கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1983.12

Page 1


Page 2
We assist to import any items especially Japanese reconditioned Vehicles,
Hussain Bros.
MPORTERS OF RECONDITIONED VEHICLES & IN DENTING AGEN IS
Importers of
CHEMICALS . ELECTRICAL FITTINGS
HARDWARES
SUNDRIES
AND GLASS WARES
Telephone: 20712 ·
137, Maliban Street,
Colombo - 11
Telegrams. Jubitee
 

"ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைக்ளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிற சனநிலை கண்டு துள்ளுவார்’
"Malikai' Progressive Monthly Magazine
175 டிசம்பர் - 1983
புத்தாண்டுச் சந்தாவைப் புதுப்பியுங்கள்
84 ம் ஆண்டு பிறக்கப் போகின்றது.
மல்லிகையின் கணிசமான சந்தாதாரர்களின் சந்தாக்களும் இந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்து விட்டன. நண்பர் களும், இலக்கிய ஆர்வலர்களும் இந்தத் தகவலைத் தமது மேலான
கவனத்தில் வைத்துச் செயலாற்றுவது நல்லது.
ஆண்டின் ஒவ்வொரு மாதங்களிலும் நாம் உங்களை நினைத்து, உங்களுடன் தொடர்பு கொண்டு வந்திருக்கின்ருேம். நீங்கள் ஆண்டுக்கு ஒரு தடவை - ஒரேயொரு தடவை - எம்முடன் தொடர் வைக்கக் கூடாதா? என்று நியாயமான நமது மன வேட்கையை உங்கள் முன் சமர்ப்பிக்கின்ருேம்.
வெளிவரும் சகல சிற்றிலக்கிய ஏடுகளைப் போலவே ம்ல்லிகை யும் விற்பனவு நிலையங்களை நம்பி வெளிவருவதல்ல. மாருக, ஆர்வமும் தேடல் முயற்சியும் அக்கறையும் கொண்ட இலக்கியச் சுவைஞர்களான சந்தாதாரர்களைப் பெரும்பாலும் நம்பியே வெளி வருகின்றது. அலர்களது நீடித்த ஆதரவுதான் நம்முடைய அடிப் படைப் பலம் என்பதை நாம் எப்பொழுதுமே நன்றியுணர்வுடன் நினைவு கூர்ந்து வருகின்ருேம்,
நமது பலமும் நமது ஆக்கச் சக்தியும் என நம்பும் நீங்கள் அசட்டையாக இருந்து விடக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளு கின்ருேம். நமது அறிவிப்புக்காகக் காத்திராமல் சந் தா  ைவ (ரூபா 35) உடன் அனுப்பி உதவினல் அது நமது வேலைப் பளு வில் கொஞ்சத்தை. நீங்களே சுமந்ததாக ஆகும் என்பதைத் தங் க்ளின் கவனத்திற்குக் கொண்டு வருகின்ருேம். -
புதிய ஆண்டில் இன்னும் இன்னும் ஆக்க பூர்வமாகப் புதுப் புது விதங்களில் செயல்பட வேண்டும் என்பதே எமது பேரவா வாகும். உங்களுக்கு மனசில் என்ன மாதிரியான புது யோசனைகள்

Page 3
தோன்றினலும் தயவு செய்து அந்த எண்ணங்களை எமக்கு ஆலோ சனைகளாக எழுத்தில் தாருங்கள்.
மல்லிகை ஆரம்பித்து இருபதாம் ஆண்டுக்குள் பிரவேசிக்க ஆயத்தமாகியுள்ளோம். கடந்த பத்தொன்பது ஆண்டுக் காலமாக நாம் வேரூன்றி நின்று நிலைத்திருப்பதன் அடிப்படைக் காரணமே உங்களைப் பேயன்ற சந்தாதாரர்களின் பேராதரவும் ஒத்துழைப் பும்தான் என்பதை நாம் என்றுமே மறப்பதில்லை.
உங்களின் முகவரிசுனை மாதா மாதம் எழுதும்போது மான சீகமாக உங்கள் முகங்கள் எமது ஞாபகத்திற்கு வருவதுண்டு. முன் பின் பழக்கமில்லாத முகங்களுக்காகவும் சேர்ந்து நமது மன தில் உங்கள் ஞாபகங்களுக்காகத் தலை சாய்த்துச் கொள்வோம்:
நமது உறவுகள், தொடர்புகள் வெறும் பொருளாதார ரீதி யானவையல்ல என்பதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம் என் பதை நீங்கள் புரிந்து வைத்திருப்பீர்கள். அந்தப் புனிதமான உற வின் நிமித்தமாகவே இந்த வேண்டுகோளை உங்கள் முன் சம்ர்ப் பிக்கின்ருேம்
ஒரு மகிழ்ச்சியான செய்தி. மல்லிகை நிறுவனம் சம்பந்தமா கச் சமீபத்தில் ஒரு தேவை ஏற்பட்டது. பணப் பிரச்சினை. அந் தத் தேவையை முதலில் கேள்விப்பட்டதும் அப்படியே சோர்ந்து போய் விட்டோம். நமது பொருளாதாரச் சக்திக்கு மீறிய நிலை என நினைத்து அப் பிரச்சினையைத் தட்டிக் கழிக்க முற்பட்ட டோம். ஆணுல் மிக நெருக்கமான அன்பு நெஞ்சங்கள் விட வில்லை. உற்சாகப்படுத்தின. நாம் சற்றும் எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் உதவும் கரங்கள் நீட்டப்பட்டன. நெஞ் சம் நெகிழ்ந்து விட்டது. பயந்த நிலை போய் சாதிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது மல்லிகைக்குப் பெரிய வெற்றி.
மல்லிகையின் மீது இத் த னை அபிமானம் வைத்து அதன் வளர்ச்சி ஒன்றையே பிரதானப்படுத்தி தக்க தருணத்தில் உதவத் தயாரான சகல அன்பர்களுக்கும் எமது நன்றி என்றென்றும் உரியதாகும்.
- ஆசிரியர் முல்லை சிறப்பிதழ் மல்லிகையில்
முல்லைத்தீவு சிறப்பிதழாக 1984, மார்ச் மாத இதழ் வெளிவர இருக்கிறது. மலர் சம்பந்தமாகத் தொடர்பு கொள்ள விரு ம் பு ப வர் க ள் பின்வரும் (மகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.
முகவரி:
முல்லேயூரான்
இரண்டாம் மைல்கல், வற்ருப்பளை, முள்ளியவளை.
உருவாக்க உதவியவர்: கா. சந்திரசேகரம் மல்லிகை 234 13, - கே. கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம் மல்லிககையில் வரும் கதைகள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே

நாம் மறக்கவில்லை
என்றும் மறக்கவும் மாட்டிோம்!
நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கின்றது! அதற்குள் ஓராண்டு ஓடிப்போன் மறைந்து விட்டது.
நேற்றுப் போல இருக்கிறது. அதற்குள் பன்னிரண்டு மாதங் கள் உருண்டோடிப் யோய்விட்டன.
பேராசிரியர் கைலாசபதி நம்மை விட்டுப் பிரிந்து சென்று விட்ட இந்த ஓராண்டில் நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் நடநீதேறி விட்டன,
துரைமான, சோகமா,ை வெட்க்கரமான, அவமானகரமான எத்தனையோ நிகழ்ச்சிகள் இந்த ஓராண்டித்குள் இந்தத் தேகித்தில் நடந்து முடிந்து விட்டன. تبر
இந்த நெருக்கடியான கால கட்டத்திலும் நாம் அவரை நினைவு கூர்ந்து வந்துள்ளோம்.
அவரது இழப்பால் ஒரு குடும்பம் கஷ்டப்படவில்லை; ஒரு பல்கலைக் கழக நிறுவனம் நஷ்டப்படவில்லை:'இந்த நாடு' இன்று நஷ்டப்பட்டுத் தவிக்கின்றது நவீன தமிழ் மொழியே விமரிசகத் தள்மற்றுத் தயங்கித் திணறுகின்றது,
அவர் ஒரு கல்விமான்தான். அதற்காக மாத்திரம் ந 7 ம் அவரை மதித்துப் போற்றவில்லை. அவரொரு பல்கலைக்கழக நிறு வனத்தைச் சேர்ந்தவர்தான். அதற்காகவும் கூட நாம் அவரைப் போற்றிப் பாராட்டவில்லை. தனது மாணவப் பருவத்தில் இருந்தே இந்த நாட்டுப் படைப்பாளிகள் மீது தோழமைப் பாசம் கொண் டிருந்தவர்; நவீன தமிழ் வளர்ச்சியில் விஞ்ஞானப் பார்வை செலுத்தி அதைச் செழுமைப்படுத்தத் தன்னலிய்ன்ற அனைத்தை யும் செய்து வந்தவர். ஈழத் தமிழ் இலக்கியமும், கலையும் சர்வ தேசத் தரத்திற்கு வளர வேண்டும் வளர்க்கப்பட வேண்டும் என அயராது பாடுபட்டு உழைத்தவர்,
ற்காகத்தான் நாம் அவரது ஞாபகத்திற்கு என்றென்றும் ਕੰਮ "ஈவியைச் செலுத்துகின்ருேம்: றன்று

Page 4
யார் என்ன சொன்னபோதிலும் இந்த நாட்டில் இரண்டு பெரும் இலக்கிய மேதைகள் தோன்றிச் சமகாலத்தில் நம்முடன் நாமாகக் கைகோர்த்து நின்று செயலாற்றினர்கள்.
நம்து காலகட்டத்தையே தமது செயலாலும் சிந்தனையாலும் செழுமைப்படுத்தினர்கள்.
அவர்களில் ஒருவர் மறைந்து விட்டார். அவர்தான் கைலாச பதி அவர்கள். மற்றவர் எமது மதிப்புக்கும் நெஞ்சார்ந்த மரியா தைக்குமுரிய சிவத்தம்பி அவர்கள்.
இந்த இருவரும் 'நமது நாட்டின் இலக்கியக் கண்களாகத் திகழ்ந்வர்கள். :
அந்த இரு விழிசளில் ஒரு கண் திடீரெனக் குருடாகி விட்டது. ஈழத் தமிழ்த் தாய் இன்று ஒரு கண்ணுடன்தான் காட்சி தரு கின்ருள்.
இது வெறும் புகழ்ச்சியல்ல. நாளைய வரலாறு இதைத்தான் பகிரங்கமாகச் சொல்லப் போகின்றது.
நண்பர் கைலாசபதியின் மரணச் சூழ்நிலையில் தாம் அவரது இழப்பை இழந்ததாகவே கருதவில்லை. காலஞ் செல்லச் செல்ல அந்த இழப்பை நினைக்கும் பொழுது அப்படியே விக்கித்துப்போய் விடுகின்ருேம் - எவ்வளவு பெரிய இழப்பு!
நடக்கும் சம்பவங்களைத் கோர்வைப் படுத்திப் பார்க்கும் பொழுதும் இன்று அவர் உயிருடன் இல்லையே என்ற ஏக்கம்தான் மனதில் நிழலாடுகின்றது.
நாம் அவரைத் தேவதையாக்கவில்லை வழிபாடும் செய்ய வில்லை,
அதே சம்யம் அந்த ஆளுமை மிக்க சிந்தனையாளனின் இழப்பை ஏதோ சர்வ சாதாரணம்ான ஒரு நிகழ்ச்பி என நாம் அலட்சிய மாக இருக்கவும் தயாராகவில்லை;
தமிழ் மொழி இருக்கும் வரை, மனுக் குலம் ஆரோக்கியமாகச் சிந்திக்கும் நல்ல சிந்தனை இருக்கும் வரை பேராசிரியரின் நாமம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
அவர் வாழ்ந்த காலத்தில் அவரது கருத்துக்களுடன் முரண் பட்டவர்கள் கூட, இன்று அவரது பேரிழப்பை உணர்ந்து கொண் டிருக்கின்றனர். அவரது இலக்கிய ஆளுமையின் விமரிசனத் தாக் சுத்தை மெய்யாகவே புரிந்து கொண்டிருக்கின்றனர்.
அவர் வெறும் தனி மனிதனுக இருக்கவில்லை; இயங்கவில்லை, இந்த? விஞ்ஞான யுகத்தில் விஞ்ஞான ரீதியான தத்துவ தரிசன வழிகாட்டலின் வெளிச்சத்தில்தான் அவர் தன்னை உருவாக்கிக் கொண்டார். எனவேதான் மற்றவர்களை விடத் தனித்துவம்ாகத் திகழுகின்ருர் - எதிர்காலத்தில் திகழப் போகின்ருர்,

nunint",
அட்டைப் படம்
冢 ስiuuu!ህዞ፪ዛዛዛuuህዞ"ዛዛuutዞዞ"ዛካutሠ።"
நவீன தமிழ் இலக்கியத்தில் தனது சமுதாயப் பார்வை யைத் துணிகரமாக வைத்துப் படைப்பாக்கம் செய்ததி ஞல் பலத்த சர்ச்சைக்குள்ளாகிய எழுத்தாளர் டானியல், இவரது படைப்புக்கள் கற்பனை உருவங்களல்ல, நிஜ வாழ் வின் எதார்த்த வடிவங்கள்.
சதாதனிகள் இவரது எழுத்தின் கருவைக் கண்டு Garrunt வேச்ங் கொண்டு துள்ளிக் குதித்த காலமொன்று இருந் தது - இது இவருக்கு வெற்றியே தவிர தோல்வியல்ல. எப்பவோ இவரது உருவம் அட்டையில் வரவேண்டியது; வரவில்லை. இப்பொழுது அட்டைப்படமாக வெளிவரு
கின்றது.
டானியல்
- ஆசிரியர்
ஆவேச மனிதாயதவாதி
1950 களில் இலங்கைத் தமி ழிலக்கியத்தில் ஏற்பட்ட ஒர் அபிவிருத்தி" தமிழிலக்கிய வர லாற்றின் முக்கிய திருப்பு முனை அளில் ஒன்ருக அமைந்தது.
தமிழ்ச் சகமூத்தின் அடி நிலை மக்களாக அமைந்தவர் களைப் பற்றி அவர்களுக்குத் தூரத்திலேயுள்ளவர்களும் அநு தாபமுள்ளவர்களும் எழுதிய நிலைபோய், அந்த அடி நிலை மக் களிடையேயிருந்து வந்து, அந்த அடிநிலை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, அதன் துக்கங்களை அது வழங்கும் ஏலாமைகளை ஏற்றுக் கொண்டு ஆணுல் சமூக தத்துவக் கருத்து நிலைக்காகப் போராடும் இயக்கங்களின் அங் கத்தவர்களாக இலட்சிய நெறி
- கார்த்திகேசு சிவத்தம்பி
யுடன் வாழும் சிலர் தம்மைப் பற்றித் தாமே எழுதும் fi2) ஏற்பட்டது.
இலக்கிய ஆசிரியர் பற்றிய பாரம்பரியத் த ரா த ரங்கள் யாவும் அந்தக் கணத்திலே பறந் தன எனலாம்.
இலக்கியத்தின் உற்பத்தியி லும்”நகர்விலும் பெருமாறுதல் ஏற்பட்டன.
இந்த இலக்கியக் குரல் தமி ழிலக்கியத்தின் உயிர்ப்பை விளங் கிக் கொண்ட அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.
ஆக்க இலக்கியத்தில் ஒரு புதிய மரபு ஏற்பட்டது:

Page 5
இந்தப் புதிய மரபின் எடுத் துக்காட்டாக, இம் மர  ைப ப் பிரதிநிதித்துவப் படுத்துபவரி களாக இருவரது பெயர்கள் இலக் கிய உலகில் அடிபடத் தொடங் கின. இந்தப் புதிய இலக்கிய ம் (ாற் றத் தை விரும்பியோர் பெருமை சார்ந்த பரித்தவ்யத் ģi - ம், அம்மாற்றத்தை எதிர்த்தோர் திரிகரண சுத்தி யான வெறுப்புடனும் அப்பெயர் களை உச்சரித்தனர்;
டோனியல், டொமினிக் ஜீவா" என்பதே அவ்விரு பெயர் கிளுமாகும்.
இருவரும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். இரு வரும் பொதுவுடைமை இயக்
கத்தைச் சேர்ந்தவர்கள். இரு வரும் இயக்க ச் செயற்பாடு உடையவர்கள்
இவர்கள் இருவரும் யாழ்ப் பாணத்தின் சமூக ஏற்றத் தாழ் வுகளை, சாதிவழி வரும் தீண் டாமையை, அது ஏற்படுத்தும் மனிதாயதச் சிதைவுகளை, அவற் ருல் பாதிக்கப்பட்டவர்களாய், பாதிக்கப் பட்டவர்களிலிருந்து அந்நியப்படாதவர்களாய் எழுதி னர். தோழர்களின் பெருமை யாகவும் இலக்கியச் ச நா த ன வாதத்தின் தாக்குமையங்களா கவும் அமைந்தனர். இந் த ப் பொருமையுணர்வும், தாக்கலும் காரண காரியத் தொடர்புடன் வளர்ந்தன. அரசியற் கருத்து வேறுபாடுகள் பிரித் தாலும் இலக்கியச் சாதனைகளில் இவர் கள் இரட்டையர்களாகவே கரு தப்பட்டனர்.
டானியலை நான் கடந்த முப்பது வருடங்களாக அறி வேன். டானியல் என்ற மனித னையும் அவரது எழுத்தையும்
இணைத்துப் பார்க்கும் பொழுது
ஒரு உண்மை புலணுகின்றது. சமூக முற்போக்கு இயக்கத்தின் பல்வேறு அமிசங்களுள் ஒன்ருன தீண்டாமை எதிர்ப்பியக்கத்தில் டானியலின் ஈடுபாடு பூரணமா னது யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் பிரதான முரண் பாடாகச் சா தி க் கொடூரத் தையே டானியல் கருத் தி ற் கொண்டு வந்துள்ளார். டா யலின் அரசியற் போக்கினை இப் பண்பே தீர்மானித்துள்ளது என லாம்;
டானியலின் இ ன் ஞெ ரு முக்கிய பண்பு அவர் நிறைய எழுதியுள்ளமையாகும். இது தரப் பிரச்சினைகளைப் பல தட வைகளிற் கிளப்பியுள்ளதெனி னும், சாதிக் கொடூரத்தைச் சித்தரிப்பதையே தனது முக்கிய இலக்கியப் பணியாகக் கொண் டுள்ள டானியல், இக் குற்றச் சாட்டுப் பற்றி அதிகம் "அலட் டிக் கொள்வதாகத் தெரிய வில்லை.
இந்தப் பிரச்சினேயைத்தனது உணர்வு வட்டமாகவும் இயக் கத்தன்ம்ையாகவும் கொண்ட டானியல், த ன து எழுத்துக் களில், இந்தச் சமூகக் கொடு ரங்களை தானே "காண்பவராக" எழுதுகிருர். இதனுல் டானிய லின் எழுத்தில் சம்பவக் கோர்
வைகளையும், கட்புலத் தெளிவு டைய சித்திரிப்பையும் காண லாம். டானியலின் நடையில்.
விவாதத்திலும் பார்க்க விவர ணம்தான் அதிகமாக இருக்கும்.
இதனலேதான் டானியலின் எழுத்துக்கள் இப் பிரச் சினை பற்றி எழுதிய மற்றைய எந்த எழுத்தாளர்களிலும் Luntriřės சமூக வரலாற்றுக்கான சான்ருக அமைந்துள்ளன: இவ்வகையில் அண்மையில் வெளிவரவுள்ள "அடிமைகள்" மிக முக்கியமான .ப் கும் "י"ו" שcפ6

டானியலின் எழுத்துக்கள் கிளப்பும் பல்வேறு 'பிரச்சினை களுள் ஒன்று, அவரது எழுத் துக்கள் வழியாக வரும் யாழ்ப் பாண உயர் சமூகத்தினர் பற் றிய அடிநிலை மக்களின் பார் வையேயாகும்.
நான் முன்னர் ஒருமுறை கூறியது போன்று, டானியல், டொமினிக் ஜீவாவின் எழுத்துக் கள், சைவத் தமிழ்ப் பாரம் பரியம் மிக்க கவனத்து டன் கட்டியெழுப்பிய சமூகப் பாரம் பரியத்தின் இருண்ட பகுதியின் சித்திரிப்புக்களாக அமைந்துள்
இதனுலேதான் ஒவ்வொரு முறையும் டானியல் எழுத சில மன அசெளகரியங்கள்" ஏற்படு கின்றன6
ஆளுல் நாம் ஒரு விடயத்தை மறந்து விடுகிருேம், ஆக்க இலக் கிய கர்த்தன் தனது சமூகப் பிரக்ஞையிலே உள்ளவற்றையே எழுத முடியும் அவை தவரு கவோ, அல்லது அசெளகரிய மானதொன்ருகவோ இருக் கி லாம். ஆனல் அவன் அதைத் தவிர வேருென்றையும் எழுத (1Քւգեւ117 5}, என்ன? ஜானகிராமன் என்ருல் என்ன? டானியல், டொமினிக் வா என்றல் என்ன? இது
விதி. இதில் முக்கியமான விஞ என்னவெனில், இந்தப் பிரக்ஞை அவர்களது படைப்பாற்றலுக்
கும் முற்போக்கான சமூக விளக்
கத்துக்கும் இடையூருக இருக் கின்றதா என்பதே. ,
டானியலின் எழுத்துக்களுக் கான ஒரு நியாயப்பாடு உண்டு. யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி strpretoruerras sepas ஒடுக்குமுறை இருக்கும்வரை டானியல்கள் இருந்து கொண்டே இருப்பார்
கஃப்காவென்முல்
கள். அந் த ப் பிரச்சினையை மறைத்துக் கொண்டு இப்படி
எழுதலாமா என்று கேட்பது நியாயமற்றது.
டானியல், டொமினி க்
ஜீவா எமது சமூக வரலாற்றின் ஒரு கட்டமாக அம்ைபவர்கள் : டானியலிடம் நான் காணும் முக்கிய சிறப்பு, அவரது நட்பு ணர்வாகும்.
1950 களில் இருந்த டானி யல் அன்று, இன்றைய டானி யல். பல மாற்றங்கள். ஆனல் இந்த இந்த மாற்றங்களிடையே காணப்படும் ஒரு தொடர்பு ணர்வு.
சமூகக் கொடூரங்களுக்கெதி ராகக் குரலெழுப்பும் ஆவேச மனிதாயதவாதக் குரல் டானிய லுடையது.
இந்தக் குரல் நீண்டு நின்று ஒலிக்க வேண்டும் என்பது எனது -916ՀIIT .
இலக்கியத்தை நேசிக்கும் நண் பர்கள் шигтдгт வது உங்களுக்கு இரு க் கி ன்ருர் களா? அவர்க ளது முகவரியை எமக்குத் தந்து தவுங்கள். நாம் மாதிரிக்கு அவர் களுக்கு மல்லி கை ஓர் இதழை அனுப்பி வைத துத் தொடர்பு கொள்ள விரும் புகின்ருேம்.
ஒருவர் எத்தனை முகவரிகளை யும் அனுப்பலாம்.
- ஆசிரியர்

Page 6
பொதுமக்களுக்கும், வர்த்தகப் பெருமக்களுக்கும் பயன்தரக்கூடிய நல்ல பல சேவைகளை நாணயத்துடன் அளித்துவரும்
மல்ரி சேவிசஸ்
தாபனத்தார்.
மாணவ மாணவியர்களும் அலுவலகங்களில் பணிபுரிபவர்களும் அயல்நாடு செல்லவிருப்பவர்களும் அறிவை விருத்தி செய்ய ஆசைப்படுபவர்களும் பிரயாணச் செலவையும், போக்கு வரத்து நெரிசலையும், போதிய நேரமின்மையும்
தவிர்த்து
வீட்டில் இருந்தபடியே
வேண்டிய நேரத்தில்
மிக இலகுவான முறையில் குறுகிய காலத்திற்குள் ஆங்கிலம் படித்துப் பயனடையக்கூடிய வகையில் விரைவில் ஆரம்பிக்கவிருக்கும்
அஞ்சல் வழி ஆங்கிலம்
விபரங்களுக்கும், விண்ணப்பப் படிவத்திற்கும் எழுத வேண்டிய முகவரி:
மல்ரி சேவிசஸ்
37 (351) மணிக்கூட்டு வீதி,
யாழ்ப்பாணம்.

கடற்த 82 ம் ஆண்டு ஆகஸ்டில் வெளிவந்த பதினெட்டாவது ஆண்டு மலரில் திரு, கந்தையா நடேசன் "இலங்கை இலக்கியமும் அதன் எதிரணியினர்களான மரபுப் பண்டிதர்களும் மார்க்ஸிஸப் பண்டிதர்களும்’ என்ருெரு விவாதக் கட்டுரையை ஆரம்பித்தார். அதையொட்டிப் பல்வேறு கருத்துக்கள் கட்டுரையாகத் தொடர்ந்து மல்லிகையில் வெளிவந்தன. முடிவாக் அக்கட்டுரைகளுக்குப் பதில ளிக்கும் வகையில் அவரே அவ் விவாதத்தை முடித்து வைக்கிருர்,
- ஆசிரியர்
ஆன பார்த்தவர்களுக்காக அநுதாபப்படுகிறேன்.
மரபுப் போராட்டம் என் பது முற்று முழுதான "இழிச னர் வழக்குப் போராட்டம்" தான் என்று நான் எங்குமே குறிப்பிடவில்லை, எனவே மரயுப் போராட்டம் பற்றிய விபரணங் களைத் தருவதைத் தவிர்த்துக் கொண்டேன். இதனைப் புரிந்து கொள்ளாமலோ அல்லது புரிந்து கொள்ளக் கூடாது என்று கரு தியோ பலர் தங்கள் கருத்துக் களை வெளியிட்டுள்ளார்கள். இந் தத் தடுமாற்றத்தின் காரண
மாகவே,
"ஒன்றை அழுத்தமாகக் கூறிவைக்க வேண்டும். ஓர் உலக வியாபகமான இயக்கத்துக்கு (சோசலிச) எதிராக நிகழ்த்தப் பட்ட போராட்டத்தை கேவ
போராட்டம்:
-கந்தையா நடேசன்
லம், சாதிக்காக நிகழ்த்தப்பட்ட போராட்டமென க. ந. நிறுவ முயல்வது எவ்வளவு நபுஞ்சக மானது" என வன்னியகுலமும்,
க. ந. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க்ம் நடாத்திய பயனுறுதியான போராட்டங் களைச் சாதிப் போராட்டத்து டன் மட்டும் இணைத்து திருப்தி யடைகிருர் போலும் 667 அனுதரட்சகனும் சொல் ல நேர்ந்தது போலும்
இந்த இடத்தில் ஒன்றை உறுதியாகக் குறிப்பிட வேண் டும். சாதி ஒடுக்குமுறைகலிைப் பேண வேண்டும் என்ற நோக் கத்துடன் நடத்தப்பட்ட ஒரு சோசலிசத்துக்

Page 7
கெதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு போராட்ட்முந்தான் என்பதை இவர்கள் ஏன்தான் விளங்கிக் கொள்ளவில்லையோ வர்க்கம்சாதி என்பவற்றுக்கிடையே இவர்களுக்குள்ள குழப்பந்தான் இத்தகைய கருத்துக்களை வெளி யிடுவதற்கான கார ண மென நான் கருதுகின்றேன்.
எனது கட்டுரையிற் குறிப்
பிடப்பட்டுள்ள o LDT rfj; 666m பண்டிதர்களின்" சார்பில் தமது பக்க நியாயங்களை எடுத்துச்
சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்
தின் பேரில் அலை ப் பயணி ஏதோ சிலவற்றைச் சொல்ல லாம் என்று எத்தனித்திருக்கி ருர், அதேசமயம், 'ஆ ஞ ைல் ஏதோ பெரிதாகச் சொல்ல வருவது போன்ற ஆர்ப்பாட்டத் துடனுன இக் கட்டுரை பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை" எனக் குறிப்பிட்டு உண்மையில் எனது கட்டுரை யில் தெரிவிக்கப்பட்ட கருத்துக் களை மறுதலிக்க இயலாது தப் பித்துக் கொள்கிருர், அதே வேளையில் எனது கட்டுரையில் சுட்டிக் காட்டப்பெற்ற கருத் துக்கள் மிகச் சரியானவை என் பதனை நிரூபிக்கத் தகுந்தவண் ணம் டானியல், டொமினிக் ஜீவா இருவரையும் சாடுவதையே சிறப்புறச் செய்து முடித்துள் ளார். இன்னேர் இடத் தி ல், "டொமினிக் ஜீவா, டானியல், தெணியான் போன்றவர்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் கள் மீதான காழ்ப்பினைப் பல
சந்தர்ப்பங்களில் வெளிக்காட்டி வந்துள்ளனர்" எனவும் குறிப் பிட்டுள்ளார். இக்கருத்தினை
அங்கீகரிக்கும் வகையில் ஏலவே அவரது (க. ந.) இரத்தத்தில் ஊறிய பல்கலைக் கழகக்காரர் மீதான அலர்ஜியும், மேற்கோ ளுக்கு மட் டும் தாராளமாய்
டுகிற வேடிக்கையும் ம ன ம்
என்று
கொள்ளத்தக்கவை' என அடைப் புக்குறிக்குள் ஜெகநாதனும் குறிப்பிடுகின்றர். இவர்கள் இரு வருக்கும் இவ்விடத்தில் ஒன் றைத் தெளிவாகச் சொல்லி
வைக்க விரும்புகின்றேன். பல்க
லைக் கழகக்காரர்களோ அல்லது வேறு எவராகவோ இருந்தா லும், தவறுகளைத் தவறுகள் கட்டிக் காட்டுவதும் போற்ற வேண்டிய இடத்தில் போற்றுவதுந்தான் நேர்மையான இலக்கியவாதியின் போக்காக அமையும். சுய வீரியம் எதுவு மின்றி, தாம் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்களுக்காக வேண்டிப் பல்கலைக்கழகம் சார்ந் தவர்களின் பாதங்களை வருடிக் கொண்டிருப்பவர்கள் து திபாடிக் கொண்டே இருப்பார்கள். இந்த நவீன சுயம்வரக் கோமாளிகளின் பார்வையில் எல்லோரும் கோமா ளிகளாகத்தானே தோன்றுவார் கள் சில சிறுகதைகளைத் தர மாக இருப்பதாகவும், மல்லிகை போன்ற இலக்கியச் சஞ்சிகை களில் எழுதுங்கள் என்றும், எழுதும் தொகையைக் குறைத்து மல்லிகையில் தொடர்ந்து சில காலம் எழுதி வந்தால் உருவாகி விடுவீர்கள்" எனக் கைலாசபதி யினுல் ஆசீர்வதிக்கப்பட்டுத் தத் தெடுக்கப்ப்ட்ட மு ற் போக்கு ஜெகநாதன், அடுத்த நூலுக் கான முன்னுரையை அவரிடமே பெற்றுக் கொள்ளும் ஆதங்கத் துடன் இருந்த ஜெகநாதன், சிறு க தைத் தொகுப்புக்கான முன்னுரையை வேருேரு பேராசி
ரியரிடம் பெற்றுக் கொண்ட ஜெகநாதன், பல்கலைக்கழகம் சார்ந்தவர்களுக்குச் ச ல் லா ரி போடுவதே தம் து இலக்கிய சேவையின் கதிமோட்சமாகக் கொள்வது அப்படியொன்றும் வியப் புக் குரிய காரியமாகி
விடாது. அவர்களோடு என்றுமே இணக்கமாக இருந்து ஆசீர்
வாதம் வாங்கிக் கொண்டிருக்க
0

லாம். அப்படியான அந்தரங்க நோக்கம் எதுவுமிவ்லாதவர்கள், தவறைத் தவறென்று சுட்டுவ தும், போற்ற வேண்டிய சம் யத்தில் போற்றுவதும் எந்த வகையில் குற்றமாகிவிட முடி யும்? இப்ட்டிக் குற்றம் சுமத்து ததன் மூலம் பல்கலைக் கழகக் காரர்களின் நேச நோக்கை” மேலும் வலுப்படுத்திக் கொள் ளலாம் என்பது பயணிக்கும் ஜெகநாதனுக்குமுள்ள ஒரே ஆதங்கம்ா? முன்னுரை வாங்கு வதும், மேற்கோள் காட்டுவ தும், நூல் வெளியீட்டு விழாக் களுக்கு அழைப்பதும் இவர்க ளுக்குத் தவழுகத் தோன்ருமல் இருக்க வேண்டுமானல், இவர் கள் பல்கலைக் கழகக்காரர்களை விட்டுத் தமது சுய த் தி லே காலூன்றி நிற்க வேண்டுமே!
டொமினிக் ஜீவா, யல் இருவரையும் முதன்மைப் படுத்த விரும்புகின்றேன் என மற்றவர்கள் முன்வைத்த குற் றச்சாட்டினையே, "அருகி வரும் சாதியுணர்வை எதற்காக அடிக் கடி கிண்டிக் கிளறி புத்துணர்வு பெறச் செய்கின்றீர்கள்’ என்று இன்னெரு தொனியில் கங்கா தரன் கேட்கின்ருர். இவருக்கு ஒன்றை மாத்திரம் சொல்லி வைக்கலாம். இன்றைய சமூக, அரசியற் சூழ்நிலையில் தாழ்த்தப் பட்ட மக்களில் ஒரு பகுதியின ரின் ஜீவாதாரமாக விளங்கும் கள்ளுந் தவறணைகள் தீ மூட்டி எரிக்கப்படுவதனைக் கவனத்துக் குக் கொண்டால் புரியாதவை கள் எல்லாம்ே இலகுவாகப் புரிந்துவிடும். கொடும்ைகளை இல்லையென்று மறுப்பதுவும் ஒரு வகை மேலாண்மைக் குணந் தான்.
இறுதியாக ஒன்றுமில்லாத
எல்லாம்நிந்த குழப்பம் பற்றிக் ே GFmråvar? Enau één
டானி
வேண்டியதாகின்றது. எ ன து முதற் கட்டுரையைத் தொடர்ந்து பலரும் தங்கள் கருத்துக்கனைத் வெளியிட்டார்கள். அவர்களுஸ் எனது கருத் தை மறுதலித்து தங்கள் கருத்துக்களை வெளியிட் டவர்களுள், இறுதிக் கட்டுரை யாளராக விளங்குபவர் காவ லூர் ஜெகநாதன். பலருடைய கட்டுர்ைகளுக்குப் பின் எழுதி யிருக்கும் அவரது கட்டுரையில் சுயமாக ஒன்றுமிருக்காது என் வது விஷயம் அறிந்தவர்கள் உணரக்கூடிய பரம இரகசியம். முன் சொன்னவர்களது கருத்துக் களைத் தொட்டுத் தொட் டு அருட்டிப் பார்த்திருக்கின்ருர், காண்டேகர் பாணியில் கட்டு ரைக்கிடையே உருவகக் கதை ஒன்றையும் எடுத்துப் பொருத்தி
இருக்கின்ருர். இவற்றைவிடக் குடுகுடுப்பைக்காரன் Guita), இச் சந்தர்ப்பத்தைப் ப யன்
படுத்தி தானும் முற்போக்கணி யைச் சார்ந்தவர் எ ன் ப ைத அறிவித்துவிட வேண்டுமென்ற அவசரத்தை வெளிப்மடுத்து கிள்ளுர்,
மார்க்ஸிஸப் பண்டிதர்கள் முற்போக்கு அணியைச் சேர்ந்த வர்களுள் குறிப்பாக ஒரு சில ரைத் தாக்கி வருகின்றர்கள். இவ்வாறு தாக்கப்படுபவர்களுள் ஒருவரைப் பற்றி மிகக் கீழ்த் தரமாக எழுதிக் கொண் டு தனது சொந்தப் பெயரைத் தவிர்த்து வேறு பெயரில் அக் கட்டுரையை வெளியிடுவதற்கு ஒடித்திரிந்தவர்களையும் நாம் அறிவோம். வேண்டுமானல், எழுதியவரின் சொந்தப் பெய ரில் அக்கட்டுரையைப் பிரசுரிக்க லாமெனப் பத்திரிகை ஆசிரியர் தெரிவித்தபோது, கட்டுரைப் பிரதி  ையப் பறித்தெடுத்துக் கொண்டோடிய தெ ம் புள் ள எழுத்தாளர்களையும் அ றி ந் து வைத்திருக்கின்முேம், ĝisnurfas

Page 8
ளெல்லாம் முற்போக்கணியைச் சார்ந்தவர் என்று சொல்லிக் கொள்வதால் அவர்களுக்கு நட்ட மில்லை. ஆனல் கருத்துக்களை முன்வைக்கும்போது தமது பின் புறத்தில் ஏதோ கிணுகினுப் பதை மறந்துவிடக் கூடாது. தமது நாற்றத்தை மற்றவர்கள் அறிந்துவிடப் போகின்ருர்களே என்ற அச்சத்தினுல் முன்னெச் சரிக்கையாக "ஏதோமணக்குது, ஏதோ மணக்குது என்று கூறி மற்றவர்களின்மேல் நாற்றமடிப் பதாகச் சொல்லித் தாம் தப்பித் துக் கொள்ள வழி தேடக் én, L-fTgil.
"இந்நிலையில் க. ந. முன் வைக்கிற தவறன கருத்துக்க ளும் முடிவுகளும் ஊறு விளைவிப் பனவல்லவா? எனின் மறைமுக மாக இதன் சேவை என்ன? வெளிச்சமாக இருக்கிற வரலாற் றுப் பாதையில் க. ந. போன்ற வர்களும் அவரே விவரிக்கின்ற பட்டியலில் த லை  ைம யிட ம் பிடித்துவிடுவாரோ என்பது தான் எமது கவலையெல்லாம்" எனப் பெரிதாகக் கவலைப்பட் டுக் கொள்ளும் ஜெகநாதனுக்கு ஒன்றை அறிவுறுத்தலாம். அவர் கூறுகின்ற பட்டியலில் (இருவ ரின் பெயர் ஒரு பட்டியலாக அ வருக் குத் தோன்றுகிறது) தலைமை இடமோ அல்லது வர லாற்று வழிவருகின்ற இடமோ நிச் ச யம் ஜெகநாதனுக்குக் கிடைக்கப் போவதில்லை. அப்ப டிக் கிடைக்குமென்ற நம்பிக்கை யினுல்தான் இவ்வாறெல்லாம் அவர் அலட்டிக் கொள்ளுகிருர் என்ருல் அதன் இரகசியம் நான் அறியாத ஒன்றென்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
இன்று நடைபெறுக்கின்ற இலக் கி யப் போராட்டத்தின் ஒரம்சமாக - அடித்தளமாக
சாதி அமைப்பு அமைந்துள்ளது
என்ற எனது வாதத்தை எதிர்க் கின்றவர்களுக்கு ஒன்று கூறி வைக்கலாம். இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களைப் பார்க்கும் போது, இந்த வளர்ச்சியைப் பார்ப்ப தற்கு இதுவும் (சாதி அமைப்பு) ஒரு முக்கியமான தடயமாகும். இலக்கியம் பற்றிய எழுத்தா ளர்கள் பற்றிய பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதற்கு இதுவும் ஒரு கண்ணுேட்டம் என்பதனை நிலைநிறுத்துகின்ற பல் வேறு தடயங்கள் உள்ளன. இலங்கைத் தமிழ் வாழ்க்கையில் முக்கிய மாக யாழ்ப்பாணத்து வாழ்க் கையில் இதுவும் பிரதானமான சமூக முரண்பாடுகளில் ஒன்றென் பதை நாம் மறந்துவிடலாகாது.
இந்த முரண்பாடு இருக்கக்கூடா
தென்பது ஒன்று இல்லையென் பது இன்னென்று. எனது கட் டுரை மூலம் இதனைத்தான் தனி யொரு முரண்பாடாக நான் கொள்ளவில்லை. இதுவும் ஒன் றென்பதே எனது உறுதியான எண்ணம். இதனை விளங்கிக் கொள்ளாது யாழ்ப்பாணத்துச் சமூக முரண்பாட்டை விளங்கிக் கொள்ள முடியாது. யாழ்ப்பா ணத்துச் சமூக முரண்பாட்டை விளங்கிக் கொள்ளாத இடத்து, எனது கட்டுரை குழப்பமான தாகவே தோண்றும். இ. மு. எ. சங்கத்தின் வரலாற்றை எழுதிய வர்கள் நான் குறிப்பிடும் சாதி பற்றிய முரண்பாட்டை அழுத் தங் கொடுக்காமல் விட் டு ப் போயிருக்கிருர்கள். விடுபட்டுப் போன அந்த முரண்பாட்டை எடுத்து முன்வைக்கும் போது, ஏனைய அம்சங்களைவிட, இந்தச் சாதி முரண்பாடு பிரதானப் படுத்தப்படுவது போலச் சிலருக் குத் தோன்றலாம். அதனல் உ ண்  ைம க ள் மறைக்கப்பட வேண்டுமென்பதில்லை. "இழிச னர் வழக்கு" என்ற குரலின் அடித்தளத்தில் சாதியும் 1?pr

தான அம்சங்களுள் ஒன் ரு க இருந்தது என்பதனை யாவரும் ஒப் புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
"இந்தச் சுருதியைப் பார்த் தால், காலகதியில் பஞ்சமர்
களின் எழுத்தாளர் சங்கங்கள்
உருவானுலும் உருவாகலாம் என்று எண்ணத் தோன்றுகின் றது" என எவரும் அச்சமுற வேண்டியதில்லை. யாழ்ப்பாணத் தின் சமூக வாழ்க்கையில் கடந்த முப்பது ஆண்டுக் காலத்தில் முதன் முதல் தீண்டாமை ஒழிக் கப்பட்டது இலக்கியத்தில்தான். கலைத்துறையிற் கூட அல்ல. அதன் உள்ளீடான போராட் டத்தை எடுத்துச் சொல்வதே எனது கட்டுரையின் பிரதான அம்சமாக அமைந்தது. எனவே புதிதாக ஒரு பஞ்சமர் எழுத் தாளர் சங்கம் இனி மேல் தோன்ற வேண்டிய அவசியம் எதுவும் நேர்ந்துவிடாது. அதே சமயம் முரண்பாடுகளை விளங் கிக் கொள்ளாது, பூசி மெழுகிக் கொண்டு முற்போக்காளர்களா
கக் காட்டிக் சொள்ள வேண்டி யது அவசியமுமிஎலை
எனது பதிற் கட்டுரை சம் பர்தமாக முடிவாக ஒன்றைச ፵ ல் லி யாக வேண்டும்; கா. சிவத்தம்பி அவர்கள் அடிக் கடி ஒன்றைக் கூறுவார்கள. முதற் கல்லை நாங்கள் போடக் கூடாது. இரண்டாவது கல்லைப் போடுவதற்குப் பின் நிற்க . கூடாது' (கா. சி. இன் மேற் Gyntsir காட்டுவதையிட்டு பயணி யும் ஜெகநாதனும் என்னை மன் னித்தருள்வார்சளாக) நான எவருக்கும் முதற் கல்லு போடு பவன் அல்லன். எனது முதற கட்டுரையைத் தொடர்ந்து T எந்தத் தொனியில் கருதிசி வெளியிட்டுள்ளார்களோ, அெ களுக்கு அவர்கள் பாணியிற் சொன்னல்தான் விளங்குமென் பதை பணத்தில் கொண்டே இப்பதிற் கட்டுரையை எழுதி னேன். அவர்கள் அவசரத்தில் ஆஜன யைப் பார்த்தார்கள் அவர்களுக்காக அநுதாபப்படு கிறேன்.
(முற்றும்)
േയ്പൂ
பஸ் நிலையத்திற்கு அணித்தாகக் கரையோர வீதிகளில் திராட் சைப்பழம் விற்பவர்கள் கூவிக் கூவி விற்பனவு செய்தார்கள்.
நவீன உடை தரித்த யுவதி ஒருத்தி ஒவ்வொரு இடத்திலும் நின்று இரண்டொரு பழங்களை எடுத்துச் சுவை பார்த்துவிட்டு முகத்தைச் சுளித்தபடியே அடுத்த அடுத்த கடைகளுக்கும் சென்று
கொண்டிருந்தாள். ஒரு
இடத்திலும் வாங்கவில்லை.
கடைசியாக ஒரு இடத்தில் நின்று பழங்களைச் சுவை பார்த்து விட்டு முகத்தைச் சுளித்தபடி திரும்பினள். கடைக்கார இளைஞன்
தடுத்தான்.
"இந்தாம்மா கால்ருத்தல் காசு
ரண்டு ரூபாவைத்
தந்துவிட்டுப் போ" என்று குரல் கொடுத்தான்,
"ஏன் நான் ரெண்டு பழந்தானே எடுத்தனன்? "ஒமோம். உன்னை எல்லாக் கடிையிலுமிருந்து பார்த்துக்
கொண்டே இருக்கிறன். எல்லாமாச் சேத்துத்தான் கால்ருத்தல்" பேசாமல் இரண்டு ரூபாவைக் கொடுத்துவிட்டு அவ்விடத்தை
விட்டு அகன்ருள் அவள்

Page 9
“MAWr4MWr1MWYN “Mur MNMNANLYN MEN
தந்திரம்
ീഴ്--\\n*( M.
'ரியமறுத்து அடம்பிடித்த ஈர விறகுகளைக் குனிந்து ஊதி விட்டு நிமிரிந்த செல்லம்மாவை கரிய நிறத்தில் படை படையாய் மிதந்து வந்த புகை மண்டலம் ணற வைக்கவே, மூச்சு முட்டு வது போல இருந்தது. மாரி வந்திட்டால் இந்த ஆய்க்கினை தான். காய்ஞ்ச விறகாய் எடுத்து நனையாமல் ஒத்தாப்புக்குள்ளை குவிச்சு வைச்சிருக்கலாம். இவள் பிள்ளைக்கு இதுகளுக்கெங்கை நேரம்? பள்ளிக்குடம் முடிஞ்சு வந்தால், ஒரு பிடி சாப்பிட் டுட்டு பழையபடி "ரியூசன்" எண்டு வெளிக்கிட்டுடுவள்" என அங்கலாய்த்துக் கொண்ட செல் லம்மா, தன் முயற்சியில் சற்றும் ம்னம் தளராத விக் கி ர ம் ன் போல மறுபடியும் அடுப்பை ஊத ஆரம்பித்தாள். நீண்ட நேர பகீரதப் பிரயத்தனத்தின் பின்னர் அவள் தன் முயற்சியில் வெற்றி கண்டாள். அடுப் பு விளாசி எரிய ஆரம்பித்தது.
அரிசிப் பானையை நோட் டம் விட்டபோது ஒரு சுண்டு வரையில்தான் இருந்தது. சமா ளிக்க வேண்டியதுதான் என எண்ணிக் கொண்டாள். வீட்டில் அப்படி என்ன கனபேரா இருக் கிருரர்கள்? அவள், மகள் ஆக இரண்டு சிவன்கள்தானே மேல
திகமாக ஒரு நாய்!
*MrMYr1MAVr1Mrs MIAMIN MVNIM Vr Vraaaaaa
ச. முருகானந்தன்
ALMLMALALMAALLAAAAALLAMAMLMALA AMALMqAALMALMLMALMALA ALALA AALLLLLLL x/\saw
அவ்வளவு தான், கறிக்கு என்ன செய்ய லாம் என்று யோசித்த போது, முற்றத்து முருங்கை மரம் கை கொடுத்தது. முருங்கைக் க்ாய் பிரட்டல் - கொஞ்சம் தண் னிர்ப்பதமாய் босифа, ортић; முருங்கையிலையில் ஒரு சுண்டல்இன்றைய பொழுது பிரச்சினை யின்றிக் கடந்து விடும்.
செல்லம்மாவின் கணவன் கந்தையா கமம்தான் செய்து வந்தான். அடிமை குடிமை வேலைகளுக்கு முழுக்குப் போட்ட ஆரம்ப நாட்களில் மிகவும் கஷ் டப்படத்தான் செய்தார்கள், எனினும் குத்தகை நிலத் தி ல் அவர்கள் சிந்திய வியர்வை வின் போகவில்லை. பத்து வருடங்க ளுக்குள்ளாகவே சுப்புடையாரிட மிருந்து கந்தையாவும், அவரது சகோதரி மீனுட்சியின் கணவன் ஆறுமுகமும் பங் காக தாம் செய்த வயலை விலைக்கு வாங்கி விட்டனர். அதன் பின் னர் அயரா உழைப்பினுல் அவர்கள் வறுமையிலும் ஓரளவு செழுமை யாகவே வாழ்ந்தனர்.
ஆனல் மூன்று வருடங்க ளுக்கு முன்னர் கந்தையா நிமோ னியாக் காய்ச்சலில் மண்டை யைப் போடி செல்லம்மாவின்
莒鑫

பாடு திண்டாட்டமாகிப் போய் விட்டது, படித்துக் கொண்டி ருந்த சுப்பிரமணியத்தையும், மேகலாவையும் எப்படித்தான் ஆளாக்கப் போகிறேனே என்று அவள் கலங்கினுள். எனினும் படிப்பில் சுப்பிரமணியம் காட் டிய திறம்ை அவளுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்ருய் தெரிந்தது. எனவே அவனைக் கஷ்டப்பட்டுப் படிப் பித்தாள். அவனும் நன்ருகப் படித்து உயர்தரப் பரீட்சையில் திறமையாகச் சித் தி ய  ைட ந்
தான். ஆனல் இந்தச் சாக்கடை
அரசியல் சமுதாய அமைப்பின் தாக்கத்தினுல் பல்கலைக் கழகக் கதவுகள் அவனுக்கு மூடப்பட் டன. அடுத்தமுறை கிடைக்கும் என செல்லம்மா உறுதியாக நம்பினள். ஆஞல் அதற்கு முன் னரே அவன் எங்கோ ஓடிவிட் terroir.
அவள் ஒப்பாரி வைத்தாள். அவளது ஒப்பாரி ஒய கனநாள் பிடித்தது.
மீண்டும் அவள் ஒ டா ய் உழைத்தாள். பெரும்போகத் தில் வயல் சிறிது கை கொடுக் கும். மற்றும்படி குத்தல் இடி யல் என்று கூலி வே லை யி ல் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை ஒடும். மேகலாவைக் கஷ்டம் தெரியாமல் வளர்த்தாள். இருக் கின்ற வீட்டையும் வயல் காணி யையும் கொடுத்து ஒருத்தனின் கையில் அவளை ஒப்படைத்து விட்டால் அவள் நிம்மதியாகக் கண்ணை மூடிவிடலாம். ஆனல் மேகலாவோ படிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிருள். இவ ளால் மறு க்க முடியவில்லை,
காரணம் அவள் கெட்டிக்காரி
யாக இருந்ததுதான். நன்முகப் படித்தால் நல்லதம்பி மாஸ்ட ரின் மூத்தவள் போல இவளும் ஒரு டொக்டராக வரக் கூடும்.
க்னவுகள். சுற்பண்கள். எதிர்பார்ப்புகள்.
காலச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது,
"என்னனை அம்மா இன்னும் கறி வைக்கல்லையே? எனக் கு நேரம் போட்டுது. * மேகலா பரபரத்தாள்.
"கொஞ்சம் இரு பிள்ளை. முதல் பாலையும், புளியையும் விட்டுட்டு ஒரு கொதி சுொதிச்ச வி; ட னை இறக்கியிடலாம்? நீ சோத்தை ஆறப்போடு.
சாப்பிட்டு விட்டு மேகலா சங்கடப் படலையைத் திறந்து கொண்டு வெளியேறவும், சுப் புடையாரின் மூத்தவரான சுந்த ரம்பிள்ளை உள்ளே வரவும் சரி பாக இருந்தது. கிணற்றடியில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த
செல்லம்மா வாசலுக்கு வந்து அவரை வரவேற்ருள். ஐயா வாங்கோ. . ஆளணிப்பியிருந்
தால் நானே வந்திருப்பனே." என்று பரபரத்தாள்.
அதுக்கில்லைச் செல்லம்மா" என்று அவர் மறுபடியும் ஆரம் பித்த போது செல்லம்மா மீண்
டும் குறுக்கிட்டாள். "இந்த மாதம் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கோ. விதைப்புச் செலவும் இருக்கு, வாறமாதம்
எப்படியும் வட்டியை எண்டா
லும் தந்திடுறன் ஐயா?
"நீயேன் இப்ப பதகளிக்கி ருய்? நான் இப்ப அதுக்கு வர யில்லை. உன்னிலை எனக்கு நம் பிக்கை இல்லாமலே? இது வேற விசயம்’ என்று பீடிகை போட்ட சுந்தரம்பிள்ளையை நிம் மதிப் பெருமூச்சுடன் Tri59ut, 'நிக்கிாயஸ் ஜயா. இருங் கோவன்" என்றபடி நாற்கா லியை எடுத்தும் போட்டாள்.

Page 10
தனது பெரிய சரீரத்தைப் புட்டுவத்தில் அமர்த்தியபடி ஒரு முறை வீட்டை நோட்டம் விட்ட சுந்தரம்பிள்ளை, ஏதோ நினைத் துக் கொண்டவராக. செல்லம் மாவிடம் இந்தப் பாச்சா பலிக் காது என்று சடுதியில் உணர்ந்து
கொண்டு, வந்த விசயத்தில் இறங்கினுர்,
*செல்லம்மா. நீ இன்
னும் வயல் உழயில்லையே.. p கந்தசஷ்டி மழைக்கு முந்தியெண் டாலும் விதைக்க வேண்டாமே? மற்றவங்கட காணியிலே பயிராப் போச்சு, நீ பேசாமல் விட்டிட் டிருக்கிருய், கந்தையன் அந்தக் காலத்திலை எங்களுக்கு விசுவாச மாக இருந்தவன் எண்டதால சொல்லுறன். நீ கைம்பெண்டா டிச்சி எண்டவுடனை உன்ர ஆக் கள் உன்னைப் பேய்க்காட்டப் பாக்கினை" என்று பீ டி  ைக போ ட் ட சுந்தரம்பிள்ளையை நிமிர்ந்து கேள்விக் குறியுடன் நோக்கினுள் செல்லம்மா.
"என்னடி ஆத்தை நீ கன நாள் வயல்பக்கம் போகயில்லைப் போலை. உன்ரை வயலை வடக் காலை பிடிச்சுப் போட்டாங்கள். வரம்பு கட்டலிலும் ஒரு ஒழுங்கு முறையில்லை. உன்ரை வயலைத் தான் தி ன் னி ன ம் ." அவர் தொடர்ந்த போது ஒன்றும் புரி
யாமல் அவரை நோக்கினுள் செல்லம்மா.
“ørøör 60rui Lunt சொல்லுறி யள்? கொஞ்சம் விளக்கமாய் சொல்லுங்கோவன். . * என்று அவள் பரிதவிக்கவே சுந்தரம்
பிள்னை சமயம் பார்த்து வாழைப் பழத்தில் ஊசி ஏற்ற ஆரம்பித் தார், "செல்லம்மா, மாணிக்க வளை குளத்துக்குக் கிழக்காலை இருக்கிற அந்தத் துண்டு வயல் உன்னுடையது தானே? உன்ர கொண்னர் ஆறுமுகம் அதைத்
தன்ர பங்கோட சேர்த்து உழுது விதைச்சிருக்கிருர்"
"அந்தத் துண்டு எங்களுக்கே guur?”
"எடி விசரி, உன்ர காணி பூமியின்ர திக்கெல்லை தெரியா மல் நிண்டு திண்டாடுருய். அவன் கந்தையன் உன் னை ப் Gul 'lig. Lurriblurri வீட்டுக் குள்ளை வைச்சிருந்ததாலே உனக் கொண்டும் சரிவரத் தெரியேல்
&avu Gumråa”
அண்னரட்டைக்
"அப்ப கேக்கட்டே ஐயா?"
"நான் மனம் பொறுக்கா மல் அவனட்ட சொல் லி ப் பார்த்தஞன். அவன் என்னே டயே சண்டைக்கு வாருன். தலை தெறிக்கக் குடிச்சிட்டு நிண்ட
தாலை நானும் பேசாமல் வந்திட்
Leif'
'எதுக்கும் நான் ஒருக்கால் கேட்டுப் பாக்கிறன் ஐயா..
எனக்குப் பாதகமாய் செய்ய Lonrl Itř" W
"விசரி. விசரி. எல்
லாரும் உன்னைப் போல நல்ல  ைவ யெ ண் டு நீ நம்புருய். ஆணுல் அவர்கள் உன்ரை தலை யிலை பச்சடி அரைக்கப் பாக்கி னம். அதிலையும் உன்ர மச்சாள் சின்னம்மா இருக்கிருளே. சரி யான அசமடுக்கல் கள்ளி. தோலிருக்கச் சுளை திண்டிடுவாள்" சுந்தரம்பிள்ளை சாதுரியமாக இயங்கிஞர்.
மச்சாளின் பெயரைக் கேட் டதும் செல்லம்மாவுக்கும் ரோசம் பிறந்தது. "உவையின்ர புலுடா என்னிலை வாய்க்காது ஐயா." என்று தட்டிக் கொண்டு கிளம் பினுள். சுந்தரம்பிள்ளை அவளைத் தடுத்து நிறுத்திஞர். "பொறு.
6

பொறு. இப்வவே ஒடாதை, எக்கணம் என்னிலைதான் பழி வரும். ஆறுதலாய்ப் போய்க் கேள். வினய் என்ர பெயரை உதுக்குள்ள இழுத்துப்போட வேண்டாம் . நான் பொதுவான ஆள்" அவர் விடைபெற்ருர்,
அன்று மாலை செல்லம்மா நியாயம் கேட்டு ஆறுமுகம் வீட் டுக்குப் போன போது ஒரு பிர ளயமே ஏற்பட்டது. சின்னம்மா வும் வாய்க்காரி. லேசில் விட வில்லை.
* எடி தேவடியாள், புரிச னைத் தின்னி, நீயும் உன்ரை குமரும் ஆடுற ஆட்டம் எங்க ளுக்குத் தெரியாதே. ஊரிலே யுள்ள ஆம்பிளையளையெல்லாம் தட்டிச்சுத்துறது போதாதெண்டு இப்ப கொண்ணரையும் தட்டிச் சுத்த வந்திட்டியேடி பரத்தை"
"சின்னம்மா, கொஞ்சம் அடக்கிப் பேசு. உனக்கும் இரண்டு குமருகள். உன்  ைர மூத்தவள் ரியூசனுக் கெண்டு யாழ்ப்பாணம் போய் குதியன் குத்துறது தெரியாமல் என்ர பிள்ளையை வசை பாட வந்திட்டாய், இப்ப வீண் கதையை விட்டுட்டுச் சொல்லு, காணிக்கு என்ன சொல்லுருய்?"
"அது எங்கட பங்கு. உறுதி யில் இருக்கு. வேணுமெண்டால் நீ வழக்குப் போடு"
இடையில் வந்த ஆறுமுகம் குறுக்கிட்டார். "ஐநூறு ரூபா பெருத கா னித் துண்டுக்கு கோடேறுறதே? விசயம் தெரிஞ்ச ஒரு ஆளைக் கொண்டு உறுதியை
வாசிப்பிச்சுப் பார்த்திட்டு முடிவு
T(Biévinruh”
7
வா  ையக்
சின்னம்மா கணவன் மீது
சீறிப்பாய்ந்தாள். நீங்கள் கொஞ்சம் பேசாமலிருங்கோ. உருப்படியாய் ஒரு காரியம் செய் யத் தெரியாது; செய்யவும் விட மாட்டியள்’ என்று அ வ ர து வாயை அடக்கிவிட்டு செல்லம் மாவிடம் கூறினுள். "நீ போய் வழக்கைப் ப்ோடு. கோட்டிலை ப்ேசிப் பாப்பம்" செல்லம்மா விடம் வழக்குப் பேசக் தாசு இருக்காது என்பது சின்னம்மா வின் கணிப்பு
ல் செல்லம்மா விட சுந்தரம்பிள்ளையிடம் ஓடினள். திட்டம் போட்டுச் செயலாற்றிக் கொண்டிருந்த சுந்தரம்பிள்ளை அவளை உற்சாக மூட்டிஞர். "நீ விடாதை. உனக்குத்தான் தீரும். வழக்குச் செலவுக்கு நான் கடன் தாற்ன். நல்ல அப்புக்காத்தாய்ப் பிடிப் Llo . . . . . .
<毁 வில்லை.
வழக்குத் தாக்கல் செய்யப் பட்டதும் ஆறுமுகத்துக்குக் கட் டளை வந்தது. கட்டளையைத் தூக்கிக் கொண்டு அவரும் சுந் தரம் பிள்ளையிடம்தான் ஒடிஞர். எதிர்பார்த்துக் காத்திருந்த சுந் தரம்பிள்ளை ஆறுமுகத்துக்கும் தூபமிட்டார். "மானப் பிரச் சினை எண்டு வந்தா ப் பிற கு சு ம் மா விடப்படாது; அவள் நல்ல அப்புக்காத்தாப் பிடிச் சிருக்கிருள். அதுக்கு மேலாலை கியூசி ஒரு ஆளைப் பிடிப்பம். அப்பதான் வெல்லலாம். பழைய அடி உறுதி எல்லாம் வேணும். அ தோ  ைட உலாந்தாவைக் கூட்டி வந்து அளந்து சரிபாக்க
வேணும். இப்போதைக்கு ஒரு ஆயிரம் ரூபா இரு ந் தால் போதும். பிறகு தவணைக்குத்
தவணை காசு கட்டலாம்’ என் முர் சுந்தரம்பிள்ளை. ஆறுமுகம் சிறிது தயங்கவே, அவர் அழுங்

Page 11
குப் பிடியாகத் தொடர்ந்தார். "உன்ரை ம்ணிசியையும், பிள்ளை யையும் வ ைச பாடினவளைச் சு ம் மா விடப்படாது. அவள் வழக்கிலையும் நிண்டு பிடிக் க மாட்டாள். காசு பணமில்லை. வெற்றி உன்ர பக்கம்தான் காசுபணம் உனக்கு வேணுமெண் டால் நான் தாறன்’
இறுதியில் வழக்கு கேட்டுக்கு வந்தது. தவணை, தவணை என் இழுபட்டுக் கொண்டே போனது. இரண்டு பக்கத்துக்கும், எதிர் தரப்புக்குத் தெரியாமல் பண உதவியும், ஆலோசனை என்ற பெயரில் சதியும் செய்து வந் தார் சுந்தரம்பிள்ளை. இரு பகுதி யினருக்கும் பணம் தண்ணிராய்க கரைய இறுதியில் செல்லம்மா வும், சின்னம்மாவும் வழக்குப் பேசிக் களைத்துப் போனதுடன் பெரும் கடனளியாகியும் விட் டார்கள். சுந்தரம்பிள்ளை எதிர் பார்த்த நாளும் வந்தது.
சுந்தரம்பிள்ளையிடம் வந்த செல்லம்மா சொன்னுள். "ஐயா வழக்குப் பேசி என்னுலை கட்டுப் படியாகாது. பேசாமல் அந்த ஐ ஞ் சு குழியையும் அவைக்கு எண்டே சமாதானமாய் விட்டுக் குடுக்கப் போறன்"
"அதுவும் சரிதான் செல் லம்மா. நீங்க்ள் ஒண்டுக்கை ஒண்டு. ஏன் வீணய் வழக்காடி நாசமறுப்பான். அது சரி, உன்ர கடனும் வட்டியும் எக்கச்சக்க மாய் ஏறிப்போச்சு. மேனைப் பற்றி ஏதும் தகவல் கிடைச்சதே"
"அவன் அறுதலன் இனி எங்கை வரப்போருன். நூற்றுக் கணக்கிலை காணுமல் போன
பொடியளுக்கை அவனும் ஒருத்
தனே ஆர் கண்டது? அதை விடுங்கோ ஐயா.. இப்ப உங்
புதிய சந்தா விவரம்
1983 ஏப்ரல் மாதத்திலி ருந்து புதிய சந்தா விவரம் பின் வருமாறு,
தனிப்பிரதி 2 - 50 ஆண்டுச் சந்தா 85 - 00 (தபாற் செலவு உட்பட)
அரை ஆண்டுச் சந்தாக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாடோ8
மல்லிகை
234 பி. கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்.
LAL LALLAL LLMLMqLALALMqLLALALSLALLMLSSLLLLLLLAL
கட கடனை என்னுலை அடைக்க வேறு வழியில்லை. என்ர முழு வயலையும், சீமா பனங்காணித் துண்டையும் அறுதியாய் எடுத் துக் கொண்டு மிச்சம் மீதியிருந் தால் தாங்கோ ஐயா" செல் லம்மா கவலையுடன் கூறினுன்
* என்ன செல்லம்மா விசர்க்
கதை பறையுருய்? என்ர முத லுக்குத்தான் காணித் துண்டு
பெறும், வட்டிக்கு என்ன செய்
யப் போரு ய் எண்டு நான் நினைக்கிறன், நீ மிச்சம் இருக்கோ வெண்டு கேக்கிருய். வேடிக் கையாயிருக்கு..."
செல்லம்மா கண் கலங்க வெளியேறவும், சின் ன ம் மா இதே நோக்கத்திற்காக சுந்தரம் பிள்ளை வீட்டுக்கு வரவும் சரி யாக இருந்தது:
சுந்தரம்பிள்ளை தனது தந்தி ரத்தை எண்ணி கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டார். O
18

-
4SN72
புதிய m பொலிக் கொடி
அ. பாலமனுேகரன்
eanse
9ഗ്ര ம்ாசிமாத மா லே ப்
பொழுது. அறுவடை முடிந்த வயலில் நெற்கதிர்களின் எச்ச
மான ஒட்டின் சுகமான மணம்
வீசியது. கள் ஆங்காங்கே சின்னங்களாக உயர்ந்து றன.
அறுவடையின் போது தவ றிப்போய் விட்ட நெற்கதிர்களைக் கொய்தும் பொறுக்கியும் கொண் டிருந்த வள்ளிக் கிழவி நிமிர்ந்து பார்த்தாள். வயதாகி விட்டத னல் தொலைவில் வந்துகொண் டிருந்த அந்தப் பெண்ணை அடை யாளங் காண முடியவில்லை.
எடி தங்கம் ஆரது இடுப் பிலை பொடியோடை" பக்கத் தில் கதிர் பொறுக்கிய தங்கம் வள்ளியைவிட நாலைந்து வயது
so
கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.
"ஆரெண்டு தெரியேல்லை யனை! இந்த வயல் வெளியிலை
வயல் வெளியில் சூடு உழைப்பின்
நின்
கதிர்களைக்  ைகயி ல்
தான் சனமில்லை, கொஞ்சக் கதிர் பொறுக்கிலாமெண்டு பாத் தால் அறுவாளவை இந் த க் காட்டுக்கையும் வரத் தொடங் கீட்டாளவை?
வன்னிப் பகுதி வயல்களில் அறுப்பின் பின் எஞ்சிய கதிர் களையும் சிந்திய மணிகளையும் பொறுக்கிச் சேர்ப்பதற்கு அய லில் உள்ள ஏழைப் பெண்களும் குழந்தைகளும் வருவது வழக்கம் வயற் காட் டி ல் பகலிரவாக
அ லை ய வேண்டுமென்பதால் இளம் பெண்க ள் வருவது குறைவு.
பசுலில் தகிக்கும் வ்ெய்யி லில், கால்களில் ஒட்டுக் குத்து வதையும் சகித்துக் கொண்டு பொறுமையோடு கதிர் பொறுக் குவார்கள். இரவில் சூடு அடிக் கும் களங்களுக்குச் சென்று அங்கு அடிப்பு முடியும் விடியற் காலைவரை பனிக்குளிரில் நடுங் கிக் கொண்டு களத்தில் கடை சியாக வழங்கப்படும் களப்பிச் சைக்காகக் சுாத்துக் கிடப்பார் d56.T. . . .
இப்போது, தங்களுக்குப் போட்டியாக யார் முளைத்தது? என வள்ளியும், தங்க மும் ஊகிக்க முன்னர் அவள் பிள்ளை யுடன் இவர்களுக்கு அருகிலே
வந்துவிட்டாள்.
அவளுடைய இடுப்பிலிருந்த ஆண் குழந்தைக்கு நான்கு வய திருக்கும். வறுமை அவளை வாட் டியிருந்தாலும் அவளுடைய தோற்றத்தில் இளம்ை தெரிந்தது.
ஆரெணை ஆத்தை." இடுப்பிலை பொடியோடை இந் தப் பேய் ஊசாடுற காட்டுக்கை வந்திட்டாய்"
வள்ளியின் இந்த க் கேள் விக்கு அவள் பதிலெதுவும் கூழு மல் நின்றிருந்தாள்.
19

Page 12
*உன்னைப் பாத்தால் வெளி யூர் போலைக் கிடக்கு. எங்கை இருக்கிறனி? உன்ரை புருசன் எங்கை??
தங்கத்தின் கேள்விக்குப் பதி லாக அவளுடைய கண்கள் கலங் 5ar' | gl htinn ... ... எனக்கு இப்ப யாரும் இல்லே. இந்த வயலிலே இன் னிக்கு சூடு மிதிக்கிறதாம், கிரா மத்திலே சொன்னங்க!”
"அதுசரி.. உன்னட்டை நெல்லுப் புடைக்கச் சுளகோ. நெல்லுக்கட்டச் சாக்கோ ஒண்டு
மில்லை. அதோடை உன்னைப்
பாத்தால் இளம் பொட்டை யாயும் கிடக்கு" என வள்ளி சொல்லிக் கொண்டிருக்கையி லேயே அந்தப் பக்கமாக டிரக் டர் ஒன்று வரும் ஒலி கேட்டது. வள்ளியும், தங்கமும் வந்த வளை விட்டு ஆவலோடு தொலை வில் பெ ட் டி சகிதம் வந்து டிரக்டரைக் கவனித்தனர்.
விரைந்து வந்த அந்த டிரக் டர் அவர்களுக்கு அண்மையிலி ருந்த ஒரு சூட்டின் அரு கில் நின்றபோது தங்கம் சந்தோஷத் துடன் "சேமன் நாகலிங்கத் தாற்றை சூடு அடிக்கப் போயி னம்" என்ருள்.
மு ன் ன ஸ் - கிராமசபைத் தலைவர் நாகலிங்சுத்தாருக்குத் தான் அந்த வெளியில் அதிக வயல்கள். குடுமிதிப்பு நாலைந்து நாட்கள் தொடர்ந்து நடக்கும். கணிசமான அளவு களப்பிச்சை கிடைச்கும் என்று எதிர்பார்ப் பில் அவர்கள் புதிய வளி ன் போட்டியையும் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை.
"இனியென்ன வந்திட்டாய் போய் அந்தக் காட்டுப் பக்க மாய்க் கதிர் பொறுக்கு" என வள்ளி காட்டியபோது அந்த இளம் பெண் குழந்தையையும்
"நான் வெளியூர்தானுங்
கடத்துக்கு
தூக்கிக் கொண்டு அங்குபோ கதிர் பொறுக்கலானள்.
நாகலிங்கத்தின் சூட்டடி புக்கு வந்தவர்களில் ஒருவரை தவிர மற்ற ஆறு பேரும் இவ
வட்டங்கள். டிரக்டர் சாரதியு
அப்படியே. அவர் களு ட ன் சேர்ந்து கொண்டு பத்மனதனு வந்திருந்தான்
பத்மனதனும் வா லி பல் தான். வாட் ட சாட்டம்ான உடல்வாகு. கள்ளமில்லாம உடல் வேலை செய்பவன். ஆன6 அவனை லூஸ் பத்மஞதன் என்று தான் ஊரில் அழைப்பார்கள் எங்கே சாப்பாடு கிடைக்குதே அங்கு போய் மா டு மாதி வேலை செய்துவிட்டு ஒரு சுருட்( மட்டும் வாயால் கேட்டு வா கிக் கொண்டு திருப்தியடைந்து விடும் ஒரு பிரகிருதி.
ஊர்ச் சிறுவர்கள் அவனுக்கு ஐஸ்பழம் வாங்கிக் கொடுத்து *பத்மஞதன் ஒரு பாட்டுப் பாடு என்ருல் "தோகை இளம்யில் என்று பாடி ஆடவுஞ் செய்வான் கிராமத்துப் பெண்கள் தேஞய் பேசி, மா டா ப் வேலைவாங் விட்டு, "பத்மனுதனுக்குப் பழகு சோறுதான் :ಚಿಣ್ಣ ငြှိန္ဍီ என்று பழையதைக் கொடுக்கு போதும் பரம திருப்தியுடன் சாப்பிடுவாள். அவன். ஊரி நடக்கும் கீலியாணவீடு, செத் வீடு, புதுவீடு அத்தனைக்குே சாதி, இனம், பாராது தப்ப மல் வேலை செய்து சாப்பிட்டு சுருட்டுக் குடிக்கும் பத்மனுதல் பெரிய இடத்தைச் சேர்ந்தவன் அவனுடைய இந்தப் போக்கு அவனுடைய இனத்தவரைச் ச
உள்ளாக்கியதா? அவர் கள் அவனைக் கைகழுவ விட்டார்கள். அவனுடைய நி3 பொறுக்காது ம ன மு ைடந்த அவனுடையதாயும் எப்போதே இறந்து போனுள்

பத்ம ஞ தன் தங்களுடன் னேலைக்கு வந்ததில் வாலிபர் களுக்கு க் கொண்டாட்டம் , சொன்ன வேலையை அரவு தப் பாமல் ஒழுங்காகச் செய்பவன். அவனை மையமாக வைத்துச் செய்யும் கேலியில் அலனும் அப் பாவியாய்ப் பங்கு கொள்கையில் வேலையின் பளு தெரியாது. நேரம் போவதும் தெரியாது.
பருத்து நிமிர்ந்து நின்ற சூட்டில் பத்மனதன் ஏறி தனி ாகவே வேலைகாரன் தடியினல் கதிர் கத்தைகளை சூட்  ைடச் சுற்றி விரித்திருந்த படங்கில் விழுத்த மற்றவர்கள் அதைப் பரவலாக்கிக் கொண்டிருந்தனர். சற்றுத் தொலைவில் காட் டோரமாகக் கதிர் பொறுக்கிய அந்த இளம் பெண்ணைக் கவனிப் பதற்கு அந்த வாலிபர்களுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.
சாதாரணமாகவே சூட்டுக் களங்களில் ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். அதுவும் இள வட்டங்கள் என்ருல் கேட்க வேண்டுமா!
பாதியாகிவிட்ட குட் டி ல் நின்ற பத்மஞதனை கீழிருந்த ஒரு வாலிபன் கேட்டான்: '
*பத்மனதன் பாத்தியே பங்கை வயலுக்கை. எப்பிடி ஆள்?"
திரும்பி அவன் காட்டிய
திசையில் பார்த்தான் பத்மன தன். அங்கே அந்த இளம்பெண் முந்தானையை இறுக வ ரிந்து கட்டிக் கொண்டு சுறுசுறுப்பா கக் கதிர் கொய்து கொண்டிருந் தாள்.
ஆரண்ணை அது? வடிவான பொம்பிளையாய்க்கிடக்கு பத்ம ஞ தன் அப்பாவித்தனமாய்க் கேட்டான்.
ள வட்டங்கள் கொல் லென்று சிரித்தன. "அவள் வடி
வெண்டு எப்படி உனக்குத் தெரி
யும்?" வேண்டுமென்றே அவன் வாயைக் கிளறி கதையைச் சுவா ரஸ்யமாக்குவதில் 561607 DFT's இருந்த ஒரு வாலிபன் கேட் டான்.
இது தெரியாதே! வடிவாய் வேலை செய்யிருள் வடிவான உடம்பு!" பத்மஞதன் சீரியஸா
கவே சொன்னன்.
"வேறை என்ன வடிவாய்த்
தெரியுது?
1சும்ம்ா போ அண்ணை வடி வெண்டால் வடிவுதான்"
தம்பியவை, களத்துக்கை கண்ட கதையெல்லாம் கதையா தையுங்கோ. . பொழுது படு குது, தேங்காயை உடைச்சுக் கற்பூரத்தைக் கொளுத் தி ப் போட்டு மிசினை வளைய விடுவம்" கந்தையர் கூறிஞர்.
நன்ருக இருட்டு முன்னரே பனி பலமாகப் பிடித்துக் கொண் டது. உதறிக் குவித்த நெற் கதிர்க் குவியலின் மேல் டிரக்டர் வண்டாய்ச் சுழன்று கொண்டி ருந்தது.
வள்ளியும், தங்கமும் களத் துக்குச் சற்றுத் தொலைவில் ஒரு மரத்தடியில் நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருந்த னர். அந்த இளம் பெண்ணும் தன் மகனை மடியில் அடக்கமாக வைத்துக் கொண்டு நெருப்பரு கில் அமர்ந்திருந்தாள்.
ஆரது? களத்துக்குக் கிட்ட நெருப்பு மூட்டினது? ஒரு கம்பீ ரமான குரல் சற்று அதட்டலா இக் கேட்கவே, அவர்கள் திடுக் கிட்டுத் திரும்பினர். வள்ளியும் தங்கமும் உடனே மரியாதை யுடன் எழுந்து நிற்க, அந்த இளம் பெண்ணும் கூடவே எழுந்து நின்றள்:

Page 13
நெற்றி நிறைய நீறும், கம் பீரமான தோற்றமுமாய் சேமன் நாகலிங்கத்தார் வந்து கொண் டிருந்தார்.
"ஆரது வள்ளியே?. .
"ஒம் உடையார். பனிக் கூதல் தாங்கேலாம்ல் கிடக்கு, அதுதான்? வள்ளி மன்னிப்புக்
கேட்பதுபோலக் குழைந்தாள்.
"ஒமோம் பணி கடுமை தான். ஒட்டிலை நெருப்புப் பர 'வாமல் கவனமாய் இருங்கோ. உதார் வள்ளி..? உன்ரை மரும்ோளே??
குழந்தையுடன் நின்ற இளம் பெண்ணைக் கண்ட சே ம ன் கேட்டார்.
*இல்லை உடையார். இந்தப் பொட்டை வெளியூர் போலை கேட்டால் ஒண்டும் பறையாமல் அழுகுது. ஆரோ இஞ்சை கதிர் கூட்டிக் களப்பிச்சை எடுக்கின மெண்டு சொல்லி வந்திருக்குது"
நாகலிங்கத்தார் தீவறையின் ஒளியில் அவளைக் கவனித்தார்:
கையில் குழந்தை. கண்களில் ஏக்கம்
"ஏன் மோனே, நெல்லுப்
புடைக்கச் சுளகு சாக்கு எல் லாம் வைச்சிருக்கிறியோ? இல் லையே? அப்ப என்னண்டு களங் கூட்டி நெல் அன்ளப் போருய்" அவர் கனிவுடன் கேட்டார்.
அவள் எதுவும் சொல்லத் தோன்ருமல் நின்றிருந்தாள்.
"இந்தப் பொட்டை இப் பிடித்தான் உடையார். என்ன கேட்டாலும் ஒரு க ைத யும் பறையாமல் ஊமைபோல நிக் கும், கலவரத்துக்கை ம் ன ம் விறைச்சுப் போச்சுப் போலை”
"ஒமோம் வள்ளி. நான்
போய் களத்துக்கை சொல்லிச் சாக்கு, சுளகும் அனுப்பிறன்
a
நீதான் பொட்டைக்கு புடைக் கக் கொள்ளக் காட்டிக் குடு. பாவம் அந்தரிச்சு வந்ததுகளை நாங்கள் தவிக்கவிடக் கூடாது இல்லையே?
"ஒமோம். பத்து முறையும்" என வள்ளி ஆமோதிப்பதற்குள் நாகலிங்கத்தார் களத்துக்குப் போய்விட்டார்.
அவருடைய வரவு களத்தில் அ  ைம தி யை ஏற்படுத்தியது. நன்ருக அடிபட்ட பொ லிக் கொடியை வேலைகாரன் தடியி ஞல் ஆத்தி வைக் கோலை வெளியே விசிறுகையில் படங் கில் சொரிந்து கிடந்த நெல்லில்
தடி உ ரா யும் ஒலி மட்டும்ே
கேட்டுக் கொண்டிருந்தது.
களத்துக்கூடாக நெல்லில் பாதம் புதைய நடந்து சுற்றி வத்த நாகலிங்கத்தார் மனதுக் குள் திருப்தி யடைந்தவராய் என்ன கந்தையா! பொடியங் கள் வேலை செய்யிருங்களோ. இல்லாட்டி விளையாடுருங்களோ? எனக் கேட்டார்:
*பொடியள் பறுவாயில்லை உடையார், விடியக்கிடையிலை அடிச்சுப் போடுவம் கந்தையர் பணிவாகக் கூறினர்.
* கவனம் பொடியள் நித்தி ரைக் களையிலை பொலியோடை அள்ளி எறிஞ்சு போடுவாங்கள்? என்றவாறே களத்தில் நின்றவர் களை நோட்டம் விட்ட சேமன், அட பத்மனுதனும் வந்திருக் கிருன்? என வியந்தபோது "ஓம் மாமா! நான் சந்தியிலை நிக்க மிசின் வந்தது, ஏறி வந்திட்டன்" என்ருன்
வாலிபர்கள் சிரிப்பை அடக் கிக் கொண்டனர். சொந்தமோ சொந்தமில்லையோ நடுவயதுக் காரர் யாரையும் மாமா என்று தான் பக்மாதைன் அழைப்பான். அது நாகலிங்கத்தாருக்கும் தெரி

யும் பத்மனதன் அடிப்புக்கு வந்ததில் அவருக்குப் பரம சந் தோசம். கொடுக்கும் கூலிக்கு மேலாகவே அவனுடைய உழைப்பு இருக்கும்.
*அச்சா. . மருமோன் வந் தது நல்லதாய்ப் போச்சு. அஞசு களத்தையும் தொடுத்து அடிப பம் எல்லாக்களங்களும் அடிச்ச நெல்லைக் கடத்துவம். ಸಿಪಿ #ခိ#ဖက် போய்க் குளிச்சுச் சாப்பிட்டு நித்திரை கொண்டிட்டு மத் தியானம் மூண்டு மணிக்கெல்லாம் வந்து படங்கு விரிச்சுக் கதிர் தள்ளிப் போடோனும் பத்மனுதன் f இங்கை பகலிலை களததுக்குக் காவல் நிண்டுகொள், என்ன?
"ஓம் மாமா. நான் நிக் கிறன், ஆனல் இவங்கள் குச் சுருட்டுத் தாருங்களில்லை
சேமன் சிரித்தார். ಕ್ಲಿಕ್ವಿ லிருந்து அ  ைரக் கட்டு ச் స్త్రీ அவனிடம் கொடுத்து *பத்மனுதன் களப் பிச்சை யெடுக்க ஆரோ ஒருத்தி குழந்தை யோடை வந்து வள்ளிவாக்க ளோடை நிக்கிருள். காலமை வவகக் குல்லமும் சாக 蠶 குடு. கந் தையா, இராச் சோத்தில் களப் பிச்சையெடுக்க வந்த பெண்டு களுக்கும் எப்பன் குடு. சோறு திறுத்தியாய்க் காணும். நாளைக் குப் பகலுக்கும் பத்மனதனுக்குக் கொஞ்சம் ಆಬ್ಜೆಕ್ಟ್ಯವಾಗಿ ங்கோ. றைவர் பெ w ருேங்கள் மிசினை வளை யாதே. பொலியெல்லாம் ஆரிசி யாய்ப் போகும்" கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு நாகலிங்கத் தார் கிராமத்துக்குப் புறப்பட்டு விட்டார்.
அவர் சென்றதுமே களத்தில் மறுபடியும் கலகலப்புப்பரவியது. "மருமோனிலை மாமனுக்குப் பட்சம் கூடத்தான்
as
‘பத்மனுதா, G சம் ன்  ைர ய பொட்டை உனக்கு நல்ல தோது"
"ஒருநாளைக்கு மாமாவைக் கேட்டுப்பாரன், பொட்டையை
முடிச்சுத்தரச் சொல்லி அவனை ஒருத்தன் சீண்டினன்.
“பொட்டை வடிவுதான்.
சிறிதேவி மாதிரி.
ஆனல் அவை யள் சரியான பணக்காறரல்லோ பத்ம ஞ தன் வெகுளியாகக் கேட்டான்.
*Hன் க் காற ரெண்டல் என்ன? பொட்டை உன்னை விரும் பிஞ ல் பிறகென்ன? பொட்டை"உன்னைப் பாத்து ஒரு நாளுஞ் சிரிக்கேல்லையே??
ஏன் சிரிக்கிறேல்லை அன் டைக்கு தீவாளியண்டு அங்கை தான் எனக்குச் சாப்பாடு. நல்ல கறி, என்னைப் பாடச் சொல்லிக் கேட்டவள். காட்டினனன்?
குட்டுக் களமே சிரிப்பினுல் அதிர்ந்தது. கந்தையர்கூடக் கொடுப் புக் குள் சிரித்துக் கொண்டார்.
"அப்ப பிறகென்ன? நாளைக்கு அவளைத் தனிய சத் திக்க என் னி ல்ை விருப்பமோ எண்டு கேள்" என்று சொல்லிய வன் கூறி முடிப்பதத்கிடையில் பரமனுதன், "நல்ல சுதை. . உனக்கு மாமாவின்ரை குணம் தெரியாதுபோலைக் கிடக் கு? உழவன் கேட்டியாலை முதுகுத் தோல் வாந்து போடுவார்
மறுபடியும் சிரிப்பு அலையலை யாகப் பரவியது. வேலையோ தீவிரமாக நடந்து கொண்டிருந் தது. வானம் வெளுக்கையில்ேே அடிப்பு முடிந்து ஆட்களும் டிரக்டரும் கிராமத்துக்குப் புறப் பட்டுவிட்டிருந்தனர்.
வரிசை வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் மூ.ை
நான் ஆடி யும்
ஒரு

Page 14
களுக்கருகில் பனிக்கு அட்க்கமாக வைக்கோல் குவியலுக்குள் படுத் திருந்த பத்மனுதன் விழித்த போது காலை வெய்யில் கண்ணை உறுத்தியது.
வள்ளியும், தங்கமும் அவச ரமாக களத்தில் சிந்திக் கிடந்த நெல்லைச் சேர்ப்பதும், தூற்றிக் கழித்த அக்கந்தை புடைப்பது மாக இருந்தனர். அந்த இளம் பெண் வயலில் குழந்தையுடன் கதிர் பொறுக்கிக் கொண்டிருந் தாள்.
பத்மனுதனுக்கு இரவு சேமன்
சொன்னது ஞாபகத்துக்கு வந்
தது. எழுந்து அவளை நோக்கி
ஒடிஞன். அவளருகில் நின்ற குழந்தை இவனைப் பார்த்துச் சிரித்தது. "அக்கிா உனக்குச்,
சேமன் சுளகும் சாக்கும் குடுக் கச் சொன்னவர். வா, வந்து அங்கே கொட்டுண்ட நெல்லை முதல் புடைச்செடு. பிறகு கதிர் கொய்யலாம். வள்ளி யாக்சுள் முழு க் த ப் புடைச்சு எ டு க் க முதல் வாக்கா" என அவசரப்படுத்தினன்.
அவனுடைய பேச்சு, உடல் வாகு இவையிரண்டும் ஒன்றுக்
கொன்று பொருந்தாததாக
அவளுக்குத் தோன்றியது. ஒரு முழு ஆம்பிளையின் வளர்ச்சி. ருழந்தை போலப் பேச்சு.
அவள் மகனையள்ளி எடுத் துக் கொண்டு களத் துக் கு விரைந்தாள்.
இதற்குள் தங்கமும், வள்ளி யும் களத்தில் சிந்திய நெல்மணி யாவற்றையும் சேகரம் செய்தி ருந்தனர். இருவருக்குமாக கால் சாக்கு வரும்.
பத்மனுதன் அவளை அழைத் துவந்து சு ள கை க் கொடுத்த
போது, "பொட்டைக்குப் புடைக்கத் தெரியுமோ தெரி யாது, அதுதான் க திரை க்
களத்துக்கு
கொய்யச் சொன்னணுங்கள்" என வள்ளி கூறியதைப் பறுவாய் பண்ணுது அவள் அக்கந்தைப் புடைப்பதற்கு ஆயத்தமானுள். "வெய்யில் ஏற நெல்லுச் சுணை தாங்கேலாது. நாங்க்ள் போகப்போறம், நீயும் வாறியே புள்ளை. வள்ளி கேட்டாள். "இல்லை ஆச்சி இங்கனயே நிண்டு நெல்லுப் புடைக்கிறன். கொழந்தையையும் எடுத்துக் கிட்டு வெய்யிலிலை போய்வர முடியாதில்லே?"
*அப்ப சாப்பாடு?*
ராவு கொடுத்ததிலை கொஞ் சம் வைச்சிருக்கேன்"
"இந்த வயல் காட்டுக்கை தனிய நிப்பியே? ത്
"வள்ளி, நீங்கள் போட்டு வாருங்கோ. . நான் இஞ்சை நிப்பன். அவவுக்கு என்ன பயம்" பத்மனுதன் கூறினன்.
வள்ளிக்குப் பதிலாகவும்" தன் மனதுக்கு ஆறுதலாகவும் அமைந்த அந்தச் சொல்லுக்காக அவனுக்குப் பார்வையாலேயே நன்றியைத் தெரிவித் துக் கொண்டு சுறுசுறுப்பாக வேலை யைக் கவனித்தாள் அந்த இளம் பெண். " W
வள்ளியும், தங்கமும் ஒரு வரையொருவர் பாரித் துக் கொண்டனர். பின்னர் நெல்லுப் பெட்டியைத் தலையில் வைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டனர். பத்மனுதன் அவள் அமர்ந்து புடைப்பதைப் பார்த்துக் கொண் டிருந்தான். அவள் இரண்டு
கொத்து நெல் சேர்ப்பதற்குள்
நெல் தூசு அவளுடைய தலை முகம், உடல் முழுவதுமே படிந்து விட்டிருந்தது. வெய்யில் ஏற ஏற, வியர்வையும் கசிய அந் தத் தூசு எப்படிச் சுணைக்கும் என்பது அவனுக்குத் தெரியும்
经雀

அவளைப் பார்க்க அவனுக்குப் பாவமாக இருந்லது.
"அக்கா, வெய்யில் ஏறமுதல் கெதியாய்ப் புடை, நான் தம்பி யையும் கூட்டிக் கொண்டு ஆத் துக்குப் போறன். "வா தம் பி
இலந்தைப்பழம் பொறுக்கித் தாறன்" எனச் சொல் லி க் கொண்டே குழந்தையையும்
துரக்கிக் கொண்டு நடந்த பத்ம ஞதனைப் பார்த்தாள் அவள். சில கணங்கள் ஏதோ சிந்தனை வயப்பட்டவள் மறுபடியும் அக் கந்தை அள்ளிச் சுளகில் போட் டுக் கொண்டு புடைக்க ஆரம் பித்தாள். வெய் யி ல் உயர வியர்வை கசிந்த இடங்களில் நெல்லுச் சுணை தாங்க முடியா மல் அரித்தது. மகனை நினைத்துக் கொண்டு வேலையில் மூழ்கினுள்
9.6167
பத்மஞதனுடன் அந்த க் குழந்தை வெகு விரைவிலேலே ஐக்கியமாகிவிட்டது. அயலில்
மேய்ந்த மயில்களைக் காட்டினன். வயலில் உதிர்ந்து கிடந்த மயில் சிறகுகளை எடுத்துக் கொடுத் தான், இலந்தைப்பழம் பொறுக் கிக் கொடுத்தான். குழந்தை அவனிடம் ஒட்டிக் கொண்டதுg
சடைத்துக் கவிந்திருந்த பெரிய மருத மரங்களுக்குக் கீழாக வளைந்தோடிய காட்டாற் றின் கரைமேட்டில்  ைப யன இருத்திவிட்டுத் துவாயைக் கட் டிக் கொண்டு சா றத்  ைத த் துவைத்தான். நெல்லுச் சுணை யும் நித்திரைக் களையும் தீர ஆற்றில் குளித்தான். உலர்ந்த சாறத்தை உடுத்துக் கொண்டு துவாயைத் தோளில் போட் டான். அகோரப் பசியெடுத்தது. குழந் ைத  ைய யு ம் துரக்கிக்
கொண்டு களத்துக்குச் சென் ருன்.
அங்கே அவள் சேகரித்த நெல்லைச் சாக்கில் போட்டுக்
போகையில் குழந்தையும்
கொண்டிருந்தாள். உடல் முழு வதும் தெப்பமாய் நனைந்து, அவள் மீகவும் களைத்துப் போயி ருந்தாள்
பத்மஞதன் அவளுடைய சாக்கைப் பார்த்தான். ஐந்தாறு கொத்து நெல் சேர்ந்திருந்தது. அவளுடைய முகத்தில் இலேசான பெருமிதம் தெரிந்தது.
"அக்கா நெல்லுச் சாக்கை நான் பாத்துக் கொள்ளுறன். நீ போய் ஆத்திலை குளிச்கிட்டு வா" என்றபோது, அ வ ள் குழந்தையையும் கூட்டிப் போக முயன்ருள்
'தம்பி என்னுேடை இங்கை இருந்து சாப்பிடட்டும் நீ குனிச் சிட்டு வா" என அவன் சாப் பாடு இருந்த மரத்தடிக்குப் சந தோஷமாக அவனுடன் செல்வ தைப் பார்த்துத் திருப்தியடைந்த
அவள் ஆற்றை நோக்கி நடந்
தாள்.
அவள் திரும்பி வந்தபோது பத்மஞதன் அவளை வியப்புடன் பார்த்தான். அழுக்கும் தூசியும் போகத் துவைத்த சேலை, மயிற் தோகை போல விரிந்து கிடந்த கருங்கூந்தல், புளிபோட்டு விளக் கிய குத்துவிளக்குப் போல அவள் பளிச்சென்றிருந்தாள். பத்மனு தனுக்குச் சந்தோஷத்தை அளித் 5gs
"அக்கா. நீ உண்மையில் வடிவுதானக்கா" என்ருன் பத்ம ஞதன் ஒளிவுமறைவின்றி.
திடுக்கிட்டவளாய் அவனைப் பார்த்தாள் அவள். பத்மஞத னுடைய சிரிப்பில் குழந்தை களின் களங்கமற்ற தன்  ைம தெரிந்தது.
"அக்கா, இந்தச் சட்டிக்கை கொஞ்சம் பழஞ்சோறு கறி மிச் சம் வைச்சிருக்கிறன், சோக்கா

Page 15
பிருக்கும் சாப்பீடு. தம்பி சாப் பிட்டிட்டான்"
அவனுடைய அன்பு அவளு டைய கண்களில் கரகர வென
நீரை வரவழைத்தது*
ஏனக்கா அழுருய்?" பத்ம ணுதன் அவசரமாகக் கேட்டான்
ஒண்டுமில்லைத் தம்பி, நான் இதை ஆத்தடியில் வைச்சுச் சாப்பிட்டுவிட்டுஎல்லாத்தையும் அலம்பிக் கொண்டு வர்ரேன். வா ராஜா" என்று மகனையும் அழைத்துக் கொண்டு போளுள் அவள்'
சாப்பிட்டு முடிந்து அவள் அந்த மரத்தடிக்கு மீண்டும் வந்த போது அங்கே பத்மனதன் தரை யில் கையை மடித்துத் தலைக்கு வைத்துக் கொண்டு ஆழ் ந் தி நித்திரையில் இருப்பதைக் கண் டாள். அவனுக்குச் சற்று அரு இல் மகனையும் படுக்கச் சொல்லி விட்டு மீண்டும் கதிர் பொறுக் குவதற்காக அவள் வயலுக்குச் சென்ருள்
இரண்டாம் நாள் சூடடிப் பின்போது விடியமட்டும் வேலை யிருந்ததால் வைக்கோல் குவிய லுக்குள் படுத்திருந்த பத்மஞ தன் கண்விழிக்கையில் பகல் பன்னிரண்டுமணிக்கும் மேலாகி விட்டிருந்தது. எழுந்து கண்ணைக் முத்திக்கொண்டு அக்கம் Luj 5 Lò பார்த்தான். அவளையோ குழந் தையையோ அங்கு காணவில்லை. கட்கப் பெட்டிக்குள் கிடந்த பழையதைப் பார்த்தான். வைத் தது வைத்தடி கிடந்தது.
இவறையில் கிடந்த கொள் ளிக் கட்டையைக் கடித்து கரி ச்ை"சப்பிப் பல்லைத் துலக்கிக் 7ெண்டே ஆற்றுக்குச் சென் முன்.
26
ஆற்றுப் படுகை Egiratifras இருந்ததனல் அங்கே வெய்யி லில் நின்றிருந்த அவள் சத்தடி
யெதுவுமின்றி பின்னல் வந்த பத்மனுதனைக் கவனிக்கவில்லை. if Gö). சட்டையைத்
துவைத்து ஆற்று மணலில் உல ரப் போட்டு விட்டு, துவைத்த ஈரச் சிேலையில் பாதியை உடலைச் சுற்றிக் கொண்டு மீதியின் ம்ேனியை மருதங் கிளையில் கட் டிவிட்டு சேலை உலர்வதற்காக விரித்த கூந்தலுடன் வெய்யிலில் நின்றிருந்தாள் அவள்.
ஈரச் சேலையினூடாக அவ ளுடைய இளமை அழகு க ள் சற்று அதிகமாகவே தெரிந்தன.
ஏதோ ஒரு உணர்வு எச்ச ரிக்க திடுக்கிட்டுத் திரும்பிய போதுதான் பின் னே நின்ற பத்மனதனேக்கண்டாள் அவள், னெச் சேலையை இழுத்து உடலை மூடிக் கொண்டவள் மிக வும் சங்கடப்பட்டவளாய்ப் பத் மீனதனைப் பார்த்தாள். அவன்
இவளைப் பார்க்காமல் கையில்
இடந்த துவாயை பிசைந் து கொண்டான். "அக்கா நீ உண் மையில் வடிவுதான்" என்று அவன் இப்போ சொல்லவில்லை.
அவனைக் கண் டு விட் ட குழந்தை மாமா? என அழை துக் கொண்டு ஆற்றேரச் செடி களுக்கூடாக வர வே 'தம்பி கவனம்" எனக் கூறிக்கொண்டே போய்ப் பத்மனுதன் பிள்ளையை: தூக்கிக் கொண்டான்.
அவள் கலவரப்பட்டவளா இவ&னப் t1 m f á SG L1 m S குழந்தை இந்த பாதையி மண்டி வளர்ந்திருந்த ஒரு செ 65) uL 555 é#5fTL-l- நல்ல காலம் நான் தூக்காட்டில் காஞ்சோண் பிள்ளையிலை பட்டிருக்கும். கா சோண்டி உடம்பிலை Lull-IT என்ன மாதிரிச் சுனைக்கும் தெ

f
யும்ே. வெய்யிலுக்குத் தாங்கவே ஏலாது. நாள் முழுக்கச் சுணைக் கும்"
அவன் அந்தச் செடிப் பற் றையைக் கவனித்தாள். கம்ப ளிப் பூச்சி போல இலைகள் நிறைய மயிர்கள்
பத்மஞதன் நடந்ததை மறந் ததுபோல நடந்து கொள்ளவே அவள் தம்பி குளிச்சிட்டு வாங்க, நாங்க போறம்" எனப் புறப் பட்டுவிட்டாள்.
பத்மஞதன் குளித்துவிட்டு வர வெகுநேரமாகிவிட்டிருந்தது:
அன்றிரவு சூடடிப்புக்குச் சேமன் வந்திருந்தார். கடந்த இரவுகளில் ஒவ்வொரு களமும் எண்பது மூடைகளுக்கு மேல் வாசி கண்டிருந்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி.
களத்தை ஒரு தடவை கற் றிப் பார்த்துவிட்டு மரத்தடியில் குளிர் காய்ந்து கொண்டிருந்த பெண்களிடம் வந்தார்.
என்ன வள்ளி, தங்கம். எப்படி உங்கடை பாடு?"
"உங்கடை தயவிலை பிழை யில்லை உடையார்"
சஎன்ன மோனை. . நீயும் நெல்லுச் சேர்த்தியோ? பத்மனு தகனச் சுளகும் சாக்கும் குடுக்கச் சொன்னஞன், தந்தவனே?’. சேமன் விசாரித்தார்.
ஆமாங்க முதலாளி. ரொம்ப் நன்றிங்க"
அதுசரி, வள்ளியும் தங்க மும் பகலிலே ஊருக்குப் GLITés, நீ இந்தப் பொ டி போை இங்க்ை தனியவே நிக்கறினீ?"
சஆமாங்க முதலாளி. பத்ம னதன் தம்பி இங்கதானுங்க இருக்காகு"
"ஒமோம், நான் மறந்து போனன். ம்ம். எப்படி நெல் லுக்கில்லு புடைச்செடுத்தியோ புள்ளை??
ஆேமாங்க முதலாளி அந்த வார்த்தையிலேயே நெஞ் சின் நன்றி கரைபுரண்டது.
"அதுதான் நல்லது. கஷ்டப் பட்டுப் பாடுபட்டு உழை க்க வேணும். நான் கடைசி நாள் பெ ருமி தி க்கு எல்லாருக்கும் கணக்க களப்பொலி தருவன் நான் வாறன்" எனக் கூறிவிட் டுப் போய்விட்டார்.
தங்கமும், வள்ளியும் ஒரு வரையொருவர் பார்த் து க் கொண்டனர். புதிதாக வந்தவ ளின் சாக்கு அரைவாசிக்குமேல் நிறைந்திருந்ததையும் பார்த்துக் கொண்டனர்.
“ւհւծ...... உலகம் கெட்டுப் போச்சுதடி தங்கம்" என்று முன கிக் கொண்டே வள்ளி, தீவறை யருகில் குறண்டிக் கொண்டாள்.
அடுத்த நாளும் பத்மனதன் நித்திரை விட்டெழ வெகு நேர மாகிவிடடது. கண்ணைத் திறந்த வன். வைக்கோல் குவியலின் இதமான சுகத்தைவிட்டுப் பிரிய மனதில்லாது விழித்தபடியே படுத்திருந்த போதுதான் அவளு டைய பிள்ளை ஆற்றுப் பக்கமாக "அம்மா, அம்மா’ என அலறு வது கேட்டது. அந்த அழுகையே அங்கே ஏதோவோர் அவல ம் நடப்பதைப்போல் எச்சரிக்கவே பத்மனுதன் விழுந் த டி த் து க் கொண்டு அங்கே ஒடிஞன்.
அங்கிே அந்த இளந்தாய், ஆடை கலைந்த நிலையில் அலங் கோலமாக ஆனல் கையில் ஒரு கத்தை காஞ்சோண்டிச் செடியை வைத்துக் கொண்டு ஆக்ரோஷ மாய் நின்றுள்
ß፻

Page 16
ஆற்றின் அக்கரை மேட் டால் ஊர்ப்பக்கமாக சேமன் நாகலிங்கத்தார் வெற்றுடம்பு டன் காஞ்சோண்டியின் அகோ ரச் சுணையைத் தாங்க முடியா மல் அவதிப்பட்டுக் கொண்டு செல்வது தெரிந்தது.
பத்மனுதன் அழுதுகொண்டு நின்ற குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டான் அந்த இளம் பெண் ஆற்றுக்குள் விம்மி விம்மியழுலது அவனுக்குக் கேட் டுக்கொண்டேயிருந்தது.
ஐந்தாம் நாள் சூடுமிதிப்பு முடியும் கடைசிநாள், கந்தையர் டிரக்டர் களத்துக்கு வருமுன்பே வந்து பத்மனதனுடன் நெ ல் மூடைகளைத் தைத்துக் கொண் டிருந்தான்
"என்ன பத்மஞதன்? நேற் றுப் பின்ன்ேரந் தொடங்கிப் பாக்கிறன் நீ பழைய ஆளாய்க் காணேல்லை, என்ன சங்கதி?
"ஒன் டு மில் லைக் கந்தை யாண்ணை, அஞ்சாறு நாள் தொடுத்து நித்திரை முழிச்சது ஒரே பஞ்சியாய்க் கிடக்கு"
கற்தையர் மூடை தைப்பதை
நிறுத்திவிட்டு பத்மஞதனை கணம் பார்த்தார்.
பின் ன ர், "உண்ணுணைக் கோவியாதை பத்மனதன். எல்லாரையும் போல ஒழுங்காய் கதைச்சுப் பேசி இருக்காமல் ஏனப்படி லூசுப் பட்டம் கேட் டுக் கொண்டு திரியிருய்?" எனக் கேட்டார்
பத்மஞதன் சற்று நேரம் ஒன்றுமே பேசாமலிருந்துவிட்டுப் பின், "எல்லாருக்கும் விசர்தானே அண்ணே! எனக் கு இப்பிடி
岛岛
சிறியவர்களும்
ஒரு
யொரு விசர்" எனக் கூறிப் பெரி தாகச் சிரித்தான். ஆனல் அந்தச் சிரிப்பு செத்தசிரிப்பு என்பதைக் கந்தையர் கவனித்துக் கொண் L-rrri.
இறுதி நாளாத லிஞல் விடி வ தற்கு முன்னதாகவே சேமன் நாகலிங்கித்தாரும் களத் துக்கு வந்திருந்தார். இந்த முறை எக்கச்சக்கமான வாசி கண்டும் மனிசன்ரை முகம் விடி யோலையே என வாலிபர்கள் தமக்குள் இரகசியமாகப் பேசிக்
கொண்டனர்; και
தூற்றி முடிந்து நெல் அம்பா ரமாய்க் குவிந்து கிடந்தது. சாக்குகளில் நெல்லை நிர்ப்புவ தற்கு முன் கந்தையர் சேமனி டம் உடையார், களப்பிச்சை போடுங்கோ. பொ லி யைக் கோலுவம் எனக் கூறியபோது நாகலிங்கத்தார் கையில் குல் லத்தை எடுத்துக் கொண்டு பொலியடிக்கு வந்தார்,
"பெண்டுகள், பெடியள் எல் லாரும் வாருங்கோ" எனக் கந் தையர் கூவவும் மரத்தடியில் இரவு முழுததும் பணியில் காத் துக்கிடந்த ஏழைப் பெண்களும் பெட்டிகளையும் பைகளையும் எடுத்துக் கொண்டு விரைந்து களத்துமேட்டுக்கு வந்தனர்.
இறுதிநாள் என்றபடியால் நிறையப் பேர் வந்திருந்தனர்,
Gurf6õpest un urris, வந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கொண்டுவந்த பெட் டி களில் நிறைய நாகலிங்கத்தார் அள் ளிப் போட்டுக் கொண்டிருந்தாா.
தங்கம், வள்ளியிலிருந்து
வந்திருந்த பெண்டு பிள்ளையெல் லாம் களப்பிச்சை பெற்ருயிற்றுg

அற்த இளம் பென் மட்டும் களத்துக்கு வரவில்லை.
குழந்தையுடன் தனது நெல் லுச் சாக்குக்குப் அமர்ந்திருந்தாள், அவள் இது வரை சேர்த்த நெல் ஒரு மூடை அளருக்கு வந்திருந்தது. அதற்கு மேலும் களப்பிச்சை அவளுக்கு வேறு சாக்கோ அல்
லது பொட்டியோ இல்லை. அத்
து டன் நாகலிங்கத்தாரிடம் போய் நின்று களப் பிச் சை எடுக்க மணமும் இல்லை. வேலை கள் யாவும் முடிந்ததும் நெல் மூடையைச் சுமந்து வந்து தரு வதற்காகப் பத்மனுதன் கூறியி ருந்தான். அதனல் குளிருக்குப் பாதுகாப்பாக மகனை மடியில் வைத்துக் கொண்டு அவள் உட் கார்ந்திருந்தாள்.
விடிந்து வெளிச்சம் பரவிக் கொண்டு வந்தபோது நாகலிங் கத்தார் திரும்பி அவளைப் பார்த் தார்.
வள்ளிக் கிழவிக்கு அவள் ஒருத்தியே ஒரு மூடை நெ ல் சேர்த்தது வயிற்றை எரிந்தது.
*உடையார் . . உங்கடை வயலுக்கை கதிர் பொறுக்கிப் போட்டு உங்கடை கையாலை சுளப்பிச்சை வாங்கக் கூடா தெண்டு இருக்கிருள் போலைக் கிடக்கு அற் த ப் பொட்டை" என குசுகுசுத்தாள்.
நரகலிங்கத்தாருக்கு கோபம் வந்தது.
"நாங்களுந்தான் எங்கடை சீவி ய காலம் முடிக்கக் கதிர் பொறுக்கியிருக்கிறம். ஆனல் ஒரு சாக்கு நெல்லை நாங்கள் சீவியத் திலை சேர்க்கேல்லை. நீங்களும் களத்துக்கையே நெல்லை விட்டிட் டியள். பத்மனதனும் இளம்
பக்கத்தில்
எடுக்க
தெண்டு.
பொடியன்; அவளுக்கு வசதி யாய்ப் போச்சு?
சிஅப்பிடியா சங்கதி’ என உறுமியவாறே நாகலிங்கத்தார் அவனடிக்கு விரைந்தார்.
"என்னடி? பாவம் பாத்து சாப்பாடும் தந்து, சாக்கும் தந் தால் கொழுப்பு மெத்திப்போச்சு என்ன? களவாய் நெல்லையள்ளிச் சாக்கை நிரப்பிப்போட்டு பெரிய உடைச்சிக் கணக்கில் களப்பிச் சைக்குக்கூட வராமல் இருக்கி ருய் என்னடி?
அவள் மெளனமாக நிலத் தையே பார்த்தவாறு இருந்தாள். "நான் கேக்கிறன். அவள் மைன்ட்பண்ணுமல் இருக்கிருள்" சினத்தின் விகாரத்துக்குச் சென்ற சேமன் அவளருகில் இருந்த நெல் லுச் சாக்கை காலால் உதைத்து வீழ்த்தினர்.
மூடை சரிந்து கட்டவிழ்ந்து நெல் ம் E க ள் சரசரவென வெறும் நிலத்தில் கொட்டின. அவள் மகனையும் தூக்கிக் கொண்டு எழுந்து நின்று நாக லிங்கத்தாரைப் பார்த்தாள்.
* களவுமெடுத்துப் போட்டு அவளுக்கிருக்கிற திமிரைப் பார்" நாகலிங்கத்தார் படபடத்தார், யாவரும் விறைத்துப்போய்
நின்றனர்.
பத்மனதன் மட்டும் மெல்ல நடந்து வந்து கொட்டிக் கொண் டிருந்த அவளுடைய மூடையை நிறுத்தி நெல்லை அள்ளிப் போடத் தொடங்கினன். உடை யார்
கொதித்தார்.
டேய் லூசா. ஒகோ
இப்ப தெரியுது. இந்தக் சிறுக்
கிக்கு ஆர் நெல்லுக் குடுத்த
நாலு நாளைக்  ைக மாப்பிளையாய்ப் போனயோ லூசுப்பிள்ளை என்ன துணிவோ,
盛9

Page 17
கடிதம்
யானை பார்த்த குருடர்?
இவ்வளவு விரைவில் உண்மை வெளிப்படுத்தப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. "பினை, பினை" என்று பினைந்து கொண் டிருக்கிற கந்தையா நடேசனின் கட்டுரைத் தொடர் முடிவடை வதற்குள்ளேயே, அவருடைய முரண்பாடுகள் நிறைந்த வாதங் களே வரிக்கு வரி (மல்லிகை, டிசம்பர் 82 இதழில்) ஆதரித்து எழுதிய அவரது சகாவான த. கலாமணி, டானியலின் கோவிந் தன் என்ற நாவலை விம்ர்சிக்க வந்த இடத்தில் உண்மையைக் கிக்கிவிட்டார்.
மரபுப் போராட்ட காலத்தில் "முற்போக்கு இலக்கி யங்கள் யாவும் இழிசனர் இலக்கியங்கள்" என்று ஒலித்த குரலின் மாற்றுக் குரலாக "முற்போக்கு இலக்கியங்களில் கலைத்துவம் அல்லது கலைநயம் இல்லை" என்ற புதுக்குரல் அண்மைக் காலங்களில் ஒலிக்கத் தொடங்கியிருந்தது.
(மல்லிகை, நவம்பர் 1983. பக் 13 = பந்தி 3.)
இதற்கு விளக்கம் தேவை இல்லை. மரபுப் பண்டிதர்கள் தாக் கியது, முற்போக்கு எழுத்தாளர்களையே என்று அவர் திட்டவட்ட மாக இங்கே தெரிவித்துள்ளார். எந்தச் சமூகத்தைச் சேர்ந்த எழுத் தாளர்களையாவது பிரித்துக் காட்டி அவர்களைத்தான் தாக்கினர் கள் என்ருே, அல்லது அந்தச் சமூகத்து எழுத்தாளர்கள் படைத்த இலக்கியங்களுக்காகத்தான் இழிசனர் இலக்கியக் குரல் எழுந்தது என்றே அவர் சொல்லவில்லை. முன்பு சொன்னவர்; இப்போது சொல்ல வேண்டியவர்; சொல்லாது விட்டுவிட்டார் உண்மை என்னவென்றல் வலிந்து" எழுதும்போது அப்படி எழுதினர்; இயல்பாக எழுதும்போது உண்மை தானுக வெளிப்பட்டுவிட்டது; இப்படி எழுதிவிட்டார்!
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எந்த எழுத்தாளனும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் அங்கம் வகித்தமைக்காகவேய, அவர்கள் பஞ்சமர் இலக்கியம் படைத்தமைக்காகவோ இழிசனர் இலக்கியக் குரல் எழவில்லை என்பதை நான் மீண்டும் அடித்துச் சொல்லுகின்றேன்!
உண்மையை வெளிப்படுத்தியமைக்கு முதலில் த கலாமணிக்கு நன்றி தெரிவிப்பதுடன், எனது கருத்துக்கள் என்றில்லாமல், வர லாற்றுண்மைகளுக்குச் சார்பாகக் கருத்து வெளியிட்ட அனதரட் சகன், வன்னியகுலம் காவலூர் ஜெகநாதன் கங்காதரன் ஆகி யோருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
இந்த உண்மைக்கு ஆதரரமாக ஒரு சம்பவத்தை இங்கு தெரி விக்க வேண்டியுள்ளது. T இழிசினர் வழக்கு" என்பதுதான் சரி யான பிரயோகம், நாங்கள் இதைப் பெரிதுபடுத்தி இயக்கத்தை வலுப்படுத்த இழிசனர்? என்று மாற்றிக் கொண்டோம்" என்று
፱ ፳

உனக்கு நான் குடுத்த சாக்கு, களத்துக்கை அள்ளின நெல்லு எழும்படா நாயே
நாகலிங்கத்தார் பத்மனதனை எட்டி உதைத்தார். உதைதத அவருடைய காலை அப்படியே
கையால் பிடித்துக் கொண்டு சட்டென எழும்பிஞன் பத்ம ஞதன்கு
உடையார் அலங்ாோலமாக அந்த இளம் பெண்ணின் கால ருகில் சரிந்தார்.
பத்மஞதனைப் பார்த்தால் நாகலிங்கத்தாரை ஏறி மிதித் துத் துவம்சம் செய்து விடுவான் போலிருந்தது.
ஒரு கணம் அப்படியே நின் *» றவன் 'தூ' என அவரை பார்த்து நிலத்தில் உமிழ்ந்து லிட்டு மீண்டும் பதட்டமின்றி நெல்லை அள்ளலாஞன்.
சேமன் நாகலிங்கத்தாரை அவமானம் பிடுங்கித் தின்றது. ஆத்திரத்தில் விழிகள் சிவக்க எழுந்து நின்று நடுங்கிஞர்
o೯or OF ... பாத்துக் கொண்டு நிக்கிறியள்! வநது இந்த விசரன்ரை காலை முறியுங் GarrLinT“ 6 TGOT களத்திவ் நின்ற வாலிபர்களை நோக்கிக் கூவினர். ஆனல் அவர்கள் அசையவில்லை
அத்தனை பேர் மத்தியில் தனக்கு நேர்ந்த அவமானத்தை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. "எளிய பொறுக்கியள். கூலி குடுக்கிற முதலாளியை விட எங்கையோ கிடந்த வே  ைச இவங்களுக்குப் பெரி சாய்த் தெரியுது” 牵 களத்தை நோக்கிச் சீறிவிட் டுப் புயலாய்ப் நாகலிங்கத்தார்.
பத்மனதன் சிந்திய நெல் முழுவதையும் பக்கு வம்ாகச்
0
சேர்த்து
Gurre."
லாம். அல்லாட்டில் அண்
புறப்பட்டார்
Finrigs) : போட்டுக் கட்டிஞன்.
திகைத்துப்போய் றியாது கண்ணீர் நின்ற அவளைப் Lin'rigg பத்ம இ9தின் "இஞ்சை வ இதைத் தூக்கிவிடு 6760Ti கூறியபோது, குழநதையை நிலத்தில் விட்டு விட்டுக் குனிந் தலையில் ஏற்றிவிட்ட்
அந்தப் பெரிய
செய்வத பெருக்கியவா
எனக் கூறி விட்டு இதிர்ந்து,நடந்த பத்மன: தொடர்ந்து குழந்தையுடன் போஞள் அந்த இளம் பெண்
சூரியனின் க ஒளிவெள்ளமாய்
out 6 Qaaifugai,
திர்க் கற்றை பாய்ந்த அந்த
அ வர் கள் போவதைப் ார்த்து நின்ற வ_ா லிபர் க ளின் மெளனம்
கலைந்தது.
"லூசுப் பத்மஞதன் உவளைக் கலியாணம் முடிக்கப் போருன் வள்ளிக்கிழவி வாய் விட்டு லியந்தாள்
'அவன் அவுளை அக்கா எண் டுதான் கூப்பிட்டவன். அவன் அவளுக்குத் தம்பியாய் இருக்க னணுய் இருக்கலாம். இல்இT புருச ஞய்த்தான் இருக்கட்டன்? உன்க் கென்ன செய்யுது வள்ளி?
கந்தையர் சற்றுக் கோபமr கவே சொன்னர்,
“நல்லாச் சொன்னியள் 46 தையாண்னே? வாலிபர்களில் ஒருவன் உரத்துச் சொன்னன்.

Page 18
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள், இந்த விவாதம் தொடங் கிய நாட்களில் என்னிடம் தெரிவித்தார். பேராசிரியரின் புதுமை இலக்கியம் - தேசிய ஒருமைப்பாட்டு மலர் கட்டுரையில் (பக், 42) மேலே குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்களின் சமூகப் பின்னணியை இந்த இழிசினர் வழக்கு" தாக்குவதாகவும் அமைந்தபடியால் . . என்று அவர், சாங்கோபாங்கமாகக் குறிப்பிட்டுள்ளதை அவதா னிக்க வேண்டும். பேராசிரியர், அச்சுப் பிசாசுக்கு எவ்விதத் தரு ணமும் கொடுக்காமல் இழிசினர் வழக்கு" என்றே எழுதி அச் சிட்டிருக்க, நடேசனும் அவரது சகாவும். எதற்காக அதைத் திரித்து "இழிசனர், இழிசனர்" என்று எடுகோள் காட்டுகிருர்கள் என்பதன் நோக்கம் இப்போது புலணுகின்றதல்லவா? யர்ண் பார்த்த குருடர் யார்? என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்
இனி, மார்க்ஸியப் பண்டிதர்கள் பற்றிய இரண்டாவது விட யத்துக்கு வருகின்றேன். இயக்கங்களைப் "பாவித்து எப்பொழுதும் தமது சொந்த நலன்களைப் பெருக்கிக் கொள்வதிலேயே குறியா யிருக்கும் சுயநல வாதிகள் பற்றி நான் எனது கட்டுரையில் சில தரவுகளைத் தந்திருந்தேன். அதன் காரணமாக, "நான் எழுது வதை நிறுத்த வேண்டும்!" என்றும், "யார் எதைச் செய்தாலும் நான் என்பாட்டிலே இருக்க வேண்டும்!" என்றும் சில எழுத்தா ளர்களால் கேட்கப்பட்டிருக்கின்றேன். இது, என் நிலைப்பாட்டிற் குக் கிடைத்த வெற்றியாகும். "எழுத்தைப் பார் எழுத்தாளனைப் பாராதே" என்று சில எழுத்தாளர் மத்தியிலிருந்து இப்போது ஒரு குரலும் எழுந்துள்ளது! இவையெல்லாம் என்ன? குறிப்பிட்ட மார்க்ஸியப் பண்டிதர்களின் திரை மறைவு வாழ்க்கையை மூடி மறைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளேயன்றி வேறல்ல. இவர்களையும் இந்த மார்க்ஸியப் பண்டிதர்கள் வரிசை யில் சேர்த்துக் கொள்வது பொருத்தமாகும். அல்லது 'முதுகு சொறி யும் பண்டிதர்கள்" என்று பெயர் சூட்டிக் கொள்ளலாம்!
சமூக மனிதனின் இயக்கச் சுவடுகள் மட்டும்தான் ஆவணங் சுளல்ல; மனிதனின் ஊழல் வாழ்க்கையும் ஆவணங்களாகவே தங்கும் ள்ன்பதை இந்த ஆவண எழுத்தாளர்கள் உணர வேண் டும். இலக்கியத்திலே ஆரோக்கியம், ஆரோக்கியமான இலக்கியம் என்றெல்லாம் அண்மைக் காலங்களிலே எழுதப் படுகின்றது" பேசப்படுகின்றது. நீ என்னத்தையும் செய்து தொலை எழுத்திலே, விளாசித் தள்ளு! இதுதான் ஆரோக்கியமான இலக்கியம் என்ருல் அதற்கு நான் எதிரி. எழுத்தாளன், சமூகத்தின் காலக்கண்ணுடி மாத் திரமல்லன். வைத்தியனுமாவான்; நல்லாசிரியனுமாவான் போர்த் தளபதியுமாவான் என்றெல்லாம் சொல்லலாம். ஆனல், அவன் சமூகத்தின் மனச்சாட்சியாக, திறந்த உள்ளத்தோடு பேணுவை ஒட்டவில்லையென்ருல் அந்த இலக்கியத்தால் ஒரு பயனும் ஏற்ப டப் போவதில்லை.
தனது எழுத்துக்களுடனேயே முரண்பட்டுக் கொண்டு குழம் பிக் கொண்டிருக்கும் நடேசனுக்காகவல்ல. இந்தத் தேசத்தின் இலக்கிய வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ன சகல இலக்கிய அன் பர்களுக்காகவும் இக் கருத்துக்களை முன் வைக்கின்றேன்! O என். கே. ரகுநாதன்
4, 2

"விமர்சனங்களில் ஆழ
மில்ல', மேலோட்டமான விமர்சனம்" போன்ற சொற் ருெடர்கள், விமர்சன அணுகு
முறைகளிலே கையாளப்படுதல் உண்டு. கலை இலக்கிய விமர்ச னங்களில் ஆய்வு உட்புகாத நிலையில் அவை வெறும் இரச னையாகவோ, அல்லது அசட்டுக் கெளரவ மனுேபாவம் தழுவிய வெளிப்பாடுகளாகவோ அமைந்து விடுதல் உண்டு.
விமர்சனம் ஒரு கலையாக
இருப்பினும், அதன் தனித்துவ மான பண்பு, ஆய்வு நலன்களை உள்வாங்கும் திறன் என்றுங் கூற லா ம். பேராசிரியர்கள் கைலாசபதி, வானமாமலை
சிவத்தம்பி போன்றேரின் விமர் சனங்கள் தமிழ் விமர்சன அரு விக்கு வளமூட்டியதென்முல், விமர்சனக் கலைக்கு அவர்கள் செலுத்திய ஆய்வுவளம் கருத் திற் கொள்ளப்படல் வேண்டும்.
இந்நிலையில் ஆய்வாளர் அனைவரும் விமர்சகராகி விடுவ தில்லை என்பதும் நினைவுக்குரியது. உயர் பட்டங்களுக்காகப் பலர், கலை, இலக்கியங்களை ஆராய்ந்து வருகின்றனராயினும், அவர்க ளது ஆக்கங்கள், விமர்சன நயங்களைக் கொள்வதில்லை. எழு பதுகளில் தமிழ் விமர்சனம்
COC விமர்சனங்களுக்கு KXXX ஆய்வு ஊட்டல்
சபா. ஜெயராசா
பற்றி எழுதிய டாக்டர் சு. சண் முகசுந்தரம் அவர்களும் (கால்யா வெளியீடு) இந்த இடைகுவளி யைச் சுட்டிக்காட்டத் தவற வில்லை. ஆய்வு, படைப்புத்திறன்
பொருந்தியதாக இருப்பினும், முற்று முழுதாக இயந்திரப் பாங்கானதாக அ  ைம யு ம்
பொழுது இந்த இடைவெளி
மேலும் விசாலித்துச் செல்லு கின்றது:
தகவல்களை ஒழுங்காகத் தேடிப் பெறுதல், சரியா ன மூலங்களிலிருந்து திரட்டுதல் பரீட்சித்துப் பார்த்தல், பாகு பாடு செய்தல், சமூக நோக்
கிலே பிரயோகிற்துப் பார்த்தல் போன்ற ஆய்வு நெறிகளுக்குரிய முறையியல்களை விமர்சனக் கலை உள்வாங்கும் பொழுது, அக் கலையில் ஆற்றலும், வினைத்திற னும் விளைதல் உண்டு
வ. வே. சு. ஐயர், டி. கே.
சி. போன்ருேர் விமர்சனக் கலை
யைத் தமிழில் வளம்படுத்திய
முன்னுேடிகளாகக் Gostoirer பட்டாலும், அவர்களுடைய விமர்சனங்கள், இரசனை
உணர்ச்சி போன்றவற்றைச் சுற் றிக் கட்டியெழுப்பப்பட்டமை யால், குறித்த சுற்றுவட்டங்க
ளுக்குள் அடங்கிவிட்டன. இந்த
முர்பு, பல்வேறு வண்ணங்களி

Page 19
லும், வடிவங்களி லும் இன்று வரை பின்பற்றப்பட்டு வந்துள் 6ITցl,
மேற்கூறிய விமர்சனப் பாங் கின் உளவியல் எதிர்மறை வடி வமொன்றும் வளர்ச்சியுற்று வரு வதைக் கா ண முடிகின்றது. விமர்சனம் என்பது கலை, இலக் கியங்களில், விமர்சகர் காணும் எதிர்மறைப் பண்புகளை விளக் கும் "காரசாரமான ஆக்கம்" என்ற செல்நிலை, அதன் தொடர்ச் சியை எடுத்துக் காட்டுகின்றது.
இவற்றை அகவயமான தாக்கல்
என்றும் குறிப்பிட முடியும். ஆக்கங்களேக் கிண்டலாகவும், குத்தலாகவும் பார்க்கும் பண்பு களும் இப் பிரிவில் அடக்கப் படக் கூடியதே. இவ் வகை விமர்சனங்களும் சோடை போவ தற்குக் காரணம், ஆய்வு நெறி களை உள்வாங்காது நிராகரித்து விடுதலாகும்.
நயப்பு, ஒதுக்கல் என்ற தன்னுணர்ச்சிப் போக்குகளிலி ருந்து சற்று வித்தியாசமான விமர்சன நோக்கையும் அவதா னிப்பிலிருந்து இவ்வாருன போக் கின் பண்பையும் பலவீனத்தை யும் விளக்க முடியும். எழுபது களில் தமிழ் விமர்சனம் தொடர் பாக அவர் குறிப்பிட்ட வசனங் கள் சில வருமாறு:
"சிட்டி, சிவபாதசுந்தரத்தின் தமிழ் நாவல் நூற்ருண்டு வளர்ச்சி குறிப்பிடத்தக்க நூலாகும். ஆனல் இலக்கிய
விமர்சனத்தின் ஆழமான பிரச்சினைகளை இது இன்னும் தொடவில்லை. நாவல் உரு
வாகும் விதம், படைப்புக் கும் வாழ்வுக்கும் உள்ள உறவு, படைப்பு- வாசகன் உறவு பற்றிய பார்வைக ளின்றி, படைப்புக்குச் சம தையான ஒரு துறையாக இன்றி இலக்கிய விமர்சனத்
34
குழாத்தினருக்கு
துை ,)מ அணிந்துரைகளாக்
வும, உய்ைவிளக்கமாக வும் இயங்கிக் கொண்டிருக் கின்றது:
பாரதி நூற்றண்டுதொட்ர் பாக வெளிவந்த பல நூல்களில் குறிப்பிட்ட பண்புகளைப் பரவ லாகக் காணமுடியும். விமர்ச னக் கலை, ஏனைய இலக் கி ய உருவங்க்ளுக்கு எவ்வகையிலும் தாழ்ந்தது அன்று என்ற சம் நிலையைக் கைவிடும் பொழுதும், ஆய்வு நெறிகளை விமர்சனக் கலைக்குள் சுளுவாகச் செலுத் தாது விடும் பொழுதும், விமர் சன முழுமை தொய்ந்து விடுதல் உண்டு.
தூய அழகியல்வாத விமர் சனங்கள், புறவுலகத் தாக்கங் களை திராகரித்து அக மும், அகத்தின்தன்னியல்பான மலர்ச்சி சியும், பூரணத்துவமுமே கலை யாக்கங்களாகப் பரிணமிப்பதை வற்புறுத்துகின்றன. இவ்வகை மதிப்பீடுகள் ஆய்வின் புறவய மான அணுகுமுறைகளைப் புறக் கணிக்கும் ஒருதலைப் பட்சமான கூட ரத்தினுள் நின்று கொள் வதனல், வலிமையான விமர்ச னக் கலையாக்கமாகிவிடுவதில்லை;
விமர்சனக் கலைக்கு ஆய்வு ஊட்டஞ் செய்வதனல் அதன் வளம் பெருகும் என்ற தொடர் பில் ஆய்வின் அழுத்தத்தை ஒரு தலைப்பட்சமானதாக்கியும் سسا முடியாது. குறிப்பாக ஆய்வறி வாளர் என்ற உயர்றதோர் மட்டுமுரிய அணுகலாகவும விமர்சனங்களை ஒருதலைப் பட்சம்ானதாக்கிவிட முடியாது. உயர் பரீட்சைகளில்
விமர்சனம் எழுதுதல் ஒரு பாட
அனுபவமாக அமைக்கப்பட்டு வருதல, விமர்சனக் கலையின் பரிணம வளர்ச்சியில் அதன் இரு முனைச் செயற்பாடுகளுக்கு மீள் அழுத்தங் கிடைக்கின்றது

அற்பித்தல் நிலையில் எத்தகைய ஒரு கலை வடிவமும், ஆய்வு DØMTL -L-lih பெறுதல் தவிர்க்க முடியாததாகின்றது. விமர்சனக் கலைக்குரிய அழகியல் நயப்பும், ஆய்வும் பாட அனுபவங்களிலே உள்ளடக்கப்பட்டு வருகின்றன.
ஆய்வு அழகியல் நயப்பை யும், விமர்சனங்களையும் வளப் படுத்தி வருகின்ற வேளை விமர் சனப் பண்புகள் சிலவற்றை ஆய்வு தழுவிக் கொள்ளும் இரு வழிச் செயற்பாடுகயளைம் காண முடியும். "விமர்சன அணுகல்" என்ற தொடர் அதனை வெளிப் படுத்கிதுன்றது; அறிவியல்களின் ஒன்றிணைப்பில் ஒரு துறை பிறி தொரு துறையால் வளம்படுத் த படும் பண்பு இன்று திட்ட
கின்றது. பல்வேறு ஆய்வுகளும் அணுகு முறைகளும் ஒன்றிணைக் கப்படாவிடில், அபிவிருத்தி பின் னடைந்து விடுதல் உண்டு.
ஆப் வின் முடிவிலாச் சிெய முறைகளால், விமர்சனக் கலை
என்றும் மீள மீளப் புதுப்பிக்
கப்பட்டு வரும் பொழுது, அது இளமை குடிய வண்ண மே
இருக்கும். சமூக இயங்குநிலை எவ்வாறு முடிவிலாச் செயல் முறையாக நிகழ்ந்த வண்ண
முள்ளதோ அவ்வாறே ஆய்வும் முடிவிலாச் செயல் முறையாகத் திரண்டெழுந்து வருகையில் அதன் நலன்களை அனைத்துத் துறைகளிலும் உட்பு குத் த வே ண் டி வரும், விமர்சனம் உள்ளிட்ட கலைகளை அவற்றுக்கு
மிடப்பட்டு மிகவும் விரி ந் த விதிவிலக்கு என்று கொள்ள அளவிலே செயற்படுத்தப்படு முடியாது. O tiേnisinlisotno spolni "ሠ"ካካሡ"ካካካብዞዞ"ካካቖ
84 to ஆண்டு சோவியத் நாடு சந்தா அழகிய கலண்டர் இணும். தொடர்பு கொள்ளுங்கள்
தாய் (மக்ஸிம் கார்க்கி) 2.50 புத்துயிர்ப்பு (தோல்ஸ்தோய்) 32/ வீரம்விளைந்த இருபாகம் 37 - 50 உண்மை மனிதனின் கதை 24-30
ஸெர்யோஷா 2 - 50
ஒட்டம் சைபீரியா 4 - 50 அரசியல் பொருளாதாரம் 6 - 75 அரசியல் பூகோளம் 17-50 மூலதனத்தின் பிறப்பு 2 - 50 லெனின் நூல் திரட்டு 10.00
மக்கள் பிரசுராலயம் லிமிட் புத்தகசாலை
40,
சிவன் கோயில் வடக்கு வீதி,
யாழ்ப்பாணம்.
124 குமரன் ரத்தினம் ருேட், கொழும்பு-25
YMMSMALMMMTMMMLMMALALMMALSMMLMLSSLMMMLMLMLLSMMELLESLMMMEESLMMLLSMLMESY
f

Page 20
காட்டுப் பாடல்
முல்லையூரான்
முதுகை வளைத்து தலையைக் குனித்து வெப்பல் கொடியை கையால் விலக்கி அக் குருமன் காட்டில்மெல்ல நுழைந்தேன், அக் குருமன் காட்டில் மெல்ல நுழைந்தே, சற்றே மேலே எழுந்திடினும் குத்தும் கீாரம் முள்ளும் முதுகை உறுத்தும் ஆரம்பற்றையும் "குனிகுனி" என்னக் குத்தியிருந்து நான் மெல்ல ம்ெல்ல காட்டில் வளைந்தேன்; பாதம் எடுத்து வருந்தி வருந்தி கால்களில் ஏறும் முட்களை எடுத்து காதலிப்பேனே? துண்டாய் முறித்து தூர விகினேன் குருமன் காட்டில் வளைந்தே போன்ேன், எனது மேனியில் எனது கண்களில் ஒரு துளி ஒளியும் பட்டிடாதிருக்கும் அக்குருமன் காட்டில் வியர்க்க வியர்க்க மண்ணுெடு ஊர்ந்து மெல்ல நுழைந்தேன். நேராய் நிமிர்ந்த முதிரை மரத்தின் கீழ் நிழல்களில் சுருண்ட மான் கொடிப்பற்றைகள் காட்டிலே தனது உடம்பைச் சுருட்டி சுற்றிக் குறுகி சுருண்டு கிடப்பதைக்கான இந்த மானிட நினைவுகள் அகல விரியும் இக் கொடும் காட்டில் எத்தனை வாழ்வுகள் சுருண்டன எனினும் காட்டில் உயர்ந்து ஒளியைக்கான தினமும் எறியும் நெப்போலியக் குருத்துகள்
36
 

மனதை ஒருமுறை தடவித் தந்தது, "இக்காட்டினைக் கடந்து எங்கே செல்வாய்" என்பது போலக் காடைப் பற்றைகள் திரண்டு நின்று வழிமறித் திருந்தன. பாதை இல்லா குருமன் காட்டில் வெளியை நோக்கி.. நோக்கி, நோக்கி மெல்ல மெல்ல காட்டில் நுளுந்தினேன். புற்றும் புதரும், புதைகுழியும், நீண்டு நிற்கும் முள்ளும், பற்றையும் காலில் தடக்கும் கொடிகளும் - என்னை *விரை நீ வெளிக்கென உறுத்த. உறுத்த சோர்ந்திடவில்லை. அக் குருமன் காட்டினை கடந்தே விட்டேன். அன்றுநான் பிரிந்த காற்று நண்பனே' என்று கட்டி அணைத்தது, காட்டில் குனிந்த முதுகு நிமிர்ந்தது, கண்கள் ஒளியை கட்டிப்பிடிக்க ஆனந்தம்ாக நிமிர்ந்தேன் நின்று. அப்போதுமக் குருமன் காடு
உன் வாழ்க்கையில் நானுமோரி பாகம் ன்ன்பதுபோல்
எதிரே நின்று எச்சரிக்கிறது. O.
Mywww
கடிதம்
இக்கடிதம் தங்கள் கைக்கு வந்து சேருமா சேராதா என்ற ஐயப்பாட்டுடனேயே எழுதுகிறேன். நண்பர்கள் நீங்கள் எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? செய்திகளைப் படிக்கப் படிக்க தங்கிக் எல்லாம் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். நண்பர் அனுப்பிவைத்திருந்த "மல்லிகை" அக்டோபர் இதழிலிருந்து தற் போதைய நிலைமையை சாகவாசமாய் புரிந்து கொண்ட்ோம்
இதழின் முன் அட்டையில் என் புகைப்படத்தைப் போட்டு கெளரவித்தமைக்கு நன்றி கடந்த 30 ஆண்டுகளாய் தமிழில் எழுதிக் கொண்டிருந்தும் இங்கே தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் யாரும்ே இதுவரை செய்யாததை செய்ய முன்வந்த தங்கள் அன்பை நினைந்து மனம் நெகிழ்கிறேன். நன்றி தெரிவிக்க என் னிடம் வார்த்தை இல்லை. இதழ் மொத்தத்தில் நன்ருகவே இருந்தது.
நீல பத்மநாபன்

Page 21
"கலை, இலக்கியத்தின் மூல மாகத் தேசிய ஒற்றும்ை" பதை இனியும் உரத்துப் பேச முடியுமா என்ற எண்ணமே, . "யார் என்னைத் தேடுவது. எனக்கும் ஆபத்தா.. g(ه )up . எ. சவின் தேசிய ஒருமைப்பாடு மாநாடும், கொரஸ் என்ற சிங் களக் கிராமத்தில் பெளத்த பிக்குகள், சிங்கள ம்க்கள் மத் தியில் எழுத்தாள நண்பர்களு டன் தமிழர் உரிமை பற்றியும்
ஒருமைப்பாடு பற்றியும் முழங்
கியதும் நினைவுக்கு வருகிறது" என்ற முருகபூபதியின் வரிகளைப் படித்ததும் ஏற்படும் உடலா லும், உள்ளத்தாலும் பாதிக்கப் பட்ட எவருமே இவ்வாறு பேசு வது இயல்பு.
இந்நிலையில் கலை, இலக்கி யத்தின் மூலமாகத் தேசிய ஒற் றுமை பற்றி மீண்டும் குரல் எழுப்பப்படுவதை முக்கியம்ாகச் சிங்களப் பத்திரிகைகளிலும், ஆங்கிலப் பத்திரிகைகளிலும் அவதானிக்க முடிகிறது. இவ் வாருன ஒரு கட்டுரை மல்லிகை நவம்பர் 83 இதழிலும் பிரசுர மா கி யுள் ளது. 22 - 11-83 * எத்த" பத்திரிகையில் மக்கள் எழுத்தாளர் முன்னணியின் பிர தான செயலாளர் குணசேன வித்தான எழுதியுள்ள விரிவான ஒரு கட்டுரையிலும் இதை வலி யுறுத்துகிறர்
என்
தேசிய ஒற்றுமையின் தமிழ்ப் பக்கம்
எஸ். எம், ஜே. பைஸ்தீன்
இத் தருணத்தில் 17-11-83 எத்த" பத்திரிகையில் தற்போ தைய கலைத்துறை பற்றி சுனில் ஆரியரத்ன அவர்களுடன் பசன் கொடிக்கார நிகழ்த்தி வெளி வந்த உரையாடல் கவனத்துக் குரியது. தேசிய ஒற்று  ைம தொடர்பாக எமது கலைஞர்கள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்ற கேள்விக்கு அவர் பின் வருமாறு கூறினர்.
இந்நாட்டுக் கலைஞர்கள்
தேசிய ஒற்றுமையைப் பற்றி அநேக சந்தர்ப்பங்களிற் பேசி
யுள்ளனர். ஜி. டீ. எல். பெரே ராவின் "தொட்டுப் பொல (ஒடக்கரை) ஜயசேன ஜயக் கொடியின் ‘கொட்டி" (புலி)
பராக்கிரம கொடித்துவக்குவின் இந்து - லங்கா போன்ற சிருஷ் டிகளிற் போலவே மககமசேகர மெ ணிக் கா குவன்பத்திரன, தயாசேன குணசிங்ஹ போன் ருேர் எழுதிய கவிதைகளிலும் தேசிய ஒற்றுமைக்கான பிரார்த் தன் அடங்கியுள்ளது. நான் அறிந்த வரையில் தமிழ்க் கலை ஞர்கள் இவ்வாறு கைகோரித் துச் செல்வதற்கு ஆரிவங் காட்ட வில்லை. தேசிய ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கு சிங்களதமிழ் இருதரப்புக் கலைஞர்களும் ஒன்றுபட்டுச் செயலாற்றுவது அவசியமாகும்?
 

அத்துடன் நான் எழுதிய சிற்சில கவிதைகளை இனவாத மிக்கனவாக" க் குறிப்பிடுவதனை நான் ஏற்கவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. தேசியவுணர்வைப்பற்றிப் பேசும் உரிமையும், தேசிய உணர்வைத் தோற்றுவிக்கும் பொறுப்பும் ங் களக் கலைஞர்களுக்கும், தமிழ்க் கலைஞர்களுக்கும் மற் றும் எந்த ஓர் இனக் கலைஞர் களுக்கும் சமமாகவே இருக்கி வேண்டும்?
மேற்ப டி கூற்றினையிட்டு * எத்த" பத்திரிகைக்கு 2 { -1 Ꭵ -83 வ. த. சரத்சேன என்ற வாசகர் எழுதிய கடிதம் பின்வரும்ாறு. "தேசிய ஒற்றுமையின் தமிழ்ப் பக்கம்" என்ற தலைப்பிற் பிர சுரமாகியுள்ளது.
"சிங்கள - தமிழ் ஐக்கியத் துக்கு சிங்களக் க லே ஞர்கள் நீண்ட காலமாகவே ஆர்வஞ் செலுத்துகின்ற போதிலும் தமிழ் கலைஞர்கள் ஆர் வங் காட்ட வில்லை என்ற கருத்தைக் கலா நிதி சுனில் ஆரியரத்ன அவர்கள் மொரட்டுவை வேல்ஸ் குமார வித்தியாலயத்தில் கலைவிழாவில் வெளியிட்டதாக 21ந் திகதி திங்கள் ‘திவயின’ மத்திரிகை யில் வெளியானது. அவர் அதே கருத்தை 17 ஆம் திகதிய "எத்த* பத்திரிகையில் தற்காலக் கலை, இலக்கியத்தைப் பற்றிக் கருத்து வெளியிடும் போதும் முன் வைத் திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் அச்சிடப் பெறும் "ம ல் லி  ைக" என்ற தமிழ்ச் சஞ்சிகையைப் பற்றி இங்கு நினைவுபடுத்தல் அதைப் பற்றி அறிந்த எம்போன்றரது கடமையாகும். அச் சஞ்கிகை யின் ஆசிரியர் தமிழ் எழுத்தா
ளரான டொமினிக் ஜீவா ஆவார். அச்சஞ்சிகை சிங்கள எழுத்தாளர்களையும் சிங்களக்
பணியாற்றியவர்
கலைச் சிருஷ்டிகளையும் வழமை யாகத் தொடர்ந்து தமிழ் வாச கர்களுக்கு அறிமுகப்படுத்துகின் றது. சிங்கள எழுத்தாளர்களது புகைப்படங்கள் அதில் வெளி யாகின்றன. சில வேளைகளில் சிங்கள எழுத்தாளர்களது புகைப் படங்கள் அட்டை முகப்பையும் அலங்கரிக்கின்றன. சிங்கள - தமிழ் ஒற்றுமைக்குச் சார்பாக வெளியாகும் சிங்களக் கட்டுரை களின் தமிழ் மொழிபெயர்ப்பும் அதிற் பிரசுரமாகின்றன.
நாம் தாமாகவே அறிந்து கொள்ள முடிந்த ஓர் உதார னத்தை மட்டுமே இங்கு குறிப் பிட்டேன். மேலும் உதாரணங் கள் உள்ளனவோ எனத் தேடிப் பார்த்தல்_பகிரங்கமாகக் கருத்து வெளியிடுவோர்களது 35 GE) D யாகும்
இங்கு குறிப்பிட்ட அளவில் சந்திரசிரி தொடங்கொட, gGOOT சேன விதான, சரத்சேன ஆகி யோர் குறிப்பிட்டுள்ள உதார ணங்களே அனந்தம். குணசேன வித்தான அவர்களோ 5 LD g5! கிட்டுரையில், நான் மேற்கூறிய விடயங்களை இவ்வாறு விஸ்தா ரமாக முன்வைப்பது எமது சில சகோதர எழுத்தாளர்களுக்கு இவை ஒன்றில் மறந்துப்ோயி, ருக்கலாம். அல்லது அவை பற்றி அவர்கள் அறியாதிருக்கலாம் என்பதனலாகும்" என்று கூடக் குறிப்பிட்டு இருந்தார்
எனவே, சுனில் ஆரியரத்ன போன்ற பொறுப்பான ஒருத்த ரிடமிருந்து முன் குறிப்பிட்ட வாருனஒரு கருத்து வெளிவரு வது உண்மையிலேயே வேதனைக் குரியது:
ஏனெனில் சுனில் ஆரிய ரத்ன யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்து சிறிதுகாலம்
39.

Page 22
அவரது "சருங்க்லே" (பட் டம்) சிங்கள - தமிழ் ஒற்றுமை யைக் கருவாகக் கொண்டது. அதில் தமிழ் உரையாடற் பகு திகள் உண்டு. அவற்றுக்கும் பொறுப்பாக இருந்தவர் யோகா பாலச்சந்திரன் ஆவார்,
சருங்கலே, பொன்மணி போன்றவை சிங்களக் கலைஞர் களால் உருவாக்கப்பட்ட போதி லும், விழிப்புடைய ஒரு தமிழ்ப் படத் துறைக்கு ஆற்றியுள்ள பங்கு பொதுக் கருத்தரங்குகளில் எ டு த் து  ைரக் கப்படுகின்றது. 1981 இல் சென்னையில் நடை பெற்ற "இலக்கு" கருத்தரங்கின் போது, கோமல் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற தமிழ் சினிமா பற்றிய அமர் வி ல், தமிழ் சினிமா என்பது இந்திய
சினிமா மட்டும் அன்றென்பது மேற் கூறியன போன்ற உதார ணங்களுடன் எடுத்துக் காட்டப் பட்ட பின், இவை பற்றித் தாம் அறிந்திருக்கவில்லை என்றும், அறிய வாய்ப்புக்கள் இல்லையென் றும் கோ ம ல் சுவாமிநாதன் போன்றேர் கவலையுடன் ஏற்றுக் கொண்டனர்.
*க லே, இலக்கியங்களின் மூலம் தேசிய ஒற்றுமை என்பது
ஒருவழிப்பாதை அல்ல என்பதை
மல்லிகை எப்போதும் வலியு றுத்தி வருகிறது. அதற்கு த் தமிழ்ப் பக்கத்தின் பங்கு இது வரையில் அளப்பரியது. எனி னும் அதன் மறுபக்கத்திலிருந்து
குற்றச்சிாட்டாக வருவது கவ
லைக்குரியதேயாகும்.
O
ஆனக்கோட்டை.
உற்சாகத்திற்கும் -
கடுமையான உழைப்பின் பின் மன ஆறுதல் பெறுவதற்கும்
புகைக்கும்போது தனிச் சுகம் பெறுவதற்கும்
மாஸ்டர் பீடி
ஒரு முறை பாவித்துப் பாருங்கள்
மாஸ்டிர் பீடிக் கம்பனி

மரணித்த இருவரும்
மல்லிகையில்
அவர்தம் நினைவுகளும்
கடர் ஆண்டு டிசம்பர் மாதம் . திகதி மாலை நேரம். கொழும்பு - 4 கின்றேஸ் அவனியூவில் கார்கள் வரிசை யாக நிற்கின்றன, பலர் நடமா டிக் கொண்டிருக்கிருர்கள், ஒரு வீட்டின் முன்னே சோகம் கப் பிய முகத்தை வைத்துக்கொண்டு பலர் அளவளாவுகின்றனர்.
பேராசிரியர் கைலாசபதி அந்த வீட்டினுள் நிரந்தரமாக துயில் கொண் டிருக் கி ரு ர். அவரை எழுப்பாமல் அழைத்துக் கொண்டு கனத்தையை நோக்கி அனைவரும் செல்லும் வேளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
யாழ். பல்கலைக்கழக மாண வர்கள் சிலர் அஞ்சலி பிரசு ரங்களை அனைவருக்கும் விநியோ கிக்கின்றனர். கைலாசிடம் கற் ருேர், உடன் படித்தோர், உடன் பணிபுரிந்தோர். உற்ருர் உறவினர், நண்பர்கள். . . கைலாஸ் பற்றிய நினைவுகளுடன் அளவளாவுகின்றனர்- வெளியே யும் உள்ளேயும்.
* குழுக்களாக' - 'கூட்ட மாக' - உரையாடல்கள் தொட ருகின்றன. பேசவென்றே பிறந்த இலக்கியக்காரர்களுக்கு அன்று * கைலாஸ் களம் அமைத்துக் கொடுக்கிறார். s
வெளியில் சபா ஜெயராசா, டொமினிக் ஜீவா, கலா பரமேஸ்
றிந்து மல்லிகை
- முருகபூபதி
வரன், நான். இன்னும் சிலர். இப்போது அச்சந்திப்பில் யார் யார் நின்றர்கள் என்பது பூரண மாக நினைவில் இல்லை. ஆனல், கலா பரமேஸ்வரன் நின்றது நன்முக நினைவில் உள்ளது.
*மல்லிகை" என்றவுடன் அட்டைப்படம் குறித்து எல்லோ ராலும் பேசப்படும், இருப் போர், இறந்தோர் என்ற பாகு பாடு இன்றி கால்ம் - கருத்த அட்டையில் இடம் பெற்றேர் நூறுக்கு மேல் இருப்பர்.
கலா பரமேஸ்வரன் கேட்கி
ருர், "ஜீவா. கைலாஸின் படன் மல்லிகை அட்டையில் வந்ததா?*
நான் ஜீவாவை முந்துகின் றேன். "1972 நவம்பர் மாத ம ல் லி  ைகயி ல் கைலாஸ்தான் அட்டைப்படம்
*பத்திரிகைக்காரனின் மூளை யோடு பேகசிறீரே, இந்தவாரமே எழுதப் போறிர் போலக் சிடக்கு. இங்க ஒருத்தருக்கும் இப்போது எழுத முடியாமல் இருக்கு. கைலாஸ் எல்லோர் கைகளையும் சோர்ந்து போக வைத்துவிட் டார்’ என்ருர் சபா ஜெயராசா,
‘அப்ப, பத்து வருடமாச்சு என்னையெல்லாம் எப்ப அட்டை யில் போடப் போறிங்க,
4马

Page 23
வழக்கமான சிரிப்புடன் வேடிக்
கையாகவே கேட்டார் கலா பரமேஸ்வரன்.
‘அட்டைப்படம் என்றவு
டன் உமக்கெல்லாம் சிரிப்பாக் கிடக்கு இல்லையா? மல்லிகை குறிப்பிட்ட ஒரு வட்டத்தினரை மட்டும் அட்டையில் போட்டு மலரவில்லையே. காலம், வேளை, சந்தர்ப்பம் வரும்போது நம்ம வர் படங்கள் அட்டையில் வரும்"
இது ஜீவா.
* அப்ப என்னையும் போடுங்க. சாகமுந்திப் போட்டீங்களென்
ருல் நானும் பார்த்துக் கொள் ளலாம். இப்ப செய்தமாதிரி, பத்து வருடத் துக்கு முந்தியே கைலாஸ்"க்கு அட்டைப்படம் போட்டமாதிரி" கலா பரமேஸ்வரன் ஜீவாவைக் குழப்பிவிட்டு வேடிக்கை பார்ப்
பதிற்கே அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
கைலாஸ் மறைந்து ஒரு வருடமாவதற்குள் அந்த கலா பரமேஸ்வரன் மறைந்துவிட் டார்.
*கலா, நீர் மல்லிகை அட் டையில் அல்ல, எம் நெஞ்சங் களிலேயே ஆழமாகப் பதிந்து விட்டங்ார்’ ஒரு வருடத்திற்கு முந் திய அச்சந்திப்பே எம்மிருவருக் குமான இறுதிச் சந்திப்பு. அதை இப்போது நினைத்தாலும் கண் களில் நீர் முட்டுகின்றதே.
ஏன் ?
சுமார் மூ ன் று வருடங்க ளுக்கு முன்பு ஒரு நாள் மாலே நேரம், கொழும்பு விவேகானந்த சபையின் சிறிய மண்டபத்தில் பலர் நிரம்பியிருக்கிருர்கள்.
மல்லிகையின் ஆண்டு மலர்
அங்கு சிலர் கைகளில். மல்லி கைக்கென ஐங்குபடுத்தப்பட்ட
கூட்டம். L' விகையுடன் உடன் பாடுள்ளோர், உடன்பாடு அற்
42
கைலாஸ்"க்கு
ருேர் அந்த மல்லிகைப்பந்தலின் கீழ் குழுமி இருக்கின்றனர்.
பிரபல சிங்கள எழுத்தாளர் குணசேன வித்தானவும் கூட்டத் தில் ஒரு பேச்சாளர். அக்காலப்
பகுதியில் அவர் முன்பு எழுதிய
ஒரு சிறுகதை ஜெயகாந்தனல் பாரா ட்ட ப் பட் டு, மொழி பெயர்க்கப்பட்டு - 'கல்பணு" வில் பிரசுரமாகியிருந்தது.
மல்லிகை பற்றியும் அதன் பணிகள், கருத்துக்கள் தொடர் பாகவும் சில ர் அடுத்தடுத்து உரை நிகழ்த்துகிருர்கள்,
குணசேன விதான சிங்களத் தில் பேசுகிருர், அது மொழி பெயர்க்கப்படுகிறது.
"மல்லிகை தேசிய ஒருமைப் பாட்டுக்காக பாடுபட்ட சஞ் சிகை. பல சிங்கள எழுத்தாளர் களை கெளரவித்ததோடு மட்டு ம ல் லா ம ல் அவர்களின் பல படைப்புகளையெல்லாம் தமிழுக் குக் கொண்டு வந்தது. இன்று எமது படைப்புகளை சகோதர மொழியில் பார்க்க விரும்பினல் மல்லிகையைத்தான் நாம் நாட வேண்டியுள்ளது. இது சாதார ணமான விஷயமல்ல'
குணசேன வித்தானவைத் தொடர்ந்து டொமினிக் ஜீவா பேசுகிருர் வழக்கமான தோர்ணை களுடன்.
கூட்டம் முடியும் வேளை நெருங்குகிறது. ச  ைபயோர் ஏதும் குறிப்புகளைக் கூறலாம் என்று கூட்டத்திற்குத் தலைமை
வகித்தவர் சொல்கிருர்
ஒரு மெலிந்த உருவம் மெல்ல எழுந்து முன்னே செல் கிறது.
யார் என்று பார்க்கிற்ேன். விமல்தாஸன்! 'மனிதன் என்ற பத்திரி கையை நடத்திய விமலதாஸன்.
 

இனங்களுக்கிடையே ஐக்கியமும் அதேசமயம் அந்தந்த இனங்க ளின் தனித்துவமும் உரிமையும் பேணப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப் பும் இயக்கத்தில் த ன் னை யு ம் நெருக்கமான உறுப்பாக்கி ஒயா மல் உழைக்கும் அந்த வலிமை மிக்க மெலிந்த உருவம் சபைக்கு முன்னே வருகிறது.
அமைதியாக, ஆழமாக, நிதானமாக கருத்துக்ஈளை முன் வைக்கிறது. முதலில் தமிழில், பின்பு ஆங்கிவத்தில்"-
*இத்தேசத்தில் ஒருதலைப் பட்சமாக ஒருமைப்பாடு பற்றி குரல் எழுப்பப்படுகிறது. இந் நாட்டு மக்களின் அடிப்படை மனித உரிமைகளும், குறிப்பாக தமிழினத்தின் உரி ைம க ஞ ம் என்ன இலட்சணத்தில் உள்ளன? தேசியப் பெரும்பான்பை இனம் தான் தே சி ய சிறுபான்மை இனத்துக்காக குரல் கொடுக்க வேண்டும். மல்லிகை பல சிங்க ளப் படைப்புகளை உங்களுக்குத் தமிழில் தந்துள்ளது. அதே சம யம் எத்த தமிழ் படைப்பு களை நீங்களும் உங்களைச் சேர்ந் தோரும் சிங்களத்தில் எமக்குத் தந்தீர்கள் என்று நான் கேட்ப தில் தவறில்லை அல்லவா." விமலதாஸன் தொடர்கிருர்.
குணசேன விதான அமைதி யாக, உன்னிப்பாகக் கருத்துக் களை ஆமோதிக்கிருர்,
"இரு சாராரும் ஒன்றி ணைந்து இயக்கம் நடத்த வேண் டும். இனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாயின் உங்களைப் போன்ற சிங்கள எழுத்தாளர் கள்- ஜீவா போன்ருேர் மேலும் மேலும் இலக்கிய ரீதியிலேனும் வேகமாகச் செயல்பட வேண் டும். நானும் எனது பங்களிப்பை இப்பணிக்கு நிச்சயம் தொடர்ந்து
வழங்குவேன்" விமலதாஸன் பேசி முடிக்கிருர் கூட்டம் கலைந்து செல்கிறது.
விமலதாஸன் பேச்சுப் பற்றி, அதில் உடன்பாடு மிக்கவராய், *பேசியவர்கள் எல்லோரும் விட்டு விட்ட விஷயத்தை தொட்டுக் காட்டினர் அந்த மெ லி ந் த பேச்சாளர்" என்று சொல்லிக் கொண்டு சிலர் சென்றனர்,
". . . . . . எனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குவேன்' என்ற விமலதாஸன், தொடர் ந் து வழங்கினர். ஆக்கபூர்வமாக, அமைதியாக, அவருடன் நெருக் கமாயிருந்தோருக்கு அது தெரி Այւb.
யாழ், நூலகம் எரிக்கப்பட்ட போது அதை கண்டித்து கொழும்பில் அவரால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத் த ப் பட இருந்த கூட்டத்தை அன்று அரசு தடை செய்தது பலருக்குக் தெரியாது!
'மனிதன் நடத்திய அந்த மனிதன் இன்று எம்மிடையே இல்லை. அவர் பற்றிய நினைவுகள் ஏதும் இல்லாத வேளையில் அவர் இல்லை என்ற தகவல் வந்தது.
அன்று மல்லிகைப் பந்தலின் கீழ் நின்று தொடர்ந்து பங்க ளிப்பை வழங்குவேன்' என்று விமலன் சொன்னது இன்றும் ஒலிக்கிறது போல் ஒரு உணர்வு'
கலாவையும், விமலனயும் ரவைகள் துளைத்து உயிர் குடித் திருக்கலாம். அவர்தம் நினைவு களை எதுவுமே துளைத்து அழித்து விடாது; என்றும் பசுமையாக நீடித்து, நிலைத்து நிற்கும்
*
Af

Page 24
ஆழ்ந்த கவலை தரும் சைப்ரஸ் நிகழ்ச்சிகள்
ஐ. உகோல்கோவ்
சைப்பிரஸ் தீவின் வட பகுதியில் வாழும் துருக்கிய சமூகத் தின் தலைமை சுதந்திர்ப் பிரகடனம் செய்ததன் விளைவாக, இப் பகுதியில் ஏற்கெனவே மோசமாகவுள்ள நிலைமை மேலும் சிக்க லாகிவிட்டது, கிரீசும். துருக்கியும் தங்கள் பொது எல்லை நெடுகி லும் தங்கள் துருப்புக்களைப் போருக்காகத் தயார் நிலையில் வைத் திருப்பதாகக் கூறப்படுகிறது:
* சுதந்திர நாடு" என்பது ஏற்படுத்தப்பட்டிருப்பதை ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டித்திருக்கிருர், ஐரோப்பியப் பொதுச் சந்தை நாடுகளும், மற்றும் பல நாடுகளும் சைப்ரஸ் பிரச்சினை பற்றி ஐ. நா. பந்தோபஸ்து சபையும் விவாதிக்கிறது.
*வட சைப்ரஸ் துருக்கியக் குடியரசு" அமைக்க எடுக்கப்பட் டுள்ள முடிவின் நோக்கம் சைப்ரசைத் துண்டாடுவதாகும், ஐ. நா. பொதுச் சபையும், பந்தோபஸ்து சபையும் பன்முறை நிறைவேற் றியுள்ள தீர்மானங்களுக்கு இது முரணுனதாகும், நியாயமான் அரசியல் தீர்வுக்கு இது குழி பறிக்கிறது.
உலகத்தில் பல்வேறு பகுதிகளிலும் யுத்தத்தின் வி% நிலங் களைத் தோற்றுவிக்கும் சக்திகளின் நடவடிக்கைகள் காரணமாக ஜலகத்தில் பதற்ற நிலைமை அதிகரித்துள்ள நிலையில், சைப்ரஸ் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. \,
துருக்கிய சமுதாயத் தலைமையில் ஒருதலைப்பட்சமான நடவ டிக்கை பற்றிய உலக மக்களின் கவலையை சோவியத் யூனியனும் பகிர்ந்து கொள்கிறது. சைப்ரஸ் மக்களின் நலனையும், இந்தும் பிரதேசம் முழுவதிலும் அ ைம தி நிலவுவதன் அவசியத்தையும் முன்னிட்டு, சைப்ரஸ் துருக்கியத் தலைமை தன் முடிவை மாற்றிக் கொண்டு, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் ஐ. நா. பொதுச் செயலாளர் மத்தியஸ்தத்துடன் ஆக்க பூர்வமான பேச்சுக்களைத் துவக்க வேண்டுமென்று முக்கிய வட்டாரங்களின் கருத்து நிலவுகிறது. 3
சீைப்ரஸ் விஷயத்தில் பொறுமை காட்டுமாறும், நிலைமையை மேலும் சிக்கலாக்கக்கூடிய எந்த நடவடிக்கையும் எடுக்காதிருக்கு மாறும், எல்லா நாடுகளையும் ஐ. நா. கேட்டுக் கொண்டுள்ளது. வெளியார் தலையீடோ நிர்ப்பந்தமோ இல்லாமல் சைப்ரஸ் மக் தங்கள் பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
அந்நிய ராணுவம் இல்லாத சுதந்திரநாடாக சைப்ரஸ் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை எல்லா நாடுகளும் தெரிவித்துள்ளன,
As

ஒட்ட ஒழுகல்
அல்லது
$(፴ முட்டாளின் கதை - சாந்தன்
u nsib
சிவா, புதிதாக வீடியோ ட்ெக் வாங்கியிருந்தான். திரைப் பட விழாவே நடந்தது அவன் வீட்டில், எல்லாமே தமிழ் ப் படங்கள்.
சிவாவும் இவனும் நண்பர்களாயிருந்து கொண்டிருப்பது வலு ஆச்சரியமான சங்கதி.
அவனது மூன்று அழைப்புக்களை நிராகரித்தாகி விட்டது. நெடுக மறுப்பது சரியில்லை என்று இன்றைக்கு வந்தாயிற்று.
ஒரு டொக்டரைப் பற்றிய கதையாயிருக்க வேண்டும்- ஒரு ஒப்பறேஷனுடன் படந் தொடங்கியது. மூளை ஒப்பறேஷனும். மூடல் பெட்டிக்கு மூடியைக் கழற்றியது மாதிரி மண்டையோடு கழற்றிய முழு மனித மூளையையும், ஸிரியஸாக வேலை செய்கிறமுக மூடிக்கு மேல் தெரிகிற- டொக்டரின் கண்களையும் கமெரா மாறி மாறிக் காட்டுகிறது.
* சாடையாய்த் தலையிடிக்குது சிவா’ என்றுவிட்டு மெல்ல வெளியே வந்தான்.
பாக்ம் 2
பெரியவர் கூப்பிடுவதாகப் பியோன் வந்து சொன் ஞர். பென்சிலை வைத்துவிட்டு எழுந்து போனன்,
"ஆ. - இ. இ, உற்சாகமாக வரவேற்ருர்,
. . . . . . உம்மட கட்டுரை நேற்றுப் பேப்பரிலை பார்த்தன்'- அவ னுக்கு அதிசயமாயிருந்தது. இந்த ஆள் இதெல்லாம், பார்க்குமா? பார்க்கலாம், சரி, படித்திருக்குமா?
". நல்ல வடிவா எழுதியிருந்தீர். இவ்வளவு நாளும் இப் படி ஆள் என்று உம்மைப் பற்றித் தெரியாது. அதிலை..." ஆங்கிலத்தில் அடித்துக் கொண்டு போனர்,
முன்னுக்கு மூன்று கதிரைகள் சும்மா கிடந்தன. * மன்னிக்கவும் ஐயா. *- விரும்பியபடி அர்த்தங் கொள்ள லாம் என்கிற ஒரு முறுவலுடன் - தானும் ஆங்கிலத்திலேயே சொன்னன். .
" . தொழில் நுட்ப அதிகாரி கண்ணன்தான் இந்தக் கந் தோரில் வேலை செய்கிறவன், எழுத்தாளன் கண்ணன் அல்ல . ಕೃಷ್ಣ - இதைச் சொல்லிவிட்டு ஆடுங் கதவைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தான்.
《成

Page 25
தியகோ கார்சியாவிலிருந்து வுெளியேற்றப்பட்டி அகதிகள்
a hurt
மரீஷியஸ் தீவுகளின் தலைநகரான போர்ட்லூயியில், வறுமை மிகுந்த சேரிகளில் கூட, உலகெங்கிலும் அகதிகளுக்கே உரிய துயர முகக் களையுடன் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும். - "தீவு வாசிகள் அல்லது 'இலியூ" என்று இவர் கள் அழைக்கப்படுகின்றனர். இவர்களுடைய வாழ்க்கை மிகவும் துன்ப கரமானது. உண்மையில் இவர்கள் தீவு இல்லாத தீவுவாசிக்ள். ஒரு நாள் அவர்களுக்குத் தங்கள் எளிய உடமைகளை மூட்டை கட்டிக் கொண்டு நெடுந்தூரத்தில் உள்ள இடங்களுக்குக் கிளம்பிச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டது. 25 சதுர கிலோ மீட்டர் பரப் பளவுள்ள அவர்களுடைய பவளத் தீவான தியகோ கார்சியா, அதைக் கண்டுபிடித்த போர்ச்சுகீசியக் கப்பல் பயணியான தியகோ கார்சியா என்பவரின் பெயரைப் பெற்றது, இந்து மாகடலில் உள்ள அந்தத் தீவு இப்பொழுது ஒரு பெரிய அமெரிக்க ராணுவ தளமாக மாற்றப்பட்டு விட்டது. ஒரு காலத்தில் கோகோ மரங் களின் இனிய சலசலப்பு ஒலி மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த இந்தத் தீவில், இப்பொழுது அமெரிக்க ஜெட் விமானங்களின் இரைச்சல் காதைப் பிளக்கிறது. 3600 மீட்டர் நீள ஒடு பாதை யுடனும். நவீன ராடார் சாதனங்களுடனும் கூடிய இந்தத் தீவின் விமான நிலையத்திற்கு அருகாமையில் ராணுவப் பாசறைகள் உள் ளன. தியகோ கார்சியா துறைமுகத்தில் இப்பொழுது விமானந் தாங்கிக் கப்பல்கள் உள்பட, மிகப் பெரிய கப்பல்கள் வந்து நிற்க முடியும் அமெரிக்க ராணுவ வீரர்கள், பெண்டகளின் உத்தரவு கிடைத்தவுடன் எந்த நிமிடமும் விமானத்தில் ஏறிக் கொண்டு நடவடிக்கையில் ஈடுபடத தயாராயிருக்கின்றனர்.
ஆனல் என்ன விதமான நடவடிக்கை? உலகெங்கிலும் சிதறிக் கிடக்கும் ராணுவ தளங்களின் சங்கிலித் தொடரில் தியகோ கார் சியா தளம் மிகவும் முக்கியமானது என்பதை அமெரிக்க ராணுவ தந்திரிகள் மறைக்கவில்லை. உலகத்தின் எந்தப் பகுதியிலாவது நடைபெறும் நிகழ்ச்சிகள் அமெரிக்காவின் 'நலன்களை பாதிப்பு தாக வாஷிங்டன் கருதினல், விரைவுத் தாக்குதல் நடத்து ம் பொருட்டு இவை அமைக்கப்பட்டுள்ளன.
விரிந்து பரந்த இந்து மாகடல் பிரதேசத்தில் நடைபெறும் அமைரிக்க ஆயுதக் கடத்தல் பற்றியும், அமெரிக்கா தன் வலிமை யைக் காட்டுவது பற்றியும், மடகாஸ்கர். சீசெல்ஸ், மொசாம் பிக், தான்சானியா முதலிய நாடுகளின் மக்கள் தங்கள் ஆழ்ந்த கவலையைப் பன்முறை தெரிவித்திருக்கின்றனர். மரீஷியஸ் பிரத மர் ஜெகநாத், இஸ்வெஸ்தியா நிருபருக்கு அளித்த பேட்டியில் இந்தப் பிரதேசத்தில் அணு ஆயுதங்கள் கொண்டுவந்து வைக்கப் படுவதை வன்மையாகக் கண்டித்தார், அந்நிய தளங்கள் கலைக்கப் பட வேண்டுமென்றும் இந்து மாகடல் சமாகாண மண்டலமாக் கப்பட வேண்டுமென்றும் அவக் வற்புறுத்தினு:
,龜研

மரீஷியஸ் மக்கள் தியகோ கார்சியா பற்றி விசேஷ அக்கறை காட்டுவது இயற்கையே. ஏனெனில், தங்களிடமிருந்து செயற்கை முறையில் தனியே பிரிக்கப்பட்ட இந்தத் தீவை அவர்கள் பல ஆண்டுகளாகத் திரும்பக் கோரி வருகின்றனர்.
இது பற்றி எழுத்து மூலம் எந்த விதமான ஒப்பந்தமும் இல்லை என்பதுதான் உண்மை. இருந்தாலும் அது சட்டரீதியாகச் செல்லு படியாகாது என்று மரீஷியஸ் தலைவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். பிரிட்டிஷ் காலனியாதிக்கதின் கீழ் மரீஷியஸ் இருந்த பொழுது 1965 ல் வாஷிங்டனும் லண்டனும் இந்த ஏகாதிபத்திய பேரத்தை முடித்தன, தங்கள் கருத்தைத் தெரிவிக்கும் உரிமை மக்களுக்கு மறுக்கப்பட்டது. பிறகு அவ்ர்கள் இந்தப் பேரத்தை மிக வன்மை யாகக் கண்டித்தனர். தியகோ கார்சியா தீவு உள்ளிட்ட சகோஸ் தீவுக் கூட்டத்தின் மீது மரீஷிக்கு உள்ள மறுக்கவொண்ணுத அரசுரிமையை நாடாளுமன்றம் உறுதிப்படுத்தியது.
தியகோ கார்சியாவில் அமெரிக்கா தன் ராணுவ தளத்தை வைத்திருக்கும் வரை, இந்தப் பிரதேசத்தில் உள்ள எந்த நாடும் ாத்திரமாக இருக்க முடியாது.
ஆப்கன் இளம் எழுத்தாளர்களின் முதலாவது மாநாடு
ஆப்கன் இளம் எழுத்தாளர்களின் முதலாவது தேசிய மாநாடு அண்மையில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றது. பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த 500 க்கு மேற்பட்ட இளம் எழுத்தாளர்களும் கவிஞர்களும் இதில் பங்கேற்றனர். ஆப்கன் இளம் எழுத்தாளர் சங்க அமைப்பையொட்டி இம்மாநாடு நடைபெற்றது,
ஆப்கன் எழுத்தாளர் சங்கத் தலைவரும், ஆப்கன் மக்கள் ஜன நாயகக் கட்சி அரசியற் குழு உறுப்பினருமான தஸ்தகீர் பாஞ்ச் ஷேரி இந்த மாநாட்டில் பேசுகையில், மக்களின் கலாசாரத் தரத் தையும் அரசியல் - சமுதாய உணர்வையும் உயர்த்துதல், ஏப்ரல் புரட்சியின் லட்சியமான புதிய சமுதாயத்தை நிர்மாணித்தல் என் னும் நோக்கங்களுக்காக இச்சங்கம் அமைக்கப்படுகிறது என்ருர்,
மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள், ஐரோப்பாவில் நவீன ஏவுகணைகளை வைப்பதில் மூர்க்கத்தனமாக முனைந்:ள்ள அமெரிக்க அரசை வன்மையாகக் கண்டித்தார். ஏகாதிபத்திய - எதிர்ப்பு இயக்கத்துடன் தமது முழு ஒருமைப்பாட்டை வெளியிட்டார். கிரெனடா மக்களுடனும் அவர்கள் ஒருமைப்பாடு காட்டினர். கிரெனடா மீது அமெரிக்காவின் ஆணவ ஆக்கிரமிப்பைக் கண்டித் தனர். ()
4?”

Page 26
ரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக்கு ஒரு பரிசளிப்பு விழா
ரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டி ஒன்றினை யாழ். இலக்கிய வட்டமும், மல்லிகையும் இணைந்து நடாத்தியதை இலக்கிய உலகம் அறியும். போட்டி முடிவுகள் மல்லிகை ஆண்டு மலரில் வெளிவந்தன, ஆனல் நாட்டில் நிலவி வரும் பதட்டநிலை அப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குரிய பரிசில்களை வழங்குவதற்கு இவ்வளவு காலமும் தடைவிதித்திருந் தது. எனினும் இருவாரங்களின் முன்னர் பரிசில்கள் பெற்ற எழுத் தாளர்களுக்குரிய பரிசுகள் வழங்கப்பட்டன, யாழ் ப் பா ன ம் பொண்ட் கல்வி நிலையத்தில் பரிசளிப்பு விழா நடந்தது,
சொக்கன் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். "ஆரோக்கிய மான இலக்கியம் வளர காய்தல் உவத்தலின்றி வழிகாட்டி விமர் சனம் செய்தவர் ரசிகமணி கனக செந்திநாதன். ஒரு தமிழ் ஆசிரி யராகவிருந்தும் ஆக்கவிலக்கியத்தில் அன்னர் ஆற்றிய சேவையும் திறனும் வியக்கத்தக்கது" என்ருர், காரை சுந்தரம்பிள்ளை வர வேற்புரை நிகழ்த்தினர். அதனையடுத்து யாழ், இலக்கியவட்டம் சார்பில் முதலாம் பரிசு ரூபா 5 0ே, ‘வெற்றுப்பக்கங்கள்’ நாவலை எழுதிய ராஜ மகேந்திரனுக்கு செங்கை, ஆழியான் வழங்கினர். இரண்டாம் பரிசு ரூபா 300, மல்லிகை சார்பில் வற்றுக் குளத் தில் வாடும் தாமரைகள்’ என்ற நாவலை எழுதிய வே. தில்லை நாதனுக்கு டொமினிக் ஜீவா வழங்கினர்.
பரிசு பெற்ற எழுத்தாளர்களை செம்பியன் செல்வன், ச. பத்ம நாதன் ஆகியோர் பாராட்டி உரை நிகழ்த்தினர். பரிசில் பெற்ற இரு குறுநாவல்களும் ஈழத்துக் குறுநாவல் துறைக்குப் புதிய பரி மாணத்தைச் சேர்த்திருப்பதாக அவர்கள் கூறினர். பின்னர் பரிசு பெற்ற எழுத்தாளர்கள் பதிலுரை வழங்கினர். அதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட எழுத்தாளர்களும் சுவைஞர்களும் கருந்துரை வழங்கினர். கோகிலா மகேந்திரன் பேசுகையில், "இப் போட்டிக்கு ஒரு பெண் எழுத்தாளரையாவது நடுவர்களில் ஒரு வராக நியமித்திருக்கலாம் என்ருர் டொமினிக் ஜீவா பதில விக்கையில், "நடுவர் விடயத்தில் நான் எவ்விதத்திலும் தலையிட வில்லை. நடுவர் மூவரும் சுயமாக முடிவு செய்வதற்கு விடப்பட் டனர்" என்றர்.
நீண்ட காலத்திற்குப் பின் யாழ்ப்பாணத்தில் எழுத்தாளர்கள் கூடிய விழாவாக இப்பரிசளிப்பு விழா அமைந்தது. O
●份

நடின மாமேதை
அன்னு பாவ்லோவா பற்றிய
திரைப்படம்
“ஆகாயத்தை நேரக்கிச் செல்லும் ஜிப்சி முகாம்’ என்ற படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற திரைப்பட டைரக்டர் எமில் லோத்யான, மாபெரும் ரஷ்ய பாலே நர்த்தகியான அன்ன பாவ் லோவா பற்றிய திரைப்படத்தைத் தயாரித்து முடித்திருக்கிருர், இந்தப் படமானது சோவியத் யூனியன் பிரிட்டன், ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு, கியூபா ஆகிய நாடுகளின் கூட்டுத் தயா ரிப்பு ஆகும்.
அன்ன பாவ்லோவா ரஷ்ய நடனக் கலையில் ஒரு புதிய சகாப் தத்தைத் தோற்றுவித்தவர் அவர் ஒரு போர் வீரரின் ம க ள், மெலிந்த இந்தப் பெண்மணி உலகத்தையே வென்று விட்டார் என்கிருர், டைரக்டர் லோத்யானு, நடனக் கலைக்காகத் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் அன்ன. தம் உள்ளத்து உணர்ச் சிகளை அவர் எல்லா நாட்டு மக்களுக்கும் உண்மையுடன் வெளி யிட்டார், பிரிட்டனிலோ, ஹாலந்திலோ, இந்தியாவிலோ அல் லது மெச்சிக்கோவிலோ, வேறு எங்கு அவர் நடனமாடியிருந்தா லும், அவர் நடனத்தைப் பார்த்தவர்கள் இன்னமும் அதை மறக்கவில்லை.
அன்ன பாவ்லோவா அனைத்து சமுதாய எ ல் லை களை யும் தகர்த்து எறிந்துவிட்டு, ஐரோப்பிய அரசவைகளாயினும் சரி, நெடுந்துரத்தில் உள்ள நாடுகளின் தெருக்களாயினும் சரி, எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி உயர்தர நடனம் ஆடினர். உதார ணமாக, ஈக்வெடார் நாட்டில் பிளேக் நோய் தாண்டவமாடிய பொழுது, அந்நாட்டிற்கு விஜயம் செய்ய அவர் அனுமதி கோரி ஞர். காயாகுவில்லில் அவர் நிகழ்த்திய புகழ் பெற்ற நடன நிகழ்ச்சி. ஒரு சதுக்கத்தின் மத்தியில் மேடையைச் சுற்றிலும் தீப் பற்றி எரிந்து கொண்டிருந்த பொழுது நடைபெற்றது, சபையோ ரிடம் இருந்து அவர் விடைபெற்றுக் கொண்ட பொழுது, மக்கள் அவருக்கு மண்டியிட்டு மரியாதை செலுத்தினர்.
அவர் பற்றிய புதிய திரைப்படத்தில் கலின பெல்யயேவா என்ற நர்த்தகி, அன்ன டாவ்லோவாவின் பாத்திரத்தை ஏற்று நடிக்கிருர், இவர் லொரொனேஷ் நடனப் பள்ளியில் பயின்று பெற்றவர். அன்ன பாவ்லோலாவின் கணவராக பிரிட்டிஷ் நடிகர் ஜேம்ஸ் ஃபாஸ் நடிக்கிருர். இஸ்தோரா டங்கன் பற்றிய படத் தில் நடித்துப் புகழ் பெற்றவர் இவர்
49

Page 27
உலகம் புகழும் சோவியத் டிவி திரைப்படங்கள்
இந்த இலையுதிர் காலத்தில் மாஸ்கோவில் ந  ைட பெற்ற "இண்டர்விஷன்" நாடுகளின் 17வது சர்வதேச டிவி கருத்தரங் கில், முப்பது நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பல்கேரியா, ஹங்கேரி, வியத்நாம்; ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு, கியூபா, மங்கோலியா, போலந்து, சோவியத் யூனியன், ருமேனியா, செக்கோஸ் லோவாகியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் "இண்டர்விஷன்" உறுப்பு நாடுகளாகும். இருந்த போதி லும் மாஸ்கோ டிவி திரைப்பட சந்தைகள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கம்பணிகள் மற்றும் நிறுவனங்களையும் கவர்ந்துள்ளன. இம்முறை கருத்தரங்கில் அமெரிக்கா, கொலம்பியா, அர்ஜெண் டின, ஜப்பான், இந்தியா, இங்கிலாந்து, ஸ்வீடன் மற்றும் இதர நாடுகளின் டிவி மற்றும் வினியோக நிறுவனங்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.
செய்தித் திரைப்படங்கள் வெகுஜன விஞ்ஞான, முழு நீள, இசை மற்றும் குழந்தைகளின் திரைப்படங்கள் போன்ற் எல்லா விதமான 410 க்கும் அதிகமான திரைப்படங்கள் அண்மையில் நடைபெற்ற மாஸ்கோ டிவி விழாவில் திரையிடப்பட்டன. அவற் றில் பெரும்பான்மையானவை சோவியத் யூனியனில் தயாரிக்கப் பட்டவை. அவற்றின் டிவிக்காகத் தயாரிக்கப்பட்ட "அன்னப் பறவைபாலே நடனத் திரைப்படம், இன்றைய மிகப் பிரபல இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள், பியோனே இ  ைசக் க%லஞர் ஸ்வியத்தோஸ்லால் ரிக்டர் மற்றும் இசையமைப்பாளர் மிராவின்ஸ்கி ஆகியோரின் நிகழ்ச்சிகள், "விந்தை உலகில் அலிஸ் மற்றும் "விநோதமான நபர்கள் போன்ற இதர திரைப்படத் களும் மேலை நாட்டுப் பிரதிநிதிகளை வெகுவாகக் கவர்ந்தன:
தற்போது, சோவியத் யூனியனில் ஆண்டுதோறும் டெலிவிஷ னுக்கர்கக் கிட்டத்தட்ட 800 திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின் றன. மத்திய திரைப்படப் பிரிவு மட்டுமே ஆண்டொன்றுக்கு 13 முழு நீளத் திரைப்படங்களையும், கிட்டத்தட்ட 20 கார்ட் (ஒன் படங்களையும், 16 டிவி நாடகங்கள், மற்றும் 90 டிவி இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றைத் தயாரிக்கின்றது. குடியரசுகளின் மத் திய டிவி மற்றும் ரேடியோ கமிட்டிகளுக்காக நாட்டிலுள்ள 36 திரைப்பட ஸ்ரூடியோக்கள் முழு நீளத் திரைப்படங்களைத் தயா ரிக்கின்றன. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான திரைப்படங் கள், பல்வேறு டிவி மையங்களில் தயாரிக்கப்படுகின்றன. O
50

நிஜ வாழ்வில் வெற்றி பெறும் மூடி வழக்கங்கள்
சி. நவநீதன்
அன்ருட வாழ்வில் பெரும்பாலான 'மக்கள் பலவிதத்திலும் மூடப் பழக்க வழக்கங்களின் தாக்கத்தை அனுபவிக்கின்றனர், பலர், இப்பழக்க வழக்கங்கள் போலியானவை என தெரிந்தும், புரிந்தும் இருப்பினும், சூழலின் காரணமாக இவற்றிலிருந்து மீள முடியாதுள்ளனர். மூடப் பழக்க வழக்கத்தின் மீது மக்களில் பலர் கொண்டுள்ள அசையாத நம்பிக்கை காரணமாகவே இவை இந்த விஞ்ஞான யுகத்திலும் நிலைத்துள்ளது. உதாரணமாக, ஒருவர் குறிப்பிட்ட ஒரு காரியம் ஒன்றை மேற்கொள்ள விழைகின்ற போது, அவர் கண்ணில் ஓர் "கெட்ட சகுனம்’ நிகழுகின்றதென கருதுவோம். இவர் மூட நம்பிக்கை அல்லது சகுனங்களில் தீவிர நம்பிக்கை உடையவரெனில் அக் காரியத் தை தொடராமலே விட்டு விடுவார். அவ்வாறு அல்லாமல் அவர் காரியத்திலீடுபட்டு அக்காரியம் வெற்றி பெறுமாயின் அவர் அன்று நிகழ்ந்த சகு னத்தை அடியோடு மறந்து விடுவார். தற்செயயாக அவரின் காரி யம் தோல்வியடையுமாயின், அச்சகுனத்தினலேயே காரியம் நிகழ் வில்லை என நினைத்துப் பெரும் மனக்கவலையடைவார். இவர் மீண்டுமொருநாளில் அச்சகுனம் தென்படின் எக்காரியம் ஆயினும் செயற்பட முயலவும் மாட்டார்;
இவ்வாறு மூடப் பழக்க வழக்கங்கள் இருப்பினும், சில பழக் கற்கள் நிஜ வாழ்வில் நன்மை பயக்கவல்லனவாக உள்ளன. அதா வது, அப்பழக்கங்களுக்கு விஞ்ஞான விளக்கம் அளிக்கப்படக் கூடி யதாக உள்ளன. பாமர மக்கள் இவற்றுக்கு முரணுன கதைகளை யும், சம்பவங்களைக் கூறினும், இப்பழக்கங்களின் விளைவு கள் நன்மை பயப்பனவாக உள்ளன. உதாரணமாக, சில பழக்கங் களுக்கு விஞ்ஞான ரீதியில் விளக்கம் தரப்படுகின்றது.
வீடு அல்லது கட்டடங்கள் புதிதாக அமைக்க முன்னர், மக் கள் சாத்திரியாரை அழைத்து நிலையம் குறிக்கவும், அளவுப் பிர மாணங்கள் தரும்ாறும் வேண்டுவர். அவ்வாறு சோதிடரின் அள வுப் பிரமாணமல்லாத வீடுகளில் பேய் பிசாசுகள் புகுந்து விகார மான ஒலியை எழுப்பும் எனக் கதைகள் வேறு கூறுவர். உண்மை யில், வீடுகள் குறித்த சில நீள அகலங்களில் அமையுமாயின் ஒலி தெறிப்புறுவதன் விளைவாகவும் ஏனைய ஒலியின் இயல்புகள் கார ணமாகவும் குடியிருப்பாளரின் பேச்சு சத்தம் விகாரமாக்கப்பட்டு பயங்கரமாக ஒலிக்றும். எனவே, சாத்திரியார் இந்தக் குறித்த நீளங்கள் தவிர்ந்த ஏனைய பிரமாணங்களை வழங்குவார். இப்பிர
德慧

Page 28
ம்ாணங்கள் சாத்திரியாருக்கு பரம்பரை பரம்பரையாக் கிடைத் திருக்கும்
முன்னை நாட்களில் மின்னல் மின்னி இடி இடிக்கும் நேரங் களில் மக்கள் "இடி அரக்கனை" வயப்படுத்த என்று கூறி வீட்டி னுள் இருந்து, அலவாங்கு போன்ற கூரிய ஆயுதங்களை வீட்டின் முற்றத்தில் குத்தி வைப்பார்கள். ஆனல் உண்மையில் இடி விழு வதற்கும், காரணமான மின் ஏற்றங்க்ள் பூமியை நெருங்கையில் பூமியிலிருந்து மேற்குறித்த ஏற்றத்திற்கு எதிரான ஏற்றங்கள் அலவாங்கின் முனையை அடைந்து கசிந்து மின் ஏற்றத்தை நொது மற் படுத்தும். இதனுல் இடி விழுவது தவிர்க்கப்படும். இல் அல வாங்கு எறிதாலின் திரிக்கப்பட்ட வடிவமே. தற்காலத்து வீடு களில் பாவிக்கும் அதிர்ச்சி வாங்கிக் கம்பிகள் ஆகும்
காவல் துறையினர் இல்லாத காலங்களில், மக்கள் குற்றவா ளிகளை கண்டுபிடிக்க மந்திரமாதிகளின் உதவியையே நாடி வந்துள் ளனர். தற்காலத்திலும் குற்றவாளியைக் கண்டறிவதற்கு "இழை கட்டுதல்" போன்ற செயல்களிலும் மக்கள் ஈடுபடுகின்றனர். இவ் வாறு மந்திரவாதிகள் குற்றவாளியைக் கண்டுபிடித்தலில் பாவிக் கும் முறை பிரபலமாகவுள்ளது. உதாரணமாக ஒரு கூட்டத் தில் பொருளொன்று திருடப்பட்டு விட்டது. திருடரும் அக் கூட் டத்திலேயே இருக்கிருர். மந்திரவாதி அங்கு போய் மந்திரங்கள் மூலம் தாம் குற்றவாளியைக் கண்டுபிடிக்கப் போவதாகக் கூறி தனது மந்திர உச்சாடனங்களைச் செய்து கூட்டத்தினரின் வாயி னுள் ஒவ்வொரு கல்லாக இடுவர்ர்" சிறிது நேரத்தின் பின் அக் கற்களை எடுத்துப் பரிசோதிப்பார். அவற்றுள் ஒன்றைத் தவிர ஏனையன ஈரமாக இருக்கும். இவ்வாறு ஈரமாகாத கல்லை கொண் டவரே திருடன் என மந்திரவாதி தீர்ப்புக் கூறுவார். ஆனல் நடப்பது என்னவெனில் திருடியவருக்கு பய உணர்ச்சி ஏற்படுவ தால் அவரின் "அதிரீனல்’ என்ற சுரப்பி குறித்த சுரப்பு ஒன்றை வெளிப்படுத்தும். இதன் காரணமாக முகம் வெளிறும், இருதயம் விரைவாக அடிக்கும், உமிழ் நீர் சுரக்காது
கிராம்ப் புறங்களில் மக்கள் யாராவது மன நோய் அடைந் துள்ளார் எனில், அவரின் உறவினர்கள் மந்திரவாதியை அழைத்து அவரைப் பீடித்துள்ள பேயை விரட்டுமாறு வேண்டுவார்கள். அவரும் பேயை விரட்டுவதற்கான - தன் வீட்டுத் தேவைக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்களை பெற்றுக் கொண்டு, பேயைக் கலைப்பதாகக் கூறி, மன நோயாளரை மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கி பேயை வெளியேறுமாறு உத்தரவிடுவார். இப்படியான சந்தர்ப்பங்களில் சிலவேளைகளில் அவரின் மனநோய் குணம்ாதலும் உண்டு. இது தற்கால அதிர்ச்சி வைத்திய முறை கட்கு ஒத்ததாகும். உதாரணமாக தற்காலத்தில் மின் சா ரம் பாய்ச்சுவதன் மூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி மனதோய் குணப் படுத்தப்படுகிறது.
柯感

தாலக்கியச் சுவைஞர்களுக்கு ஒரு வார்த்தை பல காலமாக இத் நீஇண்டிலில் பல்வேறு மட்டத்தினர். ;" கேள்விகளைக் வாதுள்ளீர்கள் சில கேள்விகள் மல்லிகைக்குத் தரமற்றது என நிந்ாகரித்துள்ளேன். தூண்டில் பகுதி இன்று பலராலும் படிக்கப் படுவது என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும், எனவே தரமான கேள்விகளைக் கேளுங்கள். நீங்கள் மாத்திரமல்ல, நானும் பல செய்திகளைத் தெரிந்து கொள்ள இந்த அறிவு உதவும்.
தூண்டில்
O தமிழ் மொழி வனர்ச்சியில் மல்லிகையின் பங்கு, அல் லது இலக்கியச் சிற்றேடுகள் வரி சையில் மல்லிகையின் சாதனை என்னும் தலைப்பில் ஓரி ஆய்வுக் கட்டுரையை எழுதினுல் அது மணிக் கொடி இலக்கிய விழா விற்கு பயன்படுமல்லவா? இதை தாங்கள் செய்தால் என்ன?
"சீரூச் சாளு"
இதை நானே செய்ய வேண் டுமென நீங்கள் உண்மையாகவே எதிர்பார்க்கின்றீர்களா? இந்த ஆலோசனை எனக்குச் சரியெனப் படவில்லை. நானே மல்லிகை யின் மகத்துவம், சாதனை பற்றி
மட்டுவில்.
எழுதுவது சுய விளம்பரம்ாகக் கூட அமையலாம். எத்தனையோ
மல்லிகை அபிமானிகள் இந்த மண்ணில் இருக்கின்றனர். அவர் கள் இதை ச் செய்யட்டுமே. மணிக்கொடி காலத்தைப் பற்றி எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னர் பி. எஸ். ராம்ையா எழு தினர், சரஸ்வதி காலத்தைப் பற்றி அச் சஞ்சிகை நிறுத்தப் பட்டு விட்ட கால த்தி ற் கு ப் பின்பு வல்விக்கண்ணன் விரிவாக எழுதினர். மல்லிகையைப் பற் றியும் யாரோ ஒருவர் எழுதக் கூடும. அது எப்போவோ ஒரு நாள் நடக்கலாம். நிச்சயம்

Page 29
நடக்கும் என உறுதியாக நம்பு கின்றேன்
ம கொழும்பு தீக்குளிப்பாட்ட
லுக்குப் பின்னர் மல்லிகை அங்கு எப்படி வேர்விட்டு இருக் கின்றது.
பரந்தன். செ. நவசிவசயம்
தொடர் ற் து பெரிய போராட்டம்தான். நான் இந் தச் சவாலை நெஞ்சுக்கு நேரே ஏற்றுக் கொண்டு செயல்படு கின்றேன்" மாதா மாதம் மல்வி கையைச் சுமந்து கொண்டு கொழும்பு பூராவாகவும் சுற்றித் திரிவேன். தெரிந்த, அறிந்த, இலக்கிய அபிமானமுள்ள சகல ரையும் மணந்து பிடித்து மல்லி கையை அவர்களிடம் சேர்ப் பித்து விடுவேன். வியாபாரம் அல்ல இதில் முக்கியம்; போக வர, தங்க 350 ரூபாவுக்கு மேல் செலவு ஏற்படும். பணக் கணக்
குப்படி பார்த்தால் ரொம்ப நஷ்டம். ஆணுல் எந்த நெருக் கடியிலும் சிரமத்திலும் மல்
லிகை தொடர்ந்து தங்களுக்குக் கிடைக்கும் என்ற ரஸிக ம்ன நிறைவுக்காகவே இத் தனை பாரிய சிரமங்களைப் பொருட் படுத்தாமல் இயங்கி வருகின் றேன்.
ஒரு சரித்திர சாதனை ஒன் றைச் சொல்லட்டுமா? உலகத் தில் வேறெந்த ஆசிரியனும் செய்யாத சாதனை இது. சஞ்சி கையை வெளியிடுவது மாத்திர மல்ல, அதை நாடு பூராவும் ருேட்டு ருேட்டாகச் சுற்றித் திரிந்து மாதா மாதம் விற்கும் ஒரே ஒரு சர்வ தேச ஆசிரிய னும் நான்தான்- நானேதான்! இந்த மன உறுதி இருக்கும் வரைக்கும் மல்லிகை என்றென் றும் வேர் விட்டுத் துளிர்க்கும், O மேத்தாவின் "ஊர்வலம்"
க வி ைத த் தொகுப்பைப்
படித்தீர்களா? இங்கு மேத்தா வின் நூல்கள் "எங்கே கிடைக் கும்?
Los Aggris FTU TIL வராத்துப்பளை
மேத்தாவின் அனைத் துக் கிவிதைத் தொகுதிகளையும் நான் படித்துச் சுவைத்து ரவித்திருக் கின்றேன். அவரது நூல்களில் பலவற்றைப் பூபாலசிங்கம் புத் தகக் கடையில் பார்த்ததாக ஞாபகம். விசாரித்துப் பாருங்
9 இன்று இலக்கிய உல இல்
தரக் குறைவான தனிப் பட்ட தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்கின்றனவே, இதைத் தடுக் கவே முடியாதா? உரும்பராய், க. தவலேன்
முன்னர் சிற்றிலக்கிய ஏடு கீள்தான் இந்தத் திருப்பணி யைச் செய்து கொண்டிருந்தன. இன்று தேசியப் பத்திரிகைகளே செய்யத் தொடங்கியுள்ளன. தனிப்பட்ட அவதூறுகளை எல் காரணங்களைக் கொண்டும் அனு மதிக்க முடியாது. ஆரோக்கிய மான மனப் பக்கு வ முள்ள படைப்பாளிகள் துணிச்சலாக
இதை எதிர்க்க முன்வரவேண் டும். இப்படித் தாக்குபவர்கள் கூடப்_புனைப் பெயருக்குள்
மறைந்திருந்தே விஷ அம்பு எப் கின்றனர். இதிலிருந்து இச்செய் கைக்கு அவர்களே தமது சொந் தப் பெயரைப் பாவிக்கி வெட் கப்படுகின்றனர் என்பது புரிந்து விடுகின்றது.
9 ஒர் அணு ஆயுத யுத்தம் வந்தால் யார் வெற்றி
பெறுவார்கள்?
அராலி. வ. சந்திரன்
யாருமே வெற்றி பெற முடி ur¥1 # ಗ್: 4ಾ:h @@ಗಿ ஒரு அணு
歡4

* த யுத்தம் ஏற்பட்டால் மறுக் குலமே முதும் பூண் புற்றுப் போய்விடும். இதற்குப் பின்னர் வெற்றிப்ாவது"தோல் աnoug:յ?
9 தமிழ்மீதும் தமிழ் இலக்கி
புத்தின் மீதும் இவ்வளவு பேரபிமானம் கொண்ட் திரு. கே. ஜீ. அமரதாஸவை அடிக் கடி சந்திப்பீர்களா? எ த் தனை வருடம் பழக்கம்?
சங்காரே. ஆர்3 நவநீதன்
அடிக்கடி இல்லாது போனு இலும் சந்திப்பது வழக்கம். இவர் தான் சாஹித்திய் பரிசு எனக்குக் கிடைக்கும்போது செயலாளராகப் பதவி வகித்த வர். மல்லிகையின் நீண்ட கால வாசகர். கைலாசப்தி, சிவத் தம்பி போன்றவர்கள் மீது பேர பிமானம் கொண்டவர். அடுத்த தடவை கொழும்பு வரும்போது என்னை அவசியம் சந்திக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். பிர் பல சிங்க்ளக் கனவான் ஒருவர் பத்திரிகைக்காக பேட்டி காண விரும்புகின்ற ராம் அதை ஒழுங்கு படுத்து வதற்கே இந்த அழைப்பு. நான் நம்பிக்கையை இன்னமும் இழக்க வில்லை. இப்படியான ம் னித நெஞ்சங்கள் பலரை எனக்குத் தெரியும். நிச்சயம் ஒரு சந்து டியான சுமூக உறவு மலர்ந்தே தீரும்.
9 சமீபத்தில் தமிழகத்தில் வெளிவந்த நல்ல நாவல் ஏதாவது படித்தீர்களா?
சண்டிலிப்பாய், Le 9Јас
ஆமணி எழுதிய "வெக்கை நாவலைப் படித்தேன். அவசியம் ஒவ்வொருவரும் 4 டி த்து ப் பார்க்க வேண்டிய நாவல். உள்
மண்டலப்
எ ன் னை ப்
மோதல்கள்
எடக்கத்தைப் பற்றி எனக்குச் ல மாருன அபிப்பிராயங்கள்
இன்டு. உத்திமுறை" էվֆ13, பார்வையும் Լվ:51ծ: , 9 'துக்ளக்" ஆசிரியர் "Gegro
இனதா கட்தியில் சேர்ந்தது பற்றி என்ன நினைக்கிறீர்களி? கோப்பாய், °·、9町母ár
PF புத்திசாலியான இந்த
当 。 முகத்தை 9றத்து வைத்துக் கொண்டு காரியமாற்றும் இந்தப் பிரதிநிதி
அசல் ஆர், எள் எஸ். காரன் தகர்ந்து போகும் பிராமணிய ஆதிக்க சக்திகளுக்குப் பின் | Iés at Orr, நின்றுழைக்கும் இந்தக் கெட்டிக்காரன் சர்வதேசப் பிற் போக்குத் கும்பலின் இந்தியக் கூட்டாளி. கட்சிகளே தேவை யற்றது என அடிக்கடி தனது சஞ்சிகையில் மக்களுக்கு உபதே சம் சொல்லிவைத் த இவர் இன்று
ஒரு கட்சியில் ’றுப்பினராகச் Gif pr வேண்டியது காலத்தின் தேவையாகும் TLDT LD5&T
மடையர்கள் எனக் க ரு தும்
இந்த அதிபுத்திசாலிக்கு அதே மக்கள் கூடிய FjäGrb புத்தி புகட்டுவார்கள் என்பது என் நம்பிக்கை,
O FGsrs. எழுத்தாளர்களைத் தரக் குறைவாகத் தாக்கு பவர்களைப் ம்
உங்களது
கருத்து என்ன?
அச்சுவேலி,
இ ைத ப் போன்றதொரு
கேள்விக்கு இதே பகுதியில் பதில்
இசால்லியிருக்கின்றே கருத்து ஏற்படலாம். குதி முரண்பாடுகள் தோன் so ஆளுறல் எக் காரணத்தைக்
L9utrru லாம்,
5

Page 30
கொண்டும் தனிப்பட்ட தாக்கு தல்களாக அவை உருமாறக் கூடாது. அந்த அனுபவத்தை என் இலக்கிய் வாழ்க்கையிலேயே நேரடியாகக் கண்டவன் நான். எத்தனையோ பேர், ஆரம்பிக் கும் எத்தனையோ சஞ்சிகைகள் என்னை நாக்கில் நரம்பில்லாமல் திட்டித் தீர்த்து விட்டனர். தி ட்டிய மனிதர்கள் இன்று இலக்கிய உலகில் அநாமதேயங் களாகி மறக்கப்பட்டு விட்டனர். சஞ்சிகைகளுக்கும் இந்தக் கதியே ஏற்பட்டது. வளர்கின்றவன் திட்டுக்களைப் பற்றிக் கவலைப் படக் கூடாது: அது பசளை. திட்டுகின்றவன் மாபெரிய எழுத் தாளணுக மதிக்கப்பட்ட விந் தன் கடைசி காலத்தில் திட்டி னல் சீரழிந்ததை ஒரு தடவை நினைத்துப் பார்ப்பது நல்லது
கு உங்களுடைய அனுப வி
முத்திரைகள் படித்துச் சுவைத்திவன். ஈழத்திலிருந்து
ஓர் இலக்கியக் குரல் நூலை அனு பவித்துப் படித்தவன் கேட்கின் றேன். நீங்கள் முன்னர் கூறி யிருந்தபடி உங்களது வாழ்க் கைச் சரிதம் எமக்கு எப்பொ ழுது நூலுருவில் கிடைக்கும்
கொக்குவில் க. ஜெயராசா
ஏன் அவசரப்படுகின்றீர்கள்?
மல்லிகையைத் தொடர் ந் து படித்து வாருங்கள், எனது வாழ்க்கையின் சுவையான சம்ப வத் தொடர்களைக் கொண்ட வாழ்க்கைச் சரிதம் நூலுருப் பெற்றவுடன் உங்களுக்கு அறி யத் தருகின்றேன்.
கு இந்த நெருக்கடியான கால கட்டத்திலும், கொழும்பில் தமிழ்ச் சஞ்சிகைகளே விற்க (pE4. Lin“35 சூழ்நிலையில் எப்படிச் சமாளிக்கிறீர்கள்? இதனுல் உங் களுக்கு லாபமா - p56 tell Drt?
வேலனை. கா. இரத்தினவேல்
என்னுடைய மன வலி மைக்கு இது ஒரு சவால் என் பதை ஒப்புக் கொள்ளுகின்றேன். லாப - நட்டம் பார்ப்பதற்காக ஆரம்பிக் கப் பட்டதல்லவே மல்லிகை.
6 இலங்கையில் அசுர எழுத்
தாளன் என்று யாரை. நீங் கள் கருதுகிறீர்கள்?
பரந்தன். ம, ராசதுரை
செங்கை ஆழியானையே நான் அப்படிக் கருதுவதுண்டு. அவரி டம் எனக்குப் பொருமை கூட. நான்தான் ஒவ்வொரு நிமிட மும் உழைப்பதில் பெருமை கொள்பவன் எனப் பெருமித மடைவதுண்டு. ஆனல் அவரு டைய உழைப்பைப் பார்க்கும் போது நான் மலைத்துப் போவ
துண்டு. நாம் பின்பற்ற வேண்
டிய நல்ல உழைப்பு.
O கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்தீர்களா? அவரைப் பற்றிய உங்களுடைய அபிப்பிராயம் என்ன? இளிநொச்சி. ஆ. யோகன் சென்ற ஏப்ரல் மாதம் சென்னைக்குச் சென் றிருந்த பொழுது அவரைச் சந்தித்து உரையாடினேன். 63 соi) и о пт நுழைவு கவிஞர்களை - அவர்க களது கவித்துவத்தை ” விழுங்கி விடுமோ என்ற அச்சம் என் மனதில் உண்டு. ஆனல் அதை யும் மீறி வைரமுத்து சினிமா வில் ஜொலிக்கிருர், வானெலி யில் அவரது பாடலைக் கேட்கும் போது ' அப்படியே சொக்கிப் குதி விடுகின்றேன். சினிமா ஒடு வெகுஜன சாத்னம் அதைக் கவிஞர் எப்படி எதிர்காலத்தில் பயன்படுத்தப் போகின்றர் என் பதைப் பொறுத்திருந்து ಬಗ್ಯೆ
Gurríb.
56

ESTATE SUPPLIERS COMMISSION
AGENTS
A.
VARIETIES OF
CONSUMER GOODS
OILMAN GOODS
TIN FOODS
GRANS
prliers AS " ككي Ak
ぎ 但 Ο C 9)ial NEEDs
NWP 2 6 5 8 7 ケと لام*
r Фо 40 USSALE o
E. SITTAMPALAM & SONS
223, Fifth Cross Street,
Colombo-11.
ή

Page 31
LUSINI
"III
Wgraig RNA,
|
S.
NIU
 

胃 ܒ ܒ ܒܒܕܒ
| 1.: {: EMI :EE 1933
晶*
Deller; il
WALL PANELLING
CHP
TIMEER
JANGELINE
# B / HR MIX LR STREET
COLOMB-1.
LLS SaS YTTT Su S TGGLS uuSaSLL SSaSSKSSK S L LS uSuSY
Allisi