கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1986.03

Page 1
மார்ச் 1986
ரூ. 250
 
 
 


Page 2
“pudrigo) e"(■■ ■、プ』、認リ ‘Ōąī£ Inuírı3ı@-āT)^T)^[ qıloonu@apmtາຊerບອາມພົ@@@@rismųosofi)Gwele‘A ‘JI, →メ
‘ıįssessionsson-a‘lgorossfısī£umŲıņłeaşırııın/“issouro(51 gígioso o usosaegsrus s-a
‘ıøoffisession-s(Úosasmụs@ ‘ıļossusqī£o usozioù unIr-ı法學. issimae|×
regișosofieleışsıfııgste hoog-e "3"|"[
,
":ജ്ഞ تیمم------------ ۔ ۔ ۔ ۔ ۔
Z / € y Z ; ououd ɔɔŋJO peəH *\/N-J-J.\/[,
!'OLT “OD SLN vinns Noo-义 |× opeos"慧*8 N O 1 1 ɔ n \} u s os o ɔ, ɔw N±+w r、
:əɔIJJO ÞeæH
: uolų sauəuildwoo nsəg əŋ ŋIAW
vụlawnym uerbunfhūtī£5ūŢ|
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்"
'Mallikai', 'Progressive Monthly Magazine
SOs Dňéý. - 1986
21-வது ஆண்டு
čDAGSGESTUDEEG
நமது "மல்லிகைப் பந்தல்" புத்தக வெளியீட்டு அமைப்புப் பற்றிப் பலரிடம் நேர்க் கருத்துக்களைக் கேட்டு வருகின்ருேம்.
இப் பிரசுரத் திட்டம் பற்றிப் புதிய புதிய கோணங்களில் ஆராய்ந்து வரும் எமக்கு உற்சாகமான பதில்களும் மனத் திருப்தி தரும் செய்திகளுமே விடையாகக் கிடைக்கின்றன.
நூல் வெளியீடு சம்பந்தமான ஆயத்த வேலைகளையும் தொடங்கி du Guruh.
மாதா மாதம் வெளிவரும் மல்லிகை இதழ்களுக்கு எந்தவித மான இடைஞ்சலும் அற்ற வகையில் புத்தக வெளியீடு நடைபெற வேண்டுமென்பதே நமது பெரு விருப்பாகும். எனவே அதற்கமைய திட்டம் போடுவதிலேயே நாம் மெத்தக் கவனமாக இதுவரை இருந்து வந்துள்ளோம்.
அந்த வகையில் நாம் நினைத்ததற்கும் அதிகமாகவே நாம் நம்மைப் பலப்படுத்திக் கொண்டுள்ளோம். இடையில் ஒரு சின்னச் சங்கடம், திடீர் திடீரென நம்மையெல்லாம் திகைத்துத திணறவவைக்கும் இன்றைய எரியும் பிரச்சினைகளின் வெளிப்பாடுகள் சற்றுத் தாம தித்துச் சிந்திக்க வைக்கின்றன.
அலைகள் ஒய்ந்ததின் பின்னர் தான் ஸ்நானம் என்ற நிலையல்ல நமக்கு, இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சம் சிந்திக்க வைக்கும் தாமதம்.

Page 3
இந்த இருபத்தொரு ஆண்டுக் காலத்தில் பல அனுபவங்களைப் பெற்றுள்ளோம். பல முகங்களையும் இதயங்களையும் அடையாளம் கண்டுள்ளோம்.
நமது பெரு நோக்கத்தைப் புரிந்துகொண்ட நெஞ்சங்களை நாம் இனம் கண்ட வேளையில்தான் தமக்கு இந்தப் புத்தக வெளியீட்டு யோசனையே மனசில் அரும்ப ஆரம்பித்தது எனலாம்.
அதையொட்டியே நமது கருத்துக்களை அத்தகைய இதயங்க ளுக்கு இத்தால் தகவல்களாக தருவதற்கு முயன்றுள்ளோம்.
கூடிய சீக்கிரம் இப்படியானவர்களை மணமறியத் தேர்ந்தெடுத்து "மல்லிகைப் பந்தல்" அழைப்பு மூலம் ஒருங்கு சேர்த்து நமது வருங் காலத் திட்டத்தையும் அதையொட்டி நாம் இதுவரை செய்துள்ள ஆக்கபூர்வமான செயல்களையும் அவர்களுக்கு விளங்கப்படுத்த விரும்புகின்ருேம்,
தூர இடங்களில் இருப்பவர்கள் நேரில் வந்து எம்முடன் தொடர்பு கொள்ள இயலாத நிலை இன்று. அவர்களால் தேர்ந் தெடுக்கப்பட்டவர்களுடன் நாம் என்றுமே தொடர்புகெள்ளப் பின் நிற்கப்போவதில்லை.
இதைப் படிக்கும் நண்பர்கள் "மல்லிகைப் பந்தல்" பிரசுரம் சம்பந்தமாகத் தங்களது கருத்துக்களை எழுதலாம். மணமறியச் சந்திா தந்தவர்களை மல்லிகை இதுவரை ஏமாற்றியதில்லை.
இந்தத் தார்மீக இலக்கிய நேர்மையைப் புரிந்துகொண்டவர்கள் முன்கூட்டியே நமது வெளியீடுகள் சம்பந்தமாக எம்முடன் தொடர்பு கொள்வது நல்லது.
காலத்தின் தேவை இது. கனிந்து வரும் எதிர் காலத்தை மனசில் கொண்டே நாம்”இந்த நூல் வெளியீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த முன்வந்துள்ளோம்.
தமிழ் மக்கள் மீது இன்று கவிந்துள்ள காரிருள் நடுத்தரமான தல்ல என்பது எமக்குத் துல்லியமாக தெரியும். இந்தப் பேயிருள் நிச்சயம் விலகத்தான் போகின்றது. அதற்குப்பின் ஒளி விளக்காக வழி காட்டும் ஒளிக்கதிராக - கலை இலக்கியங்கள் மிளிரப் போகின் றன, அதற்குத் தயாராக முற்போக்குக் கலை இலக்சிய கர்த்தாக் கள் தம்மைத் தாமே தயார்ப்படுத்தும் நிலை தோன்ற வேண்டும். நமது இத் திட்டம் அதற்கு அநுசரணையாக இருக்கவேண்டும் என்பதே நமது பெரு விருப்பமாகும்.
சகல இலக்கிய கர்த்தாக்களும் தம்மால் இயன்றதனைத்தையும் தமது துறை மூலம் வரப்போகும் புதிய தலை முறையினருக்குக்குப் படைத்தளிக்கக் கடமைப்பட்டவர்களாவார்கள்.
அதற்கான பங்குப் பணியைச் செய்வதே நமது நடைமுறை முயற்சியாகும். தமது அணுகு முறையில் கிடைக்கும் சகல பலா பலன்களையும் நாம் நமது மண்ணுக்கே இலக்கியப் படைப்பாகப் பயன்படுத்த விரும்புகிருேம்.

எழுத்தாளர்களுக்கென 6ნიმნZ ஒரு தினம் தேவை
ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள்தான் மிக மிகப் பரிதாபத் திற்குரிய பிறவிகளோ என எண்ணத் தோன்றுகின்றது.
காரணம் அரச மட்டத்தில் சகலவிதமான இருட்டடிப்புஆதரவற்ற நிலை. மக்கள் மத்தியில் கவனிப்பற்ற அலட்சியம். அவர்களின் படைப்பு வெளிப்பாடுகள் பற்றி ஒரு வித மந்த நிலை மனப்பான்மை .
இவைகளின் மத்தியில்தான் இந்த நாட்டுத் தமிழ் எழுத்தா ளர்கள் வாழ்வதற்காகப் போராடிக் கொண்டு வருகின்றனர்.
இவர்களின் இருப்பை- உழைப்பை - தொண்டை- இனங் காட்டக் கூடிய- இனங் காணத்தக்க ஓர் அடையாள அம்சத் தைத் தானும் நாடு தழுவிய முறையில் பொது சனங்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை என்றே சுருக்கமாகக் கூறிவிடலாம்.
நூல்கள் வருகின்றனவே என வாதாடலாம். இவர்களது பெயர்களை அடிக்கடி பத்திரிகைகளில் பார்க்கின்றேமே எனச் சமாளித்துக் கதைக்கலாம். சங்கங்கள் இருக்கின்றனவே என நினைப்பூட்டலாம். ஆனல் இவையொன்றும் முழுமையாக இந்த நாட்டு எழுத்தாளர்களை அங்கீகரிப்பதற்குப் போதுமானவையல்ல என்றே நாம் கருதுகின்ருேம். பொது மக்களின் ஞாபகத்தில் ஆழமாகப் பதியும் ஞாபகச் சின்னம் இன்னும் காத்திரமாக முத் திரை குத்தப்பட வேண்டுமென ஆசிக்கின்ருேம்.
எனவேதான் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கு சேர்ந்து நினைவு றுத்தும் ஞாபக தினம் ஒன்று அவசியம் தேவை என வற்புறுத் துகின்ருேம். w
தொழிலாளி - உழைப்பாளிக்கெனச் சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட பெருந்தினம் ஒன்று உண்டு- அது மேதினம். அது போலவே ஐ. நா. சபைக்கென ஒரு தினம் உண்டு.
ரஷ்யப் புரட்சியை வென்றெடுத்த தினமும், அகில உலக மட்டத் தில் பெருமைக்குரிய தினமாகக் கொண்டாடப்படுகின்றது. நாடு

Page 4
களும் தத்தமது சுதந்திர தினத்தை, குடியரசு தினத்தை, விடு தலை பெற்ற நாளைக் கொண்டாடிக் களிக்கின்றன.
பொது ஸ்தாபனங்களை, கோவில்களை, ஆகியங்களை, டில்லூரி களைக் கவனத்தில் எடுத்துக் கொண்டாலும் அனகளுக்கென ஒரு நாள் ஞாபக தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதை அறிய லாம். அன்றைய தினத்தைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடிச் சிறப்புச் செய்து வருகின்றன.
தனி ம்னிதர்களை எடுத்துக் கொண்டாலும் அப்படித்தான். பிறந்த தினம் தனி மனிதனுக்கு முக்கியமானது. கணவன் மனைவி தமது திருமண நாளே ஞாபகத்தில் வைத்திருந்து வருஷா வரு ஷம் கொண்டாடி வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏன் தேசத் தலுைவர்கள், மகான்கள், தியாகிகலை, கவிஞர்கள். நாட்டுக்காக உழைத்த உத்தமர்கள் போன்ற பிரபல ஸ்தர்களின் நாம ஞாபகமும், அவர்களது பிறந்த தினத்தை ஒட் டியே நினைவு கூரப்படுகின்றது. இறந்த தினமும் அப்படியே ஞாப கப்படுத்தப்பட்டு அஞ்சலி செய்யப் படுகின்றது.
இத்தனை இருந்தும் பேன பிடித்துத் தமது ஆத்மக் குரலைக் கருத்துக்களாக வடித்தெடுத்து இந்த மண்ணிற்குப் பசளையிட்டு இந்த நிலத்தை செழுமைப் படுத்தி உழைத்து வரும் எழுத்தாள ருக்கென ஒரு தினம் இதுவரை காலமும் அனுஷ்டிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. சுட்டிக் காட்டப்படவில்லை.
ஆகவே எழுத்தாளருக்கென ஒரு தினம் சகல இலக்கிய நிறு வனங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு, முடிவு செய்யப்பட்டுப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என ஓர் ஆலோசனை யைச் சகல இலக்கிய நெஞ்சங்களுக்கும் சமர்ப்பிக்கின்ருேம்.
இதில் அபிப்பிராய பேதத்திற்கு இடமிருக்கக் கூடாது. சகல எழுத்தாளர்களும் இந்த ஆலோசனையைச் சற்றுக் கவனத் தி ல் எடுத்து, ஒரு தினத்தை - அது சகலரும் முடிவெடுக்கும் தினம்ாக அமைவது நல்லது- எழுத்தாளர் தினம் என சக மக்களுக்கும் பிரகடனப்படுத்த வேண்டும் என ஆழ்ந்த இலக்கிய உணர்வுடன் கூறிவைக்கின்ருேம்.
இக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் நிறுவனங்கள், எழுத்தாளர் கள், சுவைஞர்கள் தமக்குரிய மட்டங்களில் இதை நடைமுறைப் படுத்தச் செவ்வையான ஆயத்தங்களைச் செய்வதுடன் சரித்திரத் தில் இந்தத் தினத்தைப் பொறிக்கத் தக்கதான ஆலோசனைகளை யும் நல்க வேண்டுமென்பதே நமது மன விருப்பமாகும்.

தேடலில் சதா உழன்று கொண்டிருக்கும் ஒவியர்
ஈழத்துத் தமிழ் ஓவியர்க ளின் மத்தியில் நவீன பாணி
ஒவியத்தின் முன்னேடியாக ஒவி
யர் மார்க் திகழ்கிருர். குறிப் பாகப் பாரம்பரிய ஒவியங்களி லும், சிறப்பாக தினசரிகள், சஞ்சிகைகளில் வரும் மட்டரக மான, வணிக ரீதியிலான ஒவி யங்களிலும் பரிச்சயம் மிக்க பெரும்பாலான ஈழத்துத் தமி ழர் மத்தியில் தனித்துலமும் பரிசோதனை ஆர்வமும் மிக்க மார்க்கின் பெயர் யிரபல்யம்
ஆாாததில் வியப்பில்லை,
தன் பெயர் ஈழத் தமிழர் மத்தியில் அறியப்படாதது பற்றி அதிகம் கவலைப்படாத மார்க் உலகில் வளர்ச்சியுற்றுச் செல் லும் நவீன ஓவிய மரபை அயல் இனத்தரான சிங்க ள மக்கள் உணர்ந்து இரசிக்குமளவு தமிழ் மக்கள் முனையவில்லையே என்ப தையிட்டு மிகவும் கவலையடை கின்ருர்,
33 வயதினரான மார்க் குருநகரில் பிறந்தவர். சிறு பரா யத்தில், சிலை செய்வ  ைத த் தனது பொழுது போக்காகக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்
-சி. மெளனகுரு
காரரான இ ரா ஜே ந் திர ம், மாணவப் பருவத்தில் சென் பற்றிக்ஸ் ஆசிரியராயிருந்த பிதா மார்சலின் ஜயக் கொடி, வெளி வில் இலவச ஒவிய வகுப்பு நடத் திய ஓவியரான பெனடிக்ற் என் பவர்களின் தூண்டுதல்களும் உதவிகளுமே இவரது ஓவிய யின. ஒ வியர் பெனடிக்கிட மிருந்து கற்ற உருவ ஒவிய
(பிகர் ட்ருெயிங்) வரைவு இவ
குக்குப் பெரிதும் உதவியது.
இயல்பாகவே கலை ஞ ண க முகிழ்ந்த மார்க் தனது 20வது வயதில் அரசாங்க நுண்கலைக் கல்லூரியிற் சேர்ந்து 5 வருடங் கள் பயிற்சி பெற்ருர். தன் திறமை காரணமாகப் பல ஸ்க லர்ஷிப்புகளை அங்கு பெற்றர். டேவிற் பெயின்ரரின் வழிகாட் டல் இவரை ஊக் கி யது. ஸ்ரான்லி அபேயசிங்க இவருக்கு இம் ப்ர ஸ னி ஸ ஒவியரான ரூபோவை அறிமுகம் செய்து வைத்தார். ரூபோவை அறிய முன்னமே மார்க்கின் ஒவியங்கள் ரூ போ பாணியிலமைந்தமை இவரது தனித்த வளர்ச்சியின் அடையாளமாகும்,

Page 5
நுண்கலைக் கல்லூரி யில் இருந்தபோது ஹாட்லிக் கல்லூ ரிக்கு ஒவிய ஆசிரியராக நியம னம் பெற்றர். அங்கு அதிபர் பூரணம்பிள்ளையின் உதவியுடன் பல ஒ வி யக் கண்காட்சிகளை நடத்தினர். 1958 தொடக்கம் கொழும்பில் கலாபவனத்தில் நடைபெற்ற ஒவியக் கண்காட் சிகளில் இ வ ர து ஒவியங்கள் இடம் பெறத் தொடங்கின. அங்கு இவரது நவீன பாணி ஒவியங்கள் பலரது பாராட்டுக்க
ளையும் பெற்றன. 1958 இல் கவனர் ஜெனரல் பரிசையும். 1957 இல் ஒப்சேவர் பரிசையும்
பெற்றதுடன் கலாபவனக் கண் காட்சியில் அடிக்கடி சிறந்த ஒவி யங்களுக்கான பாராட்டுப் பத்தி ரங்களையும் பெற்றர்.
யாழ்ப்பாணத்தில் த வீன பாணி ஓவியத்தை வளர்க்கும் நோக்குடன் நவீன வகுப்புகளை நடத்தினர், ரமணி, கிருஷ்ண ராசா போன்ருேர் இவர் பண் ணையிற் பயிற்சி பெற்றவர்களே. இன்றும் ஒவியர் சிவப்பிரகாசத் துடன் இணைந்து 20 மாணவர் களுக்கு மேற் பயிற்சியளித்து வருகிறர். இவ்வண்ணம் ஈழத் தமிழர் மத்தியில் நவீன ஒவிய நாயகனக மிளிர்கிருர். இவரு டன் நுண்கலைக் கல்லூரியிற் படித்தவர்களான ஏ. ஏ. கருண ரத்தின, ஒலிவர், குணதாஸ் போன்றவர்கள் அரச ஆதரவின் காரணமாக வெளிநாடு சென்று பிரபல்யம் பெற்றதையும் நினைவு கூர்கிருர், "
மார்க்குடன் கதைப்பது ஒரு தனி அனுபவம். தனித்துவமும், ஆளுமையும், கற்பனை விசால மும் கொண்ட கலைஞன் அவ ருள் கிடக்கிருன்.
ஒவியக் கல்லூரியை விட்டுப்
புறப்படுகையில் டேவிட் பெயின் ரர் “நீ காண்பதை, உணர்வதை வரை. மற்றவர்களைப் போல வரைவதை விடு" என்று கூறி யதை தான் மத்திரமாக ஏற்ற தாக மார் க் கூறுகிருர், ஒவ் வொரு ஓவியனும் தன்னைத் தன் ஒவியத்திற் பிரதிபலிக்க வேண்டு மென மார்க் கூறுகிறர்.
தத்ரூபமாக, யதார்த்தமாக வரைவதுதான் ஒரு காலத்தின் வழமையாக இருந்தது. கமெரா வந்தபின் தத்ரூபத்தை கமெரா, பிசிறு இல்லாமல் காட் ւգ Ամ போது கமெரா புலப்படுத்தாத பகுதிகளையும் உணர்வுகளையும் ஓவியங்கள் புலப் படுத் தத் தொடங்கின. ஞ் ஞா ன க் கண்டுபிடிப்புகள் போல ஒவியத் திலும் புதிய புதிய கண்டு பிடிப் புகள் ஆரம்பமாயின. கலைஞ னின் கற்பனைத் திறன் ஒவியத் தில் வெளிப்படலாயிற்று. நவீன பாணி ஒவியத்தின் தோற்றமே இதுதான்.
மனம் ஒர் உணர்வு நிலைக் குள் அகப்பட்டுப் ப  ைடக் க வேண்டுமென்ற எண்ணம் தோன் றியதும் உடனே தான் தன் அனுபவத்தை வ  ைர வ த ராக மார்க் கூறுகிறர். மனதில் எழும் உணர்வுகளை பல்வேறு விதங்க ளில் வரைகிருர், புதிய புதிய உத்திமுறைகளைக் கையாளுகின் படைப்பு ஒரு பி ரச வ வேதனை என்று கூறுகிறர். தனது படைப்புகள் அத்தனையையும் தன் குழந்தைகளாகவே கருது கிருர், தன் ஒவியங்கள் பிரசுர மாகவேண்டும் புக ழ  ைட ய வேண்டும் என்ற அவசரம் இவ
ரிடமில்லை.
6
யதார்த்தமாக ஆரம்பத்தில் வரைந்த இவர், தன் உணர்வு களைப் புலப்படுத்த அந்தப் பாணி

போதாது என்பன த க் புதிய பாணிகளைத் தேடியதாகக் கூறுகிறர். வர்ணங்களை அழுத்து வதன் மூலமும் கோடுகளை வரை
வதன் மூலமும் தன் உணர்வு களைப் பின்னல் தான் வரைந்த ஒ வி யங் களில் வெளிப்படுத்தி னேன் என்கிருர், தன் மனதில் எழும் எண்ணங்களைப் புலப் படுத்தப் புதிய புதிய உத்திக ளேக் கண்டுபிடிக்கிருர் . தேட லில் சதா உழன்று கொண்டிருக் கும் கலைஞஞக இவர் காணப் படுகிருர்.
தன் மனதில் எழும் உணர் உணர்வுகளைத் தான் விரும்பிய வாறு புலப்படுத்த விரும்பினல் தன்னை ஒருவேளை இம் மரபு வழிச் சமூகம் பைத்தியகாரன் என்று கூறிவிடுமோ எ ன் று மார்க் கூறுகையில் முரண்படும் சமூகச் சூழலில் வாழும் உண் மைக் கலை ஞ ணி ன் துயரம் தொனிக்கிறது.
நடனமாடும் சிவன், அர்த்த நாரீஸ்வர சிவன், ကြီး႔ကြီ႔မ္ဘီ? கண்ணகி, அன்னத்தைத் தூது விடும் தமயந்தி போன்ற உரு வங்களை ரவி வர் மா பாணியில் பொம்மைகள் போலப் பார்த் துப் பழகிய நாம், மார்க்கின் நவீன ஒவியத்திற்கூடாக இவர் களைப் பார்க்கும் போது பிர மித்து விடுகிருேம். சிவ நடனத் தின் வேகம், கண் ண கி யின் கோபாக்கினி என்பன ஒத்திசை
வுடனும், வேகத்துடனும் திமி
றிக் கொண்டு மார்க்கின் ଗର୍ଧ
யங்களிற் புலப்படுகின்றன.
ஜமினி ராய், பிக்கபஸோ
போன்ற ஒவிய விற்பன்னர்கள் தமது ஒவியத்தில் வீரியத்தைக் கிரா மிய க் கலைகளிலிருந்தும் பெற்றனர். இவர்களை மிகவும் மதிக்கும் இவர் தாமும் பல
சு னி டு கற்பனைகளையும் உருவங்களையும்
கி ரா மி யக் கலைகளிலிருந்தே பெற்றதாகக் கூறுகிருர்,
எல் கிறகோ என்ற ஸ்பானிய ஓவியரை இவர் மிக வும் விரும்புகிருர். தன் காலத் தில் நிலவிய பழைய பைசாந் திய பாணியிலிருந்து புதுமை யான பாணியில் தன் எண்ணங் களைப் புலப்படுத்த விரும்பினர். எல் கிறகோ. ஆரம்பத்தில் இவ ரது புதிய பாணி ஓவியங்கள் கூடாக பகிடிகள் போலக் கரு தப்பட்டன. ஆனல் முதலாம் உலக மகாயுத்தத்தின்பின் நவீன ஒவியம் வள ர் ச் சி பெறத் தொடங்கிய பின்னரே கிறகோ வின் ஓவியங்கள் விளங் கி க் கொள்ளப்பட்டன. Lorridia) F நினைக்கும்போது எனக்கும் இந்த நினைவுதான் வந்தது. மார்க்கின் ஒவியங்களும் இனித்தான் விளங் கிக் கொள்ளப்பட்டு இரசிக்கப் படப் போகின்றன.
மார்க்கின் படங்களைச் சிறு பத்திரிகைகள் தமது முகப்புக் களில் வெளியிடுவதன் மூலம் இவரது பாணி ஓவியத்தை இர சிக்க ஈழத் தமிழ் மக் களை ப் பயிற்றலாம். இவ்வகையில் அ3ை பத்திரிகை மார்க்கின் ஒவியங் களே வெளியிட்டமை குறிப்பி டத்தக்கது. மார்க்கின் ஒவியங் களைக் கண்காட்சிக்கு வைக்க ஓவிய ஆர்வமிக்க வசதிபடைத் தோர் உதவலாம்.
உலோகாயுத வாழ்வுக்குள் உழன்று கொண்டிருக்கும் ஈழத் துத் தமிழர்கள் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆளு மையும், கற்பனையும், அர்ப்பண மும் மிக்க ஓர் ஓவியக் கலைஞ
னைப் பற்றி சிந் தி ப் பதுடன்
அவரை ஊக்குவிக்கவும் வேண்
டும். *

Page 6
கருத்தரங்கு
*கலைஞனுடைய ஆழ்ந்த அனுபவ வெளிப்பாடு இல்லாமல் வெறுங் கோஷங்களாக அமைகின்ற எழுத்துக்களையோ படைப்புக் கஃயோ இலக்கியமாக மார்க்ஸியக் கோட்பாடு அங்கீகரிப்பதில்லை. அதே சமயம் உருவமும் உள்ளடக்கமும் முக்கியம் என்பதையும் அது வற்புறுத்துகின்றது. உள்ளடக்கம்தான் உருவத்தை நிர்ண யிக்கின்றது என்பது அதன் ஆழ்ந்த கருத்தாகும்"
24-2-86 அன்று முற்போக்கு எழுத்தாளர் சங்க யாழ் கிளை நடத்திய நோன்மதிக் கருத்தரங்கில் பேசும்போது திரு, க. சண்முக லிங்கம் "சமூகம் - இலக்கியம் - கருத்துநிலை" என்ற தலைப்பின்கீழ் கருத்துரையாற்றும்போது குறிப்பிட்டார்.
இக் கருத்தரங்கிற்கு திரு. நா. சோமசுாந்தன் தலைமை வகித்தார். ஏராளமான கலை இலக்கியச் சுவைஞர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்:
1903 தொடக்கம் 1905 வரை நடைபெற்ற தீவிர அரசிய்ல் இயக்கத்தில் பாரதி பங்கு கொண்டதுடன் தொடர்ந்தும் இந்திய அரசியலில் அவர் ஆர்வம் காட்டி வந்தார். எனவேதான் பாரதி ஒரு மாபெரும் கவியாக மலர முடிந்தது. சில எழுத்தாளர்கள் சம காலத்தில் பேரும் புகழுடனும் வாழ்வார்கள். எதிர்கால ஆழ்ந்த பார்வையற்ற இப்படியானவர்கள் வாழும் காலத்திலேயே மதிக்கப்படுவார்கள். பாரதி மரணித்ததின் பின்னர் வாழ்வதின் இரகசியம் அவன் அக்காலத்தில் கொண்ட கொள்கையேயாகும்,
தமிழ் மக்கள் வந்தேறு குடிகள், அவர்கள் ஒடிப்போக இந்தியா என்ருெரு நாடு உண்டு என்ற எண்ணம் பெரும்பான்மை மக்கள் மனதில் ஊன்றிப் போயிருந்த வேளைBல் இந்த நாட்டுத் தமிழ் மக்கள் இந்த மண்ணுக்கே உரியவர்கள், அவர்களுக்கென ஒரு பரம்பரையும் உண்டு என உரத்த குரலில் இலக்கியத்தில் கடந்த சுாலங்களில் ஒலித்த பெருமை முற்போக்கு எழுத்தாளர் களுக்கு உண்டு. கடலில் மிதக்கும் பனிமலை போன்றவர்தான் கைலாசபதி. கடலில் நுனிப்பக்கத்தைத்தான் பலர் பார்த்தார்கள் விமர்சித்தார்கள். ஆனல் ஆழமாகக் கடலின் அடிப்பாகத்தில் விரிந்து பரந்து விஸ்தீரணப்பட்டுள்ள கைலாசபதியை எதிர்காலம் தான் நன்கு விமர்சிக்க முடியும். வையாபுரிப்பிள்ளைக்குப் பின்னர் கைலாசபதியும் சிவத்தம்பியும் வானமாமலையும் தமிழுக்குச் செய்த ஆக்கபூர்வமான தொண்டு அளப்பரியது. யார் என்ன சொன்ன போதிலும் கைலாசபதிதான் தமிழ் இலகியத்திற்கும் விமர்சனத் திற்கும் கனதியான பரிமாணத்தை ஏற்படுத்திஞர்" என்ருர்,

புதிய பாடம்
M8088-888-888-88 & X & X888 & 9
இரண்டு ஆண்டுகளாகச் சுற் றிச் சுழன்று வந்த கடைக்கு அவன் இன்னும் இரண்டொரு
நாட்களில் L 97 Ano uu mi e? eseo l - கொடுத்து விடப் போகிருன். இப்படியொரு கடையில் வந்
தமர்ந்து வேலைபார்க்க வேண்டு மென்று மக்பூல் முன்பு எப் பொழுதுமே நினைத்தது கிடை யாது. இங்கு அவனின் பிரவே சமே தற்செயலாக நிகழ்ந்தது தான்.
ஜி. ஸி. ஈ. உயர்தரப் பரீட் சையில் சித்தியடைந்தபின் ஏதா வது பொருத்தமானதொரு உத்தி யோகமொன்றில் அமர்வதே அவ ளது நோக்கமாகவிருந்தது. ஆனல் அந்த நோக்கம் நினைத்தவுடன் நிறைவேறிவிடக் கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. ஏதாவது தற்கா லிகமாக வேலை பார்த்தால் வீட்
டுக்குச் சுமையாக இருக்காதே என்று நினைத்தான். கணக்கு வேலைகளில் அவனுக்கு நல்ல
அறிவு இருந்தால்தான் அப்படி இலேசாக இல்யாஸ் ஹாஜியாரின் இரும்புக் கடையில் சேரும் வாய்ப் புக் கிட்டியது.
மக்பூல் வந்து சேர்ந்தபோது அக்கடையில் வேலை செய்யும் ஊழியர்களின் தொகை பத்தாக அதிகரித்தது. அந்தப் பகுதிக்கே அதுதான் பெரிய கடை. ஏகப் பட்ட வேலைகள், ஆஞல் அவ னுக்கோ பேஞ பிடிக்கும் வேலை As rair. Wsib5 (Ta Yavair y05.5
-திக்குவல்லை கமால்
வரிகளிலிருந்து அப்புறப்பட்டு
நிற்கவில்லை.
"மக்பூல் எங்கடை மொத லாளி ஒங்களுக்கொரு சோதின
வெப்பார். அதில பாஸாளுத் தான் இங்க நிக்கேலும். . ஒருவன் இப்படிச் சொல்லி
வாயெடுப்பதற்கு முன்பே
இங்க வேலச்கி வார வங்க ளெல்லாம் சல்லிப்பெட்டிய தூக் கிக்கொணுபொக வாரெண்டு தான் எங்கட மொதலாளி நெனக் கிய" அடுத்தவன் இப்டிச் சொல்லி அர்த்தத்தோடு சிரித்தான்,
மக்பூலுக்கு எதுமே வினங்க வில்லை. ஆளுல் ஒர் உண்மை மாத் திரம் அவனுக்குத் தெளிவாகியது. வேறென்ன ? பணம் சம்பந்தப் பட்ட விஷயத்தில் மிகவும் கவன ofs இருக்கவேண்டுமென்பது தான்.
ரெண்டு பேரும் கொஞ்சம் வெளங் க ச் சொன் ன நல்லம்? அதனை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர்களிடமே Gas unresir.
"ம் . இன்னம் ரெண்டுமுனு நாளில எல்லாம் வெளங்கும் . " அப்ப எங்கள நெனவு வரும்" இதற்குமேல் விளக்கம் கொடுக்க அவர்களுக்கு அவகாசமிருக்க வில்லை. கடமை அழைத்துக் கொண்டிருந்தது.

Page 7
கிடுவது இப்படியான்வேலைகளையே அவன் ஆாம்ப வாரத்தில் தினத் திரம் செய்து வந்தான். அவன் வர்த்தகப் பிரிதி படித்ததன்
Tானமாக இந்த வே32 செய்வது விவனுக்குச் சிரமமாகப் படவில்லை. நி3 அவசர அவசர மாக இக்காரியங்களைச் செய்வது முதலாளியின் வேனத்தை ஈர்க் orruð Fúláv8). அவருடைய அனுப வத்தில் தனக்குப்பிள்ளை யென்ற பெயரோடு வேலைக்கமர்ந்தவர்க Gardianrub பஸ் ஸிப் படிப்புப்
பெற்றவர்களல்ல, பழக்கப் பயிற்சி பெற்றவர்கள்தான்.
அன்ருெரு நாள். (f):56)rr6}io
மூகமலர்ச்சியோடு மக்பூலை என்று மில்லாதவாறு அழைத்தார்,
தொழுதிட்டு தேர
T6T sca கணக்கப்புள்ள
"மஃரிபு
மீக்கிதானே. எங்கட இப்ராஇம் தான் க டக் க ன க் கெல்லா ந் பதிஞ்ச எதுக்கும் பாத்துக்கொண்ட நல்லமென." என்று வாயெல்லாம் பல்லாகக் கேட்டார்.
ogr) மொதலாளி. நான் செக் பண்ணிப் பாக்கியன் (ps லாளி முதல் தடவையாக சிரத் தையோடு விடுத்த வேண்டுகோன் அல்லவா? அவரின் p5äsavu o'u grrr யத்தை வென்று கொள்ள வேண் டுமல்லவா?
'மிச்சம் நல்லத இங்க மே சைக்கு மேல வெக்கியன். மூணு பொத்தமீக்கி என்றவாறு கபேட்டிலிருந்து எடுத்து அங்கே வைத்தார்.
சக ஊழியர்கள் வழமைபோல் வெளியே சென்றுவிட்டார்கள். டவுன் பள்ளியில் இஷா தொழுத ன்புதான் மீண்டும் அவர்கள் வந்து சேர்வார்கள் மக்பூலுக்கு
எடுத்துப்
f
மாத்திரம் அன்று அவர்களோடு உலாச் செல்ல முடியவில் லை. அவன் வேருெரு பொறுப்பைச் சுமந்து விட்டானே.
சூடாக ஒரு கப் தேநீர் அருந்திவிட்டுக் கணக்குப் புதத கங்களும் கையுமாக அமாநதான் அவன். கணக்குகளைச் சரிபார்த்த படி படபடென்று தாள்களைப் புரட்டிக் கொண்டிருந்த மிக பூல ஒரு கணம் தொடர்பு அற்றவனது ஸ்தம்பித்து நின்றன். அந்தக் கணக்குப் புத்தகத்துக்குள்ளே. நூறு ரூபாய்த் தாளொன்று. அவனைப் பார்த்து ரதோ சொல் லிக்கொண்டிருந்தது.
தற்செயலாக எப்டொதோ இதற்குள் சிக்கிக்கொண்டதோ அல்லது என்னைச் சோதிப்பதற் காக முதலாளி வைத்துத் தந்து விட்டாரோ. இப்படி இரு Gajcy’s அவனது சிந்தனை குழம பியது. அதேவேளை அன்று ಆಕ್ಲ நண்பர்கள் கூறிய வார்த்தைகள் மீண்டும் அவனது காதுகளுக்குள் எதிரொலிப்பது போலிருத்தது.
"மக்பூல் எங்கட முதலாவி ஓங்களுக்கொரு சோதின வெப் பார். அதில பாஸாஞல்தான் இங்க நிக்கேலும் வாரவங்கெல் லாம் சல்லிப் பொட்டிய தூக்கிக் கொணு போக வாரென்டுதான் எங்கட மொதலாளி நெனக்கிய?
இந்த வார்த்தை களில் தொனிக்கின்ற உண்மையை இப் பொழுதுதான் அவனுக்கு வெளிச்சமாகியது. அதனல் அந துப் பணத்தாள் அந்த இடத்தில் இருந்ததோ அதே இடத்தில் வைத்துவிட்டு தினது கடமையைச் செய்து முடித்தான்.
உண்மையாகவே முதலாளி கணக்குகளைச் ச ரி பார்க்க க் கொடுத்தாரோ அல்லது அவனைப் பரீட்சிக்கத்தான் கொடுத்தாரே

எ ன் ப ைத ப் பற்றியெல்லாம் மக்பூல் அளவுக் கதிகம் யோசித்து மண்டையை உடைத்துக்கொள்ள வில்லே .
இப்படியான ஆரம்பத்தோடு அவன் இரண்டு வருடங்களை அங்கே கடத்தியாககி விட்டான். இந்த இரண்டு வருடத்திலும் அவன் நம்பிக்கையும் நாணயழு மிக்கவனகத்தான் கடமையாற்றி வந்துள்னான்.
சில மாதங்களுக்குமுன் வங்கி களுக்கு ஆட் சேர்ப்பதற்கான பரீட்சைக்குத் தோற்றியிருந்த அவன் அதில் தெரிவு செய்யப்பட் டிருந்தமையே இதற்கான காரண
DfT(34s).
"ம். எங்குளுக்குப் பொறகு வந்து எங்குளுக்கு முந்திப் போகப் போற. அதுவும் பெங்கிலவேல. மிச்சம் நல்லம் எங்களேம் மறக்க வாண . மொதலாளிக்கெண்டா ஒங்கடமேல நல்ல பிடி: கைநெ றயச் சந்தோஷம் தந்துதான் அனுப்பியொண்டும் மக்பூலின் நகை பர்கள் கவலையும் கிண்டலு மாக தங்கள் கருத்தை முன்வைத் தனர்.
இங்க வந்ததில ஓங்கட கூட் டாளிததன கெடச்சது மட்டுத் தான் மிச்சம் தன் உண்மையான மனேநிலையை அவன் பிரஸ்தாபித் தான்.
மக்பூல் இங்க வாபுள்ள" முதலாளி தன் தடித்த குர்லால் அவனை அழைத்தார். தனக்கு விடு
தலை கிடைத்து விட்டதுபோன்ற
உணர்ச்சியோடு அவன் அவரருகே சென்ருள். .
ம். நான் வாணுன்டா நீங்க கேக்கப்போரு, ஒங்கட முன்னேற் றத்துக்குத்தான்ே போற எங் கீந்தாலும் நல்லா இரிங்கொ. இதில ஒங்கட பாக்ச்ை சல்வி மூவாயிரத்து முன்னூறு ரூவரக்கி
I
எண் ணிப் பாத் தெடுங்கொ ஏதோசும்மா கெர்டுப்ப்ம் போன்ற பாவனையோடு நீட்டினர்.
“சரியாத்தானே எண்ணிக்கும் (p56 nati என்றவாறு தந்ததைப் பெற்றுக்கொண்டு தனதறைக்குச் சென்ருன் மக்பூல். டங்களாக பணத் தாள்களை எண் ணிப் பழகிய சிேலோவி தவறவிடு Q'trprm" srsörgði?
பனத்தை எண்ணி பார்த்த போது உண்மையிலேயேமு, தவறு விட்டிருப்பது போல தான் தெரிந்தது. இரண்டு psör y முறை எண்ணியாகிவிட்ட்ான். அதிலே AD" (351 TÜš stroir ger முபபத்தி நான்கு இருந்தன. முப்புத்திமூன்றல் *வ அவரது கணக்குப்படி இருக்கவேண்டும்
"என்னடா இன்ன? t ഞTണ്ണി
முடியல்லயா? மிச்சமா தந்திட் டார்போoக்கு பகிடிய்ாய்ச் சொன்னபடியே சேர்தான் நண்ப ஞெருவன்.
"மெய்தான் Literreir
8 Disilly ருவக கூட இரிக்இச தவறித் தந் திட்டார் போவீக்இ மிக்யூல் சொன்ஞன்.
கலகலவெண்று சிரித்தான் அவன்
'சடசி டைம்லேம் இப்பிடிச் G*rÉéGsg9or? தாங்க எவ்வ ளவு நம்பிக்கையோட சம்பாதிச்சி கொடுக்கிய. நாங்க படுகிய கஷ் -த்துக்கேத்த சம்பளத்தை தந் திட்டாவது எங்கள சந்தேகிச்சா மனசிக்கி ஆறுதல். அவன் அப் போது மிகுந்த உணர்ச்சி வசத் கோடுதான் பேசிஞன் என்பதை அவனது முகம் பிரதிபலித்தது.
மக்பூல் நேரத்தைப் Lunttfë தான் இரவு எட்டு மணி. L - 1 டென்று தனது பேக்கைத் தயார் படுத்தித் தோளில் போட்டுக்
é6T6ðv frör

Page 8
*எஞ இந்த ராவேல பொகப்
போற. வெளணக்கே பொகேலு
மேன்" நண்பர்கள் இடைமறித்
தார்கள். س
அப்பிடித்தான் நெனச்சிக்
கொண்டீந்த ஆன இப்பவே
போறதுதான் நல்லம் போலீக்கி" சற்றே வித்தியாசமான மனேநில அவனது வார்த்தைகளில் தெறித்
35g •
"சரி பெய்த்திட்டு வாரன? பதிலே எதிர்பார்த்து நிற்காமல்
அவர்களிடம் விடைபெற்றுக் |
கொண்டு முன்னே வந்தான்.
மொதலாளி வெளன க் கி பொகத் கான் ஈந்த, கணக்கு முடிச்ச பொறகு நிண்டா ம். சந்தேகப்பட இடமீக்கில்லயா ..? இந்தாங்க நீங்க தந்த பாக்கிச் சல் லீல இருநூறு ரூவக் கூட இருந்த என்றவாறு மேசையில் இரண்டு தாள்களைப் போட்டுவிட்டு பதி av åt Ka - GT S) i urrrrr Lodio unrGoogsáš கிறங்கிவிட்டான்.
ஏதோ அவனது நேர்மையைக் கடைசி நேரத்திலும் உரைத்துப் பார்க்க ஒரு நூறு ரூபாய்த் தாளை மேலதிகமாக வைத்தார் போலும்! அவனே அவரை நையாண்டி பண் ணுமாப்போல் இரண்டு தாள்களை எறிந்து விட்டுப் போய்விட்டான்.
ஏதோ சொல்ல வாயெடுத்
தும் முடியாமல் போன நிலையில் முதலாளி கடைச் சிப்பந்தி*ளைப்
பார்க்க, அவர்கன் முதலாளி யைப் பார்க்க, ன  ைத யுமே சாட்டை செய்யாமல் மக்பூல்
வெகு வேகமான நடந்து கொண் டிருத்தான்
தான் வைத்த பரீட்சையில் தானே தோல்வியடைந்து, புதிய தொரு பாடத்தையும் படித்தவ ராக வேர்வையில் தோய்ந்தபடி இருக்கையில் அமர்ந்தார் முத லாளி. O
மழை நாளில் . . .
@肪岛一
வெற்றிலையைச் சப்பி சற்று நீரைத் துப்ப - மனித மேனிகள் ஈரக் கன்னிகளைக் கட்டியணைக்கும் !
பள்ளக் கட்டடங்களில் அமைந்திருக்கும் நீர் அரங்குகளில் - "தவளை" இசைக் குழுவினரின் கச்சேரிகள், காதைப் பிளக்கும் !
மூலே, முடுக்குகளில் அகுதைகளாய்க் கிடந்த குடைக் குமரிகளுக்குத் திருமணம் நடக்கும் சூரியக் காதலனின் சுக வரவிற்காப்
சில - புஷ்பப் பெண்டிர்கள் ப்ரார்த்தனை புரிவர் 1
மேனியை தானத்தில் கூதல் = உதை பத்தாட்டம் ஆரம்பமாகும்
ரழை இல்லத்தின் ஒல்க் குடிசைகளின் கூரைக் கைதிகள் தென்றல் காவலாளிகளால் கைது செய்யப்பட்டதால் ை
குடிசை மண்டபங்கள்
மகாவலி களாகும் .
- ரீ, எல். ஜவ்பர்கான்
72

எதற்காக எழுதினேன்
- சோ. தியாகராஜா
ஈழகேசரி பண்ணையைச் சேர்ந்தவர். “சோதி" என அழைக் கப்பட்டவர். கனக, செந்திநாதன் அடிக்கடி இவரது பெயரை வியந்து பேசுவார். இளந் தலைமுறையினருக்கு இவரது நாமம்
தெரியாமல் இருக்கலாம்.
இன்றும் வாழ்ந்து சிந்தித்துக்
கொண்டு செயல்பட்டு வருபவர் இவர்.
- ஆசிரியர்.
எதற்காக எழுதுகிறேன் என்ற தலைப்பு இன்றை நிலையில் சோம்பேறித்தனமா யிருப்பதால் "எழுதினேன்" என்பதுதான் பொருத்தமாயிருக்கும்.
பத்திரிகை, வனெலி, சினிமா இவற்றுள் எழுத்துத்துறை சிக்கிக் கொண்ட நிலையில் எழுத்தாளர் பலரும் அதற்காக, இதற்காக என்று கூறுவது சுயதம்பட்டமா கவே முடியும்.
எமது குடும்பத்தில் தந்தை பார் சிறந்த தமிழ்ப் படிப்பாளி. தமையனுர் படிப்பு முடிந்ததும் எழுத்தில் நாட்டங் கொண்டார். தமிழ் நாட்டுப் பயணமும், எழுத் தும் அவருக்குக் கைவந்த சாவி யம் இந்த வியாதி என்னையும் பற்றியது அத ஞ ல் எழுத்து மெல்ல அரும்பியது. w
முறையான தமிழ்ப்படிப்பும், வடமொழிப் பரிச்சயமும் இலக் கியப் படைப்புகளுக்குத் துணையா யிருந்தன. மெல்லிய விமர்சன மும் வெளிவந்தது.
3.
பற்றி
ஆங்கிலத்திற்போலத் தமி ல் தளிப்பட்ட பாடல்கள் இல் லாத குறை நீண்ட காலமாக மனத்தில் கிடந்தது. அதனைப் "ஈழகேசரி அதிபரிடம் குறைப்பட்டேன். அவர் ஆசிகறி இடம் ஒதுக்கித் தந்தார். ஈழ கேசரி மேடையில் பல கவிதை கள் Rெவந்தன. தொடர்ந்து உவேட்ஸ் வொர்த், கிறிஸ், லாங் பெலோ, ஷெல்லி முதலிய ஆங் கிலப் ருெம் புலவர்களின் பாடல் களையும் தமிழில் வடித்தேன். உலேட் ஸ்வோத்தின் கு க் கூ (குயில்) என்ற பாடலே குறிற் பாடல்கள் பல எழுத வழிகாட்டி யது. ஷெல்லியின் வானம்பாடி யைத் திருப்பித் திருப்பி எழுதியும் அதன் இசை நன்கு அமைய வில்லை. என்னதான் சொன்கு லும் அந்நிய மொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டுவரும் எது வும் மூலமொழியின் சுவையைத் தருவது குறைவு.
அந்நாட்களில் யாழ்ப்பா ணத்து முச்சந்தியில் (தற்போது

Page 9
வைரவர் கோவிலிருக்குமிடம்) வீரகேசரி தம்பிப்பிள்ளை கடை யில், காலணுப் பேப்பர் காந்தி, இந்துஸ்தான், கலாமோ கினி, கிராம ஊழியன், சிவாஜி முதலிய தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் கிடைத்தன. அவற்றை விடாமல் படிப்பது வழக்கம், இதுவும் பேனைக்கு வேலை கொடுத்தது. இந்த வாசனை தமிழ்நாட்டு யாத் திரையில் நாட்டங் கொள்ளச் செய்தது,
நமது யாத்திரைக்கு முன்பு ஒன்றை நினைவுகூர வேண்டும்:-
ஈழத்தில் எழுதுபவர்கள், வஸ்ளேப் பற்றித் தமிழ் நாட்டில் 1940 -க்கு முன்பு உள்ள பலருக்கு ஏதும் தெரியாத நில தான் இருந்தது. "கண்டி, கதிர் காமம் பார்த்தவர்கள்" என்று தான் எங்களை நினைவு கூர்வார் கள் . ஈழத்தில் தமிழ் பேசுவார் களா ? பலர் இருக்கிருர்களா ? என்ற கேள்வியைப் பலரும் கேட் பது வழக்கிம். தமிழ் நாட்டின் எழுத்து நிலையை ஈழம் அறிந்த அளவு அங்குள்ளார் அறிந்திருக்க வில்லை. நிலையில் இப்படித்தானிருந்தது. மெல்ல மெல்ல எழுத்துப் பாலம் ஏற்பட்டதென்பதை எல்லோரும் அறிவர்.
சென்னைக்கு முதலிற் காலடி
வைத்தபோது தினசரி"யில் டி.
எஸ். சொ. (காலணுப் பத்திரிகை ஆசிரியராயிருந்தவர்) இருந்தார். வ. ரா வும் பக்கத்திலிருந்தார். புதுமைப்பித்தனும் அங்கு பணி புரிந்தார். அன்று பல காரியால யங்களிலும் பேட்டி, விருந்துப சாரமும் நடந்தது.
அந்நாட்களில் மணிக்கொடி சில காலம் தொண்டு செய்தபின் பொருளாதார ரீதியில் வற்றி விட்டது. அதற்காக உழைத்த
வர் பலர். 1940-ம் ஆண்டு வரை
தொடர் பு இல்லாத
மெல்லத் திருச்சிக்குச் சென்று விட்டது. அங்கு துடிப்புள்ள இளைஞர் பலர் இலக்கிய ச்ேவை யில் ஈடுபட்டனர். படித்துக் கொண்டிருந்த யு. ஆர். ராஜ கோபாலன் கலாமோகினியை வெளியிட்டான். அவரைப்பற்றி கோவை. கும்பகோணம் முதலிய இடங்களிலும் பல உதயமாயின. கவிதையை அழ டன் வாசிப்ப தில் தீரரான திருலோக தோ ராம் இனிய நண்பராகிவிட்டார். இது ஒரு புறம்.
தமிழ் நாட்டின் எழுத்துப் போராட்ட வரலாறு நீண்டது. do Sjöstrų (3 urrrrr . காலத்தில் மக்கள் விழிப்படைய_பல் மொழி களிலும் நாவல், சிறுகதைகள் எழுந்தன. பிரமணர் பிராமண ரல்லாதார் இயக்கமும் பெலப் பட்டது. தனித் தமிழ்க் கட்டி யார் சென்னையில் படையெடுத் துத் தொண்டாற்றினர். இதுவும ஒருவிதத்தில் தமிழுக் குத் தொண்டு செய்தது எனலாம். எழுத்து சிறைவாசத்தையு: தந் தது. துடிப்புள்ள இளைஞர் பல ரும் எழுதினர். இம்மாற்றங்க ளால் பெண்ணைப் புனைந்து உன். னத சிருஷ்டியாக அமைந்த சம் பிரதாயம் மெல்லத் திரும்பியது. இக்காலகட்டத்தில் இருவித சக்தி நிலவியது. ஒன்று ஆண்டு வந்தவ னின் அகந்தை, இரண்டு மக்க் ளின் விவேகமற்ற போக்கு இவ் விரண்டின்பாலும் எழுந்த சிக்கல் கள் நன்கு புனை யப் பட் டன. தேசியத்தில் மக்களை விழிப்பாக்க பாரதி முதல் பலரும் எழுதினர். உள்ளப் போக்கு மாறிவிட்டது. இதனை மாற்ற நிலைகள் எங்கள் நாட்டில் ஆரம்பத்தில் நிகழ வில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
காலப் போக்கில் பிராமண நிலைக் கவிஞர்கள் பழகுமொழிக் கவிஞராகும் நிலை ஏற்பட்டது: இது ஒர் புதிய திருப்பம், கற்பனை
巫会

யில் மிதந்து பெண்களைப் புனைந் தால் கூலியாட்களின் கவிஞர்க ளாகி விட்டனர். இது இன்றைய நில . இதனை விமர்சிக்கலாம்:- ஆண் பெண் உறவு விஷயத் தில், கேவலமும் செளந்தர்யமும் காணப்படுகிறது. இன்று நம் மிடையே வரும் பல புதுச் கவிதை கள் உயிர்ச் சத்துடன் சொற்களை நேரடியாக அள்ளி வீசுகிறது. இவற்றிற்கு நன்றி தெரிவிக்காம லிருக்க முடியாது. இதனைக்கண்டு மகிழ்ந்து பழந் தலைமுறக் கவிஞர் கள் புது நிலைக்கேற்ப மனத்தைத் சிறந்து காட்டியவர்களும் இருக் கத்தான் செய்கிருரர்கள்.
சமுதாயக் கருவியாய் விட்ட பின்பு எழுத் துப் பாதையில் கவிதை முக்கிய இடம் பெற்று விட்டது. கவிதையின் அமைப் பைப் பற்றி நீண்ட / காலமாக விசாரந்தான்.
யாப்பு விதிகளை மீறும் கவி தைகளுக்கு சாமா னி ய ர் க ள் இடந்தருவது குறைவு. சத்துள் ளவை நிற்கின்றன. பகிரங்க மாகக் கவிதை படிக்கப்படுவத
"u፡፡፡"ካሡ።ቦሠጣካካሠ፡፡ዞ"ካ፡suሠ"ካካካ “፡፡ሠ"”ካb {፡፡"ካባ፡ „ዞዞ"ቫኳሠሱaዞም°ካካ፡ ሓዞ'
ஞல் கண்டனங்கள் குறைந்து விட்டன, கவிதை ஆத்மாவைத் தொடவேண்டும். அதற்கு உரை தேவையில்லை.
தற்காலத்தில் சமூகப் பிரச் ஒஜன32ளக் கொண்டு எழுதுபவர் கள் முற்போக்கு எழுத்தாளர்கள் இவர்கள் மார்க்சீயத்தில் ஊறிய வர்கள். மார்க்சீயமும் முதலே மாறு த லே ய டை ந் த து வி லொன்று ஸ்டாலினிலும். தற்
போது இதற் கெதிரிடையான
போக்குமுளது.
எப்படியெல்லாம் சிந்தித் தோம், எழுதிஞேம் என்ற பீடி கையில் இவ்வளவும் புலம்ப வேண்டி வந்தது.
உள்ளூர் மேடையாகிய "ஈழ கேசரி"யில் தொடங்கி பல இடங் களிலும் பயமின்றி ஏறி ஆடி னுேம். ஈழகேசரியில் எழுதிய எழுத்து வியாபாரம் என்ற கட் டுரையும் கிராம ஊழியனில் எழு திய "இலக்கியப் பாதையில்" என றதும் என்னை உயர்த்தி விட்டது. எழுதி முடிந்ததும் நிம்பதி, மன நிறைவுதான் மிச்சம். 哆·
"መካካሠሠዞ"ካuu"ዞዞ"ካካväጀ።ዞም“ካ፡ ጓ
சகல சோவியத் புத்தகங்களும்
இங்கே கிடைக்கும்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்களின் நாவல், சிறுகதைகள், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேவையான
விஞ்ஞான,
வாழ்வுக்குத் தேவையான சகல
தொழில் நுட்ட நூல்கள்
மற்றும் நவீன புத்தகங்களும்
இங்கே பெற்றுக் கொள்ளலாம். மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
40, சிவ்ன் கோயில் வடக்கு வீதி, யாழ்ப்பாணம்.
124, குமாரன் ரத்தினம் ருேட், கொழும்பு 2.
(' liturgio“ allis' Angio lius' "ካq፡፡፡ሠ““ካuag፡ሠ“ካካb፡፡፡፡፡፡“ካ፡ ፡፡፡” “ካሣዔ፡TM” ̊ 'assa!'
| S

Page 10
சென்ற இதழ் தொடர்ச்சி
சுந்தர ராமசாமியின் கருத்துக்கள்
பTடுபடும் விவசாயி உழைக்க உழைக்க மேலும் ஏழ்மைப் பட்டுக் கொண்டே போகிருன். இவ்வளவு பற்ருக்குறைகளும் ஊணங்களும் கொண்ட உலகத்தில் ஜீவன்கள் பரஸ்பரம் அன்பு கொண்டு வாழ்ந்து, ஒருவருக்கொருவர் ஆறுதலையும் மனத் திருப்தி யையும் அளித்துக் கொள்ள முடியும். ஆனல் உலகம் இந்த வழி யைக்கூடப் பின்பற்றுவதாகத் தெரிவதில்லை. இந் நிலை தா ன் கு. ப. ராஜகோபாலனை வருத்தம் கொள்ளச் செய்கிறது. இந்நில
யில் எதிர்வினையே அவருடைய கலைப் படைப்புக்கள். "சதைக் காரன் கர்வம்", "குழந்தைகள் கொலு", "உயிரின் அழைப்பு", தாயாரின் புத்தி", "பண்ணைச் செங்கான்", "அடிமைப் பயல்",
"வாழ்க்கைக் காட்சி" போன்ற கதைகள் இவரது உலகத்தை நமக்கு இனங்காட்டுகின்றன.
இந்த நூற்றண்டின் ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் பெண் ணுரிமை பற்றிய கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்பட்டன. விடு தலே இயக்கத்தின் கூரான அலையாக இது. எழுந்தது. குடும்மங் களில் பெண்களின் கேவலமான நிலையை நம் மனதில் தொடும்படி நுட்பமாகவும், கூராகவும், மிகைப்படுத்தாமலும் கு. ப. ராவைப் போல் சொன்னவர்கள் எவரும் இல்லை. பல கதைகளில் பெண் மையின் அவலத்தை வெகு நன்ருகக் கூறுகிறர். "உயிரின் அழைப்பு" என்ற கதையில் வரும் வார்த்தைகளைப் பாருங்கள். "புருஷன் இறந்ததால் புஷ்பம் மட்டும் போகவில்லை. போகம் மட்டும் போக வில்லை. சுய மரியாதை போயிற்று. பெண்மையே போயிற்று. உயிர் போகவில்லை. வெறும் மிருகம் அல்ல. மிருகத்திலும் கேடு கொண்ட் அவமதிப்பு ஜென்மம், அழகு போகவில்லை, ஆனந்தம் போயிற்று" என்ருர்.
கு. ப. ராவின் கதை அமைப்பு மிகவும் எளிமையானது சிறு கதை மீது அவர் கொண்டிருந்த பிரக்ஞையை அடிப்படையாக வைத்து இவர் தம் கதைகளை நிச்சயத்தன்மையோடு உருவாக்கு கிருர். இவர் கதைகளில் மொழி ஆற்றும் பங்கு நம் கவனத்துக்கு வருவதேயில்ல. மொழியை கலை மறைத்துக் கொண்டிருக்கிறது. நாரால் பின்னப்பட்டு நாரையே மறைத்துக் கொண்டிருக்கும் பூக்களைப் போல், கூர்ந்து தனியாகக் கவனித்தால்தான் புற உலக அதிர்வுகளையும் நுட்பமாகக் கோடுகிழிக்கும் கருவியாக இம் மொழி இவரிடத்தில் பயன்பட்டிருப்பது தெரியும்.
தமிழில் கு. ப. ரா. வின் வழி வந்தவர்கள் என்று பலரைச் சொல்லலாம், ந. சிதம்பர சுப்பிரமணியன், சி. சு. செல்லப்பா
16

எம். வி. வெங்கட்ராமன், கரிச்சான் குஞ்சு, தி ஜானகிராமன், கு அழகிரிசாமி, கிருஷ்ணன் நம்பி, அசோகமித்திரன் போன்ற பலர். இவர்கள் கு. ப. ராவின் உலகத்தை மீண்டும் அப்படியே பிரதிபலித்தார்கள் என்பது அல்ல. எந்தப் படைப்பாளியும் தற் கொலைக்கு ஒப்பா ன அந்தக் காரியத்தில் ஈடுபடமாட்டான். கு. ப. ராவின் உலகத்தில் இவர்கள் தங்களுக்கு உவப்பான பிராந்தியங்களில் பல புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினர் கள் என்று கூறலாம். தன்னளவில் வேறுபாடுகள் இருப்பினும்கூட பல பொதுவான குணங்களில் இவர்கள் கு. ப. ராவை ஒத்தவர் கள். மென்மை, தாழ்ந்த சுருதியில் விஷயங்களைக் கூறும் பாங்கு, சிக்கனம், தொணி, குறிப்புணர்தல், சிறுகதை வடிவத்தைப் டற் றிய பிரக்குை, ஆர்ப்பாட்டமற்ற எழுத்துப் பாங்கு, அழகுணர்ச்சி போன்ற பல குனங்களை எடுத்து ஆாாய்ந்தோம் என்ருல் இவர் கிள் கு. ப. ராவின் கலேப் பள்ளியைச் சோர்ந்த மாணவர்கள் என்பது தெரியும்.
கு. ப. ராவைவிடவும் சக்தி வாய்ந்த கலைஞஞக புதமைப் பித்தனைக் கூறலாம். புதுமைப்பித்தன் 1931 இல் எழுத ஆரம்பித்து 1948 வரையிலும் எழுதியவர். அவரது படைப்புலகப் பயணம் சீராக அமையவில்லை. ஒரு ஆவேசமான் ஆரம்பம்; பின் சில இடைவெளிகள்; பின் மீண்டும் சில அற்புதமான படைப்புக்களை உருவாக்கும் காலம். இவ்வாறு அமைந்திருக்கிறது. இவர் ஆரம்ப காலத்தில் எழுதிய கதைகளில் உருவ அமைதி காணக் கிடைக்க வில்லை. ஆஞல் யதார்த்தத்தின் மீது இவர் கொண்டிருந்த வலு வான பிடிப்பை இவரது ஆரம்பகாலக் கதைகளே காட்டுகின்றன.
பொதுவாக் முரண்பாடுகளை அம்பலப்படுத்தியவர் என்று இவ ரைக் கூறலாம். தனி மனித நலன்களுக்கும் சமூக நலன்களுக்காக வும் உள்ள முரண்பாடு; மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கு மான முரண்பாடு; ஆசைகளுக்கும் நடைமுறைகளுக்குமான முரண் யாடுகள் ஆகியவற்றை இவர் அம்பலப்படுத்தினர் இவர் தோன்றி பதோடு சிறுகதைப் பயிர் தமிழ் மண்ணில் வேர் பாய்ச்சிவிட்டது. அன்று வரையிலும் பலரும் சொல்ல கூசிக் கொண்டிருந்த தமிழ் வாழ்வின் இருட்பகுதிகள் இவரது பேணுவால் கலை ஆய்வுக்கு உட் படுத்தப்பட்டன. இவரது கதை உலகம் விரிவானது அனுபவச் செழுமை கொண்டது; கூரிய பார்வை கொண்டது. இவரது கோணம் புரட்சிகரமானதும் பழமையை மறுக்கும் தன்மை கொண்டதுமாகும். ஆரமப காலக் கதைகளில் புரட்சி மனத்தின் வெளிப்படையயன கொட்பளிப்பால் கலே அமைதிக்குப் பங்கம் ஏற் பட்டிருக்கிறது. "வழி", "பொன்னகரம்", "கவந்தனும் காமனும் போன்ற கதைகள் மிக முக்கியமான விஷயங்+ளை நம் கவனத் துக்கு கொண்டு வருகின்றன. ஆனல் உணர்ச்சிக் கொந்தளிப்பால் இக் கதைகள் பூரண வடிவம் பெறவில்லை.
சுமார் 20 வருடங்களுக்கு முன்ல்ை நான் எழுதிய கட்டுரை யில் அவரது இயல்புகள் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள் ளேன். "சுதந்திரமாகச் சில வார்த்தைகள் சொல்லி இவரை உணர்த்த முயலும்போது மேதாவிலாசம் பொருந்தியவர். நீதி கண் அலட்சியம் பண்ணியவர், தான் வாழ்ந்த காலத்தின் கோலத் தில் அதிர்ச்சி தெரிவித்தவர், மனித இயல் புகளை ரசிப்பவர், எழுத்தை ஆத்மார்த்தமாகக் கையாண்டார், தனி மனிதனின்
7

Page 11
மீது விழும் கட்டுப்பாடுகள் - அவை குடும்பம், தேசம், தேசியம், கட்சி, சமூகம், மொழி, கலை உலகு போன்ற எற்தத் திசையிலி ருந்து வந்தாலும் சரி - அவற்றை ஏற்றுக் கொள்ளப் பிடிவாத மாய் மறுப்பவர், தன்னுடைய உணர்வுகளை பிரதானமாக மதித்து அதன் வழியே செல்பவர், வாழ்க்கையைத் திருத்தவோ, மாற் \றவோ, செப்பனிடவோ அல்லது சீர்குலைக்கவோ உருவாக்கப்படும் தத்துவங்களையும் அதன் செயல்வடிவமான ஏற்றங்களையும் அவ நம்பிக்கைக் கண் கொண்டு பார்த்தனர்; பக்தி, பவித்திரம், அமானுஷ்யம் இவற்றிலிருந்து எழுந் பீடங்களை காலங்காலமாக மனிதன் அதன் முன் தலைகுனிந்து நின்று களிம்பேறிப் போன பீடங்களை - தனது பலவீனமாக கைகளால் அசைத்து அப்பீடங் களில் உள்ள லிக்கிரஹங்கள் அசைவதைக் கண்டு உ த ட் டி ன் கோணத்தில் சிரிப்பை வரவழைத்தக் கொண்டனர் என்றெல்லாம் கூறலாம்.
ஒரு அர்த்தத்தில் புதுமைப்பித்தன் அவருடைய காலத்தில் ஓங்கி நின்ற தனிமரம், வ, வே. சூ. ஐயரின் காலத்திலிருந்து புதுமைப்பித்தன் காலத்திற்கு காலதேவன் கணக்குப்படி இடை வெளிகள் பத்தாண்டுகள்தான் என்ருலும், மங்கையர்க்கரசியின் காதலியிலிருந்து புதுமைப்பித்தன் கதைகளுக்கு வரும்போது ஒரு கலைஞர், பல பத்தாண்டுகளை வேகமாக விழுங்கிவிட்டதஞலேயே இக் கதைகள் சாத்தியமாயின என்று தோன்றத்தான் செய்கிறது. புதுமைப்பித்தனின் வெற்றியும் தோல்வியும் சோதனையும் நவநவ மான அம்சங்களை இழைத்து தொழில் படும் நோக்கும் வளம் மண்டிக் கிடக்கும் ஒரு காலப்பகுதியின் விளைவு போல் தென்படுகி றதேயன்றி ஒரு தனிப்பட்ட க%லஞனின் காரியமாகத் தோன்றுவ தில்லை.
அவருடைய கதாபாத்திரங்கள் பல்வேறு மன இயல்பு கொண் டவர்களாக இருப்பினும் பொதுவான குணும்சம் அவர்கள் எல் லோரும் சாதாரண மனித சுபாவங்களுக்குட் எண்ணங்களுக்கும் கட்டுப்பட்டவர்கள் என்பதே. கனவு காண்பதும் கண்ட கனவு பொய்த்துப் போவதும், மீண்டும் கனவு காண்பதுமாக இருக்கிருர் கள் இவர்கள். இல்லாமை என்னும் கொடுமை அவர்களைக் குத றிக் கொண்டிருக்கிறது அவர்சளில் ஒருவருக்சேனும் கடவுளை இன் னும் தன் கண்ணுல் காணவில்லை என்ற ஏக்கம் வதைப்பதாகத் தெரியவில்லை. ஒரு பொய் சொல்லிவிட்ட பாவத்தின் குடைச்சலில் கண்ணுறங்க முடியாமல் போய்விடுகிற உத்தம ஜீவிகள் அல்லர் அவர்கள். சமூக அந்தஸ்தைப் பெற்று வீடும் வயலுமாய் பெண் களை சீரும் செளந்தரியமுமாய் கல்யாணம் செய்து கொடுத்து, வயோதிபத்தில் அப்பாடா என்று இருக்க நமக்கு லபிதம் உண்டா என்று ஏங்குகிற ஜீவன்கள், மேல் அட்டில் இருப்ப வர் களை ப் பார்த்து கொட்டாவி விடுபவர்கள்: பரோபகாரம் என்ற கொடிய பழக்கத்திற்கு இந்தப் பொல்லாத காலத்திலும் ஆட்பட்டு வாயை இளித்து விடுகிருேமே என்ரு எண்ணுகிறவர்கன் அவர்கள். லட்சி யத்தின் கறைபடிந்த முகம் ஒருவருக்கோனும் இல்லை
புதுமைப்பித்தனின் சிறந்த கதைகளாக, “காலனும் கிழவியும்" "தெருவிளக்கு", "மனித இயந்திரம்", "செல்லம்மாள்", "சுப்பையா பிள்ளையின் காதல்கள்", "காஞ்சனை" ஆகிய கதைகளைக் கூறலாம் "சாப விமோசனம்" என்ற கதையில் அவர் தன் சித்திரத்தை எட்டி
8

யிருப்பதாகவும் சொல்ல முடியும். தமிழில் இதுவரையிலும் எழு தப்பட்டுள்ள கதைகளில் ஒரு கலைஞனின் வெற்றியை இத்தனை வனுவாக கோஷிக்கும் கதை எனக்குத் தெரிந்த வரையிலும் மற் ருென்று இல்லை. م
பிச்சமூர்த்தியின் படைப்புலகம் மணிக்கொடியில் தொடங் கிற்று நடுவில் சுமார் பத்து வருடங்கள் இடைவெளிவிட்டு மீண் டும் ஐம்பதுக்கு மேல் ஆரம்பித்து எழுபது வரையிலும் ஊக்கத் தோடு எழுதினர். "மோகினி", "பதினெட்டாம் பெருக்கு" "ஜெம் பரும் வேஷ்டியும்", "மாங்காய்த்தலே", "பிச்சமூர்த்தி கதைகள்" ஆகிய கதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவரது படைப் புலகத்தை ஒரு ஆன்மீக உலகம் என்று சொல்ல வேண்டும். மத உணர்வுகளையோ ஆசார அனுஷ்டானங்களையோ போற்றும் உல கம் அல்ல இவருடையது. பாசி படர்ந்து கிடக்கும் வாழ்க்கையில் அடிப்படையான ஒரு ஆன்மீகப் பண்பைக் கண்டு மேல் நிலப் பயணம் மேற்கொள்ளத் துர ண் டு ம் நம்பிக்கை இவருடையது. உயிர்களின் கூட்டத்தை கொழுந்து விட்டெரியும் ஒரே ஜ"வாலை யாகக் கண்டது இவரது தரிசனம்.
இவரது "தாய்" என்ற கதையை எடுத்துக் கொள்லோம்: இந் தக் கதையில் மனைவியை இழந்துவிட்ட ஒருவன் தன் குழந்தை யுடன் தனியாக ரயிலில் பயணம்செய்கிருன். அந்தக் குழந்தைக்கு கக்குவான் இருமல். அது இருமிக் குலைக்கிறது. குழந்தையைத் தூக்கத்தில் ஆழ்த்த அவன் தன்னிடமிருந்த பிராந்தியை எடுக்கி முன். 'பிராந்தியைத் தொடாதீங்க, பிள்ளையை எங்கிட்டக் கொடுங்க" என்று குறுக்கிடுகிறள் மற்ருெரு பெண். குழந்தையை இந கைகளாலும் தனது உலர்ந்த மார்போடு சாய்த்துக் கொள் கிருள். குழந்தையின் இருமல் ஓய்கிறது. "அவள் நெஞ்சில் அருள் சுரக்கிறது. ஆனல் மார்பில் பால் கரந்ததோ?’ என்று கதையை முடிக்கிருர் அவர். அவள் மனதில் சுரந்த அருளையே பிச்சமூர்த்தி வேண்டி நிற்பது. "தர்மத்தையும் ஒழுக்கத்தையும் இரு கரைகளா கக் கொண்டு வாழ்க்கை என்னும் நதி ஓடிக் கொண்டிருக்கிறது? என்ருர், "நாம் நம் பண்பாட்டை இழந்தோம் எனில் நாம் நம் வாழ்வைக் குலைத்துக் கொண்டவர்கள் ஆவோம்’ என்பது அவரு டைய தீர்மானம். ܚ
பிச்சமூர்த்தியின் ஆத்மீக உலக்ப் புற உலகத்துடன் தொடர் பைக் கத்தரித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கும் உலகம் அல்ல. தனி மனிதனின் விமோசனம் ஏக்கம் முக்தி, பக்தி, கடவுளைச் சென்றடைதல் போன்ற பிரச்சினைகள் சார்ந்தவையும் அல்ல. புற உலகின் மீதே பிச்சமூர்த்தி தன் ஆத்மீகப் பார்வையைச் செலுத் துகிறர். பற்ருக்குறை என்ற ஊணம் மனிதர்களைப் பிடுங்கும் அவஸ்தையைக் குறித்து இவர் மிகு ந் த மனித நேயத்துடன் கதைகளை எழுதியிருக்கிருர், ஆஞல் பொருளாதார தன்னிறைவு ஒன்றே முழுமையான வாழ்வுக்கு மனிதனே இட்டுச் செல்லும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் அல்லர் அவர் என்பதே நாம் அவரது படைப்புலகத்தை வைத்து அனுமானிக்க வேண்டியிருக் கிறது. இந்திய ஆன்மீக மரபைச் சார்ந்தவர் அவர் என்று சொல் வதில் தவறு ஒன்றும் இல்லை. இன்னும் பொருத்தமாக இந்திய
19

Page 12
ஆன்மீக ஞானம் மேற்கில் தோற்றுவித்த பாதிப்பால் பாதிக்கப் பட்டவர் என்று கூறலாம். அமெரிக்க ஆத்மஞானிகளான எமர்சன், தோரோ, வால்ட் விட்மென் ஆகியோரால் பாதிக்கப்பட்டவர். மேற்கே பாதிப்பை நிகழ்த்தியது இந்திய ஆத்மீகப் பண் பின் அடிப்படைகளே. பிச்சமூர்ததியிடம் இந்த அடிப்படைப் பண்பு களே பேசுகின்றன. சிருஷ்டி சூட்சுமமான பேராற்றல் கொண்டது எனவும், அதன் தாத்பரியத்தை நாம் அறிவால் முட்டி மோதித் தெரிந்து கொள்வது கடினம் என்றும் இவர் கருதுவது போல் நமக்குத் தோன்றக்கூடும் ஜீவராசிகள் ஒன்ருேடு ஒன்று தத்தம் அடிப்ப்டை ஒற்றுமைகனே உணர்ந்து கூடி வாழ வேட்கை கொள் வதே பிச்சமூர்த்தி விரும்பும் உலகமாக இருக்கக் கூடும். அறிவை யும் வசதிகளையும் யந்திரங்களையும் பெருக்கிக் கொண்ட உலகத் திற்கு மாருக, மனிதராசி தனனுணர்வு பெற்று தன்னை எசமாக உணர்ந்து கூடி வாழும் உலகமே பிச்சமூர்த்தி ஏங்கும் உலகம் ஆக இருக்கும். தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களின் வரிசையில் சற்றே ல(ஒய பூர்வமான சிந்தனையாகத் தோன்றினலும் ஜீவன்கள் மேல் வழிந் தொழுகும் அன்பில் இந்த அளவில் பரவசம் கொண்டவர்கள் வேறு எவரும் இல்லை.
பிச்சமூர்த்தி இயற்கையின் ஆற்றலில் மிகு ர் த நம்பிக்கை கொண்டவர். இயற்கையிடமிருந்து மனிதன் கற்றுக் கொண்டு வாழ்ந்தால் அவன் மேலான நிலையை எட்டிவிடக் கூடும். மனித நேப்மற்ற விஞ்ஞானத்தின் ஆபத்தையும் கண்டவர். "உயிர் வளர் வதற்குத்த டன் விஞ்ஞானம் இருக்கிறது. உயிரை அழிப்பது என் agai) விஞ்ஞானம்தானே அழிந்து போகும்" என்ருர், இவரது சிறந்த கதைகளாகத் தாய்', "வானம்பாடி', "காலம்" ஆகியவற்றைக் கூறலாம். இடைவெளி விட்டுப் பின் எழுதத் தொடங்கியபோது பிச்சமூர்த்தியின் அணுகலிலும் ஒரு மாற்றம் நிகழ்த்தது. அவரது கதை வில் அனுபவ பரிமாற்றத்திற்கு அவசியமான உணர்வுகள் பின்னெதுங்கி அறிவு பூர்வமான முடிவுகளும் ஒரு ஞானியின் பற் றற்ற நிலையும் வெளிப்பட ஆரம்பித்தன.
நாம் இதுகாறும் பரிசீலனை செய்து வந்த சிறுகதை எழுத்தா ளரான கு ப. ராஜகோபாலன், புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி ஆகியோரிலிருந்து மெளளி பெரிதும் வித்தியாசப்பட்ட கலைஞர். மெளனி வந்த வழியைப் புலப்படுத்தும் இலக்கிய மரபுச் சரடு ஒன்றும் இல்லை. அவர் முன் உதாரணங்கள் அற்ற கலே ஞர் இலக்கியத் தளத்தை விட்டு ஆத்மீகத் தளத்திற்குச் சென்ருேம் என்ருல் இந்திய வேதாந்த விசாரத்தை அடிப்படையாகக் கொண் டவர் அவர் என்று சொலலலாம். இசையின் செல்வாக்கு ஊடுருவி நிற்கும் உலகம் இவருடையது படைப்பின் தீவிரம், ஆத்மார்த் தம், மிக மேலான நிலையில் செயல்படும் தன்மை ஆகிய அகங் களில இவர் இவருக்கு முன் வந்த கலைஞர்களுடன் ஒப்பிடத் தகுந்தவர். மெளனியை ஒரு விதத்தில் கலைஞர் என்றும் கூறலாம். இவா கதைகளில் புறத்தனம் மங்கிவிடுகிறது. நமது சரிசய உலகத் தின் சாயங்கள், சாட்சிகள், புறக்காட்சிகள் இவற்றையும் மெளனி
யின் கதைகள் உதறிவிடுகின்றன.
(தொடரும்)

தென்னுப்பிரிக்கக்
கொடுமைகள்
- அலெக்சாந்தர் மும்பாரிஸ்
J
ܗܝ
தென்ஞப்பிரிக்கச் சிறைகளிலுள்ள நிலைமை பற்றி அலெக்சாந்தர் மும்பாரிஸ் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இந்தக் கட்டுரையை வோல்க்ஸ்டிம்மி என்னும் ஆஸ்டிரியப் பத்திரிகை வெளியிட்டுள்ளது. மும்பாரிஸ் சற் பாது பாரிசில் ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசி ைபிரதிநிதியாக
இருந்து வருகிறர்.
அவர் எழுதிய கட்டுரையை இங்கு
1972-ம் ஆண்டு எங்கள் ர ஏ ன் சிதோழர்கள் சட்டவிரோ தமாக எல்லையைக் கடப்பதற்கு நாங்கள் உதவி செய்து கொண்டி ருந்தோம். அப்போது என் மனைவி பும் நானும் கைது செய்யப்பட் டோம். சிறிது காலத்திற்குப் பிறகு என்னுடைய மனைவி விடு தலை செய்யப்பட்டாள் ஆறுநாள் வரை தென்னுப்பிரிக்கப் பொலீ சார் என்னைச் சித்திரவதை செய் தனர், என்னைக் கொன்று விடுவ தாகவும் பயமுறுத தினர். எனி னும் வெள்ளேயர்களாகிய எங் களைவிட கறுப்பர்கள்தான் தென் ளுப்பிரிக்கச் சிறைகளில் மிகமிக அவதிப்படுகின்றனர். அவர்கள் மிருகத்தனமாக மிலேச்சத்தன மாக நடத்தப்படுகின்றனர். அத னைச் சொல்லவே நாக் கூசுகிறது. சிறைகளில் அவர்கள் பல வகை களிலும் பெரிதும் கொடுமைப் படுத்தப்படுகின்றனர். அவர்கள் மின்சார அதிர்ச்சிகளுக்கு உள் ளாக்கப்படுகின்றனர். அவர்களது
நகங்கள் பிடுங்கப்படுகின்றன மூர்ச்சையாகும் வரை அவர்கள் அடித்து நொறுக்கப்படுகின்றனர்,
விசாரணை தடைபெற்று வந்த போது, பிரிடோரியாவில் மரண தண்ணனை விதிக்கப்பட்ட கைதி களுக்கான அ  ைற யி ல் நான் அடைக்கப்பட்டிருந்தேன். அங்கு ஒவ்வொரு நான்கு பேர் தூக்கி லிடப்பட்டு வந்தனர். தென் ஞப்பிரிக்கத் தேசபக்தர்களைத் தூக்குத் தண்டனை நிறைவேற்ற அழைத்துச் செல்லப்படும் ஒவ் வொரு சமயத்திலும் அவர்க ளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகை யிலும், அவர்கள் தூக்கிலிடப் படுவதை ஆட்சேபிக்கும் வகையி லும் கைதிகளாகிய நாங்கள் ஒரே குரலில் பாடுவோம். இதன் பின் னர் நான் ஒரு வட் டா ர ச் சிறை க்கு மாற்றப்பட்டேன். அங்கு வெள்ளையர்களும் சறுப்பர் களும் தனியாகப் பிரித்து வைக் கப்பட்டிருந்தனர்.
龙及

Page 13
உணவு உடை. இதர வசதி கள் ஆகியவற்றைப் பொறுத்த வரையில் சிறையிலும் அப்பட்ட மான பாரபட்சப்போக்கு கடைப் பிடிக்கப்பட்டு வந்தது. ஓர் அறை யில் எட்டுக் கறுப்பர்கள் அடைக கப்பட்டனர். ஆனல் வெள்ளை யர்கனாகிய எங்களுக்கோ ஒவ் வொருவருக்கும் ஓர் அறை அளிக் கப்பட்டது. சித்திரவதை Q 9 வதிலும் Lrr 1l -gold errl -L-
பட்டது. நாங்கள் பெரும்பாலும் ,
изG த்தவ ஒடுக்கு முறைக்கே :ෂුද්,$'%' வெளி உலகிலிருந்து எங்களை அறவே தனிமைப்படுத்தி எங்களது மன உறுதியைக் குலைப்பதே இதன் நோக்கம்.
சிறையிலிருந்து தப்பியபிறகு இன ஒதுக்கலை எதிர்த்துப் போரா டுவதில் முன்னின்று பங்கெடுத் துக்கொண்டேன்.
ன ஒதுக்கல்-எதிர்ப்பு இயக் கம் ఏ கில ஆண்டுகளில் புதிய கெடுபிடிகளை எட்டியுள் ளது என்பதை இங்கு குறிப்பிடு வது அவசியம் ஏ ன், சி. யின் அறைகூவலுக்குச் செவிமடுத்து, நிறவெறியர்களின் ஆட்சியைத் தூக்கியெறிய தமது சக்திக் குட்பட்ட அனைத்தையும் செய்யத் தென்னப்பிரிக்க மக்கள் 2. பூண்டுள்ளனர். கடுமை :: நீதிநெருக் கடி நாட்டை அதலகுதலப்படுத்தி வருகிறது: பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மே லை ய சார்ப்பரேஷன்களைச் சார்ந்திருக்கும் அவல நில பெருகி வருகிறது; ரேண்டின் நாணய மாற்று விகிதம் மேன்மேலும் வீழ்ச்சியடைந்து வருவதால் மக் களின் வாழ்க்கைத் தரங்கள் சீனித்து வருகின்மன,
நிறவெறி ஆட்சியை எதிர்த் துப் போர்க்கொடி தூக்கி ஆர்ப் பாட்டம் செய்பவர்கள் இப்
அச் கி ர ம
போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மட்டுமே அல்ல. சொவெட்டோ எழுச்சி ஏற்பட்ட 1976-ல் அவர்கள் அத்தனை பரி பக்குவமடைத்தவர்களாக இருக்க வில்லை. ஆளுல் இன்று நிலைமை அடியோடு மாறிவிட்ட்து. இப் போது ஆர்ப்பாட்டக்காதர்கள் ஸ்தாபன ரீதியில் நன்கு ஒன்று திரண்டவர்களாக உள்ளன : ஏ.என்.சி.யின் தலைமையில் எந்த நோக்க ங் களு க் கா க த் தாம் போrாடுகிருேம் என்பதை அவர் கள் பூரணமாக உணர்ந்தவர்க ளாக இருக்கின்றனர்,
பிரிட்டோரியா நெருக்கடி நிலைமையைப் பிரகடனம் செய்த தன் மூலம் தனது பலவீனத்தைத் தான் ஊர் உலகமறியப் பறை சற்றியுள்ளது. அது ராணுவம். போலீஸ் மற்றும் முழு ஆயுத பாணிகளான வெள்ளையர்களைக் கொண்ட "கேத்திர யூனிட்டுகள்" என அழைக்கப்படுபவை ஆகிய தனது முழு ஒடுக்குமுறை எந்தி ரத்தையும் மக்களுக்கு எதிராக ஏவி விட்டுள்ளது, தொழில் நிலை யங்கவில் வேலை நிறுத்தங்களை அடக்கி ஒடுக்குவதற்காகவும், ஒழுங்கை "நிலநாட்டுவதற்காக வும் பெரிய கார்ப்பரேஷன்களின் சொந்தக்காரர்களால் அமைக்கப் பட்டவையே இந்த யூனிட்டுகள். இத்தகைய யூனிட்டுகள்" இருந்து வருவதையும், அவற்றுக்காகுமி செலவையும் பற்றித் தென்னுப் பிரிகாவிலுள்ள தொழில் நிலையங் களின் அதிபர்கள் மத்திய அதி காரிகளு+ கு எத்தகைய தகவல் சளும் தருவதில்லை.
உதாரணமாக, தொழிலாளர் களின் நடவடிக்கைகளை ஒடுக்குவ தற்காக பிரென்சு நிறுவனங்கள் இத்தகைய யூனிட்டுகனைப் பயன் படுத்துகின்றன என்பது நன்கு தெரிந்த விஷயம். சா சோ ல் பெட்ரோ-ரசாயன தொகுதி என் பது எண்ணெய், எரிவாயு மற்றும்
磨象

நில க் க ரி யிலிருந்து ரசாயனப் பொருள்கள் முதலியவற்றை உற்பத்தி செய்யும் ஒரு தென்னுப் பிரிக்சக் கார்ப்பரேஷன், இந்தத் தொகுதியில் ஏர் லிகுடுடன் ஒர் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதன்படி இந்தத் தொகுதியின் மூலதனத்தில் 30 சதவிகிதத்தை டோட்டல் எனும் பிரெஞ்சு நிறு வனம் செலுத்தியுள்ளது. இந்தத் தொகுதி சென்ற வருடம் தனது "கேந்திர யூனிட்டின்" பராமரிப் புக்காக ! , 2 கோடி பிராங்கு களைச் செலவிட்டது:
இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக அமெரிக்க நிறுவனங் கள்தான் தென்னுப்பிரிக்காவி லிருந்து மலேமலையாக லாபம் சம்பாதிக்கின்றன. அதிகார பூர்வ
மான புள்ளி விபரங்களின்ப்டி *80 முதல் 300 அமெரிக்க நிறு av6urnissir தென்ஞப்பிரிக்கப்
பொருளாதாரத்தில் 230 கோடி முதல் 80 கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளன. ஆனல் வாஷிங்டன் போஸ்ட்" பத்திரி
கையோ தென்னப்பிரிச்காவில் இத்தகைய அமெரிக்க நிறுவ கள் 500 முதல் 1,200 இருக்கின் றன என்றும், அவை 1,300 முதி 1, 00 \ காடி டாலர் முதலீடு செய்துள்ளன என்றும் எழுதியுள் ளது. அமெரிக்க வர்த் தி* grco GuT si Drtri 8,000 அமெ ரிக்க நிறுவனங்கள் நிறவெறித் தென்னப்பிரிக்கக் குடியரசுடன் இடையருது தொழில், வர்த்ததி தொடர்புகள் கொண்டுள்ளே என்று குறிப்பிட்டுள்ளது.
தென்னுப்பிரிக்காவுக்கு எதி ராகத் தடை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வது சம்பந்தமாக ஐ நா. வில் அண்மையில் ూర్తి தீர்மானம் ஏற்கப்பட்ட சல்லவா : இது பற்றி அமெரிக்சு நிர்வாகம் என்ன கூறியிருக்கிறது தெரியுமா? " இத்தகைய நடவடிக்கைகள் கறுப் பின மக்களுக்குத்தான் தீங்கு விளைவிக்கும் . “ என்று அது விதண்டா வாதம் செய்துள்
ளது .
பெஞ்சமின் மொலாய்ஸ் நினைவில்
- அலிம் கெசகோவ்,
தென்ஞப்பிரிக்கக் கவிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பெஞ்சமின் மொலாய்ஸ் தூக்கிலிடப்பட்ட செய்தியைக் கேள்விப் பட்டு அளவிலா வேதனை அடைந்தேன்.
தென்னுப்பிரிக்க நிறவெறியர்கள் இந்தக் கவிஞரைத் தூக்கிலிட விரும்பியதற்கு அவர் இழைத்ததாகக் கூறப்படும் குற்றம் காரண மல்ல. மாருக மனிதாபிமானமற்ற இன ஒதுக்கல் ஆட்சியை எதிர்த் துப் போராடும்படி அவர் மக்களுக்கு நெருப்புப்பொறி பறக்க விடுத்த ஆவேச அறை , வலே காரணம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிறவெறியர்கள் பெஞ்சமின் மொலாய்சை சிறைக்கூடத்தில் அடைத்து வைத்திருந்தனர். இதன் மூலம் அவரது மன உறுதியைக் குலைத்து விடலாம் என்று அவர்கள் மனப்பால் குடித்தனர். ஆனல் இதில் அவர் சள் தோல்வியே கண்டனர்.
ஏகாதிபத்தியத்தையும் காலனியாதிக்கத்தையும் இன ஒதுக்கலே யும் எதிர்த்துப் போராடும் தமது மக்களின் இன்ப வாழ்வுக்காகத் கமது இன்னுயிரை ஈந்தவர்களின் பட்டியலில் இவரது நாமமும் இடம் பெறுகின்றது. இந்த வீரஞ் செறிந்த கவிஞரின் நினைவுக்கு சோவியத் எழுத்தாளர்க்னாகிய நாங்கள் இதயாஞ்சலி செலுத்துகிருேம்.
g

Page 14
LCLSSLSLSLSLSLSL
கணிவு
* சுதாராஜ்?
ஆனவாழை (5a) Guit டிருக்கு!"
வீட்டுக்கு வந்த பயணக் ாப்பு ஆற அமரமுதலேTெ தச் செய்தியை மனைவி சொன் குள். அதைக்கேட்டதும் அட் அப்படியா என்ருெரு சந்தோ ற்குள். நிதானமாக நின்று உடைகளை மாற்றிஞன்.
"கேட்டுதே? ஆனலாழை யெல்லே கு ஆல போட்டிருக்கு எண்டு சொல்லுறன் !"
" ஓம் ஓம் பாப்பம்" என அவன் மனைவியைப் பார்த்துச் சிரித்து தனது Lbálybőghau வெளிப்படுத்தினுன் ,
“?' OL-T ghal . . பெரிய குல அம்ம்" ளுள், .
'-gðar வாழை பெரிசாத் கான்_குலைபோடும் என மும் 器 தெரிந்தவன் போல அவன் கூறிஞன். ல் ஆண்வாை ශී)'.*$', '**', p Gu unrGöQuib என்பது அவனுக்குத் தெரியாது. ஆணைவாழைப் பழம் பெரிசாக இருப்பதால் ஆண் வாழைக் குலேயும் பெ ரிசாக இருக்குமென 'அவன் ஊகித்தி குந்தான். அல்லது ஏன்தான் அந்த வாழைக்கு ஆனை வாழை எனப் பெயர் வைத்தார்கள் என்பது புரியவில்&ல.
நல்ல சொன்
குலை
4.
சிறு பராயத்தில் பாடசாலை யின் ஒரு விடுமுறைக் காலத்தில் அப்பாவோடு கொழும்பு கண்டி போன்ற வெளியூரிகளுக்கு சுற் றுலா போயிருந்த பொழுது தான் முதலில் ஆனைவாழையைப் பற்றி அறிந்து கொண்டான். அப்போது சாப்பாட்டுக் கடை பொன்றில் சாப்பிடப் போயி ருந்த பொழுது, வாழைப்பழம் கொண்டு வரும்படி அப்ப்ா ஒட்ர் கொடுத்தார். வெயிட்டர் G5 தட்டில் வாழைப்பழச் சீப்பைக் கொண்டுவந்து வைத் தான். இவன் அதைப் பார்த்துவிட்டு, 'காய்" என்ருன்.
"இல்லை. அது நல்ல பழம் அம்த்திப்பார்" என்ருர் அப்பா.
அவன் அதன் பச்சை த் தோலில் பிடித்து மெதுமையாக
அமத்தினன். அது நல்ல பழ மாக இருந்தது.
தோல் ஏன் பச்சையாய் இருக்கு?
"ஆனைவாழை பழுத்தாலும் தோல் பச்சையாப்த்தானிருக் கும் ஆனல் ந ல் ல ருசியான Lupiibl Fmru u Sul GSublurrii ”
சாப்பிட்டுப் பார்த்தான். பிறகு, அங்கு போகின்ற எல் லாக் க  ைட களி லும் ஆனை வாழைப்பழம் இருக்கின்றதா எனக் கவனித்தான். பழுத்தா லும் தோல் பச்சையாகவே

இருக்கும் வித்தியாசமான குணம் அவனை க் கவர்ந்தது. ஆன வாழையைக் கொண்டு சென்று வீட்டில் உண்டாக்கிஞல் அழி காக இருக்கும் என எண்ணி, தனது விருப்பத்தை அப்டாவிடம் சொன்னன்;
எங்கையாவது பாத்து ஒரு ஆணைவாழைக் குட்டி கொண்டு போளுல் வீட்டிலை நடலாம்"
"அந்த மண்ணுக்கு இது சரி வராது" என அப்பா சொன்ஞர்.
உண்மையில் ஆனைவாழை அந்த மண்ணுக்குச் சரிவராது தாஞ? அல்லது வாழைக்குட்டி ஒன்றை எடுப்பதிலுள்ள சிரமத் தினுல் அப்பா அப்படிச் சொன் ஞரா என்பது புரியவில்லை.
அவன் நினைவுக்கு எட்டிய வரை யில் யாழ்ப்பாணத்தில் ஆணைவாழை இல்லைத்தான் அவ னது வீட்டில் பல வாழைகள் உள்ளன. கதலி இருக்கின்றது. இதரை. கப்பல், மொத்தன் இப்படிப் பல இன வாழைகளை பல தோட்டங்களிலும் கண்டி ருக்கிருன். சாப்பாட்டுக் கடை கள் அல்லது வாழைப்பழக் கடை களில்கூட அவன் ஆனைவாழைக் குலையைக் கண்டதில்லை. அத ல்ை இது அந்த மண்ணுக்கு ஒத்துவராது என்பதை அவன ஒப்புக் கொள்ள வேண்டியிருந்
• lر 9ر
சுற்றுலா முடிந்து ஊருக்கு வந்ததும் அவன் ஆனைவாழை யின் விசேடம் பற்றி அம்மாவுக் குச் சொன்ஞன். பிறகு வாழைத் தோட்டங்களுக்கெல்லாம் சென்று ஆணைவாழை இருக்கிறதா எனப் பார்த்தான். தே டி ய வ  ைர கிடைக்காமலே போனது.
Lj6op U நினைவுகள் சிலவற் றில் மனதைவிட்டிருக்க, அறைக் குள் ஓடிவந்த கடைசித் தம்பி,
"அண்ணை உன்ரை ஆனைவாழை குலை போட்டிருக்கு" என்ருன்.
ஆக, ஆனைவாழை குை போட்ட விஷயம் வீட்டில் எல் லோரையுமே ஒருலித ஆச்சரிய ம7 ன மகிழ்ச்சிக்குள் ஆட்டடுத் தியிருக்கிறது! அல்லது அவர்கள் தன்னிடம் இப்படியொரு ஆச்ச ரியத்தை எதிர்பார்க்கிருரர்களோ என்னவோ!
சசரி வாங்கோ பாப்பம்" என அவன் அறையை விட்டு வெளியேறினன். அவன், அவ னது மனைவி, அம்மா குட்டித் தம்பி எல்லோருமாக வாழை யைப் பார்க்கப் போனர்கள். அறைக்குள் நோட்டம் விட்ட
வாறு விருந்தையில் படுத்திருந்த
ந ய்க்குட்டி, எழுந்து எல்லோ ருக்கும் முன்னதாக கிணற்றடிப் பக்கம் ஓடிப்போய், அவர்களது வருகையைப் பார்த்துக் கொண்டு வாழையடியில் நின்றது.
கிட்ட வந்து குல்  ைய நிமிர்த்து பார்த்தான். பிறகு மரத்தை உச்சியிலிருந்து அடி வரை நோட்டம் விட்டான்.
வாழை நல்ல நெடுவலாக வளர்ந்திருந்தது. ஆனல் உயரத் துக்குத் தகுந்த பருமன் இல்லா மல் மெலிவாக இருந்தது. ஆள் ஒட்டலென்ருலும் பெரிய குலை யாக ஈன்றிருந்தது. குலையைச் சுமக்க முடியாத பாரத்தில் முது கைக் கொஞ்சம் குனிந்து கொண்டு நின்றது, வாழை
குட்டியாக நட்ட வாழை தாயாகி விட்டது. பக்கத்தில் இரண்டு குட்டிகள் பெரிதாக வளர்ந்திருக்கின்றன. இன்ஞெரு தவ்வல் இப்பதான் முளைவிட்டு வளர்கிறது. பெற்றுப் பெருகி நின்ருலும் தாய் வாழையைப் பார்க்க அவனுக்கு மனக்குறை யாக இருந்தது, நல்லபோஷாக்கு இல்லாமற்தான் அது இப்படி ஒட்டலாக இருக்கிறது போலும்,
2.

Page 15
"நீங்கள் அது க்கு நல்ல பசளை போடயில்லைப் போல?"
Toival Gast Lntsir.
இதைக் கேட்டதும் குட்டித்
தம்பி பொங்கி எழு ந் தான்.
அண்ணன் வெளிநாட்டிலிருந்த
கடந்த ஒரு வருட காலமாக வாழையைக் கவனித்து வந்த வன் அவன்,
"தல்ல கதை அதோடை - l- lu nr GS எனக்கெல்லோ தெரியும்"
இதைக் கவனித்த அம்மா வும் "சொன்ஞள்: "அதுக்குப் போடாத பச3ளயே? அதரெடுத் துச் சாணியெல்லாம் போட்ட வன். எந்த நேரமும் அதோடை தான் மாயிறவன். விரத நேரங் களிலே அதிலே ஒரு இலை வுெட் டக்கூட விடமாட்டான். பிள் ளேதான் அதிலே வலு கவனம் அங்கைபார் வடிவாய் பாத்தி கட்டி தண்ணியும் விட்டிருக் கிருன்?
"நான்வாறனென்டு தெரிஞ் சவுடனை விட்டிருப்பான். இன் னும் ஈரம் காயாமல் கிடக்கு" ஒருத்தரும் கவனியாமல், தண்ணிவிடாமல்தான் வாழை இவ்வளவு வனந்து குலை போட் டது, என்ன? இந்த மணிசருக்கு நல்ல விசயத்தை நல்லதெண்டு சொல்ல மனம் வராது. ஏதா வது ஒரு குறை கண்டு பிடிக்க வேணும்" எனக் குட்டித்தம்பி போட்ட போடு அவனைச் சற் றுத் தடுமாறச் செய்தது.
"சரியடாப்பா, தான் சும்மா ஒரு கதைக்குத்தான் சொன்ன ஞன். வாழை ஏன் இவ்வளவு மெலிவாய் இருக்குதெண்டுதான் தெரியயில்லை" எனச் சமாளிப் Lurras iš simileysir.
ʻseyğ5/ S7.u89âie95 Jaw . tʻi Lu G RAu
தெரியும். இது அவ்வளவு செழிப் பாப் வளராதெண்டு. நான்
வாழையைக் குட்டியாக
26
சொல்லயிக்கை கேக்காம்ல் நட் டியள். இந்த நிழலுக்கை திண் டால் எப்பிடி நல்லாய் வரும்?" ஏதோ தவறு செய்துவிட்ட வள்போல தம்பியைப் பார்க்க, தம்பி சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு பள்ளிக்கூடத் தில படித்த விஷயங்களை விளா சிஞன். சூரிய வெளிச்சம் இல யளிலை பட்டால்தான் உணவு தயாரிக்கலாம். வெயில் பிடிக்கி றதுக்காகத்தான் வாழை மற்ற மரங்களுக்கும் மேலாலை உயர மாய் வளந்திருக்கு சரி யாய் வெளி ச் சம் பிடிக்காமல்தான் மெலிவாய் இருக்கு"
கிணற்றடி நிழலான இடம் தான். மறைப்பு வேலிக்கு நட்ட பூவரசங்கதியால்கள் மிக உயர மாக வணர்ந்து கு  ைழ களைப் பர ப் பி நற்கின்றன. இரண் டொரு தென்னம் பிள்ளைகள் உயர்ந்து தோகையை விரித்து நிற்கின்றன. வாழைய9ய நடும் பொழுது இது பற்றி யோசிக் காமல் விட்டது மடைத்தனம் தான். குட்டிகளையாவது வேறு இடங்களில் கிளப்பி நடவேண் டும் என நினைத்துக் கொண் டான்.
வாழை குலை போட்ட விஷ யத்தை பெரியம்மாவிடம் போய் சொல் ல வேண்டும். இந்த
ya னுக்குக் கொடுத்ததே பெரியம் மாதான்!
கல்யாணம் செய்த புதிதில் மனைவியுடன் பெரியம்மா வீட் டுக்குப் போயிருந்தான். விருத் துபசாரத்தின்போது சாப்பாட்டு மேஜைக்கு வாழைப்பழம் வந் தது. அதைக் கண்டதும் அவன் "ஆனைவாழைப்பழம்" என ஆச்ச ரியப்பட்டான்.
தேடியலைந்து கிடைக்காமற் போனமையிஞலும் பின் னர் உத்தியோகம் காரணமாக வீட்

டைவிட்டு வெளியூர்களுக்குப் போயிருந்தமையாலும் மனதை விட்டு மறந்து போயிருந்த ஆன வாழை மீண்டும் அவன் முன்னே வந்து நின்றது.
எங்கடை வாழையிலைதான் காய்ச்சது"
பெரியம்மா சொன்னதைக் கேட்டு அவன் அதே ஆச்சரியத் தோடு முற்றத்துக்கு ஓடிவந்து a t 60) p és ப் பார்த்தான். ஏழெட்டு வாழைகள் குட்டிகள் சகிதமாக நின்றன.
*எல்லாம் ஆன வா  ைமு யளோ?" எனப் பிரமித்தான். பெரியம்மாவுக்கு அவனது பரவ சத்தைக் கா ன ப் புதினமாக இருந்தது.
"எங்க்ாலை எடுத்தனிங்கள்?
நான் எவ்வளவோ நாளாய்த்
தேடித் திரியிறன், கிடைக்க
u:'
"அவர் ஓரிடத்திலேயிருந்து
குட்டியொண்டு கொண்டு வந்த வர். அதை நட்டு உண்டாக்கி அதின் ரை குட்டியன்தான் எல் லாம் ஏள்? இப்ப கன இடங் களிலே இது இருக்குதுதானே?"
வாழைமரங்களையும் Gulf யம்மாவையும் மாறி மாறிப் பார்த்தான். ஆனைவாழை இப் பொழுது இங்கு கன இடங்க ளுக்கு வந்துவிட்ட கதை அவ னுக்குத் தெரியாது.
"எனக்கொரு குட்டி தாநீங் sGaunt?”
*அதுக்கென்ன? கிளப் பி வைக்கிறன் பிறகு ஒருதானேக்கு
வந்து எ டு த் து க் கொண்டு
போவன்?
பிறகு அவன் ஒவ்வொரு
நாளும் பெரியம்மா வீட்டுக்கு
வந்தான். ஆணுல் வாழைக்குட்
டிதான் கிடைத்தபாடாக இல்லை.
27
போஞன். வீட்டுக்கு
"கொத்துறவனுக்குச் சொல் லியனுப்பினஞன், ஆளைக் காணக் கிடைக்குதில்லை. வாழைப்பாத் தியள் ஒரு க் கால் கொத்த வேணும். அப்ப கிளப்பி வைக்கி றன் பிறகு வா தம்பி" எனப் பெரியம்மாவிடமிருந்து பதில் கிடைத்தது.
பிறகு வந்தான். ஆஞ ல் கொத்துகிறவன் கிழமைக் கணக் காக வரவில்லை. அடுத்த சில நாட்கள் சில முக்கிய அலுவல் asGir srrua007 Lontas QuillaubLorr வீட் டு க்கு வர முடியவில்லை. அதற்குப் பிறகு ஒருநாள் வந் பொழுது
"எங்கை இவ்வள ாளகம் போனனி? . வாழைக் குட்டியெல்லே கிளப்பி வைச்சிருக்கிறன்"
வாழைக் குட்டியை வேவி யோடு சத்திவிட்டிருந்தார்கள். அதன் இலைகள் வாடிப்போயிருந் தன. பணிய அமர்ந்து வேர்ப் பகுதியைப் பார்த்தான். வெட் டப்பட்ட கிழங்கின் பகுதியில் பல துளிகள் நீர்க்கசிவு ஏற்பட்டு செஞ்நிறமாக உறைந்து போயி ருந்தது.
"ஐயோ!" என்முன். "என்ன தம்பி?" என்றவாறு பெரியம் மா கிட்ட ஓடிவர, *ரத்தம் வந்திருக்கு" என்ருன்.
"அட இதுதானே. . . ? அதொண்டும் செய்யாது கொண் டுபோய் நடு"
வாழைக்குட்டியை ஒரு பிள் ளையைப்போல தூக்கிக்கொண்டு வந்ததும் அவனைப் பிடிக்க முடியவில்லை. எவ்விடத்தில் நடலாம் என்ற பிரச்சனை முதலில் தோன்றிதுது. ஒவ்வொருவரும்ஒவ்வொரு இடங் சி பார் க செய்தார்கள். மற்ற வாழைகளுடன் சேர்த்து த ட் டால் அவற்றிற்கு வரும் வருத்தம் இதற்கும் தொற்றி

Page 16
விடும் என அபிப்பிராயப்பட் டான் ஏற்கனவே அங்கு சில கத லி வா  ைழ க ள் குருக்கன் அடித்து நிற்கின்றன. கிணற்றடி யிலென்ருல் அடிக்கடி போகிற
வர்கள் கவனித்து தண்ணிரும் விடுவார்கள். த னி  ைம யான இடமாகவும் இருக்குமாதலால்
அதுவே தகுந்த இடமெனத் தீர் மானித்தான். அதற்குப் பிறகு மண்வெட்டியைக் கொண்டுவா! அதைக் கொண்டுவா இதைக் கொண்டுவா ! என ஒரே அமர்க் களமாக இருந்தது.
கிணற்றடி மண்ணில் கற்க ளைக் கிளறி எடுத்து மாட்டுச் சாணத்தைப் போட்டு பாத்தி கட்டி வாழைக் குட்டியை நட்டு தண்ணீர் ஊற்றிவிட்டு வந்த பொழுது அவனுக்கு எதையோ சாதித்துவிட்ட திருப்தி தோன் றியது.
ஆனல் நாட்கள் சில கடந் தும் வாழை வளர்வதற்குரிய அறிகுறிகளைக் காணுேம். இலை கள் இன்னும் வாடின. இது அவனுக்குப பெரிய கவைேய ஏற்படுத்தியது. பெரியம்மா விடம் ஒடிப்போய் விஷயத்தைச் சொன்னன்.
"அது. தன்ரைபாட்டிலை வனரும். விட்டுப்போட்டுப்போய் பாக்கிற அலுவலைப் பார் தம்பி"
அதைக் கேட்டதும் அவனுக்கு *சப் பென்று போனது. அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டு வத்து, இன்றைக்கு வ ன ரும், நாளைக்கு வளரும் என்று பார்த் துக் கொண்டிருக்கக் குருத்தும் கருகி வாழைத் தண்டும் நுனிப் பகுதியிலிந்து கருகத் தொடங்கி யன. வெயிற் சூடாக இருக்கு மென நினைத்து தண்ணிரை அடிக்கடி ஊற்றினன். எனினும் பயனில்லை. மனதில் வைத்திருந்த அற்ப சொற்ப நம்பிக்கைகளும் போய்விடும் பேசலிருந்தது.
வேலி அடைக்கவரும் கந்தை யாண்ணையிடம் விஷயத்தைச் சொன்னன். அவருக்கு தோட்ட அனுபவங்களும் கொஞ் சம் இருக்கிறது.
கந்தையாண்ணை வந்து வாழைக்குட்டியைப் பார்த்தார். கருகிய பகுதியைத் தொட்டுப் பார்த்தார். வாழைக்குட்டியின் அடிப்பகுதியில் மெதுவாக நகத்
திஞல் நுள்ளினர் பிறகு விர
லால் வாழையடி மண் னை த்
தோண்டிப் பார்த்தார். இப் பேற்பட்ட பரிசோதனைகளின் பின்னர்,
"ஏன் இவ்வளவு தண்ணி விடடனிங்கள் கிழங்கு அழுகிப் போயிருக்குமே" என அபிப்பிரா
LILL- o
தண்ணி நெடுக விடயிக் கையே சொன்னஞன், கேட்டாத் தானே" என்ருன் குட்டித்தம்பி அவனுக்கு ஒரு குட்டுக் கொடுத்து அனுப்பிவைத்தான்.
*பற வா யில் லை, இனிக் கொஞ்ச நாளேக்குத் தண்ணி விடவேண்டாம். வாழைக் குட்டி யைக் குறுக் காய் வெட்டி விடுங்கோ, சரிவரும்" எனப் பரி காரம் சொல்லிவிட்டுப் போனுர் கந்தையாண்ணை.
வாழைக்குட்டியை குறு க் காக வெட்டுவதென்பது அவ னுக்கு முடியாத காரியமாகப் பட்டது. கத்தி கொண்டு வெட் டுவதென்பது ஒரு சீவனை அழிப் பதற்குச் சமானமாகுமே? அது வும் எங்கெல்லாமோ தேடி இவ் வளவு ஆசையோடு கொண்டு வந்த வாழைக்குட்டியை வெட் டுவதாவது? நல்ல கதை கந்தை யாண்ணை மடைக்கதை பேசு கிறது.
"ஆருக்காவது வருத்தவெண்
டால் ஒப்பியரசன் செய்யிறதில்
8

லையா ? கனக்க யோசிச்சு மண்டையைப் போட்டு உடைக் காமல் அத்தான் சொன்னமாதிரி வெட்டி விடுங்கோ, சரிவரும்" என மனைவி சொன்ஞள்.
"சரி, எண் அவன் கத்தியை எ டு த் து வாழைக் குட்டியின் காய்ந்த பகுதியை வெட்டினன். எனினும் அவனுக்கு ஒரு சந்தே கம் இனி இது உருப்படுமோ
என்னவா?
என்ன ஆச்சரியம்! அடுத்த நாட்காலையே ஒரு சின்னிவிரல் தடிமனில் குருத்து வெளியே தள்ளியிருந்தது கந்  ைத யா உனச்கு நன்றி ஐயா!
பிறகு அதைப் பிடிக்க முடிய வில்லே. அப்படியான ஒரு நேரத் தில்தான் அவ னு க்கு வெளி நாட்டு வேலைக்கு அழைப்பு வந் தது. வெளிநாட்டில் ஒரு வேலைக் காக ஏற்கனவே முயன்று கொண் டிருந்தது உண்மை; அது இப் படி திடுதிப்பென்று வந்து வீட் டில் எல்லோரையும் Li iffi uu வேண்டிய கவலையை ஏற்படுத் தும் என்று நினைத்திருக்கவில்லை.
- அது பழைய கதை. இப் பொழுது அந்த வாழை சுமக்க முடியாத குலையுடன் நிற்கிறது.
அன்று மாலை பெரியம்மா வீட்டுக்குப் போஞன். வெளி நாட் டு ப் புதினங்களே விட, ஆனை வாழை குலைபோட்டிருக் கும் செய்தியைச் சொல் லி மகிழ்ந்தான் வாழை மெலிவாக இருப்பது பற்றியும், அதற்கு ஏதாவது பரிகாரம் செய்யலாமா என்றும் விசாரித்தான். பொது வாக ஆனைவாழைக்கு அதிக கவனம் இன்றி தண்ணிர் ஒழுங் காகக் கிடைத்தாலே வளர்ந்து பயன்தரும். மற்ற வாழைகளுக் குப் பிடிக்கும் நோய்கூட அதை இ லகு வில் அண்டுவதில்லே.
எனவே ஒன்றுக்கும் கவலைப்படா மல் போகுமாறு பெரியம்மா கூறியது கூட அவ்வளவு திருப்தி யளிக்காமலே வந்தான் ,
காலையில் எழுந்ததும் கிணற் றடிக்கு வந்து வாழையைப் பார்ததுக் கொண்டு நிற்பான். அது அவனுக்கு ஒரு பொழுது போக்காகவே அமைத்து விட் டது. காய்கள் எந்த அளவு பெருத்திருக்கின்றன? எத்தனை நாட்களில் முற்றிப் பழுக்கும்?
இப்படியாக இருபது நாட் களளவில் கடந்திருக்கும். ஒரு நாள் மத்தியானம்போல கிணற் றடியிலிருந்து குட்டித்தம்பி மூச் சுத் தெறிக் க ஓடிவந்தான். அவனே முந்திக் கொண்டு நாய்க் குட்டி ஓடிவந்து நின்றது.
"ஆண்வாழை முறி ஞ் சு Gurrja, l'
அவனது மனைவியும் அம்மா வும் கிணற்றடிப்பக்கம் ஒடிஞர் கிள. அவனுக்கு அ lft I i Ulf T55 ನಿಜ್ಡಲ್ಲೈತಿ காலையிலேகூட அவன் பார்த்த பொழுது நல்ல வாட்டசாட்ட மாக நின்றது. அதற்குள்ளே எ ன் ன நேர்ந்தது 7 இந்த
வாழைக்கு?
அவன் வந்து வாழையைப் Lunrriřešs Sayonu rifs Gir அவனது முகத் தைப் பார்த்தார்கள்.
வா"ை ip வேலியின் மேல் முகம் குப்புற விழுந்து கிடத் தது. வேலியின் கதியால்கள்
தாங்கிக் கொண்டதால் துண்டு பட்டு முறிந்து போகாமல் இருந் தது. குலையும் - டிபட்டுக் காயப் படாமல் இருந்தது.
'குலையை வெட்டிக்கொண்டு வந்து வையுங்கோ பழுக்கும்" என அம்மா கூறிஞள்
罗9

Page 17
இன்னும் முத்தியிராது. எங்  ைக பழுக்கப் போகுது?" என அவன் வேண்டா வெறுப் பாகப் பதில் கூறிவிட்டு
* ஏ ன் இருந்தாப் போலை
விழுந்தது? காத்துக்கூடப் பெரி சாய் அடிக்கயில்லை" எனக் கவ லைப்பட்டான்.
உண்மையில் காற்றுப் பவ மாக வீசவேயில்லை. மற்ற ய வாழைகள் எல்லாம் கம்புமாதிரி நிற்க இந்த வா  ைழ ஏன் முறிந்து போனது என்பது அவ னுக்குப் புதிராகவே இருந்தது.
"அதுக்கொரு ஆன முண்டு குடுத்திருக்கலாமே, முறிஞ்சிருக் காது" என மனேவி அபிப்பிர பப்பட்டாள்.
வாழையைத் தாங்கி நிற்கக் கூடியதாக ஒரு முண்டு கொடுத் திருக்க லா ம் தா ன், ஆளுல் அதற்கு அவ்வளவு உரமான மரம் கிடைக்காததஞலும் இது அவ்வளவு காற்றுக் காலம் அல்ல என்பதஞலும் அந்த எண்ணத் தைப் பெரிதுபடுத்தாமல் விட்டி ருந்தான்.
இனி அதையெல்லாம் எண் ணிப் பயனில்லை, "எப்படியாவது போகட்டும்" என அவன் அந்த விசயத் தை மனதைவிட்டே தூக்கியெறிந்தான். வாழை கவனிப்பாரற்று வேலிமேலேயே கிடந்தது. ஒரு மாத லீ வில் வீட்டுக்கு வந்தவனுக்கு திரும் பப் போகவேண்டிய நாள் நெருங் கிக் கொண்டு வர, அது மற்றய விஷயங்கள் எல்லாலற்றையும் விட மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
அவனது அம்மா, மனைவி, குட்டித்தப்பி எல்லோரையும் பிரிந்து செல்லவேண்டிய அத்த நாள் பார்த்துக் கொண்டிருக்க வத்து சேர்ந்தது. அன்று இரவு
O
பிளேன். காலை றெயினில் கொழும்புக்குப் புறப்பட வேண் டும்
அவன் பயணத்துக்கு ஆயத் தமாகிக் கொண்டிருந்தபொழுது குட்டித்தம்பியும் நாய்க்குட்டியும்
போட்டி போட்டுக் கொண்டு ஓடிவந்தார்கள்.
'வாழைக்குலை பழுத்திட்டுது
*சும்மா" என்ருள் அவனது மனைவி ஒருவித நம்பமுடியாத மகிழ்ச்சியோடு,
"உம் மை தான் பாருங்கோ...?
வந்து
மனைவியும், அம்மாவுல், குட் டித் தம்பியோடு கிணற்றடிக்கு ஓடினுர்கள் அவன் எதனுலும் பாதிக்கப்படாதவன் போல நின் முன்,
றெயினுக்கு நேரமாக, இனி மேலும் நிற்கமுடியாது எனப் புறப்பட ஆயத்தமானன். மனேவி சாப்பாட்டுப்பார்சலைக் கொண்டு வந்தாள்.
"இந்தாங்கோ ரன் வாழை முறிஞ்சது. முறிஞ்சது எண்டு கேட்டியள், உங்கடை வாழை உங்களை மறக்கவில்லை" என்ற வாறு பழங்களைப் பார்சலோடு சேர்த்து பையினுள் வைத்தாள்.
இன்ஞெரு வாழைப்பழத் தையும் உரித்து அவனி ட் 6 கொடுத்து "சாப்பிடுங்கோ? என் ருள். அப்பொழுது அ Օւք 6ճ) & முத்திக் கொண்டு வந்தது.
போவதற்கு முதல் வாழை மரத்தைப் பார் க் க வேண்டு மென்ற உந்துதல் பிறக்க அவன் கிணற்றடிப்பக்கம் போனன்.
அதைச் செம்  ைம ய ர க
வெட்டி பாட்டத்தில் போட்டி
ருந்தார்கள்.
அதன் கதை முடிந்து
விட்டது.

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிவின் * யுகாந்தய
' - புன்னியாமீன்.
நம் நாட்டுத் திரைப்பட வெளியீடுத் துறையில் தரமான கலைநயம் பொருந்திய படைப்புக்களை வெளியிட்டுவரும் ஐந்தாம் ஒபையின் மற்றுமோர் சிறந்த வெளியீடாக யுகாந்தய என்னும் சிங்க்ளத் திரைப்படம் தற்போது உள்ளூர் திரையரங்குகளில் நடை பெற்றது.
"தரங்கர்" நிறுவனத்தின் சார்பில் விஜயராமநாயக்கா தயாரித்து வெளியிட்டிருக்கும் இத்திரைப்படத்தின் மூலக்கதை சிங்கள இலக் கியத்துறையில் அழியா இடத்தைப்பெற்ற "மார்ட்டின் விக்கிரமசிங்க" வின் "யுகாந்தய நாவலைத் தழுவியது. இத்திரைப்படத்தினை ಆna தேச புகழ்பெற்ற டைரக்டரான லெஸ்ட்ர் ஜேம்ஸ் பீரிஸ் நெறிப் படுத்தியிருக்கின்(rர். ஏற்கனவே "லெஸ்டர் ஜேம்ஸ் "மார்ட்டின் விக்கிரமசிங்க்" வின் ஏனைய சில நாவல்களைத் திரைப்பட மாக நெறிப்படுத்தியிருப்பதும், விசேடமாக மடோங் தூ வ, கம்பெரலிய, கலியுகய போன்ற திரைப்படங்கள் சிங்கள திரைப்பட வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியதும் குறிப்பீ-தி தக்கதாகும்.
ஐம்பதுகளின் சூழல் பின்னணியில் எழுதப்பட்ட *யுகாந்தய நாவலில் "மார்ட்டின் விக்கிரமசிங்க முன்வைத்த சில முற்போக்குக் கருத்துக்களை டைரக்டர் இத் திரைப்படத்தின் மூலம் எவ்வகையில் வெளிப்படுத்தியிருப்பார் என்பதனை அறிந்து கொள்வதில் இரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிருர்கள். இத் திரைப் படத்தினை ரஷ்யா தன் நாட்டில் திரையிடுவதற்காக "வேண்டி அதிக வி கொடுத்து கொள்வனவு செய்திருக்கின்றது. இலங்கையில் தயாரிக் கப்பட்ட சிங்களத் திரைப்படமொன்றிற்கு வெளிநாடொன்றில் இருந்து ஆகக் கூடுதலான விலை கிடைக்கப்பெற்றிருப்பது இலங்கைத் திரைப்பட சரித்திரத்திலே இதுதான் முதலாம் முறை என்பது ஒர் விசேஷ அம்சமாகும்.
இனி.திரைப்படத்தின் கதைக்கு வருவோம்: மலின் கபலான டாக்டர் அரவிந்த இருவரும் உற்ற நண்பர்கள், இங்கிலாந்தில் கல்வி கற்று முற்போக்குச் சிந்தனைகளில் உந்தப்பட்டு, அரசாங்க சேவை யில் சேராமல், ஒதுக்கப்பட்ட வர்க்கத்தினருக்கு உதவவேண்டும் என்றும், பாட்டாளித் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தம்மாலான பங்களிப்பினைச் செய்ய வேண்டும் என்றும் திடசங்கர்ப் பம் பூண்டு தாயகம் திரும்புகின்றர்கள்.
மலினின் தந்தை செளமன் கபலான ஏகச் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர். புகழ்பெற்ற வர்த்தக அதிபர், இவரின் ஆளுமையும், சிறந்த முகாமைத்துவம், வியாபாரத்தில் தன்னிகரற்ற ஓர் இடத் தினை இவருக்கும் பெற்றுக் கொடுக்கின்றது. ஆடம்பரமான, சொகு சான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு, எதிர்நோக்கும் பிரச்சினை
3.

Page 18
களை மிகவும் புத்திசாதுரீயமாக எதிர்கொண்டு தனக்குச் சாதகமான முறையில் பயன்படுத்திக் கொள்வதில் இவரை விஞ்ச எவராலும் இயலாது.
LngDILIAD Lorrás, அரவிந்தவின் தந்தை ஜமின் பரம்பரையைப் போன்றே சிங்களக் கிராமங்களில் ஆதிக்கிம் செலுத்தி வரும் 'வலங்கரையோ" சமூகத்தைச் சேர்ந்தவர், டாக்டராகப் படித்துப் பட்டம் பெற்று வந்திருக்கும் தன் மகனின் காலடிக்கு ஏனைய 'வலங் கார சமூகத்தினர் வரவேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு தனது அந்தஸ்தினை உயர்த்திக்கொள்ளத் துடிப்பவர். ஆஞல், அரவிந்தவின் தாயார் கிராமப்புற ஏளைகள் மதித்து நடக்கக்கூடிய வள். தனது கணவனின் விருப்புக்கு மாருக இங்கிலாந்தில் இருந்த வந்திருக்கும் தன் மகனைக் காணவந்திருக்கும் ஏழை விவசாயி ளையும் உபசரித்து அனுப்புகின்றள்.
சொலமன் சுபலான பட்டம் பெற்று வந்திருக்கும் தன் மகன் மலின வரவேற்று பெரிய விருந்து உப்சாரம் செய்கிருர், அங்கு வந்திருக்கும் உயர்மட்டப் பிரமுகர்களிடம் பெருமையுடன் தன் மகனே அறிமுகம் செய்துவைக்கிருர், பிறகு தன் தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்று அந்நூல் ஆலையிலே தன் மகனையும் வேலைக்கு அமாத்திக் கொள்கிருர், T தொழிற்சாலை நிர்வாகப் பொறுப்பினைத் தின் தந்தை தன்னிடம் ஒப்படைப்பார் என்றும், அப்போது நசுக் கப்பட்டு வரும் தொழிலாளர் வர்க்கத்துக்கு உதவி செய்யலாம் என்றும் எண்ணிக்கொண்டிருக்கும் மலினுக்குப் பெரிதும் ஏமாற்ற மாகி விடுகின்றது. ஏனென் முல் நிர்வாகப் பொறுப்புக்கள் முழுவ தையும் தொடர்ந்தும் சொலமனே வைத்துக்கொள்கின் ருர்,
சொலமனின் நடவடிக்கைகள் மேலும் மேலும் மலனை விரக்தி யடையச் செய்கின்றன. தனது மன உளைச்சல்களை அரவிந்தவிற்கு எழுதி அவனைக் கொழும்பிற்கு வரச் சொல்கின்றன். இந்நிலையில் அரவிந்த ஆரம்பத்தில் ஏழைகளுக்கு இலவசமாக வைத்திய உதவி களை வழங்க முயன்ருலும் பிறகு அரசாங்கத்தில் வைத்தியராகச் சேர்ந்து கொழும்புக்கு வருகின்ருன். அங்கு மலினின் வீட்டில் தங்கு கின்றன்.
ஒருநாள் மலின், அவனது தங்கை ஷாமிலி, சொலமன், அரவிந்த ஆகியோர் நுவரெலியாவில் இருக்கும் தமது தேயிலைத் தோட்டத் துக்குச் செல்கின்றனர். தேயிலைத் தோட்டத்தில் புதிதாக தொழில் சங்கம் அமைத்து சம்பள உயர்வு கொடுக்குமாறு ஒருவன் மகஜர் ஒன்றினை சொலமனிடம் கொடுக்கின்ருன். அம்மகஜரைக் கிழித் தெறிந்து உதாசீனம் செய்கின் முர் சொலமன். இதஞல் மனவிரக்தி அடைந்த அவன் சொலமனைக் கொலைசெய்ய எத்தனிக்கின்ருன். சொலமன் அவனைப் பொலிசாரிடம் ஒப்படைக்கின்ருர், அவனின் மனைவி அவனை மன்னித்து விடுதலை பெற்றுத் தரும்படி சொலமனிடம் மன்ருடுகின்ருள். சொலமன் மறுக்க மலினிடம் கெஞ்சுகின்ருள்.
இதனல் மேலும் மனத்தாங்கல் அடைந்த மலின் சொல்லிக் கொள்ளாமல் கொழும்பு திரும்பி, தனது வீட்டில் இருந்து ஒதுங்கி தனி அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து வாழ முற்படுகின்றன். அந்த அறையில் மாட்டப்பட்டிருக்கும் "லெவினின் "பெரிய உருவப் படமொன்று அவனின் எண்ணங்களைத் தெளிவாக எடுத்துக் காட்டு கின்றது. மலினை மறுபடியும் வீட்டுக்கு அழைத்துவர அவன் தாய்,
3.

தங்கை ஆகியோர் முயல்கின்றனர். ஆனல் பயனில்லை. பிறகு அரவிந்த மலினிடம் வருகின்முன். அரவிந்தவை முதலாளித்துவ சக்திகள் ஈர்ந்து விட்டதை அறிந்து மலின் மனம் வருந்துகின்ருன், முதலாளித்துவத்தின் ஊடுருவல் இடம்பெருமல்; தொழிலாளர் நலனைப் பேணவேண்டுமாயின் இதுபோன்ற இடம்தான் பிறந்தது என்கிருன் "அதற்காக இந்த ஏழ்மையான வாழ்க்கையைத்தான் எல்லோரும் வாழவேண்டும் என்று விரும்புகின்ருயா" என்று அரவித்த கேட்க, "நான் சொல்வது. எல்லோரும் சம அளவிலான பணக் க்ாரர்களாக வாழவேண்டும் என்பதையே " என்று உணர்ச்சி வசப் பட்டு பதிலளிக்கின்றன மலின்
பிறகு, மலின் தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி உலக தொழிலாளர்களின் ஒன்று கூடல் என்னும் அமைப்பில் தொழிற்சங்கமொன்றினை அமைத்து முதலா ளித்துவவாதியான தன் தந்தைக்கெதிராகவே செயல்படுகின்றன். முதலாவதாக தொழிலாளர்களுக்கு ஒய்வுநேரத்தில் தேநீர் அருந்தும் வசதி, தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதி, சுகாதார வசதி போன்றவற்றையும் தொடர்ந்து தொழிலாளர் காப்புறுதி சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மகஜர் தயாரிக்கின் முன் இம்பசுஜரை தொழிற் சங்கத்தின் சார்பில் தன் தந்தையிடம் அனுப்பிவைக்க தந்தை அம்மகஜரை உதாசீனம் செய்ததோடு, மகஜர் எடுத்துவந்தவனை அடித்து விரட்டுகின்ருர். இதனல் மசஐரு டன் மலின் நேரே தந்தையை எதிர்கொள்கின்ருன்.
ஈற்றில் வேலைநிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது" இந்நிலையில் இதுவரை தொழிற் சங்கத் தலைவராக இருந்தவனை சொலமன் விலைக்கு வாங்குகின் ருர், மலினும் அவனது சகாக்களும் குண்டர்களின் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இத்தாக்கு தலின் விளைவாக மலினின் சகாக்களில் ஒருவனன திஸ்ஸ்" என்பவன் ஒரு கையை இழக்கின்றன். வைத்தியசாலையில் இருந்து வந்தபிறகு மலின் தொடர்ந்து கருமமாற்றுகின்ருன், வேலைநிறுத்தம் செய்யப் பட்டால் அனைவரினதும் வேலைநீக்கம் செய்யப்படுமென்றும் தொழிற் சாலையை இழுத்து மூடிவிடவேண்டியேற்படும் என்றும் சொலமன் பயமுறுத்துகின்ருர். கூடவே பொலீஸ் அதிகாரிகள் பெரிய அலுவ லர்களுக்கும் இச்செய்தியை எழுதியனுப்புகின்றனர்.
போராட்டம் ஆரம்பிக்கின்றது வேலை நிறுத்தம் தொடர்கிறது. ஈற்றில் சம்பள உயர்வைக் கொடு பதையும், அவர்களது கோரிக்கை களை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் செலமன் அத்தொழிற்சங்க வாதிகளின் கோரிக்கைகளுக்கு இசைகின் முன். இது சொலமனின் வாழ்வில் அவர் கண்ட முதல் தோல்வி. ஆனல் தொழிலாளர் வர்க்கத்தினருக்கான மலினின் போராட்டத் தின் வெற்றி ஒரு யுகத்தையே முடிவுக்குக் கொண்டுவருகின்றது.
- இது "யுகாத்தய கதைச் சுருக்கம். இத் திரைப்படத்தில் சொலமன் சபலான பாத்திரமேற்று நடித் திருக்கும் பிரபல நடிகர் "காமினி பொன்சேகர்" பாத்திரப் படைப் பின் தன்மையை உணர்ந்து இயற்கையான நடிப்பின் மூலம் நடிப் பின் சிகரத்திற்கே போய் விடுகிருர் என்ருல் மிகையாகாது. எந்த வொரு கட்டத்திலும் அவரிடம் மிகை நடிப்பைக் காண முடியவில்லை. O
33

Page 19
இந்திரா காந்தி பற்றிய திரைப்படம்
"இந்திரா காந்தி பற்றி ஒரு கிரைப்படம், சோவியத - இந் திய கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படும் என்று சோவெக்ஸ் போர்ட்பிலிம்" நிறுவனத் தலைவர் கூறிஞர்.
புதுடெல்லியில் பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் மேலும் பேசுகையில், "இந்தியப் படங்கள் சோவியத் மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. சோவியத் யூனியனுக்குச் சிறந்த படங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதே வேளை யில், இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சோவியத் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது" என்ருர்,
கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், கூட்டுத் தயாரிப்பின் போது, இரு நாடுகளின் கலாசாரம், பொது வாழ்க்கை, கலைச்ள், பேரிலக்கியங்கள் மற்றும் தத்துவங்களைப் பிரதிபலிக்கும் படங்க ளுக்கு பிரதான முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ருர், திரைப் படத் துறையில் இத்தகைய ஒத்துழைப்பானது, நம்மிரு மக்களி டையே நேய உணர்வுகளையும் நல்லிணக்கத்தையும் மேலும் எளர்க் கப் பங்காற்றும்.
திரைப்படங்கள் மற்றும் புதிய திரைப்பட உத்திகளை அதிக அளவில் பரிமாறிக் கொள்ள இரு நாடுகளும் விரும்புகின்றன. சென்னை, பம்பாப், கல்கத்தா ஆகிய நகரங்களில் தயாரிக்கப் பட்ட படங்களில் சோவியத் திரைப்படத் துறையினர் விசேட ஆர்வம் கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
சோவியத் நாட்டில் மற்றுமொரு நாடகக் கல்லூரி
யூரல்ஸ் பிரதேசத்தின் முக்கிய தொழில் மற்றும் கலாசார கேந்திரமான ஸ்வெர்த்லோவ்ஸ்க் நகரில் மற்ருெரு நாடகக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. சோவியத் நாட்டில் 90 க்கு மேற்பட்ட கலா சாரக் கல்லூரிகள் உள்ளன; அவற்றில் நாடகக் கல்லூரிகள் பெரு மளவு அங்கீகாரம் பெற்றன.
மாஸ்கோவிலுள்ள ஆர்ட் தியோட்டர், மாலி தியேட்டர். லக்தன்கோவ் தியேட்டர், இவற்றின் நாடகப் பயிற்சிக்கூடங்கள் மிகப் பிரபலமானவை. ஏ. வி. லூ சைஈர்ஸ்க்கி நாடகக் கல்லூரி இவற்றின் தலையாய ஒன்ருகும். சோவியத் தேசிய இனக் குடியரசு களின் பல தொழில்முறை நாடகக் குழுக்கள் இங்கு பயிற் சி பெற்றுள்ளன.
சோவியத் நாட்டின் நாடகக் கல்லூரிகளில், கட்டணம் ஏதும் கிடையாது: பயிற்சி அனைத்தும் இலவசம். ஆளுல் ஒவ்வொரு மாணவரது பயிற்சிக்காகவும் அரசாங்கம் செலவிடும் பணம், எஞ் சினியரிங் அல்லது ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவருக்கு அது செலவிடும் பணத்தைவிட அதிகமாகும். பிற கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில், சோவியத் நாடகக் கல்லூரிகளில் ஆசிரியர் அதிகம்.

கடிதங்கள்
மல்லிகை இருபத்தோராவது ஆண்டு மலரில் பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகள் இரண்டு. தகவம் சிறுகதை மதிப்பீட்டில் சிறந்த கதைகளாகத் தெரிவு பெற்றிருப்பதை உங்களுக்கு அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மதிப்பீட்டு முடிவு விபரம் செய்தி வடி வில் கீழே தரப்படுகிறது. அதைத் தயவு செய்து மல்லிகையில் வெளியிடுங்கள்
தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்) நடத்தும் சிறுகதை மதிப் பீட்டில், 1985 மூன்ரும் காலாண்டிலே வெளிவந்த சிறுகதைகளுள் தெணியான் எழுதிய "இவளின் கதை" முதலாம் இடத்தையும், செங்கை ஆழியான் "திசநாயக்காவும் கந்தசாமியும் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன. சிறந்த சிறுகதைக்குத் தகவம் வழங் கும் நூறு ரூபா பரிசைத் தெணியான் பெறுகிருர், தெரிவுபெற்ற இக்கதைகள் இரண்டும் மல்லிகையின் இருபத்தோராவது ஆண்டு மலரில் வெளிவந்தவை.
தகவம் A. gyrongurt
மல்லிகையில் சமீபத்திய இரண்டு சிறப்பு இதழ்களையும் படித் தேன். எனக்கொரு மனக்குறை. இந்த இரண்டிதழ்களிலும் தூண் டில் பகுதி இடம் பெறவில்லை. இருந்தும் ஒரு மாற்றம் தெரிய முடிகின்றது. நான் எதிர்பார்த்த வண்ணம் கிளிநொச்சி மலர் இருக்கவில்லை என்பது மெய்தான். ஆனல் இந்தச் சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி எரிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் - எப்படி உங் களால் இத்தனையையும் சேகரித்துக் கையில் எடுக்க முடிந்தது என ஆச்சரியப்படுகின்றேன்.
ஒர் உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அழிவுக் கிடையே ஆக்கமும் இடம் பெறத்தான் வேண்டும். இல்லையேல் மனித குலம் ஸ்தம்பித்துப் போய்விடும். இத்தனை நெருக்கடிக ளுக்கு மத்தியில் புதிதாகப் பிறந்துள்ள ஒரு மாவட்டத்தைக் கெளரவித்துச் சிறப்பு மலர் போட்டதற்காக உங்களை மெச்சத் தான் வேண்டும்.
நிலேமை சீராளுல் அங்கும் ஒரு மல்லிகைப் பந்தல் கூட்டத்தை நடத்துவது சிறந்தது என்பது எனது எண்ணம்,
சாவீட்டு ஒலம் வேண்டாம். மக்கள உற்சாகப்படுத்தித் தன் னம்பிக்கை கொள்ளச் செய்வதே இன்று முழு முதல் தேவையா கும். மனிதர்கள் அழியலாம்; சாகலசம். ஆனல் மனுக்குலம் அழி யாது!’ என்று எங்கேயோ படித்த ஞாபகம். எனவே நாளை வாழப் போகும் சந்ததிகள், வளரும் இளந் தலைமுறையினருக்குத் தன்னம் பிக்கையை ஊட்டும் ஆக்கங்களைப் படைக்க உதவுங்கள். உங்களது அயராத தன்னம்பிக்கை இதற்குப் பக்கபலமாக அமையட்டும்.
ീu. ப. பிறைசூடி
35

Page 20
கைலாசபதி, நினைவுச் சொற்பொழிவுக்கான அழைப் பி த ழ் ைெடக்கப் பெற்றேன் இங்குள்ள சூழ்நிலையாலும் மனநிலையாலும் யாழ் வந்து கட்ட்த்தில் கலந்து கொள்ள முடியவில்லை.
சென்ற சம் திகதி பருத்தித்துறை நகரிலும், எனது டிஸ் பென்சரியிலும் நடந்த அனர்த்தங்கள் பற்றி பத்திரிகைகள் மூல மும், நண்பர்கள் மூலமும் அறிந்திருப்பீர்கள் என தம்புகிறேன்.
" ఎడfr'వgళ్లి శిశిష్ట போது, வழமையான நிகழ்ச்சி என நாம் ஆர்வம் காட்டாமலிருந் தோம் ஆயினும் திடீசென எமது டிஸ்பென்சரிக்கு அருகாகக் குண்டு மழை பொழிந்துகொண்டு வருவதைக் சேட்டவுடன் எல் லோரும் பயந்து திடுக்கிட்டோம். ஆயினும் புத்தி சாதுர்யமாக நானும், எனது குடும்பமும், எனது ஆஸ்பத்திரி உதவியாளர்களும் இமென்டிலான ே ல்வீட்டின் கீழ்த்தளத்தில் கட்டில்களுக்கும் மேசைகளுக்கும் கீழ் ஒளிந்து கொண்டோம்.
Ffð gy ஆறுவதற்கிடையில் மீண்டும் தலைக்கு மேலே கூரைக்கு ᏣupᏣ6Ꭷ ஹெலிகொப்டர் சத்தம். துப்பாக்கி வெடிச் சத்தங்களுடன்.
திடீரென எனது உதவி டாக்டர் எனது காலில் ஏதோ அடித்து சத்தமிட்டார். சற்றுப் பொறுங்கள் என்று கூறிவிட்டு آن 6 قه) سا-f3 வேட்டுச் சத்தம் ஒறிது அடங்கவும் ஒடிச் சென்று பார்த்தபொழுது சிறு ாயங்கள் காரில் பட்டிருந்தன: கூரையைத் துழைத்து வந்த 守Grartb,°鸟° வழியாக வந்து ரீவியைத் தாக்கி உ  ைடத் து பொழுது, அதிலிருந்து பறந்த கண்ணடித் துகள்கள் அவர் காலைத் தாக்கியிருந்தன. s
அதற்கிடையில் மீண்டும் ஹெலிக்கொப்டர் சத்தம். "-- ஒடிவாங்கோ ஹெலிக்கொப்டர் வருகுது" என மகனின் சத்தத் தைத் தொடர்ந்து மீண்டும் பதுங்கிக் கொண்டேன்.
தொடர்ச்சியாக நூறுதரம் வட்டமிட்டு வட்டமிட்டு, எமது நிலையம் நான்குதரம் ஹெலிக்கொப்டர் சூடுகளால் தாக்கப்பட் ல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதுங்கி ۰ ات-سا யிருந்தோம்
Gruuquy காப்பாற்றி விடுவார்' என்ற நம்பிக்கையில் என் னிடம் ஓபி- வரும் நோயாளிகளுடன் கூட்ச் சேர்ந்து உயிரைக் காப்பாற்றப் பதுங்கியிருந்தது எனக்கு ஒரு Hது அனுபவம்.
எல்லாம் ஓய்ந்தபின் எழுந்துவந்து பார்த்த பொழுது, கிட்டத் தட்ட 100 துப்பாக்கி ரவைக்ள் கூரையைத் துளைத்துக் கொண்டு வந்து பல பொருட்களைத் துழைத்து. உட்ைத்து நீாசப்படுத்திய பதைக் a 6007 Gl-frt. டீவி தளபாடங்கள். கதவுகன் பன்னல்கள் தையல் மெஷின் தண்ணீர் எஸ்லோன் குழாய்கள் எதுவுமே lólá சமில்லை. கராஷ்சுக்குள் நின்ற காரின் கண்ணுடிகள் சுக்கு நூரு இன. காரில் மாத்திரம் 21 துப்பாக்கி வேட்டுககள் பட்டிருந்த தென ஒரு கார் டிரைவர் ன்னிடம் பார்த்துக் கூறினர்.
இந்தப் பொருள் பண்டங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக நான்"நேசித்து. ரசித்து சேகரித்து வைத்திருந்த் மல்லிகை இதழ்
36

ள் - பைன்ட் பண்ணுவதற்காக மேசையில் அடுக்கி வைத்திருந் தேன். அவற்றையெல்லாம் துழைத்து நாசமாக்கிவிட்டதைப்
எப்படியோ உயிர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை ன்பது சற்று மி நிம்மதியைக் கொடுத்தாலும் கல்லோருக்கும் ஏற்பட்ட - ரீதியான பாதிப்பு நீங்க எவ்வளவு காலம் எடுக் குமோ தெரியாது
வும் முக்கியமாக, ஆறு வயது- நிறையாத என து மாஃ. ஹெலிக்கொப்டர் பற்றி, ஆர்மி பற்றி, மரணம் பற்றி ஏற்பட்டிருக்கக்கூடிய உணர்ச்சியான பாதிப்புக்சள், அவனது எதிர் காலச் சிந்தனைகளிலும் செயல்களிலும் வீரியத்தை அடக்கிவிடுமோ அன்றி எதிர்மறையாக் ஆவேசத்தையும் எதிர்ப்புனர்வுையும் வளர்த்து நிதானப் போக்கைக் கைவிட வைத்துவிடுமோ என அஞ்சுகிறேன்.
இன்று தமிழ் மக்கள் அகப்பட்டிருக்கும் இக்கட்டான சூழ் நிலையினை, நிதர்சனமாக நேருக்கு நேர்காணும் நிலைமை பருத்தித் துறை பொதுமக்களாகிய எங்கள் எல்லோருக்கும் கிடைத்தது.
இன மேலாதிக்க நெறியும், ஆக்கிரமிப்பு உணர்வும் ஊட்டப் பட்ட் படை வீரர்கள் கொடூரமாக, இலக்கு எதுவுமின்றி. குருட் டாம் போக்கில் தமிழ் இன ஒழிப்பில் ஈடுபட்டிருப்பதை அன் றைய, மீன் சநாத செல்" வெடிப்புச் சம்பவங்களும், ஹெலிக் கொப்டர் சூட்டுச் சம்பவங்களும் வெளிப்படையாகக் காட்டின.
இக்கட்டான இக் காலகட்டத்தில் பணந்தேடவோ அன்றி சொந்தப் பாதுகாப்பிற்காகவோ வெளிநாட்டிற்கு ஒடித் தப்புவது பச்சையான கோழைத்தனம் மட்டுமல்ல இனத் துரோகமுமாகும் என்பதை எல்லோரும் உணரவேண்டிய காலகட்டம் இது.
எழுத்தாளனே பொறியியலாளரோ, வைத்தியரோ, தொழில் நுட்ப வாசியோ, தொழில்ாளியோ - எழுத்துத் துறை சோந்தவன் என்ற பாகுபாடின்றி இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டியதுடன் இனப் பாதுகாப்பிற்கான முயற்சி களையும். வழிவகைகளையும் அறிவு பூர்வமாக ஆய்ந்தெடுத்து மக்க ளிடையே பரப்ப வேண்டியது முக்கியமானதாக எனக்குப் படுகிறது.
துப்பாக்கிச் சண்டையிலிருந்தும், குண்டு வீச்சுத் தாக்குதல் களிலிருந்தும் தப்புவதற்கான வழிவகைகள் பற்றி மல்லிகையோ அன்றி மேலும் பரந்த வாசகர் கூட்டத்தையுடைய தின் சரிப் பத் திரிகைகளோ, விளக்கப் படங்களுடன் மக்களுக்கு அறிவூட்டுவது இக்காலகட்டத்தின் மிக முக்கிய தேவையாகிறது.
இதுபற்றி ஆலோசனைக்கு எடுப்பதுடன் மற்றைய தினசரிப் பத்திரிகை ஆசிரியர்களுடன் விவாதித்து வேண்டியதைச் செய்வீர் கள் என நம்புகிறேன்.
பருத்தித்துறை, எம். கே. முருகானந்தம்
87

Page 21
வெளியேறும் வேர்கள்
கனத்த மணற் கூரை முகட்டைக் கிழித்துக் கொண்டு முன்னேறி வருகின்ருேம் . நாங்கள
வெளியே வருகிருேம்.
அடி மண்ணுக்குள்தான் அண்டமே என்று மூடிய இமைகளுக்குள் முடிவெடுத்திருந்தோம் .
βρO5 சிந்தனை இடி விழுந்து
flO
விழிகளின் கதவுகள் வெடித்துச் கிதறிய போது நாங்கள் தலைகீழ்ப் பயணம் செய்வதை தெரிந்து கொண்டோம்.
பச்சை வீட்டுக்குள் பரவசம் பூமிக்கடியிலோ புழுக்கம்.
தள்ளாடும் நம் தலைக்கு மேல் மரத்தின் பாதம்
கிளைகளில் புன்னகையாய் தொலையும் நம் சுவாசங்கள்
இலைகளில் பச்சயமாய் இழக்கும் எம் இரத்தம்
நாங்கள் இருட்டிலே இருப்பதால் மரத்துக்குப்
tussai
- வாசுதேவன்.
எங்களை
ಕ್ಹಣ: மறந பான மரத்ை
് ததை கூப்பிட்டு நிறுத்த வருகிருேம் கூரிய முனைகளாகிப் பூமியைக் கிழிக்கிருேம்.
இருட்டுக்குள் நாங்கள் சிதறிப் பிரிந்ததால் மரத்தின் காலுக்கு மண்மேலே உறுதி விரல்கள் ஒன்ருகிக் குவிவதைப் போல திரும்பவும் குவிந்த நாங்கள் கூராகி விட்டோம் நம்மில் பலர் அறுத்து போகும் சப்தத்தை மரம் சரியும் மறமறப்புச் சப்தத்தால் மகிமைப் படுத்துகிருேம்.
நாங்கள் இல்லா விட்டால் சின்னக் காற்றுக்கே சரிந்து விடும் இந்த மரத்தை நாங்களே வீழ்த்துவது நமக் கொன்றும் - கஷ்டமில்லை8
கனத்த மணற் கூரை முகட்டைக் கிழித்துக் கொண்டு வெளிச்சத்தைக் குடிக்க வெளியேறி வருகிருேம். .
ஒருநாள்
மரம் சரிந்து மண்மேலே விழும் - பூமியின் நேர் கோட்டில் நமக்குப் பக்கத்தில்.
38

அணு ஆயுதங்களின்றி 21-ம் நூற்றண்டில் பிரவேசிப்பதை
ஆதரிப்போர் யார்? எதிர்ப்போர் யார்?
- ஸ்பார்தக் பெக்ளோவ்
அணு ஆயுதங்களையும் பேரழிவு ஏற்படுத்தும் மற்ற ஆயுதங்க ளையும் கி. பி. 2000-ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதற்கான சோவியத் திட்டத்திற்குக் கிடைத்துள்ள சர்வதேசப் பிரதிபலிப்பில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. முதலாவதாக அதை மிகச் சிலரே எதிர்த்தனர். இரண்டாவதாக, இந்தத் திட்டத்தை உறுதியுடன் ஆதரிப்பவர் களுக்கும், இதை மறுக்க வழி கண்டுபிடிக்க முயல்வோருக்குமிடையே உள்ள வேற்றுமை, அமைதியை விரும்பும் "புரு"க்களுக்கும் யுத்த வெறி பிடித்து அலையும் 'கழுகுகளுக்கும் இடையே உள்ள வேற்று மையோடும். இடதுசாரிக்கும் - வலதுசாரிக்கும் இடையே உள்ள வேற்றுமையோடும் ஒன்று சேரவில்லை.
அமெரிக்காவில் இந்தத் திட்டத்தை ஆதரித்து, தற்கொலைக்கு ஒப்பான ஆயுதப் போட்டியிலிருந்து மனித சமுதாயம் தப்புவதற்கு இது ஒர் அரிய வாய்ப்பென்று கருதுவோரிடையே, அமெரிக்க ராணுவ அமைப்பில் மிக உயர் பதவி வகித்த அரசியல்வாதிகளும், ஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தைகளில் ஏதாவது ஒரு நிலை யில் பங்கு கொண்ட நியுணர்களும் உள்ளனர். மேலை நாடுகள் பலவற்றில் சோவியத் திட்டமானது எதிர்க் கட்சிகளிலும், ஆளும் கட்சிகளிலும் உள்ள அரசியல் வாதிகளாலும், வழக்கமாக சோவி யத் யூனியனை எதிர்க்கும் பல கன்சர்வெடிவ் பத்திரிகைகளாலும், ஆக்கபூர்வமாக மதிப்பிட்டுள்ளன. . ஐ. நா. வட்டாரங்களிலும், டெல்லி பிரகடனத்தில் கையெமுத் திட்ட நாடுகளின் அரசுகளிலும் சோவியத் பிரேரணைகளுக்குப் பேராதரவு கிடைத்திருக்கிறது.
நேட்டோ விளம்பர நிறுவனங்கள் சோவியத் பிரேரணைகளை விவரிக்கையில், "பிரசாரம் என்ற சொல்லைப் பயன்படுத்தத் தவற வில்லை. ஆனல் இந்தத் தடவை, "பிரசாரம்" என்ற சொல் பல தரப்பட்ட கட்டுப்பாடுகளுடன் பயன் படுத்தப்பட்டுள்ளது.
ஏனெனில், இதை உபயோகிப்போர், தாங்கள் படைக்குறைப்பின் எதிரிகளென அம்பலப்படுத்தப்படுவார்களோ என அஞ்சுகின்றனர்.
அமெரிக்க அரசு ஒருபுறமிருக்க, பிரிட்டிஷ் அரசோ, பிரெஞ்சு அரசோ அவை ஆயுத சோதனைகள் இல்லாமல் 21-ம் நூற்ருண்டில் அகியெடுத்து வைக்க விரும்பவில்லை. புதிய நூற்ருண்டின் ஆரம்பத் திற்குள் "விண்வெளிக் கவசத்தை எய்த வேண்டுமென்ற அமெரிக்க ஜனதிபதி ரீகனின் கனவு, காஸ்பர் வீன்பர்கரின் நீண்ட மற்றும் கூரிய அனு வாளுடன்" புதிய நூற்ருண்டில் பிரவேசிக்கும் காஸ்பர் வீன்பர்கரின் கனவு இணக்கமானதென அறிவிக்கப்பட்டுள்ளது.
39

Page 22
இதுவசந்தப் பெயற்சிக் காற்று எனக்கு அதன் விலாசம் தெரியாது.
அதன் ஜீவ சுரப்பியாய் சுகந்தம் மட்டும் எனக்குப் பழகிப் போன சுவாசம்.
நெல் மணமும் பனை (க்) கள் மணமும் - தமிழ் சொல் மணமும் எனக்குப் பழகிப் போன முகம் காணுத தோழனைப் போலான
F.
ஒரு நாடோடி போல் ஊர் பேர் தெரியா நிலையில் என் செவிகளில் ஏதோ குசுகுசுத்துப் போவதும் இந்தக் காற்றே !
என் நாசியில் வாசனை களை த்
தூவிச் செல்வதும் இதுவே !
இது - . . . . o எந்தப் பெயர்ச்சிக் காற்று? எனக்கு இதன் விலாசம் தெரியாது!
யுக யுகாந்திரமாய் என் முன்னுேடிகள்
காயப்பட்ட
காற்று
கோவை, என். ஜெயந்தி,
சுக 1 னுபவத்தைச் செறிந்த இந்தக் காற்றில் தான என் கரைதல்கள் கூடிணந் தோறும் :
சுகந்தம் சுமத்தலே ஒரிய பணி:ான காற்றிலே.
என்ன து?
ஏதோ リagaz
இரத்த மணமாக -
grupLåy Ld6007 LD Téf ”
என் சுந்தரச் சுகந்தங்கன்
சூனிய மாக
; gjë erit tot-Gl)
鷺。 ஏதோ மணக்கிறதே!
ப்ே பெயர்ச்சிக் காற்று?
G i nr Sl
醬 கொஞ்சமாகத்
தெரிய ஆரம்பிக்கிறது
கற்பு up Guds
கற்புக்கரசிகளான
ரதி தேவிகளே!
ான்கள் மட்டும் 8.
கண்ணகிகளைத் தேடவில்லை.
னென்றல்
டுபான்றையும்
மறுதாரமாய்த் தே
நாம் தயாரில்லை.
--குருபரன் 52souri
 

பேராசிரியர் கைலாசபதி
நினைவுச் சொற்பொழிவு
நெல்லை க. பேரன்
கடந்த 15-02-88 சனிக்கிழமை இலங்கை பல்கலைக் கழக யாழ் வளாகத்தில் உள்ள கைலாசபதி கலையரங்கில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடாத்திய கைலாசபதி நினைவுச் சொற்பொழி வுக்கு துணை வேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமை வகித்தார்.
திரு. நா. சோமகாந்தன் வரவேற்புரை நிகழ்த்துகையில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முயற்சிகளைப் பற்றி குறிப்பிட்டதுடன் முற்போக்கு இலக்கிய அணியின் கூட்டுத் தலை மையின் ஓர் அங்கந்தான் கைலாசபதி என்றும் தலைசிறந்த இலக் கியவாதியான கைலாசபதியையும், பேராசிரியர் சிவத்தம்பியையும் முற்போக்கு இலக்கிய இரட்டையர்கள் என்றும் வர்ணித்தார். காலத்தின் தேவையை அறிந்து மக்களின் பிரச்சனைகளில் பங்கு கொள்பவர் சிவத்தம்பி என்றும் இவர் சொன்ஞர்.
பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையுரையின்போது, "மேன் மக்களின் பணிகளைச் சமூகம்" என்றும் பாராட்டும். எனது மாணவரான கைலாசபதி யாழ் வளாகத்தின் முதல் தலைவராகவும், முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் இருந்தார். தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்ற அவர் மரபுவழி இலக்கியங்களையும் பண்டைய தமிழ் நூல்களையும் பயின்று நல்ல மாணுக்கராகத் திகழ்ந்தார். பழைய இலக்கிய அறிவுதான் பிற்காலத்தில் நவீன இலக்கியத்தில் இவரது ஆய்வுகளுக்கு உதவியாக இருந்தது. தினகரனில் சிறந்த பத்திரிகை ஆசிரியராக இருந்த இவர் ஏறத்தாழக் கால் நூற் ருண்டுகளாகத் தமிழ்ப் பணி புரிந்தார். பொதுவான தமிழ் ஆராய்ச்சியிலும் நவீன இலக்கியத் திறஞய்விலும் ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு வழி காட்டியாகத் திகழ்ந் தார். சமகால இலக்கியப் போக்கின் நாடித் துடிப்பை இனங் காட்டியதுடன் எல்லா அணியினரையும் அரவணைத்து நடத்துபவர். பாம்பின்கால் பாம்பறியும் என்பது போல கைலாசபதி நினைவுப் பேருரையை ஆற்றப் பொருத்தமானவர் எனது மாணவரான சிவத்தம்பி என்ருர்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி பேசுகையில், "கைலாசபதி என்ற சிந்தனையாளன் நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியின் மைல்கல்லாகும் 19 0களில் இருந்து ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்தைத் தேசீய உணர்வுகளுடன் வளர்த்தெடுத்த வரலாற்றில் கைவாசபதி பெரும் பங்கினை வகித்தார். மாக்சீய இவக்கிய விமர்சன முறையைத்

Page 23
தமிழில் அறிமுகஞ்செய்தார். அவர் ஒரு இலக்கியத் தோப்பு. சமூகப் பிரக்ஞைபற்றிய உணர்வுள்ளவர். இன்று வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் நடக்கும் இலங்கைத் தமிழர்களின் போராட் டம் இதுவரை இல்லாத உக்கிரத்துடன் நடக்கிறது. அரசியல் கட்சி கள் செயல் இழந்து போயுள்ளன. இத்தகைய சமூக மாற்றவேளை களின்போதுதான் புதிய தடிப்புடன் இலக்கியங்கள் தோன்றிக் காலத்தின் தேவையைப் பிரதிபலிக்க வேண்டும். எல்லாம் நடந்து முடிந்த பிறகு எழுதுவது "போஸ்ட்மோட்டம் றிப்போர்ட் ஆகும். ஈழத்தில் சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான கருத்துக்களை அடக்கி ஒடுக்கப்பட்டோரே முன்வைத்தனர். இன்று இக்கருத்துக்கள் வலிமை பெற்றுள்ளன. 154 - 65 முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நடவடிக்கைகள் முக்கிய இடத்தைப் பெற்றன என்ருர்,
திரு. ஐ. சாந்தன் நன்றி கூறினர்.
(992 - 86-ல் நடைபெற்ற கருத்தரங்கில் "சமகாலமும் இலக்கிய மும்" என்ற தலைப்பில் திரு. டொமினிக் ஜீவா கருத்துரையாற்றிய தின் சுருக்கம்)
இனப் பிரச்சினையால் எங்களைப் போன்ற படைப்பாளிகளின் அணுகுமுறையே வேறு. நமது பார்வை வித்தியாசமானது. தமிழ் மக்களினது போராட்டம் நியாயமானது. ஜனநாயகத் தன்மை கொண்டது, ஆரோக்கியமானது. இதை வென்றெடுக்கத் தனித் தமிழ்ப் போராட்டமாக இதைக் கருதக் கூடாது. தென்னிலங்கை யில் வதியும் தொழிலாளி வர்க்கத்தின் பேரிணைப்பும் சிங்கள முற் போக்குச் சக்திகளின் ஒருங்கிணைப்பும் நமக்கு மிக மிகத்தேவை. ஒடுக்கு முறைக்கு எதிராகச் சகல மக்கள் சக்தியையும் கூட்டிக் கோப்பதின் மூலமே தமது போராட்டத்தில் நாம் வெற்றி கொள்ள முடியும். இதில் சிங்கள-முஸ்லிம் முற்போக்கு எழுத்தாளர்களின் பங்கு காத்திரமானதாகும். உலகத்தின் எந்த மூலையில் அநீதி, அக்கிரமம் நடந்த போதும் - அது வியற்நாம், சிலி, அங்கோலா, தென்னுப்பிரிக்கா - உக்கிரமமாகத் தமது எதிர்ப்புக் குரலை ஓங்கி உரத்து எதிரொலித்த சிங்கள எழுத்தாளர்கள், தமது நாட்டில் வாழும் சகோதர மக்களுக்குத் தினசரி நடக்கும் கொடுமைகளைக் கண்டும் காணுமல் இருப்பது விசனிக்கத் தக்கது.
வட, கீழ் மாகாணத் தமிழர்கள்தான் தமிழுக்குத் தொண்டு செய்கின்றனர் என்ற கதை பழங்கதையாகி விட்டது. சிங்கள மக்களால் சூழப்பட்ட பிரதேசங்களில் வாழும் குக்கிராம முஸ்லிம் இளைஞர்கள் இன்று இளந் தமிழுக்குப் புதிய பரிமாணம் சேர்க்கின் றனர். இளைஞர்களை விட, படித்த முஸ்லிம் யுவதிகளின் பங்களிப்பு கணிசமானது மாத்திரமல்ல, கெளரவிக்கத் தக்கதுமாகும்!
திரு. ந. சோமகாந்தன் தலைமை வகித்தார். செம்பியன் செல் வன், அகஸ்தியர், சபா ஜெயராசா, எஸ். கிருஷ்ணராசா ஆகி யோர் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
8

நான் ஒரு நீக்ரோ
ஆங்கிலத்தில் அல் வைற்ரோறி
தமிழில்: எம். பாலகிருஷ்ணன்
அச்சமின்றி சொல்லி விடு வெட்கமின்றி சொல்லி விடு எல்லா மனித வர்க்கத்தின் முகத்துக்கு நேராக சொல்லி விடு என் தந்தையைப் போல்
தந்தையின் மூதாதையர்-போல்
நானும் ஒரு நீக்ருே! என் தாய் ஒரு நீக்ரச்சி! எனவே என் நிறம் கறுப்பு நான் ஒரு மானுடன்: அடிமையல்ல! ஆபிரிக்கா என் சொந்த மண் அவ்வெனது மண் நீடூழி வாழ்க அந்த ஆபிரிக்கா நீடூழி வாழ்க. எனது மண் வெள்ளை மனிதர்களால் மாசுபடுத்தப் பட்டது. ஆக்கிரமிப்பு காரர்களால் அழுத்தி அடிமையாக்கப்பட்டுள்ளது. இனி என் மகன் ஆற்ற விருப்பிறைப் போல என் மரணத்திற்கு அப்பாலும் நான் அவனுக்காகத் தியாகிக்கிறேன். என் மண்ணுக்குப் பின்னல் என் மூதாதையரின் சப்தநாதம் இடியாக முழங்குகிறது. ஒய் நீ ஆக்கிரமிப்புக் காரர்களின் அஸ்தியை வீசு தென்றலில் சுண்டி விடவில்லையா? அப்படியானுல் நீ எங்களுக்கு பிறக்கவில்லை போ நீ எங்கள் மண்ணிலிருந்து எதிரிகளை அப்புறப் படுத்தி
4、
நமது எல்லா மலைக் குன்றுகளிலும் ஆபிரிக்காவின் வெற்றி நியமத்தை உயர்த்தி இருட்டு சவப் பெட்டிகளை வீசி விட்டு - உன் மண்ணை ஒளியால் நிரப்பவில்லையானல் - நீ அதிக நாட்களுக்கு எங்கள் மகளுக இருக்க முடியாது உனது பெருமிதத்திற்கும் மகிழ்ச்சிக்கும் சரித்திரத்தை பணிய வைக்காவிடில் நீ அதிக நாட்களுக்கு எங்கள் மகளுக இருக்கமுடியாது. இருட் சுவர்களை அதிகாலை இடித்துத் தள்ளிடும் இப்போது எங்கள் வெற்றிப் பாடலைச் செவிட்டு இரவு தோல்வியுற தொடங்கி விட்டது அதி துரிதமாக அதன் கருமை நிறைகிறது. இறுதியாகப் பீதிக்குள்ளேயே மறைகிறது இப்போது பார்த்துக்கொள் LYYYc0c00L LLLLL S 0LSLzLEYOa0LLS S SLLLLL0YYLLLLSL மார்பு திறக்க மலைத் தொடர் களுக்கிடையே அடித்து வரும் கருவெள்ளமாய் நினைவற்ற நிலையிலிருந்து எழுகிருர்கள் என்று விடிவின் வெளிச்சத்தில் மின்னும் இது எங்கள் மாபெரும் ஆபிரிக்கா!.

Page 24
LLLLLLLL00L0LLLLLLY000LLYYLLL0YL0LL உவப்பு
LLLLLLLLLLLLLLLLLL0YYLLLLLL0L0LL0LLSL
தெணியான்
இவளுக்கென்ஞச்சு
ஆகாயமும் இன்று இவளைப் போல அழகாக இல்லை. எல்லாம் பொத்தல் பொத்தலாகக் கரு மையின் எழில் வண்ணத்தை அலங்கோலப்படுத்துகிறது. இந் தப் பொத்தலில்லாத ஆகாயம் கூட இவள் மேனி அழகுக்குத் தோற்றுப்போகும்.
இவள் மேனி அழகு என் לו ז0& இந்த அழகு மேனியில் மோக வெறி கொண்டு இவள் பின்னே நான் பறந்து திரிந்த நாட்கள் . நந்தலாலாவிலே இவள் கரிய நிறத்தைக் கண்டு நான் உணர்ச் சிப் பரவசத்தில் உள்ளம் சிலிர்த் துப் போன காலங்கள் . கழுத் தைச் சொடுக்கித் தி ரு ப் பி. கண்ணின் கருமனியைச் சுழற்றி வெட்டி வெட்டி மோகம் ததும்பு விழியால் இவள் போதை வெறி யூட்டிய சமயங்கள். தெத் தித் தெத்தி நடக்கும் இவள் கெந்தல் த  ைட யி ல் கிறங்கி என்னை நான் இழந்து தவியாய்த் தவித்த வேளைகள் இவள் சிறகடிப்பில் என் இதயம் ஒரு
44
பைத்தியமாக்குகிறது.
கணம் நின்று படபடத்துத் துடித்த அந்தக் கிளுகிளுப்புகள்.
எல்லாமே இவளுக்கு மறந்து
Giuntais n!
எனக்கெப்படி உ ற க்க ம் வரும் மண்டையிலே விண்விண்
என்று, சுண்டு வில்லால் கூவி அடித்த கல்லோன்று விசையாக மண்டையைத் தாக்கிக் கலக்கி விட்டது போல தலை சுழன்று கணக்கிறது.
இவளால் இவை எல்லாவற் றையும் நினைத்துப் பாராமல் மெய்மறந்து உறங்க முடிகிறதே! இந்த உறக்கம் நிசமானதுதான அல்லது. ?
உறக்கத்திலும் மென்மை யான தன் அலகுகளால் என் சிறகுகளை இதமாகக் கோதிக்
கோதி, செல்லமாக மெல்லக் கொத்திக் கொடுத்து உறங்க வைத்தவள். இன்று முகத்தை
மடக்கிக் கழுத்துக்குள் சரித்துக் கொண்டு கிடக்கிருள்.
அலகுகளைக் கூராக்க வேண் டுமென்ருெரு பொய்ச் சாட்டுச் சொல்லிக் கொண்டு என் அல கோடு அலகை உரசி உரசி கரு விழிகள் சிவந்துவர, வெப்ப மூச்சு விட்டவண்ணம் நெருங்கி வருகின்றவள், இன்று ஒதுங்கிக் கிடக்கிருள்.
இவளுக்காகவே இந் த க் கூடற் பனைக்குள் உச்சார வட் டில் கட்டினேன் அழகான ஒரு வட்டக் கூடு. சுள்ளித் தடிகள் மென்மையான இவள் உடலை உறுத்தக் கூடாது என்பதற்காக எத்தனை வீடுகளுக்கு அலைந்தேன். தும்புத்தடிகளிலிருந்து தென்னந்
தும்பைப் பிய்த்தெடுக்க எவ்வ ளவு போராடினேன்! அந்தத் தும்புகளையும், பழைய துணிக ளையும் சுமந்து வந்து, கூட்டி

னுள்ளே சொகுசான உள்ளணை தயாரித்தேன்.
அன்றிரவு, அந்த மெத்தை யில் இருவரும் படுக்கச் சென்ற முதல் நாள். . இவள் என்ன சொன்னுள்?
"காதல்தான் பெரிதெனக்கு காலையில் எழுந்து கரையவும் வேண்டாம். கறணம் போட்டுப் பறக்கவும் வேண்டாம். கட்டிய ரைச்சுக் கொண்டு காலமெல் லாம் உறங்குவோம்.
இன்னும் என்ன என்னவோ எல்லாம் சொல்லிப் பிதற்றிக் கொண்டே கிடந்தாள். அந்த இரவு அவள் உறங்கவே இல்லை.
இன்னேரு இரண்டு இரவு கள். மழைகால விழிப்புப்போல எனக்கு. மழையின் அந்த விழிப் பிலும் என்ன ஆனந்தம். நெருக் கமான இவளின் கதகதப்பு. மழைவானத் மை இரு ளை இவளின் மேனி எழிலோடு ஒப் பிட்டுப் பார்ப்போன். பூ. . வானமெங்கே? இவளின் செளந் தரிய வண் ண த் துக் கோல மேங்கே!
எப்போதோ நான் குரலெ டுத்துக் கரைய வேண்டுமென்று தவித்துக் கொண்டு கிடக்கின் றேன்.
“சேவல் இ ன் னு ம் தன் முதற் குரலைக் கொடுக்க வில் aul அதன்பிறகு அதன் இரண்டாவது குலையும் கேட்ட பிறகல்லவா நான் குரல் எடுத் துப் பாட வேண்டும்!
கடந்த இரவு எப்போதும் போல நான் பாடவில்லை; அழு தோன். என் பா ட் டோ டு சேர்ந்து தேளுகப் பெ ரு கும் இவள் இ னிய குரல், என் சோக க் குரல் கேட்டுக்கூட
மகிழ்ந்தேன்.
வெளிவரவில்லை. எனக் குப் பெருத்த ஏமாற்றந்தான்.
இவள் இவ்வளவு பெரிய விஷமக்காரியா M
நான் அப்படி என்னத்ை தச் சொல்லிவிட்டேன்?
"மனிதரைப் போல எவனே ஒருவன்ரை பிள்ளையைத் தன்ரை பிள்ளை எண்டு பெயர் பதியிற வனல்ல நான்" என்று தா ன் சொன்னேன்.
அதுக்கு இவள், “srøðrar சொல்லுறியள்? , என்று கேட் டாள். ஒன்றும் விளங்காதவள் போல.
இவள் நடிக்கிருள் என்று உணர்ந்து கொண்டே மீண்டும் சொன்னேன்!
"நான் மானமுள்ளவன்?
"அப்ப. நான்தான் மானங் கெட்டவளோ?
இவள் கேட்டுக் கொண்டு கிஅன்பிறகு மெளனமாக ஒதுங் கினவள்தான்.
என்னை க் கொல்லாமற் கொன்று கொண்டிருக்கிருள்.
நான் கேட்டதில் என்ன பிழை?
எனக்கும் மனதில் ஒரு வரு டமாக இருந்து கொண்டிருக் கும் நெருடல், மனம் பொறுக் காமல் பகிடிபோலச் சொல்லி விட்டேன்.
சென்ற ஆண்டு போல இப் போதும் நடந்துவிடக் கூடா தென்று முன்னேச்சரிக்கையாகச் சொன்னேன், அவ்வளவுதான்.
கடந்த ஆண்டு இ வள் அ ைட காக்க ஆரம்பித்ததும் நான் எவ்வளவு பெருமைப்பட் டேன். எனக்கும் ஒரு வாரிசு தோன்றப் போகிறது என்று இவளுக்கு உவப்

Page 25
பான உணவுகள் எவை எண்
பதை அறிந்து, தேடி அலைந்து எத்தித் திருடி, எறிபட்டு, இடி பட்டு, இருஞ்சிக் கொண்டு
பறந்து வந்து அடைகாத்துக் கொண்டு கூட்டுக்குள்ளே கிடந்த இவளுக்கு என் அன்பையும் குழைத்து ஊட்டினேன்.
ஒருநாள். . . ベ ஒரு நடுப்பகல் வரை இவ ளுக்கு மிகவும் பிரியமான குஞ் செலி ஒன்றைத் தேடி அலைந்து, கடைசியில் பூனையோடு சண்டை போட்டு அதை ஏமாற்றிவிட்டு அலகினல் தூக்கி க் கொண்டு இவளைத் தேடி ஓடி வந்தேன். அப்போது கூட்டில் இவ ளோடு நான் எதிர்பார்த்திருந்த என் வாரிசு.
எனக்கு மனதில் எழுந்த ஆவலைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. இவள் தடுத்தும் கேட் காமல் அணைத்து முத்தமிட் டேன்.
என்ன நிறம் ஆகா. 1 இப் படி யு மொரு அழகுக் கரு மையா? இவள் என் அழ குக் கறுப் பி தோற்றுப்போய் விடுவாள், என்ருலும் இவளால் தான் இப்படி ஒரு பேரழகைப் பெற முடியும் என்று பெருமிதங் கொண்டேன்.
அப்பன் எனக்கு அந்தப் பெருமை ம ன தி ல் பிறந்தது நியாயந்தானே!
பெண்ணுக்கும் தன்பிள்ளை பொன்பிள்ளை அல்லவா?
இந்தக் குதூகலிப்புகள் எல் லாம் ஒரு மாதகாலம் வரை தான். அதன் பிறகு ஒருநாள்.
வளுக்கு உவப்பான குஞ் செ ஒன்றைப் பிடித்துக் கொண்டு இவளுக்கும் கொடுத்து என் வாரிசுக்கும் பக்குவமாக
அருகிருந்து ஊட்டிவிட வேண்
டும் என்று எண்ணி ஆவலுடன் பறந்து வந்தேன்.
அங்கே என் கூட்டிலே என் வாரிசு கூஉ கூஉ கூஉ' எனக் கொடூரமாகக் குரல் எழுப்புவது கண்டு திகைத்தேன். "கா. கா. கா " என்று கர்ணுமிர் தமாக இனிய குரல் எழுப்ப வேண்டிய" என் வாரிசுவா இது?
எனக்குச் சினம் பொங்கி எழுந்தது.
கொல்லும் பார்வையால் இவளை வெறித்தேன்.
இவள் தலைகுனிந்து ஒதுங் கிக் கொண்டாள்.
என் வாரிசு என்று பெரு மைப்பட்ட அந்த "அதை" என் அலகால் சினம் தீரும் வ ைர கொத்தித் துரத்தினேன்.
அந்தத் தவறு திரும்பவும் நடந்தால், இவளை எப்படி நான் மன்னித்து. இவளோடு இனிமே லும் வாழ முடியும்? நானென்ன மானம் ரோசமில்லாத மனிதஞ? து சொன்னதுக்காகவா இவள் என்னைப் பழிவாங்கினுள்
காலை முதல் எத்தனை தட வைகள் இவளுக்குப் பிரியமான உணவுகளைக் கொண்டு வந்து கொடுத்தேன்.
அப்பத் துண்டு. ஒரு குழந்தையிடம் எத்தித் திருடினேன். "சீ . 1 சனியன்" என்று அம்மா எசினுள். எனக்கு நெஞ்சு பதைத்தது. நான் திகு டின குற்றத்துக்காக நான் வாக னமாகச் சுமக்கும் என் தேவ
ஞன சனீஸ்வரனையா சந்திக் இழுக்க வேணும் இவளுக்காக அந்த அம்மாவையும் நா ன்
மன்னித்தேன். இவளுக்கு அப்
பத்துண்டைக் கொண்டுவந்து கொடுக்க வேணுமென்ற அவச ரம் எனக்கு, "இல்லையென்றல்
46

தலையில் ஒரு குட்டுக் குட்டிப் போட்டு வந்திருப்பேன்.
மத்தியானம் அந்த அம்மா" பூவரசமிலையில் ஒரு கிள் ஞ ச் சோறும் கறியும் போ ட் டு க் கொண்டு வந்து கையிலே வைத் துக் கொண்டு நின்று "கா கா" என்று கூப்பிட்டாள். எனக்கு விளங்கிவிட்டது. என்னுடைய தேவன் சனீஸ்வரனுக்கு ஆக்கிப்
படைத்து, அதி ல் ஒருபங்கை எனக்குத் தரக் கூப்பிடுசிருள் என்று.
சரி, இதையாவது இவள் உண்பாள் என்ற நம்பிக்கையில் அலகு நிறைய அள்ளிக் கொண்டு ஓடிவந்தேன்.
அதன் பிறகு கோழித்தலை கொன்று, அதன் பிறகு ஆட் டெலும்பு.
குஞ்சிெலியாவது விரும்பித் ன்னுவாள் என்று நம்பி நாயாக
குள் விழும்போது, ஒரு குஞ் செலியைப் பிடித்து. துடிக்கத் துடிக்கக் கொண்டு பறந்து வந் தேன். அதையும் தன் அலகினல்
தூக்கி கூட்டுக்கு வெளியே
எறிந்துவிட்டாள்.
நானும் பட்டினிதான்.
என் வாரிசை அவள் அடை காத்துக் கொண்டு எதையும் தின்னமற் கொள்ளாமல் பட்டி னியாகக் கிடக்கிருள். நான் மட்டும் எப்படித் தின்னலாம்
சரி. சரி, இனிமேலும் இப் படியே காலம் கழிக்கேலாது இவள் மனதை அறியத்தான் வேணும்!
“6 T6ër 68Turunt பேசாமல் கிடக்கிருய்!"
* என்ன . . காது கேக்க ugia Gul
'நல்லாக் கேக்குது"
"ஏன் ஒண்டையும் தின்னு ருய் இல்லை! இப்படிக் கிடந்தால் என்னெண்டு பொரிச்ச கூட்டுக் காலை எழும்பப் போருய்
"இதுக்குத்தான் பெத்தவள் இருக்க வேணுமெண்டு சொல் லுறது. இந்த நேரத் தி லே நாவுக்கு இதம்பதமாக எல்லோ தின்ன வேணும். இப்ப கண்ட தையும் தின்ன மனமில்லை"
"அப்பம், படையல் சோறு, கோழித்தலை, ஆட்டெலும்பு, உனக்குப் பிடிச்ச குஞ்செலி . . எல்லாம் கொண்டுவந்து தந் தன். ஒண்டும் வேண்டாமெண்
டிட்டாய். நீ கோவத்திலைதான் தின்ஞமல் கிடக்கிருய் எண்டு நினைச்சேன்"
* மனதிலே ஆத்திரந்தான். எண்டாலும் ஆரோடை கோவிக் கிறது"
"என்ன தீன் வேணும்? கெதியாகச் சொல்லு! இரவும் பகலும் பட்டினி கிடச்கிருய்
"உங்களுக்குத்தானே நல் லாத் தெரியும். இப்ப கொஞ் சக் காலமாக நாங்கள் என்ன சாப்பிடுறமெண்டு”
"என்ன. மனிச இறைச்சி? எனக்கெண்டால் சு விச் சு ப் போச்சு. எவ்வளவெண்டு தின் னுகிறது"
எனக்குச் சலிக்கவில்லை. அதொரு தனி ருசி"
*சரி, இப்ப கொண்டு வாறன். இரு”
*இந்த இருட்டிலே எங்கே தேடப் போறியள்?"
"அடி விசரி. . . மணிச இறைச்சிக்கும் இஞ்சை இப்ப பஞ்சமா! எங்கே போனலும்
கு விஞ்சு கிடக்குது. நீ ஏன் வீணுகப் பசிகிடக்கிருய். இரு இப்ப வந் தி டு கிற ன். எது வேணும். ஈரலோ முனையோ? 5rt, 5fr ” O

Page 26
ஒரு நிலாக்கால நினைவும் G. ந டு மூச் சும்
- புதுவை இரத்தினதுரை
இந்த நிலாக் காலம் எப்போதும் இப்படித்தான். எந்தவித மாற்றம் இல்லாமல் .
அப்படியே இந்த நிலாக் காலம் எப்போதும் இப்படித்தான்.
முந்தி நிலா நாளில் .
முற்றத்தில் கோடிட்டுக்
கிந்தி யடிப்போம்
கிளித்தட்டு,
வாரோட்டம்
என்று களிப்போம். எப்போதும் விளையாட்டே. இன்று அதை நினைக்க . V. இருபத்தைந் தாண்டுகளின் முன்ன்ர் நிலாக்கால முசுப்பாத்தி தெரிகிறது.
இன்றும் நிலவு.
இளமை நினைவுகளில் நின்று, மனமேனே நெடுமூச்சு விடுகிறது. காலம் விரிந்ததுதான், கண்மூடித் திறப்பதற்குள் ஞாலம் விரைந்து நடந்து பறக்குது தான். என்ருலும் அந்த இளம்காலம் தடம் பதித்து நின்ற இடம் என்னுள் நிலை கொண்டிருக்கிறது.
எங்கும் வயல் நிலத்தில் எழிலாய்ப் பயிரிருக்கும். பொங்கும் நிலா வொளியில் பொற் கதிர்கள் அழகொளிரும். குளம் நிரம்பி வளியும்,
குறுமீன் தெறித் தோடும், . . பழம் சொரியும் ஆலமரம் பக்கத்தே தலையசைக்கும். ஆல மரத்தின்மேல் அழகுநிலா எழுந்து வரும். பாலைச் சொரிந்தபடி பவனிவரும் அந்த நிலா.
4.
 

இந்த நிலாக் காலம் எப்போதும் இப்படித் தான், எந்தவித மாற்றம் இல்லாமல் . அப்படியே.
இந்த நிலாக்காலம் எப்போதும் இப்படித்தான், இந்த நிலவினிலே , இம்மியதும் மாற்ற மில்லை, நாங்கள் தான் மாறி நாறிக் கிடக்கின்ருேம், தூங்க முடியாமல் துவண்டுள்ளோம். வாய் திறந்து, பேச முடியாது பேச்சிழந்து போய் விட்டோம், வீசும் பொருளாகி வீதியிலே கிடக்கின்ருேம், யாரும் நிலா முகத்தை
ரசிக்கின்ற நிலையில்லை.
யாரும் வயல் வெளியில் நடை பயிலும் நிலையில்லை. அந்தக் குளம்கூட அழகிழந்து கிடக்கிறது, அந்தக் குளத்தின் அருகிலுள்ள ஆலமரம் அப்படியே பேச்சற்று, அசைவின்றித் தூங்கிறது. எப்படித்தான் பேச்சுவரும்
என்பது போல்,
எல்லாமே. தூக்கக் கலக்கத்தில் துவண்டு கிடக்கிறது. ஏக்கத்தில் அந்த நிலா எனப் பார்ப்போர் யாருமிலர் என்ற நிகளப்பில் இருள்மேகத் திரைக்குள்ளே . சென்று மறைகிறது. திரும்ப இனி எப்போதோ? நல்ல நிலாக்கால நாளிற்தான்
தமிழர்கள் எல்லா விழாவுக்கும் ஏற்பாடு செய்வார்கள், வல்லிபுரக் கோவில் .
வற்ருப்பளை யம்மன் .
நல்லூர்,
காரைநகா,
நயினை நாகம்மை,
என்றே நாம் தெய்வ விழா எடுப்பதுவும் நிலா நாளே.
இன்றெங்கும் கார்கள்
இல்லையிது அந்நாளில் அங்கங்கு உள்ள அம்மனுக்கு விழாவென்ருல், எங்கெங்கும் பரபரப்பு. எவ்விடத்தும் நீர்ப் பந்தல் தங்கி இளைப்பாறச் சத்திரங்கள்
துணையின்றி நம்பி உலாவரலாம் யாருக்கும் பயமில்லை.
9

Page 27
பொங்கும் நிலா நாளில் போய்வரலாம் பயமில்லை வண்டிலிலே. நாங்கள் வல்லிபுரக் கோவிலுக்குச் சென்று வந்த நாளெல்லாம்
தெரியும்;
நினைவிருக்கு,
தம்பப்பா,
செவிட்டுச் சரவணையார், உலக்குளத்துச் சம்பரியான் இவர்களிடம் சவாரி விடும் வண்டிலுண்டு, வண்டிலிலே நாங்கள் வல்லிபுரக் கோயிலுக்குச் சென்றுவந்த நாளெல்லாம் தெரியும் நினைவிருக்கு, இன்றிவைகள் யாவும் இயலாத காரியங்கள். சன்னதிக்குக் கூடச் சாகத் துணிந்தவர்கள் மட்டுந்தான் போக முடியும்.
மற்றவர்கள்
எட்ட இருந்தபடி இருந்தெழும்ப வேண்டியதே. கோட்ட்ை'முனிய்ப்பர் கோவிலினைக் கண்ணுலே. பார்த்தவரைப் பார்த்துப் பலகாலம் ஆகிவிட்ட நேச்சரிலே ஏன்தான் நிலா ஆசை விட்டிடலாம்.
தாங்கள் பிறந்த நிலம், நாம் மிதித்து நடந்த நிலம், தூங்கி மகிழ்ந்த நிலம், சுடுகாடாய்ப் போனதுவே, பண்ணைக்குப் போய்வரவே பயமென்ருல். எங்களது மண்ணுக்கு வந்த மாரடைப்பை மாற்றுவதார்?.
அக்கிரமமெல்லாம் அணிவகுத்து நிற்கையிலே பக்குவமாய் நாங்கள் படுத்திருப்ப தெப்படியோ? ஆயுதங்கள் மட்டும் ஆளவந்த காரணத்தால். ஆயுதங்கள் இங்கும் அணிவகுத்து நிற்பதினல். காரோடும் வீதியெங்கும் கண்ணி வெடி, அம்மனது
தேரோடும் வீதியெல்லாம் தெருக் கொலைகள்.
ஆனலோ . இன்று : அவையெல்லாம் பழங்கதைகள் இந்த நிலாக் காலம் எப்போதும் இப்படித்தான் எந்த விதமாற்றம் இல்லாமல்
அப்படியே . நாங்கள் தான் மாறி நாறிக் கிடக்கின்ருேம் தூங்க முடியாமல் துவண்டுள்ளோம்.
50

தேசிய சிந்தனையாளன், அ. ந. கி.
"அமரர் அ. ந. கந்தசாமி ஒரு பல்கலை வேந்தர், அவர் நாவல், நாடகம், க வி ைத மொழி, பெயர்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டுப் புகழ் பெற்ருர். இவர் இத்தனை துறை களில் ஈடுபட்டாலும் *வெற்றி யின் ரகசியம்" என்ற நூலைத் தவிர வேறு எந்தப் படைப்புமே நூலுருப் பெறவில்லை. இவரது கை எழுத்துப் பிரதிகளை நூலுரு வில் கொண்டுவர நாம் செய் யும் உதவியே இவருக்கு நாம் வழங்கும் கெளரவமாகும். இப் படியான நிலை மற்ற எழுத்தா ளர்களுக்கும் வரக்கூடாது. அதற் காக எழுத்தாளர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே கெளரவிக் கப்பட வேண்டும் எழுத்தாளர் கள் ஒன்றியம் மூலம் இவ்வாருன பணிகளைச் செய்யலாம், எனவே எழுத்தாளர்கள் எ ல் லோரும் ஒன்று சேரவேண்டும்,
இவ்வாறு கூறினர் தினகரன் பிரதம ஆசிரியர் ஆர். சிவகுரு நாதன், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கொழும் புக் கிளையின் ஏற்பாட்டில் நடை பெற்ற அமரர் அ. ந. கந்தசாமி யின் ஞாபகார்த்தக் கூட்ட்த்தில் தலைமை வகித்துப் பேசுகையிலே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
மேற்படி கூட்டத்தில் பேசிய சில்லாலையூர் செல்வி ராஜன். "அமரர்
கந்தசாமியை எனது வழிகாட்டியாகக் கருதி மதிக் கின்றேன். ‘அளவெட்டி நட
ராஜா கந்தசாமி என்ற தனது பெயரைக் குறுக்கி "அ. ந. க." என்று எழுதிவந்தார். டிராம் தொழிலாளர்களை ஒன்றுசேர்த்து யூனியன் அமைத்து. டிராம் வேல்நிறுத்தத்தை முன்ன்ன்று நடத்தியவர். இதனல் சிங்கள் வர்கள் மத்தியிலும் மதிக்கப் பட்டவர். அவரை தமிழ் இலக்
கியத்துக்குள்ளும், அரசியலுக் குள்ளும் அடக்கிவிடக்கூடாது. தேசிய தலைமைத்துவத்துக்கு வளர்ந்து விட்டவர். ஆரம்பத் தில் வீரகேசரியிலும் " பின்பு ஒப்சேவர், தேசாபிமானி, சுதந்தி ரன் போன்ற பத்திரிகைகளில் கடமையாற்றியவர். "சுதந்திரன்" பத்திரிகையின் வளர்ச்சியில் இவ ருக்கும் அதிக பங்கு இருக்கிறது. அப்பொழுது சுதந்தி ரணில் இவரே ஆசிரியத் தலையங்கம் எழுதுவார். ஆனல் வேருெருவர் பெயர் போடுவார்.
இந்தியாவில் அண்ணுத்துரை கம்பராமாயணத்தைத் தீயிட வேண்டும் என்று கோஷமெழுப் பிய பொழுது இவர் இலங்கையி லிருந்து சிலப் பதிகாரத்தை தீயிட வேண்டும் என்று கட்டுரை கள் எழுதியவர். இதே கட்டுரை களை பெரியாரின் விடுதலை" இதழ் மறு பிரசுரஞ் செய்தது. இவரது தர்க்க ரீதியான எழுத் தாற்றலைக் காட்டுகிறது.
இவர் எழுதிய "மதமாற்றம்" என்ற நாடகத்தை அப்பொழுது லடிஸ் வீரமணி நெறிப்படுத்தி
ஞர். காவலூர் ராஜதுரை மேடையேற்றினர். ஆனல் இவை பற்றி பல்கலைக் கழகத்தைச்
சேர்ந்தவர்கள் கட்டுரை எழுதும் பொழுது கலாநிதி சிவத்தம்பி நெறிப்படுத்தியதாகவும், சுந்தர லிங்கம் நடித்ததாகவும் மாற்றி எழுதிகிருர்கள். இவரது 'மனக் கண்" நாவலை நாடகமாக்தி என்ஞல் வானெலியில் ஒலிபரப்ப முடிந்தது. ஆதையிட்டு நான் பெருமைப்படுகிறேன் என்றும் மேற்படி கூட்டத்தில் எச்.எம்.பி. மொஹிதீன் கூறினர் காவலூர் 7 ஐ ஆரை அந்தனி ஜிவா, சே. விஜயன் போன்ருேரும் உரையாற்றினர்கள்.

Page 28
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கல்பிட்டியின் பங்கு
ஆசாரக்கோவை
ஆசாரம் என்பதற்கு நல்லொழுக்கம் எனப் பொருள் கொள்ள லாம். மக்கள் வாழ்வில் செய்யக்கூடியது எவை செய்யத் தகாதவை எவை என்பதை நூறு செய்யுளில் அடங்கியுள்ள நூல் "ஆசாரக் கோவை" இந்நூல் இலக்கிய நூலாகத் தமிழ் உலகில் நிலைத்து நிற்கின்றது. இந்நூலை இயற்றியவர் மு.க. அப்துல் மஜீத் புலவர். இவர் தமிழ் நாட்டுக் கீழ்க் கரையைச் சேர்ந்தவர்.
இவர் கல்பிட்டி நகர் வந்து இங்கு கொடை வள்ளலாகத் திகழ்ந்த முகம்மது தம்பி மரைக்கார் அவர்களின் உதவியுடன் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் அவரால் இயற்றப்பெற்ற நூலே "ஆசாரக் கோவை"யாகும்
எளிமை, இனிமை, அழகு, ஆழம் அனைத்தும் பொதிந்த இப் பாடல் ஒவ்வொன்றினதும் ஈற்றடியை தமக்குப் பொருளுதவிய புலவர் தம்பி மரைக்கார் பெயரில் முடிப்பது குறிப்பிடத் தக்கது.
இவரின் அடக்கத்தரம் அவர் வாழ்க்கை நடத்திய திகழி' என்னும் கிராமத்தில் இன்றும் உள்ளது. இந்தக் காணியிற்ருன் திகழி முஸ்லிம் கலவன் பாடசாலை அமைந்துள்ளது என்பது குறிப் பிடத் தக்கது.
தமிழ் புளூட்டார்க்
தமிழ் இலக்கிய வரலாற்று நூல் ‘தமிழ் புளூட்டார்க்" நூலாகும். இது 1907-ல் தமிழ் புலவர்களின் சரிதங்களை உள் ளடக்கி 1859-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளி வந்தது. பிற்பட புலவர் சரிதம் எழுதிய பலருக்கு இந்நூலே வழி காட்டியாக அமைந்தது. இந் நூலை எழுதியவர், 21 - 3 - 1807-ல் கல்பிட்டியில் பிறந்த "திரு. சைமன் காசிச் செட்டி" என்பவரே.
இவர் புத்தளம் நீதிமன்ற மொழி பெயர்ப்பாளராக, புத்தளம் மணியகாரராக, புத்தளம் மாவட்ட முதலியாராக, சட்ட நிறுபன சபை உறுப்பினராக, தற்காலிக நீதி பதியாக, ஈற்றில் 1852-ல் சிலாபத்தில் நீதிபதியாக பல முக்கிய பதவிகளை வகித்தவர்.
இவர் பிறந்த மண் கல்பிட்டி மண் என்பதனுல் தமிழ் இலக்கிய வரலாற்று நூலொன்றை முதன்முதல் உலகுக்களித்த பெருமை கல்பிட்டிக்கு உரியது. O
தியாக, இராசகோபால்

இளம் இலக்கிய நெஞ்சங்களுக்கு ஒரு வார்த்தை. நேரிலும் கடித மூலமும் இலக் கியம் சம்பந்தப்பட்ட பல கேள்விகள் கேட் கிறீர்கள் அதை விடுத்து பலரும் அறியத் தக்கதாக- எனக்கும் புதிய அறிவு பெறக் கூடியதாக - கேள்விகளை எழுதி அனுப் புரகள், பரஸ்பரம் கலந்துரையாடும் ஒர் இலக்கியக் களமாக இப் பகுதியைப் பயன் படுத்துவதால் பல தகவல்களை நாம் பெற்
றுக் கொள்ள இயலும்.
O சமீப காலமாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வேக மாகச் செயல்பட்டு வருகின் றதே, காரணம் என்ன?
மானிப்பாய். க. தவராசா
தேசிய தேவை. முற்போக்கு
எழுத்தாளர் சங்க வரலாற் றைத் திருப்பிப் பாருங்கள். அது சோர்ந்திருந்த காலங்களு முண்டு. ஆஞல், நெருக்கடி
யான காலகட்டங்களில்-தேசிய நெருக்கடிக் காலங்களில்- அது துடிப்பாகவும் துணிச்சலாகவும் நிதானமாகவும் இலக்கிய வழி நடத்தல்களைச் செய்திருப்பதைக் காண்பீர்கள். அப்படியான ஒரு காலகட்டத்தில்தான் இ ன் று “). (p. Gr. F. * 560TB i ušlés ளிப்பை நல்குகின்றது.
 ேசென்ற இரண்டு இதழ்களி லும் "தூண் டில்" பகுதி இடம் பெறவில்லையே, ஏன்?
தூண்டில்
அந்தப் பகுதியை நிறுத்திவிடும் உத்தேசமா?
நெல்லியடி. ஆ. மகேந்திரன் தொடர்ந்து வந்த இரண்டு இதழ்களும் சிறப்பு இதழ்கள். மலர்களிலும், சிறப்பிதழ்களி அலும் தூண்டில் இடம் பெறுவ தில்லை. அப்பகுதியை நிறுத்தும் உத்தேசம் இல்லை. மல்லிகையில் பெரும்பான்மையோர் விரும்பிப் படிக்கும் பகுதி தூண்டில்.
0 மல்லிகை எப்போது ஆரம்
பிக்கப்பட்டது? அப்போது தங்கள் சூழ்நிலை எப்படியிருந் தது?
வெலிமட. ந யூரீதரன்
மல்லிகையில் அதன் ஆரம் பம் எழுத்தில் போடப்பட்டுள் ளதே! மல்லிகை ஆரம்பிக்கப் பட்ட போது இலக்கியச் சூழ் நிலை அவ்வளவு ஒத்ததாக இருக்

Page 29
கவில்லை. ஏதாவது சாதி க்க வேண்டும் என்ற ஆவலே மல்லி கையை ஆரம்பிக்கத் தூண்ட வைத்ததெனலாம்.
ரு கலப்புத் திருமணம் O துேச் e சிறைக்குள் அடைப்பதற்குச் சமம் - இப்படியொரு சிந்தனை எ ன் னு ஸ் எழுந்தது. இது Fiffluunt?
மல்லாகம். கே. ரி. செல்வம் உங்கள் சிந்தனை ஒரளவுக் குத்தான் சரி. இதில் ஒரு புதிய உண்மையே இ ன் று உருவாகி வருகின்றதைப் பார்க்கின்ருேம். கலப்புத் திருமணப் பகுதியினர் ஒரு புதுச் சாதியாகப் பரிண மிப்பதையும் இன்று எதார்த்த வாழ்வில் பார்க்கின்ருேமே!
O கைலாசபதி அவர்களை மறக் காம ல் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் ஞாபகச் சொற்பொழிவுகளை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளதே மற்ற வர் களை அது மறந்துவிட்டதா? Garuru. செ. முகுந்தன்
எழுத்தாளர் அ. ந. கந்தசா மியின் ஞாபகக் கூட்டம் சமீ பத்தில் கொழும்பில் நடைபெற் றதே. அத் தகவல் உங்களுக் குத் தெரியவில்லையா? ஆத்மார்த்தி கமாக, விசுவாசமாக யார் இலக்கியத்திற்குச் சேவை செய் கின்றனரோ அ வர் களது நாமத்தை நாம் என்றென்றும் நினைவில் வைத்திருப்போம்.
O இந்த நெருக்கடிக்குள் இலக்
கியம் வளர்க்கலாம் என நம்புகின்றீர்களா? கொக்குவில், க, தேவராசன்
நெருக்கடிக்குள்ளும் அவலங்
களுக்குள்ளும் முகிழ்ந்து வருவ துதான் உண்மை இலக்கியம். O சமீபத்தில் உங்களது மன திற்குப் பிடித்த மகிழ்ச்சி யான சம்பவம் ஒன்  ைற ச் சொல்ல முடியுமா?
எம். ராசேந்திரம்
நண்பர் ஜெயகாந்தனுக்கு தஞ்சாவூர்ப் பல்கலைக் கழகம்
ஆவரங்கால்.
லட்ச ரூபா ய் அன்பளிப்புச் செய்ததுதான். எழுத்தாளனக் கனம் பண்ணி ஒரு பல்கலைக்
கழக ம் இப்படியான கெளர வத்தை வழங்கியது மனசிற்கு ரொம்பவும் இதமாக இருந்தது.
இ கடந்த ஒராண்டுக்கு மேலாக நீங்கள் தமிழகம் போனதா கத் தெரியவில்லையுே, போகும் உத்தேசம் உண்டா? l அராலி. எஸ். சண்முகம்
இரண்டு அழைப்புகள் வந் துள்ளன. அது தவிர, புத்தக வேலைகளும் இருக்கின்றன. கண் டிப்பாக இம் மாதம் போகலாம் எனத் தி ட் ட ம் போடுவதும் பின்னர் அதை ரத்துச் செய்வ துமாகக் காலம் கழிந்து போகின் றது, எப்படியும் கூடிய சீக்கிரம் தமிழகம் போவதாக உறுதி கொண்டுள்ளேன். G பேராசிரியர் கைலாசபதி
யின் இழப்பிற்குப் பின்னல் இலக்கிய உலகில் எதை உணரு கிறீர்கள்.
அவரது இழப்பிற்குப் பின் ஞல் அவரது ஸ்தானததை நிரப்ப முடியாத ஒரு அவலத்தை உணரும் வேளையில், இலக்கிய விமரிசனம் தேக்கமடைந்து போய் விட்டதையும் என்னல் உணர முடிகின்றது.
3 முற்போக்கு இலக்கியவாதி களின் சாதனைகளைச் சரிவர
க, சபேசன்
4.

எடைபோட இயலாமல் தூற்று
பவர்களைப் பற்றி என்ன கருது
கிறீர்கள். பதுளை.
நான் மெய்யாகவே அவர் களுக்காக அனுதாபப் படுகின் றேன்.
 ைபொது வாழ்க்கையில், அர
சிய லில், இயக்கங்களில் தீவிர ஈடுபாடு கொண்டுள்ள யுவதிகள் ஒன்றை எண்ணிப் பயப்படுகின்றனர். தாம் திரு மணம் செய்யும் சந்தர்ப்பம் வரும் வேளையில் தமது கற் பைப் பற்றிச் சந்தேகப்படச் செய்கின்றனர்; அல்லது தம்மை ஆள முடியாது எனத் தமது ஆண்மையின் மீதே சந்தேகப் படுகின்றனர் எனக் காரணம்
கூறுகின்றனர். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நெல்லியடி. æ. Ggsgseð
இந்தப் பிரச்சினை பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும். எனக்கொரு பழைய சம்பவம் ஞாபகம் வருகின்றது. கல்கத் தரவில் இது நடந்தது.ஒரு நல்ல குடும்பத்து யுவதி இடது சாரி இயக்கத்தில் தீவிரமாக இயங்கி வந்தார். அப்பொழுது தடை செய்யப்பட்டிருந்த அவ ரது நம்பிக்கைக்குரிய கட் சித் தலைவருக்கு ரகசியத் தகவல்க ளைக் கொண்டு சேர்க்க வேண் டிய பெறுப்பு அவர் மீது வந் தது. நடு இரவு. தனிமையாகச் சந்து பொந்துகளூடாகச் சென்று கொண்டிருந்த அந்த யுவதியைப் போலீசார் கண்டு பிடித்துவிட் டனர். போலீஸ் ஸ்டேசனில் வாய் முறைப்பாட்டில் விபசாரம் செய்ய எத்தனித்ததாக ஒப்புக் கொண்டாள். பொலீசார் இதை நம்பவில்லை. அழகு, பொலிவு, பார்வையில் தெரிந்த அஞ்சாமை
என் , நெல்சன்
அவர் க னே ஒப்புக் கொள்ள வைக்கவில்லை. இருந்தும் வேறு சாட்சியமில்லை. மூன்று மாதி* காவல் தண்டன.
ஒரு மாபெரும் இலட்சியத் திற்காக விபசாரி என்ற நமி
"கர்ணத்தை ஏற்றுக் கொண்ட
வர்தான் கல்பனதத் என்ற வீராங்கன. இன்றும் சரித்திரம் இவரது தியர்கத்தை மதித்துப் ாேற்றுகின்றது. இவ9ரத் திரு மணம்செய்தவர் பி. சி. ஜோசி. “காந்தி- ஜோசி கடிதப் போக்கு வரத்துக்கள்" என்ற நூ லின் மூலம் இவரது ஆளுமையைத் தெரிந்து கொள்ளலாம். ஒரு காலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பெருமை மிக்க செய லாளராகத் திகழ்ந்தவர் இவர்.
-எனவே மகத்தான தியாக உள்ளங்கள் தற்காலிக கொச் சைத்தனங்களைச் சி ந் தி த் துப் பின்னடையத் தேவையில்லை.
9 இன்றும் மல்லிகையை வீதி வீதியாகத் திரிந்து விற்பனை செய்து வருகின்றேன் என்கிறீர்
களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா? பளை, ம. தம்பிராசா
இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? உழைக்காமல் உண் கிறேன? அல்லது மற்றவர்களை "தட்டிச் சுற்றுகிறேன? ஏமாற் றுகிறேன? மாதா மாதம் ஒழுங் காகச் சம்பளத்தை மாத்திரம் பெற்றுக் கொண்டு கடமையைச் சரிவரக் கவனிக்காமல் தில்லு முல்லுச் செய்கின்றேன? சமூகத் துரோகியாக மாறி பணம் uତfir ணுகிறேனு? இதொன்றும் எனக்
குத் தெரியாத சங்கதிகள்.
நான் நேர்மையாகச் சிந்திக் கின்றேன். அந்தச் சிந்தனைகளின் பொதுமையை நூலாக்கி மக்கள் மத்தியில் கொண்டு சென்று
55

Page 30
விற்கின்றேன். தினசரி மக்களு -ன் ஒரு ஜீவன் ததும்பிய நெருங் கிய உறவை வளர்த்துக் கொள் ளுகின்றேன். வெ: இதில் என்ன இருக்கிறது?
O Frpš தமிழர்களின் சமகா லப் பிரச்சினையை 60L outpfT
கக் கொண்டு மல்லிகை இது *ர சாதித்தது என்ன?
வட்டுக்கோட்டை. ஆர். சந்திரன்
மல் லி கை க்கு என ஒர் அணுகுமுறை உண்டு. கூட்டத்
தோடு கோவிந்தாப் போட் அதற்குத் தெரியா து. மல்விகை ஆரம்பித்த காலத்தில் அன்று
பரவலாக எரியும் பிரச்சினையா இருந்தது ér לו (5 זח பிரச்சினை. அந்த வள்ளுவர் காலத்திலிருந்து தொடர் தி 7 டராகத் தொடர்ந்து வந்த மனித நீசச் செயலை உண்மையாகக்" டித்து தனது படைப்புக்களையும் வெளியிட்டு தலேயங்கங்களையும் எழுதி வந்ததுதான் மல்லி.ை
ன்று மனுக் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கிருேம் எனச் சொன்னவர் Ll a j அந்த அநீதிக்கு எதிராகப் பேணு
டிக்காமல் ஒதுங்கி நின்றவர்
" . 197ருக நம் மை போன்றவர்களை இழிசனர் இலக்
யம் படைப்பவர்கள் என வக் கனை பண்ணிஞர்கள் இன்றும் எரியும் பிரச்சிே இனச் சங்கா ரம். மனிதக் கொல்ைகள். அநீதி * நடத்தைகள். மல்லிகை இந்தப் போக்குகளை மி மிக வன்மையாகக் சண்டித்து கதை, கவிதைகளைப் பிரசுரித்ததுடன் ւ յո հայ தலையங்கங்களையும் தீட்டி யுள்ளது. மல்லிகைய்ை விரும் பாதவர்கள் வெறுப்பின் é56OOT ஆக மல்லிகை மீது துவேஷப் பிரசாரங்களைத் gil Gij 60 fr. Lib. ஆஞல் மல்லிகையை LDGavFrrr நேசிக்கும் நெஞ்சங்கள் எமது
ஆத்ம உணர்வைப் கொள்வார்கள்.
கோழைத்தனத்தை 6pš கச் சென்னைக்கு ஒடி ஒழியாமல் Այո էb. பாதுகாப்பு வலயத்திற் குள்ளேயே தினசரி வாழ்ந்து. மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு மாதா மாதம் மல்லிகை ஒழுங்காக வெளிவரு வதே தமிழர்களுக்குச் செய்யும் தொண்டு எனக் கருதலாம்,
புரிந்து
9 முற்போக்கு இலக் கி யக் கோட்பாடுகள் பற்றிக் கூறப்
படும் குறைபாடுகளுக்கு என்ன விளக்கம் தருவீர்கள்? வசாவிளான். தரும. ராசதுரை
குறைகளைச் சுட்டிக் காட்டி சூல்ை விளக்கம் திரலாம். அல் லது தவறை ஒத்துக் கொள்ள லாம். சும்மா’ மேலோட்டமா கக் கேட்பதால் தெளிவான விடை சொல்ல
ந்தமண்ணில் சழ்த்துத் தமிழ் 醬"鯊屬 மண்வாசனை, இந்த மண்ணுக் குரிய இலக்கியம் என்ற கோஷங் களை முன் வைத்து இந்த |5ո՞ւ. டுத் தமிழ் மக்களின் உணர்வு களைத் தட்டி எழுப்பியதே முற் போக்கு இல்க்கியக் கோட்பாடு *ன்.இன்று இந்த நாட்டில் மக்களால் மதிக்கப்படுபவர்க்ள் கூட முற்போக்கு இலக்கியக் கோட்பாட்டை உந்து சக்தியா கக் கொண்டவர்கள்தான். குறை சொல்பவர்கள் சொல் விக் கொண்டே இருக்கட்டும். 9 பிழையான இடத்தில் சரி
யான கருத்தையும் சரியான இடத்தில் பிழையான கருத்தை யும் பேசிய அனுபவம் உண்டர்?
தெல்லிப்பழை. ரா. நக்கீரன்
பிழையான இடத்தில் சரி யான கருத்தையும் ச ரி யா ன கருத்தையும் பேசிய அனுபவம் உண்டு. o
56

ESTATE SUPPLERS COMMISSION AGENTS
VARIETIES OF coNsU MER Goo Dos OILMAN GOODS TN FOODS
GRANS
THE EARLIEST SUPPLIERS FOR ALL YOUR
N E E DS
WHOLESALE 8 RETAIL
To
ESITTAMPALAM8:SONS
|
223, FIFTH CROSS STREET, COLOMBO - 11.

Page 31
Mallikai
REGISTERED As
SS
Pisa : 2 M & 2 9
With Best Compliments of:
PR.S.W.SIEWoU
140, ARMC
COLO
இச் சஞ்சிகை 34B காங்கேசன்துரை வரும் ஆசிரியரும் வெளியிடுபவருமான சாதனங்களுடன் யாழ்ப்பாணம் பூரீ கா சகத்திலும் அச்சிடப்பெந்தது.
 
 

MARCH 9.4,
NEWS PAPER: AT G. P, Q, R LAPIKA
A. K. W. 73 NEWS 64)
Paleri in:
WALR PANELLAG CHIP BOARD IS TAMB EUR A
(GAANN(CHEMTTBAAR
DUR STREET, MBO-12.
ற வீதி, யாழ்ப்பாணம், முகவரியில் வசிப்
டொமினிக் ஜீவா அவர்ாண்ான் அங்கே த்தா அச்சகத்திலும்,அட்டை விஜயா அமுச்