கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலம் 1987.09

Page 1
■a@
ஜ ಜ್ಞೆ
ಸ್"
"منـــــــــــــــــــــــــــــــــــــي
تعي
 
 

1暱
心
歴

Page 2
(og. L-leLui 1987
ஆசிரியர்
நதி
ஆசிரியர் குழு :
இரா. திரவியம் சமந்தா
ச. மா. பன்னீர்ச் செல்வம்
விலை ரூ. 1.50
ஆண்டுச் சந்தா ரூ. 20
O
தொடர்புக்கு :
பாலம்
12, முதல் பிரதான சாலை,
நேரு நகர்,
அடையாறு, சென்னை-20.
தொலைபேசி : 410351
 

உங்களைத் தொடர்ந்து வரும் பாலம்
ஈலம் பன்னிரண்டாவது இதழை உங்களிடம் விக்கிருேம். பன்னிரண்டு இதழ்களையும் கொண்டு நில் சிரமங்களும் நெருக்கடிகளும் இருந்தன.
உங்கள் ஆதரவும் அரவணைப்பும் கூடவே சியையும் நெருக்கடிகளை வெல்லுகிற மனப்பக்கு 5யும் தந்தன.
pப் போராட்டத்தை மட்டுமல்ல, உலக விடுதலை ங்களின் அறிமுகத்தையும் நாம் தொடர்ந்து ாம். இதனுல் நம் மண்ணை நாம் மறந்தோம் . அவ்வப்போது தமிழகத்திலும் கால் பதித்து
3D. s
“றி இருக்கிற தற்போதைய சூழ்நிலையில்தான், தின் தேவை மிகவும் அவசியப்படுகிறது.
pத்துக்கும் தமிழகத்துக்குமான கலை இலக்கிய நட் வலிமை பெற வேண்டும். அதற்கு பாலம்தான்
சாதனம்.
லத்தின் கடந்த ஓராண்டுப் பயணத்தை நாங் ரும்பிப் பார்க்கிருேம். பல்வேறு விமர்சனங்கள் |க்கே இருக்கிறது. நீங்களும் உங்கள் விமர் த எழுதி அனுப்ப வேண்டுகிருேம் .
"லம் இன்னும் தன் குழந்தைப் பருவத்தைத் -வில்லை. தவழ்கிற தளர் நடைப் பருவம். நடைய உதவிக்கரங்கள் இணைந்தால் தான் க் கொண்டு எங்களால் நடக்க இயலும்.
3தா சேர்ப்பதும் நன்கொடை சேர்ப்பதும் உங்
தான் முடியும்.
ண்பர்கள் வருவார்கள், தொடர்பு கொள்வார்கள்
இனி காத்திருக்காது நீங்களே பாலத்தை தெடுக்க வேண்டும். ஆதரவைப் பெருக்க டும்.
மிழின்-தமிழ்க் கலாச்சாரத்தின் தூதுவனுக பாலம் ர்ந்து வெளிவரும்.
நிய சூழ்நிலைக்கேற்ப பாலம் தன்னை வடிவமைத் காண்டு உங்களைத் தொடர்ந்து வரும்.

Page 3
தோல்வியோ
உண்மையாக இருக்க வேண்டும் ஒரு புரட்சிக்காரன். “இலட்சியத்திற்கு உண்மையா கவும், இலட்சியத்தைப் பற்றிக் கொண்டு செயல்படும் சக்தியாக மாற இருக்கிற மக்க ளிடமும் உண்மையாக இருக்கவேண்டும்.
சேகுவரா இதற்கு வாழ்ந்து காட்டிய உதாரணம்.
குவாதி மாலாவிலிருந்து மெக்சிகோ வந்து சேர்ந்தார் சேகுவாரா.
அப்போது மெக்சிகோவில் மேலோங்கி யிருந்த அரசியல் சூழ்நிலை குவேராவிற்கு மகிழ்ச்சியூட்டுவதாக இல்லை. இந்த நூற் ருண்டின் ஆரம்ப இருபதாம் ஆண்டுகளில் பிற்போக்குச் சர்வாதிகாரி போர் பிரியோ தியாஸ் என்பவனை வீழ்த்தி விட்டு மலர்ந்த மெக்சிகோ புரட்சி கருகத் துவங்கி இருந்தது. லாப நோக்கம் கொண்ட புதிய உடைமை யாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தனர். அமெரிக்காவின் மூலதனப் பாய்ச்சலுக்கு ஏது வாக அனைத்து வாயில்களையும் அகலத்திறந்து விட்டனர். இதை மூடி மறைக்கப் போலிப் புரட்சிக் கோஷங்களை முன்வைத்தனர்.
இடதுசாரி சக்திகள் தங்களுக்குள்ளாக கருத்து முரண்பாட்டில் பிரிந்து கிடந்தனர்.
தொல்லைகளைத் தொடர்ந்து அனுபவித்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியோ தேசத்தில் உள்ள முற்போக்காளர்களைத் திரட்டி ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை அமைக்க முடியவில்லை.
மெக்சிகோவின் இத்தகைய அரசியல் சூழ் நிலை சேகுவராவிற்கு உற்சாக மூட்டுவதாக இல்லை.
அரசியல் சூழல் இவ்விதம் இருந்தாலும் மெக்சிகோவை அதன் உழைக்கும் மக்களை கவிஞர்களை, கலைஞர்களை தொன்மைமிக்க அதன் கலாச்சாரத்தை, எழில்மிக்க வனப் பிரதேசங் களை, அங்கிருந்துவரும் தூய காற்றையெல் லாம் நேசித்தார்.

மெக்சிகோவில் சே இருக்கும்போது தான் ஹில்டா வந்து சேர்ந்தார். இங்கேயே இரு வரும் மணம் முடித்துக் கொண்டனர்.
ஆருயிர் மனைவியையும் காப்பாற்ற வேண் டிய பொறுப்பு சேகுவராவுக்கு வந்து சேர்ந் தது. எனவே வேலை தேடும் முயற்சியில் தீவிர மாக இறங்கி இறுதியில் புத்தக விற்பனையாள ராக மாறினுர். போண்டோ டி கல்சரா எகணு மிக்கா என்ற உள்ளூர் வெளியீட்டு நிறுவனத் தின் புத்தகங்களை விற்ருர்.
இந்த நிறுவனப் புத்தகங்களை விற்றதற் கும் காரணம் இருந்தது. அதிகமான அள வுக்கு சமுதாயப் பிரச்சினைகளை முன் வைக்கும் இலக்கியங்களை இவர்கள்தான் வெளியிட்டனர்.
புரட்சிக்காரரான சே புத்தக வியாபாரி என்ற முறையில் தோல்வியைத்தான் கண்டார்.
புத்தகங்களை விற்பதைக் காட்டிலும் புத்த கங்களைப் பற்றி விவாதிப்பதில்தான் அதிக நேரத்தைச் செலவிட்டார்.
சே தொய்வில்லாத உணர்வோடு புத்தகங் களை நேசித்தார். புத்தகங்களைப் படிப்பதற் கென்றே ஒரு புத்தகக் கடையில் இரவு க் காவலராகப் பணிக்கு அமர்ந்தார்.
இவ்வாறு பிடித்தம்ான பணிகள் வாழ்க் கைக்கு உதவும் படியாக இல்லை. என்ருலும் இறுதியில் உள்ளூர் மருத்துவமனே அலர்ஜிப் பிரிவில் வேலை கிடைத்தது. வாழ்க்கைக்கு ஓரளவு உதவும் படியாக இருந்தது. தேசிய பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக சிறிது க்ாலம் பணியாற்றினுர்,
1956 பிப்ரவரி 15ஆம் தேதி ஹில்டா ஒரு பெண் மகவை ஈன்றெடுத்தார். அக்குழந் தைக்கு ஹில்டாவின் அம்மாவின் பெயர்
சூட்டப்பட்டது.

Page 4
2
ஈழ நண்பர் கழகத்தின் மாநில சிறப்புக் கூட்டம், மதுரையில் 30.8.1987 அன்று மாலை யில் நடைபெற்றது. தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கலந்து கொண்ட தோழர்களிடையே, ஈழப் புரட்சி அமைப்பின் புரட்சிகர நிறைவேற்றுக் குழு உறுப்பினர் தோழர் சங்கர், இலங்கை-இந்திய ஒப்பந்த ஈழப்போராட்டத்தின் நிலையும், ஈரோசின் நிலைப்பாடும் என்பது பற்றி உரையாற்றினுர், 1) ஜூலை 22-ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, 2. லட்சம் மலையக மக்களை நாடு கடத்தும் செயலை வன்மையாகக் கண்டித் தும், 2) தமிழ்ப் பிரதேசங்களில், ஒப்பந்தத்தின் பின் நடைபெறும் திட்டமிட்ட சிங்களக் குடி யேற்றங்களை அகற்றுமாறும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்கனவே உள்ள மாநில செயற்குழு உறுப்பினர்களுடன், புதிதாக கோவை மு.
ஈன்றெடுத்தப் பெண் மகவு எந்த நாட்டை சேர்ந்தது என்று குறிப்பிடுவது ?
முறைப்படி பார்த்தால் அக்குழந்தையைப் பெருவியன் என்ருே அர்ஜென்டைன் என்ருே பதிந்திருக்க வேண்டும். ஆணுல் 'சே'வும் * ஹில்டா' வும் அவ்வாறு செய்யவில்லை. மெக் சிகன் என்றே பதிவு செய்தனர்.
"நாங்கள் தோல்வியுற்று நா ட் டி ற்கு வெளியே வாழ்ந்த கசப்பான நாட்களில் எங் களுக்கு இடமளித்து ஆதரவு காட்டிய மெக் சிகன் மக்களுக்கு மரியாதை செய்யும் பொருட் டே நாங்கள் எங்கள் குழந்தையை மெக்சிகன் என்றே பதிவு செய்தோம் மெக்சிகோ பத்திரி கைக்குப் பேட்டியளித்தபோது சே கூறினுர்,
1955 ஜூன் இறுதி நாட்களில் மருத்துவர் சேயைச் சந்திக்க இருவர் வந்தனர். வந்த இருவரில் ஒருவர் குவாதிமாலாவில் நண்பராக இருந்த நிகோ லாபெஸ். மற்றவர் ரால், இரு வரும் எதிர்பாராத சந்திப்பு. வியப்புமாய் மகிழ்ச்சியுமாய் அவர்களை பிணைத்தது.
மாங்கடாக் கொத்தளங்கள் மீது தாக்கு தல் நடத்திக் கைதான தன்னுடைய தோழர் கள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டனர் என்றும் நிகோ குவேராவிடம் கூறினர். அவர்கள் பாடிஸ்டாவின் கியூபா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக கூறினுர், ரால், காஸ்ட்ரோவிடம் சேயை அறிமுகப்படுத்தி வைப்பதாகக் கூறினுர் .

பாலம்
பாலன் (கோவை மாவட்டம்), D 6தேவன் (சென்னை மாநகரம்), மதிவாணன் (திருச்சி மாவட்டம்), ஆகியோர் தெரிவு செய்
யப்பட்டு இணைக்கப்பட்டனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் ஈழ நண்பர் கழகத் தலைவர் தோழர் இரா. திரவியம், **இலங்கை-இந்திய ஒப்பந்தமும், நமது நிலைப் பாடும்” என்ற தலைப்பில் உரையாற்றினுர். * கடந்த கால ஈழ நண்பர் கழகச் செயற்பாடு கள்’ குறித்தான அறிக்கை தோழர் ச. மா. பன் னிர்ச்செல்வம் அவர்களால் கூட்டத்தினர் முன் விளக்கப்பட்டது. 'பாலம்” பற்றிய விமர் சனங்களுக்கு தோழர் சமந்தா பதிலளித்து, பாலத்தின் அவசியம் பற்றி உரையாற்றினுர்,
இரவு 9 மணிக்கு தோழர் அ. தனசேகர் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
1955 ஜூலை 9 ஆம் தேதி அர்ஜன்டைன வின் சுதந்திரத் தினத்தன்று காஸ்ட்ரோ மெக்சிகோ வந்து சேர்ந்தார்.
பிடல்காஸ்ட்ரோவிடம் இளம் அர்ஜென் டைன்மருத்துவர் பற்றி ரால் கூறிஞர். பிடலும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ருர்,
இருவரும் முதன் முதலாக சந்தித்துக் கொண்டனர். முதல் சந்திப்பிலேயே சர்வதேச அரசியல் நிலவரங்கள் குறித்து உரையாடி s
‘என்னை விடவும் புரட்சிகர கருத்துகளில் முதிர்ச்சி பெற்று விளங்கினுர் பிடல். தத்துவத் தெளிவிலும் கொள்கைப் பிடிப்பிலும் அவர் பல படிகள் முன்னேறி இருந்தார். என்னுேடு ஒப்பிடுகிறபோது வளர்ச்சியுற்ற புரட்சிக்காரர் அவர்’ என்று பிற்காலத்தில் குறிப்பிட்டுள்ளார். *சே' யிடம் பிடல் தன்னுடைய தமது இயக்கத்தினுடைய திட்டங்கள் அரசியல் கொள் கைகள் பற்றியும் எடுத்துக் கூறினுர்,
"நாம் நமது இராணுவ நடவடிக்கைகளை கியூபாவின் ஒரியண்டே மாநிலத்திலிருந்து தொடங்க இருக்கிருேம். கியூபாவின் மற்ற மாநிலங்களை விட ஒரியண்டே மாநிலம்தான் வீரமும் புரட்சிகர உணர்வுவளமும் தேசப் பக்தச் செறிவும் நிறைந்த மாநிலமாகும். இங்கே தான் புரட்சிகர இயக்கத்திற்கான ஆதரவாளர்களும் நண்பர்களும் நிரம்ப உள்ள னர் என்று காஸ்ட்ரோ கூறினர்.
தொடரும்

Page 5
பாலம்
அன்பையும் நேசத்தையும் சமாதானத்தையும் எவ்வளவுதான் உயர்த்திப் பிடித்தாலும். . .
பாணும விதிகளின்படி விலங்குகளிலிருந்து மனிதன் தோன்றினுன். மனிதனுக மாறிய பின் மனிதகுல வளர்ச்சி என்பது ஆச்சர்யத் தில் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது.
விலங்குகள் எப்பொழுதும் விலங்குகளா கவே இருக்க, மனிதன் மட்டும் காட்டு மிராண்டி நிலையிலிருந்து இன்றைக்கு காற்றை திசை மாற்றுகிற அளவுக்கு வளர்ந்து விட் டான். ஆயிரக் கணக்கான மைல் தூரத்தை யும் கடந்து உடனுக்குடன் பேசவும் காணவும் கூடிய வசதிகளைக் கண்டு பிடித்து விட்டான். தூரத்தை கடந்து நிற்கும் மனிதன் காலத்தை யும் கடந்து நிற்க இயற்கையோடு போரிடு கிருன். நாகரிகமும் பண்பாடும் ம னி த னை புதியவனுக்கி வைத்திருக்கிறது.
தொலைக்காட்சி, வானுெலி, தொலைபேசி, டெலிபிரிண்டர், தொலைத் தொடர்பு சாதனம், மின் வசதி, இயந்திர வளர்ச்சி இவ்வளவும் மனிதன் கண்டு பிடிப்புகள்தான். ஆணுலும் இவ்வளவு நவீன வசதிகள் ம னி த னை யு ம் மாற்றி இருக்கிறது.
இன்றைய தினத்திலிருந்து ஓர் ஆயிரம் ஆண்டுகள் திரும்பி பார்த்தோம் என்ருல் நம்முடைய மூதாதையர்தானு இவர்கள் என்று நமக்கு கேள்வி பிறந்து விடும். அந்த அள விற்கு நாம் அடையாளம் மாறிப் போனுேம் .
 

இவ்வளவு வளர்ச்சியும் எப்படி சாத்திய மானது ?
மனிதனுடைய "கண்டு பிடிப்பு’ எனும் மந்திர சக்திதான் இதை சாத்தியமாக்கியது.
மனிதனுடைய உழைப்பும், தேடல்மிக்க மனமும் கண்டுபிடிப்பை கண்டு கொள் ள வைத்தன.
மனிதன் ஆடு, மாடுகளை பழக்கி தன்னு டைய கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தான். விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டான். அதற்கு ஆடு மாடுகளையும் பயன் படுத்தினுன். தேவைக்கு அதிகமான உற்பத்தி வளர்ச்சி *சொத்து" என்றும், அது ஒருவனுக்குரியது என்றும் மாறுதல் வந்தது.
இயற்கையின் ஒரு அம்சமாக பூமியை மனிதனின் அதிகாரக் துண்டுகளாக்கிப் போட்டன.
உற்பத்தி வளர்ச்சியும் தனிமனிதனிடம் செல்வம் சேர்தலும் புயல் வேகம் பெற்றன.
உழைப்பை மிச்சப்படுத்த இயந்திரம் கண்டு பிடித்த மனிதன் அந்த இயந்திரமே ஆயிரக்கணக்கான சக மனிதனின் உழைப்பைவாழ்க்கையைப் பறிக்கப் போகிறது என்பதை யும் அந்த இயந்திரம் தனி ஒருவனுக்குச் சொந்தமாகப் போகிறது என்பதையும் அறிய வில்லை.
ஆனல் இது நடந்தது.
மனிதன் தன் தேவைக்காக தானே உழைத்துப் பூர்த்தி செய்து வந்தவன். இயந் திரம் வந்த பின் அது உற்பத்தி செய்யும் பொருள்களுக்குச் சந்தையாகிப் போனுன்.
மனிதன் உழைப்பில் உபரியும் தனிமனி தனுக்குச் செல்வ வளமும் அதிகரிக்க/நிர்வாக முறைகள் சமூக ஒழுங்கு முறைகள் எனும் பெயரில் அதிகாரச் சிம்மாசனம் கடவுள் அவதாரம் எடுக்க ஆரம்பித்தது.
சுதந்திரமும் தேடலும் கண்டுபிடிப்புமாக
இருந்த மனிதனுக்குத்தான் சிறையும் தண்
டனையும் அதிகாரக் கொடு நெருப்பும் அவன் விரும்பாமலேயே வந்து சேர்ந்தது.
அன்பு என்பது நேசிப்பதும் சந்தோஷிப் பதும் கண்ணிராய் உருகுவதும் என்பது போய் எல்லாவற்றையும் காசால் அளந்துபார்க்கிற கருமம் வந்து சேர்ந்தது.
இருகை விரித்து அன்பால் இந்த உல கத்தை ஆரத்தழுவ நினைத்தாலும் சரி, சமா தானம் சுதந்திரம் என்று நேசப் பு(Rவை சிmக

Page 6
4
விரித்து பறக்க வைத்தாலும் சரி கிடைப்பது சிறையும் துப்பாக்கிச் சூடும் தானே.
சுதந்திரம் என்பது பாவமான கா ரிய மல்ல.
வீர சுதந்திரம் கோரியதற்காகத்தான் பகத் சிங் தூக்கில் தொங்கவிடப் பட்டான்.
வ. உ. சி. செக்கிழுத்தான் , நெல்சன் மாண் டெலோ இன்னும் சிறையிலிருக்கிருன்.
இது 19 ஆம் 20 ஆம் நூற்ருண்டில் சுதந் திரம் கேட்டவர்களுக்கு மட்டுமல்ல.
10 ஆம் நூற்ருண்டில் பக்தி இயக்கம் கொடிகட்டிப் பறந்ததே! அப்போது நந்த னுக்கு என்ன நேர்ந்தது ? கண்ணப்பன் கண் டது என்ன ? ~്. -
நில உடைமையின் உச்சம் தமிழகத்தைப் பீடித்து கவ்விய காலம் அது.
மன்னர்களின் நாடு பிடிக்கும் வெறி வீரர்
களே அ டி  ைம ஆக்கியது. அடிமை களை சேவகம் புரியும் ஆயுதபாணி ஆக்கியது.
செல்வச் செழிப்பில் மிதக்க மக்களைக் கசக்கிப் பிழிந்தார்கள். சாதியப் பிரிவினைகள் மானுடத்தைக் கிழித்துப் போட்டு காலில் மிதித்தன.
அப்போதுதான் 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்ற குரல் பக்தி மார்க் கத்தில் எழுந்தது. பக்தி மார்க்கத்திலாவது தங்களுக்கு சமமான சமத்துவம் கிடைக்காதா என்று எங்கியவன் நந்தன். கண்ணப்பனும் கனவு கண்டான். அதற்காக பக்தியில் கனிந் தார்கள். கண்ணீரில் நனைந்தார்கள். ஆனல் என்ன நடந்தது ?
கோயில் கொடி மரங்கள் கொழுவேற்றும் கழு மரங்களாய் இவர்களை இம்சித்தன.
பூணுரலணிந்த அந்தணர்கள் சாதியக் கொடூரத்தின் கலசமாய் இருந்தார்கள்.
நந்தி கல்லாய் போனது. சிவன் சவமாகி
நின்ருன்.
சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காக பரத்தைய
வீட்டுக்கு தூது சென்றவர் சிவபெருமான்.
திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் த தது சிவனல்லவோ, சிவகாமியல்லவோ,
ஆனல் நந்தன் வீடு பேறு என்ற பெயரி தீயில் மூழ்கடிக்கப் பட்டார்.

Lufrato .
கண்ணப்ப நாயனூர் கண்கள் பிடுங்கப் பட்டார். வீடு பேறு பெறத்தான் கண்களை இழந்தார்.
சுந்தரமூர்த்தி சுவாமிக்கும் திருஞான சம்பந்தருக்கும் தூது செல்லவும் பால் புகட்டி விடவும்வல்ல சிவபெருமான், நந்தனை எரிக் கவும் கண்ணப்பன் கண்களைப் பிடுங்கவும் எப்படிச் சம்மதித்தார் ?
மோட்சம் தருவதில் இவ்வளவு பேதம் "{jقJت
சுந்தரமூர்த்தி சுவாமிகளும் திருஞான சம்பந்தரும் செல்வச் செழிப்பு மிக்க அரசியல் செல்வாக்கு கூடிய உயர்குடியில் பிராமணர் களாகப் பிறந்ததால் இவ்வளவு சலுகையா ? பறையன் நந்தன், வேடுவர் கண்ணப்பன்,
இவர்களுக்கு இவ்வளவு அநீதியா ?
பக்தி மார்க்கம் தான்.
அதிகாரத்தின் காலடியில் வ ண ங் கி க் கிடந்தது.
பக்தி என்ற நினைப்பில் கட்டுகளற்று சம நிலை கிடைக்கும் என்று சென்ற நந்தனின் கண்ணப்பனின் பக்திச் சுதந்திரம் வழிபாட்டு வேட்கை என்ன ஆனது? மலர்களைத் தூவி அன்பை, பக்தியை வெளிப்படுத்த நினைத்தும் சாதியால் இழிவு படுத்தி நெருப்பிலிட வைத் ததும் கண்களைப் பறித்ததும் அன்பால் பொழு தளக்கும் ஆண்டவன் செயலா ? ஆண்டவனின் பேரில் அதிகாரச் செருக்கில் அமர்ந்து வலம் வந்த தந்திரம் மிக்க மந்திரம் வல்ல ஆட்சி யாளர்கள் சதியா ?
அன்பையும் நேசத்தையும் சமாதானத்தையும் எவ்வளவுதான் உயர்த்திப் பிடித்தாலும் ஆட்சியாளர்கள் அதிகாரச் செல்வர்கள் தருவது ஒரேமாதிரி பதில்தான். சிறையிலிடுவது சித்ரவதை செய்வது சாகடிப்பது என்பதுதான்.
அன்பாலும் நேசத்தாலும் மானுடத்தைத் தழுவிய படியே இந்த வகையான பதிலை திருப்பித்தர நம்மாலும் முடியும். அப்போது சூரியன் உதிப்பான், ஆயிர மா யி ர மா ன பன்னீர்ப்பூக்களோடு.
1) சாதாரணன்

Page 7
தஞ்சை பாலைவனம் ஆகிறது
கங்கை காவிரி இணைப்பு
இராணுவம் நாட்டுக்கு பயன்படட்டும்
இந் வெள்ளட் 6).pds 5D)
ரின்றி த
40 தண்ணினி
தண் போதெல் கள் கங்ை
காவி பாடியது
தமிழ பகுதியை தஞ்சை !
விலை
தஞ்சை வைக்கிற
தண் தேவையு
திட்ட
கைகளில்
ஆலே செய்வதே
20 கோடி ெ தூங்கப் C
எல்ல கோடி என நம்முடை மேல் வீ காவிரித் யதுதானே வெட்டினு காவிரி இ மையில்
தண் இராணுவ வழிக்கிே தீர்க்கட்டு

தியாவின் வட மாநிலங்கள் ஒவ்வோராண்டும் பெருக்க்ால் தண்ணிரில் தத்தளிப்பது கி வருகிறது. தென் மாநிலங்கள் தண்ணி த்தளிப்பதும் பழகிப் போன ஒன்ருகி விட்டது.
ஆண்டு 凸TQ》 சுதந்திர இந்தியாவில் ர சமாளிக்கவே முடியவில்லை.
ணிர்ப் பெருக்கும் வறட்சியும் வந்து பாதிக்கும் லாம் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர் க காவிரி இணைப்புப் பற்றியே பேசுவார்கள்.
ரி வற்ருத ஜீவ நதி என்று பாரதியார் இன்று பொய்யாய் போனது.
கத்தின் உணவுத் தேவையில் மூன்றில் இரு பூர்த்தி செய்வது தஞ்சை மாவட்டம். இன்று பாலைவனம் தான்.
வாசி உயர்வும் வேலைவாய்ப்பின்மையும் மாவட்ட விவசாயத் தொழிலாளர்களை நலிய . بقي
ணிரும் இருக்கிறது. 'தண்ணிருக்கான ம் இருக்கிறது. −
மிட வேண்டிய பொறுப்பு மத்திய அரசின் இருக்கிறது.
ாசனைக்கு குழுக்களும் திட்ட மதிப்பீடுகளும் ாடு சரி.
ஆயிரம் கோடி செலவாகும் 30 ஆயிரம்
சலவாகும் என்று பயமுறுத்தலோடு அரசு போய்விடும்.
ாம் சரி 20 ஆயிரம் கோடி 30 ஆயிரம் ாறு செலவழிக்கிருேம். அது இராணுவத்திற்கு ப இராணுவத்தில் 10 லட்சம் பேருக்கு ார்கள் இருக்கிருர்கள். அவர்களை கங்கை திட்ட ஆக்கப் பணியில் ஈடுபடுத்த வேண்டி ா. ஆண்டுக்கு 2 இலட்சம் பேர் கால்வாயை ல் கூட ஒரு சில ஆண்டுகளில் கங்கை ணைந்து விடுமே. இராணுவச் செலவு உண்
நாட்டுக்காகப் பயன்பட்டதாகவும் அமையும்.
ணிரால் மக்கள் அவஸ்தைபடும் போது த்திற்குப் பணத்தைத் தண்ணிராய்ச் செல ம் . அது தண்ணிர்ப் பிரச்சனையைத்
s sf).

Page 8
0 சமீபத்தில் ஈ ழ த் தி ற்கு சென்ற நீங்கள் இந்திய இலங்கை ஒப்ப ந் த த் தை எதிர்த்துப் பேசினிர்களா? அல்லது ஆதரித்துப் பேசி னிர்களா?
9, upg5t Gŝu TJITL oLL - Lib தொடங்கி இவ்வளவு காலத்திற் குப் பிறகு, ஈழத்தில் மயிலணை என்ற ஊரில் ஈழவர் முன்னணி நடத்திய பொதுக் கூட்ட மொன்றில் நான் பேசினேன். இந்த ஒப்பந்தம் இனக்கலவரத் திற்கு முற்றுப் புள்ளி வைத்தி ருக்கிறது. இனி அங்கே ராணு வம் கற்பழிக்கிறது; இளைஞர் களை வேட்டையாடுகிறது; சித்ர வதை செய்கிறது என்ற பேச் சிற்கு இடமில்லை. இனி அங்கே ரத்த மழையில்லை பொம்பர் தாக்குதலில்லை; செல்கள் விழப் போவதில்லை. ஆணுல் இந்த ஒப்பந்தத்திற்கும் உண்மை யான ஈழப்பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலங்கை சோவனிச அரசு, இந்துமகா சமுத்திரத்தில் அமெரிக்க நாச காரச் சக்திகளுக்கு இடங் கொடுத்து விட்டது என்பதனுல், அது இந்திய நலன்களுக்கு பாதிப்பாக இருப்பதனுல், இப் பிரச்சினையில் அக்கறை எடுத் துக் கொண்டு சோவியத் ஆதர வோடு (ஏனென்ருல் சோவியத்
6fb35ứd Balan இந்து மகா தேவை) இந்தி இலங்கை அர நாடுகளின் சா கொண்ட ஒப்ப ஞல் அமெரிக் மொசாத் பேர் சக்திகளின் தை யிலிருந்து அ இனி அமெரிக் இலங்கைக்கு ெ விகளை இந்தி
பெற்றுக் கொ பந்தம் வழி ெ
தான் இந்த
3F/Tgt (TLD3FLD. g5I. dix மாதிரி உள சிங்கள ராணு வாழும் பகுதிக யேற்றுவது; வி
இணைத்து ஒரு லத்தை உருவ
றன. ஆஞல் அ பாளி மக்களில்
உரிமை பொரு
Guy Fréfini களுக்கிடைே ஈழமக்களின் மக்களில் ப வர்களையும் ஈழத்துச் சூ
 

ய இலங்கை ஒப்பந்தம் :
ாற்றப்பட்டு விட்டதாக
மக்கள் நினைக்கிருர்கள்
பெரியார்தாசன் பேட்டி
ce of power
சமுத்திரத்தில் ய அ ர சு ம் , சும் அணிசேரா ‘ர்பில் செய் து ந்தம் இது. இத கா இஸ்ரேல் ான்ற அந்நியச்
Uயீடு இலங்கை,
அகற்றப்பட்டது. க்காவிட மிருந்து பற்று வந்த உத யாவிட மிருந்து ள்ள இந்த ஒப் சய்கிறது. இது
ஒப்பந்தத்தின் 2sosti u u Tags appenர்ள அம்சங்கள். வங்களை மக்கள் எளிலிருந்து வெளி படக்கு கிழக்கை ரு தமிழ் மாநி
ாக்குவது போன்
|ங்குள்ள உழைப் ன் சுய நிர்ணய ளாதார நிர்ப்பந்
யர் பெரியார்தாசன் இந்திய
தம், குடியேற்றங்களால் காணி பறிக்கப்படுதல், அரசியலில் அனுதைகளாக்கப்படுதல் முத லான அடிப்படைப் பிரச்சினை களில் தலையிட இந்தியாவிற்கு இந்த ஒப்பந்தம் அதிகாரம் தர வில்லை இப்படியாய், சாதக மாயும் பாதகமாயும் பல அம்சங் கள் உள்ளன. இவற்றை நான் அங்கு நடந்த பொதுக் கூட்டங் களிலும், சந்தித்தவர்களிடமும் பேசினேன்.
() ஈழத்திற்கு நீங்கள் சென்ற
திற்கான நோக்கம் என்ன?
() சிங்கள ராணுவத் தாக்கு தலுக்கு எதிராக தமிழ்ப் போரா ளிகள் போராடுகிருர்கள் என்று மட்டுமே ஈழப் போராட்டம் இங்கே அறிமுகப் படுத்தப் பட் டது. அதற்கான தீர்வு டில்லி யின் கையில் இருப்பதாய் பிரச் சாரம் செய்யப்பட்டது. இது தவறு என்பதை அறிந்த நான் அது எவ்வளவு தூரம் தவறு
இலங்கை அரசு
ய ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் ஈழம் சென்று
உணர்வுகளை அறிந்து வந்துள்ளார்.
தமிழ்
ல்வேறு தரப்பினரை மட்டுமல்ல, சில சிங்கள
சந்திந்துள்ளார்.
மக்கள் உணர்வுகளையும்
ழ் நிலையையும் இப்பேட்டியில் விளக்கியுள்ளார்.

Page 9
பாலம்
என்பதை அந்த நாட்டு மக் களையே நேரில் சந்தித்து அறிந்து வர ஆவல் கொண் டேன். மேலும் ஈழப் போராட் டம் பற்றி நான் புரிந்துக் கொண்டதை ச ரி பார்த் து கொள்ளவும் விரும்பினேன்.
() இந்தியக் அமைதிப் படை வந்துள்ளதைப் பற்றி அங் குள்ள மக்கள் என்ன கருதுகிருர் &,6iी? '' -
நம்ம டீ.வியில இப்போ
இலங்கையில் அமைதி திரும்
பறதை தினமும் காட்டுருங்க. ஆணுல் மக்களின் பொது நிலையை பெரும்பாலான உழைப்பாளி மக்கள் இந்திய ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிருர்கள். அந் தப் பகுதிகளுக்கு டி. வி. கேமரா போவதேயில்லை. இந்திய ராணு வங்கள் கிராமங்களில் முகாம் அமைப்பதை சிங்கள மற்றும். தமிழ்ப் பாட்டாளி மக்கள் எதிர்த்து வருகிருர்கள். இந்திய அமைதிப் ப ைடயி ன ரின் எண்ணிக்கை மூவாயிரம் என்று இங்கே தவருகவே சொல்லப் படுகிறது. அங்கே நானிருந்த வரை முப்பதாயிரத்திற்கும் அதி கமான இந்திய ராணுவத்தினர் இருந்தனர். அங்கிருந்து 60 இந்திய ராணுவத்தினர் திரும்பு வதை டீவியில் காண்பிக்கிருர் கள். ஆனல் அவர்களுக்குப் பதி லாக ஆயிரம் பேர் இலங்கைக்கு அனுப்பப்படுகிருர்கள். இந்து மகா சமுத்திரத்தில் அமெரிக்கா வின் ஆதிக்கத்தை தடுத்துநிறுத் தும் வரை இந்திய ராணுவம் அங்கே இருக்கும்.
ஆணுல் சிங்கள மக்கள் அமை திப் படை வந்ததை இந்தியத் தலையீடாக நினைக்கிருர்கள். நாங்களென்ன -இந்தியாவிற்கு அடிமைகளா என்று கேட்கிருர் கள். நான் அங்கே சில சிங்களர் களை சந்தித்தேன். அவர்கள், **இந்தியத் தலையீடு எங்களுக் குத் துயரந்தரும் அதிர்ச்சி’ என்ருர்கள். தமிழ்ப் பாட்டாளி
மக்களுக்கும் இது துயரந்தரும்
காண்பிக்கவில்லை.
அதிர்ச்சியாகத் இந்தியத் தலை நீக்குவது என் இலங்கை பாட் சிந்தித்துக் ெ கள். அமைதிட் வால், தங்களு படைப் பிரச்சி தீரப்போவதில்? இவர்கள் அறிந் ஆணுல் தமிழ் பூ வியாபாரிகளும் வத்திற்கு மா ஸ்வீட் கொடு கிருர்கள்.
0இந்திய-இ பந்தம் பற்றி கருத்து நிலவுகி
() () போராட்ட வீட்டுக்குள் அம 2 வீடியோ சி பார்த்த பூர்ச இப்போது ஆறு பார்க்கிருர்கள். கூச்சலிடுகிருர்க மலையகத் தோ லாளர்கள் உட்ட நளவர்கள், பள் குப் பகுதி விவ வரும் இந்த கொஞ்சங்கூட இந்த ஒப்பந்தத் எப்படி போர எந்தத் தலைை LDái) தவித்து ருக்கிருர்கள். ே கங்களும் இந்த எதிர்க்க முடிய தில் உள்ளன. டத்தில் 20 ஆ மான தமிழ் மக் கள். ஆணுல் ரத்தம் சிந்தாம காமல் உ ல ச மிகத் தந்திர
ஒப்ப ستLJi. L
இலங்கையிலி ஏகாதிபத்தியத் இந்தியா போ, படுத்திக் கொ

ானிருக்கிறது. ட்டை எப்படி }] ତ LD !T $ $ டாளி மக்களும்
ாண்டிருக்கிருர்
படையின் வர டைய அடிப் னகள் எதுவும் I) என்பதை திருக்கிருர்கள். சுவா மக்களும் இந்திய ராணு ல போட்டு, த்து வரவேற்
லங்கை ஒப் அங்கே என்ன
Dgi ?
- காலத்தில் ர்ந்து தினமும் னி மா க் களை r 6 மக்கள் சினிமாக்களைப் சந் தோ சக்
ாட்டத் தொழி
ட மீனவர்கள், !
ாளர்கள் கிழக் சாயிகள் அனை ஒப்பந்தத்தை விரும்பவில்லை. திற்கு எதிராாக "டுவது என்று மயும் இல்லா க் கொண்டி பாராளி இயக் ஒப்பந்தத்தை ாத நிர்பந்தத்
இந்தப் போராட்
பிரத்திற்குமதிக கள் இறந்தார் கொஞ்சக் கூட }, மேனி நலுங் த் தி லே யே ாக செய்யப்
தம் இது.
ந்துஅமெரிக்க 2த அகற்ற ாளிகளை பயன் ண்டது. மிதவா
இந்த
-త్రుడి .
தத் தலைவர்களும் முதலாளித் துவ அறிவுஜீவிகளும் கள்ளத் தனமாய் தங்களுடைய குறுகிய சொந்த நல ன் களுக் காக ஒ ப் ப ந் த த்  ைத ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். ஈராஸைத் தவிர மற்ற ஈ.பி.ஆர் எல். எஃப் முதலிட்ட எல்லா இயக்கங்களும். இடைக்கால அரசாங்கத்தில் பங்கே ற் க விரும்புகிருர்கள். இவர்கள் ஒப் பந்தத்தை ஏற்கவில்லை. ஆணுல் அதன் பலனை அனு பவிக்க விரும்புகிருர்கள். ஈழத் தில் நான் இருந்த போது ஈரோஸ் வெளியிட்ட அறிக்கை களில் அது தேர்தலில் பங்கு கொள்ளாது என்று தெரிவிக்கப் பட்டது. ஈரோஸின் பொது மக்கள் அமைப்பான ஈழவர் முன்னணி, தேர்தலில் போட்டி யிடுவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறது. v
() இயக்கங்களுக்கு மக்க ளிடையே ஆதரவு இப்போது எப்படியுள்ளது? ய க் க மோதல்கள் நீடிக்கின்றனவா?
பிபொதுவாக உழைக்கும் பாட்டாளி மக்களிடம் ஈரோஸ்
வாக்கு இருக்கிறது. இவர்கள் வெறும் ஆயுதக் கவர்ச்சியுடை யவர்களாக இல்லாமல் அறி களாக இருக்கிருர்கள், ஈரோ ஸைப் பற்றி ரொம்பவும் தோழமையோடு பேசுகிருர் கள். மற்ற இயக்கங்களைப் பற்றி பேசினுல், ஒன்று அச் சத்தோடோ அல்லது எடுத்
தெறிந்தோ பேசுகிருர்கள். ஆணுல் டோராட்டத்தில் உயிர் தியாகம் செய்த அனைவரையும் பாராட்டுகிருர்கள். அவர்களை இளைஞர்களாக பார்க்கிருர்களே தவிர எந்தத் இயக்கத்தைச்
சார்ந்தவர்களென்று பார்ப்ப
இயக்கங்க ளு க் கி  ைடயே யான மோதல்கள் ஒவ்வொரு இயக்கத்தினரும் இன்னுெரு

Page 10
இயக்கத்தினர் மீது அச்சமோ அல்லது பகைமையோ கொண்டிருக்கிருர்கள். தேசிய இனப் போராட்டத்தால் இது வரை அமிழ்ந்திருந்த பல பிற் போக்குத் தனங்கள் மீண்டும் முளைவிட்டு விட்டன. யாழ்ப் பாணம் கடை வீதியில் நான் ஒரு சாதிச் சண்டையை பார்த் தேன். ஏராளமான பெண்கள் ஈழப்போராட்டத்தில் கொண்டதை நாமறிவோம். ஆணுல் தற்போது அங்கு வெளி
வரும் தமிழ்ப் பத்திரிக்கைகளில்
சீதனத்தோடு மணப் பெண் கேட்டு விளம்பரங்கள் வருகின் கின்றன. வரலாற்றை பின் னுேக்கி இழுக்கும் இந்த ஈனச் செயல்களுக்கு மக்க ள் போராட்ட இயக்கங்கள் முடிவு கட்ட வேண்டும். ( ) போராட்டம் மீண்டு' தொடரும் என்பதற்கு சாத" மான சூழ்நிலைகள் அங்கு உள்
ளனவா?
*ሆ மக்கள், ** மறுபடியும் நாம் ஏமாற்றப் பட்டு விட்
பங்கு
* Loäsot பகுதி வில் தங்களுை என்ற கே தன்மை ெ அறிகுறிய வெடிக்கப்
டோமோ, தமி சரியாக ஆதரவி இயக்கங்கள் இ வந்து விட்டு 6 தியா தன் செ காக இப்படி செ என்று <鄂 கோபத்தோடும் கள். பொருளா இவர்களுக்காக இழப்பையும்,
இவர்களுக்கு 6
பையும் மாற்றி
னும் நூறு வ( போதாது. ந பட்டினி போ அரசு போர நடந்த பான் செய்ய, இல மைக்க, 70 தரப் போகிற இந்த உதவி, (pLD, 68 மேலும் செழி மே தவிர தம பயனையும் அ தில்லை என்ட தோட்டத்
ராஜ்யங்களையோ அவற்றில் எதிர்த்து நில்லுங்கள். குறைவா கேள்வியற்றுப் பணிந்து விட்டால் தும் . ஒரு முறை முழுமையாக எந்த தேசமும் ராஜ்யமும் நகர திரும்பப் பெற முடியாது. ஆக குறைவாகப் பணிந்து போங்கள் -
 

பாலம்
பகத் தோட்டத் தொழிலாளர்களும் கிழக்குப் பசாய மக்களும் இத்தனை அழிவிற்குப் பின்னுலும் உய எந்தப் பிரச்சனையும் தீர்க்கப்படவில்லையே ாபத்தோடிருக்கிருர்கள். அவர்களின் அணுதைத் தொடர்கிறது. ஆணுல் இது அவநம்பிக்கையின் ல்ல இங்கிருந்துதான் போராட்டம் மறுபடியும்
போகிறது".
ழ் நாட்டினர்
முதல் கிழக்குப் பகுதி விவசாயி பு தரவில்லையே, கள் வரை அனைத்து உழைக் |ப்படி கொண்டு கும் மக்களும் உணர்ந்திருக் விட்டதே. இந் கிருர்கள். இத்தனை அழிவிற் Fாந்த நலனுக் குப் பின்னுலும் தங்களுடைய ய்து விட்டதே!” எந்தப் பிரச்சினையும் தீர்க்கப் ஆதங்கத்தோடும் பட வில்லையே! தாங்கள் முன் இருக்கிருர் னேறப் படவில்லையே என்ற தார ரீதியாக கோபத்தோடிகுக் கி ரு ர் கள். ஏற்பட்ட அவர்களின் அரசியல் அணு மனுேரீதியாக தைத் தன்மை தொடர்கிறது.
ரற்பட்ட பாதிப் யமைக்க இன் ருஷங்கள் கூட
ஆணுல் இது அவநம்பிக்கையின் அறிகுறியல்ல; இங்கிருந்து தான் போராட்டம் மறுபடியும்
ம்மை இங்கே வெடிக்கப் போகிறது. சிங்கள டுகிற இந்திய பேரின வாதத்திற்கும், முதலா ாட்டப் புயல் எளித்துவ அரசியல் ஆதிக்கத் தயை ஆக்கம் திற்கும் எதிரான இவர்களின்
வ்கையை புனர
போராட்டம் தொடர ஈரோஸ்
கோடி ரூபாய் போன்ற மக்கள் போராட்ட தாம். ஆணுல் இயங்கங்களும், புரட்சிகர முதலாளித்துவ அமைப்புகளும் துணை நிற்க ப்பிரபுத்துவமும் வேண்டும். இப்போது இவர் $துவளர உதவு களிடம் இல்லாதது ஆயுதங் க்கு எந்தவிதப் கள் மட்டுமே. ளிக்கப் போவ 够 தை மலையகத்
தொழிலாளர்கள் பேட்டி : சமந்தா
உள்ள நகரங்களையோ அதிகமாக கப் பணிந்து போங்கள். ஒரு முறை
அது முழுமையாக அடிமைப் படுத் அடிமைப் பட்டால் பூமியில் உள்ள மும் அதன் பின் சுதந்திரத்தைத் 'வ அதிகமாக எதிர்த்து நில்லுங்கள் அமெரிக்க மகாகவி வால்ட் விட்மன்

Page 11
நாகார்ஜூனன் ஈழத்தில் நேரில் கண்டது
கண் முன் திருகோ
இந்துமா சமுத்திரத்தி
குளிர்ந்த மதியம் ஈழத்தின் காடு மற்றும் கடல் பிரதேசங் களினூடே தி ரு கே ாண மலை த் து  ைற முகத்தை நெருங்கியபோது, அனைத்து நிருபர்களும் குலுக்
கலையும் மீறி வட்டக் கண்ணுடி ஜன்னலருகில் முகங்களைப் புதைத்தனர்,
கடல் சூழ்ந்த மலையும், மலை
சூழ்ந்த கடல்களும், தூரத் திலிருந்த கோணஸ்வரர் ஆலய மும், குரங்குப் பாலமும் நாங் கள் பார்த்துக் கொண்டிருக்கு முன்பே ஜன்னலில் மறைந் தன. நேர் கீழே இந் தி ய கடற்படையைச் சார்ந்த கப் பல்கள், மீன் பிடிப்படகுகள் திருகோணமலைத் துறைமுகத் தைப் பார்த்துப் பிடித்தோம். காமெராக்களில் .
விமானம் தரையிலிறங்கும் முன்பே பிரிட்டிசார் காலத்து ஒட்டப்பாதையென உணர்ந் தோம். நின்றவுடன் கதவுகள் திறந்து நானே முதலில் ஈழ மண்ணை மிதித்தேன். கண்டது ஈழவர்களையல்ல. இந்திய இராணுவ அதிகாரிகளை; துருப் புக்களை; இந்திய இராணுவ ஜீப்புக்களை டாங்கு களை. தொலைதுாரத்தில் சில கட்டிடங் கள் - ப்ரீமா ஜப்பானிய மாவு மில் என்று பின்னர் தெரிந்தது. துறைமுகம் மிக அருகில் கடற் காற்று எனது கலைந்த தலை யைப பதமபாாததது.
ட்ரக்கில் இந்தி மொழி துணை புரியப் பேசினேன், நிருபர்கள் வினுே த மா கப் பார்க்க உணவு, உடை, இருப் பிடம் பரவாயில்லை. சிங்கள சிப்பாய்கள் ஆங்கிலம் பேச தமக்கும் புரியவில்லை என்று ஒரு வர் சொன்னுர், ஊருக்குள்
இந்திய விமானம்
சென்னை
() விமான காலத்து ஓர் கதவுகளைத்
தேன். கண் காரிகளை, து
0 விற்கு காத நாய் காட்டின.
0 சுற்றிலு வையுடன வேண்டும் ந () செனவிர வெளியில் வ நாங்களும் இ நம்புங்கள் எ இராணுவ ந1 மலை எங்கள் பெருமை அலி பதில் சொல்
போனுல் தமிழ சிங்கள மக்கள் ததாக மராட் டைச் சேர்ந்த
இந்தியில் பரித
னுர்.
சிங்கள, இ அதிகாரிகள் மு பில் சிரித்துப் ருந்தனர். t சூழ்ந்த விமா வெளியேறி ஆ விறகு சுமக்( சைக்கிள் பயன் நாய் இவை மீறிய் உயிர்ப் மரங்கள் சூழ் டிரக் திரும்ப ஒன்றுக் கருகில் தண்ணீர் சு பெண் ஒருத்தி மீது காறி ? * * Guri" GLT 6 லையே!” ஒருவ

1987 ஆகஸ்டு 18 திருகோணமலையிலிருந்து
torua மறைந்தது. . . ன் பரப்பு விரிந்தது. . .
ம் தரையில் இறங்கும் முன்பே ட்டப் பாதையென உணர்ந்தோம்.
பிரிட்டிஷார் கின்றவுடன்
திறந்து நானே முதலில் ஈழ மண்ணை மதித்
டது ஈழவர்களையல்ல. இந்திய
Iருப்புகள்ை.
சுமக்கும்
இராணுவ அதி
முதியவர் சைக்கிள் பயணி, குரைக்
இவை இராணுவத்தை மீறிய உயிர்ப்பைக்
ம் சிங்களக் குடியேற்றங்கள் கடுமையான பார் பெண்கள். ஆண்கள் வெளியே சென்றிருக்க ாய்கள் கூட ட்ரக்குகளைத் துரத்தவில்லை. "த்னவுடன் பேசுகிறேன் கொரில்லாக்கள் பலரும் ரவில்லையே என்று குறைபட்டுக் கொள்கிறர். இலங்கையர்கள் தான். இனியாவது எங்களை ன்கிருர், நட்பு ஆச்சரியமாயிருக்க அவரது டவடிக்கைப் பற்றி கேட்கிறேன். திருகோண ஊராக இருப்பதால் அதைக் காப்பாற்றுவதில் டைந்துள்ளோம். என்று ஒற்றை வார்த்தையில் லும் போது.
Π
}ர்கள் வரவேற்க
‘நமக்குக் கல்லடி இல்லையே’
கல்லால் அடித் இன்னுெருவர். டிய ரெஜிமெண் 6 frì - ஒருவர் உடைந்த இன்று காலை ஜே.ஆர்.
ாபமாகச் சொன்
திய இராணுவ 0ன் சென்ற ஜிப் பேசிக்கொண்டி க், வலைக்கம்பி னத்தை விட்டு டிச் சென்றது. 5ம் முதியவர், ரி, குரைக்காத இராணுவத்தை பைக் காட்டின. ந்த பாதையில் இந்திய டாங்க்
குழந்தையுடன்
ந்து செல்லும் எங்கள் டிரக் மிழ்கிருள் ! டுக்க முடியவில் ரின் வருத்தம்.
பார்க்கிறேன்.
கட்சிக் கூட்டத்தின் மீது குண்டு வீசியது போல் நம் மீதும் வீசி விடலாமே!” -அடுத்த நிருபர். பேச்சைத்தாண்டி சுற்றுமுற்றும் பெரும் பெட் ரோல் டாங்கர்கள். "ஓ! இவை தான் அமெரிக்கக் கப்பல்களுக் பெற்ருேல் நிரப்புபவை. மேலும் சுற்றிலும் சிங்களக் குடியேற் றங்கள். கடுமையான பார்வை யுடன் பெண்கள். ஆண்கள் வெளியே சென்றிருக்கவேண் டும். நாய்கள் கூட டிரக்கு களைத் துரத்தவில்லை. பழகிப் போயிருக்க வேண்டும்.
*சிலோன் பெற்ருேலியம் கார்ப்பரேசன்’ என்ற ஆங்கிலப் பலகையைத் தாண்டி, இந்தி யச் சிப்பாய்கள் சூழ்ந்த கூடா ரத்தருகில் டிரக் நிற்கிறது.

Page 12
10
இந்திய ராணுவ அதிகாரிகள் குல்வன்த் சிங், பல்பீர் வர வேற்கின்றனர். திருகோண மலை மக்கள் குழுவைச் சேர்ந்த பெர்னர்ட் பெர்ணுண்டோ, சிங்களக் கமாண்டர் செனவி ரத்ன பொறுமையிழந்து எங் களைப் பார்க்கின்றனர்.
அங்கிருந்த ஒரே தமிழர், விடு தலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த வசந்த் மட்டுமே.
** மக்கள் குழுவில் தமிழர்கள் கிடையாதா?” என் கேள்வியை யாருமே பொருட்படுத்தவில்லை. வசந்த் தமிழனுகிய என்னை அடையாளம் கண்டு கொண்
T.
கிடத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டு இந்தியச் சிப்பாய்கள் சிரித்துக் கொண் டனர். ஆயுதங்களுடன் தங் களைப் போட்டோ எடுக்குமாறு ஒரு சிப்பாய் எ ன் னி டம் வேண்ட, இந்திய அரசின் டிவி நிருபர் அமிதாப்சர்ட்டர்ஜி அவர்களைப் படம் எடுத்துத் திருப்தி செய்கிருர், .
வழக்கமான கேள் வி களை வழக்கமான நிருபர்கள் கேட்க, நான் திருகோணமலை நிலைமை பற்றி இந்திய செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளிடம் கேட் றேன். ஊர்காவல்படையினர் துப்பாக்கிகளுடன் அலைவதாக வும், தமிழ் அகதிகள் திரும்பி வருவது கடினம்தான் என்றும் ஒத்துக் கொள்கின்ற ன ர். இதற்கு நேர் எ தி ரா க பெர்ணுண்டோ சக நிருபர்களி டம் கூறுவது காதில் விழு கிறது. வசந்திடம் ஓரிரு கேள் விகள் கேட்டிருக்கும் போது குல்வன்த் என்னிடம் வந்து வழி விடுமாறு கூறுகிருர் . இடங் களில் அமர்ந்த வசந்த் ஒரு ஏகே-47 துப்பாக்கியை முத்த மிட்டுக் கொடுக்க, குல்வன்த் அதைப் பெற்று செனவிரத்னி டம் காட்டுகிருர். அவர் அதைத் தொட்டு விட்டு எ ங் களை ப் பார்த்து போட்டோவுக்காகச் சிரிக்கிருர்,
செனவிரத்ன6 கிறேன். கெரில் * வெளியில் வரவு குறைபட்டுக் ெ
"நாங்களும் இ தான். இனியா நம்புங்கள்’ எ ஆச்சிரியமாயிரு இராணுவ நடவ கேட்கிறேன். ! ? எங்கள் ஊரா அதைக் காப்பா மையடைந்துள் ஒற்றை வார்த் சொல்லும் பே பயத்தை உ 6 சிலிர்த்து நகர்ந் கொழும்பில் ஜே வர்களும் தாக் றிக் கேட்க அடுத்த நிருப செனவிரத்ன ப முறுவலுடன் கிருர் .
சட்டென்று வாகிறது. நாங் மலை ஊருக்குள் தில்லை. குல் வ அணுகிக்கேட்கி ருக்கும் டீ கிை
** இன்று பே உசிதமில்லை. லியா உங்களு வேண்டும் .”. சி
நிருபர்கள் டிரக்கில் கோட பட்டார்கள். வ
பேச விரும்பி
நகர்கிறது.
**எங்களுக்கு தான். 6000 வெளிய ரோட் படிக்கு முகாம் நாங்கள் எல்ே தான்” என்று
பேசுகிருர் .
**அப்ப இவ களுக்கு வருவ

வுடன் பே சு லாக்கள் பலரும் வில்லையே என்று காள்கிருர்’
இலங்கையர்கள் வது எ ங் களை ன்கிருர், நட்பு க்க, அவரது படிக்கை பற்றிக் திருகோணமலை க இருப்பதில், ற்றுவதில் பெரு ளோம்” என்று தையில் பதில் ாது கண் கள் ண் டா க் கின. தேன். காலை ஐ.ஆரும் மற்ற கபபடடது பற நினைத்தேன். Iர் கேட்கிருர், திலுக்குப் புன் திறுத்திக் கொள்
எனக்குத் தெளி பகள் திருகோண போகப் போவ ன்த் சிங் கை றேன். எல்லோ டக்கிறது.
ாவது அவ்வளவு
நான் சொல்
க்குத் தெரிய ரிக்கிருர்.
விரட்டப் பட்டு பத்துடன் ஏற்றப் சந்த் என்னுடன் வருகிருர், டிரக்
ந எப்பவும் பயந் குடும்பங்கள் ட்டிலையும் மற்றும் களிலும் நிக்குது லாரும் அடியில் மடமடவென்று
1ங்க உங்க பகுதி
தில்லையா?
வதை அங்குள்ள
பாலம்
**வர்ருங்க ஆணு இவங்களுக் குத் துறைமுகம்தான் முக்கியம். அதைத்தான் எல்லோருமே முக்கியமாகக் கருதருங்க.”
ஊர்நிலைமை பற்றி வருந்திக் கொண்டே குறித்துக் கொண் டோம். புதிய நிலைமைகளை இன்னமும் புரிந்து கொள்ள விழையும் அச்சம் மிகுந்த அவ ரது கண்கள் கலக்கத்தை உண் டாக்குகின்றன.
*யாழ்ப்பாணத்திலோ, சென் னையிலோ பார்ப்போம்” என்னை அணைத்து விடைபெறுகிஞர். விமான நிலையம் வந்துவிட்டது.
அடுத்த இந்தியப் படை விமா
னம் மிடுக்காக வந்திறங்கு
இலங்கை விமானப் படையினர் உட்பட அனைவரும் அண்ணுந்து பார்க் கின்றனர்.
வசந்த் மீண்டும்  ைக  ைய
அசைப்பது தெரிகிறது. 6. Dr
னத்துள் ஏற்றப்பட்டு விரட்டப் பட்டோம். சிலர் உடனே பீர் புட்டிகளை உடைத்தனர். நுரை பொங்கும் போது விமானம் கிளம்பித் துறை முகத்தைத் தாண்டி விட்டிருந்தது.
**எல்லோரும் ஏறி ட் டீ ங் கல்ல, அடுத்து பலாலிதான்” சென்னை அதிகாரியின் கனத்த குரல் கேட்கிறது. என் நெஞ் சுக்குழி விறைத்து விட்டது. இனம் தெரியாத சோ கம் விறைத்த தோலைப் பற்றிச் சுண்டியது. கண் முன் திரு கோணமலை மறைந்து இந்துமா சமுத்திரத்தின் பரப்பு விரிந்தது.
**இதற்காகத்தானு எல் லாம் ?' என்று தான் வேறு வழியில்லாமல் யோசிக்க, சுற்றியிருந்தவர்களின் நெஞ் சுக்குழிகளை பீர் நிறைத்து விட்டிருந்தது.

Page 13
விஞ்ஞானத் தெ
சினிமா எனும் ம
திரைப்படம் இன்றைய வாழ்க்கை முை பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலச்சந்தர் பொருத்தி வைத்துப் பார்க்கிருேம். ஆணுல் சினி நுட்பச் சாதனையின் சின்னஞ் சிறு துளி, பற்றிய கதை இது;
பொழுது போக்கிற்காக சலனப் படங் களை (சினிமா) பார்த்துவிட்டு சந்தோசமாக வீடு திரும்புகிருேம்; இவ்விதம் பல்வேறு கதாப்பாத்திரங்கள், பல்வேறு இடங்கள், பலப் பல காட்சிகள் ஒரே சமயத்தில் ஒரே திரையில் தோன்றுதல் என்பது எப்படி சாத்தியமானது ?
பார்வையின் தீட்சண்யத்தை (Persistance of Vision) விஞ்ஞானிகள் அறிய வந்தார்கள். ஒரு பொருளைப் பார்த்ததும், அந்தப் பொருள் 1116 வினுடிகள் மனிதனின் கண்களிலேயே நிற்கும் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்தார்கள். உதாரணமாக, நள்ளிரவில் பிரகாசமானதொரு ஒளியைக் கண்டதும் நம் கண்கள் மூடிக்கொள்கின்றன: ஆனல் மூடிய கண்களுக்குள் அந்த ஒளி சில வினடிகள் நின்று பிராகாசிக்கிறது.
தீப்பந்தத்தை கையேந்தி சுற்றினுல், ஒரு வட்ட வடிவ நெருப்பின் காட்சியை நாம் காணலாம். இதை அடிப்படையாகக் கொண்டு ஃபின்டன் (Finton) என்பவர் ஒரு சிறிய விளையாட்டுக் கருவியை அமைத்தார். ஒரு வட்ட வடிவ அட்டையில் ஒரு புறத்தில் கிளியை வரைந்தார். மறுபுறத்தில் ஒரு கூண்டை வரைந்தார். பிறகு அட்டையைச் சுழற்றிவிட்டார். அப்போது ‘:கிளி கூண்டில் அடைபட்டிருக்கும்” வியப்புக்குரிய காட்சி சுழலும் அட்டையில் தோன்றியது. இம்

廷
ாழில் நுட்ப
சாதித்த ாபெரும் கலை
றயில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. என்கிற பெயர்களோடு தமிழ் சினிமாவை மா என்கிற மாபெரும் கலை விஞ்ஞானத் தொழில் சினிமா என்கிற விஞ்ஞானத் தொழில் நுட்பம்
முறைக்கு ‘தாம்தரோப்’ (Thaumathrope) என்று அழைக்கப்பட்டது,
1849-ல் பிளாட்டோ என்பவர் பல ஆய்வுகளின் முடிவில் ஒர் அறிக்கையை வெளி யிட்டார். அதில், **கண்களின் தீட்சண்யச் சக்தி ஒளியின் பலத்தைப் பொறுத்தது. கண்ணின் திரையில் அதிக ஒளி அதிக நேரம் நிற்கும். சிறிய ஒளி சிறிது நேரமே நிற்கும். அதாவது மனிதக் கண்களில் சராசரி 1130 வினுடிகள் ஓர் ஒளி நிற்கும்.” என்று கூறினுர், இந்த ஆய்வை நடைமுறைப்படுத்த பலர் முயன்றனர். தறிகெட்டு ஓடும் குதிரை ஒன் றின் படத்தை பல கோணங்களில் கேமராவை வைத்துப் படம் பிடித்தனர். ஒவ்வொரு பட மும் அதன் முற்பட்ட படத்தைக் காட்டிலும் சிறிது மாறியிருந்தது. இந்தச் சலனத்தை கண்கள் வேகமாகப் பிரதிபலித்தது. படங்களை ஒன்றன் பின் ஒன்ருகப் பார்த்தபோது **அந்தக் குதிரை தறிகெட்டு ஓடுவதை” காணமுடிந்தது.
1851-ல் ஜூல்ஸ் டுபாஸ்க் (Jules Dobosque) என்பவர் கண்டுபிடித்த பயாஸ் கோப் (Bioscope) எனும் கருவி மூலம் முதன் முதலாக மக்கள் சலனப் படங்களை கண்டனர். 1872ம் ஆண்டில் எட்வர்ட் ஜே. மேபிரிட்ஜ் தமது ஆராய்ச்சி சலனப் படங்களை வெளியிட்டு 96), fibsosoli Li Tifid, Zoo Proxinoscope என்ற கருவியையும் கண்டுப் பிடித்தார்.

Page 14
12
LITäLff LDTG3T (Dr. E. J. Marey) 1882üb ஆண்டில் கண்டுப் பிடித்த வரிசைக் கிராமமாக" படம் எடுக்கும் கருவியில் ஒரு வினுடிக்கு 12 படங்களே எடுக்க முடிந்தது; இவர் 1889-ல் நடந்த பாரிஸ் நகர விழாக் காட்சிகளை தன் கருவிக்குள் பிடித்து ஐனங்களுக்குக் காட்டி ஞர். இவரிடம் உதவியாளராய் இருந்த ஜார்ஜஸ் டெம்னி இக்கருவியில் மேலும் பல முன்னேற்றங்களை நிகழ்த்தினர். 1885-ம் ஆண்டிலேயே அலெக்ஸாண்டர் பார்க்கர் என்பவர் "பார்க்கஸின்' (Parkesine) என்ற "ஸெல்லுலாய்ட்" க்கு ஒப்பான ஒரு ஒளிப் பதிவு செய்யும் வஸ்துவைக் கண்டுப் பிடித்து விட்டார். ஆனல் 1887-ம் ஆண்டில் கை கொள்ள முடியாமல் அந்த வஸ்து தூக்கியெறி யப்பட்டு ஸெல்லுலாய்டே எடுத்துக் கொள்ளப்
--gs. W
1889-ம் ஆண்டில் பிரீஸ் கிரீன் என்பவர் முற்றிலும் முதிர்ந்த ஒரு சினிமாக் கருவியை அமைத்தார். அச்சமயத்திலேயே தாமஸ் ஆல்வா எடிசனும் " " கினிடோகிராப்” (Kinttograph) எனும் கருவியைக் கண்டு பிடித் தார். பிரீஸ் கிரீன் தான் பிடித்த படங் களை கினிடோக்ரோப்பின் மூலம் காட்டினர். 1895-ல் அர்மாத் (Armath) என்பவர் பயோக்ரோப் ப்ரொஜெக்டர் (Biograph Projector) கருவியைச் செய்தார்,
இம்மாதிரி பல சிறிய கருவிகள் சினிமாத் துறையில் ஏற்படுத்திய முன்னேற்றத்தின் விளைவாய் 1895-ம் ஆண்டு டிசம்பர் 28-ல் முதன் முதலாக பாரீஸ் நகரில் மக்கள் சலனப்படத்தை திரையில் கண்டார்கள்.
ஒருவன் கையை கீழிருந்து மேலே அசைக் கிருன் ; இவ்வசைப்பு பதினறு படங்களாக பிடிக்கப்பட்டது முதல் படத்தில் கை கீழே யிருந்தது, கடைசிப், படத்தில் மேலே இருந்தது. திரையில் முதல் 1/16 வினுடிக்குக் காட்டப்படும். இரண்டாவதும் படம் மற்ருெரு 1/16 வினுடிக்குக் காட்டப்படும். இவ்விதமாய் 1 வினுடிக்குள் 16 படங்கள் திரையில் தோன் றித் தோன்றி மறையும். முதல் படத்தைப் பார்த்த கண், அப்படத்தை சில வினுடிகள் மூளைத் திரையில் ஒளிர்ந்திருக்கச் செய்கிறது. இந்த ஒளி அகலுவதற்குள், இரண்டாவது படம் திரையில் தோன்றிவிடுகிறது. இம் மாதிரியே 16 படங்களும் நம் மனத்திரையில் சில விஞடிகள் தங்கிப் போவதால் முழு மொத்தச் சலனத்தையும் பார்ப்பதாக ஒரு பிரமையை எழும்புகிறது, ஆயினும் நாம் திரையில் காண்பது மெய்யான ஒரு முழு

பாலம்
சலனத்தில் 1132 பங்கையே. படங்கள் திரை யில் மின்னி மின்னி மறைவதால்தான் இப் படங்களை தியேட்டருக்குள் படமெடுக்க முடி வதில்லை.
பேசாப் படங்களின் வேகம் 1 வினுடிக்குப் பதினுறுபடங்கள் அல்லது 1 அடி. இப் பதினுறு படங்களுக்குள் ஒருவன் ஏதாவது பேசுகிருன் எனக் கொள்வோம். இவன் பேச்சை அதே பிலிமில் பதிவு செய்யTஇயலவில்லை. ஏனெ னில் இப் பதினறு படங்களுக்கு உரிய ஒலி அலைகளை அதே பிலிம் நீளத்திற்குள் பதிவு செய்ய இயலாது. இந்தக் குறையைப் போக்க முன்பு 16 படங்களுக்குள் அடக்கப் பட்ட ஒரு சலனம் தற்போது 24 படங்களுக் குள் அடக்கப்பட்டது. 1 வினுடிக்கு 24 வீதம் எடுக்கப்பட்ட படங்கள் அதே வேகத்தில்தான் திரையில் காட்டப்படும். , '
பிலிம் சுருள் காமிராவில் ஒடும் பொழுது அதன் பக்கத் துவாரங்களை இரு பற்கள் இழுக்கின்றன. பிறகு துவாரங்களினின்று
பற்கள் விடுப்படுகின்றன. இச்சமயத்தில் பிலிம்
லென்சுக்கு எதிராக அசையாமல் நிற்கிறது. இதற்கு ஆகும் நேரம் - 1/48 வினுடிகள். நின்ற பிலிமில் ஒரு சட்ட நீளம் படம் பதிவு செய்ய ஆகும் நேரம் - 1148 வினுடிகள். ஆக ஒரு வினுடிக்கு மொத்தம் 24 சட்டங்கள் (Frames) பதிவாகின்றன. படம் பதிவாகும் போதே அதற்கான ஒலியும் அதே வேகத்தில் ஸவுண்ட் ரிக்கார்டிங் கருவியில் பிரத்யேகமாக மற்ருெரு பிலிம் சுருளில் பதிவாகின்றது. பிறகு படத்தின் நெகடிவ்”வும் அதன் ஒலி யின் நெகடிவ்”வும் ஒரே சுருளில் (Positive) பதிவு செய்யப்படும்.
படம் காட்டும் கருவியில் (Projector) ஒட்டப்படும் போது ஒவ்வொரு சட்டமும் 1148 வினுடிகளுக்குள் இழுக்கப்பட்டு, 1148 வினுடி கள் திரையில் அது அசையாதிருக்கும். படம் இழுப்பது திரையில் தெரியாதிருக்கும் பொருட்டு ஒரு சுழலும் தடுப்பு (Shutter) இக்கருவியில் உண்டு. இத் தடுப்பு, படம் லென்சுக்கு எதிராக இழுக்கப்படும்போது ஒளியைத் தடுத்து விடும். அப்போது திரையில் படமே காணப்படாது. படம் லென்சுக்கு அருகில் நின்றவுடன், ஒளி அனுப்பப்படும். படம் திரையில் தெரியும் நேரம் 1/48 வினுடிகள். படங்கள் தோன்றி மறைவது வெகு வேகமாத லால் ஒரே படம்தான் திரையில் தோன்று வதாக நாம் உணர்கிருேம்.
படத் துறையில் பிறகு ஏற்பட்ட முன் னேற்றம் பிலிமின் வண்ணங்களில் பெரிதும்

Page 15
பாலம்
கவனம் செலுத்தியது. கேவா கலர், ஈஸ்ட் மென் கலர், வார்னர் கலர், ட்ரூ கலர், ஆன்ஸ்கோ கலர், டெக்னி கலர், ஸினி கலர், சூபர் ஃஸினி கலர், பெர்ரானியா கலர் முதலிய வைகளே பழக்கத்திலுள்ளன. இவற்றுள் டெக்னி கலர் தலைச்சிறந்தது. மற்றைய எல் லாக் கலர்ப் படங்களும் ஒரே பிலிமில் பதிவு செய்யப்படும்; ஆணுல் டெக்னி கலர் படம் மாத்திரம் மூன்று நெகட்டிவ்களில் பதிவு செய்யப்படும். அதாவது சிவப்பு, நீலம், பச்சை ஆகிய மூன்று வர்ணங்களை தனித்தனியே மூன்று பிலிம்கள் பதிவு செய்கின்றன. இதனுல் 6) foT ugurs) (Colour Composition) நம்மிஷ்டப்படி செய்துக் கொள்ளலாம். இதன் பாஸிடிவ், ரசாயன முறையில் அல்ல; அச்சு முறையில் செய்யப்படுகிறது.
டெக்னி கலர் படங்களை ரசித்த மக்கள் **இனி சினிமாக் கலையின் முன்னேற்றத்திற்கு எல்லை ஏற்பட்டு விட்டது” என நினைத்தனர் 蠶 பின் வந்த ஐந்து வருடங்களில், பிரஞ்சு விஞ்ஞானிகள் முப்பரிமாணப் படங்களை (Three Diamension) 56öTG9lîı9-55), 9 öğı L6öT “ “epGörg Lipë dyfgsgjëj &&Tutb” (Stereoponic Sound) இணைத்துக் காட்டினர்.
முப்பரிமாண படத்தின் (8 D) சூட்சுமம் என்ன? நமது ஒவ்வொரு கண்ணும் ஒரு பொருளை இருவிதமாக காண்கின்றன. வலது கண் காணும் விதம் இடது கண் காண்பதைக் காட்டிலும் சற்று வித்தியாசமனது. இரு கண் களும் ஒரே சமயத்தில் ஒரே பொருளை இரு வித மாகக் கண்டால், அப்பொருளுடைய "ஆழம்' (Depth) தெரியும். இதன் அடிப்படையில் லென்சுகள் விலகி அமைந்த கேமரா ஒன்று
முக்கிய பாலம் இந்த இதழுடன் ெ சந்தா முடிகிறது. பழைய ச, அனுப்பி புதுப்பித்துக் கொள்ளும்ட சென்ற முறை தந்தது போல தர வேண்டுகிருேம்.
பாலம் இதழுக்கு இதழ் ெ மற்றும் பணம் அனுப்புகிறவர்க அனுப்புதல் கூடாது. அனைத்து, V ஆசி
f
12, முதல் பிரதான சாலை
சென்னை-6 என்ற முகவரிக்கே அ

13
உருவாக்கப்பட்டது. லென்சுகளின் விலகு தூரம் கண்களின் விலகு தூரத்திற்கு ஒப்பானது. அது சுமார் 2 1/2 அங்குலங்கள் ஆகும். இவ்விரண்டு லென்சுகளாலும் (5 படங்கள் பிடிக்கப்பட்டு திரையிலும் இரு படங்கள் காட்டப்பட்டன. இரு படங்களும் ஒரே சமயத்தில் சற்றேய் பிரிந்து காணப்படும். g6M35 Luri šis GSLU FT6logt "tiu" (Polo riod viewers) என்ற பிரத்யேகக் கண்ணுடிகள் உபயோகிக் கப் பட்டன. இந்தக் கண்ணுடிகளின் உதவி யால் இரு படங்களின் ஒன்றிணைந்த காட்சியும், அதன் ஆழமும் (depth) தெரிந்து. ரயில் நம்மை நோக்கி வந்தது; நாம் இருக்கை யிலிருந்து ஒட எத்தனித்தோம். சிங்கம் நம் மேல் பாய்ந்தது. நாம் வீறிட்டு அலறினுேம்; கட்டிடம் இடிந்து விழுந்து நம் முகம் நோக்கி கற்கள் பறந்து வந்தன. நாம் பயத்தில் முகம் பொத்தினுேம். இவ்விதம் நம் அருகில் நிகழ் வதைப் போன்ற தத்ரூப காட்சிகள் நம்மைத் திகைக்க வைத்தன. ܝܢܠ
இதன் பிறகு தோன்றியதே ஸினிமாஸ் GSS stů (Cine mas cope), gb(yp6O» mpuísio Lu Tb5 காட்சிகள் (Wide angle) பக்க வாட்டில் அமுக் கப்பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டன. திரையில் பக்கம் அமுக்கம் மாத்திரம் விரித்துக் காட்டப் பட்டது. . இதற்கென்று அன மார்பிக் (Anamorphic) என்ற தனிலென்சு உபயோகப் படுத்தப்பட்டது.
சினிமா அசைவற்ற சிலையல்ல; அது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிற கலை, இனி வரும் காலத்தில் என்னென்ன விந்தைகளைப் காணப்போகிருேமோ? V− -
அறிவிப்பு பரும்பாலான சந்தாதாரர்களின் ந்தாதாரர்கள் தங்கள் சந்தாவை டி வேண்டுகிருேம்.
வே இம்முறையும் ஒத்துழைப்புத்
நாடர்பாக கடிதம், படைப்புகள் தனி நபர்களின் பெயருக்கு
தொடர்புகளுக்கும் • யர்,
ob
நேரு நகர், அடையாறு. 00 020.
னுப்புதல் வேண்டும்.
-

Page 16
திருமணச் சட
நம் நாட்டில் திருமண சடங்
பெண்க
6)_JITෙර්. කොෆිබේ. யைச் சேர்ந்த * L6)ffT என்.
குகள் அங்கங்கே மாறுபட் டிருந்தாலும் மணமகனும் மண மகளும் நீடித்து சந்தோஷ மாக வாழ்க்கை நடத்த வேண் டும் என்ற நோக்கத்தைக் கொண்டே சடங்குகள் அமைக் கப்பட்டுள்ளன. நம் நாட் டில் உள்ள பூர்வீக குடிகளில் அநேகரிடையே விதவிதமான விவாக வழக்கங்கள் உள்னன. உலகின் இதர பாகங்களிலும் இந்த வழக்கம் பல தினுசாகக் காணப்படுகிறது. கூடுமான வரை சேகரிக்கப்பட்டுள்ள தக
வசிப்பவர்கள் ட போல ஒரு
எல்லா சகே மணந்து G இவர்கள் பஞ் களையே 6. மூத்தவன்தான் மணக்க வேை இதர சகோதர வித சடங்குமின் விடுவாள். பிற எல்லோருக்கும் கோடியில் வசிக்
1956 ஆம் ஆண்டு "திங்கள்' இதழிலி
வல்கள் இங்கு தரப்படுகின்
றன. இன்னும் எவ்வளவோ
வித விவாக விசித்திரங்கள்
இக்கட்டுரையில் இடம் பெரு
மல் போயிருக்கலாம்.
நவீன பாண்டவர்கள்
இந்தியாவில் உத்தர பிர தேசத்தின் வடமேற்குப் பகுதி
யர்களிடையேய
இருத்து வருகி
ஒரிஸாவில் ட சாரலில் ஜாவே யார் இருக்கிரு களுக்கு குரங்கு ருல் மிக பிடிக் மாகாதவர்களுக்

கு டி  ைச இவர்களிட்ையே உண்டு. இவர்கள் சூரியனை வழிபடுகிருர்கள். LDリ盟DJ「リ丁
வர்கள் மட்டுமே இப்பூஜை
டங்குகள் ரூக்கான pங்குகள்
5 ஜவுன்ஸார் ற இடத்தில் ாண்டவர்களைப் பெண்ணையே ா த ர ர் களு ம் கொள்கிருர்கள். F LIT66T-6). FT பழிபடுகிருர்கள்.
ஒரு பெண்ணை ண்டும். அவள் ‘ர்களுக்கம் எவ்
க்கும் குழந்தை பொது. தென் கும் சில ஜாதி
ருந்து
|ம் இப்பழக்கம் றது.
மால்யகிரி மலைச் ங் என்ற ஜாதி < ரர்கள். இவர் மாமிசம் என் $குமாம். மண
க்கு என்று தனி
யைச் செய்யலாம். வில்வப் பழத்துடன் கல்யாணம்
நேபாளத்தில் நேவார் ஜாதி யில் பிறக்கும் பெண்ணுக்கு 5. வயதிலிருந்து 12 வயதிற்குள் அவளுக்கும் பரமசிவனுக்கு மிகவும் பிரியமான வில் வப் பழத்திற்கும் மணமுடித்து வைப்பார்கள். இதற்குப்பின் அவள் செய்து கொள்ளும் கல்யாணங்கள் எல்லாம் சட்ட பூர்வமான ஒப்பந்தங்களே யொழிய வேறல்ல. மணம் செய்து கொண்ட வில்வப் பழத்தை மிக ஜாக்கிரதையா
கக் காப்பாற்றி வருவார்கள்.
நேவார் ஜாதிப்பெண் ஒருத் திக்குப் புருஷனிடமிருந்து விவாகரத்து தே ைவ ய ர க இருந்தால், புருஷனின் தலை ய்ணைக்கடியில் இரண்டு வெற் றிலையையும் பா க்  ைகயும் வைத்துவிட்டு தனக்கு பிடித்த புருஷனிடம் அவள் சென்று விடலாம். வில்வப்பழத்துடன் திருமணமாகி விடு வ தால் அவள் கைம்பெண் ஆவதே
இல்லை.
ஆணுல், குர்க்கா ஜாதியில் கண்டிப்பு மிக அதிகம். மனைவி கணவனை விட்டுப்போவது என்பது அவர்கள் மனத்தாலும் நினைக்கக் கூடாத விஷயம். குர்க்காக்களுக்குள் சுயம்வரம் என்பது உண்டு. இது பேருக் குத்தான் நடக்கிறது. இந்த ஜாதியில் பல தாரங்களை மணந்துகொள்ளும் சம்பிரதா யங்கள் உண்டு. விதவா விவா கத்தை குர்க்காக்கள் அனுமதிப் பது இல்லை.
மாகர் என்ற ஜாதியினரில் மணமகன் தயிர் சாதத்தை கையில் ஏந்தி பெண் வீட்டில் போய் பிச்சை கேட்கவேண்

Page 17
L 1 ᎥᎥ 6ᏇᎥᏯ
டும். பெண்ணின் தகப்பன் தயிர் சோற்றின் மீது சில நாணயங்களை வைத்தால்தான் தன் பெண்ணை மணக்க சம்
மதம் அளித்ததாக அர்த்தம்.
காதலன் காதலி சினிமாவில் ஒருவரை ஒருவர் விரும்பி பாடு வதைப் பார்த்திருக்கிருேம். கிழக்கு நேபாளத்திலுள்ள ராய் என்ற ஜாதியினரிடையே இந்த வழக்கம் இருப்பதைக் காண லாம். ஒரு வாலிபன் தனக்கு பிடித்த பெண்ணின் மீது ஒரு பாட்டை இட்டுக்கட்டி அவள் காது கேட்கப்பாடுவான். அவ ளும் பாடுவாள். இப்படி இரு வரும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு பாடுவார் கள். இருவரில் ஒருவர் களைத் துத் தோற்றுப்போன பின்பு தான் திருமணம் நடைபெறும்.
நீலகிரியில் வாழும் ஒரு ஜாதியார் தனிக்குடிசை கட்டி அதில் பல கன்னிப் பெண்களை வசிக்கச் செய்கிருர்கள், இந் தப் பெண்களை மணக்க விரும் பும் வாலிபர்கள் நீண்ட கழி களை குடிசைச் சுவற்றில் செருகுவார்கள். முனையை எ ந் த ப் பெண் பிடிக்கிருளோ அவள் அக் கழியை உடையவனின் மனைவி யாகி விடுவாள்.
பலாஹி இருக்
மத்ய பாரதத்தில் என்ற ஆதிவாசிகள் கிருர்கள். தாய் தந்தையரின் உறவிலே பெண் கொள்வ தில்லை. ஐந்தாம் தலைமுறை வரையிலும் ரத்த சம்பந்த மும், மூன்ரும் தலைமுறை வரை சாதாரண தொடர்பும் உள்ள குடும்பங்களிலே திருமணத் திற்கு ஏற்பாடு செய்ய மாட்
டார்கள்.
முறம், துடைப்பம் பூரீதனம் !
நீலகிரி பகுதியில் வசிக்கும்
படகர்களிடையே விதவைகளே கிடையாது. ஒருவன் மனைவி யாக இருந்து நீக்கப்படு
கழியின்
DIT2a)
திருமண சிகரம்- தி( சமூகத்திற்கு மாறி வித தரலாம். பெண்களை பொருளாக இருக்கிறது. மறுக்கப்பட்(
சில திருமை
விட்டால், அ மற்ருெரு பட இருப்பான். மன திரு மண த் தி மாப்பிள்ளை கு ரூபாயாவது ெ டும். அத்தொ6 நகைகளாக வி டப்பட்டு வி உலக்கை, உ! முதலியவைகளு பசு, எருமை யும் பெண் வி மாகக் கொடுட்
வங்காளத்தி மக்களிடையே கங்கள் இருந்து பாக்தி என்ற மணமகன் ஒரு தழுவிக் கொள் பெண் சென்று போ கலந்து கொள் பிள்ளை வீட்டா போதும் ஜெயி கட் என்ற மணமகன் வில் போது ஒரு ம உட்கார்ந்திருட் பெண் அவனை வரும்படி ଗ கொட்டு மேள மகன் மரத்தில் இறங்கி வருவ மணம் நடைெ
ராஞ்சிக்கருச் மெளவில் வசி ஜாதியார்கள் • காதலியை கிக் கொள்ளு

15
ாம் என்பது ஆண் பெண் வாழ்க்கையில் ஒரு ருமணச் சடங்குகள் காலத்திற்கு ஏற்றவாறும் ஏற்றவாறும் தேசத்திற்கு ஏற்றவாறும் மாறி விதமான முறைகளாகி நமக்கு வியப்பைத்
ஆனல் அத்தனைத் திருமணச்
சடங்குகளும்
இன்பம் தருகிற இயந்திரமாக, விற்பனைக்குரிய
கருதுகின்றன.
பெண்களுக்கும் ஒரு ஆத்மா
அவர்களுக்கும் சுதந்திரம் இருக்கிறது என்பது டுள்ளது. இதற்குச் சாட்சியமாக வித விதமான
னக் கதைகள்.
வளை மணக்க கன் தயாராக எப்பெண்ணுக்கு ற் கு முன் பு றைநதது நூறு காடுக்க வேண் கைக்கு வெள்ளி பாங்கி பூட்டப் டும். முறம்: ால், துடைப்பம் நம் கூடுமானுல் முதலியகைகளை tட்டார் பூரீதன பது வழக்கம்.
ல் சில பழங்குடி விசித்திர வழக் வருகின்றன. ஜாதியினரில் மகிழ மரத்தை வான். அன்று r வீட்டுக்குச் லிச்சண்டையில் ாவான். இதில் ர்கள் தான் எப் ப்பார்கள். தாங் ஜாதியார்களில் பாகச் சடங்கின் ரத்தின்மீது ஏறி Ls* - f)6.
கும்பிட்டு கீழே க ஞ சுவா ள, ம் முழங்க, மண
பிருந்து கீழே ான் ; பின் திரு LJg LD.
லுள்ள பாலா க்கும் கோல் போர்’ புரிந்து ம னை வி ய T க்
ருர்கள். இதை
*அசுரமணம்’ என்றும் சொல்ல லாம்.
வாழைக்குத் தாலி !
வில்வப் பழத்தை மணம் செய்து கொள்வது என்ற நேபாள நேவார் ஜாதி வழக் கம் போல, இந்தியாவில் வாழை மரத்திற்கும் தாலி கட்டும் வழக்கம் ஒரு காலத் தில் இருந்தது. கல்யாணம் செய்து சுொள்ள விரும்பாத ஆண்களால் தான் இந்தமுறை
ஏற்பட்டதாம்.
முதல் பிள்ளைக்கு மணமா காமலிருந்தால் வாழைக்
தாலி கட்டச் சொல்லி பின் னரே இளைய பிள்ளைக்கு மணம்
செய்ய வேண்டும்.
ஜப்பானில் முன்பெல்லாம் விவாகம் என்ருல் குடும்பத் தைப் பொறுத்த விஷயமாக இருந்தது. இப்போது அப்படி யில்லை. அவரவர் சொந்த விஷயமாகிவிட்டது. இப்போ தெல்லாம் பெண்கள் பெற் ருேர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வதில்லை,
ஜப்பானிய மணமக்கள் ஊர் வலம் வரும்போது, இரண்டு
பேர் சிவப்பு துணி ஒன்றை வீசிக் கொண்டே ஊர்வலத் துடன் வருவார்கள். சிவப்
பைக் கண்டு பீடைகள் ஒழிந்து விடுமாம்.
கீரின்லாந்தின் கிழக்குக்கரை யில் விசித்திரமாகக் கல்யாணம்

Page 18
16
நடைபெறுகிறது. மணமகன் மணப்பெண் வீட்டுக்கு திடு திடுவென ஒருநாள் ஒடுவான். வீட்டுனுள் உள்ள பெண்ணை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தன் வீட்டுக்கு ஒடுவான். இதை எல்லோரும் பார்க்க வேண்டும். அப் போதுத்ான் இத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும்.
f)6SSD6 தம்பதிகளுக்கு பரிசு தருவது என்பது எல்லா நாடுகளிலும் உண்டு. ஆணுல் மத்யதரைக் கடலிலுள்ள சைப்பிரஸ் தீவில் இப்பரிசு தருவது விசித்திரமான முறை யில் நடை பெறுகிறது. ஒரு பாயை விரித்து விடுவார்கள். ஒரு வருஷம் இப்பாய் இப் படியே கிடக்கும். பரிசுகளைக் கொடுப்பவர்கள் எல்லோரும் இப்பாயில் கொண்டு வந்து போடவேண்டும். மேற்கு ஆப் பிரிக்காவில் ஹோரோ வகுப் பினரில் ஒருவன் ஒருத்தியை
மணக்கும் போது அவளின் சகோதரியையும் ம ன க் க வேண்டும்.
யுவர்கள் முதுகின்மீது நடந்து.
*குக் தீவில் மணப் பெண் மணமகன் வீடு செல்லும் கோலத்தைப் போல எங்கும் பார்க்கவே முடியாது. அந்த கிராமத்திலுள்ள வாலிபர்கள் எல்லாம் மணப்பெண் வீட்டு முன் குப்புறப்படுத்திருப்பார் கள். மணப்பெண் அவர்களின் முதுகின்மீது நடந்து கணவன் வீட்டிற்குப் புறப் படு வாள்.
இந்த வழக்கம் இன்னும் அனுஷ்டிக்கப்படுகிறது.
தென் பஸிபிக் பிரதேசம்
ஒன்றில் வசிக்கும் நிகிரிட்டோ ஜாதியில் மணமகளும் மண மகனும் குல குருவிடம் செல் வார்கள். அவர் இருவர் தலை யையும் சேர்த்து முட்ட விடு வார். இது மணம் ஆகிவிட்ட தாக அர்த்தம்.
ஜாவாவில் ட கள் தங்கள் பற வர்ணம் பூசிக் கள். ஏனென்
தான் அழகாக
பிணத்து
பழங்காலத்த வில் மணமான சமூகத்தில் அ ரவமாக மதி யாராவது இ சந்தர்ப்பத்திற் ஆணையோ அ யோ அழைத் காசு கொடுத் துக்கு மணம் ெ
இந்த நாட்
பகுதியிலே
வசிக்கிருர்கள். குதிரை ஏறி கும கூடாரத வாள். பெண் பார்கள். கலவ மணச்சடங்குக
சீனர்களின் இன்னும் விரி மணப் பெண் கில் வைத்து டுக்கு எடுத்து அங்கு தெய்வ குப் பின் ஒே அருந்துவார்க பதற்குமுன் இவர்கள் துக் வது எனற 6 வருகிறது, ! மானுல் பெற் விடுவார்கள் நம்பிக்கை இருந்து வரு SíT J"68ðrts) 6I 6 பல்லக்கில் வ மணமகன் தி பார்ப்பான், வில்லை என் பல்லக்கிலேே விடலாம். நதியில் உள் குடும்பங்களின் சமிக்ஞை இ(

Lite) to
துமணத் தம்பதி களுக்கு கறுப்பு கொள்கிருர் ருல் அப்போது இருக்குமாம்.
$கு மணம்
தில் பெர்ஷியா
rவர்கள் என்ருல் தை ஒரு கெள த்திருந்தார்கள். 0ந்து விட்டால், கு ஏற்றபடி ஒரு ல்லது பெண்ணை து அவர்களுக்கு து அப்பிணத் செய்து வைப்பர்.
டின் பாலைவனப் ஒரு ஜாதியார் மணப்பெண் மணமகன் இருக் தை சுற்றிவரு வீட்டார் தடுப் பரத்துடன் தான் ள் நடக்கும்.
மணச்சடங்கு வாக இருக்கும். ணை ஒரு பல்லக் மணமகன் வீட் ச் செல்வார்கள். வணக்கத்திற் கிளாஸில் மது ள். மணம் நடப் மூன்று நாள்
கம் கொண்டாடு
பழக்கம் இருந்து ககளுககு மண ருேர்கள் இறந்து என்ற குருட்டு இவர்களிடையே கிறது. இதற்கு ாத் தெரிகிறது. ந்த பெண்ணை ரையை நீக்கிப் தனக்குப் பிடிக்க ரூல் பெண்ணை பதிருப்பிஅனுப்பி சீனுவில் மஞ்சள் ள படகோட்டிக் ஒரு விசித்திர *ந்து வருகிறது.
பெண்ணை மணக்க விரும்பு பவன் ஒரு ஊசியை பெண்ணி டம் அனுப்புவான். ஊசியில் நூல் கோக்கப்பட்டு திரும்பி வந்து சேர்ந்தால் “சரி” என்று சம்மதித்ததாக அர்த்தம். வட
இதாலியில் ஒரு ஜாதியினரில் பெண்ணை மணக்க விரும்பு பவன் ஒரு பூச்சட்டியை அவ
ளுக்கு அனுப்புவான். இவளை
மணக்க அவளுக்கு சம்மதம் என்ருல் இப் பூச்செடிக்கு அவள் தினம் தண்ணீர் ஊற்று
வாள். வேறு வாலிபனிடம் அவளுக்கு கண் என்ருல் பூச் செடியை வாடிப்போகும்படி விட்டுவிடுவாள்.
கிரேக்க நகரமான ஸ்பார்ட் டாவில் நல்ல தேகாரோக்கிய முள்ளவர்கள் தான் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று சட்டமே இருந்தது. குழந்தைகள் நோஞ்சலாகப் பிறந்தால் அவை உயிருடன்
விட்டுவைக்கப்பட மாட்டாது.
பலாத்கார முறை
பெண்ணை பலாத்காரமாக தூக்கிச் சென்று மணப்பது என்கிற முறை சில ஜாதியினரி டையே இன்னும் இருந்து வரு கிறது. கிருஷ்ணன் ருக்மினி யை இப்படித்தான் மணந் தான். பிருத்விராஜ் சம்யுக் தையை இம்முறையைக் கை யாண்டே மணந்தான்' என்று சொல்லலாம். ஆணுல் பெண் இஷ்டப்பட்டே அந்த விவாகங் கள் அம்முறையில் நடந்தன
என்பதை கவனிக்க வேண்டும்.
சில தேசங்களில் இந்த பலாத்கார முறையைப் பின் பற்றுவது போல் நடித்து தான் விவாகங்கள் நடத்தப்படுகின் றன. அராபிய நாட்டில் பெடுவின் ஜாதியினரிடையே இவ்வழக்கம் இருந்து வரு கிறது.

Page 19
髒獸
I
III
ଜ୍ଞାନ ଧା
எல்லாம் (
தாயே, எங்களிடம் நீ தந்த
தங்கமகனை
இதோ
உன்னிடம் ஒப்படைக்கிருேம்.
முழுதாக ஒப்படைக்க முடியாமைக்கு வருந்துகிருேம்.
இவனுக் கொரு கால் இல்லை.
மண்ணில்
இனவெறியன் கொலைப்படையின்
கால் இடற, ஏறிமிதிக்கப் போர் செய்த இடத்திலேயே இன்னும் கிடக்கிறது.
அக்கா !
இதோ இந்தப்
பொடியன் உன் தம்பி.
எரிகுண்டால் இவனுடைய ஒரு கண்ணும் செவியும் போக மீதி தான் தருகின்ருேம் வேதனை நெஞ்சுடன் விழியும் செவியும் வெறியன் படை விமானம் வருமோ எனக் கூர்ந்து வழியில் கிடக்கின்றன.
அஸிரியாவில் அநேக வரு ஷங்களுக்கு முன்பு மணப் பெண்களை க  ைட வீ தி யில் வைத்து ஏலம் போட்டு வாலி பர்களுக்கு விற்றுவந்தார்கள்.
திது.
ஸிரியாவில் முன்காலத்தில் ஒரு ஊரில் உள்ள அத்தனை யுவர்களும் அத்தனை யுவதி களும் ஐக்யமாக மணம் செய்து கொள்வார்களாம். இ த ன் பலன் மனம் போனபடி அவர்
கள் வாழ்ந்து ஆப்பிரிக்காவிலு விலும் அண்ை விட்டால் அவ தம்பிக்கு மணட கும் வழக்கம்
சுக்ரீவ மனைவியை மண பதால் அந்த
நாட்டிலும் இரு இம்மாதிரி வழச் எங்கும் இ (
தெரியவில்லை.
 

EPer
W
முடிந்தன.
பெண்ணே !
இதோ உன் எண்ணம் நிறை கணவன். இவனுடைய கையில்லை. இவ்வளவே கொண்டுவந்தோம் . உருண்டுவந்த குண்டை விரைந்தெழுந்து ஓடி எதிர்வீசி எங்களைக் காத்தபோது இரு கைகள் போயின. அவற்றில் ஒரு கை
துப்பாக்கி விசையில் விரல் துடிப் பிடித்தபடி இன்னும் எதிரி வரும் வழியில் !
A
எங்களை மன்னியுங்கள், உங்களுக்குப் போலத்தான் எங்களுக்குக் கிடைத்துதவும் முழுசாகக் கிடைக்கவில்லை.
மீண்டும் செல்வோம் நம்மை காப்பது போல் வளைத்திருக்கும் இந்தப் புதிய சிறைகளை விடுதலை செய்ய,
அப்போது நாம் எல்லோரும் செல்வோம்.
நை. மு. இக்பால்
வந்தனராம். இந்த விசித்திர விவாகங் ம் மெக்ஸிகோ களை எல்லாம் கவனித்தால் ான் இறந்து ஒன்று புலனுகிறது. பெண் ன் மனைவியை களை ஏதோ இன்பம் நுகரும் செய்து வைக் கருவி என்றே எண்ணப்பட்டு இருந்து வந் வந்ததாகத் தெரிகிறது. ண் வாலியின் ஆனல் இந்த எண்ணம் நாள ந்ததாக இருப் டைவில் மறைந்து வருகிறது. வழக்கம் இந்த
ந்திருக்கலாம்.
கம் இப்போது
5 ப் ப த ரீ க த்

Page 20
0 வ. ஐ. ச. ெ
வெண்ணிலவு பால் சிந்த பால் சிந்த மலையிறங்கி புல்மேயும் ஓரிரவு.
நான
மலையேறும் கோத்தகிரி பஸ்சில்.
கீழே a கருப்புக் கம்பளியில் காக்கா பொன் தூவலைப்
6 .
மின் மினுங்கும்
மூன்று மணி முன்னுடி நானிருந்த சிறு நகரம்.
口
பயணப் பொதியோடு இறங்குகையில் நீலகிரி ག་། பனி இதழால் முத்தமிடும் காலை இந்த கட்டழகை தரிசிக்க வேளைக்கெழவேண்டும்.
2
கொசுக்களின்றி தொண தொணக்கும், மின் விசிறியுமின்றி துயில் மகிழ்ந்த ஓரிரவு.
செக்கர் பட்டசைய சன்னலால் நுன்ழந்தாள் கடடியங் காரி. பறவைகள் கூடி
எழுந்துபார் எழுந்துபார் என்றெனை உசுப்பும்.

Orజీ
புகள்
வாசலில் சூரிய தேவன் வருகிருர் பராக் எனும் சொல்
துயில் எழுந்தேன் நான்
சுவடு கலைய ஜெட் விமானம் போல் அகன்றது பகல் . மனிதர்கள் மட்டுமே உலகம் என்ருல் ஏமாற்றங்கள் நிறைந்ததென் வாழ்வு. எனது உலகிலோ கடல்கள் நதிகள் காடுகள் வயல்கள் வான வில்லின் கீழ் தூய காற்று நிறைந்த புல் வெளிகள் மலைகள் பள்ளத்தாக்குகள் வானில் சூரியன், நிலவு
சுடரும் உடுக்கள், கீழே பறவைகள் இவற்றுடன் மனிதர்கள். எனது உலகம் உயிர்த்துடிப்பானது.
4
என்னரும் இனிய உலகின் மீதும்
உண்மையான மனிதர்கள் மீதும்
போர் தொடுத்தனர் அசுரர்கள். விண்மீன் பூத்த தூய வானத்தின் பால் வழிபோல முன்னர்

Page 21
பாலம்
தெள்ளன ஒடி தேவகன்னியர்கள் நீர் விளையாடிய கூவம் அருவியை சென்னையின் மலக்குடல் ஆக்கி தூய்மை என்ற முகமூடியுடன் மரீனுவில் நுழைந்து மீனவர் ரத்தம் மாமிசம் புசித்த
அசுரர்கள்,
உலகின் மீதும் மனிதர்கள் மீதும் போர் தொடுத்தனர் இப் புதிய அசுரர்கள்.
பிண வாடையும் சாம்பல் மேடுமாய் என்னரும் ஈழத்து ஊர்களைச் சிதைத்த ஜெயவர்தன மேல் . காறி உமிழ்வதைப் போலவே வெறுப்புடன் உலகின் எட்டு திசைகளும் திரும்பி புதிய அசுரர் முகத்திலும் உமிழ்கிறேன்
5
கூதல் சூரியன் கூட வெள்ளைப் போர்வையுள் குடங்கி நடந்தான்
காலை யோர் கடையில் சூடு பறக்கும் தேனீருக்காகப்
இருக்கையில் கந்தல் கறுப்புக் கம்பளி போர்த்தி பசித்திருந்ததோர் மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தேன் **யாழ்ப்பாணமா?” என்றெனை விளித்தாள். எனக்கோ நீலகிரியில் கடல் பார்த்த வியப்பு. முன்னர் தான் கண்டியில் இருந்தது சொன்னுள். இருந்ததே அன்று இரண்டு நேரச் சோறும் கூரையும் என அங்கலாய்த்தாள். இங்கே சிறு சிறு படகர் காடுகளில் கொத்தடிமைகளாய் சீரழிகின்ருேம். யாழ்ப்பாணத்துப் பதுங்கு குழியில் முடங்க மறுக்கும் சிறுவனப் போன்று இருண்ட கண் குழிகளில் ஒரு துளி கண்ணிர்.
இந்தியாவுக்கு எப்போ வந்தாய்?” எழுபத்தி மூன்றில், **அப்போதெல்லாம் இனமோதல் இல்லையே ஏனம்மா வந்தாய்?” **வான சாஸ்திரி சொன்னதை நம்பி. நாங்கள் வந்தோம் நட்டாற்றலை நிற்கிருேம்.” வான சாஸ்திரியா?
குழப்பமடைந்தேன். நெடுநேரத்து மெளனம் உடைய நண்பன் கேட்டான் * சிறிமாவோ சாஸ்திரியா?”

19
ஆமடா மகனே அதே சாஸ்திரிதான். ஈழத்து மலையிலும் தமிழகத்திலும் வாழும் மக்களை மிதித்துச் சென்று டெல்கியும் கொழும்பும் கையெழுத்திட்ட முதல் ஒப்பந்தமே இப்படி நாறும்.
6
இப்படி ஆயிற்று நமது தலைவிதி. கனவு கண்டேன் நானிருந்த விடுதியைச் சுற்றி எருமைகள் குவிந்து ஆர்பாட்டம் செய்தன. வெண்நரை சூடிய தோடர் தலைவன் என் முன்பாக * "எமது மலைகளின் காவல் தெய்வமாம் புனிதம் நிறைந்த மரம் செடி கொடிகள் எங்கே” என்று என்னை அதட்டிஞர். ** யாரடா இந்த தேயிலை என்கிற மலைவிழுங்கியை கொண்டுவந்தது?” என் மீது பாய்ந்தார்.
**மைசூர் படகர் தொடங்கி ஈழத்து மலைகளின் மக்கள் வரைக்கும் புகலிடம் தந்தோம். எங்கே எங்கே எமது உயிர்நிலை?” முதியவர் எனது தோள்களைப் பற்றினர், அச்சமாய் இருந்தது.
ஐயா ஐயா ஆளை விடுங்கள் பிற தேசம் நான். மெல்ல நசிந்தேன் **நட்சத்திர உலகினுல் வந்த கவிஞனே?” ஏளனச் சிரிப்பு. எங்கே எமது காடுகள் விலங்குகள்? மீண்டும் அதட்டல். 'அழித்தன ரையா ஆனல் ஆனல் ஆணுல என்ன. *அழித்ததற்குப் பிராயச் சித்தமாய் அல்ப்ஸ் மலை காட்டு மரங்களின் விதைகளை கொண்டுவந்துள்ளனர்.” 'பாலை வனத்தில் பருத்தியை அழித்து பிராயச் சித்தமாய் கம்பளி ஆடுகள் பரிசளித்தீரோ?.
ன்று நன்று.” :"! సిన சீறிவிழுந்தார் எருமைகள் என் மீது எகிறிவிழுந்தன. மனம் துணுக்குற்று விழித்துக் கொண்டேன்.
7
மலை முகடுகளில்
பள்ளத்தாக்கில் தென்றலைப் போல சுற்றிவந்தேன் நான் காடுகள் இன்னமும் மீந்திருக்கின்ற மலைகளில் மட்டுமே வரட்சியை மீறிய உயிர்த்துடிப்பு.

Page 22
سمبر
20
ஏனைய இடமெலாம். - கோடைச் சூரியன் மிதித்த சுவடுகள் செம்மண் ரத்தம் எங்கும் சிந்த முதுகில் குத்தி வீழ்த்தப்பட்ட வீரனைக் கிடந்த நீலமலையில் அசுரர்கள் நின்றனர். 'நீல மலையின் கொத்துக்கள் யாவும் அரிப்புண்டு போயினும் மேலும் ஒரு கிலோ தேயிலை" என்கிற கோசங்களோடு. பஸ் ஒரு காலையில் மலையிறங்கியது. பனிமுக்காடுகள் நீக்கி *" போய்வா அன்பே' என்றது நீலம். சாம்பிராணி மரங்களுள் கையை அசைத்தும் காட்டினுள் ஒடியும் மலைகளுள் மறைந்தும்
இரத்த
பெருமளவில் இரத்தம் இழக்கப்பட்டால் தீவிர சோகை உண்டாகிறது. வயது வந்த ஒரு வனின் இரத்த ஓட்டத்தில் 5 லிட்டர் இரத்தம் இருக்கிறது. இதில் 1:5 லிட்டருக்கு மேல் இரத்த இழப்பு ஏற்படின் மிகவும் ஆபத்தான நிலை உருவாகிறது. இரத்த இழப்பின் விகித மும் முக்கியமாகும். ஆகவே மிகப் பெரிய தமனிகளின் காயங்களால் குருதிப் பெ ரு க் கு ஏற்பட்டால் பேராபத்தில் முடிகிறது.
பெண்கள் குருதி இழப்பை ஆண்களை விட எளிதில் தாங்கிக் கொள்கிருர்கள். எனினும் ஒரு வயதுக்குக் குறைந்த குழந்தையின் 250-300 மி.லி. க்கு அதிகமாக இரத்த இழப்பு ஏற் பட்டால் மரணத்தில் முடிகிறது.
பெருமளவில் இரத்த இழப்பு ஏற்ப டி ன் தீவிர சோகையின் அறிகுறிகள் தோன்று கின்றன. பொதுவான அசதி மற்றும் தாகம், தலைச் சுற்றல், ஒரு இருண்டச் சூழ்நிலை ஆகி யவை தோன்றுகின்றன. உதடுகள் மற்றும் கண் இமைகளின் சருமமும் சிலேட்டுமப்படல மும் வெளிறி காணப்படுகிறது. குழி விழுந்த கண்கள் உண்டாகின்றன. கொட்டாவு தோன்று கிறது. முக பாவங்கள் மாறுபடுகின்றன. நெற்றியில் குளிர்ந்த வியர்வை தோன்றுகிறது. நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 120 ஆகிறது. பின்னர் பலவீனமடைந்து நாடித்துடிப்பு எண்ண முடியாத நிலை தோன்றுகிறது, உண ர் வு

Lu (T6ud
சூரியச் சிறுவன் கண்ணுமூச்சி ஆடவா என்பான் உண்ணிப் பூஞ் செடியோ, மலைஇளவரசி. 燃 பூண்டுகளோ அவளது தோழியர், சம்மண் வடியும் மலைப்புண்களுக்கு ஒளடதமாக அவர்கள் முயன்றனர். இயலுமா உங்களால் அனுமதிப்பாரோ அசுரர்கள் இதனை முன்பு வெள்ளை அசுரர்கள் தமது குதிரையை அரப்பிய தெருக்களில் எல்லாம் ஜீப் வண்டிகளில் கறுப்பு அசுரர்கள். இறுதியாக மலைக்காடு கழிகையில் பஸ் வண்டிக்குள் சலசலப்பெழுந்தது. தொலைதூரத்தில் தென்னையும் அழகும் வீதிமருங்கில் தலையில் மண் வாரி கொட்டுமோர் யா?ன.
இழப்பு
இழப்பு நிகழ்கிறது. கண்பாவை விரிவடை கின்றன. தன்னையறியாமலேயே சிறு நீரும் மலமும் பிரிகின்றன. அவனுக்கு உடனடி முதலுதவி கிடைக்காவிடில் சுவாச மற்றும் இரு தய கேந்திரங்கள் செயலிழந்து மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் பற்ருக்குறையினுல் அவன் மரணமடைகிருன்.
மேலே விவரிக்கப்பட்ட முறைகள் மூலம் வெளிப்புறமான குருதி இழப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதன் பின் னர் நோயாளிக்குப் பருகுவதற்கு நிறைய பானங் கள் கொடுக்க வேண்டும். மூளையிலுள்ள மிக வும் முக்கியமான மூச்சுவிடல் மற்றும் இரத்த சுழற்சி நரம்பு மையங்கள் இரத்தக் குறைவால் முதலில் பாதிக்கப்படுகின்றன. இதனுல் தான் இருதயத்திற்கும் தலைக்கும் துரிதமாக, உட னடியாக இரத்தம் அனுப்பப்பட வேண்டும் என் பது உறுதியாகிறது. படுத்திருக்கும் நோயாளி யின் கால்கள் தலையைவிட உயரத்தில் இருக்க வேண்டும். காலினடியில் உள்ள தலையணையை அகற்றுவதன் மூலமும் படுக்கையின் கால்களை உயர்த்துவதாலும் மேற்கூறியதைச் சாதிக்க முடிகிறது. இதன் மூலம் மூளைக்கு இரத்தம் துரிதமாகச் செல்கிறது. மருத்துவ உதவி அளிப்பதற்குத் தேவையான அவகாசமும் கிடைக்கிறது. மருத்துவமனையில் உடனடியாக குருதிப் பெருக்கு நிறுத்தப்படுகிறது. இரத்த வினியோகம் செய்யப்படுகிறது.

Page 23
மணிக் கொடி எழுத்தாளர் விடு
சங்கீதம், நர்த்தனம் காலத்தின் போக்குக்கு களைச் செய்து தான்
என்பது அசையா வைதீகத்திற்கும் வெகு
கலையில் நவ
எதை எடுத்தாலும் வைதீகம், லெளகீகம் என்று எளிதிலே பிரித்துவிடலாம் ; பரம்பரை என்றும் நவீனம் என்றும் பிரிக்கவும் செய்ய லாம். முன்னேர்கள் காட்டிய வழியைப் பின் பற்றினுல் தான் ஒரு சமாஜம் நிலைத்து நிற்க முடியும் என்பது வைதீகர்களின் ககூழி. முன் னுேர்களின் வழியை மாற்றி அமைத்தால் ஒழிய, முற்போக்கு சாத்தியமில்லை என்பது மற்றவர்களின் ககூழி.
சினிமா முதல் சங்கீதம் வரையிலும், அரசியல் அமைப்பு முதல் பொருளாதாரம் வரையிலும், இந்த இரண்டு ககூழிகளும் இருந்து வருகின்றன. சினிமாவை எடுத்துக் கொள்வோம் ; கர்ண பரம்பரைக் கதைகளை யும் புராணக் கதைகளையும் கொண்டு சினிமாப் படம் பிடித்தால் தான், பாமர மக்கள் ரசித்து அனுபவிக்க முடியும் என்று சிலர் சொல்லு கிருர்கள். -
தற்போதைய வாழ்க்கைக்கு சிறிதும் பொருத்தமில்லாத கதைகளைக் கொண்டு படம் பிடித்தால், அதனுல் ஜனங்கள் சந்தோஷத்தை அனுபவிக்கவும் முடியாது, முற்போக்கும் அடைய முடியாது என்று சீர்திருத்த்க்காரர்கள் சொல்லுகிருர்கள்.
இந்த இரண்டில் எது உண்மை ? இரண்டும் உண்மை கொண்டவைகளா ?
வைதீகர்கள் சொல்லும் ககூழியை முதலில் எடுத்துக் கொள்வோம். 'வ ர ழ் க்  ைக யி ன் பழைய திட்டத்துக்கு ஏற்ப புராணக் கதைகள் அமைந்திருக்கின்றன. அந்தப் பழைய திட் டத்தை ஜனங்கள் மதிக்காமல் போனதற்கும் தங்களுடைய வாழ்க்கையை மாற்றிக் கொண் டதற்கும் காரணங்கள் என்ன ? பழைய தர்ம சாஸ்திரமும் வாழ்க்கைத் திட்டமும் அவைகளைச்

தலைப் போராட்ட வீரர் வ. ரா
முதலிய கலைகளிலும் த ஏற்றவாறு மாறுதல் ஆக வேண்டும், கலை கல் அல்ல. அதற்கும் த தூரம்.
சீனம் உண்டு
சார்ந்த கதைகளும் நன்மை பயப்பனவாக விருந்தால், அவைகள் ஏன் நடைமுறை வாழ் வில் மாறுதல் அடைந்திருக்க வேண்டும் என்று வைதீகர்களை தாராளமாக கேட்கலாம்.
*ஒவ்வொரு காலத்துக்கு, ஒவ்வொன்று உண்மையாகத் தோன்றலாம். நீங்க ள் சொல்லுவது தான் முக்காலத்துக்கும் உண் ை. என்று அடம் செய்வதில் நியாயமும் இல்லை உண்மையும் இல்லை. ஆகவே, நீங்க ள் சொல்லுவது எக்காலத்திலும் உண்மையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் அதட்டிப் பேசுவது தவறு என்று சீர்திருத்தக்காரர் களிடம் தெளிவாகச் சொல்லலாம்.
புத்திசாலித்தன மல்ல
இரண்டு ககூழிக்காரர்களும், தாங்கள் தங்கள் சொல்லுவதே சத்தியம் என்பது போல, பிடிவாதம் பிடிப்பது புத்திசாலித்தன மாகாது.
பண்டைக் காலத்தில், நிகழ்ச்சிகள் எல் லாம் சுபமாக முடிய வேண்டும் என்பது சம்பிர தாயம். அதனுலேதான், அரிச்சந்திரன், சந்திர மதியை வெட்டப் போகும் பொழுது, வாள் புஷ்பஹரமாக மாறி சந்திரமதியின் கழுத்தில் விழுகின்றது. கடவுள் மூலமாகவோ அல்லது வேறு சக்தியின் மூலமாகவோ, அற்புதம் நேரச் செய்கிறது பழைய காலத்து மாமூல். இந்த மாமூலை அஸ்திவாரமான "உண்மை யாகக் கொண்டு, ஆசிரியர்கள் தங்கள் நூல் களையும், நாடகங்களையும் அமைத்தார்கள். சுபத்தைச் சொல்லி, மங்களம் பாடி முடிப்பது பழைய சம்பிரதாயம் ,
இப்பொழுதோ, அற்புதங்களை புஸ்தகங் களில் பார்க்கலாமே தவிர, அவைகளை வாழ்க்

Page 24
22
கையில் பார்க்க முடியாது. "கடவுளின் கருணை என்பது உண்மையானுல் பஞ்சம் ஏன் உண் டாக வேண்டும் ? ஆயிரக் கணக்கானவர்கள், பட்டினி கிடந்து ஏன் உயிரை விடவேண்டும்’ என்று அனுபவத்தைக் கொண்டு, சிலர் கேட் கிருர்கள்.
இப்படி வாதம் செய்வது நாஸ்தீகம் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்ப்பது மிகவும் கொடுமை கொண்டதாகும். நிலைமை மாற மாற, அதற்கு தகுந்தாற்போல, வாழ்க் கையும் மாறத்தான் செய்யும். தெய்வங்கள் தலையிட்டு, அற்புதங்களைச் செய்கின்றன என் பதை மனிதர்கள் நம்புவதில்லையானுல், அப் புறம் என்ன செய்கிறது ? பழைய அற்புதங் களைக் கொண்டு நாடகங்களையே, நாடக மேடையில் ஆடி, மக்களை களிப்படையச் செய்ய முடியுமா ? எனவே, புதிய கதையை அமைத்து, ஜனங்களை மகிழ்வித்து, அவர்களை முன்னேறச்
செய்ய வேண்டும்.
அப்படியானுல், கலையிலும் மாறுதல்கள் ஏற்பட வேண்டியது நியாயம் தானே ? வாழ்க் கை, பல அம்சங்களில் மாறினுல், அதற்கு தகுந்தாற்போல கலையிலும் பல அம்சங்கள் மாறித்தான் ஆக வேண்டும். தெருக் கூத்து நாடகமாக எவ்வளவு அழகாக மாறிற்றே, அதுபோல, நாடகம் சினிமாவாக அற்புத மாறு
தல் அடைந்து விட்டது.
92öl GLOITLLITfi uj5ó
நாடகத்தில் சீன்களும் பாட்டுகளும் பிர தானமான அம்சங்களாக கருதப்பட்டு வந்தன. சினிமாவில் சம்பவங்களின் ஓட்டமும் சம்பா ஷணையின் விறுவிறுப்பும்தான் முக்கியமானவை. சம்பவங்கள் தேங்கி நிற்பது போல நிகழுமா கில், சினிமாப் பார்ப்பவர்கள், இருபது நிமிஷங் களில் அலுப்பு அடைந்து போய்விடுவார்கள்.
இது மோட்டார் யுகமாதலால், சலனம் மெதுவாக இருப்பின், அது ஜனங்களுக்கு இனிப்பதில்லை. அதற்காக கழுத்து முறியும் படியாகவும், குடல் தெறித்துப் போய் வெளியே வரும்படியாகவும் ஓடுவதையும் ஜனங்கள் விரும்புவதில்லை. ‘எச்சரிக்கையுடன் (மெது வாக) விரைந்து செல்' என்று இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அதைப்போலவே, கலைகளிலும் எச்சரிக்கையுடன் விரைந்து செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.
பண்டைக் காலத்தில், பணப்பெருக்கு, சுகபோகம், பங்களா வாசம், காதல் செய்தல்,

rs)b
ருசியுடன் சாப்பிடுதல் போன்றவைகள், பாசத் தையும் பாபத்தையும் விருத்தி செய்யும் கருவி கள் என்று உளறிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கருத்துக்களெல்லாம் இப்பொழுது தவிடுபொடியாகி விட்டன. தவம் கிடப்பதை பெரிதாக இப்பொழுது யாரும் எண்ணுவதில்லை, தினப்பட்டினிப் பேர்வழிகளுக்கு, உபவாசம் எதற்காக ? உபவாசத்தில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுமா ? அ வ ர் களுக்கு உபவாசம் தேவையுமில்லை.
உலகத்தின் துடிப்பு
நித்தியப் பட்டினிக்காரர்கள், முழு உண வையும் அவ்வப்போது விருந்தையும் தான் வேண்டுவார்கள். இது இயற்கை. உலகமே, இன்பத் துறைகளை, மேன் மேலும் கண்டு பிடித்து, அவைகளின் மூலமாக, சந்தோஷத் தையும் திருப்தியையும் அடைய ஆவல் கொண்டிருக்கிறது. அதாவது, கலைகளை புத்தம் புதிய சரக்குகளாகச் செய்ய வேண்டும் என்பது அதனுடைய உள்ளத் துடிப்பாகும்.
இந்த துடிதுடிப்பை, உலகம், பல வகை களிலும் வெளிக் காண்பித்து வருகிறது. இன்பம் அனுபவிக்க ஆவல் கொண்டிருக்கும் உலகம், பயங்கரமான"போரில் இறங்கியிருப் பதைப் பார்த்தால், இன்ப ஆவல் பொய் போலத் தோன்றுகின்றதே என்று கேட்கலாம்.
இரணியன் தன் மகன் பிரகலாதனை நேசிக்க வில்லையா ? நேசிக்கவில்லை என்று சொன்னுல், அது பொய்யாகும். நேசித்தான் என்று சொன்னுல், அவன் ஏன் பிரகலாதனுக்கு அத்தனை கொடுமைகளையும் செய்ய வேண்டும் ?
ரசமான கேள்வி.
ஒரு சிறு கதை சொல்லுகிறேன். மணி தனும் கரடியும் நண்பர்கள் ஆணுர்கள். இரு வரும் ஒரு நாள் மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். மனிதனுக்கு தூக்கம் வந்தது. காற்று வீசவில்லை. ஈக்கள் மொய்த் தன. தூங்கும் நண்பனுடைய முகத்தில் ஈக்கள் உட்காரப் படாது என்று கரடி தீர்மானம் கொண்டது. ஈக்களை வெருட்ட கரடி, தனது கைகளை, மனிதனுடைய முகத்துக்கு மேலே வைதது தடடி ஆடடிறறு.
> கரடிக்கு ஒன்றே ஒன்றுதான் தெரியவில்லை. தன்னுடைய கைகளில் நகங்கள் இருப்பதும் அவைகள் மனிதனுடைய முகத்தில் குத்தும் என்பதும் அதற்கு நினைவுமில்லை. தெரியவு

Page 25
*~ பாலம்
மில்லை. உதவி செய்ய நினைத்த கரடி, மணி தனுடைய முகத்தில், பல விடங்களில் ரத்தம் பீறீட்டு ஒடும்படியாகச் செய்தது.
நல்ல எண்ணத்துக்கு, இத்தகைய விபரீத பலன் வரலாமா ? வரப்படாது என்று உடனே சொல்லுவீர்கள். இதைப்போலவே இரணியனு டைய "தகப்பன் வாஞ்சையும் அகம்பாவமும் மிதமிஞ்சி கிடந்த இரணியன், இயற்கையாக நடந்து கொள்ள முடியவில்லை. விபரீத விளைவு கள் தோன்றின. இதைப் போலவே இன் பத்தை அனுபவிக்க ஆவல் கொண்டிருக்கும் உலகம் வழி தடுமாறிப்போய், ரத்தவெள்ளம் கரைபுரண்டு ஒடும்படியாக, போரில் இறங்கி தத்தளிக்கிறது.
நவீனம் கண்டிப்பாய் உண்டு
இது பயங்கரமான நிலைமை ; இது அறிவு தடுமாறிய நிலைமை. இந்த நிலைமையை மாற்றி, மனிதர்கள் இயற்கையான தன்மை யோடு வாழ்வதற்கு என்ன செய்யவேண்டும் ? இந்த சமயத்தில் தான் கலைகள் மிகுதியும் தொண்டு செய்ய முன்வரவேண்டும். கலை நவீன அம்சத்தை மேற்கொண்டு, தன் தன்மையை மாற்றிக் கொள்ளாமல், தனது சுபாவமான வேலையை மாற்றிக் கொள்ளாமல், மனித வர்க்கத்துக்கு உதவி புரிய வேண்டும்.
புராணக் கதைகள் அறத்தை புகட்டலாம் ; பரம்பரைக் கதைகள் இன்பமாக இருக்கலாம். அவைகள் மட்டும் போதுமானதாயிருப்பின், மனிதர்களின் வாழ்க்கை, ஏன், அந்த சோடு களை விட்டு மாறி, வேறு வழிகளில் செல்ல வேண்டும் ? அவைகள் மாறும் தன்மை கொண்ட வாழ்க்கைக்கு போதவில்லை என்பது வெளிப்படை. எனவே, புதிய கதைகளை நவீன மோஸ்தரில் அமைக்க வேண்டிய அவசியம் தானுகவே ஏற்படுகிறது. -
இதைப் போலவே, சங்கீதம், நர்த்தனம் முதலிய கலைகளிலும் காலத்தின் போக்குக்கு ஏற்றவாறு மாறுதல்களைச் செய்துதான் ஆக வேண்டும். கலை என்பது அசையாக் கல் அல்ல. அதற்கும் வைதீகத்துக்கும் வெகு தூரம். கலைக்கும் வாழ்க்கைக்கும் நெருங்கிய சம்பந்த மிருப்பதால், வாழ்க்கை மாறினுல் கலை மாறும்; கலையில் மாறுதல் ஏற்படின், வாழ்க்கையிலும் மாறுதல் உண்டாகும். எனவே, கலையில் நவீனம் உண்டு என்று சொல்லவும் வேண்டுமா ? م
-1947-ல் வெளியான கலையும் கலைவளர்ச்சி யும் என்ற நூலிலிருந்து

28
உன் அடிச்சுவட்டில் நான்
வியத்நாம் என்ற அந்தத் தந் தையர் நாட்டை கம்யூனிஸ்ட்டு களை விட யாரும் நேசித்திருக்க முடியாது, அவர் கள்தான் தங்களது இறுதி மூச்சு அடங் கும் வரை நேசிக்கிருர்கள்.
கடைசி மூச்சு நிற்கும் வரை ட்ராய் வீரத்தின் விளை நில மாய் நின்று போராடியே வீர மரணத்தைத் தழுவினர்.
மரண தண்டனை நிறை வேறிய செய்தியைச் தாங் கி வந்த பத்திரிகைகள் அனைத் தும் ஒரு நொடியில் விற்பனை யாகி விட்டன. "புதிய ஜன நாயகம்' பத்திரிகை ஒரு காப்பி கூட மிச்சமின்றி விற்பனை ஆகிவிட்டது. மக்கள் அந்த மரண தண்டனை நிறைவேற்றப் பட்டதை மிக விவரமாக அறிய விரும்பினர். அதிலும் உண் மையாக ட்ராய் இற க் கும் தருணத்திலும் மூன்று முறை **ஹோசிமின் நீடுழிவாழ்க!” என்று கூறியதை அறிய ஆவ லோடு பத்திரிகைகளை வாங்கி ஞர்கள்.)
(இரவில் வெகுநேரம் வரை
- மாநாட்டுப் பிரதிநிதிகள் ட்ரா
யின் வீரஞ்செறிந்த களச்சாவு பற்றி பேசிக்கொண்டே இருந் தனர். அவருடைய முழு வாழ்க்கையையும் அப்படியே திரைப்படமாக எடுக்க வேண் டும் என்று பலர் விரு ப் ப ம் தெரிவித்தனர். ட்ராயின் வர லாற்றை கு யெ ன் ஞ ல் தொடர்ந்து சொல்ல முடிய வில்லை. மறுநாள் மாலை தொடர்ந்து கூறுவதாக உறுதி கொடுத்துவிட்டுச் சென்ருர்.)
ஒரு நாள் காலை நேர ம், புதிதாக ஒரு ‘செல் க ட் டு

Page 26
வியத்நாமிய தொடர் கதை ப பான் தி
வதற்காக வேலை செய்து கொண்டிருந்த கைதிகளுக்கு வெந்நீர் போ டு ம் வேலை எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. திடீரென ஒரு போலீஸ்காரன் என் முன் வந்து 'பான் தி குயென், உன்னுடைய உடை மைகளை யெல்லாம் எடுத்துக்
கொண்டு உடனே ஆபிஸில் ஆஜராக வேண்டும்” எ ன் று உத்தரவிட்டான். 等
6T65T 63r நடக்கப்போகிறதென் பதைப் பற்றி உடனே என் மனதில் ஒரு எண்ணம் பளிச் சிட்டது. இம் மாதிரியாக திடீரென ஆஜராகும் படி சொன்னுல் வேறு வெகு தொலை விலுள்ள சிறைக்கு மாற்று வதற்காகத்தான் இரு க் கும் என்று எண்ணிக்கொண் டேன். சுற்றும் மு ற் று ம் வேலை செய்துகொண்டிருந்த சகல கைதிகளும் அ வ ர வர் வேலைகளை அப்படியே போட்டு விட்டு என்னைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள். ஒவ்வொரு வரும் என்னை ஆறுதல் படுத் தும் வகையில் ஏதாவது ஒரு வார்த்தை கூ றி னு ர் க ள். என்னை எங்கே கொண்டு சென் ருலும், என்னுடைய கண வருக்கு புகழ்தரும்படி நடந்து கொள்ளவேண்டும் எ ன்று ம் ஏனெனில் அவர் அத்தகைய உறுதி தளராத போர்வீரன் என்றும் நினைவு படுத்தினுர்
Sgt.
அந்த வினுடியில் என்னு டைய விருப்பம் அனைத்தும் இங்கே என்ன நடந்தது என் பது ட்ராய்க்குத் தெரிய வேண் டுமே என்பதுதான். அப் பொழுதான் நான் வந் து அவரைப் பார்க்கவில்லை என்று வருத்தப்படாதிருப்பார். ஆகை யால் என்னைச் சுற்றி இருந்த
வர்களிடம் கூறினேன்;
'ட்ராய் உடல் நிலை தேறிய
பிறகு இங்குதான் திரும்பவும்
கொண்டு வருக நினைக்கிறேன். சிறையிலாவது, யாராவது அவ நேர்ந்தால் ந இருந்த காலம் ருகவும், சந் இருந்தேன் என தயவுசெய்து கள். என்னை எா செல்கிருர்கள்தெரியவில்லைசொல்லிவிடுங்க நாட்களாக ந காண முடியாது அவரிடம் எ ன் கவலைப்படவேண் சொல்லுங்கள்; செய்யப்படுவே( அவருக்கு ஆய கிடைத்தாலும் எதிர் நோக்கி றும் சொல்லிவி
அப்பொழுது கழுத்திலும், தே தழும்புகளுடை தன்னுடைய வரும் உணவி எனக்குப் பங்கு என்னிடம் வ படாதே! ட்ரான சந்திக்கும்போ! மனைவி சிறைய நடந்துகொண் நிச்சயமாகச் அவர் மிகுந்த வார். நம்முை திரும்பவும் அப்பொழுது வரும் இணைவி யோடு சென்று
அவர்கள் அ டம் பெருமதி ருந்தார்கள். கருணையாக அவர்கள் வட மத்திய வியத் லிருந்து வந்த
பாலோர் ஊன

பாலம்
குயென் () தமிழில் பொன்னி வளவன்
பார்கள் என்று ஆணுல் வேறு உ ங் களி ல் ரைச் சந்திக்க ான் இ ங் கே முழுக்க நன் தோஷமாகவும் ாபதை மட்டும் சொல்லிவிடுங் கோ கொண்டு எங்கே என்று எ ன் ப ைதயும் ள். ரொம்ப ான் அவரைக் போகுமானுல் னை ப் பற்றி க் ண்டாம் எ ன் று நான் விடுதலை னே யா னு ல் , புள் தண்டனை அ வ  ைர யே இருப்பேன் என் டுங்கள். w
முகத்திலும், நாளிலும் நீண்ட ப ஒருவர்-அவர் வீட்டிலிருந்து ல் கண்டிப்பாக கொடுப்பவர்ந்து "கவலைப் )ய நா ங் க ள து அவருடைய வில் எ வ் வி த ம் டார் என்பதை சொல்வோம். ஆனந்தமடை டய நா டு ம்
னைவரும் ட்ராயி ப்புக் கொண்டி ான்னிடம் மிக்க
இருந்தார்கள். க்கு, தெற்கு, நாம் பகுதிகளி வர்கள். பெரும் மடைந்தும், பல
வீனமாகவும் இருந்தார்கள். அவர்கள் இதுவரை பார்க்காத சிறைகளே கிடையாது.
நான் முதல் தடவையாக அந்த வாயிலில் காத்து நின்ற போது ஒரு பெண் என்னிட மும், என்னைச் சுற்றியிருந்த வர்களிடமும், மிகக் கவலை யோடு இங்கேதான் என் கணவர் சிறை வைக்கப்பட்டி ருக்கிருர் என்பதைத் தெரிந்து கொள்ள எனக்கு நான்கு வருடங்கள் பிடித்திருக்கின் றன. போனதடவை நான் வந்த போது என் மகன்தான் அவனுடைய அ ப் பா  ைவ அடையாளம் கண்டு விட் டான். தயவு செய்து கொஞ் சம் அதிகமான நேரம் இந்த துவாரத்தில் நிற்க எனக்கு அவகாசம் கொடுங்கள். நான் சீக்கிரத்தில் ஹியூ நகரத்திற் குப் போக வேண்டியிருக் கிறது.’ என்ருர்,
போனமுறை வந்திருந்த போது அவளுடைய எட்டு வயது மகன் அவனுடைய தந்தை பார்வையில் பட்டவு டன் ஒரு போலீஸ் காரனின் காலை மிதித்துத் தாவி உள் ளே ஓடிவிட முயற்சி செய் தான். அவனைப் போலீஸ் பிடித்து அடித்து வெளியே விரட்டி விட்டார்கள்.
இந்தப் பெரிய இரும்புக் கதவில்லாமல் வேறு ஒரு சிறு கதவும், போலீஸார் போக வும் வரவும் உபயோகத்திற் காக இருக்கிறது. கைதி நோயாளிகளுக்கு அதன் வழி யாக உணவு கொடுக்கலாம். $ቋGö முறை, உணவைக் கொடுக்கும் பாவனையில், கத வை ஓரிரு நிமிடங்கள் திறந் தே இருக்கும்படி செய்து விட் டேன். ட்ராயை நான் முழு மையாகப் பார்த்ததோடு, அவரும் என்னை நன்ருகப்

Page 27
பாலம்
பார்த்துக் கொண்டார்.
ருக்கு மிகுந்த மகிழ்ச்சி.
له96
**நீ விடுதலை செய்யப்பட்டு விட்டாய் இல்லையா ?” என் ருர் பலமான குரலில்,
**ஆமாம்” ** எப்படி இருக்கிருய்”
' ' ),
இருக் கிறேன்”.
நன்ருக
இரும்புவலை போட்ட கம்பி சன்னல் அருகே வந்து கை களை நீட்டி ஆட்டினர். மற் ருெரு வார்த்தை நான் பேசு வதற்குள்ளாக கதவு என் முகத்திலடித்தாற்போல சாத்
தப் பட்டு விட்டது.
உடனே பெரிய கதவிற்கு
ஓடி துவாரத்தின் வழியாக
எட்டிப் பார்த்தேன். முகத்
தில் அதிர்ச்சி தேங்கி நிற்க, இன்னும் கம்பி வலையைப் பற்றிக் கொண்டு அங்கேயே
நின்றிருந்தார். அவரை நான் கூவி அழைத்து கைகளை அசைத்துக் காட்டினேன். அதற்குள்ளாக உள்ளே
இருந்த காவலாளி என்னைக் கேவலமாகத் திட்டிக் கொண் டே சிறுகல்லை எடுத்து என் கையை நோக்கி வீசி எறிந் தான். ஆனல் அதிஷ்டவச மாக அது என் மீது படாமல் கதவில் பட்டு படீர்’ என்று ஓசையைக் கிளப்பியது. என் கணவரின் இதயமே வெடித்து
விடும் போலாகி விட்டது, அவர் உ ர த் த கு ர லி ல், **குயென், இரண்டு வாரங்
களுக்கு ஒரு முறை மட்டும் வா. இதைப்போல வாரத் திற்கு பல முறை உன்னுல் பார்க்க முடியாது. ஒவ்வொரு முறையும் மிகவும் சிரமப்படு
கிருய். நான் சொல்வது கேட்
கிறதா ?” என்ருர்,
** இதைப்போல இன்னும்
பத்து மடங்கு கஷ்டமாக
இருந்தாலும் கக் கட்டாட என்னைப் பற் தீர்கள்” என்
எந்த வழிய di(d5 2.600T6 (υριη μΗ ιb 6τοι குன்ருமல் சோஹியுஆன் யில் இருந்த கள் கொஞ்ச செத்துக் கொ என்பதை கண் அவர்களுக்கு உணவு . தொத்து நோய கைதிகள் அன தார்கள். கூடிய ரோகம் எல்ல; களோடும் சேர் யிருந்தார்கள். சக்தியைத் தி( தற்கு உதவே விரும்பினேன். தான் மூன்ரு அவர் தப்பி வெற்றிபெற கருதினேன்.
என்னுடைய ரைக் காண ே விரும்பினுர்கள் வரை அவ!ை செல்லாமலே டேன். அவ மிகுந்த சிரம என்பதோடு ஒ கூட அவளுை குரிய மருமகே (piq-ust 35.
பொழுது கேட்கத் தயார படியும் அடுத்த போது கண்டி யும குடடித அழைத்துச் ச்ெ என்று பிடிவ
**ஒரு நிமி ஒரே ஒரு செக் ரைப் பார்த்துக் அது போதும் ;

உங்களைப் பார்க் ம் வருவேன். க் கவலைப்படா றன்.
லாவது அவரு கொடுத்து விட று நம்பிக்கை இரு ந் தே ன். மருத்துவ மனை *கதி நோயாளி கொஞ்சமாக ண்டிருந்தார்கள் டு கொண்டேன். கொடுக்கப்படும் டுமட்டமானது. க் காரர்களுடன் டக்கப்பட்டிருந் ரோகம், குஷ்ட வியாதிக்காரர் த்துதான் பூட்டி ட்ராய் இழந்த நம்பப் பெறுவ வண்டும் என்று
அப்பொழுது ம் முறையாக ச் செல்வதில் முடியும் என்று
அம்மாவும் அவ வண்டும் என்று
ஆனல் இது
அழைததுச தடுத்து விட் ஞககு அது ான காரியம் ரு வார்த்தைக் அன்பு ணுடு பேசவும் ஆனல் இப் புதையெல்லாம் க இல்லை. எப் முறை போகும் பாக தன்னை தங்கைகளையும் ஸ்ல வேண்டும் தம் பிடித்து
tb அல்லது ண்டாவது அவ கொள்கிறேன். ான் அவரைப்
பார்த்து ரொம்ப நாட்களாச்சு; என்ருர்,
என்னுடைய தாய் என்னு டைய கணவரை மிகவும் நேசிப்பதுண்டு. அ வ ளு க் கென பதினுெரு குழந்தைகள் இருந்தபோதும் கூட இந்த மருமகனையே அதிகம் நேசித் தாள். ஒரு முறை நாங்கள் வசித்து வந்த கான்ஹாய்' பகுதியில் பெரிய தொரு நெருப்பு பற்றிக் கொண்டது. அப்பொழுது ட்ராய்தான் வேலை யை நிறுத்தி விட்டு எங்கள் உடமைகளை யெல்லாம் எடுத் துக் காப்பாற்றினுர், அதிலி ருந்து அந்தப் பகுதி மக்கள் அனைவருமே அவரிடம் மதிப் புக் கொண்டிருந்தார்கள். என் னுடைய தாய்க்கு அளவற்ற Lu Frer Lb a6TG).
ஆகையால் என் தாயை அழைத்துச் செல்ல வேண்டிய தாகி விட்டது. அதிர்ஷ்டவச மாக ஓரிரண்டு நிமிடங்கள் சின்னக்கதவு திறந்திருந்தது. என கணவரைப பாாதத என னுடைய அம்மா, 'து', நான் தானப்பா உ ன் னு  ைட ய அம்மா, உன்னைப் பார்க்க வந்திருக்கிறேன். நீ நல்லா இருக்கிருயா ?” என்ருர்,
குட்டித்தங்கை கான் 'து அண்ணு து அண்ணு !’ என்று அழைத்தாள்.
ட்ராய் புன்னகை செய்த வாறே ஏதோ கூறினுர், ஆனல் அங்கே உள்ளும் புற மும் எழுந்த இரைச்சலில் அவர் கூறியது அமுங்கிப் போய்விட்டது. என் அம்மா வின் கன்னத்தில் தாரை தாரையாகக் கண்ணிர் வடிந் தது. நீண்ட நேரம் அந்தக் கதவையே பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள். பத்துப்பணி ரெண்டு தாய்மார்கள் ஒவ் வொருவரும் தங்களுக்கு ஏற் பட்ட துயரங்களைக் கூறிக்
கொண்டார்கள்.
() தொடரும்

Page 28
|
நட்புறவு பாலம் 1987 செப்டம்பர் விலை ரூ. 1.5
இருளில்
(E.F. பெருமூச்செறிந்து 2ளர்ந்து செல்கிறது
1 ---
உள்ளே உறக்கம் கொள்ளாமல் நான் உட்கார்ந்திருக்கிறேன்.
நற்றமெடுக்கிற டிவத்தின் கரையில்
هي " و "يسي " கோயில் கோபுர
கொடிமரத்தின் கீழ்
(இன்னமும் 3, | p15:fiశీ; ரேடியோப் பட்டின் பேரிரைச்சலும் 卤母 *一°凸扎 சத்தமும் வசப்பும்
விசும்பலும். )
தெருவிளக்கின் மறைவில் இருட்டில்
}g J.Et, T Jl III தயங்கியவாறே ஒதுங்குவதைக் கண்டேன்.
l, ஞ்சையான அந்த சின்னஞ் சிறுமிக்கு
1 யது
பதினேந்து இருக்குமா?
ல் இன்னமும் تم تأتي تلك الرايا
குழந்தைத்தம்ே.
சின்னத் தசிை,
புள்ளி போட்ட பாவாடை, சாமந்திப் பூக்கிளேச் சூடிய
சடைப் பின்னல்
குற்ற ாளியைப் போல
வெளியிடுபவர் : அச்சிடுபவர் : ஜே
“பாருக்கு நல்ல ந
சுகத கு
தமிழி
கே. எம். வே
L
"ஸாரே ஜஹா
என்கிற த
"பாத்து | வெளி
நார்டதTப்து
களி
மகளிர் 1 சார்ந்த இய: சமூக விழி ஏற்படுத்துப் முயற்சி முன்னணியி । ।।।।
இரா. திரவியம், 13 முதல் பு:f, பிளேஸ் பிரிண்டர்ஸ்

나 is : + . என். எம். எஸ். (எஸ்) 3|
: تاتا
ணுகோபால்
ம் பேட் அச்சா'
ஃப்பில்
ཤཱ། ། இ 点 ழில்
| | | | ull சுதந்திர தின
iji}!;
பிரச்சனே க்கங்களிலும் ப்புணர்வை இலக்கிய களிலும் ல் நிற்பவர் குமாரி
பொருள் புரிந்ததும் و لرقة تالـ L 33 ت - 31 الثة 51ت اI L கசிகிறது த்தம்,
- - - 3 i 41i jцoj 33 i 5 Ш.
துயருறுப் பின் மரணம்
இஃப தோளில் போட்டு ஆதுரத்துடன்
முதுகில் தட்டி துரங்கவைக்கிறது.
இளந்தளிரைப் போன்ற) சின்னஞ்சிறு சிசு, பேதை இவள் பாவம்,
இவளேக் குளிப்பாட்டி +ரக் கூந்தலேப் பின்னி முடிந்து, கைகளில் புத்தகம் தந்து, பச்சையும் வெள்ளேயுமாய் சீருடை அணிவித்து விட்டால் ஒரு விடியஃப் போல இவளும் தான் ஒளிர் வாள்.
சிரித்துத் தஃப்யாட்டி இவளும் தான் கொஞ்சி கொஞ்சிப் பாடுவாள்! "பாருக்குள்ளே நல்ல நாடு, நம் பாரத நாடு'
|- வண்டி
st விம் மலாய் அசைகிறது. இருட்டில் ஒதுங்கி அவளுடன் யாரோ , ஏதோ பேசுகிரும்கள். பார்க்கச் சகிக்கா பல் என் பார்வை குனிகிறது.
ரயிலி | மீண்டும்
பழகிப் போன அதே பாடல்.
தாளகதியில்
பிரதான சாஃப்
''ill.וזlr-|{{{|3. נ.
நேரு நகர், சென்ஃன - 20
நதி,
சென்ஃ3 - 20. ஆசிரியர் :