இசை அமைப்பில்
 
 

புதிய காற்று 07
சங்கர் கணேஷ் உதவியிருக்கிறார்கள். “மே தினம் என்ற பாடலைக் கண்ணதாசனும் "ஒ என்னாசை' என்ற பாட லைப் பூவை செங்குட்டுவனும் எழுதினார்கள். கே.பால சிங்கமும் ஹரிஹரனும் ஒலிப்பதிவு செய்தார்கள். 5 மாதங் களுக்குள் படம் தயாரிக்கப்பட்டுவிட்டது.
‘புதியகாற்று பலத்த விளம்பரத்தின் பின் 1975-10-03 இல் இலங்கை எங்கும் 7 தியேட்டர்களில் திரையிடப் . لقياسالا
இந்தப் படம் திரையிடப்பட்டபொழுது நல்ல வர வேற்புக் கிடைத்தது. இலங்கைத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனமும் அந்நேரத்தில் வேறு தென்னிந்தியத் திரைப்படங்களைத் திரையிடாமல் நிறுத்திவைத்து உதவி செய்தது.
ஒரு தோட்டத்துரைக்கு இரண்டு புதல்வர்கள், இளைய மகன் கண்ணன் இலண்டனில் படித்துவிட்டு இலங்கை திரும்புகிறான். அவன் மலையகத்தில் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களை நேசிக் கிறான். தொழிலாளி ஒருவனின் மகள் ராதாவைக் காத லிக்கிறான். இதைக் கண்ட அயலவர்கள் ராதா கண்ண னால் ஏமாற்றப்படப்போகிறாள் என்று எள்ளி நகையாடி GTTsT356T.
ஆனால், கண்ணன், ராதாவின் பெற்றோரின் அனுமதி பெற்று அவளை மணமுடிக்க விரும்புகிறான். இவர்களின் தொடர்பை மூத்தவன் குமார் வெறுக்கிறான். தன் காதலி கீதாவும் தொழிலாளியின் மகள் என்பதை அறிந்து அவளையும் வெறுத்து ஒதுக்குகிறான். தன் காதலி கீதா வையும் தம்பியின் காதலி ராதாவையும் கடத்திச் சென்று கொலை செய்ய முயலுகிறான். கண்ணன் கன் அண்ண னுடன் சண்டை செய்து அவர்களை மீட்கிறான். கடைசி யில் கண்ணனும் ராதாவும் திருமணத்தில் இணைகிறார்கள்

Page 63
08 தம்பிஐயா தேவதாஸ்
இதுதான் ‘புதியகாற்று' திரைப்படத்தின் கதைச் சுருக்க மாகும் 'புதியகாற்று' திரைப்படம் மலையக மக்களின் சில பிரச்சினைகளை எடுத்துக் காட்டியது என்பது உண்மை தான். ஆனாலும், படம் தென்னிந்தியப் படங்களின் பாணியைப் பின்பற்றியது என்பதும் உண்மையே.
R
.*.x.
"புதியகாற்று' திரைப்படத்தில் §ಲ್ಗಳ್ಗ கதாநாயகனும் நாயகியு மான டீன்குமாரும் வீணாகுமாரியும். (1975)
மலையக மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளான குடும்பக்கட்டுப்பாடின்மை, குடிப்பழக்கம், ஊதியக் குறைவு, குடியிருப்பு வசதியின்மை போன்ற சில பிரச் சினைகள படத்தில் காட்டப்பட்டன. ஆனாலும், மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அதிகமாக எடுத் துக் காட்டப்படவில்லை என்று பலர் கூறினர்.
 

புதிய காற்று 09
வழக்கமான படங்களைவிட, இத்திரைப்படம் ரசிகர் கள் பலரைக் கவர்ந்தது. மத்திய கொழும்பில் (செல்ல மஹால்) 34 நாட்களும், தென்கொழும்பில் (பிளாசா) 21 நாட்களும் ஓடியது. யாழ்ப்பாணத்தில் (ராணி) 38 நாட்களும், மட்டக்களப்பில் (ராஜேஸ்வரா) 29 நாட் களும், திருகோணமலையில் 14 நாட்களும் தொடர்ந்து ஒடியது. மலையகத்திலும் (பதுளை-18 நாட்கள் ஹட்டன் -18 நாட்கள், நுவெரெலியா 15 நாட்கள், மாத்தளை-15 நாட்கள்) சுமாராக ஓடியது.
இலங்கையில் அதுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களை வரிசைப்படுத்திப் பார்த்தபொழுது
புதியகாற்று புதிய நம்பிக்கையூட்டியது.
இப்படத்தைப் பற்றிப் பலரும் விமர்சித்தனர். வீர கேசரி (05-10-1975) இதழில் மேகமூர்த்தி விமர்சனம் எழுதினார்.
'------தோட்டத் தொழிலாளர்களது வாழ்க்கையைக் கருவாகக் கொண்டு உருவான இப்படம் மலையகச் சூழலி லேயே எடுக்கப்பட்டமை யதார்த்தமாக உள்ளது. கணேஷ், டீன்குமார், பரீனாலை, வீனா ஆகியோர் தமது பாத்தி ரங்களை ஏற்றவகையில் செய்திருக்கிறார்கள். சிறந்த நடிப்பை தனரெத்தினம், சின்னையா ஆகியோரிடம் காணமுடிந்தது. வசனங்கள் சில இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தின. படத்தொகுப்பு நன்றாக இருக்கிறது. மொத் தத்தில் ‘புதியகாற்று முன்னைய படங்களைவிடச் சிறந்தது என்று கூறலாம்.
'இப்படம் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என் பது முற்றிலும் உண்மையே என்று எழுதியிருந்தார் அப்பொழுது தினகரனில் ‘சித்திரதர்சனி' என்ற பகுதியை விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் எழுதிவந்தார். அப்பகுதியிலும் ‘புதியகாற்று விமர்சனம் இடம்பெற்றது.

Page 64
10 தம்பிஐயா தேவதாஸ்
புதியகாற்று' திரைப்படத்தில் எஸ்.ராம்தாஸ், விமல் சொக்கநாதன். வீ.பி.கணேசன், வீணா, பீன்குமார் ஆகியோர். (1975) ந
m-a-a- புதியகாற்று நமது நாட்டுத் திரைப்படத் தயாரிப் பில் ஒருபடி முன்னேறியுள்ளது. தொழில்நுட்ப அம்சங் களில் நமது நாட்டுத் தமிழ்ப் படங்களும், தமிழ்நாட்டுப் படங்களின் தரத்துக்கு உயர்வது மகிழ்ச்சியைத் தருகிறது. லெனிடி கொஸ்தாவின் ஒளிப்பதிவு பாராட்டத்தக்கது. மேதின ஊர்வலக் காட்சி, மோட்டார் வண்டி வளைந்த பாதைகளில் ஒடும் காட்சி போன்றவை அவருடைய சினிமா நோக்குக்கு உதவுகின்றன. லத்தீபின் இசை அமைப்பில் உருவாகிய மெட்டுகளை அடிக்கடி முணு முணுக்கத் தோன்றுகிறது. கதையின் அடிநாதம் மலை நாட்டில் ஒரு மாற்றம், புதிய காற்று வீசவேண்டும் என் பதே. வர்க்கபேதமற்ற சமுதாயம் மலைநாட்டில் உருவாகக்
 

புதிய காற்று
கூட்டுப்பண்ணை உருவாகி வருகிறது என்றும் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படும் என்றும் கதாநாயகன் கூறு வதுடன் படம் முடிவடைகிறது...என்று எழுதியிருந்தார்.
இடைவழியில் மெளனமாகிப் போய்விட்ட தமிழ் படத்துறையை கலகலக்க வைத்த பெருமை வீ.பி. கணே சனையேசாரும். அதிக விளம்பரத்தின் மூலம் அதிக பல னைப் பெறலாம் என்பதையும் நிரூபித்தவர் வி.பி. கனே சனே.
இலங்கையில் தமிழ்ப்படம் தயாரித்தல் என்பது பிரச் சினைக்குரிய விஷயம் என்று கருதிய காலகட்டத்தில் "புதியகாற்று' திரைப்படம் வெளிவந்திருக்கிறது. இப்படி யான காலகட்டத்தில் இவ்வாறான பிரமாண்டமான தமிழ்ப் படத்தை உருவாக்கிய வீ.பி.கணேசன் பாராட்டப் படவேண்டியவரே.

Page 65
13. "கோமாளிகள்' வானொலி நாடகம் திரைப்படமாக மாறியது
1974ஆம் ஆண்டு பொரளை டி.எஸ்.சேனனாயக்கா வித்தியாலய மண்டபத்தில் அரைமணிநேர நகைச்சுவை நாடகமொன்றை மேடை ஏற்றினார் ஓர் இளைஞர். அதனைத் தொடர்ந்து பல வானொலி நாடகங்களை எழுதி நடித்தார்; மேடை ஏற்றினார்.
இந்தக் கலைஞரிடம், மக்கள் வங்கியின் வானொலி விளம்பரத்துக்காக நாடகம் ஒன்றை எழுதித் தரும்படி கேட்டார் சில்லையூர் செல்வராஜன்.
இந்த இளைஞர் அரைமணிநேர மேடை நாடகமாக எழுதிய அந்த நாடகத்தை 90 வாரங்கள் ஒலிபரப்பக் கூடியதாக நீட்டி எழுதிக் கொடுத்தார். அப்படிப் பிரபல மாக 90 வாரங்கள் ஒலிபரப்பான நாடகத்தின் பெயர் தான் கோமாளிகள் கும்மாளம் . இந்த நாடகத்தைச் சிறப்புற எழுதி பிரதான பாத்திரத்தில் நடித்த அந்த இளைஞர்தான் எஸ்.ராம்தாஸ்.

கோமாளிகள் 13
်န္တိ - “”
'கோமாளிகள்' படத்தில் ஐயராகத் தோன்றும் பி.எச்.அப்துல் ஹமீட் டும் மரிக்காராகத் தோன்றும் எஸ்.ராம்தாஸ் 9ம்(1976)
கலை அபிமானமுள்ள ஒரு முஸ்லிம் வர்த்தகரும் அவரது நண்பர் ஏபிரகாமும் இந்த "கோமாளிகள் கும் மாளம் நாடகத்தை வாராவாரம் வானொலியில் கேட்டு வந்தார்கள். இந்த நாடகத்தைத் திரைப்படமாக உருவாக்க லாமா? என்ற எண்ணம் அந்த வர்த்தகரிடம் உருவாகியது. அவர் அந்த எண்ணத்தை நண்பர் ஏபிரகாமிடம் சொல்ல,

Page 66
1 4 தம்பிஐயா தேவதாஸ்
ஏபிரகாம் ராம்தாஸிடம் கேட்க அவர் ஒம் என்று சொல்ல படத் தயாரிப்பு ஆரம்பமாகியது. படத்தைத் தயாரிக்க விரும்பிய அந்த வர்த்தகரின் பெயர்தான் எம்.முஹமட்,
ராம்தாஸ் படத்தின் பிரதான பாத்திரமான மரிக் காராக நடிப்பதுடன் கதை வசனம், உதவி டைரக்ஷன் போன்ற பல பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார்.
எஸ்.ராமநாதன் அப்பொழுது சிங்களத் திரை உலகில் புகழ்பெற்ற இயக்குநராக விளங்கினார். புதிய காற்று திரைப்படத்தைப் பக்குவமாக நெறியாண்ட வெற்றிக் களிப்பில் இருந்தார். அவரே இப்படத்தின் நெறியாள ராகவும் படத் தொகுப்பாளராகவும் தெரிவு செய்யப்பட் L-TTTT -
ஊர்காவற்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்,
சிங்களத் திரை உலகில் ஒளிப்பதிவுத் துறையில் பலகாலம் அனுபவம் பெற்றிருந்தார். ‘தமயந்தி' என்ற சிங்களப் படத்தின் மூலம் சிறந்த ஒளிப்பதிவாளராக அறிமுக
மானார். இவரையே கோமாளிகள் படத்தின் ஒளிப்பதி வாளராகத் தெரிவு செய்தார்கள். அவர்தான் ஜே.ஜே.யோக ராஜா. எஸ்.ராம்தாஸ், மரிக்கார் என்ற பிரதான பாத்தி ரத்தில் நடித்தார். 'புரோக்கர் கந்தையா’ என்ற நாடகத் தில் புரோக்கர் கந்தையாவாக நடித்தவர் ரீ.ராஜகோபால், இவர் இப்படத்தில் அப்புக்குட்டி என்ற பாத்திரத்தை ஏற்றார். சுமதி என்ற நாடகத்தில் பிறின்ஸிபல் சாமிநாத னாக நடித்துப் புகழ்பெற்றவர் எஸ்.செல்வசேகரன். இவருக்கு இப்படத்தில் ‘உபாலி' என்ற பாத்திரம் வழங் கப்பட்டது.
இலங்கை வானொலியில் பிரபலமான அறிவிப்பாள ராக விளங்குபவர்தான் பி.எச்.அப்துல் ஹமீத். இவர் இப்படத்தில் ஐயராக நடித்தார்.

கோமாளிகள் 5
'கோமாளிகள்' படத்தில் காதலர்களாகத் தோன்றும் கலைத் தம்பதிகள் சில்லையூர் செல்வர்ர்ஜனும் கமலினி செல்வராஜனும். (1976)
பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராஜனுக்கு நீண்ட காலமாகவே திரைப்படத்துறையுடன் நெருங்கிய ' தொடர்புண்டு. ‘தணியாத தாகம் திரைப்படச் சுவடியை எழுதியவர். பல விவரணத் திரைப்படங்களை உருவாக்

Page 67
Η ΙΙ 6 தம்பிஐயா தேவதாஸ்
கியவர். 'கமம்', 'தங்கமே தங்கம்’, பாதைதெரியும் பார்’ என்பவை அவற்றுட் சில. ‘கமம் புதுடில்லி பேர்லின் திரைப்பட விழாக்களில் சான்றிதழ்களைப் பெற்றது.
திருமதி. கமலினி செல்வராஜன் இலக்கியத் துறையில் ஈடுபாடுள்ளவர். கலைத் துறையில் புகழ்பெற்றவர். இந்தக் கலைத் தம்பதிகள் இப்படத்தில் காதல் ஜோடியாக நடித் தார்கள்.
வானொலி நடிகைகளில் முதன்மையானவர் சுப்பு லட்சுமி காசிநாதன். இவர் இப்படத்தில் செல்லமணி யாகப் பாத்திரமேற்றார். பரதநாட்டியத்தில் புகழ்பெற்ற ஆனந்தராணி, ஐயரின் மனைவியாக நடித்தார். தோட் டக்காரி படத்தில் கதாநாயகிக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர் செல்வம் பெர்னாண்டோ. இவர் கோமாளி கள் படத்தில் கதாநாயகியின் தாயாக நடித்தார்.
பல நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்ற கே.ஏ. ஜவாஹர் புதியகாற்று படத்தில் முதன் முதலில் வில்லனாக அறிமுக மானார். இவர் கோமாளிகள் படத்தில் தணிகாசலம் பாத்திரத்தை ஏற்றார்.
கணிர் என்ற குரலுடைய சந்திரசேகரனுக்கு இதுதான் முதற்படம். முஸ்தபா வில்லனாகத் தோன்றினார். இவர்களுடன் செல்வராணி, ரவிமகேந்திரா, எஸ்.ஏ.பிர காம், முபாரக் போன்றோர் நடிகர்களாகத் தெரிவு செய் யப்பட்டார்கள்.
யாழ்ப்பாணத்தில் பிரபலமான இசைக் கோஷ்டியின் தலைவர்தான் கண்ணன். கொழும்பில் பிரபல்யமான திறீஇஸ்டார்ஸ், சுபஸ்ரார் குழுவினரின் சுப்பர் அன் ஸ்டார் கலைஞர்தான் நேசம் தியாகராஜா.
இந்தக் கண்ணனும் நேசமும் இணைந்து இப்படத்துக்கு இசை அமைத்தார்கள். சில்லையூர் செல்வராஜன், சாது,

கோமாளிகள் 1 7
பவுஸ"ல் அமீர் ஆகியோர் பாடல்களை இயற்றினர். அமரர் மொஹிதீன் பெக் இப்படத்திலேயே முதன் முத லாகத் தமிழ் சினிமாப் பாட்டுப் பாடினார். முத்தழகு, கலாவதி, சுஜாதா, எஸ்.ராம்தாஸ் ஆகியோரும் பாடல் களைப் பாடினார்கள்.
X XN
'கோமாளிகள்' படத்துக்கான பாடல் தயாராகிறது. வி. முத்தழகு, கலாவதி சின்னசாழி, எஸ்.ராம்தாஸ், கண்ணன், எஸ்.ராமநாதன், ஸ்ரனி, நேசம் தியாகராஜா ஆகியோர். (1976)
ஒலிப்பதிவை சாரங்கராஜா, பென்ஸ் ஆகியோர் செய்தார்கள்.
கோமாளிகள் படத்தின் பெரும்பான்மையான காட்சி கள் வத்தளை சுஜீவா ஹோட்டலில் படமாக்கப்பட்டன.

Page 68
தம்பிஐயா தேவதாஸ்
அமர்ஜோதி மூவீஸின், "கோமாளிகள் 45 நாட் களில் தயாரித்து முடிக்கப்பட்டது. தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனம் புதிய தென்னிந்தியத் திரைப்படங்களைத் திரையிடாமல் வசதி செய்துகொடுத்தது. கோமாளிகள் 22-10-1976இல் ஆறு இடங்களில் முதன் முதலாகத் திரையிடப்பட்டது.
ஒரு பனக்காரருக்குப் பெரிய மாளிகை ஒன்று இருக் கிறது. அதில் சிங்களம், தமிழ், முஸ்லீம் எனப் பல இனத் தவர் வாடகைக்கு இருக்கின்றனர். இவர்கள் அம்மாளிகை தமக்குச் சொந்தமாக வேண்டுமெனப் பனக்காரருடன் வெகு அன்பாக நடந்து கொள்கிறார்கள். இவற்றை நகைச் சுவையுடன் விளக்குவதே இப்படத்தின் கதையாகும்.
கோமாளிகள் படத்தைப் பற்றிப் பலர் விமர்சனம் எழுதினர். நானும் முதன் முதலாக இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதினேன். அது தினகரனில் 9.11.76இல் வெளிவந்தது. ". 'கோமாளிகள்' முன்னைய படங் களைவிட வேறுபட்டிருந்தது. இப்படம் தேசிய தமிழ்ப்பட வளர்ச்சிக்குப் புதிய வேகத்தைக் கொடுததது. " என்று எழுதியிருந்தேன். 'தினகரன்' பத்திரிகையில், 'கோமாளி கள்' படத்தைப் பற்றி எச்.எம்.பி.மொஹிதீனும் நீண்ட விமர்சனம் எழுதியிருந்தார்.
' .'கோமாளிகள் நல்லதொரு பாதையைத் திறந் துள்ளது. தமிழ்நாட்டுப் படங்களுக்கு மட்டுமே இங்கு மதிப்பு உண்டு என்ற எண்ணம் இலங்கைத் தயாரிப்பாளர் மத்தியில் இருந்தது. இது தவறான கருத்து என்பதைக் 'கோமாளிகள் நிரூபித்துள்ளது. நல்ல படம் எதுவென் றாலும் நம் ரசிகர்கள் வரவேற்பார்கள். "கோமாளிகள்' நல்லதோர் அத்திவாரத்தைப் போட்டிருக்கிறது. அதன் மேல் நல்ல கட்டடங்கள் எழட்டும். என்பது அவரது விமர்சனத்தின் சுருக்கமாகும்.

கோமாளிகள்
. . . . . . . . கோமாளிகன்' 50வது தினக் கொண்டாட்டம் கொழும்பு செல்ல முஹாவில் கொண்டாடப்பட்டபோது மேடையில் கலைஞர்கள்:- ராஜ கோபால், யோகராஜா, 器 ஜவாஹர், ராம்தாஸ், செல்வ்
சேகரன். மனோகரன் சந்திரசேகரன் நேசம் ஆகியோர்.
25.10.75 இல் வீரகேசரியில் 'சாவன்னா விமர்சனம் எழுதினார். "...உள்ளூரில் தரமான படங்களைத் தயாரிக் கலாம் என்பதை நிலைநாட்டும் வகையில் கோமாளிகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இப்படம் இரசிகர்களை நன்கு சிரிக்க வைக்கிறது. அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால்

Page 69
120 தம்பிஐயா தேவதாஸ்
நாடு முன்னேறும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது கதை. ...ஒரு கருத்தை சீரியஸ்ஸாகச் சொல்லித்தான் மக்கள் மனதில் பதிய வைக்கவேண்டுமென்பதில்லை. சிரிக்க வைத்தும் சிந்திக்கச் செய்யலாம். ’ என்று அந்த விமர் சனம் விளங்கஞ் சொல்லியது.
மித்திரன் வார மலரில் லக்ஷ்மியும் விமர்சனம் எழுதி னார். ‘. 'கோமாளிகள்' படத்தில் பல பொறுப்புக் களையும் ஏற்றத்தோடு மரிக்காராகத் தோன்றி நன்றாக நடித்திருக்கிறார் எஸ்.ராம்தாஸ். சில இடங்களில் உபாலி ரசிகர்களைக் கவர்ந்துவிடுகிறார். காதல் காட்சி சில்லை யூர் செல்வராஜன், அவர் தம் மனைவி கமலினி ஆகி யோரின் பொறுப்பு. சம்மதமா’ என்ற பாட்டும் காட்சி யும் நன்றாக இருக்கின்றன.
அப்பொழுது வெளிவந்து கொண்டிருந்த ‘சுதந்திரன்' பத்திரிகையில் அதன் ஆசிரியர் கோவை மகேசன் விமர் சனம் எழுதியிருந்தார். ‘. 'கோமாளிகள்’ சிரிப்பதற் காக எடுக்கப்பட்ட படம் என்றாலும்-அதன் தொய்வற்ற படப்பிடிப்பு, தொழில்நுட்பம், அதில் கையாளப்பட் டிருக்கும் விதம், திறமையான நெறியாள்கை போன்றவை ஈழத்துத் திரைப்பட உலகில் ஒரு புதிய நம்பிக்கையை ஊட்டி யுள்ளது. என்று அவர் எழுதினார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'மல்லிகையின் ஆசிரியர் டொமினிக் ஜீவாவும் விமர்சனம் எழுதினார். யாழ்ப்பாணத்துத் தியேட்டரில் ஒர் அதிசயம் நிகழ்ந்தது. "கோமாளிகள்’ திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் நுழைவுச்சீட்டுக் கிடைக்காமல் திரும்பிப் போனார்கள், என்பதே அந்த அதிசயமாகும். தணிகாசலமாக வரும் கே.ஏ. ஜவாஹரின் நடிப்பு மனத்துக்குப் பிடித்திருந்தது. உபாலியும் நன்றாக நடித்திருந்தார். அடுத்தது மரிக்கார் எஸ்.ராம்தாஸைச் சொல்லலாம்.' என்று எழுதினார்.

GBasrromromfssör 9.
"கோமாளிகள்’ திரைப்படம், அதுவரை திரையிடப் பட்ட பல இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களைவிட, அதிக நாட்கள் ஓடியது. மத்திய கொழும்பில் (செல்ல மஹால்) 76 நாட்களும், தென் கொழும்பில் (பிளாசா) 55 நாட்களும் தொடர்ந்து ஓடியது. யாழ்ப்பாணம் (வின்ஸர்), திருகோணமலை (கிருஷ்ணா), மட்டக்களப்பு (ராஜேஸ்வரா) ஆகிய தமிழ்ப் பிரதேசங்களில் முறையே 5 1,33,32 நாட்கள் தொடர்ந்து ஓடியது. பதுளை, கட்டு கஸ்தோட்ட, பண்டாரவளை ஆகிய மலையகப் பகுதி களில் முறையே 20,17, 15 நாட்கள் ஓடியது.
விமர்சனங்கள் குறிப்பிட்டதுபோல், இப்படத்தின் பொருளாதாரரீதியான வெற்றி, இலங்கையில் இனிமேல் தமிழ்ப் படங்களை வெற்றிகரமாகத் தயாரிக்கலாம் என்ற நம்பிக்கையை ஊட்டியது.
கோமாளிகள் படத்தின் உருவாக்கத்திற்குக் காரண மான முக்கிய நபர்களான எஸ். ராமதாஸ"ம் எம்.முஹமட் டும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

Page 70
14. 'பொன் மணி
உங்கள் மகளின் கதையாகலாம்
அது 1976ஆம் ஆண்டு. இலங்கையில் ஒரு தமிழ் இளைஞரிடம் சிறு தொகைப்பணம் இருந்தது. மூன்று இலட்சம் ரூபா அளவு பணம் அது. அந்த இளைஞர் கொழும்பில் ஒரு ஹோட்டல் கட்டலாமா என்று எண் னிக் கொண்டிருந்தார். இவருக்கு ஒரு மைத்துனர் இருந் தார். அவர் புகழ்பெற்ற எழுத்தாளர், வானொலி அறி விப்பாளர், பெயர் பெற்ற விளம்பர நிர்வாகி, இவருக்கும் தமிழ்ப் படம் தயாரிக்க வேண்டுமென்று நீண்ட நாள் ஆசை.
இளைஞரும் மைத்துனரும் ஒரு நாள் சந்தித்துக் கொண்டார்கள். மைத்துனர் ஒரு தமிழ்ப் படம், தயாரிக் கலாம் என்று "ஐடியா' கொடுத்தார். இளைஞருக்கும் ஆசை வந்துவிட்டது. சர்வதேசத் தரத்துக்கு ஒரு தமிழ்ப் படம் தயாரித்தால் அதை வெளிநாடுகளுக்கு விற்றே அதிக பணமும் புகழும் பெறலாம் என்று ஆசைப்பட்டார் இளைஞர்.

பொன் மணி
ஒரு தரமான தமிழ்ப்படம் தயாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு இருவரும் வந்தார்கள். அந்த இளைஞரின் பெயர்தான் முத்தையா ரா ஜசிங்கம். அவரின் மைத் துனரின் பெயர்தான் காவலுளர் ராஜதுரை. அவர்கள் இருவரும் தயாரித்த படத்தின் பெயர்தான் "பொன்மணி.
| ।
T
Z
;""2"//////////////////////////Eچه: "%1#&%27%27Xے "
* - 。
'பொன்மணி' திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகி, கதை வசனகர்த்தா காவலூர் ராஜதுரையும் ன்டரக்டர் பத்திர்ாஜாவும். (1977)
| L பத்திராஜா தெரிவு செய்யப்பட்டார் சிங்களத் திரையுலகில் சிறந்த ஒளிப்பதிவாளராக விளங்கிய டொனால்ட் கருணாரட்ன ஒளிப்பதிவாள ராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
படைப்பாற்றல் திறமை உள்ளவர்களை நடிகர்களாகத் தெரிவு செய்யலாம் என்று இயக்குநரும் காவலூர் ராஜ

Page 71
Η 24 தம்பிஐயா தேவதாஸ்
துரையும் முடிவு செய்தார்கள். முதலில் திருமதி. சர்வமங் களம் கைலாசபதி தெரிவு செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து பல அறிஞர்களும் நடிக்க ஒப்புக் கொண் LTTSGT.
மருத்துவத் துறையில் புகழ்பெற்ற டொக்டர் சிவஞானசுந்தரம்(நந்தி) மின் பொறியியலாளர் திருநாவுக்கரசு, வித்யோதய பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் திருமதி பவானி திருநாவுக்கரசு, ஓய்வுபெற்ற மாவட்ட நீத வான் எஸ்.யோகநாதன், ஒய்வுபெற்ற மாநகரசபை ஆணையாளர் எல்.ஆர்.அழகரெத்தினம், முன்னாள் நகர சபை அங்கத்தவர் மன்மதராயர், தகவல் திணைக்களத் தைச் சேர்ந்த செல்வி,கமலா தம்பிராஜா, யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளர் திருமதி.சித்திரலேகா, மெளனகுரு, எம்.எஸ்.பத்மநாதன், எம்.சண்முகலிங்கம்,ஆர்.ராஜசிங்கம், எஸ்.ரமேஸியஸ், ராஜேஸ் கதிரவேல், லடிஸ் வீரமணி ஆகியோர் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
அரசாங்க ஊழியரான கே.பாலசந்திரன் கதாநாயக னாகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் ஊதியமின்றி நடித்துத் தருவதாக ஆரம்பத்தில் ஒப்புக் கொண்டார். இதற்கு முன் 'சுமதி எங்கே, "நான் உங்கள் தோழன்' போன்ற படங்களில் நடித்திருந்த சுபாஷினி இப்படத்தில் கதாநாயகியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
‘பொன்மணி'யின் ஆரம்ப விழா 22.8.76 இல் கொழும்பில் திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவர் ஆர்.பியசேனாவின் தலைமையில் நடைபெற்றது. முதலா வது படப்பிடிப்பு யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலில் நடைபெற்றது. தொடர்ந்து காரைநகர், பாஷையூர், மண் ணாத்தலைதீவு, பண்ணைக்கடல், நாச்சிமார் கோயில் ஆகிய இடங்களில் இடம்பெற்றது. படப்பிடிப்பு அரை வாசி முடிந்துவிட்டது. கதாநாயகன் பிரச்சினை கொடுக்க ஆரம்பித்தார். படத்தை அரைவாசியில் நிறுத்திவிடு

பொன் மணி H 25
வோமா என்ற எண்ணம்கூட ராஜதுரைக்கு ஏற்பட்டதாம். ஒருசதமும் ஊதியமாக வேண்டாம் என்று சொன்ன கதாநாயகன் 5000 ரூபா பெற்றுக் கொண்ட பின்பே படத்தை முடித்துக்கொடுத்தார். படத்தின் தயாரிப்பு நிர் வாகி பிரபல விளம்பர வாக்கியமொன்றை எழுதியிருந் தார். 'உங்கள் மகளின் கதையாகலாம்' என்பதே அவ்விளம்பர வாக்கியம்.
$ Հ
༦༦༦ར་མས་྾ར་མས་༡༩༦༦༦ཤར་ཤར་སྨར་྾་ཤ༡༩༩༦་
'பொன்மணி திரைப்படத்தின் கதாநாயகன் பாலசந்திரனும் கதாநாயகி சுபாஷினியும். (1977)

Page 72
26 தம்பிஐயா தேவதாஸ்
ஒரு யாழ்ப்பாண இந்துக் குடும்பத்தில் கடைசிப் பெண் பொன்மணி. திருமணப் பருவம் வந்தபோது தன் அக்காவின் திருமணம் எப்போது நிறைவேறும் என்று காத்திருந்தாள். இவள் தாழ்ந்தகுலக் கிறிஸ்தவனைக் காதலித்தாள். குடும்பத்தவருக்கும் தன் சொந்த, எதிர் காலத்துக்கும் இடையில் அவள் ஒரு முடிவு எடுக்க வேண்டி யிருந்தது. அவள் தன் காதலனுடன் ஓடிவிடுகிறாள். இவர்களுக்குக் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் திருமணம் நடைபெறுகிறது. பொன்மணிக்கு ஏற்கனவே பேசிய ஒருவனின் கையாளால் அவள் சுடப்படுகிறாள். பிரேத ஊர்வலத்துடன் கதை முடிகிறது. இதுதான் பொன்மணி திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.
எம்.றொக்சாமி இசை அமைத்த பாடல்கள் சிறந்து விளங்கின. கமலினி செல்வராஜன், இயற்றிய பாடல் ஒன்று பெண்களின் மன உணர்வை வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தது. அதை சக்திதேவி குருநாதபிள்ளை உருக்கமாகப் பாடியிருந்தார்.
எடுக்கும் இளம் தோளில் மனமாலையே மிடுக்கு நடைபோடத் தடைபோடுமே மன்னவன் வருவான் மையல்தருவான் வருமெனில் வராதோ நாணமே
ஒருநாள் வாழ்வின் திருநாள் சுவைநாள்
காதல் சுகநாள் இரவு இனிக்கும் திருநாள் வருமெனில் வராதோ நாணமே
முழவோ தாளம் பொழிய குழலோ கீதம் பிழிய நிலா தேன்தரும் நாள் வருமெனில் வராதோ நாணமே

பொன் மணி 27
தோழி கேலி மொழிய சுற்றம் ஆசி சொரிய கனா பலித்திடும் நாள் வருமெனில் வராதோ நானமே.
இதுவே அந்தப் பாடலின் வரிகள். மற்றப் பாடல் களைச் சில்லையூர் செல்வராஜன் எழுதியிருந்தார். அவற்றில் பின்வரும் பாடல் கருத்துச் செறிவுடன் விளங் கியது.
‘பாதையில் எத்தனை ராதைகள் பேதைகள் பார்த்திருப்பார் கண்ணனை காத்திருப்பார் காதலினால் அல்ல கண்ணனிலே உள்ள போதையினாலல்ல
உண்டிடத் தீனியும் மேனிமூடிட ஒரு முழம் சேலையும் தந்துவிட்ட ஒரு நொண்டியும் கண்ணனே' என்று அமைந்தது அந்தப் பாடல்.
எஸ்.கே. பரராஜசிங்கமும் ஜெகதேவியும் பாடிய இன்னு மொரு பாடலும் இனிமையாக விளங்கியது.
வானில் கலகலவென இருபறவைகள் திரியுது மேலில் தழுவிய கொடிமலர் குறுநகை புரியுது தேன் நிலவினிலே ஒன்றாகுவோம் சிங்காரத் தெய்வீகப்பண்பாடுவோம்' என்று
ஆரம்பமாகிறது அந்தப் பாடல். மற்றப் பாடல்களை ரஜனி, ராகிணி, சாந்தி, ஜனதா ஆகியோர் பாடினர்.
பெரும் விளம்பரத்தோடு திரையிடப்பட்ட பொன் மணி, திரைகளில் ஒருவாரம் மட்டுமே காட்சியளித்தது. ஆனாலும், வேறு எந்த இலங்கைத் தமிழ்ப் படங்களுக்கும் இல்லாத அளவுக்குப் பலர் விமர்சனம் எழுதினர். அவை

Page 73
28 தம்பிஐயா தேவதாஸ்
கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளிவந்தன.
'பொன்மணி' படத்தில் பிரேத ஊர்வலக் காட்சி. (1977)
தினகரனில் (15.04.77) எச்.எம்.பி.மொஹிதீன் இப்படத்தைப்பற்றிச் சிறு குறிப்பு எழுதினார். " பிரபல தமிழ் எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் கதையாக்கத் தில் உருவான, அதிகம் பிரபல்யப்படுத்தப்பட்ட ‘பொன் மணி இப்பொழுது திரையிடப்பட்டிருக்கிறது. ஏனோ இப்படத்துக்குக் கூட்டத்தைக் காணவில்லை. இயக்குநர் பரீட்சியம் மிக்கவர். ஒளிப்பதிவாளரும் திறமைசாலியே. எழுத்தாளரும் நல்லவரே. நடிகர்களோ சமுதாயத்தின் உயர் மட்டப் பெரியவர்கள். இத்தனைபேரும் கூட்டு மொத்தமாகத் தலைபோட்டும் கூட்டம் வராதது புதுமை யைத் தருகிறது. நானும் படத்தைப் பார்த்தேன். பொறு
 

பொன் மணி | 29
மையோடு பார்க்கமுடிந்தது. ரசிக்கமுடியவில்லை. १ என்றுதன் எண்ணத்தை எழுதினார்.
அப்பொழுது யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப் பகுதித் தலைவராகப் பேராசிரியர் சுச் சரித்தகம் லத் கடமையாற்றினார். அவரும் ‘பொன்மணி" பற்றி சிங் களப் பத்திரிகையில் (தினமின) விமர்சனம் எழுதினார். நான் அந்தக் கட்டுரையை மொழிபெயர்த்தேன். அது தினகரனில் வெளியாகியது.
s is 8 தமிழ்மக்கள் மத்தியில் வாழ்ந்து வருபவரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் சிறந்த நெறியாளரு மான தர்மசேன பத்திராஜா பொன்மணியை நெறிப் படுத்தியுள்ளார். சாதி, சீதனப் பிரச்சினைகள் பற்றிக் கதை பின்னப்பட்டுள்ளது. ரசிகர்களின் இதயங் களை ஊடறுத்துச் சென்று அறிவுக்கண்களை, இளையவர் களின் பிரச்சினைகளை நோக்கித் திரும்பும் வண்ணம் படம் அமைந்துள்ளது. ஆனாலும், இப்படம் தோல்வி அடைந்ததற்குக் காரணம் என்ன?
முதலாளித்துவ அமைப்பினால் வேண்டுமென்றே புகுத்தப்பட்ட வர்க்க முரண்பாடுகள் இதன் தோல்விக்கு இன்னுமொரு காரணமாகும். . தியேட்டர் உரிமை யாளர்களே இரசிகர்களைத் திருப்பி அனுப்பியிருக்கிறார் கள். இன்னும் சிலர் வேண்டுமென்றே விளம்பரம் செய் யாமல் விட்டிருக்கிறார்கள். தமிழ் ரசிகர்களின் தென் னிந்திய சினிமா மோகமே இதன் தோல்விக்குக் காரண மாகும். தர்மசேன பத்திராஜா தமிழ் ரசிகர்களை அந்த மாயலோகத்திலிருந்து பிரித்து அவர்கள் வாழுகின்ற உண்மை உலகம் இதுதான் என்று காட்டினார்.
s is is is தென் இலங்கையில் எழுச்சிபெறும் கலை, வியாபார ரீதியான தோல்விகளைப் பொருட்படுத்தாதது போல வடக்கிலும் இந்த நிலை உயர்ந்து செல்லவேண்டும்." என்று அமைந்திருந்தது அந்த விமர்சனம்.

Page 74
30 தம்பிஐயா தேவதாஸ்
கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி ‘பொன்மணி" பற்றி தினகரனில் (24.04.77) நீண்ட விமர்சனம் எழுதினார்.
இலங்கைத் திரைப்பட வரலாற்றில் பொன்மணி, தென்னிந்தியத் திரைப்பட அமைப்பிலிருந்து வேறுபடும் முதல் முயற்சியாகும். தொழில்நுட்ப அழகியல் அம்சங் களைக் காத்திரமான முறையில் அறிந்து உணர்த்தும் உள்ளூர்க் கலைஞர்கள் எழுத்தாளர்களின் இணைப்பு முயற்சியால் தோன்றியது இப்படம். ஆனாலும், இதன் தோல்வி காத்திரமாக ஆய்வு செய்யப்படுவது அத்தியா வசியமாகும்.
9 8 0. பொன்மணி, சாதாரண தமிழ்ப் படங்களைவிட வேறுபாடானது. கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மிதமிஞ்சி சிருங்காரப்படுத்தாமலும், மிகையுணர்ச்சி படக்காட்டாமலும் யதார்த்தமாக இயங்கக்கூடியளவு, உள்ளது உள்ளவாறே காட்டியுள்ளார் பத்திராஜா.
O - 8 கதை அமைப்பைப் பொறுத்தவரை முக்கியப் பாத்திரங்கள் கணேசும் தாயுமே. இப்பாத்திரங்கள்மீது முழு அவதானமும் விழுந்துள்ளமைக்குக் காரணம், இப் பாத்திரங்களில் நடித்த சண்முகலிங்கம், பவானி திரு நாவுக்கரசு ஆகியோரது நடிப்பேயாகும்.
.யாழ்ப்பாண இந்துத் தமிழ்க் குடும்பத் தலைவியின் ஏக்கங்களையும் தாபங்களையும் வெகு இயல்பாகப் பவானி திருநாவுக்கரசு பிரதிபலித்துள்ளார்.
பாடல்களில் 'பாதையில் எத்தனை ராதைகள்' வெற்றியீட்டியுள்ளது. கதையின் செல்நெறியை விளக்க அப்பாடல் ஆதாரமாக அமைக்கப்பட்டுள்ளது. ‘வானில் கலகலவென' என்னும் பாடலில் ஒலிப்பதிவின் தெளி வின்மை காரணமாக பரராஜசிங்கத்தின் திறமை வீணடிக் கப்பட்டுள்ளது. றொக்சாமியின் திறமை, பாடல்களுக் கான மெட்டமைவுடன் வரையறைபெற்றுவடுகிறது. பொன்மணி ஜனரஞ்சகப் படமாகவும் இல்லாது, இலக்

பொன் மணி 3.
கணச் சுத்தமான, யதார்த்தப் படமாகவும் இல்லாது நிற் கிறது.’ என்று எழுதினார்.
'பொன்மணி படத்தில் பத்மநாதனும் சித்திரலேகா மெளனகுருவும். (1977)
விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் “டெயிலிமிரர்’, 'தினகரன்' போன்ற பத்திரிகைகளில் விமர்சனம் எழுதி
GOTTñT.

Page 75
32 தம்பிஐயா தேவதாஸ்
8 8 8 முழுப்படத்திலும், சுமார் 60 வசனங்களையே பாத்திரங்கள் பேசுகின்றன. துரதிஷ்டவசமாக அந்த வசனங்கள் தர்க்கரீதியாக அமையவில்லை. இரண்டு பாத்திரங்கள் பேசும்போதுகூட இடைவெளி அதிகம். சில பாத்திரங்கள் புத்தகத் தமிழ் பேசுகின்றன. சில பாத்திரங் கள் கொச்சைத் தமிழ் பேசுகின்றன. நடிப்புதான் இல்லா விட்டாலும் குரல் அமைப்பில்கூட கவனம் செலுத்தப்பட வில்லை. ... படத்தை முழுமையாக ரசிப்பதற்குத் தடை யாக இருப்பவை, படத்தின் மந்தகதியும் நாடகத் தன்மையு மாகும்.
. இப்படத்தின் சிறப்பான அம்சம் இசையாகும். செல்வராஜனின் பாடல்கள் தனிச்சிறப்பானவை. படத்தின் முக்கியச் செய்தி என்ன? என்னைப் பொறுத்த வரை அங்கு செய்தியைக் காண முடியவில்லை' என்று எழுதினார்.
தினகரனில் (2.6.77) விமர்சனம் எழுதிய இன்னு மொருவர் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஏ.நுஃமான்.
'...... இலங்கையில் இதுவரை வெளிவந்த வேறு எந்தத் தமிழ்ப்படம் பற்றியும் இத்தகைய காத்திரமான விமர்சனங்கள் வெளிவரவில்லை. இந்த உண்மை ஒன்றே ‘பொன்மணி மற்றப் படங்களிலிருந்து வேறுபடுகிறது, என்பதற்கு நல்ல உதாரணம். “பொன்மணி'யின் கதை, நடிப்பு, படப்பிடிப்பு, இசை அமைப்பு, படத்தொகுப்பு போன்றவற்றில் உள்ள குறைபாடுகளே தோல்விக்குக் காரணம் என்று கூறப்பட்டது. இவை மட்டும் தோல் விக்குக் காரணம் என்று கூறுவதற்கில்லை. தென்னிந்தியத் தமிழ்ப் படங்களே நமது படங்களின் தோல்விக்கான அடிப்படைக் காரணங்களாகும்.' என்று அவர் குறிப்பிட்

பொன் மணி 133
இரா. சிவச்சந்திரனும் தினகரனில் (5.5.77) விமர்சனம் எழுதினார். "காவலூர் ராஜதுரையின் ‘பொன்மணி திரையிடப்பட்டு ஒருவார காலத்துக்குள்ளேயே மறைந்து விட்டமை இலங்கைச் சினிமா அபிமானிகளுக்கு மனத்தாங்க லான சம்பவமே. பத்திராஜா சினிமாவில் புகழ் பெற்றவர். அப்படிப்பட்டவர் இங்கே ஏன் தவறிழைத்தார் என்று விளங்கவில்லை. மொழி விளங்காமை, யாழ்ப் பாணத்து சமுதாய அமைப்பையும் இயக்கங்களையும் முறையாகப் புரிந்து கொள்ளாமை போன்றவையே தோல்விக்கு முக்கியக் காரணம்போல் தோன்றுகிறது. டொக்டர் நந்தியின் தோற்றம் நடிப்பு வசன உச்சரிப்பு என்பன இயல்பாக அமைந்துள்ளன. என்று எழுதி (CITT[T.
வீரகேசரியில் (10.4.77) மண்மகள் விமர்சனம் எழுதினார். யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் வாழ்க்கை, கலை, கலாசாரம், பழக்கவழக்கம் ஆகியவற்றைப் படம் பிடித்துக் காட்டுகிறது பொன்மணி. சிறந்த கேரள, வங்காளப் படங்களைப் போல் சிறப்பு அம்சங்களுடன் இப்படம் விளங்குகிறது என்று அவர் புகழ்ந்து எழுதி
6υτΠτή .
இப்படி எல்லாம் பெரிய விமர்சனங்கள் கிடைத்த ‘பொன்மணி' திரையிடப்பட்ட எல்லாத் தியேட்டர் களிலும் எண்ணி எட்டு நாட்களே நின்று பிடித்தது.
பொன்மணியின் பொறுப்பாளர் காவலூர் ராஜதுரை என்ன சொன்னார் தெரியுமா? “தயாரிப்பாளர் என்னை நம்பிப் பணத்தைத் தந்தார். நான் இயக்குநரை நம்பிப் பணத்தையும் கதையையும் கொடுத்தேன். நடிகர்கள் இயக்குநரின் புகழுக்குப் பயந்து சொன்னதைச் செய்தார் கள். இதனால் படம் இந்த நிலைக்கு வந்தது என்று சொன்னார்.

Page 76
34 தம்பிஐயா தேவதாஸ்
1978ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சர்வ தேசத் திரைப்பட விழாவில் 'பொன்மணி' பத்திரிகை யாளர்களுக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்டது. அப் பொழுது பிரபல்யமான சினிமாச் சஞ்சிகையான ‘பொம் மையும் விமர்சனம் எழுதியது.
。つ
'பொன்மணி' திரைப்படத்தில் பின்னணி பாடிய பிரபல ஒலிபரப் பாளர் எஸ்.கே.பரராஜசிங்கம்.
" . . . . . . காதல் திருமணத்தை வலியுறுத்தும் இப்படம் இலங்கையில் பெரும் சர்ச்சைக்கு உட்பட்டது. பல பத்தி ரிகைகளில் ‘பொன்மணி" பற்றிய விவாதப் பத்திகள் வெளியாயின. இலங்கையின் இயற்கை எழிலில் தயாரிக்கப் பட்ட இப்படம் இலங்கையின் திரைப்பட வளர்ச்சியில் ஒரு மைல்கல். ராஜ்குமார் பிலிம் சார்பில் பத்திராஜா இயக்கிய இப்படத்தின் கதை வசனத்தை எழுதியவர் இலங்கை வானொலியில் பணியாற்றும் காவலூர் ராஜ துரை என்று சுருக்கமாக எழுதியது.
சென்னையிலிருந்து வெளிவரும் 'தினமணிக்கதிர் என்னும் சஞ்சிகையும் (27.1.78) விமர்சனம் எழுதியது:
 

பொன் மணி 35
இலங்கையிலிருந்து சர்வதேச திரைப்பட விழாவுக்கு வந்திருக்கும் தமிழ்பட்ம் ‘பொன்மணி ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரி ஒருவரின் மகள் பொன்மணி, வீட்டை விட்டு ஒடி ஒரு மீனவனை மணந்து கொள்கின்ற கதை. கதாநாயகியாக நடித்திருக்கு சுபாஷினி நமது ஊர் தமிழ்ப்படக் கதாநாயகியைப் போல கவர்ச்சியாக இல்லை என்றாலும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். கதாநாயகனின் பெயர் பாலச்சந்திரன். சாதாரண சட்டை யைப் போட்டுக்கொண்டு படம் முழுவதும் அதுவே போதும் என்று திருப்தி அடைந்திருக்கும் பரமசாது. நமக் குத் திருப்தி-கண்ணுக்குக் குளிர்ச்சியான இயற்கைக் காட்சி கள். திருப்தியில்லாதது பேசும் தமிழ்.
அதாவது கேரளிய சிங்களம், பாதிப் படத்துக்கு மேல், உட்கார்ந்திருக்க முடியவில்லை' என்று தினமணி கதிர் எழுதியது. இதில் கேரளிய சிங்களம்' என்றால் என்ன என்று பலருக்கும் புரியவில்லை.
‘பொன்மணி இலங்கையில் அதிக தினங்கள் ஓடா விட்டாலும் அதீத பெயர் பெற்றுவிட்டது. அதனால், அப் படத்தை மீண்டும் சுருக்கி எடிட் செய்திருந்தார் காவலூர் ராஜதுரை.
இலங்கைத் தொலைக்காட்சியில் (ரூபாவாஹினியில்) முதன் முதலில் காட்டப்பட்ட இலங்கைத் தமிழ்ப்படம் ‘பொன்மணி' தான். 9.5.84இல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. பொன்மணியை இரண்டாவது முறை யும் (21.3.85) ஒளிபரப்பினார்கள்.
அப்பொழுது வெளிவந்து கொண்டிருந்த ‘சிந்தாமணி யில் ‘சஞ்சயன் பின்வருமாறு எழுதினார். ‘இலங்கைப் படமான பொன்மணியைப் பார்க்கும் வாய்ப்பு 21.3.84 இல் ரூபாவாஹினி ரசிகர்களுக்குக் கிடைத்தது. இலங் கைப் படந்தானே என்று முன்பு சலித்துக் கொண்டவர்கள்

Page 77
36 தம்பிஐயா தேவதாஸ்
கூட, பின்பு பரவாயில்லை படம் நன்றாகவே இருக்கிறது என்று கூறக்கேட்டபோது ஈழத்துத் தமிழ் ரசிகர்களின் ரசனையில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உணரமுடிகிறது. இப்படம் பல வருடங்களுக்கு முன் இலங்கையில் தயாரிக்கப்பட்டது. வெளிப்புறக் காட்சிகள் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்டன. தென்னிந்தியப் படங் களின் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த கால கட்டத்தில் இலங் கையில் மேற்கொள்ளப்பட்ட துணிகர முயற்சி தொழில் நுட்பத் துறையில் முன்னேறியிருந்த தமிழ்நாட்டுப் படங் களின் முன்னே அன்று ‘பொன்மணி’ எடுபடவில்லை.
.தமிழ்நாட்டுப் பாரதிராஜா, பாக்கியராஜாக்கள் தரும் இப்போதைய பாணியை என்றோ 'பொன்மணி மூலம் தந்துவிட்டார் ஈழத்துப் பத்திராஜா. தமிழகத்தி லிருந்து புதுமைப் படைப்புகள் என்று இங்கு வரும் திரைப்படங்களைப் பார்க்கும்பொழுது இப்படங்களுக் கெல்லாம் முன்னோடி ‘பொன்மணி’ என்றே சொல்ல வேண்டும்.
0 0 100 VRY 40 அலைகள் ஒய்வதில்லை படத்தில் ஜாதி, மதம் இரண்டையுமே காதலுக்காக அறுத்தெறிந்து வெற்றி பெறும் இளம் ஜோடியைக் கண்டோம். ‘பொன்மணி யிலோ ஜாதி, மத வெறிக்குப் பொன்மணி பலியாவதன் மூலம் ஜாதி, மத வெறியர்கள் வெற்றிபெறுவதைக் கண் டோம் ...'
இவ்வாறு ‘பொன்மணி'யின் மையக் கருத்து அமைந் திருந்தது. எது எப்படியாயினும் இப்படியான புதுமைப் படைப்பு உருவாகக் காரணமாயிருந்த காவலூர் ராஜ துரையும் முத்தையா ராஜசிங்கமும் பாராட்டுக்குரிய வர்களே.
‘பொனமணி' திரைப்படம் பின்பு பல வெளிநாடு களில் காண்பிக்கப்பட்டது. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அப்படத்தை விருப்பத்துடன் பார்த்து வருகின்றனர்.

15. ‘காத்திருப்பேன் உனக்காக”
மலையகத்தில் வத்தேகமவில் உள்ள ஒரு தமிழருக்கு எஸ்றேற்றும் பல தொழில்களும் சொந்தமாக இருந்தன. சினிமாவைத் தன் வாழ்நாளில் பார்க்க விரும்பாத இந்தத் தந்தை, தன் தொழிலின் நிர்வாகத்தைப் புதல்வர் களுக்குக் கொடுத்தார். புதல்வர்களுக்கு சினிமாமீது தனிப் பிரியம்.
இந்தப் புதல்வர்கள் ஒரு சிங்களப் படம் தயாரிக் கலாமா? என்று எண்ணினார்கள். ஆனால், தேசிய தமிழ்த் திரைப்பட வரலாற்றுக்கு முதலில் தமது பங்களிப் பைச் செய்யலாம் என்று பின்பு தீர்மானித்தார்கள். அதன் படி ‘காத்திருப்பேன் உனக்காக என்ற பெயரில் தமிழ்ப் படம் ஒன்றைத் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அப்படி முடிவு செய்த சகோதரர்கள்தான், எம். ஜெய ராமச்சந்திரன், எம்.தீனதயாளன், எம்.ஜெயராஜ் ஆகி யோராவர்.
படத்துக்கான கதை தம்பி ஜெயராஜிடம் ஏற்கனவே தயாராக இருந்தது. அது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. கலைத்துறையில் இவர் களது குருவான நவாலியூர் நா.செல்லத்துரை இம்மூலக்

Page 78
38 தம்பிஐயா தேவதாஸ்
கதைக்கான திரைக்கதையையும், வசனங்களையும், பாடல் களையும் எழுதினார்.
st
: r - - ܐܺܝܬ݂ ܟ݁ܬ݂ܳܚ.
'காத்திருப்பேன் உனக்காக திரைப்படத்தின் கதாநாயகன் சிவராமும் கதாநாயகி கீதாஞ்சலியும்.
இந்த மூன்று சகோதரர்களின் உறவினர் துரைபாண் டியன். இவர் சினிமா உலகில் அனுபவப்பட்டிருந்தார். இயக்குநர் பொறுப்பை இவரிடம் கொடுக்கலாம் என் றால், அவர் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் தன் பெய ரைப் பதிவு செய்திருக்கவில்லை. எனவே, இப் பொறுப்பு எஸ்.வி.சந்திரன் என்ற இளைஞருக்கு வழங்கப்பட்டது.
 

காத்திருப்பேன் உனக்காக H 39
இளைஞர் எஸ்.வி.சந்திரன் நீண்ட காலமாகவே சிங் களப்பட உலகில் எடிட்டராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர். 'குத்துவிளக்கு திரைப்படத்தின் எடிட் டரும் இவரேதான். "துப்பத்தாகே ஹித்த வத்தா' என்ற சிங்களப் படத்தின்மூலம் முதன் முதலாக டைரக்டராக அறிமுகமானார். துரை பாண்டியன் இப்படத்தின் இணை இயக்குநராகக் கடமையாற்றினார்.
எஸ்.தேவேந்திரா கம்பீரமான தோற்றம் கொண்டவர். பல சிங்களப் படங்களின் ஒளிப்பதிவாளராகக் கடமை யாற்றியவர். ஏற்கனவே வெளிவந்த 'வெண்சங்கு தமிழ்ப் படத்துக்கு இவரே ஒளிப்பதிவாளர். இவரே இப்படத் துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
உதவி டைரக்டராக மூனாஸ் தெரிவு செய்யப்பட் டார். நிதி மேற்பார்வைப் பொறுப்பை எஸ்.வி.பாலசுப் பிரமணியம், வி.தர்மலிங்கம், பி.சுப்பையா ஆகியோர் பொறுப்பேற்றார்கள்.
பல வருடங்களுக்கு முன் கண்டியிலிருந்து ‘செய்தி என்ற பத்திரிகை வெளிவந்தது. அதன் ஆசிரியர் நாக லிங்கம். அவர் மகன் சிவராம், நல்ல அழகான இளைஞன். இவரே இப்படத்தின் கதாநாயகனாக நடித்தார்.
கொழும்பைச் சேர்ந்த கீதாஞ்சலி என்ற பெண்தாநாயகி யாக நடித்தார். கண்டி விஸ்வநாதராஜா நாடகங்களில் அனுபவப்பட்டவர். ஏற்கனவே நிர்மலாவில் நடித்தவர். இவருக்கும் இப்படத்தில் ஒரு பாத்திரம் வழங்கப்ட்டது. ரவிசெல்வராஜ் பிரதான உப பாத்திரத்தில் நடித்தார்.
ஏ.எம். லதீப் மேடை நாடகங்கள் பலவற்றில் நடித்து அனுபவப்பட்டவர். இவர் இப்படத்தில் தந்தை பாத்திரத் திற்குத் தெரிவு செய்யப்பட்டார். நா.செல்லத்துரையும், தர்மலிங்கமும் கலைத் தாகமுள்ளவர்கள். இவர்கள் இரு

Page 79
1 40 தம்பிஐயா தேவதாஸ்
வரும் இப்படத்தில் முக்கியமான உப பாத்திரங்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
மற்றும் சந்திரகுமார், மித்திரகுமார், குலேந்திரன், பாலகிருஷ்ணன், கிருஷ்ணராஜா,ருக்மணிதேவி, பூரீதேவி, கிருஷ்ணகுமாரி, சந்திரா, ஜெயதேவி, நிர்மலா, ரத்ன கலா, வசந்தி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமானார்கள்.
இது எம்.முத்துசாமி இசை அமைத்த 5வது தமிழ்ப் படம். ஆரம்பத்தில் திலகநாயகம் போல் பின்னணி பாடி னார். அது வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது. பின்பு அவர் பாடிய பாடல்களை ஜோசப் ராஜேந்திரன் பாடி னார். சுஜாதா அத்தநாயக்காவும் பாடினார்.
ஜெய்ந்திரா மூவிஸ் 'காத்திருப்பேன் உனக்காக படத்தின் ஆரம்ப விழா 6.9.76 இல் மாத்தளை முத்து மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. ஆரம்பப் படப் பிடிப்பு அங்கேயே தொடங்கியது. படப்பிடிப்பு தொடர்ந்து கொழும்பு, கண்டி , தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை போன்ற இடங்களில் நடைபெற்றது.
9 மாதங்களின் பின் படம் சம்பூர்ணமாகியது. 24.06.77 இல் இலங்கையின் பல நகரங்களிலும் 7 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
ராஜாவை, ராஜி காதலிக்கிறாள். ஆனால், ராஜாவோ அத்தை மகள் சாந்தியைக் காதலிக்கிறான். ராஜியின் சகோதரனான கண்ணன் ராஜாவின் தங்கையான வணி தாவைக் காதலிக்கிறான்.
ராஜா, சாந்தா திருமணம் நடைபெற இருந்த சமயத் தில், வனிதாவைக் கெடுத்துவிட்டுத் தனது தங்கை ராஜியின் கழுத்தில் தாலி ஏறினால் வனிதாவுக்கு வாழ்வளிப்பேன் என்கிறான்.

காத்திருப்பேன் உனக்காக 4
緣絲 წჯვალჯ XSSS SMO. 'காத்திருப்பேன் உனக்காக படத்தின் விளம்பர நோட்டீஸ ஒன்று.
தங்கைக்கு வாழ்வு கொடுப்பதா? அல்லது சாந்தாவை மணந்து வாழ்வதா? என்ற சிக்கலில் விழுகிறான்.

Page 80
142 தம்பிஐயா தேவதாஸ்
முடிவில் தன் தங்கைக்காகக் காதலியின் சம்மதத்துடன் ராஜியைத் திருமணம் செய்ய முன்வருகிறான் ராஜா. இதுதான் 'காத்திருப்பேன் உனக்காக திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும். எல்லாம் சரிதான் கதையின் முடிவு தான் சிறந்ததாக அமையவில்லை.
1977 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் “கீதா என்ற சினிமா பத்திரிகை வெளிவந்துகொண்டிருந்தது. இதன் ஆசிரியர் தமிழ்நெஞ்சனாவார். இவருக்கு உதவி யாக ஜெயசீலனும் அதே பத்திரிகையில் இருந்தார். இந்தக் கீதா' இலங்கையின் தமிழ்த் திரைப்பட வளர்ச்சியில் அதிக பங்களிப்புச் செய்திருக்கிறது. மற்ற தேசிய பத்தி ரிகை செய்யாத அளவுக்கு அதிகமாகவே உதவியிருக் கிறது.
இந்தக் “கீதாவும் அப்பொழுது ‘காத்திருப்பேன் உனக்காக படத்துக்கு விமர்சனம் எழுதியது.
.ஒரு காதல் கதை, கருத்துள்ள குடும்பக் கதையாக வும் அமையும் என்பதை இப்படம் நிரூபித்திருக்கிறது. வசனத்தின் சிறப்புகள் படம் முழுவதும் பரவி இருந்தா லும் முக்கிய நடிகர்களின் வாயிலிருந்து வெளிப்படும் போது உயிர்ப்பு பெறுகிறது.கதாநாயகன் சிவராமின் நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. விஸ்வநாத ராஜா வின் நடிப்பு அருமை. செல்வராஜின் துடிப்பு வெகுசிறப் பாக இருக்கிறது. கீதாஞ்சலி காதல் காட்சிகளைவிட, சோகக் காட்சிகளில் எடுபடுகிறார். பூரீதேவி வசனங்களை அழுத்தாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந் திருக்கும். கிருஷ்ணகுமாரி கோபப்படும்பொழுது சிறப் பாக இருக்கிறது. செல்லத்துரை, லதீப், தர்மலிங்கம் ஆகி யோர் தந்தைகளுக்குரிய தாக்கமான நடிப்பினைச் சிறப் பாகவே வெளிப்படுத்துகிறார்கள். சந்திராவின் தாய்மை நடிப்பிலும் தரம் இருக்கிறது. ருக்மணிதேவி, தான், ஒரு பழம்பெரும் நடிகை என்பதை நிரூபிக்கிறார்.

காத்திருப்பேன் உனக்காக 1 4 3
ஆர்.முத்துசாமி பாடல்களுக்கு ஏற்றவகையில் இசை அமைத்திருந்தார். ஒளிப்பதிவாளர் எஸ்.தேவேந்திரா தனது தனித்திறமையை நிரூபித்திருக்கிறார். எடிட்டராக வும் டைரக்டராகவும் கடமையாற்றி சிறப்பான ஒரு படத்தை நமக்கு அளித்திருக்கிறார் எஸ்.வி.சந்திரன்.
இலங்கையில் ஒரு தரமான தமிழ்ப்படம் தயாரிக்க வேண்டுமென்ற இலட்சிய வேட்கையில் பல இலட்சங் களை வாரி இறைத்து ஒரு படத்தைத் தயாரித்து இருக் கின்றனர், ஜெயேந்திரா மூவீஸார் என்பது நிரூபிக்கப்பட் டிருக்கிறது, என்று தயாரிப்பாளருக்கு 'சப்போட்பண்ணி விமர்சனம் எழுதியது.
வீரகேசரியில் (03.07 77) 'கண்ணன்' என்பவர் விமர்சனம் எழுதியிருந்தார். ...உள்நாட்டுத் திரைப்பட வளர்ச்சியில் ‘காத்திருப்பேன் உனக்காக ஒரு புதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜெயராஜின் இக்கதை சிறுகதையாக இருந்தபோதிலும் நவாலியூரானின் திரைக்கதை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக ஒடத் துணைசெய்கிறது. சிவராம் சர்வலட்சணமுள்ள கதாநாய கனாக விளங்குகிறார். காதல், சண்டை சோகக்காட்சிகளில் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்தி யிருக்கிறார். கதாநாயகி கீதாஞ்சலி சோகக்காட்சிகளில் தனித்துப் பிரகாசிக்கிறார். வில்லனாக நடிக்கும் செல்வ ராஜ் சோடைபோகவில்லை. விஸ்வநாதராஜாவின் நடிப்பை எவராலும் மறக்கமுடியாது. அவர் நகைச்சுவை யிலும் சோகத்திலும் இணையற்று நிற்கிறார். பூரீதேவியும் கிருஷ்ணகுமாரியும் இலங்கையில் நடிகைகள் பஞ்சத்தை நீக்குவார்கள், என நம்பலாம். நா.செல்லத்துரை ஒரு பண் பட்ட குணச்சித்திர நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார். லத்தீப் தன் பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்துள்ளார்.
ஆர்.முத்துசாமியின் இசையில் உருவான பட்டுப்புல் மேனி" என்று சுஜாதா பாடும் பாடல் இனிமையாக இருக்

Page 81
44 தம்பிஐயா தேவதாஸ்
கிறது. எஸ்.தேவேந்திராவின் கமரா பளிச்சென்று தன் ஒளிப்பதிவைக் காட்டுகிறது.என்று பொதுவாக எழுதியது.
இலங்கைத் தமிழ் மக்களோடு இணைந்த சில பொருட் கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று ‘மெய்கண்டான்' கலண்டராகும். அந்த மெய்கண்டான் கொம்பனியினர் 'கலாவல்லி’ என்ற சஞ்சிகையை வெளியிட்டு வந்தனர். அந்தச் சஞ்சிகையில் “கோவிலூர் செல்வராஜன் விமர் சனம் எழுதினார்.
.தமிழகத்தைப்போல் இலங்கையிலும் தரமான படத் தைத் தயாரிக்கமுடியும் என்று சவால்விட்டிருக்கும் எஸ்.வி.சந்திரனுக்கு ஒரு சபாஷ். கண்ணுக்கினிய கோணங்களில் படமாக்கியிருக்கும் எஸ்.தேவேந்தி ராவின் கமரா நுணுக்கங்களைப் போற்ற வேண்டும் படத் தின் கடைசியில் இடம்பெறும் சுடலைக்காட்சி நெஞ்சத்தை உருக்குகிறது , என்று குறிப்பிட்டிருந்தார்.
சிந்தாமணியில் (03.07.77) ‘நக்கீரர்' நன்றாகப் புகழ்ந்து விமர்சனம் எழுதினார்.
"...படப்பிடிப்பு சில இடங்களில் தென்னிந்தியப் படமோ என்று பிரமிக்கவைக்கிறது . பாடல்கள் தனியாக ஹிட் ஆகாவிட்டாலும் படத்தில் ரசிக்கக்கூடியதாக இருக் கிறது. இதுவரையில் வந்த இலங்கைத் தமிழ்ப் படங்களின் கதாநாயகர்களுக்குச் சவாலாக நடித்துள்ளார் சிவராம்.
செல்வராஜ் இணை நடிகராக ஈடுகொடுத்து நடித்துள் ளார். படத்தின் டைரக்டர் சந்திரனே எடிட்டர் என்ப தால், படத்தின் சில கட்டங்களில் குறிப்பாகக் காதல் காட்சிகளில் மிகவும் நுண்ணியமாகக் கை வைத்துள்ளார்.! 'காத்திருப்பேன் உனக்காக ஒரு வெற்றிப்படமாகவே தயாரிக்கப்பட்டுள்ளது.

காத்திருப்பேன் உனக்காக 45
என்று தூக்கி எழுதியது சிந்தாமணி. 1984ஆம் ஆண்டுக் காலத்தில் ரூபவாஹினித் தொலைக்காட்சி இலங்கைத் தமிழ்ப்படங்கள் பலவற்றை வாரா வாரம் தொடராகக் காட்டியது. அவ்வாறே காத்திருப்பேன் உனக்காக திரைப்படமும் 13.11.84 முதல் காண்பிக்கப்பட்டது. அதைப் பார்த்துவிட்டும் ‘சிந்தாமணி” விமர்சனம் எழுதி யது. அது எப்படி என்று பாருங்கள் “...இப்படத்தின் குரல் டப்பிங் படுமோசம். வாயசைப்பும் உச்சரிப்பும் வேற்றுமொழி டப்பிங் படத்தைப் பார்ப்பதுபோல் இருக் கிறது. பல இடங்களில் வசன உச்சரிப்பில் தமிழ்க் கொலை சகிக்க முடியாதபடி இருக்கிறது. ஒரு சில கட் டங்களில் தோன்றினாலும் காலஞ்சென்ற பிரபல நடிகை ருக்மணிதேவியின் நடிப்பைத்தான் நன்றாக ரசிக்கமுடி கிறது .என்று இறக்கி எழுதியிருந்தது. இந்தச் சில வருட இடைவெளிக்குள் இப்படி வித்தியாசமான விமர்சனம் எழுதியதன் காரணம் என்னவோ தெரியவில்லை.
ஒருவேளை ஆரம்பகால விமர்சனம் ஊக்குவிப்பு விமர்சனமாக இருக்கலாம்.
இப்படம் திரையிடப்பட்டபோது மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 24 நாட்களும், தென் கொழும்பில் (பிளாசா) 21 நாட்களும் ஓடியது. இப்படம் , யாழ்ப் பாணத்தில் மட்டும் அதிக நாட்கள் ஓடியது. அங்கு (வின்ஸர்) 42 நாட்கள் தொடர்ந்து ஓடியது. மட்டக்களப் பில் (ராஜேஸ்வரா) 15 நாட்களும், திருகோணமலை யிலும் (ராஜ்) , பதுளையிலும் (லிபர்ட்டி) தலா 11 நாட் கள் ஓடியது. கட்டுகள்தோட்டையில் (சீகிரி) 10 நாட் கள் மட்டுமே ஓடியது.
முதலில் இப்படம் திரையிடப்பட்டபோது, அதிக ரசி கர்கள் பார்க்காவிட்டாலும் ரூபவாஹினியில் காட்டப் பட்டபோது பலரும் பார்த்தார்கள். பாராட்டினார்கள்.

Page 82
46 தம்பிஐயா தேவதாஸ்
பொருளாதார ரீதியில் இப்படம் வெற்றிபெறவில்லை. பொதுவாக ரசிகர்கள் ‘நல்ல படம்' என்று சொல்லும் அளவுக்குச் சிறந்து விளங்கியது. அந்த வகையில் இப் படத்தைத் தயாரித்த சகோதரர்களான எம்.ஜெயராமச் சந்திரன், எம்.தீனதயாளன், எம்.செல்வராஜா ஆகியோர் பாராட்டப்படவேண்டியவர்களே.

16. நான் உங்கள் தோழன்'
1978ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. இலங்கைத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இந்த ஆண்டு பொன் எழுத்து களால் பொறிக்கப்பட வேண்டிய காலகட்டமாகும். வருடத்திற்கு ஒன்று இரண்டு என்று வந்துகொண்டிருந்த படம் இந்த ஆண்டில் அடுக்கடுக்காக ஆறு படங்கள் வெளிவந்துவிட்டன. இந்த 6 படங்களில் முதலாவது வந்ததுதான் ‘நான் உங்கள் தோழன்’ திரைப்படமாகும். இது வீ.பி.கணேசனின் இரண்டாவது தமிழ்ப் படமாகும். வீ.பி.கணேசன் "புதியகாற்று' திரைப்படத்தைத் தயாரித்த தன் மூலம் பல அனுபவங்களைப் பெற்றிருந்தார். இரண் டாவது படத்தில் பல புதிய அம்சங்களைச் சேர்க்க வேண்டு மென்று எண்ணியிருந்தார்.
எல்பிட்டிய என்ற ஊரில் பிறந்து சினிமா உலகில் புகழ்பெற்று விளங்கிய தமிழ் இளைஞர் எஸ்.வி.சந்திரன் இயக்கிய முதல் தமிழ்ப் படம்தான் இது. (ஆனால் இவர் இயக்கிய 'காத்திருப்பேன் உனக்காகவே முதலில் திரைக்கு வந்தது.) படத்தொகுப்பும் இவரே.
1957 இல் கொழும்பில் கார்டினர் அவர்களால் 'சிலோன் ஸ்ரூடியோ’ ஆரம்பிக்கப்பட்டது. அங்கே உதவி

Page 83
தம்பிஜயா தேவதாஸ்
ஒளிப்பதிவாளராக ஒரு தமிழ் இளைஞர் சேர்ந்து கொண் டார். 1963இல் ஹெந்தளையில் கே.குனரட்னம் அவர் கள் விஜயா ஸ்ரூடியோ'வை ஆரம்பித்தபோது இங்கே வந்து சேர்ந்துவிட்டார். இந்த இளைஞர் அங்கு கடமை யாற்றிய எம்.மாஸ்தானை குருவாகக் கொண்டு பல சிங் களப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றி னார். இந்த இளைஞனின் பெயர்தான் எஸ்.வாமதேவன். இவர்தான் 'நான் உங்கள் தோழன்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்.
கொழும்பில் பல நாடகங்களை எழுதி நெறியாண்டு நடித்து புகழ் பெற்று விளங்கினார் ஒரு இளங்கலைஞர். இவர் தினகரன் நாடக விழாவில் 'சிறந்த இயக்குநர்" என்ற பரிசையும் பெற்றவர். சிறுவயது முதலே சினிமா ஆர்வம் மிக்கவராக விளங்கிய இவ்விளைஞருக்கு இப் படத்துக்கான கதை வசனம் எழுதும் வாய்ப்புக் கிடைத் தது. எம்.எம்.ராவூப் என்னும் அந்த முஸ்லீம் இளைஞரின் புனைபெயர்தான் 'கலைச்செல்வன்' இவர் இப்படத்துக் கான கதை வசனத்தை எழுதியதுடன் கதாநாயகியின் தந்தையாகவும் நடித்தார்.
பிரதான பாத்திரத்தில் தயாரிப்பாளர் வீ.பி.கணேசனே நடித்தார். 'சுமதி எங்கே'யில் அறிமுகமாகி 'பொன்மணி" யில் நடித்த சுபாஷினியே கதாநாயகி. சிங்கள நடிகைகள் ஜெனிடா, ருக்மணிதேவி ஆகியோரும் ஒப்பந்தமாகினர்.
'கோமாளிகளில் அறிமுகமாகி "புதியகாற்றில் வில்ல னாக நடித்த கே.ஏ. ஜவாஹருக்கு இப்படத்திலும் வில்லன் வேடம் கிடைத்தது. ‘காத்திருப்பேன் உனக்காக'வில் அப் பாவாகத் தோன்றிய எம்.எம்.ஏ. லதீப் இப்படத்தில் இளம் வில்லனாகத் தோன்றினார். நகைச்சுவை வேடத்தில் எஸ்.ராம்தாஸ், குடியானவனாக ஏகாம்பரம் ஆகியோரும் நடித்தனர். எஸ்.என்.தன ரெத்தினத்துக்கு கிறிஸ்தவ பாதிரியார் வேடம் வழங்கப்பட்டது.

149
இவர்களுடன் எஸ்.சின்னை யா, ஹரிதாஸ், சிவலிங்கம், தம்பிராசா, மைக்கல், டொன்போஸ்கோ, ஆர்.டி.ராஜா,
------- 1 ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ --- س-- எஸ்.ராஜா சிதம்பரம். யோகநாதன், பஞ்சலிங்கம், அந்தனி ஜீவா, ரகுநாதன் போன்றவர்கள் நடிகர்
”களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
-
விழா, எஸ்.என்.தனரெத்தினம்,
கீதாசிரியர் கலைச்செல்வன், கமறா வாமதேவன் இயக்குநர்
எஸ்.வி.சந்திரன், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான வீ.பி. கணேசன்,
எஸ்.ர ாஸ் ஆகியோர்.
சந்திரகலா, ஜெயதேவி, ராஜம், நிர்மலா போன் றோர் பெண் பாத்திரங்களை ஏற்றனர். எம்.றொக்சாமி
"நான் உங்கள் தோழன்' ஆரம்ப

Page 84
150 தம்பிஐயா தேவதாஸ்
இசை அமைத்த இரண்டாவது தமிழ்ப்படம் இதுவாகும். சாந்தி, முருகவேள், சாது ஆகிய கவிஞர்கள் பாடல் களை இயற்றினர்.
முத்தழகு, கலாவதி, பாலசந்திரன், மொஹிதீன்பெக், சுஜாதா, கனகாம்பாள் ஆகியோர் பாடல்களைப் பாடினர் ஒலிப்பதிவு கே. பாலசுப்பிரமணியம். ஒப்பனைப் பொறுப்பு சுப்புவுக்கு. பட ஆரம்ப விழா 12.11.76இல் ஹெந்தள விஜயா ஸ்ரூடியோவில் நடைபெற்றது.
படப்பிடிப்பு யாழ்ப்பாண நகரவீதிகள், மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் கோவில் பகுதி போன்ற பல இடங்களில் இடம்பெற்றது. ஒருவருடம் தயாரிப்பில் இருந்த இப்படம் 06.01.78இல் ஏழு நகரங்களில் திரை யிடப்பட்டது.
‘டொக்டர் கண்ணன் பின்தங்கிய கிராமம் ஒன்றில் பணியாற்றுகிறான். அக்கிராமத்துப் பெண் ராதா, கண்ணன்மீது காதல் கொள்கிறாள். ஆனால், அதைக் கண் ணன் மறுக்கிறான். ராதாமீது மோகம் கொண்டிருந்த ராஜன் தன்னை மணமுடிக்கும்படி அவளை வற்புறுத்து கிறான்.
ராதா கண்ணன்மீது கொண்டிருந்த காதலை அறிந்த ராஜனுக்கு டொக்டர்மீது வெறுப்பு. ஒருநாள் ராஜனின் பிடியிலிருந்து தப்புவதற்காகக் கண்ணனின் வைத்திய சாலைக்குள் தஞ்சமடைகிறாள் ராதா. தண்ணிர் தாகத்தி னால் அவள் தவறுதலாக மயக்கமருந்தைப் பருகிவிடு கிறாள். அங்கு வில்லனால் அவள் கெடுக்கப்படுகிறாள். பழி கண்ணன்மீது விழுகிறது. இறுதியில், குற்றத்தை ஒப்புக்கொள்கிறான் வில்லன், இதுதான் ‘நான் உங்கள் தோழன் கதைச் சுருக்கம். கண்ணனாக கணேசனும், ராதாவாக சுபாஷினியும் ராஜனாக லதீப்பும் தோன்றி Offshof.

நான் உங்கள் தோழன் Η 5 Ι
அப்பொழுது ‘சிந்தாமணி’ பத்திரிகையில் 'ஈழத்துத் திரைவானில்' என்ற பகுதி பிரசுரமாகிவந்தது.
‘நான் உங்கள் தோழன்’ திரைப்படத்தின் கதாநாயகன் வீ.பி.கணேசன்.
‘பிரபல தொழிற் சங்கவாதியான வீ.பி.கணேசன் திரைப்படங்கள் மூலம் தொழிலாளர்கள் பிரச்சினை களைப் படம்பிடித்துக் காட்டிவருகிறார். அவர் புதிய காற்றை அடுத்து ‘நான் உங்கள் தோழனை வழங்கியுள் ளார். உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டி வாழ்ந்த அரக்க உள்ளங்களை அன்பின் துணைகொண்டு பண்புடன் வென்ற மாவீரனின் இலட்சியக் காவியமே ‘நான் உங்கள்

Page 85
52 தம்பிஐயா தேவதாஸ்
தோழன்' என்று அந்தச் செய்தி அமைந்திருந்தது. ‘சிந்தா மணி'யில் செய்தி ஆசிரியராகக் கடமை ஆற்றியவர் வி.ரி.இரத்தினம். இவர் அப்பொழுது இப்படத்தைப் பார்த்துவிட்டுத் தன் அபிப்பிராயங்களை எழுதினார்.
'•••••• ஈழத்தில் தமிழ்ப்பட வளர்ச்சிக்கு நல்ல எதிர் காலம் உண்டு என்று கூறுவதுபோல் ‘நான் உங்கள் தோழன்’ வந்திருக்கிறது. தொழிலாளர் வர்க்கத்தின் தோழனாக வாழ்க்கையில் உயர்ந்த வீ.பி.கணேசன் திரைப்படம் மூலம் தனது இலட்சியத்தை எடுத்துக் காட்ட முனைந்த செயலே ‘நான் உங்கள் தோழன். . இலங் கைத் தமிழ்ப் படங்களை முன்னேற்றப் பாடுபட்டுவரும் வீ.பி.கணேசனின் துணிவும் நல்லெண்ணமும் அவருக்கு எதிர் காலத்தில் நல்ல வெற்றிகளைத் தேடித் தரப்போ கிறது. எது எப்படியோ ‘புதியகாற்று வாசனையுடன் புறப்பட்ட வீ.பி.கணேசனை ‘நான் உங்கள் தோழன்’ ஒரு படி உயர்த்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. என்று எழுதினார்.
கொழும்பிலிருந்து பல காலமாக ஒரு சஞ்சிகை வெளி வந்து கொண்டிருந்தது. அதுதான் கே.வி.எஸ்.மோகனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 'கதம்பம். இந்தச் சஞ்சிகையும் இலங்கைப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இதுவும் ‘நான் உங்கள் தோழன்' பற்றி விமர்சனம் எழுதியது.
‘.வீ.பி.கணேசன் "புதியகாற்றைவிட நன்றாக நடித் துள்ளார். சிங்கள நடிகை ஜெனிடா, தாயாக நடிக்கும் ருக்மணிதேவி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள். தனரெத்தினத்தின் பாதிரியார் நடிப்பு அருமை. பண்ணை யார் ஜவாஹர் வில்லனுக்குரிய கொடுந்தன்மை முழு வதையும் முகத்தில் தேக்கி மனதில் நிற்கும்படி நிலைத்து விட்டார். இளம் வில்லன் லத்தீப்பின் நடிப்பில் நயமுண்டு. வயது முதிர்ந்தவராக வரும் கலைச்செல்வன் எம்.எம்.ரவூப்,

நான் உங்கள் தோழன் 53
நவரச நடிகராக விளங்குகிறார். ராம்தாஸ் மருந்து கலக்கு பவராக வந்து பச்சைத் தமிழ் பேசுகிறார். ஜூனியர் சிவலிங்கத்தை நாம் மறக்கமுடியாது. சுபாஷினி கூட உணர்ச்சிகளை அழகாக முகத்தில் காட்டியிருக்கிறாரே ! ஏகாம்பரம் சோடைபோகவில்லை.
‘நான் உங்கள் தோழன்’ மட்டக்களப்பில் மாமாங்கக் குளத்தில் இப் ப்டிப் படமாகிறது.
வாமதேவனின் ஒளிப்பதிவு குளிர்ச்சியாக இருக்கிறது. டொக்டருக்குக் கிராமத்தவர் தரும் வரவேற்பு சற்று மிகை யானது. வில்லனின் மனமாற்றம் இயற்கையாக அமைய வில்லை. இவ்வாறு சில குறைபாடுகள் இருந்தாலும் டைரக்டர் சந்திரன் திறம்பட செய்துள்ளார்" இவ்வாறு 'கதம்பம் விமர்சனம் எழுதியது.
தினகரனில் அடிக்கடி சினிமாக் கட்டுரைகளை எழுதி வருபவர் எம்.எவ்.ஜெய்னுலாப்தீன். அவரும் விமர்சனம்

Page 86
54 தம்பிஐயா தேவதாஸ்
எழுதினார். ‘நான் உங்கள் தோழனில் நாடகத்துறை நடிகர்களின் நடிப்பைத்தான் முதலில் பாராட்டவேண்டும். கதாநாயகனும் தயாரிப்பாளருமான வீ.பி.கணேசன் நடிப் பில் புதிய காற்றைவிட முன்னேறியுள்ளார். அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் இறுதி ஊர்வலம் இப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும்.
கே.ஏ. ஜவாஹர், எம்.என.நம்பியாரைப் போல் கிராமத்தை ஆட்டிப்படைக்கிறார். அவர் மகனாக வரும் லத்தீபும் இவருக்குச் சளைத்தவரல்ல என்பதை நடிப்பின் மூலம் நிரூபிக்கிறார். கலைச்செல்வன் சுபாஷினியின் தந்தையாக வந்து சுடர் விடுகிறார். தனரெத்தினம் அசல் பாதிரியாராகவே மாறிவிடுகிறார். ஏகாம்பரம் டொக்ட ரைக் கெஞ்சும் காட்சியில் அப்ளாஸ் வாங்கிவிடுகிறார். சின்னையா தனது பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள் ளார். சிதம்பரம் முரடன் என்பதைத் தனது உருவ அமைப்பினால் நிரூபித்துள்ளார். ராம்தாஸ், ஜூனியர் சிவலிங்கம், டொன்பொஸ்கோ ஹாஸ்ய வெடிகளைக் கூறியிருக்கிறார்கள். படத்தில் இன்னுமொரு முக்கிய அம்சம் எம்.கே.றொக்சாமியின் இசை அமைப்பாகும். முத்தழகுவும் பாலச்சந்திரனும் இனிமையாகப் பாடியுள் ளார்கள் , என்று அந்த விமர்சனம் இடம்பெற்றது.
மித்திரன் வாரமலரில் லக்ஷ்மி அதிகமான இலங்கைத் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதியிருக்கிறார். அவரும் விமர்சனம் எழுதினார். கவர்ச்சி மங்கையின் பாத்திரத்தை ஜெனிடா ஏற்றுள்ளார். ராதாவின் உணர்ச்சி மிக்க பாத்திரத்தை ஏற்று சுபாஷினி கஷ்டப்பட்டு நடித் திருக்கிறார். ஜெயதேவியின் நடிப்பும் பரவாயில்லை. நடனமாடும் மங்கையாக சந்திரகலா தோன்றி மேலை நாட்டு நடனம் ஆடுகிறார். இவர் பெண் எழுத்தாளர் என்பதால் பெண் பாத்திரங்களை முக்கியமாகக் குறிப் *பிட்டார்போலும்.

நான் உங்கள் தோழன் I 55
'நான் உங்கள் தோழன் பெரும் பாலும் மலையகப் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப் பட்டது. ஆனால், அது மலையகத்தைவிட வடகிழக்குப் பகுதிகளிலேயே அதிக நாட்கள் ஓடியது.
** (; , :* భ• ఖ4 ॐॐॐ சிார்,
& 3. ...&
*
i.
8.
'நான் உங்கள் - Y - KO
தோழன் திரைப்படத்தின் விளம்பர நோட்டீஸ்
இ
L-IL LÒ மத்திய கொழும்பி o (செல்லமஹால்) 5 5
ந Tடகளும், G தன (6 s ழும்பி Gol) பி GT6) 2 ாடகளும்
( )
யாழ் நகரில் (ராணி) 56 நாட்கள் 8
929-U 9) ULüb Tు (இந்திரா) 25 நாட்களும், : ன்) 20 நாட்களும், காங்கேசன்துறையில் (யாழ்) 15 டகளும், முல்லைத்தீவில் (சிவே ஓடியது. தீ (சிவசோதி) 10 நாட்களும்

Page 87
56 தம்பிஐயா தேவதாஸ்
யேட்டரில் 'நான் உங்கள் தோழன்' திரை யிட்ப்பட்டபோது அத்தியேட்டா.இவ்வாறு அழகாகக் காட்சியளித்தது.
யாழ்ப்பாணம் ராணி
மட்டு நகரில் (றிகல்) 31 நாட்களும், கல்முனையில் (தாஜ்மஹால்) 18 நாட்களும், வாழைச்சேனையில் (வெலிங்டன்) 10 நாட்களும் ஓடியது.
 

நான் உங்கள் தோழன் 57
திருகோணமலையில் (சரஸ்வதி) 20 நாட்கள் ஓடிய இப்படம் மூதூரிலும் (நியூ இம்பீரியல்) கிண்ணியாவிலும் (பூரீதேவி) தலா 10 நாட்கள் ஓடியது.
பதுளையிலும் (கிங்ஸ்), ஹட்டனிலும் (விஜிதா) தலா 18 நாட்கள் ஓடிய இப்படம் கண்டியிலும் (ஒடியன்) மாத் தளையிலும் (சென்றல்) தலா 14 நாட்கள் ஓடியது.
1978ஆம் ஆண்டில் முதன் முதலாகத் திரையிடப் பட்ட ‘நான் உங்கள் தோழன் 6 வருடங்களின் பின் மீண்டும் ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்டது.
அப்பொழுதும் பெரும்பாலான ரசிகர்கள் பாராட்டி னார்கள். எது எப்படியோ ‘புதியகாற்று' திரைப்படத்தில் இருந்த 'மண்வாசனை’ இப்படத்தில் இருக்கவில்லை. ஜனரஞ்சக அம்சங்கள் நான் உங்கள் தோழனில் மிக அதிக மாகவே இருந்தன. எப்படியாயினும் இரண்டாவது வெற்றிப் படத்தையும் தயாரித்த வீ.பி.கணேசன் பாராட் டுக்குரியவாே

Page 88
17. 'வாடைக்காற்று'
நாவல் திரைப்படமாகியது
யாழ்ப்பாணம் குரும்பசிட்டியில் பிறந்த ஓர் இளைஞ னுக்கு சிறுவயது முதலே கலைகள்மீது அதிக ஆர்வம். இரசிகமணி கனகசெந்திநாதன், கலைப்பேரரசு ஏ.ரி.பொன் னுத்துரை, கவிஞர் கந்தவனம் போன்ற கலை உள்ளங்கள் இவ்விளைஞருக்குக் கலை ஆர்வத்தை ஊட்டினர். அர சாங்க உத்தியோகம் பெற்றுக் கொழும்பு வந்த இவ் விளைஞன் குரும்பசிட்டியைச் சேர்ந்த சில இளைஞர் களுடன் சேர்ந்து 'கமலாலயம் கலைக்கழகம்' என்ற மன் றத்தை ஏற்படுத்தினார்.
இம்மன்றம் கொழும்பில் பல நாடகங்களை மேடை யேற்றியது. 1976 ஆம் ஆண்டில் தமிழ்ச் சினிமாவில் அதிகம் பேர் ஆர்வம் கொண்டிருந்தனர். கமலாலயம் கலைக்கழகத்திற்கும் இவ்வாசை ஏற்பட்டது. இவ்வெண் ணத்தைச் செயற்படுத்துவதில் ஒரு குழுவைத் தெரிவு செய்தார்கள். அக்குழுவில் இவ்விளைஞர் செயலாள ராகத் தெரிவு செய்யப் பட்டார். அவ்விளைஞரின்

வாடைக்காற்று Η 59
பெயர்தான் அ.சிவதாசன். தலைவராகத் தெரிவு செய்யப் பட்டவர் பி.சிவசுப்பிரமணியம்.
'வாடைக்காற்று' திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகி எஸ்.சிவதாசன்.
திரைப்படம் தயாரிப்பதற்கு நல்ல கதையொன்றைத் தெரிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இக்கதை பற்றி இலக்கிய முன்னோடிகளான இரசிகமணி கனக செந்திநாதன், ஏ.ரி.பொன்னுத்துரை, கவிஞர் கந்தவனம் போன்றோரிடம் விசாரித்தபொழுது, 'இப்பொழுது ஈழத்து எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகள் நூலுருப் பெற்றுள்ளன. அவற்றில் பொருத்தமான கதையொன் றைத் தெரிவு செய்யுங்களேன்' என்ற அறிவுரை கிடைத்தது. அதற்கிணங்க அ.சிவதாசனும் அவர் மனைவி உஷா சிவதாசனும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈழத்து நாவல்களை வாசித்துப் பார்த்தார்கள். இறுதியில் ‘வீரகேசரி' பிரசுரமாக வெளிவந்த இரண்டு நாவல்களைத் தெரிவு செய்தார்கள். ஒன்று ‘பாலமனோகரன்' எழுதிய, நிலக் கிளி மற்றது ‘செங்கை ஆழியான் எழுதிய 'வாடைக் காற்று.

Page 89
60 தம்பிஐயா தேவதாஸ்
இலங்கையரும் தென்னிந்தியப் பிரபல திரைப்பட இயக்குநருமான பாலுமகேந்திரா, கலைத்தம்பதிகளான அ.சிவதாசனுக்கும் உஷாதேவி சிவதாசனுக்கும் நெருங்கிய நண்பர். பாலுமகேந்திராவிடம் இவ்விரு நாவல்களையும் கொடுத்து அபிப்பிராயம் கேட்டார்கள் ‘நிலக்கிளி"யின் கதாநாயகி பதஞ்சலியின் பாத்திரத்தில் நடிக்கக்கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே கண்டுபிடிக்க முடி யாது. ஆனால், 'வாடைக்காற்று நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப இலகுவாகப் படமாக்கலாம்' என்று பதில் சொன்னார் பாலுமகேந்திரா. எனவே, 'வாடைக்காற்று'. நாவலைப் படமாக்க முடிவுசெய்தார்கள்.
எழுத்தாளர் செங்கைஆழியான் இலங்கையில் அதிக மான நாவல்களை எழுதியவர். அவற்றில் பலவற்றுக்கு சாகித்திய மண்டலப் பரிசு போன்றவை கிடைத்திருக் கின்றன. இவர் எழுதிய 'வாடைக்காற்று 1973இல் வீர கேசரிப் பிரசுரமாக வெளிவந்து, ஒரு சில நாட்களுக்குள் ளேயே 5000 பிரதிகளும் விற்பனையாகிவிட்டன. இந் நாவலில் நூலாசிரியர் செங்கைஆழியான் பின்வருமாறு எழுதியிருக்கிறார். "7 ஆண்டுகளுக்கு முன்பு நெடுந்தீவில் சில நாட்கள் தங்கவேண்டிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் விளைவாகவே 'வாடைக்காற்று நவீனம் பிறந்தது. இது கற்பனையின் இனிய கணவன்று; காலத்தைப் பிரதி பலிக்காத சழுதாயப் பிடிப்பில்லாத தயாரிப்பன்று. இக் கதையில் வரும் சம்பவங்கள் நிகழக்கூடியனதாகுமா? பாத் திரங்கள் இருக்கக்கூடியனதாமா? என்று சிலர் சந்தேகிப் பின் அவர்களுக்காக நான் இரக்கப் படுவேன். நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் உணர்ந்தவற்றையும் தான் இந்நவீனம் பேசுகின்றது.’ இவ்வாறு செங்கைஆழி யான் எழுதியது போலவே, நாவலும் யதார்த்தம் பொதிந்து விளங்கியது உண்மைதான்.
'வாடைக்காற்றுக்குத் திரைக்கதை வசனம் யார் எழுதுவது என்று செங்கைஆழியானிடம் கேட்கப்பட்டது.

வாடைக்காற்று 6
‘இன்னொரு பிரபல எழுத்தாளரான செம்பியன் செல்வன், வாடைக்காற்றுக்கான திரைப்பட வசனத்தை ஏற்கனவே எழுதிவைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். திரைக்கதை வசனப் பிரதி திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் கொடுத் துப் பதிவு செய்யப்பட்டது. முதலில் கூட்டுத்தாபனத்தில் 'ஏ' பிரிவில் பதிவு செய்யப்பட்டதாகவும் பின்னர் ‘பி’ பிரிவில் பதிவு செய்யப்பட்டு தயாரிப்புக்கு 50 சதவீத கடன் உதவி வழங்கப்படும் என்றும் கூட்டுத்தாபனம் கூறியது. கமலாலயம் மூவீஸ்' என்ற கம்பனி பதிவு செய் யப்பட்டது. திருமதி. உஷா சிவதாசன், ‘பெனின்சுலாக் கிளாஸ் வேர்க் உரிமையாளர் ஆர்.மகேந்திரன், ‘சீமா சில்க் உரிமையாளர் எஸ்.குனரெத்தினம் ஆகியோரின் பணஉதவியில் படத்தயாரிப்பு முயற்சிகள் ஆரம்பமாகின. தயாரிப்பு நிர்வாகிகளாக ஏ.சிவதாசனும், பி.பாலசுப்பிர மணியமும் தொழிற்பட்டார்கள். படத்தயாரிப்புக்கு ஒரு ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டது. அதில் ஏ.ரகுநாதன், கே.எம்.வாசகர், சில்லையூர் செல்வராஜன், பி.சிவசுப்பிர மணியம், ஏ.சிவதாசன் ஆகியோர் இடம்பெற்றார்கள்.
அப்பொழுது ஒரு தமிழ் இயக்குநர் 50க்கும் மேற்பட்ட இந்தியத் திரைப்படங்களில் டைரக்ஷன் துறையில் கடமை யாற்றி இருந்தார். ஹொலிவூட் தயாரிப்பாளர்களுடனும் வேலை செய்திருந்தார். சிங்களத் திரைப்படத் துறையில் முன்னோடியான அவர்தான் பிறேம்நாத் மொறைஸ். இவரையே திரைப்பட இயக்குநராக அந்தக் குழுவினர் தெரிவு செய்தார்கள். இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், ஐரோப்பா ஆகிய இடங்களில் ஒலிப்பதிவு துறையில் அனுபவம் பெற்றிருந்த ஒரு தமிழர் இருந்தார். அவர்தான் இலங்கையில் முதலாவது கலர்ப் படத்தை எடுத்த ஏ.வி. எம்.வாசகம். இயக்குநரின் ஆலோசனையுடன் இக்குழு இவரை ஒளிப்பதிவாளராகத் தெரிவு செய்தது. இவர்கள் அனைவரினதும் ஆலோசனைப்படி நடிகர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

Page 90
62 தம்பிஐயா தேவதாஸ்
ரு காட்சி மீன்வாடிக்குள் கே. எஸ்.பாலச்சந்திரனும் எஸ்.யேசுர்ெத்தினமும் (1978)
'வாடைக்காற்று' ரைப்படத்தில்
கே.எஸ்.பாலச்சந்திரன் (விருத்தாசலம்), எஸ்.யேசு ரட்ணம் (பொன்னு), ஏ.ஈ.மனோகரன் (செமியோன்), டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), ஏ.பிரான்ஸிஸ் (சவிரிமுத்து), கே.கந்தசாமி (தசை), கே.ஏ. ஜவாஹர் (சுடலை சண்முகம்), எஸ்.எஸ்.கணேசபிள்ளை (சிவசம்பு), லடிஸ் வீரமணி (பேயோட்டி), கே.அம்பலவாணர் (யூசுப்), சந்திரகலா (பிலோமினா), ஆனந்தராணி (நாகம்மா),
 
 

வாடைக்காற்று 63
வசந்தா அப்பாத்துரை (திரேசம்மா), ஜெயதேவி (அன்னம்) மற்றும் எஸ்.பரராசசிங்கம், சிவபாலன், அன்ரன், ராஜன் லம்போர்ட், பிரகாசம், டிங்கிறிசிவகுரு, நேரு போன் றோர் பாத்திரத்துக்கு ஏற்றவாறு தெரிவு செய்யப்பட் டார்கள். கலைஞர் வேல் ஆனந்தன், மாலினி விஜயேந் திரா ஆகியோர் நடனமாடினார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ.சிவதாசன், ஒரு சிறந்த நடிகராகவிளங்கினாலும் இப்படத்தில் நடிக்கவில்லை என் பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அதிகமான படங்களுக்கு தொகுப்புச் செய்த எஸ்.இராமநாதன் இப்படத்துக்கான படத்தொகுப் பைச் செய்தார். நடிகர் கே.எஸ்.பாலசந்திரனே உதவி டைரக்டர். இலங்கையில் தமிழ் சிங்கள சினிமாத்துறையில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரீ.எவ்.லத்தீப் முதலில் ‘புதிய காற்றுக்கு இசை அமைத்தார். இப்பொழுது 'வாடைக்காற்றுக்கு இசை அமைத்தார். ஈழத்து இரத் தினம், சில்லையூர் செல்வராஜன் ஆகியோர் இயற்றியபாடல் களை ஜோசப் ராஜேந்திரன், முத்தழகு, சுஜாதா ஆகி யோர் பாடினர். திரைக்கதை வசனங்களை கே.எம்.வாசக ரும் எழுதினார். ஒலிப்பதிவு எஸ்.சென்யோன்ஸ், ஒப் பனை செல்வராஜா, சண்டைப்பயிற்சி நேரு, ஸ்டில்ஸ் அருள்தாசன்.
'வாடைக்காற்று ஆரம்பவிழா 10.02.77ல் கொழும்பு கமலாலயம்மூவிஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. வாடைக் காற்றின் கதை பெரும்பாலும் நெடுந்தீவை நிலைக்கள னாகக் கொண்டிருந்தாலும் அங்கு சென்று படமெடுப்பது மிகவும் சிரமமானதால் பேசாலையில் படம் பிடிக்கப் பட்டது. ஒருநாள் படப்பிடிப்பின் பின் பிலிம்சுருள்கள் மெயில்றெயினில் கொழும்புக்கு அனுப்பப்படும். அங்கு கழுவப்பட்ட பின் மறுநாள் பேசாலைக்கு அனுப்பி அங் குள்ள "போலின் தியேட்டரில் போட்டுப் பார்க்கப்படும்.

Page 91
正6骨
தம்பிஐயா தேவதாஸ்
அதன் பின் மேலும் படம்பிடிக்க வேண்டிய பார்கள். ய்வா
இவ்வ று ஒருமாதம பேசாலையில்
IT படப்பிடிப்பு செய்யப்பட்டது. 43 நாட்களில் முழுப்பட
லகளும் முடிவடைந்தன.
-
R
வாடைக்காற திரைப்படத்தில் காதல் காட்சி. ஏ.ஈ. மனோகரனும்
சந்திரகலாவும் (1978)
 
 
 
 

வாடைக்காற்று
திரைப்படம் வெளிவருமுன் இசைத்தட்டு வெளி வந்துவிட்டது. பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பாகின. இலங்கைத் திரைப்படமொன்றின் இசைத்தட்டுக்கள் முதலில் வெளிவந்தன என்ற பெருமையை முதலில் வாடைக்காற்றே பெற்றது. நல்ல விளம்பரத்தின் பின் வாடைக்காற்று 30.03.1978ல் இலங்கையில் பலபாகங் களிலும் திரையிடப்பட்டது.
வருடாவருடம் இலங்கையின் வடபகுதியில் கரையூரி லும் மன்னாரிலும் இருந்து மீனவர்கள் பருவநிலைக்கு ஏற்ப நெடுந்தீவுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். கடலை நம்பி வாழும் அவர்களின் வெற்றி தோல்விகள், ஆசாபாசங்கள்,தொழில்முறைப் பூசல்கள், கிராமத்துப் பெண்களுடன் அவர்களுக்கு உண்டாகும் காதல், அதன் விளைவுகள் போன்றவற்றை மையமாகவைத்தே கதை பின் னப்பட்டுள்ளது.
'வாடைக்காற்றைப் பற்றி பலர் விமர்சித்தார்கள். அப்பொழுது பைலட் பிறேம்நாத் படத்துக்காக இலங்கை வந்திருந்த நடிகர் மேஜர்சுந்தரராஜன் தனது அபிப்பிரா யத்தை தெரிவித்தார்.
'வாடைக்காற்று திரைப்படத்தைப் பார்க்குப்பொழுது, சிறந்த யதார்த்தபூர்வமான படத்தைப் பாத்த மனத்திருப்தி எனக்கு ஏற்பட்டது. சுடலை சண்முகம்(ஜவாஹர்) விருத் தாசலம்(பாலச்சந்திரன்) மரியதாஸ்(இந்திரகுமார்) பொன்னு (யேசுரெத்தினம்) ஆகியோரின் பாத்திரங்கள் என்னைக் கவர்ந்தன. இரண்டு பாடல்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் சர்வதேசரீதியாக எங்கேயும் திரையிடக்கூடிய அற்புதப் படைப்பு. சர்வதேசப்பரிசு பெறக்கூடிய ஒரு தமிழ்ப் படம் இலங்கையிலிருந்து நிச்சயம் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்' என்று குறிப்பிட்டார்.

Page 92
166 தம்பிஐயா தேவதாஸ்
p ப்படக்கில் T காதல் ே ܢܘ"
ಇಂಗ್ಲ-ಕಣ್ಣ :"ಜ್ಜೈ#° S. 8) தல் δΑπις
நான் எழுதிய விமர்சனம் தினகரனில்(25.04.78) வெளிவந்தது. ‘நாவலின் உயிரோட்டங்களைப் புரிந்து கொண்டு நாவல்வாசகனும் திரைப்படரசிகனும் வேறு
 
 

வாடைக்காற்று 67
பாடு காணாத அளவுக்கு திரைப்படத்தை இயக்கியுள் ளார் டைரக்டர் பிறேம்நாத் மொறைஸ்.’ என்று எழுதி னேன். வீரகேசரியில்(27.03.78) அதன் வாரவெளியீட்டு ஆசிரியர் பொன் இராஜகோபால் நீண்ட விமர்சனம் எழுதினார்.
'..... வீரகேசரி' பிரசுரமான 'வாடைக்காற்று நாவல் வாசகர் மத்தியில் பெரும்வரவேற்பு பெற்றது. இப் பொழுது படமாகி வெற்றிகண்டுள்ளது. படமாக்கியவர் கள் மண்வாசனையையும் தனித்துவத்தையும் பேணமுற் பட்டதால் இப்படம் வெற்றியாய் அமைந்துள்ளது. பொருத்தமான நடிகர் தெரிவு, யதார்த்தம் குன்றாத நெறி யாள்கை, தனித்துவமான பாணி போன்றவை இப்படத்தின் வெற்றியாகும். வர்த்தகபாங்கிலான வலிந்து புகுத்தப்பட்ட சில காட்சிகளும் இருக்கின்றன.சகல ரசிகர்களையும் திருப்திபடுத்தி ஓடக்கூடிய தகைமை இப்படத்துக்கு உண்டு என்று எழுதினார்.
சிந்தாமணியில்(09.04.78) கு.ம.சுந்தரம், 'ஆனந்த விகடன்பாணியில் விமர்சனம் எழுதினார். கமலாலயம் கலைக்கழகம் தந்த நடிகர்கள் படத்தில் நன்றாக சோபித் தார்கள். ஜவாஹர், லடீஸ் வீரமணி, வசந்தா ஆகியோர் தம்பாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளார்கள். மனோ கரன் இந்திரகுமார் ஆகியோரைவிட பாலச்சந்திரனே மனதில் நிற்கிறார். அவர் தோன்றும் காட்சிகள் எல்லாம் இயற்கையாக இருக்கின்றன. சிறப்பாக நடித்திருப்பவர் யேசுரட்ணம்தான். அவர் நடிப்பில் நிறைந்து நிற்கிறார். தந்தை பிரான்ஸிஸ்ஸைவிட தாய் வசந்தா சிறப்பாக நடித் துள்ளார். ஜவாஹரும் லடீஸ்வீரமணியும் நன்றாக நடித் துள்ளார்கள். நடிகர்களில் 10 பேரைத் தெரிவு செய்தால் அவர்களுக்கு பின்வருமாறு புள்ளி வழங்கலாம்.
1. எஸ்.யேசுரட்ணம்-65 2. கே.எஸ்.பாலந்திரன்-60

Page 93
GE தம்பிஐயா தேவதாஸ்
3. கே.ஏ. ஜவாஹர்-58 4. வசந்தா அப்பாத்துரை-56 击。 லடீஸ்வீரமணி-50 枋。 ஏ.ஈ.மனோகரன்-45 7. சந்திரகலா-40 8. ஆனந்தராணி-35 9. எஸ்.எஸ்.கணேசப்பிள்ளை-28 10. இந்திரகுமார்-30 என்று புள்ளி வழங்கியிருந்தார்.
'வாடைக்காற்று திரைப்படத்தில் :ஆகிழ: தோன்றும்
鸟 硅 ,م
யேகரெத்தின் மும் மரியதாசாகத் தோன்றும் "டொக்டர் இந்திரகுமாரும்
1978)
 

வாடைக்காற்று
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மல்லிகை (01.04.78) யில் அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவும் விமர்சனம் எழுதினார். சினிமாவுக்காக நாவலில் சில இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தபோதிலும், அடிப்படைக்கு சிதறாமல் படமாக்கியுள்ளமை பாராட்டத் தக்கதாகும். யேசுரட்னமும் பாலச்சந்திரனும் திறமையாக நடித்துள்ளனர். ஜவாஹர் மிகையாக நடிக்க முனைந்துள் ளார். லடிஸ் வீரமணியின் நடிப்பில் பரம்பரை நடிகனின் குழைவு தெரிகிறது. மற்றவர்களும் பாத்திரங்களை உணர்ந்து செய்கிறார்கள். மணல் காட்டையும் பனங் கூடலையும் கிடுகுக் கொட்டில்களையும் பின்னணியாக வைத்துக்கொண்டு இப்படியொரு அழகை பிலிம் சதுரத் துக்குள் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் சிரமப்பட்டு தமது கடமைகளைச் செய்துள்ளனர். குடாநாட்டுப் பேச்சுத்தமிழ் கதையோட்டத்துடன் இயற்கையாக அமைகிறது. படத்தின் வெற்றிக்கு வலுவான கதையும் பொருத்தமான பாத்திரங்களுமே முதற்காரணம் என்பதை நம்நாட்டுச் சினிமாத் துறையினர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி எழுதினார்.
இப்படம் மத்திய கொழும்பில் (கெயிட்டி) 21 நாட் களும், தென்கொழும்பில் (கல்பனா), 8 நாட்களும் ஓடியது. யாழ்நகரில் (ராணி) 41 நாட்களும், வவுனி யாவில் (பூரீமுருகன்) 20 நாட்களும், பேசாலையில் (போலின்) 21 நாட்களும், கிளிநொச்சியில் (ஈஸ்வரன்) 18 நாட்களும் ஓடியது. திருமலை நகரில் (சரஸ்வதி) 20 நாட்களும், மூதூரில் (இம்பீரியல்) 8 நாட்களும், கல் முனையில் (தாஜ்மஹால்) 18 நாட்களும், செங்கலடியில் (சாந்தி) 18 நாட்களும் ஓடிய இப்படம் மட்டக்களப்பில் (lகல்) 7 நாட்களும் மட்டுமே ஓடியது. மலையகத்தில் ஹட்டனில் (லிபேர்ட்டி) 12 நாட்களும் ஓடிய இப்படம் பண்டாரவளையிலும் (மொடொர்ன்), மாத்தளையிலும் (தாஜ்மஹால்) தலா 10 நாட்கள் ஓடியது. வருடா வருடம்

Page 94
70 தம்பிஐயா தேவதாஸ்
இலங்கைத் திரைப்படங்களில் சிறந்த படங்களுக்கு ஜனாதிபதி பரிசு வழங்கப்பட்டு வந்தது. 78இல் தமிழ்ப் படம் ஒன்றுக்குப் பரிசு கிடைத்தது. அவ்வாண்டில் சிறந்த தமிழ்ப் படமாக 'வாடைக்காற்று தெரிவு செய்யப்பட்டது. இப்படத்தில் நடித்த யேசுரட்ணம் சிறந்த துணை நடிக ராகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஆறு வருடங்களின் பின் (27.06.84) ரூபவாஹினி யில் 'வாடைக்காற்று' திரைப்படத்தைப் பகுதி பகுதியாக ஒளிபரப்பினார்கள். வழமையைப்போல, சிந்தாமணியில் சஞ்சயன் விமர்சனம் எழுதினார். தென்னிந்தியத் திரைப்படங்களின் ஆதிக்கத்தின்போது, இலங்கை தமிழ்த் திரைப்படங்கள் அதிக நாட்கள் ஓடாது தோல்வியைத் தழுவின. இன்று அப்படங்களை ரூபவாஹினியில் பார்க் கும்போது ‘நன்றாகத்தானே இருக்கிறது என்று கூறும் கருத்துகளைக் கேட்கமுடிகிறது.
வாடைக்காற்றில் இயற்கையான நடிப்பும் நடையுடை பாவனைகளும் இதயத்தைத் தொடுகின்றன. யேசுரட்ண மும் ஜவாஹரும் நடிப்பில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். வசந்தாவின் நடிப்பு மீனவ சமுதாயத்தில் நாம் காணும் ஒரு பெண்ணையே நம் கண் முன்னே காட்டுகிறது. பாலச்சந்திரனும் ஆனந்தராணியும் பாத்திரமுணர்ந்து செய்துள்ளனர்.
8. A 0 o 0. இதுவரை இலங்கை சினிமா ரசிகர்கள் பார்த்துப் பழக்கப்பட்ட திரைப்படங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட முறையில் அமைந்திருக்கிறது வாடைக்காற்று' என்று எழுதி gest.
படம் பொருளாதார ரீதியில் வெற்றி பெறவில்லை. இது ஒழுங்கு, கட்டுப்பாடு, திட்டமிட்ட அடிப்படையில் உருவான புது முயற்சி. இம்முயற்சியை மேற்கொண்ட கமலாலயம் மூவீசாருக்கு இலங்கை ரசிகர்கள் என்றும் நன்
றியே சொல்லவேண்டும்.

வாடைக்காற்று 71
'வாடைக்காற்று' திரைப்படத்தின் விளம்பர நோட்டீஸ்

Page 95
18. "தென்றலும் புயலும்
டொக்டர் தயாரித்த படம்
திருகோணமலையில் பிறந்த ஓர் இளைஞருக்கு சினி மாவின்மீது அதிக ஆர்வம். ஒரு படம் வெளிவந்தால் அதையே அடிக்கடி பார்ப்பான். நடிப்பின்மீதும் இவனுக்கு ஆசை. 10 வயதில் நடிக்கத் தொடங்கிய இவன், 18 வயதில் நாடகம் எழுதி மேடை ஏற்றி நடிக்கத் தொடங்கி னான். நடிப்பில் ஈடுபாடு இருந்த பொழுதும் தனது கல்வி யையும், குழப்பிவிடாமல் தொடர்ந்தான். இவன் வைத் தியக் கல்லூரிக்கு எடுபட்டு ஒரு டொக்டராக வெளிவந் தான். 'வைத்தியம்' போன்ற விஞ்ஞானத் துறையில் ஈடு படுபவர்களுக்குக் கலைத்துறையில் அதிக ஆர்வம் இருப்ப தில்லை என்பார்கள். ஆனால், இந்த டொக்டருக்குத் திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசையே பிறந்து விட்டது. அதனால், ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கத் தொடங்கி விட்டார்.
அந்த டொக்டர்தான் எஸ்.ஆர்.வேதநாயகம். அவர் தயாரித்த படத்தின் பெயர்தான் 'தென்றலும் புயலும்,

. தென்றலும் புயலும்
"தென்றலும் புயலும் திரைப்படத்தைத் தயாரித்த பொக்டர்
எஸ்.ஆர்.வேதநாயகமும் டீன் குமர்ரும்படத்தில் இப்படித் தோன்று கிறார்கள். (1978)
இந்த டொக்டருக்குத் திருகோணமலையிலுள்ள ஒரு வங்கி மனேச்சர் கூட்டாளி,வங்கி மனேஜருக்கு ஓரளவு நடிகர் முத்துராமனின் முகச்சாயல், அதனால், இவருக்கும் படம் நடிக்க வேண்டும் என்று ஆசை. அந்த ஆசையை டொக்டர் நிறைவேற்றினார். பி.எஸ்.சி. பட்டதாரியான அந்த பேங் மனேஜரின் பெயர்தான் சிவபாதவிருதையர்.

Page 96
18. "தென்றலும் புயலும்
டொக்டர் தயாரித்த படம்
திருகோணமலையில் பிறந்த ஓர் இளைஞருக்கு சினி மாவின்மீது அதிக ஆர்வம். ஒரு படம் வெளிவந்தால் அதையே அடிக்கடி பார்ப்பான். நடிப்பின்மீதும் இவனுக்கு ஆசை. 10 வயதில் நடிக்கத் தொடங்கிய இவன், 18 வயதில் நாடகம் எழுதி மேடை ஏற்றி நடிக்கத் தொடங்கி னான். நடிப்பில் ஈடுபாடு இருந்த பொழுதும் தனது கல்வி யையும், குழப்பிவிடாமல் தொடர்ந்தான். இவன் வைத் தியக் கல்லூரிக்கு எடுபட்டு ஒரு டொக்டராக வெளிவந் தான். 'வைத்தியம் போன்ற விஞ்ஞானத் துறையில் ஈடு படுபவர்களுக்குக் கலைத்துறையில் அதிக ஆர்வம் இருப்ப தில்லை என்பார்கள். ஆனால், இந்த டொக்டருக்குத் திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசையே பிறந்து விட்டது. அதனால், ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கத் தொடங்கி விட்டார்.
அந்த டொக்டர்தான் எஸ்.ஆர்.வேதநாயகம். அவர் தயாரித்த படத்தின் பெயர்தான் ‘தென்றலும் புயலும்,

தென்றலும் புயலும் − 75
இவ்விளைஞர்தான் டீன்குமார். இவருக்கும் இப்படத்தில் நல்ல பாத்திரம் வழங்கப்பட்டது.
டொக்டர் வேதநாயகம் நடிகைகளைத் தேடினார். அப்பொழுது கொழும்பில் சந்திரகலாவும் ஹெலன் குமாரியும் பிரபல நடிகைகளாக விளங்கினார்கள். தாய்ப் பாத்திரத்துக்கு செல்வம் பெர்னாண்டோ பொருத்த மானவர். இவர்கள் மூவரும் இப்படத்துக்கு ஒப்பந்த மானார்கள்.
இவர்களுடன் கே.ஏ. ஜவாஹர், எஸ்.என்.தனரெத் தினம், கந்தசாமி, ஜோபுநஸிர் ஆகியோரும் தெரிவு செய் யப்பட்டனர்.
‘நிர்மலா என்ற படத்துக்கு இசை அமைத்ததன்மூலம் திருகோணமலை இசைக்கழகத்தைச் சேர்ந்த ரீ.பத்ம நாதன் நல்லபெயர் வாங்கியிருந்தார். அவரே தென்றலும் புயலும் படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கும் இசை அமைத்தார். கவிஞர் சண்முகப்பிரியா இயற்றிய இப் பாடல்களை முத்தழகு, பேர்டினன் லோபஸ், கலாவதி, சுஜாதா ஆகியோர் பாடினர். படத்தொகுப்பு அலிமான், கலை - சத்தியன்.
படப்பிடிப்பு திருகோணமலையில் கோணேஸ்வரர் ஆலயம், கடற்கரை, மூதூர்ப்பகுதி போன்ற இடங்களில் நடைபெற்றது.
ராஜேஸ்வரி பிலிம்ஸ், ‘தென்றலும் புயலும் திரைப் படம் 12.4.1978இல் இலங்கையில் பல பாகங்களிலும் திரையிடப்பட்டது.
ஒரு தாய்க்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் கடமை உணர்ச்சி மிக்கவன். இளையவன் செல்லப்பிள்ளை. நாகரீக மங்கை யொருத்திக்கு அடிமையாகி வாழ்க்கையின் கீழ் மட்டத்துக்கு வருகிறான். மூத்தவன் காதலித்த பெண்

Page 97
76 தம்பிஐயா தேவதாஸ்
ணைத் தாயின் நன்மைக்காகத் திருமணம் செய்யாமல் வாழ்கிறான். வறுமையால் வீடு வாடுகிறது. குருடனாகிப் போய்விட்ட தம்பி அண்ணனைக் குத்திவிடுகிறான்.
‘தென்றலும் புயலும் திரைப்படத்தை நெறியாண்டுஒளிப்பதிவு செய்த எம்.ஏ.கபூர் தான் பெற்ற் பரிசுப்பொருள்களுடன் கர்ணப்படுகிறார். -
வீட்டு வேலைக்காரன் தன்னைத் தானே சுட்டுவிட்டுத் தன் இதயத்தை எஜமானுக்குப் பொருத்தும்படி குறிப்பிடு கிறான். வளர்ப்புமகன் டொக்டராக வந்து இதயமாற்றுச் சிகிச்சை செய்து எஜமானைச் சுகதேகியாக்கிவிடுகிறான்.
இதுதான் ‘தென்றலும் புயலும் திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.
 

தென்றலும் புயலும் 77
‘பறாளையூர் பிறேமகாந்தன்' இலங்கைக் கலைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது, திரைப்படங் கள் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பல சஞ்சிகைகளை நடத்தியிருக்கிறார். 1978ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 'மின்விழி’ என்ற சஞ்சிகையை நடத்திவந் தார். அந்தச் சஞ்சிகையின் மேமாத இதழைத் தென்றலும் புயலும் திரைப்படச் சிறப்பு மலராக வெளியிட்டார். அதில் 'நெஞ்சின் அலைகள்' என்ற தலைப்பில் ஆசிரியத் தலையங்கம் எழுதினார்.
e 4 es es e o 1978ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் பொழுதே ‘நான் உங்கள் தோழன்’ திரையிடப்பட்டுப் பலரின் பாராட்டுகளைப் பெற்றது. சென்ற மாதம் 'வாடைக் காற்று வந்தது. அதைத் தொடர்ந்து ‘தென்றலும் புயலும் புத்தாண்டுப் பரிசாக வந்திருக்கிறது. எங்கள் கலை வாழ வேண்டும்; எமது கலாசாரமும் வளரவேண்டும்; அதனால், தமிழ்மொழி உயர வேண்டும். இந்த உயரிய நோக்கத் தோடு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ‘தென்றலும் புயலும் படத்துக்கு ஆதரவு தரவேண்டும்' என்று எழுதி யிருந்தார்.
மற்றப் படங்களைப் போல் தென்றலும் புயலும் படத் துக்கு அதிகம் பேர் விமர்சனம் எழுதவில்லை. வீரகேசரி யில் (23.04.78) ‘டி.ஆர்.டி.விமர்சனம் எழுதினார்.
'••••• ராஜேஸ்வரி பிலிம்ஸ் வேதாவின் ‘தென்றலும் புயலும் படத்தில் கதாநாயகிகள் இருவரும் போட்டி போட்டு நடிக்கிறார்கள். தென்னகப் படங்களுக்கு நிகராக மலையகத்து எழிற்காட்சிகளை படமாக்கி, கபூர் மனதைக் குளிரவைக்கிறார். பாடல்களும் பாடல் காட்சிகளும் நன் றாக இருக்கின்றன. வேதநாயகம், சிவபாதவிருதையர், அமரசிங்கம் ஆகியோர் படத்தை ஆக்கிரமித்திருந்தாலும், டீன்குமார் ஒரு சில காட்சிகளில் தோன்றி மனத்தில் நிற் கிறார். ஜவாஹர் வழக்கம் போல் வந்து தனது பங்கைச்

Page 98
78 தம்பிஐயா தேவதாஸ்
செலுத்துகிறார். தனரெத்தினம், ஜோபுநஸர், கந்தசாமி, சாம்பசிவம் ஆகியோர் தோன்றி மறைகின்றனர். நடிப் புக்கு இலக்கணம் கூறித் திகைக்க வைக்கிறார் செல்வம் பெர்னாண்டோ. இசை, கதைவசனம் பரவாயில்லை.
நடிகைகள் பஞ்சம் என்று கூறுபவர்கள் இப்படத்தைப் பார்ப்பது நல்லது.
+?#** **
ဓာ်၄င္ငံမ္ဘ* ဖွံဖါး
ர்ெi):17,
چوہ گھر؟؟؟ ** شمچ
‘தென்றலும் புயலும் திரைப்படத்தின் விளம்பர நோட்டீஸ்
இலங்கைப் படம் என்ற வகையில் குறைகளை மறந்து ரசிகர்கள் ஆதரவளிப்பது நமது கடமையாகும் , என்று அந்த விமர்சனம் முடிவடைகிறது.
 
 
 
 
 
 
 
 
 

தென்றலும் புயலும் 79
இது பெரும்பாலும் திருகோணமலைக் கலைஞர்கள் உருவாக்கிய படம் என்பதால் திருகோணமலையில் மற்ற இடங்களைவிட அதிக நாட்கள் ஓடியது.
ப்படம் ய இடங்களும் நாட்களும்:-
ளு ளு -كاډي
மத்திய கொழும்பு (கெபிடல்) 9 நாட்கள் தென்கொழும்பு (ஈரோஸ்) 7 நாட்கள் யாழ்ப்பாணம் (லிடோ) 15 நாட்கள் திருகோணமலை (லக்சுமி) 30 நாட்கள் மட்டக்களப்பு (விஜயா) 12 நாட்கள் மன்னார் (குமரன்) 12 நாட்கள் அக்கரைப்பற்று (சாரதா) 14 நாட்கள் வாழைச்சேனை (ஈஸ்வரி) 14 நாட்கள் நீர்கொழும்பு (மீபுர) 7 நாட்கள்
இந்தப் படத்துக்கும் மூதூருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆனால், அங்கு இப்படம் 4 நாட்கள் மட் டுமே ஓடியது.
1978ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஜனாதிபதி பரிசு இப்படத்தில் நடித்த செல்வம் பெர் னாண்டோவுக்குக் கிடைத்தது.
இப்படியான ஒரு கலைமுயற்சியில் ஈடுபட்ட டொக்டர் வேதநாயகம் 29-07-93இல் காலமானார். அவர் மறைந் தாலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அவரது பெயர் என்றும் மறையாது.

Page 99
19. 'தெய்வம் தந்த வீடு'
மலையகத்தில் ஹட்டன் நகரில் பிரபல வர்த்தகர் ஒருவர் இருந்தார். ஹட்டன் "லிபேர்டி தியேட்டரும் இவருக்குச் சொந்தமானதே. கலைகளில் பற்றுமிக்க இவர், தனது தியேட்டரிலேயே இலங்கைத் தமிழ்த் திரைப்படங் களைத் திரையிட்டு அவற்றுக்கு ஆதரவு வழங்கி வந்தார். தானும் இலங்கையில் தமிழ்ப்படம் தயாரிக்கவேண்டும் என்பது இவரது நீண்டநாள் ஆசை.
‘கடமையின் எல்லை', ‘நிர்மலா” படங்களுக்குப்பின் தானும் ஒரு படம் யாராவது உதவியுடன் தயாரிக்கவேண் டும் என்று கலைத்தாகத்துடன் நின்றார் ஏ.ரகுநாதன்.
அந்த வர்த்தகரும் இந்த ரகுநாதனும் சந்தித்துக் கொண் டார்கள். வழமையைவிட வித்தியாசமான முறையில் பிர மாண்டமான அமைப்பில் தமிழ்த் திரைப்படம் தயாரிக்க லாம் என்று தீர்மானித்தார்கள். படவேலையை ஆரம் பித்துவிட்டார்கள். அப்படி ரகுநாதனுடன் சேர்ந்து திரைப் படம் தயாரிக்க முன்வந்த அந்த வர்த்தகரின் பெயர்தான் வி.கே.டி.பொன்னுசாமிப்பிள்ளை. அந்தப் படத்தின் பெயர்தான் ‘தெய்வம் தந்த வீடு.

தெய்வம் தந்த வீடு 81
படத்தின் கதை தமிழர் பாரம்பரியத்தை வெளிப் படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். இலங்கையில் உள்ள பல கோயில்களில் படப்பிடிப்பு நடைபெறவேண் டும். இதுவரை வெளிவந்த மற்றப் படங்களைவிட வித்தி யாசமான அமைப்பில் இருத்தல் வேண்டும். அதாவது அகலத்திரையில் (சினிமாஸ்கோப்) படம் அமைய வேண் டும் என்று பல திட்டங்களைப் போட்டார்கள்.
லங்கையின் ாவது 70 மி.மீ. ழ்த் திரைப்படத்தை mrffክå
###### ள்ளை. த் தயாரித்த
தில்லானா மோகனாம்பாளின் அருட்டுணர்வின் காரணமகாகவோ என்னவோ, நாதஸ்வரக் கலைஞன் ஒருவனும் நாட்டியக்காரி ஒருத்தியும் காதல் கொள்ளும் கதையை ரகுநாதன் ஏற்கனவே எழுதி வைத்திருந்தார். இதற்கான திரைக்கதை வசனத்தை ஏ. ஜுனைதீன் எழுதி (TTT.
நீண்ட காலமாக எனக்கிருந்த படம் தயாரிக்கும் ஆசைக்கு ரகுநாதனின் நல்ல கதை உற்சாகத்தைத் தந்தது.

Page 100
2 தம்பிஐயா தேவதாஸ்
உடனே படத்தைத் தொடங்கத் தீர்மானித்து விட்டேன்’ என்று ஆரம்பத்தில் பேட்டியளித்தார் பொன்னுசாமிப் பிள்ளை. இந்தியாவில் பிரபல திரைப்பட இயக்குநர்கள் பி.நீலகண்டன், பி.மாதவன் ஆகியோருடன் இணைந்து கடமையாற்றினார், ஓர் இலங்கையர். பல சிங்களப் படங் களையும் இயக்கியிருக்கும் இவர்தான் வில்பிரட் சில்வா. இவரை இப்படத்தின் இயக்குநராக ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
பி.எஸ்.நாகலிங்கம் என்ற கலைஞர் சினிமாத்துறை யில் பல காலமாகவே ஈடுபட்டு வந்தார். பல படங்களுக்கு உதவி இயக்குநராகக் கடமையாற்றியிருக்கிறார். இவரை இப்படத்துக்கு இணை டையரக்டராக நியமித்தார்கள்.
எம்.ஏ.கபூரை ஒளிப்பதிவாளராகச் சேர்த்துக் கொண் டார்கள். இது இவருக்கு 6வது தமிழ்ப்படம்.
ஏ.ரகுநாதன் கதாநாயகனாக நடித்தார். கதாநாயகி யாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குமுதினி (றேலங்கி செல்வராஜா) என்ற புதுமுகத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.
மற்றும் டீன்குமார், எஸ்.என்.தனரெத்தினம், கே.ஏ. ஜவாஹர், விஸ்வநாதராஜா, சந்திரகலா, சுப்பு லட்சுமி காசிநாதன், ஜெயதேவி, பிரான்ஸிஸ், முத்து சாமி, சிவபாலன், கண்ணன், ஏ.நெயினார், மனோகரி, தேவராஜ், ரெமீஜியஸ், சிவாஸ்கர், அரியதாஸ், சுதுமலை தம்பிராசா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இவர்களுடன் யாழ்ப்பாணத்தில் நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த கலையரசு சொர்ணலிங்கம், பூந்தான் ஜோசப், நடிகமணி வி.வி.வைரமுத்து ஆகியோர் சம்பந் தப்பட்ட காட்சிகளையும் சேர்க்கலாம் என்று தீர்மானிக் கப்பட்டது. இப்படத்துக்கு மூன்று இசையமைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். எம்.கே.றொக்சாமி, கண்ணன், நேசம்தியாகராசா ஆகிய மூவருமே அவர்கள்.

தெய்வம் தந்த வீடு 183
வீரமணிஐயர், அம்பி, சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை பூரீகிருஷ்ணமூர்த்தி, அமுதன் அண்ணா மலை, கலாவதி, பார்வதி சிவபாதம் ஆகியோர் பாடினர். பிரபல நாதஸ்வர வித்வான் அளவெட்டி என்.கே.பத்ம நாதனின் நாதஸ்வர இசை இப்படத்தில் சேர்க்கப்பட்டது. ஒலிப்பதிவு சென்ஜோன்ஸ்; ஒப்பனை - சுப்பு: தொகுப்பு - அலிமான்.
‘தெய்வம்தந்தவீடு' திரைப்படத்தில் உருக்கமான ஒரு கட்டம். கதா நாயகன் ஏர்குநாதனும் கதாநர்ய்கி சந்திரகலாவும் இப்படித் தோன்று கிறார்கள். (1978) 哆
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஒவிய ஆசிரியர் செ.சிவப்பிரகாசம் . கலைநிர்மாணத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற படப் பிடிப்புகளுக்கு ஸ்ரில் போட்டோக்களை யாழ் பிரபா போட்டோ உரிமையாளர் தியாகராஜா எடுத்தார்.

Page 101
84 தம்பிஐயா தேவதாஸ்
"லிபேர்டி பிலிம்ஸ்' வி.கே.டி.பொன்னுசாமிப் பிள்ளை தயாரிக்கும் ‘தெய்வம்தந்தவீடு' (சினிமாஸ்கோப்) திரைப்படத்தின் தொடக்க விழா 16.09.1977இல் பம்பலப்பிட்டி மாணிக்கவிநாயகர் ஆலயத்தில் ஆரம்ப மாகியது.
அப்பொழுது மஸ்கேலியா- நுவரெலியா மூன்றாவது எம்.பி.யாக விளங்கிய எஸ்.தொண்டமான் அவர்கள் கமறாவை முடுக்கி படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார். நடிகர் எஸ்.என்.தனரெத்தினம் கிளாப் அடிக்க, ஒளிப் பதிவாளர் கபூர் சில காட்சிகளை ஒளிப்பதிவு செய்தார்.
யாழ்ப்பாணத்தில் 28.10.77 முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகியது. படப்பிடிப்புகள் பல வீடுகளில் நடைபெற்றன. யாழ் 2ஆம குறுக்குத் தெருவில் உள்ள “பொன்மீன்' இல்லம், இணுவிலில் துரையின் இல்லம், இப்படிப் பல இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்றன.
பல்வேறு சைவக் கோவில்களிலும் படப்பிடிப்ப்பு நடை பெற்றது. நயினாதீவு நாகபூஷணி அம்மன், மாவிட்டபுரம் கந்தசாமி, செல்வச்சந்நிதி, மானிப்பாய் மருதடிவிநாயகர், ஆனைக்கோட்டை மூத்தநயினார், பறாளை முருகன், சண்டிலிப்பாய் இரட்டையபுலம் வைரவர், இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார், நல்லுார் கந்தசாமி, நகு லேஸ்வரம், கோணேஸ்வரம், மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார், கதிர்காமம், முன்னேஸ்வரம், திருக்கேதீஸ் வரம் மற்றும் கொழும்பு ஹட்டன் போன்ற இடங்களில் உள்ள கோயில்கள் போன்றவற்றில் ஒளிப்பதிவு நடை பெற்றது.
வீரமணி ஐயர் இயற்றி பூரீ கிருஷ்ணமூர்த்தி பாடிய ‘நாதம் கேட்குதடி நல்லூர்நாதம் கேட்குதடி' என்ற பாடல் இடம்பெற்றபோது இந்தக் கோயில்கள் காட்டப்பட்டன. ஒரு மாதத்திலேயே படத்தின் பெரும்பகுதி நிறைவு பெற்று

தெய்வம் தந்த வீடு 85
༣༽
விட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் (14.07.1978) படம் திரைக்கு வந்தது.
வேணுகோபாலன் ஒரு நாதஸ்வரக்கலைஞன். அவனுக்கு ஒரு நாட்டியக்காரிமீது (ஜானகி) காதல். ஆனால், நாட்டியக்காரிக்கோ கலைமீது காதல். நாதஸஸ வரக்கலைஞன்மீது அவனுடைய மைத்துணிக்கு (சந்திரா) காதல். நாட்டியக்காரியின் அண்ணனுக்கு (கிருஷ்ணன்) நாதஸஸவரக்கலைஞனி மைத்துணிமீது காதல். இந்தக் காதல்களினால் ஏற்படும் மோதல்கள்தான் இப்படத்தின் மூலக்கதை. வேணுகோபாலனாக ஏ.ரகுநாதனும் கிருஷ்ண னாக டீன்குமாரும் நடித்தனர். ஜானகியாகப் புதுமுகம் குமுதினியும், சந்திராவாக, சந்திரகலாவும் தோன்றினர். சிந்தாமணியில் (23.07.78) இப்படத்துக்கான விமர்சனம் வந்தது.
"சினிமா ரசிகர்கள் பல்வேறுதரப்பட்டவர்கள். எல் லோரையும் கூட்டுமொத்தமாகத் திருப்திப்படுத்தமுடி யாது. அதற்காக ஒரு படத்திலேயே எல்லாத்தரத்தினருக் கும் பிடித்தமான காட்சிகளைத் திணித்தால் எப்படி இருக்கும்? 'தெய்வம்தந்தவீடு' படம் மாதிரி இருக்கும்.
'உலகத்திலேயே தமிழில் வெளியான முதலாவது கறுப்பு வெள்ளை சினிமாஸ்கோப்பு' என்ற பெருமை யுடன் வெளிவந்திருக்கும் இப்படம், பல்வேறு சுவைகள் ஒன்று சேர்ந்த விசித்திரச் சுவையாகக் காட்சி தருகிறது.
படம் அங்கும் இங்கும் இழுபட்டுச் செல்கிறது. ஆரம் பத்திலும் கோயில் வருகிறது. இறுதிக்காட்சியிலும் கோயில் வருகிறது. கதையுடன் சம்பந்தப்படாவிட்டாலும், இலங் கையின் பிரபல சைவ ஆலயங்களின் காட்சிகள் புகுத்தப் பட்டுள்ளன.
மேடை நாடகம் ஒன்றில் காட்சி அமைவதுபோல் இப் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. படம் நத்தை வேகத்தில் நகர்கிறது.

Page 102
86 ཆ, தம்பிஐயா தேவதாஸ்
|
கதாநாயகன் பாத்திரத்தில் ரகுநாதன் பூரண வெற்றி பெறாவிட்டாலும் நாதஸ்வரத்தை வாசிப்பதுபோல் பாவனை காட்டும்போது அசல் நாயனக்காரராகவே மாறி
விடுகிறார். ^ * *
‘தெய்வம்தந்தவீடு' திரைப்படத்தில் றேலங்கி செல்வராஜாவும் ஏ.ரகு நாதனும். (1978)
கதாநாயகி பிரயாசையுடன் நடிக்க முயன்றிருக்கிறார். ஆமினாபேகத்தின் குரல் நடித்த அளவுக்கு குமுதினியின் முகம் நடிக்கவில்லையே. சந்திரகலா தனது பங்கை நன்
 

தெய்வம் தந்த வீடு 87
றாகச் செய்துள்ளார். சுப்புலட்சுமி காசிநாதனின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.
வில்லன் டீன்குமார் கலகலப்பாக வந்துபோகிறார். அப்பாவியாக வரும் விஸ்வநாதராஜாவுக்கு வேடப் பொருத்தம் பிரமாதம். ஆனால், நடிப்பு சற்று ஓவர். எஸ்.என்.தனரத்தினம் உடையாராக வருகிறார். ஜவாஹரின் நடிப்பு வழக்கம்போல் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.
ஜெயதேவி தொடைகாட்டும் கவர்ச்சித்தாரகையா அல்லது நகைச்சுவை நடிகையா என்று புரியவில்லை. அவருடன் ஏ.நெயினாரும் வேறு பாத்திரங்கள் ஒரே குவியல். சம்பவங்களும் ஒரே அவியல், சண்டைக்காட்சி நகைச்சுவைக்காட்சியாகிவிட்டது.
படத்தைப் பார்த்துவிட்டு வெளியேறும்போது மனதில்
பதிந்திருப்பது என்.கே. பத்மநாதனின் நாதஸ்வர இசை
ஒன்றுதான்.
என்று அமைந்தது அந்த விமர்சனம்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘ஈழநாடு
(31.07.78) பத்திரிகையில் 'உதயவாணன்' என்ற வாசகர்
விமர்சனம் எழுதியிருந்தார்.
“...இப்பொழுதெல்லாம் காரணமில்லாமல் பெயர் வைப்பது சகஜமாகிவிட்டது. உதாரணம் தெய்வம் தந்த வீடு. சிறந்த படம் என்று கூறமுடியாவிட்டாலும் சிறந்த முயற்சி. ரகுநாதனிடம் ஆர்வமும் திறமையும் இருக்கிறது. ஆனால், அவரது தோற்றம் ஒத்துழைக்கவில்லையே. நடிப்பில் குமுதினியைவிட சந்திரகலா பரவாயில்லை. ஆனால், நடனமாடும்போது குமுதினி ஜொலிக்கிறார். இதுவரை வந்த ஈழத்து நடிகைகளில் குமுதினி அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார். ஆனால், இவற்றைத் தவிர, நடிப்பு முக்கியமானதல்லவா?

Page 103
H 88 தம்பிஐயா தேவதாஸ்
சந்திரகலாவும் சுப்புலட்சுமியும் சோகக் காட்சிகளில் நன்றாக எடுபடுகிறார்கள். ஜவாஹரும் தனரெத்தினமும் டீன்குமாரும்தான்.
சாந்தி தியேட்டரில் (யாழ்ப்பாணம்) அனைத்துப் பாத் திரங்களின் முகங்களும் உடல்களும் நீளமாகத் தெரிகின் றனவே, என்றும் எழுதினார் இந்த வாசகர்.
சினிமாஸ்க்கோப் இல்லாமல் சாதாரண படமாகத் தயாரிக்கப்பட்டிருந்தால் இப்படியான பிரச்சினை ஏற்பட் டிருக்காது. சாதாரணப் படங்களே ஒழுங்காக வளர வில்லை. அதற்குள் "சினிமாஸ்கோப்' தேவைதானா என்று அப்பொழுது பலர் சொன்னார்கள்.
இலங்கை வானொலி மாதாமாதம் வெளியிட்டுவந்த சஞ்சிகையின் பெயர் 'வானொலி மஞ்சரி' அப்பொழுது வானொலி நிலையத்தில் ஜோர்ஜ் சந்திரசேகரன் அறிவிப் பாளராகக் கடமையாற்றினார். பத்திரிகை, நாடகம், சினிமா போன்றவற்றில் ஈடுபாடுடையவர். இவரும் இப் படத்தைப்பற்றி 'வானொலி மஞ்சரியில் விமர்சனம் எழுதினார்.
ஆசை யாரை விட்டது? ஏ.ரகுநாதனை விட்டு வைக் குமா? ‘தெய்வம்தந்தவீடு' திரைப்படத்தில் கதாநாயகனாக ரகுநாதன் நடித்திருக்கிறார். 'கலைஞர்கள் ஒவ்வொரு வரும் விமர்சகர்களாக இருக்க வேண்டும்' என்பார்கள். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ‘கடமையின் எல்லை' வெளிவந்தபோது, ரகுநாதனின் உடலமைப்பும் முகவெட்டும் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று.
பல கோயில்களின் பெயர்களையும் நடிகர்களின் பெயர்களையும் கொண்டு இப்படத்தை விளம்பரப்படுத் தியதற்குப் பதிலாக 'மாயா ஜாலம் நிறைந்த ஒரு மர்மச் சித்திரம் ‘என்று விளம்பரப்படுத்தியிருக்கலாம்

தெய்வம் தந்த வீடு 89
‘தெய்வம்தந்தவிடுபடத்தில் நாட்டியத் தாரகையாகத் தோன்றும் றேலங்கி செல்வராஜா. (1978)
யாழ்ப்பாணத் தமிழ் பேசக்கூடிய ஒருவரேனும் இப்
பொழுது யாழ்ப்பாணத்தில் இல்லையா? இது ஒரு மாயா ஜாலம்.

Page 104
9. தம்பிஐயா தேவதாஸ்
கதாநாயகன் ஒரு நாதஸ்வர மேதை. இவன் நாட்டியக் காரி ஒருவரைக் காதலித்துத் தோல்வி கண்டதால் 4 ஆண்டுகள் நாதஸ்வரத்தைத் தொடாமல் குடிபோதையில் விழுகிறான். நாதஸ்வர மேதையின் அத்தையின் மகள் சந்திரகலா, அவளுக்கு நாதஸ்வர மேதையின்மேல் காதல். நாட்டியக்காரியின் அண்ணனுக்குச் சந்திரகலாமீது காதல்.
டீன்குமார், சந்திரகலா தன்னைத் திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அது முடியாமல் போகவே பலாத்காரத்தில் இறங்கிவிடுகிறார். இறுதியில் பெண்மை வென்றுவிடுகிறது. வில்லனின் தலையில் இரத்தம் வடிகிறது. 'உன்குடும்பத்திலும் இப்படி இரத்தம் சிந்தவைப்பேன்". இது வில்லனின் சபதம்.
நான்கு வருட இடைவெளிக்குப் பின் கோயிலில் நாதஸ்வரம் வாசிப்பதற்கு மேதை சம்மதிக்கிறார். ஆனால், இதே கோயிலில் நாட்டியக்காரியின் நடனம் இடம்பெறும் என்று கேள்விப்பட்டதும், ஒரு மூலையில் போய் ஒதுங்கிவிடுகிறார். நாட்டியக்காரி அவரிடம்போய் சில தத்துவங்களைச் சொன்னதும் அவர் சம்மதிக்கிறார்.
நாதஸ்வர இசைக்கு நாட்டியம் நடைபெறுகிறது. சனக்கூட்டத்துக்குள் வில்லனும் துப்பாக்கியோடு வந்து நிற்கிறான். நாதஸ்வர மேதையைக் குறிபார்த்து ஒருமுறை சுடுகிறான். ஆடிக்கொண்டிருந்த நாட்டியக்காரி நாதஸ்வர மேதையின் காலடியில் விழுந்து சாகிறாள். நாதஸ்வர மேதை இன்னும் நாதஸ்வரம் வாசிப்பதை நிறுத்தவில்லை. அவரின் வாயாலும் நாதஸ்வரத்தாலும் இரத்தம் பாய் கிறது (இது அடுத்த மாயாஜாலம்) நாதஸ்வர மேதை நாட்டியக்காரியின்மேல் விழுந்து சாகிறார்.
இந்த மாயா ஜாலங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் அமைகிறது இந்தப் படத்தின் பெயர்.

தெய்வம் தந்த வீடு 9.
.நகைச்சுவை என்ற பெயரில் நான்கைந்து பேர் அடிக்கும் கொட்டம், சில வேளைகளில் ஆபாசமாகவும்
அபத்தமாகவும் தெரிகிறது.
நாதனும். 1978
ஓர் அரைக்கிறுக்குப் பாத்திரத்தில் விஸ்வநாதராஜா நடிக்கிறார். இவரது நடிப்பு வெகுசிறப்பாக இருக்கிறது. ஜவாஹரின் நடிப்புப் பரவாயில்லை. தனரெத்தினம் வெகு சீரியசாக நடிக்கிறார். மேலும் குறிப்பிடும்படியாக இந்தப் படத்தில் வேறு எதுவும் கிடையாது.

Page 105
H 92 தம்பிஐயா தேவதாஸ்
இப்படி வித்தியாசமான முறையில் எழுதினார் ஜோர்ஜ் சந்திரசேகரன்.
‘தெய்வம்தந்தவீடு' யாழ்ப்பாணத்தில் மட்டும் அதிக நாட்கள் ஓடியது. தயாரிப்பாளரின் சொந்தத் தியேட்ட ரான ஹட்டன் லிபேட்டியிலும் 16 நாட்கள் மட்டுமே ஒடியது.
‘தெய்வம்தந்தவீடு ஓடிய இடங்களும் நாட்களும்:- மத்திய கொழும்பு (செல்லமஹால்) 13 நாட்கள்
தென்கொழும்பு (மெஜஸ்ரிக்) 13 நாட்கள் தென்கொழும்பு (ஈரோஸ்) 05 நாட்கள் யாழ்ப்பாணம் (சாந்தி) 34 நாட்கள் வவுனியா (றோயல்) 14 நாட்கள் கிளிநொச்சி (பராசக்தி) 14 நாட்கள் மட்டக்களப்பு (ராஜேஸ்வரா) 14 நாட்கள் வாழைச்சேனை (வெலிங்டன்) 06 நாட்கள் கல்முனை (ஹரிசன்) 16 நாட்கள் திருகோணமலை (லக்சுமி) 09 நாட்கள் மூதூர் (இம்பீரியல்) 05 நாட்கள் பண்டாரவளை (சீகிரி) 13 நாட்கள் பதுளை (றெக்ஸ்) 06 நாட்கள்.
எல்லாவற்றையும்விட வேடிக்கை ஒன்று நடைபெற்றது. ‘தெய்வம் தந்தவீடு' திரைப்படம் வெளிவந்தபோது, 'தின கரனில் தயாரிப்பாளர் பொன்னுசாமிப்பிள்ளையின் பேட்டி வந்திருந்தது. இத்திரைப்படம் தயாரித்ததன்மூலம் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எவை? என்ற கேள் விக்குப் பதில் சொல்லியிருந்தார்.
பிடித்தது படம் , படித்தது பாடம். மூன்று வாரத் தில் படத்தை முடித்துத் தருவோம் என்பார்கள். எத்

தெய்வம் தந்த வீடு 93
தனையோ மாதம் இழுத்தடிப்பார்கள். 'மேக்கப்மேன்" றேட்டில்கூட ‘கட் வைக்கிற ஆசாமிகள் இருக்கிறார்கள். லாபம் இருந்தால் எவரையும் தம்முடன் சேர்த்துக் கொள் வார்கள். உண்மை சொல்கிறவர்களை ஒதுக்கி விடுவார் கள். பாஷை தெரியாதவனுக்கும் பாத்திரம் கொடுப்பார் கள். அமைதிப் பேர்வழியாக இருப்பார்கள். அதற்குள் இருக்கிற திருட்டுத்தனத்தைப் போகப்போகத்தான் புரிந்து கொள்ளமுடியும் 'தெய்வம்தந்தவீடு' படப்பிடிப்பு யாழ்ப் பாணத்தில் நடந்தபோது ஏற்பட்ட அனுபவத்தையும் அவர் சொல்லியிருந்தார்.
முழு யூனிற்றும் யாழ்ப்பாணம் சென்றுவிட்டது. அதன் பின்புதான் கதையில் மாற்றம் செய்யவேண்டும் என்று ஒட்டலிலே உட்கார்ந்து கதை எழுத ஆரம்பித்துவிட்டார் கள். அதனால், மூன்று நான்கு நாட்கள் வீணாகிவிட்டன. செட்டுக்கோ லொகேஷனுக்கோ வருவதற்கு முன் என்ன செய்யப்போகிறோம் என்று ஒரு டைரக்டர் திட்டமிட வேண்டாமா? "ஸ்டார்ட் ‘கட் இந்த இரண்டைத் தவிர, வேறு வார்த்தைகளே இவருக்குத் தெரியாதா? ஏதோ படம் ஒழுங்காக வெளிவந்ததென்றால் ஒளிப்பதிவாளரும் தொழில்நுட்பக் கலைஞர்களுந்தான் அதற்குக் காரணம்.
ஒருமுறை தெய்வம்தந்தவீடு படத்துக்குப் பொறுப்பாக இருந்தவர்கள், ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்துக்குப் போடப்பட்ட செட்டைவிட பிரமாதமாகப் போட்டிருக்கிறோம். வந்து பாருங்கள்’ என்றார்கள். ஆசையோடு போய்ப்பார்த்தேன். சின்ன மேளம் நடக்கும் நாட்களில் சுற்றிப் போடப்படும் அலங்காரப் பந்தல்தான் அங்கிருந்தது. கொஞ்சநாட்களாவது சொகுசாக இருக்கப் போடப்பட்ட திட்டம்தான் இந்த அவுடோர் துடிங். இலங் கையிலே தமிழ்ப்படம் ஒழுங்காக வளரவேண்டுமென்றால் ஒட்டுண்ணிகள் ஒதுங்க வேண்டும்' என்று அந்தப் பேட் டியில் கூறியிருந்தார்.

Page 106
194 தம்பிஐயா தேவதாஸ்
‘தெய்வம்தந்த விடு' திரைப்படம் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு படமாக் கப்படுகிறது. ஒளிப்பதிவாளரும் எம்.ஏ.கபூர், கதாநாயகன். 臀
டைரக்டர் ல்பிரட் சில்வா, நடிகைக்ள் சுப்புலட்சுமி காசிநாதன்,
சந்திரகலா, உதவி இயக்குநர், பி.எஸ்.நாகலிங்கம் ஆகியோர்.
இப்படி அனுபவப்பட்ட இவர் இரண்டாவது படத் தையும் தயாரிக்க இருந்தார். ஆனால் 1983 கலவரத்தில் இவர் கொல்லப்பட்டார். அவர் இறந்து விட்டாலும் அவரது பெயர் இலங்கைத் தமிழ்ச் சினிமா வரலாற்றில் நிலைத்திருக்கும் என்பது உண்மையே.
 

20. ‘ஏமாளிகள்' ராம்தாஸின் இரண்டாவது படம்
'கோமாளிகள்" திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'மரிக்கார் எஸ்.ராம்தாஸ்' வெளியிட்ட படம் தான் ‘ஏமாளிகள்'. இலங்கைத் தமிழ்ப் படங்கள் அதிக மாக வெளிவந்த ஆண்டான 1978இல் வெளியான 5வது தமிழ்ப் படம்.
நகைச்சுவையைப் பொறுத்தவரை, எஸ்.ராம்தாஸ் குழுவினருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந் தது. சிரிப்பின் மூலம் ரசிகர்களை வெல்லலாம் என்ற எண்ணம் ராம்தாஸுக்கு வந்துவிட்டது. ஏ.ஏ.எம்.மவுஜுத் படத்தைத் தயாரிக்க முன்வந்தார்.
'கோமாளிகள் திரைப்படத்தை இயக்கிய எஸ். இராம நாதனையே இப்படத்தினையும் இயக்கத் தெரிவு செய் தார்கள். கமறா ஜே.ஜே.ஜோகராஜா. இது இவருக்கு இரண்டாவது தமிழ்ப்படம்.
*கண்ணன்-நேசம் இசை அமைத்தார்கள். கலாவதி, ஜோசப் ராஜேந்திரன், ஸ்ரனி சிவானந்தன் ஆகியோர் பின்னணி பாடினார்கள். இதுவும் 'ராம்தாஸ்' ஏற்கனவே எழுதி

Page 107
196 தம்பிஐயா தேவதாஸ்
ஒலிபரப்பிய வானொலி நாடகமே. ராம்தாஸே திரைப் படத்துக்கு ஏற்றவாறு திரைக்கதை வசனம் எழுதினார். உதவி டைரக்ஷன், தயாரிப்பு மேற்பார்வை போன்ற வற்றை அவரே பொறுப்பேற்றார்.
ஏமாளிகள் திரைப்படத்தில் கதாநாயகன் சிவராமும் கதாநாயகி ஹெலன் குமாரியும். (1978)
'கோமாளிகள்’ திரைப்படத்தில் சில்லையூர் செல்வ ராஜன்-கமலினி செல்வராஜன் ஆகியோர் அறிமுகமானது போல், இப்படத்திலும் புதிய ஜோடி அறிமுகமாகியது.
 
 
 

ஏமாளிகள் 97
'காத்திருப்பேன் உனக்காக திரைப்படத்தில் அறி முகமாகி பெயர் பெற்றவர், என்.சிவராம். சிங்களப் படங்கள் பலவற்றில் நடித்துவிட்டு 'மஞ்சள் குங்குமம்', ‘தென்றலும் புயலும் படங்களில் நடித்ததன்மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகிப் புகழ்பெற்றவர், ஹெலன் குமாரி. இவர்கள் இருவருமே இப்படத்தில் புது ஜோடி யாக அறிமுகமானார்கள்.
'மீனவப்பெண்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ராஜலஷ்மி இப்படத்தில் ‘செல்லமணியாக நடித்தார்.
'மரிக்கார்ராம்தாஸ், ‘அப்புக்குட்டிராஜகோபால், ‘உபாலிசெல்வசேகரன், ஆகியோருடன் கே.ஏ. ஜவாஹர், டொன்பொஸ்கோ, இரா.பத்மநாதன், ஜேசுரட்ணம், விக்டர், ஈஸ்வரன், ஏபிரஹாம், ஆர்.ரீ.ராஜா, செழியன் வயணவப்பெருமாள், மணிமேகலை, ஜெயதேவி, செல்வம் பெனாண்டோ, ருவினா, சுட்டி போன்றோர் நடிக்க ஒப்பந்தமானார்கள்.
ஒலிப்பதிவு சென் ஜோன்ஸ் . படத்தொகுப்பு எம்.எஸ்.அலிமான்.
'கோமாளிகள்' போல் இப்படத்திற்கு அதிக விளம் பரம் கிடைக்கவில்லை. ஆனாலும் சில மாதங்களுக்குள் படம் வளர்ந்து விட்டது.
‘பாக்கீர் பிலிம்ஸ்" ஏமாளிகள் 06.10.1978இல் இலங்கையில் ஏழு ஊர்களில் திரையிடப்பட்டது.
இப்படத்துக்கு அதிக விமர்சனமும் கிடைக்கவில்லை. 24.10.78இல் 'தினகரன்’ விமர்சனம் எழுதியது.
"...இரசிகர்களைச் சிரிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சிந் திக்க வைக்கக்கூடிய எதுவுமே இல்லை. வர்த்தக நோக்கில் படம் பரவாயில்லை. படத்தில் நடித்திருப்பவர்களில்

Page 108
98 தம்பிஐயா தேவதாஸ்
அநேகர், ஏற்கனவே சினிமா அனுபவம் பெற்றவர்கள். இரா.பத்மநாதன், விக்டர், செழியன் வயணவப்பெரு மாள் ஆகியோருக்கு மட்டுமே இது முதலாவது படம். இந்த அனுபவபூர்வமான கலைஞர்களின் ஒத்துழைப்புத் தான் வெற்றிக்குக் காரணமாகும்.
'ஏமாளிகள்' திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர்கள் எஸ்.ராம்தாஸும் செல்வசேகரனும்.
 

ரமாளிகள் 99
ரசிகர்களைச் சிரிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணத் துடனேயே கதை பண்ணப்பட்டிருக்கிறது. நம் நாட்டு ரசிகர்களைச் சிரிப்பின் மூலம்தான் மடக்கவேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறார் ராம்தாஸ். சண்டைக் காட்சியும், கிளப் நடனமும் இணைக்கப்பட்டால்தான் நமது ரசிகர்கள் திருப்திப்படுவார்கள் என்ற எண்ணத்தில் அவை வலிந்து புகுத்தப்பட்டுள்ளன.
பகலில் மட்டும்தான் உங்கள் மனைவிக்குக் கணவ னாக நடிக்க வேண்டுமா? என்று ராம்தாஸ் பீடிகையுடன் வினவுவதும், சிறிது நேரம் ராஜகோபால் திருதிருவென்று விழித்து விட்டு ‘அதைப்பிறகு பார்க்கலாம்' என்று கூறு வதும் மிகுந்த சிரிப்பை உண்டாக்குகிறது. தன் மகனுக்குப் பைத்தியம் என்று ராம்தாஸ் வேதனையுடன் கூறுவதைக் கேட்ட செல்வசேகரன் ஒருவரை ஒருவர் வேதனையுடன் பற்றிக் கொள்வதும், 'மது பருகுவோமா? என்று கேட் பதும் அருமையான கட்டங்கள். இவர்களுடன் டொன் பொஸ்கோ வேறு. உரையாடல்கள் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலும் மலையகப் பேச்சு வழக்கிலும் அமைந்திருக் கின்றன.
‘ராஜகோபாலின் மனைவியாக வரும் "ராஜலஷ்மி யின்’ நடிப்பு சில இடங்களில் இயற்கையாக அமைகிறது. செல்வசேகரனின் மனைவியாக வரும் ‘மணிமேகலை பரவாயில்லை. காதல் ஜோடியாக வரும் ‘சிவராம் ஹெலன்குமாரி இருவரும் நன்கு நடித்துள்ளனர். சிவராமைவிட, ஹெலன்குமாரி, தான் சினிமாவுக்கு அனுபவசாலி என்பதை நிரூபித்துள்ளார்.
‘ஜெயதேவிக்கு இப்படத்தில்தான்நடிக்க இடம் கிடைத்திருக்கிறது. வழமையைப்போல் ஜவாஹர் அட்ட காசம் செய்கிறார். அவருடன் ஆபிரகாமும் ஆர்.ரி.ராஜா வும் சேர்ந்து விடுகிறார்கள். இரா.பத்மநாதன், செல்வம் பெர்னாண்டோ, ஜேசுரட்ணம் ஆகியோர் சில காட்சி

Page 109
200 தம்பிஐயா தேவதாஸ்
களில் தோன்றினாலும் தம் பாகத்தைப் பாராட்டும் வகை யில் செய்துள்ளார்கள்.
'ஏமாளிகள்' படப்பிடிப்பின்போது சிவராமும் ஹெலன்குமாரியும் முன்னே நிற்கிறார்கள். நடுவில் நிற்பவர் டைரக்டர் எஸ்.ராமநாதன். கமறாவுடன் நிற்பவர் ஜே.ஜோகராஜா. இப்படம் மத்திய கொழும்பில் (கெப்பிட்டல்) 35 நாட்களும் தென் கொழும்பில் (ஈரோஸ்) 28 நாட் களும், கொம்பனித் தெருவில் (நவா) 7 நாட்களும் ஓடியது.
 

ஏமாளிகள் - 20
பாடல்களை ஈழத்து இரத்தினமும், பவுசில் அமீரும் இயற்றி இருக்கிறார்கள். கண்ணன்-நேசம் இசை அமைத் திருக்கும் இப்படத்தின் பாடல்கள் 'கோமாளிகள் போல் சிறந்து விளங்கவில்லை. ‘வான் நிலவு தோரணம்' என்று ஜோசப் ராஜேந்திரனும், கலாவதியும் பாடும்பாடல் இனிமையாக இருக்கிறது. ஸ்ரெனி சிவானந்தன் பாடும், ‘வா இந்தப் பக்கம்' என்ற பாடலுக்கு இசை அமைப் பாளர்களில் ஒருவரான நேசம் தியாகராஜா வாயசைத்த வாறு நடனமாடியுள்ளார்.
கொழும்பு சுதந்திர சதுக்கக் கட்டடத்தை ஒளியும் நிழலும் கொண்டு மாற்றியமைத்து காதலர்கள் ஓடி விளையாடும் பிரமாண்டமான மாளிகையாகக் காட்டி ரசிகர்களைப் பிரமிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜே.ஜோகராஜா. டைரக்ஷன் பொறுப்பை, அனுபவப் பட்ட இயக்குநர் எஸ்.ராமநாதன் கச்சிதமாகச் செய்துள் ளார். காட்சிகள் நீண்டனவாக அமைந்திருந்தாலும் அவரது திட்டமிட்ட படப்பிடிப்பின் மூலம் படத்தொகுப் பாளர் அலிமானுக்கு அதிக சிக்கல் ஏற்படவில்லை. பல நடிகர்கள் வரும் காட்சிகளில் உரையாடல்களைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.
குறைகள் சில இருப்பினும் நம் நாட்டுத் திரைப்படம் என்ற உணர்வுடன் பார்த்து மகிழக்கூடிய படம் ‘ஏமாளி கள். தயாரிப்பாளர் ஏ.ஏ.எம்.மவுஜ"த்துக்கு எமது பாராட்டுகள்' என்று அமைந்தது அந்த விமர்சனம்.
யாழ்நகரில் (ராஜா) 52 நாட்களும், வவுனியாவில் (வசந்தி) 29 நாட்களும் , மன்னாரில். (நாதன்ஸ்) 14 நாட்களும் ஓடியது. மட்டக்களப்பில் (றிகல்) 20 நாட் களும், கல்முனையில் (தாஜ்மஹால்) 5 நாட்களும், வாழைச்சேனையில் (ஈஸ்வரி) 7 நாட்களும் ஓடியது. திருகோணமலையில் (பூரீகிருஷ்ணா) 17 நாட்களும் ஒடியது.

Page 110
202 stbount தேவதாஸ்
மலையகத்தில் பண்டாரவளையில் (மொடர்ன்) 18 நாட்களும், கண்டியில் (ஒடியன்) 5 நாட்களும் ஓடியது.
இலங்கைத் தமிழ்ச் சினிமாவுக்கு நடிகர் எஸ். ராம் தாஸ் அதிக பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
'கோமாளிகள் திரைப்படத்தை உருவாக்கியதுடன் அவரது பங்களிப்பு ஆரம்பமாகியது. அந்தப் பங்களிப் பின் தொடர்ச்சியே 'ஏமாளிகள்’ திரைப்படமாகும்.

21. 'அநுராகம்
ஒரு கதை, இரண்டு மொழிகள்
1978ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் ஒரு தமிழ்ப்படம் தயாரிக்க 4% லட்சம் ரூபாய் தேவைப் பட்டது. இப்படிப் போட்ட முதலையும் மீண்டும் பெறு வதற்கு அப்படம் 10 லட்சம் ரூபாவை வதுலாகப் பெற வேண்டும். ஆனால், அதுவரை திரைக்கு வந்த இலங்கைத் தமிழ்ப் படங்களில், "கோமாளிகள்', ‘நான் உங்கள் தோழன்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே 8 லட்சம் ரூபாவை வதுலாகப் பெற்றன. அதனால், தயாரிப்பாளர் கள் தமிழ்ப்படம் தயாரிக்கப் பின் வாங்கினார்கள்.
இந்த நிலையை மாற்றும் வகையில் புதிய ஒரு வழி யைச் சொன்னார் ஒரு தமிழ் நடிகர். ஒரே நேரத்தில் ஒரே கதை ஒரே தொழில் நுட்பக்கலைஞர்கள்; ஆனாலும் நடிகர்களும் பாடகர்களும் வேறு வேறு, அதாவது ஒரே கதையை தமிழிலும் சிங்களத்திலும் படங்களாகத் தயாரிக் கும்போது, தமிழ்ப்படத்தின் செலவில் 2 லட்சம் ரூபா அளவு குறைகிறது. அப்படியே தமிழ்ப்படம் தோல்வி

Page 111
204 தம்பிஐயா தேவதாஸ்
அடைந்தாலும், சிங்களப்பட வதுல் அந்தத் தமிழ்ப்பட, நஷ்டத்தை ஈடுசெய்யும்.
'அநுராகம் திரைப்படத்தில் கதாநாயகன் சிவராமுவும் கதாநாயகி சந்திரகலாவும். (1978)
இந்த மாற்று வழியைச் சொன்ன தமிழ் நடிகர் தான், மலையகத்தில் கொஸ்லந்தையில் நாராயணசாமி, அமிர் தம்மாள் தம்பதிகளின் இரண்டாவது மகன்; ‘சமுதாயம் திரைப்படத்தின் கதாநாயகன், பின்னாளில் குணச்சித்திர வேடங்களில் தோன்றிய அமரர் எஸ்.என்.தனரெத்தினம்.
 
 
 

அநுராகம் 205
இந்த மாற்று வழியைப் பிரபல சிங்களப்படத் தயாரிப் பாளரும் இயக்குநருமான ஒரு சிங்களவர் ஏற்றுக் கொண் டார். அவர்தான் பிரபல இடதுசாரி அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவின் தம்பியான யசபாலித்த நாணயக்காரா.
இந்த மாற்று வழியில் யசபாலித்த ஒரு தமிழ்ப்படத் தையும் ஒரு சிங்களப் படத்தையும் ஒரே நேரத்தில் தயாரிக்கத் தொடங்கினார்.
சிங்களப் படத்தின் பெயர் “கீதிகா' தமிழ்ப்படத்தின் பெயர் 'அநுராகம் தமிழ்ப் படத்தின் கதாநாயகன் என்.சிவராம் கதாநாயகி சந்திரகலா,
சிங்களப் படத்தின் கதாநாயகன் விஜயகுமாரணதுங்க, கதாநாயகி மாலினி பொன்சேகா.
தமிழ்ப் படத்துக்கான கதை வசனத்தையும் உதவி இயக்குநர் பொறுப்பையும் பி.எஸ்.நாகலிங்கம் ஏற்றுக் கொண்டார்.
ஜே.யோகராஜா ஒளிப்பதிவு செய்த மூன்றாவது தமிழ்ப்படம் இது. மற்றும் நடிகர்களாக எஸ்.என்.தனரெத் தினம், எஸ்.விஸ்வனாதராஜா, செல்வம் பெர்னாண்டோ, டொன்பொஸ்கோ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இரண்டுமொழிகளிலும் அனோ ஜா, லிலியன், பி.எஸ்.பெரேரா, ரஷி ஆகியோரும் நடித்தனர்.
இப்படத்துக்கு, சரத் தசனாயக்க இசை அமைத்தார். 'ஈழத்து ரெத்தினம் இயற்றிய பாடல்களை முத்தழகுவும் கலாவதியும் பாடினார்கள். ஒலிப்பதிவு-ஈ.டி.சென்யோன்ஸ், ஒப்பனை-பெனாட், படத்தொகுப்பு-துரை பவானந்தன். தயாரிப்பு நிர்வாகம் கே.குமார்.
படம் 19 நாட்களுக்குள் தயாரிக்கப்பட்டுவிட்டது. அநுராகம் 1978ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட 6வது

Page 112
206 தம்பிஐயா தேவதாஸ்
தமிழ்ப்படமாகும். 27.10.1978இல் தீபாவளி வெளி யீடாக இப்படம் ஆறு ஊர்களில் வெளியிடப்பட்டது.
'அநுராகம் திரைப்படக் கலைஞர்களுக்குக் கொழும்பு விவேகாநந்த மகா வித்தியாலயத்தில் စ္တပ္မ္ရစ္သဖွ*ဗူ့ g டைரக்டர் யசபாலித்த நாணய்க்கார கூட்டத்துக்குத் தலைமை வகித்த ாஜா மொஹிதீன், கலைஞர்கள் விஸ்வநாதரர்ஜா, சிவராம் ஆகியோர்.
ராஜா ஒரு பணக்கார இளைஞன். அழகான எதையும் ஒவியமாக வரைவது அவனது பொழுது போக்கு. அவன் விடுமுறையைக கழிக்க பண்டாரவளைக்கு வருகிறான். அங்கு வசந்தி என்ற அழகியைச் சந்திக்கிறான். காதல் மலர்கிறது. இவர்களைப் பிரிக்க முயன்றான் வசந்தியின் மைத்துனன் நாகப்பன். அவன் ராஜாவின் காலையே முறித்துவிடுகிறான். தந்தை சதாசிவம் பண்டாரவளைக்கு
 
 
 
 
 

அதுராகம் 2O7
வந்து தனது மகன் ராஜாவைப் பிடிவாதமாகக் கொழும் புக்கு அழைத்துவந்துவிடுகிறார்
ராஜாவின் உறவால் கருவுற்ற வசந்தி, ஊர் ஜனங் களுக்குப் பயந்து வேறு ஊர் சென்று விடுகிறாள்.
தனக்காகக் காத்திருக்கும் தன் அத்தைமகள் நளினியின் உதவியுடன் வசந்தியைத் தேடுகிறான் ராஜா. ஐந்து வருடங்கள் கழிந்துவிடுகின்றன.
வசந்தியின் மகன் கண்ணன் தந்தையைத் தேடிப் புறப் படுகிறான். மகன் கண்ணனைத் தேடி வசந்தி அலை கிறாள்.
இறுதியில் எல்லோரும் ஒன்று சேர்கின்றனர். இது தான் 'அநுராகம் கதைச் சுருக்கமாகும். ராஜாவாக என்.சிவராமும் வசந்தியாக சந்திரகலாவும் நடித்தார்கள். தந்தை சதாசிவமாகத் தனரெத்தினமும் வில்லன் நாகப்ப னாக விஸ்வநாதராஜாவும் நளினியாக அனோஜாவும் கண்ணனாக ரஷியும் தோன்றினார்கள்.
மலைநாட்டைப் பற்றி ஈழத்து இரத்தினம் இயற்றி முத்தழகு பாடிய பாடல் சிறந்து விளங்கியது.
'எண்ணங்களாலே இறைவன்தானே பொன் வண்ணத்தாலே வரைந்துவிட்டானே" வண்ண வண்ணத் தோற்றங்கள் தன்னாலே எந்நாளும் நிலையாகும் எழில் கொஞ்சும் மலையகமே என்று தொடங்கும் பாடல்தான் அது.
இப்படத்தைப் பலரும் பாராட்டினார்கள். ‘சிந்தா மணி"யும் (05.11.1978) பாராட்டி விமர்சனம் எழுதியது.
'இதுவரை இலங்கைப் படங்களிலிருந்த 'அமெச்சூர்' தன்மையின்றி வர்த்தக நோக்குடன் கூடிய முழுமை'

Page 113
208 தம்பிஐயா தேவதாஸ்
அநுராகத்தில் காணமுடிகிறது. பல வெற்றிப் படங்களைத் தயாரித்த யசபாலித நாணயக்காரவின் கைவண்ணத்தில் இப்படம் வெளிவந்திருக்கிறது. ஒரு சாதாரண கதையை விறு விறுப்பாக இயக்கியிருக்கிறார் அவர். கமறாமூலம் புகுந்து விளையாடியிருக்கிறார் யோகராஜா. ஒலிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. நறுக்குத் தெறித்தாற்போல் வசனம் எழுதியிருக்கிறார் உதவி இயக்குநர் பி.எஸ்.நாகலிங்கம். முத்தழகுவும் கலாவதியும் இனிமையாகப் பாடியிருக்கிறார் கள். அவை ரசிகர்களை வாய்திறந்து பாடி மகிழ வைக் கின்றன.
கதாநாயகன் சிவராம் உள்ளூர்த் தமிழ்ப்பட நடிகர் களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துவருகிறார். சந்திரகலாவும் நன்கு நடித்திருக்கிறார். அவருடைய நடிப் பின் முதிர்ச்சியுடன் தோற்றமும் போட்டி போடுகிறது. விஸ்வநாதராஜா வில்லனாக வந்து தான் ஒரு குணச் சித்திர நடிகர் என்பதை நிரூபிக்கிறார். பண்பட்ட நடிகர் தனரெத்தினம் ஒரு சில காட்சிகளில்தான் வருகிறார். ஆனாலும், திரைமறைவில் இப்படத்துக்கு அவர் பல வழி களில் உதவியிருக்கிறார்.
அனோஜாவின் பாத்திரம் அனுதாபத்தைப் பெறு கிறது. செல்வம் பெனாண்டோ பாட்டியாக வந்து கச்சித மாக நடித்துள்ளார். டொன்பொஸ்கோ ஒரு சில காட்சி களில் வந்தாலும் மனதில் பதிந்துவிடுகிறார். மாஸ்டர் ரஷி வெகு அருமையாக நடித்துள்ளார்.
‘போமிலா கதையென்றாலும் படத்தை நன்றாக உரு வாக்கித் தந்திருக்கிறார் யசபாலித்த. என்று அமைந் திருந்தது. அந்த விமர்சனம்.
ரமேஸ் என்பவர் அடிக்கடி திரைப்படங்களைப்பற்றி விமர்சனம் எழுதினார். அவர் இப்படத்தைப் பற்றி எழுதிய விமர்சனம் மித்திரனில் (02.11.1978) இடம் பெற்றது.

அநுராகம் 209
மலையகத்தின் இயற்கைச் சூழலில் இப்படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆடல், பாடல், காதல், ஹாஸ்யம், சண்டைக் காட்சிகளுக்குக் குறைவில்லை. படம் போரடிக்காமல் செல்கிறது. வலுவான கதை இல் லாவிட்டலும் சம்பவங்களின் கோர்வையும் கருத்தாழமிக்க வசனங்களும் படத்தை ஒட்டிச் செல்கின்றன.
'அநுராகம் திரைப்படத்தில் இன்னுமொரு உருக்கமான காட்சி. கதாநாயகன் சிவராமும் சிங்கள் நடிகை அனோஜா வீரசிங்கவும். (1978)

Page 114
210 தம்பிஐயா தேவதாஸ்
விஸ்வநாதராஜாவும் தனரெத்தினமும் நன்கு நடித்துள் ளனர். கதாநாயகன் சிவராம் சில காட்சிகளில் எவ்வித உணர்ச்சியுமின்றி நடித்துள்ளார். சந்திரகலாவின் நடிப்புப் பரவாயில்லை. அனோஜா நடிக்க முயன்றுள்ளார். செல்வம் பெனான்டோ பரவாயில்லை டொன்பொஸ்கோ சிரிக்க வைக்கிறார்.
சரத் தசனாயக்காவின் இசை அமைப்பில் முத்தழகு கலாவதி பாடியுள்ள பாடல்கள் இனிமையாகவுள்ளன. யோகராஜாவின் ஒளிப்பதிவு நன்றாகவுள்ளது.
1978இல் வெளிவந்த ஆறு படங்களுக்கும் நானும் விமர்சனம் எழுதியிருந்தேன். இப்படத்தைப்பற்றி நான் எழுதிய நீண்ட விமர்சனம் தினகரனில் (14.11.1978) வெளி வந்திருந்தது.
கதாநாயகன் என்.சிவராமே காட்சி முழுவதும் நிறைந்து நிற்கிறார். சில இடங்களில் எவ்வித உணர்ச்சியுமின்றி சும்மாவே நின்று விடுகிறார். சந்திரகலா இப்படத்தில் தன் திறமையைக் காட்டியுள்ளார். குழந்தையுடன் அழும் காட்சியில் ரசிகர்களையும் அழவைத்துவிடுகிறார்.
தனரெத்தினமும் விஸ்வநாதராஜாவும் தமது பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளனர். செல்வம் பெனாண்டோ வழமையைப் போல் திறமாக நடித்துள்ளார். டொன் பொஸ்கோ சிறிது நேரம் தோன்றி மறைநதாலும் அவரது நகைச்சுவைகள் நினைவில் நிற்கின்றன.
இனிமையான ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன. முத்தழகுவும் கலாவதியும் தமக்கே உரித்தான இனிய குரலில் யாரையும் பின்பற்றாமல் நன்கு பாடியிருக்கிறார் கள். மலையகத்தின் எழில் காட்சிகளை திறம்படப் படம் பிடித்துள்ளார், யோகராஜா. கருத்தாழமிகு வசனங்களை எழுதியதுடன் துணை இயக்குநராகவும் நன்கு செயற்பட்

அநுராகம்
டிருக்கிறார், பி.எஸ்.நாகலிங்கம் சலிப்புத்தட்டாமலும் கதை, புரியும்படியும் படத் தொகுப்புச் செய்துள்ளார், துரை பவானந்தன்.
செல்வசேகரன், அமினாபேகம்,ஏ.நெயினார்,ஞெய்ரஹீம் சஹிட் போன்றோரின் குரல்கள் பாத்திரங்களுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
சமத்கார பிலிம்ஸ் 'அநுராகம் மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 42 நாட்களும் தென்கொழும்பில் (சபை யார்) 16 நாட்களும் ஓடியது.
யாழ்நகரில் (வின்சர்) 56 நாட்களும் வவுனியாவில் (நியூ இந்திரா) 20 நாட்களும் காட்சியளித்தது.
மட்டக்களப்பில் (விஜயா) 18 நாட்களும் அக்கரைப் பற்றில் (சாரதா) 14 நாட்களும் காண்பிக்கப்பட்டது.
திருகோணமலையில் (லக்சுமி) 18 நாட்களும் மூதூரில் (இம்பீரியல்) 10 நாட்களும் நின்று பிடித்தது.
மலையகத்தில் மாத்தளையில் (தாஜ்மஹால்) 30 நாட் களும் பதுளையில் (மொடொன்) 20 நாட்களும் கட்டுகள் தோட்டையில் (சீகிரி) 14 நாட்களும் ஓடியது.
அநுராகம் திரையிடப்பட்ட சமயம் ஏற்பட்ட புயலி னால் கிழக்கு மாகாணம் உட்பட பல பகுதிகளில் பட வதுல் பாதிக்கப்பட்டது. ஆனால் பொருளாதாரரீதியில் 'அநுராகம் வெற்றிப்படமே. காரணம் இப்படத்துக்கு 1% லட்சம் ரூபா மட்டுமே செலவாகியிருந்தது.
எத்தனையோ தமிழ்த் தயாரிப்பாளர்கள் பயந்து பின்னின்ற வேளையில் சிங்களவர் ஒருவர் துணிந்து இம் முயற்சியில் ஈடுபட்டார் என்றால் அவரது பெருந்தன் மையை என்னவென்று சொல்வது.

Page 115
தம்பிஐயா தேவதாஸ்
விள
ஸ். கதாநாயகி சந்திர
g Q35 mTL" La
ம்ப
ன்
af. (1978)
டத்தி
F}TLILF
கலா பாடி ஆடு
LD BETL
ம்' தி
அநுராகம்
*((()); _______-|-
├──────────────────)~=~=== = = _
|-TT---- -s.|-s.-• ¿L_)=**¿¿.
-*No.
 

22. எங்களில் ஒருவன்
இலங்கையில் புதிய தமிழ்ப்படங்கள் வெளிவரும் பொழுது அவற்றில் பல புதுமுகங்கள் அறிமுகமா வார்கள், கலைஞர்கள் மட்டுமல்ல தயாரிப்பாளர்கள்கூட, புதுமுகமாக அறிமுகமாவார்கள். 'எங்களில் ஒருவன்' திரைப்படத்திலும் பல புதிய தயாரிப்பாளர்கள் அறிமுக LDTTTT.
ஒரு முஸ்லிம் வர்த்தகருக்குச் சிறுவயதிலிருந்தே நாடகக் கலைமீது அதிக ஆர்வம். இந்த வர்த்தகர் தன் பெயரை வெளியிடாமலே, பல தமிழ் நாடகங்கள் மேடையேறு வதற்குப் பொருளாதார உதவி செய்திருக்கிறார்.
இந்த வர்த்தகரின் பெயர் வெளியே தெரியும் வகை யில் அவரை ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக அறி முகப்படுத்தினார். இயக்குநர் எஸ்.வி.சந்திரன். அப்படி அறிமுகமான அந்த வர்த்தகரின் பெயர்தான் எம்.ஜே. ஆப்தீன். அவர் தயாரித்த படத்தின் பெயர்தான், எங்களில் ஒருவன்'
எஸ்.வி.சந்திரன் ஒரு நகைச்சுவைப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எல்லாவற்றையும் ஏற்கனவே எழுதி

Page 116
24 தம்பிஐயா தேவதாஸ்
வைத்திருந்தார். அந்தப் படத்துக்கான கதாநாயகனைக்கூட மனதில் வைத்திருந்தார்.
எங்களில் a படப்பிடிப்பில் டைரக்டர் எஸ்.வி.சந்திரன் காட்சியை விளக்குகிறார். உ இயக்குனர் அன்டன்கிங்ஸ்லி, ரைக்டர் எஸ்.வி.சந்திரன், நடிகர்கள் ஏகாம்பரம், டொன் பொஸஸ்கோ,
ப்பதிவாளர் செல்லத்துரை நடிகை மணிமேகலை ஆகியோர். (1979)
எம்.ஜே. ஆப்தீனும், எஸ்.வி.சந்திரனும் ஒன்று சேர்ந்து நகைச்சுவைப் படமொன்றைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள். ‘மரிக்கார்' என்ற பெயரில் இப்பொழுது எஸ்.ராம் தாஸ் புகழ்பெற்று விளங்குகிறார். இதே பாணியை
 
 
 
 
 

எங்களில் ஒருவன் 25
1960 ஆம் ஆண்டளவில் ‘காசீம் காக்கா’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தி அதன் மூலம் புகழ்பெற்று விளங்கியவர் றொசாரியோ பீரிஸ். இவருக்குத் தம்பியொருவன் இருந் தான். றொசாரியோ பீரிஸ் நாடகங்கள் நடிக்கும்போது இந்தத் தம்பி உதவி செய்வான். றொசாரியோ பீரிஸ் காலமானதும் இந்தத் தம்பியும் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினான். இவன் சில படங்களிலும் நகைச்சுவைப் பாத்திரங்களில் தோன்றி மறைந்திருக்கிறான். அவனது பெயர்தான் டொன்பொஸ்கோ. இவரையே இப்படத்தின் கதாநாயகனாகப் போடவேண்டும் என்று டைரக்டர் சந் திரன் ஏற்கனவே தீர்மானித்திருந்தார். இவருக்கு சோடி யாகத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக நடிகையின் பெயர் *காஞ்சனா”.
இவர்களுடன் எஸ்.செல்வசேகரன், ஏ.நெய்னார், கே.ஏ. ஜவாஹர்,லத்தீப்,தர்மலிங்கம், ரெமியஸ், ஆர்.ரி.ராஜா, ராகவன், மகாராஜா. விஜயராஜா , எஸ்.கே.ராஜன்.
ஜெனிடா, ஜெயதேவி, மணிமேகலை, பூரீதேவி, ரத்னகலா, சர்மிளா என்று பல நடிக நடிகையர் தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழ் நடிகர் அலெக்சாண்டர் பெர்னாண்டோ ஆரம் பத்தில் சிறந்த நாடக நடிகராக விளங்கியவர். புகழ்பெற்ற மல்யுத்த வீரராகவும் திகழ்ந்தவர். பல சிங்களப் படங் களில் கதாநாயகனாக நடித்தவர். இவருக்கு இப்படத்தில் கெளரவ வேடம் கொடுக்கப்பட்டது.
பல படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக விளங்கிய என்.செல்லத்துரை, இப்படத்தின் பிரதான ஒளிப்பதி வாளராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். உதவி இயக்குநர் அன்ரன்கிங்ஸ்லி.
ஈழத்து ரெத்தினம் இயற்றிய பாடல்களுக்கு ஆர்.முத்து சாமி இசை அமைத்தார். ஜோசப் ராஜேந்திரன், முத்தழகு.

Page 117
26 தமயிஜயா தேவதாஸ்
குலசீலநாதன், சுஜாதா, ஜெகதேவி ஆகியோர் பாடல் களைப் பாடினர். ஒலிப்பதிவு கே.பி.பாலசிங்கம், நிர் வாகம் லால், ஒப்பனை சுப்பு, படத்தயாரிப்பில் ஆர்.செளந்தரராஜன், லாஸரஸ் அந்தணி, எஸ்.சிவசோதி, மேர்ஸி சந்திரன் ஆகியோர் உதவினர். எம்.ஜே.ஏ.புரடக்ஷன்
‘எங்களில் ஒருவன் 18.05.1979இல் திரைக்கு வந்தது.
‘எங்களில் ஒருவன்' திரைப்படத்தில் ஒரு காட்சி, அலெக்சாண்டர் பெர்னாண்டோ, ஏ. நெயினார்,டொன் பொஸ்கோ,எஸ்செல்வசேகரன், ஜவாஹர் ஆகியோர் தோன்றுகிறார்கள். (1979)
தந்தையுடன் சண்டைபிடித்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறான், ரமேஷ் என்ற இளைஞன். பூங்கா வொன்றில் பழைய நண்பன் ஈஸ்வரனைச் சந்தித்தான். இவர்கள் இருவரும் இணைந்து முன்னேற முயலுகிறார்கள்.
 
 
 
 
 

எங்களில் ஒருவன் 21 7
முதலாளி ஒருவர் இவர்களுக்கு மனமிரங்கி தனது சைவஹோட்டலில் சர்வர் வேலை கொடுக்கிறார். இவர் களது கூத்தாட்டத்தில் அடிக்கடி ஹோட்டலில் சண்டை முற்படுகிறது. ஒரு நாள் றெளடியொருவன் கடையை நொருக்கித் தள்ளுகிறான். அன்று முதல் இவர்கள் ஹோட்டலைவிட்டு விலகுகிறார்கள்.
இவர்கள் இருவரும் றைவராகவும், மெக்கானிக் காகவும் வேறு இடத்தில் வேலைக்குச் சேர்கிறார்கள். முதலாளியின் மகளுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் அந்த வேலையும் பறிபோய்விடுகிறது.
பின்பு பிரபல நடிகராக மாறியபின் பழைய காதலி யைத் திருமணம் செய்கிறான்; சுகவீனமுற்ற தந்தையையும் காப்பாற்றுகிறான்.
இதுதான் ‘எங்களில் ஒருவன்’ திரைப்படத்தின் கதைச் சுருக்கம். ரமேஷாக டொன்பொஸ்கோவும், ஈஸ்வரனாக எஸ்.செல்வசேகரனும், இன்னுமொரு சர்வர் ரவியாக ஏ.நெய்னாரும் முதலாளியாக கே.ஏ. ஜவாஹரும் தோன்றி னார்கள். அறிவிப்பாளர் எஸ்.கே. ராஜன் இப்படத்தில் அறிவிப்பாளராகவே தோன்றினார்.
இப்படம் மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 35 நாட்களும் தென்கொழும்பில் (சபையார்) 12 நாட்களும் ஒடியது.
இது வடபகுதியில் அதிக நாட்கள் ஒடவில்லை. யாழ்ப்பாணம் (ராணி), வவுனியா (பூரீமுருகன்), மன்னார் (அயின்) ஆகிய இடங்களில் தலா 15 நாட்கள் மட்டுமே
9-Ugs.
மட்டக்களப்பில் (விஜயா) 14 நாட்களும், கல்முனை யில் (கமல்) 10 நாட்களும், களுவாஞ்சிக்குடியில் (சாரதா) 7 நாட்களும் ஓடியது. திருகோணமலையில்

Page 118
218 தம்பிஐயா தேவதாஸ்
(சரஸ்வதி) 18 நாட்களும், ஹட்டனில் (விஜிதா) 10 நாட்களும் ஓடியது.
இப்படத்தைப்பற்றி, ‘சிந்தாமணி ' (20.05.1978) 'ஈழத்துத் திரைவானில்' என்ற தலையங்கத்தின் கீழ் விமர் சனம் எழுதியது.
. . . . . மூலக்கதை, திரைக்கதை வசனம், படத்தொகுப்பு, நெறியாள்கை, ஆகிய பொறுப்புக்களை எஸ்.வி.சந்திரன் ஏற்றிருக்கிறார். இலங்கையில் தேர்ந்த கலைஞர்கள் இருக் கிறார்கள் என்பதற்கு இப்படம் ஒரு எடுத்துக்காட்டு. நகைச்சுவையை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். டொன் பொஸ்கோ, செல்வசேகரன் பாத்திர முணர்ந்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அழுதழுதே சிரிக்க வைக்க முனைகிறார்கள். அவர்கள் அழுகின்ற சில கட்டங்களில் நாம் தலையில் அடித்துக் கொள்கிறோம்.
சைவ ஹோட்டல் முதலாளியாக நடிக்கும் ஜவாஹரும் டீ மேக்கராக வரும் நெய்னாரும் தாம் தேர்ந்த நடிகர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள்.
சண்டைகள், கிளப் நடனங்கள் இல்லாமல், குடும் பத்தின் சகல அங்கத்தினரும் பார்த்து மகிழக்கூடிய விதத்தில் சந்திரன் படத்தை இயக்கியிருக்கிறார்.
ஆர்.முத்துசாமி இசை அமைத்த பாடல்கள் கேட்கக் கூடியனவாக இருக்கின்றன. என்.செல்லத்துரை புதிய கோணங்களில் கமறாவைக் கையாண்டிருக்கிறார், என்று அந்த விமர்சனம் அமைந்திருந்தது.
இந்தப் படத்தைப் பற்றி தினகரனில் (12.06.79) நானும் இப்படி விமர்சனம் எழுதினேன்.
. . . . . . விருப்பு வெறுப்பற்ற நடிகர் தேர்வில் இப் படத்தில் 25க்கு மேற்பட்ட நடிக நடிகையர் தோன்று

எங்களில் ஒருவன் 2夏9
கிறார்கள். டொன் பொஸ்கோ ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவையை அள்ளி வீசுகிறார். அவரது புள்ளி மீசையுடன் கூடிய முகபாவம் சிரிப்பை உண்டாக்குகிறது. இவரது சிரிப்புப் போதாதென்று செல்வசேகரனும் நெய் னாரும் சேர்ந்து கும்மாளமடிக்கிறார்கள்.
செல்வசேகரன் சாம்பார் வாளியை முதுகுப்புறமாகப் பிடித்துக் கொண்டு பொஸ்கோவுடன் உரையாடுவதும், நெய்னார் தேநீர் அடிப்பதும் அவர்களது நல்ல நடிப்புக்கு உதாரணங்களாகும்.
தந்தையாகத் தோன்றும் ஏகாம்பரத்திற்கு நடிப்பதற்குச் சில காட்சிகளே கிடைத்தாலும் அத்தனை காட்சிகளிலும் தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகன் என்பதை நிறுவு கிறார். அதனால்தான், அவருக்கு அதிகமான 'குளோஸ்அப் காட்சிகள் கிடைக்கின்றன. ஏகாம்பரத்தின் மனைவி யாகத் தோன்றும் மணிமேகலை தனது பங்கைத் திறம்படச் செய்கிறார். புதுமுகம் காஞ்சனா காதல் காட்சிகளில் சுடர் விடுகிறார். கே.ஏ. ஜவாஹர் தனது பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்துள்ளார். அவரது அடம்பிடித்த மனைவி யாக ஜெயதேவி தோன்றுகிறார்.
அலெக்சாண்டர் பெர்னாண்டோ, ஜெனிடா ஆகி யோர் கெளரவ நடிகர்களாகத் தோன்றுகிறார்கள். அலெக்சாண்டருடன் மோதுவதற்கென்றே லத்தீப் தோன்று கிறார்.
எம்.எஸ்.ஈஸ்வரன், விஜயராஜா, சிதம்பரம் போன்ற நடிகர்களுக்கு நடிக்க அதிக சந்தர்ப்பங்கள் கிடைக்காவிட் டாலும் எதிர்காலத்தில் சுடர்விடுவார்கள் என்பதற்கு அவர்களது நடிப்பாற்றல் சான்று பகருகின்றது. இயக்குநர் சந்திரனே படத்திலும் டைரக்டராகத் தோன்றுகிறார்.
ஆர்.முத்துசாமி படத்துக்கு இசை அமைத்துள்ளார். அவருக்கு அவரது மகன் எம்.மோகன்ராஜும் உதவி

Page 119
220 தம்பிஐயா தேவதாஸ்
யிருக்கிறார். ஜோசப் ராஜேந்திரன், சுஜாதா பாடியுள்ள சிலைமேனியே' என்ற பாடலும் முத்தழகு, ஜெகதேவி பாடியுள்ள ‘உன்னைத் தேடி வந்ததொரு என்ற பாடலும் இனிமையாக இருக்கின்றன. குலசீலநாதன் குழுவினர் பாடும் பாடலில் நடிகர் திலகம் போலே நண்பர் நடிக் கணும். மக்கள் திலகம் போலே அள்ளிக் கொடுக்கணும் என்ற வரிகள் நகைச்சுவை மிக்கவை.
பாடல்களை ஈழத்து ரெத்தினம் இயற்றியுள்ளார். ஒலிப் பதிவை கே.பாலசிங்கம் கவனித்திருக்கிறார். என்.செல்லத் துரை என்ற புதியவர் (தமிழ்த்திரை உலகுக்கு) ஒளிப் பதிவைத் திறம்பட செய்துள்ளார். கொழும்பின் புதிய கட்டடங்கள்மீது அவரது கமராக் கண்கள் சென்று வரு கின்றன. அன்ரன் கிங்ஸ்லி என்ற இளைஞர் நெறியாள் கையில் சந்திரனுக்கு உதவியிருக்கிறார்.
குறைகள் சில இருப்பினும் நம்நாட்டுப் படைப்பு என்ற தேசிய உணர்வுடன் பார்த்து மகிழக்கூடிய படம் ‘எங் களில் ஒருவன். இலங்கைத் தமிழ்த்திரைப்பட வரலாற் றுக்கு மேலுமொரு படத்தைத் தயாரித்தளித்த கலைப்பிரி யர்கள் எம்.ஜே. ஆப்தீன், ஆர்.செளந்தரராஜன், லாசரஸ் அந்தணி, எஸ்.சிவசோதி , மேர்ஸி சந்திரன் ஆகியோ ருக்குப் பாராட்டுகள்’ என்று அந்த விமர்சனத்தில் எழுதி யிருந்தேன்.
உண்மைதான். தயாரிப்பாளர்களுடன் எஸ்.வி.சந்திர னும் பாராட்டுக்குரியவரே! ஆனால், இப்படமும் அதிக நாட்கள் ஓடாதது கவலைக்குரியதே.

23. ‘மாமியார் வீடு'
1978ஆம் ஆண்டளவில் கூட்டுத்தயாரிப்பு என்ற பெயரில் பல தென்னிந்திய சினிமாக்காரர்கள் இலங் கைக்கு வரத் தொடங்கினார்கள். பைலட் பிறேம்நாத் படத்தை இங்கு பிடிப்பதற்குப் பெரிய பட்டாளமே வந்து சேர்ந்துவிட்டது.
இலங்கைக் கலைஞர்களுக்கு அவர்கள் வாய்ப்பு வழங்க வில்லை என்று உள்ளூர்க் கலைஞர்கள் சிலர் போர்க் கொடி உயர்த்தினர்.
அவர்கள் இங்குள்ள சிங்கள நடிகை மாலினி பொன் சேகாவுக்கு மட்டும் ஓரளவு வாய்ப்புக் கொடுத்தார்கள்.
அந்த வகையில் மாலினி பொன்சேகா, கீதா குமார சிங்க போன்ற நடிகைகள் தமிழ்நாட்டிற்குப்போய் நடித்துக் காட்டிவிட்டு வந்தார்கள்.
ஆனால், இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இலங் கைத் தமிழ் நடிகை ஒருவர் தென்னிந்தியத் தமிழ்ப்படத்தில் நடித்துக் கொடிகட்டிப் பறந்திருக்கிறார். யாழ்ப்பாணத் தைச் சேர்ந்த இந்த நடிகை தமிழ்நாடு சென்று நீச்சல் உடையிலே நடித்துவிட்டு வந்துவிட்டார். அவரின் பெயர்

Page 120
: தம்பிஐயா தேவதாஸ்
தான் கே.தவமணிதேவி. "எழிலான தோற்றம் எடுப்பான சரீரம். இயற்கையிலேயே தவமணிக்கு. இப்படி அப் போதய ரசிகர்கள் விமர்சித்தார்களாம்.
'மாமியார்விடு திரைப்பட இயக்குநர் கே.வெண்கட்
அங்கு போன கையோடு தவமணிதேவி பத்திரிகை களுக்குப் பேட்டி கொடுத்தார். பேட்டியின் போது இலங் கையிலேயே எடுக்கப்பட்ட தனது போட்டோவைப் பிரசுரத்துக்காகக் கொடுத்தார். அந்தப் போட்டோவில் தவமணிதேவி நீச்சலுடையில் நின்று புன்னகை புரிந்தார்.
தவமணி நீச்சலுடைக் கவர்ச்சிப் படத்தை வெளியிட்டு அதன் கீழே "பதிவிரதை அகல்யாவாக நடிக்க இலங்கையி லிருந்து வந்திருக்கும் தவமணிதேவி குடும்பப் பெண்கள் தாராளமாகச் சினிமாவில் நடிக்கவேண்டும் என்று கூறுகி றார்" என ஒரு பத்திரிகை குறிப்பு எழுதி வெளியிட்டதாம்.
இது நடந்தது 1936ஆம் ஆண்டில் ஆனால்,1978ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இரு நடிகைகளும் ஒரு
 

மாமியார் வீடு
நடிகரும் இலங்கை வந்து இங்குள்ள நடிகர்களுடன் நடித்து விட்டுச் சென்றார்கள்.
வனமோகினி இந்தியத்திரைப்படத்தில் இலங்கை நடிகை தவமணி தேவி.(1941)
புங்குடுதீவில் பிறந்த செல்லையா மாஸ்டர், சங்கானையில் கல்யாணம் செய்தார். இவர்களது மூத்த மகன், சினிமா ஆசை காரணமாக இந்தியாவுக்கு ஓடி னான். அங்கு கதை வசனம் எழுதி, டைரக்டராகிப் பின்பு தயாரிப்பாளராகவே உயர்ந்து விட்டான். அங்குள்ள நடிகை ஒருவரையும் திருமணம் செய்துகொண்டார்.
அந்தத் தயாரிப்பாளரின் பெயர் வி.சி. குகநாதன். அந்த நடிகையின் பெயர் ஜெயா. இந்த நடிகைதான் இலங்கையில் படம் நடிக்க வந்தார். இவருடன் மீரா என்ற புதுமுகம், பத்மபூரீ எஸ்.வி. சுப்பையாவும் இலங்கைக்கு வந்தார்கள்.

Page 121
224 தம்பிஐயா தேவதாஸ்
மலையக இளைஞன் ஒருவனுக்கு சினிமா மீது தணி யாத காதல். அதனால், 1955இல் இந்தியாவுக்கு ஓடி னான். தான் எழுதி வைத்திருந்த கதையைக் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனிடம் காட்டினான். கலைவாணரோ, தன் வீட்டு அலுமாரியில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த கதைகளைச் சுட்டிக்காட்டி ‘இவைகளை வைத்திருக்கவே இடம் போதவில்லை. இவற்றுக்கிடையில் உமது கதையை எங்கே வைப்பேன்? என்று திருப்பிக் கேட்டார்.
ஆனாலும், இளைஞனின் புத்திபூர்வமான உரை யாடலில் மயங்கிய கலைவாணர் அதை வாசித்துப் பார்த் தார். கதை பிடித்துவிடவே கலைவாணர் அதை மேடை நாடகமாகவே போட்டுவிட்டார். அந்தக் கதையின் பெயர் தான் ‘மாமியார் வீடு. அந்த இளைஞனின் பெயர்தான் கே.வெங்கடாசலம்.
இந்த வெங்கடாசலம் சென்னையில் டைரக்டர் ஏ.எஸ். நாகராஜனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து கொண்டார். அவரின் சிபாரிசுக் கடிதத்துடன் இலங்கைக்கு வந்த வெங்கடாசலம் நாயகத்தின் ஸ்ரூடியோவில் உதவி இயக்குநராகச் சேர்ந்துகொண்டார்.
1966இல் 'மஹறேஹமுவூஸ்திரிய' என்ற சிங்களப் படத்தைத் தனியே இயக்கினார். பின்பு சிங்களத் திரை உலகில் புகழ்பெற்ற இயக்குநராக உயர்ந்தார். தனது பெயரை 'கே.வெண்கட் என்று சுருக்கிக் கொண்டார்.
இந்த வெண்கட்டிற்கு நீண்ட நாட்களாகவே இலங்கை யில் தமிழ்ப் படமொன்றை இயக்கவேண்டும் என்று ஆசை. அந்த ஆசைக்கு வழிசமைத்துக் கொடுத்தார்கள் எம்.பி.எம். ரமீஸ், எம்.பி.எம்.ஸமீர் என்ற சகோதரர் கள். ‘மாமியார் வீடு' என்ற பெயரில் ஏற்கனவே என்.எஸ். கிருஷ்ணனிடம் கொடுத்த கதையைத் திரைக்கு ஏற்றவாறு வசனம் எழுதி வைத்திருந்தார் வெண்கட்.

மாமியார் வீடு 225
இந்தப் படத்தில் இந்திய நடிகர்களையும் இலங்கை நடிகர் களையும் ஒப்பந்தம் செய்யலாம் என்று வெண்கட்டும் தயாரிப்பாளர்களும் தீர்மானித்துக் கொண்டார்கள்.
ழாமியார் வீடு' திரைப்படத்தில் இந்திய ಙ್ಗಣತ್ ஜெயா குகநாதனும், இலங்கை நடிகர் எம்.உதயகுமாரும். (1979)

Page 122
226 தம்பிஐயா தேவதாஸ்
யாழ்ப்பாணம் மாதகல்லைச் சேர்ந்த சிவகுமாரன் என்ற இளைஞன் நல்ல முகவெட்டு உடையவர். இவரைத் தன் நாடகங்களில் நடிக்க வைத்தார் எம். உதயகுமார். வெண்கட் கதாநாயகன் ஒருவரைத் தேடியபோது அவரிடம் சிவகுமாரனை அறிமுகப்படுத்தினார் உதயகுமார். வெண்கட் இவரையே கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார்.
இவர்களுடன் எம்.உதயகுமார், எஸ்.ராம்தாஸ், எஸ்.என்.நடராஜா, எஸ்.செல்வசேகரன், இரா.பத்ம நாதன், வீ.சண்முகராஜா, முத்துலிங்கம், என்.மெண்டிஸ், சாந்திலேகா, பி.எஸ்.பெரேரா போன்ற நடிகர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
திரைக்கதை வசனம், ஆகிய பொறுப்புகளை கே.வெண்கட் ஏற்றுக்கொண்டார். ஒளிப்பதிவை ஜே.யோகராஜா கவனித்தார். படத்தொகுப்பு லோகநாத்.
ஈழத்து இரத்தினம், சண்முகலிங்கன், வெண்கட் ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு எம்.கே. றொக்சாமி இசை அமைத்தார். வீ.முத்தழகு, ஜோசப் ராஜேந்திரன், நூர்ஜான், சண்முகலிங்கன், கலாவதி, திருமதி றொக்சாமி ஆகியோர் பாடினர். ஒலிப்பதிவை மேவின் பெயின்ஸ், சுப்பிரமணியம் ஆகியோர் கவனித்தனர்.
நடனம் றொனால் பெனான்டோ. ஒப்பனை-சுப்பு. படம் எஸ். பி.எம். ஸ்ரூடியோவில் வேகமாக வளர்ந்தது.
ஷோலே என்ட ரெய்மன்ஸ் ‘மாமியார் வீடு' 25.08.1979இல் திரையிடப்பட்டது. குடிப்பழக்கத்தி னால் குட்டிச்சுவராகும் ஒரு குடும்பத்தின் கதையே திரைப் u-b.
‘மித்திரன்’ வாரமலரில் (16.09.79) வழமையைப் போல் 'லக்சுமி விமர்சனம் எழுதினார்.

மாமியார் வீடு 227
..'பைலட் பிறேம்நாத் கூட்டுத் தயாரிப்பைத்
தொடர்ந்து பரபரப்பில் உருவான படங்களில் ஒன்றுதான்
‘மாமியார் வீடு. எனவே, தமிழக நட்சத்திரங்களின்
கவர்ச்சி ‘மாமியார் வீட்டில் மேலோங்கி நிற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதே.
.குடியினால் விளையும் கேடுகளை ஒரளவு புலப் படுத்த முனையும் ‘மாமியார் வீடு' கதையில் ஒன்றும் புதுமையில்லை. ஆனாலும், நடிகர்கள் தமது நடிப்பினால் கதையைக் காப்பாற்றியிருக்கிறார்கள். எஸ். வி.சுப்பை யாவுக்குக் குடிகார அண்ணன் பாத்திரம். கச்சிதமாக நடித்திருக்கிறார். இவருக்கு இணையாக எஸ். ராம்தாஸ் நடித்திருக்கிறார். இடைக்கிடை சிரிக்கவும் வைக்கிறார். சுப்பையாவின் தங்கையாகத் தோன்றும் ஜெயாவும் தனது பாத்திரத்தை நன்றாகச் செய்திருக்கிறார்.
மீராவுக்குக் கவர்ச்சி வேடம் . இடையிலே வந்து போகும் அவருக்கு நடிக்கச், சந்தர்ப்பமில்லை.
இப்படத்தின் மூலம் தமிழ்ப் படத்துறைக்கு ஒரு நல்ல கதாநாயகன் கிடைத்திருக்கிறார். அவர்தான் சிவகுமாரன். நல்ல முகவெட்டும், எடுப்பான தோற்றமும் கொண்ட அவர், சுப்பையாவின் தம்பியாக நடிக்கிறார். ரசிகர் களைக் கவரும் விதத்தில் நடிக்கும் அவர், சண்டைக் காட்சியில் சோபிக்கிறார். உதயகுமாரும் தனது நடிப்பில் சோடை போகவில்லை. செல்வசேகரன் சில காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார்.
...றொக்சாமியின் இசை அமைப்பில் 'இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன்' என்று ஜோசப் ராஜேந்திரன் பாடும் பாடல் இனிமையாக இருக்கிறது. 'பூத்திருக்குது என்ற பாடலைக் கலாவதி சின்னச்சாமி பாடியிருக்கிறார். தாலாட்டுப் பாடல் ஏனோ எடுபடவில்லை.

Page 123
228 தம்பிஐயா தேவதாஸ்
இதுவரை இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் இது சற்று மாறுபட்டதாக இருக்கிறது. தமிழ கத்துப் படங்களைப் பார்த்து ரசித்துப் பழகிப்போன நம் நாட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப டைரக்டர் கே.வெண்கட் ‘மாமியார் வீட்டை உருவாக்கியிருக்கிறார், என்று அந்த விமர்சனம் அமைந்திருந்தது.
மாமியார் வீடு' திரைப்படத்துக்கான பாடல் ஒலிப்பதிவின்போது பமைப்பாளர் எம்.றெர்க்சாமி, பாடகர் ஜோசப் ராஜேந்திரன், ப்ாடகி நூர்ஜகான் ஆகியோர். (1979)
நான் எழுதிய விமர்சனமும் தினகரனில் (11.09.1979) வெளிவந்திருந்தது.
 
 
 
 

மாமியார் வீடு 229
'.இயக்குநர் வெண்கட் நமது ரசிகர்களின் சுவை யைப் புரிந்து கொண்டு அவர்களை வெல்லுவதற்காக 3 தென்னிந்திய நட்சத்திரங்களை ஏவிவிட்டிருக்கிறார். அவர்கள் பெயர்பெற்ற இந்திய நட்சத்திரங்களாக விளங் கியபொழுதும் அவர்களுக்குள்ளேயே இந்த இயக்குநர் அமிழ்ந்துவிடவில்லை. நம்நாட்டு சிவகுமாரனே படம் முழுவதும் நிறைந்திருக்கிறார்.
கதை வசனத்தை வெண்கட்டே எழுதியிருக்கிறார். இலங்கை ரசிகர்களின் மனோ நிலையையும் பழக்கத்தை யும் மனதில் கொண்டு கதை இலகுவாக்கப்பட்டிருக்கிறது. வசனங்கள் சில தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நடிகர் எம்.உதயகுமார் கண்டெடுத்த சிவகுமாரன்’ என்ற வைரத்தை வெண்கட் நன்றாகப் பட்டை தீட்டியிருக்கிறாள். அந்த அளவுக்கு அவர் நடிப்பில் பிரகாசிக்கிறார்.
எஸ்.வி.சுப்பையா தனது பாத்திரத்தை உணர்ந்து திற மாக நடிக்கிறார். அவரைத் தென்னிந்தியப் படங்களில் அப்பாவாகப் பார்த்த நாங்கள் இப்படத்தில் இளைஞ ராகப் பார்க்கிறோம். இலங்கையின் நடிகைகள் பஞ்சத் தைத் தென்னிந்திய ஜெயாவும் மீராவும் ஈடுசெய்கிறார்கள். ராம்தாஸ் ஒரே நேரத்திலேயே ஹாஸியப் பாத்திரத்தையும் வில்லன் பாத்திரத்தையும் ஏற்றிருக்கிறார். ஆனால், எமது மனதில் நிற்பது நகைச்சுவைப் பாத்திரம்தான்.
இது எம்.உதயகுமார் நடித்திருக்கும் மூன்றாவது தமிழ்ப் படமாகும். அந்த வகையில் முன்னைய படங் களைவிட, இதில் திறம்பட அமைதியாக நடித்திருக்கிறார். செல்வசேகரனுக்கு அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும் தோன்றும் காட்சிகளிலெல்லாம் ரசிகர்களைச் சிரிக்க வைக்கிறார். சிங்கள நடிகை சாந்திலேகா அசல் தமிழ்ப் பெண்போல் நன்றாக நடித்திருக்கிறார். இரா.பத்மநாதன் இடைக்கிடை வந்து போகிறார்.

Page 124
230 தம்பிஐயா தேவதாஸ்
படத்தின் அடுத்த வெற்றி ஜே.யோகராஜாவின் அருமையான படிப்பிடிப்பாகும். ட்றெயின் பிரயாணக் காட்சியொன்றே நல்ல உதாரணமாகும். வயல்கள், குடிசைகள், மாடிகள் போன்றவற்றை ட்றெயினில் இருந்த வாறே பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது.
వk ”ܐ
- 霸 ‘மாமியார் வீடு திரைப்படத்தில் 蠶 ஒரு காட்சி. இலங்கை நடிகர் சிவகுமாரும் இந்திய நடிகை மீராவும் தோன்றுகிறார்கள். (1979)
எம்.கே.றொக்சாமியின் இசையமைப்பில் இனிமை யான 5 பாடல்கள் உருவாகி இருக்கின்றன. வெண்கட் இயற்றிய 'இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன்' என்ற பாடலை ஜோசப் ராஜேந்திரன் இன்பமாகவும்
 
 
 
 
 

ortáluuntíř 6(6) 23.
துன்பமாகவும் பாடியிருக்கிறார். படம் முடிந்து வெளி வரும்பொழுது, இரசிகர்கள் இந்தப் பாடலை முணு முணுத்துக் கொண்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு ஜோசப் ராஜேந்திரன் தன் திறமையை வெளிக்காட்டி யிருக்கிறார்.
ஈழத்து இரத்தினம் எழுதிய 'பூத்திருக்கு காய்த்திருக்கு என்ற பாடலைக் கலாவதி பாடியிருக்கிறார். காவடிப் பாடலை சண்முகலிங்கம் இயற்றியிருக்கிறார்.
தாயும் தங்கையும் சுப்பையாவை அடிக்கும் காட்சி அருவருப்பாக இருக்கிறது. எது எப்படியோ முந்திய இலங்கைப் படங்களைப் பார்த்துவிட்டு வெளியே வரும் பொழுது ஏற்படும் ஒருவித ஏமாற்ற வேதனை, இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வரும்பொழுது ஏற்படவில்லை.
...நம்நாட்டுச் சினிமா வளர்வதற்கு நமது ரசிகப் பெருமக்களை மடக்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. அதற் காக ஒரு சில தென்னிந்திய நடிகர்களை இறக்குமதி செய்து நடிக்க வைப்பது நல்லவழிதான். இந்த வளமான வழியை முதலில் காட்டித்தந்த இயக்குநர் வெண்கட்டுக்கும் தயாரிப்பாளர் ரமீஸ், சமீஸ் சகோதரர்களுக்கும் எமது பாராட்டுகள்’ என்று விமர்சனம் எழுதினேன்.
கே.வெண்கட் மேலும் பலவித தமிழ்ப் படங்களை உருவாக்குமுன்பே இளவயதில் காலமானார். 1983 கலவரத்தில் அவர் அநியாயமாகக் கொல்லப்பட்டார்.

Page 125
24. 'நெஞ்சுக்கு நீதி'
மூன்று நாடுகளை ஒன்றிணைத்த படம்
‘பைலட் பிறேம்நாத் படத்துக்காகப் பல தென் னிந்தியக் கலைஞர்கள் இலங்கைக்கு வந்து சென்றனர். ‘மாமியார் வீடு' திரைப்படத்துக்காக எஸ்.வி.சுப்பையா, ஜெயா, மீரா போன்றோர் வந்து போனார்கள். இப்படித் தென்னிந்தியக் கலைஞர் ஒருவர் இருவரை இறக்குமதி செய்து இலங்கைப் படத்தில் நடிக்கவைத்தால் ஓரளவு வெற்றிபெறலாம் என்ற கருத்து இங்கு பலர் உள்ளங் களில் உருவாகியது.
இப்படியான எண்ணம் இலங்கையில் உள்ள கலைத் தம்பதி ஒன்றுக்கும் உருவாகியது. இவர்கள் ஏற்கனவே இலங்கையில் ஒரு தமிழ்ப் படத்தையும் அதன்பின் ஒரு சிங்களப் படத்தையும் தயாரித்த அனுபவசாலிகள். இலங் கைத் தமிழ்ச் சினிமாவை ஆரம்பித்தவர்களின் பெயர் களில் இவர்கள் பெயர்களும் அடங்குகின்றன. அந்தக் கணவனின் பெயர் சுண்டிக்குளி சோமசேகரன்; அவரது மனைவியின் பெயர் மாலினிதேவிசோமசேகரன்.பூரீதர் தன் "வெண்ணிற ஆடை திரைப்படத்தில் இரண்டு புது முகங்

நெஞ்சுக்கு நீதி -22 دس.......................................سس
களைக் கதாநாயகர்களாக அறிமுகப்படுத்தினார். ஒருவர் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா, மற்றவர் நடிகர் பூரீகாந், புதிய அலையாக வந்த 'அவள் என்னும் திரைப் படத்தில் இவர் ஒருமாதிரியாக நடித்திருந்ததால் இவருக் குக் கவர்ச்சி வில்லன்' என்ற பெயர் கிடைத்தது. பூரீகாந் மலேசியாவுக்குப் போயிருந்த சமயம் மாலினிதேவியைச் சந்தித்தார். மாலினிதேவி தயாரிக்க இருக்கும் இலங்கைத் தமிழ்ப் படத்தில் பூரீகாந் நடிக்க ஒப்புக்கொண்டார்.
அப்பொழுதே மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தொலைக்காட்சிச்சேவை சிறந்து விளங்கியது. மலேசி யாவில் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்று விளங்கினார் ஒரு நடிகர். அவர் பெயர் சிவாஜி ராஜா. அவரும் இலங்கைப் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். இவர்களுடன் சிங்களத் திரை உலகில் சிறந்த ஜோடியாக விளங்கிய றோய் டி சில்வாவும் சுமனா வும் இப்படத்தில் நடிக்க முன்வந்தார்கள்.
இவர்கள் மட்டுமல்ல ஏ.ரகுநாதன், டீன்குமார், கே.ஏ. ஜவாஹர், எஸ்.ராம்தாஸ், எஸ்.ராஜகோபால், எம்.வீ.பாலன், கலைச்செல்வன், விஸ்வநாதராஜா, டொன் பொஸ்கோ, ஜோபுநஸிர், விஜயராஜா, தனரெத்தினம் , பரீனாலை, ஹெலன்குமாரி, சந்திரகலா, யோகா தில்லைநாதன், ராஜலக்சுமி, மானல்வானகுரு ஜெயதேவி என்று சினிமா அனுபவம் பெற்ற பெரிய பட்டாளமே நடிகர், நடிகைகளாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்,
‘இந்த நாட்டின் திறமையான கலைஞர்கள் பலரை ஒன்று சேர்த்து இப்படத்தை உருவாக்குகிறேன்' என்று சொன்னார் இயக்குநர் சுண்டிக்குளி சோமசேகரன். தயாரிப்பு இவரது மனைவி மாலினிதேவி சோமசேகரன். தயாரிப்பில் இவர்களுக்கு உதவியாக விளங்கினார் லோர்ட் எஸ்.கந்தசாமி.

Page 126
234 தம்பிஐயா தேவதாஸ்
இவர்களது முதலாவது தயாரிப்பான 'டைக்ஷி டிறைவருக்குக் கதைவசனம் எழுதிய பேராதனை ஏ. ஜுனைதீனே இப்படித்துக்கும் கதைவசனம் எழுதினார். எம்.ஏ.கபூர் ஒளிப்பதிவு செய்த ஏழாவது தமிழ்த் திரைப் படம் இது.
'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் தயாரிப்பாளர் திருமதி மாலினிே
ாம்சேகரன், கதை வசன கர்த்தா பேராதனை ஏ.ஜுனைதீன், டைரக்டர் சுண்டிக்குளி சோமசேகரன் ஆகியோர்.
 
 
 

நெஞ்சுக்கு நீதி 235
பல பாடல்களுக்கு இசை அமைத்து, பல பாடகர்களை அறிமுகப்படுத்தி, பல சிங்களப் பாடல்களின் இசைத் தட்டுகளை உருவாக்கிவந்தார், தமிழ் இளைஞர் ஒருவர். அவர் 'கலியுககாலம்' என்ற டப் படத்துக்கும் இசை அமைத்தார். பின்நாளில் நடிகர் தியாகராஜன். ஸ்வப்னா போன்ற நடிகைகளை வரவழைத்து “இளையநிலா என்ற படத்தைத் தயாரித்தார். இளையநிலாவுக்கு இவரே இசை அமைத்தார். இப்படத்துக்கு இவர் இசை அமைத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.பி.சைலஜா ஆகியோர் பாடிய பாடல்களின் இசைத்தட்டு இப்பொழுதும் இலங்கை வானொலி நிலையத்தில் இருக்கிறது.
அந்த இசை அமைப்பாளர்தான் 'சண்’ என்று அன புடன் அழைக்கப்படும் சண்முகமாவார். 'நெஞ்சுக்கு நீதி' படத்திலும் ஈழத்து ரெத்தினம், சாது ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு 'சண் இசை அமைத்தார்.
முத்தழகு, கலாவதி, நித்தி கனகரெத்தினம், சுஜாதா ஆகியோர் பாடல்களைப் பாடினர்.
இலங்கையில் தமிழ்ப்படங்கள் உருவாகுவதை இந் தியப் படங்களுடன் தொடர்புடைய பலர் பல காலமாக எதிர்த்து வந்திருக்கிறர்கள். இந்த எதிர்ப்பாளர்கள் இலங் கையிலும் இருந்தார்கள், இந்தியாவிலும் இருந்தார்கள்.
பூரீகாந் இலங்கைக்கு வந்து படம்நடிப்பது தென் னிந்தியாவிலுள்ள பிரபல நடிகர் ஒருவருக்குப் பிடிக்க வில்லையாம்.
பூரீகாந்தின் இலங்கை விஜயத்தை அந்த நடிகர் பல தடவை தடுத்துப் பார்த்தார். ஆனாலும் பூரீகாந் இலங் கைக்கு வந்துவிட்டார். வந்து நடித்துவிட்டு விரைவாக திரும்ப வேண்டியிருந்தது. அவர் போய் விட்டார். படத் தில் அவர் நடித்த பாத்திரத்துக்குக் குரல் கொடுக்க மீண் டும்வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார் மீண்டும் வரவில்லை.

Page 127
E. தம்பிஐயா தேவதானப்
பின்பு பூரீகாந்தின் பாத்திரத்துக்கு வானொலி அறி விப்பாளர் எஸ்.நடராஜசிவம் குரல் கொடுத்தார். பல சிரமங்களுக்கு மத்தியில் பல வருடங்களுக்குப் பின்பு 'நெஞ்சுக்குநீதி 04.04.1980இல் இலங்கையில் திர்ை யிடப்பட்டது.
'நெஞ்சுக்கு நீதி' படத்துக்கு இசை அமைத்த பிரபல இசை அமைப்
பாளர்" சன்'"
மூன்று குடும்பங்களைச் சுற்றி கதை நகர்கிறது. ஒரு குடும்பத்தில் வலிப்பு நோயுள்ள விஸ்வநாதராஜா
வும் அவரது தங்கை பரீனாலையும் இருக்கிறார்கள்.
மற்றது பணக்காரக் குடும்பம். ஏ.ரகுநாதன் மூத்த அண்ணன். இவருக்கு பூரீகாந் தம்பி. இவர்களுக்கு தங்கை
LITT.
மூன்றாவது குடும்பம் பெரியது. தந்தை கே.ஏ.ஜவாஹர்.
ஏழைப்பெண் பரீனாலையைப் பணக்காரப் பையன் டீன்குமார் காதலிக்கிறார். பரீனாலை தாயாகிறாள்.
 

நெஞ்சுக்கு நீதி 骂J富
விஸ்வநாதராஜா, டீன்குமாரின் குடும்பத்தோடு கடைசிவரை போராடி தனது தங்கையை டீன்குமாருக்கு மனமுடித்துக் கொடுக்கிறார்.
邑
இநஞ்சுக்கு நீதி' திரைப்படத்தில் கலைச்செல்வனும் ஏ.ரகுநாதனும் இவ்வ்ாறு தோன்றுகிறார்கள்' 19801
இதுதான் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும்.

Page 128
ዷ23 8 தம்பிஐயா தேவதாஸ்
இத்திரைப்படத்தைப் பற்றி ஏ.மதுரைவிரன் ‘தின கரனில் விமர்சனம் எழுதினார்.
நல்ல கதையைத் தந்த திரைக்கதை வசனகர்த்தா ஏ. ஜுனைதீன் பாராட்டுக்குரியவர். ஆனால், நல்ல கதையை நல்ல முறையில் படமாக்கத் தவறிவிட்டார்கள். கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறந்த முறையில் நடிகர் நடிகைகளைத் தேர்ந்தெடுத்திருப்பது குறித்து, டைரக்டர் சோமசேகரனைப் பாராட்டவேண்டும். எல்லா நடிகர் நடிகைகளும் தங்கள் பாத்திரங்களைத் திறம்படச் செய் துள்ளனர்.
இவ்வரிசையில் விஸ்வநாதராஜா, பரீனாலை, பூரீகாந், ஏ.ரகுநாதன், யோகா தில்லைநாதன், கலைச்செல்வன், டீன்குமார், ராஜகோபால், ஜவாஹர், ராம்தாஸ், ஜோபு நஸிர் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.
மலேசிய நடிகர் சிவாஜிராஜாவின் காட்சிகளை நீக்கி, தென்னிந்திய நடிகர் பூரீகாந் சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் அதிகரித்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
எம்.ஏ.கபூர் தனது ஒளிப்பதிவுப் பணியைத் திறம்படச் செய்துள்ளார்.
எஸ்.ராம்தாஸ், எம்.வீ.பாலன் தோன்றும் நகைச் சுவைக் காட்சிகளை ரசிக்கலாம். பெரேரா, லிலியன், டொன்பொஸ்கோ போன்றோரும் நகைச்சுவைக் காட்சி களில் தோன்றுகின்றனர். ஒரு பெண்ணின் இடுப்பின்மீது குரங்குபோல் தாவிக்கொண்டு கொஞ்சுவது என்ன நகைச்சுவையோ?
இப்படியான பிரமாண்டமான படைப்பை உரு வாக்கிய டைரக்டர் சுண்டிக்குளி சோமசேகரன் பாராட் டுக்குரியவரே என்று அந்த விமர்சனம் அமைந்திருந்தது.

நெஞ்சுக்கு நீதி 239
இப்படம் மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 28 நாட்களும், தென்கொழும்பில் (சபையார்) 14 நாட்களும் ஓடியது. யாழ் நகரில் (ராணி) 22 நாட்களும், வவுனி யாவில் (நியூஇந்திரா) 14 நாட்களும் ஓடியது. மட்டக்களப்பில் (ராஜேஸ்வரா) திருகோணமலையிலும் (பூரீகிருஷ்ணா) தலா 14 நாட்கள் ஓடியது.
'நெஞ்சுக்கு நீதி படப்பிடிப்பின்போது கதை வசனகர்த்தா ஏ.ஜூனை தீன் காட்சியை விளக்குகிறார். அவருடன் ஜோபு நசீர், ஒளிப்பதி வாளர் எம்.ஏ. கபூர், மானல்வானகுரு, டைரக்டர் சுண்டிக்குளி சோம சேகரன், ரீ.இராஜகோபால் ஆகியோர். (1980)

Page 129
240 தம்பிஐயா தேவதாஸ்
ஹட்டனில் (பிறின்ஸ்) 10 நாட்கள் ஓடியது.
இவற்றைவிட, மேலுமொரு திரைப்படத்தை உரு வாக்க இந்தக் கலைத் தம்பதிகள் முயன்றார்கள்.
1983 ஜூலைக் கலவரம் வந்தது. பாமன்கடையில் இருந்த இவர்களது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.
袭
ar T**్మ ಸ್ಥಿತಿ ಅ நீதி' திரைப்பட்த்தில் எம்.வி.பாலனும் எஸ்.ராம்தாசும்.
திரு.சோமசேகரன் மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்றார். திருமதி.மாலினி சோமசேகரன் யாழ்ப்பாணம் சென்றார். பின்பு இந்தியா சென்றார். இப்பொழுது திருச்சியில் இருந்துகொண்டு கலைமுயற்சியில் ஈடுபடு கிறார்.
 

25. இரத்தத்தின் இரத்தமே கொழும்பு நகரின் பிரபலமான ஹோட்டல்களில் 'பிறைட்டன் ஹோட்டலும் ஒன்று. தென்னிந்தியாவி லிருந்து இங்கு வரும் பிரபல நடிகர் நடிகையர் பெரும் பாலும் இந்த ஹோட்டலில்தான் தங்குவார்கள். அப்பொழு தெல்லாம் அந்தக் கலைஞர்களைப் பார்ப்பதற்கு ஹோட்ட லுக்கு வெளியே பல ரசிகர்கள் தவம் கிடப்பார்கள். சில
வேளைகளில் நானும் அங்கு நின்றிருக்கிறேன்.
அந்த ஹோட்டல் அப்பொழுது எஸ்.கே. அரியரெத் தினத்துக்குச் சொந்தமாக இருந்தது. ஹோட்டலில் தங்கிய நடிகர்களுடன் பழகியதில், இவருக்கும் இலங்கையில் ஒரு தமிழ்ப்படம் தயாரிக்கவேண்டும் என்ற ஆசை பிறந்து விட்டது.
அதையும் பிரமாண்டமான முறையில் தயாரிக்கவேண் டும் என்று தொடங்கிவிட்டார்.
பிரபல தென்னிந்திய சினிமா இயக்குநர் ஏ.சீ.திருலோகச் சந்தரின் கதைக்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதினார்.
‘பைலட் பிறேம்நாத் கூட்டுத் தயாரிப்பில் இணை இயக்குநராகக் கடமையாற்றியவர் ஜோதேவானந், அப்

Page 130
242 தம்பிஐயா தேவதாஸ்
படத்தில் ‘கடமைக்காக இவரது பெயர் போடப்பட்டிருந் தாலும் 'இரத்தத்தின் இரத்தமே படத்தில் முழுமையாக இயங்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
ரத்தத்தின் இரத்தமே திரைப்படத்தின் ஆரம்பவிழாவில் உதவி
இயககுநர் அன்ரன் கிரகரி, தயாரிப்பாளர் பிறைட்டன் அரிய ரத் தினம், சிவாஜி கணேசன், கீதா குமாரசிங்க, டைரக்டர் ஜோதேவா னந், பூரீதர் ஆகியோர். (1980)
பல சிங்களப் படங்களுக்கு உதவி இயக்குநராக விளங்கிய அன்ரன் கிரகரியும் பத்திரிகையாளர் ஜோ.ஜெய சீலனும் உதவி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
முக்கியமான பாத்திரங்கள் தென்னிந்தியக் கலைஞர் களுக்கு வழங்கப்பட்டன. ஜெய்சங்கர், ஜெயச்சந்திரன், ராதிகா, அசோகன், நாகேஷ் ஆகியோர் முக்கியப் பாத் திரங்களில் நடிக்க ஒப்பந்தமானார்கள்.
 

இரத்தத்தின் இரத்தமே 243
கவர்ச்சிப் பாத்திரங்களும் அடிவாங்கும் பாத்திரங் களும் சிங்கள நடிகையர் நடிகர்களுக்குக் கொடுக்கப் பட்டது.
அப்பாத்திரங்களில் கீதாகுமாரசிங்க, அனோ ஜா வீரசிங்க, பியதாச விஜயகோன், அலெக்சாண்டர் பெர் னாண்டோ போன்றோர் நடித்தனர்.
சிறுசிறு பாத்திரங்கள் உள்நாட்டுத் தமிழ்க் கலைஞர் களுக்கு வழங்கப்பட்டன.
தர்மலிங்கம், டிங்கிறி, கனகரெத்தினம், சச்சிதானந்தன், சண்முகராஜா, பூரீவிஜயதீபன், வசந்தர், ராஜலக்சுமி, நடராஜா, ஆர்.பி.கந்தையா, ராம்குமார் போன்றோர் அச்சிறுசிறு பாத்திரங்களை ஏற்றுக் கொண்டனர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரும்பாலும் இலங் கையர்களாகவே இருந்தனர். எம்.ஏ.கபூர் ஒளிப்பதிவைப் பொறுப்பேற்றார்.
எம்.கே. றொக்சாமி இசை அமைப்புக்குப் பொறுப்பு. ஈழத்து ரெத்தினம் இயற்றிய பாடல்களைப் பிரபல ஒலி பரப்பாளர் எஸ்.கே.பரராஜசிங்கம், ஜோசப் ராஜேந் திரன், ஜேசுதாஸ், சுஜாதா ஆகியோர் பாடினர்.
பிறைட்டன் பிலிம்ஸாரின் 'இரத்தத்தின் இரத்தமே திரைப்படத்தின் ஆரம்ப விழா 26.11.1979இல் ஆரம்ப மாகியது. சிவாஜி கணேசன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து கமறாவை முடுக்கி வைத்தார். கபூர் கமறாவை இயக்க ஜோதேவானந் ‘ஓகே சொன்னார்.
இந்தியக் கலைஞர்கள் இலங்கை வந்தார்கள். மூன்று மாதத்துக்குள் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்தன. படம் ஈஸ்மென்ட் கலர் என்பதால் ஹொங்கொங்குக்கு அனுப்பிக் கழுவப்பட்டது.

Page 131
244 தம்பிஐயா தேவதாஸ்
ஜெய்சங்கர் ஒரு பொலிஸ் அதிகாரி. கீதா அவரது தங்கை. ஜெயச்சந்திரன் பெண்களுக்குப் போதை மருந்து களைக் கொடுத்து அவர்களைக் கெடுப்பவன். முதலில் அனோஜாவைக் கெடுக்கிறான். பின்பு கீதாவை மயக்கிக் கெடுக்க முனைகிறான். அவளை நிர்வாணமாகப் பார்க்க வேண்டும் என்கிறான். போதை மருந்து கிடைக்கும் என்ப தால் அதை அவள் ஏற்றுக்கொள்கிறாள். அவள் நிர்வான மாக நிற்கும்பொழுது அண்ணன் ஜெய்சங்கர் கண்டு விடுகிறான்.அவமானம் தாங்கமுடியாமல் தங்கை தற் கொலை செய்கிறாள். பொலிஸ் அதிகாரி வில்லனைச் சுட்டுக் கொல்கிறார்.
எப்படி இருக்கிறது கதை? மலையாள ‘ஏ’ படம்போல் இருக்கிறதல்லவா?
கீதா நிர்வாணமாக நிற்கும் காட்சியில் அவரது பின்னழகைத் திரையில் நீண்டநேரம் காட்டினார்கள். தணிக்கை சபை சில காட்சிகளைக் கத்தரித்த பின்புகூட, படம் படுகவர்ச்சியாக இருந்தது. இந்தப்படம் 100 நாட் கள் ஓடாமல் வேறு எந்தப்படம்தான் ஒடும்?
இத்திரைப்படம் 11.04.1980இல் இலங்கையில் ஆறு நகரங்களில் திரையிடப்பட்டது. இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ஒன்று முதன் முதலில் ஒரே தியேட்டரில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது.
இப்படம், மத்திய கொழும்பில் (கிங்ஸ்லி) 105 நாட் கள் தொடர்ந்து ஓடியது. தென் கொழும்பில் (சவோய்) ஒடிய நாட்கள் 5 2 ஆகும்.
யாழ்ப்பாணத்தில் (பூரீதர்) 56 நாட்களும், வவுனி யாவில் (பூரீகிருஷ்ணா) 30 நாட்களும், சுன்னாகத்தில் (நாகம்ஸ்) 34 நாட்களும் ஓடியது
மட்டக்களப்பில் (விஜயா) 35 நாட்களும், திருகோண மலையில் (லக்சுமி) 30 நாட்களும், கல்முனையில் 20

இரத்தத்தின் இரத்தமே 245
நாட்களும், பதுளையில் (கிங்ஸ்) 28 நாட்களும் தொடர்ந்து ஒடியது.
菱
'இரத்தத்தின் இரத்தமே'திரைப்படத்தில் இந்திய நடிகர் சிவச்சந்திர னும் இலங்கை நடிகை கீதா குமாரசிங்கவும். (1980)
ஏ.எச்.சித்தீக் காரியப்பர் ஒர் இளம் பத்திரிகையாளர். அவர் இப்படத்தைப் பற்றி 'தினகரனில் விமர்சனம் எழுதினார்.
‘.’ இரத்தத்தின் இரத்தமே படத்தில் புதிய முறை யான நெறியாள்கை கையாளப்பட்டுள்ளமை சிறப்புக் குரியது. காட்சிக்குக் காட்சி மாறுபட்டு ஒலிக்கும் தனி இசை ஆங்கிலப் பாணியைக் காட்டுகிறது.

Page 132
246 தம்பிஐயா தேவதாஸ்
போதை மருந்துாட்டிப் பெண்களைத் தம் வசப்படுத்தி, அவர்களின் கற்பைச் சூறையாடுவதுடன், அவர்களைக் கொலை செய்யும் காமப்பித்தர்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பதுதான் கதை.
காமனின் போதை மருந்தை உண்டு கற்பை இழக்க நேரிடும் பெண்களில் இன் ஸ்பெக்டரின் தங்கையும் அடங்குகிறாள்.
படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாகச் செல்கிறது. இனிமையாக இசை அமைத்த பாடல்கள் புதிய வர்களால் பாடப்பட்டமை போற்றத்தக்கது. நாகேஷின் நகைச்சுவை நன்றாக அமைந்துள்ளது. அனைவரது நடிப் பும் பிரமாதம். இலங்கையின் தலைநகரிலுள்ள காட்சிகள் பலவற்றை உள்ளடக்கியது பாராட்டுக்குரியது. டைரக்டர் ஜோ.தேவானந் பாராட்டுக்குரியவர். 'பிறைட்டன் அரிய ரெத்தினம் தனது பெயர் நிலைத்து நிற்கக்கூடிய விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
இப்படித் தன் விமர்சனத்தின்மூலம் புகழ்ந்திருந்தார். அப்பொழுது சென்னையிலிருந்து "சினிமா எக்ஸ் பிறஸ்’ பத்திரிகை வந்துகொண்டிருந்தது. மற்றைய சினிமாப் பத்திரிகைகளைவிட, அளவில் பெரிதாகவும் இருந்தது. அந்தப் பத்திரிகையில் 'சிலோன் சினிமா என்ற தலையங்கத்தில் நம்நாட்டுச் சினிமாச் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். அதை ‘இலங்கை மானா’ என்ற பெயரில் நமது எம்.எம்.மக்கீன் அவர்களே எழுதி வந் தார். இப்படத்தைப் பற்றியும் எழுதினார்.
மிகக் குறுகிய காலத்தில் ஜெய்சங்கர், ராதிகா, அசோகன், நாகேஷ், ஜெயச்சந்திரன் நடித்துக் கொடுத்த இரத்தத்தின் இரத்தமே இலங்கைத் தமிழ்ப்படம் இலங் கையில் சக்கை போடு போடுகிறது. நூறுநாள் தாண்டி

இரத்தத்தின் இரத்தமே 247
விடும் என்கிறார்கள். ஜெய்சங்கர் 100வது நாள் விழா வுக்குக் கட்டாயம் இலங்கை வருவார் என்று நம்புகிறார் கள்.
இரத்தத்தின் இரத்தமே திரைப்படத்தில் தென்னிந்திய நடிகர்கள்
ஜய்சங்கரும் ராதிகாவும்.

Page 133
248 தம்பிஐயா தேவதாஸ்
இப்படத்தின் வெற்றி ரகசியம் என்னவென்று ஒரு தீவிர ரசிகரிடம் கேட்டபோது, ‘கர்ணன் ஸ்டைலில் மிகவும் புத்திசாலித்தனமான மூளையோடு செக்ஸ் வைக்கப்பட்டிருக்கிறது என்றார்.
சிவாஜியின் 'மோகனப் புன்னகை கதாநாயகி கீதா இதில் தாராளமாகக் கவர்ச்சியைக் காட்டுகிறார். சென் சார் சில காட்சிகளில் கத்தரிக்கோல் போடவும் செய்தது. இந்தப் படம் தமிழகத்தில் காட்டப்படுமானால் கீதாவுக்குத் தமிழ்ப்பட மார்க்கட் மட்டுமல்ல, தெலுங்குப் பட மார்க் கட்டும் பிய்த்துக் கொண்டு வரும் என்று எழுதினார்.
1981ஆம் ஆண்டு ஆரம்பத்தில் டெல்லியில் நடை பெற்ற திரைப்பட விழாவில் இப்படம் பார்வையாளர் களுக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ்த் திரைப்படம் எதுவும் அதுவரை இந்தியாவில் திரையிடப்படவில்லை. ஆனால், இத்திரைப் படம் இந்தியாவுக்கு நாலரைலட்சம் ரூபாவுக்கு விற்கப் பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன.
1981 நவம்பர் மாதம் இப்படம் தமிழ்நாட்டில் திரை யிடப்பட்டது. அங்குள்ள தியேட்டர்களில் ஒரு வாரம் மட்டும் ஓடியது. அங்குள்ள பத்திரிகைகள் இப்படத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தால் வருடா வருடம் நடத்தப்படும் திரைப்பட விழா 1981ஆம் ஆண்டிலும் நடைபெற்றது. இப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருந்த கீதாகுமாரசிங்கவுக்குச் சிறந்த துணைநடிகைக் கான விருது கிடைத்தது.
பிரபல ஸ்ரில் படப்பிடிப்பாளர் மைக்கல் விக்டோரியா, இப்படத்தைச் சிங்கள மொழிக்கு டப் பண்ணும் உரிமை யைப் பெற்றார். அது யுக்தியட்ட சண்டியா என்ற பெயரில் சிங்கள ஊர்களில் நன்றாக ஓடியது.

26. "அவள் ஒரு ஜீவநதி' எழுத்தாளர் தயாரித்த படம்
மலையகத்தில் பிறந்த ஓர் இளைஞனுக்குச் சிறுவயது முதலே எழுதுவதில் தனிப்பிரியம். பாடசாலைக் காலத்தி லேயே கவிதை, சிறுகதை, இலக்கியக் கட்டுரை, சமயக் கட்டுரை என்று பலவற்றை எழுதி வந்தான்; நாடகம் எழுதி அதில் நடித்தும் வந்தான்.
மாத்தளை கிறிஸ்தவ தேவாலயக் கல்லூரியில் படிக் கும்போதே இவன் எழுதி நடித்த பல மேடை நாடகங் களுக்குப் பல்வேறு பரிசுகள் கிடைத்தன.
இவன் எழுதிய முதல் நாடகம் ‘தீர்ப்பு ஆகும். முதலில் நடித்த நாடகம் ‘பலேபுரடியூஷர் என்பதாகும். பின்னாளில் கொழும்புக்கு வந்து 20க்கும் மேற்பட்ட நாடகங்களை மேடையேற்றினான் அக்காலத்தில் இலங்கை தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனம் நடத்திய திரைக் கதையாக்கப் போட்டியிலும் இவன் எழுதிய ‘சுற்றும்சுடர்' என்ற பிரதிக்கு இரண்டாவது பரிசும் கிடைத்தது.
சில நண்பர்களின் உதவியுடன் தமிழ்த் திரைப்பட மொன்றையும் தயாரித்தான். அந்த இளைஞன்தான் ‘மாத்

Page 134
25 O தம்பிஐயா தேவதாஸ்
தளை கார்த்திகேசு. அவர் தயாரித்த படத்தின் பெயர் தான் ’அவள் ஒரு ஜீவநதி,
'அவள் ஒரு ஜீவநதி திரைப்படத்தின் விளம்பர நோட்டீஸ், நடிகர் ஏகாம்பரமும், தயாரிப்பாளர் மாத்தளை கார்த்திகேசுவும் இப்படித் தோன்றுகிறார்கள். (1980)
மாத்தளைக் கார்த்திகேசுவைக் கலைத்துறைக்குக் கொண்டு வந்தவர், ஜே.பி.றொபேர்ட். கார்த்திகேசுவும் றொபேர்ட்டும் இன்னும் பல கலைஞர்களும் ஒன்று சேர்ந்து, கொழும்பில் ‘கவின் கலை மன்றம்' என்ற நாடகக் குழுவை நடத்திவந்தனர். இக்குழுமூலம் கார்த்திகேசு எழுதி, றொபேர்ட் இயக்கிய பல நாடகங்கள் மேடை
யேறின.
 

அவள் ஒரு ஜீவநதி 25 Ι
இந்த இரு கலைஞர்களும் 'அவள் ஒரு ஜீவநதி' திரைப்படத்தையும் உருவாக்க முனைந்தனர். கார்த்தி கேசுவின் திர்ைக்கதைப்படி 2 கதாநாயகர்கள் தேவை.
அவர்களில் ஒருவராக ஏற்கனவே திரைப்படங்களில் நடித்து அனுபவமுள்ள டீன்குமாரைத் தெரிவு செய்து கொண்டார்கள்.
மற்றவர் யார்? கொழும்பில் பிறந்து கொட்டாஞ் சேனை புனித பெனடிக்ற் கல்லூரியில் படித்துவந்தான் ஓர் இளைஞன். 7 வயது தொடக்கமே வானொலி நிகழ்ச்சி களில் பங்குபற்றிவந்தான். பாடகனாக வரவேண்டுமென் பதே ஆசை. ஆனால், நடிகனாகவே வர முடிந்தது. 1974ஆம் ஆண்டு இவனுக்கு வயது 20. கே.எஸ்.செல்வ ராஜாவின் இயக்கத்தில் உருவான மேடைநாடகத்தில் முக்கியப் பாத்திரத்தில் தோன்றினான். எஸ்.வி.சந்திரனின் ‘எங்களில் ஒருவன்’ திரைப்படத்தில் சிறிது நேரம் தோன்றி மறைந்தான்.
இந்த இளைஞனும் இப்படத்தில் இன்னுமொரு கதாநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டான். அந்த இளை ஞன்தான் விஜயராஜா.
இவர்களுடன் கே.எஸ்.பாலச்சந்திரன், எம்.ஏகாம் பரம், ஆர்.சிதம்பரம், கந்தையா, சீதாராமன், பூரீதர், மோகன்குமார் போன்றோர் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள். பரீனாலை, அனுஷா, சந்திரதேவி, சந்திரகலா போன்றோரும் நடிகைகளானார்கள்.
படத்தை இயக்கும் பொறுப்பை ஜே.பி.றொபேர்ட்டும், ஜோ.மைக்கலும் இணையாக ஏற்றுக்கொண்டார்கள்.
நாடக உலகிலிருந்தே ஜே.பி.றொபேர்ட் திரை உல கிற்கு வந்தவர். இலங்கை ‘கலாச்சாரப் பேரவை' நடத்திய களங்கம்' என்னும் நாடகம் இவருக்குச் சிறந்த இயக்கு

Page 135
252 தம்பிஐயா தேவதாஸ்
நருக்கான பரிசை வாங்கிக் கொடுத்தது. இவர் இப்படத் தின் இயக்குநரானார். இவருடன் இன்னுமொரு நாடக அனுபவசாலியான ஜோ.மைக்கலும் இப்ப்டத்தின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
1961ஆம் ஆண்டில் அரசாங்க இசையாசிரியராக நியமனம் பெற்றவர் எம்.எஸ்.செல்வராஜா. இவர் பல சிங்களப் படங்களுக்கு இசை அமைத்தார். 1971ஆம் ஆண்டுமுதல் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை 'யில் மெல்லிசைப் பாடல்களுக்கு இசை அமைத்துவந்தார்.
பாடகர் வீ.முத்தழகுவின் ‘ஸப்தஸ்வரம்' என்ற ஒரே நபர் மேடை இசை நிகழ்ச்சிக்கு இசை அமைத்துப் புகழ் பெற்றார். இவ்வாறு இசை அமைப்பில் புகழ்பெற்ற இவருக்கு இப்படத்துக்கு முதன் முதலாக இசை அமைக்கும் பொறுப்பை வழங்கினார்கள்.
ஈழத்து ரெத்தினம், மெளனகுரு, கார்த்திகேசு ஆகி யோர் இயற்றிய பாடல்களை வீ.முத்தழகு, கலாவதி, சுஜாதா, எஸ்.வீ.ஆர்.கணபதிப்பிள்ளை, ஜோசப் ராஜேந் திரன், தேவகி மனோகரன் ஆகியோர் பாடினர்.
இது எழுத்தாளர் தயாரிக்கும் படமல்லவா? பலரும் நல்ல கதையை எதிர்பார்த்தார்கள்.
பலவித கஷ்டங்களின் மத்தியில் கீதாலயா மூவீஸ் அவள் ஒரு ஜீவநதி திரைப்படம் 17.10.1980இல் 6 ஊர்களில் திரையிடப்பட்டது.
மலையகத்தில் தோட்ட உரிமையாளர் ஒருவருக்கு ஒரே மகள். அவள் தன் அத்தானைக் காதலிக்கிறாள். அது ஒருதலைக் காதலாகும். ஆனால், அத்தானோ தனக்கு இரத்ததானம் செய்த ஒருத்தியை விரும்பி மணந்து கொள் கிறான். தன் அத்தானால் கைவிடப்பட்ட பெண், பழிச் சொல்லுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்ள முனை

அவள் ஒரு ஜீவநதி 25。
கிறாள். அச்சமயம் அவளைக் காமுகர்களிடமிருந்து காப் பாற்றுகிறான் எழுத்தாளன். அவளுடன் தாம்பத்திய உறவில்லாது வெறும் சதிபதியாக வாழ்கிறான் எழுத் தாளன். கடைசியில் எழுத்தாளன் கொலை செய்யப்படு கிறான். அதனால், அவள் துறவறம் பூணுகிறாள். அவள் கான் 'அவள் ஒரு ஜீவநதி’.
V. ' .
அவள் ஒரு ஜீவநதி' திரைப்படத்தில் டீன்குமாரும் பரீனாலையும் இப் படித் தோன்றுகிறார்கள். (1980)

Page 136
254 தம்பிஐயா தேவதாஸ்
எழுத்தாளர் மாத்தளை கார்த்திகேசுவின் திரைப் படத்தின் கதைச்சுருக்கம்தான் இது.
படம் திரையிடப்பட்டு பத்து நாட்களின் பின் கே. எஸ்.சிவகுமாரன் வீரகேசரியில் (26.10.1980) விமர்சனம் எழுதினார்.
‘இலங்கை நாடகத்துறையில் ஈடுபட்ட பலரும் திரை உலகிலும் தமது ஆற்றலைக் காட்ட விழைவது இயல்பே. 'அவள் ஒரு ஜீவநதி ரசிகர்கள் பார்த்து மகிழக்கூடிய படம். அனாவசியமான விளக்கங்களும் காட்சி நீட்டல் களும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. நடிப்பில் மேடைத் தன்மை குறைந்திருக்கிறது.
டீன்குமார், விஜயராஜா, கே.எஸ்.பாலச்சந்திரன், திருச்செந்தூரன் ஆகியோரின் நடிப்புமுறை சினிமாவுக்கு ஏற்றதாக இருக்கிறது. டீன்குமாருடைய ஸ்ரைல் அலட்சிய மாகத் தோற்றம் கொடுக்கும் அதேவேளையில், நிதானத் துடன் இயங்குவதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். சாடை யாக சிவாஜி பாணி தென்பட்டாலும் இவர் பிரக்ஞை யாகவே சுயபாணியில் நடிக்க முற்படுவது வரவேற்கத் தக்கது.
விஜயராஜாவும் தனது ஆற்றலை நன்றாக வெளிப் படுத்துகிறார். பாத்திர அமைப்புக் காரணமாகச் சிறிது எச்சரிக்கையுடன் நடிக்க முற்படுகிறார்.
'வாடைக்காற்று' படத்தில் கே.எஸ்.டாலச்சந்திரனின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இவரது ஆற்றல், நாடகத் திலும் பார்க்க சினிமாவிலேயே நன்றாக வெளிப்படு கிறது. அவர் இப்படத்தில் தனித்துவமான பாணியில் நடிக்கிறார்.
திருச்செந்தூரன் கிறிஸ்தவ பாதிரியாராக ஒரிரு காட்சிகளில் வந்து போகிறார். அவருடைய பாத்திரமும் பண்பான பயிற்சியும் பரவசப்படுத்துகின்றது.

அவள் ஒரு ஜீவநதி 255
கார்த்திகேசு, ஏகாம்பரம், சிதம்பரம், பரீனாலை, அனுஷா போன்றோரும் தமது திறமைகளைக் காட்டு கின்றனர். பரீனாலை தன் எல்லைக் கட்டுக்குள் நின்று தன்னாலியன்ற அளவு ஒத்துழைக்கிறார். பாத்திரத்தின் தன்மையை அவர் கொண்டுவருகிறார். அனுஷாவும் ரசிக் கும்படி நடிக்கிறார்.
麴 ܐܣܛܪ”
*王 ை عند அவள் ஒரு ஜீவநதி திரைப்படத்தில் தமிழ் நடிகர் விஜயராஜாவும் சிங்கள நீடிக்ை அனுஷாவும். (1980) -

Page 137
256 தம்பிஐயா தேவதாஸ்
ஆக படத்தொகுப்பு, நடிப்பு இரண்டிலும் சிறப் பாகவும், நெறியாள்கை, படப்பிடிப்பு ஆகியவற்றில் புறபஷனலாகவும், இசை அமைப்பில் லலிதமாகவும், பாடல்களில் இனிமையாகவும் இணைந்த இப்படம் வளர்ச்சியைத்தான் காட்டுகிறது.
மாத்தளை கார்த்திகேசுவின் படக்கதை முடிவும், 'ஜீவநதி’ என்ற பெயரைக் கதாநாயகி பெறப் பொருத்த மானவரா? என்ற ஐயமும் ஏற்படுகிறது.
இக்கதையில் முக்கியப் பாத்திரம் எழுத்தாளனின் மனைவியல்ல; எழுத்தாளனின் காதலியான நேர்ஸ்தான். அவளைச் சுற்றித்தான் ஏனைய பாத்திரங்கள் இயங்கு கின்றன. அவரே இரத்த தானம் செய்கிறார். அவளுக்கே பல இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. அவள்தான் உண்மை யான ஒரு ஜீவநதி. ஆனால், கார்த்திகேசுவின் கதைப் படியும், றொபேர்ட்டின் நெறியாள்கையின்படியும் முதலாளி யின் மகள் பரீனாலையே கதாநாயகி.
படத்தில் கவர்ச்சி, கராட்டே, ஆபாச நடனம், தழுவல், அணைத்தல், முத்தமிடல் போன்ற பாவனைக் காட்சிகள் எல்லாம் வருகின்றன.
இவை பொழுதுபோக்கு ரசிகர்ளுக்கு உரியவை. ஆனாலும், அவை படத்தின் கட்டுக்கோப்புக்குக் குந்தக மாக இருக்கின்றன.
நாம் தென்னிந்திய சினிமாவுடன் வர்த்தகரீதியில் போட்டிபோட முடியாது. இந்நிலையில் நமது திரைப்பட முயற்சிகளுக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், இலக்கியத்தில் நமது தனித்தன்மை காட்டமுடிந்ததுபோல், சினிமாவிலும் அந்நிலையைப் பெறச் சந்தர்ப்பம் ஏற்படாமல் போய் விடுமல்லவா? எனவேதான், வளரும் கலைகளுக்கு ‘டபிங் ஸ்ராண்டர்ஸ்' என்ற மாதிரி விமர்சனம் செய்யவேண்டி யிருக்கிறது என்று எழுதி முடித்தார். உண்மைதான்.

அவள் ஒரு ஜீவநதி 257
விமர்சனம் எழுதாமல் விளம்பரமே பல விமர்சகர்கள்
எழுதினர். s
இப்படத்தைப்பற்றி நானும் விமர்சனம் எழுதினேன்.
அது தினகரனில் (25.10.80) வெளிவந்தது.
மாத்தளை கார்த்திகேசு தனது எழுத்தாற்றலைச் சினிமா உலகம் நோக்கியும் திருப்பியிருக்கிறார். இவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்று பலர் எதிர்பார்த்தனர். சிறந்த முறையில் ஆரம்பமான கதை, சினிமா சமாசாரத்துக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டபோது, கார்த்திகேசுவின் தனித்துவத்தைக் காணமுடியாமல் போய் விட்டது.
கதாநாயகன் டீன்குமார் தன் காட்சியில் திறம்பட நடிக்கிறார். இப்படத்தில்தான் இவருக்கு நடிக்க அதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது. தான் கமறாவுக்குப் புதியவனல்ல என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக் கிறார். நாட்டுப்பாடல் காட்சியொன்றே அவரது நடிப் பாற்றலுக்கு நல்ல உதாரணமாகும்.
இளம் கதாநாயகன் விஜயராஜா நாடக உலகத்தி லிருந்து, திரை உலகத்திற்கு வந்திருக்கிறார். ‘எங்களில் ஒருவன்', 'நெஞ்சுக்கு நீதி’ போன்ற படங்களில் அவர் தலைகாட்டினாலும் இப்படத்தில்தான் தன் திறமையைக் காட்ட சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. காதல் காட்சிகளில் நன்கு ஜொலிக்கிறார்.
கே.எஸ்.பாலச்சந்திரன் தென்னக நடிகர் ஒருவரை ஞாபகப்படுத்தினாலும் தன் முத்திரையையும் பதிக்கிறார். பரீனாலையும் அனுஷாவும் பரவாயில்லை. கார்த்திகேசு பல இடங்களில் நன்றாக நடித்திருந்தாலும் சில இடங் களில் நாடகபாணி தென்படுகிறது. எம்.ஏகாம்பரமும் சில காட்சிகளில் தோன்றினாலும் தன் பாத்திரத்தைத் திறம் படச் செய்கிறார். ஆர்.சிதம்பரம் தானும் தென்னக

Page 138
፰5 $ தம்பிஐயா தேவதாஸ்
வில்லன்களுக்குச் சளைத்தவரில்லை என்பதை நிரூபிக் கிறார். திருச்செந்தூரன் பாதிரியாராக அமைதியாக நடிக் கிறார். என்று விமர்சனம் எழுதினேன்.
அவள் ஒரு ஜீவநதி' § பாடல் ஒலிப்பதிவு நடைபெறுகிறது.
இசை அண்ம்ப்ப்ாள்ர் எஸ்.செ
ல்வராஜா, பாடகி சுஜர்தா அத்தநாயக்கா, ப்ாடகர் வீ.முத்தழகு ஆகியோர்
'அவள் ஒரு ஜீவநதி மத்திய கொழும்வில் (செல்ல மஹால்) 22 நாட்களும், தென்கொழும்புவில் (ஈரோஸ்) 13 நாட்களும் ஓடியது. யாழ்ப்பாணத்தில் (வின்ஸர்) 14 நாட்களும் மட்டக்க்ளப்பிலும் (றிகல்), திருகோணமலை
 
 

அவள் ஒரு ஜீவநதி 岛战岛
யிலும் (சரஸ்வதி) தலா 8 நாட்கள் ஓடியது. தயாரிப் பாளர் கார்த்திகேசுவின் சொந்த ஊரான மாத்தளையில் இப்படம் அதிக நாட்கள் ஓடவில்லை.
படம் திரையிடப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப்பின் இத்திரைப்படம் (18.09.1984) ரூபவாஹினியில் ஒளி பரப்பப்பட்டது. அப்பொழுது ‘சிந்தாமணி'யில் 'சஞ்சயன்' விமர்சனம் எழுதினார்.
'ரசிகர்களின் மனதில் என்றென்றும் ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஊற்றுத்தன்மையை உள்ளத்திலும் ஏற்படுத்தும் தன்மை 'அவள் ஒரு ஜீவநதி படத்தில் இல்லை.
கணவனை இழந்து விதவையாகி வெண்ணிறஆடை யுடன் வீட்டைவிட்டு வெளியேறும் பெண்னை "ஜீவநதி' என்று, ஒரு நதியையும் காட்டி படத்தலைப்பிலும் ஒரு பாடலைப் புகுத்தி படத்தை முடித்துவிட்டால் மட்டும் போதுமா?
ஜீவன் இல்லாத பாத்திரப் படைப்புகளால் ஜீவ நதியில் உணர்ச்சிப் பிரவாகத்தைக் காணமுடியவில்லை.
நாடகபாணி நடிப்பிலும் ஒரு திரைப்படம் தயாரிக்க முடியுமென்றால் அது நிச்சயமாக "அவள் ஒரு ஜீவநதி' யாகத்தான் இருக்க முடியும்' என்று அந்த விமர்சனம் முடிகிறது.
மாத்தளை கார்த்திகேசுவுக்கு நாடகமூலம் கிடைத்த நல்ல பெயர் இப்படத்தின் மூலம் கிடைக்கவில்லை. ஆனாலும், சினிமா பற்றிய பல படிப்பினைமிக்க அனு பவங்கள் அவருக்குக் கிடைத்துவிட்டன.

Page 139
27. 'நாடு போற்ற வாழ்க’ வீ.பி.கணேசனின் மூன்றாவது படம்
செலவைக் குறைப்பதற்காக ஒரே நேரத்தில் இரண்டு மொழிப் படங்களைத் தயாரிக்கும் முயற்சியை ஆரம்பித்து வைத்தவர் யசபாலித நாணயக்கார.
இதே முயற்சியைப் பின்னாளில் வீ.பி.கணேசனுடனும் சேர்ந்து செய்தார்.
இவர்கள் இருவரும் உருவாக்கிய சிங்களப் படத்தின்
பெயர் 'அஞ்சனா”, அதன் தமிழ் ‘றிமேக்'தான் நாடு போற்ற வாழ்க.
இரண்டு படங்களிலும் ஒரே கதை. ஒரே தொழில் நுட்பக் கலைஞர்கள். ஆனால், நடிகர்கள் மட்டுமே வித்தி யாசமானவர்கள். சிங்களப் படத்தின் கதாநாயகன் விஜய குமாரணதுங்க. தமிழ்ப் படத்தின் கதாநாயகன் வீ.பி.கணேசன். ஆனால், இரண்டு மொழிப் படங்களிலும் கதாநாயகிகள் கீதா குமாரசிங்க, ஸ்வர்ணா மல்லவராச்சி ஆகிய இருவரு
TGJT. V

நாடு போற்ற வாழ்க 26 Ι
இவர்களுடன் கே.எஸ்.பாலச்சந்திரன், எஸ்.ராம்தாஸ், எம்.ஏகாம்பரம், லத்தீப், செல்வசேகரன், டொன்பொஸ்கோ, சிதம்பரம், மணிமேகலை, ரஞ்சனி போன்றோரும் நடித் தனர்.
நாடு போற்ற திரைப்படத்தில் வி.பி.கணேசனும் சுவர்ணா மல்லவராச்சியும். (1981)
யசபாலித்த படத்தை இயக்கினார். கதைவசனமும் உதவி நெறியாள்கையும் எஸ்.என்.தனரெத்தினம். ஒளிப் பதிவு ஜே.ஜே.யோகராஜா.
ஈழத்து ரெத்தினம் இயற்றிய பாடல்களுக்கு சரத் தசனாயக்க இசை அமைத்தார். முத்தழகு, கலாவதி, சுஜாதா, சந்திரிகா, பாலச்சந்திரன் ஆகியோர் பின்னணி ust qGSTT.

Page 140
፵ Š ፰ தம்பிஐயா தேவதாஸ்
படப்பிடிப்பு 1980ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகியது. பாடல் ஒலிப்பதிவுகள் சரசவிய ஸ்ரூடியோவில் நடைபெற்றன. படப்பிடிப்பு கள் கொழும்பு மலையகம் என்று பல இடங்களில் நடை பெற்றன.
பலத்த விளம்பரத்தின் பின் 31.07.1981இல் 6 நகரங்களில் கனேஷ் பிலிம்ஸ், "நாடு போற்ற வாழ்க திரையிடப்பட்டது.
கண்ணன் (கணேஷ்) என்ற ஏழை இளைஞனும் மரிக் காரும் (ராம்தாஸ்) நண்பர்கள். செல்வந்தர் ஒருவருக்கு (லத்தீப்) செய்த உதவியால் நண்பர்கள் இருவருக்கும் எஸ் ரேட்டில் வேலை கிடைக்கிறது. செல்வந்தரின் மகள் சரோஜா (சுவர்ணா) எஸ்டேட் சுப்பிறிண்டன் விஸ்வநாத் துடன் (பாலச்சந்திரன்) நெருங்கிப் பழகும் அதே வேளை யில் கண்ணன்மீதும் அன்பு செலுத்துகிறார். கண்ணனோ இன்னுமொரு செல்வந்தரின் (ஏகாம்பரம்) மகளான வனிதாவை (கீதா) உண்மையாகக் காதலிக்கிறார். விஸ்வ நாத்தின் தொடர்பால் சரோஜா தாயாகிறார். பழி கண்ணன் மீது விழுகிறது.
கடைசியில் மோதல் வருகிறது. பின்பு விஸ்வநாத் ஒப்புக் கொள்கிறார். இறுதியாக இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெறுகிறது.
இதுதான் 'நாடு போற்ற வாழ்க திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும்.
அப்பொழுது இத்திரைப்படத்தைப் பற்றிப் பலர் விமர்சனம் எழுதினார்கள். நானும் விமர்சனம் எழுதி னேன். அது தினகரனில் (11.08.1981) வெளிவந்தது.
1975 வரை பெரிதும் தேக்கமுற்றிருந்த இலங்கைத் தமிழ்ச் சினிமாவைப் "புதியகாற்று மூலம் வேகம் கொள்ளச்

நாடு போற்ற வாழ்க 3.
செய்தவர் வீ.பி.கணேசன், 'புதியகாற்று', 'நான் உங்கள் தோழன்' படங்கள் மூலம் பல மேடை நடிகர்களைத் திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவரும் அவரே.
ಟ್ಗBuಶಿಖ வாழ்க திரைப்படத்தில் கீதாவும் வீ.பி.கணேசனும்,
சிங்களத் திரை உலகில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்து நெறியாண்டவர் யசபாலித்த நாணயக்கார.
இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய படம்தான் 'நாடு போற்ற வாழ்க
"புதியகாற்று மூலம் தோட்டத் தொழிலாளர் பிரச் சினைகள் காட்டப்பட்டன. "நான் உங்கள் தோழன்'

Page 141
喜的叠 தம்பிஐயா தேவதாஸ்
மூலம் உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்டங்கள் காட்டப்பட்டன. ஆனால், 'நாடு போற்ற வாழ்க திரைப் படத்தில் அப்படியான பிரச்சினைகள் முன்வைக்கப்பட வில்லை. அது ஜனரஞ்சகப் படைப்பாக விளங்கியது. தோட்டப் பின்னணியில் கதை நிகழ்கின்றபொழுதிலும் தோட்டத்தில் வாழும் மேல் வர்க்கத்தினரின் பாலியல் சிக்கல்களையே கதை கூறியது.
'நாடு போற்ற வாழ்க திரைப்படத்தின் விளம்பர நோட்டிஸ்,
நடிகர்கள் எல்லோருமே ஏற்கனவே சினிமா அனு பவம் உள்ளவர்கள். முன்னைய படங்களைவிட, இப் படத்தில் கனேஷ் பாத்திரத்தை உணர்ந்து நடிக்கிறார்.
 

நாடு போற்ற வாழ்க &临占
இப்படத்தில் வில்லனாகத் தோன்றும் பாலச்சந்திரன் திறம்படச் செய்கிறார்.
தமிழ் நடிகைகள் பஞ்சத்திற்கு இப்படம் நல்லதொரு உதாரணமாகும். கீதாவின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. சுவர்ணாவும் நன்றாக நடிக்கிறார். தந்தைகளாகத் தோன் றும் ஏகாம்பரமும் லத்தீப்பும் வரும் காட்சிகள் எல்லாம் பாராட்டும்படி இருக்கின்றன. இவர்களுடன் மணிமேகலை, செல்வசேகரன், டொன்பொஸ்கோ, ரஞ்சனி போன் றோரும் தோன்றுகிறார்கள்.
நான்கு பாடல்களையும் ஈழத்து ரெத்தினம் எழுதி யிருந்தார். சரத் தசநாயக்க இசை அமைத்த மூன்றாவது தமிழ்ப்படம் இது.
மலையகத்தின் வனப்புமிக்க காட்சிகளை அருமை யாகப் படமாக்கியிருக்கிறார் ஜே.ஜே.யோகராஜா." என்று நீண்டதாக விமர்சனம் எழுதியிருந்தேன்.
கணேஷின் மற்றப் படங்களைப்போல் இப்படம் அதிக நாட்கள் ஓடவில்லை. மத்திய கொழும்பில் (கெயிட்டி) நான்கு வாரங்களும், தென்கொழும்பில் (பிளாசா) ஒரு வாரமும் ஓடியது.
யாழ்ப்பாணம் (சாந்தி), மட்டக்களப்பு (சுபராஜ்), திருகோணமலை (பூரீகிருஷ்னா), வவுனியா (நியூ இந்திரா) ஆகிய இடங்களில் தலா இரண்டு வாரங்கள் ஓடியது.
1989 ஆம் ஆண்டில் ஜே.வி.பி.பிரச்சினையால், இந்தியப் பொருட்கள் இலங்கையில் பாவிக்கக்கூடாது என்ற ஒரு நிலை உருவானது. அதனால், இந்தியப் படங் களும் திரையிடப்படாமல் தடை ஏற்பட்டது. அதனால், ஏற்கனவே திரையிடப்பட்ட இலங்கைத் தமிழ்த் திரைப் படங்களை மீண்டும் திரையிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற் பட்டது. அதன்படி 30.06.1989 நாடு போற்ற வாழ்க’

Page 142
266 தம்பிஐயா தேவதாஸ்
மீண்டும் கொழும்பில் மட்டும் (செல்லமஹால்) திரை யிடப்பட்டது. பழைய படமாகையால் அறுந்து விழுந் தோடிய இப்படம் ரசிகர்களின் பொறுமையைச் சோதித்தது. அப்போதும் இப்படம் ஐந்து நாட்கள் ஓடியது.
錢 錢
நாடு போற்ற வாழ்க திரைப்படத்தில் லத்தீப், சுவர்ணா, வி.பி.கணேசன், கே.எஸ்.பாலச்சந்திரன், கீதாகுமாரசிங்க ஆகியோர். (1981)
அதற்கு முன் ரூபவாஹினியிலும் காட்டப்பட்டது. எது எப்படியோ இலங்கைத் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் தொடர்ந்து மூன்று படங்களைத் தயாரித்த பெருமை வீ.பி.கணேசனையே சாருகிறது.
 
 
 

28. 'பாதை மாறிய பருவங்கள்
‘தெய்வேந்திரா" என்ற இளைஞர் சிங்களத்திரை உலகில் பிரபலமான ஒளிப்பதிவாளர். வெளிநாட்டிலும் ஒளிப்பதிவுத் துறையில் பயிற்சி பெற்றவர். பல சிங் களப் படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவாளர். “வெண் சங்கு', 'காத்திருப்பேன் உனக்காக ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவாளர் இவரே.
இளைஞர் சிறீஸ்கந்தராஜாவின் தந்தை நாதன் அவர்கள் நல்ல செல்வந்தர். அவருக்குத் தென்னிந்திய சினிமாக் கலை ஞர்களுடன் நெருங்கிய தொடர்பிருந்தது. இவருக்கும் இலங்கையில் தமிழ்ப்படம் தயாரிக்க வேண்டுமென்பது ஆசை.
தெய்வேந்திராவும் சிறீஸ்கந்தராஜாவின் தந்தையும் சந்தித்துக் கொண்டார்கள். பிரதான பாத்திரங்களில் தென்னிந்தியக் கலைஞர்களையும் உபபாத்திரங்களில் இலங்கைக் கலைஞர்களையும் நடிக்கவைத்து ஒரு வர்ணப் படத்தை இலங்கையிலேயே உருவாக்குவோம் என்று இருவரும் தீர்மானித்துக் கொண்டார்கள்.
டைரக்டர் தெய்வேந்திராவுக்கு வானொலிக்காரர் இரா.பத்மநாதன் நண்பர். தனது படத்துக்கான கதையை

Page 143
268 தம்பிஐயா தேவதாஸ்
எழுதித் தரும்படி டைரக்டர் இரா. பத்மநாதனிடம் கேட் டார்.
பாதை மாறிய பருவங்கள்’ திரைப்படத்தில் கவர்ச்சி நடனமாடிய தென்னிந்திய நடிகை மாயா. (1992)
வானொலிக்காரர்கள் இரா.பத்மநாதன், கே.கந்தசாமி, கவிஞர் ஈழத்து ரெத்தினம் ஆகியோர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு திரைக் கதை எழுதினார்கள். அவர்களது கதையில் உரையாடல் கள் மட்டக்களப்புத் தமிழில் எழுதப்பட்டிருந்தது. அதைப் பொதுவான தமிழுக்கு மாற்றி எழுதவேண்டியிருந்தது. இவர்களது வசனங்களை மட்டுமல்ல, கதையையே புதி தாக மாற்றி எழுதினார் ஜோர்ஜ் சந்திரசேகரன்.
கதையின்படி % பகுதி கொழும்பில் நடைபெற்றது. % பகுதி மட்டக்களப்பில் நடைபெற்றது.
 

பாதை மாறிய பருவங்கள் 269
பிரபலமான மலையாள நடிகர் பிறேம் நஸரின் மகன் ஷாநவாஸ். 'சுவரில்லாத சித்திரங்கள் மூலம் அறிமுக மான நடிகை சுமதி. பல படங்களிலும் நடனமாடிய மாயா ஆகியோர் இப்படத்தில் நடிக்க இலங்கை வந்தார்கள்.
சிங்கள நடிகைகளான சாந்தி ரசிகா, லீனாடிசில்வா ஆகியோருடன் நடராஜசிவம் இரா.பத்மநாதன், விஜய ராஜா, ராஜா கணேசன், எஸ்.என்.தன ரெத்தினம், ஜோர்ஜ் சந்திரசேகரன், ரீ.ராஜேஸ்வரன், சிதம்பரம் போன்றோர் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
ஒரு கதாநாயகன் மூன்று கதாநாயகிகள். இரண்டாவது கதாநாயகனாக நடராஜசிவம் தெரிவு செய்யப்பட்டார்.
ஒருநாள் படப்பிடிப்புக்கு நடராஜசிவம் சென்றார். தான் நடிக்க வேண்டிய பாத்திரத்தில் தயாரிப்பாளர் நடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போய்விட் LTñT.
பின்பு ஜோர்ஜ் சந்திரசேகரன் நடிக்க இருந்த பாத் திரத்தில் நடராஜசிவமும், யாரோ நடிக்கவேண்டி இருந்த பாத்திரத்தில் ஜோர்ஜ் சந்திரசேகரனும் நடித்தார்கள்.
திரைக்கதையில் பல்வேறு சிறு பாத்திரங்கள் வந்து போகின்றன. அவற்றுக்கு அவ்வப்போது படப்பிடிப்பைப் பார்க்கவந்தவர்களைப் பயன்படுத்தினார்கள்.
படப்பிடிப்புகள் கொழும்பு, மலையகம், மட்டக் களப்பு ஆகிய இடங்களில் நடைபெற்றன. தயாரிப்பாளர் கள், பாடல்களின் இசை அமைப்பில் அதிக அக்கறை காட்டினார்கள். ஆர்.முத்துசாமி பல படங்களுக்கு இசை அமைத்தவர். அவர் மகன் மோகன்ராஜ் மேடைகளில் பல இசை நிகழ்ச்சிகளைச் செய்துவந்தார். ‘எங்களில் ஒருவன்’ என்ற படத்தில் தந்தையுடன் சேர்ந்து இசை அமைத்தார். தனித்து "புளுகர்கள் யாக்கிரதை' என்ற படத்துக்கு முதன்

Page 144
270 தம்பிஐயா தேவதாஸ்
முதலில் இசை அமைத்தார். ஆனால், அப்படம் வெளி வரவில்லை.
எம்.மோகன்ராஜ் இப்படத்துக்கான பாடல்களுக்கு இசை அமைத்தார். அவருக்கு உதவியாக ரங்கன் இருந் தார்.
'பாதை மாறிய பருவங்கள்' திரைப்படத்தில் ஒரு காட்சி. லினா, மாயா, ஷாநவாஸ் ஆகியோர். (1992)
பாடல்களை பூரீஸ்கந்தராஜா, இரா.பத்மநாதன், அம்பி, செ.குணரத்தினம் ஆகியோர் இயற்றினர்.
 

பாதை மாறிய பருவங்கள் 27
அப்பாடல்களை மோகன், கே.எஸ்.பாலச்சந்திரன், கே.ஜெயகிருஷ்ணா, பி. கிருஷ்ணன், ராணி ஜோசப், ஜெகதேவி ஆகியோர் பாடினர்.
பல கஷ்டங்களின்பின் 15.10.1982இல் பூரீகருமாரி யம்மன் கிறியேஷன், 'பாதை மாறிய பருவங்கள் திரைப் படம் இலங்கையில் ஐந்து இடங்களில் திரையிடப்பட்டது.
கதை வசனம் தயாரிப்பு பூரீஸ்கந்தராஜா' என்று இருந்தது. கெளரவ நடிகர்களின் பெயர்ப் பட்டியலில் ஜோர்ஜ் சந்திரசேகரனின் பெயரும் இருந்தது. இப்படத்தைப் பற்றிப் பலர் விமர்சனம் எழுதினர். நானும் எழுதினேன். அது ‘வீரகேசரி'யில் (31.10.1982) வெளிவந்தது.
0 0 0 0 KM தெய்வேந்திரா, தான் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். வர்ணக் காட்சிகள் எல்லாம் மனத்தை மயக்குகின்றன.
கதை நாயகன் அந்தக் காலத்துத் 'திரும்பிப்பார்’ சிவாஜியை நினைவுபடுத்துகிறார். மூன்று கதாநாயகிகள், கதாநாயகன் இருவரை ஏமாற்றி மூன்றாவது பெண்ணிடம் சிக்கித் திருந்தியபோது, கைது செய்யப்படுகிறான். நீண்ட காலமாகப் பெண்களை ஏமாற்றிய ஒருவன் சில நாட்களில் வேதனையால் மனம் மாறுகின்றார்.
மனம் மாறுவதற்கான காரணத்தைச் சிறிது விளக்க மாகத்தான் காட்டியிருக்கக்கூடாதா? இலங்கை நடிகைகள் தென்னகப் படங்களில் கவர்ச்சியைக் காட்ட அழைக்கப் படுவது போல், இந்த இலங்கைப் படத்தில் கவர்ச்சியைக் காட்டுவதற்கென்றே தென்னகக் கவர்ச்சித்தாரகை மாயாவை அழைத்திருக்கிறார்கள். இந்நடிகை கவர்ச்சியை மிக அதிகமாகக் காட்டிக் கொண்டே சில இடங்ளில் மற்ற நடிகைகளைவிடத் திறமாகவும் நடிக்கிறார். சுமதிக்கு உருவத்தில் முதிர்ச்சி போதவில்லை. பல நடிகைகளுக்கு வானொலியினர் இரவல் குரல் வழங்கியிருக்கிறார்கள்.

Page 145
272 தம்பிஐயா தேவதாஸ்
படத் தொகுப்பில் தொய்வு தெரியவில்லை. பாடல் காட்சிகள் வர்ணத்தில் இருக்கின்றன. இதுவரை இலங் கையில் உருவான தமிழ்த் திரைப்படங்களைவிட, இப் படத்தின் தொழில் நுட்ப அம்சங்கள் சிறந்து விளங்கு கின்றன.
இப்படத்தின் நல்ல அம்சங்களில் ஒன்று சிறந்த படப் பிடிப்பாகும். பொதுவாக எல்லா நடிகர்களும் திறம்பட நடித்திருந்தாலும், நம்பமுடியாத கதை நிகழ்வுகள் வெறுப்பை உண்டாக்குகின்றன.
‘பாதை மாறிய பருவங்கள்" திரைப்படக் கதாநாயகன் ஷாநவாஸ்.
இத்தனை பெரிய முயற்சியில் ஈடுபட்ட கலைஞர்கள், சிறந்த கதையொன்றைத் தெரிவு செய்து படத்தைத் தயாரித்திருந்தார்களானால் அவர்களின் முயற்சியை மேலும் அதிகமாகவே பாராட்டியிருக்கலாம்.
இப்படம் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் மூன்று வாரங்கள் ஓடியது. மட்டக்களப்பிலும் ஹட்டனிலும் இரண்டு வாரங்கள் ஓடியது.
 

பாதை மாறிய பருவங்கள் 273
இப்படம் 1982இல் திரையிடப்பட்டது. இக்காலத்தில் இன்னும் சில திரைப்படங்களும் தயாரிப்பில் இருந்தன. 1983 ஆம் ஆண்டு பிறந்தது. ஜூலை மாதம் வந்தது. கலவரம்' நிகழ்ந்தது. கே.குணரெத்தினத்தக்குச் சொந்த மான ஹெந்தள விஜயா ஸ்ரூடியோ தீ வைக்கப்பட்டது. அரைகுறையாக வளர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் படங்கள் சிலவும் எரிந்து சாம்பலாகின.
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் வரலாற்றிலும் கரு மேகங்கள் சூழத்தொடங்கின.
இலங்கைத் தமிழ் சினிமாவின் வரலாற்று நாயகர் களில் சிலர் புலம் பெயர்ந்தார்கள் பலர் மெளனம் சாதித்தார்கள்.

Page 146
29. 'ஷர்மிளாவின் இதய ராகம்
1982ஆம் ஆண்டு ‘பாதை மாறிய பருவங்கள்' என்ற படம் திரையிடப்பட்டது. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ் சிங்களக் கலவரம் உருவாகியது. அதனால், தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் பலர் புலம்பெயர்ந்தார் கள். தொடர்ந்து 10 வருடங்களாக எந்தத் தமிழ்த் திரைப் படமும் உருவாகவில்லை. இலங்கையில் தமிழ்ச் சினிமா அழிந்தொழிந்து போய்விட்டதோ என்று எண்ணத் தோன் றியது.
ஆனால், அது தவறு என்பதை 1989ஆம் ஆண்டு வெளிவந்த செய்தியொன்று தெரிவித்தது. ஷர்மிளாவின் இதயராகம்' என்ற படம் உருவாகிறது என்ற செய்திதான்
• 9H3ے
அந்தக் காலத்தில் இலங்கையில் ‘வீரகேசரி', 'தினகரன்', ‘சிந்தாமணி” ஆகிய பிரபலமான தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருந்தன. காலக் கோளாறினால் ‘சிந் தாமணி’ பத்திரிகை நின்றுவிட்டது. அந்தச் ‘சிந்தாமணி’ பத்திரிகையில் 1987.01.04 முதல் பிரபல பெண் எழுத்

ஷர்மிளாவின் இதய ராகம் 275
தாளர் ஜெகியா ஜூனைதீன் தொடர்ந்து 32 வாரங்களாக எழுதிய தொடர்கதைதான் 'ஷர்மிளாவின் இதயராகம்'.
அநேக வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1989 இல் 'ஷர்மிளாவின் இதயராகம் முதற்பதிப்பாகப் புத்தக உருவில் வெளிவந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் தமிழ் பேசும் வாசகர்களின் விருப்பத்துக்கிணங்க இக் கதைப் புத்தகம் இரண்டாவது பதிப்பாகவும் வெளிவந்தது.
இந்தக் கதை பலரையும் கவர்ந்தது. இத்தனை ஜன ரஞ்சகமான கதையைத் திரைப்படமாக்கினால் வெற்றி பெறலாம் என்று எண்ணினார், இந்நாவல் ஆசிரியையின் கணவர். அவர்தான் பேராதனை ஏ.ஏ. ஜுனைதீன்.
‘பேராதனை ஜூனைதீன் நீண்ட காலமாக இலங்கைச் சினிமாத் துறையுடன் தொடர்புடையவர். ஏற்கனவே இலங்கையில் உருவான 'டைக்ஷி டிறைவர்' 'நெஞ்சுக்கு நீதி’, ‘தெய்வம் தந்த வீடு' ஆகிய படங்களுக்குத் திரைக் கதை வசனம் எழுதியவர். சுமார் 10 சிங்களப் படங் களுக்கும் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்.
'மவுண்டன் இன் த ஜங்கில்' என்ற ஆங்கிலப் படத் துக்கு உதவி இயக்குநராகவும் கடமையாற்றியிருக்கிறார்.
தனது மனைவி எழுதிய ‘ஷர்மிளாவின் இதயராகம் என்ற கதைக்கும் இவரே திரைக்கதை வசனம் எழுதினார். முஸ்லிம் பாத்திரங்களைத் தமிழ்ப் பாத்திரங்களாக மாற்றித் திரைக்கதை எழுதினார். முழுக்க முழுக்க இலங் கைக் கலைஞர்களைக் கொண்டே இந்தத் திரைப்படத்தை உருவாக்கவேண்டும் என்று எண்ணினார். கலைக்கு இன மத பேதம் இல்லை என்பதற்கு இணங்க இதே படத்தைச் சிங்களத்திலும் உருவாக்க முனைந்தார். ‘ஷர்மிலா பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இப்படமே, இலங் கையின் முதலாவது கலப்படமற்ற தேசிய வர்ணத் திரைப் படம் என்று கொள்ள வேண்டும்.

Page 147
276 தம்பிஜயா தேவதாஸ்
ஷர்மிளாவின் இதயராகம்' படப்பிடிப்பின்போது ஒளிப்பதிவாளர் ஜே.ஜே. யோகராஜா, கதாநாயகி விணா, காதநாயகன் ஷஷி, இயக்குநர் சுனில்சோமபீரிஸ், கதை வசனகர்த்தாவும் தயாரிப் பாளருமான ஏ.ஏ. ஜுனைதீன் ஆகியோர்.
பிறப்பால் முஸ்லிமான ஷஷி பிரபலமான சிங்களத் திரைப்பட நடிகர். இவரே இப்படத்தின் கதாநாயகன் இவருடன் வீணா ஜெயக்கொடி, நிலானி அபேவர்த்தன, லீனாடி சில்வா, றோஹித்த மான்னகே போன்ற சிங்கள நடிகர்கள் நடித்தார்கள் இவர்களுடன் மரிக்கார் எஸ்.ராம்தாஸ், கே.எஸ்.பாலச்சந்திரன், கே.ஏ. ஜவாஹர், எம்.எம்.லத்தீப், ஜோபு நசீர், கே.மோகன்குமார், கமலபூரீ, என்.ராஜம், ரஞ்சனி, எஸ்.விஸ்வநாதநராஜா, எஸ்.என்.தனரெத்தினம், கலைச்செல்வன், எம்.உதயகுமார், டபிள்யூ ரட்ணம், என்.ராஜ" ஆகியோரும் நடித்தனர். ஜே.பாத்திமா சுல்பிகா,
 
 

ஷர்மிளாவின் இதய ராகம் 277
டி.ஜெயப்பிரியா, ஜே. உஸாமா அலி போன்ற குழந்தை நட்சத்திரங்களும் தோன்றின.
பேராதனை ஜூனைதீன், கதை திரைக்கதை வசனங் களுடன் பாடல்கள் சிலவற்றையும் எழுதினார். இன்னும் சில பாடல்களை எஸ்.விஸ்வநாதராஜா, 'புஸல்லாவ இஸ்மாலிகா ஆகியோர் எழுதினர். சரத் தசனாயக்கா இசை அமைத்த பாடல்களை வீ.முத்தழகு, எஸ்.வீ.ஆர்.கணபதிப் பிள்ளை, கலாவதி, ராணிஜோசப், விஸ்வநாதராஜா, ஆகியோர் பின்னணி பாடினர். வானொலிக் கலைஞர்கள் பலர் உரையாடல்களுக்குக் குரல் வழங்கினர். கதாநாயக னுக்கு ஏ.ஆர்.எம்.ஜிப்றி குரல் வழங்கினார். ஜே.ஜே.யோக ராஜா ஒளிப்பதிவு. லயனல்குணரத்ன ஒலிப்பதிவு. நடன அமைப்பு பி.எம்.நந்தகுமார்.
இயக்குநர் சுனில் சோமபீரிஸ். இணை இயக்குநர் ஏ.ஏ. ஜுனைதீன். தயாரிப்பு நிர்வாகிகள் எஸ்.வி.ரஞ்சன், ஜே.ஜே.அசன்அலி. தயாரிப்பு மேற்பார்வையும் கலை நிர்மாணமும் பிரபல ஒவியர் எஸ்.டி.சாமி. தயாரிப்பு ஏ.ஏ. ஜுனைதீன், திருமதி ஜெக்கியா ஜுனைதீன் ஆகி
யோர்.
இலங்கையில் தயாரான இந்தத் தமிழ்த் திரைப்படம் சிங்களத்தில் டப் பண்ணப்படுவதும் முக்கிய அம்சமாகும். இச்சிங்களப்படத்தின் பெயர் ‘ஒப மட்ட வாசனா’ என்ப தாகும்.
1989 ஆம் ஆண்டே தயாரித்து முடிக்கப்பட்ட 'ஷர் மிளாவின் இதயராகம் 4 வருடங்களின் பின்பே திரைக்கு வந்தது.
படம் திரையிடுவதற்கு முன்பு பத்திரிகையாளர்களுக் குக் கொழும்பு ரீகல் தியேட்டரில் போட்டுக் காட்டினார்கள். என்னையும் ஜுனைதீன் அழைத்திருந்தார். என்னைப் போலவே நண்பர் மொழிவாணனும் படத்தைப் பார்த்தார்.

Page 148
278 தம்பிஐயா தேவதாஸ்
இவர் தனது கருத்தை விமர்சனமாகத் தினகரனில் (27.06.93) எழுதினார்.
'ஷர்மிளாவின் இதயராகம்' படத்தில் ஒரு காட்சி. கதாநாயகன் ஷஷியும் கதாநாயகி வீணாவும்.
படத்தின் டைடிலைப் பார்த்தவுடனேயே கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அருமை! சாமிக்கு ஒரு சபாஷ்! ஆரம்பமே சண்டைக் காட்சி. அசத்திவிட்டார்கள்! தென் னிந்தியப் படத்தைப் பார்ப்பதுபோன்று ஒரு பிரமை
ஆரம்பத்திலேயே தனது கைவரிசையைக் காட்டிவிட் டார் சுனில்சோமபீரிஸ்! யோகராஜாவின் கமறா நம்மை
 

ஷர்மிளாவின் இதய ராகம் 279
யோசிக்கவைக்கிறது. நம் நாட்டிலும் இப்படியும் ஒரு திறமைசாலியா என்று!
கலைஞர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பைக் குறை வின்றிச் செய்திருக்கிறார்கள். முகவரி தொலைந்துபோன கலைஞர்களுக்கு இப்படத்தில் முகம் காட்டுவதற்கு ஜுனைதீன் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.
..இதுவரையில் இலங்கையில் உருவான திரைப்படங் களைவிட, 'ஷர்மிளாவின் இதயராகம் உயர்ந்து நிற்கிறது.
இந்தியாவிலிருந்து எந்தக் குப்பையை இங்கு கொண்டு வந்து கொட்டினாலும் ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்து அந்தக் குப்பைமேட்டில் குளிர்காய்ந்துவிட்டு, சலித்துக் கொண்டு திரும்பும் நம் நாட்டு ரசிகர்கள், இப்படத்துக்குக் கண்டிப்பாகத் தம் ஆதரவை வழங்கவேண்டும்’ என்று எழுதினார்.
பல்வேறு பிரச்சினைகளின் பின் 'ஷர்மிளாவின் இதய ராகம் திரைப்படம் 24.09.1993இல் திரையிடப்பட்டது. மத்திய கொழும்பு (கபிடல்), கட்டுகள்தொட்டை (நியூ சீகிரி), நுவரெலியா (திவோலி) ஆகிய மூன்று இடங்களி லேயே முதன் முதலில் திரையிடப்பட்டது.
வழமையைவிட, இப்படத்துக்குத் தேசியப் பத்திரிகை கள் பெரும் வரவேற்பைக் கொடுத்தன. ‘வீரகேசரி'யில் ஆர்.ராஜலிங்கம் விமர்சனம் எழுதினார்.
- - - O இப்படம் முன்னர் வெளிவந்த படங்களோடு ஒப் பிடுகையில் எவ்வளவோ அபிவிருத்தி அடைந்துள்ளது. நாவலில் வந்த ஷர்மிளா எந்தளவுக்கு வாசகர் மனதைத் தொட்டதோ அந்த அளவுக்குப் படத்தில் வந்த 'ஷர்மிளா ரசிகர்கள் மனதைத் தொடவில்லை என்றே தோன்றுகிறது.

Page 149
280 தம்பிஐயா தேவதாஸ்
ஜவாஹர், ராம்தாஸ், லத்தீப், சாண்டோ முத்தையா தேவர் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக அமைந்தது. பாடல் கள் இனிமையாக இருக்கின்றன.
ஷர்மிளாவின் இதயராகம் திரைப்படத்தில் கதாநாயகி வீணாவுடன் மரிக்கார் எஸ்.ராம்தாஸ்
.ஏனைய நம் நாட்டுக் கலைஞர்களும் இத்தகைய ஒரு முயற்சியில் ஈடுபட இந்தப் படம் ஒரு நம்பிக்கை நட்சத்திர மாக மிளிரவேண்டும் என்பதே எமது ஆசை என்று எழுதி னார்.
தினகரனில்'மானா மக்கீன் வித்தியாசமான முறையில் விமர்சனம் எழுதினார். xx
 
 
 
 

ஷர்மிளாவின் இதய ராகம் 28
அன்பான ஷர்மிளா சகோதரி என்று விளித்து எழுதி னார். எப்படியோ பல போட்டிகளுக்கும் பொறாமை களுக்கும் மத்தியில் உங்கள் இதயராகத்தை இசைக்க வேண்டியிருக்கிறது.
இது உங்கள் தலைவிதிமட்டுமல்ல எங்கள் தலைவிதியும்
(n-.
.ஷர்மிளா இலங்கைப் பெண் எத்தனையோ ஆண்டு களுக்குப் பின் அருமை பெருமையா வந்திருப்பவள். அவளுக்குக் கியூவரிசையில் இருந்து விதிவிலக்கு அளியுங்கள்; ஒரு நல்ல தியேட்டரைத் தாருங்கள் என்று உங்கள் தந்தை (ஏ.ஏ. ஜுனைதீன்) போராடியிருக்கலாம்.
O to எது எப்படியானாலும் என் அபிமானிகள் உங் களை ஒரு முறை காண வருவார்கள் என நிச்சயமாக நம்பு கிறேன், என்று எழுதியிருந்தார்.
இப்படம் மத்திய கொழும்பில் 4 வாரங்களும் நுவரெலியாவில் 3 வாரங்களும் கட்டுகாஸ்தோட்டையில் 2 வாரங்களும் தென் கொழும்பில் (கொன்கோட்) 1 வாரமும் ஓடியது.
இப்படம் திரையிடப்பட்டு ஒரு மாதத்தின்பின் இப்படக் கலைஞர்களுக்கு மருதானை எல்பிஸ்டன் ‘சரசவிபாயா வில் ஒரு பாராட்டு விழா வைத்தார்கள். அலையோசை ஞானப் பிரகாசம் அதை ஏற்பாடு செய்திருந்தார். இதில் இப்படத் தின் தயாரிப்பாளர் ஏ.ஏ. ஜுனைதீன் பேசினார்.
‘நான் மவுண்டன் இன் த ஜங்கில் என்ற ஆங்கிலப் படத்தில் உதவி இயக்குநராக இருந்தேன். அப்படத்தில் உழைத்த பணத்தினால் கண்டியில் வீடு கட்டினேன். 'ஷர் மிளாவின் இதயராகம்' படத்துக்காக அவ்வீட்டை விற்க வேண்டி ஏற்பட்டுவிட்டது. இப்படத்துக்காக 21 லட்சம் ரூபாவைச் செலவு செய்தேன். திரைப்படக் கூட்டுத் தாபனம் 6% லட்சம் ரூபா கடனாகத் தருவதாகக் கூறியது.

Page 150
282 தம்பிஐயா தேவதாஸ்
பின்பு தர மறுத்துவிட்டது. இப்படத்தை ‘மா ஒபட வாசனா என்ற பெயரில் சிங்களப் படமாக டப் செய்கிறேன். அப்
படத்தின் இறுதி வேலைகளைச் செய்வதற்காக 50 ஆயிரம்
ரூபா இல்லாமல் கஷ்டப்படுகிறேன்' என்று கூறினார்.
இவற்றைக் கூறும் பொழுது அவர் மேடையில் அழுதேவிட்
LsTT
மானாமக்கீன் இக்கூட்டத்தில் "இனிமேல் இலங்கை யில் தமிழ்த் திரைப்படம் உருவாகாது’ என்றார். மதுர் மெளலானா இனித்தான் தமிழ்ப்படங்கள் வரவேண்டும் என்று கூறினார்.
எது எப்படியோ இதன்பின்பும் தமிழ்ப்படங்கள் உரு வாகுவதாக செய்திகள் வெளிவந்தன. அவை உண்மையும்
sin. L

30. தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள்
1931ஆம் ஆண்டு “இந்தியத் தமிழ்ப் பேசும்படமான காளிதாஸ்' திரையிடப்பட்டது. இந்தப்படத்தில் ஓர் அதி யம். கதாநாயகி தமிழில் பேசுவாள்; பாடுவாள். ஆனால் அவளது கேள்விகளுக்குக் கதாநாயகன் தெலுங்கில்தான் தில் சொல்லுவான். அவ்வப்பொழுது துணைநடிகர்கள் இந்தியிலும் பேசியிருக்கிறார்கள். இப்படித் தான் இந்தியா வின் முதல் தமிழ்ப்படம் தமிழ் பேசத்தொடங்கியது. பின் னாளில் வேறு இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட விசேடமான படங்கள் அவற்றின் தனித்தன்மை கருதி தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இன்று தமிழ்நாட்டில் வெளிவரும் தமிழ்ப்படங்களில் கணிசமான அளவு டப் படங்களும் இருக்கின்றன.
இப்படியான முயற்சி 1973ஆம் ஆண்டில் இலங்கை யிலும் நடைபெற்றிருக்கிறது. சிங்களப் படமொன்றை தமிழில் மொழிமாற்றம் செய்யும் முயற்சிதான் அது.
ஆரம்பகாலத்தில் சிங்களப்படங்கள் தென்னிந்தியா வில் தயாரிக்கப்பட்டன. இவை பின்பு இலங்கையில் தயாரிக்கப்பட்டபோது தென்னிந்தியத் தமிழ்க்கலைஞர்கள் இலங்கைக்கு வந்து சென்றனர். அவர்கள் பல சிங்களப்

Page 151
284 தம்பிஐயா தேவதாஸ்
| படங்களை இயக்கினர், ஒளிப்பதிவு செய்தனர், இசை அமைத்தனர், பின்னணி பாடினர். அவர்களே சிங்களப் படங்களை வளர்த்து விட்டனர். வழிகாட்டி விட்டனர். உயர்த்தி விட்டனர். அவர்களில் ப. நீலகண்டன், எஸ். நாகராஜன், மஸ்த்தான், ரீ.ஆர். பாப்பா, ஏ.எம். ராஜா, ஜிக்கி என்று பல கலைஞர்களின் பெயர்களை கூறிக் கொண்டே போகலாம். திரையில் தோன்றுபவர்களைத் தவிர திரையின் பின்னால் தொழிற்பட்ட கலைஞர்கள் எல்லோரும் இந்தக் கலைஞர்களே. 1956 ஆம் ஆண்டு வரை இவர்களே சிங்கள சினிமா உலகை ஆட்டிப்படைத் தனர்,
1956 ஆம் ஆண்டுக்குப்பின் இந்தியக்கலைஞர்கள் இலங்கைக்கு வந்து சினிமாத் தொழிலில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் தடைபோட்டது.
அதனால் இந்தியக் கலைஞர்களிடம் உதவியாளர் களாக இருந்த இலங்கைத் தமிழ்க் கலைஞர்கள் சிங்களச் சினிமாவை ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.
இவர்களில் சு.சோமசேகரன், கே. வெண்கட், எஸ். ராமநாதன், எஸ். செல்வரெத்தினம், எம்.எஸ். தம்பு, லெனின்மொறைஸ், ஜோ. தேவானந், எஸ்.வி. சந்திரன், எம்.வி. பாலன், எம்.எஸ். ஆனந்தன், ஏ. அர்ஜுனா போன்றோாைக் குறிப்பிடலாம். அர்ஜுனாவின் ஆரம்ப கால முயற்சிகளில் 'கலியுககாலய என்ற சிங்களப்படமும் ஒன்றாகும். இப்படத்தை தமிழ்மொழிக்கு டப் செய்து வெளியிடலாமே என்று அர்ஜூனா எண்ணினார்.
(1) கலியுக காலம்
இப்படித்தான் 'கலியுககாலம் டப் படம் உருவானது.
டப் படம் என்றால் நடிகர்களின் உதட்டசைவுக்கு ஏற்ற வாறு வசனம் எழுதவேண்டும். இப்படி வசனம் எழுது

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 285
வதில் ஈழத்து ரெத்தினம் சமர்த்தர். அவரே வசனத்தை எழுதினார்.
வசனங்களைப்போலவே பாடல்களும் முக்கிய
V
ஒரு படப்பிடிப்பின்இடைவேளையின்போது, பின்னால்கண்ணாடி அணிந்து அமர்த்திருப்பவரே ஏ. அர்ஜினா. .
அந்தக்காலத்தில் இசை அமைப்பாளர் 'சண் கொழும்பு பிரதான வீதியில் றெக்கோட்பார் வைத்திருந்தார். பல சிங்களப் பாடகர்களின் பாடல்களை இசைத் தட்டில் ஏற்றிக் கொடுத்தார். 'கலியுக காலய சிங்களப்படத்துக்

Page 152
286 தம்பிஐயா தேவதாஸ்
கும் இசை அமைந்திருந்தார். இவரே இதன் தமிழ்ப்பதிப் பான 'கலியுக காலம் தமிழ்ப்படத்தின் 5 பாடல்களுக்கும் இசை அமைக்கும் பொறுப்பையும் ஏற்றார். எம்.பி. பரமேஸ், குலசீலநாதன் போன்றோர் பின்னணி பாடி னர். சுஜாதா அத்தநாயக்க, அமுதன் அண்ணாமலை போன்றோர் இப்படத்தின் மூலமே சினிமாப்பாடகர்களா
SENITTSSGIT .
'கலியுக காலம் திரைப்படத்தில் ஒரு காட்சி. டொனி ரனசிங்கவும் நீட்டா பெனான்டோவும்.
 
 

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 287
பெரும்பாலான வானொலிக் கலைஞர்களுக்கு இப் படமே சினிமாவில் நுழைவதற்கான வாசற்படியாக அமைந்தது.
'கலியுக காலய சிங்களப்படம். 1975ஆம் ஆண்டி லேயே திரையிடப்பட்டது. ஆனால் அதற்கு ஒரு வருடத் துக்கு முன்பே (14.04.74) 'கலியுக காலம் தமிழ்ப்படம் திரையிடப்பட்டது.
இப்படத்தில் இடம்பெற்ற உருப்படியான அம்சம் எது வென்றால் 'சண் இசை அமைத்த பாடல்கள் மட்டுமே. இப்பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு இலங்கை வொனொலி நிலையத்தில் இருக்கிறது.
'அர்ஜுனா’ என்ற தமிழர் தயாரித்தார். ‘சண்’ என்ற தமிழர் இசை அமைத்தார் என்பதைத் தவிர இப்படத்தை இவ்வளவு பணம் செலவழித்து தமிழாக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டதோ தெரியவில்லை.
(2) நான்கு லெட்சம்'
'கலியுக காலம் டப் படம் அதிக நாட்கள் ஒட வில்லை. ஆனாலும் மேலுமொரு சிங்களப்படத்தை டப் பண்ணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
1946 ஆம் ஆண்டு இலங்கையில் ஒரு பெரும் கொள் ளைச் சம்பவம் இடம்பெற்றது. உண்மையாகவே இடம் பெற்ற இக்கொள்ளைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து சிங்களத் திரைப்படமொன்றை உருவாக்கினார் கள். பிரபல சிங்களத் திரைப்பட இயக்குநர் டைரஸ் தொடவத்தை இப்படத்தை இயக்கினார். படம் 1971ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படம் திரையிடப்பட்டு இரண்டு வருடங்களின்பின்பு இதனைத் தமிழில் மொழி மாற்றம் செய்யும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.

Page 153
288 VM தம்பிஐயா தேவதாஸ்
இப்படத்தை தமிழாக்கும் பொறுப்பு பிரபல அறிவிப் பாளர் மயில்வாகனனிடம் கொடுக்கப்பட்டுது. ‘ஹாற லக்கூடி' என்ற சிங்களத் தொடரின் கருத்தான ‘நான்கு லெட்சம்' என்ற பெயரே தமிழ்ப்படத்துக்கும் வைக்கப்பட் டது. கலைஞர்கள் பி.எச். அப்துல்ஹமீட், எஸ். ராம்தாஸ் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து இப்படத்துக்கான வச னங்களை எழுதினார்கள்.
நூற்றுக்கு மேற்பட்டுகள் படங்களுக்கு ஆர்ற் டிறெக்ரறாகப் பணியாற்றிய ஜே. ஏ. வின்சென்ற்
ரீ. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், கே. சந்திர சேகரன், நடராஜ சிவம், ஜோர்ஜ் சந்திரசேகரன் போன் றோர் படத்துக்குக் குரல் வழங்கினர். படம் கொழும்பு (கிங்ஸ்லி) உட்பட நான்கு ஊர்களில் மட்டுமே திரை யிடப்பட்டது.
படத்துக்கு அதிக விளம்பரம் கிடைக்கவில்லை. உண் மைக் கொள்ளைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது என்பதைத்தவிர வேறு விசேடம் எது வும் இப்படத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. வானொ
 

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 289
லிக் கலைஞர்கள், தமது சினிமா ஆர்வத்தையும் ஆசை களை யும் இப்படத்தின் மூலமும் தொடர்ந்திருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும். தயாரிப்பாளர்கள் எப்படியான படம் தயாரித்தாலும் படத்துக்குக் குரல் சேர்ப்பதற்கு வானொலி நிலையத்தை நோக்கியே வரவேண்டியிருந்தது.
(3) 'யார் அவள்”
1955ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் அதிக தமிழ் நாடகங்கள் மேடையேறிக்கொண்டிருந்தன. அக்காலத்தில் பல நாடகங்களை இயக்கி வந்தார் தமிழ் இளைஞர் ஒருவர். சென்னைக்குச் சென்ற அவ்விளைஞர் இங்குள்ள ரேவதி ஸ்ரூடியோவில் ஒளிப்பதிவாளராகச் சேர்ந்து கொண்டார். தொடர்ந்து இந்தியாவில் இருக்க விசா கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் இலங்கை திரும்பிவிட்டார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட சில ஆங்கிலப்படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக் கடமை யாற்றினார். முதன்முதலாக ‘சுது துவ' என்ற சிங்களப் படத்தை நெறியாண்டதுடன் ஒளிப்பதிவையும் கவனித் தார். தொடர்ந்து பல சிங்களப் படங்களை நெறியாண் டார். காமினி பொன்சேகாவை "துரயன்கேத் துரயா' படத்தின் மூலம் பிரபலமாக்கினார். விஜயகுமாரணதுங் கவை கதாநாயகன் ஆக்கினார். கீதா குமாரசிங்காவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே. சிங்களத் திரை உலகில் சிறந்த இயக்குநராக இவர் விளங்கினார்.
இந்தத் தமிழ் இளைஞரின் பெயர்தான் லெனின் மொறைஸ். அந்தக் காலத்தில் 'அந்த நாள்' என்றொரு புதுமையான இந்தியத் தமிழ்ப்படம் இலங்கையில் திரை யிடப்பட்டது. இப்படத்தைப் பார்த்துச் சொக்கிப்போன இவ்விளைஞர், இதே போன்றதொரு சிங்களப்படத்தை யும் உருவாக்கினால் என்ன என்று எண்ணினார். அவ்

Page 154
290 தம்பிஐயா தேவதாஸ்
வெண்ணத்தைச் செயலிலும் காட்டத் தொடங்கிவிட்டார். அச்சிங்களப்படத்தின் பெயர்தான் 'அபிரஹச (பரம ரகசியம்) என்பதாகும். இந்தப் படம் இவருக்கு சிங்கள ரசிகர்கள் மத்தியில் பெரும் மதிப்பை ஏற்படுத்தியது. பெரும் புகழைக் கொண்டு வந்தது.
அவர், இதே படத்தைத் தமிழ்மொழிக்கு டப் செய் தால் என்ன என்று எண்ணினார். அவரது எண்ணத்துக்கு பிரபல ஒலிப்பதிவாளர் எஸ். சாரங்கராசா களம் அமைத்துக் கொடுத்தார். புதிதாக ஒரு பாடல் காட்சியைப் படம் பிடித்து இப்படத்துக்குள் செருகினார். அக்காலத் தில் பொப்பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றிருந்தவர் ஏ.ஈ. மனோகரன். சிங்களத் திரை உலகின் புகழ்பெற்ற கதாநாயகியாக விளங்கியவர் மாலினி பொன்சேகா. இவர் கள் இருவரையும் இணைத்து உருவாக்கிய பாடல் காட்சி தான் அது. அந்தமொழி மாற்றுப்படத்தின் பெயர்தான் யார் அவள்’. பிரபல ஒலிப்பதிவாளர் எஸ். சாரங்க ராஜாவின் புதல்வர்களான எஸ். சாஸ்வதராஜ், எஸ். மனோராஜ் ஆகிய இருவரும் இப்படத்தின் தயாரிப் பாளர்கள். எஸ்.ஏ. அழகேசனின் மூலக் கதைக்கு ஈழத்து ரெத்தினம் வசனம் பாடல்களை எழுதினார்.
இசை அமைப்பை எம்.கே. றொக்சாமியும், ரீ.எப். லத்தீப்பும் ஒன்றிணைந்து பொறுப்பேற்றார்கள். அந்தக் காலத்தில் பிரபலம் பெற்று விளங்கிய ஹிந்திப் பாடல்க ளின் மெட்டுக்களை அப்படியே பிரதிபண்ணி பாடல்கள் உருவாக்கிப்பட்டிருந்தன. ஹிந்திப் பாடல்களை அப் படியே அழகாகப் பாடும் டொனிஹசன், மற்றும் சுஜாதா, எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் பின்னணி பாடினார்கள்.
சிங்கள நடிகர்களின் வாய் அசைப்பிற்கு வானொலித் தமிழ்க் கலைஞர்களின் குரல்கள் ஒலித்தன. பி.எச்.

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 29
அப்துல் ஹமீத், நடராஜ சிவம், ஜோர்ஜ் சந்திரசேகரன், ஆமினா பேகம் போன்றோர் குரல் கொடுத்திருந்தார்கள். விமர்சகர் ஒருவர், 'ரசிகன்’ என்ற புனைபெயரில் வீரகே சரியில் சிறிய விமர்சனம் எழுதியிருந்தார்.
ཚུཚེ་ཚེ་རྩི་
"யார் அவள் திரைப்படத்தை இயக்கிய பிரபல திரைப்பட. இயக்குநர் திரு. லெனின் மொறைஸ்
‘. இயக்குநர் லெனின் மொறைஸ் தனது கைவண் ணத்தைத் திறம்படக் காட்டியுள்ளார். நீருக்கடியில் பிணத் தைத் தேடும் காட்சி, பின்னணி இசை ஆகியவற்றை லெனின் மொறைஸ் புதிய பாணியில் கையாண்டுள் ளார். படத்தில் இடம்பெற்றுள்ள காபரே நடனங்கள் சிகர்களுக்கு விறுவிறுப்ப ஏற்படுத்துகின்றன. மனோகர

Page 155
292 தம்பிஐயா தேவதாஸ்
னும் மாலினியும் தங்கள் பாகத்தை கனகச்சிதமாகச் செய் துள்ளனர்" என்று அந்தச் சிறிய விமர்சனம் அமைந்திருந்
Ø3]•
'யார் அவள் டப் படத்தில் காதல் காட்சி. ஏ.ஈ. மனோகரனும் மாலினி பொன்சேகாவும் இப்படித் தோன்றுகிறார்கள். (1976)
தர்ஷினி பிலிம்ஸ் "யார் அவள் 09.04.1976இல் ஆறு நகரங்களில் திரையிடப்பட்டது. ஏனோதானோ என்று விளம்பரம் செய்யப்பட்டது.
 

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 293
படம் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்து 21 நாட்கள் ஓடியது. மட்டக்களப்பிலும் திருகோணமலை யிலும் 15 நாட்கள் ஓடியது.
இப்படியான மொழிமாற்றுப்படமே 20 நாட்கள் ஓடி யது ஆச்சரியமே. "புதிய காற்று ரசிகர்கள் மத்தியில் ஏற் படுத்திவிட்ட நம்பிக்கையே அதற்குக் காரணம் என்று பலர் கூறினர்.
1983ஆம் ஆண்டில் லெனின் மொறைஸ் 'நெஞ்சுக் குத் தெரியும்' என்ற முழுநீளத் தமிழ்ப்படத்தை உருவாக் கியிருந்தார். நல்லூர் மனோகரன், ஹெலன்குமாரி போன்ற பலர் நடித்திருந்தார்கள்.
1983 ஜூலைக் கலவரத்தில் ஹெந்தல விஜயா ஸ்ரூடியோ’ எரிக்கப்பட்ட போது, இப்படமும் எரிந்து சாம்பலாகியது. அப்படத்தின் சில காட்சிகளை ஏற்கனவே பார்த்திருந்த சிலர் அருமையான காட்சிகள் என்று புகழ்ந் தனர். லெனின் மொறைஸ் 28.05.1994ல் காலமானார்.
(4) 'சுமதி எங்கே?
எச்.சி. சந்திரவன்ச முதலாவது 16 மி.மீ. தமிழ்ப்பட மான ‘சமுதாயம்' படத்தை உருவாக்கியவர். அதன் பின்பு பல சிங்களப் படங்களைத் தயாரித்தவர். படம் வெற்றி பெறுகிறதோ தோல்வி அடைகிறதோ அதைப் பற்றிக் கவலைப்படமாட்டார். தொடர்ந்து படங்களைத் தயாரித்துக் கொண்டே இருப்பார்.
‘சமாஜய', 'சுனில’, ‘சேயாவ பசு பசு', 'சுகதிய கறா’, ‘வனகத்த கெல்ல" போன்ற பல சிங்களப்படங் களைத் தயாரித்து வெளியிட்டார். கடைசியாக வெளி யிட்ட ‘வனகத்த கெல்ல' என்ற படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தைத் தமிழுக்கு மொழிமாற்றம்

Page 156
2.94 தம்பிஐயா தேவதாஸ்
செய்வோமா என்று எண்ணினார். தமிழ்ப் படத்துக்குப் பொருத்தமான எதையாவது படம் பிடித்து இப்படத்துடன் இணைத்து விட்டால் அதைத் தமிழ்ப்படமாகவே மாற்றி விடலாம் என்று தீர்மானித்தார். அதற்கு நல்ல கதை வசனம் வேண்டுமே?
'சுமதி எங்கே?" திரைப்படத்துக்குத் திரைக்கதை வசனம் எழுதிய திருமதி ராஜம் பஷ்பவனம்.
1960 ஆம் ஆண்டு முதல், சிறுகதை, கவிதை, கட்டுரை, சோதிடம், சித்த வைத்தியம், சங்கீதம், வில்லுப் பாட்டு, கேலிச்சித்திரம், வானொலி நாடகம் போன்ற பல்வேறு துறைகளில் புகழ் பெற்று விளங்கினார் ஒரு பெண் எழுத்தாளர். அவர்தான் திருமதி இராஜம் பஷ்
Go).
இவரே இப்படத்துக்கான வசனம் பாடல்களை எழுதி னார். எண் சாத்திரப்படி இப்படத்துக்கு 'சுமதி எங்கே
 

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 295
என்றும் பெயர் துட்டினார். இலங்கைத் தமிழ்த் திரைப்பட மொன்றுக்குத் திரைக்கதை வசனம் எழுதிய முதலாவது பெண்மணி திருமதி இராஜம் புஷ்பவனம் என்றே கூற வேண்டும்.
"പ" 22༧ ༈ །
f
'சுமதி எங்கே படத்தில் சுப்பு லட்சுமியும் காசிநாதனும்.
இப்படத்தில் நடிப்பதற்காக அப்புத்தளையிலிருந்து 'பிலோமினா சொலமன்' என்ற அழகிய தமிழ்ப் பெண்ணை அழைத்து வந்தார்கள். எண் சாத்திரம் பார்த்த இராஜம் புஷ்பவனம் இவருக்கு ‘சுபாஷினி என்ற புதிய

Page 157
296 தம்பிஐயா தேவதாஸ்
பெயரைச் சூட்டினார். சுபாஷினிக்கு இப்படத்தில் சிறு பாத்திரமே வழங்கப்பட்டது. ஆனால் இதற்கு அடுத்து வந்த இரண்டு படங்களில் இந்த சுபாஷினி கதாநாயகி யாகவே நடித்து விட்டார்.
'சுமதி எங்கே திரைப்படத்தில் ஜபீர்குமார், யோகேஸ்வரன், காசிநாதன், ஏ.எஸ். ராஜா, சுப்பு லட்சுமி, பூரீ லதா, சுசில்குமார், வீ. ராஜம், எம். தனுஸ் போன்றோரும் நடிக்க ஒப்பந்தமானார்கள். இசை அமைப்பை இந்திராணி செல்லத்துரை கவனித்தார். இவ ருடன் குலாம் யாஸின், உதயகுமார், ஜெயந்தி, ஜெய கெளரி, நளினி, லக்சுமி போன்றோரும் பின்னணி
பாடினர்.
இலங்கையில் உள்ள பல புனித தலங்களில் படப் பிடிப்புகள் நடைபெற்றன. திருக்கேதீஸ்வரம், முன்னேஸ் வரம், போன்ற இடங்களும் அவற்றில் அடங்கும். பணக் கஷ்டம் காரணமாக இப்படம் ஆறு வருடங்கள் தயாரிப் பில் இருந்து விட்டது. 27.11.1976 இலேயே திரைக்கு வந்தது.
காட்டில் கொள்ளைக்காரரிடம் சிக்கிய சுமதி அவர் களிடமிருந்து தப்பி விடுகிறாள். விவசாயிகளுடன் சேர் கிறாள். பிச்சைக்காராக்களுக்குப் புனர்வாழ்வு அளிக் கிறாள். பல சாகசங்களைப் புரிந்துவிட்டு இறுதியில் பெற்றோரை அடைகிறாள். இதுதான் 'சுமதி எங்கே யின் கதையாகும்.
இத் திரைப்படம் கொழும்பில் ஒரு வாரமும், யாழ்ப் பாணத்தில் இரண்டு வாரங்களும் ஓடியது. மட்டக்களப் பிலும் பதுளையிலும் தலா ஐந்து நாட்கள் ஓடியது.
பத்திரிகைகள் கூட ஏனோ தானோ என்று விமர்சனம் எழுதின. காய்த்த மரத்துக்குத்தான் கல்லெறி விழுமென் பது உண்மைதானே.

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 297
(5) ஒருதலைக் காதல் பெப்டிஸ் பெனாண்டோ பிரபலமான சிங்கள நடிகர், படத் தயாரிப்பாளர். அவர் "எக்திககதாவ' என்ற சிங்க
ளப் படத்தைத் தயாரித்தார். கதாநாயகனும் அவரே. கதா நாயகி ஜெனிடா.
நடிகரும் எழுத்தாளருமான கலைச்செல்வனின் தயா ரிப்பு மேற்பார்வையில் இப்படம் 'ஒருதலைக் காதல் என்ற பெயரில் தமிழுக்கு டப் செய்யப்பட்டது. டப் படங் களில் பாத்திரங்களின் உதட்டசைவுகளுக்கு ஏற்பவே வச னமும் பாடலும் எழுதவேண்டும். அதை ஈழத்து ரெத் தினம் பொறுப்பேற்றார். பாடல்களுக்கு எம். றொக்சாமி இசை அமைத்தார். தமிழ்ப் பாடல்களை முத்தழகும் கலா வதியும் பாடினார்கள்.
கதாநாயகனுக்குக் கலைச்செல்வன் குரல் வழங்கினார். கதாநாயகிக்கு செல்வம் பெர்னாண்டோவின் குரல் ஒலித் தது. ஜவாஹர், டொன் பொஸ்கோ போன்றோரின்குரல் களும் ஒலித்தன.
தமிழ்ப் பாடல்களுடன் மேலும் இரண்டு வேற்று மொழிப் பாடல்களும் இடம் பெற்றன. அவற்றில் ஒன்று லதா மங்கேஷ்கர் பாடிய ஹிந்திப் பாடல். மற்றையது அல்பிராடோ பெஞ்சமின் பாடிய கிரேக்கமொழிப் பாட லாகும்.
செவன் ஆட்ஸ் ஒருதலைக் காதல் 12.12.1980ல் திரையிடப்பட்டது. கொழும்பில் 6 வாரங்களும், யாழ்ப் பாணத்தில் 7 வாரங்களும் ஓடியது. அந்தக் காலத்துத் தமிழ்ப்படத்தின் சுமாரான வதுலைவிட இப்படம் அதிக வதுலைப் பெற்றது. 1981ல் நடைபெற்ற அனைத்து இலங்கை கத்தோலிக்க திரைப்படப் போட்டியில், (ஒ.சீ.ஐ.சீ) தரமான சிருஷ்டி என்ற பாராட்டையும் பெற்றது.

Page 158
தம்பிஐயா தேவதாஸ்
(6) பனிமலர்கள்
சிங்களத்திரை உலகின் சிறந்த இசை அமைப்பாளர் களில் சரத் தசனாயக்கவும் ஒருவர். 'அநுராகம் தமிழ்த் திரைப்படத்துக்கும் இவரே இசை அமைத்தார். இவர் மிஹிதும்சிஹின என்ற சிங்களப்படத்தைத் தயாரத்தார்.
இப்படத்தை டப் பண்ணி அதற்கு 'பணிமலர்கள்' என்று பெயர் வைத்தார்கள். அதற்கான தயாரிப்பு நிர் வாகத்தை எஸ்.என். தனரெத்தினம் மேற்கொண்டார்.
இப்படத்தில் விஜயகுமாரணதுங்கவும் மாலினி பொன்சேகாவும் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார் கள். இவர்களுடன் றோய்டி சில்வா. சுமனா போன்றோ ரும் நடித்திருந்தார்கள்.
மொழிமாற்றுப் படத்துக்கு வசனம் முக்கியமாகும். அதனைப் பி. எஸ். நாகலிங்கம் எழுதினார்.
தயாரிப்பாளரே இசை அமைப்பாளர் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே போடப்பட்ட மெட்டுகளுக்கு ஈழத்து ரெத்தினம், சண் முகப்பிரியா ஆகியோர் பாட்டெழுதினர். இவர்களின் பாடல்களை முத்தழகு அருள்தாஸ், சந்திரிகா, கலாவதி ஆகியோர் பாடினர்.
குரல்வளம் மிக்க குறத்தி ஒருத்தியின் கதையே இது. விஜயகுமாரணதுங்கவின் பாத்திரத்துக்குக் கலைஞர் ஆர். திவ்வியராஜன் குரல் கொடுத்தார். மாலினிக்கு ஆமினா பேகமும், சுமனாவுக்கு செல்வம் பெனாண்டோவும், றோய்டி சில்வாவுக்குக் கே. சந்திரசேகரனும் குரல் கொடுத்தனர்.
மெவுனா பிலிம்ஸ் "பனிமலர்கள்' 05.01.81ல் திரை யிடப்பட்டது. கொழும்பில் 3 வாரங்களும், யாழ்ப்

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள்
பாணத்தில் 2 வாரங்களும் ஓடியது. டப் படங்களைப் பொதுவாக ரசிகர்கள் கணக்கெடுக்காததைப்போலவே பத்திரிகை விமர்சகர்களும் கணக்கெடுக்கவில்லை.
—ി हैं. ※
. . ܨ ܘ ܒ 'பனிமலர்கள் படத்தில் விஜயகுமாரணதுங்கவும், மா லினிபொன்
॥

Page 159
300 தம்பிஐயா தேவதாஸ்
(7) இவளும் ஒரு பெண்
ஏற்கனவே 6 சிங்களப் படங்கள் தமிழுக்கு டப் செய் யப்பட்டு விட்டன. பின்பு எந்தப் படத்தை டப் பண்ணு வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.
யசபாலித்த நாணயக்கார, 2 தமிழ்ப்படங்களை இயக் கிவிட்டார். அவரது சிங்களப்படம் ஒன்றின் பெயர் 'கஹனியக்' என்பதாகும். இதைத் தமிழில் டப் பண்ண முடிவு செய்யப்பட்டது. இதற்கான தமிழ் வசனங்களை எஸ்.என். தனரெத்தினம் எழுதினார். அதற்கு 'இவளும் ஒரு பெண்’ என்று பெயர் துட்டினார்கள்.
படத்தில் விஜயகுமாரணதுங்க, மாலினி, வினா போன்றோர் நடித்திருந்தார்கள். பழைய தென்னிந்தியத் தமிழ்ப்படங்களின் தொகுப்புக்குத்தான் இதன் கதை.
ஈழத்து ரெத்தினம் அவரின் மகள் சாந்தி ரெத்தினம் ஆகியோர் பாடல்களை இயற்றினர். மொஹிதீன் பெக், முத்தழகு,--கலாவதி, சந்திரிகா, எஸ்.பி.ஆர். கணபதிப் பிள்ளை ஆகியோர் பாடினர். இவற்றுக்கான இசை அமைப்பு பி.எல். சோமபால, படத்தொகுப்பு எம்.எஸ். அலிமான்.
படத்தின் பெயர்தான் தமிழ், ஆனால் பாத்திரங்களின் ஆடை அணிகள் எல்லாம் இது ஒரு சிங்களப்படம் என்று அப்படியே காட்டியது.
1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் ‘கிறேஸிபோய்ஸ்" என்ற ஆங்கிலப்படம் இலங்கையிலும் சக்கைபோடு போட்டது. அதன் தாக்கத்தால் எஸ். ராம்தாஸ் குழு வினரும் ‘கிரேஸி கோமாளிகள்’ என்ற நகைச்சுவை நாட கத்தை நடத்தி வந்தார்கள். அதில் எஸ். ராம்தாஸ், ஆர். ராஜகோபால், எஸ். செல்வசேகரன், கே. சந்திரசேகரன் மணிமேகலை, ஈஸ்வரன் ஆகியோர் நடித்து வந்தனர்.

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 30
அந்த நாடகத்தையும் படம்பிடித்து இப்படத்துடன் இணைத்து விட்டனர்.
சிங்களத்தில் அதிக நாட்கள் ஓடிய இப்படம் ஏழு மாதங்களின் பின் தமிழ்ப் படமாக திரைக்கு வந்து விட்டது.
கிறேஸி கோமாளிகளுடன் 'இவளும் ஒரு பெண்' என்று விளம்பரம் செய்யப்பட்டது.
விக்ரம் பிலிம்ஸாரின் 'இவளும் ஒரு பெண் 07.08.1981இல் கொழும்பிலும் (ஜெஸிமா), யாழ்ப் பாணத்திலும் (லிடோ) திரையிடப்பட்டது.
இவ்விரு தியேட்டர்களிலும் ஒரு வாரத்தின் பின் இப் படம் எங்கே போனது என்றே தெரியவில்லை.
(8) அஜாசத்த
ஜாதகக் கதைகளில் 'அஜாசத்த மன்னனின் கதையும் ஒன்றாகும். இக்கதையை இதே பெயரில் சிங்களப்படமாக தயாரித்து இருந்தார்கள். படம் போட்ட இடங்களில் எல் லாம் அதிக நாட்கள் ஒடியது. பெளத்த மதக் கதை என்ப தால் சிங்கள மக்கள் பெருவாரியாகப் பார்த்தார்கள். அதிக அளவில் பணம் குவிந்தது.
இப்படத்தைத் தமிழிலும் உருவாக்கலாம் என்று யாரோ கதையைக் கொடுத்து விட்டார்கள்; தமிழ் சினிமா ஆர்வலர்கள் பலர், நாசுக்காக விஷயத்தை முடித்து விட் L-sTTEST.
ஏ. எஸ். ஜி. பிலிம்ஸ் 'அஜாசத்த 26.03.1982இல் இலங்கை எங்கும் ஆறு தியேட்டர்களில் திரையிடப் Lull-gi).

Page 160
E. தம்பிஐயா தேவதாஸ்
இப்படம் திரையிடப்பட்ட திகதியை நான் அப் பொழுதே குறித்து வைத்திருந்தேன். படம் ஒன்றோ இரண்டோ நாட்கள் ஓடியதாக ஞாபகம். அதன் பின்பு அவை எங்கே சென்றன என்றே தெரியவில்லை.
i tirič Passif : pasi fër
նքԵլք
오
'அஜாசத்த படத்தின் விளம்பர நோட்டிஸ்
 

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள்
'அஜாசத்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மட்டும் இசைத்தட்டாக வெளிவந்தது. பாடகர் வி. முத்தழகுவின் முயற்சியால் வெளிவந்த இவ்விசைத்தட்டு இப்பொழுது இலங்கை வானொலி நிலையத்தில் மட்டும்தான் இருக் கிறது.

Page 161
31. முடிவுரை
கரவெட்டியைச் சேர்ந்த கலைஞர் தேவதாசன் சென்னைச் சினிமா உலகுடன் நன்கு தொடர்புள்ளவர். இலங்கையில் தமிழ்ப்படமொன்றை உருவாக்க வேண்டு மென்ற முனைப்பில் நின்றார். தன் படத்துக்கு, ‘மாநகரக் காதல்" என்று பெயரும் வைத்துவிட்டார். இப்படத்துக்கான பாடல்களையும் இந்தியாவில் ஒலிப்பதிவு செய்துவிட்டார். யாழ்-சுதாகர் இயற்றிய பாடல்களுக்கு நீதிதேவன் இசை யமைத்தார். இப்பாடல்கள் ஒலிநாடாவாகவும் சீ. டி. இசைத்தட்டாகவும் வெளிவந்துவிட்டன. ஆனால் படம் வெளிவரவில்லை.
ஆனாலும் கலைஞர் தேவதாசன் உள்ளூர் திரைக்கலை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு 'சலனசித்திரம்' என்ற பெயரில் திரைக்கலைச் சங்கம் ஒன்றை உருவாக்கினார். அச்சங்கத்தின் மூலம் பல சினிமா ஆர்வலர்களை ஒன்று சேர்த்துச் ‘செந்தமிழ் ஃபிலிம் கொம்பனி' என்ற நிறுவனத் தையும் உருவாக்கினார். உள்ளூர் சினிமா முன்னோடிகளும் பிரபல தொழிலதிபர்களும் இக்கொம்பனியில் இணைந் திருக்கிறார்கள்.
எம். டபிள்யூ. இராஜசிங்கம், தெ. ஈஸ்வரன், எம். புஷ்பராஜா. எஸ். தியாகராஜா, மனோ கணேசன், சே. தில்லைநாதன், சி. தங்கராஜா, பி. ஆரூரன், காவலூர் ராஜதுரை போன்றோரே அவர்கள். இச்சினிமாக் கொம்பனி பல முயற்சிகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.
இலங்கையில், சினிமாச் சஞ்சிகை ஒன்றை வெளியிடுவது, திரைப்படக் கல்லூரி ஒன்றை நிறுவுவது, தரமான திரைப்படங்களை உருவாகுவது என்பன இக்கொம்பனியின் நோக்கம் என்று தெரியவருகிறது.
இச்சினிமா நிறுவனம் நிச்சயமாக 2000 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழ்த் திரைப்படங்களை உருவாக்கும் என்று நம்பலாம்.

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 305
எச்சரிக்கை
இந்நூலில் இடம்பெற்றுள்ள வாக்கியங்களையோ, புகைப்படங்களையோ, தனியாகவோ, கூட்டாகவோ, உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ மீள்பிரசுரம் செய்யக் கூடாது.
மீள்பிரசுரம் செய்யவேண்டிய தேவை ஏற்படின் ஆசிரியரின் அனுமதி பெற்றேயாகவேண்டும்.
மீறுவோர் மீது புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும்.

Page 162


Page 163
இவர், யாழ்ப்பானம் பு ரத்தைச் சேர்ந்த தம்பிஐயா ஐ புதல்வர். புங்குடுதீவு மகா விவேகானந்தாக் கல்லூரி, ம சாலை ஆகியவற்றின் பழை கொ|கொள்பிட்டி மெதடிஸ் ஆசிரியராகக் கடமைப்ாற்றுகி கூட்டுத்தாபனத்தில் உதவி . யாற்றுகிறார். நாளைய சந்ததி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வ யில் அதிதித் தயாரிப்பாளரா
ரூபவாஹினியில் 'காதம்பரி களைப் பேட்டி கண்டுவருகிற என்ற தொலைக்காட்சி நா இவரே .
சிறுகதை எழுத்தாளராக நுழைந்தார். நூற்றுக்கு மேற்ட யிருக்கிறார். சினிமா சம்பந்: எழுதியிருக்கிறார். 'நெஞ்சில் வகுத்த வழி', 'மூன்று பா, நாவல்களைத் தமிழில் மெ வெளியி ட்டிருக்கிறா it .. ' §୍UIf கதை என்ற இந்நூல், இவர!

திரு. தம்பிஐயா தேவதாஸ் |ங்குடுதீவு 11 ஆம் வட்டா ஐஸ்வரி தம்பதிகளின் மூத்த வித்தியாலயம், கொழும்பு |ட்டக்களப்பு ஆசிரிய கலா ய மாணவர். தற்பொழுது த தமிழ் வித்தியாலயத்தில் றார். இலங்கை ஒலிபரப்புச் அறிவிப்பாளராகவும் பணி , 'அங்கும் இங்கும்' ஆகிய ழங்குவதுடன் கல்விச்சேவை கவும் இருக்கிறார்.
மூலம் உள்ளூர்க் கலைஞர் ார். "இதயத்தில் ஓர் உதயம்' டகத்தின் தயாரிப்பாளரும்
வே இலக்கிய உலகிற்குள் பட்ட சிறுகதைகளை எழுதி தமான பல கட்டுரைகளை ஓர் இரகசியம்' , 'இறைவன் த்திரங்கள் ஆகிய மூன்று ாழிபெயர்த்து நூலுருவில் ங்கைத் தமிழ்ச் சினிமாவின்
து நான்காவது நூலாகும்.

Page 164
818 நற்சிந்தனை குருமணி
புலனவென்ற பெரியோர்க ளுளம்பூத்த மணி
பொள்ளாமணி யென்றும் புதுமணி இலமென்று வந்தடைந்தா ரிடும்பை கெடுக்கும்மணி
எவராலும் விலைமதிக்க வொண்ணு மணி பலநிறமாய்ப் பாரினிடைத் தோற்றும் மணி பச்சைமால் மெச்சிப் பணியும் மணி இலங்கையிலே யெங்கு மிருக்கும் மணி
என்னைப் பணிகொண்ட குருமா மணி.
கசிந்துருகிப் பாடுவார் காணும் மணி
கண்மூன் றுடைய கதிர்மா மணி − வலிந்தென்னைப் பணிகொண்ட வண்ண மணி
மலரோனும் மாலவனுங் காணு மணி இந்தோடு கங்கைசென்னி யேந்தும் மணி
இளநாகம் -மேனியிலே சாத்தும் மணி அந்தமணி இலங்கையிலே வாழும் மணி ,
ஆரேனும் தேடுவார்க் ககப்படுந் தெய்வமணி. 2
பந்தமெனும் பாழிருளைக் கிழிக்கும் மணி
பரவுவார்க் கிலவசமாய்க் கிடைக்கும் மணி அந்தமுட னதியில்லா அரும்பொன் மணி
அதிசயங்க ளநேகமெல்லாங் காட்டும் மணி முந்திய மணிக்கெல்லாம் முதலான மணி
மூவர்களுந் தேவர்களும் பணியும் மணி இந்தவளஞ் சேரிலங்கை வந்த மணி
எனையாண்ட குருமணியென் சொந்த மணியே. 3
ஓம் சிவாயநம
ஓம் சிவாயநம என்று சொல்லு , உண்மை முழுது மென்று வெல்லு நாம் நாம் நாம் என்று நில்லு நரக மோட்சம் நாடாமல் தள்ளு போம் போம் வினையென்று கொள்ளு பூரண நிட்டையிலே நில்லு - - - - - வீம்பிடும்பை யகங்காரம் கல்லு - விண்ணும் மண்ணும் கைவசமாய்த் துள்ளு. 1

நற்சிந்தனை 39
சற்குருவின் பாதத்தைப் போற்று தன்னைத் தன்னல் அறிந்து தேற்று நிர்க்குண நிட்டையிலே யேற்று நீநான் என்பதை மாற்று மல்லாகத்தில் சுன்னகத்தான் வீற்று மாசற் றிருப்பா னென்று சாற்று பொல்லாப் பிங்கில்லையென்று போற்று போக போக்கியம் எல்லாம் மாற்று. 2
அன்பருடன் கூடிநீ வாழ்த்து புண்ணிய பாவத்தை வீழ்த்து போக்குவர வில்லையென்று தேற்று எல்லாரி டத்து மன்பு காட்டு ஏகனநேகன் என்று நாட்டு நல்லூரான் திருவடியே பாட்டு நமச்சிவாய வாழ்க வென்று சூட்டு. 3
போக்கும் வரவு முள்ளா னில்லான்
போக்கும் வரவு முள்ளா னில்லான்
பூத கணங்கள் சூழப் பொலிவான்
தேக்கு மடியார் சிந்தையி லுள்ளான்
திருவே யுருவாய்ச் செறிந்த சீமான்
காக்குந் தலைவன் கருணை யுடையான்
கண்மூன் றுடையான் கால காலன்
பூக்கும் பொழில்சே ரிலங்கை வாழ்வான் 2:ዶ , -
பொன்ன ரடியைப் போற்ருய் மனனே
என்று மினியான் ஏத்து மடியார்
இடர்சே ராமே விடைமேல் வருவான் நன்றுந் தீது முள்ளா னில்லான்
நாரி பாகன் ஞான வுருவான் அன்று மின்று மென்று மாகி
யந்த மாதி யில்லாப் பெருமான் குன்றும் மலையும் பொலியு மிலங்கை
குடியாய்க் கொண்டா னடிகள் போற்றுதுமே 2

Page 165
320 நற்சிந்தனை
தம்மையன்றி வேறென்றுங் காணுர்
தம்மைத்தம் மாலறிந்த சாலப் பெரியோர்கள் தம்மையன்றி வேறென்றுந் தாங்காணுர்-பின்னைப் பிறப்பும் இறப்புமில்லைப் பேய்பித்தர் போல்வார் மறப்பின்றி வாழ்வார் மகிழ்ந்து.
மதியு மிரவியும் மன்னுஞ் சமாதி பதியும் படியாக்கிப் பாழ்த்த-விதிவென்று வாழ்வாரை வாழ்த்தி வளரு மடியவர்க்குத் தாழ்வுண்டோ தம்பிநீ சாற்று. 2
சாந்தம் பொறுமை தயைதவந் தானமிகு மாந்தருக்குத் துன்பம் மருவுமோ-சாந்தனையும் அன்னர்பா லன்புவைத்து ஆரறிவார் என்றகுரு தன்னுணை போற்றல் தவம். 3.
தவத்திற் சிறந்தார் தமதுயிர் போல உவப்புடனே யோம்பியொரு பொல்லாப்பு-மில்லென்ருன் தாளிணையைப் போற்றிச் சகத்துடன் கூடியே வாழக் கருதுவதே மாண்பு. 4
மாண்டார் மனத்தானை மண்விண்ணு மொன்முகி நீண்டான நெஞ்சமே நீநினைப்பாய்-வேண்டாமை வேண்டுவோர் வீடு பெறுவாரே வையத்தை ஆண்டாலு மென்ன மறி. 5 . سه
அப்படி யுள்ளதென் றன்பாகச் சொல்லியே அப்பன்செல் லப்ப னருள்தந்தான்-இப்பார் இருள்கடிந் துள்ளத் தெழுந்தவெல் லென்றன் அருள்சேர் மாதவத்தோ னன்று. 6

நற்சிந்தனை v 32
தேவாதி தேவ இராகம்-மோகனம் தாளம்-ஆதி
தேவாதி தேவ அடியார் இடர் பொடிபட அருள் தரு. (தேவாதி)
அநுபல்லவி −
ஆபாச மாபாச ஆழி வீழாவடிய வரும் கோபாலனும் மற்றுங் கோகனகத்தானுந் துதி. (தேவாதி)
சரணங்கள்
காலும் புன லணலும் வானும் நெடுநிலனும் சசி ரவியுமான மாவடிவா மேலை யெழுவிடத்தை மிடற்றி லடக்கிவைத்த விகிர்தன் எனையுடையான். (தேவாதி)
கலகஞ் செய்யும் இருண்ட காலனும் நெஞ்சமஞ்ச உலகங்களும் நடுங்க நடனமிடும் துதிமிகு யோகசுவாமி சொன்ன கீதம் விளங்கச் சதுர்வேத முழங்கத் தாண்டவமாடும். (தேவாதி)
செல்வன் சீரடிகள் காப்பு ஒருபொல்லாப்பு மில்லை யென்னு மோசையோடுவந்து
. . . நோக்கித் திருவருள் தீக்கை செய்த செல்வன்சீ ரடிகள் காப்பு. 1 ஆரறி வாரென் றுன்னு மரியமந் திரத்தைத் தந்த ,
பேரறி வுடைய செல்வன் பெய்கழ லென்றுங் காப்பு. 2
முழுவது முண்மை யென்று முகமலர்ந் v
- தெனக்குச் சொல்லிப் பழுதற வாண்டு கொள்ளும் பாதபங் கயமே காப்பு. - 3 பாராதி -பூத மெல்லாம் பரமன்றன் வடிவ மென்றே சீராக வெடுத்துச்சொன்ன செல்வன் தாளென்றுங் காப்பு.4 காயமே கோவிலாகக் கண்டுபா வனைசெய் யென்று நேயமா யெனக்குச் சொன்ன நிமலன்தா ளென்றுங்
. . காப்பு." 5 பற்றினற் பிறந்திறந்து பாரினில் சுழன்ரு யந்தப் ? பற்றிலை விடுவாயென்ற பரமன்தா ளென்றுங் காப்பு. 6
2.

Page 166
322 நற்சிந்தனை
வந்தனை செய்திடடா தம்பி
உண்ணுதே யுறங்காதே யூரூராய்த் திரியாதே பெண்ணுசை வையாதே-தம்பி!
பிரமத்தை யறிந்திடடா- 1
கண்ணுரக் கண்டிடடா காலமே லேற்றிடடா விண்ணுணம் பேசாதே-தம்பி! வேறுபொரு வில்லையடா. 2
எண்ணும லெண்ணிடடா இயைந்தபடி நடந்திடடா மண்ணுசை வையாதே -தம்பி! மலரடியைப் போற்றிடடா. 3
சுன்னகத் தானையென்றுந் தோத்திரம்நீ செய்திட்டா அன்னை பிதாக்குருவை-தம்பி! அன்புடனே போற்றிடடா, 4.
வலமிடமாய்ச் செல்லுகின்ற வாயுவைநீ தம்பியடா பலமுனக்கு வந்துவிடுந்->தம்பி! பற்றற்று நின்றிடடா, 5
குலநலம் பாராதே கோபம்நெஞ்சில் வையாதே தலமாறுந் தாண்டிடடா-தம்பி! தனிமையைநீ நாடிடடா. 6
உண்டில்லை யென்றுசொல்லி யுரையாட வேண்டாமடா கண்டு களித்திடடா-தம்பி! கருணைவெள்ளம் பெருகுமடா. 7
பண்டுசெய்த வல்வினைநோய் பாரிற் பறக்குமடா நன்றென்றுந் தீதென்றுந்-தம்பி!
நடுவாக நின்றிடடா. - - 8 கொன்ருென்றும் புசியாதே குருவாக்கை மறவாதே அன்றுமின்று மென்றுந்-தம்பி! அப்படியே யுள்ளதடா. 9

நற்சிந்தனை 323
மன்றுபறித் துண்ணுதே மாயத்திற் சிக்காதே குன்றுபோல் நின்றிடடா தம்பி! குறைவொன்று மில்லையடா. 10
இந்தப்பத்துப் பாடலையும் இரவும்பக லுஞ்சொல்லி வந்தனை செய்திடடா-தம்பி! வறுமைபிணி தீருமடா.
நினைமின் மாந்தர்காள்
நினைமின் மாந்தர்காள் நினைமின் மாந்தர்காள் நீடூழி சிவதொண்டன் வாழ்க. (நினைமின்) 1
அனைவரு மொன்றப்க் கூடி யவன ஆதரித் தன்பு பாராட்டிப் - , புனைந்து பூமாலை சூட்டிப் புகழ்ந்து (நினைமின்) 2 தினைத்துணைப் போதும் மறவாது சிந்தித்துத் தேவாரம் திருவாசக மோதி. (நினைமின்) 3
முனைத்து வரும்பெருங் கூற்றை யுதைத்த முதல்வனைத் திங்கள் தோறும் நும்மணம். (நினைமின்) 4
அணைந்து வந்து ஆசான் செப்பிய அரிய வாசகந் தருஞ்சிவ தொண்டன. (நினைமின்) 5 கனைக்குங் கடல்சூழ் இலங்கைத் தீவில் கதிரொளி போலொளி பரப்புந் தொண்டனை. (நினைமின்) 6
வினேப்பகை வெல்ல விருது கட்டிய வேத மோதும் வித்தகத் தொண்டன. (நினைமின்) 7
சுனைக்கும் நல்லூர் தூயசற் குருவின் துணையடிமற வாத தொண்டன. (நினைமின்) 8

Page 167
昭24 நற்சிந்தனை
சிவனடி வாழ்க
உலகெலா முணர்ந்த வொருவ னடிவாழ்க அலகிலா நாத னடியிணை வாழ்க ஈருய் முதலா யிருந்தோ னடிவாழ்க மாருக் கருணை வள்ளலடி வாழ்க சிவனெனும் நாமத் திருவுடையான் தாள்வாழ்க என்னை விலகா விறைவனடி வாழ்க அன்னைபோல் வந்த வவனடி வாழ்க பின்னைப் பிறவிப் பெருமா னடிவாழ்க முன்னைவினை தீர்த்த முதல்வனடி வாழ்க எல்லாமா யல்லவுமா யிருந்தோ னடிவெல்க கொல்லான யுரிபோர்த்த குழக னடிவெல்க தில்லையிற் கூத்தன் திருவடிகள் மிகவெல்க எல்லையில் லாத இறைவ னடிவெல்க கல்லான கன்னல் கறிக்கவைத்தோ னடிபோற்றி நல்லோரை நாளும் பிரியா னடிபோற்றி நாரணனுங் காணுத நாத னடிபோற்றி ஆரணமுங் காணு வடியிணைகள் தாம்போற்றி பூரண மான புண்ணியன்றன் தாள்போற்றி எல்லையில் லாம லிறந்து பிறந்தேனை எல்லையில் லாத கருணையின லாண்டபின்பு கண்டேன் களித்தேன் கலங்காத சித்தமின்று கொண்டேன் குளித்தேன் குவலயத்தி லாசையெல்லாம் விண்டேன் வெளிப்பட்டேன் வேறென்றி லிச்சையுமே அண்டாத வண்ண மடிமைகொண்ட பெம்மானே பொன்னன மேனியனே போக்குவர வில்லானே எந்நாளு மென்னை மறவாப் பெருமானே அடியார்த முள்ளமே யாலயமாய்க் கொண்டோனே கடியார் புரமூன்றுங் கண்ணழலாற் செற்றேனே முடியா முதலே முதலீறு மானவனே அடியேனை யாட்கொண்ட வையா பெருமானே பொடியாரும் மேனியனே பூங்குழலாள் பாகனே படிமீதில் வேடனிட்ட பன்றியூ னுண்டானே

நற்சிந்தனை Y 325
அடியார்க் கடியனே யானந்தக் கூத்தனே பாண்டியனுய் வந்துமண்ணிற் பாராண்ட பெம்மானே வேண்டுவார் வேண்டுவதை விரும்பிக் கொடுப்போனே இருநிலனய்த் தீயா யிருந்த விறையோனே மருவார் குழலியொடு மகிழ்ந்தங் கிருந்தவனே அப்பருக்குப் பொற்கா சளித்த பெருமானே ஒப்பிலா வொன்றே யொளியே யெனவழுத்தி எப்பொழுது முன்னை யிறைஞ்சத் தப்பிலாத் தண்ணருளைத் தந்தாள் தனிப்பொருளே.
ஆள வேண்டுமே
இராகம்- சங்கராபரணம் தாளம்- திரிபுடை
sis)
சஞ்சல மிகவும் மிஞ்சுதே சற்குருநாதா தமியேனை யாள வேண்டும். (சஞ்சல)
அநுபல்லவி
வஞ்சம் பொருமை கோபம் வரவர நெருக்குதே வாணு வினசை மிகமிகப் பெருக்குதே. (சஞ்சல)
gy Goto
எப்படிச் சொன்னலும்நீ யேனென்று கேளாமல் செப்படி வித்தை செய்தல் திருவருட் காகுமோ ஒப்புவமை யில்லாத அப்பனே செல்லப்பனே உன்றுணே யல்லாம லொருவரு மில்லை ஐயா. (சஞ்சல)

Page 168
326 நற்சிந்தனை தீருவருள் தருவாயே
இராகம்-மோகனம் தாளம் -ஆதி
பல்லவி தெய்வமே திருவருள் தருவாயே நீ.
அநுபல்லவி வையக மீதில் வணங்க அறியேன் பொய்யும் புலையுங் கொலையுந் தவிரேன். (தெய்வமே)
சரணங்கள்
கையும் மெய்யுங் கருத்துக் கிசைய ஐயா தந்தனை யதையா னறியேன் மெய்யா யுன்றன் மெல்லடிக் கபயம்
மேலும் மேலும் உனையான் வேண்டுவன். (தெய்வமே) செந்நெலுங் கன்னலுஞ் செறியும்நல் லூரில் dh
தேசிகன் தாசன் யோகசுவாமி சொல்லுங் கீதம் சொல்லுவார் கேட்பார் துன்பம் நீங்கி யின்ப மோங்கும். (தெய்வமே)
தாளம் பேர்டு தாளம்போடு தாளம்போடு தாளம்போடு தன்னையறிந்தோ மென்றுசொல்லித் தாளம்போடு 1 ஆழநீள மில்லையென்று தாளம்போடு அவனேநா மென்றுசொல்லித் தாளம்போடு 2 வாழுவோ மென்றுவென்று தாளம்போடு மாளமாட்டோ மென்றுசொல்லித் தாளம்போடு 3 நாம்நாம்நாம் என்றுசொல்லித் தாளம்போடு / நம்மையறிந் தோமென்று தாளம்போடு 4. போம்போம் வினையென்று தாளம்போடு பெம்மானுக் கடிமையென்று தாளம்போடு 5 ஒம்ஓம் என்றுசொல்லித் தாளம்போடு உள்பொருள்நாம் என்றுசொல்லித் தாளம்போடு. 6

நற்சிந்தனை 3.27
சமயங் கடந்த சங்கரா வடைக்கலம்
நேரிசையாசிரியப்பா
உவமையொன் றில்லா வொன்றே யடைக்கலஞ் சமயங் கடந்த சங்கரா வடைக்கலம் அமையு மடியா ரன்பே யடைக்கலம் உமையாள் மகிழு மொருவா வடைக்கலம் எந்தா யடைக்கல மிறைவா வடைக்கலஞ் சிந்தனைக் கரிய சிவமே யடைக்கலம் அந்தமு மாதியு மில்லாய் போற்றி அந்தமு மாதியு முள்ளாய் போற்றி ஒடும் பொன்னும் ஒன்ருய் நோக்குவார் தேடும் பொருளே செல்வமே போற்றி பாடு மடியார் பரனே போற்றி வாடு மடியார் மழையே போற்றி தேடக் கிடையாச் சிவமே போற்றி ஆடகத் தில்லை யரனே போற்றி குழைத்தெனை யாண்ட கோவே போற்றி மழவிடை யேறும் மாதவ போற்றி பிழைத்த வெல்லாம் பொறுப்பாய் போற்றி தழைத்தநற் கொன்றைச் சடையாய் போற்றி வரம்பி லின்ப வடிவே வாழ்க கரத்தி லங்கி கலந்தாய் வாழ்க சிரத்திற் றண்மதி தரித்தாய் வாழ்க புரத்தை யெரித்த புங்கவ வாழ்க வாழ்க வாழ்க நின்னடி வாழ்க வாழ்க வாழ்க வையகம் வாழ்க வாணுதல் மங்கையும் மகிழ்ந்தே.

Page 169
32& நற்சிந்தனை
அடைக்கலம் அடைக்கலம் 1
அளவிலா வொன்றே யன்பர்க ளன்பே உலகெலாம் நிறைந்த வொண்சுட ரொளியே மலமிலா முதலே மாசிலா மணியே பலரும் புகழ்ந்துரை பரம தயாளுவே நிலம்நீர் தீகால் வானப் நின்ற அலகிலா வாட லுடைய வப்பனே அழுதபிள் ளைக்காய்ப் பாற்கட லழைத்தாய் தொழுதசுந் தரர்க்காய்த் தூயபொன் வழங்கினய் வழுதிபோல் வந்து மாமுடி தாங்கிப் பழுதி லாத பார்தனை யாண்டாய் அந்தணன் வேண்ட வரிய கூற்றினை வெந்திறற் ருளால் வீழச் செய்தனை கண்ணப்ப னுானைக் கலந்து புசித்தாய் என்பது கேட்டுன் னிணையடி யடைந்தேன் என் பிழை யெல்லாம் பொறுப்பதுன் கடனே பொன் போல் மதியம் பொதிந்த சடையாய் அடைக்கலம் அடைக்கலம் அப்பனே படைக்கலம் நின்திருப் பஞ்சாக் கரமே.
அடைக்கலம் அடைக்கலம் 11
அடைக்கல மடைக்கல மரனே யடைக்கலம் விடைக்கல னுகந்த வேதாந்த விளக்கே ஆறும் பிறையுஞ் சூடிய வரசே கூறு மடியார் தங்கள் குருவே உருகி யுருகி யடியே னுணரப் பெருவரந் தருவாய் பேரரு ளாளர மாசிலா மணியே மன்னர்தம் மன்னவா காசி வாழும் கண்ணுதற் பரனே பூசிக்கும் யோக நாதன் பொற்பே வாசித்துக் காண வொண்ணு மறையே இந்திரன் முதலோ ரறியா விறையே சந்திரன் தயங்குஞ் சடையுடை யோனே அந்தமு மாதியு மில்ல3 வமலா சந்தத முன்பதஞ் சாற்றுவார் தமக்குச் சாலோக பதவி வீற்றிருக்க வைத்த விமலா வடைக்கலம்.

நற்சிந்தனை 329
அப்படியே உள்ளது
ஒருகறியும் ஒருசோறும் ஆக்கியுண்ணும் ஆசான்
ஒருபொல்லாப்பு மில்லையென்றன் உணர்.
ஒதாமல் வேதம் உணர்ந்த குருநாதன் உண்மை முழுதுமென்ருன் உணர். 2
நாமறியோம் என்ற நல்ல திருவாக்கை நாமறியச் சொன்னன் நய. 3 முடிந்த முடிவென்று முன்னளில் ஆசான் அடியவர்முன் சொன்னு னறி. 4.
அப்படியே யுள்ளதென அத்து விதப்பொருளைச் செப்பினன் செல்லப்பன் தேர். 5 நீறணியான் காவி யுடையணியான் நீணிலத்தில் தேறவைத்தான் என் முன் சிரித்து. 6 சிரித்துப் புரமெரித்த சிவனேயொப் பானென்ன மரித்துப்பிறவாத மாண்பளித்தான் மதி. 7 பாசத்தால் வெந்துநொந்து பாழாகப் போகாமல் நேசத்தால் ஆக்கினன் என்னை நினை. 8 தேரடியில் வீற்றிருப்பான் சிரிப்பான் சினத்திடுவான் ஆரறிவார் என்பா னவன். 9 பித்தனென்றும் பேசுவார் பேயனென்றுஞ்
சொல்லுவார் சித்தனென்றுஞ் சொல்லுவார் சிலர். 10
ஆர்கொடுக்க வாசையுடன் வந்தாரோ வவரைச் சீர்கேடாய்ப் பேசுவான் தேர்.
நரிபோல் உழலுவான் நாய்போல் திரிவான் பெரியவனென்னும் பேர்படையான் பித்தன். 12
மாருட்ட மாகவே வந்த படிபிதற்றித்
தேருமற் செய்வான் சிரித்து. 13

Page 170
330 . நற்சிந்தனை jTLOTÄ குடியுமல்லேம் நாகநாதன் குடிகானும்
நானென நீயென வேறில்லை யென நகையால் . தானெனைச் செய்தபிரான் அவன் சமர்த் தாரறிவார் கோனெனை யாண்டுகொண்டா னென்றுங் குறைவில்லைத் தேனெனச் சிந்தையுள்ளே யெந்தநாளுந் தித்திக்குமே. 1
பாரவன் விண்ணவன்காண் பன்னும்வேத
மொழியவன்காண் காரவன் கடலவன்காண் கறைக்கண்ட முடையவன்காண் சீரவன் திறலவன் காண் சிரம்பத் துடையானமுன் தேர நெரித்தவன்காண் தேவதேவர் தம்பெருமானே. 2
நாமார் குடியுமல்லேம் நாகநாதன் குடிகாணும் ஏமாந்து போவோமல்லே மினிமறலி தானுமஞ்சேம் சாமாறுந் தணிவிடையன் திருப்பாத மல்லாமல் நாமார்க்குந் தொண்டுசெய்யேம் இனிநாளை நினையோமே 3
போக்கொடு வரவுமில்லைப் பூமிவான மிங்கில்லை நீக்கற வோங்கிநிற்கும் நின்மலன் றன்னையன்றிக் காக்குமோர் தேவுமில்லைக் காலநே ரமுமில்லை நோக்குவார் தங்கட்கெல்லாம் நுணுக்கமாய்த்
t தெரியுமன்றே. 4
எத்திக்குமாகி யிருக்குந் தெய்வமே இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி பல்லவி முத்திக்கு வழிகாட்டும் -என்றன் மூட புத்தியை யோட்டும் k அநுபல்லவி எத்திக்கு மாகி யிருக்குந் தெய்வமே ஏழையடி யார்க்கு இரங்கு முய்யவே (முத்தி)
syGrotto சித்தத்துட் டித்திக்குந் தீங்கரும்பே தெளிந்த தேனே சீனியே பாகே பத்த ருள்ளத்தில் பாக்கிய வானே பாவ மனத்தும் நீக்கியாள் கோனே. (முத்தி)

நற்சிந்தனை 33 I. கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வம்
இராகம்-எதுகுலகாம்போதி தாளம்-மிஸ்ரம்
uრსის6მ. ኔ கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வமே கடைக்கண் பார்நீ தெய்வமே.
அநுபல்லவி ஒருத்தர் துணையுமில்லை யுன்றுணை யல்லாமல் உலகுயிர் பரமாகி நடிக்கின்ற செல்வமே. (கருத்தில்)
சரணம் எங்கெங்கு சென்ருலும் அங்கெங்கும் நீயே ஈசா மதுராபுரி வாசா மீனுட்சி -- நேசனே சொக்கநாதா யோகனுக்கருள் தாதா நின்று மிருந்துமுனை யென்றென்றும்
போற்றநான். (கருத்தில்)
அரகர சிவசிவ இராகம்-சுத்தபங்களா தாளம்-ஆதி
பல்லவி - . . அடியா ருள்ளத்தே வாழும் பரனே அஞ்சுவ தகற்றி யாள்வதும் பரமே
அநுபல்லவி
அரகர சிவசிவ சம்போ சங்கர
அறிஞரு மறிவரி தாகிய பொருளே (அடியா)
சரணம் " ... .
அறிவாருளரோ அகம்பிர மாஸ்மி
வெகுபலம்வாசி சமாதிநீ யோசி
வேண்டும் வேண்டும் அருள்நீ தாதா விக்ந விநாயக விமலா நமோ நமோ (அடியா)

Page 171
332 நற்சிந்தனை
இடர்படாதிருக்கத் தயவுவை - இராகம்-நளினகாந்தி தாளம்-ஆதி
- ubຄbຄທີ எனதுயானெனும் இடர்படா(து) இருக்கத்தயவுவை எம்பிரான்
அநுபல்லவி கண்ணுதலே கறைக்கண்ட நீ கருணுணந்த காமாட்சி பாகா வா (எனது)
Freyyub எந்நேரமும் உன்றன் பொன்னரடி ஏத்தித்தொழ வேழைக் கேயருள் அன்னே யுன்னை யல்லால்துணை இம்மாநிலம் எவரு மில்லையே. (எனது)
நிஜமா மான்மா தெளி இராகம்-உமாபரணம் தாளம்-ஆதி
பல்லவி
நிஜமா மான்மா தெளி அரகர சிவ நெஞ்சே யஞ்சேல் நீ வரோதய
V அநுபல்லவி தசமுகன் நெரிதரத் தனதடி யூன்றிய சாமிநாத பாதமே ஒதுமந்திரம் நீதமே (நிஜமா)
சரணம் சுதிரச பூரண பரப்பிரம தாரக தூய அற்புத சுகமார மாரண சுரசேவித தொந்தத்தசி சுந்தரா னந்தனே துய்யா மெய்யா சுபானுபவ.
(நிஜமா)

நற்சிந்தனை W 333
ஓங்கார நாதமே
இராகம்- ஹரிகாம்போதி தாளம்- ஏகம்
பல்லவி ஓங்கார நாதமே யோதவொண்ணுப் பிரமாதமே
அநுபல்லவி தாந் தாந் தோம் என்றிடு மோசை அற்புத விற்பன நிர்க்குண நேயம் (ஓங்கா)
சரணங்கள் உத்திக்கும் எத்திக்கும் அவரவர் சத்திக்கும் பத்திக்கும் அதிரச (ஓங்கார) ஒதும் வேதம் இதமுடன் - அன்றும் இன்றும் ஒருவிதம் (ஓங்கார) உம்பர்களு மிம்பர்களும் தினசரி எண்ணரிய சித்தர்களும் மிகவேத்தும் (ஓங்கார) ஒதிடவே யருள் பாலிக்குமே நன்மை பூரிக்குமே மனஞ் சேவிக்குமே யருள் (ஓங்கார) உயிரை யெழுப்பிச் சிவத்தி லேமனம் பயிலப் பயிலச் சுவைக்கு மேதினம் (ஓங்கார) ஆதரித் திணிமேற் சுகித்திட நீநினைத்திடு ஆசைவைத்திடு (ஓங்கார)
தொகையற நீங்காது எந்தநாளு மினிது முடிந்து இளந்தென்றலும் வீச விபுதர் பலர் ஒன்றுகூடி அஞ்சலஞ்சலென்று செஞ்சொல் மிஞ்ச நீங்காரம்பாட வருள்கூட நல்ல சித்தர்கள் பக்தர்கள் தித்தி மத்தளம் தத்தித் தகு தகு. -

Page 172
334 நற்சிந்தனை
திருவருட் செய லெப்படியோ இராகம் - காப்பி தாளம்-சதுர்சஜாதி ஏகம்
பல்லவி திருவருட் செய லெப்படியோ சீமானே கோமானே
அநுபல்லவி திருவளர் நல்லூர் மேவிய தேவே செல்லப்பா v (திரு)
சரணங்கள் வரவர மனத்திற் கவலைகள் மிஞ்சி வலிந்துகவரும் மாய வாழ்வினுக் கஞ்சி அரகரசிவனே சங்கராவென்று போற்றினேன் புகழ் சாற்றினேன் (திரு) இரவும் பகலு மிணையடி மறவேன் இனியடியேன் மண்ணிற் பிறவேன் பரவும் யோக சுவாமிகட் கன்பு
காட்டுமோ வொளி சூட்டுமோ! (திரு)
நீ வா தா அருள்
இராகம்-ஹம்சத்வனி தாளம்-ஆதி
Y. பல்லவி -, -,
நீ வா தா அருள் பத்திசெய்வோம் சிவ
நித்திய ஆனந்தம் நிர்மல சகிதம்
அநுபல்லவி ஆசாபாசம் ஆகிய விசனம் , நாசமாகவுன் ஞானப் பிரகாசம்
தாதா தொம்தொம் தகுதகு தகுதகு தளங்கு தரிகிட தக்கிட கிடஜாம் (நீவா)

நற்சிந்தனை 3.35
SFDJGTo
பாராய் என்முகம் பரமயோகப் பரப்பிரவேசந் தாராய் சகலலோக வஸ்ய சம்மதம் பராபர பரிபூரணம்
கோலாகல குமாரி கவுரி கும்பிடும் புராரி பிரமாதிதேவர் கொண்ட கோடி பழிவிண்ட விபுதன் குஞ்சிதாம் புயமலர் நெஞ்சில் வைத்திடு குற்ற மற்றசிவ யோக நற்றவன் குருகுல வாசந் தருமொரு வசனங் கருது மவர்மிடி காணு தோடுங் காவாய் அடியனைப் பூணு யன்பு ஹம்சத்வனி பேசிடு பேரின்பம் (நீவா)
' ennsnamu!
மறவாதே என்மனசே!
இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி
பல்லவி
குருராஜ ராஜ பரசிவ பக்தி தன்னைநீ மறவாதே யென்மனசே
சரணங்கள்
அச்சுதன் அயன்முதல் அமரருங் காண்கிலர் அடிமுடி யில்லை யறி அண்டசரா சரங்கள் அவையனைத்தும் அவனே தானென வறியென் மனசே (குருராஜ)
தவஞ் செய்வோர்க் கனுகூலன் சர்வ சாட்சிப் பிரதாபன் அவனிவன் என்னும் மாயம் அனைத்து மில்லாத சிவயோக நாதன் விசுவாசன் சிவராசன் (குருராஜ)

Page 173
336 நற்சிந்தன்ை
தர்மமெங்குந் தங்க அருளையா V இராகம்-காம்போதி தாளம்-ஆதி
பல்லவி
ஐம்பொறி மாட்டு மனசுபோய் அலைந்திடிலோ பழி பழி
அநுபல்லவி நம்பினேன் நானே நடராஜ நீவாகா நியாயந்தானே கைவிடச் சற்குருநாதா (ஐம்)
சரணம் t சர்வகுணுதி சசிதவழ் சேகர சாமுண்டி சமேத சாமி சர்வாலங்கிர்த சகள நிஷ்கள மங்கள சுரசேவிதபானு சித்தம்வைத்து ஆண்டிடு சின்மய ஜெகசோதி சாயுச் சியமும் வேண்டினேன் ஆண்டி சர்வதியாகந் தந்தேன் தாளைத் தலையிற் சூட்டிடு தர்மமெங்குந் தங்கக் குறைகள் மங்க அருளையா (ஐம்)
www-Wawa wanamwikhawhnw
அருவமு முருவமு மானுன் ஒரு பொல்லாப்பு மில்லையெனவே-முன்னுள்
ஒதினன் உண்மை முழுது மெனவே பருவத்தில் மழைபெய்தாற் போல-ஐயன் பந்தத்தை நீக்கி வளர்த்தா னன்பாலே 2 அருவமு முருவமு மானன்- என்னை ஆட்கொள்ள வந்தான் நல்லூரிற் றணுய் 3 கருவிக ரணங்க ளெல்லாந்-தத்தம் கருமத்தை விட்டுக் காவலுக் குள்ளாய் 4. வருவதும் போவது மின்றித்-தூய மெளன நிலையில் நிலைத்தது தானே 5
ஆரு மறியா ரெனவே - அப்பன் "அப்படி யுள்ளதென் முனறி வாயே. -x 6

நற்சிந்தனை 337
உன்னடிமை நான் ஐயனே
இராகம்-கானடா தாளம்-திஸ்ரம்
பல்லவி
உன்னடிமை நான் ஐயனே உளமகிழ்ந்து பார் மெய்யனே
சரணங்கள்
பொன்னடி மாதவர் சேர்பெரு முத்தனே
பூங்கொடியாள் பங்கா
உன்னடி யென்முடி வைத்தினி யாளுவாய்
ஓங்காரத்துட் பொருளே (உன்)
ஓயாமற் பொய்பேசி உழைக்கின்ற வுலுத்தரை
உறவென்றிருந்து விட்டேன் வாயார வாழ்த்தி வணங்கு மடியாரை
மனசாரப் போற்ற வைப்போய் (உன்)
சித்தத்துட் டித்திங்குந்தேனே பாலென்று
சிந்தனை செய்த டியேன் இனியுத் தமரோடு பிரியாமல் வாழ
உன்னருள் தாருமையா (உன்)
நீயே நானென்று நினைக்கும்மெய் யடியாரை
நேயத்தொடு வணங்கிடுவார் தாயே யனைய சங்கரனே வந்து
தண்ணருள் தாருமையா (உன்)
22

Page 174
338 நற்சிந்தனை
நீ அருளாவிடிற் கதியேது
இராகம்-அடாணு தாளம்-ஆதி
பல்லவி
நீ யருளா விடிற் கதியேது-ராமா நீ ரவிகுல திலகம் உலகுக் கெல்லாம்
அநுபல்லவி
தாயுந் தந்தையுஞ் சகலமும் நீயே தமியேன் உயிருக்குயி ராகிய பரனே (நீயரு)
agFJRRTo
பாற்கடல் தன்னிற் பள்ளி கொள்வோனே பாக்கிய லட்சுமி தன்மண வாளா ஆர்க்கு முணர்வரி தாகிய பொருளே அடியேன் மனத்தைக் கொள்ளை கொண்டவனே நீக்கமற் றெங்கும் நிறையும் நின்மலனே நினையும் யோக சுவாமிதன் துணையே போக்கும் வரவு மில்லாப் பொருளே பூதலத் துள்ளோர் போற்றும் அருளே (நீயரு)
சிவசிவ வென்றுசொல்லிப் பேணேனே இராகம்-செஞ்சுருட்டி தாளம்-ஆதி
பல்லவி.
தில்லையம்பலத்தைக் கண்ணுற் காணேனே சிவசிவ வென்று சொல்லிப் பேணேனே
அநுபல்லவி
நல்லவர் கூட்டத்தைத் தேடிநா டேனே அல்லும் பகலும் பாடியா டேனே (தில்லை)

நற்சிந்தனை 339
சரணங்கள்
கல்லை நிகர்த்த மனமுரு காதோ காமக்குரோத மோகங் கருகாதோ (தில்லை) எல்லை யில்லாத வின்பம் பெருகாதோ ஏழைகள்மே லிரக்கம் வாராதோ (தில்லை) நில்லாத காயத்தை நான்வெல் லேனே நீயேநா னென்றுசொல்லி நில்லேனே (தில்லை) உல்லாச மாக வெங்குஞ் செல்லேனே உண்மையைச் சொல்லிச்செல் கில்லேனே (தில்லை) இல்லையென் றெவர்க்கும் நான் சொல்வேனே இனிய செஞ்சுருட்டியைக் கல்லேனே (தில்லை)
சிவனே உன் தரிசனந் தாராயோ இராகம்- ஆனந்தபைரவி தாளம் -ஆதி
u sibsna சிவனே யுன்தரிசனந் தாராயோ தேவாதி தேவர்தொழும் பெருமானே
அநுபல்லவி தரிசனந் தாராய் தமியேனைக் காவாய் தத்துவா தீதனே சங்கர சிவசம்போ (சிவனே)
சரணங்கள்
அரிய விருவரும் அறியாத விமலனே கரியுரி போர்த்த கருணைக் கடலே திரிபுர தகனனே தில்லையில் வாசனே சிவகாமி யம்மை பூசிக்கு மீசனே (சிவனே) வரவர மனசு சங்கடப்படுகுதே வாராய் துயர்தீராய்: கண்பாராய் என்னைக்காவாய் இரவும் பகலுமுன்றன் இணையடி மறவாமல் பரவி யானந்த பைரவி ராகம் பாடி. (சிவனே)

Page 175
340 நற்சிந்தனை
எல்லாஞ் சிவன்செயலென்றிருப்போம் தோன்ருத் துணையை யென்றுந் துதிப்போம் தூயதிருப் பாதத்தைப் பதிப்போம் ஈன்ருளையு மப்பனையும் மதிப்போம் எல்லாஞ் சிவன்செயலென் றிருப்போம் ஆன்ருேர் விதித்தபடி நடப்போம் அந்திசந்தி மந்திரத்தைப் படிப்போம் நான் ரு னெனுமிரண்டுந் தடுப்போம் நாதனடி யிணைக்கீழ்க் கிடப்போம் வஞ்சம் பொருமை நெஞ்சில் வையேம் சஞ்சலத் தால் மிஞ்சி நாங்கள் நையேம் கொஞ்சம் கொஞ்ச மாய்மனத்தை வெல்வோம் கூடாத கூட்டத்தில் நாங்கள் செல்லோம்
வாரா வரவினில் வந்த சஞ்சீவியே
தோடுடைச் செவியனே தோன்றத் துணையே பீடுடைப் பெரியோர் பெட்டகத் தணியே தந்தையுந் தாயும் மைந்தருந் தமரும் எந்தையே நீயென் றெண்ணியெப் போதும் விந்தைசே ரவர்பணி வேண்டியா னுற்றி இவ்வுல கத்தி லிறுமாப் புடனே சந்ததம் வாழத் தயைபுரி யுமையாள் வந்தனை புரியும் வண்ணமே ணியனே கந்தமுங் காயுங் கடும்பசி மூடியே வந்திடி னுண்ணும் மாசிலா மனத்தர் சிந்தையிற் குடிகொள் தேசிக மூர்த்தி தீராக் கோபமுஞ் சித்தக் குரோதமுஞ் நீரா யுருக்கும் நெறியிது காணெனத் தாரா விடில்யான் தளையுண் டுழல்வேன் வாரா வரவினில் வந்தசஞ் சீவியே , பழியொன்று பூணு வழிபடு தெய்வமே
ஒழியா வின்பமாய் நின்று − தெளியாவென் சிந்தை தெளிந்திடச் செய்யே

நற்சிந்தனை 341 நல்லூரில் ஆட்டக்காரன்
நல்லூரில் ஆட்டக்காரன் நான்வணங்கும் குருநாதன் கல்லைக்க ரைக்குஞ்சித்தன் கருணைபூத்த திருமுகத்தான்
இல்லை யென்னுஞ்சொல்லை இல்லாம லாக்கிடுவான் அல்லும் பகலுமென்றன் அகத்தினிலே வாழ்ந்திடுவான்
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் உண்மை
முழுதுமென்பான் கருப்பையிலே வாராமல் காத்தென்னையாண்டுகொண்டான்
தேரடியில் வீற்றிருப்பான் செல்லப்பனென்னும் பெயரா 7 ஆரறிவா ரென்றுசொல்வான் அன்னையைப்போல்
அன்புடையான்
பொய்சொல் லாதேயென்பான் மெய்யுஞ்சொல்
லாதேயென்பான்
வல்லபங்கள் பேசிவந்தோர் வாயை யடக்கிடுவான்
வித்தையொன்றுஞ் செய்துகாட்டான் விவேகமற்றேர்
போலிருப்பான் அத்துவா மார்க்கம்விட்டு ஆறியி ருந்திடுவான்
*** --W*-.*W*A*a*l*ið
சிவசிவ என்றிடத் தீரும் பாவம்
சிவசிவ என்றிடும் போதினிலே செய்த
பாவமெல்லாம் ஒடும் பாரினிலே அவனிவன் என்கின்ற வார்த்தையெல்லாம் போக்கி
ஐயன் திருப்பாதம் உண்மையதாய் நோக்கி தவம்செய்வார்தமைத் தானக நோக்கிச்
சச்சி தானந்தம் தன்னிடத்தே தாக்கில் உவமையில் லாமுத்தி நிலையிலே போக்கும்
உண்மை யறிந்து சொன்னேன் யோகசுவாமி.

Page 176
344 நற்சிந்தனை
இதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய்
பல்லவி w
என்னிதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய் ஏகாம்பர நாதனே சிவனே
அநுபல்லவி
பதசாரி தோறும் உன்னதி சிலம்பொலி கேட்டுப் பரமானந்தம் பெறுவேன் சிற்ச பேசனே -என்னிதய
சரணங்கள் எனதென்ற கங்கரிக்கும் மனதுப னரிந்துவர இருவினைக் கட்டுகள் இற்றுச் சுயேச்சைபெற அனவரதமு முன்னை நினைந்து கசிந்துருகி அத்தாவுன் மலரடிப் பித்தணுய் வாழ்ந்திட-என்னிதய ஹரஹர வென்று அரவங்கள் கோஷிக்க அன்பு மகரவீணை தும்தும் என வாசிக்க சிரசி லானந்தஞ் சிலிர்த்து நடமாடச் செந்தமிழ் வாணியுமுன் மந்திரப் பொருள்பாட
- என்னிதய
GFA Gig) LOGOof எல்லை யெமக் கில்லையென்று சொல்லு மணியே எல்லாஞ் சிவன் செயலாய்ச் சொல்லு மணியே இல்லையென் ருெருபோதுஞ் சொல்லாய் மணியே ஈச ஞெருவ னென்று சொல்லு மணியே அன்னைதந்தை சுற்றத்தைப் பேணு மணியே அயலவர் தம்முறவு வேணு மணியே பின்னைப்பொய் சொல்லாமல் காணு மணியே பிறர் பொருள்மே லாசையின்றி வாழு மணியே என்னையினி மறவாமல் பாடு மணியே ஈச னடியவரைத் தேடு மணியே
முன்னை வினையெல்லாமோடு மணியே முருகன் திருவடியைக் கூடு மணியே.

நற்சிந்தனை 345 சிவனடியைச் சிந்திநெஞ்சே
அன்பிலா ரோடுறவு கொள்ளாதே அடுத்தோருக்குத் துன்பத்தைச் செய்யாதே சூதும்வாதும் பேசாதே இன்பத்தில் துன்பத்தில் ஏகமன சாயிருந்து தென்புடனே யரன்பாத மந்திசந்தி சிந்திநெஞ்சே.
ஆரோடும் பகையாதே ஆசைதனைக் கொள்ளாதே ஊரோடே ஒத்து நட உண்மையைத் தேடிக்கொள் நீரோடே வெகுநேரம் நீந்திவிளை யாடாதே
சீரோடே. சிவன்பாத மெப்போதுஞ் தேடுநெஞ்சே,
இடுவதை மறவாதே ஏழைகளை இகழாதே கெடுவது நினையாதே கேளிரைப் பிரியாதே சுடுவது சொல்லாதே துணையின்றிச் செல்லாதே படுதலையிற் பலிகொள்ளும் பரமனைப் பாடுநெஞ்சே.
ஈவது விலக்காதே யிழிதொழில்கள் செய்யாதே சாவது வந்தாலுஞ் சத்தியத்தை மறவாதே ஆவதும் அழிவதும் நமக்கில்லை யெனவறிந்து vn தேவர்கள் தொழுதேத்துஞ் சிவனடியைச் சிந்திநெஞ்சே.
அன்பாய் இருப்போமே
அன்பே சிவமென்று கிளியே! ஆன்ருே ருரைத்தார்கள் ஆனமையால் நாங்கள் கிளியே! அன்பாய் இருப்போமே இரப்பவர்க் கில்லையென்று கிளியே! எடுத்துநீ
சொல்லாதே
ஈவது நன்மையெனக் கிளியே! எடுத்தவ்வை சொன்னரே. சாவது வந்தாலுங் கிளியே! சத்தியம் மறவாதே தேவர்கள் வந்தாலுங் கிளியே! சித்தங் கலங்காதே தாய்சொல்லைத் தட்டாதே கிளியே! தந்தைசொல்
.மந்திரமே ۔

Page 177
346 ܪ f நற்சிந்தனை
இலங்கை என்னூர்
எல்லாமென் னுரர்எல்லா மென்சுற்றத் தார்களே எல்லா மெனக்குதவி யென்றறிந்தேன்-நில்லாத நீர்சடைமேற் கொண்ட நிமல னெனக்கன்பன் சீரிலங்கை யென்னுரர் தெரி.
நாமார்க்கும் ஆளல்லேம் நாளை வருவதெண்ணேம் ஆமா றறம்புரிவே மார்க்குமஞ்சேங்-கோமாற்கே மீளா வடிமையாய் மேதினிமேல் வாழுவோம் தாளா ரிலங்கையென்னுடர் தான்.
மெய்யுரைப்போம் மேன்மக்கள் நட்பை விரும்புவோம் செய்வன வெல் லாந்திருந்தச் செய்குவோம்- வையகத்தில் தாமரைமேல் நீர்போற் ருனியைந்து வாழுவேம் காம ரிலங்கை யென்னுரர் காண்.
சூரியன் தோன்றுதற்கு முன்ன ரெழுந்திருப்பேம் சீரியவா யாற்சிவனைப் பாடுவேம்-பாரினிலே தண்ணுர் பொழிலுந் தடவரையு மாறுகளும் நண்ணிலங்கை யென்னுரர் நய.
புன்சொல் புறங்காப்பேம் போன வகையெண்ணேம் எஞ்செயலா லொன்றுமில்லை யென்னுவேம் - வன்சொற் களை வேம் கனமேகங் கண்ணுறங் கின்பப் பழவிலங்கை யென்னுரரே பார்.
சித்தி பெறலாம் திருவெல்லாஞ் சேரலாம் பத்தியின்றேல் என்ன பலனிவற்ருல் - எத்திசையும் மெச்சு புகழிலங்கை மேலோர்கள் வந்துதினம் நச்சு மிலங்கையென்னுரர் நாடு.
நாடி யொருகருமம் நாடோறு மாற்றுவார் வாடி மெலிவதில்லை மாநிலத்தில்-நீடியசீர் கொண்ட விலங்கையிலே கோடிசனம் வந்துபணம் கொண்டுசெல்வார் என்னுரர் குறி.
கருங்குயில்கள் பாடுங் கரியினங்கள் கூடும் நெருங்குங் கதலிபலா தென்னை - ஒருங்குதிரை
கொண்டுவந்து முத்தங் கொடுக்கும் வளநாடு கண்டுகொண் டேனிலங்கை காண்.

நற்சிந்தனை 347 ܕ
மாது பங்கனை மறக்கவு மாமோ
ஒப்பில்லாத இலங்கைநகர் ஒருவன் றிருவடியைத் தப்பில்லாமற் போற்றுவார்கள் சாகார் பிறவாரே கொப்பில் மந்தியோடு குயில்பயிலும் பொழில்நீழல் எய்ப்பிலாத விளமான் மரைமேதி துயில்கொள்ளும்.
கடல்சூ Nலங்கைநகர் மேவிய கடவுள்பாதம் திடமோ டெந்தநாளுஞ் சிந்திப்பார்கள் மிடியாலே புடிவிதனில் துயரால் நொந்துபோகார் வரைமீது அடவிதனில் ஆமா புலியான துயில்கொள்ளும் கரையு மன்பர்தங் கருத்தி னனையே உரைசெய் வார்க்கொரு குறையு மில்லையே.
ஆடு பாம்பணிந் தாடு வான் கழல் பாடு வார்களே பரம யோகிகள்
அறஞ்செய்வார் தங்க ளகமே கோவிலாய் நிறைஞ்சு நிற்குமே நிமலன் நாடொறும் புறத்திற் கூறுவர் புகழைப் பெற்றிடார் அறத்தைக் கூறுவா ராக்கஞ் சேர்வரே.
காலை மாலையுங் கடவுள் பாதத்தைச் சால வேதொழு வார்க ளன்பரே.
ஒது மன்பர்க ளுள்ளத் துளான மாது பங்கனை மறக்கவு மாமோ
பாது காவெனைப் பகலு மிரவும்
மோதுங் கரைசேர் முதுலங்கை யானே.
கூடலி லன்று குதிரையை நரியாய் நர்ட வைத்த நம்பனை யல்லால் பாட்ட வும்வேறு பரம்பொரு ஞண்டோ மாடமலி யும்மிலங்கை மாநக ரானே.

Page 178
348 நற்சிந்தனை.
கரையு மன்பர்கள் கண்டுகந் தானும் வரையை யெடுத்த மன்னநெரித் தானும் மரையும் மானும் மயிலினமுங் குயிலும் நிரைநிரையாய் நிற்கு மிலங்கைமா நகரானே.
மத்தம் மதியொடு மாநா கத்தை வைத்த சென்னியன் வாணுதல் கணவன் புத்தஞ் சமணம் போயக லும்படி சித்தத்திற் கொண்ட சீரிலங்கை யானே.
சிவ சிவ சிவ
அன்பரன்பது சிவசிவசிவ ஆசையற்றது சிவசிவ சிவ இன்பமயமது சிவசிவசிவ ஈசனுயிர்தொறுஞ் சிவசிவசிவ முன்பின் அற்றது சிவசிவசிவ மோனமுதலது சிவசிவசிவ தன்வயத்தது சிவசிவசிவ சர்வவல்லபஞ் சிவசிவசிவ.
பொன்னிறத்தது சிவசிவசிவ போக்கிலாதது சிவசிவசிவ என்னிடத்தது சிவசிவசிவ எங்குமுள்ளது சிவசிவசிவ மண்ணிடத்தது சிவசிவசிவ மந்திர ரூபஞ் சிவசிவசிவ விண்ணிடத்தது சிவசிவசிவ வேதமானது சிவசிவசிவ. 2
மட்டிலாதது சிவசிவசிவ மங்கைபங்கது சிவசிவசிவ முட்டிலாதது சிவசிவசிவ மூவராவது சிவசிவசிவ கிட்டொனதது சிவசிவசிவ கிருபையுள்ளது சிவசிவசிவ எட்டிலானது சிவசிவசிவ ஏகமாவது சிவசிவசிவ. 3
அன்னையாவது சிவசிவசிவ அப்பணுவது சிவசிவசிவ முன்னையுள்ளது சிவசிவசிவ முனிவர்புகழ்வது சிவசிவசிவ என்னையாள்வது சிவசிவசிவ எடுத்த திருவடி சிவசிவசிவ பின்னையென் பிழை சிவசிவசிவ பேதாபேதஞ் சிவசிவசிவ. 4
3. 4.

நற்சிந்தனை s - 849
இலங்கை நகரானே
சிந்தை செய்கதிர் வேலனைத் தந்த எந்தையை யெந்த நாளும் மறந்திடார் பந்தங்க ளற்றுப் பரமவி டெய்துவர் கந்தம் பொலியு மிலங்கைக் கடிநகரானே.
கண்மூன் றுடைய கடவுளை நாளும் பண்முறை தப்பாது பாடு மடியார் மண்ணுள வளவும் மனக்கவலை எய்தார்கள் விண்டொடு வரைமே விலங்கைமா நகரானே. 2
மண்முதற் பூதங்கள் வகுத்த வொருவனை எண்முத லெல்லா மாயிருப் பானைப் பெண்ணுமை யாளைப் பிரியாப் பெருமானை விண்ணுேர் விரும்பு மிலங்கை நகர்கண்டேன். 3.
ஒதுபல் வேத முரைசெய்த நாவானே போது கங்கை சூடிய புனிதனே தீதுசேர் தக்கன் வேள்வி சிதைத்தானே மீதுவண் டார்க்கு மிலங்கை மேவியபரனே, 4
கமல நான்முகன் கண்ணனுங் காணு தமல னேயென வாரருள் செய்தானே , பவன மனலம் பாராகிய பரமனே உவமைசொல் லவொண்ணு லங்கை நகரானே.
பாலனுக் காகப் பாற்கடலை யழைத்தானை ஞாலம் புகழ்ஞான சம்பந்தன் தந்தையை ஆல மரத்தின்கீ ழன்றற முரைத்தானைக் கோலக் குயில்கூவு மிலங்கையிற் கண்டேனே. 6
சூதான வெளியிலே சும்மாவிருப்போம்
ஒம்நம சிவாயவென உருவேற்றுவோம் உருகி யுருகிநாம் உணர்வவிழ்வோம் வீம்பிடும்பை யகங்காரம் விட்டுவிடுவோம் வேதாந்த வீட்டிலே குடியிருப்போம்

Page 179
350 நற்சிந்தனை
நாம்நாம் நாமென நடமிடுவோம் நல்லவிருளை நல்ல வொளியாக்குவோம் போம்போம் வினையெனப் போற்றிசெய்குவோம் பூரண மானநிட்டை புகுந்திடுவோம் ஆம்ஆம் நமக்கெல்லாம் ஆய்விடுமென்போம் அவனேநா மென்றுசொல்லி யானந்தங்கொள்வோம் சந்திரனைச் சூரியனை ஒன்றுசெய்குவோம் சச்சிதா னந்தத்தேனைத் தானருந்துவோம் இடைகலை பிங்கலை யிரண்டுமடைப்போம் எழிலாருஞ் சுழுமுனைக்குள் ஒடுங்கிநிற்போம் பஞ்சவர்ணப் பரிமேலே பவனிசெல்வோம் பாரும்விண்ணும் ஒன்ருகப் பண்புசெய்குவோம் ஆதார மாறுக்கு மப்பாலேசெல்வோம் அங்கே திருநடனங் கண்டுகளிப்போம் சூதான வெளியிலே சும்மாவிருப்போம் சுகம்சுகம் எந்நாளு முற்றிடாதோ.
9ILIT Liguodalib
இராகம்-புன்னுகவராளி தாளம்-ஆதி
பல்லவி அப்பா பரமசிவம் (அப்பா)
சரணங்கள்
அன்றுதொட்டு இன்றுமட்டும் அடியேனுந் தேவரீரும்
அத்துவித மாயிருந்த
வித்தைதனை யாரறிவார் (அப்பா) ஒப்பாரும் மிக்காரு மில்லா வொருபொருளே தப்பேது யான்செயினும் அப்பா பொறுத்தருள்வாய் அப்பாலுக் கப்பாலா யாருமறி யாதவண்ணம் ஆடுந் திருநடனங் காண வருள்புரிவாய் (அப்பா)

நற்சிந்தனை
அத்துவிதப் பொருள் காப்பாம்
அத்துவி தப்பொருள் காப்பாம்-எனக் கடியார்க ளென் றென்றுங் காப்பாம்
சித்தருந் தேவருங் காப்பாம் என்றன் சித்தத் திலங்குந் திருவருள் காப்பாம்.
அட்ட வசுக்களுங் காப்பாம் - எனக் கானந்த மான பராபரன் காப்பாம் எட்டுத் திசைகளுங் காப்பாம் - எனக் கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம்.
பிராண னபானனுங் காப்பாம் - என்னைப் பிரியா திருக்கும் பிரணவங் காப்பாம் அராவணி வேணியன் காப்பாம்-எனக் கருளை யளிக்குங் குருபரன் காப்பாம்.
பஞ்சப் புலன்களுங் காப்பாம் என்னைப் பரவு மடியவ ரனுதினங் காப்பாம் குஞ்சர முகத்தவன் காப்பாம் - நல்ல
குழந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம்.
சந்திர சூரியர் காப்பாம்- எங்குந் தங்கு முயிர்க ளனைத்துமென் காப்பாம் மந்திரந் தந்திரங் காப்பாம் - நான்கு மறைகள் சிவாகமம் மாநிலங் காப்பாம்.
351
(அத்து) 1
(அத்து) 2
(அத்து) 3
(அத்து) 4
(அத்து) 5

Page 180
352
நற்சிந்தனை
எல்லாஞ்சிவமே
அப்பனும் அம்மையுஞ் சிவமே அரிய சகோதரருஞ் சிவமே ஒப்பில் மனைவியுஞ் சிவமே ஒதரும் மைந்தருஞ் சிவமே செப்பில் அரசருஞ் சிவமே தேவாதி தேவருஞ் சிவமே இப்புவி யெல்லாஞ் சிவமே என்னை யாண்டதுஞ் சிவமே.
usm -4
மங்களம் ஜெய மங்களம் 1
அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம் அத்துவித வஸ்துவுக்கு மங்களம் ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம் உத்தம பத்தருக்கு மங்களம் முப்பொழுதுந் தொழுவார்க்கு மங்களம் மூவாசை வென்றவர்க்கு மங்களம் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம் முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம் தன்னைத்தன்னு லறிந்தவர்க்கு மங்களம் ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம் ஐயமில்லாச் சாதுக்கட்கு மங்களம் ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம் சீர்காழித் தேவருக்கு மங்களம் திருநாவுக் கரசருக்கு மங்களம் சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் திவ்விய மாணிக்கர்க்கு மங்களம் எங்குந்தங்கும் உயிர்களுக்கு மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்

நற்சிந்தனை 353
மங்களம் ஜெய மங்களம் 11
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
ஆதியந்த மில்லா அப்பனுக்கு மங்களம் சோதிவடி வாயுள்ள சுவாமிக்கு மங்களம்.
ஆன்மா நித்தியமென்ற ஆன்ருேர்க்கு மங்களம் தேன்போ லுருசிக்குஞ் சிவனுர்க்கு மங்களம். 2
காண்பதெல்லாங் கடவுளாய்க் காண்பார்க்கு மங்களம் நாண்மல ரெடுத்துப்பூசை பண்ணுவோர்க்கு மங்களம், 3
பொறிவழிபோ யலையாத புண்ணியர்க்கு மங்களம் நெறிவழியே செல்லுகின்ற நிருபருக்கு மங்களம். 4.
நாமறியோ மென்றுசொல்லும் நாதனுக்கு மங்களம் உண்மை முழுதுமென்ற வுத்தமர்க்கு மங்களம். , 5
தன்னைத் தன்னலறிந்த தாபதர்க்கு மங்களம் அன்னைபிதாக் குருவான அப்பனுக்கு மங்களம். 6
மண்ணைப்பெண்ணை மதியாத மாதவர்க்கு மங்களம் வண்ணநகர் வாழும்வைத் தீசனுக்கு மங்களம். 7
திண்ணனென்ற பேர்கொண்ட அப்பனுக்கு மங்களம் சண்முக நாதனுக்குஞ் சங்கரற்கும் மங்களம், 8
விண்ணில் விளங்குஞ் சூரிய சந்திரர்க்கும் மங்களம் எண்ணிலடங் காவுயிர்கள் அத்தனைக்கும் மங்களம். 9 நித்தியகர்மந் தவருத நின்மலர்க்கு மங்களம் பத்துப்பாட்டும் படிப்போர்க்குங் கேட்போர்க்கும்
A. மங்களம், 10
மங்களம் ஜெய மங்களம் محي மங்களம் ஜெய மங்கள்ம் ,
23

Page 181

பகுதி II
உரைநடைப் பகுதித் திரட்டு

Page 182
6
குருநாதன் அருள்வாசகம்
ஒரு குறைவுமில்லை
நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே. ஆகையால் நாம் அவருடைய உடைமை.
அவருடைய அடிமை. நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே. நாம் அவரை ஒருபோதும் மறந்திருக்க முடியாது.
நமக்கு ஒரு குறைவுமில்லை.
நாம் என்று முள்ளோம்.
எங்கு மிருக்கிருேம்.
எல்லா மறிவோம். இப்படியே நாம் இடையருது சிந்தித்துச் சிந்தித்துக்
கீழ்மையான குணங்களைப் போக்கி மேலான தெய்வ தத்து வத்தை அடைவோமாக.
*சந்ததமு மெனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மை
நினையன்றி யில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த
சமரச சுபாவமிதுவே."
என்னுந் தாயுமானவர் அருமைத் திருவாக்கே இதற்குப்போதிய சான்று.

நற்சிந்தனை V, 357
சிவதொண்டு I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு செய்வதே எங்கள் தொழில். அதற் காகவே நாங்கள் பூமியில் வாழுகிருேம்.
சந்திரன் சிவதொண்டு ஆற்றுகின்றது. சூரியனும் ஏனைய கிரகங்களும் அத்திருப்பணியையே செய்கின்றன. தேவர் களும் அசுரர்களும் கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர் களும் அப்படியே தொண்டாற்றி வருகின்றனர்.
அனைத்துஞ் சிவன் செயல்; அவனன்றி அணுவும் அசை யாது. நாம் இழந்து போவதுமொன்றுமில்லை. ஆதாய மாக்கிக் கொள்வதும் ஒன்றுமில்லை. இருந்தபடியே இருக் கின்ருேம்.
நமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லை. நமக்கு இதம் அகிதம் இல்லை. மரணம் பிறப்பில்லை. வேண்டுதல் வேண்டாமை இல்லை. மண்ணுதி ஆசை யில்லை. மனமான பேய் இல்லை. காலதேச வர்த்தமானம் நமக்கில்லை. நாம் அனைத்துக்குஞ் சாட்சியாக விளங்குகின்ருேம்.
ஓம் தத் சத் ஒம்
I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு ஆற்றுவதே எங்கள் தொழில். அதற். காகவே நாம் உயிரோடிருக்கிருேம். உண்பதும் உறங்குவ தும் அதற்காகவே. எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத் தைப் பட்டாலும் எல்லாம் அதற்காகவே செய்கிருேம். நமக்கு ஆதியுமில்லை அந்தமுமில்லை. பிறப்புமில்லை இறப்பு மில்லை. நாம் விளையாட்டுக்காகினும் பிறர்பொருளைக் கவ ரோம். பிறர்வசை உரையோம். எல்லாஞ் சிவன்செய

Page 183
g58 நற்சிந்தனை
லென்பதை மறவோம். பசித்தாற் புசிப்போம். பிறர்செய் யும் நிட்டூரத்தையாவது, கிருபையையாவது பொருளாகக் கருதமாட்டோம். எப்பொழுதும் தூய்மை உடையோம். துன்பத்திலும் இன்பத்திலும் கவலை அடையோம். முழு தும் உண்மை.
ஓம் தத் சத் ஓம்.
II
நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார். இது சரியை; இது கிரியை; இது யோகம்; இது ஞானம்; இது மந்திரம்; இது தந்திரம் இது மருந்து.
இந்தத் தியானத்தில் நிலைத்தலே நிட்டை இந்த நிட்டையுடையோர்க்குச் சீலமில்லை; தவமில்லை; விரத மில்லை; ஆச்சிரமச் செயலில்லை.
இவர்கள் தாம் விரும்பிய வண்ணம் மண்ணில் வாழ்ந் தார்கள்; வாழுகிருர்கள்; வாழ்வார்கள். இவர் பெருமை யாவருமறியார்; கற்கண்டின் இனிமை கற்கண்டை உமிப வர்க்கே தெரியும்.
ஒரு பொல்லாப்பு மில்லை. எப்பவோ முடிந்த காரியம். நாமறியோம். முழுதும் உண்மை.

நற்சிந்தனை" 359
ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்தது. ஒழுக்க முடையார் எல்லாமுடையார். ஒழுக்கங்களாவன கொல்லாமை, கள் ளாமை, பிறர் வசை உரையாமை, பிறர் பொருள் கவ ராமை, தாழ்மை, பொய்யுரையாமை முதலியனவாம்.
எக்கருமத்தைச் செய்யும் பொழுதும் ஊக்கத்தோடுஞ் சிரத்தையோடும் மனமகிழ்ச்சியோடுஞ் செய்து பழகுதல் வேண்டும். அப்படிச் செய்து பழகிவந்தால் மன உறுதி உண்டாகும். அஃதாவது மனம் ஏகாக்கிர சித்தத்தைப் பொருந்தும். பொருந்தவே ஆன்மசக்தி அதிகரிக்கும். நினைத்தகாரியம் நினைத்த மாத்திரத்திலே உண்டாகும். இவர் பகைவர், இவர் உறவினர் என்ற பாகுபாடு சித்தத் திற் புகுந்து கவலையை உண்டாக்காது.
எல்லாம் என்னிடத்தே உண்டாகின்றன; எல்லாம் என் னிடத்தே நிலைத்திருக்கின்றன; எல்லாம் என்னிடத்தே ஒடுங்குகின்றன என்ற தூய்மையான எண்ணம் உடைய வராய் இருத்தல் வேண்டும். மேலும் எனக்கொரு குறைவு மில்லை; என்னிடத்திலே எல்லோரும் அன்பாய் இருக்கி ருர்கள்; நானும் எல்லாரிடத்திலும் அன்பாய் இருக்கிறே னென்று அடிக்கடி நினைந்து நினைந்து சாதிக்க வேண்டும். இப்படியே இடைவிடாமற் பழகிவந்தால் எல்லாமறியும் ஆற்றலும் எல்லாஞ் செய்யும் வல்லமையும் எளிதிற் கைவரும்.
'ஓம் தத் சத் ஓம்"

Page 184
360 நற்சிந்தனை
சன்மார்க்கம்
குரங்குபோல் மனங்கூத்தாடுகின்றதே.
இதன் கூத்தை எப்படி யடக்குவதென்று தெரியவில் லையே. நன்று சொன்னய். இதற்கு நல்ல மருந்துன்னிட முண்டு. நீ அதை மறந்து போனுய். சொல்லுகிறேன் கேள்.
சிவத்தியான மென்னும் மருந்தைத் தினந்தோறுஞ் சாப்பிட்டுவா. மனக்குரங்கின் பிணி மாறும்.
அதைச் சாப்பிடும்போது அனுபானத்தைக் கூட்டிச் சாப்பிடு. அதுவுமுன்னிடமுண்டு.
அது என்னவென்றல்; நாவடக்கம், இச்சையடக்க மென்னுஞ் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு.
இதுவும் போதாது. பத்திய பாகத்திலே தான் முற் றுந் தங்கியிருக்கிறது. அதுவு முன்னிட முண்டு.
அது என்னவென்முல்; மிதமான ஊண், மிதமான நித்திரை. மிதமான தேக அப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம். ஆன்ம இலாபத்தின் பொருட்டிதைச் செய். vn
மனத்தை ஒருவன் அடக்கி வெற்றி கொள்ள முழு மனத்தோடு விரும்புவானனல் சிவத்தியானத்தைத் தினந் தோறுஞ் செயது வரக் கடவன். -
படிப்படியாக அவன் மனமொடுங்கி வருவதை அவன் கண் கூடாகக் காணுவான்.
சாந்தம், பொறுமை, அடக்கம் முதலிய நற்குணங் கள் அவனிடத் துதிக்கும். γ.
அவன் மனமெந்த நேரமும் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். இகழ் புகழிரண்டினலும் இழிவடையான்.

நற்சிந்தனை 36.
அந்தராத்மாவிலே சுகிப்பான். பிறர் சுகந் தன் சுக மென்ற எண்ணம் பெருகும்.
கைவிளக்கை யொருவன் கொண்டு செல்வானுணுல் இராக்காலத்தில் அவன் மனங் கலங்குவான? கலங்கான். அப்படியே சிவத்தியானத்தைச் செய்து வருவானனல் மாய விருள் அவனை அடையுமா? அடையா. V
போதனையிலுஞ் சாதனை சிறந்தது. ஒரு பொல்லாப்பு மில்லை.
ஆன்ம இலாபமே பொருளெனக்கண்ட அறிஞர் அநித் தியமான இந்த உலக இன்ப துன்பத்தின் மயங்காது தாமரையிலையில் நீர் போற் சகத்துடன் கூடிவாழ்வார். ஆன்ம இலாபத்தைப் பெற நினையாதவர் இந்த உலகத் துன்ப இன்பத்தினுற் கலங்கித் தியங்கித் திரிவார்கள். ஆன்ம இலாபத்தையே குறிக்கோளாகக்கொண்டு நன்மை தீமை யைவென்று நான் எனதென்னும் அகங்கார மமகாரங் களைக்களைந்த அறிஞர் இறைவன் திருவடி நிழலில் பிறப் பிறப்பற்றுப் பேரின்பத்துடன் வாழ்வார்.
அஃதறியா அறிவிலிகளே துன்பக் கடலிலே வீழ்ந்து எரிவாய் நிரயத்துக் காளாவார்.
வண்டுகள் பூவைக்கிண்டித் தேனை உண்டு ஒன்று மறி யாது கிடப்பது போல் பக்தனும் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத்தினுல் கிண்டி ஆங்குவரு மானந்தத்தேனை யுண்டு ஒன்று இரண்டு, நன்று தீதென்றறியாமற் தேக் கிக் கிடக்கிருன்.
ஒரு கமக்காரன் தன்னுடைய நிலத்திலே நல்ல வித்தை யிட்டு அதிலுண்டாகுங் களையைக் களைந்து, விளையுந் தானியத்தை யொன்று சேர்க்கிறன்.
அதுபோலப் பக்தனும் சிவமாகிய நிலத்திலே பக்தி யென்னும் வித்தை வித்திக் காமக்குரோத மோக மதமாச்

Page 185
362 நற்சிந்தனை சரியமென்னுங் களையைக் களைந்து சிவபோக மென்னுந் தானியத்தைச் சேர்த்து வைத்துப் புசிக்கிருன்.
பூலோகமாகிய நந்தன வனத்திலே சீவர்களாகிய மலர்கள் மலர்ந்து கிடக்கின்றன. சிவன் அதைக்கண்டு மகிழ்கிறன்.
பொற்கொல்லன் பொன்னை யெடுத்துப் பல பூண் களைப் படைக்கிருன்.
சிவனகிய பெரிய பொற்கொல்லன் ஆன்மாவாகிய
பொன்னை யெடுத்துச் சீவர்களாகிய பலபணிகளையு மாக்கு கிருன். 8.
வைத்தியன் பல மூலிகளையு மெடுத்து ஒன்ருக்கி நோய்க்கு மருந்து கொடுத்து நோயை மாற்றுகிருன்.
பெரிய ஞான வைத்தியனும் தனு கரண புவன போகங் களை ஆன்மாவுக்குக் கொடுத்து அதன் நோயை மாற்றி இன்ப வீட்டில் வைக்கிருன்.
தாய் தனது குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான் களைக் கொடுத்து மகிழ்விக்கிருள்.
சிவபெருமானுந் தன் குழந்தைகளாகிய எங்களுக்குப் பல விதமான இன்பங்களையுந் தந்து மகிழ்விக்கிருன்.
பொறி வழியே போந்து மனம் அலைய அறிஞர் இடங் கொடார். ஏனெனில் ஆத்மாவே தானென அறிந்தவர்கள்; ஆசை நோய்க்கு இடங்கொடுப்பாரா? அன்று.
அவர்தம் பெருமையை வேத சிவாகமங்களும் புகழ் கின்றன. இவர்களைக் கண்டால் கல்லுங் கரையும்
அனைத்தினும் வெற்றி யுண்டு.

நற்சிந்தனை 3 SB
W சிவத்தியானம்
ஒ மனிதனே! நீ உண்மைப் பொருள். கேடற்றவன். உனக்கு ஒருவருங் கேடு விளைவிக்க முடியாது.
நீ இங்கும் அங்கும் எங்கும் உள்ளவன். நித்தியன். உறுதியுடனே சிங்கங் கானகத்தில் திரிவதுபோல் உலக மாகிய கானகத்தில் திரி. எந்த விதத்திலுந் தளர்வடை
யாதே. ஒரு நூதனமு மிங்கில்லை. முழுதுமுண்மை. ஒரு பொல்லாப்புமில்லை.
ஒ மனிதனே! வானம் வந்தாலும் பூமி வந்தாலும் ஆட்சிசெய்யக் கருதாதே. சாட்சியாயிரு. மாட்சி உன் பிறப்புரிமை.
அது என்ன வுபாயத்தாலு மடையப்படுவதொன் றன்று. அப்படியுள்ள காரியம். மற்றனைத்துஞ் செப்படி வித்தை, அறிவு, அறியாமை உன்னிடமில்லை. நீ பர LDfTjöLorr.
l ஓம் தத் சத் ஒம் |
ஒ மனிதனே! சற்றுப் பொறுமையாயிருந்து பார். நீ யாரெனத் தெரிந்து கொள்வாய். துயருறத் தகாத காரியங்களில் துயருருதே. துன்பமும் இன்பமும் உலக
நடவடிக்கைகள். நீ சித்துப் பொருள்.
உன்னை ஒன்றுந் தாக்கமாட்டாது. எழுந்திரு. விழித் துக்கொள். சிவத்தியான மென்னுந் திறவுகோலால் மோகூடிவீட்டின் கதவைத்திறந்து பார். எல்லாம் வெளி யாகும். VK.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஓ நண்பனே! உன்னை யார்தான் பாவியென்று சொல்ல வல்லான், ஏன்?

Page 186
364 நற்சிந்தனை
" நீ சிவத்தின் அம்சமல்லவா? மறந்து போனுய். ஓம் தத் சத் ஒம் என்று ஓயாமற் சொல்லு, உன் முழுமனத் தோடும் இறைவனுக்கு உன்னை ஒப்புக்கொடு. சிவத்தியா னத்தை அசட்டை பண்ணுதே. ஈற்றில் யாவும் நன் மையாய் முடியும். சோம்பலுக்குஞ் சோம்பலின்மைக்கும் நீ கட்டுப் படாதே, h
அதிகப் பேச்சில் என்ன பயன். பண்படுத்தப்பட்ட தரையிலன்றே நல்ல பயன் வரும். அஞ்சாதே.
நாங்கள் சிவனடியார். சிவபெருமான் என்றுள்ள வரோ அன்று நாமுமுள்ளோம்.
வெப்பந் தட்பம், இன்பந் துன்பம், இளமை முதுமை இயற்கையின் குணங்கள்.
இவைகளின் தீண்டுதலால் நாமேன் கவலைப்படுவான்.
இவைகள் தோன்றி மறைவன. நாமோ தோன்றுவது மில்லை. மறைவதுமில்லை.
உண்மை இன்மை யாகாது. இன்மை உண்மை யாகாது.
எல்லாஞ் சிவன் செயலென்ற எங்களுக்குக் குறைவு முண்டோ? நிறைவு முண்டோ? நாம் சிவபெருமானென்ற நூலிலே கோக்கப்பட்ட பல நிற முள்ள மணிகளை யொப் பவர். நூலறுவதுமில்லை. நாங்கள் சிதறிப்போவதுமில்லை. பலபடக் கூறுவதால் பயனில்லை. . . . . . .
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஒ சினேகிதா! நீ சிவனடியானென்று முழுமனத் தோடும் நினை. எல்லா வெற்றியு முன்னிடமுண்டு. அதற்கு மேல் வேருென்று மில்லை. யாவுமுன் காலடியில்.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |

நற்சிந்தனை s 365
குரு வாசகம்
ஆத்துமா நித்தியமானது. பிரிவில்லாதது. பூரணமா னது. சரீரமோ அழியுந் தன்மையுள்ளது. பிரிவுள்ளது. இப்படி யிருக்கையில் நாங்கள் இவ்விரண்டையுஞ் சரி யென்று சொல்ல முடியுமா? அப்படி நாங்கள் சொன்னல் இதிலும் பெரிய பாவமும் பழியும் வேறுண்டோ?
ஆத்துமா எல்லாவற்றுக்கு மாதியாயுள்ளது. யாவை யும் ஆளுகின்றது.
சரீரமோ தொடக்கமுடையது. ஆளப்படுந் தன்மை (1460)L-Ugbl.
இப்படி யிருக்கையில் நாங்களில்விரண்டையும் ஒன்ருே டொன்று ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? அப்படி யொப் பிட்டால் இதிலும் வேறு பழி கிடையாது.
இயற்கையிலே ஆத்துமா அறிவுடையது. தூய்மையா னது. சரீரமோ அறியாமை யுடையது. தூய்மை யற்றது. இவ்விரண்டையும் ஒப்பிட்டால் இதிலும் அஞ்ஞானம் பிறி துண்டோ?
ஆத்துமா பிரகாசமுடையது. அதாவது சுயம்பிரகாச முடையது. சரீரமோ இயற்கையிலே இருள் மயமானது. இவ்விரண்டையு மொப்பிடலாமா?
யாரொருவன் தன்னைச் சரீரியென்று நினைக்கிருனே ஐயோ, அவனிலுங் கீழ்மகன் யார்?
யார் ஒருவன் தன்னுடைய சரீரமென்று சொல்லு , கிருனே அவன் மட்பிண்டத்தைத் தன்னுடையது என்று சொன்னது போலிருக்கும்.
யார் ஒருவன் தன்னைப் பூரணனென்றும், நித்தியன் என்றும், இயற்கை அறிவுடையவனென்றும் நினைக்கிருனே அவன் உண்மை யறிவாளி. அவனுக்கிணையாக ஒரு தெய் வமுமில்லை.

Page 187
366 நற்சிந்தனை
யார் ஒருவன் தன்னை ஓர் அழுக்கும் பற்றமாட்டா
தென்றும், மாறுபாடில்லாதவனென்றும், தூய்மையிலுத்
தூய்மை யென்றும் நினைக்கிருணுே அவனை அறிவாளிகள் ஞானி யென்று சொல்லுவார்கள்.
வேதம் ஆகமம் யாவும் இந்த உலகம் முழுவதுந் தெய்வமே நிறைந்திருக்கிற தென்றும் அதைவிட வேறு யாதுமில்லை யென்றும் முறையிட நாங்கள் எப்படி உலக மிருக்கிறது சரீர மிருக்கிறதென்று நினைக்கலாகும். அப்படி உலகஞ் சரீரம் வேருயிருக்கிறதென்றல் இதைவிடப் பழி பிறிதுண்டோ? ஆன்ருேரும் நின்னவார் பிறரன்றி நீயே ஆணுய்" என்று சொல்லி யிருக்கிருர்கள்.
இன்னேரன்ன பல காரணங்களாலுங் கடவுளைத் தவிர வேறென்றுமில்லை. யாவு மவன் செயல்.
சொல்லெல்லாம் மோனம் தொழிலாதியும் மோனம் எல்லாம் நன்மோன நிறைவே.
சிவபக்தி
சிவபக்தி மாத்திரந்தான் மனிதனைப் பாக்கியவானக் கும். மற்றையவனத்தும் பிரயோசனமற்றவை. ஆகை யால் இடைவிடாமற் சிவத்தியானம் பண்ணு. ஒன்றுக்கும் பயப்படாதே. வெற்றியுன் சொந்தம். எத்தனைமுறை தவ றினலுந் தைரியத்தைக் கைவிடாதே. தவறுதல் சடசம் பந்தமானது. நீயோ சித்துப்பொருள் (அதாவது அறிவுப் பொருள்). நீயொரு நாளும் அழிய மாட்டாய். எழுந் திரு! விழித்துக் கொள்! காரியங் கைகூடுமட்டும் வழி யிலே தங்கிவிடாதே! உற்சாகத்தோடு முன்னேறிச் செல். உனக்குச் சகல சத்தியுங் கட்டுப்படுவதைக் காண். வீண் வாத தர்க்கத்திலே நாளைப் போக்காதே. நீ எங்கே போகிருயோ அங்கே உன்னுடன் பகவான் வருவார்.
வெளிமாதிரி யொன்றுஞ் செய்யாதே. உனக்குள் நீ பெலத்துக்கொள். சமயமென்பது ஒரு மாதிரியுமற்ற தனித்த நிலை. உடல் பொருள் ஆவி மூன்றையும் பகவா னுக்கு ஒப்படை. அதன்பின் உன்னைப் பற்றிய காரியங் களைக் கைவிட்டுவிடு. அனைத்தும் அவனே பார்.

நற்சிந்தனை 367 தவம்
தவத்திலே மேம்பட்டவர்களைக்கூட இந்திரியங்கள் வரம்பு கடந்து இழுத்துச் செல்கின்றன. ஆதலால் அவற்றை வெல்வதற்குச் சிவத்தியானஞ் செய்க. அதனல் மாத்திரந் தான் புலன்களைத் தன்வசப்படுத்தத்தக்கது. ஆகவே இடை விடாமற் சிவத்தியான ஞ் செய். மனிதன் விடயங்களைக் கருதும் போதெல்லாம் பற்றுண்டாகிறது. பற்றுதலால் விருப்பம் உண்டாகிறது. விருப்பத்தாற் சினம் பிறக்கிறது. சினத்தால் மயக்கம். அம்மயக்கத்தால் தவறுதல் உண்டா கும். ஆதலால் உன்னைச் சிவத்தியானத்தால் காத்துக் கொள்.
நாங்கள் எங்கள் சிறுமைக் குணத்தினல் இயல்பழிந்து தரும வழியினின்று தவறுகிருேம். தவறுதல் நீங்கித் திட முண்டாகச் சிவத்தியானமே சிறந்த கருவியாகும். இந்த உலகத்தில் மிகுந்த செல்வமிருப்பினும், வானுேரை ஏவல் கொள்ளக்கூடிய வல்லமையிருப்பினும் நாங்கள் புலன்களை அடக்கியாளுதல் முடியாது. ஆதலால் திருவருளை முன்னிட்டு மனத்தைப் புலன்வழிச் செல்லாமல் அடக்கியாள். இது தான் தவமென்று பெரியோர் சொல்வர். அதைவிடுத்து இடம்பமான வேள்வி முதலியவை செய்வதால் திடமுண் டாக மாட்டாது.
நானே நீ
என்னுடைய இராச்சியத்தில் இராப்பகலில்லை; நன்மை தீமையில்லை; நீ நானில்லை; இன்றைக்கு நாளைக்கு இல்லை; பெரிது சிறிது இல்லை; நீயுமிந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டுமாகில், அங்கு முழுமனத்தோடு வெளியேறக் கடவை; புகையிரதம் வேண்டியதில்லை; மாட்டுவண்டி தேவையில்லை; பின் என்ன வேண்டுமாகில் வைராக்கிய மென்னும் புதுக்காத வண்டிலும், சாந்தம் என்னும் இரண்டு வெள்ளை எருதுகளும், மனப்பாக்கிய மென்னுஞ் சமையாத சாதமும், யாசகமென்னும் அங்கவஸ்திரமும், ஞானமென்னும் மூக்குக் கண்ணுடியும் எடுத்துக்கொண்டு பின் முன் நாடாமல் வரக்கடவை. அப்பொழுது நீ காண விருக்கும் காட்சிகளை என்னுற் சொல்ல முடியாது. கட வுளே சாட்சி.

Page 188
368 நற்சிந்தனை
866).T6th UTG).260T
தெய்வத்தை நம்பு, முழுமனத்தோடு நம்பு; உலகில் உனக்கினியதெனத் தோன்றும் எவற்றிலும் இனியதாக நினை. அதைவிட வேறில்லை என்று நினை. இருக்கும் போதும் நிற்கும்போதும், நடக்கும்போதும், கிடக்கும்போதும் நினை. உனது நரம்பிலும் தசையிலும் இரத்தத்திலுந் தெய்வ மென்னும் நினைவே நிறைவதாக. நானில்லை, கடவுளே இருக்கிருரென எண்ணு. கடவுளைக் கும்பிடுதலே வாழ்வின்' இலக்காக வைத்துக்கொள். எவன் எதை நினைக்கிருனே அவன் அதுவாகிறன். கடவுளை உனது உள்ளத்தில் வைத்து வளர்ப்பாயாக. எல்லாம் அவருடைய செயலாகுக. ஈற் றில் எல்லாம் அவனுகவே காணப்படும்.
சிவபெருமான் அத்துவிதமாக இருக்கிருர், அடியேன் அவரே எனத் தியானிக்கும் மகிமை எனக்குண்டு. ஒருவன் எப்படிப் பாவனை செய்கிருனே அவன் அப்படி ஆகிறன். ஆகையால் "நான் அவனே' என்று தியானஞ் செய். அப் போது உன் செய்கைகள் அனைத்தும் அவன் செய்கையே யாகும். அவனைத் தவிர வேறு பொருள் இல்லை. அவனே அனைத்தும். அப்படியான அவனே தன்னைப் பல கோலங் களாக்கி விளையாடுகிருன்,
அவனுக்குப் பிறப்பிறப்பில்லை. ஆதியந்தமில்லை. ஒரு மாறுதலுமில்லை. முழுதுமுண்மை.
ஓம் சாந்தி.

நற்சிந்தனை : 369
66.60TiguTf
நாங்கள் சிவனடியார்
ஆதியுமந்தமும், இறப்பும் பிறப்பும், இரவும் பகலும், சுகமுந் துக்கமும் எங்களுக் கில்லை யென்னும் திருமந்தி ரத்தை எவனெருவன் மறவாமல் தியானஞ் செய்கிருனே அவனுக்கு ஒரு குறையும் வராது.
எதை நீ பாவனை செய்கிறயோ அது நீ யாவாய்.
இதற்கெல்லாம் விடாமுயற்சி, அதாவது சலியாமை வேண்டும் .
பாடுபட அஞ்சுபவனுக்கு ஒரு பிரயோசனமு முண்டா காது; பாடின்றிப் பட்டங் கிடையா தென்பது உலக வழக்கு.
காரியசித்தி எய்தும் வரையும் விடாமுயற்சி செய். நீ ஏன் ஓயாமல் கெட்ட காரியங்களைச் சிந்திக்கிருய்? அச் சிந்தனையை விட்டு முழு மனத்தோடு தெய்வத்தை வணங்கு. உனக்கு விதிவசத்தாற் பொருந்துவனவற்றை உவகையோடு ஏற்று நடத்து. இறுதியில் யாவும் ஜெயமாகும்.
அது அப்படி யுள்ள காரியம் என்பதைச் சதா நெஞ் சிற் பதித்துக் கொண்டு இயல்பாய் உனக்கு வரும் வேலை களையுங் கடமைகளையுஞ் செய்து கொண்டிரு. அல்லது அவற்றை விட்டிரு. எதுவுஞ் சரியே.
செய்தலிலுஞ் செய்யாமையிலும் அது தங்கியிருக்க வில்லை. கருமம் இல்லாமையை விரும்பாதே. கருமத்தைப் பற்றதே. செய்தல் செய்யாமை இவற்றுள் இயல்பாய் எது உனக்கு அமைகின்றதோ அதையே பற்றி நில்.
24

Page 189
370 நற்சிந்தனை
இன்பவிறையே
ஒரு பிதா தனது குழந்தையினது மழலைமொழியைக் கேட்டு மகிழ்வானன்றிச் சிறிதுமிகழமாட்டான்.
அவ்வண்ணமே, தேவரீர் அடியேனுடைய விண்ணப் பத்தைக் கேட்டருள்வீராக. இவ்வுலகத்திலே எத்தனையோ சாதிகளுண்டு. அவைகளின் பழக்கவழக்கங்கள் ஒன்ருே டொன் ருெவ்வாது முரண்படுகின்றன. ஒவ்வொரு சாதி யுந் தத்தம் பழக்க வழக்கங்களே மேம்பாடுடைத்த தெனக் கூக்குரலிடுகின்றது. சமயங்களுமப்படியே. இவைகள் யாவும் உலகத்தின் சிறப்புக்களேயன்றி வேறல்ல. இந்த வித்தியாசமான போராட்டங்களெல்லாம் முன்னு முள் ளன. நூதனமான காரியங்களல்ல. இவைதாம் இந்தப் பிரகிருதியின் தோற்றங்கள். இவை வேறு தான் வேறு என்றறிந்த அறிவாளி இவைகளுடன் கூடியுங் கூடாது மிருப்பன். எத்தனையோ முறைகளில் பெரிய பெரிய அவ தாரங்கள் வந்து எவ்வளவோ வேலைகளைச் செய்தும் மீட் டும் இந்த உலகம் அப்படியே யிருக்கின்றது. இது ஒரு பெரிய இரகசியம்.
தேவரீர் இவைகள் எல்லாம் நன்கறிவீர். நானென் றுமறியேன். என்னை மன்னித்துக் கொள்ளும்.
pamahagið
ஆண்டவனை யன்றி வேருெரு பொருளுமில்லை. அனைத் தும் அவன்செயல். உனது சுமைமுழுவதையுந் திருவடிக் கீழ் இறக்கி வைத்து இளைப்பாறு. கவலைக்கிடங்கொடாதே. நான் செய்தேன், அவன்செய்தானென்று நலியாதே. விழித்திரு.

நற்சிந்தனை " , 371 ·
சுகவாழ்வு
கடவுளை மனம் வாக்குக் காயத்தாலே காலை, உச்சி, மாலை என்னும் மூன்று காலத்திலும் வழிபடுதல் வேண் டும்.
சரீரத்தையும் மனத்தையும் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சரீரத்திலாவது மனத்திலாவது ஏதுங் குழப்படி ஆரம் பிக்கும்போது அந்த கூடிணமே சாப்பாட்டை நிறுத்தி, ஆலய வழிபாடு, அடியார் வழிபாடு, அல்லது இயன்ற தானதருமங்கள் செய்யவேண்டும். w வரவுக்கேற்ற செலவு செய்யவேண்டும்.
தனிமையாக இருந்து கொண்டு அல்லது நடந்து கொண்டு, தன் வாழ்நாளை நடாத்தும் வகையைச் சிந் திக்கவேண்டும்.
மிஞ்சிய போகத்திலாவது, போசனத்திலாவது, வைத் திருக்கு மாசையை அடியோடு தவிர்க்கவேண்டும்.
இறைச்சி மீன் குடி முதலியவைகளை விடவேண்டும்.
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புள்ளவனுக இருக்க வேண்டும். م s
தான் மிகவும் பரிசுத்தன் என்றுந் தனக்கு ஒரு குறை வில்லை யென்றும் அமைதியாகச் சிந்தித்தல் வேண்டும்.
மேலே சொல்லிய வண்ணம் இவ்வாறு ஒருவன் சாதித் துப் போதித்து வருவானுயின், யோகமும், ஞானமும், சர்வசித்தியும் ஈற்றில் முத்தியும் லபிக்கும்.

Page 190

US6 III
திருமுகங்கள்

Page 191
374 . . . நற்சிந்தனை
நான் யார்
நீ உடம்பன்று, மணமன்று, புத்தியன்று, சித்த மன்று, நீ ஆத்மா.
ஆத்மா ஒரு நாளும் அழியாது. இது மகான்க ளுடைய அநுபவ சித்தாந்தம். இந்த, உண்மை உனது உள்ளத்தில் நன்ருய்ப் பதியக் கடவது.
ஆனல் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு, அதா வது தருமநெறியிற் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் திருமுன்னிலை என்று சாதனை செய். கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளவர்.
இப்படிக்கு அவனே நானே.
~~
ஓம் தத் சத் ,
கொல்லம், ஆணி 17, 1938
அகமுக மாகு. அப்போதே ஆனந்தமுண்டாம்.
எதனல் கண் காணுகிறது? எதனுல் காது கேட்கின்றது? எதனல் மூக்கு முகருகின்றது? எதனுல் வாய் பேசு கின்றது? அதுதான் ஆத்துமா அல்லது கடவுள். எவ் வளவு சுலபமான வழி! நினைத்துப் பார். அனைத்துமுன் கைவசம். ஒரு கணம் நீ ஊன்றி யோசிப்பாயானல், நீ அதுவென உனக்கு நன்கு புலணுகும். உன்னுள்ளே தெய் வீகத்தன்மையை உணர். நீயே உனக்குத் தலைவன். நீயே உன்னை நடத்துபவன். நீயே உலகத்துக் கேகசக்கராதிபதி. இந்தத் தூய எண்ணத்தை மறந்தால் இறப்புப் பிறப் பாகிய சமுத்திரத்திற் கிடந்து திக்குமுக்குப்படுவாய்.
எழுந்திரு, விழித்துக்கொள். உன்னை இனி ஒன்றும் வெற்றியெடுக்க முடியாது. விளக்கு எரியவேண்டுமாயின் திரியும் எண்ணெயும் வேண்டும். நீ பிரகாசமடைய வேண்டினல் ஓயாமல் ஒம் தத் சத் என உணர்ச்சியோடு (அதாவது உயிரை எழுப்பி) பிரார்த்தனைசெய். சீக்கிரம் புத்தகத்தை முடி. h−
 

நற்சிந்தனை ‘ - 375 உத்தம இரகசியம்
நாங்களெல்லாம் ஒரே சமயத்தையும் ஒரே சாதியை யும் சார்ந்தவர்கள்; எங்களுக்குள் ஒருமாறுதலும் இல்லை. நாங்கள் பரிசுத்தரும், தெய்வத்துவத்துள் வைக்கப்பட்ட வர்களாகவும் இருக்கின்ருேம். வித்தியாசம் வித்தியாச மான மாறுதல்கள் யாவும் உண்மைச் சுபாவத்தின் சிறப் புக்களாக இருக்கின்றன. இவைகளை மாயை எனப் பெரி யோர் சொல்வர், ஒழுக்கத்தினுல் வசீகரப்படுத்தப்பட் டோர்க்கன்றி மற்றையோர்க்கு இவ்வுண்மை புலப்படாது. அதுபற்றியே தன்னுயிர்போல் மன்னுயிர் யாவையும் நேசித்தல் வேண்டுமென்று மகத்துக்களால் திரும்பத் திரும்ப வற்புறுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால் யாவும் ஒழுக்கத்திலேயே தங்கியிருக்கின்றன. இவ் வொழுக்கவழியில் நின்று எல்லாம் நாம் என்று பாவனை செய்து வரவர அற்புதமான அநுபவங்கள் மூலமாக நாங்கள் சடப்பொருள் அல்ல, சித்துப் பொருளென்று தெளியலாகும்.
அஞ்சேல்
14-11-33
'அஞ்சுவ தியாதொன்றுமில்லை, அஞ்ச வருவதியா தொன்றுமில்லையென்னு மான்றேர் மெய்ம்மொழி நம்மைப் பிறப்பிறப்பாகிய கடலைக் கடப்பிக்குந் தெப்பம்". இதைத் துணையாகக் கொண்ட வெமக்கென்னகுறை? ஆதலால் நிறைந்த மனத்துடன் இந்தப் பெரும் பிரயாணத்தைச் செய்வோமாக.
'அகர வுயிர்போ லறிவாகி யெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து'
இப்படிக்கு என்றும் மறவாதவன்.

Page 192
376 நற்சிந்தனை
காசியிலிருந்து எழுதிய கடிதம்
தேடித்திரிந்து காசிக்கு வந்து கண்டேன் விசுவநாதனை என்னுள். வாடித்திரிந்து வருந்த வேண்டாம். தேடிய பூடு காலுக்குள்ளே என்ற தெவிட்டா வாசக மொன் றுண்டு. இவ்விடத்திலும் மனிதர்களெல்லாம் எங்களைப் போலே தானிருக்கிறர்கள், நூதனமான காரணமொன் றும் பூதலமீதிலில்லவே இல்லை. இருந்த இருக்கிற இருக் கும் யாழ்ப்பாணத்தா ரெல்லாருக்குமாகக் கருமாதிகளெல் லாஞ் செய்து முடிந்து விட்டன. இனிமே லுங்களுக் கியைந்தபடி அன்பாக உலகில் நடந்து ஆண்டவன் அடிக்
கீழ் அமர்ந்து வாழ்க.
30- 1 - 40
Gl Glouubub
இதோபார். நான் உனக்கு மிகவும் அணித்தாயிருக் கிறேன். என்னைக் காண்கிருயா? நல்ல கூர்மையாய்ப் பார், உள்ளேயிருக்கிறேன். இன்னுந் தெளிவாய்ச் சொல் லில் நான் நீயாயிருக்கிறேன். பின் நீயேன் என்னை உனக்கு வேருய் நினைக்கிருய்?
நீயொரு கெட்டிக்காரனல்லவா? உனக்கு என்ன குறை? ஒரு குறைவுமில்லையல்லவா? உனது கடமையை நீ நல்லாய்ச் செய். யாவரிடத்தும் அன்பாயிரு. அதா வது உன்னைப்போல எவரையும் பார். பின்னல் வருவன வற்றைப் பாடம் பண்ணு.
'அரும்பிய கொன்றை அணிந்த சென்னியன்
ஆறும் பிறையும் சூடிய அழகன் இறையவன் மறையவன் ஏழுல காளி ஈசன் மழுப்படை தாங்கிய கையன் உம்பர் தலைவன் உயர்கை லாயனே'.
-ஈசுரமாலே ஒளவையார்.

நற்சிந்தனை 377.
β) - சிவமயம்
பகைத்தலும் விரும்புதலும் இல்லாதவன் சந்நியாசி யாயினுஞ் சரி, இல்லறத்தானுயினுஞ் சரி, அவனே பரம புருடன். அதாவது அவன் சீவன் முத்தனென்று பெரி யோர் சொல்லுகிருர்கள். இயற்கையோடு அளவளாவி வாழுதல்தான் பேரின்பம். அது ஒரு மாதிரியல்ல; உண்மை உணர்ச்சி. தனக்குத் தான் உண்மையாக விருந்தால் யாவும் விளங்கும். தன்னைப்போல மற்றவர்களையும் நேசித் தலே ‘தவம்'. அதுவே அறம்.
எங்குஞ் சிவம்
.ெ
சிவமயம்
யாவும் நமது ஊர். யாவரும் நமது கேளிர். நன்மை தீமை நாம்தர வருவன. பிறராலன்று. பிறர் காய்ந்த வழிக் காய்கிலம்; உவந்தவழி உவக்கிலம். யாவும் திரு வருளென்பது நன்கு அறிவேம். நம்மைச் சூழவரவிருக் கும் மலைகள் திருமாலைப்போல் பச்சைப் பசேலெனக் காணப்படுகின்றன. இரைந்து விரைந்து செல்லு மருவி களின் இனிய சத்தம் திருமாலின் கரத்திலிருந்து இடை விடாது ஒலித்துக்கொண்டிருக்கும் பாஞ்ச சன்னியத்தை ஒத்தன. சந்திரனுஞ் சூரியனு மிருபாரிக ளிருபக்கத்தும் விளங்குவதுபோல் விளங்குகின்றன. மரக்கொம்பரிலிருந்து தீங்குரலாற் பாடும் பட்சிகள் அக் கண்ணன் புல்லாங் குழல் பாடுவதை ஒத்திருக்கின்றன. தேயிலை கொய்யும் மகளிர் திருமாலின் இனிய பத்தரான கோபிகாஸ்திரீகளை நேர்வர். இவ்விடத்துக் கறங்கும் முரசம் துரியோதன னுடனே போருக்குச் சென்ற பஞ்சபாண்டவரின் தேரின் மீது அடிக்கப்படும் பேரிகையை இசைந்தது. எப்படித். திருமால் சகல வளங்களுடனுந் துவாரகையில் விளங்கி ஞனே அப்படியே இம்மலை இவ்விடத்து மிளிர்கின்றது. கண்ணனுடைய விருந்தினராக நாம் இவணிருக்கிறேம். ஒன்று கூறுதும். உவந்து கேட்குதி. நன்று தீதென நாட் கழிந்தன. என்று காணுவல் என்ற எண்ணமே இன்றும் எம்மை இசைந்து வாட்டிற்று.
என்றும் மறவாதவன். 17-3-32

Page 193
378 u நற்சிந்தனை
சிவமயம்
சொல்வதை மிகவும் கவனமாகக்கேள். நீ யார்? உடம்பா? மனமா? அன்றிக் கண், காது, வாய் மூக்கு முதலிய அவயவங்களா? இல்லை. ஏன்? எனது உடம்பு எனது கையென்று சொல்லுகிறதனுல் நான் உடம்பை விட வேறு பொருளல்லவா? ஆம்? பின்னை நான் எப் படிப்பட்டவன்? அழிவில்லாதவன். ஆகையால் எனக்குப் பயம் முதலியன விரலாமா? இல்லை. ஆனல், சரீர மன தர்மத்தையொட்டிப் பாவத்திற்குப் பயப்பட வேண்டும். புண்ணியத்தைச் செய்யவேண்டும். புத்திமான்கள் இப்படி நினைந்தும், செய்தும் பேரின்பத்திற்கு இம்மையிலும் மறு மையிலும் பாத்திரமுள்ளோராகின்றனர். நிலம், காற்று, தண்ணிர், நெருப்பு, வானம் இவைகளா லாக்கப்பட்ட வீட்டில் பகவான் வசிக்கிருர். ஆனபடியால், வீட்டைச் சுத்தமாயும், மனத்தைச் சுத்தமாயும் வைத்து அமைதி யாய் நட.
என்றும் மறவாதவன்.
842ے 18 سے87
6.
Soul Duth
உனக்குச் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. நாங்க ளெல்லாம் தேவ சந்நிதானத்தில் இருக்கிருேம். இது ஒரு பெரும் சத்தியம். யாவும் இருந்தபடியே நடந்து வருகின் றது. கிலேசமோ, அன்போ, பகையோ, இவையாவும் பகவானுடைய விளையாட்டு. இவை என்றும் இப்படியே. நாமும் அப்படியே. பிறப்பைப் போல இறப்பு. புகழைப் போல இகழ். நன்மையைப்போலத் தீமை. முழுதும் உண்மை. முன்னிலை இன்றித் தன்னிலையில் யாவும். இயங் காமல் இயங்கு. முடிவைக் காணுேம். அதுதான்
சுற்றிச் சுற்றிச் சுப்பருடைய கொல்லை.
என்றும் மறவாதவன்

நற்சிந்தனை 379
வ. &laյւՃամ)
நான், நீ, ஐயா, அம்மா, அண்ணர், அக்காமார், அத்தை, அப்பாச்சி, பெரியையா, சீனியையா, சின்னையா, கந்தசாமி, கணபதி, வைரவர், வீரபத்திரர், காளி, கூளி, கிருஷ்ணன், கிறிஸ்து, புத்தன், முகம்மது, இராச ரத்தின மாமா, சோமா மாமா, செல்லத்துரை மாமா, கன்று, பசு, ஆடு, குதிரை, சந்திரன், சூரியன், நட்சத் திரங்கள், மேடம். இடபம், மிதுனங் கர்க்கடகம், சிங் கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம், ஊர்வன, பறப்பன, கிடப்பன, நடப்பன, மலை, கடல், வாவி, குளம், கொடி, செடி என்று அளவிடக் கூடாமல் விரிந்து நிற்கிற ஒன்றுதான் கடவுள். இதை விட வேறில்லை யென்று தியானிக்கிறவன்தான் உண்மை யான பக்தனென்று சொல்லப்படுகிருன். இவனுக்கு இந்த உலகில் வெறுப்பானவர்களும் பிரியமானவர்களுமில்லை.
என்றும் பிறவாதவன்
60 -. சிவமயம்
வருடப்பிறப்பாய் விட்டது. நீங்கள் நல்ல பலகார வகைகள் செய்வீர்கள். பட்டுவேட்டி கட்டுவீர்கள். வீடு வெள்ளையடிப்பீர்கள். கோவிலுக்குப் போவீர்கள். சுவா மிக்கு நைவேத்தியமயிடேகம் முதலியவைகள் செய்விப்பீர் கள். நானே சாந்தமென்னும் புனலாடிப் பொறுமை என் கிற உத்தரீயம் பூண்டு வறுமையென்று சொல்லப்படுங் குருவின் போதனை கேட்டு மாசற்ற மனத்தைத் தரும் வெண்ணிறனிந்து, வேண்டாமையென்னும் விழுச் செல் வத்தையே மேலும் மேலும் தருமாறு பணிந்து அஞ் சாமை யென்கின்ற கேடகத்தை யுடையவனுய்ச் சுப்பிர மணிய சுவாமியினுடைய நெஞ்சிலே மிதித்து விளையாடு வேன்.
என்றும் மறவாதவன்
Η Α.- 4- 32

Page 194
380 நற்சிந்தனை
டெ சிவமயம்
பார். எல்லாம் சிவமயமாய் இருக்கின்றன. அப்போது நீ யார்? நான் யார்? ஐயா யார்? மற்றும் எல்லாம் என்ன? சிவமல்லவா? இன்னுஞ் சந்தேகமா? பயமா? பார். நான் உன்னுடனும் நீ என்னுடனும், எல்லாம் ஒன்ருகவும், ஒன்று எல்லாமாகவும் ஒருவிதமான மாறு தலும் அடையாமல் இருந்தபடியே இருக்கின்றது. எழுந் திரு. வரவரப் படி.
காலமில்லை. சுகம். சுகம். சுகம்.
பிறவாதவனிறவாதவன்
шаважами
, 29-5-33 இயாழ்ப்பாணம்
உலகமு முயிரு மாகியு மாகா அலகில் சோதி யடிமலர் பரவி ஒன்று சொற்றுது முவந்து கேண்மதி என்றும் நாங்க ளெல்லாஞ் சிவன்செயல் ஒன்றுக்கு மஞ்சேல் ஒருவனே தெய்வம் நன்று தீதென நாடிநீ கவலலை இன்று தொட்டுப் பணமெனக் கனுப்பாதே தொன்று தொட்டுப் பணந்தொல்லை யென்பர் முன்னும் பின்னு மெண்ணிமலை யாதே உன்னுள்ளு மென்னுள்ளு மிருப்ப தொன்றே சொன்ன வாசகஞ் சித்த சுத்தியைத்தரும் ஒன்னலர் தம்மை யுவந்துகொள் என்ன புதுமை யீண்டுண் டெனவறி.
ஒருநாளுமறவா யோகசுவாமி

நற்சிந்தனை " 881
.ெ சிவமயம்
நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றுண்டு. நீங் கள் உங்கள் கடமையை வழுவாது செய்யுங்கள். உங்க ளுக்குப் பகவான் நல்லருள்புரிவார்.
எல்லாருக்கும் என் அன்பார்ந்த வணக்கத்தைச் செய் கிறேன். ... । ‘’
இப்படிக்கு அவனே தானே
"செய்வன திருந்தச்செய்
மூத்தோர் வார்த்தை அமிர்தம்'.

Page 195
நாம் கடவுளை உள்ளத்தில் வளர்க்கிருேம். நாம் அவருடைய தாய். நமக்கு மவருக்குமொரு குறைவுமில்லை. நம்மை அவர் பிரிய முடியாது.
முழுதும் உண்மை.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!

v
Jfr "G8 அஃகமுங் காசும் அதிகம் அஃகமுங் காசும் தேடி அலேந்து நான். அஃகமுங் காசுஞ் சிக்கென அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடெனும் அஃகமும் காசுக் தேடி அம்புவியில் அஃகமுங் காசுக்தேடி அலையும் அஃகமும காசுக் தேடிடில் Q b (y அஃகமுங் காசுந்தேடி யலையாமல் அஃகா மனத்தா அஃகுதலில்லா அறிவினை Y. அஃகுதலில்லா அறிவுடைய அன்பரகம் . அஃகுதலில்லா அறிவுடைய பெரியோர் . அஃதை யறிவோ அகண்ட வெளியிலே அகந் தூய்மை அகம் பிரமாஸ்மியென்று அகம் பீரமாஸ்மியென்னும் அகரத்திலுகர மகர st அகரத்தில் உகரமும் o Y அகரமாம் எழுத்துப்போல அகரமுதல் எழுத்தெலாம் அகல நீளங் sh அகலிடத்தாசான் அகலிகை கல்லானுள் அக்கினறுமாலை அக்கக்காவடி அக்கு மனிதனைக் அங்கிங் கல்யாதே அங்கிங் கென்றெண்ணுதே அங்கிங் கெனுதபடி ஆனந்தமாய் அங்கிங் கெனுதபடி யெங்குஞ் es a அங்கிங் கெனுமல் அங்கிங் கெனுமலெங்குமான அங்கும் இங்கும் எங்கும் நான் 峰姆曾 அங்குமிங்குமாக அங்குமிங்கு மெங்கும் ஓடாதே A அங்குமிங்கு மெங்கும் திருக்கூத்து . அங்குமிங்கு மெங்குமந்த அங்கு மிங்கு மோடி அங்கையிலே பூவெடுத்து அங்கையிற் போது அச்சம் தீர்த்து அச்சமும் கோபமும் அச்சமொடு கோபத்தை
பக்கம் 343 56 288 314 243 187 115 289 157 225 303 185 16S 214 17 264 280 156 209 57 258 166 209 102 05 33 313 254 242 280 55 105 164 265 129 249 95 223 121
85 214
25 196
6. பாட்டு முதற்குறிப் பகராதி
அ
us0 அச்ச மொழியும் அஞ்சடுக்குத் தீபமுதல் அஞ்சின் வழியை அஞ்சும் மூன்றும் அஞ்சுகங்காள் அஞ்சுபூதம் யேல்ல அஞ்சு மடக்கு
அஞ்செழுத்தாலே அனைத்தும்
அஞ்செழுத்தாலே ஆக்கை அஞ்செழுத்தாலே சஞ்சல அஞ்செழுத்தாலே அரனடி அஞ்செழுத்தின அஞ்செழுத்துப் அஞ்செழுத்துள்ளே அனைத்தையுங் அஞ்செழுத்துள்ளே அஞ்செழுத்தை நெஞ்சில் அஞ்செழுத்தை வழுத்திடேன் அஞ்சென ஆறென அஞ்ஞான் விருளை அடிக்கடி மிடியால் அடிக்கீழ் அரக்கன்
spp. uu fi g LS 6TTàs asubsoġ5(8gb அடியார்க் கடியானென்று அடியவர் பாதத் தன்பு செய்திடில் அடியவர் மனத்தை அடியா ருள்ளத்தே அடுக்குமோவின அடைக்கல மடைக்கல மரனே அட்டவசுக்களும் அட்டாங்க யோகம் அவத்தை அட்டாங்க யோகத்திற்கும் அட்டாங்க யோகமெலாம் அட்டாங்க யோகமெல்லாம் அட்டாங்க யோகம் விட்டேன் அட்டாங்கயோக மறிந்து அணங்கு தந்தெமை அனேக்து வந்து அண்டசராசரம் அவன் அண்டசரா சரமவன் வடிவாகும் sı6örlerger a0 GLDü6)Tû அண்டமும் பிண்டமும் அகத்திற் அண்டமும் பிண்டமும் ஒன்ருே அண்டமும் பிண்ட மடங்கலு அண்ட பிண்ட மனத்தும்
பக்கம் . 133
214
始
多
6
134 94 102
26 . 213 23 23 10 151. 44 112 186 137 2O7 177 159 234 301
272 40 33 281 328 35 286 316 341
155 67 226 323 26 212 18 214 13 169 276

Page 196
பாட்டு
அண்ட பிண்ட மெல்லாம் அண்ட பிண்ட மெல்லா மடக்கி அண்டர் முனிவர் கரர் அண்ணன் மாரே அதுங்ானென்னு அதுவிது வென்றவன் அத்த சாமப் பூசைக்கு அத்துவா மார்க்கமாறும் அத்துவிதப் பொருள் அத்துவிதப் பொருளை அருந்தவர்கட் அத்துவிதப் பொருளை அறிவுக் அநுதினம் சாதனை அந்தக் கரண நாமல்ல அந்தம் ஆதி
அந்தமும் ஆதியும் அகன்றேன் வருக .
அந்தமும் ஆதியும் அறியொன அந்தமும் ஆதியும் இல்லான் அந்தமும் ஆதியு மில்லா அந்தமு மாதியு மில்லா ஒருவனே அந்த வாக்கும்
அந்த விதமே அக்தி சந்தி உன் அடியை அந்தி சந்தியும் சிந்திக்கு அந்தியுஞ் சந்தியும் அன்பினி அக்தியுஞ் சந்தியும் ஆசான் அந்தியுஞ் சந்தியும் இதனே அந்தியுஞ் சந்தியும் நீ அப்படி யுள்ள தென் அப்படியே உள்ள தென்பான் அங்கு அப்படியே உள்ள தென்பான் ஆசான்
su
es ve
·4· ·
அப்படியே உள்ள தென்பான் ஆரறிவார்
அப்டடியே அப்படியே அப்படியே அப்படியே அப்படியே
உள்ள தென்றன் உள்ள தென்று உள்ள தென அடிக்கடி
உள்ளதென அன்றசான் அப்படியே உள்ளதெனச் சொல்லி அப்படியே யுள்ளதென அத்து அப்படி யுள்ளதென்று அன்பாக அப்படியே உள்ள பொருளெடா அப்பர்க்கு சமணர் செய் அப்பர் சுநதரா அப்பனுக்கும் அம்மைக்கும் அப்பனும் அம்மையும் அப்பனும் அம்மையுஞ் சிவமே அப்பனே ஆகுயிரே
a as
oe
a.
உள்ளதென அடிக்கடியே
. . .
På asb
162 63 286 55 16 204
56 351 238 280 274 282 306
34
14 I87 100 88 252 304 199 159 301 240 280 292 248 312 248 276 163 270 288 86 283 329 320 305 283 38 352 47
352
130
i
i
பாட்டு
அப்பா பரமசிவம் அம்மையப்பன் அம்மை யப்பனரிய அம்மையு மப்பனுமாய் அம்மையப்பன
அயலறியா
அயலறியாத அயலுனக்கில்லே அயணு மரியும் அரகர சிவசிவ அாகரவென்று அரவரைக் கசைத்த அரவார் செஞ்சடை அரவுசேர் பேணியெம் அரற்று மன்பர்க்கு அரனு முமையு அரியதி லரியது ஆன்மா வதுதான் அரியதி லரியது ஆன்மா அரியயனுந்தேடி அரியும் பிரமாவும் அருந்தவர்தம் அருந்தவர் கெஞ்சிலிருக்கும் அருந்தவர் கெஞ்சில் ருசிக்குங் அருமருந் தொரு ჰotტნისტყ) ტყიტნllტყ) அருவமு முருவமு மானுன் அருவாகி நின்றவன் அருவாவுருவா அருவா யுருவாகி அருவென்றும் உருவென்றும் அருளா லறிந்தேன் அருளொளிக்குள்ளே அருள்நீ தாதாவே அலகிலாச் சோதியை அலகில் உயிர்களை அலங்காரமாக அலேயும் மனத்தை அல்லலற்று வாழ வழி அல்லலெல்லாம் நீக்கி அல்லும் எல்லியும் இறைவன் அல்லும் பகலும் அறிவாக அல்லும பகலும் அப்பன் அல்லும் பகலும் அறிவாகி அல்லும் பகலுமற அவமானப் படுவதில் அவனருளாலே
பக்கம்
350 307 203 49 32 217 208 284 39 306 39 178 226 1 C6 216 103 35 295 128 302 283 214 132
214 336 108 100 280 209 299
274 106
26 278 C4
65 121 272 287 294
44 190
77 282

t_jRL".(B -
அவனவ ளதுவெனு - 。 அவனன்றி யணுவும் அசைய
அவனன்றி ஓரணுவும் அவனி வனுரென் அவனிவ னென்றதை அவனன்றி யொன்றும் அs னன்றி யோரணுவுமசை அவனே நானென்று அவைக் கஞ்சா அழகாரரியும் அழகாருமமயுலியும் அழல்சேர் கையு அளந்தேன் அருளால் அளவிலா மதங்தொறு அளவிலா வொன்றே அளவில் மதங்தோறும் அளவுக்காகாரம் அளவுக்குப் போசனத்தை அரஞ்செய விரும்னெ அறஞ்செய்வார் தங்களகமே அறத்தோடு பூசை அறமே யாற்றுதும் தினமே அறம்புரி வோர்கள் திறம் அறம் பொருள் இன்பமும் அறவாழி அந்தணன் அறவோ ரெனப்படுவார் அறி சதி யறிவிகுலே அறிவறி யாமை
அறிவுக கறிவாகி யப்பாற்கப்பாலா .
அறிவுககறி வாகிகின்றப் அறிவுக்கறி வாகியங்கு அறிவுக்கறிவாக் யப்பாலுக் அறிவுக்கறிவாகி யப்பாற் அறிவுடையார் எல்லா அறியும் பொருளும் அறுபதும் காலுமறியா அறையும் மறை அனங்கணுகத்தை அனைத்து மவனே அவன்செயலே அனைத்தும் ஒன்றாய் அ*னத்தும் சிவன அனைத்தும சிவன் செயல் அனைத்து யிரும்நீயே அ*ன வருக்கும தெய்வம் அனைவரும் ஒன்ருய்
25
iii
பக்கம்
170 170 280 120 77 234 55 257 198 227 106 179 203 170 328 106
58. 238 347 101 170 179 106 109 1)2 133
61 161
51 100 193
104 106 214 198 227 343
55
36
61 243 284 323
uT"(B பக்கம்
அன்பரன்பது சிவசிவசிவ 348 அன்பருடன் கூடி நீ ..., 319. அன்பர் தம் சிந்தை 233 அன்பர் பணி 21 அன்பர் பணிந் தேத்தி நிற்கும் 290 அன்பிலா ரோடுறவு ... 345 அன்பில்லேன் இரக்கமில்லேன் 149 அன்பிலேன் பொறுமையிலேன் ..., 148 அன்பிற் கரைந்துருகி 188 அன்பிற் குழைந்து 304 அன்பினுற் பணி ... 271 அன்பினுருகி 191 அன்பு சிவமெனல் --- 7 அன்பு சிவமென் 33 ۔۔۔ அன்பு சிவமென்ற ஆன்றேர் ... 294 அன்புடனே ஐந்தெழுத்தை ... 94 அன்புடையோர் 107 அன்பு நெறியும் ... 64 அன்பே கடவுள் ... 26 அேைப சிவ ரி கக் 114. அன்பே சிவமென அறிவார் ... 97 அ* பே சிவமென * ... 23 அன்பே சிவமெனு ... 118 அன்பே சிவமெனற 289 அன்பேசிவம் அறிந்திடடா 247 அன்பே சிவமென்று கிளியே ... 345 அன்பே சிவமென் றறைந்த 170 அன்பேயுருவாய் ... 93 அன்பே வடிவாய் 228 அன்று மின்று 225 அன்னத்தோடாடை 106 அன்னே தந்தை சுற்றம் ... 185 அன்னை தந்தை சுற்றத்தை ... 344 அன்னை தந்தையர் ... 150 அன்னை பிதாக் குருவாய் 20 அன்னை பிதாக் குருவாகி 29 அ*னை பிதாக் குருவானுன் 241 அன்னை பிதாக் குருவானுன் எங்கள் . 277 அன்னை பிதா குரு ... 296 அன்னை பிதாக் குருவாகி அடியேனே . 270 அன்னை பிதாக் குரு தெய்வம் 38 அன்னை பிதாக் குருவாகிய 214 ..ه அன்னையாவது சிவசிவசிவ ... 348 அன்னையும் பிதாவும் 314

Page 197
LTG ஆக்கி னுனெ?ன ஆக்கை கிலேபல்ல శిరీ60 tడి ஆக்கை நிலையில்லே ஆக்கை நீ பல்லே ஆக்கையே கோயில் அகஞ்சிவ ஆக்கையே கோயில் அகமே ஆக்கையே கோயிலாக ஆங்காரம் போச்சுது ஆசா?னக் கண்டேன் ஆசான் லுருளால் ஆசான் அருளால் அகந்தை ஆசான் மலரடி ஆசுகவி மதுரகவி ஆசைக் கடலில் அலைந்து ஆசை கிகளத்தினை
ஆசைடாம் ஆசையை விட்டிடடி ஆசைேைலயிற் சிக்கி ஆச்சு தென்று ஆடம்பர மெல்லாம் ஆட வெடுத்த
bę. Nuo T (o: FrgisT UT ஆபொம் ப7ரிங் ஆடுபாப் பணிந் ஆரியாம் பணிந்தாடுவான ஆடுபாம்பே ஆகி மயிலே ஆடுவர் பாரிவர் ஆனில் பெண்ணும் ஆணு ^ாய்ப் பெண்ணுமாகி
ஆணும் பெண்ணும் அலியும் ஆணும் பெண்ணும் ஆனவனே ஆண்டவன் திருவடி ஆதார வாதேய ஆதாரக்தாலே ஆதாரத்தால் ஆதார மாறு க ஆகார மாறும் அகன்ற ஆதாரமாறும் அவத்தையோ ஆதார வாதேய முழுது ஆதாரம் ஆறும்விட்டுப் ஆதார வாதேய மாணவப் ஆதியந்த ம ன்மாவுக் ஆதியந்த மில்லாத ஆன்மா ஆதியந்த மில்லாத நாடெங்கள் ஆதியந்த மில்ல
OO
ν
293
ويت
udäöd uT (R பக்கம் 54 ஆதியந்தமும் அற்றவன் 271 342 ஆகியங்தம் இல்லையென்று 80 303 ஆதியந்த மில்லையென்றன் 3 171 ஆதிபந்தம் உங்கட்கில்லேப் 269 56 ஆதியு மந்தமூ ம ன்மாவுக்கில்லை 343 225 ஆதியு மந்தமு மில்லா 111 185 ஆதியு மந்தமுமில்லான் 240 140 ஆகியு மருதமு மில்ல நமக்கு 196 113 ஆதியந்தமில்லா அப்பனு 353 221 ஆதியு மில்லே 9 208 ஆதியும அந்தமும் அானுர்க்க 299 299 ஆதியும் அந்தமும் இல்லா ... 26 ஆகியும் அக்தமும நமக்கிலே ... 250
152 ஆமைபோல வைந்து 170 219 ஆயிரங் திருநாம * ... 142 108 ஆயுகான் ... 65 - 164 ஆாகத்தினும 54 280 ஆரடா நீ யென்றே 282 242 ஆாறிபவ ரென்ன 39 ܚܚܗ 153 ஆாறிவாரென அடிககடி சொல்லுவான். 239 223 ஆாறிவாரென அடிக்கடி ஒதும் 210 128 ஆரறிவாரென அன்று 52 279 ஆரறிவாரென்ற அருமைத் 187 199 ஆரறிவாரென்ற ஆசான் ... 293 14 ஆரறிவா ரென்று சொல்லிக் • • • 82 347 ஆாறிவா ரென்று சொல்லும் ... 308 266 ஆரறிவா சென்றுன்னுமரிய ... 321 60 ஆாறிவா ரென்றெனக 288 25 ஆரறிவா ரென்றே ... 219 208 ஆரறிவா ரென்ன • .163 م 57 ஆரறிவார் என்றப்பன் 232 --مه 251 ஆாறிவார் என்று முன்னுள் 186 233 ஆரறிவார் என்னும் ... 289 . 268 ஆராயும் வேதமுதல் ... 302 293 ஆராயும் வேதம் அறியாத ... 33 44 ஆராய்ந்து நற்கருமம் ... 107 204 ஆராய்ந்து பார்த்தாலறிவே 171 141 ஆராரென்ன வறைந்த ... 171 304 ஆருமறியாமல் ... 129 113 ஆாமறியா ரெனவே ... 336 156 ஆருமறியா ரென்று ... 80 269 ஆருயிர்கள் தோறு ... 93 168 ஆருயிர் தோறு ... 100 114 ஆரையனே . 46 294 ஆரோடும் பகையாதே 345 21 ஆர் கொடுக்க . 329 220 ஆர்க்குங் கடல்சூழ்ந்த 207 ماهه

LJTUG ஆர்க்கும் சுதந்திரத்தை ஆலயக் தொழுவது ஆவதில்லா அழிவதில்லா ஆவது அழிவதுதான் ஆவதும் அழிவதும் இல்லே ஆவதும் அழிவது அறியா ஆவதும் இல்ல ஆவதும் இல்லையடி ஆவதொன்று மறிகில்லேன் ஆவதோ ஒன்றுமில்லை ஆவிக்குளாவி ஆழ fள மில்ல ஆழிதழ் இலங்கை ஆழிததுரும்பெனவே ஆளான அன்பர் ஆளான மெய்யடியார் ஆளும பெருமான் ஆறணி சடையினனே ஆறணிக்த திருச்சடையா ஆறத் துவாக்களுக்கும் ஆருக்கவலை யெல்லாம் ஆருத காதல்சேர் ஆருய்க் கண்ணிர் ஆருறுக் கபபால் ஆறறு தத்துவத்துக் கப்பா லா ஆறறுத உதுவத்துக் கப்பாலே ஆறியாறி ஆறுகுளமேரி
இகலோகம் டரலோகம் இகழ்ச்சி புகழ்ச்சியென இசையும் பொருண் ඹුණී ශාකd tuff.0’ 6කකl இச்சையில்லோரே இடத்து மடந்தையை இட பந்தனிலேறு இடமக ைற ஞாலத்தே இடம் வலமோடி இருககண்கள் பலபல இ.ே லயக கிடும்பை இவே த மறவாதே இடு துவே சிறிதுமிலேன்
SOL. Y ħl h * இ. பிங்கல இரண்டுஞ் சேர்ந்து இடையா என் பென இ. ட யிடையே
Li u ܚܝܝܐ -: S8
છx . R : , (3.-7ř
பக்கம் utu (8 பக்கம்
241 ஆறுகுடிய
314 ஆறுதலாய் இருமென்னன் 243 ஆறுதல் பெற 104 ஆறுபடி தாண்டு 251 ஆறுபிறைகொண றை pe 167 ஆறும் பிறையுஞ் சூடிய - - - 208 ஆறும் குளனும் A lev 280 ஆறு வருடமவன் 149 ஆறுவது சினமென கடி ·· · 133 ஆறுவது சினமெனு மரிய I65 ஆறுவது சினமென்னு 8 326 ஆறு வைத்ததும −− − 282 ஆனந்தக்கூத் தாடினுன்
223 ஆனந்த மாந்த மனந்தங் a A
50 ஆகந்த கடனம் ஆடினுன
131 ஆனிரைதனை
202 ஆன்மா அழியா - 149 ஆன்மா அழியாதென்று - - - 145 ஆன்மா ஒருபோதும்
154 ஆன்மா நித்தியமான 304 ஆன்மா நித்தியமென்று
303 ஆன்மா கித்தியமென்ற
188 ஆன்மாவக் கயலில்&ல
213 ஆன்மாவே காமென்று
294 ஆன் மாவே நாமென் றுாதூது 288 ஆன் மாவே நாமென்னும்
17 ஆன்மாவை
101 ஆணே நீ அடல்விடைநீ
264 இட்டுண்டு வாழ்வார் 207 இணக்கமாயிருந்து
98 இணங்கிவாழ் மாந்தர் 137, ജൂഞ്ഞ് ധ്യ பணிவார் MA () 222 இது அது என்றெண்ணுமல் a
226 இந்தப் பத்து
O5 இந்தவுயிர் உடல் ஆனுன் 161 இந்திரராதி யோரானுன் 177 இந்திரனுதியோர்
159 இப்பிறவி தீர்ப்பான
287 இம்மைக்கும்
345 இம்மை மறுமை இரண்டின் 149 இம்மை மறும்ை
152 இம்மையிலும
95 இம்மையிடிம் மறுமையிலும் 207 இயககர் முனிவர்கள்
30 இயமன் வருணன் குபேரன் weww. 55 இல்வ5, கரவேல்
155 இல்லை யென்னும சொல்
3. 248 138 52 130 171 27 18 292 238 287 147 256 284 237 215 13 69 81 274 301 353 280 8O 190 36 89. 275

Page 198
LTG இரவு பகலற்ற ஏகாந்தம் இரவுபகலற்ற தனி இரவு பகலில்லாத இரவும் பகலுமற்ற இரவும் பதலுமுன்னை இராஜ திராஜன் இருநிலனுய்த் இரு நிலனுய் இரவிமதி இருநிலனுேடிாவி இருந்த படியே யிருக்கும் பொருளை
இருந்த படியே யிருப்பதனைக் கான .
இருந்துபார் என்றென இருப்பார் பொருப்பி லிறைவி இருப்பினும் நடந்து இருப்பு நெருப்புப் இருவருங் காணு வீசன் இருவி%ன சேரா இருவினை பணு மிடுக்கணெய் இருவருந்தேடி
இருவழியை
இருவாசல்
இருவினைகளென இருவினை நீககி இருவினையான் இருவினையால் கட்டுண்டு இருவினையை நீக்கி இருவினை சுய நீக்கி இரவுபக இருவி%னயின் கட்டழித்து இருவினை வந்தெனை இருளை நீக்கி இலங்கைவாழ் தெய்வம் இலது உளதென இல்லறத்தில் நின்றெளிரும் இல்லற மல்லது இல்லற மென்பதியார்க்கும் இல்ல*ளுக் தானும் இல்லே உண்டென்னு
இல்லை உண்டென்பது
Firsof 200rut. ஈசனே எம்மை நீங்கா ஈசனே எவ்வுயிர்க்கும் அவ் ஈசனே எவ்வுயிர்க்கும் உயிராய் ஈசனே நல்லூர் ஈசனே நல்ல வாசனே ஈசனே யெங்கு மென
ν
பக்கம்
125 102
152
36 302
41 130 297 143 172 343
56 72ן 203 100 315 315 172 245
160 204 57 124 185 187 188 129 199
197 226 03 314 103 103 100 256
31 140 187
... 302
99 188
இல்லை
பாட்டு உண்டென்று இயம்ப உண்டென எடுத்து
உண்டென்று உண்டென்று சொல்ல யென்னு மலே யென்று சொல்லுவார் யென்று சொல்கிலோ இல்லை யென்னுமல் இல்ல யென்றும உண்டென்று; இல்லயென் ருெருடோதுஞ் இள ை இன்பத்தில் இள ை0 கிலேயாதென
இல்க் இல்ல இல்க் @6სზა இல்ல
ଦ୍ରୁ, ଶ୍ୱେତ ଅଲି)
இளமையுமூ இளம் பிரை அணிந்த இளம்பிறை சூடி
இளமை மூப்பிலான் இளமையும் மூப்பும் இளமை முப்பிலான் இறப்பும் பிறப்பும் இனிப் பிறவா இனிய அருள் இனிய திலினியது இனியவனே இனியேதெனக்குன் . வருமோ இனி யேதெனக்குள் இன்சொல் விளை நிலனுய் இன்சொற்றவருர் இன்ப துன்பம் இன்பமே யல்லாமல் இன்ருகி நா?ளயாய் இன்றிருளை நீக்கி இன்றுளோர் நா8ள இன்றென நா?ள யென்றே இன்றைக்கோ நா?ளக்கோ இன்ன தன்மை என்று நம்மை இன்னதன்மைய னிவனென இன்ன தன்மையனென் இன்னு னிவனென் றெவரும்
ஒருவனென ஈசன் ஒருவனெண்ணிப் ஈசன் ஒருவனென எண்ணி ஈசன் திருவடி ஈசன் திருவடியை ஈசன் மேல் நேசமாய் ஈசனை எல்லாவுயிர்க்கு
FF伊守
Y
பக்கம்
317
108 301 225 114 104 93 196 218 242 344 32 75 179 43 119 14 43 227 227 194 93 166 50 85 192
103
126

UT"08 ஈசனை யெல%லயில் ஈடேற வேண்டுமென்றல் ஈடேற்ற முண்டாமே ஈன்றளுமா யெமக் ஈயாத புல்லர் தங்கள் ஈயாத புல்லர் இடந்தோறும் ஈயாத புல்லரை நீ ஈயாத மாந்தர் Ffu (T gb ffîääsioàs) ஈயார் தேட்டைத் ஈயு மெறும்பு ஈரவார்சடை ஈரவார் சடையான ஈரவார் செஞ்சடையா
உகந்து மணங்குவிந்து உடல் பொருளாவி உடையது விளம்பேலு உணர்ந்தார்க்கு உணர்வரிய உணர்ந்தார்க்கு முணர உண்னவே உண்ண உண்ணுதே உறங்காதே உண்ணு துறங்கா திருந்த உண்டான போதுகா உண்டி சுருங்குதல் உண்டில்&ல யென்று சொல்ல உண்டில்?ல யென்றுசொல்லி உண்டோதானுன உண்மை முழுது மெனவுறுதி உண்மை முழுது மெனவோ உண்மை முழுதுமென ஒது உண்மை முழுதுமென்றல் உண்மை முழுது மென்றேத்தி உண்மை முழுது மென்பான் உண்மை முழுதுன்ெற உயர்ந்த உண்மை முழுது மென்ற ஒரு உண்மை முழுது மென்று சாற்று உண்மை முழுதுமென்றேயா உண்மை முழுது மென்னும் உண்மை முழுது மென்ருேதுங் உண்மை முழுதும் என்ற உண்மை முழுவதும் என்றுரை உண்மையும் இன்மையும் உத்தம நட்பை உத்தமர்கள் போற்றும் உம்பர் தலைவனை
vii
பக்கம் பாட்டு டக்கம் 104 ஈர்த்தென்னை யாண்டவன் ... 108 242 ஈர்த்தென ஜன யாட்கொண்ட ... 29 343 ஈவது கடைப்பிடி ... 199 93 Fr6aug Mesir seo 345 سعه - - 56 ஈவது விலக்காதே ... 345 185 ஈவது விலக்கே லென் ... 238 308 ஈவோரிரக்கவு 173 ماهه 156 ஈழநாடு வாழவந்த ... 229 172 ஈழநாடு வாழவந்த எங்கள்சிவ ... 229 3I4 ஈவாரே எல்லாம் ... 107 172 ஈறில்லாதவன் ... 147 14 ஈனருளு மாயென் ... I73 126 ஈன்றிடு தந்தை ... 57 130
2
19 உம்பர் தலைவனுயர் ... 225 231 உம்பர் தல்வனை யூழி ... 173 238 உயர்ந்த திருக்கோபுரமும் ... 220 33 உயிருக்குயிராகி 129 57 உயிரெலாம் தன்னுயிர் ... 166 163 உயிரெல்லா மாகியும் ... 130 322 உருக்கு மொழியால் 79 173 உருகி உருகி ... 187 199 உருகி உருகி உணர்வழிந்து 295 314 உருகியுருகி உணர்ந்தேன் ... 18 10 உருவேறவே செபிக்க 24 322 உருவேறவே செபித்து ... 153 64 உலகத்தோடொட்ட 167 288 உலகமும் உயிரும் ... 20 29 உலகமே கோயிலாய் ... 301 127 உலகம் உதித்ததுமாங்கே . . . 256 343 உலகம் உவக்கவும ... 231 114. உலகம் யாவையும் ... 14 312 உலகுமுயிரு மாயொன்றி 104 242 உலகெலா முணர்ந்த ... 324 36 உல்லாச கடையனடி , 249 96 உல்லாச மாயெங்குஞ் . . 298 210 உவந்து வருவான் ஓம் ... 192 287 உவமானம் கடந்த ... 77 218 உவமை ஒன்றில்ல ... 327 308 உவமை கடந்த . எல் - 92 120 உவமை கடந்த பேரின்பம ... 282 147 உவமை கடந்த வின்பம் ... 61 61 உளவறிக் தெல்லாம் ... 108 238 உள்குவாருள்ளத் ... 140 156 உள்ளத்தி னுள்ளே யுலாவு --- 173

Page 199
Lr-G உள்ளத்தினுள்ளே யொளிருஞ் உள்ளத்தூய்மையாய் உள்ளமே கோயில் உள்ள வுள்ள உறவு மிதுவே உறுதி தருவது சிவழே உறுதி யுண்ட குமுண்மை உற்றர் பெற்றருடன் உற்றரும் போனுர் உனைப்போல உத்தமர்கள் உன் துணை யன்றி
ஊக்கத்தைப்போல ஊக்கமது கைவிடேல் ஊக்கமுள்ளவர்
DGIJá (po Tu - - ஊசிமேல் நுனி - - ஊட்டி வளர்க்க
"ஊண்பொருளு ஊதியமாவதும் நீயே ஊதூது சங்கே ஒளதுாது ஒவதூது சங்கே ஊதூது ஊமத்தை கொன்றை யுவந்த ஊமை, போலிருந்தே ஊரார் சிறக்க ஊருடன் பலகக்கின் ஊருமில்லாய் பேருமில்லாய் ஊருமில்லான் பேருமில்லான் ஊரும் துணையில்* ஊரும் பேருமில்லா உத்தமனே ஊரும் பேருமில்லா ஒருபொருளை ஐவரும் .ோமில்லா ஒருவருக்குச் ஊரும்பேருமில்லா ஒருவனே ஊரும் ருேமில்லா ஒருவனை
எங்களை ஆள் குருகாதா எங்கw விட்டுப் எங்கள் குருநாதன் எங்குக் திருவிழி எங்கு தேடினுய்
1ங்கு மீசனே யேத்துவார் ww எங்கு முள்ளவன் எங்கும் ஈசனை எங்கும் என்றன் தங்கும் எங்கு சிவனடியை எங்கும் மாதவர்
பக்கம்
304 272 107 115 169 247 174 173 221 243 230
9G.
287 238 301 174
57
, 104
81 147 189 190 174 140 107 314 130 154
46 302
36 114 289 156
59 114 53 175 262 272 204 10 265 38 206
viii
பாட்டு உ நினைவல்லால் உன்மத்தங் கொண்டு உன்மத்தன் போல உன்மத்தன் போலே உன்னடிமை உன்னைப் பிரிவனுே உன்னை மறப்பேனுே உன்னை முழுவதும் உன்னே யல்லால் உன்?ன யுனக்கொரு உன்?ன உணர்ந்தவர்கள்
பேருமில்லா ஒருவன் பேருமில்லா ஒருவன் திரு பேருமில்லா வொருவன் பேருமில்வாத உத்தம?னச் பேருமில்லா னுள்ளான் ஊரும் பேரும் இல்லையென்று ஊரும் பேரும் இல்லான் ஊரூராய்த் திரிந்து ஊழிக் காலத்து மொருவர் ஊழ்வினைபோக ஊனு (புணர்வா யுயிருக் ஊணு யுயிராய்க் ஊணு யுயிராகி யுட்கலந்த ஊணு யுயிரா யுலகாயோ ஊஞய் உயிராய் உளத்திற் ஊனுய் உயிராய் உடலாய் ஊனுய் யுயிரா யுடலாய் உறுப்பாய் ஊனுமவனே உயிருமவனே ஊஜமாய் உயிருமாகி ஊனே நீ உயிரே நீ ஊன் பொதிந்த
ஊரும் ஊரும் ஊரும் ஊரும் ஊரும்
எங்கெங்கு சென்ருலும் எங்கெங்கே எங்கே காம் அங்கே எங்கே நீ அங்கே நான் எட்டாத கொப்பிலிருக்கின்ற எட்டாத கொப்பிலிருககுந் தேனுக்கு எட்டாத கொப்பில் எட்டாத கொப்பினிலே எட்டாத கொப்புக்கு எட்டாத பேரின்பம்
எட்டுத் தரம்
t க்கம் 122 129 289
56. 337 185 93 165 302 249 88
185 295 225 242 174 80 108 187 174 120 74 308 188 343 93 186 199 106 56 275 14
115 303 162
63 286 175 27. 155 155 155 152

ix
பாட்டு பக்கம் பாட்டு பக்கம் எட்டுத் திசையுமற் . 304 எல்லா மாயல்லவுமா . திருவரு ... 187 எட்டும் இரண்டும் அறியாத . 220 எல்லாமாய் அல்லவுமாய் இருப் ... 185 எட்டு மிரண்டு மறியா எனக்கொரு . 52 எல்லாமாய் அல்லவுமாயிருக்கும் . 63 எட்டு மிரண்டு மறியா எனக்குகல் . 125 எல்லாமு மல்லவும் ... 310 எட்டுமிரண்டு மிசைந்து ... 286 எல்லாமென் ... 18 எட்டுணையும் தாழ்ச்சி ... 286 எல்லாமென்னூர் ... 346 எண்ண மெலாம் ... 102 எல்லாம் அவனே 62 எண்வ்கை ஒருவனே .. 310 எல்லாம் சிவமயம் ... 301 என ணமல் எண்ணிடடா . 322 எல்லாம் சிவன் செயலே 13 ۔ ۔۔ எண்ணிப் பணிவார் ... 289 எல்லாம் சிவன்செயல் 53 ۔۔۔ எண்ணிய வண்ணம ... 56 எல்லாம் செய " ... 40 எண்ணி யெண்ணிப் ... 246 எல்லாம் நினது செயலென் 188 ••۔ எண்ணி யெண்ணி ... 201 எல்லாம் நீ யென . 205 م எண்ணி லடங்காதடா ... 264 எல்லாம் நீயே ... 175 எண்ணு மெழுத்துங் ... 314 எல்லாம் வல்ல திருப்பாதம் 202 ۔۔۔ எண்ணு மெழுத்துமாய் ... 225 எல்லா ரகத்தும் ... 161 எண்ணுவார் எண்ணங் . 140 எல்லாரிடதது முள்ளாய் -- 230 எண் ணுவார் நெஞ்சில் 309 எல்லா ரிடத்தும் . ... 230 எத்திக்குமாகி . 238 எல்லாரு ருவமும் ... 230 எ திக்கு மீசனடி ... 224 எல்லா ருள்ளத்தினும் ... 24 எத்திசைக்கும் ... 273 எல்லாரையு ... 89 எத்தொழிலச் - ... 69 எல்லார்க்கு மன்பு ... 24 எந்தச் செயலுஞ் ... 252 எல்லார்க்கும் தம்பிரான் . . . 235 எந்த நேரமும் ... 31 எல்லார்க்கும் நன்மைசெய் ... 264 எந்த நேரமும இறைவன் ... 272 எல்லார்க்குமாங் கடவுள் ... 197 எந்த வேளையும் 54 எல3லசொலல ... 302 எந்தையே எந்தையே 50 எல்லேயிலாக் கருணை ... 110 எந்தையே எம பெரு ... 46 எல்லேயிலாவருள் .233 م.م எந்நாளும் நல்லூரை 66 எல்லே பெமக்கில்லே ... 344 எப்டடி இவன்றன்மை ... 283 எவரேனும் ... 166 எப்பவோ முடிந்ததென எங்தை 186 எவ்வுயிருந் தன்னுயிர்போல் - 60 எப்பவோ முடிந்ததென எனக்கு ... 270 எழுக புலருமுன் OO 8 எப்பவோ முடிந்த தென்றெடுத் ... 211 எழுதவே யொண்ணு ... 104 எப்பவோ முடிவான" ... 39 எழுவாய் பயனிலைகள் ... 222 எமன் வருமுன்னே ... 105 ஏள்ளப்படா ரறிஞர் ... 107 எல்லாஞ் சிவன் செயலென்பர் ... 165 எள்ளுக்கு ளெண்ணெய் ... 115 எல்லாஞ் சிவன்செயலென்றெண் ... 304 எள்ளுக்குள் ளெண்ணெய்போலெங்கும் . 343 எல்லாஞ் சிவன் செய . 287 எள்ளுக்குள் எண்ணெய்போல் 12 எல்லாஞ் செயவல்ல இறைவனே . 130 எள்ளும் எண்ணெய்யும்போல ... 136 எல்லாஞ் செயவல்ல தெய்வம 297 எள்ளுக்குள் எண்ணெய் == 294 எல்லாஞ் செயவல்ல சித்தர் ... 142 எள்ளு மெண்ணெயும் ... 14 எல்லா வுயிரினு ... 295 எனக் கினியாள் ... 203 எல்லா உலகமுமான ... 108 எனக்கின்பமே வா ... 68 எல்லாச் சமயமும் ... 305 எனக்கும் தனக்கும் ... 36 எல்லந் தருங் தெய்வம் . 197 எனக்குள்ளே as 121 எல்லாப் பொருள்களும் ... 147 என்செயலாவதில்லை ... 175 எல்லா மாயல்லவுமாய் . ... 93 எனது யான் எனும் ... 332
எல்லாமாய் அன்றி . 162 என் செயல் ... 168

Page 200
TG என் பிழைகள் எனபு பூண்டவன் என்று நீயன்று நாம் என்றும் மறவா என்று மிருந்தபடி
என்று மினியான் w
என்னப்ப னெம்பிரான் - - - என்னாசை ஆரமுதை
என்னுருயிரே as a என்னிதய வெளியினிலே so என்னுயிருக் குயிரானை
என்னு ளொளியை என&னக்கணமுடி பியா
6j&ኔ Ibffሀ Jö8mኽr
ஏகமனதாகிக்
ஏக மாசிய ஏகமாகிய இறைவன் ஏகம்பம் மேவி ஏகப மேவியந்த ஏகன கேகனுயுறற ஏகனகே கணிாறவனடி ஏகனகே கனிறைவனடி வாழ்க 6JaST (Brb a GigaST 6T ,) ஏகனனேக னென்று சொல்லும் ஏகனநேக னெல்லார்க்கு ஏகன் அநேகன் ஏகனனே கனிறைவனடி ஏக னனேகனென்றுமிமைய ஏடவிழ் கோதை
ஐங்கரத்தொ ருகோட் ஐஞ்சு பூகமும் ஐஞ்சு மாறுமான ஐந்தாண்டு விழாவத&ன ஐந்து பலன்வென்ற ஐந்தும் அடக்கா ஐந்தெழுத்துள்ளே ஐ*தெழுத்தை ஐம்புல பந்தனை ஐம்புல ஆனந்தையும் ஐம்புலன் தன்?ன வென்ற
ஐ பலன் வழிபோம் e 8
ஐம்பூதt ஐம்பொறியும்
ஐம்பூதம் காமல்லக்காணும் de
பக்கம்
126 47 186 89 54 319 242 126 303 344 127 156 175
157
168 301 225 14り 104. 295
93 300 185
175
287 343 131 .
56
225 11 111
58 2n5 252 167 317 205 1s8 114 244 343 282
பாட்டு
பக்கம் என்?ன நீ வேரு 57 என்னேயறிவித்தென ... 53 என்னை யன்றி 125 என்&னயினிப் பிறவாமல் 270 என்?ன பிணி மறவாமல் 344 எ**னயுடையானவன் 154 என்?ன யெனக் - 1 என்னையெனக் கென்னுலே ... 134 என்னையெனக் கென்னலே அறிவித்த 149 என்?ன யென்னுல் 204 என்?ன யென்னு லெனக்கறி 204 என்னே விட்டகலாம 235 என்னுேடு 121
ஏட்டிலெழுதிக் 108 ஏதும் அவன் செயலென்று 114 எது சிவன் செயல் 36 ஏதுமற நில் 289 ஏதுமறியாத 188 ஏது மொன்ாற 57 ஏலாது செய்பவரை 107 ஏவா மக்கள் 314 - ஏழுலகங் கொழுதேத்தும் 242 எrழக்காய் வந்திரங்கி 302 ஏழை பங்கன் 15. ஏறுவாம் பரி ... 31 ஏற்கமோ திருவுருளுக் 273 ஏற்றில் வருவது 148 ஏனையவ றங்களினு 103
ஐம்பூதம் நாமல்லவென்று கூவு 80 ஐம்பூதம் நாமல்லவென்று ஊது 190 ஐம்பூதம் நீயல்?ல அறிந்திதனை 242 ஐம்பூதம் நீயல்?ல ஐம்பொறி நீ 309 ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறியு 191 ஐப் பூதம் நீயல்ல ஐம்பொறியும் 154 ஐம்பூதம் நீவீரல்லீர் 269 ஐம்பொறி மாட்டு 336 ஐtபொறியும் மனமும் ... 185 ஐம்  ெஈறியை அடக் ... 12 ஐம்பொறி வழிசெல்லாமல் ... 292 ஐம்பொறி வழிபோய் is ... 252 ஐம்பொறி வழியினிற் 120 ممن ஐயந் தீர்த்தடியேன் 140

u"(B 3ut Lifs ஐயப்படாமல் ஐயப்பாடின்றி ஐயமிட்டுண் ஐயமில்லா ஐயமெலாம் தீர அன்புடனே ஐயமெலாம் ஐயமே னென்றுரைத்த ஐயமேன் காணு ஐயங்கொடுப்பது ஐயமபுகார்
ஒடுங்கு மனத்தில் ஒண்டொடியே ஒப்பற்ற தெய்வமே ஒப்பில்லாத ஒப்புயர்வற்றவன் ஒரு கறியும் ஒரு சொல்லா ஒரு தெய்வம் ஒருலகம்
நாமம் ஒருருவம் பிடிசோற்றுக்காய் கோந் நெல்லரிசி பொல்லாப்புமில்லையெடா பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு டொல்லாப்பு பொல்லாப்பு பால்லாப்பு பொல்லாபபு பொல்லாப்பு பொல்டிாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு
Lfüsiაზo
uჩ6სზდა மில்லேயென் Lfleobo gir Lfléსზეა மில்8லயென்றவர் மில்லையென்னும் மில்லத்தம்பி tfsöådu JLIr மில்லயுணர்வீர் மில்லையென
மில்லயென மில்லையென மில்லயெனும் மில்லேயென்றே மில்லயென்டான்
பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல லாப்பு பொல லாட பு ,ெ எல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு  ெஎல்லாப்பு ஒருவ: மிருவரும் ஒருமை மனம்படைத்த ஒரு மொழியதணு ஒரு ஏமாழியா லென்றன்*
26
மில்லையென்று மில்லையென்றே
y pw ah
.ொல்லாப்பு மில்லையென்று ஒது .
ow a
a
மில்லையென்றென் . மில்லையென்ற மருந்து மில்லையென்ற வாக்கு
bapa
xi
பக்கம் 1( 4. 187 301 287 15 289 36 93 56 148 107
166 83
347 109 329 18 186 188 270 121 305 39
276 248 185 186 301 321 243 258 120 207 219 296 289 287 225 312 288
87
255 163 267 228
93
பாட்டு ஐயம் புகினுஞ் ஐயம் புகுத்து ஐயம்வையாதே ஐயனே ஆரூரில் ஐயனே சறகுருகாதா ஐயனே யழகன ஐயாற கலாத ஐயுந் தொடர்ந்து ஐவருமுன் ஏவல் செய்வார் ஐவர் செய்வினையில்
ஒரு மொழியாலே உணர்தற்கு ஒருவனுலே உலகம ஒருவனுலே உல*மூ ஒருவனே தெய்வமெனும் ஒருவனே தெய்வமென்னும் ஒருவனே யொரு ஒருவ%னப்பற்றி ஒவ்வாதன சொல்லி ஒழுக்க விழுப்பந்தருய் ஒளிக் கொளியை ஒற்றுமை பிந்தவூரிடை ஒன்பது வாய்ததோற்பைக்குளு ஒன்பது வாய்க்தோற்பைக்கு ஒன்பது வாயிலுள்ள ஒன்பது வாயிலும் ஒன்பது வாய்ததோற்பைக்காயி ஒன்பது வாயில் உடைய ஒன்பது வாய்த்தோற்பையு ஒன்பது வாய்த்தோற்பை தன்னில் ஒன்ரு யிரண்டாகி ஒன்ருய் யிரண்டாய் மூன்றயோ ஒன்ருகக் கண்ட ஒன்ரு யிருப்பதும் ஒன்றப் இரண்டாயொரு ஒன்ருய் இரண்டாய் ஒன்றிரண்டென்று ஒன்றிரண்டென்றே ஒன்றிரண்டென்னு ஒன்றிலொன்றி ஒன்றுக்கு மஞ்சாதே ஒன்றும் இரண்டும் ஒன்றென இாண்டெனளண் ஒன்றெனக் கும்பிடுவாய் ஒன்றென ரண்டென ஒத ஒன் றிரண்டென்று ஒன்றென்றிரு தெய்வம் ஒன்றை நினைக்தென் ஒன்க்ரு இரண்டோ
uàsasůd
wwat
3 4. 131 216 302. 51 176 199 188 153 157
163 15 212 37 3CO 212 314 85 123
136 302 187 243 157 131
1C4 140 153 176 114 148
63
33 112 230 343
10 264
207 262 113 309 295 雯13 217

Page 201
LuMGB ஓங்காரக் கம்பத்தினுள் ஓங்காரக் கம்பத்தின் ஓங்காரத்தி ஓங்காரத்தினுள்ளே ஓங்கார நாதமே ஓங்காரத்தாலே ஓங்காரத்தில் உதித்த ஓங்காரததின் ஓங்காரத்துட்பொருளான ஓங்கார மேடையின் ஓடாதே வழுக்குமடி ஓடி யோடி ஓடிவாடா தொண்டா ஓடு கங்கையுடன் ஓடும் இருநிதியும் ஒம்ே புளியம்பழமும ஓடும் புளியம்பழமும்போலும் ஒதாதஈர்க்கில்ஸ் ஓதாமல் வேதம் ஒதியுணர முடியான் ஒதியோதி.மீரமே ஒதியோதி .தனனையே ஒதியோதி யுன்மத்த ஒதுபல் வேதமூரைசெய்த
ஒளவனத் தில்லையில் ஒளவா நல்ல ஒளவியம் செல்வம் ஒளவியத்தை நீக்கி அகக் ஒளவியத்தை நீக்கியறத்தை ஒளவிய நெஞ்சத்தார் ஒளவிய நெஞ்சததால் ஒளவிய நெஞ்சப ஒளவிய நெஞ்சை ஒளவிய மனத்தின ரறியா ஒளவிய மில்லாமன
கங்குலும் பகலுமில்லாக் கங்குல் பகலற்ற கங்கல் பகலகாணுத கங்கைச் சடை கங்கையொடு கசடுதீர்த்தறங் _ கசிந்துஈகி
கஞ்சனும்
கஞ்சமலர் கஞ்சா அபின் கடலகுழிலங்கை
xii
Q பக்கம் பாட்டு பக்கம் 157 ஒது மன்பர்களுள்ளத்து ... 347 187 ஒதும் பொருளும் ... 107 15 ஒதுவ தொழியே லென்ற . 243 37 ஒதுவார் தீவினை ... 200 333 ஒதுவார் நெஞ்சில் ... 50 185 ஒமெனும் ஒண்பொருள் ... 148 225 ஒமெனுந் தாரகம் ... 116 109 ஒமெனு மெழுத்தினுள்ளே ... 295 176 ஒமெனும் எழுத்தினுள்ளே உல - S6 113 ஓம் ஓம் என்று 326 هـه 84 ஓம் சிவ சிவ ... 306 17 ஓம் சிவாயநம வென்றுசொல்லு ... 318 279 ஓம் சிவாயாகமவெனத் 292 138 ஓம் சிவாயநமவென்று சொல்லுவோர். 115 289 ஓம் சிவாய நமவென்று உறுதி 287 س 104 ஓம் சிவாய நமவென்று ஒது 302 .س 221 ஓம் நமசிவாயவென உருவேற ... 93 314 ஓம் நமசிவாயவென உருவேற்று ... 349 329 6th b(3ot nito rug09 ... 307 240 ஓம் நாம் நாமென்று ... 298 12 ஓயாமல் உள்குவார் தம் 43 ۔۔۔ 17 ஒருரு வானுன் ஈருரு ... 111 251 ஒவியம் போலி 309 349 ஓவியம் போலிருந்து ... 343
ஒள 225 ஒளவிய மில்லா வறிவு ... 37 56 ஒளவிய மில்லா அறிவை ... 15 105 ஒளவிய மில்லாதார் 187 مصم 289 ஒளவியம் பேசல் - 314 343 ஒளவியம் பேசா 302 ۔ 185 ஒளவியம் பேசாதே 243 ماهه 109 ஒளவியம் பேசி ... 93 309 ஒளவியம் பேசுதல் 288 سسه 157 ஒளவை உறுவை .107 مم 176 ஒளவியமறறதும் ... 148 200
176 all 681T Syrigh ... 250 157 கடிவது மறந்திடடி .291 سم 223 கட்டாத மனத்தைக் ... 155 38 கட்டுருமன் ... 21 105 கட்டுப்படாதமனத்தைக் ... 225
5 கட்ப்ேபடா மனத்தைக் கட்டத் 186 سمي 318 கட்டுப்படாமனத்தை • 316 مه 52 கட்டுப்பாடில்லாதார் ... 161 94 கண்டவாரும் ... 316 255 s6irl Gut sirtuou98o ... 83 347 கண்டுசர்க்கரை -- 153

uTGB கண்டாரு மில்லயடி கண்டார் ககை கண்டொன்று சொல்லாதே கண்ணல்லக் காதல்லத் கண்ணபிரானுங் காணுக் கண்ணுரக் கண்டிடடா கண்ணுலே காணுெணுதது கண்ணிறைந்த செல்வத்தை கண்ணிறைந்த ஆண்ணுக்கு அணிகலன் கண்ணுக்குக் கண்ணுயிருக்கும் கண்ணுககுக் கண்ணுயிருக்கின்ற கண்ணுக்குக் கண்ணுகிகின்றய் கண்ணுக்குக் கண்ணைங்ாம் கண்ணுக்குக் கண்ணுய கடவுளை கண்ணேயுறங்குறங்கு கண்னைப் போலறங் கண்ணையிமை கண்ணைக் கண்ணுல் பார் கண்மூன்றுடைய கதிரவன்னெழுமுன் கங்தைத்துணியணிந்து கங்தைத்துணியணிவான் கமலாகான்முகன் கமலநான்முகன் கண்ணனுங் கருங்குயில்கள் கருததிற் கருத்தாயிருக்கும் கருத்திலிருக்கும் கதிர்காமத்தோனே கருத்தில் நினைந்துருகிக் கருத்தில் கருத்தாகி கருத்திற் கருத்தே
காக்குந் திருவடிகள் காட்டகத்தே வாழுங் காட்டிலே காளியுடன் காணுகின்ற கண்ணிற் கலந்த காணுகின்ற கண்ணிற் கலந்துள்ள காணுங்கண்ணிற்
காணுங் கண்ணிற் கலந்த கண்ணது . காணுங் கண்ணிற் கலந்ததென்பர் .
காணுங் கண்ணிற் கலந்தவனே
காணுங் கண்ணிற் கலந்தவனேகார் .
காணும் கண்ணிற் கலந்து காணுவார் தொண்டர் காண்பதெல்லாம் காண்டான் காட்சி காண்பான் காட்சி காட்சிப் காண்பான் காட்சியுங் காட்சிப்
xiii
பக்கம் பாட்டு பக்கம் 255 கருமத்தைக்கை ... 258 82 கருமததைச் செய்யலன் ... 267 286 கருவி கரணங்களெல்லாங் 336 ۔۔۔ . 264 கருவிகரணங்களெல்லாங் கலந்து . 297 306 கருவூரில் வாராமை 24 . . ۔ ۔ 322 கரைகாணு வின்பக் ... 219 273 கரையவொரு சொற்சொல்லுஞ் ... 249 33 கரையுமன்பர்கள் ... 348 33 கர்ப்பூரப் பெட்டிகளும் ... 83 23 கல்லார் கற்ருர்க்கும் ... 100 112 கல்லார்க்குங் கற்றவர்க்குங் ... 29 113 கல்லாதார்பாற் A sw 7 146 கல்லாப் பிழையுங் 236 278 கலேகள் பலவுங் ... 298 310 கல்ல நிகர்த்த ... 89 270 கல்லை நிகர்த்தமனங் ... 121 12 கல்லான கன்னலுண்ணச் ... 146 118 கல்லொத்திடு மனங் 67 277 கவனமாய் கருமத்தை ... 77 349 களிபெருகுங் காமக் 195 .م 246 கறங்குபோலக் கலங்கு 176 288 கறுத்திருண்ட கண்டத்தின் ... 145 248 கற்பனை கடந்த வற்புதன் ..... 179 47 கற்றதனுற் பயன் 258 ۔۔۔ 349 கற்றவர் விழுங்கும்கருணை 210 معه 346 கற்ருேரும் அறியாத 312 86 கனைக்குங் கடல்சூழ் ... 323 79 கன்னலொடு செந்நெல் ... 217 27 கன்னலுடன் செந்நெல் .164 مم 331 கன்னலொடு செந்நெல் கதலி 127 33
As 218 காண்பானும் காட்சியும் ... 81 134 காண்பானுங் காட்சியும் போய் 223 124 காதலாற் பாடி 134 162 காதலிக்கு மெய்யடியார் 63 163 காதல் நீ கருத்தும் 75 55 влi,5si (psyaso 310 168 காமக்கடல் கடந்து 304 251 காமமுதலாறுங் கடிந்து 75 233 காமமுதலாறுங் களைந்த 102 270 காமாதி குணமெல்லாங் 40 244 காயமே கோயில் கடிமணமடிமை . 253 195 காயமே கோயிலடி தங்கமே ... 260 195 காயமே கோவிலாகக் கண்டிடும் 141 10 காயமே கோயிலாகக் கண்டு பாவனே . 321 203 காயமொரு 267 294 காயம அழிந்து 13

Page 202
LmtG காயுங் கனியுமாகி காராரானவக் கார்த்தி கேயனைக் &ff tập காவார் குயில் காலனே கோலிக் காலமுமில்ல காலனு மணுகான் are)? is ass systs) காலனக் காலாலுதைத்தான்
கிஞ்சுக வாயுமை
கீரன் சொன்ன
குடிப்பிறந்தாரோடு குடி முழுதையும் குணங்கடந்தது குணமிலலா மூர்க்கரோடுங் கும்பிடுவார் தம்மனத்தைக் ஆம்பிடுவார் நன் மனத்தை கும் மியடி பெண்ணே குருசீடம் முறை
குருந்த மரத்தடியில் குருவாக வந்தவன்
குருந்த மரத்தடியில் குருவாக வந்து
குருபக்தியே குருபரன் அடியின
கூசும் கொலைகள் era LL66 60637 go e.g. suffusf கூத்தாடுதே கூவியழைத்திடுவாய்
Basudio Lo6oř
கொச்சை மக்கள் கொச்சை மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சம கொஞ்சம ய் மனத்தைக்
கொடிய வசுரர் கொடுத்தார்க்கு கொண்டுங் கொடுத்துங் கொத்தார் குழலுமை
p.
209
xiv .
L0âkastb 244 179 216
211
92 160 9 69 72 162
கி 18O
ó 180
(ඊ) 58 234 305 149 161
63 234
10 283 255 205
s 206 347 279 232 259
uTü"CB asTe)6T as கா% க் கட்டித் காகித்தூக்கி கால நீ தூக்கியாடும் கால மா8லயுங் கால யெழுந்திருந்து காலை யெழுந்து asp akA) (éeQuèsT காணக்குறத்தி
கிட்ட நெருங்கையிலே
குருபாதம்
குருவடியொரு குருவான கல்லூரிற் செல்வன் குருராஜ
56Nobsao p6OOTT Tås esorb6bú Um Trá குலாகலம் பாராதே ۔۔۔۔ குழந்தை யன்போடு குருவின்
குழந்தை யன்போடு நாம் குழந்தை வேலா குற்றமெல்லாம்
கூவுகுயிலே கூறுவார் கோடி கூறும் நாமுதல் எல்லா கூறும் நாவே
கையையுங் காலையு
கொல்லாதே கோபம் கொல்லாமை கள்ளாமை கொல்லாமை பெரிதென்று கொல்லார் பொய் கொல்லா வரமெனக்கு கொல்லானே கொன்றை மத்தம் கொன்றென்றும்
ιμάταιο
92 16 72 141 347 19 169 37 68
82
61 259 335 167 210 322 274 278
78 304
80 315 305 153
180
264 24
1(3
89 310 180 322

untG கோகனகத்தானுங் கோணுதசிந்தையுடன் கோணிய பிறையை கோபம் பொருமையை
கெளரியை யிடத்தில்
hlasrüe (Burao
да ато சங்கர சங்கர சம்பு சங்கரன் தானினே சங்கரன் திருப்பாதம் சங்கோசை சஞ்சலத்தை சஞ்சலம் மிகவும் சணடக மரத்தடி பிற் சத்தி சிவமாகித் சத்தி சிவ மொன்றன சத்தியம் பொறுமை சகதியுஞ்சிவமும் சந்ததம் சாதனை
சாங் காலம் Ժր (3600 t சாதலும் பிறத்தலுக் சாதி சமயங்களில்லான் சாதி சமயமென்னுஞ் சாதி சமயப் பற்றினை
சிங்கக் குட்டி சிங்களவர்
சிங்காரங் சிட்டர் பரவுஞ் சிததத்தினுள்ளே சிவ சித்தததினுள்ளே தித்திக்குங் சித்தக துள் கித்தம் சித்தததி லூறுக் சித்த திலே தித்திக்குங் சிததத்துள் தித்திக்கக் சித்திர காரன்தீட்டிய சிகதி தருங் தேவாய் சித்தி பெறலாம் சிகதி மயிலேறு சிங்க% க் கெட்டாத
XV
Vä dobT
பக்கம் பாட்டு 180 கோல மாமலர்
82 கோல மொன்றும்
233 கோலா கல 259
கெள
274
226
ሪፓ 180 சந்திர சூரியர் காப்பாம் 263 சந்திர சூரியரானுன் 105 சந்திரன் தவழ்தரும்
95 சந்திரனில்லச் 81 சமய தீக்கையைப் 154 சமய நெறி 325 சர்வம் பிரம
81 சலன முதிப்பது 33 சற்குருதரிசனம் 38 சற்குருவின் 66 சற்றுஞ் சந்தேகங் 177 சற்குருவைப் போற்றித் 226 சனகர்
FA 311 சாந்தம் உபசாந்தம் 275 சாந்தம் பொறுமை 181 சாந்தம் பொறுமை யன்பு 240 சார்ந்தவர்க்கு சாவா 248 சாவதும் பிறப்பதுங்
. 250
265 , சிந்திக்க நெஞ்சும் 265 சிந்தித்துச் சிந்தித்துச் 28 சிங்கி சிந்தி சிக்கி 286 சிந்தித்துத் தெளிந்தார்
89 சிந்தையிலன்பு
167 சிந்தை செய்கதிர் 235 சிந்தையில் வெந்துயர் 303 சரித்டிப்புரமெரித்த 316 சிரித்து கலலூர்
33 சிரித்து முப்புர
181 சிரித்துப் புரமூன்றுஞ் 238 சவ சீவு என்றிடும் 346 சிவ சிவ என்று
70 சிவ சிவ வென்றெந்த 191 சிவ சிவ என்று சிந்திப்பர்
பக்கம்
32 54 72
35 240
25 296 203 315 305 256 263 319 168 192 179
320 31s) 164 167
196 187
169
315 46 349
329 54 47 142 341 77
213

Page 203
Luri CB சிவ சிவ செல்வக் கணபதி சிவ தொண்டு செய்வார்க்குச் சிவ தொண்டனென்னும் சிவ தொண்டன் சிவ தொண்டு செய்தல் சிவத்தியானஞ் சிவதொண்டு செய்வார் சிவத்தைக் கண்டிடர் சிவத்தை நோக்கித் சிவத்தினை வளர்க்கும் சிவத்தியானத்தைச் செய்யும் சிவத்தை மறைத்தது சிவத்தை விடத்தெய்வம் சிவநாமமைந்தெழுத்தும் \ சிவ நாமஞ் சொல்லி சிவ நெறிச் செல்வர் சிவபக்தியாலே சிந்தை சிவமே தாமெனச் சிந்திப்பார் சிவனடியார்கள்
&Lot?gTL
சீரகமுள்ள சீராரிலங்கை சீராரும் நல்லூரில் சீரார்மேனியுடையாய் doroT aligu(BartGB a.8
சுகதுக்கம் சுட்டாமல் சுந்தரற்கு சுந்தரற்குப் பெண்
56)
5 g6 flT குதானதற்ற சூதானவெளியில் சூரியன் தோன்று
செக்கச் சிவந்த செக்கர் போலும் செத்தார் என்பு செந்நெலுடன் கன்னல் செந்நெல்லும் கன்னலும் செப்பந்தரமோ செய்யமேனியனே செல்லப்ப &ன *தினம் செல்லப்பன் என்னுக் செல்லார் செல்வக்குருகாதா
as Y 8
po
s.As
*K. dia o
4 UA to
xvi
பக்கம் uTG 232 சிவமே நாமென்று சிந்திக்கச்
42 சிவனடியாருடன்கூடி
48 சிவனடியாரை
120 சிவனடிக்கன்பு செய்குவர் 208 சிவனடியாரொடுங்கூடி 135 சிவனடியைச் சிந்தை 299 சிவன் சிவனென்று
12 சிவனேயுன் தரிசனங் 17 சிவனையல்லாமல் தேவரு 245 சிவனுெருத்தனே 272 சிவாய நமவென்று
299 சிறப்பு மிதுவே
198 சிறையார் வண்டறை
58 சிறப்புக் குறைவிடமே 61 சிறப்புஞ் செலவமும்
141 சிற்றம பலவன்
212 சினத்தை மனத்தில்
299 சினத்தைக் கொல்லுவோம் 109 சின்னத்தனமாய்த்
153 சீருந் துணையில்&லச்
181 சீர் பெறுஞ்சித்தரும் ஆங்கே 303 சீலஞ்சேர்
270 சீலமு மதுவே
135 சீவன் சிவனெனல்
26 சீவன் சிவனென்று
62 er (5508uur 155 öጽጨfftß 111 சுழி முனைக்குள்
12 சுனைக்கும் கல்லூர் 284 சுன்னுகத்தான
279 சூரியன் வருவது 168 தலபாணியைத் 141 26.) JusÐLULJETÜ 346 சூழமிகநினைத்து
செ
313 செல்வச் சிவதொண்டன் 202 செல்வச் செருக்கினுற் 25 செல்வகிலே யாதென்று 249 செல்வம் அது
59 செலவர்க்கழகு 51 செல்வர் பின் சென்று 25 செழுமலர்த்திருவடி
67 சென்னிக்கணி
16 சென்றன சென்றன 310 சென்றன வாணுட்கள் 12
o
168 285
47 249
46 256 272 169
45
37
11 323 322
160
132 229
16
9) 197 249 127 18
97 193
22 162

LTG சேணிடை சேண்பொலியுக் சேர்ந்தவர்க்குத்
சைவனேயுன்னத்
Garres (Sur (8s சொல்லச் சொல்லச் சொல்லமுடியாத தீர்ப்பு சொல்லமுடியாதபொருள் சொல்லாமற்சொன்ன சொல்லாலே பயனில்லை
சோடிழந்த சோதிப்பிழம்
ஞானதேசிகனே
தக்கன் வேள்வி தங்கப் பொம்மை தங்குஞ் சிவ தச்சன் கட்டா வீட்டிலே
தச்சன் கட்டா வீட்டிலே தாவும்பரி
தட்டா னிடத்துச் தண்ணிர்க் கடவுள் தண்ணிர் குளிருமோ தத்தாதித் தோம் தத்து பரி தத்து வங்களாருறும் தத்துவந் தொண்ணுற்றறுஞ் தத்துவப்பே தத்துவம் ஆருறும் தத்துவ மெல்லாம் தத்துவம் யாவுஞ் சடமென தத்துவம் யாவுஞ் சடமென்று தந்திமுகத்தனச் தந்தை தாய் மற்றுங் தந்தை தாய் மைந்தர் தந்தைதாயும் தமஞ்சம மிரண்டின் தம்மைத்தம் மாலறிந்த
is List (Bu தருமநிலையிலே தருமநெறி பிசகாமல் தருமமு மில்லத்
xvii
Lånd
v Kej
(35戸
tă atb பாட்டு 181 சேவித்துஞ் சென்றிரந்துஞ் சீவன் . 224 சேவித்துஞ் சென்றிரந்துந் தம்பி 164
சை 81
சொ 24 சொல்லாலே வாய்த்த 279 சொல்லால்வருங்
95 சொல்லித்துதிக்குக் 40 சொல்லிற் கலந்த 16S சொல்லுகிவமே 264 (des s676TUIT scorés
@于阿 82 சோமசுந்தரன் 131
(6. 222 ஞானயோகம்
த் 111 தர்க்கஞ் செய்யப் 265 த&லயிலிரந்து 249 தலையை நிலத்தில் 316 தவஞ் செய்து 342 தவத்திற் சிறந்தார் I55 தவத்தை யாற்றிடில் 101 தவராச சிங்கத்தை 102 தனக்குத் தானிகரான
46 த*னலம் வீந்திடத் 105 தன்மை முன்னிலே 162 தன்னே அறிந்தால் 141 தன்னை அறிந்துவிட்டால் 224 தன்னைத் தன்னுல்
40 தன்னைத் தன்னுலறிந்த 1^2 தன்னைத் தன்னுலறிவார்
61 தன்னத் தன்னுலறிந்திடடா 44 தன்னைத் தன்னுலறியடா 212 தன்னைத் தன்னுலறியவேண்டும் 184 தன்னை மறந்தருளில் 124 தன்?ன யறிந்தார் 182 தன்னே யறிதல்
66 தன்னே யறியத் தவத்தை 320 தன்னை யறியத் தவமுயற்றும் 85 தன்னை யறியத் தனக்கொரு 255 தன்னை யறிந்தோமே 267 தன்னை யறிந்தோர்க்குத் 168 தன்னுெப் பாரில்லாத
192 220
18 13 276 51 65 182
226
313 16 298
7. 320 272 288
32 205 296
19
226
247 342 255
59 161 198 177 27 91 239
38
33

Page 204
UT" (8 தாபதர்தம் தாமரையில் நீர் தாயினு மன்பு தாயுங் தந்தையுமாகி தாரகத்தனி தாவித் தாவிச் தாவும் வேங்கை தாளம் போடு
திக்குத் திகாந்த மெல்லாம் திக்குத் திகாந்தமும் திக்குத் திகாந்தமும் கைவச திங்கட் சடையாய் திங்களும் கங்கையுஞ் சீறும் திங்களும் கங்கையும்
திங்களும் கங்கையுஞ் சென்னியில்
திங்கள் கங்கை திங்கள் தங்கிய திடமுட்ன் தியானஞ் தித்திக்கும் அமுதே தித்திக்கும் அமுதினேத் தித்திக்கும் ஒரு
தீமையெவர்
துக்கம் சுகம் துஞ்சாதே தூங்காதே துட்டச் சமணர் துண்டப் பிறையாய் துதிக்க மதிதந்த
தூக்கியபாதத்தின் தூங்காமல் தூங்குஞ் தூண்டு சுடர் தூது சுந்தரர்க்
தெய்வத்துக்குத் தெய்வமே திருவருள் தெய்வமே யடினென தெய்வம் எல்லோர் தெய்வம் ஒன்றெனத் தெரிந்து செயலாற்றும்
தேகம் நீயல்ல வென்றன் தேகம் நீயல்ல வென்றதிட
χνiii
தா பக்கம் Jr" (B 259 தானதருமங்கள் 184 தானந் தவமிரண்டுக் தானுற்ற 85 தானர் தவமிரண்டுஞ் சற்று 244 தானுன சற்குருவைத் 117 தானுன தத்துவன 220 தானுன தன்மை 182 தானுன தானேயல்லால் 326
தி
2 திருந்து மடியவரொடு 44 திருநீறும் ஐந்தெழுத்தும் 3.13 திரு நீறுஞ் சந்தனமும் 236 திருவருட் செயல் 209 திரு ருள் கைகூடுது
37 திருவருளை நாடி 44 திருவாரும் நல்லூரில் 182 தில3லயம்பலத் தாடும் 136 தில்லையம்பலத்தைக் கண்ணுற் 250 தில்லயிலாடிய 135 தினத்தனைப்போது மறவாமல் 310 தி&னத்தனப்போதும் மறவோம் 3 தினத்துணைப்போதும் மறவாது
தீ
196 தீவினைகெஞ்சத்
து 33 துப்பி சைந்த 254 தும்பி முகன் 317 துள்ளித்திரியும் 183 துள்ளும் மனத்தை 218
து 234 தூலதுக்கும
113 தூவி மயிலேறும் 196 தூணே நீ
83
தெ 223 தெரிந்து வினையாற்றும் 326 தெளியுமே நின் சிங்தை
32 தெளிய வழிகாட்டும்
7 தென்னவன் தீப்பினி 272 தென்னு தென்னுவென 191
தே 1 தேகம் விழுமுன் 141 தேகமே மெய்யென்று
»eo
... 284
பக்கம் 165 103
117 254
224
283
334 266
267 307 338 233
285 323
182
26 292 115 249
169 220 275
198
86 117 183 310
168 124

பாட்டு தேகாதிதனை தேங்காயி லிளநீர் Ο ΣΚΣ தேசகாலம் யாவையும் ob தேசம் புகழுஞ் சிவன் w
தேசம் புகழுந்திரு ops தேடாமல் தேடென்ரு to a தேடித் தேடித் pov தேடி நான்காணும் தேடிகின் திருவடியே தேடிவாடாதொண்டா (3g (Bs. Tñ um. (Bé apud தேர்முட்டிப்படி o தேரடியில எங்காளும் 4. தேரடியிற் சென்று way
தையலார் மையலிற்ருன் o O
தொண்டர் நாங்களே தொண்டு செய்வாருக்கு தொந்தோ மென்ருடும்
தோடுடைச் செவியனே A a தோளாமுத்தே
நகரத்துள்ளே Fasa நஞ்சணி நஞ்சை a de гъt-ti (Bie OO நட்டா ·· bഞ്ഞ് ഇ obes (5 LDé(ğ ΑΑΟ το நமச்சி வாயவே நாம்சொல்லும்
நமச்சி வாய வாழ்கவென நமச்சி வாயவே நான்மறை
கமனு 8 நபமிடமெல்லா w a w ந1 மிடமென்றுங் s நம்பன்
bi 3560bas bel960T (ur Qe p ur நயப்பார் நரிபோல் bora நரியை 8 நலமறிய oе நல்லசமயமிது 8 wo நல்ல தெய்வானை Wh நல்ல மருந்தொரு - - - நல்ல மலரெடுத்து opp நல்ல மழை - கல்லன m நல்லூரான் கிருபை.காம் as a நல்லூரான் கிருபைவேண்டும்-வேறெ. கல்லூரான் திருபபாதம் Op நல்லூரான் திருமுன்பு was
27
பக்கம் பாட்டு 215 தேரடியில் வீற்றிருப்பான் 115 தேவதேவனே என்றுந்
60 தேவரும் முனிவரும் 307 தேவர்கடம்
41 தேவர் சிறை
2 தேவர் பிரான், 271 தேவாதி தேவ 141 தேறிததெளிந்த
45 தேனுந்துகொன்றை 279 தேனுந்துசோலேத்
7 தேனுந்து முக்கணித்
81 தேனும் பாலினுமினிய 282 தேன் சொரியுஞ்
86
தை
90 தையல் வேட்டுச்
தொ
4. தொல்லாகா னிருவர்காணு 230 தொழுது வணங்கிடுவாய்
41 தொழுது வணங்கிநின் தோ 340 தோன்ருத்துணையை 184
b
212 நல்லூரான் திருவடியைப்பாடு 167 நல்லூரான் திருவடியை நான் 149 நல்லூரான் வீதியிற்போய் 250 கல்லூரில் செல்லப்பன் 155 நல்லூரில் தேரடியில் 306 நல்லூரில் வாசன் 293 நல்லுரைக் கும்பிட்டு 177 நல்லூர் ஆட்டக்காரா 315 நல்லூர்பதியிலே 58 நல்லூர் வாசனே
38 நடு லூர் வெளியிலே 277 நல்லோரி 277 fò sobombs 144 நல்லப்பதிக்கு
80 நல்லப் பதிக்கரசே
29 நல்& யில் வாசா
79 நவாகவமாய் 329 நவிலுமறை
16 நற்சிங்தை யெனும். நறுமலர் 86 நற்சிந்தை யெனும்.கல்லமுதம் 264 நனந்து
7 நன்மை
98 நன்மையுந் தீமையும் நாமல்ல 86 நன்மையும் தீமையும் நாடா 222 நனமையும் தீமையும் கங் 2O6 நன்றியை
91 நன்று தீதை
73 கன்று தீதென்று
95 நன்றென்றுக் தீதென்றும் 190 நன்றெனத் தீதெனத்
பக்கம்
329 252 251 153
183 321 292
134 142
43
83
183 223 193
340
255 113

Page 205
LTG நாங்கள் சிவமென் காசிதுணி
DETSATT & காடியொரு கருமம் is si mb|Tig,68LLum நாடுவார் நாதன் நானும் காமஞ் நமந்தி நாமறியோமெனச் சொலு நாமறியோ மெனும் நாமறியோ மெனும் நல்லமந்திரம் நாமறியோ மென்னும் நல்வாக்கு நாமறியோ மெனும் கறியதிரு நாமறியோ மென்ற கலந்திகழ் - நாமறியோ மென்று கல்லூரிற்சொன்ன . நாமறியோ மென்று 8 8 நாமறியோ மென்று சொன்னுன் நாமறியோ மென்று நகைத்தென்னே. நாமறியோ மென்று நல்லூரிற்
கிகரொ ருவரும் நிஜமா மான்மா கிததியம கித்திரையை நித்தியர்
நிலனுகிக்
நில்லடா நில்லன் பொடு நினைந்து கில்லாத காயத்தை கில்லாத நீர் நில்லாத செல்வத்தை நிற்பனவும்
:
நீக்கமற்று நீங்காத நீங்காது
நீதிகுருபரன் &
திே அநீதியென்னும் நீதி நெறியைச் நீயருளாப்டிற் கீயும் நானும் நீயே நான் என்றுநேர் நீயே நான் என்று நீயே கான் என்னும் நீயே நீயாயிருக்கப் நீராய் கெருப்பாய் ரோனுய் நிலனுணுய் ருேங் காலும்
KK
நா LIä3úb 311 152 279 346 141 117 158 251 47 92 39 S2 21. 163 161 293 288 82 276 219 270
259 332 278 162 238. 197 298
235 30
90 146
342 113 333 240 248 80 338 58 63 87 2 269 27 12S 2O1
uTB நாமறியோ மென்று முன்னுள் நாமறியோம என்ற நல்லதிருவாக்கை . நாமாாககுங் was நமோர்குடியுமல்லேன் நாமார்க்கும் ஆளல்லேம் நாமுமே நாமாக நாமும் காமாக நாமே நாமென்றுரைத்தான் - a a நாமே நாமென்றுசொல்லிச் re. nbrüd büd blid 66 காவலரும் நாவுக் நாற்றிசையுஞ் நான் உன்ன நான படும் நானுரென் கானென்னும் நானே நீ நன்மதி நானேநீ நீயோநான் நானென {B୩ (କ୍ରୋଥି) ଓ
Tâb(8urû
ßoT é a rấgrăso
ißጿ0] õÖ [filgulgDU நினைககு மடியாரை நீயே 8 நினைககு மடியார் கெஞ்சத்துள்ளே கினைத்தபடி AO ARO V t6]3%All their • ** به நினைவில் நினைவாகி
நினவுக்கு நிஜனவாய்
கின்னு வார்
நீர்நிலம் தீகாற்று
ក៏ពុំ ឯសb ឆ្នាំ
நீல கண்டன
நீவா தா
நீள நினைக்கும்
நீறணி நின்மலா - நீறணிந்த 8 நீறணிமேனியினும்
நீறணியான் < Ad• «O நீரு திருமேனி கீறாமேனி as கீறு பூசிய As a 0 நீறு மணியான்
பக்கம்
186 329 184 330 346 153 38 3. 80 326 43 43 117 71 43 124 29 275 275 330 167
197 164 306 218 201 284. 323 194 158 294 184
256 235
32 334 111 201
25 145 151 329 303 135
3. 248

UT'09
நுண்ணிடை 48 r.
நூதன
நூலறி
கெஞ்சகம் -8 கெஞ்சுருகும்
நேசயோகத்தார் asp
கைந்து
நொந்தவர் a Neae
பகருவார் நெஞ்சம்
பக்குவகால பக்குவாய்ப் a பக்தர்கள் எல்லாம் 4 பக்கிசெய்து பந்தத்தை d பக்திசெய் யோகசுவாமி 0.
uங்கில் மங்கையை பச்சை நிறப்புற்றரை பச்சைப் பசுங்கிளியே பச்சை மாமயிலோடு பச்சைப்புரவி பஞ்சப்புலன்களுங் பஞ்சப் லன்வழி - பஞ்சம் படை வந்தாலும் a y பஞ்சம் படை வந்த LJL-&plaus 5 guð b பட்டது பட்டேற்று பட்டால் பாவாடை பட்டுக்குடைபிடித்து பணித8லக் கொள்ளல் - பணிபவர் கெஞ்சினுனே meAO பண்ணவன் பண்ணே பண்ணிற் - பண்டையனும் மாலுந்தேடிப் - பண்டையனும் மாலுமடி பண்டு செய்த வல்வினை நோய் பண்டு செய்த வல்வினையால் பண்டுசெய் வல்விண்நோய் பண்டு செய்வின யெல்லாம் பறந்து பண்டு செய்வினை யெல்லாம் பரிந்தன. பண்டு மின்றம் என்றுமுள்ள பரனடி , பண்டு மின்றுமென்றும் பண்டுமின்றும் உள்ள பதமலர் போற்று
8 v 8
பாசத்தால் வெந்து நொந்து பாடல்பத்தும் படிப்போர்கள் . . . பாடவறியான் பலகலையுந் தானறியான்
xxi
டு
பக்கம்
158
T
158 169
நெ
167
284
நே
1.59
நை
252
நொ
159
50 313 313 120 23 24 25 342 83 137 342 351 186 69 94 250 316 155 286 206 139 144 231 316 297 322 286 254 4. 169 306 38 264 85
329 41 222
பாட்டு
நூற் பெர்ருள்
@Bທູ (ມ நெற்றி
நேசத்தால் oo
கையும்
பதின்மூன்று பாடல்கள் பத்திககு மடியவர்
பத்தி செய்யும் es •
பத்தியுடன் பத்துப்பாட்டா மிவற்றைக் பத்துப்பாட்டும் படிப்பவர் பத்துப் பாட்டுப்படிப்போகும் பத்தும் காலும் பத்தும் படிப்போர்க்குப் பாக்கியமுஞ் பத்தும் படிப்போர்கள் --- பத்தும் படிப்போர்கள் கேட்போர்கள் . பத்மாசனத்தில் 4 பந்தஞ்செய் பாசமே - பந்தமும் வீடும் -- பந்தமெனும் பந்தி பக்தியாயிருந்து
பயமுண்டோ
U06junigun fids o 4 பரவு வார்க்கருளுவாய் - a பரிந்தன்பர் பாதத்தில் பரிந்து பணியாற்றி e பருவத்தில் மழை a- - -
6) LU606us iš
பல்வினே போக்கி
பவ நெறிகடக்கப்
பவம் நீங்கும்
பவவருடத்துப்
பவவருடம் மார்கழியிற் பழம் பாக்கு வெற்றிலே பற்றற்ருர் பற்றும் பரமகுரு பற்றற்றர் பற்றும் பரமபொரு பற்றினுற் பிறந்திறந்து டன்னுட் பழக்கத்தினுட் பன்னிரண்டு காற்
பாடி மகிழும் சிவபாக்கியம் UT gtUTigtj USOoflub பாடிவாடா தொண்டா o
a
233
46 158
202
159
279

Page 206
Luar LGB பாதாரவிந்தத்தைக் காணுமற் ܝ ܝ பாதிச் சாமததின் பாதி மதிசூடிப் பவளம்போல் பாம்பும் புலியும் பாமர மக்கட் பணிசெயல் பாரவன் விண்ணவன் காண் பாரறியார் இவருடையதன்மை பாராதி பூதமெல்லாம் urg" (Bur. G6.6ö73öT பாாம் விண்ணுமாகி நிற்பது பாசையனே கடைக்கண்ணுல் பாரையனே மனம் பாரொடு பூதங்களாகிப் பரிதிமதி பாரொடு விண்ணுய்ப் பரந்தான் பார்க்கப் பார்க்க பார்க்கு மிடமெங்குஞ்
பார்ப்பதெல்லாஞ்சிவ
Słgpayäfia v 9:35 (dsGoTeirg Lumok pas பித்தனென்றவர் பிறவி · sa பித்தனென்றும் பேசுவார்
பித்தனெனப் பலபேரும் an A பிராண னபானனுங் காப்பாம் waபிருதுவியப்புத் பிறப்பிறப்பற்ற பெருமான் பிறுப் பிறப்பில்லாத
புகல்வதற் கொன்று புத்தியை நீநாட்டாதே புத்தியை ஒன்றிலும் காட்டாதே புலன்வழிச் செல்லும் பொல்லாப் புல%னவென்ற  ெரியோர்களுளம் புள்ளிக் கலாப மயிலேறும்
பூக்கைகொண்டு போற்றடா பூக்கைகொண்டு போற்றுமடியார் பூதங்கள் ஐந்தான
பூதங்களில்&லப் பொறிபுல பூதங்களைந்தாகிப்
பெண்ணுமானு மில்லையடா vo பெரிதானுய் சிறிதானுய் · · · பெரியதிற் பெரியது waw
இபசரிய சிர்ச்சனகன் பேசாத மந்திரத்தின் பெருமை Yoo பேணும் பிறபபிறப்பில்ல யென்பார் .
36
XXii
பக்கம்
113 54 128 234 206 330 282 321 86 244 46 46 151 145 24 2O7
194
288 59 31 329 82 351 285 166
133 224 258 141 38
85
342 132 4.
296
126
sou
247 125 99
பே 103
12 251
Lumu" (8 LuTuTfuULe?ST பாலகற்குப் பாற்கடலைப்பாரி பாலன் மார்க்கண்டன் பாலனுக்காகப் பாலும் பழமுக் பாலக்குடித்துப் பாவணி செய்துபாடு பாவம்போம் பொல்லாப் Luñ any sa)ñf (5 fT6QJ6)ñi பாவலர் நாவலர்கள்
பாவலர் நாவலர் பணியும் நல்லூரில்
பாவனை யொன்று டாவிகளறியார் பாவிகதும் பாட்டிசைத்துங் பாவியென்று uTpG Fuqua Lor uLuT பாற்கடல் தன்ன
வீறப்பிறப்பில்லாப். யெங்கள்
பிறப்பிறப்பில்லாப் பெருமானே நீ
பிறவார்கள் இறவார்கள் பிறியென்றன் பிறியாமற் பின்ன ரெனக்குப் பின்னுமுன்னு மில்லே பின்னைப் பிறப்பிறப் பின்னேப் பொய் பின்னே யுனக்குத்துணை
புறத்தில*லபாதே புனலொழுகப் புன்னகையாலே புன்சொல் புன்னுனிமேல் நீர்போல் புன்னேறி செலும்
பூதம் நீ பொறியும் பூப்பொலியுங் பூவின் மனம்போற் பூவும் மணமும் போலப்
பெரியவன் சிறியவனென்பது பெருமான்காண்
பெருமை சிறுமையில்லாப்
பேதங்களெல்லா மாயினும் பேராயிர முடையான்
296
255
62 217 110 346
75.
203
275 134 165 208
16S 144 100
167 150

ur.09 பொங்கல் பூசை பொங்கிவரும் அமிர்தத்தை பொங்கிவரும் காமமே பொங்கும் காமக்குரோத பொய்யை மெய்யென பொல்லாப் பிங்கில்லையென்று பொல்லாப் புழுமலியும் பொழில் வாழும் பொறியஞ்சும் வென்றவர்தம் பொறியைந்தும் வென்றவர் பொறிவழிச்செல்லும் பொல்லா பொறிவழிபோம் பொறிவழிபோய் பொறிவழிப் புகுத்துதே பொறிவழிமனத்தை பொறிவழி மனம் போயல் பொறிவழியினிற் செல்லாதே பொறிவழியே பொறிவழியே போய்ப்புகுந்து பொறிவழிபோயலயாமல் பொறிவழியே போயலயும்
போக்கும் வரவும் இல்லாப்புனிதன் போக்கும் வரவுமுள்னானில்லான் போக்குவரவில்லாத
BLJOT óGolest G8 QU6qfiio?bo போகபோக்கியம் எல்லாம் போதுகொண்டு போற்றேன் போதுமளவும்
diis 6TT as roaTas L0äl č56T aš0 LDTsor மங்களம் ஜெய மங்களம் 1 மங்களம் ஜெய மங்களம் 11 L) bi 36ITLDI és L) மங்களமான வார்த்தை மங்குவார்
udělspasuoTř
மங்கையொரு மடைதிறந்தாற் மட்டிலாதது
மணிவாசகங்
மண்டலங்கள் மண்டலம் முழுவதும் மண்டலம் மூன்றும்
цовбот (В மண்ணுகிய பூதமைந்தும் மண்ணுசை பெண்ணுசை
xxiii
GUIT
பக்கம் uT'GB ιμά δύο 265 பொறிவாயிலந்தவித்தான் ... 109 95 பொறிவென்றர் தாமும் 103 95 பொறுமையுமடக்கமும் 166 249 பொறுமையைப் பறங்காப்பது ... 12 138 பொன்போல்மேனியர் ... 160 239 பொன்போலும் திருமேனி உடையார் . 143 90 பொன்போலும்-மேனியனே ... 33 31 பொன்னுணுய் மணியானுய் 125 316 போன்னுசை பெண்ணுசை ... 20 30 பொன்னுசை முண்ணுசை அகப்பேய் . 254 165 பொன்னுசை மண்ணுசை பெண்ணுசையை 294 60 பொன்னுர் மேனி 30 91 பொன்னுருடலிற் பொடியைப் பூசிப் 32 317 பொன்னிறத்தது சிவ சிவ சிவ 348 61 பொன்னின் குடத்துக்கெவர் 154 202 பொன்னும் பொருளும் ... 101 258 பொன்னும் பொருளும் புகழுந்தருவான். 201 13 பொன்னே மணியே ... 233 124 பொன்னே நீ பொருளே 275 235 பொன்னே யன்றி 9
19
(3 it
20 போமே போம்வின 80 319 போம்போம் வினையென்று 326 13 போவதும் வருவதுமில்லை யென்பார் . 251 330 போற்றி யென்வாழ் முதலா
168 போற்றி யொரு பெரில்லாப்பு ... 64 192 போன காலத்தை யெண்ணிப் 203 19 போன நாட் கிரங்கும் 165
O
95 மண்ணுசை வையாதே .264 م ه 53 மணணுதி பூதமெல்லாம் .. 30Ꮞ 352 மண்ணுணுய் விண்ணுணுய் 125 353 மணனினுசை 16 265 மண்ணையும் விண்ணையும் 52 249 மண்ணுெடு விண்ணும் 101. 265 மண்தீகால் 143 265 மண்புகுந்த - 33 39 மண்முதற் ... 349 95 மதிககு மதி ... 278 348 மதிக்கு மதியீ ... 62 226 மதிககும் மதி 195 سم 154 மதிதவழ் சடையாய் ... 132 169 மதியிலேரவி 204 ۔۔۔ 162 மதியும் கதியும் ... 20
4. மதியு மிரவியும் 320 150 மத்த மாமலர் ... 32 164 மததம் மதியொடு ... 348
237

Page 207
பாட்டு மத்தம் மதிதடி மத்தர் பேயர் மந்திர தந்திர மானுன் o மந்திர தந்திரமும் M osgop மந்திரமாய்த தந்திரமாய் மந்திரமுங் தந்திரமும் ஆளுர் மந்திரமுந் தந்திரமும் வேண்டா மரகத மயின் மரத்திலே மல மருந்து கண்டேனே மருமத்தில் மருமமறிந்தவர்கள் மருவாருங் மலர் மிசை யோனும் மலைத்து கிணற மலமேலேறி மழை யென்னும் Op.
toTov opp மாசில்லா மாதவர் மாசில் மாதவர் மனத்திற் es மாண்டார் மனத்தானே மாண்டு போனவர் மாண்புடனே a O மாதம் மும்முறை o மாதிரி யொன்றுஞ் மாதுமை பங்க up to மாமதுரைத் - - LOTLDusio
மாமனுய் வந்து
LOTULUusisoofiu a6o
முக்குன மாயைக் முக்குறுணிப் a முச்சந்திக் குப்பையிலே முச்சந்திக் குப்பை முடிந்தமுடிபென்னும் முனிவன் முடிந்த முடிபென்ருன் முன்னும் பின்னு முடிந்த முடிபென்று முன்னின்று முடிந்த முடின்ெறு முன்னுளிற் முடிந்த முடிபெணறு முன்னுளில் ஆசான் முடியப் பிறப்பிறப்பைக்
ههولى F5-لا-الول முண்டக மலர்ததாள் os ab M முததமிழ்ச் சங்கம் ” ܚ - முதத்திக்கு வழியை u upan முத்திக்கு வழிகாட்டும் a
XXίν
பக்கம் 303 178 240 288 126 143 162 66 123 283
210
136 250 190 110
74 110
89
313
33
342 293 276 219 161
329 29
286 69 206
330
urt'(B பக்கம் மறந்தாலும் பிறந்தாலும் ... 153 மறவாதே யெெைறன்றும் ... 164 மறவாமல் போற்றும் ... 112 மனச் சாட்சி - 285 மனத்தில் வஞ்சகம் 32 மன சுதுக்கண் 109 மனத்துயரம் மாற்ற 79 மனத்துயரைநீக்க ... 284 மனமாட்சி உள்ளார் ... 285 மனமாட்சி வேணுமென்று 285 மனவாசகங்கடந்த ... 63 மன்னவகுகி ... 44 மன்னுதவ ... 101 மன்னுயிரெல்லாம் ... 205 மன்று பறித் 323 محیه மன்றுள்ளேயாடு 05
மாயும் மனிதரை 244 மாரியுலகை 101 மாருட்ட ... 329 tDafléaÉ; ... 241 மார்க்கண்டற்காக ... 283 மார்க்கத்தை ... 342 மார்க்க நன்நெறி ... 216 மாலயனும் 124 மாறிப்புலன் 235 மாறிப்பொறிவழியோகா 236 மாறிப் பொறிவழிபோய் 81 மாற்றறியாத 111 மானுயி மானம் ... 224
முத்திக்கு வித்தான ... 33 முத்திக்கு வித்தை ... 238 முத்திக்கு வித்தை மூனயிலிட்டுச் 162 மு போதுங் 312 முயல முபல 284 முருகா வோ 76 முழுது மூண்மையென 39 முழுது முண்மை ஆச்சுதெடி 154 முழுது முண்மையென்று முனிவனவன். 161 முழுது முண்மையென்று முன்னுள் 223 முழுவது முண்மையென்று முகமலர்ந் . 321 முழுவது முண்மை யெனமுன் ... 292 முழுதும் முண்மையென்ற 63 முழுவது உண்மைஎன மொழிந்தான் 163 முழுவதும் உண்மையென்று 200

UFC முற்ருத (UዎይD£D] முனியே முனைத்து வரும்
முனை ததுவரும் மூர்க்ககுனமெல்லாம் .
முனைந்துநிற்கும்
மூண்ட வல்வின மூதாதைமார் மூர்க்க குணமில்லே மூர்க்கமான குணம்போக்கும் மூலநிலத்தின்
மெத்தக்கதை பேசாதே மெய்யரும்பி விதிர்
மொழிக்கு கற்றுனே
மோனத்தாழுதல்
ususti
யாவரும் சமமென
s
வஞ்சம்
வஞ்சியர் வஞ்சகம் வஞ்சநெஞ்சினர் வடிவ மில்லாதவனே வடிவுசேர் 6.J.g.6460L. வடியார் சூலம் வணக்கினுன்மா வணக்கம்
வண்டு வண்டார்க்குங்
ങ്ങuങ്ങ് வந்தது போனது வந்திபபார்
auTösesso QTFONJoç. வாசம்பொருந்திய வாசித்துக் வாசியோகங் தேர் வாணிச்சிககாக வாதம் பேசி DMT uuKgÚ வாய்மையும்
வால்
DU
XXV.
பக்கம் 235 168
323
294 284
27 .
UTB முன்செய்த முன்னில் முன்னேவின்வந்து மூண்டுதே முன்னேவினயென்றும் நினையாதே முன்னைவினையெல்லாமோடு
மூலயிலிருந்து Sypavo uLuar மூவர்களும் மூன்று மொன்ருன மூன்று மொன்ருய்
மெய்யுரைப்போம்
வந்துன்னடி
வருக முருக
வருத்தமறற
வருவதும்
வருவன வருவாரைப் போவாரை ஆசான் வருவாரைப் வருவார் வருவார் வலமிடமாய்ச் செல்கின்ற வலமிடமாய் ஓடுகின்ற வலமிடமோடும் வாசியை வலப்பட்டமான் வல்லாரும் வழிகள் இரண்டையும் வழுத்துதறகு ஒன்றுமில்ல வறுமைப்பிணிக்கு
agresíduuT
வாழிகுருநாதன் su ji daете штiadi வாழுவோமென்றுவென்று வாழ்க சிவதொண்டன் ഖമ ീഖങ്ങ
RTb
auterih IT RNGR ANaval
asTar
uassà
16 29 154 255 344
298
283 161
346
326
101 16S 275

Page 208
urruC) 63> விஞ்சுபிறப் விடத்தை விடியுமூன் விடையேறு விட்டகுறை விண்ணவர் விண்ணுணம் விண்ணும் மண்ணும் eßsöI00(BLff60 விண்ணுட்டாரும் வித்தகம் நீபேசாதே வித்தாரப் பேச்சையும் வித்தாரமாகக் கதை வித்தார விடையேறி
வீடுசேர்வதில் வீடுகமக் 66 Turrar வீதிக்கு வீதி
வெட்டவெளியில் வெம்பகை வெய்யபுவிப்பார்வை வெய்யகாமம்
வெளியிலேயொளி
வேடமொன்றும்
வேடிக்கை
வேணியிற் வேண்டில் வேண்டாமை வேண்டுதல் வேண்டாமையில்லான் வேண்டுதல் வேண்டாமை யில்லா வேண்டுவார் வினே வேதகீதத்தன்
வேதசாத்திரம் வேத மந்திரம் சொல்லும் வேதியர் வேதமறியாத பொருள்
வையகம்
sa
崇钴象
Χχνί
வி
பக்கம் 313
22 38 291 128 286 163 20 154 247 132 224 58 278 46
வீ
31 60 259
71
வெ
259 292 2. 166 16
வே
223 211 233
196 102 31 136 10 151 40
269
பாட்டு வியக்கவொன்று வியந்து நின்ற விரிந்த வறிவுடைய விருத்தணுய்ப் விரும்புவார் » விருப்பு வெறுப்பின விருப்பும் வெறுப்பும் விருப்பு வெறுப்பை வேரற விரை மலரை விரைவாய் கடந்து விளையுமிச்சையெல்லாம் விற்றுாண் வினைப்பகையை
YA
வி%னப்பகையை வெல்வதற்குமார்க்க .
வினைப்பகை வெல்ல
േന്ദ്രബ வீம்பிடும்பை அகங்காரம் வீரமாமயில்
வெள்விடைமேல்  ெள்ளம் பள்ளத்தை வெறும் வீணன் வெற்றிதரும்
வேதமோ டாகம மறியா வேதம் வகுத்தான வேதாந்த சித்தாந்தம் வேருக வேதாந்த சித்தாந்தம் கற்ற வேதாந்த சித்தாந்தம் சமமென்று வேதாந்தம்பேசி வேதோபதேச வேலனக் கொண்டாடுவோம் வேலைத்துக்கி வேள்படச் செய்த வேருய் உடனுய்