கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாதாரணங்களும் அசாதாரணங்களும்

Page 1


Page 2

சாதாரணங்களும் அசாதாரணங்களும்
குப்பிழான் ஐ. சண்முகன்
நர்மதா பதிப்பகம் நல்ல நூல் வெளியீட்டாளர்கள் 10, சோமசுந்தரம் தெரு, தி. நகர், சென்னை-600 017.

Page 3
ఒ&రిశీలి.
SSLSLSSLSCLSSLSLSLSLSLS
சமர்ப்பணம்
விடுதலைக்காக புறப்பட்டிருக்கும் இளைய போராளிகட்கு
"డాన్షిణా
PRICE Rs. 13100
I O SAATHARANANGALUM ASATHARANANGALUM-A Short Story collection by KUPPI LAN A. SHANMUGAN (c) O First Edition: October 1983 O Published by: T. S. RAAMALINGAM, NARMATHA PATHIPAGHAM, No. 10, Somasundaram St, T. Nagar. Madras-600 017. L][ ] Printed at M/s. THAMIZHOSAI ATCHAGAM, Madras-600 047. ] ] ] ] ] ] ]

ஆசிரியரைப்பற்றி.
கோடுகளும் கோலங்களும்' என்ற "அலை' வெளியீடான சிறு கதைத் தொகுப்பின் மூலம் பலரது அவதானிப்புக்குள்ளான சண் முகன், 'அலை" யின் ஆரம்பகால பரிணுமங்களில் அதன் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் இருந்தவர்.
uğd5 Tu 88Uusi
இளைஞர்களின் மன அவசங்கள்-அவர்களால் வெளிப்படுத்தி உணர்த்திக் காட்ட முடியாத சோகங்கள் - எதிர்பார்ப்புகள் இவற் றிஞல் அவர்களிடையே எழும் நடைமுறைக்கு ஒத்துப்போகாத பிடிப்பற்ற தன்மை, இவற்றை அழகுணர்ச்சியுடன் சித்தரிக்கும்
கலைஞர்.
குந்தவை
இவரது பாத்திரங்கள் எழுத்தாளனின் எவ்வித தலையீடுமின்றி தங்களைத் தாங்களே இயக்க வைக்கின்றன.
Gla. Gштаута. Т
கலையுலகின் நவீன திரைப்படங்களின் தாக்கத்தை சண்முக னின் பிற்பட்ட காலக் கதைகளில் காணலாம். 'பளிச்', பளிச்சென
சணமுகன் கதையை கடத்திச் செல்லும் பாணி அலாதியானது.
sI. (8uj8 JTSF
சண்முகன் என்ற பெயர் குறிப்பிடப்படும் போதெல்லாம் இவரது அழகிய, அலாதியான அந்த நடை கூடவே எழுவதைத் தவிர்க்க முடியாது. இவர் கதைகளில் சங்கீதத்தின் இனிய ஓசை பல்வேறு விதங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறது.
மு. புஸ்பராஜன்
இன்ப வேதனையின் இழையொன்று எல்லாக் கதைகளிலும் தென்படுகிறது.
அசோகமித்திரன்

Page 4
வாசித்தீர்களா?
நர்மதாவின் புதிய நாவல்கள்
இவர்கள் நகுலன்
அன்றிரவே கரிச்சான் குஞ்சு
தந்தைக்காக அசோகமித்திரன்
பாவப்பட்ட ஜீவன்கள் ஜெயந்தன்
விடிலும் காவலூர் எஸ். ஜெகநாதன்
00 -سي- 9
7 - 00 11 - 00
0 - 00 10-00
நர்மதா பதிப்பகம் : - சென்னை - 600 017.

தலைமன்னுர் ரெயில்
ஜீவகளை ததும்பி இயங்கிக் கொண்டிருந்த ஸ்டேசனில் மனிதக் கூட்டம் குறைந்திருந்தது. அப்போது நேரம் இரவு ஒன்பது மணி. சிலந்தி வலைப் பின்னலாய் நாட் டின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்லும் தபால் வண்டி களும் புறப்பட்டு விட்டன. மாலை நாலு மணி தொடக் கம் இரவு எட்டரை மணிக்கு மட்டக்களப்பு தபால் வண்டி புறப்படும்வரை கலகலப்பாக, சுறு சுறுப்பாக, களை பூண்டிருந்த ஸ்டேசன் சிறிது ஓய்ந்திருந்தது. இறுதியாக ஒன்பதரை மணிக்குத்தான் தலைமன்னர் தபால் வண்டி புறப்படும்.
சில நாட்களில் அந்த வண்டியில் கூட்டமதிகமா யிருக்கும்; சில நாட்களில் வெறும் வண்டியாக கடகட வென்று அது ஓடும். தலைமன்னரிலிருந்து இந்தியாவுக் குக் கப்பல் புறப்படும் நாட்களில் வண்டியில் கூட்டம் அதிகரிக்கும். அதுவும் பூரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தால் வடபகுதிப் புகையிரதச் சேவைக்கு அடுத்ததாக இலா பம் தரும் பகுதியாக அதுதான் இருக்கிறதென்று கேள்வி.

Page 5
6 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
அன்றெரு நாள் . தெற்கே பாணந்துறைக்கு ஒன்பது மணிக்குப் புறப் படும் புகையிரதத்தை ஒரு சில நிமிடங்களில் தவற விட்டதால், அடுத்த றெயில் வரும்வரை ஸ்டேசனில் காத் திருக்க வேண்டியிருந்தது. "சும்மா இருக்க முடியாத மனித சுபாவத்தினுல் ஸ்டேசன் காட்சிகளை வேடிக்கை பார்க்கலானேன்.
முதலாவது மேடையில் கூட்டம் நிறைந்திருந்தது. மெல்ல அவ்விடத்தை அணுகி விசாரித்தேன். தலை மன்னர் தபால் வண்டிக்காக காத்திருக்கிறர்களாம். அடுத்த நாள் இந்தியாவுக்கு கப்பல் புறப் படுகிறதாம். ஒன்பதேகால் மணிக்கு நீண்ட, மனித வாழ்க்கைப் பயணத்தைப் போல மிக நீண்ட அந்தப் புகையிரதம், ஸ்டேசனில் நுழைந்து புகையைக் கக்கிக் கொண்டு நின்றது. ஏதோ நினைத்துப் பெருமூச்சு விடுமாற்போல் அது ஓய்ந்து நின்றது. திடீரென்று பரபரப்பு, சலசலப்பு, சுறுசுறுப்பு, மனிதர்கள்-எதற்கோ அவசரம் கொண்ட மனிதர்கள் இடித்து நெரிந்து குமைந்து றெயிலில் ஏறி னர்கள். அப்படி அவர்கள் ஏறிய பின்பும் மேடையில் கூட்டம் நிறைந்துதானிருந்தது. பயணம் செய்பவர்களி லும்பார்க்க பிராயாணிகளை வழியனுப்ப வந்திருந்தோர் தொகை ஏராளம் போலும். மனிதனின் இறுதிப் பயண மும் அப்படித்தானே என்று நான் நினைத்தேன்.
பரபரப்பு அடங்கி குசுகுசுப்பு மேலோங்கி நின்றது. புகையிர பெட்டியொன்றின் அருகே போய் நின்று பயணம்Aசய்ய வந்தவன் மாதிரி அல்லது வழியனுப்ப வந்தவன் மாதிரிப் பாவனை செய்து, அந்தப் பெட்டியில் இருந்த சனங்களை மேலோட்டமாக நோட்டம் விடலா னேன். குடும்பஸ்தர்களும், குடும்பப் பெண்களும், குழந்தைகளும் குமரிகளும், காளைகளும் இருந்தவர்களி ருக்க, நிற்பவர்கள் நெருக்கியடித்து நிற்க .

குப்பிழான் ஐ. சண்முகன் ! 1
அந்தக் கிழவியில் என் கண்கள் படிந்தன. எழு பதையோ எண்பதையோ அவள் தாண்டிவிட்டிருந் தாள், வாழ்க்கையின் அனுபவச் சுருக்கங்கள் அவள் முகத்தில் பிரதிபலிக்க ஏதோ நோயினுல் அவஸ்தைப் படுபவள் போல அவளிருந்தாள். காதில் பெரிய துளை களின் கீழ்த் தொங்கிய கடுக் கண்கள் அசைந்தாட ஏதோ தன்பாட்டிலேயே அணுங்கினுள். பூமிக்குப் பார மாய் நெடுநாள் இருக்கமுடியாத, பூமியோடு இரண்டறக் கலக்க வேண்டிய அவளும் இந்தியாவுக்குப் போகிருள், அல்லது போக்கடிக்கப்படுகின்றள். மனிதாபிமானம் மிகுந்த மனித உரிமைகளை மதிக்கும் இன்றைய உலகில் மண்ணுேடு மண்ணுகப் போகும் அவள் தான் பிறந்த இந்திய மண்ணில் சங்கமமாகப் போகின்றள். தான் வளர்ந்த தான் வாழ்ந்த மண்ணில் தன்னல் வளர்க்கப் பட்ட தேயிலைச் செடிகளுக்கு அவள் மண் உரமாகக் கூடாதாம், இந்த உலகம் மனிதாபிமானமுள்ள உலகமாம்.
எனக்கு சிரிப்பு வந்தது. வேதனை கலந்த சிரிப்பு.
என் மனம் அவளைச் சுற்றி வட்டமிட்டது. அவள் இங்கு எப்படி வாழ்ந்திருப்பாளென நான் கற்பனை செய்து பார்த்தேன். பனியிலும், குளிரிலும் வெய்யிலிலும், மழையிலும் புயலிலும் மாளாத உழைப்பு, இரவினில் அவள் கணவனுடன் 'மங்கியதோர் நிலவினிலே’. அனுபவங்கள்; தந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவிய நாட்டின் நினைவுகள் பிள்ளை குட்டிகள், பேரன் பேத்தி கள், இன்ப துன்பங்கள்.
நான் பெருமூச்சு விட்டேன்.
அருகினில் மெல்லிய இனிய பெண் குரல் கேட்டது. திரும்பினேன். இரண்டு இளம் பெண்கள். அழகான பெண்கள். ஒருத்தி தமிழ்ப் பெண் போலச் சேலை கட்டி யிருந்தாள். மற்றவள் சிவந்த பாவாடையும், சிவந்தச்

Page 6
8 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
சட்டையும் போட்டுப் பளபளத்தாள். நான் திரும்பவும், அவள் தலை குனிந்து நாணி நின்றள். இருவரும் பிளாட் போமில் றெயிலின் ஒரு ஜன்னலருகே நின்றர்கள். பெரியவள் உள்ளே ஜன்னலருகேயிருந்த வாலிபனு டன் எத்தனையோ உணர்ச்சிகள் பிரதிபலிக்க ஏதேதோ கதைத்துக் கொண்டு நின்றள்.
வாலிபனைப் பார்த்தேன். உழைப்பினல் உருண்டு திரண்ட அங்கங்கள். இளம் அரும்பு மீசை முகத்தில் ஒரு கவர்ச்சி. கண்களில் ஏதோ ஏக்கம்.
காதலர்களாக்கும்; நல்ல பொருத்தமான சோடி, சிங்களத்திலும் தமிழிலும் மாறி மாறிக் கதைத்தார்கள். அவளும் அழகாகத் தமிழ் பேசினுள். அவன் அவளின் வளையலனிந்த கரங்களைப் பற்றி மெதுவாக வருடினுன். அவள் எதையோ நினைத்து ஏங்குவதுபோல மெளன மாக நின்றள். சின்னவள் மெல்ல நிமிர்ந்து என்னைப் பார்த்துவிட்டு மீண்டும் தலை குனிந்தாள்.
பெட்டியில் ஒரு குழந்தையின் கலீர், கலீர் சிரிப் பொலி கேட்டது. அங்கே கண்களைத் திருப்பினேன், இரண்டு வயது மதிக்கத்தக்க அழகான மொழுமொழு வென்ற ஆண்குழந்தை தாயின் மடியிலிருநது கைதட் டிச் சிரித்தது. வெளியில் ஜன்னலருகில் நின்று கொண் டிருந்த ஒரு மூதாட்டி குழந்தையுடன் மழலை மொழியில் செல்லம் பாராட்டினுள். குழந்தையை வைத்திருந்த தாய் ஏதோ நினைவு லயிப்பில் ஆழ்ந்திருந்தாள். ஓரளவு செல் வம் கொழிக்கும் அவர்கள் தோற்றம் தோட்டத்தில் ஏதோ A. நிலையிலிருந்திருக்கிறர்களென யோசிக்க வைத்தது. அவர்களும் இந்தியாவுக்குப் போகிறர்கள்.
காதலர் பக்கம் திரும்பினேன். சிறிய பெண் என் னைப் பார்த்து விட்டுத் தலை குனிந்தாள். பெரியவள் அவனிடமிருந்து எதையோ எதிர்பார்ப்பவள் போல ஏங்கி

குப்பிழான் ஐ. சண்முகன் / 9
நின்ருள். றெயில் பெட்டியின் ஜன்னல் விளிம்புகளை அவள் தடவிக் கொண்டிருந்தாள். "கவலைப் படாதே, நான் கடிதம் போடுகிறேன். உன்னை மறந்து நான் வாழமாட்டேன்’ என்றன் அவன். 'உங்களை நினைத்து ஏங்கி ஏங்கி இங்கேயே ஒரு உயிர் காத்திருக்கும். நீங் களின்றி எனக்கு வாழ்க்கை இல்லை" என்று அவள் சிங்களத்தில் சொன்னுள். அவள் குரல் கம்மியிருந்தது. அவள் கையின் மெல்லிய விரல்கள் ஜன்னல் விளிம்பை விரைவாகத் தடவின. சின்னப் பெண் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு தலை குனிந்தாள்.
நான் நின்ற வாசல் அருகே யாரோ நிற்பது போல உணர்ந்து திரும்பினேன். ஓரளவு படித்தவன் போலக் காணப்பட்ட வாலிபன் காற்சட்டை சேட் அணிந்து, வாசலின் மேற்பகுதியைப் பிடித்துக்கொண்டு நின்றன். அழகான கைக்கடிகாரம் கட்டியிருந்தான். தென்இந்தியா வில் பிரபல்யமான ஒரு நடிகர் போலத் தலைவாரி மீசை விட்டிருந்தான். வெறுமே எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
விசும்பலொலி ஒன்று பெட்டியில் கேட்டது. நடுத் தர வயதுப் பெண்ணுெருத்தி எதற்கோ அழுது கொண் டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் நின்ற வாலிபன் "அழாதே மாமி, இப்படி எத்தனை நடக்கப் போகுது" என்று சொன்னுன். அவனுக்குப் பக்கத்தில் நின்ற இளம் பெண் அவன் மனைவியாக இருக்க வேண்டும். அழும் பெண்ணின் கையைப் பிடித்து ஏதோ மெதுவாகக் கூறி னுள். எனக்கொன்றும் கேட்கவில்லை.
திரும்பினேன், வாசலில் நின்ற வாலிபன் அப்படியே நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்து நின்ற சின் னப் பெண் தலை குனிந்தாள். பெரியவள் நழுவுகின்ற சேலைத் தலைப்பை பிடித்துத் தோளில் போட்டுக் கொண்டே அவனுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

Page 7
10 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
வாசலில் நின்ற வாலிபனைப் பார்த்தேன். அவனு டன் பேச்சுக் கொடுக்க் வேண்டுமென்று தோன்றியது. 'தம்பி” என்றேன். அவன் என்னைத் திரும்பிப் பார்த்து விட்டு அலட்சியமாக நின்றன். 'தம்பியும் இந்தியாவுக் குப் போகுதோ’ என்றேன். அவன் பதில் பேசவில்லை
எப்படியும், அவனுடன் பேசுவதென்று நினைத்து மெல்ல ஒரு பொய்யை அவிழ்த்தேன். நான் ஒரு பிர பல்ய பத்திரிகையின் நிருபரென்று கூறி, அதில் பிரசுரிப் பதற்காக உங்களைப் போன்றவர்களின் நிலைகளை விசாரிக்கின்றேன் என்றேன்.
வாலிபனின் முகம் மலர்ந்தது.
என்னை இடையில் பேசவிடாமல் பேசத் தொடங் கினுன். அடுக்கு வசனத்தில் படபடவென்று பொரிந்து தள்ளினுன். “நாம் வளம் படுத்திய நாட்டில் எமக்கு வாழ உரிமையில்லை; நாங்கள் மனிதர்களாக நடத்தப் படவில்லை. மந்தைகளாக நடத்தப் படுகிருேம். நாங்கள் வேறு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றேம்” என் முன் அவன். அவனின் பேச்சில் சில தென்னிந்திய ஈழத்து அரசியல் தலைவர்களின் வாடை மணத்தது.
'தம்பிக்கு ஏது இவ்வளவு கோபம் வருகுது; எந்தப் பகுதியிலை இருந்தது' என்றேன்.
'ஹhறன்” என்ருன் அவன். ஹைலன்ஸ் கொலிச் சிலை எங்.ேஎஸ்.சி. வரை படித்ததென்றும் சொன்னன். நாங்கள் படித்தவர்கள் யோசிக்கா விட்டால் யார் எமது உரிமைகளைப் பற்றி யோசிப்பார்களென்றும் கேட்டான். "எங்கள் அவலங்களை உங்கள் பத்திரிக்கையில் வெளி யிட்டு, எங்களைப் போன்றவர்களுக்கு ஓரளவாகுதல் விமோசனம் வேண்டித் தாருங்கள் சார்” என்று பவ்விய மாகச் சொன்னுன்.

குப்பிழான் ஐ. சண்முகன் / 11
றெயில்) புறப்படுவதற்காகக் கூவியது.
அவனிடம் விடைபெற்று அவசரமாக பிளாட்போம் பாலத்தின் இரண்டாவது, மூன்றுவது படிகளில் ஏறிப் பார்க்கலானேன்.
கிழவி இருக்கையில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந் தாள். w
குழந்தையை வைத்திருந்த தாய் குழந்தையை ஜன் னல் அருகில் பிடிக்க மூதாட்டிக் கிழவி, முத்தமாரி பொழிந்து கொண்டிருந்தாள்.
அந்த இளம் தம்பதிகள் அவசரம் அவசரமாகி வெளியே இறங்க 'மெதுவாக அழுது கொண்டிருந்த பெண் பலத்து சத்தமிட்டு அழுதாள்.
காதலன், பெரியவளின் கைகளைப் பிடித்து முத்த மிட்டுவிட்டு தங்களை யாரும் கவனிக்கிறர்களோவென்று சுற்றும்முற்றும் பார்த்தான்.
சின்னவள் நான் நின்று கொண்டிருந்த இடத்தில் என்னைக் காணுது தேடி, பாலத்தின் படிகளில் நின்ற என்னைக் கண்டு புன்னகை பூத்தாள்.
தலைமன்னுர் றெயில் புறப்படுகிறது.
பிளாட்போமில் பரபரப்பு மிகுந்தது, விசும்பல் ஒலி கள் கேட்டன.
பெரியவளின் வளையலனிந்த கரங்கள், அவனை நோக்கி அசைந்தன. அவள் கண்களில் கண்ணிர் மணி கள் பளிச்சிட்டன.

Page 8
12 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
வாசலில் நின்ற வாலிபன் என்னைக் குறிவைத்துக் கையசைத்தான். நானும் அசைத்தேன்.
சின்னவள் பெரியவளைப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்துக் கையசைத்துப் புன்னகை பூத்தாள்.
றெயில் உஸ் - உஸ் சென்று பெருமூச்சு விட்டுக் கொண்டு விரைந்தது.
(1970)

பைத்தியங்கள்
"நான் இனிமேல் இந்த ஊரிலேயே இருக்கப் போவதில்லை. நான் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து வந்த இந்த ஊருக்கு நான் இனிமேலும் வடுவை தேடிவைக்க போவதில்லை. குழந்தைப் பருவத்தில் உருண்டு புரண்டு விளையாடிய மண்ணில் நான் இனிமேல் மிதிக்கப் போவதேயில்லை.
“என்னை நீங்கள் ஒரு பைத்தியக்காறணெண்டு நினைக்கலாம். நான் உண்மையிலை ஒரு பைத்தியக் காறன் தான். ஒரு பொருளிலை அளவுக்கு மீறி ஆசை வைத்து, அந்தப் பொருளையே நினைத்து, அந்தப் பொருளையே பேசி, அந்தப் பொருளையே மனதில் வைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறவர்கள் எல்லோரும் பைத்தியக்காறர்கள் என்றால் நானும் பைத்தியக் காறன்தான்.
s "நான் இந்த மண்ணில், எனது சொந்த ஊரில் இனி -மேல் மிதிக்கப் போவதில்லை.?
சிறுவனுக இருந்த காலத்தில் என்னைப் போன்ற சிறு
வர்க்ளுடன் நான் விளையாடிய இடங்களையெல்லாம்

Page 9
14 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
நான் இனிமேல் பார்க்க முடியாது. பள்ளிக்கூடம் போகிறேன் என்று ஐயனர் கோவில் ஆலமரத்தடியில் ஏறி விளையாடிய விளையாட்டுகள்; பள்ளிக்கூடச் சுவரில் வாத் திமாரின் படங்களைக் கீறிவிட்ட சேட்டைகள். தலையாட் டித் தம்பரின் வளவில் இரகசியமாக புகுந்து மாங்காயும், விளாங்காயும் திருடித் தின்ற நினைவுகள், மாங்காயிலும், விளாங்காயிலும் மற்றவர்களுக்கு பங்கு கொடுப்பதற் காக அவற்றைக் குத்திய, சந்தியிலிருக்கும் சுமை தாங்கி. இவற்றையெல்லாம் நான் இனிமேல் மறந்துவிட வேண்டுமா? ஐயனுர் கோவில் ஆலமரத்தையும், ஊரின் மத்தியில் அடக்கமாக இருக்கும் நான் படித்த பள்ளிக் கூடத்தையும் தலையாட்டித் தம்பரின் சோலை போன்ற வளவையும் எனது ஊரில் கலகலப்பான சந்தியில் சாந்த மாக நிமிர்ந்து நிற்கும் சுமை தாங்கியையும் நான் இனி மேல் காணமுடியாது. அந்தச் சுமைதாங்கியில் ஏறி என்னை மறந்த நினைவுகளில் நான் இனிமேல் இலயிக்க முடியாது?
"நான் இந்த ஊரை விட்டே செல்கிறேன். “என்னை இந்த ஊரில் உள்ளவர்கள் பைத்தியம் என் கிருர்கள். நீங்களும் என்னைப் பைத்தியக்காரன் என்று தான் சொல்லுவீர்கள். உண்மையில் நானும் ஒருவகைப் பைத்தியக்காரன்தான், மற்றவர்களின் கவனத்தை ஈர்க் காத நிகழ்ச்சிகள் என் கவனத்தை ஈர்க்கின்றன. நான் அவற்றில் மூழ்கி என்னை மறந்து விடுவேன். ஆணுல்" எனது உ3,)ல் நான்வளர்ந்த மண்ணில் நான் இருக்கும் போது தான் பைத்தியக்காறனுய் இருப்பேன். வேறு இடத்துக்குச் சென்றல். p
அதைப் பற்றி நான் கற்பனை செய்து பார்த்ததே இல்லை.
எனது ஊரில் எனக்கு நல்லாய் பிடிச்ச இடம் ஒன்றே யொன்றுதான் அது தான். சந்தியிலிருக்கும் சுமைதாங்கி.
威

குப்பிழான் ஐ. சண்முகன் / 15
இதில் உனக்கு ஏன் அளவற்ற பிடிப்பு என்று நீங்கள் கேட்குமுன்னரே நான் சொல்லுகிறேன்.
"நான் என்னை மறந்த நிலையில், எனது கற்பனுலோ கத்தில் சஞ்சரிக்கும்போது, அந்தச் சுமைதாங்கியிலேயே இருப்பேன். காலை, மாலை நேரங்களில் டாண் : டாண் : என்ற ஆலயமணி ஓசை என் காதில் ஏதோ வந்து ஒதும்ா அந்த ஒலி மெதுவாகக் கிளம்பி பரவி, ரீங்காரித்து. அதைப்பற்றி, வர்ணிக்க எனக்கு தெரியாது. "வாழ்க்கை என்பது ஒரு சோகமயமான கீதம் போன்றது" என்று அந்த ஓசை எனக்கு சொல்லாமல் சொல்லும்.
"நான் பைத்தியக்காரன் தானே. நான் சொல்லு றதை நீங்கள் ஏன் கேட்கப் போறியள். நான் சொல்லு கிறதையெல்லாம் நீங்களும் கேட்டால், ஒரு வேளை நீங் களும் பைத்தியங்கள் ஆகலாம்.
"ஆணுல்..? இனிமேல் நான்.இந்த ஊரிலே இருக்க முடியாது..?
"நான் இருக்கிற அந்தச் சுமைதாங்கிக்கு முன்னலை, நெளிந்து வளைந்து போகிற அந்த தண்டவாளத்தை நீங்கள் கண்டிருப்பீர்கள். அதில் பின்னேரம் அஞ்சு மணிக்கு ஒரு ரெயில் வரும். தண்டவாளக் கேற்டைக் கடக்கும் போது, அது ஒருமாதிரிக் குரலெடுத்துக் கூவும். எனது மனுேநிலைக்கேற்ப அந்தக் கூவல் என் மனதில் ஒரு உணர்ச்சியை ஏற்படுத்தும். சில வேளைகளில் நெடுந் தூரம் அலைந்த அலைப்பினுல் களைத்துச் துவஞம். பெண்ணின் குரல் போல அந்த ஒலி கேட்கும். சில வேளைகளில் வீரம் மிக்க வாலிபனின் அறை கூவல்போல வும், சில வேளைகளில் மழலை மொழி பேசும் குழந்தையின் குரல் போலவும் சில வேளைகளில் கொலையாளி ஒருவனின் முன் பயந்து நடுங்கி அவலக்குரல் எழுப்பும் அப்பாவி மனிதனின் குரல் போலவும் அது எனக்குக் கேட்கும்.

Page 10
16 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
"இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்டால் எந்த ஒரு சம்பவமும் அந்த அந்த மனிதனின் மனே நிலைக்கேற்பத்தான் நல்லதாகவோ, தீயதாகவோ கணிக் கப்படுகிறதென்பதற்காகத்தான். இது எனது வாழ்க்கை அனுபவத்தின் மகத்தான கண்டுபிடிப்பு. இதை ஒரு பைத்தியத்தின் முணுமுணுப் பென்று நீங்கள் ஒதுக்கி விடக் கூடாது. அப்படி ஒதுக்கினுல் நீங்களும் பைத்தி யங்களாகிவிடுவீர்கள்.
"ஆனல் இனிமேல் நான் இந்த ஊரில் இருக்க முடியாது..?
"ஒவ்வொரு நாளும் காலமை அஞ்சு மணிக்கெல்லாம் நான் சுமை தாங்கியில் வந்து குந்திவிடுவேன். என்னை மறந்து நிலையில் நான் இருக்கும் போது "கிட்டதட்ட" எட்டுமணியாளவில் அவள் வருவாள். முழங்கால் தெரிந் தும் தெரியாத அளவுக்கு, நவீன பாணியில் வெள்ளைப் பாவாடை கட்டி, அதற்கேற்ற சட்டையும் போட்டு அழ காக நடந்து அவள் பள்ளிக்கூடத்துக்கு போவாள். தண்டவாளத்தைக் கடக்கும் தறுவாயில், அவள் என்னைத் திரும்பிப் பார்த்து ஒரு புன்னகை பூப்பாள். அந்தப் புன்னகை...!
"அவளாலைதான் எனக்குப் பைத்தியம் என்று ஊரிலை உள்ளவையள் சொல்லுகினம். ஆனல் உண் மையில் அவளாலைதான் எனக்குப் பைத்தியம் தெளியும். அவளை) கண்டவுடன்தான் எனக்குப் பள்ளிக்கூடம் போகவேணுமெண்ட நினைவு வரும். என்ன முழிக் கிறியள்..? நானும் பள்ளிக்கூடத்திலை படித்தவன் தான். a
"ஆணுல் நான் இனிமேல் இந்த ஊரிலை இருக்க முடி யாது. அந்தமணியோசையை, அந்த றெயிலின் கூவலை, அவளின் புன்னகையைக் காணமுடியாது. நான் இங்கு

குப்பிழான் ஐ. சண்முகன் / 17
தொடர்ந்து இருந்தாலும் அவளின் புன்னகையைக் காண முடியாது. அவள் ஒரு துரோகி ஒரு வஞ்சகி!
'நீங்கள் எதிர்பாராத அளவுக்கு நான் என்னைப் பற்றி ஒரு இரகசியத்தைச் சொல்லப் போகிறேன். திடுக் கிட்டுவிடாதீர்கள். நான் ஒரு கொலைகாரன். என்ன திடுக் கிடுறிர்களா? நான் உண்மையைத்தான் சொல்லுகிறேன். நான் ஒரு கொலைகாறன். அந்த றெயிலின் கூவல்கூட சில வேளைகளில் நான் கொலை செய்த அந்த அப்பாவி மனிதனின் அவலக்குரல்போல..?
"ஐயோ! அதை இப்ப நினைச்சாலும் நெஞ்சு நடுங்கு கின்றது.
"இந்தப் பைத்தியத்தோடை-கொலைகாரறனுேடை எமக்கென்ன கதையெண்டு நடையைக் கட்டுகிறீர்களா? உண்மையில் நீங்களும் பைத்தியங்கள்தான்; நீங்களும் கொலைகாறர்தான். இதென்னடா அநியாயமெண்டு நினைக்கிறீர்களா? நான் உண்மையைத்தான் சொல்லு கிறேன். நான் ஒருபோதும் பொய் பேசுவதில்லை.
"எவன் விபசாரம் செய்யவேண்டுமென்டு நினைக் கிருனுே, அவனும் விபசாரி ஆகிறன் என்று யாரோ சொன்ன மாதிரித்தான் நானும் சொல்கிறேன். நீங்கள் ஒரு நாளும் பைத்தியக் காற நினைவுகள் நினைப்பதில்லையா? நீங்கள் ஒருநாளாவது உங்கள் மனச்சாட்சியையாதல் கொல்லவில்லையா? அப்படியானல் நீங்கள் மிக நல்ல வர்கள். உங்களைப் பைத்தியங்கள், கொலைகாறர்க ளெண்டு சொல்வதற்காக உங்களிடமிருந்து மன்னிப்புக் கேட்கின்றேன்.
"இவனேன்னடா தன்ரைபாட்டுக்குச் சிரிக்கிரு னெண்டு நினைக்கிறீர்கள் போலை. சில பைத்தியங்களை நினைத்து இந்தப் பைத்தியம் சிரிச்சது; அவ்வளவுதான்.

Page 11
18 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
"சரி, நான் எப்படி கொலைகாறனுய் மாறினேன் தெரி யுமா? வழக்கம் போல ஒரு நாள், சுமைதாங்கியிலை குந்தியிருக்கேக்கை, அவள் பள்ளிக்கூடம் போகின்றுள். அவளுக்குப் பின்னுலை ஒரு ஆசாமி வந்து, அவள் கூந்தலை முரட்டுத்தனமாய் பிடிக்க அவள் அலற.என்.னை மறந்து நிலையில் நானெழுந்து, ஒடிப்போய் அவன் கை யிலிருந்த கத்தியைப் பறித்து அவனை வெட்டி குத்திக். கிழித்து..?
ஏன் காதைப் பொத்துறியள்?.நான் இனிமேல் இந்த ஊரிலேயே மிதிக்கப்போவதில்லை.
என்ன போகப்போகிறீர்களா? நான் ஏன் இந்த ஊரைவிட்டு போகப்போகிறேன் என்ற ஒன்றை மட்டும் கேட்டுவிட்டுப் போங்கள். அதைக் கேட்டால்தான் நீங்கள், இந்தப் பைத்தியத்தைப் பற்றிப் பூரணமாக அறிந்திருப்பீர்கள்.
எவள் என்னைப் பார்த்துப் புன்னகைப் பூத்தாளோ, எவள் நான் பைத்தியம் என்று ஊர் கதைக்க வைத்தா ளோ, எவளுக்காக நான் கொலைகாரணுக மாறினேனுே, அவளுக்கும், நான் கொலைசெய்த அந்த அப்பாவி மணி தனின் தம்பிக்கும் நாளைக்குக் கலியாணம் ஐயா கலியாணம்.
அந்தக் கலியாணம் நடக்கும் போது இந்த ஊரிலை இருந்தால் நான் இன்னும் ஒரு கொலையைச் செய்ய வேண்டிNரும்.
என்ன நடுங்குகிறீர்கள் போலை. ஆனல் நான் இனி ஒரு கொலையும் செய்யமாட்டேன். நான் பிறந்த ஊரை நான் வளர்ந்த ஊரை நான் என்னை மறந்திருக்க எனக்கு உதவிய ஊரை நான் ஒரு கொலைக்காற ஊர் ஆக்கமாட் டேன். ೯gir உயிரினும் மேலாக நான் போற்றிய

குப்பிழான் ஐ. சண்முகன் ! 19
ஊருக்கு, என்னை பைத்தியமாக்கிய ஊருக்கு நான் இனி மேலும் வடுவைத் தேடித்தர மாட்டேன்.
இவ்வளவு நேரமும் என்ரை கதையைக் கேட்ட உங் களிடம் ஒரே ஒரு வேண்டுகோளைமட்டும் விடுகிறேன். என்ரை கதையை ஆதாரமாக வைத்து நீங்கள் ஒவ்வொரு வரும் உங்கள் வாழ்க்கையை அலசிப் பாருங்கோ. நீங் களும் பைத்தியக் காறர்தான் என்பதை அறிவீர்கள். ஆனலொன்று, நீங்களும் உங்கள் மனச்சாட்சியைக் கொன்று கொலைகாறராகி விடாதீர்கள்.
சரியான பைத்தியமெண்டு நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. அதற்காக நான் கவலைப்பட வில்லை. ஏனெண்டால், நீங்களும் பைத்தியங்கள் தானெண்டு நீங்களே உணரவில்லை. ஆனல் நான் பைத் தியமெண்டு நானே உணர்ந்துவிட்டேன். .
உண்மையில் உங்களிலும்பார்க்க நான் ஒரு படி மேலானவன்
என்ன சிரிக்கிறீர்கள்?
சரி நான் வாறேன். நான் இனிமேல் இந்த ஊரி லேயே இருக்கப் போவதில்லை. நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவந்த இந்த ஊருக்கு நான் இனிமேலும் வடு வைத் தேடிவைக்கப் போவதில்லை.
(1969)

Page 12
அரியத்தின் அக்காவுக்கு.
அரியத்தின் அக்காவுக்கு,
எப்படி இந்தக் கடிதத்தை எழுதத் தொடங்குவதென்று எனக்குத் தெரியவில்லை. எவ்வளவோ நேரம் சிந்தித்தும் ஒரு முடிவுக்கு வர என்னுல் முடியவில்லை. கொஞ்ச நேர மென்றலும்-நீ என்னுடன் பழகிய அந்த மகத்தான உணர்ச்சிகரமான நேரத்தைக் கொண்டு எப்படி உன்னை அழைக்கலாமென்று எனக்குப் புரியவில்லை. உன்னை அன்புள்ள சகோதரியென்று விளிக்கவும் என்னுல் இய லும்; அன்புள்ள. என்று விளிக்கவும் என்னுல் இய லும். உன் பெயரைச் சொல்லி உரிமையோடு அழைக்க வும் என்ன2முடியும். ஆனல், நீ உன் பெயரை எனக்குச் சொல்லவில்லை. என்னை நீ எப்படிப் பாவித்தாய்-ஒரு உடன்பிறவாச் சகோதரனுகவோ அல்லது நீ உள்ளன் புடன் நேசிக்கும் ஒருவனுகவோ, அல்லது எப்போதோ ஒருமுறை சந்தித்து மறந்து விடக்கூடிய, எதுவித உறவுகள், பந்தபாசங்கள் அற்ற ஒரு மூன்றம் மனித ணுகவோ-எப்படி நீ பாவித்தாய் என்றே எனக்குத்

குப்பிழான் ஐ. சண்முகன் / 21
தெரியவில்லை. அப்படி நீ ஒருவித தொடர்பை வகுத்து என்னேடு பழகியிருந்தால்-அந்தத் தொடர்புக்கேற்ற - அந்தத் தொடர்பைப் பாதுகாக்கக்கூடிய-அந்தத் தொடர்பின் உணர்ச்சிகள் நிறைந்த குரலில் நான் உன்னை அழைத்திருக்க இயலும். அந்த மன நிறைவில் நான் நிம்மதி காண முடியும். நீ எப்படி என்னை அழைக்கிரு யென்பதல்ல எனக்கு முக்கியம்; இந்த உலகில் நான் வாழக்கூடிய நீண்டகாலத்தில்-ஒரு சில நேரப் பழக்கத் தில் என் மனதில் ஒரு உணர்ச்சியை, ஒரு குளிர்ச்சியை, ஒரு கிறுகிறுப்பை ஏற்படுத்திய உன் உறவுதான் எனக்கு முக்கியம். அது எப்படியிருந்தாலும் எனக்கு அக்கறை யில்லை.
ஆனல், நீ மொழியளவில் சொல்லக்கூடிய அல்லது எழுதக்கூடிய ஒருவித உறவுகளையும் ஏற்படுத்தாமல்அதே நேரம் உன் உயிரினல், உணர்வினல் ஏதோ ஒரு உறவை ஏற்படுத்தியவளைப் போல கண்கள் கலங்க, குரலடைத்து நெஞ்சம் குலுங்க, பீறிட்டுவரும் அழு கையை வலிந்தடக்கி ஒரு செயற்கைப் புன்முறுவல் காட்டி, கரங்களைக் கூப்பி, "வணக்கம், வருகிறேன்" என்று விடைபெற்றயே?
நான் கண்கள் கலங்க, உணர்ச்சிகளை வெளிக்காட் டாது-மரமாய்-கல்லாய் தலையசைத்து விடை கொடுத் தேனே..?
எந்த உறவுக்கு இந்த உணர்ச்சி வரும்?
அந்த உறவை-அல்ல-அந்த உணர்ச்சிகளைத் தந்த உன்னுடைய உறவை நான் நாடி நிற்கிறேன். அதற்காக ஏங்குகின்றேன். அதனுல்தான் இவ்வஞ்சலை வரைகின்' GSpóT.
さキTー2

Page 13
22 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
இதை எழுத உட்கார்ந்த போதுதான், உன்னை எப்படி விளிப்பது என்ற பிரச்சனை ஏற்பட்டது. ஒரு முடி வுக்கும் வரமுடியாமல் நான் நீண்டநேரம் சிந்தித்தேன். நீயும், நானும் பழகிய சூழல் மனத்தரங்கில் விரிய-நீண்ட பஸ் கியூவில் உனக்கும் எனக்குமிடையே கள்ளங்கபட மற்ற சின்னஞ்சிறிய சிறுமியாய் உன் தங்கை-அவள் தான் அரியம்; சிரித்த காட்சி என் மனத்தரங்கில் மின்னு கிறது.
அவளால்தானே உனக்கும் எனக்கும் பழக்கம் ஏற் பட்டது. அவளால்தானே இந்த உறவு-பிரிய வேண்டு மென்று அறிந்திருந்துங்கூட, பிரியும்போது மனதில் வேதனைக் குமைச்சல் எடுக்குமென்றும் தெரிந்திருந்துங் கூட, அதாவது தவிர்க்க வேண்டிய உறவென்று புரிந்தி ருந்தும் தவிர்க்க முடியாத உறவாக ஏற்பட்டது.
அதனுல் அவள் பெயரைக்கொண்டே, உன்னை விளிக்கிறேன். அரியத்தின் அக்காவே,. என்று அழைப்பதிலேயே ஒரு மனநிறைவை-ஒரு உறவுத் தொடர்பின் உணர்ச்சி இழையைக் காண்கிறேன்.
அரியத்தின் அக்காவே.
நீ எங்கிருந்தாலும் எனது வணக்கங்கள் உன்னைச் சேரட்டும். "வாழ்க்கை ஒரு விபத்தென்று எங்கோ படித்த ஞாபகம். எமக்கு எதிர்பாராமல் நடக்கும் விபத் துக்களித் தொகுப்புத்தான் வாழ்க்கையென்றல், நீயும் நானும் சிந்தித்ததும் ஒரு விபத்துத்தான். அந்த விபத் தின் விழைவாக என் நெஞ்சம் குமையக் குமைய, உன்னை நினைத்து வேதனையுடன் அழவைக்கிறயே; அதுதான் என் வாழ்க்கையா? என் வாழ்நாள் முழுவதும் நான் உன் நினைவில் சித்திரவதைப்படத்தான் வேணுமா?
நாம் சந்திக்கின்றேம்: அன்பு செய்கின்ருேம்; பிரி கிருேம்; ஒவ்வொரு மனித மனதின் சோக கீதமே இது

குப்பிழான் ஐ. சண்முகன் / 23
தான்" என்று ஒரு ஆங்கிலக் கவிஞன் பாடினணும். அவ னின் இந்த ஆத்மார்த்தமான-அழகிய கவிதை வரிகளை நினைத்து நான் உன்னை மறந்துவிடத்தான் முயல்கிறேன். உனது உறவை-அது எத்தகைய உறவென்றலுங்கூடஅதை நாடி நிற்கும் என் மனதை-உள்ளத்தை-சித் தத்தை-இல்லை என்னையே வலிந்தடக்கத்தான் முயன்று முயன்று பார்க்கிறேன். எப்போதும் நான் அதில் தோல்வி யையே காண்கின்றேன்.
உன்னை மறந்துவிட்டேனென்ற நினைவில், நான் வீதியில் நடை போடும்போது, அழகிய ருேசாவில் நீ நின்று அழுகிறயப்; உன்னை மறந்துவிட்டேனென்ற நினை வில் ஏதாவது பாடலை நான் முணுமுணுக்கும்போது, அந்தப் பாடலில் இழையோடும் சுருதியாய் நீ நின்று உன் சோகக் குரலைக் கொடுக்கிருய்; உன்னை மறந்துவிட்டே னென்ற நினைவில் நான் ஆண்டவனை வணங்கும்போது, வரங் கேட்கும் பாவனையில் நீ என்னைப் பார்க்கின்ருய்; உன்னை மறந்துவிட்டேனென்று நினைவில் நான் ஏதாவது படிக்க முயலும்போது, கண்களில் ஏதோ உணர்ச்சி மிளிர்வுடன் நீ நின்று பாடத்தை மறைக்கிருய். என் நன விலும்--கனவிலும், விழிப்பிலும், உறக்கத்திலும் நீயே நிறைந்து நின்று என்னை வாட்டுகின்றயப்.
அரியத்தின் அக்காவே.
உனக்குத் தெரியாமலே நீ ஏன் என் நெஞ்சத் திரை யில் மின்னுகின்ருய். எனக்குத் தெரியாமலே நானும் உன் மனத்தரங்கில் இடம் பிடித்திருக்கின்றேன. அப்படிப் பிடித்திருந்தால், அந்தப் பிடிப்பின் அர்த்தத்தில்-அந்த உறவுத் தொடர்பின் உணர்ச்சியில்-ஒரே ஒரு முறை யாதல் உன் குரலையெடுத்து என்னை அழைக்கமாட்டாயா? அப்படி அழைப்பதின் மூலம் எப்படியாதல் ஏதோவொரு உறவுத்தொடர்பை என்னுடன் ஏற்படுத்தமாட்டாயா?

Page 14
24 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
நீ அப்படிச் செய்யமாட்டாய்; அது எனக்குத் தெரி யும்.
"ஏன்' என்ற கேள்விக் கொளுக்கியில் பிடித்துப் பின் நோக்கிப் பார்க்கிறேன்.
புலர்ந்தும் புலராத காலை வேளை, வைகறை இளம் பனியின் மெல்லிய தூய்மையான குளிர்ச்சியில், சலசலத் தோடும் மாணிக்க கங்கையில் நீராடி, அந்தப் புனித உணர்வுடனே ஆண்டவனை வழிபட்டு, மீண்டும் எமது உத்தியோக வாழ்வு என்னும் இயந்திரமயமான வாழ்வை நோக்கிப் புறப்படுவதற்காக நானும், நண்பர்களும் பஸ் நிலையத்திற்கு வருகின்ருேம். இரண்டு தினங்களாக, பச்சை பரந்து உயர்ந்திருக்கும் மலைச்சூழலில், வசந்தக் குறுகுறுப்பில் சிரிக்கும் மரச்சோலைகளில், மஞ்சளாய்ப் பூத்து மணத்து நிற்கும் கொன்றைமலர்ப் பரப்பில், சலசலத்தோடும் மாணிக்க கங்கையில், புதிய ஆல யத்தைத் தரிசித்த மனப்பக்குவத்தில், சாதிமத பேதமில் லாமல் மொய்த்து நின்ற சனக்கூட்டத்தில்-வாழ்ந்த வாழ்வை-அந்த இனிமையான வாழ்க்கையோட்டத்தை விட்டுப் போகிருேமே என்ற ஏக்கத்துடனேயே நானும் நண்பர்களும் பஸ் நிலையத்தில் நிற்கின்றேம்.
"இனி எப்போது நாம் கதிர்காமத்திற்கு வரப் போகி ஒறம்" என்கிறன் நண்பன் பாலச்சந்திரன்.
*ன்ழ்க்கையில் தரிசிக்க வேண்டிய ஒரு தரிசனம் நன்றக முடிந்து விட்டதே" என்று கூறி நிம்மதிப் பெரு மூச்சு விடுகிருன் வைதீகப் போக்குடைய நண்பன் Lurg)).
“எமது இயந்திரமயமான வாழ்வை விட்டு, இதே
போன்று அருமையான இயற்கைச் சூழலில், காலகாலமாக அமைதியாக வாழ எங்களுக்குக் கிடையாதா” என்று

குப்பிழான் ஐ. சண்முகன் / 25
ஏங்கினன் என்னை நன்றக அறிந்துகொண்ட என் அறை நண்பன் "பரி' என்கிற பரிபூரணுனந்தன்.
நான் சிரித்தேன்; வெறுமே சிரித்தேன். ஒவ்வொரு மனித மனதிலும் எத்தனை எத்தனை விதமான ஏக்கங்கள். அந்த ஏக்கங்களின் தொகுப்புத் தானே வாழ்க்கை. -வாழ்க்கை என்பதே ஏக்கங்களின் சிதறல்தானே என்ற அனுபவ ரீதியான உண்மையை மீண்டும் அசைபோட்டு, வெறுமே சிரித்தேன்.
அழகு போர்த்துக் கிடக்கும் அந்தச் சூழலில் பச்சை போர்த்துக் கிடக்கும் மலைகளில் ஏறி உலாவ எனக்கும் ஆசைதான்; சலசலத்தோடும் மாணிக்க கங்கையில் எப்போதும் மூழ்கி மூழ்கிக் குளிக்கவும் ஆசைதான்; உடலை மெதுவாகத் தடவி இதம் கொடுத்து ஊடும் கொன்றைப்பூ வாசனை நிறைந்த தென்றலை நுகர எனக்கு என்றும் ஆசைதான். மாலை மங்கும் நேரத்தில் - மேற்கே உயர்ந்து நிற்கும் மரங்களுக்கப்பால், தங்கச் சூரியன் பளபளத்துக்கொண்டு-மரஇடைவெளியினூடாக இடை யிடையே மஞ்சள் வெயிலைப் பரப்பிப் பூக்கோலம் போடும் போது அந்த அழகைப் பார்த்துப் பார்த்து கவிதை பாட எனக்குக் கொள்ளையாசை தான். வைகறை யின் இளம் குளிரில் மாணிக்க கங்கையில் மூழ்கி, முருக சன்னிதானத்தில் நின்று, அருணகிரிநாதரின் திருப்புகழை உருக்கமாக மெல்லிய குரலெடுத்துப் பாட எனக்கு என்றும் ஆசைதான். மத்தியானத்தின் பின் மேகங்கள் திரண்டு இருள-காற்று பலமாக அடிக்க-மர இலைகளும் கொன்றை மரப் பூக்களும் பொலபொலவென்று உதிரபறவைகள் ஆரவாரம் செய்து கொண்டு பறக்க-மதிய உணவுண்ட களைப்பில் இராமகிருஷ்ண மடத்துப் பளிங்குத் தரையில் படுத்துக்கொண்டு-எமது பழைய ஏமாற்றமான சோக நினைவுகளில் மனத்தைச் செலுத்திஉலகத்து அழகிய காவியங்களில் வரும் சோக கீதங்களை

Page 15
26 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
யெல்லாம் உணர்ந்து-நயந்து-அனுபவித்துப் படிக்க எனக்கு எப்போதுமே ஆசைதான்.
ஆனல் இந்த ஆசைகள் எல்லாம் நிறைவேறதென்று எனக்குத் தெரியும். அவ்வளவுதூரம் அந்த இயந்திர மயமான வாழ்வில் நாம் கட்டுண்டு இருக்கிறேம். அந்த வாழ்க்கையை உதறித்தள்ள எமக்குத் துணிவில்லை. துணி விருந்தாலும் எங்கள் குடும்பச்-சமூகச் சூழல் அதற்கு இடந்தரப் போவதில்லை.
எனவேதான் நான் வெறுமே சிரித்தேன்.
'என்ன புலவர் ஒன்றும் பேசாமல் சிரிக்கின்றயப்" என்றன் பரி.
‘என்னத்தைப் பேசிறது” என்றேன் நான்.
உனக்கும், எனக்கும் இடையில் நின்ற உன் தங்கை, அரியம் என்னைத் திரும்பிப் பார்த்தாள். என்னைச் சுட்டிக் காட்டி உன்னிடம் ஏதோ சொன்னுள். நீயும் என்னைத் திரும்பிப் பார்த்து; ஒரு அரைப்புன்னகை காட்டி முகத்தைத் திருப்பிக் கொண்டாய்.
'உலகத்தில் பேசுவதற்குத்தான் எவ்வளவோ விஷ யங்கள் இருக்கின்றனவே என்று நீ உன்பாட்டிலேயே சொன்னது எனக்குக் கேட்டது.
“உலகத்தில் பேசுவதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்று சிலர் நம்புகிறர்கள். மனிதன் தோன்றிய ஆதி நாளிலிருந்தே பேசிக்கொண்டுதானே இருந்திருப்பான். பேசிப்பேசிப் பேசியே தன் வாழ்வைக் கழித்திருப்பான். இன்னமுந்தான் அந்தப் பேசுகிற வாழ்க்கையில் அவ னுக்குச் சலிப்போ, களைப்போ ஏற்படவில்லை போலிருக் கிறது” என்றேன் நான் என் நண்பனைப் பார்த்து.
அவன் மெளனமாக ஏதோ யோசனையில் ஆழ்ந் திருந்தான்.

குப்பிழான் ஐ. சண்முகன் / 2
அப்போது நீ என்னை நன்ருகத் திரும்பிப் பார்த்து முழுதாகச் சிரித்தாய். உன் அதரங்களைப் பவ்வியமாகத் திறந்து "உண்மைதான்’ என்றப். அப்போ நான் அர்த்தத்துடன் சிரித்தேன்; நீயும் சிரித்தாய்.
உன்னுடன் நான் சிரித்துக் கதைப்பதைக் கண்ட என் நண்பர்கள் ஏதோ உந்தலினல் உஷார் கொள்கிறர் கள். உலகத்து விடயங்கள்-நுட்பங்களை எல்லாம் தாங்கள் முற்றுமுழுதாக அறிந்தவர்கள் போலவும், பெரிய ஹாஸ்ய மன்னர்களைப் போலவும், அழகு இராசாக் களாகவும் தம்மை உருவகித்து பேசினர்கள். பலத்துச் சத்தமிட்டுச் சிரித்தார்கள். நீ மீண்டும் மெளனமானுய். அந்த அல்லோல கல்லோலத்தில், பஸ்நிலைய தூணுென் றுடன் மோதுண்டு நண்பன் பரியின் தலையில் காய மேற்பட்டபோது, எதுவித உறவுகள் பந்த பாசங்களற்ற ஒரு மூன்றம் மனிதனைப் போல நீ அவனது காயத்தைப் பற்றி விசாரித்தாய்; உன்னுடைய தங்கையும் விசாரித் தாள்; உன்னுடன் வந்த உன் குடும்பத்தவர்கள் விசாரித் தார்கள்.
நீண்ட நெடு நேரத்தின்பின், மாத்தறை நோக்கிச் செல்லும் பஸ் வந்தது. உனக்கும் உன் தங்கைக்கும் நடுவில் பின்புறமாக நான் உட்கார்ந்து கொண்டேன். என் நண்பன் ஒருவன் பஸ்சின் பிற்பகுதியிலும், மற்ற இருவரும் பஸ்சின் முற்பகுதியிலும் உட்கார்ந்து கொண் டார்கள், எனக்கருகில் நீயும், உன் தங்கையும், உன் தாயும் உட்கார்ந்திருந்த படியால், எப்போதோ சந்தித்துப் பிரியும் மூன்றம் மனிதனைப் போல உன் குடும்பம், சூழல், தொழில் என்பன பற்றி விசாரித்துக் கொண்டேன். பேச்சு வாக்கில் உன் தங்கையின் பெயர் அரியமென்றும், உனது ஊர் இலங்கையின் கீழ்ப்பகுதியிலுள்ள ஒரு எழில் கொழிக்கும் நகரமெனவும் அறிந்தேன்.

Page 16
28 ! சாதாரணங்களும் அசாதாரணங்களும்
பஸ் தன் பயணத்தை ஆரம்பித்ததும் நான் என்னை மறந்த நிலையில் இயற்கைக் காட்சிகளில் மனதைப் பறி கொடுத்திருந்தேன். வரண்ட அம்பாந்தோட்டைப் பகுதியின் உப்பளங்களையும், பற்றைக் காடுகளையும், எங் காவது தென்படும் ஒற்றைப் பனைமரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தேன். நீர் நிலைகளில் தம்மை மறந்து படுத்துத் தூங்கும் எருமை மாடுகளையும், சிறிய நீர்க் குட்டைகளில் குளிக்கும் கிராமியப் பெண்களையும், சிங்களக் கிராமியப் பண்பாட்டின் உயிர் துடிக்கும் நீண்ட துண்டுச் சேலைகளை அணிந்து வீதியில் ஆங்காங்கே தென் படும் இளம் பெண்களையும் பார்த்து என்னை மறந்திருந் தேன்.
எப்போதாவது உன்னைத் திரும்பிப் பார்க்கும் போது, தி சிந்தும் மோகனப் புன்னகையில் அப்போது ஓர் அர்த்தத்தை மெதுவாக உணரலானேன். அதனுல், இயற்கையை மறந்து நான் உன்னையே பார்க்கத் தலைப் பட்டேன். நீ என்னைப் பார்த்துச் சிரிக்கும்போதெல்லாம் நானும் பதிலுக்குப் புன்னகை புரிய முற்பட்டேன். நீ சிந்திய புன்னகைகளின் அர்த்தத்தை நான் புரிந்து கொண்ட ரீதியில், உன்னேடு உறவுத் தொடர்பு கொள்ள வேண்டுமென்ற ஆதங்கத்தில் நான் தவிக்கலானேன். பேச்சைப் பற்றி நான் முன்னர் சொன்னதை நன்ற கப் புரிந்து ஆமோதிப்பதுபோல நீ வாயால் பேச முற்பட வில்லை. நானும் பேசவில்லை. நீ கண்ணுல் ஏதோ பேசு வதாக நினைத்து, அந்தப் பேச்சின் சாரங்களை நான் எனக்குகந்த மாதிரிப் புரிந்து, அந்த ஆனந்தத்தில் திளைக்கலானேன்.
எப்போதோ ஒருமுறை சந்தித்து மறந்து விடக்கூடிய எதுவித உறவுகள் பந்த பாசங்களற்ற ஒரு மூன்றவது ஆளாக பஸ் நிலையத்தில் என்னுல் கணிக்கப்பட்ட நீ-பஸ் பயணத்தில் உணர்ச்சியும் உயிர்த் துடிப்பும் மிக்க உறவு

குப்பிழான் ஐ. சண்முகன் / 29
கொள்ளக்கூடிய-உறவு கொள்ள வேண்டிய ஒருத்தியாக என் மனத்தரங்கில் இடம் பெற்ருய். அப்போது உன் உறவை நான் நாடி நின்றேன். அதற்காக ஏங்கினேன்.
நீண்டதூர பஸ் ஆதலால், வழியில் ஒரு பஸ்தரிப்பில் ஓய்வெடுப்பதற்காக பத்து நிமிடம் நின்றது. ஒய்வெடுப் பதற்காகவும் அந்தச் குழலை அவதானிப்பதற்காகவும் நானும் அவ்விடத்தில் இறங்கிச் சிறிது உலாவலானேன். அப்போது பஸ்சில் முன்பகுதியிலிருந்த வெளக்க அனுப வங்கள் மிக்க என் நண்பன் பாலச்சந்திரன், உன்னைப் பற்றி நான் எதிர் பாராத சங்கதிகளைக் கூறினன். நீ அவனு டன் கண்களால் பேசுவதாகவும், அவனை அடைய விரும் புவதாகவும் அவன் சொன்னுன். என்னுடன் மட்டுமே ஏதோவோர் உறவை நாடி நிற்கிருய் என நான் நம்பிய நீ, அவனுடனும் அப்படியான உறவை விழைகின்றய் என நான்' அறிந்த போது என் மனம் துடித்தது. நான் என் மனத்தரங்கில் கட்டிய கோட்டைகள் சிதைந்தன. உன்னைப் பற்றி என் மனதிலிருந்த உயர்வான அபிப்பிரா யம் தவிடுபொடியானது. உன்னைப்போய் உணர்ச்சி களும், உயிர் துடிப்பு முள்ள ஒருத்தி யென்று நான் நினைத் ததை நினைத்து வெட்கினேன். பஸ்சில் ஏறிய போது மூன்றம் மனித தோரணையில் உன்னுடன் பேசியதைபேசாமலேயே இருந்திருக்கலாமென எண்ணத் தலைப்பட் டேன். அதனுலேதான், நீ அதே உணர்ச்சிகளுடன், அதே உயிர்த் துடிப்புக்களுடன், அதே மோகனத்துடன் என்னைப் பார்க்கும் போதெல்லாம் நான் காணுதவன் மாதிரி, ஏதோ பெரிய யோசனைகளில் ஈடுபட்டிருப்பவன் மாதிரி நடிக்கலானேன்.
பஸ் பயணம் முடிந்து றெயிலில் நாங்களும் நீங் களும் ஒன்றகவே பயணத்தைத் தொடர்ந்தோம். உன்னைப் பற்றி ஒரு மூன்றம் மனிதரிலும் கீழான மதிப் புக் கொண்டிருந்தபடியால் நான் உன்னைக் கவனிக்கவு

Page 17
30 f சாதாரணங்களும் அசாதாரணங்களும்
மில்லை; உன்னைப்பற்றி அக்கறை காட்டவும் இல்லை. நிமிரும் போதெல்லாம் உன்னைச் சந்திக்கக் கூடிய கோணத்திலிருந்து பஸ்சில் பிரயாணம் செய்த நான், நீ
என்னைப் பார்க்கவோ, நான் உன்னைப் பார்க்கவோ முடி யாத கோணத்திலிருந்து றெயிலில் என் பிரயாணத்தைத் தொடங்கலானேன். நீ இருந்த இடத்திலிருந்து நெளிந்து வளைந்து குனிந்து பார்த்தது எனக்குத் தெரியும், ஆணுல், நான் அதைப் பொருட்படுத்தவில்லை. பெண்னைப்
பற்றி மற்றவர்கள் சொன்னதையும், பெண் என்பவள்
பெரிய புதிர்தான் என்ற அணுபவ வார்த்தைகளையும்
நான் அனுபவரீதியாகப் புரிந்துகொண்டனே என்று எண்ணி என் மனத்தில் கேலியாகச் சிரிக்கலானேன்.
அரியத்தின் அக்காவே...
நான் உண்மையாகவே உன்னைப் பற்றிக் கேலியாக நினைத்துச் சிரித்தேன். உனது புனிதத்தை உணராது சிரித்தேன். காலம், சூழல், சந்தர்ப்பம் என்பனவற்றுக் கேற்ப மாறும் சமுதாயச் சூழலில், பெண்களும் ஒரளவு சக சமாக எல்லோருடனும் பழக வேண்டுமென்று உணராமையால்-உன்னைத் தவறுக எடை போட்டு அதனல் என்னை நானே பாராட்டி, ஒருவித "நக்கீர மிடுக் கில் நான் சிரித்தேன். அப்படிச் சிரித்தற்கெல்லாம் இப் போது நினைத்து நினைத்து, உருகி உருகி அழுகிறேன்.
றெயிலில் எனக்கோர் நண்பன் அறிமுகமானன். கொஞ்சம் துடுக்கும், துடிப்பும் மிக்கவனை அவன், உன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கலானன். உன்னிடத்திலவன் மயங்கிக் கிடந்தான். ‘என்னுடைய தும், என் நண்பன் பாலச்சந்திரனுடையதும் சகாப்தம் முடிந்து அவன் சகாப்தம் ஆரம்பமாகிறது; பாவம். ஏமா றட்டும்; நல்லாக ஏமாறட்டும்" என நான் எனக்குள் நினைக்கலானேன். நான் விரும்பியிருந்தால் அவனை

குப்பிழான் ஐ. சண்முகன் / 31
அவ்வாறு செய்யவிடாது தடுத்திருக்கலாம். ஆனல் நான் அதை விரும்பவில்லை. அவன் வழியில் குறுக்கிட நான் முற்படவில்லை.
நீலக்கடலலைகள் ஓங்காரித்து சத்தமிட்டுக்கொண்டே இருந்தன. கடலுக்கும் றெயில்பாதைக்குமிடையில் ஒழுங் காக அழகாக குளிர் நிழல் பரப்பி நின்ற தென்னஞ்சோலை கள் காற்றில் சலசலத்து களிநடம் புரிந்தன. என் முன்னுல் இருந்த கண்ணுடி மனிதன் ஏதோ பரந்த யோசனையில் ஆழ்ந்திருந்தான். என் புதிய நண்பன் உன்னைப் பார்க்கக் கூடிய கோணத்திலிருந்து உன்னையே பார்த்துக் கொண்டிருந்தான். எனக்குப் பக்கத்தில் முன்னும் பின்னுமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்த இரு சிங்கள இளம் எழுத்தாளர்கள் அப் போது வெளியாகியிருந்த குணதாச அமரசேகராவின் நாவலொன்றைக் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந் தார்கள். நான் மெளனமாக இருந்தேன்.
என் புதிய நண்பன் உன்னையே பார்ப்பதைக் கண்ட நானும், நீ 1 ன்ன செய்கிருய் என்று அறிவதற்காக உன்னைப் பார்க்க முற்பட்டேன். நான் உன்னைப் பார்க்க நெளிந்து திரும்புகையில், எனக்கு முன்னுலிருந்த சிங்கள எழுத்தாளன் உன்னைப் பார்த்து விட்டு என்னைப் பார்த்துச் சிரித்தான். எனக்கு சங்கோசம் குறுக்கிட்டது. நீ என்னையே பார்த்துக்கொண்டிருக்கிருயென்பது எனக் குப் புலனுயிற்று. ஆனல், என்னுல் உன்னைப் பார்க்க முடியவில்லை.
அரியத்தில் அக்காவே.
நீ எவ்வளவு மனம் நொந்து போயிருப்பாய் என் பதை இப்போது நினைக்கும்போது என்னையே என்னுல்
ஆற்றமுடியாத துக்கம் பீறிடுகிறது. இப்போ ஏங்கி என்ன செய்ய முடியும்.

Page 18
32 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
றெயிலில் கூட்டம் கூடியிருந்தது. என் புதிய நண்பன் உன்னைப் பார்ப்பதை விட்டு எங்கோ சென்றி ருந்தான். நான் உன்னைப் பார்க்க முற்பட்டேன். கூட்டம் கூடியிருந்ததால் அது முடியவில்லை.
நாம் இறங்கவேண்டிய கோட்டை ஸ்டேசன் அண் மிய போது, உன்னருகில் நின்று என் புதிய நண்பன் என் பெயரைச் சொல்லிக் குரல் கொடுத்தான். அவனின் மனுேநிலையை நினைத்து நான் மனதில் சிரித்துக்கொண் டேன்.
கோட்டையில் புகையிரதம் நின்றது.
ஒரு மாதிரியான சோக பாவனையில் நீ "வணக்கம் வருகிறேன்' என்று விடைபெற்ருய்.
நான் பதிலுக்குத் தலையசைத்தேன். புதிய நண்பர் தவிர மற்ற நண்பர்கள் ஒன்று சேர்ந் தோம்.
நண்பன் பரி உன்னைப் பற்றிக் கதை கதையாகக் கூறினன். உன் பின்னலிருந்து அவன் வெளியே ஜன்னலினூடாக தலையை நீட்டி உன்னுேடு எத்தனை எத்தனையோ கதைகள் கதைத்தானும்; நீ பரிசுத்தமான, புனிதமான பிறவியாம்.
என் புதிய றெயில் நண்பன் உன்னைப் பார்த்து ஏதோ கேட்டானும் வற்புறுத்தி வற்புறுத்திக் கேட்டானும், நீ கண்கள் கலங்கி அழுதாயாமே; மெளனமாக ஏங்கிப் பெருமூச்சு விட்டாயாமே; ஆற்ற முடியாத சோகத்தில் சிலையாக மாறியிருந்தாயாமே.
நண்பன் அதற்கான காரணத்தை அறிய எவ்வள வோ முற்பட்டானும், நீ அவனிடம் ச்ொல்லவில்லையாம். நீ அவனிடம் சொல்லியிருக்கலாம். அவன் நல்லவன் மிகமிக நல்லவன்.

குப்பிழான் ஐ. சண்முகன் / 33
நீ ஏன் அழுதாய்? நீ ஏன் கண்ணிர் முத்துக்களைச் சிந்த விட்டாய்? நீ ஏன் ஏக்கப் பெருமூச்சு விட்டாய்? நீ ஏன் சோகச் சிலையாக மாறியிருந்தாய்.
இவற்றை அறியத்தான் நான் விழைகிறேன். நீ அழுதாயாமே-அதைக் கேட்கும்போது ஏன் என் கண்கள் கலங்க வேண்டும்-ஏன் என் நெஞ்சம் துடிக்க வேண் டும்; ஏன் நான் பேச முடியாதவனுக வேண்டும்; ஏன் நான் என்னையே மறக்க வேண்டும்.
நீ ஏன் அழுதாய் என்பதை அறியாமல் என்னுல் நிம் மதியாக இருக்க முடியாது. இந்த உலகம் முழுவதுமே நீ அழுவதுபோன்ற பிரமையையே எனக்குத் தந்து நிற் கின்றது.
அரியத்தின் அக்காவே.
நீ ஏன் அழுதாய்?
அதை எனக்குச் சொல்லிவிடு. ஏதோவொரு உற வின் உணர்ச்சிகள் நிறைந்த குரலில் என்னை அழைத்துச் சொல்லிவிடு. நீ எப்படி அழைக்கிருயென்பதல்ல எனக்கு முக்கியம். நீ ஏன் அழுதாய் என்பதை, ஏதோ வோர் உறவுப் பாசத்துடன் நீ எனக்குச் சொல்லு வதுதான் முக்கியம்.
உனது பதிலை, உறவு உணர்ச்சிகளுடன் சுட்டிய பதிலை என்றென்றும், கலங்கிய கண்களுடன், சோகம் குடிகொண்ட நெஞ்சுடன் எதிர்பார்த்து நிற்கும்.
இளங்கோ
(1971)
OOO

Page 19
விடிவு வரும்
தலையைச் சொறிந்து கொண்டாள் ஈஸ்வரி.
எவ்வளவு நேரந்தான் இப்படியே இருந்து, இருந்து யோசிக்க முடியும். எவ்வளவு நேரந்தான் மனத்தில் நினைந்து நினைந்து"ஏங்கி, ஏங்கி அழமுடியும். எவ்வளவு நேரந்தான் வாசற்படிக் கட்டில் ஒற்றைக் காலை நிமிர்த்தி ஊன்றி, ஒரு கையை அதன் மேல் நீட்டி, தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கமுடியும். எவ்வளவு நேரந்தான் அந்த மங்கல் மாலைப் பொழுது தொடர்ந்து நீடிக்க முடியும்.
உயிர்துடிக்கும் மாலை நேரத்து அல்லோல கல்லோ லங்களுக்கு, பறவைகளின் கத்தல்களுக்கு, வானத்தின் வண்ணக் கோலங்களுக்கு, மாலை நேரத்து ஆலயமணி யின் ரீங்காரத்துக்குப் பிறகு. அப்பால், இரவுவரும், குளிர் நிலவு வரும்; பின் விடிவும் வரும், விடிவு வரத் தானே வேண்டும்.

குப்பிழான் ஐ. சண்முகன் / 35
ஈஸ்வரி தலையை நிமிர்த்தி இருண்டுவரும் உலகைப் பார்த்தாள். பெருமூச்சு விட்டபடி எழுந்த அவள், முகம் கழுவி சாந்துப் பொட்டு இட்டுக் கொண்டாள். அடுத்த அறையில் மனக்குதூகலத்தில் தங்கை ஏதோ சினிமாப் பாட்டை முணுமுணுப்பது அவள் காதில் கேட்டது. அவளுக்கு எதற்கோ அழ வேண்டும்போலத் தவிப்பு மேலிட்டது; தங்கையின் மேல் கோபம் வந்தது.
இடையில் இரண்டொன்று தவறிவிட, அவளிலும் பார்க்கப் பத்து வயது இளையவளாக - இருபத்துமூன்று வயது கட்டுக் குலையாத பொற்சிலையாக வளர்ந்திருந் தாள். அவள் தங்கை ராணி. இன்னும் ஒரு மாதத்தில் அவளுக்குக் கலியாணம் நடக்கும். ராணியைப் பெண் பார்த்த மாப்பிள்ளை அவள் அழகில் மயங்கி சீதனத்தைக் கூட அவ்வளவு எதிர்பார்க்கவில்லையாம்.
கலியாணம். p
ஈஸ்வரி பெருமூச்சு விட்டுக் கொண்டாள். அந்த இளமைக் காலத்து மயக்கும் அழகுகள் அவள் வாழ் வில் மீண்டும் வரப்போகின்றனவா..?
கிட்டத்தட்டப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, பருவத்தின் எழிற் கலவைகளால் அவள் பூரணமா வார்க்கப்பட்டுப் பளபளத்துக் கொண்டிருந்த போது அவனின், நினைவுகள் அவள் மனதில் கிளர்ச்சி ஊட்டின; வாழ்வின் மயக்குகின்ற மோகனமான ஆழமான அர்த் தத்தைக் கொடுத்தன; வாழவேண்டுமென்ற தவிப்பை ஏற்படுத்தின. அந்த நினைவுகள் தூரத்துச் சங்கீதமாய், ஊதுவத்தியின் இரம்மியமான வாசனையாய் இனித்தன.
அவள். f
அவள் மனதில் பதிந்த அவன் கோலம்.:

Page 20
86 சாதாரணங்களும் அசாதாரணங்களும்
அவளின் தந்தையின் தோட்டத்தில் அன்றடம் உழைக்கும் கூலியாக அவன் வேலைக்கு வந்தான். அப் போது அவனுக்கு இருபத்திமூன்று அல்லது இருபத்தி நாலு வயது மதிக்கலாம். உழைப்பின் உரத்தால் முறுக் கேறியிருந்த கட்டுமஸ்தான உடல். அளவான தசைக் கூட்டு, அரும்பு மீசை விட்டிருப்பான்.
தோட்டத்தில் வேலை செய்யும் நாட்களில், மதிய உணவுக்காக வீட்டுக்கு அவன் வரும்போதெல்லாம் அவள் புன்னகையுடன் எதிர் கொள்வாள்; அவனும் புன்னகை பூப்பான்.
செம்பாடு படிந்த சாறத்தை மடித்துக்கட்டி, மண் வெட்டியை வலத் தோளில் வைத்து, வலது கையை அதன் மீது நீட்டி, இடதுகை ஆட அவன் ஏறு நடை யில் வருவான். தசைக்கோளங்கள் குலுங்கும். மார்பு உரோமங்களில் வியர்வை படிந்த தடத்தில் செம்பாட்டுச் சுவடு படிந்திருக்கும். வெயிலில் நடந்து வந்ததால் பரந்த நெற்றியிலும், மூக்கு நுனியிலும் வியர்வை மணிகள் முத்துகளாக மினுக்கும்.
பெரிய கமக்காறிச்சி" என்று அவன் அவளை அழைப் பான். அதில் இழையும் வாத்சலியத்தில் அவள் குழை வாள்; அந்தக் குரலுக்காக ஏங்குவாள்; அந்த அழைப் பில் அவள் இன்பங் காண்பாள்.
அவள் அவனுக்கு உணவு பரிமாறுவாள். ஊர் உலகத்துக் கதைகள் பேசிச் சிரித்து மகிழ்வார்கள். தங்களை மறந்து பேசிக்கொண்டு நெடுநேரம் இருப் பார்கள்.
வாயுடன் இணைத்துக் கோலிய அவன் கரங்களில், அவன் குடிப்பதற்காக அவள் தண்ணிர் ஊற்றுவாள். அவன் ‘முழுக்’, ‘முழுக்கென்று தண்ணிர் குடிப்பான். அவள் கையை நீட்டி அவனது கோலிய கரங்களில்

குப்பிழான் ஐ. சண்முகன் / 37
தண்ணீரை ஊற்றிக்கொண்டிருப்பாள். அவன் தண்ணிர் குடித்து நிமிருவான். அவன் அரும்பு மீசை தண்ணிரில் நனைந்திருக்கும். அவள் சிரிப்பாள்.
ஒரு நாள். அவர்களின், தம்மை மறந்த பரவச நிலையை அவள் தந்தை கண்டார்; முறைத்துப் பார்த்தார். அன்றைக்குப் பிறகு அவன் வேலைக்கு வரவேயில்லை.
அப்போதுதான் அவள் வேதனையை முதன்முதலில் அனுபவித்தாள். அவனின் அந்தக் கோலங்கள். மண்வெட்டியுடன் அவன் நடக்கும் நடை: மார்பில் படிந்திருக்கும் வியர்வைச் சுவடு; நெற்றியில் முத்துக்களாகக் கோர்வை கட்டியிருக்கும் வியர்வைத் துளிகள்;
கோலிய கையினல் முழுக், முழுக்கென்று தண்ணி குடித்து நிமிரும் அந்த முகம்.
அவள் அவனே மறக்க முயற்சிக்கவில்லை. அவள் நி*னயாமலேயே அவன் கோலங்கள் அவள் மனதில் கிளர்ந்து மனத்தை வருடி ஏதோ செய்தன.
அப்போதெல்லாம் அவள் பெருமூச்சு விட்டுக் கொள்வாள்.
அவள் பதின் நான்கு வயதிற்குப் பிறகு - பருவம் அடைந்த பின் பாடசாலைக்குப் போகவில்லை. ஏற்கனவே தாயை இழந்திருந்த அவள் அந்த வீட்டுக்காறியாக மாறினுள். தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்குப் "பெரிய கமக்காறிச்சி ஆணுள். தங்கை படித்துக் கொண் டிருந்தாள். தந்தை தோட்டத்தை மேற்பார்வை செய்து
写mー3

Page 21
38 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
கொண்டிருந்தார். அவள் வீட்டுக் கடமைகளைச் செய்து சமைத்துக் கொண்டிருந்தாள்.
வாசற்புறத்தில் இருமற் சத்தங்கேட்டு ஈஸ்வரி வெளியே எட்டிப்பார்த்தாள். நெற்றியில் மூன்றுகுறித் திருநீறு பளிச்சிட விருந்தையில், கதிரையில் தந்தை உட்கார்ந்திருந்தார். அவள் எட்டிப்பார்ப்பதைக் காணுத அவர் பெரிய தங்கைச்சி என்று அவளைக் கூப்பிட்டார். என்னப்பா என்றவள் அந்த மெல்லிய மஞ்சள் வெளிச் சத்தில் மேலே சுவர்க்கடிகாரத்தை அண்ணுர்ந்து பார்த் தாள். நேரம் ஏழுமணியென அறிந்து கொண்ட அவள், அவரது பதிலை எதிர்பாராது நேரே குசினிக்குச் சென்று தேநீர் தயாரித்தாள். ஒன்றைத் தந்தையின் கையில் கொடுத்து விட்டு, மற்றதைத் தங்கையின் அறைக்கு எடுத்துச்சென்ருள்.
தங்கை ஏதோ நாவலில் தன்னை மறந்திருந்தாள். தேனீரைத் தங்கையின் மேசையில் வைத்த அவள் 'தங்கச்சி தேத்தண்ணி வைச்சிருக்கு ஆறப்போகுது என்று சொன்னுள்.
தங்கை தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தி லிருந்து கண்களை எடுக்காமலே வெறுமே 'ம்' என்றுள்.
சற்றுத் தயங்கி நின்று தங்கையை ஏற இறங்கப் பார்த்தாள் ஈஸ்வரி. தங்கை அழகாகத்தான் இருந்தாள். மனமகிழ்ச்சியில் முகம் சதா ஒளி பெற்றுத் திகழ ஆடாது அசையாது அமைதியாக இருந்தாள்.
ஈஸ்வரி பெருமூச்சு விட்டுக் கொண்டு திரும்பினுள். குசினிக்குச் சென்று தனக்காக வைத்திருந்த தேனீரை எடுத்துக் குடித்தாள்.
தங்கையின் அழகை, அமைதியை 'ம்' என்ற அலட் சியத்தை யோசிக்க, யோசிக்க அவளுக்கு ஆத்திரம்

குப்பிழான் ஐ. சண்முகன் / 39
வந்தது; அழுகை வந்தது; நான் ஏன் பிறந்தேன் என்ற விரக்தி வந்தது.
தங்கையும் என்ன செய்ய முடியும்...? இராணிக்குக் கல்யாணம் நிச்சயமான அன்று, எல் லாம் முடிந்த பின்னர், அவளது படிக்கும் அறையிற் தமக்கையைக் கட்டிக் கொண்டு அவள் அழுதாள். 'அக்கா உன்னை விட்டிட்டுப் போகப் போறேனே" என்று விம்மினுள். 'அக்கா உனக்கு முன் நான்." என்று தவித் தாள்.
அப்போது தங்கையின் வாயைப் பொத்தி அவள் சொன்னுள்.
'இராணி, நான் சந்தோஷமாக வாழாவிட்டாலும் நீ சந்தோஷமாக இரு; நீ சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தே நான் சந்தோஷமாக வாழ்வேன்; என்னை இனி யெவன் ஏற்பான். எனக்குத்தான் வயதுபோய்விட்டதே"
இராணி அழுதாள். "அக்கா, நான் மகா பாவி" என்ருள். தமக்கை தங்கையின் வாயைப் பொத்தினுள்
ஈஸ்வரி குசினியை விட்டுப் பழையபடி தன் அறைக் குச் சென்று முகத்தை மேசையிற் கவிழ்த்துக் கொண் டாள். நினைவுக் கிளர்ச்சியில் பிறக்கும் கண்ணிர்த் துளி களை மறைத்துக் கொண்டாள்.
தங்கை பற்றிய நினைவுத் தூண்டல்கள் அவள் மனதை வருடின. சிறிய வயதிற் தாய் இறக்க அவளே தாயாகித் தங்கையை வளர்த்ததை நினைத்தாள். பாட சாலைக்கு அவள் போகுமுன் அவளின் கூந்தலை இரட் டைப் பின்னலாகப் பின்னி “றிபன் கட்டிவிடுவதை நினைத்தாள். தலைவாரிப் பேன் பார்ப்பதை நினைத்தாள். தங்கை படித்து முடித்து ஆசிரியத் தொழிலில் அமர்ந்த போது, அவளின் முதற் சம்பளத்தில் அக்காவுக்கென வாங்கிக் கொடுத்த தங்கச் சங்கிலியை நினைத்தாள்.

Page 22
40 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
அவள் அதிஷ்டமற்றவளாக இருக்கும்போது தங்கை யால் என்ன செய்ய முடியும்?
அவளையும் எத்தனையோ பேர் பெண்பார்க்க வந் தார்கள். நெடிய, மூன்றங் கிளாஸ் கிளறிக்கல் மாப் பிள்ளை; சற்று வயதுபோன கலகல வென்று பேசிக் கொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்; எங்கேயோ தூரத்தில் சில்லறைக் கடை வைத்து நடத்தும் 'மைனர்' போன்ற தோற்றமுடைய ஒருவர். இப்படி எத்தனை பேர். !
இவர்கள் அவளை மணஞ்செய்ய ஒப்பினுலும் அவர் கள் எதிர்பார்த்த சீதனம் ? அதைக் கொடுக்க அவள் தந்தையால் இயலாது.
அவள் எத்தனையோ முறை பெருமூச்சு விட்டிருக் கிருள். பெருமூச்சுகள் விட்டு, விட்டு, விட்டே முப்பத்தி மூன்று வருடங்களைக் கழித்திருக்கிருள்.
வேலிக்கப்பால் வீதியில் ஏதோவொரு அர்த்தத்தில் சைக்கிளின் மணிசத்தம் கேட்டது. ஈஸ்வரி ஜன்னலினு டாக நிமிர்ந்து பார்த்தாள். சைக்கிளிலிருந்த மீசைக்கார இளைஞன் ஏதோ சைகை செய்தான். ஏதோ நினைத்து ஒரு கணம் தடுமாறிய ஈஸ்வரி, வாசற்கதவினுல் இறங்கி வேலியோரம் சென்ருள்.
பொழுது போகாத வேளைகளில் ஜன்னலோரம் வேடிக்கை பார்க்கும் ஈஸ்வரி ஒரு நாள் அவனைக் கண் டாள். அவனும் அவளைக் கண்டு ஏதோ சைகை செய் தான். அவள் புன்னகை பூத்தாள். அதன்பின் நித்திய சங்கதி" ஆகிவிட்ட நிகழ்ச்சியில் வளர்ச்சியில்.:
அன்று .
அவன் அவளை மணந்து கொள்வதாக உறுதி சொன்னுன்.

தப்பிழான் ஐ. சண்முகன் : 4)
அவளும் அவனுடன் வாழ்க்கையை இணைத்துக் கொள்ளச் சம்மதம் என்ருள். இன்னும் ஒருமாதம்
பாறுக்கும்படியும் கேட்டாள்.
திரும்பிவந்த ஈஸ்வரி விருந்தையில் தந்தையைப் பார்த்தாள். அவர் சாய்மனைக் கதிரையிற் சாய்ந்து ஏதோ தன்னை மறந்த யோசனையில் ஆழ்ந்திருந்தார். இவள் நிமிர்ந்து சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். அவரும் பார்த்தார். நேரம் ஒன்பது மணியாகி இருந்தது.
அவர் கதிரையிலிருந்து மெல்ல எழுந்தார். அவள் படிக்கும் அறையைப் பார்த்து 'தங்கச்சி சாப்பிடுவோமா? என்று கேட்டார்.
அறையைவிட்டு வெளியே வந்த ராணி ஈஸ்வரியைப் பார்த்துக் கொண்டே, "அக்கா இன்றைக்கு வலு சந் தோஷமாய் இருக்கிற அப்பா,” என்ருள். -
அவரும் ஈஸ்வரியை நிமிர்ந்து பார்த்தார்.
ஈஸ்வரி தலைகுனிந்து கொண்டாள்; “பகிடியை விட் டிட்டுச் சாப்பிட வாங்கோ, விடியப் போகுது" என்றஸ்.
(1973)
OOO

Page 23
நான் சாகமாட்டேன்
மேல்மாடியில் வலைக்கம்பி அடித்த ஜன்னல்களுக்கப் பால், மர உச்சிகளின் பரந்த பச்சைக் கம்பளங்கள் இருட்கோலம் பூண்டன. இருண்ட பச்சை, மஞ்சள் பர விய பச்சை, புதிய தளிரான பச்சை என்ற அத்தனை பச் சைகளும்-பூவுலகின் அதிசயங்களாய் அப்பச்சைகளி டையே தலைகாட்டி, தென்றலில் சிலுசிலுத்த சின்ன சின்ன பூக்களும், அந்த இருட்போர்வையுடன் இரண் டறக் கலந்தன. பூமி இருண்டு வந்தது. மங்கி மறை கின்ற மாலை நேரத்துச் சங்கமத்தில், மெதுவாகத் தூறிய மழையின் குளுமை; எங்கேயா கீச்சிடும் பறவைகள்; வீதியில் உறுமி ஆரவாரிக்கும் வாகனங்கள்;
இவற்றுக்கு அப்பாலுக்கு அப்பாலாய்-அந்தச் சோகங்கவிந்த இருள்-சற்று நேரத்திற்கு முன் பச்சைக் கம்பளமாய் அதிலிழைந்த பூக்கோலங்களாய் பரவச மூட்டிய அந்தக் காட்சி இருளாய்-இருளாய்.
இந்தப் பிரபஞ்சத்தின் அந்த ஆழமான சோகம்எதற்கோ குரல்விட்டுக் கத்த வேண்டும் என்ற தவிப்

குப்பிழான் ஐ. சண்முகன் ! 43
பிலும்-மெளனமாக மனத்தினில் அழும் அந்த மெள டீகச் சோகம்-எனக்குப் புரிந்தமாதிரி இருந்தது.
என் மனத்தை ஏதோ செய்தது. நான் மீண்டும் வலைக்கம்பி அடித்தது ஜன்னலுக்கப்பால் வானத்தை அண்ணுந்து பார்த்தேன். அங்கொன்றும் இங் கொன்றுமாக ஜொலிக்கும் வைரக் கற்களாக நட்சத்தி ரங்கள் மினுங்கின. இலையுதிர்ந்த-பெரிய மொட்டை மர மொன்று நிமிர்ந்து நின்றது. எங்குமே பச்சை போர்த்து வசந்தம் சிரிக்கையில்-அந்த மரம் மட்டும் அதற்கு விதி விலக்காய் ஏதோவொரு ஆழ்ந்த சோகத்தில் இல யித்திருப்பதாக எனக்குப்பட்டது.
பூப்போட்ட பச்சைக் கம்பளமான மரத்தொகுதியின் இருட் கோலத்திலும் தனிமையில் வாடி நின்ற ஒற்றை மரத்திலும், கீச்சிடும் பறவையின் ஒலியிலும் ஆரவாரிக் கும் வாகனங்களின் உறுமலிலும் அங்கொன்றும், இங் கொன்றுமான நட்சத்திர மினுக்கிலும் நான் ஏதோ சோகத்தைக் கான்கின்றேன்.
என்னுள் கிளர்ந்து, என்னுள் வளர்ந்து, என்னை மூடி விழுங்கி விடுகின்ற பயங்கர பூதம் மாதிரி அச்சோகத்தை நான் இனங் கண்டேன்.
அப்போது நான் இனிய கனவுகள் காண்கின்ற பிள்ளைப் பிராயத்தினனுக இருந்தேன். என்னிலும் இரண்டு வயது இளையவளான என் சின்னத்தங்கையுடன் நான் எப்போதும் இருப்பேன். பாட்டி சொல்லுகிற பூதக்கதைகளை எல்லாம் நானும் அவளும் ஒன்றகவே யிருந்து கேட்போம். நானும் அவளும் ஒன்றகவே பக் கத்து வளவில் மாங்காய் பிடுங்கித் தின்போம். நானும் அவளும் ஒன்ருகவே வீட்டின் அயலெல்லாம் உலா வரு வோம்.

Page 24
&4 : சாதாரணங்களும் அசாதாரணங்களும்
இப்போது எனக்கு முப்பது வயதாகின்றது. என் றலும் இந்த உலக மயக்கங்களில் பற்றற்ற மனிதன் போல நான் ஈசிச்சேரில் படுத்திருக்கின்றேன். வாழ்க் கையில் இனிய, கடிய அனுபவங்களையெல்லாம் நான் அனுபவித்து முடித்திருக்கின்றேன். ‘வாழ்க்கை' என் பதன் அர்த்தங்களையெல்லாம் என்னைப்போல உணர்ந்து இரசித்து இரசித்து அனுபவித்தவர்கள் என்னளவில் யாரும் கிடையாது.
கள்ளம் கபடமில்லாத சின்னஞ் சிறுவனுய்,-என் தங் கையுடன் கழித்த அந்த நாட்களின் பசுமை வனப்புகள் என் நினைவில் படிந்து நிற்கின்றன. பாட்டியின் பூதக் கதைகளைக் கேட்டு அவள் பயந்து நடுங்குவதும், அடுத்த வளவில் மாங்காய் பிடுங்கும் போது அகப்பட்டு அடிவாங்கி அழுது குலுங்குவதும், பல் துலக்கும்போது அவள் வாயிலிருந்து வடியும் கரிகலந்த எச்சிலும், செல்ல மாகச் சிணுங்குகின்ற அழுகையும், கெக் கட்டமிட்ட சிரிப்பும், அந்தச் சிவத்த சட்டையும் கறுத்தப் பொட்டும் போட்டு அவள் பளபளத்த நாட்களும்.
ஒருநாள். இன்று போல இருண்ட ஒருநாள்; மப்பும் மந்தாரமுமாக இருந்த மழை நாள்; மின்னல் மின்னின நாள் இடி இடித்த நாள்;
'அண்ணை வயிற்றுக்கை குத்துதடா" என்று துடித் தாள் தங்கை. நானும் அழுதேன். அம்மாவும் அழுதாள். மாலை மங்கும் நேரம்; மரம் பச்சையெல்லாம் இருண்டன. காகங்கள் கத்திக்கொண்டு பறந்தன, மழை தூறிக் கொண்டு இருந்தது. மழைத் தண்ணிர் ‘றைவரின் பார் வையை மறையாமலிருக்க, மழைத் தண்ணிரை வழித்து விடுகின்ற இருப்புத்துண்டு ஆடிக்கொண்டிருக்க "போம் போம்" என்று கோணடித்துக் கொண்டு கார் வந்தது நானும், தங்கையும் முற்றத்தில் வளர்த்த மல்லிகைக்

குப்பிழான் ஐ.சண்முகன் 4*
கன்றை நெரித்துக் கொண்டு கார் வந்து "பிறேக்” போட்டு நின்றது. Y
ஐயா அவளைத் தூக்கிக் கொண்டு காரில் ஏறினர். அம்மாவும் ஏறினுள்; வீட்டில் உடுத்திருந்த மண் வேட்டி யுடன் தான் ஐயா காரில் ஏறினர். எங்காவது போகும் போது கட்டுகின்ற பவுன் சங்கிலியைக்கூட அன்று அவர் கட்டவில்லை. அவர் போடுகின்ற கறுத்த கூலிங் கிளா சையும் எடுக்காமலேயே, கவலை தோய்ந்த கறுத்த முகத் தோடு அவர் காரில் ஏறினர். அம்மாவும் வீட்டுக்குக் கட்டியிருந்த பச்சை சேலையோடை காரிலேறி ஐயாவுக் குப் பக்கத்திலே அழுது கொண்ட இருந்தா. கோயிலுக்கு போகும் போது அல்லது எங்காவது கலியான வீட்டுக் குப்போகும் போது வீட்டு அலமாரியிலிருந்து அவா எடுத் துப் போடுகின்ற பதக்கம் சங்கிலியை அன்று அவா போடவில்லை. வடிவாய் மினுங்குகின்ற அந்த நெளி நெளிக் காப்புகளை அவா போடவில்லை. பவுன் "புருேச் சை’ எடுத்து அவா நெஞ்சில் குத்தவில்லை. முடிமயிர் வைத்துத் தலையைப் பின்னிக் கட்டவில்லை, குங்குமப் பொட்டு நெற்றிக்குப் போடவில்லை. ஐயாவுக்கும் கொடுத்து வாய் சிவக்க சிவக்க சப்புகின்ற வெற்றிலை பாக்கைக்கூட அவா அன்று சப்பவில்லை.
ஐயாவுடைய தோளிலை சரிந்து அழுதுகொண்டே அவா இருந்தா.
நானும் அம்மாவைப் பார்த்தேன்; ஐயாவைப் பார்த் தேன்; தங்கச்சியைப் பார்த்தேன். அழுதேன்; விக்கி விக்கி அழுதேன்; 'மீனுட்சி" என்று கத்திக்கொண்டு அழுதேன். பாட்டி என்னைத் தேற்றிக் கொண்டே, தானும் கண்ணிர் விட்டாள். கார் இரைந்து கொண்டு பறந்தது.
நான் பாட்டியின் மடியில் கிடந்து அழுதேன். ஏன் அழுகிறேனென்று தெரியாமலேயே அழுதேன்.

Page 25
46 I சாதாரணங்களும் அசாதாரணங்களும்
கார் மீண்டும் வந்தது. "ஐயோ என்ரை இராசாத்தி” என்று என்னைப் போட்டுவிட்டு பாட்டி ஓடினுள். м
நான் எழும்பி நின்று முழுசிப் பார்த்தேன். பச்சை, சிவப்பு நிறங்கள் பூசப்பட்ட வடிவான ஒரு சின்னப் பெட்டியும் கொண்டு வந்தார்கள். தங்கச்சியை யாரோ தூக்கிக் கட்டிலில் கிடத்தினர்கள். அம்மாவையும் தூக்கி பாய் விரித்து, சீலை போட்டு, தலையணி போட்டு கிடத் தினர்கள் ஏராளம் அம்மா மாதிரிப் பொம்பிளையஞம், பாட்டி மாதிரிக் கிழவியளும் வந்து ஏதோதோ சொல்லிக் குழறினுர்கள்!
ஐயா தலையைச் சுவரில் சாய்த்து விக்கிக் கொண் டிருந்தார்.
தங்கச்சி கிடந்த கட்டிலில் தலைமாட்டிலும், கால் மாட்டிலும் பக்கத்து வீட்டுப் பெரியம்மா குத்து விளக்கு களைக் கொளுத்தி வைத்தா.
எல்லோரும் தங்கள் தங்கள் பாட்டில் ஏதோதோ செய்துக் கொண்டிருந்தார்கள். என்னை ஒருவருமே கவனிக்கவில்லை. எனக்குப் பயம் வந்தது; அழுகை வந்தது.
நான் அம்மாவின் படுக்கைக்குப் பக்கத்தில் போ யிருந்து அவாவின் சொக்குகள் இரண்டையும் கையால் தொட்டு, ஆட்டி 'அம்மா’ என்றேன். அவா என்னைப் பாராமல் கிடந்தா; பதில் பேசாமல் கிடந்தா, ‘என்னடா தம்பி’ என்று கேளாமல் கிடந்தா, சின்னக்குஞ்சாச்சி, 'அம்மாவுக்குச் சுகமில்லை இராசா; அவளைக் கரைச்சல் படுத்தாதே" என்று என்னைத் தூக்கிக்கொண்டுபோய் தேத்தண்ணி தந்தா.
நான் அவ்வளவு சனக்கூட்டத்திலும் புகுந்து, புகுந்து திரிந்தேன். சனக்கூட்ட மென்றல் எனக்கு நல்ல

குப்பிழான் ஐ. சண்முகன் / 47
ஆசை. குஞ்சியம்மாளின் கலியாண வீட்டுக்கு எவ் வளவோ பேர் வந்திருந்தார்கள். அவ்வளவு சனத்துக்கை யும்நானும், தங்கச்சியும், வேறு ஐந்தாறு சிநேகிதர்களும் சேர்ந்து கைதட்டி விளையாடினது எனக்கு அப்போது ஞாபகம் வந்தது. நான் தங்கையை நினைத்துப் பார்த் தேன். மெதுவாய், மெதுவாய் அவள் கிடந்த கட்டில லடிக்குப் போய் தங்கச்சி தங்கச்சி என்று கூப்பிட்டேன். திடீரென என்னைக் கட்டிப்பிடித்த அம்மா மாதிரி ஒரு பெண் ‘என்ரை இராசா' என்று அழுதாள். எல்லோரும் என்னைச் சுற்றி அழுதார்கள். நானும் பயந்து மிரண்டு போய் அழுதேன்.
பக்கத்து வீட்டு அக்கா எப்படியோ தெண்டித்து அந்தக் கூட்டத்துக்குள்ளிருந்து என்னைத் தூக்கிக் கொண்டு போனதையும் தங்கடை வீட்டு சின்ன அறைக் குள் என்னை இறக்கிவிட்டு 'உன் ரை தங்கச்சி செத்துப் போச்சடா கண்ணு' என்று கண் கலங்கிச் சொன்ன தையும், நான் இப்போ நினைத்துப் பார்க்கின்றேன்.
அதைக் கேட்ட போதும் எனக்கு அழுகை வர வில்லை நான் பார்த்துக் கொண்டிருந்த ஜன்னலுக்கப் பால் மர இலைகளெல்லாம் கறுத்து இருளுவதை நான் கண்டேன்; ஒன்றுக்குப் பின் ஒன்றக இரண்டு காகங்கள் கத்திக் கொண்டு பறப்பதை நான் கண்டேன். பின் வேறென்றையும் நான் காணவில்லை; தலைக்குள் ஏதோ செய்ய, கட்டிலில் கிடந்த தங்கையின் கோலம் மட்டுமே எனக்குத் தெரிய நான்.
பச்சை இருள்வதாய்த் தெரியும்போது, அந்த நேரத் தில் ஒன்றன்பின் ஒன்ருகக் காகங்கள் கத்திக் கொண்டு பறக்கும்போது, அந்த வேதனையான நினைவின் திட்டுகள், மனதில் கிளர்ந்து என்னை ஏதோ செய்கின்றன.

Page 26
*8 ! சாதாரணங்களும் அசாதாரணங்களும்
என்னுள் கிளர்ந்து, என்னுள் வளர்ந்து, என்னையே மூடி விழுங்கி விடுகின்ற பயங்கர பூதம் மாதிரி என் வாழ்க் கையில் அந்த சோக நினைவுத் திட்டுகள்.
ஏதோ நினைவுகளில் மூழ்கி நெடுநேரமாக ஈஸிசேரில் படுத்து விட்டேன் போலிருக்கிறது. வாலிப வயது என் றலும் வாழ்க்கைச் சோதனைகளில் அடிபட்ட மனத்தின ஞயும், இயற்கையிலேயே நோய் பொருந்திய உடம்பின னயும் இருந்தால் அசதி மேலிடுகின்றது; ஈஸிசேரில் பிரப்பம் நார்கள் உடம்பில் படிந்து வருத்த, சோம்பல் முறித்துக்கொண்டே அப்படியும் இப்படியுமாய் நெளிந்து கொண்டிருக்கின்றேன்.
வலைபோட்ட ஜன்னலுக்கு அப்பால் கீழ்த்திசையில் மிதக்கும் முழுநிலவில் குளிர்ச்சி தெரிகின்றது. 'சொக்க வெள்ளிப் பாற்குடத்தினின்றும் சொரிந்த பசும்பாலாய் நிலவுக்கதிர்கள் சிரிக்கின்றன. ஊருகின்ற தென்றலின் சலசலப்பில் மர இலைகள் சோககிதம் இசைக்கின்றன. எங்கிருந்தோ கத்தும் குயிலோசை காதில் பாய்கின்றது. மனத்தை அறுத்து, அறுத்து, அறுத்து ஏதோ செய்கின்றது
நான் மெல்லச் சிலிர்த்துக் கொள்கின்றேன். என்னுள் மெதுவாகச் சிரித்துக் கொள்கின்றேன். "எங்களது இன்ப மான சிரிப்பில்கூட சோகம் நிறைந்திருக்கின்றது" என்ற ஷெல்லியின் கவிதை வரிகளை நினைத்துக் கொள்கின் றேன்.
ஒரிரு வருடங்களுக்கு முன் என் வாழ்வின் அந்தப் பசுமையான பகுதிகளை நான் அனுபவித்திருக்கின்றேன். காதல். அந்த மகத்தான அனுபவங்களை வெறும் வார்த்தைகளுக்குள் சிறைப்பிடிக்க என்னுல் முடியாது. சோகங்களும், துன்பங்களும், விரக்திகளும், ஏமாற்றங் களும் நிறைந்த ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் ஏற்படு கின்ற மிகமிக மகத்தான, இனிமையான அனுபவம் அது

குப்பிழான் ஐ. சண்முகன் 49
வாகத்தானிருக்க முடியுமென நினைக்கின்றேன். எங்கள் ஆத்மாவின் உணர்ச்சிகளைப் புரிந்து, எங்கள் இன்பங் களையும், துன்பங்களையும், துயரங்களையும், சோகங்களை யும், தங்களுடையதாகவும் கருதி, அதில் அமிழ்ந்து, எங் களுக்காகவே வாழ்கின்ற அல்லது நாங்கள் அவர்களுக் காகவே வாழ்கின்ற எதுவென்று சொல்லி விவரிக்க முடி யாத அந்த மோகனமான வாழ்க்கை.; என்னையும் ஒருத்தி காதலித்தாள். கடற்கரையிலும், பூஞ்சோலையி லும்; காற்றட உலாவுவதிலும் அல்லாமல் இதய உணர்ச் சிகளில், வாழ்க்கை பற்றிய நோக்கங்களில், இந்த உல கத்தின் மயக்குகின்ற மோகனமான அழகுகளில் நானும் அவளும் ஒன்ருக வாழ்ந்தோம்.
நான் பெருமூச்சு விடுகின்றேன். நான் பெருமூச்சு விடுவது தவறென்று ஒருவரும் சொல்லமாட்டார்களென் றும் நினைக்கின்றேன்.
வெளியே ஊதும் பனிக்காற்றில் உடம்பு குளிர் கின்றது. மேகத் திரையில் மறைந்த சந்திரனின் மங்கிய ஒளியில் மரங்களின் கீழ் கரும்பூதங்கள் தலையை நீட்டு கின்றன. அந்த ஆழ்ந்த நிசப்தத்தில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளின் கீச்சிடும் சப்தங்கள் கேட்கின்றன.
எனக்கும் பெருமூச்சு விடவேண்டும் போலத் தோன் றியது. ஏதாவதொரு மோகனமானதொரு மெளனகீதத்தை முணுமுணுக்க வேண்டும் போலவும் தோன்றியது. ஜானகி ராமனையோ, லா. ச. ராவையோ, மெளனியையோ எடுத்து வைத்துப் படிக்க வேண்டும்போலவும் தோன்
வீட்டின் கீழ்ப்பகுதியில் குடியிருக்கும் இளம் தம்பதி களின் ஒரே குழந்தையின் அழுகையொலி கேட்டது. அருகில், எங்கோ "பாத்ரூமில் யாரோ குளிப்பதினுல் தண்ணிரின் சலங்கைச் சத்தம் கேட்டது.

Page 27
50 | சாதாரணங்களும் அசாதாரணங்களும்
நான் சோம்பல் முறித்து ஒரு கொட்டாவி விடுகின் றேன்.
இந்த வாழ்க்கையின் - மாலைநேரத்து வானம் போன்ற மோகனமான நினைவுகள், உணர்ச்சிகள், அனு பவங்கள் எல்லாம் நிலையில்லாததுதானு? வானவில்லின் வர்ண ஜாலங்களாய் அவை மறைந்து விடத்தான் வேண் டுமா என நான் நினைக்கிறேன். ஏதோவொரு உணர்ச்சி பூர்வமான மென்மையான கீதத்தைக் கேட்டு அனுபவிப் பது போன்ற நிலையில் நானிருந்தேன். எங்கள் வீட்டு முற்றத்தில்-பரபரவென்று இருளுகின்ற வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில்-சாணத்தால் மெழுகிய திண்ணை களின் தூய்மையில்-வீடுகளில் விளக்குகள் ஜெகஜோதி யாய் பிரகாசிக்க ஆரம்பிக்கையில்-இழைகின்ற தென்ற லில், முற்றத்து முல்லையின் சுகந்தத்தில் அந்தக் காலங் களில் நான் என்னை மறந்திருந்தது போன்ற நிலையிலிருந் தேன். பருவவாளிப்பில் எழிற்கோலம் காட்டி, வாலிபத் தினுலும் மனத்தின் களங்கமற்ற புனிதத் தன்மையிலுைம் முகத்தில் எழில்காட்டி, முத்துநகை காட்டி, என்னருகில் அவளிருந்து காதல்கதை சொன்ன பரவசநிலையில் நானரி ருந்தேன்; அவளை முதன்முதல் கண்டபோது-பார்வை யும், பார்வையும் முட்டி மோதியபோது, இப்படியும் ஒரு பெண்ணு என்று நானினைத்துருகிய அந்தக் கணத்தில் இருந்தது போல நானிருந்தேன்.
இவற்றைவிட வேறுவிதமாக அந்தப் பரவச நிலையை என்னுல் சொல்ல முடியாது. இந்த உலகில் "சுடர்மிகும் அறிவுடன்’ பிறந்தவர்கள், அந்த அறிவின் உச்சத்தில் படி இருந்திருப்பார்களென்று புரிந்தவர்கள் என்னு டைய நிலையையும் புரிவார்களென்று நம்புகின்றேன்.
வாழ்க்கையில் எதுவும் அழிவதில்லை; வாழ்க்கையின் மகத்தான அனுபவங்கள் அழிந்துவிடுவதுமில்லை; வாழ்க் கையின் அர்த்தமே உணர்ச்சி பூர்வமான இன்பந்தான்;

குப்பிழான் ஐ. சண்முக்ன் 51
வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்கள் கூட. அந்தச் சோகங் களின் மங்கிய நிழலான நினைவுகள் கூட இன்பந்தான்; போராட்டங்களும், வெற்றிகளும்.தோல்விகளும் இன் பந்தான்; எல்லாமே இன்பந்தான்; இப்படியெல்லாம் நான் நினைக்கின்றேன்.
இருள்கின்ற பச்சை இலைகளும் ஒன்றன் பின் ஒன்றக கத்திக்கொண்டு பறக்கும் காகங்களும், என் மனத்தில் சோக நினைவுகளை மீட்டாலும்கூட, அதுவும் ஒரு இன்பந் தானென நான் நினைக்கிறேன்.
வாழ்க்கையின் சமூக அமைப்புகள் அவளையும் என் னையும் பிரித்து வைத்தது. நிரந்தரமாகவே பிரித்து வைத் தது. ஏழை வாலிபனும், பணக்காரப் பெண்ணும் எப்படி ஒன்றக வாழ முடியும் என்று கேட்பது போல இந்தச் சமூக அமைப்பு எங்களைப் பிரித்தது.
வழக்கமாகவே அவள் என்னைச் சந்திக்கின்ற-ஒரு நாள் மாலையில் அவள் என்னைச் சந்திக்க வரவில்லை: இரண்டாம் நாளும் வரவில்லை. என் உயிருக்குயிரான ஏதோவொன்றை இழந்ததுபோல நான் தவித்தேன். உல கம் எங்குமே சூனியமாகக் காட்சி அளிப்பதுபோல நா8. உணர்ந்தேன்.
இருள் நிறைந்த மூன்று மாதங்களின் பின் இடியான அந்தச் செய்தி என் காதில் விழுந்தது. அவள் போய் 6.F -- T Gir.
அவளையும்-என்னையும் நன்கறிந்த அவளது தூரத்து உறவினன் ஒருவன் இதை எனக்குச் சொன்னுன், மாலை மங்கி இருளும் தழலில்-வானத்து அந்தகாரத்தில் காகங் கள் கத்திக் கொண்டு பறக்கையில்-மின்மினிப் பூச்சி களாக வீதி விளக்குகள் பளிச்சிடுகையில் ஒடும் இரட் டைத்தட்டு வஸ்சின் மேற்பகுதியில் என்னருகில் இருந்த அவன் இதை என்னிடம் சொன்னன்.

Page 28
52 | சாதாரணங்களும் அசாதாரணங்களும்
நான் ஒடுகின்ற வஸ்சிலிருந்து ஓடாத காட்சிகளை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். மரம் பச்சை கள் இருண்டன; பறவைகள் கத்திக் கொண்டு பறந்தன; எனது நெஞ்சில் ஏதோ செய்தது; கண்கள் இருண்டு வந்தது; ஒருமுறை குரலெடுத்து அழவேண்டும் போலி
ருந்தது.
இப்போது நான் அதை நினைத்துப் பார்க்கிறேன். அவளை - அவள் அன்பை-அந்த அமைதியான அழகை நினைத்து மனதில் அழுகின்றேன். அவளுடன் கழித்த அந்த நித்தியமான நாட்களை-அவள் மறைந்தாலும் மறையாது நிலைத்துவிட்ட அந்தப் பசுமையான அனுப வங்களை நினைத்து-அந்த இன்ப நினைவுகளிலேயே வாழ முனைகின்றேன். அவளுடன் பகிர்ந்த அந்த அனுபவங் களின் மங்கிய மனப்பதிவுகளை நான் நினைக்கும்போது வளவு இன்பங் கலந்த வேதனை இந்த வாழ்க்கை" என்றும் நினைக்கின்றேன். நான் அனுபவித்த மகத்தான சோகங்களின் உள்ளார்த்தமான அழகை-அந்த இன் பங்களை நான் அனுபவித்ததுபோல மனநிறைவுங் காணப் பார்க்கின்றேன்.
உறுமிச் செல்லும் வஸ்சின் ஒசை வீதியில் கேட்கின் றது. அதன் ஒளிக்கோடுகள் இருண்டு கிடக்கின்ற மரங்களில் அசைகின்றன. அவற்றின் தேய்வில் கீழே இளம்குடும்பத்தின் குசுகுசுப்புக் கேட்கின்றது.
எனக்கு நெஞ்சை ஏதோ செய்கின்றது; மூச்சு அடைா பது போல் இருக்கின்றது; கை கால்கள் விறைப்பதுவும் தெரிகின்றது.
சாவு என்னை அண்முகின்றதா .. ? நான்சாக மாட்டேன்.

குப்பிழான் ஐ. சண்முகன் / 53
எத்தனை எத்தனை விரக்திகளும், இன்பங்களும், ஏமாற்றங்களும், சோகங்களும் ஏற்பட்டாலும்- இந்த உலகின் மயக்குகின்ற, மோகனமான, எழிலான வனப் புகளை விட்டு நான் பிரியமாட்டேன்.
‘வாழ்க்கை அழகானது; இன்பமானது; வாழ்க்கை போராட்டங்களும் வெற்றிகளும் தோல்விகளும் இன்ப மானவை, w
‘நான் ஏன் சாக வேண்டும் ... ? "நான் சாக மாட்டேன்."
(1972)
DJ
Fn 4

Page 29
பிரிவதற்குத்தானே உறவு
ஏதோவொரு விரக்தியான மனப்போக்கில், தண்டவாளக் கட்டைகளில் கால்களைப் பதியப் பதிய வைத்து நடந்து கொண்டிருந்தான் கருணுகரன். வானத்தில் கவிந்திருந்த மேகக்கூட்டங்கள் மத்தியில், மேற்குத் திசையில் மாலைச் துரியன் கருமஞ்சள் நிறத்தில், கவலையால் கலங்கியிருப்பது போல மினுங்கிக் கொண்டிருந்தான். கடற்கரையில் சாய்ந்து வளர்ந்திருந்த ஒற்றைத் தென்னை மரம் மேல் காற்றில் மெதுவாக அசைந்தாடிக் கொண்டிருந்தது. நீலத் திரைகள் மெதுவாக கரையை வருடிக் கொண்டிருந்தன. தண்டவாளக் கரையிலிருக்கும் கல்லில் தன்னை மறந்து முணுமுணுத்துக் கொண்டிருக்கும் நீலச்சேலை கட்டி யிருக்கும் பைத்தியக் காரி அன்றும் அவ்வாறே முணு முணுத்துக் கொண்டிருந்தாள்.
தன்னை மறந்து நடந்துகொண்டிருந்த கருணுகரன் பின்னல் திரும்பிப் பார்த்தான். அவன் எதிர்பார்த்தது போல, கரிய புகையைக கக்கிக்கொண்டு தூரத்தில் விரைந்து வந்து கொண்டிருந்தது.றெயில். தன்னையறி

குப்பிழான் ஐ. சண்முகன் / 55
யாமலே கையை உயர்த்தி கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் சரியாக 4.46. அவன் மீண்டும் பின்னல் திரும்பிப் பார்த்தான். றெயில் அவனை முந்தி, அவன் நடந்து கொண்டிருந்த இரும்புப் பாதைக்கு, அருகிலுள்ள பாதை யால் அவன் சென்று கொண்டிருந்த திசையை நோக்கியே 剑t9-叫莹列·
வழக்கமாகவே நிகழும் இந்த நிகழ்ச்சியை நினைத்து அவன் மனத்துள் சிரித்துக்கொண்டான்.
எப்போதாவது துரியன் கவலையால் கலங்கியிருப்பது போல் இராமல் பிரகாசமாக மினுங்கிக் கொண்டிருப்பான். அல்லது மேகங்களால் ஒரேயடியாக மூடப்பட்டு முற்ருக மறைந்திருப்பான். எப்போதாவது தென்னைமரம் ஆடா மல் அசையாமல் அமைதியாக இருக்கும். எப்போதாவது கடல் நிர்ச்சலனமாக இருக்கும். எப்போதாவது, தண்ட வாளக் கல்லில் இருக்கும் பைத்தியக் காரி அதிலிருக்க மாட்டாள். எப்போதாவது றெயில் நேரம் பிந்தி வரும் , எப்போதாவது அவள் வரமாட்டாள்.
அவளின் நினைவு வந்ததும், கருணுகரன் தலையை நிமிர்த்தி தூரத்தில் தெரியும் ஸ்டேசனைப் பார்க்கலானன்.
அவனை முந்திச் சென்ற றெயில் அதில் நின்று விட்டு, மீண்டும் புகையைக் கக்கிக்கொண்டு புறப்படுவதற் காயத்தமாகக் கூவியது. ஸ்டேஷன் பிளாட்போம் மனிதத் தலைகளால் நிறைந்திருந்தது. அவன் கண்கள் அம்மனிதக் கூட்டத்தில் அவளேயே தேடி அலைந்தன.
தன் மனப்போக்கை நினைத்து அவன் சிரித்துக் கொண்டான். இந்த இயந்திரமான வாழ்வின்-இயந் திரச் சுருதியான சில அனுபவங்கள்-கதிரவனின் மறை வும் வரவும், காலையும் மாலையுமாய்ப் புலர அந்த அனு பவங்கள் நாவிலும் பொழுதிலும் அதே உப்புச் சப்பற்ற பழக்கங்களாயும் வழக்கங்களாகியும் ஆகிவிடும் அந்தப் போக்கை நினைத்து அவன் சிரித்தான்.

Page 30
56 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
வழக்கமாக காலை ஐந்து மணியளவில் துயிலுணர்ந்து வழக்கமான காலைக் கடன்களைக் கழித்து, அல்லோல கல்லோலமாக, அவசரம் அவசரமாக ஒவ்வீசுக்கு புறப் படும் அன்றட நிகழ்ச்சியை அவன் எண்ணினன். சைவக் கடையின் ஒரு மூலையில் ஒரே கதிரையிலிருந்து வழக்க மாகச் சாப்பிடும் காலைச் சாப்பாட்டை எண்ணினன். கடையிலிருந்து ஸ்டேசனுக்குப் போகும் பாதையில், ஐந் தாவது வீட்டில், கீழ்ப்பகுதி ஜன்னலை மூடியிருக்கும் பச்சைநிறச் சீலைக்கு மேலாய், வட்டமாய், கவர்ச்சியாய் யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பது போன்ற அந்தப் பெண்ணின் ஏக்கம் ததும்பும் விழிகளை அவன் நினைத் தான். அப்பால் வீதிக்கரையில் தன் றிச்சோ வண்டிலைச் சரித்துவிட்டு, அதில் கண்களை மூடிக்கொண்டு சாய்ந் திருக்கும் றிச்சோக்காரக் கிழவனின் தோற்றத்தை அவன் எண்ணினுன். தூக்கமுடியாத சுமையாக, ஏராளமான புத்தகங்களை தம் மார்போடு சார்த்திய வண்ணமாக ஏந்திக் கொண்டு, தூய வெள்ளைநிற உடையுடன் கலகல வென ஏதோ கதைத்துக்கொண்டு, பாடசாலை சேர்விஸ் வஸ்சுக்காக விரைந்து செல்லும் அந்த இரு இளம் பெண் களையும் நினைத்துப் பார்த்தான். ஸ்டேசன் பிளட் போமில் ஏதோவோர் நிரந்தரமான சோகம் குடிகொண்ட பெரிய விழிகளுடன் கூடிய அந்தப் பெண்ணையும், மொத்தமான சனக்கும்பலையும் எண்ணினுன்.
வாரத்தில் ஒருநாள் ஓய்வுநாள் தவிர்ந்த மற்றைய ஆறு நாட் காலைப் பொழுதுகளிலும், நிரந்தரமாகிவிட்ட இந்தச் சம்பவங்களை ஏனே அவன் மனது அசை போட்டுப் பார்த்தது.
ஸ்டேசன் பிளாட்போமில் தெரிந்த மனிதத் தலைகள் கலைந்துவிட்டன. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரிருவர் அலைந்து திரிந்தார்கள். அந்த ஸ்டேசனில் கண

குப்பிழான் ஐ. சண்முகன் / 51
நேரச் சலசலப்பை ஏற்படுத்தி உயிர் துடிக்கச் செய்த றெயில் அப்பால் ஓடி மறைந்தது.
அவன் ஸ்டேசனைப் பார்த்துக்கொண்டே நடந்தான்
ஸ்டேசன் பிளாட்போமை விட்டிறங்கி, அவனை எதிர்நோக்கி, பூப்போட்ட வெள்ளைநிற வொயில் சாரி அணிந்த அவள் வந்துகொண்டிருந்தாள். தூரத்தில், மங்கலாய் அவளைக் கண்டபோதும், அது அவள்தான் என உணர்ந்து கொண்ட கருணுகரனின் கண்கள் ஒரு பரவசத்தில் மின்னின.
தன்னுள் ஒரு குதூகலம் நிரம்பி வழிவதை அவன் உணர்ந்துகொண்டான். அவன் நினையாமலே-அவனை அறியாமலே ஏதோவோர் இன்ப முகிழ்ச்சி அவன் உட லில் ஊடுருவி நிற்பதாக அவன் உணர்ந்தான். தான் ஒரு புதிய மனிதனுக, சற்றுமுன் தண்டவாளத்தில் நடந்த போது ஏற்பட்ட விரக்திகளுக்கு அப்பாற்பட்ட மனி தனக-உருமாறிவிட்டது போன்ற ஒர் உணர்ச்சியில் அவன் நினைக்கலானுன்.
வழக்கமாக மாலை நேரத்தில் அவளைக் காணும் போது, இத்தகையதோர் பரவச உணர்ச்சி தன்னில் ஏன் ஏற்படுகிறது என அவன் சிந்திக்கலானன், இயந்திர இயக்கம் போன்ற வாழ்வின், இயந்திர சலனங்களாக அசையாமல் அவளின் சந்திப்பில் மட்டும் ஏன் ஓர் உயிர்த்துடிப்பு, உணர்ச்சி ஏற்படுகிறதென்று அவன் அறிய முயன்றன்.
பெண்களைச் சந்திக்கும் போதெல்லாம் அவனுக்கு அப்படியான உணர்ச்சிகள் ஏற்படுகிறதென்றும் கூற முடியாதிருக்கிறது. ஜன்னல் நிலைக்குமேல் தெரியும் பெண்ணின் முகத்தையும், பள்ளிக்கூடம் போகும் பெண் களையும், ஸ்டேசன் பிளாட்போமின் சோக விழிகளுடன் கூடிய பெண்ணையும் அவன் எப்போதும் சந்திப்பான்.

Page 31
58 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
வாரத்தில் ஓரிரு நாட்களாவது, ஒரு குறிப்பிட்ட ஸ்டேசனில் இறங்கும் அழகிய கிராமியப் பெண்ணை றெயிலில் சந்திப்பான். றெயிலால் இறங்கியதும் ஒவ் வீசுக்கு அவசரமாகச் செல்லும் வழியில், "லிப்ஸ்டிக்" பூசிய, ஒரு கையில் அழகுப்பையுடன் மறு கையால் தன் சங்கிலியின் பதக்கத்தை தூக்கிச் சுழற்றும் அழகியையும் சந்திப்பான். மாலையில் ஸ்டேசனுக்குத் திரும்பும் வழி யில் நீண்ட பஸ் கியூவில் நின்று, அவனைப் பார்த்து *அறிமுகமான புன்னகை காட்டும், சின்னப் பெண்ணை யும் சந்திப்பான். அவர்களின் சந்திப்பு உணர்ச்சிகளும் உயிர்த் துடிப்புமற்றதாய்-வெறும் நாளாந்த இயக்கங் களாக இருக்கும்போது, இவளது சந்திப்பில் மட்டும் ஏன் ஓர் இன்பம் ஏற்படுகின்றதென்பது அவனுக்கு விளங்க வில்லை.
வழக்கமாக, மாலையில், இந்த நேரத்தில் அந்த றெயிலில் வந்திறங்கி தன் இருப்பிடத்தை நோக்கிச் செல் லும் அவளும், அடுத்த றெயிலைப் பிடிப்பதற்காக அந்த ஸ்டேசனை நோக்கிச் செல்லும் அவனும், ஒருவரை யொருவர் எதிர்ப்ட்டு சந்தித்துப் பிரியும் தறுவாயில், அவனும் அவளும் ஒருவரையொருவர் நிமிர்ந்து பார்க்கும் போது, அந்த ஒரு கணம் அவர்கள் கண்கள் சந்தித்துத் தழுவும் போது - அந்த உணர்ச்சியில் அவன் புல்லரித்து நிற்கும் போது, அவளும் அது போன்றதோர் ஆனந்தத் தில் மூழ்குகின்றளென்பதையும் அவன் அறிந்து கொண்
6.
இத்தனைக்கும், அவன் அங்கு மாற்றலாகி வந்திருக்கும் நான்கைந்து மாதங்களிலும், ஒவ்வொரு மாலையிலும் அவ ளைச் சந்தித்து பரவசமுற்ற போதும், அவனுே அவளோ வாய்திறந்து ஒருவரோடடொருவர் பேசியதில்லை. தம்மை மறந்து சிரித்ததுமில்லை.

குப்பிழான் ஐ. சண்முகன் / 58
அந்த ஒரு கணநேரக் கண்களின் சந்திப்பில், அவர் களின் கண்கள் விரிந்து சிரித்திருக்கலாம்; ஒரு கோடி கதைகளைப் பேசியிருக்கலாம்.
அந்தக் கண்களின் சந்திப்பைத் தவிர, அவர்களி டம் வேறு எவ்வித தொடர்புகளோ, உறவுகளோ இருக்கவில்லை.
அப்படியாயின் அந்தக் கண்களின் சந்திப்புத்தான் அவர்களது தொடர்பா? அதுதான் அவர்களை உணர்ச்சி வசப்பட வைக்கும் உறவா? அப்படியான ஓர் உறவுக் கும், இப்படியான ஒரு சக்தி உண்டா?
சில கனநேரத்தில் மனதில் கிளர்ந்து விஸ்வரூபம் கொண்ட எண்ணச் சிதறல்களுடன் அவன் நடந்தான். ஸ்டேசனில் ஒரு றெயில் கூவியது.
அவன் சென்று கொண்டிருந்த பாதையில், அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது ஒரு "குட்ஸ்" வண்டி. அவள் அடுத்த பாதையால் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவனும், றெயில் வந்து கொண்டி ருந்த தான் சென்ற பாதையை விட்டு, அவள் வந்து கொண்டிருந்த பாதையினுாடாக நடக்கலாஞ்றன்.
“குட்ஸ்" வண்டி அந்த ஸ்டேசனில் நில்லாமல் விரைந்து அவனைக் கடந்து அவளையும் கடந்து சென்றது. அவனைக் கடந்து அப்பால் சென்ற றெயில் கூவவே, அவன் திடீரென்று பின்னுல் திரும்பிப் பார்த்தான். கிட் டத்தட்ட அவனுக்கு நூறு யாருக்கு அப்பால் வந்து கொண்டிருந்த அவளும் நிமிர்ந்து பார்த்தாள். பின்னுல் திரும்பிய அவன், அது தன்னைக் கடந்து சென்ற குட்ஸ் வண்டியின் கூவலென்று அறிந்ததும் முன்னுல் திரும்பி அவளைப் பார்த்தான்.
அவர்கள் ஒருவரையொருவர் பார்ப்பதை அவர்களே உணர்ந்து கொண்டனர்.

Page 32
60 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
அவள் தான் அவனைப் பார்க்கவில்லை என்பதைப் போல, சர்வகாசமாக அப்பால் திரும்பி நீலக்கடலலை களைப் பார்க்கலானுள்.
அவன் அவளையே பார்த்துக்கொண்டு நடந்தான் மேகத்திரையில் மறைந்து நின்ற கதிரவனின் மெல்லிய ஒளியலைகளில், நீலக்கடலில் பட்டுத் தெறித்த பிரதி பலிப்பில், அவள் ஒய்யாரமாக மிதந்து வந்து கொண் டிருந்தாள். மெதுவாக ஊதிய இளங்காற்றில் அவள் கன்னத்து மயிர்களும், அவள் அணிந்திருந்த சேலையின் தலைப்பும் நெளிந்து வளைந்தன. ஒரு தேவதை போல அவள் அவன் கண்களுக்குத் தென்பட்டாள். மோகன மான உணர்வலைகளால் அவன் பீடிக்கப்பட்டிருந்தான். நளினமான கற்பனைகள் அவன் மனத்திலுதித்தன.
ஓர் உணர்ச்சிபூர்வமான கவிஞனுக்குரிய மனக்கிறக் கத்துடன் அவன் பெண்களைப் பற்றி சிந்தித்தான். சின் னஞ்சிறு குழந்தைகளையும் காந்தக் கவர்ச்சி காட்டும் செழுமையான அங்கங்கள் கொண்ட இளம் பெண்களை யும் புதுமை மயக்கில் புதுப் பொலிவு காட்டும் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்த பெண்களையும், ஓரிரு குழந்தைகளைப் பெற்று தாய்மையெனும் தெய்வ உரு வைப் பெற்ற பெண்களையும் நரைமயிருடன் காதில் கடுக் கண்கள் அசைந்தாட தம் பேரக் குழந்தைகளை மடியில் தூக்கிவைத்து, ஒரே ஒரு ஊரிலே கதை சொல்லும் பாட் டிக் கிழவிகளையும்பற்றி அவன் எண்ணினன்.
பெண்ணின் ஒவ்வொரு பருவங்களிலும் அவள் எப்படி இருந்திருப்பாள் - இருப்பாளென அவன் கற் பனை செய்து பார்க்கலானுன்.
அவன் கண்களுக்கு முன்னுல் தெரிந்த அவள் உரு வம் சிறுத்தது. பாவாடை கட்டிய சின்னஞ் சிறிய சிறுமி யொருத்தி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

குப்பிழான் ஐ. சண்முகன் / 61
வழவழவென்ற செழிப்பில் அவள் உருண்டை முகமும் அந்த முகத்தில் பதிந்த நீலமணி போன்ற குறுகுறுத்த கண்களும், சிறிய அழகிய செவ்வாயும், அதில் நிரந்தர மாகி விட்ட இளம் சிரிப்பும்.
அவள் இப்போது வெள்ளை வொயில் சாறி அணிந்த பருவப் பெண்ணுய் அவனை நோக்கி வந்து கொண் டிருந்தாள். கையில் ஓர் அழகுப் பையுடன் அன்னப் பதுமையென மெதுவாக பவ்வியமாக அவள் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அடிக்கொரு தடவை நீலக்கடலையும், அவனையும் நிமிர்ந்து பார்க்கும் அவள், பெரும்பாலும் நிலத்தைப் பார்த்த வண்ணமே வந்து கொண்டிருந்தாள்.
கருணுகரன் அவளைப் பற்றிக் கனவு கண்டான்.
அவளைத் தன் வாழ்வுத் துணைவியாக்கி, மனைவாழ் வில் ஆரம்பத்தில் புதுமை மயக்கில் பொலியும் அவளது புதிய தோற்றத்தையும், அவளும் தானும் அனு பவிக்கப் போகும் இன்ப வாழ்வினையும், அவளுடன் பொய்மையான ஊடல் கொண்டு தான் பிணங்குவதாக -வும் அவன் கற்பனை செய்து பார்த்தான். தன் வாழ்வில் ஏற்படப் போகும் இன்ப துன்பங்கள், சுகதுக்கங்கள், பூரிப்புக்கள் சோகங்கள் யாவற்றிலும் அவளும் பங்கு கொண்டு-அவளுடன் வாழ்ந்தால் எப்படி இருக்கு மென்ற நினைவிலேயே அந்த நினைவேயொரு இனிய அனுபவமாக அவன் அமிழ்ந்தித் திளைத்தான். அவளு டன் தான் குடும்பம் நடத்த போகும் போது பிறக்கும் பிள்ளைகளைப் பற்றியும்-அப்போது அவளுக்கு ஏற்படப் போகும் தாய்மைப் பூரிப்பைப் பற்றியும்-தனது பிள்ளை களுக்குப் பிறக்கப் போகும் பிள்ளைகளைப் பற்றியும்அவள் அவர்களுக்குப் பாட்டியாய் கதை சொல்லும் இலாவகத்தைப் பற்றியும் அவன் எண்ணினுன்.

Page 33
62 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
அவனுக்குப் பின்னுல், அவன் போகவேண்டிய றெயில் இரைந்து வந்து கொண்டிருந்தது. இனிய நினைவு களின் மயக்கத்தில் கற்பனை உல்கில் சஞ்சரித்தவனுக வந்து கொண்டிருந்த அவன் றெயில் வருவதை உணர
அவனுக்கு முன்னுல் கிட்டத்தட்ட இருபத்தைந்து யார் தூரத்தில் வந்து கொண்டிருந்த அவள், அவனை எச்சரிப்பதுபோல் பார்த்துக்கொண்டே அடுத்த லைனுக்கு செல்லலானுள்.
அவள் பார்த்த பார்வையின் அர்த்தத்தை உணர வேண்டியவனுக பின்னே பார்த்த அவன், தன்னை அண்மி வந்து கொண்டிருக்கும், தான் செல்ல வேண்டிய றெயி லைக் கண்டு ஒரு கணம் துணுக்குற்றன். திடீரென ஸ்டே சனைப் பார்க்கலானுன்.
அவன் ஒடினுல், றெயிலைப் பிடிக்கக் கூடிய தூரத்தி லேயே ஸ்டேசன் இருந்தது.
ஆணுல், அவன் ஸ்டேசனைப் பார்க்கும் போது, அவளையும் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள். அவர்கள் பார்வையின் மோதலில், அவள் பார்வையி லிருந்த ஏதோவொரு சக்தி அவனை ஒடவிடாது தடுப் பது போல உணர்ந்த அவன், ஓடவா-விடவா என்று தத்தளித்தான். ஏதோ தீர்மானத்துக்கு வந்தவன் மாதிரி மிக மெதுவாக நடக்கலானன்.
அவன் அவளைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.
அன்னப்பதுமையென நடக்கும் அவள் நடையில் அன்று ஒரு தொய்யலான சோர்வு தென்படுவதை அவன் அவதானித்தான். அவளும் மிக அண்மையில் வரவே குறுகுறுப்பாக உற்றுப் பார்க்கலானன். உண்மையில், அவள் ஏதோ தவிர்க்கமுடியாத சோகத்தால் பீடிக்கப்

குப்பிழான் ஐ. சண்முகன் / 63
பட்டவள் போலவே தென்பட்டாள். அவள் எதற்காக கவலைப்படுகிறள் என்று அறிய வேண்டும் போல அவன் மனம் தவித்தது.
தன் சிந்தனைப்போக்கை நினைத்து அவன் மனத்தில் சிரித்துக் கொண்டான். தன் இயந்திர வாழ்க்கையில், சில கணங்களின் சந்திப்பில், ஏதோ இனம் தெரியாத கிளுகிளுப்பை ஏற்படுத்துகிருள் என்பதற்காக-யாரோ, எவரோ என்றறியாத ஒரு பெண்ணை அடித்தளமாக வைத்து, காதல் வாழ்வு, ஊடல், சந்ததிப்பெருக்கம் என் றெல்லாம் கோட்டை கட்டினேனே என்றெண்ணி விரக்தி மேலிடச் சிரித்துக்கொண்டான்.
அவன் போகவேண்டிய றெயில், கூவிக்கொண்டே ஸ்டேசனை விட்டுப் புறப்பட்டது.
அதை அவன் கவனிக்காதவன் மாதிரி, அல்லது கவனித்தும் அலட்சியம் செய்பவன் மாதிரி மிகச் சாதார ணமாக நடக்கலானன்.
அவள் அவனை அண்மினுள். ஒருவரையொருவர் சந்தித்து, ஒருவரையொருவர் பிரிந்து, எதிரெதிராகச் செல் லும் தறுவாயில்-வழக்கமாகவே அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் நிமிர்ந்து பார்க்கும் அந்த அணுகலில்" அவள் சற்றுத் தயங்கி நின்றள்.
அவனும் நடப்பதுபோல நின்றன். அவள் நிலத்தைப் பார்த்துக்கொண்டு மலங்க மலங்க விழித்தாள். அழகுப் பையை வைத்திருந்த வலது கையின் விரல்களையும், இடது கையின் விரல்களையும் சேர்த்துப் பிசைந்தாள். நின்றதற்கு நாணியவள் போல, தொடர்ந்து நடக்க முற்பட்டாள்.
இயற்கையிலேயே சற்றுக் கூச்ச சுபாவமுள்ள அவன் என்ன செய்வதென்று அறியாமல் தவித்தான். கொஞ்சம்

Page 34
64 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
துணிவை வரவழைத்துக்கொண்டு, நாத்தழுதழுக்க மெது வாகக் கேட்டான்.
"உங்களுக்கு என்ன வேணும்" அவள் ஒரு வினடி மெளனமாக நின்றள்.
என்ன கேட்கின்றேனென்று அறியாமலே, தான் கேட்டுவிட்ட கேள்வியை, அவன் மறுபடியும் தன் மனத் தில் சொல்லிப்பார்த்து, தான் தவறு செய்து விட்டவன் போலத் தவித்தான்.
"நான் நாளையிலிருந்து எனது சொந்த ஊருக்கு மாற்றலாகிச் செல்கின்றேன்."
அவள் வாயிலிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்ட அவன் முகம் ஏன் அப்படி மாறவேண்டும்? அந்த மாற் றத்தை மறைப்பவன்போல அவன் சொன்னன் 'உங் களுக்கு என் நல்வாழ்த்துக்கள்'
அவளின் முகமும் அர்த்தமற்ற வாழ்வின் சோகங் களை உணர்ந்த அவளின் நிலையைப் பிரதிபலிப்பதுபோல மாறியிருந்தது.
அவள் அவனை நோக்கி கரங்களை அசைத்தாள். அவனும் பதிலுக்கு கரம் அசைத்தான். அவர்கள் ஒருவரையொருவர், பிரிந்து, எதிரெதிராகத் தம்தம் வழியே சென்றனர். ஒரே ஒரு முறைமட்டும் சொல்லி வைத்தாற்போல, ஒரே நேரத்தில் இருவரும் ஒருங்கே திரும்பி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட னர்.
அவன் செல்லவேண்டிய அடுத்த றெயிலும் அவனைக் கடந்து ஸ்டேசனில் நின்றது. அவன் அதைப் பிடிக்க வேண்டுமென்று ஓடவுமில்லை. ஓடவேண்டுமென்று தவிக் கவுமில்லை. --

குப்பிழான் ஐ. சண்முகன் / 65
அவன் தனக்குள் சிந்தனையில் மூழ்கியிருந்தான். அர்த்தமற்ற வாழ்விலும் ஓர் அழகு இருப்பதுபோல, சோகம் மிகுந்த வாழ்விலும் ஒரு சுவை இருப்பது போல அவனுக்குப் பட்டது.
வெறும் பார்வையினல் ஏற்பட்ட உணர்ச்சித் துடிப்பு களினுல் உருவான அவளின் உறவு இவ்வளவு சீக்கிரத் தில் அறுந்துவிடுமென அவன் நினைக்கவில்லை. இவ்வளவு சோகத்தைத் தருமெனவும் அவன் எதிர்பார்க்கவில்லை. 'மனித மனங்களிடையே உணர்ச்சிகளுக்கிடையே ஏற்ப டும் உறவுகள் ஏதோவொரு காலத்தில் பிரிவதற்குத் தானே ஏற்படுகின்றன’ என்று கூறி மனத்தைத் தேற்றிக் கொண்டான் அவன்.
நாளைக்கும், அவன் தண்டவாளக் கட்டைகளில் நடப்பான்; துரியன் மினுங்கிக்கொண்டிருப்பான்; தென்னைமரம் காற்றில் அசைந்தாடும்; நீலக்கடலலைகள் கரையைத் தழுவிச் செல்லும்; கல்லிலிருக்கும் பைத்தியக் காரி தன்னை மறந்து முணுமுணுத்துக் கொண்டிருப்பாள்; றெயில்,சரியான நேரத்திற்கு வரும்.
ஆனல், நிச்சயமாக அவள் வரமாட்டாள்.
(1969)
O

Page 35
ஒரு ஒட்டாத உறவாய்
இது நடந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. இல்லை; இது தொடங்கித்தான் எத்தனையோ காலமாயிற்று. இப் போதும் - அவ்அவ் போதுகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு ஒட்டாத உறவாய் இயைபில்லாத ஒட்டுறவாய்.
அந்தக் காலங்களில் அவன் மிகவும் குதூகலமான வனுய் இருந்தான். சிட்டுக் குருவியைப்போல உற்சாக மாய் சுற்றிச்சுற்றி வந்தான். தனக்குள்ளேயும் நண்பர் களிடையேயும் ஓயாது தர்க்கித்துக் கொண்டே இருந் தான். முகத்தில் வசீகரமும் கண்களில் தீட்சணியமுமாய் உலகமே எனக்காக என்பதான ஒரு அலட்சியத்தோடு ஒரு மிடுக்கோடு, 'உங்களுக்குத் தெரியாது’ என்பதான ஒரு புன்னகையோடு.
அந்தக் காலங்களில் அவனைச் சுற்றி எப்போதுமே
நண்பர்களிலிருந்தார்கள். எல்லோரும் இளைஞர்களென்று சொல்ல முடியாவிட்டாலும் பெரும்பாலோர் இளைஞர்கள்.

குப்பிழான் ஐ. சண்முகள் / 67
வாழ்வின் ஆதர்ஸத்தைக் காணத் துடிப்பவர்களாய், உற் சாகம் நிறைந்தவர்களாய், சதா ஏன் ஏனென்று கேட்டுக் கொண்டிருப்பவர்களாய். அரசியல்வாதிகளாய், இலக் கிய வாதிகளாய் நாடகக்காரராய். பொருளியல்பற்றி, ஆத்மீகம்பற்றி, வர்க்கமுரண்பாடுகள்பற்றி, இனவிடுதலை யைப் பற்றி பேசுபவர்களாய்... அழகை ஆராதிப்பவர் களாய், இயற்கையை வியப்பவர்களாய், தென்னைமர ஒலை யில் பட்டுத் தெறிக்கும் நிலவின் கதிர்களை இரசிப்பவர்
களாய்.
அவனுக்கு நல்லாய் ஞாபகம்இருக்கிறது. ஒரு மனேகர மான மாலைப் பொழுது; அவனும் நண்பனுமாய் கடற் கரையில் சிறு நடையில் உலாவி வந்தார்கள். வானம் வண்ணமாய் பிரகாசிக்க மஞ்சள் வெய்யில் பட்டு மினுங் கும் கடலலைகள். சோடி, சோடியாய் கும்பல்களாய், தனிமை கொண்டு திரியும் சனங்கள். தாழம்புதர் மறை வில் சல்லாபிக்கும் இளம் காதலர்கள். அடிக்கடி இரைந்து கொண்டு ஓடும் புகை வண்டிகள்.
அவனும் நண்பனுமாய் ஒரு கருங்கற் பாறையில் அமர்ந்து உலகை வியந்து கொண்டிருந்தார்கள். ‘வாழ்கை-அதன் அழகுகள்-அதன் அவலங்கள்: உருண் டோடும் காலச்சக்கரம்; கிண்கிணி நாதமாய் சிரிக்கும் குழந்தை; பிரகாசிக்கும் குறும்புச் கண்களையுடைய சிறுமி; பார்வையால் சிரித்துக் கொள்ளும் அழகி, அலையில் மிதக் கும் வெளிநாட்டுச் சோடி தூரத்து வானச் சரிவோடு புள்ளியாய் தெரியும் கப்பல்; "வாழ்க்கைச் சோலையில் வசந்தத்தின் பூக்கள்' என்ற கவிஞனின் வரிகள்.
"அதோ தென்னைமர ஓலையில் பட்டுத் தெறிக்கும் அந்த நிலவின் கதிர்களைப் பார். இப்படியெல்லாம் அழகு களைச் செய்த அந்த ஆண்டவன் எத்தனை அற்புதமான


Page 36
68 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
திடீரெனக் கேட்ட நண்பனின் குரலால் அவன் துணுக்குற்றன். அசைந்தாடும் தென்னைமர ஒலைகளில் பட்டுத் தெறிக்கும் பால் நிலவின் மின்னும் கதிர்களை அவனும் பார்த்தான். அவன் நெஞ்சில் ஏதோ கிளர்வ தாக வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அந்த அனுப வத்தில் மனம் விரிவு கொள்வதாய்...
இப்போது அவையெல்லாம் பழங்கதைகளாகி விட் டன. தன்னை மறந்து இலயிக்கும் அந்த நிலை. ஒத்த மனப் போக்கில் இயைபு கொள்ளும் நண்பர்கள். ஒன்றயப்க். காணும் சமநிலைகள்.
வாழ்வின் நினைவுகள் பசுமையானவைதான் இயந் திரமயமான வாழ்கையோட்டத்தில், பகலென்றும்-இர வென்றும் - உண்பதென்றும் - உறங்கலென்றும் நீளும் சுழற்சியில் சில கணங்கள். சில நிமிசங்கள். ; அந்த மகோன்னதமான பொழுதுகள் தான் வாழ்வின் அர்த் தங்களா?
இளமையில் எப்போதோ ஒரு நாளில், அவன் வாழ் வின் ஒரு கனத்தில்-முதற்காதல் என்னும் அந்த இரம் மியம் நேர்ந்தது. உலக அறிவு சரிவர வராத பேதைப் பருவத்துக் காதல்; கிராமத்துக் கோயிலின் பவள மல் லிகை மரத்தடியில், கண்ணுக்குள் கண் பார்த்து, முகம் பார்த்து நகையரும்பி, தலை கவிழ்ந்து, நிலம் கீறி மன தைச் சிலுப்பிய காதல்; ஓராயிரம் கனவுகளை அவன் மன தில் கிளர்த்திய காதல்; அவனைக் கவிஞனுக்கிய காதல்.
பாலாய் நிலவு சொரிந்த ஒரு முன்னிரவுப் பொழு தில் தான் அந்த அனர்த்தமும் நிகழ்ந்தது. ஒரு இலக்கிய விழாவிற்குச் சென்று விட்டுத் திரும்பும் வழியில், தற் செயலாக ஏற்பட்ட சந்திப்பில் சம்பாஷித்துக் கொண்டு திரும்புகையில்தான் அது அவனுக்குப் புலனுயிற்று. ஒரு ஒட்டாத உறவாய்.இயைபில்லாத ஒட்டுறவாய்.

குப்பிழான் ஐ. சண்முகன் / 69
துண்டு துண்டாக துணுக்குத் துணுக்காக நீளும் சம் பாஷனை. "நான் பெரிய அழகி; வீட்டில் ஒரே பிள்ளை; பெற்றேருக்கும்-பெற்றேரின் பெற்றேருக்கும் ஒரே செல் லம்; ஏராளமான சொத்துப் பத்து;-
'நீ அழகனென்று சொல்ல முடியாதவன். அன்ருட வாழ்க்கையை நடத்துவதற்கே கஷ்டப்படும் குடும்பத் தில் பிறந்தவன். பெரிய படிப்புப் படித்தவனென்றும் சொல்லமுடியாது”
அவனுள் அது நொறுங்கிற்று. இவள் எனக்காகத் தன்னைக் கரைக்க முடியாதவள். நான் என்ற அகங்காரம் மிக்கவள். நான் இவளுக்காக என்னைக் கரைக்க (pigயாது. அதற்கான தகுதியையும் இவள் கொண்டிருக்க் 66ుడి;
வாழ்க்கை அந்தக் கணங்களை நினைவில் விட்டு மீண் டும் நீளத் தொடங்கிற்று. ஒட்டுறவில்லாத வாழ்க்கைஒன்றில் தன்னைக் கரைக்கத் தெரியாத வாழ்க்கை தன்?ன ஒன்றிற்காக-ஒரு மகத்தான அன்பிற்காகத் தன்னை இழக் கத் தெரியாத வாழ்க்கை அர்த்தமற்ற வாழ்க்கையாக அவனுக்குப் பட்டது. R
அந்தக் காலங்களில், தன்னில் கரைந்து விரிவு கொண்ட அனுபவங்கள். ; அப்போது அவனுக்கு "நான்’ என்ற அகங்காரமற்ற நண்பர்கள் இருந்தார்கள் "தான்" என்பதை மறந்த காதலி இருந்தாள். நான்" என் பதையும் 'தான்’ என்பதையும் மறக்க அவனுலும் முடிந் திது.
இளமைக் கனவுகளோடு ஏதாவது செய்யவேண்டும் செய்ய வேண்டும்" என்ற துடிப்புகளும் பொங்கிய கால மது. ஏதாவது செய்ய வேண்டுமென அவனும் L (LJTgs செய்யவேண்டும் தான். அவனின் இளைய நண்பர்களும்
FIT-5

Page 37
70 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
பரபரத்தார்கள், கடைசியில் மக்களிடையே கலையைப் பற்றியபிரக்ஞையை ஏற்படுத்தும் ஓர் இயக்கமாக மூவர் ஒன்றினைந்தார்கள் பெரும்பாலும் ஒத்த கருத்துள்ளவர் களாய் மூவர் இணைய மற்றவர்கள் ஒவ்வொரு காரணங் கள் சொல்லப்பட்டு அந்த நெருங்கிய கூட்டிற்குள் அகப் படாமல் செய்யப்பட்டார்கள்.
"பாலா ஒரு அரசியல் கட்சியின் தீவிர செல்வாக் கிற்கு உட்பட்டவன்.' *கோபால் ஓரளவு விஷையம் தெரிந்தவனென்ற லும் எல்லாம் தெரிவதாக பம்மாத்து பண்ணு கிறவன்." *சபா எல்லா விதத்திலும் சரியானவன் தான்; ஆணுல் அவன் தூர இருப்பதினுல் எங்களுடன் ஒத்துழைக்க முடியாதவன். “காந்தன் பிரச்சனைக்குரிய காதலொன்றில் ஈடு பட்டு முழுநேரத்தையும் அதிலேயே செலவிடு பவன்." அந்த மூவர்களுக்குள்ளும் சிறிய சிறிய முரண்கள் இருந்தன தான். வெள்ளிக் கிழமைகளில் தவறது பிரார்த் தனைக்குச் செல்லும் நண்பனைக் கண்டு மற்றவர்களுக் கோர் இளக்காரம் நிதர்சனமாய்க் காண்கின்ற அடக்கு ஒடுக்கு முறையிலும் பார்க்க வேறேதெதையோ பெரிது படுத்துபவனுய் இருக்கிறவன் ஒருவன். ஏழைப் பெற் ருேர், உடன் பிறந்தோர் பற்றி அக்கறை இல்லாமல், இந்த விடயங்களிலேயே ஈடுபாடு கொண்டு திரியும் இன்னுெருவன் என்றலும்; கலையைப்பற்றிய கண் னுேட்டத்தில், வாழ்க்கையைப் பற்றிய புரிந்து கொள்ளு தலில், நேர்மையில். சத்தியத்தில் அவர்கள் ஒன்றிணைந் தார்கள்.
துள்ளும் உற்சாகத்தோடு கூடிய அசுர உழைப்பு. நகரம் நகரமாக கிராமங் கிராமமாக அலைச்சல், அவர்

குப்பிழான் ஐ. சண்முகன் / 71
களைப் புரிந்து கொண்டு வரவேற்போர் ஒரு சிலரேயாக மற்றவர்கள் நையாண்டி செய்து நக்கலடித்துச் சிரிப் போரையும், பைத்தியக்காரர் என்று பேசுவோராயும், தமது தனிப்பட்ட வாழ்வில் விருப்பு வெறுப்புக்களில் அத்து மீறிப் பிரவேசித்து விட்டதாக விரோதிப்பவர்
ES G5UDT uŮ.........
இந்த நேரத்தில்தான் அவனை அவன் நண்பர்கள் சந்தேகித்தார்கள். செய்யாதனவற்றைச் செய்வதாகவும் சொல்லாதனவற்றைச் சொன்னதாகவும் அவன் பழி சுமத் தப்பட்டான். இயக்கத்தின் நல்லனவெல்லாம் தம்மா லேற்பட்டதாகவும் தீயன வெல்லாம் அவனுலேயே நிகழ்ந்தனவாகவும் அவன் புறமொதுக் கப்பட்டான். அவர்கள் பார்வையில் அவன் வெறுத்து ஒதுக்கப்படத் தக் கவனனன். குறிப்பாக அவனுக்கு மிகவும் பிரியமான தனது நடவடிக்கையினுல் அவனை வியப்புக்கொள்ள வைக்கிற அந்த நண்பனே அவனை ஒதுக்கத் துணிந் தான்;
எந்த நேரமும் வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கிற அந்த பெரிய நகரத்து வீதியை ஒட்டிய நடைபாதையில் மூவரும் நடந்து கொண்டிருக்கையில், நண்பன் ஆத்திரத் துடன் பேசியது ஞாபகம் இருக்கிறது. கைகளை ஆட்டிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கண்கள் சிவந்து வர, அறுந்து அறுந்து வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டு விரலை அவன் முகத்திற்கு முன்னே நீட்டி, நான் என்ற அகங்காரம் தொனிக்க.
அவன் தனிமைப்பட்டுப்போன்ை. தன்னுள் கிளர்ந்த உணர்ச்சிகளும், உற்சாகங்களும் அடங்கியவனுய் நடைப்பிணமாய் போனன். வட்ட முகமும், குத்திட்டு நிற்கும் தலைமயிரும், உள்ளே ஆழ்ந்திருக்கும் கண்களும் முன்னே துருத்திக் கொண்டிருக்கும் இரண்டு பற்களு மாய். உயிரில்லாத ஓவியம் போலானன்.

Page 38
72 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
என்றலும் வாழ்க்கை நீண்டு கொண்டுதானே இருக் கிறது. சூரியன் உதிப்பதும்-அஸ்தமிப்பதும், மழை பெய்வதும்-வெய்யில் எரிப்பதும் காற்றடிப்பதும் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கிறது. பழைய நினைவுகளின் மோகனத்தோடு அவனும் வாழவேண்டித்தானே இருக் கிறது.
ஒரு சிறிய காலச் சலிப்பின் பின் அவன் மீண்டும் இயங்கத் தொடங்கினன். ஒரு ஒட்டாத உறவாக. எச்சரிக்கையோடுதான் அவன் தன்னைச் சார்ந்தவர் களோடு பழகினன். அதுவே ஒரு உறுத்தலாக இருந்தது. மனம் விட்டுச் சிரிக்க முடியாமலிருந்தது. கலகலப்பாக பேச முடியாமலிருந்தது. போலியாக ஹலோ என்று குசலம் விசாரிக்க வேண்டி வந்தது. மனதில் படும் அபிப் பிராயங்களைப் படபடவென்று கொட்டித் தீர்க்க முடியாம லிருந்தது. எவ்வளவு அற்பத்தனமாக . அட கடவுளே!
‘என்னுல் நடிக்க முடியாமலிருக்கிறது. நான் எவ்வ ளவு பாவி; கையைக் காலை ஆட்டி, சிரித்துப் பேசி, உண் மையை பொய்யாகக் காட்டி, பொய்யை உண்மையாக்கி பச்சையை சிவப்பாக்கி-சிவப்பை நீலமாக்கி காணுததை கண்டதாகச் சத்தியம் ' செய்து-கண்டதை காணுததாக மழுப்பி, 'இப்படிச் சொன்னதை நானே என் இரண்டு காதுகளாலும் கேட் டேனென்று அபிநயித்து, கும்பிட்டுக் கூத்தாடி மாய்மாலம் செய்து மயங்க வைத்து. அட பேர நீ வாழத் தெரியாத மனுசனப்பா!
தமிழில் நாடகங்கள் பற்றிய ஒரு கருத்தரங்கு. இயல் பான ஆர்வத்தால் அழையா விருந்தாளியாக அவன். சபைகளை கட்டிற்று. வாதப் பிரதிவாதங்கள் தூள் பறந்தது.
"தமிழில் மொழிபெயர்ப்பு நாடகங்கள் அவசிய மில்லை. அவை எமது சுயத்தை அழித்துவிடும் "

குப்பிழான் ஐ. சண்முகன் / 73
'உலக நாடக மேதைகளின் மொழிபெயர்ப்பு நாடகங்கள் தமிழிற்கு அவசியம் வரவேண்டும். அவை எமது பிரக்ஞை அற்ற நிலையை உலுப்பி ஒரு விழிப்பு நிலையை ஏற்படுத்திவிடும்”
"தமிழில் உலக நாடகங்களோடு ஈடுநிற்கக் கூடிய நாடகமெதுவும் இதுவரை எழுதப்படவில்லை"
"வடமொழியில் காளிதாசனின் படைப்புகளையும் ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரின் படைப்புகளையும் பார்க்கும்போது, நாடகமென்ற வடிவமே தமிழ் மொழிக்கு ஒத்து வராது போலும்"
"இல்லையில்லை; அந்தக் கருத்தை அண்மைக் காலத்து மொழி பெயர்ப்பு நாடகங்கள் உடைத் துள்ளன' அவன் தனது கட்டுப் படுத்தப்பட்ட எச்சரிக்கை யான மனேநிலையை மறந்து விட்டிருந்தான். அவன் மனத்தில் உற்சாகமும், ஆர்வமும் துளும்பிற்று. எதிர்ப் பட்ட நண்பனிடம் இயல்பாகவே சிரித்தான், குசலம் விசாரித்தான். கருத்தரங்கு பற்றிய தனது அபிப்பிராயங் களைச் சொன்னன். நண்பனிடம் அபிப்பிராயங்களைக் கேட்டான். இருவருக்கும் முரணுன கருத்துக்களின்போது மறுதலித்தான். ஒத்த கருத்துக்களின் போது மகிழ்ந்தான்.
“என்ன காணும் கை தோளுக்கு வருகுது.' திடுக்கிட்டுப் போனவனுய்-சுயநிலை அடைந்தான். M அவனின் கை நண்பனின் தோளில் இருந்தது. கடுகடுத்த முகத்துடன் நண்பன் மீண்டும் கேட்டான்.
"என்ன காணும் கை தோளுக்கு வருகுது'! 'நீர் முந்திச் சொல்லிப் போட்டு இப்ப சொல் லேலை என்று சொல்லுறீர்."
"நான் அழகி - நீ வடிவற்றவன்."

Page 39
14 சாதாரணங்களும் அசாதாரணங்களும்
"தென்னை மர ஒலையில் பட்டுத் தெறிக்கும் அந்த நிலவின் கதிர்களைப் பார்." இனிமேல் அந்த அற்புதமான பொழுதுகள் வரப் போவதில்லை. தன்னை மறந்து இலயிக்கும் அந்த நிலை. ஒத்த மனப்போக்கில் இயைபு கொள்ளும் நண்பர்கள். . ஒன்முய்க் காணும் சமநிலைகள். இது நடந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. இல்லை; இது தொடங்கித்தான் எத்தனையோ காலமாயிற்று. இப்போதும் அவ் அவ் போதுகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு ஒட்டாத உறவாய்.. இயை பில்லாத ஒட்டுறவாய் .
(1981)
OOO

நிகழ்வுகள்
எதிர்பார்க்கப்பட்டது போலவே நண்பன் அறையில் இல்லை என்று தெரிந்தது. புதிய நாயும், பழைய "டிட்டோ வும் வாலைக் குழைத்து மகிழ்ச்சிக் குரலெழுப்பி அவனைச் சுற்றிச் சுற்றி வந்தன. ஏற்கனவே கொழும்பில் வேலை பார்த்த இரண்டு மூன்று வருடங்களாக அவனுக்கு "டிட்டோ'வுடன் பழக்கம். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் கொழும்புக்கு வந்தபோதுதான் புதிய நாயுடன் பழக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவனைக் கண்டதும் வள் வள்ளென்று பாய்ந்தது அது. டிட்டோ’தான் சமாதானப் படுத்திற்று. அறையால் போகும்போதும் வரும்போதும் மீண்டும் மீண்டும் சிறு முனங்கல்கள். பிறகு அவனையும் தனக்குத் தெரிந்தவர் பட்டியலில் அது சேர்த்துக் கொண்டு விட்டது.
நாய்களின் குரல்களுக்கிடையில் வெளிக் கதவின் அண்மையில் நின்று கதவை தட்டலாமா என்று தயங்கிய கணத்தில், உள்ளில் கிழவிகள் கதைக்கும் சத்தம் கேட் டது. மகிழ்ச்சியுடன் கதவைத் தட்டினன். 'அறையில் போய் ஒரு Wash எடுத்தவுடன் ஒரு ஐந்து நிமிடம் ஆறி

Page 40
6 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
விட்டு “மகிந்த விஜயசேகரா'வின் கூட்டத்திற்குப் போக வேணும். கூட்டம் எப்படியும் ஐந்தரை மணியளவில் முடிந்து விடும். பிறகு 'Alfie Darling’ படம் பார்க்க வேணும். இப்போதே மூன்றரை மணியாகுது'
கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அப்பால் வீட்டுக் காரக் கிழவி 'நீங்களோ" என்ருள். *என்னை வருமெண்டு பூரீசொல்லவில்லையோ’ என்றன். "சொன்னவர் தான். அவர் இன்னமும் வேலையாலை வரவில்லையே! என்ன செய்யப் போகிறீர்கள்” என்ருள்.
அவன் தயங்கினன். பூரீயின் மேல் கோபம் வந்தது* "உதிலை தட்கேஸை வைச்சிட்டு வேணுமெண்டால் Wash எடுங்கோவன். இப்ப நாலுமணிக்கு அவர் வந்திடுவார்"
மற்றக் கிழவி அவனைப் புதினமாகப் பார்த்துக் கொண்டு நின்ருள். ‘அனுதாபப்படுகிறளா? கர்வப்படு கிருளா?"
"நாலு மணிக்கு வந்திடுவாரா?” என்றன். "ஒம், நாலரை மணிக்கு வந்திடுவர்”
வெளிக் கதவில் மாட்டியிருக்கும் துணி கட்டிய-- கறுத்த-அந்த மற்றத் திறப்பால் பூரீயின் அறையைத் திறக்கலாமென்று அவனுக்குத் தெரியுந்தான். அந்த வீட்டுக்காரக் கிழவியும் அவனை நாலைந்து வருடங்களாக அறிவாள்தான். அந்த மற்றக் கிழவிக்கும் அவன் முகம் பரிச்சயமாகித் தானிருக்கும், என்ருலும் அந்தக் கணங் களில் ஒரு இறுக்கம் இருந்தது. இந்தக் கர்வம் பிடித்தவர் களிடம் பணிய வேண்டாமென்றுபட்டது.
‘எப்படி wash எடுப்பது. இரண்டு கிழட்டுச் சனியன் களுக்கு முன்னுல் எப்படி உடைமாற்றுவது?"
"சும்மா உதிலை றேட்டுக்குப் போட்டு வாறேன். பூரீயும் வந்திடுவார்தானே” எதனுலும் பாதிக்கப்படாதவன்

குப்பிழான் ஐ. சண்முகன் / 77
போலத்தான் சொன்னன். அந்தக் கறுத்தத் திறப்பால் பூரீயின் அறைக் கதவைத் திறக்கலாம் என்பதை அறியாத வன் போலத்தான் சொன்னன்.
அவன் பின்னுலேயே வெளிக் கதவு பூட்டப்பட்டது. நாய்கள் கொஞ்ச தூரம் அவனுடன் வந்தன. "மத்தி யான றெயினிலேயே வந்திருக்கலாம், சும்மா எரிந்து விழுந்து அவள் முகம் கறுப்பைக் காணுது தவிர்த்திருக் கலாம்."
"கடையளுக்குப் புத்தகம் போட்ட அந்த ரிசீற்று களை எங்கேயப்பா வைச் சனிர்?"
"நீங்கள் தானே வைச்சினிங்கள்"
'இராத்திரியல்லே எடுத்து வைக்கச் சொன்னுன் இப்பவே ஐஞ்சே முக்காலாகுது”
"பொறுங்கோ இரண்டு நிமிஷத்திலே எடுத்துத் தாரன்"
'பிறகு எந்த றெயினிலை போறது” அவள் முகம் கறுப்பதாய் .
அவன் அதைத் தவிர்க்க முயல்வதாய் .
கரிபடர்ந்த இந்த முகத்துடனும், கசங்கிய சேட்டுட னும், உடலின் அசதியுடனும் இப்படி அழைக்கழியாமல் இருந்திருக்கலாம்.
கொழும்பு பழையபடியேதான் இருந்தாலும் ஸ்தம் பித்து இருப்பதுபோல ஒரு தோற்றம். அசையும் மனிதர் களை மறந்துவிட்டால் ஒரு ஓவியக் காட்சிபோல மங்க லொளியில் நகரம் குளித்துக் கிடந்தது.
"நல்லவேளை; இராசேஸ்வரியிலை சாப்பிடாமல் பசி யோடை வந்திருந்தால் இன்னும் கஷ்டப்பட்டிருக்க வேணும்.

Page 41
78 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
காலி வீதி நீண்டு தெரிந்தது.
‘வடக்கே திரும்புவோமா? தெற்கே திரும்புவோமா? வடக்கே போனல் ஸ்டேசன் றேட்டாலை போய் ஸ்டே சனிலை பூரீவரும்வரை காவலிருக்கலாம். தெற்கே போனல் கிருஷ்ணபிள்ளையின் ரூமுக்குப் போகலாம்'
தெற்கே திரும்பினன். மாலை நேரமாகையால் நண்பர் களைச் சந்திக்க வேண்டி வரலாம். சந்தித்தால் சிரிக்க வேணும்; இரண்டொரு வார்த்தை கதைக்க வேண்டி நேர லாம். சிலவேளை ofice வேலைகளைப் பற்றி (அந்த டீச்ச ரின் conversion செய்தாச்சோ; இந்த டீச்சரின் pension file க்கு என்ன நடந்தது?) விசாரிப்போர் குறுக்கிடலாம், அவர்கள் கதையை நீட்டி வளர்க்கலாம்.
"அந்தச் circular கிடைத்ததாஜஸ்ே’ "இந்த வேலை செய்கிற staff oficer சரியில்லை"
"அந்தக் clerk உம்முடைய கூட்டாளி தானே! அவரிட்டை சொல்லி இதை ஒருக்காச் செய்வித்துத் தாருமன்,
*புதிதாய் வந்த Director எப்படி?”
நினைவின் அதிருப்தியிலேயே வேகமாய் நடந்தான். வலதுகாற் செருப்பு காலோடு ஒட்டாது இருப்பதுபோலப் பட்டது. ‘செருப்புகளும் அறுந்து போச்சுது! வாங்கியும் கனகாலம் ஆச்சு. ஒரு செருப்புத் தைப்பவனிடம் கொடுத்துத் தைப்பிச்சால் நல்லது, யாழ்ப்பாணத்திலை அந்த அவசரங்களுக்கை இதுகளைக் கவனிக்க ஏலாது. மதிற் கரையில் மெழுகுசீலைப் பந்தலின் கீழ் ஒரு செருப்பு தைப்பவன் எதிர்ப்பட்டான். சுற்றிவர பழையசெருப்புச் சப்பாத்துக்குவியல்; நடுவில் நரைத்த முகத்துடன் அவன் யாரோவொரு, காற்சட்டை போட்ட வயோதியரின் கால் களை-செருப்பைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

குப்பிழான் ஐ. சண்முகன் 78
இதிலை நிண்டு மினைக்கிடேலாது"
'இண்டைக்குச் சனிக்கிழமை, கிருஷ்ணபிள்ளையு" அறையிலை இருக்குதோ தெரியாது. ஆள்கொட்டாஞ் சேனைக்குப் போயிருக்கக்கூடும். சும்மா போய்ப் பார்க் கலா மெண்டாலும் அந்த இரண்டு மூன்று கேற்றுக்களையு மல்லே திறந்து கொண்டு போகணும்?
அந்தக் கடையருகில் வேறேர் சப்பாத்துத் தைப்ப வன். இல்லை--குடைதைப்பவன். 'இப்ப கொழும்பிலை மழைகாலம் போலை; இண்டைக்குப் பின்னேரமும் மழை வரும் போலை. இப்ப காலு மணி ஆகப் போகுது மஹிந்த விஜயசேகராவிட்டைப் போகேலாது”
"அப்ப என்ன செய்கிறது. இப்ப இராமகிருஷ்ண மிஷனுக்குப் போய்ப் பேப்பர் பார்க்கலாம்"
மீண்டுமோர் செருப்புத் தைப்பவன். கறுத்த வாட்ட சாட்டமான மனிதன். 'செருப்புகளைத் தைக்கக் குடுப் போமா? மூன்று இளம் பெண்கள்; வாளிப்பானவர்கள் மகிழ்ச்சியான முகத்தையுடையவர்கள்; சாரி கட்டியிருப் பவர்கள்; பூச்சூடியிருப்பவர்கள்; இவனை ஒரக்கண்ணுல் பார்த்துச் செல்பவர்கள்.
"இனியும் செருப்புத்தைப்பவன் எதிர்ப்படுவானு? நான் நினைக்கேலை. வழக்கம் போலவே செருப்புக்களை அப்படியே விட வேண்டியதுதான்.”
இராமகிருஷ்ண மிஷனுக்குத் திரும்பும் முடக்கில், சின்னப் பையனிடமிருந்து போத்தலில் ரீ வாங்கிக் குடிக் கும் பெரிய பையன்; பழைய செருப்புக்களை மூட்டை யாகக் கட்டி கிளம்பும் நிலையில் இருந்தான் இவனின் பார்வையைச் சந்தித்து இவனையே பார்த்தான். இவனும் சுற்றுமுற்றும் பார்த்தான். பக்கத்தில் ரிக்ஷோவில் சரிந்து இளைப்பாறும்-காத்திருக்கும் கிழவனைத் தவிர ஆள் நட மாட்டம் உறுத்தவில்லை. இரண்டுகால் செருப்புக்களை

Page 42
80 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
யும் கழற்றிப் பையன் முன் போட்டான். “அறுந்தது களைப் பார்த்து ஒருக்கால் சரிபண்ணித் தாரும்' அறுந்து தொங்கிய இரண்டொரு நூல்களையும், துருத்திக் கொண் டிருந்த சில தோல் சிலும்பல்களையும் வெட்டியவன், ஒரு தோல்வாரை மீண்டும் கெட்டியாக இனைத்துத் தைக்கத் தொடங்கினுன். "இதுக்கு ஆணி. அடிச்சாத்தான் நல்லது இப்ப ஆணியெல்லாம் சரியான விலை விக்குது ஐயா"
இவன் ஒன்றும் பேசவில்லை. வெற்றுக் கால்கள் சுட் டன. மழை பெய்யப் போவதற்கு முந்திய சாய்வு வெய்யி லில் நெற்றியிலும் கன்னத்திலும் வியர்வை முத்துக்கள் அரும்பின. யாரோ இரண்டு பெண்கள் இவன் அரு கால் சென்றது போலத் தெரிந்தது. ஒரு கணத்தில் வியர்வைகலந்த பெண்ணின் மனம் இவனைக் கடந்து சென்றது.
இரண்டு செருப்புக்களையும் இவன் முன்னுல் தூக் கிப் போட்டுவிட்டு ஏதோ தேடும் பாவனையில் இருந் தான் பையன்.
"எவ்வளவு வரும்?"
"ஒரு ஐம்பது சதம் தாருங்கோவேன்'
‘ஒரு ரூபா ஐம்பது சதமோ” என்றவன் ஒரு ரூபா வைத் தூக்கி அவன் கையில் போட்டான். ந க்கத் தொடங்கியவன் திரும்பி அவனைப் பார்த்தபோது, அவன் சின்னவனிடம் 'இவனைப் பேயன்’ என்பது போல ஏதோ சொல்ல வாயெடுத்தவன் - இவன் முகத்தைக் கண்டதும் ஒரு நொடி பயந்தவனகி மீண்டும் பெரிதாகத் தலையாட்டி இவனுக்கு நன்றி தெரிவித்தான்,
'அவன் கண்களில் தெரிந்தது பயமா? மகிழ்ச்சியா? வியப்பா? ஏளனமா? அல்லது எல்லாம் கலந்த ஒன்ற?
"நான் சரியான பேயன்தான்"

குப்பிழான் ஐ. சண்முகன் / 81
இராமகிருஷ்ண மிஷன் வளவில் செழித்து வளர்ந்த அசோக மரங்கள்; ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அப் பால் இரட்டைக் கவரில் பச்சையாய்ப் படர்ந்து குவிந் திருந்தன. இதைப் பற்றி விசாரிக்க வேனும். எங்கடை வீட்டுக் கேற்றிற்குப் பக்கத்திலை வளர்கிற இரண்டு மரங் களையும் இது போலத்தான் வளர்க்க வேணும். அதுகள் எப்பதான் வளரப்போகுதோ'
மிஷன் வாசிகசாலையில் வழக்கம் போலவே சனக் கூட்டம். தினசரிகள் இருக்கிற நடு மேசையைச் சுற்றிலும் சஞ்சிகைகள் இருக்கிற வலதுபக்க மேசையைச் சுற்றி லும் இருப்போரும் - நிற்போருமாய்ச் சனங்கள்; காத் திருக்கின்ற சனங்கள்; ஆவலாதிப் படுகின்ற சனங்கள் வெற்றுவாய் சப்புகின்ற சனங்கள்.
சமயச்சஞ்சிகைகள் கேட்பாரற்றுக் கிடக்கும் இடது பக்கத்து மேசையின் அருகில் கதிரையில் குந்துகிறன். தர்ம சக்கரம், இராமகிருஷ்ண விஜயம், ஆத்ம ஜோதி, தர்மசக்கரம், இராமகிருஷ்ண விஜயம், பெயர் விளங்காத சிவலிங்கத்தை மையமாகக் கொண்ட வடமொழிச் சஞ் சிகை ஒரு தர்ம சக்கரத்தை எடுத்து விரித்தான் வாழ்க் கையில் கடைபிடிக்கப்பட வேண்டிய பத்து விதிகள் வாசித்தான். அருயையாக இருந்தன; இவற்றை . நினை வில் நிறுத்த வேண்டும்! இதன் படியே நடக்க முயல வேண்டும்."
'நாலரை மணியாகி விட்டது தர்ம சக்கரத்தைப் பார்ப்பதாக பக்கங்களைத் தட்டிக் கொண்டே சுற்றிலும் நோட்டம் விட்டான். "இதுவரை வந்தற்கு ஏதாவதொரு தினசரியையாவது பார்க்கவேணும்; அதற்காக காத்திருக் கும் சனங்களுடன் போட்டி போடவேணும். மூர்க்கத் தனமாக ஆக்கிரமிக்க வேண்டும், மற்றவர்கள் காத் திருப்பதைக் காணுதவனுய்ப் பாவனை செய்யவேண்டும்.

Page 43
82 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நடு மேசைக்கு நகர்ந்து கொண்டான். 'ஹிந்து இதழொன் றைப் புரட்டினன். விஜயலட்சுமி பண்டிட் இந்திராவுக்கு எதிராக பிரசாரம் செய்து கொண்டிருந்தார். வீரகேசரியின் அசைவுகளிலேயே கண் பதித்திருந்தான். எதிர்பாரமல் அவன் அருகிலேயே வந்து விழுந்தது அது. டபாரென்று ஹிந்துவை மூடி அதை எப்படி எடுப்பது அக்கறையாக ஹிந்து படிப்பதாக பாவனை பண்ணி, இயல்பாகவே அதை மூடி வைத்துவிட்டு வீரகேசரியை எடுக்கவேணும்.
பாவனை பண்ணி தயாராவதற்குள் அது மீண்டும் போய்விட்டது. அவனைப் போலவே எத்தனையோ பேர் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். சுவருக்குப் பக் கத்தில் இருந்த கதிரையில் வீரகேசரி காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்தது தலை நரைத்திருந்தது, கண்ணுடி போட்டிருந்தது; நிதானமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
எல்லாக் கண்களும் அதையே துளைப்பதாய்... எல்லோரும் பொருமை பொங்க அதையேபார்ப்பதாய். எல்லோரும் மனதில் கறுவிக் கொள்வதாய் எல்லோரும் ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணுல் வெறிப்பதாய்.
‘நானும் அப்படித்தானே."
நாலே முக்கால் ஆகிவிட்டது. பூரீவந்திருக்கக் கூடும்; அறைக்குப் போய் ஒரு சிறு குளிப்புப் போட்டுவிட்டு படம் பார்க்கவேணும். கடவுளேயென்று அதற்குள் மழை வந்திடக் கூடாது! سمبر--
மனங் கேளாமல் மீண்டும் தினசரிக் காய் சுற்றும் முற்றும் பார்த்தான். மின்விசிறியின் "விர் சத்தம் கர்ண கடுரமாய் ஒலிக்கும் மெளனத்தில், எல்லோரும் மூர்க்க மாய் இயங்குவதாய் . ஒருவரோடொருவர் மோதிக்

குப்பிழான் ஐ. சண்முகன் ! 83
கொள்ளத் தயார் ஆவதாய் ... ; யாரை ஆக்கிரமிக்க லாம் என்று குறிபார்ப்பதாய்.
'நான் யாரையாதல் ஆக்கிரமித்திருக்கிறேனு? நானும் எனது இலக்குகளும் தான் பலராலும் ஆக்கிரமிக்கப் பட்டிருப்பது போல.
ஆற்றமையுடன் கிளம்பினுன், ஒரு வேகம் வந்து பிடரியைப் பிடித்து உந்தித் தள்ளுவது போலப்பட்டது நாலு ஐம்பது; நாலு ஐம்பத்தைந்து; எங்கேனும் ஒன் றய்ப் பொட்டாக விழும் மழைத்துளி; நாலு ஐம்பத் தேழு; பூரீயின் அறையிருக்கும் ஒழுங்கைக்கான முடக்கின் திரும்பல்; வீதியின் கரையில் இருக்கும் குடும்பம்; குழி விழுந்த கண்களை உடைய அவன்; அவனுேடு முரண்டு பிடித்து அழும் மூன்று வயதுக் குழந்தை வீதியில் படுத் திருந்து கைக் குழந்தைக்கு பால் கொடுக்கும் அவள்; அவளின் கறுத்த பெரியதனம்; நாலு ஐம்பத்தெட்டு: வெளிக் கதவில் தட்டல் ஐந்துமணி.
கிழவியின் சினேகிதியே கதவைத் திறந்தாள்; 'ஆள் இன்னும் வரவில்லையே! என்னசெய்யப் போகிறீர்கள்"
கறுத்தத் திறப்பை ஆவலோடு பார்த்தான். 'திறப் பைக் கொடுத்திட்டு போறேனென்று தானே எழுதின. 6. Ji'
"அவர் சொல்லிப் போட்டுத்தான் போனவர். நீங்க தான் வெளியாலை போகப் போறேனெண்டதாலை நான் சொல்லேலை. உந்தத் திறப்பை எடுத்துத் திறவுங்கோ'
'உதுவும் திறக்குமே?” என்று தெரியாதவனுகக் கேட்டான்.
'சிலவேளை திறவாது” கதவு உடனேயே திறந்து கொண்டது. உள்ளே நின்று அடித்துச் சாத்தினன். ஜன்னல்களை ஒலியெழும்பத்

Page 44
84 ! சாதாரணங்களும் அசாதாரணங்களும்
திறந்து விட்டான். உடைகளைக் களைந்தெறிந்தான். கோடு போட்ட சிவத்தச் சாறத்தைக் கட்டிக் கொண்டு, உடம்பைத் துவாயால் மூடிக்கொண்டு, படாரென்று கதவைத் திறந்து, அருகருகே நின்ற இரண்டு கிழவிகளை யும் உர்ரென்ற முகத்துடன் பார்த்துக் கொண்டு பாத் ரூமுக்கு விரைந்தான்.
தலையில் வார்த்த நீரின் குளிர்ச்சியில் மனத்திலும் ஒரு இதம் தொத்திக் கொண்டதுபோல ஒரு உணர்ச்சி. இரண்டு கிழவிகளும் பாவம் என்று நினைத்தான். இரண்டு கிழவிகளும் பாவமென்று மீண்டும் மீண்டும் நினைத்தான். பாத்ரூமிலிருந்து திரும்புகையில் சகஜபாவத்தில் முகத்தில் புன்முறுவல் காட்ட முயன்றன்.
நேரம் ஐந்தேகாலாகி விட்டது. ‘ஐந்தரை மணிக் காதல் பஸ் ஏறினல்தான் ஆறு மணிக்கு முந்தித் தியேட் டருக்குப் போகலாம்"
கிழவிகளுக்குத் தாங்ஸ் சொல்லி வெளிக் கிளம் பினன். நாய்கள் மூலையில் ஒன்றகப் படுத்திருந்தன. அடுக்குச் செம்பரத்தைப் பூக்களை யாரோ பறித்து நிலத் தில் போட்டிருந்தார்கள், மழைக்கோலம் வலுத்திருந்தது. *மழை வர முந்தியே தியேட்டரடிக்குப் போயிடவேணும்?
பஸ்ஸில் சனம் அதிகம் இல்லை. அலையும் கண்கள் தரிக்கக் கூடியதான வண்ணங்கள் எதுவுமில்லை. இயந் திரமாக ஓடிக் கொண்டிருக்கும் பஸ்ஸிலிருந்து கொள்ளுப் பிட்டித் தரிப்பில் இறங்கி நடக்கத் தொடங்கினன். மழை கட்டாயமாக வரும். படம் முடிந்து திரும்பும்போது மழை பெய்தாலும் பரவாயில்லை. ஏதாவது கட்டிடத்தில் ஒதுங்கியிருந்து தாரை தாரையாக வழியும் மழைத் தண் ணிரை மஞ்சல் வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டிருக் கலாம்.

குப்பிழான் ஐ. சண்முகன் / 85
தியேட்டரடியிலும் சனக்கூட்டமில்லை. நிலைமை அசாதாரணமானது போலப் பட்டது. 'மழை வரும் போலிருந்ததால் சனங்கள் வராதிருந்திருக்கலாம். ஒரே யொரு கவுண்டரில் மட்டும் "கியூ வாலாய் நெளிந்திருந் தது. அந்த வாலில் இவனும் தொத்தினன். இவனுக்குப் பின்னுலும் இரண்டு மூன்று பேராய்.
அது எந்தக் கிளாசுக்குரிய கியூவென்றே இவனுக்குத் தெரியவில்லை. தனக்கு முன்னுல் நிற்பவர்களைக் கேட் கலாமென்று எண்ணினன். அதற்கான சிங்கள வார்த் தைகளை மனத்தில் கோர்த்துக் கட்டினன். கியூவின் முன் வரிசையில் சலனம். "டிக்கற் முடிந்து விட்டதான செய்தி காதில் விழுந்தது. நிராசையுடன் திரும்பினன். "இனி என்ன செய்வது? இன்றைய நாளே இப்படி அலைக்கழிப் பாய்.இனி என்ன செய்வது?
கால்கள் கோல்பேஸ் நோக்கி நடந்தன.
பிரக்ஞை அற்றவனைப்போல, பிரக்ஞை உள்ள வணுகவே நடந்தான். எதிர்ப்பட்ட மைதானத்தில் வர்ண விளக்குகளால் காணி வெல்லின் கோலாகலம். இங்கு நின்றல் வர்ணங்களைப் பார்க்கலாம்தான்; எத்தனை வர் ணங்கள்? சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா, சிவப் பில் கோடாய் மஞ்சளில் புள்ளியாய், பச்சையில் கோல மாய் வண்ணங்கள்; கண்சிமிட்டும் வண்ணங்கள் புன் னகை பூக்கும் வண்ணங்கள்; ஒயிலாய் நடக்கும் வண் ணங்கள்; தங்கச் சங்கிலியைத் தூக்கிப் பல்லால் கடிக்கும் வண்ணங்கள்; சங்குமாலை போட்டிருக்கும் வண்ணங்கள் கனவில் ஆழ்ந்து கவிதையாக்கும் வண்ணங்கள்.ஆனல் எங்கே நிற்கிறது.
அலரி மாளிகை வாசலில் துப்பாக்கியுடன் நிற்கும் போலீஸ்காரர்கள்; தனித்து நடக்கும் இவனையே கவனிப்
FIT-6

Page 45
86 ! சாதாரணங்களும் அசாதாரணங்களும்
பதாய்; உற்றுப் பார்ப்பதாய் தங்களுக்குள் குசுகுசுப் பதாய். இயல்பாய் நடக்க முடியவில்லை. இடதுகை ஆட வலது கையை ஆட்டி நடக்க முடியவில்லை.
பெரிய ஒப்ருேய் ஹொட்டலின் தண்ணிர்த் தடாகம். புதிதாய் வளரும் மரங்கள். படபடவென்று விழத் தொடங்கும் பெரிய மழைத் துளிகள். ஒடத் தொடங் கினுன், நேராகவே ஒடினன். யாரோவொரு சாறக் காறனும் ஓடிவந்தான். எதிரே வந்த ஒரு கட்டிடத் தாவாரத்தில் நுழைந்து மீண்டும் மிதந்து பெருநடை போட்டான். தெற்கு நோக்கிப் போகும் பஸ்கள் தரிக்கும் ஹோல்பேஸ் பஸ் ஹோல்ற் கூடாரத்தில் நுழைந்து தயங் கினுன்.
மழை ஓசையெழப் பலத்து விட்டது. கூடாரத்தில் கும்பல் கூடிவிட்டது. காதல் சார்ந்த ஒரு ஆங்கிலப் பாடலின் கோரஸ் குரலுடன், ஒரு வாலிபப் பட்டாளம் கூடாரத்தில் பிரவேசித்தது. தலைவனுகத் தெரிந்த கறுத்தத் தடியன் தன் தொப்பியை நீட்டி சில்லறைகள் வாங்கத் தொடங்கினன். தயங்கியவர்களிடம் உறு மலுடன் தொப்பி அசைந்து அசைந்து இவன் முன்னல் på GooT L-g). 96J6öT B&U S960) Fg5 T6ðT. “what about you” உறுமலுடன் மீண்டும் நீண்டது. இவனைப் பயம் பற்றிக் கொண்டது; அவர்களுக்கு கும்பலாக வந்த தலை வளர்த்த கறுத்தத்தடியர்களுக்கு இது ஒரு கெளரவப்பிரச்சினை ஆகி றது போலவும் இவனுக்குப் பட்டது. இவனும் விட்டுக் கொடுக்காமல் (பயத்துடன் தான்) மீண்டும் தலை அசைத் தான.
'Are you a thomian' ஆமெனத் தலையசைத்தான். றேயல் கல்லூரியை
வாழ்த்தும் சுலோகங்களுடன் கும்பல் அப்பால் நகர்ந்தது. காற்றின் வீச்சில் மழைச் சாரல் உள்ளே தெறித்தது.

குப்பிழான் ஐ. சண்முகன் / 87
மேலும் உள் நுழைந்து நின்று கொண்டான். முகங்களை வெறிக்கத் தொடங்கினன். ஆணும் பெண்ணுமான இளம் சோடி ஒன்று; அவன் அவளிடம் சொன்னன். "இந்த "மச்சிலை சென்தோமஸ் இனிங்ஸாலை வெல்லும்"
மழையில் நனைந்தபடியே ஒடும் வாகனங்களைப் பார்த்துக் கொண்டு நின்றன். மழை நீர் வழியும் தார் வீதியில்-ஒளியைப் பரப்பிக் கொண்டு அப்படியே வழுக் கிக் கொண்டு அவை பறக்கும். முதலில் மஞ்சள் ஒளி யாய்த் தூரத்தில் தெரியத் தொடங்கி பெரிதாகிப் பெரிதாகி பரந்து-அண்மி, அவனைக் கடந்து விரைகையில் பின்னல் சிவந்த ஒளிப் பொட்டாய் நீரில் பிரதி பலித்துக் கொண்டே மறையும். v. . . .
கனவுலகம் போன்ற மயக்கில் வீதி விளக்குகளின் ஒளிப் பிரவாகம்; காலி வீதி நீட்டிற்கு ஒரே வரிசையாய் மின்னும் மஞ்சள் ஒளிப் பொட்டுகள். கண் எதிரில் விதி யில் திட்டு திட்டாய்த் தேங்கி நிற்கும் நீரில் மஞ்சளாய் சலனப்படும் ஒளிப் பிம்பங்கள்-நிலாத் துண்டுகள் போல; நினைவிருக்கிறதா? ஹரிசீனிவாசனின் 'நிலாத் துண்டுகள்
மனதில் மேலோங்கும் சலிப்பு: நினைத்ததொன்றும் நிறைவேருத சலிப்பு: இன்றைய நாள் இப்படியே அநியா யமாகி விட்டதே என்ற சலிப்பு: பகலில் பயணம் செய்து இ2ளப்பாருத அசதி நேரத்திய சலிப்பு: மெலிதாய் உடம் பில் கொதிக்கும் நோய்பற்றிய சலிப்பு.
ஏன் சலிக்க வேணும்? ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒவ் வொரு அர்த்தம் இருக்கும் தானே! அர்த்தமின்றி ஏதும் நிகழ முடியுமா? அர்த்தம் தெரியாமல் நிகழ்வதெல்லாம் அர்த்தமின்றி நிகழ்ந்ததாகி விடுமா? வீதியில் திட்டுத் திட்டாய் தேங்கி நிற்கும் நீரில் மஞ்சளாய் சலனப்படும் ஒளிப் பிம்பங்கள்-நிலாத் துண்டுகள் போல

Page 46
88 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
"என்னையே நான் ஏமாற்ற முடியாது. தோல்விகள் தோல்விகள் தான்; கையாலாகாத்தனங்கள் கையாலா காத்தனங்கள்தான்"
‘எப்படியும் இண்டைக்குப் படம் பார்த்தே ஆக வேண்டும். அறைக்குப் போய் பூரீயையும் கூட்டிக் கொண்டு வந்து "செக்கண்ட் ஷோ படம் பார்க்க வேணும்"
பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் கால்கள் தோய வும் பஸ் பீலியிலிருந்து வடியும் துளிகள் உடலெங்கும் தெறிக்கவும் ஒடும் பஸ்ஸில் ஏறிக் கொண்டான். பஸ் ஸால் இறங்குவதும், சாப்பிடுவதும், நடப்பதுவும் அரை மயக்க நிகழ்ச்சிகளாக அறைக்கு மீண்டவன் அப்போதும் பூரீ திரும்பியிருக்காததைக் கண்டான். ノ
கிழவிகளின் பம்பலும் நாய்களின்பம்ப்லும் இல்லாத மழைத் தூறலின் இலேசான இரைச்சலில் மனதில் கலியும் ஒரு சோர்வில் படுக்கையில் படுத்தவன், அப்படியே உறங்கிப் போனன்.
(1978)
O

சிறை
அவரை இன்று காணவில்லை. அவர் என்றுதான் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. வேறுவிதமாகச் சொல்ல என்னுல் முடியவில்லை. வேறு எப்படிச் சொல்வதாம்? 'அவன்" இல்லாவிட்டால் அவர்தானே! ஒரு சாதாரண இளம் வாலிபன். அந்த எளிமையையும் குறுகுறுக்கும் கண்களையும் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவுமில்லை. கொஞ்ச கூச்ச ஸ்பாவமும் கூட.
அவர் வருகின்ற நேரம்கடந்துவிட்டது. இனி அவரை எதிர்பார்க்க முடியாதுதான் என்றலும் மனதில் ஒரு அங் கலாய்ப்பு. கைகளை விசுக்கிக் கொண்டு அந்த அலை பாயும் கண்களுடன் அவர் திடீரெனத் தோன்ற மாட் டாரோ வென்று.
என்றுமில்லாதபடி நான் போகவேண்டிய பஸ்கள் இன்று அடுக்கடுக்காக வருகின்றன. ஒன்றுக்குப் பின்னல் ஒன்ருக. எரிச்சலாக இருக்கிறது. எத்தனை நாட்கள், எவ் வளவு நேரமாக இந்த பஸ்ஸ0க்குத் தவிப்புடன் காத்

Page 47
90 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
திருக்கிறேன். இன்றும் காத்திருக்கிறேன். தவிப்புடன் தான் காத்திருக்கிறேன். ஆனல் அவர் வரமாட்டார்.
"ஏன் ரதினி எல்லாவற்றையும் விட்டுக் கொண் டிருக்கிருய்?" தோழி காதில் கிசுகிசுத்தாள்.
"உந்த நெரிசல்களுக்கே எப்பிடியடி ஏறிகிறது?” என்று சமாளிக்கிறேன்.
தோழி புன்னகைக்கிருள். எல்லாம் தெரியுமென்ற பாவத்தில். அவளுக்கும் சாடை மாடையாகத் தெரியு மென்று எனக்குத் தெரியும். ஆனல் எனக்கு எதுவுமே தெரியாதென்ற பாவத்தில் நான் அபிநயிக்கின்றேன்.
பஸ் நிலையத்திலும் சனங்கள் கூடிவிட்டார்கள். பல விதமான மனிதர்கள்-விதம் விதமான ஆடையணிகள்விதம் விதமான உணர்ச்சி பாவங்கள்--இரண்டு மூன்று மொழிகள். மாலை நேரத்துக் கலகலப்பு வீதியை ஆக் கிரமிக்கத் தொடங்கிவிட்டது. வாகனங்கள் உறுமத் தொடங்கிவிட்டன. சோடிசோடியாக கும்பல் கும்பல் களாக அபூர்வமான தனிமனிதர்களாக-எங்கும் விரைவாய், எதிலும் பதட்டமாய், ஒரே அவசரமாய்.
மாலை நேரத்து மஞ்சள் வெய்யில் கண்களை கூச வைக்கிறது. எங்கும் ஒரு சோகச் சாயை படர்ந்திருப் பது போல. கண்க்ளைத் திருப்புகிறேன். வடக்கே சனங் களுக்கு மத்தியில் ஊடுருவுகின்றேன்; தெற்கே ஊடுருவு கிக்றேன்; பெருமூச்சு விடுகின்றேன். ஏதோ தவிப்புடன் கூடிய சோர்வு நெஞ்சை அமுக்குவது போல.
அவரை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் பிரயோசன மில்லை. அவர் வரமாட்டார். நான் அன்று அப்படி நடந்துகொண்டதன் பின்னும் எப்படி அவர் வருவாரென எதிர்பார்க்க முடியும்?.
டஸ்ஸில் நெரிந்து, குமைந்து பிதுங்கும் கூட்டம். எனக்குப் பின்னல் அவர். கண்டும் காணுதவளாகக்

குப்பிழான் ஐ. சண்முகன் / 9i
கடைக்கண்ணுல் அவரை அளவிடுகின்றேன். ஒரு கம் பீரமான ஆண்மை; அரும்பு மீசை, காதுக்கு அருகில் சிலும்பி நிற்கும் கன்னத்து மயிர், எங்கோ ஆழத்தில் கனவு காண்கின்ற, வசிகரிக்கின்ற புன்னகை பூக்கும் கண்கள்.
புன்னகை பூக்கும் கண்கள். 'நீங்கள் இதிலை இருக்கலாந்தானே!" எனது பார்வைத் தவம் கலைகிறது. குரலும் எடுப்பா கத்தான் இருக்கிறது. நான் அந்தக் காலியான இடத் தில் இருந்துகொள்கிறேன். ஏதோ இனம் புரியாத இன் பம் மனதில் சுரந்த மாதிரி இருக்கின்றது. அந்த இனிய பாடலை முணுமுணுக்கவேண்டும் போலிருக்கிறது. கண் களை மூடிக் கொண்டு எதையும் நினையாமலே, அப்படியே லயிக்க வேண்டும் போலிருக்கிறது.
எனது அந்த லயம் கலைய, பக்கத்தில் இருந்தவர் எழும்புகின்றர், ஒரு கணநேரத் தயக்கத்தில் அவர் என் னருகில் அமர்கின்றர். என் மனம் டக் டக்கென்று அடித் துக் கொள்கிறது. ஏதோ இனம்புரியாத பீதி என்னைக் கவ்விக்கொள்கிறது. எனது அம்மாவின் - ஐயாவின்அண்ணுவின் முகங்கள் மனதில் பளிச்சிடுகின்றன. வலது கையின் சுட்டுவிரலை வாயில் வைத்து கடித்துக் கொள் கின்றேன்.
அவர் பார்வை என்பக்கம் திரும்பிற்று. சற்று நிதா னிப்பது போல என்னைப் பார்த்தார்.
“உங்கள் பெயர் ரதினி தானே?"
"ஏன்' என்றேன் நான். அப்படிக் கேட்கத்தான் என் ஞ்ல்ை முடிந்தது.
‘என்னை உங்களுக்கு ஞாபகமிருக்கின்றதா?’ என்றர் அவர்.

Page 48
92 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
'இல்லையே' என்று தலையசைத்தேன்.
ஏன் அப்படிச் செய்தேனென்று எனக்குத் தெரியாது. நாலு வருடங்களுக்கு முன்னர் எனது பதினுலாவது வய தில் ஒரு றெயில் பயணத்தில் அவரைச் சந்தித்ததை என்னுல் மறக்கமுடியாது. வாலிபத்தின் தொடக்கத்தில் அவரின் முகம் கனவில் மிதப்பதாய் வேதனை தந்த அந்த நாட்களை என்னுல் ஒருபோதும் மறக்கவே முடி யாது.
அன்று நான் ஏன் அப்படி நடந்துகொண்டேனென்று இப்போது நினைக்கும் போது எனக்கு ஆச்சரியமாகத் தானிருக்கிறது. அப்படி நடந்து கொண்டதற்கு ஏதோ காரணங்கள் இருப்பதுபோலவும் எனக்குப் படுகின்றது. என்னைப் பற்றிய எனது பெற்றேரின் நல்லபிப்பிராயங் களையும், எதிர்பார்ப்புகளையும் பெய்யாக்காமல் இருப் பதற்காக நான் அப்படி நடந்து கொண்டிருக்கலாம். நான் ஒரு டாக்டராகி, எனது பெற்றேரின் துன்பங்களை யும் கவலைகளையும் போக்கி அவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்த்தைத் தேடிக் கொடுக்கவேண்டுமென்ற எனது கனவுகள் கலையாமல் இருப்பதற்காக நான் அப்படி நடந்து கொண்டிருக்கலாம். அல்லது அவரைப்போலவே அவர் பாணியில் கதைக்க முயன்று அவர் மனதைத் நான் புண்படுத்தியிருக்கலாம்.
"என்னடி கனக்க யோசிக்கிருய்? இந்த பஸ்ஸில் சனமில்லை. ஏறடி" என்று என்னைப் பிடித்துத் தள்ளி விடு கிருள் தோழி. ஏறிக் கொள்கிறேன். "சீ யு என்று கை யசைக்கிருள் அவள். எனது கையையும் தூக்கி அசைத் துக் கொள்கிறேன்.
இன்றைக்கு ஒரே சோர்வாக இருக்கிறது; தவிப்பாக இருக்கிறது; மூலையிலிருந்து அழ வேண்டும் போலிருக் கிறது. எவர்மேலும் ஆத்திரம் ஆத்திரமாக வருகின்றது. "இன்றைக்கு ஏனப்பா சிடுசிடுக்கிறீர்?" என்று இரஞ்சனி

குப்பிழான் ஐ. சண்முகன் / 93
கூட வகுப்பில் கேட்டாள். நான் என்ன செய்ய. என்னுல் என்னையே நிதானிக்க முடியவில்லை.
வெறுமையாய் இருந்த சீற்றில் அமர்கிறேன்.
கொஞ்சநேரம் அவர் ஒன்றும் பேசாமல் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பவர் போல் இருந்தார். பிறகு என்னை முழுமையாகத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சொன்னுர்,
“என்னைப் பற்றி ஞாபகம் உங்களிடம் இல்லாவிட் டாலும் உங்களைப்பற்றிய ஞாபகம் என் மனதில் பசுமை யாக இருக்கிறது. "மனம்" என்ற பத்திரிகையில் ‘தென்றல்' என்ற பெயரில் நீங்கள் எழுதிய கவிதையைக்கூட நான் வாசித்திருக்கிறேன்."
ஒரு கவிதையின் அழகுடன் மிக்க நளினத்துடன் அவர் இதைச் சொன்னபோதும் நான் 'எனக்கு ஞாபக மில்லை” என்றே சொன்னேன்.
*உங்கள் கவிதையைப் பற்றித்தான் சொல்கிறேன் ” என்றர் அவர்.
'அதைத்தான் நானும் சொல்கிறேன்” என்றேன் நான்.
"அப்படியா,’ என்றவரின் முகம் கறுத்து இருண்டது. அந்த முகத்தில் பொங்கி நின்ற சோபையின் ஒளி மங்கு வது எனக்குத் தெரிந்தது. அப்படியெல்லாவற்றையும் மறந்து, என்னை முழுமையாக அவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று என் மனம் தவித்தாலும் என்னுல் அப்படிச் செய்ய முடியவில்லை.
இப்போதும்கூட, அவர் என் முன்னல் எதிர்ப் பட்டால் நான் அப்படிச் செய்வேன் என்று திடமாகச் சொல்லமுடியாதென்றே நினைக்கின்றேன்.

Page 49
94 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
அவரைக் காண வேண்டுமென்று எனக்குத் தவிப் பாகத்தான் இருக்கிறது. அவருடன் வாழ வேண்டு மென்று, அந்த மார்பில் முகம் புதைத்து அழ வேண்டு மென்று - கையுடன் கைகோர்த்து இணையாகத் திரிய வேண்டுமென்று - அவர் தலையை வருடி ஆறுதல் சொல்ல வேண்டுமென்று. என்றலும்.என்றலும், என்னல் அப்படிச் செய்ய முடியாது. கூண்டுப்பறவைபோல, ஏதோ, தளைகளினுல் காலம் காலமாகப் பிணைக்கப்பட்ட வள் போல. . . . .
பிறகு அவர் ஒன்றுமே பேசவில்லை. ஏதோவொரு தரிப்பில் "இவ்வளவும் கதைத்ததற்கு நன்றி” என்றி சொல் லிவிட்டு இறங்கிவிட்டார்.
என்னுள் ஏதோ மகத்தானதொன்று கிளர்ந்து அமுக் கியது போலிருந்தது. அன்றேடு எனது கலகலப்பும் சிரிப் பும் என்னிடமிருந்து விடைபெற்றுக் கொண்டன. நான் என்னுள் அழுது எனக்குள் தவிக்கிறேன்.
இண்டைக்கு பஸ் வலு கெதியாய் வந்துவிட்டது போல.
நான் இறங்கி நடக்கிறேன். அப்போதுதான் இருண் டதென்றலும் தெருவில் சனநடமாட்டம் இல்லை. வீதி விளக்குகள் அழுது வழிகின்றன. அம்மா என்னை எதிர் பார்த்துப் படலையில் காத்திருக்கிருள். அப்பா “ஓவர் டைம்' செய்து விட்டு இன்னும் வந்திருக்கமாட்டார். அண்ணு வழக்கம் போலவே, வேலையில்லையே என்ற கவலையில் மெகட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறன் .
'நான் டாக்டராகத்தான் வேண்டும்" என்று நினைக் கிறேன்.
(1976)
OOO

உடைவுகள்
இந்த முறையும் பொருந்துவது போல வந்து பொருந் தாமல் அது நழுவிவிட்டது. அவன் மீண்டும் பழைய படிமுயலத் தொடங்கினன். பழைய துணியைக் கிழித்து, இயந்திரத்தில் நீர் வரும் குழாயைப் பொருத்து மிடத்தில் சுற்றிவிட்டு, மிக மிக மெதுவாக மீண்டும் குழாயை இயந்திரத்தோடு பொருத்தத் தொடங்கினன். பொருந்து வதுபோல் அது இறுகி வந்தது. அசட்டுத் துணிச்சலில் அசைத்துப் பார்த்தான். இறுகியதாகவே பட்டது. மேலும் இறக்குவதற்கான சாவியை உபயோகித்து நெம்புகையில், படாரென்ற சத்தத்துடன் அது மீண்டும் கழன்று விட்டது.
நிதான மிழந்தவனுகக் கையிலிருந்த சாவியை ஓங்கி அந்தப் பொருத்து வாயில் ஓர் அடிவிட்டான். இவனை நிமிர்ந்து பயத்தோடு பார்த்தான். அடிபட்ட இடத்தில் நெளிவு ஏதாவது தென்படுகின்றதா என்பதாகத் தடவிப் பார்த்தான். இரக்கத்திற்குரியவஞ்க்த் தன்னைச் சிலிர்த்து, மீண்டும் பழைய துணியைச் சுற்றிப் பொருத்தத் தொடங்

Page 50
w
96 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
கின்ை. பொருந்து வாயையும்.பொருத்து வாயையும் மெதுவாக.மெதுவாக...இணைக்க வாயோடு வாய் சேர்க் கையில், மெதுவே எட்டிப் பார்ப்பதுபோல் வெளிப்பட்ட கறுத்த வாசர் வெளியே விழுந்து உருண்டது. அதைப் பற்றிப் பிடித்து உள்ளே வைத்துப் பொருத்திச் சுழற்று கையில் அது இறுகுவதாகவே வந்து, தொடர்ந்த நெம் பலில் படாரெனச் சுழன்று கையை மீறி, இயந்திரத்தின் ஸ்ராண்டில் அடித்து உறுமியது.
"என்னுல் ஏலா தென்பதாகக் கையை உதறி நிமிர்ந்த இவனைப் பார்த்தான்.
கோபப் பார்வை;
வெறுப்பைக் கக்கும் பார்வை;
சலித்த பார்வை;
இரக்கத்தை வேண்டி நிற்கும் பார்வை;
'நான் படும் கஷ்டமெல்லாம் உனக்குப் புரிகிறதா' என்ற கேள்விப் பார்வை.
"நீ குளிக்கிற தெண்டால் வாளியாலை அள்ளிக் குளி,
என்னுலை இந்தச் சனியனை ஸ்ராட் பண்ண ஏலாது”
இவன் ஒன்றும் பேசவில்லை. மெளனமாகவே
பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இவனைப் பார்த்து விட்டு அந்தக் கண்களில் பாசம் மின்னுவது போல
'மீசை முளைக்காத பதினெட்டு வயது;
கருத்து உருண்டு வளர்ந்துஇளமை காணத் துடிக்கும் உடற்கட்டு;
உதட்டில் கறுப்பு-இரகசியமாகச் சிகரெட் பிடிப் பதாலா?

குப்பிழான் ஐ. சண்முகன் / 97
மின்னல் காட்டும் ஒரு முரட்டு வசீகரத்தில். அலையும் தலைமயிர்க் கற்றைகள்
...மீண்டும் முயலத் தொடங்கினன். வேகம் குறைந்த, எல்லைப்படுத்தப்பட்ட ஒரு நிதானத்தில், வாயோடு வாய் பொருத்தி, வெளியே எட்டிப்பார்க்கும் 'வாசரை உள்தள்ளி மெதுவாக மெதுவாகச் சுழற்ற இறுகுவது போலவே வந்து, வழுக்குவது போலத் திடுக் கிட வைத்து, நிஜமாகவே இறுகி விட்டது. சாவியால் மெதுவே மெதுவே நெம்பி மேலும் இறுக்கியாகி விட்டது.
மகிழ்ச்சிப் புளகாங்கிதத்தில் இவனை நிமிர்ந்து பார்த் துப் புன்னகைத்தான். இவனிலும் மகிழ்ச்சியை எதிர் பார்த்தவன் சலனமற்ற இவன் நிலையைக் கண்டு வியப் படைந்தவனுய்ப் பார்த்தான். 'நீ பாவந்தான் அண்ணு, அண்ணி வீட்டுப் பொதுக் கிணற்றில் சனி முழுக்குச் சண்டையிலிருந்து தப்பிக்கத்தானே இங்கு ஓடி வரு கின்றயப்'
'மிசினுக்குத் தண்ணிவிட ஒருக்கால் பிடியுங்கோ அண்ணை"
"நான் வெள்ளைக் கொலர்ச் சட்டை வேலைக்காரன், காலமை எழும்பி மத்தியானச் சாப்பாட்டுப் பொதியோடு பஸ்ஸில் போவேன்: ஒவ்வீசிலை கதிரையில் இருந்து வேலை செய்யேக்கை விர் விர்ரென்று மேலே Fan? சுத்தும்; ஆட்கள் வருவினம்; போவினம்; சிரிச்சுச் சந் தோஷமாய்ப் பொழுது கழியும் - சந்தோஷமாய்ப் பொழுது கழியும் சிரிச்சுச் சிரிச்சு .ம்..”
இவன் கைபிடிக்கவே கொளக்குக் கொளக் கென்று, இயந்திரத்திலும், நீர் இழுக்கும் குழாயிலும் தண்ணிர் நிரம் பிற்று. ஏதேதோ தட்டி.ஏதேதோ ஊற்றி, டுக்.டுக் கென்று. ஒருக்கால் விக்கி, ஒரே சுருதியில் இயந்திரம் "ஸ்ராட் ஆகிற்று.

Page 51
98 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
அந்தச் சூழலிலேயே மகிழ்ச்சி களை கட்டிற்று. அடுத்த வீட்டுக் குழந்தை ராதா அள்ளிக் குளிப்பதற் கான சருவச் சட்டியுடன் நிர்வாணமாக ஓடி வந்தாள். குழந்தையின் கண்களில் எட்டி எட்டிப் பார்த்துப் பு மை காணும் ஆவல். சோதி ஏதோ பாடலை முணுமுணுத்த வாறு மாற்றுத் துணியைத் தோளில் போட்டுக் கொண்டு வந்தான். கீதா பாடசாலை 'யூனிபோமை" சலவை செய்ய ஆயத்தமானுள், வதனி முழுகுவதற்காகத் தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டாள்.
ஆசுவாசத்துடன் நிமிர்ந்து பார்த்த அவன் மீண்டும் இயந்திரத்தைக் கூட்டினன்; குறைத்தான்; நீரிழுக்கும் குழாயைப் பிடித்து மெதுவே குலுக்கினன்; ஏற்றமும், இறக்கமுமான சுருதியில் இயந்திரம் சத்தமிட்டுக் கொண் டிருந்தது. தாரையாய்ப் பீச்சும் நீரைக் காணுேம். குழந் தையின் மூத்திரம் போல முதலில் வந்து பிறகு அதுவும் நின்று விட்டது.
இயந்திரத்தினுள் தண்ணிர் அள்ளி ஊற்றி, அதைக் கூட்டிக் குறைத்து பொருந்து வாயை மெதுவே குலுக்கி குலுக்கி, அவன் பம்பரமாக இயங்கினன்.
தாரையாய்ப் பீச்சும் நீரைக் காணுேம்.
அவன் சோர்ந்து போனன்.
எல்லோரையும் பரிதாபமாகப் பார்த்தான்.
"இதோடை மாரடிக்கேலாது; உங்கடை உங்கடை அலுவலைப் பாருங்கோ'

குப்பிழான் ஐ. சண்முகன் / 99
இயந்திரத்தின் சுருதியே பெரியதாய் ஒலிக்கும் மெளனத்தில் மனங்கேளாதவனுக மீண்டும் ஒவ்வொன் ருகப் பார்த்துக் கொண்டே வந்தான்.
பொருத்து வாயும், பொருந்து வாயும் இணையும் இணைப்பின் அருகில் சொட்டுச் சொட்டாக நீர் கசிந்து கொண்டிருந்தது.
(1977)
OOL )

Page 52
கனவு
காலையில் அலுவலகத்திற்கு வந்ததும் அந்தச் செய்தி கிடைத்தது. அவளின் தந்தை கடந்த இரவில் செத்துப் போனுராம். பரபரப்பு மேலோங்கவில்லை. எப்படி. 6 Tuulq-• • • • • • என்ற செய்தி அறியும் உணர்வே கிளர்ந்தது. துண்டு துண்டாக, அங்குமிங்குமாக, பொய்யும் மெய்யு மாக, ஒன்றுக்கொன்று முரணுன தகவல்கள் கிடைத்தன. அப்படிப் பிரமாதப்படுத்தப்பட வேண்டியதாகவோ, பெரிதாக அலட்டிக் கொள்ளத்தக்கதாகவோ ஏதுமில்லை. அவர் வயது போனவர்தானம்; இரண்டு மூன்று நாட் களாக சிறிய சுகவீனமாகப் படுத்திருந்தவர், திடீரென்று. எதிர்பாராமல். இப்படி.
அவள் என்னுடன் வேலை செய்யும் ஒரு சக ஊழியை கண்ட நேரங்களில் மெல்லிதாக இதழ் மலர கண்களினுல் ஒரு சிரிப்பு. சில வேளைகளில் சில வார்த்தைப் பரிமாறல் கள். அவ்வளவுதான். அவளைப் பற்றியோ அவள் குடும்பத்தினரைப் பற்றியோ, அவளின் ஆர்வங்களைப்

குப்பிழான் ஐ. சண்முகன் / 101
பற்றியோ, அவளின் மன அந்தரங்கங்கள் பற்றியோ வேறெதுவும் தெரியாது. என்னைப் பற்றியும் அவளுக்குத் தெரியாதென்றே நினைக்கிறேன். s
அவள் இனி என்ன செய்வாள்; பாவம். புத்திளமைப் பருவத்தின் அந்திமத்திலும் ஓர் அசையும் சிலை போல அழகாகத்தானே இருக்கிருள். கண்களில் ஈரம் பளிச் சிடச் சிரிக்கிருள். முகலாவண்யமும் வசீகரமும் கொண் டவள். பாவம்; ஆதரவான தந்தையை இழந்தபின் இனி என்ன செய்யப் போகிருள்.
மற்றைய நண்பர்கள் முன்னரே சென்றுவிட்டார்கள். நானும் வேறிருவரும் எதிர்பாராமல் அல்லது ஒருவித அசட்டைத்தனத்தில் பிந்திப்போனுேம். வஸ்சிற்காக ஒடி அதைத் தவற விட்டுக் காத்திருந்து வஸ் ஏறி, பின் அடுத்த வஸ்சிற்காகக் காத்திருந்து - சலித்து - பின் ஏறிச் செல்கையிலும் தவிப்பு: சரியான இடத்தைக் கண்டு பிடிப்போமா?
நகரத்தின் சனசந்தடி மறைந்து, சுற்றுநகர் கட்டிடங் களையும் தாண்டியாகி விட்டது. பெரிய பாலம் வந்து மறைந்தது. ஒரே சீரான பெரிய வெளி. நான்கைந்து நிமிடங்களுக்கொருமுறை கிளைபிரியும் கறுத்தத் தார் (?ாட்டுகள். லேசான சாய்வு வெயில் கண்களைக் கூச வைக்க வடலியடைப்புகள், பனம்புதர்கள். புளியமரச் சோலைகளைக் கடந்து அந்த முடக்கில் இறங்கினுேம், சரி யான இடத்தில்தான் இறங்கினுேமா? சுற்றுமுற்றும் Luftis துத் தயங்கித் திரும்புகையில், கொக்கிபோட்டு இழுத்த கேள்வியாய்.
'இலட்சுமி வீட்டைதானே போறியள்?"
அவளும் பருவ வயதினள்தான்; எங்கேயோ படிப் பித்துவிட்டு வரும் வாத்திச்சி போல சடக்கென மனத்தில்
Fir-7

Page 53
102 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
பட்டது. நாலைந்து புத்தகங்களும், கைப்பையும் நிமிர்ந்த நடையுமாய். உதடுகள் கறுத்துப்போய் கிடந்தன.
அவளின் வழிகாட்டலில் நடக்கையில் மேலும் பனம்புதர்கள்; பக்கத்து வயற் பரப்பில் மஞ்சளாய் பூத்து வாடும் சணற் செடிகள்; ஒரு ஆரம்பப் பாடசாலை; ஒரு சங்கக் கடை.
"இப்படித் திரும்பி நேராகப் போங்கோ"
டும், டும் என்பதாய் பறையொலி அதிர்ந்தது. படார், படாரென வெடிச்சத்தம் கேட்டது. நடந்தோம்; நடந் தோம்; நெருங்கி வரும் பறையொலியில் சைக்கிளை உருட் டிவரும் சில கிராமத்து மனிதர்கள்; என்ன செய்வதென்ற தயக்கத்தில், ஒழுங்கைக் கரையில் ஒதுங்குகையில் - வெள்ளைக் கடதாசிகளினுல் அலங்கரிக்கப்பட்டு தொ டர்ந்து வரும் பாடை மேலும் சில மனிதர்கள்; அதிசய மாய் பார்த்து நகர்கையிலும்-ஒரு கெளரவம்போல - ஒரு பெருமிதம் போல தலை நிமிரல் (எங்கள் இலட்சுமிக்கும் நாகரீகமானவர்கள் நண்பர்களாக இருக்கிறர்கள்)
ஒரு கையில் புகைகின்ற சுருட்டும், மறு கையில் அதி காரிகளின் கைப்பையுமாய், எங்கள் கந்தோரின் இடைத் தர அதிகாரியின் பின்னுல், எங்களை விட்டுவந்த எங்கள் சக ஊழியர்கள்.
'வந்தனிங்கள் பக்கத்திலைதான் வீடு; போட்டு வாங்கோ.'
"கவலை தோய்ந்த அவளின் முகததில் எப்படி விழிப்பது.
படலையால் திரும்பியதுமே அதற்காகக் காத்திருந்த வர்போல ஒரு கண்ணுடிக் கிழவர் வரவேற்றர். தூரத்தில் கண்ணிர் வடியும் முகமாய் இலட்சுமி - தயங்கித் தடுமாறு கையில் கைச்சுட்டலால் கதிரைகளைக் காட்டினுள்.

குப்பிழான் ஐ. சண்முகன் / 103
என்ரை அப்பு, என்ரை அப்பு என்று ஒரு பன்னி ரண்டு வயதுப் பையன் கத்திக் கொண்டிருந்தான். ஒரு வயதுபோன பெண் அவனை தேற்றச் சிரமப்பட்டாள். என்ரை அப்பு, என்ரை அப்பு என்று அவன் கேவிக் கொண்டேயிருந்தான். இலட்சுமியும் அவனைப் பிடித்துத் தேற்ற முற்பட்டாள். "குஞ்சியம்மா என்ரை அப்பு என்ரை அப்பு” என்று கேவிக்கொண்டே அவளின் அணைப்பில் அவன்; கண்களில் வடியும் கண்ணிரில் அவனும் அவளும் முகத்தோடு முகம் வைத்து மூன்னு லிருக்கையில்.
மனம் கனத்து கண்கள் கலங்குவதாய்.
பிரேதம் வைக்கப்பட்டிருந்த கட்டில் பக்கவாட்டில் சரிக்கப்பட்டு கால்களை நீட்டிக் கொண்டு கிடந்தது. மரணச் சடங்கில் சிந்துண்ட தானியங்களை நாலைந்து கோழிகள் கொத்தித் தின்றன. இரண்டொரு காக்கை களும் எட்டி எட்டிப் பறந்தன.
றேயில் மூன்று கிளாஸ்களில் சோடாவுடன் ஒரு பெண். 'குடியுங்கோ' என்ருள் இலட்சுமி, பையன் கேவிக்கொண்டே இருந்தான், இதென்ன என்பதாய் பார்த்து. ஒன்றுஞ் செய்யமுடியாமல். எடுத்துக் குடிக் கையில் மனத்தில் ஏதோ குற்ற உணர்வாய்.
அந்த அணைப்பில் அவன் கேவிக்கொண்டேயிருந் தான.
கட்டி முடிக்கப்படாமல் ஜன்னல்கள் இருக்க வேண்டிய இடம் மூளியாய், வீடு சின்னதாகத்தான் இருந்தது. முற்றத்தில் இரண்டு மூன்று பனை மரங்களைத் தவிர மரஞ்செடிகள் எதுவுமில்லை. இரண்டொருவர் அங்குமிங்கும் போய்க்கொண்டிருந்தனர். "எல்லோரும் என்னை விட்டிட்டுப் போறியளே' என்று அந்த வயது போன பெண் திடீரென அழுதாள்.

Page 54
104 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
தூரத்து ஒசையாய் பறையொலி கேட்டது.
அப்பு. என்பதாய் எழுந்தோம். இலட்சுமியும் எழுந்தாள். பையன் அப்பு அப்பு என்பதாய் கேவிக் கொண்டே இருந்தான்.
நாங்கள் நடக்கையில் தலையசைத்து அவள் விடை. தருகையில்.கண்ணிர் வடியும் அந்த முகத்திலும்-அப்பு அப்பு என்ற பையனின் கேவலூடு-அந்தப் பருவத் தின் வசீகரம் மின்னலாய் வெடிக்கையில், வாழ்வு காத் திருப்புகளும் கனவுகளுமாய் நீள்வதாய்.
(1979).
OOO

இருளிலிருந்தே ஒளி பிறக்கிறது
"சின்னப்பு கமக்காறன்ரை ஒரே பிள்ளை; சகோ தரங்களில்லாதவனென்டு தான் என்ன எல்லோரும் சொல்லுறவை. எனக்கும் தம்பியோ தங்கச்சியோ அண் ணையோ அக்காவோ இல்லாதது பெரிய மனவருத்தந் தான். எண்டாலும், எனக்கு ஒருவழியிலை சகோதரம் இருக்குதுதானே. அவள் மங்கையர்க்கரசி, என்னைச் சதா சிவத்தண்ணன் எண்டு கூப்பிடேக்கை எனக்கு எவ்வ ளவு சந்தோசமாய் இருக்கும் தெரியுமே. அவள் என்ரை உடன் பிறந்த சகோதரமாய் இல்லாட்டிலும், நான் அவளிலை உயிரையே வைச்சிருக்கிறேன். அவளும் அப் படித்தான் என்னிலை நல்ல பட்சம். பொயிலைக்கண்டுக் காலத்திலை, நான் தோட்டத்திலை இறைக்கேக்கை, ஆச்சி எனக்குச் சாப்பாடு அனுப்பப் பிந்தினுலும் அவள் விட மாட்டாள்; ‘அண்ணன் பாவம் வெய்யிலுக்கை காயுது” எண்டு சொல்லி, ஆச்சிக்கு கூடமாட ஒத்தாசையா யிருந்து, அவள்தான் எனக்குச் சாப்பாடு அனுப்பிவைப் பள். முந்தி அவள் இராமநாதன் கொலிச் சிலை படிக்

Page 55
108 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
கேக்கை, எனக்குப் பிடிக்குமெண்டு புதுப்புதுப்போசிலை எம். சீ. ஆறின் ரை படங்களும், நல்ல நல்ல பாட்டுப் புத்தகங்களும் வாங்கித் தாறவள்."
"அவளும் அவையின் ரை குடும்பத்திலை ஒரு பிள்ளே தான். அவளின்ரை அப்பாதான் எங்கடையூர்ப் பள்ளிக் குடத்திலை முதல் வாத்தியார். நாங்களெல்லாம் அவரை முதல் வாத்தியார் எண்டுதான் சொல்லிறது. எங்கட அப்பு, ஆச்சி போன்ற பெரியாக்கள் அவரைத் ‘தீருநீத் துச் சட்டம்பியார்' எண்டுதான் சொல்லுறவை. எந்த நேரமும் வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு நேஷனல் சேட்டு போட்டுக் கொண்டு பள்ளிக்குடத்துக்கு போகேக்கை வரேக்கை அவரை நான் றேட்டிலை காணு றனுன். அவற்றை நெத்தியிலை பட்டையாய் பூசிக்கிடக் கிற அந்த மூண்டுகுறித் திருநீத்தையும், நடுவிலை பென் னம் பெரிய வட்டமாய் வைச்சிருக்கிற சந்தணப் பொட் டையும், புடரியிலை அசைந்துக் கொண்டிருக்கிற அந்தச் சின்னக்குடுமியையும் காணேக்கை, எனக்குக் கையெடுத் துக் கும்பிடச் சொல்லிற மாதிரி ஒரு பத்தி இல்லை-ஒரு பயம் வரும். வழியிலை எங்கேயன் என்னைக் கண்டால், கண்களை அகல விரித்து. மெல்லிய சிரிப்பு சிரிச்சு ‘எப் படியடா சதாசிவம்’ எண்டு அவர் கேக்கேக்கை, எனக்கு உடம்பெல்லாம் குளிரிறமாதிரி இருக்கும். மயிர்க்கால்கள் எல்லாம் குத்திட்டு நிற்கும். அப்படிப் பட்ட அவருடைய செல்லப்பிள்ளைதான் மங்கையர்க்கரசி. அவரைப் பாக்கேக்கை ஏதோவொரு சந்தோஷமான பயமாய் இருக்க, அவளைப் பார்ககப் பார்க்க ஆசையாய் இருக்கும். சதாசிவத்தண்ணன், சதாசிவத்தண்ணன் எண்டு அவள் சொல்லிற கதைகளைக் கேட்கக் கேட்க பசிகூடவராது. அவள் எத்தினை எத்தினை கதை சொல்லு வாள். எம். சீ. ஆர். சிவாஜி நடிக்கிற படக் கதையஞம் சொல்லுவாள்."

குப்பிழான் ஐ. சண்முகன் / 107
"எங்கடை வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளித்தான் அவையின்ரை புதுக் கல்வீடு இருக்குது. அவள் அவை யின்ரை வீட்டிலும் பார்க்க எங்கடை வீட்டிலைதான் அதிக மாய் இருப்பாள். பள்ளிக்கூட விடுதலை நாட்களிலை அவள் நித்தமும் எங்கடை விட்டிலைதான் நிற்பள். ஆக நித்திரை செய்யத்தான் தங்கடை வீட்டுக்குப் போவள். எங்கடை வீட்டிலை ஆச்சிக்குச் சுகமில்லையெண்டால் அவள் தான் சமைப்பள்; மற்றவேலையளிலை ஆச்சிக்கு கூட மாட ஒத்தாசையாக இருப்பாள். பழையது, புதியது நல்லது நறியது எண்டு பாராமல், "உனக்குக் கூடாது மோளே; பழக்கமில்லை" எாண்டு ஆச்சி சொன்னுலும் கேளாமல் அடம் பிடிச்சுச் சாப்பிடுவள். எங்கடை 6չhւ டிலை ஏதேன் கொண்டாட்டமெண்டால் அவள் தான் நிண்டு, கல கலவென்று பேசி எல்லாத்தையும் நடத்து வள். எப்பனும் வெக்கமில்லாமல் எல்லாரோடையும் “பகிடிகள்’ விடுவள். எத்தினையோ பேர் 'திருநீத்து வாத்தி யாற்றை பெடிச்சி நல்ல பிள்ளை' எண்டு சொன்னதை நான் கேட்டிருக்கின்றேன். அப்ப எனக்கு சந்தோசம், சந்தோசமாய் வரும். அவள் என்ரை தங்கச்சித்தானே எண்டு எனக்குப் புழுகமாயிருக்கும்."
"அவயின்ரை வீட்டிலை ஏதேன் கொண்டாட்டமெண் டால் என்னைத் தங்கடை வீட்டை வரச்சொல்லி அவள் பிடிவாதம் பிடிப்பள். நான் மாட்டேனெண்டு சொல்லு வேன் எண்டு அவளுக்குத் தெரியும். திருநீத்து வாத்தி யார் இருக்கிற இடத்திலை என்னுலை இருக்க ஏலாது. உவள் மங்கையர்க்கரசி எப்பிடித்தான் இருக்கிருள் எண்டு நான் யோசிக்கிறனன். கடவுளுக்குப் பக்கத்திலை இருக்க, அழுக்கு வேட்டி கட்டிக்கொண்டு தோட்டம் செய்யிற அறிவில்லாத எங்களுக்கென்ன யோக்கியதை இருக்கு எண்டு நான் அவளைக் கேப்பேன். 'ஐயா உன் னைப் பார்க்க எவ்வளவு சந்தோசப்படுகிறர். நீ தான்

Page 56
108 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
சும்மா சும்மா பயப்படுகிருய் எண்டு அவள் சொல்வாள். எனக்கு அவள் கெஞ்சிறதை பாக்க அழுகை வரும் எண்டாலும் கடவுள் போன்ற வாத்தியாரோடும், அவை யின்ரை வீட்டை வாற வெள்ளை வேட்டி கட்டின மற்ற மனிசரோடும் நான் எப்பிடித்தான் புழங்கிறது எண்டு யோசித்துப் பார்ப்பேன். என்னுலை முடியாது தங்கச்சி; "என்னை விட்டுவிடு தங்கச்சி என்பேன், எனது குரல் கம்மும். 'சரி அண்ணு' எண்டு அவள் போய்விடுவாள். அவள் ஏமாற்றத்துடன் போவதைப் பார்க்க எனக்கு அழுகை வரும். மூலையிலை ஒழிச்சிருந்து அழுவேன்; நல் லாய் அழுவேன்; நெஞ்சிலை கனக்கிற மாதிரி கிடக்கிற அந்தப் பாரம் கரையு மட்டும் அழுவேன்.”
"நான் மூண்டாம் வகுப்பு மட்டும்தான் படிச்சிருக் கின்றேன். நான் மூண்டாம் வகுப்பிலை படிக்கேக்கை, மங்கையர்க்கரசி அரிவரியிலைதான் படிச்சவள். அவள் முதலாம் வகுப்புப் படிக்கேக்கையும், இரண்டாம் வகுப் புப் படிக்கேக்கையும் கூட நான் மூண்டுதான் படிச்சனன். அதுக்குப் பிறகு நான் பள்ளிக்குடத்துக்குப் போகேலை. போக மனம்வரேலை. அப்பு என்னை Lugirafis குடத்துக்குப் போகச்சொல்லி அடிச்சார். நான் போகேலை மங்கையர்க்கரசி கூட கூப்பிட்டாள். நான் போகேலை. ஒரு நாள் முதல் வாத்தியார் கூட ‘நாலெழுத்துப் படிச் சால் தானேடா, நல்லாய் இருக்கலாம்; பள்ளிக்குடத் துக்கு வாவேன்ரா” எண்டார். நானுெண்டும் சொல்லேலை. அந்தக் காலதில்லையும், நான் அவருக்கு முன்னுலை ஒன டும் கதைக்க மாட்டேன். அண்டைக்கிம் நான் வீட்டை வந்து அழுதேன்; மூலையிலிருந்து விக்கி விக்க் அழு தேன். அப்பு அடிக்கேக்கை கூட நான் அப்படி அழேலை. முதல் வாத்தியார் பள்ளிக்குடத்திற்குவா வேன்ரா எண்டு சொன்னபோது எனக்கு அழுகை அழுகையாய் வந்தது. நல்லாய் அழுதேன். ஆச்சிகூடக் கண்டிட்டு

குப்பிழான் ஐ. சண்முகன் / 109
ஏன்ரா அழுகிறய எண்டு கேட்டா. நான் ஒண்டும் சொல்லேலை. நல்லாய் அழுதேன்."
"ஒம்பதாம், பத்தாம் வகுப்புகளிலை என்ன படிக்கினம் எண்டு எனக்கு விளங்கேலை, எங்கடை மங்கையர்க்கரசி கூட கண்டியிலை பதின்மூண்டாம், பதினலாம் வகுப்பு படிச்சது தானே! நீங்களெல்லாம் கண்டியிலை என்ன படிக்கிறியள் எண்டு ஒரு நாள் அதைக் கேட்டன்ை.
அதெல்லாம் உனக்கு விளங்காதடா அண்ணு' எண்
டாள். உண்மையிலை எனக்கு விளங்கேலைத்தான். நான் கூட வீரகேசரி, தினகரன் ஈழநாடு பேப்பரெல்லாம் எழுத்துக் கூட்டி வாசிப்பேன்தானே எம். சீ. ஆறின் ரை பாட்டுப் புத்தகங்களும் வாசிக்கிறனுன் தானே. மங்கை யர்க்கரசியும் என்னைப்போலதானே பெரிய பெரியகதைப் புத்தகங்களெல்லாம் வாசிக்கும். எனக்கு அதெல்லாம் வாசிக்க ஆசைதான். பதின்மூண்டாம், பதினுலாம் வகுப் புப் படிக்கிற மங்கையர்க்கரசி வாசிக்கிற புத்தகங்களை, மூண்டாம் வகுப்புப் படிச்ச என்னுலும் வாசிக்க ஏலும். ஆணுல் எனக்கு நேரமில்லாததாலை நான் வாசிக்கிறேலை. அப்ப, அவை பதின்மூண்டாம் பதினுலாம் வகுப்பிலை என்ன படிக்கிறவை எண்டு எனக்கு விளங்கேலை."
"பெரிய வகுப்புகளிலை இங்கிலீசு படிக்கிறதாக்கும் எண்டு நினைச்சிருந்தேன். மூண்டாம் வகுப்புக்கிடையிலை தமிழ் படிச்சா இங்கிலீசு படிக்க ஆரும் வகுப்புப்போதும் தானே. அப்ப ஏன் கணக்க வகுப்புகள்; அப்ப ஏன் மங்கையர்க்கரசி கண்டிக்கு படிக்கப் போகவேனும்"
'விடுதலையிக்கை ஒருநாள் அது எங்கடைவீட்டை நிக்கேக்கை, அதுக்கு "இங்கிலிசிலை ஒரு கடிதம் வந்தது. நான் தான் கடிதக் காறனிட்டையிருந்து அதை வேண்டி தங்கச்சியிட்டை கொடுத்தனன். அதிலே கிறுக்கல் கிறுக் கலாய், நெளிஞ்ச நெளிஞ்ச இங்கிலீசு எழுத்துக்கள்;

Page 57
110 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
எனக்குக் காய்ச்சல் வந்தால் டிச்பென்சறியிலை மருந்து வேண்டேக்கை, அப்போதிக்கரி ஐயா எழுதித் தாற துண்டிலை, கிறுக்கல் கிறுக்கலாய் கிடக்கிற இங்கிலீசு எழுத்துகள் மாதிரி.; என்ரை தங்கச்சிக்கும் இங்கி லீசில கடிதம் வந்ததாக்கும் எண்டு எனக்கு நல்ல Hமுகம். எனக்குச் சந்தோசத்திலை சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. கடிதத்தை வேண்டிக்கொண்டு போகேக்கை நான் சிரிச்சுக்கொண்டுதான் போனனன். மணிச்சத்தம் கேட்டு வெளியாலை வந்த மங்கையர்க்கரசி ‘ஏண்டா அண்ணை சிரிக்கிருய் எண்டு கேட்டுக்கொண்டே கடி தத்தை வாங்கினுள். அவள் இங்கிலீசு படிக்கிறதைப் டாக்க வேணுமெண்டு எனக்கு ஆசை ஆசையாய் கிடந் தது. ‘என்ன தங்கச்சி அதிலை எழுதிக்கிடக்கு எண்டேன்.
"அவள் முகத்தைச் சுழித்தாள்; எனக்கு இங்கிலீசு விளங்கேலையடா அண்ணு” எண்டாள்.
எனக்கு பெரிய ஏமாத்தமாய்ப் போச்சு. "பின்னை என்னடி பெரிய படிப்புப் படிக்கிருய்” எண்டு சீறினேன். அவள் சிரிச்சாள். எனக்கு அழுகை, அழுகையாய் வந்தது. முகத்தைப் பொத்திக்கொண்டு வீட்டுக்குள் ஓடினேன். மூலையிலை இருந்து அழுதேன்.
அவள் எனக்குப் பின்னலை வந்ததை நான் கவனிக் கேலை. ஏன்ரா அண்ணை அழுகிருய் எண் டாள். இது பெரிய குழந்தை எண்டு சொல்லி என்ரை கண்ணிரைத் துடைத்தாள். என்னண்ணு இப்பவும் குழந்தைப் பிள்ளை மாதிரி இருக்கிறயே எண்டு என்னை நாப்பினுள்.
"இங்கிலீசு படியாமல் யூனிவேசீட்டியிலை-அதுதான் கண்டியிலை அவை படிக்கிற பள்ளிக்குடம்-என்னடி படிக் கிருய் எண்டேன் "அதெல்லாம் உனக்கு விளங்காதடா அண்ணை என்ருள், வெள்ளைக்காறன் போனதின் பின்னுலை அவன்ரை பாசையை நாங்களேன் படிக்க வேணும்

குப்பிழான் ஐ. சண்முகன் ! 111
எண்டு கேட்டாள். எங்கடை நாட்டிலை இருக்கிற தமிழாலும் சிங்களத்தாலும் எல்லா வேலையும் செய்யலாம் தானே எண்டும் சொன்னுள்.
"அது சொன்னதிலை எனக்கு முழுதும் விளங்கேலைத் தான்; கொஞ்சந்தான் விளங்கிச்சுது. வெள்ளைக் காறன் போனதின் பின்னலை அவன்ரை இங்கிலீசு எங்களுக்கு என்னத்திற்கு; பெரிய பெரிய கதைப்புத்தகங்களெல்லாம் எழுதுகிற எங்கடை தமிழாலை, சின்னச் சின்ன கடிதங் களெழுதலாம் தானே-மூண்டாம் வகுப்பு படிச்ச நான் இதொண்டும் யோசிக்கேலை. பதின் மூண்டாம், பதின் நாலாம் வகுப்புப் படிக்கிற தங்கச்சிதானே இதையெல் லாம் சொல்லுது, யோசிச்சுப் பார்த்தா அது சொல்லிற தெல்லாம் சரியாய்த்தான் கிடக்கு. அப்ப பதின்மூண் டாம், பதின் நாலாம் வகுப்பிலை இதெல்லாம்தான் படிக் கிறவையோ."
"எங்கடை தோட்டத்துக்கும் வெள்ளைக் காறன் வந்த வணும். முந்தி றெயில் ருேட்டுப்போடேக்கை, அதைப் பாக்க வந்த ஒரு வெள்ளைக் காறன், எங்கடை தோட் டத்துக்கை வந்து பயித்தங்காய் புடுங்கித் திண்டவனும். அப்ப எங்கடை ஆச்சி குமரியாய் இருந்தவவாம். அவா வெள்ளைக் காறனைப் பார்த்து பயித்தங்காய்க்கு காசு தரச் சொல்லிக் கேட்டவவாம். அவன் ஒரு பயித்தங்காய்க்கு ஒரு ரூபா காசு கொடுத்தானும். கொடுத்திட்டு எதோ இங் கிலீசிலை கேட்டானும். ஆச்சி வெக்கப்பட்டு வீட்டை ஓடி வந்திட்டாவாம். அப்ப ஒருரூபாவுக்கு பத்துக் கொத்து அரிசி வேண்டலாமாம். அப்படிப்பட்ட வெள்ளைக் காறன் போனபின்னுலை இங்கிலீசு என்னத் திற்கு சரிதான்.”
“ஒருநாள், பொழுது மங்கிற நேரம், தோட்டத்திலை. பொயிலைக்கண்டுக்கு இறைக்கிறதுக்காக நான் மம்பெட்டி யோட போகேக்கை, ருேட்டிலை இரண்டு காச்சட்டை

Page 58
112 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
போட்ட பெடியங்கள், எங்கடை வீட்டைப் பார்த்துக் கொண்டு சைக்கிளோடே நிண்டாங்கள். தங்கச்சி கிணத்தடியிலை உடுப்புத் தோய்ச்சுக்கொண்டு நிண்டது. எனக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. எங்கடை தங்கச்சியை இவை ஏன் பாக்க வேணும். நான் அவை யளுக்குப் பக்கத்திலை போனேன். போங்காற்ரு உன்ரை சரக்கு நிக்குது எண்டு ஒருத்தன் மற்றவனிட்டைச் சொன் னுன். மற்றவன் எங்கட கிணத்தடியைப் பார்த்துச் சிரிச்சான். அவருக்கு என்ன சிரிப்பு? நான் கிணத் தடியைத் திரும்பிப் பார்த்தேன். எங்கடை தங்கச்சியும் சிரிச்சமாதிரிக் கிடந்தது. நான் சைக்கிள்ளை நிண்ட வங்களை முழிசிப் பார்த்தேன். என்ரை கையிலை மம்பெட்டி யும் கிடந்தது. அவங்கள் பயந்திட்டாங்கள் போலை கிடக்கு; விர்றெண்டு சைக்கிளிலை ஏறிப் போட்டான்கள். அவங்கள் பேந்தும் நிண்டிருந்தால் எனக்கு வந்த கோபத்திற்கு ஒருவேளை மம்பெட்டியை பாவிச்சாலும் பாவிச்சிருப்பேன்" -
'அண்டைக்கு பருவம். அப்படி நிலவிலை எனக்கு தண்ணிகட்ட நல்ல ஆசை எம். சீ. யாற்ரை படத்திலை வாற நல்ல நல்ல சினிமாப் பாட்டுக்கள் பாடிக்கொண்டு, அப்படி நிலவிலை தண்ணி கட்ட எனக்கு நல்ல புழுகம் புழுகமாயிருக்கும். ஆனல் அண்டைக்கு எனக்குச் சரியான மனவருத்தமாய் இருந்தது. மங்கையர்க்கரசி அந்தப் பெடியங்களைப் பார்த்துச் சிரிச்சவளே; சிரிச்ச மாதிரித்தான் கிடந்தது. பொழுது கருகிற நேரத்திலை தற் செயலாய் அவள் நிமிந்து பாத்தது எனக்கு சிரிச்ச மாதிரிக் தெரிஞ்சிருக்கும். அவள் சிரிச்சிருக்கமாட்டாள்; அவள் திருநீத்துச் சட்டம்பியாற்றை பெடிச்சி; என்ரை தங்கச்சி; நெடுகவம் அந்த நினைவுகள் தான் வந்தது. துக்கம் துக் கமாய் வந்தது; நெஞ்சை அடைச்சது; அழுகை வந்தது."

குப்ழான் ஐ. சண்முகன் / 113
இண்டைக்கு நாலைஞ்சு நாளைக்கு முந்தித்தான் அவளுக்கு மறுமொழி வந்தது. அவள் சோதினை பாஸாம்; இனிமேல் அவள் ஒரு வீஏயோ, பீஏயாம். அவள் துள்ளிக்கொண்டு எங்கடை வீட்டை ஓடிவந்தாள். "எங்கே சதாசிவத்தண்ணன் எண்று ஆச்சியைக் கேட் டாள். 'ஏன்ரி எண்டேன். 'அண்னை நான் சோதினை பாசடா; உனக்கொரு பரிசு தரப்போறே' னெண் டாள். "ஏன்ரை தங்கச்சி சோதினை பாசு பண்ணியது எனக்கு நல்ல புழுகம். அவள் தன்ரை கையிலை வைச்சிருந்த பாசலை தாறேனெண்டு சொல்லி நீட்டி, நீட்டி ஏய்ப்புக் காட்டினுள். நான் பாஞ்சு பாசலைப் பறிக்சுப் பிரிச்சேன்."
"எனக்குச் சந்தோசம், சந்தோசம், சந்தோசமாய் வந்தது. என்ரை தங்கச்சி என்ரை தங்கச்சிதான். அவளை அப்படியே கட்டிப் பிடிச்சுத் தூக்கி கொஞ்சவேணும் போலை எனக்குப் புழுகம் வந்தது, அவள் அதுக்கிடை யிலை ஆச்சியிட்டை ஓடிவிட்டாள். இப்பவும் அண்ணன் குழந்தைதான் எண்டாள்."
"அவள் எனக்கொரு நீல டெர்லின் சேட்டுத்தான் பரிசு தந்தவள். முந்தியும், அவள் யூனிவேசிட்டிக்கு படிக் கப்போகேக்கையும் எனக்கொரு மஞ்சல் டெர்லின் சேட்டுத் தந்தவள். அதொரு சேட்டுத்தான் நான் இவ் வளவு நாளும் வைச்சிருந்தனன். நான் ஓரிடமும் சேட் டுப்போட்டுக் கொண்டு போறதுமில்லைத்தானே. எப் பவேன் என்னுேடை தோட்டம் செய்யிற பெடியங்க ளோடை, டபிளிலை செக்கண்சோ படத்திற்குப் போனுப் போறதுதான். அதுவும் எம். சீ. ஆறின்ரை சண்டைப் படம் எண்டாத்தான் நான் போவேன்."
"சிலவேளை தங்கச்சி யூனிவேசிட்டியாலை லீவிலை வந்து நிக்கேக்கை அதோடையும் படத்துக்குப் போறஞ்றன். நான் மாட்டேன் மாட்டேனெண்டாலும்

Page 59
114 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
அது விடாது; நான் தனியவோடா போறது அண்ணு; சும்மா ஒரு ஆம்பிளைத்துணைக்கு நீ வா; எனக்கு எல்லாம் எல்லாம் தெரியுமெண்டு கேப்பாள். பின்னை நான் என்ன செய்யிறது, மஞ்சள் டெர்லின் சேட்டையும், போக்கு வரத்து வேட்டியையும் நல்லாய்த் தோய்ச்சுப் போட் டிட்டு, அதோடை வசுவிலை படத்துக்குப் போறன்ை. அல்லாட்டில் நான், சந்தைக்குக் கூட வசுவிலை போறேலை"
"யாழ்ப்பாணத்திலை அதுக்கு எல்லா இடமும் தெரி யும், அது என்னையும் ஒருரூபா பத்துச் சதத் துத்திக்கேற் றுத்தான் எடுக்கச் சொல்லும். நான் மாட்டேனெண்டு போடுவேன். அறபத்தைஞ்சு சதத்திற்கு கலறியிலை கிட்ட இருந்துதான் நான் படம் பார்ப்பேன். நான் சில வேளை பின்னுக்குத் திரும்பி செக்கன் கிளாசைப் பாக் கிறனுன். கடைசியாய்ப் படம் பாக்கேக்கை ஒரு பொடி யன் தங்கச்சியைக் குறுகுறுப்பாய்ப் பார்த்தமாதிரிக் கிடந்தது. பொடியனையும் எங்கையோ பார்த்தமாதிரி எனக்கு ஞாபகம் வந்தது. எங்கேயெண்டுதான் ஞாபகம் வரேல்லை. அங்கை எல்லாம் அப்பிடித்தானே. ஆம் பி2ளயன், பொம்பிளையஸ் எண்ட வித்தியாசமில்லாமல் எல்லாரையும் குறுகுறுப்பாய் பாப்பினம்;"
*படம் முடிஞ்சு வரேக்கை இரண்டோ, மூண்டு பெட் டையள் மங்கையர்க்கரசி, மங்கையர்க்கரசி, மங்கையுர்க் கரசி எண்டு தங்கச்சியைக் கூப்பிட்டினம், தங்கச்சி இது தான் நான் சொல்லுற சதாசிவத்தண்ணன் எண்டு என்னை அவையஞக்குக் காட்டிச்சு. எனக்கு நல்ல சந் தோசம்-வெக்கமாயுமிருந்தது. அந்தப் பெட்டயளிஜல மஞ்சள் சீலை கட்டின கண்ணுடி போட்ட, சின்னப்பிள்ஜா தான் நல்லபிள்ளை. நீலச்சீலை கட்டின பிள்ஜளயும் ஒரு மாதிரி; சின்னச் சட்டைப் போட்ட மற்றப்பிள்ளை சீ. எனக்குப்பாக்க அரிகண்டமாய் இருந்தது; வாயிலையும்

குப்பிழான் ஐ. சண்முகன் / 115
எதோ சிவப்புகளைப் பூசி. அவரும் வந்தவர் போலை எ7ண்டு சொல்லி அது சிரிச்சுது; தங்கச்சியும் சிரிச்சுது. எனக்கு ஒண்டும் பிடிக்கவுமில்லை; ஒண்டும் விளங்க வுமில்லை.
‘நான் பேந்து தங்கச்சிக்கு அந்த பின்ளையோடை பழகாதையெண்டு சொன்னனுன். அந்த மஞ்சல் சீலை கட்டினபிள்ளை நல்ல பீள்ளை; அப்பிடிப் பிள்ளையளோடை தான் பழகவேணும் எண்டும் சொன்னனுன். எனக்கு அந்தப்பிள்ளையிலை பிடிச்சுப் போச்சு; அது நல்ல
96t.
"தங்கச்சி வீட்டை சிலவேளை சைக்கிள்ளை பெடியங் களும் வாறவங்கள்; அது அவங்களோடை எல்லாம் சிரிச் சுக் கதைக்கும். பகிடியளும் விடும். வீட்டிலை இருத்தி தண்ணியும் கொடுக்கும். முதல்வாத்தியாரும் ته راول) அதுக்கு ஒண்டும் பறையிறேலை."
'நீ பொம்பிளைப் பிள்ளையல்லே; பெடியங்களோடை உப்பிடியே பழகிறது எண்டு நான் தங்கச்சியைக் கேட் டனுன். அது பிலத்துச் சிரிச்சது. அண்ணை நீ இப்பவும் குழந்தையடா. பொம்பிளையஞம் ஆம்பிளையஞம் சிரிச்சுப் பழகிறதிலை என்ன பிழையடா. பிழை எண்ட தெல்லாம் அவங்கடை அவங்கடை மனசைப் பொறுத்தது எண்டு அது சொல்லிச்சு. நானும் பேந்து யோசிச்சுப் பார்த் தனன். பொம்பிளையஞம் ஆம்பிளையஞம் பழகிறதிலை என்ன பிழை? ஒண்டுமில்லைத் தானே. இப்பத்தான் பதின்மூண்டாம் பதினுலாம் வகுப்பிலை என்ன படிப்பிக் கிறவை எண்டு எனக்கு விளங்குது."
"நான் நேத்து பொழுது படேக்கை தோட்டத்தாலை வீட்டை வந்து பாத்தா தங்கச்சி அழுகிற மாதிரி நிக்குது. என்னைக் கண்டிட்டு விக்கி, விக்கி அழுதது. எந்த நேர மும் பகிடியள் விட்டுச் சிரிச்சுக் கொண்டிருக்கிற தங்கச்சி

Page 60
116 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
அழுகிறதைப் பாக்க எனக்கு அழுகையாய் வந்தது. நான் அழேக்கையெல்லாம், அழுமூஞ்சி, இப்பவும் குழந்தை யோ எண்டு என்னைக் கேட்டு என்னைப் பகிடி பண்ணி என்னை அழாமல் செய்யிற தங்கச்சி, அப்பிடி அழுவதைப் பாக்க ஏதோ கூடாதது நடந்து போச்சு எண்டு எனக்கு விளங்கியிட்டுது. ‘என்னடி நடந்தது' எண்டு நானும் அழுகிற மாதிரிக் கேட்டேன். அதின்ரை கண்ணிரைத் துடைத்து, கையைப் பிடிச்சு சொல்லமாட்டியோ எண்டு கெஞ்சிக் கேட்டேன். 'என்னை, ஐயா கலியாணம் செய்து கொடுக்கப் போருராம்' எண்டு விக்கி அழுதது."
"எனக்கு ஒண்டும் விளங்கேலை. கலியாணம் செய் கிறதெண்டால் எல்லாருக்கும் புழுகம்தானே. இவள் ஏன் அழுகிறளெண்டு எனக்கு விளங்கேலை. அது நல் லது தானேடி. அதுக்கேன்ரி அழுகிருய் எண்டேன்'
அவள் அழுகையை நிப்பாட்டி என்னை முழுசிப் பார்த்தாள். எங்கடை பெரிய பள்ளிக்குடத்திலை படிப் பிக்கிற சுப்பிரமணியம்தான் மாப்பிளை எண்டாள்"
'எனக்கு அவரைத் தெரியும். எங்கடை ஊர் பெரிய பள்ளிக்குடத்திலை படிப்பிக்கிற நல்ல வாத்திமாரிஜல அவரும் ஒருத்தரெண்டு அங்கை படிக்கிற பொடியங்கள் சொல்லிறவங்கள். நானும் சிலவேளை அவரைக் காணுற ஞன். ஆள் சைக்கிள்ளை போகேக்கை, வரேக்கை தேவா ரம் மாதிரிப் பாட்டுக்களை மெதுவாய் பாடிக்கொண்டு போறவர். பெரிய பெரிய இங்கிலீசுப் புத்தகங்களும் கொண்டு போறவர். ஒரு நாள் அவர் சைக்கிள்ளை போகேக்கை புத்தகமொண்டு தவறி றேட்டுலே விழ, நான்தான் எடுத்துக்குடுத்தனன். அவரும் தங்கச்சி மாதிரி பீஏயோ எம்மேயோதானம். மங்கையர்க்கரசிக்கு நல்ல பொருத்தமான ஆள்; அப்பேன் அவள் அழ வேணும்."

குப்பிழான் ஐ. சண்முகன் / 117
"அவர் நல்ல மாதிரி மனிசன்தானேடி உனக்கு நல்ல பொருத்தமான ஆள்; உதுக்கேன்ரீ பேச்சி அழுகிருய் எண்டு நான் கேட்டேன்'.
"அவள் தன்ரை சட்டைக்குள்ளாலை ஒரு படத்தை எடுத்து என்னைப் பாக்கச் சொல்லிக் காட்டினுள். ஒரு காச்சட்டை போட்ட நெடுவல் பெடியனும், ஒரு பொம் பிளையும். நான் கண்ணைக் கசக்கிப்போட்டு வடிவாய்ப் பார்த்தேன். பொம்பிளை தங்கச்சி, தங்கச்சியேதான்இரண்டு பேரும் சோடியாய் சிரிச்சுக் கொண்டு நிக்கினம். பெடியனையும் எங்கையோ கண்டமாதிரி-ஒ! ஒருநாள் சைக்கிள்ளை நிண்டு தங்கச்சியைப் பாத்த பெடியன்; படம் பாக்கேக்கை குறுகுறுப்பாய் பாத்த பெடியன்; எனக்கு தலை சுத்திச்சுது ; மயக்கம் வந்தது; நெஞ்சை அடைச்சது; கண் இருண்டது; அழுகை அழுகை அழுகை யாய் வந்தது" .
"அழுகையை அடக்கிக்கொண்டு, அவளை நிமிர்ந்து பாத்துக்கேட்டேன் "நீ என்ரை தங்கச்சி தானேடி? ତT ଗର୍ତt Gତ..''
"அவள் என்ரை காலிலை விழுந்து கையாலை காலைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு அழுதாள். நான் உன்ரை தங் கச்சி இல்லாட்டா வேறை ஆரடா உன்ரை அருமைத் தங்கச்சி எண்டுகேட்டாள். ஐயாவும்,நீ என்ரை மோளாடி எாண்டு பேசினது எண்டு சொல்லிக் கதறினுள். அண்ணை நீ ஒரு தெய்வம்; குழந்தை எண்டு நினைச்சேன், நீயுமா என்னை விரட்டிருய் எண்டு கேட்டாள். எனக்கு அடக்க அடக்க அழுகை வந்தது. "அப்ப ஏன் தங்கச்சி உப்பிடிச் செய்தனி எண்டு கேட்டேன்,"
அவள் கண்ணைத்துடைச்சுப் போட்டுச் சொன்னுள். அது என்னவோடா, அண்ணு எனக்குச் சொல்லத் தெரி
சா-8

Page 61
118 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
யாது. எனக்கு அவரிலை பிடிச்சுப்போச்சு அவருக்கும் அப்படித்தான். தாங்கள் பெத்ததுகளுக்கு கலியாணம் செய்து பார்க்கிறதோடை தாய் தேப்பன்ரை பொறுப்புத் தீர்ந்துபோம். குடும்பம் நடத்துகிறது நாங்கள்தானே. எங்களோடை குடும்பம் நடத்தக்கூடியவங்களை தெரிஞ் செடுக்க எங்களுக்கு அறிவு காணுதே, நாங்கள் விரும் பியவங்களுடன் நாங்கள் வாழவேணுமடா அண்ணு; ஐயா தான் சொல்லுறவரைத்தான் கலியாணம் செய்ய வேணுமெண்டு சொல்லுறர். இவர் இல்லாமல் என்னல் வாழ ஏலாத டா எண்டு சொல்லிக் கண்கலங்கிச்சுது தங்கச்சி; நானும் எவ்வளவோ மனதைக் கல்லாக்கி வைராக்கியமாயிருக்கத்தான் பார்த்தேன். 6T6öt t60)8äu) ஏலாமல் போச்சுது. எனக்கும் கண்கலங்கிச்சுது. அது சொல்லுறதும் சரிபோலத்தான் எனக்குத் தெரிஞ்சுது. பதின்மூண்டாம் பதினலாம் வகுப்பிலை என்ன படிப்பிக் கிறவை யெண்டு எனக்கு விளங்கிப்போச்சு. எங்களைப் போலை மூண்டாம் நாலாம் வகுப்புப் படிச்சவையெல்லாம் இப்பிடி இப்பிடி புதிசு, புதிசாய் யோசிச்சுப் பார்க்க மாட்டினம். கணக்கப் படிச்சவைதான் புதிசு புதிசாய் யோசிப்பினம்போலை. தாங்கள் விரும்பினவையைத் தானே எல்லாரும் கலியாணம் செய்யிறதெண்டால் எவ் வளவு நல்ல (ou um d23or.”
"எனக்கு இப்ப ஒரு உதவி செய்ய வேண்டுமெண்டு தங்கச்சி கேட்டிது. அந்தப் பெடியன் பக்கத்தூர் பெடி பயன்தானும் போய் நான் தாற துண்டைக் குடுத்து அவனை கூட்டியாறியோ எண்டு கேட்டது."
"நான் ஒமண்டிட்டேன். உந்த இருட்டுகளுக்கெல் லாம் நான் பயப்பிடமாட்டேன். அமாவாசை இருட்டிலை கூட கைக்குறிப்பிலை தண்ணிகட்டிறனுன்தானே. ஆக இருநீத்து வாத்தியாரை நினைக்கத்தான் பயமாய் கிடந்தது”

குப்பிழான் ஐ. சண்முகன் / 119
'பேந்தென்ன? அவன் வந்தான். தங்கச்சியையும் அவனையும் நான்தான் வழி அனுப்பிவைச்சேன். அதுகள் படிச்சதுதானே எங்கேயெண்டாலும் போய் சந்தோச மாய் வாழட்டும் எண்டு நினைச்சேன்."
“அவை இரண்டு பேருமாய் போகேக்கை தங்கச்சி என்ன்ர காலிலை விழுந்து கும்பிட்டுது; அண்ணு நீயொரு தெய்வமடா எண்டு சொல்லிச்சுது. எங்களை ஆசீர்வதிச்சு விட டா அண்ணை எண்டு அது கேட்டது. எனக்கு வெக் க்மாய்த்தான்கிடந்தது. சந்தோசமாயும் கிடந்தது. கண்ணி ரும் வந்தது. தங்கச்சி நீ எங்கையெண்டாலும் சந்தோச மாய் இருக்க வேண்டுமெண்டு நான் சொன்னேன். என் ரை குரல் கம்மி இருந்தது."
"அவையள் அந்த இருட்டிலை போக வெளிக்கிட்டி னம். தங்கச்சியின் ரை புழுகத்தை பாத்து எனக்கு சந்தோ ஷம், சந்தோஷம், சந்தோஷமாய் இருந்தாலும், திருநீத்து வாத்தியாரை நினைக்க மினக்கு பயமாய்த்தானிருந்தது.”
'தங்கச்சி போகேக்கை சொல்லிச்சிது. அண்ணு! ஐயாவை நினைச்சு பயப்படாதேயடா; காலம் மாற மாற அதுக்கேற்க மனிசனும் மாறத்தானடா வேணும். ஐயா வும் மாறுவார்; அவற்றை கோபமும் அடங்கும் எண்டு தான் நினைக்கிறேன்."
*அழுது கொண்டே-அப்படிச் சந்தோசத்திலையும் அவையள் ஏன் அழவேணும்-கையளை ஆட்டிக் கொண்டே அவையள் போச்சினம். நானும் கையளை ஆட்டிக்கொண்டே நிண்டேன். என்னை மறந்துபோய் ஆட்டி, ஆட்டி, ஆட்டி கைவலிக்கத்தான் நிப்பாட்டி னேன். என்ரை நெஞ்சு குளிர்ந்திருந்தது."
"நான் இப்ப திருநீத்து வாத்தியாருக்கும் பயப்பட மாட்டேன். தங்கச்சி அவனுேடை ஓடினதைப்பற்றி,

Page 62
120 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
அவர் என்னைக் கேட்டா நான் இப்ப அவருக்கு முன்னுலை துணிஞ்சு நிண்டு ஞாயம் சொல்லுவேன். ஓம்; உண்மை யாச் சொல்லுவேன்."
“இரா முழுக்க நித்திரை வரேல்லை; புரண்டு புரண்டு படுத்தேன். கோழி கூவிச்சிது; குருவி கத்திச்சுது; சாடை சாடையாய் விடிஞ்சுது. இருட்டுப் போக வெளிச்சம் வந்தது.'
"தங்கச்சியும் அவனும் இப்ப வெளிச்சத்திலை நடப் பினம் எண்டு நான் நினைச்சேன்."
(1969)

ஒரு றெயில் பயணம்
கடகடவென்ற இரைச்சலுடன் புகையிரதம் விரைந்து கொண்டிருந்தது. உள்ளே கூட்டம் நெரிந்து குமைந்தது. நானிருந்த பெட்டியின் வாசற்புறக் கதவருகில் நின்று வெளியே தெரிந்த காட்சிகளில் கண்களை மேயவிட்டுக் கொண்டிருந்தேன். கரையோரப் பகுதியில், இடைக் கிடை நெடுமூச்சு விட்டவாறே புகையிரதம் சென்றது. எனது கண்கள் கரைப் பகுதிகளைத் துழாவின. ஒடிக் கொண்டிருக்கும் காட்சிகளில் மனது தங்காமலும் ஓடாத காட்சிகளில் மனது தங்கியும் கோலம் போட்டது.
கரையில் போடப்பட்டிருந்த கருங்கல் அணைகளில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இருந்து ஏதேதோ கதைத்துக் கொண்டிருந்தார்கள். காற்சட்டை போட்ட உத்தியோகம் பார்க்கும் மனிதர்களும், சாரம் அணிந்த சாதாரண தொழிலாளர்களும், கோவணம் தரித்த மீன வரும், பெண்களும், கிழவர்களும், இளைஞரும், குமரிகளும் கிழவிகளும், குழந்தைகளும் கூட்டம் கூட்டமாக, திட்டுத் திட்டாக அமர்ந்திருந்து ஏதேதோ அளாவளாவினர்கள்.

Page 63
122 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
மனிதர்கள் பிறந்தநாள் தொடக்கமே கதைத்துக் கொண்டே இருக்கிறர்கள்; ஆதாமும், ஏவாளும் கூடக் கதைத்திருப்பார்கள். இவர்களுக்கு எப்துேதான் இக் கதை முடியுமோவென நான் எண்ணினேன்.
அவர்களில் பலர் சிரிப்பது போலவும், சிலர் உற்சாக மாகச் சத்தமிட்டுக் கதைப்பது போலவும், சிலர் நோயால் வருந்தி முனங்குவது போலவும், சிலர் அழுவது போல வும் எனக்குத் தெரிந்தது. ஆக இந்த மனித சமுதா யத்தின் பல்வேறு விதமான பல்வேறு தரப்பட்ட பிரதி நிதிகளும் அங்கு காட்சி தந்தார்கள்.
றெயில் நெடுமூச்சு விட்டவாறே விரைந்தது. ஏதோ வோர் ஸ்ரேசன் நெருங்கி விட்டதற்கு சமிக்ஞை தருவ தைப் போல, கீச்சிடும் குரலெடுத்துக் கூவியது. இறுதி யில், ஒரு முக்கல், முனங்கல், குலுங்கலுடன் ஒரு ஸ்ரேசனில் நின்றது. வெளியே மேய்ந்துகொண்டிருந்த என் கண்களை திடீரென உள்ளே திருப்பினேன். ஒரு நடுத்தரவயது மனிதரும், வயது இருபது மதிக்கத்தக்க, கண்டவரை மயக்க வல்ல ஒருவித கவர்ச்சிகொண்ட இளம் சிவப்பு நிறச் சேலையணிந்த ஒரு பெண்ணும், என்னுடன் மோதுவது போல, வாசல் கதவில் பிடித்து இறங்கிச் சென்றர்கள்; வேறும் பலர் அக் கொம்பாட் மென்டிலிருந்து இறங்கினர்கள். என் மனம் அப்பெண் ணிலேயே இலயித்துவிட்டது. அவளும், அம்மனிதரும் பிளாட்போமில் தெரிந்த மனிதத் தலைகளுடன் தலைக ளாய் வேகமாக தெற்கே சென்று மறைந்தார்கள்.
நான் அவளின் நினைவில் மயங்கிக்கிடந்தேன். வெறுமே என் கண்கள் பிளாட்போமை நோக்கிக் கொண்டிருந்தன. பிளாட்போமில் கேட்ட வடை. வடை, சோடாச் சத்தங்கள், மெதுவாக என் நினைவுத் திரையில் தட்டின.

குப்பிழான் ஐ. சண்முகன் / 123
புறப்படுவதற்கு ஆயத்தமாக றெயில் கூவியது. வெளியே எட்டிப் பார்த்தேன். றெயிலின் வட அந்தத் திலிருந்த பெட்டியிலிருந்து காட் பச்சைக்கொடியைக் காட்டினர். றெயில் ஒரு குலுக்கலுடன் மெதுவாக ஊர்ந்து புறப்படத் தொடங்கியது. அந்தப் பெண் பிளாட்போமில் எங்காவது தென்படுவாளாவென என் மனம் ஏங்கியது. மெதுவாக ஊர்ந்த றெயில் படிப்படி யாக தன் துரித கதியை எட்டிக் கொண்டிருந்தது. பிளாட் போம் மறைந்தது. தூரத்தில் ஸ்ரேசன் என் கண்களிலி ருந்து மறையும் வரையும் நான் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பெருமூச்சுடன் தலையை உள்ளே திருப்பினேன். றெயிலில் கூட்டம் குறைந்திருந்தது. என்னைத்தவிர மற்றவர்கள் யாபேரும் ஆசனத்தில் அமர்ந் திருந்தார்கள். எனக்கும் ஆசனம் கிடைக்குமோ எனத் தடவினேன்.
இரு ஜோடிக்கண்கள் குறுகுறுவென என்னையே உற்றுப் பார்ப்பதைக் கண்ட நாள் துணுக்குற்றேன். திடீரென தன்னைப் பார்ப்பதைக் கண்ட அவள் முகம் சிவக்கக் கீழே குனிந்தாள். அவளின் முகம் நிலாவட்ட மாக என் மனதில் பதிந்தது. எலுமிச்சம் பழத்திலும் சிறிது மங்கிய நிறம் கொண்டவளாக அவள் இருந்தாள். மெல் லிய கோடுகளாக அவள் நெற்றியில் விபூதி அணிந்திருந் தாள். நெற்றியின் மையத்தில் சின்னஞ்சிறிய ஒரு கறுப் புப் பொட்டு இட்டிருந்தாள். தலையை நேர்வகிடாய் பிரித்துப் பின்னி, சுவப்பு றிபன் கட்டிருந்தாள். வெள்ளை நிற அரைப்பாவாடையும், வெள்ளையில் பச்சைப்பூப் போட்ட சட்டையும் அணிந்திருந்தாள். வாழைத்தண்டு போன்ற அவள் கைகளில் இரு புத்தகங்களையும், ஒரு தொப்பியையும் ஏந்தியிருந்தாள். மேலேயிருந்த புத்த கத்தின் பெயரை வாசிக்க முயன்றேன். ‘பாரதியும் ஷெல்லியும்" என்றிருந்தது. ஓர் இலக்கிய இரசிகை

Page 64
124 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
f போலுமென்று எண்ணிக் கொண்டேன். என் கண்க்ள் அவளை விட்டகல மறுத்தன. }
மீண்டும் தலையைத் தூக்கி என்னைப் பார்த்த அவள் நான் தன்னையே பார்ப்பதைக் கண்டு தலையைக் கவிழ்த் துக்கொண்டாள்.
நான் புன் முறுவலுடன் தலையை வெளியே திருப்பிக் கொண்டேன். என் மன இயல்பை எண்ணி சற்று நேரத்தின் முன் ஒரு பெண்ணைப் பார்த்து அவளில் மயங்கி, அவளை இன்னுேர் முறை பார்க்க மாட்டேனே என்று தவித்த நானு, இப்போது இப்பெண்னைப் பார்த்து, இவள் அழகை அணு அணுவாக இரசித்து, இவளையே பார்க்கவேண்டும் போலத் தவித்துக்கொண்டிருக்கிறேன்?
என் மனம் அவளைப் பார்க்குமாறு தூண்டியது.
என் மனதின் இப்போக்கை எப்படியும் அடக்குவ தென்று தீர்மானித்தேன். மனதை அவளின் நினைப்புக் களில் இலயிக்க விடாமல் வலிந்து திருப்ப முயன்றேன்.
மாலை நேரத்து இளம் வெயில் காய்ந்து கொண்டி ருந்தது. கடல்நீர் வெயிலில் பளபளத்தது. வெண்ணிற அலைகளில் பட்ட வெயில் என் முகத்திற்கு நேரே பிரதி பலித்துக்கொண்டிருந்தது. தூரத்தே அடிவானத்திற்கு இப்பால் மங்கலாய், சிறிய புள்ளியாய் ஒரு கப்பல் விரைந்து கொண்டிருப்பது தெரிந்தது. கரைக்கு அண் மையில் வடமேல் பக்கத்தில் பாய் விரித்த படகொன்று காற்றின் போக்கிற்கு அமைய அசைந்து கொண்டிருந் தது. அதில் இரண்டு மனிதர்கள் இருப்பதுபோல மங்க லாக இரு புள்ளிகள் தெரிந்தன. ஆணும் பெண்ணுமாக இரு தம்பதிகள், புகையிரத வீதியோரத்தில் றெயிலையே பார்த்தவாறு நின்றனர். அவர்களுக்கிடையே நின்ற மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன், றெயிலைப் பார்த்து, கெக் கட்டமிட்டு சிரித்த வண்ணம் கையைக் காட்டினுன்.

குப்பிழான் ஐ. சண்முகன் / 12
றெயில் ஒரு குலுக்கலுடன் அடுத்த ஸ்ரேசனில் நின்றது.
என்னையே ஒரக்கண்ணுல் பார்த்துக்கொண்டிருந்த அவள் ஒரு புன்னகை பூத்தவண்ணம், அப்பாலே திரும்பி வானத்தைப் பார்த்தாள்.
எனக்குச் சிரிப்பு வந்தது. அதை வலிந்து அடக்கிக் கொண்டே நான் இருப்பதற்காக ஓரிடத்தைத் தேடி னேன். அவளுடன் எப்படியாவது பேசித்தான் தீருவது என்று சங்கல்பம் பூண்டுகொண்டேன்.
நல்ல வேளையாக அவளின் அருகிலேயே, அவளை ஒட்டினுற்போல, ஒரு ஆள் இருக்கத்தக்க இடம் காலி யாக இருந்தது. அவள் வானத்தையே பார்த்துக்கொண் டிருந்தாள். தயங்கியவாறு சென்று அவள் அருகிலேயே அமர்ந்து கொண்டேன்.
அவள் அலட்சியமாக திரும்பி என்னைப் பார்த்தாள்! இதை அவள் எதிர்பார்த்திருந்தவள் போல த்தென்பட் டாள். அவள் கண்கள் ஒருவித கிறங்கவைக்கிற அழ கைத் தந்து மின்னின. அவளுடன் எனது உடல் உராஞ் சுவதைப் பொறுக்காதவள் போல மெல்ல நெளிந்து கொண்டாள். என்னுடன் ஏதேதோ பேசத் தவிப்பவள் போல அவள் காணப்பட்டாள்.
வண்டி மீண்டும் ஒரு குலுக்கலுடன் புறப்பட்டது. அவள் என்னை அலட்சியம் செய்பவள் போல பழைய படியே ஜன்னலூடாக அப்பாலே தெரிந்த வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் ஒரு பெருமூச்சுடன் என் கண்களை வண்டியினுள்ளே உலாவவிட்டேன். என் பெருமூச்சிணுல் தன் கவனம் கலைந்தவளைப்போல அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். நான் அவள் பார்ப்பதைக் கவனியாதவன்மாதிரி வண்டிக்குள்ளே எதையோ வெறி

Page 65
126 /சாதாரணங்களும் அசாதாரணங்களும்
துப் பார்ப்பதாக பாசாங்கு செய்தேன். அவள் என்னைத் தலையில் இருந்து உள்ளங்கால் வரை அவதானிப்பதை நான் என் ஒரக்கண்களால் கண்டும் காணுதவன் போலி ருந்தேன்.
குழந்தையொன்று அவலக் குரலெழுப்பி அழுதது. எனக்கு முன்னிருந்த சீற்றில் இருந்த அந்த இளம் தாய், அதை மார்போடு அணைத்து தூங்கவைக்க முயன்ருள். அவளின் அணைப்பின் இதத்தில் சுகங்கண்ட குழந்தை யின் அழுகை ஓய, நான் அப்பால் என் கவனத்தைச் சற்றுத் திருப்பினேன். வண்டியில் கூட்டம் கூடியிருந். தது. கடந்த ஸ்ரேசனில் இரண்டு மூன்று பேர்கள் வண்டியில் புதிதாக ஏறியிருப்பார்களென எண்ணினேன். நான் நின்ற இடத்தில் ஒரு வாலிபன் நின்றுகொண்டு ஏதேதோ கதைகளில் மூழ்கியிருந்தான். அப்பால் ஒரு மீனவன் தன் வெறுமையான கூடையைக் கவிழ்த்து அமர்ந்திருந்தான். சுவீப் ரிக்கெற் விற்கும் பையன் ஒரு வன் தன் சுவீப்ரிக்கற்றுகள் கொண்ட பலகையை கையில் பிடித்தவண்ணம் கடற்கரையை வேடிக்சுை பார்த்துக் கொண்டு நின்றன்" அவனுக்கு அப்பால் இருந்த ஓர் தாடிக்காரக் கிழவன் என்னையும், அவளையும் வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான். யாரோ ஒரு பிச்சைக்காரக் கிழவி ஒரு நவீன சினி மாப் பாடலைப் பாடிய வண்ணம் பிச்சை கேட்டுக் கொண் டிருந்தாள். அவள் எனக்கும் அவளுக்கும் முன்னுல் வந்து நின்று கொண்டு அந்தப் பாட்டைப் பாடி கையை நீட்டினுள்.
நான் எனது காற்சட்டைப் பையில் கையை விட்டு துழாவினேன். ஒரு ஐம்பதுசதக்குத்தி தவிர வேறென் றும் கையில் தட்டுப்படவில்லை. அவள் தனக்குப் பக்கத் தில் இருந்த கறுப்பு நிறக்கைப்பையை எடுத்து நாதக் காகத் திறந்து ஒரு பத்துச்சதக்குத்தியை எடுத்து பிச்சைக்

குப்பிழான் ஐ. சண்முகன் / 127
காரியின் கையில் போட்டாள். அவள் அந்தக் கைப் பையை வைத்திருந்ததை நான் இதுவரையில் கான வில்லை.
பிச்சைக்காரி என்னைப் பார்த்தாள். நான் இல்லை போ" என சைகை செய்தேன். அவளுக்குப் பக்கத்தில் இருந்து அப்படிச் செய்ய எனக்கு, வெட்கமாகத்தான் இருந்தது. ஆனல் என்னுல் வேறென்றும் செய்யமுடிய வில்லை. பெண்களின் கவனத்தை தம்பால் கவரவேண்டு மென்பதற்காக தம் கையில் இருக்கும் எதையும் கொடுத்து விடும் சில மன்மதக் குஞ்சுகளை ப்போல அந்த ஐம்பது சதத்தைக் கொடுக்க எனக்கு மனம் வரவில்லை.
அவள் என்ன நினைத்தாளோ எனக்குத் தெரியாது. ஒரு விதமாக என்னைத் திரும்பி பார்த்தாள். நானும் பார்த் தேன். மெளனமாக தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். பழைய செந்தழிப்பு முகத்தில் தென்படவில்லை. பிச் சைக்காரி அப்பால் சென்று தன் பிலாக்கணத்தை மீண் டும் ஆரம்பித்தாள். நான் மனதில் அப் பிச்சைக் காரி யைத் திட்டினேன்.
வண்டி, அடுத்த ஸ்ரேசனில் நின்று விட்டு புறப் பட்டது. பிச்சைக்காரக் கிழவியும் சுவீப் ரிக்கெற் பைய னும் இறங்கியிருந்தார்கள். குழந்தையை வைத்திருந்த பெண் அதை அணைத்த வண்ணம் பின்னுக்கு தலை யைச்சாத்தி அமர்ந்திருந்தாள். கூடைக்கார மீனவன் அதில் இருந்த வண்ணம் அப்போ பிரசித்தமாயிருந்த ஒரு சிங்களப்பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்; வாசலில் நின்ற வாலிபன் முன்னைப்போலவே ஏதோ கனவில் ஆழ்ந்திருந்தான். தாடிக்காரக் கிழவன் ஆழ்ந்த தூக்கத்தில் இலயித்திருந்தான்.

Page 66
128 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
அவளைப் பார்த்தேன்; அப்பாலே தெரிந்த காட்சி களில் மனத்தைப் பறிகொடுத்தவள் போல, வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் அழகிய கைகள், அந்தப் புத்தகங்களையும், தொப்பியையும் இறுகப் பற் றியிருந்தன. இப்போது, அப்பற்றுதலில் அவளின் கைப் பையும் சேர்ந்திருந்தது.
புகையிரதம் கரைப் பகுதியை விட்டு நாட்டுக்குள் புகுந்து ஓடத் தொடங்கியது. அழகிய வயல் பிரதேசங்க ளுக்கூடாக நெளிந்து, வளைந்து செல்லும் தண்டவாளத் தின் மீது அது வேகமாக சென்று கொண்டிருந்தது. இருண்டு வரும் மங்கிய வெளிச்சத்தில், அப்பகுதி அழ கிய சோபை பெற்று மிளிர்ந்து கொண்டிருந்தது. நானும் அவளுடன் சேர்ந்து வெளியழகை நோக்கிக் கொண்டி ருந்தேன்.
வழியிலிருந்த ஆற்றுப் பாலத்தில் பயங்கரச் சத் தத்தை எழுப்பிக் கொண்டே புகையிரதம் ஓடிக் கொண் டிருந்தது. ஆற்றங்கரையில் இரண்டு பெண்கள் குளித் துக் கொண்டிருந்தார்கள். பாதையின் அருகினில் பச் சைப் பசேலென்ற நெல் வயல்களும் வாழைத் தோட் டங்களும் காணப்பட்டன.
இயற்கையையே பார்த்துப் பார்த்துச் சலித்த நான் மீண்டும் என் கவனத்தை அவள்மேல் திருப்பினேன். அவளின் கோலத்தில் எதுவித மாற்றமும் இல்லை. வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"இந்தப் புத்தகத்தை ஒருமுறை தருவீர்களா' என் றேன். எனது குரல் மெல்லிய ஸ்தாயியில் ஒலித்தது. அவள் ஏதோ பிரமையில் இருந்து விடுபட்டவள் போல ஒரு முறை அசைந்து கொடுத்தாள். பின்னுல் திரும்பிப் பார்க்காமலே தன் பின்னலில் ஒன்றைத் தூக்கி முன் பக்கம் போட்டு அதை அழகுப் படுத்தினுள். அவள்

குப்பிழான் ஐ. சண்முகன் / 129
தன் பின்னலைத் தூக்கி முன்னுல் போடும்போது அது என்னைத் தழுவி அணைத்துச் சென்றது. அவள் என்னைத் தழுவ மாட்டாளோவென ஏங்கினேன். நான் கேட்ட கேள்விக்கு அவளிடமிருந்து பதில் வரவில்லை. அது அவளின் காதில் விழவில்லை போலும் என எண்ணி GaoTait.
புகையிரதம் ஒரு குகையில் புகுந்து ஓடியது. அதனல் புகையிரதத்தினுள்ளே ஒரு செயற்கையான இருள் பரந் திருந்தது. அப்போது அவள் தன் முகத்தை உள்ளே திருப்பி இருப்பாளென நினைக்கிறேன். புகையிரதம் குகையை விட்டுக் கழிந்ததும் அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள்; பார்வையும் பார்வையும் முட்டி மோதிச் சித றின. அவள் நாணமிக்க ஒரு புன்முறுவலுடன் முகத் தைக் கவிழ்த்துக்கொண்டாள்.
கூடையில் இருந்த மீன்காரக்கிழவன் 'ஆதரே மம ஆதரே" (நேசிக்கிறேன் நான் நேசிக்கிறேன்) என்று முணு முணுத்தான். தாயின் அணைப்பிலிருந்த குழந்தை கையைக் காலை ஆட்டி விளையாடியது. வாசலில் நின்ற இளைஞன் ஏதோ நினைவில் சிரிததுக் கொண்டான்.
நான் அவளைப் பார்த்து "இந்தப் புத்தகத்தை ஒரு முறை தருவீர்களா?' என மீண்டும் வினவினேன். அவள் கைகள் அசைந்தன. அந்தப் புத்தகத்தை எடுத்து பவ்வியமாக என் கையில் தந்தாள். அப்போது கீழே இருந்த புத்தகத்தை அவதானித்தேன். 'இரு மகா கவிகள்? -கலாநிதி க. கைலாசபதி, என்றிருந்தது. நான் நினைத்தது சரிதான். இவள் இலக்கியத்தில் ஆழ்ந்த விருப்பம் கொண்டவள்தான் என்று தீர்மானித்துக் கொண்டேன்.
புத்தகத்தின் அட்டையைப் புரட்டினேன். 'பிரமிள்ா" என்ற பெயர் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று

Page 67
130 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தது. புத்தகத்தின் அடுத்த பக்கத்தை புரட்டிக்கொண்டே "உங்கள் பெயர் பிரமிளாவா?’ என்றேன்.
ஆமாம் என்று தலையசைத்த அவள் 'உங்கள் பெயர் என்ன?" என்ருள் தொடர்ந்து.
"இளங்கோ” என்றேன். 'ஓ! சிலப்பதிகாரம் எழு தியவரின் பெயரையே கொண்டிருக்கிறீர்களே" என்று. கூறிச் சிரித்தாள்.
நான் புத்தகத்தின் பக்கங்களைத் தட்டினேன். ஒரெ ழுத்தையாதல் படிக்க மனம் வரவில்லை. அவள் நான் செய்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
'உங்களுக்குச் சிங்களம் தெரியுமா?" எனத் திடீ ரென வினவினேன். அவள் சொன்னுள். "எனக்கு இலக்கியத்தில் ஆழ்ந்த பற்று. தமிழ் இலக்கியத்தைப் படித்துக்கொண்டிருந்த நான் தற்செயலாக ஒருநாள் வீடு" என்றதோர் கவிதையைப் படிக்க நேர்ந்தது. அந்த அருமையான கவிதையை ஒரு சிங்களக் கவிஞன் எழுதியிருந்தான். நான் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை யே படித்தேன். அன்றிலிருந்து நான் சிங்களம் படித்து சிங்கள இலக்கியங்களைப் படிப்பதென்று முடிவு செய் தேன். இன்று எனக்கு சிங்களம் பெருமளவு தெரியும் "
"அப்படியானுல் எனக்கு சிங்களம் படிக்க உதவு கிறீர்களா?" என்றேன் நான்.
அவள் பலத்துச் சிரித்தாள். "நாம் இப்போது றெயி லில்" என்ருள். தொடர்ந்து "இப்பிரயாணத்தில் நானும் நீங்களும் நண்பர்கள், பின் நான் யாரோ நீங்கள் யாரோ" என்று கூறி பெருமூச்சு விட்டாள்.

குப்பிழான் ஐ. சண்முகன் / 131
எனக்கு எங்கிருந்துதான் அவ்வளவு துணிவு வந்த தோ தெரியாது. நான் சொன்னேன். 'இந்த றெயில் பயணத்தில் சந்தித்த உன்னை, நான் என் வாழ்க்கைப் பயணத்திலேயே மறக்க முடியாது பிரமிளா; நீ என் மன தில் ஏதோ ஒரு விதத்தில் நீங்காத இடம் பிடித்து விட் டாய்'.
அவள் மெளனமாகச் சிரித்தாள். அவள் கண்களில் கண்ணிர்த் துளிகள் பளிச்சிட்டன. என்ன நினைத் தாளோ தெரியாது, என் மார்பில் முகத்தைப் புதைத்து அழுதாள். நான் அவள் தலையைக் கோதினேன்.
தாடிக்காரக் கிழவன் எங்களையே பார்த்துக் கொண்டி ருந்தான். மற்றவர்களை நான் கவனிக்கவில்லை.
றெயிலின் வேகம் குறைந்தது. தன் கண்ணிரைத் துடைத்துத் கொண்ட அவள் 'நான் இவ்வளவு நாளும் எதையோ 51 திர்பார்த்திருந்தேன், அது இங்கேதான் கிடைத்தது", என்று என் மார்பைத் தொட்டுக் காட்டி ணுள்.
பழையபடியே கலகலப்பாக அவர் மாறினுள். 'என் புத்தகத்தைத் தருவீர்களா? நான் இறங்கவேண்டிய ஸ்ரேசன் வந்து விட்டது."
நான் புத்தகத்தை மூடி அவளிடம் கொடுத்தேன். றெயில் நின்று விட்டது.
அவள் இறங்கி என்னைப் பார்த்துச் சொன்னுள். 'நீங்கள் சொன்னதுபோல இந்த றெயில் பயணத்தில் சந்தித்த உங்களை, இந்த வாழ்க்கைப் பயணத்திலேயே மறக்கமுடியாது. நான் எதிர் பார்த்ததை உங்களிடமே பெற்றேன். வாழ்க்கை என்பதே எதிர்பார்ப்புகளில் தானே தங்கியுள்ளது” அவள் கைகளை கூப்பி என்னி டம் விடைபெற்ருள்.

Page 68
132 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
அவளின் அழகிய உருவம் என் கண்களிலிருந்து மறைந்து கொண்டது. றெயில் சோகமயமான குரலெ டுத்து கூவிக்கொண்டு புறப்பட்டது. அவள் கைகளை அசைத்து விடை கொடுத்தது, கண்ணிரினுல் நனைந்தி ருந்த என் கண்களுக்கு மங்கலாகத் தென்பட்டது. நானும் பதிலுக்கு கைகளை அசைத்தேன்.
றெயில் நீண்ட தூரம் வந்துவிட்டது. உள்ளே கவ னத்தை திருப்பினேன், கூடைக்கார மீனவனும், குழந் தையை வைத்திருந்த இளம் தாயும், வாலிபனும் இறங்கி யிருந்தார்கள். தாடிக்கார கிழவன் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கண்களை வெளியே திருப்பினேன். மேகத்திரையி னுள்ளே மூன்றம் பிறைச்சந்திரன் உதயமாக எத்தனித்து கொண்டிருந்தான். 蓬
றெயில், தன் பயண இலக்கை* நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
(1968)

மெளன கீதம்
மின் விசிறிகள் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கின் றன. மின் விளக்குகளின் மஞ்சள் நிறமான வெளிச்சத் தில், அவற்றின் நிழல் கரும்பூதங்களாய் கூரையில் அசைகின்றன. ஏதோவொரு ஸ்வலிப்பான அழகு பெற் றது போன்ற அந்தச் சூழலில் - கலகலவென்று பேசிக் கொண்டிருக்கும் "ஒவ்வீஸ்' நண்பர்களின் குரலுக்கு அப்பால் மயங்குகின்ற மோகனமானதொரு மெளனகீத மாய், ஏதோவொரு உணர்ச்சி என் இதயத்தின் அடித் தளத்தில் பிறப்பதுபோன்ற அந்த இலயிப்பில், மூடியிருக் கின்ற கண்ணுடி ஜன்னலுக்கப்பால் பார்க்கின்றேன். ஒவ்வீசில்' எனது இடத்தில் இருந்தவாறே பார்க்கின் றேன்.
நெளிந்து, வளைந்து செல்கின்ற அந்த வீதிக்கப்பால், மேடும் பள்ளமுமாக ஒட்டு வீடுகளின் கூரைகள் தெரி கின்றன. வடகீழ் மூலையில் அருகருகாக இருக்கும் பிள்
gf fr---9

Page 69
134 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
ளையார் கோவில் கோபுரமும், மாதாகோவிலின் சிலுவை யும் ஏதோ தத்துவ உபதேசம் செய்வன போல் நிமிர்ந்து நிற்கின்றன. தூரத்தில் துறைமுகக் கம்பத்தில் அந்த மூன்று கொடிகளும் காற்றில் அசைந்துகொண்டே இருந் தன. ஒட்டு வீடுகளின் மத்தியில் ஒற்றை மரமாய் நின்ற தென்னை மரத்தின் பச்சை ஓலைகளும் அசைந்தன. துறை முகத்தில் நிற்கும் கப்பல் கொடிமரங்களின் நுனிகள் ஒட்டு வீடுகளுக்கு மேலாய்த் தெரிந்தன.
அந்த மெளனகீதத்தில் மனம் கிளுகிளுத்தது. எப் போதாவது அபூர்வமாக சங்கீதக்கச்சேரிகளில் கேட்கும் வயலினின் மெல்லிய-மனத்தை உருக்குகின்ற அந்த ஒலிபோல, நாத சக்திகள் எல்லாம் ஒன்று திரண்டு அழு வதுபோல, கள்ளம் கபடமற்ற ஒரு கன்னிப்பெண் மெல் லிய குரலெடுத்து முனங்குவது போல.
வெளியேயே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பூமியை மூடியிருக்கும் மேகக் கூட்டங்களால் அரை யிருட்டுக் கோலம்; மெல்லிய தூறலாய் மழை விழுந்து கொண்டு இருக்கிறது. தூரத்தே சினிமாத் தியேட்டரின் சிவப்பு வெளிச்சத்தில் அதன் பேர் பளபளக்கிறது. ருேட்டில் கண்ணுக்கு எட்டிய வளைவில் சிவப்புச்சேலை கட்டி மொட்டாக்குப்போட்ட நடுத்தரவயதுப் பெண் ணுெருத்தி விரைந்து கொண்டிருந்தாள்.
கண்ணை மூடிக்கொண்டே என்னுள்ளே பார்க்கின் றேன். மனம் எதற்கோ ஏங்குவதுபோலத் தவிக்கிறது. இந்த உலக வாழ்க்கையில் விரக்தி வந்தமாதிரி, உலகத் தையே துறந்து விடவேண்டுமென்ற உத்வேகம் வந்த மாதிரி, திடீரென்று சாவு வந்தால் புன்சிரிப்புடன் அதை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறமாதிரி. பச்சை, சிவப்பு, நீல, மஞ்சள் வர்ணங்கள் சுழல்கிற மாதிரி. அந்த நிறங்

குப்பிழான் ஐ. சண்முகன் / 135
களுக்கும் அந்த மெளன கீதத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறமாதிரி. அந்த மெளனகீதம் மஞ்சள் நிறமான மாதிரி. ஐயோ!. நான் கண்களைத் திற்க்கின்றேன்.
அபூர்வமான அழகுடன் உலகம் ஜன்னலுக்கப்பால் பரந்து கிடக்கிறது. அரையிருளில் அமிழ்ந்திருந்த உலகத்தில் மெல்லிய தூறலாய் மழை விழுந்து கொண்டி ருந்தது. லூயிபாஸ்ரர்" என்ற விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூலில், அவன் முதன் முதல் கல்லூ ரிக்குப் படிக்கப் போகக் கோச்வண்டியில் ஏறியபோது இருந்த தழல் வர்ணிக்கப்பட்டிருப்பது போன்று; அப் போதும் - நான் ஜன்னலால் வெளியே பார்க்கும் போதும் உலகம் இருந்தது. இயற்கை அழும்போது தன் இலட்சியத்தின் மாருதப்பிடியுடன் புறப்பட்ட அவன் விஞ்ஞானியானுன்; நானுே.?
நானும் இயற்கையுடன் அழுகின்றேனு?
துன்பப்படுகின்ற உள்ளங்கள் அழுகின்றனவா? அப்போ, உலகமும் துன்பத்தில் ஆழ்ந்து கிடக்கின்றதா? நானும் துன்பப்படுகின்றேனு? அப்படியாகில், துன்பம் மோகனமானதா? மனுேரம்மியமானதா? விவரிக்க முடி யாத தவிப்பை ஏற்படுத்துமா? இறுதியில் . இறுதியில். அமைதியை, ஆனந்தத்தை அளிக்குமா? இயற்கை அழுதால் பின்பு உலகம் செழிக்குமா ?
திடீரென்று ஒரு மின்னல்; உலகம் வெளித்து மீண் டும் இருள்கின்றது. இருள் ஒளி; துன்பம்-இன்பம்; புயல்-அமைதி; பச்சை-சிகப்பு-நீலம்-மஞ்சள்; ஒன் நின்றி ஒன்றில்லை. ஒன்றிலே ஒன்று தங்கியிருக்கிறதா?
நான் அழுகிறேன்; நான் சிரிக்கிறேன்; நான் துன்பப் படுகிறேன்; நான் ஆனந்தமடைகிறேன்;

Page 70
136 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
வாழ்க்கை இருள்; ஒளி; துன்பம்; இன்பம்.
மெளனத்தில் மெளனமான அந்த மெளனத்தைக் கிழித்துக்கொண்டு மாதாகோயில் மணி ஒலித்தது. அந்த ஒலி பரவி ரீங்காரித்தது. ரீங்காரித்து, ரீங்காரித்து.என் காதில் இனிப்பதுபோல.
அந்த மெளனகீதம் அற்புதமானதொரு ராகக் குழை வுடன் இதயத்தை உருக்கி ஒலிப்பதுபோல எனக்குக்கேட் டது. எனக்குக் கண்ணிர் அரும்பிற்று. சிலப்பதிகாரத்தில் மாதவியும், கோவலனும் வாசித்த கானல்வரிப் பாட லினுல் ஏற்பட்ட சோகமான விளைவும் அதன் அனுபவங் களும் போல எனக்கும்...எனக்கும்.
நான் மீண்டும் கண்களை மூடிக்கொள்கிறேன்.
அந்தத் தளுக்கு நடையுடன் ‘என்னதான் நடந்தா லும் அச்சமில்லை’ என்ற அந்தக் கைவீச்சலுடன் அவள் வந்து சிரிக்கிறள். என் வாழ்க்கைப் பயணத்தில் எப் போதோ குறுக்கிட்டு நீங்காது நிலைத்துவிட்ட அவளுக் கும், அந்த மெளனகீதத்திற்கும் நிச்சயமாகத் தொடர்பு இருக்கத்தான் வேண்டும்.
அப்போதும் இப்படி ஒரு நாள்.
அமைதியான, அழகான, மனத்தை உருக்குகின்ற, மேகங்களால் தழப் பெற்ற, மழை தூறிக்கொண்டிருக் கின்ற ஒரு நாள். பல்கலைக்கழகத்துக் கலை மண்டபத்துக் கூரை போட்ட முன்றலில் மழைக்கு ஒதுங்கி, பஸ்சிற் காகக் காத்து நிற்கின்றேன். அவளும் நிற்கின்றள்; சிலை மாதிரி நிற்கின்றள்; மஞ்சள் சேலை கட்டிக்கொண்டு மஞ்சள் நிறத்தவளாய், மஞ்சள் மயமாய், ஜோதியாய் என் கண்களுக்குப் பளிச்சிடுகிருள். மெல்லிய குரலில் சோக மான ஒரு சினிமாப்பாட்டை முணுமுணுத்துத் கொண்டு கொடிபோல நெழிந்து சாய்ந்து நிற்கிருள்.

குப்பிழான் ஐ. சண்முகன் / 137
கணங்கள் கரைகின்றன; நிமிஷங்கள் கரைகின்றன; மணித்தியாலங்கள் பிறக்கின்றன. கண்களும் கலந்த மாதிரி.
பஸ் வருகின்றது; இருவரும் ஏறுகின்றேம், ஒருவர் பின் ஒருவராக ஏறுகின்றேம். எனக்குப் பின்னல் அவள் ஏறுகின்றள்.
நான் ‘ரிக்கற்’ எடுக்கின்றேன்; அவளுக்கும் எனக்கு மாக எடுக்கின்றேன். அவள் மெதுவாகப் புன்னகைத் தாள், "நன்றி” என்ருள் மெல்லிய குரலில்; "பரவாயில்லை" என்றேன் நான்.
இது முதல் அறிமுகம்.
என் மனதில் அவளின் கோலம் பதிந்து விட்டது. ஜெகஜோதியாய் மினுங்கும் மஞ்சள் நிறத்தில் அவள் என்னுள்ளே நின்று முறுவலிப்பாள். மெல்லிய, சோக மான அந்தச் சினிமாப்பாடல் மெட்டு மெளன கீதமாய்.
வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை மயக்குகின்ற அனுபவங்கள்
பிறகு.
பிறகென்ன?
நானும் அவளும் இணையானுேம். ஒருவருள் ஒருவர் கலந்து ஒருவரானுேம்-ஏகமானுேம்,
அந்த மெளனகீதத்தின் துன்பமான மயக்கில், நான் நன்றக அடிமனத்தைத் துருவிப் பார்க்கின்றேன். ஆf
حمر
ஒருவருள் ஒருவர் கலந்த நிலையிலே வாழ்ந்தோம். அப்படி ஒரு வாழ்க்கை. கவலைகளும், துன்பங்களும் இல்லாத மோகனமானதொரு வாழ்க்கை-அதைவிட்ட பரலோக சுவர்க்கம் இருக்குமென்று நினைக்க முடியாத வாழ்க்கை.

Page 71
138 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
பச்சை போர்த்த மலையடிவாரங்கள், சலசலத்து நெளிந்தோடும் மலையருவிகள், பூக்களாய் பூத்துக் குலுங் கும் மலர் மரங்கள்-புல் பரந்த பூமிகள்; அறிவுப் பெட்ட கமாக அடுக்கடுக்கான மாடிகள் கொண்ட நூல் நிலையம். விரிவுரை மண்டபங்கள். எங்கும் அவளும் நானும்
இணையாய், இணையாய், இணையாய்.
நான் சொல்வேன் "ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதுதான் வாழ்க்கையென்று. வாழ்க்கையை வெறுப் பதெல்லாம் பொய். வாழ்க்கையை வெறுக்கத் தூண்டும் இலக்கியங்களும் பொய். ‘வாழ்வாவது மாயம் என்ற வா தாட்டம் எல்லாம் பொய். வாழ்க்கைதான் உண்மை அது தான் நிசம்; அதுதான் சுவர்க்கம். மஞ்சள்-சிகப்பு -நீலம்-பச்சை வர்ண பேதங்கள் போல, இன்பம்-துன் பம்-கவலை களிப்புக் கொண்டதுதான் வாழ்க்கை”
அதன் மகத்தான அனுபவங்கள்.
ஆணும் பெண்ணும் இணைவதற்கு குலம், கோத்திரம் அழகு, சாதகப் பொருத்தம் ஒன்றும் வேண்டாம்; அன்பு வேண்டும். அன்புதான் குலம்-அன்புதான் அழகுஅன்புதான் பொருத்தம்.
நான் அவள் மீது அன்பு கொண்டேன்; அவள் என் மீது அன்பு கொண்டாள். இணைந்தோம். இறுகினுேம், நான் அழகனல்ல, அவள் அழகி. அவளுக்கு நான் அழ கனம். என்னைவிட வேறெருவரும் அழகில்லையாம். நான் சிரித்தேன். அன்பு என்னவென்று புரிந்தது.
நான் கண்ணை மூடியவாறே இருக்கின்றேன். அந்த மெளனகீதம் என்னை என்னவோ செய்கிறது.
ஒரு நாள்.
எனக்கும் அவளுக்கும் ஊடல்.

குப்பிழான் ஐ. சண்முகன் / 189
நூல் நிலையத்தில், ஆங்கிலக்கவிஞன் கீட்சின் நூலொன்றைப் பிரித்துப் படித்தபடி இருக்கின்றேன். அவள் வந்து கெஞ்சுகிருள்-மன்றடுகிருள், நான் மசிய வில்லை. அவள் என்னருகிலிருந்து மெதுவாக மூணு முணுக்கிருள். நாதசக்திகளெல்லாம் அழுவதுபோன்ற மெல்லிய சோககீதமாய்.
நான் என்னை மறந்து அவளை அணைக்க முயல்கிறேன். அவள் சிரிக்கிருள்; வெண்கல மணியின் நாதமாய்-கலீர் கலீரென்று.
என்னைப் பொருத்தவரையில் அவளொரு இசை மேதை; கலாரசிகை. எத்தனையோ இயற்கையின் அற்பு தக் காட்சிகளை அவள் எனக்குக் காட்டி வியாக்கியானங் கள் செய்து இருக்கிருள். ருேட்டின் வடக்கே உயர்ந்த மலைச்சிகரத்தின் புகார் மூடிய கோலங்கள், காலை இளம் பரிதி வெளிச்சத்தில் பளிங்குக் கற்களாய் பளிச்சிடும் மலை அருவிகள், புல்நுனிகளில் மணிகளாய் மினுங்கும் பனித்துளிகள், இலைகளே இல்லாமல் பூத்துக்குலுங்கும் மலர்மரங்கள், நிசப்தமான வானத்து அந்தகாரத்தில் ஜோடி, ஜோடியாய் பறக்கும் பறவைகள்.
இதையெல்லாம் நாங்கள் தனிமையாக நின்று பார்த் திருக்கிருேம். எங்களை மறந்த நிலையில் ஒன்றயப் நின்று அவற்றில் கலந்து இலயித்திருக்கிறேம்; அவற்றுக்கு எங்களால் புரியக்கூடிய அர்த்தங்கள் செய்து மகிழ்ந்தி ருக்கிருேம்.
அவள் சொல்லுவாள் "நீங்கள் ஒரு கலைஞர்” என்று. நண்பர்கள் சொல்லுவார்கள் "உன் படைப்புச் சக்தி யால் எமது சமுதாய அவலங்களைச் சித்தரியாது, வாழ்க் கைப் போராட்டங்களை வர்ணிக்காது வெறுமனே இயற் கை, காதல், தனி மனிதமன உணர்ச்சிகள் என்று உழன்று கொண்டிருக்கிறயே" என்று.

Page 72
140 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
எனது கதைகள், கவிதைகள் அற்புதமாய் இருக் கின்றனவென்று அவள் பாராட்டுவாள். நான் நண்பர் கள் கூறும் குறைகளைக் கூறுவேன். அவள் வானத்துப் பறவைகளைக் காட்டிக் கேட்பாள், "அவைகளுக்கு வாழ்க்கைப் போராட்டமில்லையா - பசியில்லையா - எவ் வளவு ஆனந்தமாகப் பாடி இயற்கையை அனுபவித்துக் கொண்டு வாழ்கின்றன. வாழ்க்கையிருக்குமட்டும் வாழ்க்கைப் போராட்டமும் இருக்குமென்றும்" அவள் கூறுவாள். ‘லளிதகலைகளினுல் மட்டுமே வாழ்க்கையில் எம்மை மறந்த ஆனந்தத்தை அனுபவிக்கலாம்" என் பாள் அவள்,
நான் தலையசைப்பேன். மனப்பூர்வமாக தலையசைப் பேன். வாழ்க்கை, கலை, இலக்கியம் எல்லாவற்றிலும் என் கருத்துக்களும் அவள் கருத்துக்களும் ஒன்றே. அத ற்ைபோலும் நாம் எம்மை மறந்து பரிபூரணமாக ஒரு வரில் ஒருவர் கலக்க முடிந்தது. ஆணும் பெண்ணும் இணைய அன்பு இருந்தால் மட்டும் போதாது. மனப் பொருத்தமும் வேண்டும் தான். இருவர் மனத்தினல், மன உணர்வுகளினல்-அதனுல் உயிரினுல் கலப்பதுதான் உண்மையான வாழ்க்கை.
மனித வாழ்க்கையின் மன உணர்ச்சிகள், துழல் பாதிப்புகள், அவற்றின் விளைவுகள் என்பனவற்றைப் பற்றி தீவிரமாகச் சிந்தித்து ஒரு கவிதை எழுதியிருத்தேன். "வாழ்க்கையின் மூச்சுக் காற்று" என்ற மகுடத்தில் எழு திய அக்கவிதையை, "வாழ்க்கை என்பது கனவின் தொகுதிகள்' என்ற முத்தாய்ப்புடன் முடித்து வைத் தேன்.
அவள் அக்கவிதையைப் பார்த்தாள். அவள் கண் கள் பரவசத்தில் மின்னின. "வாழ்க்கை என்பதே எத் தனை எத்தனையோ கனவுகளின் தொகுதிகள்தான்” என் முள். "லைவ் இஸ் மாஸ் ஒவ் றீம்ஸ்" என்று அந்த இறுதி

குப்பிழான் ஐ.சண்முகன் / 141
வரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் துள்ளினுள். என்னை அளவுக்கு மீறிப் புகழ்ந்தாள்.
"இந்தக் கவிதையை நான் மட்டும் எழுதவில்லை; என்னுடன் கலந்த நீயுந்தான் எழுதினுய்; உன்னுடன் கலந்த அனுபவங்கள்தானேடி இந்தக் கவிதை” என் றேன்.
அவள் கன்னத்தில் செம்மை பரவ முறுவலித்தாள்.
ஏனுே, எனக்கு முதன் முதலில் அவளைச் சந்தித்த போது மனதில் பதிந்த அந்த மஞ்சள் நிறமும் அந்தச் சோகமான பாடல் மெட்டும் நினைவில் தட்டின.
நான் கண்களை மூடியபடியே இருக்கிறேன். மின் விசிறிகளின் வீர், வீர் சத்தம் காதில் விழுகிறது.
இந்த உலகின் ஊனக் கண்களுக்கு, நாங்கள் ஒருவ ரைவிட்டு ஒருவர் பிரிந்தோம். அப்போதும் உலகம் அரை யிருட்டில் ஆழ்ந்திருந்தது. மழை தூறிக்கொண்டிருந்தது. அவள் மஞ்சள் சேலை கட்டியிருந்தாள் ; அந்தப் பாடலை முணு முணுத்துக் கொண்டிருந்தாள். கரிய புகையைக் கக்கிக் கொண்டு புகையிரதம் வந்தது. நான்தான் அவளை வழியனுப்பி வைத்தேன். அவள் அழவில்லை. நானும் அழவில்லை. நாங்கள் அழக் காரணம் இருக்கவில்லை. ஏன் நாங்கள் அழவேண்டும்? எங்களுக்குத் துன்பம் வரவில்லை. துன்பம் வந்தாலும் அழவேண்டுமென்று நியதியிருக்கிறதா என்ன?
நான் உண்மையில் ஒருமுறை அழுதிருக்கிறேன். அவளும் அழுதிருக்கிருள். பஸ்சில் அறிமுகமானதின் பின், முதன் முதல் நாங்கள் இருவரும் பூந்தோட்டத் தில் ஒன்ருகச் சந்தித்தபோது-என்னை அவளும் அவளை நானும் புரிந்தபோது-நாங்கள் ஒருவரில் ஒருவராய்க் கலந்தபோது - அப்போது நாங்கள் அழுதிருக்கின்றேம்.

Page 73
142 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
எதற்காகவோ அழவேணும் போல இருந்தது. அழு தோம்; அந்தத் தவிப்பு தீருமட்டும் அழுதோம்.
நாங்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துவிட்டதாக எல்லோரும் சொல்கிறர்கள். எனக்கு அதில் நம்பிக்கை யில்லை. நாங்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரியவில்லை. எங்களைப் பிரிக்க ஒருவராலும் முடியாது. நாங்கள் அம ரத்துவமான காதலர்கள், என்னுள் அவள் இருக்கிருள் அவளுள் நான் இருப்பேன்; நிச்சயமாக இருப்பேன்.
நாங்கள் புற வாழ்வில் ஒன்றக இருக்க முடியா தென்று அறிந்தபோது-இந்தச் சமுதாயத்தின் கட்டுப் பாடுகளை மீற முடியாது என்று உணர்ந்தபோது நாங் கள் அதை எதிர்த்துப் புரட்சி செய்யவில்லை. எங்களுக்கு புரட்சி செய்ய வலுவில்லை. நாங்கள் புரட்சிக்காரர்களல்ல நாங்கள் கலைஞர்கள் .
அப்போது அவள் சொன்னுள், 'நாங்கள் ஒன்ற கவே இணைந்து வாழ்வோம். என் மனதில் நீதான் என் றும் வாழ்வாய்; சமுதாயம் எங்களைப் பழிவாங்க முடி யாது. என் ஆத்மா என்றும் உன்னையே நாடி நிற்கும்; என் உடலை சமுதாயம் என்ன செய்தாலும் செய்யட் டும்; என் உயிருள்ள வரையில், இந்த உலகின் எங்கோ மூலையில் மானசீகமாக உன்னுடனே ஒரு கற்புள்ள மனைவியாக நான் வாழ்வேன்."
அப்போதும் நான் அவளைப் பரிபூரணமாக புரிந்து கொண்டேன். அப்போதும், என் கண்களில் நீர் வடிந்.
- لوت 25
புறவாழ்வில் அவள் யாருக்கோ மனைவியாக இருந்
தாலும், உண்மையில் என் மனைவியாகத்தான் அவள் என்றும் இருப்பாள்.

குப்பிழான் ஐ. சண்முகன் / 143
நானும் அவள் கணவனுகவே இருப்பேன்; உலகை மூடிய அரையிருட்டு, தூறும் மழை, மஞ்சள் நிறம், மெளனகீதம்.
"என்ன தம்பி நித்திரையோ’ என்ற குரல் கேட்கிறது.
கண்ணை விழித்துப் பார்க்கிறேன். கடிகாரம் நாலரை மணியைக் காட்டுகிறது.
سمعیہ
ஜன்னலுக்கப்பால் வெளியே பார்க்கிறேன்.
மழை தூறிக்கொண்டிருக்கிறது. உலகம் விரிந்து கிடக்கிறது. மனதில் மெளனகீதம் ஒலிக்கிறது. பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள்.
(1969)
OOO

Page 74
வேட்டைத் திருவிழா
"மெய்யடியார்களே."
ஒலிபெருக்கியினூடாக வந்த அந்தக் கம்பீரமான குரலேக் கேட்ட கூட்டம் ஒரு கணம் ஸ்தம்பித்தது. தங் களில் யாரும் மெய்யடியார்களல்ல என்று சொல்வது போல, மீண்டும் பழைய பரபரப்பு அங்கு மேலோங்கி நின்றது. குழந்தைகள் கும்மாளமடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் தேர்த்திருவிழாவுக்கு வரமுடியுமோ வென நாட்கணக்குப் பார்த்துக் கொண் டும், அடுத்தவளின் சேலை, நகை, கண்ணுேட்டம், ஒய் யாரம் என்பனவற்றைப் பற்றி சல்லாபித்துச் சிரித்துக் கொண்டும் நின்றர்கள். கோவிலின் தெற்குப்புற அரச மரநிழலிலும், அதற்குக்கிழக்கே நின்ற பூவரசமர நிழலி லும் ஒதுங்கி நின்ற-நகரிலே உத்தியோகம் பார்க்கிறதிருவிழாவுக்காக லீவில் ஊருக்கு வந்திருந்த 'வெள்ளை வேட்டி கைக்கடிகார மனிதர்கள்’-நகரின் அரசியல்நிலை பற்றியும் மந்திரிமார்கள் வைத்திருக்கிற இரகசியத் திட் டங்கள் பற்றியும், ஆட்சிப்போக்கிலுள்ள 'மாபெரும்"

குப்பிழான் ஐ. சண்முகன் I 145
குறைகளைப்பற்றியும், ‘எல்லாம் தெரிந்தவர்களாக" மற்றவர்களை நம்பச் செய்யப் பிரயத்தனப்பட்டுக் கொண் டிருந்தார்கள். அவர்கள் சொல்பவற்றையெல்லாம் வேத வாக்காகச் சிலர் நம்பித் தலையாட்டிக் கொண்டிருந் தார்கள். கிராமத்துப் பக்திமான்கள் சிலர் அங்குமிங்கும் ஒடி அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
"எல்லாம் வல்ல எங்கள் பெருமான் வேட்டைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கின்றர். அழகிய குதிரைவாகனத் தில் அவர் பவனி வரப்போகிறர். அந்த அழகுக்காட்சி யைக் காணத் தயாராகுங்கள். உங்கள் மனத்திலுள்ள குறைகளை, வேதனைகளை அவனிடம் முறையிட்டு அவற் றை நிவர்த்தி செய்துகொள்ளுங்கள்.”
C "வேட்டைக்குக் கிளம்பி. பவனி வரப்போகின்ற
இறைவனிடம் தங்கள் குறைகளை *முறையிட்டு” அவற்றை நிவர்த்திக்க அடியார்கள் தயாரானர்கள்.
இறைவன் குதிரைவாகனத்தில் ஆரோகணித்து எழுந் தருளினன். அவனை வண்ண வண்ண மலர்மாலை களிஞலும் துணிவகைகளினுலும் அலங்கரித்திருந்தனர். அவனின் ஒரு கரத்தில் ஒரு நீண்டதண்டைச் செருகியி ருந்தனர்; மறுகரத்தில் அம்புடன் கூடிய வில்லொன்றைச் செருகியிருந்தனர்; மறுகரத்தினுல் இறைவன் குதிரைக் கடி வாளத்தைப் பற்றியிருந்தான்.
இந்த இறைவனுக்கு ஐந்து கரங்கள்; அவன் விக் கினங்களைத் தீர்க்கும் விக்கினேஸ்வரன்; கணபதி, விநா யகன். அவன் சில வேளைகளில் கோபம் கொண்டிருப் பான்; சில வேளைகளில் மிகமிக மகிழ்ச்சியாய் உல்லாச மாய் இருப்பான்! சிலவேளைகளில் தூங்கிவழிந்து கொண் டிருப்பான்; சிலவேளைகளில் எதையுமே இலட்சியம் செய்யாத மோனநிலையில் இருப்பான். இப்போது அவன் சிறிது புன்னகை பூத்த மாதிரி எனக்குத் தெரிந்தது.

Page 75
146 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
அவனைப்பற்றியும் என்னைப்பற்றியும் நான் இன்னும் நிறையச் சொல்லவேண்டும். அவன் ஊரின் வடக்குப் பகுதியில் கோவில் கொண்டிருந்தான். எங்கள் கிராமத் தில் ஓரளவு குறிப்பிடக்கூடிய ஒரு பணக்காரனுக்கு இருக்கவேண்டிய அளவுக்கும் கூடுதலான சொத்துக் களைப் பெற்றிருந்தான். இப்போது, நானும் அவனும் கண்ட கண்ணில் குசலம் விசாரிக்கின்ற நண்பர்கள் போலத்தானிருக்கின்றேம். எந்த நேரமும் ஒரு செல்லப் பிள்ளைக்கு இருக்க வேண்டிய செருக்கோடுதான் அவனி ருந்தான். அவன் என்னிலும் பார்க்க எத்தனை எத்தனை யோ மடங்கு வயதில் பெரியவன். நான் பிறந்து வளரத் தொடங்கிய காலத்தில் எனக்கு அவனை என் பெற்றேர் அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது நான் அவனில் மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். உண்மையில், சொல் லப்போனுல் அவன் எனக்கு எதும் செய்துவிடுவானே என்ற பயங்கலந்த மதிப்பு வைத்திருந்தேன். சிறிது காலத்தில் எனது ஆசைகளையும், தேவைகளையும் நிறை வேற்றுவதற்காக அவனுடைய சகாயத்தை எதிர்பார்த்து அவனை மதித்துவந்தேன். சிலவேளைகளில் எனது தேவைகள் நிறைவேறதபோதும், எனது ஆசைகள் நிறைவேறுத நிராசைகளான போதும், மனங்கொதித்து அவனை அலட்சியப்படுத்தவும் பார்த்தேன். இப்போது எங்கள் உறவு ஒரு செளஜன்யமான நிலையிலுள்ளது. அவன் வீட்டில் நிகழும் விசேடங்களுக்குப் போக வேண்டுமென்ற அளவுக்கு அவனேடு இன்னும் கொஞ் சம் நெருங்கிய தொடர்பு கொள்ளவேண்டுமென்ற அளவுக்கு. அந்த உறவு நெருங்கவேண்டுமென்று எனக்கொரு ஆசை.
வேட்டை ஊர்வலம் கிளம்பிற்று.
குழந்தைகள் 'அரோகரா’ கோஷம் எழுப்பினர்; சிலர் வெற்றிக் கொடிகளை முன்னுல் பிடித்து துள்ளித்

குப்பிழான் ஐ. சண்முகன் ! 147
துள்ளிச் சென்றனர்; சிலர் தீப்பந்தங்களை உயரப்பிடித்து பல்வியமாக நடந்தனர்: பஜனைக் கோஷ்டி ஒன்று இறைவஃ01ப் பின் தொடர்ந்தது. ஆண்டவனின் அனுக் 1. ரகத்துக்கு ஆளாக விரும்பிய, வாட்ட சாட்டமான இஃாஞர்கள் ஒரு சிலர் ஒருவர் மாறி ஒருவராய் அவனைச் சுமந்தனர். பெண்கள் கூட்டம் வண்ணங்களாய் அ6)சந்தது.
இறைவன் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான். நானும் பரிவாரங்களில் ஒருவனுக அசைந்து நடந்தேன். அங்கங்கு நடந்த வேடிக்கை களைப் பார்த்துக் கொண்டு நடந்தேன். இடைக்கிடை ஞாபகம் வந்தவனக எழுந்தருளும் இறைவனின் திரு முகத்தைப் பார்த்துக் கொண்டு நடந்தேன். அவன் முகத்தில் அதே புன்னகை மாறது அப்படியே இருப்ப தாகத்தான் எனக்குப்பட்டது.
கோவிலின் தென்மேற்குப் புறத்தில் தோட்டக் கிணறுகளைச் சுற்றி நின்ற தென்னைமரங்களின் இடை வெளிகளுடாகவும், ஆங்காங்கேயிருந்த வீடுகளைச் சுற்றி சோலையாய்க் கவிந்திருந்த மரங்களினூடாகவும் மாஜலச் சூரியன் தன் கதிர்களைப் பரப்பி நின்றன். மெல்லிய காற்று உவர்ந்தது. இனியகீத அலைகளாம் நாதஸ்வர ஓசை மிதந்தது.
இயந்திர இயக்கமான நகரவாழ்வின் வேதனைகளால் மரத்த மனதை, கிராமியத்தின் உயிர்துடிக்கும் அழகு களில், இயக்கங்களில், அப்பாவித்தனங்களில் இலயிக்க விட்டு என்னை மறந்திருந்தேன் நான். பெண்கள் கூட் டத்தில், இறைவனை நோக்கி சிரசின் மேல் கரங்களைக் குவித்திருந்த அந்தப் பெண்ணின் முகம் திடீரென என் கண்களை உறுத்திற்று.

Page 76
148 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
பிறந்தது முதற்கொண்டு இருபது வயது இளைஞனுகும் வரை கிராமத்து அப்பாவி மனிதர்களுள் ஒருவனுகவே நான் வாழ்ந்தேன். அந்தச் சூழலிலேயே துள்ளி விளை யாடினேன்; அந்தச் சூழலிலேயே படித்தேன். அந்தச் சூழலிலேயே அந்தந்தப் பருவத்துக் கனவுகளும் கண் டேன். அந்தச் சூழலிலேயேதான் இன்பங்களையும் துன்பங்களையும் சுமக்கும் சுமைதாங்கியாக நான் வளர்ந் தேன். அப்போதெல்லாம் கூட நான் அந்தப் பெண்ணை எதிர்ப்படுவதுண்டு; பழகியதுண்டு; இரண்டொருமுறை அவளுடன் பேசிச் சிரித்த ஞாபகம்கூட உண்டு.
அப்போதெல்லாம் உறுத்தாத அவளின் அந்த முகம் சின்ன வாயினுாடாக வெளியே தெரியும் அந்த முன் வாய்ப்பற்களைக்கொண்ட அந்த முகம் என் கண்களை உறுத்தியது.
அவள் எளிமையான வெளிர்நிற கைத்தறிச் சேலை கட்டி இருந்தாள். என்னிலும் பார்க்க நாலைந்துவயது கூடியவளாகவிருந்தும், வயதின் முதிர்ச்சி தெரியாத இளம் பெண் போலவே அவள் காட்சிதந்தாள். கரங்களை தலை மேற்குவித்து, கண்களை மூடி தன்னைமறந்து நின்றள் அவள். அவள் கழுத்தில் தங்கத்தாலி மின்னிற்று.
எப்படி இவ்வளவு நிர்ச்சலனமாக-அமைதியாக இருக்க முடிகிறது அவளால்? எப்படித்தான் வாழ்வின் உயிர்த்துவமான இயக்கத்தோடு சங்கமிக்க முடிகிறது அவளால்?
டும் டும் டும்மென மேளம் முழங்கிற்று. வழியில் ஒரு வீட்டின் வாசலில், நிறைகுடம் வைத்திருந்தார்கள். அர்ச் சகர் மந்திர உச்சாடனம்செய்து ஆண்டவனுக்குத் தீபம் காட்டினர். பித்தளை நிறைகுடம் மாலை வெயிலின் இடை நுழைந்த கிரணங்கள் பட்டு மஞ்சளாய் மினுங்கிற்று. ஒருவர் இளைஞர்களின் தோளிலிருந்த, குதிரை வாகனத்

குப்பிழான் ஐ. சண்முகன் / 149
தில் ஏறி, சிவந்த பட்டொன்றை ஆண்டவனுக்குச் சாத் திருறர். 'அரோகரா’ கோஷம் முழங்கிற்று. அவளும் கைகூப்பி நின்றள்.
நான் இறைவனைப் பார்த்தேன். அவனின் அந்த மர்மப் புன்னகையே தெரிந்தது.
ஊர்வலம் அசைந்து நகர்ந்தது. ஒரு கார் போவதற் காக வீதியில் ஓர் ஒரமாக ஊர்வலத்தை ஒதுக்கச் சிலர் முனைந்தார்கள். இடுப்பில் கட்டிய சால்வையை அவிழ்த்து உதறி, 'பாதைக்கு அரோகரா, பாதைக்கு அரோகரா? என்று ஒருவர் சத்தமிட்டார். இன்னெருவர், வீதியோர மாயிருந்த வேலியில் ஒரு பூவரசங்கொம்பைப் பிடுங்கி, 'வழியை விடுங்கோடா' என்று குழந்தைகள் நின்ற பக்கமாக உறுமினுர்.
ஒருவிதமாக அந்தப்பெரிய கார் பவனியைக் கடந்து சென்றது. அதனுள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் முன் சிற்றில் அருகருகே அமர்ந்திருந்தனர். ஆணே காரைச் செலுத்தினன், பெண் பவனியை வேடிக்கை பார்த்து எதை எதையோ ஆணுக்குச் சொன்னுள்.
கோடை வரட்சியினல் காய்ந்திருந்த நிலத்திலிருந்து கார் சென்றதினுல் புழுதி கிளம்பிப் பரவிற்று.
"சரியான புழுதியப்பா'என்ருர் ஒருவர்.
"வேட்டை என்றல் புழுதி பறக்காதா" என்றர் மற்றவர்.
ஒரு கூட்டம் குலுங்கிச் சிரித்தது.
நான் எழுந்தருளும் இறைவனைப் பார்த்தேன். அவ னும் அப்படியேதான் சிரித்துக் கொண்டிருந்தான். வேட்
gmー10

Page 77
150 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
டைக்குப் புறப்பட்டவன் முகத்தில் வீரத்தைக் காணுேம். என்ன அர்த்தம் பொதிந்த பரிகாசமான சிரிப்பு!
வேட்டையாடும் இடத்திற்கு இன்னும் கொஞ்ச தூரமே இருந்தது. வீதியிலிருந்து இறங்கி, கிழக்கே சிறிது தூரத்தில் தெரியும் கோவிலுக்குப் பின்புறமுள்ள செம்மண் வெளியில் வேட்டைக்கான களம் அமைத்தி ருந்தார்கள். நிலத்தைக் கூட்டி துப்புரவு செய்து நீர் தெளித்துப் புனிதப் படுத்தி இருந்தார்கள், வெளியின் நடுவில், கொழுத்த கன்னி வாழை ஒன்றை நட்டு, உரப் படுத்தியிருந்தார்கள். வாழையைச் சுற்றிக் கிட்டத்தட்ட முப்பதுயார் விட்டத்தில் கூட்டம் வட்டமாகக் குழுமிற்று. இறைவன் வட்டமான கூட்டத்தின் நடுவில், பாயப் போகும் புலியாகத் தன் நெருங்கிய பரிவாரங்களுடன் நின்றன்.
நடப்பட்டிருந்த வாழையைச் சுற்றித் துரிதகதியில் அவனைச் சுமந்துகொண்டு ஓடினர்கள்; ஒருவிதமான பெருமித நடையில் மூன்று முறை அதனைச் சுற்றி வந்தார் கள். குதிரை முன்னங்கால்களைத் தூக்கித் தூக்கி ஆடிற்று. வயதான அர்ச்சகர், கூரான கத்தியைப் பிடித் துக் கொண்டு, வாழைக்கு அருகில் நின்றர். இறைவனை முன்னும் பின்னுமாகக் கொண்டு ஓடினர்கள்.
மூன்றம் முறையாக இறைவன் பின் சென்று முன் வருகையில், அர்ச்சகர் கத்தியை ஓங்கி வாழையை வெட் டினர்; அதேகதியில் மறுமுறையும் வெட்டினர்; முதல் வெட்டில் துண்டான மாதிரி வாழை அடுத்த வெட்டில் துண்டாகவில்லை. டும் டும் டும்மென மேளம் முழங்கிற்று; நாதஸ்வரம் கனராகத்தில் நீண்டொலித்தது; சங்கு ஓங் காரித்தது; கூட்டம் பக்தி கோஷம் எழுப்பிற்று.

குப்பிழான் ஐ சண்முகன் / 151
இறைவனுக்குப் பன்னீர் தெளிக்கப்பட்டது; வெட் டப்பட்ட வாழைத்துண்டுகளில் குங்குமத் திரவியங்க எரிட் டு நீர் ஊற்றப்பட்டது; தொடர்ந்து இறைவனுக்கு "பஞ்சாலாத்தி தீபம் காட்டப்பட்டது. வேட்டையாடப் பட்ட இரையின் ஒருபகுதி துணியில் பொதியாக குதிரை வாகனத்தின் முன்னங்காலொன்றில் கட்டப்பட்டது.
அந்த முகத்தில் எங்கிருந்து இந்தப் பிரகாசம் வந் தது.? அந்த முகம்.? நாலைந்து வருடங்களுக்கு முன் பெல்லாம் பாடசாலைக்குப் போகும் வழியில் எதிர்ப் பட்டு தத்தளிக்கும், அந்தச் சோகம் தோய்ந்த, வரண்ட, விரக்தியான முகம்..? நீல உடைகளின் பின்னணியில், மஞ்சளாய் அவள் தா லி மினுங் க, குங்குமப் பொட்டிட்ட நெற்றிமேடு சுருங்க அவள் புன்னகை பூத்தாள். அவள் இன்னமும் என்னை மறக்காதிருக்கின் றள். அவள் என்னை மறக்க முயலாமல் இருக்கின்றளோ அல்லது முடியாமலிருக்கிறளோ?
வேட்டை முடிந்து ஊர்வலம் கிளம்பிற்று.
உயிர்சுமந்த புள்ளிகள் பல்வேறு சுருதிபேதங்களாய் அசைந்தன.
எங்கிருந்து இந்தப் பேரமைதி கவிந்தது.1 எப்படி இந்தப் பரபரப்பு அவிந்தது.1
உணர்ச்சிகள் வடிந்து அடங்கிய பின்னெழும் அமை தியும் இது போன்றதா.!
உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் பின்னெழும் ஆழ்ந்த அமைதி பூரணத்துவமான அமைதி; அழகின்ஆத்மார்த்தமான கவித்துவம் நிரம்பிய அமைதி.!

Page 78
152 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
இதுதான பேரின்பம்! வாழ்க்கையின் சாரமே இதுதானு!
நான் இறைவனைப் பார்த்தேன். அவன் எல்லாம் தெரிந்தவனுக, அமைதியாக, மெல்லிய புன்னகை பூத் தான்.
அந்த இறைவனுக்கு ஐந்து கரங்கள்; அவன் விக்கி னங்களைத் தீர்க்கும் விக்கினேஸ்வரன்; கணபதி; விநாய கன்.
(1971)

தடங்கள்
வானம் கறுத்து இருண்டிருந்தது. காற்றுப் பலமாகச் சுற்றிச் சுழன்று அடித்தது. நீலக்கடலலைகள் மடிந்து வெண்ணுரை கக்கி கரையில் மோதித் திரும்பின.
அவனும், நந்தகுமாரும், பொன்னுத்துரையும் கடற் கரைத் தாழை மரமொன்றின் நிலம் நோக்கிச் சாய்ந்த கிளையில் அமர்ந்திருந்தனர். அவன் ஏதோ நினைவில் மனத்தைப் பறி கொடுத்த இலயிப்பில், மனத்தில் அடங் காது கட்டுமீறிக் கொப்பளிக்கும் குதூகலத்தில், வார்த்தை களில் சிறை பிடிக்க முடியாத அந்த உணர்ச்சிகளின் சுகானுபவத்தில் மூழ்கி ஏதேதோ இராகக் கோலங்களை மனத்துள் வரைந்து-அவற்றுக்கு ஒலி அர்த்தம் கொடுக் கும் முனைப்பில் எதை எதையோ முணுமுணுத்துக் கொண்டு - அந்த முணுமுணுப்பின் சுருதிபேதங்களில் மனத்தைச் சஞ்சரிக்க விட்டு அந்த சுருதிபேதங்களை தனது குதூகல உணர்ச்சிகளை - வார்த்தைகளில் சிறைப் பிடிக்க முடியாத அந்த உணர்ச்சிகளை அப்படியே அலா

Page 79
154 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
தியாக வெளிக் கொணர்கின்றன என நினைத்து, அந்த இன்பத்தில் மூழ்கியிருந்தான். அவன் சுற்றடலை மறந் திருந்தான். இசைமயமான தன் உணர்ச்சி வெளிப்பாடு களினலும் இயற்கையின் அழகுக் கோலங்களினலும் அவன் தன்னை மறந்து இயற்கையுடன் ஏகமாகி இருந் தான.
மலையில் பிறந்து கடலில் கலக்கும் நதியின் வாழ்க்கை வழியினை அவன் எண்ணிப் பார்த்தான். அதன் வழி யில் குறுக்கிடும் செங்குத்தான பள்ளங்களில், வைரத் தொங்கல்களாக அவை விழுந்து, வெள்ளி மணிகளாகச் சிதறி, மீண்டும் ஒருங்கிணைந்து ஓம் என்ற நாதமெழுப்பி ஓடும்; மலர் சுமக்கும் காடுகளில் சிறு குழந்தைகளாகச் சிரித்து அவை தவழும்; பாறைகளில் முட்டி மோதிச் சுழித்துப் பாயும்; கிராமங்களின் வயற்கால்களில் புகுந்து மெல்லிய நீர் வளையங்களாகத் துள்ளி விளையாடும்; சங் கமத் துறையில் இவ்வுலக பந்த பாசங்களேதுமற்ற யோகியைப் போல அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாது கடலோடு கலந்து ஏகமாகும்.
நதியின் உயிர்துடிக்கும் அந்த இயக்கங்களை இசைக் கோலங்களில் அவன் கற்பனைசெய்து பார்த்தான். அவன் மனத்தின் நாத அலை ஏற்ற இறக்க சுருதி பேதங்களில் நதி ஓடிற்று. நீர் வீழ்ச்சிகளாய் வீழ்ந்து நாதமெழுப்பிற்று. மலர் சுமந்து சிரித்திற்று. பாறைகளில் மோதி ஒலித் திற்று, வயல்களில் விளையாடிற்று, இறுதியில் கடலுடன் அமைதியாயிற்று. அவன் களிப்பில் மிதந்தான். ஆகா யத்தில் உயர உயரப் பறப்பது போல் உணர்ந்தான். உடல் லேசாகி விட்டமாதிரியும் - உணர்ச்சியேயில்லாத பஞ்சுப் பொதி போலவும் அவனுக்குப் பட்டது. உரத் துக் குரலெடுத்துப் பாடவேண்டும் போல அவனுக்குப் பட்டது. தாழம்புதர்களின் ஈரலிப்பான அந்தப் பச்சை யில் படுத்துப் புரள வேண்டும் போல அவனுக்குப்பட்

குப்பிழான் ஐ. சண்முகன் / 155
டது. அலை அடித்து வடிந்து செல்ல, வானத்தின் வண் னக் கோலங்களைப் பிரதிபலிக்கும் கடற்கரையின் பளிங்கு போன்ற ஈர மணலில் எழுந்து நின்று துள்ளித் துள்ளி ஆடவேண்டும் போல அவனுக்குப்பட்டது. இறு தியில் தலையைச் சுற்றி மயக்கம் வருவதாக அவன் உணர்ந்தான்.
தாழைமரக் கிளையைக் கரங்களினுல் இறுகப்பிடித்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான். தன் கவித் துவமான - ஆழமான அந்த மயக்கினின்றும் விடுபட்டு அவன் நண்பர்களைப் பார்த்தான், நந்தகுமார் ஏதோவோர் தமிழ் சஞ்சிகையின் கதையொன்றில் ஆழ்ந்திருந்தான். வலக்கையில் சஞ்சிகையை வைத்துக் கொண்டு, இடது கையால் தலையைக் கோதிக் கொண்டு தன்னை மறந்திருந் தான் அவன். அவன் முகத்தில் சாந்தம் ததும்பிற்று. அந்த நிலையில் அவன் மிக அழகாக இருந்தான். அவ னது கோடிட்டாற் போன்ற அந்த அரும்பு மீசை, அவன் முகத்திற்கு ஒரு தனிக்களையைக் கொடுத்துக் கொண் டிருந்தது.
பொன்னுத்துரை கிளையின் உயரமான பகுதியில் அமர்ந்திருந்தான். காலிரண்டையும் அந்தரத்தில் தொங்க விட்டு ஆட்டிக் கொண்டிருந்தான். ஒரு கையால் கிளை யைப் பிடித்துக்கொண்டு, வாடிவதங்கியிருந்த ஒரு தாழம் பூவை அவன் முகத்தருகில் வைத்து முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
கணங்கள் ஊர்ந்தன. கரையோரத் தண்டவாளத் தில் தெற்கு நோக்கி வண்டியொன்று விரைந்தது. மாலை நேரத்து மஞ்சள் வெய்யில், பச்சைத் தாழம் புதர்களில் படர்த்து பளபளத்தது; வெண்ணுரை கக்கும் அலைகளி னுாடாக மினுமினுத்தது; பருவத்தின் தலைவாயிலில் வந்து நிற்கும் பன்னிரண்டு பதின்மூன்று வயது மதிக்கத்தக்க

Page 80
156 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
சிறுமி ஒருத்தி அலைக்கரங்களின் போக்குக்கேற்ப துள் ளித் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவன் அந்த அழகுகளில் மயங்கினன். இந்தப் பிர பஞ்சத்தின் ஆத்மாவே இப்படியான அழகுக்கோலங்கள் தானென அவன் எண்ணினன். பொங்கும் புதுப்புன லாக- பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் நிறங்களாய்ச் சொரியும் மத்தாப்பின் வரவை ஜாலங்களாக- வசந்த காலத்து உயிர் துடிக்கும் பெரிய பூங்காவாக- மாலை நேரத்து வயல் வெளியின் பறவைக் கூட்டங்களாக அவன் மனதில் ஏதேதோ இசைக்கோலங்கள் மிதந்தன; மனத்தை வருடி இதம் கொடுத்தன; பூரித்து முணு முணுப்புகளாகச் சிதறின.
அவன் அவளை நினைத்துக் கொண்டான்; அவள் கடைக்கண் பார்வையின் குளுமையை நினைத்துக் கொண் டான்; அவள் நடையின் பாவத்தை நினைத்துக்கொண் டான்; அவள் புன்சிரிப்பின் மோகனத்தை நினைத்துக் கொண்டான்; நெஞ்சின் ஆழத்திலிருந்து பிறக்கும் அவள் குரலின் இனிமையான கம்பீரத்தை நினைத்துக் கொண் டான்; எல்லாருடனும் சகஜமாகப் பழகும் அந்த லாவண் யத்தை நினைத்துக் கொண்டான்.
அவன் உணர்ச்சிவசப்பட்டவனுக நண்பர்களைத் திரும்பிப் பார்த்து திடீரெனச் சொன்னுன்.
*கலைகளின் பிறப்பின் அடிப்படை அழகு இலயிப் புகள்தான்; அழகுகளின் வசீகரங்களே மனித மனங்களை கிறுகிறுக்கச்செய்து, உணர்ச்சி வசப்பட வைத்து, அவனை கலைக்கோலங்களை ஆக்கத் தூண்டுகின்றது. இதைப்பற்றி நீங்கள் எனன நினைக்கிறீர்கள்?
பொன்னுத்துரையின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பிற்று.

குப்பிழான் ஐ. சணமுகன் / 157
சஞ்சிகையில் பதிந்திருந்த கண்களைத் தூக்கி ஒரு கணம் தயங்கிய நந்தகுமார், தனது வலதுகை மோதிர விரலில் இருந்த தங்கமோதிரத்தை இடது கையால் கழற் றிக் கொண்டே சொன்னுன்.
*அழகுகள்தான் கலையின் அடிப்படை என்ற வாதத் தை ஏற்க முடியாது. மனித மனத்தின் உணர்ச்சிக் குமுறல்களும், கொந்தளிப்புகளும் சோகங்களும் கூட உயர்ந்த படைப்புகளின் கருப்பொருளாகியிருக்கின்றன தானே!"
அவன் இடைமறித்தான். 'உண்மைதான்; ஆனல் மனிதன் குதூகலமாக இருக்கும்போதுதான் ஆத்மார்த்த ரீதியாக அவனின் உணர்ச்சிகள் பொங்கிப் பிரவாகிக்கின் றன. ஆதிமனிதன் மகிழ்ச்சியாய் இருக்கும்போதுதான் கலைகளின் அடிப்படையைச் சமைத்திருப்பான். அபி நயம், இசை, ஓவியம், சிற்பம் என்கிற ஒவ்வொரு கலைக் கோலமும் ஏதோவோர் உணர்ச்சியின் வெளிப்பாடாகத் தானே அமைந்திருக்கும்; இப்போதும் அமைந்திருக் கின்றன".
"அதைத்தான் நானும் சொல்கிறேன்! அழகு இரசனை தான் கலைகளின் அடிப்படை அல்ல; மனிதனின் உணர்ச்சிகள் இன்பம், துன்பம், சோகம், சந்தோஷம் என்கின்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடு - அதாவது நவ ரச வெளிப்பாடே கலையின் அடிப்படை' என்ற நந்த குமார் தான் சொன்னவற்றின் அர்த்தத்தைப் பற்றி நினைத் துக்கொண்டே, சஞ்சிகையின் ஒற்றைகளை ஒவ்வொன் முகப் புரட்டினுன்.
அதுவரை மெளனமாக இருந்த பொன்னுத்துரை, கிளையினின்றும் இறங்கி, கால்களை நிலத்தில் பதித்து, கிளையில் சாய்ந்துகொண்டு, கைகளை நெஞ்சின் மேல்

Page 81
158 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
கட்டிக்கொண்டு, புன்னகை பூத்த வண்ணம் தன் கம்பீ ரமான குரலில் சொன்னன்.
'உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள்தான் கலை என்கி றிர்கள். சமுதாய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கலைப் படைப்புகளே உன்னதமானவை என்று நான் சொல் வேன். அவைதான் சமுதாய வளர்ச்சியைத் துரிதப்படுத் தும். அவைதான் அடக்குமுறைகளுக்குள்ளாகி அடிமை கள் போல இன்னலுறும் மனிதர்களைச் சிந்திக்க வைக்கும். சமுதாய சமத்துவம் காணும் முயற்சியில் அவர்களை ஊக்குவிக்கும். இன்றைய சமுதாய அமைப்பில் அடக்கு முறையால் அல்லலுறும் மனிதர்களின் அவல உணர்வு கள்தான், இன்றைய கலைப்படைப்புகளின் ஊடுபாவாக திகழ வேண்டுமென்பேன். வெறும் தனிமனித உணர்வு களையும், சோகங்களையும் கலைப்படைப்புகளில் கையாள் வதால் சமுதாய முனைப்புகள் திசைதிருப்பப்பட்டு பாழா கின்றன".
'இந்த வார்த்தை என்னுல் ஏற்க முடியாது. சமுதாய வளர்ச்சி என்னும்போது வெறும் உணவுக்கும்-உடைக்கு மான போராட்டங்களும், அவற்றின் வெற்றிகளும்தான் சமுதாய வளர்ச்சியாகாது; உணவையும், உடையையும், சுகபோகங்களையும் அனுபவித்து காலங்கழிக்கும் அந்த *வேடிக்கை தான் உன்னத வாழ்க்கையுமாகாது. வாழ்க் கைக்கு ஒர் அர்த்தம் இருக்க வேணும் நண்பனே. உண வும், உடையும் தேடுவதுதான் வாழ்க்கையின் அர்த்த மாகாது".
இருவரின் கருத்துக்களையும் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் நந்தகுமார். வட்ட நிலாவாக வரையப் பட்டிருந்த பெண்ணின் முக லாவண்யத்தை சஞ்சிகை யின் அட்டையில் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
கடலலைகள் ஓங்கரித்தன.

குப்பிழான் ஐ. சண்முகன் / 159
சமுதாயத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் கடல் கொந்தளிப்பதுமாதிரி, தார்மீக ஆவேசம் கொண்டுபேசும் பொன்னுத்துரை அன்று மிக அமைதியாகவே சொன் னன். குரலில் உறுதியும் ஒருவித நையாண்டியும் தொனிக்கச் சொன்னன். “உணவும் உடையும் மறுக்கப் படுகிற மனிதன் அதைப்பற்றித்தானே சிந்திக்க வேணும்; உணவிலும், உடையிலும் காணும் திருப்திதான் அவன் வாழ்வின் அர்த்தம். உணவில்லாவிட்டால் அவனுக்கு வாழ்க்கையே இல்லை,”
அவனும் அமைதியாக இருந்தான்; வலது காலினல் கீழேயிருந்த கருங்கல்லில் முண்டு கொடுத்துக் கொடுத்து கிளையை ஆட்டிக்கொண்டிருந்தான்; கடலில் அடி வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான். சிவப்புக் கோளமாக துரியன் கடலில் அஸ்தமிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கறுத்த மேகக் கூட்டங்கள் கலைந்துகொண்டிருந்தன. அவன் தனக்குள் சிந்தனையுள் மூழ்கியிருந்தான். இந்த வாழ்க்கையின் தாத்பரியம் என்னவாக இருக்கு மென அவன் எண்ணினுன். இந்த உலக சிருஷ்டி இரகசி யத்தின் புதிர்முடிச்சு என்னவாக இருக்குமென அவன் எண்ணி வியந்தான். "எத்தனை எத்தனை ஜீவராசிகள்; எத்தனை புல் பூண்டுகள்; எத்தனை மரங்கள்; எத்தனை செடி கொடிகள்; எத்தனை வண்ண வண்ண மலர்கள்; எத்தனை ஜந்துக்கள்; எத்தனை பறவைகள்; எத்தனை வித மான மனிதர்கள்; எத்தனை அழகுகள்’ என்றெல்லாம் எண்ணி அவன் ஆச்சரியப்பட்டான்.
“இந்த வாழ்க்கையே ஒரு போராட்டந்தான். வலிய தற்கும் மெலியதற்குமான போராட்டத்தில்தான் இவ் வுலக வாழ்வே இயங்குகிறது. சிருஷ்டியே வலியதும் மெலியதுமாகப் படைத்துப்போராட வைத்து வேடிக்கை

Page 82
160 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
பார்க்கின்றது. சில சந்தர்ப்பங்களில் ஒன்றன் அழிவில் தான் மற்றதன் வாழ்வே தங்கியிருக்கின்றது. அழிவுகள் சோகங்களாகும் போது, இந்த உலகமே ஒருவித சோகச் சாயை பெற்றுத்தானே மிளிர்கின்றது" இப்படியெல்லாம் அவன் எண்ணினன்.
பொன்னுத்துரை கைகளை மார்பில் கட்டிக்கொண்டு மரக்கிளையில் சாய்ந்தபடியே ஏதோ யோசனையில் மூழ்கி யிருந்தான். நந்தகுமார் கால்களை அகல விரித்து இருந்து கொண்டு, சஞ்சிகையைச் சுருட்டி வலது கையில் வைத் துக் கொண்டு, கால்களுக்கிடையில் குனிந்து நிலத்தில் எதையோ தேடுவதுபோல வெறித்துப் பார்த்துக் கொண் டிருந்தான்.
அவன் அவர்களைப் பார்த்து மெல்லிய குரலில் சொன் சூனை.
"வலியவருக்கும் மெலியவருக்கும் இடையிலும், இயற் கைக்கும் மனிதருக்குமிடையிலும் நிகழும் போராட்டங் களே சமூக வாழ்வின் நாகரீக வளர்ச்சிப் பரிணமத்தை இயக்குகின்றன. அது தவிர்க்கமுடியாததும் உண்மை 497னதும் தான்; உணவும், உடையும் குறைந்தபட்ச ாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளும் இல்லாமல் எத்த னேயோ பேர் ம்ற்றவர்களால் சுரண்டப்படுகின்றர்கள் தான்; அவை பற்றிய கலைப்படைப்புகள் அவர்களைச் சிந்திக்கவைத்து அவர்கள் விமோசனத்திற்கு வழிவகுக் கலாம்தான்; ஆனல், அதற்காக அதையே மட்டும்தான் கலைப்படைப்புகளில் கையாளவேண்டும் என்று இல்லைத் தானே. இந்த உலக சிருஷ்டியின் அழகுகளையும், சோகங்களையும், இன்பதுன்பங்களையும் ‘கலை’களாக்க லாம்தானே!"
ஒரு கணம் தயங்கிய அவன் மீண்டும் தன் மெது வான - பெண்மையின் இலயம் நிறைந்த குரலில் சொன்

குப்பிழான் ஐ. சண்முகன் / 161
'புற வாழ்வுப் போராட்டங்கள் தவிர்க்க முடியா தவை; கலைப்படைப்புகளில் அது கையாளப்படத் தான் வேண்டும். அதற்காக மனம் பற்றிய அகவாழ்வு அம்சங்களைக் கலையாக்கக் கூடாது என்று வாதிடக் கூடாது. மனிதன் இயற்கையிடத்துக் காணும் அழகு களும், இயற்கையாகவே அங்கவீனர்களாகப் பிறந்து விட்ட பிறவிகளில் கொள்ளும் இறக்கங்களும், அழிவு களில் காணுகின்ற ஆத்மார்த்தமான சோகங்களும், அழகுகளை அனுபவிக்க வேண்டுமென்ற ஏக்கங்களும் அவற்றில் காணும் தவிப்புகளும் மகத்தான ஏமாற்றங் களும் அருமையான - நித்தியமான கலைச் சிருஷ்டிகளா கின்றன. ஆகிக் கொண்டுமிருக்கின்றன, அழிந்த நாக ரிக எச்சங்களிலும் இதைத்தானே நாம் காண்கின்றேம்."
அவர்கள் ஒன்றும் கூறது மெளனமாக இருந்தனர்.
கணங்கள் ஊர்ந்தன.
அவர்களிடையே மெளனம் கனத்தது.
அவன் அவர்கள் ஏதும் கூறுவார்கள் என்று எதிர் பார்த்தான். அவர்கள் முகச்சாடைகளிலிருந்து அவர்கள் ஏதும் கூறமாட்டார்களென்று நினைத்த அவன் -வடகீழ்த் திசையில் தாழம் கிளைகளினூடே இடைவெளியினூடாக வானவெளியை வெறித்தான்.
ஸ்ரேஷனின் தென்புற மதிலோடு நிமிர்ந்து நின்ற ஒற்றைத் தூணில், உயரத்தில் மின்விளக்கு மஞ்சளாய் அழுது கொண்டிருந்தது. தூணிலிருந்து புறப்பட்டு மின் விளக்கைத் தாங்கி நிற்கும் கைகாட்டி போன்ற இரும்புக் கம்பியில் இரண்டு காகங்கள் உட்கார்ந்திருந்தன. அவற்றின் பின்னணியில் ஸ்ரேஷன் கட்டடத்தில், கிழக்கு மேற்காக ஓடிய முகட்டின் இருபுறங்களிலும்,

Page 83
162 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
பழையபாணிக் கட்டட முறையைப் பிரதிபலிக்கும்
இரு கூர்நுனிக் கம்பங்கள் நிமிர்ந்து நின்றன. அவன் கண்களை மூடிக்கொண்டான். வேதனையின் சாரமெலாம் இழைத்த ஏதோ ராகம்
அவன் வாயிலிருந்து முணுமுணுப்புகளாகக் கிளம்பின.
இந்தச் சமுதாய வாழ்வின் அவலங்களை அவன் எண்ணினுன் . ஒழுக்கங்கள், அறங்கள் தர்மங்கள், மதங் கள், நம்பிக்கைகள் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே பிதற்றிக் கொண்டே - கூக்குரலிட்டுக் கொண்டே, இந்தச் சமுதாயம் ஒழுக்கவீனமாகவும், அறங்கள்-தர்மங்களைப் புறக்கணித்துக் கொண்டும் மனிதனின் தார்மீக நம்பிக்கைகளைச் சிதைத்துக்கொண் டுந்தானே வாழ்கின்றது. சமுதாயத்தின் பெரும்பகுதி ஒழுக்கவீனங்கள் விளையும் விளை நிலமாகவும் அறங் கள்-தர்மங்கள்-நம்பிக்கைகள் பலியிடப் படும் பலிக் களமாகவும் தானே மாறியிருக்கிறது. அதோடு. இவை பற்றிய பல்லவிகள். s
ஒழுக்கவீனம் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒழுக்கவீனம் செய்யலாம்; அறங்கள், தர்மங்கள், நம் பிக்கைகளைச் சிதைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு சிதைக்கலாம். அவை முன்னதிலும் பார்க்க மேலானவை. இவ்வாறெல்லாம் அவன் எண்ணினன்.
உண்மையில் அவளின் அழகில், அது தந்த மோகனத் தில், அந்த நளினத்தில் அவன் மயங்கித்தானிருந்தான். அவளிலும் அவன் நண்பர்களிலும் அவன் நம்பிக்கை வைத்திருந்தான். 'நானும் நீயுமொன்று; என் வாழ்வின் சாரமே உன்னேடு வாழ்வதில்தான் இருக்கிறது" என்று அவள் சொன்னதின் பின்னல் அவளும் அவன் நண்பர் களும் பழகுவதை அவன் பூரணமாக அனுமதித்துத் தானிருந்தான்.

குப்பிழான் ஐ. சண்முகன் / 163
அவள் என்னிடம் சொல்லியிருக்கலாம்.
'உன்னிலும் பார்க்க உன் நண்பன்தான் எனக்குப் பிடித்தமானவனுயிருக்கிறன்' என்று;
அவன் எனக்கு உணர்த்தி இருக்கலாம்;
'மக்சான் அவள் என்னை விரும்புகிருள்-நானும் தான் அவளை விரும்புகிறேனென்று".
அவன் தனக்குள் முணுமுணுத்தான். ஒழுக்கங்கள், நம்பிக்கைகள், தர்மங்கள், அறங்கள், சிதையும்போது நான் உண்மையில் உணர்ச்சிவசப்படுகின்றேன்; ஆத் திரப்படுகின்றேன்; கழிவிரக்கப்படுகின்றேன்; வேதனைப் படுகின்றேன்.
தாழம்புதர்களின் இடையிலும், கடலும் வானமும் சங்கமிக்கும் மேற்குவானச் சரிவிலும் இருள் சிரித்தது. கறுத்த மேகத் திரள்கள் ஒன்றையொன்று துரத்தின.
அவர்கள் தாழம் கிளையைவிட்டு இறங்கி நடந்தனர்.
அவன், நண்பர்களுக்குப் பின்னல் கடற்கரை மண லில் பதியும் அவர்கள் காலடித் தடங்களைப் பார்த்துக் கொண்டே நடந்தான்; அந்த வேதனையான இராகத்தை முணுமுணுத்துக்கொண்டே நடந்தான்.
(1977)
OD

Page 84
உணர்ச்சிகள்
அவனருகிலிருந்த அவளை, அவன் வலு குறுகுறுப்பாகப் பார்த்தான். அவளின் அண்மை அவனை என்னவோ செய்தது. அவளிலிருந்து வீசிய 'சென்றின் நறுமணத் தை அவன் நுகர்ந்தான். அவளின் சேலைத் தலைப்பின் தழுவலில் அவன் சுகமனுபவித்தான்.
அவளை எங்கோ கண்டதுபோல அவனுக்கு ஞாபகம் வந்தது. அவளை உற்றுப் பார்த்துக் கொண்டே அவளை எங்கே கண்டிருப் பேனென யோசித்தான். அவளின் மெல்லிய நீலநிறச் சேலையையும். கருநிறப் பாம்பாக நீண்ட ஒற்றைப் பின்னலையும், அதன் தொடக்கத்தில் சிரிக்கும் வெள்ளை முல்லை மலர்களையும், அவன் மெல் லியதாக பார்த்தான். சிவந்த சாயம் பூசப்பட்ட அவள் அதரங்களையும் பார்த்தான்; நிகுநிகுத்துப் பள பளக்கும் நீண்ட கழுத்தில் மெல்லிய மஞ்சள் கோடாக மினுங்கும் தங்கச் சங்கிலியையும் பார்த்தான். பக்கப் பார்வையில் ஒரு பக்கம் தெரிந்த அவள் முகத்தில்

குப்பிழான் ஐ. சண்முகன் / 165
நீண்ட மூக்கினையும், காதளவோடிய புருவத்தினையும், பளபளத்துருண்ட ஒருபக்கச் சொக்கினையும் பார்த்தான்.
திடீரென, அவளை ஒரு பரீட்சை மண்டபத்தில் சந்தித் திருப்பதாக அவனுக்கு ஞாபகம் வந்தது. அன்றைய பரீட்சையின் இறுதிக் கட்டத்தில், இலக்கிய சம்பந்த மான ஒரு வினவின் விடையை எப்படி அழகாக வார்த் தைகளில் அடக்கலாமென அவன் அண்ணுந்து யோ சித்த போது-அந்த முகத்தையும் அதில் குறுகுறுத்துச் சுழன்ற கருவண்டுக் கண்களையும், அவன் கண்ட ஞாப கம் வந்தது; அப்போது அவனெரு மோகனமான புன்ன கை பூத்தான். அவளும் பதிலுக்குச் சிரித்துத் தலை கவிழ்த்துக் கொண்டாள். அந்த அழகான கவிதை போன்ற அனுபவத்தில், திழைத்த விறுவிறுப்பில், அந்த வினுவுக்கான விடையை அழகாக எழுதியதும் அவ னுக்கு ஞாபகம் வந்தது.
பரீட்சை முடிந்ததும் அவளை சந்திக்க முனைந்ததும் அவனுக்கு ஞாபகம் வந்தது. அவளைப் பின்பு காணமல் ஏங்கியதையும், அவன் நினைத்தான். காற்றில் மிதக்கும் சுகமாக-அவளின் புன்னகை நிறைந்த அந்த முகம் இரண்டு மூன்று நாட்களாக மனத்தில் மிதந்து, ஒருவித, துன்பங்கலந்த இன்பத்தை அளித்ததையும் அவன் நினைந்தான். பின்பு அவளை மறந்து, நாளாந்த வாழ்க் கை இயக்கத்தில் எத்தனையோ விதமான கவர்ச்சிகளைக் கண்டு, இரசித்து, அதில் இலயித்த, இந்த வாழ்க்கையின் மோகனமான அந்தப் பொழுதுகளையும் அவன் நினைத் துப் பார்த்தான்.
அவன் பெருமூச்சு விட்டான். இடக்காலைத் தூக்கி வலக்காலின் மேல் போட்டுக் கொண்டான். வேண்டு மென்றே அவளின் உடலில் படத்தக்கதாக தனது கை யைத் தூக்கி விட்டு, அதற்கு வருந்துபவன் போல,
JFIT-11

Page 85
166 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
"சொறி" என்று சொன்னன். அவளைத் தன் பக்கம் திருப்பு வதற்காக அவன் எவ்வளவோ பிரயத்தனங்கள் செய் தான். அவள் அசைந்து கொடுக்கவில்லை. நிகழ்ச்சி களில் தன்னை மறந்து ஒன்றித்திருப்பவள் போல, அவள் மேடையையே ஆடாமல் அசையாமல் பார்த்துக் கொண் டிருந்தாள்.
அவன் சலிப்புற்றன். சாவகாசமாக மண்டபத்து அலங்காரங்களை மேலோட்டமாக நோட்டம் விட்டான். மாலையும் இரவும் சந்திக்கும் அந்த அந்தி நேரத்தில், மண் டபத்து மின்விளக்குகள் மஞ்சள் முலாம் பூசியதுபோன்ற ஒளியைச் சிந்திக் கொண்டிருந்தன. மண்டபம் தலை களால் நிறைந்திருந்தது. . மேடையில் சலங்கைச் சத்தம் கேட்டது. முன்னலிருந்த நடுத்தரவயது மனிதர் வெகு இலாவகமாக சிகறெட் புகையை ஊதிக்கொண்டிருந்தார். அவர் அருகிலிருந்த அழகான பட்டுச் சேலையணிந்திருந்த பெண் - அவர் மனைவியாக இருக்கவேண்டும். அப் புகையினுல் அருவருப்படைந்தவள் மாதிரி முகத்தை மற்றப்பக்கம் திருப்பிக் கொண்டாள். அவள் அவரிலும் பார்க்க வயது குறைந்தவளாக இளம் பெண்ணுகக் காட்சி தந்தாள். ஒற்றைப் பின்னல் பின்னி அதன் நுனி யில் பூக்குஞ்சம் கட்டி, சிவப்பு, வெள்ளை மணிகள் போன்ற சிறிய வட்டக்குண்டுகளால் அதை அலங்கரித்து இருந்தாள். பாவைபோன்ற அழகான பத்துவயதுக் குழந் தையொன்று, ஓடிவந்து அவளை மாமியென்று கட்டிக் கொண்டு சிரித்தது.
அவன் பக்கத்திலிருந்த அவள் 'அருமை, அருமை” என்று தன்னை மறந்து கைகொட்டினள்.
அவன் மேடையைப் பார்த்தான். அலங்கார பூஜிதை
ான இளம்பெண் ஒருத்தி, ஒற்றைப் பாதத்தைத் தூக்கி மேடையில் குக்கிகத்தி கைகளை வளைத்து ஏதோ அபிநய

குப்பிழான் ஐ. சண்முகன் / 167
முத்திரை காட்டினள். பாதச் சலங்கையொலி கலிங் கலிங்கென காதில் இனித்தது. பாடல் பாடிய பெண் இனிய குரலில் இழைந்தாள்.
"அழகென்னும் சொல்லுக்கு பொருள் கண்டேனடி: ஆனந்தம் கொண்டேனடி.தோழி!"
ஆடிய பெண் கால்களை விரித்து இருந்து கைகளினுல் ஏதோ கோலங்கள் காட்டிக்கொண்டே எழுந்தாள். உண்மையிலேயே அது அற்புதமாகத்தான் இருந்தது. அந்த மோகனத்தில் அவனும் மயங்கித் திளைத்தான்.
அவன் அவளைப் பார்த்துக் கேட்டான்; “அருமை யாக ஆடுகிறளே யாரிந்தப்பெண்?"
அவள் முழுதாகத் திரும்பி அவனைப் பார்த்தாள். ని( கணம் துணுக்குற்ருள். அறிமுகமான புன்னகையுடனே 'யாரோ தெரியவில்லை?” என்ருள்.
அவனும் மெதுவாகச் சிரித்துக்கொண்டான் " وقی p காகவும் இருக்கிருள்” என்று சொன்னன்.
அவன் சொன்னதைப் பிடிக்காதவள் போல அவள் திரும்பிப் பார்த்தாள். 'இந்த மண்டபமும் அழகாகத் தானே அலங்கரிக்கப்பட்டிருக்கிறது’ என்ருள் வெடுக் கென
அப்போதுதான் அந்த மண்டபத்தை முழுதாகப் பார்ப்பதுபோல அவன் பார்த்தான். தென்னை, மாவிலைத் தோரணங்கள் காற்றில் அசைந்தன. வண்ணக் கடதாசி கள் ஒளிவெள்ளத்தில் பிரகாசித்து மினுங்கின. கலைத் தெய்வமென்று கற்பிக்கப்பட்ட கலைமகளின் படம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மேடை யின் ஒருபக்கத்தில் இருந்தது.

Page 86
168 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
அவன் சொன்னுன் "நீர் சொல்வது சரிதான்; இப் படிப் பார்க்கப்போனல் உலகம் எல்லாமே அழகுதானே. ஆடிய பெண்ணின் அழகு உயிர்த்துவமான ஒரு ரகம்; மண்டபத்தின் அழகு செயற்கையான வேறேர் ரகம்’
அவளுக்கு விளங்காத விடயத்தை அதிகப் பிரசங் கித்தனமாக சொல்லிவிட்டதுபோல அவன் தவித்தான்.
அவள் திரும்பி அவனை நேருக்குநேர் பார்த்துச் சொன்னுள். "அழகு என்பது மனம் பற்றிய ஒரு கோட் பாடு."
அவன் உஷாரானன். தான் அவளைத் தவருக எடை போட்டு விட்டதை அவன் உணர்ந்தான். இந்த நுணுக் கமான விடயங்களைப்பற்றி, அவளும் அதிகம் அறிந்திருக் கிருளென்பதையும் அவன் அறிந்து கொண்டான். முன்பு ஒரு பக்கம் மட்டும் பார்த்த அவளின் முகத்தை நேருக்கு தேர் பார்த்துக்கொண்டு-அவள் நெற்றியில் ஆச்சரியக் குறியாக விளங்கிய சிவத்தச் சாந்துப் பொட்டைப் பார்த்துக் கொண்டு, மெல்லியதாக மைதீட்டப்பட்ட புரு வங்களைப் பார்த்துக் கொண்டு-காதில் அசைந்தாடிய வட்டக் காதணிகளைப் பார்த்துக்கொண்டு-அவள் தலை யின் நேர்வகிட்டின் நேர்த்தியைப் பார்த்துக்கொண்டு அவன் சொன்னுன்.
*அழகு என்பது மனம் பற்றிய ஒரு கோட்பாடுதான்; எனக்கு அழகாகத்தெரிவது உமக்கு அருவருப்பாகவும், உமக்கு அருவருப்பானது எனக்கு அழகாகவுந் தெரிய லாந்தான். நீர் அழகென்று சொல்லி வாதிடாததை நான் அழகென்று சொல்லி வாதிடலாந்தான்; என்ருலுங்கூட இந்த உலகில் நித்தியமான, உயிர்த்துவமான, மோகன மான, எல்லாராலும் அழகென்று ஏற்றுக் கொள்ளக்கூடிய பவித்திரமான அழகுகளும் இருக்கின்றனதானே;'

குப்பிழான் ஐ. சண்முகன் 1 189
அவள் அவன் சொன்னதை அங்கீகரிப்பவள் போல மெளனமாகத் தலைகுனிந்திருந்தாள். அவன் தான் பலத்துப்பேசிவிட்டதுபோல, யாராகிலும் தங்களை அவ தானிக்கிறர்களோவெனச் சுற்றும்முற்றும் பார்த்தான். ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளேயே ஏதேதோ குசுகுசுத்துக்கொண்டிருந்தனர். மேடையைப் பார்த் தான். காற்சட்டை போட்ட, கண்ணுடி அணிந்த முதிய வரொருவர், நவராத்திரி பூசையின் தத்துவம் பற்றி, கேட்டுக்கேட்டு புளித்துப்போன விடயங்களைத் திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருந்தார்.
"தமிழன் பெண்ணுக்கு முதன்மையிடம் அளித்திருந் தான்; பெண்மையை மதித்தான்; அதனலேதான் பெண் சக்திக்கு கோயில் கட்டி வணங்கினன். மனித வாழ்வுக்கு இன்றியமையாத கல்வி, செல்வம், வீரம் என்பனவற்றுக் கும் முறையே கலைமகள், அலைமகள், மலைமகள் எனப் பெண் தெய்வங்களைப் படைத்தான். மனித வாழ்க்கை யோட்டத்தில் பெண்களின் பெரும்பங்கை அறிந்திருந் தான்".
அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். "ஐயோ தாழ்ந்த தமிழகமே. என்று யாரோவொரு கவிஞன், மனங்கொதித்துச் சொன்ன அந்த உணர்ச்சிகரமான வாக்கியங்களை நினைத்துக் கொண்டான். இப்படியே பேசிப், பேசிப், பேசி.
அவன் அவளைப் பார்த்தான். அவள் மெளனமாகவே குனிந்திருந்தாள்.
"என்னுடன் கோபமா." என்று அவன் மெதுவாகக் கேட்டான்.
"இல்லையே." என்றவள் புன்னகை பூத்தாள்.
‘'நீ மிக அழகாக இருக்கிருய்" என்றன் அவன் தொடர்ந்து.

Page 87
170 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
'நீங்களுந்தான்." என்றவள் வெட்கித் தலைகுனிந் தாள்.
அவள் கன்னஞ் சிவந்தது. அவன் மகிழ்ச்சி என்னுங் கடலில் மிதந்தான். இந்த உலக வாழ்வின் சாசுவதமானநித்தியத்துவத்தை உணர்ந்துவிட்டவன்போல அவன் குதூகலித்தான். ஒரு அழகான மனத்திற்கு இதமான பெண்ணின் வாயால் கேட்ட, "நீயும் அழகானவன்" என்ற வார்த்தைகளில் ஓர் அற்புதமான கவிதையின் சாரம் இருப்பதுபோல அவனுக்குப் பட்டது. ஓர் அழ கான ஒவியத்தைப் பார்த்த-ஒர் அமரத்துவமான இசை யைக் கேட்ட-ஒரு சாகாவரம் பெற்ற கதையைப்படித்த உணர்ச்சி மேலிட்டது அவனுக்கு. தன் வாழ்க்கையின் சாரமே அந்தக் கணத்தில் அடங்கியிருப்பதாக அவன் எண்ணினுன்.
அவன் மலர்போன்ற அவள் கரத்தைப்பற்றினுன், அவள் அதற்கு விருப்பமில்லாதவள் போல நெளிந்தாள். இடதுகால் பெருவிரலால் நிலத்தை உராஞ்சினுள். இடது கையின் சுட்டுவிரல் நகத்தை வாயில் வைத்துக் கடித் தாள், ஓசை எழாமல் சிணுங்கினுள்.
மேடையில் யாரோ சங்கீத வித்துவான், பரபரவெ னப் பூச்சொரிவதுபோல, ஏதோவொரு இராகத்தை ஆலாபரணம் செய்து கொண்டிருந்தார்.
அவன் அவளின் மென்மையான கரத்தை வருடிய வாறே யோசித்தான். இந்த விடயத்திலாதல் தானுெரு பாக்கியசாலியென அவன் நம்பினன். அழகான அவளை தனது அறிவுக்கு சமனன அறிவுடையவளான அவளை ஒரு 'இன்ரலெக்சுவல் கொம்பானியனுக' அடைவதில் தான் அதிர்ஷ்ட சாலியென அவன் பெருமிதமுற்றன். சிந்தனைப் போக்கில் சில விடயங்களில் அவளும் தானும்

குப்பிழான் ஐ. சண்முகன் / 171
முரண்பட்டால் கூட, அந்த 'முரண்பாடுகளும் ஒருவித மான இன்பந்தானென அவன் எண்ணினுன்.
மண்டபம் கலகலக்க சங்கீத வித்துவான் தன் கச்சேரி யை முடித்துக் கொண்டார். "போங்களேன்’ என்று சொல்லி அவன் பிடியிலிருந்து அவள் தன் கரத்தை விடுவித்துக் கொண்டாள். விடுவித்த கரத்தை அவள் தன் மற்றக் கரத்தால் தடவியுங் கொண்டாள்.
அவனுக்கு அன்ருெருநாள் கடற்கரைக் ஹோட்ட லின், கருங்கற் பாறைகளில் கண்ட காட்சி ஞாபகம் வந்தது. எவ்வளவு ஸ்படிகமாக அந்த வெள்ளைக் காரன் அவளை-அவன் மனைவியாக இருக்கலாம்-முத்தமிட் டான். சிவப்புக் கோளமாக துரியன் அஸ்தமிக்கும் அந்த நீலக் கடலின் பின்னணியில், எத்தனைபேர் அந் தக் காட்சியைக் கண்டிருப்பார்கள். அவன் கூட அதைக் கண்டு நாணியிருந்தான். இந்த நாட்டின் இளைய சந்த தியினரும் இதைக் கண்டு மாறிவிடுவார்களேயென்று வருந்தியுமிருந்தான்.
"போங்களேன்' என்று சொல்லி தன் கரத்தை விடு வித்த அவளின் நாணங் கலந்த பெண்மையுடன்-எவ் வளவோ பேருக்கு முன் ஒரு ஆடவனை முத்தமிட்ட அந்த வெள்ளைக் காரியின் பெண்மையை ஒப்பிட்டுப் பார்த்தான். இடம், காலம், சூழல், தொடர்ந்த வரலாற் றுப் போக்கு என்பனவற்றுக்கமைய பண்பாட்டுக் கோலங்கள் எப்படி எப்படி அமைந்திருக்கின்றன என்று எண்ணி அவன் வியந்தான்.
"என்ன யோசனை’ என்ற குரல் அவன் காதில் இனித்தது.
அவன் விழித்துப் பார்த்தான்

Page 88
172 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
நிகழ்ச்சிகள் முடிந்து கூட்டம் கலையத் தொடங்கி இருந்தது. அவனுக்காகவும் அவள் தான் பெற்றிருந்த பிரசாத உறையை அவனிடம் நீட்டினுள், "நான் வரப் போறேன்” என்று திரும்பினுள். அவளுக்காக அவளைப் போல நாலைந்து பெண்கள் காத்து நின்றர்கள்.
“ஒரு நிமிஷம்" என்றவன் 'உங்கள் பெயர் ஒன்றை யுமே சொல்லவில்லையே” என்று தயங்கினுன்.
“அவை தேவையில்லையென்று நினைக்கிறேன். எங் களிருவருக்கும் இந்தப் பொழுதுகள் இன்பமானவை, இனிமேலும் நாம் ஒருவர் வாழ்வில் ஒருவர் குறுக்கிட வேண்டும்தான" என்றவள் திரும்பி தன் தோழிகளை நோக்கி நடந்தாள்.
அவன் இடிவிழுந்ததுபோல விக்கித்து நின்றன் தனது மன உணர்ச்சிகள் மாறி மரப்பதை அவன் உணர்ந்தான். மனித மனப்போக்குகளின் உணர்ச்சி களின் விசித்திரங்களை அவன் எண்ணிப் பார்த்துக் கொண்டே அவர்களைப் பின் தொடர்ந்து நடந்தான்.
அவர்களின் கலகலவென்ற சிரிப்பொலி அவர் காதில் விழுந்தது. அவர்கள் எதுவித சஞ்சலமுமில்லா மல் சந்தோஷமாக குதூகலமாக சிரித்துக் கதைத்தவாறு கிழக்கே திரும்பினர்.
அவன் தன்னைப்பற்றி யோசித்தவாறே மேற்கே திரும்பி நடந்தான். தன் மனத்தில் மகிழ்ச்சியோ, துக் கமோ என்று சொல்ல முடியாத ஓர் உணர்ச்சி தேங்கி நிற்பதாக உணர்ந்தான்.
அவளுடன் பழகிய அந்தக் கணங்களின் நினைவு மகிழ்ச்சியை தந்தது.

குப்பிழான் ஐ. சண்முகன் / 173
அவள் பிரிந்து செல்கிருள் என்ற உணர்வு துக்கத் தைத் தந்தது.
வாழ்க்கை என்பதே உணர்ச்சிகளின் கோலந்தானே என மனத்தைத் தேற்றினுன்.
வீதி விளக்குகளின் ஒளியில், ஆடி அசைந்த மர இலைகள் நிழற்கோலம் போட்டன.
A (1970)

Page 89
அவனுள் தவிப்பே மேலோங்கி நின்றது. திருமண மானதின் பின் வந்த இந்த இரண்டு மாதங்களும் ஏதோ நிறைவின்றிக் கழிந்தது போல அவனுக்குப்பட்டது வார்த்தைகளில் சொல்லமுடியாத, நெஞ்சினுள் கெம்பிக் கெம்பி மேலெழும்புகின்ற, முள்ளாய் உறுத்துகின்ற. மெல்லிய சோகமாய் உள்ளெல்லாம் இழையூடுகின்ற, அவனுக்கும் அவளுக்குமிடையில் உணர்ச்சிகளின் பூரண மான, உன்னதமான ஒன்றிப்பைத் தடை செய்கின்ற அந்த "அது" எதுவாக இருக்குமென அவன் சிந்தித் தான.
அவனுக்குப் புரிந்த மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது.
அவன் ஐந்து வருடங்களாக அவளைக் காதலித்தே கைப் பிடித்தான். ‘வாழ்ந்தால் அவளுடன் தான் வாழ் வேன்" என்பதில் அவன் தளராத உறுதி கொண்டிருந் தான். அவளுடன் வாழும் அந்த வாழ்க்கைக்காக அவன்

குப்பிழான் ஐ. சண்முகன் / 175
எத்தனையோ இன்னல்களைத் தாங்கி இருந்தான். எத தனையோ ‘அன்புக்குரியவர்களின் மனத்தை வருத்தி இருந்தான். எத்தனையோ உறவுப் பிணைப்புகளை மிகுந்த சோகத்துடன்--கவலையுடன்-கண்ணிருடன் அறுத்திருந் தான,
அந்த இலட்சியப் பயணத்தின் வெற்றிக்காக அவ ளும் அவனுடன் ஒத்துழைத்தாள். அவளும் எத்தனையோ சோகங்களால் உலுக்கப்பட்டிருந்தாள். எத்தனையோ சந்தர்ப்பங்களில் கண் கலங்கி இருந்தாள். எத்தனையோ போதுகளில் மனத்துள் வெதும்பி வெதும்பி அழுதிருந் தாள். எத்தனையோ நாட்கள் பட்டினியாய் - துயிலில் லாமல் கிடந்து உழன்றிருந்தாள்.
அதை எல்லாம் அவன் அறிவான்.
அதை எல்லாம் அவளும் அறிவாள்.
அப்போதெல்லாம் அவர்கள் தாங்கள் ஒருவர்மேல் ஒருவர் கொண்ட காதலில் எவ்வளவு பற்றுறுதியுடன் இருந்தார்கள். அவள் சிரித்தால் அவன் சிரித்தான், அவன் அழுதால் அவள் அழுதாள். அவள் சிரிக்க வேண்டுமென்பதற்காக அவனும், அவன் சிரிக்கவேண்டு மென்பதற்காக அவளும் சிரித்தார்கள்.
வசந்த காலத்தின் உலகின் குதூகலத்தை அவர்கள் அனுபவித்தார்கள். சுற்றிச் சுழலும் சுழல் காற்றில், கரு. மிருட்டில், கொடுர இடியின் ஒசையைக் கேட்டு அவர்கள் பயந்தார்கள். அமைதியான நீரோட்டத்தில் உல்லாச மாகப் படகில் பாடிக் கொண்டே மிதந்தது போன்ற மகிழ்ச்சியில் திழைத்திருந்தார்கள். காலம் அப்போதெல் லாம் எவ்வளவு விரைவாகச் சென்றது; கணங்களாக அசைந்து ஊர்ந்து சென்றது; அசையாது நின்று அவர் களைப் பார்த்து இரசித்தது.

Page 90
176 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
அவன் வாசல் நிலையில் சாய்ந்து வானத்தைப் பார்த் துக் கொண்டிருந்தான். முற்றத்துக் கிணற்றடியின் தென்னைமர உச்சிகள் இருண்டிருந்தன. மெல்லிய காற் றில் அவை சலசலக்கும் ஒசை விட்டுவிட்டுக் கேட்டது. கண் சிமிட்டும் தாரகைகள். தங்கக் கடுக்கன்களைக் கையில் அள்ளி வாரி இறைத்தது போல வானமெங்கும் பரந்து கிடந்தன.
அவன் அவள் எங்கே இருக்கிருளென்று பார்ப்பதற் காக வீட்டினுள் திரும்பிப் பார்த்தான். கண்ணுடி விளக் கின் மஞ்சளொளி மங்கி இருந்தது. ஜன்னல் திரைச்சீலை காற்றில் ஆட ஆட, அந்த ஒளிக்கதிர்கள் வெளியே பர விப் பரவிக் கோலம் போட்டன. வீட்டினுள் ஆழ்ந்த அமைதி கவிந்து கிடந்தது. கிழவி பாக்கு இடிக்கும் சத்தம் மட்டும், அவவின் ஒதுக்குப்புற மூலையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. அவள் அறையிலிருந்து ஏதாவது புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பாள்.
அவன் கொட்டாவி விட்டான்;
அப்போதெல்லாம் இப்படி ஒரு தனிமைக்காக அவர் கள் எப்படியெல்லாம் ஏங்கித் தவிப்பார்கள்; அப்படிக் கிடைக்கும் அருமையான தனிமைப்போதுகள்..எவ் வளவு இன்பங்கள். இன்பங்களேதான்; தனிமையின் துயரங்கள், சுமைகள், சோகங்கள், சஞ்சலங்களை யெல் லாம் அவளும்-அவனும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும்போது, கண்ணிர்த் துளிகள் உருண்டு வடி கையில் அவற்றை ஆதரவாகத் துடைத்து விடும் விரல் களின் ஸ்பரிசத்தின்போது, மெல்லிய புன்னகையின் போது, இணைந்தொலிக்கும் வெண்கலச் சிரிப்பில் தன்னை மறந்த இலயத்தின்போது, இதமான அணைப்பின் போது, மார்பிலோ தோளிலோ முகம் புதைத்து விம்மும்போது, ஊடல்கொண்டு பிணங்கிப் பின் உறவாடும்போது.இன்

குப்பிழான் ஐ. சண்முகன் / 177
பங்கள் இன்பங்களேதான். தாம்பத்தியத்தின், .ஏன் வாழ்க்கையின் தாற்பரியமே அதுதானுே?
கூடத்தில் சுவர்க்கடிகாரம் "டிக், டிக்கென ஒரே சீராக ஒலித்துக் கொண்டிருந்தது. பல்லியொன்று தன் பாஷை யில் ஏதோ சொல்லிற்று. அடுத்த வீட்டிலிருந்து முதுமை யின் கனமேறிய இனிய ஆண்குரலொன்று காற்றில் மிதந்து வந்தது.
"பித்தா பிறைதடி பெருமானே அருளாளா
எத்தால்மறவாதே நினைக்கின்றேன்."
அவனுக்கு நினைவு வந்தது. மெல்ல ஆடி அசைந்து ஊர்ந்தது தேர். பஜனைக் கோஷ்டியினர் ஆடிப் பாடினர். கரகாட்டம் நடந்தது. நாதஸ்வரம் மேளத்துடன் காவடி யாட்டம் நிகழ்ந்தது. இடைக்கிடை ஊதுவத்தியின் மணம் காற்றில் கலந்து மனத்தை அள்ளிச் சென்றது. சர்க்கரைத் தண்ணிர் பந்தலில் சிறுவர் கூட்டம் கும்மாள மிட்டது. பட்டுவேட்டி சால்வை, பட்டுச் சேஜல. வண்ணச் சட்டைக் கூட்டம் அசைந்தது. ஒலிபெருக் கியில் 'சின்னத்தனத்துக்கோர், சிங்காரப்பேச்சுக்கோர், சிரித்தமுகத்துக்கோராம். பாட்டுப்பாடியது. அப்போது தான் அவன் அவளைக் கண்டான்.
வியப்பால் அவன் கண்கள் விரிந்தன.
காலச்சுழற்சி அவளை இவ்வளவு மெருகுபடுத்தி உள்ளதா?
என்னமாதிரி வளர்ந்துவிட்டாள் அவள்! ஒல்லியாய், உயரமாய், சிவப்பாய், கவர்ச்சியாய். அலையலையாக, கறுத்திருண்ட நீளமான தலைமயிர் கற்றையாய்.
அவளும் அவனைக் கண்டு கொண்டாள்;
கருமணிகள் வெட்டிச் சுழன்றன.

Page 91
"178 ! சாதாரணங்களும் அசாதாரணங்களும்
மெல்லிய ஒரு புன்னகையுடன் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்புதான் அவன் அவளை இறுதியாகக் கண்டிருந்தான். அப்போதும் ஏதோ திருவிழாவிலோ - கலியாண வீட்டிலோ தான் அவளைக் கண்டதாக அவனுக்கு மங்கலாக ஞாபகம் வந்தது. பட்டுப் பாவாடையுடள் சிறுமியாய் அவள் துள்ளித் திரிந்தது ஞாபகம் வந்தது.
"அப்பனே முருகா" என்று கிழவி முனங்குவது கேட் டது. முற்றத்துக் கிணற்றில் அடுத்த வீட்டார் யாரோ தண்ணீர் அள்ளும் சலசலப்புக் கேட்டது. தாழ்வாரத்தில் கொட்டிலில் கட்டியிருந்த மாடுகன்றுகளின் சந்தடியும்
கேட்டது.
ஒல்வொரு நாளும் ஒரு குறித்த நேரத்தில் அவன் சைக்கிளில் பவனி வரத் தொடங்கினன். கிடுகு வேலித் துவாரத்தினூடாக முதலில் இரண்டு கண்கள் பார்த்துப் பரவசமாயின. நாளசைவில் கண்கள் சிரித்தன. கிடுகு வேலித் துவாரம் பெரிதாக அவள் முகமே செந்தாமரை யாய் மலர்ந்து சிரித்தது.
‘எப்பிடிச் சுகம்" என்று அவன் ஒருநாள் கேட்டான்
அவள் பதிலுக்கு இதழால் சிரித்துக் கொண்டாள்.
"எப்படிச் சுகம்" என்று அவன் அடுத்த நாளும் கேட்டான்.
'நல்லாய்த்தான் இருக்கிறேன்” என்றுள் அவள்.
அன்றேடு அந்த இனிய போராட்ட வாழ்க்கை அவர்
களுக்கு ஆரம்பமாயிற்று. இனிய போராட்டங்கள்தான் வாழ்க்கையே இனிய போராட்டங்கள் தான?

குப்பிழான் ஐ. சண்முகன் / 179
'வாசல் நிலையில் சாய்ந்து நின்றவன் வாசல் படியில் இருந்து கொண்டான்.
அந்த இனிய வாழ்க்கை எப்படி போராட்ட வாழ்க் கையானதென அவன் சிந்தித்தான். உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி என்ற சாதி வேறுபாடுகளைப் பற்றியும் காரணமின் றியே வரட்டுப் பிடிவாதத்திற்காக அவற்றை விடாது பற்றிப் பிடித்திருக்கும் மனிதர்களைப் பற்றியும் அவன் எண்ணிப் பார்த்தான். அதிர்ஷ்டவசமாக அவனும்அவளும் ஒரே உயர்ந்த சாதியினராக இருந்தாலும், பொரு ளாதார ஏற்றத் தாழ்வுகளினல், அந்தஸ்து வேறுபாடு களினுல் அவர்கள் சுற்றம்-'அந்தஸ்தில் உயர்ந்தவன்" என்று கருதப்படும் அவனின் சுற்றம் அவர்களின் இணை வுக்கு எதிராகப் படைதிரண்டபோது, அவன் தான் கொண்ட கொள்கையில் பற்றுறுதியாகத்தான் இருந் தான். சகோதர பாசத்தையும், பெற்றவரின் பாசங்களை யும், உற்றரின் பாச வலைகளையும் மீறி அவன் அவளைக் கரம் பிடிப்பதில் உண்மையில் பெருமை கொண்டிருந் தான். உற்றர் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்த போதுஒன்றன் பின் ஒன்ருக எத்தனையோ இடர்கள் தலைதூக்கிய போது-எவ்வளவு உறுதியுடன், எவ்வளவு திடசித்தத் துடன், எவ்வளவு சாதுரியத்துடன் அவற்றை எல்லாம் கடந்து தான் அவளைக் கரம் பிடித்தேன் என்பதை நினைத் துப் பார்த்தபோது அவன் தன்னைத்தானே வியந்து கொண்டான்.
என்றலும். . . . என்றலும்.
அந்த இணைவில் 'ஏதோவோர் குறை இருப்பதுபோல அவனுக்குப்பட்டது. அவர்களது முதலிரவில்-மங்கலான மஞ்சள் வெளிச்சத்தில், அவன் அவளை அனைத்துத் தழு வியபோது-உயிரற்ற பாவையாய், அவன் கைகளை அவள் மெல்ல விலக்கி-கண்களில் கண்ணிர் மணிகள்

Page 92
180 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
பளிச்சிட அவன் முகத்தை அவள் நிமிர்ந்து பார்த்த போது-அவளது மனத்தின் ஆழத்தில் ஏதோவோர் தவிப்பை ஊட்டும் சோகம் படிந்திருப்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
அவன் அவள் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டு அவளை ஆசுவாசப்படுத்தினன். அவள் கண்ணிரைத் துடைத்தான்.
"பிரமிளா ஏன் நீ அழுகிருய்?"
வாழ்க்கையின் இனிய இந்த நேரத்தில் ஏன் நீ அழ வேண்டும்? இந்த இனிய நாளைப் பற்றியெல்லாம் நாம் எத்தனை கற்பனைகள் செய்திருந்தோம்? அன்றெரு நாள் - அந்தக் கருமிருட்டில்-தனிமையில் நான் எது வெதுவோ செய்ய முற்பட்டபோது நீ சொன்னுய்; 'எல்லாவற்றுக்கும் ஒரு காலம் வரும். அந்தக் காலம் வரும் வரையும் பொறுத் திருங்களேன். எல்லாவற்றிலும் உங்களுக்கேன் இந்த அவசரம்?"
அந்த நேரத் தவிப்பில் நான் சொன்னேன். "நாங்கள் ஒன்றக வாழ்வது நிச்சயம் தானேடி. நீ ஏன் பயப்படு dou.”
நீ ஒன்றுமே சொல்லாது மெளனமானுய்.
நான் ஒன்றுமே செய்யாது அமைதியானேன்.
"பிரமிளா ஏன் நீ அழுகிருய்?
நான் அவளைக் காதலித்துத்தான் கரம் பிடித்தேன். காதலின் அந்த மனுேகரங்களெல்லாம் எனக்குத் தெரி யும். அதனல், உலகின்-இயற்கையின் நியதிகளுக்கு நான் மாறுபட்டவனல்ல. நான் ஆண்; அவள் பெண்; எனக்கும் சிருஷ்டியின் இரகசியங்களை அறியும் ஆசைகள்

குப்பிழான் ஐ. சண்முகன் / 181
கிளர்ந்துதான் இருந்தன. ஆனல், சிருஷ்டியின் நுட்பங் களை அறியும் உந்துதல்தான் ஒன்ருக வாழ்வதின்" தாம்பத்தியத்தின்-முற்றுமுழுதான நோக்கமல்ல என் பதும் அவனுக்கு தெரியும்.
'பிரமிளா, ஏன் நீ அழுகிருய்."
அவள் வெறுமே சிரித்தாள். “அந்தஸ்தில் குறைந்த வர்கள் அந்தஸ்தில் கூடியவர்களோடு இணைவதினுல் சமமானவர்களாகிவிட முடியாதுதானே."
அவனுக்குப் புரிந்தது. அவன் ஒன்றும் செய்ய முடி யாத நிலையிலேயே தவித்துக்கொண்டிருந்தான். வாழ்க் கையின் பந்தம் பாசம் என்ற உணர்வுகள், உறவுகள். அவனேடு உறவு கொண்டாடுபவர்கள் அவன் மனைவி யான அவளை மதிக்கவில்லைதான். அதற்காக.அவ னும்-அவளும் ஒருவரை ஒருவர் ஆறுதல் காண்கின்ற, ஒருவருக்காகவே ஒருவர் வாழ்கின்ற தம்பதிகள் ஆன போது-அவன் அவளுக்காக சிலவற்றை விட்டுக் கொடுக்கத்தான் வேண்டுமா? இந்த உலகத்தில் தனித்து விடப்பட்டவர்கள் இணைந்து, தனிமைத் துயரங்களை மறந்து, ஒருவரில் ஒருவர் ஆறுதல் காண்பது தானுே தாம்பத்தியம்?
சுவர் மணிக்கூடு ஒன்பது தடவை அடித்து ஓய்ந்தது. "சாப்பிட வாருங்கோவேன்."
வாசல்படியில் இருந்தவாறே நிமிர்ந்து பார்த்தான் அவன். அவள் எவ்வளவு அழகாக ஜொலித்துக் கொண் டிருக்கிறள். எவ்வளவு எடுப்பாக' புன்னகை பூக்கிருள். எவ்வளவு நிஷ் களங்கமானவள் அபள். அவனுக்காகவே தன்னை அர்ப்பணித்து-அவனுக்கா வே வாழ்ந்து கொண் டிருக்கிற-அவனுடையவள் அவ,
div-12

Page 93
182 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
அவனுக்கு எதுவெதுவோ எண்ணங்கள் மனதில் மிதந்தன.
"என்ன அப்பிடிப் பாக்கிறியள். சாப்பிட வாருங் கோவேன்."
அவன் எழுந்து அவள் கரத்தைப் பற்றினன். அவள்
நெற்றியில் மெதுவாக முத்தமிட்டான். 'பிரமிளா உன்னைப் புரிந்து கொண்டேன்; உனக்காகவே வாழ்
G36 Jesör.”
அவன் கைகளை இறுகப் பற்றியவாறே, அவன் தோளில் முகம் புதைத்து அப்போதும் அழுதாள் அவள்.
(1971)

இலுப்பை மரமும் இளஞ்சந்ததியும்
காலை வெளுத்தபின் ஏழுமனிபோல் எழுந்திருந்தான். அவன் சிறிய தங்கை ‘அண்ணை, அண்ணை’ என்று அவனை உருட்டிப் புரட்டி எழுப்பினுள். சோம்பல் முறித் துக் கொண்டு, பாயைச் சுருட்டி சுவர்ப்புறமாக ஒதுக்கி வைத்தான்.
வீடு கலகலத்துக் கொண்டிருந்தது. அவன் தம்பி, தங்கைகள் பள்ளிக்கூடம் செல்வதற்காகப் பரபரத்துக் கொண்டிருந்தார்கள்.
'அம்மா ஏழேகால் வஸ் போகப் போகுது. கொஞ் சம் கெதியாய்ப் பாசலைக் கட்டித் தாணை".
'அண்ணை, அண்ணை இண்டைக்கு உன்ரை பேனை யைக் கொண்டு போறன்".
'கீதா குளிச்சு எத்தனை நாளாகுது. இண்டைக்குக் குளியாமல் பள்ளிக்கூடம் போகக்கூடாது.”

Page 94
184 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
அண்ணை வதனி தனக்குக் குளிக்க வாத்து விடட் LfTuíbʼʼ
"விடிய விடியக் கிடக்கிறது. இப்பதான் எல்லாரும் ஒண்டாய்ப் பரபரக்கிறது."
வானத்திலே பனிமூட்டம் கவிந்திருந்தது. காலைக் கதிர்கள் புகைக்கோடுகளாக வீட்டு முன் விருந்தையில் கோலம் போட்டன. மெல்லிய குளிர்காற்று இதமாய் ஊதிச் சென்றது.
வேப்பங்குச்சி ஒன்றை முறித்து வாயில் வைத்து மெல்லத் தொடங்கினன். சிறிய தங்கையைக் கூப்பிட்டு குளிப்பாட்டி விட்டான். 'அண்ணை எப்ப வந்தனிங்கள்" என்று கேட்டுக் கொண்டே வந்தாள் அடுத்த வீட்டுச் சின்னப் பெண் - சின்னத் தங்கையின் தோழி.
'நேற்றே வந்துவிட்டேன். நீ காணவில்லையோ' என்றன்.
'பொய் பொய்” என்று அவன் கையைப் பிடித்துக் குலுக்கினுள் அவள்.
வீட்டின் கலகலப்பு ஓய்ந்துவிட்டது. எல்லாரும் எங்கெங்கோ போய்விட்டார்கள். அம்மா SQhör6).JPGLOffgs உட்கார்ந்து டக்டக்கென்று பாக்குவெட்டியால் பாக்கு வெட்டிக் கொண்டிருந்தாள். சின்னக்கன்று துள்ளிக் கொண்டு ஓடிவந்து தூரநின்று அவனை முறைத்துப் பார்த் துவிட்டு மீண்டும் துள்ளிக்கொண்டு ஓடிற்று. புகை போக்கிக் குழாயிலிருந்து காகமொன்று கரைந்தது. அம்மா எழுந்து "த ச் சூ" வென அதைக் கலைத்தாள்.
காலமை வெள்ளெனக் காகம் கரையுது”
பொழுது மேலே ஏறி, வெய்யில் உறுத்தத் தொடங் சிற்று. பல் துலக்கிக்கொண்டே முற்றத்துப் பூங்கன்று

குப்பிழான் ஐ. சண்முகன் / 185
களைப் பார்த்துக்கொண்டிருந்தான். வெள்ளையும் சிவப்பு மாய் குலைகுலையாய்ப் பூத்துக் குலுங்கும் கலியாண மல்லி கையைக் காணவில்லை. அந்த இடத்தில் கொடி மல்லி கையொன்று பசுந்தளிர்விட்டு வளர்ந்துகொண்டிருந்தது. கொய்யா மரத்தில் இளம் பிஞ்சுகள் தொங்கிற்று. நெல்லி மரத்தின் இலைகளை ஏதோ பூச்சி அரித்திருந்தது. "இரவு ராணி இலையுதிர்ந்து நின்றது.
‘விடிஞ்சு எவ்வளவு நேரமாயடா போச்சு முகத் தைக் கழுவிப் போட்டு வாவேன்ரா! நானும் என்ரை வேலையைப் பாக்க..!"
மெளனமாக முகம் கழுவச் சென்றன். அன்றைய பொழுதை எப்படிக் கழிக்கலாமென யோசித்தான். 'சீ. லீவிலை இங்கை வந்தால் நேரமே போகுதில்லை. சைக் கிள் இருந்தாலாவது அங்கினை இங்கினை போகலாம். உங்கை பொடியன்களும் இல்லைத்தானே, அவனவனும் த ங் க  ைட தங்கடை வேலையளுக்குப் போயிருப் பாங்கள்...!"
சாப்பிட்டுவிட்டு, "பாரதியார் கதை" களை எடுத்து வந்து சுவரோடு சாய்ந்திருந்து படிக்கத் தொடங்னன். ஞானரதம், சின்னச் சங்கரன் கதை, தராசு. மேலோட் டமான ஒரு பார்வை. அச்செழுத்துக்கள் கண்ணை உறுத் தின. கண்களை மூடிக்கொள்ளவேண்டும் போல ஒரு தவிப்பு அப்படியே சரிந்து நித்திரை கொள்ள வேண்டும் போல.
‘எப்படியும் இப்ப நித்திரை கொள்ளிறேலை. லீவிலை வந்ததற்கு ஆகப் பகல் முழுக்க நித்திரை கொள்ளிறதும், காலையில் நேரஞ்செல்ல எழும்புறதும் தானே வேலை."
மரங்களற்ற வெளியினூடாகத் தொலைவை ஊடுருவி பார்த்தான். வளவின் வடகீழ் மூலையில் நின்ற பெரிய இலுப்பைமரம் தறிக்கப்பட்டு விட்டது. இந்த உலகத்

Page 95
188 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
தைப் பற்றிய அறிவு சரியாக அவன் மனத்தில் பதியாத காலத்தில் அதை விற்று விட்டார்கள். தோணி செய்வ தற்காக அதன் அடிமரத்தைக் கொண்டு செல்வதாகச் சொன்னர்கள்.
அந்த மரத்தின் கீழ் ஒரு கொட்டிலில் அவன் அப் பாச்சி குடியிருந்தாள். அவள் பச்சைக் கோதுமை மாவில் ரொட்டி சுட்டு இரகசியமாக அவனுக்குத் தருவாள். அந்த மரத்துடனேயே அவள் வாழ்க்கை பிணைந்திருந்தது. ஒரு பருவத்தில் அந்த மரம் பூக்கும்; ஒருவிதமான பாணி மணத்துடன் அந்தப் பூக்கள் உதிரும் காலம் இரம்மிய மானது. அரும்பு கட்டும்; அரும்புகள் உதிரும்; காய்க்கும் பழுக்கும்; வெளவால்களும்- பறவைகளும் சத்தமிடும்; இலைகள் உதிர்ந்து மொட்டை மரமாய் நிற்கும்; வசந்தக் குறுகுறுப்பில் பச்சைப் பசுந்தளிர்களை ஈனும்.
அப்பாச்சியின் கொட்டிலிலும் இலுப்பம்பூ மணக்கும். இலுப்பை முத்துக்கள் காயும்; அதை வாங்க வரும் பெண் களின் பேரம் பேசும் குரல் இடைக்கிடை ஒலிக்கும்.
"உன்னுணை ஆச்சி ஒன்றேகால் ரூபாய்க்கு மேல் ஒரு சதமும் தரேன்'
'கிழவி குப்பை என்ன விலை சொல்கிருய்?"
“நாற்பத்தைந்து ரூபா".
"சரி சரி நாற்பது ரூபாய் தாறேன். வேறை கதை பேசாதை”.
இரட்டை மாட்டு வண்டியில் குப்பை ஏற்றுவார்கள். மாடுகளைக் கழற்றி, பக்கத்தில் மலை ஆமணக்கில் கட்டி யிருப்பார்கள். மாடுகள் கழுத்து மணிகள் குலுங்க, வாலைச் சுழற்றி முதுகிலிருக்கும் ஈக்களைக் கலைத்துக் கொண்டே மேயும்.

குப்பிழான் ஐ. சண்முகன் / 187
குப்பை விற்ற இரண்டொரு மாதங்களுக்கு அப்பாச் சியின் கழுத்தில் அந்தப் பவுண் அட்டிகை தொங்கும். அப்போதெல்லாம் அப்பாச்சி மிகவும் சந்தோஷமாக இருப்பாள். மீண்டும் அது அடைவுக்குச் சென்றுவிடும். ஒரு மழைக்காலக் காலைப் பொழுதில் அப்பாச்சி செத்து விட்டாள்.
'தம்பி எப்ப வந்ததாக்கும்?’ திடுக்கிட்டுப் பார்த் தான். வெண்தாடியுள் காவி படிந்த பற்கள் தெரியச் சிரித்துக் கொண்டு பெரியான் குழைந்துபோய் நின்றன். இரண்டு கைகளையும் இடுப்புக்கு மேலால் வயிற்றுடன் இணைத்திருந்தான்.
"நேற்றைய மெயிலிலை வந்தனுன் பெரியான்.” "ஒமெண்டுதானுக்கும் அங்கை சொன்னவை".
எங்கே என்று கேட்க நினைத்தவன் அது எங்கே யாக இருக்குமென மனதில் தோன்றவும், பேசாது அவ னைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதேதோ நினைவுகள் கிளை பரப்ப முனைந்தன. நெஞ்சில் ஏதோ வேதனை கவிந்து வருவது போல. தலையைக் குனிந்துகொண் டான்.
தன்னைச் சுதாகரித்து நிமிர்ந்தவனின் பார்வை பெரி யானின் முகத்தில் படிந்தது. அவன் கண்களில் படிந் திருந்த அந்த இரக்கத்தின் சாயை இவனை உறுத்திற்று. அவர்களின் குழந்தைப் பருவத்து இணைவுகளையும் கனவு களையும் எல்லையில்லாத வாத்சல்யத்துடன் அவதானித்த வனும் மனத்தால் ஆசீர்வதித்தவனும் . அவை எதிர் பாராத முறையில் முடிந்தபோது மெளனமாகவே தன் எல்லையற்ற அனுதாபங்களை தெரிவித்து ஆறுதல் அளித் தவனும் எல்லாம் தெரிந்தவனுயும் எதுவுமே தெரியாத வனைப் போலவும் பெரியான். உனக்கு எல்லாம் தெரி üLEd.

Page 96
188 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
'தம்பி ஏதோ பழைசுகளை யோசிக்குது போலை” "இல்லை பெரியான்" கன்னத்தில் கையை வைத்
துக் கொண்டு கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தான்.
கூனல் விழுந்த முதுகுடன் தா தாவென இரக்கும் கண்களுடன் அவனையே பார்த்துக் கொண்டு நின்ருன் பெரியான். -
"இப்ப என்ன விலை போகுது பெரியான்?" "ஐம்பது சதம் தம்பி”
பேசாமல் எழுந்து சென்று ஒரு ரூபா நாணயத்தை எடுத்து வந்து பெரியான் கையில் கொடுத்தவன் பழைய படியே சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து கொண்டான்.
"அப்ப நான் வாறனுக்கும்’ 'தம்பி பெரியானைக் கொஞ்சம் நிற்கச் சொல்லு' குசினியிலிருந்து அம்மா சொன்னுள்.
'இல்லைப் பிள்ளை; தம்பி ஒரு ரூபா தந்தது; நான் போகப்போறேன்".
"அப்ப நீ இப்ப தேத்தண்ணி குடியாய்தானே! பின்னைப் போட்டுப் பேந்து வாவேன்".
"அப்ப நான் வாறேன் தம்பி” கைகளை வயிற்றுக்கு மேலால் இடுப்புடன் இணைத்த படியே கூனல் விழுந்த முதுகுடன் அந்தத் தாண்டும் நடையில் பெரியான், தெற்கு வேலிப் படலையைக் கடப் பது தெரிந்தது. இவன் மனதில் சலிப்பு மேலோங்கியது.
'தம்பி தேத்தண்ணி குடிக்கப் போறியே’
'இப்ப வேண்டாம் அம்மா”

குப்பிழான் ஐ. சண்முகன் 1/ 189
*பின்னை எலுமிச்சம் பழத் தண்ணி கரைச் சுத் தாறதே"
'இப்ப ஒண்டும் வேண்டாம்",
மனம் எங்கெங்கோ அலை பாய்ந்தது. இப்போ ஒவ் வீசில் இருந்தால் என்ன செய்து கொண்டிருப்பேன்? அந்த இருண்ட மூலையிக்கை இருந்து ஏதாவது வாசித் துக் கொண்டிருப்பேன், இல்லாவிட்டால் கன்ரீனுக்குப் போய் அரசியலோ இலக்கியமோ பேசிக்கொண்டு நண் பனுடன் தேத்தண்ணி குடிச்சுக் கொண்டிருப்பன்.
"ஒவ்வீசிலை எனக்கு முன்னுலை இருக்கிற பெட்டை யள் எப்போதும் போலவே சும்மா கலகலத்துக்கொண்டு சிரித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் கடதாசித் துண்டு களால் எறிந்து கொண்டிருப்பினம்!
'அவளை ஒருக்கால் பார்க்க வேணும் போல இருக் குது. ஏதாவது சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அரைகுறை சிங்களத்தில் பேசவேணும் போல இருக்குது. அவளு டைய அந்த கிறங்கவைக்கிற, அர்த்தம் செறிந்த, ஆவல் தொனிக்கிற பார்வையையும் புன்னகையையும் பார்த் துப் பதிலுக்குச் சிரிக்கவேணும் போல இருக்குது'
வளவின் தொடக்கத்தில், புளியமரத்தடியில் அம்மம்மா வந்து கொண்டிருந்தா. தலையில் பெரியதோர் ஒலைக் கடகம். கைகளை ஆட்டி ஆட்டி அசைந்து வந்துகொண் டிருந்தா. வாசல் விருந்தையில் கடகத்தை வைத்து விட்டு அவனைப் பார்த்துத் தலையாட்டிச் சிரித்தா. முகத்தில் இழையோடிய ஒரு பிரகாசம். அவன் வெறுமே சிரித் தான.
‘எப்பவடா தம்பி வந்தனி?”
"நேற்று வந்தனன்; எப்பிடி அம்மம்மா உங்கடை சுவாத்தியம்?"

Page 97
190 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
“எங்கடை சுகத்துக்கு என்னடா குறை?” அவனுக்குப் பக்கத்தில் சுவருடன் சாய்ந்து உட் கார்ந்து கொண்டாள்.
"கொழும்புப் பக்கமெல்லாம் சாப்பாடு எப்படிப் போகுது? ஆள் சரியான கேவலம்,”
*நான் நெடுகிலும் இப்படித்தானே” என்று அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.
"மனம் சந்தோஷமாக இருந்தால் தானே அம்மம்மா உடம்பும் தேறும்.”
"ஏன் இப்ப உனக்கென்ன குறை?” 'எனக்கு இந்த வேலை பிடிக்கேலை; படிச்சுப்போட்டு படிப்புக்குத் தக்க வேலை கிடைச்சாத்தானே சந்தோஷ. மாக இருக்கலாம்."
"ஏன் இப்ப எவ்வளவு சம்பளம் தாருங்கள்?"
"முன்னூறு ரூபாய்க்குக்கிட்ட நான் சம்பளத்திற் காகச் சொல்லேலை அம்மம்மா,”
சில கணங்கள் மெளனமாக இருந்தான். தன்னு
டைய நுணுக்கமான உணர்வுகளை, சோகங்களை எப்படி அவருக்குப் புரியவைக்கலாமென யோசித்தான்.
"அவரவருக்குப் பிடித்தமான வேலை எண்டாத்தானே சந்தோஷமாக இருக்கலாம்."
அம்மம்மா ஒன்றும்சொல்லவில்லை. அவனும் மெளன மாகத் தன் நினைவுகளில் ஆழ்ந்தான். வாழ்க்கைதான் எத்தனை அற்புதமாக அமைந்துவிடுகின்றது எத்தனை விதமான இனிய கனவுகள்; ஏத்தனை விதமான மயக்கும் எழில்கள்; எத்தனை விதமான சோகங்கள்; எத்தனை வித

குப்பிழான் ஐ. சணமுகன் / 191
மான அப்பாவித்தனங்கள்; எத்தனை நடிப்புகள்; எத்தனை கள்ளங் கபடமற்ற புனிதங்கள்.
அம்மம்மாவைப் பார்த்தான். அவள் காலே நீட்டிக் கொண்டு வெற்றிலைத் தட்டத்தை வைத்து டக் டக் கென்று பாக்கு வெட்டிக் கொண்டிருந்தாள்.
'அம்மா, அம்மம்மா வந்து நிக்கிற,” பலத்த குரலில் சொன்னுன்.
"குஞ்சாச்சி உதிலை வெத்திலைத் தட்டம் கிடக்கணை* உவன் தம்பியோடை கதைச்சுக் கொண்டிரணை; நான் இந்தக் கையலுவலை முடிச்சுப்போட்டு வாறன்’ அம்மா குசினியிலிருந்து வெளியே வந்து சொன்னுள்.
"அவன் ஒண்டும் கதைக்கிறனில்லையடி பிள்ளை. சும்மா கேட்டதுக்குப் பதில் சொல்லிப் போட்டு இருக் கிருன்.”
"என்னத்தையணை கதைக்கிறது.” அம்மம்மாவும் அம்மாவுடன் குசினிப் பக்கம் சென் ლფ6fr.
அவன் தனிமையில் விடப்பட்டான்.
நேரம் கிட்டத்தட்ட பத்து மணியாகிவிட்டிருந்தது. வெளியே வெயில் கானல் எறியத் தொடங்கியிருந்தது. வீட்டு வாசல் முன்பாக சோலையாய் கவிந்திருந்த பலா மரத்தின் கிளைகள் சோழகக் காற்றில் அசைந்து சலசலத் தன. மரத்தின் கீழே ஒளிப் புள்ளிகள் கோலம் போட்
6.
கிழக்கே அடைக்கப்படாத வேலியினூடே தொ லையை ஊடுருவினுன். கண்ணுக்கெட்டிய தூரத்தில் குஞ்சியம்மாவின் வீட்டுக் கிணற்றடித் தென்னஞ்சோலை கள் தெரிந்தன. கிணற்றடியில் யாரோ ஒரு பெண்

Page 98
192 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
சலவை செய்து கொண்டிருந்தாள். அவள் சேலை ஒன்றை தலைக்கு மேலால் தூக்கி தூக்கி கல்லில் அடித் துக் கொண்டிருந்தாள்.
தூக்கம் கண்ணை மயக்கிற்று. கண்களைக் கசக்கிக் கொண்டான்.
‘குஞ்சியம்மா வீட்டை போன இராணி அல்லது
வேறு ஆரேன் இருப்பினம். அவையோடை ஏதேன் கதைக்கலாம்."
'அம்மா ஞானக் குஞ்சியம்மா வீட்டை போட்டு வாறேன்."
(1974)
OO

எல்லைகள்
அந்தக் குருவியின் கத்தலுடன் அவனுக்கு விழிப்புக் கண்டது. அவன் இடப்புறமாகத் திரும்பிப் படுத்தான். பாதங்கள் குளிர்ந்து சில்லிடுவது போலிருந்தது. போர் வையை இழுத்துப் பாதங்களை மூடிக்கொண்டான். அடுத்த அறையில் மெல்லிதாக கொட்டாவிவிடும் சத்தம் கேட்டது. ஆள் அசைவதினுல் கட்டிலின் சரசரப்புக் கேட்டது. முழுவதாகத் தூக்கம் கலையாத மயக்கத்தில் அவன் கண்களை மூடியிருந்தான்; மூடிய கண் இமை களில் இருள் வட்டங்களும், ஒளி வட்டங்களும், ஒன் றேடு ஒன்று கலந்தும், கூடியும், பிரிந்தும், மாறுபட்டும் அசைவது போலிருந்தது. ஒருவிதமான அமைதி; ஒரு விதமான மயக்கம்; ஒருவிதமான இனம்புரியாத அலுப்பு. அந்தக் குருவி மட்டும் டிரிங். டிரிங். என்று தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தது.
மூடிய கண்ணிமைகளின் ஊடாக ஒளி ஊடுருவிற்று அவன் திடுக்கிட்டு விழித்தான். அடுத்த அறையில் வெளிச்சம் போடப்பட்டிருந்தது. கதவின் இடைவெளி

Page 99
194 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
களுடாகவும் கூரையை ஒட்டிய இடைவெளியினூடாக -வும் அது இவன் அறையிலும் பரவி இருந்தது. இவன் அறை நண்பன் சிவத்தக் கம்பளியால் உடல் முழு வதையும் மூடி குறங்கி உறங்குவது மங்கலாகத் தெரிந் தது. அறையிலெழுந்த சந்தடியிலிருந்து வீட்டு எஜமானி எழுந்து விட்டாளென இவன் ஊகித்தான்.
இவன் நீட்டி நிமிர்ந்து படுத்தான். கண்களை நன்ருக மலர விழித்துக் கூரை முகட்டைப் பார்த்துக் கொண்டிரு ருந்தான். அன்று இரவு சரியாக உறங்கவில்லைபோல இவனுக்குப் பட்டது. இரவு பதினெரு மணிக்குப் படுக் கப் போகமுன் கடைசியாகப் படித்த கதை இவனுக்கு மங்கலாக ஞாபகம் வந்தது. முதல்நாள் மாலையில் ஒவ் வீசுக்கு லீவு போட்டு விட்டுப் பார்த்த சினிமாப்படம் ஞாபகத்திற்கு வந்தது. முதல் நாள் அவன் நெருங்கிய நண்பனிடமிருந்து வந்த, கண நேரச் சலசலப்பை ஏற் படுத்திய, அவன் மனத்தில் ஏதோ இனம்புரியாத சோகத்தை ஏற்படுத்திய அந்தக் கடிதம் ஞாபகத்திற்கு வந்தது.
அந்தக் குருவி தொடர்ந்தும் டிரிங்.டிரிங். என்று கத்திக்கொண்டேயிருந்தது. "இந்த இழவு ஏன் கத்திக் தொலைக்கிறது.’ என்று நினைத்துக் கொண்டான். தொடர்ந்து அப்படி நினைத்ததற்காக வெட்கப்பட்டான். அந்தக் குருவியின் கத்தலை அவன் மிக ஆழமாகக் கவ னித்தான். அதில் பொங்கி வழியும் குதூகலத்தை அவன் உணர்ந்தான். அவனுக்கு அத்தக் குருவியின் மேல் பொருமைப்பட வேண்டும்போல் இருந்தது.
பெருமூச்சு விட்டுக்கொண்டு ஏதோ நினைவில் மூழ் இக் கிடந்தவன் சரேலென துள்ளி எழுந்துகொண்டான் கண்களைக் கசக்கிக் கொண்டான். கைகளை முன்னும், மேலும் பக்கவாட்டிலுமாக நீட்டி நீட்டி தேகாப்பியா சம் செய்து கொண்டான். வளைந்து குனிந்து நிமிர்ந்தான்.

குப்பிழான் ஐ. சண்முகன் / 195
ஒன்று மாறி ஒன்றக கால்களை முன்னும், பக்கவாட்டி லும், பின்னும் பின்னும் வைத்து எடுத்தான். உடம்பின் அலுப்பு நீங்கி புத்துணர்ச்சி வந்துவிட்டதாக அவன் தனக்குள் தானே நம்பிக் கொண்டான். ، لسلة
மெதுவாக ஜன்னலின் ஒரு சிறகைத் திறந்து வெளியே பார்த்தான். பலபலவென்று விடிந்துகொண் டிருந்தது. அரையிருட்டில் மிதக்கும் மரங்களும் தென்னை மர ஒலைகளும் ஏதோ கனவுக்காட்சி போலிருந்தன. குருவி டிரிங், டிரிங் கென கத்துவது கேட்டது. அவன் மனத்திலும் குதூகலம் பொங்கி வழிவதுபோற் தோன் றிற்று.
அறையினுள் திரும்பி லைற்றைப் போட நினைத்தவன் குறங்கி உறங்கும் நண்பனின் நிலையைப் பார்த்ததும் தன் நினைப்பை மாற்றிக் கொண்டான். போர்வையால் உடம்பை மூடிக்கொண்டு கண்ணை விழித்துக்கொண்டு அப்படியே நீட்டி நிமிர்ந்து படுக்க வேண்டும்போல அவனுக்குப் பட்டது. எவ்வளவு சாதாரணமாக நண்பன் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தான். இந்தத் தேடல் களும் காத்திருத்தல்களும், ஏன் வாழ்க்கையும் அர்த்த மற்றவை போல அவனுக்குப் பட்டது. சோர்ந்துபோய் கட்டிலில் உட்கார்ந்தான்.
குருவி டிரிங், டிரிங்கென கத்திக் கொண்டிருந்தது.
பாத்ரூம் தொட்டியில் சளசளவென்று தண்ணீர் நிரப்பும் சத்தம் கேட்டது. வீட்டு எஜமானி திறந்து விட்டிருப்பாளென நினைத்துக் கொண்டான். அந்த அதி காலையிலேயே சில்லிடும் பனிக்குளிரில் குளித்தால் எப் படி இருக்குமென நினைத்துக் கொண்டவன் துவாய்த் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு, சோப் பெட்டியையும், பற்பொடியையும் கையிலெடுத்துக்

Page 100
196 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
கொண்டு, மெதுவாக அறைக் கதவைத் திறந்தான். அது என்றுமில்லாதவாறு அன்றுதான் சத்தம் போட்டுத் திறந் தது போலிருந்தது. அறைநண்பன் மறு பக்கம் திரும் பிப் படுத்தான். பாத்ரூம் வாசலில் மின்விளக்கின் வெளிச் சம் மங்கலாகப் பரவி இருந்தது. பாத்ரூமுக்கும் வீட்டுக் கும் இடைப்பட்ட ஓடையில் வீட்டுக்கு எஜமானி பல் துலக்கிக் கொண்டிருப்பது நிழலுருவமாய் தெரிந்தது.
வீட்டு வாசல் முகப்பில் நின்றுகொண்டு இவனும் பல் 3லத் துலக்கத் தொடங்கினன். குளிருக்குப் பாதுகாப்பாக துவாயினுல் நெஞ்சை மறைத்துக்கொண்டான். தென்னை மர ஒலைகள் அசைவற்று நிர்ச்சலனமாகக் கிடந்தன. வானத்தில் இரண்டொரு நட்சத்திரங்கள் பளிச்சிட்டன. காக்கைகள் கத்திக் கொண்டு பறந்தன.
முகம் கழுவிக்கொண்டு வந்த எஜமானி இவனை ஏதோ அதிசயமாகப் பார்த்துக் கொண்டு குசினியுள் விரைந்தாள். இவன் குளியலறையில் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டான். உடம்பு சில்லிட்டு நடுங்கிற்று. பற்கள் தாளம் போட்டன. இவன் தண்ணிரைக் கையி னுல் அளைந்தவாறே தயங்கினன். ‘வாழ்க்கையின் அர்த் தமென்ன? வெறும் நாளாந்த இயக்கங்கள் தான? குளித்து முழுகி, உண்டு உடுத்து, பேசிச் சிரித்து.'
சிரித்து.
அவள் அழகாகச் சிரிப்பாள். அகத்தின் மலர்ச்சி யாய் இதழ்கள் விரிய, கண்கள் பரவச ஒளி பெற்றுத் திகழ, வெண்பற்கள் பளிச்சிட அடித்தொண்டையிலி ருந்து மென்மையான ஒரு தொனி கிளம்பி வர.
கடகடவென்று தண்ணிரை அள்ளி உடம்பில் ஊற்றினன். சோப் போட்டு உடம்பைத் தேய்த்துக்

குப்பிழான் ஐ. சண்முகன் / 197
கொண்டான். துவாயால் உடம்பை ஒத்திக்கொண்டு அறைக்கு மீண்டான். 1.
வீட்டு நடுக்ஹோலில் வெளிச்சம் போடப்பட்டிருந் தது. நடுக்ஹோலையும், அவன் அறைவாசலையும் பிரிக் கும் இடைவெளியின் திரைச்சீலை அரைகுறையாக இழுத்து மூடப்பட்டிருந்தது. இடைவெளியின் திறந்த பகுதியினூடாக புகை வளையங்கள் கிளம்பிச் சுழன்று, சுழன்று செல்வது தெரிந்தது. மெல்லிய சத்தத்தில் வானெலியிலிருந்து நாத வெள்ளமாய் இன்னிசை கிளம்பி வந்தது.
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிரெழுந்
தென்அத்தன் ஆனந்தன் அமுதன் என்றுள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய்.
அன்று திருவெம்பாவை ஆரம்ப நாளென்பது அவ னுக்கு நினைவு வந்தது. அவனுக்கு கோவிலுக்குப் போக வேண்டும் போலிருந்தது. வீட்டின் வேலைக்காரச் சிறுவன் கொண்டுவந்து கொடுத்த ஆவி பறக்கும் தேனீரை மடக் மடக்கென்று குடித்தான். அந்தச் சிறுவனைப் பார்க்கை யில் அவனுக்கு அனுதாபமாக இருந்தது. சோகைபிடித்த பையன் போல அவன் இருந்தான். சிறுவனின் கண் களில் கலையாத தூக்கத்தின் சாயல் தெரிந்தது.
"வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ"
அவளது மெதுமையான நளினமான குரலோசை
அவன் மளமளவென்று வெளிக்கிட்டுக்கொண்டான். அப்போதுதான் விழித்த அறை நண்பன் கேள்வியைக்
கண்ணில் தேக்கி இவனைப் பார்த்தான். "கோவிலுக்கு போகிறேன்' என்று இவன் சொன்னன். "சோதனைக்கு
FIT-13

Page 101
198 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
இன்னும் இருபது நாள் கிடக்கு. நான் விடிய விடியப் படுக்கிறேன்" என்று துள்ளி எழுந்தான் அவன்.
இவன் தன் உற்சாகத்தை எல்லாம் இழந்தவனுக அவனைப் பார்த்தான். அவன் கன்னத்திலடித்து அவனை பேசாது படுக்கச்சொல்ல வேண்டும் போல இவனுக்குப் பட்டது. சிறிது நேரம் தயங்கி நின்றவன் 'நான் வா றேன்" என்று சொல்லி அறையை விட்டுக் கிளம்பினுன்.
வெளியே பணி புகையாய்த் தெரிந்தது. ஒழுங்கை யில் முன் தலையில் வழுக்கை விழுந்த ஒருவர் இவனைக் *கோவிலுக்குப் போகிறீரா” என்று விசாரித்தார். இவன் ஆமெனத் தலையசைத்தான். ஒருகூடு கற்பூரத்தை இவன் கையில் திணித்து அவர் பரபரப்புடன், அவசரத்துடன் எங்கோ விரைந்தார்.
இவன் சோர்ந்துபோய் பஸ்ராண்டை நோக்கி நடந் தான்.
விடியற்காலை அமைதியில் வீதி நீண்டு கிடந்தது. கரையிலிருந்த வீதி விளக்குகள் மெளனமாக மினுங்கின. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒளிக்கோடுகளாய் வாகனங்கள் அசைந்தன.
பஸ் ஸ்ராண்டில் சிலர் பஸ்ஸிற்காகக் காத்து நிற்கிறர் கள். அனேகமானேர் கோவிலுக்குப் போகின்றவர்க ளாகவே இருந்தார்கள். ஒருசிலர் கைப்பைகளுடன் எங்கோ தொலை தூரம் பயணப்படுபவர்கள் போல நின்றி ருந்தார்கள். இரண்டொரு வாலிபர்களைத் தவிர கோவி லுக்குப்போக நின்றிருந்தவர்களில் அனேகர் பெண்கள். குளித்து முழுகி வண்ணங்களினலான பட்டுச் சேலைகள் கட்டியிருந்தார்கள். இளம் பெண்கள் பளபளக்கும் நீண்ட பாவாடையும் சட்டையும் அணிந்திருந்தார்கள். அவர்களின் முகங்கள் அப்போதுதான் விரியும் மலர்
56ft 85. . .

குப்பிழான் ஐ. சண்முகன் / 199
குழந்தையின் பேதைமை மாருதஅந்தக் காலத்தில் மழைபெய்த ஒரு திருவெம்பாவைக் காலைப் பொழுதில், கிராமக் கோவில் வீதியில் பவள மல்லிகை மரத்தின் கீழ் மலர்கள் பொறுக்கிய அவனும் அவளும்.
பஸ் இரைந்துகொண்டு வந்து நின்றது. எல்லோரும் இடித்துப் பிடித்துக்கொண்டு ஏறினர். இவன் கடைசியாக ஏறினன். இரண்டு மூ ன் று நிறுத்தங்களுக்கப்பால் இறங்கித் தனியணுக நடந்து கோவிலுக்குச் சென்றன்.
கோவிலுள் கூட்டம் அதிகமாக இருந்தது. பாடற் பூசை அதன் இறுதிநிலைக்கு வந்திருந்தது. இறுதிப் பாடலைத் தொடர்ந்து பூசகர் தீபம் காட்டினர். மேளம் முழங்கிற்று. கூட்டம் அரோகராச் சத்தம் இட்டது. இவ னுக்கு முன்னுல் நின்றவர் கரங்களைத் தலைக்குமேல் தூக்கி மூன்றுமுறை தன்னைத்தானே சுற்றிவந்தார். இவனும் கரம் கூப்பினுன். ஏதோ பொறி தட்டினல் போல; இதெல் லாம் எதற்காக? எதற்காக?"
விபூதி கொடுத்தனர்; தீர்த்தம் கொடுத்தனர்; சந்த னம் கொடுத்தனர்; பிரசாதம் கொடுத்தனர்; குசுகுசு கதை கள் மேலோங்கி நின்றன. மனிதர்கள் நடமாடும் நிழல் களாய் அசைந்தனர். ஒவ்வொரு முகத்தையும் பார்க்க வேண்டும் போலவும். அந்த அந்த மனங்களில் கனக் கும் சோகங்களை அறியவேண்டும் போலவும். கையைப் பிடித்து வருடி ஆறுதல் சொல்ல வேண்டும் போலவும் .
கோவிலுக்கு அவனுக்குத் தெரிந்த நெருங்கிய நண் பர்கள் எவரும் வந்திருக்கவில்லை. கோவில் மண்ட பத்தையொட்டிக் கட்டப்பட்டிருக்கும் குந்துச்சுவரில் சிறிதுநேரம் இருக்கவேண்டும் போலிருந்தது. அசையும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். சிரிக்கும் முகங்களையும், கதைக்கும் வாய்களையும், தலையாட்டல்

Page 102
200 /சாதாரணங்களும் அசாதாரணங்களும்
புன்முறுவல்களையும், மனத்தைச் சொக்கவைக்கும் வண் னங்களையும், நளினங்களையும், கடைக்கண் வீச்சல்களை யும் பார்த்துக் கொண்டிருந்தான்.
கூட்டம் சிறிது சிறிதாக குறைந்துகொண்டிருந்தது. பெருமூச்சு விட்டுக்கொண்டு எழுந்திருந்தான். வீதியை ஒட்டிய கோவில் வாசற்புறத்தை அடைந்தவன் நடந்து போவோமா, பஸ்ஸில் போவோமா என்று ஒருகணம் தயங்கினன். விடியற்புறத்து நடை ஒரு மாறுதலாக விருக்குமென நினைத்தவன் நடக்கத் தொடங்கினன்.
காலை வெளுத்து நகரம் உயிர்த்துவிட்டது. அவசர அவசரமாக மனிதர்கள் வீதியில் நடமாடத் தொடங்கி விட்டார்கள், வாகனங்கள் இடையருத இரைச்சலுடன் ஓடத் தொடங்கிவிட்டன.
அவன் மனதில் கவிந்த தவிப்புடன் நடந்தான். இந்த வாழ்வின் ஒவ்வொரு இயக்கமும் அர்த்தமற்றவை போலவும், சோகம் நிரம்பியவை போலவும் அவனுக்குப் பட்டது. அர்த்தமற்ற இயக்கங்களும், இனிமை கவிந்த சோகங்களுந்தான் வாழ்க்கையின் அர்த்தங்கள் போல வும் அவனுக்குப் பட்டது. ஏதோவொரு பாடலை ծpgԱԶ} முணுததவாறு நடநதான.
வழியில் பாலம் எதிர்ப்பட்டது கால்வாயின் மரங்க ளற்ற இடைவெளியினூடாக தூரத்தில் தொழிற்சாஜலப் புகைக் குழாயினூடாக புகை சென்று கொண்டிருந்தது, அது வளைந்து வளைந்து வானத்தில் ஏதோ தேடுவதாக அவனுக்குப் பட்டது. தங்கச் சூரியனின் பொன்னிறக் கதிர்கள் புகைக்கோடுகளாக மர இடைவெளியினூடா கக் கோலம் போட்டது.
நேரம் ஏழுமணியாகிக் கொண்டிருந்தது, தனித்த அவன் நடையின் துரிதம் கூடிற்று. கைகளை வீசிக் கொண்டு நடந்தான். எதையும் பார்க்காதவனுக எதை

குப்பிழான் ஐ. சண்முகன் 1 201
யும் மனத்தில் வாங்காதவனுக நடந்தான். கையைத் தூக்கி அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு நடந்தான்.
தொழிற்சாலைச் சங்கூதிற்று. இரண்டு மூன்று மாதங் களுக்கு முன்னர் அவன் அந்த வீதியில் குடியிருந்த போது, அந்தச் சங்கூதலுடன் வீதியில் எதிர்ப்படும் அந்த அழகி, அவன் நினைவுக்கு வந்தாள். சிவந்த நிற மூம், இளமை கொஞ்சும் வாளிப்பும், கனவுகளைத் தேக் கிய கண்களும் ஒய்யாரமான கைவீச்சும்., அவனைக் கண்டு சில வேளைகளில் புன்னகை பூப்பாள் சில வேளை களில் கண்டும் காண்தவளாக முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு செல்வாள். அவன் பார்வை தொலைவை ஊடுருவிற்று. அவள் அசைந்தாடி வருவது தெரிந்தது. அவன் மனத்தில் பரபரப்பு மேலோங்கிற்று. நீண்ட சில நாட்களின் பின் அவளை எதிர்கொள்ளத் தயாரானன். அவள் அவனை அண்மினுள். உயிரற்ற ஒரு பார்வை: தலை கவிழல்; மெளனம்; விரைந்த நடை.
அவனுள் ஏதோ நொறுங்கியது போலிருந்தது. தொழிற் சாலை, பஸ், கார், கைக்கடிகாரம், மூக்குக் கண் ணுடி எல்லாவற்றையும் அடித்து உடைக்க வேண்டும் போலிருந்தது. எல்லா மனிதரையும் பிடித்துவந்து சிரிப் பதற்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் போலிருத்தது.
அவளும் சிரித்தாள். கோவில் திருவிழாவில் அவன் அவளுக்காகக் காத்திருந்தபோது, அவனுடன் சிரித்த வள். அவனுடன் திரிந்தவள். வேறெருவனுடன் குலுங்கிக் குலுங்கி குதூகலமாய்ச் சிரித்தாள்.
அவன் தன் கண்களிஞலேயே கண்டான்.
"ஐயா! பிச்சை” என்று கை நீண்டது, பாடசாலை மதிற் சுவரில் சாய்ந்திருந்தவன் கந்தல் துணி கட்டியிருந்

Page 103
202 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
தான். முகத்தில் நரை மயிர்கள் கண்களில்., பத்துச் சதத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு நடந்தான்.
கைகளை வீசிக் கொண்டு, கால்களை அகல வைத்துக் கொண்டு, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கன கம்பீரத் துடன் நடந்தான். அவனுக்குத் தன்னிலேயே வெறுப்பு வந்த மாதிரி இருந்தது. "இந்த மனிதர்கள்.இந்த மணி தர்கள்" என்று த்லையில் அடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
மனிதர்கள் விரைந்து கொண்டிருந்தார்கள். கார் களும், பஸ்களும் விரைந்து கொண்டிருந்தன. அகன்ற அந்த வீதியைக் கடப்பதற்கான சரியான சந்தர்ப்பத தைப் பார்த்து அவன் காத்திருந்தான். w
சந்தியிலிருந்த "சிக்னல் விளக்கில் பச்சையொளி. எல்லாமே பேரிரைச்சலுடன், பிரமாண்டமாக ஓடிக் கொண்டிருப்பதாக.,
அவன் நடை பாதையில் சிவப்புச் சைகைக்காகக் காத்து நின்றன்.
(1977)

வலி
மார்பில் வலப்புறத்தில் கீழ்ப்பக்கமாக விட்டு விட்டுத் தான் வலித்தது. சுள்ளிடுவதுபோல, எந்தநேரம் அது வருமென்று சொல்லத் தெரியாது. எந்த நேரமும் வரலாம் நடு இரவில் நல்ல நித்திரையிலிருக்கும் போது கூட வர லாம். ஒரு ஐந்து நிமிடம் அப்படியே சுண்டிச்.சுண்டி வலித்து. இந்த வாழ்க்கையே அர்த்தமில்லை என்று நினைக்கத் தூண்டும்படி.குரல் விட்டுக் கத்தவேண்டும் போல. அம்மா. அம்மா என்று முனங்க வேண்டும் போல .
அவன் முகத்தில் மெல்லிய இழையாய் ஒரு வேதனை யின் சாயல் கவிவது தவிர வேறென்றும் தெரியாது. இடது கையில் விரல்கள் அந்த இடத்தைத் தடவுவதையே அறியாது, செய்த வேலையைச் செய்து கொண்டேயிருப் பான். ஒவ்வீசில் பைல்களைப் புரட்டிக் கொண்டிருப் பான்; றெயிலிலோ பஸ்சிலோ பிரயாணம் செய்து கொண்டிருப்பான். கடற்கரை வெளியில் மாலை கவிந்து

Page 104
204 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
வரும் அழகைப் பார்த்துக் கொண்டிருப்பான்; நண்பர் களுடன் சர்ச்சை செய்து கொண்டிருப்பான். சமயங் களில் சிரிக்கவும் கூடச் செய்வான். அந்தச் சிரிப்பில் நெருடலாக அந்த வேதனை.
அது தொடங்கி மூன்று மாதங்களாகி இருக்கலாம். அதைச் சகித்துச் சகித்துப் பழகி.இப்போது சகிக்க முடி யாததாகி, ஒரு எல்லைக்கப்பால் சகிக்க முடியாத நிலையில் இதற்குப் பரிகாரம் காணவேண்டுமென நினைத்தான். அந்த நினைப்பே ஒரு ஆனந்தம்போல இருந்தது. ஆனல் வழமையான அசமந்தத்தில் பழக்கமாகிவிட்ட வேதனைச் சகிப்பில் நாட்கள் நீண்டு. நீண்டு. செல்ல,.
அவன் நண்பன் அவனை ஏசுவான், ‘இந்த விஞ் ஞான யுகத்தில் ஏன்ரா அப்பா தேவையில்லாமல் கஷ்டப் படுகிருய்"
**எவ்வளவுதான் கொள்கைகள் பேசினலும் நீ சரி யான சோம்பேறி’
*முதலில் உன்னைத் திருத்திக்கொண்டுதான் பிறகு மற்றவைக்கு சொல்ல வேணும் காணும்';
எல்லா உந்துதல்களினுலும் ஒரு நாள் புறப்பட்டான். பத்துமணிப் பொழுதென ஞாபகம். ஒரு மைலளவு தூரத்தை நடந்துதான் சென்றன். வெயில் உறுத்தாத மப்புக் கவிந்த வானம்; தட்டு வீட்டில் வாழும் குடும்பங் கள்; வீதியை நிறைத்து அம்மணமாகத் திரியும் குழந்தை கள்; தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரி. சைக்கிள் மணியோசை, ஸ்டேசன் வாங்கில் காத்திருக்கும் குழந் தையை ஏந்திய இளம் தாய். உயிர் ததும்பும் பகல் நேர இயக்கம்.
"இவ்வளவு நாளும் இந்த உணர்வு ஏன் என்னை உறுத்தவில்லை?"
மார்பின் வலப்புறத்தில் கீழ்ப்பக்கமாக சுண்டிச் சுண்டி இழுப்பது போன்ற அந்த உணர்வு வாய்விட்டுக் கத்த வேண்டும்போல..மூன்று நிமிடத்தில் அது அடங் கிற்று.

குப்பிழான் ஐ. சண்முகன் / 205
வானம் வெளித்து வெயிலின் அகோரம்; குளிர்பானத் தொழிற்சாலையின் முன் வீதியோரம் நீண்ட உயர்ந்த மதில்; சோடா குடிக்கும் பெண்ணின் படம் போட்ட பெரிய விளம்பரம், கால்வாய்க்கும் வீதிக்குமிடையில் செழித்த சோளப் பயிர்களின் பச்சைப் பரப்பு. நீர் பாச்சும் தொப்பி போட்ட மனிதன். நெருங்கிய அணு கலில் அவன் முகத்தில் முத்தாய்க் கோர்த்து நிற்கும் வியர்வைத் துளிகள். அரச அலுவலகங்கள். மும்மொழி களிலுமான அறிவிப்புப் பலகைகள். ஒடும் பஸ்கள்; வீதியோரம் மலர் சொரியும் நிழல் மரங்கள்.
ஆஸ்பத்திரியின் ஒரு பக்கத்தில், அடக்கமான ஒரு அறையின் நடுவிலிருந்த கதிரையில், கம்பீரமான உடை யில் அந்த மனிதர் அடையாளம் காட்டப்பட்டார். சுற் றிலும் மருந்துக் குப்பிகளும் பரிசோதனைக் குழாய்களும் மூக்கைத் துளைக்கும் மருந்து நெடியுமாய்.
ஒரு புன்முறுவலுடன் நண்பன் தந்த அறிமுகக் கடி தத்தை நீட்டினுன். மேலோட்டமான கண் பரவலின் பின் ஊர், பேர், உற்ருர், சுற்றம்: தழல் பற்றிய விசாரணை.
டாக்டரின் அறை முன்னுல் குவிந்து நின்ற சனங் களினூடாக இவனைக் கூட்டிச் சென்று டாக்டரிடம் அறிமுகப்படுத்தினுர்,
'எனக்கு தம்பி முறையானவர் கல்வித் திணைக்களத் தில் வேலை செய்கின்றர் "
அவன் முகத்தையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந் தார் டாக்டர், 'என்ன வருத்தம்"?
அவனும் டாக்டரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு சொன்னன். அந்த வசீகரிக்கும் கண்களின் ஆழத்தில் ஏதோ சோகம் கவிந்திருப்பது போல இருந்தது. குழுமை யாக அணைப்பது போன்ற கருணை நிறைந்திருப்பதைப் போலவும் பட்டது. டாக்டரின் மூக்கு கொஞ்சம் நீளம் தான்.
மீண்டும் அவனை ஏற இறங்கப் பார்த்தார். முகத்தில் கடுமை, தெரிந்தது;

Page 105
206 / சாதாரணங்களும் அசாதாரணங்களும்
“நல்லாய் குடிக்கிறனிரே ஐஸே? கசிப்பு அடிக்கிற னிரா?” 'இல்லையே” என்று பரிதாபமாகத் தலையாட்டி ஞன். 'நான் சிமோக் பண்ணிறதுசுட இல்லை"
"இறைச்சி, நல்ல காரமான சாப்பாடு சாப்பிடுகிற னிராக்கும்" "நான் ஒரு வெஜிரேறியன்” மெதுவாகச் சொன்னுன்.
அவன் சொன்ன எதையுமே நம்பத் தயாரில்லாத வரைப் போல டாக்டர் அவனைப் பார்த்தார். தலையை ஆட்டினுர். அவனை மட்டும் வெளியே அனுப்பிவிட்டு அவன் ‘அண்ணரை நிற்கச் சொன்னுர்,
தள்ளாடியவனுக வெளியே வந்தான். மார்பின் வலது w புறத்தில் கீழ்ப்பக்கமாக சுண்டி இழுப்பதுபோல.
சோர்ந்து வாடித் துவண்டிருக்கும் குழந்தை, லொக்கு லொக்கென இருமி கோழை துப்பும் கிழவன். தலையைச் சுற்றி பண்டேஜ் கட்டுப் போட்டிருக்கும் அரும்பு மீசை இளைஞன். அயர்வு மேலிட்ட ஒரு கர்ப்பிணிப் பெண் இன்னும் சிலர்.கொஞ்ச தூரத்தில் மூங்கில் கழியின் மேல் பலகை பரவி அதன் மேல் நின்று செங்கற்களை அடுக்கி மாடி எழுப்பும் இரண்டு தொழிலாளர்.
டாக்டரின் அறை வாசலில் காத்து நின்ற அவனை நோக்கி அண்ணர் வந்தார். முகத்தில் ஒரு சோர்வுக்களை. எதுவுமே பேசவில்லை.
டாக்டர் என்ன சொன்னுரென்று அண்ணரிடம் விசாரித்தபோதும் அவர் தெளிவான பதிலைத் தரவில்லை. ஏதேதோ சொல்லி மழுப்பினுர். சிலவேளை அவன் அறி யக்கூடாதவையாக, அவன் அறிந்தால் வேதனைப் பட லாம் என் அவர் எண்ணியிருக்கலாம், உண்மையாகச் சொல்லப்போனுல் அவன்கூட அதில் அவ்வளவு அக் கறை காட்டவிற்லை. அந்த அக்கறையின்மைக்கு வழ மையான அசமந்தம் அல்லது என்ன நடந்தாலென்ன என்ற பிடிப்பற்ற போக்குக் காரணமாக இருக்கலாம்.
அடுத்த முறை ஆஸ்பத்திரியில் அண்ணரைச் சந் தித்தபோது அவன் சற்று உற்சாகமடைந்தவனுக இருந்

குப்பிழான் ஐ. சண்முகன் / 207
தான். முகம் தெளிவடைந்து இருந்தது. கண்களில் படிந்திருந்த அயர்வு அகன்று விட்ட்து. சொக்கையில் கொஞ்சம் சதைப்பிடிப்பு ஏற்பட்டது போலவும் இருந்தது பேச்சில் கூட ஒரு மிருதுவும், நளினமும், உறுதியுமாய்.
அண்ணர் ஆச்சரியப்பட்டுத்தான் போனுர். டாக்ட ரும் அப்படித்தான். ஆனல் அவர் அதை வெளியே காட் டிக் கொள்ளவில்லை. அந்த வசீகரிக்கும் கண்களால் அவனை ஆழமாகப் பார்த்துக்கொண்டே சொன்னுர்.
"நீர் நல்லாய் யோசிக்கிறனிர் போலை. பிரச்சினைகளை இட்டு "வொறி பண்ணக்கூடாது. ஆருக்குத்தான் பிரச் சினைகள் இல்லை"
அவன் எதுவுமே பேசாது நின்றன். மனத்தில் ஏதேதோ எண்ணங்கள். சோர்ந்து வாடி துவண்டி ருக்கும் குழந்தை. கோழை துப்பும் கிழவன், செங் கற்களை அடுக்கி மாடி கட்டும் தொழிலாளர், தொப்பி போட்டமனிதனின் முகத்தில் முத்தாய் கோர்த்து நிற்கும் வியர்வை.
'மை டியர் பாய்’ டாக்டரின் குரலில் ஒரு கம்பீரம் தொனித்தது. "யாருக்குத்தான் பிரச்சினைகள் இல்லை. மனத்தைப் போட்டு அலட்டாதேயும். நெடுகவம் வொறி பண்ணிறதும் குடற்புண் வர ஒரு காரணமென்று உமக்குத் தெரியுமா?"
ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறும்போது புது மனிதனுகத்தான் வெளியேறினன். உலகம் முழுவதுமே ஒருவித மயக்கும் அழகில் பொலிவதாக நினைத்தான். வாழ்க்கை மிகவும் அர்த்தம் நிறைந்தது என்றும் நினைத் தான், மூன்று மாதமாக நினைவில் வராத அவளின் புன் னகைபூத்த முகம் கூட நினைவில் தெரிந்தது. ஏதோ பாடல் கூட முணுமுணுப்பாகக் கிழம்பிற்று! நடையில் கூட ஒரு கம்பீரம்.
அதே வீதி: அதே பாதை.
வீதியை நிறைத்து அம்மணமாகத் திரியும் குழந் தைகள்.

Page 106
208/ சாதாரணங்களும் அசாதாரணங்களும்
சாறத்தின் அடிப்பாகத்தை இடது கையால் தூக்கிக் கொண்டு வீதியை வெறித்து நோக்கும், ஒரு வாரமாக "சேவ் எடுக்காத விரக்தி நிறைந்த கண்களையுடைய இளைஞன்;
நொண்டிப் பிச்சைக்காரன்;
தட்டு வீட்டின் கதவுநிலையில் சாய்ந்துகொண்டு, ஏக் கத்தோடு போவோர் வருவோரைப் பார்க்கும் கல்யாண மாகாத முட்பது வயதுக் கன்னிப்பெண்.
சிவப்பு எழுத்தில் மதிற்கவரில் பளிச்சிடும் ‘சிலியில், மக்களை நசுக்கும் பாஸிஸ ஆட்சியின் கொடுமைகளைச், சித்தரிக்கும் சுவரொட்டி.
அவனின் முகம் இருண்டது. பாடலின் முணுமுணுப்பு திடீரென்று அடங்கிற்று. கண்களில் வேதனையின் சாயல் கவிய இடது கை விரல்கள் மார்பின் வலது புறத் தில் கீழ்ப்பக்கமாக தடவுவதாக.
ஒரு வாரமாக இல்லாத அந்த வலி மீண்டும் நெருடு வதாக உணர்ந்தான்.
"சைய்-- என்னமாய் வலிக்கிறது"
இதற்கு நிரந்தரமாகவே ஒரு தீர்வு காண வேண்டு மென உறுதிகொண்டான்.
(1974)
O)

நிறைவில்.
வாழ்வின் தேடல்களில், காத்திருப்புகளில் அவ்வப்போது என் சிந்தனையில் கிளர்ந்த உணர்வு களின் - தவிப்புகளின் - தரிசனங்களின் கோலங் களே என் கதைகள். இந்தக் கதைகளை ஒருசேர உங்கள் முன் வைக்கும்போது, உங்கள் மனங்களில் எவ்வித முற்சார்புகளையும் ஏற்ற வேண்டாமென்று பட்டது. அதனுல்தான் இந்த என் கதைகளை நீங்கள் அனுபவித்த பின், அந்த நிறைவில் உங்களை சந்திக்கலாம் என எண்ணினேன். எதுவித "வழி காட்டலுமின்றியே, இந்தக் கதைகளின் ஆத்மாவை நீங்கள் தொட்டிருப்பீர்கள்தானே! புகைவண்டிகளில் பயணம் செய்திருப்பீர்கள். மலைகளினதும், நதிகளி னதும், பூஞ்சோலைகளினதும் அழகை இரசித்திருப் பீர்கள். மாறிவரும் உலகின், மனித மனங்களின் உணர்ச்சிக் கோலங்களைக் கண்டு வியந்திருப்பீர்கள். "அழகு இலயிப்புத் தான் இந்தக் கதைகளின் உள் ளார்த்தம் என்று நீங்கள் சொல்லக்கூடும். அப்படிச் சொன்னுல், நான் அதை மறுக்கப் போவதில்லைதான்.
இந்தச் சந்தர்ப்பத்தில், என் கதைகளை இனங் கண்டு அவற்றைப் பிரசுரித்த வீரகேசரி, ஈழநாடு, சிரித்திரன், மல்லிகை, இளம்பிறை, அஞ்சலி, கற் பகம், அலே, மங்கை, எழில், நெய்தல், கலங் கரை (மருதமுனை அல்மனர் மகா வித்தியாலய மலர்) தாமரை (கனகராயன்குளம் மகாவித்தியாலய மலர்) இதழ்களின் ஆசிரியர்களிற்கு நன்றி சொல்லக்

Page 107
கடமைப்பட்டவன். என் கதையொன்றின் ஆகர் ஷிப்பில் தொடர்பு கொண்டு, தொடர்ந்த என் கலை வாழ்வில் என்னை வளப்படுத்தியவரும், எனது முதல் தொகுதியான கோடுகளும் கோலங்களும் உரு வாக்கத்திற்கு உழைத்தவருமான நண்பன் அ. யேசு ராசா விற்கும், இப்போது தமிழகத்தில் இந்தத் தொகுதி வெளி வருவதற்கு காரணமாகவிருக்கும் நண்பன் இ. பத்மநாப ஐயருக்கும். இதனை ஏற்று அழகுற வெளியிட்டு உதவும் தர்மதா பதிப்பகம் உரிமையாளர் திரு. டி. எஸ். ராமலிங்கம் அவர்களுக் கும் சம்பிரதாய பூர்வமாக நன்றி சொல்லக் கூச்சப் படுகிறேன்.
"மாணிக்க வளவு"
கரணவாய் தெற்கு
கரவெட்டி குப்பிழான் ஐ. சண்முகன் இலங்கை, 7-06-1983

நர்மதாவின் (புதுக்) கவிதை நூல்கள்
உதய காலங்கள் அமுதபாரதி இணைதேடும் இதயம் 9. IBLigs ISTL-85th மு. மேத்தா சூரிய மழை அனிதா ஜன்னல் கைதிகள் பாப்ரியா விதிகளை நேசிக்கும் வீணைகள் 壁擎· காகிதக் கனவுகள் மேத்தாதாசன் ஹிரோஷிமாவின் ஹீரோக்கள் மேமன்கவி அழியா நிழல்கள் எம். ஏ. நுஃமான் போர்க்காற்று முல்லையூரான்
OD
00
OO
00
00
00
50
00
00
00
50

Page 108
நர்மதாவின் சுய முன்னேற்ற நூல்கள்
பயன் தரும் மனுேதத்துவம்
O
மனுேதத்துவ மருத்துவம் டாக்டர் சோமசுந்தர் 10
தாழ்வு மனப்பான்மை நீங்க
மனதில் மறைந்திருக்கும் சக்தி மெஸ்மரிசம்-ஹிப்னுடிசம் பி. எஸ். ஆச்சார்யா உயர்வு உன்னிடமே மெர்வின் வாழ்க்கை உன் கைகளிலே நல்ல எண்ணம் நன்மையைத் தரும் s மனுேபலமே வாழ்வின் நலம் சுய முன்னேற்ற வழிகள் கர்மயோகி

OO
OO
50
00
OO
00
00
O)
OO
50

Page 109
“இஃளஞர்களின் மன அவச, களால் வெளிப் படுத்தி உனர் முடியாத சோகங்கள் - எத இவற்றினுல் அவர்களிடையே முறைகளுக்கு ஒத்துப் போகா தன்மை - இவற்றை ஆழ்ந்த யுடன் சித்தரிக்கும் கலேஞர்" களால் பாராட்டப் பெறும் தி இ&மங்கைப் பல்கலைக் கழகப் பட் இலக்கியம், ஒவியம், சங்கீதம் பற்றும் பரிச்சயமும் உள்ள கதைத் தொகுப்பு கோடுகளும் சமீப கால(இலங்கை) சிறு கதை குறிப்பிடத் தகுந்தது.
கல்முனேயில் (இலங்கை)கல்வி அ
தற்போது பணியும் இவருக்கு பத்தேழு,
PANTE E PELICA MOA
DRIAS-SDOT
 

ங்கள் - அவர் த்திக் காட்ட ர்ெ பார்ப்புகள் எழும் நடை "த பிடிப்பற்ற அழகுணர்ச்சி என விமர்சகர் கு. சண்முகன் டதாரி. நவீன இவைகளில் இவரது முதல் கோலங்களும் இலக்கியத்தில்
இவைகத்தில் வயது முப்