கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணத் தமிழரசர்

Page 1
I
|
*
! 帽* *) %%;z- ŹŹ 途-|- 历鹦)-
%&&
--------=====FFFFFFF): F== No
“T磷静
Nosso) Noae, 。Źā
回%) s- .ミ**||# 鹦鹉密s.参
邮W川—目坛
*호
琵遍海
襲Est
į
|||||Ē_ 娜罹 歴
-월 �|-メ*ae *■
H
!
==F =-
陈)比 明)
* **** シミ残 });* Ź,ooo,)
シー
|-
 
 
 
 
 
 
 
 
 
 

IIIIIIIIIIIIII||I||I||I||I||I||I||I||I|| .
த்தரணி
E
盐

Page 2


Page 3

யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும்
ஆக்கியோன்
புலவர் பண்டிதர் பொ. ஜெகந்நாதன்
θειιουδουντ
பதிப்புரிமை ஆசிரியர்க்கே
Gamu :
யாழ். இலக்கிய வட்டம்
யாழ்ப்பாணம் : இலங்கை

Page 4
இந்நூல் எனது அன்பு மனைவி, ஆசிரியை திருமதி ஜெ. முத்துப்பிள்ளை அவர்களுக்கு
gFIdt Tib
1987 - 08 - 07
யாழ்ப்பாணம்.
இலங்கை

Bibliographical
Title of the book:
Editor:
Publiser:
Publication No.
Language:
Size of the hook
Price:
Printers:
Coyer Printers:
Artist:
Subject:
Firsi Edition:
iii
Đata
Yarlpana Tha milarasar Varalarum Kaalamum
P. JEGANATHAN
Jaffna Literary Circle, Jaffna,
39
Tamil
42 X 26 cm.
30/-
Aseervatham Press, Jaffna.
Vijeya Printers, Jaffna.
V. Kanagalingam (V. K.)
History
August 1987.
el 2su et. 30-00

Page 5
i v
“யாழ்ப்பாணத் தமிழரசர் தமிழரசர் வரலாறும் காலமும்”
வாழ்த்துரை
பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் துணவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
இலங்கையின் வடபகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் உருவாகி வந்த தமிழ்ச் சமுதாயம் ஒரு காலகட்டத்திலே தனித்துவம் வாய்ந்த சமுதாய நிறுவனங்களையும் அரசியல் அமைப்புக்களையும் பண்பாட்டு நெறிகளையும் வகுத்தும் கொண்டது. அதுவே ஆரியச் சக்கரவர்த்தி கள் என்ற யாழ்ப்பாணத்தரசர் காலமாகும். அம்மன்னர்கள் பல நூற்ருண்டுகளாக யாழ்ப்பாணக் குடாநாட்டையும், மன்னர் மாதோட்டம் போன்ற பகுதிகளையும் ஆண்டு வந்தனர். திருகோண மலே, அடங்காப்பற்று ஆகிய பகுதிகளிலுள்ள வன்னிமைகள் மேலும் ஆரியச் சக்கரவர்த்திகள் மேலாதிக்கம் செலுத்தினர். அவர்கள் ஆட்சி பதினேழாம் நூற்முண்டு வரை நிலைபெற்றது.
வையாபாடல், கைலாயமாலே, கோணேசர் கல்வெட்டு முதலிய வரலாற்று நூல்கள் அவர்களின் காலத்தவை. இவற்றுட் கைலாய மாலை என்பது ஆரியச் சக்கரவர்த்திகள் நல்லூரில் இராசதானி அமைத்து யாழ்ப்பாண நாட்டில் அரசாட்சி ஏற்படுத்தியமை பற்றிக் கூறும் சிறப்புடையது. அவர்களின் ஆட்சியில் வன்னி நாட்டின் மீது ஏற்பட்ட படையெடுப்புக்கள், குடியேற்றங்கள், அரசியல் மாற்றங்கள் பற்றிக் கூறுவதே வையா என்ற நூலாகும். இந்நூல்கள் நன்கு ஆராயப்பட்டு விரிவான வரலாற்றுக் குறிப்புக்களுடன் புதிதாகப் பதிப்பிக்கப்படல் வேண்டும். இவற்றை ஆதாரமாகக் கொண்டே பதினெட்டாம் நூற்றண்டில் மயில்வாகனம் புலவர் யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலை எழுதினர்.
யாழ்ப்பயண வரலாறு பற்றிப் பல நூல்கள் சென்ற நூற் ருண்டிலிருந்து எழுதப்பட்டு வந்துள்ளன. இவற்றிலே பெரும் HLHCTtCTT TT LLLTTTLGLLCCCTTS S LTLtlCLLGLLS S LTTTTtTTS TLLLLLT என்பவற்றையே ஆதாரங்களாகக் கொண்டுள்ளன. அண்மைக் காலங்களில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற ஆராய்ச்சி களின் பயருக ஆரியச் சக்கரவர்த்திகள். வன்னிமைகள், வேளைக்

у
காரப் படைகள், வணிக நகரங்கள், பெருங்கற் பண்பாடு போன்ற விடயங்கள் பற்றி ஆக்கபூர்வமான நூல்களும் கட்டுரைகளும் வெளி வந்துள்ளன. இவற்றிலே பெரும்பாலானவை ஆங்கிலத்திலுள்ளன. இலங்கைத் தமிழ்ச் சாசனவியவில் ஏற்பட்ட முன்னேற்றம் வரலாற்று ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் துணையாக அமைந்துள்ளது. இலங்கைத் தமிழரின் வரலாற்றை முழுமையாகவும் விரிவாகவும் தமிழில் எழுதி வெளியிட வேண்டியது இக்கால கட்டத்திலே மிக அவசியமான தேவையாகும். இப்பொறுப்பை நிறைவேற்றும் தகைமையும் பொறுப்பும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்ததாகும்.
வரலாற்று நூல்கள் பல்வேறு மட்டங்களிலே எழுதப்படுகின் றன. பல்கலேக்கழக மட்டத்து ஆராய்ச்சிகளின் பயணுக எழுதப் படுபவை பெரும்பாலும் வித்துவத் தன்மை பொருந்தியவை. பொது மக்கள் மத்தியிலே ஆக்கபூர்வமான சிந்தனைகளேத் தூண்ட வல்லது ஒரு தேசத்தின் வரலாறு. அதைப் பொதுமக்களின் கவனத்தைப் பெறும் வகையிலும் எழுதுதல் வேண்டும். நாடகம், நாவல் சிறு கதை என்ற இலக்கிய வடிவங்கள் சிலவும் வரலாற்று நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படுகின்றன. வரலாற்றுச் சார்புடைய பூதத்தம்பி விலாசம், சங்கிலியன் நாடகம் என்ற நாடகங்கள் எமது மக்களின் வரலாற்றுணர்வுகளைத் தூண்ட வல்லனவாய் விளங்கி வருகின்றன.
பொ. ஜெகந்நாதன் அவர்களின் "யாழ்ப்பாணத்தரசர் வர லாறும் காலமும்' என்ற நூல் காலத்தின் தேவைக்கேற்ப எழுந்த தொன்ருகும். இலங்கைத் தமிழரின் வரலாற்றுச் சிறப்பினைப் பற்றிய சிந்தனைகளைப் பொதுமக்களிடையே ஏற்படுத்த வல்லதொன்ருகும், யாழ்ப்பாண வரலாற்றில் அவர் கொண்டுள்ள ஆர்வமும் ஈடுபாடும் பாராட்டிற்குரியனவாகும்.
சு. வித்தியானந்தன்
ഇ. 6 - 87

Page 6
vi
யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும்
எழுதியவர்
புலவர் பண்டிதர் பொ. ஜெகந்நாதன்
மதிப்புரை
இலங்கைத் தமிழர் வரலாறு பூரணமாக வெளிவர இன்னும் பல ஆண்டுகள் செல்லக்கூடும். இலங்கைத் தமிழருள் ஒரு சாராரான யாழ்ப்பாணத் தமிழரின் வரலாறு ஓரளவு துலக்கம் பெற்றுள்ளது. இங்குகூட, பல விடயங்கள் இன்னும் தெளிவுபெற வேண்டியுள்ளன. இந்தப் பணியிலேயே புலவர் பண்டிதர் ஜெகதாதன் ஈடுபட்டுள்ளார்.
கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை என்றும் மூலா தாரங்களை வரலாற்ரூசிரியர்கள் தகுந்த முறையிலே பயன்படுத்த வில்லை என்பது ஜெகநாதனுடைய வாதம் . இவர் பல புதிய கருத் துக்களை த் துணிந்து முன்வைத்துள்ளார். இவற்றுட் சில, எதிர்கால வரலாற்றுய்வைத் தூண்டக்கூடியன. செங்கடக நகர் பற்றிய கருத்து அத்தகையது.
எண்பதாவது வயதை அண்மிக் கொண்டிருக்கும் நிலேயிலும் வரலாற்ருய்விலே இவர் மிகுந்த ஆர்வமுள்ளவராகக் காணப்படுகிறார். வரலாற்றுண்மைகளைத் தேடுவதிலும் தமக்கு உண்மைகளாகப் படுவன வற்றை வலியுறுத்துவதிலும் இவருடைய கடும் முயற்சி போற்றத் தகுந்தது.
இந்நூலிலே அச்சுப்பிழைகள் பல இடம்பெற்றுள்ளமையால், நீண்ட பிழை - திருந்தம் பகுதி இடம்பெறுகிறது. தென்னுசிய வரலாற்றுப் பின்னணியிலே, நூலாசியரின் கருந்துகளுட் சில மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளன. இந்த நூலின் இரண்டாவது பதிப்பு திருத்தங்களோடு வெளிவருமாளுல், இந்நூல் வாழ்ப்பாண வரலாற் முய்வுகளிலே போற்றப்படக்கூடிய ஒர் இடத்தைப்பெறுமென்பதில் ஐயமில்லை.
பேராசியர் ஆ. வேலுப்பிள்ளை,
தமிழ்த்துறைத் தல்வர், 37 - 1987 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் .

vll
- மதிப்புரை - யாழ் - இலக்கிய வட்டம் அளித்தது
அறிஞர் பொ. செகந்நாதன் அவர்களால் ஆக்கப்பட்டு, 1944ஆம் ஆண்டு தென்னிந்தியப் பதிப்பகம் ஒன்றினல் அச்சிட்டு வெளியிடப்பட்ட ‘அடியார்க்கு நல்லார் வரலாற்று ஆராய்ச்சி' என்ற ஆய்வு நூலினைப் படித்தபோது எனக்கு வியப்பும், தம் தாட்ட வர் ஒருவர் ஆக்கிய நூல்' என்பதால் பெருமிதமும் ஏற்பட்டன. படித்து முடித்தபோது நிச்சயமாக இந்நூல் தத்துவக் கலாநிதிப் பட்டத்திற்கு விதத்துரைக்கத்தக்க ஆராய்வு நூல் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. இன்று அதே அறிஞரின் “யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும்' என்ற இத் நூலினப் படித்தபோது, என் தொடக்கத்து எண்ணம் மீண்டும் வலுப்பெறுவதை உணர் கிறேன்.
நமது நாட்டில் பிறத்து வளர்ந்து இலக்கிய ஆக்கங்கள் மூலம் தமிழைப் பெருமைப்படுத்தும் அறிஞர்கள் பலரை நாம் சரிவரச் கணிக்கவில்லை. மதிக்கவில்லை. நாற்பத்திமூன்று வருடங்களுக்கு முன் ஆராய்ச்சி நூல் ஒன்றினை எழுதி வெளியிட்ட அறிஞர் பெருமகன் குறித்து நாம் மறந்துவிட்டோம்.
புலவர் செகந்நாதன் அவர்களுக்கு இன்று எழுபத்தொன்பது வயதாகிறது. 1908-ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10-ஆம் திகதி வேலணையில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை வேலணை அமெரிக்க மிசன் பாடசாலையிலும், சரஸ்வதி வித்தியாசாலையிலும் பெற்ருரர். பின்னர் திருநெல்வேலி ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்ருர், 1933-ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பாடசாலைகளிலும் ஆசிரியராகக் கடமையாற்றிஞர். வேலணை சரஸ்வதி வித்தியாசாலை, இடைக்காடு புவனேஸ்வரி வித் தியாசாலை, கல்வியங்காடு செங்குத்தாக் கல்லூரி, யாழ்ப்பாணம் சேனியதெருப் பாடசாலை, தயிஞதிவுத் தமிழ்க் கலவன் பாட சால் எனப் பல பாடசாலைகள் இந்த அறிஞரின் கற்பித்தலால் சிறப்புப் பெற்றன.
செகந்தாதன் அவர்கள் தனது பதினெட்டாவது வயதில் கவிதைகள் ஆக்கத் தொடங்கிஞர். ரட்டில் இடம் பெழுத, அச்சு வாகனமேருத கவிதைகள் பல நூறு. வேலணைப் பேருங்குளம் முத்துமாரியம்மன் மீது இவர் பல பதிகங்களேப் பாடியுள்ளார்.

Page 7
Wii
அவை அச்சிலுள்ளன. செகந்நாதனின் கவிதைகளைக் கேட்ட, படித்த வேலாயூர் மக்கள் அவருக்குப் புலவர் என்ற கெளரவத்தை அளித் தார்கள்.
புலவர் செகந்நாதனின் இலக்கியப் பணிகளில் தலையாயது என அவர் ஆக்கிய "அடியார்க்கு நல்லார் வரலாற்று ஆராய்ச்சி" நூலினக் குறிப்பிடலாம். சிலப்பதிகாரத்திற்கு முதன் முதல் உரை யெழுதிய அடியார்க்கு நல்லாரும் இலங்கையில் அமைச்சராகவிருந்த அடியார்க்கு நல்லாரும் ஒருவரேயென செகந்நாதன் அவர்கள் இந்த ஆராய்ச்சி நூலில் நிறுவியிருக்கிருர், "இம் முடிவு புதுமையேயாயினும் தக்க சான்றுகளோடு மாறு கொள்ளாதவரையில் உறுதியுடைய தென்பதில் இழுக்கில்லேயெனலாம். இந்நிஃலயில் இவ்வாசிரியரின் அறிவும் ஆற்றலும் ஊக்கமும் உழைப்பும் பாராட்டிற்குரியா" என செந்தமிழ்ப் பத்திரிகையில் மதுரைத் தமிழ்ச் சங்கம் மதிப்புரை எழுதியிருக்கின்றது.
"இந்நூல் புதுவது கிளக்கும் ஓர் ஆராய்ச்சி நூலாகும், முத்தமிழ்க் கருவூலமாகிய சிலப்பதிகாரத்திற்கு உரைகண்ட அடி யார்க்கு நல்லாரது சரித்திர சம்பந்தமாக இதுகாறும் தமிழுலகம் அறியாத சில மூக்கிய செய்திகன் இந் நூல் தக்க ஆதாரங்காட்டி விளக்குகின்றது" என அறிஞர் க. நடேசபிள்ளை மதிப்புரை தத் துள்ளார்." இந் நூல் தமிழுலகிற்கு ஓர் அரிய விருந்தாகும். இந் நூலிலிருந்து செகந்நாதனுடைய பொறுமையான ஆராய்ச்சிவன்மை யும் நுண்மதியும் தெரிசின்றது" என மகாவித்துவான் பிரம்மg சி. கணேசையர் பாராட்டியுள்னமையொன்றே இந்நூலின் சிறப்பிற் துப் போதுமான சான்து. இந் நூல் இதுவரை காலமும் ஈழத்தில் வெளிவந்த சிறந்த ஆய்வு நூல்களிலொன்று சான இலங்கை இலக் கியப் பேரவையின் விருதிளேயும் பெற்றது.
அறிஞர் பொ. செகந்நாதனின் ஆற்றல் அறிஞர் பெருமக்கள் பலரும் இனங்கண்டிருக்கிருர்கள். அவரது ஒரேயொரு ஆராய்ச்சி நூலிலிருந்து அவரின் திறனையும் மதிநுட்பத்தையும் உணர்ந்து போற்றியிருக்கிருர்கன். அத்தகைய அறிஞர் இன்று தனது இரண் டாவது ஆராய்ச்சி நூல் ஒன்றினே வெளியிட்டிருக்கிருர். யாழ்ப் பாணச் சரித்திரத்தின் மெய்மையான ஆய்வொன்றினே, மூன்று தசாப்தங்களாக ஆராய்ந்து கண்ட முடிவுகளேக் கொண்டு, "யாழ்ப் பாணத் தமிழரசரி வரலாறும் காலமும்' என்ற நூலாக வெளி யிட்டுள்ளார். இந் நூல் மிக விரிவாகவும் நுட்பமாகவும் ஆராயப் பட்டிருக்கிறது. தக்க ஆதாரங்களின் துணைகொண்டு, அவரது கருதுகோள்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.
 
 
 
 
 
 

ix
யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றைக் கூறும் மூல நூல்களாக கைலாபமாஃல, வையாபாடல், யாழ்ப்பயண வைபவ ாலே ஆகிய மூன்றுங் கருதப்படுகின்றன. இந் தூல்களின் அடி யோற்றியும், இத்துறை சார்ந்த பல்வேறு நூல்களின் துணைகொண் டும் கல்வெட்டுக்கள், சாசனங்கள், அகழ்வாராய்ச்சியின் பெறுபேறு அன் என்பனவற்றை ஆதாரமாகக் கொண்டும் காலத் சிற்குக் காலம் ப ைநூல்களும் கட்டுரைகளும் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பான வைபவ கௌமுதி (சு, வேலுப்பிள்ளே - 1918), யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (சுவாமி ஞானப்பிரகாசர் - 1938), யாழ்ப்பாணச் சரித் திரம் (ஜோன் - 1930), யாழ்ப்பாணச் சரித்திரம் (ஆ. முத்துத்தம் TTTTtTu uT S S 00LL0SS LLLLLL LLL LLLLHL SSYSS STTSTTTTTT TS LLLLLL LLLLLLLHHLHH LLLLLH SSTT STT Ae eu SAAS 000SS TTTTLT MT இராச்சியத்தின் தோற்றம் (கா. இந்திரபாலா - 1978), The LLLLLLLH LLL LLLLL SS0S TT TTTT T S0LL 0SSS SSMTTTT TTTT TT வகையில் குறிப்பிடத்தக்தன. பிள்ஃனய நூல்கள் பெரிதும் செ. இராசநாயக முதலியா ரினதும், சுவாமி ஞானப்பிரகாசரினதும் வழி தழுவியனவாகவுள்ளன. மூலநூல்களாகக் கொள்ளத்தக்கஙற்றினத் தள்ளிவிடும் போக்கினேயும் கொண்டன. இவ்வழியில் முற்றிலும் வேறுபட்ட ஆராய்வுக்கோணத்தில் தன் முடிவுகளைப் புலவர் செகந் நாடின் இந் நூவில் முன் வைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தமிழரசு 13 ஆம் நூற்ருண்டில்தான் ஆரம்பமான தென்பது புதிய வரலாற்றுப்வாளரின் சனிப்பு ஆகுல் செகந்நாதன் அவ்வாறன்றி யாழ்ப்பானித்தமிழரசு 8 ஆம் நூற்குண்டில் உருவாகி விட்டதென இந்நூலில் நிறுவியுள்ளார். கலிங்கமாகாே முதலாவது சிங்கையாரிய மன்னனென்று நவீன வரலாற்றறிஞ்ர்கள் இன்து நிறுவ முயல்கின்றனர். அது தவறு கவிங்க மாகனுக்கும் யாழ்ப்பானத் திற்கும் தொடர்புல்லே. இருவரும் வெவ்வேறு புருடர்கள் எஈ செகந்நாதன் இந்த நூலில் நிறுவியிருக்கிருர், நல்லூர்க் சுந்தவேள் கோட்டத்தை நிறுவிய புவனேகவாகுவும் செண்பகப்பெருமாள் புவனேகபாகுவும் ஒருவரல்ார். கயிலாயமாஃபைப் புரானம் என ஒதுக்கிவிட்டு யாழ்ப்பான இராச்சியத்தின் மெய் வரலாற்றை ஒரு போதும் கூறிவிட முடியாதென இந்நூலில் செங்கந்நாதன் நிறுவியிருக் விருர், சிங்கைநகர் நல்லூரே என அவர் அறுதியிட்டு தக்க ஆதாரங்க ளோடு இந்த ஆராய்ச்சி நூலில் காட்டியிருக்கிருர், சிங்கை பாரியன் வேந்த ஆண்டு சிேக்னூற்றெழுபது என்பதை 1170 எனப் பிழையாகப் பொருள் கொண்டு, கலிங்கமாசுனது வருகையுடன் தொடர்புபடுத்த நவீன ஆய்வாளர்கள் மு பங்வதை செகந்நாதன் ாண்டிக்கிருர், உண்மையில் அது சிங்கையாரியன் சாண்வாகன

Page 8
சகவருடம் 870 ஆம் ஆண்டே துந்தான் ான்பது அவர் முடிபு. அத்துடன் யாழ்ப்பாண வைபவ விமர்சன ஆசிரியரும், யாழ்ப்பாணச் சரித்திர ஆசிரியரும் உரைத்த பிழைகள் பலவற்றை இந்நூலில் அவர் சுட்டிக் காட்டுகிறர். எனவே இவற்றின் அடியொற்றி நோக்கும்போது யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்று ஆய்விற்குப் புதியதொரு பரிமானத்தைச் சேர்ப்பதாக செகந்தாதனின் யாழ்ப்பா னைத் தமிழரசர் வரலாறும் காலமும் என்ற இந்த ஆராச்சி நூல் அமைகின்றது.
அறிஞர் செகந்நாதனின் ஆளுமைக்கும், ஆராய்வுத்திறனுக்கும், அனுபவத்திற்கும் ஏற்ப இந்நூலில் அவர் முன் வைத்துள்ள வரலாற்றுச் செய்திகளின் மெய்மை உள்ளது. ஏற்பதும் ஏற்காதுவிடுவதும், தக்க ஆதாரங்களுடன் மறுப்பதும் போற்றுவதும் இந்நூலிக்னச் சீர் தூக்கிப் பார்க்கும் அறிஞர் பெருமக்களின் பணியாகும்.
அறிஞர் செகந்நாதனின் இந்நூலினே வெளியிடுவதில் யாழ். இலக்கியவட்டம் பெருமிதமடைகின்றது. புலவர், பண்டிதர், அறிஞர் செகந்நாதனின் பணி சிறக்கவும் இன்னமும் பல ஆராய்ச்சிகளேப் புரிந்து தமிழின் பெருமையை உயர்த்தவும் வாழ்ந்துகின்றது.
வாழ்க, நீ அறிஞ !
கந்தையா குனராசா எம். ஏ. இ. நி. சே.
உதவி அரசாங்க அதிபர். (செங்கை ஆழியான்) கிணிநொச்சி. செயலாளர், யாழ், இலக்கியவட்டம்
- 7 - 8F
 
 

xi
முகவுரை
பாழ்ப்பாணம் எம் தாயகம், யாழ்ப்பாணத் தமிழரசர் பண் ஈடக் காலத்திலே இந்த யாழ்ப்பான நாட்டை ஆட்சிசெய்தார்கள். அவர்கள் சரித்திரத்தைக் கூறும் யாழ்ப்பாணச் சரித்திர நூல்கள் இன்றும் உள்ளன. அவைகளுட் சிஸ், சிற்சில உண்மைகளே மாறுபாடு கொண்டுரைக்கின்றன. அதனுல் பயில்வார்க்கு உள்ளபடியான உண்மைகளே ஐயம்திரிபில்லாமல் உணர்ந்து கொள்வதில் இடர்ப் பாடுகள் ஏற்படுகின்றன. அவ்விடர்ப்பாடுகளே நீக்கியும், விசாக் ாத்தை எளிதாக்கியும் கூறவல்ல யாழ்ப்பாணத் தமிழரசர் கால நூல்கள் இக்காலத்தில் வெளிவரவேண்டும் என்று எண்ணி இத்துரலே எழுதிகுேம். தமிழரசர் நம் நாட்டிற்குச் செய்த நன்மைகளே நினைத்து நன்றிகூரவும், அவர்கள் ஞாபகத்தை நிஃப் நிறுத்தவும் இந் நூல் உதவும் என்பது நமது நம்பிக்கை.
(யாழ்ப்பாணத் தமிழரசர் காலம் யாழ்ப்பாணத் தமிழரின் சுதந்திரகாலம், அக்காலத்தில் தமிழரசர் அரசு புரிந்தார்கள், அவர் கள் வரலாறு பொய்யாய்ப் பழங்கதையாய், இல்ஃபாய்ப் போகாமல் உறுதிப்படுத்தி வைக்கவேண்டுமென்பதுதான் நம் நாட்டபிமானம் படைத்த பெரியோர்களது கொள்கை. ( சுதந்திரதTகம் மிக்க இக்
காலத்தில் யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாற்றை எழுதி வெளிவிடுதல்
அவசியமென எண்ணினேன். இந்நூலினே யாழ் பல்கலேக் கழக துணேவேந்தர் அவர்களும் இக்காலத் தேவைக்கு ஏற்ப எழுந்த ஒன்று குமென்று குறிப்பிட்டுள்ளார்கள். இந் நூலில் யாழ்ப்பாணத் தமிழரசர் காலச் சரித்திரச் சிக்கில்கள் சில, பல வெட்டப்படுகின் றன பல புதுவிடயங்கள் அரிதிற்கவிண்டு சொங்லப்படுகின்றன. இக் காலத்திலே ஒரு நூல் அச்சிட்டு வெளியிடுவதென்பது மிகவும் கடின மான செயலே என்பது யாவரும் அறிந்ததே. யாழ்ப்பாணத் தமி ரசர் மேல் யாம் கொண்ட அன்பினுலும் அபிமானத்தினுலுமே இந்நூலே எழுதலானுேம் நிற்க,
மாவிட்டபுரம் கந்தக்கடவுள் அருளிலே அக்கோயில் ஆதீன கர்த்தர் மகாராஜ் பூரீ சு. து. ஷண்முகநாதக் குருக்கள் அவர்கள் இந் நூவிற்கு ஆசியும், ஆதரவும் நல்கியுள்ளார்கள். அப் பெருந் தகைக்கு இயல்பாக அமைந்துள்ள யாழ்ப்பானத் தேசாபிமாாம், ாசவசமயாபிமானம், யாழ்ப்பானத் தமிழரசர்மேல் கொண்ட ாபிமானம் என்பனவே இவற்றை இவ்வாறு நல்கக் காரணங் காாயிருந்தனவென்றறிந்து நாமவரைப் போற்றுகின்றுேம்,
இவர் சிதம்பரம் அந்தணர் நில்லே மூவாயிரவர் குடும்பத்தைச் ார்ந்தவராய் சோழராசாவால் மாவிட்டபுரம் சுத்தசுவாமி கோயி

Page 9
xii
லூக்கு முதலாவது ஆதீனகர்த்தராக நியமிக்கப்பட்ட பெரிய மனத் துள்ளாரீன் உத்தேசமாக நாற்பதாவது பேரணுகி யாழ்ப்பான வைபவமாதுேப்படி அறியப்படுகின்றவர்.
இந் நூலிற்கு வேறும் பல பெரியார்கள் உதவிபுரிந்துள்ளார் கள் யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர், பேராசிரியர் கிரு. சு. வித்தியானந்தன் அவர்கள் வாழ்ந்துரை வழங்கியுள்ளார்கள். கலாநிதி திரு. ஆ. வேறுப்பிள்ளே அவர்கள் மதிப்புரை அளித்துள் ளார்கள். மேலும் யாழ். இலக்கிய வட்டத்தார் இந் நூலிற்கு மதிப்புரை அளித்துள்ளார்கள். இவர்கள் அஃனவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
யாழ், இலக்கிய வட்டச் செயலாளர் செங்கையாழியான், இந் நூல் வெளியீட்டிற்கு பல்வகை ஒத்துழைப்பும் நல்கினூர். அது அவரது சால்போ, இயல்போ என்று உணர்ந்து கொள்வதன்றி சொல்லி விளக்க இயலோம்.
யாழ். பல்கலைக் கழக நூலகர் திரு. முருகவேள் அவர்கள் இந் நூலாராய்ச்சிக்கு வேண்டிய நூல்களே அக் கழக நூலகத்தில் பார்வையிட அனுமதித்தார்கள். யாழ். மந்திய கல்லூரி நூலகர் திரு. K. மா விைக்கவாசகர் தம் நூல் நிலேயத்திலும் வேண்டிய நூல் க3ாப் பார்வையிட அனுமதி தந்தார், கலாநிதி சி. க. சிற்றம்பலம் அவர்களும் இவ்வாராய்ச்சிக்கு வேண்டிய சில நூல்களேத் தந்துத விஞர்கள். நம் வீட்டயலவரும் நம் மானுக்கரும் ஆகிய ஒரு வர்த்தகப் “ பிரமுகர் தாமே முன்வந்து இவ்வாராய்சிப் பணிக்குப் பயன்படுத் தும்படி ஒருதொசுைப் பணத்தைத் தந்துள்ளார்கள். இவர்சின் அrேவர் தன்றியையும் யார் போற்றுகின்ருேம்.
இந் நூல் வெளிவரவேண்டுமென்று ஆவல்கொண்டிருந்தவரும் ஒத்தாசை புரிந்தவருமான எனது மனேவி நூல் வெளிவர முன்பு இறைவனடி சேர்ந்துவிட்டார். அவர் ஆன்மா சாந்தியடைய ஆண்டவனேப் பிரார்த்திக்கின்றேன்.
இந் நூலின் வாசிப்போர் இதில் புதிதாக வெளியாகும் உண்மைக3ளயும், மறுத்துரைக்கும் உண்மைகளேயும் கவனித்துப் பயில் வார்களாக, இந் நூலில் உள்ள அச்சுப் பிழைகளே முதற்கண் அறிந்து திருத்திப் பயிலும்படி வேண்டிக்கொள்கிறேன். இந் நூலின் அழகுற அச்சிட்டுத் தீத்த யாழ். ஆசீர்வாதம் அச்சகத்தாருக்கும் மேல் அட்டை வேலேகளே அழகுறச் செய்து தந்த யாழ். விஜயா அச்சகத்தாருக்கும் நன்றி கூறுகின்றேன்.
இங்ஙனம்
பொ. ஜெகந்நாதன்.
 
 

副首。
பொருளடக்கம்
ஓர் ஆராய்ச்சி நூலின் ஆய்வு முறை யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசன் அரசாட்சி ஆரம்பம் வைபவமாஃ நூலமைப்பு கைலாயமாலே நூலமைப்பு தமிழ் அரசர்கால வரலாறு இன்றுள்ள நிலே அதிரமலே இராச்சியமூம் காலமும்
மாருதப்பிரவல்வி சுைவா பமாஃலயில் மாருதப்பிரவல்வி வரலாறு டக்கிரசிங்கன் தலைநகர்
இடப்பெயர்கள்
பெரியமனத்துள்ளார் விவாகம்
மாவிட்டபுரம் கந்தசாமி கோவீனின் பிற்கால வரலாறு
செங்கடகநகர் இராச்சியம் யாழ்பாடியின் யாழ்ப்பான இராச்சியம் நல்லுரர் இராச்சியம் பாண்டிமழவன் அழைத்துவந்த சோழ இராசகுமாரன் பிறர்சண்ட சிங்கைநகர் சிங்கை ஆரியகுல மன்னரும் நாம ஆவலியும் சிங்கை ஆரியனும் கலிங்கமாகதும் காலிங்கை - கூழங்கை மாகன் காலத்துக்கு முன்னரே நல்லூரில் துலேநகர்
அமைந்திருந்தது வல்லிபுரத் தலேநகர் சிங்கைநகரல்ல பரராசசகேரன் திருப்பணி கூறும் சிதம்பரப்பட்டயம் துயிற்றுரதில் காணப்படும் குறிப்புகள் புகழேந்திப் புலவர் வரவு வல்லிபுரத்திலுள்ள தலைநகர் செங்கடசுநகர் செண்பகப்பெருமாள் படையெடுத்த தஃநகர் நல்லூர் நல்லூர் இராச பரம்கரை தக்லதகர் ஒன்று பெயர்கள் மூன்று
xiii
in
盛盘
7
臀墨
39
臺工
47
虚尘
ሰኛ8
GG
『3
『
母星
f
IOS
OG

Page 10
30. நல்லூரில் இருந்த தலநகர்க் களம் ஒன்று. குலமும் ஒன்று 118 31. நல்லூரும் சிங்கை நகரும் 32. சிங்கை நகர் 33. சிங்ாக நகரும் சிலாசனமும்
தி இலகியசாப்தம் எண்ணுற்றெழுபது 132 35. அமைச்சர் புவனேகபாது 137 88, சிங்கை நகர் t 37. யாழ்ப்பாண வைபவமாலையும், யாழ்ப்பாண வைபவ
விமர்சனமும் 141 38. கோட்டை அரசன் செண்பகப்பெருமாள் வரலாறு 4. 39. நல்லூர்த் தலைநகர் இருந்த களம் 40. பிறர்களுத்து 41. நல்லூர் நகர் வீழ்ச்சி is 42. யாழ்ப்பாணம் என்னும் பெயர் I tiէ: 43. இந்நூலில் புதிதாக வெளியாகும் உண்மைகளுள்
அனேகம் 直岳岛 44. யா, வை. காரரும் யா, ச. காரரும் உரைத்த
பிழைக்ளுள் அனேகம்ானவை 5. முதற்குறிப்புக்களும் விளக்கமும் f 48. இந்நூலின் ஆதார நூல்கள்
-
-
 
 
 

1. ஒர் ஆராய்ச்சி நூலின் ஆய்வு முறை
ஒர் ஆராய்ச்சிக்காரரோ யாரோ ஒரு ஆராய்ச்சிக் களத்திடை ஒன்ற&னக் கூறம்புகுங்கால் அந்தக் கூறப்புகுந்த பொருளிலே முன்னர் யாரும் ஏதுங் கூறிஇருக்கிறார்களா என்று பார்த்தல் வேண்டும். அங்ங்னம் பார்த்த அளவானே அதனில் தம் சுருத்துக்கு ஒவ்வாமை இருப்பக் கண்டால் உடனே அவைகளே மறுத்து எழுதிவிட வேண்டும். அங்ங்னம் மறுத்த பின்னரே அதன் உண்மை இல்ஃபாய்விடும். அதன்பின்னர்த்தான் கைக்கண் உள்ள சான்றுக்களே எடுத்துக்காட்டித்தான் சொல்ல எடுத்துக் கொண்ட பொருளே நிச்சயம் செய்தல் வேண்டும். அங்ங்னம் மறுக்க இயலாவிட்டால் ஒப்புக் கொண்டாக வேண்டும், பிறர் முன்னர் ஒன்று கூறிஇருப்ப அப்பொருள் பற்றி பின் எழுதுபவர் பின்னுென்று கூறினுல் பயில்வார் மலேப்பர் அவர்க்கு அதுசரியோ இது சரியோ என்று துணிதற்கு இயலாது இடர்ப்படுவர் எழுதும் நூலின் நோக்கம் சித்தி பெறுது.
ஒரு பொருளிலே இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் கிடப்பன வாசு இருக்கும். இவ்வாறிருத்தல் பயில்வார்க்குச் சிக்கஃல விளேக்கும். முறைகள். இங்கினமாக அநேகமாக இவைகள் ஒன்றனேயும் பின் பற்ருமல் பின் பிந்த யா. வை. விகாரரும் யா.ச. காரரும் பற்பல நூற் முண்டுகளுக்கு முற்படத் தோன்றிய கைலாயமாஃ), வைபவமாலே நூல்களின் முடிபுகளுக்கு மாறு க ஒருமித்தும் தனித்தும் வேறு வேறு கோட்பாடான முடிபுகளேக் கூறி இருக்கிறர்கள். அங்ஙனம் செய்யு மவர் முன்னர் வெளியான நூல்களின் புரைபாட்டை எடுத்துக் காட்டி ஆதாரங்களுடன் அவை விஃஇல்லா தொழிந்தவற்றை விளக்கவில்லே. தம்மனம் புத்திபோன போக்கின்படி தம்வாயொன் மினலே தம் மாறுபட்ட கருத்தைக்கூறி இருக்கிருர்கள். இங்ஙனம் செய்வது பெரும்பிழையே. இன்னும் என்னேயெனில் இவ்வாதார வைபவமாலே கைலாயமாலே நூல்களில் சொல்லப்பட்ட சரித்திர

Page 11
2
சம்பவங்கள் முன்னர் நடந்து முடிந்தவை. அங்ங்ணம் நடந்து முடிந்தவைகளைத் திரட்டித்தான் நூலாக வெளியிட்டிருக்கிருர்கள் அவைபின்னுலே :ோன்றுபவர்களுக்கு அறிவிக்கும் அவாவினலே பரோபகாராமாக வெளியிடப் பட்டவைகளாகும்.
உதாரணமாக
முன்னுள் மந்திரியாய் இருந்த மகாதேவா யாழ்ப்பாணம் ஆசுப்பத்திரிக்கு அத்திவாரக் கல்லிட்டார் என்று அவ்வாசுப்பத்திரி மதிலில் எழுதப்பட்டிருக்கிறது.
அவர் அவ்வாறு இடவில்லை என்று நாம் மறுக்க முடியுமா? மறுக்கச் சான்று கிடைக்குமா? இவ்வாறு யாழ்ப்பாண நூல்நிலையத் திலும் சாம்சபாபதி அத்திவாரக் கல்லிட்டார் என்று எழுதப்பட்டி குக்கிறது அது பொய்யென்று நாம் மறுக்கமுடியுமா? இவைபிறர் அறிதல் உபகாரம் கருதியல்லவா எழுதப்பட்டிருக்கு. இவ்வாறு உப காரம் கருதித்தான் வைபவமாலை, கைலாயமாலை ஆதார நூல்களில் எழுதப்பட்டு வெளிவந்த பொருள்களுமென்க. அவைகளை மறுக்க அக்காலத்து வெளிவந்த மாறுபட்ட முடிவைக் கொண்ட ஆதாரங்கள் கிடைத்தாலல்லது நம்புத்தி ஆதாரமோ யூக ஆதாரமோ செல்லாது அவைகள் உண்மையானல் மாறுபட்ட ஆதாரங்கள் கிடைக்கா. இவ் வாதார நூல்களை மரபு நூல்கள் என்று சொல்லுவார்கள். என்னை யெனின் ஒன்றனில் சொல்லப்பட்டவைகளை - எழுதப்பட்டவைகளைப் பார்த்து மற்றது எழுதப்பட்டு வருதலால் கைலாயமாலையிற் சொல்லப்பட்டவைகளை வைபவமாலை அப்படியே ஒப்புக்கொண்டு எழுதியிருப்பது இதற்குதாரணம் பண்டைய சரிதத்திலே நாம் ஒன்று கூறப்புகுங்கால் அவ்வாதார நூல்களில் சொல்லப்பட்ட அன்றியும் அக்காலத்தவர் சொல்லி வைத்த வரம்பின்படிதான் போக வேண்டும். அதற்காகத்தான் நடுகல்லைப் புதைபொருளை ஆராய்ச்சிக்காரர் தேடுவதுமென்க இவ்வாறு ஆராய்ச்சி வரம்பை முறையைப் பின்பற்றிப் போகாமல் தம் புத்திபோன போக்கின்படி போய்பிறர்யாழ்ப்பாணச் சரித்திரத்திலே பல பிழைகளை யா. வை. வி. காரர் யா. ச. காரர் விளைத்து விட்டனர் இவைகளை இந்நூலின் பிற இடங்களில் காணலாம்,
அன்றியும் யாழ்ப்பாணத்திலே வேறும் பாரிய கட்டிடங்கள் பாலங்கள் என்பவற்றில் இன்னர் இன்ன காலத்தில் இதனை இயற்றினர் என்று எழுதி இருக்கிருர்கள். இவை பொய்யாகவா எழுதப்பட்டிருக்கின்றன.

வைபமாலை 8ம் நூற்ருண்டது. யா. வை. விகாரர் 20 ம் நூற் குண்டில் வாழ்ந்தவர் அவருக்கு வைபவமாலைக் கூற்றுக்கள் நன்கு தெரிந்துள்ளன. அவற்றுள் ஒன்று தமக்குடன்பாடில்லை என்ருல் அதனைத் தக்க சான்று கொண்டு மறுத்துத் தமக்குடன்பாடான ஒன்றுக்கு ஏது காட்டிச் சொல்ல வேண்டும். அங்ங்ணம் இல்லாமல் முன்னைய கூற்று அப்படியே இருக்க பின்னென்று சொன்னல் அதையேன் தள்ளவேண்டும் இதையேன் கொள்ள வேண்டும் என்று வாசகர் தெரியாராய் இரண்டனையுங் கொள்ளாது விடுவார் இம் முறையான எழுதுவது ஆராய்ச்சி வழுமுறை இது சரியில்லை. வைபவமாலை அமைச்சர் கோயில் கட்டினன் என்றும் அவர்தான் தலைநகர் கட்டினன் என்றும் அவர்தான் விருந்துண்டான் என்றும் சொல்லியிருக்க இவர் அச்செயல்களை ஒரு காரணமும் காட்டி மறுக்காமல் இவைகளைச் செண் பகப்பெருமான் செய்தான் என்று சொல்லுகிருரர். மறுக்கவும் சான்று காட்டவில்லைகொள்ளவும் சான்று காட்டவில்லை. பிறமுடிபு சுட்டும் நற் சான்றுவேறு காணுத வரை அவ்வுரைத் துணிபே உண்மையாகலாம். எனத்தடையில்லை என்க. என்னை கோயில் கட்டினதுஅமைச்சர் ஆனல் செண்பகப் பெருமாள் கட்டினன் என்று சன்று கிடைக்குமா அவ் வாறு விருந்துண்டது அமைச்சரானல் செண்பகப் பெருமாள் உண்டதை தெரிவிக்கச் சான்று கிடைக்குமா இன்னவாறே பிறவும் ஆகவே சான்று காட்டாதவைகள் உண்மையில்ஃ) எனவும் அவை ஏற்றுக் கொள்ளக் கூடாதெனவும் விளங்குக. ஆகவே 9(D உண்மையைக் கொள்ளவும் சான்று வெண்டும் தள்ளவும் சான்று
வேண்டும் என்க.
இந்நூல் முதல் நூலுமன்று வழிருாலுமன்று சார்பு நூல் ஆகையால் முன்னர் அறிமுகம் செய்து வைத்த ஆகாரங்களை முழுத் துணையாகவும் பிறவாக வந்து அவ்வுண்மைகளை வற்புறுத்தும் பிற ஆதாரங்களைப் பக்கத்துணையாகவும் கொண்டு இத் தமிழ் அரசர் காலத்தைப் பூரணமாக நிறைவுசெய்யக் கருதுகிமுேம், இஃது ஒர் சார்பு நூலாதல்பற்றி முந்து நூல்களாகவும் ஆதாா நூல்களாகவும் இருக்கும் கைலாயமாலை, வைபவமாலைகளின் வழித்தாகவே Jm b செல்ல வேண்டும் என்னையெனில்
"முன்னேர் மொழிபொருளேயன்றி யவர் மொழியும் பொன்னேபோற் போற்றுவோம் என்பதற்கும்-முன்னேரின் வேறு நூல் செய்து மிலம் மேற்கோளில் என்பதற்கும் கூறு பழஞ்சூத்திரத்தின் கோள்'
ாண்பதே இலக்கணமாகவிதை எண்க

Page 12
முன்னேரின் வேறுநூல் செய்தல் முக்கியமாக இச் சரித்திர பாடத்துக் கொவ்வாது முன்னரே சரித்திர நிகழ்ச்சிகள் நிகழ்ந்து முடிந்த பின்னர் அவ்வச் சம்பவங்களையெல்லாந் திரட்டி, காலத்தாற் பின் வருவார்க்கு அறிய வைக்க வேண்டும் என்னும் நன்நோக்கமே கொண்டு அக்காலத்துண்டான சான்றேர்கள் அவைகளை எழுதி வைத்திருக்கின்றனர் ஆகையால் என்க.
அவை வெளிவந்து பற்பல நூற்றண்டுகளின் பின்னர் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அவைகளை அவர்கள் எழுதித் தராவிட்டால் எப்படி அப் பண்டை நாள்களின் விஷயங்களே நாம் அறிந்துகொள்ள முடியும். நாம் சொல்லக் கூடியவை நம்வாழ்நாளில் நாம் கண்ட வைகள் கேட்டவைகள். அதற்கு முற்பட நம்முன்னேரால் நமக்குச் சொல்லப்பட்ட கதை பரம்பரைக் கதைகளாக உள்ள இவைதான். அதற்கு முற்பட்ட நிகழ்ச்சிகளை நாம் சொல்லப் போனல் கண்டிப் பாக அவைக்கு ஆதாரம் காட்டியே சொல்ல வேண்டும். கைலாய மாலை மாருதப் பிரவாகவல்லி கதையில் இருந்தே தொடங்கி சரிதத் தைச் சொல்லியிருக்கிறது.
எக் காரணங் கொண்டோ அது அவள் வரலாற்றுக்கு முற் பட்ட விஷயங்களை சொல்லவில்லை. அது நூல் செய்ய எடுத்துக் கொண்ட உத்திக்கேற்ப அவ்வாறு சொல்லி இருக்கலாம். நாம் அதற்கு முற்படவும் வாய்ப்பு வருவழிச் சொல்லவிழைகின்ருேம். விளக்கங்களை எளிது படுத்தும் பொருட்டாக ஒவ்வோர் இராச்சிய மாகக் கால அடைவின்படி சொல்லுற்றம் காலஅடைவின்படி என்பது காலமுன்னிருந்து பின்னக நிகழ்ச்சிகள் நடந்து நடந்து முடிந்த ஒழுங்கின்படி சொல்லுவது என்க.
இந்நூலின் காலம் வரை தமிழ் அரசர் காலச் சரிதங்களைச் சிக்கறுத்து வரையறையாகக் கூறியவைகளாக நூல்கள் இராமல் அங்கொரு சில குறிப்புகளும் இங்கொரு சில குறிப்புகளும் கொண் டனவாகவே பிறநூல்கள் வெளிவந்துள்ளன. இந்நூல் பெரும்பாலும் கருத்து வேற்றுமைகளை ஒழித்துக்கட்டி ஒரு முகமாகவே உண்மை க3ளச் சொல்வதாகவே நோக்கமாகக் கொண்டது.
ஒருவன் தான் ஜெனனமாகி நூறு ஆண்டு வரை வாழ்ந்தான். என வைத்துக் கொள்வோம் அவன்தன் கால எல்லைக்குள்ளே சம்பவித்த நிகழ்ச்சிகளை நான் நேரே கண்டேன் கேட்டேன் என்று சொல்லலாம் பிறரும் நம்பலாம். அவன் காலத்துக்கு முற்பட்ட நிகழ்ச்சியைக் கர்ணபரம்பரைக் கதை வழியாகச் சொல்லக் கேட் டேன் எனலாம். அவைகளையும் ஒருவர் நம்பலாம் அதற்கு முற்பட நிகழ்ந்த நிகழ்ச்சியை ஒருவன் எப்படிச் சொல்ல முடியும் முடியாது.

5
அங்ங்ணம் சொல்லவேண்டுமேல் அவைகளுக்காதாரம் காட்டியே சொல்லவேண்டும். அங்ங்ணம் சொல்லப்படும் உண்மைகளை தமக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்தோர் சிலையிலேயோ, சிற்பத்திலோ, சுவரிலோ ஏதேன் எழுத்து வகையாக எழுதிவைத்த சுவடிகளிலோ இன்னும் அகழ்வாராச்சியாற் பெறப்பட்ட குறிப்புகளில் இருந்துதோ தான் சொல்ல வேண்டும். அந்த வகையிலே இந் நூல் வைபவமாலை யையும் கைலாயமாலையையும் ஆதார நூல்களாகக் கொண்டமை கிறது. என்னேயெனில் முன்னுேர் நூலின்படி யொருங்கொத்து அழியாமரபினது வழிநூலாகும் என்பதனுலும் பின்னர் நூல் செய் வோர் முன்னேர் உரைத்த சரித்திரக் குறிப்பை போற்றிக் கொள்ள வேண்டும் அதுவே விதியாதலாலும் இந்நூல் முன்னைய யாழ்பாணச் சரித்திர ஆதார நூல்களை ஆதாரமாகக் கொண்டே உரைக்கப்பட்ட தென அறிக.
இங்கே நாம் பிரஸ்தாபிக்க இருக்கும் தமிழரசர் காலம் எது வெனக் காண்போம். தமிழரசர் காலம் கி. பி. 795 தொடங்கி கி.பி 1620 வரையும் சுதந்திர மன்னராக ஆட்சி புரிந்தார்கள் மொத்தம் 825 ஆண்டு அதன் பின்னர் கி. பி. 1658 வரை போர்த்தருக்கடங்கிய சிற்றரசர்களாக ஆட்சிபுரிந்தார்கள் அந்த இரண்டு வகையாலும் 863 ஆண்டுகள் என்னலாம் இக்காலச் செய்திகளைத்தான் இயன்ற வரை நாம் இங்கே சொல்லலுற்ரும்.

Page 13
2. யாழ்ப்பாணத்தில் தமிழரசர் அரசாட்சி ஆரம்பம்
சாலிவாகன சகர்ப்தம் 717 ல் (கி. பி. 795) விஜயராசனின் சகோதரன் மரபில் பிறந்த உக்கிர சிங்கன் என்னும் அரசன் வட திசையில் இருந்து வெகு திரளான சேனைகளைக் கொண்டு வந்து போராடிச் சில தலைமுறையாய் இழந்து போன இவ்விலங்கை அரசாட்சியில் அரைவாசி வரைக்கும் பிடித்து கதிரைமலையிலிருந்து அரசாண்டு வந்தான் தென்னடுகளை வேற்றசன் ஆண்டுவந்தான். (யா. வை. மா. பக். 13) என்று வைபவமாலையார் சொற்றனர். இக்கூற்றுகளைச் சுட்டி யா. வை. விகாரர் பக்கம் 48ல் யாழ்ப்பாண அரசனின் ஆதி இராசதானி கதிரைமலை அல்லது கதிருமலை, எனும் இடமாய் அமைந்தமை உண்மைப் பகுதியாகலாம் எனவும் ஆயின் அம்மாலை யார் ஆண்டைச் சகாப்தம் 717 என்பது பொருந்தா தெனவும் மொழிந்து அப்பாலும் மொழிவதாவது யாழ்ப்பாண வை. மாலை தந்திருக்கின்ற பூர்வகால ஆண்டுக் கணக்குகளை பெரும் பான்மை ஒப்புகின்றனவராகிய இராச நாயக முதலியார் எட்டாம் நூற்முண்டு தொடக்கம் (கி. பி. 795 தொடக்கம் கதிரைமலையில் உக்கிரசிங்கன் இருந்து யாழ்ப்பாண அரசியற்றினன் எனவும் சொற்ற னர்எனவும்சொல்லுகிருர், நிற்க மேற்படி கதிரைமலையைத் தலைநகர் இருந்தாகக் கருதப்படும் சுன்னகம் புகைரதத்தானத்துக்கருகே இருக்கும் சிவன்கோவில் கதிரைமலைச் சிவன் கோவில் என்று அழைக்கப் படுகிறது
யா. வை. விகாரர் பக். 48 ல் வைபவ மாலையார் சுட்டுகின்ற கதிரைமலையும் கந்தரோடையாகலாம். இவ்வூருக்கணிமையின் சுன்ன கத்தில் கதிரைமலை என்னும் மேடு அபரதஸ்தானத்துக்கும் சந்தைக்கு மிடையில் இருத்தலையும் கவனிக்க என்கின்றர். எனவே மேற்படி கதிரை மலேயைத் தலைநகராகக் கொண்டு உக்கிரசிங்கன் கி.பி 795 தொடக்கம் அரசு புரிந்தான் என்று வைபவமாலை சொல்லுகிறது. இதுவேதான் யாழ்ப்பாண நாட்டின் கண்தோன்றிய முதற் தலைநகரம் ான்றறிக.

தார்க் கடம்பன் பேர்முருகன் ருமோ தரன் மருகன் சீர்க்குரவன் தேவர் திரட்டுக்கொருவன் - சூர்பகையை மாற்றும் குகன் குழகன் வாய்ந்தவடியார்துயரை யாற்றுங் குமரனருளாலே-போற்றுதவர் வாய்ந்த கதிரைமலை வாழு மடங்கன்முகத் தாய்ந்த நராகத் தடல் ஏறு சாய்ந்து கங்சூல் போவதன்முன் னேகியந்தப் போர் வேந்தன் மாமகடன் காவல் கடந்தவளைக் கைப்பிடித்தே-ஆவலுடன் கொண்டேகித் தன் பழைய கேலமலை மா முழைஞ்சில் வண்டார் குழலை மணம்பு ணர்ந்து - " கை. மா.கண். 10-16
கீரிமலைப் பக்கத்திலே கூடாரம் அடித்திருந்த வல்லியைப் பொழுது பட்டு இரவு நேரத்தில் கைபிடித்து அவ்விரவு கழியமுந்தி தன்கதிரமலைக்குக் கொண்டு போனன் என்று குறிப்பிடப்படுவதால் அப்படி இரவு கழிவதன் முன் வரக்கூடிய இடைத் தூரத்தில்தான் மேற்படி சுன்னுகக் கதிரைமலை இருப்பதையறிக. எனவே கதிரைமலை இடநிச்சயம் சரி என்றறிக. நிற்க, எனவே யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசு ஆரம்பம் 8ம் நூற்ருண்டென்று அறிக. இவ்வுக்கிரசிங்கன் அரசு சிற்றரசு, பேரரசாரம்பம் கி. பி. 10ம் நூற்றண்டு அது நல்லூர்ப் பேரரசு. அதன் வரலாற்றை இந்நூலில் கண்டு கொள்க. ஆகவே யாழ்ப்பாணத்தில் சிற்றரசு 8ம் நூற்றண்டிலும் பேரரசு 10ம் நூற் ருண்டிலும் என்று யாழ்ப்பாண வாதாரநூல்களில் சொல்லப்பட்டி ருக்க இவற்றினை ஆதாரம் காட்டி மறுக்காமல் ஆதாரம் இல்லாமல் வாளா 13ம் நூற்றண்டென்பது அர்த்தமற்ற பேச்சென்சு.

Page 14
3. வைபவமாலை நூலமைப்பு
இவ் வைபவமாலை யாழ்ப்பாணத் தமிழ் அரசர் காலத்தினை யறிய ஒரு முக்கியமான நூல் இந் நூலைப்பற்றியும் இந்நூலில் நாம் எடுத்தாளும் ஆதாரங்களைப்பற்றியும் அறிந்தாற்ருன் உண்மையை அறிந்து கொள்ளமுடியும். ஒருவன் ஒரு செய்தியை ஒரு சம்பவத் தைத்தான் நேரடியாகக் கண்டறியலாம். அவன் வாழ்வும் ஒரு நூருண்டு என்று வைத்துக் கொள்வோம் அன்றியும் அவன் முற்பட்ட சங்கதிகளை தந்தை அவன்றந்தையாகிய முன்னேர் தாம்கேட்டறிந்த வைகளை அவனுக்குச் சொல்லும் கர்ணபரம்பரையைக் கேட்டறிய லாம். அவ்வாய்ப்பும் அவனுக்கு 50 ஆண்டுவரை முற்பட்டவைக ளாகத்தான் இருக்க முடியும் எனவே ஒருவன் தன்காலத்து 150 ஆண்டுவரை பழமை வரையுள்ள செய்திகளை பிறர்க்குச் சுட்டியுரைக் கும்போது அவ்விஷயத்தை நான் கண்டேன் கேட்டேன் கர்ண பரம்பரைக் கதைமூலம் கேட்டேன் என்று சொல்லாம்.
இந்த 150 அல்லது 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செய்தியை ஒருவன் பிறர்க்கு எடுத்துரைக்கும்போது அந்த செய்தியை அல்லது உண்மையை சிவாசனத்தையோ புதைபுருளையோ, எவ்வகைச்சுவடி யாகவோ, நூலாகவோ ஆதாரம் காட்டாமல் வாளாதம் வாயாலே சொல்லலாமோ சொன்னல் அதில் உண்மை இருக்கும் என்று நம்ப லாமோ. எப்படி அவரால் ஆதாரம் இல்லாமல் காணமுடியும்.
ஆதாரம் இல்லாதவைகளே எப்படி உண்மை இருக்குமென்று நம்பமுடியும் இப்படித்தானே ஆராச்சிக்காரர் சிலர் வளாதம் வாயாதா ரமாகச் சொல்லி இருக்கிருர்கள். அதனுலேதான் சிக்கல்கள் அதிகம் உண்ட ராயின. இவ்வைபவமாலை ஒல்லாந்த மன்னனுக்கு தமிழரசர் காலச் சம்பவங்களை அறியும் பொருட்டாக எழுதப்பட்ட ஒரு சிறந்த நூல் இந்நூல் தனக்கு முற்பட நிகழ்ந்த பல சங்கதிகளைச் சொல்லி யுள்ள பல ஆதார நூல்களில் இருந்து விஷயங்களைச் சேர்த்துக் கொண்டு திரட்டி எழுதப்பட்டது. என்க

9
இவை எதிர்கால மக்களுக்கு உண்மையைச் சொல்லி வைக்க வேண்டும் என்னும் ஆசையோடு எழுதப்படுபவை. அவைகளை எழுதும் ஆக்கியோன் பொய்யோ புனைவோ அற்பமேனும் அவற்றுள் இருக்க விரும்பான் முக்குண வயத்தான் முறை பிறழ்ந்துரைத்தல் மக்கள் இயற்கை என்பவாகலின்ஒரோவழி முக்குணவயப்பட்டு அவன் வாக்கில் தற்செயலாகப் பிழை நேரலாம் ஆராய்ச்சிக்காரன் தன் அறிவாற்றலா லும் ஆராய்ச்சித் திறத்தாலும் பிறநூல்களின் உதவியாலே அப்பிழை களைக் கண்டு கொள்ள முடியும்.
அங்ஙனமேவாய்மையாயின் என்னை? பிறர் போர்த்துக்கேயர் வரலாற்றினை வைபவமாலையார் சொன்ன வகையிலே குறை சொன் ஞர் எனின் வைபவமாலையார் போர்த்துக்கேயர் வரலாறு சொல்ல எடுத்துக் கொள்ளவில்லை என்க. காரணம் போர்த்துக்கேயர் வர லாற்றைச் சொல்லும்படி ஒல்லாந்த மன்னன் கேட்கவில்லை போர்த்தர் அண்டைநாடாக இருந்ததாலும் அவர் வரலாறு அவர்களே தெரிந்து கொண்டிருந்திருப்பர். பாதர் குவிருேஸ் போர்த்தர் படையோடேயே வந்து முன்னரே ந்நூலை எழுதியிட்டார் ஆதலாலும் (அன்றியும் அந்நூல் அப்பொழுது போர்த்தர் போருக்குப்படையனுப்பி வைத்த கோவைத் தேசாதிபதிக்கு அவர் மேலதிகாரப் பொறுப்புடையவராய் இருந்தமையின் இவர் அவர்க்கு எடுத்துச் சொல்லும் பொறுப்புடையவ ராய் இருந்தே அந்நூலை எழுதி அங்கனம் பின்னர் அவர்க்கே சொல்லி அந்நூலை அவர் முன்னிலையிலேயே அரங்கேற்றினர் ஆதலாலும் என் பது. அந்நூற் சரிதம்) முற்றிலும் இனத்தால், தூரத்தால் பாஷையால் சமயத்தால் உருவத்தால் கலாசாரத்தால் நாகரீகத்தால் தம்மிலும் வேறுபட்ட தமிழரசர் ஆட்சிமுறையை அவர்கள் வரலாற்றை அறி
யத்தான் ஒல்லாந்தர் சொல்லும்படி கேட்டார் என்க. எனவே டே0க்கறுரன்னன்ருேதும் ஒல்லாந்த மன்னன் மயில் வாகனப்புலவரைச் சொல்லும்படி கேட்டது தமிழரசர் வரலாற்றை என்க. வைபவ
மாலையார் சொன்னதும் தமிழரசர் கால வரலாற்றை என்க. இவ் வுண்மை இன்னும் எவ்வாறு வலியுறுக்கப்படுகிறதெனின்,
உரராசர் தொழு கழன் மேக் கறுரனென் ருேது முவாந்தேச் மன்னனுரைத் தமிழாற் கேட்க வரராச கைலாய மாலை தொன்னுரல்
வரம்பு கண்ட கவிஞர் பிரான்வையா பாடல் பரராச சேகரன் னுலாவுங் காலப்
படிவழுவா துற்றசம்ப வங்க டீட்டுந் திரராசா முறைகளும் தேர்ந்தியாழ்ப் பாணத்தின் செய்திமயில் வாகனவேள் செப்பி ஞனே?"
என்னும் பாடலால் மதிப்புரை அளித்தவர் தமிழரசர் காலவரலாற் றைச் சொல்லுகிள்ற கைலாயமாலை வையா பாடல், பரராச சேகரன் உலா இராசமுறை என்னும் நூல்களை ஆராய்ந்தே வைபவ

Page 15
0
மாலையார் அவ்வாறு சொன்னர் என்று சொல்லியிருத்தலால் தேர்ந்து கொள்க. போத்த்துக்கேய வரலாற்றையுடைய எந்த நூலையும் அவர் ஆதாரநூல்களாக எடுத்தார் என்று சொல்லப்படவில்லை. அவர் சொல் லவும் இல்லை என்க, அவர் நூல் எழுதியது போர்த்தர் காலத்தைக் கடந்தாதலின் தமிழரசர் காலவரலாற்றை நிறைவு செய்வான் ஆண் டைக்கு வேண்டும் பகுதியையோ சொன்னர் என்க. அன்றியும் எதிர்காலத் தமிழர்க்கு போர்தகர் காலத்து நிகழ்ந்த புதுமையும் வியப்பும் நிறைந்த சில சம்பவங்களையும் தம்மார்வத்தால் கூட்டிச் சொன்னர் என்க. இஃதென்னை. வியப்பு யா. வை. விகாரரரும் யா. ச. காரரும் இவ்வைபவமாலையைப்பற்றி தத்தம் நூல்களில் பல இடங்களில் கண்டித்தும் அந்நூலாசிரியர் அறிவுக்கு மாசும் மறு வுந் தோன்ற தத்தம் நூல்களில் எழுதியும் இருக்கிருர்களே. ஆகை யால் அம் மாலைகளை எப்படி உண்மைக்குறுயானவை என்று சொல்ல முடியும் என்னின், இந்த யா. வை. வி. காரரும், யா. ச. காரரும் ஆராய்ச்சி முறை புரியாராய் தம்மாராச்சியைச் செய்து கொண்ட அதஞலே அம்மாலை நூல்களின் உண்மை முடிபுகளை அவை சொன்ன படியே விளங்காமல் பிறழ்வாக விளங்கிக்கொண்டு அவ்விளக்கத்தின் அறிவையே துணை கொண்டு இம்மாலை நூல்களின் முடிபுகளை நோக் கிஞராக. அந்நோக்கிலே இம்மாலை நூல்கள்தான் பிழை என்று அவர் களுக்குத் தோன்றவே. அவர்கள் இம்மாலை நூல்களைக் கண்டித்தார் என்க. அங்ங்ணம் கண்டிப்பவர் தம்மிற்ருன் பிழை இருக்கு எமது அப்பிழை காரணமாகத்தான் நான் கண்டிக்கிறேன் என்று புரியா ராய் கண்டித்தார் என்க. இன்னும் எங்ங்னமெனின். கண் பிழைப் பட்ட ஒருவன் ஒரு பண்டத்தைப் பார்க்கும்போது அப்பண்டத்தின் உண்மைக் காட்சி அவன் கண்ணுக்கு விகாரமாகத் தோன்றவே அவன் பண்டம்தான் பிழைத்தது என்று எழுதியவாரும் என்க.
அங்ங்ணமாயின் யா. வை. வி; யா. ச. காரர் மேலதான் பிழை, ஆம் ஆம் அவரே பிழைத்தனர். அப் பிழைகளை நூல் முடிலிலே தெரிந்து கொன்ளவரும். அவற்றை யாம் யாவரும் உணரும்வண்ணம் விளக்குவோம். அதுவரையும் இந்நூல் வழியே செல்லுக. நிற்க.
இவ் வைபவமாலை யார் ஆதாரமாகக் கொண்ட நூல்களிலே இப்பொழுது இருப்பவை கைலாயமாலையும், வையா பாடலும் இல்லாதவை. (இவை சில தூற்றண்டுகளாகவே இல்லை.) பரராசகேசு ரனுலாவும், இராசமுறையும் ஆகையால் இருக்கிற கைலாயமாலை யையும், வையாபாடலையும் நாம் வாசித்துணர்ந்துகொண்டு வைபவ மாலையைப் பார்ப்போமானல் வைபவமாலை சிலஇடங்களிலே கொஞ் சம்கூட விவரித்துச் சொல்லுகின்றமை புலப்படும். அவை பரராச சேகரனுலா, இராசமுறை என்பவனவற்றுள் அந்நூலாசிரியர் கண்டி ருக்க வேண்டும் என்று முடிவுசெய்துகொள்ள வேண்டும். நிற்க அவ்விரிவுகளே இந்நூலின் உட்களங்களிலே பார்க்க.

4. கைலாயமாலை நூலமைப்பு
கைலாய மாலை என்னும் இந்நூலமைப்பு அதி விசித்திரமானது. அது ஆதிச்சிங்கையாரியனல் அவன்றன் நல்லூர் இராச்சியம் பின் வரும் அரச சந்ததியினரும் மக்கள் சந்ததியினரும் அறிந்துகொள்ளச் செய்து வைத்த பொன்னேடு. அரசன் அதனைப் பாண்டி மழவன் புவனேகவாகு கெங்காதரக் குருக்கள் என்பவர்களாகிய பேரறிஞர் களது உதவியையும் ஒத்துழைப்பையும் பெற்று முத்துராசக்கவிராச ரைக்கொண்டு பாடுவித்து நிறைவேற்றி முடித்தான். இது யாழ்ப் பாணத் தமிழ் அரசர் காலத்துச் சரித்திரத்துக்குயிர் ஆன முதல் நூல். இஃதில்லையேல் யாழ்ப்பாணச் சரித்திரம் தமிழ் அரசர் காலம் முழுதும் இருள் நிறைந்ததாய்விடும். யாழ்ப்பாண வைபவமாலை யுரைக்கும் வாய்மைக்குத் துணை நிற்கும் முதல்நூல். இஃதொன்றே யொன்றுதான். இய்பொழுது கிடைக்கப் பெறுவனவற்றுள் தமிழ் அரசர் காலத்துச் சரித்திரத்துக்குச் சிறப்பான விரிவைக் கொடுப்பது. பரராசசேகரன் உலா, இராசமுறை, வையாபாடல் என்பனவும் இத்தமிழ் அரசர் கால நூல்களே. இவைகள் இக் கைலாயமாலை யோடும் வைபவமாலைக்கு முதல் நூல்களாகச் சொல்லப்படுகின்றன. ஆணுல் பரராசசேகரன் உலா, இராசமுறையும் இப்பொழுது கிடைக் கப்பெறவில்லை.
கைலாயமலை என்னும் பெயர் கேட்ட துணயானே அந்நூல் கைலாயத்தில் எழுந்தருளியுள்ள ஆண்டவன் மீது பாடப்பட்ட ஒரு தோத்திரப்பாமாலை என்றுதான் பலரும் எண்ணும்படி இருக்கும். அன்றியும் அப்படியுமல்லாது கைலாய நாதரது வரலாறு சொல்லும் நூலென்று எண்ணும்படியுந் தோன்றும். இந்நூலோ அவ்விரண்டின் வகையுமல்லாது யாழ்ப்பாணத்தரசரின் பண்டைய சரித்திர நூலாக அமைந்திருக்கின்றது.
இந் நூலின் உண்மை நிலை இன்று வரை தெரியப்படவில்லை. அன்றி இந்நூல் வரை தெரியப்படவில்லை. நூல் எழுதிய யா. வை. வி. காரரும், யா. ச. காரரும் விளக்கப் பிசகினலே இந் நூலைப் புறக்கணித்தும், குறை சொல்லியும் தத்தம் நூல்களை எழுதலாயி னர். இவர்கள் சுத்த தங்கத்தின் மாற்றை உரைத்தளந்து கொள்ள

Page 16
இயலாத பொற்கொல்லருக் கொப்பாளுர்கள். இவர்கள் இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முந்தியே இருந்து, இந் நூலேப் புறக்கணித்து விட்டதாலே அன்றி அதற்கு மாருகத் தம் நூலே எழுதி வெளியிட்ட தாலே அவர்களுக்குப் பின் வந்தாரெல்லாரும் அவர்களைப் பின்பற்றி அவர்கள் போன வழியே தாமும் போய் இந் நூலேப் புறக்கணித்து வந்தனர். இப் பின்வந்தோர் யாவரேனும் தன் தனி அறிவினையோ, ஆற்றலேயோ கொண்டாராய்ந்து இந் நூலேச் தம் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திச்கொள்ள அறிந்திவராயினுர், மேற்படி நூலார் இதற்கு மாருகவே தம் நூல்களே எழுதலானர். இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் என்ன இதையேன் பிறர்தரத் தேர்ந்து கொள்ளாமல் விட்டனர். அது சரியா பிழையா என்பதைக் கொஞ்சம் இங்கே கவனிப்போம்.
இந்நூலின் அமைப்பையும் அதன் உள்ளடக்கிய விஷயங்களே பும் அக்காலச் சூழ்நிஃப் சந்தர்ப்பங்களேயும் நோக்கும்போது நம் முகம் பின்வருமாறு தோன்றுகிறது.
மன்னன் நகரிவலம்வந்து நானிலம் போற்ற, புசுலுமணி :ாளி சுையிற் போந்து ஓங்க தனிவீற்றிருக்கிறன். அரசன் அவையிலே முடிதொட்டுக் கொடுக்கும் பரம்பரைப், பாண்டி மழவன் என்னும் பிரபு இருக்கிறர். மந்திரி புவனேகவாகு இருக்கிருர் முடி குட்டிவைத்த கெங்காதரக்குருக்க# இருக்கின்ருர், இன்னும் குடியேறி வந்தார் பல்வோர் இங்கே இருக்கின்ருர்கள் அவர்கள் முன்னிலேயிலே மன்னன் தான் கண்ட கனவின் காட்சியை விம்மலும் பொருமலுமாக எடுத்துச் சொல்லுகிருன், தான் மதுரை யில் இருந்தபோது சொக்+நாதரை வழிபட்டு வந்ததையும், இங்கே அவரை சுழிபட இயலாமல் விசாரமாக வாழ்ந்து வந்ததையும், இங்கே ஒரு சிவன்கோயில் கட்டி அக் கடவுளுக்குச் சொக்கலிங்கம் என்று பெயர்சூட்ட எண்ணியிருந்ததையும் அப்பால் அச் சொக்க நாதர் உமாதேவியாரையும் சர்வாங்கபூஷணியாய்க் கூட்டிக்கொண்டு தாலும் சர்வாங்கபூஷணனுய் வந்து மன்னு என்னே மறந்தனேயோ என்பெயர் கைலாயநாதன் என்று சொல்லித் தன்ஃன ஒழித்து நின்று ஆட்கொண்டதையும் மன்னன் தீயிடை இட்ட மெழுதென செக்கு நெக்காசு உருகிக்கொண்டு அவ்வாறு அவை முன் மொழிந்தவனுய் அப்பாவ் இனிமேல் நான் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யத் தக்கது சொல்லுங்கள் என்று கேட்டான்.
அப்போது புவனேகவாகு என்னும் மந்திரி எழுந்து அரசே
மதுரையில் நீங்கள் வழிபட்ட சொக்கவிங்கப் பெருமானே உங்களே ஒழித்து நின்றுட்கொண்டுள்ளான். அவன் அந்தச் சிவபெருமான் தன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெயர் கைலாயநாதன் என்று சொல்லி இருப்பதால் அக்கைலாய நாதருக்கு ஆலயம் ஒன்று சமைப்பதுதான் செய்யத் தக்கது என்ருன். பாண்டி மழவன் கெங்கா தரக் குருக்களும் அவ்வாறே சொன்னுர்கள். அரசனும் ஆம் அவ்வாறுதான் செய்யத்தக்கதென்று எண்ணுகிறேன் என்று சொன்னுன், மறுநாள் கோயில் கட்டும் வேலே ஆரம்ப மாயிற்று. அப்பால் தொடர்ந்து கும்பாபிடேகமும் நிறைவேறி முடிந்தது. அப்பாலும் சில நாள்கள் சென்றன. அப்பால் அரசன் நல்லூர் இராச்சியத்தைச் சேர்ந்த பல தேசங்கள் மக்கள் குடியேறி போழ வாய்ப்புள்ள நிலங்களாக இருப்பதும் குடிமக்கள் தென் இந்தி பாவில் இருப்பதையும் உணர்ந்து மத் தி ரி பிரதானிகளோடு யோசஃன செய்து தென் நாட்டுத் தமிழ் மன்னர்க்கு ஒnே) போக்கியும் குடியேற்றம் செய்யத் திட்டம் இட்டான். குடியேற்றம் நாட்டு வளர்ச்சிக்கும் அரசன் உயர்ச்சிக்கும் அவசியம் என்று எண்ணினுள். குடியேற்றம் பல பிரச்சினேகள் தலைதூக்கும் விஷயமாகவும் அது இருந்தது. குடியேற்றப்படும் ஒவ்வொரு தஃவஃனப் பற்றியும் அன்ே எங்கிருந்து இங்கே பழைக்கப்பட்டான். இங்கே எங்கே குடி யமர்த்தப்பட்டான் என்பன வாய விஷயங்கள் ஆட்சிக்கு வரும் அரசர் பரம்பரை முக்கியமாக அறிய பேண்டிய விஷயங்களாக இருக்கின்றன. மேலும் புவனேகவாகு சொல்வார் அரசே பாண்டி மழவரும், நீங்களும் நானுமாசு யோசித்துத் தென் இந்திய தமிழ்ப் பிரதேசங்களில் விசாரஃணசெய்து மக்களேத் தெரிந்தெடுத்து வருவித்து இங்கேயும் அவரவர்க்கு ஏற்ற இடங்களில் குடி யேற்றினுேமே அது பின்வருபவர் எவர்க்கும் தெரியாது, அது உங்களுக்கும், எங்களுக்கும் தான் தெரியும்.அவைகளே நீங்கள் எழுதிவைத்தாலன்றி வேருெருவருக் கும் தெரியாது, ஆகையால் அரசாங்கம் பதிவிலும் பதிந்து வெளியே பொது மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுமென்ருன், அரசனும் ஆம் என்றன். அப்பாலும் சில நாட்கள் கழித்தன.
( மனித வாழ்வு "நிச்சயம் அற்றது " உங்கள் காலத்தின் பின் இனும் உங்கள் பரம்பரையினர்) இந் நல்லூர் இராச்சிய மன்னராக வரப்போகிறர்கள். இந் நாட்டில் நீங்கள் குடியேற்றிய மக்களும், இந்நாட்டு மக்களும் எதிர்காலத்தில் வாழப்போகிருர்கள். இவர்க ளூக்கு இவ்விராய்ச்சிய வரலாறு தெரியப்பட வேண்டும். ஆகையால் அவைகளே ரட்டில் எழுதி வைக்கவேண்டும் என்ருர்கள். ஆம், அரரே அவ்வாறு செய்ய வேண்டியது அவசியம்தான் என்று ஆங்கிருந்த பாண்டிய மழவனும் கெங்காரக் குருக்களும் சொன்னூர்கள். அரச லும் அவைகளே முக்கியமானவைகளே அரசாங்கப் பதிவேட்டில் பதிந் துள்ளேன் என்ருன் அப்பாலும் பாண்டி மழவன் எழுந்து அரசே,

Page 17
直卓
கைலாயநாதன் உங்களை ஒழித்து நின்ருட்கொண்ட சங்கதியை நீங்கள் இந்த இராச்சிய மக்கள் எல்லார்க்கும் தெரியப்படுத்தினுல் தான் அவ்வாண்டவனுக்கு நன்றிக்கடன் செய்தவராவீர்கள் அது பிறர்க்கும் அவ்வாண்டவன் மீது பக்திபெருகும். அரசனும் ஆம் அவ்வாறு செய் தாற்ருன் ஆண்டவன் பழி என்னே அணுகாது நீங்கிவிடும் என்ருன்
இக் கைலாயநாதன் தன்னை ஆட்கொண்டதும் தான் அவர்க்குக் ரகாயில் கட்டினதுமான இச் செய்திகள் என் வருங்கால இராச பரம்பரையும், இந்நாட்டு மக்கள் பரம்பரையும் அறிய வேண்டும். ஆகையால் அதனை, அச் செய்தியை நூலாக எழுதி வெளியிட எண்ணினுள். அப்படிச் செய்தாற்ருசன் கைலாயநாதனுக்கு நான் நன்றிக் கடன் செய்தவஞவேன், ான் தாகமும் நிற்கும என்று எண்ணியவணுய் அமைச்சர் அடிையைக் கூட்டி யோசித்தான். அவர்கள் எல்லோரும் ஒரே முஃமாக அக் கருத்தை ஆமோதித்தார்கள். சரி அப்படியானுல் அச் சங்கதிகள் எல்லாம் திரட்டி நூலாக எழுதிக் கூடியவர் யார் அவரைத் தேடிச் சபைக்குக் கொண்டுவர வேண்டுமே. என் சமூகத்துக்குக் கொண்டு வரவேண்டுமே என்கின் முன் மன்னன், அப்பொழுது அவையினரில் பாண்டி மழவன் எழுந்து அரசே, சிங்களக் கலகங்களால் நாடு சீர்கெட்டிருக்கிறது. செந்தமிழ் வளர்ச்சி குன்றி இருக்கிறது. இப்பொழுது இச் சம்பவங்களேப் பாடக் கூடிய சிறந்த புலவர்கள் இந்நாட்டில் இல்லே. சோழநாடு முதலிய தமிழ் நாடுகளில் தான் யாரும் சிறந்த புலவரைத் தேடி ஆராய்ந்து வர வழைத்து'அவரைக் கொண்டுதான் எழுதுவது நல்லதென்று சொன்னூர், அப்பால் சிங்கையாரியனும் அவர்கள் கூற்றை ஆமோதித்துக் கொண் டவணுப் பல தமிழ்நாடுகளிலும் விசாரணைசெய்து இறுதியில் சோழ மன்னரின் பழைய தலைநகராகிய உறையூரிலே சோழ இராசாங்கப் புலவராய செந்தியப்பர் மகன் முத்து இராசக் கவிராசர் என்ருெரு பெரும்புலவர் இருப்பதாகக் கேள்விப்பட்டான். "அவரைத்தின் சபைக்கு அழைக்கமன்னன் விரும்பினுன். உடனே ஒருதூதுவனே அழைத்து சோழ மன்னனுக்கு ஒரு திருமுகம் எழுதி அவன் கையிற்கொடுத்து இதைச் சோழமன்னன் கையிற்கொடுத்து வாவென்று அனுப்பினுன், தூதுவன் மறுநாளே வெளிப்பட்டு சோழ நாட்டுக்குப் போய் சோழ அரசன் கையில் ஒலயைக் கொடுத்தான் சோழ மன்னன் அதனே வாசித்துப் பார்த்தான். " உறையூரிலே, த&லநகரிலே வசிக்கும் செந்தியப்பர் மகன் முத்து இராசக் கவிஞரை தன் சபைக்கு அனுப்பிவைக்கும்படி எழுதப்பட்டிருந்தது.
மறுநாள் சோழமன்னன் தன் அரண்மனைத் தூதுவர் ஒருவரை அழைத்து உறையூர் சோழரின் பழைய தலைப்பட்டணம் காவிரி நதிக் கரையில் உள்ளது. நீவிர் உறையூர் சென்று செந்தியப்பர் மகன்

முத்துராசக் கவிராசரிடம் ஈழச்சிங்கையாசிய மன்னன் எனக்குச் செய்த வேண்டுகோஃாயும் அவ்வேண்டுகோளின்படி புலவரை ஈழச் சிங்கை ஆரிய மன்னன் சமஸ்தானத்துக்குச் செல்ல நாளே அதிகாவே புறப்பட்டுப் பிரயாணத்தை மேற்கொள்ளும்படியும் நான் சொன்ன தாகச் சொல்லிவா என்றணுப்பினுன். தூதுவனும் அவ்வாறே அப்
புலவரிடம் சொன்னுன்.
புலவர் அம்மன்னன் கட்டளேயை ஒப்புக்கொண்டவ ராய் தாம் மறுநாளே ஈழநாட்டுச் சிங்கையாரிய மன்னனிடம் செல்ல இருப்ப தாகவும் இச்செய்தியைச் சோழ இராசாவுக்கறிவிக்கும்படியும் சொல்வி யனுப்பினுர், தூதுவன் தான் புலவரைச் சந்தித்த விவரங்களே யெல்லாம் சோழ மன்னனிடம் எடுத்துச் சொன்னுன், சோழன் அங்கே தங்கி இருந்த சிங்கை மன்னன் தூதுவனிடம் புலவர் வருகை யைத் தெரிவித்து ஈழத்துக்கு வழியனுப்பி வைத்தான். ஈழத் தூதுவனும் சிங்கை மன்னனிடம் வந்து அங்கே நடந்தவைகளேயெல் லாம் சாங்கோபாங்கமாக எடுத்துச் சொன்ஞன், ஈழத் தூதுவனும் சிங்கை மன்னனிடம் வந்து அங்கே நடந்தவைகளேயெல்லாம் விபர மாக எடுத்துச் சொல்லிப் புலவர வருகையைத் தெரிவித்தான்.
புலவர் சில நாட்களால் நல்லூர் சிங்கை மன்னன் சமஸ் தானத்துக்கு வந்து சேச்ந்தார். புலவர்க்கு நல்ல வரவேற்பு நடந்தது. அப்பால் நூல் ஆக்கல் ஆரம்பமாயிற்று. மன்னன் மேற்படி அவையைக் கூட்டினுன். புலவர் தாம் பாடவேண்டிய வரலாறுகஃாத் தம்மிடம் ஒப்படைக்கும்படியும் தான் பாடித் தருவதாகவும் சொன்னூர். அங்கே நூலாக்கும் சர்ச்சை தலேதுாக்கியது. நூவின் பெயரென்ன, நூலில் சேர்க்கப்படும் விஷயங்களெவை என்பதில் கொஞ்சம் கொஞ் சம் கருத்து வேற்றுமைகள் நிலவியன.
கைலாயநாதன் மேம்படு பொருளாக இருப்பதாலும் அவன் தன்சீன ஆட்கொண்ட தெய்வமாக இருப்பதாலும், அவன் கனவில் தோன்றிய நிகழ்ச்சியே ஆகக்கடை நிகழ்ச்சியாக இருப்பதாலும், கைலாயம் சிறந்த மங்களப் பெயராக விருப்பதாலும் பொருள் நோக்கத்திலும் அது உயர்ந்ததாக இருப்பதாலும், கைலாயநாதன் பெயரோடே புத்தகம் விளங்கினுல்தான் அவர் பெயர் என்றும் நிஃலபெறவும், அக் கனவு என்றும் நிலேபெறவும், நானும் நன்றிக்குறிப்புச் செய்து விட்டேன் என்று என்மனம் சாந்தியடையவும் இக்கால வருங்கா நாடும் என் நன்றிகுறிப்பையும் தெய்வபக்தியையும் மதிக்கவும் ஆண்ட வனும் என் நன்றியை நினைக்கவும்கூடும். கைலாயநாதர் வரலாறு மாலே என்றே பெயரிடுக என்று மன்னன் சொன்ஞன்,

Page 18
I {ኛ
ஆம் அரசே! நீங்கள் சொல்பவை அனேத்தும். உண்மைதான் அவைகளே சுருக்கி அப்பொருளிலே கைலாயமாலே என்றே பெயர் வைத்து விடுவோம் என்று புலவர் சொன்ஞர். எல்லாரும் ஒரே முக மாக ஆமோதித்தார்கள். சரி அப்பால் பாடும் வரலாற்றை ஒழுங்கு படுத்தித் தாருங்கள் என்று புலவர் வேண்டினுர், புவனேகவாதி எழுந்து அரசே, நல்லூர் வரலாறு மாத்திரம் பாடினுல் நூல் பூரண மானதல்ல. அது இப்போ நிகழ்ந்த இடை நிகழ்ச்சி இதற்குமுற்பட நிகழ்ந்த இந்நாட்டு நிகழ்ச்சிகளேயும் சேர்த்துப்பாடினுல் தான் நூல் பூரணமடையும். நல்லூர் வரலாற்றுப்பற்றி நாங்கள் நேரடியாகச் சொல் லுகிருேம். அது எங்கால நிகழ்ச்சி இதற்கு முற்பட நிகழ்ந்த மாருதப் பிரவாக வல்லி வரலாறு அவரின் சொந்தக்காரணுகிய மன்னனுக்குத் தெரியும் யாழ் பாடியின் யாழ்ப்பான வரலாறு பாண்டி மழவர் சொல்வார். எனவே நல்லுரர் வரலாறு அதனுேடு முற்படத் தொடர்பு பட்ட செங்கடசுநகர் வரலாறும், செங்கடசு நகர் வரலாற்ருேடு தொடர்வுபட்ட கதிரைமலே வரலாறுமே. கதிரை லேந் தவேநகர்க்கு முன்னும் யாழ்ப்பாணத்தில் மன்னர் ஆட்சியும் மக்களுமிருத்திருக் கிருர்கள். ஆயினும், சுநிரைமலேத் துலேநகர் கொண்ட உக்கிரசிங்களில் இருந்துதான் சொல்லக்கூடிய சான்றுக்கள் இங்குள்ளன. ஆகையால் இந்நூல் உக்கிரசிங்கன் வரலாறு தொடங்கிக் கைலாயநாதர் கு. முழுக்குவரை சொல்ல வேண்டும் என்ருர்கள். அரசன் அவர்கள் நாட்டபிமானத்தையும் புத்தி சாதுரியத்தையுமறிந்து சந்தோஷப்பட் டான். உங்கள் விருப்பம் அதுவானுல் அவ்வாறு செய்க. ஆயின், கைலாயமாலே என்னும் தலேப்பெயர் மாறக்கூடாது என்ருன் நூல் யாப்பு ஆரம்பமாயிற்று. நூலுக்கு வேண்டிய ஆதரச் சுவடிகளேயும் காணபரம்பரைக் கதைகளேயும் புவனேகவாகு ப எண்டிமழவனும் அங் கிருந்த முதியோர்களும் கொடுத்தார்கள் பு, வர் அவைகங் ஆராய்ந்து அடைவுபடுத்திக் குறித்துக்கொண்டனர் துவ யாப்பும் ஆரம்பமாகிப் பலவாரங்கள் சென்றன. அப்பால் ஒருநாள் நூல் நிறைவெய்தியது என்று புலவர் அரசனுக்குத் தெரிவித்தார்.
அரசன் அவையைக் கூட்டினுன், அவையிலே புலவர் பிள்ளே யாரை வணக்கம்செய்து கலிவெண்பா யாப்பு (310) முன்னூற்றி பத்திலே தன் பாடலே வாசித்தரங்கேற்றிஞர்.
"எந்தைபிரான். நல்லூர்க் கையிலேயில் நாடிவந்து பேnவுமனி யாலயம்புக்கு ஆதிபரனங்கே யமர்த்துளறந்து - நீதியுறு மன்னவரும் விரும் மனிதர்களும் வாழ்ந்திருக்க யுன்னியருள் செய்தானுசுந்து"
என்று கைலேநாதன் அருளோடு மங்கலமாக நூலே முடித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அபாரம் அபாரம் என்று எல்லாரும் வியந்தார்கள். அரசன் கைலாயநாதனுக்கு தான்செய்யவேண்டிய நன்றிக் கடன் நிறைவேறி விட்டதேயென்று மிகவும் சந்தோஷப்பட்டான். மழவர் யாழ்ப்பான தமிழ் அரசர் வரலாற்று நூல் ஒன்று எழுதப்பட்டாயிற்று என்று சந்தோஷப்பட்டார். கைலாயநாதசுவாமி வரலாற்றுமாலே பாடுவிக்க எடுத்துக்கொண்ட பிரயத்தினம். அம்மாலேயோடு நல்லூர் இராச்சிய வரலாறும் அதற்கு முற்படவுள்ள யாழ்ப்பாண வரலாறும் பாடி முடித்தவாறுயிற்று. புலவர் வாசிக்கக்கேட்டவர்கள் எல்லாரும் அமு துண்டு களித்தவர் போலக் களித்தார்கள் ஒவ்வொருபகுதியும் தித் இப்பாக இருந்தது முத்துராசன் கவிராசமகுடம்தான் என்று எல் வாரும் வியந்தார்கள்.
ஆயினும் பாண்டி மழவர் சிற்சில இடங்களில் ஆட்சேபனையைக் கிளப்பிவிட்டார். கவியைபற்றியுமல்ல. சுவையைப்பற்றியுமல்ல சிற்சில சரித்திராய்சங்களைப்பற்றி, 1 சிங்கையாரியமன்னன் தஃநகர்கட் டிய, அல்லது கைலாயநாதர் கோயில் கட்டியகாலம் இந்நூலில் குறிக்கப்பட்டிருக்கா? அமைச்சர் புவனேகவாகு தலைநகர்கட்டுவித் தாரே, அவர் கட்டுவித்தமை குறிக்கப்பட்டிருக்கா? அவர் நல்லூர்ச் சுந்தசுவாமி கோவிவேக் கட்டி யசெய்தி குறிக்கப்பட்டிருக்கா? இவை
இல்ஃயே. புலவர்க்கிவ் விஷயத்தைச் சொல்வி வைக்கவில்லையே என்ருர் புவனேகவாகு. நூல் வாசித்து அரங்கேறிவிட்டதே. அல்லா மலும், சிங்கையாரிய மன்னர் வரலாறு, தலேநகர் வரலாறு,
கோவில் வரலாறு, குடியேற்ற வரலாறு தானே என்னேப் பாடச்சொன் னிர்கள், குறிப்புந்தந்தீர்கள் என்ருர் புலவர்.
ஆம், அப்படியானுல் இச் செய்தியைப் பாடி, அந் நூலோடு மேலதிகமாகச் சேருங்கள் என்ருன் அரசன். அக் கருத்தை எல்லாரும் வரவேற்ருர்கள். உடனே புலவர் அறுசீராசிரிய விருத்தத்தில்,
'இஸ்கிய சகாப்த மெண்ணுரற் றெழுபதா மாண்டதெல்லே அவர் பொலி மாலே மார்ப னமைச்சணு புவனே கவாகு நலமிகு யாழ்ப் பானத்து நகரிசுட் டுவித்து நல்ஃக் குலவிய சுந்த வேட்குக் கோயிலும் புரிவித் தானே"
என்று அறுசீராசிரிய விருத்தத்தால் பாடி முடித்தார். என் லோரும் சபாஷ், சபாஷ் என்ருர்கள், கவிராசர் சிறப்பும், மதிப்பும் பன்மடங்கு உயர்வாயிற்று.
"ஆயிரமுகத்தான் அகன்றதாயினும் பாயிரமில்லது பணுவ
என்றே " என்ருராசுவின் கவிராசர் யாத்த கைலாய மாஃ) க்கு
மதிப்புரை அளிக்க வேண்டுமே என்ருர் பாண்டி மழவன். மதிப்புரை

Page 19
அளிப்பவர் சிறந்த கல்விமானுக இருப்பதோடு, சிறந்த அந்தஸ்தும் உள்ளவராகவன்ருே அவர் இருத்தல் வேண்டும். அத்தகையாரை LJU Th எங்ங்னம் பெறுகுவோம் என்று கவலைகொண்டார் பாண்டி மழவன். மழவரை மன்னன் விழித்து அமைச்சர் புவனேகவாகு சிங்கியிருக்கிருரே அவர் புலமையை நீவிர் அறியீர் போலும் என்று உரைத்துக்கொண்டே அமைச்சரை மதிப்புரை வழங்கும்படி மன்னன் கேட்டுக்கொண்டான்" அமைச்சர் புவனேகவாகு உடனே ஒரு நேரிசை வெண்பாவில்,
'கற்ருேர் புகழக் கயிலாய மாலே தன்னை நற்றமிழி னுற்றெடுத்து நாட்டினுன் - சுற்றுறையூர்ச் செந்தியப்பன் தந்தசிறுவன் முத்து ராசனென வந்தகவி ராசமகு டம்"
என்று மதிப்புரையை வழங்கிஞர். புலவர் பெயர் ழுத்துராசர். அவர் தந்தையார் பெயர் செந்தியப்பன். (தந்த = மகனுகப் பெற்றுத் தந்த) உறையூரில் இருந்து யாழ்ப்ாாணம் கவிபாட வந்ததிைச்சுட்டி வந்த கவிராச மகுடம் என்ருர் வந்தகவிராசன்தந்த சிறுவனும் என்று துணிக, இவை கைலாயமாலே நூற்கிடக்கையைக் கண்டு யாம் ஊகம் கொண்டு உரைத்தவைகளாம். எனவே, இக்கைலாயமாலே நல்லூர்த் தலைநகரைக் கட்டிய, கைலாயநாதர் கோவிலேக் கட்டிய ஆதிச்சிங்கையாரியன் காலத்தில் செய்யப்பட்டதென்பதும், அவன் காலம் அதிற் சொல்லப்பட்ட "இலகிய சகாப்தம் எண்ணுற்றெழு பதென்பதால் (இங்கே சொல்லப்பட்ட சகாப்தம் சாவிவாகன சகாப் தம் அதாவது சாவிவாகனன் என்னும் அரசன் பிறந்த ஆண்டு முதலாக எண்ணிக் கணக்கிட்ட வருடம் இது கிறிஸ்து சகாப்தம் அதாவது கி. பி. 918-ம் ஆண்டாகும். என்பதும் காண்க. (கிறிஸ்த்து சாலிவாகனனிலும் 78 ஆண்டு முந்திப் பிறந்தவர். ஆகையால் சாவி வாகன சகாப்தத்தோடு 78 ஐக் கூட்ட கிறிஸ்துசகாப்தி வருடம் வரும் அது) கிறிஸ்த்து வருடம் கி" பி. 948 ஆகும்.
கைலாயநாதன் தன்னே ஒழித்து நின்ருட்கொண்டதற்கு அவன் செய்யக்கூடிய நன்றிக் கடன், அதை மக்களுக்குச் சொல்வது தான் வேறென்றும் அவனுல் செய்யமுடியாது. அவன் கைலாயமாலே பாடா விட்டால் யாழ்ப்பாணச் சரிந்திரம் இல்லே.
அச்சிங்கையாரிய ஒரு மன்னரையே அதுபாடியிருக்கன்றிப்பின் னுள்ள எந்த ஒரு மன்னனைப் பற்றிய ஒருகுறிப்பும் அதில் இல்லே அது அவ்வொரு மன்ன&னப் பற்றியே பாடியது. பிந்திப்பாடியிருந் தால் அதாவது தலநகரும் கைலாய நாதர் கோட்டமும், கந்த

சுவாமி கோட்டமும், கட்டின காலத்துப்பாடாமல், குடியேற்றம் நடைபெற்ற காலத்துப் பாடாமல் அவ்வாதிச்சிங்கையாரிய மன்ன வின் மகனுே பேரனுே மூன்றும் நான்காம் பேரருே அரசாட்சி பண்ணிய காலத்தே அவர்களில் ஒருவன் பாடுவித்திருப்பானுஞல் அவன் பெயர் சிறப்புப் பாயிரத்தோடு இல்லை. அத்தகைய ஒரு இயைபு இந்நூலில் இல்லே அப்படியாகப் பின்னுள்ள குறிப்பொன் றும் இல்லே. இது ஆதிச்சிங்கையாரியனேயும் அவன்தலை நகர் சுட்டிய கோயில் கட்டிய வரலாறும் மாத்திரம்தானே அதில் சொல்லி இருக்கு. அன்றியும் என்னேயெனின் தன்ஃன ஆட்கொண்ட கைலாய நாதர்க்குத் தான் நன்றிக்கடனுகவோ நேர்த்திக்கடனுகவோ செலுத் தும் வகையிலே இதனப் பாடிஞன் என்பது குறிப்பெச்சம் அப்படிக் கருத்துள்ளவன் தன் நேர்த்திக்கட&னத் தான் முடிப்பானல்லது
பிறர்க்கு விட்டுவைக்கானென்க
இவ்வாராய்ச்சியால் கலிங்கமாஅன் அல்ல சிங்கை ஆரியன்தான் நல்லூரில் தவேநகர் அமைத்தான் என்று உறுதியாகிறது. கைலாய நாதர் மேலே தோத்திரப்பாடலாக சிவராமல் யாழ்ப்பாண வரலாற்றுப் பாடல் வந்ததற்குக் காரணம் இதுவே.
இந்நூற்கிடக்கையைக் கொண்டு நாம் ஊகித்துரைத்த இவ்வுண் மையை நீங்கள் நம்பத்தயக்கமா அப்படியானுல் இன்னும் அபிதான சிந்தாமணிக்காரர் சொல்வதைக்கேட்போம் அதுவருமாறு முத்துராசர் இவர்சோழ மண்டலத்துள்ள உறையூரார்இவர் சிங்கையாரியச் சக்கர வர்த்தி யாழ்ப்பாணத்து நல்லுரரில் தங்கி அரசியல் முதலியன செய்த சரிதங்களே யடக்கிக் கவிவெண்பாவில் கைலாயமாஃல பாடிய புலவர் சைவசமயத்தவர் தந்தை பெயர் செந்தியப்பர்" அபிதான சிந்தாமணி (பக்க 1332)
இனிமேல் நம்பிக் கொள்க இந்த அருமருந்தன்ன யாழ்ப்பபன சரித்திர உண்மை கொண்ட இந்நூலேப் பிறர் இன்றுவரை அறிந்து கொள்ளவில்ஃ. அறிந்து கொண்டால் யா, வை. வி காரர் யா. ச ஏன்ஜெண்ட் யாவ்னுக்காரர் இந்நூலேப் போற்றித் தம்நூல்களைச் செய்து கொள்ளாமல் இக்கைலாயமாலேயைத் தூற்றிக் கட்டித்தம் நூல்களே எழுதார் இந்நூலுக்கு மாறுபாடு கொண்ட முடிவுகளெல் லாம் பொய்மையாக முடியும் அப்படி எழுதியவர் உண்மைகளேச் சொல்லாத குற்றவாளிகளாவர்

Page 20
இந் நூலில் காணும் ஒருதனி வாய்மை என்னென்ருல் கைலாய மாலே என்னும் அத்தலேப்பெயர் கைலாயக்கடவுள் மேலே பாடப் பட்ட ஒரு தோத்திரப் பாமாலேயாகவும் இருக்காமல் அல்லது அக் கோயிலே, கொண்டசுவாமியைப் பற்றிய வரலாறுகளேப் பற்றி மாத்திரம் அமையாமல் அக்கோவிலே சுடவுள் வரலாற்றில் வைத்து அக்கோயில் கட்டிய காலத்துக்கு முற்படவுள்ள வரலாறுகளே யெல் லாம் சொல்வியிட்டமை. அது வேண்டுமென்று நினேத்துச் செய்த செய்கை அவை அனைத்தும் உண்மை என்க. பின்னுள்ளவரராகிய நல்லூர் நாட்டவர்க்கு அவற்றை அறிவிக்க வேண்டுமென்று அவர்கள் ஆசை கொண்டெழுதிச் சேர்க்கப்பட்டவைகள் என்க. கைலாயமாலை நூல்வரலாறு இன்றுவரைவெளியாகவில்லே. அது அந் நல்லூர் இராச் சியத்துக்காக ஆக்கப்பட்டநூல் என்க. இத் தனிச்செய்யுஃளப் பற்றி இன்னும் பார்ப்பாம்.
இது கைலாபமாலே காலத்தன்றிப் பிற்காலத்தா அன்றிக் கைலாயமாலே நூலாசிரியாலன்றிப் பிறர் ஒருவராற் பாடிச் சேர்க்கப் பட்டதா அன்றி பிறவொரு புவனேகவாகுவைப் பாடியதாவென அறிதல் வேண்டும். சம்பிரதாய பூர்வமாக ஒருவர் ஒரு கோவில் கட்டிப்பின் கும்பாபிடேகம் செய்யப்பின் அக்கோவிற் கடவுளேப்பின் ஞெருவர் பாட அப்பாடலேப் பல்லோர் மந்தியில் வாசிக்க அவர்கள் குறை குற்றம். நயம் சிறப்பு என்பனவாய உண்டில்லாதவை பற்றி ஆசங்கிக்க விணுவப் பாடியவர் உத்தரம் சொல்ல, அப்பால் நூலுக்கு மதிப்புரை வழங்கல் என்பனவாய நிகழ்ச்சிகள்தான் நிகழ்வது வழக்கம், அவ்வாறு தான் இந்நூலும் நிறைவேறியது என்போம். அஃதின்றி இந்நூலில் ஒரு பாடல் - இத்தனிப் பாடல் பின்னும் சேர்க்கப் பட்டது என்பதாகச் சொல்லல் விதண்டவாதம், அப்படி இங்கே வரவேண்டிய சந்தர்ப்பமும் இல்லே. அப்படித்தான் நிகழ்ந்த வர லாறுமில்லை. ஏன் சேர்த்தார் ? எப்பொழுது சேர்த்தார்? யார் சேர்த்தார்? என்ன சந்தர்ப்பம், அப்படிச் சேர்க்க வேண்டி வந்தது ான்பவைகளே அறியாமவே அன்றினடுத்துக்காட்டாமலே வாளா, அது பிற்காலத்ததென்பது. அங்ஙனம் சொல்வாருடைய மெல்லறிவையே புலப்படுத்தும் பேச்சாம். நிற்க, நலமிகு யாழ்ப்பாண நகரிகட்டு வித்து, நல்லேக் குலவிய சுந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே என்பதில் நலமிகும் யாழ்ப்பாணத்து நல்லே நகரிகட்டுவித்து நல்லைக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குலவிய சுந்தவேட்டுக் கோயிலும் புரிவித்தானே என்பதாம். நகரி கட்டவும், கோயில் கட்டவும் நல்லே இடமாய் இருந்ததென்பதே ஆண்டுப் போந்த பொருளாம். சோழ மன்னனின் உறையூர் சமஸ் தானத்துப் புலவர் பாடினூர் என்பதில் இருந்து இம்மாலே இரா சாங்கப் படைப்பு என்பதை நாம் நன்கு அறியவேண்டும். அதாவது ஆக்குவித்தோன் இராசாவாக இருக்க வேண்டும் என்க.
குடியேற்றுவது மிகவும் கஷ்டமான வேலே தென்னிந்தியலுர் மீளெல்லாம் தெரியவேண்டும். பின் அந்நாட்டில் குடியேறக்கூடிய தஃபவர்களேத் தெரியவேண்டும். அவர்களுக்கு விஷியத்தைச் சொல்லி விரும்பவைக்கவேண்டும். அவர்கள் குனுதினங்களைத் தெரியவேண்டும். அவர்களே இங்கே எந்தெந்த இடங்களில் எவரைக் குடியேற்றுவோம் பான்று தெரியவேண்டும். அவர்களுக்கு இங்கே இடம் செப்பம் செய்ய வேண்டும்.இக்குடியேற்றத்தைப்பாண்டிமழவன்,மன்னன்,புவனேகவாகு மூன்றுபேரும்சேந்ந்துதான் செய்திருக்கிமூர்கள் இதுஇராசபரம்பரையும் நல்லுரர் குடிமக்களும் அறிய வேண்டும் என்று அவர்களே பாடுவித்து வெளிப்படுத்தியிருக்கிறர்கள் பின்னவர் எவரும் பாடுவிக்க அவர்களுக்கு அவ்விபரம் தெரியாது அதுவுமன்றிக் குடியேற்றம் பாடுவிப்பதும் ஒரு கவிழ்டமானவேலே புலவர்க்கு இவ்விபரங்களேச் சொல்ல வேண்டுமே,
■

Page 21
5. தமிழ் அரசர்கால வரலாறு இன்றுள்ள நிலை
இக்கால வரலாற்றைச் சொல்லும் நூல்கள் எல்லாம் ஒரே முடிப்பிண்னக் கொண்டனவாகவில்லே. முடிபுகளே வெவ்வேருகச் சொல் லுகின்றன. அந் நூல்கள் இரண்டு அணியிலே பிரிந்து சொல்லுகின் றன. ஒரு அணி கைலாயமாலே வைபவமாலேக் கூற்றுக்களும் அவற் றின் கூற்றுக்களே நம்பி நூல் எழுதப்பட்ட நூல்களுமாம். மற்றேர் அணி சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய யாழ்ப்பாண வைபவ விமர்சனம் செ. இ. எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் Ancient Jaffna என்னும் நூல்களும் அவற்றின் நூற்கருத்துக்களே நம்பித் தம்நூல்களில் எழுதிக் கொண்ட பேர்களின் நூல்களுமாகும் இத் நூலார் அனேக இடங்களில் அம்மாலே நூல்களின் கருத்துக்களுக்கு நேர்மாமுகத் தம் நூல்களின் கருத்துக்களே எழுதிக் கொண்டனர். இவ்வகையில் முன்னுேடியாக சுவாமி ஞானப்பிரகாசர் திகழ்கின்ருர் அவர் பல இடங்களிலே அந் நூல்களே எள்ளியும் புறக் கணித்தும் தம் கருத்துக்களே வெளியிட்டிருக்கிருர்கள், அவர்கள் இந் நாட்டு ஆதார நூல்களைப் புறக்கணித்து நூல் எழுதியபடியால் அவர்கள் நூல்கள் ஆதாரமில்லாத நூல்களாம். அவர்கள் ஆராய்ச்சிப் போக்கு அறிவாராய்ச்சிக்கு நிலேநிற்கக் கூடியதாகவோ ஆராய்ச்சி முறையைப் பின்பற்றியதாகவோ இல்லே. ஒருவர் தாம் நூலெழுத முன்னர் பிறர் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தால் முதற்கண் அக் கருத்தை ஆராய்ந்து அது பிழை என்ருல் பிழை என்றும் சரி யென்றல் சரியென்றும் ஒப்புக் கொண்டு அந்நூலின் மேற் கொண்ட பகுதியை எழுதல் வேண்டும் இவர் தம் கருத்துக்கு மாறன கருந்துக்களே எக் காரணங் கொண்டோ மறுக்காமல் விட்டிட்டுத் தம் முடிவை மாத் திரம் சொல்லுபவராயிஞர் இன்னுேரன்ன காரணங்களால் வெவ் வேறு எதிர்க்கருத்துக்கள் கொண்ட சரித்திரக் குறிப்புகள் எழலாயின வாசகர்கள் அவற்றில் எது பொய் எது மெய்யென்று அறியுமாற்றல் இலராய் அங்கனம் சுற்றக்கண் அவாவிழந்து விடுகின்றனர் இதுவே தாள் இன்றுள்ள தமிழரசர் காலச் சரித்ரத்தின் நில் இந்த யாழ்ப் பான மண்ணிலே தமிழரசர் காலத்திலே உண்மையாக நிகழ்ந்த ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிகழ்ச்சியைத் தேர்ந்து கொண்டு அதுபற்றி எழுந்துள்ள பல்வேறு வன யான முடிபுகளேயும் ஆராய்ந்து அவற்றுள் ஏனேயவற்றை ஒழித்துக்கட்டி உண்மை முடிபு இதுதான் என்று வாசகர்க்கு எடுத்துக் காட்ட முனேவதே இந் நூலின் நோக்கம் என்க. அந்த வகையிலே அவ்வாறு விலக்கப்பட்டவற்றில் உள்ளனவாய போலியும் புரையாடு களும் எடுத்துக் காட்டப்படும். ஒரு வாசகர்க்கு உள்ளபடியா நிகழ்ந்த ஒரு சம்பவத்தை ஐயந்திரிபின்றி விளங்க வைக்க வேண்டுமென்பதே நோக்கமாகக் கொண்டது இந்நூலென்சு, அது எந்தளவில் சித்திக் ன்ெறதென்பது நூலிலேதான் காணவேண்டும். இந்த யாழ்ப்பான மண்ணிலே, தமிழ் அரசர் காலத்திலே, ஒரு சரித்திரம் முன்த்த ஒழுங்கின்படி முன்னிருந்து பின்னுேக்கி தமிழரசர் அரசாட்சி முடியும் வரை இச்சரித்திரம் சொல்லப்படுகின்றது. தமிழரசர் காலமதைப் பற்றிய சிற்சில குறிப்புக்களே எழுதிய பல்லோர் அபிப்பிராய வேறு பாடுகளேக் கொண்டதாகச் சிக்கல்கொண்டதாகவே தம் நூல்களே எழுதி இருக்கிருர்கள். அவ்வகையாக எழுதப்பட்டதாலே பொது மக்கள் அவற்றை அறியவோ அபிமானிக்கவோ இயலாதவர்களாக இருக்கிருர்கள். பெரும்பகுதி இக் காலச் சரித்திரம் இருட்டாகவே இருக்கிறது. இக்காலச் சரித்திரத்தைப் பிற அறிஞர்கள் தெளி வாகவும் வரையறையாகவும் எழுதி வெளியிட வேண்டுமென்று நாம் விரும்புகிருேம். நூல்களின் கருத்து வேறுபாடுகள் நேருக்குநேர் ாநிராக அமையுமானுல் அவற்றுள் ஒன்றுதானே மெய் அல்லது சரி, மற்றது பொய் அல்லது பிழை. இப்பொழுது இந்த இரண்டு நூல் சுளும் வாசகர் மத்தியில் புழக்கத்தில் இருக்கின்றன. எனவே பிழை யானவைகளேயும் மக்கள் நம்பிப்படிக்கிருர்கள் என்னல் வேண்டும். யாழ்ப்பாணச் சரித்திரம், தமிழரசர் காலம் யாழ்ப்பாணத் தமிழ ான்றி உலகத் தமிழரும் அறியவேண்டிய சம்பவங்களேக் கொண்டது.

Page 22
6. (க) கதிரைமலை இராச்சியமும் காலமும்
ஒரு தலேநகரைத் தலநகராகக்கொண்டு ஒரு மன்னன் தன்னு ஃணக்குட்பட்ட நாட்டினே ஆட்சி புரிந்தான் என்ருல் அந்நாடு அந் நகரின் இராச்சியத்தைச் சேர்ந்தது. அம் மன்னன் அந் தலே தநீர் இராச் சியத்து மன்னன் அவன் ஆண்டகாலம். அத்தலே நகர் இராச்சியக் காலம். எனவே ஒரு மன்னன் அவன் அரசிது நீதி தவேடு நீர் அவன் அரசிருந்தகாலம் அவன் அரசாட்சி பண்ணிய நாடு அவன் அரசியற் பரிபாலனம் பற்றிய செய்தி என்றின்னவும் பிறவுமான சரித் திர விஷயங்கள் அத்தலே நகர்தொடர்பிலே அதிகரித்து வருகின்றன. ஈண்டுப் பேசப்புகுவது கதிரைமலைத் தலேநகரும் அதனுடன் தொடர்பு பெற்ற விஷயங்களுமாதலாலே அவை எல்லாமடங்கி இவ்வதிகா ரத்துக்குக் கதிரைமலே இராச்சியமும் காலமும் எனய "0ே பெயர் தந்து பேசப்புகுகின்ருேம் மேல் வரும் இராச்சியங்களுக்கும் விளக்கம் இஃதே.
இக்கதிரைமலே இராச்சியமாவது. இதன் முன்விளக்கத்துக்காக வைபவமாஆலயிற் சொல்லப்பட்டவைகளே ஈண்டைக்கு வேண்டப்படும் அளவுக்குச் சுருக்கமாகத் தருவோம்.
யாழ்ப்பானத்தில் பண்டைநாட்களில் இருந்து மறைந்து போன தலைநகரங்களுள் ஒன்று இக்கதிரை மனே நகரம். இந்தியாவின் தென்பகுதியும் இலங்கையின் வடபகுதியும் அண்மித்து இருக்கின்ற இயற்கை வாய்ப்பதனுல் அவ்விரண்டு நாட்டுவரலாறுகளும் கலந்து ஒன்றேடொன்று தொடர்பு கொண்டவைகளாக இருக்கின்றன. அதாவது தென்னிந்தியாவில் உள்ள சோழ பாண்டிய சேர வரலாறு களும் இவ்விலங்கையின் உள்ள வடபகுதியில் உள்ள யாழ்ப்பாண் இராச்சிய வரலாறும் ஒன்றுேடொன்று சரித்திரத் தொடர்பு கொண் டவைகளாக இருக்கின்றன என்பதே. என்னே யாழ்ப்பானவரலாறே ஒரு சோழ இராச குமாரியில் இருந்துதான் ஆரம்பித்து உருவாகின் நது இங்கே அவ்வரலாறுகளேக் கண்டு கொள்ளச் செல்வோமாக,
யாழ்ப்பான வைபமா?ல சொல்லும் விபரங்களேக் காண்போம்
வங்க தேசத்து சத்திரிய மரபிற்பிறந்து இலாட தேசத்தை அர ாண்ட சிங்க வாகுவின் குமாரன் விஜயன் என்பவன் மகா துஷ்ட
 

墨直
ஆக இருந்ததினுல் அவனேப் பிதாவாகிய சிங்கவாகு துரத்திவிடஅவன் கா சிக்குப்போய் அங்கே இருந்தான்.
அவ்விடத்தில் விஜயகுமாரனுக்கு நீ இலங்கை நாட்டின் மத்தி யிலுள்ள கதிரை மலேயிற் போயிரு அந்தநாடு உனக்குடையது" எனச் சொற்பனத்தில் உத்தரவு கிடைத்ததினுல் அவன் நீலகண்டா சிெயர் என்னும் குருவையழைக்க அவர் தமது பத்தினியாகிய அசி வாண்ட வல்லியம்மாளேயும், புத்திர புத்திரிகளேயும், மருமக்களேயும் கூட்டிக் கொண்டு வந்து தனது பரிவாரங்களுடன் கதிரை மலேயிற் சேர்ந்தான்.
அக் காலத்தில் இலங்கையின் குடிசனங்கள் யாருமில்லாததனுல் விஜயராசன் குடிகளே அழைத்துத் குடியேற்றக் கருதிப் பல முயற் பு:ளச் செய்து பார்த்திாள். . . . . குடிகளே வசப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தினுல் விஜயராசன் சமய வழிபாட்டைக் குறித்துச் சனங் களுக்கு இஷ்டம் கொடுத்திருந்தும் தன் சமயாசாரவொழுக்கத்தை தவருமற் காக்துக் கொண்டான். அரசாட்சியை ஆரம்பிக்கு முன் ரமே அவன் தன் அரசாட்சிக்குப் பாதுகாப்பாக நாலுதிக்கிலும் நாலு சிவாலயங்களே எழுப்பிக் கொண்டான்.
வடதிசைக்குக் கீரிமலைச் சாரலில் திருத்தம்பஃ என்னும் பதி பபிலே, திருத்தம்ப்லேசுவரன், திருத்தம்பலேசுவரி கோயில்களேயும் அவைகளின் சமீபத்திலே சுதிரையாண்டவர் கோவிலேயும் கட்டுவித்து நவ்வாலயங்கட்குப் பூசஃன நடாத்தும்படி நீலகண்டாசாரியனின் மூன்றுங் குமாரன் வாமதேவாசிரியர் என்னும் காசியிற் பிராமண ஃபும் அன்ை பத்தினியாகிய விசாலாட்சி அம்மாண்பும் அழைப் பித்து அக்கிராகாரம் முதலிய வசதிகளையுங் கொடுத்து இருத்தி வைத்தான். அக்கோவில் அவ்விடத்தில் தோன்றிய காரணத்தால் அந்தக் கிராமம் கோவிற் கடவை எனப் பெயர் பெற்றது "முற் காலத்திலே நகுலமுனியென்னும் ஓர் இருடி அங்குள்ள மலேச்சார வே சில காலந்தங்கியிருந்து அங்குள்ள கீரிமசீலத் தீர்த்தமாடி வந்தபொழுது தின் முகத்துக்கிருந்த அங்கவினம் நீங்கிப் போன்து கண்டு அத்தவ விசேடத்தையும் நீர்த்த மகிமையுங் குறித்து வியப்புற்று அவ்விடமே தனக்குத் தவம் செய்தற் சுேற்ற இடமென்று அம்மலே முழைஞ்சிலே வாசஞ் செய்து கொண்டிருந் தார். அம்முனிவனுக்குக் கீரிமுகம் மாறிய காரணத்தால் அம் ம8லக்குக் கீரிமலை என்பார்கள். விஜயராசன் அவ்விடத்திற் சிவால பங்கட்டுவித்தபின் நகுல முனிவர் அவ்வாலயங்களிற்றங்கியிருந்து வழி பாடு பண்ணி வந்தார். அதனுல் திருத்தம்பலேசுவரர் கோவிலே நகுலேசுவரர் கோவிலென்றும் திருத்தம்பலேசுவரியம்மன் கோவிலை நகுலாம்பிகையம்மன் கோவிலென்றுப் பெயரிட்டு வழங்கி வந்தார்கள் விஜயராசன் திருப்பணி நிறைவேற்றி முடிந்தபின் பிரயாணப்பட்டுத் தன்னிராச்சியம் முழுவதையும் சுற்றிப் பார்த்துக் கொண்டு கதிரை
ாலேயைச் சேர்ந்தான். (யா, வை. மா, பக். 1-8)
疊

Page 23
அப்பால் விஜயன் தம்மனு என்னுமிடத்தை இராசதானியாக் கித் தன் மனேவியையும் இரு பிள்னேகளேயும் தள்ளிவிட்டுப் பாண்டி நாட்டுப் பெண்ணுெருத்தியை விவாகம் பண்ணிச் சிலவருள் காலம் அரசாண்டு புத்திர சந்தானமின்றி இறக்க, அவன் மந்திரி இராச்சி யத்தைத் தளம்ப விடாமல் ஒரு வருடம் காப்பாற்றி. பின்பு விஜய ராசன் சகோதரன் குமாரணுகிய பாண்டு வசு என்பவனே அழைத்து வந்து அரசனுக்கினுன்
இவன் குலத்தில் அரசர் அதன்பின் அனேகந் தலே முறையாக, இவ்விலங்கையை ஆண்டு வந்தார்கள் { irir. &3ığılır. El ET bu iş 8 ) உக்ரேவிங்கன்
இவன் விஜயராசனின் சகோதரன் பாண்டுவசு என்பவன் மரபைச் சேர்ந்தவன். வைபவமாஃல இவனே "சாவிவாகன சகாப்தம் 717 ல் (கி. பி. 795) விஜயராசனின் சகோதரன் மரபிற் பிறந்த ஐக்கிரசிங்கன் என்னும் அரசன் வடதிசையில் இருந்து வெகு திர ாான சேஃரைகளேக் கொண்டு வந்து போராடிச் சிலதிலேமுறையாய் இழந்துபோன இவ்விலங்கை அரசாட்சியில் அரைவாசி வரைச்கும் பிடித்துக் கதிரைமலையில் இருந்து அரசாண்டு வந்தான். தென்னுடுகளே நேற்றரசன் ஆண்டுவந்தான். இவன் நகுலேசர் கோயிஐத் தரிசித்துக் கீரிமலைச் சாரவில் வந்திறங்கி, முற்கா லத்திலே சோழராசன் தான் நீர்த்தமாட வந்திறங்கியிருக்கும் காலத் திலே மாளிகை கட்டுவித்திருந்த வளவர் கோன் பள்ளமென் னும் இடத்திலே பாளயமிட்டிருந்தான். (யா. வை. மா பக் 13-14)
இங்ஙனம் உக்கிரசிங்கன் வந்திருப்பதை அறிந்த தொண்டை நாட்டை அரசாண்ட தொண்டமான் என்னுகரசன் கேள்விப்பட்டு பரிவாரங்களுடன் கீரிமலைக்சாரலில் வந்திறங்கி இவ்வுக்கிரசிங்கனேச் சந்தித்து இந்தநாட்டில் விளேயும் உப்பைத் தனக்கு வருடந்தோறும் வில்க்குத் தரும்படியும் அவ்லுப்பு வினேயும் இடங்களுக்குச் சமீப மாகத் தம் பரக்கனங்களேக் கொண்டு போப் உப்பேற்றவும், மாரி காலங்களில் அம்மரக்கலங்களே ஒதுக்கி விட்டு அம் மரக்கலமோட் டிகள் தங்கவும் வசதியாக இருக்கும் பொருட்டு வடகடவில் இருந்து ஓர் ஆறு வெட்டுவித்துக் கொள்ளவும் உத்துரவு கேட்டான். உக்கிர சிங்க காராசன் உத்தரவு கொடுக்கத் தொண்டமான் ஆங்கிருந்த சிற்ருற்றை மரக்கலங்கள் ஒடத்தக்க . ஆழமும் விராசமும் உள்ள தாகவும் ஒதுக்கிடமுள்ளதாகவும் வெட்டுவித்துத் தன்னுரருக்கு மீண் டான். அதுமுதல் இதுவரைக்கும் அவ்வாறு தொண்டமானுறு என்று அழைக்கப்படுகின்றது.
அப்பால் உக்கிரசிங்க மன்னன் கதிரைமலேக்குத் திரும்பினுன். வன்னியர்கள் வந்து தங்கள் வன்னிநாடுகஃாத் திறை கொடுத்து ஆள உத்தரவு கேட்டார்கள். அரசன் தன் இராச்சியமெங்கும் தன் ஞனேயே செல்லவும் தனக்கு வரவேண்டிய திறையைக் கோணேசர் கோயிலுக்குக் கொடுக்கவும் உடன்பாடு பண்ணுவித்துக் கொண்டு
இரைம&லக்குச் சேர்ந்தான். (யா. வை. மா. பக். 13-15)
 

7. மாருதப்பிரவல்லி
மாருதப்பிரவல்லி, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் கட்டி பமை இக்கோவிலின் புரதான வரலாறு யாழ்ப்பான ஆதார நூல் களாகிய வைபவமாஃப், கைலாயமாஃலயில் விரிவாகச் சொல்லப் பட்டுள்ளது. சாலிவாகன சகாப்தம் 717ல் (கி. பி. 795) விஜய ராசன் சகோதரன் மரபிற்பிறந்த உக்கிரசிங்கன் என்னும் அரசன் வடதிசையில் இருந்து வெகுதிரளான சேஃபசுளேக் கொண்டு வந்து போராடிச் சிலதலேமுறையாய் இழந்துபோன இவ்விலங்கை அரசாட் சியில் அரைவாசி வரைக்கும் பிடித்துக் கதிரை மலேயிலிருந்து அர சாண்டு வந்தான். (வை. பக், 13)
"இவன் காலத்திலே சோழதேசாதிபதியாகிய திசையுக்கிர சோழன் மகள் மாருதப்பிரவல்லியெ பவள் தனக்கிருந்த குன்டி வியாதியால் மெலிந்தவளாப் வியாதியை வைத்தியர்கள் ஒருவரும் சுகமாக்க முடியாததினுல் இனித்தீர்த்த யாத்திரையாகுதல் செய்து பார்த்தால் சுகம் வரக்கூடும் என்றெண்ணிக் காவிரிப்பூம் பட்டினத் தில் இருந்து புறப்பட்டு அங்கும் இங்கும் போய்த் தீர்த்தமாடி வரு கையில் சாந்தலிங்கம் என்னும் ஒரு சன்னியாசி கண்டு உன் வியாதி பண்டிதர் ஒருவராலும் குணமாக்கத்தக்கதல்ல. நீ. இப்பொழுது எடுத்த முயற்சியே உனக்குச் சுகம்தரத்தக்கது. இலங்கையின் வடமுஃன யிலே கீரிமலே என்ருெரு மலேயுண்டு. அது சமுத்திரதீரத்துள்ளது அங்கே உவர்ச்சல மத்தியில் சுத்தநீர்த்தமும் மஃப்யருவிநீர்த்தமுங் கலந்த உத்தமதீர்த்தம் ஒன்றுண்டு. உலகத்தில் உள்ள எந்தத்தீர்த்தங் களிலும் முக்கிய தீர்த்தமாயிருக்கின்றது. அதிலே நீ போய் நீராடித் தங்கியிருந்தாற் சுகமடைவாய் என்று சொல்ல அச் சொற்படி மாரு தப்பிரவல்லி புறப்பட்டுத் தாதிமாரும் தோழிமாரும் சேனுவீரரும் சூழ்ந்துவரக் கீரி nலேச்சாரலில் வந்திறங்கிக் குமாரத்திபள்ளம் என்னும் இடத்திற் பாளயம் போட்டிருந்து நகுலமுனிவரைக் கண்டு சாட்டாங்க மாகவண்ங்கி அவரால் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு அத்தல விசேடத்தையும் தீர்த்த மகிமையையும் அத்தீர்த்தத்திலாடித் தனக்
r
27

Page 24
குக் கீரிமுகம் மாறின செய்தியையும் அம்முனிவர் சொல்லக் கேட்டு மகாசந்தோஷத்துடன் தீர்த்தமாடிச் சிவாலய தரிசனம் செய்து வந் தாள். சில காலத்தில் அவளுக்கிருந்த குன்மவலியுந் தீர்ந்து குதிரை முகமும் மாறியது மாறவே மாருதப்பிரவல்லியின் பெளனை சொரூ பத்தைக் கண்டவர்கள் ஆச்சரியங் கொள்ளாமல் இருந்ததில்ஃவ
(வை. மாஃn, பக் 15-17)
உக்ரே சிங்கன் மாருதப்பிரவல்லியை விவாகம் செய்ய நினத்தல்
அக்காலத்திலே கதிரை மலேயில் இருந்த உக்கிரசிங்க மகா ராசன் நகுலேசர் கோவிலேத் தரிசிக்க முன்ருந்தரம் கீரிமலைச் சாரலில் வந்திறங்கி வளவர் கோன்பள்ளத்தில் பாளயம் போட்டிருந்தான் அவன் மாருதப்பிரவல்லியை நகுலேசர் சந்நிதானத்தாலே கண்டு அவள் பேரழகிருல் மயங்கி மிகுந்த ஆச்சரியங் கொண்டு தான் அவ&ள விவாகம் செய்யவேண்டு மென்று நீர்மானித்துக்கொண்டான்.
(பா. வை. மT பக். 18)
மாருதப்பிரவல்லி மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலேக் கட்டுதல்
மாருதப்பிரவல்லி தனக்குக் குதிரைமுகம் நீங்கின கார ஈனத் தாற் கோவிற்கடவை என்னுங் குறிச்சிக்கு மாவிட்டபுரம் என்னும் பெயர் சூட்டி அவ்விடத்திலே கந்தசுவாமி கோயில் கட்டுவிக்க ஆரம்பித்து அதற்கு Ba Giarili ay sa: எஸ்துக்களும் பிராமணரும் வரும்படி பண்னவேண்டுமென்று பிதாவாகிய திசையுக்கிர சோழ ஆணுக்குத் திருமுகம் அனுப்பினுள். அப்பொழுது திசையுக்கிரசோழன் சகல ஆயத்தங்களும் பண்ணிக் கொண்டு இலங்கையிவேயுள்ள கீரிமஃ) நாட்டுக்கணுப்புவதற்குத் தில்லே மூவாயிரவரில் ஒருவரைத் தன்னிடத் துக்கு அனுப்பி வைக்கும்படி சிவாலயத் தலேவணுக்குக் கட்டண் அணுப்பி ஞன். அப்பொழுது சிவாலயத் தஃவன் பிராமணர் தோணி ஏறு வதும் இலங்கையிற் குடி இருப்பதும் மாகா தோஷமாக இருக்க அரசன் இப்படிக் சுட்டளேயனுப்பி இருக்கிருனே நான் இதற்கு என்ன செய்யலாம் என்று பயந்து தில்லேச்சிவாலயத்திலே மூன்று நாட் பட்டினி கிடந்தான். அப்பொழுது கனவிலே "கீரிமலைச் சாரலானது அங்குள்ள புண்ணிய தீர்த்தத்தாலும் சிவாலய மகத்துவத்தினுலும் மகாதிவ்வியதலமாகவேயிருக்கின்றது. காசியிற் பிராமணரும் அங்கே யிருக்கிருர்கள். பிராமணர் தங்கள் நியமநிட்டை வழுவாமற் செய் வதற்கு மரக்கலங்களில் இராத்தங்காமல் ஏறலாம். நகுல முனிவர் அத்தவ விசேடத்தை நோக்கி அவ்விடத்தில் இருந்து தவம் பண்ணும் போதே அத்தல விசேடத்தைக் குறித்து யோசிக்க வேண்டியதென்ன யாதொரு யோசண்யுமின்றி பணுப்பலாம்' என்று உத்தரவு கிடைத்தது. (பா வை. மா. பக் 19-20)

器岛
பெரியமனத்துள்ளார் வருகை
அப்பொழுது சிவாலயத் தஃவன் பெரிய மனத்துள்ார் எனுந் நீட்சதரை சோழராசனிடம் அனுப்பி வைக்கச் சோழரா “ன் சகல தளபாடங்களேயும் கந்தசுவாமி வள்ளியம்மன், தெய்வ நாயகி அம்மன் விக்கிரகங்களேயும் பெரிய மனத்துள்ளார் கையில் ஒப்புவித்து அனுப்பி வைத்தான். நீட்சதர் அவைகளேயும் கொண்டு கீசாத்துறை (காங்கேயன்துறை) என்னும்துறையில் வந்திறங்கிஞர். கந்த சுவாமி விக்கிரகம் வந்திறங்கின காரணத்தால் அந்தத்துறைக்குக் சீTங்கேசன்துறை எனப் பெயராயிற்று. (யா. வை. மா. பக். 20-22)
மாவிட்டபுரம் நந்தசுவாமி காயிலின் பெருமை
மாருதப்பிரவல்வி என்னும் சோழ இராசக்குமாரத்தியால் இவ்வா 'யம் கட்டப்பட்டதும் கத்தசுவாமி விக்கிரகம் முதலான விக்கிரகங்க ளெல்லாம் தந்தையாகிய சோழ இராசனுல் அனுப்பிவைக்கப்பெற்றும் பெரியமனத்துள்ளார்என்னும் சிதம்பரதீட்சகரால் சாஸ்திரமுறைப்படி ரேதிஷ்டை செய்யப்பெற்றதும் அவரால் துவசாரோகனம் செய்து திரு விழஈச்செய்யப்பெற்றதும் இக்கோயிலின் தனிப்பெருமைக்குரிய செய்தி *ளாம். அன்றியும் இவ்விலங்கையிலே முதன்முதல் துவசாரோகனம் செய்து திருவிழாச் செய்யப் பெற்ற புண்ணிய தலம் இம் மாவிட்ட ரம் சுத்தசுவாமி கோயில்தான் என்பது வைபவ மாலயைக் கொண் டறியக் கிடக்கின்றது.
பாருதப்பிரவல்லியின் மன நிகழ்ச்சி
ஒரு நாளிரவில் மாருதப்பிரவல்வி தேவாலயத்திருப்பணியைப் 1ற்றிய ஆலோசனேயுடன் சப்பிரமஞ்சத்திற் சாய்ந்து விழிப்பாப் இருக்கும் சமயத்திலே அர்த்த சாமவ்ேளேயில் உக்கிரசிங்கமகாராசன் பாளயங்களேயும் அரணிப்பான சேனகளேயும் கடத்து அவனிருந்த "ணயத்துட் புகுந்து அவளே எடுத்துத் தன் எமத்துக்குக் கொண்டு போய் வைத்துக் கொண்டான். பொழுது விடிந்தபின் ாேருதப்பிரவல்வியின் தாதிமாரும் தோழிமாரும் காவற் சேனேகளும் அவளைக் காணுததினுல் மனங்கலங்கித் தேடிப் போய் உக்கிரசிங்கமகா "சன் பாளயத்தில் இருந்த செய்தியறிந்து அவனிடத்தில் சென்று நாங்கள் என்னசெய்யலாம் என்று கேட்க அவன் என் பட்டத்துத் தேவியாயினுள். நீங்கள் போய் இந்தசுப சோபனச் செய்தியைப் பிதா வுக்கறிவியுங்கள் என்று சொல்லி வழிச்செலவுக்குப் பொருளுங் கொடுத்து அனுப்பிவிட்டான். அதன்பின் உக்கிரசிங்கன் கதிரைமலைக் குப் போசு யோசித்த போது மாருதப்பிரவல்லி கந்தசுவாமி கோயிற் திருப்பணி நிறைவேற்றி முதலாம் உற்சவச் சிறப்புக் கண்டல்வா மல் அவ்விடத்தை விட்டுப் போகப்பிரியமில்ஃவ என்ற தனுஸ் அப்பிர

Page 25
3)
யாணத்தை நிறுத்தித் திருப்பணியை நிறைவேற்றி ஆனி உத்தரத் தன்று துவஜாரோகனந் தொடங்கி உற்சவத்தை நிறைவேற்றி கொண்டு கதிரைமலேயிற் சென்று பணிவாகச் சடங்கையும் நிை வேற்றிச் சகல செளகரியங்களையும் அனுபவித்திருந்தாள்
(யா, வை. மா. பக். 31-22
அரசகுமாரி தன்கண்காணிப்பில் கட்டுவித்தும் கும்பாபிஷேகம் செய்து வைத்தமை பற்றி நகுலகிரிப் புராணத்தில் பின்வருமாறு விபரமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது
பாடல்கள்
1. நீள்பெருங் கோயிலும் நிகரில் கோபுரஞ் சூழ்தரு நெடுமதில் சுடர்தன் காண்புறத் தாழ்வகன் றிடுமறு கோடுத் தந்துகன் நாளினின் சுந்தவேள் தன்ன நயப்புடன்
2. செப்பரும் கும்பதா பனங்கள் செய்திடா
தொப்பிலா மனறமுறை யொனிரு நல்லருண் வைப்பினு வாகன பதிட்டைதன்னேமுன் தப்பிலார்க் குமரவேள் தனக்குச் செய்தனள்
உக்கிரசிங்கராசனுக்கும் மாருதப்பிரவல்லிக்கும் கதிரைம பிற் சோழ அரச பரம்பரை மரபிற்கமைவாக வெகு உற்சாகத்தோடு விமரிசையாகவும் திருமணம் நடந்தேறியது. சிலகாலஞ் சென்றபின் மாருதப்பிரவல்வி தலயாத்திர செய்து வரும்போது கோணேசகிரி குச் சென்று தீர்த்தமாடிக் கோணேசரரையும் தரிசித்து அங்குள் பூசகருக்குப் பட்டாடை முதலயபரிசுகளேயும் வழங்கி அவர்களது ஆ சுளேப் பெற்றுள் இப்படியே சென்ற சென்ற இடங்களெல்லாம் தான் தர்மங்கள் செய்தும் மீண்டும் நகுலகிரிக்கு வந்து நெடுக்காலமா மாவிட்டபுரம் கந்தசுவாமியாரை வணங்கி நல்லருள் பெற்று கொண்டு கதிரை மலேக்கே புறப்பட்டாள்.

8. கைலாய மாலையில் மாருதப்பிரவல்லி
வரலாறு
இம்மாருதப் பிரவாகவங்லி வரலாறு கைலாயமாஃபயிற் சொல் லப் பட்டிருக்கிறது. அது வருமாறு
"உதய குல ராச னுதய மதி வாசன் கண்ணி சிதைவின் மனு ராச வம்சதீரன் - துதைபணிகள் பாடு மல ராத்திபுண் பார்த்திவன் றன் சீர்த்தி முற்றும் தேடுந் தனிக் கவிகைச் செம்பியர் கோ - வீடு கரைப் பொன்னித் துறைவன் புலிக் கொடியன் பூவின் மன்னர் மன்னனெனுஞ் சோழன் மகளொருத்தி - கன்னிமின்ஞர் தேடுங் கடலருவித் தீர்த்தகத்த நீரகத்து னாடிப் பிணி தனிப்ப தானினேந்து - சேடியர்தஞ் சேவைகளுங் காவலுறு சேண்யுமாய் வந்திறங்கிப் பாவை புறு நீர்த்தம் படிந்த தற்பி - னேர்வை பெறு கங்குலுற வெங்குமிகு காவ வரண்பரப்பிச் சங்கைபுறு கூடாரந் தானமைத்து - மங்கை விரித்தரப்ர மஞ்சமெத்தை மெல்லஃணயின் மீதே பொருத்துதுயி லாயிருக்கும் போது"- (கண்ணி கை, மா. சி-1)ெ
ஜப்பால் உக்கிரசிங்கன் வரலாறு டிெ நூலில்
" . . சூர்ப்பகையை மாற்றுங் குகன் குழகன் வாய்ந்தவடி - யார்துயரை யாற்றுங் குமர னருளாலே - போற்று தவர் வாய்ந்த கதிரைபஃ வாழு மடங்கள் முகத் தாய்ந்த நகராகத் தடலேறு - சாய்ந்து சுங்குல் போவதன்முன் னே கிபந்தப் மோர் வேந்தன் மாமகடன் காவல் கடந்தஃை: க் கைப்பிடித்தே - ஆவலுடன் கொண்டேகித் தன் பழைய கோலமலே மாமுனழஞ்சில் வண்டார் சூழலே மணம் புணர்ந்து - உண்டான பூவினது போகம் பொருந்திப் புலோ மனசமங் காவலனும் போலக் கலந்திடுநாள்" கண் விரி 12 - 17
சொல்லப்பட்டது. இந்நூல் வைபவமாலேயின் முதநூலாதலின்
வைபவமாஃபார் வேறும் நூல்களிலும் இவர்கள் வரலாற்றைக்
கண்டு விரித்தெழுதியிருத்தல் நிச்சயமே. நிற்க,

Page 26
9. உக்கிரசிங்கனின் தலை நகர் மாற்றம்
இது நிற்க, கதிரைமலையிலிருந்த உக்கிரசிங்கராசன் சில காலத் தின் செங்கடக நகரியை இராசதானியாக்கி அங்கிருந்து அரசாண்டு வருங்காலத்தில் மன்மதன் போன்ற ரூபமும் சர்வராசலட்சணங்க ளும் உடையவனுய்ச் சிங்கத்தின் வாலேயொத்த வாலுடனே ஒரு குமா ரனும் அவனுடனெரு பெண்ணும் பிறந்தார்கள். அவ்விருவருக்கும் உக்கிரசிங்கராசன் நரசிங்கராசனென்றும் சண்பகாவதி என்றும் பெயரிட்டான். அவன் அவர்களுக்கு விவாகம் நிறைவேற்றி நர சிங்கராசன் என்னும் பெயர் படைத்த வாலவிங்கனுக்கு முடிசூட்டி அரசாள வைத்து மரணமடைந்தான். வா விங்க மகாராசன் செய துங்க வரராசசிங்க மென்னும் பட்டத்துடன் முடிசூட்டப் பெற்று அர சாட்சியை ஒப்புக்கொண்டான்' (வை. மா. பக் 22-23 கு. சபா நாதன் பதிப்பு)
இவ்வளவில் கதிரைமலை இராட்சியம் முடிந்து இனிஇதனை அடுத்துச் செங்கடக நகர் இராச்சியம் ஆரம்பமாகிறது. உக்கிசிரங் கனல் மாற்றப்பட்டதும் சில காலம் உக்கிரசிங்கனல் ஆட்சி செய்யப் பட்டதும் பின்னர் அவன் மகனுக்கு முடிசூட்டப்பெற்று அவன் அர சாட்சி பண்ணியதும் அச் செங்கடக நகர்தான் அது எங்குள்ளது
என்பது அடுத்த அதிகாரத்தில் காண்போம்.
32

10. இடப் பெயர்கள்
கீரிமலை, நகுலேசுவரம், மாவிட்டபுரம் என்னும் இடப்பெயர்கள்:
1. கீரிமலே: முற்காலத்திலே நகுலமுனி என்னும் ஒர் இருடி அங்குள்ள மலைச்சாரலிலே சிலகாலந் தங்கி இருந்து தீர்த்தமாடிவந்த பொழுது தன் முகத்துக்கிருந்த அங்கவீனம் நீங்கிப் போனதுகண்டு அத்தல விசேடத்தையும், தீர்த்த மகிமையையும் குறித்து வியப்புற்று அவ்விடமே தனக்குத் தவம் செய்தற்கேற்ற இடமென்று அம் மலை முழைஞ்சிலே வாசம்செய்து கொண்டிருந்தார். அம் முனிவனுக்குக் கீரிமுகம் மாறிய காரணத்தால் அம்மலைக்குக் கீரிமலை என்பார்கள். நகுலம் = கீரி (யா. வை. மா.)
2. நகுலேஸ்வரம்:- ந கு ல மு னி வர் வந்து தங்கி அக்கீரிமலையில் தீர்த்தமாடி சுவாமி தரிசனம்செய்து வர அக் கீரிமுகம் மாறி அழகான மனித முகம் ஆகப் பெற்றவர் என்பது சரிதம் ஆகும். ஆகையால் அவர் தரிசனம்செய்த மூர்த்தி எழுந் தருளிய இடம்தான் நகுலேஸ்வரம். மூர்த்தி - நகுலேஸ்வரர்.
மேலும், இதன் விவரங்களை வேறு இடத்துக் காண்போம்: மேலே காட்டப்பட்ட பெயர்களல்லாமல் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் பிரதம குருக்களான து. ஷண்முகநாதக் குருக்கள் 'குதிரை முகமாக விகாரமடைந்திருந்த இளவரசியின் முகம் மாறப் பெற்ற காரணத்தால் இவ்விடத்திற்குத் 'துரகானன விமோசனபுரி எனப் பெயரிடப்பட்டது. அக் காலத்திலிருந்தே இன்றும் இங்கு இக்கோவிலில் அனுஷ்டிக்கப்படும் பூசை வழிபாடுகளைக் கொண்ட பத்ததியொன்றில் இவ்விடம் 'துரகானன விமோசன புரே " என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கீழ்வரும் சுலோகங்களாலறியலாம்.
"பூரீமத் காவேரி யாஹ தகFணதீரே ஸமுத்திரஸ்ய பஸ்சிமதடே பாஸ்கர சுேஷத்ரேதுர கானன விமோசன புரே அஸ்யதேவ தேவஸ்ய மஹாவல்லி கஜவல்லி ஸ்மேத பூரீ சுப்பிரமண்ய பரமேஸ்வரஸ் ய. . . . p.
3

Page 27
3.
துரகானன விமோசனபுரே என வடமொழியில் வழங்கப்பட்ட இவ்விடம் அதே பொருள்பட மா - விட்ட -புரம் எனத் தமிழில் வழங்கலாயிற்று. (மாவிட்ட - புரத்திருத வரலா. பக் 17) துரகம், மா, என்பன குதிரை என்னும் பொருளாம். நிற்க,
முேமன் கத்தோலிக்க பாதிரியார் சுவாமி ஞானப்பிரகாசர் யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்னும் தம் நூலில் 12-ம் பக் கத்தில் மாவிட்டபுரம், கீரிமவே என்று தஃவப்பிட்டுப் பொருள் உரைக் கின்ருர், அவர் கூற்ருவது "மாவிட்டபுரமென யாழ்ப்பாணச் சரித் திராசிரியர்கள் தமிழடைவு கொடுத்தெழுதிய பெயர் பரவை வழக்கி லுள்ளபடி மாவட்டபுரம் என்றிருத்தலே பொருத்தமானது. சிங்களத்தில் மாவட்டம் என்பது மஹாவட்ட அதாவது பெரிய ஆலமரம் எனப் பொருள்தந்து நிற்கும், மா என்பது மாவத்தை முதலிய சிங்கள இடப்பெயர்களிலும் வருவது. வட்ட என்னும் சிங்களச் சொல் பகுதி . . . .புரம் என்பது தமிழிற்போலச் சிங்களத் திலும் தற்சமமாய் வழங்குகின்ற நகர் என்னும் பொருளுள்ள சமஸ்கிருதச் சொல்லாகும். மாவிட்டபுரத்தையொட்டி வையாபாடல் ஆசிரியர் முதலானுேரும் குதிரைமுகம்விட்ட கதையைச் சிருட்டித்துப் பேசினுர்" என்பதே.
ரிேமவிே என்னும் இடப்பெயர் சிங்கள உற்பத்தி உடையதாதல் வெளிப்படும். கீரி என்பது கிரி என்னும் சிங்களச் சொல்லின் பகுதி, இனிக் கீரிமலே இருபெயரொட்டாகலாம் இ க் கருத்துரைக்கு என்ன முடிவு. இதன் பெறுமதி இதைச் சொன்னவர்க்குக் கூட விளங்கி இருக்காது. விளங்கினுல் அவர் சொல்லி இருக்கமாட்டார். ஒரு மனிதன் தன் வாழ்க்கை எல்லேயில் 100 வருடம் வரை வாழ்ந்தான் என்றல் அவன் அந்த 100 வருட் எல்லைக்குள்ளே ஒரு சம்பவத்தை நான் கண்டேன் என்று சொல்லலாம். அவன் தன் வாழ்நாளில் சில பழங் கதைகஃனச் செவி வாயால் தகப்பன் சொன்னது, பேரன் சொன்னது நான் கேட்டேன் என்னலாம். அதுதான் கர்ண பரம்பரை கதை, காது வழியால் கேட்டுவந்த கதை. அக்கதைக்கும் ஒரு 50 ஆண்டுகள் அவன் தன் வாழ்நாள் எல்லேக்கு முற்பட்ட கதையைத் தெரிந்திருந் தான் எனலாம். ஆகையால் ஒருவன் 150 வருடங்களுக்கு முற்பட்ட சங்கதியைச் சொல்ல எப்படி இயலும். வைபவமாஃவ இக் கீரிமலை மாவிட்டபுரம் என்னும் சொற்கள் அவ்வத் தலைவர்கள் வாழ்ந்து தொடர்புபட்ட காரணங்களால் வந்த காரணப் பெயர் என்று சொல்லுகிறது. இவர்கள் அதற்கு அகராதிச் சொற்பொருள் விரிக் ஒழர்கள் தம் வாயாலே. மாருதப்பிரவாகவல்வி காலம் கி. பி. 785 வரை, இவர்காலம் 20ம் நூற்ருண்டு. எனவே, 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட காரணப் பெயர்க்கு இவர் தம் வாயாதாரமாகச் சொன்

ஜல் அவை மறுக்கப்படுமா. இவர்கள் ஒரு ஆதாரம் காட்டியும் மறுக்கவில்லை. இவர்கள் மறுப்புக்கு ஆதாரம் காட்ட இவர்களால் இயலாது. என்னே பெனின் ஆதார நூல்கள் கூற்றுக்குமாருக இன் னுெரு ஆதாரம் எடுக்கவும் இயலாது. நிற்க,
ஆதார நூல்களைப் பற்றி இவர்களுக்குக் குண்டலான விளக்கக் குறைவே இவர்கள் இவ்வாறுரைக்கக் காரணம் என்க இவ்வைபவ மாலே யாழ்ப்பாணத் தமிழ் அரசர் காலச் சரித்திரத்துக்கு உயிர் இவ்வைபவமாஃல இல்ஃலயேல் யாழ்ப்பாணத் தமிழ் அரசர் கால அரசர் அட்டவனேயே இல்லை. இன்னும் இவ்விளக்கம் என்ரேயெனின் ஒரு நாட்டின் ஒரு காலத்தில் ஒரு வாழ்ந்த அறிவாளிகளிற் சிலர் அந்நாட்டில் பின்வரும் சந்ததியினர்க்கு அன்றி பின்வரும் நாட்ட பர்க்குத் தாம் அறிந்துள்ளவைகளே அறிவிக்க வேண்டும் என்று சொல்லி வைப்பதும் உண்டு அதுவருங்காலத்தவன் ஆசையைத் தீர்க்க அவர்கள் மாட்டெழுந்த ஆசை. அதாவது பின் வருங்காலத்தவனுக்கு அவர் இட்ட அறிவுப்பிச்சை. அப்படி முன்னுள்ளவர்கள் சொல்வி ஹவக்கா விட்டால் ஒருவன் தன் நாட்டு முன்சரித்திரத்தை அறிய மாட்டான். உதாரணமாக யாழ்ப்பாணப் பட்டினத்திலே ஒரு நூல் நிலேயமிருக்கு அந் நூல் நிலையத்தின் அடிப்பக்கத்திலே இந்நூல் நிலை யம் 1946 ம் ஆண்டில் A ஜாம் சபாபதியால் அத்திவாரம் இடப் பட்டது என்று எழுதப்பட்டிருக்கிறது. இப்படியே யாழ்ப்பாணம் ஆசுப்பத்திரிக் கட்டிடத்திலே இக் கட்டிடம் உள்நாட்டு மந்திரி A. மகாதேவாவால் அத்திவாரம் இடப்பட்டது என்று எழுதப்பட்டி ருக்கு ஏன் இப்படி அந்நூல் நிலேயக்காரர் எழுதினுர்கள் ஆசுப்பத் திரிக்காரர் எழுதினுர்கள் வருங்காலத்தவன் அன்றிப்பிறருக்கு அந் நூல்நில்யம் எப்போ கட்டப்பட்டது என்ருே அவ்வாசுப்பத்திரி எப்போ கட்டப்பட்டதென்ருே அறிய ஆசை ஏற்படும். தாகம் ஏற் படும். அந்த ஆசை அந்தத் தாகத்தைத் தீர்க்க உதவப்படும் பொருட்டு முன் கூட்டியே அறிந்து எழுதி இருக்கிருர்கள். அது அவர்கள் பின் னவனுக்கிட்ட சரித்திரப்பிச்சை அவ்வாறேதான் வைபவமாலைக் காரரும் கீரிமலை மாவிட்டபுரப் பெயர்களின் வரலாற்றைச் சொன் ணுர் என்றறிந்து கொள்ள வேண்டும் அங்கனமாயின் என்னே பிறர் வைபவமாஃலயிலே குறை சொல்லுகிறர்கள் என்னின் நன்று சொன் ஞய், தம் பிழையான ஆராய்ச்சியைச் செய்து பிழையான முடிபைப் பெற்றுக் கொண்டவர்கள்தான் அப்பிழைக்கு வைபவமாலே இடங் கொடுக்காமையாலே வைபவமாஃலயைக் குறை கூறுகிருர்கள் அவர் தம்பிழையைத் தாம் உணர்ந்து கொள்ள இயலாதவர்கள் என்க. வைபவமாலேயில் ஒரு அணுவும் பிடுங்கி கொள்ள இயலாது. இந் நூலில் அவ்வுண்மை விசித்திரமாகப் பின்னுல் விளக்கிப்படுகின்றது.

Page 28
品高
எனவே வைபவமாலேக் கூற்றுக்களே நாம் அறிந்து பயன் படுத்திக் கொள்ள வேண்டு . அந்நூலே எழுதித் தந்த மகாபுருடனே-அறிவுப காரியை நாம்போற்ற வேண்டும் அந்நூல் இல்லையேல் யாழ்ப்பாணச் சரித்திரமுமில்லே, யாழ்ப்பாணத் தமிழரசர் பட்டியலும் இல்ஃவ. ஞானப்பிரகாசர் அல்ல எந்த மேதாவிகளும் ஆதாரநூல்கள் சொல் வதைக் கேட்டு அவற்றின் வழியே ஒரு அணுவும் பிசகாது தம்நூலே எழுதினுல்தான் நாட்டு மக்களுக்கு உண்மையை உணர்த்த முடியும் அல்லாத நூல்களே அவர்கள் நம்பிப் போனுல் அவைகள் பொய்யான முடிபுகளுக்குக் கொண்டு போய்விடும். நம்முடைய எழுத்துக்கள் முதல்நூலுக்கு எந்த வழியாலும் இடராய் இருத்தல் கூடாது. அப் படியாளுல் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற பழிக்கு ஆளாகவேண்டி வரும் நிற்க ஞானப்பிரகாசர் இப்போ அச்சொற் களுக்குப் புதுப்பொருள் சுண்டால் முன்னர் நடந்து முடிந்த நிகழ்ச் சிகள் இல்லாமல் போய்விடுமா? இவர்க்குத்தானும் தான் இவ்வாறு சொல்வது பிழை என்று அவர் புத்திக்கெட்டி இருக்காது. நிற்க, இவர்கள் கூற்றுப் பொய்ப்படுவதையும், வைபவமாலேக் கூற்று மெய்ப் படுவதையும் இந்நூலில் ஞானப்பிரகாசரும் நூலாய்வும் என்ற பக்தி புள்விளக்குவாம். வைபவமாஃல கைலாயமாவேயில் ஓர் அணுவும் யாராலும் பிடுங்க இயலாது. மாறுபட்டவர் எல்லாரும் வீழ்வர் நிற்க. உத்தேசம் கி. பி 795ம் ஆண்டு வரை இப்பெயர்களின் காலம் gr G3 qift II).
யாழ்ப்பாணத்திலே தமிழரசர் அரசாட்சிக் காலத்திலே அரசு புரிந்த அரசர் அஃனவரும் சைவசமயந்தவர், குடி மக்களும் சைவர். அக்காலத்திலே அனேகம் சைவக் கோவில்கள் பிரதிட்டை செய்யப் பட்டன. அனேக கோவில் சுவாமிகள் ஆச்சரியப்படத்தக்க அருள்க புரிந்திருக்கின்றனர். அவைகளே எல்லாம் நடுநிலமை விலகாது அண் உண்மைகளேக் கண்டபடி எழுதுவல்ல ஆசிரியரைக் கொண்டே எழு விக்க வேண்டும். போர்த்தர் தம் அரசாட்சிக் காலத்திலே சைவ சமயத்தவர்களுக்கு இழைத்த நீங்குகள் அனந்தம். கூலிக்கு ஆட்களே நியமித்து அவர்களேக் கொண்டு சைவ சமயத்தவர்களே அஞ்ஞானிகள் என்று பிரசாரம் பண்ணுவித்தார்கள். அவர்கள் சைவ மக்கன்ப் பார்த்து உங்கள் சுவாமி முக்கிருந்தால் மனக்குமா, கண்ணிருந்தால் காணுமா. காதிருந்தால் கேட்குமா என்றெல்லாம் பிரசாரம் பண்ணு வித்தார்கள். அப்படிப் பிரசாரம்செய்யும் போதகன்மார் பட்டியஃலச் சேர்ந்தவர்தான் சுவாமி ஞானபிரகாசர். அவர் கீரிமலே, மாவிட்டபுரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னும் சொற்களின் வரலாற்றுப் பெயர்களே அறிய அவர்க்கு சந்தர்ப்பம் கிட்டியிருக்காது. "மூர்த்திதவம் தீர்த்தம் முறையாய் வழி பட்டார்க்கு வார்த்தை சொல்லச் சற்குருவும் வாய்க்கும் பிராபரமே' ான்று தாயுமான சுவாமிகள் பாடின பாட்டின் உண்மை தத்துவம் அவர்குப் புரியாது, அல்லதும் சமயக் கடவுளின் அருள்புரி பரத்துவத் Eதப் பற்றிப் புரிந்திருந்தால் அவர் மேற்படி சொற்களுக்கு அவ்வாறு பொருள்செய்து ஒல்வொரு சைவசமயத்தவன் உள்ளத்தையும் புண் படுத்த முற்படார், நிற்க இஆர் இவ்வாறு வைபவமாலேக் கூற்றுக ளூக்கு எதிர்க் கூற்றுக்களேச் சொல்வாராணுல் பொது மக்களுக்கு யார் கூற்றுச்சரி, யார் கூற்றுப்பிழை" என்று பிரித்தறிய முடியாது. அவர் *ளுக்கு வைபவமாஃல சொல்லும் உண்மை மனசு புகாது. மனதிற் பதியாது விட்டுவிடும், ஆகையால் சைவசமயத்தர் வைபவமாலைக் கூற்றையே ஏற்று உண்மை வரலாற்றை உணர்வாராக. அன்றியும் கீரிமலை, நகுலேஸ்வரம் மாவிட்டபுரம் என்னும் பெயர்கள் அவ்வவ் விண் முற்றலேவர்களால் தொடர்புபட்டுக் காரணப் பெயர்களாக அழைக் கப்பட்டு வருதலே வைபவமாலேயார் தங்கால எல்லேக்கு முற்கூட்டியே நிகழ்ந்துவரும் நிகழ்ச்சியென்றும் துணிந்து கொண்டமையாலே தான் தம் நூலில் அவ்வாறு குறிப்பிட்டார் என்றும் அப்பெயர்களுக்கு சொற் பொருள் விரிப்பது அதளே மறுக்கும் ஆற்றல் கொண்டதல்ல என்றும், ஒருவர் உரைக்கும் இன்ன கருத்துக்கள் 150 ஆண்டுகளுக்கு முற் பட்ட ஒரு ஆய்வுப் பொருளிடைச் செல்லாதென்றும் அதுவும் தம் வாய் ஆதாரம் தானெனில் அது எள்ளப் படுந்தகையதென்றும் உணர்ந்து கொள்க. அக்காலத்துக்கு ஒருவர்க்காதாரம் மநுக்கிடைக்கா தென்க. எனவே வைபவமாலேக் கூற்றை மெய்யென நம்பிப் பய
Star Gar TLm T3.

Page 29
11. பெரிய மனத்துள்ளார் விவாகம்
தில்லேயிற் பெண் தில்லோஸ்லே கடவாததால் பெரியமனத்துள்ளார் விவாசுமில்லாதவராய் வந்திருந்தார். அவர் சாம்பசிவ ஐயரின் மகள் வாலாம்பிகையை விவாகம்செய்து அப் பெண்ணுக்குத் தில்ஃவநாயக வல்வி என்று பெயரை மாற்றிக் கந்தசுவாமி கோயிற்றென்புறத்தி லுள்ள அக்கிரகாரத்தில் வாசஞ்செய்து தன் பணிவிடையை நிறை வேற்றி வந்தார். பிராமணக் குடும்பங்கள் இரண்டும் ஒரு குடும்ப மாகி இரு திறத்துக் கோவில்களுக்கும் ஒருவரே விசாரணேத் தஃவ ராஞர். இது நிற்க, (வை, மா. ப. 82)

12 மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் பிற்கால வரலாறு
யாழ்பாடி இறந்தபின் யாழ்ப்பாண நாடு ஸ்திரமான ஆட்சி இன்றித் தளப்பம் அடைந்தது. பரந்து வாழ்ந்த குடிமக்கள் யாவரும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலேயே தஞ்சமென்று வாழ்ந்து வர லாயினர். இலங்கையில் மிகப் பழமையானதும், தமிழரசர் பரம் பரையால் தோற்றுவித்ததுமானதும் மகிமையான தமிழ்க் குடியேற் றங்களே உருவாக்க ஏதுவானதுமான இம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் 15ம் நூற்றுண்டு வரை எதுவித குறைவுமின்றி வளர்ந்தது. கிறிஸ்தவர். பறங்கியர்கால அழிவுகளின் பின்னர் 17-ம் நூற்றுண்ட எாவில் மீண்டும் புத்துயிர் பெற்றபோது பழமைபோலக் கோயில் நிர் மாணிக்கப்பெற்று மூர்த்திகள் பிரதிட்டை செய்யப்பெற்று, கொடி யேற்றம் என்ற கிரியையுடன் கூடிய இருபத்தைந்து தினங்களுக்கான மகோற்சவத்தை ஆரம்பித்தும், மாசி மகத் தீர்த்தம், ஆடி அமா வாசைத்தீர்த்தம் ஆகியவற்றை முறைப்படி ஆரம்பித்தும் அதன்மூலம் சைவ மக்களே உயர்நிவேக்கு உயர்த்தி வளர்க்க வேண்டிய பிரயத்த னங்களேயும் அவ்வக்கால ஆதீன கர்த்தாக்கள் இக் கோயிலே மைய மாக கிவைத்துச்செய்து வந்தனர்.
ஈழத்திலே அரசபரம்பரையினரால் கட்டப் பட்டதும், ஆதரிக் பட்டதும், சைவத் தமிழர்களது பெருக்கத்துக்கிடமானதுமான இவ்வா லயத்திற்தான் முதன் முதலாகத் துவசாரோகணமாகித் தொடர்ச்சி யான 25 தினங்களுக்கு மசோற்சவம் நடைபெற்றது முதன்முதலா கச் சாஸ்திரவிதிக்கமைய சிற்பத்தேர் செய்வித்து ஐந்து தேர்களோ டிய ஸ்தலம் மாவிட்டபுரம்தான் ஆடி, அமாவாசை மாசிமகம்ஆகிய காலத்தீர்த்தங்களே ஆகமமரபு பிறழாது ஆரம்பித்து வைத்த பெருமை மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலைத்தான் சாரும். கலேஞர்களுக்கு அவர்தம் துறையில் ஊக்குவிக்கும் நோக்கமாகப் பரிசுகளும் விருது *ளும் பட்டங்களும் கொடுக்கும் வழக்கத்தை இவ்வாலயந்தான்
ஈழத்தில் ஆரம்பித்திருந்தது
კ9

Page 30
கதாப்பிரசங்கம், பூஞ்சப்பறம் பூமாலைகளால் சாத்துப்படி அலங்காரம் இலட்சதீபம் ஆதியாந்துறைகளே முதன்முதலாகப் புகுத் தியதும் இவ்வாலயந்தான் மூன்று திரு வீதிகளேயும் நந்தவனவாச லில் தலவிருட்சமான களஞ்சிமானவிருட்சத்தையும் இவ்வாலயங்கொண் டிருக்கிறது. ஈழத்தில் முதன்முதலாக இராஜ கோபுரம் அமைத்த பெருமைப்ாவிட்ட புரத்தையே சாரும் இன்னும் இக்கோபுரமே இலங் கையில்,அதியுயரத்தைக் கொண்டுள்ளது. ஈழத்தில் எங்குமே காணப் பெருத முற்றும் வெள்ளியாற் செய்த அழகுமிகு கொடிதம்பம் இங்கே தான் உண்டு. இங்கு இடம்பெறும் பூசைகள் உற்சவாதிகள் கர்மானுஷ டானங்கள் இன்றும் எவ்வித திருத்தம் இடைச் செருகல் இல்லாது முன் னுேர்கள் வகுத்தவழி மூலம் இடம்பெற்று வருகின்றன.
ஈடிஃனயற்ற திருவருட்செல்வங்களேத் தன்பால் ஈர்த்துவைத்து மழை நீர்போல்யாவருக்கும் பயன்தரக்கூடியதான் மகிமைகளேக்கொண்ட இத் திவ்விய தலத்திற்கு ஈழநாடு மட்டுமல்ல உலக மக்களே இவ் வாலய திவ்விய தரிசனத்துக்கு வந்து போவதோடு அதன் வரலாற் றுச் சிறப்பினே ஆராயவும் முற்படுகின்றனர். இன்று மாளிட்டபுர ஆலயம் கருங்கற் திருப்பணிகளாலும், அழகுமிகு மண்டபங்களாலும் சித்திரவாகனங்களாலும் உயர்ந்து வளருகின்றது. நித்திய நைமித்தி யங்கள் யாவும் பழமையான மரபைப் பின்பற்றி எதுவிததவறு மில்லாது சிதம்பரம் தில்லேமூவாயிரர் தீட்சிதர் தில்ஃலவாழ் அத்தனர் பரம்பரையினர் நடத்தி வருகின்றனர். இங்கே நடைபெறும் உற்சவங் களுள் ஆனி ஆடி மாத மகோற்சவங்கள் ஐப்பசி ஸ்கந்தசட்டி Gloಷ್ರ மாத இலட்சார்ச்சனே ஆகியவை மிகமிகத் தெய்வீகமானவை. இதை வி. விஜயதசமியன்று மாவைமுருகப் பெருமான் தெல்விப்பழை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு எழுந்தருளி வியாக்கிராசுரவதம் இசய்வது ஒரு சிறந்த உற்சவம் மிக உயர்ந்த இராச கோபுரத்தைக் ஒாண்டு சீரும்பிறப்புமாய் வளர்ந்துவரும் மிாவிட்டபுர ஸ்தலம் இன்று சகலதுறைகளிலும் பிரகாசித்து வருவதை காணப்பெறலாம். இம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலாதீனத்தை முன்நின்று தடTத்தும் இன்றைய ஆதீனகர்த்தா மஹாராஜபூரி பீ. து. எண்முகநாதக் குருக் களாவர். இவர் தீட்சிதர் பெரியமனத்துள்ளார் வழித்தோன்றலா கவும் தீட்சிதர் சபாபதி ஐயர் அவர்களது பரம்பரையின் ஏழாவது வாரிசு வாகவும் விளங்குகிறர் யாவரிடத்தும் அன்பும் பாசமும் கொண்டு தன்னலமற்ற சேவை கிளேச் செய்து மாவை முருகப்பெரு மானது "அடிமை" என்றசீரிய தொண்டனுக இவர் வாழ்வதை யாவருமறிவர். வேதாகம அறிவும், சைவசமய நூல்களின் அறிவும், தமிழறிவும் ஒருங்கே பெற்றவர். தாய்நாட்டபிமானம் உடையவர். பாவர்க்கும் மாவை முருகன் திருவருள் பாவிப்பாராக
 

13. (உ) செங்கடக நகர் இராச்சியம்
செங்கடக நகரைத் தலே நகர் கொண்டு ஆட்சி புரிந்த அந் நாட்டையும், அங்ஙனம் ஆட்சி புரிந்த மன்னனேயும் அத்தலேநகரை யும் அதன் காலத்தையும், அவன் இராச்சிய பரிபாலனத்தையும் பேச வந்த இந்த அதிகாரத்துக்கு செங்கடா நகர் என்று மகுடம் சூட்டி அந்நகரோடு தொடர்புபட்டவை அனேத்தையும் பேச எடுத்துக் கொண்டோம். மேல்வரும் இராச்சியங்களுக்கும் இவ்வாறே விளக்கம் a TDT
யாழ்ப்பாணக் குடாநாட்டில் முன்னுெரு காலத்திருந்த இச் செங்கடசு நகர் இன்று வரை இந் நூலாலன்றி பிறரால் அறியப் டவில்லே. சொல்லவும்படவில்லே, அந்நகர் இருந்த காலம்; அது இருந்த இடம் அந்நகரத்து அரசர் அந்நகரில் நிகழ்ந்த வரலாறு இவ் வளவும் அறியப்படவில்ஃப். இப்பொழுது யாமே ஆராய்ப்து அந் நகர் பற்றிய முழுவரலாற்றையும் விளக்குகின்ருேம். வைபவமாலே கைலாயமாஃல அந்நகர் அரசர்களேயும் நிகழ்ச்சிகளேயும் சொல்லி இருக்கின்றன. அத் தஃநகரம் இந்த யாழ்குடா நாட்டில் எங்கே இருந்ததென்பது அது இந்து நூலின் கண்டுபிடிப்பாகப் புதுதாக வெளி யாகிறது.
வாஸ்விங்கன் அரசாட்சி
வைபவமாஃவயில் " உக்கிரசிங்கராசன் செங்கடசு நகரியை இராசதானியாக்கி அங்கிருந்து அரசாண்டு வருங்காலத்தில்" மன் மதன் போன்ற ரூபமும் சர்வராசலட்சனங்களும் உடையணுய்ச் சிங் கத்தை யொத்த வல்லமையுடன் ஒரு குமாரன் பிறந்தான் அவனுக்கு நரசிங்கராசன் என்று பெயரிட்டார்கள் நரசிங்கராசன் என்ற பெயர் படைத்த வாலசிங்கனுக்கு முடிசூட்டி அரசாளவைத்து மரண மடைந்தான். வாலசிங்க மகாராசன் செயதுங்கவராாசசிங்கமென் ணும் பட்டத்துடன் முடிசூட்டப்பெற்று அரசாட்சியை ஒப்புக்
கொண்டான்" (வை. மா. பக். 28. கு. ச. பதிப்பு)
齿 圭卫

Page 31
42
இவனைப் பற்றியும், இவன் பிறப்புப் பற்றியும். கைலாயமாலை விரிவாகச் சொல்கிறது. இவ்வாலசிங்கன்தான் செங்கடகநகர்மன்னன். உக்கிரசிங்கன் மகன். இது கதிரைமலையில் இருந்த உக்கிரசிங்களுல் அதன்பின்னர் ஆட்சி புரிந்த தலைநகர் 'இதுநிற்க, கதிரைமலையில் இருந்த உக்கிரசிங்கராசன் சிலகாலத்தின் பின் செங்கடகநகரியை இராசதானியாக்கி அங்கிருந்து அரசாண்டு வரும் காலத்தில் (வை. ப. மா. பக்.22) எனச் செங்கடகநகர் சொல்லியுண்மை காண்க.
செங்கடசுநகர் எங்குள்ளது ஏன் உக்சிர சிங்கன் மாருதப்பிரவாக வல்லியைத் திருமணம்செய்து கொண்டபின் செங்கடநகர்க்கு மாற்றி ஞன் என்பதை நாம்யூகித்துக் காண்போம். அங்ங்ணம் காணமுன்னர் அக்காணும் விளக்கத்தை எளிதாக்கும் பொருட்டாக இந்நகர் பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகண்க் கொஞ்சம் தொகுத்துத் தருவாம்.
வைபவமாலை, செங்கடநகர்க்கு உக்கிரசிங்கன் தலைநகரை மாற்றிஞன் என்பதுபிழை. அந்நூலார் அறியாமலே சொன்னர். அவன் மாற்றியஇடம் சிங்கைநகரம் என்று பிறர்சொல்வதும், இந்நூலில் அப்பிறர் சிங்கைநகர் என்று சொல்வதுதான் பிழை அப்பிறர்தான் அறியாமல் சொன்னர். அவ்வைபவமாலைதான் சொல்வது சரியென்று சொல்லப்படுவதையும் மிக நுட்ப ஒட்பமாகக் கவனித்தல் வேண்டும்.
ஒரு சரித்திர புருடனுடைய நிகழ்ச்சி அவன் வாழ்ந்த காலம் அக்கால சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்பவே உருவாகிறது. இஃதொரு இயற்கை விதி. இதனை ஒட்டியே உக்கிரசிங்கன் சரித நிகழ்ச்சிகளை யும் நாம் யூகித்தல் வேண்டும். இவ்வூகத்தை முதலில் காண்போம்.
கதிரைமலையில் வாழ்வு கொண்டிருந்த உக்கிரசிங்க மன்னன் வாழ்வுத் திட்டங்கள் திருமண நிகழ்ச்சியின்பின் கொஞ்சம் மாற்றங் கொள்ளவேண்டி வந்தனவாதல் வேண்டும். அவன் சோழப் பேரரசன் குமாரத்தியை விவாகம்செய்து கொண்டதால் அவளுக்கேற்ற பாது காப்பு:அமைந்த அரண்மனை அமைத்தல் அவசியமாயிருந்தது. அன்றியும் தெற்கேயுள்ள சிங்களத் தாக்கங்கள் நிகழவல்ல கதிரைமலையில் இருந்தும் அவளைப் பாதுகாப்பதும் அவனுக்குக் கஷ்டமானதாயிருக்க வேண்டும். அவள் ஒரு அழகுசுந்தரியென்பதும் ஒரு இராசகுமாரத்தி என்பதும் அவன் நாடெங்குமன்றி பிற நாட்டகத்தும் எட்டியிருக்க வேண்டிய ஒரு செய்தியாயிருந்தது.
ஆகையால் அவன் தன் தலைநகரைச்சிங்களவர் உட்பட்ட பிறர் தாக்கங்கனில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒரு தற்பாதுகாப்பான இடத்துக்குத் தன் தலைநகர் மாற்றியமைக்க

4.
எண்ணமிட்டான். மாருதப்பிரவாகவல்லியின் தூண்டுதலே இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. மாருதப்புரவீகவல்லி இந்நிலைபரத்தைக் தந்தைக்கறிவித்தாள் தந்தையும் அவ்யோசனையை வரவேற்ருன். அவன் காவிரிப்பூம் பட்டினத்துக்கு மிக அணித்தாக இலங்கையின் வடகடற்கரையிலே அந்தலை நகரை அமைக்க வேண்டும் என்று புத்தி சொன்னன். மூவரும் ஒரு மனப்பட்டார்கள் இலங்கையின் வடகடற் கரையிலே காவிரிப்பூம்பட்டினத்துக்கு மிக அணிதாகவுள்ளது பருத் தித்துறைக் கடற்கரை தான் எனவே தான் காவிரிப்பூம்பட்டினத் துக்கு நேர் தெற்கே பருத்தித்துறை கடற்கரையிலே சோழன் உத வியோடு ஒரு தலைநகரமைமத்தார்கள். சோழக் கப்பல்கள் சுலபமாக வரவும் போகவும் பாதுகாக்கக்கூடிய இடமாக. அது இருந்தது. அத் தலைநகர் மாருதப்புரவீகவல்லியின் தூண்டுதலாலும் அவன் பாது காப்புக்காகவும் அது கட்டப்பட்டதாதலாலோ அந்நகர்க்கு வல்லி பட்டணம். (பட்டணம் - புரம் - இரண்டும் ஒரு பொருளே) அதாவது வல்லிபுரம் என்று பெயரிட்டார்கள் அன்று தொடக்கம் அத்தலைநகர் இட்டபகுதி வல்லிபுரம் என்று பெயர் பெறுவதாயிற்று. சோழனுடைய பாதுகாப்புப் பெறவும் அச்சோழ நாட்டோடு போக்கு வரவு செய்யவும் பண்டங்கள் ஏற்றுமதி இறக்குமதி செய் யவும் அது வாய்ப்பானதானமாயிற்று. உக்கிரசிங்கனும் மனைவியும் எவ்வகையான அச்சமுமின்றி இலங்கையின் வடபகுதியை அரசு புரிய அது வாய்ப்பானதானமாயிற்று. சோழர் தலைநகரான காவிரிப்பூம் பட்டினத்திற்கு நேரே தெற்கே பருத்தித்துறைக் கரையில் இருந்தது தான் இச் செங்கடக நகரம் என்க.
அது கடல் அருகுப்பட்டணமாக இருந்தது. சோழ நாட்டுக் கப்பல்கள் மூலம் படைகள் எளிதாக வரக்கூடிய பாதுகாக்கக் கூடிய இடமாக இருந்தது. பிற மரக்கலங்கள் தங்கள் வியாபாரம் நோக்கமாகவும் அங்கே வந்து தங்குவன ஆயின. அந்நகர் தோன்றி அப்பெயரும் தோன்றி தொழாயிரம் 900 ஆண்டுவரை பின்னல் வைபவமாலை எழுதப்பட்டது. அதிலே க.க.நகர் "செங்'" என்னும் அடைபெற்றுச் செங்கடகநகர் என்று குறிக்கப்படலாயிற்று
இன்னும் ஊகிக்கக் கிடப்பது வல்லியைச் சோழமன்னன் தீர்த்த மாடிச் சிவாலய தரிசனம்செய்து குன்ம வியாதியும் தீர்ந்து குதிரை முகமும் மாறித் தம்மிடம் வந்தால் தன்குலச் சோழ மன்னக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்று எண்ணிக் கீரிமலைக்குத் தீர்த்த மாடச் சிவாலய தரிசனம் செய்யவிட்டிருக்கவேண்டும். அவன் அங்கே போய் நோய் நீங்கப்பெற்று யெளவன சொரூபியானதும் தற்செய லாக அவளைச் சந்திக்கநேர்ந்த உக்கிரசிங்கன் அவளைக்கண்டு மயங்கிய காதலால் காவல்கடந்தவனைக் கைப்பிடித்து விட்டான். இதனை அறிந்த

Page 32
ஏவலாளர்கள் சோழராசக்கறிவித்ததும் அவனுள்ளம் தூக்கிவாரிப் போடப்பட்டிருக்க வேண்டும். ஒருவன் கைப்பிடித்த வல்லியைத் திரும்பக் கொண்டுவந்து தன்னுட்டில் மணம் முடிப்பதும் இயலாது. வல்லியும் விரும்பி வாராள். உக்கிரசிங்கன் மகளேக் கவர்ந்துவிட் டானே என்று கோபித்துப் போர்பொருதவும் இயலாது. மகளின் வாழ்க்கை கெட்டுவிடும். தீர்த்தமாடப் போன பெண் உக்கிரசிங்க ஃனத் தானுக வரித்தவளுமல்லன், அவனுசைக் கிணங்காமல் எதிர் நின்று போராட அவளாலும் அங்கே இயலாது. எனவே அவள் மேலும் குற்றமில்லை. என்ற அளவிலே ஏவ வாளர் இத் திரு மணச் செய்தியைச் சொல்லக்கேட்டும் சோழன் ஒன்றும் பேசாதி ருந்துவிட்டான் என்று வைபவமாலே சொல்லுகிறது. வல்லி சுந்த சுவாமி கோயிலேக் கட்ட வேண்டும் என்று திருமுகமனுப்பினதும் பிள்ளைப்பாசவசப்பட்டு அக் கோயில் கட்டவேண்டிய எல்லாவுதவி களேயும் செய்தவன், அப்பால் அவள் ஒரு சிற்றரசனேக் கட்டித் தன் லுயிர்க்கும் தன் கணவன் உயிர்க்கும் அபாயம் நேரக்கூடிய கதிரை மலேயில் அவர்கள் வாழ்க்கை நடத்த அவன் விரும்பவில்லேப் போலும், ! சோழப்படை எந்த பொழுதிலும் போகக்கூடியதாகவும்,வரவு செய்யக் கூடிய வாய்ப்பான சோழ தலேநகர்க்குச் சமீபமான இலங்கையின் வடபகுதியை உக்கிரசிங்கன் ஆட்சி செய்யத்தக்க இடம் ஒன்றுக்கு அவன் தஃவநகரை மாற்றியமைக்க வேண்டும் என்று எண்ணினுன் போலும். எனவே, சோழ மன்னன் உக்கிரசிங்கன் டிெ வல்லி இம் மூவரும் ஒருமித்து இலங்கையின் வடகரையில் அத்தஃநகரைக் கட்டி வல்லிபுரம் என்று அவன் பெயரையே அதற்கு இட்டார்கள். என்க, இல்லையேல் இம்மணல் வெளியிலே யாரும் பகல் 10 மணிக்கு மேல் நிற்க டியாத வெயில் சூடுள்ள ஒரு இடத்திலே ஒன்றரை மைல்ாவரை நீளம் ஏற்ற அகலமுகமாக உள்ள இடிந்து உடைந்துசிதைந்த சின்னங்கள் பரவிக்கிடக்கக் கூடிய கோட்டையை ஒருவன் ஏன் கட்டிஞன். எனவே, இன்ன அவசிய தேவை நோக்கித்தான் அம்மூவரும் ஒருமைபட்டுத் தான் அத் தலேநகரை அங்கே அமைத்தார்கள் என்க.
இன்னும் என்னேயெனின் உக்கிரசிங்கன் தலைநகரை மாற்றினுன் என வைபவமாவே சொல்வதாலும் அங்ஙனம் மாற்றப்பட்ட தலே நகர்க்கு வல்லிபுரம் என்றே பெயர் இருப்பதாலும், அங்ஙனம் மாற் றப்பட்ட தானம் சோழநாட்டை நோக்கி மிக ஒட்ட அன்மித்திருப்ப தாலும், இவர்கள் மூவரும் முன்னர் மா விட்டபுரம் கந்தசுவாமி கோயில்கட்டித் துவஜாரோகனம் வரை நிறைவேற ஒத்துழைத்தமை பாலும் இவ்வுண்மை துணியப்படும். "
அதாவது உக்கிரசிங்கன் மாருதப்புரவீகவல்லியைத் திருமணம் செய்தபின் அவளின் பாதுகாப்பின் பொருட்டாகவே தலைநகரை மாற்றியிட்டான் என்றும் அங்கீனம் மாற்றக்கூடிய நகரம் இவனுடைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடமாயிருத்தல் வேண்டும் என்றும் அவ்வல்லிபுரம் இவன் நாட்டிங் வடகரையாய் வல்லியின் தந்தையின் சோழநாட்டுக் கணித்தாய் அச்சோழநாட்டுத் கப்பற் படைகளால் அரண்செய்யக் கூடியதாய் இருப்பதும் அறிக. ஒரு தஃவநகரை நீக்குவதும், இன்ஜெரு தஃவ நகரை அமைப்பதும், பெரும் பிரயத்தனமும், பெரும் பொருட் செலவுங் கொண்ட ஒரு கருமன்ெக. அதற்கவசியம் உண்டாண்மை துணியப்பட்டவாறு கண்டுகொள்க. அன்றியும். சோழ இராசகுமா ரத்தியைக் கட்டிக் கொண்ட உக்கிரசிங்கன் சோழ நாட்டோடும் தொடர்புகொண்டவன் ஆணுன், அத்தொடர்பு அவனுக்கு வாய்ப்பாக இருந்தது. சோழநாடு அண்டைநாடு, தன் நாட்டிலும் பெரியதாடு வல்லமை கொண்ட நாடு, பல வளங்களும் கொண்ட நாடு. விசேட மாக்த் தன் மனேவியின் நாடு, அந்நாட்டுக்கும் தனக்கு முண்டான தொடர்பை தனக்கு ம் தனது நாட்டின் முன்னேற்றத்துக்கும் சாதிக ாக்க அவன் எண்ணியிருக்க வேண்டும் அச் சோழ நாட்டுக்கும். தன் கதிரைமஃக்கும் இடைப்பட்டதும். அச்சோழ நாட்டுக்குச் சுல் பமாகப் போக்குவரவு புரியவும், வர்த்தகம் புரியவும், தன் நாட்டை ஆட்சிபண்ணவும் பொருத்தமான இடம் வல்லிபுரமே எனக்கண்டு அதனேயே இராசதானியாகவும், துறைமுகமாகவும் அமைத்துக்கொண் டான் என்க. அது அப்பொழுதைக்கு அவசியாயிற்று. வல்லிபுரத் துள்ள பழைய பட்டினம் இருந்த இடத்தையும், கதிரைமலே, காவிரிப் பூம் பட்டினம் இருந்த இடங்களேயும் நோக்குவார்க்கு இவ்வுண்மை தெள்ளிதிற் புலணுகும். அக்காலச் சோழர் தஃதகர்க்குக்குறுக்காகவும், நேராகவும் போக்குவரவு புரியக்கூடிய இடம் வல்லிபுரமே பொருத் தமாயிருத்தல் காண்க.
செங்கடக நகர் என்பது கண்டியைக் குறிக்கும். செங்கடல என்பதன் " ல " கெட்டவடிமல்ல, அது வேறு அதற்கும் உச் கிரசிங்கனுக்கும் எவ்வித தொடர்புமில்லே என்க. சிங்களத்தின் ச.ே என்பது கல்ஃலக் குறிக்கும் என்பர். எனவே வைபவமாஃ உக்கிர சிங்கன் செங்கடசுநகர்க்குத் தலே நகரை மாற்றினுன் என்ற கூற்றுச் சரியென்றும் அங்ஙனம் மாற்றியிட்ட இடம் வல்லிபுரம் தானென்றும் கண்டு கொள்க.
கடகம் என்னும் சொல்லின் பொருள்களேக் கீழே காண்பாம் செந்தமிழ் அகராதியில் கடகம்:- சுைவனே. ஒருதஃலநகரம், கர்ற்கடகராசி எனபனவும் பிற வும் பொருளாகச் சொல்லப்பட்டது. இதில் செங்கடகம் சொல்லப் படவில்லை. ஆனந்தவிகடன் அகராதி பக்கம் 640ல் கடகம் ஒர் இராச தானி, உருள், கங்கனம் கைவ&ள வட்டம் என்பனவும் பிறவும் சொல்லப்பட்டது செங்கடகம் என்றசொல் சொல்லப்படவில்லே. ஐ-பிலி தமிழ்ப்பேரகராதி பக்.287லும் செங்கடகம் என்ற சொல்

Page 33
壹台
சொல்லப்படவில்லே வீரமாமுனிவர் செய்தசதுர அகராதி (பக். 640ல்) கடகம் என்பதற்குக் கங்கணம், கைவளே என்பன பொருளாகச் சொல்லப்பட்டன. செங்கடகம் இல்லே அபிதான சிந்தாமனியிலும், செங்கடகம் என்ற பெயரில்வே. மதுரைத் தமிழ் பேரகராதியிலும் கடகம் என்பதற்கு ஓர் இராசதானி, கங்கணம், கற்கடகம், வட்ட வடிவம் என்பன பொருளாகச் சொல்லப்பட்டிருக்கிறன. செங்கடகம் சொல்லப்படவில்லே. தமிழ் லெக்ஸிகன் வால்யூம் 2லும், கடகம் என்பதற்கு மேலே காட்டிய பொருள்களேயன்றி செங்கடகம் சொல் லப்படவில்லை. ஆகையால் காலிங்கனே விஜயகாலிங்கன் என்ருற் போலும், கூழங்கையனே விஜயகூழங்கையன் என்ரும் போலும். சுடசுநகரை செங்கடக நகரியெனச் சொல்லப்பட்டிருக்கும். அவ் வாறே பண்டை ஏடுகளில் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனே அறிந்து கொண்ட வெபவமாலைகாரர் ஆஸ்வாறே தம்மேட்டில் குறித் திருக்க வேண்டும் இறுதியான முடிபு இதுவே நிற்க அக்கோட்டை கடற்கரையையடுத்தே அ ட் ட ப் பட் ட தா லே வட்டவடி வமான கோட்டையாகவே சுட்டப்பட்டிருக்க வேண்டும் கடலுக்கும் காற்றுக்கும் ஏன் மக்கள் தாக்கத்துக்கும், பாதுகாப்பாக அவ்வாறு கட்டி ஒரு வாயிலேவிட்டிருக்க வேண்டும் பலதடவை அங்கு சென்று அக்கட்டிடப் பொருள்களேயும் அத்திவாரத்தையும் பார்வையிட்டோம் மதில் சுவர் 4 முளம்வரை அகலமுள்ளதாகவும் காட்டுக் கற்களே உள்ளே போட்டுக் கட்டப்பட்டதாகவும் இருக்கு. அங்கும் இங்கும் பரந்து கிடக்கும் சாந்துத் தகடுகள் மிகவும் பலங்கொண்டன. சிரமப்பட்டும் உடைக்க முடியாதவை. செங்கடக நகர் என்பதன் பொருளே இவ்வாறும் கொள்ளலாம்
செம்மை-கடகம் என்னும் இரு சொற்களில் நிலேமொழியில் உள்ள ஈறு கெட்டு வருமொழிக்கினங்க ம், ங், எழுத்தாகத் திரிந்து செங்கடகம் என வருவதாயிற்று. கடகம்தான் தலே நகரின் பெயர் அது வ&ளவு கொண்ட கோட்டையை கொண்டதாய் இருத்தல் வேண்டும். அடை அதனேச் சிறப்பித்துச் சொல்ல வந்த இயற்கை அடை செங்கடக நகர் கடற்கரையின் கண்ணே அமைக்கப்பட்டதாதsirே புயல்காற்று கடல்பெருக்கம், இவைகளாகிய இயற்கை ஏதுக்களால் தாக்குருவண்ணம் அதஃன அமைத்தோர் வஃாவுகொண்ட கோட்ை யாசு அமைத்திட்டார் போலும் என ஊகிக்கலாம். ஆனல் மேர் படி அகராதிகளில் கடகம் இராசதானியென்று குறிக்கப்பட்டிருப் தால் அவ் இராசதானியின் நலனேச் சிறப்பை நோக்கிச் செங்கட நகர் என்ற பெயர் வழங்கி இருக்க வேண்டும் அவ்வறிவின் வழியே வைபவமாஃலயார் செங்கடக நகர் என்று குறித்தார் என்க. அஃது இயற்கை அடையே, இந் நகர்க்காலம் 72 வரை உக்கிரசிங்கள் மாருதப்பிரவாக வல்வியைச் சந்தித்ததாங் அப்பால் கதிரைமஃலயி: அவன் அரசாட்சி. 20 ஆண்டு போனுல் செங்கடகநகர்க்கு .ெ 815 ஆகும். அதாவது செங்கடக நகர்க்கு அவன் 815-820ம் ஆண் வரை வந்திருக்கலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

14. (5) யாழ்பாடியின்
யாழ்ப்பாண ராச்சியம்
இவ் யாழ்ப்பான வரலாறு முதலில் கதிரை மலே இராச்சியம் அதன் பின்னர் செங்கடசு நகர் இராச்சியம் அதன் பின்னர் யாழ் - FTI பின் யாழ்ப்பான இராச்சியம் தோன்றியன காலஓழுங்கின்படி மூன்றுவதாக நின்ற அவ்விராச்சியத்தைப்பற்றி ஈங்கு காண்பாம்.
உக்கிரசிங்கன் காலம் (சாலிவாகன சகாப்தம் 717) கிறிஸ்து ஆண்டு 795 என்று வைபவமாஃல சொல்லுவதாலும் அவன் கட்டிய செங்கடக நகரத்தில் அவன் முதிர் வயது வரையும் ஆட்சி செய்தான் என்பதால் அக்காலம் தி. பி. 850ம் ஆண்டு வரை ஆகலாம். இப்பால் செங்கடசுநகர் உக்கிரசிங்கனுல் வாலசிங்கனுகிய மகனுக்குக் கொடுக்கப்பட்டது என்பதால் மகனுட்சி 9ம் நூற்றுண்டின் இறுதி வரைக்குப் போகலாம். மகனின் பின் உருவான யாழ்ப்பானனின் யாழ்பாண இராச்சியமும் அரசின்றி இருந்த காலமும் கி. பி. 948 நுரையும் (சாவிவாகன சகாப்தம் 870) என்க. என்னேயெனில் 948ல்
சிங்கை ஆரியன் ஆட்சி ஆரம்பம். ஆகையால் யாழ்ப்பான இராச் சியம் உத்தேசம் கி. பி. 900-945 என்க.
அந்நகரிலிருந்த வாலசிங்கனேத்தான் யாழ்ப்பானன் பாடியிருக் சிறன் Titiring டிே வைபவமாஃபாலன்றி அவன் பாடிய தனிப் பாடல்களே கொண்டும் யாம்முன் விளக்கியிட்டாம், வடக்கந்த&லயில் உள்ள ஒருவன் தான் நாடு கொடுக்க நினத்தால் தனக்குத் தெற்கே தன் உபயோகத்திற்குண்டாயிருந்த நாட்டுப்புறத்தைத் தாண்டித் தானே கொடுத்திருக்க வேண்டும். எனவே வடபகுதியில் ஆட்சிபுரிந்த அரசன் பரிசு கொடுத்தது அவ் வடபகுதியில் இன்னுெரு இடமன்றி வடபகுதிக்கு வெளியேயுள்ளதல்ல "அக்காலத்திலே சோழநாட்டிவி ருந்து இரண்டு கண்ணுங்குருடனுகிய யாழ்ப்பாணன் செங்கடகநகரி விருந்து அரசாட்சி செலுத்தும் வாலசிங்கமகாராசன் பேரிற் பிரபந்தம் பாடிக்கொண்டுபோய் யாழ் வாசித்துப் பாடிஞன், அதைக்கேட்டு மகா சந்தோசமாய் அவனுக்குப்பரிசிலாக இலங்கையின் வடதிசையில் உள்ள மணற்றிடல் என்னும் இந்நாட்டைக் கொடுத்தான்" என

Page 34
星岛
வாலசிங்கன் வடதிசைக்கு வெளியே ஆட்சிபுரிந்துள்ளவன் போலவும், அவன் யாழ்பாடிக்கு இவ்வடதிசையிலுள்ள (அதாவது யாழ்ப்பான குடாநாட்டை) நாட்டைக் கொடுத்தான் போலவும் விளக்கம் தரக் கூடியதாக பிறர் வசனம் கோத்துள்ளார். சொந்த விளக்கத்தை உபயோகிக்காமல் மூல ஏடுகளிலோ, முந்துநூல்களிலோ கண்டவகை பாகக் குறிக்கின்ருர் போலும், இங்கே உண்மை விளக்கம் தவறிச் ஐTண்டாக்கிக் கொள்ளற்க. பிாலசிங்கலுக்கு வெளியே நாடி ருந்தாலன்ருே அங்கே கவிஞன் போகமுடியும், கவிஞனுக்கும் அவன் இந்நாட்டைக் கொடுக்கமுடியும். இந்நாட்டிவிருந்தவன் கவிஞனுக்கு ாப்படி முழுநாட்டையும் கொடுக்க முடியும். லுப்பால் அவன் நாட்டைக் துறந்தானுே? இல்ஃயே. கவிஞன் அவனிடம் வந்ததும் 3. அவன் பரிசு கொடுத்ததும் சிெப் அதிவி'- திசையில் உள்ளதும் மெய், அதற்குப்பெயர் மனற்றிடல் என்பதும் மெய் ஆணுல் அது வடதிசையிலுள்ள ஒரு இடம் என்றறிக. நிற்க, கவிஞன் வடதிசையில் உள்ளே ஒரு காட்டைப்பெற்றன். அது மணற்றிடலும் காடுகளும் உடையதாயிருந்தது. கவிஞன் தன்னினத்தவரைத் தன்னுட்டவரைத் கொண்டுவந்து குடியேற்றிக் காட்டைத்திருத்தி வளமுள்ள நாடாக் னுென் யாழ்பாணம் என்று பெயரிட்டான். வைபவமாலை சொல்லு
வதாவது
யாழ்ப்பானன் இதற்கு யாழ்ப்பாணம் என்று பெயரிட்டு இவ்விடத்தில் வந்திருந்து வடதிசையில் சில தமிழ்க்குடிகளே அழைப் பித்துக்குடியேற்றி இவ்விடம் இருந்த சிங்களவரையும் அவர்களேயும் ஆண்டு முதிர்வயதுள்ளவனுய் இருந்து இறந்துபோனுன். (யா, வை. மா. பக். பிே)
இனிக் கைலாயமா8லயிற் சொல்லப்பட்ட பகுதியைத் திருவசம் ாலசிங்கனிடம் பாணன் பரிசில் பற்றிச் சொல்லப்படுவதாவது.
நங்கோ னிரமான் நடத்தியுல காண்டதுபோல் இங்கோ பேரசி செலுத்துநாள்-மங்காத பாவலர்கள் வேந்தன் பகருமியாழ்ப் காவலன்றன் மீது கவிதை சொல்லி-நாவலர்முன் ஆனகவி யாழி னமைவறவா வித்திடலும் மானபரன் சிந்றை மகிழ்வாகிச்-சோனேக் கருமுகி னேருங் கரன்பரிசி பொக
வரு நகர மொன்றை வழங்கத்-தருநகரை மன்றுமுதல் யாழ்ப்பாண மான பெரும்பெயராய் நின்ற பதியி னெடுங்காலம் வென்றிப் புவிராசன் போலப் புகழினு-ணுண்ட
விராசன் காலங் கழிய' கை. மா. கி. 39-45)
 
 
 

f
(மான ரன் மானத்தை ஆபரணமாகவுடைய வாலசிங்கன் கருமுகில் நே தங்கரன் - கருக்கொண்ட முகிலேயொத்தகையையுடை பவன்)
கைலாயமாலையில் "வருநகரமொன்றை வழங்க" என்றிருக்க வைபவமாலேயில் "னேற்றிடல்' என்னும் இந் நாட்டைக்கொடுத் தான்" என்றிருப்பதென்ன? கொடுக்கப்பட்டது நாடா, நகரமா. காடா, காட்டைப்பரிசில் கொடுக்க அவன் அதைப்பின் நாடாக்கி, நகரமாக்கி, வாழ்ந்து கழித்தபின் இப் பாடல் பாடப்பட்டதாலே கொடுத்தவஃனச் சங்கைப்படுத்தி சுருநகரமென்று சொல்லப்பட்டிருக்கு வாலசிங்கனிடம் தானிருந்த நகரத்தைவிட அப்பொழுது வேறு நகர மில்லேக் கொடுக்க, வைபவமாஃவ வேறு நூல்களேயும் ஆதாரமாகக் கொண்டுடெழுதப்பட்டதாலே அது நாடென்று சொல்லுவதையாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கவிஞன் தான் பெற்ற பின் சோழநாட் விருந்தும் குடிஜனங்களேக் கொண்டுவந்து குடியேற்றியிருக்கின்றன். எனவே வைபவமாஃல சொல்வதுபோல நாடுதான். நாடென்ருல் உண்மை நிவேபரத்தில் அது காடும் சேர்ந்ததுதான், பரிசிலுக்கு வந்தவ லுக்குநாடு கொடுப்பதாயிருத்தால் கொடுத்த மன்னன் இவன்பால் எத் துணேப் பெரிய அன்பும் மதிப்பும் வைத்திருக்க வேண்டும். அப்படியே இவன் அவனுக்குப்பிரபந்தம் பாடுவதாயிருந்தால் எத்துணேப் பெரிய அன்பு வைத்திருக்கவேண்டும்.
உக்கிரசிங்கன் கதிரைமலையில் இருந்து மாற்றியிட்ட தலைநகரம் செங்கடசு நகரம் அது வல்லிபுரக் கரையில் உள்ள ஒரு கடற்கரை நகரமென்பது உக்கிரசிங்கன் மகன் வாலசிங்கனே யாழ்பாடிய பாடல் களால் அறியலாம்.
1 'நரைகோட்டினங்கன்று நல்வளநாடு நயந்தனிப்பான்
விரையூட்டும் தார்புய வெற்பீழ வீமமன்னனென்றே விரும்பிக் கரையோட்டமாக மரக்கலம் போட்டுனேக் காணவத்தால் திரைபோட்டிருந்தனேயோ வாலசிங்க சிகாமணியே என்று கரையோட்டமாக மரக்கலம் போட்டுனேக்கா
னவந்தேன் என்று சொல்லி இருப்பதாலும்,
岛
வாழுமிலங்கைக்கோ மானில்லே மானில்லே ஏழு மரா மரமோ ஈங்கில்லே-ஆழி அலேயடைத்த வெற்புயத் தாதித்தா நின்கைச் சிலேயேந்திய வாறேது செப்பு" என்று அஃலயடைதத நகரத்திலிருந்தவன் என்று புலப்படப் பாடி இருப் பதுது கொண்டும் அறியலாம். 7

Page 35
Wû
அண்டைநாட்டுத் தொடர்பும் ஒருவர் மேல் ஒருவர் வைத்த அபிமானமும்தான் இதற்குக் காரணம் முன்பின் அறியாத - தொடர்பில்லாதவரினப் list fly. இவ்வளவு பெரிய
பரிசில் பெற்றிருக்க முடியாது. புறநானுற்றிலே புலவர்க்குப் பரிசில் கொடுத்த பல கதைகள் பேசப்படுகின்றன. ஆணுல் கண்ணிரண்டும் தெரியாத ஒரு குருடஃனப் பொருள் பண்ணி இப்பெரிய பரிசிஃக் கொடுத்தகதை இம் மன்னனுடன்தான் பேசப்படுகின்றது. பான்ன னும் இக் கொடையினுலே அழிபாப்பெரும் புகழ் எய்தினுன் புலவ லும் நிலப்பிரபுவாக முடிசூடா பன்னணுக வாழ்ந்து பெரும்புகழ் அடைந்தான். அதாவது அவனது நிலப்பிரபுத்துவதிசுரமே அவன் காலத்தில் யாழ்ப்பான நாடெங்கணும் பரவலாயிற்று. புவீராசர் போற்றும் புகழுடனுன்ட கவிராசன் என்று புகழப்பட்டான் பாதர் குவிருேசு இக்கருத்தை ஆதரிக்கிருர் - நிற்க
"வாலசிங்கன் (ஜயதுன்சுன் மறுபெயர்) தான் அரசு புரிந்த இலங்கையின் வடக்குக் கரையிலே அரசு புரிந்து வத்தான் அக் காலத்திலே அவன் நாட்டின் தென் அந்தத்திலே பண்ணேக்கடஃல அடுத்த பிரதேசத்திலே யாழ்பாணன் தன்நிலப்பிரபுத்துவ அதிகாரத் தோடு வாழ்ந்தான்.
"கி-பி. 823 தொடக்கம் 83 வரை இலங்கையிலரசாண்ட முதலாம்சேனன் காலத்தில் சின்னமனூர் தாமிரசாசானத்திற் கூறப் பட்டவனும் இராசஜிம்மனுக்குப் பின் மதுரையை ஆண்டவனுமான வரகுணன் என்னும் பாண்டியன் இலங்கைக்கு படை எடுத்து வந்து ஜெயதுங்கனே வென்று தன்னுட் சிக்குள்ளாக்கி. சென்ருன்' பா. ச செ. இ. பக். 30) (தென்னிந்திய சாசனங்கள் 2ம் வால்யூம் 3ம்பகுதி
ம்ே ராசனம்)
"வரகுாேஞந் ஜெயதுங்சரசன் கொல்லப்பட்டமையாற் போலும் அவனுககுப்பின் வந்த அவன் சந்ததியார்கள் பெயர்கள் "" (யா. ச. செ. இ} என்பனவற்ருல் இவ்னாலசிங்கன் என்னும் ஜெயதுங்கன் போரில் மடிந்துள்ளான் என்ருே அன்றியும் பிறகாரனத் தாலோ அவன் ஆட்சி நீடித்துச் செல்லவிங்ஃ என்று தோன்று கிறது. அப்பொழுது செங்கடநகரியில் அவன் ஆட்சி நின்றுவிட்டது.
T
தெற்கன கண் இருந்த யாழ்ப்பாணனின் அதிகாரமே செங்சு டசுநகர் நாட்டினுக்கும் பரவுவதரயிற்று. அதாவது அவனின் நிலப் புத்துவ அதிகாரமே அவன் காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடெங் கணும் செல்வதாயிற்று. முடிசூடா மன்னனுக இராச்சியபரிபாலனம் செய்தான். "புவிராசர் போற்றும் புகளுடனுண்ட கவிராசன்

காலங்கழிய என்ருர் கைலாயமாலேயார். அக்காரணத்தால் அவன் இருந்த நகர் யாழ்ப்பாணநகர் எனவும் அவன் ஆட்சிசெய்தநாடு பாழ்ப்பான நாடு - யாழ்ப்பாணக்குடாநாடென்றும் பெயர் பெறுவ நாயிற்று. யாழ்ப் பாணன் ஆட்சிசெய்ததாடு யாழ்ப்பான நாடென்க
வடதிசையிலுள்ள மனற்றி என்றும் இந்நாட்டைக் கொடுத்தான் என்றும்யாழ்ப்பா ஒனன் இதற்கு யாழ்ப்பாணம் என்று பெயரிட்டு இவ் விடத்திலிருந்து வாழ்த்தான் என்றும் சொல்லி இருப்பதால் யாழ்பான புறக்கு யாழ்ப் பTணக் குடாநாடு முழு துந் தான் பரிசியாகக் கொடுக்கப் பட்டதென்று புரைபாடாக விளங்கலாயினர். அவன்காலத்திலே அவ் வடபகுதியில் வேறு இராச்சியங்களில்ஃ கொடுக்கப்பட்டதோர் பிரதேசம் உண்டு அளன் ஆட்சிசெய்தது யாழ்ப்பான நாடு முழுவதும் அவன் தன் காலத்தும் அதன் பின்னரும் அது யாழ்ப்பாணக்குடா நாடென்று பெயராயிற்று,
பிறர் இந்நிலையிலே செங்கடகலெ என்னும் பெயர் கண்டியைக் குறிப்பது என்று தெரிந்திருந்தார்கள். கதிரைமஃலயில் இருந்த உக் கிரசிங்கன் மாற்றியிட்டதாக வைபவமாலேயால் சொல்லப்பட்ட செங்கடசுநகர் என்னும் பெயர் செங்கடகஸெ நகரின் ரூேஉ அல்ல வென்றும் அது பிறிதொரு நகரின் பெயரென்றும் புரிந்து கொள்ள இவர்களால் முடியவில்ஃ. இவர்கள் !! செங்கடசுலெ "" நகரைத் தான் இவ்வைபமாலே சொல்லுகின்றது. சுதிரைமஃலயில் உள்ள டிக் கிரசிங்கன் செங்கடசுலெ (கண்டி) க்குத் தன் தலேநகரை மாற்றியிருக்க முடியாதே. அன்றிக் கண்டிப் பகுதியும் அவன் ஆட்சிக்கில்ஃயே. எனவே வைபவாாலேக்காரர் இந்தச் சத்தத்தைக் கேட்டுத்தான் தள் புத்தகத்திலே செங்ாடக என்று எழுதிப்போட்டார். நாம்தான் அறியாமல் இருக்கின்ருேம் என்பதை அறிந்து கொள்ளாமல் , அதனுல் சரியாக எழுதிய வைபவமாஃபைப் பிழையாக எழுதியதாக விளங் சிக்கொண்டு இச் செங்கடசுநகர் வட இலங்கையில் இல்லாத
தொன்து. ஆகையால் இதனே நீக்கவேண்டும், அத்துடன் இந் நகரில் நடந்ததாகச் சொல்லப்பட்ட யாழ்ப்பாடியின் கதை முற்றுக நீக்கப்பட வேண்டும் என்றும் பிறர் எண்ணினர், இந் நிலேயில்
கதிரைமஃப் சுந்தரோடையிலும், நல்லூர் நகர் நல்லூரிலும் இருந்த நகரங்கள் என்ற விளக்கம் இருந்ததோடு, வல்விபுரக் கரையில் அழித்த ஒரு தஃலநகர்க் காட்சியையும் கண்டிருந்தனர். சிங்கைநகர் எங்கிருந்த தென்ற விசாரிப்பும் இருந்து வந்தது. இவர் தம்முள் ஏ.ஜா. காரருக்கு ஏதோ அசுஸ்மாத்தாகக் கொந்தகமத்துச் சாசனம் கிடைத்தது. அதில் சிங்கை நகரைப் பற்றிய பேச்சு இருந்தது. அதில் அது பொங்கொலி நீர்ச் சிங்கை நகரம் என்றும் பேசப்பட்டிருந்தது. அவர் தம் விளக்கத்தின்படி தியாயங்களேச் சொல்வி வல்லிபுரத்தின் கரையின் கண்னதே சிங்கை

Page 36
禺星
நகர் என்று முடிபுபண்ணி எழுதினூர். எழுதியதை அப்படியே எடுத்துத் தம்மோடு சமகால ஆராய்ச்சியாளர் யா. வை. வி. காரர் அவர்களிடம் கொடுத்தார். அவரும் இச்சங்கதிகளேத் தம் புத்தகத்திலும் சொல்வி அம்மதம் எனக்கும் சம்மதம் என்று எழுதிக்கொண்டார். இருவரும் கூட் டாக நல்லூர்த் தலேநகரின் மறுபெயரான, அப்பெயரை. அதன் வரலாற்றை வல்லிபுரத்தில் வைத்து எழுதிவிட்டனர். அத்துடன் யாழ்ப்பாணச்சரித்திர ஆதார நூல்களேயும் அளப்பிக்குளப்பிச் சிக்க ஐயும் ஆக்கிவிட்டனர்.
இவ்வுண்மையை அறிந்து கொள்ளாமல் யாழ்படி சுண்டி அரசனேப்பாடி யாழ்ப்பானத்தைப் பரிசாகப் பெற்றுன் என்றும் அனுரதபுரத்திலுள்ள அரசனே பாடி அவ் யாழ்ப்பாணத்தைப் பரிசாகப் பெற்ருன் என்றும் வேறு பிறர்கூறுவர் அந்நகர்கள் கடற்கரை அருகில் உள்ளவைகள் அல்லவென்றும் அவ்வரசர்களைப்பாடவேண்டிபஇயை பும் தொடர்பும் அவனுக்கில்&a) யென்றும் ஆகையால் அக்கூற்றுக்கள் பொருந்தாவென்றும் ஓர்ன் எனவே வல்லிபுரத்தில் செங்கடகநகரைக் கண்டு கொள்க.
இனும்கில ஐயமறுப்பாம் என்ன? வல்லிபுரத்திலே சிங்க்ை நகர் இருந்தாலும் அங்கே வாலசிங்க்ன் இருந்தாலும் அப்பாணன் தான் கடல்தாண்டிவந்தி பாடலே - அம்மன்னன் சிலேயேந்தியபாடலேப் பாடியிருப்பான்தானே நீவிர் செங்கடக நகர் என்று செப்புபதேன் என்னின் இவ்வினுசாசன முதலியனவாக யாம் மேலே காட்டிய நியாயக் கோட்பாடுகளே விளங்காமல் எழுந்ததாம். அன்றியும் அவர் சுட்டும் சிங்கைநகர் (யா. ச. காார் யT. வை. வி காரர்) சுவிங்க ம கணுல் 13 ம் நூற்ருண்டில் அமைக்கப்பட்டதாக வ ன் குே சொல்லுகின்றனர். எனவே 8 ம் நூற்றுண்டில் இருந்த உக்கிரசிங்கன் அவன் காலத்துக்கு 5 நூற்ருண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய நகர்க்கு எப்படி மாற்ற முடியும் அவனே அச்செங்கடநகரைக் கட்டினுன் என்னும் போது அவன் காலத் விண்டான த8லநகர்க்கன்ருே அவனுல் மாற்றமுடியும். எனவே அது செங்கடகநகரமென்சு. நிற்க,
நன்று இன்னும் பாணன் கண்டி அரசனேயோ அநுராதபு அரசனையோ பாடவில்லை என்பது நன்கு தெரிக்குதும். வாலசிங்கள் சோழ இராசகுமாரத்தி மகன். பாணன் சோழ நாட்டவன். இ வரும் ஒருவரை ஒருவர் நன்கறிந்திருக்கிருர்கள் பாணன் இவனேப் பாடிப் பரிசில் பெற நெடுநாளாக காத்திருக்கிறன். அதற்காக அவள் மேல் ஒரு பிரபந்தம் பாடிக்கொண்டு வந்திருக்கிறன், அரசின் பாணன் பெரும் புலவன் என்பதோடு ஞானதிருஷ்டியாகப் பா டக்கூடியவன் இதை அரசன் அறிந்திருக்கிருன் புலவர் செங்கடக நகரிக்கு வருகை தருவதை அறிந்த அரசன்புலவனது ஞானதிருட்டியைச் சோதிப்பாள் ஒரு திரைச்சீலேசிய இடுவித்து அதன் நடுவண் அமர்ந்திருந்தா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலவர் தம் கண்டசுத்திப் பாடலாக நரை கோட்டினங்கன்று நீல் வளநாடு நயந்தனிப்பான், விரையூட்டும் தார்ப்புய வெற்பீழ மன்ன னென்றே விரும்பி, கரையோட்டமாக பரக்கிம்போட்டுனேக் கான வந்தால், திரைபோட்டடிருந்தனேயோ வாலசிங்க சிகாமணியே" என்று பாடினுர். இப்பாடலால் அந்தகனுசு இருந்தும் திரைபோட்டி ருந்ததைத் தெரி து கொண்டதும் அவ்வரசன் இருந்த நகர் கரை யோட்டமாக மரக்கலம் போட்டுக் காண்க கூடியதாகவுள்ள இட ாாய் அது செங்கடக நகருக்குப் பொருத்தமT* இருப்பதை உணர்க . அப்பால் அரசன் அடுத்த செங்கையாக அம்பையும் வில்லேயும் தாங்கி இருந்ததாகவும் அதனையும் புலவர் வாழுமிங்சுைக்கோமானில்லே. மாரீசனுகிய மானில்லே ஏழு மராமரமில்லே, ஏ ன் வில்லேயும் அம்பையும் தாங்கினுய் என்று கேட்டதோடு ஆழிஅலே அடைத்தி வேற்புயத்து ஆதித்தா என்றதால் அரசன் இருந்தது கடற்கரை பட்டினமும். அவன் சூரியகுலத்தரசன் என்பதும் வலியுறுகின்றது. அப்ப்ாண்ன் செங்கடசுநகரில் பாடிப் பரிசு பெற்ருன் f ன்பது உறுதி பாகிறது. புவவர் நரைகோட்டிளங்கன்று நல் வளநாடு நயந்தனிப்பாய் என்று வந்தேன். என்பதாலும் அரசன் புலவரை பூர்வ புண்ணிய வசத்திஞலே அச்சியிலே தன் நெஞ்சை ஏடாகக் கற்ருன் முத்தமிழை பும் என்பதாலும் இவர்கள் தம்முள் அன்பினர் என்று தெரிகிறது ஆகையாற்றுன் அவன் பிரதபந்தம்பாடிக் கொண்டுவந்தான். புலவ இனக் குடியேற்றினுல் நாடுபெருமை அடைவதோடு சோழநாட்டு மக்க்ளக் குடியேற்றவும் அவன் உதவி கிடைக்கும்மென்று அவன் எண்ணியிருக்கலாம்.
வாலசிங்கன் பாணனுக்குப் பரிசிவாசிக் கொடுக்கப்பட்டவா இலங்கையின் வடகீழ்ப்பாகத்திலே வல்லிபுரம் இருக்கிறது. அதுவே செங்கடரிகநகரி இருந்த இடம் அங்கே வந்து தன்னப்பாடிய கவிஞனுக்கு அவன்’கொடுக்கிக் கூடியதாக இருந்த இடம் அச்செங் சுடாநகரிக்கும் கதிரைமலே இருந்த சுண்ணு சுத்துக்கும் ஒரு கோடிழுக் தால் அதற்கு வடக்கேயுள்ளப்குதியும் அதற்கு அண்மையில் உள்ள தென்பகுதியும் அவன் புழக்கத் தில் உள்ளவையாகலாம். ஆகையால் அவைகளுக்குத் தெற்tே பண்னேக்கலுடக்கு வடக்கே அந்நிலம் அவன் கொடுக்கக் கூடியநிலமாக அமைந்ததாகலாம். அது மணலும் hrrs}i fyrir? ருந்தமனற்றிப்பிரதேசமாக இருந்ததாக வைபவமால சொல்லியுள்
ாது. இது நமக்கும் பொருத்தமே.
இவன் ஆட்சிக்காலத்திலே சதிரை மலேயும் விற்ந்து செங்கடகந கரியும் வீழ்ந்துவிடப்பட்டதால் நிலப்பிரபுவாக இருந்தி இவன் முடி சூடாமன்ன்னுகி விட்டான் பிறர்தம் ஆராய்ச்சித் திறத்தால் தமிழ் நாட்டில் இருந்த செங்கடசுநகர் யாழ்பாடியின் யாழ்ப்பானநகர் என்பவைகளேக்க்ாணுது விட்டனர். அதாவது அவர்கள் சொல்ல இயலாது விட்டு விட்டனர் . யாழ்ப்பா னன் வாங்கியது மணற்றியை அவன் இறக்கும்போது அந்நிலம் யாழ்ப்பாணம் என்னும் பெயர் பெற்றது அவன் ஆட்சியினுல்தான் இப்பெயர் ஏற்பட்டது.

Page 37
15. (ச) நல்லூர் இராச்சியம் நல்லூர்த்தலைநகர்க் காலம் gð. 15). 948 - 8: 1i. 1658
நல்லூர் நகர்கட்டிய காலம் இலகிய சகாப்தம் 870 என்ற கி. பி. 948 (10ம் நூற்றுண்டு) என்று சொல்லி இருக்கவும் என்னே பிறர் 13ம் நூற்ருண்டென்று சொல்லுகிருர்களே இஃதுதொரு வியப்பாக இருக்கே யார் இக்கருத் ை5 முதன் முதலில் வெளி பிட்டவர் இவ்வுண்மையை இங்கே காண்பாம்
பாண்டிமழவன் ஜெயசிங்கையாரியனேச் சந்தித்து "பெருகு புகழ் யாழ்ப்பாணப் பேரரசு செய்ய வருகுதி என்று வணங்கினதும் அவ்வாறே அவனும் வந்து மதித்த வளங் கொள் வயல்செறி நல்லூரில் கதித்தமண் செய்ததும் இகிைய சகாப்தம் எண்ணுற்றெழுபதாம் ஆண்டதெல்லே நலமிகு யாழ்ப்பாண நகரி சுட்டியதும் ஐயமின்றி வெளியான செய்தியல்லவா? இம் முடிபை மறுத்து வேறேதும் புதை பொருளாகவோசிலாசனமாகவோஅன்றிவேறேது ம் வழியாகவோ சான் றுக்கள் பெறப்பட்டனவா இல்ஃயே. இங்கே இலக்கிய சகாப்தம் எண் னுாற்றெழுபது சாலிவாகன சகாப்தம் 87) என்று சொல்லப்படு கின்றது அது கிறீஸ்தாப்தம் (870+78) அதாவது கி. பி. 948
இத்தலைநகர் 13ம் நூற்றுண்டில்தான் கட்டப்பட்டதென்றும் அது கலிங்கமாகனேப் பாடியதென்றும் கலிங்கமாகனும் சிங்கையாரி ஒருவர் என்றும் பிறர் புரைபாடாக மொழிகின்றனர்.
கைலாயமாலை கி. பி. (948ம் ஆண்டில்) 10ம் நூற்றுடில் இயற் றப்பெற்றது. சுவிங்கமாகன் கி.பி 13ய நூற்ருண்டில் வாழ்ந்தவன். கலிங்கமாகனே அந்நூலால் எப்படிப் பாடமுடியும் அவன் பிறக்க 300 ஆண்டுகளுக்கு முன்னல்லவோ அந்நூல் பாடப்பட்டது. இம் மாகன் சிங்கையாரியன் என்ருல் ஏன் ஆதாரம் காட்டி நிரூபிக்கவில்ஃ. இவன் பாடப்படும் பொழுது சக்கரவர்த்திப் பட்டத்தையும் கீர்த்திப் 历业
4 AD 4
 

5.
பிரதாபத்தையும் இழந்து தானே யாழ்ப்பாணம் வந்ததாக இப்பிறர் மேலே சொற்றனர். அப்படி இழந்த ஒருவனே அவை உள்ள ஒருவ குறுகி முத்து இராசர் பாடமாட்டாரே. வைபவமாக்யார் விஜய கூழங்கையன் என்றது பாண்டி மழவனுல் வரவழைக்கப்பட்ட சிங்கை பாரியனே. அவர் கைலாயமாலேயாலும் பிறநூல்களாலும் அவஃனப் பற்றி அறிந்துள்ளார் அவர் ஒரு இடத்திலும் மாகஃன விஜயகாலிங் கன் என்று சொல்லவில்ஃப், ஆதார நூல்கஃக் கொண்டெழுதப் tட்ட வைபவமாஃக் கூற்றுக்கு இவர் சொல்லும் வாயாதாரம்
T கைல்ாபமாஃ பாடப்படும்போது கலிங்கமாகன் பிறந்தி ருக்கவில்ஃ. கைலாயமாலே 10ம் நூற்குண்டிலும் வைபவமாலை 18ம் நூற்றுண்டிலும் இயற்றப் பெற்றவை. எல்லாவற்றுக்குமுன் மாகன் மாழ்ப்பாணம் வந்ததற்குச் சான்று வேண்டுமே வந்ததும் அப்பொழுது ஜெயவாகு அரசிருந்ததும் அவனே இவன் வென்றதும் பின்னர் இவன் அரசாட்சி பண்ணினதும் இரகசியமான செயல்களா ஒன்றுக்கும் சான்று காட்டவில்லேயே எனவே வரவில்ஃல என்றபடி ஊகம் ஊகிப் பார் அளவோடு மட்டும்தான் விஃபோகவல்லது என்க. இக் கீட் உத்தில் பா. வை. வி. காரர் பக். 5-66ல் கூறியவற்றைக் காண்க. சுருக்கமாகச் சொல்லலாம் "கை:ாயமாஃலயானது சிங்கையாரியன், ஜெயசிங்கயாரியன் என நிச்சயமன்றி மங்குனமாய்க் கூறியதை வைபவமாஃ: திருத்தி விஜயகூழங்கை ஆரியன் என்றமை ஜெயசிங்க thாவிங்கஃனச் சொல்லுதற்கே போலும் "காலிங்க சக்கரவர்த்தியென ஓர்வேஃ கைச்சரவைகளில் கண்டதை கூளங்கைச் சக்கரவர்த்தியென் அறியாதோர் மயங்கினருமாகலாம். காலிங்க என்றிருப்பது கூளங்கை ான வருவது மிகந் சுலபமேயாகும். காலிங்கச் சக்கரவர்த்தியே யாழ்ப்பான. . . . . . நாட்டின் முதலாம் ஆரிய சக்கரவர்த்தி எனக் கொள்ளுதல் எவ்வாற்ருலும் பொருத்தம் உடையது' யா. வை.வி. பக். 34-66
கையொன்று கூளேயாக இருந்தமையாற்ருதான் கூளங்கையன் என்றழைக்கப்பட்டான் என வைபவமாஃ சொன்னவாற்றுைபோர்சு,
,T}
காலிங்க என்பதைத்தான் கூளங்கையன் எனத் தடுமாற்ற வயப்பட்டு எழுதிவிட்டார் என்றபேச்சு நன்புத்தியின் பாற்பட்ட்ட தல்ல. ஒற்றுமை வேற்றுமைக்குக்காலம் இடம்வரலாற்று விசேடங்கள் தான்முக்கியம், அவை இக்காலிங்கனுக்கு வராவே, கைலாயமாலேயாற் சொல்லப்பட்டவன் இடத்தால் யாழ்ப்பான நாடோடு தொடர்பு பட்டவன். மாசுன் யாழ்ப்பாண நாட்டோடு தொடர்பு பட்டுள்ள ஒருவன் என்பதற்கு ஒருசான்றும் இவர்கள் ஒருவராலும் காட்டப்பட வில்லே.

Page 38
ஒருவர் தம்காலத்துக்கு 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சரித்திரப் பொருள்பற்றிய பேச்சுக்கு யாதாரம்செல்லாதென்ருேம்: இவர்களிருவரும் 20 ம் நூற்றுண்டின் முற்பகுதியைச் சேர்ந்தவர்கள் இவர்களாற் பேசப்படுவோர் இவர்களுக்கு 600 ஆண்டுகள் முற்பட வாழ்ந்தவர்கள் எங்ஙனம் இவ்வாறு ஆதாரம் இல்லாமற் பேசமுடியும், இருவரும் அம் மாலேகளுக்கு எதிராகப் போகிருர்கள். எதிர் முடிபுகள் பெப்ப்படும், நிற்க. நல்லூர்தலே நகர் கட்டிய காலம் அவ்விரு மாஃவ ஆதாரநூல்களாலும் கி. பி 10 ம் நூற்ருண்டென்று சொல்வி இவர்கள் எச்சான்னறக் காட்டி 13 ம் நூற்ருண்டென்று சொன் ஞர்கள் என்பதை மேலே விசாரிப்போம்.
பா. வை வி காரர் பக் 5-மீே ஸ் சொல்வத்ாவதி காலனல்லே, இனிக்காவிங்கச்சக்கரவர்த்தி யாழ்ப்பாணச்சிங்கை ஆரிய அரசை அடியிட்டகாலத்தை ஆராய்வாம் அக்காலமானது மாகன் பொல் னறுவையை அகன்று வந்த ಹೌ ಹೌ - (ನಿ பி 1212 ம் ஆண்டு) அடுத்ததேயாம் என்பது தேற்றம் - மேலும் யா, வை வி. காரர் கூறுபவை வருமாறு 'கைலாயமாலேயோடு பதிப்பித்திருக்கின்ற தனிக்கவியொன்றிற் சுட்டிய யாழ்ப்பானநகரியென்பது சிங்கைநக ாயின் புவனேகவாகுவாகும் காலகதியிற் புகுந்த வழுவாயின் அக்கவிகூறும் ஆண்டும் கணக்கு காலிங்கச் சக்கரவர்த்தி சிங்கை நீக ரைக்கட்டிய ஆண்டாகலாக் அக்கவி பின்வருமாறு
"இலக்கிய சகாப்தமெற்ண்னூ றெழுபதா மாண்ட தெல்வே அவர்பொலி மாலே மார்ப ஞம்புவ னேக வாகு நலம்மிகும் யாழ்ப்பா னத்து நகரிகட் டுவித்து நல்லே குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித் தானே'
புவனேகவாகு உள்ளபடி சப்புமால் குமரையா என்பதும் அக்காலம் 15ம் நூற்ணுண்டென்பது மேல்வரும் அதிகாரம் ஒன்றனுள் தெரிவிக் கப்படு ம் . ஆதலால் இத்து2ணமயக்கங் கொண்டெழுந்த இக் கவிகாலிங்கச் சக்கரவர்த்தியின் நாட்களுக்கு சமீபகாலத்தன்று என்பது மலேயிலக்கு இதை மயில் வாகனப் புலவர் நபது வைபவமாலையில் வசனருபமாகப் புகுத்தியிருக்கின்றர் ஆ வால் இது அவர்காலத்துக்கு முற்பட்டதேயாம் அவர்கள் காலத்துக் ஒரு நூற்றுண்டுக்கு மட்டும் முந்தியதாகக் கூடிய கைலாயமாலே இயற்றப்பட்ட காலத்தில் கவிவழங்கியதாயின் புவனேகவாகுை முதவாம் சிங்கையாரியனின் பேரமைச்சணுகக் காட்டிய கைலாய மாஃவயுடையார் அவன் நல்லூர்க் கந்தவேட்குக் கோயில் புரிவித் மையும் தமது நூலுட் புகுத்திாது விடார் ஆகையால் சுட்டி தனிக்கவி முத்திராசக் கவிராசருக்கும் மயில் வாகனப் புலவருக்கு இடைப்பட்ட காலத்திற்ருன் எழுந்ததென முடியும், இனிக்கவியி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

57
காட்டிய பெயர்கள் பிழையாயினும் ஆண்டுக் கணக்கு விசேஷ ஞாபகத்துக்குரிய ஓர் சம்பவத்தைப்பற்றியதாதலால் கர்ண் பாரம் பரியமாய் அறியப்பட்ட உண்மயாகலாம் அங்ஙனமாயின் அவ்வாண்டு யாது. (யா, வை. வி. பக். 8ே-67)
இங்கே இவர்பேசும் பேச்சுக்கள் இந்நூலில் கைலாயமாஃலநூல் அமைப்பு. இலகியசகாப்தம் எண்ணுற்றெழுபது என்னும் தலேப் புக்களே வாசிக்க நீங்கிவிடும். ஆணுல் இப்பேச்சுக்கள் கூட்டாகுத்தை பாகவும் பொருள்வரையறை இல்லாமலும் ஆராய்ச்சி வரம்பு முறைகளை மீறியும் போகின்றது. யாழ்ப்பாண நகரி என்பது இவர் கூறும் வல்லிபுரத்துச் சிங்கைநகரையல்ல. நல்லூர்நகரை அமைச்சர் புவனேசுவா குதான் அந்நகரைக் கட்டினவர். ஆண்டுக்கணக்கு அமைசர் நல்லூர்நகரைக்கட்டிய ஆண்டு, செண்பகப்பெருமாள் அரசன் கட்டவில்லே. கட்டினவனுக்கு அரசன் என்ற சொல் அடையாகச் சொல்லவில்லே, அரசன் உயர்பதவி அதைச்சுட்டாமல் அரசனுப் இருந்தால் எந்தப்புலவனும் பாடாமல் வி டா ன். இக்கவி மயக்கம் கொண்டெழவில்ஃல இக்கவி வைபவமாஃலக்கு எட்டு நூற்றுண்டுக்கு முற்பட்டது. இக்கவியிற் கூறிய பெயர்கள் எல்லாம் சரி.
கைலாயIால இருவகையாப்பால் செய்யப்பட்டிருக்கு கவிவெண் பாட்டால் அரசனே முன்னுக்கும் விருத்தத்தால் அமைச்சனேயும் ஆண்டையும் பின் பாடி இருக்கு. அக்கவி வெண்பாவாற் சொல்லப் பட்ட பொருள்களோடு சொல்லப்படாமல் எஞ்சிநின்ற பொருள் களேயும் எஞ்சி நின்றகுறிப்புக்களேயும் தான் இவ்விருத்தந்துள் வைத்துச் சொல்லப்பட்டதென்பது விளங்குதல் வேண்டும். வெண்பா வில் அத்தஃநகர் கட்டின ஆண்டு சொல்லப்படவில்லை. இதில் இலகிய சகாப்த மெண்ணுரற்றெழுபதாம் ஆண்டதெல்ஃல' என்று சொல்லப் பட்டுள்ளது. சைலா யமாலே நூலின் அகத்திலே, அச்சிங்கையாரியன் தஃபநகர் அமைத்துக் கோயில்கட்டி மந்திரியை நல்லும் குடியேற்றி பது முதலாக எல்லாக் குடியேற்றங்களேயும் சொல்லுகின்றது.
இராசமந்திரி பேரமை, சன் என அப்புவனேகவாகு சொல்லப் பட்டுள்ளார். அரசனுக்கு மந்திரி என்றவகையிஞவே அரசனுக்குமந்திரி புத்தி சொல்ல அப்பால் அரசனும் மந்திரியும் சேர்ந்தே அத்தலே நகரைக்கட்டியிருப்பார்கள் என்பது விளக்காமலே விளங்கக்கிடப்பது. எனவே அரசன் கட்டினுன் என்றேனும் அமைச்சன் கட்டினுன் என் றேனும் அரசனும் அமைச்சனும் கட்டினுன் என்றேனும் வருங்கூற் றுகளில் யாதா மொன்றைச் சொல்லினும் அது உண்மைக்கேற்புடை யதே. ஈண்டு அரசனது முதன்மைத்தலேமை சுருதியும் இத்தலநகர் வரலாற்றுப் புருடன் அவளுனமை கருதியும் கைலாயநாதன் அவனது
8

Page 39
58
கனவிலேயே தோன்றி தம் பெயர் கைலாயநாத ன் என்று சொன் னமையாலும் இக்கைவிாயமாவே அவனேயே தஃநகர் அமைத்தான்
என்று சிறப்பித்துப் பாடியது. இஃதிவ்வாருசு இவனது அமைச்சனு
கிய புவனேகவாகு தனது தனித்தொடர்போடு நல்லூர்க்கந்தசுவாமி கோயிலேக் கட்டிஞன். எனவே மன்னனேச்சுட்டி மாஃபயுள்ளும் மந்திரி யைச்சுட்டி தனிச் செய்யுளும் தோன்றின. அம்மந்திரியே சிங்கை நசரியையும் சிட்டுவித்தான். ஆதலின் ஆண்டும் அச்சிங்கை நகர் சட்டின ஆண் டே ஆதலின் அத்தனிச்செய்யுள் இலகிய சகாப்தம்
எண்ணுரற்றெழுபதிலே, மந்திரியாம் புவனேகவாகு யாழ்ப்பான நகரியை முன்னர் சட்டுவித்து முடித்து அப்பல் நல்லூர்க் கந்த
சுவாமி கோயிஃக் கட்டி ஞன் என்று பாடியது. அம்மாைேயப் பாடு வித்தோர் அம்மாஃ யினுள்ளே பன்னஃயுைம் அவரூேடு மந்திரியையும் பாடவிரும்பாமலேதான் இவ்வாறு தனியே பாடிஞர் என்க
அஃது அன்ஞரது நூ ல  ைம ப் பே த " வின் சட்டநாதர் கோவில் திரு. முத்துச்சாமிப்பிள்ஃ) - அவர்களோடு அக்கோவில் வர லாறு பற்றி அளவிட எாாவியபோது சட்டநாதர் சிவன் கோவில் இராசா
கட்டினது என்றுார் தன் ஆரர்கந்தசுவாமி கோயிஃப் மந்திரி சுட்டினது
என்றும் இன்ஜருச்குள்ளே கர்ன பரம்பரைக் சீதையுண்டென்றும் சொன்ஞர். எனவே வல்விபுரத்தில் கலிங்கமாக என் தஃநகர்கட்ட வில்லே, செண்பகப்பெருமான் நல்லுரில் தஃநகர் முதன்முதலாகக் கட்டவிஸ் ஃ1. யாழ்ப்பான மன்னனின் கொட்டத்தை அடக்கக் கோட்டை அரசனுல் ஏவப்பட்டுப் படை எடுத்தான். எனவும் அவன் கனகசூரியன் இருந்தத&லநகருக்குப்படை எடுத்தான் எனவும் அறிக. அக்கனகசூரியன் இருந்ததன் நகரத்தை யார் சுட்டினுன் அது தான் (ஆதிச்சிங்கை யாரியனும்) அமைச்சர் புவனேசபாகு சுட்டிய வைபவமாஃ சொன்ன கி பி 948ல் கட்டப்பட்டதஃநகரம். என்க.
நல்லூர்த் தலைநகர்க் காலம்
வைபவமாலே பக் 28ல் அத்தஃநகரைக்ட்டிய ஆதிச்சிங்கை பாரிய மன்னன் கீழ்த்திசைக்குக் காப்பாக வெயில் உவந்தபிள்ஃள யார் கோவிஃபும், பேற்றிசைச்கு வீரமா காளியம்மன் கோவிவேயும், வடதிசைச்கு சட்டநாதர்கோவிலேயும், தையல்நாயகியம்மன் கோவில் ராஜ விநாயகர் கோவிஃபும், கட்டுவித்துத் திவசதியார் என்னும் புத்திரியுடனே கிருசுப்பிரவேசம் செய்து வாழ்ந்திருந்தான், என்று சொல்லுகின்றது. சிலபிரதிகளில் வடக்கே தலங்காவற்பிள்ளே யார்
கோவி:யும், தெற்றிசைக்குக் கைஃவிநாயகர் கோளிலேயும் கட்டு வித்தான் என்றுரைக்கின்றன. ஆசையால் இக்கோவில்களே நாற்
பக்கமும் வெவியே விட்டு இக்கோவில்களின் உட்பக்க இருகாக ஒரு கோடிழுத்தால் அதுதான் அரண்மனே இருந்தகளம் ஆகும்
 

蔷岛
இதற்குள்ளேதான் சங்கிவியன் தோப்பு யமுனு ஏரி வருகின்றன. இது அகநார் எல்லே. புறநகர் எல்லேவெளியே ஆணேப்பந்தி அடி யார்க்கு நல்லார்குளம், ஆரியகுளம், (பழக்கப்படாத ஆண்களேக் கோட்டைகட்டிய) ஆனக்கோட்டை என்பனவற்றைச் சேர்ந்த நிலங்கள் என்பன இவ்வசுநகர் எவ்ஃலக்குள்ளே நான் இராசபரம்பரை யினர் பெயருள்ள நிலங்கள் குளங்கள் அனேகம் இருக்கின்றன. என்னே இக் கோவில்கள் பண்டைக் காலத்தனவா அன்று, அக்கோவில்சுட்டப் பட்டதானம் பண்டைக்காலத்தன. அப் பழைய கோவில் கட்டிடமும் அதற்குள்ளே இருக்கு ம் விக்கிரகங்களும் பெரும்பாலும் இப்போ இல்லே. எனலாம். அவை போர்த்தர்காலம் தொடக்கமாக அழிபட்டும் போயின. அந்த அழிந்த இடங்களிலே அவை பண்டைக்கால அரசர் கோவில் இருந்த இடங்களெனவெண்னிப் பின் வாழ்ந்துவந்த குடி மக்கள்.அக்கோல்களேக் கட்டி விக்கிரகங்களேயும் வைத்து வழிபட்டு வந்திருக்கின்றர். அக்கோவில்பிளம்பு (உருவம்) இப்பொழுது நமக்க எல்ஃலயைக் காட்டுகின்றன என்று தேர்க.
அங்ங்ணம் அந்நகரிலே ஆதிச்சிங்கையாரியன் அரசுக்கு வந்தானுக வயசு முதிர்வில் அவன் தன் மகன் குலசேகரசிங்கையாரி பணுக்கு முடிசூட்டினுணுக. இப்படியே மைத் தன் வழியைத் தீனுசி இந்த இராசபரம்பரை கி-பி. 918ம் ஆண்டு தொடங்கி ... i. 5) வரையும் அதே தலநகரிலே சீரும் சிறப்பும் பேரும் புகழும் பெருக செகராசசேகரன் பரராசசேகரன் என்னும் சிங்காசனப் பட்டத்தை பும் பெற்று அரசு புரிந்து வந்தார்களாக அவர்கள் இலங்கை எங்கணும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் யாழ்பாணத் தமிழ் அரசனென்று சுட்டிப் பேசப்பட்டு வந்தார்கள். 9 ஆவது அரசன் செயவீரசிங்யாரியன் காலத்திலே இலங்கை முழுவதையும் அவன் ஆட்சி புரிந்தான் என்றும் சொல்லுகிருர்கள். துங்வளவுக்கு அவர்கள் செல்வாக்குப் பரவியிருந்தது. இவ்வரசபரம்பரை மன்னன் ஒருவன் 11ம் நூற்றுண்டில் சிதம்பரத்துக்குப் போய்ப் பரராசசேகரன் மடங்கட்டி சூரியமூர்த்தித்தம்பிரானே நியமித்துச் செப்புப்பட்டயம் எழுதிக் கொடுத்துச் சிதம்பர தானம் வழங்பினுன், 12ம் நூற்ருண்டில் உள்ள இப்பரம்பரை மன்னன் காலத்திலே புகழேந்திப் புலவர் இந்த அகநகரெல்லேக்குள்ளே காலடி கொண்டு நடந்துவந்துதான் இங்கே இருந்த அரண்மனே மன்னனிடம் ஆண்யும் நிதிக்குவையும் வாங்கி ஞர். இப் 13ம் நூற்றுண்டில் (முன்னர் 1ம் நூற்றுண்டென்று கொரி யானது) தான் இவ்வரண்மனேச் சேஞபதி பொப்பண்ண காங்கேயர் கோன் சிவப்பதிகாரத்துக்குரை செய்வித்தார். செய்த அடியார்க்கு நல்லார்க்கு அரண்மனேயும் குளமும் வெட்டிக் கொடுக்கப் பட்டன அவைமுறையே அடியார்க்கு நல்லார் வரம்பு, எனவும் அடி யார்க்கு நல்லார் குளம் எனவும் பெயர்கள் பெற்றன. அந் நகரிே

Page 40
üህ
இருந்த மன்னனுலேதான் பரராசசேகரம் என்னும் வைத்திய நூலும் செகாரசேகரமாலே என்னும் சோதிட நூலும் இயற்றப் பெற்றன. அவை 13ம் நாற்ருண்டு வரையில் இந்த எல்லேக்குள்ளே இருக்கும் ப வடிவில் அமைந்த யமுனு ஏரியில் இராசகுல ஆடவர் ஒருபக்கமாகவும் மகளிர் ஒரு பக்கமாகவும் நீராடிஞர்கள்.
பூஞ்சோலை மத்தியிலே அவ்வேரியின் வண்டிப் பக்கம் அதாவது இப்பொழுது அக்குளத்தின் வடபக்கபக்கம் இருக்கிறது அது வர வர ஆழமாகப் போகிறது. இந்நிலத்துக்குக் கிழக்கே அ  ைர  ைமல் வரை தூரத்துக்கப்பால் கோட்டை வாசல் என்னும் தோம்புப் பெயர் கொண்ட நிலம் இருக்கிறது. அங்கே 50க்கு மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. நான் அவ்வீடுகளில் போய் அவ்வீட்டுக்காரரி டம் உறுதிகளே வாங்கி வாசித்துப் பார்த்தேன். அவைகள் எல்லா வற்றிலும் தோம்புப் பெயர் "கோட்டை வாசல் என்று எழுதப்பட் டிருக்கிறது. இவற்றைக் கொண்டு அக்கோட்டை அரை மைலுக்குக் குறையாத அகலம் கொண்டதாக இருக்கக்கூடும் என்று ஊகிக்கக் கிடக்கிறது. எனவே கோட்டைக்குக் கிழக்கு வாசல் என்று தெரி கிறது. இவ்வாசல்தான் ஆனேப்படை முதலானவை போக்குவரவு செய்ததாக வேண்டும். இப்பொழுது மேற்கே இருக்கும் வாசல் அந்த ரங்க - அல்லது ஆபத்து வாசல் எனலாம். தோற்றுேடிய கனகசூரி யனும் மக்களும் திரும்ப வந்து நுழைந்த వాrr"#Fు அதுவாகவும் இருக்கலாம். (அது இப்போ முத்திரைச்சந்தைக்கு வடக்கே யாழ். பரித்தித்துறை ருேட்டில் ந ல் லூ ரிவ் இருக்கிறது) சுட்ட செங்கிட்டிகளாலும் இறுகிய சுண்ணும்புக் கலவையாலு மானது. அது உடைந்து போகாமல் பிற்காலத்தில் சிமென்ற்பூசப் பட்டிருக்கின்றது. இலங்கையின் வடபகுதி தட்டைநிலமாக இருந்து தால் அப்பகுதித் தமிழ் மன்னர் தலைநகரை மாற்றி அமைக்கக்கூடிய மலேநாடுமில்லே. அவர்கள் மைந்தன் வழிமைந்தணுக தன் தந்தை ஆட்சி பண்ணிய கோட்டையிலே தாமும் இருந்து ஆட்சி புரிந்தார்கள் தம்மைத்தர்க்குச் சோழஇராசபரம்பரைப் பெயரையேஇட்டுவந்தார்கள் அத்துடன் சிங்கை என்னும் தலைநகர்ப் பெயரும் மேலாம் சாதிக் காரன் என்ற பொருளில் வரும் ஆரியன் என்ற பெயரையும் சேர்த்து குலசேகரசிங்கை ஆரியன் என்றுற் போலும் பெயர் வைத்து வந்தார்கள் மார்பில் முப்புரிநால் அணிந்தார்கள் இராமேசுவரப் பிராமணக் குடும்பத்தில் பெண் எடுத்தார்கள் இவர்கள் குலம் ஆரியச் சக்கர வர்த்திகுலம் என அழைக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

行上
இப்படியே கி. பி. 948 தொடங்கி இ-பி. 1450 வரை தம் மூதாதையர் தலைநகரை மாற்ருமல் ஒருவர் பின்ஜெருவராய் ஒரே கோட்டையிலே ஆட்சி பண்னினுர்கள். ஆகலாம் அ க் க வ ால்லக்குள்ளே துலேநகர் மாற்றக்கூடிய போர் ஒன்றும் நடக்கவில்லே சலனமில்லாமல் இராச்சிபம் நடந்தேறிவந்தது. பின்னர் இத்திலே நகர்க்கு செண் கபெருமான் படைஎடுத்தான் கி. பி 140 வரை தோல்விசுண்ட அரசன் ஓடிவிட்டான். அந்தஇடத்தில் செண்பகப்பெரு மாள் ஆட்சிபண்ணினுன், அவன் கொழும்புகோட்டை இராச்சி யத்தை கைப்பற்றுவான் இந்தநல்லூர் இராச்சிய ஆட்சிக்கு விஜயவாது என்னும் பிரதிநிதியைநியமித்துச் சென்ருன். இவன் ஆட்சியை-வகையை வைபவமாஃலயார் "விஜயவாகு என்னும்ீசிங்களவன் தானே அரச னெனத் தலைப்பட்டுத் தமிழ்க் குடிமக்களே பொடுக்கிக் தமிழரை யுடை நடை பாவனைகள் எல்லாம் தங்களைப் போலாக வேண்டு மென்று பலவந்தம் பண்ணி மாறுதல் பண்ணுவித்து அதற்கமையாத வர்களேத் தண்டித்தும் பதினேழு வருடம் அரசாண்டான் (யா-வை. rnT,Lr岳。望5一型f片
இவனே இவனே இவ்வாறு ஆட்சிசெய்யப்பணித் க செண்பகப் பெருமாளோ சைவசமய நல்லூர்க் சுந்தசுவாமி கோவிலேக் கட்ட மாட்டார் என்றுதுணிக. அப்பால் வைபவமாலே சொல்வதாவது கனகசூரியசிங்கையாரியன் தன் பிள்ளைகளாய பரராசசேகரனேயு செகராசசேகரனேயும் திருக்கோவலூர் இராச குடும்பத்திவர் பாற் கல்வி பயில வைத்து தன்மனேவியுடனே காசிபரியந்தம் யாத்திரை பண்ணி மீண்டான் பின் திருக்கோவலூர் போய்ப் பிள்ளைகளைக் கண்டான். பிள்ளைகளிருவரும் சத்துருக்களைச் செயிக்கவும் இழந்த தந்தையின் இராச்சியத்தை மீட்டுக் கொள்ளவும் பண்ணியிருந்த பிரயத்தனங்களைக் கண்டு மிகுந்த ஆச்சரியங்கொண்டு அவர்களே முத்த பட்டு அங்குள்ள இராசகுடும்பத்தார்க்குக் காட்டவேண்டிய நன்றிகள் எல்லாம் காண்பித்து பிள்ளகளே புத் தேவியையும் கூட்டிக்கொண்டு மதுரைக்குப் போய்ச்சேர்ந் நான். சேர்ந்த பொழுது பாண்டி நட் டைப் பகுதிகளாய் ஆண்டசிற்றரசர்கள் பலரும் சேனேனயயும் ஆயு தங்களேயும் கொடுத்து விட அவன் சகல ஆயத்தங்களுடனேயும் யாழ்ப்பாணம் (நல்லூர்) வந்து சேர்ந்து கோட்டையின் மேற்கு வாசல்வழியாக நுழைந்தான். (அவ்வாசல் இப்பொழுதிருக்கும்வா q] if arଦylf இருக்கவ ம்) விஜயவாகு காத்திர 门山、 வேபிளேற் சேஃணவர்க் சுத்துடன் இவன் நுழைந்தபோதிலும் அவன் சடுதியில் சேனேசுளேக்கூட்டி அஞ்சாநெஞ்சத்தனுப் நின்று பெருஞ்சமர் பண்ணினுன் செகராச சேகரன் ஒரு அரணி தனில் சண்டை செய்துகொண்டுநிற்க, பரராச சேகரன் விஜயவாகுவின் துணிவையும் அவன் செய்யும் வீரத்தையும் கண்டு வாட்படைபுடனே விஜயவாகுவின் போர்முஃ:மேற்சிங்கம்பாய்ந்

Page 41
தாற்போல்பாய்ந்து சேனைகளையும் விஜயவாகுவையும் தன் வாளுக்கிரை யாக்கினுன். அதைக்கண்டு செகராசசேகரனுடன் எதிர்ந்த போர் முஃனமுறிந்து கெட்டுச்சிதறிப் போயிற்று. பரராசசேகரன் பிதாவை அரசாட்சியில் வைத்துத் தான் தேசவிசாரனே செய்ய முயன்ருன். (LLI FT. 337 5J, IL IO T. Lå 45 - d 8)
இவ்வாறு சரித்திரமானுல் எந்த இடத்தில் கனகசூரியன் நோற்ருனுே அந்தக் கோட்டையை - அதே களத்தை அவன் மீள வென்று கொண்டான். அவனின் பின்னர் அவன் மகன் சங்கிலி அர சுக்குவந்தான் அவன் இறுதியில் அரசாட்சி பண்ணும்போது கி-பி. 1820 வரை போர்த்தர் படை எடுத்தனர். சங்கிவி இக்கனத்தில் இருந்த காரணத்தால் அது அவன் காலத்தில் சங்கிலிதோப்பென்று அழைக்கப்பட்டது. போர்த்தர் சங்கிலியை வென்று கொள்ள போர்த் தரின்கீழ் அவன் பரம்பரை கி-பி 1658 வரையும் இக்களத்தில் இருந்தரசு பண்ணியது. ஒல்லாந்தர் அரசுக்கு வந்தபோது அவ் வந் நிலங்களுக்குப் பெயர் பதித்தார்கள் சங்கிலி பெயரால் அழைக்கப் பட்டநிலத்தைச் சங்கிலிதோப்பென்று பதிந்தார்கள் இவன் சகோ தரன் பண்டாரத்தின் மாளிகை இருந்த இடம் பண்டாரமாளிகை என்றெழுதப்பட்டது. எனவே சங்கிலித்தோப்பு பண்டாரமாளிகை TT I ETILITY அழைக்கப்பட்ட நிலம் அவர்கள் மாத்திரந்தான் இருந்த நிலம் அல்ல. அவர்கள் முன்னுேர் பன்னிருவரும் இருந்த நிலம், எனவே ஆதி அரசன் சிங்கையாரியன் தஃநகர் அமைத்த இடமும் இதுவே என்க. என்னே? இப்பரம்பரை எவரேனும் தலே நகரை மாற்றிய மைத்த சங்கதியில்ஃவ எனவே நல்லூர்த்தலே நகரம் கி. பி.948-1638 வரையும் அதன் காலம் 710 ஆண்டுவரை இருந்ததென்சு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

16. பாண்டிமழவன் அழைத்துவந்த சோழ இராசகுமாரன்
இல்வாதிச் சிங்கையாரியஃளச் சிலர் பாண்டியன் என்கின்றனர். சிலர் சோழன் என்கின்றனர். சிலர் ஒன்றினேயும் துணிய இயலா திருக்கின்றனர். யாம் ஈண்டு நிச்சயிப்பாம். அவ்வாரியன் தன் மதி ணுக்கு தன் இராச்சியத்தை முடிசூட்டி வைத்துச் சிவபதம் சார்ந் தான். என்று வைபவமாலை சொல்லிஇருக்கே யல்லவா. அவன்பெயர் குலசேகரசிங்கையாரியன் என்று அந்நூலால் சொல்லப்பட்டிருக் கல்லவா. இப்பெயரை அவனுக்கிட்டவன் அவன் தந்தையல்லவா அவன் தன் குலத்தவர் அனுசரித்து வந்த பெயரைத்தானே தன் ந்ைதனுக்கு இட்டிருப்பான். எனவே இம் மைந்தன் பெயரைக் கொண்டும் அவன் தந்தை எக்குலத்தவன் என்றும் நிச்சயமாக அறிந்துவிடலாம். அதன் கூற்றுவருமாறு:
"சிங்கள கலசுத்துக்கு எடுபடாமல் காலம் விட்டுவத்த பொன் பற்றியூர் வேளாளன் பாண்டிமழவன் என்னும் பிரபு மதுரைக்குப் போய் அவ்விடத்திலே சோழ நாட்டிலிருந்து வந்து இராச உத்தி யோகத்துக்கு ஏற்ற கல்விகற்றுக் கொண்டிருந்த திசையுக்கிரசோழன் நகருகிய சிங்கசேதுவுக்கு மருமகனுன சிங்கையாரியன் என்னும் சூரிய வம்சத்து இராசகுமாரனேக் கண்டு யாழ்ப்பாணத்தின் நிவேபரத்தை அறிவித்து இவ் யாழ்ப்பாணத்தை அரசாட்சி செய்ய வரவேண்டு கென்று சேட்க சிய்கையாரிய அரசன் மறுத்துப் பேசாமல் பாண்டி மழவன் கேள்விக்குடன்பட்டு (கல்வியறிவிலும் புத்திவிவேகத்திலும் எவர்களும் வியந்து கொள்ளத்தக்க உத்தண்டவீரசிகாமணியாகிய புவனேகவாகு என்னும் மந்திரியையும் காசிநகரத்திவிருந்துவந்த வேதிய குலோத்துங்கணுகிய சுெங்காதர ஐயரென்ஜங் குருவையுங்

Page 42
齿蛭
கொண்டு தனது பரிவாரங்களுடன் பிரயானப்பட்டு பாண்டியராசன் வழிவிட்டனுப்பி வைக்க யாழ்ப்பாணத்தில் வந்திறங்கி நல்லுனர்ப் பகுதியிலே . கிருகப்பிரவேசஞ் செய்திருந்தான்- (யா. வை. மா. பக், 25-26) வந்து தஃநகர் அமைத்தான். என்று சொல்வியுள்ளது.
எனவே சோழ அரசன் பாண்டிய நாட்டில் கல்வி சுற்றுக் கொண்டிருந்த பின், ஆஞல் பாண்டிய அரசனல்ல. ஆதிச்சிங்கை யாரியவன் பாண்டிபணு சோழனு என்பது அவன் தன்மைத்தனுக் கிட்ட பெயர் கொண்டறியலாம். மைந்தனுக்கு குலசேகரசிங்கை பாசியன் என்று பெயர் வைத்திருக்கிருன். இதைக்கொண்டு ஆதிச்சிங் பாரியன் சோழகுலத்தவன் என்று தெரிகிறது. இது சோழகுலத்துப் பெயரைத் தழுவியது அந்த முதல்பெயர்களேக் கொண்டைன்களாகத்
தான் இன்றும் இவன் குலப்பின்னவர்கள், குலோத்துங்கள், வித்திரமன், கனகசூரியன் எனத் தங்கள் பெயரை வைத்து க்கொண்
கு 岛 芭遭门
டார்கள் இவ்வுண்மையை சோழர் சரித்திரத்திலறிந்து கொள்க.
இனிப்பாண்டியர் பெயர்களே. R. அரிகர மையர் (தஃமைத் தமிழ் பண்டிதர் நீர்த்தபதிக்கலாசாலே அப்பாசமுத்திரம்) எழுதிய பாண்டிய ராசவம்ச சரித்திரம் எனும் நூலில் காண்பாம்.
பாண்டியன் வடிவம்பலம் நின்றவன், பாண்டியன் வெள்ளி யம்பலத்துத்துஞ்சிய பெருவழுதி, பாண்டியன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன், எனவே, பாண்டியன், வழுதி, மாறன், செழியன் என்னும் பெயர்களில் ஏதாவதொன்றும் அச்சிங்கையாரிய குலத்தவர் பெயரோடு தொடரவில்லே. ஆகையால் ஆதிச்சிங்கையாரியன் பாண்டியன்அல்ல. அவனேச் சோழகுலத்தவன் பாண்டிய நாட்டிலே இராசவுத்தி யோகக் கல்விகற்றுக் கொண்டிருந்தவன் என வரையறை யாகச் சொன்ன வைபவமாலையை நாம் வியக்கின்ருேம். இன்னும்
கேட்க
வைபவமாஃலயார், பாண்டிமழவன் போய்க்கேட்ட இராச குமார&ன விபரிக்குமிடத்து அவன் சோழநாட்டிலிருந்து வந்து மதுரை யிலே இராசவுத்தியோகத்துக்கேற்ற கல்வி கற்றுக் கொண்டிருந்தவன் எனவும், சோழன் மகனுகிய சிங்ககேதுவுக்கு மருமகனுன சிங்சுை பாரியன் என்று சொல்லியிருக்கிறர் அல்லவா எனவே அவன் சோழன் என்று துணிக. அப்பாலும் ஐயம்கிளம்பு மேல சூரியவம்சத்து இராச
 
 
 
 
 
 
 

குமார&னக்கண்டு என்று சொல்லி இருக்கிருரே. உலகவழக்கிலும் நூல்வழக்கிலும் சோழரைச் சூரியகுலம் என்றும், பாண்டியரைச் சந்திர குலமென்றும் சொல்லும் வழக்கம் இருக்கு. அவ்வகையிலே அவ&னச் சோழனென்றே துணிந்து கொள்க. அங்கனம் ரரிபாபு னும் அவன் பாண்டிநாட்டு மதுரையில் உள்ள சொக்கநாதரை வழி பட்ட செய்தி இக்கோட்பாட்டுக்கூறுவிளக்காதோ வெனின் இல்லையே இவ்வரசரான "ஜெயசிங்கையாரியனும் செய்யகுலராசன், நயந்து புவியாண்டிருக்குநாளில், வியந்த மதுரைநகர்ச் சொக்கர் மலர்ப்பாதம் போற்றி, இதயத்திரவு பகலெய்தி விதனமுறும். அக் கவின் கோயிலமைத்துப் பிரதிட்டை செய்து, சொக்கலிங்கமென்று பெயர் சூட்டுமென்ன. மிக்க, மனநினேவின் மன்னன் மதித்து மஞ்ச மீதிற், புண்துயிலாங் மேவியிடும்போது (கை. மா. கண் 10-15)'
இப்பகுதிக்குரை செய்தவர் உரையாவது "இவ்வாறு ஆக வேண்டிவை எல்லாம் சிங்கையாரியன்) அமைத்து முடித்து இரவும் பகலும் மதுரை சொக்கநாதர் திருப்பாதங்களேயே சிந்தித்து அர சாண்டு வருகையில் யாழ்ப்பாணத்திலே (நல்லூரிலே) சொக்கநாதர் கோயிலமைக்க விரும்பி அவ்வாறு செய்வதென ஒருநாள் தீர்மானித் தான், (கை. மாஃல. பக். 28) இவன் முன்இராசவுத்தியோசுத்துக்கேற்ற கல்வி கற்க மதுரைக்குப் போயிருக்கிருன் அங்கே 10-15 வருட காலம் தங்கி அக்கல்வியைக் கற்கும் காலத்திலே மதுரைச் சொக்கரை வழிபட்டிருக்கிருன். அவன் பின்னர் யாழ்ப்பாணத்து நல்லுரருக்கு வந்து அச்சொக்க நாதர்க்கு ஒரு கோயில் கட்டி வழிபட எண்ணி இருக் கிருன் (அச்சந்தர்ப்பத்திலேதான் கைலாயநாதன் உமாதேவி சகிதம் போய்க் காட்சி கொடுத்து என்ன" மறந்தனேயோ என்றுகேட்டார் ான்க.) இன்னுமொன்று அரசர் பெயர் வைப்பது சிந்தித்துச்செய்யப் படும் விஷயம். பாண்டியன் சோழஇனத்தார் பெயரையோ - சோழன் பாண்டிய இனத்தவர் வைக்கும் பெயரையோ வையான் எனவே
சிங்கையாரியன் சோழனே என்க.

Page 43
17. பிறர்கண்டசிங்கைநகர்
சு. ஞா காரர் கூறுவதாவது (யா. வை. வி. பக் 67-68)
"ஆதி ஆரியச்சக்கரவர்த்தி கட்டிய யாழ்ப்பாண நகரியாது?அது நல்லுராதல் கூடுமா கூடர்தென்பர் பூரீ இராசநாயக முதலியார். இவ்வியுற் பத்திமானின் அனுமானப்படி பருத்தித்துறைக் கணித்தாய் மணல் மேடுகள் பொருந்தி இருக்கின்ற வல்லிபுரமே பூர்வ காலச்சிங்கை நகராம். நல்லூர் புவனேகவாகுவெனப்பிற்படக் கோட்டை இராச் சியம் வகித்த செண்பகப்பெருமாள் பதினேந்தாம் நூற்ருண்டில் கட்டுவித்ததாம். இம்மதம் எனக்கும் சம்மதம். வல்விபுர மணற்கும்பி களுள் காற்றுக்காலங்களில் அகப்படும் பழம்பொருட்கள் அங்குசிலவிடங் சுனில் குவிந்துகிடக்கின்ற பூர்வ காலக்சுலவோடுகள் கீச்சுக்கிட்டம் ஆதியனவும் அங்கிருந்து கரைமார்க்கமாகப் போன பெருவீதியின் அடை யாளங்களும் ஒருநாள் அது விஸ்தாரநாராய் விளக்கியதெனக்கரதல் ஆமலகமாய்க் காட்டும் "அப்பால் ஆரியச்சக்கரவர்த்திகள் தம் செல் வாக்கு நிரம்பிய நாட்களில் பெருங்கப்பற் படையுள்னோராய்ப் பிரக்கியாதி பெற்றுள்ளமையால் அம்மரக்கலத்திரள் ஆழியிற். சுலப மாய்ச் சென்று திரும்பதற்கனுகூலமான துறைமுகம் உள்ளோராய் இருந்தமை அவசியம், கேகாலைப்பகுதியில் உள்ளகொத்தகமத்திற்கண் டெடுக்கப்பட்ட கல்வெட்டும் அன்னுேரை பொங்கொலி நீர்ச்சிங்கை நகர் ஆரியர் என்று சூசிக்பிக்கிறது. பெருங்கடற் சமீபமும் சிறந்த துறைமுகம் பொலிவும் கொண்டது வல்லிபுரமே. ஆங்கு நற்றுறை புண்டோ என இராசநாயகமுதலியார் கொண்ட ஐயுறவு எம்மால் இனிது நீர்க்கப்படாது"
இச்செ.இ, காரர் சு. ஞா காரர்இருபேரும்செண்பகப்பெருமாள் தான் நல்லூர்த்தஃநகரைக் கட்டிஞன் எனவும் கலிங்கமாகன் வல்வி புரத்தில் சிங்கைநகரைக் கட்டினுன் எனவும் ஒரே முகமாகச் சொல் லுகின்றனர். அவர்கள் சொல்லுமாற்றை முன்னும் பின்னும் நோக்கி யறியலாம். நல்லூர்த்தலேநகர் செண்பகப்பெருமாள் கட்டவில்லே f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7
என்றும் ஆயின் வல்விபுரத்திலே சிங்கைநகர் இல்ஃ) என் பதும், அது கட்டிய ஆண்டை அவர்கள்"பின்ழயாகச் சொல்லுகின்
ஜர் என்றும் கலிங்கமகானுக்கும் யாழ் եմ: தாடர்பில்லே என்றும்
விளங்கிக் கொள்க. *
சு. ஞா. சொல்லுவதாவது
'il நல்லேக் கோயிலேப் புரிவித்த புவனேகவாகு: மால்குமாரயா எனும் செண்பகப்பெருமாசோயாம் கி பதினேந்தாம் நூற்றுண்டாகும்மென்பதும் மேல் மொன்றனுன் தெளிவிக்கப்படும். ஆதலால் இத் கொண்டெழுந்த இக்கவி காலிங்கச் சக்கரவர்த்தியின் நாட்களுக்குச் சமீபகாலத்ததன்று என்பதுமில்லேயிலக்கு இதைமயில் வாகனப்புலவர் தமது வைபவமாலேயில் வசனருபமாகப் புகுத்தியிருக்கின்ருர் ஆத லால் இது அவர் காலத்துக்கு முற்பட்டதேயாம். அவர்காலத்துக்கு ஒரு நூற்றுண்டுக்கு மட்டும் முந்தியதாகக் கூடிய இக்கவி கைலாய மாஃவ இயற்றப்பட்ட காலத்தில் வழங்கியதாயின், புவனேகவாகுவை முதலாம் சிங்கையாரியனின் போரமைச்சணுகக் காட்டிய கைலாய மாலேயுடையார் அவன் நல்லூர்க் சுந்த வேட்குக் கோயில் புரிவித்தமை யையும் தமது தூவில் புகுத்தாது விடார். ஆதலால் சுட்டிய தனிக்கவி முத்துஇராசக் கவிராயருக்கும் மயில்வாகனப் புலவர்க்கும்இடைப்பட்ட காலத்திற்ருன் எழுந்ததென் முடியும்.இனிக்கவியில் காட்டியபெயர்கள் பிழையாயினும் ஆண்டுக் கனக்கு விசேடஞாபகத்துக்குரிய ஓர் சம்ப வத்தைப் பற்றியதாலால் கர்ண பாரம்பரியமாய் அறியப்பட்ட ந.ண்மையாண்டாகலாம். அங்ங்னமாயின் அ வ் எ எண் டு பாது எண்ணுரற்றெழுபது என்பது 878 அன்று 1000ம் ஆகிய எண்ணும் 170 உம் சேர்ந்த காணக்காகுமெனத் தோன்றும், எண் என்பதை ஆயிரம் என்னும் பேரெண்எனக் கொள்வதுஎவ்வாறெனில் இத்தனிக்கவி :ேருெரு சுவியை அனுசரித்துச் செய்யப்பட்டது. அக்கவியில் எண் என்பது பேரெண்னேயே குறிக்கு மென்பர். அதுவும் பின்வருவது.
எண்ணிய சகாப்த மென்னூற் றேறின் மேற்சடை பன்வாழ்வு தண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்ன பண்ணிய இராம காதை பங்குனி அந்த நாளில் கண்ணிய வரங்கர் முன்னே கவியரங் கேற்றி ஞனே
இக்கவியிற் சொல்லிய எண்ணுாற்றேழு எண் = 1000+1000+197 ானநின்று சகாப்தம், 107 ஆகு மென்றும் அது கிறீஸ்தாப்தம் 1185 ஐக் குறிக்கும் என்றும் இது பிற ஏதுக்களேக் கொண்டு நிச்சயித்த

Page 44
காலத்துக்கு பொருத்தமுடையதென்றும் கற்ருேர் சுழறுவர். (செந் தமிழ் 111-பக் 178-81) ஆகவே நம் யாழ்ப்பாணத்தனிக்கவி கூறும் ஆண்டு 1000+170-1170 என வந்து கிறிஸ்தாப்தம் 1248க்குச் சரி யாகும் இவ்வாண்டு காலிங்கச் சக்கரவத்தி புலத்தி நகரைவிட்டகன்ற ஆண்டுக்கு (1242) ஆருண்டு மட்டும் பிற்பட்டது. மாகன் வடதிசை நோக்கிய ஆருண்டின் பின் யாழ்ப்பாண நகர் நிர்மாணித்து முடி வெய்தியது என்பது மிகப் பொருத்தமடைந்து (யா, வை. வி88-67)
இங்கே சுருக்கமாக இவர்கள் கூறியவற்றுக்கு விடையிறுப்பாம்.
முத்துஇராசர் அரசனே நூலுள்ளும் அமைச்சனே வெளியே தனிப் பாடலாலும் பாடி இருக்கிருர் . இரண்டும் கைலாயமாஃலதான் அது முத்துராசா கவியமைப்பு. இவர் அச்சுட்டிய தனிக்கவியைப் பற்றி முற்றிலும் விளங்கவில்லே. எண்ணுற்றெழுபது என்னும் எண்ணுக்கு அதாவதுஅத்தொகைக்கு வேறு தொகையைப் பொருள் கற்ப்பிக்கிருர்
ஒருவெள்ளிபாடலோடு இலக்கி பசகாப்தம் என்னும் செய்யுளே ஒப்பிடுகிருர் " அது கூடாது. வெள்ளிபாடல் என்று இவர்க்கு விளங்க வில்ல. வெள்ளிபாடலாவது என்னே? இராபயானம், பாரதம் அனேய காவியங்களிலே அவ்வக் காவியங்களேப்பாடிய புலவர் பாட லல்லாமல் வேறும்வில பாடல்களும் இப்பொழுது காணப்படுகின்றன. அவைகள் அப்பாடல்களே ப் பிரதிபண்ணி வந்தவர்கள் அவ்வப் பாடல்களின் போக்கை அனுசரித்துப் பாடியிட்டவைகள் என்று அறி ஞர்கள் சொல்லியிருக்கிமுர்கன் அவைகள் பாடியவர்களின்வெள் இாறிவை எளிதிற் புலப்படுத்துகின்றன. அத்தகைய வெள்ளிபாடவில் ஒன்றுதான் சு. ஞா. காரர் காட்டும் "எண்ணிய சகாப்தமெண்ணுரற் றேழின் அரங்கேற்றினுனே' என்றபாடல் அதனேப்பற்றிநன்கு விளங்க வேண்டும் அமைச்சர் புவனேகவாகு இகிய சகாப்தம் 870 ல் (அதா வது எட்டு நூற்ருண்டும் 70 ம் சேர்ந்த ஆண்டில் நல்லூர்: நகரையும் கந்தசுவாமி கோயிலேயும் கட்டியிருக்கிருன் என்று கைலாய மாலேயில், சொல்லப்பட்டிருக்கு இதனுல் அமைச்சரின் அரசஞன சிங்கையாரியனும் இந்த எண்ணுரற்றெழுபதாம் ஆண்டில் உள்ளவன் தான் நிற்க.
வண. சு. ஞா. கலிங்கமாகன் கி.பி 1248 ஆண்டு யாழ்ப் பனத்து (எங்கேனும்) இத்தலே நகரைக் கட்டிஞன் என்ற தன்பிழை யான கோட்பாட்டைச் சொல்வரன் கருதி இந்தப்பாட்டில் வந்த ாண்ணூற்றெழுபதுக்கு 1170 தான் பொருள் என்றும் இப் பாடில் கம்பர் காலத்தைப் பற்றி நிச்சயிர்க்கவல்ல, "எண்ணிய சகாப்தம்

எண்ணுற்றேழின்மேல்சடையன் வாழ்வு' என்றபாட்டைப்பின்பற்றிப் பாடியிருக்கென்றும் இங்கே 807 க்கு (107 என்றும் அது கி. பி 12 ம் நூற்ருண்டு ஆதலால் கம்பன் காலத்துக்குச் சரியென்றும் கூறி அந்த எண்ணுரற்றெழுவதை 1170 என்று பொருள்பண்ணி அது கி. II, 70 ---- 78) 1248 ஆகும் அது கலிங்கமாகன் யாழ்ப்பாணம் வந்த ஆண்டை நிச்சயிக்கக்கூடியது என்கிருர். இவ்விடத்திலே இப்பாடல்களுக்குப் பிற அறிஞர்கள் பொருள்பண்ணிய வகையை அறிதல் அவசியம்.
செந்தமிழ்ப் பத்திராசிரியர் ரா. இராகவஐயங்கார் செந்தமிழ் தொகுதி 3-ம் பக்கம் 177-181 ல் கூறுவதாவது "எண்ணியசகாப்க மெண்ணுரற்றேழின் மேல்சடையன்வாழ்வு அரங்கேற்றினூனே" என் பதஞல் கம்பர் இராமாயணம் அரங்கேற்றிய காலம் 807 என்று கூறு வதால் சகாப்தம் 807 என்பது கி. பி. 885 ஆகும். அது விக்கிரமன் காலத்துக்கு நெடுந்தூரமானது. அங்ஙனமாயின் அது ஒட்டக்கூத்தர் காலமுமன்று கூத்தர்காலமுமன்ருயின் சங்கரன் காலமுமன்று. சங்க ான் காலமுமன்ருயின் சடையன் சேதிராயன் காலமுமன்று. சடை பன் சேதிராயன் காலமுமன்ருயின் கம்பர் காலமுமன்று ஓரங்கல் உருத்திரன் காலமும் இஃதன்றுல் கூற வேண்டா இங்ஙனமே கம்பர் காலத்தவராகத் தெரியப்பட்ட வேறுபலர் காலங்களுக்கும் கி.பி 885 பொருத்தாதவின் அது கம்பர் காலத்துக்குப் பொருந்தாதென்பது ஒரு த&ல, மேற்காட்டிய பிரமாணங்களாற் தெளியப்பட்ட கம்பர்காலத் தோடு பொருந்த வைத்து நோக்கின் டிெ செய்யுள் பாடம் பிழைத்தி தென்றேனும் வேருேர் பொருனடையதென்றேனும் கருதப்படும்" என்பது. அப்பால் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவர் எஸ். வையாபுரிப்பிள்ளே அவர்கள் கூறுவதாவது எண்ணிய சகாப்தம்" இச்செய்யுள் இராமாயணப் பிரதிகளில் காணப்படும் ஒரு தனியன். இங்கே சகாதம் எண்ணுாற்றேழு என வருதலால் கி பி. 885ல் கம்பர் தனது காவியத்தை இயற்றிஞர் என்று வெளியாகிறது. இம் முடிபு ஆராய்ச்சியால் நன்கு தெரியப் பட்ட சிலகால வரையறைக்குப் பெயருத்தமின்றிச் சரித்திர முடிபுக 3ளப் புரட்டிவிடுகின்றது. இதனுல் சோழ அரசர் பெருமையுற்று விளங்கியதற்கு முற்படட காலத்தில் இவர் வாழ்ந்தனர் என்று துணிய நேரிடும். இவைகள் முற்றும் அசம்பாவிதமாம். வைணவசமய சரித்திரத்துக்கும் தமிழ் இலக்கிய சரித்திரத்துக்கும் தமிழ் நாட்டுச் சரித்திரத்துக்கும் இச் செய்யுள் முரண்பாடாக உள்ளது. இக் கார னங்களால் இத்தனியன் சான்முகக் கொள்ளத்தக்கதன்று. செந்தமிழ் 43ந் தொகுதி 1945ம்-48ம் ஆண்டு பக். 97-98

Page 45
T
இங்கே காட்டிய அறிஞர்கள் எண்ணுரற்றேழை 1107 என்று பொருள் பண்ணவில்லே அப்பாடல் நாம் சொன்னவாறுபோல் அவர் களும் சான்ருகக் கொள்ளத்தக்கதல்ல பாடம் பிழைத்த பாடல் என் இருர்கள் இந்த 870 ஐ 1170 என்று பொருள் பண்ணினுல்தானே கலிங்கமாகனுக்குப் போகும், அப்படிப் பொருள் பண்னக் கூடாது? அது பிழை என்றல் கலிங்கமாகனுமில்லே. அவன் வரவுமில்லே. 87. தான் பொருள் என்ருல் அது சிங்கையாரியனைக் குறிக்கும். அன்றியும் "எண்ணுரற்றேழு"12ம் நூற்றுண்டில் வாழ்ந்த கம்பரைப்பற்றிய பாடல், சகாப்தம் எண்ணுரற்றெழுபது என்றது 10ம் நூற்றுண்டில் வாழ்ந்த சிங்கையாரியஃனப் பற்றியபாடல். ஆதாரநூல்களாகிய வைபவமாலே நைலாயமாலேயில் கலிங்கமாகணேப்பற்றி ஒரு சொல்லுமில்லே எப்படிப் பத்தாம் நூற்ருண்டில் வாழ்ந்த சிங்கையாரியனும் 13ம் நூற்றுண்டில் வாழ்ந்த கலிங்கமாகனும் ஒரே புருடனுவி இருக்க முடியும்.
ஆகையால் அப்பாடலே அனுசரித்து இலகிய சகாப்தம் எண்ணுரற்றெழுபதுக்குப் பொருள்பண்ணக் கூடாது. அன்றியும் அப் பாடலில் 87) என்ற ஒரு தொகையும் 1178 என்ற மற்ருெரு தொகையும் பொருள்பண்ணப்படுகிறதா? அதுபிழை. முத்துஇராசர் போன்ற பெரும்புலவர்கள் வரையறையாகத்தான் சொல்லுவார்கள். ஒரு எண்ணுக்கு ஒன்றுதான் தொசிை. அல்லது விஎேன்க.
இந்து 87) எந்தக்காலத்திலும் எந்தநாட்டிலும் என்வெவர்க்கும் நூதன் விலே 870 தான் 1170 ஐக்குறிக்கவேண்டுமேல் புலவர் அதனே உணர்த்தும் சொற்பெய்தே பாடியிருப்பர். அப்பெரும்புலவர் இந்: எண்ணுற்றெழுபதை சுைலாபமாஃப நூற்தலேவசூன சிங்கை சுபாரி ப&னப்பாடியிருக்கிருரே யொழியக் கலிங்க மகனேயல்ல. விங்கமாகீன் காலம் 13 ம் நூற்ருண்டு சிங்கையாரியன் முத்துராசர்காலம் 300 ஆண்டுகளுக்கு முற்படவுள்ள 10 ம் நூற்ருண்டு அப்படிக் கவிங்கமா கண்ப்பற்றி ஒரு அணு அளவு செய்தியும் முத்துராசருக்குத் தெரியாதே நிற்க. இவர்பொருள்பண்ணிய 1170 இல்லேயாகவே அதுதான் கலிங்க மாகன் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகக் கொண்ட ஆண்டு. அது இல்&லயாகவே கலிங்கமாகன் யாழ்ப்பாணத்துக்கு வரவில்லே, அவன் வரவில்லையாகவே வல்லிபுரத்தில் சிங்கைநகரில்லே, சிங்கைநகர் எல்வி புரத்தில் கட்டியதற்கும் சான்றில்லே. வல்லிபுரத்தில் சிங்கை நகரில்லே யாருல் கனகசூரியனும் மக்களும் அங்கிருந்து நல்லூரிற்கு வந்து குடியேறவில்ஃல. நிற்க, கிறிஸ்தாப்தம் 1848 மாகன் புவந்தி நகரை விட்டுவந்த ஆருண்டுக்கு மாத்திரம்தான் பிற்பட்டது. அதில் குற்ற குற்றமில்லே என்கிருர் அரை மனித்தியாலத்துக்கிடையேயும் ஒருவன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7.
சரித்திரம் மாறலாம், 2ம் பராக்கிரமவாவால் கஃக்கப்பட்டு புலத்தி நகரைவிட்டகன்ருன் மாகன் என்ருல் அதாவது அவன் வென்றது 1215ல் ஆட்சி 21 ஆண்டு ஆகவே மாகன்
1236 ல் விலகியிருக்கவேண்டும். இப்பிறர் மாசுனே 1248 ல் தான் யாழ்ப்பாணத் தோடு தொடர்பு படுத்துகிருர், இந்தப்பன்னிரண்ாண்டு முடியும்வரை மாகன் வரலாறென்னனன்று இவர்கள் காட்டவில்லே. பொல்லனறு வையை விட்டு அகன்ற மாகன் யாழ்ப்பானததுக்குத் தான்வரவேண்டுமா? அவன் வேறெங்கேனும் போயிருக்க மாட்டாணு அல்லது இறந்திருக்க மாட்டானு? அவன் யாழ்ப்பாணம் வந்ததற்கு என்னசான்று. ஒன்றும் இவர்கள் அதன் சார்பாகக் காட்டப்பட வில்ஃயே. மாகன்தான் யாழ்ப்பாணத்தலநகரைக் கட்டினுன் என்று சொல்ல ஆசையுள வேல் சிங்கையாரியன் கட்டினுன் என்று சொல்லும் மா8லக்கூற்றுக்களே பிறமுடிபுசுட்டும் நற்சான்றுகொண்டு மறுக்க, அப்பால் கலிங்கமாகன் கட்டியதாக அத்தாட்சிப்படுத்தும் சான்றைக் கொண்டு அக்கூற்றை நிறுவுக. இரண்டு சான்றுமில்லையேல் நிரூபன மாகாது. ஜனகர்சான்றென்று பேசுவது பிழை. காட்டுயானே நாட்டுக் குள்ளே வந்ததை அத்தாட்சிப்படுத்திப் போட்டு அதுபடுத்த இடம் போனபாதை, முறிந்த மரங்கள் என்பனவற்றின்மேலே யூகம் செய்து கொள்க. பாஜன காட்டுக்குள்ளே நுழைந்ததற்கத்தாட்சி இல்லேயேல் அஃனத்தையும் விட்டொழிக. மாகன் யாழ்ப்பாணம் வரவில்லே என்க. எனவே அம்மாலே நூல்களுக்கு மாருசு இச் செ. இ. காரர் சு. ஞா காரர் சொன்னபடி நல்லூரைச் செண்பகப்பெருமாள் கட்ட வில்லே என்றும் வல்லிபுரத்தில் சிங்கைநகரில்லே என்றும் தெரிந்து
கொள்க.

Page 46
18. சிங்கை ஆரியகுல மன்னரும் நாம ஆவலியும்
யா. வைபவ மாயிேன் (ப. 33-34) சிங்கை ஆரியமகாராசா. அல்லும் பகலும் கைலாய தாதர் திருவடிகளேத் தியானித்துக் கொண்டு நல்லூர்க் கயிலேயில் நெடுங்கால மிருந்தரசாண்டபின் தன் குமாரணுகிய குலசேகரசிங்கையாரியனுக்கு மு டி சூ ட் பு வைத்துச் சிவபதஞ்சார்ந்தான். இவர் சிங்கையாரியஃன முதல் அரசனுக வைத்து அட்டவண்ண தந்துள்ளார். தானியேல் யோன் அவர்களும் இச்சிங்கையாரியஃயே முதல் அரசனுக வைத்துத் தன்நூலே (யா, ச. பக்கம் 1, 18-21) எழுதியுள்ளார். ஆணுல் பா: வை. விகாரர் கலிங்க மாசுனே (காலிங்கினே) முதல் அ ர ச ஞ க வைத்து இச்சிங்கை ஆரியர் அரசர் அட்டவஃணயை (பக் 80) எழுதியுள்ளார். செ. இ. யா. சகாரரும் (ஷபக் 46-52) இக்கலிங்கமாகஃனயே முதல் அரசனுக வைத்து இவ்வட்டவனேயை எழுதியுள்ளார். இவர் W (பக் 370) நூலிலும் அவ்வாறே கலிங்கமாகனே முதல் அரசனுக
வைத்து அவ்வட்டவனேயை எழுதியுள்ளார். இங்கே எமது முக்கிய கேள்வி. அவ்வரசர் அட்டவஃரையில் காட்டப்பட்டுள்ள சிங்கை ஆரிய அரசர்கள் கலிங்கமாகன் பரம்பரையா? சிங்கையாரியன்
பரம்பரையில் வந்தவர்களா? என்பதே. அவர்கள் சிங்கையாரிய மன்னர் பரம்பரையே. அவர்கள் பெயரிலே அவ்வுண்மை அமைந்திருக்கே அஃதென்னே? வந்த ஆரியன் இங்கே சிங்கைஆரியன் ஆகிவிட்டான். அவன் பெற்றபிள்ஃள அவன் மகன் என்பது போதரகுலசேகரன் என்னும் அவனுக்கிட்ட இடுகுறியும் சேர்த்து குலசேகர சிங்கையாரியன் என்று பெயர் பெறுகின்றன். அஃதாவது தந்தை தானே மைந்தர்க்குப் பெயர் வைப்பது வழக்கம். அதன்படியே அவன் தன்மைந்தனுக்குக் குலசேகர சிங்கை யாரியன் என்று பெயர் வைத்தான். என்க.
இப்பெயரீட்டுமுறை இவர்தம் பின்வரும் ஏனேயோர்க்கும் ஒக்கும் இப்பரம்பரைப் பெயர் அமைப்பைக் கொண்டே இவள் முன்னவன் சிங்கையாரியன் என்று தேர்ந்துகொள்ளலாம். அங்கனே 『g

இப்பெயர்கள் சிங்கையாரியன் பரம்பரையினர் பெயரென்று தேர்ந்து கொள்ளலாம். இங்கே மேற்சுட்டிய நூலார் அக்கைலாயமாலே நூல் களுக்கு மாருகக் கலிங்கமாகனின் பெயருக்குக்கீழே இப் பரம்பரை யினர் பெயரையும் அட்டவனைப்படுத்திப் போட்டார்கள். அஃது பிழையே. ஆகையால் அக்கிவிங்கமாகன் பெயரை நீக்கிச் சிங்கை ஆரியனேயே குல முதல்வனுக வைத்து அப்பெயர் அட்டவனேயைத் திருந்தியவடிவில் இங்கே தருகிறுேம்.
சிங்கைஆரியன் (விஜயகூளங்கைச்சக்கரவர்த்தி) குலசேகர சிங்கையாரியன் குலோத்துங்கசிங்கைஆரியன் விக்கிரமசிங்கையாரியன் வரோத பசிங்பைாரியன் மார்த்தாண்ட சிங்கைஆரியன் குனயூஷண சிங்கையாரியன் விரோதய சிங்கையாரியன் ஜெயவீர சிங்கையாரியன் குணவீர சிங்கையாரியன் கனக சூரிய சிங்கையாரியன் கி.பி 1440-1450 (இதன்பின்னர் செண்பகப்பெருமாள் படைவரவு)
(யா, வை. வி பக் 74-80)
சிலர் கைலாயமாஃல வைபவமாஃல நூல்களுக்குமாருகவும், முன் நாள்களில் நடந்துமுடித்த உண்மைக்கு மாருகவும் சிங்கையாரியன் காலமான கி. பி 948 ல் இருந்து அரசர் ஆட்சிக்காலத்தைக் களச் குப்பண்ணுமல் சுவிங்கமாகன் காலமான 1170 ல் இருந்து கனக்குப் பண்ணியும் ஒவ்வொருவர் ஆட்சிக்காலத்தையும் குறைத்து எழுதி இருக்கிருர்கள். இங்கே செண்பகப்பெருமாள் படைவரவு வரைக்கு முள்ள அரசர் அட்டவணை தான் காட்டியுள்ளோம். இங்கே ஆதிச் சிங்கையாரியனோபும் அவன்மேற் சொன்ன 948 ஐயும் எடுத்துக் கொண்டு கணக்குப்பார்த்தால் (அக்கணக்கில் பூரணமாக ஆட்சிநிறை வேறமுந்திக் கனகசூரியன் ஆ ட் வி நின்றுவிட்டதால் அவனே விட்டிட்டு) மொத்தம் 948-10 ம் ஆண்டுவரை 492 ஆண்டுவரை 1) அரசர் ஆட்சி நடைபெற்றிருக்கிறது. இதனேப் பத்துப்பேருக்குப் பங்கிட்ால் ஒருவருக்குச் சராசரி 49, 2 ஆகிறது இது ஒருவன் ஆட்சிசெய்யும் கனக்குக்குக் கூட வா கி றது. இது ஒருவர் கனக்கிற்கதிகம் ான்னேயெனில் இராச்சியவேஃ) மறுவேல் போவன்று இராசகுமாரனுக்குப்படிப்பும் வேண்டும். போர்ப்பயிற்சி முதலியனவும் வேண்டும். ஆகையால் அவன் முடிசூடப்படும் வயது 3) வரை ஆக இருக்க வேண்டும். அப்பால் அவன்தன் இரா. சிய

Page 47
7.
பாரத்தை மகனுக்கு முடிசூட்டி ஒப்படைக்கும் காலம் 0ேம் வயசுவரை ஆகவேண்டும். எனவே ஒருவர் ஆட்சிக்கு நாம் கணக்குப்போடும் தொகை 30 ஆக முடிகிறது. இம்முடி சூட்டும் மரபோ வழக்கமோ முந்தையோர் முறையைப்பின்பற்றி மைந்தன் வழி மைந்தனுக நிகழுமாதலால் அவ்வகையிலும் இது சரியே
அம்முப்பதின்படி இந்த 192 ஆண்டுகளுக்கும் 492 ஐ 30 ல் வகுக்கப் 16 பேர் வரை இக்கணக்கில் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டி யவர்களாக இருக்கிருர்கள். மேலே அட்டவனேயில் 10 பேர்தான் தந்திருக்கிருர்கள் 8 பேர் மன்னர்கள் வரை இல்லே. ஆனுல் 33 வருட ஆட்சி ஒரு மன்னனுக்கு போடலாம் என்பாரும் உண்டு. அவர்களைச் குப்படி பார்த்தால் f92ஐ 35 ஆல் வகுக்க 14 TெTர்ரம் வருகிறது. ஆகையால் இக்கணக்கின்படி 14 பேர் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் இங்கே 30 படி 6 பேர் இல்லே. 35 பேர்படி 4 பேர் இவ்ஃ. ஆகை மேற்படி அரசர் இங்கே கண்ட கணக்கின்படி 4 அல்லது 5 அல்லது பேர் இல்லே.
இஃதென்ஃன இவ்வளவு வரையறவாகச் சொல்லுகின்றீ ான்பீரேல் இஃதுள்ளங்கை. நெல்லிக்கினி, எவ்வாறெனின் 948 என்னு தொடக்க ஆண்டு கைாலய மாஃப்யால் உறுதிப்படுத்தப் பட்டது 14) என்னும் இறுதி ஆண்டு மகாவம்சம் குயிற்றுாது, என்னும் சிங்கள நூல்களாலும் வைபவமாலேயின் ஆமோதிப்பாலும் பெறப் பட்டது. இன்னும் இஃதுறுறியாமாறு எங்ங்ணமெனின் காட்டுதும்
கி. பி. 1302 வரை வாழ்ந்தவனுகக் கருதப்படும் வரோதய ஆதிவிஜய கூழ்கையனின் பின்வந்த அவனது 5 ஆவது தலைமுறையினன் எனவே வரோதயன் உட்பட விஜயகூளங்கையன் தொடங்கி வரே தியன் விக்கிரமன், குலோத்துங்கள், குலசேகரன், விஜயகூழங்கையன் என ஐவர் பேசப்பட அந்நூல் சிறப்புரைகாரர் வேந்தனும் கோவுமாக இவன் முன்னவர் 11 பேரைச் சொல்லியுள்ளனர். இஃதென்னே? அப் பாயிரகாரர் வரோதயன் சிறப்பைப் பாடுவான் புகுந்து அவன் மு னுேர் சிறப்பையும் அவனுக்குப் பாடி அணி செய்வான் செய்தனர். எனவே பெயர் அறிந்தார் ஐவர் பெயர் அறியாதோர் அறுவராக இவ்வறுவரையும் பிறர் இதுவரை எடுத்துக் காட்டவில்லே. இவ்வறு வரும் விஜயகூழங்கைககுப் பின்னவரும் வரோதயனுக்கு முன்னவ ர். எனவே இனிமேல் விஜயகூழங்கைக்குப் பின்னும் எரோதயனு முன்னும் உள்ள நாம 5 பேரைச் சேர்த்துச் சிங்கை ஆரியர் அரசனுடன் ஆவலியைக் கூட்டிக் கொள்க. அவ்வறுவர் பெயரும் பாயிரத்தில் சொல்லப்பட்ட வேந்தன், கோவென்று பொதுப் பெயர்களால் தெரி யப்படுகிறதன்றி அவர்கள் சிறப்புப் பெயர் சொல்லப்படவில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

75
ஆதிச்சிங்கை ஆரியன் தொடக்கம் சங்கிலி குமரன் இறுதியாக இருபதின்மாவரை ஆட்சிபுரிந்திருக்கின்றனர். ஆதிச்சிங்கையாரியன் தொட்க்கம் கனக சூரியன் முதல் ஆட்சிபுரிந்த காலம்வரை_நாடோ நகரோ எந்த மாற்ருன் படை எடுப்புக்கும் இலக்காகாமல் இராச்சிய பரிபாலனம் போயிருக்கு இப்பிரிவு 1ம் பிரிவு அப்பால் சிங்களப் படை எடுப்புத் தொடக்கம் போர்த்தர்படை எடுப்பு வரையும் உள்ள காலம் இரண்டாம் பிரிவு, போர்த்தர் படை எடுப்புத் தொடங்கிகடைசிஅரசன் வரையுமுள்ள காலம் 3ம் பிரிவென்றுங்கொள்க
முன்னர் காட்டப்பட்ட தமிழ் அரசர் 1-ம் பிரிவினர்
இரண்டாம் பிரிவில் அமைப்பவர்கள்
தான் செண்பகப்பெருமாள் ஆட்சியின் பின் அரசாண்டவர்கள். அவர்கள்
கனகசூரியன் கி. பி. 1467
பரராசரேதரன் 1478
சங்கிலி கி. பி. 1519 3 ம் பிரிவிலே போத்துககேயர் மேலாட்சியிலே அமைவோர்
புவிராசபண்டாரம்
காசி நயினூர்
பெரியபிள்ளே ! ம் புவிராசபண்டாரம்
எதிர் மன்ன சிங்கம்
அரசகேசரி
சங்கிலி " குமரன் (A. J. Ji 370-374) இவர்கள் 1820 வரைபும் சுதந்திரமாக ஆட்சிபண்ணினர். அப்பால் போத்துக்கேயர் ஆட்கியில் கி. பி. 1658 வரையும் நிகழ்ந்தது.
சோழ குமாரன் ஆதிச்சிங்கையாரியன் தான்_கி. அத்தலைநகரைக் கட்டினுன் என்று நாம் சொல்லுகிறுேம் இல்லேக் கலிங்க மாகன்தான் 13ம் நூற்ருண்டில் அத்தலே நகரைக் கட்டிஜன் என்று அவர்கள் சொல்லுகிருர்கள். இது பிழை என்று விளக்கப் பட்டுள்ளது.அவர்கள் சொல்லும்படி சிங்கை ஆரியரின் 300 ஆண்டு சரித்திரம் இல்லை. 300 ஆண்டு முற்பட்ட பெருமையும் இல்லே. இது மட்டுமல்ல விங்கமாகன் வந்ததற்கோ வாழ்ந்ததற்கோ தவேநகர்கட் டியதற்கோ செங்கோல் செலுத்தியதற்கோ எந்தச் சிறுவகையான ஒரு துப்பும் துலங்கவில்லை. ஆகையால் அவனல்ல இம்முதல்வன் வைபவமாஃ கைலாயமா?ல இவனப்பற்றி ஒரு வாக்தையும் சொல்வி ສາມີສ່.ປ.
முன்னவன் சிங்கையாரியன் என்னும் பெயரை உடையோஜய் இருந்ததாலேதான் அவன் பின்னவர் எல்லாம் அவ்விடுகுறிப்பெயரு டன் சிங்கையாரியன் பெயரையும் சேர்த்து (குலசேகா சிங்கையாரியன் கான்ருற் போலும் அழைக்கப்படலாயினர். (முன்னவன் ாகணுயின் அம்மாகன் பெயரையும் சேர்த்துக் குலசேகரமாகன் என்ரு ற் போலும் அழைக்கப்பட்டிருப்பர் அன்ருே' மாகன் பெயர் அப் பரம்பரையிற் ான் ருேருெடரவில்ஃயே.)

Page 48
19.
சிங்கைஆரிய லு ம்(விஜய கூழங்கைச்சக்ககவர்த்தி)
கலிங்கமாகனும் வேறுவேறு புருடர்கள்
யா, வை. வி காரரும் யா, ச சாரரும் பெரும்பிழைஈய விட்டுச் சிக்கஃவ விளேவிக்கிருர்கள். இவர்கள் காகலாயமாலே வைபவமாஃவயிற் சொல்லப்பட்ட சிங்கையாரியனும், பொலநறுவையை வென்று பின்னர் 2 ம் பராக்கிரமபாகுவால் கி. பி 1236 ம் ஆண்டு வரை துரத்தப்பட்ட கலிங்கமாகனும் ஒரேபுருடன் என்கிறுள்கள். யாம் அவர்கள் இரண்டு வேறுபுருடர்கள் என்கிருேம். முதற்கண் தம் கோட்பாட்டுக்காக அவர்கள் எழுதிய கூற்றுக்களேத் தருவாம்.
"யாழ்ப்பாண வைபவமாஃலயில் விஜயகூழங்கைச் சக்கரவர்த்தி யென்று சொல்லப்படுபவன் அக்கலிங்கமாகனே. ஒருதேசம் முழுவ தையும் தன்கீழ் அடிப்படுத்தி ஆளும் திறமையூண்டாலொழியச் சக்கரவர்த்தியெனும் புகழ்ப்பட்டம் அரசரடையமாட்டார். பாண்டி மழவனுற் கொண்டு வரப்பட்டு முடிசூட்டப்பட்ட கூழங்கையன் இலங்கைமுழுவதையும் வென்று அப்பட்டத்தை ஏற்குந் திறமை தின் காலத்திலேயே பெற்ருன் என்பது நம்பும்தரத்ததன்று விஜயகாலிங்கச் சக்கரவர்த்தியே அவன் நாமம் என்பதற்கு இஃதோர் சான்று: ஆகையால் அவன் கூழங்ைைகச் சக்கரவர்த்தியன்று . இவஃன முதல்யாழ்ப்பாணத் தரசனென மயில்வாகனப்புலவர் எழுதிவைத்த புரட்டுக்கதை" (யா ச. பக் 49 - ச்
"இருபத்தேழாண்டாய் (1215-1242) இலங் ை4 முழுவதிலும் ஆளிச் செங்கோல் செலுத்திய இவ்வாரிய அரசன் (கலிங்க ஆரி
துவ சக்கரவர்த்தி என்னும் பெயர் தாங்கியதும் இயல்பே. கிளிங்க ஆசிய சக்கரவர்த்தி புலத்தி நகரை ஒருவி யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த காAலயில். அங்கு டின் நாட்டுக் கலகம் விஃாந்திருந்தமையும் மாகன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

γ 7
களரியிற்முேன்ற அக்கலகம் நீங்கி யாழ்ப்பாணத் தனியரசு அன்னுேணுல் உறுதியாய் நாட்டப்பட்டமையும் சாலும், இங்ஙனமேமதுரைக்குப் பாண்டிய மழவன் பரிந்து சென்றமையும் அங்கிருந்து செல்வம துரைச் செழியசேகரன் புதல்வஞன சிங்கையாரியன் பெருகுபுகழ் யாழ்ப்பாணப் பேரரசு செய்ய வந்தமையும் மனுேராச்சியத்தின் பாற்படுகின்றன. ஜெயவாகுமாண்டபின் மாகன் யாழ்ப்பாண அர சிருக்கையை இனிதாய் நாட்டினுன் என்பதுதான் உண்மைப் பகுதி எஞ்சிநிக்கின்றது. கைலாயமான்யானது சிங்கையாரின் செயசிங்கை யார்யன் என கூறியதை வைபவமாலை திருத்தி விஜயகூளங்கை ஆரியன்ான்றது காலிங்கச் சக்கரவர்த்தியென ஓர் வேன கைச்சர வையிற்கண்டதை கூளங்கைச் சக்கரவர்த்தியென் அறியாதோர் மயங் கினருமாகலாம். (இது இராசநாயக முதலியாரது ETT" ILITAT" Aணகம்) உள்ளபடி பாழய தமிழ் விபியில்,
காலிங்க என்றிருப்பது "கூளங்கை, என வருவது மிகச் சுலபபே யாகும். காலங்கச் சக்கரவர்த்தியே யாழ்ப்பாண அரசு உறுதியாய் திலே நாட்டப் பெற்ற காலத்தில் கிரித்தீபம் போல் விளங்கிய புகழாழனுதலால் அவன்தான் நம்நாட்டின் முதலாம் ஆரியச்சக்கர வர்த்தியெனக் கொள்ளுதல் எவ்வாற்ருனும் பொருத்தமுடைத்து"
பா. வை. வி. 65- 66)
3 இன்னும் இவர் "கலிங் மோகனுக்கு ஜெயசிங்கையாரியன் என்னும்பெயர் இருந்ததுபோலும். இவனேயே வைபTமாஃவயார் விஜய கூனங்கைச் சக்கரவர்த்தி என்ருர் என்க. காலிங்க ஆரியச்சக்கர வர்த்தி புலத்திநகரை யொருவி யாழ்ப்பானத்தைச் சார்ந்த காலேயில் . யாழ்ப்பாணத்தில் தனியரசு ஆன்னுேகுல் உறுதியாக நாட்டப் பட்ட மையும் சாலும்" (ஷபக் 65)
* இன்னும் யா, ச காரர் கி. பி. 1838 ல் தம்பத்தேனியாவை ஆண்ட இரண்டாம் பராக்கிரமபாகுவால் கலிங்கமாகன் பொல நறுவையினின்றும் துரத்தப்பட்டான். என்று மகாவம்சம் கூறும்.
யா, ச பக் 51)
கைலாயமாஃவ தமிழரசனுல் செய்விக்கப்பட்டது. வைபவமாஸ் ஒல்லாந்த அரசனுல் செய்விக்கப்பட்டது. இரண்டும் சிறந்த புலவர் களால் எழுதப்பட்டவை முந்து நூல்களின் முறைப்படி எண்ணிப்புலம் தொகுக்கப்பட்டவை . அவை இன்று யாழ்ப்பாணச்சரித்திரங்களுக்கு ஆதாரமாய் இருப்பவை. அவை கூற்றுள் ஒன்றனில் பலுப்புக் கூறப் புகுங்கால் அவற்றினும், வலியசான்னிற எடுத்துக் காட்டி யல்லது கூறக்கூடாது, அன்றியும் அவைகள் எழுதப்படுதற்குபகாரப்பட்ட ஆதார நூல்கள் இப்பொழுது தமக்கப்படவிலே என்றும் டிெ

Page 49
75
ஆராச்சிக்காரர் தம் வாயால் சொல்லிய இடங்களே மேலே காட்டி னுேம் அப்படி இருந்தும் அந்நூல்களின் முடிபுகளுக்கு மாறுபாடாக இவர்கள் உரைக்கின்றனர். நிற்க
இம்மாறுபாட்டுக்கு இவர்கள் ஏதாவதொரு ஆதாரத்தை எடுத்துக்காட்டி இருக்கவில்ஃப் இவைகூறிய அனைத்தும் தம் வாயா தாரமும் தம்மூகவாதாரமும்தான். அம்மாவேநூல்களிலே கலிங்க மாகனைப்பற்றி ஏதாவதொரு சொல்லோ சொல்லியிருக்கா இல்லையே. நிற்க, காலிங்க கூளங்கையானதல்ல கையொன்று கூழையாயிருந்த தஞலேதான் கூழங்கைச்சக்கரவர்த்தியென்று சொல்லப்பட்ட தென்று சொல்லி இருந்தும் (வை. மா. பக் 30)
சாலிங்ககூளங்கை என்றுனது என்று சொல்வது முறையான தல்ல. சிங்கையாரியலுக்கு சக்கரவர்த்திப்பட்டம் சொல்வி இருப்ப தால் அவன் மாசுனல்ல. அப்பட்டம் பலநாடுகளே வென்றதால் ஏற்பட்டபட்டப்பெயரல்ல. அது இடுகுறிப்பெயர் "மழவராயன் முடி தூக்கிக் கொடுக்க கங்காதரஐயரால் விதிப்படி மகுடமும் சிங்கை யாரிய சக்கரவர்த்தி என்றபட்டமும் குட்டப்பட்டான்" (ஆமு. யா, ச Li )
ஊகம் அவர் முன் பெற்றுள்ள அறிவுக்கேற்ப ஒவ்வொரு வருக்கும் வெவ்வேறு வகையாகத் தோன்றுவது அது ஆதார நூல் களே மறுத்துரைக்கும் வகைக்குச் செல்லாது ஒருவன் தன் வாழ் நாளின் முற்பட்ட 200 ஆண்டுகளுக்கு (தன்காலம், தன்கர்ண பரம் பரைக் காலம், முற்பட்டகாலங்களில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு ஆதாரம் காட்டியே சொல்ல வேண்டும். சக்கரவர்த்தி இங்கே குடும்பப் பெயர். இவர்கள், கவிங்க மாகன் யாழ்ப்பாணத்துக்கு வந்து தஃவநகர் அமைத்தான் என்று சொல்லுவது இரண்டாம் பராக்கிரம பாகுவால் துரத்தப்பட்டபிறகல்லவா. அப்பொழுது அவன் சக்க்ர வர்த்தியாக இருந்தானு? ஒண்டியாகவல்லவோ இருந்தான். அவனச் சக்கவர்த்தியென்று கைலபமாலேக்காரரோ வைபவராலேக்காரரோ சொல்லியிருக்கமாட்டார். அவன் தலைநகர் அமைத்தால் அவன் பெய ரெடிஃணத்தே அச்செய்தியைச் சொல்லி இருப்பார்கன் வைபவமாலே யார்க்குப் பாயிரம் பாடினவர் அந்நான்கு நூல்கஃ) யும் தேர்ந்து செப் பினுன்என்றல்லல்வா சொல்லியிருக்கிருர், அவர்புரட்சிக் கதையை எழு தியா ஒல்லாந்த மன்னனுக்குக் கூறினூர் நிற்க, பெயர் ஒற்றுமை எழுத்தொற்றுமை கொண்டா ஒரு சரித்திர புளிடனே நிச்சயம் செய்வது. பிறப்பால் அவன் பெற்றடைந்த வரலாறு முழுதும் ஒப்பு நோக்க வேண்டும். அங்ஙனம் இருவருக்கிடையில் ஒற்றுமை காண வேண்டின், காலம் இடம் வரலாற்று விசேடம் உள்ளிட்ட பல ம் சங்களேயும் ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.

F',
சிங்கையாரியன் விஜய கூழங்கையன் பாண்டிமழவன் வேண்டுாேகளுக்கு வந்தவன். சோழ நாட்டவன் சூரியகுலத்தவன் ஆரிய இனத்தவன். தமிழ் நாட்டரசர்க்கு திருமுகமனும்பிச் சோழநாட்டில் இருந்தும் குடிமக்களே வருவித்து யாழ்ப்பாணத்தில் குடி ஏற்றின வன். பத்தாம் துாற்ருண்டுக் காலத்தவன். இவன் நல்லூரில் தலைநகர் சட்டிய வரலாறு வை யா பாடல், இராசமுறை. பரராசசேகரன் உலா என்பவைகளே ஆதார மாசுக் கொண்டெழுதப்பட்ட வைபவமாலையாலும் கைலாயமால்யா லும் சொல்லப்பட்டது. கி. பி 848ம் ஆண்டு வரைஉள்ளவன் கலிங்க மாகணுே சிங்கையாரியனுக்கு 370 ஆண்டு வரை பிற்பட்டவன் பொல்ல னறுவையில் 1230வரை அரசிருந்தவன் அவன் கவிங்கநாட்டவன் கவிங்க நாட்டில்இருந்து பொல்லநறுவைக்கு படை எடுத்தவன். அங்கிருந்து தம் பராக்ரெமபாகுவால் சுஃலக்கப்பட்டவன். சிங்தையாரியன் நல்ஜாரில் நலைநகர் அமைத்த வரலாறு. வைபவமாலையாலும் கைலாயமாலேயா
லும் சொல்லப்பட்டது.
சுவிங்கமாகன் நல்லூரில் தஃலநகர் அமைத்தமை ஒருகுறிப்பாலும் சொல்லப்படவில்ஃல. இவன் வடஇந்திய கவிங்கநாட்டைச் சேர்ந்தவன். பதின்முள்ளும் நூற்ருண்டவன். இவன் இலங்கைக்குப் படைஎடுக்அ வந்து பொலநறுனையை ளென்று அங்கே அரசியற்றியவன். பிரா மண்ணல்லாதவன் கொடுங்கோலன் இவர்கள் இருவர்களும் வேறுவேறு இடத்தால், காலத்தால், வரலாற்றல் சுேறுபட்டவர்கள். வைபவ மாஃவயால் பலநூல்துனே கொண்டெழுதப்பட்ட விஜயகூழங்கையன் வரலாற்றை தம்மூகம் ஒள்நுமே வன்றுனேயெனக் கொண்டு சொல் லும் இவ்வாராய்ச்சிக்காரரின்துணிவு பெருவியப்பே. மறுத்துரைக்கும் இத்தளைகமம் ஒரேகாலத்து வாழ்ந்த ஒத்தவரலாறுச்ள இருவர் மேல் வைத்துயுகிப்பதாயினும் ஒருபுடைமதிப்புண்டு. அங்கனம் ჭkilinumf' மாட்டுஇவ்:ளகம் செல்லாதென்சு.
சுவிங்கநாதன் 13 ம் நூற்றுண்டு படைஎடுத்து வருகாவே பத் தாம் நூற்றுண்டின் ஆரம்பிக்கப்பட்ட சிங்கை நகர் இராச்சியம் 13 ம் நூற்ருண்டில் பிரபலம்வாய்ந்த சிங்கையாரியமின்னரால் ஆளப் பட்டிருக்கவேண்டும். அதன் வலுமையால் அதனச் ஜெயிக்கமுடியாது. என்றுகண்டமாகன் தன்படையெடுப்பைப் பொனெறுவைக் கெடுதி திருக்கவேண்டும். ஆகையால்தான் அவன் பொல்வநறுளmபை வென்று அங்கே ஆட்சிபுரிந்தான்.
அன்றியும் இம்மாகன் சரிதம் மறைவு படவில்லேயே. தெளி வாக இருக்கே. அவன் பொல்லனறுவைக்கும் படை எடுத்தது அறியப் பட்டதானுல் அவன் வடபகுதிக்குப் படை எடுத்ததும் ஆங்கு தக்லநகரி அமைத்து அரசு புரிந்ததும் உண்டாஞல் என் அச்செய்தி ம்றை

Page 50
Ñዕ]
பட்டிருகக வேண்டும். ஏன் அம்மகாவம்சம் சொல்லாமல் இருக்க வேண்டும். இன்னும் என்னயெனின் வைபவமாஃபார் அத்தலேநகர் அமைத்தவண் "திசைாக்கிர சோழன் மகனுகிய சிங்ககேதுவுக்கு மரு மகனுகிய சிங்கையாரியன் என்னும் சூரிய வம்சத்து இராசகுமாரன்" என்றும் இவனுக்கு கையொன்று கூழையாய் இருந்ததால் இவனேக் கூழங்கையாரியன் என்றும் விசய கூழங்கைச் சக்கரவர்த்தியென்றும் வரைவாகக் கூறிஇருக்கிருர், இத்துணே வரையறைவுக்குள்ளே "காலிங்கன்தான் கூளங்கை" ஆயது என்று யாரும் சொல்லவில்லேயே.
"காலிங்க' கூழங்கையஞனதை தள்ளிவைத்துவிட்டு மேலும் கைலாயமாஃ வைபவமாலையைத் தொடர்ந்து செல்வோமாக.
வைபவம்ாலேக்காரர் அப்பிறர் சொல்லும் மாதிரிப் புரட்டுக் கதையொன்றும் பேசவில்ல்" பின்வருமாறு தம்முதனூலான கைலாய மாஃல சொன்னதையே சொன்னுர்,
கைலாயமாஃவயில்
செல்வ மதுரைச் செழியசேகரன் மல்க வியன் கவாய் வந்தபிரான்
தென்னன் நிகரான் செகராச சேகரன் தென்னிலங்கை மன்னவனும் சிங்கையயாரிய தன்னிழையில் பாண்டிமழவன் பரிந்து சென்று வேண்டிப் பெருபுகழ் யாழ்ப்பாப் பேரரசு செய்ய வருகுதி என்று வணங்க என்று சொல்லப்பட்டுள்ளமை காண்க, (இதுகிக்குநீக்கம்)
சிங்கையாரியனும் கலிங்கமாகனுக்கும் உள்ள ஒற்றுமை
வேற்றுமை அட்டவனே
சிங்கையாரியன் கலிங்கமாகன் சிங்கையாரியன் விஜய 1. கவிங்கமாகன் காலிங்கமாகன் கூளங்கை ச்சக்கரவர்த்தி விஜயகாலிங்கமாகன்
2. சோழகுலத்தவன்,மதுரையில் 2. இவன் குலம் தெரியவில்லே
கல்விபயின்றவன்
ச. சோழநாட்டில் பிறந்தவன்
4. இவன் பெற்ருர் சோழர்
கலிங்கநாட்டில் பிறந்தவ
இவன் பெற்ருர் கவிங்கர்
 
 
 
 

5. பாண்டியமழவனுல் அழைக் . இவன் தானே பொல்ஸ் நறு
கப் பட்டவன். வைக்குப் படை எடுத்தவன்.
ச. இவன் நல்லூரில் தலைநகர் 6. இவன் வரவில்லே
அமைத்தவன்.
7. இவன் இந்தியாவின் தென் . இந்தியாவின் வடகிழக்குப்
பகுதியில் உள்ளவன். பகுதியில் உள்னவன்.
8. இவன் கி. பி. 948ல் வாழ்ந் இவன் கி. பி. 1215-1238
தவன். வரை பொல்லநறுவையில்
வாழ்ந்தவன் இவன் 1236ம் ஆண்டின் பின் ஒண்டியானவன்
9. இவன் சக்கரவர்த்தி எள்னும் 9. குடும்பப்பெயரைப் பெற்றவன்
இவன் பொல்லனறுவையில் இருந்து கஃக்கப்பட்டவன்
அக்கைக் கூஃன இல்லாதவன்
10. இவன் மதுரையில் இருந்து 10.
அழைத்து வரப்பட்டவன்
11. இவன் கையொன்று கூஃன .
பாண்ள்ை
இவை உள்ளிட்ட வேற்றுமை அம்சங்களுள்ள ஒற்றுமை அம்சம் ஒரு அணுவும் இல்லாத சிங்கைஆரியனேயும் கலிங்கமாகனேயும் ஒரே புருடர்கள்தாம் என்று சொல்ல எந்தக் குருடரும் முன்வரார். எனவே சிங்கை பாரியன் வேறு கலிங்கமானும் வேரு ய் உள்ள இரு புருடர்கள் என்க. இவ்விடத்தில் ஒரு பெருஞ்சிக்கல் வெட்டப்பட்டது. இப்பிறர் சிங்ஜீ பாரின் காலத்தோடோத்த காலவரையறை கொடுத்து அவனின் (மாகனின்) யாழ்ப்பாணத் தொடர்பை அத்தாட்சிப் படுத்துவிட்டு அப்பால் அவன் வேற்றுமைத் தொடர்பைச் சொல் ஐாமையாலே அவர் பேச்செல்லாம் தள்ளிவிட வேண்டியவைகளாக கின்றன.
அன்றியும் இன்னும் ஓர்சு, அவன் பெயர் சிங்கையாசிச்சக்கர வத்தி, விஜய கூழங்கைச் சக்கரவததி என்பதில் வரும் அச்சக்கர வர்த்திப் பெயர் அரசனுகி முடிகவிக்கப்படும் போதே வைக்கப் பட்ட பெயர். கலிங்கமாகன் டெசுகே (வரவில்வே) வந்தான் என்று வைத்தபோதும், நாடு நகரங்களே இழந்து தலேமை இழந்து ஒண்டியாக வந்தவஃனச் சக்கரவர்த்தி என்று சொல்லுவார்களா? கைrயமாஃ; அவனே அப்படிப் பாடுமா? அவன் ஜெயவாகுவை வென்றன் என்பதற்கோ ஜெயவாகு இருந்தான் என்பதற்கோ ஆதா ரம் ஒன்றும் இல்ஃ. சிங்கையாரியானுக்குப் பின்வந்த அரசரெல்லார்க் கும் சிங்கை ஆரியன் என்னும் பெயரே தொடர்ந்து குலசேகரசிங்கை

Page 51
ஆரியன் என்பது முதலாகப் பெயர் வந்திருக்கேயன்றி குலசேகர மாகன் என்பதாக வரவில்லையே. எனவே அவ் ஆதி அரசன் விஜய கூளங்கையன் (சிங்கை ஆரியனே என்க).
ஒரே ஒரு வினிட மாகன் யாழ்ப்பாணத்துக்கு வந்தான் என்று அத்தாட்சிப்படுத்தும் வரை இவர்தம் கோட்பாடு செல்லாது, அத் தாட்சிப் படுத்த இயலாது. ஆனகயால் அவன்வரவில்ஃப் என்பதே முடிபு. வந்தான் என்பதை அத்தாட்சிப் படுத்திய பின்பன்ருே இவர்கள் இந் நியாயங்களைச் சொல்ல வேண்டும். நிற்க, இவ்வளவு தூரமாய் யாம் பிறர் கருத்தைத் தொடர்ந்து பேசிவந்தது இளயோர்க்காக இப் பிறர். களிங்கமாகன் யாழ்ப்பாணத்துக்கு வந்ததை அத்தாட் சிப்படுத்திய பின்னரும் அவன் வந்து இங்குள்ளானர வென்ருே வெல் வாமலோ இராச்சியத் தொடர்புகளில் ஈடுபட்ட வரலாற்றை அத் தாட்சிப் படுத்திய பின்னருமன்றுே கைலாயமாலே அவனேப் பாடியது என்ருே வைபவமாஃ) அவஃளச் சுட்டியதன்ருே சொல்லலாம். என்னே யெனில் அந்நூல்கள் பாழ்ப்பானத்துள்ளான் ஒரு புருடன் மேல் அல்லுவா சொல்லப்பட்டிருக்கின்றன. எனவே அவன் தொடர்பை யாழ்ப்பாணத்தில் வைத்துகாட்டாதவழி. இவர்களின் இக்கூற்றுக்கள் அ&னத்துமே செல்லாச் சரக்காகிவிடும். என்ஃா பேரிைல் பாசுன் பொல்லனறுவையினின்றும் துரத்தப்பட்டபின் வழியில் இறந்திருந் தால் வேறும் வகையாக அவன் தொலேந்திருந்தாலும் அவன் மேலே சரித்திரம் எழுதியதாகவல்லவா முடியும். நிற்க, சிங்கையாரியனும் கலிங்கமாகனும் வேறு வேறு புருடர்கள் என்பதை முன் தந்த அட் _வண்பால் காண்க.
இவை இங்ங்ணமாக, கவிங்கமாகன் யாழ்ப்பாணத்துக்கு வந்த தற்கும் சான்றில்ஃவ, தலைநகர் அமைத்தற்கும் சான்றில்ஃப் அமைத்த இடம் காலம் என்றவைகளுக்கும் சான்றில்லை. எனவே வரவில்ஃ). அங்ங்னம் வராத மாகன் மேலே யாழ்ப்பாணத்துக்கு வந்து நல்லூரில் த&லநகர் அமைத்தவனுகக் கைலாயமாஃவயாலும் வைபவமாஃவயாலும் சொல்லப்படும் விஜயகூழங்கைச் சக்கரவத்தியின் சரிதங்களே ஏற்றி இப்பிறர் எழுதியிட்டனர். அங்ங்ணம் எழுதியதோடு விஜயகூழங் கையன் (சிங்கையாரியன்) என்று அந்நூல்கள் சொல்வது இக்கலிங்க மாசுனேத்தான் என்றும் தவருகச் சொல்வியிடடார் என்க. அத்தவ றினுல் சிங்கைஆரியன் காலத்தைச் சொன்ன "சகாப்தம் எண்ணுரற் றெழுபது" என்பதை 948ம் ஆண்டு என்று எண்ணுமல்1248 என்று கலிங்க மாகன் காலத்துக்கு ஏற்க தவருகவும் பொருள் பண்ணி விட்டனர். இவர்கள் இல்லாத மாசுண் இருந்ததாகப் பேசியும் இருந்த சிங்கை ஆசிய3ளஇல்லை என்று பேசியும் தம்சரித்திரத்தைப் படைத்தனர் என றறிக.
 
 
 
 
 

岛、
ஆதிச்சிங்கையாரியன்னக்குறித்துக் கைலாயமாலேயிற் சொல்லப் பட்ட " "எண்ணுரற்றெழுபதை எடுத்துக்கொண்டு அதை 1170 ஆகப் பொருள் பண்ணி,அத்தோடு 78 ஐக்கூட்டி 1248 என்று கண்டு அது கலிங் Inாகன் பொல்லனறுவையைவிட்டு நீக்கிய காலத்துக்கு உத்தேசமாக ஏற்புடைத்து என்றுகண்டு அங்கனம்கண்ட மாத்திரையானே யாழ்ப் பாணத்தில் த&லநகர் அமைத்த புருடளேயும் அவன் த&லநகர் அமைத்த காலத்தையும் கண்டுவிட்டதாகச் சொல்லுகின்றனர். ான்னமுறை தவறிப்போகும் ஆராய்ச்சிப்போக்கு ஏதாவதொரு சான்றை எடுத்துக்காட்டிச் சொல்லாமல் பிற ஒரு புருடனுக்கு சிங்கையாரியனுக்குச் சொன்ன ஆண்டை எடுத்துக் கொண்டல் ஸ்வா தாம் கண்டமாகன் ஆண்டைக்கண்டு வீட்டதாகச் சொல் ஒது கின்றனர்.
அது மாகனச் சுட்டவில்லே சிங்கை பாரியஃனச் சுட்டித்தான் எழுந்ததென்று நாம் வரையறை செய்யவே அவர் சொல்லும் ாகஃனக் காட்டவல்ல ஒரு ஆண்டு குறித்த ஏதாவதொரு சான்றும் இல்லையாயிற்று. அம்மாலேயார் எண்ணுரற்றெழுபதைத்தான் (800+70) தெரிப்பான் வேண்டித்தான் அவ்வாறு சொற்ருர் என்று நிஃநிறுத்தவே கா கணுமில்ஃவ. அவனேச்சுட்டி இவர் சொன்ன.ஆண்டுமில்ஃ. அவன் கட்டிய தலேநகருமில்லேயாயிற்று. இந்த ஆராச்சிவழியில் போய்த்தான் சிங்கையாரியர் தஃநகரத்தோற்றம் பதின் மூன்றும் நூற்ருண்டென்று கண்டனர் எனவே அக்காட்சி பிழை என்பதைத் தேர்ந்து கொள்க.

Page 52
20. காலிங்க.கூழங்கை
"காலிங்க என்னும் பதம் கூழங்கையென மாறியது என்று பிறர் சொல்லுகிருர்கள். "கி. பி. 1215ல் கலிங்க விஜயபாகு அல்லது கலிங்கமாகன் என்னும் அரசன் . . இவனே சிங்கை நகர் ஆரிய அர சர்களுக்குள் முதலாவதாக சக்கரவர்த்திப் பட்டமும் கீர்த்திப் பிரதா பமும் பெற்றவஞன படியால் விஜயகாலிங்கச் சக்கரவர்த்தியெனப் பெயர் பூண்டான். இதனே அவன் பெயர் விஜயகூழங்கைச் சக்கர வர்த்தியெனவும் பாண்டிமழவனுல் மதுரையில் இருந்து மொண்டு வரப்பட்ட சோழவரச குமாரனெனவும் அவளுல் நல்லூரிலே முடிசூட்டப் பெற்றவன் எனவும் பைவமாஃல கூறும். காலிங்க" என்னும் பதத்தை மயில்வாகனப் புலவரோ அன்றிப் பின் வந்தவர்களோ எக்காரனத்தாலோ கூழங்கையெண் மாற்றி விட்
டார்கள்" (யா, ச, பக், 48-50)
"காலிங்க என்றிருப்பது கூகிளங்கை என வருவது மிகச் சுலப மேயாகும். காலிங்கச்சக்கரவர்த்தியே யாழ்ப்பான அது r உறுதியாய் நிலைநாட்டப் பெற்ற காலத்தில் கிரித்தீபம் போல் விங்கிய புகழா ானதலால் அவன்தான் நம்நாட்டின் முதலாம் ஆரியச் சக்கரவர்த்தி ானக் கொள்ளுதல் எவ்வாற்றுணும் பொருத்த முடைத்து" (யாவை, வி. பக். 85-பிபி)
இவர்கள் இருவரும் ஆராச்சி வரம்பு முறைகளேப் பின்பற்ருமல் இவ இயசகாப்தம் எண்ணுாற்றெழுபதுக்கு 1170 என்று பொருள்பண்ணிக் கொண்டு அது கலிங்கமாகன் காலத்துக்குச் சரியென்றும் அவனேத தான் வைபவமாஃலயார் சொல்லுகிருர் என்றும் சொல்லுகிருர்கள்.

母岳
கையொன்று கூழையானதால் கூழங்கையனென்று பெயர் பெற்ருன், என்று அம்மாலே யார் சொல்வி இருப்பதை இவர்கள் நோக்கவில்லே கலிங்கமாகன் யாழ்ப்பானத்துக்கு வரவில்லை என்று முன்னர் நிரூபித் துள்ளோம். அப்படியானுல் இல்லாத காவிங்கனே வைபவமாலேயார் அறியமாட்டார். அவர் கைலாயமாலேயாலும் பிறரதுக்களாலும் அறிந்தபடியே சிங்கையாரியனேப்பற்றிச் சொன்னுர் என்றவாறு, இந்த யா, ச. காரர்க்கும் யா, வை. காரர்க்கும் யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்துக்குபிராய் இருக்கும் கைவாயமாஃபைப்பற்றி விளங்கவில்ஃ. விளங்கினுல் அதைவிலக்கியிட்டு அதன்மேல் குறை கூறியிட்டும் தம் நூல்களே எழுதார், அதனே ஆதாரம் காட்டி மறுக்கவும் இயலார். ஈவபவமாஃயையும் விளங்குதல் செய்யார், அவைகளுக்கு மாறுபா டாசுத்தம் நூல்களே எழுதித் தம்நூல்களேச் செல்லாக்காசாக்கி விட் டனர். அவைகளே விளக்கி விளக்கம் கொடுக்காதது அவர்கள் மேவே குறையாம். அவைகள் பிழை என்ருல் ஆதாரங்கள் காட்டி. மறுத்தி தக்க வேண்டுமே. வாயாலே குறைபேசினுல் அவை மறுப்பாகுமா.

Page 53
21. மாகன் காலத்துக்கு முன்னரே நல்லூரில் தலைநகர் அமைந்திருந்தது.
நாற்பெருந்தலேவர்களாகிய பாண்டி மழவன், அமைச்சர் புவனேகவாகு, சிங்கை'ாரியமன்னன், முத்துராசக்கவிராசர் என்ப வர்களால் தோற்றுவிக்கப்பட்ட கைலாயமாஃ நல்லூர்த்தலே நகர் கி. பி. 948 ல் இலகியசகாப்தம் எண்ணுரற்றெழுபதில் அமைக்கப் பட்டதென்று சொல்வியுள்ளது. மாகன் இலங்கைக்குப் படைஎடுத்துப் பொல்லனறுவையை வென்று அரசாட்சி செய்த காலம் கி. பி. 215 தொடக்கம் 1236 முடியவுள்ள காலமாகும். மாகன்படை எடுத்து இலங்கைக்கு வந்தபோது வட குதியில் பலம் பொருந்திய இராச்சியம் இருந்தபடியால்தான் பொல்லனறுவைக்குப் படைஎடுத்தான். இஃஃல யேல் அவன் வடபகுதிக்கே படைஎடுத்திருப்பான் வடபகுதி அவன் படைஎடுப்பின் வழியில் அல்லவா அமைந்திருந்தது. அன்றியும் இவ் அண்மையை இந்நூலில் வரும் பரராசசேகரன் சிதம்பர ப் பட்டயம் புகழேந்தியார் சரித்திரத்திலும் அறியலாம்
பிறரும் சொல்வதாது "புகழேந்திப்புலவர் பாடிய பாக்களி விருந்துபன்னிரண்டாம் தாற்றுண்டுத் தொடக்கத்திலேயே இச்சிங்ை நகர் அரசர் சிங்கையாரிய அரசர் எனவும் பரராசசேகரன், செகராச ரேகரன் என்னும் பட்டப்பெயர்களேயும் விடைக்கொடி சேதுஸாஞ்சன் முதலிய வரசசின்னங்களேயு முடையவர்களாயிருந்தார்கள் என அறி யவாம்" (செ. இ யா, ச. பக் 47-48)
முதவாம் பரக்கிரமவாத இலங்கைச்சக்கரவர்த்தியாய் வருமுன் (அதாவது கி. பி. 1154 க்கு முன்) இலங்கையிலே கொடிய பஞ்சம் உண்டாகச் சோழதேசத்திலே இரண்டாம் இராச இராச சோழன் சபையில் இராமாயணம் பாடி அரங்கேற்றிய கவிச்சக்சுரவர்த்தி யாகிய கம்பரை ஆதரிததுப்புகழ் பெற்ற சடையப்பவள்ளல் ஆயிரம் கப்பல்களில் நெல்லனுப்பிப்பஞ்சத்தைத் தீர்த்ததற்கு உவந்து சிங்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசனுகிய பரராகசேகரன் என்னும் நன்றிபாராட்டிப்பல #ffbfffflistTy'] பாடிச் சடையப்ப வள்ளலுக்கணுப்பினுனெச் சோழமண்டலசதகங் கூறும். (ரெ. இ. பா ச. 48)
ஒரு நாட்டுக்குப் படைஎடுக்குமெவணும் அந்நாட்டிற்குப் பளிட எடுக்கமுன் அந்நாட்டின் அரசியலேயும் அரசனேயும் அவன் படைவலி து&ணவின்களேயும் நன்கு ஒற்றர் உளவாளிகள் மூலம் ஆராய்ந்து தனக்கு வெற்றி நிச்சயம் ஆகும் என்று நம்பிக்கை கொண்டபின்தான் அந் நாட்டுக்குப் படை எடுப்பான். தன்வலியும் மாற்ருன் வலியும்துனே வலியும் துக்கிச்செயல்" என்பது பெரியோர் வாக்கு. இவ்வுண்மை மTஅணுக்குத் தெரியாமற் போகுமா? கலிங்க நாட்டிவிருத்து வரும வணுக்கு வழியில் அண்மையாக இருந்த இலங்கையின் வடகிரையில் இருந்த நல்லூர் நகர்க்குப் படை எடுக்காமல் இன்னும் அனேக ாமல் தூரத்திலே தெற்கேயுள்ள பொல்லனறுவைக்கு ஏன் படை எடுத்தான் என்பது யோசிக்சுத்தந்தது. சிங்கையரசன் சோழபரம் பரையாகவோ தமிழனுகவோ இருந்தாலும் மாகன் அங்கு படைஎடுக்கா திருக்கலாம். எனவே பன்னிரண்டாம் நூற்ருண்டின் முன்பகுதியிலேயே நல்லுரர்ச் சிங்கைநகர் இராச்சிய ஆட்சியைப் புரிந்து கொண்டு Friu GMF நகர் மன்னர்கள் வாழ்ந்திருக்கிருர்கள். என்று முடிபு செய்து கொள்க. நல்லூர் நகர் என்றும் சிங்கை நகர் என்றும் பெயர்கள். ஒரு நகரின் இரு பெயர்கள் என்பது பின்னர் விளங்குவாம்,
மாகன் படைஎடுப்பு 1215 என்ருல் தஃலநகர்த் தோற்றம் 818 என்ருல் மாகன்காலத்துக்கு 1215-948= 287 வருடங்களுக்கு முன்னரே நல்ஒாரில் தலே நகர் கட்டப்பட்டதென்பதை அறிக. (அப்ப டியானுல் மாகன் நல்லுரர்த் தக்லநகரைக் கூட்டினுன் என்பது பிழை பல்லவா?) அங்ஙனமாயின் மாகன் வல்லிபுரத்திலே சிங்கைநகரைக் கட்டிஞன் என்பது சரிதானே என்னின் அங்கே சிங்கை நகரில்ஃவயே. எனவே அதுவும் பிழையாச்சு. கனகசூரியனும் மக்களும் வல்வி புரத்துச் சிங்கை நகரிலிருந்து திரும்ப நல்லூருக்குவந்து குடியேறி ஞர்கள் என்பதும் பிழை. செண்பகப் பெருமாள் நல்லூர்நகரைக் கட்டினுன் என னலாமோ எனின் அதுவும் பிழையே. அவன் படை எடுப்புக்கு முந்தியே அங்கே தஃநகர் இருக்கே இருந்தபடியால்தானே அவன் அங்கேபடை எடுத்தான்.

Page 54
22. வல்லிபுரத்துள்ள தலைநகர்
சிங்கைநகரல்ல
இஃ தென்னே யா. ச. சாரரும் யா, வை. விகாரரும் ஒருமுக மாக வல்லிபுரத்துள்ளது சிங்கை நகர் என்றல்லவா சொல்லுகின்ற னர். என்ணின் ஆம் அவர் அறியாமற்றுன் சொன்னுர், அவ்வுண்மை தெரிக்குவாம். வைபவமாஃலயார் உக்கிரசிங்கன் செங்கட நகரிக் தன்த8ல நகரைமாற்றியிட்டான். என்றது. பிழை என்றும் செங்கடசி என்பது செங்கடகல என்பதன் நாமீந்தான் என்றும் அச்செங்கடகல என்பது கண்டியென்றும், கண்டி அப்பொழுது உக்கிரசிங்கன் ஆட் யிலில்ஃப் ஆனமையால் வைபவமாஃபார் அவ்வாறு சொன்னது. பிழை என்றும் உண்மயில் அது சிங்கை நகரம் என்றும் முன்னர் இப்பிறர் சொல்வியுள்ளார். ஆகையால் அத்துணிபிஃன நோக்குவாம்.
அங்கனம் நோக்கும் வகையில் அந்நகர் பற்றிய பிறர் சொன்ன கருத்துக்களே முதலில் ஒப்படைக்கின்றுேம், வல்லிபுரத்தில்தான் சிங்கை நகர் உண் டாயிருந்தது என்று முன்னர் வெளியான சில நூல்களின் குறிப்புக்களைத்தான் பின்னர்தோன்றிய நூல்களும் ே திருக்கின்றன.
சிங்கைநகரும் விலாசாசனமும்
இக்கருத்தை முதன் முதலாகத் தாங்கி வெளியானநூல்கள்
• gcirfageir - Luirging)'' ANCENT JAFFNA 'UTypLJLJT Goord சரித்திரம்" என்னும் இெைமுறையே ஆங்கில தமிழ் நூல்களாகும். இவைஇரண்டும் இராசநாயக முதவியாரால் எழுதப்பட்டவைக இக்கருத்தை ஆமோதித்த பொறுப்பு வண. சுவாமி ஞானப்பிரகாசர் அவர்க3ளச் சார்ந்ததே. இனி அவர்கள் கூறிய அச்சரித்திரக்கூற்று களேயும் இங்கே காட்டுவாம். திரு. முதலியார் அவர்கள் ஏன்ஜெ பாவ்னுஎன்னும் ஆங்கில நூல் 364 ம் பக்கத்தும், யாழ்ப்பாண சரித்திரம் என்னும் தமிழ்நூலில் 68 ம் பக்கத்தும் கேகாலேப்பிரிவி
 
 
 
 
 
 
 
 
 

உள்ள சுெ rத்தகமத்துச்சாசனம் என்ருெரு சாசனத்தை எடுத்துக் காட்டிஅச்சிங்கை நகரை இன்னஇடத்தினது என்று துணிபு செய் கின்றர்.
"சேது" "கங்கனம்வேற் கண்ணினேயாற் காட்டிரும் காமர்வளேப் பங்கயக்கை மேற்றிலதம் பாரித்தார் - பொங்கொலிநீர்ச் சிங்கைநகராபியனேச் சேரா வணுரேசர் தங்கள்மடமாதர்கள் தாம்" என்பது (A, J. P. 364)
இந்நூலில் இவர்கள் மேலும் சொல்லும் இப்பகுதியின் தமிழாக்கமா வது. 'சிங்கைநகர் அல்லது சிங்கபுரம் யாழ்ப்பாணத்தின் கிழக்குக் கரையிலே வல்விபுரத்திலே கட்டப்பட்டதென்பது மிகத்தெளிவு. ஆரியச்சக்கரவர்த்திகளுக்குப் பிறகுதான் அது பிரபல்யம் அடைந்தது. உக்கிரசிங்கன் தன் தஃவதகரைக் கதிரைமலையில் இருந்து சிங்கைநகர்க்கு மாற்றிஞன். சிலவிற்பனர்கள் நலலூர்தான் அச்சிங்கைநகர் என்று சொல்லத் தெண்டிக்கிறர்கள். ஆணுல் கொத்த சுமத்துச் சாசனத்தால் அச்சிங்கைநகர் அஃயெறிந்து சப்திக்கும் ஆழியின் அருகே அமைந் துள்ள ஒருபட்டினம் என்று அறியலாம். நல்லூர் ஒருவா விக்கரையிற் கூடவில்ஃ. உக்கிரசிங்கன் கதிரை மலேயில் இருந்து தன் தலேநகரைச் சிங்கை நகர்க்கு மாற்றியுள்ளான். ஆதலால் அதுநல்லுரரின் வேரூன தொன்றென்பது நிச்சயம், அது யாழ்ப்பாணத்தின் கிழக்குக்கரையில் உள்ள ஒரு துறைமுகமுகமாகவும் ஒரு வே ஃ இருத்திருக்கலாம். (A. J. P. 310, 311) என்பது, அன்றியுமிவர்கள் அந்நகர் சிங்கைநகர், யாழ்ப்பாணத்தின் இராசதானியாய் வந்தபின் சிங்கைநகர் என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. இப்பெருநகர் அழிந்து ப) எனலால் மூடப்பட்டிருக்கு மிடத்ப்ை பருத்தித்துறைக்குத் தெற்கே எல்லிபுரக் கோயிலுக்கண்மையில் இன்றுங் காணலாம். (பா, ச. பக், 10) என்றுங் கூறியுள்ளார். வனசுவாமி ஞானப்பிரகாசர் அவர்களும், முதலியார் சிங்கைநகரைப்பற்றிக் கூறிய கூற்றை அப்படியே ஒப்புக் கொண்டவர்களாய் இவ்வுயிற்பத்திமானின் (திரு. முதவியாரின்) அனுபானப்படி பருத்தித்துறைக் கணித்தாய் மணல் மேடுகள் பொருந்தியிருக்கின்ற வல்லிபுரமே பூர்வ காலச் சிங்கை நகராம் இம்மதம் எனக்குச் சம்மதம் என்கிருர்
வல்லிபுரத்திலே புரதான தலைநகரம் மூன்று அழித்துபட்டுள்ள தென்ணுமுண்1ை0 அவ்விடத்தைச் சென்று பார்ப்பாக்கு இன்றும் புலனுகும். ஆயின் அதுசிங்கைநகரமா அல்லது வேருேரு நகரமா! எண்பதுதான் அறியவேண்டி நிற்பது. துறைமுகமாகவிருந்தால், இயற்கை யொதுங்குகுடாவுள்ளதாக விருந்தால் கரையருகிலே யிருந்தால், அன்றியும் பழைய நகரத்து அழிபொருட்கள் இருந்தால் அவை சிங்கைநகரை மாத்திரம்தான் குறிப்பிடும் அந்நகரின் சிறப்பி

Page 55
፵0
லட்சணங்களா? அல்லது பிற திருதுறைமுகநகரையும் குறிக்கவல்ல பொது இலட்சணங்களா? என்றும் அறிதல் வேண்டும். அன்றியும் அச்சாசனம் சிங்கைநகரை ஒரு துறைமுகநகர் என்று குறிப்பிட வில்ஃயே. நிற்க
வல்லிபுரத்திலே சிங்கைநகர் உண்டாயிருந்த தென்பார்க்கு உண்மையில் சிங்கைநகர் ராப்படிப் பட்டது என்ன இலட்சனங்களே உடையதென்பது விளங்கவில்ஃ என்பது பின்னர் நிச்சயமாய்த் தெளி வாகிவிடும். இவ்வாராய்ச்சிக்காரர் ஆச்சாசனத்தை வல்லிபுரத்துடன் சார்த்திக் காணும் காட்சியிலே வல்விபுரத்திலே சிங்சுைநர் இருப்ப தாக அவர்க்கு நிரூபணமாகின்றது. அவற்றின் உண்திைலே வெளி யாக எல்லாச் விக்கல்களும் நீங்கிவிடும் ஈண்டு இவ்வுண்மையை விளக்குவம் ,
இச்சாசசானத்தாலும், வல்லிபுரத்தில் இவர்கள் எடுத்துக் காட்டிய புராதான சுட்டிடம், தானம் என்பனவற்ருலும் வல்லி புரத்தில் சிங்கைநகர் திருபணமாமாறு எவ்வாறு? சிங்ா நகரை வல்லி புரத்தில் நிரூபிக்கு மாற்றல் மூன்று சான்றுகளாலும் உண்டாதல் வேண்டுமே, அவை ஒவ்வொன்ருகவோ எல்லாம் சேர்ந்தோ அத் நிரூபணத்தைக் கொடுக்க வேண்டுமே. அவை ஒன்றிலேயும் அத்தகைய ஆற்றல் இல்ஃலயே. இச்சாசனத்தில் பொங்கொலி நீர்ச்சிங்கைநகர் ஆரியரைச் சேராத அநுராசர் தங்கள் மடமாதர்கள் சுங்கணம் வேற் கண்ணினே யாற் காட்டினுர், காமர்வஃளப் பங்தயக் கையாற்றிலதம் பாரித்தார் என்ற அளவிலே அந்நிருபளத்தில் என்னபகுதி அல்லது என்ன குறிப்புப் பெறப்பட்டது.
இச் சொற்ருெடர்களுக்கும் வல்விபுரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஒரு சம்பந்தமுமில்லேயே, அக்கூற்றுக்களால் அல்லது. சொற்ருெடரால் சிங்கைநகர் எங்கேயுண்டாயிருந்தததென்று விசாரித் துக்கொண்டு வந்தார்க்கு அது இன்ன இடத்தில் இருந்தது என்றதில் ஏதாவது இடக்குறிப்பு அற்பசொற்ப மேலும் பெறப்படுகிறதா? ஏதாவதொரு இடமும் அதில் சுட்டப்படவில்ஃயே. சிங்கையாரியர் வென்றியை அன்றி வல்லமையைச் சிறப்பித்துச் சொல்லும் வகையிலே அவர்களேச் சேர்ந்து வாழாத அதுராசர் மனேவிாார்கள் சுங்கணம் வேற் சுண்ணிஃன யாற் காட்டிஞர்கள், (சுங்கனம், கண்ணீர்) கண்ணி னேயாற் கண்ணிர் சோர்ந்து அழுதார்கள். காமர் வளேயலனித்த பங்கய (தாமரை) க் கையால் திலதம் (எள்ளு) இறைத்தார்கள் என்கின்றது. (அதாவது கனவனே இழந்து கைமைக்கடன் செய்தார்கள் என்று சொல்லும் வகையிலே சிங்கையாரியரது வென்றியைச் சிறப் பித்துக் கூறுகின்றது) அதுவிங்கைநகரைச் சுட்டிப்பேசவந்ததன்று
 

சிங்சுைநகர ரியரைச் சுட்டிப்பேசவந்தது. இலங்கையில் உள்ள எந்த இடத்துக்கும் அது பொது, சிங்கையாரியர் முன்னர் எந்தஇடத்தில் வாழ்ந்தார்களோ அந்த இடத்து அவர்கள் மேற்செல்லும் யோக்கிய மும் தகுதிப்பாடும் தான் அதற்குள்ளது. சிங்கைநகர் விசேடமாக எந்தஒரு இடத்தில் உண்டாயிருந்தது. என்ற விசாரனேக்கு விடை யிறுக்க வவ்லனவாயுள்ளாகுறித்த அம்சங்களேக் கொண்டு வரவில்ஃ. எனவே அதண்க்கொண்டு சிங்கை நகர் எங்:ே எவ்விடத்தில் உண்டா யிருந்தது என்னும் நகர் விசாரணைக்குப் போகப்படாது; அதாவது வல்லிபுரப்பெயர் இதில்விதந்து சொல்லப்படவில்லே. இன்னும் என்னே யெனின் வல்லிபுரக்கரைச் சிங்கைநகர், வல்லிபுரக்கரைச்சிங்கை நகர சியர் என்று இச்சாசனம் சொல்லியிருக்கவில்லே. எனவே வல்லிபுரத் தானத்துடன் இச்சாசனத்தைக் கூட்டிவைத்துச் சிங்கைநகரை அறியக்கூடிய இயைபும் தொடர்பும் இதற்கில்லே அற்றன்று வல்லி புரம் ஒரு கடற்கரைத் தானத்ததன்முே. பொங்கொவி நீர் அல் யெறிந்து சப்தி கும் ஆழிக்கரையைக்தறித்து வந்த ஆன்ருே அவ்வாரு யின் ஏன் அது வல்லிபுரக்கரையைக் குறிக்காது எனவினவலும் எழுமோவெனின் இலங்கைக்கடற்கரை யெங்கணும் பொங்கொலி நீர்க்கவரைதானே! அதாவது அஃலயெறிந்து சப்திக்கும் ஆழிக்கரை தானே என1ே அச்சிங்கைநகர் வல்விபுரம் தவிர்ந்த இலங்கைக் கடற்கரையின் ஏதாவதொரு கடற்கரையிலிருந்தாலும் அதைக்
குறித்தும் அச்சாசனம் அவ்வாறுதானே எழ வல்லதாம்.
அன்றியும் இங்கே பொங்கொலி நீர் என்பது நிச்சயமாகக் கடற்கரையைக் குறித்து வந்ததென்று சொல்லுதலும் இயலாதே. என்னயெனின் சாசனத்தைப் பாடிய அவ்வெண்பாக்காரர் அவ் வெண்பா வை "வெளிப்படை குறிப்பின் வி ரி ப் பது சொல்லுே" என்ருற்போல் ஏதாவதொரு கருத்திற்குறிப்புடைப் பொருளாகவும் சொல்லியிருத்தல் கூடுமன்றே. அன்றேல் அச்சாசனக்காரர் நிச்சய மாகக் கடற்கரையைத்தான் சுருதிக்கொண்டாராயின் அவ்வாறு னர்த்துவான் ஒளி என்பதை நீக்கி அலேயென்பதைச் சேர்த்து பொங் சுலே யென்றும் சொல்வியிருக்கலாமே. அன்றியும் அச்சாசனதாரர், கடல், கரை, துறை என்றற்போன்ற சொற்களுள் ஏதாவதொன் றண்யுங் கூடச் சேர்த்துச் சொல்லாமல் விட்டாரன்ருே நிருச்சீரசில வாய், அவே"ப். ஆடைகள்ளர என்னும் கடற்கரை பைக்குறித்துப் பிற இடங்களில் வந்த தொடர்சுஃபும் இங்கு நோக்கத்தக்கது. எனவே அச்மாசனம் வல்லிபுரக் கடற்கரையைத்தான் குறித்து வந்த தென்று கொள்ள - அதைச்சுட்டி மாத்திரந்தான் வந்ததென்று சொல்ல அற்பமேலும் அதற்குச் சிறப்பான இயைபு இல்லை,

Page 56
எனவே சாசனத்துக்கும் வல்லிபுரத்துக்கும் தொடர்பில்லேயாம். அங்கள்ம் தொடர்பில்லையாகவே சாசனத்தை இவ்வல்லிபுர நிரூபணல் திலிருந்தும் நீக்கிவி டுதல்வேண்டும். அவர்களின் இந் நிரூபனத்தித் ம்ே நீக்கிக்கொள்ள எஞ்சி நிற்பது வல்லிபுரத்தானமும் அப்பழங் கட்டிடமுமே அவற்லையும் இங்கே கண்டுகொள்வாம்.
இந்நிரூபன காரர் அ சாசனத்த்ை வல்லிபுரத்தின்மேலே அதனுள்ளும் ஆண்டுள்ள பூர்வகாலக் கட்டிடத்தின் மேலே வைத்து சிங்கைநகரை நிரூபிக்கி முனைகின்றனர். எனவே அக்கட்டிடத்தைத் தான் அவர்கள் பூர்வகாலச்சிங்கைநகர்க் சுட்டிடமென்று கருதிக் கொண்டார்கள் என்று தெரிகிறது. அன்றியும் அதை அவர்கள் சுட்டிப்பேசியுமிருக் கிறர்கள். அவ்வாறயின் அவர்கண்ட ஆண்டுக்கணக்கின்படி ச்சிங்கையாரிய மன்னர்கள் ரி , பி. 128 தொடங்கி கி. பி 1450 13ம் 14ம் 15ம் நூற்றுண்டுக் காலம் மூன்று நூற்றுண்கிடைக் தொடர்ந்து அங்கு வாழ்ந்தவர் ஆகின்ருரன்றே! அவ்வாருயின் ான்ஜா இவர்கள் அச்சிங்கையா ரியர் வாழ்க்கைக்குறிப்பை யோபதி வையோ சுவட்டையோ" ஆங்கேயுள்ளனவென்று எடுத்துக்காட்ாத வாறு சங்கிலியன் இருந்தவளவு சங்கிலித்தோப்பு ஆரியன்பெயரால் கட் _. குளம் ஆரியகுளம், ப எண்டாரம் பெயரினல் கட்டப்பட்ட குளம் பண்டாரக்குளம் அடியார்க்கு நல்ல' இருத்தநிலம் அடியார்க்கு நல்லார்வரம்பு" "சிங்கையாரியசமுகா' (கட்டியத்தில்) என்ருற்போலும் ஒருவாழ்க்க்ைப்பதிவுகூட அவர்கள் காட்டியிருக்கவில்ஃயே அங்கே நடந்த ஒருபோர் வரலாருே பாதுமோ அவர்கள் அவ்வல்லிபுரத்தில் ாட்டியிருக்கவில்லேயே - அன்றி அவர்களது ஏதாவது சரித்திரக் குறிப்பும் அவர்கள் அங்கே காட்டியிருக்கவில்லேயே அச்சிங்கை பாரியர் ஒருவரது ஒரு வாழ்க்கைச்சுவடுகூட அங்கே இல்ஃப் யானுல் ဓါuáuဌင်္ဂါ புரத்திலே சிங்கையாரியர் வாழ்ந்திருக்கவில்லே என்பதுதான் முடிபு. வல்லிபுரத்திலே சிங்கையாரியர் வாழ்ந்தகுறிப்புக் காட்டப்படவில்லை யேல் சிங்கை ஆண்டுள்ளது என்னும் நிரூபணத்தில் வல்லிபுரம் இடது யிருத்தல் இல்ஃ. வல்லிபுரத்தின் பழங்கட்டிடத்தின் மேல் சாசனத்தை வைத்துச் சிங்கைநகரை நிரூபிக்கமுடியுமேல் போங்கொலி நீர் அடை கொள்ளக்கூடிய ஒடு கடற்கரை மையப்ார்த்து அங்கேயுள்ள பழங்கட்டி டத்தைப் பார்த்து இச்சாசனம் அள்ளிடத்தைத்தான் குறித்து வந்த இதன்று சாசனத்தை அதனுடன் சாரசுவத்து அவ்விடத்திலேயும் ஒரு சிங்கைநகர் எடுக்கலாமன்றே என விணுவுவார்க்கு இறுக்குமா நென்னே? அவ்வாருயின் இலங்கையின் கடற்கரையைச் சார்ந்து பலப் al இடங்களில் பலப்பல எடுக்கலாம் என்பது துணிவாகிவிடுமே. எனவே சாசனம் வல்லிபுரத்தைச் சொல்லவில்லே. வல்லிபுரத்தானம் கட்டிடம் முதலியன சிங்கையாரியர் வாழ்ந்தகுறிப்பைச் சொல்ல
 

வில்லே. அக்கட்டிடமும் அது சிங்கை நகர்கட்டிடம் என்று (புலப் படுத்தவில்லே.) எனவே வல்லிபுரத்தில் சிங்கை நகர் இல்லே என்பதே நிரூபணமாயிற்று. வல்லிபுரத்துள்ள நகரை வைபவமாஃவ தன் நாவிங் சொல்லியுள்ளது. அது சொன்ன செங்கடக நகர் அதுதான் அவ்விடத் ததுதான். அதனை இவ்வாராட்சிக்காரர் புரிந்து சொள்ளாமல் வைபவ மாலேயே தவழுகச் சொல்லிவிட்டதாகக் கரு தி வைபவமாலேயைக் கண்டித்து அந்நகர் கண்டியில் உள்ளது. என்று சொல்விவிட்டு.ேக்கிர சிங்கன் மாற்றிய மைத்ததொரு தஃவநகரமாகுல் அது நிச்சயமாகச் சிங்கைநகர் என்றும் கருதிவிட்டனர். சிங்கைநகர் கதிரைமஃப்பில் இருந்த உக்கிரசிங்கன் மாற்றியமைத்தவொரு துலேநகரமானுல் அது நீச்சயமாகச் சிங்கைநகராக இருக்க முடியாதென்பது எம் கருத்து. என்&gயெனில் சரித்திர நிகழ்ச்சியில் காலம் முக்கியம்,
டிக்கிரசிங்கன் சுநீரை மலேயில் தஃவநகர்கொண்டதும் அப்பாங் அவன் இன்னுெரு தஃலநகர்க்கு மாற்றிக்கொண்டதும் ஒருவன் செப்து கொண்ட இருசெயல்கள் எனவே அவன் ஒருவன்தன் காலத்திலேயே ് நிகழ்ந்தவைகள் உக்கிரசிங்கள் காலம் 8 ம் நூற்ருண்டு யா, வை, மா. பக் 3) சிங்கைநகர்க்காலம். ஏன்ஜென் யாவ்னுக் காரரதும், யாழ்ப்பாண வைபவ விமர்சனக்காரரதும் கருத்துப்படி யா, வை. விமர் பக். 74 80) 13 ம் நூற்றுண்டின் மத்தியபகுதி வரை கொண்டகாலம் எஈவே 8 ம் நூற்றுண்டில் உள்ள ஒருவன் 8 ம் 9 ம் நூற்ருண்டைத்தாண்டி 13 ம் நூற்றுண்டு ரை யும் hாழ்ந்து அக்காலத்திலே உண்டாயிருந்த இவர் சொல்லும் சிங்கை நகர்க்கு மாற்றியிருக்க முடியுமோ முடியாதே. அப்பொழுது இருக்கக்கூடிய நகர் அவன் காலத்ததான் செங்கடசு நகர் அன்ருே சிங்க்கை நகர் துப் பொழுது அங்கே தோன்றவில்ஃயே எனவே அவன் மாற்றியமைத்த நகர் சிங்கைநகர் என்று இவர்கள் சொல்வது காவித்தவறு கொண்ட தாயும் இருக்கிறது" அன்றியும் அவர்சொன்ன சிங்கைநகர் ஆங்கில்ஃ என்பது மேலே கண்டுகொண்டாம் அன்றே
வல்லிபுரத்தில் சிங்கைநகர் நிரூபணமாக வேண்டுாேள் அங்கு ானப்பட்ட பூர்வகட்டிடத்திலே சிங்கை பாரியர் வாழ்ந்தனக்குச் "ான்றுக்கள் காட்டப்பட்டிருக்க வேண்டும். அக்கட்டிடம்சிங்துை பாரியர் காலத்தைக் கொண்டது யுமிருக்க வேண்டும். அச்சாசனத் திலே வல்விபுரமும் அதன்கடற்கரையும் சுட்டிச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அக் சுட்டிடத்தில் உபயோகிக்கப்பட்ட பொருட்கள் ரி ங் த ரா ரிய ர் சுாவத்திலுபயோகிக்கப்பட்ட பொருள்களாயிருக்க வேண்டும் அவ்வக்காலத்தில் உண்டான சிற்ப அறிவு நாகரீகம் பாவற்றுக்கேற்கத்தாள் கட்டிடங்கள் அமைந்துள்ளன. இவ்வா

Page 57
| if
றுண்டேல் வல்லிபுரத்தில் சிங்கைநகர் நிரூபணமாம் . இவ்வாறு மற்றுந் தலேநகரங்களின் உண்மைகளும் வெளியாக வைபவமாஃல கைலாய மாலேயின் மாற்றுயர்ந்துவிடும். யாழ்ப்பாணச் சரித்திரச்சிக்கலுந் நீர்ந்து விடும்) நிற்க,
இவ்வாராய்ச்சிச்காரர் தம் தவறு,தம் கருத்துப்பிழை என்பவைகளே தாமே விளங்கிக்கொள்ளார் சரியாகச் ச்ொன்ன வைபவமாலையைச் ஈண்டித்தது மகாபெரும் தவறு. இவர்களின் இவ்வாய்வுக் காட்சியால் செங்கடசுநகர் வரலாறு மறைந்தது. சிங்சுைநகர்வரலாறு பிறழ்ந்தது. நல்லுரர் வரலாறும் பிறழ்ந்தது யாழ்பாணச்சரித்திரச்சிக்கல் ஆரம்ப மானது. இங்கே இன்னும்கீசில நுட்பமான விளக்கத்துக்குப் போவாம். உக்கிரசிங்கன் கதிரைமலையை நீங்கி வல்லிபுரத்துள்ள கஃலநகர்ச்குத் தான் மாற்றினுன் என்பதை நாமும் ஒப்புக்கொள்ளுகிழுேம் அவர் களும் ஒப்புக்கொள்ளுகிருர்கள் அந்தவகையிலே மாற்றப்பட்டாளம் ஒன்று அக்களத்தில் Wமைந்த தஃலதகரும் இரண்டாக விருக்கவில்வே ஒன்றே பொன்று. அத் கலே நகரை அதாவது இப்பொழுது அங்கே அழிந்துள்ளதாகக் காட்சி தரும் அத்தவேநகரை நாம் செங்கடசுநகரி யென்று சொல்ல அவர்கள் சிங்கைநகர் என்கிருர்கள். உக்கிரசிங்கன் காலம் வைபவமாலே கி. பி. 795 என்று சொன்னதை அவர்சு ஒப்புக்கொண்டு காலத்தை மறுத்து ஒரு ஆதாரமும் காட்டாமல் தாமே தம் நூலிலே வேறிடங்சளிலே சிங்கை நகர் சுவிங்கமாகஞல் கட்ட பட்டது. அது கி. பி. 1248 ல் வல்லிபுரத்தில் கட்டப்பட்டதென்று எமுதி வைத்துவிட்டு உக்கிரசிங்கன் அச்சிங்கைநகர்க்குத்தான் மாற்றிஒன்: என்று சொல்லுகிருர்கள். இங்கே எட்டாம் நூற்றுண்டில் உள்ள டிக்கிரசிங்கன் எப்படி அவன்காவித்துக்கு ஐந்து நூற்றுண்டுக்குப்பின் உண்டானதவேநகர்க்கு மாற்றமுடியும். முடியாதே என்றும் விளங்கி ஹிலர் இப்பிழையான ஒதுக்களால் வல்லிபுரத்தில் சிங் ைஐநகரை காணமுடியாது. காணவேண்டுமேல் நல்ல ஏதுக்கள் அகப்படவேண்டு தல்ல உண்மையை உணர்த்தும் ஏதுக்கள் அகப்படா ஏன் அசு படாது. சிங்கைநகர் அங்கே இருத்திருக்கவில்லையே! அங்கே இருக்தால் தானே ஏதுக்களும் அங்கே இருக்கும். அது இன்னுெரு இடத் லிருக்கே. அவ்விடத்தையும் பின்னர்க் காண்பாம் போலிச்சான்று சுளேக்காட்டி சிங்ைைகநகர் வல்லிபுரத்துள்ளதென்று இவர்கள் எழுதி பீட்டமை பெரும் தவரும் என்க.
இந்த யா, ச. கீாரர். பா. வை. வி காரர் யாரேனும் வல் புரத்தில் கலிங்கமாகன் சிங்கைநகர் கட்டியவரலாறு செண்பக பெருமாள் அவ்வல்லிபுரத்துக்குப் படைஎடுத்த வரலாறு. அங்ே
சிங்கையாரியர் எவரினதும் ஏதாவதுதொரு வாழ்க்கைகுறிப்பு, பின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னர் அச்சிங்கை பாரியர் நல்லூருக்கு வந்து குடியேறிய வரலாறு ஏதாவது ஒன்றுக்கும் ஒரு ஆதாரமும் காட்டவில்லே அத்தஃநகரிலே பதிகுெரு சிங்கை ஆரியர் 200 ஆண்டுவரை வாழ்ந்திருப்பாரேயானுல் ஏதாவதொருகுறிப்பும் இல்லாதிருக்கப்போமோ. எனவே சிங்கைநகர் ஆங்கில்லாமையாலேதான் மேற்சொன்ன குறிப்புக்களே அவர்களால் காட்டமுடியவில்ஃவ. ஆச்சரித்திர நிகழ்ச்சிகளும் அங்கேபில்லே என்றே துணிக, எனவே ஈண்டும் சிங்கைநகர் வல்விபுரத்தில் இல்லே என்றே துணிக சாசனத்திலே காலம் இடம் புருடன் சொல்லப்படவில்லே அது சிங்கையாரியரைப்பற்றிச் சொல்வியிருக்கேயொழிய சிங்கைநகர் இருந்தஇடம் சொல்லப்படவில்லே.
வல்லிபுரம் சொல்லப்படாதிருக்க அச்சாசனத்தை வல்லிபுரத் துடன் இணைத்து நோக்கியது முதலாவது தவறு. வல்லிபுரத்தானமும் அதன் பூர்வ கட்டிடங்களும் அங்கே சிங்கையாரியர் வாழ்ந்த குறிப்பை மெய்ப்பியாதிருக்க அதனேச்சாசனத்துடன் கூட்டி நிரூபணத்துக்கெடுத் துக்கொண்டது. இரண்டாவது தவறு. வல்லிபுரத்திலேதான் சிங்கை நகர் உண்டென்று தம்நூல்களில் எழிதியுட்டது. மூன்றுவது தவறு. தம்கருத்துப்பிழை என்பதைத்தாமே விளங்கிக்கொள்ளாமல் சரியாகச் சொன்ன வைபவமாலேயைக் கண்டித்தது நாலாவது தவறு. இவை வல்லிபுரத்தில் சிங்கைநகர் உண்டென்று சொல்லும் கோட்பாட்டுக்கு வரும் தவறுகளாம் என்றறிக

Page 58
23. பரராசசேகரன் திருப்பணி கூறும்
சிதம்பரப் பட்டயம்
இப்பட்டயம் மாகன் காலத்துக்கு முன்னரே யாழ்ப்பாணத் நல்லூர்த் தலைநகரம் அமைந்திருந்ததென்பதற்கு ஒரு உறுதியா சான்றுக அமைந்துள்ளது. இப்பட்டயத்தைான் பேராதஃனப்ப சுலேக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் திரு. செ. குணசிங்க வெளியிட்ட கல்வியங்காட்டுச் செய்பேடுகள் என்ற நூவிலும், கலாநிதி சி. பத்மநாதன் வெளியிட்ட வன்னியர் என்ற நூலிலும் பார்த்தது மன்றி கல்வியங்காட்டுக்குப் போய் இப்பட்டயத்தை வைத்திருக்கு சிவக்கொழுந்துவிடமும் அதனேவாங்கிப் பார்வையிட்டேன்-குறித்து கொண்டேன். அப்பட்டயத்தை வன்னியர் என்ற நூவின் செப்பேட்டி நிருத்திவாசகப்படி அவ்வவ்வரி இலக்கங்களுடன் கீழே தருவாம்.
1. ஸ்வஸ்திபூgரீமத் மஹாமண்டலேசுரன் 5. மஹாராயர் பிருதுவிராஜ்யம் பண்னியகுளாநின்ற சாலிவா 8. கனசகாப்தம் தொளாயிரத்து நாற்பத்துநாவின்மேல் செவ் 7. நின்ற சுபகிருது வருஷம் தைமாதம் குருவாரமும் சுவாதி நட்சத் 8. திரமும்பறுவமும் கூடினசுபதினத்தில் யாழ்ப்பாணம் இராச்சிய 9. பண்ணியிருந்து பரராசசேகர மகாராசா அவர்கள் சிதம்ப 0. ரத்துககு வந்து சிதம்பரேசுர தரிசனம் பண்ணி, சபாப 1. திக்குக் குண்டலமும் பதக்கமும் சாத்தி தில்ஃல மூவாயி
வருக்கும் கு 13. ஸ்டலம் போட்டுச் சுவாமிக்கு என்றும் கட்டண் நடக்கு
.
இப்பட்டயம்பற்றிக் கலாநிதி சிதம்பரநாதன் அவர்கள் "சானி வாகன சகாப்தம் தொளாயிரத்து நாற்பத்து நான்காம் ஆண்டி பரராசசேகர சிதம்பரத்துக்குப் போனுன் என்று பட்டயம் கூறுகின்ற 岛位
 
 
 
 
 
 
 
 

சசுவருடம் 944 இல் (கி. பி. 1022) வடஇலங்கையில் ஒருதமிழரசு ஏற்பட்டிருக்கவில்லே. எனவே . இப்பட்டயம் பரராசசேகரன் ஆணேப் படி எழுதப்பட்டிருப்பின் பட்டயத்தை எழுதினவரின் அவதானச் குறைவினுலும் அறியாமையாலும் இப் பிழை ஏற்பட்டிருக்கலாம். எனவே பட்டயத்தில் ஆண்டு பிழையா எழுதப்பட்டுள்ளதென்பது தெளிவாகின்றது. இப்பட்டத்திலுள்ளவை மூலசாசனத்திலிருந்து பெயர்த்தெழுதப்பட்டிருத்தலுங் கூடும். அள்வாருகில் மூலத்தைப் பார்த்துப் பட்டையத்தை எழுதியவர் ஆண்டினேப் பிழையாக எழுதிஇருத்தல் வேண்டும்' (என்னியர் பக். 67) என்றும் கூறுகின்ஞர் இக்கொள்கைகள் நமக்கு உடன்பாடில்லே. வட இலங்கைப் பரராசசேகர மன்னவனின் மூதாதை யருள முன்னவனுகிய சிங்கையாரியன் ஆரம்பத்தில் த&லநகரை கி. பி. 948 ல் அமைத்தான். அதனேக் கைலாயமாஃ) சாவிவாகன சகாப்தக்கணக்கில் "இலகிய சகாப்தம் எண்ணுாற்றெழுபது" என்று சொல்லுகிறது.
கிஸ்ரீது ஆண்டுகளுக்கு 870 ஒடு 78 ஐக் கூட்ட 918 சரியே. ஆகை யால் இப்பட்டயம் எழுதினவனுகிய பரராசசேகரன் (1028-948-74) ஆரம்ப சிங்கையாரியனின் பின்னவனுகிய இரண்டாவது அல்லது மூன்ருவதுபாட்டனுகிய பரராசசேகரணுதல்வேண்டும் இவன் சங்கிலிக்கு முன் அரசிருந்த பரராசசேகரனல்ல அவனுக்குப்பல நூற்றுண்டுகளுக்கு முன்னிருந்த பரராசசேகரன் ஆவான். பரராசசேகரன் என்பது சிங்காசனப் பட்டப்பெயர் அன் ருே! எனவே இப்பட்டயத்தில் உள்ள ஆண்டுபிழை அல்ல, சரியே என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. பட்டயத்தை எழுதினவரின் அவதானக்குறைவாலும் அறியாமை பாலும் இப்பிழை ஏற்பட்டிருக்கலாம்" என்றும் சொல்வதற்கில்ஃ) என்னேயெனின் இந்தப்பட்டயம் எழுதினது பரநிருபசிங்கப்படை பாண்டவர் என்று எழுதப்பட்டிருப்பதால் அவர் அரசனின் உயர்தர உத்தியோகத்தவராக இருப்பதால் அவர் அவதானங்குறைந்தவ ராகவே அறியாமையுடையோராகவோ இருக்கமுடியாது. அன்றியும் சிதம்பரதர்ாத்துக்குக் கொடுத்து இந்தக் கட்டஃள என்றும் தர்மம்ஃசாரிக்கும் படிக்கு இராசவாசலுக்கு மத்திரிாரா தீவும் இராசி வம்சமாக இருக்கிறவர்கள் தில்வியூர்ச்சேஞபதியார், சிங்கையூர்ப்படை ஆண்டவர், தில்லியூர்க்குலத்துங்கர், பரநிருபசிங்க, குலநிருவாங்கப் டைபாராய்ச்சியா மிவர்கள் வம்சத்திலே நாலுபேரும் சம்மதித்து தங்களினத்துக்குள்ளே ஒருதரைக் காவி வேட்புத்தம்பிராணு'வைத்து இராசாக்கள் தம்பிரானூர் திருச்சிற்றம்பலம் என்றவருக்குப் பட்டமும் சுட்டிவைத்து என்றென்றைக்கும் இத்தர்மம் விசாரித்துக்கொள்ளும் படிக்கு இந்த நாலுபேரையும் பரராசசேகர மகாராசா இதம்படி கட்ட3ள டன்னித் தர்மம் நடக்கும்படிக்கு கல்லும்காவேரியும் புல்லும் பூமியுமுள்ளமட்டுக்கும் இவர்களே இது விசாரித்துக் கொள்ளும் படிக்கு
I

Page 59
கட்டஃாபண்ணி எழுதிப்போட்டது. இப்படிக்கு பரராசசேகர மகா ராசா என்றும் இருக்கிறது அன்றியும் இப்படி இப்பட்டயத்தில் வேருேர் இடத்தில் "இப்படிச்சம்மதித்து இந்தப் பட்டயம் எழுதனது பரராசசேகர மகாராசா அவர்கள் தில்லியூர்ச்சேனுபதிார் சிங்கை யூர்ப்படை ஆண்டவர் தில்லியூர்க்குலத்துங்கர், பரநிருபசிங்க குல நிருவாகப் படையாராய்ச்சியார் என்று சொல்லப்பட்டிருப்பதால் எழுதியவர் ஒருவர் அல்ல அரசாங்கத்தைச் சேர்ந்த பலர் சேர்ந்திருப் பதாலும் அரசனுமோ சேர்ந்திருப்பதாலும் அறிவுக்குறைவுக்கோ அவதானக் குறைவுக்கோ அங்கே இடமில்லே. நிற்க.
இப்பட்டய தர்மத்தை சிதம்பரக் கோயில்காராகிய *:| மூவாயிரவரும் வாசித்திருப்பார் என்பதும், நிஸ்ஃ மூவாயிர
வருக்குக் குண்டலம் போட்டதாக அப்பட்டயக்தில் குறிப்பிட்டிரு
பதால் அது மேலும் நிச்சயமே. அன்றியும் அங்கே அரசனின் மடம்
இருப்பதாலும் அரசனின் வழிபாட்டுத் தொடர்பு பின்னும் இருந்து
வரும் ஆதலாலும் அரசனின் கந்தோர்ப் பதிவேட்டில் அப்பட்டய வரலாறு பதியப்பட்டிகுக்குமாதலாலும் அதிற்குறிக்கப்பட்ட ஆண்டு எவ்வாற்ருனும் பிழைபட்டிருக்காது.
இப்பட்டய ஆண்டைப்பிழை என்று காதுபவர்கள் பரராச சேகரனின் மூதாதையரின் முதல்வனே பதிஞலாம் நூற்ரூண்டில் வாழ்ந்த பாண்டிய சேணுதிபதியான ஆரியச்சக்கரவர்த்தி யென்றும் அவனே தீஃலநகர் அமைத்தான் என்றும் கருதுகின்றனர். அக்கருத்து ஊகமேயொழிய எவ்வகையான உருப்படியான ஆதாரங்களும் இல்லே வேறுசிலர் பதின்மூன்ரும் நூற்றண்டில் வாழ்ந்த கலிங்கமாகனே அவ்வடஇலங்கைத் தஃநகரை அமைத்தான் என்றும் கருதுகின்றனர். அப்படிக்கருதுபவர்கள் எண்ணுற்றெழுபன (870 ஆயிரத்து நூற் றெழுபது (1170) என்று பிழையாகப் பொருள் எண்ணி மாசுன்காலத் தோடு இயைக்கின்றனர். அவ ன் வட இலங்கைக்கு வரவில்லே. என்பதை மேலே காட்டினும்,
இவர்கள் விளக்கம் போனவாறு என்னேயெனின் இப்பட்டயம் எழுதின பரராசசேகரனின் குவ முதல்வன் பதின்மூன்றும் நூற்ருண்டில் தானே தஃவநகர் அமைத்தான். அப்படியானுல் அவன் வழித்தோன்றல் எப்படி பதின்னுெராம் நூற்குண்டில் (கி. பி. 1012ல்) இருக்கமுடி யும் என்பதே. யாம் சொல்வது அவ்வாறன்று அக்குலமுதல்வகுண் சிங்கை பாரியன் கைலாயமாஃ:படி கி. பி பத்தாம் நூற்ருண்டிலே (948 ல்) தஃநகர் அமைத்தான். அவ ன் வழித்தோன்றல் பரராச சேகரன் பதினுெராம் (கி. பி. 1022 ல்) நூற்ருண்டில் o: எழுதினுன் என்பதே. ஆகையால் கைலாயமtலயிற் சொல்லப்பட்ட

ቌዴ!
ஆண்டும்.சரி. பட்டயத்தில் சொல்லப்பட்ட ஆண்டும் சரி. பிறர்தல் நகர் அமைத்ததாகச் சொல்லும் பேர்வழிகளும் ஆண்டுகளும்தான் பிழை. அவை தள்ளத்தக்கவைகள் என்பதே. எனவே பட்டைய ஆண்டைக்கொண்டு கைலாயமாலே ஆண்டும். ஈசுலா பமாலே ஆகின் டைக்கொண்டு பட்டய ஆண்டும் உண்மை என்பன: அவை இரண்டும் சேர்த்து ஒன்றினே ஒன்று உறுதிப்படுத்துகின்றன. எனவே பட்டயத் தில் சொல்லப்பட்ட கி. பி. 1023 ம் ஆண்டுகள் சரி என்பதே. நிற்க இப்பட்டயம் மூலபட்டயம் அல்ல அதனேப்பார்த்து எழுதப்பட்ட பட்டயமாக இருத்தலும்கூடும். அவ்வாறுயின் அதிேேப்பார்த்து எழு நியவரே அவ்வாண்டைப்பிழையாக எழுதிஇருத்தல் கூடாதோ. எனின் அங்கனமும் இல்ஃவயே அவ்விபரம் இப்பட்டயத்தில் சொல்லப்பட்டி ருக்கவில்ஃபே. அன்றியும் மூவபட்டயம் என வேறுென்றுவேறெங்கே ணும்புலப்பட்டிருக்கவில்லையே. இப்பட்டயஅமைப்பு இது ஒரு மூலபட்ட யமாகவேதெரிகின்றது. ஆகையால் ஆதிற்குறிப்பிட்ட ஆண்டு எவ்வாற் ரூனும் சரியென்பதே. மேலே இலகியசகாப்தம் எண்ணுற்றெமுபதை (87 ஐ ஆயிரத்துநூற்றெழுபது என்று பிழையாகப் பொருள் கண்ட பிறர் விளக்கத்தைப் பின்பற்றியவர் மாட்டுத்தான் இப்பட்டய
ஆண்டும் பிழையென்று கருத்து சுருத்தெழதாம் என்க. நிற்க,
இப் பட்டையம் ஒருவலிய சான்று. இப்பட்டயம் எழுதியது ஒருவரா பிழைவிட? இப்பட்டயம் எழுதும்போது அரசனும் அறி வாற்றல் படைத்த அவனது உயர் அதிகாரிகளும் இருந்தனர் அவர்கள் மட்டுமா இப்பட்டயத்தில் தொடர்பு படுத்திப் பேசப்படும் நல்லமூவாயிரவர் எனப்படும் அந்தணர் குழுவும் இருந்தது. இவர்கள் எல்லாரும் அப்ப ட்டட்டடத்தை ஆர்வமாகப் படித்திருப்பார்களல் லவா? ஐயமே இல்லே. அன்றியும் அரசனது இக்கோவில் விவகாரங் கஃாக் கவனிக்க அங்கே ஒரு மடபரிபாலனம் இருக்கல்லவா எனவே அப்பட்டயத்தில் பிழை இருக்காது. இருந்தாலும் அக்கணமே அப்பிழையை அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பும் திருத்தக் கூடிய வாய்ப்பும் அவ்வரசனுக்கிருந்திருக்கல்லவா அன்றியும் அவன் இராச்சிய பரிபாலனத் தொடர்பில் இம்மடம் இருந்திருக்கிற தல்லவா? அவன் அரண்மனைக் கந்தோர் பதிவேட்டிலும் இவ் ஆண்டு பதியப்பட்டிருக்குமல்லவா? அன்றியும் இப்பட்டயம் எழுதிய மன்னனுே இவன் பாரம்பரையினரோ அக்கோட்டத்துடன் வழிபாட்டின்

Page 60
I [] []
தொடர்பிலும் பரிபாலன தொடர்பிலும் பின்னும் வந்திருப்பர் அல்லவா எனவே எக்காரணம் கொண்டும் அவ் ஆண்டிலே பிழை ஏற்பட இடம் இல்ஃவ என்க. எனவே அப்பட்டய ஆண்டும் சரி என்க. என்னே. ஆச்சரியம் இப்பிறர் எல்லாரும் இப்பெரிய இடத்துக் குறிப்பை பிழை என்கிருர்களே என்றெண்ணின் விஷயம் சரியாய்ப் புலனுகிறது. இன்னும் என்னென்ன இதன் முன்னுள்ள நூல்களிலே யாழ்ப்பான இராச்சியம் (சிங்கைநகரோ, நல்லூரோ, யாழ்ப்பாண நகரோ) பதின் மூன்ரும் நூற்ருண்டில் அல்லவா ஆரம்பமானது என்று சொல்வி இருக்கிருர்கள். அவ்வகையைக் கொண்டுதான் இப் பட்டய ஆண்டை பிழை என்கிருர்கள். ஆகையால் பட்டயத்தில் பிழை இல்லே. இவர்கள் கணக்கிட்ட வழியில்தான் பிழை. அதைத் நான் திரும்பவிளங்குசு. அது பிழை. எனவே பட்டயமும் சரி. சிங் கையாரியன் தவேநகர் வைத்த ஆண்டும் சரி என்க. அன்றியும்
இப் பட்டயம் எழுதின மன்னன் எழுதின அன்ருேடேயே இச்சிதம்பர தரிசனத்தை விட்டிருப்பானு அன்றியும் அவனுக்கு விபூதி முதலிய பிரசாதங்கள் வந்து கொண்டிருக்கும் தொடர்பிருக்குமே தூதுவர் தொடர்பிருக்குமே. மடத்தை பரிபாலனம் செய்யும் அரசன் ஆஞ்ஞைத் தொடர்பிருக்குமே. எழுதிக் கொடுத்த ஆண்டு பிழை என்ருல் திருத்தும்படி மடத்துக்குப் பொறுப்பான தம்பிரான் டடனே ஒலே அனுப்புவாரே. ஆண்டு தோறும் அவ்வரச பரம்பரையினர் அக் கோயிலுக்கு யாத்திரை பண்ணியிருப்பார்களே. எவ்வாற்ருனும் கொண்டு நோக்கினும் பட்டய ஆண்டும் சரியே தஃநகர் பே ட் ஆண்டும் சரியே.
 

24. குயிற்றுதில் காணப்படும் குறிப்புகள்
தவே நகர் ஆராய்ச்சியால் பற்பல கூற்றுக்களால் தடுமாறி நின் ரூர்க்கு இக்குயிற்றுாது ஒரு நிச்சயித்துக்கு வர உதவுவதாயிற்று'
தோலிது.
கோட்டைச் சிங்கள அரசனுகிய ஆரும் பராக்கிரமபாகுளின் ஏவவின் வண்னம் செண்பகப் பெருமாள் யாழ்ப்பானத்தில் உள்ள தமிழர் இராய்ச்சியத்துக்குப் படை எடுப்பான் வந்து அப்பொழுது கி. பி. 1450ம் ஆண்டில் நல்லூரில் தஃநகர் கொண்டரசியற்றி நின்ற கனகசூரிய சிங்*ை மாரிய மன்னனுடன் பொருதி அவன்றன் தஃபநகரை வென்று அவனே ஓட்டெடுக்கப்படச் செய்த செய்தி சொல்லப்பட்டது.
படை எடுக்கப்பட்ட அவ்வாரிய அரசன் ஆரும் பராக்கிரம குே காலத்தவன் என்பதால் அவன் கனகசூரியன் என வன. சு. ஞா. (பா. வை. வி பக். 1) உரைகின்ருர். எனவே அவன் படை எடுப்புக் காலத்திலே நல்லூர்த்தலே நகரிலே கனகசூரியன் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிருன் என்றறிக. இஃதிங்ஙனமாக " "நல்லூர்பிற் படக் கோட்டை இராச்சியம் வகித்த செண்பகப் பெருமாள் 15ம் நூற்ருண்டில் சுட்டுவித்ததாம் இம்மதம் எனக்கும் சம்மதம்" என சு. ஞா அவர்கள் பிறிதோரிடத்தில் மொழியக்காரணம் என்ஃன? அக்குயியிற்றுாதிற்" கொண்டிருக்கும் உண்மை உள்ளூரச்சரியாக இங்கனம் மொழி வார்க்குப் புலப்படவில்வே என்பதுதான் எம்.கருத்து, ான்ஃண்பெனின் செண்பகப்பெருமாள் அந்நகர்க்குள் நுழைந்தமை முந்தியதா? அவன் அந்நகரைவென்று அந்நகர் அதிகாரத்தைத்தான் அடைந்து திரும். க்கட்டியமை முந்தியதா? அந்நகர் அரசனே வென்ற பின்னன்ருே அங்ங்னம் கட்டுதல் கைகூடும். இவன்கட்டிஞனுே கட்ட வில்லேயோ என்பது பிறிதொரு ஆராய்ச்சி) எனவே செண்பகப் பெமாள் படைஎடுத்துவந்த அப்பொழுதே ஒரு தலநகரம் இருந்திருக் கிறதே அதிலேதான் கனகசூரியன் அரசியற்றிக் கொண்டிருந்திருக்
கிருன் அத்தலேநகரம் தான்யாது?

Page 61
8
செண்பகப்பெருமாளின் படைஎடுப்பின் குறிப்புக்களில் "அதுகரை புரண்டு சேணுவெள்ளம் இராசதானியின் மேல் எ {புத்துவருவதை யறிந்தசெகராசசேகரன்' தடுத்தான் நீலத்துரங்கத்திவர்ந்து செண்பகப் பெருமாள்பட்டனத்தை முற்றுகையிடத் தீர்மானித்தான் " என்பது வலன்றைன்குறிப்புக்களாலும், தெரிகிறதுசெண்பகப்பெருமாள் யாப்பா (நெ) பட்டினத்தில் நுழைந்து அதன்வீதிகளே இரத் தவெள்ளம் ஒடும்.ஆறு சுளாக்கினன்') "அரசனும் குடும்பமும் ஒழித்தோடிவிடபaபிா காளி சுஃளச் சிறைசெய்து வெற்றிவாகை சூடிக்கிகழ்த்தான்' செண்பகப் பெருமாள் டிெ பட்டினத்கைக் கைப்பற்றினன்' பாப்பாப் பட்டினத் தைத தன்னானக்கி, செண்பகப்பெருமாள் கைக்கொண்டு ஆண்ட நகர் விசாவித்தசுெருக்களும் உப்பரிகை பொருக்கிய வீடுகளும்" மாளிகைகளும் உளதாசுக்குறிக்கப்பட்டுள்ளதா என்பனவாகச் சொல் ஃப்படும் இக்குறிப்புக்களால் இவன்படை எடுப்பிற்கு rத்தியே ஒரு தலைநகரம் அங்கே இருந்தமை ஐயமின்றித்துணியப்படும் அன்றியும்" செண்பகப்பெருமார் யாப்பாப் பட்டினத்துள் நுழைந்து அதன் வீதி கஃள இாக்க வெள்ளம் ஓடும் ஆறுகளாக்கின்ை. அரசனும் குடும் பமுமொழித்கோடிவிடப் பல பிரகாளிகளேச்சிறை செய்து வெற்றி வாகை குடித்திகழ்ந்தான். (யா, வை. வி. பக் 105} என்பவற்றுலும், அக்குபிற்றுாதுக்காரரே ஆரியச்சக்ாாார்க் நிபைத் துரத்திவிட்டு யாப் பாப்பட்டினர்  ைஈ (நல்லூரை) கன்னாணுக்கி வாழ்கின்ா நாநாசு ர்ேத்தி பொருந்திய சப்புமல் (செண்பகப்பூ ராசேந்திரனுக்கு". என்று அக்குயிற்றுாதில் சொல்விஇருக்கல்லவா இதுதொண்டும்.அறி:
அந்நகர்தான் யாது, கனகசூரியன் அங்கிருக்கக் காரணம் என்ன? அச்சுனசு சூரியன்தான் யாவன். அவனே கான் இருந்த தள நகரைக் சுட்டினுஞ? அன்றேஸ் அளன் மூதாதையர் பரம்பரை பாய் ஆட்சி செய்து வந்த நவநகரில் இருந்தாட்சி செய்தாஜ? என் ணும் விசாரஃணகள் ஈண்டெழுப்பப் படுகின்றன. இவன் செண்ப கப்பெருமாளுக்கு முற்பட இருத்தலால் அச்சிங் "யாரிய அரசரின் ஆவலியை வைபவமாலே சொல்லிய வண்ணமே அவர்களும் ஏற்றுக் கொண்டதாலும் அவ்விருசாரர் கொள்கைப் படியும் இவன் அச்சிங்கை யாரிய மன்னனுடைய கடைசி அரசன். அவன் புதிதாக ஒரு தலை நக ரைக் கட்டிய செய்தி யாராலும் சொல்லப்படவில்லே. அவன்முன் ஞேஞய ஆதிச்சிங்கைஆரியன் சுட்டிய தஃலநகரிலேதான் பரம்பரை பரம்பரை யாய் ஆட்சி செய்து வந்த பதினுேராவது சிங்கையாரியன் ான்பதை அவ்விருசாராரும் ஒப்புகின்றனர். ஆயின் வைபவமாலேயோ அவ்வாதித் தலே நகரை நல்லூரொடுபடுத்திச்சொல்ல அதாவது நல்லு சில் சுட்டப்பட்டதென்று சொல்ல அப்பிறர் அத்தஃவநகர் கட்டிய வரலாறுரையராய் அது வல்லிபுரத்தின் கண்ணது என்கின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விஷயம் சரியாய்த்தான் புரிந்துவிட்டது. புரிவிக்கவும் முடிந்து விட்டது
த&லநகர்ண நிச்சயமும் நிகழத்தான் போகின்றது. முன்னர்ச்சாசன ஆராய்ச்சியாலும் வல்லிபுர ஆராய்ச்சிபலும் வல்லிபுரத்தில் சிங்கை பாரியர் வாழ்ந்திருக்கவில்லை எனக் கண்டாம். ஈங்கு அக்குயிற்று து நல்லூருக்கு அதாவது நல்லூரிலுள்ள செண்பகப் பெருமாளுக்கு அனுப்பியிட்டதையுங் கண்டாம்.
எனவே அக்குயிற்றுாதனுப்பப்பட்ட இடம் இக்கனகன் இருக்கப் பெற்றதான ஆதிச் சிங்கைநகர்தான். இன்னும் என்னேயெனின் -&& குயிற்றுாதாசிரியர். அக்குயிலேத் தெய்வேந்திர நகரத்திவிருத்து நல்லூா ருக்கு விடுப்பவராய் அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட இடங்களேத் தாண்டிப் போகும் மார்க்கத்தை விளங்கப்படுத்தும் வகையில் வழி உள்ள சாவகச்சேரியையும் . . . தாண்டி அப்பால் நல்லூருக்குச் செல்லும்படி சொல்லுகிருர், அத்தலே நகர். முன் தொட்டே அன்றியும் அப்பொழுதும் வல்லிபுரத்தில் இருந்திருக்குமே யானுல் நல்லூரில் இருந்து வடகிழக்காய் இருபத்தைந்து மைல் வரை தொஃலயிலுள்ள வல்லிபுரத்துக்கே அக்குபிலேத் தூதாகப் போக்கியிருப் பார்ர் என்பதும் அவ்வகையில் நல்லுரருக்கும் வல்விபுரத்துக்கும் இடைப்பட்ட இடங்களேச் சுட்டிப் பேசி இருப்பார் என்பதும் முக்கி யமாக நல்லூர் பருத்தித்துறை வல்லிபுரம் என்பனவாகுதல் அவ ரால் அப்போது பேசப்பட்டு அக்குயிலுக்கு மார்க்கம் உரைக்கும் வகையில் சொல்லப்பட்டிருக்குமென்பதும், அவர் நல்லூர்க்கு ஆற்றுப் படுத்தி இருக்க மாட்டார் என்பதும் நிச்சயத்தின் மேலும் நிச்சய மாயிற்று. என்க.
பிறரால் லல்லிபுரத்தினுெடு படுத்திப்பேசப்பட்ட சிங்கையா ரியர் வேறு. வைபவமாலேயாரால் கனகசூரியனுக்கு முற்பட்டுள்ள வராகப் பேசப்பட்ட சிங்கையாசியர் வேருமோ. எனின் அற்றன்று அவர்கள் வல்லிபுரத்தொடுபடுத்திச் சொல்லியிட்டதும் வைபவமாஃ. யார் சொல்லியிட்ட இச்சிங்சுையஆரியரையே சுட்டித்தான். இவர் களன்றிப்பிறகொரு சிங்கையாரிய பரம்பரையுமில்ஃல. எனவே அச் சரசன் ம் சொன்னது இந்நல்லூர்ச் சிங்காக யாரியரையே என்றுதுணிக அதுவே துனிபா பீன் அவ்வங்லிபுரத்தில் சிங்கை நகருமில்லே சிங்கை யாரியருமில்ல என்பது மேலுந்துணிபாதல் காண்க : "ப ா த ர்' குவைருேஸ் கூறும் சிங்கைநகர் மதிலும் இந்நல்லூர்ச் சிங்கை நகரத்தின் மதிலாம் என்க.
சிங்கையாரியர் ஒன்றேயொரு பரம்பரையாகவும், அவர்இருந்த தஃலநகர் ஒன்றேயொன்ருயிருக்கவும் வைபவமாலையார் அத்தலேநகர் நல்லூர் என்றுசொல்ல அப்பிறர் (டிெ பிறர்) சிங்கைநகர் என்று

Page 62
சுட்டியமைதான் என்னயெனின் அது அன்னர் அம்மாலேயாரின் உள்ளக்கருத்தையோ வரலாற்றின் உண்மையையோ ஒர்ந்துகொள் ளாமே நல்லுர்வேறு சிங்கைநகர்வேறு என்று பிற ஓரினங்ரிக்கொண் டதும் வைபவமாலேயார் அறியாமலே செப்பினுர் என அவர் அறி வுடமைக்கும் அறியாமை கற்பித்துக்கொண்டு தாம் தமது அறிவின் மதுகையாலே வல்விபரத்திலே சிங்கைநக பரை அதிரமர்த்தாகக் கிண்டு விட்டோம், சிங்கை ஆரியரும் அந் நகரிற்ருன் உறைந்தார் எனதம்திரி புணர்வை மெய்யுனர்வென்று சுருதிக் கொண்டாம்தான் காரணம் ான்சு, அந்நகர்சுட்டிடத்திலே இவர்தாமும் சிக்குப்பட்டுயாழ்ப்பாணச் சரித்திரத்திலும் ஒருபெருஞ் சிக்கவே உண்டாக்கி விட்டனர். என்க. அச் சிக்கல் ஈண்டெடுக்கப்பட்டது.
ஊரின்பெயர் நல்லூர் அந்நகரின் பெயர் சிங்கை என்பது" அந் நகர்க்கு நல்லூர் ஊரால் தொடர்புபட்டது. சிங்கைபெயரால் தொடர்புபட்டது. நல்லூர் என்னும் ஊரிலே சிங்கை என்னும் பெயரையுடை கோட்டையை - தலேநகரைக் கட்டினுன் என்க. உயரப்புலத்திலே நம்பி இலக்குமிவாசத்தைக் கட்டிஞன் என்பது போல உயரப்புலம் காணிப்பெயர் இலக்குமிவாசம் வீட்டின்பெயர் நல்லூர் என்னும்உஊரிலே கட்டப்பட்ட அத்தலே நகரின் புறநகர் மதிலிலே கொழும்புத்துறைக்கும் நல்லூருக்குமிடையிலே) சிங்கை ஈர் என்று எழுதப்டிபட்ருந்தால் நல்லூரில் சுட்டப்பட்ட நகரின் பெயர் சிங்கை நகர் என்று விளங்கவில்லையா?" ஈண்டுசிக்கலும் நீங்கியது ஐயம் தெளித்தது உண்மையும் தெரிந்தது. இனி இன்னும் நுட்பமான பகுதிகட்குப் போசோம். சீனகசூரியன் இருந்த நகரத்தைத்தானே செண்பகப்பெருமாள் கைப்பற்றினுள் செண்பகப்பெருமாள் இருந்த அதேநகரைத்தானே திரும்பக் கனகசூரியன் கைப்பற்றிஜன் கனசு சூரியன்மகன்தானே பரராசேசுரன். ஆவணும் அத்தலே நகரில் இருந்து தானே அரசாண்டான் பரராசசேகரனின் மூன்றுவது மனேவியின் வைப்புப்பெண்ணுகிய மங்கத்தம்மாள் சங்கிலியென்னும் ஒருவ*னப் பெற்ருள். (யா. வை. மா. | rá, 189)
அவன் மகன்தானே சங்கிலி மன்னன். அவனும் அத்தலே நகரிலிருந்து தானே அரசியற்றினுன், எனவே போர்த்தர் வரும்போது சங்கிலி நல்லூரில் இருத்தானல்லவா. எனவே போர்த்தர் படை எடுத்த நகரம் சிங்க்ை நகரமல்லவா? போத்தர் படை எடுத்தது நல்லூாருள் கல்லவா? யார் "கோட்டை வாசல்" என்னும் பெயருடைய பெரிய நிலப்பரப்பி& ஆராய்ந்து கோட்டை வாசல் இருந்து மறைந்த பின்னர் அவ்வாசல் இருந்த இடம் தோம்பில் கோட்டை வாசல் என்று குறிப்எழுத பட்டிருக்சிறது) அது நாயன்மார்கட்டுச்
 

IՈ5
சந்திக்கண்மையில் இருப்பதால் நல்லுரர்க் கோட்டை வாசல் என்று நிரூபணம் செய்தோம். நல்லூர் ஊர்ப்பெயரென்றும் அவ்வூரில் கட் டப்பட்ட நகர்க்குச் சிங்கைநகர் என்றும் மேலே வலியுறுவதால் சிங்கைநகர் வாசலும் அதுவேதான் என்சு,
போர்த்தர் 1590ல் சங்கிலியன் மீது Lig). L. எடுத்து வந்தபோது கொழும்புத்துறைக்கும் நல்லூருக்குமிடையில் சிங்கைநகர் என்னுமதில் இருத்திருக்றேதென்பதை சு.ஞா. அவர்கள் சொல்வியுள்ள மையும், மேலேகாட்டினுேமல்லவா - மேற்படிவாசல் கொழும்புத் துறைக்கும் நல்லுரருக்குமிடையிலல்லவா இருக்கிறது. எனவே நல்லூ லே சிங்கைநகர் உண்டென்பதை அத்தூது நூலும் மெய்ப்பிக்கிறது என்க. எனவே செண்பகப் பெருமாள் வரமுந்தியே நல்லூரில் நஃலநகரம் இருந்திருக்கிறது என்க.

Page 63
25. புகழேந்திப்புலவர் வரவு
விக்கிரமசோழன் இரண்டாம் குமாரகுலோத்துங்கன் என்னுஞ் சோழவரசர் காலத்திலே (கி. பி 1118 - 114) அவன் அரண் மண்ப்புலவராகிய புகழேந்திப்புலவர் கதிர்காம யாத்திரையின் பொருட்டு இலங்கைக்குவந்த ஞான்று சிங்கைநகர் அரசன்னக்கண்டு அவ*னப்பாடி பாஃனயும் நிதியும் பரிசிலாகப்பெற்றுச் சென்ருர், பெற்ற இபம் புலவர் வீட்டு வாசலிலே சுட்டப்பட்டிருப்பதை அறிந்தசோழனும்
பாண்டியனும் அதனைப்பெறும்வண்ணம் புலவரிடம் போனகாலத்து
"புலவர் பாவலன் வாசலில் வந்தியம் வாங்கப் படிபுரக்கும் காவலர் நிற்கும்படி வைத்தவா கண்டி யொன்பதிலும் மேவலர் மார்பினுந் திண்டோளினுஞ்செம்பொன் மேருவினும் சே-வெழுதும் பெருமான் சிங்கையாரிய சேகரனே
ானத்தமக்குப் பரிசில்தந்த அரசன் பெருமைதோன்ற முன்னிஃப்யாசு வைத்துப் புகழ்ந்தும் அவ்வரசன் இறந்ததைக் கேள்விப்பட்டபோது
அ. ஆ. விதியோ கடல்வா பியர் கோமான்
T. 5T Għiħ' TIT விறந்தநாள் -ஒ ஒ
தருக்கண்ணிலுங் குளிர்ந்த தண்னாளிதந் தாண்ட
நிருக்கண்லுஞ்சுடுமோ நீ
எனக்சுவன்று தனக்கு அளிசெய்த சுண்ணேப் புகழ்ந்தும் பாடினர். புகழேந்திப்புலவர் பாடியபாக்களில் இருந்து பன்னிரண்டாம் நூற் ருண்டுத்தொடக்கத்திலேயே இச்சிங்கை நகரரசர் சிங்கையாரிய அரசர் பரராசசேகரன் செகராசசேகரன் என்னும் பட்டப்பெயர் களேயும் விடைக்கொடி சேதுவாஞ்சனே முதலிய வரசசின்னங்களேயு முடையவர்களாயிருந்தார்களெனவறியலாம். (செ.இ பா.ச.பக்17-48) எனவே மேலே சிங்கையாரிய குடும்பத்தினர் சிதம்பரதானம் பண்
ணிையது 11 ம் நூற்ருண்டு நிகழ்ச்சி. புகழேந்திப்புலவரை யாதரித்தது
.=
 
 
 
 
 
 
 
 

17
அக்குடும்பத்தவரின் 12 ம் நூற்ருண்டு நிகழ்ச்சி. இவைகள் கலிங்க மாகன் வரமுத்தி நிகழ்ந்தநிகழ்ச்சி..அப்படி இருக்கக்கவிங்கமாகீன்தான் தலைநகர் கட்டினுன் என்பது பிழையங்லவா? நிற்க,
இன்னும் தெணிவான விளக்கம் என்ஃனயெனின் பிறர் 870 என்ற அந்த எண்ஃணத்தான் வியாக்கியான் வேறுபாட்டால் 1170 ஆக்கிக் கலிங்கமாகனுக்குக் கொண்டு போகிறார். அப்படி 1170 ஆக்கியவழி பிழை என்று சொல்லவே அந்தப்பிழையான எண்ணுமில்லே, அந்த எண்ணிலே ஆண்டிலே வந்தசுவிங்கமாகனுமில்ஃவ என்று.
கலிங்கமாகனின் யாழ்ப்பாணவரவைக் காட்ட இவர்களால் இயலாதுபோகவே கைலாயமாலேசிங்கைஆரியனுக்குக் கொடுத்த-பாடிய 948 ஐ அன்ருே ஆராய்ச்சி நாணயம் தப்பிவேறு வியாக்கினத்தால் 1248 என்றுகண்டார்கள். அவ்வியாக்கியானம் பிழைஎன்ருல் இருப்பது 94 E TITIG , 125 தொடங்கி 123 முடிய ஆட்சிசெய்த ாலிங்சுமாள் 13 ஆண்டுவரை வெளியில் வாழ்ந்து 1248 ம் ஆண்டு தாள் யாழ்ப்பாணம் வந்தான் எனின். இந்த 12 ஆண்டும் அவன் ாங்கிருந்தான் அப்பேச்சும் அவன்வரவில் உள்ளபொய்மையைக் காண் பிக்கின்றதே. கவிங்கமாகன் யாழ்ப்பாணம் வந்ததை அத்தாட்சிப் படுத்தாதவழி அவன்மேற் பாலிக்கும் அவ்வூகமும் செல்வாதென்க. நிற்க,
வைபவமால் அமைச்சர் புவனேகவாகு நல்லூர்தலேநகளரயுங் ாட்டிக்ாந்தசுவாமி கோயில்ேயுங்கட்டிருள் என்ற கூற்றை இப்பிறர் சான்றுகாட்டி மறுக்கவுமில்ல. அப்பால்தாம் செண்பகப்பெருமாள் காள் சுட்டியதைச் சான்றுகாட்டி நிறுவவுமில்ல.

Page 64
26. வல்லிபுரத்தில் உள்ள தலைநகர் செங்கடகநகர்
ஆனேகிடந்த இடத்திலே ஒரு அடிச்சுவடுகூட இல்லேயா 280 ஆண்டுவரை அங்கே சிங்கை ஆரியர் வாழ்ந்தால் ஒரு சிங்கை ஆரி பன் வாழ்ந்த ஒரு குறிப்பும் இல்லாதிருக்குமா? அப்படி ஒரு குறிப் பும் காட்டவில்ஃவயாயின் சிங்ாைநகர் அங்கே உண்டென்று நிரூபணப் படாது. என்ளே அங்கே பண்டைக்காலத்திலே ஒரு தஃவநகர் இருந்த தென்று மட்டிடக்கூடிய அளவு பழங்கட்டிடச் சிதைவுகள், கீச்சுக் கிட்டம் சுலவோடு என்பனவும் பழம் அத்திவாரம் போன அடை யாசாங்களும் இல்ஃவயாலோ எனின் அவை இருக்கின்றன. அ  ைவ செங்கடகநகர் இருந்த அடையாளங்கள, ஆராய்ந்து அறியும் திறப் பாடின்மையாலே சுழுைையதக் குதிரையென்று மட்டிட்டுக் கொண்ட கழுதைவாருய்மட்டிட்டு விட்டனர். அந்தலநகர் கி-பி. 795 வரை உக் கிரசிங்கணுல் மாற்றியமைக்கப்பட்ட ஒன்று. கவிங்கமாகன் காலம் 13ம் நூற்றுண்டு உக்கிரசிங்கன் காலம் 8ம் நூற்ருண்டு. ஸ்லிபுரத்திலே கலிங்கமாகன் தலேநகர் இட்டதற்கோ, இட்ட ஆண்டுக்கே இவர்கள் யார்க்கண்ணும் சான்றில்வேயே. நிக, கொத்த சுமத்திலே கண்டெ டுக்கப்பட்ட சாசனம் வல்லிபுரத்திலே சிங்கை நகர் இருந்ததென்பதை அத்தாட்சிப் படுத்தவில்லேயா என்னின் இல்ஃயே அதனேச் சிங்கை நகரும் விலாசனமும் என்பதில் காம சு.
மேலே முன்னர்ச் சொல்லிவந்த இச் சு. ஞா. காரர் செ.இ.காரர் ஆராய்ச்சி முடிபு நமக்குக் கொஞ்சம் கவஃயைக் சொடுப்பதாக இருக்கிறது. அனேக இடங்களிய அம்மால் நூல்களுக்கு மாறு பாடான முடிபுகளே இவர்கள் கூறுகின்றனர், செண்பகப்பெருமாள் நல்லூரில் முதன் முதலாகத் தஃநகர் அமைக்கவில்வே, யாழ்ப்பான அரசனின் அதிகாரத்ம தயடக்கவே படை எடுத்தான் இவர்கள் கூற்றுப் படியே ஒரு நூலிலும் சொல்லவுமில்லே அவன் தன் இராச்சியப் பொறுப்பை தம் பிரதிநிதி விஜயவாகுவிடம் சிொடுத்துக் கோட்டை இராச்சியத்துக்கு முடிசூடப்_போர்க் கனகசூரியனும் மக்களும் விஜய பாகுவைக் கொன்று இராச்சியத்தைப் பிடித்துக் கொண்டார்னன், { ii T. GIF. LUFT" LI Jř. s W)
E
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

27. செண்பகப் பெருமாள் படை எடுத்த தலைநகர் நல்லூர்
செண்பகப் பெருமாள் கோட்டைக்குப் யோசனபின்தான் புவ னேகவாகுக்குப் பட்டம் பெற்றது. அவன் கோட்டைப் புவனேசு வகு ஆன பின் நல்லூரில் அவனுக்கு அரச தொடர்பில்லே - எனவே புவனேகவாகு பெயர்த் தொடர்பு அவனுக்கு நல்லூரில் இல்லே. என்க. நிற்க,
செண்பகப் பெருமாள் படை எடுத்ததும் மெய் கனசு சூரியன் தோற்குேடியதும் மெப், ஆணுல் அத்தலே நகரைச் செண்பகப் பெரு மான்தான் முதன் முதலாகக் கட்டினுன் என்பதுதான் பொய், அவன் ஒட இவன் இருந்தான். அப்பால் கோட்டை இரா. சியத் துக்குப் போவான் இவன் விஜயபாகுவை இங்காட்சியில் வைத்துச் சென்ருன் கனகசூரியனும் பிளேகளும் விஜயவாகுவைக் கொன்று அரசனுர்கள் என்பதே முடிபு *** சூரியன் முன்னர் அத்தவேநகரில் இருந்திருக்கிருனே அக் கனகசூரியன் சிங்கையாரியகுல மன்னவருள் பதிதுேராவது அரச னன்றே அங்ஙனமாயின் அவன் முன்னவராய அரசர் பதின்மரும் எத்தலே நகரில் இருந்து ஆட்சி புரிந்தார்கள் அவர்கள். முன்னர்ச் சொல்விப் போந்த ாேண் கி.பி. 1248ம் ஆண்டு வல்வி ரத் தில்த&nநகர மமைத்தான் ஆங்கிருந்தே சிங்கேய fய இன்னர் பரம்பரை வாழ்ந்து வரலாயினர் எனப் பிறர் உரைகின்றனர். அன்றியும் அக் காலத்தில் செண்பகப் பெருமாள் கோட்டை இச்சியத்தைக் கவர் வான் வேண்டி நல்லூர் இராச்சியத்தை விட்டிட்டுப் போகக் கண்க சூரியனும் மக்களும் அங்கே வந்து குடியேறினுக்கள் என்கிருர்கள்.
 ைமா. ஆராய்ச்சி முன்னுரை பக், 6. செ. இ)
அப்படியாயின் அச்சிங்கையாரியர் கனகசூரியனுக்கு முன்அள் ாேர் ஐ-பி. 128 தொடங்கி கி-பி 199 வரையும் அங்கே வாழ்ந் திருக்க வேண்டுமன்றே 202 ஆண்டுவரை (1248 - 1150) அவர்கள்
அங்கே வாழ்ந்ததற்கு ஒரு ஆதாரமும் இப்பிறர் காட்டவில்ஃப
I

Page 65
10
நாம் முயன்று பார்த்தும் அவர்கள் அங்கே வாழ்ந்த குறிப்பொன் றும் கிடைக்கவில்லை. அது உக்கிரசிங்கன் கதிரைமலையை நீக்கி விட்டமைந்த செங்கடக நகரியாயிருப்பதுதான் காரணம் என்க.
கைலாயமாலை பத்தம் நூற்ருண்டிலும் வைபவமாலை 18 ம் நூற்ருண்டிலும் தோன்றிய நூல்கள். அந்நூல்களிலே அமைச்சர் புவ னேகவாகுதான் நலமிகு யாழ்ப்பாண (நல்லை) நகரிகட்டினன் என்று சொல்லப்பட்டிருக்கே 20ம் நூற்ருண்டில் வாழ்ந்த இப்பிறர் அந் நூல்கள் கூற்றைப்பிழை. என்பதைத் தம் கைக்கண் உள்ள பிற முடிபு சுட்டும் நற்சான்றுக்களால் மறுத்த பின்னர்தான் வேறென்று சொல்லக்கடவர். அவர்க்குப் பிறிது சுட்டும் சான்று கிடைக்காவிட்டால் அவ்விருமாலைகளும் சொல்வதிற்ருன் உண்மை இருக்கென்று துணிந்த வராய் அவைகளை ஒப்புக் கொண்டு அப்பாலே தம்நூலின் ஏனைய பகுதி களைச் செய்யக்கடவர். இவரோ தங்காலத்துக்கு முன்னுள்ள இவை க-ா எடுத்துக் காட்டாது விட்டமை அவரது தோல்வித்தானத்த்ையும் அவர்கள் ஆராய்ச்சி வரம்பும் மூறையும் பின்பற்ருதவர் என்று விளங்கிக் கிடக்கிறது.

28. நல்லூர் இராசபரம்பரை
தலைநகர் வரலாற்றில் கனகசூரிய சிங்கையாரியன் கி. பி. 1450 ம் ஆண்டளவில் அரசு புரிந்தானக. அக்காலையில் கோட்டை அரசனகிய செண்பகப்பெருமாள் படைஎடுத்துவந்து அவனை வென்று கொண்டானுக. தோல்வி கொண்ட கனகசூரியன் இந்தியாவுக் கோடிப்போக செண்பகப்பெமாள் அந்நகரில் இருந்தரசுபுரியும்ம் நாளில் கோட்டை இராச்சியத்தைப் பெற்று அவன்முடிசூடும் நோக்கமாக அந் நல்லூரில் விஜயவாகு என்பவனை நியமித்து அரசாட்சி செய்யும்படி வைத்துச் சென்ருனுக அப்பால் தோற்ருேடிப்போன கனகசூரியனும் பிள்ளைகளும் 1467 ம் ஆண்டில் நல்லூருக்குப்படை எடுத்து வந்து விஜயவாகுவைக் கொன்று அத்தலைநகரில் ஆட்சிபுரிந்தார்களென்றும் கண்டாம். இனிமேல் கனகசூரியனுக்கு முன்னும் பின்னும் அத் தலைநகர் வரலாறு அறிதல் வேண்டும் ஈண்டு அவனுக்கு முன்னுள்ள வரலாற்றை அறிவாம். கனகசூரியன் இருந்த தலைநகரம் யாது அது அவனுக்குத் தந்கையசல் முடிசூட்டப்பட்டது இப்படியே தந்தை ஆள்வதும் மகனுக்குமுடிசூட்டுவதுமாக ஆதி அரசன் சிங்கை, ஆரியன் வரைதந்தை முன்தந்தையாக கி. பி 948 ம் வரை போயிருக்கு எனவே ஆதிச்சிங்கை ஆரியனில் இருந்து கனகசூரியன் வரை அட் வணப் படுத்தினுல்
ஆதிச்சிங்கையாரியன் கி. பி-948 குலசேகரசிங்கையாரியன் குலோத்துங்க சிங்கையாரியன் விக்கிரம சிங்கையாரியன் ேைராதய சிங்கையாரியன் மார்த்தாண்டசிங்கையாரியன் குணபூஷணசிங்கையாரியன் 8. விரோதய சிங்கையாரியன் s ulu 6J 6Frši GM s u urrifuusir -- 10. குணவீர சிங்கையாரியன் 11. கனகசூரியசிங்கையாரியன் கி-பி. 1440 1450
1

Page 66
I I
இவ்வளவு அரசர்களும் நல்லூரிலே செண்பகப்பெருமாள் படை எடுப்புவரையும் அரசாண்ட அரசர்கள் பிறர் கவிங்க மாசுனேயே முதல் அரசனுக வைத்து அவன் பரம்பரைதான் குலசேகரன் முத லான அரசர்கள் என்று அட்டவணேப்படுத்தியிருக்கிறார்கள் இந்நூலி லிலே ஆதிச்சிங்கை ஆரியன் பாண்டிமழவன் கூட்டிவந்த சோழ இராச குமாரன்தான் முதல் அரசன் என்று நன்கு விளக்கப்பட்டிருக் கிறது.
11ஆவது அரசன் கனகசூரியன் கி. பி. 144 பிம்ஆண்டில் அரசை ஆரம் பித்தான், ஆணுல் 98 தொடங்கி 1440 வரையும் 10 அரசர் ஆண் டார்கள். ஆகையால் அவர்கள் ஆட்சிக்காலப் 98 தொடங்கி 1440 வரையும் 492 ஆண்டுகளாகும், அதஃனப் 10 ஆலே பிரித்தால் ஒரு வனுக்கு 49 ஆண்டுவரை ஆகிறது செகராசசேகரமாஃப் ஆராய்ச்சி யால் மன்னர்கள் பெயர்கள் வெளியாகவில்லே. என்று அறியப்பட லால் அதனை 14ஆல் பிரித்தால் 35 ஆண்டுகள் ஆகின்றன். இது ஒரு வரின் ஆட்சிக்காலச் சராசரிக் கணக்காகும்? இக்கணக்கே சரி. நிற்க பிறர் சிங்கை ஆரியன் பரம்பரையைக் கலிங்கமாகன் பரம்பரை யாகப் பிழையாக எழுதிவிட்டார்கள் அதனூலேயே ஆட்சிக்காலத்தை 300 ஆண்டுகள் பின்னுக்கு வைக்கிருர்கள். இங்கே சிவகைஆரியன் வரம்பரையாகக் காட்டப்பட்டிருக்கிறது. இவர்கள் ஆட்சிக்காலம் முன்னர்த் தனித்தனியாக வெளியாகவில்லே.
செண்பகப் பெருமாள் (சிங்கள அரசன்) கி-பி. 1450-1467 பரராச சேகரன் கி.பி. 167-1819 卢凸岛、 岛一L岛,T519一1561 இவ்வளவு அரசரும் போர்த்துக்கேயர் படை எடுப்புக்கு முன்
சுதந்திரமாய் வாழ்ந்த அரசர்கள்,
இவ்வட்டவனே. (யா, வை. வி. பக். 109-110)
காசிநயினுர்
பெரியபிள்ளே
புவிராசபண்டாரம் எதிர்மன்னசிங்கம் 1591-1818 சங்கிலி குமரன் கி. பி 1618-1820
என்னை இச் செ. இ.காரர் சு. ஞா க்காரர்கலிங்கமாகன் ஒருவன் வந்ததாகப்பாவ&னபண்ணி அவன் மேலே யாழ்ப்பாணத்தலே நகரை வைத்துத் தலைநகர்காலத்தை 300 ஆண்டுகள் குறைத்து விட்டிட் டார்களே. கி பி 10ம் நூற்ருண்டாரம்ப தஃலநகரை பதின்மூன்ரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நூற்றுண்டாக்கிவிட்டார்களே நிற்க. கலாநிதி சி. பத்மநாதன் அவர்கள் வெளியிட்ட வன்னியர் என்னும் நூலின் யாம் பார்சிக் நேர்ந்தது. அதிலே யாழ்ப்பாணத்து நல்லூரில் ஆட்சி செய்த பரராச சேகரமகாராசா சிதம்பரத்துக்குப் போய் மடம் ஒன்று கட்டி அதில் சூரியமூர்த்தித்தம்பிராஃன நியமித்து சிதம்பர நடேசருக்குப்பலவகைத் தான தருமங்களேச் செய்திருக்கிருன் அத்தரும சாதனங்கஃனப் பண்ணிய காலம் டிெ நூல் பக். 70-75 வரையில் விளங்கப்படுகின்றது, அக்காலம் செப்பேட்டில் உள்ளபடியும் திருந்திய வாசகப்படியும் சானி வாகன சகாப்தம் தொழாயிரத்து நாற்பத்துநாலு (1744)ம் ஆண்டின் மேற் செல்லாநின்ற சுபசிருது வருடம் தைமாதம் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. அது கொண்டும் நல்லூர்த் த&லநகர் ஆரம்பம் கி-பி 948 சரி என்று தோன்றுகிறது என்னேயெனில் அது கிறிஸ்தாப்தம் t4 +78 = 1022 ஆகிறது. அப்படியானுல் அது நல்லூர்த்தலே நகரம் சுட்டிய 1222-948= 74 ஆண்டுகளுக்குப்பின் ஆனபடியால் அத்
தானம் செய்தவர்கள் ஆதிச்சிங்கையாரியனின் 3வது பாட்டனுகலாம்
I

Page 67
29. தலைநகர் ஒன்று பெயர்கள் மூன்று
ஆதிச் சிங்கையாரியகுல மன்னர் பரம்பரை பரம்பரையாக போர்த்தர் படை எடுப்பில் தோல்விகாணும் வரைக்கு அதாவது கி.பி. 1620 வரைக்கும் அதன் பின்னர் அரை நூற்கு சிண்டுக் காலம் விர அப்போர்த்தரின் கீழ் சிற்றரசர்களாகவும் இரு ந் து ஆட்சி புரிந்த தலைநகரம் ஒன்று. அத்தலே நீருள்ளும் அவர் இருந்து ஆட்சி புரிந்த களமும் ஒன்று. அதாவது அவர்கள் நல்லுரரை விட்டு வேறேர் இடத்திலோ அன்றி நல்லூரில் வெவ்வேறிடங்க ளிலோ தலைநகர் அமைத்து ஆட்சி புரியவில்ஃவ. ஒரே ஒரு இடத்தில் தான் இருந்து ஆட்சி புரிந்திருக்கிறர்கள் அந்த ஒரே ஒரு இடத் தான் நல்லுரர். ஆங்கே தஃவநகர் அவர்கள் அமைத்தது சி-பி. 948 ல், போர்த்தர் அதிகாரம் முடிந்தது கி-பி. 1658 வ"ை . எனவே சிங்கை ஆரியர் குலத்தவர் ஆட்சி நல்லூரிலே (948-1658) உத்தேசம் 710 ஆண்டு வரை. இக்கால எல்லேயிலே அத்தலே நகர் க்கு அதுபெற்ற வரலாறு காரணமாகவும், வெவ்வேறு சார்பு காரணமாகவும் அந் நல்லுரர் நகர்க்கு, நல்லூர் நகர் என்றும் சிங்ாக நகர் என்றும், யாழ்ப்பானநகர் என்றும் பெயர்கள் வந்திருச்கின்றன.
இவைகளில் சிங்கைநகர் என்னும் பெயரை எடுத்துக் கொண்டு அது ஒரு தனி நகரபொன்றும் தடக்கிரசிங்கனுர் பருதப்பிாவாக வல்வியும் மாற்றியமைத்தவல்லிபுரச்செங்கடசுநகர்ப்பழங்கட்டிடக்கை வேற்றுமை தெரியாமல்மட்டிட்டுக் கொண்டு அதுதான் சிங்கை நகா சென்று எழுதி பrவை.வி.காரரும். யா, ச. காரரும், A. காரரும் (கழுதையைக் குதிரையென்று விளக்கம் செய்து விட்டதுபோல்) விளக்கம் செம்து விட்டனர். அவர்களைப் பின்பற்றி வேறும் பல நூலாரும் எழுதி அவ்வாறு விளக்கம் செய்து விட்டனர். இன்று வரையும் இவ் விளக் சும்தான் இந்நாட்டிலே இருக்கின்றது.
யாழ்ப்பாணத்து நல்லூரிலே இச்சிங்கை ஆரியகுலத்தினர் வாழ்ந்த ஒரு சனமே சுண்டு பிடிக்கப்பட்டதன்பி தள் ஒர்க் தலே நகர்க்களமென்ன ஒன்றும், சிங்கைநகர்க் களமென இன்னுெ ன்றும், ாழ்ப்பான நகர்க்களமென வோருென்றும் கண்டுபிடிக்கப்படவில்லே
d
 
 
 
 
 
 
 
 

நல்லூர்ப் பெயர் அத்தலநகர்ச்கு உாரால் வந்தது. சிங்கைப் பேர் இடுகுறியால் வந்தது நல்லூர் யாழ்ப்பான நாட்டில் உள்ள ாாரணத்தினூலே அத்தொடர்பிலே யாழ்ப்பாணப் பெயர் வந்தது. இன்னும் அம்முப்பெயர்களைப் பற்றி அறிவாம். செகராசசேகரன் ஆஃணப்படி பண்டிதராசரால் இயற்றப் பெற்ற தட்சணகைலாய புராணத்தில் இவனைப்பற்றிக் கூறுமடத்து.
"அந்நாட்டரசன் ஆரியயகோமான் . சிங்கையாதிபன் சேதுகாவன் சிங்கையாதீபன்' இது சிங்கைநகர் அரஈனென்றவாறு "செகராசசேகரம் சிங்கைதங்கும்" (செசே.மா. செ135) "சேவளிதுவசன் சிங்கையெங்கோமாள் செகராசசேகரன்" (ஷ். செ. 5ל( செயம் பெறுசிங்கைநாடன் செகராசசேகரன்ருன்" (டிெ நூல் அங்காதி பாதம்) இவ்வாறு நல்லூரில் இருந்தரசாண்ட ஆரியஅரசர்க்குச் சிங்கைஆரிய என்று பெயர் வருகிறது. அன்றியும் நல்லூரில் பிறந்த முதலாம் மன்னனுக்கு "குலசேகரசிங்கையாரியன்" என்று பெயர். இதிலே குவ சேகரன் இடுகுறிப்பெயர். சிங்கை நகர்ப்பெயர் ஆரியர் குலப்பெயர் இவ்வான்றல் நல்லூரில் இருந்த சிங்கைஆரியர் அனைவரும் சிங்கை நகரத்தரசர்களேயென்றறிக
சிங்கைநகர் நல்லூரிலுள்ளது - நல்லூர் யாழ்ப்பாணத்துள்ளது இத் தொடர்புகளாலே. ஒரு களத்திலுள்ள தலைநகர்க்கு மூன்று பெயர் வந்திருக்கின்றது. என்க,
"நலமிகு யாழ்ப்பான நகரிகட்டுவித்து நல்லேக் குலவியகந்த வேட்குக் கோயிலும் புரிவித்தானே" இடஒற்றுமையாக கைலாய மாலேயால் நல்லூர்நகர் யாழ்ப் பான கரி என்று சொல்லப்பட்டது. "திருமருவு யாழ்ப்பான நாட்டை ஆண்ட சிங்கையாரியர்குலம்' இதிலே நல்லூரில் சிங்கை நகரிலிருந்தரசாண்ட சிங்கையாரியரை யாழ்ப்பான நாட்டை ஆண்ட சிங்கையாரியர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பரராசசேகரன் திருப்பணிகூறும் பட்டயத்திலே "யாழ்ப்பாணம் இராச்சியம் பண்ணிஇருந்த பரராசசேகர மகாராசா அவர்கள் சிதம்பரத்துக்கு வந்து சிதம்பரேசர் தரிசனம்பண்ணி (வன்னியர் பக் 73)
சிதம்பரத்திலே தாமம் செய்தவன் பரராசசேகரன் அப்பரராசசேகரன் சிங்கை நகரரசன் , அன்றியும் நல்லூர் சீரான் அல்லவா? அவன் யாழ்ப் பானஅரசன் என்று அப்பட்டயத்திலே எழுகிக் கொடுத்திருக்கிருள் அல்லவா? ஆகையால் ፵ኃኟዃ கனத்திலுள்ள தஃலநகர்க்கு மூன்று பெயர்கள்ளந்தமை காண்க. அக்களமே ஆதிச்சிங்கை ஆரியன் தலைநகர் அமைத்ததும் அத்தலைநகரே கனகசூரியன்வரை ஆட்சிபுரிந்ததும் செண்பகப்பெருமாள் வென்றதும் வென்று மீண்டும்

Page 68
பின்னர் கனகசூரியன் மீண்டும் வென்று ஆட்சி புரிந்ததும், சங்கிலி குமரன்வரை ஆட்சிபுரிந்ததும் இறுதியில் போர்த்துக்கீசர் வென்ற தலைநகர் இருந்தகளமும் இதுஎன்க. இனிமேல் அக் களம் இருந்த இடங்கஃனக் காண்பாம்,
பழையகோட்டை அமைந்த நிலங்கள்தான் சங்கிவித்தோப்பு இது சங்கிலியன் தலநகர் மாத்திரம் இருந்ததல்ல. அன்ை முன்னுேர் தலைநகரமும் அதில்தான் இருந்தது. இறுதியில் சங்கிலியன் இருந்ததான் அது நிலமான பின்னர் கி. பி-163 வரை தோம்பெழுதப் படும்போது சங்கிலியன் பேரில் பதியப்பட்டது. அவ்வாறே பண்டார
nாளிகையும்
யமுளுவரி கி. பி. 948 வரை வெட்டப்பட்டது. அது இப் பொழுதும் இருக்கிறது. அது 1000 வருடங்களுக்கு முற்பட்டது. கோட்டைவாசல் தோம்பு இவைகளுக்குக்கிழக்கே நாயன்மார்க்கட்டுப் பக்கமாக இருக்கிறது. முத்திரைச்சந்தை இவைகளுக்கருகே இருக்கிறது. பண்டாரக்குளமும் அருகே இருக்கிறது. வைபவமலே வடக்கே சட்ட நாதர் கோயில் தெற்கே கைலாயபிள்ளையார் (முன் கைலாய நாதர்) கோவில் மேற்கே வீரமாகா எரி அம்மன் கோவில் ஆகியவையும் கிழக்கே வெயிலுகந்தபிள்ஃளயார் கோயிலும் எல்லேகளாக பாதுகாப் பாகச கட்டப்பட்டன. (பழைய உருவம் காலத்தில் இடிபட்டபோதும் மக்கள் அவ்விடங்களில் பழைய கோயில் இருந் , வ என எண்ணேரிக் கட்டிவந்திருக்கின்றர்) ஆகையால் இல் எல்லேக்குட்பட்டது அநகராக லாம், ஆரியகுளம், அடியார்க்கு நல்லார் குளம் நாயன் ாார்க்கட்டுக் ளம் அடியார்க்கு நல்லார்வரம்பு, இராசாதோட்டம் என்பன. புறநகர்த்தானத்தில் உள்ளவைகளாகும். இன்னும் இவை கலேச்சூழ்ந்து அரசர் தொடர்பில் உள்ளநிலத் தோம்புகள் இருக்கின்றன. சங்கிலியன் சி&வ இப்பொமுதிருப்பதும் இத்தானத்திலேயே இவை அனைத்தும் சேர்த் தவைகளே அத்தலேநகர்க்களம், அத்தஃநகரைத்தான் சிங்கைத சீரம் என்றும் நல்லூர்நகரம் என்றும் யாழ்ப்பா என தகரம் என்றும் பெயர்கள் சுட்டினூர் எ ன் சு. சிங்கர் கப்பரரா கசேகரன் சிங்கைச்செகராசசேகர னுட்படச் சிங்கையாரியகுலமன்னவர் அஃன பேரும் இதிலிருந்து அரசு புரிந்தவர்களே - ஆயின் யாழ்ப டியின் யாழ்ப்பாணப்பட்டனம் வேறு. அதுவேறேர்க்களத்தில் அமைந்தது அது சிங்கையாரியர்க்கு முற்பட்டது வி-பி. 948 க்கும் முற்பட்டது.
குவினுேள் போர்த்தர்படை கொழும்புத்துறைக்கும் நல்லூ ருக்குமிடையின் சிங்கைநகர் என்னும் பெயர் எழுதப்பட்ட மதிலைத் தாண்டி வந்ததென்பதால் அந்நகர் சிங்கைநகர் என்னும் பெயரைக் கொண்டதாயும் இருந்தது. அந்தலைநகர் (கோட்டை) கிழக்கு வாச
 

7 ו I
லேக் கொண்டதாகவும் இருந்ததென்றுந் தெரிகிறது. இந் தலைநகர் தான் ஆதிச் சிங்கையாரியனுல் கட்டப்பட்டதும், அவன் தொடக்கம் கனகசூரியனின் முதலாந்தடவை ஆட்சி வரை ஒரே தொடர்பாக ஆட்சி செய்யப்பட்டதென்றும் தெரிகிறது. இத்தஃவநகர் 10ம் நூற்ருண்டில் நிர்மாணிக்கப் பெற்றதால் 11ம் நூற்ருண்டில் கி-பி. 1033ல் சிதம் பரத்தில் மடங்கட்டிய தர்ம வள்ளல் இருந்ததும், sh நூற்ருண்டில் புகழேந்திப் புலவரின் வரவை உபசரித்து அவருக்கு ஆஃன பரிசளித் தவன் இருந்ததும் கி-பி 1302 வரை செகராசசேகரமாஃலு செய்யப் பட்டதும், செய்த அம்மன்னன் இருத்ததும் கி-பி. 1450 வரை செண்பகப்பெருமாள் படை எடுத்ததும், கனகசூரியன் தோற்றதும் வென்றதும் திரும்ப 1830ல் போர்த்தர் படை எடுத்ததும் என்க. நல்லூர்த் தலைநகரின் மறுபெயர் சிங்கைநகரானதால் நல்லுரர் உண்டான போதே சிங்கைநகர் உண்டானதால் நல்லூரில் இருந்த சிங்கைநகர் வல்விபுரத்துக்குப் போனதெப்படி, நல்லூர்நகர் ஒன்றும் சிங்கைநகர் ஒன்றும் யாழ்ப்பான நகர் ஒன்றுமாக முன்று நகர்கள் இருந்தன். என்றல் ஆகாதோ என்னின்? ஆகதே. மூன்று களங்கள் அத்தலநகர் கட்டிய புருடர்கள் அந்த அரச பரம்பரை அவர் அரச பரிபாலனம் செய்த இடம் காலம் அடங்கிய வரலாறு இவைகளிங் யாதா மெபன்றும் கேட்கப்படவில்ஃபே. அறியப்படவில்லேயே, இடுகுறிப் பெயரால் சிங்கை என்றும் அதுவே இருந்த மாரின் தொடர்பால் நல்லூர்என்றும், அவை தாமே இருந்த தேசத்தின் தொடர்பால் யாழ்ப் பாண மென்றும் அவ்வொரு களத்திருந்த அந்நகரையே சுட்டி சொல்லுவார் ஒவ்வோர் சந்தர்ப்பம் நோக்கிச் சொன்னூர் என்க. சிங்ாகை ஆரியர் வங்லிபுரத்தில் இருக்கவுமில்லே. அவர்கள் அங்கிருந்து நல்லூருக்கு வரவுமில்லே. அவர்கள் கி பி. 948 தொடக்க்ம் கி-பி. 1620 வரை பின்னர்ச் சிற்றரசராக கி. பி. 1658 வரை அந்தல்லூரில் இருந்துதான் ஆட்சி புந்தார்கள்.

Page 69
30. நல்லூரில் தலைநகர் இருந்த களம் ஒன்று குலமும் ஒன்று
யாழ்ப்பானத் தமிழ் அரசர் என்று சிறப்பித்துப் பேசப்படும் அச்சிங்கைஆரிய குல மன்னரால் 7ே2 ஆண்டுகள் வரை ஆட்சிசெய்யப் பட்டதும் பிரசித்தி பெற்ற சங்கிலி மன்னனுல் இறுதியில் ஆட்சி செய்யப்பட்டதும், ஆகிய தலைநகர் இச்சிங்கை நகராம் என்க. இதனே அறிய இந்நூலின் முன்முடிபுகளே எல்லாம் மீண்டும் படித்து ஆராய்ந்து கொள்க
சிங்கையாரியகுல மன்னர் தலைநகரம் நல்லூரில்தான் அமைந்தது என்று வாதிடுவார் தம்மை நோக்கிமுன்னர் நல்லூரில் இருந்து ஆராய்ந்து சென்று அத்தலே நகரை நல்லுரரில் கண்டோம் அத்தலைநகர் சிங்சைநர் என்று வாதிடுவாரை நோக்கிச் சிங்கைநகரில் இருந்து ஆராய்ந்து அத்தலைநகர் நல்லுரில்தான் அமைந்தது. STitlj தையுங் கண்டோம். அத்தலேநகர் இரண்டும் இரண்டு வெவ்வேரு னதல்ல சிங்கையாரியமன்னன் ஒருவனுலே இலகியசகாப்தம் எண் லூற்றெழுபதில் நல்லூரில் ஒரேகளத்திலே, ஒரே இடத்திலே கட்டப் பட்ட ஒருதலைநகர்தான் என்றும் அதுதான் நல்லூரில் கட்டப்பட்ட சிங்கைநகர் என்று முடித்துக்கொள்க.
ս Աբ3:0 ஏரியே யமுளு ஏரியே உன்றன் பெருமை யாவரோ உணர்வர் மன்னிய நல்லூர் மாமுடி மன்னர் தம்மின் வரலாற்றுச் சான்றும் ஒளிர்குவை முன்னவன் சிங்கையாரிய முதல்வோன் மன்னவன் தலேநகர் வைப்பிடம் காட்டுவை அழியாமல் இனுன்ம் பல்லூழி யாக கழிய நின்றும் கட்டுரை பகர்குவை அசைக்கவோ ஆட்டவோ துரக்கவோ ஆற்று மிடுக்கா பிருந்த இடத்தினும் விலகலே ,

யமுனு ஏரிபற்றி வைபவமாலையார் பின்வருமாறு குறிப்பிடு கின்றனர். சிங்கையாரிய காராசன் நல்லூர்ப் பகுதியிலே அரசிருக் கையை ஸ்தாபிக்கக்கருதி சோதிடர் தேர்ந்து சொல்லிய நன் முகூர்த் தத்தில் அத்திவாரம் போட்டு நாலுமதிலும் எழுப்பி வாசலும் ஒழுங்காய் விடுவித்து மாடமாளிகைகளையும் கூடகோபுரங்களேயும் பூங்காவையும் பூங்காவன நடுவிலே ஸ்நானமண்டபமும், půLan - di சுபமுமுண்ட்ாக்கி அக்கூபத்தில் யமுனுநதித்தீர்த்தமும் அழைப்பித் துக் கலந்து விட்டு" (யா. வை. மா. பக். 2) என்பதில் உள்ள முப்புடைக் கூபத்தில் யமுளு நதித் நீர்த்தம் கலந்துவிட்ட ஏரிதான் இப்பொழுதுமுள்ளயமுனூரி என்றறிக. இது ஆதியிலே சிங்சை யாரியன் தலைநகர் அமைத்த வரலாற்றேடு தொடர்பு கொண்டது: இது கி. பி. 948 ம் ஆண்டளவில் கட்டப்பட்டது. இதன் & Tabl? இலகியசகாப்தமெண்ணுாற்றெழுபதமோண்டதெல்லே' என்பர். இது பல சரித்திர நிகழ்ச்சிகளைக் கண்டது. கி. பி. 1450 ம் ஆண்டுவரே செண்பகப்பெருமாள் நல்லுருக்குப் படைஎடுத்தபோதும் இதன் அழித்துக்கொள்ள முடியவில்லை. போர்த்தர் கி. பி. 1630 வரை நல்லூருக்குப் படைஎடுத்த போதும். நல்லூரை வெற்றிகொண்டு அதன் கோட்டைகள் அரண்மனைகஃன இடித்து அக்கற்களேக் கைவரிசை யாகவும் தஃவச்சுமையாகவும் எடுப்பித்துப் பண்ணேயிற்றுாறயிலே கோட்டைக3ளக் கட்டினுர்கள். அவர்களாலும் அழித்துக் கொள்ள முடியவில்ஃ.
இந்த யமுனுரியைபற்றிப் யா, ச. காரர் யா. வை. வி. காரர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இன்றுவரை யமுனு ஏரி பற்றி அவ் வைபவமாலையிற் சொல்லப் பட்ட அக்கூற்றை யாரும் மறுத்தது மில்லை. அன்றி யாதுமொரு குடிமக்கள் ஒருவர் மீதும் அதன் சரித் திரம் சொல்லப்பட்டிருக்கவில்ஃ.
தலநகரமிருத்த களம் (விளக்கம் 2)
நல்லூர்த் தமிழரசர் அரண்மனை சங்கிலித் தோப்பில் இருந் தது. (சங்கிலியன் வீதி, சங்கிலியன்சிலே, யமுனு ஏரி. வாயில் முகப்பு, பண்டாரக்குளம், பண்டார மாளிகை. கைலாயம் என்ப னவும் பிறவும் அங்கே வாழ்த்த தமிழரசர் தொடர்பிலுள்ள சின் னங்களே. சங்கிலி அத்தமிழரசனின் இறுதி அரசனுண்படியால் அவ ணுமழிந்து, அவன் கோட்டையுமழிந்து பட்டபின்னர் அவன் இருந்த நிலம் சங்கிதோப்பென்று அழைக்சப்பட்டது. அதிலே சங்கிலிமன் னனும் உறவினரும் அவன் முன்னுேரும் அரசிருந்தார்கள். என்ஃனயெனின் அரசர் அரண்மனை குடிமக்கள் வீடுபோலல்ல ஒருவர் பின்ணுெருவராக அரசு புரியும் ஒரு குலத்தவர் அவ்வொரு அரண்மனே

Page 70
யிலேயே ஆட்சி புரிந்தார் என்க. எனவே இவன் பாட்டன் கனது சூரியன் திரும்ப வந்து வென்றதும் அவனின் முன்னர் செண்பகப் பெருமான் தோற்றதும் வென்றதும் அதன் முன்னர்க் கனகசூரி யன் அரசு புரிந்ததும் அவன் மூதாதையஞன பதினுேராவது பாட்டன் சிங்கை ஆரியன் சிங்கை நகரைக் கட்டியதும் இவ்விடமே மதித்த வனங்கொள். 'வயல் செறி நல்லூர்" என்று சுட்டியதும் இவ்விடத் தைத்தான். ஆசித் தஃநகரோடு சம்பந்தப்பட்ட யமுணுரரி இங்கே தான் இகுக்கிறது. அவ்வாதி அரசன் எடுத்த i H & TELJ நாதர் இருந்த கோயில் இதைச் சேர்ந்துதான் இரு க் கிற து சிழக்கேயுள்ள கோட்டை வாசல் தோம்பில் சுட்டும் கோட்டை வாசல் இதன் கண் அமைந்துள்ள கோட்டைக்கேற்ற வாசலாகத்தான் அமைந்திருக்கிறது. அது கிழக்கு வாசல். "கொங்கெல்ட ஒவ் சிலோ Eல்" குவிருேசால் சொல்லப்பட்ட சிங்கைநகர் மதில் இதைச் சூழ்ந்துதான் போகிறது. இவ்விடத்துக்குப் பொருத்தமாக இருக்கி றது. கைலாயமாஃலயில் அமைச்சர் புவனேகவாகு கட்டியதாகச் சொல்லப்பட்ட "நலமிகு யாழ்ப்பாண நசரிகட்டுவித்து' என்பது இந்நகரையும் கட்டியதைத்தான் அவன் குலவிய சுந்த வேடடுக் கோயிலும் புரிவித்தானே' என்பதில் சொல்லப்பட்ட கந்தசுவாமி கோவில் இங்கேதான் இருக்கிறது. இச்சங்கிவியன் முன்னவனுகிய வணுய் இத்தஃத கிர்க்களத்திலே அரசு புரிந்த அரசன் ஒருவன் தன் தஃலநகர்க்குக் காப்பாக வடக்கே சட்டநாதர்கோயில் தலங்காவற் பிள்ஃளயார் கோவிலேயும் தெற்கே கைrயபிள். பார் கோயிஃவயும் கிழக்கே வெயிலுகந்தப்பிள்ளே யார் கோவிலேயும் மேற்கே வீர மாதானி யம்மன் கோவிஃவயும் கட்டினுன் என்று வைபவம" ஃபிற் சொல்லப் பட்ட அந்நான்கு கோட்டங்களுக்கும் இடையில்தான் இக்களம் அமைந்திருக்கின்றது. அக்கோட்டங்கள் இப்பொழுதும் இருக்கின்றன. அவை போர்த்தரரல் அழிக்கப்பட்டபோதும் பின்னுள்ள மக்கள் அவ்வவ்விடங்களில் கோயிலக்கட்டி வைத்திருக்கிமூர்கள். இக்களத்தி லேதான் சங்கிலிக்குப் பின்னுள்ளவர்களும் கி. பி. 1830 வரை வாழ் ந்திருக்கிமுர்கள் 16 ம் 7 ம் நூற்கு விண்டில் போத்தர் நல்லூருக்குப் படைஎடுத்ததும் நல்லூரில் இக்களம் இருக்கப்போய்த்தான் அக் களத்தை நோக்கிப் படை வந்திருக்கின்றது.
இக்களைத்தில் இருந்த அரசக்கள் தங்களே சிங்ாைநகரத்தரசர்கள் எனக்குறிப்பிட8ாலும் இந்நகரிலிருந்த அரசர் சிங்கைப் பரராச சேகரன் சிங்கை சொகரசசேகரன் என்று பெயர் வைத்ததுக்கொண்ட தணுலும் போர்த்தர்படை வந்தது சிங்கை நசர்க்கே என்து தெரிகிறது. இவர்கள் வாழையடி வாழையாக வந்த ஒரேகுலத்தவராக இருத் தலும் அறியலாம். என்க. எனவே கி. பி. 98 தொடங்கி கி பி. 1820 ம் ஆண்டுவன்று இவர்கள் ஒருதலே நகரில் வாழ்ந்த ஒரேகுலத்தினர்
 

2
இவர்கள் நல்லூரில் இருந்ததுண்மைதான் ஆல்ை களம்வேரூென்று யிருத்தல் கூடாதோ எனின் வேருெருகளம் அறியப்படவில்லையே.
அவ்வரண்மனேயின் மேற்குவாசல் கோபுரம் மாத்திரம் இன் னும் அழியாமல் இருக்கின்றது (ஆ. மு. யா. ச Li;. 70)
இக்கோபுரத்தை நாம் பன்முறை பார்த்திருந்ததுமன்றி யாம் எழுகிய அடியார்க்கு நல்லார் நூலின் முகப்பட்டையில் பதித்தும் இருக்கிருேம் நல்லூர்க் கோட்டையும் நல்லுரர்க் கந்தசுவாமிகோயில் தோற்றமும் ஒரே காலத்ததாலும், அவை இரண்டும் ஒரேசரித்திர புருடர்களாலே அமைக்கப்பட்டுள்ளனவாதாலும் அவைஷன்றனுக் கொன்று எதிர்முகமாக அமைக்கப்பட்டிருக்காதென்று கொள்க ! இத்தவேநகர் இருந்த களத்தை உத்தேசமாகக் குறிப்போமானுல் மத்தியக் களத்தில் யமுனுரி சங்கிலியன்தோப்பு சங்கிலியன்சிலே முத்தி ரை ச்சந்தை என்பன அமைந்திருக்கின்றன. நல்லுரர் வீரமா காளி அம்ான்கோவிலில் இருந்தும் கைலாயபிள்ளையார் கோவிலில் இருந்தும் கிழக்கே வெயிலுகந்தப்பிள்ளோயர் கோயில் இருந்தும் வடக்கே சட் நாதர்கோயில் இருந்தும் முத்திரச்சந்தையில் வந்து முடியும் ருேட்டுக்கள் எல்லாம் தலைநகர் இருந்த களத்தின் மேலாலேதான் வருகின்றன.
ஒரு விானிக்கு மக்கள் என்னபெயரிட்டு வழங்கி வந்தார்களோ அப்பெயரை ஒல்லாத்தர் தங்காலத்தில் பதிந்திருக்கிறர்கள் என்றும், போர்த்தர் பின்னவர் ஒல்லாந்தர் ஆதலால் போர்த்தர் காலத்திலே யும் அவ்வாறு அழைக்கப்பட்டு வந்திருக்கிறது என்றும் போர்த்தர் தான் தமிழரசர் கோட்டையை இடித்தவர்கள் ஆதலால் அவர்கள் இடிக்கும் போதே அக்கோட்டை இருந்தி இடம் அதுவென்றும் தேர்ந்துகொள்க
அப்பால் சிங்கையாரியகுலம் பல கோட்டைகளே வெவ்வேறு இடங்களில் கட்டிஆட்சிசெய்யவில்லே ஆதிச் சிங்கையாரியன் தொடக்கம் (கி. பி. 948 இறுதிச்சங்கிலியன் காலம் கி. பி. 1620 வரை ஒரே ஓஃநகரிலே ஒரே களத்திலே ஒரே கோட்டையிலேதான் ஆட்சிபுரிந் தார்கள். அந்நகர் தனக்கிருந்த தொடர்பு சம்பந்தமாக நல்லூர் நகரென்றும் சிங்சைநகர் என்றும் யாழ்ப்பாண நகர் என்றும் அழைகப் பட்டிருக்கிறது. இவ்வுண்மை முன்னும் பின்னும் காணலாம்.

Page 71
31. நல்லூரும் சிங்கைநகரும்
சிங்கையாரியன் வந்து நல்லூரில் தலைநகரைக்கட்டி அதற்குச் சிங்கைநகர் என்று பெயர்வைத்து அரியாசனம் ஏறி இருக்கின்றன். வந்த இராசகுமாரன் அரசனுனயின் பெற்றபெயர் சிங்கையாரியன் அவன்அரசனுண்தும் சிங்கையாரியன் என்று பிரகடனப்படுத்திக் கொண் டான். கைலாயமாஃப் அவனேச்சிங்கையாரியன் என்று பாடியது அவன் அரியாசனம் ஏறினபின் பாடப்பட்டபடியால் என்க.
என்னேபெனின் அவனுக்குப்பின் அரசாசனம் ஏறிய அவன் மகலுக்குக் குலசேகரசிங்கை பாரியன் என்றுபெயர். இங்கே குலசேகரன் இடுகுறிப்பெயர். சிங்கை நகர்ப்பெயர். ஆரியர் சாதிப்பெயர். சிங்கை பாரியகுல இராசபரம்பரை நல்லூரில் இருந்து தான் தோன்றி யிருக்கிறது. இந்நுட்பம் உணராமல் பொவ்தேறுவையை விட்டு எங்கேயோ தொலேவுண்ட கலிங்கமாகன் யாழ்ப்பானம் வந்தான் என்றும், அவனே வல்லிபுரத்தில் சிங்கைநகரைக்கட்டினுன் என்றும் புரை பாடாக மொழிந்தனர் பிறர்
+ஆ. மு. யா. ச. 17 ம் பக்கத்தில் "இராசகுமாரன்" பாண்டி மழவன் முடிதூக்கிக்கொடுக்க கிங்காதரஐயரால் விதிப்படி மகுடமும் சிங்கைஆரியச்சககரவர்த்தி என்றும் பட்டமும் rட்டப்பட்டான் என்றுரைத்திருப்பது இவ்வுண்டையை மேலும் நிச்சயப்படுத்துகிறது.
1. வல்லிபுரத்தில் சிங்கைநகர் கட்டிய வரலாறில்லே. 2. வல்லிபுரத்தில் சிங்கையாசியர் பாவரேனும் வாழ்ந்த
குறிப்புக்களில்லே,
3. சிங்கைஆரியர் யாரேனும் வல்விபுரத்தஃநகரை விட்டு நல்
லுரருக்கு தலேநகரை மாற்றி அமைத்த செப்தியும் இல்லே. 4. செண்பகப்பெருமாளும் கனகசூரிய சிங்கையாரியனும்
வல்லிபுரத்தில் பொருதிய வரலாறுமில்லே. 5. கனகசூரியன் தோற்ருேடிய நகரம் ஓர் இடத்தில் இருந்தது
வென்றது வேருேர் இடத்தில் இருந்தது என்றுப் சொல்லப் 32

படவில்லை இங்ங்ணம் இல்லாதவைகளே உண்டென்று நிச்ச யிக்க யா, ச. காரர் யா. வை. விகாரர் ஒரு ஆதாரமும் காட்டவில்லே, அன்றியும் அவர்கள் கருத்துப்படி அவர் சொல்லும் சிங்கை நகரம் 1450 க்கு முறபட்டதானுல் (1450 - 948) 500 ஆண்டு வரை இருந்த அத்தஃநகரம் சிங் கையாரியரின் வாழ்வின் உள்ள ஒரு குறிப்பையுங் கொடுக் காமையோடு துறைமுகம் சம்பந்தப்பட்ட ஏதாவதொரு குறிப்புங் கொடுக.கவில்லை
மேற்படிநூலினர் கைலாயமாஃல வைபவமாஃபினால் சொல்லப்பட்ட உண்மைகளே உணர்ந்து கொள்ளாமையாலே, அன்றியும் ஒருபகுதி யைப் பிழையாகவும் உணர்ந்து கொண்டமையாலே வல்லிபுரத்திலே அதாவது வல்லிபட்டனமாகிய செங்கடசு நகரிலே கி-பி. 1450க்கு முற்பட்ட நல்லுரர் வரலாற்றை எழுதி அதனைச் சிங்கைநகர் வரலாறு ான்றுபெயர்வைத்துக் கொண்டார் என்க. எனவே, சுெங்கடக நக ரைத் தெரியாமல் விட்டார். சிங்கைநகரையும் தெரியாமல் விட்டார். இவ்வுண்மையைமேன் மேலும் காண்பாம்.
வல்லிபுரத்திலே சிங்கை நகரைக் கண்டவர்கள் ஆதிச் சிங்கை யாரியன் தொடங்கி இறுதிக் காலத்தில் நல்லூரில் ஆட்சி பண்ணிய பிரபல மன்னனு ன சங்கிலி மன்னன் வரையுமன்றி அவன் பிற்சந்ததி யாரராய்ப் போர்ந்தர் காலத்தில் சிற்றரசர்களாய் இருந்தாருங் கூடச்சிங்கையாரிய குல அரசர்தாமென்றும் அறிக.
செண்பகப்பெருமாள் படை எடுத்த இடம் நல்லூரா, அல்லது இவர் சொல்லும் வல்லிபுரத்திலுள்ள சிங்கை நகரமா அது நல்லூரே
1. செண்பகப்பெருமாள் தமிழ்ப்படைகளேக் கொன்று இரத்தாறு ஒடச்செய்த இடம் நல்லூப் என்பதாலும் (யா. ச பக். 310)
2. செண்பகப்பெருமாள் நல்லூரை வென்று ஆட்சிபுரிந்த காலேயில் கோகில சந்தேசம் அலலது குயிற்றுது என்னும் தூதுநூலினே பாடியவர் நல்லுரை வெற்றிகொண்டு நானுாேத்தி பொருந்த வாழுகின்ற சம்புமால் குமாசேந்திரனுசகு (செண்பகப்பெரு மாளுக்கு) எனப்பாடி இருக்கும் வகையில் அந்நல்லுர் சொல் லப்படுவதாலும் செண்பகப்பெருமாள் படைஎடுத்துப் போர் பொருந்திய இடம் நல்லூரே.
3. செண்பகப்பெருமாள் பொருதியது கனகசூரியனுடன் என்று சொல்லப்படுவதால் கனகசூரியன் நல்லூரில் ஆட்சிசெய்யும் போதுதான் செண்பகப்பெருமாள் அங்குபடை சடுத்தான்.

Page 72
2d
நல்லூரும் சிங்கை நகரும் பகுதி 2 1
வைபவ மாலே யார் "பொன்பற்றியுயூர் வேளாளன்பாண்டிமழவன் என்றும் பிரபு மதுரைக்குப் போய் சிங்கையாரியன் என்னும் சூரிய வமிசத்து இராச குமானேக் கண்டு யாழ்ப்பானத்தின் நிலபரத்தை அறிவித்து இவ்யாழ்ப்பாணத்தை அரசாட்சி செய்ய வரவேண்டும் மென்று கேட்க, சிங்கையாரிய இராசன் மறுத்துப் பேசாமல் பாண்டி மழவன் கேள்விக்குடன்பட்டு புவனேகவாகு வென்னும் மந்திரியையும் கூட்டிக்கொண்டு வந்து யாழ்ப்பானத்தில் வந்திறங்கி நல்லூர்ப் பகுதியிலே அரசிருக்கையை ஸ்தாபிக்கக் கருதிச் சோதி டர்ன் தேர்ந்து சொல்லிய நன்முகூர்த்தத்தில் அத்திவாரம்போட்டு
வ3ளத்தும் கட்டுவித்து . . . திலகவதியார் என்னும் பத்தினி டனே திருசுப் பிரவேசம் செய்து வாழ்ந்திருத்தான்." (யா வை: மாவே, பக். ஐ-ே27)
எனவே நல்லூரிலே சிங்கை ஆரியன் கிருகப் பிரவேசம் செய்து வாழ்ந்திருந்தான் என்க. அவ்வாறிருப்ப, இந் நல்லூர் அர்சனுகிய இவன் பரம்பரையில் பின்வந்த செகராசசேகரனத் தட்சணகைலாய
புரா &T, TT rif
"அந்நாட்டரசன் ஆரியர்கோமான் விங்கையாதிபன்' என்றும் இந் நல்லுரரிவிருந்த செயராச மன்னர் இயற்றுவித்த செகராசசேகர ா8லயில் அவ்வியற்றறுவித்தோனேக் குறிக்கும் இடங்களில் "செகராச சேகரன் விங்,மேவு மாரியர் கோன்" (செ. சே. மா. செ. )ே
திங்கையெங்கோமான்" (செ. சே. மா. செ. 86) இங்கேயும் சிங்கைநகர் அவ்வரசர் இத்தொடு படுததிச் சொல் லப்படுவது காண்க. இச்செகராசசேகரன் -ெபி. 948 வரை ஆரம்ப தக் நகரமைந்த கூளங்கை மன்னனின் பின் அவன் பரம்பரையில் வந்த 3- 1:12-1323 வரை அரசாண்ட மன்னன் அல்லவா?
சிங்கைப் பரரசசேகரன்
ரிங்சைச்செகராசசேகரன் என்னும் இவ்விருவரும் நல்லுரில் இறுதிக்காலத்திருந்த அரசர்களல்லவா?
இங்கே மேற்காட்டிப் போந்தவைகளால் சிங்கை என்பது ஒரு இடப் பெயரென்று ஐயமற விளங்குகின்றது. அவ்வாருயின் அது நல்லூர்கண்டையில் உள்ளதா? அல்லது நல்லூரைத் தன்னகம் கொண்ட பெரியனுரா? நாடா அவ்வாறு சொல்லவும் எவ்வாரு குறிப்பும் கிடைக்கவில்லேயே பின் என்னே?
சிங்கை என்பது தலேநகர்க்கு வைக்கும் ஒரு பழம்பெயர் "வாழ்விங்கையுங் கொங்கு மண்டலமே' எனக் கொங்குமண்டல ச கத்திலும் குறிக்கப்பட்டிருக்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I 5
ஆரியர் என்பதன் பொருள் பூசிக்கத் தக்கத்வர், மேலோர் பிராமணர், ஆரிய மொழியுணர்ந்தோர் என்பனவன்ருே? ஆனல் நல்லுரரசர்கள் சோழ குலத்தவர், பூனூல் தரித்தவர் இராமேசுவரப் பிராமணருடன் பின் விவாகம் செய்தவர்.
எனவே சிங்கை ஆரியர் என்ருல் சிங்கை நகரத்தை ஆளும் மேலாஞ்சாதி அரசர் என்பது பொருள் ஆகையால் நல்லூரில் த&லநகர் கட்டிக்கிருகப்பிரவேசம் செய்த அரசர், தாங்கட்டியப அந்நகர்க்குச் சிங்கைநகரம் என்னுபெரபவர் வைத்துள்ளனர் என்று தெரிகின்றது. அவ்வாட்சிப்பீடமெறி வழி வழி அரசு புரிவோர்க்கெல்லாம் சிங்கை ஆரியனன்று சிங்காசனப்பட்டப்பெயர் வருகின்றது.
இவ்வாரியச் சக்கரவர்த்திகள் சிங்கை நகரிலிருந்து அரசு புரிந் தமையின் சிங்கையாரியச் சக்கரவர்த்திகள் என்று அழைக்கப்பட்ட est.
எனவே சிங்கை என்னும் பெயர் ஒரு நகரத்தின் பெயர்தான் என்று தேர்ந்துகொள்க. நல்லூர் அந்நகர் கட்டிய :Iரின் பெயர்சிங்கை ஆரியகு மன்னர&னவரும் நல்லூரில் கட்டப்பட்ட அவ்வொரு தலே நகரிலிருந்துதான் ஆட்சிசெய்தார்கள் என்றும் சொன்னுேம் இங்கே அத்தலை நகரின் பெயர் சிங்கை என்றும் சொன்னுேம், இவற்றை யாங்கனணும் மறவற்க்,
பிறர்சிங்கை நகர் பிறிதோரிடத்தில் இருந்த தென்றும் நல்லுரர் நகர் நல்லூரிலிருந்ததென்றும் அச் சிங்கை நகரப்பரம்பரை யினர், பின்னர் பழைய ஆஃப் நகரம் பழாய்ப்பேனபடி பால் நல் லூரில் வந்து குடியேறினர் என்றும் சொல்லியுளளார். ஏன் அப் பழைய தகலநகரம் பாழல் ய்ப்போனது என்றும்சொல்லவில்லே நிற்.
என்னே பிறரும் நல்லூர் நகரம் என்ருென்றும் வ்ெசிை நகரம் என்றென்றும் இருந்ததாகத்தானே சொல்லுகிருர்கள். நீவிச் சொல்லும் புது: பதின் என்ஃன என்னின், |ப்பிறர் வெவ்வேறு இரண்டிடத்தில் இரண்டு தஃபநகரங்கள் இருந்த எண் என்னுரைக் கின்றனர். அவற்றுள் ஒன்று நல்லுரரின் உள்ள நல்லூர்நசீரம் மற்றது வல்லிபுரத்தில் சிங்கைநகரம் என்கிருர்கள் யாம் சொவதாவது நகரம் ஒன்று. க்ளமுபொன்று சுட்டிக் குறிப்பிடும் பெயர்கள்தான் இரண்டு. ஒன்று அந்நகரம் இருத்தி நல்லுர் என்றும் அளர்ப்பெயராலே சுட்டுகிருேம் ஒன்று அந்நகர்க்கு அரசர்வைத்த சிங்கை என்னும் பெய ராலே சுட்டுகிருேம். என்பதே.
அதாவது நல்லூரில் கட்டப் பட்டநசீர்க்குச் சிங்கைநகரம் என்பது அரசர் வைத்த பெயர் என்க. நல்லுனர் அந்நகர் இருந்த ஆார்ப் பெயர், சிங்கை நகர்ப் பெயர். சிங்கை என்பது முதலில் அரசர்

Page 73
1. F
வைத்த பெயர். சிங்கை நகர் சிங்கை என்னும் பெயருடைய நகரம் ான்றும், நல்லூர்நகர் நல்லூர் என்னும் ஊரிற் கட்டப்பட்ட நகர் என்றும் பொருள் கொள்க,
கைலாயமாஃல அவ்வாதி ஆரியன் எங்கே தஃலநகரைக் கட்டி ஒன் என்பதை விளக்குவான் "மதித்த வளங் கொள் வயல் செறி நல்லூரில்" என்றும் சொல்லி இருக்கு ஊர்ப்பெயரால் சொல்லப்பட் ருக்கு. வைபவமாலையார் "யாழ்ப்பாணத்தில் வந்திறங்கி நல்லூர்ப்பகு தியிலே அரசிருக்கையை ஸ்தாபிக்கக் கருதி". என்பது முதலாக அவ்வாறு நல்லூரில் தவநகர் சுட்டினுன் என்கின்றனர். இவர் சிங்கை நகர் நல்லூரில் மறைந்த (கி.பி. 1658) ஒரு நூற்றுண்டின் பின் தம்நூல் எழுதியுள்ளார். அப்பொழுது சிங்கை நகர் மறைந்து நல்லூர் நில விட்டது. எனவே தலேநகர் சுட்ட முந்தியும் அவ்விடம் நல் ஜரர். தலைநகர் மறைந்தபின்னும் அவ்விடம் நல்லூர் என்கி
அரசர் அவைக்களத்தில் இருந்து பாடினுேகும், அவைக்களத் துத்தோன்றிய நூல்களாற் பாடினுேகும் அந்நகரைச் சிங்கை என்னும் நகர்ப் பெயரால் சுட்டினர். ஆயின் கைலாயமாஃபிக்காரர் வைபவ மாஈலக்காரர். அக்கட்டியதஃல நகர்க்குச் சிங்கை என்று பெயர் வைக் கப்பட்டது. என்றுவிளக்கம் சொல்லவில்லே. அவர்கள் இவ்வாறு பிரித்து நோக்கவில்லேப் போலும், அவர்கள் சுட்டப்பட்ட இடத்தின்மேலேயே
அவ்விடவரலாற்றை வைத்து மொழிந்தனர்.
கனகசூரியனும் மக்களும் வந்து குடியேறியது செண்பகப் பெரு மாள் இருந்த இடத்தில், கனகசூரியன் முன்னிருந்ததும் பொருதிய இடமுமொன்று அவன் போர் புரிந்த இடம், சிங்கை நகரம். எனவே அவன் முன்ஆேர் பதின்மரும் இருந்தரவி. செய்தவிடமும் அது விஜய கூழங்கை கிருகப்பிரவேசம் செய்த இடமும் அது. அவன் கட்டிய தலே நகரல்லவா எனவே விஜயகூழங்கை அத்திவாரம் போட்டதலே நகரம் சிங்கைநகரம் எனவே.
அத்திவாரம் போடப்பட்டது கனக சூரியன் வரை இருந்தது செண்பகப் பெருமாள் பொருதியது. கனகசூரியன் திரும்பப் பிடித்தது சிங்கைப்பரராச செகராசசேகரங்கள் இருந்தது எனவே சங்கிலி இருந்ததும் அச் சிங்கை நகரம் ானவே போர்தர் வென்றது சிங்கை நகரம் எனவே போர்தர் போரில் வென்றபின் மறைந்த சங்சிலி இருந்த தலைநகரம்தான் பின்னர் அழிந்து நிலமாகஇருப்பு சங்கிலியத்தோப்பு என்று நாமமிட்டுப் பின்னர் வழங்கி வரும் நிலம்.

எனவே ஒரே இடத்தில் ஒரேகாத்தில் இருந்த தலநகர்க்கு நல்லூர் நகரென்றும் சிங்கை நகர் என்னும் இருபெயர்கள் பேசப் பட்டுவிட்டன.
எனவே வல்லிபுரத்தில் சிங்கை நகரை வைத்து நூல் எழுதி யது பிழை இவ்வளவில் கைலாயமாலே வைபவமாலேக் கூற்றுக்கள் In Sir Gao L I EL T Siv&rA' LU r. சிங்கைநகர்ச் சுவர்
பறங்கிக்காரர் கி.பி. 1500ல் கொழும்புத்துறையிலிறங்கி நல்லூரைச் சருவிய காஃவயில் சிங்கைநகர் என்னுப் பெயரோடு ஒர்பெலத்த அரணிருந்ததென பாதர் குவேருேஸ் கூறுகின்றமை" Conquista P, 357) (Lt. Ganar. Go. Luá. 68) "யாழ்ப்பாணத்தில் போாத்தரின் இரண்டாம் படை ஏற்றம் கி. பி. 1891ல் நடந்திது என்பர். சு. ஞா. புவிராசனின் அபசெயம் என்பதில் வன. சு சூா. அவர்கள் மேலும் சொல்லுவதாவது " 28ந் திகதி அதிகாலே பறங்கியர் தம்சமப நிஷ்டைகஃன முடித்துக் கொண்டு குருமார் ஆசி சொல்ல எழுந்து நல்லூரை நோக்கி நடத்தலும் வழியில் (யாழ்ப்பாணத்துப் பூர்வதஃநகரின் ஞாபகார்த்தமாய்ப் போலும்) சிங்கை நகர் பெயர் தரித்த முள்வேலி அரணில் தமிழர் சத்துருபடையை வீரா வசத்தோடு தாக்கிச் சமராடினர். குண்டு, அம்பு, தீக்கூண்டு கற் களின் நிரன் கார்மேகம்போல் நெருங்கிப் பறங்கியர்மேல் வருவதித் துக் கொண்டிருந்தது" (பா. வை. வி. பக். 141)
இங்கே பழைய தவேநகரோடு ஒகு அரண் இருக்கவில்லே. அது ஞாபகத்துக்க பகவும் கட்டப்படவுமில்லே. அதுதான் பூர்வகாலச்சிங்கை நகர்க் கோட்டையென்றறிக.
ஆதி அரசன் தலைநகர்களம் இக்கோயில்களுக்குள்ளேதான் இருந்தி திருக்கு அதில் ஒருவர்பின் ஒருவராக அரசாண்டார்கள் இவர்கள் யாரே னும் வேறு எங்கும் போகவுமில்லே எங்கிருந்துவரவுமில்லே தலைநகரை எவரேனும் வேறிடத்துக்கும் மாற்றியும் அமைக்கவில்லே. கனகசூரியன் மீளக் கைப்பற்றி அச்சிங்காசனத்தில் ஏறிக் கொண்டான். அவன் பரம்பரையிலே சங்கிவி இருந்தான் அப்பொழுது போர்த்தர்படை வந்தபோது மதிவிலே சிங்தைநகர் என்று எழுதப்பட்டிருந்தது அதிலே தமிழ்ப்படையின்பெரும் போர் நிகழ்ந்தது. பீரங்கித்தாக்கல்களுக்கு மதில் நிநிேற்க முடியவில்லை. போர்த்தர் வென்றனர் சிங்சுை.ஆரியர்பரம் பரை அவர்கழிகீள்ச்சிற்றரசராய் இருந்தனர். போர்த்தர்பறங்கித் தெருவிலும் கோட்டையிலும் இருந்தனர். இக்களத்திலே ஆதிச்சிங்பை ஆரியன் ஆட்சி கி.பி.948, ஆரம்பம் செண்பப்பெருமாள்படை 1450 ல் வந்தது போர்த்தர் வென்றது 1820, சிங்கைஆரியர் சிற்றரசு நடந்தது கி.பி. 1820ல் தொடங்கி1858 ல் போர்த்தர் ஆட்சிமுடிந்தது கி. பி. 1965 அப்பால் ஒல்லாந்தர்காலம்.

Page 74
32. சிங்கைநகர்
சிங்கையாரிய மன்னர் தஃலநகரமொன்று. களமுமொன்று, குலமுமொன்று ஆதடிமுடகொண்டு பார்க்கஅது நல்லூரிலிருந்ததானுல் அது சிங்கையாரிய மன்னர்அரசாண்ட தஃவநகரம்தான் என்றுமுன் னர் கண்டோம் ஆகையால் அது சிங்கை நகரம். இன்னும் என்ஃனயெனின் கி. பி. 1450 ஆண்டு imit': 'g2', 'r' சிங்கைஆரிய அரசர்களில் பதினுேராவது அரசனுகித் துணியப்பட்டுள்ள கனககு ரியவரசன்பால் செண்பகப் பெருமாள் படை எடுக்கும்வரை அர சாண்ட தஃவநகரம் பாது ஆதிச்சிங்கைஆரியன் அடியிட்ட தஃவநகரா? அல்லது வேறென்று? அது அவ்வாதிஆயரின் அடி இட்ட அவ்வாதித் தலே நகரேதான். எவ்வாறெனின் கனகசூரியன் அரசாட்சிக் காலத்திலே, தான் அந்நிய சிங்களவனு செண்பகப் பெருமாள் படை எடுத் தானே அன்றி அவன் முன்னர் யாரேனும் அத்தஃபநசீர்ச்குப் படை எடுத்தது கிடையாது. அச்சூரியன் வரை அவன் முன்னுேர் எல்லாம் தம்நகர்க்கு யாது படைஎடுப்போ அச்ச்சம் கலவராேது இன்றிசமாதான மாக அரசாண்டு வந்தனர். அப்படிப்படை எடுத்த செய்தி எந்த நூற்குறிப்பிலும் பேசப்படவில்ஃப் எக்காரணத்தை முன்னிட்டும் அவர்கள் தலேநகரை மாற்றியமைக்கவுமில்லே. எனவே கனகசூரியன் செண்பகப் பெருமாள் வரும்பொழுது இருந்த தஃநகரம் கூளங்கை பாரியன் சுட்டிய அச் சிங்கை நகரிலேயே. எனவே செண்பகப் பெரு மாள் படைஎடுத்ததும் அவள் கி. பி. 1467ம் ஆண்டு வரை அரசாண்டு கொண்டிருந்ததும் அச்சிங்கை நகரிலேயே (என்ஃண்பெனின் செண்ப கப்பெருமாள் வென்றதும் கனகசூரியள் தோல்வியடைந்தோடின தும்) அவ்வொரு செண்பகப் பெருமாள. கோட்டையில் ஆகும் பராக்கிரமபாகு காலமாகிவிட அவன் கோட்டை இராச்சியம் வகிக் சுப்போக அவன் பிரதிநிதியாக இருத்த விஜயபாகு அரசாட்சியில் இருக்கத் திரும்பக் கனக சூரியன் வந்து அவனுடன் போராடி அவ் விடத்தைக் கைப்பெற்றிக் கொண்டாணுதலால் அவன் திரும்பக் கைப்பற்றிஇடமும் சிங்கை நகராம் என்க. 138
 

33. சிங்கை நகரும் சிலாசனமும்
"ஏன் ஜென்ற் யாவ்னு நூலாசிரியரும் (ஏ. ஜா பக். 48-80) யாழ்ப்பாண வைபவ விமர்சனம் எழுதிய இன்னுெருவரும் தன் நூலில் (யா. வை. வி. பக். 106) ஒரு சாசனத்தை அதாவது இரு பேரும் ஒரே சாசனத்தை எடுத்துக் காட்டி இச் சிங்கை நகர் வல்லி புரத்தில் இருந்ததென்று நிச்சயம் செய்கிருர்கள். அச் சாசனமாவது
கங்கணம் வேற் கண்ணினேயாற் காட்டிஞர் காமர் வளப் பங்கயக் கையாற் றிலதம் பாரித்தார் - பொங்கொவி நீர்ச் சிங்கை நகராரியனச் சேரா வனுராசர் தங்கள் மடமாதர்கள் தாம் என்பது ஏன் ஜென் ஜாவ்னுக்காரர் கி. பி. 1210-ம் ஆண்டு தொடங்கி,
கி. பி. 1440-ம் ஆண்டு வரை 230 ஆண்டுகள் வல்லிபுரத்திவ் இச் சிங்கை நகர் இருந்ததாகச் சொல்லுயிக்கிருரே (A. J. P. 370) யாழ்ப்பாண வைபவ விமர்சனகாரர் வல்லிபுரத்தில் இச் சிங்கை நகர் கி. பி. 1242-ம் ஆண்டு தொடங்கி, கி. பி. 1450-ம் ஆண்டு வரை 208 ஆண்டுகள் இருந்ததாகச் சொல் வி யி ரு க் கி ரு ரே! (யா. வை. வி. பக். 80) அப்படி 200 ஆண்டுகளுக்கு மேலாக ஓர் இடத்தில் இருந்த ஒரு தலே நகரை அது இருந்த இடம் இன்னது தான் என்று நிச்சயம் செய்ய எண்ணியபொழுது இச் சாஸனத்தைப் பார்த்தா நிச்சயித்திருக்க வேண்டும்? ஏன் இவர்கள் அவ் வல்லி புரத்தைப் போய்ப் பார்த்து அங்கேயுள்ள சிங்கை நகர அடையாளங் களேயோ வேறும் சின்னங்களையோ கண்டு அவைகளை எடுத்துக் காட்டி அச் சிங்கை நகர் இவ் வல்விபுரத்தில்தான் இருந்திருக்கிறது என்று ரன் நிச்சயம் செய்திருக்கக் கூடாது? இவர்கள் ஒரு முகமாக 200 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு இடத்தில் இருந்ததாக நிச்சயம் செய்யும் ஒரு தலே நகரை, இவர்கள் கூற்றுப்படி பதினுெரு தல் மூனற மன்னர்கள் இருந்தரசு புரிந்த ஒரு தஃ) நகரை,
7

Page 75
இட நிச்சயம் செய்வதன் கண் இச் சான்னத்தையா எடுத்துக் காட்டவேண்டும்? அந்த இடத்தில் அம் மன்னருள் ஒருவர் வாழ்ந்த ஒரு #வட்டை - ஒரு அடையாளத்தை எடுத்துக் காட்டிருற் போதுமே, இவர்கள் அச் சாசனத்தை வவிய சான்றுகக் கொண்டு வல்லிபுரத்தில் சிங்கை நகர் இருந்தது என்று முடிபுபண்ணிவிட் டார்வின் அன்றியும் வல்லிபுரத்தில் சிங்தை நகர் உண்டென்பதை அதன் புரதான அம்சங்கஃனக் கொண்டோ அவற்றை ாடுத்துக் காட்டியோ நிச்சயம் செய்யவில்ஃவ என்பதும் கவனிக்குக.
இச்சாசனத்தின் பொருள் வரையறுவாய்த் தெளிவாய் வெளிப் படையாய் இல்லாத தாரதன்மியத்தை விளங்கினவர்கள் இச் சாச இனத்தை மாத்திரம் சாட்சியாக வைத்து வல்லிபுரத்தில் சிங்கை நகர் உண்டென்று நிச்சயம் பண்ணத் துணியார். துணிவதும் தப்பு நிற்க,
சிங்கை நகர் மன்னரைச் சிங்கையாரியர் என்பார்கள் இவ் வாராய்ச்சிக்காரர் பதினுெரு மன்னர்கள் அங்கு வாழ்ந்ததையும் அப் பரம்பரை இருநூற்றுச் சொச்ச ஆண்டுகள் அவ்விடத்தில் வாழ்ந்த தையும் ஒப்புக்கொள்ளுகிருர்கள் அப்படி ஒப்புக் கொள்ளுபவர் தன் ஏன் அம் மன்னர் வாழ்வொடு சம்பந்தப்பட்ட ஏதாவதொரு தொல் பொருளே எடுத்துக் காட்டிச் சாசனத்தால் தாம் கண்ட கோட்பாட்டை உறுதிப்படுத்தாமல் விட்டவாறு ஒரு முடிரிப ஒது ஆராய்ச்சியாளர் நிலே நாட்டும்பொழுது அம்முடிஓட வலியுறுத்தும் பிற சான்றுக்களேயும் எடுத்துக்காட்டுதல் அவசியானது என்பதை இவ்வாராய்ச்சிக்காரர் புரியாமலில்&ல. அவர்கள் வர ய்க்கூற்ருலேயே இவ்வுண்மை பறியலாம்.
"பண்டை நாள் ஒரு சாதியார் ஒரு தானத்தில் வசித்துப் போயினர் என்னும் செய்திக்கு வேறு சாசன சாட்சியங்களில்லாமற்
போகலாம், சாட்சியங்களிருப்பினும் அவை மயக்கமுள்ளவைகளாக
விாம். அன்னுேர் அத்தானத்துக்கிட்டு வழங்கிய பெயர்மட்டும் நிஃப் பதுண்டாயின் அதுவோ அவர்கள் ஒரு நாள் அங்கு குடியிருந்தமைக்கு என்றுமழியாத சந்தேக விபரீதமில்லாச் சாட்சியங்களாகும். இவ்வாறே யாழ்ப்பாணத்துத் திTண்ம் பெயர்களுட் பெரும்பாலானவை" (படா ரி.ை வி. பக். 29 ஆகையாள் இச் சாசனத்தைக் கண்ட துண்பானே தாமே நேரடியாக வல்லிபுரத்துக்குச் சென்று ஆங்குள்ள தொல் பொருள் ஆய்வுப் பொருகளே ஆராய்ந்து கண்டு அக்காட்சி யற் பெறப்பட்ட முடிபாக அச் சிங்கை நகரை வல்லிபுரத்தில் நிச்
சயம் செய்துரைப்பின் சாலவும் பொருத்தமாம். அதனே யார் தான்
மறுப்பர். சாசனமாம் அப் பிறர் கூற்றைத் துனேக் கொண்டு மாத் திரம் வல்லிபுரத்தில் சிங்கை நகரை நிசசயம் செய்வது இவர்கள்
 

ஆய்வின் நெகிழ்ச்சியைக் காட்டியவாகும். நிற்க, அச் சாசனத்தில் வல்விபுரம் சொல்லுப்படவில் வேயே. நம் சுெT ஸ்கை வன்விபுரத்தில் சிங்கை நகர் இல்ஃ' என்பதுதான்.
வல்லிபுரத்தில் சிங்கையாரியர் வாழ்த்ததான குறிப்புக்கள் யாதொன்றும் அகப்படாமை கொண்டு வல்லிபுரத்தில் சிங்கைநகர் இஸ்லே என்ற முடிபுக்கு அவர்கள் வரவில்லே, சிங்கநகரைப்பற்றி அவர்களுக்குண்டா யிருந்த ஞான சூனியத்தாலே சிங்கை நகர் அங்கே இருந்திருக்கிறது என்றும் அதனே அத்தட்சிப்படுத்தும் சான்றுக்கள் தான் வள்விபுரத்தில் தங்களுக்கு எட்டவில்லே என்றும் முடிபுக்கு வந்திருக்கிருர்கள் சிங்கை நகர் அங்கே இiாவிட்டால் அது இருத் ததாக அத்தாட்சிப் படுத்தும் சான்றுக்கள் அங்கே கிடைக்காதன் ருே . எனவே அதனூலேதாள் அவர்கள் சாசனம் ஒன்றக் கொண்டு சிங்கை நகரை அங்கே நிச்சயம் செய்திருக்கிருர்கள் வல்லிபுரத்தில் சிங்கை நகரிருந்திருந்த ல் அத் நகர் மன்னரின் வாழ்வுத் தொடர் புகள் காரணமாக அவர்கள் பெயரால் நிலங்கள் குளங்கள் கோயில்கள் இன்னும் வேறு பொருள்கள் வேறும் சுவடுகள் பிற ஐதீகங்கள் என்பன 1ே1 ல் ற பவற்றுள் இவ்வுண்மை தெரிந்து கொள்ளக் கூடிய குறிப்புக்களிப்பொழுதும் அங்கேயிருக்க வேண் டு பேறு அவைகள் ஒன்றும் அங்கேயில்லேயே பாம் முன்னர் வல்லிபுரத்துக்குச் சென்று அந்நகர் இருந்த இடங்களேயெல்லார் சுற்றிப் பார்த்து மீண் டுள்ளோம் அந்நகர் இருந்த அதாவது அங்கே சிங்கையாரியர் வாழ்ந்த சுவடு ஒன்று கூட நாம் அறிய முடியவில்ஃப் நிற்க,
ஒரு விஷ சர்ப்பம் தோன்றி மறைவது போன்ற தல்ல ஒரிடத் தில் ஒரு நகர் தோன்றி IEEறவது. அந்ந சீர் அங்கே கட்டப்பட் டால் அங்களிர் சுட்டிய வரலாறெங்கே? அழிந்து பட்டால் அழிந்து பட்ட வரலாறேங்?ே அந்நகர மன்னர் பிற நாட்டு மன்னரொடு பொருதிய போர் வரலாறேங்கே? எங்கே அவர் காலச்சம்பவங்கள்? எங்கே அவர்கள் குடும்ப வரலாறு Fள் பிற குறிப்புக்கள்? இவர் பிங் னவர் நல்லூரில் வாழ்ந்தால் இவர்கள் தலேநகர் நில்லுTருக்கு மாற் றிய வரஐாறெங்கே? இன்னுேரன்ன பல விளுக்களே எழுப்பலாம். இவையொன்றுக்குக்கூட. அவர்கள் தாலாத ரம் காட்டவில்லே. அங்ங் எம் காட்டவும் முடியாது சிங்கையாரியரின் வல்லிபுரச் சம்பந்தம் பற்றிக் கைலாபமாஃவ, வைபமாலே ஒரு வார்த்தைகூடச் சொல்ல விஸ்லே என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

Page 76
34 ‘இலகிய சகாப்தம்
எண்ணுற்றெழுபது'
"இலசிய சகாப்தம் எண்ணுற்றெழுபதாம் ஆண்டதெல்ஃல
அவர் பொலி மாலே மார்பனும் புவனேக வாகு நலமிகும் யாழ்ப்பாண நகரி கட்டுவித்து நல்லேக் குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித்தானே"
இது, கைலாய மாஃபயில் உள்ள பாடல் இது. ஆதிச் சிங்கை
ஆரிய மன்னனின் ஏவலின்படி அமைச்சர் புவனேகவாகு யாழ்ப்பான நல்லூர்த் தலே நகர் கட்டிய செய்தியைச் சொல்வது. அதில் உள்ள இலகிய சகாப்தம் எண்ணுற்றெழுபது என்பதற்கு எட்டு நூறும் 70 உம் கொண்ட தெ  ையென்று பொருள்கொள்ளாமல் பிறர் வேறு தொகையாகப் பொருள் காண்கிறர்கள். பா. வை. வி. காரர் சொல்லும் பொருளாவது "எண்ணுரற்றெழுபது 870 அன்று ஆயிரம் ஆகிய (பேர்) எண்ணும் 170 உம் சேர்ந்த கணக்கா மெனத் தோன்றும் எண் என்பதை ஆயிரம் என்னும் பேரெண்ணெனக் கொள்வது எவ்வாறெனில் இத் தனிக்கவி வேருேரு களியை அணு சரித்துச் செய்யப்பட்டது அக்கவியில் எண் என்பது பேரெண்னேயே குறிக்கும் என்பர் அது வருமாறு.
"எண்ணிய சகாப்தம் எண்ணுரற்றேழின் மேல் சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன் பண்ணிய இராமகாணத பங்குனி உத்ர நாளில் கண்ணிய அரங்கர் முன்னே கவியரங் கேற்றிஞனே இக்
கவியீற் சொல்விய எண்ணுரற்றேழு எண் 1000+107 என நிக் நு ர பாப்தம் 11 "ே ஆகுமென்றும் ஆது கிழீஸ்தாப்தம் 直【岛5 ஜர் குறிக்கும் என்றும் இது பிற ஏதுக்களேக்கொண்டு நிச்சயித்த கம்பர் காலத்துக்குப் பொருத்தமுடையதென்றும் கற்ருேர் சுழறுவர். ஆகவே நம் யாழ்பாணத் தனிக் கவி கூறும் ஆண்டு 1000+ 170 என
 

183
வந்து கிறீஸ்தாப்தம் 1248க்குச் சரியாகும். இவ்வாண்டு காவிங்கச் சச்கரவர்த்தி புலத்தி நகரை விட்டகன்ற ஆண்டுக்கு (I.243) ஆருண்டு மட்டும் பிற்பட்டது. இக் காலந்தான் யாழ்ப்பான நகர் நிர்மாணித்து முடிவெய்தியது என்பது மிகப் பொருத்தமுடைத்து" (யா, வை. வி பக், 87) இது மகா தப்பிதமான முடிபு. யாழ்ப்பான நகரி எதுவென்பதை அதாவது நல்லூர் நகரா சிங்கை நகரா யாழ்ப்பாணப் பெயர் உள்ள நகரா அல்லது யாழ்ப்பா எனத்தே கட் டப்பட்ட நகரா) இலக்கிய சகாப்தம் 870 என்பது கர்பர் காலத் துக்கு 20 ஆண்டு வரை முற்பட்ட பாட்டு, 1ம்ெ நூற்றண்டு வரை வாழ்ந்த சிங்கையாரியனே யும் அவன் மத்திரியையும் பாடியது அப்பொழுது கம்பர் பிறக்கவில்லே. அவர் பாடல் பெறவுமில்லே. இன்னும் என்னேயெனின் 9ம் நூற்ருண்டில் வாழ்ந்த யாழ்ப்பாணன் இறந்து போகக்கொஞ்சக் காலம் தளப்பம் நாடடைய அதனேச் சகிக்கலாற்ருத பாண்டி மழவன் சிங்கையாரியனே அழைத்துவந்து அரசியற்றினுன் என்பதாலும் அது பத்தாம் நூற்ண்டதென்பது நிச்சயமாயிற்று, கம்பர் காலத்துக்குப் பிற்பட இப்பாடல் எழுந் தால்தான் அதை அனுசரித்து இப்பாடல் எழுந்ததென்னலாம். நிற்க,
பொல்லனறுவையினே விட்டு ஓட்டங் கொண்ட பு: அகன் யாழ்ப்பாணம் வந்தான் என்பதற்கொரு ஆதாரமுமில்ஃல. அவன் தலே நகர் அங்கே அமைத்த ஆதாரமுமில்ஃல. எனவே அவன் அங்கே வாழ்ந்த குறிப்பும் கிடைக்கவில்லை, அவன் வரவில்லை என்பதே முடிபு. பொல்லனறுவையில் இறந்தானு? வழியில் இறந்தானு? அரச வாழ்க்கை ஆபத்தானது. அப்படியானுல் இப்பாடல் அப்பொழுது வந்துள்ள இருந்துள்ள ஒருவன் மேலேதான் பாடப்பட் டதென்சு. நிற்க,
இப்பிறர் இக்கைலாய மாலேயில், பாண்டி மழவன் போன தும், அவன் அழைப்பை ஏற்று சிங்கையாரியன் வந்ததும் நிகழா நிகழ்ச்சி என்கின்றனர். அவ்வகையிலே இக்கையை மாஃல தள்ளத் தக்க நூலென் வின்றனர். அங்கனமாயின் அது சொல்லும் இப்பாட ஆலச் சான்றுக்கு எடுத்துக் காட்டக் கூடாதே நிற்க,
கலிங்க மாகன் வந்ததைக் குறிக்க, ஒரு ஆதாரமும் கிடைக் விஸ்ஐ, சிங்கையாரியன் வந்ததைக் குறிக்கும் இந்தி ஆண்டைத் தான் எடுத்துக் காட்டி அம்மாரின் வந்ததாக நிச்சயம் செய்தார் ானின் உண்மையில் வந்தவன் சிங்கையாரியன் என்றும் மாகன் அங் துனம் வரவில்&ல என்றும் நிச்சயம் என்றும் கண்டு கொள்க. இப் பொழுது 13ம் நூற்றுண்டென்று நிச்சயம் பண்ணப் பொருள் தந்து நிற்பது ஒரு சிலாசனத்தால் அல்ல, ஒரு புதைபொருளாள் அல்ல, வேதும் ரதுஞ்சான்றுக்களால் அல்ல 870 ஓடு 300ஐக் கூட்டி 1170 என்று

Page 77
34
பொருள் பண்ணிக் கண்ட வகையால் என்க, நிற்க. அப்பாடல் இவர்கள் ஒருவர் இருவர்க்காகப் பாடப் பட்டதல்ல அக் கவிராயர் தாம் அறிந்து கொண்ட உலகத்திலே புழக்கத்தில் இருந்து கொண் டிருக்கிற எண் மதிப்பைப் பின்பற்றித்தான் பாடி இருப்பர். அவர் ஈண்டுச் சொல்லக் கருதியது எட்டு நூறையும் எழுபதையுங் கொண்ட 870 ஐத்தான் பொருள் பண்ணுவது புலவர் உள்ளக் கருத்துக்கொத்ததாம்
அங்கே வெளிப்படையாக என்ன விலையோ அதுதான்விலை. 1170ஐ அவர் கருதி இருப்பாரானுல் அதற்குரிய சொற்கள் போட்டுப் பாடி இருப்பர். கவிஞர் யாவரேனும் தம் உள்ளக் கருத்து வாசகர் உள்ளத்திலே கருகல் இன்றித் தெளிவாக விளங்க வேண்டிய வழிவகைகளைப் பின்பற்றி அதற்குரிய சொற்கள் போட்டுப்பாடுவதுதான் வழக்கம். அங்கமாயின் என்னை முன்னர் கம்பர் காலத்தைச் சுட்டிப்பாடிய எண்ணிய சகாப்தம் 887 என்னுங் கவி கம்பர் காத்துக்கும் பொருள் கொடுக்கவில்லையோ வெனின் இல்லை அதுவும் பிழை. அவ்வழியைப் பின்பற்றி 1170 என்று கண்ட இதுவும் பிழை. ஒரு பிழையை எடுத்துக்காட்டி அவ்வழியைப் பின்பற்றி இது வும் பாடினேன் எவ்ருல் இதுவும் பிழைதானே என்பது சொல்லாமல் போதரும். இவ்வுண்மையை இன்னும் துணிவாம் (செந்தமிழ் 3ம்தொகுதி பக்கம் 177-181) ரா. ராகவ ஐயங்கார் சொல்வதாவது
* முதலாம் பிரஸ்தாப உருத்திரனுடைய ஆட்சியின் இறுதிக்காலம கிய
கி. பி. 1197ஆலும் கம்பர் இருந்து அவனல் அடைப்பை கட்டும் சிறப்பைப் பெற்றனர் என்பது விரோதமில்லையாம். இதனுல் கம்ப ருக்கு அடைப்பை கட்டினவன் முதலாம் உருத்திரன் எனவும் அவன் அவருக்கது புரிந்த காலம் கி. பி. 1162க்கும் 1197க்கும் இடைப்பட்ட தாகும் எனவும் கெ கள்ளத்ககும். இதனுற் கம்பருடைய காலத்துக்கு இறுதியெல்லை முதலாம் உருத்திரனுடைய அரசாட்சியின் இறுதிக காலமேயென்றுணர்ந்து கொள்க . . கி. பி. 1162க்குப் பிற்பட்ட காலம் இராச ராசன் காலமாதலால் கம்பர் ஓரங்கல் உருத்திரன் பாற் சென்று சிறப்பெய்தியதும் அவன் காலத்தேயாதல் ஒருதலையாம். இதனுல் கம்பரை முனிந்தவனும் கொற்றவனுமாகிய சோழன் இராச ராசனே என்பதுய்த்துணரப்படும். கம்பர் இராமயணம் பாடி அரங் கேற்றியதும் இவ்விராசராசன் காலமேயாகும். கூத்தர் தக்கயாகப் பரணி பாடியதும் இக்காலமேய: கும். இனி, எண்ணிய சசுாத்தம் எண்ணுாற்றேழின் மேல் சடையன் வாழ்வு. பண்ணிய இராம
காதை . . . அரங்கேற்றினுனே' என்பதனற் கம்பர் இராமாயணம்
அரங்கேற்றியகாலம் சகாப்தம் எண்ணுாற்றேழு என்று கூறுவதால் கம்பர் காலம் மேற்காட்டிய காலத்துக்கு 300 வருடம் முற்பட்ட தன்ருேவெனின் கூறுவேன் சகாப்தம் 807 என்பது கி. பி 885

I 35
ஆகும். அது விக்கிரமன் காலத்துக்கு நெடுந்தூரமானது. அங்ங்ன மாயின் அது ஒட்டக்கூத்தர் காலமுமன்று. கூத்தர் காலமன்ரு யின் சங்கரன் கங்கரன் காலமுமன்று. சங்கரன் காலமன்ருயின் சடையன் சேதிராயன் காலமுமன்று. சேதிராயன் காலமுமன்ருயின் கம்பர் காலமுமன்ரும் ஒரங்க லுருத்திரன் காலமும் இஃதன் முதல் கூற வேண்டாம். இங்ங்ணம் கம்பர் காலத்தவராகத் தெரியப்பட்ட வேறு பலர் காலங்களுக்கு கி. பி. 885 பொருந்தாதா கவின் அது கம்பருக்கும் பொருந்தாதென்பது ஒரு தலை மேற்காட்டிய பிரபல பிரமாணங்களாற் றெரிபுப்பட்ட கம்பர் காலத்தோடு பொருந்தவைத்து நோக்கின் இந்த "எண்ணிய சகாப்தம் என்ற செய்யுள் சிறிது பாடம் பிழைத்த தென்றேனும் வேருேர் பொருளுடையதென்றேனும் கருதப்படும்' இத்துடன் இன்னெரு பெரியார் கூற்றையுந்தருவாம்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித் துறைத் தலைவர் எல். வையாபுரிப்பிள்ளையவர்கள் சொல்வது(செந் தமிழ் 45-46ம் ஆண்டு 43-ந் தொகுதி பக். 97-98)
கம்பர் காலம் :- " " கம்பர் பெருங்கவிஞர் என்பதை ஒத்துக் கொள்கின்றனர். இத்தகைய பெருங்கவிஞர் வாழ்ந்த காலங்கூட இன்னும் ஐயமற அறியப்படாதது. வியப்பல்லவா ஆராய்ந்து துணி யவேண்டிய அவசியத்தை ஒரு செய்யுள் நின்று மறைத்து அறிஞர் களே மயக்கிவிட்டது. அச் செய்யுள் இராமாயணப் பிரதிகளில் காணும் ஒரு தனியன் ஆகும் அது வருமாறு
"எண்ணிய சகாப்தம் எண்ணுரற்றேழின் மேல் சடையன் வாழ்வு
கண்ணிய வரங்கர் முன்னே கவியரங்கேற்றினனே"
இங்கே சகாப்தம் எண்ணுரற்றேழு என வருதலால் கி. பி 885ல் கம்பர் தன் காவியத்தை இயற்றினர் என்று வெளியாகிறது இத்தனை தெளிவான சான்றிருக்கும்போது காலம்பற்றிய ஆராய்ச்சி எதற்கு என வினவலாம். ஆனல் இம் முடிபு ஆராய்ச்சியால் நன்கு தெரியப்பட்ட கால வரையறைகளுக்குப் பொருத்தமின்றிச் சரித்திர முடிபுகளேயே புரட்டிவிடுகின்றது. இதனுல் இராமானு இராமாநுஞர் இறுதியாகிய ஆசார்ய பரம்பரைக்கு முற்பட்டவர் கம்பர் என்று: கொள்ளப்படும் சோழ அரசர்கள் பெருமையுற்று விளங்கியதற்கு முற் பட்ட காலத்தில் இவர் வாழ்ந்தார் என்று துணிய நேரிடும். இவை கள் முற்றும் அசம்பாவிதமாம். வைணவ சமயசரித்திரதிற்கும் , தமிழ் இலக்கியசரித்திரத்திற்கும் , தமிழ்நாட்டுச்சரித்திரத்திற்கும் இச்செய்யுள் முரண்பாடாகவுள்ளது. இக் காரணங்களால் இத் தனியன் சான்ற கக் கொள்ளத்தக்கதன்று என்பது எனவே எண்ணிய சகாத்தம் எண்ணுரற் றெழு என்னும் செய்யுளைச் சாட்சியாக வைத்து? இலகிய சகாத்தம்

Page 78
136
எண்ணுாற்றெழுபதுக்குப் பொருள் காண்பது பிழை. எனவே சரியான பொருள் உலகியல் நெறிப்படி 870 தானென்க. அன்றியும் இன் ஞென்று கலிங்க மாகன் 13-ம் ஆண்டில் தலைநகர் கட்டியதற்கு ஒரு சான்றுமில்லை 870 ஐத்தான் பிழையாகப் பொருள்பணி 1 179 என்று சொல்லுவதைக் கண்டோம். அது பிழை என்று கண்டிடவே 1170 உம் இல்லை. அவன் தலைநகர் கட்டியதும் இல்லை. பின்னை அது முன் சுட்டியது சிங்கையாரியனை எனவே தலை நகர் கட்டியது சிங்கையாரி யன் என்றும் அவன் கி. பி. 948 வரை வாழ்ந்தான் என்றும் முடிபு பண்ணுக. உள்ளபடியான சான்றுக்களின் பின்னே போய் அவை கொடுக்கும் முடிபுகளைப் பெற்றுக்கொள்ளாமல் அச்சான்றுகளைத் தம் விருப்பத்துக்குத் திருத்துவது ஆராய்ச்சிமுறை ஆராய்ச்சி வரம் பைக் கடந்தசெயலாம் என்க, இன்னும் சொல்வாம்.
இந்நூல் (கைலாயமாலை) செய சிங்கையாரியனும் செய்யகுல ராசனையும் அவன் தலை தகர் கட்டிய ஆண்டையும் சொல்லி இருக்க, என்னை, கலிங்கமாகனைப் பாடி இருக்கென்று சொல்லுகிருர்களே யெனின்? அங்ங்ணமாயின் கலிங்க மரீகன் பெயர்: அவன் பொல்ல னறுவையை வெற்றி கொண்டமை, அவன் அங்கே அரசு புரிந்தமை, அவன் காலம் என்னபன இருந்தால்தான் அவனைப் பாடியது என்ன லாம். எனவே அப்பாடலில் உள்ள ஆண்டுக் கணக்கு 870 தான் சரியென்க,

35 அமைச்சர் புவனேகபாகு
இவர் ஆதிச் சிங்கையாரிய மகாராசாவின் மந்திரி, கி பி. 948ல் அச் சிங்கையாரியன் தலைநகர் கட்டியபோது உடன் இருத்தவர் அத் தலைநகர் கட்டிய வேலையில் ஈடுபட்டவர் வைபவ மாலேயில் சிங்கையாரியன் "கல்வியறிவிலும் புத் தி விவேகத்திலும் எவர்களும் வியந்து கொள்ளத்தக்க உத்தண்ட வீரசிகாமணியாகிய புவனேக வாகு என்னும் மந்திரியையும் கூட்டிக்கொண்டுவந்து (யா. வை. மா. பக், 25-26) நல்லூரில் தலைநகரமைத்தான் என்று சொல்லுகின்றது.
“ “ rău so su u rifuu ulog, rT, ir go är இப்படியே அரசாட்சியைக் கையேற்று நடத்தி வருகையில் புறமதில் வேலையையும் கந்த சுவாமி கோயிற்றிருப்பணியையும் சாலி வாகன சகாப்தம் எண்ணுரற்றெழுப தாம் வருஷத்திலே புவனேகவாகு என்னும் மந்திரி நிறைவேற்றி முடித்தான்” (யா. வை. பா. பக். 32) கைலாயமாலையும் இவனைப் பற்றி மிக அழகாகச் சொல்லுகின்றது.
‘புண்டரிக மார்டன் புகலுமது ராபுரியோன்
எண்டிசையு மேற்று மிராச மந்திரி-கொண்டதொரு வேதக் கொடியோன் விருதுபல பெற்றதுரை கீதப் பிரபுடிகன் கிருபையுள்ளான்-தீதற்ற புந்தியுள்ளான் மேன்மையுள்ளான் புண்ணியமுள்ளான்
புவியோர் வந்திறைஞ்சு பாத மகிமையுள்ளான் -- முந்தரிபாற் ருேன்றி யகிலாண்ட கோடியெல்லாம் தோற்றமுற ஈன்றேன் குலத்திலெழுகுலத்தோன் - சான்றேன் புவனேக வாகு வென்னும் போரமைச்சன் றன்னை நலமேவு நல்லூரில் நண்ணுவித்து"
(கை. மா. கண்ணி 148.155) இவைகள் அமைச்சர் புவனேகவாகுவின் நிரந்தரத் தொடர்புகளைக் காட்டும் நல்லூர்க் குறிப்புகளாம் என்க.
மேலும் வைபவமாலை சொல்லுவதாவது "சிங்கையாரிய மகா ராசனும் புவனேகவாகு என்னும் மந்திரியும் கீரிமலைக்குப்போய்த் தீர்த்தமாடிச் சிவாலய தரிசனம் செய்துகொண்டு அவ்வாலய விசா ரணையை அரசாட்சி விசாரணைக்குள்ளாக்கிக் கொண்டு கந்தசுவாமி கோவிலில் வந்து பெரிய மனத்துள்ளாரின் குமாரர்சிதம்பர தீட்சதரின் மகன் சின்னமனத்துள்ளார் விருந்திட உண்டு இளைப்பாறிஞர்கள். அவ் விருந்து மகாவுசிதமாக இருந்ததினல் புவனேகவாகு அவ்விருந்திற்

Page 79
ዘ 88
பரிமாறிய ஒவ்வொரு பதார்த்தத்திற்குமொவ்வொரு பாட்டுச் சொன் ஞன் அவற்றுள் சில வருமாறு’’
1. "இன்னமுத விண்டு வி(ண்) ஞேர்க் கீந்தசெய லன்னதுவாம்
மன்னவனும் தொக்க வரூதினியு(ம்) - நன்னரு(ண்)ண அன்னபளித் திந்நாளிலாதரவு தந்துநின்ற சின்ன மனத்தான் செயல்"
2. "சின்ன மனத்தான் செயும்விருந்திற் சாற்றுரூசி
அன்னதனே விண்ணுேரறிந்திருந்தால் -முன்னலைவாய் வெற்பதனைக் காவியுய்த்து வேலை கடைக் தேயுலைதல் அற்ப மெனத் தள்ளுவரே யாம்"
இப்படியே பாட்டுக்களும் சொல்லிக் கொண்டு தேவாலயத் தைப் பற்றிய ஒழுங்குகளும் பண்ணிந் கொண்டு திரும்பினுன் , (uurir. GO) Çry. Drr. Lu & 32-33)
 ைபவமாலை இவ்வமைச்சர்தான் நல்லூர்க் கந்தசாமி கோயிலைக் கட்டினன் என்று சொல்ல, அப்படி இல்லை; என்று வேறு பிறர் மறுக்கிருர்கள். அவன் பாடிய அப்பாடல்களைத்தவருண ஆராய் விஞல் அத்தமிழ் அறியாத சிங்கள புத்தமன்னஞன செண்பகப்பெரு மாள்தான் பாடினன் எண்று பிறர் புரைபாடாக மொழிகின்றனர். அமைச்சர் புவனேகவாகு பத்தாம் நூற்ருண்டு வரையில் வாழ்ந்தார். இந்நிகழ்ச்சிகள் நிகழ்ந்து ஐஞ்ஞாறு ஆண்டுகள் பின்னரன்ருே அப் பெருமாள் பிறந்தான், அவன் காலம் 15ம் நூற்ருண்டு அவளுல் எப் படி இவ்வெண்பா யாப்புக்கள் பாடமுடியும் எப்படிச் சைவசமயத் துள் வழங்கும் பழங்கதைகளைச் சேர்க்க முடியும் இவ்வமைச்சர்தான் முத்துராசக்கவிராசர்க்கு அந்த மதிப்புரை வெண்பாவைக் கொடுத் திருக்கக் கூடுமென்பது நம்மூகம் இப்பாட்டின் அமைப்புக்கள் அம் மதிப்புரைப் பாடலை ஒத்திருக்கின்றன. நல்லூர்க் கர்தசுவாமி கோயில் கட்டிய புவனேகவயகு,
"இலகிய சகாத்த மெண்ணுாற் றெழுபதா மாண்டதெல்லை அலர் பொலி மாலை மார்பனும் புவனேக வாகு நலமிகு யாழ்ப்பாண நகரி கட்டுவித்து நல்லைக் குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித்தானே' என்றும்
கைலாய மாலைப் பாவினல் குறிக்கப்படுகின்றன். இலகிய சகாத்தம் எண்ணுரற்றெழுபதாம் ஆண்டு கி. பி. 948ம் ஆண்டாகும் அவ்வாண்டிலேதான் யாழ்ப்பாணத்து நல்லூர் நகரியைக் கட்டுவித் ததும் நல்லூரில் உள்ள கந்தவேளுக்குக் கோயில் கட்டுவித்ததும் இப் புவனேகபாகுவின் வேலை.சிலர் சிங்களச் செண்பகப் பெருமாளுக்குப்புவ

139
னேகவாகு என்ற பெயருண்டென்றும் அவன் இக் கோயிலைக்கட்டினன். என்றும் சொல்கின்றனர் அவனின் நல்லூர்க்காலம் கி. பி. 1450 - 1467 ஆகையால் இப்பட்டு அவனைக் குறிக்கக் காலம் பொருந் தாது. அன்றியும் பூரீ சங்கபோதி என்ற பெயரோ அரசனு 'குரிய அடையோ இதில் இல்லை.
அன்றியும் ‘சிங்கையாரிய மகாராசன் இப்படியே அரசாட் சியைக் கையேற்று நடத்தி வருகையில் புறமதில் வேலே யையும் கந்த சுவாமி கோயிற்றிருப் பணியையும் சாலிவா கனசகாப்தம் ஏண்ணுரற் றெழுபதாம் வருஷத்திலே புவனேக வ: கு என்னும் மந்திரி நிறை வேற்றி முடித்தான் 8" என்று வைபவமாலையும் சொல்கின்றது. (யா. வை, மா பக்.31-32)
செண்பகப் பெருமாள் காலத்திலே நல்லூரிலே ஆட்சி ரெகடுங் கோலாய் நடந்தது. தமிழரை உடைநடைபாவனையில் தங்களைப் போலவாக்க வேண்டு மென்று பலவந்தம் பண்ணியும் அதற் க:ை யா தவர்களைத் தண்டித்தும் வந்தார்கள். என்றும் வைப0ாலே சொல் லுகின்றது. செண்பக பெரு: ஸ் கீரிமலைக்குப் போய்த்தீர்த்தமாடு வதும், அப்பால் சிவாலயத்துக்கும் கந்த வேன் ஆலயத்துக்கும் போய்ச் சுவாமி தரிசனம் செய்வதும், சின்ன மனத்தார் விருந் சிடுவதும் அவ் விருந்தைப்பாராட்டித் தமிழ் வெண்பாப் டாட்டுக்கள் பாடுவதும் அசம்பாவிதமான காரியங்களாகும். சாலிவா கனச்சகாப்தம் 717 வரையில் வசித்த பெரிய மனத்தார்:ன் மூன்ருவது பேரன் சின்ன மனத்தார் காலமும் சலிவாகனசகாப்தம் 870ல் வசித்த அமைச் சர் புவனேகவாகு காலமும் ஒன்று. அன்றியும் நல்லூர்க்கந்த சுவாமி கோயிற் கட்டியத்திலே அக்கோயிலைக் கட்டியவன் "சூரிய குலவம் சோத்பவன்" என்று சொல்லப்படுகிறது. அதாவது சூரிய குலத்துதித்தவன் என்றும் சொல்ல்ப்படுவதால் அது செண்ட சப் பெருமாளைக் குறிக்காது. அமைச்சர் புவனேகவாகுவையே குறிக்கு மென்க. ஆகவே இப்புவனேகவாகுதான்
1. நல்லூர்க் கட்டியத்தில் சூரியகுலவம்சோத்பவன் என்று
சொல்லப்பட்டவர். 2. சின்னமனத்தான் விருந்தைப் பாடியவர்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலேக் கட்டியவர். 4. நல்லூர்த் தலைநகர் கட்டியவர் 5. கைலாயமாலைநூலுக்கு மதிப்புரை அளித்தவர் ஆவர்

Page 80
36. சிங்கை நகர்
சிங்கை நகர் இருந்த இடத்தை எழுத்தோடு காட்டுவாம்
ஆராய்ச்சிக் காரரால் இன்றுவரையும் அறுதியிட்டுரைக்க அதா வது ஐயம் நீங்கிஉறுதியாக உரைக்க இயலாததாயுள்ள ஊகம்ஒன்முனே உரைக்கப்பட்டு வந்த சிங்கை நகரை யாம் கையும் மெய்யுமாக அது இருந்த களத்தோடும் எழுத்தோடும் காட்டுவாம். வண-சு. ஞா வாக்காக உரைக்கப்படுவது 'சிங்கை நகர் வல்லிபுரத்தில் இருத்ததெனக் கொள்ளுதல் அமைவுடத்தாயின் பறங்கிக்காரர் 1590-ல் கொழும்புத்துறையில் இறங்கி நல்லூரைச் சருவியகாலையில் சிங்கை நகர் என்னும் பெயரோடு ஒர்பெலத்த அரண் இருந்ததென பாதர் குவிருேஸ் கூறுகின்றமை (Conquista p. 367) எவ்வாறென ஓர் ஆசங்கை நிகழும். பூர்வ சிங்கை நகர் கொழும்புத்துறைக்கும் நல்லூருக்கும் இடையிலாமெனக் கொள்ள வேறு சான்றின்மையால் அச்சிங்கை நகர் அழிந்துபட்டு நல்லூர் தலைநகராயின பின் அப்பழைய நகர்ப் பெயரோடு ஒர் அரண் இங்கு வினங்கியதெனக் கொள்ளலாம். என்க’ என்கிருர். (யா. வை. வி. பக் 68) சரி இவ்வரணுக்குச் சிங்கை நகர் என்றுயார் எழுதினர் எப்பொழுது எழுதப்பட்டது.
அமைச்சர் புவனேகவாகுவால் தலைநகர் கட்டிய போது எழுதப்பட்டது. அஃது எங்ங்ணம் தெரியு மாறு எனின் தலைநகர் கட்டி முடிந்த பின்னர் முடிசூடப்படுவது வழக்கம். அந்தச் சோழ இராசகுமாரன் நல்லூரில் நகரைஅமைச்சரைக் கொண்டு கட்டியபின் முடிசூடப்படும் பொழுது முடி சூடப்படும் அரசனுக்கு சிங்கை யாரியச் சக்கரவர்த்தி என்று கங்காதரக்குருக்கள் முடிசூட்டி இருச கிருர் அந்த முடியைப் பாண்டிமழவன் எடுத்துக் கொடுத்திருக்கிருன் (அவன் முடி தொட்டுக் தொடுக்கும்பரம்பரையைச் சேர்ந்தவன்) இங்கே விளங்கக்கிடப்பது நல்லூர் ஆரியச் சக்கரவர்த்தி என்று சொல்ாமல் சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி என்பதால் நல்லூரில் கட்டப் பட்டதலை நகர்க்குச் சிங்கை என்பது பெயர் என்பது விளங்குகிறது
முதற் சிங்கை யாரியன் தொடக்கம் 11 ஆவது அரசன் கனகசூரியன் வரை ஒரே கோட்டையில் அன்றி ஒரே அரண்மனை யிவோ அன்றி யொரே சிங்காசளத்திலோ இருந்துதான் அவ்வரசர் அரசு புரிந்திருக்கிருர்கள். ஏனெனில் அவ்வளவு காலமும் ஒரு போரோபடையெடுப்போ அங்கேஇல்லை. ஆகையால் தலைநகர் மாற்ற மில்லை;அப்பால் கி.பி 1450 ம் ஆண்டளவில் கனக சூரியன் காலத்தில் தான்செண்பகப் பெருமாள் படை எடுத்திருக்கிருன் நல்லூர்க்கு. அப் பொழுது செண்பகப் பெருமாள் வெல்லக் கனக சூரியன் நகரை

141
விட்டோடி விட்டான். திரும்பக் கனகசூரியன் வந்து அவ்விடத்தில் அரசு செய்த விஜயவாகுவை அதாவது செண்பகப்பெருமாளின் பிரதிநியை வென்று அரசனுகி விட்டான். அதன் பின்னர் கனக சூரியன் மக்கள் அத்தலைநகரில் இருந்து ஆட்சி செய்தார்கள். அவர்கள் சிங்கை நகரத்தரசர்கள் என்பதற்காகச் சிங்கைப் பரராசசேகரன் சிங்கைச் செகராசசேகரன் என்று பெயர் வைத்துக் கொண்டார்கள். எனவே இவர் காலம் வரைக்கும் தலைநகரோ தலைநகர் இருந்த களமோ இம்மாறவில்லை, நல்லூரிலே சிங்கைநகர் பெயரோடிருந் திருக்கிறது. கி. பி. 1590 - ல் சங்கிலி அரசாட்சியின்போது போர்த்துக்கேயப்படை யாழ்ப்பாணத்துக்கு வரும்போது கோவைத் தேசாதிபதி அப்படையின் போர் வரலாற்றைத் தனக்கெழுதி அறி விக்கும்படி குவிருேஸ் பாதிரியாரையும் உடன் அனுப்பி இருந்தார்.
போர்த்தர் வரும்போது இருந்த மதிலில் சிங்கை நகர் என் றெழுதப்பட்டிருந்தது. எப்போ, யார் எழுதிஞர். ஒரு மன்னன் தலைநகர் கட்டிமுடிந்த பின்தான் முடி சூடுகிறது. அதற்கு முன்னர் தான் நகர்க்குப் பெயர் வைக்கின்றது முடி சூடும்போதே தலைநகர் கட்டிமுடிந்தது. அத்தலைநகரைக் கட்டினது யார் 'இலகிய சகாப்தம் 870 - ம் ஆணடதெல்லை அலர் பொலிமாலைபனம் புவனேகவாகு நலமிகு யாழ்ப்பாண நகரிகட்டி" என்பதால் (கை. மா. த. செ) புவனேகவாகுதான் கட்டி எழுதிவிட்டிருக்க வேண்டும். அதுதா ன போர்த்தர் வரும் போது இருந்தது. ஆம், அத்தலைநகரிலிருந்துதான் இச்சிங்கை ஆரிய மன்னர் வாளேயடிவாளை யாய் அரசாண்டு வந்துள் ளனர். பேஈர்த்தரோடு பொருதிய சங்கிலி மன்னனும் அதில்தான் இருந்தான். இப்பரம்பரை எக்காரணம் கொண்டும் தலைநகரை இடம் மாற் றி ய  ைம க் க வி ல் லை . அங்ங்னமாயின் போர்த்தர் தி. பி. 1590 - ல் சந்தித்தது, இந்த மதிலைத்தான். அஃதெங்கனம் போர்த்தர் சந்தித்தது இம்மதிலின் தென்பக்கமதிலை. அப்பக்கமதில் கொழும்புத்துறைக்கும் நல்லூருக்குமிடையில்தான் போயிருக்கும்.
0காட்டைவாசல் கிழக்குப்பக்கம். கி பி. 1450 வரை செண்பகப் பெருமான் படை எடுத்தாள். எனவே அவன் படைஎடுப்பின் 140 வருடம்வரை பின்னும் கி. பி. 1590 வரை அம்மதில் இருந்திருக்கு அஃதெப்படிச் செண்பகப் பெருமாள் இடித்தான் தலைநகரை என்று பிறர் சொல்லுகிருர்களே என்னின் அவர்கள் சொல்வது வாயாதாரம் தான். புத்தியாதாரங் கூட இல்லை சான்ருதாரம் இல்லை. ஆகவே நல்லூரில் சிங்கை நகர் என்றெழுதப்பட்டிருப்பது வேருேர் இடத்திலிருந்த சிங்கை நகர் ஞாபகத்துக்காக வல்ல அவ்விடத் திலிருந்த உண்மைச் சிங்கநகரை விளக்கவே என்றறிக.

Page 81
37. யாழ்ப்பாண வைபவமாலையும்
யாழ்ப்பாண வைபவவிமர்சனமும்
யா - வைபவ மாலை 18ம் நூற்ருண்டில் வெளியாகியது. யா. வைபவ விமர்சனம் இருபதாம் நூற்ருண்டில் கி.பி 1928ல் இயற்றப் பெற்றது. இந்த வை. வி காரருக்கு இந்த வைபவ மால் யில் சொல்லப்பட்ட சரித்திரங்கள் மூடிபுகள் நன்கு தெரிவிந்திருக்க வேண்டும். அன்றியும் அத்நுாற் கூற்றுக்களைத் தம் நூல்களில் சுட்டியும் பேசியுள்ளனர் அங்ங்ன மாகையால் அந்நூன் மூடிபுகள் இவர்க்கு நன்கு தெரிந்திருக்கும் என்பது நிச்சயம். ஆனல் இந்த வை. விகாரர் அநேக இடங்களில் அவ் வைபவ மாலை முடிபுகளுக்கு எதிர்முடிபுகளைக் கூறுகிருர், அங்ங்ணம் கூறுமிவர் அந்நூலின் ஒரு முடிபு தமக்குடன் பாடின்மை கண்டால் அதற்காதாரம் காட்டி மறுத் துத் தமது இப்புது முடிபு கொள்ளக் காரணமாய் இருந்த ஆதா ரத்தை எடுத்துக் காட்டித் தம்முடிபை நிறுத்துதல் வேண்டும். இவர் மறுப்பதற்கும் ஆதாரம் காட்டவில்லை. நிறுத்தும் புது முடிபுகளுக்கும் ஆதாரம் காட்டவில்லை தாம் விரும்பியவாறு மனம் வந்த வண்ணமே சொல்லிக் கொண்டு போகிருர், அவையெல்லாம் முன்னர் நடந்து முடிந்த சரிதமாக அதாவது மெய்ச்சரிதாக இருக்குமோ? நாம் நடு நின்று அவ்வுண்மைகளை கண்டு கொள்ள வேண்டும் அவ்விரு நூல்களிலுமுள்ள சரிதக் கூற்றுக்களை இங்கே காண்பாம்.
uurt. mA. Loyau. யா. வை. விமர்சனம்
1. சோழ இராசகுமாரன் நல் 1. கலிங்கமாகன் வல்லிபுரத் லூருக்கு வந்தான், துக்கு வந்தான்.
2. இவன் 948ல் நல்லூருக்கு 2. இவன் 1248ல் வல்லிபுரத் வந்தான் துக்கு வந்தான்.
3. இவன் நல்லூரில் சிங்கை 3. இவன் லல்லிபுரத்தில் சிங் நகரை அமைத்தான். கைநகரமைத்தான்.
4. இவனுக்கு கையெ, ல் று 4. இல்லை, காலிங்க என்ற கூளையாயிருந்ததால் கூளங்கை  ெப ய  ைர த் தா ன் கூளங்கை
யன் என்று பெயர் யென்று சொல்லுகின்றனர்.

5. கைலாயமாலையில் "நல மிகு யாழ்ப்பாண நகரி கட்டு லித்து நல்லைக்குலவிய கந்தவேட் குக் கோயிலும் புரிவித்தானே' என்பது அமைச்சர் புவனேக வாகுவைப் பற்றியது என்று வை பவ மாலை சொல்லுகிறது.
6. கீரிமலை நகு ல மு னி வர் தொடர்பால் வந்த பெயர்
7. மாவிட்டபுரம் குதிரை முகம் நீங்கியதால் வந்த பெயர்
செய்த Lurrunt L
8. சின்னமனத்தார் விருந்தை அமைச்சர் டிப் பாடினர்.
45
5. இவர் நகரிகட்டுவித்து என்பது காலிங்கராசன் சிங்கை நகரைக் கட்டியதையும், செண் பகப் பெருமாள் நல்லூர் நகரைக் கட்டியதையும் நல்லூர்க் கந்த சுவாமி கோயில் கட்டியதையும் சுட்டிவந்ததாகக் கூறுகிருர்,
6 கிரியும், கிரிேயும், மல்யும் சேர்ந்ததால் வந்த பெயர்.
7, பெரிய ஆலமரம் நின்ற காரணத்தினுல் வந்த பெயர்
8. செண்பகப் பெருமாள் தான் அவ்விருந்தைப் பாராட் டிப்பாடிஞர்.
இவ்வாறு வைபவமாலையில் சொல்லப்பட்ட புகுடர்கள் அவர்கள்
சம்பவங்களுக்கு அன்றியும் வேறும் சம்பவங்களுக்கு நேர்மாருகவே இவ்வைபப விமர்சனக்காரர் சொல்லுகிருர். வைபவமாலை 18 -ம் நூற்ருண்டில் இயற்றப்பெற்றது. யாழ்ப்பாண வைபவ விமர்சனம் 20 -ம் நூற்ருண்டில் இயற்றப் பெற்றது இரண்டு கூற்றுக்களும் மெய்யாக இருற்காது. அதாவது ஒரு கூற்று உண்மையானல் அதற்கு நேர்மாருகச் சொல்லும் கூற்றில் உண்மை இருக்காது. அதனை மறுக்கவும் சான்று கிடைக்காது. வைபவமாலை உலாந்தேசு மன்னன் கேட்க வையாபாடல் கைலாயமாலை பரராசசேகரன் உலா இராச முறை என்பனவற்றில் உள்ள வரலாற்றுக் குறிப்புகளை அறிந்து அவற்றில் உள்ளபடியே இந்நூலை எழுதிஞர் என்று அதன்பாயிரகாரர் சாட்சி பகர்கின்ருர். வைபவ விமர்சனக்காரர் இந்நூன் முடிபுகளுக்கு மாறுபாடாகக் கூறுகிருர்,
ஒரு சான்றுகளை ஆதாரங்காட்டி இக்கூற்றுக்களே மறுக்கவு மில்லை ஏதாவதொரு ஆதாரங்காட்டித் தம் கூற்றை நிறுவவும் இல்லை. வைபவமாலைக் கூற்றுக்கள் உண்மையானல் இவருக்கு மறுக்கவோ நிறுவவோ சான்று சிடைக்காது. இவ்வளவிலே யா, வை. வி. காரர் யாழ்ப்பாண வைபவமாலைக்கு மாறுபாடாக ஒரு நூலை இல்லாத புருடர்களையும் நிகழாத நிகழ்க்சிகளுங் கொண்டவைகளாகப் படைத் திருக்கின்ருர் என்றுதான் நமக்குத் தோன்றுகின்றது. உண்மைச் சொர்க்கம் வேருய் இருக்க விஸ்வாமித்திரர் திரிசங்குவுக்காக ஒரு

Page 82
l44
சொர்க்கத்தைப் படைத்ததைப்போல இந்நூலின் போக்கு இருக்கிறது. தமக்கு முன்னர் சொல்லப்பட்ட அந்நூலின் கூற்றை இவர் மறுக் கவும் சான்று காட்டவில்லை நிறுவவும் சான்று காட்டவில்லை ஆதலான் என்க. இவரின் நூற்படைப்ப்ால் பயில்வார் (að) 1)L. 1611 மாலையில் நம்பிக்கைகொள்ள இடர் விளைகிறது. இவ்வைபவ விமர் சனக்காரரின் முடிபுகளை , பிழைகளை இந்நூலின் வெவ்வேறு இடங் களில் காணலாம். பின்நூல் எழுதுபவர் முன்னேர் உரைத்ததற்கு மாருகச் சான்றில்லாமல் ஏன் எழுதவேண்டும். அம்முன்னேர் உரையைச் சான்றும் காட்டி மறுத்தன்ருே புது முடியைச்சொல்ல வேண்டும். சான்றில்லாதவற்றை உண்மை உள்ள கூற்றென்று நம்புவதெப்படி? வைபவமாலையில் சொல்லப்பட்ட அனைத்துப் பொருளுக்கும் இவர் மறுப்புக் கொடுப்பதாலும் ஒன்றுக்கும் ஆதாரம் காட்டாமல் சொல்வதாலும் இவர் உண்மைகளை அத்தாட்ச்சிப் படுத்தாமல் சொல்வதாலும் இவர் கூற்றுக்கள் உண்மைக்குறுதி யானவை என்று எம்மால் நம்ப முடியாமல் இருக்கிறது.
38. கோட்டை அரசன் செண்பகப்பெரு மாளின் வரலாறும் யாழ்ப்பாணத் தொடர்பும்
இவன் ஆரும் பராக்கிரம பாகுவின் வளர்ப்புப் புத்திரன் . இவனை யாழ்ப்பாண இராச்சியத்தைச் செயித்து வருமாறு அப்பராக் கிரமபாகு அனுப்பி வைத்தான். செண்பகப் பெருமாள் படைஎடுப்பு ஒ. பி. 1450ல் நல்லூரில் கனகசூரியன் ஆட்சி செய்யும் போது நடந் தது. இப்படை எடுப்பில் கனகசூரியன் தோல்வி பெற்று இரவிலே மனைவி மக்களைக் கூட்டிக் கொண்டு வடதேசத்துக்கோடிப் போய் விட்டான். இவ்விடத்தில் யாழ் வைபவமாலை சொல்வதாவது "விஜய வாகு என்னும் சிங்களவன் தானேயரசனெனத்தலைப்பட்டு தமிழ்க் குடிகளை யொடுக்கித் தமிழரை யுடைநடை பாவனையிலேல்லாம் தங் களைப் போலாக வேண்டும் என்று பலவந்தம் பண்ணி மாறுதல் பண்ணுவித்து அதற்கமையாதவர்களைத் தண்டித்தும் பதினேழு வரு டம் அரசாண்டான்' 'கனகசூரிய சிங்கையாரியன் தன் பிள்ளைக ளாகிய பரராசசேகரனையும் செகராசசேகரனேயும் திருககோவலூரில் இராசகுடும்பத்தார்பால் கல்வி பயில வைத்துக் காசிபரியத்தம் யாத் திரை பண்ணி திரும்பக் திருக்கோவிலூருக்குப்போய் அங்கே தன்

145
பிள்ளைகள் வளர்ந்தவர்களாய்ப் போர்ச்சாமர்த்தியத்திலும் கல்விப் பயிற்சியிலும் சரீர வழகிலும் அதிகப்பட்டவர்களாய் இருக்கக் கண்டு அளவில்லாத சந்தோஷவானஞன். பிதாவைக் கண்டபோதே பிள்ளைகளின் முகமீ சூரியனைக் கண்ட தாமரைப் புட்பங்கள் போலாயின. பிள்ளைகள் இருவரும் சத்துருவைச் செயிக்கவும் இராச் சியத்தை மீட்டுக் கொள்ளவும் பண்ணியிருந்த பிரயத்தனங் கண்டு மிகுந்த ஆச்சரியங் கொண்டு அவர்களை முத்தமிட்டு அங்குள்ள இராச குடும்பத்தார்க்குத் தான் காட்ட வேண்டிய நன்றியறிதல் எல்லாம் காண்பித்து பிள்ளைகளையும் தேவியையுங் கூட்டிக் கொண்டு மதுரைக்குப் போய்ச் சேர்ந்தான். அங்கே சேர்ந்த பொழுது பாண்டி நாட்டைப் பகுதிகளாக ஆண்ட சிற்றரசர்கள் பலரும் சேனைகளையும் ஆயுதங்களையும் கொடுத்துவிட அவன் சகல ஆயுதங் களுடனேயும் யாழ்ப்பாணம் வத்து சேர்ந்து மேற்கு வாசல் வழி யாக நுழந்ைதான்.
விசயவாகு காத்திராத வேளையிற் சேனைவர்க்கத்துடன் கனகசூரிய கிங்கையாரியன் நுழைந்த போதிலும் அவன் சடுதியிற் சேனைகளைக் கூட்டி'அஞ்சா நெஞ்சணுய் நின்று பெருஞ்சண்டை பண்ணி ஞன். செகராசசேகரன் ஒர் அரண் மேற்சண்டை செய்து நிற்கப் பரராசசேகரன் விஜயவாகுவின் துணிவையும் அவன் செய்யும் வீரத் தையுங் கண்டு வாட்படையுடனே விசயவாகுவின் போர்முனையிற் சிங்கம் பாய்ந்தாற்போல் பாய்ந்து சேனைகளையும் விசயவாகுவையும் தன் வாளுக்கிரையாக்கிஞன், அதைக் கண்டு செகராசசேகரனுடன் எதிர்த்த போர்முனை முறிந்து கெட்டுச் சிதறிப் போயிற்று. பரராச சேகரன் பிதாவை அரசாட்சியில் வைத்துத் தான்தேச விசாரணை செய்ய முயன்ருன், பிதாவாகிய கனகசூரியன் பராரசசேகரண் முடி சூட்டிச் சிங்காசனத்தில் வைத்துத்தான் இளைப்பாறியிருந்து சில காலத்தின் பின் இறந்து போரூன். யா. வை" மா, பக்-44-48
இவை நிற்க, செண்பகப் பெருமாளைப் பற்றி பிறர் கூறுவ தாவது “செண்பகப் பெருமாள் தலைநகருட் புகுத்து மதங் கொண்ட கனிறெனக் கண்டாரைக் கொன்று அந்நகர் ஆவணங்களிலெல்லாம் இரத்த வெள்ளம் பாய்ந்தோடும் ஆறுகளாக்கி நகரில் விளங்கிய மாடமாளிகைகளெல்லாம் இடித்துத் தரைமட்டம் ஆக்கிஞன். பின் அனேகவதிகாரிகளைச் சிறைப்படுத்தி அவர்களுடன் ஜெயவர்தன கோட்டைக்கு மீண்டான்'பராக்கிரமபாகு களிப்பால். ஆரியவேட்டை ஆடும் பெருமான் எனப் புகழ்ந்து யாழ்ப்பாணத்தையே அரசு புரியு மாறு அனுப்பினன்.

Page 83
146
செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணம் போய்ப் பழைய தலை நகரம் பாழாய் விட்டமையால் நல்லூரில் கி. பி. 1450 ல் ஒரு புது நகர் ரமெடுப்பித்துச் சிறீ சங்க பே த புவனேகபாகு என்னும் சிங்கள நாமத்தோடு பதினேழு வருடங்களாக வரசு செய்து வந்தான் இவன் யாழ்ப்பானத்தை வென்ற புகழ் சிங்கள நாடெங்கும் பரவிப் பேரா னந்தத்தை விளைவித்தது, இவ் வெற்றியைப் புகழ்ந்து கோகில சந் தேச வென்னும் குயிற்றுாதுப் பிரபந்தம் ஒன்று தங்காலைக் கணித் தான மூல்கிரிகல வென்னும் விகாரையில் இருந்த பெரும் புகழ்
படைத்த சிங்களப் புலவர் ஒருவராற் பாடப்பட்ட து"
(செ. இ.யா. பக். ச. 74. 75,)
செண்பகப் பெருமாள் கோட்டை இராட்சியத்துக்கு அரசஞன பிறகுதான் பூரீசங்கபோதி புவனேகவாகு என அழைக்கப்பட்டான்”
ஆகையால் நல்லூரில் உண்டான கட்டியத்தில் அப் பெயர் வரக் காரணம் இல்லை. சப்புமால். செண்பகப்பெருமாள், இராசகும ரேந்திரன் என்ற பெயர்கள் வந்திருக்க வேண்டும். தீவை வர
வில்லை. கட்டியத்தில் பூரீசங்கபோதிப் பெயர் வருதலால் அவன் , கோட்டைக்கரசனன பிறகு கட்டினன் என்போமானுல் இங்கே அவ னுக்கு நாடுமில்லை ஆட்சியுமில்லை. இங்கே கனகசூரியன் ஆட்சிக்கு வந்துவிட்டான். ஆகையால் செண்பகப்பெருமாள் நல்லூர்க் கந்த சுவாமி கோயில் கட்டவில்லை என்பதுதான் எம்முடிபு. செண்பகப் பெருமாள் ஆட்சியைப் பற்றி வைபவமாலை குறிப்பிடும் பொழுது *விஜயவாகு (செண்பகப்பெருமாளின் இராசப் பிரதிநிதி) வென்னுஞ் சிங்களவன் தானேயரசனெனத் தலைப்பட்டுத் தமிழ்க் குடிகளை யொடுக்கித் தமிழரையுடை நடைபாவனைகளால் தங்களைப் போலாக வேண்டுமென்று பலவந்தம் பண்ணி மாறுதல் பண்ணுவித்து அதற் கமைய யாதவர்களைத் தண்டித்துப் பதினேழு வருடம்,அரசாண்டான்"
(uunT. GOp6nu . LD nr. Luis. 45, 46)
இந்த வசையிலே அரசாண்டவன் கந்தசுவாமி கோயில் கட்டு !ை ஞ? அல்லாமலும் புத்தசமயப் பட்டமான சிறீசங்கபோதிப் பட்டம் பெற்ற அரசன் கட்டுவான? நிச்சயமாக அவன் கட்ட மாட்டான். நிற்க. இவ்வுண்மையை நிறுவ யெரிதும் வைரமான சான்று அக்கட்டியத்திலே கீழ் அடியிலேசொல்லப்படுவது. அதாவது: சூரிய குல வம்சோத்பவ. புவனேகவாகு' எனச் சொல்லப் பட்டி ருப்பது, இது அமைச்சர் புவனேகவாகுவையே வரைந்து குறிக்கும் எனவே அக் கோயில் கட்டியவன் அமைச்சர் புவனேகவாகுவென்க அன்றியும் செண்பகப் பெருமாள் சூரியகுல வம்சத்தவளு? இல்லையே, இவை நிற்க,

I 47
நல்லூரில் செண்பகப்பெருமாள் காலத்துக்குப் பல நூற்ருண் டுகளுக்கு முன்பே தலைநகர் கட்டப்பட்டு வன்மையுள்ள அரசரால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. அந்நகர் அரசின் வல்லமையை அடக்கத்தான் கோட்டை அரசன் இவனை அனுப்பி இருக்கிருன் , அங்ங்ணமாயின் இலகிய சகாப்தம் என்னும் பாட்டிலே நலமிகு யாழ்பாண நகரி கட்டுவித்து என்பது இவனைச் சுட்டாதோ எனின் சுட்டாது. இவன் படை எடுத்தது கி. பி. 1450ல் அது பாடப்பட் டது. கி. பி.948ல் அதாவது 500 ஆண்டுகளுக்குமுன். அப்படியானல் அப்பாட்டு இவனைச் சுட்டுவதெப்படி? நன்று இவன் அத்தலை நகரை இடித்துப் போட்டுக் கட்டியதை சுட்டாதோ எனின் அப்படியும் இல்லையே. கட்டியதென்று சொல்லப்பட்டதேயொழிய இடித்துக் கட் டியது திருத்திக் கட்டியதென்று சொல்லப்படவில்லை. அன்றியும் இது இராச விஷயம் கோட்டை அரசன் சொல்லாததை இவன் செய் யான். ஆனல் இவன் இங்கே இடிக்கவில்லை என்றுதான் தெரிகிறது அஃதெங்ங்னமெனின் இவன் படை எடுத்த தலை நகருக்குச் சிங்கை நகர் என்று பெயர். அப் பெயரை அந் நல்லூர் அரசன் அந்நகர் மதிலில் எழுதி இருக்கிருன். இவன் படை எடுத்தபின 140 ம்வரு டத்துக்குப்பிறகு போர்த்துக்கேயப் படை நல்லூருக்கு வந்திருக்கி றது. அந்தப்படை சிங்கைநகர் என்றும் எழுத்துப்பட்ட மதிலைத் தாண்டிப் போனதாக அப்படையோடுடன் வந்த பாதர் குவிருேஸ் எழுதி இருக்கிருர் ஆகையால் செண்பகப்பெருமாள் இடிக்கவில்லை. இடிக்கிறவன் முதலில் மதிலைத்தான் இடிப்பான் நிற்க,
உட்கோட்டையையும் இடிபடவில்லை என்னையெனில் இவன் படை எடுப்பில் தோல்வி கண்டோடிய கனகசூரியன் "இந்திய சிற்ற ரசர் பலரும் சேனைகளையும் ஆயுதங்களையும் கொடுத்துவிட அவன் சகல ஆயுதங்களுடனேயும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து மேற்குவாசல் வழியாக நுழைந்தான்’(யா. வை.மா,பக். 67)என்பதால் கனகசூரியன் முன்னர் இருந்த கோட்டை அப்படியே இருந்திருக்கு அதை அறிந்து தான் கனகசூரிமான் அவ்வழியாகக் காத்திராத வேளையில் நுழைந் திருக்கின்றன். முன்செண்பகப்பெருமாள் இடித்துக் கட்டினல் அக் கனகசூரியனுக்கு வாசல் தெரியாது நிற்க, கோட்டையும் நல்லுர ரும் இயற்கையில் வெவ்வேறு தேசங்கள். அங்கில்லாத பொருள் இங்கே கிடைக்கும். ஆகைய ல் அப்பெருமாள் இடியான். அப பெரு மாளுக்கு அரசன் ஓடினது வலு வாய்ப்பு. அப்படியே இருந்து ஆட் சியைச் சுலபமாக சுைப்பற்றி ஆட்சி செய்தான் என்றறிக. இடித் தால் ஆட்சி செய்ய இயலாதே, நிற்க.

Page 84
4
செண்பகப்பெருமாள் நல்லூர்த் தலைநகர் கட்டின தற்கோ கந்த சுவாமிகோயிலைக் கட்டியதற்கோ பிறர் ஒருவரும் ஒரு ஆதார மும் காட்டவில்லை, அவர்கள் கைலாயமாலையில் வரும் அமைச்சர் புவனேகவாகுவைச் சுட்டி 948ம் ஆண்டு வரையிய் பாடப்பட்ட பாடலில் புவனேகவாகு பெயர் வர அதிலே நலமிகு யாழ்ப்ானநகரி கட்டுவித்து நல்லைக்குலவிய கந்தவேட்கு கோயிலும் புரிவித்தானே' சான்றது. செண்பகப்பெருமாளேப் பாடினதாகக் காட்டுகிருர்கள். செண்பகப்பெருமாள் ஐஞ்ஞாறு ஆண்டு வரை பின்னுள்ளவன் அன் றியும் அப்பாடல் ஆசிரியர் முத்துஇராசக்கவிராமர்க்கும் செண்பகப் பெருமாளுக்கும் இவ்வாறு பாடும் தொடர்பு கொள்ளச் சந்தர்ப்பம் வராதே. இது வைபவமாலை நூலுக்கு எதிராகப் படைத்த படைப் புகளுட் சிலவாகும். அன்றியும், கைலாயமாலை செண்பகப்பெருமா ளுக்குப் பின்னுள்ள தமிழரசன் சுாலத்திலே பாடப்பட்டிருக்காது ஏனென்றம் சோழர் உறையூர்த் தலைநகரம் அப்பொழுது இல்லை அது அழிந்து விட்டது, இங்கே பாயிரகாரர் உறையூர் முத்து ராசக்கவியரசர் பாடியதென்று சொல்லி இருப்பதானுல் என்க. அன் றியும் கைலாயமாலையிற் சொல்லப்பட்ட குடியேற்றம்பற்றிமேற்படி புலவர்க்குப் பாடும்படி குறிப்புகளைக் கொடுக்க இவர்கள் அறியார் அது பல தூற்றண்டுகளுக்கு முற்பட நிகழ்ந்த சம்பவம் அன்றியும் அக் கோயில் கட்டிய காலத்திலேயன்றிப் பின்னவர் காலத்திலே அப்படி ஒகு சந்தர்ப்பம் வரவில்லை. அன்றியும் மாருதப்பிரவல்வி கதை சிங்கையாரியனுக்கும் யாழ்ப்பாண வரலாறு பாண்டியமழவனுக்கும் தான் தெரியும் பின்னுள்ளவர்க்குத் தெரியாதே"
39. நல்லூர்த் தலைநகர் இருந்த களம்
யாம் இத்தலைநகர் களம் இருந்த இடம். விசாரணையில் ஈடு பட்டு அவ்விடம் சென்று ஆராய்ந்த பாாத்த காலை, யமுனு ஏரி சங்கிலித் தோப்பு:சேர்ந்து இருக்கும் அக்களத்துக்கு அரை மைல் வரை கிழக்கே நாயன்மார்கட்டு என்னும் பிரதேசத்தில் கொழும்புத்துறைக் கும் நல்லூர்க்கும் இடையில் பன்னுாற்றுக் கணக்கானுேர் வீடுகட்டி குடிகொண்டு வாழும் ஒரு பிரதேசம் 'கோட்டை வாசல்" என்னும் தோம்புப் பெயர் உள்ளதாய் இருப்பதைக் கண்டேன். அங்குள்ள பற்பல வீடுகளுள்ளும் நாம் பார்க்க வேண்டிய தானங்களில் உள்ள வீடுகளுக்குப் போய் அவற்றின் சொந்தக்காரரைக் கண்டு யான் நல்லூர்த் தமிழ் அரசர்காலச் சரித்திரம் எழுத முயற்சிக்கிறேன். அதற்காக உங்கள் வீட்டுறுதியின் தோம்புப் பெயரைப் பார்த்தறிய

49
விரும்புகிறேன, அவ்வுறுதிகளைத் தாருங்கள் என்று கேட்டேன். அவர்கள் அப்பெயர்கள் “-கோட்டை வாசல்” மன்று அழைக்கப்படு கின்றன. என்று சொல்லி அவைகனை என்னிடம் தந்தார்கள். நானும் வாசித்துப் பார்த்துக் கோட்டை வாசல் என்றிருக்க கண்டேன். மகிழ்ந்தேன். எனவே தமிழ் அரசரின் கோட்டையின் வாசல் கிழக்கு நோக்கியதென்றும் தேர்ந்தேன். எனவே பிற ஆராய்ச்சிக்காரர் நல்லூர் நகர்க்குத்தான் சிங்கைநகர் என்றும் இன்னுெரு பெயர் இருப்பதைத் தேர்ந்து கொள்ளாமல் அச்சாதனத்தால் அது இன் ஞெரு இடத்தில் உள்ள நகரமென்று விளங்கிக் கொண்டு அவ் விளக்கத்தால் வல்லிபுாத்துச் செங்கடக நகர் மேலே சிங்கைநகரை நிச்சயம்பண்ணி உண்மையைச் சரிதத்தை மாறுபட எழுதியிட்டனர் என்க.
இக்களம் வடக்கே சட்டநாதர் கோயிலுக்கும் தெற்கே கைலாய பிள்ளையார் கோயிலுக்கும் மேற்கே வீரகாளியம்மன் கோயி லுக்கும் இடைப்பட்டதாக முத் திரைச் சந்தையை உள்ளடக்கியதா கச் கங்சிலியன் தோப்பு யமுனு ஏரிகளையும் சேர்ந்து கிழக்கு வாசல் கொண்டதாக கி. பி. 948 தொடங்கி கி.பி. 1658 வரை அரசு இருந்த தென்க், இவ்வொருகளத்தில் உள்ள கோட்டையில்தான் சிங்கையா ரியர் முழுப்பேரும்ஆட்சி செய்தார்கள். நவ்லூர்க் கததசுவாமிகோயில் இக்களத்திதின் மத்தியைச் சேர்ந்ததாக மேற்கேயிருக்கிறது எனலாம்,
இந்நகர்க்குப் போர்த்தர் வரும்போது சிங்கைநகர் என்னும் பெயர் அழைக்கப்பட்டிருக்கு இராசாதோட்டம் ஆரியகுளம் புற நகர்ப் பக்கமாயமைந்தவைகளாம். இச்சிங்கையாரிய பரம்பரையில் சங்கிலி கடைசிக்காலத்தில் இருந்த பிரகித்தி பெற்ற மன்னன், அவன் இருந்த நிலம் சங்கிலித் தோப்பென்று பெயர் பெற்றது. அந்நிலத் திலே அக்களத்திலேதான் புன்னர் கனகசூரியனின் கோட்னட அரண்மனை என்பன இருந்துள்ளன. அதுதான் கனகசூரியன் செண் பகப் பெருமாளிடம் தோற்ற இடமும் யின்னர் அவனிடம் அவன் பிரதிநிதியிடமோ வென்ற இடமும் கனகசூரியனுக்கு முன்னர் எக் காலத்கிலும் தலைநகரில் படை எடுப்பு நடக் ஏவுமில்லை தலைநகர் இருந்த களம் மாற்றம் அடையவும் இல்லை ஆகவே கி. பி. 1440 தொடங்கி அக்காலததின் முன் ணுக கி. பி 948 வரை ஆதிச் சிங்கை ஆரியன் வரையும் தலைநகர்க் களம் ஒரே இடத்தில்தான் இருந்தி ருக்கிறது. அதுதான் இறுதியில் நல்லூரில் சங்கிலித் தோப்பாக வும் அதைச் சார்ந்த நிலங்களுமாயது. ஆகவே சங்கிலித் தோப்பு நல்லூரில் இருக்கிறது. அது சிங்கைநகர் மதிலுக்குள்ளே இருக்கி றது. ஆகவே நவ்லுரர் நகர்க்களத்தான் சிங்கைநகர் களமரக நிரூ பணம! வதாக வருவதையுமறிக.

Page 85
40. பிறர்கருத்து
கைலாயமாலேயில் வெளியான தனிப்பாடலில்
"இலகிய சகாப்தம் எண்ணுரற்றெழுபதாமாண்டதெல்லே அவர் பொலிமாஃவ மார்பனும் புவனேகவாகு நலமிகு யாழ்ப்பான நகரிசுட்டுவித்து நல்லேக் குலவிய கந்தவேட்கு கோயிலும் புரிவித்தானே
என்ற பாட்டால் அமைச்சர் புவனேகவாகு சிங்கைநகரியைக் கட்டியதையும் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கட்டயதையும் வரை யறையாகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்லப்பட் டிருக்கிறது. அன்றியும் அமைச்சராகிய ஒரு புருடன் மேலே அவ் விரண்டு செயலும் சொல்லப்பட்டிருக்கிறது. வன. சுவாமி ஞானப் ஞானப்பிரகாசர் "யாழ்ப்பாண நகரி என்பது சிங்கை நகராபின், புவனேகவாகு என்பது காலகதியிக் புகுத்த வழுவாயின் அக் கவி கூறும் ஆண்டுக் கணக்கு காலிங்கச் சக்கரவர்த்தி சிங்கை நகரைத் கட்டிய ஆண்டாகலாம்" என்றும் கூறிஞர் (யா, வை. வி. பக். பீசி
அப்பால் (டிே நூல் பக் 108ல் செண்பகப் செண்பகப்பெரும ளே புவனேகவாகுவாயினமையால் இரு பேருடையவஞன இவஃனத்தான் நலம்மிகும் யாழ்ப்பாணத்து நகரிகட்டுவித்து நல்லேக்குவவிய சுந்த வேட்கும் கோயிலும் புரிவித்தானே" எனப்பட்டது போலும் என்று முறையே 13ம் நூற்றுண்டில் கலிங்கமாகன் மேலும் 15ம் நூற்ருகன் டில் உள்ள செண்பகப்பெருமாள் மேலும் தடுமாறிப் பொருள் பண்ணுவது காண்க. அதாவது பத்தாம் நூற்றுண்டில் உள்ள ஒரு புருடன் மேலே சொல்லப்பட்ட பாடலே 18ம் 15 நூற்ருண்டில் உள்ள இரு வேறு புருடர் மேலே பொருள் பண்ணுவதைக் கவனிக் குக இக் கூற்றுக்களால் இவர்கள் பொருள் வரையறையில்லாமல் தெளியாமல் சொல்வனவற்றை நோக்குக.
வண. சு. ஞா, தம் நூலே 1928ம் ஆண்டு வரையில் எழுதிஞர். இவர்க்குப் பின் 1933ல் செ, இ. யாழ்ப்பாணச் சரித்திரத்தை எழு நிஞர் அவரும் வல்லிபுரத்தில் சிங்கைநகர் உண்டாயிருந்த செய்தி யைத் தன்நூலில் (செ. இ. பாச. பக் 10 லும் 23 லும் குறிப்பிட்ட தோடு "செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத் தலேநகருள் புகுந்து கண்டாரைச் கொன்றும் மாடமாளிகையை இடித்துத் தரை மட்டமாக்கினுன் என்றும் (டிெ நூல் பக். 74) இவன் நல்லூரிலே

교 II
1450ல் ஒரு புது நகர் எடுப்பித்து சிறீ சங்கபோதி புவனேகவாகு வென 17 வருடம் ஆட்சி செய்தான் என்றும் (டிே நூல் பக். 73) இவனே கந்தசுவாமி கோயிலைக் கூடக் சுட்டினுள் என்றும் சொல்லியுள் ளார். இவர்கள் தமக்கு முன்னர் வைபவமாலை. கைலாயமாலே அமைச்சர் புவனேகவாகுதான் நல்லுரர் தலே நகரையும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலையும் கட்டி இருக்கிருன் என்று சொல்வி இருப் பதை ஆதாரம் காட்டி மறுக்கவும் இல்லை. தம்புதுக் கேர்ட்பாட் டுக்கு ஆதாரம் காட்டி நிறுவவும் இல்லே தம் மனம் Gurr Gran GTGCTG4 ) சொல்லி இருக்கின்றனர் ஆகையால் இவர் சுற்றுக்களை கடந்த உண்மை யைச் சம்பவங்களென்று நம்ா ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது. இரண்டு புவனேகவாகுகள் ஒரு கந்நசுவாமி கோயில் கட்டினவர்க ால்ல ஒரு புவனேச்வாகு தான் கட்டினது குலசபாநாதன் அவர்கள் நல் லூர்கந்தசுவாமிஎன்னும் நூலில்(பக். 23ல்) யாழ்ப்பான வைபவம் என் னும் நூவில் தமிழ் அரசனின் வாசல்ஸ்தானமாகிய நல்லூரிலே 870 வருடத்தில் சிங்கையாரிய மகாராசனின் மந்திரியாகிய புவனேகவா குவினுற் கட்டப்பட்டுப் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்ட சுந்த கோயில் என்று குறிப்படப்பட்டுள்ளதாகக் காட்டுகிருர், அன்றியும் அவர் யாழ்ப்பாணம் கச்சேரியில் சைவசமயக் கோயில் களேப் பதிவு செய்து வைத்திருக்கும் பழைய இடாப்பு ஒன்று உண்டு. என்றும் அதனைத் தாம் பார்வையிட்டபோது கோயிற் குறிப்பு வரலாறு என்பதன் கீழ்.
கந்தசுவாமி 1ே பில் குருக்கள் வளவு என்ற காணியிற் கட் டப் பெற்றுள்ளது இது தமிழ் அரசன் ஆரியச்சக்கரவர்த்தியின் பிர தம மந்திரி புவனேகவாகால் 884 ம் ஆண்டளவிற் கட்டப்பெற்றது என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கரட்டுகிருர், (டிெ நூல் பக். 34) அன்றியும் அவர் துவைனம் அவர்கள் எழுதியயாழ்ப்பாணப் பகுதி இந்து ஆலயங்களின் அட்டவனேப் புத்தகம் பார்க்க நேர்ந்ததாகவும் அதில் நல்லூர்க் கந்தசுவாமி தோபில் குருக்கள் வளவு என்னும் NGTGPMafi (ப் பெற்றுள்ளது தமிழ மன்னன் ஆரியச் சக்கரவர்த்தி பின் பிரதம அமைச்சர் புவானகவாகரிஞல் கி. பி. 884 வரை கட் டப்பெற்றது. என்ற குறிப்புக்களைக் கண்டதாகவுங் கூறுகிருர் (டிே நூல் பக் 5ே)
இங்கே இவர்கள் காட்டிய குறிப்புக்கள் அனைத்தும் கைலாய மாலேத் தனிப்பாடலில் இலகிய சகாப்தம் எண்ணுரற்றெழுபதாமாண்ட தெல்ல. புவனேகவாது நல்லசுகுலவிய கந்த வேட்குக் கோபி லும் புரிவித்தானே" என்று கூறப்பட்ட புவனேகவாகு அமைச்சர்

Page 86
52
புவனேகவாகுதான் என்ற துணிவதற்கு மேலும் வலுவைக் கொடுக் கின்றன. என்பது கவனிக்குக. இவை இங்ங்ணமாக திரு செங்கை யாழியான் அவர்கள் ஈழநாடு இதழிலே சுந்த வேள் கோட்டம் என்ற தலைப்பிலே அனேக கட்டுரைகள் எழுதி இருக்கிருர் . அவற் றுள் 27-10-85 இதழிலே ஆரியச்சக்கரவர்த்தி என்றும், சிங்கை ஆரியன் என்றும் வழக்கப்படப் போகின்ற இவன் மந்திரியாகப் புவ னேகவாகு என்பவர் இருந்தார் . அவர் நல்லூரில். மந்திரிமாளி கைக்கருகில் தென்கிழக்கே அமைந்திருந்த குருக்கள் வளவு என்ற இடத்தில் (இன்றைய நல்லூர்க் கந்தன் ஆலயம் அமைந்துள்ள இடம்) கந்த வேளுக்குச் சிறிதொரு ஆலயம் அமைப்பித்திருந்தார், முதலலாயம், இது இவரின் இக் கூற்று நாம் மேலே காட்டிய கூற்றுச்க ளுக்கொத்தாம் . நம்கூற்று அமைச்சர் புவனேகவாகுவே நல்லூர்த் தலை நகரையும் கந்தசுவாமி கோயிலையும் கட்டினுன் என்பதே.
41. நல்லூர் நகர் வீழ்ச்சி
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்னும் நூலில் சொல்லப் பட்டபடி சங்கிலி ஏழாம் செகராசசேகரன் கி. பி. 1519-1561 வரை ஆட்சி பண்ணிஞன், போர்த்துக்சேயர் கி. யி 1505 ஆண்டளவில் வியாபாரிகளாய் வியாபார நோக்கமாக வத்து இலங்கையினுட் புகுந்து கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாண இராச்சியற்தோடு சம்பந்தம் பூண்டு ஈற்றில் அதனே ஜெயித்து அப்பிக் கொண்டார்கள் போர்த்துக்கேயர் அவனைக் கொலை பாதகன் கொடுங்கோலன் என்று சங்கிலியை எழுதி வைத்துள்வனர் 1542ம் வருஷம் அர்ச் சவேரியார் என்னும் குரு, மன்னர் வாசிகள் ஏழுநூறு பேருக்கு அவர்கள் சத் திய வேதத்தில் சேரவிரும்பிய படியால் அவர்களுக்கு ஞானஸ்நா னம் கொடுத்த்ார் அந்த ஞானஸ்நானம் பெற்றவர்களைச் சங்கிலி மன்னன் முன் போல் தங்குல தெய்வத்தைத் தொழும்படி ஆக்ஞா பித்தான், அவர்கள் சத்திய வேதத்தை விடுவதில்லை என்று சொன் ஞர்கள் அனைவரையும் அரசன் வாளுக்கிரையாக்கினன். இது 1544 ம் ஆண்டுக் கடைசியில் நடந்தது என்பர், (யா. வை, வி. பக். 113-11)
அன்றியும் அந்தூலில் பறங்கிப் படை எழுச்சி 1560ம் ஆண்டு நடந்த விவார சங்கிலி தன் பிரசைசுளில் கிறிஸ்தவராஞேர்களை வருத்தியதோடு யாழ்ப்ாணத் துறைகளை யடையும் அன்னியக் கப்பல் களைச் சூறைய7 டிக் கொண்டு வந்தமை பறங்கியரின் பழைய கோபத்தை வளர்த்துக் கெகண்டு வந்தது. கொன் ஸ்கந்தீனுபிறகன்சா

153
என்னும் போர்த்துக்கேயரது இந்தியப் பிரதி ராசாவின் தளைமையில் அவன் 92 மரக்கலன்கள் படையுடன் 1560ம் ஆண்டு செப்ரம்பர்மாதம் 7 ந் திகதி கோவையைவிட்டுப் புறப்பட்டான் கொச்சியில் இன்னும்
7 போர்க்கப்பல்கள் சேர்க்கப்பட்டன. கப்பற் படையானது யாழ்ப் பாணத்தில் வந்து ஒக்டோபர் மாதம் 20ந் திகதி நங்கூரம் போட் டது. பிறகன்சா கரைகளைப்பார்வையிட்டு இரண்டு நாட்களாகப்
பாரியா லோசனை பண்ணியபின் பண்ணையிற்றுறைபில் இறங்கினன் . சங்கிலி அரசன் பெலம் முழுவதும் கொழும்புத் துறையில் இருந்தது. அத்துறையில்தான் பறங்கியர் கரை பிடிபபர்கள் என அவன் காத் திருந்தான். பறங்கியர் 2 நாட்களின் யின் சிறுத்தீவில் இறங்கி அதி காலையில் தங்கள் சமய நிட்டைகளை முடித்துக் கொண்டு பின் நேரம் 3 மணிய2ாவில் பண்ணைத் துறையை நோக்கி வந்தனர். அர சன் சேனை2000 டேர் வரை சேது என்று பொறிக்கப்பட்ட கேடயங்களு டன் வந்தும் பறங்கிகள் சொரிந்த குண்டு மாரிக்காற்ருது பின்னி டவே சத்துருக்கள் எதிரிடையின்றி இறங்கிக் கொண்டனர்.
(யா, வவ. வி. பக். 124)
நல்லூர்ப் பிரவேசம்
பறங்கிப் படை 1200 பேர் மாத்திரம் கொண்டதாயிருந்தும் அணிவகுப்பில் சிறந்து விளங்கியது, முன்னணியில் ஒரு குரு கிறிஸ் துவின் கொடியைச் சுமந்து செல்ல பிறகன்சா பின்னணியில் வத் தாஷ் . கிறிஸ்துவின் கொடியை வணங்கிக் கொண்டு ‘சந்தியாகூ" என்று போர்ச் சத்தமிட்டுக் கொண்டு படை பட்டணத்தை நோக்கி நடந்தது. பட்டத்துக் குமாரனும் படைகளுடன் வந்தெதிர்த்துப் பின் வாங்கினன். அப்பாலும் பறங்கிப் படைகள் நெருங்கி வரவே கோட் டைப் புரிசையின் முன் தமிழர் இரண்டு அணியாக நின்று எதிர்த் தனர். இரு படையினர் க்ரும் போர் மூண்டது.
அச்சsமையத்தில் பறங்கியர் குண்டுமாரி பொழிந்து ஒர் வாயிலை உடைத்து விட்டு பட்டணத்தில் சரிந்தனர். அங்கு அதன் முக்கிய சிெருவில் இறங்குதலும் ஒலைகளின் கீழ் மறைத்து வைத்திருந்த பல பீரங்கிகள் வெடித்துக் குண்டு சொரியவே பறங்கியர் மீண்டும் வீராவேசமாய்ப் போர்புரிந்து தமிழர் படையின்மேல் வீழ்ந்து பல ரைக் கொன்றனர். தமிழரும் பிறகன்சாவின் குதிரையை வெட்டி வீழ்த்தியும் வீடுகளிலும் தோட்டங்களிலும் இருந்து சரமாரி சொரிந்தும் எதிரிபடையை வருத்திளர். பறங்கியர் தம்முயர்தர மான படைப் பழக்கத்தின் உதவியால் தமிழர் படைகளையெல்லாம் ஒதுக்கி ஒரு பக்கத் தெருவழியால் ஒடக் செய்தனர்.
(யா, வை, வி. பக். 127)

Page 87
154
அரசன் நழுவி விடல்
நல்லூர்க் கோட்டை புற நீங்கலாக பட்டணம் போர்த்துக் கேயர் கைப்படவே பேர் வீரர் அங்குமிங்குமாகச் சூறையாடத் தலைப்பட்டனர், குறையாடப்பட்ட பொருட்களுடன் வீதிராசா பொரு ளான புத்த சின்னமுமொன்று அந்த யுத்தத்தில் மறியற்காரராகப் பிடிக் கப்பட்ட இராச குடும்பத்தினரைப் போர்தர் பதவிக்கேற்ற மரியாதை யாக நடத்தினர். பிறகன்சா அன்றிரவு கோட்டைக்கயலே தங்கி மறு நாள்கோட்டையைப் பிடிக்க எண்ணினன். நல்லூர்க் கோட்டையில் இருந்து போர் தொடுப்பான் அரசரென போர்தர் எண்ணினர்.ஆயின் அர்த்த சாமத்தில் அவன் திரவியங்சன் அனைத்தையும் அள்ளிச் கொண்டு அரண்மனைக்கு நெருப்பு வைத்து விட்டுக் கோப்பாய்க் கோட்டைக்கு ஒட்டம் பிடித்தான். போர்த்துக்கேயர் நல்லூர்க்கோட் டையைக் கைப்பற்றிக் கொண்டு நகரவாசிகளுக்குப் பறை அறி வித்து நல்லூரில் வந்து குடியேறச் செய்தனர் அப்பால் பிறகன்சா கோப்பாய்க் கோட்டைக்குப் போனன், அதுவும் வெறுமையா பிருந் தது அரசன் பறங்கியர் டை தன்னைத் தொடர்ந்து வருவதை யறிந்து காடுகளுக்குள் கரந்துறைவானுயிஞன். பின்னர் பிறரின் துரண்டுதலால் அரசன் போர்த்துச்சேயரோடு சமாதானம் செய்ய உடன்பட்டான். பிறகன்சாவும் ஒப்புக் கொண்டான் இரு பகுதி யார்க்கும் 6 அம்சங்களைக் கொண்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி அரசன் நடக்கவில்லை இரு பகுதியாரும் பகைமை பூண்டனர், (யா, வை. வி. பக். 124-130)
அப்பால் காக்கைவன்னியன் செய்த துரோகத்தினுல் சங்கிலி போர்த்தரால் சிறைபிடிக்கப்பட்டான். அவர்கள் காளிகோயில் சன் னதியில் அவனைச் சிரச்சேதம் செய்து கொன்ருர், மனைவி தீயில் குதித்து இறந்தாள் என்றும் திரு ஆ. மு. ('பா' ச. பக். 70) சொல் லுகிருர்,
போர்த்துக்கேயரின் மேலாட்சி 1561 தொடங்கி 1590 வரையும் நடந்தது.
காசிநயினர் பெரியபிள்ளை புவிராசபண்டாரம் என்போர் அவ்வாட்சியில் அரசியற்றினர் (யா. வை. வி. பக் 132-139)
இவர்களுக்குப்பின் எதிர்மன்னசிங்கம் சங்கிலி குமரன் அர
Fit GR37 6.

55
யாழ்ஜ்ாணத்தில் போர்த்துக்கேயரின் இரண்டாம் படை ஏற்றம் (யா. வை. வி. பக். 140)
1591 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ந் திகதி பூத்தாடு என் னும் போர்த்துக்கேய தலைவனின் / கீழ் படை கொழும்புத் துறையில் இறங்கியது. அப்பொழுது அரசஞயிருந்த புவிராசசிங்கமும் போருக் காயத்தமானன். 23ந் திகதி பறங்கியர் படை நல்லூரை நோக்கி நடந்ததும். வழியில் சிங்கைநகர் என்னும் அரணில் தமிழர் படை போர்த்தரை எதிர்த்துக் கடும்போர் புரிந்தது. தமிழர் சேனைத்தலை வஞகக் காக்கு என்பவன் போர் புரிந்தான். போர்த்தர் 'சந்தி யாகஉ' என்ப் போர்ச் சத்தமிட்டுக் கொண்டு தமிழர் சேனையுட் பகுந்தனர். அப்பால் போர்த்தர் படை நல்லூரில் இரு கோயிலுக் கிடையில் (அவை வீரமா காளியம்மன்கோயில் கந்தசுவாமிகோயில் என்பன போலும்) போர் புரிந்தது.
இப்போரில் அகப்பட்ட எதிர்மன்னசிங்ககுமாரன் என்னும் இராசகுமாரனைச் சீமான் பிஞ்ஞன் என்னும் போர்த்தர் போர்வீரன் காப்பாற்றினன். பூத்தாடும் அவ்விராச குமாரனை உபசரித்தும் சு ப் பற்றினன். அப்ப ல் எதிர்மன்னசிங்ககுமாரனைப் போர்த்தர் திறை யரசனுக்கினர்கள். அவன் 1591-1616 வரைபும் அரசாண்டான், அப்பால் சங்கிலி குமாரனின் ஆட்சி 1616-1620 வரையும் நடந்து இவன் ஆட்சியிலே இராசபரம்பரையினர் பலருக்குத் தீமைகள் நிகழ்ந் தன. இவன் போர்த்துக்கேய மேலிடத்துக்குப் யிடிக்காமல் நடந் தான் இவன் தன் மனைவியோடும் சுோவைக்கனுப்பப் பட்டான். இவனும் மனைவியும் சத்தியவேதத்திற் சேர விரும்பினர். கோவை யின் அதிமேற்றிராணியார் ஞானப்பிதாவாய் நிற்க இராசமரியாதை யோடும் ஞானதீட்சை கொடுக் கப்பட்டது. சங்கிலிக்குத் தொன் பிலிப்பென்றும் மளைவிக்குத் தொன்னகத்தரின என்றும் பெயரா யிற்று.
பின்னர் கோவையிலே இவனுக்குத் தீர்மானிக்கப்பட்ட மரணத்தீர்ப்பு நிறைவேறும் தினம் வரவே சங்கிலி அத் தீர்ப்பை மனச் சாந்தியோடும் ஏற்போனயினன். அலுப்பு ந்தியின் முற்றவெளிக் கவனஇட்டுக் கொண்டு போகுப் போது பிரான்சீஸ் சபைச் சன்னி யாசிகள் பலர் உடன் சென்றனர். கொலைக்களம் முழுதும் துக் கத் துக்குக்கடையா விளமாகக் கறுப்புத் துகிலால் போர்த்திருந்தது அதன் நடுவில் ஒரு கம்பளம் விரித்துப் சிவப்புப் பட்டுத்தலையணை போடப்பட் டிருத்தது குற்றத்துக்காகக் கொல்லப்படும்போதும் கொல்லப்படு

Page 88
56
வோனின் இராசகுலத்துக்குக்கேற்ற மரியாதையைச் செய்யப் போர்த் துக்கேயர் தவறிஞரில்லை. அப்பால் சிரம் கொய்யுமுன் வழக்கம் போலக் கைகளைக் கட்டச் சங்கிலி சம்மதியாமல் யான் என் பாபத் துக்கே மரிக்கின்றேன்ஞனதினுல் என் மனமொப்பிக் கொண்டேன் என்றனன். பின் யேக என்னும் திருநாமத்தையுச்சரித்துக் கொண்டி ருக்கையிலே யாழ்ப்பாணத்தைக் கடைசியாய் ஆண்ட எம் அரசன் சிரம் விழுந்தது. சங்கிலி ஒரே ஒரு தயவைக் கேட்டிருந்தான். தன் தேகத்திற்கு பிரான்சீஸ் சபையாரின் உடுப்புக்கட்டி சேமம் செய்ய வேண்டுமென்பது, அவ்வாறே தீ நியாசிகள் மரித்த சரீரத்துக்குத் தம் சபையின் அங்கிகளை அணிவித்து இராச வைபவங்களோடு ஊர் வலம் செய்து தங்கள் சவக்காலையில் பிரேத சேமம் செய்தனர்.
(யா, 1ை. வி. பக். 160)
சங்கிலியின் மனைவி மனம் திரும்பினேருக்குரிய ஓர் மடத்தில் உட்பட்டு அங்கு பழம் கிறிஸ்தவரும் காணும்படியான உத்தL கிறிஸ்த சீவியமுள்ளவளாய் லிளங்கினள் (ைெடி பக். 180)
இச்சங்கிலி அரசன் தான் சிங்கை ஆரிய அரசனின் கன்டசி அரசன் இவனுடன் தமிழரசர் அரசாட்சி முடிவெய்தியது.
யாழ்பாணத்தை ப நூற்றண்டாக அரசு செய்த சந்ததியா ரின் இறுதியரசன் கைதியாகவே போர்த்துக்கேய சேன தி பிலிப்டே ஒலிவேரு கி, பி. 1620ல் தேசாதிபதியானுள் இவன் ஆட்சி ஆரம்பம் வரையும் இருந்த தமிழர் நல்லூர் இராச்சிய முடிவெய்தியது (டிெ பக். 160)
42. யாழ்ப்பாணம் என்னும் பெயர் இப்பெயர் பற்றி
முதலில் வண. சு. ஞானப்பிரகாசர் அவர்கள் கூறியகூற்றுக்கு வருவோம்
யாழ்ப்பாண அரசர் காலத்தில் வடவிலங்கைத் தலைநகர் தமிழ் நூல்களில் யாழ்ப்பாணமென்றழைக்கப் பட்டதாகத் தோன்றவில்லை , அந்நூல்களிலெல்லம் சிங்கைநகரையே பெரும் பான்மையும் நல்லூ ாைச் சிறுபான்மையும் குறிக்கின்றன யாழ்ப்பாணம் என்னும் பெயர் 15ம் நூற்றண்டுச் சிங்கள நூல்களிற்ருன் முதன் முதற் காணப்படும். செல்லுகினி சந்தெசய, கோகில சந்தெசய எனும் இரு நூல்களிலும் அது யாப் பாப் பட்டுன எனப் பெயரிடப் படு

157
கின்றது. இதஞல் யாழ்ப்பாணப் பெயர் யாப்பா-நெ எனும் சிங் களப் பெயரீட்டினின்று உண்டான தென்பர் ஆராய்ச்சி வல்லோர். இதுவே எம்மதமுமாம். யாப்பா (யகபத்) எனும் சொற்பகுதி நல்ல என்னும் பொருளுள்ள ஓர் மொழியாம். நெ என்னும் பகுதி ஊர் மனப் பொருள் படும். ஆகவே யாப்-பா-நெ 'நல்லூர் எனும் தமிழ்ப் பெயர்க்குச் சரியான சிங்களமாம் (இது பூரீ, எ, எம். குண சேகர முதலியார் முதற்கண் எடுத்துக் காட்டியது. இடப் பெயர் வரலாறு 130ம் பக்)எனவேயாப்பா-நெயாப்பாப் பட்டுண என்பவையி ரண்டும் நல்லூர்-நல்லூர்ப் பட்டணம் எனும் தமிழ்ப் பெயர்களேயே காட்டி நிற்கும், யாப்பாநெ எனும் பெயர் யாழ்ப்பாணம் என மருவி வழங்கிய நாட்களிலே நம்புலவர்கள் யாழ்ப்பாணன் கதையை உருப்படுத்தி வைக்க அன்னுேரைப் பின்பற்றிய மயில் வாகனப் புலவர் காலவரையறையிகந்து கவிவீரராகவரென்னும் சமீப காலத்து யாழ்ப்பாணனை பழைய காலத்துக் கற்பனையிலுள்ள யாழ்ப்பாணனு டன் சேர்த்து வைபவமாலையிற் புகுத்தி விடுகின்றவராஞர்."
இதுகாறுங் கூறியவற்ருல் யாழ்பாடியின் வரலாறு சமூலமகா நிஷேதிக்கப்பட வேண்டும் என்பது தெளிவு. ( யா. வை. வி. பக். 18-19)
யாழ்பாடியின் வரலாறு செங்கடக நகரியிலிருந்து ஆரம்ப மான லரலாறு வைபவமாலை, சொன்ன செங்கடகநகரி வடவிலங் கையில் வண. சு ஞா. அவர்களால் அறியப்படாத ஒன்று இன்னும் வண சு. ஞா அவர்கள் மற்றுமோரிடத்தில் ஒர் சிங்கள நூல் செண்பகப் பெருமாள் யாழ்பாணத்தைக் கைப்பற்றியது கேட்டுச் சிங்களவர் ஆனந்த நிருத்தமாடிய காலத்தில் இயற்றப் பட்டது. அதனைச் செண்பகப் பெருமாளுக்கே தேவேந்திர நகரி லிருந்து வந்த ஒரு தூதாக" கோகில சந்தேசயமெனப் பெயர் கொடுத்து அந்நகரத்து இறுகல் குலபிரவேணியின் அதிபர் பாடிஞன். அதில் . யாப்பா பட்டுண . திறகொட்ட அதாவது ஆரியச் சக்கர வர்த்தியைத் துரத்திவிட்டு யாப்பா பட்டினத்தை (நல்லூரைத் தன்னரளுக்கி வாழ்கின்ற நாளுசுகீர்த்தி பொருந்திய சப்பு:பல் (செண் பகப்பூ) ராசகுமாரேந்திரனுக்கு அக்குயிற்றுாதையனுப்பியதாக காட்டப்பட்டிருக்கிறது" (யா வை, வி. ப 105-106,
இவர் கருத்துப்படி நல்ல என்னும் தமிழ்ச் சொல்லின் பொருள் குறித்த "யாப்பா' என்னும் சிங்களச் சொல்லும் ஊர் என்னும் தமிழ்ச் சொல்லின் பொருள் குறித்த "நெ' என்னும் சிங் களச் சொல்லும் அதாவது கல்லூர் என்னும் தமிழ்ப் பெயரின் சிங் சுள மொழி பெயர்பாகிய "யாப் 1 நெ என்பது காலகதியில் யாழ்ப்

Page 89
58
பானமாக மருவி வழங்க வைபவமாலை யார் அப்பெயரைக் கொண்டு கற்பனையிலே ஒரு கலிவிரராகவனக் கண்டு அவனை வைபவமாலையில் சேர்த்து எழுதியிருக்கிருர், எள்பதே:
இங்கே நாம் அறியவேண்டியது (யாப்பாநெ) தான் யாழ்ப் பாணமானதா உள்ளபடி யாழபாணன் வசித்த காரணத்தால்தசன் யாழ்பாணம் என்றபெயர் வந்ததா என்பதே கி.பி. 9ம் நூற்ருண்டிலே யாழ்பாணன் வசித்திருக்சிருன், செண்பகப் பெருமான் 15ம் நூற்ருண் டில் வாழ்தவன் எனவே ஆறுநூற்ருண்டுக்கு முன்னரே யாழ்ப்பாணன் வசித்ததாலே யாழ்ப்பாணப் பெயர் வந்துவிட்டது. கைலாயமாலை கி. பி. 948 ல் இயற்றப்பட்டது. அதிலே, * 'பாவலர்கள் வேந்தன் பகரு மியாழ்ப் பாணன் காவலன் றன்மீது கவிதை சொல்லி - நாவலர் முன் ஆனகவி யாழினமைவுற வாசித்திடலும் மானபரன் சிந்தை மகிழ்வாகிச் - சோனைக் கருமுகில் நேருங் கரன் பரிசிலாக வருநகரமொன்றை வழங்க - தருநகர மன்றுமுதல் யாழ்பாண மான பெரும் பெயராய் நின்றபதி யினெடுங்காலம் - வென்றிப் புவிராசன் போலப் புகழுடனுண்ட கவிராசன் காலங்கழிய" (கண், 40-45)
எனவே செண்பகப் பெரும7ள் காலத்துக்குப் பின் யாழ்பாண னின் யாழ்ப்பாணப் பெயர் வந்தாற்ருன் யாப்பாநெயில் இருந்து வந்ததெனலாம்
மதித்த வளங்கொள்வயல் செறி நல்லூரில்"எனக்கைலாயமாலை
யிற் சொல்லப்படுவதால் ஊருக்கு நல்லூர் என்ற பெயரும் தேசத் துக்கு யாழ்ப்பாணம் என்னும் :ெரும் இக் குயிற்றுாதுக்கு முன்னரே இருப்பதால் இக்குயிற்றுாதாலே தான் இப் பெயர் வந்ததென்பது பிழை.
"யாப்பாநெ” என்ற சிங்களச் சொல் மாழ்ப்பாணம் என வரவில்லை. அதனை வைபவமாலை யார்மயங்கிக் கூறவும் இல்லை. கைலாயமாலை, வைபவமாலைக்காதாரமான நூல் அக்கைலாயமாலேயிற் சொல்லப்பட்டதையே அவர் சொன்னர் என்பதே,
அன்றியும் நல்லூரில் உள்ள தமிழ் மக்கள் தம் நாட்டு நல்லூர் என்னும் சொல்லைவிட்டு ‘யாப்பாநெ’ என்னும் சிங்களச் சொல்ஆல
சொன்னர்கள் என்றும் அதுவே காலகதியில் யாழ்பாணம் எனும்

I59
பெயர் ஆனதென்பதும் அசம்பாவிதமே எனவே இந்த ஆறு நூற் முண்டுக்கால எல்லையிலே யாழ்ப்பாணமென்னும் பெயர் சிங்கள நாட்டிலும் பரவி இருக்க வேண்டும் அதனை அறித்துதான் அக் கோகில சந்தேசகாரர் தம் நூலிலே யாப்பா பட்டுண என்றும் குறித் தார் என்று தோன்றுகிறது. அஃது எங்ங்னமெனில் யாழ்ப்பாணம் என்பதில் கூள்ள "ழ்" என்னும் மெய் எழுத்து தமிழுக்கே சிறப் டெழுத்து அந்த எழுத்து சிங்களத்தில் இல்லை. ஆசுையா சிங்கள மக்கள் அதனை ஒழித்து யாப்பாணம் என்று சொல்ல வேண்டும் அதைத்தான் அவர்கள் "யாப்பாநெ? என்று சொல்லுகிருர்கள் எனவே அச்சந்தேசக்காரரும் யாழ்ப்பாணம் என்ற சோல்னைத்தான் அவ்வாறு சொன்ஞர் என்க, செண்பகப் பெருமாள் ஒரு தமிழ் நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருக்கிற ஒரு சிங்கள மன்னன் அம் மன்னனைக் குறித்துப் பாடிய அவனுக்கனுப்பிய பாட்டிலே இந்த யாப்பாப் பட்டுன என்னும் சொல் உபயோகிக்கப் பட்ட தானுல் அச் சொல் சூழ உள்ள தமிழ் நாட்டு மக்களின் புழக்கத்துக்குப் போவத்ெப்படி ஒரு நாட்டின் பெயரை அந்நாட்டின் வெளிநாட் டார், வேறுமொழியர்ளர் மொழிபெயர்த்தா வழங்குகிறர்கள். இல்லையே. மொழிபெயர்த்தால் பெயர் மாறிப்போமே. அன்றியும் இப்பெ. முது சிங்களவர் யாப்பாநெ, யாப்பினே என்று சொல்லு வது இந்த யாழ்ப்பாணம் என்ற பெயரைத்தானே அவ்வாறுதான் பண்டுள்ள சிங்களவரும் யாழ்ப்பாணம் என்ற பெயரைத்தான் யாப் பாநெ யாப்பாப் பட்டுண என்று சொன்னர் என்க.
43. இந்நூலில் புதிதாக வெளியாகும் உண்மைகளுள் அனேகம்
யாழ்பாணச் சரித்திரம் தமிழரசர் காலத்தில் இந்துாலாலேயே முதன்முத
லாக வெளியாகும் உண்மைகளுள் அனேகம் வல்லிபுரத்தில் சிங்கை நகரில்லை அங்கிருப்பது செங்கடக நகர் சிங்கை நகர் நல்லூரில் கட்டப்பட்டது அந்நகர்க்கு வைத்த இடு குறிப்பெயர் சிங்கை சிங்கையாரியச் சிக்கரவர்த்தியில் உள்ள சக்கரவர்த்திப் பட்டப் பெயர் பல தேசங்களை வென்றதஞல் ஏற்பட்ட பட்டப் பெய
ரல்ல முதலரசனுக்கு முடி சூட்டும் பொழுது அம் முடியைச்

Page 90
60
O
! I
g
I 3
சூட்டிய கெங்காதரக் குருக்களால் கொடுக்கப்பட்ட உயர்வு நவிற்சி ஆசீர்வாதப் பட்டபெயர் இராசாவை உயர்த்திச் சக்கர வர்த்தி என்று சொன்னவாறு, கலிங்கமாகனுக்கு யாழ்ப்பாணத்தில் தொடர்பில்லை * லிங்க மாகனும் சிங்கையாரியனும் வேறு வேறு புகுடர்கள் சிங்கையாரிய மன்னர் பரம்பரையைக் கலிங்க மாகன் பரம் பரையாகப் பிறர் அட்டவனைப் படுத்தியது பிழை. கலிங்க மாகன் வல்லிபுரத்தில் சிங்கைநகர் கட்டவில்லை செண்யகப் பெருமாள் நல்லூர்த் தலைநகரைக் கட்டவில்லை. நல்லூரில் பூரீ சங்கபோதிபுவனேகவாகுப் பட்டத்தை அவன் பெறவில்லே. சின்னமனத்தார் விருத்தைப் பாராட்டிச் செண்பகப் பெருமாள் шти-65) i au . சிலகிய சகாப்தம் எண்ணுரற்றெழுபது எட்டு நூறும் எழுபது:
உம் கொண்ட தெ? கையாகும் அது 1170 அல்ல அது பிழை
5
7
18
9
20
யான பொருள் கி. பி. 948 தொடங்கி கி. பி. 1620ம் ஆண்டு வரை நல்லூர் தலை நகரம் இருந்தது அத்தலை நகர் இருந்த களம் ஒன்றேயொன் றுதான்
ஒரு களத்தில் உள்ள தலை நகர்க்கு மூன்று பெயர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழரசு 8ம் நூற்ருண்டில் ஆரம்பமானது நல்லுரர்த்தலே நகரம் 10ம் நூற்ருண்டில் ஆரம்பமானது. 13ம் நூற்ருண்டென்பது பிழை. சின்ன மனத்தார் அமைச்சர் புவனேக விாகுக்கே விருந்திட்டார். கைலாயமாலை நல்லூர் இராச்சிய மக்களுக்காகவே டாடப் Lit --gil உக்கிரசிங்கன் தலைநகரைச் சிங்கை நகர்க்கு மாற்றவில்லை செங் கடக நகர்க்கே மாற்றினுன் கைலாயமாலை கலிங்க மாகனைப் பாடவில்லை *காலிங்க' என்னும் சொல்லில் உள்ள கா, ல எழுத்துக்களின் விளக்கப் பிசகால் வைபவமாலை யார் கூளங்கையென்று சொல்ல வில்லை. அப்படி சொல்லுவது கையொன்று கூழையானதால் என்றும் சொல்லியுள்ளார் அன்றியும் கூளங்கையன் காலம் காலம் 16ம் நூற்ருண்டு காலிங்கன் 13ம் நூற்ருண்டு ஆகை ய7 ல் காலிங்க 19ாகனைப் பற்றிய ஒரு சொல்லும் ஒரு குறிப்பும் கைலாயமாலையிற் பாடப் பெறவில்ல்ை அவன் கைலாயமாலை பாடிய மூன்று நூற்றண்டின் பின் யிறந்தவன், இவை அரிய

24
25
26
፵7
28
29
30
3 Ι
6.
ஆராய்ச்சி முடிபுகள்
செண்பகப் பெருமாள் கனக சூரியனை எந்த இடத்தில் வென் ருனே அந்த இடத்திலே அவன் பிரதி நிதி தோன்ருன் கணக சூரியன் வென்ருன், ஆகையால் ஆதிச்சிங்கை ஆரியன் இட்ட நல்லூர்த் தலைநகர்க் களத்தில்தான் கனகசூரியனின் கால முன் பரம்பரையும் பி பரம்பரையும் இருந்தது. சிங்கையாரிய பரம்பரையினர் ஆட்சி. ஆரம்ப அரசன் தொடங்கிக் சங்கிலி குமரன் வரையும் ஒரே இடத்தில் நல்லூரில்தான் இருந் தது. எனவே அத்தலைநகரம் கி. பி. 948 தொடங்கி 17ம் நூற் ருண்டு முற்பகுதி வரை இருந்தது, சிங்கையாரிய பரம்பரையினர் ஆதிச் சிங்கையாரியன் தொடக்கம் இறுதியரசஞன சங்கிலிகுமரன் ஆட்சி முடிபுவரை நல்லூரில் ஒரே தலைநகர்க் களத்தில் இருந்துதான் ஆட்சி புரிந்தார்கள். சிங்கைஆரிய பரம்பரை மன்னர் நல்லூரில்தான் தோன்றினர். அவர்கள் யாரும் வல்லி புரத்துக்குப் போய் ஆட்சி செய்ய வில்லை அவர்கள் அங்கிருந்து நல்லூருக்கு வரவுமில்லை. சிங்கையாரிய பரம்பரை முதல் மன்னன் சிங்கையாரியனே யன்றிக் கலிங்க மாகனல்ல. சிவ்கையாரியன் வந்த ஆண்டு எண்ணுரற்றெழுபதைத்தான் 1170 என்றுபொருள் கண்டு கலிங்க மாகன் வந்த ஆண்டென்று பிறர் நிச்சயித்தனர். அப்பொருள் பிழை எனவே வந்தவன் 870ஐ உடை
யவன்தான். அவன் சிங்கை ஆரியன்.
நல்லூர் ஊரால்வருபெயர், சிங்கை இடுகுறியால் வருபெயர்
யாழ்ப்பாணம் தேசத்தால் வருபெயர்.
44. யா, வை. விகாரரும் யாசகாரரும் உரைத்த பிழைகளிலனேகமானவை
வல்லிபுரத்திலே சிங்கை நகரைக் கண்டமை கலிங்கமாகன்தான் சிங்கைந்கரைக் கட்டினன். என்றமை. கலிங்கமாகன் வருகை யாழ்ப்பாணத்தில் நிகாழாதிருக்க நிகழ்ந் தது என்றமை

Page 91
】62
4.
10
1.
12
3
14
5
6
7
16
இலகிய சகாப்தம் எண்ணுாற்றெழுபது என்பதற்கு 870 என்று பொருள் காளுமை 1170 என்னும் பாருள் கண்டமை நல்லூரில் சிங்கைநகரைக் கண்டுகொள்ள இயலாதிருந்தமை செங்கடக நகரைக் காணுதிருந்தமை இடமும் காலமும் சுட்டாத சாசனத்தை வல்லிபுரத்தினைக் குறித்ததாக எண்ணியமை. யாழ்ப்பாணச் சரித்திரத்தின் உயிர்க்குயிராக விளங்கும் கைலாய மாலையின் உண்மையைத் தெரிந்து கொள்ள இயலாமை செங்கடக தகரின் பழங்கட்டிடத்தினை சிங்கைநகர் என்று நிச்ச யித்தமை, கனகசூரியனும் மக்களும் வல்லிபுரத்துச் சிங்கைநக ரியில் இருந்து நல்லூருக்கு வந்து குடியேறினர் என்றமை, ஆதியில் கட்டிய சிங்கைநகர் மதில் போர்த்தர்படை எடுத்த போதிருக்கவும் அதை அறியாமல் செண்பகப் பெருமாள் அந் நல்லூர்நகரை அழித்தான் என்றமை திரும்ப அவனே கட்டினன் என்றமை, கனகசூரியனும் மக்களும் வல்லிபுரத்தில் சிங்கைநகர் பாழாய்ப் போனபடியால் திரும்ப நல்லூரில் வந்து குடியேறினர்கள் என்றமை கைலாயமாலையிற் பாடப்பட்ட சிங்கையாரியனும் கலிங்கமாக னும் ஒன்றென்றமை யா பாடி வரலாற்றை நீக்கச் சொன்னமை மாருதப்பிரவாகவல்லி வரலாறு கற்பனை என்றமை சிங்கை ஆரியர் பரம்பரையை ஆதிச்சிங்கை ஆரியன் கீழ் அட்ட வனைப்படுத்தாமல் கலிங்கமாகன் கீழ் நாம ஆவலியில் அட்ட வனைப் படுத்தியமை. மாவிட்டபுரக் கந்தசுவாமி கோயில் அர்ச்சகர் சின்னமணத்தார் விருந்தைப் பாராட்டி அமைச்சர் புவனேகவாகு பாடிய பாட் டைச் செண்பகப் பெருமாள் பாடினன் என்றமை, கோட்டைச் சிம்மாசனத்துக்குப் போன பின் அவ்வரசன் பெறும் பூரீசங்கபோதி என்னும் பட்டப் பெயரை, இங்கே நல் லூரில் ஆளும் போதே செண்பகப் பெருமாள் பெற்றுக் கொண்டு அரசாண்டான் என்றமை. அமைச்சர் புவனேகவாகு கட்டிய நல்லூர் கந்தசுவாமிகோயிலை புத்த சமயத்தவஞன செண்பகப் பெருமாள் கட்டினன் என்றமை,

20
忍及
22
23
24
25
26
27
28
29
30
3.
32
33
19
நல்லுரரிலே போர்த்தர் படை சிங்கைநகர் மதிலைத் தாண்டிப் போனதென்று "பாதர் குவிருேஸ்" சொல்ல அது அப்பெயருடைய அரண் என்று அதையறியாமற் பிழையாகச் சமாதானம் சொன்
T6) foi
கலிங்கமாகன் யாழ்ப்பாணத்துக்கு வந்ததைச் சான்று காட்டா மல் அவன் மேல் யாழ்ப்பாணச் சரித்திரத்தை எழுதியமை யாழ்ப்பாணன் வரலாற்றை நீக்கச் சொன்னமை சிங்கையாரியன் பாண்டிமழவனுல் அழைக்கப்பட்டு வந்ததை இல்லை என்றமை. மாருதப்பிரவாகவல்லி கதையைக் கற்பனை என்றமை. சிங்கையாரியனும் கலிங்கமாகனும் ஒருவரே என்றமை.
வல்லிபுரத்தில் உள்ள செங்கடக நகரையறியாது அதனைச் சிங்கைநகர் என்றமை, வல்லிபுரம்-வல்லிபட்டணம்
காலிங்க என்ற பதத்தைத்தான் கூளங்கையென்று வைபவமாலை யார் சொன் ஞர் என்றமை.
நல்லூர் நகரை செண்பகப்பெருமாள் கட்டிஞன் என்றமை
யா. வைபவமாலை கைலாயமாலையாம் ஆதாரநூல்களின் நேர் முடிபுகளுக்கு நேர்மாருகத் தத்தம் நூல்களை வெளியிட்டமை
சிங்கையாரின் அரசர் பரம்பரையைக் கலிங்கமாகன் கீழ் அட்ட வணைப்படுத்தி அவன் பரம்பரம்பரையாகக் காட்டியமை
யாழ்ப்பாணம் என்னும் பெயர் யாப்பாநெ என்ற சிங்களச் சொல்லில் இருந்துதான் வந்ததென்றமை
சிங்கையாரியனுல் நல்லூரில் கி. பி. 948 ல் அமைந்த சிங்கை தகரைக் கலிங்கமாகஞல் கட்டப்பட்டதென்றல் அது வல்லிபுரத் தில் கட்டப்பட்டதென்றல் 1248ல் கட்டபட்டதென்ருல் மும் மடிப் பிழை, இவ்வாறே இவர்கள் கூற்றிலே பலமடிப் பிழைக ளும் வேறு பிழைகளும் வருகின்றன. அவைகளை வாசகர்தாம் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.
சிங்கையாரியர் 3 தலைநகர் கட்டிய வரலாறில்லை ayariassy டைய 3 தலைநகர்க் களமும் இல்ல், அவர்களுடைய தலைநகர் களம் ஒன்றே ஒன்றுதான் அறியப்பட்டிருக்கிறது.

Page 92
164
1.
g
5
16
17
18
19
45. முதற்குறிப்புக்களும் விளக்கமும
சு. ஞா. காரர் சுவாமி ஞானப்பிரகாசர் செ. இ. காரர் செ. இராசநாயக முதலியார் யா. ச. யாழ்ப்பாணச் சரித்திரம் A. J. Ancent Jaffna யா. வை. வி. யாழ்பாண வைபவ விமர்சனம் யா. வை. மா. யாழ்ப்பாண வைபவமாலை uurt. 606). Lurr u u T jb ju f’T GOTT 636. u urr. Lurt L–6ão கை, மா. கைலாயமாலை கை. மா. கண். கைலாயமாலைக் கண்ணிகள் (ogF, GSF . Lorr. GogestTrr F G3Fg5rtforr&ao த. பா. தி. தனிப்பாடற்திரட்டு
46. இந்நூலின் ஆதார நூல்கள்
செகராச சேகரமாலை
யாழ்ப்பாண வைபவமாலை
an) 9: au (Tutortahu
வைபவமாலை
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் யாழ்ப்பாணச் சரித்திரம் - செ.இ ANCENT JAFFNA GIF @
யாழ்ப்பாணச் சரித்திரம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை யாழ்ப்பாணச்சரித்திரம் முதலாம் பாகம் டானியேல்யோன் யாழ்ப்பாணக் குடியேற்றம் முதலாம் பாாம் சிவானந்தன் வன்னியர் கலாநிதி சி. பத்மநாதன் கள்ளியங்காட்டுச் செப்பேடு கலாநிதி செ. குணசிங்கம் கள்ளியங்காட்டுச் செப்பேடு ஒதுவார் சிவக்கொழுந்து தந்தவை The kingdom of Jaffna S. Pathmanathan யாழ்ப்பாண இராய்ச்சியத்தின் தோற்றம்
கலாநிதி கா. இந்திரபாலா Conquest of Ceylon Luitgif gigolo Gaipei) கோட்டைவாசல் தோம்புகள் குயிற்றுாது இன்னும் வேறும்பல நூல்கள் நல்லூர்க் கந்தசுவாமி குலசபாநாதன் கந்தவேள்கோட்டம் செங்கையாழியான்

பாகம் பக்கம்
Gilsfi
O
36
19
I6
I6
盛6
I 2
3.
26
27
169
8
O
名4
27
36
9
4.
S3
6
பிழை திருத்தம
பிழை
ாேன்று
8th
கட்டினுன் உண்டான்
மாகவிதை
63
புருளையோ ந்நூலை னன்ருேது இய்பொழுது செக்கி
في
பு - வர்
துவ
இங்கி குளுதினங்களை அங்கணம் யெபவள்
யணிகள்
அவனே பூவின் வாசிங்க
785
குக்
அதனே
மநுக் துன்கன்
s
கடரிக கிபி 1658 வரை
165
திருத்தம்
தோன்று
18 to
கட்டினர் உண்டார்
மாகலின்
86@ பொருளையோ அந்நூல் என்ருேது இப்பொழுது தெக்கு
இதி புலவர் நூல் இங்கே குனதிசயங்களே அங்ஙனம் யென்பவள்
யளிகன் அவளை பூவில் வாலசிங்க
795.
குத் அதனே மறுக்கக் துங்கண்
őAllகடக
63 O

Page 93
l66
Li Tash lus 5th
57
57
58
62
64
64
64
伤5
67
67
67
67
74
74
75
89
98
93
94
94
95
96
96
0.
O2
09
09
OA
13
5
6
6
வரி பிழை
2O
29
37
7
6
7
2
9
2.
3.
28
26
32
23
33
24
17
26
6
22
24
13
22
2
4
5
14
31
34
அக்கவி பேரமைசன்
இருகாக நோற்ருணுே இருந்தன் ஆரியவன் கொண்வடகை துயிலாங் மில்லே
தாலால்
அந்தி
1000 - 1000+ l O7
அந்நூல் செகராச-கேகரமாஃ
அந்துரல் முன்னவர்
620
தென்னு
அவற்வையும் தான்
யென்று
ஒதுக
պւ -ւ-Յl சிதம்பரநாதன் சேகர
நல்லுர் தொண்டும் வாருக்குப் அவர்கள்படி זה.oח מ!
及2罗2
ST DLb யமுளுவரி குவினுேஸ்
திருத்தம்
அக்கவி போரமைச்சன்
அருகாக தோற்ருனே இருந்தவன் ஆரியன் கொண்டவை
துயிலாய் மலை
ஆதலால் அத்த 1000 - 107
முன்னவராவார்
6:58
தென்னு
அவற்றையும்
தான
என்று
ஏது
யிட்டது சி. பத்மநாதன் சேகரன் நல்லூர் நகர்
கொண்டும் வாகுப் அவர்கள் கருத்துப்படி Loirsea
O2
தானம் யமுஞரி குவிரூேஸ்

பக்கம் பாகம்
17
17
117
18
18
19
五24
24
25
8
I 28
፲፰ 8
28
8
128
28
134
I 40
4
148
I51
152
I 52
60
வரி
9
26
27
23
25
O
23
பிழை
மெபன்றும்
658
புந்தார்கள் இனுன்ம் துர்க்கவோ காராசன்
வளே இத்தொடு ன்று
呜凸母 ஆயரின் fiGs)
அவள் ஆகும் அவ்வெனேரு பற்றி என்ருல் upèäaru9GB6) rT இம் வரையிப் நம்ா வழக்க விவார
I6
167
திருத்தம்
மொன்றும்
620
புரிந்தார்கள் இன்னும் துறக்கவோ மகாராசன்
அனை இடத்தொடு
எனறு
e忍5 ஆரியன்
Gg
அவன் ஆகும் அவ்வொரு இடம் பற்றிய என்றல் LD&TuGarr இடம் வரையில் நாம்
வழங்க விவரம்
O

Page 94


Page 95


Page 96
"இவ்வரலாற்றுக் குறிப்புகள் ஆய்திறனும் உடையவர் என்பன
இந்நூலில் அவர்களுடைய பும் நுண்மதியும் நன்கு தெரிகின்
இந்நூல் "புதுவது கிளக்குப்
புலவர். பொ. ஜெகந்நாதனி "யாழ்ப்பாணத் தமிழரசர் வரல
"பொ. ஜெகந்நாதன் அவர் வாறும் காலமும்" என்ற நூல் தொன்ருகும். இலங்கைத் தமிழரி சிந்தனேகளேப் பொதுமக்களிடை யாழ்ப்பான வரலாற்றில் அவர் பாராட்டிற்குரியனவாகும் "
"எண்பதாவது வயதை அன் வரலாற்ருய்விலே இவர் மிகுந்த வரலாற்றுண்மைகளேத் தேடுவதி வற்றை வலியுறுத்துவதிலும் இ தகுந்தது."
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறிஞர். பொ. ஜெகந்நாதன் 1908 를டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திரு5 னேயில் பிறந்தார். திருநெல்வேன் ய கலாசாகி யில் ஆசிரியப் பயிற்சி டூர் பலநூறு கவிதைகளே யாத Tார். புலவரின இலக்கியப் பர்ைகளின் ாயது அவர் ஆக்கிய 'அடியார்க்கு நன் வரலாற்று ஆராய்ச்சி" நூலாகும. இது 1944-இல் சென&னயில் வெளியாகியது சோமசுநதரபாரதியார், பிரம் ம பூர் ணேசையர், சு நடேசபிள்ளே முதலான நர்கள் அந்நூலினேப் பாராட்டியுள்
இவ்வாராய்ச்சிப் புலவர் மதிவலியும் த வலியுறுத்தப் போதியங்ாம்
=அறிஞர் சோமசுந்தரபாரதியார்.
பொறுமையான ஆராய்ச்சி ୍lgäts! Wr ஈறது.
-பிரம்மருர் சி. கனோசையர்
b ஒர் அரிய ஆராய்ச்சி நூலாகும்" -திரு சு. நடேசபிள்ளே.
ன் இரண்டாவது ஆராய்ச்சி நூலாக ாறும் காலமும் வெளிவருகின்றது.
ளிேன் "யாழ்ப்பாணத் தமிழரசர் வர காலத்தின் தேவைக்குகேற்ப எழுந்த ன் வரலாற்றுச் சிறப்பினேப் பற்றிய யே ஏற்படுத்தவல்ல தொன் ருகும்.
கொண்டுள்ள ஆர்வமும ஈடுபாடும்
பேராசிரியர். சு. வித்தியானந்தன்.
ாமித்துக் கொண்டிருக்கும் நிலேயிலும்
ஆர்வமுள்ளன்ராகக் காணப்படுகிருர், லும், தமக்கு உண்மைகளாகப் படுவன வருடைய சடும் முயற்சி போற்றத்
பேராசிரியர். ஆ வேலுப்பிள்ளே

Page 97
76 தம்பிஐயா தேவதாஸ்
ணைத் தாயின் நன்மைக்காகத் திருமணம் செய்யாமல் வாழ்கிறான். வறுமையால் வீடு வாடுகிறது. குருடனாகிப் போய்விட்ட தம்பி அண்ணனைக் குத்திவிடுகிறான்.
‘தென்றலும் புயலும் திரைப்படத்தை நெறியாண்டுஒளிப்பதிவு செய்த எம்.ஏ.கபூர் தான் பெற்ற் பரிசுப்பொருள்களுடன் கர்ணப்படுகிறார். -
வீட்டு வேலைக்காரன் தன்னைத் தானே சுட்டுவிட்டுத் தன் இதயத்தை எஜமானுக்குப் பொருத்தும்படி குறிப்பிடு கிறான். வளர்ப்புமகன் டொக்டராக வந்து இதயமாற்றுச் சிகிச்சை செய்து எஜமானைச் சுகதேகியாக்கிவிடுகிறான்.
இதுதான் ‘தென்றலும் புயலும் திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.
 

தென்றலும் புயலும் 77
‘பறாளையூர் பிறேமகாந்தன்' இலங்கைக் கலைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது, திரைப்படங் கள் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பல சஞ்சிகைகளை நடத்தியிருக்கிறார். 1978ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 'மின்விழி’ என்ற சஞ்சிகையை நடத்திவந் தார். அந்தச் சஞ்சிகையின் மேமாத இதழைத் தென்றலும் புயலும் திரைப்படச் சிறப்பு மலராக வெளியிட்டார். அதில் 'நெஞ்சின் அலைகள்' என்ற தலைப்பில் ஆசிரியத் தலையங்கம் எழுதினார்.
e 4 es es e o 1978ஆம் ஆண்டு ஆரம்பிக்கும் பொழுதே ‘நான் உங்கள் தோழன்’ திரையிடப்பட்டுப் பலரின் பாராட்டுகளைப் பெற்றது. சென்ற மாதம் 'வாடைக் காற்று வந்தது. அதைத் தொடர்ந்து ‘தென்றலும் புயலும் புத்தாண்டுப் பரிசாக வந்திருக்கிறது. எங்கள் கலை வாழ வேண்டும்; எமது கலாசாரமும் வளரவேண்டும்; அதனால், தமிழ்மொழி உயர வேண்டும். இந்த உயரிய நோக்கத் தோடு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ‘தென்றலும் புயலும் படத்துக்கு ஆதரவு தரவேண்டும்' என்று எழுதி யிருந்தார்.
மற்றப் படங்களைப் போல் தென்றலும் புயலும் படத் துக்கு அதிகம் பேர் விமர்சனம் எழுதவில்லை. வீரகேசரி யில் (23.04.78) ‘டி.ஆர்.டி.விமர்சனம் எழுதினார்.
'••••• ராஜேஸ்வரி பிலிம்ஸ் வேதாவின் ‘தென்றலும் புயலும் படத்தில் கதாநாயகிகள் இருவரும் போட்டி போட்டு நடிக்கிறார்கள். தென்னகப் படங்களுக்கு நிகராக மலையகத்து எழிற்காட்சிகளை படமாக்கி, கபூர் மனதைக் குளிரவைக்கிறார். பாடல்களும் பாடல் காட்சிகளும் நன் றாக இருக்கின்றன. வேதநாயகம், சிவபாதவிருதையர், அமரசிங்கம் ஆகியோர் படத்தை ஆக்கிரமித்திருந்தாலும், டீன்குமார் ஒரு சில காட்சிகளில் தோன்றி மனத்தில் நிற் கிறார். ஜவாஹர் வழக்கம் போல் வந்து தனது பங்கைச்

Page 98
78 தம்பிஐயா தேவதாஸ்
செலுத்துகிறார். தனரெத்தினம், ஜோபுநஸர், கந்தசாமி, சாம்பசிவம் ஆகியோர் தோன்றி மறைகின்றனர். நடிப் புக்கு இலக்கணம் கூறித் திகைக்க வைக்கிறார் செல்வம் பெர்னாண்டோ. இசை, கதைவசனம் பரவாயில்லை.
நடிகைகள் பஞ்சம் என்று கூறுபவர்கள் இப்படத்தைப் பார்ப்பது நல்லது.
+?#** **
ဓာ်၄င္ငံမ္ဘ* ဖွံဖါး
ர்ெi):17,
چوہ گھر؟؟؟ ** شمچ
‘தென்றலும் புயலும் திரைப்படத்தின் விளம்பர நோட்டீஸ்
இலங்கைப் படம் என்ற வகையில் குறைகளை மறந்து ரசிகர்கள் ஆதரவளிப்பது நமது கடமையாகும் , என்று அந்த விமர்சனம் முடிவடைகிறது.
 
 
 
 
 
 
 
 
 

தென்றலும் புயலும் 79
இது பெரும்பாலும் திருகோணமலைக் கலைஞர்கள் உருவாக்கிய படம் என்பதால் திருகோணமலையில் மற்ற இடங்களைவிட அதிக நாட்கள் ஓடியது.
ப்படம் ய இடங்களும் நாட்களும்:-
ளு ளு -كاډي
மத்திய கொழும்பு (கெபிடல்) 9 நாட்கள் தென்கொழும்பு (ஈரோஸ்) 7 நாட்கள் யாழ்ப்பாணம் (லிடோ) 15 நாட்கள் திருகோணமலை (லக்சுமி) 30 நாட்கள் மட்டக்களப்பு (விஜயா) 12 நாட்கள் மன்னார் (குமரன்) 12 நாட்கள் அக்கரைப்பற்று (சாரதா) 14 நாட்கள் வாழைச்சேனை (ஈஸ்வரி) 14 நாட்கள் நீர்கொழும்பு (மீபுர) 7 நாட்கள்
இந்தப் படத்துக்கும் மூதூருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆனால், அங்கு இப்படம் 4 நாட்கள் மட் டுமே ஓடியது.
1978ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஜனாதிபதி பரிசு இப்படத்தில் நடித்த செல்வம் பெர் னாண்டோவுக்குக் கிடைத்தது.
இப்படியான ஒரு கலைமுயற்சியில் ஈடுபட்ட டொக்டர் வேதநாயகம் 29-07-93இல் காலமானார். அவர் மறைந் தாலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அவரது பெயர் என்றும் மறையாது.

Page 99
19. 'தெய்வம் தந்த வீடு'
மலையகத்தில் ஹட்டன் நகரில் பிரபல வர்த்தகர் ஒருவர் இருந்தார். ஹட்டன் "லிபேர்டி தியேட்டரும் இவருக்குச் சொந்தமானதே. கலைகளில் பற்றுமிக்க இவர், தனது தியேட்டரிலேயே இலங்கைத் தமிழ்த் திரைப்படங் களைத் திரையிட்டு அவற்றுக்கு ஆதரவு வழங்கி வந்தார். தானும் இலங்கையில் தமிழ்ப்படம் தயாரிக்கவேண்டும் என்பது இவரது நீண்டநாள் ஆசை.
‘கடமையின் எல்லை', ‘நிர்மலா” படங்களுக்குப்பின் தானும் ஒரு படம் யாராவது உதவியுடன் தயாரிக்கவேண் டும் என்று கலைத்தாகத்துடன் நின்றார் ஏ.ரகுநாதன்.
அந்த வர்த்தகரும் இந்த ரகுநாதனும் சந்தித்துக் கொண் டார்கள். வழமையைவிட வித்தியாசமான முறையில் பிர மாண்டமான அமைப்பில் தமிழ்த் திரைப்படம் தயாரிக்க லாம் என்று தீர்மானித்தார்கள். படவேலையை ஆரம் பித்துவிட்டார்கள். அப்படி ரகுநாதனுடன் சேர்ந்து திரைப் படம் தயாரிக்க முன்வந்த அந்த வர்த்தகரின் பெயர்தான் வி.கே.டி.பொன்னுசாமிப்பிள்ளை. அந்தப் படத்தின் பெயர்தான் ‘தெய்வம் தந்த வீடு.

தெய்வம் தந்த வீடு 81
படத்தின் கதை தமிழர் பாரம்பரியத்தை வெளிப் படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். இலங்கையில் உள்ள பல கோயில்களில் படப்பிடிப்பு நடைபெறவேண் டும். இதுவரை வெளிவந்த மற்றப் படங்களைவிட வித்தி யாசமான அமைப்பில் இருத்தல் வேண்டும். அதாவது அகலத்திரையில் (சினிமாஸ்கோப்) படம் அமைய வேண் டும் என்று பல திட்டங்களைப் போட்டார்கள்.
லங்கையின் ாவது 70 மி.மீ. ழ்த் திரைப்படத்தை mrffክå
###### ள்ளை. த் தயாரித்த
தில்லானா மோகனாம்பாளின் அருட்டுணர்வின் காரணமகாகவோ என்னவோ, நாதஸ்வரக் கலைஞன் ஒருவனும் நாட்டியக்காரி ஒருத்தியும் காதல் கொள்ளும் கதையை ரகுநாதன் ஏற்கனவே எழுதி வைத்திருந்தார். இதற்கான திரைக்கதை வசனத்தை ஏ. ஜுனைதீன் எழுதி (TTT.
நீண்ட காலமாக எனக்கிருந்த படம் தயாரிக்கும் ஆசைக்கு ரகுநாதனின் நல்ல கதை உற்சாகத்தைத் தந்தது.

Page 100
2 தம்பிஐயா தேவதாஸ்
உடனே படத்தைத் தொடங்கத் தீர்மானித்து விட்டேன்’ என்று ஆரம்பத்தில் பேட்டியளித்தார் பொன்னுசாமிப் பிள்ளை. இந்தியாவில் பிரபல திரைப்பட இயக்குநர்கள் பி.நீலகண்டன், பி.மாதவன் ஆகியோருடன் இணைந்து கடமையாற்றினார், ஓர் இலங்கையர். பல சிங்களப் படங் களையும் இயக்கியிருக்கும் இவர்தான் வில்பிரட் சில்வா. இவரை இப்படத்தின் இயக்குநராக ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
பி.எஸ்.நாகலிங்கம் என்ற கலைஞர் சினிமாத்துறை யில் பல காலமாகவே ஈடுபட்டு வந்தார். பல படங்களுக்கு உதவி இயக்குநராகக் கடமையாற்றியிருக்கிறார். இவரை இப்படத்துக்கு இணை டையரக்டராக நியமித்தார்கள்.
எம்.ஏ.கபூரை ஒளிப்பதிவாளராகச் சேர்த்துக் கொண் டார்கள். இது இவருக்கு 6வது தமிழ்ப்படம்.
ஏ.ரகுநாதன் கதாநாயகனாக நடித்தார். கதாநாயகி யாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குமுதினி (றேலங்கி செல்வராஜா) என்ற புதுமுகத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.
மற்றும் டீன்குமார், எஸ்.என்.தனரெத்தினம், கே.ஏ. ஜவாஹர், விஸ்வநாதராஜா, சந்திரகலா, சுப்பு லட்சுமி காசிநாதன், ஜெயதேவி, பிரான்ஸிஸ், முத்து சாமி, சிவபாலன், கண்ணன், ஏ.நெயினார், மனோகரி, தேவராஜ், ரெமீஜியஸ், சிவாஸ்கர், அரியதாஸ், சுதுமலை தம்பிராசா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இவர்களுடன் யாழ்ப்பாணத்தில் நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த கலையரசு சொர்ணலிங்கம், பூந்தான் ஜோசப், நடிகமணி வி.வி.வைரமுத்து ஆகியோர் சம்பந் தப்பட்ட காட்சிகளையும் சேர்க்கலாம் என்று தீர்மானிக் கப்பட்டது. இப்படத்துக்கு மூன்று இசையமைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். எம்.கே.றொக்சாமி, கண்ணன், நேசம்தியாகராசா ஆகிய மூவருமே அவர்கள்.

தெய்வம் தந்த வீடு 183
வீரமணிஐயர், அம்பி, சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை பூரீகிருஷ்ணமூர்த்தி, அமுதன் அண்ணா மலை, கலாவதி, பார்வதி சிவபாதம் ஆகியோர் பாடினர். பிரபல நாதஸ்வர வித்வான் அளவெட்டி என்.கே.பத்ம நாதனின் நாதஸ்வர இசை இப்படத்தில் சேர்க்கப்பட்டது. ஒலிப்பதிவு சென்ஜோன்ஸ்; ஒப்பனை - சுப்பு: தொகுப்பு - அலிமான்.
‘தெய்வம்தந்தவீடு' திரைப்படத்தில் உருக்கமான ஒரு கட்டம். கதா நாயகன் ஏர்குநாதனும் கதாநர்ய்கி சந்திரகலாவும் இப்படித் தோன்று கிறார்கள். (1978) 哆
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஒவிய ஆசிரியர் செ.சிவப்பிரகாசம் . கலைநிர்மாணத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற படப் பிடிப்புகளுக்கு ஸ்ரில் போட்டோக்களை யாழ் பிரபா போட்டோ உரிமையாளர் தியாகராஜா எடுத்தார்.

Page 101
84 தம்பிஐயா தேவதாஸ்
"லிபேர்டி பிலிம்ஸ்' வி.கே.டி.பொன்னுசாமிப் பிள்ளை தயாரிக்கும் ‘தெய்வம்தந்தவீடு' (சினிமாஸ்கோப்) திரைப்படத்தின் தொடக்க விழா 16.09.1977இல் பம்பலப்பிட்டி மாணிக்கவிநாயகர் ஆலயத்தில் ஆரம்ப மாகியது.
அப்பொழுது மஸ்கேலியா- நுவரெலியா மூன்றாவது எம்.பி.யாக விளங்கிய எஸ்.தொண்டமான் அவர்கள் கமறாவை முடுக்கி படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார். நடிகர் எஸ்.என்.தனரெத்தினம் கிளாப் அடிக்க, ஒளிப் பதிவாளர் கபூர் சில காட்சிகளை ஒளிப்பதிவு செய்தார்.
யாழ்ப்பாணத்தில் 28.10.77 முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகியது. படப்பிடிப்புகள் பல வீடுகளில் நடைபெற்றன. யாழ் 2ஆம குறுக்குத் தெருவில் உள்ள “பொன்மீன்' இல்லம், இணுவிலில் துரையின் இல்லம், இப்படிப் பல இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்றன.
பல்வேறு சைவக் கோவில்களிலும் படப்பிடிப்ப்பு நடை பெற்றது. நயினாதீவு நாகபூஷணி அம்மன், மாவிட்டபுரம் கந்தசாமி, செல்வச்சந்நிதி, மானிப்பாய் மருதடிவிநாயகர், ஆனைக்கோட்டை மூத்தநயினார், பறாளை முருகன், சண்டிலிப்பாய் இரட்டையபுலம் வைரவர், இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார், நல்லுார் கந்தசாமி, நகு லேஸ்வரம், கோணேஸ்வரம், மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார், கதிர்காமம், முன்னேஸ்வரம், திருக்கேதீஸ் வரம் மற்றும் கொழும்பு ஹட்டன் போன்ற இடங்களில் உள்ள கோயில்கள் போன்றவற்றில் ஒளிப்பதிவு நடை பெற்றது.
வீரமணி ஐயர் இயற்றி பூரீ கிருஷ்ணமூர்த்தி பாடிய ‘நாதம் கேட்குதடி நல்லூர்நாதம் கேட்குதடி' என்ற பாடல் இடம்பெற்றபோது இந்தக் கோயில்கள் காட்டப்பட்டன. ஒரு மாதத்திலேயே படத்தின் பெரும்பகுதி நிறைவு பெற்று

தெய்வம் தந்த வீடு 85
༣༽
விட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் (14.07.1978) படம் திரைக்கு வந்தது.
வேணுகோபாலன் ஒரு நாதஸ்வரக்கலைஞன். அவனுக்கு ஒரு நாட்டியக்காரிமீது (ஜானகி) காதல். ஆனால், நாட்டியக்காரிக்கோ கலைமீது காதல். நாதஸஸ வரக்கலைஞன்மீது அவனுடைய மைத்துணிக்கு (சந்திரா) காதல். நாட்டியக்காரியின் அண்ணனுக்கு (கிருஷ்ணன்) நாதஸஸவரக்கலைஞனி மைத்துணிமீது காதல். இந்தக் காதல்களினால் ஏற்படும் மோதல்கள்தான் இப்படத்தின் மூலக்கதை. வேணுகோபாலனாக ஏ.ரகுநாதனும் கிருஷ்ண னாக டீன்குமாரும் நடித்தனர். ஜானகியாகப் புதுமுகம் குமுதினியும், சந்திராவாக, சந்திரகலாவும் தோன்றினர். சிந்தாமணியில் (23.07.78) இப்படத்துக்கான விமர்சனம் வந்தது.
"சினிமா ரசிகர்கள் பல்வேறுதரப்பட்டவர்கள். எல் லோரையும் கூட்டுமொத்தமாகத் திருப்திப்படுத்தமுடி யாது. அதற்காக ஒரு படத்திலேயே எல்லாத்தரத்தினருக் கும் பிடித்தமான காட்சிகளைத் திணித்தால் எப்படி இருக்கும்? 'தெய்வம்தந்தவீடு' படம் மாதிரி இருக்கும்.
'உலகத்திலேயே தமிழில் வெளியான முதலாவது கறுப்பு வெள்ளை சினிமாஸ்கோப்பு' என்ற பெருமை யுடன் வெளிவந்திருக்கும் இப்படம், பல்வேறு சுவைகள் ஒன்று சேர்ந்த விசித்திரச் சுவையாகக் காட்சி தருகிறது.
படம் அங்கும் இங்கும் இழுபட்டுச் செல்கிறது. ஆரம் பத்திலும் கோயில் வருகிறது. இறுதிக்காட்சியிலும் கோயில் வருகிறது. கதையுடன் சம்பந்தப்படாவிட்டாலும், இலங் கையின் பிரபல சைவ ஆலயங்களின் காட்சிகள் புகுத்தப் பட்டுள்ளன.
மேடை நாடகம் ஒன்றில் காட்சி அமைவதுபோல் இப் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. படம் நத்தை வேகத்தில் நகர்கிறது.

Page 102
86 ཆ, தம்பிஐயா தேவதாஸ்
|
கதாநாயகன் பாத்திரத்தில் ரகுநாதன் பூரண வெற்றி பெறாவிட்டாலும் நாதஸ்வரத்தை வாசிப்பதுபோல் பாவனை காட்டும்போது அசல் நாயனக்காரராகவே மாறி
விடுகிறார். ^ * *
‘தெய்வம்தந்தவீடு' திரைப்படத்தில் றேலங்கி செல்வராஜாவும் ஏ.ரகு நாதனும். (1978)
கதாநாயகி பிரயாசையுடன் நடிக்க முயன்றிருக்கிறார். ஆமினாபேகத்தின் குரல் நடித்த அளவுக்கு குமுதினியின் முகம் நடிக்கவில்லையே. சந்திரகலா தனது பங்கை நன்
 

தெய்வம் தந்த வீடு 87
றாகச் செய்துள்ளார். சுப்புலட்சுமி காசிநாதனின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.
வில்லன் டீன்குமார் கலகலப்பாக வந்துபோகிறார். அப்பாவியாக வரும் விஸ்வநாதராஜாவுக்கு வேடப் பொருத்தம் பிரமாதம். ஆனால், நடிப்பு சற்று ஓவர். எஸ்.என்.தனரத்தினம் உடையாராக வருகிறார். ஜவாஹரின் நடிப்பு வழக்கம்போல் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.
ஜெயதேவி தொடைகாட்டும் கவர்ச்சித்தாரகையா அல்லது நகைச்சுவை நடிகையா என்று புரியவில்லை. அவருடன் ஏ.நெயினாரும் வேறு பாத்திரங்கள் ஒரே குவியல். சம்பவங்களும் ஒரே அவியல், சண்டைக்காட்சி நகைச்சுவைக்காட்சியாகிவிட்டது.
படத்தைப் பார்த்துவிட்டு வெளியேறும்போது மனதில்
பதிந்திருப்பது என்.கே. பத்மநாதனின் நாதஸ்வர இசை
ஒன்றுதான்.
என்று அமைந்தது அந்த விமர்சனம்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘ஈழநாடு
(31.07.78) பத்திரிகையில் 'உதயவாணன்' என்ற வாசகர்
விமர்சனம் எழுதியிருந்தார்.
“...இப்பொழுதெல்லாம் காரணமில்லாமல் பெயர் வைப்பது சகஜமாகிவிட்டது. உதாரணம் தெய்வம் தந்த வீடு. சிறந்த படம் என்று கூறமுடியாவிட்டாலும் சிறந்த முயற்சி. ரகுநாதனிடம் ஆர்வமும் திறமையும் இருக்கிறது. ஆனால், அவரது தோற்றம் ஒத்துழைக்கவில்லையே. நடிப்பில் குமுதினியைவிட சந்திரகலா பரவாயில்லை. ஆனால், நடனமாடும்போது குமுதினி ஜொலிக்கிறார். இதுவரை வந்த ஈழத்து நடிகைகளில் குமுதினி அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார். ஆனால், இவற்றைத் தவிர, நடிப்பு முக்கியமானதல்லவா?

Page 103
H 88 தம்பிஐயா தேவதாஸ்
சந்திரகலாவும் சுப்புலட்சுமியும் சோகக் காட்சிகளில் நன்றாக எடுபடுகிறார்கள். ஜவாஹரும் தனரெத்தினமும் டீன்குமாரும்தான்.
சாந்தி தியேட்டரில் (யாழ்ப்பாணம்) அனைத்துப் பாத் திரங்களின் முகங்களும் உடல்களும் நீளமாகத் தெரிகின் றனவே, என்றும் எழுதினார் இந்த வாசகர்.
சினிமாஸ்க்கோப் இல்லாமல் சாதாரண படமாகத் தயாரிக்கப்பட்டிருந்தால் இப்படியான பிரச்சினை ஏற்பட் டிருக்காது. சாதாரணப் படங்களே ஒழுங்காக வளர வில்லை. அதற்குள் "சினிமாஸ்கோப்' தேவைதானா என்று அப்பொழுது பலர் சொன்னார்கள்.
இலங்கை வானொலி மாதாமாதம் வெளியிட்டுவந்த சஞ்சிகையின் பெயர் 'வானொலி மஞ்சரி' அப்பொழுது வானொலி நிலையத்தில் ஜோர்ஜ் சந்திரசேகரன் அறிவிப் பாளராகக் கடமையாற்றினார். பத்திரிகை, நாடகம், சினிமா போன்றவற்றில் ஈடுபாடுடையவர். இவரும் இப் படத்தைப்பற்றி 'வானொலி மஞ்சரியில் விமர்சனம் எழுதினார்.
ஆசை யாரை விட்டது? ஏ.ரகுநாதனை விட்டு வைக் குமா? ‘தெய்வம்தந்தவீடு' திரைப்படத்தில் கதாநாயகனாக ரகுநாதன் நடித்திருக்கிறார். 'கலைஞர்கள் ஒவ்வொரு வரும் விமர்சகர்களாக இருக்க வேண்டும்' என்பார்கள். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ‘கடமையின் எல்லை' வெளிவந்தபோது, ரகுநாதனின் உடலமைப்பும் முகவெட்டும் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று.
பல கோயில்களின் பெயர்களையும் நடிகர்களின் பெயர்களையும் கொண்டு இப்படத்தை விளம்பரப்படுத் தியதற்குப் பதிலாக 'மாயா ஜாலம் நிறைந்த ஒரு மர்மச் சித்திரம் ‘என்று விளம்பரப்படுத்தியிருக்கலாம்

தெய்வம் தந்த வீடு 89
‘தெய்வம்தந்தவிடுபடத்தில் நாட்டியத் தாரகையாகத் தோன்றும் றேலங்கி செல்வராஜா. (1978)
யாழ்ப்பாணத் தமிழ் பேசக்கூடிய ஒருவரேனும் இப்
பொழுது யாழ்ப்பாணத்தில் இல்லையா? இது ஒரு மாயா ஜாலம்.

Page 104
9. தம்பிஐயா தேவதாஸ்
கதாநாயகன் ஒரு நாதஸ்வர மேதை. இவன் நாட்டியக் காரி ஒருவரைக் காதலித்துத் தோல்வி கண்டதால் 4 ஆண்டுகள் நாதஸ்வரத்தைத் தொடாமல் குடிபோதையில் விழுகிறான். நாதஸ்வர மேதையின் அத்தையின் மகள் சந்திரகலா, அவளுக்கு நாதஸ்வர மேதையின்மேல் காதல். நாட்டியக்காரியின் அண்ணனுக்குச் சந்திரகலாமீது காதல்.
டீன்குமார், சந்திரகலா தன்னைத் திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அது முடியாமல் போகவே பலாத்காரத்தில் இறங்கிவிடுகிறார். இறுதியில் பெண்மை வென்றுவிடுகிறது. வில்லனின் தலையில் இரத்தம் வடிகிறது. 'உன்குடும்பத்திலும் இப்படி இரத்தம் சிந்தவைப்பேன்". இது வில்லனின் சபதம்.
நான்கு வருட இடைவெளிக்குப் பின் கோயிலில் நாதஸ்வரம் வாசிப்பதற்கு மேதை சம்மதிக்கிறார். ஆனால், இதே கோயிலில் நாட்டியக்காரியின் நடனம் இடம்பெறும் என்று கேள்விப்பட்டதும், ஒரு மூலையில் போய் ஒதுங்கிவிடுகிறார். நாட்டியக்காரி அவரிடம்போய் சில தத்துவங்களைச் சொன்னதும் அவர் சம்மதிக்கிறார்.
நாதஸ்வர இசைக்கு நாட்டியம் நடைபெறுகிறது. சனக்கூட்டத்துக்குள் வில்லனும் துப்பாக்கியோடு வந்து நிற்கிறான். நாதஸ்வர மேதையைக் குறிபார்த்து ஒருமுறை சுடுகிறான். ஆடிக்கொண்டிருந்த நாட்டியக்காரி நாதஸ்வர மேதையின் காலடியில் விழுந்து சாகிறாள். நாதஸ்வர மேதை இன்னும் நாதஸ்வரம் வாசிப்பதை நிறுத்தவில்லை. அவரின் வாயாலும் நாதஸ்வரத்தாலும் இரத்தம் பாய் கிறது (இது அடுத்த மாயாஜாலம்) நாதஸ்வர மேதை நாட்டியக்காரியின்மேல் விழுந்து சாகிறார்.
இந்த மாயா ஜாலங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் அமைகிறது இந்தப் படத்தின் பெயர்.

தெய்வம் தந்த வீடு 9.
.நகைச்சுவை என்ற பெயரில் நான்கைந்து பேர் அடிக்கும் கொட்டம், சில வேளைகளில் ஆபாசமாகவும்
அபத்தமாகவும் தெரிகிறது.
நாதனும். 1978
ஓர் அரைக்கிறுக்குப் பாத்திரத்தில் விஸ்வநாதராஜா நடிக்கிறார். இவரது நடிப்பு வெகுசிறப்பாக இருக்கிறது. ஜவாஹரின் நடிப்புப் பரவாயில்லை. தனரெத்தினம் வெகு சீரியசாக நடிக்கிறார். மேலும் குறிப்பிடும்படியாக இந்தப் படத்தில் வேறு எதுவும் கிடையாது.

Page 105
H 92 தம்பிஐயா தேவதாஸ்
இப்படி வித்தியாசமான முறையில் எழுதினார் ஜோர்ஜ் சந்திரசேகரன்.
‘தெய்வம்தந்தவீடு' யாழ்ப்பாணத்தில் மட்டும் அதிக நாட்கள் ஓடியது. தயாரிப்பாளரின் சொந்தத் தியேட்ட ரான ஹட்டன் லிபேட்டியிலும் 16 நாட்கள் மட்டுமே ஒடியது.
‘தெய்வம்தந்தவீடு ஓடிய இடங்களும் நாட்களும்:- மத்திய கொழும்பு (செல்லமஹால்) 13 நாட்கள்
தென்கொழும்பு (மெஜஸ்ரிக்) 13 நாட்கள் தென்கொழும்பு (ஈரோஸ்) 05 நாட்கள் யாழ்ப்பாணம் (சாந்தி) 34 நாட்கள் வவுனியா (றோயல்) 14 நாட்கள் கிளிநொச்சி (பராசக்தி) 14 நாட்கள் மட்டக்களப்பு (ராஜேஸ்வரா) 14 நாட்கள் வாழைச்சேனை (வெலிங்டன்) 06 நாட்கள் கல்முனை (ஹரிசன்) 16 நாட்கள் திருகோணமலை (லக்சுமி) 09 நாட்கள் மூதூர் (இம்பீரியல்) 05 நாட்கள் பண்டாரவளை (சீகிரி) 13 நாட்கள் பதுளை (றெக்ஸ்) 06 நாட்கள்.
எல்லாவற்றையும்விட வேடிக்கை ஒன்று நடைபெற்றது. ‘தெய்வம் தந்தவீடு' திரைப்படம் வெளிவந்தபோது, 'தின கரனில் தயாரிப்பாளர் பொன்னுசாமிப்பிள்ளையின் பேட்டி வந்திருந்தது. இத்திரைப்படம் தயாரித்ததன்மூலம் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எவை? என்ற கேள் விக்குப் பதில் சொல்லியிருந்தார்.
பிடித்தது படம் , படித்தது பாடம். மூன்று வாரத் தில் படத்தை முடித்துத் தருவோம் என்பார்கள். எத்

தெய்வம் தந்த வீடு 93
தனையோ மாதம் இழுத்தடிப்பார்கள். 'மேக்கப்மேன்" றேட்டில்கூட ‘கட் வைக்கிற ஆசாமிகள் இருக்கிறார்கள். லாபம் இருந்தால் எவரையும் தம்முடன் சேர்த்துக் கொள் வார்கள். உண்மை சொல்கிறவர்களை ஒதுக்கி விடுவார் கள். பாஷை தெரியாதவனுக்கும் பாத்திரம் கொடுப்பார் கள். அமைதிப் பேர்வழியாக இருப்பார்கள். அதற்குள் இருக்கிற திருட்டுத்தனத்தைப் போகப்போகத்தான் புரிந்து கொள்ளமுடியும் 'தெய்வம்தந்தவீடு' படப்பிடிப்பு யாழ்ப் பாணத்தில் நடந்தபோது ஏற்பட்ட அனுபவத்தையும் அவர் சொல்லியிருந்தார்.
முழு யூனிற்றும் யாழ்ப்பாணம் சென்றுவிட்டது. அதன் பின்புதான் கதையில் மாற்றம் செய்யவேண்டும் என்று ஒட்டலிலே உட்கார்ந்து கதை எழுத ஆரம்பித்துவிட்டார் கள். அதனால், மூன்று நான்கு நாட்கள் வீணாகிவிட்டன. செட்டுக்கோ லொகேஷனுக்கோ வருவதற்கு முன் என்ன செய்யப்போகிறோம் என்று ஒரு டைரக்டர் திட்டமிட வேண்டாமா? "ஸ்டார்ட் ‘கட் இந்த இரண்டைத் தவிர, வேறு வார்த்தைகளே இவருக்குத் தெரியாதா? ஏதோ படம் ஒழுங்காக வெளிவந்ததென்றால் ஒளிப்பதிவாளரும் தொழில்நுட்பக் கலைஞர்களுந்தான் அதற்குக் காரணம்.
ஒருமுறை தெய்வம்தந்தவீடு படத்துக்குப் பொறுப்பாக இருந்தவர்கள், ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்துக்குப் போடப்பட்ட செட்டைவிட பிரமாதமாகப் போட்டிருக்கிறோம். வந்து பாருங்கள்’ என்றார்கள். ஆசையோடு போய்ப்பார்த்தேன். சின்ன மேளம் நடக்கும் நாட்களில் சுற்றிப் போடப்படும் அலங்காரப் பந்தல்தான் அங்கிருந்தது. கொஞ்சநாட்களாவது சொகுசாக இருக்கப் போடப்பட்ட திட்டம்தான் இந்த அவுடோர் துடிங். இலங் கையிலே தமிழ்ப்படம் ஒழுங்காக வளரவேண்டுமென்றால் ஒட்டுண்ணிகள் ஒதுங்க வேண்டும்' என்று அந்தப் பேட் டியில் கூறியிருந்தார்.

Page 106
194 தம்பிஐயா தேவதாஸ்
‘தெய்வம்தந்த விடு' திரைப்படம் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு படமாக் கப்படுகிறது. ஒளிப்பதிவாளரும் எம்.ஏ.கபூர், கதாநாயகன். 臀
டைரக்டர் ல்பிரட் சில்வா, நடிகைக்ள் சுப்புலட்சுமி காசிநாதன்,
சந்திரகலா, உதவி இயக்குநர், பி.எஸ்.நாகலிங்கம் ஆகியோர்.
இப்படி அனுபவப்பட்ட இவர் இரண்டாவது படத் தையும் தயாரிக்க இருந்தார். ஆனால் 1983 கலவரத்தில் இவர் கொல்லப்பட்டார். அவர் இறந்து விட்டாலும் அவரது பெயர் இலங்கைத் தமிழ்ச் சினிமா வரலாற்றில் நிலைத்திருக்கும் என்பது உண்மையே.
 

20. ‘ஏமாளிகள்' ராம்தாஸின் இரண்டாவது படம்
'கோமாளிகள்" திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'மரிக்கார் எஸ்.ராம்தாஸ்' வெளியிட்ட படம் தான் ‘ஏமாளிகள்'. இலங்கைத் தமிழ்ப் படங்கள் அதிக மாக வெளிவந்த ஆண்டான 1978இல் வெளியான 5வது தமிழ்ப் படம்.
நகைச்சுவையைப் பொறுத்தவரை, எஸ்.ராம்தாஸ் குழுவினருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந் தது. சிரிப்பின் மூலம் ரசிகர்களை வெல்லலாம் என்ற எண்ணம் ராம்தாஸுக்கு வந்துவிட்டது. ஏ.ஏ.எம்.மவுஜுத் படத்தைத் தயாரிக்க முன்வந்தார்.
'கோமாளிகள் திரைப்படத்தை இயக்கிய எஸ். இராம நாதனையே இப்படத்தினையும் இயக்கத் தெரிவு செய் தார்கள். கமறா ஜே.ஜே.ஜோகராஜா. இது இவருக்கு இரண்டாவது தமிழ்ப்படம்.
*கண்ணன்-நேசம் இசை அமைத்தார்கள். கலாவதி, ஜோசப் ராஜேந்திரன், ஸ்ரனி சிவானந்தன் ஆகியோர் பின்னணி பாடினார்கள். இதுவும் 'ராம்தாஸ்' ஏற்கனவே எழுதி

Page 107
196 தம்பிஐயா தேவதாஸ்
ஒலிபரப்பிய வானொலி நாடகமே. ராம்தாஸே திரைப் படத்துக்கு ஏற்றவாறு திரைக்கதை வசனம் எழுதினார். உதவி டைரக்ஷன், தயாரிப்பு மேற்பார்வை போன்ற வற்றை அவரே பொறுப்பேற்றார்.
ஏமாளிகள் திரைப்படத்தில் கதாநாயகன் சிவராமும் கதாநாயகி ஹெலன் குமாரியும். (1978)
'கோமாளிகள்’ திரைப்படத்தில் சில்லையூர் செல்வ ராஜன்-கமலினி செல்வராஜன் ஆகியோர் அறிமுகமானது போல், இப்படத்திலும் புதிய ஜோடி அறிமுகமாகியது.
 
 
 

ஏமாளிகள் 97
'காத்திருப்பேன் உனக்காக திரைப்படத்தில் அறி முகமாகி பெயர் பெற்றவர், என்.சிவராம். சிங்களப் படங்கள் பலவற்றில் நடித்துவிட்டு 'மஞ்சள் குங்குமம்', ‘தென்றலும் புயலும் படங்களில் நடித்ததன்மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகிப் புகழ்பெற்றவர், ஹெலன் குமாரி. இவர்கள் இருவருமே இப்படத்தில் புது ஜோடி யாக அறிமுகமானார்கள்.
'மீனவப்பெண்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ராஜலஷ்மி இப்படத்தில் ‘செல்லமணியாக நடித்தார்.
'மரிக்கார்ராம்தாஸ், ‘அப்புக்குட்டிராஜகோபால், ‘உபாலிசெல்வசேகரன், ஆகியோருடன் கே.ஏ. ஜவாஹர், டொன்பொஸ்கோ, இரா.பத்மநாதன், ஜேசுரட்ணம், விக்டர், ஈஸ்வரன், ஏபிரஹாம், ஆர்.ரீ.ராஜா, செழியன் வயணவப்பெருமாள், மணிமேகலை, ஜெயதேவி, செல்வம் பெனாண்டோ, ருவினா, சுட்டி போன்றோர் நடிக்க ஒப்பந்தமானார்கள்.
ஒலிப்பதிவு சென் ஜோன்ஸ் . படத்தொகுப்பு எம்.எஸ்.அலிமான்.
'கோமாளிகள்' போல் இப்படத்திற்கு அதிக விளம் பரம் கிடைக்கவில்லை. ஆனாலும் சில மாதங்களுக்குள் படம் வளர்ந்து விட்டது.
‘பாக்கீர் பிலிம்ஸ்" ஏமாளிகள் 06.10.1978இல் இலங்கையில் ஏழு ஊர்களில் திரையிடப்பட்டது.
இப்படத்துக்கு அதிக விமர்சனமும் கிடைக்கவில்லை. 24.10.78இல் 'தினகரன்’ விமர்சனம் எழுதியது.
"...இரசிகர்களைச் சிரிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சிந் திக்க வைக்கக்கூடிய எதுவுமே இல்லை. வர்த்தக நோக்கில் படம் பரவாயில்லை. படத்தில் நடித்திருப்பவர்களில்

Page 108
98 தம்பிஐயா தேவதாஸ்
அநேகர், ஏற்கனவே சினிமா அனுபவம் பெற்றவர்கள். இரா.பத்மநாதன், விக்டர், செழியன் வயணவப்பெரு மாள் ஆகியோருக்கு மட்டுமே இது முதலாவது படம். இந்த அனுபவபூர்வமான கலைஞர்களின் ஒத்துழைப்புத் தான் வெற்றிக்குக் காரணமாகும்.
'ஏமாளிகள்' திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர்கள் எஸ்.ராம்தாஸும் செல்வசேகரனும்.
 

ரமாளிகள் 99
ரசிகர்களைச் சிரிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணத் துடனேயே கதை பண்ணப்பட்டிருக்கிறது. நம் நாட்டு ரசிகர்களைச் சிரிப்பின் மூலம்தான் மடக்கவேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறார் ராம்தாஸ். சண்டைக் காட்சியும், கிளப் நடனமும் இணைக்கப்பட்டால்தான் நமது ரசிகர்கள் திருப்திப்படுவார்கள் என்ற எண்ணத்தில் அவை வலிந்து புகுத்தப்பட்டுள்ளன.
பகலில் மட்டும்தான் உங்கள் மனைவிக்குக் கணவ னாக நடிக்க வேண்டுமா? என்று ராம்தாஸ் பீடிகையுடன் வினவுவதும், சிறிது நேரம் ராஜகோபால் திருதிருவென்று விழித்து விட்டு ‘அதைப்பிறகு பார்க்கலாம்' என்று கூறு வதும் மிகுந்த சிரிப்பை உண்டாக்குகிறது. தன் மகனுக்குப் பைத்தியம் என்று ராம்தாஸ் வேதனையுடன் கூறுவதைக் கேட்ட செல்வசேகரன் ஒருவரை ஒருவர் வேதனையுடன் பற்றிக் கொள்வதும், 'மது பருகுவோமா? என்று கேட் பதும் அருமையான கட்டங்கள். இவர்களுடன் டொன் பொஸ்கோ வேறு. உரையாடல்கள் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலும் மலையகப் பேச்சு வழக்கிலும் அமைந்திருக் கின்றன.
‘ராஜகோபாலின் மனைவியாக வரும் "ராஜலஷ்மி யின்’ நடிப்பு சில இடங்களில் இயற்கையாக அமைகிறது. செல்வசேகரனின் மனைவியாக வரும் ‘மணிமேகலை பரவாயில்லை. காதல் ஜோடியாக வரும் ‘சிவராம் ஹெலன்குமாரி இருவரும் நன்கு நடித்துள்ளனர். சிவராமைவிட, ஹெலன்குமாரி, தான் சினிமாவுக்கு அனுபவசாலி என்பதை நிரூபித்துள்ளார்.
‘ஜெயதேவிக்கு இப்படத்தில்தான்நடிக்க இடம் கிடைத்திருக்கிறது. வழமையைப்போல் ஜவாஹர் அட்ட காசம் செய்கிறார். அவருடன் ஆபிரகாமும் ஆர்.ரி.ராஜா வும் சேர்ந்து விடுகிறார்கள். இரா.பத்மநாதன், செல்வம் பெர்னாண்டோ, ஜேசுரட்ணம் ஆகியோர் சில காட்சி

Page 109
200 தம்பிஐயா தேவதாஸ்
களில் தோன்றினாலும் தம் பாகத்தைப் பாராட்டும் வகை யில் செய்துள்ளார்கள்.
'ஏமாளிகள்' படப்பிடிப்பின்போது சிவராமும் ஹெலன்குமாரியும் முன்னே நிற்கிறார்கள். நடுவில் நிற்பவர் டைரக்டர் எஸ்.ராமநாதன். கமறாவுடன் நிற்பவர் ஜே.ஜோகராஜா. இப்படம் மத்திய கொழும்பில் (கெப்பிட்டல்) 35 நாட்களும் தென் கொழும்பில் (ஈரோஸ்) 28 நாட் களும், கொம்பனித் தெருவில் (நவா) 7 நாட்களும் ஓடியது.
 

ஏமாளிகள் - 20
பாடல்களை ஈழத்து இரத்தினமும், பவுசில் அமீரும் இயற்றி இருக்கிறார்கள். கண்ணன்-நேசம் இசை அமைத் திருக்கும் இப்படத்தின் பாடல்கள் 'கோமாளிகள் போல் சிறந்து விளங்கவில்லை. ‘வான் நிலவு தோரணம்' என்று ஜோசப் ராஜேந்திரனும், கலாவதியும் பாடும்பாடல் இனிமையாக இருக்கிறது. ஸ்ரெனி சிவானந்தன் பாடும், ‘வா இந்தப் பக்கம்' என்ற பாடலுக்கு இசை அமைப் பாளர்களில் ஒருவரான நேசம் தியாகராஜா வாயசைத்த வாறு நடனமாடியுள்ளார்.
கொழும்பு சுதந்திர சதுக்கக் கட்டடத்தை ஒளியும் நிழலும் கொண்டு மாற்றியமைத்து காதலர்கள் ஓடி விளையாடும் பிரமாண்டமான மாளிகையாகக் காட்டி ரசிகர்களைப் பிரமிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜே.ஜோகராஜா. டைரக்ஷன் பொறுப்பை, அனுபவப் பட்ட இயக்குநர் எஸ்.ராமநாதன் கச்சிதமாகச் செய்துள் ளார். காட்சிகள் நீண்டனவாக அமைந்திருந்தாலும் அவரது திட்டமிட்ட படப்பிடிப்பின் மூலம் படத்தொகுப் பாளர் அலிமானுக்கு அதிக சிக்கல் ஏற்படவில்லை. பல நடிகர்கள் வரும் காட்சிகளில் உரையாடல்களைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.
குறைகள் சில இருப்பினும் நம் நாட்டுத் திரைப்படம் என்ற உணர்வுடன் பார்த்து மகிழக்கூடிய படம் ‘ஏமாளி கள். தயாரிப்பாளர் ஏ.ஏ.எம்.மவுஜ"த்துக்கு எமது பாராட்டுகள்' என்று அமைந்தது அந்த விமர்சனம்.
யாழ்நகரில் (ராஜா) 52 நாட்களும், வவுனியாவில் (வசந்தி) 29 நாட்களும் , மன்னாரில். (நாதன்ஸ்) 14 நாட்களும் ஓடியது. மட்டக்களப்பில் (றிகல்) 20 நாட் களும், கல்முனையில் (தாஜ்மஹால்) 5 நாட்களும், வாழைச்சேனையில் (ஈஸ்வரி) 7 நாட்களும் ஓடியது. திருகோணமலையில் (பூரீகிருஷ்ணா) 17 நாட்களும் ஒடியது.

Page 110
202 stbount தேவதாஸ்
மலையகத்தில் பண்டாரவளையில் (மொடர்ன்) 18 நாட்களும், கண்டியில் (ஒடியன்) 5 நாட்களும் ஓடியது.
இலங்கைத் தமிழ்ச் சினிமாவுக்கு நடிகர் எஸ். ராம் தாஸ் அதிக பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
'கோமாளிகள் திரைப்படத்தை உருவாக்கியதுடன் அவரது பங்களிப்பு ஆரம்பமாகியது. அந்தப் பங்களிப் பின் தொடர்ச்சியே 'ஏமாளிகள்’ திரைப்படமாகும்.

21. 'அநுராகம்
ஒரு கதை, இரண்டு மொழிகள்
1978ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் ஒரு தமிழ்ப்படம் தயாரிக்க 4% லட்சம் ரூபாய் தேவைப் பட்டது. இப்படிப் போட்ட முதலையும் மீண்டும் பெறு வதற்கு அப்படம் 10 லட்சம் ரூபாவை வதுலாகப் பெற வேண்டும். ஆனால், அதுவரை திரைக்கு வந்த இலங்கைத் தமிழ்ப் படங்களில், "கோமாளிகள்', ‘நான் உங்கள் தோழன்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே 8 லட்சம் ரூபாவை வதுலாகப் பெற்றன. அதனால், தயாரிப்பாளர் கள் தமிழ்ப்படம் தயாரிக்கப் பின் வாங்கினார்கள்.
இந்த நிலையை மாற்றும் வகையில் புதிய ஒரு வழி யைச் சொன்னார் ஒரு தமிழ் நடிகர். ஒரே நேரத்தில் ஒரே கதை ஒரே தொழில் நுட்பக்கலைஞர்கள்; ஆனாலும் நடிகர்களும் பாடகர்களும் வேறு வேறு, அதாவது ஒரே கதையை தமிழிலும் சிங்களத்திலும் படங்களாகத் தயாரிக் கும்போது, தமிழ்ப்படத்தின் செலவில் 2 லட்சம் ரூபா அளவு குறைகிறது. அப்படியே தமிழ்ப்படம் தோல்வி

Page 111
204 தம்பிஐயா தேவதாஸ்
அடைந்தாலும், சிங்களப்பட வதுல் அந்தத் தமிழ்ப்பட, நஷ்டத்தை ஈடுசெய்யும்.
'அநுராகம் திரைப்படத்தில் கதாநாயகன் சிவராமுவும் கதாநாயகி சந்திரகலாவும். (1978)
இந்த மாற்று வழியைச் சொன்ன தமிழ் நடிகர் தான், மலையகத்தில் கொஸ்லந்தையில் நாராயணசாமி, அமிர் தம்மாள் தம்பதிகளின் இரண்டாவது மகன்; ‘சமுதாயம் திரைப்படத்தின் கதாநாயகன், பின்னாளில் குணச்சித்திர வேடங்களில் தோன்றிய அமரர் எஸ்.என்.தனரெத்தினம்.
 
 
 

அநுராகம் 205
இந்த மாற்று வழியைப் பிரபல சிங்களப்படத் தயாரிப் பாளரும் இயக்குநருமான ஒரு சிங்களவர் ஏற்றுக் கொண் டார். அவர்தான் பிரபல இடதுசாரி அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவின் தம்பியான யசபாலித்த நாணயக்காரா.
இந்த மாற்று வழியில் யசபாலித்த ஒரு தமிழ்ப்படத் தையும் ஒரு சிங்களப் படத்தையும் ஒரே நேரத்தில் தயாரிக்கத் தொடங்கினார்.
சிங்களப் படத்தின் பெயர் “கீதிகா' தமிழ்ப்படத்தின் பெயர் 'அநுராகம் தமிழ்ப் படத்தின் கதாநாயகன் என்.சிவராம் கதாநாயகி சந்திரகலா,
சிங்களப் படத்தின் கதாநாயகன் விஜயகுமாரணதுங்க, கதாநாயகி மாலினி பொன்சேகா.
தமிழ்ப் படத்துக்கான கதை வசனத்தையும் உதவி இயக்குநர் பொறுப்பையும் பி.எஸ்.நாகலிங்கம் ஏற்றுக் கொண்டார்.
ஜே.யோகராஜா ஒளிப்பதிவு செய்த மூன்றாவது தமிழ்ப்படம் இது. மற்றும் நடிகர்களாக எஸ்.என்.தனரெத் தினம், எஸ்.விஸ்வனாதராஜா, செல்வம் பெர்னாண்டோ, டொன்பொஸ்கோ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இரண்டுமொழிகளிலும் அனோ ஜா, லிலியன், பி.எஸ்.பெரேரா, ரஷி ஆகியோரும் நடித்தனர்.
இப்படத்துக்கு, சரத் தசனாயக்க இசை அமைத்தார். 'ஈழத்து ரெத்தினம் இயற்றிய பாடல்களை முத்தழகுவும் கலாவதியும் பாடினார்கள். ஒலிப்பதிவு-ஈ.டி.சென்யோன்ஸ், ஒப்பனை-பெனாட், படத்தொகுப்பு-துரை பவானந்தன். தயாரிப்பு நிர்வாகம் கே.குமார்.
படம் 19 நாட்களுக்குள் தயாரிக்கப்பட்டுவிட்டது. அநுராகம் 1978ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட 6வது

Page 112
206 தம்பிஐயா தேவதாஸ்
தமிழ்ப்படமாகும். 27.10.1978இல் தீபாவளி வெளி யீடாக இப்படம் ஆறு ஊர்களில் வெளியிடப்பட்டது.
'அநுராகம் திரைப்படக் கலைஞர்களுக்குக் கொழும்பு விவேகாநந்த மகா வித்தியாலயத்தில் စ္တပ္မ္ရစ္သဖွ*ဗူ့ g டைரக்டர் யசபாலித்த நாணய்க்கார கூட்டத்துக்குத் தலைமை வகித்த ாஜா மொஹிதீன், கலைஞர்கள் விஸ்வநாதரர்ஜா, சிவராம் ஆகியோர்.
ராஜா ஒரு பணக்கார இளைஞன். அழகான எதையும் ஒவியமாக வரைவது அவனது பொழுது போக்கு. அவன் விடுமுறையைக கழிக்க பண்டாரவளைக்கு வருகிறான். அங்கு வசந்தி என்ற அழகியைச் சந்திக்கிறான். காதல் மலர்கிறது. இவர்களைப் பிரிக்க முயன்றான் வசந்தியின் மைத்துனன் நாகப்பன். அவன் ராஜாவின் காலையே முறித்துவிடுகிறான். தந்தை சதாசிவம் பண்டாரவளைக்கு
 
 
 
 
 

அதுராகம் 2O7
வந்து தனது மகன் ராஜாவைப் பிடிவாதமாகக் கொழும் புக்கு அழைத்துவந்துவிடுகிறார்
ராஜாவின் உறவால் கருவுற்ற வசந்தி, ஊர் ஜனங் களுக்குப் பயந்து வேறு ஊர் சென்று விடுகிறாள்.
தனக்காகக் காத்திருக்கும் தன் அத்தைமகள் நளினியின் உதவியுடன் வசந்தியைத் தேடுகிறான் ராஜா. ஐந்து வருடங்கள் கழிந்துவிடுகின்றன.
வசந்தியின் மகன் கண்ணன் தந்தையைத் தேடிப் புறப் படுகிறான். மகன் கண்ணனைத் தேடி வசந்தி அலை கிறாள்.
இறுதியில் எல்லோரும் ஒன்று சேர்கின்றனர். இது தான் 'அநுராகம் கதைச் சுருக்கமாகும். ராஜாவாக என்.சிவராமும் வசந்தியாக சந்திரகலாவும் நடித்தார்கள். தந்தை சதாசிவமாகத் தனரெத்தினமும் வில்லன் நாகப்ப னாக விஸ்வநாதராஜாவும் நளினியாக அனோஜாவும் கண்ணனாக ரஷியும் தோன்றினார்கள்.
மலைநாட்டைப் பற்றி ஈழத்து இரத்தினம் இயற்றி முத்தழகு பாடிய பாடல் சிறந்து விளங்கியது.
'எண்ணங்களாலே இறைவன்தானே பொன் வண்ணத்தாலே வரைந்துவிட்டானே" வண்ண வண்ணத் தோற்றங்கள் தன்னாலே எந்நாளும் நிலையாகும் எழில் கொஞ்சும் மலையகமே என்று தொடங்கும் பாடல்தான் அது.
இப்படத்தைப் பலரும் பாராட்டினார்கள். ‘சிந்தா மணி"யும் (05.11.1978) பாராட்டி விமர்சனம் எழுதியது.
'இதுவரை இலங்கைப் படங்களிலிருந்த 'அமெச்சூர்' தன்மையின்றி வர்த்தக நோக்குடன் கூடிய முழுமை'

Page 113
208 தம்பிஐயா தேவதாஸ்
அநுராகத்தில் காணமுடிகிறது. பல வெற்றிப் படங்களைத் தயாரித்த யசபாலித நாணயக்காரவின் கைவண்ணத்தில் இப்படம் வெளிவந்திருக்கிறது. ஒரு சாதாரண கதையை விறு விறுப்பாக இயக்கியிருக்கிறார் அவர். கமறாமூலம் புகுந்து விளையாடியிருக்கிறார் யோகராஜா. ஒலிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. நறுக்குத் தெறித்தாற்போல் வசனம் எழுதியிருக்கிறார் உதவி இயக்குநர் பி.எஸ்.நாகலிங்கம். முத்தழகுவும் கலாவதியும் இனிமையாகப் பாடியிருக்கிறார் கள். அவை ரசிகர்களை வாய்திறந்து பாடி மகிழ வைக் கின்றன.
கதாநாயகன் சிவராம் உள்ளூர்த் தமிழ்ப்பட நடிகர் களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துவருகிறார். சந்திரகலாவும் நன்கு நடித்திருக்கிறார். அவருடைய நடிப் பின் முதிர்ச்சியுடன் தோற்றமும் போட்டி போடுகிறது. விஸ்வநாதராஜா வில்லனாக வந்து தான் ஒரு குணச் சித்திர நடிகர் என்பதை நிரூபிக்கிறார். பண்பட்ட நடிகர் தனரெத்தினம் ஒரு சில காட்சிகளில்தான் வருகிறார். ஆனாலும், திரைமறைவில் இப்படத்துக்கு அவர் பல வழி களில் உதவியிருக்கிறார்.
அனோஜாவின் பாத்திரம் அனுதாபத்தைப் பெறு கிறது. செல்வம் பெனாண்டோ பாட்டியாக வந்து கச்சித மாக நடித்துள்ளார். டொன்பொஸ்கோ ஒரு சில காட்சி களில் வந்தாலும் மனதில் பதிந்துவிடுகிறார். மாஸ்டர் ரஷி வெகு அருமையாக நடித்துள்ளார்.
‘போமிலா கதையென்றாலும் படத்தை நன்றாக உரு வாக்கித் தந்திருக்கிறார் யசபாலித்த. என்று அமைந் திருந்தது. அந்த விமர்சனம்.
ரமேஸ் என்பவர் அடிக்கடி திரைப்படங்களைப்பற்றி விமர்சனம் எழுதினார். அவர் இப்படத்தைப் பற்றி எழுதிய விமர்சனம் மித்திரனில் (02.11.1978) இடம் பெற்றது.

அநுராகம் 209
மலையகத்தின் இயற்கைச் சூழலில் இப்படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆடல், பாடல், காதல், ஹாஸ்யம், சண்டைக் காட்சிகளுக்குக் குறைவில்லை. படம் போரடிக்காமல் செல்கிறது. வலுவான கதை இல் லாவிட்டலும் சம்பவங்களின் கோர்வையும் கருத்தாழமிக்க வசனங்களும் படத்தை ஒட்டிச் செல்கின்றன.
'அநுராகம் திரைப்படத்தில் இன்னுமொரு உருக்கமான காட்சி. கதாநாயகன் சிவராமும் சிங்கள் நடிகை அனோஜா வீரசிங்கவும். (1978)

Page 114
210 தம்பிஐயா தேவதாஸ்
விஸ்வநாதராஜாவும் தனரெத்தினமும் நன்கு நடித்துள் ளனர். கதாநாயகன் சிவராம் சில காட்சிகளில் எவ்வித உணர்ச்சியுமின்றி நடித்துள்ளார். சந்திரகலாவின் நடிப்புப் பரவாயில்லை. அனோஜா நடிக்க முயன்றுள்ளார். செல்வம் பெனான்டோ பரவாயில்லை டொன்பொஸ்கோ சிரிக்க வைக்கிறார்.
சரத் தசனாயக்காவின் இசை அமைப்பில் முத்தழகு கலாவதி பாடியுள்ள பாடல்கள் இனிமையாகவுள்ளன. யோகராஜாவின் ஒளிப்பதிவு நன்றாகவுள்ளது.
1978இல் வெளிவந்த ஆறு படங்களுக்கும் நானும் விமர்சனம் எழுதியிருந்தேன். இப்படத்தைப்பற்றி நான் எழுதிய நீண்ட விமர்சனம் தினகரனில் (14.11.1978) வெளி வந்திருந்தது.
கதாநாயகன் என்.சிவராமே காட்சி முழுவதும் நிறைந்து நிற்கிறார். சில இடங்களில் எவ்வித உணர்ச்சியுமின்றி சும்மாவே நின்று விடுகிறார். சந்திரகலா இப்படத்தில் தன் திறமையைக் காட்டியுள்ளார். குழந்தையுடன் அழும் காட்சியில் ரசிகர்களையும் அழவைத்துவிடுகிறார்.
தனரெத்தினமும் விஸ்வநாதராஜாவும் தமது பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளனர். செல்வம் பெனாண்டோ வழமையைப் போல் திறமாக நடித்துள்ளார். டொன் பொஸ்கோ சிறிது நேரம் தோன்றி மறைநதாலும் அவரது நகைச்சுவைகள் நினைவில் நிற்கின்றன.
இனிமையான ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன. முத்தழகுவும் கலாவதியும் தமக்கே உரித்தான இனிய குரலில் யாரையும் பின்பற்றாமல் நன்கு பாடியிருக்கிறார் கள். மலையகத்தின் எழில் காட்சிகளை திறம்படப் படம் பிடித்துள்ளார், யோகராஜா. கருத்தாழமிகு வசனங்களை எழுதியதுடன் துணை இயக்குநராகவும் நன்கு செயற்பட்

அநுராகம்
டிருக்கிறார், பி.எஸ்.நாகலிங்கம் சலிப்புத்தட்டாமலும் கதை, புரியும்படியும் படத் தொகுப்புச் செய்துள்ளார், துரை பவானந்தன்.
செல்வசேகரன், அமினாபேகம்,ஏ.நெயினார்,ஞெய்ரஹீம் சஹிட் போன்றோரின் குரல்கள் பாத்திரங்களுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
சமத்கார பிலிம்ஸ் 'அநுராகம் மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 42 நாட்களும் தென்கொழும்பில் (சபை யார்) 16 நாட்களும் ஓடியது.
யாழ்நகரில் (வின்சர்) 56 நாட்களும் வவுனியாவில் (நியூ இந்திரா) 20 நாட்களும் காட்சியளித்தது.
மட்டக்களப்பில் (விஜயா) 18 நாட்களும் அக்கரைப் பற்றில் (சாரதா) 14 நாட்களும் காண்பிக்கப்பட்டது.
திருகோணமலையில் (லக்சுமி) 18 நாட்களும் மூதூரில் (இம்பீரியல்) 10 நாட்களும் நின்று பிடித்தது.
மலையகத்தில் மாத்தளையில் (தாஜ்மஹால்) 30 நாட் களும் பதுளையில் (மொடொன்) 20 நாட்களும் கட்டுகள் தோட்டையில் (சீகிரி) 14 நாட்களும் ஓடியது.
அநுராகம் திரையிடப்பட்ட சமயம் ஏற்பட்ட புயலி னால் கிழக்கு மாகாணம் உட்பட பல பகுதிகளில் பட வதுல் பாதிக்கப்பட்டது. ஆனால் பொருளாதாரரீதியில் 'அநுராகம் வெற்றிப்படமே. காரணம் இப்படத்துக்கு 1% லட்சம் ரூபா மட்டுமே செலவாகியிருந்தது.
எத்தனையோ தமிழ்த் தயாரிப்பாளர்கள் பயந்து பின்னின்ற வேளையில் சிங்களவர் ஒருவர் துணிந்து இம் முயற்சியில் ஈடுபட்டார் என்றால் அவரது பெருந்தன் மையை என்னவென்று சொல்வது.

Page 115
தம்பிஐயா தேவதாஸ்
விள
ஸ். கதாநாயகி சந்திர
g Q35 mTL" La
ம்ப
ன்
af. (1978)
டத்தி
F}TLILF
கலா பாடி ஆடு
LD BETL
ம்' தி
அநுராகம்
*((()); _______-|-
├──────────────────)~=~=== = = _
|-TT---- -s.|-s.-• ¿L_)=**¿¿.
-*No.
 

22. எங்களில் ஒருவன்
இலங்கையில் புதிய தமிழ்ப்படங்கள் வெளிவரும் பொழுது அவற்றில் பல புதுமுகங்கள் அறிமுகமா வார்கள், கலைஞர்கள் மட்டுமல்ல தயாரிப்பாளர்கள்கூட, புதுமுகமாக அறிமுகமாவார்கள். 'எங்களில் ஒருவன்' திரைப்படத்திலும் பல புதிய தயாரிப்பாளர்கள் அறிமுக LDTTTT.
ஒரு முஸ்லிம் வர்த்தகருக்குச் சிறுவயதிலிருந்தே நாடகக் கலைமீது அதிக ஆர்வம். இந்த வர்த்தகர் தன் பெயரை வெளியிடாமலே, பல தமிழ் நாடகங்கள் மேடையேறு வதற்குப் பொருளாதார உதவி செய்திருக்கிறார்.
இந்த வர்த்தகரின் பெயர் வெளியே தெரியும் வகை யில் அவரை ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக அறி முகப்படுத்தினார். இயக்குநர் எஸ்.வி.சந்திரன். அப்படி அறிமுகமான அந்த வர்த்தகரின் பெயர்தான் எம்.ஜே. ஆப்தீன். அவர் தயாரித்த படத்தின் பெயர்தான், எங்களில் ஒருவன்'
எஸ்.வி.சந்திரன் ஒரு நகைச்சுவைப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எல்லாவற்றையும் ஏற்கனவே எழுதி

Page 116
24 தம்பிஐயா தேவதாஸ்
வைத்திருந்தார். அந்தப் படத்துக்கான கதாநாயகனைக்கூட மனதில் வைத்திருந்தார்.
எங்களில் a படப்பிடிப்பில் டைரக்டர் எஸ்.வி.சந்திரன் காட்சியை விளக்குகிறார். உ இயக்குனர் அன்டன்கிங்ஸ்லி, ரைக்டர் எஸ்.வி.சந்திரன், நடிகர்கள் ஏகாம்பரம், டொன் பொஸஸ்கோ,
ப்பதிவாளர் செல்லத்துரை நடிகை மணிமேகலை ஆகியோர். (1979)
எம்.ஜே. ஆப்தீனும், எஸ்.வி.சந்திரனும் ஒன்று சேர்ந்து நகைச்சுவைப் படமொன்றைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள். ‘மரிக்கார்' என்ற பெயரில் இப்பொழுது எஸ்.ராம் தாஸ் புகழ்பெற்று விளங்குகிறார். இதே பாணியை
 
 
 
 
 

எங்களில் ஒருவன் 25
1960 ஆம் ஆண்டளவில் ‘காசீம் காக்கா’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தி அதன் மூலம் புகழ்பெற்று விளங்கியவர் றொசாரியோ பீரிஸ். இவருக்குத் தம்பியொருவன் இருந் தான். றொசாரியோ பீரிஸ் நாடகங்கள் நடிக்கும்போது இந்தத் தம்பி உதவி செய்வான். றொசாரியோ பீரிஸ் காலமானதும் இந்தத் தம்பியும் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினான். இவன் சில படங்களிலும் நகைச்சுவைப் பாத்திரங்களில் தோன்றி மறைந்திருக்கிறான். அவனது பெயர்தான் டொன்பொஸ்கோ. இவரையே இப்படத்தின் கதாநாயகனாகப் போடவேண்டும் என்று டைரக்டர் சந் திரன் ஏற்கனவே தீர்மானித்திருந்தார். இவருக்கு சோடி யாகத் தெரிவு செய்யப்பட்ட புதுமுக நடிகையின் பெயர் *காஞ்சனா”.
இவர்களுடன் எஸ்.செல்வசேகரன், ஏ.நெய்னார், கே.ஏ. ஜவாஹர்,லத்தீப்,தர்மலிங்கம், ரெமியஸ், ஆர்.ரி.ராஜா, ராகவன், மகாராஜா. விஜயராஜா , எஸ்.கே.ராஜன்.
ஜெனிடா, ஜெயதேவி, மணிமேகலை, பூரீதேவி, ரத்னகலா, சர்மிளா என்று பல நடிக நடிகையர் தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழ் நடிகர் அலெக்சாண்டர் பெர்னாண்டோ ஆரம் பத்தில் சிறந்த நாடக நடிகராக விளங்கியவர். புகழ்பெற்ற மல்யுத்த வீரராகவும் திகழ்ந்தவர். பல சிங்களப் படங் களில் கதாநாயகனாக நடித்தவர். இவருக்கு இப்படத்தில் கெளரவ வேடம் கொடுக்கப்பட்டது.
பல படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக விளங்கிய என்.செல்லத்துரை, இப்படத்தின் பிரதான ஒளிப்பதி வாளராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். உதவி இயக்குநர் அன்ரன்கிங்ஸ்லி.
ஈழத்து ரெத்தினம் இயற்றிய பாடல்களுக்கு ஆர்.முத்து சாமி இசை அமைத்தார். ஜோசப் ராஜேந்திரன், முத்தழகு.

Page 117
26 தமயிஜயா தேவதாஸ்
குலசீலநாதன், சுஜாதா, ஜெகதேவி ஆகியோர் பாடல் களைப் பாடினர். ஒலிப்பதிவு கே.பி.பாலசிங்கம், நிர் வாகம் லால், ஒப்பனை சுப்பு, படத்தயாரிப்பில் ஆர்.செளந்தரராஜன், லாஸரஸ் அந்தணி, எஸ்.சிவசோதி, மேர்ஸி சந்திரன் ஆகியோர் உதவினர். எம்.ஜே.ஏ.புரடக்ஷன்
‘எங்களில் ஒருவன் 18.05.1979இல் திரைக்கு வந்தது.
‘எங்களில் ஒருவன்' திரைப்படத்தில் ஒரு காட்சி, அலெக்சாண்டர் பெர்னாண்டோ, ஏ. நெயினார்,டொன் பொஸ்கோ,எஸ்செல்வசேகரன், ஜவாஹர் ஆகியோர் தோன்றுகிறார்கள். (1979)
தந்தையுடன் சண்டைபிடித்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறான், ரமேஷ் என்ற இளைஞன். பூங்கா வொன்றில் பழைய நண்பன் ஈஸ்வரனைச் சந்தித்தான். இவர்கள் இருவரும் இணைந்து முன்னேற முயலுகிறார்கள்.
 
 
 
 
 

எங்களில் ஒருவன் 21 7
முதலாளி ஒருவர் இவர்களுக்கு மனமிரங்கி தனது சைவஹோட்டலில் சர்வர் வேலை கொடுக்கிறார். இவர் களது கூத்தாட்டத்தில் அடிக்கடி ஹோட்டலில் சண்டை முற்படுகிறது. ஒரு நாள் றெளடியொருவன் கடையை நொருக்கித் தள்ளுகிறான். அன்று முதல் இவர்கள் ஹோட்டலைவிட்டு விலகுகிறார்கள்.
இவர்கள் இருவரும் றைவராகவும், மெக்கானிக் காகவும் வேறு இடத்தில் வேலைக்குச் சேர்கிறார்கள். முதலாளியின் மகளுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் அந்த வேலையும் பறிபோய்விடுகிறது.
பின்பு பிரபல நடிகராக மாறியபின் பழைய காதலி யைத் திருமணம் செய்கிறான்; சுகவீனமுற்ற தந்தையையும் காப்பாற்றுகிறான்.
இதுதான் ‘எங்களில் ஒருவன்’ திரைப்படத்தின் கதைச் சுருக்கம். ரமேஷாக டொன்பொஸ்கோவும், ஈஸ்வரனாக எஸ்.செல்வசேகரனும், இன்னுமொரு சர்வர் ரவியாக ஏ.நெய்னாரும் முதலாளியாக கே.ஏ. ஜவாஹரும் தோன்றி னார்கள். அறிவிப்பாளர் எஸ்.கே. ராஜன் இப்படத்தில் அறிவிப்பாளராகவே தோன்றினார்.
இப்படம் மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 35 நாட்களும் தென்கொழும்பில் (சபையார்) 12 நாட்களும் ஒடியது.
இது வடபகுதியில் அதிக நாட்கள் ஒடவில்லை. யாழ்ப்பாணம் (ராணி), வவுனியா (பூரீமுருகன்), மன்னார் (அயின்) ஆகிய இடங்களில் தலா 15 நாட்கள் மட்டுமே
9-Ugs.
மட்டக்களப்பில் (விஜயா) 14 நாட்களும், கல்முனை யில் (கமல்) 10 நாட்களும், களுவாஞ்சிக்குடியில் (சாரதா) 7 நாட்களும் ஓடியது. திருகோணமலையில்

Page 118
218 தம்பிஐயா தேவதாஸ்
(சரஸ்வதி) 18 நாட்களும், ஹட்டனில் (விஜிதா) 10 நாட்களும் ஓடியது.
இப்படத்தைப்பற்றி, ‘சிந்தாமணி ' (20.05.1978) 'ஈழத்துத் திரைவானில்' என்ற தலையங்கத்தின் கீழ் விமர் சனம் எழுதியது.
. . . . . மூலக்கதை, திரைக்கதை வசனம், படத்தொகுப்பு, நெறியாள்கை, ஆகிய பொறுப்புக்களை எஸ்.வி.சந்திரன் ஏற்றிருக்கிறார். இலங்கையில் தேர்ந்த கலைஞர்கள் இருக் கிறார்கள் என்பதற்கு இப்படம் ஒரு எடுத்துக்காட்டு. நகைச்சுவையை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். டொன் பொஸ்கோ, செல்வசேகரன் பாத்திர முணர்ந்து நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அழுதழுதே சிரிக்க வைக்க முனைகிறார்கள். அவர்கள் அழுகின்ற சில கட்டங்களில் நாம் தலையில் அடித்துக் கொள்கிறோம்.
சைவ ஹோட்டல் முதலாளியாக நடிக்கும் ஜவாஹரும் டீ மேக்கராக வரும் நெய்னாரும் தாம் தேர்ந்த நடிகர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள்.
சண்டைகள், கிளப் நடனங்கள் இல்லாமல், குடும் பத்தின் சகல அங்கத்தினரும் பார்த்து மகிழக்கூடிய விதத்தில் சந்திரன் படத்தை இயக்கியிருக்கிறார்.
ஆர்.முத்துசாமி இசை அமைத்த பாடல்கள் கேட்கக் கூடியனவாக இருக்கின்றன. என்.செல்லத்துரை புதிய கோணங்களில் கமறாவைக் கையாண்டிருக்கிறார், என்று அந்த விமர்சனம் அமைந்திருந்தது.
இந்தப் படத்தைப் பற்றி தினகரனில் (12.06.79) நானும் இப்படி விமர்சனம் எழுதினேன்.
. . . . . . விருப்பு வெறுப்பற்ற நடிகர் தேர்வில் இப் படத்தில் 25க்கு மேற்பட்ட நடிக நடிகையர் தோன்று

எங்களில் ஒருவன் 2夏9
கிறார்கள். டொன் பொஸ்கோ ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவையை அள்ளி வீசுகிறார். அவரது புள்ளி மீசையுடன் கூடிய முகபாவம் சிரிப்பை உண்டாக்குகிறது. இவரது சிரிப்புப் போதாதென்று செல்வசேகரனும் நெய் னாரும் சேர்ந்து கும்மாளமடிக்கிறார்கள்.
செல்வசேகரன் சாம்பார் வாளியை முதுகுப்புறமாகப் பிடித்துக் கொண்டு பொஸ்கோவுடன் உரையாடுவதும், நெய்னார் தேநீர் அடிப்பதும் அவர்களது நல்ல நடிப்புக்கு உதாரணங்களாகும்.
தந்தையாகத் தோன்றும் ஏகாம்பரத்திற்கு நடிப்பதற்குச் சில காட்சிகளே கிடைத்தாலும் அத்தனை காட்சிகளிலும் தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகன் என்பதை நிறுவு கிறார். அதனால்தான், அவருக்கு அதிகமான 'குளோஸ்அப் காட்சிகள் கிடைக்கின்றன. ஏகாம்பரத்தின் மனைவி யாகத் தோன்றும் மணிமேகலை தனது பங்கைத் திறம்படச் செய்கிறார். புதுமுகம் காஞ்சனா காதல் காட்சிகளில் சுடர் விடுகிறார். கே.ஏ. ஜவாஹர் தனது பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்துள்ளார். அவரது அடம்பிடித்த மனைவி யாக ஜெயதேவி தோன்றுகிறார்.
அலெக்சாண்டர் பெர்னாண்டோ, ஜெனிடா ஆகி யோர் கெளரவ நடிகர்களாகத் தோன்றுகிறார்கள். அலெக்சாண்டருடன் மோதுவதற்கென்றே லத்தீப் தோன்று கிறார்.
எம்.எஸ்.ஈஸ்வரன், விஜயராஜா, சிதம்பரம் போன்ற நடிகர்களுக்கு நடிக்க அதிக சந்தர்ப்பங்கள் கிடைக்காவிட் டாலும் எதிர்காலத்தில் சுடர்விடுவார்கள் என்பதற்கு அவர்களது நடிப்பாற்றல் சான்று பகருகின்றது. இயக்குநர் சந்திரனே படத்திலும் டைரக்டராகத் தோன்றுகிறார்.
ஆர்.முத்துசாமி படத்துக்கு இசை அமைத்துள்ளார். அவருக்கு அவரது மகன் எம்.மோகன்ராஜும் உதவி

Page 119
220 தம்பிஐயா தேவதாஸ்
யிருக்கிறார். ஜோசப் ராஜேந்திரன், சுஜாதா பாடியுள்ள சிலைமேனியே' என்ற பாடலும் முத்தழகு, ஜெகதேவி பாடியுள்ள ‘உன்னைத் தேடி வந்ததொரு என்ற பாடலும் இனிமையாக இருக்கின்றன. குலசீலநாதன் குழுவினர் பாடும் பாடலில் நடிகர் திலகம் போலே நண்பர் நடிக் கணும். மக்கள் திலகம் போலே அள்ளிக் கொடுக்கணும் என்ற வரிகள் நகைச்சுவை மிக்கவை.
பாடல்களை ஈழத்து ரெத்தினம் இயற்றியுள்ளார். ஒலிப் பதிவை கே.பாலசிங்கம் கவனித்திருக்கிறார். என்.செல்லத் துரை என்ற புதியவர் (தமிழ்த்திரை உலகுக்கு) ஒளிப் பதிவைத் திறம்பட செய்துள்ளார். கொழும்பின் புதிய கட்டடங்கள்மீது அவரது கமராக் கண்கள் சென்று வரு கின்றன. அன்ரன் கிங்ஸ்லி என்ற இளைஞர் நெறியாள் கையில் சந்திரனுக்கு உதவியிருக்கிறார்.
குறைகள் சில இருப்பினும் நம்நாட்டுப் படைப்பு என்ற தேசிய உணர்வுடன் பார்த்து மகிழக்கூடிய படம் ‘எங் களில் ஒருவன். இலங்கைத் தமிழ்த்திரைப்பட வரலாற் றுக்கு மேலுமொரு படத்தைத் தயாரித்தளித்த கலைப்பிரி யர்கள் எம்.ஜே. ஆப்தீன், ஆர்.செளந்தரராஜன், லாசரஸ் அந்தணி, எஸ்.சிவசோதி , மேர்ஸி சந்திரன் ஆகியோ ருக்குப் பாராட்டுகள்’ என்று அந்த விமர்சனத்தில் எழுதி யிருந்தேன்.
உண்மைதான். தயாரிப்பாளர்களுடன் எஸ்.வி.சந்திர னும் பாராட்டுக்குரியவரே! ஆனால், இப்படமும் அதிக நாட்கள் ஓடாதது கவலைக்குரியதே.

23. ‘மாமியார் வீடு'
1978ஆம் ஆண்டளவில் கூட்டுத்தயாரிப்பு என்ற பெயரில் பல தென்னிந்திய சினிமாக்காரர்கள் இலங் கைக்கு வரத் தொடங்கினார்கள். பைலட் பிறேம்நாத் படத்தை இங்கு பிடிப்பதற்குப் பெரிய பட்டாளமே வந்து சேர்ந்துவிட்டது.
இலங்கைக் கலைஞர்களுக்கு அவர்கள் வாய்ப்பு வழங்க வில்லை என்று உள்ளூர்க் கலைஞர்கள் சிலர் போர்க் கொடி உயர்த்தினர்.
அவர்கள் இங்குள்ள சிங்கள நடிகை மாலினி பொன் சேகாவுக்கு மட்டும் ஓரளவு வாய்ப்புக் கொடுத்தார்கள்.
அந்த வகையில் மாலினி பொன்சேகா, கீதா குமார சிங்க போன்ற நடிகைகள் தமிழ்நாட்டிற்குப்போய் நடித்துக் காட்டிவிட்டு வந்தார்கள்.
ஆனால், இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இலங் கைத் தமிழ் நடிகை ஒருவர் தென்னிந்தியத் தமிழ்ப்படத்தில் நடித்துக் கொடிகட்டிப் பறந்திருக்கிறார். யாழ்ப்பாணத் தைச் சேர்ந்த இந்த நடிகை தமிழ்நாடு சென்று நீச்சல் உடையிலே நடித்துவிட்டு வந்துவிட்டார். அவரின் பெயர்

Page 120
: தம்பிஐயா தேவதாஸ்
தான் கே.தவமணிதேவி. "எழிலான தோற்றம் எடுப்பான சரீரம். இயற்கையிலேயே தவமணிக்கு. இப்படி அப் போதய ரசிகர்கள் விமர்சித்தார்களாம்.
'மாமியார்விடு திரைப்பட இயக்குநர் கே.வெண்கட்
அங்கு போன கையோடு தவமணிதேவி பத்திரிகை களுக்குப் பேட்டி கொடுத்தார். பேட்டியின் போது இலங் கையிலேயே எடுக்கப்பட்ட தனது போட்டோவைப் பிரசுரத்துக்காகக் கொடுத்தார். அந்தப் போட்டோவில் தவமணிதேவி நீச்சலுடையில் நின்று புன்னகை புரிந்தார்.
தவமணி நீச்சலுடைக் கவர்ச்சிப் படத்தை வெளியிட்டு அதன் கீழே "பதிவிரதை அகல்யாவாக நடிக்க இலங்கையி லிருந்து வந்திருக்கும் தவமணிதேவி குடும்பப் பெண்கள் தாராளமாகச் சினிமாவில் நடிக்கவேண்டும் என்று கூறுகி றார்" என ஒரு பத்திரிகை குறிப்பு எழுதி வெளியிட்டதாம்.
இது நடந்தது 1936ஆம் ஆண்டில் ஆனால்,1978ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இரு நடிகைகளும் ஒரு
 

மாமியார் வீடு
நடிகரும் இலங்கை வந்து இங்குள்ள நடிகர்களுடன் நடித்து விட்டுச் சென்றார்கள்.
வனமோகினி இந்தியத்திரைப்படத்தில் இலங்கை நடிகை தவமணி தேவி.(1941)
புங்குடுதீவில் பிறந்த செல்லையா மாஸ்டர், சங்கானையில் கல்யாணம் செய்தார். இவர்களது மூத்த மகன், சினிமா ஆசை காரணமாக இந்தியாவுக்கு ஓடி னான். அங்கு கதை வசனம் எழுதி, டைரக்டராகிப் பின்பு தயாரிப்பாளராகவே உயர்ந்து விட்டான். அங்குள்ள நடிகை ஒருவரையும் திருமணம் செய்துகொண்டார்.
அந்தத் தயாரிப்பாளரின் பெயர் வி.சி. குகநாதன். அந்த நடிகையின் பெயர் ஜெயா. இந்த நடிகைதான் இலங்கையில் படம் நடிக்க வந்தார். இவருடன் மீரா என்ற புதுமுகம், பத்மபூரீ எஸ்.வி. சுப்பையாவும் இலங்கைக்கு வந்தார்கள்.

Page 121
224 தம்பிஐயா தேவதாஸ்
மலையக இளைஞன் ஒருவனுக்கு சினிமா மீது தணி யாத காதல். அதனால், 1955இல் இந்தியாவுக்கு ஓடி னான். தான் எழுதி வைத்திருந்த கதையைக் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனிடம் காட்டினான். கலைவாணரோ, தன் வீட்டு அலுமாரியில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த கதைகளைச் சுட்டிக்காட்டி ‘இவைகளை வைத்திருக்கவே இடம் போதவில்லை. இவற்றுக்கிடையில் உமது கதையை எங்கே வைப்பேன்? என்று திருப்பிக் கேட்டார்.
ஆனாலும், இளைஞனின் புத்திபூர்வமான உரை யாடலில் மயங்கிய கலைவாணர் அதை வாசித்துப் பார்த் தார். கதை பிடித்துவிடவே கலைவாணர் அதை மேடை நாடகமாகவே போட்டுவிட்டார். அந்தக் கதையின் பெயர் தான் ‘மாமியார் வீடு. அந்த இளைஞனின் பெயர்தான் கே.வெங்கடாசலம்.
இந்த வெங்கடாசலம் சென்னையில் டைரக்டர் ஏ.எஸ். நாகராஜனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து கொண்டார். அவரின் சிபாரிசுக் கடிதத்துடன் இலங்கைக்கு வந்த வெங்கடாசலம் நாயகத்தின் ஸ்ரூடியோவில் உதவி இயக்குநராகச் சேர்ந்துகொண்டார்.
1966இல் 'மஹறேஹமுவூஸ்திரிய' என்ற சிங்களப் படத்தைத் தனியே இயக்கினார். பின்பு சிங்களத் திரை உலகில் புகழ்பெற்ற இயக்குநராக உயர்ந்தார். தனது பெயரை 'கே.வெண்கட் என்று சுருக்கிக் கொண்டார்.
இந்த வெண்கட்டிற்கு நீண்ட நாட்களாகவே இலங்கை யில் தமிழ்ப் படமொன்றை இயக்கவேண்டும் என்று ஆசை. அந்த ஆசைக்கு வழிசமைத்துக் கொடுத்தார்கள் எம்.பி.எம். ரமீஸ், எம்.பி.எம்.ஸமீர் என்ற சகோதரர் கள். ‘மாமியார் வீடு' என்ற பெயரில் ஏற்கனவே என்.எஸ். கிருஷ்ணனிடம் கொடுத்த கதையைத் திரைக்கு ஏற்றவாறு வசனம் எழுதி வைத்திருந்தார் வெண்கட்.

மாமியார் வீடு 225
இந்தப் படத்தில் இந்திய நடிகர்களையும் இலங்கை நடிகர் களையும் ஒப்பந்தம் செய்யலாம் என்று வெண்கட்டும் தயாரிப்பாளர்களும் தீர்மானித்துக் கொண்டார்கள்.
ழாமியார் வீடு' திரைப்படத்தில் இந்திய ಙ್ಗಣತ್ ஜெயா குகநாதனும், இலங்கை நடிகர் எம்.உதயகுமாரும். (1979)

Page 122
226 தம்பிஐயா தேவதாஸ்
யாழ்ப்பாணம் மாதகல்லைச் சேர்ந்த சிவகுமாரன் என்ற இளைஞன் நல்ல முகவெட்டு உடையவர். இவரைத் தன் நாடகங்களில் நடிக்க வைத்தார் எம். உதயகுமார். வெண்கட் கதாநாயகன் ஒருவரைத் தேடியபோது அவரிடம் சிவகுமாரனை அறிமுகப்படுத்தினார் உதயகுமார். வெண்கட் இவரையே கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார்.
இவர்களுடன் எம்.உதயகுமார், எஸ்.ராம்தாஸ், எஸ்.என்.நடராஜா, எஸ்.செல்வசேகரன், இரா.பத்ம நாதன், வீ.சண்முகராஜா, முத்துலிங்கம், என்.மெண்டிஸ், சாந்திலேகா, பி.எஸ்.பெரேரா போன்ற நடிகர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
திரைக்கதை வசனம், ஆகிய பொறுப்புகளை கே.வெண்கட் ஏற்றுக்கொண்டார். ஒளிப்பதிவை ஜே.யோகராஜா கவனித்தார். படத்தொகுப்பு லோகநாத்.
ஈழத்து இரத்தினம், சண்முகலிங்கன், வெண்கட் ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு எம்.கே. றொக்சாமி இசை அமைத்தார். வீ.முத்தழகு, ஜோசப் ராஜேந்திரன், நூர்ஜான், சண்முகலிங்கன், கலாவதி, திருமதி றொக்சாமி ஆகியோர் பாடினர். ஒலிப்பதிவை மேவின் பெயின்ஸ், சுப்பிரமணியம் ஆகியோர் கவனித்தனர்.
நடனம் றொனால் பெனான்டோ. ஒப்பனை-சுப்பு. படம் எஸ். பி.எம். ஸ்ரூடியோவில் வேகமாக வளர்ந்தது.
ஷோலே என்ட ரெய்மன்ஸ் ‘மாமியார் வீடு' 25.08.1979இல் திரையிடப்பட்டது. குடிப்பழக்கத்தி னால் குட்டிச்சுவராகும் ஒரு குடும்பத்தின் கதையே திரைப் u-b.
‘மித்திரன்’ வாரமலரில் (16.09.79) வழமையைப் போல் 'லக்சுமி விமர்சனம் எழுதினார்.

மாமியார் வீடு 227
..'பைலட் பிறேம்நாத் கூட்டுத் தயாரிப்பைத்
தொடர்ந்து பரபரப்பில் உருவான படங்களில் ஒன்றுதான்
‘மாமியார் வீடு. எனவே, தமிழக நட்சத்திரங்களின்
கவர்ச்சி ‘மாமியார் வீட்டில் மேலோங்கி நிற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதே.
.குடியினால் விளையும் கேடுகளை ஒரளவு புலப் படுத்த முனையும் ‘மாமியார் வீடு' கதையில் ஒன்றும் புதுமையில்லை. ஆனாலும், நடிகர்கள் தமது நடிப்பினால் கதையைக் காப்பாற்றியிருக்கிறார்கள். எஸ். வி.சுப்பை யாவுக்குக் குடிகார அண்ணன் பாத்திரம். கச்சிதமாக நடித்திருக்கிறார். இவருக்கு இணையாக எஸ். ராம்தாஸ் நடித்திருக்கிறார். இடைக்கிடை சிரிக்கவும் வைக்கிறார். சுப்பையாவின் தங்கையாகத் தோன்றும் ஜெயாவும் தனது பாத்திரத்தை நன்றாகச் செய்திருக்கிறார்.
மீராவுக்குக் கவர்ச்சி வேடம் . இடையிலே வந்து போகும் அவருக்கு நடிக்கச், சந்தர்ப்பமில்லை.
இப்படத்தின் மூலம் தமிழ்ப் படத்துறைக்கு ஒரு நல்ல கதாநாயகன் கிடைத்திருக்கிறார். அவர்தான் சிவகுமாரன். நல்ல முகவெட்டும், எடுப்பான தோற்றமும் கொண்ட அவர், சுப்பையாவின் தம்பியாக நடிக்கிறார். ரசிகர் களைக் கவரும் விதத்தில் நடிக்கும் அவர், சண்டைக் காட்சியில் சோபிக்கிறார். உதயகுமாரும் தனது நடிப்பில் சோடை போகவில்லை. செல்வசேகரன் சில காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார்.
...றொக்சாமியின் இசை அமைப்பில் 'இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன்' என்று ஜோசப் ராஜேந்திரன் பாடும் பாடல் இனிமையாக இருக்கிறது. 'பூத்திருக்குது என்ற பாடலைக் கலாவதி சின்னச்சாமி பாடியிருக்கிறார். தாலாட்டுப் பாடல் ஏனோ எடுபடவில்லை.

Page 123
228 தம்பிஐயா தேவதாஸ்
இதுவரை இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் இது சற்று மாறுபட்டதாக இருக்கிறது. தமிழ கத்துப் படங்களைப் பார்த்து ரசித்துப் பழகிப்போன நம் நாட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப டைரக்டர் கே.வெண்கட் ‘மாமியார் வீட்டை உருவாக்கியிருக்கிறார், என்று அந்த விமர்சனம் அமைந்திருந்தது.
மாமியார் வீடு' திரைப்படத்துக்கான பாடல் ஒலிப்பதிவின்போது பமைப்பாளர் எம்.றெர்க்சாமி, பாடகர் ஜோசப் ராஜேந்திரன், ப்ாடகி நூர்ஜகான் ஆகியோர். (1979)
நான் எழுதிய விமர்சனமும் தினகரனில் (11.09.1979) வெளிவந்திருந்தது.
 
 
 
 

மாமியார் வீடு 229
'.இயக்குநர் வெண்கட் நமது ரசிகர்களின் சுவை யைப் புரிந்து கொண்டு அவர்களை வெல்லுவதற்காக 3 தென்னிந்திய நட்சத்திரங்களை ஏவிவிட்டிருக்கிறார். அவர்கள் பெயர்பெற்ற இந்திய நட்சத்திரங்களாக விளங் கியபொழுதும் அவர்களுக்குள்ளேயே இந்த இயக்குநர் அமிழ்ந்துவிடவில்லை. நம்நாட்டு சிவகுமாரனே படம் முழுவதும் நிறைந்திருக்கிறார்.
கதை வசனத்தை வெண்கட்டே எழுதியிருக்கிறார். இலங்கை ரசிகர்களின் மனோ நிலையையும் பழக்கத்தை யும் மனதில் கொண்டு கதை இலகுவாக்கப்பட்டிருக்கிறது. வசனங்கள் சில தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நடிகர் எம்.உதயகுமார் கண்டெடுத்த சிவகுமாரன்’ என்ற வைரத்தை வெண்கட் நன்றாகப் பட்டை தீட்டியிருக்கிறாள். அந்த அளவுக்கு அவர் நடிப்பில் பிரகாசிக்கிறார்.
எஸ்.வி.சுப்பையா தனது பாத்திரத்தை உணர்ந்து திற மாக நடிக்கிறார். அவரைத் தென்னிந்தியப் படங்களில் அப்பாவாகப் பார்த்த நாங்கள் இப்படத்தில் இளைஞ ராகப் பார்க்கிறோம். இலங்கையின் நடிகைகள் பஞ்சத் தைத் தென்னிந்திய ஜெயாவும் மீராவும் ஈடுசெய்கிறார்கள். ராம்தாஸ் ஒரே நேரத்திலேயே ஹாஸியப் பாத்திரத்தையும் வில்லன் பாத்திரத்தையும் ஏற்றிருக்கிறார். ஆனால், எமது மனதில் நிற்பது நகைச்சுவைப் பாத்திரம்தான்.
இது எம்.உதயகுமார் நடித்திருக்கும் மூன்றாவது தமிழ்ப் படமாகும். அந்த வகையில் முன்னைய படங் களைவிட, இதில் திறம்பட அமைதியாக நடித்திருக்கிறார். செல்வசேகரனுக்கு அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும் தோன்றும் காட்சிகளிலெல்லாம் ரசிகர்களைச் சிரிக்க வைக்கிறார். சிங்கள நடிகை சாந்திலேகா அசல் தமிழ்ப் பெண்போல் நன்றாக நடித்திருக்கிறார். இரா.பத்மநாதன் இடைக்கிடை வந்து போகிறார்.

Page 124
230 தம்பிஐயா தேவதாஸ்
படத்தின் அடுத்த வெற்றி ஜே.யோகராஜாவின் அருமையான படிப்பிடிப்பாகும். ட்றெயின் பிரயாணக் காட்சியொன்றே நல்ல உதாரணமாகும். வயல்கள், குடிசைகள், மாடிகள் போன்றவற்றை ட்றெயினில் இருந்த வாறே பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது.
వk ”ܐ
- 霸 ‘மாமியார் வீடு திரைப்படத்தில் 蠶 ஒரு காட்சி. இலங்கை நடிகர் சிவகுமாரும் இந்திய நடிகை மீராவும் தோன்றுகிறார்கள். (1979)
எம்.கே.றொக்சாமியின் இசையமைப்பில் இனிமை யான 5 பாடல்கள் உருவாகி இருக்கின்றன. வெண்கட் இயற்றிய 'இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன்' என்ற பாடலை ஜோசப் ராஜேந்திரன் இன்பமாகவும்
 
 
 
 
 

ortáluuntíř 6(6) 23.
துன்பமாகவும் பாடியிருக்கிறார். படம் முடிந்து வெளி வரும்பொழுது, இரசிகர்கள் இந்தப் பாடலை முணு முணுத்துக் கொண்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு ஜோசப் ராஜேந்திரன் தன் திறமையை வெளிக்காட்டி யிருக்கிறார்.
ஈழத்து இரத்தினம் எழுதிய 'பூத்திருக்கு காய்த்திருக்கு என்ற பாடலைக் கலாவதி பாடியிருக்கிறார். காவடிப் பாடலை சண்முகலிங்கம் இயற்றியிருக்கிறார்.
தாயும் தங்கையும் சுப்பையாவை அடிக்கும் காட்சி அருவருப்பாக இருக்கிறது. எது எப்படியோ முந்திய இலங்கைப் படங்களைப் பார்த்துவிட்டு வெளியே வரும் பொழுது ஏற்படும் ஒருவித ஏமாற்ற வேதனை, இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வரும்பொழுது ஏற்படவில்லை.
...நம்நாட்டுச் சினிமா வளர்வதற்கு நமது ரசிகப் பெருமக்களை மடக்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது. அதற் காக ஒரு சில தென்னிந்திய நடிகர்களை இறக்குமதி செய்து நடிக்க வைப்பது நல்லவழிதான். இந்த வளமான வழியை முதலில் காட்டித்தந்த இயக்குநர் வெண்கட்டுக்கும் தயாரிப்பாளர் ரமீஸ், சமீஸ் சகோதரர்களுக்கும் எமது பாராட்டுகள்’ என்று விமர்சனம் எழுதினேன்.
கே.வெண்கட் மேலும் பலவித தமிழ்ப் படங்களை உருவாக்குமுன்பே இளவயதில் காலமானார். 1983 கலவரத்தில் அவர் அநியாயமாகக் கொல்லப்பட்டார்.

Page 125
24. 'நெஞ்சுக்கு நீதி'
மூன்று நாடுகளை ஒன்றிணைத்த படம்
‘பைலட் பிறேம்நாத் படத்துக்காகப் பல தென் னிந்தியக் கலைஞர்கள் இலங்கைக்கு வந்து சென்றனர். ‘மாமியார் வீடு' திரைப்படத்துக்காக எஸ்.வி.சுப்பையா, ஜெயா, மீரா போன்றோர் வந்து போனார்கள். இப்படித் தென்னிந்தியக் கலைஞர் ஒருவர் இருவரை இறக்குமதி செய்து இலங்கைப் படத்தில் நடிக்கவைத்தால் ஓரளவு வெற்றிபெறலாம் என்ற கருத்து இங்கு பலர் உள்ளங் களில் உருவாகியது.
இப்படியான எண்ணம் இலங்கையில் உள்ள கலைத் தம்பதி ஒன்றுக்கும் உருவாகியது. இவர்கள் ஏற்கனவே இலங்கையில் ஒரு தமிழ்ப் படத்தையும் அதன்பின் ஒரு சிங்களப் படத்தையும் தயாரித்த அனுபவசாலிகள். இலங் கைத் தமிழ்ச் சினிமாவை ஆரம்பித்தவர்களின் பெயர் களில் இவர்கள் பெயர்களும் அடங்குகின்றன. அந்தக் கணவனின் பெயர் சுண்டிக்குளி சோமசேகரன்; அவரது மனைவியின் பெயர் மாலினிதேவிசோமசேகரன்.பூரீதர் தன் "வெண்ணிற ஆடை திரைப்படத்தில் இரண்டு புது முகங்

நெஞ்சுக்கு நீதி -22 دس.......................................سس
களைக் கதாநாயகர்களாக அறிமுகப்படுத்தினார். ஒருவர் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா, மற்றவர் நடிகர் பூரீகாந், புதிய அலையாக வந்த 'அவள் என்னும் திரைப் படத்தில் இவர் ஒருமாதிரியாக நடித்திருந்ததால் இவருக் குக் கவர்ச்சி வில்லன்' என்ற பெயர் கிடைத்தது. பூரீகாந் மலேசியாவுக்குப் போயிருந்த சமயம் மாலினிதேவியைச் சந்தித்தார். மாலினிதேவி தயாரிக்க இருக்கும் இலங்கைத் தமிழ்ப் படத்தில் பூரீகாந் நடிக்க ஒப்புக்கொண்டார்.
அப்பொழுதே மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தொலைக்காட்சிச்சேவை சிறந்து விளங்கியது. மலேசி யாவில் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்று விளங்கினார் ஒரு நடிகர். அவர் பெயர் சிவாஜி ராஜா. அவரும் இலங்கைப் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். இவர்களுடன் சிங்களத் திரை உலகில் சிறந்த ஜோடியாக விளங்கிய றோய் டி சில்வாவும் சுமனா வும் இப்படத்தில் நடிக்க முன்வந்தார்கள்.
இவர்கள் மட்டுமல்ல ஏ.ரகுநாதன், டீன்குமார், கே.ஏ. ஜவாஹர், எஸ்.ராம்தாஸ், எஸ்.ராஜகோபால், எம்.வீ.பாலன், கலைச்செல்வன், விஸ்வநாதராஜா, டொன் பொஸ்கோ, ஜோபுநஸிர், விஜயராஜா, தனரெத்தினம் , பரீனாலை, ஹெலன்குமாரி, சந்திரகலா, யோகா தில்லைநாதன், ராஜலக்சுமி, மானல்வானகுரு ஜெயதேவி என்று சினிமா அனுபவம் பெற்ற பெரிய பட்டாளமே நடிகர், நடிகைகளாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்,
‘இந்த நாட்டின் திறமையான கலைஞர்கள் பலரை ஒன்று சேர்த்து இப்படத்தை உருவாக்குகிறேன்' என்று சொன்னார் இயக்குநர் சுண்டிக்குளி சோமசேகரன். தயாரிப்பு இவரது மனைவி மாலினிதேவி சோமசேகரன். தயாரிப்பில் இவர்களுக்கு உதவியாக விளங்கினார் லோர்ட் எஸ்.கந்தசாமி.

Page 126
234 தம்பிஐயா தேவதாஸ்
இவர்களது முதலாவது தயாரிப்பான 'டைக்ஷி டிறைவருக்குக் கதைவசனம் எழுதிய பேராதனை ஏ. ஜுனைதீனே இப்படித்துக்கும் கதைவசனம் எழுதினார். எம்.ஏ.கபூர் ஒளிப்பதிவு செய்த ஏழாவது தமிழ்த் திரைப் படம் இது.
'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் தயாரிப்பாளர் திருமதி மாலினிே
ாம்சேகரன், கதை வசன கர்த்தா பேராதனை ஏ.ஜுனைதீன், டைரக்டர் சுண்டிக்குளி சோமசேகரன் ஆகியோர்.
 
 
 

நெஞ்சுக்கு நீதி 235
பல பாடல்களுக்கு இசை அமைத்து, பல பாடகர்களை அறிமுகப்படுத்தி, பல சிங்களப் பாடல்களின் இசைத் தட்டுகளை உருவாக்கிவந்தார், தமிழ் இளைஞர் ஒருவர். அவர் 'கலியுககாலம்' என்ற டப் படத்துக்கும் இசை அமைத்தார். பின்நாளில் நடிகர் தியாகராஜன். ஸ்வப்னா போன்ற நடிகைகளை வரவழைத்து “இளையநிலா என்ற படத்தைத் தயாரித்தார். இளையநிலாவுக்கு இவரே இசை அமைத்தார். இப்படத்துக்கு இவர் இசை அமைத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.பி.சைலஜா ஆகியோர் பாடிய பாடல்களின் இசைத்தட்டு இப்பொழுதும் இலங்கை வானொலி நிலையத்தில் இருக்கிறது.
அந்த இசை அமைப்பாளர்தான் 'சண்’ என்று அன புடன் அழைக்கப்படும் சண்முகமாவார். 'நெஞ்சுக்கு நீதி' படத்திலும் ஈழத்து ரெத்தினம், சாது ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு 'சண் இசை அமைத்தார்.
முத்தழகு, கலாவதி, நித்தி கனகரெத்தினம், சுஜாதா ஆகியோர் பாடல்களைப் பாடினர்.
இலங்கையில் தமிழ்ப்படங்கள் உருவாகுவதை இந் தியப் படங்களுடன் தொடர்புடைய பலர் பல காலமாக எதிர்த்து வந்திருக்கிறர்கள். இந்த எதிர்ப்பாளர்கள் இலங் கையிலும் இருந்தார்கள், இந்தியாவிலும் இருந்தார்கள்.
பூரீகாந் இலங்கைக்கு வந்து படம்நடிப்பது தென் னிந்தியாவிலுள்ள பிரபல நடிகர் ஒருவருக்குப் பிடிக்க வில்லையாம்.
பூரீகாந்தின் இலங்கை விஜயத்தை அந்த நடிகர் பல தடவை தடுத்துப் பார்த்தார். ஆனாலும் பூரீகாந் இலங் கைக்கு வந்துவிட்டார். வந்து நடித்துவிட்டு விரைவாக திரும்ப வேண்டியிருந்தது. அவர் போய் விட்டார். படத் தில் அவர் நடித்த பாத்திரத்துக்குக் குரல் கொடுக்க மீண் டும்வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார் மீண்டும் வரவில்லை.

Page 127
E. தம்பிஐயா தேவதானப்
பின்பு பூரீகாந்தின் பாத்திரத்துக்கு வானொலி அறி விப்பாளர் எஸ்.நடராஜசிவம் குரல் கொடுத்தார். பல சிரமங்களுக்கு மத்தியில் பல வருடங்களுக்குப் பின்பு 'நெஞ்சுக்குநீதி 04.04.1980இல் இலங்கையில் திர்ை யிடப்பட்டது.
'நெஞ்சுக்கு நீதி' படத்துக்கு இசை அமைத்த பிரபல இசை அமைப்
பாளர்" சன்'"
மூன்று குடும்பங்களைச் சுற்றி கதை நகர்கிறது. ஒரு குடும்பத்தில் வலிப்பு நோயுள்ள விஸ்வநாதராஜா
வும் அவரது தங்கை பரீனாலையும் இருக்கிறார்கள்.
மற்றது பணக்காரக் குடும்பம். ஏ.ரகுநாதன் மூத்த அண்ணன். இவருக்கு பூரீகாந் தம்பி. இவர்களுக்கு தங்கை
LITT.
மூன்றாவது குடும்பம் பெரியது. தந்தை கே.ஏ.ஜவாஹர்.
ஏழைப்பெண் பரீனாலையைப் பணக்காரப் பையன் டீன்குமார் காதலிக்கிறார். பரீனாலை தாயாகிறாள்.
 

நெஞ்சுக்கு நீதி 骂J富
விஸ்வநாதராஜா, டீன்குமாரின் குடும்பத்தோடு கடைசிவரை போராடி தனது தங்கையை டீன்குமாருக்கு மனமுடித்துக் கொடுக்கிறார்.
邑
இநஞ்சுக்கு நீதி' திரைப்படத்தில் கலைச்செல்வனும் ஏ.ரகுநாதனும் இவ்வ்ாறு தோன்றுகிறார்கள்' 19801
இதுதான் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும்.

Page 128
ዷ23 8 தம்பிஐயா தேவதாஸ்
இத்திரைப்படத்தைப் பற்றி ஏ.மதுரைவிரன் ‘தின கரனில் விமர்சனம் எழுதினார்.
நல்ல கதையைத் தந்த திரைக்கதை வசனகர்த்தா ஏ. ஜுனைதீன் பாராட்டுக்குரியவர். ஆனால், நல்ல கதையை நல்ல முறையில் படமாக்கத் தவறிவிட்டார்கள். கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறந்த முறையில் நடிகர் நடிகைகளைத் தேர்ந்தெடுத்திருப்பது குறித்து, டைரக்டர் சோமசேகரனைப் பாராட்டவேண்டும். எல்லா நடிகர் நடிகைகளும் தங்கள் பாத்திரங்களைத் திறம்படச் செய் துள்ளனர்.
இவ்வரிசையில் விஸ்வநாதராஜா, பரீனாலை, பூரீகாந், ஏ.ரகுநாதன், யோகா தில்லைநாதன், கலைச்செல்வன், டீன்குமார், ராஜகோபால், ஜவாஹர், ராம்தாஸ், ஜோபு நஸிர் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.
மலேசிய நடிகர் சிவாஜிராஜாவின் காட்சிகளை நீக்கி, தென்னிந்திய நடிகர் பூரீகாந் சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் அதிகரித்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
எம்.ஏ.கபூர் தனது ஒளிப்பதிவுப் பணியைத் திறம்படச் செய்துள்ளார்.
எஸ்.ராம்தாஸ், எம்.வீ.பாலன் தோன்றும் நகைச் சுவைக் காட்சிகளை ரசிக்கலாம். பெரேரா, லிலியன், டொன்பொஸ்கோ போன்றோரும் நகைச்சுவைக் காட்சி களில் தோன்றுகின்றனர். ஒரு பெண்ணின் இடுப்பின்மீது குரங்குபோல் தாவிக்கொண்டு கொஞ்சுவது என்ன நகைச்சுவையோ?
இப்படியான பிரமாண்டமான படைப்பை உரு வாக்கிய டைரக்டர் சுண்டிக்குளி சோமசேகரன் பாராட் டுக்குரியவரே என்று அந்த விமர்சனம் அமைந்திருந்தது.

நெஞ்சுக்கு நீதி 239
இப்படம் மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 28 நாட்களும், தென்கொழும்பில் (சபையார்) 14 நாட்களும் ஓடியது. யாழ் நகரில் (ராணி) 22 நாட்களும், வவுனி யாவில் (நியூஇந்திரா) 14 நாட்களும் ஓடியது. மட்டக்களப்பில் (ராஜேஸ்வரா) திருகோணமலையிலும் (பூரீகிருஷ்ணா) தலா 14 நாட்கள் ஓடியது.
'நெஞ்சுக்கு நீதி படப்பிடிப்பின்போது கதை வசனகர்த்தா ஏ.ஜூனை தீன் காட்சியை விளக்குகிறார். அவருடன் ஜோபு நசீர், ஒளிப்பதி வாளர் எம்.ஏ. கபூர், மானல்வானகுரு, டைரக்டர் சுண்டிக்குளி சோம சேகரன், ரீ.இராஜகோபால் ஆகியோர். (1980)

Page 129
240 தம்பிஐயா தேவதாஸ்
ஹட்டனில் (பிறின்ஸ்) 10 நாட்கள் ஓடியது.
இவற்றைவிட, மேலுமொரு திரைப்படத்தை உரு வாக்க இந்தக் கலைத் தம்பதிகள் முயன்றார்கள்.
1983 ஜூலைக் கலவரம் வந்தது. பாமன்கடையில் இருந்த இவர்களது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.
袭
ar T**్మ ಸ್ಥಿತಿ ಅ நீதி' திரைப்பட்த்தில் எம்.வி.பாலனும் எஸ்.ராம்தாசும்.
திரு.சோமசேகரன் மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்றார். திருமதி.மாலினி சோமசேகரன் யாழ்ப்பாணம் சென்றார். பின்பு இந்தியா சென்றார். இப்பொழுது திருச்சியில் இருந்துகொண்டு கலைமுயற்சியில் ஈடுபடு கிறார்.
 

25. இரத்தத்தின் இரத்தமே கொழும்பு நகரின் பிரபலமான ஹோட்டல்களில் 'பிறைட்டன் ஹோட்டலும் ஒன்று. தென்னிந்தியாவி லிருந்து இங்கு வரும் பிரபல நடிகர் நடிகையர் பெரும் பாலும் இந்த ஹோட்டலில்தான் தங்குவார்கள். அப்பொழு தெல்லாம் அந்தக் கலைஞர்களைப் பார்ப்பதற்கு ஹோட்ட லுக்கு வெளியே பல ரசிகர்கள் தவம் கிடப்பார்கள். சில
வேளைகளில் நானும் அங்கு நின்றிருக்கிறேன்.
அந்த ஹோட்டல் அப்பொழுது எஸ்.கே. அரியரெத் தினத்துக்குச் சொந்தமாக இருந்தது. ஹோட்டலில் தங்கிய நடிகர்களுடன் பழகியதில், இவருக்கும் இலங்கையில் ஒரு தமிழ்ப்படம் தயாரிக்கவேண்டும் என்ற ஆசை பிறந்து விட்டது.
அதையும் பிரமாண்டமான முறையில் தயாரிக்கவேண் டும் என்று தொடங்கிவிட்டார்.
பிரபல தென்னிந்திய சினிமா இயக்குநர் ஏ.சீ.திருலோகச் சந்தரின் கதைக்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதினார்.
‘பைலட் பிறேம்நாத் கூட்டுத் தயாரிப்பில் இணை இயக்குநராகக் கடமையாற்றியவர் ஜோதேவானந், அப்

Page 130
242 தம்பிஐயா தேவதாஸ்
படத்தில் ‘கடமைக்காக இவரது பெயர் போடப்பட்டிருந் தாலும் 'இரத்தத்தின் இரத்தமே படத்தில் முழுமையாக இயங்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
ரத்தத்தின் இரத்தமே திரைப்படத்தின் ஆரம்பவிழாவில் உதவி
இயககுநர் அன்ரன் கிரகரி, தயாரிப்பாளர் பிறைட்டன் அரிய ரத் தினம், சிவாஜி கணேசன், கீதா குமாரசிங்க, டைரக்டர் ஜோதேவா னந், பூரீதர் ஆகியோர். (1980)
பல சிங்களப் படங்களுக்கு உதவி இயக்குநராக விளங்கிய அன்ரன் கிரகரியும் பத்திரிகையாளர் ஜோ.ஜெய சீலனும் உதவி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
முக்கியமான பாத்திரங்கள் தென்னிந்தியக் கலைஞர் களுக்கு வழங்கப்பட்டன. ஜெய்சங்கர், ஜெயச்சந்திரன், ராதிகா, அசோகன், நாகேஷ் ஆகியோர் முக்கியப் பாத் திரங்களில் நடிக்க ஒப்பந்தமானார்கள்.
 

இரத்தத்தின் இரத்தமே 243
கவர்ச்சிப் பாத்திரங்களும் அடிவாங்கும் பாத்திரங் களும் சிங்கள நடிகையர் நடிகர்களுக்குக் கொடுக்கப் பட்டது.
அப்பாத்திரங்களில் கீதாகுமாரசிங்க, அனோ ஜா வீரசிங்க, பியதாச விஜயகோன், அலெக்சாண்டர் பெர் னாண்டோ போன்றோர் நடித்தனர்.
சிறுசிறு பாத்திரங்கள் உள்நாட்டுத் தமிழ்க் கலைஞர் களுக்கு வழங்கப்பட்டன.
தர்மலிங்கம், டிங்கிறி, கனகரெத்தினம், சச்சிதானந்தன், சண்முகராஜா, பூரீவிஜயதீபன், வசந்தர், ராஜலக்சுமி, நடராஜா, ஆர்.பி.கந்தையா, ராம்குமார் போன்றோர் அச்சிறுசிறு பாத்திரங்களை ஏற்றுக் கொண்டனர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரும்பாலும் இலங் கையர்களாகவே இருந்தனர். எம்.ஏ.கபூர் ஒளிப்பதிவைப் பொறுப்பேற்றார்.
எம்.கே. றொக்சாமி இசை அமைப்புக்குப் பொறுப்பு. ஈழத்து ரெத்தினம் இயற்றிய பாடல்களைப் பிரபல ஒலி பரப்பாளர் எஸ்.கே.பரராஜசிங்கம், ஜோசப் ராஜேந் திரன், ஜேசுதாஸ், சுஜாதா ஆகியோர் பாடினர்.
பிறைட்டன் பிலிம்ஸாரின் 'இரத்தத்தின் இரத்தமே திரைப்படத்தின் ஆரம்ப விழா 26.11.1979இல் ஆரம்ப மாகியது. சிவாஜி கணேசன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து கமறாவை முடுக்கி வைத்தார். கபூர் கமறாவை இயக்க ஜோதேவானந் ‘ஓகே சொன்னார்.
இந்தியக் கலைஞர்கள் இலங்கை வந்தார்கள். மூன்று மாதத்துக்குள் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்தன. படம் ஈஸ்மென்ட் கலர் என்பதால் ஹொங்கொங்குக்கு அனுப்பிக் கழுவப்பட்டது.

Page 131
244 தம்பிஐயா தேவதாஸ்
ஜெய்சங்கர் ஒரு பொலிஸ் அதிகாரி. கீதா அவரது தங்கை. ஜெயச்சந்திரன் பெண்களுக்குப் போதை மருந்து களைக் கொடுத்து அவர்களைக் கெடுப்பவன். முதலில் அனோஜாவைக் கெடுக்கிறான். பின்பு கீதாவை மயக்கிக் கெடுக்க முனைகிறான். அவளை நிர்வாணமாகப் பார்க்க வேண்டும் என்கிறான். போதை மருந்து கிடைக்கும் என்ப தால் அதை அவள் ஏற்றுக்கொள்கிறாள். அவள் நிர்வான மாக நிற்கும்பொழுது அண்ணன் ஜெய்சங்கர் கண்டு விடுகிறான்.அவமானம் தாங்கமுடியாமல் தங்கை தற் கொலை செய்கிறாள். பொலிஸ் அதிகாரி வில்லனைச் சுட்டுக் கொல்கிறார்.
எப்படி இருக்கிறது கதை? மலையாள ‘ஏ’ படம்போல் இருக்கிறதல்லவா?
கீதா நிர்வாணமாக நிற்கும் காட்சியில் அவரது பின்னழகைத் திரையில் நீண்டநேரம் காட்டினார்கள். தணிக்கை சபை சில காட்சிகளைக் கத்தரித்த பின்புகூட, படம் படுகவர்ச்சியாக இருந்தது. இந்தப்படம் 100 நாட் கள் ஓடாமல் வேறு எந்தப்படம்தான் ஒடும்?
இத்திரைப்படம் 11.04.1980இல் இலங்கையில் ஆறு நகரங்களில் திரையிடப்பட்டது. இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ஒன்று முதன் முதலில் ஒரே தியேட்டரில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது.
இப்படம், மத்திய கொழும்பில் (கிங்ஸ்லி) 105 நாட் கள் தொடர்ந்து ஓடியது. தென் கொழும்பில் (சவோய்) ஒடிய நாட்கள் 5 2 ஆகும்.
யாழ்ப்பாணத்தில் (பூரீதர்) 56 நாட்களும், வவுனி யாவில் (பூரீகிருஷ்ணா) 30 நாட்களும், சுன்னாகத்தில் (நாகம்ஸ்) 34 நாட்களும் ஓடியது
மட்டக்களப்பில் (விஜயா) 35 நாட்களும், திருகோண மலையில் (லக்சுமி) 30 நாட்களும், கல்முனையில் 20

இரத்தத்தின் இரத்தமே 245
நாட்களும், பதுளையில் (கிங்ஸ்) 28 நாட்களும் தொடர்ந்து ஒடியது.
菱
'இரத்தத்தின் இரத்தமே'திரைப்படத்தில் இந்திய நடிகர் சிவச்சந்திர னும் இலங்கை நடிகை கீதா குமாரசிங்கவும். (1980)
ஏ.எச்.சித்தீக் காரியப்பர் ஒர் இளம் பத்திரிகையாளர். அவர் இப்படத்தைப் பற்றி 'தினகரனில் விமர்சனம் எழுதினார்.
‘.’ இரத்தத்தின் இரத்தமே படத்தில் புதிய முறை யான நெறியாள்கை கையாளப்பட்டுள்ளமை சிறப்புக் குரியது. காட்சிக்குக் காட்சி மாறுபட்டு ஒலிக்கும் தனி இசை ஆங்கிலப் பாணியைக் காட்டுகிறது.

Page 132
246 தம்பிஐயா தேவதாஸ்
போதை மருந்துாட்டிப் பெண்களைத் தம் வசப்படுத்தி, அவர்களின் கற்பைச் சூறையாடுவதுடன், அவர்களைக் கொலை செய்யும் காமப்பித்தர்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பதுதான் கதை.
காமனின் போதை மருந்தை உண்டு கற்பை இழக்க நேரிடும் பெண்களில் இன் ஸ்பெக்டரின் தங்கையும் அடங்குகிறாள்.
படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாகச் செல்கிறது. இனிமையாக இசை அமைத்த பாடல்கள் புதிய வர்களால் பாடப்பட்டமை போற்றத்தக்கது. நாகேஷின் நகைச்சுவை நன்றாக அமைந்துள்ளது. அனைவரது நடிப் பும் பிரமாதம். இலங்கையின் தலைநகரிலுள்ள காட்சிகள் பலவற்றை உள்ளடக்கியது பாராட்டுக்குரியது. டைரக்டர் ஜோ.தேவானந் பாராட்டுக்குரியவர். 'பிறைட்டன் அரிய ரெத்தினம் தனது பெயர் நிலைத்து நிற்கக்கூடிய விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
இப்படித் தன் விமர்சனத்தின்மூலம் புகழ்ந்திருந்தார். அப்பொழுது சென்னையிலிருந்து "சினிமா எக்ஸ் பிறஸ்’ பத்திரிகை வந்துகொண்டிருந்தது. மற்றைய சினிமாப் பத்திரிகைகளைவிட, அளவில் பெரிதாகவும் இருந்தது. அந்தப் பத்திரிகையில் 'சிலோன் சினிமா என்ற தலையங்கத்தில் நம்நாட்டுச் சினிமாச் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். அதை ‘இலங்கை மானா’ என்ற பெயரில் நமது எம்.எம்.மக்கீன் அவர்களே எழுதி வந் தார். இப்படத்தைப் பற்றியும் எழுதினார்.
மிகக் குறுகிய காலத்தில் ஜெய்சங்கர், ராதிகா, அசோகன், நாகேஷ், ஜெயச்சந்திரன் நடித்துக் கொடுத்த இரத்தத்தின் இரத்தமே இலங்கைத் தமிழ்ப்படம் இலங் கையில் சக்கை போடு போடுகிறது. நூறுநாள் தாண்டி

இரத்தத்தின் இரத்தமே 247
விடும் என்கிறார்கள். ஜெய்சங்கர் 100வது நாள் விழா வுக்குக் கட்டாயம் இலங்கை வருவார் என்று நம்புகிறார் கள்.
இரத்தத்தின் இரத்தமே திரைப்படத்தில் தென்னிந்திய நடிகர்கள்
ஜய்சங்கரும் ராதிகாவும்.

Page 133
248 தம்பிஐயா தேவதாஸ்
இப்படத்தின் வெற்றி ரகசியம் என்னவென்று ஒரு தீவிர ரசிகரிடம் கேட்டபோது, ‘கர்ணன் ஸ்டைலில் மிகவும் புத்திசாலித்தனமான மூளையோடு செக்ஸ் வைக்கப்பட்டிருக்கிறது என்றார்.
சிவாஜியின் 'மோகனப் புன்னகை கதாநாயகி கீதா இதில் தாராளமாகக் கவர்ச்சியைக் காட்டுகிறார். சென் சார் சில காட்சிகளில் கத்தரிக்கோல் போடவும் செய்தது. இந்தப் படம் தமிழகத்தில் காட்டப்படுமானால் கீதாவுக்குத் தமிழ்ப்பட மார்க்கட் மட்டுமல்ல, தெலுங்குப் பட மார்க் கட்டும் பிய்த்துக் கொண்டு வரும் என்று எழுதினார்.
1981ஆம் ஆண்டு ஆரம்பத்தில் டெல்லியில் நடை பெற்ற திரைப்பட விழாவில் இப்படம் பார்வையாளர் களுக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ்த் திரைப்படம் எதுவும் அதுவரை இந்தியாவில் திரையிடப்படவில்லை. ஆனால், இத்திரைப் படம் இந்தியாவுக்கு நாலரைலட்சம் ரூபாவுக்கு விற்கப் பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன.
1981 நவம்பர் மாதம் இப்படம் தமிழ்நாட்டில் திரை யிடப்பட்டது. அங்குள்ள தியேட்டர்களில் ஒரு வாரம் மட்டும் ஓடியது. அங்குள்ள பத்திரிகைகள் இப்படத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தால் வருடா வருடம் நடத்தப்படும் திரைப்பட விழா 1981ஆம் ஆண்டிலும் நடைபெற்றது. இப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருந்த கீதாகுமாரசிங்கவுக்குச் சிறந்த துணைநடிகைக் கான விருது கிடைத்தது.
பிரபல ஸ்ரில் படப்பிடிப்பாளர் மைக்கல் விக்டோரியா, இப்படத்தைச் சிங்கள மொழிக்கு டப் பண்ணும் உரிமை யைப் பெற்றார். அது யுக்தியட்ட சண்டியா என்ற பெயரில் சிங்கள ஊர்களில் நன்றாக ஓடியது.

26. "அவள் ஒரு ஜீவநதி' எழுத்தாளர் தயாரித்த படம்
மலையகத்தில் பிறந்த ஓர் இளைஞனுக்குச் சிறுவயது முதலே எழுதுவதில் தனிப்பிரியம். பாடசாலைக் காலத்தி லேயே கவிதை, சிறுகதை, இலக்கியக் கட்டுரை, சமயக் கட்டுரை என்று பலவற்றை எழுதி வந்தான்; நாடகம் எழுதி அதில் நடித்தும் வந்தான்.
மாத்தளை கிறிஸ்தவ தேவாலயக் கல்லூரியில் படிக் கும்போதே இவன் எழுதி நடித்த பல மேடை நாடகங் களுக்குப் பல்வேறு பரிசுகள் கிடைத்தன.
இவன் எழுதிய முதல் நாடகம் ‘தீர்ப்பு ஆகும். முதலில் நடித்த நாடகம் ‘பலேபுரடியூஷர் என்பதாகும். பின்னாளில் கொழும்புக்கு வந்து 20க்கும் மேற்பட்ட நாடகங்களை மேடையேற்றினான் அக்காலத்தில் இலங்கை தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனம் நடத்திய திரைக் கதையாக்கப் போட்டியிலும் இவன் எழுதிய ‘சுற்றும்சுடர்' என்ற பிரதிக்கு இரண்டாவது பரிசும் கிடைத்தது.
சில நண்பர்களின் உதவியுடன் தமிழ்த் திரைப்பட மொன்றையும் தயாரித்தான். அந்த இளைஞன்தான் ‘மாத்

Page 134
25 O தம்பிஐயா தேவதாஸ்
தளை கார்த்திகேசு. அவர் தயாரித்த படத்தின் பெயர் தான் ’அவள் ஒரு ஜீவநதி,
'அவள் ஒரு ஜீவநதி திரைப்படத்தின் விளம்பர நோட்டீஸ், நடிகர் ஏகாம்பரமும், தயாரிப்பாளர் மாத்தளை கார்த்திகேசுவும் இப்படித் தோன்றுகிறார்கள். (1980)
மாத்தளைக் கார்த்திகேசுவைக் கலைத்துறைக்குக் கொண்டு வந்தவர், ஜே.பி.றொபேர்ட். கார்த்திகேசுவும் றொபேர்ட்டும் இன்னும் பல கலைஞர்களும் ஒன்று சேர்ந்து, கொழும்பில் ‘கவின் கலை மன்றம்' என்ற நாடகக் குழுவை நடத்திவந்தனர். இக்குழுமூலம் கார்த்திகேசு எழுதி, றொபேர்ட் இயக்கிய பல நாடகங்கள் மேடை
யேறின.
 

அவள் ஒரு ஜீவநதி 25 Ι
இந்த இரு கலைஞர்களும் 'அவள் ஒரு ஜீவநதி' திரைப்படத்தையும் உருவாக்க முனைந்தனர். கார்த்தி கேசுவின் திர்ைக்கதைப்படி 2 கதாநாயகர்கள் தேவை.
அவர்களில் ஒருவராக ஏற்கனவே திரைப்படங்களில் நடித்து அனுபவமுள்ள டீன்குமாரைத் தெரிவு செய்து கொண்டார்கள்.
மற்றவர் யார்? கொழும்பில் பிறந்து கொட்டாஞ் சேனை புனித பெனடிக்ற் கல்லூரியில் படித்துவந்தான் ஓர் இளைஞன். 7 வயது தொடக்கமே வானொலி நிகழ்ச்சி களில் பங்குபற்றிவந்தான். பாடகனாக வரவேண்டுமென் பதே ஆசை. ஆனால், நடிகனாகவே வர முடிந்தது. 1974ஆம் ஆண்டு இவனுக்கு வயது 20. கே.எஸ்.செல்வ ராஜாவின் இயக்கத்தில் உருவான மேடைநாடகத்தில் முக்கியப் பாத்திரத்தில் தோன்றினான். எஸ்.வி.சந்திரனின் ‘எங்களில் ஒருவன்’ திரைப்படத்தில் சிறிது நேரம் தோன்றி மறைந்தான்.
இந்த இளைஞனும் இப்படத்தில் இன்னுமொரு கதாநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டான். அந்த இளை ஞன்தான் விஜயராஜா.
இவர்களுடன் கே.எஸ்.பாலச்சந்திரன், எம்.ஏகாம் பரம், ஆர்.சிதம்பரம், கந்தையா, சீதாராமன், பூரீதர், மோகன்குமார் போன்றோர் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள். பரீனாலை, அனுஷா, சந்திரதேவி, சந்திரகலா போன்றோரும் நடிகைகளானார்கள்.
படத்தை இயக்கும் பொறுப்பை ஜே.பி.றொபேர்ட்டும், ஜோ.மைக்கலும் இணையாக ஏற்றுக்கொண்டார்கள்.
நாடக உலகிலிருந்தே ஜே.பி.றொபேர்ட் திரை உல கிற்கு வந்தவர். இலங்கை ‘கலாச்சாரப் பேரவை' நடத்திய களங்கம்' என்னும் நாடகம் இவருக்குச் சிறந்த இயக்கு

Page 135
252 தம்பிஐயா தேவதாஸ்
நருக்கான பரிசை வாங்கிக் கொடுத்தது. இவர் இப்படத் தின் இயக்குநரானார். இவருடன் இன்னுமொரு நாடக அனுபவசாலியான ஜோ.மைக்கலும் இப்ப்டத்தின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
1961ஆம் ஆண்டில் அரசாங்க இசையாசிரியராக நியமனம் பெற்றவர் எம்.எஸ்.செல்வராஜா. இவர் பல சிங்களப் படங்களுக்கு இசை அமைத்தார். 1971ஆம் ஆண்டுமுதல் இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை 'யில் மெல்லிசைப் பாடல்களுக்கு இசை அமைத்துவந்தார்.
பாடகர் வீ.முத்தழகுவின் ‘ஸப்தஸ்வரம்' என்ற ஒரே நபர் மேடை இசை நிகழ்ச்சிக்கு இசை அமைத்துப் புகழ் பெற்றார். இவ்வாறு இசை அமைப்பில் புகழ்பெற்ற இவருக்கு இப்படத்துக்கு முதன் முதலாக இசை அமைக்கும் பொறுப்பை வழங்கினார்கள்.
ஈழத்து ரெத்தினம், மெளனகுரு, கார்த்திகேசு ஆகி யோர் இயற்றிய பாடல்களை வீ.முத்தழகு, கலாவதி, சுஜாதா, எஸ்.வீ.ஆர்.கணபதிப்பிள்ளை, ஜோசப் ராஜேந் திரன், தேவகி மனோகரன் ஆகியோர் பாடினர்.
இது எழுத்தாளர் தயாரிக்கும் படமல்லவா? பலரும் நல்ல கதையை எதிர்பார்த்தார்கள்.
பலவித கஷ்டங்களின் மத்தியில் கீதாலயா மூவீஸ் அவள் ஒரு ஜீவநதி திரைப்படம் 17.10.1980இல் 6 ஊர்களில் திரையிடப்பட்டது.
மலையகத்தில் தோட்ட உரிமையாளர் ஒருவருக்கு ஒரே மகள். அவள் தன் அத்தானைக் காதலிக்கிறாள். அது ஒருதலைக் காதலாகும். ஆனால், அத்தானோ தனக்கு இரத்ததானம் செய்த ஒருத்தியை விரும்பி மணந்து கொள் கிறான். தன் அத்தானால் கைவிடப்பட்ட பெண், பழிச் சொல்லுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்ள முனை

அவள் ஒரு ஜீவநதி 25。
கிறாள். அச்சமயம் அவளைக் காமுகர்களிடமிருந்து காப் பாற்றுகிறான் எழுத்தாளன். அவளுடன் தாம்பத்திய உறவில்லாது வெறும் சதிபதியாக வாழ்கிறான் எழுத் தாளன். கடைசியில் எழுத்தாளன் கொலை செய்யப்படு கிறான். அதனால், அவள் துறவறம் பூணுகிறாள். அவள் கான் 'அவள் ஒரு ஜீவநதி’.
V. ' .
அவள் ஒரு ஜீவநதி' திரைப்படத்தில் டீன்குமாரும் பரீனாலையும் இப் படித் தோன்றுகிறார்கள். (1980)

Page 136
254 தம்பிஐயா தேவதாஸ்
எழுத்தாளர் மாத்தளை கார்த்திகேசுவின் திரைப் படத்தின் கதைச்சுருக்கம்தான் இது.
படம் திரையிடப்பட்டு பத்து நாட்களின் பின் கே. எஸ்.சிவகுமாரன் வீரகேசரியில் (26.10.1980) விமர்சனம் எழுதினார்.
‘இலங்கை நாடகத்துறையில் ஈடுபட்ட பலரும் திரை உலகிலும் தமது ஆற்றலைக் காட்ட விழைவது இயல்பே. 'அவள் ஒரு ஜீவநதி ரசிகர்கள் பார்த்து மகிழக்கூடிய படம். அனாவசியமான விளக்கங்களும் காட்சி நீட்டல் களும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. நடிப்பில் மேடைத் தன்மை குறைந்திருக்கிறது.
டீன்குமார், விஜயராஜா, கே.எஸ்.பாலச்சந்திரன், திருச்செந்தூரன் ஆகியோரின் நடிப்புமுறை சினிமாவுக்கு ஏற்றதாக இருக்கிறது. டீன்குமாருடைய ஸ்ரைல் அலட்சிய மாகத் தோற்றம் கொடுக்கும் அதேவேளையில், நிதானத் துடன் இயங்குவதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். சாடை யாக சிவாஜி பாணி தென்பட்டாலும் இவர் பிரக்ஞை யாகவே சுயபாணியில் நடிக்க முற்படுவது வரவேற்கத் தக்கது.
விஜயராஜாவும் தனது ஆற்றலை நன்றாக வெளிப் படுத்துகிறார். பாத்திர அமைப்புக் காரணமாகச் சிறிது எச்சரிக்கையுடன் நடிக்க முற்படுகிறார்.
'வாடைக்காற்று' படத்தில் கே.எஸ்.டாலச்சந்திரனின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இவரது ஆற்றல், நாடகத் திலும் பார்க்க சினிமாவிலேயே நன்றாக வெளிப்படு கிறது. அவர் இப்படத்தில் தனித்துவமான பாணியில் நடிக்கிறார்.
திருச்செந்தூரன் கிறிஸ்தவ பாதிரியாராக ஒரிரு காட்சிகளில் வந்து போகிறார். அவருடைய பாத்திரமும் பண்பான பயிற்சியும் பரவசப்படுத்துகின்றது.

அவள் ஒரு ஜீவநதி 255
கார்த்திகேசு, ஏகாம்பரம், சிதம்பரம், பரீனாலை, அனுஷா போன்றோரும் தமது திறமைகளைக் காட்டு கின்றனர். பரீனாலை தன் எல்லைக் கட்டுக்குள் நின்று தன்னாலியன்ற அளவு ஒத்துழைக்கிறார். பாத்திரத்தின் தன்மையை அவர் கொண்டுவருகிறார். அனுஷாவும் ரசிக் கும்படி நடிக்கிறார்.
麴 ܐܣܛܪ”
*王 ை عند அவள் ஒரு ஜீவநதி திரைப்படத்தில் தமிழ் நடிகர் விஜயராஜாவும் சிங்கள நீடிக்ை அனுஷாவும். (1980) -

Page 137
256 தம்பிஐயா தேவதாஸ்
ஆக படத்தொகுப்பு, நடிப்பு இரண்டிலும் சிறப் பாகவும், நெறியாள்கை, படப்பிடிப்பு ஆகியவற்றில் புறபஷனலாகவும், இசை அமைப்பில் லலிதமாகவும், பாடல்களில் இனிமையாகவும் இணைந்த இப்படம் வளர்ச்சியைத்தான் காட்டுகிறது.
மாத்தளை கார்த்திகேசுவின் படக்கதை முடிவும், 'ஜீவநதி’ என்ற பெயரைக் கதாநாயகி பெறப் பொருத்த மானவரா? என்ற ஐயமும் ஏற்படுகிறது.
இக்கதையில் முக்கியப் பாத்திரம் எழுத்தாளனின் மனைவியல்ல; எழுத்தாளனின் காதலியான நேர்ஸ்தான். அவளைச் சுற்றித்தான் ஏனைய பாத்திரங்கள் இயங்கு கின்றன. அவரே இரத்த தானம் செய்கிறார். அவளுக்கே பல இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. அவள்தான் உண்மை யான ஒரு ஜீவநதி. ஆனால், கார்த்திகேசுவின் கதைப் படியும், றொபேர்ட்டின் நெறியாள்கையின்படியும் முதலாளி யின் மகள் பரீனாலையே கதாநாயகி.
படத்தில் கவர்ச்சி, கராட்டே, ஆபாச நடனம், தழுவல், அணைத்தல், முத்தமிடல் போன்ற பாவனைக் காட்சிகள் எல்லாம் வருகின்றன.
இவை பொழுதுபோக்கு ரசிகர்ளுக்கு உரியவை. ஆனாலும், அவை படத்தின் கட்டுக்கோப்புக்குக் குந்தக மாக இருக்கின்றன.
நாம் தென்னிந்திய சினிமாவுடன் வர்த்தகரீதியில் போட்டிபோட முடியாது. இந்நிலையில் நமது திரைப்பட முயற்சிகளுக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், இலக்கியத்தில் நமது தனித்தன்மை காட்டமுடிந்ததுபோல், சினிமாவிலும் அந்நிலையைப் பெறச் சந்தர்ப்பம் ஏற்படாமல் போய் விடுமல்லவா? எனவேதான், வளரும் கலைகளுக்கு ‘டபிங் ஸ்ராண்டர்ஸ்' என்ற மாதிரி விமர்சனம் செய்யவேண்டி யிருக்கிறது என்று எழுதி முடித்தார். உண்மைதான்.

அவள் ஒரு ஜீவநதி 257
விமர்சனம் எழுதாமல் விளம்பரமே பல விமர்சகர்கள்
எழுதினர். s
இப்படத்தைப்பற்றி நானும் விமர்சனம் எழுதினேன்.
அது தினகரனில் (25.10.80) வெளிவந்தது.
மாத்தளை கார்த்திகேசு தனது எழுத்தாற்றலைச் சினிமா உலகம் நோக்கியும் திருப்பியிருக்கிறார். இவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்று பலர் எதிர்பார்த்தனர். சிறந்த முறையில் ஆரம்பமான கதை, சினிமா சமாசாரத்துக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டபோது, கார்த்திகேசுவின் தனித்துவத்தைக் காணமுடியாமல் போய் விட்டது.
கதாநாயகன் டீன்குமார் தன் காட்சியில் திறம்பட நடிக்கிறார். இப்படத்தில்தான் இவருக்கு நடிக்க அதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது. தான் கமறாவுக்குப் புதியவனல்ல என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக் கிறார். நாட்டுப்பாடல் காட்சியொன்றே அவரது நடிப் பாற்றலுக்கு நல்ல உதாரணமாகும்.
இளம் கதாநாயகன் விஜயராஜா நாடக உலகத்தி லிருந்து, திரை உலகத்திற்கு வந்திருக்கிறார். ‘எங்களில் ஒருவன்', 'நெஞ்சுக்கு நீதி’ போன்ற படங்களில் அவர் தலைகாட்டினாலும் இப்படத்தில்தான் தன் திறமையைக் காட்ட சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. காதல் காட்சிகளில் நன்கு ஜொலிக்கிறார்.
கே.எஸ்.பாலச்சந்திரன் தென்னக நடிகர் ஒருவரை ஞாபகப்படுத்தினாலும் தன் முத்திரையையும் பதிக்கிறார். பரீனாலையும் அனுஷாவும் பரவாயில்லை. கார்த்திகேசு பல இடங்களில் நன்றாக நடித்திருந்தாலும் சில இடங் களில் நாடகபாணி தென்படுகிறது. எம்.ஏகாம்பரமும் சில காட்சிகளில் தோன்றினாலும் தன் பாத்திரத்தைத் திறம் படச் செய்கிறார். ஆர்.சிதம்பரம் தானும் தென்னக

Page 138
፰5 $ தம்பிஐயா தேவதாஸ்
வில்லன்களுக்குச் சளைத்தவரில்லை என்பதை நிரூபிக் கிறார். திருச்செந்தூரன் பாதிரியாராக அமைதியாக நடிக் கிறார். என்று விமர்சனம் எழுதினேன்.
அவள் ஒரு ஜீவநதி' § பாடல் ஒலிப்பதிவு நடைபெறுகிறது.
இசை அண்ம்ப்ப்ாள்ர் எஸ்.செ
ல்வராஜா, பாடகி சுஜர்தா அத்தநாயக்கா, ப்ாடகர் வீ.முத்தழகு ஆகியோர்
'அவள் ஒரு ஜீவநதி மத்திய கொழும்வில் (செல்ல மஹால்) 22 நாட்களும், தென்கொழும்புவில் (ஈரோஸ்) 13 நாட்களும் ஓடியது. யாழ்ப்பாணத்தில் (வின்ஸர்) 14 நாட்களும் மட்டக்க்ளப்பிலும் (றிகல்), திருகோணமலை
 
 

அவள் ஒரு ஜீவநதி 岛战岛
யிலும் (சரஸ்வதி) தலா 8 நாட்கள் ஓடியது. தயாரிப் பாளர் கார்த்திகேசுவின் சொந்த ஊரான மாத்தளையில் இப்படம் அதிக நாட்கள் ஓடவில்லை.
படம் திரையிடப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப்பின் இத்திரைப்படம் (18.09.1984) ரூபவாஹினியில் ஒளி பரப்பப்பட்டது. அப்பொழுது ‘சிந்தாமணி'யில் 'சஞ்சயன்' விமர்சனம் எழுதினார்.
'ரசிகர்களின் மனதில் என்றென்றும் ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஊற்றுத்தன்மையை உள்ளத்திலும் ஏற்படுத்தும் தன்மை 'அவள் ஒரு ஜீவநதி படத்தில் இல்லை.
கணவனை இழந்து விதவையாகி வெண்ணிறஆடை யுடன் வீட்டைவிட்டு வெளியேறும் பெண்னை "ஜீவநதி' என்று, ஒரு நதியையும் காட்டி படத்தலைப்பிலும் ஒரு பாடலைப் புகுத்தி படத்தை முடித்துவிட்டால் மட்டும் போதுமா?
ஜீவன் இல்லாத பாத்திரப் படைப்புகளால் ஜீவ நதியில் உணர்ச்சிப் பிரவாகத்தைக் காணமுடியவில்லை.
நாடகபாணி நடிப்பிலும் ஒரு திரைப்படம் தயாரிக்க முடியுமென்றால் அது நிச்சயமாக "அவள் ஒரு ஜீவநதி' யாகத்தான் இருக்க முடியும்' என்று அந்த விமர்சனம் முடிகிறது.
மாத்தளை கார்த்திகேசுவுக்கு நாடகமூலம் கிடைத்த நல்ல பெயர் இப்படத்தின் மூலம் கிடைக்கவில்லை. ஆனாலும், சினிமா பற்றிய பல படிப்பினைமிக்க அனு பவங்கள் அவருக்குக் கிடைத்துவிட்டன.

Page 139
27. 'நாடு போற்ற வாழ்க’ வீ.பி.கணேசனின் மூன்றாவது படம்
செலவைக் குறைப்பதற்காக ஒரே நேரத்தில் இரண்டு மொழிப் படங்களைத் தயாரிக்கும் முயற்சியை ஆரம்பித்து வைத்தவர் யசபாலித நாணயக்கார.
இதே முயற்சியைப் பின்னாளில் வீ.பி.கணேசனுடனும் சேர்ந்து செய்தார்.
இவர்கள் இருவரும் உருவாக்கிய சிங்களப் படத்தின்
பெயர் 'அஞ்சனா”, அதன் தமிழ் ‘றிமேக்'தான் நாடு போற்ற வாழ்க.
இரண்டு படங்களிலும் ஒரே கதை. ஒரே தொழில் நுட்பக் கலைஞர்கள். ஆனால், நடிகர்கள் மட்டுமே வித்தி யாசமானவர்கள். சிங்களப் படத்தின் கதாநாயகன் விஜய குமாரணதுங்க. தமிழ்ப் படத்தின் கதாநாயகன் வீ.பி.கணேசன். ஆனால், இரண்டு மொழிப் படங்களிலும் கதாநாயகிகள் கீதா குமாரசிங்க, ஸ்வர்ணா மல்லவராச்சி ஆகிய இருவரு
TGJT. V

நாடு போற்ற வாழ்க 26 Ι
இவர்களுடன் கே.எஸ்.பாலச்சந்திரன், எஸ்.ராம்தாஸ், எம்.ஏகாம்பரம், லத்தீப், செல்வசேகரன், டொன்பொஸ்கோ, சிதம்பரம், மணிமேகலை, ரஞ்சனி போன்றோரும் நடித் தனர்.
நாடு போற்ற திரைப்படத்தில் வி.பி.கணேசனும் சுவர்ணா மல்லவராச்சியும். (1981)
யசபாலித்த படத்தை இயக்கினார். கதைவசனமும் உதவி நெறியாள்கையும் எஸ்.என்.தனரெத்தினம். ஒளிப் பதிவு ஜே.ஜே.யோகராஜா.
ஈழத்து ரெத்தினம் இயற்றிய பாடல்களுக்கு சரத் தசனாயக்க இசை அமைத்தார். முத்தழகு, கலாவதி, சுஜாதா, சந்திரிகா, பாலச்சந்திரன் ஆகியோர் பின்னணி ust qGSTT.

Page 140
፵ Š ፰ தம்பிஐயா தேவதாஸ்
படப்பிடிப்பு 1980ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகியது. பாடல் ஒலிப்பதிவுகள் சரசவிய ஸ்ரூடியோவில் நடைபெற்றன. படப்பிடிப்பு கள் கொழும்பு மலையகம் என்று பல இடங்களில் நடை பெற்றன.
பலத்த விளம்பரத்தின் பின் 31.07.1981இல் 6 நகரங்களில் கனேஷ் பிலிம்ஸ், "நாடு போற்ற வாழ்க திரையிடப்பட்டது.
கண்ணன் (கணேஷ்) என்ற ஏழை இளைஞனும் மரிக் காரும் (ராம்தாஸ்) நண்பர்கள். செல்வந்தர் ஒருவருக்கு (லத்தீப்) செய்த உதவியால் நண்பர்கள் இருவருக்கும் எஸ் ரேட்டில் வேலை கிடைக்கிறது. செல்வந்தரின் மகள் சரோஜா (சுவர்ணா) எஸ்டேட் சுப்பிறிண்டன் விஸ்வநாத் துடன் (பாலச்சந்திரன்) நெருங்கிப் பழகும் அதே வேளை யில் கண்ணன்மீதும் அன்பு செலுத்துகிறார். கண்ணனோ இன்னுமொரு செல்வந்தரின் (ஏகாம்பரம்) மகளான வனிதாவை (கீதா) உண்மையாகக் காதலிக்கிறார். விஸ்வ நாத்தின் தொடர்பால் சரோஜா தாயாகிறார். பழி கண்ணன் மீது விழுகிறது.
கடைசியில் மோதல் வருகிறது. பின்பு விஸ்வநாத் ஒப்புக் கொள்கிறார். இறுதியாக இரண்டு ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெறுகிறது.
இதுதான் 'நாடு போற்ற வாழ்க திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும்.
அப்பொழுது இத்திரைப்படத்தைப் பற்றிப் பலர் விமர்சனம் எழுதினார்கள். நானும் விமர்சனம் எழுதி னேன். அது தினகரனில் (11.08.1981) வெளிவந்தது.
1975 வரை பெரிதும் தேக்கமுற்றிருந்த இலங்கைத் தமிழ்ச் சினிமாவைப் "புதியகாற்று மூலம் வேகம் கொள்ளச்

நாடு போற்ற வாழ்க 3.
செய்தவர் வீ.பி.கணேசன், 'புதியகாற்று', 'நான் உங்கள் தோழன்' படங்கள் மூலம் பல மேடை நடிகர்களைத் திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவரும் அவரே.
ಟ್ಗBuಶಿಖ வாழ்க திரைப்படத்தில் கீதாவும் வீ.பி.கணேசனும்,
சிங்களத் திரை உலகில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்து நெறியாண்டவர் யசபாலித்த நாணயக்கார.
இவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய படம்தான் 'நாடு போற்ற வாழ்க
"புதியகாற்று மூலம் தோட்டத் தொழிலாளர் பிரச் சினைகள் காட்டப்பட்டன. "நான் உங்கள் தோழன்'

Page 141
喜的叠 தம்பிஐயா தேவதாஸ்
மூலம் உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்டங்கள் காட்டப்பட்டன. ஆனால், 'நாடு போற்ற வாழ்க திரைப் படத்தில் அப்படியான பிரச்சினைகள் முன்வைக்கப்பட வில்லை. அது ஜனரஞ்சகப் படைப்பாக விளங்கியது. தோட்டப் பின்னணியில் கதை நிகழ்கின்றபொழுதிலும் தோட்டத்தில் வாழும் மேல் வர்க்கத்தினரின் பாலியல் சிக்கல்களையே கதை கூறியது.
'நாடு போற்ற வாழ்க திரைப்படத்தின் விளம்பர நோட்டிஸ்,
நடிகர்கள் எல்லோருமே ஏற்கனவே சினிமா அனு பவம் உள்ளவர்கள். முன்னைய படங்களைவிட, இப் படத்தில் கனேஷ் பாத்திரத்தை உணர்ந்து நடிக்கிறார்.
 

நாடு போற்ற வாழ்க &临占
இப்படத்தில் வில்லனாகத் தோன்றும் பாலச்சந்திரன் திறம்படச் செய்கிறார்.
தமிழ் நடிகைகள் பஞ்சத்திற்கு இப்படம் நல்லதொரு உதாரணமாகும். கீதாவின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. சுவர்ணாவும் நன்றாக நடிக்கிறார். தந்தைகளாகத் தோன் றும் ஏகாம்பரமும் லத்தீப்பும் வரும் காட்சிகள் எல்லாம் பாராட்டும்படி இருக்கின்றன. இவர்களுடன் மணிமேகலை, செல்வசேகரன், டொன்பொஸ்கோ, ரஞ்சனி போன் றோரும் தோன்றுகிறார்கள்.
நான்கு பாடல்களையும் ஈழத்து ரெத்தினம் எழுதி யிருந்தார். சரத் தசநாயக்க இசை அமைத்த மூன்றாவது தமிழ்ப்படம் இது.
மலையகத்தின் வனப்புமிக்க காட்சிகளை அருமை யாகப் படமாக்கியிருக்கிறார் ஜே.ஜே.யோகராஜா." என்று நீண்டதாக விமர்சனம் எழுதியிருந்தேன்.
கணேஷின் மற்றப் படங்களைப்போல் இப்படம் அதிக நாட்கள் ஓடவில்லை. மத்திய கொழும்பில் (கெயிட்டி) நான்கு வாரங்களும், தென்கொழும்பில் (பிளாசா) ஒரு வாரமும் ஓடியது.
யாழ்ப்பாணம் (சாந்தி), மட்டக்களப்பு (சுபராஜ்), திருகோணமலை (பூரீகிருஷ்னா), வவுனியா (நியூ இந்திரா) ஆகிய இடங்களில் தலா இரண்டு வாரங்கள் ஓடியது.
1989 ஆம் ஆண்டில் ஜே.வி.பி.பிரச்சினையால், இந்தியப் பொருட்கள் இலங்கையில் பாவிக்கக்கூடாது என்ற ஒரு நிலை உருவானது. அதனால், இந்தியப் படங் களும் திரையிடப்படாமல் தடை ஏற்பட்டது. அதனால், ஏற்கனவே திரையிடப்பட்ட இலங்கைத் தமிழ்த் திரைப் படங்களை மீண்டும் திரையிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற் பட்டது. அதன்படி 30.06.1989 நாடு போற்ற வாழ்க’

Page 142
266 தம்பிஐயா தேவதாஸ்
மீண்டும் கொழும்பில் மட்டும் (செல்லமஹால்) திரை யிடப்பட்டது. பழைய படமாகையால் அறுந்து விழுந் தோடிய இப்படம் ரசிகர்களின் பொறுமையைச் சோதித்தது. அப்போதும் இப்படம் ஐந்து நாட்கள் ஓடியது.
錢 錢
நாடு போற்ற வாழ்க திரைப்படத்தில் லத்தீப், சுவர்ணா, வி.பி.கணேசன், கே.எஸ்.பாலச்சந்திரன், கீதாகுமாரசிங்க ஆகியோர். (1981)
அதற்கு முன் ரூபவாஹினியிலும் காட்டப்பட்டது. எது எப்படியோ இலங்கைத் தமிழ்த்திரைப்பட வரலாற்றில் தொடர்ந்து மூன்று படங்களைத் தயாரித்த பெருமை வீ.பி.கணேசனையே சாருகிறது.
 
 
 

28. 'பாதை மாறிய பருவங்கள்
‘தெய்வேந்திரா" என்ற இளைஞர் சிங்களத்திரை உலகில் பிரபலமான ஒளிப்பதிவாளர். வெளிநாட்டிலும் ஒளிப்பதிவுத் துறையில் பயிற்சி பெற்றவர். பல சிங் களப் படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவாளர். “வெண் சங்கு', 'காத்திருப்பேன் உனக்காக ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவாளர் இவரே.
இளைஞர் சிறீஸ்கந்தராஜாவின் தந்தை நாதன் அவர்கள் நல்ல செல்வந்தர். அவருக்குத் தென்னிந்திய சினிமாக் கலை ஞர்களுடன் நெருங்கிய தொடர்பிருந்தது. இவருக்கும் இலங்கையில் தமிழ்ப்படம் தயாரிக்க வேண்டுமென்பது ஆசை.
தெய்வேந்திராவும் சிறீஸ்கந்தராஜாவின் தந்தையும் சந்தித்துக் கொண்டார்கள். பிரதான பாத்திரங்களில் தென்னிந்தியக் கலைஞர்களையும் உபபாத்திரங்களில் இலங்கைக் கலைஞர்களையும் நடிக்கவைத்து ஒரு வர்ணப் படத்தை இலங்கையிலேயே உருவாக்குவோம் என்று இருவரும் தீர்மானித்துக் கொண்டார்கள்.
டைரக்டர் தெய்வேந்திராவுக்கு வானொலிக்காரர் இரா.பத்மநாதன் நண்பர். தனது படத்துக்கான கதையை

Page 143
268 தம்பிஐயா தேவதாஸ்
எழுதித் தரும்படி டைரக்டர் இரா. பத்மநாதனிடம் கேட் டார்.
பாதை மாறிய பருவங்கள்’ திரைப்படத்தில் கவர்ச்சி நடனமாடிய தென்னிந்திய நடிகை மாயா. (1992)
வானொலிக்காரர்கள் இரா.பத்மநாதன், கே.கந்தசாமி, கவிஞர் ஈழத்து ரெத்தினம் ஆகியோர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு திரைக் கதை எழுதினார்கள். அவர்களது கதையில் உரையாடல் கள் மட்டக்களப்புத் தமிழில் எழுதப்பட்டிருந்தது. அதைப் பொதுவான தமிழுக்கு மாற்றி எழுதவேண்டியிருந்தது. இவர்களது வசனங்களை மட்டுமல்ல, கதையையே புதி தாக மாற்றி எழுதினார் ஜோர்ஜ் சந்திரசேகரன்.
கதையின்படி % பகுதி கொழும்பில் நடைபெற்றது. % பகுதி மட்டக்களப்பில் நடைபெற்றது.
 

பாதை மாறிய பருவங்கள் 269
பிரபலமான மலையாள நடிகர் பிறேம் நஸரின் மகன் ஷாநவாஸ். 'சுவரில்லாத சித்திரங்கள் மூலம் அறிமுக மான நடிகை சுமதி. பல படங்களிலும் நடனமாடிய மாயா ஆகியோர் இப்படத்தில் நடிக்க இலங்கை வந்தார்கள்.
சிங்கள நடிகைகளான சாந்தி ரசிகா, லீனாடிசில்வா ஆகியோருடன் நடராஜசிவம் இரா.பத்மநாதன், விஜய ராஜா, ராஜா கணேசன், எஸ்.என்.தன ரெத்தினம், ஜோர்ஜ் சந்திரசேகரன், ரீ.ராஜேஸ்வரன், சிதம்பரம் போன்றோர் நடிகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
ஒரு கதாநாயகன் மூன்று கதாநாயகிகள். இரண்டாவது கதாநாயகனாக நடராஜசிவம் தெரிவு செய்யப்பட்டார்.
ஒருநாள் படப்பிடிப்புக்கு நடராஜசிவம் சென்றார். தான் நடிக்க வேண்டிய பாத்திரத்தில் தயாரிப்பாளர் நடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போய்விட் LTñT.
பின்பு ஜோர்ஜ் சந்திரசேகரன் நடிக்க இருந்த பாத் திரத்தில் நடராஜசிவமும், யாரோ நடிக்கவேண்டி இருந்த பாத்திரத்தில் ஜோர்ஜ் சந்திரசேகரனும் நடித்தார்கள்.
திரைக்கதையில் பல்வேறு சிறு பாத்திரங்கள் வந்து போகின்றன. அவற்றுக்கு அவ்வப்போது படப்பிடிப்பைப் பார்க்கவந்தவர்களைப் பயன்படுத்தினார்கள்.
படப்பிடிப்புகள் கொழும்பு, மலையகம், மட்டக் களப்பு ஆகிய இடங்களில் நடைபெற்றன. தயாரிப்பாளர் கள், பாடல்களின் இசை அமைப்பில் அதிக அக்கறை காட்டினார்கள். ஆர்.முத்துசாமி பல படங்களுக்கு இசை அமைத்தவர். அவர் மகன் மோகன்ராஜ் மேடைகளில் பல இசை நிகழ்ச்சிகளைச் செய்துவந்தார். ‘எங்களில் ஒருவன்’ என்ற படத்தில் தந்தையுடன் சேர்ந்து இசை அமைத்தார். தனித்து "புளுகர்கள் யாக்கிரதை' என்ற படத்துக்கு முதன்

Page 144
270 தம்பிஐயா தேவதாஸ்
முதலில் இசை அமைத்தார். ஆனால், அப்படம் வெளி வரவில்லை.
எம்.மோகன்ராஜ் இப்படத்துக்கான பாடல்களுக்கு இசை அமைத்தார். அவருக்கு உதவியாக ரங்கன் இருந் தார்.
'பாதை மாறிய பருவங்கள்' திரைப்படத்தில் ஒரு காட்சி. லினா, மாயா, ஷாநவாஸ் ஆகியோர். (1992)
பாடல்களை பூரீஸ்கந்தராஜா, இரா.பத்மநாதன், அம்பி, செ.குணரத்தினம் ஆகியோர் இயற்றினர்.
 

பாதை மாறிய பருவங்கள் 27
அப்பாடல்களை மோகன், கே.எஸ்.பாலச்சந்திரன், கே.ஜெயகிருஷ்ணா, பி. கிருஷ்ணன், ராணி ஜோசப், ஜெகதேவி ஆகியோர் பாடினர்.
பல கஷ்டங்களின்பின் 15.10.1982இல் பூரீகருமாரி யம்மன் கிறியேஷன், 'பாதை மாறிய பருவங்கள் திரைப் படம் இலங்கையில் ஐந்து இடங்களில் திரையிடப்பட்டது.
கதை வசனம் தயாரிப்பு பூரீஸ்கந்தராஜா' என்று இருந்தது. கெளரவ நடிகர்களின் பெயர்ப் பட்டியலில் ஜோர்ஜ் சந்திரசேகரனின் பெயரும் இருந்தது. இப்படத்தைப் பற்றிப் பலர் விமர்சனம் எழுதினர். நானும் எழுதினேன். அது ‘வீரகேசரி'யில் (31.10.1982) வெளிவந்தது.
0 0 0 0 KM தெய்வேந்திரா, தான் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். வர்ணக் காட்சிகள் எல்லாம் மனத்தை மயக்குகின்றன.
கதை நாயகன் அந்தக் காலத்துத் 'திரும்பிப்பார்’ சிவாஜியை நினைவுபடுத்துகிறார். மூன்று கதாநாயகிகள், கதாநாயகன் இருவரை ஏமாற்றி மூன்றாவது பெண்ணிடம் சிக்கித் திருந்தியபோது, கைது செய்யப்படுகிறான். நீண்ட காலமாகப் பெண்களை ஏமாற்றிய ஒருவன் சில நாட்களில் வேதனையால் மனம் மாறுகின்றார்.
மனம் மாறுவதற்கான காரணத்தைச் சிறிது விளக்க மாகத்தான் காட்டியிருக்கக்கூடாதா? இலங்கை நடிகைகள் தென்னகப் படங்களில் கவர்ச்சியைக் காட்ட அழைக்கப் படுவது போல், இந்த இலங்கைப் படத்தில் கவர்ச்சியைக் காட்டுவதற்கென்றே தென்னகக் கவர்ச்சித்தாரகை மாயாவை அழைத்திருக்கிறார்கள். இந்நடிகை கவர்ச்சியை மிக அதிகமாகக் காட்டிக் கொண்டே சில இடங்ளில் மற்ற நடிகைகளைவிடத் திறமாகவும் நடிக்கிறார். சுமதிக்கு உருவத்தில் முதிர்ச்சி போதவில்லை. பல நடிகைகளுக்கு வானொலியினர் இரவல் குரல் வழங்கியிருக்கிறார்கள்.

Page 145
272 தம்பிஐயா தேவதாஸ்
படத் தொகுப்பில் தொய்வு தெரியவில்லை. பாடல் காட்சிகள் வர்ணத்தில் இருக்கின்றன. இதுவரை இலங் கையில் உருவான தமிழ்த் திரைப்படங்களைவிட, இப் படத்தின் தொழில் நுட்ப அம்சங்கள் சிறந்து விளங்கு கின்றன.
இப்படத்தின் நல்ல அம்சங்களில் ஒன்று சிறந்த படப் பிடிப்பாகும். பொதுவாக எல்லா நடிகர்களும் திறம்பட நடித்திருந்தாலும், நம்பமுடியாத கதை நிகழ்வுகள் வெறுப்பை உண்டாக்குகின்றன.
‘பாதை மாறிய பருவங்கள்" திரைப்படக் கதாநாயகன் ஷாநவாஸ்.
இத்தனை பெரிய முயற்சியில் ஈடுபட்ட கலைஞர்கள், சிறந்த கதையொன்றைத் தெரிவு செய்து படத்தைத் தயாரித்திருந்தார்களானால் அவர்களின் முயற்சியை மேலும் அதிகமாகவே பாராட்டியிருக்கலாம்.
இப்படம் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் மூன்று வாரங்கள் ஓடியது. மட்டக்களப்பிலும் ஹட்டனிலும் இரண்டு வாரங்கள் ஓடியது.
 

பாதை மாறிய பருவங்கள் 273
இப்படம் 1982இல் திரையிடப்பட்டது. இக்காலத்தில் இன்னும் சில திரைப்படங்களும் தயாரிப்பில் இருந்தன. 1983 ஆம் ஆண்டு பிறந்தது. ஜூலை மாதம் வந்தது. கலவரம்' நிகழ்ந்தது. கே.குணரெத்தினத்தக்குச் சொந்த மான ஹெந்தள விஜயா ஸ்ரூடியோ தீ வைக்கப்பட்டது. அரைகுறையாக வளர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் படங்கள் சிலவும் எரிந்து சாம்பலாகின.
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் வரலாற்றிலும் கரு மேகங்கள் சூழத்தொடங்கின.
இலங்கைத் தமிழ் சினிமாவின் வரலாற்று நாயகர் களில் சிலர் புலம் பெயர்ந்தார்கள் பலர் மெளனம் சாதித்தார்கள்.

Page 146
29. 'ஷர்மிளாவின் இதய ராகம்
1982ஆம் ஆண்டு ‘பாதை மாறிய பருவங்கள்' என்ற படம் திரையிடப்பட்டது. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ் சிங்களக் கலவரம் உருவாகியது. அதனால், தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் பலர் புலம்பெயர்ந்தார் கள். தொடர்ந்து 10 வருடங்களாக எந்தத் தமிழ்த் திரைப் படமும் உருவாகவில்லை. இலங்கையில் தமிழ்ச் சினிமா அழிந்தொழிந்து போய்விட்டதோ என்று எண்ணத் தோன் றியது.
ஆனால், அது தவறு என்பதை 1989ஆம் ஆண்டு வெளிவந்த செய்தியொன்று தெரிவித்தது. ஷர்மிளாவின் இதயராகம்' என்ற படம் உருவாகிறது என்ற செய்திதான்
• 9H3ے
அந்தக் காலத்தில் இலங்கையில் ‘வீரகேசரி', 'தினகரன்', ‘சிந்தாமணி” ஆகிய பிரபலமான தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருந்தன. காலக் கோளாறினால் ‘சிந் தாமணி’ பத்திரிகை நின்றுவிட்டது. அந்தச் ‘சிந்தாமணி’ பத்திரிகையில் 1987.01.04 முதல் பிரபல பெண் எழுத்

ஷர்மிளாவின் இதய ராகம் 275
தாளர் ஜெகியா ஜூனைதீன் தொடர்ந்து 32 வாரங்களாக எழுதிய தொடர்கதைதான் 'ஷர்மிளாவின் இதயராகம்'.
அநேக வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1989 இல் 'ஷர்மிளாவின் இதயராகம் முதற்பதிப்பாகப் புத்தக உருவில் வெளிவந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் தமிழ் பேசும் வாசகர்களின் விருப்பத்துக்கிணங்க இக் கதைப் புத்தகம் இரண்டாவது பதிப்பாகவும் வெளிவந்தது.
இந்தக் கதை பலரையும் கவர்ந்தது. இத்தனை ஜன ரஞ்சகமான கதையைத் திரைப்படமாக்கினால் வெற்றி பெறலாம் என்று எண்ணினார், இந்நாவல் ஆசிரியையின் கணவர். அவர்தான் பேராதனை ஏ.ஏ. ஜுனைதீன்.
‘பேராதனை ஜூனைதீன் நீண்ட காலமாக இலங்கைச் சினிமாத் துறையுடன் தொடர்புடையவர். ஏற்கனவே இலங்கையில் உருவான 'டைக்ஷி டிறைவர்' 'நெஞ்சுக்கு நீதி’, ‘தெய்வம் தந்த வீடு' ஆகிய படங்களுக்குத் திரைக் கதை வசனம் எழுதியவர். சுமார் 10 சிங்களப் படங் களுக்கும் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார்.
'மவுண்டன் இன் த ஜங்கில்' என்ற ஆங்கிலப் படத் துக்கு உதவி இயக்குநராகவும் கடமையாற்றியிருக்கிறார்.
தனது மனைவி எழுதிய ‘ஷர்மிளாவின் இதயராகம் என்ற கதைக்கும் இவரே திரைக்கதை வசனம் எழுதினார். முஸ்லிம் பாத்திரங்களைத் தமிழ்ப் பாத்திரங்களாக மாற்றித் திரைக்கதை எழுதினார். முழுக்க முழுக்க இலங் கைக் கலைஞர்களைக் கொண்டே இந்தத் திரைப்படத்தை உருவாக்கவேண்டும் என்று எண்ணினார். கலைக்கு இன மத பேதம் இல்லை என்பதற்கு இணங்க இதே படத்தைச் சிங்களத்திலும் உருவாக்க முனைந்தார். ‘ஷர்மிலா பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இப்படமே, இலங் கையின் முதலாவது கலப்படமற்ற தேசிய வர்ணத் திரைப் படம் என்று கொள்ள வேண்டும்.

Page 147
276 தம்பிஜயா தேவதாஸ்
ஷர்மிளாவின் இதயராகம்' படப்பிடிப்பின்போது ஒளிப்பதிவாளர் ஜே.ஜே. யோகராஜா, கதாநாயகி விணா, காதநாயகன் ஷஷி, இயக்குநர் சுனில்சோமபீரிஸ், கதை வசனகர்த்தாவும் தயாரிப் பாளருமான ஏ.ஏ. ஜுனைதீன் ஆகியோர்.
பிறப்பால் முஸ்லிமான ஷஷி பிரபலமான சிங்களத் திரைப்பட நடிகர். இவரே இப்படத்தின் கதாநாயகன் இவருடன் வீணா ஜெயக்கொடி, நிலானி அபேவர்த்தன, லீனாடி சில்வா, றோஹித்த மான்னகே போன்ற சிங்கள நடிகர்கள் நடித்தார்கள் இவர்களுடன் மரிக்கார் எஸ்.ராம்தாஸ், கே.எஸ்.பாலச்சந்திரன், கே.ஏ. ஜவாஹர், எம்.எம்.லத்தீப், ஜோபு நசீர், கே.மோகன்குமார், கமலபூரீ, என்.ராஜம், ரஞ்சனி, எஸ்.விஸ்வநாதநராஜா, எஸ்.என்.தனரெத்தினம், கலைச்செல்வன், எம்.உதயகுமார், டபிள்யூ ரட்ணம், என்.ராஜ" ஆகியோரும் நடித்தனர். ஜே.பாத்திமா சுல்பிகா,
 
 

ஷர்மிளாவின் இதய ராகம் 277
டி.ஜெயப்பிரியா, ஜே. உஸாமா அலி போன்ற குழந்தை நட்சத்திரங்களும் தோன்றின.
பேராதனை ஜூனைதீன், கதை திரைக்கதை வசனங் களுடன் பாடல்கள் சிலவற்றையும் எழுதினார். இன்னும் சில பாடல்களை எஸ்.விஸ்வநாதராஜா, 'புஸல்லாவ இஸ்மாலிகா ஆகியோர் எழுதினர். சரத் தசனாயக்கா இசை அமைத்த பாடல்களை வீ.முத்தழகு, எஸ்.வீ.ஆர்.கணபதிப் பிள்ளை, கலாவதி, ராணிஜோசப், விஸ்வநாதராஜா, ஆகியோர் பின்னணி பாடினர். வானொலிக் கலைஞர்கள் பலர் உரையாடல்களுக்குக் குரல் வழங்கினர். கதாநாயக னுக்கு ஏ.ஆர்.எம்.ஜிப்றி குரல் வழங்கினார். ஜே.ஜே.யோக ராஜா ஒளிப்பதிவு. லயனல்குணரத்ன ஒலிப்பதிவு. நடன அமைப்பு பி.எம்.நந்தகுமார்.
இயக்குநர் சுனில் சோமபீரிஸ். இணை இயக்குநர் ஏ.ஏ. ஜுனைதீன். தயாரிப்பு நிர்வாகிகள் எஸ்.வி.ரஞ்சன், ஜே.ஜே.அசன்அலி. தயாரிப்பு மேற்பார்வையும் கலை நிர்மாணமும் பிரபல ஒவியர் எஸ்.டி.சாமி. தயாரிப்பு ஏ.ஏ. ஜுனைதீன், திருமதி ஜெக்கியா ஜுனைதீன் ஆகி
யோர்.
இலங்கையில் தயாரான இந்தத் தமிழ்த் திரைப்படம் சிங்களத்தில் டப் பண்ணப்படுவதும் முக்கிய அம்சமாகும். இச்சிங்களப்படத்தின் பெயர் ‘ஒப மட்ட வாசனா’ என்ப தாகும்.
1989 ஆம் ஆண்டே தயாரித்து முடிக்கப்பட்ட 'ஷர் மிளாவின் இதயராகம் 4 வருடங்களின் பின்பே திரைக்கு வந்தது.
படம் திரையிடுவதற்கு முன்பு பத்திரிகையாளர்களுக் குக் கொழும்பு ரீகல் தியேட்டரில் போட்டுக் காட்டினார்கள். என்னையும் ஜுனைதீன் அழைத்திருந்தார். என்னைப் போலவே நண்பர் மொழிவாணனும் படத்தைப் பார்த்தார்.

Page 148
278 தம்பிஐயா தேவதாஸ்
இவர் தனது கருத்தை விமர்சனமாகத் தினகரனில் (27.06.93) எழுதினார்.
'ஷர்மிளாவின் இதயராகம்' படத்தில் ஒரு காட்சி. கதாநாயகன் ஷஷியும் கதாநாயகி வீணாவும்.
படத்தின் டைடிலைப் பார்த்தவுடனேயே கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அருமை! சாமிக்கு ஒரு சபாஷ்! ஆரம்பமே சண்டைக் காட்சி. அசத்திவிட்டார்கள்! தென் னிந்தியப் படத்தைப் பார்ப்பதுபோன்று ஒரு பிரமை
ஆரம்பத்திலேயே தனது கைவரிசையைக் காட்டிவிட் டார் சுனில்சோமபீரிஸ்! யோகராஜாவின் கமறா நம்மை
 

ஷர்மிளாவின் இதய ராகம் 279
யோசிக்கவைக்கிறது. நம் நாட்டிலும் இப்படியும் ஒரு திறமைசாலியா என்று!
கலைஞர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பைக் குறை வின்றிச் செய்திருக்கிறார்கள். முகவரி தொலைந்துபோன கலைஞர்களுக்கு இப்படத்தில் முகம் காட்டுவதற்கு ஜுனைதீன் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.
..இதுவரையில் இலங்கையில் உருவான திரைப்படங் களைவிட, 'ஷர்மிளாவின் இதயராகம் உயர்ந்து நிற்கிறது.
இந்தியாவிலிருந்து எந்தக் குப்பையை இங்கு கொண்டு வந்து கொட்டினாலும் ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்து அந்தக் குப்பைமேட்டில் குளிர்காய்ந்துவிட்டு, சலித்துக் கொண்டு திரும்பும் நம் நாட்டு ரசிகர்கள், இப்படத்துக்குக் கண்டிப்பாகத் தம் ஆதரவை வழங்கவேண்டும்’ என்று எழுதினார்.
பல்வேறு பிரச்சினைகளின் பின் 'ஷர்மிளாவின் இதய ராகம் திரைப்படம் 24.09.1993இல் திரையிடப்பட்டது. மத்திய கொழும்பு (கபிடல்), கட்டுகள்தொட்டை (நியூ சீகிரி), நுவரெலியா (திவோலி) ஆகிய மூன்று இடங்களி லேயே முதன் முதலில் திரையிடப்பட்டது.
வழமையைவிட, இப்படத்துக்குத் தேசியப் பத்திரிகை கள் பெரும் வரவேற்பைக் கொடுத்தன. ‘வீரகேசரி'யில் ஆர்.ராஜலிங்கம் விமர்சனம் எழுதினார்.
- - - O இப்படம் முன்னர் வெளிவந்த படங்களோடு ஒப் பிடுகையில் எவ்வளவோ அபிவிருத்தி அடைந்துள்ளது. நாவலில் வந்த ஷர்மிளா எந்தளவுக்கு வாசகர் மனதைத் தொட்டதோ அந்த அளவுக்குப் படத்தில் வந்த 'ஷர்மிளா ரசிகர்கள் மனதைத் தொடவில்லை என்றே தோன்றுகிறது.

Page 149
280 தம்பிஐயா தேவதாஸ்
ஜவாஹர், ராம்தாஸ், லத்தீப், சாண்டோ முத்தையா தேவர் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக அமைந்தது. பாடல் கள் இனிமையாக இருக்கின்றன.
ஷர்மிளாவின் இதயராகம் திரைப்படத்தில் கதாநாயகி வீணாவுடன் மரிக்கார் எஸ்.ராம்தாஸ்
.ஏனைய நம் நாட்டுக் கலைஞர்களும் இத்தகைய ஒரு முயற்சியில் ஈடுபட இந்தப் படம் ஒரு நம்பிக்கை நட்சத்திர மாக மிளிரவேண்டும் என்பதே எமது ஆசை என்று எழுதி னார்.
தினகரனில்'மானா மக்கீன் வித்தியாசமான முறையில் விமர்சனம் எழுதினார். xx
 
 
 
 

ஷர்மிளாவின் இதய ராகம் 28
அன்பான ஷர்மிளா சகோதரி என்று விளித்து எழுதி னார். எப்படியோ பல போட்டிகளுக்கும் பொறாமை களுக்கும் மத்தியில் உங்கள் இதயராகத்தை இசைக்க வேண்டியிருக்கிறது.
இது உங்கள் தலைவிதிமட்டுமல்ல எங்கள் தலைவிதியும்
(n-.
.ஷர்மிளா இலங்கைப் பெண் எத்தனையோ ஆண்டு களுக்குப் பின் அருமை பெருமையா வந்திருப்பவள். அவளுக்குக் கியூவரிசையில் இருந்து விதிவிலக்கு அளியுங்கள்; ஒரு நல்ல தியேட்டரைத் தாருங்கள் என்று உங்கள் தந்தை (ஏ.ஏ. ஜுனைதீன்) போராடியிருக்கலாம்.
O to எது எப்படியானாலும் என் அபிமானிகள் உங் களை ஒரு முறை காண வருவார்கள் என நிச்சயமாக நம்பு கிறேன், என்று எழுதியிருந்தார்.
இப்படம் மத்திய கொழும்பில் 4 வாரங்களும் நுவரெலியாவில் 3 வாரங்களும் கட்டுகாஸ்தோட்டையில் 2 வாரங்களும் தென் கொழும்பில் (கொன்கோட்) 1 வாரமும் ஓடியது.
இப்படம் திரையிடப்பட்டு ஒரு மாதத்தின்பின் இப்படக் கலைஞர்களுக்கு மருதானை எல்பிஸ்டன் ‘சரசவிபாயா வில் ஒரு பாராட்டு விழா வைத்தார்கள். அலையோசை ஞானப் பிரகாசம் அதை ஏற்பாடு செய்திருந்தார். இதில் இப்படத் தின் தயாரிப்பாளர் ஏ.ஏ. ஜுனைதீன் பேசினார்.
‘நான் மவுண்டன் இன் த ஜங்கில் என்ற ஆங்கிலப் படத்தில் உதவி இயக்குநராக இருந்தேன். அப்படத்தில் உழைத்த பணத்தினால் கண்டியில் வீடு கட்டினேன். 'ஷர் மிளாவின் இதயராகம்' படத்துக்காக அவ்வீட்டை விற்க வேண்டி ஏற்பட்டுவிட்டது. இப்படத்துக்காக 21 லட்சம் ரூபாவைச் செலவு செய்தேன். திரைப்படக் கூட்டுத் தாபனம் 6% லட்சம் ரூபா கடனாகத் தருவதாகக் கூறியது.

Page 150
282 தம்பிஐயா தேவதாஸ்
பின்பு தர மறுத்துவிட்டது. இப்படத்தை ‘மா ஒபட வாசனா என்ற பெயரில் சிங்களப் படமாக டப் செய்கிறேன். அப்
படத்தின் இறுதி வேலைகளைச் செய்வதற்காக 50 ஆயிரம்
ரூபா இல்லாமல் கஷ்டப்படுகிறேன்' என்று கூறினார்.
இவற்றைக் கூறும் பொழுது அவர் மேடையில் அழுதேவிட்
LsTT
மானாமக்கீன் இக்கூட்டத்தில் "இனிமேல் இலங்கை யில் தமிழ்த் திரைப்படம் உருவாகாது’ என்றார். மதுர் மெளலானா இனித்தான் தமிழ்ப்படங்கள் வரவேண்டும் என்று கூறினார்.
எது எப்படியோ இதன்பின்பும் தமிழ்ப்படங்கள் உரு வாகுவதாக செய்திகள் வெளிவந்தன. அவை உண்மையும்
sin. L

30. தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள்
1931ஆம் ஆண்டு “இந்தியத் தமிழ்ப் பேசும்படமான காளிதாஸ்' திரையிடப்பட்டது. இந்தப்படத்தில் ஓர் அதி யம். கதாநாயகி தமிழில் பேசுவாள்; பாடுவாள். ஆனால் அவளது கேள்விகளுக்குக் கதாநாயகன் தெலுங்கில்தான் தில் சொல்லுவான். அவ்வப்பொழுது துணைநடிகர்கள் இந்தியிலும் பேசியிருக்கிறார்கள். இப்படித் தான் இந்தியா வின் முதல் தமிழ்ப்படம் தமிழ் பேசத்தொடங்கியது. பின் னாளில் வேறு இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட விசேடமான படங்கள் அவற்றின் தனித்தன்மை கருதி தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இன்று தமிழ்நாட்டில் வெளிவரும் தமிழ்ப்படங்களில் கணிசமான அளவு டப் படங்களும் இருக்கின்றன.
இப்படியான முயற்சி 1973ஆம் ஆண்டில் இலங்கை யிலும் நடைபெற்றிருக்கிறது. சிங்களப் படமொன்றை தமிழில் மொழிமாற்றம் செய்யும் முயற்சிதான் அது.
ஆரம்பகாலத்தில் சிங்களப்படங்கள் தென்னிந்தியா வில் தயாரிக்கப்பட்டன. இவை பின்பு இலங்கையில் தயாரிக்கப்பட்டபோது தென்னிந்தியத் தமிழ்க்கலைஞர்கள் இலங்கைக்கு வந்து சென்றனர். அவர்கள் பல சிங்களப்

Page 151
284 தம்பிஐயா தேவதாஸ்
| படங்களை இயக்கினர், ஒளிப்பதிவு செய்தனர், இசை அமைத்தனர், பின்னணி பாடினர். அவர்களே சிங்களப் படங்களை வளர்த்து விட்டனர். வழிகாட்டி விட்டனர். உயர்த்தி விட்டனர். அவர்களில் ப. நீலகண்டன், எஸ். நாகராஜன், மஸ்த்தான், ரீ.ஆர். பாப்பா, ஏ.எம். ராஜா, ஜிக்கி என்று பல கலைஞர்களின் பெயர்களை கூறிக் கொண்டே போகலாம். திரையில் தோன்றுபவர்களைத் தவிர திரையின் பின்னால் தொழிற்பட்ட கலைஞர்கள் எல்லோரும் இந்தக் கலைஞர்களே. 1956 ஆம் ஆண்டு வரை இவர்களே சிங்கள சினிமா உலகை ஆட்டிப்படைத் தனர்,
1956 ஆம் ஆண்டுக்குப்பின் இந்தியக்கலைஞர்கள் இலங்கைக்கு வந்து சினிமாத் தொழிலில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் தடைபோட்டது.
அதனால் இந்தியக் கலைஞர்களிடம் உதவியாளர் களாக இருந்த இலங்கைத் தமிழ்க் கலைஞர்கள் சிங்களச் சினிமாவை ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.
இவர்களில் சு.சோமசேகரன், கே. வெண்கட், எஸ். ராமநாதன், எஸ். செல்வரெத்தினம், எம்.எஸ். தம்பு, லெனின்மொறைஸ், ஜோ. தேவானந், எஸ்.வி. சந்திரன், எம்.வி. பாலன், எம்.எஸ். ஆனந்தன், ஏ. அர்ஜுனா போன்றோாைக் குறிப்பிடலாம். அர்ஜுனாவின் ஆரம்ப கால முயற்சிகளில் 'கலியுககாலய என்ற சிங்களப்படமும் ஒன்றாகும். இப்படத்தை தமிழ்மொழிக்கு டப் செய்து வெளியிடலாமே என்று அர்ஜூனா எண்ணினார்.
(1) கலியுக காலம்
இப்படித்தான் 'கலியுககாலம் டப் படம் உருவானது.
டப் படம் என்றால் நடிகர்களின் உதட்டசைவுக்கு ஏற்ற வாறு வசனம் எழுதவேண்டும். இப்படி வசனம் எழுது

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 285
வதில் ஈழத்து ரெத்தினம் சமர்த்தர். அவரே வசனத்தை எழுதினார்.
வசனங்களைப்போலவே பாடல்களும் முக்கிய
V
ஒரு படப்பிடிப்பின்இடைவேளையின்போது, பின்னால்கண்ணாடி அணிந்து அமர்த்திருப்பவரே ஏ. அர்ஜினா. .
அந்தக்காலத்தில் இசை அமைப்பாளர் 'சண் கொழும்பு பிரதான வீதியில் றெக்கோட்பார் வைத்திருந்தார். பல சிங்களப் பாடகர்களின் பாடல்களை இசைத் தட்டில் ஏற்றிக் கொடுத்தார். 'கலியுக காலய சிங்களப்படத்துக்

Page 152
286 தம்பிஐயா தேவதாஸ்
கும் இசை அமைந்திருந்தார். இவரே இதன் தமிழ்ப்பதிப் பான 'கலியுக காலம் தமிழ்ப்படத்தின் 5 பாடல்களுக்கும் இசை அமைக்கும் பொறுப்பையும் ஏற்றார். எம்.பி. பரமேஸ், குலசீலநாதன் போன்றோர் பின்னணி பாடி னர். சுஜாதா அத்தநாயக்க, அமுதன் அண்ணாமலை போன்றோர் இப்படத்தின் மூலமே சினிமாப்பாடகர்களா
SENITTSSGIT .
'கலியுக காலம் திரைப்படத்தில் ஒரு காட்சி. டொனி ரனசிங்கவும் நீட்டா பெனான்டோவும்.
 
 

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 287
பெரும்பாலான வானொலிக் கலைஞர்களுக்கு இப் படமே சினிமாவில் நுழைவதற்கான வாசற்படியாக அமைந்தது.
'கலியுக காலய சிங்களப்படம். 1975ஆம் ஆண்டி லேயே திரையிடப்பட்டது. ஆனால் அதற்கு ஒரு வருடத் துக்கு முன்பே (14.04.74) 'கலியுக காலம் தமிழ்ப்படம் திரையிடப்பட்டது.
இப்படத்தில் இடம்பெற்ற உருப்படியான அம்சம் எது வென்றால் 'சண் இசை அமைத்த பாடல்கள் மட்டுமே. இப்பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு இலங்கை வொனொலி நிலையத்தில் இருக்கிறது.
'அர்ஜுனா’ என்ற தமிழர் தயாரித்தார். ‘சண்’ என்ற தமிழர் இசை அமைத்தார் என்பதைத் தவிர இப்படத்தை இவ்வளவு பணம் செலவழித்து தமிழாக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டதோ தெரியவில்லை.
(2) நான்கு லெட்சம்'
'கலியுக காலம் டப் படம் அதிக நாட்கள் ஒட வில்லை. ஆனாலும் மேலுமொரு சிங்களப்படத்தை டப் பண்ணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
1946 ஆம் ஆண்டு இலங்கையில் ஒரு பெரும் கொள் ளைச் சம்பவம் இடம்பெற்றது. உண்மையாகவே இடம் பெற்ற இக்கொள்ளைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து சிங்களத் திரைப்படமொன்றை உருவாக்கினார் கள். பிரபல சிங்களத் திரைப்பட இயக்குநர் டைரஸ் தொடவத்தை இப்படத்தை இயக்கினார். படம் 1971ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படம் திரையிடப்பட்டு இரண்டு வருடங்களின்பின்பு இதனைத் தமிழில் மொழி மாற்றம் செய்யும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.

Page 153
288 VM தம்பிஐயா தேவதாஸ்
இப்படத்தை தமிழாக்கும் பொறுப்பு பிரபல அறிவிப் பாளர் மயில்வாகனனிடம் கொடுக்கப்பட்டுது. ‘ஹாற லக்கூடி' என்ற சிங்களத் தொடரின் கருத்தான ‘நான்கு லெட்சம்' என்ற பெயரே தமிழ்ப்படத்துக்கும் வைக்கப்பட் டது. கலைஞர்கள் பி.எச். அப்துல்ஹமீட், எஸ். ராம்தாஸ் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து இப்படத்துக்கான வச னங்களை எழுதினார்கள்.
நூற்றுக்கு மேற்பட்டுகள் படங்களுக்கு ஆர்ற் டிறெக்ரறாகப் பணியாற்றிய ஜே. ஏ. வின்சென்ற்
ரீ. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், கே. சந்திர சேகரன், நடராஜ சிவம், ஜோர்ஜ் சந்திரசேகரன் போன் றோர் படத்துக்குக் குரல் வழங்கினர். படம் கொழும்பு (கிங்ஸ்லி) உட்பட நான்கு ஊர்களில் மட்டுமே திரை யிடப்பட்டது.
படத்துக்கு அதிக விளம்பரம் கிடைக்கவில்லை. உண் மைக் கொள்ளைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது என்பதைத்தவிர வேறு விசேடம் எது வும் இப்படத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. வானொ
 

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 289
லிக் கலைஞர்கள், தமது சினிமா ஆர்வத்தையும் ஆசை களை யும் இப்படத்தின் மூலமும் தொடர்ந்திருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும். தயாரிப்பாளர்கள் எப்படியான படம் தயாரித்தாலும் படத்துக்குக் குரல் சேர்ப்பதற்கு வானொலி நிலையத்தை நோக்கியே வரவேண்டியிருந்தது.
(3) 'யார் அவள்”
1955ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் அதிக தமிழ் நாடகங்கள் மேடையேறிக்கொண்டிருந்தன. அக்காலத்தில் பல நாடகங்களை இயக்கி வந்தார் தமிழ் இளைஞர் ஒருவர். சென்னைக்குச் சென்ற அவ்விளைஞர் இங்குள்ள ரேவதி ஸ்ரூடியோவில் ஒளிப்பதிவாளராகச் சேர்ந்து கொண்டார். தொடர்ந்து இந்தியாவில் இருக்க விசா கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் இலங்கை திரும்பிவிட்டார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட சில ஆங்கிலப்படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக் கடமை யாற்றினார். முதன்முதலாக ‘சுது துவ' என்ற சிங்களப் படத்தை நெறியாண்டதுடன் ஒளிப்பதிவையும் கவனித் தார். தொடர்ந்து பல சிங்களப் படங்களை நெறியாண் டார். காமினி பொன்சேகாவை "துரயன்கேத் துரயா' படத்தின் மூலம் பிரபலமாக்கினார். விஜயகுமாரணதுங் கவை கதாநாயகன் ஆக்கினார். கீதா குமாரசிங்காவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே. சிங்களத் திரை உலகில் சிறந்த இயக்குநராக இவர் விளங்கினார்.
இந்தத் தமிழ் இளைஞரின் பெயர்தான் லெனின் மொறைஸ். அந்தக் காலத்தில் 'அந்த நாள்' என்றொரு புதுமையான இந்தியத் தமிழ்ப்படம் இலங்கையில் திரை யிடப்பட்டது. இப்படத்தைப் பார்த்துச் சொக்கிப்போன இவ்விளைஞர், இதே போன்றதொரு சிங்களப்படத்தை யும் உருவாக்கினால் என்ன என்று எண்ணினார். அவ்

Page 154
290 தம்பிஐயா தேவதாஸ்
வெண்ணத்தைச் செயலிலும் காட்டத் தொடங்கிவிட்டார். அச்சிங்களப்படத்தின் பெயர்தான் 'அபிரஹச (பரம ரகசியம்) என்பதாகும். இந்தப் படம் இவருக்கு சிங்கள ரசிகர்கள் மத்தியில் பெரும் மதிப்பை ஏற்படுத்தியது. பெரும் புகழைக் கொண்டு வந்தது.
அவர், இதே படத்தைத் தமிழ்மொழிக்கு டப் செய் தால் என்ன என்று எண்ணினார். அவரது எண்ணத்துக்கு பிரபல ஒலிப்பதிவாளர் எஸ். சாரங்கராசா களம் அமைத்துக் கொடுத்தார். புதிதாக ஒரு பாடல் காட்சியைப் படம் பிடித்து இப்படத்துக்குள் செருகினார். அக்காலத் தில் பொப்பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றிருந்தவர் ஏ.ஈ. மனோகரன். சிங்களத் திரை உலகின் புகழ்பெற்ற கதாநாயகியாக விளங்கியவர் மாலினி பொன்சேகா. இவர் கள் இருவரையும் இணைத்து உருவாக்கிய பாடல் காட்சி தான் அது. அந்தமொழி மாற்றுப்படத்தின் பெயர்தான் யார் அவள்’. பிரபல ஒலிப்பதிவாளர் எஸ். சாரங்க ராஜாவின் புதல்வர்களான எஸ். சாஸ்வதராஜ், எஸ். மனோராஜ் ஆகிய இருவரும் இப்படத்தின் தயாரிப் பாளர்கள். எஸ்.ஏ. அழகேசனின் மூலக் கதைக்கு ஈழத்து ரெத்தினம் வசனம் பாடல்களை எழுதினார்.
இசை அமைப்பை எம்.கே. றொக்சாமியும், ரீ.எப். லத்தீப்பும் ஒன்றிணைந்து பொறுப்பேற்றார்கள். அந்தக் காலத்தில் பிரபலம் பெற்று விளங்கிய ஹிந்திப் பாடல்க ளின் மெட்டுக்களை அப்படியே பிரதிபண்ணி பாடல்கள் உருவாக்கிப்பட்டிருந்தன. ஹிந்திப் பாடல்களை அப் படியே அழகாகப் பாடும் டொனிஹசன், மற்றும் சுஜாதா, எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் பின்னணி பாடினார்கள்.
சிங்கள நடிகர்களின் வாய் அசைப்பிற்கு வானொலித் தமிழ்க் கலைஞர்களின் குரல்கள் ஒலித்தன. பி.எச்.

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 29
அப்துல் ஹமீத், நடராஜ சிவம், ஜோர்ஜ் சந்திரசேகரன், ஆமினா பேகம் போன்றோர் குரல் கொடுத்திருந்தார்கள். விமர்சகர் ஒருவர், 'ரசிகன்’ என்ற புனைபெயரில் வீரகே சரியில் சிறிய விமர்சனம் எழுதியிருந்தார்.
ཚུཚེ་ཚེ་རྩི་
"யார் அவள் திரைப்படத்தை இயக்கிய பிரபல திரைப்பட. இயக்குநர் திரு. லெனின் மொறைஸ்
‘. இயக்குநர் லெனின் மொறைஸ் தனது கைவண் ணத்தைத் திறம்படக் காட்டியுள்ளார். நீருக்கடியில் பிணத் தைத் தேடும் காட்சி, பின்னணி இசை ஆகியவற்றை லெனின் மொறைஸ் புதிய பாணியில் கையாண்டுள் ளார். படத்தில் இடம்பெற்றுள்ள காபரே நடனங்கள் சிகர்களுக்கு விறுவிறுப்ப ஏற்படுத்துகின்றன. மனோகர

Page 155
292 தம்பிஐயா தேவதாஸ்
னும் மாலினியும் தங்கள் பாகத்தை கனகச்சிதமாகச் செய் துள்ளனர்" என்று அந்தச் சிறிய விமர்சனம் அமைந்திருந்
Ø3]•
'யார் அவள் டப் படத்தில் காதல் காட்சி. ஏ.ஈ. மனோகரனும் மாலினி பொன்சேகாவும் இப்படித் தோன்றுகிறார்கள். (1976)
தர்ஷினி பிலிம்ஸ் "யார் அவள் 09.04.1976இல் ஆறு நகரங்களில் திரையிடப்பட்டது. ஏனோதானோ என்று விளம்பரம் செய்யப்பட்டது.
 

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 293
படம் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்து 21 நாட்கள் ஓடியது. மட்டக்களப்பிலும் திருகோணமலை யிலும் 15 நாட்கள் ஓடியது.
இப்படியான மொழிமாற்றுப்படமே 20 நாட்கள் ஓடி யது ஆச்சரியமே. "புதிய காற்று ரசிகர்கள் மத்தியில் ஏற் படுத்திவிட்ட நம்பிக்கையே அதற்குக் காரணம் என்று பலர் கூறினர்.
1983ஆம் ஆண்டில் லெனின் மொறைஸ் 'நெஞ்சுக் குத் தெரியும்' என்ற முழுநீளத் தமிழ்ப்படத்தை உருவாக் கியிருந்தார். நல்லூர் மனோகரன், ஹெலன்குமாரி போன்ற பலர் நடித்திருந்தார்கள்.
1983 ஜூலைக் கலவரத்தில் ஹெந்தல விஜயா ஸ்ரூடியோ’ எரிக்கப்பட்ட போது, இப்படமும் எரிந்து சாம்பலாகியது. அப்படத்தின் சில காட்சிகளை ஏற்கனவே பார்த்திருந்த சிலர் அருமையான காட்சிகள் என்று புகழ்ந் தனர். லெனின் மொறைஸ் 28.05.1994ல் காலமானார்.
(4) 'சுமதி எங்கே?
எச்.சி. சந்திரவன்ச முதலாவது 16 மி.மீ. தமிழ்ப்பட மான ‘சமுதாயம்' படத்தை உருவாக்கியவர். அதன் பின்பு பல சிங்களப் படங்களைத் தயாரித்தவர். படம் வெற்றி பெறுகிறதோ தோல்வி அடைகிறதோ அதைப் பற்றிக் கவலைப்படமாட்டார். தொடர்ந்து படங்களைத் தயாரித்துக் கொண்டே இருப்பார்.
‘சமாஜய', 'சுனில’, ‘சேயாவ பசு பசு', 'சுகதிய கறா’, ‘வனகத்த கெல்ல" போன்ற பல சிங்களப்படங் களைத் தயாரித்து வெளியிட்டார். கடைசியாக வெளி யிட்ட ‘வனகத்த கெல்ல' என்ற படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தைத் தமிழுக்கு மொழிமாற்றம்

Page 156
2.94 தம்பிஐயா தேவதாஸ்
செய்வோமா என்று எண்ணினார். தமிழ்ப் படத்துக்குப் பொருத்தமான எதையாவது படம் பிடித்து இப்படத்துடன் இணைத்து விட்டால் அதைத் தமிழ்ப்படமாகவே மாற்றி விடலாம் என்று தீர்மானித்தார். அதற்கு நல்ல கதை வசனம் வேண்டுமே?
'சுமதி எங்கே?" திரைப்படத்துக்குத் திரைக்கதை வசனம் எழுதிய திருமதி ராஜம் பஷ்பவனம்.
1960 ஆம் ஆண்டு முதல், சிறுகதை, கவிதை, கட்டுரை, சோதிடம், சித்த வைத்தியம், சங்கீதம், வில்லுப் பாட்டு, கேலிச்சித்திரம், வானொலி நாடகம் போன்ற பல்வேறு துறைகளில் புகழ் பெற்று விளங்கினார் ஒரு பெண் எழுத்தாளர். அவர்தான் திருமதி இராஜம் பஷ்
Go).
இவரே இப்படத்துக்கான வசனம் பாடல்களை எழுதி னார். எண் சாத்திரப்படி இப்படத்துக்கு 'சுமதி எங்கே
 

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 295
என்றும் பெயர் துட்டினார். இலங்கைத் தமிழ்த் திரைப்பட மொன்றுக்குத் திரைக்கதை வசனம் எழுதிய முதலாவது பெண்மணி திருமதி இராஜம் புஷ்பவனம் என்றே கூற வேண்டும்.
"പ" 22༧ ༈ །
f
'சுமதி எங்கே படத்தில் சுப்பு லட்சுமியும் காசிநாதனும்.
இப்படத்தில் நடிப்பதற்காக அப்புத்தளையிலிருந்து 'பிலோமினா சொலமன்' என்ற அழகிய தமிழ்ப் பெண்ணை அழைத்து வந்தார்கள். எண் சாத்திரம் பார்த்த இராஜம் புஷ்பவனம் இவருக்கு ‘சுபாஷினி என்ற புதிய

Page 157
296 தம்பிஐயா தேவதாஸ்
பெயரைச் சூட்டினார். சுபாஷினிக்கு இப்படத்தில் சிறு பாத்திரமே வழங்கப்பட்டது. ஆனால் இதற்கு அடுத்து வந்த இரண்டு படங்களில் இந்த சுபாஷினி கதாநாயகி யாகவே நடித்து விட்டார்.
'சுமதி எங்கே திரைப்படத்தில் ஜபீர்குமார், யோகேஸ்வரன், காசிநாதன், ஏ.எஸ். ராஜா, சுப்பு லட்சுமி, பூரீ லதா, சுசில்குமார், வீ. ராஜம், எம். தனுஸ் போன்றோரும் நடிக்க ஒப்பந்தமானார்கள். இசை அமைப்பை இந்திராணி செல்லத்துரை கவனித்தார். இவ ருடன் குலாம் யாஸின், உதயகுமார், ஜெயந்தி, ஜெய கெளரி, நளினி, லக்சுமி போன்றோரும் பின்னணி
பாடினர்.
இலங்கையில் உள்ள பல புனித தலங்களில் படப் பிடிப்புகள் நடைபெற்றன. திருக்கேதீஸ்வரம், முன்னேஸ் வரம், போன்ற இடங்களும் அவற்றில் அடங்கும். பணக் கஷ்டம் காரணமாக இப்படம் ஆறு வருடங்கள் தயாரிப் பில் இருந்து விட்டது. 27.11.1976 இலேயே திரைக்கு வந்தது.
காட்டில் கொள்ளைக்காரரிடம் சிக்கிய சுமதி அவர் களிடமிருந்து தப்பி விடுகிறாள். விவசாயிகளுடன் சேர் கிறாள். பிச்சைக்காராக்களுக்குப் புனர்வாழ்வு அளிக் கிறாள். பல சாகசங்களைப் புரிந்துவிட்டு இறுதியில் பெற்றோரை அடைகிறாள். இதுதான் 'சுமதி எங்கே யின் கதையாகும்.
இத் திரைப்படம் கொழும்பில் ஒரு வாரமும், யாழ்ப் பாணத்தில் இரண்டு வாரங்களும் ஓடியது. மட்டக்களப் பிலும் பதுளையிலும் தலா ஐந்து நாட்கள் ஓடியது.
பத்திரிகைகள் கூட ஏனோ தானோ என்று விமர்சனம் எழுதின. காய்த்த மரத்துக்குத்தான் கல்லெறி விழுமென் பது உண்மைதானே.

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 297
(5) ஒருதலைக் காதல் பெப்டிஸ் பெனாண்டோ பிரபலமான சிங்கள நடிகர், படத் தயாரிப்பாளர். அவர் "எக்திககதாவ' என்ற சிங்க
ளப் படத்தைத் தயாரித்தார். கதாநாயகனும் அவரே. கதா நாயகி ஜெனிடா.
நடிகரும் எழுத்தாளருமான கலைச்செல்வனின் தயா ரிப்பு மேற்பார்வையில் இப்படம் 'ஒருதலைக் காதல் என்ற பெயரில் தமிழுக்கு டப் செய்யப்பட்டது. டப் படங் களில் பாத்திரங்களின் உதட்டசைவுகளுக்கு ஏற்பவே வச னமும் பாடலும் எழுதவேண்டும். அதை ஈழத்து ரெத் தினம் பொறுப்பேற்றார். பாடல்களுக்கு எம். றொக்சாமி இசை அமைத்தார். தமிழ்ப் பாடல்களை முத்தழகும் கலா வதியும் பாடினார்கள்.
கதாநாயகனுக்குக் கலைச்செல்வன் குரல் வழங்கினார். கதாநாயகிக்கு செல்வம் பெர்னாண்டோவின் குரல் ஒலித் தது. ஜவாஹர், டொன் பொஸ்கோ போன்றோரின்குரல் களும் ஒலித்தன.
தமிழ்ப் பாடல்களுடன் மேலும் இரண்டு வேற்று மொழிப் பாடல்களும் இடம் பெற்றன. அவற்றில் ஒன்று லதா மங்கேஷ்கர் பாடிய ஹிந்திப் பாடல். மற்றையது அல்பிராடோ பெஞ்சமின் பாடிய கிரேக்கமொழிப் பாட லாகும்.
செவன் ஆட்ஸ் ஒருதலைக் காதல் 12.12.1980ல் திரையிடப்பட்டது. கொழும்பில் 6 வாரங்களும், யாழ்ப் பாணத்தில் 7 வாரங்களும் ஓடியது. அந்தக் காலத்துத் தமிழ்ப்படத்தின் சுமாரான வதுலைவிட இப்படம் அதிக வதுலைப் பெற்றது. 1981ல் நடைபெற்ற அனைத்து இலங்கை கத்தோலிக்க திரைப்படப் போட்டியில், (ஒ.சீ.ஐ.சீ) தரமான சிருஷ்டி என்ற பாராட்டையும் பெற்றது.

Page 158
தம்பிஐயா தேவதாஸ்
(6) பனிமலர்கள்
சிங்களத்திரை உலகின் சிறந்த இசை அமைப்பாளர் களில் சரத் தசனாயக்கவும் ஒருவர். 'அநுராகம் தமிழ்த் திரைப்படத்துக்கும் இவரே இசை அமைத்தார். இவர் மிஹிதும்சிஹின என்ற சிங்களப்படத்தைத் தயாரத்தார்.
இப்படத்தை டப் பண்ணி அதற்கு 'பணிமலர்கள்' என்று பெயர் வைத்தார்கள். அதற்கான தயாரிப்பு நிர் வாகத்தை எஸ்.என். தனரெத்தினம் மேற்கொண்டார்.
இப்படத்தில் விஜயகுமாரணதுங்கவும் மாலினி பொன்சேகாவும் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார் கள். இவர்களுடன் றோய்டி சில்வா. சுமனா போன்றோ ரும் நடித்திருந்தார்கள்.
மொழிமாற்றுப் படத்துக்கு வசனம் முக்கியமாகும். அதனைப் பி. எஸ். நாகலிங்கம் எழுதினார்.
தயாரிப்பாளரே இசை அமைப்பாளர் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே போடப்பட்ட மெட்டுகளுக்கு ஈழத்து ரெத்தினம், சண் முகப்பிரியா ஆகியோர் பாட்டெழுதினர். இவர்களின் பாடல்களை முத்தழகு அருள்தாஸ், சந்திரிகா, கலாவதி ஆகியோர் பாடினர்.
குரல்வளம் மிக்க குறத்தி ஒருத்தியின் கதையே இது. விஜயகுமாரணதுங்கவின் பாத்திரத்துக்குக் கலைஞர் ஆர். திவ்வியராஜன் குரல் கொடுத்தார். மாலினிக்கு ஆமினா பேகமும், சுமனாவுக்கு செல்வம் பெனாண்டோவும், றோய்டி சில்வாவுக்குக் கே. சந்திரசேகரனும் குரல் கொடுத்தனர்.
மெவுனா பிலிம்ஸ் "பனிமலர்கள்' 05.01.81ல் திரை யிடப்பட்டது. கொழும்பில் 3 வாரங்களும், யாழ்ப்

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள்
பாணத்தில் 2 வாரங்களும் ஓடியது. டப் படங்களைப் பொதுவாக ரசிகர்கள் கணக்கெடுக்காததைப்போலவே பத்திரிகை விமர்சகர்களும் கணக்கெடுக்கவில்லை.
—ി हैं. ※
. . ܨ ܘ ܒ 'பனிமலர்கள் படத்தில் விஜயகுமாரணதுங்கவும், மா லினிபொன்
॥

Page 159
300 தம்பிஐயா தேவதாஸ்
(7) இவளும் ஒரு பெண்
ஏற்கனவே 6 சிங்களப் படங்கள் தமிழுக்கு டப் செய் யப்பட்டு விட்டன. பின்பு எந்தப் படத்தை டப் பண்ணு வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.
யசபாலித்த நாணயக்கார, 2 தமிழ்ப்படங்களை இயக் கிவிட்டார். அவரது சிங்களப்படம் ஒன்றின் பெயர் 'கஹனியக்' என்பதாகும். இதைத் தமிழில் டப் பண்ண முடிவு செய்யப்பட்டது. இதற்கான தமிழ் வசனங்களை எஸ்.என். தனரெத்தினம் எழுதினார். அதற்கு 'இவளும் ஒரு பெண்’ என்று பெயர் துட்டினார்கள்.
படத்தில் விஜயகுமாரணதுங்க, மாலினி, வினா போன்றோர் நடித்திருந்தார்கள். பழைய தென்னிந்தியத் தமிழ்ப்படங்களின் தொகுப்புக்குத்தான் இதன் கதை.
ஈழத்து ரெத்தினம் அவரின் மகள் சாந்தி ரெத்தினம் ஆகியோர் பாடல்களை இயற்றினர். மொஹிதீன் பெக், முத்தழகு,--கலாவதி, சந்திரிகா, எஸ்.பி.ஆர். கணபதிப் பிள்ளை ஆகியோர் பாடினர். இவற்றுக்கான இசை அமைப்பு பி.எல். சோமபால, படத்தொகுப்பு எம்.எஸ். அலிமான்.
படத்தின் பெயர்தான் தமிழ், ஆனால் பாத்திரங்களின் ஆடை அணிகள் எல்லாம் இது ஒரு சிங்களப்படம் என்று அப்படியே காட்டியது.
1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் ‘கிறேஸிபோய்ஸ்" என்ற ஆங்கிலப்படம் இலங்கையிலும் சக்கைபோடு போட்டது. அதன் தாக்கத்தால் எஸ். ராம்தாஸ் குழு வினரும் ‘கிரேஸி கோமாளிகள்’ என்ற நகைச்சுவை நாட கத்தை நடத்தி வந்தார்கள். அதில் எஸ். ராம்தாஸ், ஆர். ராஜகோபால், எஸ். செல்வசேகரன், கே. சந்திரசேகரன் மணிமேகலை, ஈஸ்வரன் ஆகியோர் நடித்து வந்தனர்.

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 30
அந்த நாடகத்தையும் படம்பிடித்து இப்படத்துடன் இணைத்து விட்டனர்.
சிங்களத்தில் அதிக நாட்கள் ஓடிய இப்படம் ஏழு மாதங்களின் பின் தமிழ்ப் படமாக திரைக்கு வந்து விட்டது.
கிறேஸி கோமாளிகளுடன் 'இவளும் ஒரு பெண்' என்று விளம்பரம் செய்யப்பட்டது.
விக்ரம் பிலிம்ஸாரின் 'இவளும் ஒரு பெண் 07.08.1981இல் கொழும்பிலும் (ஜெஸிமா), யாழ்ப் பாணத்திலும் (லிடோ) திரையிடப்பட்டது.
இவ்விரு தியேட்டர்களிலும் ஒரு வாரத்தின் பின் இப் படம் எங்கே போனது என்றே தெரியவில்லை.
(8) அஜாசத்த
ஜாதகக் கதைகளில் 'அஜாசத்த மன்னனின் கதையும் ஒன்றாகும். இக்கதையை இதே பெயரில் சிங்களப்படமாக தயாரித்து இருந்தார்கள். படம் போட்ட இடங்களில் எல் லாம் அதிக நாட்கள் ஒடியது. பெளத்த மதக் கதை என்ப தால் சிங்கள மக்கள் பெருவாரியாகப் பார்த்தார்கள். அதிக அளவில் பணம் குவிந்தது.
இப்படத்தைத் தமிழிலும் உருவாக்கலாம் என்று யாரோ கதையைக் கொடுத்து விட்டார்கள்; தமிழ் சினிமா ஆர்வலர்கள் பலர், நாசுக்காக விஷயத்தை முடித்து விட் L-sTTEST.
ஏ. எஸ். ஜி. பிலிம்ஸ் 'அஜாசத்த 26.03.1982இல் இலங்கை எங்கும் ஆறு தியேட்டர்களில் திரையிடப் Lull-gi).

Page 160
E. தம்பிஐயா தேவதாஸ்
இப்படம் திரையிடப்பட்ட திகதியை நான் அப் பொழுதே குறித்து வைத்திருந்தேன். படம் ஒன்றோ இரண்டோ நாட்கள் ஓடியதாக ஞாபகம். அதன் பின்பு அவை எங்கே சென்றன என்றே தெரியவில்லை.
i tirič Passif : pasi fër
նքԵլք
오
'அஜாசத்த படத்தின் விளம்பர நோட்டிஸ்
 

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள்
'அஜாசத்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மட்டும் இசைத்தட்டாக வெளிவந்தது. பாடகர் வி. முத்தழகுவின் முயற்சியால் வெளிவந்த இவ்விசைத்தட்டு இப்பொழுது இலங்கை வானொலி நிலையத்தில் மட்டும்தான் இருக் கிறது.

Page 161
31. முடிவுரை
கரவெட்டியைச் சேர்ந்த கலைஞர் தேவதாசன் சென்னைச் சினிமா உலகுடன் நன்கு தொடர்புள்ளவர். இலங்கையில் தமிழ்ப்படமொன்றை உருவாக்க வேண்டு மென்ற முனைப்பில் நின்றார். தன் படத்துக்கு, ‘மாநகரக் காதல்" என்று பெயரும் வைத்துவிட்டார். இப்படத்துக்கான பாடல்களையும் இந்தியாவில் ஒலிப்பதிவு செய்துவிட்டார். யாழ்-சுதாகர் இயற்றிய பாடல்களுக்கு நீதிதேவன் இசை யமைத்தார். இப்பாடல்கள் ஒலிநாடாவாகவும் சீ. டி. இசைத்தட்டாகவும் வெளிவந்துவிட்டன. ஆனால் படம் வெளிவரவில்லை.
ஆனாலும் கலைஞர் தேவதாசன் உள்ளூர் திரைக்கலை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு 'சலனசித்திரம்' என்ற பெயரில் திரைக்கலைச் சங்கம் ஒன்றை உருவாக்கினார். அச்சங்கத்தின் மூலம் பல சினிமா ஆர்வலர்களை ஒன்று சேர்த்துச் ‘செந்தமிழ் ஃபிலிம் கொம்பனி' என்ற நிறுவனத் தையும் உருவாக்கினார். உள்ளூர் சினிமா முன்னோடிகளும் பிரபல தொழிலதிபர்களும் இக்கொம்பனியில் இணைந் திருக்கிறார்கள்.
எம். டபிள்யூ. இராஜசிங்கம், தெ. ஈஸ்வரன், எம். புஷ்பராஜா. எஸ். தியாகராஜா, மனோ கணேசன், சே. தில்லைநாதன், சி. தங்கராஜா, பி. ஆரூரன், காவலூர் ராஜதுரை போன்றோரே அவர்கள். இச்சினிமாக் கொம்பனி பல முயற்சிகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.
இலங்கையில், சினிமாச் சஞ்சிகை ஒன்றை வெளியிடுவது, திரைப்படக் கல்லூரி ஒன்றை நிறுவுவது, தரமான திரைப்படங்களை உருவாகுவது என்பன இக்கொம்பனியின் நோக்கம் என்று தெரியவருகிறது.
இச்சினிமா நிறுவனம் நிச்சயமாக 2000 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழ்த் திரைப்படங்களை உருவாக்கும் என்று நம்பலாம்.

தமிழ்ப்படங்களாக மாறிய சிங்களப்படங்கள் 305
எச்சரிக்கை
இந்நூலில் இடம்பெற்றுள்ள வாக்கியங்களையோ, புகைப்படங்களையோ, தனியாகவோ, கூட்டாகவோ, உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ மீள்பிரசுரம் செய்யக் கூடாது.
மீள்பிரசுரம் செய்யவேண்டிய தேவை ஏற்படின் ஆசிரியரின் அனுமதி பெற்றேயாகவேண்டும்.
மீறுவோர் மீது புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும்.

Page 162


Page 163
இவர், யாழ்ப்பானம் பு ரத்தைச் சேர்ந்த தம்பிஐயா ஐ புதல்வர். புங்குடுதீவு மகா விவேகானந்தாக் கல்லூரி, ம சாலை ஆகியவற்றின் பழை கொ|கொள்பிட்டி மெதடிஸ் ஆசிரியராகக் கடமைப்ாற்றுகி கூட்டுத்தாபனத்தில் உதவி . யாற்றுகிறார். நாளைய சந்ததி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வ யில் அதிதித் தயாரிப்பாளரா
ரூபவாஹினியில் 'காதம்பரி களைப் பேட்டி கண்டுவருகிற என்ற தொலைக்காட்சி நா இவரே .
சிறுகதை எழுத்தாளராக நுழைந்தார். நூற்றுக்கு மேற்ட யிருக்கிறார். சினிமா சம்பந்: எழுதியிருக்கிறார். 'நெஞ்சில் வகுத்த வழி', 'மூன்று பா, நாவல்களைத் தமிழில் மெ வெளியி ட்டிருக்கிறா it .. ' §୍UIf கதை என்ற இந்நூல், இவர!

திரு. தம்பிஐயா தேவதாஸ் |ங்குடுதீவு 11 ஆம் வட்டா ஐஸ்வரி தம்பதிகளின் மூத்த வித்தியாலயம், கொழும்பு |ட்டக்களப்பு ஆசிரிய கலா ய மாணவர். தற்பொழுது த தமிழ் வித்தியாலயத்தில் றார். இலங்கை ஒலிபரப்புச் அறிவிப்பாளராகவும் பணி , 'அங்கும் இங்கும்' ஆகிய ழங்குவதுடன் கல்விச்சேவை கவும் இருக்கிறார்.
மூலம் உள்ளூர்க் கலைஞர் ார். "இதயத்தில் ஓர் உதயம்' டகத்தின் தயாரிப்பாளரும்
வே இலக்கிய உலகிற்குள் பட்ட சிறுகதைகளை எழுதி தமான பல கட்டுரைகளை ஓர் இரகசியம்' , 'இறைவன் த்திரங்கள் ஆகிய மூன்று ாழிபெயர்த்து நூலுருவில் ங்கைத் தமிழ்ச் சினிமாவின்
து நான்காவது நூலாகும்.

Page 164
818 நற்சிந்தனை குருமணி
புலனவென்ற பெரியோர்க ளுளம்பூத்த மணி
பொள்ளாமணி யென்றும் புதுமணி இலமென்று வந்தடைந்தா ரிடும்பை கெடுக்கும்மணி
எவராலும் விலைமதிக்க வொண்ணு மணி பலநிறமாய்ப் பாரினிடைத் தோற்றும் மணி பச்சைமால் மெச்சிப் பணியும் மணி இலங்கையிலே யெங்கு மிருக்கும் மணி
என்னைப் பணிகொண்ட குருமா மணி.
கசிந்துருகிப் பாடுவார் காணும் மணி
கண்மூன் றுடைய கதிர்மா மணி − வலிந்தென்னைப் பணிகொண்ட வண்ண மணி
மலரோனும் மாலவனுங் காணு மணி இந்தோடு கங்கைசென்னி யேந்தும் மணி
இளநாகம் -மேனியிலே சாத்தும் மணி அந்தமணி இலங்கையிலே வாழும் மணி ,
ஆரேனும் தேடுவார்க் ககப்படுந் தெய்வமணி. 2
பந்தமெனும் பாழிருளைக் கிழிக்கும் மணி
பரவுவார்க் கிலவசமாய்க் கிடைக்கும் மணி அந்தமுட னதியில்லா அரும்பொன் மணி
அதிசயங்க ளநேகமெல்லாங் காட்டும் மணி முந்திய மணிக்கெல்லாம் முதலான மணி
மூவர்களுந் தேவர்களும் பணியும் மணி இந்தவளஞ் சேரிலங்கை வந்த மணி
எனையாண்ட குருமணியென் சொந்த மணியே. 3
ஓம் சிவாயநம
ஓம் சிவாயநம என்று சொல்லு , உண்மை முழுது மென்று வெல்லு நாம் நாம் நாம் என்று நில்லு நரக மோட்சம் நாடாமல் தள்ளு போம் போம் வினையென்று கொள்ளு பூரண நிட்டையிலே நில்லு - - - - - வீம்பிடும்பை யகங்காரம் கல்லு - விண்ணும் மண்ணும் கைவசமாய்த் துள்ளு. 1

நற்சிந்தனை 39
சற்குருவின் பாதத்தைப் போற்று தன்னைத் தன்னல் அறிந்து தேற்று நிர்க்குண நிட்டையிலே யேற்று நீநான் என்பதை மாற்று மல்லாகத்தில் சுன்னகத்தான் வீற்று மாசற் றிருப்பா னென்று சாற்று பொல்லாப் பிங்கில்லையென்று போற்று போக போக்கியம் எல்லாம் மாற்று. 2
அன்பருடன் கூடிநீ வாழ்த்து புண்ணிய பாவத்தை வீழ்த்து போக்குவர வில்லையென்று தேற்று எல்லாரி டத்து மன்பு காட்டு ஏகனநேகன் என்று நாட்டு நல்லூரான் திருவடியே பாட்டு நமச்சிவாய வாழ்க வென்று சூட்டு. 3
போக்கும் வரவு முள்ளா னில்லான்
போக்கும் வரவு முள்ளா னில்லான்
பூத கணங்கள் சூழப் பொலிவான்
தேக்கு மடியார் சிந்தையி லுள்ளான்
திருவே யுருவாய்ச் செறிந்த சீமான்
காக்குந் தலைவன் கருணை யுடையான்
கண்மூன் றுடையான் கால காலன்
பூக்கும் பொழில்சே ரிலங்கை வாழ்வான் 2:ዶ , -
பொன்ன ரடியைப் போற்ருய் மனனே
என்று மினியான் ஏத்து மடியார்
இடர்சே ராமே விடைமேல் வருவான் நன்றுந் தீது முள்ளா னில்லான்
நாரி பாகன் ஞான வுருவான் அன்று மின்று மென்று மாகி
யந்த மாதி யில்லாப் பெருமான் குன்றும் மலையும் பொலியு மிலங்கை
குடியாய்க் கொண்டா னடிகள் போற்றுதுமே 2

Page 165
320 நற்சிந்தனை
தம்மையன்றி வேறென்றுங் காணுர்
தம்மைத்தம் மாலறிந்த சாலப் பெரியோர்கள் தம்மையன்றி வேறென்றுந் தாங்காணுர்-பின்னைப் பிறப்பும் இறப்புமில்லைப் பேய்பித்தர் போல்வார் மறப்பின்றி வாழ்வார் மகிழ்ந்து.
மதியு மிரவியும் மன்னுஞ் சமாதி பதியும் படியாக்கிப் பாழ்த்த-விதிவென்று வாழ்வாரை வாழ்த்தி வளரு மடியவர்க்குத் தாழ்வுண்டோ தம்பிநீ சாற்று. 2
சாந்தம் பொறுமை தயைதவந் தானமிகு மாந்தருக்குத் துன்பம் மருவுமோ-சாந்தனையும் அன்னர்பா லன்புவைத்து ஆரறிவார் என்றகுரு தன்னுணை போற்றல் தவம். 3.
தவத்திற் சிறந்தார் தமதுயிர் போல உவப்புடனே யோம்பியொரு பொல்லாப்பு-மில்லென்ருன் தாளிணையைப் போற்றிச் சகத்துடன் கூடியே வாழக் கருதுவதே மாண்பு. 4
மாண்டார் மனத்தானை மண்விண்ணு மொன்முகி நீண்டான நெஞ்சமே நீநினைப்பாய்-வேண்டாமை வேண்டுவோர் வீடு பெறுவாரே வையத்தை ஆண்டாலு மென்ன மறி. 5 . سه
அப்படி யுள்ளதென் றன்பாகச் சொல்லியே அப்பன்செல் லப்ப னருள்தந்தான்-இப்பார் இருள்கடிந் துள்ளத் தெழுந்தவெல் லென்றன் அருள்சேர் மாதவத்தோ னன்று. 6

நற்சிந்தனை v 32
தேவாதி தேவ இராகம்-மோகனம் தாளம்-ஆதி
தேவாதி தேவ அடியார் இடர் பொடிபட அருள் தரு. (தேவாதி)
அநுபல்லவி −
ஆபாச மாபாச ஆழி வீழாவடிய வரும் கோபாலனும் மற்றுங் கோகனகத்தானுந் துதி. (தேவாதி)
சரணங்கள்
காலும் புன லணலும் வானும் நெடுநிலனும் சசி ரவியுமான மாவடிவா மேலை யெழுவிடத்தை மிடற்றி லடக்கிவைத்த விகிர்தன் எனையுடையான். (தேவாதி)
கலகஞ் செய்யும் இருண்ட காலனும் நெஞ்சமஞ்ச உலகங்களும் நடுங்க நடனமிடும் துதிமிகு யோகசுவாமி சொன்ன கீதம் விளங்கச் சதுர்வேத முழங்கத் தாண்டவமாடும். (தேவாதி)
செல்வன் சீரடிகள் காப்பு ஒருபொல்லாப்பு மில்லை யென்னு மோசையோடுவந்து
. . . நோக்கித் திருவருள் தீக்கை செய்த செல்வன்சீ ரடிகள் காப்பு. 1 ஆரறி வாரென் றுன்னு மரியமந் திரத்தைத் தந்த ,
பேரறி வுடைய செல்வன் பெய்கழ லென்றுங் காப்பு. 2
முழுவது முண்மை யென்று முகமலர்ந் v
- தெனக்குச் சொல்லிப் பழுதற வாண்டு கொள்ளும் பாதபங் கயமே காப்பு. - 3 பாராதி -பூத மெல்லாம் பரமன்றன் வடிவ மென்றே சீராக வெடுத்துச்சொன்ன செல்வன் தாளென்றுங் காப்பு.4 காயமே கோவிலாகக் கண்டுபா வனைசெய் யென்று நேயமா யெனக்குச் சொன்ன நிமலன்தா ளென்றுங்
. . காப்பு." 5 பற்றினற் பிறந்திறந்து பாரினில் சுழன்ரு யந்தப் ? பற்றிலை விடுவாயென்ற பரமன்தா ளென்றுங் காப்பு. 6
2.

Page 166
322 நற்சிந்தனை
வந்தனை செய்திடடா தம்பி
உண்ணுதே யுறங்காதே யூரூராய்த் திரியாதே பெண்ணுசை வையாதே-தம்பி!
பிரமத்தை யறிந்திடடா- 1
கண்ணுரக் கண்டிடடா காலமே லேற்றிடடா விண்ணுணம் பேசாதே-தம்பி! வேறுபொரு வில்லையடா. 2
எண்ணும லெண்ணிடடா இயைந்தபடி நடந்திடடா மண்ணுசை வையாதே -தம்பி! மலரடியைப் போற்றிடடா. 3
சுன்னகத் தானையென்றுந் தோத்திரம்நீ செய்திட்டா அன்னை பிதாக்குருவை-தம்பி! அன்புடனே போற்றிடடா, 4.
வலமிடமாய்ச் செல்லுகின்ற வாயுவைநீ தம்பியடா பலமுனக்கு வந்துவிடுந்->தம்பி! பற்றற்று நின்றிடடா, 5
குலநலம் பாராதே கோபம்நெஞ்சில் வையாதே தலமாறுந் தாண்டிடடா-தம்பி! தனிமையைநீ நாடிடடா. 6
உண்டில்லை யென்றுசொல்லி யுரையாட வேண்டாமடா கண்டு களித்திடடா-தம்பி! கருணைவெள்ளம் பெருகுமடா. 7
பண்டுசெய்த வல்வினைநோய் பாரிற் பறக்குமடா நன்றென்றுந் தீதென்றுந்-தம்பி!
நடுவாக நின்றிடடா. - - 8 கொன்ருென்றும் புசியாதே குருவாக்கை மறவாதே அன்றுமின்று மென்றுந்-தம்பி! அப்படியே யுள்ளதடா. 9

நற்சிந்தனை 323
மன்றுபறித் துண்ணுதே மாயத்திற் சிக்காதே குன்றுபோல் நின்றிடடா தம்பி! குறைவொன்று மில்லையடா. 10
இந்தப்பத்துப் பாடலையும் இரவும்பக லுஞ்சொல்லி வந்தனை செய்திடடா-தம்பி! வறுமைபிணி தீருமடா.
நினைமின் மாந்தர்காள்
நினைமின் மாந்தர்காள் நினைமின் மாந்தர்காள் நீடூழி சிவதொண்டன் வாழ்க. (நினைமின்) 1
அனைவரு மொன்றப்க் கூடி யவன ஆதரித் தன்பு பாராட்டிப் - , புனைந்து பூமாலை சூட்டிப் புகழ்ந்து (நினைமின்) 2 தினைத்துணைப் போதும் மறவாது சிந்தித்துத் தேவாரம் திருவாசக மோதி. (நினைமின்) 3
முனைத்து வரும்பெருங் கூற்றை யுதைத்த முதல்வனைத் திங்கள் தோறும் நும்மணம். (நினைமின்) 4
அணைந்து வந்து ஆசான் செப்பிய அரிய வாசகந் தருஞ்சிவ தொண்டன. (நினைமின்) 5 கனைக்குங் கடல்சூழ் இலங்கைத் தீவில் கதிரொளி போலொளி பரப்புந் தொண்டனை. (நினைமின்) 6
வினேப்பகை வெல்ல விருது கட்டிய வேத மோதும் வித்தகத் தொண்டன. (நினைமின்) 7
சுனைக்கும் நல்லூர் தூயசற் குருவின் துணையடிமற வாத தொண்டன. (நினைமின்) 8

Page 167
昭24 நற்சிந்தனை
சிவனடி வாழ்க
உலகெலா முணர்ந்த வொருவ னடிவாழ்க அலகிலா நாத னடியிணை வாழ்க ஈருய் முதலா யிருந்தோ னடிவாழ்க மாருக் கருணை வள்ளலடி வாழ்க சிவனெனும் நாமத் திருவுடையான் தாள்வாழ்க என்னை விலகா விறைவனடி வாழ்க அன்னைபோல் வந்த வவனடி வாழ்க பின்னைப் பிறவிப் பெருமா னடிவாழ்க முன்னைவினை தீர்த்த முதல்வனடி வாழ்க எல்லாமா யல்லவுமா யிருந்தோ னடிவெல்க கொல்லான யுரிபோர்த்த குழக னடிவெல்க தில்லையிற் கூத்தன் திருவடிகள் மிகவெல்க எல்லையில் லாத இறைவ னடிவெல்க கல்லான கன்னல் கறிக்கவைத்தோ னடிபோற்றி நல்லோரை நாளும் பிரியா னடிபோற்றி நாரணனுங் காணுத நாத னடிபோற்றி ஆரணமுங் காணு வடியிணைகள் தாம்போற்றி பூரண மான புண்ணியன்றன் தாள்போற்றி எல்லையில் லாம லிறந்து பிறந்தேனை எல்லையில் லாத கருணையின லாண்டபின்பு கண்டேன் களித்தேன் கலங்காத சித்தமின்று கொண்டேன் குளித்தேன் குவலயத்தி லாசையெல்லாம் விண்டேன் வெளிப்பட்டேன் வேறென்றி லிச்சையுமே அண்டாத வண்ண மடிமைகொண்ட பெம்மானே பொன்னன மேனியனே போக்குவர வில்லானே எந்நாளு மென்னை மறவாப் பெருமானே அடியார்த முள்ளமே யாலயமாய்க் கொண்டோனே கடியார் புரமூன்றுங் கண்ணழலாற் செற்றேனே முடியா முதலே முதலீறு மானவனே அடியேனை யாட்கொண்ட வையா பெருமானே பொடியாரும் மேனியனே பூங்குழலாள் பாகனே படிமீதில் வேடனிட்ட பன்றியூ னுண்டானே

நற்சிந்தனை Y 325
அடியார்க் கடியனே யானந்தக் கூத்தனே பாண்டியனுய் வந்துமண்ணிற் பாராண்ட பெம்மானே வேண்டுவார் வேண்டுவதை விரும்பிக் கொடுப்போனே இருநிலனய்த் தீயா யிருந்த விறையோனே மருவார் குழலியொடு மகிழ்ந்தங் கிருந்தவனே அப்பருக்குப் பொற்கா சளித்த பெருமானே ஒப்பிலா வொன்றே யொளியே யெனவழுத்தி எப்பொழுது முன்னை யிறைஞ்சத் தப்பிலாத் தண்ணருளைத் தந்தாள் தனிப்பொருளே.
ஆள வேண்டுமே
இராகம்- சங்கராபரணம் தாளம்- திரிபுடை
sis)
சஞ்சல மிகவும் மிஞ்சுதே சற்குருநாதா தமியேனை யாள வேண்டும். (சஞ்சல)
அநுபல்லவி
வஞ்சம் பொருமை கோபம் வரவர நெருக்குதே வாணு வினசை மிகமிகப் பெருக்குதே. (சஞ்சல)
gy Goto
எப்படிச் சொன்னலும்நீ யேனென்று கேளாமல் செப்படி வித்தை செய்தல் திருவருட் காகுமோ ஒப்புவமை யில்லாத அப்பனே செல்லப்பனே உன்றுணே யல்லாம லொருவரு மில்லை ஐயா. (சஞ்சல)

Page 168
326 நற்சிந்தனை தீருவருள் தருவாயே
இராகம்-மோகனம் தாளம் -ஆதி
பல்லவி தெய்வமே திருவருள் தருவாயே நீ.
அநுபல்லவி வையக மீதில் வணங்க அறியேன் பொய்யும் புலையுங் கொலையுந் தவிரேன். (தெய்வமே)
சரணங்கள்
கையும் மெய்யுங் கருத்துக் கிசைய ஐயா தந்தனை யதையா னறியேன் மெய்யா யுன்றன் மெல்லடிக் கபயம்
மேலும் மேலும் உனையான் வேண்டுவன். (தெய்வமே) செந்நெலுங் கன்னலுஞ் செறியும்நல் லூரில் dh
தேசிகன் தாசன் யோகசுவாமி சொல்லுங் கீதம் சொல்லுவார் கேட்பார் துன்பம் நீங்கி யின்ப மோங்கும். (தெய்வமே)
தாளம் பேர்டு தாளம்போடு தாளம்போடு தாளம்போடு தன்னையறிந்தோ மென்றுசொல்லித் தாளம்போடு 1 ஆழநீள மில்லையென்று தாளம்போடு அவனேநா மென்றுசொல்லித் தாளம்போடு 2 வாழுவோ மென்றுவென்று தாளம்போடு மாளமாட்டோ மென்றுசொல்லித் தாளம்போடு 3 நாம்நாம்நாம் என்றுசொல்லித் தாளம்போடு / நம்மையறிந் தோமென்று தாளம்போடு 4. போம்போம் வினையென்று தாளம்போடு பெம்மானுக் கடிமையென்று தாளம்போடு 5 ஒம்ஓம் என்றுசொல்லித் தாளம்போடு உள்பொருள்நாம் என்றுசொல்லித் தாளம்போடு. 6

நற்சிந்தனை 3.27
சமயங் கடந்த சங்கரா வடைக்கலம்
நேரிசையாசிரியப்பா
உவமையொன் றில்லா வொன்றே யடைக்கலஞ் சமயங் கடந்த சங்கரா வடைக்கலம் அமையு மடியா ரன்பே யடைக்கலம் உமையாள் மகிழு மொருவா வடைக்கலம் எந்தா யடைக்கல மிறைவா வடைக்கலஞ் சிந்தனைக் கரிய சிவமே யடைக்கலம் அந்தமு மாதியு மில்லாய் போற்றி அந்தமு மாதியு முள்ளாய் போற்றி ஒடும் பொன்னும் ஒன்ருய் நோக்குவார் தேடும் பொருளே செல்வமே போற்றி பாடு மடியார் பரனே போற்றி வாடு மடியார் மழையே போற்றி தேடக் கிடையாச் சிவமே போற்றி ஆடகத் தில்லை யரனே போற்றி குழைத்தெனை யாண்ட கோவே போற்றி மழவிடை யேறும் மாதவ போற்றி பிழைத்த வெல்லாம் பொறுப்பாய் போற்றி தழைத்தநற் கொன்றைச் சடையாய் போற்றி வரம்பி லின்ப வடிவே வாழ்க கரத்தி லங்கி கலந்தாய் வாழ்க சிரத்திற் றண்மதி தரித்தாய் வாழ்க புரத்தை யெரித்த புங்கவ வாழ்க வாழ்க வாழ்க நின்னடி வாழ்க வாழ்க வாழ்க வையகம் வாழ்க வாணுதல் மங்கையும் மகிழ்ந்தே.

Page 169
32& நற்சிந்தனை
அடைக்கலம் அடைக்கலம் 1
அளவிலா வொன்றே யன்பர்க ளன்பே உலகெலாம் நிறைந்த வொண்சுட ரொளியே மலமிலா முதலே மாசிலா மணியே பலரும் புகழ்ந்துரை பரம தயாளுவே நிலம்நீர் தீகால் வானப் நின்ற அலகிலா வாட லுடைய வப்பனே அழுதபிள் ளைக்காய்ப் பாற்கட லழைத்தாய் தொழுதசுந் தரர்க்காய்த் தூயபொன் வழங்கினய் வழுதிபோல் வந்து மாமுடி தாங்கிப் பழுதி லாத பார்தனை யாண்டாய் அந்தணன் வேண்ட வரிய கூற்றினை வெந்திறற் ருளால் வீழச் செய்தனை கண்ணப்ப னுானைக் கலந்து புசித்தாய் என்பது கேட்டுன் னிணையடி யடைந்தேன் என் பிழை யெல்லாம் பொறுப்பதுன் கடனே பொன் போல் மதியம் பொதிந்த சடையாய் அடைக்கலம் அடைக்கலம் அப்பனே படைக்கலம் நின்திருப் பஞ்சாக் கரமே.
அடைக்கலம் அடைக்கலம் 11
அடைக்கல மடைக்கல மரனே யடைக்கலம் விடைக்கல னுகந்த வேதாந்த விளக்கே ஆறும் பிறையுஞ் சூடிய வரசே கூறு மடியார் தங்கள் குருவே உருகி யுருகி யடியே னுணரப் பெருவரந் தருவாய் பேரரு ளாளர மாசிலா மணியே மன்னர்தம் மன்னவா காசி வாழும் கண்ணுதற் பரனே பூசிக்கும் யோக நாதன் பொற்பே வாசித்துக் காண வொண்ணு மறையே இந்திரன் முதலோ ரறியா விறையே சந்திரன் தயங்குஞ் சடையுடை யோனே அந்தமு மாதியு மில்ல3 வமலா சந்தத முன்பதஞ் சாற்றுவார் தமக்குச் சாலோக பதவி வீற்றிருக்க வைத்த விமலா வடைக்கலம்.

நற்சிந்தனை 329
அப்படியே உள்ளது
ஒருகறியும் ஒருசோறும் ஆக்கியுண்ணும் ஆசான்
ஒருபொல்லாப்பு மில்லையென்றன் உணர்.
ஒதாமல் வேதம் உணர்ந்த குருநாதன் உண்மை முழுதுமென்ருன் உணர். 2
நாமறியோம் என்ற நல்ல திருவாக்கை நாமறியச் சொன்னன் நய. 3 முடிந்த முடிவென்று முன்னளில் ஆசான் அடியவர்முன் சொன்னு னறி. 4.
அப்படியே யுள்ளதென அத்து விதப்பொருளைச் செப்பினன் செல்லப்பன் தேர். 5 நீறணியான் காவி யுடையணியான் நீணிலத்தில் தேறவைத்தான் என் முன் சிரித்து. 6 சிரித்துப் புரமெரித்த சிவனேயொப் பானென்ன மரித்துப்பிறவாத மாண்பளித்தான் மதி. 7 பாசத்தால் வெந்துநொந்து பாழாகப் போகாமல் நேசத்தால் ஆக்கினன் என்னை நினை. 8 தேரடியில் வீற்றிருப்பான் சிரிப்பான் சினத்திடுவான் ஆரறிவார் என்பா னவன். 9 பித்தனென்றும் பேசுவார் பேயனென்றுஞ்
சொல்லுவார் சித்தனென்றுஞ் சொல்லுவார் சிலர். 10
ஆர்கொடுக்க வாசையுடன் வந்தாரோ வவரைச் சீர்கேடாய்ப் பேசுவான் தேர்.
நரிபோல் உழலுவான் நாய்போல் திரிவான் பெரியவனென்னும் பேர்படையான் பித்தன். 12
மாருட்ட மாகவே வந்த படிபிதற்றித்
தேருமற் செய்வான் சிரித்து. 13

Page 170
330 . நற்சிந்தனை jTLOTÄ குடியுமல்லேம் நாகநாதன் குடிகானும்
நானென நீயென வேறில்லை யென நகையால் . தானெனைச் செய்தபிரான் அவன் சமர்த் தாரறிவார் கோனெனை யாண்டுகொண்டா னென்றுங் குறைவில்லைத் தேனெனச் சிந்தையுள்ளே யெந்தநாளுந் தித்திக்குமே. 1
பாரவன் விண்ணவன்காண் பன்னும்வேத
மொழியவன்காண் காரவன் கடலவன்காண் கறைக்கண்ட முடையவன்காண் சீரவன் திறலவன் காண் சிரம்பத் துடையானமுன் தேர நெரித்தவன்காண் தேவதேவர் தம்பெருமானே. 2
நாமார் குடியுமல்லேம் நாகநாதன் குடிகாணும் ஏமாந்து போவோமல்லே மினிமறலி தானுமஞ்சேம் சாமாறுந் தணிவிடையன் திருப்பாத மல்லாமல் நாமார்க்குந் தொண்டுசெய்யேம் இனிநாளை நினையோமே 3
போக்கொடு வரவுமில்லைப் பூமிவான மிங்கில்லை நீக்கற வோங்கிநிற்கும் நின்மலன் றன்னையன்றிக் காக்குமோர் தேவுமில்லைக் காலநே ரமுமில்லை நோக்குவார் தங்கட்கெல்லாம் நுணுக்கமாய்த்
t தெரியுமன்றே. 4
எத்திக்குமாகி யிருக்குந் தெய்வமே இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி பல்லவி முத்திக்கு வழிகாட்டும் -என்றன் மூட புத்தியை யோட்டும் k அநுபல்லவி எத்திக்கு மாகி யிருக்குந் தெய்வமே ஏழையடி யார்க்கு இரங்கு முய்யவே (முத்தி)
syGrotto சித்தத்துட் டித்திக்குந் தீங்கரும்பே தெளிந்த தேனே சீனியே பாகே பத்த ருள்ளத்தில் பாக்கிய வானே பாவ மனத்தும் நீக்கியாள் கோனே. (முத்தி)

நற்சிந்தனை 33 I. கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வம்
இராகம்-எதுகுலகாம்போதி தாளம்-மிஸ்ரம்
uრსის6მ. ኔ கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வமே கடைக்கண் பார்நீ தெய்வமே.
அநுபல்லவி ஒருத்தர் துணையுமில்லை யுன்றுணை யல்லாமல் உலகுயிர் பரமாகி நடிக்கின்ற செல்வமே. (கருத்தில்)
சரணம் எங்கெங்கு சென்ருலும் அங்கெங்கும் நீயே ஈசா மதுராபுரி வாசா மீனுட்சி -- நேசனே சொக்கநாதா யோகனுக்கருள் தாதா நின்று மிருந்துமுனை யென்றென்றும்
போற்றநான். (கருத்தில்)
அரகர சிவசிவ இராகம்-சுத்தபங்களா தாளம்-ஆதி
பல்லவி - . . அடியா ருள்ளத்தே வாழும் பரனே அஞ்சுவ தகற்றி யாள்வதும் பரமே
அநுபல்லவி
அரகர சிவசிவ சம்போ சங்கர
அறிஞரு மறிவரி தாகிய பொருளே (அடியா)
சரணம் " ... .
அறிவாருளரோ அகம்பிர மாஸ்மி
வெகுபலம்வாசி சமாதிநீ யோசி
வேண்டும் வேண்டும் அருள்நீ தாதா விக்ந விநாயக விமலா நமோ நமோ (அடியா)

Page 171
332 நற்சிந்தனை
இடர்படாதிருக்கத் தயவுவை - இராகம்-நளினகாந்தி தாளம்-ஆதி
- ubຄbຄທີ எனதுயானெனும் இடர்படா(து) இருக்கத்தயவுவை எம்பிரான்
அநுபல்லவி கண்ணுதலே கறைக்கண்ட நீ கருணுணந்த காமாட்சி பாகா வா (எனது)
Freyyub எந்நேரமும் உன்றன் பொன்னரடி ஏத்தித்தொழ வேழைக் கேயருள் அன்னே யுன்னை யல்லால்துணை இம்மாநிலம் எவரு மில்லையே. (எனது)
நிஜமா மான்மா தெளி இராகம்-உமாபரணம் தாளம்-ஆதி
பல்லவி
நிஜமா மான்மா தெளி அரகர சிவ நெஞ்சே யஞ்சேல் நீ வரோதய
V அநுபல்லவி தசமுகன் நெரிதரத் தனதடி யூன்றிய சாமிநாத பாதமே ஒதுமந்திரம் நீதமே (நிஜமா)
சரணம் சுதிரச பூரண பரப்பிரம தாரக தூய அற்புத சுகமார மாரண சுரசேவித தொந்தத்தசி சுந்தரா னந்தனே துய்யா மெய்யா சுபானுபவ.
(நிஜமா)

நற்சிந்தனை W 333
ஓங்கார நாதமே
இராகம்- ஹரிகாம்போதி தாளம்- ஏகம்
பல்லவி ஓங்கார நாதமே யோதவொண்ணுப் பிரமாதமே
அநுபல்லவி தாந் தாந் தோம் என்றிடு மோசை அற்புத விற்பன நிர்க்குண நேயம் (ஓங்கா)
சரணங்கள் உத்திக்கும் எத்திக்கும் அவரவர் சத்திக்கும் பத்திக்கும் அதிரச (ஓங்கார) ஒதும் வேதம் இதமுடன் - அன்றும் இன்றும் ஒருவிதம் (ஓங்கார) உம்பர்களு மிம்பர்களும் தினசரி எண்ணரிய சித்தர்களும் மிகவேத்தும் (ஓங்கார) ஒதிடவே யருள் பாலிக்குமே நன்மை பூரிக்குமே மனஞ் சேவிக்குமே யருள் (ஓங்கார) உயிரை யெழுப்பிச் சிவத்தி லேமனம் பயிலப் பயிலச் சுவைக்கு மேதினம் (ஓங்கார) ஆதரித் திணிமேற் சுகித்திட நீநினைத்திடு ஆசைவைத்திடு (ஓங்கார)
தொகையற நீங்காது எந்தநாளு மினிது முடிந்து இளந்தென்றலும் வீச விபுதர் பலர் ஒன்றுகூடி அஞ்சலஞ்சலென்று செஞ்சொல் மிஞ்ச நீங்காரம்பாட வருள்கூட நல்ல சித்தர்கள் பக்தர்கள் தித்தி மத்தளம் தத்தித் தகு தகு. -

Page 172
334 நற்சிந்தனை
திருவருட் செய லெப்படியோ இராகம் - காப்பி தாளம்-சதுர்சஜாதி ஏகம்
பல்லவி திருவருட் செய லெப்படியோ சீமானே கோமானே
அநுபல்லவி திருவளர் நல்லூர் மேவிய தேவே செல்லப்பா v (திரு)
சரணங்கள் வரவர மனத்திற் கவலைகள் மிஞ்சி வலிந்துகவரும் மாய வாழ்வினுக் கஞ்சி அரகரசிவனே சங்கராவென்று போற்றினேன் புகழ் சாற்றினேன் (திரு) இரவும் பகலு மிணையடி மறவேன் இனியடியேன் மண்ணிற் பிறவேன் பரவும் யோக சுவாமிகட் கன்பு
காட்டுமோ வொளி சூட்டுமோ! (திரு)
நீ வா தா அருள்
இராகம்-ஹம்சத்வனி தாளம்-ஆதி
Y. பல்லவி -, -,
நீ வா தா அருள் பத்திசெய்வோம் சிவ
நித்திய ஆனந்தம் நிர்மல சகிதம்
அநுபல்லவி ஆசாபாசம் ஆகிய விசனம் , நாசமாகவுன் ஞானப் பிரகாசம்
தாதா தொம்தொம் தகுதகு தகுதகு தளங்கு தரிகிட தக்கிட கிடஜாம் (நீவா)

நற்சிந்தனை 3.35
SFDJGTo
பாராய் என்முகம் பரமயோகப் பரப்பிரவேசந் தாராய் சகலலோக வஸ்ய சம்மதம் பராபர பரிபூரணம்
கோலாகல குமாரி கவுரி கும்பிடும் புராரி பிரமாதிதேவர் கொண்ட கோடி பழிவிண்ட விபுதன் குஞ்சிதாம் புயமலர் நெஞ்சில் வைத்திடு குற்ற மற்றசிவ யோக நற்றவன் குருகுல வாசந் தருமொரு வசனங் கருது மவர்மிடி காணு தோடுங் காவாய் அடியனைப் பூணு யன்பு ஹம்சத்வனி பேசிடு பேரின்பம் (நீவா)
' ennsnamu!
மறவாதே என்மனசே!
இராகம்-சங்கராபரணம் தாளம்-ஆதி
பல்லவி
குருராஜ ராஜ பரசிவ பக்தி தன்னைநீ மறவாதே யென்மனசே
சரணங்கள்
அச்சுதன் அயன்முதல் அமரருங் காண்கிலர் அடிமுடி யில்லை யறி அண்டசரா சரங்கள் அவையனைத்தும் அவனே தானென வறியென் மனசே (குருராஜ)
தவஞ் செய்வோர்க் கனுகூலன் சர்வ சாட்சிப் பிரதாபன் அவனிவன் என்னும் மாயம் அனைத்து மில்லாத சிவயோக நாதன் விசுவாசன் சிவராசன் (குருராஜ)

Page 173
336 நற்சிந்தன்ை
தர்மமெங்குந் தங்க அருளையா V இராகம்-காம்போதி தாளம்-ஆதி
பல்லவி
ஐம்பொறி மாட்டு மனசுபோய் அலைந்திடிலோ பழி பழி
அநுபல்லவி நம்பினேன் நானே நடராஜ நீவாகா நியாயந்தானே கைவிடச் சற்குருநாதா (ஐம்)
சரணம் t சர்வகுணுதி சசிதவழ் சேகர சாமுண்டி சமேத சாமி சர்வாலங்கிர்த சகள நிஷ்கள மங்கள சுரசேவிதபானு சித்தம்வைத்து ஆண்டிடு சின்மய ஜெகசோதி சாயுச் சியமும் வேண்டினேன் ஆண்டி சர்வதியாகந் தந்தேன் தாளைத் தலையிற் சூட்டிடு தர்மமெங்குந் தங்கக் குறைகள் மங்க அருளையா (ஐம்)
www-Wawa wanamwikhawhnw
அருவமு முருவமு மானுன் ஒரு பொல்லாப்பு மில்லையெனவே-முன்னுள்
ஒதினன் உண்மை முழுது மெனவே பருவத்தில் மழைபெய்தாற் போல-ஐயன் பந்தத்தை நீக்கி வளர்த்தா னன்பாலே 2 அருவமு முருவமு மானன்- என்னை ஆட்கொள்ள வந்தான் நல்லூரிற் றணுய் 3 கருவிக ரணங்க ளெல்லாந்-தத்தம் கருமத்தை விட்டுக் காவலுக் குள்ளாய் 4. வருவதும் போவது மின்றித்-தூய மெளன நிலையில் நிலைத்தது தானே 5
ஆரு மறியா ரெனவே - அப்பன் "அப்படி யுள்ளதென் முனறி வாயே. -x 6

நற்சிந்தனை 337
உன்னடிமை நான் ஐயனே
இராகம்-கானடா தாளம்-திஸ்ரம்
பல்லவி
உன்னடிமை நான் ஐயனே உளமகிழ்ந்து பார் மெய்யனே
சரணங்கள்
பொன்னடி மாதவர் சேர்பெரு முத்தனே
பூங்கொடியாள் பங்கா
உன்னடி யென்முடி வைத்தினி யாளுவாய்
ஓங்காரத்துட் பொருளே (உன்)
ஓயாமற் பொய்பேசி உழைக்கின்ற வுலுத்தரை
உறவென்றிருந்து விட்டேன் வாயார வாழ்த்தி வணங்கு மடியாரை
மனசாரப் போற்ற வைப்போய் (உன்)
சித்தத்துட் டித்திங்குந்தேனே பாலென்று
சிந்தனை செய்த டியேன் இனியுத் தமரோடு பிரியாமல் வாழ
உன்னருள் தாருமையா (உன்)
நீயே நானென்று நினைக்கும்மெய் யடியாரை
நேயத்தொடு வணங்கிடுவார் தாயே யனைய சங்கரனே வந்து
தண்ணருள் தாருமையா (உன்)
22

Page 174
338 நற்சிந்தனை
நீ அருளாவிடிற் கதியேது
இராகம்-அடாணு தாளம்-ஆதி
பல்லவி
நீ யருளா விடிற் கதியேது-ராமா நீ ரவிகுல திலகம் உலகுக் கெல்லாம்
அநுபல்லவி
தாயுந் தந்தையுஞ் சகலமும் நீயே தமியேன் உயிருக்குயி ராகிய பரனே (நீயரு)
agFJRRTo
பாற்கடல் தன்னிற் பள்ளி கொள்வோனே பாக்கிய லட்சுமி தன்மண வாளா ஆர்க்கு முணர்வரி தாகிய பொருளே அடியேன் மனத்தைக் கொள்ளை கொண்டவனே நீக்கமற் றெங்கும் நிறையும் நின்மலனே நினையும் யோக சுவாமிதன் துணையே போக்கும் வரவு மில்லாப் பொருளே பூதலத் துள்ளோர் போற்றும் அருளே (நீயரு)
சிவசிவ வென்றுசொல்லிப் பேணேனே இராகம்-செஞ்சுருட்டி தாளம்-ஆதி
பல்லவி.
தில்லையம்பலத்தைக் கண்ணுற் காணேனே சிவசிவ வென்று சொல்லிப் பேணேனே
அநுபல்லவி
நல்லவர் கூட்டத்தைத் தேடிநா டேனே அல்லும் பகலும் பாடியா டேனே (தில்லை)

நற்சிந்தனை 339
சரணங்கள்
கல்லை நிகர்த்த மனமுரு காதோ காமக்குரோத மோகங் கருகாதோ (தில்லை) எல்லை யில்லாத வின்பம் பெருகாதோ ஏழைகள்மே லிரக்கம் வாராதோ (தில்லை) நில்லாத காயத்தை நான்வெல் லேனே நீயேநா னென்றுசொல்லி நில்லேனே (தில்லை) உல்லாச மாக வெங்குஞ் செல்லேனே உண்மையைச் சொல்லிச்செல் கில்லேனே (தில்லை) இல்லையென் றெவர்க்கும் நான் சொல்வேனே இனிய செஞ்சுருட்டியைக் கல்லேனே (தில்லை)
சிவனே உன் தரிசனந் தாராயோ இராகம்- ஆனந்தபைரவி தாளம் -ஆதி
u sibsna சிவனே யுன்தரிசனந் தாராயோ தேவாதி தேவர்தொழும் பெருமானே
அநுபல்லவி தரிசனந் தாராய் தமியேனைக் காவாய் தத்துவா தீதனே சங்கர சிவசம்போ (சிவனே)
சரணங்கள்
அரிய விருவரும் அறியாத விமலனே கரியுரி போர்த்த கருணைக் கடலே திரிபுர தகனனே தில்லையில் வாசனே சிவகாமி யம்மை பூசிக்கு மீசனே (சிவனே) வரவர மனசு சங்கடப்படுகுதே வாராய் துயர்தீராய்: கண்பாராய் என்னைக்காவாய் இரவும் பகலுமுன்றன் இணையடி மறவாமல் பரவி யானந்த பைரவி ராகம் பாடி. (சிவனே)

Page 175
340 நற்சிந்தனை
எல்லாஞ் சிவன்செயலென்றிருப்போம் தோன்ருத் துணையை யென்றுந் துதிப்போம் தூயதிருப் பாதத்தைப் பதிப்போம் ஈன்ருளையு மப்பனையும் மதிப்போம் எல்லாஞ் சிவன்செயலென் றிருப்போம் ஆன்ருேர் விதித்தபடி நடப்போம் அந்திசந்தி மந்திரத்தைப் படிப்போம் நான் ரு னெனுமிரண்டுந் தடுப்போம் நாதனடி யிணைக்கீழ்க் கிடப்போம் வஞ்சம் பொருமை நெஞ்சில் வையேம் சஞ்சலத் தால் மிஞ்சி நாங்கள் நையேம் கொஞ்சம் கொஞ்ச மாய்மனத்தை வெல்வோம் கூடாத கூட்டத்தில் நாங்கள் செல்லோம்
வாரா வரவினில் வந்த சஞ்சீவியே
தோடுடைச் செவியனே தோன்றத் துணையே பீடுடைப் பெரியோர் பெட்டகத் தணியே தந்தையுந் தாயும் மைந்தருந் தமரும் எந்தையே நீயென் றெண்ணியெப் போதும் விந்தைசே ரவர்பணி வேண்டியா னுற்றி இவ்வுல கத்தி லிறுமாப் புடனே சந்ததம் வாழத் தயைபுரி யுமையாள் வந்தனை புரியும் வண்ணமே ணியனே கந்தமுங் காயுங் கடும்பசி மூடியே வந்திடி னுண்ணும் மாசிலா மனத்தர் சிந்தையிற் குடிகொள் தேசிக மூர்த்தி தீராக் கோபமுஞ் சித்தக் குரோதமுஞ் நீரா யுருக்கும் நெறியிது காணெனத் தாரா விடில்யான் தளையுண் டுழல்வேன் வாரா வரவினில் வந்தசஞ் சீவியே , பழியொன்று பூணு வழிபடு தெய்வமே
ஒழியா வின்பமாய் நின்று − தெளியாவென் சிந்தை தெளிந்திடச் செய்யே

நற்சிந்தனை 341 நல்லூரில் ஆட்டக்காரன்
நல்லூரில் ஆட்டக்காரன் நான்வணங்கும் குருநாதன் கல்லைக்க ரைக்குஞ்சித்தன் கருணைபூத்த திருமுகத்தான்
இல்லை யென்னுஞ்சொல்லை இல்லாம லாக்கிடுவான் அல்லும் பகலுமென்றன் அகத்தினிலே வாழ்ந்திடுவான்
ஒருபொல்லாப்பு மில்லையென்பான் உண்மை
முழுதுமென்பான் கருப்பையிலே வாராமல் காத்தென்னையாண்டுகொண்டான்
தேரடியில் வீற்றிருப்பான் செல்லப்பனென்னும் பெயரா 7 ஆரறிவா ரென்றுசொல்வான் அன்னையைப்போல்
அன்புடையான்
பொய்சொல் லாதேயென்பான் மெய்யுஞ்சொல்
லாதேயென்பான்
வல்லபங்கள் பேசிவந்தோர் வாயை யடக்கிடுவான்
வித்தையொன்றுஞ் செய்துகாட்டான் விவேகமற்றேர்
போலிருப்பான் அத்துவா மார்க்கம்விட்டு ஆறியி ருந்திடுவான்
*** --W*-.*W*A*a*l*ið
சிவசிவ என்றிடத் தீரும் பாவம்
சிவசிவ என்றிடும் போதினிலே செய்த
பாவமெல்லாம் ஒடும் பாரினிலே அவனிவன் என்கின்ற வார்த்தையெல்லாம் போக்கி
ஐயன் திருப்பாதம் உண்மையதாய் நோக்கி தவம்செய்வார்தமைத் தானக நோக்கிச்
சச்சி தானந்தம் தன்னிடத்தே தாக்கில் உவமையில் லாமுத்தி நிலையிலே போக்கும்
உண்மை யறிந்து சொன்னேன் யோகசுவாமி.

Page 176
344 நற்சிந்தனை
இதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய்
பல்லவி w
என்னிதய வெளியினிலே பொதுநடம் புரிகிருய் ஏகாம்பர நாதனே சிவனே
அநுபல்லவி
பதசாரி தோறும் உன்னதி சிலம்பொலி கேட்டுப் பரமானந்தம் பெறுவேன் சிற்ச பேசனே -என்னிதய
சரணங்கள் எனதென்ற கங்கரிக்கும் மனதுப னரிந்துவர இருவினைக் கட்டுகள் இற்றுச் சுயேச்சைபெற அனவரதமு முன்னை நினைந்து கசிந்துருகி அத்தாவுன் மலரடிப் பித்தணுய் வாழ்ந்திட-என்னிதய ஹரஹர வென்று அரவங்கள் கோஷிக்க அன்பு மகரவீணை தும்தும் என வாசிக்க சிரசி லானந்தஞ் சிலிர்த்து நடமாடச் செந்தமிழ் வாணியுமுன் மந்திரப் பொருள்பாட
- என்னிதய
GFA Gig) LOGOof எல்லை யெமக் கில்லையென்று சொல்லு மணியே எல்லாஞ் சிவன் செயலாய்ச் சொல்லு மணியே இல்லையென் ருெருபோதுஞ் சொல்லாய் மணியே ஈச ஞெருவ னென்று சொல்லு மணியே அன்னைதந்தை சுற்றத்தைப் பேணு மணியே அயலவர் தம்முறவு வேணு மணியே பின்னைப்பொய் சொல்லாமல் காணு மணியே பிறர் பொருள்மே லாசையின்றி வாழு மணியே என்னையினி மறவாமல் பாடு மணியே ஈச னடியவரைத் தேடு மணியே
முன்னை வினையெல்லாமோடு மணியே முருகன் திருவடியைக் கூடு மணியே.

நற்சிந்தனை 345 சிவனடியைச் சிந்திநெஞ்சே
அன்பிலா ரோடுறவு கொள்ளாதே அடுத்தோருக்குத் துன்பத்தைச் செய்யாதே சூதும்வாதும் பேசாதே இன்பத்தில் துன்பத்தில் ஏகமன சாயிருந்து தென்புடனே யரன்பாத மந்திசந்தி சிந்திநெஞ்சே.
ஆரோடும் பகையாதே ஆசைதனைக் கொள்ளாதே ஊரோடே ஒத்து நட உண்மையைத் தேடிக்கொள் நீரோடே வெகுநேரம் நீந்திவிளை யாடாதே
சீரோடே. சிவன்பாத மெப்போதுஞ் தேடுநெஞ்சே,
இடுவதை மறவாதே ஏழைகளை இகழாதே கெடுவது நினையாதே கேளிரைப் பிரியாதே சுடுவது சொல்லாதே துணையின்றிச் செல்லாதே படுதலையிற் பலிகொள்ளும் பரமனைப் பாடுநெஞ்சே.
ஈவது விலக்காதே யிழிதொழில்கள் செய்யாதே சாவது வந்தாலுஞ் சத்தியத்தை மறவாதே ஆவதும் அழிவதும் நமக்கில்லை யெனவறிந்து vn தேவர்கள் தொழுதேத்துஞ் சிவனடியைச் சிந்திநெஞ்சே.
அன்பாய் இருப்போமே
அன்பே சிவமென்று கிளியே! ஆன்ருே ருரைத்தார்கள் ஆனமையால் நாங்கள் கிளியே! அன்பாய் இருப்போமே இரப்பவர்க் கில்லையென்று கிளியே! எடுத்துநீ
சொல்லாதே
ஈவது நன்மையெனக் கிளியே! எடுத்தவ்வை சொன்னரே. சாவது வந்தாலுங் கிளியே! சத்தியம் மறவாதே தேவர்கள் வந்தாலுங் கிளியே! சித்தங் கலங்காதே தாய்சொல்லைத் தட்டாதே கிளியே! தந்தைசொல்
.மந்திரமே ۔

Page 177
346 ܪ f நற்சிந்தனை
இலங்கை என்னூர்
எல்லாமென் னுரர்எல்லா மென்சுற்றத் தார்களே எல்லா மெனக்குதவி யென்றறிந்தேன்-நில்லாத நீர்சடைமேற் கொண்ட நிமல னெனக்கன்பன் சீரிலங்கை யென்னுரர் தெரி.
நாமார்க்கும் ஆளல்லேம் நாளை வருவதெண்ணேம் ஆமா றறம்புரிவே மார்க்குமஞ்சேங்-கோமாற்கே மீளா வடிமையாய் மேதினிமேல் வாழுவோம் தாளா ரிலங்கையென்னுடர் தான்.
மெய்யுரைப்போம் மேன்மக்கள் நட்பை விரும்புவோம் செய்வன வெல் லாந்திருந்தச் செய்குவோம்- வையகத்தில் தாமரைமேல் நீர்போற் ருனியைந்து வாழுவேம் காம ரிலங்கை யென்னுரர் காண்.
சூரியன் தோன்றுதற்கு முன்ன ரெழுந்திருப்பேம் சீரியவா யாற்சிவனைப் பாடுவேம்-பாரினிலே தண்ணுர் பொழிலுந் தடவரையு மாறுகளும் நண்ணிலங்கை யென்னுரர் நய.
புன்சொல் புறங்காப்பேம் போன வகையெண்ணேம் எஞ்செயலா லொன்றுமில்லை யென்னுவேம் - வன்சொற் களை வேம் கனமேகங் கண்ணுறங் கின்பப் பழவிலங்கை யென்னுரரே பார்.
சித்தி பெறலாம் திருவெல்லாஞ் சேரலாம் பத்தியின்றேல் என்ன பலனிவற்ருல் - எத்திசையும் மெச்சு புகழிலங்கை மேலோர்கள் வந்துதினம் நச்சு மிலங்கையென்னுரர் நாடு.
நாடி யொருகருமம் நாடோறு மாற்றுவார் வாடி மெலிவதில்லை மாநிலத்தில்-நீடியசீர் கொண்ட விலங்கையிலே கோடிசனம் வந்துபணம் கொண்டுசெல்வார் என்னுரர் குறி.
கருங்குயில்கள் பாடுங் கரியினங்கள் கூடும் நெருங்குங் கதலிபலா தென்னை - ஒருங்குதிரை
கொண்டுவந்து முத்தங் கொடுக்கும் வளநாடு கண்டுகொண் டேனிலங்கை காண்.

நற்சிந்தனை 347 ܕ
மாது பங்கனை மறக்கவு மாமோ
ஒப்பில்லாத இலங்கைநகர் ஒருவன் றிருவடியைத் தப்பில்லாமற் போற்றுவார்கள் சாகார் பிறவாரே கொப்பில் மந்தியோடு குயில்பயிலும் பொழில்நீழல் எய்ப்பிலாத விளமான் மரைமேதி துயில்கொள்ளும்.
கடல்சூ Nலங்கைநகர் மேவிய கடவுள்பாதம் திடமோ டெந்தநாளுஞ் சிந்திப்பார்கள் மிடியாலே புடிவிதனில் துயரால் நொந்துபோகார் வரைமீது அடவிதனில் ஆமா புலியான துயில்கொள்ளும் கரையு மன்பர்தங் கருத்தி னனையே உரைசெய் வார்க்கொரு குறையு மில்லையே.
ஆடு பாம்பணிந் தாடு வான் கழல் பாடு வார்களே பரம யோகிகள்
அறஞ்செய்வார் தங்க ளகமே கோவிலாய் நிறைஞ்சு நிற்குமே நிமலன் நாடொறும் புறத்திற் கூறுவர் புகழைப் பெற்றிடார் அறத்தைக் கூறுவா ராக்கஞ் சேர்வரே.
காலை மாலையுங் கடவுள் பாதத்தைச் சால வேதொழு வார்க ளன்பரே.
ஒது மன்பர்க ளுள்ளத் துளான மாது பங்கனை மறக்கவு மாமோ
பாது காவெனைப் பகலு மிரவும்
மோதுங் கரைசேர் முதுலங்கை யானே.
கூடலி லன்று குதிரையை நரியாய் நர்ட வைத்த நம்பனை யல்லால் பாட்ட வும்வேறு பரம்பொரு ஞண்டோ மாடமலி யும்மிலங்கை மாநக ரானே.

Page 178
348 நற்சிந்தனை.
கரையு மன்பர்கள் கண்டுகந் தானும் வரையை யெடுத்த மன்னநெரித் தானும் மரையும் மானும் மயிலினமுங் குயிலும் நிரைநிரையாய் நிற்கு மிலங்கைமா நகரானே.
மத்தம் மதியொடு மாநா கத்தை வைத்த சென்னியன் வாணுதல் கணவன் புத்தஞ் சமணம் போயக லும்படி சித்தத்திற் கொண்ட சீரிலங்கை யானே.
சிவ சிவ சிவ
அன்பரன்பது சிவசிவசிவ ஆசையற்றது சிவசிவ சிவ இன்பமயமது சிவசிவசிவ ஈசனுயிர்தொறுஞ் சிவசிவசிவ முன்பின் அற்றது சிவசிவசிவ மோனமுதலது சிவசிவசிவ தன்வயத்தது சிவசிவசிவ சர்வவல்லபஞ் சிவசிவசிவ.
பொன்னிறத்தது சிவசிவசிவ போக்கிலாதது சிவசிவசிவ என்னிடத்தது சிவசிவசிவ எங்குமுள்ளது சிவசிவசிவ மண்ணிடத்தது சிவசிவசிவ மந்திர ரூபஞ் சிவசிவசிவ விண்ணிடத்தது சிவசிவசிவ வேதமானது சிவசிவசிவ. 2
மட்டிலாதது சிவசிவசிவ மங்கைபங்கது சிவசிவசிவ முட்டிலாதது சிவசிவசிவ மூவராவது சிவசிவசிவ கிட்டொனதது சிவசிவசிவ கிருபையுள்ளது சிவசிவசிவ எட்டிலானது சிவசிவசிவ ஏகமாவது சிவசிவசிவ. 3
அன்னையாவது சிவசிவசிவ அப்பணுவது சிவசிவசிவ முன்னையுள்ளது சிவசிவசிவ முனிவர்புகழ்வது சிவசிவசிவ என்னையாள்வது சிவசிவசிவ எடுத்த திருவடி சிவசிவசிவ பின்னையென் பிழை சிவசிவசிவ பேதாபேதஞ் சிவசிவசிவ. 4
3. 4.

நற்சிந்தனை s - 849
இலங்கை நகரானே
சிந்தை செய்கதிர் வேலனைத் தந்த எந்தையை யெந்த நாளும் மறந்திடார் பந்தங்க ளற்றுப் பரமவி டெய்துவர் கந்தம் பொலியு மிலங்கைக் கடிநகரானே.
கண்மூன் றுடைய கடவுளை நாளும் பண்முறை தப்பாது பாடு மடியார் மண்ணுள வளவும் மனக்கவலை எய்தார்கள் விண்டொடு வரைமே விலங்கைமா நகரானே. 2
மண்முதற் பூதங்கள் வகுத்த வொருவனை எண்முத லெல்லா மாயிருப் பானைப் பெண்ணுமை யாளைப் பிரியாப் பெருமானை விண்ணுேர் விரும்பு மிலங்கை நகர்கண்டேன். 3.
ஒதுபல் வேத முரைசெய்த நாவானே போது கங்கை சூடிய புனிதனே தீதுசேர் தக்கன் வேள்வி சிதைத்தானே மீதுவண் டார்க்கு மிலங்கை மேவியபரனே, 4
கமல நான்முகன் கண்ணனுங் காணு தமல னேயென வாரருள் செய்தானே , பவன மனலம் பாராகிய பரமனே உவமைசொல் லவொண்ணு லங்கை நகரானே.
பாலனுக் காகப் பாற்கடலை யழைத்தானை ஞாலம் புகழ்ஞான சம்பந்தன் தந்தையை ஆல மரத்தின்கீ ழன்றற முரைத்தானைக் கோலக் குயில்கூவு மிலங்கையிற் கண்டேனே. 6
சூதான வெளியிலே சும்மாவிருப்போம்
ஒம்நம சிவாயவென உருவேற்றுவோம் உருகி யுருகிநாம் உணர்வவிழ்வோம் வீம்பிடும்பை யகங்காரம் விட்டுவிடுவோம் வேதாந்த வீட்டிலே குடியிருப்போம்

Page 179
350 நற்சிந்தனை
நாம்நாம் நாமென நடமிடுவோம் நல்லவிருளை நல்ல வொளியாக்குவோம் போம்போம் வினையெனப் போற்றிசெய்குவோம் பூரண மானநிட்டை புகுந்திடுவோம் ஆம்ஆம் நமக்கெல்லாம் ஆய்விடுமென்போம் அவனேநா மென்றுசொல்லி யானந்தங்கொள்வோம் சந்திரனைச் சூரியனை ஒன்றுசெய்குவோம் சச்சிதா னந்தத்தேனைத் தானருந்துவோம் இடைகலை பிங்கலை யிரண்டுமடைப்போம் எழிலாருஞ் சுழுமுனைக்குள் ஒடுங்கிநிற்போம் பஞ்சவர்ணப் பரிமேலே பவனிசெல்வோம் பாரும்விண்ணும் ஒன்ருகப் பண்புசெய்குவோம் ஆதார மாறுக்கு மப்பாலேசெல்வோம் அங்கே திருநடனங் கண்டுகளிப்போம் சூதான வெளியிலே சும்மாவிருப்போம் சுகம்சுகம் எந்நாளு முற்றிடாதோ.
9ILIT Liguodalib
இராகம்-புன்னுகவராளி தாளம்-ஆதி
பல்லவி அப்பா பரமசிவம் (அப்பா)
சரணங்கள்
அன்றுதொட்டு இன்றுமட்டும் அடியேனுந் தேவரீரும்
அத்துவித மாயிருந்த
வித்தைதனை யாரறிவார் (அப்பா) ஒப்பாரும் மிக்காரு மில்லா வொருபொருளே தப்பேது யான்செயினும் அப்பா பொறுத்தருள்வாய் அப்பாலுக் கப்பாலா யாருமறி யாதவண்ணம் ஆடுந் திருநடனங் காண வருள்புரிவாய் (அப்பா)

நற்சிந்தனை
அத்துவிதப் பொருள் காப்பாம்
அத்துவி தப்பொருள் காப்பாம்-எனக் கடியார்க ளென் றென்றுங் காப்பாம்
சித்தருந் தேவருங் காப்பாம் என்றன் சித்தத் திலங்குந் திருவருள் காப்பாம்.
அட்ட வசுக்களுங் காப்பாம் - எனக் கானந்த மான பராபரன் காப்பாம் எட்டுத் திசைகளுங் காப்பாம் - எனக் கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம்.
பிராண னபானனுங் காப்பாம் - என்னைப் பிரியா திருக்கும் பிரணவங் காப்பாம் அராவணி வேணியன் காப்பாம்-எனக் கருளை யளிக்குங் குருபரன் காப்பாம்.
பஞ்சப் புலன்களுங் காப்பாம் என்னைப் பரவு மடியவ ரனுதினங் காப்பாம் குஞ்சர முகத்தவன் காப்பாம் - நல்ல
குழந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம்.
சந்திர சூரியர் காப்பாம்- எங்குந் தங்கு முயிர்க ளனைத்துமென் காப்பாம் மந்திரந் தந்திரங் காப்பாம் - நான்கு மறைகள் சிவாகமம் மாநிலங் காப்பாம்.
351
(அத்து) 1
(அத்து) 2
(அத்து) 3
(அத்து) 4
(அத்து) 5

Page 180
352
நற்சிந்தனை
எல்லாஞ்சிவமே
அப்பனும் அம்மையுஞ் சிவமே அரிய சகோதரருஞ் சிவமே ஒப்பில் மனைவியுஞ் சிவமே ஒதரும் மைந்தருஞ் சிவமே செப்பில் அரசருஞ் சிவமே தேவாதி தேவருஞ் சிவமே இப்புவி யெல்லாஞ் சிவமே என்னை யாண்டதுஞ் சிவமே.
usm -4
மங்களம் ஜெய மங்களம் 1
அப்பனுக்கும் அம்மைக்கும் மங்களம் அத்துவித வஸ்துவுக்கு மங்களம் ஒப்பில்குரு நாதனுக்கு மங்களம் உத்தம பத்தருக்கு மங்களம் முப்பொழுதுந் தொழுவார்க்கு மங்களம் மூவாசை வென்றவர்க்கு மங்களம் முப்பத்து முக்கோடி தேவர்க்கும் மங்களம் முனிவர்க்கும் இருடிகட்கும் மங்களம் தன்னைத்தன்னு லறிந்தவர்க்கு மங்களம் ஐயமிட் டுண்பவர்க்கு மங்களம் ஐயமில்லாச் சாதுக்கட்கு மங்களம் ஆதியந்த மில்லாத ஆன்மாவுக்கு மங்களம் சீர்காழித் தேவருக்கு மங்களம் திருநாவுக் கரசருக்கு மங்களம் சீர்பெருகு சுந்தரர்க்கு மங்களம் திவ்விய மாணிக்கர்க்கு மங்களம் எங்குந்தங்கும் உயிர்களுக்கு மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்

நற்சிந்தனை 353
மங்களம் ஜெய மங்களம் 11
மங்களம் ஜெய மங்களம் மங்களம் ஜெய மங்களம்
ஆதியந்த மில்லா அப்பனுக்கு மங்களம் சோதிவடி வாயுள்ள சுவாமிக்கு மங்களம்.
ஆன்மா நித்தியமென்ற ஆன்ருேர்க்கு மங்களம் தேன்போ லுருசிக்குஞ் சிவனுர்க்கு மங்களம். 2
காண்பதெல்லாங் கடவுளாய்க் காண்பார்க்கு மங்களம் நாண்மல ரெடுத்துப்பூசை பண்ணுவோர்க்கு மங்களம், 3
பொறிவழிபோ யலையாத புண்ணியர்க்கு மங்களம் நெறிவழியே செல்லுகின்ற நிருபருக்கு மங்களம். 4.
நாமறியோ மென்றுசொல்லும் நாதனுக்கு மங்களம் உண்மை முழுதுமென்ற வுத்தமர்க்கு மங்களம். , 5
தன்னைத் தன்னலறிந்த தாபதர்க்கு மங்களம் அன்னைபிதாக் குருவான அப்பனுக்கு மங்களம். 6
மண்ணைப்பெண்ணை மதியாத மாதவர்க்கு மங்களம் வண்ணநகர் வாழும்வைத் தீசனுக்கு மங்களம். 7
திண்ணனென்ற பேர்கொண்ட அப்பனுக்கு மங்களம் சண்முக நாதனுக்குஞ் சங்கரற்கும் மங்களம், 8
விண்ணில் விளங்குஞ் சூரிய சந்திரர்க்கும் மங்களம் எண்ணிலடங் காவுயிர்கள் அத்தனைக்கும் மங்களம். 9 நித்தியகர்மந் தவருத நின்மலர்க்கு மங்களம் பத்துப்பாட்டும் படிப்போர்க்குங் கேட்போர்க்கும்
A. மங்களம், 10
மங்களம் ஜெய மங்களம் محي மங்களம் ஜெய மங்கள்ம் ,
23

Page 181

பகுதி II
உரைநடைப் பகுதித் திரட்டு

Page 182
6
குருநாதன் அருள்வாசகம்
ஒரு குறைவுமில்லை
நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே. ஆகையால் நாம் அவருடைய உடைமை.
அவருடைய அடிமை. நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே. நாம் அவரை ஒருபோதும் மறந்திருக்க முடியாது.
நமக்கு ஒரு குறைவுமில்லை.
நாம் என்று முள்ளோம்.
எங்கு மிருக்கிருேம்.
எல்லா மறிவோம். இப்படியே நாம் இடையருது சிந்தித்துச் சிந்தித்துக்
கீழ்மையான குணங்களைப் போக்கி மேலான தெய்வ தத்து வத்தை அடைவோமாக.
*சந்ததமு மெனதுசெயல் நினதுசெயல் யானெனுந் தன்மை
நினையன்றி யில்லாத் தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த
சமரச சுபாவமிதுவே."
என்னுந் தாயுமானவர் அருமைத் திருவாக்கே இதற்குப்போதிய சான்று.

நற்சிந்தனை V, 357
சிவதொண்டு I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு செய்வதே எங்கள் தொழில். அதற் காகவே நாங்கள் பூமியில் வாழுகிருேம்.
சந்திரன் சிவதொண்டு ஆற்றுகின்றது. சூரியனும் ஏனைய கிரகங்களும் அத்திருப்பணியையே செய்கின்றன. தேவர் களும் அசுரர்களும் கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர் களும் அப்படியே தொண்டாற்றி வருகின்றனர்.
அனைத்துஞ் சிவன் செயல்; அவனன்றி அணுவும் அசை யாது. நாம் இழந்து போவதுமொன்றுமில்லை. ஆதாய மாக்கிக் கொள்வதும் ஒன்றுமில்லை. இருந்தபடியே இருக் கின்ருேம்.
நமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லை. நமக்கு இதம் அகிதம் இல்லை. மரணம் பிறப்பில்லை. வேண்டுதல் வேண்டாமை இல்லை. மண்ணுதி ஆசை யில்லை. மனமான பேய் இல்லை. காலதேச வர்த்தமானம் நமக்கில்லை. நாம் அனைத்துக்குஞ் சாட்சியாக விளங்குகின்ருேம்.
ஓம் தத் சத் ஒம்
I
நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறைவு மில்லை. சிவதொண்டு ஆற்றுவதே எங்கள் தொழில். அதற். காகவே நாம் உயிரோடிருக்கிருேம். உண்பதும் உறங்குவ தும் அதற்காகவே. எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத் தைப் பட்டாலும் எல்லாம் அதற்காகவே செய்கிருேம். நமக்கு ஆதியுமில்லை அந்தமுமில்லை. பிறப்புமில்லை இறப்பு மில்லை. நாம் விளையாட்டுக்காகினும் பிறர்பொருளைக் கவ ரோம். பிறர்வசை உரையோம். எல்லாஞ் சிவன்செய

Page 183
g58 நற்சிந்தனை
லென்பதை மறவோம். பசித்தாற் புசிப்போம். பிறர்செய் யும் நிட்டூரத்தையாவது, கிருபையையாவது பொருளாகக் கருதமாட்டோம். எப்பொழுதும் தூய்மை உடையோம். துன்பத்திலும் இன்பத்திலும் கவலை அடையோம். முழு தும் உண்மை.
ஓம் தத் சத் ஓம்.
II
நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார்; நாங்கள் சிவனடியார். இது சரியை; இது கிரியை; இது யோகம்; இது ஞானம்; இது மந்திரம்; இது தந்திரம் இது மருந்து.
இந்தத் தியானத்தில் நிலைத்தலே நிட்டை இந்த நிட்டையுடையோர்க்குச் சீலமில்லை; தவமில்லை; விரத மில்லை; ஆச்சிரமச் செயலில்லை.
இவர்கள் தாம் விரும்பிய வண்ணம் மண்ணில் வாழ்ந் தார்கள்; வாழுகிருர்கள்; வாழ்வார்கள். இவர் பெருமை யாவருமறியார்; கற்கண்டின் இனிமை கற்கண்டை உமிப வர்க்கே தெரியும்.
ஒரு பொல்லாப்பு மில்லை. எப்பவோ முடிந்த காரியம். நாமறியோம். முழுதும் உண்மை.

நற்சிந்தனை" 359
ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்தது. ஒழுக்க முடையார் எல்லாமுடையார். ஒழுக்கங்களாவன கொல்லாமை, கள் ளாமை, பிறர் வசை உரையாமை, பிறர் பொருள் கவ ராமை, தாழ்மை, பொய்யுரையாமை முதலியனவாம்.
எக்கருமத்தைச் செய்யும் பொழுதும் ஊக்கத்தோடுஞ் சிரத்தையோடும் மனமகிழ்ச்சியோடுஞ் செய்து பழகுதல் வேண்டும். அப்படிச் செய்து பழகிவந்தால் மன உறுதி உண்டாகும். அஃதாவது மனம் ஏகாக்கிர சித்தத்தைப் பொருந்தும். பொருந்தவே ஆன்மசக்தி அதிகரிக்கும். நினைத்தகாரியம் நினைத்த மாத்திரத்திலே உண்டாகும். இவர் பகைவர், இவர் உறவினர் என்ற பாகுபாடு சித்தத் திற் புகுந்து கவலையை உண்டாக்காது.
எல்லாம் என்னிடத்தே உண்டாகின்றன; எல்லாம் என் னிடத்தே நிலைத்திருக்கின்றன; எல்லாம் என்னிடத்தே ஒடுங்குகின்றன என்ற தூய்மையான எண்ணம் உடைய வராய் இருத்தல் வேண்டும். மேலும் எனக்கொரு குறைவு மில்லை; என்னிடத்திலே எல்லோரும் அன்பாய் இருக்கி ருர்கள்; நானும் எல்லாரிடத்திலும் அன்பாய் இருக்கிறே னென்று அடிக்கடி நினைந்து நினைந்து சாதிக்க வேண்டும். இப்படியே இடைவிடாமற் பழகிவந்தால் எல்லாமறியும் ஆற்றலும் எல்லாஞ் செய்யும் வல்லமையும் எளிதிற் கைவரும்.
'ஓம் தத் சத் ஓம்"

Page 184
360 நற்சிந்தனை
சன்மார்க்கம்
குரங்குபோல் மனங்கூத்தாடுகின்றதே.
இதன் கூத்தை எப்படி யடக்குவதென்று தெரியவில் லையே. நன்று சொன்னய். இதற்கு நல்ல மருந்துன்னிட முண்டு. நீ அதை மறந்து போனுய். சொல்லுகிறேன் கேள்.
சிவத்தியான மென்னும் மருந்தைத் தினந்தோறுஞ் சாப்பிட்டுவா. மனக்குரங்கின் பிணி மாறும்.
அதைச் சாப்பிடும்போது அனுபானத்தைக் கூட்டிச் சாப்பிடு. அதுவுமுன்னிடமுண்டு.
அது என்னவென்றல்; நாவடக்கம், இச்சையடக்க மென்னுஞ் சரக்கோடு சேர்த்துச் சாப்பிடு.
இதுவும் போதாது. பத்திய பாகத்திலே தான் முற் றுந் தங்கியிருக்கிறது. அதுவு முன்னிட முண்டு.
அது என்னவென்முல்; மிதமான ஊண், மிதமான நித்திரை. மிதமான தேக அப்பியாசம் என்பவையே. வெற்றி நிச்சயம். ஆன்ம இலாபத்தின் பொருட்டிதைச் செய். vn
மனத்தை ஒருவன் அடக்கி வெற்றி கொள்ள முழு மனத்தோடு விரும்புவானனல் சிவத்தியானத்தைத் தினந் தோறுஞ் செயது வரக் கடவன். -
படிப்படியாக அவன் மனமொடுங்கி வருவதை அவன் கண் கூடாகக் காணுவான்.
சாந்தம், பொறுமை, அடக்கம் முதலிய நற்குணங் கள் அவனிடத் துதிக்கும். γ.
அவன் மனமெந்த நேரமும் மகிழ்ச்சியுடையதாகவே இருக்கும். இகழ் புகழிரண்டினலும் இழிவடையான்.

நற்சிந்தனை 36.
அந்தராத்மாவிலே சுகிப்பான். பிறர் சுகந் தன் சுக மென்ற எண்ணம் பெருகும்.
கைவிளக்கை யொருவன் கொண்டு செல்வானுணுல் இராக்காலத்தில் அவன் மனங் கலங்குவான? கலங்கான். அப்படியே சிவத்தியானத்தைச் செய்து வருவானனல் மாய விருள் அவனை அடையுமா? அடையா. V
போதனையிலுஞ் சாதனை சிறந்தது. ஒரு பொல்லாப்பு மில்லை.
ஆன்ம இலாபமே பொருளெனக்கண்ட அறிஞர் அநித் தியமான இந்த உலக இன்ப துன்பத்தின் மயங்காது தாமரையிலையில் நீர் போற் சகத்துடன் கூடிவாழ்வார். ஆன்ம இலாபத்தைப் பெற நினையாதவர் இந்த உலகத் துன்ப இன்பத்தினுற் கலங்கித் தியங்கித் திரிவார்கள். ஆன்ம இலாபத்தையே குறிக்கோளாகக்கொண்டு நன்மை தீமை யைவென்று நான் எனதென்னும் அகங்கார மமகாரங் களைக்களைந்த அறிஞர் இறைவன் திருவடி நிழலில் பிறப் பிறப்பற்றுப் பேரின்பத்துடன் வாழ்வார்.
அஃதறியா அறிவிலிகளே துன்பக் கடலிலே வீழ்ந்து எரிவாய் நிரயத்துக் காளாவார்.
வண்டுகள் பூவைக்கிண்டித் தேனை உண்டு ஒன்று மறி யாது கிடப்பது போல் பக்தனும் சித்தமாகிய பூவைச் சிவத்தியானத்தினுல் கிண்டி ஆங்குவரு மானந்தத்தேனை யுண்டு ஒன்று இரண்டு, நன்று தீதென்றறியாமற் தேக் கிக் கிடக்கிருன்.
ஒரு கமக்காரன் தன்னுடைய நிலத்திலே நல்ல வித்தை யிட்டு அதிலுண்டாகுங் களையைக் களைந்து, விளையுந் தானியத்தை யொன்று சேர்க்கிறன்.
அதுபோலப் பக்தனும் சிவமாகிய நிலத்திலே பக்தி யென்னும் வித்தை வித்திக் காமக்குரோத மோக மதமாச்

Page 185
362 நற்சிந்தனை சரியமென்னுங் களையைக் களைந்து சிவபோக மென்னுந் தானியத்தைச் சேர்த்து வைத்துப் புசிக்கிருன்.
பூலோகமாகிய நந்தன வனத்திலே சீவர்களாகிய மலர்கள் மலர்ந்து கிடக்கின்றன. சிவன் அதைக்கண்டு மகிழ்கிறன்.
பொற்கொல்லன் பொன்னை யெடுத்துப் பல பூண் களைப் படைக்கிருன்.
சிவனகிய பெரிய பொற்கொல்லன் ஆன்மாவாகிய
பொன்னை யெடுத்துச் சீவர்களாகிய பலபணிகளையு மாக்கு கிருன். 8.
வைத்தியன் பல மூலிகளையு மெடுத்து ஒன்ருக்கி நோய்க்கு மருந்து கொடுத்து நோயை மாற்றுகிருன்.
பெரிய ஞான வைத்தியனும் தனு கரண புவன போகங் களை ஆன்மாவுக்குக் கொடுத்து அதன் நோயை மாற்றி இன்ப வீட்டில் வைக்கிருன்.
தாய் தனது குழந்தைகளுக்கு விளையாட்டுச் சாமான் களைக் கொடுத்து மகிழ்விக்கிருள்.
சிவபெருமானுந் தன் குழந்தைகளாகிய எங்களுக்குப் பல விதமான இன்பங்களையுந் தந்து மகிழ்விக்கிருன்.
பொறி வழியே போந்து மனம் அலைய அறிஞர் இடங் கொடார். ஏனெனில் ஆத்மாவே தானென அறிந்தவர்கள்; ஆசை நோய்க்கு இடங்கொடுப்பாரா? அன்று.
அவர்தம் பெருமையை வேத சிவாகமங்களும் புகழ் கின்றன. இவர்களைக் கண்டால் கல்லுங் கரையும்
அனைத்தினும் வெற்றி யுண்டு.

நற்சிந்தனை 3 SB
W சிவத்தியானம்
ஒ மனிதனே! நீ உண்மைப் பொருள். கேடற்றவன். உனக்கு ஒருவருங் கேடு விளைவிக்க முடியாது.
நீ இங்கும் அங்கும் எங்கும் உள்ளவன். நித்தியன். உறுதியுடனே சிங்கங் கானகத்தில் திரிவதுபோல் உலக மாகிய கானகத்தில் திரி. எந்த விதத்திலுந் தளர்வடை
யாதே. ஒரு நூதனமு மிங்கில்லை. முழுதுமுண்மை. ஒரு பொல்லாப்புமில்லை.
ஒ மனிதனே! வானம் வந்தாலும் பூமி வந்தாலும் ஆட்சிசெய்யக் கருதாதே. சாட்சியாயிரு. மாட்சி உன் பிறப்புரிமை.
அது என்ன வுபாயத்தாலு மடையப்படுவதொன் றன்று. அப்படியுள்ள காரியம். மற்றனைத்துஞ் செப்படி வித்தை, அறிவு, அறியாமை உன்னிடமில்லை. நீ பர LDfTjöLorr.
l ஓம் தத் சத் ஒம் |
ஒ மனிதனே! சற்றுப் பொறுமையாயிருந்து பார். நீ யாரெனத் தெரிந்து கொள்வாய். துயருறத் தகாத காரியங்களில் துயருருதே. துன்பமும் இன்பமும் உலக
நடவடிக்கைகள். நீ சித்துப் பொருள்.
உன்னை ஒன்றுந் தாக்கமாட்டாது. எழுந்திரு. விழித் துக்கொள். சிவத்தியான மென்னுந் திறவுகோலால் மோகூடிவீட்டின் கதவைத்திறந்து பார். எல்லாம் வெளி யாகும். VK.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஓ நண்பனே! உன்னை யார்தான் பாவியென்று சொல்ல வல்லான், ஏன்?

Page 186
364 நற்சிந்தனை
" நீ சிவத்தின் அம்சமல்லவா? மறந்து போனுய். ஓம் தத் சத் ஒம் என்று ஓயாமற் சொல்லு, உன் முழுமனத் தோடும் இறைவனுக்கு உன்னை ஒப்புக்கொடு. சிவத்தியா னத்தை அசட்டை பண்ணுதே. ஈற்றில் யாவும் நன் மையாய் முடியும். சோம்பலுக்குஞ் சோம்பலின்மைக்கும் நீ கட்டுப் படாதே, h
அதிகப் பேச்சில் என்ன பயன். பண்படுத்தப்பட்ட தரையிலன்றே நல்ல பயன் வரும். அஞ்சாதே.
நாங்கள் சிவனடியார். சிவபெருமான் என்றுள்ள வரோ அன்று நாமுமுள்ளோம்.
வெப்பந் தட்பம், இன்பந் துன்பம், இளமை முதுமை இயற்கையின் குணங்கள்.
இவைகளின் தீண்டுதலால் நாமேன் கவலைப்படுவான்.
இவைகள் தோன்றி மறைவன. நாமோ தோன்றுவது மில்லை. மறைவதுமில்லை.
உண்மை இன்மை யாகாது. இன்மை உண்மை யாகாது.
எல்லாஞ் சிவன் செயலென்ற எங்களுக்குக் குறைவு முண்டோ? நிறைவு முண்டோ? நாம் சிவபெருமானென்ற நூலிலே கோக்கப்பட்ட பல நிற முள்ள மணிகளை யொப் பவர். நூலறுவதுமில்லை. நாங்கள் சிதறிப்போவதுமில்லை. பலபடக் கூறுவதால் பயனில்லை. . . . . . .
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |
ஒ சினேகிதா! நீ சிவனடியானென்று முழுமனத் தோடும் நினை. எல்லா வெற்றியு முன்னிடமுண்டு. அதற்கு மேல் வேருென்று மில்லை. யாவுமுன் காலடியில்.
| ஓம் சாந்தி சாந்தி சாந்தி |

நற்சிந்தனை s 365
குரு வாசகம்
ஆத்துமா நித்தியமானது. பிரிவில்லாதது. பூரணமா னது. சரீரமோ அழியுந் தன்மையுள்ளது. பிரிவுள்ளது. இப்படி யிருக்கையில் நாங்கள் இவ்விரண்டையுஞ் சரி யென்று சொல்ல முடியுமா? அப்படி நாங்கள் சொன்னல் இதிலும் பெரிய பாவமும் பழியும் வேறுண்டோ?
ஆத்துமா எல்லாவற்றுக்கு மாதியாயுள்ளது. யாவை யும் ஆளுகின்றது.
சரீரமோ தொடக்கமுடையது. ஆளப்படுந் தன்மை (1460)L-Ugbl.
இப்படி யிருக்கையில் நாங்களில்விரண்டையும் ஒன்ருே டொன்று ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? அப்படி யொப் பிட்டால் இதிலும் வேறு பழி கிடையாது.
இயற்கையிலே ஆத்துமா அறிவுடையது. தூய்மையா னது. சரீரமோ அறியாமை யுடையது. தூய்மை யற்றது. இவ்விரண்டையும் ஒப்பிட்டால் இதிலும் அஞ்ஞானம் பிறி துண்டோ?
ஆத்துமா பிரகாசமுடையது. அதாவது சுயம்பிரகாச முடையது. சரீரமோ இயற்கையிலே இருள் மயமானது. இவ்விரண்டையு மொப்பிடலாமா?
யாரொருவன் தன்னைச் சரீரியென்று நினைக்கிருனே ஐயோ, அவனிலுங் கீழ்மகன் யார்?
யார் ஒருவன் தன்னுடைய சரீரமென்று சொல்லு , கிருனே அவன் மட்பிண்டத்தைத் தன்னுடையது என்று சொன்னது போலிருக்கும்.
யார் ஒருவன் தன்னைப் பூரணனென்றும், நித்தியன் என்றும், இயற்கை அறிவுடையவனென்றும் நினைக்கிருனே அவன் உண்மை யறிவாளி. அவனுக்கிணையாக ஒரு தெய் வமுமில்லை.

Page 187
366 நற்சிந்தனை
யார் ஒருவன் தன்னை ஓர் அழுக்கும் பற்றமாட்டா
தென்றும், மாறுபாடில்லாதவனென்றும், தூய்மையிலுத்
தூய்மை யென்றும் நினைக்கிருணுே அவனை அறிவாளிகள் ஞானி யென்று சொல்லுவார்கள்.
வேதம் ஆகமம் யாவும் இந்த உலகம் முழுவதுந் தெய்வமே நிறைந்திருக்கிற தென்றும் அதைவிட வேறு யாதுமில்லை யென்றும் முறையிட நாங்கள் எப்படி உலக மிருக்கிறது சரீர மிருக்கிறதென்று நினைக்கலாகும். அப்படி உலகஞ் சரீரம் வேருயிருக்கிறதென்றல் இதைவிடப் பழி பிறிதுண்டோ? ஆன்ருேரும் நின்னவார் பிறரன்றி நீயே ஆணுய்" என்று சொல்லி யிருக்கிருர்கள்.
இன்னேரன்ன பல காரணங்களாலுங் கடவுளைத் தவிர வேறென்றுமில்லை. யாவு மவன் செயல்.
சொல்லெல்லாம் மோனம் தொழிலாதியும் மோனம் எல்லாம் நன்மோன நிறைவே.
சிவபக்தி
சிவபக்தி மாத்திரந்தான் மனிதனைப் பாக்கியவானக் கும். மற்றையவனத்தும் பிரயோசனமற்றவை. ஆகை யால் இடைவிடாமற் சிவத்தியானம் பண்ணு. ஒன்றுக்கும் பயப்படாதே. வெற்றியுன் சொந்தம். எத்தனைமுறை தவ றினலுந் தைரியத்தைக் கைவிடாதே. தவறுதல் சடசம் பந்தமானது. நீயோ சித்துப்பொருள் (அதாவது அறிவுப் பொருள்). நீயொரு நாளும் அழிய மாட்டாய். எழுந் திரு! விழித்துக் கொள்! காரியங் கைகூடுமட்டும் வழி யிலே தங்கிவிடாதே! உற்சாகத்தோடு முன்னேறிச் செல். உனக்குச் சகல சத்தியுங் கட்டுப்படுவதைக் காண். வீண் வாத தர்க்கத்திலே நாளைப் போக்காதே. நீ எங்கே போகிருயோ அங்கே உன்னுடன் பகவான் வருவார்.
வெளிமாதிரி யொன்றுஞ் செய்யாதே. உனக்குள் நீ பெலத்துக்கொள். சமயமென்பது ஒரு மாதிரியுமற்ற தனித்த நிலை. உடல் பொருள் ஆவி மூன்றையும் பகவா னுக்கு ஒப்படை. அதன்பின் உன்னைப் பற்றிய காரியங் களைக் கைவிட்டுவிடு. அனைத்தும் அவனே பார்.

நற்சிந்தனை 367 தவம்
தவத்திலே மேம்பட்டவர்களைக்கூட இந்திரியங்கள் வரம்பு கடந்து இழுத்துச் செல்கின்றன. ஆதலால் அவற்றை வெல்வதற்குச் சிவத்தியானஞ் செய்க. அதனல் மாத்திரந் தான் புலன்களைத் தன்வசப்படுத்தத்தக்கது. ஆகவே இடை விடாமற் சிவத்தியான ஞ் செய். மனிதன் விடயங்களைக் கருதும் போதெல்லாம் பற்றுண்டாகிறது. பற்றுதலால் விருப்பம் உண்டாகிறது. விருப்பத்தாற் சினம் பிறக்கிறது. சினத்தால் மயக்கம். அம்மயக்கத்தால் தவறுதல் உண்டா கும். ஆதலால் உன்னைச் சிவத்தியானத்தால் காத்துக் கொள்.
நாங்கள் எங்கள் சிறுமைக் குணத்தினல் இயல்பழிந்து தரும வழியினின்று தவறுகிருேம். தவறுதல் நீங்கித் திட முண்டாகச் சிவத்தியானமே சிறந்த கருவியாகும். இந்த உலகத்தில் மிகுந்த செல்வமிருப்பினும், வானுேரை ஏவல் கொள்ளக்கூடிய வல்லமையிருப்பினும் நாங்கள் புலன்களை அடக்கியாளுதல் முடியாது. ஆதலால் திருவருளை முன்னிட்டு மனத்தைப் புலன்வழிச் செல்லாமல் அடக்கியாள். இது தான் தவமென்று பெரியோர் சொல்வர். அதைவிடுத்து இடம்பமான வேள்வி முதலியவை செய்வதால் திடமுண் டாக மாட்டாது.
நானே நீ
என்னுடைய இராச்சியத்தில் இராப்பகலில்லை; நன்மை தீமையில்லை; நீ நானில்லை; இன்றைக்கு நாளைக்கு இல்லை; பெரிது சிறிது இல்லை; நீயுமிந்த இன்பத்தை அனுபவிக்க வேண்டுமாகில், அங்கு முழுமனத்தோடு வெளியேறக் கடவை; புகையிரதம் வேண்டியதில்லை; மாட்டுவண்டி தேவையில்லை; பின் என்ன வேண்டுமாகில் வைராக்கிய மென்னும் புதுக்காத வண்டிலும், சாந்தம் என்னும் இரண்டு வெள்ளை எருதுகளும், மனப்பாக்கிய மென்னுஞ் சமையாத சாதமும், யாசகமென்னும் அங்கவஸ்திரமும், ஞானமென்னும் மூக்குக் கண்ணுடியும் எடுத்துக்கொண்டு பின் முன் நாடாமல் வரக்கடவை. அப்பொழுது நீ காண விருக்கும் காட்சிகளை என்னுற் சொல்ல முடியாது. கட வுளே சாட்சி.

Page 188
368 நற்சிந்தனை
866).T6th UTG).260T
தெய்வத்தை நம்பு, முழுமனத்தோடு நம்பு; உலகில் உனக்கினியதெனத் தோன்றும் எவற்றிலும் இனியதாக நினை. அதைவிட வேறில்லை என்று நினை. இருக்கும் போதும் நிற்கும்போதும், நடக்கும்போதும், கிடக்கும்போதும் நினை. உனது நரம்பிலும் தசையிலும் இரத்தத்திலுந் தெய்வ மென்னும் நினைவே நிறைவதாக. நானில்லை, கடவுளே இருக்கிருரென எண்ணு. கடவுளைக் கும்பிடுதலே வாழ்வின்' இலக்காக வைத்துக்கொள். எவன் எதை நினைக்கிருனே அவன் அதுவாகிறன். கடவுளை உனது உள்ளத்தில் வைத்து வளர்ப்பாயாக. எல்லாம் அவருடைய செயலாகுக. ஈற் றில் எல்லாம் அவனுகவே காணப்படும்.
சிவபெருமான் அத்துவிதமாக இருக்கிருர், அடியேன் அவரே எனத் தியானிக்கும் மகிமை எனக்குண்டு. ஒருவன் எப்படிப் பாவனை செய்கிருனே அவன் அப்படி ஆகிறன். ஆகையால் "நான் அவனே' என்று தியானஞ் செய். அப் போது உன் செய்கைகள் அனைத்தும் அவன் செய்கையே யாகும். அவனைத் தவிர வேறு பொருள் இல்லை. அவனே அனைத்தும். அப்படியான அவனே தன்னைப் பல கோலங் களாக்கி விளையாடுகிருன்,
அவனுக்குப் பிறப்பிறப்பில்லை. ஆதியந்தமில்லை. ஒரு மாறுதலுமில்லை. முழுதுமுண்மை.
ஓம் சாந்தி.

நற்சிந்தனை : 369
66.60TiguTf
நாங்கள் சிவனடியார்
ஆதியுமந்தமும், இறப்பும் பிறப்பும், இரவும் பகலும், சுகமுந் துக்கமும் எங்களுக் கில்லை யென்னும் திருமந்தி ரத்தை எவனெருவன் மறவாமல் தியானஞ் செய்கிருனே அவனுக்கு ஒரு குறையும் வராது.
எதை நீ பாவனை செய்கிறயோ அது நீ யாவாய்.
இதற்கெல்லாம் விடாமுயற்சி, அதாவது சலியாமை வேண்டும் .
பாடுபட அஞ்சுபவனுக்கு ஒரு பிரயோசனமு முண்டா காது; பாடின்றிப் பட்டங் கிடையா தென்பது உலக வழக்கு.
காரியசித்தி எய்தும் வரையும் விடாமுயற்சி செய். நீ ஏன் ஓயாமல் கெட்ட காரியங்களைச் சிந்திக்கிருய்? அச் சிந்தனையை விட்டு முழு மனத்தோடு தெய்வத்தை வணங்கு. உனக்கு விதிவசத்தாற் பொருந்துவனவற்றை உவகையோடு ஏற்று நடத்து. இறுதியில் யாவும் ஜெயமாகும்.
அது அப்படி யுள்ள காரியம் என்பதைச் சதா நெஞ் சிற் பதித்துக் கொண்டு இயல்பாய் உனக்கு வரும் வேலை களையுங் கடமைகளையுஞ் செய்து கொண்டிரு. அல்லது அவற்றை விட்டிரு. எதுவுஞ் சரியே.
செய்தலிலுஞ் செய்யாமையிலும் அது தங்கியிருக்க வில்லை. கருமம் இல்லாமையை விரும்பாதே. கருமத்தைப் பற்றதே. செய்தல் செய்யாமை இவற்றுள் இயல்பாய் எது உனக்கு அமைகின்றதோ அதையே பற்றி நில்.
24

Page 189
370 நற்சிந்தனை
இன்பவிறையே
ஒரு பிதா தனது குழந்தையினது மழலைமொழியைக் கேட்டு மகிழ்வானன்றிச் சிறிதுமிகழமாட்டான்.
அவ்வண்ணமே, தேவரீர் அடியேனுடைய விண்ணப் பத்தைக் கேட்டருள்வீராக. இவ்வுலகத்திலே எத்தனையோ சாதிகளுண்டு. அவைகளின் பழக்கவழக்கங்கள் ஒன்ருே டொன் ருெவ்வாது முரண்படுகின்றன. ஒவ்வொரு சாதி யுந் தத்தம் பழக்க வழக்கங்களே மேம்பாடுடைத்த தெனக் கூக்குரலிடுகின்றது. சமயங்களுமப்படியே. இவைகள் யாவும் உலகத்தின் சிறப்புக்களேயன்றி வேறல்ல. இந்த வித்தியாசமான போராட்டங்களெல்லாம் முன்னு முள் ளன. நூதனமான காரியங்களல்ல. இவைதாம் இந்தப் பிரகிருதியின் தோற்றங்கள். இவை வேறு தான் வேறு என்றறிந்த அறிவாளி இவைகளுடன் கூடியுங் கூடாது மிருப்பன். எத்தனையோ முறைகளில் பெரிய பெரிய அவ தாரங்கள் வந்து எவ்வளவோ வேலைகளைச் செய்தும் மீட் டும் இந்த உலகம் அப்படியே யிருக்கின்றது. இது ஒரு பெரிய இரகசியம்.
தேவரீர் இவைகள் எல்லாம் நன்கறிவீர். நானென் றுமறியேன். என்னை மன்னித்துக் கொள்ளும்.
pamahagið
ஆண்டவனை யன்றி வேருெரு பொருளுமில்லை. அனைத் தும் அவன்செயல். உனது சுமைமுழுவதையுந் திருவடிக் கீழ் இறக்கி வைத்து இளைப்பாறு. கவலைக்கிடங்கொடாதே. நான் செய்தேன், அவன்செய்தானென்று நலியாதே. விழித்திரு.

நற்சிந்தனை " , 371 ·
சுகவாழ்வு
கடவுளை மனம் வாக்குக் காயத்தாலே காலை, உச்சி, மாலை என்னும் மூன்று காலத்திலும் வழிபடுதல் வேண் டும்.
சரீரத்தையும் மனத்தையும் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
சரீரத்திலாவது மனத்திலாவது ஏதுங் குழப்படி ஆரம் பிக்கும்போது அந்த கூடிணமே சாப்பாட்டை நிறுத்தி, ஆலய வழிபாடு, அடியார் வழிபாடு, அல்லது இயன்ற தானதருமங்கள் செய்யவேண்டும். w வரவுக்கேற்ற செலவு செய்யவேண்டும்.
தனிமையாக இருந்து கொண்டு அல்லது நடந்து கொண்டு, தன் வாழ்நாளை நடாத்தும் வகையைச் சிந் திக்கவேண்டும்.
மிஞ்சிய போகத்திலாவது, போசனத்திலாவது, வைத் திருக்கு மாசையை அடியோடு தவிர்க்கவேண்டும்.
இறைச்சி மீன் குடி முதலியவைகளை விடவேண்டும்.
எப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புள்ளவனுக இருக்க வேண்டும். م s
தான் மிகவும் பரிசுத்தன் என்றுந் தனக்கு ஒரு குறை வில்லை யென்றும் அமைதியாகச் சிந்தித்தல் வேண்டும்.
மேலே சொல்லிய வண்ணம் இவ்வாறு ஒருவன் சாதித் துப் போதித்து வருவானுயின், யோகமும், ஞானமும், சர்வசித்தியும் ஈற்றில் முத்தியும் லபிக்கும்.

Page 190

US6 III
திருமுகங்கள்

Page 191
374 . . . நற்சிந்தனை
நான் யார்
நீ உடம்பன்று, மணமன்று, புத்தியன்று, சித்த மன்று, நீ ஆத்மா.
ஆத்மா ஒரு நாளும் அழியாது. இது மகான்க ளுடைய அநுபவ சித்தாந்தம். இந்த, உண்மை உனது உள்ளத்தில் நன்ருய்ப் பதியக் கடவது.
ஆனல் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு, அதா வது தருமநெறியிற் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் திருமுன்னிலை என்று சாதனை செய். கடவுள் உள்ளும் புறம்பும் உள்ளவர்.
இப்படிக்கு அவனே நானே.
~~
ஓம் தத் சத் ,
கொல்லம், ஆணி 17, 1938
அகமுக மாகு. அப்போதே ஆனந்தமுண்டாம்.
எதனல் கண் காணுகிறது? எதனுல் காது கேட்கின்றது? எதனல் மூக்கு முகருகின்றது? எதனுல் வாய் பேசு கின்றது? அதுதான் ஆத்துமா அல்லது கடவுள். எவ் வளவு சுலபமான வழி! நினைத்துப் பார். அனைத்துமுன் கைவசம். ஒரு கணம் நீ ஊன்றி யோசிப்பாயானல், நீ அதுவென உனக்கு நன்கு புலணுகும். உன்னுள்ளே தெய் வீகத்தன்மையை உணர். நீயே உனக்குத் தலைவன். நீயே உன்னை நடத்துபவன். நீயே உலகத்துக் கேகசக்கராதிபதி. இந்தத் தூய எண்ணத்தை மறந்தால் இறப்புப் பிறப் பாகிய சமுத்திரத்திற் கிடந்து திக்குமுக்குப்படுவாய்.
எழுந்திரு, விழித்துக்கொள். உன்னை இனி ஒன்றும் வெற்றியெடுக்க முடியாது. விளக்கு எரியவேண்டுமாயின் திரியும் எண்ணெயும் வேண்டும். நீ பிரகாசமடைய வேண்டினல் ஓயாமல் ஒம் தத் சத் என உணர்ச்சியோடு (அதாவது உயிரை எழுப்பி) பிரார்த்தனைசெய். சீக்கிரம் புத்தகத்தை முடி. h−
 

நற்சிந்தனை ‘ - 375 உத்தம இரகசியம்
நாங்களெல்லாம் ஒரே சமயத்தையும் ஒரே சாதியை யும் சார்ந்தவர்கள்; எங்களுக்குள் ஒருமாறுதலும் இல்லை. நாங்கள் பரிசுத்தரும், தெய்வத்துவத்துள் வைக்கப்பட்ட வர்களாகவும் இருக்கின்ருேம். வித்தியாசம் வித்தியாச மான மாறுதல்கள் யாவும் உண்மைச் சுபாவத்தின் சிறப் புக்களாக இருக்கின்றன. இவைகளை மாயை எனப் பெரி யோர் சொல்வர், ஒழுக்கத்தினுல் வசீகரப்படுத்தப்பட் டோர்க்கன்றி மற்றையோர்க்கு இவ்வுண்மை புலப்படாது. அதுபற்றியே தன்னுயிர்போல் மன்னுயிர் யாவையும் நேசித்தல் வேண்டுமென்று மகத்துக்களால் திரும்பத் திரும்ப வற்புறுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால் யாவும் ஒழுக்கத்திலேயே தங்கியிருக்கின்றன. இவ் வொழுக்கவழியில் நின்று எல்லாம் நாம் என்று பாவனை செய்து வரவர அற்புதமான அநுபவங்கள் மூலமாக நாங்கள் சடப்பொருள் அல்ல, சித்துப் பொருளென்று தெளியலாகும்.
அஞ்சேல்
14-11-33
'அஞ்சுவ தியாதொன்றுமில்லை, அஞ்ச வருவதியா தொன்றுமில்லையென்னு மான்றேர் மெய்ம்மொழி நம்மைப் பிறப்பிறப்பாகிய கடலைக் கடப்பிக்குந் தெப்பம்". இதைத் துணையாகக் கொண்ட வெமக்கென்னகுறை? ஆதலால் நிறைந்த மனத்துடன் இந்தப் பெரும் பிரயாணத்தைச் செய்வோமாக.
'அகர வுயிர்போ லறிவாகி யெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து'
இப்படிக்கு என்றும் மறவாதவன்.

Page 192
376 நற்சிந்தனை
காசியிலிருந்து எழுதிய கடிதம்
தேடித்திரிந்து காசிக்கு வந்து கண்டேன் விசுவநாதனை என்னுள். வாடித்திரிந்து வருந்த வேண்டாம். தேடிய பூடு காலுக்குள்ளே என்ற தெவிட்டா வாசக மொன் றுண்டு. இவ்விடத்திலும் மனிதர்களெல்லாம் எங்களைப் போலே தானிருக்கிறர்கள், நூதனமான காரணமொன் றும் பூதலமீதிலில்லவே இல்லை. இருந்த இருக்கிற இருக் கும் யாழ்ப்பாணத்தா ரெல்லாருக்குமாகக் கருமாதிகளெல் லாஞ் செய்து முடிந்து விட்டன. இனிமே லுங்களுக் கியைந்தபடி அன்பாக உலகில் நடந்து ஆண்டவன் அடிக்
கீழ் அமர்ந்து வாழ்க.
30- 1 - 40
Gl Glouubub
இதோபார். நான் உனக்கு மிகவும் அணித்தாயிருக் கிறேன். என்னைக் காண்கிருயா? நல்ல கூர்மையாய்ப் பார், உள்ளேயிருக்கிறேன். இன்னுந் தெளிவாய்ச் சொல் லில் நான் நீயாயிருக்கிறேன். பின் நீயேன் என்னை உனக்கு வேருய் நினைக்கிருய்?
நீயொரு கெட்டிக்காரனல்லவா? உனக்கு என்ன குறை? ஒரு குறைவுமில்லையல்லவா? உனது கடமையை நீ நல்லாய்ச் செய். யாவரிடத்தும் அன்பாயிரு. அதா வது உன்னைப்போல எவரையும் பார். பின்னல் வருவன வற்றைப் பாடம் பண்ணு.
'அரும்பிய கொன்றை அணிந்த சென்னியன்
ஆறும் பிறையும் சூடிய அழகன் இறையவன் மறையவன் ஏழுல காளி ஈசன் மழுப்படை தாங்கிய கையன் உம்பர் தலைவன் உயர்கை லாயனே'.
-ஈசுரமாலே ஒளவையார்.

நற்சிந்தனை 377.
β) - சிவமயம்
பகைத்தலும் விரும்புதலும் இல்லாதவன் சந்நியாசி யாயினுஞ் சரி, இல்லறத்தானுயினுஞ் சரி, அவனே பரம புருடன். அதாவது அவன் சீவன் முத்தனென்று பெரி யோர் சொல்லுகிருர்கள். இயற்கையோடு அளவளாவி வாழுதல்தான் பேரின்பம். அது ஒரு மாதிரியல்ல; உண்மை உணர்ச்சி. தனக்குத் தான் உண்மையாக விருந்தால் யாவும் விளங்கும். தன்னைப்போல மற்றவர்களையும் நேசித் தலே ‘தவம்'. அதுவே அறம்.
எங்குஞ் சிவம்
.ெ
சிவமயம்
யாவும் நமது ஊர். யாவரும் நமது கேளிர். நன்மை தீமை நாம்தர வருவன. பிறராலன்று. பிறர் காய்ந்த வழிக் காய்கிலம்; உவந்தவழி உவக்கிலம். யாவும் திரு வருளென்பது நன்கு அறிவேம். நம்மைச் சூழவரவிருக் கும் மலைகள் திருமாலைப்போல் பச்சைப் பசேலெனக் காணப்படுகின்றன. இரைந்து விரைந்து செல்லு மருவி களின் இனிய சத்தம் திருமாலின் கரத்திலிருந்து இடை விடாது ஒலித்துக்கொண்டிருக்கும் பாஞ்ச சன்னியத்தை ஒத்தன. சந்திரனுஞ் சூரியனு மிருபாரிக ளிருபக்கத்தும் விளங்குவதுபோல் விளங்குகின்றன. மரக்கொம்பரிலிருந்து தீங்குரலாற் பாடும் பட்சிகள் அக் கண்ணன் புல்லாங் குழல் பாடுவதை ஒத்திருக்கின்றன. தேயிலை கொய்யும் மகளிர் திருமாலின் இனிய பத்தரான கோபிகாஸ்திரீகளை நேர்வர். இவ்விடத்துக் கறங்கும் முரசம் துரியோதன னுடனே போருக்குச் சென்ற பஞ்சபாண்டவரின் தேரின் மீது அடிக்கப்படும் பேரிகையை இசைந்தது. எப்படித். திருமால் சகல வளங்களுடனுந் துவாரகையில் விளங்கி ஞனே அப்படியே இம்மலை இவ்விடத்து மிளிர்கின்றது. கண்ணனுடைய விருந்தினராக நாம் இவணிருக்கிறேம். ஒன்று கூறுதும். உவந்து கேட்குதி. நன்று தீதென நாட் கழிந்தன. என்று காணுவல் என்ற எண்ணமே இன்றும் எம்மை இசைந்து வாட்டிற்று.
என்றும் மறவாதவன். 17-3-32

Page 193
378 u நற்சிந்தனை
சிவமயம்
சொல்வதை மிகவும் கவனமாகக்கேள். நீ யார்? உடம்பா? மனமா? அன்றிக் கண், காது, வாய் மூக்கு முதலிய அவயவங்களா? இல்லை. ஏன்? எனது உடம்பு எனது கையென்று சொல்லுகிறதனுல் நான் உடம்பை விட வேறு பொருளல்லவா? ஆம்? பின்னை நான் எப் படிப்பட்டவன்? அழிவில்லாதவன். ஆகையால் எனக்குப் பயம் முதலியன விரலாமா? இல்லை. ஆனல், சரீர மன தர்மத்தையொட்டிப் பாவத்திற்குப் பயப்பட வேண்டும். புண்ணியத்தைச் செய்யவேண்டும். புத்திமான்கள் இப்படி நினைந்தும், செய்தும் பேரின்பத்திற்கு இம்மையிலும் மறு மையிலும் பாத்திரமுள்ளோராகின்றனர். நிலம், காற்று, தண்ணிர், நெருப்பு, வானம் இவைகளா லாக்கப்பட்ட வீட்டில் பகவான் வசிக்கிருர். ஆனபடியால், வீட்டைச் சுத்தமாயும், மனத்தைச் சுத்தமாயும் வைத்து அமைதி யாய் நட.
என்றும் மறவாதவன்.
842ے 18 سے87
6.
Soul Duth
உனக்குச் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. நாங்க ளெல்லாம் தேவ சந்நிதானத்தில் இருக்கிருேம். இது ஒரு பெரும் சத்தியம். யாவும் இருந்தபடியே நடந்து வருகின் றது. கிலேசமோ, அன்போ, பகையோ, இவையாவும் பகவானுடைய விளையாட்டு. இவை என்றும் இப்படியே. நாமும் அப்படியே. பிறப்பைப் போல இறப்பு. புகழைப் போல இகழ். நன்மையைப்போலத் தீமை. முழுதும் உண்மை. முன்னிலை இன்றித் தன்னிலையில் யாவும். இயங் காமல் இயங்கு. முடிவைக் காணுேம். அதுதான்
சுற்றிச் சுற்றிச் சுப்பருடைய கொல்லை.
என்றும் மறவாதவன்

நற்சிந்தனை 379
வ. &laյւՃամ)
நான், நீ, ஐயா, அம்மா, அண்ணர், அக்காமார், அத்தை, அப்பாச்சி, பெரியையா, சீனியையா, சின்னையா, கந்தசாமி, கணபதி, வைரவர், வீரபத்திரர், காளி, கூளி, கிருஷ்ணன், கிறிஸ்து, புத்தன், முகம்மது, இராச ரத்தின மாமா, சோமா மாமா, செல்லத்துரை மாமா, கன்று, பசு, ஆடு, குதிரை, சந்திரன், சூரியன், நட்சத் திரங்கள், மேடம். இடபம், மிதுனங் கர்க்கடகம், சிங் கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம், ஊர்வன, பறப்பன, கிடப்பன, நடப்பன, மலை, கடல், வாவி, குளம், கொடி, செடி என்று அளவிடக் கூடாமல் விரிந்து நிற்கிற ஒன்றுதான் கடவுள். இதை விட வேறில்லை யென்று தியானிக்கிறவன்தான் உண்மை யான பக்தனென்று சொல்லப்படுகிருன். இவனுக்கு இந்த உலகில் வெறுப்பானவர்களும் பிரியமானவர்களுமில்லை.
என்றும் பிறவாதவன்
60 -. சிவமயம்
வருடப்பிறப்பாய் விட்டது. நீங்கள் நல்ல பலகார வகைகள் செய்வீர்கள். பட்டுவேட்டி கட்டுவீர்கள். வீடு வெள்ளையடிப்பீர்கள். கோவிலுக்குப் போவீர்கள். சுவா மிக்கு நைவேத்தியமயிடேகம் முதலியவைகள் செய்விப்பீர் கள். நானே சாந்தமென்னும் புனலாடிப் பொறுமை என் கிற உத்தரீயம் பூண்டு வறுமையென்று சொல்லப்படுங் குருவின் போதனை கேட்டு மாசற்ற மனத்தைத் தரும் வெண்ணிறனிந்து, வேண்டாமையென்னும் விழுச் செல் வத்தையே மேலும் மேலும் தருமாறு பணிந்து அஞ் சாமை யென்கின்ற கேடகத்தை யுடையவனுய்ச் சுப்பிர மணிய சுவாமியினுடைய நெஞ்சிலே மிதித்து விளையாடு வேன்.
என்றும் மறவாதவன்
Η Α.- 4- 32

Page 194
380 நற்சிந்தனை
டெ சிவமயம்
பார். எல்லாம் சிவமயமாய் இருக்கின்றன. அப்போது நீ யார்? நான் யார்? ஐயா யார்? மற்றும் எல்லாம் என்ன? சிவமல்லவா? இன்னுஞ் சந்தேகமா? பயமா? பார். நான் உன்னுடனும் நீ என்னுடனும், எல்லாம் ஒன்ருகவும், ஒன்று எல்லாமாகவும் ஒருவிதமான மாறு தலும் அடையாமல் இருந்தபடியே இருக்கின்றது. எழுந் திரு. வரவரப் படி.
காலமில்லை. சுகம். சுகம். சுகம்.
பிறவாதவனிறவாதவன்
шаважами
, 29-5-33 இயாழ்ப்பாணம்
உலகமு முயிரு மாகியு மாகா அலகில் சோதி யடிமலர் பரவி ஒன்று சொற்றுது முவந்து கேண்மதி என்றும் நாங்க ளெல்லாஞ் சிவன்செயல் ஒன்றுக்கு மஞ்சேல் ஒருவனே தெய்வம் நன்று தீதென நாடிநீ கவலலை இன்று தொட்டுப் பணமெனக் கனுப்பாதே தொன்று தொட்டுப் பணந்தொல்லை யென்பர் முன்னும் பின்னு மெண்ணிமலை யாதே உன்னுள்ளு மென்னுள்ளு மிருப்ப தொன்றே சொன்ன வாசகஞ் சித்த சுத்தியைத்தரும் ஒன்னலர் தம்மை யுவந்துகொள் என்ன புதுமை யீண்டுண் டெனவறி.
ஒருநாளுமறவா யோகசுவாமி

நற்சிந்தனை " 881
.ெ சிவமயம்
நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றுண்டு. நீங் கள் உங்கள் கடமையை வழுவாது செய்யுங்கள். உங்க ளுக்குப் பகவான் நல்லருள்புரிவார்.
எல்லாருக்கும் என் அன்பார்ந்த வணக்கத்தைச் செய் கிறேன். ... । ‘’
இப்படிக்கு அவனே தானே
"செய்வன திருந்தச்செய்
மூத்தோர் வார்த்தை அமிர்தம்'.

Page 195
நாம் கடவுளை உள்ளத்தில் வளர்க்கிருேம். நாம் அவருடைய தாய். நமக்கு மவருக்குமொரு குறைவுமில்லை. நம்மை அவர் பிரிய முடியாது.
முழுதும் உண்மை.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!

v
Jfr "G8 அஃகமுங் காசும் அதிகம் அஃகமுங் காசும் தேடி அலேந்து நான். அஃகமுங் காசுஞ் சிக்கென அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடெனும் அஃகமும் காசுக் தேடி அம்புவியில் அஃகமுங் காசுக்தேடி அலையும் அஃகமும காசுக் தேடிடில் Q b (y அஃகமுங் காசுந்தேடி யலையாமல் அஃகா மனத்தா அஃகுதலில்லா அறிவினை Y. அஃகுதலில்லா அறிவுடைய அன்பரகம் . அஃகுதலில்லா அறிவுடைய பெரியோர் . அஃதை யறிவோ அகண்ட வெளியிலே அகந் தூய்மை அகம் பிரமாஸ்மியென்று அகம் பீரமாஸ்மியென்னும் அகரத்திலுகர மகர st அகரத்தில் உகரமும் o Y அகரமாம் எழுத்துப்போல அகரமுதல் எழுத்தெலாம் அகல நீளங் sh அகலிடத்தாசான் அகலிகை கல்லானுள் அக்கினறுமாலை அக்கக்காவடி அக்கு மனிதனைக் அங்கிங் கல்யாதே அங்கிங் கென்றெண்ணுதே அங்கிங் கெனுதபடி ஆனந்தமாய் அங்கிங் கெனுதபடி யெங்குஞ் es a அங்கிங் கெனுமல் அங்கிங் கெனுமலெங்குமான அங்கும் இங்கும் எங்கும் நான் 峰姆曾 அங்குமிங்குமாக அங்குமிங்கு மெங்கும் ஓடாதே A அங்குமிங்கு மெங்கும் திருக்கூத்து . அங்குமிங்கு மெங்குமந்த அங்கு மிங்கு மோடி அங்கையிலே பூவெடுத்து அங்கையிற் போது அச்சம் தீர்த்து அச்சமும் கோபமும் அச்சமொடு கோபத்தை
பக்கம் 343 56 288 314 243 187 115 289 157 225 303 185 16S 214 17 264 280 156 209 57 258 166 209 102 05 33 313 254 242 280 55 105 164 265 129 249 95 223 121
85 214
25 196
6. பாட்டு முதற்குறிப் பகராதி
அ
us0 அச்ச மொழியும் அஞ்சடுக்குத் தீபமுதல் அஞ்சின் வழியை அஞ்சும் மூன்றும் அஞ்சுகங்காள் அஞ்சுபூதம் யேல்ல அஞ்சு மடக்கு
அஞ்செழுத்தாலே அனைத்தும்
அஞ்செழுத்தாலே ஆக்கை அஞ்செழுத்தாலே சஞ்சல அஞ்செழுத்தாலே அரனடி அஞ்செழுத்தின அஞ்செழுத்துப் அஞ்செழுத்துள்ளே அனைத்தையுங் அஞ்செழுத்துள்ளே அஞ்செழுத்தை நெஞ்சில் அஞ்செழுத்தை வழுத்திடேன் அஞ்சென ஆறென அஞ்ஞான் விருளை அடிக்கடி மிடியால் அடிக்கீழ் அரக்கன்
spp. uu fi g LS 6TTàs asubsoġ5(8gb அடியார்க் கடியானென்று அடியவர் பாதத் தன்பு செய்திடில் அடியவர் மனத்தை அடியா ருள்ளத்தே அடுக்குமோவின அடைக்கல மடைக்கல மரனே அட்டவசுக்களும் அட்டாங்க யோகம் அவத்தை அட்டாங்க யோகத்திற்கும் அட்டாங்க யோகமெலாம் அட்டாங்க யோகமெல்லாம் அட்டாங்க யோகம் விட்டேன் அட்டாங்கயோக மறிந்து அணங்கு தந்தெமை அனேக்து வந்து அண்டசராசரம் அவன் அண்டசரா சரமவன் வடிவாகும் sı6örlerger a0 GLDü6)Tû அண்டமும் பிண்டமும் அகத்திற் அண்டமும் பிண்டமும் ஒன்ருே அண்டமும் பிண்ட மடங்கலு அண்ட பிண்ட மனத்தும்
பக்கம் . 133
214
始
多
6
134 94 102
26 . 213 23 23 10 151. 44 112 186 137 2O7 177 159 234 301
272 40 33 281 328 35 286 316 341
155 67 226 323 26 212 18 214 13 169 276

Page 196
பாட்டு
அண்ட பிண்ட மெல்லாம் அண்ட பிண்ட மெல்லா மடக்கி அண்டர் முனிவர் கரர் அண்ணன் மாரே அதுங்ானென்னு அதுவிது வென்றவன் அத்த சாமப் பூசைக்கு அத்துவா மார்க்கமாறும் அத்துவிதப் பொருள் அத்துவிதப் பொருளை அருந்தவர்கட் அத்துவிதப் பொருளை அறிவுக் அநுதினம் சாதனை அந்தக் கரண நாமல்ல அந்தம் ஆதி
அந்தமும் ஆதியும் அகன்றேன் வருக .
அந்தமும் ஆதியும் அறியொன அந்தமும் ஆதியும் இல்லான் அந்தமும் ஆதியு மில்லா அந்தமு மாதியு மில்லா ஒருவனே அந்த வாக்கும்
அந்த விதமே அக்தி சந்தி உன் அடியை அந்தி சந்தியும் சிந்திக்கு அந்தியுஞ் சந்தியும் அன்பினி அக்தியுஞ் சந்தியும் ஆசான் அந்தியுஞ் சந்தியும் இதனே அந்தியுஞ் சந்தியும் நீ அப்படி யுள்ள தென் அப்படியே உள்ள தென்பான் அங்கு அப்படியே உள்ள தென்பான் ஆசான்
su
es ve
·4· ·
அப்படியே உள்ள தென்பான் ஆரறிவார்
அப்டடியே அப்படியே அப்படியே அப்படியே அப்படியே
உள்ள தென்றன் உள்ள தென்று உள்ள தென அடிக்கடி
உள்ளதென அன்றசான் அப்படியே உள்ளதெனச் சொல்லி அப்படியே யுள்ளதென அத்து அப்படி யுள்ளதென்று அன்பாக அப்படியே உள்ள பொருளெடா அப்பர்க்கு சமணர் செய் அப்பர் சுநதரா அப்பனுக்கும் அம்மைக்கும் அப்பனும் அம்மையும் அப்பனும் அம்மையுஞ் சிவமே அப்பனே ஆகுயிரே
a as
oe
a.
உள்ளதென அடிக்கடியே
. . .
På asb
162 63 286 55 16 204
56 351 238 280 274 282 306
34
14 I87 100 88 252 304 199 159 301 240 280 292 248 312 248 276 163 270 288 86 283 329 320 305 283 38 352 47
352
130
i
i
பாட்டு
அப்பா பரமசிவம் அம்மையப்பன் அம்மை யப்பனரிய அம்மையு மப்பனுமாய் அம்மையப்பன
அயலறியா
அயலறியாத அயலுனக்கில்லே அயணு மரியும் அரகர சிவசிவ அாகரவென்று அரவரைக் கசைத்த அரவார் செஞ்சடை அரவுசேர் பேணியெம் அரற்று மன்பர்க்கு அரனு முமையு அரியதி லரியது ஆன்மா வதுதான் அரியதி லரியது ஆன்மா அரியயனுந்தேடி அரியும் பிரமாவும் அருந்தவர்தம் அருந்தவர் கெஞ்சிலிருக்கும் அருந்தவர் கெஞ்சில் ருசிக்குங் அருமருந் தொரு ჰotტნისტყ) ტყიტნllტყ) அருவமு முருவமு மானுன் அருவாகி நின்றவன் அருவாவுருவா அருவா யுருவாகி அருவென்றும் உருவென்றும் அருளா லறிந்தேன் அருளொளிக்குள்ளே அருள்நீ தாதாவே அலகிலாச் சோதியை அலகில் உயிர்களை அலங்காரமாக அலேயும் மனத்தை அல்லலற்று வாழ வழி அல்லலெல்லாம் நீக்கி அல்லும் எல்லியும் இறைவன் அல்லும் பகலும் அறிவாக அல்லும பகலும் அப்பன் அல்லும் பகலும் அறிவாகி அல்லும் பகலுமற அவமானப் படுவதில் அவனருளாலே
பக்கம்
350 307 203 49 32 217 208 284 39 306 39 178 226 1 C6 216 103 35 295 128 302 283 214 132
214 336 108 100 280 209 299
274 106
26 278 C4
65 121 272 287 294
44 190
77 282

t_jRL".(B -
அவனவ ளதுவெனு - 。 அவனன்றி யணுவும் அசைய
அவனன்றி ஓரணுவும் அவனி வனுரென் அவனிவ னென்றதை அவனன்றி யொன்றும் அs னன்றி யோரணுவுமசை அவனே நானென்று அவைக் கஞ்சா அழகாரரியும் அழகாருமமயுலியும் அழல்சேர் கையு அளந்தேன் அருளால் அளவிலா மதங்தொறு அளவிலா வொன்றே அளவில் மதங்தோறும் அளவுக்காகாரம் அளவுக்குப் போசனத்தை அரஞ்செய விரும்னெ அறஞ்செய்வார் தங்களகமே அறத்தோடு பூசை அறமே யாற்றுதும் தினமே அறம்புரி வோர்கள் திறம் அறம் பொருள் இன்பமும் அறவாழி அந்தணன் அறவோ ரெனப்படுவார் அறி சதி யறிவிகுலே அறிவறி யாமை
அறிவுக கறிவாகி யப்பாற்கப்பாலா .
அறிவுககறி வாகிகின்றப் அறிவுக்கறி வாகியங்கு அறிவுக்கறிவாக் யப்பாலுக் அறிவுக்கறிவாகி யப்பாற் அறிவுடையார் எல்லா அறியும் பொருளும் அறுபதும் காலுமறியா அறையும் மறை அனங்கணுகத்தை அனைத்து மவனே அவன்செயலே அனைத்தும் ஒன்றாய் அ*னத்தும் சிவன அனைத்தும சிவன் செயல் அனைத்து யிரும்நீயே அ*ன வருக்கும தெய்வம் அனைவரும் ஒன்ருய்
25
iii
பக்கம்
170 170 280 120 77 234 55 257 198 227 106 179 203 170 328 106
58. 238 347 101 170 179 106 109 1)2 133
61 161
51 100 193
104 106 214 198 227 343
55
36
61 243 284 323
uT"(B பக்கம்
அன்பரன்பது சிவசிவசிவ 348 அன்பருடன் கூடி நீ ..., 319. அன்பர் தம் சிந்தை 233 அன்பர் பணி 21 அன்பர் பணிந் தேத்தி நிற்கும் 290 அன்பிலா ரோடுறவு ... 345 அன்பில்லேன் இரக்கமில்லேன் 149 அன்பிலேன் பொறுமையிலேன் ..., 148 அன்பிற் கரைந்துருகி 188 அன்பிற் குழைந்து 304 அன்பினுற் பணி ... 271 அன்பினுருகி 191 அன்பு சிவமெனல் --- 7 அன்பு சிவமென் 33 ۔۔۔ அன்பு சிவமென்ற ஆன்றேர் ... 294 அன்புடனே ஐந்தெழுத்தை ... 94 அன்புடையோர் 107 அன்பு நெறியும் ... 64 அன்பே கடவுள் ... 26 அேைப சிவ ரி கக் 114. அன்பே சிவமென அறிவார் ... 97 அ* பே சிவமென * ... 23 அன்பே சிவமெனு ... 118 அன்பே சிவமெனற 289 அன்பேசிவம் அறிந்திடடா 247 அன்பே சிவமென்று கிளியே ... 345 அன்பே சிவமென் றறைந்த 170 அன்பேயுருவாய் ... 93 அன்பே வடிவாய் 228 அன்று மின்று 225 அன்னத்தோடாடை 106 அன்னே தந்தை சுற்றம் ... 185 அன்னை தந்தை சுற்றத்தை ... 344 அன்னை தந்தையர் ... 150 அன்னை பிதாக் குருவாய் 20 அன்னை பிதாக் குருவாகி 29 அ*னை பிதாக் குருவானுன் 241 அன்னை பிதாக் குருவானுன் எங்கள் . 277 அன்னை பிதா குரு ... 296 அன்னை பிதாக் குருவாகி அடியேனே . 270 அன்னை பிதாக் குரு தெய்வம் 38 அன்னை பிதாக் குருவாகிய 214 ..ه அன்னையாவது சிவசிவசிவ ... 348 அன்னையும் பிதாவும் 314

Page 197
LTG ஆக்கி னுனெ?ன ஆக்கை கிலேபல்ல శిరీ60 tడి ஆக்கை நிலையில்லே ஆக்கை நீ பல்லே ஆக்கையே கோயில் அகஞ்சிவ ஆக்கையே கோயில் அகமே ஆக்கையே கோயிலாக ஆங்காரம் போச்சுது ஆசா?னக் கண்டேன் ஆசான் லுருளால் ஆசான் அருளால் அகந்தை ஆசான் மலரடி ஆசுகவி மதுரகவி ஆசைக் கடலில் அலைந்து ஆசை கிகளத்தினை
ஆசைடாம் ஆசையை விட்டிடடி ஆசைேைலயிற் சிக்கி ஆச்சு தென்று ஆடம்பர மெல்லாம் ஆட வெடுத்த
bę. Nuo T (o: FrgisT UT ஆபொம் ப7ரிங் ஆடுபாப் பணிந் ஆரியாம் பணிந்தாடுவான ஆடுபாம்பே ஆகி மயிலே ஆடுவர் பாரிவர் ஆனில் பெண்ணும் ஆணு ^ாய்ப் பெண்ணுமாகி
ஆணும் பெண்ணும் அலியும் ஆணும் பெண்ணும் ஆனவனே ஆண்டவன் திருவடி ஆதார வாதேய ஆதாரக்தாலே ஆதாரத்தால் ஆதார மாறு க ஆகார மாறும் அகன்ற ஆதாரமாறும் அவத்தையோ ஆதார வாதேய முழுது ஆதாரம் ஆறும்விட்டுப் ஆதார வாதேய மாணவப் ஆதியந்த ம ன்மாவுக் ஆதியந்த மில்லாத ஆன்மா ஆதியந்த மில்லாத நாடெங்கள் ஆதியந்த மில்ல
OO
ν
293
ويت
udäöd uT (R பக்கம் 54 ஆதியந்தமும் அற்றவன் 271 342 ஆகியங்தம் இல்லையென்று 80 303 ஆதியந்த மில்லையென்றன் 3 171 ஆதிபந்தம் உங்கட்கில்லேப் 269 56 ஆதியு மந்தமூ ம ன்மாவுக்கில்லை 343 225 ஆதியு மந்தமு மில்லா 111 185 ஆதியு மந்தமுமில்லான் 240 140 ஆகியு மருதமு மில்ல நமக்கு 196 113 ஆதியந்தமில்லா அப்பனு 353 221 ஆதியு மில்லே 9 208 ஆதியும அந்தமும் அானுர்க்க 299 299 ஆதியும் அந்தமும் இல்லா ... 26 ஆகியும் அக்தமும நமக்கிலே ... 250
152 ஆமைபோல வைந்து 170 219 ஆயிரங் திருநாம * ... 142 108 ஆயுகான் ... 65 - 164 ஆாகத்தினும 54 280 ஆரடா நீ யென்றே 282 242 ஆாறிபவ ரென்ன 39 ܚܚܗ 153 ஆாறிவாரென அடிககடி சொல்லுவான். 239 223 ஆாறிவாரென அடிக்கடி ஒதும் 210 128 ஆரறிவாரென அன்று 52 279 ஆரறிவாரென்ற அருமைத் 187 199 ஆரறிவாரென்ற ஆசான் ... 293 14 ஆரறிவா ரென்று சொல்லிக் • • • 82 347 ஆாறிவா ரென்று சொல்லும் ... 308 266 ஆரறிவா சென்றுன்னுமரிய ... 321 60 ஆாறிவா ரென்றெனக 288 25 ஆரறிவா ரென்றே ... 219 208 ஆரறிவா ரென்ன • .163 م 57 ஆரறிவார் என்றப்பன் 232 --مه 251 ஆாறிவார் என்று முன்னுள் 186 233 ஆரறிவார் என்னும் ... 289 . 268 ஆராயும் வேதமுதல் ... 302 293 ஆராயும் வேதம் அறியாத ... 33 44 ஆராய்ந்து நற்கருமம் ... 107 204 ஆராய்ந்து பார்த்தாலறிவே 171 141 ஆராரென்ன வறைந்த ... 171 304 ஆருமறியாமல் ... 129 113 ஆாமறியா ரெனவே ... 336 156 ஆருமறியா ரென்று ... 80 269 ஆருயிர்கள் தோறு ... 93 168 ஆருயிர் தோறு ... 100 114 ஆரையனே . 46 294 ஆரோடும் பகையாதே 345 21 ஆர் கொடுக்க . 329 220 ஆர்க்குங் கடல்சூழ்ந்த 207 ماهه

LJTUG ஆர்க்கும் சுதந்திரத்தை ஆலயக் தொழுவது ஆவதில்லா அழிவதில்லா ஆவது அழிவதுதான் ஆவதும் அழிவதும் இல்லே ஆவதும் அழிவது அறியா ஆவதும் இல்ல ஆவதும் இல்லையடி ஆவதொன்று மறிகில்லேன் ஆவதோ ஒன்றுமில்லை ஆவிக்குளாவி ஆழ fள மில்ல ஆழிதழ் இலங்கை ஆழிததுரும்பெனவே ஆளான அன்பர் ஆளான மெய்யடியார் ஆளும பெருமான் ஆறணி சடையினனே ஆறணிக்த திருச்சடையா ஆறத் துவாக்களுக்கும் ஆருக்கவலை யெல்லாம் ஆருத காதல்சேர் ஆருய்க் கண்ணிர் ஆருறுக் கபபால் ஆறறு தத்துவத்துக் கப்பா லா ஆறறுத உதுவத்துக் கப்பாலே ஆறியாறி ஆறுகுளமேரி
இகலோகம் டரலோகம் இகழ்ச்சி புகழ்ச்சியென இசையும் பொருண் ඹුණී ශාකd tuff.0’ 6කකl இச்சையில்லோரே இடத்து மடந்தையை இட பந்தனிலேறு இடமக ைற ஞாலத்தே இடம் வலமோடி இருககண்கள் பலபல இ.ே லயக கிடும்பை இவே த மறவாதே இடு துவே சிறிதுமிலேன்
SOL. Y ħl h * இ. பிங்கல இரண்டுஞ் சேர்ந்து இடையா என் பென இ. ட யிடையே
Li u ܚܝܝܐ -: S8
છx . R : , (3.-7ř
பக்கம் utu (8 பக்கம்
241 ஆறுகுடிய
314 ஆறுதலாய் இருமென்னன் 243 ஆறுதல் பெற 104 ஆறுபடி தாண்டு 251 ஆறுபிறைகொண றை pe 167 ஆறும் பிறையுஞ் சூடிய - - - 208 ஆறும் குளனும் A lev 280 ஆறு வருடமவன் 149 ஆறுவது சினமென கடி ·· · 133 ஆறுவது சினமெனு மரிய I65 ஆறுவது சினமென்னு 8 326 ஆறு வைத்ததும −− − 282 ஆனந்தக்கூத் தாடினுன்
223 ஆனந்த மாந்த மனந்தங் a A
50 ஆகந்த கடனம் ஆடினுன
131 ஆனிரைதனை
202 ஆன்மா அழியா - 149 ஆன்மா அழியாதென்று - - - 145 ஆன்மா ஒருபோதும்
154 ஆன்மா நித்தியமான 304 ஆன்மா நித்தியமென்று
303 ஆன்மா கித்தியமென்ற
188 ஆன்மாவக் கயலில்&ல
213 ஆன்மாவே காமென்று
294 ஆன் மாவே நாமென் றுாதூது 288 ஆன் மாவே நாமென்னும்
17 ஆன்மாவை
101 ஆணே நீ அடல்விடைநீ
264 இட்டுண்டு வாழ்வார் 207 இணக்கமாயிருந்து
98 இணங்கிவாழ் மாந்தர் 137, ജൂഞ്ഞ് ധ്യ பணிவார் MA () 222 இது அது என்றெண்ணுமல் a
226 இந்தப் பத்து
O5 இந்தவுயிர் உடல் ஆனுன் 161 இந்திரராதி யோரானுன் 177 இந்திரனுதியோர்
159 இப்பிறவி தீர்ப்பான
287 இம்மைக்கும்
345 இம்மை மறுமை இரண்டின் 149 இம்மை மறும்ை
152 இம்மையிலும
95 இம்மையிடிம் மறுமையிலும் 207 இயககர் முனிவர்கள்
30 இயமன் வருணன் குபேரன் weww. 55 இல்வ5, கரவேல்
155 இல்லை யென்னும சொல்
3. 248 138 52 130 171 27 18 292 238 287 147 256 284 237 215 13 69 81 274 301 353 280 8O 190 36 89. 275

Page 198
LTG இரவு பகலற்ற ஏகாந்தம் இரவுபகலற்ற தனி இரவு பகலில்லாத இரவும் பகலுமற்ற இரவும் பதலுமுன்னை இராஜ திராஜன் இருநிலனுய்த் இரு நிலனுய் இரவிமதி இருநிலனுேடிாவி இருந்த படியே யிருக்கும் பொருளை
இருந்த படியே யிருப்பதனைக் கான .
இருந்துபார் என்றென இருப்பார் பொருப்பி லிறைவி இருப்பினும் நடந்து இருப்பு நெருப்புப் இருவருங் காணு வீசன் இருவி%ன சேரா இருவினை பணு மிடுக்கணெய் இருவருந்தேடி
இருவழியை
இருவாசல்
இருவினைகளென இருவினை நீககி இருவினையான் இருவினையால் கட்டுண்டு இருவினையை நீக்கி இருவினை சுய நீக்கி இரவுபக இருவி%னயின் கட்டழித்து இருவினை வந்தெனை இருளை நீக்கி இலங்கைவாழ் தெய்வம் இலது உளதென இல்லறத்தில் நின்றெளிரும் இல்லற மல்லது இல்லற மென்பதியார்க்கும் இல்ல*ளுக் தானும் இல்லே உண்டென்னு
இல்லை உண்டென்பது
Firsof 200rut. ஈசனே எம்மை நீங்கா ஈசனே எவ்வுயிர்க்கும் அவ் ஈசனே எவ்வுயிர்க்கும் உயிராய் ஈசனே நல்லூர் ஈசனே நல்ல வாசனே ஈசனே யெங்கு மென
ν
பக்கம்
125 102
152
36 302
41 130 297 143 172 343
56 72ן 203 100 315 315 172 245
160 204 57 124 185 187 188 129 199
197 226 03 314 103 103 100 256
31 140 187
... 302
99 188
இல்லை
பாட்டு உண்டென்று இயம்ப உண்டென எடுத்து
உண்டென்று உண்டென்று சொல்ல யென்னு மலே யென்று சொல்லுவார் யென்று சொல்கிலோ இல்லை யென்னுமல் இல்ல யென்றும உண்டென்று; இல்லயென் ருெருடோதுஞ் இள ை இன்பத்தில் இள ை0 கிலேயாதென
இல்க் இல்ல இல்க் @6სზა இல்ல
ଦ୍ରୁ, ଶ୍ୱେତ ଅଲି)
இளமையுமூ இளம் பிரை அணிந்த இளம்பிறை சூடி
இளமை மூப்பிலான் இளமையும் மூப்பும் இளமை முப்பிலான் இறப்பும் பிறப்பும் இனிப் பிறவா இனிய அருள் இனிய திலினியது இனியவனே இனியேதெனக்குன் . வருமோ இனி யேதெனக்குள் இன்சொல் விளை நிலனுய் இன்சொற்றவருர் இன்ப துன்பம் இன்பமே யல்லாமல் இன்ருகி நா?ளயாய் இன்றிருளை நீக்கி இன்றுளோர் நா8ள இன்றென நா?ள யென்றே இன்றைக்கோ நா?ளக்கோ இன்ன தன்மை என்று நம்மை இன்னதன்மைய னிவனென இன்ன தன்மையனென் இன்னு னிவனென் றெவரும்
ஒருவனென ஈசன் ஒருவனெண்ணிப் ஈசன் ஒருவனென எண்ணி ஈசன் திருவடி ஈசன் திருவடியை ஈசன் மேல் நேசமாய் ஈசனை எல்லாவுயிர்க்கு
FF伊守
Y
பக்கம்
317
108 301 225 114 104 93 196 218 242 344 32 75 179 43 119 14 43 227 227 194 93 166 50 85 192
103
126

UT"08 ஈசனை யெல%லயில் ஈடேற வேண்டுமென்றல் ஈடேற்ற முண்டாமே ஈன்றளுமா யெமக் ஈயாத புல்லர் தங்கள் ஈயாத புல்லர் இடந்தோறும் ஈயாத புல்லரை நீ ஈயாத மாந்தர் Ffu (T gb ffîääsioàs) ஈயார் தேட்டைத் ஈயு மெறும்பு ஈரவார்சடை ஈரவார் சடையான ஈரவார் செஞ்சடையா
உகந்து மணங்குவிந்து உடல் பொருளாவி உடையது விளம்பேலு உணர்ந்தார்க்கு உணர்வரிய உணர்ந்தார்க்கு முணர உண்னவே உண்ண உண்ணுதே உறங்காதே உண்ணு துறங்கா திருந்த உண்டான போதுகா உண்டி சுருங்குதல் உண்டில்&ல யென்று சொல்ல உண்டில்?ல யென்றுசொல்லி உண்டோதானுன உண்மை முழுது மெனவுறுதி உண்மை முழுது மெனவோ உண்மை முழுதுமென ஒது உண்மை முழுதுமென்றல் உண்மை முழுது மென்றேத்தி உண்மை முழுது மென்பான் உண்மை முழுதுன்ெற உயர்ந்த உண்மை முழுது மென்ற ஒரு உண்மை முழுது மென்று சாற்று உண்மை முழுதுமென்றேயா உண்மை முழுது மென்னும் உண்மை முழுது மென்ருேதுங் உண்மை முழுதும் என்ற உண்மை முழுவதும் என்றுரை உண்மையும் இன்மையும் உத்தம நட்பை உத்தமர்கள் போற்றும் உம்பர் தலைவனை
vii
பக்கம் பாட்டு டக்கம் 104 ஈர்த்தென்னை யாண்டவன் ... 108 242 ஈர்த்தென ஜன யாட்கொண்ட ... 29 343 ஈவது கடைப்பிடி ... 199 93 Fr6aug Mesir seo 345 سعه - - 56 ஈவது விலக்காதே ... 345 185 ஈவது விலக்கே லென் ... 238 308 ஈவோரிரக்கவு 173 ماهه 156 ஈழநாடு வாழவந்த ... 229 172 ஈழநாடு வாழவந்த எங்கள்சிவ ... 229 3I4 ஈவாரே எல்லாம் ... 107 172 ஈறில்லாதவன் ... 147 14 ஈனருளு மாயென் ... I73 126 ஈன்றிடு தந்தை ... 57 130
2
19 உம்பர் தலைவனுயர் ... 225 231 உம்பர் தல்வனை யூழி ... 173 238 உயர்ந்த திருக்கோபுரமும் ... 220 33 உயிருக்குயிராகி 129 57 உயிரெலாம் தன்னுயிர் ... 166 163 உயிரெல்லா மாகியும் ... 130 322 உருக்கு மொழியால் 79 173 உருகி உருகி ... 187 199 உருகி உருகி உணர்வழிந்து 295 314 உருகியுருகி உணர்ந்தேன் ... 18 10 உருவேறவே செபிக்க 24 322 உருவேறவே செபித்து ... 153 64 உலகத்தோடொட்ட 167 288 உலகமும் உயிரும் ... 20 29 உலகமே கோயிலாய் ... 301 127 உலகம் உதித்ததுமாங்கே . . . 256 343 உலகம் உவக்கவும ... 231 114. உலகம் யாவையும் ... 14 312 உலகுமுயிரு மாயொன்றி 104 242 உலகெலா முணர்ந்த ... 324 36 உல்லாச கடையனடி , 249 96 உல்லாச மாயெங்குஞ் . . 298 210 உவந்து வருவான் ஓம் ... 192 287 உவமானம் கடந்த ... 77 218 உவமை ஒன்றில்ல ... 327 308 உவமை கடந்த . எல் - 92 120 உவமை கடந்த பேரின்பம ... 282 147 உவமை கடந்த வின்பம் ... 61 61 உளவறிக் தெல்லாம் ... 108 238 உள்குவாருள்ளத் ... 140 156 உள்ளத்தி னுள்ளே யுலாவு --- 173

Page 199
Lr-G உள்ளத்தினுள்ளே யொளிருஞ் உள்ளத்தூய்மையாய் உள்ளமே கோயில் உள்ள வுள்ள உறவு மிதுவே உறுதி தருவது சிவழே உறுதி யுண்ட குமுண்மை உற்றர் பெற்றருடன் உற்றரும் போனுர் உனைப்போல உத்தமர்கள் உன் துணை யன்றி
ஊக்கத்தைப்போல ஊக்கமது கைவிடேல் ஊக்கமுள்ளவர்
DGIJá (po Tu - - ஊசிமேல் நுனி - - ஊட்டி வளர்க்க
"ஊண்பொருளு ஊதியமாவதும் நீயே ஊதூது சங்கே ஒளதுாது ஒவதூது சங்கே ஊதூது ஊமத்தை கொன்றை யுவந்த ஊமை, போலிருந்தே ஊரார் சிறக்க ஊருடன் பலகக்கின் ஊருமில்லாய் பேருமில்லாய் ஊருமில்லான் பேருமில்லான் ஊரும் துணையில்* ஊரும் பேருமில்லா உத்தமனே ஊரும் பேருமில்லா ஒருபொருளை ஐவரும் .ோமில்லா ஒருவருக்குச் ஊரும்பேருமில்லா ஒருவனே ஊரும் ருேமில்லா ஒருவனை
எங்களை ஆள் குருகாதா எங்கw விட்டுப் எங்கள் குருநாதன் எங்குக் திருவிழி எங்கு தேடினுய்
1ங்கு மீசனே யேத்துவார் ww எங்கு முள்ளவன் எங்கும் ஈசனை எங்கும் என்றன் தங்கும் எங்கு சிவனடியை எங்கும் மாதவர்
பக்கம்
304 272 107 115 169 247 174 173 221 243 230
9G.
287 238 301 174
57
, 104
81 147 189 190 174 140 107 314 130 154
46 302
36 114 289 156
59 114 53 175 262 272 204 10 265 38 206
viii
பாட்டு உ நினைவல்லால் உன்மத்தங் கொண்டு உன்மத்தன் போல உன்மத்தன் போலே உன்னடிமை உன்னைப் பிரிவனுே உன்னை மறப்பேனுே உன்னை முழுவதும் உன்னே யல்லால் உன்?ன யுனக்கொரு உன்?ன உணர்ந்தவர்கள்
பேருமில்லா ஒருவன் பேருமில்லா ஒருவன் திரு பேருமில்லா வொருவன் பேருமில்வாத உத்தம?னச் பேருமில்லா னுள்ளான் ஊரும் பேரும் இல்லையென்று ஊரும் பேரும் இல்லான் ஊரூராய்த் திரிந்து ஊழிக் காலத்து மொருவர் ஊழ்வினைபோக ஊனு (புணர்வா யுயிருக் ஊணு யுயிராய்க் ஊணு யுயிராகி யுட்கலந்த ஊணு யுயிரா யுலகாயோ ஊஞய் உயிராய் உளத்திற் ஊனுய் உயிராய் உடலாய் ஊனுய் யுயிரா யுடலாய் உறுப்பாய் ஊனுமவனே உயிருமவனே ஊஜமாய் உயிருமாகி ஊனே நீ உயிரே நீ ஊன் பொதிந்த
ஊரும் ஊரும் ஊரும் ஊரும் ஊரும்
எங்கெங்கு சென்ருலும் எங்கெங்கே எங்கே காம் அங்கே எங்கே நீ அங்கே நான் எட்டாத கொப்பிலிருக்கின்ற எட்டாத கொப்பிலிருககுந் தேனுக்கு எட்டாத கொப்பில் எட்டாத கொப்பினிலே எட்டாத கொப்புக்கு எட்டாத பேரின்பம்
எட்டுத் தரம்
t க்கம் 122 129 289
56. 337 185 93 165 302 249 88
185 295 225 242 174 80 108 187 174 120 74 308 188 343 93 186 199 106 56 275 14
115 303 162
63 286 175 27. 155 155 155 152

ix
பாட்டு பக்கம் பாட்டு பக்கம் எட்டுத் திசையுமற் . 304 எல்லா மாயல்லவுமா . திருவரு ... 187 எட்டும் இரண்டும் அறியாத . 220 எல்லாமாய் அல்லவுமாய் இருப் ... 185 எட்டு மிரண்டு மறியா எனக்கொரு . 52 எல்லாமாய் அல்லவுமாயிருக்கும் . 63 எட்டு மிரண்டு மறியா எனக்குகல் . 125 எல்லாமு மல்லவும் ... 310 எட்டுமிரண்டு மிசைந்து ... 286 எல்லாமென் ... 18 எட்டுணையும் தாழ்ச்சி ... 286 எல்லாமென்னூர் ... 346 எண்ண மெலாம் ... 102 எல்லாம் அவனே 62 எண்வ்கை ஒருவனே .. 310 எல்லாம் சிவமயம் ... 301 என ணமல் எண்ணிடடா . 322 எல்லாம் சிவன் செயலே 13 ۔ ۔۔ எண்ணிப் பணிவார் ... 289 எல்லாம் சிவன்செயல் 53 ۔۔۔ எண்ணிய வண்ணம ... 56 எல்லாம் செய " ... 40 எண்ணி யெண்ணிப் ... 246 எல்லாம் நினது செயலென் 188 ••۔ எண்ணி யெண்ணி ... 201 எல்லாம் நீ யென . 205 م எண்ணி லடங்காதடா ... 264 எல்லாம் நீயே ... 175 எண்ணு மெழுத்துங் ... 314 எல்லாம் வல்ல திருப்பாதம் 202 ۔۔۔ எண்ணு மெழுத்துமாய் ... 225 எல்லா ரகத்தும் ... 161 எண்ணுவார் எண்ணங் . 140 எல்லாரிடதது முள்ளாய் -- 230 எண் ணுவார் நெஞ்சில் 309 எல்லா ரிடத்தும் . ... 230 எத்திக்குமாகி . 238 எல்லாரு ருவமும் ... 230 எ திக்கு மீசனடி ... 224 எல்லா ருள்ளத்தினும் ... 24 எத்திசைக்கும் ... 273 எல்லாரையு ... 89 எத்தொழிலச் - ... 69 எல்லார்க்கு மன்பு ... 24 எந்தச் செயலுஞ் ... 252 எல்லார்க்கும் தம்பிரான் . . . 235 எந்த நேரமும் ... 31 எல்லார்க்கும் நன்மைசெய் ... 264 எந்த நேரமும இறைவன் ... 272 எல்லார்க்குமாங் கடவுள் ... 197 எந்த வேளையும் 54 எல3லசொலல ... 302 எந்தையே எந்தையே 50 எல்லேயிலாக் கருணை ... 110 எந்தையே எம பெரு ... 46 எல்லேயிலாவருள் .233 م.م எந்நாளும் நல்லூரை 66 எல்லே பெமக்கில்லே ... 344 எப்டடி இவன்றன்மை ... 283 எவரேனும் ... 166 எப்பவோ முடிந்ததென எங்தை 186 எவ்வுயிருந் தன்னுயிர்போல் - 60 எப்பவோ முடிந்ததென எனக்கு ... 270 எழுக புலருமுன் OO 8 எப்பவோ முடிந்த தென்றெடுத் ... 211 எழுதவே யொண்ணு ... 104 எப்பவோ முடிவான" ... 39 எழுவாய் பயனிலைகள் ... 222 எமன் வருமுன்னே ... 105 ஏள்ளப்படா ரறிஞர் ... 107 எல்லாஞ் சிவன் செயலென்பர் ... 165 எள்ளுக்கு ளெண்ணெய் ... 115 எல்லாஞ் சிவன்செயலென்றெண் ... 304 எள்ளுக்குள் ளெண்ணெய்போலெங்கும் . 343 எல்லாஞ் சிவன் செய . 287 எள்ளுக்குள் எண்ணெய்போல் 12 எல்லாஞ் செயவல்ல இறைவனே . 130 எள்ளும் எண்ணெய்யும்போல ... 136 எல்லாஞ் செயவல்ல தெய்வம 297 எள்ளுக்குள் எண்ணெய் == 294 எல்லாஞ் செயவல்ல சித்தர் ... 142 எள்ளு மெண்ணெயும் ... 14 எல்லா வுயிரினு ... 295 எனக் கினியாள் ... 203 எல்லா உலகமுமான ... 108 எனக்கின்பமே வா ... 68 எல்லாச் சமயமும் ... 305 எனக்கும் தனக்கும் ... 36 எல்லந் தருங் தெய்வம் . 197 எனக்குள்ளே as 121 எல்லாப் பொருள்களும் ... 147 என்செயலாவதில்லை ... 175 எல்லா மாயல்லவுமாய் . ... 93 எனது யான் எனும் ... 332
எல்லாமாய் அன்றி . 162 என் செயல் ... 168

Page 200
TG என் பிழைகள் எனபு பூண்டவன் என்று நீயன்று நாம் என்றும் மறவா என்று மிருந்தபடி
என்று மினியான் w
என்னப்ப னெம்பிரான் - - - என்னாசை ஆரமுதை
என்னுருயிரே as a என்னிதய வெளியினிலே so என்னுயிருக் குயிரானை
என்னு ளொளியை என&னக்கணமுடி பியா
6j&ኔ Ibffሀ Jö8mኽr
ஏகமனதாகிக்
ஏக மாசிய ஏகமாகிய இறைவன் ஏகம்பம் மேவி ஏகப மேவியந்த ஏகன கேகனுயுறற ஏகனகே கணிாறவனடி ஏகனகே கனிறைவனடி வாழ்க 6JaST (Brb a GigaST 6T ,) ஏகனனேக னென்று சொல்லும் ஏகனநேக னெல்லார்க்கு ஏகன் அநேகன் ஏகனனே கனிறைவனடி ஏக னனேகனென்றுமிமைய ஏடவிழ் கோதை
ஐங்கரத்தொ ருகோட் ஐஞ்சு பூகமும் ஐஞ்சு மாறுமான ஐந்தாண்டு விழாவத&ன ஐந்து பலன்வென்ற ஐந்தும் அடக்கா ஐந்தெழுத்துள்ளே ஐ*தெழுத்தை ஐம்புல பந்தனை ஐம்புல ஆனந்தையும் ஐம்புலன் தன்?ன வென்ற
ஐ பலன் வழிபோம் e 8
ஐம்பூதt ஐம்பொறியும்
ஐம்பூதம் காமல்லக்காணும் de
பக்கம்
126 47 186 89 54 319 242 126 303 344 127 156 175
157
168 301 225 14り 104. 295
93 300 185
175
287 343 131 .
56
225 11 111
58 2n5 252 167 317 205 1s8 114 244 343 282
பாட்டு
பக்கம் என்?ன நீ வேரு 57 என்னேயறிவித்தென ... 53 என்னை யன்றி 125 என்&னயினிப் பிறவாமல் 270 என்?ன பிணி மறவாமல் 344 எ**னயுடையானவன் 154 என்?ன யெனக் - 1 என்னையெனக் கென்னுலே ... 134 என்னையெனக் கென்னலே அறிவித்த 149 என்?ன யென்னுல் 204 என்?ன யென்னு லெனக்கறி 204 என்னே விட்டகலாம 235 என்னுேடு 121
ஏட்டிலெழுதிக் 108 ஏதும் அவன் செயலென்று 114 எது சிவன் செயல் 36 ஏதுமற நில் 289 ஏதுமறியாத 188 ஏது மொன்ாற 57 ஏலாது செய்பவரை 107 ஏவா மக்கள் 314 - ஏழுலகங் கொழுதேத்தும் 242 எrழக்காய் வந்திரங்கி 302 ஏழை பங்கன் 15. ஏறுவாம் பரி ... 31 ஏற்கமோ திருவுருளுக் 273 ஏற்றில் வருவது 148 ஏனையவ றங்களினு 103
ஐம்பூதம் நாமல்லவென்று கூவு 80 ஐம்பூதம் நாமல்லவென்று ஊது 190 ஐம்பூதம் நீயல்?ல அறிந்திதனை 242 ஐம்பூதம் நீயல்?ல ஐம்பொறி நீ 309 ஐம்பூதம் நீயல்லை ஐம்பொறியு 191 ஐப் பூதம் நீயல்ல ஐம்பொறியும் 154 ஐம்பூதம் நீவீரல்லீர் 269 ஐம்பொறி மாட்டு 336 ஐtபொறியும் மனமும் ... 185 ஐம்  ெஈறியை அடக் ... 12 ஐம்பொறி வழிசெல்லாமல் ... 292 ஐம்பொறி வழிபோய் is ... 252 ஐம்பொறி வழியினிற் 120 ممن ஐயந் தீர்த்தடியேன் 140

u"(B 3ut Lifs ஐயப்படாமல் ஐயப்பாடின்றி ஐயமிட்டுண் ஐயமில்லா ஐயமெலாம் தீர அன்புடனே ஐயமெலாம் ஐயமே னென்றுரைத்த ஐயமேன் காணு ஐயங்கொடுப்பது ஐயமபுகார்
ஒடுங்கு மனத்தில் ஒண்டொடியே ஒப்பற்ற தெய்வமே ஒப்பில்லாத ஒப்புயர்வற்றவன் ஒரு கறியும் ஒரு சொல்லா ஒரு தெய்வம் ஒருலகம்
நாமம் ஒருருவம் பிடிசோற்றுக்காய் கோந் நெல்லரிசி பொல்லாப்புமில்லையெடா பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு டொல்லாப்பு பொல்லாப்பு பால்லாப்பு பொல்லாபபு பொல்லாப்பு பொல்டிாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு
Lfüsiაზo
uჩ6სზდა மில்லேயென் Lfleobo gir Lfléსზეა மில்8லயென்றவர் மில்லையென்னும் மில்லத்தம்பி tfsöådu JLIr மில்லயுணர்வீர் மில்லையென
மில்லயென மில்லையென மில்லயெனும் மில்லேயென்றே மில்லயென்டான்
பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல லாப்பு பொல லாட பு ,ெ எல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு பொல்லாப்பு  ெஎல்லாப்பு ஒருவ: மிருவரும் ஒருமை மனம்படைத்த ஒரு மொழியதணு ஒரு ஏமாழியா லென்றன்*
26
மில்லையென்று மில்லையென்றே
y pw ah
.ொல்லாப்பு மில்லையென்று ஒது .
ow a
a
மில்லையென்றென் . மில்லையென்ற மருந்து மில்லையென்ற வாக்கு
bapa
xi
பக்கம் 1( 4. 187 301 287 15 289 36 93 56 148 107
166 83
347 109 329 18 186 188 270 121 305 39
276 248 185 186 301 321 243 258 120 207 219 296 289 287 225 312 288
87
255 163 267 228
93
பாட்டு ஐயம் புகினுஞ் ஐயம் புகுத்து ஐயம்வையாதே ஐயனே ஆரூரில் ஐயனே சறகுருகாதா ஐயனே யழகன ஐயாற கலாத ஐயுந் தொடர்ந்து ஐவருமுன் ஏவல் செய்வார் ஐவர் செய்வினையில்
ஒரு மொழியாலே உணர்தற்கு ஒருவனுலே உலகம ஒருவனுலே உல*மூ ஒருவனே தெய்வமெனும் ஒருவனே தெய்வமென்னும் ஒருவனே யொரு ஒருவ%னப்பற்றி ஒவ்வாதன சொல்லி ஒழுக்க விழுப்பந்தருய் ஒளிக் கொளியை ஒற்றுமை பிந்தவூரிடை ஒன்பது வாய்ததோற்பைக்குளு ஒன்பது வாய்க்தோற்பைக்கு ஒன்பது வாயிலுள்ள ஒன்பது வாயிலும் ஒன்பது வாய்ததோற்பைக்காயி ஒன்பது வாயில் உடைய ஒன்பது வாய்த்தோற்பையு ஒன்பது வாய்த்தோற்பை தன்னில் ஒன்ரு யிரண்டாகி ஒன்ருய் யிரண்டாய் மூன்றயோ ஒன்ருகக் கண்ட ஒன்ரு யிருப்பதும் ஒன்றப் இரண்டாயொரு ஒன்ருய் இரண்டாய் ஒன்றிரண்டென்று ஒன்றிரண்டென்றே ஒன்றிரண்டென்னு ஒன்றிலொன்றி ஒன்றுக்கு மஞ்சாதே ஒன்றும் இரண்டும் ஒன்றென இாண்டெனளண் ஒன்றெனக் கும்பிடுவாய் ஒன்றென ரண்டென ஒத ஒன் றிரண்டென்று ஒன்றென்றிரு தெய்வம் ஒன்றை நினைக்தென் ஒன்க்ரு இரண்டோ
uàsasůd
wwat
3 4. 131 216 302. 51 176 199 188 153 157
163 15 212 37 3CO 212 314 85 123
136 302 187 243 157 131
1C4 140 153 176 114 148
63
33 112 230 343
10 264
207 262 113 309 295 雯13 217

Page 201
LuMGB ஓங்காரக் கம்பத்தினுள் ஓங்காரக் கம்பத்தின் ஓங்காரத்தி ஓங்காரத்தினுள்ளே ஓங்கார நாதமே ஓங்காரத்தாலே ஓங்காரத்தில் உதித்த ஓங்காரததின் ஓங்காரத்துட்பொருளான ஓங்கார மேடையின் ஓடாதே வழுக்குமடி ஓடி யோடி ஓடிவாடா தொண்டா ஓடு கங்கையுடன் ஓடும் இருநிதியும் ஒம்ே புளியம்பழமும ஓடும் புளியம்பழமும்போலும் ஒதாதஈர்க்கில்ஸ் ஓதாமல் வேதம் ஒதியுணர முடியான் ஒதியோதி.மீரமே ஒதியோதி .தனனையே ஒதியோதி யுன்மத்த ஒதுபல் வேதமூரைசெய்த
ஒளவனத் தில்லையில் ஒளவா நல்ல ஒளவியம் செல்வம் ஒளவியத்தை நீக்கி அகக் ஒளவியத்தை நீக்கியறத்தை ஒளவிய நெஞ்சத்தார் ஒளவிய நெஞ்சததால் ஒளவிய நெஞ்சப ஒளவிய நெஞ்சை ஒளவிய மனத்தின ரறியா ஒளவிய மில்லாமன
கங்குலும் பகலுமில்லாக் கங்குல் பகலற்ற கங்கல் பகலகாணுத கங்கைச் சடை கங்கையொடு கசடுதீர்த்தறங் _ கசிந்துஈகி
கஞ்சனும்
கஞ்சமலர் கஞ்சா அபின் கடலகுழிலங்கை
xii
Q பக்கம் பாட்டு பக்கம் 157 ஒது மன்பர்களுள்ளத்து ... 347 187 ஒதும் பொருளும் ... 107 15 ஒதுவ தொழியே லென்ற . 243 37 ஒதுவார் தீவினை ... 200 333 ஒதுவார் நெஞ்சில் ... 50 185 ஒமெனும் ஒண்பொருள் ... 148 225 ஒமெனுந் தாரகம் ... 116 109 ஒமெனு மெழுத்தினுள்ளே ... 295 176 ஒமெனும் எழுத்தினுள்ளே உல - S6 113 ஓம் ஓம் என்று 326 هـه 84 ஓம் சிவ சிவ ... 306 17 ஓம் சிவாயநம வென்றுசொல்லு ... 318 279 ஓம் சிவாயாகமவெனத் 292 138 ஓம் சிவாயநமவென்று சொல்லுவோர். 115 289 ஓம் சிவாய நமவென்று உறுதி 287 س 104 ஓம் சிவாய நமவென்று ஒது 302 .س 221 ஓம் நமசிவாயவென உருவேற ... 93 314 ஓம் நமசிவாயவென உருவேற்று ... 349 329 6th b(3ot nito rug09 ... 307 240 ஓம் நாம் நாமென்று ... 298 12 ஓயாமல் உள்குவார் தம் 43 ۔۔۔ 17 ஒருரு வானுன் ஈருரு ... 111 251 ஒவியம் போலி 309 349 ஓவியம் போலிருந்து ... 343
ஒள 225 ஒளவிய மில்லா வறிவு ... 37 56 ஒளவிய மில்லா அறிவை ... 15 105 ஒளவிய மில்லாதார் 187 مصم 289 ஒளவியம் பேசல் - 314 343 ஒளவியம் பேசா 302 ۔ 185 ஒளவியம் பேசாதே 243 ماهه 109 ஒளவியம் பேசி ... 93 309 ஒளவியம் பேசுதல் 288 سسه 157 ஒளவை உறுவை .107 مم 176 ஒளவியமறறதும் ... 148 200
176 all 681T Syrigh ... 250 157 கடிவது மறந்திடடி .291 سم 223 கட்டாத மனத்தைக் ... 155 38 கட்டுருமன் ... 21 105 கட்டுப்படாதமனத்தைக் ... 225
5 கட்ப்ேபடா மனத்தைக் கட்டத் 186 سمي 318 கட்டுப்படாமனத்தை • 316 مه 52 கட்டுப்பாடில்லாதார் ... 161 94 கண்டவாரும் ... 316 255 s6irl Gut sirtuou98o ... 83 347 கண்டுசர்க்கரை -- 153

uTGB கண்டாரு மில்லயடி கண்டார் ககை கண்டொன்று சொல்லாதே கண்ணல்லக் காதல்லத் கண்ணபிரானுங் காணுக் கண்ணுரக் கண்டிடடா கண்ணுலே காணுெணுதது கண்ணிறைந்த செல்வத்தை கண்ணிறைந்த ஆண்ணுக்கு அணிகலன் கண்ணுக்குக் கண்ணுயிருக்கும் கண்ணுககுக் கண்ணுயிருக்கின்ற கண்ணுக்குக் கண்ணுகிகின்றய் கண்ணுக்குக் கண்ணைங்ாம் கண்ணுக்குக் கண்ணுய கடவுளை கண்ணேயுறங்குறங்கு கண்னைப் போலறங் கண்ணையிமை கண்ணைக் கண்ணுல் பார் கண்மூன்றுடைய கதிரவன்னெழுமுன் கங்தைத்துணியணிந்து கங்தைத்துணியணிவான் கமலாகான்முகன் கமலநான்முகன் கண்ணனுங் கருங்குயில்கள் கருததிற் கருத்தாயிருக்கும் கருத்திலிருக்கும் கதிர்காமத்தோனே கருத்தில் நினைந்துருகிக் கருத்தில் கருத்தாகி கருத்திற் கருத்தே
காக்குந் திருவடிகள் காட்டகத்தே வாழுங் காட்டிலே காளியுடன் காணுகின்ற கண்ணிற் கலந்த காணுகின்ற கண்ணிற் கலந்துள்ள காணுங்கண்ணிற்
காணுங் கண்ணிற் கலந்த கண்ணது . காணுங் கண்ணிற் கலந்ததென்பர் .
காணுங் கண்ணிற் கலந்தவனே
காணுங் கண்ணிற் கலந்தவனேகார் .
காணும் கண்ணிற் கலந்து காணுவார் தொண்டர் காண்பதெல்லாம் காண்டான் காட்சி காண்பான் காட்சி காட்சிப் காண்பான் காட்சியுங் காட்சிப்
xiii
பக்கம் பாட்டு பக்கம் 255 கருமத்தைக்கை ... 258 82 கருமததைச் செய்யலன் ... 267 286 கருவி கரணங்களெல்லாங் 336 ۔۔۔ . 264 கருவிகரணங்களெல்லாங் கலந்து . 297 306 கருவூரில் வாராமை 24 . . ۔ ۔ 322 கரைகாணு வின்பக் ... 219 273 கரையவொரு சொற்சொல்லுஞ் ... 249 33 கரையுமன்பர்கள் ... 348 33 கர்ப்பூரப் பெட்டிகளும் ... 83 23 கல்லார் கற்ருர்க்கும் ... 100 112 கல்லார்க்குங் கற்றவர்க்குங் ... 29 113 கல்லாதார்பாற் A sw 7 146 கல்லாப் பிழையுங் 236 278 கலேகள் பலவுங் ... 298 310 கல்ல நிகர்த்த ... 89 270 கல்லை நிகர்த்தமனங் ... 121 12 கல்லான கன்னலுண்ணச் ... 146 118 கல்லொத்திடு மனங் 67 277 கவனமாய் கருமத்தை ... 77 349 களிபெருகுங் காமக் 195 .م 246 கறங்குபோலக் கலங்கு 176 288 கறுத்திருண்ட கண்டத்தின் ... 145 248 கற்பனை கடந்த வற்புதன் ..... 179 47 கற்றதனுற் பயன் 258 ۔۔۔ 349 கற்றவர் விழுங்கும்கருணை 210 معه 346 கற்ருேரும் அறியாத 312 86 கனைக்குங் கடல்சூழ் ... 323 79 கன்னலொடு செந்நெல் ... 217 27 கன்னலுடன் செந்நெல் .164 مم 331 கன்னலொடு செந்நெல் கதலி 127 33
As 218 காண்பானும் காட்சியும் ... 81 134 காண்பானுங் காட்சியும் போய் 223 124 காதலாற் பாடி 134 162 காதலிக்கு மெய்யடியார் 63 163 காதல் நீ கருத்தும் 75 55 влi,5si (psyaso 310 168 காமக்கடல் கடந்து 304 251 காமமுதலாறுங் கடிந்து 75 233 காமமுதலாறுங் களைந்த 102 270 காமாதி குணமெல்லாங் 40 244 காயமே கோயில் கடிமணமடிமை . 253 195 காயமே கோயிலடி தங்கமே ... 260 195 காயமே கோவிலாகக் கண்டிடும் 141 10 காயமே கோயிலாகக் கண்டு பாவனே . 321 203 காயமொரு 267 294 காயம அழிந்து 13

Page 202
LmtG காயுங் கனியுமாகி காராரானவக் கார்த்தி கேயனைக் &ff tập காவார் குயில் காலனே கோலிக் காலமுமில்ல காலனு மணுகான் are)? is ass systs) காலனக் காலாலுதைத்தான்
கிஞ்சுக வாயுமை
கீரன் சொன்ன
குடிப்பிறந்தாரோடு குடி முழுதையும் குணங்கடந்தது குணமிலலா மூர்க்கரோடுங் கும்பிடுவார் தம்மனத்தைக் ஆம்பிடுவார் நன் மனத்தை கும் மியடி பெண்ணே குருசீடம் முறை
குருந்த மரத்தடியில் குருவாக வந்தவன்
குருந்த மரத்தடியில் குருவாக வந்து
குருபக்தியே குருபரன் அடியின
கூசும் கொலைகள் era LL66 60637 go e.g. suffusf கூத்தாடுதே கூவியழைத்திடுவாய்
Basudio Lo6oř
கொச்சை மக்கள் கொச்சை மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சம கொஞ்சம ய் மனத்தைக்
கொடிய வசுரர் கொடுத்தார்க்கு கொண்டுங் கொடுத்துங் கொத்தார் குழலுமை
p.
209
xiv .
L0âkastb 244 179 216
211
92 160 9 69 72 162
கி 18O
ó 180
(ඊ) 58 234 305 149 161
63 234
10 283 255 205
s 206 347 279 232 259
uTü"CB asTe)6T as கா% க் கட்டித் காகித்தூக்கி கால நீ தூக்கியாடும் கால மா8லயுங் கால யெழுந்திருந்து காலை யெழுந்து asp akA) (éeQuèsT காணக்குறத்தி
கிட்ட நெருங்கையிலே
குருபாதம்
குருவடியொரு குருவான கல்லூரிற் செல்வன் குருராஜ
56Nobsao p6OOTT Tås esorb6bú Um Trá குலாகலம் பாராதே ۔۔۔۔ குழந்தை யன்போடு குருவின்
குழந்தை யன்போடு நாம் குழந்தை வேலா குற்றமெல்லாம்
கூவுகுயிலே கூறுவார் கோடி கூறும் நாமுதல் எல்லா கூறும் நாவே
கையையுங் காலையு
கொல்லாதே கோபம் கொல்லாமை கள்ளாமை கொல்லாமை பெரிதென்று கொல்லார் பொய் கொல்லா வரமெனக்கு கொல்லானே கொன்றை மத்தம் கொன்றென்றும்
ιμάταιο
92 16 72 141 347 19 169 37 68
82
61 259 335 167 210 322 274 278
78 304
80 315 305 153
180
264 24
1(3
89 310 180 322

untG கோகனகத்தானுங் கோணுதசிந்தையுடன் கோணிய பிறையை கோபம் பொருமையை
கெளரியை யிடத்தில்
hlasrüe (Burao
да ато சங்கர சங்கர சம்பு சங்கரன் தானினே சங்கரன் திருப்பாதம் சங்கோசை சஞ்சலத்தை சஞ்சலம் மிகவும் சணடக மரத்தடி பிற் சத்தி சிவமாகித் சத்தி சிவ மொன்றன சத்தியம் பொறுமை சகதியுஞ்சிவமும் சந்ததம் சாதனை
சாங் காலம் Ժր (3600 t சாதலும் பிறத்தலுக் சாதி சமயங்களில்லான் சாதி சமயமென்னுஞ் சாதி சமயப் பற்றினை
சிங்கக் குட்டி சிங்களவர்
சிங்காரங் சிட்டர் பரவுஞ் சிததத்தினுள்ளே சிவ சித்தததினுள்ளே தித்திக்குங் சித்தக துள் கித்தம் சித்தததி லூறுக் சித்த திலே தித்திக்குங் சிததத்துள் தித்திக்கக் சித்திர காரன்தீட்டிய சிகதி தருங் தேவாய் சித்தி பெறலாம் சிகதி மயிலேறு சிங்க% க் கெட்டாத
XV
Vä dobT
பக்கம் பாட்டு 180 கோல மாமலர்
82 கோல மொன்றும்
233 கோலா கல 259
கெள
274
226
ሪፓ 180 சந்திர சூரியர் காப்பாம் 263 சந்திர சூரியரானுன் 105 சந்திரன் தவழ்தரும்
95 சந்திரனில்லச் 81 சமய தீக்கையைப் 154 சமய நெறி 325 சர்வம் பிரம
81 சலன முதிப்பது 33 சற்குருதரிசனம் 38 சற்குருவின் 66 சற்றுஞ் சந்தேகங் 177 சற்குருவைப் போற்றித் 226 சனகர்
FA 311 சாந்தம் உபசாந்தம் 275 சாந்தம் பொறுமை 181 சாந்தம் பொறுமை யன்பு 240 சார்ந்தவர்க்கு சாவா 248 சாவதும் பிறப்பதுங்
. 250
265 , சிந்திக்க நெஞ்சும் 265 சிந்தித்துச் சிந்தித்துச் 28 சிங்கி சிந்தி சிக்கி 286 சிந்தித்துத் தெளிந்தார்
89 சிந்தையிலன்பு
167 சிந்தை செய்கதிர் 235 சிந்தையில் வெந்துயர் 303 சரித்டிப்புரமெரித்த 316 சிரித்து கலலூர்
33 சிரித்து முப்புர
181 சிரித்துப் புரமூன்றுஞ் 238 சவ சீவு என்றிடும் 346 சிவ சிவ என்று
70 சிவ சிவ வென்றெந்த 191 சிவ சிவ என்று சிந்திப்பர்
பக்கம்
32 54 72
35 240
25 296 203 315 305 256 263 319 168 192 179
320 31s) 164 167
196 187
169
315 46 349
329 54 47 142 341 77
213

Page 203
Luri CB சிவ சிவ செல்வக் கணபதி சிவ தொண்டு செய்வார்க்குச் சிவ தொண்டனென்னும் சிவ தொண்டன் சிவ தொண்டு செய்தல் சிவத்தியானஞ் சிவதொண்டு செய்வார் சிவத்தைக் கண்டிடர் சிவத்தை நோக்கித் சிவத்தினை வளர்க்கும் சிவத்தியானத்தைச் செய்யும் சிவத்தை மறைத்தது சிவத்தை விடத்தெய்வம் சிவநாமமைந்தெழுத்தும் \ சிவ நாமஞ் சொல்லி சிவ நெறிச் செல்வர் சிவபக்தியாலே சிந்தை சிவமே தாமெனச் சிந்திப்பார் சிவனடியார்கள்
&Lot?gTL
சீரகமுள்ள சீராரிலங்கை சீராரும் நல்லூரில் சீரார்மேனியுடையாய் doroT aligu(BartGB a.8
சுகதுக்கம் சுட்டாமல் சுந்தரற்கு சுந்தரற்குப் பெண்
56)
5 g6 flT குதானதற்ற சூதானவெளியில் சூரியன் தோன்று
செக்கச் சிவந்த செக்கர் போலும் செத்தார் என்பு செந்நெலுடன் கன்னல் செந்நெல்லும் கன்னலும் செப்பந்தரமோ செய்யமேனியனே செல்லப்ப &ன *தினம் செல்லப்பன் என்னுக் செல்லார் செல்வக்குருகாதா
as Y 8
po
s.As
*K. dia o
4 UA to
xvi
பக்கம் uTG 232 சிவமே நாமென்று சிந்திக்கச்
42 சிவனடியாருடன்கூடி
48 சிவனடியாரை
120 சிவனடிக்கன்பு செய்குவர் 208 சிவனடியாரொடுங்கூடி 135 சிவனடியைச் சிந்தை 299 சிவன் சிவனென்று
12 சிவனேயுன் தரிசனங் 17 சிவனையல்லாமல் தேவரு 245 சிவனுெருத்தனே 272 சிவாய நமவென்று
299 சிறப்பு மிதுவே
198 சிறையார் வண்டறை
58 சிறப்புக் குறைவிடமே 61 சிறப்புஞ் செலவமும்
141 சிற்றம பலவன்
212 சினத்தை மனத்தில்
299 சினத்தைக் கொல்லுவோம் 109 சின்னத்தனமாய்த்
153 சீருந் துணையில்&லச்
181 சீர் பெறுஞ்சித்தரும் ஆங்கே 303 சீலஞ்சேர்
270 சீலமு மதுவே
135 சீவன் சிவனெனல்
26 சீவன் சிவனென்று
62 er (5508uur 155 öጽጨfftß 111 சுழி முனைக்குள்
12 சுனைக்கும் கல்லூர் 284 சுன்னுகத்தான
279 சூரியன் வருவது 168 தலபாணியைத் 141 26.) JusÐLULJETÜ 346 சூழமிகநினைத்து
செ
313 செல்வச் சிவதொண்டன் 202 செல்வச் செருக்கினுற் 25 செல்வகிலே யாதென்று 249 செல்வம் அது
59 செலவர்க்கழகு 51 செல்வர் பின் சென்று 25 செழுமலர்த்திருவடி
67 சென்னிக்கணி
16 சென்றன சென்றன 310 சென்றன வாணுட்கள் 12
o
168 285
47 249
46 256 272 169
45
37
11 323 322
160
132 229
16
9) 197 249 127 18
97 193
22 162

LTG சேணிடை சேண்பொலியுக் சேர்ந்தவர்க்குத்
சைவனேயுன்னத்
Garres (Sur (8s சொல்லச் சொல்லச் சொல்லமுடியாத தீர்ப்பு சொல்லமுடியாதபொருள் சொல்லாமற்சொன்ன சொல்லாலே பயனில்லை
சோடிழந்த சோதிப்பிழம்
ஞானதேசிகனே
தக்கன் வேள்வி தங்கப் பொம்மை தங்குஞ் சிவ தச்சன் கட்டா வீட்டிலே
தச்சன் கட்டா வீட்டிலே தாவும்பரி
தட்டா னிடத்துச் தண்ணிர்க் கடவுள் தண்ணிர் குளிருமோ தத்தாதித் தோம் தத்து பரி தத்து வங்களாருறும் தத்துவந் தொண்ணுற்றறுஞ் தத்துவப்பே தத்துவம் ஆருறும் தத்துவ மெல்லாம் தத்துவம் யாவுஞ் சடமென தத்துவம் யாவுஞ் சடமென்று தந்திமுகத்தனச் தந்தை தாய் மற்றுங் தந்தை தாய் மைந்தர் தந்தைதாயும் தமஞ்சம மிரண்டின் தம்மைத்தம் மாலறிந்த
is List (Bu தருமநிலையிலே தருமநெறி பிசகாமல் தருமமு மில்லத்
xvii
Lånd
v Kej
(35戸
tă atb பாட்டு 181 சேவித்துஞ் சென்றிரந்துஞ் சீவன் . 224 சேவித்துஞ் சென்றிரந்துந் தம்பி 164
சை 81
சொ 24 சொல்லாலே வாய்த்த 279 சொல்லால்வருங்
95 சொல்லித்துதிக்குக் 40 சொல்லிற் கலந்த 16S சொல்லுகிவமே 264 (des s676TUIT scorés
@于阿 82 சோமசுந்தரன் 131
(6. 222 ஞானயோகம்
த் 111 தர்க்கஞ் செய்யப் 265 த&லயிலிரந்து 249 தலையை நிலத்தில் 316 தவஞ் செய்து 342 தவத்திற் சிறந்தார் I55 தவத்தை யாற்றிடில் 101 தவராச சிங்கத்தை 102 தனக்குத் தானிகரான
46 த*னலம் வீந்திடத் 105 தன்மை முன்னிலே 162 தன்னே அறிந்தால் 141 தன்னை அறிந்துவிட்டால் 224 தன்னைத் தன்னுல்
40 தன்னைத் தன்னுலறிந்த 1^2 தன்னைத் தன்னுலறிவார்
61 தன்னத் தன்னுலறிந்திடடா 44 தன்னைத் தன்னுலறியடா 212 தன்னைத் தன்னுலறியவேண்டும் 184 தன்னை மறந்தருளில் 124 தன்?ன யறிந்தார் 182 தன்னே யறிதல்
66 தன்னே யறியத் தவத்தை 320 தன்னை யறியத் தவமுயற்றும் 85 தன்னை யறியத் தனக்கொரு 255 தன்னை யறிந்தோமே 267 தன்னை யறிந்தோர்க்குத் 168 தன்னுெப் பாரில்லாத
192 220
18 13 276 51 65 182
226
313 16 298
7. 320 272 288
32 205 296
19
226
247 342 255
59 161 198 177 27 91 239
38
33

Page 204
UT" (8 தாபதர்தம் தாமரையில் நீர் தாயினு மன்பு தாயுங் தந்தையுமாகி தாரகத்தனி தாவித் தாவிச் தாவும் வேங்கை தாளம் போடு
திக்குத் திகாந்த மெல்லாம் திக்குத் திகாந்தமும் திக்குத் திகாந்தமும் கைவச திங்கட் சடையாய் திங்களும் கங்கையுஞ் சீறும் திங்களும் கங்கையும்
திங்களும் கங்கையுஞ் சென்னியில்
திங்கள் கங்கை திங்கள் தங்கிய திடமுட்ன் தியானஞ் தித்திக்கும் அமுதே தித்திக்கும் அமுதினேத் தித்திக்கும் ஒரு
தீமையெவர்
துக்கம் சுகம் துஞ்சாதே தூங்காதே துட்டச் சமணர் துண்டப் பிறையாய் துதிக்க மதிதந்த
தூக்கியபாதத்தின் தூங்காமல் தூங்குஞ் தூண்டு சுடர் தூது சுந்தரர்க்
தெய்வத்துக்குத் தெய்வமே திருவருள் தெய்வமே யடினென தெய்வம் எல்லோர் தெய்வம் ஒன்றெனத் தெரிந்து செயலாற்றும்
தேகம் நீயல்ல வென்றன் தேகம் நீயல்ல வென்றதிட
χνiii
தா பக்கம் Jr" (B 259 தானதருமங்கள் 184 தானந் தவமிரண்டுக் தானுற்ற 85 தானர் தவமிரண்டுஞ் சற்று 244 தானுன சற்குருவைத் 117 தானுன தத்துவன 220 தானுன தன்மை 182 தானுன தானேயல்லால் 326
தி
2 திருந்து மடியவரொடு 44 திருநீறும் ஐந்தெழுத்தும் 3.13 திரு நீறுஞ் சந்தனமும் 236 திருவருட் செயல் 209 திரு ருள் கைகூடுது
37 திருவருளை நாடி 44 திருவாரும் நல்லூரில் 182 தில3லயம்பலத் தாடும் 136 தில்லையம்பலத்தைக் கண்ணுற் 250 தில்லயிலாடிய 135 தினத்தனைப்போது மறவாமல் 310 தி&னத்தனப்போதும் மறவோம் 3 தினத்துணைப்போதும் மறவாது
தீ
196 தீவினைகெஞ்சத்
து 33 துப்பி சைந்த 254 தும்பி முகன் 317 துள்ளித்திரியும் 183 துள்ளும் மனத்தை 218
து 234 தூலதுக்கும
113 தூவி மயிலேறும் 196 தூணே நீ
83
தெ 223 தெரிந்து வினையாற்றும் 326 தெளியுமே நின் சிங்தை
32 தெளிய வழிகாட்டும்
7 தென்னவன் தீப்பினி 272 தென்னு தென்னுவென 191
தே 1 தேகம் விழுமுன் 141 தேகமே மெய்யென்று
»eo
... 284
பக்கம் 165 103
117 254
224
283
334 266
267 307 338 233
285 323
182
26 292 115 249
169 220 275
198
86 117 183 310
168 124

பாட்டு தேகாதிதனை தேங்காயி லிளநீர் Ο ΣΚΣ தேசகாலம் யாவையும் ob தேசம் புகழுஞ் சிவன் w
தேசம் புகழுந்திரு ops தேடாமல் தேடென்ரு to a தேடித் தேடித் pov தேடி நான்காணும் தேடிகின் திருவடியே தேடிவாடாதொண்டா (3g (Bs. Tñ um. (Bé apud தேர்முட்டிப்படி o தேரடியில எங்காளும் 4. தேரடியிற் சென்று way
தையலார் மையலிற்ருன் o O
தொண்டர் நாங்களே தொண்டு செய்வாருக்கு தொந்தோ மென்ருடும்
தோடுடைச் செவியனே A a தோளாமுத்தே
நகரத்துள்ளே Fasa நஞ்சணி நஞ்சை a de гъt-ti (Bie OO நட்டா ·· bഞ്ഞ് ഇ obes (5 LDé(ğ ΑΑΟ το நமச்சி வாயவே நாம்சொல்லும்
நமச்சி வாய வாழ்கவென நமச்சி வாயவே நான்மறை
கமனு 8 நபமிடமெல்லா w a w ந1 மிடமென்றுங் s நம்பன்
bi 3560bas bel960T (ur Qe p ur நயப்பார் நரிபோல் bora நரியை 8 நலமறிய oе நல்லசமயமிது 8 wo நல்ல தெய்வானை Wh நல்ல மருந்தொரு - - - நல்ல மலரெடுத்து opp நல்ல மழை - கல்லன m நல்லூரான் கிருபை.காம் as a நல்லூரான் கிருபைவேண்டும்-வேறெ. கல்லூரான் திருபபாதம் Op நல்லூரான் திருமுன்பு was
27
பக்கம் பாட்டு 215 தேரடியில் வீற்றிருப்பான் 115 தேவதேவனே என்றுந்
60 தேவரும் முனிவரும் 307 தேவர்கடம்
41 தேவர் சிறை
2 தேவர் பிரான், 271 தேவாதி தேவ 141 தேறிததெளிந்த
45 தேனுந்துகொன்றை 279 தேனுந்துசோலேத்
7 தேனுந்து முக்கணித்
81 தேனும் பாலினுமினிய 282 தேன் சொரியுஞ்
86
தை
90 தையல் வேட்டுச்
தொ
4. தொல்லாகா னிருவர்காணு 230 தொழுது வணங்கிடுவாய்
41 தொழுது வணங்கிநின் தோ 340 தோன்ருத்துணையை 184
b
212 நல்லூரான் திருவடியைப்பாடு 167 நல்லூரான் திருவடியை நான் 149 நல்லூரான் வீதியிற்போய் 250 கல்லூரில் செல்லப்பன் 155 நல்லூரில் தேரடியில் 306 நல்லூரில் வாசன் 293 நல்லுரைக் கும்பிட்டு 177 நல்லூர் ஆட்டக்காரா 315 நல்லூர்பதியிலே 58 நல்லூர் வாசனே
38 நடு லூர் வெளியிலே 277 நல்லோரி 277 fò sobombs 144 நல்லப்பதிக்கு
80 நல்லப் பதிக்கரசே
29 நல்& யில் வாசா
79 நவாகவமாய் 329 நவிலுமறை
16 நற்சிங்தை யெனும். நறுமலர் 86 நற்சிந்தை யெனும்.கல்லமுதம் 264 நனந்து
7 நன்மை
98 நன்மையுந் தீமையும் நாமல்ல 86 நன்மையும் தீமையும் நாடா 222 நனமையும் தீமையும் கங் 2O6 நன்றியை
91 நன்று தீதை
73 கன்று தீதென்று
95 நன்றென்றுக் தீதென்றும் 190 நன்றெனத் தீதெனத்
பக்கம்
329 252 251 153
183 321 292
134 142
43
83
183 223 193
340
255 113

Page 205
LTG நாங்கள் சிவமென் காசிதுணி
DETSATT & காடியொரு கருமம் is si mb|Tig,68LLum நாடுவார் நாதன் நானும் காமஞ் நமந்தி நாமறியோமெனச் சொலு நாமறியோ மெனும் நாமறியோ மெனும் நல்லமந்திரம் நாமறியோ மென்னும் நல்வாக்கு நாமறியோ மெனும் கறியதிரு நாமறியோ மென்ற கலந்திகழ் - நாமறியோ மென்று கல்லூரிற்சொன்ன . நாமறியோ மென்று 8 8 நாமறியோ மென்று சொன்னுன் நாமறியோ மென்று நகைத்தென்னே. நாமறியோ மென்று நல்லூரிற்
கிகரொ ருவரும் நிஜமா மான்மா கிததியம கித்திரையை நித்தியர்
நிலனுகிக்
நில்லடா நில்லன் பொடு நினைந்து கில்லாத காயத்தை கில்லாத நீர் நில்லாத செல்வத்தை நிற்பனவும்
:
நீக்கமற்று நீங்காத நீங்காது
நீதிகுருபரன் &
திே அநீதியென்னும் நீதி நெறியைச் நீயருளாப்டிற் கீயும் நானும் நீயே நான் என்றுநேர் நீயே நான் என்று நீயே கான் என்னும் நீயே நீயாயிருக்கப் நீராய் கெருப்பாய் ரோனுய் நிலனுணுய் ருேங் காலும்
KK
நா LIä3úb 311 152 279 346 141 117 158 251 47 92 39 S2 21. 163 161 293 288 82 276 219 270
259 332 278 162 238. 197 298
235 30
90 146
342 113 333 240 248 80 338 58 63 87 2 269 27 12S 2O1
uTB நாமறியோ மென்று முன்னுள் நாமறியோம என்ற நல்லதிருவாக்கை . நாமாாககுங் was நமோர்குடியுமல்லேன் நாமார்க்கும் ஆளல்லேம் நாமுமே நாமாக நாமும் காமாக நாமே நாமென்றுரைத்தான் - a a நாமே நாமென்றுசொல்லிச் re. nbrüd büd blid 66 காவலரும் நாவுக் நாற்றிசையுஞ் நான் உன்ன நான படும் நானுரென் கானென்னும் நானே நீ நன்மதி நானேநீ நீயோநான் நானென {B୩ (କ୍ରୋଥି) ଓ
Tâb(8urû
ßoT é a rấgrăso
ißጿ0] õÖ [filgulgDU நினைககு மடியாரை நீயே 8 நினைககு மடியார் கெஞ்சத்துள்ளே கினைத்தபடி AO ARO V t6]3%All their • ** به நினைவில் நினைவாகி
நினவுக்கு நிஜனவாய்
கின்னு வார்
நீர்நிலம் தீகாற்று
ក៏ពុំ ឯសb ឆ្នាំ
நீல கண்டன
நீவா தா
நீள நினைக்கும்
நீறணி நின்மலா - நீறணிந்த 8 நீறணிமேனியினும்
நீறணியான் < Ad• «O நீரு திருமேனி கீறாமேனி as கீறு பூசிய As a 0 நீறு மணியான்
பக்கம்
186 329 184 330 346 153 38 3. 80 326 43 43 117 71 43 124 29 275 275 330 167
197 164 306 218 201 284. 323 194 158 294 184
256 235
32 334 111 201
25 145 151 329 303 135
3. 248

UT'09
நுண்ணிடை 48 r.
நூதன
நூலறி
கெஞ்சகம் -8 கெஞ்சுருகும்
நேசயோகத்தார் asp
கைந்து
நொந்தவர் a Neae
பகருவார் நெஞ்சம்
பக்குவகால பக்குவாய்ப் a பக்தர்கள் எல்லாம் 4 பக்கிசெய்து பந்தத்தை d பக்திசெய் யோகசுவாமி 0.
uங்கில் மங்கையை பச்சை நிறப்புற்றரை பச்சைப் பசுங்கிளியே பச்சை மாமயிலோடு பச்சைப்புரவி பஞ்சப்புலன்களுங் பஞ்சப் லன்வழி - பஞ்சம் படை வந்தாலும் a y பஞ்சம் படை வந்த LJL-&plaus 5 guð b பட்டது பட்டேற்று பட்டால் பாவாடை பட்டுக்குடைபிடித்து பணித8லக் கொள்ளல் - பணிபவர் கெஞ்சினுனே meAO பண்ணவன் பண்ணே பண்ணிற் - பண்டையனும் மாலுந்தேடிப் - பண்டையனும் மாலுமடி பண்டு செய்த வல்வினை நோய் பண்டு செய்த வல்வினையால் பண்டுசெய் வல்விண்நோய் பண்டு செய்வின யெல்லாம் பறந்து பண்டு செய்வினை யெல்லாம் பரிந்தன. பண்டு மின்றம் என்றுமுள்ள பரனடி , பண்டு மின்றுமென்றும் பண்டுமின்றும் உள்ள பதமலர் போற்று
8 v 8
பாசத்தால் வெந்து நொந்து பாடல்பத்தும் படிப்போர்கள் . . . பாடவறியான் பலகலையுந் தானறியான்
xxi
டு
பக்கம்
158
T
158 169
நெ
167
284
நே
1.59
நை
252
நொ
159
50 313 313 120 23 24 25 342 83 137 342 351 186 69 94 250 316 155 286 206 139 144 231 316 297 322 286 254 4. 169 306 38 264 85
329 41 222
பாட்டு
நூற் பெர்ருள்
@Bທູ (ມ நெற்றி
நேசத்தால் oo
கையும்
பதின்மூன்று பாடல்கள் பத்திககு மடியவர்
பத்தி செய்யும் es •
பத்தியுடன் பத்துப்பாட்டா மிவற்றைக் பத்துப்பாட்டும் படிப்பவர் பத்துப் பாட்டுப்படிப்போகும் பத்தும் காலும் பத்தும் படிப்போர்க்குப் பாக்கியமுஞ் பத்தும் படிப்போர்கள் --- பத்தும் படிப்போர்கள் கேட்போர்கள் . பத்மாசனத்தில் 4 பந்தஞ்செய் பாசமே - பந்தமும் வீடும் -- பந்தமெனும் பந்தி பக்தியாயிருந்து
பயமுண்டோ
U06junigun fids o 4 பரவு வார்க்கருளுவாய் - a பரிந்தன்பர் பாதத்தில் பரிந்து பணியாற்றி e பருவத்தில் மழை a- - -
6) LU606us iš
பல்வினே போக்கி
பவ நெறிகடக்கப்
பவம் நீங்கும்
பவவருடத்துப்
பவவருடம் மார்கழியிற் பழம் பாக்கு வெற்றிலே பற்றற்ருர் பற்றும் பரமகுரு பற்றற்றர் பற்றும் பரமபொரு பற்றினுற் பிறந்திறந்து டன்னுட் பழக்கத்தினுட் பன்னிரண்டு காற்
பாடி மகிழும் சிவபாக்கியம் UT gtUTigtj USOoflub பாடிவாடா தொண்டா o
a
233
46 158
202
159
279

Page 206
Luar LGB பாதாரவிந்தத்தைக் காணுமற் ܝ ܝ பாதிச் சாமததின் பாதி மதிசூடிப் பவளம்போல் பாம்பும் புலியும் பாமர மக்கட் பணிசெயல் பாரவன் விண்ணவன் காண் பாரறியார் இவருடையதன்மை பாராதி பூதமெல்லாம் urg" (Bur. G6.6ö73öT பாாம் விண்ணுமாகி நிற்பது பாசையனே கடைக்கண்ணுல் பாரையனே மனம் பாரொடு பூதங்களாகிப் பரிதிமதி பாரொடு விண்ணுய்ப் பரந்தான் பார்க்கப் பார்க்க பார்க்கு மிடமெங்குஞ்
பார்ப்பதெல்லாஞ்சிவ
Słgpayäfia v 9:35 (dsGoTeirg Lumok pas பித்தனென்றவர் பிறவி · sa பித்தனென்றும் பேசுவார்
பித்தனெனப் பலபேரும் an A பிராண னபானனுங் காப்பாம் waபிருதுவியப்புத் பிறப்பிறப்பற்ற பெருமான் பிறுப் பிறப்பில்லாத
புகல்வதற் கொன்று புத்தியை நீநாட்டாதே புத்தியை ஒன்றிலும் காட்டாதே புலன்வழிச் செல்லும் பொல்லாப் புல%னவென்ற  ெரியோர்களுளம் புள்ளிக் கலாப மயிலேறும்
பூக்கைகொண்டு போற்றடா பூக்கைகொண்டு போற்றுமடியார் பூதங்கள் ஐந்தான
பூதங்களில்&லப் பொறிபுல பூதங்களைந்தாகிப்
பெண்ணுமானு மில்லையடா vo பெரிதானுய் சிறிதானுய் · · · பெரியதிற் பெரியது waw
இபசரிய சிர்ச்சனகன் பேசாத மந்திரத்தின் பெருமை Yoo பேணும் பிறபபிறப்பில்ல யென்பார் .
36
XXii
பக்கம்
113 54 128 234 206 330 282 321 86 244 46 46 151 145 24 2O7
194
288 59 31 329 82 351 285 166
133 224 258 141 38
85
342 132 4.
296
126
sou
247 125 99
பே 103
12 251
Lumu" (8 LuTuTfuULe?ST பாலகற்குப் பாற்கடலைப்பாரி பாலன் மார்க்கண்டன் பாலனுக்காகப் பாலும் பழமுக் பாலக்குடித்துப் பாவணி செய்துபாடு பாவம்போம் பொல்லாப் Luñ any sa)ñf (5 fT6QJ6)ñi பாவலர் நாவலர்கள்
பாவலர் நாவலர் பணியும் நல்லூரில்
பாவனை யொன்று டாவிகளறியார் பாவிகதும் பாட்டிசைத்துங் பாவியென்று uTpG Fuqua Lor uLuT பாற்கடல் தன்ன
வீறப்பிறப்பில்லாப். யெங்கள்
பிறப்பிறப்பில்லாப் பெருமானே நீ
பிறவார்கள் இறவார்கள் பிறியென்றன் பிறியாமற் பின்ன ரெனக்குப் பின்னுமுன்னு மில்லே பின்னைப் பிறப்பிறப் பின்னேப் பொய் பின்னே யுனக்குத்துணை
புறத்தில*லபாதே புனலொழுகப் புன்னகையாலே புன்சொல் புன்னுனிமேல் நீர்போல் புன்னேறி செலும்
பூதம் நீ பொறியும் பூப்பொலியுங் பூவின் மனம்போற் பூவும் மணமும் போலப்
பெரியவன் சிறியவனென்பது பெருமான்காண்
பெருமை சிறுமையில்லாப்
பேதங்களெல்லா மாயினும் பேராயிர முடையான்
296
255
62 217 110 346
75.
203
275 134 165 208
16S 144 100
167 150

ur.09 பொங்கல் பூசை பொங்கிவரும் அமிர்தத்தை பொங்கிவரும் காமமே பொங்கும் காமக்குரோத பொய்யை மெய்யென பொல்லாப் பிங்கில்லையென்று பொல்லாப் புழுமலியும் பொழில் வாழும் பொறியஞ்சும் வென்றவர்தம் பொறியைந்தும் வென்றவர் பொறிவழிச்செல்லும் பொல்லா பொறிவழிபோம் பொறிவழிபோய் பொறிவழிப் புகுத்துதே பொறிவழிமனத்தை பொறிவழி மனம் போயல் பொறிவழியினிற் செல்லாதே பொறிவழியே பொறிவழியே போய்ப்புகுந்து பொறிவழிபோயலயாமல் பொறிவழியே போயலயும்
போக்கும் வரவும் இல்லாப்புனிதன் போக்கும் வரவுமுள்னானில்லான் போக்குவரவில்லாத
BLJOT óGolest G8 QU6qfiio?bo போகபோக்கியம் எல்லாம் போதுகொண்டு போற்றேன் போதுமளவும்
diis 6TT as roaTas L0äl č56T aš0 LDTsor மங்களம் ஜெய மங்களம் 1 மங்களம் ஜெய மங்களம் 11 L) bi 36ITLDI és L) மங்களமான வார்த்தை மங்குவார்
udělspasuoTř
மங்கையொரு மடைதிறந்தாற் மட்டிலாதது
மணிவாசகங்
மண்டலங்கள் மண்டலம் முழுவதும் மண்டலம் மூன்றும்
цовбот (В மண்ணுகிய பூதமைந்தும் மண்ணுசை பெண்ணுசை
xxiii
GUIT
பக்கம் uT'GB ιμά δύο 265 பொறிவாயிலந்தவித்தான் ... 109 95 பொறிவென்றர் தாமும் 103 95 பொறுமையுமடக்கமும் 166 249 பொறுமையைப் பறங்காப்பது ... 12 138 பொன்போல்மேனியர் ... 160 239 பொன்போலும் திருமேனி உடையார் . 143 90 பொன்போலும்-மேனியனே ... 33 31 பொன்னுணுய் மணியானுய் 125 316 போன்னுசை பெண்ணுசை ... 20 30 பொன்னுசை முண்ணுசை அகப்பேய் . 254 165 பொன்னுசை மண்ணுசை பெண்ணுசையை 294 60 பொன்னுர் மேனி 30 91 பொன்னுருடலிற் பொடியைப் பூசிப் 32 317 பொன்னிறத்தது சிவ சிவ சிவ 348 61 பொன்னின் குடத்துக்கெவர் 154 202 பொன்னும் பொருளும் ... 101 258 பொன்னும் பொருளும் புகழுந்தருவான். 201 13 பொன்னே மணியே ... 233 124 பொன்னே நீ பொருளே 275 235 பொன்னே யன்றி 9
19
(3 it
20 போமே போம்வின 80 319 போம்போம் வினையென்று 326 13 போவதும் வருவதுமில்லை யென்பார் . 251 330 போற்றி யென்வாழ் முதலா
168 போற்றி யொரு பெரில்லாப்பு ... 64 192 போன காலத்தை யெண்ணிப் 203 19 போன நாட் கிரங்கும் 165
O
95 மண்ணுசை வையாதே .264 م ه 53 மணணுதி பூதமெல்லாம் .. 30Ꮞ 352 மண்ணுணுய் விண்ணுணுய் 125 353 மணனினுசை 16 265 மண்ணையும் விண்ணையும் 52 249 மண்ணுெடு விண்ணும் 101. 265 மண்தீகால் 143 265 மண்புகுந்த - 33 39 மண்முதற் ... 349 95 மதிககு மதி ... 278 348 மதிக்கு மதியீ ... 62 226 மதிககும் மதி 195 سم 154 மதிதவழ் சடையாய் ... 132 169 மதியிலேரவி 204 ۔۔۔ 162 மதியும் கதியும் ... 20
4. மதியு மிரவியும் 320 150 மத்த மாமலர் ... 32 164 மததம் மதியொடு ... 348
237

Page 207
பாட்டு மத்தம் மதிதடி மத்தர் பேயர் மந்திர தந்திர மானுன் o மந்திர தந்திரமும் M osgop மந்திரமாய்த தந்திரமாய் மந்திரமுங் தந்திரமும் ஆளுர் மந்திரமுந் தந்திரமும் வேண்டா மரகத மயின் மரத்திலே மல மருந்து கண்டேனே மருமத்தில் மருமமறிந்தவர்கள் மருவாருங் மலர் மிசை யோனும் மலைத்து கிணற மலமேலேறி மழை யென்னும் Op.
toTov opp மாசில்லா மாதவர் மாசில் மாதவர் மனத்திற் es மாண்டார் மனத்தானே மாண்டு போனவர் மாண்புடனே a O மாதம் மும்முறை o மாதிரி யொன்றுஞ் மாதுமை பங்க up to மாமதுரைத் - - LOTLDusio
மாமனுய் வந்து
LOTULUusisoofiu a6o
முக்குன மாயைக் முக்குறுணிப் a முச்சந்திக் குப்பையிலே முச்சந்திக் குப்பை முடிந்தமுடிபென்னும் முனிவன் முடிந்த முடிபென்ருன் முன்னும் பின்னு முடிந்த முடிபென்று முன்னின்று முடிந்த முடின்ெறு முன்னுளிற் முடிந்த முடிபெணறு முன்னுளில் ஆசான் முடியப் பிறப்பிறப்பைக்
ههولى F5-لا-الول முண்டக மலர்ததாள் os ab M முததமிழ்ச் சங்கம் ” ܚ - முதத்திக்கு வழியை u upan முத்திக்கு வழிகாட்டும் a
XXίν
பக்கம் 303 178 240 288 126 143 162 66 123 283
210
136 250 190 110
74 110
89
313
33
342 293 276 219 161
329 29
286 69 206
330
urt'(B பக்கம் மறந்தாலும் பிறந்தாலும் ... 153 மறவாதே யெெைறன்றும் ... 164 மறவாமல் போற்றும் ... 112 மனச் சாட்சி - 285 மனத்தில் வஞ்சகம் 32 மன சுதுக்கண் 109 மனத்துயரம் மாற்ற 79 மனத்துயரைநீக்க ... 284 மனமாட்சி உள்ளார் ... 285 மனமாட்சி வேணுமென்று 285 மனவாசகங்கடந்த ... 63 மன்னவகுகி ... 44 மன்னுதவ ... 101 மன்னுயிரெல்லாம் ... 205 மன்று பறித் 323 محیه மன்றுள்ளேயாடு 05
மாயும் மனிதரை 244 மாரியுலகை 101 மாருட்ட ... 329 tDafléaÉ; ... 241 மார்க்கண்டற்காக ... 283 மார்க்கத்தை ... 342 மார்க்க நன்நெறி ... 216 மாலயனும் 124 மாறிப்புலன் 235 மாறிப்பொறிவழியோகா 236 மாறிப் பொறிவழிபோய் 81 மாற்றறியாத 111 மானுயி மானம் ... 224
முத்திக்கு வித்தான ... 33 முத்திக்கு வித்தை ... 238 முத்திக்கு வித்தை மூனயிலிட்டுச் 162 மு போதுங் 312 முயல முபல 284 முருகா வோ 76 முழுது மூண்மையென 39 முழுது முண்மை ஆச்சுதெடி 154 முழுது முண்மையென்று முனிவனவன். 161 முழுது முண்மையென்று முன்னுள் 223 முழுவது முண்மையென்று முகமலர்ந் . 321 முழுவது முண்மை யெனமுன் ... 292 முழுதும் முண்மையென்ற 63 முழுவது உண்மைஎன மொழிந்தான் 163 முழுவதும் உண்மையென்று 200

UFC முற்ருத (UዎይD£D] முனியே முனைத்து வரும்
முனை ததுவரும் மூர்க்ககுனமெல்லாம் .
முனைந்துநிற்கும்
மூண்ட வல்வின மூதாதைமார் மூர்க்க குணமில்லே மூர்க்கமான குணம்போக்கும் மூலநிலத்தின்
மெத்தக்கதை பேசாதே மெய்யரும்பி விதிர்
மொழிக்கு கற்றுனே
மோனத்தாழுதல்
ususti
யாவரும் சமமென
s
வஞ்சம்
வஞ்சியர் வஞ்சகம் வஞ்சநெஞ்சினர் வடிவ மில்லாதவனே வடிவுசேர் 6.J.g.6460L. வடியார் சூலம் வணக்கினுன்மா வணக்கம்
வண்டு வண்டார்க்குங்
ങ്ങuങ്ങ് வந்தது போனது வந்திபபார்
auTösesso QTFONJoç. வாசம்பொருந்திய வாசித்துக் வாசியோகங் தேர் வாணிச்சிககாக வாதம் பேசி DMT uuKgÚ வாய்மையும்
வால்
DU
XXV.
பக்கம் 235 168
323
294 284
27 .
UTB முன்செய்த முன்னில் முன்னேவின்வந்து மூண்டுதே முன்னேவினயென்றும் நினையாதே முன்னைவினையெல்லாமோடு
மூலயிலிருந்து Sypavo uLuar மூவர்களும் மூன்று மொன்ருன மூன்று மொன்ருய்
மெய்யுரைப்போம்
வந்துன்னடி
வருக முருக
வருத்தமறற
வருவதும்
வருவன வருவாரைப் போவாரை ஆசான் வருவாரைப் வருவார் வருவார் வலமிடமாய்ச் செல்கின்ற வலமிடமாய் ஓடுகின்ற வலமிடமோடும் வாசியை வலப்பட்டமான் வல்லாரும் வழிகள் இரண்டையும் வழுத்துதறகு ஒன்றுமில்ல வறுமைப்பிணிக்கு
agresíduuT
வாழிகுருநாதன் su ji daете штiadi வாழுவோமென்றுவென்று வாழ்க சிவதொண்டன் ഖമ ീഖങ്ങ
RTb
auterih IT RNGR ANaval
asTar
uassà
16 29 154 255 344
298
283 161
346
326
101 16S 275

Page 208
urruC) 63> விஞ்சுபிறப் விடத்தை விடியுமூன் விடையேறு விட்டகுறை விண்ணவர் விண்ணுணம் விண்ணும் மண்ணும் eßsöI00(BLff60 விண்ணுட்டாரும் வித்தகம் நீபேசாதே வித்தாரப் பேச்சையும் வித்தாரமாகக் கதை வித்தார விடையேறி
வீடுசேர்வதில் வீடுகமக் 66 Turrar வீதிக்கு வீதி
வெட்டவெளியில் வெம்பகை வெய்யபுவிப்பார்வை வெய்யகாமம்
வெளியிலேயொளி
வேடமொன்றும்
வேடிக்கை
வேணியிற் வேண்டில் வேண்டாமை வேண்டுதல் வேண்டாமையில்லான் வேண்டுதல் வேண்டாமை யில்லா வேண்டுவார் வினே வேதகீதத்தன்
வேதசாத்திரம் வேத மந்திரம் சொல்லும் வேதியர் வேதமறியாத பொருள்
வையகம்
sa
崇钴象
Χχνί
வி
பக்கம் 313
22 38 291 128 286 163 20 154 247 132 224 58 278 46
வீ
31 60 259
71
வெ
259 292 2. 166 16
வே
223 211 233
196 102 31 136 10 151 40
269
பாட்டு வியக்கவொன்று வியந்து நின்ற விரிந்த வறிவுடைய விருத்தணுய்ப் விரும்புவார் » விருப்பு வெறுப்பின விருப்பும் வெறுப்பும் விருப்பு வெறுப்பை வேரற விரை மலரை விரைவாய் கடந்து விளையுமிச்சையெல்லாம் விற்றுாண் வினைப்பகையை
YA
வி%னப்பகையை வெல்வதற்குமார்க்க .
வினைப்பகை வெல்ல
േന്ദ്രബ வீம்பிடும்பை அகங்காரம் வீரமாமயில்
வெள்விடைமேல்  ெள்ளம் பள்ளத்தை வெறும் வீணன் வெற்றிதரும்
வேதமோ டாகம மறியா வேதம் வகுத்தான வேதாந்த சித்தாந்தம் வேருக வேதாந்த சித்தாந்தம் கற்ற வேதாந்த சித்தாந்தம் சமமென்று வேதாந்தம்பேசி வேதோபதேச வேலனக் கொண்டாடுவோம் வேலைத்துக்கி வேள்படச் செய்த வேருய் உடனுய்