கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போது 2005.03-04

Page 1
உயிர்ப்பு எப்போது ?
இந்தச் சமுதாயம் உயிர்ப்பது எப்போது? எந்தத் தீர்க்கதரிசிக்கும் இது தெரியாது
உட்பகை, குரோதம் உள்ளவரை உயிர்ப்பு என்பது ஒருநாளும் இல்லை !
ஏமாற்று, மோசடி இருக்கும்வரை நமக்கு உலகம் நரகம்தான் !
சுயநலம்தான் மனிதனின் சுவாசம் இது நின்றால்தான் நிச்சயம் உயிர்ப்பு
சொல் ஒன்று, செயல் ஒன்று இதுதான் நமது கவிஷேசம் இந்த வேதம் ஒதும்வரை ஏது நமக்கு உயிர்ப்பு ?
இறந்துபோன மனிதன் எப்படி உயிர்ப்பான்? அவன் என்ன இயேசுகிறிஸ்துவா?

பொட்டு வைத்த பொற்குடம் பூரண நிலவு
மட்டக்களப்பின் மான்மியம் மங்கல விளக்கு

Page 2
N
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
மகாகவி பாரதியார்
w ஆண்டுச் சந்தா 100/3
PROFESSIONAL PSYCHOLOGICAL COUNSELLING CENTRE
BATTICALOA.
 

******ஆ மரத்துப் போன * போது -7 இதழ்-42*
来 மனிதன்
* கடந்த ஆண்டின் இறுதியில் திடீரென * ஏற்பட்ட கடல்கோள் நமது கண்மு நிர்வாக ஆசிரியர் ன்னே ஆயிரக் கணக்கான மனித (Managing Editor) * உயிர்களை அள்ளிச் சென்ற சோக சுவாமிஜி * நிகழ்வு மூன்று மாதம் ஆவதற்கு போல் சற்குணநாயகம்.யே.ச. 崇 முன்பே முற்றாக மறக்கப்பட்டுவிடு மென்று யாருமே எதிர்பார்த்திருக்க
பங்குனி-சித்திரை 2005 தோற்றம் 5-5-1998
ஆசிரியர் * மாட்டார்கள். ஏன் இப்படி? இந்த மனித (Editor) * ஜாதி இவ்வளவு இழிவானதா? வாகரைவாணன் நினைக்க ஒன்று; மறக்க ஒன்று என
* இரண்டு மனம் வேண்டும் என்று நிர்வாகம்: * கவியரசு கண்ணதாசன் கேட்டது (Management) * இதற்குத்தானா? உண்மையிலேயே சி.எம்.ஒக்களில் நமக்கு மலைப்பு ஏற்படுகின்றது. பணிமனை: 来
இன்றைய மனிதனின் எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் * மிக இழிந்த நிலைக்கு இறங்கிவிட்டன
உளநல உதவிநிலையம்* 15, வெபர் வீதி,
DLL6856TTUt. * என்பதற்கு அவனைச் சுற்றி நடக்கும் தொலைபேசி: நிகழ்வுகளே தக்க சான்று. O65-2222842
* இலட்சியம் ஏதும் இல்லாத * இன்றைய மனிதன் பணத்திற்காக E-mail
* பகட்டான வாழ்விற்காக பாலியல் * தேவைகளுக்காக மட்டும் வாழும் ஓர் ஈனப்பிறவி. இப்படிப்பட்டவனிடம் விழுமிய எண்ணங்களும் விரிந்த மனப்பான்மையும் எப்படி உருவாக
(Մ)լգպլք? 01.
ppccG2cdiamond.lanka.net
*్క
is a a

Page 3
தன்னலம்தான் இன்றைய மனிதனின் தாரக மந்திரம். தாய், தந்தை, தாரம், தான் பெற்ற பிள்ளைகள் கூட அவனுக்கு இரண்டாம் பட்சம்தான். தான்தான் இந்த உலகம். தனக்கு நிகராக யாரும் இல்லை என்னும் தன் முனைப்பான எண்ணம் அவனை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டது.
இத்தகைய ஓர் இழிந்த ஜீவனுக்கு சுனாமி ஒரு பெரும் சுகமாக வாய்த்தமை அவனது அதிஸ்ரம்தான். அனுதாபத்தாலும் ஏதோ ஓர் அக்கறையாலும் அந்நிய நாடுகள் - நண்பர்கள் அள்ளித் தரும் பணம் - பொருள் - அவனைப் பெரும் மயக்கத்தில் ஆழ்த்திவிட்டன.
இந்தப் பணமும் பொருட்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டபோதும் அவற்றைத் தனக்காக அவன் பயன்படுத்துவதை மனிதாபிமானம் உள்ளவர்களால் எப்படி ஜீரணித்துக் கொள்ளமுடியும்?
பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட பணத்தையும் பொருட்களையும், பொறுப்பில் உள்ள ஒரு சிலர் பதுக்குவதும் அதைப் பொதுமக்கள் கண்டுபிடித்து ஆர்ப்பாட்டப் பேரணி நடத்துவதும் நாட்டின் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன.
சுனாமியால் இறந்தவர்கள் சுவர்க்கம் போனார்களோ இல்லையோ அவர்களின் பெயரில் வழங்கப்பட்ட பணத்தை சுவைப்பவர் கள் - உலகம் என்னும் நரகத்தில் கிடந்து உழல்கின்றார்கள் என்பதுதான் gD 60öT60)LD.
இந்த உண்மையை மரத்துப்போன மனிதன் உணருவானா என்ன?
அன்புடன் வாகரைவாணன்.
O2

அறிய வேண்டிய அரிய மனிதர் -20
புகழ் பெற்ற ஓவியர் 65 Jormicil-T LIrofoiáf
லியானார்டோ டாவின்சி ! இந்தப் பெயரைச் சொன்னதும் ஒ இவரை எனக்குத் தெரியுமே, மோனாலிசா ஒவியத்தை வரைந்தவர்தானே என்று நீங்கள் கேட்கக் கூடும். ஆனால் இந்த மாமனிதன் ஓர் ஓவியர் மட்டுமல்ல.தேர்ந்த சிற்பி, சிறந்த கவிஞர், இசை விற்பன்னர், தத்துவ மேதை, விளையாட்டு வீரர், இன்ஜினியர், ஆர்க்கிடெக், கடல் ஆராய்ச்சியாளர், வானியல் விஞ்ஞானி, நீர்ப்பாசன நிபுணர், ராணுவ ஆலோசகர், இப்படி அவர் எடுத்த அவதாரங்கள் பத்துக்கு மேலே! ஐந்நூறு ஆண்டுகளுக்கு பின்பு மனிதன் கண்டுபிடிக்கவிருக்கும் ஹெலிகொப்டரிலிருந்து, பீரங்கி வரையிலான பல கண்டுபிடிப்புக்களைத் தொலை நோக்கோடு கற்பனை செய்து காகிதத்தில் வரைந்தவர் இவர்.
விமானமோ - ஹெலிகொப்டரோ கண்டுபிடிக்காத காலத்திலேயே இவர் பரசூட்டைப் பற்றி தூரிகையால் கற்பனை செய்தார். கடிகாரம் கண்டுபிடிக்காத அந்த நாளில் அலாரம் வரை சிந்தித்தார்.
தாயின் கருப்பையிலே குழந்தை எப்படி இருக்கிறது? என்றுகூட இவரின் கற்பனை விசாரணை செய்தது! ஒவியத்தில் ஒளியையும், நிழலையும், ஒருசேரக் கொண்டுவந்த முதல் ஓவியரும் இவர்தான். ! ஒளியையும் நிழலையும் இவர் கவனிக்க ஆரம்பித்தபோது கண்களைப் பற்றி ஆராய ஆரம்பித்தார். பின்பு ஒளி அலைகளைப் பற்றி விசாரணை செய்தார். கமராவுக்கான அடிப்படைத் தத்துவத்தை வழங்கியதே இவரின் ஆராய்ச்சிதான். மனிதர்களை ஓவியமாக வரைந்தபோது மனிதனின் உடற்கூறுஇயலை ஆராய்ச்சி செய்தார். செடிகளை வரைந்தபோது தாவரவியல் սft {flա தேடலில இறங்களினார்.
இதிலே மிகப் பெரிய பிரமிப்பு என்னவென்றால் இவரின் காலத்திலே மேலே சொன்ன எந்த விஞ்ஞான ஆரய்ச்சியுமே துளிர்விடக்
O3

Page 4
கூட ஆரம்பிக்கவில்லை. ஒரே சமயத்தில் இரண்டுகைகளாலும் ஓவியம் வரையக்கூடிய ஒப்பற்ற ஆற்றல் இவருக்குண்டு. அது மட்டுமல்ல . மூளையைப்போலவே இவரின் புஜங்களும் பலம் வாய்ந்தவை. குதிரை லாடங்களை வெறும் கைகளால் இரண்டாக உடைக்கக் கூடியவர்
இவர்.
இத்தாலியின் புளோரன்ஸ் நகர் அருகே உள்ள வின்சி என்ற மலைகள் சூழ்ந்த கிராமம்தான் இவரின் பிறந்த ஊர். டாவின்சியின் அப்பா பெயர் சாப்பியரோ. இவருக்கும் கர்த்தரினா என்ற கூலிவேலை பார்த்த பெண்ணிற்கும் 1452ம் ஆண்டு சட்டவிரோதமாகப் பிறந்தகுழந்தைதான் டாவின்சி. பிறந்தவுடனேயே தாய் இன்னொருவருடன் குடும்பம் நடத்தப்போய்விட தாய்ப்பாசம் என்றால் என்னவென்று தெரியாமலே வளர்ந்தார், இந்த மாபெரும் ஒவியர்.
மைக்கல் ஏஞ்சலோ போன்ற ஒவிய மேதைகள் இவரின் காலத்தில் இவர் வாழ்ந்த அதே இத்தாலி நாட்டில் இருந்தார்கள். என்றாலும் டாவின்சியைப்போல கலை, மருத்துவம், பெளதீகம், தாவரவியல், என்று எல்லாத் துறைகளிலும், தடயம் பதித்த இன்னொருவரை உலகம் இன்றுவரை ஈன்றெடுக்கவில்லை.
1911ம் ஆண்டு திருடன் ஒருவன் இந்த மகா ஒவியத்தை திருடிக்கொண்டு போய்விட்டான். ஒவியம் காணாமல்போனபிறகு அது வைக்கப்பட்டிருந்த வெற்றிடத்தைப் பார்க்கவே கூட்டம் அலைமோதியது. பிறகு ஒருவழியாக மீட்கப்பட்ட இந்த ஓவியம்இப்போது பாரீசின் லூவர் மியூசியத்தை அழகுபடுத்திக் கொண்டிருக்கிறது. மோனாலியா ஒவியம் இப்போது எவ்வளவு ரூபாய் மதிப்புக்கு இன்ஷிர் பண்ணப்பட்டிருக்கிறது GgõuuDT...? ஐந்நூறு கோடி ரூபாய்க்கு.
(வாவ் 2000)
O4

கண்ணிர்க் கவிதைகள்
எங்கள் தேசத்தின் சுதந்திரத்தாய் சர்வாதிகாரத் தால் கடத்தப்பட்டுள்ளதால் எங்கள் பேனா டுற்னைகளும் கண்ைர்ைக் கவிதைகளையே வடிக்கின்றன !
தேசக் கடலில் шншоопђ 6kлüф தெய்வீகக் கப்பல்கள் தெப்பங்களாகி. அனாதியற்று அலைகின்றன அலைகளுடன்.
இன்னும் எங்களின் தேச மானுடங்களாகத்தான். அவர்கள்தான் - எம்மை மிடுகங்களைவிடவும் இழிவாக்கிவிட்டார்கள். அதனால்தான் வானக் கன்னியும் அக்கினியைப் பொழிகின்றாள்.
O 5

Page 5
புரட்சிப் பூக்கள்தான் இன்னும் பூக்கின்றன. ஆனால்-எங்களுள் ஏராளப் பூசல்கள். அதுதான் தோல்வி அத்தியாயங்கள் வாழ்க்கைப் புஸ்தகத்தின் தொடர்கள்
நாங்கள் வாழ்கின்றோம் ‘இன்னும்.ஏனென்றால் இறப்பதற்கு நேரம் வரவில்லை
என்றுதான் இன்றேல் எங்களுயிரை பிறப்பின்போதே. மரிக்கச் செயிதிருப்போம் ID itpddiLGoi...!
O6

கடல் வந்தபோது.
காலை எட்டு மணி இருக்கும். மார்கழிக் குளிரின் பிடியில் இருந்து மட்டக்களப்பு இன்னும் விடுபடவில்லை. நான் இறுக்கிப் போர்த்திய போர்வையோடு வீட்டின் முன்வாசலில் நின்றபடி பார்வையை வெளியே செலுத்துகின்றேன்.
சில நாட்களுக்கு முன்பு, என்னைவிடக் கொடைவள்ளல் யார் இருக்கிறார்கள் என்று கேட்பது போல வர்ண பகவான் வர்ஷித்த மழைவெள்ளம், எங்கள் வீட்டின் முன் குண்டும் குழியுமாகக் காட்சி தரும் மாநகர சபை கிறவல் றோட்டிலிருந்து வெளியேற விரும்பாமல் ஒரு குளமாகத் தேங்கிக் கிடக்கின்றது.
பொங்கலுக்குப் பிறகு ஆணையாளரைக் கண்டு பேசி இதற்கு ஒரு வழிகாண வேண்டும் என எனக்கு நானே கட்டளையிட்டுக் கொண்டு அந்த இடத்திலேயே நிற்கிறேன். . சனங்கள் சாமான் சட்டுக்களோடு ஓடி வருகின்றார்கள்.பாவம் ஒருபையன். அந்தக் குளத்தில் சறுக்கி விழுந்துவிட பின்னால் வந்த பெரிய மனம் படைத்த ஒருவர் அவனைத் தூக்கிவிடுகின்றார். அவன் தன் காற்சட்டையில் படிந்த சேற்றைத் துடைத்துக் கொண்டு திரும்பிப் பாராமல் ஓடுகின்றான்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இந்தச் சனங்கள் ஓடுதுகள்? என்ன நடந்தது? என்னையே நான் கேட்டுக் கொள்கின்றேன். ஆனால் பதில்தான் இல்லை. அதனால் என் மனைவியைக் கூப்பிட்டு ஆட்டு மந்தைகள் போல ஒடும் சனத்தைக் காட்டுகின்றேன். அவள் அந்தக் கூட்டத்தை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு “இதுகள் வெள்ள நிவாரணம் வாங்க ஓடுதுகள்” என்கிறாள் தீர்க்கமாக.
மனைவியின் பதிலில் பூரண திருப்தி அடையாத நான் சற்று வேகமாக நடந்து சென்று வெளிக்கேற்றைத் திறந்து ஓடுகின்ற சனத்தைப் பார்த்து வினவுகின்றேன். எனது கேள்விக்கு நின்று நிதானித்து பதில் சொல்ல நேரம் இல்லாத ஒருவன் போகிற போக்கிலேயே "கடல் வருது. நீங்களும் எங்கேயாவது ஒடித் தப்புங்க" என்று அபாய ஒலி எழுப்பிவிட்டு தனது றேசைத் தொடருகின்றான். எனக்கு சிரிப்பு வருகின்றது. கடலாவது வருவதாவது.
O7

Page 6
என்றாலும் என்மனதில் ஓர் உதைப்பு. .பக்கத்து வீட்டுக் காரனைப் போய்ப்பார்க்கின்றேன். கேற் பூட்டப்பட்டிருக்கின்றது. மனத்தின் உதைப்பு இன்னும் அதிகமாகின்றது. மறுகணம் வீட்டிற்கு விரைந்துவந்து முக்கிய சாமான்களை எடுத்துக் கொண்டு கெதியாக வீட்டைவிட்டுப் புறப்படுங்க . என்று மனைவி மக்களை அவசரப்படுத்துகின்றேன். எனது பதற்றமும், அவசரமும் அவர்கள் வாயை அடைத்துவிடுகின்றன. ஆனாலும் கடல் வருதாம் என்று நான் சொன்னதும் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோகின்றார்கள்.
அச்சமும் சந்தேகமும் ஆட்கொள்ள வீட்டைவிட்டுப் புறப்பட்ட எங்களுக்கு மெயின் றோட்டில் ஆங்காங்கே கூடி நின்றபடி உணர்ச்சிவசப்பட்டுக் கதைத்துக் கொண்டிருக்கும்மக்கள் கூட்டம், ஏதோ விபரீதம் நடந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. கலக்கம் நிறைந்த அந்தச் சூழலில் கூட்டத்தில் நின்ற பெரியவர் ஒருவரின் குரல் கோபாவேசத்தில் ஓங்கி ஒலிக்கின்றது.
கடல் வராம என்ன செய்யும்? நாட்டில் அதர்மமும் அநியாயமும் அளவு கடந்துபோச்சு. நல்லவன் யாரெண்டே தெரியுதில்ல. எங்கு பார்த்தாலும் ஏமாற்றும் மோசடியும்தான். இனி கடல் என்ன, நெருப்பும் வரும்.
பெரியவரின் ஒவ்வொரு வார்த்தையையும் ஆமோதிப்பதுபோல அங்கு நின்றவர்களும் தமக்குள் கதைத்துக் கொள்கின்றார்கள். கடவுளும் எவ்வளவு காலத்துக்குத்தான் பொறுத்துக் கொள்வார்? கொஞ்சக் காலமாக மட்டக்களப்பில் ரெத்தம்தானே ஓடுது. .எங்கு பார்த்தாலும் துவக்குவெடிதான். மனிசன்ர உயிருக்கு மதிப்பே இல்ல. . இதனால்தான் எங்களுக்கு இந்தத் தண்டனை. அனுபவிச்சுத்தான் தீரணும்.
சனங்களின் வார்த்தைகளிலிருந்து எழும் அக்கினிச் சுவாலையைக் கவனித்த எனக்கு மட்டக்களப்பு அரசடிக்கு ரியூசனுக்குச் சென்ற மூத்த மகளின் நினைவு வருகின்றது. அங்க எப்படியோ? என்ற எனது அங்கலாய்ப்பை உடனடியாகப் புரிந்து கொண்ட மற்றொரு மகள் நான்போய் அக்காவைக் கூட்டித்து வாறன் என்று கூறிவிட்டு சைக்கிளில் ஏறிப் பறக்கின்றாள்.
மகள் சென்று சில நிமிடங்கள் கூட இருக்காது. அதற்குள்
08

அங்கு நின்ற ஒரு இளவட்டம் என்ன நினைத்ததோ கல்லடிப் பாலத்துக்குமேலாகக் கடல் பாயுதாம்' என்று ஒரு பெரிய குண்டைத் துாக்கிப் போடுகின்றது. மனைவி கண் கலங்குகின்றாள். என் மனமும் உடலும் அசுர வேகத்தில் இயங்குகின்றன. சைக்கிளில் ஏறி என்னால் இயன்ற மட்டும் உழக்குகின்றேன். மறந்துபோன தெய்வங்கள் எல்லாம் மனதில் வந்து நிற்கின்றன. மட்டக்களப்பின் புதிய கல்முனை வீதியின் இருமருங்கிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. அவரைக் காணேல்ல. இவரைக் காணேல்ல. என்று மக்கள் வைக்கும் ஒப்பாரி மனதைக் கலக்குகின்றது. சைக்கிளின் வேகம் தானாகவே தடைப்படுகின்றது.
வீதியில் நின்றவாறு தலையில் அடித்துக் கொண்டு புலம்பும் அந்த அபலைகளைப் பார்க்க அங்கு ஒரு கூட்டம் உடனடியாகத் திரண்டு விடுகின்றது. அந்தக் கூட்டம் புதினம் பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. புதிய புதிய கதைகளை சிருஷ்டி ச்ெய்து அவற்றைப் பட்டமாக எங்கும் பறக்கவிடுகின்றது. சி. இப்படியும் பிறவிகளா? எனது மனம் சீறுகின்றது.நான் கல்லடிப் பாலத்தைத் தொட்டுவிடுகின்றேன். நல்ல காலம் அந்த இளவட்டம் பயமுறுத்தியதுபோல கல்லடிப் பாலம் கடலில் மூழ்கவில்லை. என்றாலும் மக்கள் கடலில் மூழ்கித் திணறுகின்றது. அந்தச் சூழ்நிலையிலும் சிலதுகள் புதினம் பார்க்கத் தவறவில்லை. ஆற்றில் மிதந்துவரும் சடலங்களையும், பொருட்களையும், அந்தக் கூட்டம் எண்ணிக்கொண்டிருக்கின்றது. நான் காறித் துப்பிவிட்டு பாலத்தின் ஊடாக நெரிபட்டு ஒருவாறு அரசடியை நோக்கி முன்னேறுகின்றேன். சைக்கிளில் சென்ற மகள் எதிரே வருகின்றாள் முகத்தில் கவலையின் அடையாளங்கள்.
மகளை ஒருவிதப் பரபரப்போடு நிறுத்தி விசாரிக்கின்றேன். அக்காவைக் காணேல்ல. . ரியூசன் சென்ரரும் பூட்டிக் கிடக்கு. . அவள் தயங்கித் தயங்கிச் சொல்கின்றாள். . சரி. சரி. நீ வீட்ட கெதியாப் போ. நான் அக்காவைக் கூட்டித்து வாறன். V
ஒருமகளை அனுப்பிவிட்டு மற்ற மகளைத் தேடி விரைகின்றேன். வழியில் கடல் வெள்ளம் தடுக்கின்றது. இதனால் நகருக்குள்ளும் கடல் புகுந்துவிட்டதோ என்ற அச்சம் என்னைப் பீடித்தாலும் ஒருவாறு வெள்ளத்தின் ஊடாகச் சைக்கிளை உருட்டிக் கொண்டு அரசடிச் சந்திக்கு வருகின்றேன். வீதிகளிலும், மாடிகளிலும் நின்றவாறு அங்கும்
O9

Page 7
ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கின்றது. அடடா என்ன மனிதர்கள் இவர்கள். ..!
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காத அந்த அற்ப பிறவிகளை மனதாரத் திட்டியபடி மகளைத் தேடி அந்தப் பிரதேசம் முழுவதும் அலைகின்றேன். புத்தகமும் கையுமாக மிரண்ட கண்களோடு நிற்கும் மாணவிகளை நோட்டம் விடுகின்றேன். அங்கு நின்ற பலரையும் பதற்றத்தோடு விசாரிக்கின்றேன். “இங்க ரவுணில் ஒரு பிரச்சனையும் இல்ல. உங்கட மகள் யாராவது பிரன்சோட நிற்பா. தேடிப்பாருங்க.” அவர்கள் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை ஊட்டுகின்றன. மூன்று மணித்தியாலத்துக்கு மேலாக அரசடி முழுவதையும் சல்லடை போட்ட என் கண்களில் மகளின் முகம் தெரிகின்றது. சந்தோஷத்தில் அவளைப் பற்றிக் கூட்டிக் கொண்டுவருகின்றேன். வாகனங்கள் பிணத்தோடு ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுக்கின்றன.மட்டக்களப்பே மரணவீடாகின்றது. .
வாகரைவாணன்
ஒருவாறு சன நெரிசலில் ஊடறுத்து மகளுடன் நாவற்குடா நோக்கி வந்த என் காதில் தீய செய்திகள் சில விழுகின்றன. என் உடல் முழவதுமே கொதிப்பது போன்ற உணர்வு.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிலர் வீடுகளைக் கொள்ளையடிக்கின்றார்களாம். பிணங்களில் கிடந்த நகைகளைக் கூட விட்டுவைக்கவில்லையாம். கடல் அலையில் தத்தளித்த பெண்களைக் கரையேற்றிய சிலர் அவர்களைக் கெடுத்துவிட்டார்களாம்.
செய்திகளைக் கேட்டதால் நிலைகுலைந்துபோன நான் அந்தப் பெரியவரின் வார்த்தைகளை நினைவில் கொண்டு வந்து நிறுத்துகின்றேன். கடல் மட்டுமல்ல - இந்தச் சனங்கள் மீது நெருப்பு மழையாகத்தான் பெய்யப்போகுது.
அந்தப் பெரியவர் தீர்க்கதரிசியோ என்னவோ?
1 O

கடல்கோளும் எண் இருபத்தாறும்
இந்தோனேஷிய நாட்டின் சுமத்திரா தீவுக்கருகில் இருக்கும் கடற்பகுதியில் பெரிய நில நடுக்கம் காரணமாக உருவான கடற் கொந்தளிப்பு எமது நாட்டுக் கரையோரப் பகுதிகளில் கோர விளைவுகளை ஏற்படுத்தி பல மனித உயிர்களை விழுங்கி ஏப்பமிட்டு பெரும் அழிவை ஏற்படுத்தியது.
இது நடந்தது 2004 டிசம்பர் 26ம் திகதிதான். இந்த 26ம் திகதிக்கும், கடலுக்கும் பூமிக்கும் இருக்கும் சம்பந்தம்தான் என்ன எனப் பலபேர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
2003 அதே டிசம்பர் 26ம் திகதி ஈராக்கின் தென்கிழக்கில் (பாம்) பெரும் பூமி நடுக்கம் ஏற்பட்டு பெரும் அழிவு ஏற்பட்டது. இதன் ரிச்சட் அளவு 6.5 எனக் கணக்கிடப்பட்டது.
மே மாதம் 26ம் திகதி ஜப்பானில் சென்டல் என்ற பகுதியில் பூமியதிர்வு ஏற்பட்டது. மீண்டும் ஜப்பானில் செப்டம்பர் 26ம் திகதி பெரும் பூமியதிர்வு ரிச்சர்ட்ட அளவு 7.8 ஏற்பட்டு மக்களை கதிகலங்க வைத்தது.
- 1

Page 8
அக்டோபர் மாதம் 26ம் திகதி சீனாவில் கன்சு பிரதேசத்தில் இரண்டு பெரும் பூமியதிர்வுகள் ஏற்பட்டு நகரை அழித்தன.
2002 ஏப்ரல் 26ம் திகதி மரியன்னா தீவில் 7.1 ரிச்சட் அளவில் ஏற்பட்டது. 2001 ஜனவரி 26ம் திகதி இந்தியாவில் குஜராத் நகரில் பெரும் பூகம்பம் வெடித்துச் சிதறியது. அதே வருடம் சென்னையில் மீண்டும் செப்டம்பர் மாதம் 26ம் திகதி நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த 26ம் திகதி என்ற இலக்கம் நிலநடுக்கம் , கடல் கொந்தளிப்பு, ஆகியவைகளுடன் மிக அதிசயமான முறையில் ஏதோ ஒருவகையில் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது எப்படி என்று விளங்கவேயில்லை.
சரித்திரத்தைப் பின்னோக்கிப் பார்த்தால் 26ம் திகதிகளிலேயே ஏகப்பட்ட பூமியதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.இது தற்செயலாக ஏற்படும் ஒன்று அல்லது வேறு ஏதாவது விஞ்ஞான ரீதியிலான தோற்றங்களா என்பது பெரும் புதிர்தான்.
ஆனால் பேராசிரியர் வீரவர்ணகுல கூற்றின்படி எனைய திகதிகளிலும் பூகம்பங்கள் நிலநடுக்கங்கள், ஏற்பட்டுள்ளமை ஒரு
சாதாரண விடயம் என்பது புலனாகின்றது.
12
 

மனோதத்துவ வியலாளரும், எண்கணித நியூமராலஜி நிபுணருமான டச்சுக் காரர் டாக்டர் ஹென்ஸ் விச்சியேன்ஜர் அதெல்லாம் எட்டாம் இலக்கத்தின் ஏற்பாடுகள் எனக் கூறுகின்றார்.
இதனையிட்டு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் இரண்டையும் ஆறாம் இலக்கத்தையும் கூட்டும்போது எட்டு (8) பிறக்கிறது. எட்டு என்ற இலக்கம் மிகவும் கஷ்டமான பிரச்சனையான எண்ணாகும்.
இதற்குக் காரணம் இரண்டு என்ற எண்ணையும், நான்கு என்ற எண்ணையும் இணைத்து உருவாகிறது இந்த எட்டு என்ற இலக்கம். எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த எட்டு என்ற எண் பெரும் பிரச்சனைகளை சந்தித்தும் கஸ்டங்களை சந்தித்துமே சாதனை படைக்க வேண்டியுள்ளது.
எட்டு என்ற இலக்கத்தின் உறுதியான கொள்கையாதெனில் செல்வம் சேர்க்க அயராது உழைப்பதேயாகும்.என்றாலும் இந்த இலக்கத்துக்குரிய வேகம், உழைப்பின் ஆர்வம் அதனை கீழே தள்ளிவிடும். அப்படி சாதனைகளைப் படைத்தாலும் அது நிலைத்து நிற்காது எனக் கூறுகின்றார்.
டிசம்பர் 26ம் திகதியும்2004 என்ற இலக்கங்கள் முறையே 26 (2 + 6 =8) 2004, 2ம் எண்ணையும் நான்காம் எண்ணையும் கொணி டதாகும் . இவையெல் லாம் எட் டை உருவாக் கும் எண்களாகும்.எனவே இத்தகைய எண்களைக் கொண்டிருக்கும் நேரகாலங்களையிட்டு அவதானமாக இருக்க வேண்டும் என்கிறார் அவர்.
இத்தகைய நாட்களில் எட்டு என்ற இலக்கங்களை இறுதியில் (END) கொண்டிருக்கும் எண்களையிட்டு கவனம் தேவை எனக்கூறுகின்றார் டாக்டர் ஹென்ஸ். எந்த விதத்திலும் எதாவது வகையிலும் இத்தகைய எண் ஆபத்தைவிளைவிக்கக்கூடியது எனவும்
கூறுகிறார் அவர்.
நன்றி டைம்ஸ் தொகுப்பு: லீலா இராமையா.
13

Page 9
என்னுரே
என்னூரே. எப்படி இருக்கிறாய்? கண்ணிரும் கம்பலையும்தான் உன் கதையா?
ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டுப் போர் உன் உடலெங்கும் இரத்தாபிஷேகம் செய்தது.
கட்டிடங்களையும் 65(6560)6muyub குண்டுகள் கற்குவியல்களாக்கின அதனால் கூடுகளை இழந்த குருவிகளாகினர் மக்கள் மனித சஞ்சாரமற்ற மண் ஆனாய் நீ காடுகளும் செடிகளுமே உன் மீது கால் கொண்டன இது கண்டு நான் கண்ணீர் உகுத்தேன்.
இன்று சுனாமி உன்னைச் சுத்தமாகக் கழுவிவிட்டது கடற்கரைப் பூமி நீ
14

கல்லறைப் பூமியானாய் கோயில்களையே அது
வாயில்
அள்ளிப் போட்டுக் கொண்டது. ஆண்டுகள் பல தழுவி மகிழ்ந்த அலை திடீரெனப் பாய்ந்து தின்று முடித்துவிட்டதே!
சுனாமியின் சூறையாடல் (905
பயங்கரக் கனா! மனங்களில் மாறாத காயம்! எதிர்காலம் இந்த வரலாற்றை எண்ணிப் பார்க்கும்!
என்னை ஈன்ற மண்ணே உனக்கு ஏன் இத்தனை சோதனை? உன்னை நினைத்து உள்ளம் குமுறுகிறேன்.
நாளை ஒரு வேளை வரும் அப்போது நீ ஞாயிறெனப் பிரகாசிப்பாய்.
வீழ்ந்த நீ விரைவாகவே எழுந்து இமயம் என விளங்குவாய் உன் புகழ்க் கொடி விண்ணைத்தொடும் !
வாகரைவாணன். 15

Page 10
கடல்கோள் பாதிப்பும் உளநல மேம்பாடும்.
பல உயிர்களைக் காவுகொண்டும், பல சொத்துக்களைச் சேதப்படுத்தியும் குடும்பப் பாதிப்புக்களையும் சமூகப் பாதிப்புக்களையும் ஏற்படுத்திய ஆழிப் பேரலை அனர்த்தத்தினால் உடல் ஊறுகள், உள ஊறுகள் சமூகத் தாக்கங்கள், பொருளாதாரத் தாக்கங்கள் என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்பாக பல பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இத்தாக்கத்திலிருந்து மீள்வதற்கான சமூக உள மேம்பாட்டுத் திட்டங்கள் குறைந்தது பத்துவருடங்காளாவது மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்குத் தேவையான மாதிரியாக இந்தியாவின் ஒரிசா மானிலத்தில் 1999ம் ஆண்டு நிகழ்ந்த சூறாவளியின் பின்னரான சமூக உளப் பிரச்சனைகளையும் , அதனை அங்கு உள்ள சமுதாய உளவியலறிஞர்கள் எவ்வாறு எதிர்கொண்டனர்என்பதையும் ஆராய்வதால் இலங்கையில் நிகழக்கூடிய சமூக உளப் பாதிப்புக்களைப் பெருமளவில் தவிர்க்கலாம்.
சமூக உளநல மேம்பாட்டுத் திட்டங்கள் நிரந்தரமான செயன்முறை அல்ல. அவ்வப்போது ஏற்படும் செயன்முறைகளுக்கேற்ப மாற்றியமைக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வயது, பால், பிரதேசம் , இனம், கலாசாரம் , என்பவற்றிற்கேற்ப சமூக உளநலத்திட்டங்கள் அமைக்கப்படல் வேண்டும். மேலும் தனிநபருக்கான திட்டங்கள், குடும்பத்துக்கான திட்டங்கள், கிராமத்துக்கான திட்டங்கள் என வகுத்துச் செயற்பட வேண்டும். சமூக நல மேம்பாட்டில் செல்வாக்குச் செலுத்துவனவாக அழிவின் ஆழம் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டு உள்ளமை, நேரடியான தாக்கங்கள், மறைமுகமான தாக்கங்கள், கிடைக்கப்பெறும் சமூக உதவிகள், தனிப்பட்ட இழப்புக்கள், அனர்த்தத்துக்கு முன்பான மனநிலை என்பன அமைகின்றன. தனிநபர் பாதிப்பில் காயங்கள், அல்லலூட்டம், நோய்த் தொற்றல், உளத் தாக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய பாரிய அனர்த்தத்தின்போது ஏற்பட்ட அசாதாரண சூழலில் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுவது சாதாரணமாகும். எனவே இதன் பொறிமுறையை விளக்குவதாலும், அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது
16

என அறிவதாலும் அவற்றிலிருந்து விடுபட முடிவதுடன், நாட்பட்ட உளப் பாதிப்புக்களிலிருந்து விடுபட முடியும். மேலும் உடனடிப் பாதிப்புக்களிலிருந்தும் விரைவாக விடுபட முடியும். சிறப்பான சமூக உளவளத்துணை, கோர அனர்த்தத்தினையும், இன்பமான வடுவாக மாற்ற உதவும் என்றால் மிகை இல்லை.(உதாரணமாக விபத்தில் அகால மரணமான இளைஞனுக்கு 31ம் நாள் நினைவு தினத்தை அனுஸ்டிக்கும்போது பல ஆயிரக் கணக்கானோருக்கு விருந்து கொடுத்து நினைவு செலுத்தும்போது துன்பவின்பமான நிகழ்வாக அமைவது போல் )
ஆரம்ப நிலையில் உடனடித் தேவைகளுக்கு முகம் கொடுத்தல்
வேண்டும். இதன்போது பாதிக்கப்பட்டவர்களும் ஒன்றாகச் சேர்ந்து வேலை
செய்வர். ஆரம்பத்தில் உற்சாகமாக பற்றோடு வேலை செய்வர். பின் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுவிடும். ஆரம்ப நிலையில் செவிமடுத்தல் ஆதரவு உணர்வுகளை வெளிப்படுத்தல் துயரத்தை துறத்தல் என்பவற்றை மேற்கொள்ள வேண்டும். இறுதியில் விரக்தியை எதிர்கொள்ளல், கோபத்தை எதிர்கொள்ளல், தவறான தோற்றப்பாடுகளை மாற்றல் என்பன மேற்கொள்ளப்பட வேண்டும்.
- டாக்கடர் . சி. ஜமுனானந்தா -
தனிநபர்களுக்கு உணர்வுபூர்வமான ஆதரவு தேவை. அனர்த்தத்தினால் உயிரிழப்பு, சொத்து இழப்பு, சூழல் வளம் பாதிப்பு, என அவர்கள் துன்பத்திலும் மீளாத் துயரிலும், பதகளிப்பிலும், கோப உணர்விலும் இருப்பர். இவ்வனர்த்தங்கள் தனிப்பட்ட ரீதியில் மன அழுத்தங்களாகவும், துயரங்களாகவும் அமையும்.
சமூக ரீதியில் சமூகக் கட்டமைப்புக்கள் உடைவதால் அவர்களுக்குரிய இயற்கைத் தாங்கல்கள் இல்லாது போகின்றன. அதாவது சாதாரண சூழலில் இழப்பு ஏற்படும்போது சமூகத்தில் ஏனையவர்கள் உதவக்கூடிய நிலையில் இருப்பர். ஆனால் இவ்வனர்த்தம் வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதை வீடுகள் அழிவுற்ற நிலையில் இறந்தவர்களுக்கு ஆடை அணிவிக்க வசதியற்ற சூழலில் அடக்கம் செய்யும் நிலையில் காட்டியது.
இப்பாரிய அனர்த்தம் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும், பாதித்துள்ளது. உணவு, உடை, உறையுள், என அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியமான உளவளத்திற்கு மீள்வதற்கு
17

Page 11
காலத்துடன் திட்டமிட்ட புனர்வாழ்வுத் திட்டங்கள் அவசியம்.
தனிநபரில் உடனடியாக ஏற்படும் உணர்வு மாற்றங்களாக பதற்றம், பதகளிப்பு, பீதி என்பன காணப்படும். சற்றுப் பின் பதகளிப்பு, கழிவிரக்கம், இயலாமை, அனுசரித்துப் போகமுடியாமை, மரத்துப் போன நிலை, மிகை எழுச்சி, குற்ற உணர்வு, இடம் தெரியாது அலைதல், சம்பவங்கள் மீள மீள வரல், பயங்கரக் கனவு என்பன ஏற்படும்.
ஆறு மாதங்களுக்குப் பின் ஏற்படும் மாற்றங்களாக செயற்திறன் குறைதல், போதைப் பொருள் பாவனை, தற்கொலை, உடல் மாய நோய்கள், திருமண முறிவு, குடும்பத்தை நடத்துவதில் பிரச்சனைகள், தகாத பாலியல் தொடர்புகள் என்பன ஏற்படும்.
தாமதமாக ஏற்படும் மாற்றங்களாக செயற்திறன் குறைதல், போதைப் பொருள் பாவனை, தற்கொலை, உடல்மாய நோய்கள், திருமண முறிவு, குடும்பத்தை நடத்துவதில் பிரச்சனைகள், தகாத பாலியல் தொடர்புகள் என்பன ஏற்படும்.
М சமூக உளத் தேவைகளை அறிவதற்கு நெருக்கீட்டின் விளைவுகளைத் தெளிதல் வேண்டும். நடத்தை மாற்றம், செயற்றிறன் குன்றல், சக்தியற்ற நிலை, ஆறுதல் அடைய முடியாமை,கிரகிக்க முடியாமை, நித்திரையின்மை, மீள நினைத்தல், ஞாபக மறதி, போதைப் பொருள் பாவனை, என்பன நெருக்கீட்டினால் ஏற்படும் சமூக உள மாற்றங்களின் அடிப்படை உளமாற்றங்களாகத் தலையிடி, களைப்பு, தசைப்பிடிப்பு, பதற்றம், இதயத்துடிப்பு அதிகரித்தல், உணவில் நாட்டமின்மை, வயிற்றுநோ, வாந்திக் குணம், தொடர்பற்ற உடல் நோ என்பன காணப்படும். உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
எரிந்து விழல், பயம், படபடப்பு, இயலாத நிலை, துயரம் தோய்ந்த நிலை, ஆதரவு அற்ற நிலை, குற்ற நிலை, ஒரே நினைவு மீள மீள வரல், மறதி, தற்கொலை எண்ணம் என்பன ஏற்படும்.உறவு முறையில் மாற்றம் ஏற்படும். இதனால் தனிமனித உறவுகள் பாதிக்கப்படும். குறைந்த ஆதரவு நிலை உருவாகும். நம்பகத் தன்மை குன்றும். இடம் பெயர்ந்து வாழ முனைவர். வாழ்க்கைப் பாத்திரத்திலும், பொறுப்பேற்பிலும், மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களில் தங்கிவாழும் நிலை ஏற்படும்.
உதாரணங்கள் (1999ம் ஆண்டு ஒரிசாவில் நிகழ்ந்தவை)
18

17 வயதுச் சிறுமி பெற்றோரையும், 2மாதச் சகோதரனையும் அன்ர்த்தத்தினால் இழந்து விறைத்துப்போய் அமைதியற்று இருந்தாள். அழவில்லை, சிரிக்கவில்லை,மற்றவர்களுடன் கதைக்கவில்லை.
சித்திரம் கீறவிட்போது தனது குடும்பத்தை வரைந்து அழுதாள்.
கடல் தொழிலாளி கடல் அலையினால் தனது குடும்பத்தையும் இழந்து வள்ளத்தையம் இழந்து நின்றான். மற்றவர்களுடன் கதைக்கவில்லை. தனிமையாக இருந்தான். மனதுக்குள் கதைத் தான்.வாழ்க்கை பிரயோசனமற்றது என எண்ணினான்.
காணப்பட்ட பிரச்சனைகள் :- குடும்ப அங்கத்தவர்களின் இழப்பு, பொருளாதார இழப்பு, மனச்சோர்வு,
செய்யவேண்டியவை.
உணர்வுகளை வெளிக்கொணரல்
இழப்பை நினைத்து அழல்
மற்றவர்களுடன் உணர்வைப் பகிரல் எங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட சம்பவங்களுக்கு நாங்கள் பாத்திர வாழிகள் அல்ல என உறுதிப்படுத்தல்
அடிக்கடி சந்தித்தல்
சமுக ஆதரவு
G) கற்பிணிப் பெண் தனது கணவனையும் இரு குழந்தைகளையும் கடலில் தவற விட்டாள். பராமரிப்பு முகாமில் இருந்தாள். தனிமையில் யோசித்தாள். வீடு அள்ளிச் செலல்லப்பட்டு விட்டது.
:
姜
பிரச்சனைகள் இளவயதுக் கள்ப்பிணி , கணவன் பிள்ளைகள் இழப்ட
56.606) நித்திரை கொள்ள முடியாது
தர்வு பெண் உளவளத் துணையாளர்கள் மூலம் உள உணர்வுகளை வெளிப்படுத்தல். போஷாக்குள்ள உணவுகளைக் கொடுத்தல்
19

Page 12
அன்றாட வேலைகளில் ஈடுபட வைத்தல் 4. 18 வயதுப் பெண் அண்மையில் திருமணம் முடித்தவள். வெள்ளம் வீட்டுடன் கணவனின் குடும்பத்தையே அள்ளிச் சென்றுவிட்டது. கணவனின் உடலைக் காணவில்லை. உற்சாகமின்மை நித்திரையின்மை, உணவில் நாட்டமின்மை,
காணப்பரும் பிரச்சனைகள்
1. இளம் விதவை 2. கணவனின் உடலைக் காணவில்லை. இறந்தவரின் உடலைக் காணாவிடின் அவர் உயிருடன் வருவார் என்ற எண்ணம் எப்பொழுதும் காணப்படும்.
3.856606)
தர்வு. ஒழுங்கான சந்திப்பு கணவன் இறந்ததற்கான நிகழ்வு அதிகம் என்பதை உணர்த்தல்.
உணர்வுகளை வெளிப்படுத்தல் தனிமனித. குழு நாடகங்களும் இதற்கு உதவும்.
35 வயதுப் பெண கணவனையும் பிள்ளைகளையும் கடல் அனர்த்தத்தினால் இழந்துவிட்டாள். அயல் வீட்டுக் காரன் அவ்வப்போது உதவி புரிந்து வந்தான். அவளது இயற்கைத் தேவையை அவன் பூர்த்தி செய்துவிட்டு அவளை மீண்டும் அனாதையாக்கிவிட்டுச் சென்றுவிட்டான். d5(T6OH LJL || FJäf &F606O356fi:- அன்பானவரின் இழப்பு பொருளாதாரப் பிரச்சனை தனிமை, தாய்மை ஒருவர் துன்பத்தில் உள்ளபோது அவருடன் நெருங்கிப் பழகுபவர்களிடம் பற்று ஏற்படும். இத்தகைய அனர்த்தத்தின்போது கணவனை, மனைவியை இழந்தோர் அல்லது எதிர்பாலோர் ஒருவருடன் ஒருவர் வைத்துக் கொள்ளும் உறவு , ஒருவரை மற்றவருடன் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் தங்கவைத்து விடுகின்றது. இதுவே தகாத பாலியல் உறவுக்கு வழிவகுத்துவிடுகின்றது. அனர்த்தத்துக்குப் பின்னரான தந்தையற்ற பிள்ளைகளுக்கும், திருமண முறிவுகளுக்கும் இதுவே காரணம். இத்தகைய விழிப்புணர்வு இருந்தால் இத்தகைய சமூக உளப்பிரச்சனை எற்படும் சந்தர்ப்பங்களைக் குறைக்கலாம்.
இறுதியாக சமூக உள ஆதரவு மூலம் உணர்வுகளை எதிர் கொள்ளவும், இழப்புக்களை எதிர்கொள்ளவும் புறநில உதவி வழங்கல் மூலம் மீள் வாழ்வைக் கட்டியெழுப்பி, புத்துயிர் பெற்ற சமுதாயத்தை உருவாக்கலாம். அங்கு அன்பானவர்களின் இழப்பு என்றென்றும் இன்பமான வடுவாக அமையும். ( தினக்குரல் 18.05.2005)
20

மட்டக்களப்பு "பொதிகை"யிலிருந்து இமய மலைச் சாரல்வரை.
இலங்கையின் கிழக்குப் புலம் இயற்கை அழகின் இருப்பிடம். சொக்கவைக்கும் செந்தமிழ்ச் சொல்வளத்தின் சொந்தக் காரர்கள் இந்த மண்ணின் மக்கள். முத்தமிழில் ஒன்றான நாட்டுக் கூத்து கிழக்குத் தேசத்தின் மூச்சாகவே விளங்குகின்றது. இனிமைமிகு நாட்டார் பாடலின் ஆட்சியும் இங்கேதான் எடுப்பாக நடைபெறுகின்றது.
இத்தகைய பெருமைமிகு நாட்டினை மகாவலிகங்கை, வடபால் திருகோணமலை என்றும், தென்பால் மட்டக்களப்பென்றும் இரு கூறாகப் பிரிக்கின்றது.
தென்பிரதேசத்தின் மத்தியில் தென்னை மரச் சூழலிலே வீற்றிருந்து எல்லார் இதயங்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறாள் மட்டக்களப்பு வாவி என்னும் மங்கை நல்லாள். மட்டமான நீர் என்னும் பொருளமைந்த இவ்வாவியின் பெயரே அது அணி செய்யும் நாட்டிற்கும் பெயராயிற்று என்பர்.
மட்டக்களப்பு என்னும் பெயர்ச் சொல்லிற்கு வேறு சில பொருள்
கூறப்படினும் அதன் அளவிறந்த வளம் குறித்து மட்டு (தேன்) நிறைந்த நாடு என மக்கள் போற்றி மகிழ்வர்.
இதுபோல் இன்னும் பல சிறப்புக்களையும், மான்மியங்களையும், கொண்டிலங்கும் மட்டக்களப்புத் தமிழகத்தின் தென்பால் 27 மைல் தொலைவில் உள்ள காரைதீவு என்னும் சிற்றுாரில் 1892 பங்குனித் திங்கள் 27ம் நாளில் தோன்றினார் சுவாமி விபுலாநந்தர். தந்தை பெயர் சாமித்தம்பி. தாயார் பெயர் கண்ணம்மை. பெற்றார் தம் பிரிய மகனுக்கு இட்டு மகிழ்ந்த நாமம் மயில்வாகனன் என்பதாகும்.
கிராமியச் சூழலின் கிளுகிளுப்பில் தம் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த மயில்வாகனன் சரியாகப் பத்து ஆண்டுகளுக்குப் பின்பு
21

Page 13
கல்முனை மெதடிஸ்த கல்லூரியில் காலடி எடுத்து வைத்தார். வீட்டிலே ஆங்கிலக் கல்வியின் நறுமணத்தை நுகர்ந்த அந்தப் பிஞ்சு உள்ளம் மேலும் 4 ஆண்டுகள் அந்த மேற்கு நாட்டு மொழியை அங்கு அனுபவிப்பதில் ஈடுபட்டது.அதன்பின் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மழலை மயில்வாகனனுக்கு கல்வியமுதத்தை வழங்கும் பணியை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டது.
சின்னவயதில் மயிலவாகனனுக்குச் செந்தமிழையும், ஆங்கிலச் செல்வத்தையும், தந்து களித்தவர்களில் ஆசிரியர் குஞ்சித் தம்பி, வசந்தராசப் பிள்ளை, சிவகுருநாதப் பிள்ளை முதலானோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
தமது 16வது வயதில் தரணி புகழ் கேம்பிரிட்ச் (Cambridge) பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட தேர்வில் சித்தியடைந்த மயில்வாகனன் ஒருசில ஆண்டுகளில் பயிற்றப்பட்ட ஓர் ஆங்கில ஆசிரியரானார். ஆசிரியர் அவர்களை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி விரும்பி அழைத்து தனது ஆசிரியர்களில் ஒருவராய் ஆக்கிக் கொண்டது.
- ஆரணி -
ஆசிரியர் பணி ஆற்றும்போதே அறிவுசார் நூல்களைக் கற்பதில் அதிக ஆர்வம் காட்டிய திரு மயில்வாகனன் 1915ம் ஆண்டில் பொறியியல் கல்லூரியின் டிப்ளோமா பட்டமும் மதுரைத் தமிழ் சங்கத்தின் பண்டிதர் தேர்வில் 1918) சித்தியும் பெற்றுச் சிறப்படைந்தார். இலங்கையிலேயே முதன் முதலாகப் பண்டிதர் தேர்வில் சித்தியடைந்த பெருமை மட்டக் களப்பு மயரில் வாகனன் அவர்களையே சாரும்.
ஓராண்டு காலம் அரசினர் பொறியியற் கல்லூரியில் உதவி இரசாயன ஆசிரியராகப் பணியாற்றிய பண்டிதர் அவர்கள் 1917ம் ஆண்டில் யாழ்/புனித பத்திரிசியார் கல்லூரியில் ஓர் அறிவியல்துறை ஆசிரியராக அமர்ந்தார். அந்த மாணவர்களுக்கு அறிவின்பத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருந்த அதேவேளையில் தம்மை லண்டன் பல்கலைக் கழகத்தாரின் பி.எஸ்.சி. தேர்விற்குத் தயார் செய்து அதிலும் வெற்றிபெற்றார். -
22

தமிழிலும் ஆங்கிலத்திலும்தன்னிகரற்ற புலமையோடு விளங்கிய அறிஞர் மயிலவாகனன் அவர்களை மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவி தேடி வந்தது. பணியாற்றும் ஒரே நோக்கத்தோடு அப்பதவியை ஏற்றுக் கொண்ட அறிஞரின் உள்ளம் தூய்மையான துறவறத்தைத் துய்க்கவிரும்பிய போது சமய சமரசத்தைப் உலகிற்குப் போதித்த சாது பூரீ இராம கிருஸ்ணனரின் சாந்தமான முகமே அவர் உள்ளத்தில் நிறைந்தது.
1922ல் சாதுவின் சங்கத்தில் (இராமகிருஸ்ண மிஷன்) இணைந்து இறைபணி ஆற்றும் பொருட்டு தமிழகம் சென்ற பண்டிதர் மயில்வாகனனுக்கு பிரபோதசைதன்யர் என்னும் பிரமசாரியப் பெயரை அங்குள்ள மடாலயத்தார் வழங்கி மகிழ்ந்தனர். அதன் பின் 1924ம் ஆண்டில் சுவாமி சிவாநந்தாவின் திருவாயால் விபுலாநந்தர் என்னும் துறவறப் பெயரைப் பெற்று தம் வாழ்வில் துலங்கலானார்.
ஆக ஐம்பத்தைந்து ஆண்டுகளே இவ் உலகில் வாழ்ந்த சுவாமி விபுலாநந்தர் ஆற்றிய பல்வேறு துறைசார்ந்த பணிகள் அளவில. தமிழ் நூல்கள் அனைத்தையுமே அந்தத் தபசி ஆழமாகப் பயின்றிருந்தார் என்பதற்கு அவர் 1939ம் ஆண்டில் கல்முனையில் நடைபெற்ற ஆசிரியர் விடுமுறைக் கழகத்தினுக்குத் தலமைதாங்கி இலக்கியம் கற்றலும், இலக்கிய சுவையில் ஈடுபடலும், என்பது பற்றி ஆற்றிய உரையே தக்கதொரு சான்றாக விளங்குகிறது.
இவ்வாறு தமிழ் இலக்கியப் புலமை உலகில் தலைநிமிர்ந்து நின்ற சுவாமிகளின் கற்றல் உள்ளம் ஆங்கில இலக்கியக் கடலின் ஆழத்தையும் அளந்து அதில் திளைத்து மகிழ்ந்தது என்பதை இமயமலைச் சாரலிலே மாயாவதித் தவப் பள்ளியில் வாழ்ந்துகொண்டிருந்தபோது ஆங்கில வாணி என்ற தலைப்பில் அவர் எழுதிய அருமையான கட்டுரை ஒன்று நமக்கு எடுத்துக் காட்டாகின்றது.
ஆங்கில இலக்கியக் கவிஞர்களையும், அவர் தம் படைப்புக்களையும், நமக்கு அறிமுகப்படுத்தும். இவ்வழகிய கட்டுரை "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமையில்லை" என்னும் மகாகவி பாரதியின் வாழ்க்கையை உணராத

Page 14
அக்காலத்து தமிழ் அறிஞர்களுக்கு (ஏன் இன்றும்கூட) அளிக்கப்பட்ட சாட்டை அடி என்றால் மிகையாகாது.
ஆங்கில இலக்கியவானின் ஆதவனாகவே பிரகாசிக்கும் சேக்ஸ்பியர் (Shakespeare) தமது இரண்டு கண்களை இழந்தபின்பே பரடைஸ் லொஸ்ற;(Paradise Lost) என்ற மகாகாவியத்தை எழுதிப் புகழ்பெற்ற மில்ரன் (Milton) அழகு எப்போதும் ஆநந்தத்தையே 96fligib(A thing of beauty is a Joy for ever)616örgotb serfu தத்துவத்தைத் தந்தவனும் இளவயதிலேயே இயற்கை எய்தியவனுமாகிய (Keats) கீற்ஸ், மகாகவி பாரதியின் மனதைக் கவர்ந்த ஆங்கில கவிஞர்களுள் ஒருவரான ஷெல்லி (Shelly) பரட்சியின் வடிவமாகத் திகழ்ந்த பைரன்(Byron) இயற்கையின் கவிஞன் என்னும் பெயர் பெற்ற வேட்ஸ்வேர்த்த (Words wroth) விக்ரோறியா மகாராணியின் காலத்தில் பெரும் புகழோடு விளங்கிய ரெனிசன்(Tennyson) இலக்கிய வாழ்விலேயேதம் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவழித்தவரும் ரெனிசனின் நண்பனுமான ரொபட் பிரவுனிங் (Robert Browning) கவிஞர் பைரன் காலத்தவரும் கவிதையிலும்(Romantic -Tales in verse) நாவல் இலக்கியத்திலும் தம் கைவண்ணத்தைக் காட்டிச் சிறப்பெய்தியவனுமாகிய வால்ரர் ஸ்கொட்(Walter Scott) முதலான ஆங்கில இலக்கியக் கர்த்தாக்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தந்த அடிகளார் பிற நாட்டு நாவலறிஞர் சாத்திரங்களைத் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவை நனவாக்கியவர் என்பதில் ஐயமில்லை.
அருந்தமிழிலும் ஆங்கிலத்திலும் ஊறித் திளைத்த அடிகளார் இளவயதிலேயே இனிமை மிகு கவிதைகளையும் படைத்து மகிழந்தவர். தமது 23வது வயதிலே அவர் யாத்த குருவணக்கப் பாடல் இதற்கோர் எடுத்துக் காட்டு எனலாம். அதே காலகட்டத்திலேயே கணேச தோத்திர பஞ்சகம் கதிரையம்பதி மாணிக்கப் பிள்ளையார் இரட்டை மணிமாலை, சுப்பிரமணிய சுவாமிகள் இரட்டை மணிமாலை, குமரவேள் நவமணிமாலை, ஆகிய நூல்களை ஆக்கிப் புகழ்பெற்றார் கவிஞர் மயில்வாகனன் அவர்கள்.
இவை தவிர அடிகளார் படைத்த தனிப்பாடல்கள் பல. அவற்றுள்
24

ஈசனுவக்கும் மலர், கங்கையில் விடுத்த ഉങ്ങബ அன்பு ஆகிய தலைப்புக்களில் அமைந்த பாடல்கள் எளிமைக்கும் இனிமைக்கும் பெயர் போனவை.
கடிய சொற்களால் மட்டுமன்றி, கவிஞன் பாரதியைப் போல எளிய சொற்களைக் கொண்டும் கவிதைமாலை புனையமுடியும் என்பதைக் காட்டுவததைப் போல அமைந்த மேற்படிச் செய்யுட்கள் காலத்தை வென்று வாழக்கூடியவை.
அடிகளாரின் வசன நடை அவர் வாழ்ந்த காலத்தை ஒட்டியது எனலாம். பழங்கால இலக்கியங்களில் நன்கு பரிச்சயம் பெற்றிருந்த பலராலும் பின்பற்றப்பட்டு வந்த அந் நடையினையே அடிகளாரின் காலத்தில் வாழ்ந்தவர்களும் அவர் நண்பர்களுமான அறிஞர்கள் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், நாவலர் ச.சோமசுந்தரப் பாரதியார் நவநீத கிருஷ்ண பாரதியார், முதலானோரும் கையாண்டனர் என்பதைக் கற்றோர் அறிவர்.
படிப்பாளியாகவும், படைப்பாளியாகவும் துலங்கிய சுவாமி விபுலாநந்தர் பத் தரிரிகை ஆசிரியராகவும் , சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் திகழ்ந்தவர். தமது துறவற வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் ழரீ இராமகிருஸ்ண விஜயம் என்னும் தமிழ்ச் சஞ்சிகைக்கும், ஆசிரியராக இருந்தது போலவே இமையமலைச் சாரலில் தப வாழ்வை மேற்கொண்டிருந்தபோது பிரபுத்த பாரத என்னும் ஆங்கில திங்கள் இதழின் ஆசிரியராகவும் பிரகாசித்தார்.
பத்திரிகை, சஞ்சிகைகளின் ஆசிரியராகப் பணிபுரிந்து பலரின் பாராட்டுதல்களையும் பெற்ற அடிகளாரின் பலவேறு துறைசார்ந்த படைப்புக்களை மொடேன்றிவியூ (Modern review) செந்தமிழ் (மதுரைத் தமிழ்ச் சங்க மாதச் சஞ்சிகை) தமிழ்ப் பொழில் (கரந்தைத் தமிழ்ச் சங்க மாதச் சஞ்சிகை) செந்தமிழ்ச் செல்வி,கலைமகள், ஈழகேசரி ஆகிய பத்திரிகைகள் பெருமையோடு வெளியிட்டு வந்தன.
தூய துறவியாக சுடர்விட்டுப் பிரகாசித்து, மக்கள் தொண்டுக்கே
25

Page 15
தன்னை முற்றாக அர்ப்பணித்துக் கொண்ட அடிகளாரின் புகழ் அகிலமெங்கும் பரவிய வேளையில் தமிழகத்து அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அவர் தலையில் முதல் தமிழ்ப் பேராசிரியர் என்னும் முத்து மகுடத்தை (1931) சூட்டி மகிழ்ந்தது. இதே போன்று இலங்கைப் பல்கலைக் கழகமும், தனது முதல் தமிழ்ப் பேராசான் ஆகத் தவத்திருவாளரையே தாள் பணிந்து ஏற்றுக் கொண்டதன் மூலம் (1943) அது தன்னையே பெருமைப் படுத் தக் கொண் டது.
இசையாராய்ச்சித் துறையே அடிகளாரின் இதயமாயிருந்தது என்பதை யாவரும் அறிவர். இந்த விடுதல் அறியா விருப்பமே அவரது இணையற்ற படைப் பான uJ FT ĝ நுாலினை ஆக் க தூண்டுகோலாயிருந்திருக்கலாம்.
தேவாரப் பாடல்களும், இசைநாடகச் சூத்திரங்களும், புறவுறுப்பாக அமைந்த யாழ் நூல் பாயிரவியல் முதலாக ஒழிபியலிறாக 7 இயல்களையுடையது. சிலப்பதிகாரத்து அரங்கேற்றுக் காதையை நிலைக் களனாகக் கொண்டு சிருட்டிக்கப்பட்ட இச் சிரஞ்சீவிப் படைப்பு, அடிகளார் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்த அரும்பெரும் கொடையேயாகும்.
இசைத் தமிழில் அடிகளார் அதிக ஈடுபாடு கொண்டிருந்தபோதும் முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழையும், மறவாமல் மதங்க சூளாமணி தில்லைத் திருநடனம் ஆகிய அணிகலன்களையும், வழங்கி அதனை அலங்கரித்து இருக்கின்றார் என்பதை நாம் இவ்விடத்தில் நினைவுகூருதல் நன்றாகும்.
இசையாராய்ச்சியில் தம்மையே முற்றாக இழந்துவிட்டதினால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து தமிழ்ப் பேராசிரியர் பதவியைவிட்டுவிலகிய அடிகளார் தமது கவனம் முழுவதையும் அத்துறையிலேயே செலுத்தினார்.
தஞ்சாவூர் இராவ் சாகிப், மு:ஆபிரகாம் பண்டிதர் (1859-1919) அவர்களால் தொடங்கப்பட்ட தமிழிசை ஆராய்ச்சித் துறையில் தவத்திரு
26

விபுலாநந்தர் காட்டிய அதீத ஆர்வத்திற்கு 1930க்குப் பின் தமிழ் நாட்டில் உருவான தமிழிசை இயக்கத்தின் வேகமான வளர்ச்சியும் ஒரு காரணம் என்பர். எனினும் மட்டக்களப்புத் தமிழகத்தின் பாடும் மீன் இசையே அடிகளாரின் இசை ஆராய்ச்சிக்கு உந்து சக்தியாக இருந்தது என்பார் எனது தமிழாசிரியர்களில் ஒருவரும், தமிழறிஞருமான பண்டிதர் திரு. வி.சி.கந்தையா B.O.L அவர்கள் .
காரணம் எதுவாக இருந்தபோதும் தமிழிசையில் அடிகளாருக்கிருந்த தாகமும்அவரது அயரா உழைப்புமே இத்தகைய வரலாற்றுச் சாதனைக்கு உந்து சக்தியாக இருந்தன என்பது மறுக்கமுடியாத உண்மை.
பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல பாண்டித்தியமும் ஈடுபாடும் கொண்ட அடிகளார் புதுமை இலக்கியத்தை புறக்கணித்தவர் அல்லர். இதற்குச் சான்றாக விளங்குவன பாரதி கவிதையில் அவருக்கிருந்த பற்றும் பிணைப்பும். கற்றவர் போற்றுவது கலித்தொகை மட்டுமல்ல. கண்ணன்பாட்டும்தான் என்று அடித்துக் கூறிய அடிகளார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தான் அடியெடுத்து வைத்தும் அங்கு பாரதி கவிதைக்கு அரியாசனம் அளித்துப் போற்றினார்.
இவ்வுண்மையை அடிகளாரின் மாணவர்களில் ஒருவரான பேராசிரியர்.க. கணபதிப்பிள்ளை அவர்கள் சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பாட்டுக்கள் யாவும் மிகுந்த உணர்ச்சியுடன் முன்னேற்றமான கருத்துக்களைப் பொதிந்துள்ளனவாய் இருந்தாலும் இலக்கண இலக்கியங்களைக் கற்றறிந்த பண்டிதர்கள் அவை பழைய யாப்பமைதியோடும் தமிழ் மரபோடும் முற்றாகப் பொருந்தாமையின் அவை உண்மையான தமிழ்க் கவிதைகளல்ல என வெறுத்தனர். அப்பாடல்களுக்கு உரிய மேலான சிறப்பையும் கொடுக்க மறுத்தனர். ஆனால் அடிகளார் அண்ணாமலை நகர் அடைந்தபோது அங்கு பாரதி கழகம் என்ற ஒரு சங்கமும் கூட்டி அப்பாடல்களை இசையறிந்த புலவர்களைக் கொண்டு இசையோடு பாடுவித்தார். அதன் பின்னரே பாரதியார் புகழும் பாட்டுக்களும் நாடெங்கிலும் பரவின. தேடாதிருந்த பாரதியாரை தமிழ் உலகம் கனம்பண்ணவைத்த பெருமை விபுலாநந்த
27

Page 16
அடிகாளாருக்கே உரித்தாகும்" என்று கூறுவதிலிருந்து தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.
அடிகளாரின் பன்மொழிப் புலமை தமிழ் இலக்கியத் துறையில்புதியதோர் முயற்சியில் அவரைப் புக வைத்தது. ஒப்பியல் நோக்கு என்னும் அந்தப் புதுத் துறையின் முன்னோடிகளில் ஒருவராக அடிகளார் விளங்குகின்றார் என்பதை அவரின் ஆங்கிலவாணி என்னும் கட்டுரை மட்டுமன்றி அவர்களால் அவ்வப்போது எழுதப்பட்ட இலக்கியச்சுவை, கவியும் சால்பும், வண்ணமும் வடிவமும், ஐயமும் அழகும், நிலவும் பொழிலும், இயலிசை நாடகம், யாழ்நூல், மேற்றிசைச் செல்வம், சோழமண்ணடலத் தமிழும், ஈழ மண்டலத் தமிழும் ஆகிய கட்டுரைகளும் அரண் செய்கின்றன.
ஆராய்ச்சித் துறையிலும், எழுத்துலகிலும் ஓர் அரசனைப்போல விளங்கிய அடிகளார் கல்விப் பணியைத் தம் இரண்டு கன்களாகவே கருதியவர். இவ்வுணர்வின் வெளிப்பாடாகவே மட்டக்களப்பில் அவரால் அமைக்கப்பட்ட சிவாநந்த வித்தியாயலயம், விவேகாநந்த மகளிர் பாடசாலை, வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம், திருகோணமலை இந்துக் கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், ஆகிய கலைக்கோயில்கள் கலங்கரை விளக்குகளாகப் பிரகாசிக்கின்றன.
தமது குறுகிய கால வாழ்க்கையில் தரணியே மெச்சும் விதத்தில் எத்தகைய ஆர்ப்பாட்டமுமின்றி, அமைதியாக அரும்பணி பல ஆற்றிய அடிகளாரின் உள்ளம் உண்மையிலேயே உலகளாவியது.
ஓர் இந்துசமயத் துறவியாக இருந்தபோதும் தமிழும் சைவமும் வளர்த்த வேறு அறிஞர்கள் சிலர் போலன்றி சமய சமரசத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தவர் சுவாமி விபுலாநந்தர்.
இதுபோன்றே பேராசிரியர் கைலாசபதி அவர்கள் 'தமிழ்க் காதல் அடிகளாரை ஆட்கொண்டிருந்தபோதும் அது அளவாகவே இருந்தது. காதல் வெறியாக மாறவில்லை." என்று விதந்து போற்றியதற்கும் அடிகளாரின் விசாலமான உலகப் பார்வையே காரணமாகின்றது.
28

அடிகளாருக்கு இந்தப் பரந்த மன்ப்பான்மை ஏற்பட்டதற்கு அவர் பிறந்த மண்ணே முதற்காரணம் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் மட்டக்களப்பு மண் இயல்பாகவே இளகும் தன்மை வாய்ந்தது. சாதி சமய பூசல்களால் சல்லடைபோடப்படாத பூமியது. அனைவரையும் அணைத்து மகிழும் இயல்பு ஒருமனவாத உணர்வும் அதன் தனி உடைமை இறுக்கமான சமயச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத இறைபற்று மிக்க மக்கள் வாழும் தேசமது.
இந்த மண்வாசனையே மட்டக்களப்பையும், இமயமலைச் சாரலையும், ஒன்றாக நோக்கும் உள்ளத்தை அடிகளாருக்கு அளித்திருக்க வேண்டும். மேலும் அடிகளாரின் ஆரம்பகால் ஆசிரியர்களாக இருந்த மூவரும் மூன்று வேறு சமயத்தைச் சார்ந்தவர்கள். கத்தோலகிக்க சமயத் துறவியான தவத்திரு . பொனல் (Fr-Bonnel) மெதடிஸ்த கிறிஸ்தவரான குஞ்சித்தம்பி ஆசிரியர் சைவப் பழமான வைத்தியலிங்கம் தேசிகர் முதலான சான்றோரின் தொடர்பும் அடிகளார் ஒரு சமரச ஞானியாக உயர வழிசமைத்துக் கொடுத்தது என தமிழ் அறிஞர் திரு.வி.சி.கந்தையா அவர்கள் எடுத்து வைத்துள்ள கருத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாகும்.
தமிழோடும், தாம் வாழ்ந்த சமுதாயத்தோடும் தம்மை முற்றாக இணைத்துக் கொண்டு வாழ்ந்த அடிகளார் 1947ம் ஆண்டு ஆடித் திங்கள் 19ம் திகதி உயிர் நீத்தபோது தமிழ் உலகமே கண்ணிர் விட்டழுதது. 1947ம் ஆண்டு ஆனித் திங்கள் 20-21ம் நாட்களில் கரந்தை தமிழ் சங்கத்தின் ஆதரவில் திருக்கொள்ளம் புத்துர் திருக்கோயிலில் ஆளுடைப்பிள்ளையார் முன்றலில் அனைத்து உள்ளங்களும் பாராட்டும் விதத்தில் யாழ் நூல் அரங்கேற்றப்பட்டபோதே உடல் தளர்ந்திருந்த அடிகளார் அதைப்பற்றிச் சிறிதும் அக்கறை கொள்ளாமல் தமது அரிய படைப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சியோடு வேறு சில இலக்கியப் பணிகளிலும் தம் கவனத்தை அவர் திருப்பியிருந்த நேரத்திலேயே எதிர்பாராத இந்த இடி ஒவ்வொரு தமிழன் மீதும் விழுந்தது.
தமிழ்மொழிப்பற்று, தாம் சார்ந்த மதக் கோட்பாடுகளில் வைத்திருந்த ஆழமான நம்பிக்கை சமய சமரச நோக்கு, சமுதாயப்
29

Page 17
பணி இலக்கியச் சுவைதேடும் இதயம்.
இந்த உணர்வுகளின் மொத்த வடிவமாக திகழ்ந்த சுவாமி விபுலானந்தர் அடிகளைத் தான் பெற்றெடுத்ததை எண்ணி மட்டக்களப்பு தாய் நிச்சயம் மகிழ்சியடைவாள் என்பதை சொல்லவும் வேண்டுமா?
எண் வந்தது கடல் 2
நல்லவன் ஒருவன்
நாட்டில் இருந்திருந்தால் வல்ல கடல் வந்து
வளைத்திருக்குமா நம்மை?
பெரியோர் என்று
பெயர் பெற்ற மனிதர்
சிறியோர் ஆனதல்
சீறி வந்தது கடல் !
அரசியலில் பிக்குகள்
ஆட்டம் நடத்துவதால்
இரகசியமாகக் கடல்
எழுந்திங்கே வந்தது !
சமூக சேவை என்று
சம்பாத்தியம் செய்வதினால்
அமைதியான கடல்
ஆர்த்தெழுந்து வந்தது !
30

தமிழுக்குக் கிடைத்த தகுத
ஞானபீட விருது
நமது எழுத்தாளனுக்கு வானம் வரை உயர்ந்த வயிர எழுத்தாளன்
புதுமைப் பித்தனின் புகழ் பெற்ற வாரிசு முதுமையிலும் எழுதும் முற்போக்குக் காரன்!
முத்திரைக் கதை எழுதி முகவரி பெற்றவன் எத்தனையோ பரிசு இவன் பெற்றுவிட்டான்
எங்கள் தமிழ் இலக்கியம் இவனது எழுத்தால் மங்காப் புகழ் பெற்றது மகத்தான எழுத்தாளன்
'உன்னைப்போல ஒருவன்'
ஒப்பற்ற நாவல் வண்ணத்த திரைதனிலும் வந்து புகழ் பெற்றது !

Page 18
ஊர் போற்ற எழுதிய ஒரு நல்ல எழுத்தாளன் பேர் பெற்று விட்ட பெரிய எழுத்தாளன்
ஆறுவரை படித்து அகிலமதை வென்ற கூறு புகழ் எழுத்தாளன் கோடியில் ஒருவன் !
ஏழை எளிய மக்களே இவன் எழுத்தில் இருப்பார் ஆளும் இவன் கதைகள் அத்தனை மணங்களையும் !
போலிகளை ஒரு நாளும் பொறுத்திடவே மாட்டான் காலமெல்லாம் எழுதி கருத்துப் பயிர் வளர்த்தான்
ஜெயகாந்தன் எழுத்து ஜெயித்ததடா இன்று இயல் தமிழ் மொழிக்கு இனி என்ன வேண்டும் ?

சுனாமி ஒரு சுவீப்
சுரண்டுவோர் சொத்துச் சேர்ப்போர் இவர்களுக்கு சுனாமி ஒரு சுவீப் !
அந்நிய நாடுகளும் இந்தப் புண்ணியவான்களிடம் அள்ளித் தருகின்றன இததான் பூர்வ ஜென்மப் பலனோ?
செத்தவர்கள் பேரில் சீவிப்பவர்களா இவர்கள்?
அரசுக்கும் இதர பெரிய ஆசீர்வாதம் சுனாமி ஒரு நல்ல சுமைதாங்கி !