கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1983.06.15

Page 1
Registered as a Newspaper in Sri Lanka.
KUMARAN - 63 (15-06-1983) R;"***"
அ ரிய நூ ல் க ள்
மீண்டும் கிடைக்கும்
இளமையின் கீதம் செ. கணேசலிங்கன் els. 18.00 குந்தவிக்குக் கடிதங்கள் p. 12.00 சடங்கு 12.00 செவ்வானம் 丑5.00 தரையும் தாரகையும் Ο Φ 16.50 போர்க்கோலம் 9 p. 14.25 மண்ணும் மக்களும் 10.50 அந்நிய மனிதர்கள் 9 Α. 13,50 வதையின் கதை 99 巫5,75 கலையும் சமுதாயமும் s 11.25 சொந்தக்காரன் பெனடிக்ற் பாலன் 13.50 வெற்றியின் இரகசியங்கள் அ. ந. கந்தசாமி 15.00 உயர்தர இரசாயனம் கணேசர் சிவபாலன் 90.00
(A. L. வகுப்பு பாடநூல்)
இலக்கியச் சிந்தனைகள்- க. கைலாசபதி
«Ե. 15|-
யுகமலர் - யோகா பாலச்சந்திரன் 200,
விற்பனையாளர்களுக்கு கழிவு உண்டு. முற்பணம் அனுப்புவோருக்கு பார்சல் செலவு இணும். வி. பி. பி. ஏற்கப்படும்.
விஜயலட்சுமி புத்தகசாலை 248, காலி வீதி : ; வெள்ளவத்தை
கொழும்பு 6. ر
தொலைபேசி: 588930
அச்சு : குமரன் அச்சகம், 201, டாம் வீதி, கொழும்பு-12, ஆசிரியர் : செ. கணேசலிங்கன்

SSS LLLLLL LLLLLr r LLLGGGLS GL LLLL LLLLLLLrG rGGGrrrr rrLLLGGLL skete et ses sk chassisk v
SccTTkccLccOkOO OBYYS DuDLYLkLOOLkMmmmTTTTkuuBBGDB LBkBukBuBBCBCBD CCCkCBCBGDLCBCCBCumSTTTkeTDCeDmY
மார்க்சியம் விடுதலையின் இலக்கணம் மக்களின் பகைமை எப்பக்கம் ? - மாதவன்
င္ငံဖ္ရစ္သန္တီးဒ္ဓစ္သို႕ အီ&ဆီဒီgéè ဒီဇ هي ة
இலங்கை மற்றெரு நவ காலனியா ? - தியாகு
மாவோ பாடல்கள் - கோவிந்தன்
அடிவருடி அழவே தெரிந்த குழந்தைகள் காகங்கள் என்றல்
- யோ. பெனடிக்ற் பாலன்
அடைபட்ட கதவுகள் நவீன படைப்பிலக்கியத்தில் மார்க்சியத்தின் தாக்கம்-2 - செ. யோகநாதன்
மொழிபெயர்ப்பும் பண்பாடும்
சிட்டுக்குருவி ஒன்று
- கவிஞர் கபிலன்
எல் சல்வடோர் - மற்றெரு வியத்நாம்
- செ. கணேசலிங்கன்
உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது ? கேள்வி ? பதில் !
- 'வேல்"
ALAqALLLeL TLkLkLkLL LLLL LLLLL LLL LLLL CL CC SLLLLLLLL LeeeLTqq eeeTe ஷ 之基$巴 (M
STeLL 0M TkTTTBOTOOkOkS kLkOOkOOkOTOTOOOOOOuyT uu 55 #383
D விலை : ரூ. 2/-

Page 2
மக்களின் பகைமை எப்பக்கம்?
-மாதவன்
சென்றமாதத்தில் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தல்கள்,இடைத் தேர்தல்கள் அவற்றை ஒட்டி நடைபெற்ற சம்பவங்கள் மறக்க முடியா தவை. யாழ்ப்பாணத்தில் தேர்தலன்று மாலை வாக்களிப்பு நிலையத்தில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திற்கு எதிராக, வஞ்சம் தீர்ப்பதாக இராணுவத்தினர் வாக்களிப்பு நிலையத்தைச் சுற்றியிருந்த 75 வீடுகளுக் குத் தீயிட்டனர். வாகனங்களைக் கொளுத்தினர். வீடுகளை உடைத்து பணம், நகைகளைக் கொள்ளையடித்தனர். ஏழைகள் வாழ்ந்த குடிசைகள் முற்ருகச் சாம்பராயின. தம் உடைகள், சிறு உடைமைகள் யாவையும் சிலமணி நேரத்தில் இழந்து அகதிகளாகினர்.
பின்னர் 1-6-83ல் வவுனியாவில் புலிப்படையினர் எனக் கூறப்படும் தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தவர் விமானப்படையினர் மேல் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அதையொட்டி புதிய சந்தையிலிருந்த 37 கடை களும் சில மணி நேரத்தில் தீப்பற்றி எரிந்தன. பொலிசாரே தீ மூட்டிய தாகவும் மக்களும் இராணுவத்தினரும் தீயை அணைத்ததாகவும் பத்திரி கைகள் அறிவித்தன.
யூன் 1981இல் யாழ். நாச்சிமார் கோவிலடியில் இருபொலிசார் சுடப் பட்டதையொட்டி யாழ். பெரியகடை, யோகேஸ்வரன் வீடு, நூல்நிலை யம் யாவும் பொலிசாரால் எரிக்கப்பட்ட செய்தி யாவரும் அறிந்ததே.
இச்சம்பவங்கள் யாவும் ஒரு உண்மையைக் கூறி நிற்கின்றன. அரசின் பலாத்கார வடிவங்களான பொலிசார், இராணுவத்தினர் மேல் எவர் கைவைப்பினும் பதிலடி உடனே கைவைப்பவர்களுக்குமட்டுமல்ல மக் களுக்கே கிடைக்கும் என்பதாகும்.
வேலியே பயிரைமேயும் இத்தகைய சம்பவங்கள் பற்றி கண்டனங் கள் தெரிவிக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் பட்டியல்கள் தரப்படு கின்றன. ஆசிரிய தலையங்கங்கள் எழுதப்படுகின்றன. ஆயினும் பதி லடிகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஏன்?
ஆளும் வர்க்கமும் அதன் பாதுகாவலரான அரசின் தேவையுமே இத்தகைய நடவடிக்கைகளுக்கு இடம் தருகின்றன. பூர்ஷ்வா ஜன நாயகம் வலுவிழந்து வருகிறது . என்பதும் இச்சம்பவங்கள் மூலம் அம் பலமாகின்றன. இக்காலகட்டத்தில் பூர்ஷ்வா வர்க்க நீதிமன்றங்களும் அரசின் நோக்கங்களுக்கு வழிவிட வேண்டும். தவறின் அரசின் தேவைக் கேற்ப அவையும் மாற்றி அமைக்கப்படும். அவசரகாலச் சட்டங்கள்,
2 குமரன்

பயங்கரவாத தடைச் சட்டங்கள் மூலமும் பூர்ஷ்வா ஜனநாயக உரிமை கள் பறிக்கப்படலாம்.
தேர்தல்கள், சட்டத் திருத்தங்கள், அரசியலமைப்பில் விரும்பிய மாற்றங்கள் யாவும் அரசின் தேவைக்கேற்ப நடாத்தப்படும். தேர்தல் கள் நடாத்தும் புதிய முறைகளை 1981 இல் யாழ்ப்பாணத்திலும் சென்ற ஆண்டிலும் இவ்வாண்டிலும் பிற'இடங்களிலும் கண்டோம். பிரசார சாதனங்கள், தொடர்பு சாதனங்கள் யாவும் அரசு சார்பாக இயங்கு வதையும் காணலாம்,
பொலிசார் இராணுவத்தினர் பதிலடி கொடுப்பது முதலாளித்துவ அமைப்பு பாசிச அமைப்பாக மாறிவரும் வேளை வேகமடைவது புதுமை யான செயலல்ல. கெரில்லாப் போராட்டம், யுத்தம் நடைபெறும் வேளையெல்லாம் இத்தகைய சம்பவங்கள் உலகில் நடைபெறுவதை நாம் பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்கிருேம். எல் சல்வடோர், பிற லத்தீன் அமெரிக்க நாடுகள், தென் ஆபிரிக்கா, இந்தோனேசியா ஆகிய நாடுகளி லெல்லாம் காண்கிருேம். சில கெரில்லாக்கள் ஒரு கிராமத்தில் நடமாடு வதாக அறிந்ததும் இராணுவத்தினர் அக்கிராமம் முழுவதையுமே துவம் சம் செய்வதை அல்ஜீரிய விடுத&லப் போராட்டத்தில் கண்டோம். வியத் நாம் யுத்தத்தில் கண்டோம். தென் ஆபிரிக்கா, எல் சல்வடோர், பிற லத்தீன் மத்திய அமெரிக்க நாடுகளில் காண்கிருேம். இரண்டாவது உலக யுத்தத்தின்போது பிரெஞ்சு கெரிலாக்கள் இருப்பதாகக் கூறப் பட்ட ஒரு சிறு நகரிலுள்ள உயிரினங்கள் யாவும் அழிக்கப்பட்டதை அண் மையில் ரூபவாகினி செய்தியில் பார்த்தோம். அக்கோரச் செயலைத் தலைமை தாங்கி நடத்திய நாஜிப்படைத் தலைவனை அண்மையிலேயே பிரெஞ்சு நீதிமன்றம் விசாரணை செய்து தண்டித்தது.
முதலாளித்துவ நாட்டுப் படைகள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட தீ வைத்தல், கொள்ளையடித்தல், கொலை செய்தல், கற்பழித்தல் ஆகிய வற்றிற்கெல்லாம் லைசென்சு பெற்றவர்கள். இவை அரசின் மறைமுக அனுமதியுடனேயே நடைபெறுகின்றன. மைலாய்போல ஒரு சில சம்ப வங்களே திைர்பாராது வெளியே தெரியவருகின்றன.
மாவோமட்டுமே மக்கள் யுத்தத்தை நடாத்தும்போது தமது படை யினருக்குக் கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பித்து நடைமுறைப்படுத்தி ஒர். கிராமங்களில் தங்கும்போது மக்களிடம் உப்புப் பெறினும் பணம் கொடுத்துப் பெறவேண்டும், அவர்களுக்கு உதவ வேண்டுமே தவிர எவ் வித தீங்கும் செய்யப்படாது என்று மாவோ கட்டளையிட்டார். கிரா மத்தை விட்டுப் போகும்போது தங்கியிருந்த இடங்களைக் கூடப் ப-ை யினர் துப்பரவாக்கிவிட்டுச் செல்வார்களாம்.
குமரன்

Page 3
இலங்கைமற்றெருநவகாலனியா?
தியாகு
அண்மையில் எங்கள் நிதி மந்திரி ஒரு கூட்டத்தில் பேசும் வேஃ1 இலங்கையின் பொருளாதார நிலைபற்றிய உண்மையைக் கூறினர். எங் கள் ஆண்டு வருமானம் ரூபா 2000 கோடி ரூபாவாக இருக்கும் வேளே செலவு ரூபா 5000 கோடியாக உள்ளது என்பதாகும். ஆகவே இப்பற் ருக்குறை ரூபா 3000 கோடியை நாம் எவ்வாறு பெறுகிருேம்? கடன்கள் மூலமே பெறமுடியும். உள்நாட்டில் ஒரு பகுதியையே பெறமுடியும். பெரும் பகுதி வெளிநாட்டுக் கடனே.
எங்கள் ஆண்டு வருமானத்திலும் தற்போது 25% தொகையை நாம் கடன்பட்ட வட்டி, தவணைப் பணமாகச் செலுத்த வேண்டியுள்ளது. 1982 ஆம் ஆண்டு மத்திய வங்கி அறிக்கையின்படி எமது வெளிநாட்டுக் கடன் சென்ற 10 ஆண்டுகளில் ரூபா 235 கோடியிலிருந்து ரூபா 3469
கோடியாக உயர்ந்துவிட்டது.
வட்டி தவணைப் பணமாக 25% ஆண்டு வருமானம் போய்விடுகிறது.
முதலாளித்துவ அமைப்பில் பொலிசார் இராணுவத்தினர் மக்கள் எதிர்ப்புக்குப் பதிலடி கொடுக்கு முகமாக தீ வைத்தல், கொள்ளையடித் தல், கொலை செய்தல், கற்பழித்தல் போன்ற செயல்களால் தமது சிமைப்டையே அழிக்க முயல்கிருர்களே தவிர வெற்றிபெறுவதில்லை என் "°தி அவர்களே அறிவதில்லை. இத்தகைய செயல்களால் அழிந்த அரசு *ளின் வரலாற்றைக் கூட அவர்கள் கற்பதில்லை. கற்ருலும் தெளிவு பெறுவதில்லை. யாழ். நகர், கந்தர்மடம், வவுனியா ஆகிய இடங்களில் நடைபெற்ற தீ வைப்பு, கொள்ளைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக் *ளின் பகைமை உணர்வு எப்பக்கம் சார்ந்து நிற்கிறது என்பதே இங்கு முக்கியமானதாகும். புலிப்படை என்று கூறப்படும் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பொலிஸ் இராணுவத்தினரைத் தாக்குவதும் அக்கார ணத்தைச் சாட்டாக வைத்து அவர்கள் மக்கள்மேல் சீறுவதும் நடை பெறும் வேளை மக்களின் பகைமை புலிப்படை இயக்கத்தவர் மேல் ஏற் H4ன் அவ்வியக்கம் நிலைக்கமாட்டாது. இதற்கு மாருக பொலிஸ், இரா இணுவத்தினர்மேல் மக்கள் கொதிப்பு ஏற்படின் அத்தகைய ஆட்சி நீடிக்க மிாட்டாது. இதுவே வரலாறு உலகிற்குக் கற்பிக்கும் பாடமாகும்.
நீதியான போராட்டமே என்றும் வெற்றிபெறும். அநீதியான போராட்டம் நிலைக்காது. நீதி எப்பக்கம் நிலவுகிறது என்பதே முக்கி யம். நீதி சில வேளைகளில் வெற்றிபெற நீண்டகாலம் ஆகலாம்.
"? 4. - (5LDysity

இது தவிர உள்நாட்டுக் கடன் 1977 இல் ரூபா 1439 கோடியிலிருந்து 1982இல் ரூபா 4,557 கோடியாக உயர்ந்துள்ளது. சேமிப்பு வங்கியின் உள்நாட்டு வட்டி விகிதம் 22 சத வீதமாகும். பிற வங்கிகளும் 18-20% வழங்குகின்றன. சேமிக்கத்தக்க வருமானமுள்ள ஒரு சிறு பகுதியின ருக்கே மக்களின் உபரி உழைப்பான வட்டியும் கிடைக்கிறது. ஏழைகள் ஏழைகளாக பணமுள்ளவர்கள் செல்வந்தராகி வருகின்றனர். இலங்கை யில் உள்ள அளவு வட்டி கொடுக்கும் நாடு உலகில் சிலவே.
அமெரிக்க ஏகாதியத்தியத்தின் ஆதிக்கத்திலுள்ள உலக வங்கியின் ஆணைப்படி நாம் வாழும் நிலை ஏற்பட்டுவிட்டது. எமது வரவு செலவுத் திட்டங்களை அவர்களே தயாரிக்கும் நிலை வந்துவிட்டது. தற்போது ரூபாவின் மதிப்பை டாலருக்கு ரூபா 23இல் இருந்து ரூபா 26க்கு குறைக் கும்படி வற்புறுத்தும் நிலை வந்துவிட்டது.
தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடிப் பிடி யில், இலங்கையின் நிலையில் எந்த நாடும் இல்லை என்றே கூறலாம். இந் நிலை சென்ற 6 ஆண்டுகளில் ஏற்பட்ட சிறப்பான நிலையாகும், அரைக் காலனி நிலையிலுள்ள இந்தியாவில் உள்ள அளவான சோவியத் ஆதிக்கம் இலங்கையில் கிடையாது. இந்தியா சோவியத்துடன் இராணுவ உடன் படிக்கையே எழுதியுள்ளது. இன்று இலங்கை அமெரிக்க காலனியாக மாறிவருவதைக் கண்கூடாகக் காண்கிறுேம்; காரணங்கள்: (1)உலகவங்கி அமெரிக்கக் கடன்களின் அதீத வள்ளர்ச்சியும் பொருளாதாரப் பிணைப்பும் (2) திருகோணமலைத் துறைமுகம் எண்ணெய்த் தாங்கிகள் அமெரிக்கா விற்கு வழங்க இருக்கும் நிலை. (3) வோய்ஸ் ஒப் அமெரிக்கா என்ற அமெரிக்கப் பிரசார ஒலிபரப்பு நிலையம் இலங்கையில் நிறுவப்படும் ஆப த்து. (4) அமெரிக்க டாலருடன் எமது ரூபா இணைக்கப்பட்டு ஆண்டு தோறும் மதிப்பிழந்து வரும் நிலை. (5) அமெரிக்க பொருளாதார நிபு ணர்களின் ஆணையின் பேரில் தாராள இறக்குமதிப் பொருளாதாரக் கொள்கையும் அரசுடைமைக் கூட்டுத்தாபனங்களை தனியாரிடம் கை யளிக்கும் போக்கு. (6), வெளிநாட்டு மூலதனத்துடன் இணைந்த கூட்டுக் கம்பெனிகளை மேலும் பெருக்கி தரகு முதலாளிகளுக்கு மேலும் வாய்ப்பு அளிப்பது. (7) பிரிட்டிஷ் ஏகாதிபத்திய யுத்தத் தளங்களை 1956 இல் அகற்றிய பின்னர் சுதந்திர வர்த்தக வலையத்தில் நவீன முறையில் ஏகாதிபத்திய மூலதனம் சுதந்திரமாக நுழைந்து தொழிற்சாலைகளை அமைக்க அனுமதி வழங்கல். (8) கண்டிச் சிங்கள மக்கள் நிலங்கள் காலணி ஆதிக்கத்தால் பறிக்கப்பட்டதாக நீண்டநாள் கூக்குரலிட்டு விட்டு நெசில்ஸ் போன்ற சர்வதேசக் கம்பனிகளுக்கு பல்லாயிரக் கணக் கான ஏக்கர் நிலங்களை வழங்க முன் வருதல். (9) நிர்வாக அதிகாரம் கொண்ட ஜனதிபதி ஆட்சிமுறை. (10) தேர்தலை அபிப்பிராய வாக் கெடுப்பாக மாற்றுவதும் வன்முறையாக மாறும் தேர்தல்களும். (1) ஜனதிபதித் தேர்தலின் பின் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் போக்கு.

Page 4
இவ்வாறன நவகாலணி நிலை வளர்ச்சியடையும் வேளை பூர்ஷ்வாஜன நாயக உரிமைகளையும் நாம் சிறிது சிறிதாக இழந்து வருகிருேம். "
லத்தீன் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகளின் நவகாலனி நிலை க்கு நாமும் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிருேம். இந்நாடுகளின் பொரு ளாதாரம் முழுவதும் அமெரிக்க ஆதிக்கப் பிடியில் இருப்பது யாவரும் அறிந்ததே. இந்நாடுகளின் ஆண்டு வருமானம் கடன்பழுவின் வட்டி, தவணைப் பணம் செலுத்தவே முடியாத நிலைக்கு வந்துவிட்டன. இத ஞல் ஆண்டுதோறும் புதிய கடன் பெற்று வட்டியும் தவணைப் பணமும் செலுத்தி வருகின்றனர். இந்நிலைகளினல் உழைக்கும் மக்கள் அத்து மீறிச் சுரண்டப்பட்டு வறுமையில் உழைக்கின்றனர். பணவீக்கம் ஆண்டுதோறும் அவர்களது உழைப்பை உறுஞ்சிவிடுகிறது.
தேர்தலற்ற ஆட்சியே பல நாடுகளில் நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறினும் இராணுவ ஜனதிபதிகளே வெற்றி பெறுகின்றனர். நவீன முறைகளில் தேர்தலில் வெற்றிபெறும் முறைகளை அவர்கள் அறிந் துள்ளனர்.
இக்கொடுமைகளை எதிர்த்து கெரில்லாமுறை ஆயுதப் போராட்டம் நடத்தியபோதும் அமெரிக்க ஆயுதம், இராணுவப் பயிற்சி, இராணுவ ஆலோசனைகள் உதவியுடன் அவை நசுக்கப்படுகின்றன. ஆயினும் 1960, 1970 களில் தோல்வியுற்ற போராட்டங்கள் 1980 களில் புதுவடிவ மெடுத்து வெற்றிபெற்று வருவதைக் காண்கிருேம். வியத்நாமின் பின் னர் அமெரிக்காவையே திகைக்க வைக்கும் புதிய போராட்ட முறையை யும் மக்களின் வெற்றியையும் இன்று எல் சல்வடோரில் பார்க்கிருேம். மா-லெ முறையான மக்கள் யுத்தம் அங்கு நடைபெறுகிறது. எத்த கைய ஆயுதபலம், இராணுவ நடவடிக்கையாலும் தொழிலாள, விவ சாயிகளின் போராட்டத்தை அடக்கிவிட முடியவில்லை. சீன பெரிய நாடு; ஒரு பகுதியைப் பிடித்து விரிவாக்க முடிந்தது. எல் சல்வடோர் மிகச் சிறிய நாடு. வியத்நாமுக்கு வடவியத்நாம் துணையிருந்தது. சோ வியத், சீனு உதவி எல்லை வழியாக ஆயுதம் வழங்க வாய்ப்பிருந்தது, எல் சல்வடோருக்கு எல்லை நாடுகளே அமெரிக்க ஆதிக்கத்திலுள்ளன. போ திய ஆயுத பலமின்றியே மக்கள் போரிடுகின்றனர்; வெற்றி பெறுகின் றனர். இதைத்தான் மாவோ அனுபவ ரீதியாகக் கண்டு மக்கள்யுத்தம், மக்கள் சக்தியை எத்தகைய பலத் தாலும் அழிக்க முடியாது என்று எழு தினர் போலும். سمبر
நவகாலணிகள் விடுதலைபெறும் காலங்கள் வெகுதூரத்திலில்லை என் பதையே எல் சல்வடோர் காட்டி நிற்கிறது.
6 குமரன்

மார்க்சியம்விடுதலையின் இலக்கணம்
‘மாதவன்’
தமிழக பிரபல மார்க்சிய சிந்தனையாளர்களில் எஸ். என். நாக ராசன் ஒருவராவார். அவர் தமிழர் மரபை ஒட்டி மார்க்சியத்தைக் காண்பவர். V,,
அன்னர் “கம்யூனிசம்-விடுத8லயின் இலக்கணம்' என்ற தலைப்பில் கட் டுரைத் தொகுதி ஒன்றை வெளியிட்டுள்ளார். V−
* Lorrri 56657 ஆராய்ச்சி அனைத்துமே, கட்டுண்டு விலங்கினும் கேடாக மாறியுள்ள இம்மானிடப் பிறவியை விடுவிப்பதேயன்றி வேறெதுவு மல்ல' என்று கூறுவதுமட்டுமல்ல முதலாளித்துவ பண்ட உற்பத்திப் பெருக்கத்துடனும் மனிதன் எவ்வாறு கூலி அடிமையாக மூலதனத் துடன் கட்டுண்டு கிடக்கிருன் என்பதையும் தமது கட்டுரைகளில் தாக ராசன் சிறப்பாக விளக்கியுள்ளார்.
மார்க்சியம் தமிழர்களின் சிறந்த மரபுக்கும் ஒழுக்கத்திற்கும் வேறு பட்டதல்ல எனக் கூறி எங்கள் பழமொழிகள், பழந்தமிழ் இலக்கியக் கருத்துகளிலிருந்தே மார்க்சிய சித்தாந்தத்தை இந்நூல் கட்டுரைகள் சில வற்றில் நிரூபிக்க முயன்றுள்ளார்.
மார்க்சியத்தை பழைய மரபு வழியாக நாம் பிரசாரம் செய்து கொண்டிருக்கப்படாது, சமுதாயத்தை யதார்த்தமாக மாற்றியமைக் கும் புரட்சிகர ஆயுதமாகக் கற்பிக்க வேண்டும் மன்ற கருத்துள்ளவர்.
மாவோ வழியான விவசாயப் புரட்சியில் நாகராசன் ஆழ்ந்த நம்பிக் கையுள்ளவர். ',
அண்மையில் ஈழத்தில் ஏற்பட்ட தேசிய எழுச்சி தமிழ் நாட்டிலும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இயக்கங்களிலுள்ள பலர் அறி வர். இந்தியாவிலும் தேசிய இனரீதியில் புரட்சியை நடாத்த வேண்டும் என்ற புதிய கருத்துப் பல இயக்கங்களிடை பலத்த விவாதத்தை ஏற்படு த்தியுள்ளது. நாகராசனும் இக்கருத்தை ஆதரிப்பதாகக்கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மார்க்சின் இயக்கவியல் பொருள் முதல் வாதத்தை நன்கு புரிந்து கொண்டவர்களில் நாகராசனும் முக்கியமானவர். இச் சிறப்பை அவரது கட்டுரைகளிலே காணலாம். மார்க்சிய சித்தாத் தத்தை நன்கு புரிந்து கொண்டவர்களாலேயே அதை எளிதாகவும் கூறி விளக்க முடியும். கல்வியறிவுக்கு வாய்ப்பில்லாத தொழிலாளி, விவ
குமரன் 7

Page 5
சாயிகளுக்கு இச்சித்தாந்தங்களை எளிமையாக, புரியத்தக்கதாகக் கூறு வதும் இன்றைய முக்கிய தேவையே.
மார்க்சைப் புதுமையாக நாகராசன் புரிந்து விளக்கியபோதும் இன் றைய நவ மார்க்சிஸ்டுகளின் சில கருத்துகளை அவர் ஏற்கவில்லை, உதாரணமாக, அல்துரசர் போன்றவரின் இளம் மார்ச்ஸ், முதிர்ந்த மார் க்ஸ் என்று பிரித்துப் பார்ப்பதையும் கூறலாம். மார்க்சின் இளமைக்கால எழுத்திலும் பார்க்க 1857 இன் பின் எழுதிய முதிர்ந்த எழுத்துக்களே இயக்கவியல் பொருள் முதல்வாதக் கோட்பாட்டுடன் அமைந்துள்ளது என்ற கருத்து நவமார்க்கிஸ்டுகளிடை இன்று ஆதரவு பெற்றுவருகிறது.
*மனிதன் ஒரு அடைப்பாளி. மனிதன் இறுதியில் கலைஞன். கலையே மானுடத்தின் உயிர்' என்ற கருத்தை அந்நிய மாதல் கட்டுரையில் மிகத் தெளிவாக நிரூபித்துள்ளார்.
பெளதிக விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சியினல் எற்படும் ஆக்கம் மட்டுமல்ல அழிவுபற்றியும் விளக்கி தமது அச்சத்தை ஆசிரியர் ஆங் காங்கே தெரிவித்துள்ளார்.
பெளதிக விஞ்ஞானிகளே மூடக் கொள்கையுள்ளவர்களாகவும் இருப்பதைக் காண்கிருேம். அதற்குரிய காரணத்தை பர்னும் அழகாக விளக்கியுள்ளார். பெளதிக விஞ்ஞானத்தில் முதலாளித்துவம் காட் டும் ஊக்கத்தை சமூக விஞ்ஞானத்தில் காட்டுவதில்லை. அதனுலேயே மார்க்சியம் போன்ற சமூக விஞ்ஞானங்களைப் பரவலாகக் கற்பிப்பதைத் தடுத்து வருகின்றனர். அதனல் பெளதிக விஞ்ஞானிகளே மூடக் கொள் கையுள்ளவர்களாகவும் உலகில் காண்கிருேம்.
"மனித வரலாறும் தன்-அறிவும் தோற்றமும்’ என்ற கட்டுரையில் ஆன்மீக வாதிகளுக்கும் நாத்திகருக்குமுள்ள வேறுபாட்டை ஆசிரியர் அழகாக விரித்துள்ளார். அத்துடன் மார்க்சியம் எவ்வாறு இவ்விரண்பி லிருந்து ம் வேறுபடுகிறது என்பதையும் விளக்கியுள்ளார். இக்கட்டுரை தமிழ் நாட்டவருக்கு மிக அவசியமான கட்டுரையாகும். இவர் இரண்டு பற்றியும் கூறிய கருத்துக்கள் கீழே சுருக்கித் தரப்பட்டுள்ளன:
ஆன்மீகம் நாத்திகம்
1. தெய்வத்தை ஏற்பது, 1. தெய்வத்தை மறுப்பது. பொ ஆன்மாவை தெய்வமாகக் ருளையே உயர்வாகக் கொள் கொள்வது. வது.
2. மெய்யை (DL&av) G untuj 2. பொருளை மெய் என்பது.
என்பது.
8 குமரன்

ஆன்மீகம் நாத்திகம்
3. புலன்களின் இ ச்  ைச  ைய 3. புலன்களாலேயே இன்பம்
எதிர்ப்பது. என்பது.
4. பொருளை எதிர்ப்பது. 4. பொருளை வழிபடுதல்.
5. உடலை மறுப்பது. 5, உள்ளம் என்பதை மறுக்
கிறது. 6. உடலற்ற உயிரை ஏற்பது. 6. உயிரை மறுத்து உடலை ஏற்
w ġej.
7. கடவுளே பொருள் என்பது. 7. பொருளே கடவுள் என்பது,
8. பொருள் அடிமையின் அத்தி 8. பொருளே சுதந்திரம்.
வாரம்.
9. கடவுளின் அருளே தேவை 9. பொருளின் அருளே தேவை
என்பது. என்பது,
10. பொன், பொருள் மக் களை 10. பொன், பொருள், அமுதம்" ஆட்டிப் படைக்கும் பிசாசு மக்களைப் படைக்கும் தெப் போன்றது. வம்.
மார்க்சியத்தை வரட்டுத் தத்துவம் என்று கூறுவோரும் உள்ளனர். மார்க்ஸ் 14-3-1883இல் மறைந்து 17-3-1883 அன்று அடக்கம் செய் யப்பட்டபோது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரையில் பின்வருமாறு மார்க்ஸ் பற்றிக் குறிப்பிட்டார்:
*மனித வர்க்கம் அரசியல், விஞ்ஞானம், கலை, சமயம் முதலியவற்றி லெல்லாம் ஈடுபடுவதற்கு முன்பாக உண்ண வேண்டும், குடிக்க வேண் டும், உறைவிடமும் உடையும் பெறவேண்டும்.என்று விரும்பியவர்."
இத்தகைய உயர்ந்த கோட்பாடுடைய மானிட வர்க்கத்தின் சிறந்த மானிடன் பொருளையும் மனிதனையும், உடலையும் ஆன்மாவையும், பிரித் துப் பாராது இணைத்தே பார்த்தார்.
ஆசிரியர், மார்க்சியம் பற்றிக் கூறப்படும் தவருனகருத்திற்குப் பின் வருமாறு பதில் இறுக்கிருர்:
'மார்க்ஸ் பொருளையும் அதன் வாயிலாக மனிதனின் உண்மையை யும் விளக்கினர். பொருளையே காண விரும்பியவர்கள் பொருளைக் காண இயலவில்லை. அவ்வாறே மனிதனை மட்டுமே காணத் துடித்தவர் கள் மனிதனையும் காண இயலவில்லை. பொருளையும் மனிதனையும்
குமரன் 9

Page 6
இணைத்துப் பார்த்தவராகிய மார்க்சே பொருளையும் விளக்க முடிந்தது: மனிதனையும் காண முடிந்துது.
பொது உடமைத் தத்துவம் இத்தகைய தத்துவமல்ல. மாரு கப் பொருளைப் பெரிதெனப் போற்றும் தத்துவமுமல்ல. மாருகப் பொரு ளைப் பொய்யெனத் தூற்றும் போக்குமல்ல. இது மனிதனையே போற் றும் தத்துவம். இக்காரணமாகவே இதை விஞ்ஞான அடிப்படைகொண்ட மானிடத் தத்துவம் என்றும் அழைக்கின்றனர். -
முதலாளியம், நடைமுறையில் பொருளைப் போற்றும் ஒரு தத்துவ மன்றி வேறென்ன? இச்சமுதாயத்துள் மனிதன் நாளுக்கு நாள் பொரு ளின் நிரந்தரமான அடிமையாக மாறிவிடுகிருன். அதாவது பொருள் இவனை அதிவேகமாகத் தன்வயமாக்கி வருகின்றது. வேறு வகையில் இதைக் கூறுவோமானல், மனிதன் தான் படைத்த பொருளுக்குள் வேகமாக மறைந்து வருகின்றன். அவன் நிற்கக்கூட இடமில்லாமல் அவன் படைத்த உலகிலேயே தத்தளிக்கின்றன். இத்தகையதொரு நிலையை முற்றிலும் மாற்றி, மறையும் மனிதனை மீண்டும் மீட்கவே பொதுஉடைமைத் தத்துவமும், அதனை உணர்ந்த பாட்டாளி வர்க்க மும் இவ்வுலகில் டோராடி வருகின்றன. அறிவுடன் கூடிய செயலல்லவா இப்பணியைச் செய்ய முடியும்? அத்தகைய பணியையே பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் செய்யத் தொடங்கியுள்ளது."
சில கட்டுரைகளில் அடிப்படை அமைப்பையே மறந்து மேல் மட்டஅமைப்பை முதன்மைபடுத்தி ஆசிரியர் ஆராய்வதையும் காணலாம்.
கிறிஸ்தவர்களுக்கும் மார்க்சிய வாதிகளுக்கும் இடையில் உரையா" مسيحية ட்ல்" என்ற கட்டுரையின் முடிவில் புரட்சியாளர் பற்றிய புதிய கருத்து ஒன்றையும் ஆசிரியர் கூறியுள்ளார். நாம் வழமையாக புரட்சியாளர் துன்பத்தை அனுபவிக்கின்றனர் என்றே கொள்கிருேம். அவர்களுக் காக வருந்துகிருேம். புரட்சியாளர் பேரின்பமய உணர்வுடனே (3u jst pr[T(6) : கின்றனர்என்று ஆசிரியர் உதாரணத்துடன் விளக்குவதைக் கீழே காண்க:
‘உழைப்பில் கொள்ளும் இன்பம்தான் ஒருவருக்கு உற்சாகம்தர முடி முடியும். மிகச் சாதாரண ஒரு வேலையையும் உற்சாகம்தரும் வேலை யாக எப்படி மாற்றுவது என்பதே பிரச்சினை. திரும்பத் திரும்பச் செய் தல் என்பது சோர்வைத் தரும். ஆனல் வியப்புக்குரிய முறையில் இசை யில் நிலை அப்படி இல்லை. எல்லாவற்றையும் இசைபோல ஆக்க மு4 யுமா? புறத்திலிருந்து பார்ப்பதற்கு துன்பமும் வேதனையும் ழிக்கதாகத்
O குமரன்

தோன்றும் ஒரு புரட்சியாளனது வாழ்க்கை, அவனைப் பொறுத்தவர்ை பேரின்பமயமானது சீன இளைஞர்களும் உழவர்களும் இத்தகைய பேரி ன்ப2உணர்வில்லாமல் 6,000 மைல் நீண்ட பயணத்தைச் செய்திருக்க முடியாது. கலாசாரப் புரட்சியின்போதும் சீன மக்கள் இத்தகைய உணர்வைச் சற்றுக் குறைந்த அளவிலேனும் கொண்டிருந்திருப்பார்கள். புரட்சிகரமான வாழ்க்கை என்பது பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கை யையும் ஆழ்ந்த அமைதியையும் கொண்டது, ஒரு புரட்சியாளனின் இறுதிப் புகலிடம் மனித சமுதாயம். அவன் அற்புதமான முறையில் தன்னை அதில் கரைத்துக் கொள்கிருன். இதன் மூலம் ஒரு புதிய தனி மனிதப்பண்பையும் பெறுகிறன். அவனே அனைத்து மக்களின் சிந்தனை களிலும் செயல்களிலும் உள்ளான். அவன்தான் அவர்களுக்குத் தலே வன். அவன் ஒரே சமயத்தில் பல இடங்களிலும் தோன்றுகிருன். அவ னது ஆன்மா எங்கும் எப்பொழுதும் நிறைந்திருக்கிறது. இத்தகைய மனிதர்களைத்தான், காலத்தையும் இடத்தையும் கடந்த கடவுளர் களெனக் காவியங்களும் புராணங்களும் பேசுகின்றன. மக்கள் மறக்க விரும்பாத பெருமக்கள் எவராயினும் அவர்களுக்கும் இந்த உண்மை பொருந்தும்." w
சொற்களின் அர்த்தங்கள்
ஆங்கில மொழியில் கறுப்பு, வெள்ளை ஆகிய இரண்டு வார்த்தைக் கும் இடையில் துருவ வேறுபாடு உண்டு.
வெள்ளை நல்லது; கறுப்பு தீயது. வெள்ளே தூயது; கறுப்பு தூய் மையற்றது. வெள்ளை உயர்ந்தது; கறுப்பு குறைந்தது. வெள்ளை அழ கானது; கறுப்பு அவலட்சணமானது. வெள்ளை துப்பரவானது; கறு ப்பு அழுக்கானது. தேவதைகளின் நிறம் வெள்ளை; பிசாசுகளின் நிறம் கறுப்பு. இவை இயல்பாக சொல் உணர்த்தும் கருத்துகளல்ல; குறிப் பிட்ட சமூக உறவுகளினல் ஏற்பட்ட அர்த்தங்களாகும். வரலாற்று அடிப்படையாக எழுந்த கருத்துருவ நடைமுறைகளிலிருந்து தோன்றி யவை, மொழியியல் கோட்பாட்டின்படி சொற்களின் அர்த்தங்கள் தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கும். கருத்துருவம் பற்றிய மார்க் சிய கோட்பாடும் இதுவே. ஒரு நடைமுறை ஆக்கியதை புதிய சமூக நடைமுறை மாற்றிவிடலாம். உதாரணமாக நீகிரோ அமெரிக்க விடு தலை இயக்கத்தைச் சார்ந்தவர், கறுப்பு நிறத்துக்குப் புதிய அர்த்தம் கூறி நிலைநாட்டுகின்றனர். ஒடுக்குவோர் கூறும் அர்த்தத்திற்கு எதி
ராக 'கருமை அழகானது" என்று சுலோகமாகக் கூறிவருகின்றனர்.
- றெஜி சிறிவர்த்தன, லங்கா கார்டியன்,
குமரன் 11

Page 7
குட்டிக் கதை:
அடிவருடி யோ. பெ.
தெரு நாய்கள் நான்கு அந்தக் கரிநாயின் வரவை எதிர்பார்த்துத் தெருச் சந்தியில் காத்துக் கிடந்தன. -
ஆட்டிறைச்சி வியாபாரியின் கடை எல்லைக்குள் அந்தத்தெரு நாய் களை எட்டிப் பார்க்கவும் அந்தக் கரிநாய் விடுவதில்லை. சிறு எலும்புத் துண்டைத்தானும் தூக்கிவிடலாமென்று அவை பெருமுயற்சி செய்தும் முடியவில்லை. கரிநாய் அவற்றின் தலைக் கறுப்பைக் கண்டாலும் குரைத்துத் துரத்திவிடும்.
அந்தக் கரிநாயை எதிர்பார்த்துத்தான் அவைதூங்காமல் இருந்தன. y, வியாபாரம் முடிந்து இறைச்சி வியாபாரி வீடு நோக்கி வந்து கொண் டிருந்தான். அவன் பின்னல் கரிநாய் வாலை ஆட்டிக் கொண்டு நடந்து வருவதை அத்தெரு நாய்கள் கண்டு கொண்டதும், எழுந்து குந்தி இருந் தன. ܫ
இறைச்சி வியாபாரி முன்னே போனதும் அவை கரிநாயை வழி மறித்தன. “உன்னுடன் நாங்கள் பேசவேணும்' 'என்னுடன் உங் களுக்கென்ன பேச்சு' கரிநாய் செருக்குடன் கூறியது.
"நீயும் ஒரு நாய்; நாங்களும் உன் வர்க்கந்தான். எங்களை ஏன் ஒரு எலும்புத்துண்டைத்தானும் எடுக்க விடுவதில்லை?" என்று அவை சாதுவாகக் கேட்டன.
*அவர் என் எசமான். அவர் எனக்கு தீன் போட்டுத் தன் வீட்டி லேயே வளர்க்கிருர். அவருக்கு நான் துரோகம் செய்யமாட்டேன்!"
“எங்களுக்குத் துரோகம் செய்யலாமா? தெருநாய்கள் தாழ்மை யுடன் கேட்டன. -
'நீங்கள் யார்? நான் யார்? என் பெயர் என்ன தெரியுமா ‘வீமன்" என் எசமான் வைத்த் மனிதப் பெயர், நீங்கள் ஊர் பேர் தெரியாத தெரு நாய்கள். உங்களுடன் எனக்கென்ன பேச்சு?’ என்று செருக்காக, கூறிய கரிநாய் வாலைக் கிளப்பிக் கொண்டு எசமான நோக்கி ஒடத் தொடங்கியது, மனப் பயத்துடன்,
'உந்த நாய் நாளேக்கு இந்தச் சந்தியைக் கடந்துதானே போக வேண்டும்!" என்று கூறிய தெருநாய்கள் அதிலேயே காத்துக்கிடந்தன
2 குமரன்

மொழிபெயர்ப்பும் பண்பாடும்
கைலாசபதி நி%னவுச் சொற்பொழிவை சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஏ. கே. ராமானுஜம் அவர்கள் 2-6-83 அன்று மாலை இலங்கை மன்றக்கல்லூரியில் நிகழ்த்தினர். “மொழிபெயர்ப்பும் பண் பாடும்" என்ற தலைப்பில் பேசும்வேளை குறுந்தொகையிலிருந்து பின் வரும் பாடலை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டார்.
நிலத்தினும் பெரிதே வானிலும் உயர்ந்தன்று நீரினும் ஆர் அளவின்றே-சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனுேடு நட்பே.
இப்பாடலை அப்படியே சொல்லுக்குச் சொல்லாகவும், கருத்தைமட் டும் தெரிவிக்கும் வசன முறையாகவும், ஆங்கில கவிதையின் ஒசை ஒட் டியமரபாகவும் மொழிபெயர்த்துக் காட்டினர். எவ்வாறு தெளிவாக மொழிபெயர்த்தபோதும் தமிழ் கவிதையில் மறைந்திருக்கும் பண் பாட்டை வெளிப்படுத்த முடியாது. உதாரணமாக குறிஞ்சி மலரை எடுத்துக் கொண்டால் அதனுள் தமிழர் பண்பாட்டை ஒட்டிய ஆ மான பல கருத்துக்கள் உள்ளன.
குறிஞ்சி மலர் மலைநாட்டுக்குரியது. செடியை நாட்டி, அங்கு வாழும் பெண்கள்போல 12 வருடங்களின் பின் மலர்வது. காதற் சின் னம். குளிர்காலத்தில் இரவில் மலர்வது. குறிஞ்சிப் பறவைகள் மயில், கிளி. மிருகங்கள். குரங்கு. குதிரை, மாடு. மரங்கள்: பலா, மூங்கில், வேங்கை, நீர் நீர் வீழ்ச்சி. தொழில்: தினை பயிரிடுதல், தினைப்புனக் காவல், தேனெடுத்தல்.
இத்தனை அடிப்படையான சூழற் பண்பாட்டையும் சிறுகவிதையில் கொண்டுவர முடியாது. தொடர்ச்சியாகப் பல கவிதைகள் மொழி பெயர்க்கப்படும்போதே பண்பாட்டைப் பற்றியும் ஒரளவு தெளிவாக்க முடியும்.
இவ்வாருக மொழிபெயர்ப்பிலுள்ள மிகச் சிக்கலான பிரச்சனையை மிகவும் தெளிவாக விளக்கினர்.
*கலை கலைக்காகவே” என்று சொல்லும் கற்பனைச் சித்தாந்தத்தை அல்ல, சிறு பிள்ளைகளிடம் பலூன்களை ஊதிவிட்டு வேடிக்கை காட்டு வதுபோல வெறும் உவமைப் பிதற்றலும் கனவுலக மாயாவாதக் கதை களும் இன்றைய தமிழ்நாட்டைச் சாவுப்படுக்கையில் வீழ்த்தும் கொ டிய தொற்று நோய்களைப் போன்றவை," -தமிழ் ஒளி
குமரன் 13,

Page 8
சொற்பாதம்
அழவே தெரிந்த குழந்தைகள்
யோ. பெனடிக்ற் பாலன்
நாங்கள் அழவே தெரிந்த குழந்தைகள். அழுதால்த்தான் பால் கிடைக்குமாம்.
நாங்கள் அழுது கொண்டேயிருக்கிருேம். பால்தான்
இன்னும் கிடைக்கவில்லை. நாங்கள் பாலை நினைந்தழுவோம் பால் கேட்டு அழமாட்டோம். பால் கேட்டு அழாதவரை
நாம் அழுதுகொண்டே
தேடினுல் எங்கள் பாலிருக்கும் இடம் காணலாம்
ஆளுல் நாம் தேடமாட்டோம். ஏனெனில் எங்கள் கால்களில் ஏதோ வளையம் தொங்கிறது பாலிருக்கும் இடம் கண்டாலும்
இருக்கலாம்.
பலவந்தமாய்க் G5! q_j 35LDfTL "Gunrub பார்த்துப் பார்த்து , அழுது கொண்டே இருப்போம் ஏனெனில் - எங்கள் கைகளில் ஏதோ வளையம் தொங்கிறது. அந்த வளையங்கள்
எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை ஏனெனில் எங்கள் வெளிச்சம் அணைக்கப்பட்டுள்ளது. ஏனென்று கேட்கமாட்டோம் நாங்கள் அழவே தெரிந்த குழந்தைகள் அதனல் எல்லாம் தலைவிதியென்று அழுது கொண்டே இருக்கிருேம். எனவேதான் பால் கறப்பு
அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது
மனிதன் விழித்திருக்கும் நேரத்தில்தான் படைக்கும் தொழிலில் ஈடுபட முடியும்; ஈடுபடுகி 1 ன். அப்படியாயின் அவன் விழித்திருக்கும் நேரத்தில்தான் மனிதனைப்போல வாழ முடியும். மாருகத் தூங்கும் நேரத்திலோவெனில் அவனுக்கும் ஏனைய விலங்கினத்திற்கும் இருக்கும் வேறுபாடு மறைந்து விடுகிறது. முதலாளிய அமைப்பிலோ வெனில் விழித்திருக்கும் நேரத்திலும் அவன் விலங்கினும் கேடான நிலைக்கு உந் தப்படுகிருன். தூங்குவதே அவனுக்கு நிம்மதியான மானிடச் செயலா கக் காட்சியளிக்கும் நிலை உருவாகி வருகிறது. இதுதான் முதலாளியத் தில் படைக்கும் செயலும் படைப்புகளும் தொழிலாளிக்குக் கொடுக்கும் பரிசுகள். -எஸ். என். நாகராசன்.
14 குமரன்

சிறுகதை
அடைபட்ட கதவுகள்
செ. யோகநாதன்
காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, ஆசைகளும், கனவு களும் நிறைந்திருந்த அவனது மனதிலே துக்கத்தினைத் தவிர இப் போது வேறெந்த உணர்ச்சியுமே இல்லை. மருந்து நெடி வீசுகிற அர சினர் ஆஸ்பத்திரியின் நீண்ட வாங்கிலே, உடலெல்லாம் வலியாக, இரத்தம் வழிகிற இடது கையை வலது கையினல் பிடித்துப் பொருத் தியபடியே உட்கார்ந்திருந்த சங்கரனுக்கு அழுகை பொங்கிப் பொரு மிக் கொண்டு நெஞ்சினுள் முட்டுகின்றது. தன்னை மீறிய மனத்துணி வினேடு, சதை ஆழக்கிழிந்து, குழம்பிய இரத்தத் சேருய் மணிக்கட்டி லிருந்து கீழே தொங்குகிற ஐந்து விரல்களும் சேர்ந்த தொகுதியை அப் படியே மணிக்கட்டுப் பொருத்தோடு சேரவைத்துப் பிடித்தபடியே டொக்டரின் வருகைக்காய் காத்திருக்கின்றன்.
இரண்டுமுறை அவனைத் தாண்டிக் கொண்டுபோன, கால்களினை அகட்டி வைத்து நடக்கின்ற, பற்கள் மிதந்த நர்ஸ் இப்போதும் அவ னைத் தாண்டிப் போகிருள். அவளை நிமிர்ந்து பார்க்கவே சங்கரனுக் குப் பயம். ‘அம்மா, டொக்டர் எப்போது வருவார்? கை வலிதாங்க முடியவே இல்லை." என்று ஈனஸ்வரமாக அவளைப் பார்த்து அவன் முதற்தரம் கண்டபோது கேட்டான். “எனக்குத் தெரியாது, அவர் வாறபோது கண்டு கொள்ளும்.’’ என்று சள்ளென விழுந்தாள், அவ னறிந்த நல்லம்மா என்ற நர்ஸ் எவ்வளவு அன்பான பொறுமைசாலி! வார்த்தைகளிலேயே நோய் மாறிவிடும். அவளை விசாரித்துப் பிடித் தால் உதவியாக இருக்கும் என்ற நினைப்பினேடு மற்றத்தரம் அந்தப் பற்கள் மிதந்த நர்ஸ் அவனைத் தாண்டிப் போனபோது, நல்லம்மா அக் காவைப் பற்றி விசாரித்தான், அவ்வளவு தான்,
“அங்கை இங்கை திரிஞ்சு கை காலை முறிக்கிறது. பிறகு இங்கை வந்து உபத்திரவம். வாயை மூடிக்கொண்டு இரும்." ஒரு பரம வைரி யாகத் தன்னை மதித்து அவள் நடந்து கொள்வதற்கான காரணத்தினை சங்கரனல் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இரத்தப் பெருக்கம் விளே ந்த மனத்திகிலால், அவளோடு தொடர்ந்து பேசி வாக்குவாதமெர்ன் றினை உருவாக்கினல் ஏதாவது பயங்கர விளைவு தனக்கு ஏற்பட்டுவிடலா மென எண்ணிய சங்கரன் மெளனமாக, மீண்டும் வலிபொறிக்காது
முனக ஆரம்பித்தான்.
குமரன் sy 5

Page 9
சாவகச்சேரிச் சந்தையிலே வாங்கிய காய்கறிகளை மூட்டை கட்டிக் கொண்டு, சைக்கிளில் எதிர்காற்றை முட்டியவாறு வந்த அவனை, கை தடி வளைவிலே அந்த லொறி மிகப் பயங்கரமாகப் பந்தாடி எற்றி, அவன் வீதியோரத்துக்குத் தூக்கி எறியப்பட்ட சம்பவம், சில நிமிஷப் பொழு திலே நடந்து முடிந்துவிட்டது. சைக்கிள் அவனது பயங்கரமான மோது தலுக்குச் சாட்சி சொல்லி துண்டு துண்டாகி சப்பளிந்து கிடந்தது. அதிர்ச்சியிலிருந்து சுதாரித்துக் கொண்டு எழ முயன்றவனல் முடிய வில்லை. இடது கையை அசைக்கவே இயலாமற்போக, பார்த்தான் மணிக்கட்டுப் பொருத்தடியில், என்ன வெட்டியதோ விரல்களடங்கிய கைப்பகுதி அப்படியே தனியாக ஆவென்று தொங்கிச் சரிந்திருந்தது. மெல்லிய சிவப்பு நிறத்தில் சதைகள் இழுவுண்டு, இரத்தம் சேருகி வழிந்தது. சங்கரன் பதைத்துப் போய்விட்டான்; இனி அவனது கை நிரந்தரமாக இப்படித்தான் ஆகி விடுமா? மணிக்கட்டிற்கு மேலே அப் படியே வெட்டி எடுத்து விடுவார்களா? அவனுக்கு எல்லாமே இந்தக் கைதான். சைக்கிள் ஓட, சந்தையில் பொருட்கள் வாங்க, தனது சிறிய கடையிலே அவற்றை தராசில் நிறுத்து விற்க, சாப்பிட, அன்ருடவேலை களுக்கு, இந்தக் கையைக் கழற்றினல்?
மிகவும் பத்திரமாக சதையோடு சதையாக வைத்துப் பொருத்திய வாறு, இரத்தம் தோய எழுந்த அவனைப் பார்த்துக் கொண்டு நின்ற திருநாவு தஃ) சுற்ற மயக்கமாகி வீழ்ந்தான். சுற்றி நின்றவர்கள் சங்கர னின் தைரியத்தை வெளிப்படையாகவே வியந்து பாராட்டினர். 'இப் படியே பொருத்திப் பிடித்தால் இரத்தம் ஒடுவதும் நின்றுவிடும். கை யைப் பொருத்தித் தைக்கிறதும் சுகமாகப் போகும்.கடவுளே, இந்தக் கை பொருந்திவிட வேண்டும். நாளிலும் பொழுதிலும் உன்னைக் கும் பிடுகிற ஆச்சிக்கு என்னைவிட்டால் வேறை ஆர் துணை?. மனதுக்குள் பிரார்த்தனையும், கண்களில் துளிர்க்கிற கண்ணிருமாயும் நின்றவனை, அவ்வழியே வந்த கார் ஒன்றில் ஏற்றில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆஸ்பத்திரிக்கு அவன் வந்து ஒரு மணித்தியாலம்வரை ஆகிவிட்டது. ஒப் பரேஷன் தியேட்டருக்குப் போகும்படி ஒ. பி. டி. டொக்டர் சொன்ன போது சங்கரனின் மனதிலே துளிர்த்த நம்பிக்கை, நேரக் கரைவினிலே மங்கிக் கொண்டு போயிற்று.
2
கண்களிலிருந்து தாரை தாரையாக வடிந்த கண்ணிரைத் துடைத் துக் கொண்டிருந்த தாயை மிகவும் பரிதாபமாகப் பார்த்தான் சங்கரன். இரண்டு தினங்களாக அவள்தான் ஆஸ்பத்திரிக்கு சாப்பாடு கொண்டு வருவதும், மகனுக்குப் பக்கத்திலேயிருந்து ‘பன்டேஜ்" போட்ட அவ னது கையைப் பார்த்து கடவுளை மன்ருடுவதுமாயிருக்கிருள்.
ش
6 குமரன்

ஒப்பறேசன் தியேட்டருக்கு சங்கரன் கொண்டு செல்லப்பட்டு இர ண்டு மணித்தியாலமாக அவனுக்கு அறுவ்ைக் சிகிச்சை செய்யப்பட்டது. நிறைய இரத்தம் வெளியேறிவிட்டதென்று இளைஞனன டொக்டர் தன் னுள்ளேயே கடிந்து கொண்டார். மீண்டும் அவன் காயவார்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டான். நரம்புகள் சில சிதைந்து போய்விட்டன. எல்லா நரம்புகளையும் பொருத்தி, கிழிந்த தசையினை தைத்து மூடி "பன்டேஜ்" போட்ட பிறகு இன்னமும் தாளாதவலி. கட்டிலில் கிடந் தவன் தன்னை மறந்து தீனமாக அலறினன். நர்ஸ் ஓடிவந்தாள். தனது வலியின் கொடுமையினை அழுதழுது சொன்னன். தூக்கமாத்திரை கொடுத்தாள். ஒன்றும் பேசாமல் உறங்கிப் போனன்.
விடிந்தபோது இன்னெரு நர்ஸ், அந்தப் பற்கள் மிதந்தவள் வந் தாள். வார்ட்டிலிருந்த எல்லோரையும் சின்னச் சின்னக் காரணங் களுக்காகத் திட்டினள். இவனது கட்டிலுக்கு அருகேவந்து நின்று தன் பாட்டிலே முணுமுணுத்தாள்.
~ *சும்மா கண்டபடி திரிகிறிது. கை கால் வெட்டப்பட்டு இங்கை வாறது. மனிஷருக்கு ஒரே கரைச்சல்." Y
சங்கரனுக்கு நாக்கு நுனியில் பதில் வந்தது. அடக்கிக் கொண் டான். பின்னர் டொக்டர் வந்தார். சில நிமிஷங்களே அவனுக்குப் பக்கத்திலே நின்றர். இவனுடைய மனதிலே நிறையக் கவலைகள். அவ ரிடம் ஆறுதல் பெறவென நிறைந்திருந்தன. அவருடைய முகத்தைப் பார்த்தான். இறுகிப்போய் வெடுவெடுப்பாயிருந்தது. வாயைத் திற க்கு முன் போய்விட்டார்.
அவனது கட்டிலிற்கு அருகாக நேற்றுப் பின்னேரம்வரை கால் முறி
ந்து கிடந்த, அவனது வயதொத்த இளைஞன் ஒருவன் இன்று அங்கிருந்து துண்டு வெட்டிக் கொண்டு போய் விட்டான். அவனது தமையனுக்குத் தம்பியாரின் சிகிச்சையையிட்டு மிகவும் ஆத்திரம். போகும்பே சொன்னுன்
"இங்கை உன்னை வைத்திருந்தால் நிச்சயமாக உனக்கு கால் கழட்ட வேண்டித்தான் வரும். இந்த டொக்டர்தான் இத்தகைய நோய்களெல் லாத்துக்கும் திறமான ஆள். ஆனல் இங்கை அவர் நோயாளியை நல் லாகப் பார்க்க மாட்டார். எங்கையாவது 'பிறைவேற் நேர்ஸிங் ஹோ மிலை காசு கட்டி இவரைக் கூப்பிட்டால் வடிவாகப் பார்ப்பார்.ஆப் பிடித் தேவை என்ருல் பிறகு இவரையே பெரியாஸ்பத்திரியிலே போய்ச் சந்தித்து எக்ஸ்ரேயும் எடுக்கலாம். வசதியானகட்டிலிலை நல்ல கவனிப் போடேயும் இருக்கலாம்.”*
குமரன் 17

Page 10
சங்கரனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை, அரசாங்கத்திலை சம் பளம் எடுத்து வருகிற ஒரு டொக்டர் எப்படி பிறைவேற் ஆஸ்பத்திரி யிலே போய் நோயாளியைப் பார்க்க முடியும்? ஆஸ்பத்திரியிலை நோயா ளிகளை ஒழுங்காகப் பார்க்க நேரமில்லாமல் கடுகடுத்த முகத்தோடு பாய்ந்து பாய்ந்து நோயாளிகளைப் பார்க்கிற டொக்டருக்கு, பிறைவேற் ஆஸ்பத்திரியிலை ஆறுதலாக நோயாளிகளைப் பார்வையிட எப்படி நேரம் கிடைக்கிறது.? அவனுக்கு பதிலே தோன்றவில்லை.
அடுத்தநாள் - விலா எலும்பு முறிந்து மூன்றுமாத 'நோயாளி யாய்க் கிடந்த ஒருவன் இதே கதையினை அவனிடம் கூறிவிட்டு சிங் கிருந்து புறப்பட்டபோதுதான் சங்கரனுக்கு அச்சம் தோன்றிற்று. விலா எலும்பு முறிந்தவன் பரிதாபகரமாகக் கூறினன்;
*தம்பி, நீயொரு இளந்தாரி. இங்கை வந்து ஒரு கிழமை, ஆனல் வலி மாறவேயில்லை என்கிருய். கை சில வேளை கழட்ட வேண்டிவரும். தருமாஸ்பத்திரியிலை இருந்து நோயை மாத்தலாம் என்றுதான் நானும் நினைச்சிருந்தன். புத்தியைப் பாவித்து நடந்து கொள். கடனைத் தண் ணியைப் பட்டென்ருலும் இந்த டொக்டரை பிறைவேற்ருய் கூப்பிட்டுக் காட்டு. இந்த டொக்டர் ஆருேழு இடத்திலை பிறைவேற்முய் நோயா ளியைப் பார்க்கிறவர். சரி தம்பி நான் வரவோ..?"
3
சங்கரன் மிகவும் மனநிம்மதியோடு கட்டிலிற் படுத்திருந்தான். இரண்டு நாட்களாய் “நல்லதம்பி பிறைவேற் நேர் ஸிங்ஹோமில் அவன் சிகிச்சை பெற்று வருகிருன். தாயின் ஒரே சொத்தான சங்கிலியை அவள் விற்றுப் பணமாக்கி டொக்டருக்கும், வார்ட்டுக்கும் கட்டியிருந் தாள.
. “நீர் நோயைப் பற்றிப் பயப்படத் தேவையில்லை. ஆறு கிழமை யிலை கை நல்லாகப் பொருந்திவிடும். ஒன்றுக்கும் யோசிக்கத் தேவை யில்லை, என்ன சங்கடம் மனதிலை இருந்தாலும் எனக்குச் சொல்லிப் போட வேணும் . டொக்ட்ர் என்று பயப்படாமல் கதைச்சால்தான் நா. களும் நல்ல வைத்தியம் செய்ய முடியும் . உமக்கு இன்னும் கலி யாணம் ஆகஇல்லையோ ?"டொக்டர் தமாஷாகக் கதைத்தார். ‘பான் டேஜ்" கட்டுக்கு வெளியே தெரிந்த விரல்களை வருடிவிட்டார். ஒவ் வொரு நாளும் அரைமணி நேரம்வரை அவனைப் பார்வையிட்டார். பிரிய மனமின்றிப் பிரியும் நண்பனுய் அவனைப் பார்த்தவாறு அங்கிருந்து சென்றர்.
மூன்ரும் நாள் கட்டிலில் படுத்திருந்தவனை, கதவைத் திறந்து உள் ளே வந்த பெண்ணின் உருவம் வியப்பிலாழ்த்திற்று. மறுபுறம் அருவருப்
18 குமரன்

பும் சிலிர்த்தது. வந்தவள் அந்தப் பற்கள் மிதந்த நர்ஸ். நீலசாரியும் புன்னகையுமாய் வந்தவள் அவனேடு சரளமாகக் கதைத்தாள்;
'தம்பிக்கு இப்பதான் நல்ல புத்தி வந்ததாக்கும். சின்னப் பிள்ளே கள் மாதிரித் திரிந்து இப்பிடியா கையைக் காயப்படுத்துகிறது? எனக் கும் உம்மடை வயதிலை ஒரு தம்பியிருக்கிறன். அவனும் இப்பிடித் தான். நல்ல காலம். நீர் இங்கை வந்தது. மிஸ்டர் நல்லதம்பி என் னுடைய அவர்தான். அவருடைய இந்த நேர்ஸிங் ஹோமிற்கு நானும் ஒய்வு நேரத்திலை வந்து கிளார்க் வேலை பார்க்கிறன். உமக்கு என்ன கஷ்டமென்றலும் எனக்குச் சொல்லலாம்.'
அன்றிரவு சிங்கரனுக்ரு நீண்ட நேரமாக உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். சில தினங்களின் முன்னர் ஆஸ்பத்திரிக் கட்டிலிலே அவனது மனதிலே தொற்றிக் கொண்ட கேள்விகள் அவனுக்கு மேலே சுழல்கிற மின் விசிறியாய் மனதினுள்ளே சுழன்று கொண்டிருந்தன.
கூலி, உழைப்பு, மூலதனம்
-தியாகு ஜெர்மன் தொழிலாளர்கள் சங்கத்தில் மாக்ஸ் 1847 இல் தொடர்ச் சியாகச் சில சொற்பொழிவுகள் ஆற்றினர். அரசியல் பொருளாதாரம் பற்றிய முக்கிய கோட்பாடுகளைத் தொழிலாளர்கட்கு விளக்குவதே அவர் நோக்கமாகும். இச்சொற் பொழிவுகள் 1869 இல் சிறுநூல்ாக வெளியிடப்பட்டது.
முதலாளித்துவ சமுதாயத்தில் தொழிலாளர் தம் பொருளாதார நிலையைப் புரிந்து கொள்வதற்கு உதவுவதே இந்நூலின் நோக்கமாகும்.
தொழிலாளர் தம் உழைப்புச் சக்தியை முதலாளிக்கு விற்பதன் மூலம் இழந்த உழைப்புச் சக்தியின் விலையையே பெறுகின்றனர் என் பதை மார்க்ஸ் விளக்கினர். விலை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என் பதையும் கூலி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பதையும் விவரித்தார். தொழிலாளர்க்கும் முதலாளிக்குமிடையில் ஒரே சமூக நலன் இல்லை என் பதையும் இவ்விரு வர்க்கத்தவர் நலனும் எதிரிடையானது என்பதையும் நிரூபித்தார்.
உண்மையான கூலியையும் பணமாக வழங்கப்படும் கூலியையும் விளக்கி உண்மைக் கூலிக்கும் லாபத்திற்குமிடையில் தலைகீழ் பங்கு விகி தம் உள்ளது என்பதையும் விளக்கினர். முதலாளிகள் தொடர்ந்து உற் பத்தியை நியாயப்படுத்தி, போட்டியை வளர்த்து, பண்ட விலையைக் குறைத்து தொழிலாளரின் கூலியைக் குறைக்க முயன்று கொண்டே யிருப்பர்.
குமரன் 19

Page 11
உபரி மதிப்புக் கோட்பாடுகள்
மார்க்ஸ் எழுத்துப் பிரதியாக இந்நூலே விட்டுச் சென்ருர், அவர் மூலதனத்தின் IV வது பாகமாக வெளியிட இருந்தார். ஏங்கெல்ஸ் சரி பார்த்துப் பதிப்பிக்க இருந்தார். இவ்வேலையை முடிக்காமலே ஏங் கெல்ஸ் மறைந்தார். கார்ஸ் கவுட்கி இவ் எழுத்துப் பிரதியை உபரி மதிப்புக் கோட்பாடுகள் என்ற தலைப்பில் வெளியிட்டார். கவுட்சியின் முன்னுரை பல கண்டனங்களுக்கு உள்ளானது. W
மார்க்சிற்கு முன்பிருந்த பொருளாதார நிபுணர்கள் பற்றி மார்க்ஸ் எழுதிய குறிப்புக்களை இந்நூல் கொண்டது. ' .
(2) உபரி மதிப்புப் பற்றி அடிம் ஸ்மித்வரை இருந்த கருத்துக்கள்.
(2) டேவிட் ரிக்கார்டோ.
(2) ரிக்கார்டோ தொடக்கம் கீழ்த்தரப் பொருளாதார நிபுணர்
வரை, s
மார்க்ஸ் தனக்கு முன் வாழ்ந்த ஆங்கில அரசியல் பொருளாதார நிபுணர்கள் பற்றி உயர்ந்த கருத்துக் கொண்டிருந்தார்,
பூர்ஷ்வா பொருளாதாரக் கோட்பாடுகள் பற்றிய மதிப்பீட்டிற் கும் அவற்றை விளங்கிக் கொள்வதற்கும் மார்க்சின் இந்நூல் மிக முக் கியம் வாய்ந்தது. முதலாளித்துவி லாபம் பற்றி இன்று கூறப்படும் கருத்துகள் பற்றியே மார்க்ஸ் அன்றே பதில் கூறியுள்ளார்.
இந்நூலின் முக்கிய பகுதிகள் வருமாறு:
(1) நிலப்பிரபுத்துவம் அழிந்து முதலாளித்துவம் தோன்றும்வரை
அரசியல் பொருளாதாரம் பற்றி ஆராயப்பட்டுள்ளது.
(2) லாபம் என்பது கூலி கொடுக்கப்படா உழைப்பு எனக் கூறி உழைப்பின் பெறுமதி பற்றி விடைகூற முடியாத அடம் ஸ்மிதின் குழப்பத்திற்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது.
(3) உற்பத்திப் பண்டத்தின் விலை, லாபத்தின் பங்கு விகிதம், மூலத னக் குவிப்பின் வழிமுறை ஆகிய வினக்களுக்கு மார்க்ஸ் விளக் கம் கூறியுள்ளார். உபரி மதிப்பிற்கும் லாபத்துக்குமிடையில் உள்ள வேறுபாட்டையும் உற்பத்தியின் விலக்கும் மதிப்புக்கு மிடையில் உள்ள வேற்றுமையையும் பிரித்துக் காணத் தவறிய ரிக்காடோவிற்கு தக்க பதில் கூறியுள்ளார். (4) மூலதனத்தின் ஏற்ற இறக்கப் பிரச்சனைக்குரிய காரணங்களை யும் ஆராய்ந்துள்ளார். -தியாகு 20 குமரன்

உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது? (ரொபேர்ட் ரெஸ்ஸல் 1906 இல் எழுதிய ஆங்கில் நாவலில் ஒரு பகுதி)
“ஏன் அப்பா வேலைக்குப் போக வேண்டும்? அதஞல்தான் நாங்கள் ஏழையாயிருக்கிருேம் என்று நான் நினைக்கிறேன்."
மகன் புன்னகையுடனே சொன்னன். ܫܚܝ “வேலைக்குப் போகும் எல்லோருமே ஏழையாகவே உள்ளனர். ച് அப்பா வேலைக்குப் போகாவிட்டால் மேலும் ஏழையாகிவிடுவோம். சாப் பாட்டிற்கு எதுவுமில்லாமல் போய்விடும்.' ・ 。
தாயார் பதில் கூறினள். “வேலை செய்யாமல் இருப்பவர்களிடமே எல்லாப் பொருட்களும் அதிகமாக இருக்கிறது என்று அப்பா சொன்னர்.
“அது உண்மையே. ஒருவேலையும் செய்யாதவர்களிடம் எல்லாம் இருக்கிறது. எங்கிருந்து அவர்கள் பெறுகிமுர்கள்? எப்படிப் பெறுகி ருர்கள்?"
"எனக்குத் தெரியாது’?-மகன் தலையாட்டினுன். "அப்பா வேலைக்குப் போகாவிட்டால் அல்லது ஒரு வேலையும் இல் லாவிட்டால், நோய் வந்து வேலை செய்யாவிட்டாலும் எதுவும் வாங்க முடியாது. நாங்கள் எப்படி வாழ முடியும்?'
“எங்கள் நாற்காலிகள் கட்டில்கள் கூட விற்கக் கூடியதாக இல்லை என் வெல்வெட் சட்டையைமட்டும் அடைவு வைக்கலாம்.'
"எல்லாவற்றையும் விற்ருலும் சில நாட்களுக்கே வாழ முடியும். பின் என்ன செய்வது?" . . . . . .
“அப்பா லண்டனில் இருந்தபோது நடந்ததுபோலகஷ்டப்பட வேண் டியதே." V
"அப்போது வேலை செய்யாதவர்களிடம் எப்படி எல்லாம் இருக் கிறது?
மகன் கேட்டான். "பல வழிகள் உள்ளன. அப்பா லண்டனில் இருந்தபோது சாப் பாட்டிற்குப் பணமில்லாது என் சோபா நாற்காலியை விற்றது நினை விருக்கா."
“நினைவிருக்கிறது." "கடைக்காரனுக்கு என்ன விலைக்கு விற்ருேம் தெரியுமா?"
འ།
குமான் --- - -

Page 12
‘ஐந்து சிலிங்கிற்கு." “கடையன்னலால் மறுநாள் பார்த்தபோது அதில் என்ன விலை போட்ப்பட்டிருந்தது தெரியுமா?"
*பதினைந்து சிலிங்." “வேலை செய்யாமல் பணம் பெறும் முறையில் இது ஒன்று? *மற்ற வழிகள் என்ன?” “பணம் இல்லாதவர்களை வேலைக்கு வா என அழைத்து பணம் உள்ள வர் வேலை செய்விக்கின்றனர். அன்றுமட்டும் வாழத்தக்க அளவாகவே கூலி தருகின்றனர். இதனல் மறு நாளும் வேலை வாங்க முடிகிறது பின் வேலை முடிந்ததும் அவர்களைப் பட்டினி கிடக்க அனு, பிவிட்டு அவர்கள் செய்த பொருளை அதிக பணத்திற்கு விற்றுவிடுகின்றனர். இது வேலை செய்யாது அதிக பணம் சேர்ப்பதற்கு மற்ருெரு வழியாகும்."
‘ஆனல் இப்படியில்லாது பணக்காரராக வேறு வழியில்லையர்? *மற்றவர்களை ஏமாற்ருமல் பணக்காரராக எவரும் வர முடியாது." "எங்கள் பள்ளிக்கூட வாத்தியார் பற்றி என்ன கூறுவாய்? அவர் எந்த வேலையும் செய்வதில்லையே."
"அவர் பயனுன, தேவையான வேலை செய்யவில்லையா? ஒவ்வொரு நாளும் அத்தனை பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லித் தருவது எத்தனை கஷ்டமானது."
அது ப்யனுடையதே. கஷ்டமானதும் தான். சில வேளை கவலைப் படுபவராகவும் காணப்படுகிறார். எங்க தேவாலய சுவாமியார் பற்றி என்ன கூறுவாய்?"
“பயனுள்ள வேலை செய்யாது வாழ்பவரில் அவர் ஒருவர். அப்படிப் பட்டவர்களில் இவர் மிக மோசமானவர்."
மகன் வியப்போடு தாயைப் பார்த்தான். அவனுக்குப் பெற்ருர் சுவாமியோடு நெருக்கமாகப் பேசுவதும் பாடசாலையில் மதிப்பளிப்பதாக ஆசிரியர் கற்பிப்பதும் நினைவில் வந்தன.
*ஏன் அம்மா?* வேலை செய்யாதவர் வைத்திருக்கும் அழகான பொருட்களையெல் லாம் உழைப்பவர்களே செய்தார்கள் என்பதை நீ அறிவாய்தானே"
"ஆமாம்" N "அப்படி உழைத்தவருக்கு நல்ல உணவில்லை. அழு க் கடைந்த உடையே உடுக்கின்றனர், குடிசைகளிலேயே வசிக்கின்றனர்."
"ஆமாம்” 22 குமரன்

*சில வேளைகளில் அவர்சளுக்கு உண்ணவே உணவு கிடைப்பதில்லை கந்தையைக் கட்டிக் கொண்டு வீடில்லாது அலைகின்றனர்."
'g, Drth "பணக்காரர் வாழ்வதற்காகவே ஏழைகளைக் கடவுள் படைத்தார் என்று சுவாமியார் கூறித்திரிகிருர், வேலை செய்யாத டணக்காரருக் காக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று தொழிலாளர்கட்குப் போதிக்கிருர். மட்டமான உணவிற்கும் கந்தலுக்கும் குடிசைக்குமாக கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று கூறுகிருர், கிடைத்த துடன் ஏழைகள் அடக்கமாக வாழவேண்டும். குறைபடக் கூடாது. அப்படி வாழ்ந்தால் இறந்தபின் மோட்சம் என்று கூறும் இடத்திற்கு கட வுளால் அழைக்கப்படுவார்கள் என்று பிரசாரம் செய்கிறர்."
“வேலையில்லாது சுகமாக வாழ்பவர் பற்றி என்ன சொல்லுகிறர்? மகன் சிரித்துக் கொண்டே கேட்டான்.
'தான் கூறுபவற்றை நம்ப வேண்டும். தொழிலாளரிடமிருந்து பறித்தெடுக்கும் பணத்தில் ஒரு பங்கு தனக்குத்தரின் அவர்களையும் கட வுள் மோட்சத்தில் சேர்த்துக் கொள்வார் எனவும் சொல்கிறர்."
"அம்மா, அது நியாயமாக இல்லையே." "அது உண்மையில்லை. உண்மையாயிருக்க முடியாது.
*ஏன் அம்மா?* -- "பல காரணங்களைக் கூறலாம். முதலில் சுவாமியாருக்கே அதில் நம்பிக்கையில்லை. அவர் பைபிளை நம்புவதாகப் பாசாங்கு செய்கிறார். பைபிளைப் படித்தால் உண்மை தெரியும். யேசு எமது தந்தை, உலகில் உள்ள மக்கள் அனைவரும் அவரது பிள்ளைகள், சகோதர சகோதரியர். எஜமான் வேலையாள் என்பதையே சகோதரர் சகோதரியர் என்று கட வுள் கருதினர் என்று சுவாமியார் கூறுகிருர், மேலும் யேசு தன்னை வழி படுபவர்கள் நாளையைப் பற்றிச் சிநதிக்கப்படாது, தமக்குப் பணம் சேர்க்கப்படாது. சுயநலமில்லாது மற்றவர்க்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார். யேசு மேலும் சொன்னர், த ன் னை வழிப டு பவருக்கு ஏதாவது துன்பம் செய்தால் அவர்களை மன்னித்து விட வேண்டும் என்று யேசு சொல்வதுபோல் நடந்தால் உல கம் இயங்காது என்று சுவாமியார் சொல்கிறர். துன்பம் செய்பவர்களை சிறையில் இடவேண்டும். வேறு நாட்டவராயின் துப்பாக்கி எடுத்துக் கொல்ல வேண்டும். அவர்கள் வீடுகளை எரிக்க வேண்டும் என்கிருர். யேசுவை அவர் நம்பவில்லை. நம்புவதாகக் காட்டிக் கொள்கிருர்."
‘சுவாமியார் ஏன் பொய்யாக நடந்து இப்படிப் பேசித் திரிகிறர்?
குமரன் 23

Page 13
“வேலை செய்யாது வாழ அவர் விரும்புகிருர், "இவர் ஏமாற்றுகிருர் என்று மற்றவர்களுக்குத் தெரியாதா? * მრyr# அறிவார்கள். சுவாமியார் சொல்வது பொய் எனப் பணக் காரர் அறிவர். ஆனல் நம்புவதாக நடித்துப் பணம் தருவர். ஏனென், முல் தொழிலாளிகளிடம் சென்று அவர்களைச் சிந்திக்கவிடாது, பய முறுத்தி, உழைக்கும்படி சுவாமியார் சொல்லிக் கொண்டேயிருப்பார்."
“தொழிலாளர் இவற்றை நம்புகிருர்களா? 'பெரும்பாலானேர் நம்புகின்றனர். உன்னைப்போல சிறுவனுயிருக் கும் காலத்திலிருந்தே கடவுள் பணக்காரருக்கு உழைப்பதற்காகவே படைத்துள்ளார் என்று பெற்ருர் போதிக்கின்றனர். பாடசாலைக்குச் சென்ருலும் ஆசிரியர் இதையே படிப்பிக்கிருர், அதை நம்பி வேலைக் குச் சென்று அவர்களுக்காக உழைக்கின்றன்ர். அதஞ்லேழே தொழிலா ளர் பிள்ளைகளும் உணவு, உடையில்லாது துன்பப்படுகின்றனர், சிலர் சாப்பிட முடியாத அளவிற்கு உணவும், உடுக்க முடியாத அள்விற்கு உடையும் வைத்திருக்கின்றனர், வீணுக்கியும் வீசுகின்றனர்."
‘நான் வளர்ந்து வேலைக்குப் போகும்போது பணக்காரர் எதையும் பறிக்க விடமாட்டேன். அவர்கள் எதையாவது பறிக்க முயன்ருல் நல்ல பாடம் கற்பிப்பேன்."
அவன் ஆத்திரம் பொங்கக் கூறியபடி தன் விளையாட்டுச் சாமான் களை ஒவ்வொன்முக பெட்டியுள் வேகமாக வீசினன்.
அரசியல் பொருளாதாரம் பற்றிய மதிப்பீடு
-தியாகு
இந்நூல் 1859இல் வெளியிடப்பட்டது; பண்டம், பணம் பற்றிய இரு அத்தியாயங்களைக் கொண்டது, மூலதனம் என்ற நூலின் முத லாம் பாகத்தில் இவை மேலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பண்டங் கள், பணம் பற்றிய கோட்பாடுகளை மார்க்ஸ் முதன் முதலாக இந்நூலி லேயே எழுதினர். இதன் மூலமே உபரி மதிப்புக் கோட்பாட்டைக் கண்டு பிடித்தார். மூலதன அபிவிருத்தி பற்றிய இயல்புகளையும் விதி களையும் கண்டறிந்து மூலதனம் நூலில் எழுதினர். அரசியல் பொரு ளாதாரம் பற்றிய கருத்துகளின் முதல் பாகமாக மார்க்ஸ் இந்நூலை ஆரம்பத்தில் கருதினர். தன் கருத்தைப் பின்பற்றி 8 வருடங்களின் பின் மூலதனத்தின் முதற் பாகமாக அரசியல் பொருளாதாரத்தை வெளியிட்டார்.
24 குமரன்

எல்சல்வடோர்
மற்றெரு வியத்நாம்-2.
செ. கணேசலிங்கன் றிகன் கனவு −
"கியூபாவின் உதவியுடன் ஆயுதம் ஏந்திய் கெரிலாக்கள் எல்சல்வ டோரில் மார்க்சிய லெனினிச சர்வாதிகாரத்தை ஏற்படுத்த முயல்கின் றனர். இம்முயற்சி ஏகாதிபத்தியத் திட்டம் கொண்டது. தற்போது நாம் உறுதியாக சுதந்திரத்தைக் காப்பாற்ருவிடின் இன்றைய முரண் பாட்டின் அழிவிலிருந்து புதிய கியூப்ாக்கள் தோன்றிவிடும்" - அமெரிக்க ஜனதிபதி ரீகன் 25-2-82இல் அமெரிக்க அரசுகள் கழகத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியே இது. wA
இன்று 15 மாதங்களின் பின்னரும் கெரிலாக்களை ஒழித்துவிட ரீக னல் முடியவில்லை. அவர்கள் மேலும் வளர்ச்சியடைந்தே வருகின்ற ன்ர். ஆயுதம் ஏந்திப் போராடும் விவசாய இளைஞர்களும் பெண்களும் பெரும்பாலும் 18-25 வயதினரே. ஆயினும் இவர்களது 65 வயதான பாட்டியரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோருக்கு கியூபா, எங்கிருக்கு என்றே தெரியாது. சோவி யத் யூனியனைப் பற்றிக் கேள்விப்பட்டவரே குறைவு. விசாரணைச் குழு அறிக்கை
1981 பிப்ரவரி 9-11 ஆம் திகதிகளில் மெக்சிகோ நகரில் நடை பெற்ற மனித உரிமைக் கழகத்தின் விசாரணைக் குழுவின் அறிக்கையில் இருந்து சில பகுதிகளைக் கீழே காண்க; '
எல்சல்வடோரில் 2 சதவீத நிலப்பிரபுக்கள் 60 சதவீத நிலத்தைக் கொண்டுள்ளனர். 98 சத வீத மக்கள் வைத்திருப்பது 30 சத வீத நிலம், 8 சதவீத செல்வந்தர்கள் தேசிய வருமானத்தில் 50 சத வீதத் தை அபகரிக்கின்றனர். 30 இலட்சம் மக்கள் மாதம் 10 டாலரே பெறு கின்றனர். 16 சதவீதமானவரே ஆண்டு முழுவதும் வேலை பெறுகின் றனர். v , ኃ
“தேவாலயங்கள் ஏழைகள் பக்கமே உள்ளன; அவர்கள் விடுதலைக் காகப் போராடுவேன்" என்று கூறிய அதிமேற்றிராணியார் ருேமிரோ இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டார். மரண விசாரணை யின் முடிவாக இந்த உண்மையைக் கூறிய நீதிபதி நாட்டைவிட்டு ஒட நேர்ந்தது.
ருேமிரோ மட்டுமல்ல மேலும் 28 மத குருமார் கொல்லப்பட்டனர். 21 குருமார் தடுப்புக் காவலில் உள்ளனர். 14 தடவைகள் குண்டுகள்
குமரன் 25

Page 14
வீசப்பட்டன. 41 தடவை யந்திரத் துப்பாக்கியால் தாக்கப்பட்டனர்; 33 தேவாலயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராணுவ ஆட்சி கொடூரமானதும் மக்களிடை பீதியை ஏற்படுத் துவதாகவும் செயலாற்றுகிறது.
இராணுவத்தினரின் பயங்கரமான நடவடிக்கைகள், வதைகளில் சில
வருமாறு: ・
(1) விதைகளே நலமெடுத்தல், ஆண் உறுப்பை வாயில் வைத்தல். (2) கற்பழித்தல், பெண்களின் உடலுறுப்புகளை வெட்டுதல். (3) குழந்தைகளை வதை செய்தலும் சிறு பெண்களைக் கற்பழித் தலும், நாக்குகளை வெட்டுதல், கண்களைத் தோண்டுதல் (பெற்முர், உறவினர் முன்னிலையில்) s
(4) கற்பமான பெண்களின் வயிற்றைக் கீறி கற்பப் பையை எடுத்து நாய்களுக்கு வீசுதல், (5) தடுத்து வைத்திருத்பவர் மேல் எரிவூட்டும் இர சாயனப் பொருட்களை வீசுதல், (6) குழந்தைகளை (மூன்று மாத வயது உட்பட) எறும்பூரும் மலைகளில் நிலத்தோடு கட்டி, எறும்புகளுக்கு உண வாக்கல், (7) மக்களைப் பயமுறுத்த கொலை செய்யப்பட்டவர் உடல்களை நடுத் தெருக்களில் பார்வைக்கு விடுதல், தலைக்ளை வெட்டி தடிகளில் தொங்கவிடல், VN
1980 ஜனவரி முதல் திகதி தொடக்கம் டிசம்பர் 15 வரை கொல்லப் பட்டவர் தொகை 8214, இவர்களில் விவசாயிகள் 3431, தொழிலாளர் 422, மாணவர்கள் 778, குழந்தைகள், பெண்கள் உட்பட அடையாளம் காணமுடியாதவர் 2794,
1980 மே 14, 15 திகதிகளில் மட்டும் குழந்தைகள், பெண்கள், முதி யவர் உட்பட வதை செய்து கொல்லப்பட்டவர் தொகை 600,
இவை தவிர குண்டுகள் போடுதல், கிராமங்களை எரித்தல், பயிர் களை எரித்தல், வீடுகளை இடித்தல் முதலியனவும் நடைபெற்றுள்ளன.
12,000 க்கு மேற்பட்டவர் இராணுவத்தால் கொல்லப்பட்ட போதும் ஒருவன் மேலும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இராணுவ ஆட்சி மனித உரிமைகளை மீறி படுகொலை, வதை, கொ ள்ளை, தீ வைத்தல், உடலே கிடையாது எரித்துவிடல் ஆகிய குற்றங்களை இழைத்துள்ளது. எல்சல்வடோரும் வியத்நாமும்
இத்தனை கொடுமைகளையும் தாங்கி இன்றும் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
“மக்கள் எரிமலை போன்றவர்கள். ஒருவராலும் தீமூட்டமுடியாது. தாமாகவே வெடித்தெழுவார்கள். மத்திய அமெரிக்கா. எரிமலைப் பகுதியாகும்" என்று கஸ்ரோ கூறியதில் தவறில்லை.
26 குமரன்

விடுதலைப்போரைத் தலைமை தாங்கி நடாத்தும் FM LN என்ற கூட்டு முன்னணி விடுதலைப் படையினரிடம் போதிய ஆயுதங்களே கிடையாது. பல வாலிபர்கள் காவல் புரியும்போது ஒரு சிலரிடமே துப்பாக்கி இருப்பதைக் காணலாம்" என ஒரு நிருபர் கூறியுள்ளார்.
போதிய ஆயுதங்க்ள், உணவு, மருந்துவகைகள், குழந்தைகளுக்குப் பால் மா கிடையாத போதும் போராட்டம் நடைபெறுகிறது.
அமெரிக்க இராணுவத்தினரால் பயிற்றப்பட்ட 20,000 வீரரைக் கொண்ட படை அரசிடம் உள்ளது. வியத்நாமில் பயன்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்கள் போதியளவு அரசிடம் வழங்கப்பட்டுள்ளன. 100க்கு மேற்பட்ட இராணுவ ஆலோசகர்களை அமெரிக்கா அங்கு அனுப்பியுள் ளது. இவர்கள் வியட்நாம் போரில் அனுபவம் பெற்றவர்கள். ஆண்டு தோறும் லத்தீன் அமெரிக்க நாடுகளிட்ை அதிக உதவிபெறும் நாடு இந் நாடே. மூன்றரைக்கோடி டாலர்களை 1982 வரை ஆண்டுதோறும் வழ
இத்தொகையை 12 கோடியாக உயர்த்த ரீகன் முயன்றுவருகிருன்.
‘எல்சல்வடோர் மற்ருெகு வியத்நாமாது' என்று கூறும்போது நீண்ட கால, அதிகம் செலவான யுத்தமாகாது பார்ப்பேன் என அமெரிக்க மக் களுக்கு றிகன் உறுதியளிப்பதாகவே கருதிச் சொன்னன்.
வியத்ந்ாம் அளவு வாய்ப்பு எல்சல்வடோருக்குக் கிடையாது. சிறிய நாடு. எப்பகுதிக்கும் அரைமணி நேரத்தில் இராணுவம் அனுப்பப்பட லாம். வடவியத்நாம்போல த்தவக் கூடிய அண்டைய நாடு கிடை யாது. அயல்நாடுகளும் அமெரிக்க ஆதிக்கத்தில் உள்ளன. மக்கள் யுத்தம்
1960, 1970 ஆம் தசாப்தங்களில் இலத்தின் அமெரிக்க நாட்டுக் கெரில்லாக்கள் ஒடுக்கப்பட்டது போலவே ரீகன் எல் ஸ்வடோரையும் எண்ணியுள்ளான். அக்காலத்தில் வாலிப, மாணவ கெரில்லாக்கள் மக் களிடமிருந்து பிரிந்து காடுகளிலும் மலைகளிலுமிருந்து போராடித் தோற் றனர். இன்று புதிய அனுபவத்துடன் மக்களுடனிருந்தே போராடுகின் றனர். மாவோ கூறிய மக்கள் யுத்தமாக போராட்டம் நடைப்ெறு கிறது.
எல்சல்வடோரில் மூன்றில் ஒரு பகுதி இன்று மக்கள் ஆட்சியில் வந்துவிட்டது. மற்றைய பகுதிகளிலும் தெரில்லாக்களின் ஊடுருவல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
20 000 இராணுவப்படையில் நீகனுக்கு இன்று நம்பிக்கை குறை ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேைலயே அயல்நாடான கொண் டுராஸ் நாட்டுப் படையையும் பலப்படுத்தி எல்சல்வடோர் கெரில்லாக் களை எல்லையூடாகத் தாக்கி வருகிறன்.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீ வைப்பு ஆகியவற்றையே அமெ ரிக்க ஆதரவான எல்சல்வடோர் அரசின் இராணுவமும் செய்து வரு கிறது. இத்தகைய அநீதிகள், அக்கிரமங்கள் மூலம் நீதியையும் சமத்து வத்தையும் வேண்டும் மக்களை ஒடுக்கிவிட முடியாது என்பதற்கு எல்சல் வடோரும் மற்ருெரு உதாரணமாகும், வியத்நாம்போல.
grymwner
குட0ரன் 27

Page 15
மாவோவின் பாடல்கள்
1. છ(5 பாடல்
1923
பிரியா விடைகள் பல கூறி-நாம்
கைகளை ஆட்டி அசைக்கின்ருேம் சோம்பிய முகத்துடன் நின்துயரை-நீ
சொல்லிட என்மனம் துடித்ததுவே! வேதனை தாங்கும் விழிகளிலே-கண்
சுரந்திடும் துன்பச் சுடுநீரே துயரை மறைந்திட முயன்றேநி-விழி
ததும்பிய நீரை மறைத்துவிட்டாய்! இறுதி மடல்களில் இருந்ததெலாம்-நாம் புரியா தெழுதிக் கொண்டவையே: மேகமும் மூடிய பனிமுகிலும்-அட
துடைத்து எறியப் பட்டுள்தே! நமது மனத்தைப் புரிந்தவர்கள்-ஆம்,
நாமே என்று கூறிடலாம்; மக்கள் துயரின் காரணங்கள்-எவை?
விண்ணுல குமதை அறிந்திடுமா!
கீழை வாசலின் வழிநெடுகே-ஒ.
காலைப் பொழுதின் மூடுபனி;
மேற்கில் மறைகிற சந்திரனும்-ஒ
பொய்கை நீரில் கிடக்கின்றன்!
தனிமை உணர்வைக் கூட்டிடுதே ஓர்
ஊதொலி எங்கோ முனங்கிடுதே; உள்ளம் உடைந்து வருந்துகிறேன்-இதை
நீயும் உணர்வாய் நானறிவேன்! தனியாய் உலகின் விளிம்பினுக்கே-நான்
பயணஞ் செய்யப் போகின்றேன்; குன்லுன் மலையில் இருக்கின்ற-செங்
குத்துப் பாறையைப் பிளப்பதுபோல். அண்டத்தின் ஊடே அடிக்கின்ற-ஆ.
சூரைக் கா ற்றுப் புயலினைப்போல் துன்ப துயரம் நாமழித்து-அட
28
பறந்து மேகந் தொட்டிடுவோம்.
குமரன்

1.1 புரட்சிகர இயக்கப் பணியில் ஈடுபட்டிருக்கும் கணவன் மனை வியரிடையே, பணிப் பளு பிரிவுத் துன்பம் முதலானவைகள் காரண மாக மனக் கவலைகளும் கருத்து வேறுபாடுகளும் தோன்றக் கூடும்; அத் தகைய தேவைகளில் கணவனக இருக்கிறவன், தன் பணியில் உள்ள நியாயக் காரணங்களை எடுத்துக் கூறி மனைவியின் மனக் கவலையை மாற்றி, அவரையும் தன் போராட்டத் தோழராக அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற சீரிய கருத்தை "ஒரு பாடல்" என்னும் மாவோ பாடல் வலியுறுத்துகின்றது.
ஆம் சமுதாயத்தின் மொத்த ஜனத்தொகையில், கிட்டத்தட்ட சரிபாதியாக இருக்கின்ற பெண்களை ஒதுக்கிவிட்டு, அந்தப் போராட் டத்தையும் முழுமையாக நடத்த முடியாது!
1.2. இதுவரை நமக்குக் கிடைத்துள்ள மாவோவின் பாடல்களில் "ஒரு பாடல்" என்னும் இப்பாடலே காலத்தால் முந்தையது; இது மா வோவின் முதல் பாடலாகக் கூட இருக்கக் கூடும். இப்பாடல் 1923 ஆம் ஆண்டே அவரால் எழுதப்பட்டிருந்த போதிலும், அவரின் மறைவிற் குப் பிறகு, மக்கள் சீனத்தில் முதல் முறையாக, 1978ஆம் ஆண்டு செப் டம்பர் மாதத்தில் தான் வெளியிடப்பட்டது. 1979 ஆம் ஆண்டு ஜன வரி மாதம், "சீன இலக்கியம்’ இதன் ஆங்கில ஆக்கத்தை வெளியிட் டது. இப்பாடல் காலந்தாழ்த்தி வெளியிடப்பட்டதற்கான காரணம் ஆராயத்தக்கதாகும்.
1.3. அந்நிய ஏகாதிபத்தியத்தினலும் உள்நாட்டு நிலப்பிரபுத்துவ முறையாலும், அல்லலுற்ற சீன சமுதாயத்தில், புரட்சிகர இயக்கப் பணிகள் பின்னடைவு அடைந்தபோது, பின்னடைவைப் போக்கிப் புரட்சியை முடுக்கிவிட, மாவோ பல சமயங்களில் பலவிடங்களுக்கு, தன் அன்பு மனைவியும் போராட்டத் தோழருமான யாங்க் காய் கூயை, பிரிந்து செல்ல நேரிட்டது. இவ்வாறு ஒரு சமயம் மாவோ கூயைப் பிரி ந்து சென்றபோது கூட மனக் கவலை அடைந்திருக்கிறர். சமுதாயத்தின் ஒட்டு மொத்துக் கவலையைப் போக்க நீண்ட பயணம் மேற்கொண்ட மாவோ, தன் போராட்டத் தோழரும் அன்பு மனைவியுமான கூயின் கவலையையும் போக்க வேண்டியவராஞர்! :
3.1. யாங்க் காய் கூயின் புரட்சிகர வரலாற்றை "யாங்க் காய்கூய் மனைவியும் புரட்சித் தோழரும்" என்ற கட்டுரையில் காணலாம். இய க்க ஈடுபாட்டின் காரணமாகவே மாவோவும் சுயும் ஒருவரையொருவர் மணந்து கொண்டனர், இருவருக்கிடையே எதன் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது; எப்போது மாவோ கூயைப் பிரிந்து சென்ருர் போன்ற செய்திகள் ஆராயத்தக்கது.
குமரன் 29

Page 16
1923ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாவோ தோழர் கூயைப் பிரிந்து சென்ருர் என்று தோழர் எஸ். வி. ராஜதுரையின் குறிப்புக் கூறுகிறது. (ராஜதுரை, எஸ். வி, 'மா சேதுங் கவிதைகள் பொதுமை வெளியீடு. 16- மங்கேன்தெரு, சென்னை-17. 1981 பக். 2) ஆனல் அதே 1923 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மா சேதுங் கட்சியின்மையக் குழுப் பணிக்காக சாங்கை சென்ழுர்; அவருடன் யாங்க்காய் கூயுஞ் சென்ருர். அங்கு தொழிலாளர்களின் இரவுப் பள்ளியில் கல்வி கற்பித்தார். என்று ‘யாங்க் காய் கூய் மனைவியும் புரட்சித் தோழரும்" என்று மேலே சொன்ன கட்டுரையில் செய்தி காணப்படுகிறது.
14. மாவோ - கூய் பிரிவினல், கூய் அம்மையார் அடைந்த துன்பம் பாடலின் முதல் நான்கு அடிகளிலும், மாவோ அடைந்த வேதனை பாட லின் ஒன்பது முதல் பன்னிரண்டு அடிக்ளிலும் கூறப்பட்டுள்ளது. இரு வருக்கும் இடையே ஏற்பட்ட துன்பமும் வேதனையும் அகற்றப்பட்ட பாடலின் ஐந்தாம் ஆரும் அடிகளில் புறப் பொருள் உள்ளுரையாக (படிமக்காட்சியாக) கூறப்பட்டுள்ளது சமுதாய மாற்றத்திற்கான புரட் சியில், தன்னுயிரையும் பொருட்படுத்தாது தான் போராடத் துணிந்து விட்டதைப் பாடலின் பதிமூன்ருவது அடியில் கூறி, அத்தகைய புரட் சிப் பாதையில் கூவும் தொடர்ந்து தன்னுடன் இணைந்து வரவேண்டு மென்ற வேண்டுதலை பாடலின் பதினன்கு முதல் பதினரும் அடிகளில் கூறியுள்ளார்.
1.5. சமுதாயப் பணிக்காக கணவன் - மனைவி இடையே ஏற்படும் பிரிவை நாம் துன்பமாகக் கருதுதல் கூடாது, மாவோ இயக்கப் பணிக் காக கூயைப் பிரிந்து சென்றது அவசியமானது;_சரியானது.
இந்த இடத்தில் நமது பாரம் பரிய தமிழ் இலக்கியத்தில் உள்ள சங்க இலக்கிய இலக்கணக் கோட்பாடுகள் நினைவுக்கு வருகின்றன. சங்க இலக்கியம் காட்டும் குடும்பத் தலைவர்கள் தம் மனைவியரான தலைவி யரை (1) ஒதல் (கல்வி கற்றல்) (2) தூது (அரச காரியங்களின் பொரு ட்டு தூது செல்லல்), (3) பகை (தம் அரசருக்காகப் போர்புரிதல்), (4) பொருள் (தம் குடும்ப நல்வாழ்வுக்காப் பொருள் தேடச் செல்லுதல்) ஆகிய நான்கு காரணங்களில் ஏதேனும் ஒன்று பற்றி பிரிந்து செல்வர், குடும்ப நல்வாழ்விற்காகப் பொருள் தேடச் செல்லுதல் உண்மையிலே அவசியமாகவும் கணவர் உயிருக்கு பொதுவாகத் தீமையற்றதாக இரு ந்த போதிலும், சங்கச் செய்யுள்கள் பாடிய சான்றேர்களாகிய புலவர் கள், இதனை மிகக் கொடிய துன்பமாகச் சித்தரித்துள்ளனர். மறுபுறம், அதே சமயம் அரசனுக்காகப் போர் புரியத் தலைவியைப் பிரிந்து செல் லுதல், தலைவனுடைய உயிருக்கு உண்மையிலேயே ஆபத்தாக இருந்த போதிலும், இத்தகைய பிரிவுகளை சங்கச் சான்றேர் போன்றிப் புகழ்
30 குமரன்

ந்து பாராட்டி வந்துள்ளனர். ‘அரசின் நலன் பொருட்டு ஒளிரும் வாள் வீசுதல் காளையரின் கடமைகளில் ஒன்று" என்று இலக்கணமும் கூறி னர். பொருள் வயின் பிரிவு மிகுந்த துன்பத்தைத் தருவது என்று கூறும் அதே சங்கச் சான்றேர் போர்வையின் பிரிவைப் போற்றி வ வேற்றதின் காரணம் என்ன? ۔
உடைமை வர்க்க நலன்காக்கும் மன்னனின் பிரச்சார பீரங்கிகளாய் இருந்த மன்னர்களை அண்டி வாழ்ந்த சங்கச் சான்றேர், மன்னவனின் நலனுக்கேற்ற தத்துவத்தை உருவாக்கினர் என்ற கசப்பான உண்மை இதில் மேலோங்கி ஒருபுறம் இருக்கிறது. இன்னெருபுறம், இதில் அக நிலைப் பொருளாக, எதிரியின் தாக்குதல் வரும்போது அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் - முறியடிக்காவிட்டால் எந்தக் குடியும் வாழ முடி யாது - நாடு காக்கப்படாவிட்டால் வீடு காக்க முடியாது என்ற தத்து வமும் உள்ளடங்கியுள்ளது.
நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை நிலைநாட்ட பாண்டியன் நெடுஞ் செழியன் போர்க்கடமையாற்றச் சென்றதை "நெடுநல்வா டை" என்ற பத்துப் பாட்டுக்களில் ஒன்ரு ன இப்பாட்டு கூறும். இவ்வாறு பாண்டி பன் போாக்கடைமை ஆற்றச் சென்றிருக்கும் வேளையில், இயற்கைச் கற்ருடல் எல்லாம் காமத்தை மிகுவிக்கும் நிலையிலும் அதனை வென்று பாண்டியமாதேவி காமத்தைவென்று தலைவன் வரவை எண்ணி ஆற்றி இருக்கிருள். போர்க்களத்திலோ பாண்டியன் காமத்தைத் தூண்டும் கடுங்குளிர் வாடை வேளையிலும் போர்க்கடமை ஆற்றிக் கொண்டிருக் கிருன். நாட்டின் நலன் பொருட்டு பாண்டியன் போர்க்களஞ் சென் றிருப்பதை, பாண்டிய மாதேவி துன்பமாகக் கருதவில்லை - கூறவில்லை என்பது இங்கு குறிக்கக்தக்கது
\
1.5.1 நெடுநல் வாடை கூறும் பாண்டிய மாதேவிக்கும் யாங்க் காய்கூய் அம்மையாருக்கும் மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. முன்னவர் அரசவை கொலுயீடப் பாவையாக - படுக்கையறைப் பதுமையாக வாரிசை வழங்கும் பிள்ளை பெறும் இயந்திரமாகமட்டும் இருந்தார். ஆனல் பின் னவரான கூயோ, பிள்ளைப் பருவ முதல் புரட்சிப் பணியில் ஈடுபட்டிருந் தவராக - வாழ்க்கையின் வசந்தத்தை முழுமையாக அனுபவிக்காத இளம் முப்பது வேளையில் கோமிங்க்தாங்க் கொடும்படையினரால் கைது செய்யப்பட்டு இன்னுயிரைத் தியாகஞ் செய்த புரட்சிகரத் தோழராக விளங்கினர். கடும் துன்பம் வந்தபோதெல்லாம் மனங்கலங்காத மாவோ, பின்னர் 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம்நாள் வீ சுயி அம்மையாருக்கு எழுதிய பாடலில் ‘என் சிந்தையைக் கவர்ந்திருந்த செல்வஞ்சி நானிழந்தேன்’ என்று வர்ணித்தார்.
குமரன் 31

Page 17
1.6. குறிப்புகள்.
(1) அடி 6 மேகமும் மூடிய பனி முகிலும்" - புறப்பொருள் உள் ளுரை கூய் அடைந்த துன்பததிற்கும் மாவோ அடைந்த வேதனைக்கும் மேகமும் பனிமுகிலும் குறியீடாக உள்ளது. இதுவும் இதுபோன்ற புறப் பொருள் உள்ளுரைகளும் “மாவோவின் பாடல்களும் புறப்பொருள் உள் இருரையும்" என்ற தனிக் கட்டுரையில் விளக்கி உரைக்கப்படும்.
(2) அடி 11. ஊதொலி எங்கோ முனங்கிடுதே - மாவோவின் வேத னேதற் குறிப்பேற்றமாகக் கூறப்பட்டுள்ளது. አ‛
(3) அடி 14. குன்லுன் மலை; இந்தியாவில் உள்ள இமயமலையைப் போல சீனத்தில் உள்ள மிகப் பெரிய மலை. பயங்கரக் கணவாய்களும் செங்குத்துப் பா றைகளும் உடையது. நீண்ட படை நடைப்பின்போது செம்படை இம்மலைகளில் தம் குருதியை நீராகப் பாய்ச்சி உள்ளனர். இம்மலையின் பெயரிலேயே ஒரு பாடல் எழுதியுள்ளார். அதனைப் பின் 607 rio Luntri LüG3Lumr Lib.
யாங்க் காய் கூய் அம்மையார்: (1901 - 1930) மக்கள் சீனம் மலருவதற்குப் போராடிய பெண்பால் புரட்சிகரத் தோழர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர். கூரையின் மாநிலத்தில் சாங்க்சா நகருக்கருகிலுள்ள பந்தீசாங்க் கிராமத்தில் பேராசிரியர் யாங்க் சாய்க் சீ என்ற யாங்க் கூவை சுங்கின் மகளாகப் பிறந்த இவர், மாவோவின் பாலிய அரசியல் நண்பர்களில் ஒருவராகவும், போராட்டத் தோழராகவும், மனைவியராகவும் இருந்தவர். 1930 ஆம் ஆண்டு அக் டோபர் மாதம் 24 ஆம் நாள், மாவோவைப் பிரிந்து தன் இரு மகன் களுடன் பந்த்சாங்க் கிராமத்தில் புரட்சிப் பணி ஆற்றிக் கொண்டிரு ந்தபோது கோமிந்தாங்க் படையினரால் கைது செய்யப்பட்டார். மாவோவைக் கைவிட்டால், கட்சியைக் காட்டிக் கொடுத்தால் உயிர்ப் பிச்சை அளிக்கப்படும் என்று கோமிங்க்தாங்க் படை கூரிய போதிலும், அவர்களோடு சமரசஞ் செய்து கொள்ள மறுத்து, 1930 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் நாள் புரட்சிகர மரணத்தை ஏற்றுக் கொண் டார். (பின்னரும் இவரை 25 ஆம் பாடலில் பார்ப்போம்.)
சில புள்ளி விபரங்கள் 1980/81 குடித்தொகை மதிப்பீட்டுத் திணைக்கள தகவல்படி சில விபரங்கள் வருமாறு:
4.2 % குடித்தொகையினரின் மாதாந்த வருவாய் ரூபா 132
17.9 % 99 916 19.1% s 99 495
4五.2
இலங்கையின் வறுமைக் கோட்டு எல்லை ரூபா 500 ஆகக் கருதப்படு கிறது. ஆகவிே 41.2% மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
32 குமரன்

விழியோரச் சுடுநீரே! உந்த
நெருக்கடிகள் தூவுகின்ற நிகழ்கால விதைகள் நாம் முளையிலே கிள்ளிடினும் முளைத்தெழுவோம் எங்களது எதிர்கால அறுவடையை எரிக்க முடியாது. அடக்கு முறையே-தன் அழிவையும் பிரசவிக்கும் 5,655, D60) Ltuftsgil
காட்டாறு பொங்கியெழும்.
விழியோரச் சுடுநீரே - உன் வெடியோசை எங்களது செவிகளிலே விழுகிறது. எங்கிருந்து பொங்குகிருய் எங்கிருந்து வேதனையை எங்களிடம் வீசுகிருய்.?
இங்கே கவனியுங்கள்!
ரீ. எஸ். சிவகுமார்
நாங்கள்உங்கள் அலட்சியங்களால் அலைப்புண்டு இலட்சியங்களை இழந்து விட்டவர்கள். சான்றிதழ்களைச் சாதனைகளாய் எண்ணி ஏமாந்தவர்கள். வர்த்தமானிப் பக்கங்களில்-புது வாழ்வுதேடி அலைபவர்கள். ‘வெற்றிடங்களுக்கு
குமரன்
விண்ணப்பங்களை அனுப்பிவிட்டு எதிரொலியை
எதிர்பார்த்திருப்பவர்கள் என்ருவது ஒருநாள் எங்கள் வீட்டுக் கூரைகளும் பிய்க்கப்படும் என்று காத்திருக்கிருேம் இல்லாவிட்டால் நாங்களும் என்றே தலைமறைவாகி விட்டிருப்போம்"
33

Page 18
கேள்வி பதில்? *வேல்”
கே: முற்போக்கு அணியைச் சேர்த்த டொமினிக் ஜீவா, டானியல் ஆகியோரின் எழுத்துகளில் கலைநயமில்லை என்று கே. எஸ். சிவகுமாரன் எழுதுவது பற்றி என்ன கூறுவீர்?
த. சிவானந்தன், கொழும்பு. ப; கலை கலைக்காக, கலை இலக்கியத்தில் பிரச்சாரம் இருக்கப்படாது. கலை அரசியலுக்கு - வர்க்கநலனிற்குஅப்பாற்பட்டது போன்ற பிற்போக் கான, இத்துவரும் முதலாளித்துவத்தின் பொய்மைக் கருத்துகள் கொணட விமர்சகர்கள் தொழிலாள விவசாயிகளுக்காக கலை, இலக்கியம் படைப்பவர்களைப் பார்த்து இவ்வாறு குலைப்பர், குலைத்துக் கொண்டே யிருப்பர். இது புதுமையல்ல. சென்ற குமரன் (62) இதழில் இதற்கு விரிவான பதில் தரப்பட்டுள்ளது, சிவகுமாரன் கைலாசபதி அணியைச் சார்ந்தவரல்ல; எதிர் அணியில் நின்று குட்டையைக் குழப்புபவர்.
தற்போது சிவகுமாரன் விமர்சனம் செய்வதைவிட்டு எனக்கு. இவா களது கதைகள் பிடிக்கும் என்று பட்டியல் தந்து வாசகர் அபிப்பி ராயம் கூறும் நிலைக்கு வந்துவிட்டார். விமர்சனம் என்பது தனக்கு இய லாத தொழில் என்பதை அவராகவே ஒப்புக்கொள்ளும் நிலைக்கு இறங்கி வருகிருர் என்பது அவரது அண்மைய எழுத்துகள் நிரூபிக்கின்றன.
கே. மதக் கருத்துகளா, அரசியலா முதன்மை வாய்ந்தது?
க. சின்னத்தம்பி, ஏழாலை, ப: சாந்தம், அகிம்சை, நீதி, நேர்மை, உண்மை போதிக்கும் புத்த மதத்தைச் சாாந்த இராணுவத்தினரே 18-5-83 அன்று யாழ். நக ரில் கொலை, கொள்ளை, தீ வைப்பு ஆகிய புத்தமத போதனைக்கு முற்றும் மாறன வீரச் செயல்களை ஆயுதபலத்தோடு நடத்தினர். 1-6-83அன்று வவுனியாவில் கடைகள் தாமாக எரிந்தனவா? அரசியல் ஆதிக்க வர்க்க நலனின் முன்னர் மதக்கருத்துக்கள் மறைந்துவிடுகின்றன என்பதையே இவை நிரூபிக்கின்றன.
O கே: உயர்நீதிமன்ற நீதியரசர்கள் இல்லங்களின் எதிரே ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றது நீதிமன்ற நீதி வழங்கலை அவமதிப்பதாக இல்
2suurt?
மு. கந்தரம், கொழும்பு.
ப; ஆங்கிலேயர் எமக்குப் பாடசாலைகளில் கற்பித்த ஜனநாயகத் தின்படி சட்ட வாக்கம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றும் தனித்
34 குமரன்

தனி அமைப்புகள்; ஒரு அமைப்பின் செல்வாக்கு, தாக்கம் மற்ற அமைப் பில் மேல் இருக்காது என்பதாகும். ஆனல் இது நடைமுறையில் சாத் தியமில்லை என்பதை இன்று நேரடியாகக் காணலாம். சட்ட வாக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தால் ஆக்கப்படுகிறது, அமைச்சரவையே சட்டவாக்கம், திருத்தச் சட்டம் ஆகியவற்றைத் தீர் மானிக்கிறது. தற்போதைய அமைச்சரவை, நீதிமன்றங்களிலும் உயர் வாகத் தம்மைக் கொள்கிறது. மக்களுக்கும் தம் செயல்மூலம் காட்டிக் கொள்கிறது.
அபிப்பிராய வாக்கெடுப்பின்போது பறிமுதல் செய்யப்பட்ட சிங் கள பிரசுரத்திற்காக கம்பகா நீதிமன்றம் பறிமுதல் செய்த பொலிஸ் சுப்பிரின்டன் ரூபா 10000 நட்டஈடு செலுத்த வேண்டும் எனத் தீர்ப் பளித்தது. மறுநாளே அரசு அதைத் செலுத்துவதாக அறிவித்தது. சுH பிரின்டனின் வீரச் செயலுக்காகப் பதவி உயர்வு வழங்கியது. அண்மை யில் விவியன் குணவர்த்தணுவின் மனித உரிமை மீறல் வழக்கில் நீதிபதி களின் தீர்ப்புக்கு எதிராக அரசு மாதர் ஊர்வலத்தைக் கலைத்த சப்இன்ஸ் பெக்டருக்குப் பதவி உயர்வு வழங்கியது. நீதிபதிகள் இல்லத்தின் முன் A. நடைபெற்ற ஆர்ப்பாட்டச் சம்பவங்களைப் பார்க்கும்போது அரசினதும் பொலிசினதும் ஆதரவுடனேயே இது நடைபெற்றதாக மக்கள் உணர் கின்றனர். இ. போ, ச. பஸ்களை வேறு யாரால் பயன்படுத்தியிருக்க முடியும்? வரலாற்று நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது ஓர் ஆபத்தான நிலைக்கே மக்கள் அழைத்துச் செல்லப்படுகிறர்கள் என்பது புலனுகிறது.
பூர்ஷ்வா ஜனநாயக நீதிவழங்கும் மரபுகளே மீறப்படுகிறதோ என அஞ்சவேண்டியுள்ளது. அரசைச் சார்ந்தவர் நீதிபதிகளைப் பயமுறுத்த முனைகிருர்களோவென மக்கள் சந்தேகிக்க நேர்ந்துள்ளது. பிரதம நீதி யரசர் அவ்வாறு அஞ்ச வேண்டியதில்லை என அறிக்கை விடுத்துள்ளார்: இவ்வேளை இரண்டாவது உலக யுத்தத்தின் பின் ஜெர்மனியில் நடை பெற்ற உலகப் பிரசித்திபெற்ற நுரன்பேக் நீதிமன்ற வழக்கு பலருக்கு நினைவில் வரலாம். கிட்லரின் கீழ் பணியாற்றிய ஜெர்மனிய நீதிபதிகளு
ஆண்வழிச் சொத்துரிமை என சட்டரீதியாகப் பெண்கள் ஒதுக்கப்படு கின்றனர், குடும்பத்தின் தேவைகளைச் சமாளிப்பவர் குடும்பம் என்பது உற்பத்தி, நுகர்வின் அமைப்பு எனக் கூறிப் பொருளாதார ரீதியாக அடக்கப்படுகின்றனர். சமூக அரசியல் வாழ்வில் பங்கு பற்றுவதைத் தடை செய்வதுபோல வீட்டுக்குரியவள் என தனிச் சொத்தாக்ப் புறக் கணிக்கப்பட்டு சமூகரீதியாகவும் பெண் ஒதுக்கப்படுகிருள் - எல் சல்வ டோர் மாதர் சங்க அறிக்கையிலிருந்து.
குமரன் 35

Page 19
க்கு அமெரிக்கா உட்பட உலக நீதிபதிகள் விசாரணை நடத்தித் தண்டனை வழங்கினர். அவ்வேளை அமெரிக்க நீதிபதி ஒருவர் குற்றம் சாட்டப் பட்ட நீதிபதிகளைப் பார்த்துப் பின்வருமாறு கூறினர்; எல்லோரும் கிட் லருக்குப் பயந்தே ஒருதலைப்பட்சமாக நீதிவழங்கியதாகக் கூறுகிறீர்கள், அரசியல் தலைவனுக்கு அஞ்சி முதலாவது தீர்ப்பு வழங்கப்பட்டபோதே நாட்டில் பாசிசம் உருவாகி இத்தகைய அழிவுக்கும் கொடுமைக்கும் கோடிக்கணக்கானவர் கொலைக்கும் இது இட்டுச்செல்லும் என்பதை நீங் கள் அறிந்திருக்க வேண்டும்.
O
கே: காலணி, அரைக் காலனி, நவகாலனி நாடுகள் என்பவற்றிற்
கிடையே உள்ள வேறுபாடுகள் என்ன?
க. சிற்றம்பலம், பருத்தித்துறை,
ப: காலனி ஆதிக்கம் என்பது ஏகாதிபத்திய வல்லரசு தன் நேரடி இராணுவ பலத்துடன் மற்ருெரு நாட்டை ஆளுவதாகும். 1947 வரை இலங்கை, இந்தியா பிரிட்டிஷ் காலனி நாடாகவே இருந்தன. பிரிட் டன் "சுதந்திரம் வழங்கிய பின்னர் அந்நாட்டு மூலதனம்மட்டுமல்ல பிறமுதலாளித்துவ நாடுகளின் மூலதனங்களும் வந்து சுரண்டி ஆட்சி புரிவதையே அரைக் காலனி என்று கூறுகிருேம். பிறநாட்டு மூலதனங் *ள் ஒரளவு வந்தபோதும் ஒரு ஏகாதிபத்திய நாட்டின் மூலதனம் பெரு மளவில் குவிந்து அந்நாடு ஆதிக்கம் செலுத்துவதையே நவகாலனி என் கிருேம். இதற்கு உதாரணமாக லத்தீன் அமெரிக நாடுகளைக் காண லாம். இவை அமெரிக்க ஆதிக்கத்தில் உள்ளன. இலங்கையும் அமெ ரிக்க நவகாலனியாக மாறிவருவதை இன்று காண்கிருேம். (இலங்கை மற்ருெரு நவகாலனியா என்ற கட்டுரையும் பார்க்க)
பச்சிளம் குழந்தையைப் பத்து நிமிஷம் தோளில் சுமக்க முடியாத சோம்பேறிகள் வயிற்றிலே சுமக்கும் எங்களை வல்லிகள் என்றும் மெல்லியர் என்றும் வர்ணனை செய்கிருர் புரோகித வர்க்கமே! புலவர் கூட்டமே!! பூங்கொடிகளல்ல நாங்கள் . تیر "
போர்க் கொடிகள்
கவிஞர் ஏ. தெ. கப்பையன்.
36 குமரன்

சிட்டுக்குருவி ஒன்று
சிட்டுக்குருவி யொன்றை சுற்றி வளைத்து சிறையிலடைத்த விசித்திரம்
சொல்லட்டுமா?
சந்தன முகத்தில் செந்தணல் பொட்டோடு சைக்கிளில் சிட்டாக தாவணி பறந்தாட சுற்றிய
சிட்டெங்கள் ‘கண்ணுடி வார்ப்புகள்" சிறைப்பட்ட கதை தெரியுமா?
தெரியாதா?
இத்தீ
மூடுவாயை சமூகப் பிரக்ஞைகளை சற்றேனும் சிந்திக்க மாட்டீரா, சூனியங்களே சமூகத்தைவிட்டு சற்றே விலகி சிந்தனையாளருக்கு வழிவிட்டாவது நில்லுங்கள்.
தெரியுமா?
சொல்லாதே தெரிந்துமா சும்மா இருக்கிருய், சிந்தித்துப் பார்த்தாயா!
அந்த சிட்டுக்குருவியின் முகம் சோர்ந்து சிங்கார ரூபம், ஒளி மங்கி
தன்
உறவுக்காய்
பொட்டில்லாச் சுமங்கலியாய் சிறையிலே வாடுவதை சற்றேனும் சிந்தித்துப் பார்த்தாயா?
இல்லை சிட்டுக் குருவியின் களை போக்கி சிங்காரமா யொரு பொட்டாக சீறியெழுந்த
d 60 சிரசுகள் கட்ட வேலியில் சிக்கி சீறிடும் செந்நீர் அருவி சிறைச்சாலைவரை செல்லட்டும், அதிலே தொட்டொரு பொட்டிட்டுக் கொள்ளட்டும் எங்கள்
ruoši 356ólë சிட்டுக் குருவிகள்.
f -கவிஞர் கபிலன்.
குமரன்

Page 20
O 4. நவீன படைப்பிலக்கியத்தில் மார்க்சியத்தின் தாக்கம்-2 -செ யோகநாதன்
நாவல் இலக்கியத்திலே விரல்விட்டெண்ணக் கூடிய சிலரே மார்க் சிய அம்சங்களை உள்வாங்கி சிறந்த நாவல்களை எழுதியுள்ள போதிலும், அவர்களிற் பலர் சிறுகதைத் துறையிலிருந்தே நாவல்துறைக்கு காலடி எடுத்து வைத்தவர்களென்பது இங்கே குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒன்ற கும். ரகுநாதன், கே. டானியல், செ. கணேசலிங்கன், பொன்னீலன், செல்வராஜ் ஆகியோர் சிறந்த கதைகளை மார்க்சிய கண்ணேட்டத் திலே எழுதியிருக்கிருர்கள். இவர்களோடு முற்போக்கு இலக்கியத்தின் தோற்றப்பாடு, வளர்ச்சி என்பனவற்றை நாம் அவதானிக்க முடியும். இவர்களும், இவர்களைத் தொடர்ந்து எழுதிய இன்னும் பலரும் மார்க் சிய இயக்கங்களால் கவரப்பட்டவர்கள் அல்லது அவற்றிலே தங்களை ஈடு படுத்திக் கொண்டவர்கள் என்பது லரலாருகும்.
*தாமரை” இதழ் தமிழ் நாட்டிலே மார்க்சிய கோட்பாடு தழுவிய எண்ணற்ற எழுத்தாளர்களை உருவாக்கிற்று. இவ்வழியினைத் தொடர் ந்து "செம்மலர்', 'ஜீவா’, ‘சிகரம்’, ‘மனிதன்” போன்ற பத்திரிகைகள் தோன்றி இவ்வழியினை மேன்மேலும் அகலித்தன. இவை முற்று முழு தாகவே மார்க்சிய சித்தாந்தத்தினை (வேறுபாடுகளுக்கு மத்தியிலும்) பிர திபலித்தனவே தவிர எவ்விதத்திலும் எல்லோருக்கும் உகந்த பொது மேடையாக விளங்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இலங் கையைப் பொறுத்தவரை மார்க்சிய நெறிநின்ற இதழ்களாக தாயகம், களனி, வசந்தம், குமரன் என்பவற்றைச் சுட்டலாம். இவைதவிர இலங் கையிலும் இந்தியாவிலும் பாரதி, சாந்தி, மரகதம், சரஸ்வதி, மனிதன் (விந்தன்), என்ற பத்திரிகை புள் முற்போக்கு அம்சங்களை வலியுறுத்தி மார்க்சிய எழுத்தாளர்களுக்கும் இடமளித்து வந்தன காலத்துக்குக் காலம் பல மார்க்சிய இலக்கியச் சிற்றேடுகள் தோன்றியபோதிலும் அவை இரண்டோ மூன்று இதழ்களோடு நின்றுவிட்டன.
மேற்கூறிய இதழ்களிலே எழுதிய எழுத்தாளர்களில் பலர், அரசியல் இயக்கங்களின் நேரடியாகவே பங்கு கொண்டிருந்தவர்கள். தங்களின் அரசியல் பணியில் ஒரம்சமாகவே படைப்பிலக்கியத்துறையிலும் அவர் கள் பணிபுரிந்தனர். அவர்களின் எழுத்துக்களே இந்தத் தன்மையை நமக்கு உணர்த்துகின்றன.
நீர்வை பொன்னையன், எச். எம். பி. முகைதீன், டானியல், Gorró) னிக்ஜீவா, என். கே. ரகுநாதன், செ. கதிர்காமநாதன், பெனடிக்ற்
メ
38 一 - குமரன்

பாலன். சிதம்பர ரகுநாதன், செ. கணேசலிங்கன், பொன்னீலன், அஸ்வ கோஷ், லிங்கன், கதைப்பித்தன், சு. சமுத்திரம், மேலாண்மை செ. பொன்னுசாமி, டி. செல்வராஜ், இராகுலதாசன், பா. செயப்பிரகாசம், செ. யோகநாதன், பூமணி, கொ. ச. பலராமன், கொ. மா. கோதண் பும், இராகுலதாசன் போன்றேர் மார்க்சிய சித்தாந்தத்தின்பால் மிகு ந்த நம்பிக்கை வைத்திருப்பதாக உள்ள போதிலும் அவர்களுடைய எழுத்தின் தரமும், பார்வையும் ஒன்றுக்கொன்று சமனற்று ஏற்ற இற க்கமுள்ளனவாகக் காணப்படுவதற்கு, அவர்களது நம்பிக்கையும், மார்க் சியத் தெளிவும், இயக்கத்தோடு அவர்கள் கொண்டுள்ள தொடர்பும், அதில் அவர்களது நிலைப்பாட்டின் தன்மையுமே காரணங்களாகின்றன வெறும் நம்பிக்கையும், தத்துவ அறிவும்மட்டுமே ஒரு படைப்பாளியை உருவாக்கிவிட முடியாது. நடைமுறை அனுபவமும் பிரதான காரணம். நீர்வை பொன்னையனது அனேக கதைகள் வடபகுதியின் தொழிலாள இயக்கப் போராட்டங்களைப் பற்றிப் பேசுவது தற்செயலான ஒன்றல்ல, நீர்வை பொன்னையன் என்ற தொழிற்சங்க இயக்கவாதியின் அனுபவங் களே கதைகளாக உருப்பெறுகின்றன. அவர் தனது அனுபவங்களை தனது தத்துவதரிசன வீச்சினுரடாக வெளிப்படுத்துகின்றபோது, அவை கலாபூர்வமான படைப்புகளாகின்றன.
மேற்கூறிய பிரபல எழுத்துகளிலும் பார்க்க ‘புதிய தலைமுறை" என்ற மார்க்சிய சிற்றேடு ஒரு காலகட்டத்தில் தமிழகத்தில் ஏற்படுத் திய தாக்கத்தை எவரும் குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது. பல புரட்சிகர கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் இவ்வேடு அறிமுகப் படுத்தியது. இது தடை செய்யப்பட்ட பின்னர் பரிணமம் என்ற சித் தாந்த ஏடு வெளிவந்தது;
மார்க்சியத்தை நம்புகிற இரு எழுத்தாளர்களான அஸ்வகோஷ்,
கதைப்பித்தன் என்பவர்களுடைய படைப்பை அணுகுவதன் மூலம்,
மார்க்சியத் தாக்கம் எவ்விதம் நவீன சிறுகதைத் துறையைப் பாதித் துள்ளது என்பதனைக் கண்டு கொள்ள முடியும்.
'பின்தங்கிய கிராமங்களின் வறட்சியையும், வாழ்க்கைத் துயரங் களையும் மையமாக வைத்து" பத்தாண்டுகளுக்கு மேலாகக் கதை எழுதி வருகிற கதைப் பித்தன்" தன்னுடைய கதைகளின் இறுதியிலே பரி தாப உணர்வினைத் தோற்றுவிக்கின்றர். சுரண்டலை, வறுமைக் கொடு மையை, அறியாமையை, ஒடுக்குமுறைகளைப் பற்றிக் கூறுவதோடு நின்றுவிடுகிருர். ஆனல் யதார்த்தத்தில் மார்க்சிய சித்தாந்தத்தினுல் புடமிடப்பட்ட ஒரு படைப்பாளியின் கடமை அத்தோடுமட்டுமே நின்று விடுகின்றதா? --நிச்சயமாக இல்லை.
குமரன் 3.

Page 21
துரதிருஷ்டவசமாக மேலே சுட்டப்பட்ட எழுத்தாளர்களிலே பலர் இதேவிதமாகவே கடந்த கால்நூற்ருண்டு காலத்திற்கும் மேலாக எழுதி வருகிருர்களென்பதனை இங்கே விசனத்துடன் குறிப்பிட்டேயாக வேண் டும். இவ்விதத்திலே டொமினிக் ஜீவாவை இங்கே குறிப்பிட்டுச் சொல்லலாம். அவருடைய சிறுகதைத் தொகுதிகளான 'தண்ணிரும் கண்ணிரும்' , ' சாலையின் திருப்பம்', 'வாழ்வின் தரிசனங்கள்", என்பன வற்றை வாசிக்கின்றபோது, கதைப்பித்தன் எழுதிய பழைய சோறும் போர்ன்விட்டாவும் வளர்ச்சி பெற்ற கதைகள் என்பதை உணர முடி யும். கதைப்பித்தன் தனது அனுபவங்களை, தனது தத்துவப் பார்வை யூடே இயல்பாகச் சித்தரிக்கின்ருர். இதனலேயே கதைப்பித்தன் என்ற படைப்பாளி மேல் கொள்கிற நம்பிக்கையை, டொமினிக் ஜீவா போன் ருேரிடம் முழுமையாகக் கொள்ள முடியாது போய்விடுகின்றது. இன் னெரு புறத்திலே அஸ்வகோஷின் "பறிமுதல்’ சிறுகதைத் தொகுதியை எடுத்துப் பார்த்தால் தெளிவான உண்மை புலனுகும். தனது அனுபவங் களை, தத்துவப்பார்வையூடே இயல்பாகச் சித்தரிட்பதோடுமட்டும் ஒரு மார்க்சியக் கலைஞன் ஒய்ந்துவிட முடியாது. தான் சித்திரிக்கிற முரண் பாட்டினுாடாகவே, அவன் விஞ்ஞானரீதியான தீர்வினையும் சுட்டிக் காட்டக் கடமையுள்ளவன். அப்போதுதான் அவன் செழுமையான மார்க்சியக் கலாசிருஷ்டியாளன் என்ற அணிக்குள்ளே தன்னை உட்படுத் திக் கொள்ள முடிகின்றது. அஸ்வகோஷின் ‘பறிமுதல்', மேலாண்மை செ. பொன்னுசாமி, டி. செல்வராஜ், நீர்வை பொன்னையன், செ. கதிர் காமநாதன், பா. செயப்பிரகாசம், செ. கணேசலிங்கன், கொ. ச. பல ராமன், கொ. ம. கோதண்டம், பெனடிக்ற்பாலன், லிங்கன், பொன்னி லன் ஆகியோரதுபல சிறுகதைகள் இத்தகைய சிறப்பியல்புகளைப் பெற் றனவே. ۔۔۔۔۔۔۔
சிறுகதை எழுதவேண்டுமென்ற மன அவசரங் காரணமாகமட்டும் இவர்கள் கதை எழுதுவதில்லை. தங்கள் எழுத்துக்கிருக்கக் கூடிய சமு தாயப் பணியினைப் பற்றிய தீர்க்கமான கொள்கையோடுதான் மேற் கூறிய எழுத்தாளர்கள் எழுதி வருகின்ருர்களென்பதனை இவர்களது கதைகளே நமக்கு அறுதியிட்டுக் கூறுகின்றன.
- மார்க்சியம் என்பது வளர்ந்து வருகிற தத்துவம். புதிய உலகின ஆக்குவதற்கான நெறி. இந்நெறியின் தாக்கத்திற்குள்ளான படைப் பாளிகள், புதிய உலகினை ஆக்கும் போராட்டத்தில் தங்கள் செழுமை யான பங்களிப்பை உலகளாவிய கண்ணுேட்டத்தோடு உருவாக்குவ தற்கு மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் பெருமளவு உதவியிருக்கின்றன: உதவி வருகின்றன.
40 குமரன்

சோஷலிஸ எதார்த்த வாதத்தினை உலகிற்கு வழங்கிய சோவியத் இலக்கியத்திலே, மார்க்சிம் கோர்க்கியின் எழுத்துக்கள் முன்னிடம் பெறுகின்றன. மொழிபெயர்ப்பு இலக்கியத்தைப் பொறுத்தவரை தமி ழிலே கூடுதலாக மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் மார்க்சிம் கோர்க்கி யினதே ஆகும். அவனுடைய "தாய்' நவீனம் மூன்று மொழிபெயர்ப் பாளர்களால் தனித் தனியே மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுள்ளது. அவனுடைய 'அதலபாதாளம்" - நாடகம், வாழ்க்கைக் குறிப்புகள். "தாய் நவீனம், "அமெரிக்காவிலே கட்டுரை, இலக்கியம் - விமர் சனக் கட்டுரைகள், ‘நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன்?" ஆகிய நூல்கள், பல எழுத்தாளர்களுக்குப் போதமளித்து. அவர்களை மார்க்சி யத்தின்பால் ஈர்த்தவை. இதுபோலவே நிக்கலாய் ஒஸ்ரோவொஸ்கியின் "வீரம் விளைந்தது", இலியாஎரன்பர்க்சின் ’வசந்தமே வருக', ஜார்ஜ் குலியாவின் "வஸந்த காலத்திலே ஆகிய நூல்கள் கம்யூனிச இயக்கங் களின் அற்புதமான போக்கினை ஜீவன்ததும்ப எடுத்துச் சொன்னவை. எனவேதான் மார்க்சிய இயக்கங்களால் வசீகரிக்கப்பட்ட படைப்பாளி களே மேற்கூறிய இலக்கியங்கள் பெரிதும் சிந்திக்க வைத்தன. அதே பாணியில் எழுதவும் தூண்டின. இவைகூட மார்க்சிய சித்தாந்தங்களே, இலக்கிய வடிவத்தினூடாக இப்படைப்பாளிகளின் நெஞ்சிலே ஆழமா கப் பதித்தவைதான். ஆகவேதான் 1950ஆம் ஆண்டு காலத்தின் மார்க் சியம் சார்ந்த படைப்பாளிகளிடையே மேற்கூறிய எழுத்தாளர்களின் தாக்கம் - குறிப்பாக மார்க்சிம் கோர்க்கியின் செல்வாக்கு மேலோங்கி நிற்பதன் அவதானிக்க முடிகிறது.
குமரன் சந்தா 6 இதழ்கள் ரூபா 11 12 努射 ரூபா 20 இலங்கையிலும் தமிழ் நாட்டிலிருந்தும் குமரன் இதழ்களை விற்க விரும்புவோர் எழுதுக. ஆசிரியர், குமரன் 201, டாம்வீதி, கொழும்பு-12,
குமரன் 4.

Page 22
காகங்கள்
எங்கள் பின்வளவில் கிளை பரப்பி நிற்கிறது ஒரு சிறிய புளியமரம் அதன் உச்சிக் கிளையில் ஒரு காகக்கூடு ஒரு சோடிக் காகங்கள் பல நாளாய்ச் சுள்ளி பொறுக்கி ஒவ்வொன்ருய்த் தும்புகள் சேகரித்து சொண்டுகளால்
கட்டிய - அழகான் ஒரு கூடு ஒரு நாள் மாலை என் முரட்டு மகன் தலையை இரு கைகளாலும் பொத்தியபடி
9,1795.515GT என்னை க் கொத்துது காகங்கள் என்னைக் கொத்துதென அலறி அடிததுக் கொண்டு என்னை நோக்கி ஓடி வந்தான். காகங்களுக்கு நீ என்ன செய்தாயென்றேன் காகக் கூட்டைக் கொக்கைத் தடிகொண்டு குத்தி விழுத்திவிட்டேனென்று பயத்தினுல் வெலவெலத்தான் நான் பின்வளவு சென்று பார்த்தேன்
என்றல்.
யோ. பெனடிக்ற் பாலன்
கோரமான காட்சி அது அந்த அழகான கூடு நிலத்திலே உருக்குலைந்து கிடந்தது இறகு முளைக்காத குஞ்சுகள் இரண்டு வாய் பிளந்து குப்புறச் சாய்ந்தபடி இறுதி மூச்சிழுத்தன. இரக்கமற்ற பிறவியே காகங்கள் உன்னைக் கொத்தாமல் என்ன செய்யும் தாம் பிறந்த மரக்கிளையில் தாமே கட்டிய கூட்டில் அவை வாழ நீ விடவில்லை தாயும் குஞ்சுகளும் ܚ நிம்மதியாய்ப் படுத்துறங்கும் கூட்டைக் குத்தி விழுத்தினய் விழுந்த கூட்டைச் சிதைத்து நாசஞ் செய்தாய் தவ்வல் குஞ்சுகளைக் கொடூரமாய்க் கொன்ருய் அவை இனி உன்னைச் சும்மாவிடா கொத்திக் குதறும் கொலையும் செய்யுமென்றேன். நான் துவக்கெடுத்துச் சுடுவேனென்ருன்.
நீ ஒரு காகத்தை நீ சுட்டால்
ஒன்பது காகம் ஒருமித்து வரும் உன்னைப் பிராண்டிக் கொத்தும் அவை பின்னல் அந்த இனமே
திரண்டு விடும்
42
குமரன்

MOет штrt அவை செய்யும் ஆர்ப்பாட்டம் ஒன்று திரண்டு வந்து நீ செய்த அநீதியை மாரறிய இரைகின்றன. என்று நான் சொல்ல ஒரு காகத்துக்கும் குந்தியிருக்க இட மின்றி விரட்டிக் கலைக்கின்றேன் இருந்து பாருங்கள் என்று சொல்லி அம்முரடன் பேரினத் திமிரோடு வெறிபிடித் தோடிஞன். துவக்கைத் தூக்கிஞன் ஒடிப்போய் தன் பரிவாரத்தை கூட்டி வந்தான்
பின்வளவில் கல்லெறியும் பொல்லெறியும் துவக்கு வெடிச் சத்தங்களும் காகங்களின் இடைவிடாத இரைச்சல்களும் கொஞ்ச நேரமாய் காதுகள் அடைத்தன. நீண்ட நேரம் செல்லவில்லை என் முரடன் துப்பாக்கி கையில் கொண்டு என்னை நோக்கி ஒடி வந்தான் திரட் டி வந்த பரிவாரம் கால்தெறிக்க ஒடுவதை நான் பார்த்தேன். அப்பா அப்பா
அந்தச் சனிய்ன்கள் ஒன்றுக்கும் பயந்தபாடில்லை துப்பாக்கி தூக்கி நின்றும் அவை என்னைத் துரத்தி வந்து
கொத்துகின்றன. நான் என்ன செய்வேனென்முன் அவை பிறந்த மரக்கிளையில் சுதந்திரமாய் வாழ்ந்து வந்த பறவைக் கூட்டம் அவை இப்போது கூடிழந்து பெற்ற குஞ்சுகளைப் பறிகொடுத்து
நிம்மதி இழந்து அந்தரமாய் நிற்கின்றன. உன் ஆயுதங்களுக்கும் உன் பரிவாரங்களுக்கும் உன் பயங்கரப் பயமுறுத்தல்களுக்கும் உன் பேரினத் தோற்றங்களுக்கும் அடி பணிந்து தலை சாய்க்கும் பறவை இனமல்ல அது எம் கூட்டில் எம்மை வாழவிடு என்ற நீதி கேட்கும் ஓங்காரப் பறவை இனம் சுதந்திரமாய் வாழ்வதற்காய் உயிர் போனலும் உறுதியோடு போராடும் கிறுங்காத உயிர்கள் அவை அவற்றின் உயிர் மூச்சில் கைவைத்த உன்னை இனி அவை நிம்மதியாய் இருக்கவிடா வீட்டு மூலைக்குள் ஒடிப்போய் ஒளித்துக் கொள் என்று சொன்னேன் ஓடி ஒளிந்து கொண்டான் இப்போது அவன் காகங்கள் என்ருல் புலியென்று நினைத்துக் கிலி பிடித்து ஒடுங்குகிருன்.
குமரன்
43