கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையில் முஸ்லிம் கல்வி

Page 1
இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலை பற்றி குறிப்பாக, பெண்கல்வி,உயர்கல்வி என்பன பற்றி
பேராதனைப்பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸம்
இணைந்து
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி 1994 நவம்பர் 19, 20ஆம் திகதிகளில் கொழும்புமார்க்கா நிறுவனத்தில் நடத்திய தேசிய கல்வி மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட பத்து ஆய்வுக் கட்டுரைகள்
இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
முஸ்லிம் பெண்கல்வி,உயர்கல்வி தொடர்பான புதிய தகவல்கள் பலவற்றை உள்ளடக்கிய இந்நூல் கல்வித்துறை ஆர்வலர்களுக்கு மட்டுமன்றி
பொது வாசகர்களுக்கும் மிகுந்த பயனுடையது.
SBN: 955-625-O-7
PRINTERW" INTEMERS WAT
 
 
 
 
 
 
 

இலங்கையில் முஸ்லிம் கல்வி
பெண்கல்வியும்
உயர்கல்வியும்
பதிப்பாசிரியர்கள் எஸ். எச். ஹஸ்புல்லா
என். பி. எம். சைபுதின்
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி

Page 2

இலங்கையில் முஸ்லிம் கல்வி பெண் கல்வியும் உயர் கல்வியும்
இலங்கை முஸ்லிம்களின் கல்விநிலை தொடர்பான தேசிய கல்வி மாநாட்டுக் கட்டுரைகள்
பதிப்பாசிரியர்கள் எஸ். எச். ஹஸ்புல்லா என். பி. எம். சையுதீன்
வெளியீடு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி, செயல் முன்னணி

Page 3
இலங்கையில் முஸ்லிம் கல்வி: பெண்கல்வியும் உயர் கல்வியும் இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலை தொடர்பான தேசிய மாநாட்டுக் கட்டுரைகள்
பதிப்பாசிரியர்கள்: எஸ்.எச். ஹஸ்புல்லா, என்.பி.எம். சைபுதீன்
முதற் பதிப்பு : ஜனவரி 2000
வெளியீடு : இலங்கை முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி,
செயல் முன்னணி, 21/25 பொல்ஹேன் கொட கார்டன், கொழும்பு - 5, இலங்கை
பதிப்புரிமை : பதிப்பாசிரியர்கள்
அச்சு : யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட்) லிமிடெட்.
விலை : BUT 250/-
ISBN : 955-625-00-7
Musim Education in Sri Lanka :
Women's Education and Higher Education. Proceedings of the National Conference on Muslim Education in Sri Lanka
Editors : S. H. Hasbullah, N. P. M. Saifdeen
First Edition : January, 2000
Publishers : Muslim Women's Research and
Action Forum, 21/25, Polhengoda Garden, Colombo -5.
Price ་་་་་་་་་ : RS. 250/-
We are grateful to HIVOS-Humanitarian Agency for Development Cooperation N in the Netherlands for sponsoring this publication

சமர்ப்பணம்
1992 முதல் 1998 வரை பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல், வர்த்தக, புள்ளிவிபரவியல் துறையில் விரிவுரையாளராகக் கடமையாற்றி 1998ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி காலமாகிய சகோதரி செல்வி எம். எஸ். இஸ்லத்துன் நிலாவுக்கு

Page 4

பொருளடக்கம்
பக்கம் முன்னுரை vii பதிப்பாசிரியர்களின் குறிப்பு xi ,
பகுதி 1 முஸ்லிம் பெண் கல்வி
1. முஸ்லிம் பெண்களின் கல்வி: ஒரு பின்னணி அறிக்கை 03
எம்எஸ் இஸ்ஸதுன் நிஸ7, எஸ்.எச்ஹளப்புல்லா
2. முஸ்லிம் பெண்களின் கல்வி: ஒரு நோக்கு 24
எம்எஸ் இஸ்ஸதுன் நிஸ7
3. முஸ்லிம் பெண்களின் உயர் கல்வி நிலை 39
பாதிமா சுல்பிகா
4. முஸ்லிம் மாணவிகள் பாடசாலைக் கல்வியை
இடை நிறுத்துவதற்கான காரணங்கள் 61 எம்ஐஏ பேகம் மும்தாஜ் எம் அஜ்வத் ஹாசிம்
5. மாநாட்டுத் தீர்மானங்கள்: பெண் கல்வி 74
பகுதி 11 முஸ்லிம்களின் உயர் கல்வி
6. முஸ்லிம்களின் உயர் கல்வி: ஒரு பின்னணி அறிக்கை 77.
என்பிஎம் சையுதீன், எஸ்.எச் ஹஸ்புல்லா
7. முஸ்லிம் பாடசாலைகளின் பொதுக்கல்விப் பெறுபேறுகள்:
ஓர் அளவீடு 110 மா. கருணாநிதி

Page 5
8. கல்முனைக் கல்வி வலயத்தில் விஞ்ஞானக் கல்விக்கான
வாய்ப்புக்களும், மாணவர்களின் கல்வி அடைவும் பிசி பக்கீர் ஜவ்பர்
9. முஸ்லிம்களின் பல்கலைக்கழகக் கல்வி
சே7 சந்திரசேகரம்
10. இனப்பிரச்சினையால் இடம்பெயர்ந்த முஸ்லிம்
பட்டதாரி மாணவர்களின் கல்விப் பிரச்சினைகள் எம்எளப் அமானுல்லா
11. இலங்கை முஸ்லிங்களின் கல்வி:
பிரதேச ரீதியான ஒரு கண்ணோக்கு என்பிஎம் சைபுதீன், எஸ்.எச். ஹளப்புல்லா
12. மாநாட்டுத் தீர்மானங்கள் : முஸ்லிம்களின் உயர்கல்வி
உசாத்துணை நூல்கள்
பின்னிணைப்புகள்
1. இலங்கை முஸ்லிம் கல்வி பற்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட
உசாத்துணை நுால்கள். 2. இலங்கை முஸ்லிம்களின் கல்வி பற்றிய
புள்ளிவிபரச்சுருக்கம் முஸ்லிம் கல்வி நிலைபற்றிய அண்மைக்கால மாற்றங்கள்
முஸ்லிம் உயர்கல்விப் புள்ளிவிபரங்கள் தேசிய கல்வி மாநாட்டு நிகழ்ச்சி நிரல் மாநாட்டில் பங்குபற்றியவர்களின் பெயர் விபரங்கள் பேராதனைப் பல்கலைக்கழக மஜ்லிஸ் செயற்குழு கட்டுரையாளர்கள் பற்றிய விபரம்
125
136
160
170
179
180
185
190
194
196
203
205
208
210

முன்னுரை
இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி, செயல் முன்னணியுடன் இணைந்து 1994 நவம்பர் 19, 20ஆம் திகதிகளில் கொழும்பு மார்க்கா நிறுவனத்தில் நடத்திய இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலை தொடர்பான தேசிய கல்வி மகாநாட்டுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கட்டுரைகள் இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலை பற்றி பல வேறு கண்ணோக்குகளில் அணுகுகின்றன.
முஸ்லிம்கள் தம்மை ஒரு இன-சமயக் குழுவாக அடையாளம் காண்கின்றனர். இந்நாட்டின் இரண்டாவது சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் மத்தியில் கலாசார, சமூக, பொருளாதார, பிரதேச ரீதியாக வேறுபாடுகள் இல்லாமல் இல்லை. இம்மக்களை பொதுமைப் படுத்தும் அம்சமாகவும் தனித்துவத்தை கொடுக்கின்ற காரணியாகவும் காணப்படுவது இவர்கள் பின்பற்றும் சமயமான இஸ்லாமாகும்.
இலங்கையரினி கலி வரி வரலாற் றோடு ஒத்த பல பொதுப்பண்புகளை இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியிலும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதே நேரத்தில் தேசிய கல்வி நீரோட்டத்தில் இருந்து விலகிய போக்கையும் இச்சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் அவதானிக்க முடியாமலில்லை. இக் கல்வி வளர்ச்சித் தனித்துவத்தில் இச்சமூகத்தின் சமய-கலாசாரச் செல்வாக்கு பரவலாககக் காணப்படுகின்றது.
இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் சமய, கலாசாரக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தி வந்திருப்பதால் இச்செல்வாக்கின் அடிப்படைகளையும், அதன் விளைவுகளையும் ஆய்வு பூர்வமாக அறிய வேண்டியது அவசியமானதாகும். அவ்வாறான ஒரு முயற்சி, இச்சமூகத்தின் எதிர்கால கல்வி வளர்ச்சியை முறைப்படி திட்டமிட, வழிநடாத்த, தேசிய கல்வி நீரோட்டத்தோடு இரண்டறக் கலக்க உதவக்கூடியவைகளாகும்.
அந்த அடிப்படையில் “இலங்கை முஸ்லிம் கல்வி’ பற்றிய ஆய்வு ஒரு நடைமுறைத் தேவையாகும். கடந்த காலங்களில் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமை வருந்தத்தக்கதாகும்.

Page 6
“இலங்கையில் முஸ்லிம் கல்வி’ என்ற இந்நுாலை வெளிக்கொண்டுவருவதில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி, செயல் முன்னணி மகிழ்ச்சியடைகின்றது. இந்நூலில் முஸ்லிம் பெண்கல்வி, உயர் கல்வி என்ற அம்சங்கள் ஆழமாக ஆராயப்பட்டிருக்கின்றன. இநீ நுாலை வெளிக் கொணி டுவர உதவியாக இருந்த தனிப்பட்டவர்களுக்கும் அமைப்புக்களுக்கும் இம்முன்னணி நன்றி கூறிக்கொள்ள விரும்புகின்றது.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி, செயல்முன்னணி, கொழும்பு.

பதிப்பாசிரியர்களின் குறிப்பு
இந்நூல் ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட முயற்சியின் பலனாகும். 1993 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களினது கல்விநிலை பற்றிய ஆய்வொன்று பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஐ லிசால மேற் கொள்ளப் பட்டது. 1992/1993, 1993/1994 கல்வியாண்டுகளுக்குரிய முஸ்லிம் மஜ்லிஸ் செயற்குழுவினர்களால் இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இதில் பங்கு பற்றினார்கள். இதே ஆண்டுகளில் முஸ்லிம்களின் கல்வி சம்பந்தமான வெளிக்கள ஆய்வொன்றும் இவர்களால் செய்யப்பட்டது. வெளிக்கள ஆய்வுகளில் இருந்து பெறப்பட்ட முடிவுகள் பிரதேச மட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்குகளில் கலந்துரையாடப்பட்டன. பிரதேச மட்டக் கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. இறுதியாக 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம், 22ஆம் திகதிகளில் நடைபெற இருந்த இருநாள் கருத்தரங்கில் முஸ்லிம் கல்விபற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வந்த அறிஞர்கள் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் படி அழைக்கப்பட்டார்கள். இம்மகாநாட்டின் ஆறு செயலமர்வுகளில் 26 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட ஒழுங்குகள் செய்யப்பட்டன. இவ்வாய்வுக் கட்டுரைகளின் சுருக்கங்கள் ஆங்கிலத்தில் ஒரு நூலாகவும் வெளியிடப்பட்டன. இக்கருத்தரங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. முதல்நாள் மகாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது துரதிஷ்டவசமாக இடைநிறுத்தப்பட வேண்டிய கட்டாயத்துக்குள்ளானது. காரணம், பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் இம்மகாநாட்டுக்கு சில அரசியல் வாதிகள் அழைக்கப்பட்டது தவறு என்று எதிர்ப்புத் தெரிவித்தமையாகும்.
1994 ஆம் ஆண்டு நவம்பர் 19, 20ஆம் திகதிகளில் மேற்குறிப்பிட்ட மகாநாட்டின் இரு அமர்வுகள் கொழும்பு மார்க்கா நிறுவனத்தில் நடாத்தப்பட்டன. முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி, செயல் முன்னணி இவ்விரு அமர்வுகளையும் நடாத்துவதற்கு உதவி செய்தது. பெண்கல்வி, உயர் கல்வி ஆகிய இரு அம்சங்களே இக்கருத்தரங்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இக்கருத்தரங்கு வெற்றிகரமாக முடிவடைந்தது. இக் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளில் மிகப் பெரும்பாலானவை இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நூல் இரண்டு பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதியில் முஸ்லிம் பெண்கல்வி பற்றி நான்கு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இப்பகுதியின் இறுதியில் இலங்கை முஸ்லிம் பெண்கல்வி பற்றி மகாநாட்டில் எடுக்கப்பட்ட பொதுவான தீர்மானங்கள் சில தரப்பட்டுள்ளன. இந்நூலின் இரண்டாவது பகுதி முஸ்லிம்களின்

Page 7
உயர்கல்வி பற்றியதாகும். ஆறு ஆய்வுக் கட்டுரைகளும் மகாநாட்டுத் தீர்மானங்களும் இப்பகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் நேற்றைய, இன்றைய கல்விநிலை பற்றிய பல முக்கியமான புள்ளிவிபரங்களும் மற்றும் ஏனைய விபரங்களும் பின்னிணைப்புக்களில் தரப்பட்டுள்ளன. மாநாட்டில் சமர்ப்பித்த கட்டுரைகளை இந் நூலாக் கத்திற்காக திருத்தியும் விரிவாக்கியும் வழங்கிய கட்டுரையாசிரியர்கள் அனைவரும் எமது நன்றிக்கு உரியவர்கள்.
இலங்கை முஸ்லிம் கல்வியோடு தொடர்புடைய அம்சங்களில் தெளிவைப் பெறுவதற்கான எமது முயற்சிகளை வெற்றியடையச் செய்வதற்குப் பல தனிப்பட்டவர்களும், நலன் விரும்பிகளும், அமைப்புக்களும் மனப்பூர்வமாக உதவியுள்ளனர். இந்நூலைப் பதிப்பிப்பதற்கு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி, செயல் முன்னணியின் ஏற்பாட்டின் பேரில் HIVOS நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. இந்நூலின் கணனி உருவத்தை பி. சுக்ரி அமைத்துத் தந்தார். இதில் இடம்பெறும் படங்களை தென்கிழக்குப் பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் எம். தெளபீக் வரைந்து தந்தார். பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எம். ஏ. நுஃமான், வி. மகேஸ்வரன் ஆகியோர் நூலின் மூலப் பிரதிகளை வாசித்து மொழித் திருத்தங்களைச் செய்து உதவினார்கள். இந்நூல் உருவாவதற்கு அடித்தளமாக அமைந்த 1993 ஆகஸ்ட் 21ஆம், 22ஆம் திகதிகளில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பின்னர் 1994 நவம்பர் 19ஆம், 20ஆம் திகதிகளில் கொழும்பு மார்கா நிறுவனத்திலும் நடைபெற்ற முஸ்லிம்களின் கல்வி நிலை தொடர்பான தேசிய கல்வி மாநாடுகளை நடத்துவதில் அக்காலப்பகுதிக்குரிய பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் உத்தியோகத்தரும் மற்றும் உறுப்பினர்களும் அயராது உழைத்தனர். இம் மகா நாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளியிடுவதற்கு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி, செயல் முன்னணியினர் ஆர்வத்தோடு முன்வந்தனர். இந்நூலை யுனி ஆர்ட்ஸ் பிறைவேட் லிமிடெட் அச்சகத்தினர் சிறப்பாக அச்சிட்டுத் தந்துள்ளனர். இந்நூலின் பதிப்பாசிரியர்கள் என்ற வகையில் மேற்குறித்த அனைவருக்கும் மற்றும் இந்நூலின் உருவாக்கத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிய அனைவருக்கும் எமது நன்றியைக் கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
முஸ்லிம்களின் கல்வி அபிவிருத்தியின் உள்ளார்ந்த தன்மையையும், எதிர்கால சவால்களையும் புதிய தரவுகளையும், அணுகு முறைகளையும் அடிப்படையாகக் கொண்டு மேலும் ஆராயப்பட வேண்டிய தேவை இருக்கின்றது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
பதிப்பாசிரியர்கள்

பகுதி 1 முஸ்லிம் பெண் கல்வி

Page 8

முஸ்லிம் பெண் கல்வி: ஒரு பின்னணி அறிக்கை
எம். எஸ். இஸ்ஸதுன் நிஸா எஸ். எச். ஹஸ்புல்லா
1. அறிமுகம் h
மூன்றாம் உலக நாடுகளில் கல்வி அபிவிருத்தி ரீதியாக இலங்கை முன்னணி வகிக்கின்றது. எழுத்தறிவு வீதம், பாடசாலை செல்வோர் வீதம், உயர் கல்வியில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை போன்ற கல்விக்குறிகாட்டிகள் ஒப்பீட்டு ரீதியாக இலங்கையில் உயர்வாகக் காணப்படுகின்றன.
கல்வி அபிவிருத்தியில் பிரதேச, இன, சமய, பால் ஏற்றத்தாழ்வுகள் இலங்கையில் காணப்படுகின்றன. இலங்கை முஸ்லிம் சமூகம் இந்நாட்டின் கல்வியில் பின்தங்கிய சமூகங்களில் ஒன்றாகும். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பெண்களின் கல்வி ஒப்பீட்டு ரீதியாகத் தாழ்வாகக் காணப்படுகின்றது. இவ்வாய்வுக் கட்டுரை இலங்கை முஸ்லிம் பெண்களின் கல்வி நிலை பற்றி ஆராய்கின்றது.
முஸ்லிம்கள் இலங்கையில் சிறுபான்மையினராவர். இவர்கள் இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஏறக்குறைய 8%த்தினராவர். இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றும் இவர்கள் சமய, கலாசார ரீதியாகத் தனித்துவமான மக்களாகக் கருதப்படுகின்றார்கள். இவர்கள் நாடு முழுவதும் பரந்து வாழும் சமூகமாகவும் காணப்படுகின்றார்கள்.
முஸ்லிம்கள் ஒப்பீட்டு ரீதியாகக் கல்வியில் பின்தங்கிக் காணப்படுகின்றார்கள் என்பதைக் கல்வி அபிவிருத்தி பற்றிய புள்ளிவிபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. உதாரணமாக பொது எழுத்தறிவு வீதத்தை எடுத்துக் கொண்டால், முஸ்லிம்களின் எழுத்தறிவு வீதம் தேசிய எழுத்தறிவு வீதத்தைவிடவும், சிங்கள தமிழ் மக்களின் எழுத்தறிவைவிடவும் குறைவாகக் காணப்படுகின்றது. ஏனைய கல்விக்குறிகாட்டிகளான பாடசாலை செல்வோர் வீதம், உயர் கல்வி கற்போர் வீதம் போன்றவையும் முஸ்லிம்களின் கல்வியில் பின்தங்கிய தன்மையை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
முஸ்லிம் பெண்கள் கல்வி அபிவிருத்தி ரீதியாக மேலும் துரதிஷ்டமுடையவர்களாகக் காணப்படுகின்றார்கள். பால்ரீதியான ஒப்பீட்டுக் கல்விக் குறிகாட்டிகள் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

Page 9
முஸ்லிம் பெண்களின் கல்விப் பின்னடைவிற்குக் காரணம் என்ன? சமூக, கலாசார, பொருளாதாரக் காரணிகளின் தாக்கத்தின் விளைவினாலா இவர்கள் கல்வியில் பின்தங்கிக் காணப்படுகின்றனர்?. இந்த வினாக்களுக்கு ஆய்வுபூர்வமான விளக்கங்கள் கொடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். -
இக் கட்டுரை இலங்கை முஸ்லிம் பெண்களின் கல்வி அபிவிருத்தியை வரலாற்று ரீதியாகவும், பிரதேச, பொருளாதார, சமூக அந்தஸ்து வேறுபாட்டு அடிப்படையிலும் நுணுக்கமாக ஆராய்கின்றது. முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சிக்குச் சாதகமாகவும், தடையாகவும் இருந்த காரணிகளை அறியவும் இக்கட்டுரை முற்படுகின்றது.
ஆய்வு விபரங்கள் பல்வேறு தரவு மூலங்களில் இருந்து பெறப்பட்டன. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட பாடசாலைகள், மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய புள்ளிவிபரங்கள், இலங்கை புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இலங்கைக் குடிசனக் கணிப்பீட்டு விபரங்கள் ஆகியவை முக்கிய புள்ளிவிபர மூலங்களாகும். பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் வெளிக்கள ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம் கல்வி பற்றிய விபரங்களும் இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டன. •
2. இலங்கையின் கல்வி வரலாறும் முஸ்லிம்களின் கல்வியும் 2.1. கல்வி வரலாறு:
கல்வி ரீதியாக மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். சுதேசக் கல்வி முறைகள் இந்நாட்டில் மிக நீண்ட காலம் வழமையில் இருந்துவந்துள்ளன. இக்கல்விமுறை இந்நாட்டின் கல்வி வளர்ச்சிப் பாரம்பரியத்தை வீழ்ச்சியடையாமல் இருக்கச் செய்தது. காலனித்துவ ஆட்சியாளர்களின் வருகையுடன் மிஷனரிகள் மூலம் மேலைத்தேசக் கல்வி முறை இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஆங்கில மொழி மூலமான கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாட்சியின் இறுதிக்கட்டமான 1931ஆம் ஆண்டு கட்டாயக் கல்விச் சட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1945ஆம் ஆண்டு தாய் மொழியிலான இலவசக் கல்விச் சட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இவை இலங்கையின் கல்வி வரலாற்றில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தின.
இலங்கையின் சுதந்திரத்தோடு இந்நாட்டின் கல்வித்துறை வளர்ச்சியில் பல பாரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. நாடு

முழுவதும் பரவலாகக் கல்வி வாய்ப்புக் கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. பல பாரிய கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 1961ஆம் ஆண்டில் நாட்டில் இருந்த சகல பாடசாலைகளையும் அரசாங்கப் பாடசாலயைாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளும், 1970இல் 10 சதுர மைலுக்கு 3 பாடசாலை என்ற அடிப்படையில் மொத்தமாக ஏறக்குறைய 10,000 பாடசாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டமும், 1979 ஆம் ஆண்டின் கல்வி ஆணைக்குழுவின் சிபாரிசுகளும், 1980ஆம் ஆண்டிலிருந்து இலவசப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டமையும், 1981ஆம் ஆண்டின் கல்வி வெள்ளையறிக்கையின் அடிப்படையில் கல்வி வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களும், 1998 இல் அறிமுகம் செய்யப்பட்ட மாணவர் மையக் கல்விச் சீர்த்திருத்தங்களும் இவற்றுள் முக்கியமானவை.
2.2 பெண்கல்வி:
சுதேசக் கல்வி முறையில் பெண்கள் பெளத்தத் துறவறம் மூலமாக ஆச்சிரமங்களில் கல்வி பெறும் வாய்ப்புக் களைப் பெற்றிருந்தார்கள். இக்கல்வி ஓரளவு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பெண்களுக்குக் கிடைத்தது. போர்த்துக்கேயர் காலத்தில் கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த பெண்கள் சிலர் கத்தோலிக்க சமயக் கல்வி முறை மூலமாகக் கல்வி வாய்ப்பினைப் பெற்றனர். பிரித்தானியர் காலத்தில் கிறிஸ்தவ சமய ஸ்தாபனங்கள் மூலமாகப் பெண் கல்வி வளர்ச்சிக்கு மேலும் துாண்டுதல்கள் ஏற்படுத்தப்பட்டன. இக்காலத்தில் கொழும்பு, சிலாபம், யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் கிறிஸ்தவப் பெண் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுப் பெண்களுக்குக் கல்வி வாய்ப்பு அளிக்கப்பட்டது.
1931இல் கொண்டுவரப்பட்ட “எல்லோருக்கும் கட்டாயக் கல்வி’ என்ற கல்விச் சீர்திருத்தக் கொள்கை இந்நாட்டில் எல்லா மதத்தினரும் சமமான கல்வி வாய்ப்புப் பெறக் காரணமாக இருந்தது. இதன் பிறகு இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டமை பெண் கல்வியை மேலும் துாண்டியது. இக்கல்விச் சீர்திருத்தங்களின் விளைவாக இந்நாட்டில் ஆண்களும், பெண்களும் பால் பேதமின்றி ஆரம்பப் பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகம் வரை கல்வி பயிலக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. மேற்குறிப்பிட்ட கல்விச் சீர்திருத்தங்களின் விளைவாகப் பெண் கல்வியில் பிரமிக்கத்தக்க வளர்ச்சி ஏற்பட்டது.

Page 10
இலங்கைப் பெண்களின் கல்வியில் ஏற்பட்ட புரட்சிகரமான இம் மாற்றத்திற்குப் பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களும் பங்களித்திருக்கின்றன. இதில் பெண்கள் தமது கிராமிய கலாசார சூழலில் கல்வி பெறுவதற்கு ஏற்படுத்தப்பட்ட வாய்ப்புக்களும், உயர் கல்வி வளர்ச்சி தொழில் வாயப் ப் போடு சேர்த் துப் பார்க்கப்பட்டமையும் சமூகத்தில் பெண் கல்வி பற்றிய சாதகமான கண்ணோக்குகளை ஏற்படுத்தின.
2.3. முஸ்லிம் கல்வி:
இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாறு தனித்துவமான பண்புகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. காலனித்துவ காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கில மொழி மூலமான கல்வியில் சமய, கலாசார காரணங்களுக்காக முஸ்லிம்கள் பங்கெடுக்க முன்வரவில்லை. ஆனால், இவர்கள் “குர்ஆன் மத்ரசாக்களை’ அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையில் தமது பாரம்பரிய கல்வியைக் கற்று வந்தனர். இது ஆங்கில மொழி மூலமான மேலைத்தேசக் கல்வியில் பின்தங்கியவர்களாக இச்சமூகத்தினர் கடந்த காலத்தில் காணப்படக்காரணமாயிற்று. −
19ஆம் நுாற்ாண்டின் இறுதிப் பகுதியில் ஏனைய சுதேசமக்கள் மத்தியில் ஏற்பட்ட கல்வி விழிப்புணர்ச்சி முஸ்லிம்கள் மத்தியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. ஒராபி பாஷா, சித்தி லெவ்பை ஆகிய கல்விச் சீர்திருத்தவாதிகளின் வழிகாட்டல்களால் நவீன கல்வியை இஸ்லாமியச் சூழலில் முஸ்லிம்களின் மத்தியில் வளர்த்து எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
நாடு முழுவதும் பரவலாக்கப்பட்ட இலவசக் கல்வி முறை இலங்கை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகக் காணப்பட்டது. கிராமிய மட்டத்தில் சுய மொழியில் கல்வி பெறும் வாய்ப்பு ஏனைய பிரஜைகளைப் போல முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டது. இஸ்லாமியக் கிராமியச் சூழலில் வழங்கப்பட்ட கல்வி, முஸ்லிம்களினது கல்வி அபிவிருத்தியைத் துாண்டக் காரணமாயிற்று. கல்விக் குறிகாட்டிகள் சுதந்திர காலத்தில் இருந்து முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் பிரமிக்கத்தக்க மாற்றங்களை எடுத்துக்காட்டுகின்றன. இம்மாற்றத்தின் பிரதிபலிப்புகள் முஸ்லிம் பெண்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கின்றமை குறிப்படத்தக்கது.
ஆயினும், ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகின்ற போது முஸ்லிம் பெண்கள் கல்வி நிலையில் பின்தங்கியவர்களாகக் காணப்பட்டனர்.

முஸ்லிம் பெண்களின் கல்வியைப் பாதித்த பல தனித்துவமான காரணிகள் அடையாளங்காணக் கூடியவையாக இருக்கின்றன. இவ்வம்சங்கள் இலங்கை முஸ்லிம் பெணி கல்வியுடன் எந்த வகை யரில் தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன என்பது மேலும் சீர்துாக்கிப் பார்க்கப்பட வேண்டியதொன்றாகும்.
8.0 முஸ்லிம் பெண் கல்வியைப் பாதிக்கும் காரணிகள்
இலங்கை முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியில் சமூக,
கலாசார, பொருளாதார, அரசியல், திருமண வயது போன்ற குடிசனப்
பண்புக்காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.
1ே. திருமணவயது :
பெண்களின் வயது, திருமண நிலை, தாயாக இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் போன்றன பெண் கல்வியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாகும். பால் ரீதியாக முஸ்லிம் பெண்கள் ஆண்களுக்குச் சமனான எணி னிக் கை கொணி டவர்களாக இந் நாட் டி ல காணப்படுகின்றார்கள். வயதமைப்பிலும் முஸ்லிம் ஆண் - பெண்களுக்கிடையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால், கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை ரீதியாகப் பெண்களின் பங்களிப்பு முஸ்லிம் ஆண்களோடு ஒப்பிடும்போது குறைவாகக் காணப்படுகிறது.
இதற்கு முஸ்லிம்கள் மத்தியில் நடைமுறையில் காணப்படுகின்ற சில கலாசார அம்சங்கள், முஸ்லிம் பெண்களின் பாடசாலை செல்லும் தன்மையில் செல்வாக்கு வகிப்பது காரணமாக இருக்கலாம். உதாரணமாக முஸ்லிம்கள் மத்தியில் இள வயதுத் திருமணங்கள் ஏனைய மத மக்களோடு ஒப்பிடுகின்ற போது உயர்வாகக் காணப்படுகின்றன.
இளம் வயதுத் திருமணங்கள் கல்வி வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன. முஸ்லிம்களின் திருமணங்கள் முஸ்லிம் திருமணச் சட்டத்தின் கீழ் நடை பெறுகின்றன. இலங்கையில் நடைமுறையிலுள்ள ஏனைய சமய மக்களின் திருமணங்களுடன் ஒப்பிடும்போது, முஸ்லிம் திருமண முறையிலேயே இளம் வயதுப் பெண் திருமணம் நாடு முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றது. வரலாற்று ரீதியாகவும் இவ்விள வயதுத் திருமணம் முஸ்லிம் பெண்கள் மத்தியில் அவதானிக்கப்பட்டு இருக்கின்றது. இளவயதுத் திருமணம் இளவயதில் பெண்கள் பாடசாலையை விட்டு விலகுவதற்குத் துாண்டுகோலாகக் காணப்படுகின்றது. திருமணத்திற்குப் பின் ஒரு பெண்

Page 11
பாடசாலைக் கல்வியைத் தொடர்வது வழமையில்லை. முஸ்லிம் பெண்களின் கல்வி பாதிக்கப்படுவதற்கு இள வயதுத் திருமணம் ஒரு முக்கிய காரணி எனலாம்.
இளவயதுத் திருமணத்துடன் நேரடியாகத் தொடர்புடைய அம்சங்களாக அதிக அளவு குழந்தைகளைப் பெறும் தன்மையும், உயர் சிசுமரண விகிதாசாரமும் முஸ்லிம்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவது ஆய்வு மூலமாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. மேற்குறித்த சமூகக் குடிசனக் குறிகாட்டிகளின் அடிப்படையில் முஸ்லிம் சமூகம் பின் தங்கியதாகக் காணப்படுவதற்கு இச் சமூகத்தின் பெண்கல்வியின் பின்தங்கிய தன்மை நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக இருக்கின்றது.
3.2. சமுக, பொருளாதார, கலாசாரக் காரணிகள்:
பெண்களின் சமூக அந்தஸ்து சமூகத்திற்குச் சமூகம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஒரு சமூக அமைப்பில் பெண்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் பொறுத்து, அச்சமூகத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்தி தீர்மானிக்கப்படும்.
இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பெண்களின் சமூக அந்தஸ்து ஆண்களை விடக் குறைவாகக் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் முஸ்லிம் பெண்களின் குறைவான சமூக அந்தஸ்து அப் பெண்களின் கல்வி விருத்திக்கும், ஏனைய சமூக அபிவிருத்திக்கும் தடையாக அமைந்திருந்தன என அறியப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண்களின் சமூக அந்தஸ்து பற்றி இலங்கையில் ஆழமான ஆய்வுகள் இதுவரை செய்யப்படவில்லை. ஆனால் சமூகநலக் குறிகாட்டிகள் என எழுத்தறிவு, ஆயுள் எதிர்பார்ப்புக்காலம், சிசுமரணம் ஆகியவைகள் முஸ்லிம் பெண்களின் சமூகப் பின்னடைவைச் சுட்டிக்காட்டுகின்றன.
4.0 முஸ்லிம் பெண் கல்வியின் வளர்ச்சி
4.1 அறிமுகம்:
முஸ்லிம்கள் மத்தியில் ஆண்களின் கல்வி ஈடுபாட்டை விட
பெண்களின் கல்வி ஈடுபாடு குறைவாக உள்ளது. கல்வியில் ஈடுபாடற்ற
தன்மை முஸ்லிம் பெண்கள் மத்தியில் கடந்த காலங்களில் மிகக்

கூடுதலாகக் காணப்பட்டுப் பின்னர் மாற்றம் ஏற்பட்டுவருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. 20ஆம் நுாற்றாண்டின் நடுப்பகுதியில் மொத்த முஸ்லிம் மாணவர்களில் 41 சதவீதத்தினராக முஸ்லிம் பெண்கள் காணப்பட்டார்கள் (அட்டவணை- 1). இந்நிலையில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டு வந்திருக்கின்ற தன்மையைப் புள்ளி விபரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. 1991ஆம் ஆண்டில் முஸ்லிம் ஆண்பெண் கல்வி வேறுபாடு 4 சதவீதமாக மாத்திரமே காணப்படுகின்றது.
அட்டவணை 1: பாடசாலைக் கல்வியில் முஸ்லிம் மாணவிகளின் அதிகரிப்புவீதம்
1953ம் 1963 ஆம் 1991ஆம் ஆண்டுகளில்
1953 1963 1991 குடிசனக்கணிப்பு குடிசனக்கணிப்பு|குடிசனக்கணிப்பு
மொத்த முஸ்லிம்
மாணவர்களில் முஸ்லிம் 412 45.5 47.8 பெண்களின் வீதம்
மூலம் குடிசனக் கணிப்பு 19531963 பாடசாலைக்கணிப்பு 1991
ஆனால், முஸ்லிம் பெண் கல்வியின் பொதுவான வளர்ச்சிப் போக்கு எல்லாக் கல்வி மட்டங்களிலும் அவதானிக்கக் கூடியதாக இல்லை. முஸ்லிம் பெண்களுக்கு ஆரம்பக் கல்விக்கான வாய்ப்புக்கள் கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி எல்லாப் பிரதேசங்களிலும் சமமாகக் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் இச்சமவாய்ப்புக்கள் இடைநிலைக் கல்வியில் குறைவாகும். உயர் கல்வியில் இது பெண்களுக்கு மேலும் குறைவாகும்.
4.2 தேசிய மட்டத்தில் முஸ்லிம் பெண் கல்வியின் வளர்ச்சி 4.2.1 சுதந்திரத்திற்கு முந்தியகால முஸ்லிம் பெண்களின் கல்வி நிலை
இக்காலத்தில் முஸ்லிம் பெண்களது கல்வி நிலை ஒப்பீட்டு ரீதியில் குறைவாகக் காணப்பட்டது. நகர்ப்புறங்களில் வாழ்ந்த மத்திய, உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்களில் சிலரே பாடசாலைக் கல்வியைப் பெறும் வாய்ப்பினைப் பெற்றிருந்தனர். இதனால் முஸ்லிம் பெண்களின் கல்வியறிவு பொதுவாகக் குறைவாகவே காணப்பட்டது. இக்காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் தமிழ், சிங்கள, ஆங்கில

Page 12
மொழிகளில் தேர்ச்சியற்றவர்களாகக் காணப்பட்டார்கள். உதாரணமாக இந்நுாற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் வாழ்ந்த 100 முஸ்லிம் பெண்களுக்கு ஏறக்குறைய 3 பெண்களே எழுதவும் வாசிக்கவும் ஆற்றல் பெற்றிருந்தனர். இடைநிலை, உயர்நிலைக் கல்வியில் முஸ்லிம் பெண்களின் நிலை மேலும் மோசமாக இருந்தது.
இக்காலத்தில் முஸ்லிம் சமூகம் மேலைத்தேயக் கல்வியை முற்றாகப் புறக்கணித்ததோடு குறிப்பாகப் பெண் கல்விக்குத் தடையையும் விதித்திருந்தது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. மேலைத்தேயக் கல்வி முறையானது கிறிஸ்தவ சமய அடிப்டையில் அமைந்ததால் முஸ்லிம் சமய, கலாசார தனித்துவத்தை அது பாதித்து விடலாம் என்ற அச்சம் அங்கு நிலவியது. இதன் காரணமாக இக்காலகட்டத்தில் முஸ்லிம் பெண்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படலாயிற்று.
இக்காலகட்டத்தில் முஸ்லிம்கள் தமது கல்வி வளர்ச்சிக்கு எதிராக இருந்தார்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. ஏனெனில் எல்லாக்காலத்திலும் “ குர்ஆன் மத்ரசா” கல்வி முறை முஸ்லிம்கள் மத்தியில் பிரபல்யமாகக் காணப்பட்டது. இதனால், முஸ்லிம் பெண்களில் பெரும்பாலானோர் அரபு மொழியை எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாகக் காணப்பட்டார்கள். முஸ்லிம் பெண்களில் ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தினர் அக்காலத்தில் இலங்கையிலும், தென் இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்ட “அரபுத்தமிழ்” மொழியில் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கினார்கள்.
4.1.2. சுதந்திரத்திற்குப் பிந்திய காலகட்டம்
இக்காலத்தில், கிராமப்புற மக்களும் பாடசாலைக் கல்வியைத் தமது சூழலில் கற்க வாய்ப்பளிக்கப்பட்டனர். இப்பிரதேசங்களில் கட்டிட வசதிகளோடு ஏனைய கல்வி வசதிகளும் இலவசமாக அரசால் வழங்கப் பட்டன. முஸ்லிம்கள் இதனால் பலனடைந்தனர். சுதந்திரத்துக்குப்பின் 50 ஆண்டுகளில் அதாவது 1991ஆம் ஆண்டு இலங்கையில் மொத்தமாக 710 முஸ்லிம் பாடசாலைகள் காணப்பட்டன. இவை நாடு முழுவதும் பரந்து எல்லாப் பிரதேச முஸ்லிம்களுக்கும் பயன் தரக் கூடிய முறையிலும் அமைவுற்றிருந்தன. அவ்வாண்டில் மொத்தமாக 16831 முஸ்லிம் ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். இவர்களில் ஏறக்குறைய அரைப்பங்கினர் முஸ்லிம் பெண் ஆசிரியர்களாவர். சுதந்திரத்திற்குப் பிந்திய காலம் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் குறிப்பாக முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியில் ஒரு முக்கியமான கால்கட்டம் என்றால் மிகையாகாது.
10

இக்காலகட்டத்தில் முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியைத் துாண்டிய காரணிகள் பல. அவற்றுள் கிராம மட்டத்தில் இலவசக் கல்வி வாய்ப்புக்கள் அரசினால் வழங்கப்பட்டமையும், பாடசாலைக் கல்வி பற்றிய சமூகக் கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் முக்கியமானவையாகும். இதன் விளைவாக முஸ்லிம் பெண்கள் “குர்ஆன் மதுரசாவிற்கு” செல்கின்ற அதே முறையில் பாடசாலைக்குச் செல்லவும் தூண்டப்பட்டனர். பெண் பாடசாலைக் கல்வியின் முக்கியத்துவம் சமூகத்தால் இக் காலத்தில் உணரப்பட்டது. கல்வியானது பெண்களுக்குச் சமூக அந்தஸ்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை உருவானது. படித்த பெண்கள் ஆசிரியத் தொழில் செய்வது தவறில்லை என்ற கருத்தும் உருவாயிற்று. கால மாற்றத்திற்கேற்பப் பெண்களின் இடைநிலை, உயர்நிலைக் கல்வியானது அத்தியாவசியம் என்பது இச்சமுதாயத்தினால் உணரப்பட்டது. பெண் கல்வியில் உறுதியான வளர்ச்சி இக்காலத்தில் ஏற்பட இது காரணமாகியது.
சுதந்திரத்திற்குப் பிற்பட்ட கால முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சிப் போக்கைப் புள்ளிவிபரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. முஸ்லிம் பெண்களின் எழுத்தறிவு வீதம் 1946 இல் 30 வீதமாக இருந்து 1981இல் 70 வீதமாக அதிகரித்திருக்கின்றது. இக்காலகட்டத்தில் பாடசாலை செல்லும் மாணவர் விகிதம் இரட்டிப்பாகியது.
கல்வி ரீதியாக முஸ்லிம் பெண்கள் அடைந்த வெற்றிக்கு மற்றுமொரு உதாரணம் இப் பெண்களின் இரு மொழித் தேர்ச்சியாகும். ஒப்பீட்டு ரீதியாக முஸ்லிம் பெண்கள் இந்ாட்டில் வழக்கத்தில் இருந்த முக்கியமான மொழிகளில் எழுத, வாசிக்க, விளங்கத் தெரிந்தவர்களாகக் காணப்படுகின்றார்கள். இதனை 1981ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு, கல்விப் புள்ளிவிபரங்களிலிருந்து அறியலாம். படம் 1 தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் முஸ்லிம் பெண்கள் எழுத்தறிவாற்றல் பெற்றிருக்கின்ற தன்மையைத் தெளிவாகக் காட்டுகின்றது. இதில் குறிப்பாகத் தமிழ், சிங்கள மொழிப் பிரதேசத்திற்கேற்ப முஸ்லிம் மொழியாற்றலிலும் பிரதேச ரீதியான வேறுபாடுகளை படம் 2 இல் இருந்து அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
எனினும், முஸ்லிம் பெண் கல்வியின் எல்லா அம்சங்களிலும் திருப்திகரமான மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. தவிர்க்கப்படக்கூடிய பல்வேறு காரணங்களுக்காகவும் முஸ்லிம் பெண்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தம் செய்கின்றார்கள். உயர் வகுப்புக்களில் முஸ்லிம் மாணவிகள் பாடசாலையை விட்டு விலகும் விகிதம்
1.

Page 13
LJUD 2 a a
முஸ்லிம் பெண்களின் எழுத்தறிவு வீதம்
தமிழ் சிங்களம்
ロ ܕ݁ܙܰܝܙܕ.، ق.م S స్టో)
ús (í i-7') Q. 3 mai 85-95)
esijat - pi. [...]ታ'ዙ (o.ዓ) Sfiew tit.2"
圈” பார் க.
si o trii:
m (i).
Samu (5-1)
pui ().5
கிதாசரர் "
SR-in 5.9
s gait (-30)
Soire: Population census 19
2
 
 
 
 
 
 
 
 
 
 

உயர்வாகக் காணப்படுகின்றது. பல்கலைக்கழக முஸ்லிம் மாண்விகள் கூட இதற்குப் புறம்பானவர்கள் அல்ல என்பதை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. குறைவிருத்திச் சமூகத்தில் சராசரிப் பெண்களின் கல்வியைப் பாதிக்கின்ற சமூக, பொருளாதார, கலாசாரக் காரணிகளோடு வேறுபல தனித்துவமான காரணிகளும் இலங்கை முஸ்லிம் பெண்களின் தொடர்ச்சியான கல்வி வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன.
பெண்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்ற இக்காரணிகளில் முஸ்லிம் சமூகத்தின் பெண் கல்வி பற்றிய நோக்கு என்ற அம்சம் மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியதொன்றாகும். மேலைத்தேசக் கல்வியின் பாதகம் பற்றி இச்சமூகத்தில் மிக நீண்டகாலம் வேரூன்றியிருந்த கருத்துக்கள் முற்றாக இன்னும் வேரறுக்கப்படவில்லை. இது ஒரு முக்கியமான காரணியாகும். முஸ்லிம் பெண்களுக்குக் கல்வி அவசியம் என்ற நோக்கில் சாதகமான மாற்றம் இச் சமூகத்தில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டிருந்தாலும் எந்த அளவு கல்வி அவசியம் என்பதில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் இச்சமூக அங்கத்தவர் மத்தியில் இன்றும் காணப்படுகின்றன. ஆசிரியத் தொழிலைவிட ஏனைய தொழில்களுக்காகப் பெண்களைக் கற்பிப்பது பொருத்தமற்றது என்ற மனோபாவம் மிகப் பரவலாக முஸ்லிம் பெற்றோர் மத்தியில் இன்றும் காணப்படுகின்றது. அதாவது தங்குதடையற்ற சுதந்திரமான கல்வி வளர்ச்சியை நோக்கி முஸ்லிம் பெண்கள் ஆர்வமூட்டப்படுவதில்லை.
4.3 முஸ்லிம் பெண் கல்வியில் பிரதேச ரீதியான வேறுபாடுகள்.
முஸ்லிம் பெண்களின் கல்விநிலை மாவட்டத்திற்கு மாவட்டம் ஏற்றத்தாழ்வு கொண்டிருப்பதை அவதானிக்கலாம். உதாரணமாக எழுத்தறிவாற்றலை எடுத்துக் கொண்டால் 1981ஆம் ஆண்டில் காலி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் பெண்களின் எழுத்தறிவு தேசிய எழுத்தறிவு வீதத்தை விடவும் உயர்ந்ததாகக் காணப்பட்டது. ஆனால், இந்நிலை முஸ்லிம்கள் மத்தியில் நாடு முழுவதும் பரவலாக இல்லை. LDLL d5 356T), திருகோணமலை, அநுராதபுரம், மொனராகலை போன்ற மாவட்ட முஸ்லிம் பெண்களின் எழுத்தறிவு சராசரி எழுத்தறிவு வீதத்தை விடக் குறைவாகக் காணப்படுகின்றது (படம் 2).
எழுத்தறிவு கல்வியின் ஒர் அம்சத்தை மதிப்பிடும் குறிகாட்டி Iத்திரமே. அதனால், முஸ்லிம் கல்விநிலையை இனங்காண்பதற்கு வேறு கல விக் குறிகாட்டிகளும் பயன்படுத்தப்பட வேண்டியது அவசியயாகும். இந்த அடிப்படையில் முஸ்லிம் மாணவிகளின் பாடசாலைக்
13

Page 14
அட்டவணை 2
ாவட்ட ரீதியாக மொத்த முஸ்லிம் மாணவர்களில் முஸ்லிம் மாணவிகளின் விகிதாசாரம், 1953. 1991.
மாவட்டம் 1953 1991 மாற்றம் 1953-1991 கொழும்பு 39.6 49.0 9.4 கம்பஹா ★★ 46.9 re களுத்துறை 48 48.6 6.8 கண்டி 46.9 48.9 2.0 மாத்தளை 28.2 48.5 20.3 நுவரெலியா 38.9 48.4 9.5 காலி 34.2 48.2 14.0 மாத்தறை 414 418 0.4 அம்பாந்தோட்டை 418 43.7 19 யாழ்ப்பாணம் 44.5 50.0 5.5 கிளிநொச்சி 女★ 57.2 drwy மன்னார் 43.7 49.6 5.9 முல்லைத்தீவு ★女 女★ வவுனியா 46.6 46.6 O.O மட்டக்களப்பு 38.0 49.5 115 அம்பாறை Ar yr 46.5 திருகோணமலை 39.4 45.3 5.9 குருநாகல் 35.5 48.3 12.7 புத்தளம் 50.2 47.8 2.4 அநுராதபுரம் 42.1 48.8 6.7 பொலனறுவை 女★ 47.5 un
பதுளை 46.0 48.8 2.8 மொனராகலை yA yb 48.0 இரத்தினபுரி 38.1 47.8 9.7 கேகாலை 43.7 48.6 4.9 இலங்கை 41.2 47.9 6.7
** - விபரம் கிடைக்கப் பெறவில்லை. மூலம் குடிசனக் கணிப்பு 1953 பாடசாலைக் கணிப்பு 1991
14

கல்வி பற்றிய குறிகாட்டிகள் பற்றியும் ஆராய்வது பொருத்தமானதாகும். அட்டவணை 2 முஸ்லிம் மாணவிகளின் பாடசாலைக் கல்வியின் மாவட்ட ரீதியான பரம்பலைக் காட்டுகின்றது. 1991ஆம் ஆண்டு யாழ்ப்பான மாவட்டத்தைத் தவிர இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் முஸ்லிம் மாணவிகளின் விகிதாசாரம் மாணவர்களைவிடக் குறைவாகக் காணப்பட்டது. எழுத்தறிவு ரீதியாக பின்தங்கிய மாவட்டம் என அடையாளம் காணப்பட்ட அம்பாறை, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் முஸ்லிம் மாணவிகளின் கல்வியில் பின்தங்கிய தன்மை மிகத் தெளிவாகக் காணப்படுகின்றது. இவ்வட்டவணையில் முஸ்லிம் பெண்களின் எழுத்தறிவு விதத்தோடு முஸ்லிம் மாணவிகளின் பாடசாலை செல்லும் வீதத்தை ஒப்பிடும்போது சில முரண்பாடுகள் காணப்படுவதனை அவதானிக்கலாம். உதாரணமாக மிக உயர்ந்த முஸ்லிம் பெண் எழுத்தறிவு வீதத்தைக் கொண்ட மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம் பெண்கள் பாடசாலை செல்லும் விகிதம் மிகக் குறைவாகக் காணப்படுகின்றது.
முஸ்லிம் பெண்களின் வரலாற்று ரீதியான கல்வி வளர்ச்சியைப் பிரதேச மட்டத்தில் நோக்குகின்ற போது பல புதிய உண்மைகள் தெளிவாகின்றன. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முஸ்லிம்களின் எழுத்தறிவு குறைந்த மாவட்டங்களாக மட்டக்களப்பு (அம்பாறை உட்பட) திருகோணமலை, குருநாகல், புத்தளம், சிலாபம், அநுராதபுரம், மன்னார் ஆகியவை காணப்பட்டன. இக்காலத்தில் இம்மாவட்டங்களில் சராசரி 100 முஸ்லிம் பெண்களுக்கு ஒருவரே எழுத்தறிவு கொண்டிருந்தார். அதே நேரத்தில் இதே காலத்தில் நகர்ப்புறங்களில் முஸ்லிம் பெண் எழுத்தறிவு முன்னைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது திருப்தியாகக் காணப்பட்டது. ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1981ஆம் ஆண்டு குடிசனக் கணிப்பீட்டின் போது மாவட்ட ரீதியான எழுத்தறிவு வீதத்தில் புதியதொரு பிரதேச ஒழுங்குமுறை உருவாகியிருப்பதைப் புள்ளிவிபரங்களிலிருந்து அவதானிக்கலாம். எழுத்தறிவை ஒரு கல்விக் குறிகாட்டியாகக் கொண்டு இந்நூற்றாண்டில் ஏற்பட்ட பிரதேச ரீதியான கல்வி வளர்ச்சி வேறுபாடுகளை ஆராயும்போது பின்வரும் ஒழுங்குமுறையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இக்காலக்கட்டப் பகுதியில் முஸ்லிம் பெண்களின் எழுத்தறிவில் ஏற்பட்ட மாற்றத்தை மெதுவான, மிதமான, வேகமான மாற்றங்கள் என இனங்காணலாம். இலங்கையிலுள்ள நிருவாக மாவட்டங்கள் முஸ்லிம் பெண்களின் வரலாற்று ரீதியான கல்வி மாற்றத்திற்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன. அட்டவணை 3 இதனைக் காட்டுகின்றது. இதில் 1900-1981 வரையிலான காலப்பகுதி இரண்டு கால கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
15

Page 15
அட்டவணை 3 மாவட்டரீதியாக முஸ்லிம் பெண்களின் எழுத்தறிவு மாற்றத்தின் போக்கு 1901-1981
மாற்றம் 1901-1963 1963-1981
மெதுவாக மன்னார், மட்டக்களப்பு, கொழும்பு, அம்பாந்தோட்டை திருகோணமலை, அநுராதபுரம் யாழ்ப்பாணம்.
மிதமாக கண்டி, மாத்தளை, காலி, கேகாலை நுவரெலியா, வவுனியா, பதுளை,
புத்தளம், பதுளை, இரத்தினபுரி களுத்துறைகண்டி, காலி இரத்தினபுரி குருநாகல். மாத்தளை,திருகோணமலை
Columes யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, மன்னார்,பொலனறுவை, அநுரா
களுத்துறை, நுவரெலியா மட்டக்களப்பு, குருநாகல் கேகாலை.
மூலம்: பல்வேறு குடிசனக் கணிப்பீடுகளிலிருந்து கணிக்கப்பட்டது.
இவ்வட்டவணையிலிருந்து முஸ்லிம் பெண்களின் கல்வி சார்ந்த பின்வரும் அம்சங்கள் தெளிவாகின்றன. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் முஸ்லிம் பெண் கல்வியில் வேகமான மாற்றம் யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, களுத்துறை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளன. மாறாக மிக மெதுவான கல்வி வளர்ச்சி மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அநுராதபுரம் ஆகிய கிராமப்புற, பின்தங்கிய, விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளன. மேற்குறிப்பிட்ட நிலையிலிருந்து வேறுபட்ட கல்வி வளர்ச்சிப் போக்கினை அண்மைக் காலத்தில் அதாவது கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அவதானிக்க முடிகின்றது. இந்நுாற்றாண்டின் முற்பகுதியில் எழுத்தறிவில் வேகமான மாற்றத்தை அவதானிக்க முடிந்தது. இம்மாவட்டங்கள் அண்மைக் காலத்தில் மிக மெதுவான கல்வி வளர்ச்சி மாற்றத்தைக் காட்டுகின்றன. அதே வேளை ஆரம்பத்தில் மெதுவான வளர்ச்சியைக் கொண்டிருந்த மாவட்டங்கள் அண்மைக் காலத்தில் வேகமான வளர்ச்சியைக் கொண்டிருப்பதை தெளிவாக அவதானிக்க முடியும்.
மேலே எடுத்துக் காட்டப்பட்ட அம்சங்கள் பின்வரும் உண்மைகளை உணர்த்துகின்றன. முஸ்லிம்களின் எழுத்தறிவு ஆற்றல் ஒரு இலக்கை வேகமாக அடைந்த பிறகு மெதுவாக மாறிச் செல்கின்ற போக்கைக் கொண்டிருந்தது. மறுபுறத்தில், ஒவ்வொரு பிரதேசத்திற்குள்ளும் காணப்படுகின்ற சமூக, பொருளாதாரக் காரணிகளும் முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் எழுத்தறிவு மற்றும் கல்வித்தர வேறுபாட்டினை உருவாக்குகின்றன.
16

6.0 முஸ்லிம் பெண் கல்வியின் இன்றைய நிலை 5.1 ஆரம்ப, இடைநிலைக் கல்வி:
ஆரம்ப, இடைநிலைக் கல்வியில் முஸ்லிம் மாணவிகளின் விகிதம் ஏறக்குறைய முஸ்லிம் மாணவர்களுக்குச் சமனாகக் காணப்படுகின்றது. முதலாம் ஆண்டிலிருந்து 10ஆம் ஆண்டு வரை முஸ்லிம் மாணவிகள் கல்வியை தொடர்ச்சியாக மேற்கொள்கின்றனர். இப்போக்கை நாடு முழுவதும் பரவலாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
முஸ்லிம் சூழலில் பெண்கள் ஆரம்ப, இடைநிலைக் கல்வியைப் பெறுவதற்கு வாய்ப்புக் கிடைக்கக் கூடியதாக இருப்பது இக்கல்வியின் விருத்திக்கு முதற் காரணமாகும். இலவசக் கல்வி முறையும் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான அரசாங்கச் சலுகைகளும் (உ.ம்: இலவசப் பாடநூல், உணவு, உடை) முஸ்லிம் பெண்களின் ஆரம்ப காலக் கல்விக்கு உத்தரவாதம் செய்கின்றன. கலாசார ரீதியாக நோக்கும் போது பராயமடையாத பெண்குழந்தைகளின் பாடசாலைக் கல்வி முஸ்லிம் பெற்றோரின் அல்லது இஸ்லாமிய சமுதாயத்தின் கண்ணோட்டத்தில் முரண்பாடான ஒன்றல்ல. மேற்குறித்த சமூக, கலாசாரக் காரணிகள் சாதகமான வெளிப்பாட்டை முஸ்லிம் மாணவிகளின் கல்வியில் ஏற்படுத்தியிருக்கின்றது. என்றாலும் வறுமை காரணமாகவும், கல்வி வழிகாட்டலின்மை காரணமாகவும் பாடசாலையை விட்டு வெளியேறும் நிலை மேற்குறித்த வயதெல்லைக்குட்பட்ட முஸ்லிம் பெண்கள் மத்தியில் உண்டு என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
6.2 க.பொ.த.சாதாரணதரக் கல்வி:
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளில் மிகச் சிறிய விகிதத்தினரே உயர்தரக் கல விக்குத் தகுதி பெற்றிருக்கின்றார்கள். முஸ்லிம் மாணவிகளைப் பொறுத்தவரை இப்பரீட்சை திறமை ரீதியாக மட்டுமல்லாமல் கலாசார ரீதியாகவும் ஒரு தடைக்கல்லாக அமைந்துள்ளது. ஒரு பெண் பராயம் அடையும் வயது இடைநிலைக் கல்வியின் இறுதிக்கட்டமாகும். பராயமுற்ற ஒரு பெணி குழந்தை பற்றிய முஸ்லிம் பெற்றோரின் பார்வை இப்பெண்களுக்கான திருமண ஒழுங்கு பற்றியதாகவே இருக்கின்றது. முஸ்லிம் சமூகச் சூழலும் பாரம்பரியமும் பெண்களின் இளவயதுத் திருமணத்துக்குத் தூண்டுதல்களாக விருக்கின்றன. இதன் விளைவு திறமையிருந்தாலும் கல்வியை மேலும் தொடர முடியாத சூழ்நிலைக்கு முஸ்லிம் மாணவிகளை உள்ளாக்குகின்றது. மிக அண்மைக்காலப் புள்ளிவிபரங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக க.பொ.த.
17

Page 16
சாதாரண தரப் பரீட்சையின் போதும் அதன் பிறகும் முஸ்லிம் மாணவிகளின் எண்ணிக்கை ரீதியான வீழ்ச்சியை இப்புள்ளிவிபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இதன் காரணமாகத் தொகையில் குறைந்தளவான மாணவிகளே உயர் தரப் பாடசாலைக் கல்வி முறைக்குள் நுழைய வாய்ப்பு ஏற்படுகின்றது. இது முஸ்லிம் பெண்களின் உயர் கல்வியை வெகுவாகப் பாதிக்கின்றது.
5. க.பொ.த. உயர்தரக் கல்வி
க.பொ.த. சாதாரண பரீட்சையிலிருந்து துறைவாரியான சிறப்புக் கல்வித் தேர்ச்சிக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கலை, வர்த்தகம், விஞ்ஞானம்,கணிதம் ஆகிய பாடநெறிகள் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்குப் போதிக்கப்படுகின்றன. இக்கட்டத்தில் இம்மாணவர்கள் குறிப்பாகப் பல்கலைக்கழக உயர் கல்வி முறைக்கு இக்கல்வியின் மூலம் வழி நடாத்தப்படுகின்றார்கள்.
இலங்கையில் உயர் கல்வியில் பங்கெடுக்கின்ற மாணவிகளி விகிதாசாரம் மிக அண்மைக் காலத்தில் அதிகரித்துச் செல்லும் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளது. தமிழ் சிங்கள மாணவிகள் க.பொ.த.உயர்தர வகுப்புக்களில் ஆண்களைவிட விகிதாசார ரீதியாக அதிகமாக இருக்கின்றனர். (அட்டவணை 4). முஸ்லிம் மாணவிகளைப் பொறுத்தவரை க.பொ.த. (உயர்தர) வகுப்புகளில் கலைத்துறையை விட ஏனைய வர்த்தக, விஞ்ஞானத் துறைகளில் கல்விபயிலும் விகிதாசாரம் ஆண்களைவிடக் குறைவாகக் காணப்படுகின்றது. தேசியப் போக்கிலிருந்து இது ஒரு வித்தியாசமான போக்கைக் காட்டுவதாக இருக்கின்றது.
அட்டவணை 4 இனரீதியாக, உயர் வகுப்புக்களில் கல்வி கற்ற மாணவிகளின் விகிதாசாரப் பரம்பல், 1991. மாணவிகளின் விகிதாசாரம்
கல்வி மட்டம் முஸ்லிம் சிங்களம் | தமிழ் மொத்தம் க.பொ.த (உத) 45.2 53.7 55.6 53.4 க.பொ.த (உத) விஞ்ஞானம் 37.5 46.7 44.8 46.2 க.பொ.த (உத) கலை. 618 70.3 69.5 69.7 க.பொ.த (உத) வர்த்தகம். 42.2 52.2 54.3 517 க.பொ.த (உத) மொத்தம் 49.6 60.0 58.0 58.0
ypavuir untLeFramavaśasaorfhliu, 1991
18

LU LID 3
மாவட்ட ரீதியாக க.பொ.த (சாதாரண உயர்தர) வகுப்புக்களில் கல்வி கற்கும் முஸ்லிம்
மாணவிகளின் விகிதாசாரம்.
க.ப்ொ.த.(சாத) க.பொ.த.(உத) விஞ்ஞானம்
Esox 350) E50 - 40 E. 50 - 40 Sn II. 40< 目40一30
anagssad 30t
மூலம் பாடசாலைக் கணிப்பீடு "
19

Page 17
அட்டவணை 5
மாவட்ட ரீதியாக பாடசாலை உயர் வகுப்புக்களில் கல்வி கற்ற முஸ்லிம் மாணவிகளின் விகிதாசாரம் 1991.
மாவட்டம் க.பொ.த. க.பொ.த. (உத)க.பொ.த. (உத) க.பொ.த. (உத) பல்கலைக்கழகம்
(சாத) விஞ்ஞானம் 56) வர்த்தகம் கொழும்பு 42 22 74 52 36
கம்பஹா 43 38 69 48 50
களுத்துறை 52 43 92 52 43
கண்டி 51 42 71 43 60
மாத்தளை 52 39 7 39 46
நுவரெலியா 52 33 88 36 13
காலி 41 47 73 60 83
மாத்தறை 34 17 58 28 17
அம்பாந்தோட்டை 34 48 71 55 50
மட்டக்களப்பு 52 34 63 53 48
அம்பாறை 38 32 50 33 19
திருகோணமலை 35 17 33 18 f
குருநாகல் 50 25 62 39 37
புத்தளம் 48 45 56 41 30
அநுராதபுரம் 44 18 51 47 29
பொலனறுவை 49 OO 50 14 00
பதுளை 49 39 74 40 00
மொனராகலை 51 OO 100 00 00
இரத்தினபுரி 51 65 75 66 50 கேகாலை 48 58 79 31 33 மொத்த முஸ்லிம்கள் 45 38 62 42 32
மூலம்: பாடசாலை கணிப்பு 1991 பல்கலைக்கழகம்மானிய ஆணைக்குழு 1990/1991கல்வி வருடம்
20

உயர் கல்வியில் பங்கெடுக்கும் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கையும், விகிதாசாரமும் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. இந்த அம்சம் அட்டவணை 5இலும் படம் 3இலும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. கலைத் துறைக் கல்வி பல மாவட்டங்களில் முஸ்லிம் பெண்களின் விருப்பத்திற்குரிய கல்வித்துறையாகக் காணப்படுகின்றது. கலைத்துறை சார்ந்த உயர் கல்வி கிராமச் சூழலில் முஸ்லிம் மாணவிகளுக்குக் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றமை இதற்குக் காரணமாகும். வர்த்தக, விஞ்ஞானத் துறைகளில் உயர்கல்வி வாய்ப்பு வசதிகளை அதிகமாகக் கொண்ட களுத்துறை, கொழும்பு, நுவரெலியா கண்டி, மாத்தளை, கேகாலை போன்ற மாவட்டங்களிலும் கூட கலைத் துறையில் மாணவிகளின் வீதம் மொத்த மாணவர்களில் 2/3 இலும் கூடுதலாகக் காணப்படுகின்றது. கல்வி வசதி ரீதியாகக் கிட்டிய சூழலில் கிடைக்கக் கூடிய மற்றுமொரு உயர் கல்வித்துறை வர்த்தகத்துறையாகும். புள்ளிவிபர ரீதியாக முஸ்லிம் பெண்கள் மத்தியில் விஞ்ஞானக்கல்வி பிரபல்யமற்ற கல்வியாகக் காணப்படுகின்றது. முஸ்லிம் பெண்கள் மத்தியில் திறமையில்லை என்பதை இது எடுத்துக் காட்டவில்லை. மாறாக க.பொ.த. உயர்தர விஞ்ஞானக் கல்விப் போட்டிப் பரீட்சைக்கு மாணவிகளைத் தயார்ப் படுத்தும் மனோதைரியம் முஸ்லிம் பெற்றோர் மத்தியில் இல்லாமையே பிரதான காரணமாகும்.
5.4 பல்கலைக் கழகக் கல்வி:
பல்கலைக்கழகக் கல்வியில் முஸ்லிம் மாணவிகள் கடந்த காலங்களைவிட அண்மைக் காலத்தில் மிக ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் போன்ற துறைகளில் முஸ்லிம் மாணவிகளின் தொகை அதிகரித்து வருகின்றது. பல்கலைக்கழக உயர்தரக் கல்விக்கு உள்நுழைந்த பெரும்பாலான முஸ்லிம் மாணவிகள் தமக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பட்டதாரிகளாகி வருகின்றனர். பல்கலைக்கழக அனுமதியில் துறை ரீதியான பரம்பல் இதனைக் காட்டுகின்றது.
கிடைக்கப் பெற்ற புள்ளிவிபரப்படி பல்கலைக்கழக உயர் கல்வி கற்கின்ற முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது மாணவிகளின் விகிதாசாரம் குறைவாகக் காணப்படுகின்றது. இவை பல்கலைக்கழக உயர் கல்வி மட்டத்தில் முஸ்லிம் பெண்களின் ஆர்வமின்மையைக் காட்டுகின்றது.
21

Page 18
அட்டவணை 6
முஸ்லிம் பெண் கல்வியும், பெண்கல்வி வளமும், 1991.
ஆசிரியைகளின் முஸ்லிம் மொத்த முஸ்லிம்
பிரிவுகள் ஆசிரியைகள் ஆசிரியர்களில்முஸ்லிம்
எண்ணிக்கை ஆசிரியைகளின்
விகிதாசாரம் மொத்த ஆசிரியைகள் 5617 48% விஞ்ஞான ஆசிரியைகள் 27 25% பட்டதாரி ஆசிரியைகள் 440 38% பயிற்றப்பட்ட ஆசிரியைகள் 2710 45% சான்றிதழ்பெற்ற ஆசிரியைகள் 120 44% க.பொ.த.உத, க.பொ.த. சா.த
2262 58% மெளலவி ஆசிரியைகள் 58 27 % முஸ்லிம் மகளிர் பாடசாலைகள் 24 3.4%
மூலம் பாடசாலைக் கணிப்பு கல்விஅமைச்சு 1991
22

இக்கட்டத்தில் பல்கலைக்கழக அனுமதியில் முஸ்லிம் மாணவிகளின் மாவட்ட ரீதியான பங்களிப்பினை நோக்குவது பொருத்தமானதாகும். கிடைக்கப்பெறுகின்ற விபரங்களின்படி விஞ்ஞானக் கல்வி வசதிகள் முஸ்லிம் மாணவிகளுக்கு நாடு முழுவதிலும் பரவலாகக் கிடைப்பதில்லை. ஆனால் கலை, வர்த்தகப் பாடங்களைப் பொறுத்தவரையில் இக்கல்வி வாய்ப்புக்கள் பரவலாகக் காணப்படுகின்றன (அட்டவணை 6). இதனால் கல்வி ரீதியாகப் பின்தங்கிய மாவட்டங்களில் இருந்தும் கூட முஸ்லிம் மாணவிகள் கலை, வர்த்தகத்துறைக் கல்வி மூலம் பல்கலைக்கழகம் செல்லக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
பெரும்பான்மையான முஸ்லிம் மாணவிகளைப் பொறுத்தவரை பல்கலைக்கழகக் கல்வியை இடையூறின்றித் தொடரக் கூடியதாக இருக்கின்றது. மிகப் பெரும்பான்மையினர் பட்டதாரிகளாகின்றனர். ஆயினும் பல்கலைக்கழக மட்டத்தில் சிறப்புத் தேர்ச்சிக்கான முயற்சியின்மை முஸ்லிம் பட்டதாரி மாணவிகள் மத்தியில் காணப்படும் பொதுவான குறைபாடாகும். அது மட்டுமன்றி கல்வி ஆர்வமின்மையால் சில மாணவிகள் பல்கலைக்கழகக் கல்வியை இடை நிறுத்தியதற்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன. பல்கலைக்கழக அனுமதி கிடைத்தும் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர முன் வராத வேறுசில மாணவிகளும் காணப்படுகின்றனர். இவ்வாறு முஸ்லிம் பெண்கள் இடைவிலகலுக்குத் தனிப்பட்ட காரணிகளோடு தொழில் வாய்ப்பு, திருமணம் போன்ற காரணங்களும் பங்களிப்புச்செய்கின்றன.
23

Page 19
முஸ்லிம் பெண் கல்வி: ஒரு பொது நோக்கு
எம்.எஸ். இஸ்ஸதுன் நிஸா
1. Sloupasib:
இலங்கை முஸ்லிம் பெண்களின் கல்வி நிலை பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றன. இதுவரை கிடைக்கப் பெற்ற விபரங்களில் இருந்து முஸ்லிம் பெண்களின் கல்வி ஒப்பீட்டளவில் பின்தங்கிக் காணப்படுகின்றது. இக்கட்டுரை முஸ்லிம் பெண்களின் கல்வியில் உள்ள பிரச்சினைகளை இனங்காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதலில் முஸ்லிம் பெண்களின் கல்வி வரலாறு பற்றியும், அடுத்து முஸ்லிம் பெண்கள் இன்றுவரை கல்வியில் அடைந்துள்ள முன்னேற்றத்தையும் மூன்றாவதாகக் கல்வியைத் தொடர்வதில் முஸ்லிம் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளையும் இனம்காண முற்படுகின்றது. இறுதியாக, இப்பிரச்சினைகளுக்கு நடைமுறையில் அடையாளம் காணக்கூடிய தீர்வுகளைக் கூறுகின்றது.
இவ்வாய்வுக்கான தகவல்கள்; நுால்கள், சஞ்சிகைகள், ஆய்வுக்கட்டுரைகள், பத்திரிகைகள், ஏற்கனவே தொகுத்து வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் போன்ற பல்வேறு மூலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன. அத்துடன் கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடல்களிலிருந்து ஆய்வு விபரங்கள் பெறப்பட்டுள்ளன.
2. கல்வி வரலாறு 2.1 ஆரம்ப காலம்
இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி பற்றி 1891ஆம் ஆண்டுவரை தெளிவான விபரங்கள் கிடைக்கவில்லை. பிரித்தானியருக்கு முந் தரிய காலத் தரில் மதக் கல விக்கு முக் கரியத் துவம் கொடுக்கப்பட்டிருந்தமை பற்றி ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. உதாரணமாக முஸ்லிம்களைப் பொறுத்தவரை கல்வி வளர்ச்சிக்கு பள்ளிவாசலுடன் இணைந்ததாக “மத்ஹப்’ எனப்படும் முதனிலைப் பாடசாலைகளும், மதுரசாக்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இவ்வாறான பாடசாலைகளில் முக்கியமாக அல்-குர்ஆன் கற்பிக்கப்பட்டது. அத்துடன் எழுத்தும், இலகுவான கணிதமும், முஸ்லிம்கள் தங்களது சமய அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்து ஒழுக
24

வேண்டிய அடிப்படை அறிவும் கற்பிக்கப்பட்டன (Ministry of Education and Cultural Affairs, 1969). slaust 60LD60)u 95.316153(5b, குர்ஆனிலும், அறபு மொழியிலும் ஆரம்ப அறிவையூட்டுவதற்கும் உரிய அங்கீகரிக்கப்பட்ட பாடசாலையாக மத்ஹப் கணிக்கப்பட்டது. எனினும், பெற்றோர் தமது பிள்ளைகளை வாசிப்பு, எழுத்து, கணிதம் என்பவற்றைக் கற்பதற்காக மட்டுமன்றி நல்ல பழக்கவழக்கங்களைப் பழகுவதற்காகவும் அங்கு அனுப்பி வைத்தனர். இங்கு வகுப்புக்களோ, வகுப்புக்கான பாடத்திட்டங்களோ, வயதுக்கட்டுப்பாடுகளோ, மாணவர்களைச் சேர்க்கும் காலநிர்ணயமோ காணப்படவில்லை. மிசனரிப் பாடசாலைகளில் நவீன கல்வி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட அக்காலத்தில் மதுரசாக்கள் அவ்வாறன்றிப் பின்தங்கியிருந்தன.
2.2 பிரித்தானியர் காலம்
பிரித்தானியர்களின் ஆட்சியின் போது முஸ்லிம்களின் கல்வி நிலைமையில் சிறிது சாதகமான மாற்றம் ஏற்படத் தொடங்கியது. ஆயினும், அக்காலத்தில் முஸ்லிம்கள் ஆங்கிலக் கல்வி கற்க வேண்டிவந்தமையும், கிறிஸ்தவ மதக் கோட்பாட்டிற்குள் நின்றே கற்க வேண்டியிருந்தமையும், முஸ்லிம்கள் நவீன கல்வியைப் பெறத்தடையாக அமையும் என்ற அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் அக்காலத்தில் உணரப்பட்டது (Muslim, 1902). 1886இல் சட்டசபை, நிர்வாக சபை என்பவற்றின் உத்தியோக மொழியாக ஆங்கில மொழி ஆக்கப்பட்டமை முஸ்லிம்களும் ஆங்கிலக் கல்வியில் ஈடுபாடு கொள்ளத் துாண்டியது. ஆனால், முஸ்லிம்கள் மத்தியில் இது தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவின. ஆயினுமி, பல செல்வந்தப் பெற்றோர்கள் பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும், தமது பிள்ளைகளை ஆங்கில மொழிப் பாடசாலைகளுக்கு அனுப்பினர். அக்கால கட்டத்தில் அறிஞர் சித்திலெவ்வையின் அயராத முயற்சிகளும், ஒராபி பாசாவின் வருகையும் முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தின.
முதல் முஸ்லிம் கல்விச் சேவையாளரான ஐ. எல். எம். அப்துல் அஸிஸ் அவர்கள் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் முஸ்லிம்களின் வளர்ச்சியிலும் கல்வி வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை காட்டிவந்தார். இவர் முஸ்லிம் சமுதாயம் ஆங்கிலக் கல்வியை முற்றாக நிராகரிப்பதால் ஏற்பட இருந்த ஆபத்தை நன்கு உணர்ந்திருந்தார். “அல்-முஸ்லிம்’ எனும் பத்திரிகையில் 1890ஆம் sa,60ii (6 (S605 Juigi 6holds&LDITEs 6T(pg560TTi (Ministry of Education
25

Page 20
and Cultural Affairs 1969). மேலும், முஸ்லிம் கல்வி மாந்ாடுகள் நடாத்துவதன் மூலம் கல்வியை ஊக்குவிக்கலாம் என்ற வகையில் தமது கருத்துக்களை வெளியிட்டார்.
அக்காலப்பகுதிகளில் முஸ்லிம் பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தப்பட்டது. முஸ்லிம் பெண்களின் கல்வி 1891 வரை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டிருக்கவில்லை. 1891ஆம் ஆணி டையடுத்த காலப் பகுத களில் , பெணி கல் வியரின் அவசியமும்,அவசரமும் உணரப்பட்டதால் மலைநாட்டிலும், தென் மாகாணத்திலும் பெண்களுக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கண்டியில் திருகோணமலை வீதியில் ஒரு பெண்கள் பாடசாலை அமைக்கப்பட்டதோடு அதன் கிளையொன்று கண்டி கட்டுக்கலையில் திறந்து வைக்கப்பட்டது (Muslim 1909). 1891 ஆம் ஆண்டில் இலங்கையின் நிர்வாக அறிக்கையின்படி 152 மாணவிகளின் பெயர்கள் இடாப்பில் பதியப்பட்டிருந்ததுடன் ஆசிரியைகள் 4 பேர் கடமையாற்றினர் (Muslim, 1909). எனவும் அறியமுடிகின்றது.
கம்பளை, குருநாகல் போன்ற பகுதிகளில் மேலும் இரண்டு பெண்கள் பாடசாலைகள் திறந்து வைக்கப்பட்டன எனவும், பொல்கஹவெலப் பகுதியிலிருந்து முஸ்லிம் பெண்கள் கல்விக்காக குருநாகலுக்குச் சென்றனர் எனவும் Muslim Nation (1891) பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1891இல் காலிக்கு அண்மையிலுள்ள தலாபிட்டிய என்னும் கிராமத்திலும், மாத்தளை நகரிலும் முஸ்லிம் பெண்கள் பாடசாலைகள் திறந்து வைக்கப்பட்டன. மாத்தறையில் ஜனாப் எம்.எல்.எம். மரிக்கார் என்பவர் பெண்கள் பாடசாலையொன்றைத் திறந்து வைக்க உதவினார். காலி, முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் 121 மாணவிகளும், மாத்தறை, முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் 112 மாணவிகளும் கல்வி கற்றனர். ஆனால் 1891ஆம் ஆண்டு நிருவாக அறிக்கையில் தென் மாகாணப் பாடசாலைப் பரிசோதகர் “இப்பாடசாலைகள் திருப்திகரமாக இயங்கவில்லை’ எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இக் காலத்தில் கொழும் பிலும் முஸ்லிம் பெணிகள் பாடசாலை யொனி றை ஏறி படுத் துவதற்கான முயறி சிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக 1892ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி ஒரு பொதுக் கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. இப்பாடசாலையை நிர்வகிக்க அறபு மொழியாற்றலுடைய முஸ்லிம்
26

ஆசிரியைகள் இல்லாமை பெரும் தடையாக இருந்தது. இதனால் தகைமையுடைய ஒரு முஸ்லிம் பெண்ணை இந்தியாவிலிருந்து அழைத்து வர அரசு முயற்சித்தும் அது சாத்தியமாகவில்லை. இதனால் முஸ்லிம் பெண்கள் பாடசாலை கொழும்பில் அமைக்கும் பணி காலதாமதமாகியது (Government of Ceylon, 1891). 6T66sgrub, 1892S6, Spigs' U(55u56) முஸ்லிம் பெண் பாடசாலையொன்று கொழும்பில் இருந்ததாக முஸ்லிம்நேசன் என்ற பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
19ஆம் நுாற்றாண்டின் இறுதியில் படித்த ஒரு சில முஸ்லிம் பிரமுகர்களின் முயற்சியால் இலங்கையின் வேறு சில பகுதிகளில் ஆண், பெண் பாடசாலைகள் அமைக்கப்பட்ட போதும் அம்முயற்சி முழு முஸ்லிம் சமுதாயத்தினதும் மனப்பூர்வமான வரவேற்பைப் பெறவில்லை. கண்டி, கம்பளை, பதுளை, கொழும்பு, காலி, மாத்தறை முதலான நகரங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்ததால் முஸ்லிம் பாடசாலைகள் அங்கு ஏற்படுத்தப்பட்டன. ஆனால் கிழக்கு மாகாணத்தில் கணிசமான அளவிலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரந்தும் வாழ்ந்த முஸ்லிம்கள் தத்தம் பகுதிகளில் பாடசாலைகள் அமைக்க முயற்சிக்கவில்லை. குறிப்பாக, இக்காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்களின் நலனுக்காக ஒரு பாடசாலையும் அமையவில்லை.
1903ஆம் ஆண்டளவில் முகம்மதிய உதவி நன்கொடைபெறும் பாடசாலைகள் என்ற பெயரில் 6 ஆண் பாடசாலைகளும், முகம்மதிய அரசாங்கப் பாடசாலைகள் என்ற பெயரில் 7 பாடசாலைகளும் நிறுவப்பட்டன (Ministry of Education and Cultural Affairs, 1969). S6 306ft 60f பாடசாலைகளை உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளாகவே அரசு கருதியது. ஆனால் அரசு முஸ்லிம் பெண் பாடசாலைகளை அரசாங்கப் பாடசாலைகளாக ஏற்றுக் கொண்டது. இவற்றிற்குக் கட்டடவசதி, தளபாட வசதி, ஆசிரியர்களுக்கான சம்பளம் என்பன அரசாங்கத்தாலேயே 6ptics UL60T (Government of Ceylon, 1893).
வரலாற்று ரீதியாகப் பெண்களின் கல்வி நிலையை 1921ஆம் ஆண்டின் நிர்வாக அறிக்கை, கல்வி புள்ளிவிபரங்கள் தெளிவாக காட்டுகின்றன (அட்டவணை 1). எழுத்தறிவு வீதத்தை இன அடிப்படையில் முஸ்லிம் ஆண்களுடனும், பெண்களுடனும் ஒப்பிட்டு நோக்குவதன் மூலம் முஸ்லிம் பெண்கள் எத்தகைய நிலையிலுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. பால் ரீதியான எழுத்தறிவு வீதங்களையும் இப்புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. 1891ஆம் ஆண்டு நிர்வாக அறிக்கை மூலம்
27

Page 21
அட்டவணை 1
இன ரீதியான எழுத்தறிவு வீதம் 1881-1921
ஆண்கள் வீதம் இனவாரியான வகுப்பு 1881 1891 1901 1911 1921 கிறிஸ்தவர்கள் 4.5 50.0 55.2 60.3 66.0 சிங்களவர்கள் 23.5 28.8 34.9 418 50.4 முஸ்லிம்கள் 26.9 30.5 34.4 36.2 44.8 தமிழர்கள் 19.8 23.3 25.9 29.6 36.9
பெண்கள் வீதம் இனவாரியான வகுப்பு 1881 1891 1901 1911 1921 கிறிஸ்தவர்கள் 13.6 21.7 30.0 38.8 50.1 சிங்களவர்கள் 14 2.6 5.2 9. 16.8 முஸ்லிம்கள் 1.5 1.5 3.3 3.2 6.3 தமிழர்கள் 1.1 8 2.5 4.0 10.2
மூலம் குடிசனக் கணிப்பு இலங்கை 1921தொகுதி பகுதி2
முஸ்லிம் பெற்றோர் பொதுவாக தமது பெண் குழந்தைகளின் பாடசாலைக் கல்வியில் அக் கறை கொண்டிருக்கவில்லை என்ற அம்சம் தெளிவாகின்றது.
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் மத்தியில் கல்விக்கான ஈடுபாட்டில் சிறிது அபிவிருத்தி ஏற்படத் தொடங்கியது. இதனை அட்டவணை 2 காட்டுகின்றது. ஆயினும், 1921ஆம் ஆண்டுப்பகுதியில் எழுத்தறிவு வீதத்தில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டதே தவிர கல்வித்தரத்தில் பாரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில் முஸ்லிம் பெரியார்களின் விடாமுயற்சியினாலும் அரசு வழங்கிய பல்வேறு சலுகைகளினாலும் பெற்றோர்கள் ஆர்வம் காட்டியதனாலும் பெண்கல்வியின் அவசியம் உணரப்பட்டதாலும் முஸ்லிம் பெண் கல்வி முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
காலத்திற்குக்காலம் முஸ்லிம் கல்வி மாநாடுகள் நடத்தப்பட்டதும் கல்வியில் ஆர்வம் ஏற்படக் கராணமாகியது. 1931-1947 காலப்பகுதியில் கல்வியமைச்சராக இருந்த மாண்புமிகு கன்னங்கரா அவர்களால்
28

முஸ்லிம்களின் கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தச் சிறந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அக்காலப்பகுதியில் டி.பி.ஜாயா, ஏ.ஆர். ராசிக் ஆகியோர் கல்வி உயர் மட்டக்குழுவில் அங்கத்துவம் வகித்தனர். எட்டாம், பத்தாம் வகுப்புக்களில் அறபு மொழி ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 1936இல் இரண்டாவது கல்வி மாநாட்டின் போது, பெண்களின் கல்வியில் அதிக கவனம் எடுக்கப்பட்டதால் அநேகமான பெண் பாடசாலைகள் திறக்கப்பட்டன. 1945இல் இலவசக் கல்விமுறை அறிமுகப் படுத்தப்பட்டதும் கிராமப் புறங்களின் கல்வியில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது. தேசிய கல்வி ஆணைக்குழு 1961இல் சமர்ப்பித்த அறிக்கையில் “பொருளாதார, சமூக ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோரும் பாடசாலை வரத் தொடங்கினர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது (Shafi Marikar,1985). 1945இல் மூன்றாவது முஸ்லிம் கல்வி மாநாடு இடம் பெற்றபோது, முஸ்லிம்களின் கல்வியை ஊக்குவிக்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ஏழைக் குடும்பங்களின் கல்வியறிவை முன்னேற்ற இலங்கை முஸ்லிம்களின் புலமைப் பரிசில் நிதியம் தாபிக்கப்பட்டமை (Shafi Marrikar,1985) மற்றுமொரு முக்கியமான அம்சம் ஆகும்.
அட்டவணை 2
எழுத வாசிக்கத் தெரிந்த இலங்கை முஸ்லிம்கள். 1911ஆம் 1921ஆம் ஆண்டுகளில்
மாவட்டம் ஆண்கள் பெண்கள்
1911 1921 1911 1921 கொழும்பு 56.0 63.8 7.8 9.0 கேகாலை 45.9 57.8 1.1 5.6 மன்னார் 47.2 54.0 0.6 0.6 காலி 47.3 5.7 9.7 13.5 கொழும்பு 42.2 51.3 7.7 7.6 களுத்துறை 49.4 50.9 4.4 3.4 கண்டி 40.0 50.8 3.5 7.6 குருனாகல் 38.7 48.7 0.9 3.4 புத்தளம் 40. 46.3 2.0 1.7 திருகோணமலை 29.9 37.2 0.5 1.5 அநுராதபுரம் 33.5 37.1 2.7 0.6 மட்டக்களப்பு 17.7 32.3 0.2 0.6
குறிப்பு: 0 - 4 வயதுப்பிரிவு சிறுவர்கள் நீங்கலாக மூலம் குடிசனக் கணிப்பு இலங்கை 1921தொகுதி 1 பகுதி2
29

Page 22
8.0 அண்மைக்கால மாற்றம் 3.1. மாற்றத்திற்கான அடிப்படைகள்
1949இல் முஸ்லிம் கல்வி மாநாடு ஏ. எம். ஏ. அஸிஸ் தலைமையில் இயங்கிய போது மொழி மூல வழிகாட்டல் பற்றி ஆராய விஷேட குழு நியமிக்கப்பட்டதுடன், புதிய அமைச்சரிடம் இது சம்பந்தமான வேண்டுகோளும் விடுக்கப்பட்டது (Shafi Marikar,1985).
அதனால் முஸ்லிம் பெண்களின் கல்வியிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. முஸ்லிம் பெண்களுக்காக ஓர் அரசாங்க மத்திய பாடசாலையும் அமைக்கப்பட்டது. அளுத்கமையில் ஒரு அரசாங்கப் பயிற்சிக் கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்டது. இவற்றோடு கிராமப்புறங்களிலும் பாடசாலைகள் அமைக்கப்பட்டன. இவற்றினால் முஸ்லிம் பெண் கல்வி ஒரு புது வேகம் பெறத் தொடங்கியது.
1954இல் சுய மொழிக் கல்வியைத் தொடர அனுமதி வழங்கப்பட்டதனால் பெண்கள் கல்வியில் ஆர்வம் காட்ட முன்வந்தனர். மேலும் 1956இல் கல்வியமைச்சராக இருந்த டபிள்யூ.தகநாயக்காவின் திட்டத்திற்கிணங்க 50% திற்கு மேற்பட்ட முஸ்லிம் மாணவர்களைக் கொணி ட பாடசாலைகள் முஸ் லிமி பாடசாலைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டமையும் முஸ்லிம் பெண்களின் கல்வியில் திருப்பம் ஏற்படக் காரணமாயிற்று. எனவே பெற்றோரும் பெண் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பத் தொடங்கினர்.
1960களிலும் 1970களிலும் முஸ லிம் களின் கல்வி முன்னேற்றத்திற்குக் கலாநிதி பதியுதீன் மஹற்மூத் அவர்கள் ஆற்றிய முயற்சிகள் இங்கு குறிப்பிடத்தக்கவை. அக்காலப் பகுதிகளில் பெண்களின் கல்விக்கான பங்களிப்பு எல்லா மட்டங்களிலும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. 1981-1991 காலப்பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் காரணமாகச் சகல தரத்திலும் ஆண்களின் கல்வி மட்டத்தை முஸ்லிம் பெண்கள் அடையக் கூடிய அளவிற்கு முன்னேறியிருந்தனர்.
அதிகமான பெண்கள் சுபீட்சமுள்ள எதிர்காலம் தொடர்பாகப் பெரும் நம்பிக்கையும் அபிலாசையும் கொண்டுள்ளமை உயர்கல்வியை நாடும் பெண்களின் தொகை அதிகரித்ததிலிருந்து வெளிப்டையாகின்றது. கல்வி வளர்ச்சிப் போக்குகளில் ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றம் இன்று காணப்படுகின்ற வரையறுக்கப்பட்ட வேலைவாய்ப்பிற்குள்ள கடும் போட்டியினால் ஏற்பட்டுள்ள விளைவு என்றும் கூறலாம். இந்நிலைமை எல்லோரும் உயர் கல்வித் தகைமைபெற வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. ኀ
30

முஸ்லிம் பெண்கள் இறுக்கமான கலாசாரப் பிணைப்பில் வாழ்கின்றார்கள். இன்று கலாசாரத்திற்குள்ளேயே இருந்துகொண்டு கல்வியைத் தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளமையும் கல்வித்தரத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு காரணமாகக் கூறலாம்.
பெண்களின் மனோபாவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இதற்குக் காரணம் எனலாம் . சுயதேவைகளைத் தாமே நிறைவு செய்து கொள்ள விரும் பரியமை, வேலைவாயப் ப் பு, திருமணவாய்ப்புகளை மேம்படுத்த வேண்டியமை போன்றவை அம்மாற்றங்களாகும். அத்துடன் அநேகமான முஸ்லிம் பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளின் கல வித் தரத் தை முன்னேற்ற முன்வந்தமையும் ஒரு முக்கிய காரணமாகும்.
பொதுவாக எலி லாப் பகுதிகளிலும் முக்கியமாகக் கிராமப் பகுதிகளில் உள்ளவர்கள் கல்வி நடவடிக் ககைளில் பங்குகொள்வதில் புதுவேகம் தோன்றியமைக்கு அரசின் நடவடிக்கைகளான இலவச புத்தக விநியோகம், மதிய உணவுத்திட்டங்கள், இலவச சீருடை விநியோகம், புலமைப் பரிசில்கள் வழங்குதல் பாடசாலை அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றைக் கூறலாம்.
8.2 பிரதேச ரீதியான வேறுபாடு
1981ஆம் ஆண்டின் மாவட்ட அடிப்படையிலான நகர கிராமியத்துறை எழுத்தறிவு விகிதப் புள்ளி விபரங்களின்படி கொழும்பு, மொனராகலை மாவட்டங்களிலுள்ள கிராமியத் துறையில், முஸ்லிம் பெண் களின் எழுத்தறிவு விகிதம் நகரத்துறையை விடவும் உயர்ந்ததாகக் காணப்படுகின்றது. கொழும்பு மாவட்டத்தில் நகரத்துறையில் முஸ்லிம் பெண்களின் எழுத்தறிவு 85% மாகவும் கிராமியத்துறையில் 87.4% மாகவும், மொனராகலை மாவட்டத்தில் நகரத்துறையில் 66.7% மாகவும், கிராமியத்துறையில் 68.4% மாகவும் காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஏனைய மாவட்டங்களில் கிராமியத் துறையின் எழுத்தறிவு வீதம் நகரத்துறையினை நெருங்கியுள்ளது.
மாவட்ட அடிப்படையில் நோக்குமிடத்து 1981ஆம் ஆண்டுப் புள்ளிவிபரங்களின் படி கொழும்பு, காலி, மாத்தறை, கேகாலை, யாழ்ப்பாணம் முதலிய மாவட்டங்களில் உயர்ந்த எழுத்தறிவு வீதமும் பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை, அநுராதபுரம் முதலிய மாவட்டங்களில் குறைவான எழுத்தறிவு வீதமும் காணப்படுகின்றது.
3.

Page 23
8.3 முஸ்லிம் ஆண்களின் கல்வியுடனான ஒப்பீடு
இடைநிலைக்கல்வி, உயர் கல்வி ஆகியவற்றில் குறிப்பாக கேகாலை, மாத்தறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஏனைய மாவட்டங்களைவிட ஆண்களின் கல்வி மட்டத்தை முஸ்லிம் பெண்களின் கல்விமட்டம் அண்மித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். முஸ்லிம் ஆணி களின் கல வித் தரத்திற்கும் , முஸ்லிம் பெண் களின் கல்வித்தரத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை எழுத்தறிவு வீதம் குறைவாகவுள்ள பகுதிகளான அம்பாறை, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் வெளிப்படையாகக் கண்டுகொள்ளலாம்.
பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றவர்களில் பெண்களின் எண் ணிக்கை அதிகரிப்பை அனுமதி பெற்ற ஆணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் வரவேற்கத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது. முஸ்லிம் ஆண்கள் தொழில்நுட்பக் கல்வி, மற்றும் ஏனைய பயிற்சிநெறிகளில் காட்டும் ஆர்வம் தற்போது முஸ்லிம் பெண்களிடையேயும் பரவியுள்ளமை மிகவும் வரவேற்கத் தக்கதாகும். உதாரணமாக கணனிப் பயிற்சி நிலையங்களிலும், பல்கலைக்கழகக் கல்லூரிகளிலும், திறந்த பல்கலைக்கழகத்திலும் முஸ்லிம் பெண்களின் ஈடுபாடு குறிப்பிடத்தக்கதாகும். பட்டப்பின்படிப்பில் முஸ்லிம் ஆண்களின் ஈடுபாட்டை விடவும் முஸ்லிம் பெண்களின் ஈடுபாடு ஒப்பீட்டு ரீதியில் மிகவும் குறைவு என்றே கூறலாம்.
8.4 ஏனைய இனப் பெண்களின் கல்வியுடனான ஒப்பீடு
1963இல் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி பாடசாலைக கல்வியில் சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் 60,659 பேராவர். அதே வேளை சிங்கள மாணவிகள் 8,94,246 பேராகக் காணப்பட்டனர். ஆரம்ப காலத்துடன் ஒப்பிடும் போது சேர்வுவீதம் குறிப்பிடத்தக்கதாக இருந்ததுடன், தொடர்ந்து வந்த காலங்களில் மேலும் அதிகரித்துச் சென்றது எனலாம்.
மேலும் 1981ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, சிங்களப் பெண்களின் எழுத்தறிவு ஏறக்குறைய 85% மாகவும், முஸ்லிம் பெண்களின் எழுத்தறிவு 68% மாகவும் காணப்படுகின்றமை முஸ்லிம் பெணி களின் கல்வி மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துகின்றது. பட்டப் பின்படிப்பில் சிங்களப் பெண்கள் காட்டும் ஆர்வம் போன்று முஸ்லிம் பெண்களிடையே காணப்படாமை வருந்தத்தக்கதாகும்.
32

4. Îuă efoarasei
முஸ்லிம் பெண்களின் எழுத்தறிவு விகிதத்தில் ஏற்பட்ட அதிகரிப்பினைக் கொண்டு கல்வியில் எல்லா மட்டங்களிலும் இவர்கள் உயர்ந்துள்ளனர் என்று கூற முடியாது. அநேகமானோர் 8ஆம் வகுப்பு வரையும், வேறுசிலர் கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண அல்லது உயர்தரம் வரை கல்விகற்றுவிட்டு படிப்பை நிறுத்திக் கொள்கின்றனர். இதனால் பல்கலைக்கழகக்கல்வி வரை படிப்பைத் தொடர்ந்தவர்கள் மிகக்குறைவாகவே காணப்படுகின்றனர்.
கடந்தகாலங்களிலும், தற்காலத்திலும் முஸ்லிம் பெண்களின் இவ்வாறான நிலைக்கு அவர்கள் கல்வி, கலாசார, பொருளாதார, சமூக, மற்றும் அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருத்தல் காரணமாகும்.
4.1 கல்வி ரீதியான காரணிகள்:
கிராமப்புற மாணவிகள் பலர் பாடசாலை அனுமதி தொடர்பான பிரச்சினைகள் பலவற்றை எதிர்நோக்குகின்றனர். உயர்கல்வியை வழங்கும் பாடசாலைகள் பெரும்பாலும் நகரப் பகுதிகளிலே அமைந்திருப்பதன் காரணமாக அங்கு சென்று கல்வியைத் தொடர்வதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். கிராமப்புறங்களில் உயர் கல் விக்கான வாய்ப்புகள் குறைவு என்பதனை இவை எடுத்துக்காட்டுகின்றன.
மேலும் பாடசாலைக்குச் செல்வதாயின் அதிக துாரம் நடக்க வேண்டும் அல்லது பஸ்ஸில் செல்ல வேண்டும். வயது வந்தபெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது ஏதாயினும் பிரச்சினைகள் எழலாம் என்ற பயமும் கல்வியைத் தொடரத் தடையாகின்றன. பாடசாலை துாரத்தில் அமைந்திருந்தால் பெற்றோர் அங்கு அனுப்பத் தயங்குகின்றனர். மற்றும் போக்குவரத்து வசதியின்மையும் கல்விக்குத் தடையாகின்றது.
கிராமிய மட்டத்தில் பாடசாலை செல்வோர் பொதுவாக எல்லா வயது மட்டங்களிலும் காணப்படுகின்றனர். அனேகமான கிராமப்புறப் 1 சாலைகள் ஆசிரியர் பற்றாக் குறை, குறைவான வசதி, வகுப்பறைகளில் இட வசதியின்மை, விஞ்ஞான கூட வசதியின்மை போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளன.
33

Page 24
நகரப் பகுதிகளில உள் ள பாடசாலைகளில் கூட உயர்கல்வியைத் தொடர விரும்புவோருக்குத் தகைமையுள்ள ஆசிரியரின்மை பெரும் பிரச்சினையாகும். இது விஞ்ஞானத்தில் உயர் கல்வியைத் தொடர விரும்புவோருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
ஆசிரியர்கள் மாணவர்களை வழி காட்டுகின்ற முறையும் கல்வியில் பாதிப்பை எற்படுத்தும். மாணவர்களுக்கு அக்கறை ஏற்படுத்தக்கூடிய முறையில் வழிகாட்டல் அமையவில்லையாயின் கல்வியைக் கைவிட்டுச் செல்லக்கூடிய நிலை ஏற்படுகின்றது.
4.2 பொருளாதாரக் காரணிகள்:
ஏனைய இனத்தவர்கள் முஸ்லிம்களை “வர்த்தகர்கள்’ “செல்வந்தர்கள்’ என்ற அடிப்டையில் நோக்குகின்றனர். ஆனால், உண்மையில் முஸ்லிம்களில் அநேகமானோர் மத்தியதர, வறிய குடும்பத்தவர்களாவர். சகல வசதிகளுடனும் வாழ்வோர் மிகக் குறைவானவர்களே. அதேவேளை கல்வியில் ஆர்வம் காட்டுவோர் மத் தரிய தரக் குடும் பதி த வருமி கழி மட்ட வருமானம் கொண்டவர்களுமாவர். இந்நிலையில் தொடர்ந்து படிக்கத் தகைமை இருந்தும் பொருளாதாரக் காரணங்களுக்காக பலர் க. பொ. த. சாதாரண தரத்துடன் கல்வியை விட்டுச் செல்கின்றனர். முஸ்லிம் மாணவிகளைப் பொறுத்தவரையில் இது பெரிதும் உண்மையாகும். மேலும் உயர்வகுப்பில் விஞ்ஞானப்பிரிவிற்குத் தகைமை இருந்தும் குறைந்த வருமானம் காரணமாக வர்த்தக அல்லது கலைப்பிரிவில் சேரும் அநேகமானோரும் காணப்படுகின்றனர். பெண் களைப் பொறுத் தவரை இக் காரணங்கள் கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தறி போது அநேக வேலைவாயப் புக் களைப் பெற்றுக் கொடுக் கின்ற தொழில் நுட்பவியலாளர், பட் டயகி கணக்காளர்கள், கிரயக் கணக்காளர்கள் போன்ற உயர் மட்ட உத்தியோகங்களில் முஸ்லிம் பெண்களின் பங்குபற்றல் குறைவாக உள்ளமைக்கு வருமானக் குறைவும் ஒரு காரணமாகக் கூறலாம். உள்நாட்டில் முஸ்லிம் பெண்களுக்குக் கிடைக்கும் வருமானம் குறைவாக இருப்பதன் காரணமாக அவர்கள் வெளிநாடு செல்லும் நிலை உருவாகும் போது அவர்களுடைய பிள்ளைகளின் கல்வியும் இடைநிறுத்தப்படுகின்றது.
34.

4. கலாசாரக் காரணிகள்:
முஸ லTம் பெணி கள் கல வியரில் பரிணி தங் கரிக் காணப்படுகின்றமைக்கு கலாசாரக் காரணங்களின் செல்வாக்கு ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
தென் மாகாணத்தில் ஒரு சில பகுதிகளிலும் கிழக்கு மாகாணத்திலும் 5ஆம் தரம், 7ஆம் தரம், கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரத்துடன் அநேகமான பெண்கள் கல்வியை நிறுத்திக் கொள்கின்றனர். கல்வி, கலாசார பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது எனப் பயப்படுவது இதற்குக் காரணமாகும். ஏனைய பகுதிகளிலும் சாதாரணமாக இதே நிலையை நாம் கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
முஸ்லிம்கள் கலாசாரத்துடன் இறுக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளவர்களாதலால், கல்வியைப் பற்றிய சரியான கருத்தை விளங்கிக் கொள்ளாமல் ஒரு சிலர் கூறும் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டு பெண் பிள்ளைகளின் கல்வியை இடையில் நிறுத்திவிடுகின்றனர். பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லுாரி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி பயில விரும்புவோர் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றனர்.
இன்றும்கூடக் கல்வி என்பதை அந்நிய “நாகரீகம்” என்ற அடிப்படையில் பிழையாக விளங்கிக் கொண்டோர் முஸ்லிம்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது அநேகமாக முஸ்லிம் பெண்களின் கல்வி ரீதியான பங்களிப்புக்குத் தடைக்கல்லாக அமைகின்றது.
மேலும், முஸ்லிம்பெற்றோர் ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பாடசாலைக்குத் தமது பெண் பிள்ளைகளை அனுப்பத் தயங்குகின்றனர். இவ்வாறான பாடசாலைகளில் தாம் விரும்பும் துறைகளில் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பிருந்தாலும் பெற்றோரின் கலாசாரப் பிணைப்புக் காரணமாகப் பெண்களின் கல்வி இடைநிறுத்தப்படுகின்றது.
4.4 சமுகக் காரணிகள்
முஸ்லிம் பெற்றோரில் அநேகர் கல்வி கற்காதவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களுடன்சேரும் நண்பர்களும் கல்வியின் அவசியத்தை உணராதவர்களாக இருக்கின்றனர். மேலும், அவர்கள் பழகும் சூழலும் கல்வியைத் துாண்டுவதாக அமையாதிருக்கலாம். இந்நிலைமை காரணமாக முஸ்லிம் தாய்மார்கள் தமது பெண்களைக் கல்வியைத் தொடர்வதினின்றும் இடைநிறுத்துகின்றனர்.
35

Page 25
வசதி படைத்த பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகள் கல்வியைத் தொடர அனுமதித்தால், அவர்கள் தொழில் செய்யத் துாண்டப்படுவார்கள் என்றும், அவ்வாறு துாண்டப்பட்டால் சமூகம் தம்மை ஏளனமாக நோக்கும் என்றும் தயங்குகின்றார்கள். சமூகத்தில் கல்வியின்மூலம் உயர் அந்தஸ்த்தைப் பெற்ற ஒருவர் வரையறுக்கப்பட்ட சம்பளத்துடன் இருப்பதால், இவ்வாறானவர்களின் திறமைகள் எப்போதும் எடுபடுவதில்லை.
வைத்தியம், பொறியியல் போன்ற துறைகளில் உயர் கல்வி கற்றோரைவிட, ஏனைய துறைகளில் உயர்கல்வி கற்றோரின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கின்றது. சமூகத்தில் இவ்வாறான நிலைப்பாடு காரணமாக உயர் கல்வியை இடையில் நிறுத்திவிட்டுச் சாதாரண தொழில்களில் சேர்ந்து கொள்பவர்கள் முஸ்லிம் சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர்.
முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் கல்வியை இடைநிறுத்துகின்ற முக்கியமான காரணம் இளவயதுத் திருமணம் ஆகும். இது பெண்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்நிலை வீட்டு வேலையுடன் திருப்திப் படுபவர்களாகப் பெண் களை மாற்றிவிடுகின்றது. அல்லது ஆசிரியத் தொழிலை ஏற்றுக்கொள்வதுடன் நிறுத்தி விடுகின்றது.
சில பெற்றோர் தமது பெண் பிள்ளைகள் குடும்பத்தை நடத்தவும் அவர்களது பிள்ளைகளுக்கு எழுத வாசிக்கச் சொல்லிக் கொடுக்கவும் போதுமான அறிவு இருந்தால் போதும் என்ற எண்ணத்துடன் உயர் கல்விக்குரிய தகைமை இருந்தும் கல்வியைத் தொடர விடாது இடைநிறுத்தி விடுகின்றார்கள்.
ஆரம்ப காலத்திலிருந்தே பெண்கள் கல்விபற்றிக் கொண்டுள்ள மனப்பான்மையும் கல்வியில் அவர்கள் பின்தங்குவதற்கு ஏதுவாக உள்ளது. இவ்வாறான மனப்பான்மை பின்தங்கிய பகுதிகளில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.
மற்றும், கிழக்கு மாகாணத்தில் முக்கியமாகவும் ஏனைய மாகாணங்களில் சாதாரணமாகவும் நிலவுகின்ற சீதனப் பிரச்சினை காரணமாகத் தமது பெண்களைத் தொடர்ந்து படிப்பிக்கப் பெற்றோர் தயங்குகின்றனர். பெண்கள் தமது தரத்திற்கேற்ப அல்லது அதனிலும் உயர்ந்த தரத்தில் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புகின்றனர். இது பெண்ணைப் பெற்ற பெற்றோருக்குப் பெரும் இடையூறு என்பதால் அநேகமான பெண்கள் கல்வியை இடையில் நிறுத்துகின்றனர்.
36

ஏனைய சமுதாயங்களுடன் பிணைப்பு ஏற்படும் எனப் பயந்து தாம் விரும்பிய துறையிலேயே கல்வியைத் தொடர அனுமதியளிப்பதால் பெண்களின் திறமைகள் கட்டுப்படுத்தப்பட்டுக் கல்வியை வெறுக்கும் நிலைக்கும் கூடத் தள்ளப்படலாம்.
இவ்வாறு முஸ்லிம் பெண்கள் முகம் கொடுக்கின்ற, கொடுக்க வேண்டியிருக்கின்ற பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தை அடிப்டையாக வைத்தே தீர்வுகளை வழங்க வேண்டியுள்ளது.
6.0 தீர்வுகளும் ஆலோசனைகளும்
கிராமியப் பகுதிகளில், கல்விநிலை பின்தங்கியிருப்பதற்கு அப்பகுதியில் காணப்படும் கல்வி வசதியீனங்கள் காரணமாகும். இப்பிரச்சினையைத் தீர்க்க இப்பகுதிகளிலுள்ள கற்றவர்களும், வசதி படைத்தவர்களும் இணைந்து செயற்படலாம். அரசிடம் இவர்கள்
தரும்படி வேண்டுகோள் விடுக்கலாம். ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க இப்பகுதிகளில் தகைமையுள்ள ஆசிரியர்களை நியமிக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறான முயற்சி விஞ்ஞானத் துறை போன்ற துறைகளில் கிராமியத்துறையின் வளர்ச்சிக்கு வழி வகுக்கலாம்.
குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் விஞ்ஞானப் பிரிவில் முஸ்லிம் பெண்களின் பங்குபற்றல் விகிதாசார ரீதியாக உயர்வாக உள்ளது என்பதைப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஏனைய
சமூகம் முன்வரவேண்டும். சில மாவட்டங்களில் முஸ்லிம் பெண்கள் பாடசாலைப் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவுமானால் எதிர்காலத்தில் பெண்களின் நிலை, பெண்களின் பங்குபற்றல் குறையும் என்பதால் பெண்கள் பாடசாலைகள் கூடுதலாக அமைக்கப்படுவது அவசியமாகும். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான கல்வித்தர வேறுபாடு நிலவுகின்ற மாவட்டங்களான பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை போன்ற பகுதிகளில் பெண்களின் கல்வி வசதிகளில் திருப்திகரமான மாற்றம் ஏற்பட வேண்டும்.
தொழில்நுட்பக் கல்லுாரிகளில் காணப்படுகின்ற வாய்ப்புக்களைப் பயன்படுத்த முஸ்லிம் பெண்கள் முன்வர வேண்டும். கைத்தொழில் துறைகளில நவீன முறைகள் காலத் தறி குக் காலம்
37

Page 26
அறிமுகப்படுத்தப்படுவதாலும், தொழில் வாய்ப்புக்களில் போட்டி நிலைமைக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதாலும் நவீனமுறையிலான பயிற்சி நெறிகளைப் பெற்றுக்கொள்ளப் பெண்கள் முன்வரவேண்டும். எடுத்துக் காட்டாகப் புலமைப் பரிசில்களுடன் கணனிப் பயிற்சிநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ள சில முஸ்லிம் செல்வந்தர்களின் நிறுவனங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்ள முஸ்லிம் சகோதரிகள் முன்வரவேண்டும்.
முஸ்லிம்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும் கல்வியற்றிய தவறான கருத்துக்கள் தொடர்ந்தும் நிலவுமானால் பெண்களின் பங்களிப்பை அவை குறைத்துவிடும். கலாசாரத்தை ஒழுங்காகப் பேணவும், சமுதாயத்தின் நிரந்தர உறுதித் தன்மைக்கும் கல்வி அவசியம் என்பதை முஸ்லிம் சமூகம் உணரச் செய்ய வேண்டும்.
இலங்கையின் பல பாகங்களில் பொதுவாக நிலவுகின்ற சீதனப் பிரச்சினையைத் தடுக்க படித்த பெண்கள் முன்வர வேண்டும். அவரவரது தரத்திலோ, அல்லது அவரிலும் உயர்ந்த தரத்திலோ வாழ்க்கைத் துணை தேடும் நிலை மாறினால் கல்விக்குத் தடையாக இருக்கும் பெற்றோரின் தயக்கம் நீங்கி எதிர் காலத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும்.
முஸ்லிம் பெண்களின் கல்விநிலைமை பல்வேறு காரணங்களின் செல்வாக்கினால் ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்படுகின்றது. மேலே காட்டப்பட்டுள்ள நடைமுறையில் பிரயோகிக்கத்தகுந்த ஆலோசனைகள் நீண்டகாலத்தில் முஸ்லிம் பெண்கள் சமூகம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற சமுதாயமாக விளங்குவதற்கு உதவும். அத்துடன் முழு முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் பயன்படும்.
38.

முஸ்லிம் பெண்களின் உயர் கல்வி நிலை: ஓர் ஆய்வு
பாத்திமா சுல்பிகா
அறிமுகம்
உயர் கல்வி நிலை பற்றி விபரிக்கும் போது உயர் கல்வி என்றால் என்ன என்பது பற்றி வரையறை செய்து கொள்ளுதல் அவசியமாகும். ஏனெனில், இடை நிலைக் கல்வியைப் பூரணமாக நிறைவு செய்யாத மாணவர்களும்கூட உயர் கல்வி நிலையங்களில் அனுமதி பெற்றுப் பயிலக் கூடிய கற்கைநெறிகள் இன்று காணப்படுகின்றன. பல நாடுகளில் தொழில்நுட்பக் கல்லுாரிகள், தொழிற் பயிற்சிக் கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகள் போன்றன சிரேஷ்ட இடைநிலைக் கல்வியை நிறைவு செய்யாத மாணவர்களுக்கு “சிறப்பு டிப்ளோமா' பயிற்சி நெறிகளை வழங்குகின்றன. எனினும், இக்கற்கை பண்பிலும் தரத்திலும் இரண்டாம் நிலைக்குப் பின்னருள்ள நிலைகளைக் கொண்டிருப்பதில்லை. தற்காலத்தில் இரண்டாம் நிலைக்குப் பின்னர் தரமுள்ள கல்வி, உயர் கல்வி நிலையம் எனக் குறிக்கப்படாத கல்வி ஸ்தாபனங்களால் அமுலாக் கப்பட்டும் வருகின்றது. உதாரணமாகச் சட்டம், உயர் தொழில் நுட்பக் கல்வி, கம்பியூட்டர் பயிற்சி நெறிகள், வங்கியியல், பட்டயக் கணக்காளர் கற்கை நெறிகள், என்பன தனியார் ஸ்தாபனங்களால் நடாத்தப்படுகின்றன. எனவே, எது உயர் கல்வி என்பதை வரையறுப்பது சர்ச்சைக்குரிய விடயமேயாகும். அதிஷ்டவசமாக இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பாலும் உயர் கல்வி என்பது பல்கலைக்கழகக் கல்வி என்றே கொள்ளப்படுகின்றது.
இலங்கையில் பொதுவாக உயர்கல்வி அமைச்சின் கீழ் உள்ள எல்லா ஸ்தாபனங்களாலும் வழங்கப்படும் கல்வி உயர்கல்வி எனக் குறிப்பிடப்படுகின்றது. உதாரணமாக, பல்கலைக்கழகங்கள், நுண்கலைக் கல்லுாரிகள், ஆயுர்வேத வைத்தியத் கல்லுாரிகள், தொழில்நுட்பக் கல்லுரிகள், விதந்துரைக்கப்பட்டுள்ள மாகாணக் கல்லுாரிகள் போன்றவற்றினால் வழங்கப்படும் கற்கைகள் போன்றன இதில் அடங்கும் (Gunawardana , 1990).
39

Page 27
1.2. ஆய்வின் வரையறைகள்:
கல்வியியல் நோக்கில் ஒருவருக்குப் பாடசாலைக் கல்விக்குப் பின் வழங்கப்படுகின்ற அனைத்து அனுபவங்களும, பயிற்சிகளும் உயர்கல்வி எனப்படலாம். இவ்வாய்வில் உயர்கல்வி மூன்றாம் நிலைப் பல்கலைக்கழகக் கல்வி என வரையறுக்கப்பட்டுள்ளது. காரணம், உயர்கல்வி பற்றிய தெளிவான ஆய்வுக்கு பொருத்தமான புள்ளி விபரங்கள் பெறமுடியாமல் இருக்கின்றமையாகும்.
1990ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மூன்றாம் நிலைத் தொழில் நுட்பக்கல்வி ஆணைக்குழுவின் விபரங்களின்படி இலங்கையில் 3000 உயர்கல்வி நிறுவனங்கள் செயற்படுகின்றன. இவற்றில் தனியார் நிறுவனங்கள் 1000ஆகவும், அரச துறை நிறுவனங்கள் 1750 ஆகவும், அரசுசாரா நிறுவனம் 250 ஆகவும் காணப்படுகின்றன. % 4 ஆணைக்குழு இவற்றில் 2000 நிறுவனங்களை குறிப்பாக இனங்கண்டுள்ளது. 700 நிறுவனங்கள் பதிவு செய்வதற்காக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இந்த 700 கல்வி நிறுவனங்களும் ஒரு இலட்சம் மாணவர்களுக்கு, 400 பயிற்சி நெறிகளில் கல்வியையும், பயிற்சியையும் வழங்கி வருகின்றன. இவை எல்லாம் அனுமதிக்காக ஏதோ ஒரு வகையில் சிரேஷ்ட இரண்டாம் நிலைக் கல்வியில் குறைந்த பட்ச சித்தியை எதிர்பார்ப்பவையாக உள்ளன. இவற்றில் பயிலும் மாணவர்கள் பற்றியும், கற்கை நெறிகளைப் பற்றியுமுள்ள தகவல்கள் இதுவரை பகுப்பாய்வு செய்யப்படவில்லை. இதன் காரணமாக இன்நிறுவனங்களின் உயர் கல்விநிலைபற்றிய விடயங்கள் இவ்வாய்வில் தவிர்க்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்கள் (திறந்த பல்கலைக்கழகம் உட்பட) பற்றிய தகவல்கள் கூட போதியளவில் கிடைக்காத நிலையில் நேரடியான அனுபவங்கள், கருத்துக்கள் அடிப்படையில் அமைந்த தகவல்களும் பாடசாலைகளிலிருந்து கிடைக் கப் பெற்ற தகவல்களும் , பயன்படுத்தப்பட்டுள்ளன.
உதாரணமாக முதலாவது பரீட் சை, மற்றும் இறுதிப்பரீட்சைகளுக்கு அமர்ந்த மாணவர்களின் பல்கலைக்கழக இடைவிலகல் பற்றிய தகவல்களோ அல்லது இன, பால் வாரியாகப் பயன்படுத்தப்பட்ட இவ்வகையான தகவல்களோ இதுவரை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வெளியிடப்படவில்லை. அத்துடன் 1982ஆம் ஆண்டிற்கு முன்னர் இன, பால் அடிப்படையில் அமைந்த தகவல்கள் இல்லை. எனவே, கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் பல்வேறு ஆய்வாளர்களின் கருத்துக்களின்
40

அடிப்படையிலும் இன்றைய இலங்கை முஸ்லிம் பெண்களின் உயர் கல்வி நிலை பற்றி இவ்வாய்வில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
2. இலங்கை முஸ்லிம்களின் உயர் கல்வி வளர்ச்சி
இலங்கை முஸ்லிம்களின் உயர்கல்வி வளர்ச்சி ஒப்பீட்டு ரீதியாக ஏனைய சமூகங்களின் உயர்கல்வி வளர்ச்சியிலும் பார்க்கப் பின்தங்கியுள்ளது. பொதுவாக இலங்கை முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியவர்களாக இருந்தமைக்கு முக்கிய காரணம் ஒன்றுண்டு. பிரித்தானியர்களால் கல்வி ஸ்தாபனங்கள் விஸ்தரிக்கப்பட்டபோது முஸ்லிம்கள் தங்கள் மதக் கட்டுக்கோப்புகளைக் களைந்து அக்கல்வி ஸ்தாபனங்களில் சேரவில்லை. ஏனெனில் மதமாற்ற முயற்சிகளுக்கும் மதம் பரப்பும் முயற்சிகளுக்கும் ஆங்கிலேயர்கள் கல்வி ஸ்தாபனங்களைப் பயன்படுத்த முனைந்தனர். இதனை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எதிர்த்தனர். இதனுடன் ஆண்-பெண் இணைந்த கல்வி முறையும் எதிர்ப்புக்குள்ளாகியது. எனவே பாடசாலைக் கல்விக்குள் முஸ்லிம்கள் புகமுடியவில்லை. இதனால் முஸ்லிம்களால் உயர் கல்வி கற்பது தவிர்க்கப்பட, பல்கலைக்கழகக் கல்விக்குள் நுழையும் காலமும் பிற்போடப்பட்டது.
இந்நிலையில் 19ஆம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் சமய மறுமலர்ச்சி இயக்கங்கள் தோன்றின. எம். சி. சித்திலெவ்பை போன்றோரின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் பாடசாலைகள் முஸ்லிம் மாணவர்களுக்குத் தாய் மொழியில் கல்வி போதிப்பனவாய் அமைந்தன. அதன் மூலம் பாடசாலைக் கல்வி பெற்றோரும், ஆங்கிலத்தைப் போதனாமொழியாகக் கொண்ட பல்கலைக்கழகத்திற்குள் புகமுடியாது போயிற்று. இதனை அஸிஸ். தனது கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“பிரித்தானிய ஆட்சிக் காலத்திலும், அதன் பின்னரும் ஆங்கிலம் பல்கலைக்கழகப் போதனா மொழியாக இருந்தது. எனவே பாடசாலையில் ஆங்கிலத்தைப் போதனா மொழியாகக் கொண்டோர் மாத்திரமே, பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த ஒழுங்கு காரணமாக அநேகமான முஸ்லிம்கள் நன்மையடையவில்லை. எனவே முஸ்லிம்களின் முகாமைத்துவத்தின் கீழ் ஆங்கிலப்பாடசாலைகள் ஏற்படுத்தப்படவேண்டியது அவசியமாகியது’ (Azeez, 1969).
இதற்குப் பிந்திய காலத்தில் இரண்டாம் நிலைக் கல்வியை ஆங்கிலத்தில் வழங்கக் கூடிய பாடசாலைகள் வளர்ச்சியடைந்தன.
41

Page 28
இவ்வாறு ஆங்கிலப் பாடசாலைகளில் கல்வி கற்ற முஸ்லிம்கள் 1942ஆம் ஆண்டு தேசியப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றனர். இதற்கு முன்னர் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லுாரி மூலம் லண்டன் பல்கலைக்கழகத்தில் மற்றிக்குலேசன் பரீட்சைக்குத் தோற்றினர். மருத்துவக் கல்லுாரி பரீட்சைகளுக்கும், சட்டக்கல்விப் பரீட்சைகளுக்கும் தோற்றும் வாய்ப்புக் கிடைத்தது.
தொடர்ந்து வந்த தசாப்தங்களில் முஸ்லிம் களின் பல்கலைக்கழகக் கல்வியில் பங்குபற்றுதலானது மிகக் குறைந்த வேகத்தில் வளர்ச்சியடைந்தமையைப் புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ஜெயசூரியா முஸ்லிம் மாணவர்களின் பங்குபற்றுதல் குறைவாக இருந்தமைக்கு இரு விடயங்கள் காரணமாக அமைந்ததாக எடுத்துக் காட்டுகின்றார்.
1. ஏனைய தொழிற் கல்விகளைவிட வர்த்தகமும், வியாபாரமும் வருமானத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்களுக்கு அதிகளவு கவர்ச்சியுடையனவாய் அமைந்தமை.
2. பெண்கள் மறைவாக இருக்கவேண்டும் என்ற நிலை பெண்களின் கல்வியில் மாத்திரமல்லாது ஆண்பிள்ளைகளின் கல்வியில்கூட பாதிப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், கல்வி கற்ற தாய்தான் தனது குழந்தைகளின் கல்வியின் மீது நல்ல விளைவுகளை ஏற்படுத்த உதவ முடியும் (Jayasuriya, 1965).
முஸ்லிம்கள் மத்தியில் சனத்தொகை விகிதாசாரத்துடன் ஒப்பிடும் போது பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் விகிதாசாரம் குறைவான நிலையிலேயே இருந்து வந்துள்ளது. 1987ஆம் ஆண்டு முஸ்லிம்களின் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு குறிப்பிடக் கூடிய ஆண்டாகும். அதாவது இவ்வாண்டில் முஸ்லிம்கள் தமது இன விகிதாசாரத்தைவிடக் கூடுதலாகப் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர். இவ்வாண்டிலேயே மிகக் கூடுதலான முஸ்லிம் மாணவர்கள் திறமையடிப்டையில் தெரிவாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், உயர் கல்வியில் பங்குபற்றுதலில் பிரதேச வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆரம்பகாலத்தில் பல்கலைக்கழகக் கல்வியில் பங்குபற்றுதலுக்கும், பிரதேசக் கல்விநிலைக்கும் தொடர்பு காணப்பட்டது. கல்வியில் வளர்ச்சியடைந்த பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் கூடுதலான உயர்
42

கல்வி பெறும் வாய்ப்பை 1972 இற்கு முன்னர் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம், கொழும்பு முஸ்லிம்களே தேசிய பல்கலைக்கழகங்களில் ஆரம்ப காலங்களில் கல்வி கற்றனர். கல்வியில் வளர்ச்சியடையாத பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு இவ்வாய்ப்புப் பிந்தியே கிடைக்கக் கூடியதாக இருந்தது. இப்பிரதேசங்களில் குறிப்பாக முஸ்லிம் சனத்தொகை அடர்த்தி குறைவாகக் காணப்படும் பிரதேசங்களில் இன்றுகூட முஸ்லிம்களின் பங்குபற்றும் வீதம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.
1972இற்குப் பின்னர் பவ்கலைக்கழக அனுமதிக் கொள்கையில் இடம் பெற்ற மாற்றங்கள் முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஆரம்பகாலத்தில் சாதகமாகவே அமைந்தது. இது முஸ்லிம்களிடத்தில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக முஸ்லிம்களின் சனத்தொகையடர்த்தி கூடுதலாகக் காணப்பட்ட இடங்களிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெறுவோரின் தொகை அதிகரித்தது. அம்பாறை, முல்லைத்தீவு, திருகோணமலை, மாத்தளை, கண்டி போன்ற இடங்களிலுள்ள மாணவர்கள் இதனால் பெருமளவு நன்மைபெற்றனர். இது எதிர்காலத்தில் முஸ்லிம் கல்வியில் மாற்றம் ஒன்றையும் தோற்றுவிக்க ஏதுவாயிற்று. 1982/83இலிருந்து 1986/87 வரை மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளுக்குப் பின்தங்கிய மாவட்டங்களிலிருந்தும், ஏனைய மாவட்டங்களிலிருந்தும் தெரிவான மாணவர் தொகையை அட்டவணை 1 காட்டுகின்றது.
அட்டவணை : 1. மாவட்ட அனுமதி அடிப்படையில் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் தொகை, 1982/83 - 1986/87 மருத்துவம் பொறியியல் பாடநெறிகளில் முஸ்லிம் மாணவர்கள்.
ன மாவட்டம் ஏனையவை Gips
மருத்துவம் பொறியியல்|மருத்துவம்
08 13 05 07 13
18 19 02 08 20
17 14 03 08 20
10 10 10 4. 20
12 12 09 17 2 மூலம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிக்கை, 1984 1985 1986
43

Page 29
இதன் விளைவாக 1980களில் பல்வேறு கற்கை நெறிகளில் இடம் பெற்ற மாணவர் தொகையும் அதிகரித்தது. அனுமதிக் கொள்கையிலுள்ள இறுக்கமான கட்டுப்பாடு இந்த வளர்ச்சிப் போக்கினை மட்டுப்படுத்தி வருகின்றமையை 1988/89/90 ஆண்டுகளில் அவதானிக்க முடிகின்றது. 1987 இல் காணப்பட்ட 8.9சதவீத அதிகரிப்பு மீண்டும் 1990 இல் 7.1சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. முஸ்லிம்களின் பல்கலைக்கழகக் கற்கைநெறி அடிப்படையிலான பங்குபற்றுதல் 19721978 வரையிலான காலப்பகுதியில் கலை, சட்டம், வர்த்தகம் போன்ற துறைகளிலேயே அதிகம் இடம் பெற்றுள்ளது.
இவ்விகிதாசாரத்தில் அமைந்த அனுமதிக் கொள்கை ஏனைய சிறுபான்மைச் சமூகங்களைப் போலவே முஸ்லிம்களின் பல்கலைக்கழகப் பங்குபற்றலையும் வரையறுத்து விடுகின்றது. எப்படியிருப்பினும் தற்போதைய கொள்கைப்படி வருடம் ஒன்றுக்கு அனுமதி பெறக்கூடிய முஸ்லிம்களின் மிகக் கூடிய எண்ணிக்கை 500ஆகும். அனுமதிக்கப்படும் மாணவர்களில் உயர் கல்வி வாய்ப்புக்கள் விதந்துரைக்கப்பட்டுள்ளபடி மொத்த அனுமதி 9500 ஆக உயர்ந்தால் முஸ்லிம்களின் அனுமதி 760 ஆக உயர வாய்ப்புண்டு.
ஒரு சமூகத்தின் நகர்வு அல்லது அந்தஸ்து மேம்பாடு அச்சமூகம் பெறும் கல்வியின் தரத்திலும், வாய்ப்புக்களிலும் தங்கியுள்ளது. சமூக நகர்வை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானவை இவையாகும். எனவே கல்வி வாய்ப்புக்கள் வரையறுக்கப்படும் போது கல்வி வளர்ச்சி தடைப்படுவது மட்டுமல்லாது சமூக அமைதியின்மைக்கும் அது ஏதுவாகியதை நாம் வரலாறுகளிலிருந்து அறிகின்றோம்.
2.1 பயிற்சி நெறி அடிப்படையில் முஸ்லிம் மாணவர் அனுமதி 2.1.1. 1967-74 வரையான காலப்பகுதி
கடந்த சில தசாப்தங்களில் ஒவ்வொரு பயிற்சி நெறிக்கும் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் முஸ்லிம் மாணவர்களின் விகிதம் படிப்படியாக அதிகரித்துச் செல்கின்றது. சட்டத்துறையில் 1971ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் இன விகிதாசாரத்திலும் பார்க்க கூடிய விகிதத்தில் (10.8%) அனுமதி பெற்றுள்ளனர். 1972இல் கலைத்துறையில் இன விகிதாசாரத்திலும் கூடிய விகிதத்தில் (8.4%) அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் ஏனைய ஆண்டுகளில் எல்லாத் துறைகளிலும் அனுமதி பெற்ற முஸ்லிம்களினது விகிதாசாரம் குறைவாக அமைந்துள்ளது.
44

1979இற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் அதாவது 1984 வரை பெருமளவு மாணவர்கள் விஞ்ஞானக் கற்கைநெறிகளில் ஈடுபட்டனர். இதன் நல் விளைவாக இதற்குப் பின்னுள்ள ஆண்டுகளில் மருத்துவம், பொறியியல் அத்துடன் விஞ்ஞானத்தின் ஏனைய துறைகளுக்கும் மாணவர் அனுமதி பெறத் தொடங்கினர். இதனைப் புள்ளிவிபரங்கள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.
2.1.2 1986-1991 வரையான காலப்பகுதி
ஒப்பிட்டு நோக்கும் போது முஸ்லிம் கல்வியில் 1969-74 காலப்பகுதியைவிட 1986-91 காலப்பகுதியில் குறிப்பிடக் கூடியளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை அறியமுடிகின்றது.
பயிற்சிநெறி வகைப்படுத்தப்பட்ட தரவுகளின்படி 1988, 1989, 1990 கல்வியாண்டுகளில் கலைத்துறைக்கு இன விகிதாசாரத்திலும் பார்க்கக் கூடியளவு எண்ணிக்கையுள்ள மாணவர்கள் அனுமதி பெற்றுள்ளனர். இதனையடுத்து சட்டத்துறையிலும், வர்த்தகத்துறையிலும் கூடியளவு மாணவர்கள் அனுமதி பெற்றுள்ளனர். எனினும் பொறியியல், மருத்துவம், விஞ்ஞானம் போன்ற பொருளாதாரப் பெறுமானம் மிக்க துறைகளில் மாணவர் தொகை குறைவாக உள்ளது. மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் ஆகியவற்றில் முறையே 4%, 4.1%, 5.2% மாக அனுமதி பெற்றனர்.
1986-91 வரையான காலப்பகுதியில் அனுமதி பெற்ற மொத்த முஸ்லிம் மாணவர்கள், பயிற்சிநெறி அடிப்படையில் கலை, சட்டம், முகாமைத்துவம் ஆகியவற்றில் கூடிய அனுமதி பெற்றுள்ளனர். ஏனைய துறைகளில் அனுமதி குறைவாக உள்ளது. அதாவது கட்டிடக்கலை, மருத்துவம், பொறியியல் போன்றவற்றில் அனுமதி குறைவாக உள்ளது.
2.2 பல்கலைக்கழகங்களில் சேரும் வாய்ப்புக்கள்:
தற்போதுள்ள அரசியல் ஸ்திரமின்மை காரணமாக முஸ்லிம்கள் செல்லக்கூடிய பல்கலைக்கழகங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழிமூலமே பெரும்பாலான முஸ்லிம்கள் கற்கை நெறிகளை மேற் கொள்வதால் பேராதனை, யாழ்ப் பாணம் , கிழக் குப் பல்கலைக்கழகங்களிலேயே கல்வி கற்று வந்தனர். அட்டவணை 2 பல்கலைக்கழக ரீதியாக முஸ்லிம் மாணவர்களின் பரம்பலைக் காட்டுகின்றது.
45

Page 30
அட்டவணை 2 :
பல்கலைக்கழக வகைப்படி முஸ்லிம் மாணவர்களின் அனுமதி, 1984/85 - 1990/91 கல்வியாண்டுகள்
முஸ்லிம் மாணவர் 1990/91 முஸ்லிம் மாணவர்
6 ᎧtᎠᏑᏴᏏ 27 160
O7 08 களனி 02 O7
மொரட்டுவ 08 7 ப்பாணம் 44 02
09 02 கிழக்குப்
18 09 மொத்தம் 305
மூலம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 1984/85 1990/91
ஆனால் இன்றைய நிலைமையில் முஸ்லிம்கள் வட கிழக்குப் பிரதேசங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பெற முடியாத நிலையில் உள்ளனர். ஏற்கனவேயுள்ள ஏற்பாட்டின்படி தென் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிமூலக் கற்கைநெறிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. எனினும் சுமூகமற்ற நிலைமையைக் கருத்தில் கொண்டு இடம் பெயர்ந்த மாணவர்களுக்காகத் தற்காலிக ஏற்பாடாக வகுப்புக்கள் நடத்தவும், பரீட்சைகள் நடத்தவும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. தேசிய பல்கலைக்கழகங்களில் கல்வி பெறும் வாய்ப்பினைப் பெற்ற இடம் பெயர்ந்த முஸ்லிம் மாணவர்கள் எப்பல்கலைக்கழகத்திலும் நிரந்தர மாணவ அந்தஸ்துடன் கல்வி பெற முடியாத நிலையிருந்தது. இதன் காரணமாகப் பெருமளவு பல்கலைக்கழக இடைவிலகல்கள் ஏற்பட்டுள்ளதை நாம் அறிய முடிகின்றது. எனினும் 1990/91 கல்வியாண்டிற்கான அனுமதிப்படி கொழும்பு, பேராதனைப் பல கலைக் கழகங்களில் அதிகளவு முஸ்லிம் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவும் தற்காலிக ஏற்பாடாகவே தோன்றுகின்றது.
46
 

. முஸ்லிம் பெண்களின் உயர் கல்வி வளர்ச்சி
தென் இந்திய முஸ்லிம்களின் இலங்கைக்கான குடிப்பெயர்வு காரணமாக இலங்கை முஸ்லிம்களுக்கு இந்தியத் தொடர்பு நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ஆங்கில மொழிமூலம் கல்வி கற்ற சில பெண்கள் யாழ்ப்பாணம், கொழும்பு, காலி போன்ற இடங்களிலிருந்து தென் இந்தியாவிற்குச் சென்று உயர் கல்வி கற்றனர். இவ்வாறு கல்வி கற்ற பெண்களும், தென் இந்தியாவிலிருந்து இலங்கை வந்த “ஆயிசா ரஊப்’ போன்றோரும், இந்தியாவில் காணப்பட்ட பெண்கல்வி எழுச்சிப் போக்கினை இலங்கை முஸ்லிம் பெண்களிடையேயும் உருவாக்க முனைந்து முன்னின்று உழைத்தனர். இதற்கு அக்காலத்தில் இருந்த முஸ்லிம் அறிவாளர்களும், அரசியல்வாதிகளும் ஆதரவு அளித்தனர்.
ஆரம்பத்தில் இலங்கையில் முஸ்லிம்களின் முகாமைத்துவத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட ஆங்கிலப் பாடசாலைகள் பெண் மாணவர்களைக் கொண்டிருக்கவில்லை. அத்துடன் பெண்களுக்கென (ஆங்கில மொழிமூல) தனியான கல்வி நிலையங்கள் அமைக்கப்படவுமில்லை. எனினும் சமூக, பொருளாதார அந்தஸ்தில் உயர் நிலையிலிருந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்பிள்ளைகள் தனியார் கிறிஸ்தவ பாடசாலைகளில் பயின்றனர். மத்திய கல்லூரிகள் (Central College) ஸ்தாபிக்கப்பட்டதன் பின் முஸ்லிம் பெண்கள் கல்லூரிகள் சிலவும் சிரேஷ்ட இடைநிலை வகுப்புக்கள் கொண்டனவாகத் தரமுயர்த்தப்பட்டன. இவை ஆங்கில மொழி மூலமே கல்வி வழங்கின. இதனால், முஸ்லிம் பெண்கள் உயர் கல்வி பெறும் வாய்ப்பு உருவாக்கப்பட்டது. எனினும் அக்காலத்தில் பாடசாலைக் கல்விக்கு அப்பால் பல்கலைக் கழகத்திற்குச் செல்வது முஸ்லிம் பெண்களுக்குச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கவில்லை.
பல்கலைக்கழகப் போதனா மொழி ஆங்கிலமாக இருந்தமையால் ஆங்கில மொழி மூலம் திறமையாகச் சிரேஷ்ட இடைநிலைக் கல்வியை முடித்தோர் தேசியப் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றனர்.
முஸ்லிம் பெண்களின் பல்கலைக்கழகக் கல்வியில் ஏற்பட்ட விரிவும் வளர்ச்சியும் ஏனைய சமூகங்களைப்போல முஸ்லிம்களுக்கும் இயல்பாகப் பல்கலைக்கழக வாய்ப்புக்களை வழங்கியது. 1956இலிருந்து 1964வரை ஒவ்வொரு வருடமும் 1-9 வரையிலான முஸ்லிம் பெண்கள் கல்வி கற்றுள்ளனர் என அறிய முடிகின்றது. இலங்கைப் பல்கலைக்கழகங்களில் 1980 வரை பெண்களின் விகிதாசாரம்
4.

Page 31
குறைந்தளவில் இடம் பெற்றுள்ளதாகவும் அதற்கான முக்கிய காரணம், முஸ்லிம் பெண்களின் பங்குபற்றுதலானது மிகக் குறைந்தளவில் இடம் பெற்றமையாகும் எனவும் பேராசிரியர் ஜயீவர (1985) குறிப்பிடுகின்றார்.
அட்டவணை 3, 1942இல் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற பெண் மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டுகின்றது. கலைப் பிரிவுக்கு ஒரு முஸ்லிம் பெண் மாணவர் தெரிவாகியிருந்தார். இவ்வேளை பறங்கிய இனப் பெண்களின் பங்குபற்றுதல் மிகக் கூடுதலாக இருந்தது. முஸ்லிம் பெண்களின் பங்குபற்றுதலுடன் நோக்கும் போது ஏனைய இனப் பெண்களின் பிரதிநிதித்துவம் சுமாராகவுள்ளது. இது இலங்கை சோனக, மலாயப் பெண்களின் பங்குநிலை பற்றிய சமூக வரையறைகளையும், சிந்தனைப் போக்கினையும் காட்டுவதாகச் சந்திரா குணவர்த்தன (1987) குறிப்பிடுகின்றார்.
அட்டவணை 3 இலங்கைப்பல்கலைக்கழகத்தில் முழுநேரக்கல்வி பயிலும் மாணவர் தொகை, 1942.
இனக்குழுக்கள் 666) மருத்துவம் மொத்தம்
மொத்தம் பெண் மொத்தம் பெண் மொத்தம் பெண்
சிங்களவர்கள் 338 35 139 7 477 42 தமிழர்கள் 187 25 70 7 257 32 பறங்கியர்கள் 26 7 16 5 42 12 முஸ்லிம்கள் 15 f 9 24 f ஏனையோர் 8 4. 5 13 4
மொத்தம் 574 72 239 19 813 91
மூலம் பல்கலைக்கழக சபை 1942
1970இலிருந்து 1974ஆம் ஆண்டுவரை முஸ்லிம் பெண்களின் பல்கலைக்கழக அனுமதி முஸ்லிம் ஆண்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக உள்ளதை அட்டவணை 4 காட்டுகின்றது. 1984இல் தேசிய மட்டத்திலான பல்கலைக்கழக மாணவிகளின் பரம்பல் 43.6 வீதமாக இருந்தபோது அதே வருடம் முஸ்லிம் மாணவிகளின் வீதம் 28.5 வீதமாக மாக இருந்தது. மொத்த மாணவிகள் 2210 ஆகும். இதில் 80 மாணவிகள் மட்டுமே முஸ்லிம் பெணி களாவர். இது பல கலைக் கழக மாணவியர் தொகையில் 3.6% மட்டுமேயாகும். அட்டவணை 5
43

அட்டவணை 4 பல்கலைக்கழகங்களில் சில குறிப்பிட்ட பயிற்சி நெறிகளில் முஸ்லிம் மாணவர்களின் அனுமதி 1970-1974.
பயிற்சிதெறிகள் 1970 1971 1972 1973 1974
ஆ பெ | ஆ பெ | ஆ பெ |ஆ பெ | ஆ பெ மருத்துவம் a as a
விவசாயம் 17 (2) 23 (2) 48 (2) 41 (2) 83 (5)
மிருக வைத்தியம் 05 (0) 15 (1) 17 (0) 120 (0) | 23 (0)
மூலம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, 1970-74
இனவாரியாகவும், பால் வாரியாகவும் இடம் பெற்ற மாணவர் தொகையையும் பெண்களின் சதவிகிதத்தையும் காட்டுகின்றது. 1983 இலிருந்து 90 வரையில் மொத்தம் 17,951 மாணவிகளில் 997 பேரே முஸ்லிம் பெண்களாவர். இது 5.5% மேயாகும்.
1942 இற்குரிய மாணவர் அனுமதியுடன் ஒப்பிடும் போது 1984இல் பங்குபற்றுதல் எல்லா இனக் குழுக்களிலும் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை கடந்த நான்கு தசாப்தங்களில் பங்குபற்றுதலானது 7 மடங்கு அதிகரிப்பைக் காட்டுகின்றது. எனினும் ஏனைய சமூகப் பெண்களுடன் ஒப்பிடும்போது இவ்வீதம் குறைவாக உள்ளது. உதாரணமாகச் சிங்களவர் வீதம் 6.09% த்திலிருந்து 43.51%மும், தமிழர் வீதம் 11.07% த்திலிருந்து 44.8% மும் அதிரித்துள்ளது. (அட்டவணை 5)
இனக் குழுக்களிடையே காணப்படும் இவ்வேறுபட்ட பங்குபற்றுதலுக்குப் பிரதான காரணம் முஸ்லிம் சமூகத்திலுள்ள பெண் கல்வி பற்றிய மனப்பாங்கேயாகும். இந்த மனப்பாங்கு இன்றும்கூட முஸ்லிம் பெண்களின் முழுமையான பங்குபற்றுதலுக்கு எதிராகச் செயற்படுகின்றது. கற்கை நெறிகளுடன் தொடர்பான மாணவர்கள் அனுமதியை நோக்கும்போது, முஸ்லிம் மாணவிகளின் தொகை கலை, வர்த்தகப் பிரிவுகளிலேயே அதிகளவு இடம் பெறுவதைக் காணலாம்.
பொறியியல் துறையுடன் ஒப்பிடும் போது மருத்துவத்துறை ஓரளவு குறைவான முஸ்லிம் மாணவிகளின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது. விவசாயம், பெளதீக விஞ்ஞானம் ஆகிய துறைகளும் மிகக் குறைவாக முஸ்லிம் மாணவிகளைக் கொண்டுள்ளன. 198090 ஆண்டுகளில் பொறியியல் துறையில் 151 மொத்தம் முஸ்லிம்
49

Page 32
(soo@aevumusoqoso 06/696) og/296) f)ogaewffomyuwuwr «foșmwawoợrī: qawfɔ
Zo/90Ɛt?09!ƐZ"9t?2UL:Ɛ098t7ኸ7ty0ļ9ț7900Z06/6861 00°/8Ɛsɛ8846Ɛ’6t70Z8 -90ț79/TEtyZț76€.68/886|| 891寸9/t786||90't79tŷị6ț76ț7947017AltyssoG99||88/1861 ሯt7 ̇0b”ț7ƐƐ9846/'t79Þ9960800ኽ7t7Z801796/ļZ8/986), |8"2||7ZZ$0174to/"tŷ908// tyɛ"Zț7|×68099||98/G86|| Ꭺ18"ᎭᏋt20€904.8‛tztyZ96!oty|ty"Ct76t78€.!/91G8/t786|| ZG’8Z08Z08Ꮓ9"ᎭᎭ9860ț7ț769"Zț78968069||Þ8/ɛ86|| ZZot??90ሪ0969"Zț780ļļƐ/t796'oty8ZZ8!99!£8/Z86|| %quos suonto)19șişori(s)%q1$$ılgıle) | Ipsoksenso)%q1$$ııgıs)1ųoologorie) || @iņofā,
19șqų990ųofi)ựđīņāĻreusosqitoსლდ9ge
06/6861 – 88/z861 @ırır.soccorto 1991 mošų apıırı sıcssNo;apgrootoğơif@s@ ofioșastosoqorı
ç ışseverte-i Tıł@
50

மாணவர்களில் நால்வரே பெண்களாவர். அவ்வாறே விவசாயப் பீடத்தில் அனுமதி பெற்ற 52 மாணவர்களில் 9பேர் பெண்களாவர். மருத்துவத்துறையில் 107 மாணவர்களில் 38 பேர் பெண்களாவர். பெளதீக விஞ்ஞானத் துறைக்கு அனுமதி பெற்ற 164 மாணவர்களில் 13 பேர் பெண்களாவர். சட்டத் துறைக்கு அனுமதி பெற்ற 95 மாணவர்களில் 23 பேர் பெண்களாவர்.
பொதுவாக நோக்குமிடத்து உயர் கல்வி கற்கை நெறியில் பால் பாகுபாட்டு நிலைமைகள் காணப்படுவதை அவதானிக்கலாம். சில துறைகள் பெணிகளுக்குரியதென்றும் சில துறைகள் பெண்களுக்குரியதல்ல என்று கருதும் மனப்பாங்கு இதற்குக் காரணமாகும். க.பொ.த. உயர் தரப் பாடசாலைகளைத் தெரிவு செய்வதில் காணப்படும் பால் பாகுபாடே உயர் கல்வியிலும் பிரதிபலிக்கின்றது.
அறியப்பட்ட தகவல்களின் படி பொறியியல் மற்றும் மருத்துவ, விவசாய விஞ்ஞானக் கற்கை நெறிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடத்துறைகளைத் தெரிவு செய்வதிலும் சில பாகுபாட்டு நிலைகளைக் காட்டுகின்றனர். அதாவது பெண்கள் இலத்திரனியல், இயந்திர பொறியியல், அறுவைச் சிகிச்சை போன்ற துறைகளைத் தெரிவு செய்வதைத் தவிர்க்கின்றமை அறியக் கூடியதாக உள்ளது.
பல்கலைக் கழகத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை நோக்குதல் உயர் கல்வி நிலையின் மற்றுமொரு கட்டத்தை ஆராய்வதாக அமையும். 1991ஆம் ஆண்டில் நிரந்தர நியமனமுள்ள ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 2020 ஆகும். மொத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 30தில் பெண்களின் எண்ணிக்கை 6 ஆகும்.
4. முஸ்லிம் பெண்களின் பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்புக்கள்
விரயமாக்கப்படுதல்.
அண்மைக்காலங்களில் பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்புக்கள் பல்வேறு காரணங்களால் விரயமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அண்மைக் காலத்தில் ஏற்பட்ட ஸ்திரமற்ற அரசியல் நிலைமை பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்புக்கள் விரயமாக்கப்படுவதற்குரிய முக்கிய காரணமாய் அமைந்திருந்தமை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை கிடைக்கும் பல்கலைக்கழக வாய்ப்புக்கள்
S1

Page 33
மிகவும் பெறுமதிமிக்கதாகும். ஏனெனில், 1,80,000 மாணவர்கள் போட்டியிடும்போது 6,500 மாணவர்கள் மாத்திரமே இவ்வாய்ப்பைப் பெறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மொத்த மாணவர்கள் பல்கலைக்கழக வயதெல்லையிலுள்ள (18-25வயது) சனத்தொகையில் 2% மட்டுமேயாகும். இவ்வாறான அரிய வாய்ப்புக்கள் விரயமாக்கப்படுதல் சமூகக் குற்றமாகும்.
பொதுவாகப் பெண்களின் கல்வி விடயத்தில் சமய, சமூக,கலாசார காரணிகளே செல்வாக்குச் செலுத்துவதைக் காணலாம். விஷேடமாக முஸ்லிம் பெண்கள் இடைநிலைக் கல்வி கற்பதும், பல்கலைக்கழகக் கல்வி கற்பதும் அப்பெண்களின் விருப்பு, வெறுப்பில் தங்கியிராது அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பம், சமூகம் ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது. அண்மைக் காலங்களில் முஸ்லிம் பெண்கள் ஓரளவு பல்கலைக்கழக வாய்ப்புக்களைப் பெற்றுள்ள போதிலும் இவற்றில் பெரும்பாலானவை விரயமாக்கப்பட்டுள்ளன.
இதனால் முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியில் ஏற்படும் தேக்க நிலை எதிர்கால சமூக முன்னேற்றத்தில் கணிசமான அளவு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இந்நிலைக்கான காரணிகளை இனங்கண்டு அதற்கேற்ற பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டியது முழு முஸ்லிம் சமூகத்தினதும் கடமையாகும்.
கடந்த காலங்களில் முஸ்லிம்களின் உயர் கல்வி வளர்ச்சி தடைப்பட்டதாகவும் வேகமற்றதாகவும் இருந்து வந்துள்ளது. எனினும் 1972 இற்குப் பின்னர் முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சி துரித முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்புக்கள் அதிகரித்தன. முஸ்லிம் பெண்கள் உயர் கல்வி கற்கும் வாய்ப்பும் அதிகரித்தது. எனினும் 1980களின் பிற்பகுதியில் பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்புக்களின் பயன்பாடு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதை நாம் அறியமுடிகின்றது.
துரதிஷ்டவசமாகப் பல்கலைக்கழக இடைவிலகல் பற்றிய தகவல் இதுவரை பகுப் பாய் வு செய்யப் படவில் லை. எனினும் பாடசாலைகளிலிருந்தும். குறிப்பிட்ட பிரதேச மக்களிடமிருந்தும் தகவல்களைப் பெறக் கூடியதாகவுள்ளது.
4.1 கல்முனையில் பெண்கல்வி விரயம்:
கல்முனை, “மஹற்மூத் மகளிர் கல்லூரி' கிழக்கிலங்கையிலுள்ள
முஸ்லிம் பெண்களுக்கான பிரபலமான உயர்தரப் பாடசாலையாகும்.
கிழக்கிலங்கையில் எல்லா முஸ்லிம் ஊர்களிலிருந்தும் மாணவிகள்
52

இங்கு வந்து கல்வி கற்கின்றனர். இக்கல்லூரி 1971ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1981ஆம் ஆண்டில் இருந்து இங்கிருந்து மாணவிகள் பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர். 1981இலிருந்து 1988 வரையான ஆணி டுப்பகுதியில் 44 மாணவிகள் இப் பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகக் கல்வி பெறுவதற்கான அனுமதி பெற்றுள்ளனர் (அட்டவணை 6). இதன் பின்னர் மிகக் கூடியளவு மாணவிகள் ஒவ்வொரு வருடத்திலும் அனுமதி பெறுகின்றனர். 1988 வரையான காலப்பகுதியில் அவர்கள் பெற்ற பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்புக்கள் எந்தளவிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.
பல்கலைக்கழக விரயமாதல் மூன்று கட்டங்களில் நிகழ்கின்றது. 1. பல்கலைக்கழக அனுமதி பெறத் தகுதி பெற்ற மாணவர்கள்
அனுமதிக்காக விண்ணப்பிக்காது விடுதல். 2. அனுமதி பெற்ற மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யாது
விடுதல். 3. அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் பதிவு செய்த மாணவர்கள்
பல்கலைக்கழகக் கல்வியை தொடராது விடுதல்.
பல்கலைக்கழக வாய்ப்புக்களை விரயம் செய்தல் பல பாதகமான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும். பொருளாதார அபிவிருத்தியும், தேசிய சர்வதேச ஒருமைப்பாடும் கல்வி அறிவியல் அபிவிருத்தியின் விளைவுகளேயாகும். அவ்வாறே சமூக நல மேம்பாடும், முன்னேற்றமும் கல்வி அபிவிருத்தியின் முக்கிய அம்சங்களாகும். எனவே கல்வி வளர்ச்சி ஊறுபடுவதனாலி முழுநாட்டு அபரி விருத்தரியும் பின்தள்ளப்படுகின்றது.
இதன் அடுத்த முக்கியமான பக்க விளைவு பாடசாலை அல்லது கல்விச் சாதனத்தின் மீது தோற்றுவிக்கப்படும் நச்சுவட்டமாகும். பல்கலைக்கழக வாய்ப்புக்களின் எண்ணிக்கையைக் கொண்டும் ஒரு பாடசாலையின் தரம் மதிப்பீடு செய்யப்படுகின்றது. அதில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் அதே வேளை பல்கலைக்கழக வெளியீடுகளான வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் போன்றோரின் மூலமும் பாடசாலையின் தரம் கணிக்கப்படுகின்றது.
ஒரு பாடசாலை எவ்வளவு பல கலைக்கழகக் கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தாலும், அதனைப் பயன்படுத்துதல் மாணவரதும், சமூகத்தினதும் கைகளிலேயே தங்கியுள்ளது.
S3

Page 34
அட்டவணை 6 ! கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி, 1981-1988.
கற்கை
நெறிகள் எண்ணிக்கை எண்ணிக்கை
06 O6
த்துவம் 03 02
ல் விஞ்ஞதனம் 12 03
தீக விஞ்ஞானம் 02 02
மைத்துவம் 08 02
13 04
த்தம் 44 19
மூலம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி 1991
குறிப்பு : 1 இப்பாடசாலையில் 1ம், 2ம் தடவைகளில் அனுமதி பெற்ற மாணவிகளை மாத்திரம் இது
குறிப்பிடுகின்றது. 2. ஒரு மருத்துவத்துறை மாணவியும், 6 உயிரியல் விஞ்ஞானப்பிரிவு மாணவிகளும், 2 முகாமைத்துவ மாணவிகளும் திருமணத்திற்காகவே பல்கலைக்கழக வாய்ப்புக்களைக் கைவிட்டனர். 3, 4 முகாமைத்துவமாணவிகள்,4கலைப்பிரிவுமாணவிகள்,3உயிரியல்பிரிவுமாணவிகள்,
யாழ், கிழக்குப்பல்கலைக்கழகங்களுக்குச் செல்லமுடியாமையினால் கைவிட்டுள்ளனர்.
மூலம் வெளிக்கள ஆய்விலிருந்து திரட்டப்பட்டது. 1993
54
 

பல்கலைக்கழக வாய்ப்பு விரயமாக்கப்படுதலால் அதன் வெளியீடுகள் சமூகத்தினைச் சென்றடையாது விடுவதால் சமூகம் நீண்டகால தாக்கங்களுக்கு உட்பட நேர்கின்றது. உண்மையில் பாடசாலையின் இடைநிலைக் கல்வி பல்கலைக்கழக வாய்ப்புக்களைப் பெற உதவுவதுடன்
அடையச் செய்வதும் முழுச் சமூகத் தினதும் பொறுப்பாகும். நடைமுறையில் இவ்வாறு ஏற்படாமையால், பாடசாலை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றது. அதே வேளை எதிர்கால சமூக முன்னேற்றமும் பின்தள்ளப்படுகின்றது. அத்துடன் அரிய தேசிய வளமான பல்கலைக்கழக வாய்ப்பும், மனித முயற்சிகளும் வீணடிக்கப்படுகின்றன. உண்மையில் இலங்கை போன்ற வளர்முக நாட்டைப் பொறுத்தவரை பல்கலைக்கழக வாய்ப்புக்களை விரயம் செய்தல் சமூகத்திற்கும், முழுநாட்டிற்கும் இழைக்கப்படும் பாரிய குற்றமாகும்.
இலங்கை முஸ்லிம் பெண்கள் பல்கலைக்கழக வாய்ப்புக்களைக் கைவிடுவதற்கு அவர்கள் மீது சமூக நடைமுறைகள், கலாசார விழுமியங்கள் போன்றவை ஏற்படுத்தும் தாக்கங்களும் அழுத்தங்களும் கூட காரணமாயப் அமைகின்றன. முஸ்லிம் பெண்களின் பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்புக்கள் விரயமாக்கப்படுவதற்கான சமூக, பொருளாதர, அரசியல் காரணங்களை நோக்குவோம். 1. பெரும்பாலான முஸ்லிம் மாணவர்களுக்கு வடக்கிலும், கிழக்கிலும் உள்ள இரண்டு தமிழ்மொழி மூலப் பல்கலைக்கழகங்களிலேயே அனுமதி வழங்கப்பட்டன. இலங்கையின் இனப்பிரச்சினை காரணமாக எழுந்துள்ள துரதிஷ்டமான நிலமைகள் முஸ்லிம்கள் இப்பல்கலைக்கழகங்களில் கல்விபயில முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, வாழைச்சேனை போன்ற இடங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் வதிவிட நிலைமைகளும், வாழ்க்கையும் பெருமளவிற்கு நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. இதன் காரணமாக தென் இலங்கைப் பல் கலைக் கழகங்களுக்கு மாணவர்கள் தற்காலிகமாக இடமாற்றம் பெற்றுள்ளனர். எனினும் இதற்கு முன்னரே அநேக முஸ்லிம் பெண்கள் பல கலைக் கழக வாய்ப்புக் களை கைவிட்டுவிட்டனர். மக்கள் நிரந்தர அகதிளாக்கப்பட்ட குறிப்பிட்ட சில பிரதேசங்களைச் சேர்ந்த மாணவிகள் கற்றலை முற்றாக நிறுத்த வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
55

Page 35
2. கல்வி கற்றாலும், கற்காவிட்டாலும் பெண்ணுக்குரிய தேவையும் அடைவும் திருமணம் தான் என்ற நிலை உயர் கல்வி வாய்ப்புக்களை கைவிட்டுவிட்டு திருமண வாய்ப்புக்களை நாடச் செய்கின்றது. பெற்றோரும் சமூகமும் திருமணம், கல்வி ஆகிய இரண்டில் திருமணத்திற்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். 3. சீதனமும், பெண்களைவிட ஆண்கள் கல்வியில் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற அர்த்தமற்ற சிந்தனையும் இதில் தாக்கம் செலுத்துகின்றது. 4. ஆண் முதன்மைப் போக்கும், பெண் அடக்கு முறைகளும் கூட இந்நிலைகளை உருவாக்கியுள்ளதை இனங் காணக்கூடியதாக உள்ளது. 5. சமயத்தில் பெண் கல்விக்கு போதியளவு இடமளிக்கப்பட்டுள்ள போதிலும் உயர் கல்வி பற்றிய தவறான சிந்தனைப் போக்கில் அமைந்த பிரச்சாரங்கள் பெண்கள் தங்கள் சிந்தனைகளையும், அறிவாற்றல்களையும் தமக்குள்ளேயே முடக்கிக்கொள்ளச் செய்கின்றன. இவற்றை மீறமுடியாது முஸ்லிம் பெண்கள் பல்கலைக்கழக வாய்ப்புக்களைக் கைவிடுகின்றனர். 6. குறிப்பிடப்பட்ட சில தொழில் துறைகளில் முஸ்லிம் பெண்கள் ஈடுபடுவது பொருத்தமற்றது என்ற சமூகக் கண்ணோட்டத்தால் பெண்கள் உயர் கல்வியைக் கைவிடுகின்றனர்.
5. முடிவுகளும் ஆலோசனைகளும்
கல்வி சமூக வாழ்விற்கான தகைமைகளை அளிக்கும் அதே வேளையில் ஒருவரது தனித்தன்மைகளையும், ஆளுமைப் பண்பையும் பேணிவளர்க்கும் சாதனமாகவும் அமைகின்றது. அதாவது ஒருவர் பெறும் கல்வி அவரது விருப்புக்கள், கவர்ச்சிகள், உந்தல்கள், சிந்தனைகள், சமூகத் தன்மைகள், நடத்தைக் கோலங்கள் ஆகியவற்றினைத் தீர்மானிக்கின்றது. அவற்றை வளம் பெறவும் செய்கின்றது. அதே வேளை பொருளாதார பலத்தையும் , சுதந்திரத்தையும் வழங்கும் சாதனமாகவும் கல்வி விளங்குகின்றது. இவ்வகையில் கல்வியானது ஒவ்வொரு மனிதனுக்கும் பரிறப் புரிமையாகும் . சமூக மேமி பாட்டினையுமி , மனித மேம்பாட்டினையும் ஏற்படுத்துவதற்கு ஒவ்வொரு மனிதனும் கல்வி பெறுவது அவசியமாகும். எந்தவொரு சமூகத்தினதும் முழுமையான
56

மேம்பாடு பெண்களின் கல்வி வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது. ஆசியப் பிராந்தியத்திலுள்ள 20 நாடுகளில் உலக வங்கியால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று பெண் கல்விக்கும், சமூக நலனுயர்வுக்கும் இடையிலுள்ள தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாய்வில் ஓரளவு சம ஆள்வீத வருமானம் கொண்டதும் ஒரே மாதிரியான செலவுக் கோலங்களையுடையதுமான ஆனால் வேறுபட்ட சமூக நிலைமைகளை கொண்ட இரு நாடுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இவற்றின் சமூக நல மேம்பாட்டைக் காட்டும் பெளதீக வாழ்க்கைச் சுட்டிகள் வேறுபட்டிருப்தாக இவ்வாய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. பெண்கள் கல்வியில் பங்கு பற்றுதல் வீதம் குறைவாக உள்ள நாட்டில் பெளதீக வாழ்க்கைப் பணி புச் சுட்டிகள் தரிருப்தரிகரமான பெறுமானங் களைக் கொண்டிருக்கவில்லை (King, 1990).
இன்றைய சமூக அமைப்பில் குடும்பம் அடிப்படை அலகாக உள்ளது. ஒரு பிள்ளையின் கல்வி வளர்ச்சியில் முதலாவது கற்றல் அனுபவங்களை வழங்கும் அமைப்பு குடும்பமாகும். கற்ற தாய் மூலம் கல்வி குழந்தைக்கு வழங்கப்படுகின்றது. ஒருவரை சமூக இயல்பினன் ஆக்குவதில் கல்விக்கும் குடும்பத்திற்கும் எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அவ்வளவு முக்கியத்துவம் தாய்க்கும் 9—60і (6. தாயின் கல வித் தரம் குடும் பத்தின் அடிப்படை கல்வித்தரத்தைத் தீர்மானிக்கின்றது. வாழ்க்கைக்கான பலதரப்பட்ட அறிவைக் குடும்பச் சூழல் வழங்குகின்றது. குடும்பம் தவிர்ந்த ஏனைய கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட அறிவை வரையறுக்கப்பட்ட காலத்தில் மாத்திரமே வழங்குகின்றன.
மேற்குறிப்பிட்ட உண்மைகள் மேற்கு நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்தும் இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்தும் தெரிய வருகின்றன. வேறு சில ஆய்வுகள் கொழும்பு நகரத்தில் வசதி குறைந்த இடங்களில் காணப்படும் ஆரம்பப் பாடசாலைகளில மாணவர்களின் இடை விலகல் பற்றி மேற்கொள்ளப்பட்டன. இப்பிரதேசம் அநேக உள் விடயங்களை எடுத்துக்காட்டுகின்றது. அநேக தாய்மார்கள் (82.4%) கல்வியறிவில் மிகக் குறைந்த நிலையிலுள்ளனர். இவர்கள் தொடர்ச்சியாக அதிகமான குழந்தைகளைப் பெற்றதன் காரணமாகவும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியைத் தூண்டக்கூடிய அனுபவங்களை வழங்குவதற்குத்
57

Page 36
தவறிவிடுகின்றனர். அத்துடன் இக்குழந்தைகளின் மொழி வளர்ச்சியும் குறைவானதாகக் காணப்படுகின்றது (Kariyawasam, 1973).
இந்தத் தகவலை நோக்குமிடத்து இரு விடயங்கள் தெளிவாகின்றன. 1. குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்குத் தாயின் கல்வியறிவும்,
அனுபவமும் துாண்டுதலாக அமைகின்றன. 2. தாய் கல்வியறிவற்றவளாக இருக்கும்போது குடும்பத்தின் ஏனைய விடயங்களையும் சிறந்த முறையில் திட்டமிட்டு முன்னேற்ற முடியாதுள்ளது. சுமனசேகர (1984) தனது ஆய்வில் பின்வருமாறு கூறுகின்றார். பல நாடுகளில் அவதானிக்கப்பட்டதன்படி பெண்களின் அந்தஸ்து உயர்வு வாழ்க்கைத்தர உயர்வுக்கு இட்டுச் செல்கின்றது. இதை குடும்பத்தின் நுண் நிலையிலும், சமுதாயத்தின் மா நிலையிலும் காணலாம்.
குடும்பத்தின் ஆரோக்கியமும், அறநெறிப்பண்புகளும், அறிவும் கற்ற தாய் உள்ள குடும்பத்தில் மேம்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாய்வு பின்வருமாறு கூறுகின்றது. “ஒரு சதவீதம் வைத்தியர்கள் எண்ணிக்கையில் உயர்வதிலும் பார்க்க ஒரு சதவீதம் கல்வி கற்ற பெண்களின் எண்ணிக்கை உயர்ந்த குடும்பம் ஆரோக்கியம், அற நெறிப்பண்புகள் அறிவு மட்டம் ஆகியவற்றில் மும்மடங்கு சிறப்பு நிலையைக் காட்டுகின்றது”.
“முஸ்லிம் பெண்களின் போசாக்கும் சுகாதார நலன்களும்” பற்றி எழுதிய கட்டுரையில் பின்வருமாறு கூறுகின்றார்.
“ஒப்பிடும்போது முஸ்லிம் பெண்கள் மிகக் குறைவாகக் கல்வி கற்றவர்களாக உள்ளனர். பருவமடைந்ததும் பாடசாலையை விட்டு பெண் பிள்ளைகள் விலக்கப்படுவதாலேயே இந்நிலை ஏற்படுகின்றது. குறைந்த பொருளாதார அந்தஸ்துள்ள குழுக்களில், குழந்தைகளின் போசாக்கு நிலைமை தாயின் கல்வி நிலையிலேயே தங்கியுள்ளது. அதாவது முஸ்லிம் பெண்களின் போசாக்கு, சுகாதாரக் குறைவுகள், சுகாதார விடயங்கள், பிரச்சினைகள் பற்றி வழங்கப்படும் தகவல்கள் பற்றிய அறிவின்மையாலேயே ஏற்படுகின்றது. அத்துடன் இப்பொதுநல விடயங்கள் குறித்து பரந்த அறிவற்றவர்களாகவும் உள்ளனர்". பிரியானி டி சொய்சா (1990)
பெண்களின் கல்வியுயர்வு சமூக முன்னேற்றத்திற்கு இரு வகையில் உதவ முடியும்.
58

1. தனிப்பட்ட அறிவு முதிர்ச்சியும் உழைப்பும்
உழைப்பு பணம் சார் உழைப் பாகவும் , அறிவுசார் முயற்சிகளாயும் அமையும்.
2. குடும்ப நல மேம்பாடு மூலம் முழுச்சமூக மேம்பாட்டிற்கும் உதவுதல். கல்வியுயர்வு மூலம் பெண் சமூகத்திற்குப் பங்களிக்கும் ஆற்றல் உடையவளாகிறாள். எனவே பெண் கல்வி முக்கியமானதாகும். “வயிற்றுப்பசிக்கு உணவளிக்க தர்மம் செய்; 10 ஆண்டிற்குப்பின் பலன் பெற மரத்தை நடு; ஒரு சமூகம் பலன் பெற ஒரு பெண்ணுக்குக் கல்வியூட்டு’ என்பது இதன் நிலைப்பாடாகும். பெரும்பாலான இலங்கைப் பெண்கள் தொடர்ச்சியான மரபு ரீதியான கலாசார வரையறைக்குள் சிக் குண்டுள்ளனர். இந் நிலைமை முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரை சற்று இறுக்கமாகவே காணப்படுகின்றது. முஸ்லிம் சமூகம் பெண் தாயாகவும், மனைவியாகவும் குடும்பத்திற்காகப் பங்களிப்புச் செய்வதையே வலியுறுத்துகின்றது.
எனினும் இலங்கைப் பெண்கள் வாழ்கின்ற, வேலைசெய்கின்ற கலாசாரச் சூழல் சிக்கலான சமூகப் பெறுமானங்கள் கொண்ட வலையமைப்புடையது. இச்சமூகப் பெறுமானங்கள் மரபு ரீதியான எண்ணக்கருக்கள், பொருளாதாரக் கட்டுக்கோப்புக்கள் ஆகியவற்றால் ஆக்கப்பட்டதாகும்.
தொகுத்து நோக்குமிடத்து பெண் கல்வி தொடர்பான மனப்பாங்குகள் படிப்படியாக மாற்றமடைந்து வருகின்றன. பெண்களின் தனிப்பட்ட ஈடுபாடும், முயற்சியும், துணிவும் இவ்விடயத்தை வெற்றி கொள்வதற்கு அவசியமாகும். பெண்கள் சமூகத்தில் பாதியாவர். எனவே, ஒரு சமூகத்தின் முழு முன்னேற்றத்தில் அரைவாசிப்பங்கு பெண்களுக்கு உண்டு. அதே வேளையில் ஆணைவிட சமூகத்திற்குக் கல்வியளித்தலில் பெண்களின் பங்கு குடும்பத்தின் மூலம் இன்னும் அதிகரிக்கின்றது. எனவே முதலில் குறிப்பிட்டது போல் பெண்கள் உயர் கல்வி கற்றல் சமூகத்தினதும் தேவையாகும். பெண்களின் கற்றலுக்கான சகல வாய்ப்புக்களையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல் முழுச் சமூகத்தினதும் பொறுப்பாகும்.
எதிர் கால விளைவுகளைக் கருதி தில் கொணர் டு இந்நிலைமைகளை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்களுக்குக் கிடைக்கும்
5列

Page 37
பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அதன் உச்சப் பயன்பாட்டைச் சமூகம் அடைய வேண்டும். பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்புக்களை மேலும் பெற்றுக் கொள்வதில் சிரத்தை எடுக்க
வேண்டியதும் அவசியமாகும்.
6.0 முஸ்லிம் பெண் கல்வி வளர்ச்சியின் பெறுபேறுகள்
ஒரு பெண் சமூகத்தில் சமமான, கெளரவமான, தனித்துவமான அங்கத்தவராகத் திகழ்வதற்குக் கல்வி அவசியமாகும். பெண்கல்வி வளர்ச்சியின் மூலமாக அப் பெண்ணின் வாழ்க்கையில் அபிவிருத்தி ஏற்படுவதோடு சமுதாயத்தின் அபிவிருத்திக்கும் அது காரணமாக அமைகின்றது. ஒரு பெண் தனது குடும்பக் கடமையைச் சரிவரச் செய்வதற்கும், சமூக அபிவிருத்திக்குத் தனது பங்களிப்பைச் செய்வதற்கும் ஏற்ற பொருத்தமான கல்வி அவசியம். பெண் கல்வி விருத்தியின் சாதகமான அம்சங்கள் இன்னும் பல.
முஸ்லிம் பெண்கள் இந்நாட்டில் கல்வி ரீதியாக தமது நிலையை உயர் தீ த எடுத் துக் கொணி ட முயறி சிகள் வரவேற்கத்தக்கவையாகக் காணப்படுகின்றன. பல இடர்ப்பாடுகளுக்கு மத் தயரிலும் முஸ் லிமி பெணி களர் தமது கல வரியை வளர்த்தெடுக்கின்றார்கள். கல்வி ரீதியாகத் திறமையைக் காட்டியிருக்கின்றார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம். இலங்கை முஸ்லிம் பெண்களின் கல்விப் பெறுபேற்றையும் பிரதிபலன்களையும் பல்வேறு துறைகளில் காணக் கூடியதாக இருக்கின்றது. இக்கட்டுரையில் கல்வித்துறை சார்ந்த இவர்களின் பெறுபேறும் பங்களிப்பும் நோக்கப்பட்டுள்ளது. பெண் கல்வி வளம் பற்றிய புள்ளிவிபரங்கள் சுட்டிக் காட்டுவதைப் போல் ஆண் ஆசிரியர்களுக்குச் சமனான விகிதாசாரப் பங்களிப்பை முஸ்லிம் ஆசிரியைகள் வகித்து வருகின்றார்கள் என்பது மற்றுமொரு முக்கியமான அம்சமாகும். இக்கல்வி வளம் முஸ்லிம் பெண் கல்வி வளர்ச்சிக்கு மேலும் வழிகோலக்கூடியது.

முஸ்லிம் மாணவிகள் பாடசாலைக் கல்வியை இடை நிறுத்துவதற்கான காரணங்கள்
எம். ஐ. எம். பேகம் மும்தாஜ் எம். அஜ்வத் ஹாசிம்
1. அறிமுகம்
பாடசாலையைவிட்டு மாணவர் இடைவிலகும் தன்மை அனைத்துச் சமூகங்களிலும் காணப்படும் ஒரு பொதுப்பண்பாகும். ஆனால் இத்தன்மை இலங்கை முஸ்லிம் சமூகத்தில், அதிலும் குறிப் பாகப் பெணி களிடையே அதரி க மாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வுக் கட்டுரை இலங்கையில் முஸ்லிம் மாணவியர் அதிகளவில் பாடசாலைக்கல்வியை இடைநிறுத்துவதற்கான காரணங்ளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முஸ்லிம் கிராமம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு முஸ்லிம் மாணவியரின் கல்வியைப் பாதிக்கின்ற காரணிகள் ஆராயப்பட்டுள்ளன.
2. ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசம்
கேகாலை மாவட்டத்தில் மாவனல்லைத் தேர்தல் தொகுதியின் ஹெம்மாதகமைப் பிரதேசத்தில் அமைந்துள்ள தும்புளுவாவை என்ற சிற்றுாரே ஆய்வுக்கெடுக்கப்பட்ட கிராமம் ஆகும். கொழும்பு-கண்டி பிரதான நெடுஞ்சாலையிலிருந்து ஒன்பது மைல்கள் தொலைவில் தெற்குத் திசையாக ஹெம்மாதகமை அமைந்துள்ளது. கேகாலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசமாக ஹெம்மாதகமை விளங்குகின்றது. ஏழு சிறிய கிராமங்களைக் கொண்ட இப்பிரதேசம், கேகாலை மாவட்டத்திலுள்ள மொத்த முஸ்லிம் குடித்தொகையில் 1/4 பகுதியைக் கொண்டுள்ளது. ஆய்வுக்குத் தேர்நீ தெடுக் கப் பட்ட துமி புளு வா வைக் 35 U (T LD Lfö ஹெம் மாதகமையிலிருந்து தெற்கே ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ளது. ஓரளவு மலைப்பாங்கான இச்சிறு கிராமம் அதன் கிழக்கு, தெற்குத் திசைகளில் சிறு குன்றுத் தொகுதிகளை அரணாகக் கொண்டுள்ளது. ஏனைய பகுதிகள் அயலிலுள்ள சிற்றுார்களுடன் இணைந்ததாகக் காணப்படுகின்றன. ஹெம்மாதகமையிலிருந்து
61

Page 38
தும்புளுவாவையை ஊடறுத்து ஒரு சிறு பாதை செல்கின்ற போதிலும் அதில் சீரான போக்குவரத்து வசதிகள் காணப்படுவதில்லை (படம்1).
தும் புளுவாவைக் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராம மக்கள் எத்தகையதொரு தனியான தொழில் முயற்சிகளிலும் கூடிய செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. இங்கு வாழும் மக்களில் சுமார் 40% த்தினர் அரசாங்க உத்தியோகத்திலும் ஏனைய 60% த்தினர் வர்த்தகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சிறு தொழில்கள் என்பவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.
3. பிரதேசத்தின் கல்விப் பின்னணி:
கேகாலை மாவட்டத்தில் முஸ்லிம் மாணவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 30 பாடசாலைகள் காணப்படுகின்றன. இப் பாடசாலைகள் முஸ்லிம் களின் குடிப் பரம் பலுக்கேற்ப அமைந்துள்ளன. ஹெம்மாதகமைப் பிரதேசத்தில் மாத்திரம் ஆறு பெரிய, சிறிய முஸ்லிம் பாடசாலைகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு பாடசாலை க.பொ.த(உ.த) கலை, வர்த்தக, விஞ்ஞான வகுப்புக் களையும், மற்றொரு பாடசாலை கலை, உயர்தர வகுப்புக்களையும் கொண்டுள்ளன.
கேகாலை மாவட்ட முஸ்லிம்கள் கல்வித்துறையில் ஒப்பீட்டு ரீதியாகச் சிறப்பிடம் பெறுகின்றனர். அதிலும் விஷேடமாக மாவனல் லைப் பிரதேச செயலகத்திற் குட்பட்ட பகுதிகள் குறிப்பிடத்தக்கன. ஹெம்மாதகமைப் பிரதேசம் மாவனல்லைப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்டதாகும். கேகாலை மாவட்டத்திலுள்ள மூன்று 1 ஏ.பி. தரத்து பாடசாலைகளில் ஒன்று ஹெம்மாதகமையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹெம்மாதகமைப் பிரதேசத்திலும் ஒப்பீட்டு ரீதியாக ஆய்வுக் கெடுக் கப்பட்ட தும் புளுவாவைக் கிராமத்திலேயே கல்வி கற்றோர் அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆனால், இவ்வதிகரிப்பு கலைத்துறையில் மட்டுமே என்பது நோக்கத் தக்கது. காரணம் விஞ்ஞான மற்றும் வர்த்தகத்துறைகளில் உயர் கல்வி வாய்ப்பின்மையாகும்.
தும் புளுவாவைக் கிராமப் பாடசாலையின் வரலாற்றைச் சுருக்கமாக நோக்கலாம். முதன்முதலாக 1951இல் தும்புளுவாவை, கொடேகொடை கிராமங்களைச் சேர்ந்த சோனக சங்கங்களின் அயராத
62

| +661 - owns pois asinos ,
・・・ダ: * '
± .
v.
\!
\ Q(0)
**。 、:る。 * を・。。。g、ある。·
uso qợsą:sfőBဇဖဇံiséခဲlစ္စဲ
63

Page 39
முயற்சியால் ஏற்கனவே இருந்து வந்த சிறுபாடசாலை “சேர் ராசிக் பரீத்” அவர்களால் அரசாங்கப் பாடசாலையாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. 2 ஆசிரியர்களுடனும், 60 மாணவர்களுடனும் ஆரம்ப வகுப்புகளை மட்டும் கொணர் டதாக இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு முதன் முதலாக க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு மூவர் தோற்றி இருவர் சித்தியடைந்தனர். இதனைத் தொடர்ந்து இப்பாடசாலை துரிதகதியில் வளர்ச்சியடையவே அயல் கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் இங்கு அனுமதிபெறத் தொடங்கினர். மாவட்ட ரீதியான விளையாட்டுப் போட்டிகளிலும், கலை, இலக்கிய விழாக்களிலும் இப்பாடசாலை மாணவர்கள் பங்குபற்றி வெற்றியீட்டினர். காலப்போக்கில் மாணவர் தொகை அதிகரித்தமையால் இட நெருக்கடி, நிரந்தரக் கட்டிடமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. எனவே இதுவரை காலமும் கிராமத்தின் மத்தியில் பள்ளிவாசலுக்கு அருகாமையில் நடாத்தப்பட்ட பாடசாலை 1964ஆம் ஆண்டு கிராமத்தின் கிழக்கெல்லையில் உள்ள பதாங்க மலைக்குன்றுக்கு நகர்த்தப்பட்டது. 120 X 20 அடி அளவுடைய நிரந்தரக் கட்டிடமொன்று அங்கு அமைக்கப்பட்டு பாடசாலை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. காலப்போக்கில் அயற் கிராமங்களிலும் பாடசாலைகள் அமைக்கப்படவே தும்புளுவைக் கிராமத்திலுள்ள மாணவர்களை மட்டும் கொண்டதாக இப்பாடசாலை மாறியது. தற்போது இப்பாடசலையில் 197 மாணவர்களும் 16 ஆசிரியர்களும் உள்ளனர். ஆரம்ப வகுப்பு முதல் க.பொ.த. சாதாரண தரம் வரையான வகுப்புகள் இங்கு உள்ளன.
ஒப்பீட்டு ரீதியாக கல்வித்துறையில் ஓரளவு முன்னேற்றம் அடைந்த இப்பிரதேசத்தை ஆய்வுக்கான மாதிரியாக எடுத்தமைக்குப் பின்வரும் நியாயங்களைக் கூறலாம்.
இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடையான காரணிகளில் பெரும்பாலானவை ஒருங்கே இப்பிரதேசத்தில் காணப்படுகின்றன. அத்துடன் மத்திய மலைநாட்டுத் தோட்டப் பகுதிகளில் அவதானிக்கப்படும் சில வசதியீனங்களும் இங்கு அவதானிக்கப்படுகின்றன. மாவனல்லை கோட்டக் கல்விப் பிராந்தியத்திலுள்ள 17 முஸ்லிம் பாடசாலைகளில் இரு பாடசாலைகள் கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளாகும். தும்புளுவாவைக் கிராமப் பாடசாலை அதில் ஒன்றாகும். “விருப்புக்குரிய பாடசாலை, விருப்புக் குறைந்த பாடசாலை, பின்தங்கிய பாடசாலை’ என்ற வகைப்படுத்தலில் தும்புளுவாவை முஸ்லிம் வித்தியாலயம் மூன்றாவது வகையிலேயே அடங்கியுள்ளது.
64

4. ஆய்வில் பயன்படுத்தப்பட்ட முறைகள்: '
இவ்வாய்விற்குத் தேவையான பின்னணித்தகவல்கள் பிரதேசக் கல்வி நிலையங்களிலிருந்து பெறப்பட்டன. மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகுவதில் அதிக செல்வாக்குச் செலுத்திய காரணிகள் எவை என்ற விடயங்கள் ஆய்வொன்றின் மூலம் பெறப்பட்டன. பாடசாலையை இடையில் நிறுத்திய 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாய்வுக்காக தகவல்கள் வினாக் கொத்துக்களைப் பயன்படுத்தி நேரடியாகப் பெறப்பட்டன. இவ்வாய்வில் பெறப்பட்ட முடிவுகளினுாடாக முஸ்லிம் மாணவியர் கல்வியை இடையில் நிறுத்த வழிவகுக்கும் காரணங்களை அறியக் கூடியதாக இருக்கின்றது.
முஸ்லிம் மாணவியர், பாடசாலையை விட்டு விலகுவதற்கான காரணங்களாகப் பின்வருவனவற்றை வகைப்படுத்தலாம். 9}60(6mل அரசியல் காரணிகள், பெளதீகக் காரணிகள், பொருளாதார சமூக கலாசாரக் காரணிகள் போன்றனவாகும். இவற்றோடு பின்வரும் உப காரணிகளும் அவதானிக்கப்பட்டன. பெற்றோர் கல்வியில் ஆர்வமின்மை, கல்வி பற்றிய தப்பபிப்பிராயங்கள், பிள்ளைகளின் விருப்பிற்கும் திறமைக்கும் அப்பாற்பட்ட துறைகளில் அவர்களை நிர்ப்பந்தமாக ஈடுபடுத்துதல் இவையனைத்தும் ஒருங்கேயமைந்து முஸ்லிம் மாணவியரின் கல்வியைப் பாதிக்கின்றன.
5. முஸ்லிம் பெண் கல்வி அபிவிருத்தியை பாதிக்கும் காரணிகள்: 5.1. அரசியற் காரணி:
ஆய்வுக்கெடுக்கப்பட்ட பிரதேசத்தின் அரசியல் பின்னணியை நோக்கும்போது சுதந்திரத்திற்குப் பிற்பட்ட பல தசாப்தங்களில் எக்காலத்திலும் இப்பிரதேசம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறவில்லை. தேர்தல் காலங்களில் வாக்கு வேட்டைக்கு வரும் அரசியல்வாதிகள் தேர்தல்களின் பின்பு மிகக் குறைவாகவே இப்பிரதேச நலன்களைக் கவனித்தனர். இதுவரை ஹெம்மாதகமைப் பிரதேசத்திலிருந்து பாராளுமன்றத்திற்கோ, மாகாணசபைக்கோ எவரும் தெரிவு செய்யப்படவில்லை. அத்தோடு, இப்பிரதேசக் கல்வி வளர்ச்சிக்குத் துணைபுரியும் விதத்தில் அதிகாரம் பெற்ற அரச நிர்வாகிகள் கூட மிக அண்மைக்காலம் வரை இப்பிரதேசத்திலிருந்து உருவாகவில்லை. இப்பிரதேசப் பாடசாலையின் விருத்திக்காக இதுவரை முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளில் ஒரு சிலவே
65

Page 40
நிறைவேற்றப்பட்டுள்ளன. ஹெம்மாதகமையிலிருந்து தும்புளுவாவையை அடைவதற்கான ஒழுங்கான போக்குவரத் துப் பாதையோ, போக்குவரத்துச் சாதனங்களோ இதுவரையில்லை. அரசியல் ரீதியான புறக் கணிப்பும் இப் பிரதேசத் தரின் கல வி வளர்ச்சியைப் பாதித்திருக்கின்றது என்பது மறக்க முடியாத உண்மையாகும்.
5.2 பெளதீகக் காரணிகள்:
இப்பிரதேசத்தின் புவியியல் அமைவிடம் அதன் கல்வித்துறை வளர்ச்சியைப் பாதிக்கின்ற முக்கிய காரணியாகும். இங்குள்ள பாடசாலை கிராமத்தின் கிழக்கு எல்லையில் உள்ள மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது. கால்நடையாகவே அதனையடைய வேண்டியுள்ளது. அதனையடைவதற்கான இலகுவான பாதையமைப்பு இல்லை. தனித்த ஒரு பாடசாலையை மட்டும் கொண்ட இக்குன்றில் வேறு எத்தகைய வசதிகளும் இல்லை. மனிதக் குடியிருப்புகளும் இல்லை. குடிநீர்த்தேவையுட்பட சகல தேவைகளுக்கும் குன்றின் அடிவாரத்திற்கே வரவேண்டியுள்ளது. இத்தகைய நிலை காரணமாக பிரதேச மக்களில் சிலர் தமது பிள்ளைகளை அயற் கிராமப் பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். பாடசாலையின் அமைவிடம் காரணமாக மாலைநேர வகுப்புகள், ஏனைய இணைப்பாட செயற்பாடுகள் என்பன மிகக் குறைவாகவே இங்கு இடம் பெறுகின்றன. பாடசாலை வேளைகளில் மட்டுமே இப்பாடசாலைக் கட்டடம் பயன்படுத்தப்படுகின்றது. போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால் மாணவர்களது திறன்கள் சரியான முறையில் இனங்காணப்பட்டு வெளிக்கொணரப்படுவதில்லை. இதனால் பெரும்பாலான மாணவர்கள் க.பொ.த. (சாத) இல் சிறந்த பெறுபேறுகளைப் பெறாமல் கல்வியைத் தொடர்வதை இடைநிறுத்திக் கொள்கின்றனர். பாடசாலையின் அமைவிடச் சூழல் காரணமாக ஆசிரியர்களும், மாணவர்களும் இப்பாடசாலையை நாடி வராது வேறு பாடசாலைகளுக்குச் செல்கின்றனர்.
5.8. பொருளாதாரக் காரணிகள்:
இப்பிரதேசத்தின் பொருளாதார நிலைகள் பெண்களின் கல்வியில்
பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. சுயதொழில் முயற்சிகளுக்கான
வாய்ப்புகளோ, உற்பத்திக்கான மூலப் பொருட்களோ இங்கு இதுவரை

இனம்காணப்படவில்லை. கிராம சனத்தொகையில் தொழில் புரிபவர்களுள் 40%மான அரச உத்தியோகத்தர்களின் பிள்ளைகளே கல்வித்துறையில் முன்னிற் கின்றனர். இதற்குக் காரணம், கல்வித் துறையில் அவர்களுக்குள்ள மிகுந்த ஆர்வமும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கவல்ல வாய்ப்புகள் கல்வித்துறையிலே உள்ளன என்று அவர்கள் நம்புவதுமாகும்.
அரச உத்தியோகம் தவிர்ந்த ஏனைய தொழில் வியாபார முயற்சிகளும் கிராமத்திற்கு வெளியே அண்மையிலுள்ள நகர்ப் புறங்களிலேயே மேற்கொள்ளப்படுவதால் உள்ளூரில் தொழில் வாய்ப்புகள் விருத்தியடையவில்லை.
வறுமை பல குடும்பங்களில் மாணவர்களின் கல்வி வாய்ப்புக்களை இழக்கச் செய்துள்ளது. க.பொ.த.(சாத) வரை கிராமப்பாடசாலையில் கற்ற மாணவர்கள், அதன் பின் கல்வியைத் தொடர்வதாயின் சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ள அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயத்திற்கு அல்லது 10 மைல் தொலைவிலுள்ள மாவனல்லை அல்லது கம்பளை நகரப் பாடசாலைகளுக்குப் போகவேணி டியுள்ளது. நகரப் பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்கும் போது போக்குவரத்துச் செலவுகள் விடுதிக் கட்டணங்கள் போன்றவற்றைச் சமாளிக்க முடியாமற் போவதால் வறிய நிலையிலுள்ள பல மாணவர்கள் தொடர்ந்து கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர். பொருளாதார வசதியின்மை பல மாணவ, மாணவிகள் தம் கல்வியினை இடைநிறுத்திக் கொள்ளக் காரணமாக அமைந்துள்ளது. ஆய்வுக்கு எடுக்கப்பட்ட மாணவர்களில் 35 சதவீதமான மாணவர்கள் தமது கல்வியை இடைநிறுத்தியதற்குக் காரணம் வறுமையே என்பது தெளிவாகியது. ஆண்களைப் பொறுத்த வரையில் இவ்விகிதாசாரம் கூடுதலாக அதாவது 50 சதவீதமாக இருந்தமை அவதானிக்கப்பட்டது. தந்தையின் இறப்பும் அதனால் ஏற்பட்ட குடும்பப் பொறுப்பும் பொதுவாக ஆண் பிள்ளைகளையும், சிலவேளை பெண் பிள்ளைகளையும் சிறுவயதிலேயே தொழில் புரிய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியது. இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்ட மாதிரியின் 20%திற்கும் மேற்பட்டோர் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியதற்குத் தகப்பனின் இறப்பும் அதனால் ஏற்பட்ட குடும்பப் பொறுப்பும் காரணமாக அமைந்தன. இங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆண்களும், பெண்களும் கணிசமான அளவில் தொழில் புரியச் செல்கின்றனர். தொழிலின்மை, குடும்ப வறுமை, வெளிநாட்டு மோகம் முதலியன
67

Page 41
காரணமாக மத்திய கிழக்கிற்குச் செல்கின்றனர். உள்ளுரில் தொழில் வாய்ப்புக்கள் அரிதாகையாலும் சிலர் கடின உழைப்புக்குப் பழக்கப்படாமையாலும் தனது துணைவியரை தொழில் புரிய வெளிநாட்டுக்கு அனுப்புகின்றனர். இதனால் குடும்பத்தின் மூத்த பெண் பிள்ளை சகோதரர்களைக் கவனிக்கவும் வீட்டைப் பராமரிக்கவும் பாடசாலையை விட்டு விலக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்படுகின்றாள். சிலநேரங்களில் தாய் வெளிநாட்டிற்குப் பணிப்பெண்ணாகப் போக முடியாத நிலையில் மூத்த பெண் பிள்ளை வெளிநாட்டிற்கு அனுப்பப்படுகின்றாள். மத்திய கிழக்கில் ஆண்களை விட பெண்களுக்கே இலகுவில் தொழில் பெறும் வாய்ப்பு இருப்பதால் பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் அளவு அதிகரித்துள்ளது. எனவே இது பெண்களின் பாடசாலைக் கல்வியை வெகுவாகப் பாதித்துள்ளது. வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்களால் பல குடும்பங்களில் பொருளாதாரம் ஓரளவு திருப்திகரமான நிலையை அடைந்திருப்பினும் அக்குடும்பங்கள் பெரும்பாலானவற்றின் கல்வி நிலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
முஸ்லிம் பெண்பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்த வழிகோலும் காரணிகளில் பல சமூக சலாசாரக் காரணிகள் இனம் காணப்பட்டன. அவையாவன சமூகச் சூழல், இளவயதுத் திருமணம், குடும்பப் பின்னணி, பெற்றோர் கல்வியில் ஆர்வமின்மை, பெண்களின் வெட்க சுபாவமும் சிலவேளை ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும், சமய வழிகாட்டல்களை விளங்காமையும் அதை அமுல் படுத்துவதில் காணப்படும் அணுகு முறைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவையனைத்தும் தனித்தனியாக நோக்கப்பட வேண்டியவைகளாகும்.
5.4 சமுகச் சூழற் காரணிகள்:
இலங்கை முஸ்லிம் சமூகத்தில் சிலரிடம் காணப்படும் கல்வி பற்றிய தப்பபிப்பிராயங்கள் முஸ்லிம் மாணவியர் கல்வியைத் தொடர்வதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன. உயர் கல்வி கற்பதில் பெண்களைப் பொறுத்தளவில் எத்தகைய பிரயோசனமும் இல்லை குடும்பத்தை நடாத்துவதற்குரிய அறிவிருந்தால் அதுவே போதுமானது என சிலர் கருதுகின்றனர். பெண்பிள்ளைகள் உயர் கல்வி கற்றதும் தம் கலாசார மரபுகளைக் கைவிட்டு ஏனைய கலாசாரப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கக் கூடும் எனப் பெற்றோர்கள் சிலர் அஞ்சுகின்றனர்.
68

பெண்கள் உயர் கல்வி பயின்றால் அவர்களின் தரத்திற்கேற்ற வாழ்க்கைத் துணைவர்களைத் தேடுவது கடினம் என்றெண்ணி அப்பிள்ளைகளின் கல்வியை இடை நிறுத்துகின்றனர்.
சுற்றுச் சூழல், அமைவிடம், போக்குவரத்துப் பிரச்சினைகள் என்பனவும் பெண்களின் கல்வியைப் பாதித்துள்ளன. உயர் கல்வி பெறுவதற்காகத் துாரப் பிரதேசப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லும் போது பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். பஸ் பிரயாணத்தில் அதிக நேரம் செலவாகின்றது. போக்குவரத்து நெருக்கடிகள் காரணமாக தாமதமாகவே மாலையில் வீடுவந்து சேரவேண்டியுள்ளது. அத்துடன் பெண்பிள்ளைகளை பஸ்ஸில் தனியாக அனுப்ப முடியாத நிலையும் காணப்படுகின்றது. கலைத்துறை வகுப்புகள் போன்று விஞ்ஞானத் துறை வகுப்புக்கள் அநேக பாடசாலைகளில் இல்லை. எனவே விஞ்ஞானத் துறையில் கற்க விரும்புவோர் அத்தகைய வசதிகள் உள்ள துாரப் பாடசாலைகளுக்குச் செல்ல ஆரம்பித்துப் பின் இடையில் மேற்கூறப்பட்ட பிரச்சினைகளால் அலுப்பும், வெறுப்பும் ஏற்பட்டு கல்வி வாழ்வை முடித்துக் கொள்கின்றனர். ஆய்வுக்கென எடுக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் விஞ்ஞானத் துறைகளில் கல்வி கற்க விரும்புவோர் இங்கிருந்து 10 மைல் தொலைவில் உள்ள நகரப்புறப் பாடசாலைகளுக்குத் தினமும் பஸ்ஸில் செல்ல வேண்டியுள்ளது. பாடசாலை முடிந்து அவர்கள் வீடு திரும்பும்போது மாலை நான்கு மணிக்கு மேலாகிவிடுகின்றது. களைப்போடு வீடு திரும்பும் அவர்களால் இரவில் பாடங்களை மீட்டுப் படிப்பதற்கு முடியாத நிலையில் பாடசாலையிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறமுடியாதுள்ளது. இதனால் கல்வியை இடைநிறுத்துகின்றனர். இது இலங்கையில் கிராமப்புற மாணவர்கள் எதிர் நோக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும்.
5.6. குடும்பச் சூழல்:
மாணவர்களுக்கு ஏதும் சுகயினம் ஏற்பட்டால் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுவது போல குடும்பங்களில் வேறு எவருக்கும் சுகயினம் ஏற்பட்டால் அவர்களைக் பராமரிப்பதற்காகவும் மாணவர்கள் சிலவேளை பாடசாலை செல்வது நிறுத்தப்படுகின்றது. பெற்றோருக்கோ அல்லது வேறு எவருக்கோ நீண்டகால நோய்
69

Page 42
ஏற்பட்டால் அவர்களைப் பராமரிப்பதற்காக பெரும்பாலும் மூத்த பிள்ளைகள் வீட்டில் நிறுத்தப்படுகின்றனர். காலப்போக்கில் கல்வி இழந்து விடுவர். கல்வியில் வாய்ப்பினை ஆர்வமற்றவர்களுடன் ஏற்படும் சகவாசம் காரணமாகவும் பாடசாலை செல்வதை இவர்கள் முற்றாக நிறுத்தி விடுகின்றனர்.
பெற்றோர்களின் கல்விப் பின்னணியும் மாணவர்களது கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பெற்றோர் கல்வி கற்காதவர்களாகவும் கல்வியில் கூடிய ஆர்வம் இல்லாதவர்களாகவும் இருக்கின்றமை மாணவர்கள் கல்வியை இடைநிறுத்துவதற்குக் காரணமாக அமைந்திருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. சில பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி வருவதில்லை. பிள்ளைகளின் கல்வி நிலையை அவதானித்து, அவர்களது பலவீனங்களை இனம்கண்டு ஆசிரியர்களுடன் அவைபற்றிக் கலந்துரையாடி அவற்றை நிவர்த்தி செய்வதில் அக்கறை கொள்வதில்லை. இதனால் மாணவர்கள் கல வரித துறையPலி பெறிறோரினி வழிநடாத த லரின் றிக் கைவிடப்படுகின்றனர். இறுதியில் கல்வியில் சித்தி எய்தாது கல்வியில் வெறுப்பு ஏற்பட்டுக் காலப்போக்கில் சுயமாகவே பாடசாலை செல்வதை நிறுத்திக் கொள்கின்றனர். ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மாணவியர்களில் 75% சத வீதமானோர் இத்தகைய குடும்பப் பின்னணிகளைக் கொண்டிருந்தமை அவதானிக்கப்பட்டது. இவை அவர்களது கல்வி வாழ்வை வெகுவாகப் பாதித்திருந்தன.
குடும்பத்தின் வருமான ஏற்றத்தாழ்விற்கும் மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறுவதற்குமிடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. பெற்றோரின் சிறிய வருமானம் பிள்ளைகளது உணவு, உடை, மருத்துவத் தேவைகளுக்கே போதாததாக அமையும் போது கல்வித்துறைத் தேவைகள் முற்றாகப் புறக்கணிக்கப்படுகின்ற நிலை காணப்படுகின்றது. தகப்பனின் இறப்பும் அதனால் எற்பட்ட குடும்பப் பொறுப்பும் 20 சதவீதமான ஆண்பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திக் கொள்ளக் காரணமாக அமைந்திருந்தன. மற்றுமொரு புறத்தில் பணவசதி படைத்த குடும்பங்களில் பெண் பிள்ளைகள் கல்வி கற்று உத்தியோகம் பார்த்து சம்பாதிக்க வேண்டியதில்லை என்றும் தங்களது வாழ்க்கையைக் கொண்டு
70

நடாத் துவதற்கேற்ப அறிவு இருந்தாலி போதும் என்றும் கருதப்படுகின்றது. மேலும் பல குடும்பங்களில் பிள்ளைகள் செல்லமாக வளர்க்கப்படுவதால் அவர்கள் கல்வியில் செலுத்தும் கவனம் விளையாட்டுக்களிலும், ஆடம்பர வாழ்க்கை வசதிகளிலும் திசை திருப்பப்படுகின்றது.
இதனால் காலப்போக்கில் கல்வியில் ஆர்வம் குன்றுதல் பரீட்சையில் தவறிவிடுதல், பாடசாலைக்குப் போக முடியாத நிலையேற்படுதல் என்ற காரணங்களால் கல்வி இடைநிறுத்தப்படுகிறது என்பதும் இவ்வாய்வின் மூலம் புலப்படுகின்றது.
5.6 இள வயதுத் திருமணங்கள்:
மாணவர்களது கல்வி வாழ்வைப் பாதிக்கும் இன்னொரு காரணி இளவயதுத் திருமணமாகும். ஏனைய் சமூகங்களை விட முஸ்லிம் சமூகத்தில் இள வயதுத் திருமணங்கள் நீண்ட காலமாக வழக்கிலிருந்து வருகின்றன. பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகள் கூட இடை நிறுத்தப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர். ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பெண் பிள்ளைகளில் 30 சதவீதமானவர்கள் இளம் வயதில் திருமணம் காரணமாகவே தமது கல்வியை இடைநிறுத்திக் கொண்டனர். என்பது தெளிவாகின்றது. இத் தன்மை பொதுவாக சகல பாகங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றது.
6.7 பெற்றோரின் நிர்ப்பந்தங்கள்:
பெற்றோர் தமது பிள்ளைகளை அவர்களின் திறமைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற துறைகளில் படிக்க வைக் காது தமது விருப்பத்திற்கேற்ப வேறுசில துறைகளில் கல்வி பயில வைப்பதும் மாணவர்கள் கல்வியை இடைநிறுத்துவதற்கு ஒரு காரணியாக இருந்துவருகின்றது. பெற்றோரின் விருப்பத்தின் பேரில் சிறுவயதிலேயே 'மதுரசாக்களில்" சேர்க்கப்படும் இத்தகைய மாணவர்கள் அக்கல்வி பெற்றோர் தம் பிள்ளைகளை வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ உருவாக்கப்பட வேண்டுமென்பதற்காக பிள்ளைகளை வற்புறுத்தி அத்துறைகளில் படிக்க வைக்கின்றனர். இது இறுதியில் மாணவர்கள் கலவியில் தோல்வியைத்தழுவ வழிகோலுகின்றது.
71

Page 43
.8 கலாசாரக் காரணிகள்:
பெண்பிள்ளைகளின் ஒழுக்கம் பேண வேண்டும் என்ற நோக்கில் பெற்றோர் கலவன் பாடசாலைகளுக்குப் பெண்பிள்ளைகளை அனுப்பவும் சில வேளைகளில் தயங்குகின்றனர். அதற்கான மாற்று வசதி வாய்ப்புக்கள் இல்லாத போது அத்தகைய பெண் பிள்ளைகள் கல்வியைத் தொடரமுடியாது விட்டுவிடுகின்றனர். சில பெற்றோர் சமூகத்திலும் சூழலிலும் மலிந்துள்ள ஒழுக்கச் சீர்கேடுகள் காரணமாகத் தமது பெண் பிள்ளைகளைப் பாடசாலையை விட்டும் இடைநிறுத்திக் கொள்கின்றனர். தவறான நடத்தைகளும், ஒழுக்க முரணான நடைமுறைகளும் மலிந்த ஒரு சூழலில் தமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான வழி, அவர்களை வீட்டை விட்டு வெளியே செல்ல விடாது தடுப்பதாகும் என அவர்கள் கருதுகின்றனர். இவ்விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெற்றோர் தமது பெண்பிள்ளைகளைப் பாடசாலையை விட்டும் இடைநிறுத்தியதற்கான முக்கிய காரணிகளாக பெண்பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்பதும் அவர்கள் தனியே வெளியே செல்லும்போது பல்வேறு பிரச்சினைகள் தோன்றும் என்று கருதுவதும், வயது வந்த ஆண்பிள்ளைகளின் இடைஞ்சல்களும் அதனால் பாரதுாரமான விளைவுகள் ஏற்படும் என அஞ்சுவதும் அவதானிக்கப்பட்டன.
5.9 சமய வழிகாட்டல்கள் பற்றிய தெளிவின்மை:
இஸ்லாமிய சலாசார ஒழுக்கவியல் பற்றிய தவறான விளக்கங்களும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் சில பெற்றோர்கள் கையாளும் தெளிவற்ற செயன்முறைகளும், அறியாமையும் தமது பெண்களைப் பாடசாலையைவிட்டு விலக்குவதற்குக் காரணங்களாக அமைந்துள்ளன. பெண்கள் கல்வி கற்பது, தொழில் புரிவது, இஸ்லாமிய ஒழுக்க வாழ்வு என்பன பற்றிய அவர்களின் தெளிவற்ற சிந்தனைகள் அவர்களை இவ்வாறு செய்யத் துாண்டுகின்றன. பெண்பிள்ளைகள் கல்வி கற்பதும் அதற்காக வீட்டுக்கு வெளியே செல்வதும் மார்க்கத்திற்கு முரணானது என இவர்கள் எண்ணுகின்றமையால், பெண் பிள்ளைகளின் கல்விவாழ்க்கையை இடைநிறுத்துவதற்கு பெற்றோர்கள் முற்படுகின்றனர்.
72

.ே முடிவுரை
தும்புளுவாவை முஸ்லிம் கிராமத்தின் பெண்கள் கல்வி அபிவிருத்தியில் சமூக, பொருளாதார, பெளதீக, கலாசார காரணிகள் என்பன எவ்வாறு செல்வாக்கு வகித்தன என்பது இவ்வாய்விலிருந்து தெளிவாகின்றன. முஸ்லிம் மாணவிகள் இளம் வயதில் பாடசாலையை விட்டு விலகும் அம்சத்தைத் தீர்மானித்த காரணிகளில் கலாசாரக் காரணி கூடுதலான செல்வாக்கை வகிக்கின்றது. இக்கலாசாரக் காரணிகளில் கல்வியைப் பொறுத்தவரையில் குடும்பச் சூழல் மிகுந்த ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்பது தெளிவாகின்றது.
73

Page 44
மகாநாட்டுத் தீர்மானங்கள்: முஸ்லிம் பெண் கல்வி
1) பெண் கல்வி மேம்பாட்டிற்கு சாதகமான முறையில் சமூகத்தின் மனோபாவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். இம்மாற்றம் பெண்களின் கல்வியில் தாக்கமுடைய விளைவுகளை ஏற்படுத்தும்.
2) சமகல்வி வாய்ப்பைப் பொறுத்தமட்டில் கிராமங்களிலும், நகரங்களிலும் வாழும் ஏழை மக்களே மிகவும் பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றார்கள்.
3) உயர் கல்வியில் ஈடுபடும் முஸ்லிம் பெண்கள் மத்தியில் பாடசாலையை விட்டுவிலகும் விகிதம் உயர்வாகக் காணப்பட திருமணமும், சீதனமும் காரணமாக இருக்கின்றன.
4) முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரை ஆரம்பக் கல்வியைப்போல இரண்டாந்தர, உயர்தரக் கல்வியும் சமமான முக்கியத்துவத்தைக் கொண்டவைகளாகும்.
5) சமூகஅபிவிருத்தியில் பெண்கள் ஈடுபடும் ஆர்வத்தை அதிகரிக்கச்
செய்வதாக முஸ்லிம் பெண் கல்வி அமைய வேண்டும்.
6) கல்வியானது பல்வேறு இணக்கக்குழுக்கள் மத்தியில் இணக்கமான உறவையும், ஒத்துழைப்பையும் அதிகரிக்க உதவுவதாக இருக்கவேண்டும்.
7) தொழில் நுட்பக் கல்வியும் முதியோர் கல்வியும் முஸ்லிம் பெண்கள்
மத்தியில் ஊக்குவிக்கப்படவேண்டும்.
8) முஸ்லிம் பெண்கள் க.பொ.த உயர்தர மட்டத்திலும், பல்கலைக்கழக மட்டத்திலும் விஞ்ஞானக் கல்வியைக் கறி பதற்கு ஊக்கமளிக்கப்படவேண்டும்.
74

பகுதி II முஸ்லிம்களின் உயர் கல்வி

Page 45

உயர் கல்வியில் முஸ்லிம்கள்: ஒரு பின்னணி அறிக்கை
என்.பி.எம். சைபுதீன் எஸ்.எச். ஹஸ்புல்லா
1. அறிமுகம்
கல்வி மனிதனின் உயிரோட்டமுள்ள வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஒரம்சமாகும். சமூகம் இயங்குவதற்குக் கல்வி அவசியமாகும். அது சமுதாய மேம்படுத்தலையும், சமுதாய நகர்வையும் ஏற்படுத்தும் பிரதான சாதனமாகும் என்று எமில் டுர்கைம் குறிப்பிடுகின்றார். தனி மனிதன் மட்டுமன்றி சமுதாயத்தில் ஏனையவர்களும் தமது சமூக அந்தஸ்தை மேம்படுத்தும் பிரதான அம்சமாக கல்வியைக் கருதுகின்றனர், எனவே ஒரு சமுதாயத்தின் அபிவிருத்தியில் அதன் கல்வி வளர்ச்சி முன்னணி வகிக்கின்றது.
சமூக அபிவிருத்தியில் உயர் கல்வியின் இடம் மிக முக்கியமாகும். ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி ஆகியவற்றிலிருந்து உயர் கல்வி வேறுபட்டதாகும். உயர்கல்வி அதைக் கற்போரைக் கல்வி கேள்விகளிலும், ஆராய்ச்சிகளிலும் தலைசிறந்து விளங்கச் செய்வதோடு, அவர்களை அறிவுபூர்வமாக ஆழப்படுத்திக் கூர்மைப்படுத்துகின்றது. உயர் கல்வியின் இப்பயன்பாடுகள் சமூக, அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்யக்கூடியவைகளாகும்.
இலங்கை போன்ற நாடுகளில் உயர்கல்வி முறைசார் கல்விக்குட்பட்டதொன்றாகக் கொள்ளப்படுகின்றது. இவ்வுயர் கல்வியில் பல்கலைக்கழகக் கல்வி, பட்டப் பின்படிப்புக்கல்வி, உயர்தொழிற்கல்வி போன்றவை உள்ளடக்கப்படுகின்றன. அபிவிருத்தி நோக்கில் இவ்வுயர் கல்வி முறைகள் சமூகத்தில் நேரடியான, மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இப்பின்னணி அறிக்கை உயர் கல்வியில் முஸ்லிம்களின் ஈடுபாட்டையும், பங்களிப்பையும், அடைவுகளையும் பற்றியதாகும். இக்கட்டுரையில் முஸ்லிம்களது உயர் கல்வியின் தனித்துவத் தன்மைகள் நோக்கப்படுகின்றன.
இப்பின்னணி அறிக்கை பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளது. முதலில் உயர் கல்வியில் முஸ்லிம்களின் ஈடுபாட்டை
77

Page 46
மதிப்பீடு செய்கின்றது. உயர் கல்வியில் இச்சமூகத்தின் எண்ணிக்கை ரீதியானதும், விகிதாசார ரீதியானதுமான முக்கியத்துவத்தையும், பால், மற்றும் பிரதேச ரீதியான வேறுபாட்டையும் வரலாற்று ரீதியான மாற்றங்களையும் அடையாளம் காண்கின்றது. மேலும் முஸ்லிம்களின் உயர் கல்வியின் தரம் அவர்களது பல்கலைக்கழக அனுமதிப் பெறுபேறுகளைக் கொண்டு மதிப்பிடப்படுகின்றது. இறுதியாக இச்சமூகத்தின் எதிர்கால உயர் கல்வியின் போக்குகள் மதிப்பிடப்பட்டு முஸ்லிம் சமூகம் அதனை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்று ஆலோசனை கூறப்படுகின்றது.
2. ஆய்வு ஆதாரங்கள்
இவ்வாய்வு உயர்கல்விபற்றிய வரலாற்றுரீதியான தரவுகளைப் பயன்படுத்துகின்றது. இவை பல்வேறு மூலாதாரங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன. இதில் குறிப்பாகப் பாடசாலைக் கல்வி பற்றிய தரவுகளும், விபரங்களும் மத்திய அரசுக் கல்வி அமைச்சின் பாடசாலைப் புள்ளிவிபரத்திரட்டு, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் பல்வேறு வெளியீடுகள் முதலியவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளன.
அத்துடன் குடிசன மதிப்பீட்டுப் புள்ளிவிபரத் தரவுக் கோவையிலிருந்தும் இவ்வாய்வுக்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன. அதே வேளை 1993ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசினால் மேற்கொள்ளப்பட்ட “இலங்கை முஸ்லிம்களின் கல்வி’ பற்றிய வெளிக்கள ஆய்விலிருந்தும் இக்கட்டுரைக்குத் தேவையான தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
3. இலங்கையில் கல்வியும் உயர் கல்வியும்:
பாடசாலைக் கல்வியானது ஆரம்பநிலை, கனிஷ்ட இடைநிலை, சிரேஷ்ட இடைநிலை, கல்லூரி நிலை என்ற பிரிவுகளைக் கொண்டுள்ளது. பாடசாலைக் கல்வியில் ஆண்டு 1 இல் இருந்து ஆண்டு 5 வரையிலான கல்வி ஆரம்பக்கல்வி என்று அழைக்கப்படுகின்றது. இக்காலகட்டத்தில் எழுத்தறிவும் எழுத்துப்பயிற்சியும் முக்கியம் பெறுகின்றன. இவ்வாண்டுகள் ஒரு பிள்ளையின் கல்வி அபிவிருத்தியில் முக்கிய கட்டமொன்றாகும். ஒரு பிள்ளையின் ஆக்கத்திறன் இக்கால கட்டத்தில் விருத்தி செய்யப்படுவதுடன் இப்பிள்ளையின் பிற்கால ஆளுமை வளர்ச்சிக்கும் இக்கல்வி அடிகோலுகின்றது. ஆண்டு 6 முதல் 8 வரையிலுள்ள காலகட்டக்கல்வி கனிஷ்ட இடைநிலை எனப்படும். இந்த மட்டத்தில்
78

ஒரு மாணவன் ஆரம்ப நிலையில் பெற்றுக் கொண்ட அடிப்படை அறிவு உறுதிப்படுத்தப்பட்டு உயர்கல்விக்குத் தேவையான அத்திவாரமும் அமைத்துக் கொடுக்கப்படுகிறது. ஆண்டு 9 முதல் ஆண்டு 11 வரையிலான மூன்று ஆண்டுகள் சிரேஷ்ட இடைநிலை கல்வி என்று குறிக்கப்படும். க.பொ.த. (சாத) பரீட்சையை இலக்காகக் கொண்ட இக்கட்டம் பெரும்பாலான மாணவர்களுக்கு இறுதிநிலைக் கல்வியாக அமைகின்றது. இப்பரீட்சைப் பெறுபேறுகள் கல்லுாரிக் கல்விக்கான தெரிவினை நிர்ணயிப்பதுடன் ஒரு மாணவன் எதிர்காலத்தில் எத்துறையைச் சார்ந்த உயர் கல்வியைத் தான் தெரிவுசெய்யவேண்டும் என்பதற்கான தரத்தையும் வழங்குகின்றது. அதனால் சிரேஷ்ட இடைநிலைக் கல்வி உயர் கல்விக்கான அடித்தளமாக அமைகின்றது.
ஆண்டு 12ஆம், 13ஆம் தரங்களைக்கொண்ட கல்லுாரிக்கல்வி, அறிவைத் திரட்டும் உயர் கல்வியைத் தொடர விரும்புவோருக்குரிய ஒரு கட்டமாகும். இது பாடசாலைக் கல்வியின் இறுதி நிலையாகும். இங்கு இடம் பெறும் பாடவிதானமும் பயிற்சி நெறிகளும் பல்கலைக்கழகம், மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிற்கு மாணவர்களை ஆயத்தம் செய்கின்றன. 13இன் இறுதியில் நடைபெறும் க.பொ.த. (உ.த) பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்றவர்களில் இருந்தே உயர்கல்விக்கான தெரிவுகள் இடம் பெறும்.
பாடசாலைக் கல்விக்குப் பிந்தியகல்வி உயர்கல்வி எனப்படும். பல்கலைக்கழகம், மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் சார்ந்த கல்வியும் 3ஆம் நிலைக் கல்வியில் இடம் பெறும் உயர் தொழிற் கல்வி, தொழில்நுட்பக்கல்வி, பட்டப்பின்படிப்புக்கல்வி போன்றவையும் உயர் கல்வியில் இடம் பெறுகின்றன. உயர் கல்வியில் பல்கலைக்கழகக்கல்வி தொகை ரீதியாகவும், பண்பு ரீதியாகவும் முக்கியமானதாகையால், இவ்வாய்வுக் கட்டுரை பல்கலைக்கழகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராய்கின்றது. உயர் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, பட்டப்பின்படிப்புக்கல்வி போன்ற உயர் கல்வித்துறைகள் இந்நூலில் தனித்தனியாக ஆராயப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
4. இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வி
இலங்கையில் உயர் கல்வி 1921 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. அவ்வாண்டில் கொழும்பில் பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்று நிறுவப்பட்டு இங்கிலாந்துப் பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்புக்கு மாணவர்களைத் தயார் செய்யும் முறை இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது.
79

Page 47
இலங்கைக்கேயுரிய பல்கலைக்கழகக் கல்வி 1942ஆம் ஆண்டிலேயே ஆரம்பமாகியது. 1952ஆம் ஆண்டு “இலங்கைப் பல்கலைக்கழகம்” என்ற பெயரில் பேராதனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
1945இல் இலவசக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து பல்கலைக்கழகக் கல்விக்கான தேவை அதிகரித்தது. பல்கலைக்கழக அனுமதியை அதிகரிப்பதன் மூலம் இத்தேவையைப் பூர்த்திசெய்ய முயற்சி எடுக்கப்பட்டது. எனினும் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் இடப்பற்றாக்குறை காரணமாக புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட வேண்டியதாயிற்று. 1956இல் இலங்கையின் மொழிக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு சுதேச மொழிகளில் கல்லூரி மட்டத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாகப் பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்ப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழிக்கல்வியோடு சிங்கள, தமிழ் மொழிக்கல்வியும் ஆரம்பிக்கப்பட்டன. இன்று எமது நாட்டில் 11 பல்கலைக்கழகங்களும், ஒரு திறந்த பல்கலைக்கழகமும், 5 இணைந்த பல்கலைக்கழகங்களும், 3 கல்விக்கல்லுாரிகளும், ஒரு உயர் தொழில் நுட்பக்கல்லுாரியும், பல தொழில்நுட்பக் கல்லூரிகளும் காணப்படுகின்றன. உயர்கல்வி இன்று நாடளாவிய வகையில் பரவலாக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் முஸ்லிம்கள் தமது பல்கலைக்கழகக் கல்வியில் ஆர்வம் செலுத்தி வந்திருப்பினும் அவர்களின் விகிதாசாரம் ஒப்பீட்டு ரீதியாகக் குறைவாகவே காணப்பட்டது. இலங்கைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் மொத்தத் தொகையில் 2.8 வீதம் ஆக இருந்த முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி 1954 ஆண்டில் 1.7 வீதம் வரை குறைந்து மீண்டும் 1965 ஆம் ஆண்டளவில் 2 வீதமாக அதிகரித்திருந்தது. முஸ்லிம்கள் மத்தியில் பிற்காலத்தில் ஏற்பட்ட கல்வி ஆர்வம், பாடசாலைகளின் வளர்ச்சி முதலியன முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை அதிகரித்தது. 1990 ஆம் ஆண்டில் முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி 7.1 வீதமாக இருந்தது.
5. பல்கலைக்கழக முன்கல்வியும் முஸ்லிம்களும்
உயர் கல்வியில் பங்குபற்றுவோரின் எண்ணிக்கையும், தரமும்
பாடசாலை மட்டத்தில் சிரேஷ்ட இடைநிலைக் கல்வி, கல்லுாரி
நிலைக்கல்வி என்பவற்றிலுள்ள வசதிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.
SO

இவ்வடிப்படையில் உயர் கல்வியுடன் தொடர்புடைய பாடசாலைக்கல்வி பற்றிய பின்வரும் அம்சங்கள் ஆராயப்பட வேண்டியவையாகும்.
5.1 பாடசாலை மட்டத்தில் உயர்தரக்கல்வி:
1992ஆம் ஆண்டு இலங்கையில் பாடசாலை மாணவர் தொகை 3996259 ஆகும். இவர்களில் 8.5 சதவீதமானவர்கள் (3,42,684 பேர்) முஸ்லிம் மாணவர்களாவர். இவர்களில் 1,78,929 பேர் ஆண்களும் 1,63,755 பேர் பெண்களும் ஆவர்.
கிடைக்கப்பெறும் தரவுகளிலிருந்து சிரேஷ்ட இடைநிலைக்கல்வி, கல்லுாரிமட்டக் கல்வி ஆகியவற்றில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டதை அவதானிக்க முடிகிறது. மொத்த முஸ்லிம் மாணவர் தொகையில் 55 சதவீதத்தினர் ஆரம்பநிலைக் கல்வியில் பங்குபற்றினாலும் கல்லுாரிநிலைக்கல்வியில் அவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளமையை அட்டவணை 1 காட்டுகின்றது. சிரேஷ்ட இடைநிலையில் க.பொ.த. சாதாரண தர வகுப்புக்களில் 19576 பேர் மட்டுமே கல்வி பயில்கின்றனர். பாடசாலை மதிப்பீட்டுப் புள்ளிவிபரங்களின்படி க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றியோரில் 4710 பேர் மட்டுமே க.பொ.த.உயர்தர வகுப்புக்களில் பல்வேறு கல்வி நெறிகளிலும் சேர்ந்து படிப்பதற்குத் தகுதி பெற்றனர். மொத்த முஸ்லிம் மாணவர்களோடு ஒப்பிடும்போது தகுதி பெற்றோரின் தொகை 1.3 சதவீதம் மட்டுமேயாகும். இவர்களுள் அதிகமானோர் கலைத்துறைக்குத் தகுதி பெற்றனர். முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் இடைவிலகலும், மீண்டும் ஒரே வகுப்பில் தங்கிப்படிப்பதும் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்கு முதலிலே தோற்றியோர் மீண்டும் அப்பரீட்சைக்குத் தோற்றுவதில் அதிக ஆர்வம் காட்டாமையும் அதிகமாக இடம்பெறுவதினாலேயே க.பொ.த.உயர்தர வகுப்புக்களில் சேர்ந்து கற்போரின் எண்ணிக்கை குறைந்த நிலையில் காணப்படுகின்றது.
இனவிகிதாசார அடிப்படையில் க.பொ.த உயர்தர வகுப்புக்களில் பல்வேறு கற்கை நெறிகளிலும் முஸ்லிம் மாணவர்களின் பங்குபற்றுதல் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. சுதந்திரத்திற்குப் பின்னருள்ள முதலி இரு தசாப் தங்களிலும் முஸ் லிமி கள் மத்தியரிலி கல்லுாரிநிலைக்கல்வியில் பின்தங்கிய நிலை காணப்பட்டாலும் 1970, 1980ஆம் தொடராண்டுகளில் அந்நிலையில் படிப்படியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
8

Page 48
1981-1992 வரையிலான 11 வருடங்களில் க.பொ.த. சாதாரணதர வகுப்புக்களில் பயிலும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 0.2 சதவீதத்தால் மட்டுமே அதிகரித்துள்ளது. சிங்கள மாணவர்களின் அதிகரிப்பு விகிதாசாரத்துடன் ஒப்பிடும்போது இது ஒரு சிறிய அதிகரிப்பு மட்டுமேயாகும். மேற்குறிப்பிட்ட கால இடைவெளியில் நாட்டில் க.பொ.த. உயர்தர வகுப்புக்களில் சேர்ந்து கற்றோரின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒரு வளர்ச்சியாகும். இதற்குப்பல காரணங்களைக் கூறலாம். ஒன்று இக்காலப்பகுதியில் பல்கலைக் கழகங்களினதும், மற்றும் உயர்கல்வி நிறுவனங்களினதும் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு. இரண்டு, உயர்கல்வியின்மீது மக்களுக்கு ஏற்பட்ட ஆர்வம். மூன்று, 1978இல் அறிமுகம் செய்யப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் பின்னர் தொழில் வாய்ப்புக்களுக்கு உயர்கல்வியின் அவசியம் வலியுறுத்தப்பட்டமை. நான்கு, க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்ந்தும் தொழில் வாய்ப்புக்கான தகுதியாகக் கருதப்படாமை போன்றவை ஆகும்.
உயர்கல்வியின் மீதான ஆர்வம் எல்லாச் சமூகங்களின் மத்தியிலும் தொகை ரீதியாக அதிகரித்து வருவதைக் கடந்த 20 ஆண்டுகால உயர்கல் விபற்றிய புள்ளிவிபரங்கள் தெளிவாகக் காட்டிநிற்கின்றன. ஆயினும் அதிகரிப்பு வேகம் சமூகங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு கொண்டதாகக் காணப்படுகின்றது (அட்டவணை 2). உதாரணமாக உயர்தர வகுப்புக்களில் பயிலும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 1992 இல் 2.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இது சிங்கள மாணவர்களின் அதிகரிப்பு வேகத்தை விடக் கூடியதாகும். எவ்வாறாயினும் சிங்களவர்களின் இன விகிதாசாரத்தை விட அவ்வினத்தின் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் அதேவேளை முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் முஸ்லிம்களின் இன விகிதாசாரத்தையாவது அடைந்துகொள்ளவில்லை. கடந்த சில தசாப்தங்களைவிட 1990களில் உயர்தர வகுப்பில் பயிலும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை வீகிதாசார ரீதியாக அதிகரித்திருப்பதற்கு அவ்வகுப்புக்களில் பயிலும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் மொத்த மாணவர் தொகையில் ஏற்பட்ட பாதிப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இதற்கு வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் நிலவும் யுத்த நிலைமைகள் அப்பிரதேச மாணவர்களின் கல்வியைப் பாதித்தமை காரணமாகும்.
82

அட்டவணை1:
பாடசாலைக் கல்வியில் பல்வேறு மட்டங்களில் முஸ்லிம்
மாணவர்களின் பரம்பல், 1992.
கல்வி மட்டம் மாணவர்களின் எண்ணிக்கை மாணவர்களின் எண்ணிக்கை %
ஆரம்பக் கல்வி 190,155 55.3
இடைநிலைக்கல்வி 1,42,133 414
க.பொ.த. (உத.) 11374 3.3
மொத்தம் 3,43,662 100.0
முலம் பாடசாலை கணிப்பீடு 1992
அட்டவணை 2 பாடசாலைக் கல்வியில் இடைநிலை, உயர் வகுப்புக்களில் மாணவர்களின் இன ரீதியான விகிதம், 1981 - 1992.
முஸ்லிம் சிங்களவர் தமிழர்
கல்வி மட்டம் 1981 1992 1981 1992 1981, 1992
க.பொ.த. (சா.த.) 5.9 6.1 816 83.5 12.1 10.2 9.8 19.6 84.9 75.3 5.3 4.7 ).உ.த( مساهم
க.பொ.த. (உ.த.) விஞ்ஞானம் 4.1 6.9 87.3 829 8.4 10.
க.பொ.த. (உ.த.) வர்த்தகம் 3.3 6.9 86.8 85.9 9.7 8.2
ா.த. (உ.த.) கலை 3.9 6.0 83.5 84.7 12.3 9.2
wawu A uruAwaMaua assauflüt, 1991, 1992
83

Page 49
6.2 கற்கை நெறி ரீதியான பரம்பல் வேறுபாடு
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் மூலமாக க.பொ.த. உயர்தர வகுப்பில் பயிலுவதற்குக் தகுதி பெறும் மாணவர்கள் கலை, விஞ்ஞானம், வர்த்தகம் என்ற கற்கை நெறிகளுக்குக் தரம் பிரிக்கப்படுகின்றனர். பயிற்ச்சி நெறிகளை அடிப்படையாகக் கொண்டே பல்கலைக்கழகக் கல்விக்குத் துறை ரீதியான அனுமதிகள் வழங்கப்படுகின்றன.
உயர்தர வகுப்புக்களில் போதிக்கப்படும் விஞ்ஞானக்கல்வி, தொழில்நுட்பக் கல்விக்கும், உயர் தொழில் வாய்ப்புகளுக்கும் பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவன மட்டத்தில் விஞ்ஞானக் கல்விக்குமான வாய்ப்பினைப் பெற்றுத்தருவதால் இக்கற்கை நெறி பலராலும் விரும்பப்படுகின்றது. ஆயினும் இக்கற்கை நெறி மீது சிங்கள மாணவர்கள் காட்டும் ஆர்வத்துடன் ஒப்பிடும்போது முஸ்லிம்களின் ஆர்வம் மிகவும் குறைவாகும். உதாரணமாக 1981-1992 காலப்பகுதியில் அத்துறையில் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை 9.6 சதவீதத்தால் அதிகரித்த போது முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 0.6 சதவீதத்தால் மட்டுமே அதிகரித்திருந்தது. இந்த மந்தப் போக்கிற்குக் காரணம் பாடசாலை மட்டத்தில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களில் முஸ்லிம் பாடசாலைகளில் வினையாற்றல் குறைந்த மட்டத்தில் இருந்தமையாகும்.
இப்போக்கிற்கு மாறாக கலை, வர்த்தகம் சார்ந்த துறைகளில் முஸ்லிம்களின் ஆர்வம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இத்துறைகள் சார்ந்த ஆர்வத்தின் வேகம் 1992 இல் முறையே 3.6 சதவீதம், 2.8 சதவீதங்களால் அதிகரித்துள்ளது. சிங்கள, தமிழ் மாணவர்கள் மத்தியில் கலை, வர்த்தகத்துறைகளின் மீதான ஆர்வம் குறைந்து செல்லும்போது முஸ்லிம்கள் மத்தியில் அவை பிரபல்யமடைந்து வருகின்றன. மறுவார்த்தையில் கூறின் சிங்கள, தமிழ் மாணவர்கள் தமது தொழில் வாய்ப்புக்குப் பொருந்தாது என்று கைவிடும் பாடத்துறைகளை முஸ்லிம் மாணவர்கள் தெரிவு செய்கின்றனர். இப்போக்கு முஸ்லிம் மாணவர்களுக்குக் கல்வி பற்றிய முறையான வழிகாட்டலின்மையைப் பிரதிபலிக்கின்றது.
5.3 பால், மொழி, பிரதேச ரீதியான வேறுபாடுகள்
கல்வி அபிவிருத்தியில் மாணவர் மத்தியில் காணப்படும்
வேறுபாடுகளை நோக்குவது அவசியமாகும். இதில் முஸ்லிம் மாணவர்களின்
கல்வியில் நிலவும் பால் வேறுபாடு குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
84

கலைத் துறையில் முஸ்லிம் பெண்களின் விகிதாசாரம் கூடுதலாகவும் விஞ்ஞான வர்த்தகத் துறைகளில் ஆண்களின் விகிதாசாரம் கூடுதலாகவும் இருப்பதைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன (அட்டவணை 3). உயர் கல்வியில் முஸ்லிம்களின் இப் பால் வேறுபாட்டில் கலாசார அம்சங்களின் செல்வாக்கினை அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக விஞ்ஞான, வர்த்தகக் கல விக்கான வசதிகள் நகர்ப் புறங்களிலேயே அதிகமாகக் காணப்படுகின்றன. கிராமப்புற முஸ்லிம் மாணவிகள் கலாசாரக் காரணங்களினால் நகர்ப்புறப் பாடசாலைகளுக்குச் சென்று பயில்வதைத் தவிர்த்துக் கொள்கின்றனர். கிராமப் புறங்களில் கலைத்துறைக் கல்விக்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதனால் முஸ்லிம் மாணவிகள் கலைத்துறை சார்ந்த கல்வி நெறியில் ஆர்வம் காட்டுவதன் விளைவாக க.பொ.த. சாத, க.பொ.த. உத வகுப்புக்களில் முஸ்லிம் மாணவிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு கூடுதலாகவுள்ளது.
அட்டவணை 3 : க.பொ.த. (சாத), க.பொ.த. (உ.த.)வகுப்புகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களின் பால் ரீதியான எண்ணிக்கை 1992.
ஆண் பெண் மொத்தம் கல்விமட்டம் எண்ணிக்கை 1 % எண்ணிக்கை 1 % எண்ணிக்கை1 %
க.பொ.த. (சாத) 10,718 54.75 8,857 4525| 9575 H0000 க.பொ.த. (உத) விஞ்ஞானம் 1576 145 948 8.72 2,524 23,22
ஈ.பொ.த. (உத) வர்த்தகம் 2095 伯.27 1,522 14.00 3,617 33,27 க.பொ.த. (உத) கலை 1805 怡.60 2,924 26.90 4,729 43.51 க.பொ.த. (உத) மொத்தம் 5,476 50.37 5,394 49.63. 10,870 100.0
MA' Antuérintawáš assaorfhliu, 1992
உயர் கல்வியில் பங்குபற்றுவோரின் அளவு கிராம நகரங்களுக்கிடையிலும், மாவட்டங்களுக்கிடையிலும் வேறுபடுகின்றது. நகரம் சார்ந்த மாவட்டங்களிலேயே முஸ்லிம் மாணவர்களுக்கு விருந்ஞானம், வர்த்தகம் போன்ற துறைகளுக்கான கல்வி வசதிகள் கிடைக்கப்பெறுகின்றன. இலங்கையில் இது ஒரு பொதுவான பண்பு கனினும் முஸ்லிம்களைப் பொறுத்தஅளவில் அதிக தாக்கத்தினை
85

Page 50
ஏற்படுத்துகின்றது. பதுளை, நுவரெலியா,அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, பொலன்னறுவை போன்ற மாவட்டங்களில் உயர்தரத்தில் விஞ்ஞானக் கல்விக்கான வாய்ப்புகள் குறைவாகக் காணப்படுகின்றன. அதேவேளை கிராமியச் சூழலில் உள்ள பாடசாலைகளில் கலைத்துறைக்கான வசதிகளே அதிகம். அதனால் கிராமப்புற மாணவ, மாணவிகள் கூடுதலாக கலைத்துறையிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். பல கிராமப்புற முஸ்லிம் பாடசாலைகளில் வர்த்தக உயர்தர வகுப்புக்கள் காணப்படினும் அவற்றின் பெறுபேறுகள் குறிப்பிடத்தக்கதாக இல்லை.
5.4 கல்வி வசதிகள்:
பாடசாலைகள், அவற்றின் கல்வி வசதிகள், தரங்கள், ஆசிரியர் தொகை மற்றும் பெளதிக வளங்களின் அளவு போன்றவை உயர் கல்வி வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்துகின்றன. 1992ஆம் ஆண்டு பாடசாலைக் கணிப்பீட்டுப் புள்ளிவிபரங்களின் படி இலங்கையில் சுமார் 10,000 அரசாங்கப் பாடசாலைகள் பொதுக்கல்வியை வழங்கி வருகின்றன. இவற்றில் 72.3 சதவீதமான பாடசாலைகள் சிங்களப் பாடசாலைகளாகவும், 20.2 சதவீதமான பாடசாலைகள் தமிழ்ப் பாடசாலைகளாகவும் உள்ளன. முஸ்லிம் பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கை 710ஆகும். இது நாட்டிலுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கையில் 6.7 சதவீதமாகும்.
பாடசாலைக் கல்வியில் க.பொ.த. உத வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் 1ஏ பி, 1 சி என்ற இரு தரங்களாகப் பிரிக்கப்படுகின்றன. விஞ்ஞானம், வர்த்தகம், கலை ஆகிய கற்கை நெறிகளில் உயர்தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் 1 ஏ பி பாடசாலைகள் என்று அழைக்கப்படுகின்றன. கலை அல்லது கலையும் வர்த்தகமும் சேர்ந்த உயர்தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் 1 சி பாடசாலைகள் என்று அழைக்கப்படுகின்றன. அதன்படி இலங்கையில் 49 முஸ்லிம் பாடசாலைகளே 1 ஏ பி பாடசாலைகள் என்ற தரத்தைப் பெற்றுள்ளன. நுவரெலியா, முல்லைத்தீவு, பொலன்னறுவை, பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 1 ஏ பி தரத்தையுடைய பாடசாலை ஒன்றுதானும் காணப்படவில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கென இத்தரத்ன்தயுடைய பாடசாலைகள் காணப்படினும் அவற்றுள் பல கல்வி அடைவுமட்டத்தைப் பொறுத்துப் பின்தங்கியவையே. மேலும் இத்தரத்திலான பாடசாலைகள் இந்நாட்டின் முஸ்லிம் சனத்தொகையின் பரம்பலுக்கேற்ப அமையவில்லை என்பது முஸ்லிம் சனத்தொகை விகிதாசாரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது புலப்படுகின்றது.
86

கல்வி வளர்ச்சிக்கு மிக அவசியமான வளம் ஆசிரியர்களாவர். இலங்கையில் முஸ்லிம் பாடசாலைகளில் 11,224 ஆசிரியர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுள் 1443 பேர் பட்டதாரி ஆசிரியர்களாயினும் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை 1.8 சதவீதம் (204பேர்) ஆகும். (இதில் ஏனைய இனத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் அடங்குவர். முஸ்லிம் விஞ்ஞானப் பட்டதாரிகளின் எண்ணிக்கை 117 ஆகும்). ஆசிரியர் பற்றாக்குறையால் விஞ்ஞானக் கல்வி கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கலை, வர்த்தகத்துறைகளில் கூட தகுதியுடைய முஸ்லிம் ஆசிரியர்களின் தொகை திருப்திகரமாக இல்லை. உதாரணமாக இலங்கையில் தேசிய மட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்-மாணவர் விகிதம் 115:1 (அதாவது 115 மாணவர்களுக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர்) என்ற அடிப்படையில் காணப்பட முஸ்லிம்கள் மத்தியில் இது 219 மாணவர்களுக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் என்ற வகையில் காணப்படுவதிலிருந்து தகுதியான பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுகின்றது என்பதும் அதன் விளைவாக முஸ்லிம் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உயர் கல்விக்கான பிரவேசமும் குறைகின்றது என்பதும் புலப்படுகின்றது. தேசிய மட்டத்திலான இப்புள்ளிவிபரம் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. பல மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் பற்றாக குறை நிலவுவதைப் புள்ளிவிபரங்கள் தெளிவுபடுத்துகின்றன. உதாரணமாக முஸ்லிம் சனத்தொகை அதிகரித்துக் காணப்படும் மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் முறையே 1 : 578, 1 : 446 என்ற வகையில் ஆசிரியர் மாணவர் விகிதம் காணப்படுகின்றது.
கூட்டுமொத்தத்தில் உயர் கல்விக்கு இட்டுச்செல்லும் பாடசாலை மட்டத்திலுள்ள உயர்தர வகுப்புக் கல்வி வசதிகள் முஸ்லிம்களைப் பொறுத்துப் பற்றாக்குறையாக இருப்பதையும், அந்தத் தன்மை உயர்கல்வியின் பண்பு மற்றும், அளவுரீதியான பாதிப்புகள் முதலியவற்றை ஏற்படுதுதையும் அவதானிக்கலாம். உயர்தர வகுப்புக்களில் பயிலும் மாணவர்களின் பால், மொழி, பிரதேச ரீதியான வேறுபாடுகளினால் இந்நிலை மேலும் நிரூபிக்கப்படுகின்றது.
.ே பல்கலைக்கழகக் கல்வியும் முஸ்லிம்களும்
பல கலைக் கழகங்களுக்கு மாணவர்கள் திறமையின்
அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். க.பொ.த. உத பரீட்சைப்
பெறுபேறுகள் திறமையை மதிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப்
87

Page 51
போட்டிப் பரீட் சைக்குத் தோற்றிய மாணவர்களில் குறிப்பிட்ட விகிதாசாரத்தினருக்கே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கின்றது.
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு அண்மைக் காலமாக 1,40,000-1,50,000 இடைப்பட்ட பரீட்சாத்திகள் தோற்றுகின்றனர். ஒவ்வொரு வருடமும் 10,000க்கும் குறைவானவர்களே பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர் என்பதன் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்கான கடும் போட்டி நிலவுகின்றமையை அவதானிக்கலாம். பல்கலைக்ழக அனுமதி பெறத்தகுதி பெற்றோரில் 25சதவீதத்தினருக்குக் குறைவானவர்களே பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர் (அட்டவணை 4). க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சாத்திகளின் எண்ணிக்கையோடு தொடர்புபடுத்திப் பார்ப்பின் பல்கலைக்கழக அனுமதிக்கான சிரமங்களை நன்கு உணர்ந்து கொள்ளலாம்.
அட்டவணை 4: பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கும், விண்ணப்பிப்பதற்கும் தகுதியானவர்களின் எண்ணிக்கை, 1988, 1989, 1990.
க.பொ.த. (உத) பல்கலைக்கழக தகுதியான அனுமதி கிடைத்தவர்|பல்கலைக்
பரீட்சைக்கு அனுமதி பெற்ற | மாணவர்களின்களின் எண்ணிக்கை கழகத்திற்கு
தோற்றியவருடம்|வருடம் எண்ணிக்கை அனுமதியின்% 1988 1989/1990 34,491 7,152 20.73 1989 1990/1991 37,374 9,439 25.25 1990 1991/1992 43.454 9,281 21.35
மூலம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 1988 1989 1990
இதனை மேலும் தெளிவுபடுத்த 1992ஆம் ஆணி டு க.பொ.த.உயர்தரப் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு 1993 ஆம் பல்கலைக்கழக கல்வியாண்டுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் பற்றிய புள்ளிவிபரங்களை நாம் பயன்படுத்துவோம். 1992ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு 1,50,000 மாணவர்கள் தோற்றினர் எனக் கருதுவோம். இவர்களுள் 55,126 (36வீதமானவர்) பேர் பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்குத் தகுதி பெற்றதுடன் பல்கலைக்கழக அனுமதி கோரி 19060 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் 8391பேர் மட்டுமே அனுமதி பெற்றனர். (இத்தொகையில் விஷேட அனுமதி, விஷேட பாடங்கள், வெளிநாட்டுப் பங்கீடு, குறைநிரப்புதல் என்ற வகைகளில் அனுமதி பெற்றோர் தொகை சேர்க்கப்படவில்லை.)
88

க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குக் தோற்றியவர்களில் சுமார் 5 சதவீதத்தினர் மாத்திரமே வருடாவருடம் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர்.
பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கலை,வர்த்தகம், விஞ்ஞானம், மருத்துவம் போன்ற துறை ரீதியாகவும், சிங்களம், தமிழ் என்ற மொழி ரீதியாகவும், பிரதேசரீதியாகவும், இனரீதியாகவும், பால்ரீதியாகவும் வேறுபட்ட விகிதாசாரங்களைக் கொண்டுள்ளன.
பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் தெரிவுக்குத் திறமையும் மற்றும் குடிசன, பொருளாதாரக் குறிகாட்டிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக அனுமதிக் கொள்கை காலத்திற்குக் காலம் மாற்றமுற்று வந்துள்ளது. உயர் கல்வியில் பங்குபற்றும் மாணவர்களின் எண்ணிக்கையையும் மொழி, இன, பிரதேச வேறுபாடுகளையும் இவ்வனுமதிக் கொள்கைகளே தீர்மானிக்கின்றன. எனவே, பல்கலைக்கழக அனுமதிக் கொள்கை பற்றிச் சற்று ஆழமாக நோக்குவது பொருத்தமானதாகும்.
6.1 பல்கலைக்கழக அனுமதிக் கொள்கை
இலங்கையில் பல்கலைக்கழக முறை ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் தொடர்புடைய பரீட்சைகளில் காட்டும் திறமையின் அடிப்படையிலேயே மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டனர். கடந்த காலங்களில் பல்கலைக்கழக அனுமதியைத் தீர்மானிப்பதற்குப் பல்வேறு பரீட்சை முறைகள் பயன்படுத்தப்பட்டன. இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து ஆரம்பத்தில் பல்கலைக்கழக அனுமதியைத் தீர்மானிப்பதற்காகப் பல்கலைக்கழகப் புகுமுகப்பரீட்சை நடத்தப்பட்டது. இலங்கையில் 1950ஆம் ஆண்டுகளின் இறுதியில் புதிய பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தமக்கெனப் புறம்பான புகுமுகப்பரீட்சைகளை நடாத்தி வருடாவருடம் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டன. 1960 களின் ஆரம்பப்பகுதியில் பல்கலைக்கழகங்கள் தனித்தனியாக நடாத்திய புகுமுகப் பரீட்சைமுறை ஒழிக்கப்பட்டு இலங்கை பரீட்சைத் திணைக்களம் உயர்தரப் பாடசாலை தராதரப் பத்திர (எச்.எஸ்.ஸி)ப் பரீட்சை என்ற பெயரில் பொதுவான ஒரு பரீட்சையை அறிமுகம் செய்தது. பின்னர் அது க.பொ.த. உயர்தரப்பரீட்சை என்று மாற்றப்பட்டு இன்றுவரை நடைமுறையிலுள்ளது. 1981ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கல்வி வெள்ளையறிக்கை மீண்டும் பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சை முறை
89

Page 52
அறிமுகம் செய்யபப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறினாலும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
சுதந்திரத்திற்குப் பிற்பட்ட முதல் இரு தசாப்பதங்களில் பல்கலைக்கழக அனுமதியில் திறமையடிப்படையிலான தெரிவுமுறைக் கொள்கையே பின்பற்றப்பட்டது. பல்கலைக்கழகங்களுக்குச் சேர்த்துக் கொள்வதற்கெனத் தீர்மானிக்கப்படும் எண்ணிக்கையினர் குறிப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பெற்றுக் கொண்ட நாடளாவிய புள்ளிகளின் அடிப்படையிலும் நாடளாவிய திறமையின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டனர். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வருடத்தில் 2000 பேர் பல்கலைக்கழகத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்பது தீர்மானிக்கப்படின் சம்மந்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்தோரில் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற முதல் 2000 பேரும் ஒழுங்கு வரிசை முறையின் படி தெரிவு செய்யப்பட்டனர்.
1970ஆம் அண்டு திறமையடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதிக் கொள்கை ஒழிக்கப்பட்டது. அதன் பின்னர் அனுமதிக் கொள்கை அடிக்கடி மாற்றத் திற்குட்பட்டது. 1970/71ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் தெரிவின்போது பொறியியற் பீடத்திற்குப் பெரும்பான்மையின மாணவர்களை விடத் தமிழ் மாணவர்களின் அனுமதி கூடுதலாக இடம் பெற்றமையை எதிர்த்து நாடளாவிய வகையில் மேற்கொள்ளப்பட்ட கோசங்களுக்குச் செவிமடுத்த அப்போதைய அரசாங்கம் பலவகையான தரப்படுத்தல் முறையினை அறிமுகம் செய்தது. முதலில் மொழிவாரியாகவும், பின்னர் பாடவாரியாகவும் மாணவர்கள் தரப்படுத்தப்பட்டுப் பல கலைக்கழக அனுமதி வழங்கப்பட்டது. இக்கொள்கை பல்கலைக்கழக அனுமதியில் இனரீதியான ஏற்றத்தாழ்வினை ஊக்குவித்தது.
1970ஆம் தொடராண்டுகளின் இறுதிப்பகுதியில் பல்கலைக்கழக கட்டமைவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் உடன்பாட்டுடன் இவ்வாணைக்குழு காலத்திற்குக் காலம் பின்பற்றும் அனுமதிக் கொள்கைகளின் அடிப்படையிலேயே பல்கலைக்கழக அனுமதி இடம்பெறுகின்றது. இவ்வாணைக்குழு மாணவர்கள் பரீட்சையில் காட்டும் திறமை, மாவட்டக் குடிசனம், பிரதேச ரீதியாக கல்வியில் பின்தங்கிய நிலை போன்றவற்றைப் பல்கலைக்கழக அனுமதிக்கான நிபந்தனைகளாக அறிமுகம் செய்தது.
90

மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் பல்கலைக்கழக அனுமதிக் கொள்கை கடந்த பத்துவருடங்களில் பல மாற்றங்களுக்குட்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஆரம்ப காலத்தில் திறமையடிப்படையில் 30 சதவீதத்தினரும், மாவட்டக் குடிசனத்தொகையின் அடிப்படையில் 55 சதவீதத்தினரும் பின்தங்கிய மாவட்டங்கள் எனப்பிரகடனப்படுத்தப்பட்ட நுவரெலியா, அம்பாந்தோட்டை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை,அம்பாறை, அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை ஆகிய பன்னிரண்டு மாவட்டங்களில் இருந்து மேலும் 15 சதவீதத்தினரும் தெரிவு செய்யப்பட்டார்கள். பின்னர் பின்தங்கிய மாவட்டங்களுக்கான கோட்டா 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு மாவட்ட சனத்தொகையின் அடிப்படையிலான தெரிவு 65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டில் மாவட்ட சனத்தொகையை அடிப்படையாகக் கொண்ட அனுமதி 10சதவீதத்தால் குறைக்கப்பட்டு திறமையினடிப்படையில் 40வீதத்தினரும் மாவட்டச் சனத்தொகையின் விகிதாசாரத்திற்கேற்ப 55சதவீதத்தினரும் பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து 5சதவீதத்தினரும் பல்வேறு பல்கலைக் கழகங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் 1992/93 கல்வியாண்டிலிருந்து கலைப்பிடத்திற்கான மாணவர் அனுமதி நாடளாவிய ரீதியில் திறமையின் அடிப்படையிலேயே இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிபந்தனைகளைக் கொண்ட தெரிவுகள் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்ற பரீட்சாத்திகள் சகலரும் பெற்றுக் கொண்ட மொத்தப் புள்ளியை அடிப்படையாகக் கொண்டு இடம் பெறுகின்றது.
தற்போது நடைமுறையிலிருக்கும் பல்கலைக்கழக அனுமதிக் கொள்கையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியற் காரணங்களுக்காக இக்கொள்கை இதுவரை மாற்றப்படாமல் இருந்து வருகின்றது. இப்பல்கலைக்கழக அனுமதிக் கொள்கை முஸ்லிம்களின் உயர் கல்வியில் பல சாதக, பாதக விளைவுகளை ஏற்படுத்திவருகின்றது. அவை மிக நுணுக்கமாக நோக்கப்பட வேண்டியவை.
0. முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி
இலங்கையில் பல்கலைக்கழகக் கல்விமுறை ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் உயர் கல்வியில் முஸ்லிம்களின் பங்குபற்றுதல் குறைவாகக் காணப்பட்டாலும், 1970ஆம் ஆண்டின் பின்னர் படிப்படியாக அதிகரித்து வந்திருப்பதைக் காணலாம் (அட்டவணை 5).
91

Page 53
அட்டவணை 5 பல்கலைக்கழக அனுமதியும் குடிசன விகிதாசாரமும் 1946 -1995.
த்த சனத்
விதாசாரம் % % 1946 5.6 2.8 1947 2.9 1948 2.5 1953 17
1954 17 1963 1.2 1964 2. 1965 2.0 1965 3.4
1970 3.1
1971 w 2. 1972 2.2 1975 3.6 1976 3.2 1977 3.3 1978 3.8 1979/80 4.7 1980/81 3.9 1982/83 4.0 1983/84 5.4 1984/85 6.0 1985/86 6.8 1987/88 8.9 1988/89 7.3 1989/90 7. 1990/91 6.6 1991/92 5.8 1992/93 7.6 1993/94 6.8 1994/95 6.8 1995/96 6.1 1996/97 4.3 1997/98 6.3 1998/99 5.6 மூலம்:குடிசனக்கணிப்பீடு பல்வேறு வருடங்கள், பல்கலைக்கழகமானிய ஆணைக்குழுவின் ஆண்டறிக்கைகள் பல்வேறு வருடங்கள்.
92
 

ஆரம்பத் தில் ஆங்கிலக் கல் வி (போதனை மொழி) நடைமுறையிலிருந்த காலத்தில் உயர்தரக் கல்விக்கான வாய்ப்புகள் நகர்ப்புறங்களிலேயே காணப்பட்டமையினாலும், நகர்ப்புற முஸ்லிம்கள் மத்தியில் உயர் கல்விக்கான ஆர்வம் குறைவாகக் காணப்பட்டமையாலும் முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி வரையறுக்கப்பட்டிருந்தது. 1963இல் முஸ்லிம்களின் சனத்தொகை 1946இல் இருந்ததை விட 6.6 சதவீதம் வரை அதிகரித்திருந்தாலும் முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதியில்மாற்றம் ஏற்படவில்லை. 1946இல் 2.8வீதமாக இருந்த முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி 1963இல் 1.2 சதவீதமாக குறைந்தது.
இலவசக் கல்விமுறை, அதன் விளைவாகக் கிராமப்புறப் பாடசாலைகளின் வளர்ச்சி, சுதேச மொழிகளிலும் பல்கலைக்கழகக் கல்வி போன்ற காரணிகளினால் 1965ஆம் ஆண்டின் பின்னர் முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. 1970இன் முற்பகுதியில் மொழிரீதியான தரப்படுத்தலின் விளைவாக அவ்வனுமதி பாதிக்கப்பட்டாலும் மாவட்ட சனத்தொகையை அடிப்படையாகக் கொண்ட அனுமதிக் கொள்கை நடைமுறைக்கு வந்ததன் பின்னர் அதிகரித்து வந்துள்ளது. 1991/92 இல் இருந்து கலைப்பீட அனுமதி 100சதவீத திறமை அடிப்படையில் இடம் பெற்று முஸ்லிம்களின் தொகை வீழ்ச்சியுற்றமையால் மீண்டும் முஸ்லிம்களின் பல கலைக் கழக அனுமதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை அண்மைக்காலப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
முஸ்லிம்களின் இன விகிதாசாரத்தோடு ஒப்பிடும்போது 1987/88 கல்வியாண்டில் முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி 8.9 சதவீதம் வரை அதிகரித்து அவர்களின் இன விகிதாசாரத்தை விடக் கூடுதலாக இருந்தது. ஆனால் 1946-1992 வரையுள்ள வருடங்களில் 1988/89 வருடத்தைத் தவிர்ந்த சகல வருடங்களிலும் முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி அவர்களின் இன விகிதாசாரத்தை விடக் குறைவாகவே இருந்து வந்துள்ளது.
6.3 துறைவாரியான பல்கலைக்கழக அனுமதி:
பல்கலைக்கழக உயர் கல்வியில் முஸ்லிம்கள் படிப்படியான வளர்ச்சிக்கட்டங்களை அடைந்து வந்திருப்பினும் கற்கை நெறி அல்லது கல்வித்துறை ரீதியான பல தனித்துவமான பண்புகளைக் கொண்டு காணப்படுகின்றனர். அண்மைக்காலப் புள்ளிவிபரங்களின் படி கற்கை
93

Page 54
நெறிகளை அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதியில் மேலெழுந்தவாரியான பல வேறுபாடுகளை அவதானிக்க முடிகின்றது. கல்வி, வர்த்தகம், முகாமைத்துவம், சட்டம் என்ற சமூக விஞ்ஞானத் துறை சார்ந்த கற்கை நெறிகளில் முஸ்லிம்களின் அனுமதி மிகக் கூடுதலாகக் காணப்படுகின்றது. இதனை அட்டவணை 6 காட்டுகின்றன.
1976ஆம் ஆண்டிலிருந்து 1992 வரையிலான பல்கலைக்கழக அனுமதியில் கவனம் செலுத்தினால் 1982ஆம் ஆண்டின் பின்னர் சட்டத்துறைக்கான அனுமதியும் 1984ஆம் ஆண்டிற்குப்பின்னர் சகல துறைகளுக்கான அனுமதியும் அவர்களின் இன விகிதாசாரத்தை விடக் கணிசமான அளவு அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதே போன்று வர்த்தகம், முகாமைத்துவம் சார்ந்த கற்கை நெறிகளிலும் 1980களின் இறுதிப்பகுதியிலிருந்து முஸ்லிம் மாணவர்களின் நுழைவு கணிசமான அளவு அதிகரித்துள்ளதை அவதானிக்கலாம்.
ஒருகண்ணோட்டத்தில் ஏற்கனவே அவதானிக்கப்பட்டதைப் போன் று க.பொ.த. உயர் தர வகுப் புக் களில் கலை, வர்த்தகத்துறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை கூடுதலாகக் காணப்படுவதும் இக்கற்கை நெறிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் (பாடாலை, ஆசிரியர்கள்) நகர்ப்புறங்களில் மட்டுமன்றி கிராமப் புறங்களிலும் கிடைக்கக் கூடியதாக இருப்பதும், ஏனைய சமூக மாணவர்களின் போட்டி இத்துறைகளில் குறைவாகக் காணப்படுதலும் மேறி கூறிய துறைகளில முஸ் லிமி களின் எணி னிக் கை அதிகரித்திருப்பதற்குக் காரணங்களாக உள்ளன.
விஞ்ஞானத்துறை சார்ந்த பல கற்கை நெறிகளிலும் முஸ்லிம்களின் அனுமதி விகிதாசாரம் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. இன ரீதியான ஒப்பீட்டின்படி தமிழ் முஸ்லிம் இனத்தவர்களைவிடவும் பெரும்பான்மை இனத்தவரின் இத்துறை சார்ந்த அனுமதி அவர்களின் இன விகிதாசாரத்தைவிடக் கூடுதலாகக் காணப்படுகின்றது (அட்டவணை 7). 1960, 1970களைவிட 1980களின் இறுதி அரைப்பகுதியிலிருந்து விஞ்ஞானத் துறைசார்ந்த பல்வேறு கற்கை நெறிகளுக்கும் முஸ்லிம்களின் அனுமதி அதிகரித்திருப்பினும் அவர்களின் இன விகிதாசாரத்தை ஒருபோதும் நெருங்கவில்லை. முஸ்லிம் சமுதாயத்தவர்கள் வாழும் நகர்ப் புறங்களிலோ,
94

*ųwoowosoluçovo apoyiyorg/~7%(v/@rvpợrt of)%)ęuwayffomyuwun «foșnwayoņørī: qanwdo
LLLLLLLL L0LLL K0K KKKLLLLLSLLKK H0 LL SL00 0S0L LLLLL L LLLLLYLLLLLL 0 LLL 000rLL LT0L
HLLLLLLL 0 LL 00L0LL LLLLLLL L SLLLLLL L LLLLYLL LL LLL LLLLYLLLLLL 0 LLYY0T LSLSLL LL L 9'$ | --|’6// | Zog寸9988"$ | O’G8"|0'8£"|9"t?96/G66|| !'|| || --!”6G”6!”66°/ | /`Z679188:ZG”90^0}ZozG6/t/66į 3,9L] 119o6 | 0'6 || 9799’01 || 0'90′Z || ZTZ6"Z0'89’t»9°Cv6/€66|| 8o/ | | 'Z i ty"Z|| || ty’9 | € /Zo9 | 8°98′Z || 6'GG“Z8"GZ"G8’9£6/Z66|| -- - -6°9į’69°/Zo9 | 0"ty9'8 | 1'96"98 ̊ሪZot?9°9Z6/1661 Ɛ"Z || 0'Z || Zo0} | / "Zį. Į tvo/6′Z || Z'6Ɛotz | Zo68"Zt7"ty8°9G”816/066|| -- | GoŻ | L'O! | 0'$| | /`o66°9 || |'''79'8 || 0'86°9OotyG“Z8o06/686|| 9 6|| 11 || OZ) || 8,8 || Org-- [ G’9/'8 || 9°/Ɛ°00'96°9!otz68/886|| t'$ | 9'Z | L'G| || 979 || $'9---- | †”Ggot? I Zot?ZoG6°9Ɛ"G9"888/1861 į’9 || 9°Z || 6'01 || Go04 || 9°G---- | 0°G9°9ļot?9"|6"|G“Z8"GZ8/986|| -- | €'8!’80'9--- | €"#79°ț7 | 6'9"ty"ZZ었9"|Goo98/t786|| 9°Z || ty"9 | 0°01 || Zog-- | 9'989 y:98°9Ɛoz/';0's,tv3/£861 ----0't7 | €”/ | 8′Z-- I GogZoo || 0′Z0ኸንsy';0'9O‘Z£8/Z86|| t'Z | Goo | Go6 | Zot?11 || Z, >ዜኸን0'8Ɛsɛ6"$!”69'8Z8/1864 -- | $'t;ᎭᏤ 1 1Ꮛ*i7-- | | '$ZO || 8,86"|----8"|9'Z | | 18/086ų G“Z || Zo9 | Zo9 | 8°tz-- į įogዜ‛tyƐ"Z0’t?•------ | Coz08/6/64 -- | Zog | 9 g | t’0---- | 6'0sy'$ | O‘ZZozƐsɛ8°9Goo61/8/61 Ɛ’9 || 6'9"0’Z || #7°ty-- | 0'8t7ኽl6"|9°Z---------Zoo8/ / /./61 Zo9 | 1'9 | € / | Z’Z-- | Zoot7ዄ6"|!"£•-0ኸን65Tz// * 9.161 t’9 | 6'9 | 1'1 || 8‘o---- | €’otoz | 0'86°Z----OTZZī£9. §. 15. N | W.TXITIH{)}}[CHCIDsosW
Z661 - Sz6I Ġơif@iĝo ofi:espasosoɛɛɖɛrı ış»grooqi şeasefi) olinš), go ɛ sɑşann滑滑电 9 kouere--Ziké?
9S

Page 55
கிராமப்புறங்களிலோ தரமான பாடசாலைகள் கிடைக்கப்பெறாமை, ஆய்வுகூட வசதிகளின் பற்றாக்குறை, தமது சமூகத்திலிருந்து திறமையான ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்ள முடியாமை, ஏனைய இனத்தவர்களின் ஈடுபாட்டினால் ஏற்படும் கடும் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமை போன்ற பொதுவான விடயங்களும் ஒப்பீட்டு ரீதியாக முஸ்லிம்களின் கல்வித்தரத்தில் காணப்படும் பண்புசார் குறைபாடுகள், ஆர்வமின்மை, குறைந்த பரீட் சைப் பெறுபேறுகள் போன்ற முஸ்லிம்களுக்கேயுரிய தனித்துவமான விடயங்களும் இத்துறை சார்ந்த பின்னடைவுக்குக் காரணங்களாக அமைகின்றன.
அட்டவணை 7 பல்கலைக்கழக அனுமதிக் கொள்கையும், இன ரீதியான பல்கலைக்கழக அனுமதியும், 1989-90, 1990-91, 1991-92 கல்வி வருடங்களில்.
1989/90 1990/91 1991/92
இனவகுப்பு A B & C A D - C A B & C
சிங்களவர்கள் 1,307 3,534 2,789 2,654 2,887 2,938 67.72 78.94 73.14 80.2 74.25 78.01
தமிழர்கள் 524 589 766 428 818 557 27.23 13.16 20.0 12.93 21.04 14.79
முஸ்லிம்கள் 86 344 249 215 172 265 4.48 7.68 6.53 6.50 4.43 7.04
ஏனையோர் 11 10 09 12 11 06 0.57 0.22 0.23 0.36 0.28 0.16
மொத்தம் '' ನ್ನು 1924 4,477 3,813 3,309 3,888 3,766 100.00 100.00 100.00 100.00 100.00 100.00
A - 40% திறமைக் கோட்டாB - 55% மாவட்டக் கோட்டா C - 05% பின்தங்கிய மாவட்டக் கோட்டா மூலம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு பல்வேறு வருடங்களில்
96

6.4 பிரதேச ரீதியான வேறுபாடுகள்:
இலங்கையில் அம்பாறை, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, கண்டி, புத்தளம் போன்ற மாவட்டங்களில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்தாலும் முழுமையாக நோக்கின் அவர்கள் நாடு முழுவதும் பரந்து வாழ்கின்றனர். முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி ஓரளவிற்கு அம்மக்களின் குடிசனப் பரம்பலைப் பிரதிபலிப்பதாகக் காணப்பட்டாலும் சில தனித்துவப் போக்குகளையும், பண்புகளையும் கொண்டுள்ளது. :
1991ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்ட மொத்த முஸ்லிம் மாணவர்களில் ஏறக்குறைய 75% மானவர்கள் அம்பாறை (31%), கண்டி(10%), கேகாலை (9%), கொழும்பு (7%), திருகோணமலை (5%), மட்டக்களப்பு (5%), மாத்தளை (5%), ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். இதில் குடித்தொகை ரீதியாக மிகக் கூடுதலான முஸ்லிம்களைக் கொண்ட கொழும்பு மாவட்டம் நான்காவது நிலையிலும், அதுபோன்று குடித்தொகை ரீதியாக இறுதி நிலையில் உள்ள கேகாலை மாவட்டம் மூன்றாவது நிலையிலும் இடம் பெறுவதிலிருந்து முஸ்லிம் மாணவர்களின் பிரதேச ரீதியான அனுமதி வேறுபாட்டை அவதானிக்க முடிகின்றது.
மாவட்ட ரீதியான முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி வேறுபாட்டில் இன்று நடைமுறையிலிருக்கும் பல்கலைக்கழக அனுமதிக் கொள்கையும், முஸ்லிம் பாடசாலைகளில் காணப்படும் உயர்தரக் கல்விக்கான வசதிகளும், கல்வி மொழியும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இத்தகைய அம்சங்களைச் சற்று ஆழமாக நோக்குதல் அவசியமாகும்.
7. பல்கலைக்கழக அனுமதிக் கொள்கையும் முஸ்லிம்களின் பல்கலைக்கழக
அனுமதியும்
திறமை, மாவட்டக் குடிசனம், பின்தங்கிய மாவட்டம் ஆகிய மூன்று அம்சங்களும் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான அனுமதிக் கொள்கையில் பயன்படுத்தப்படுகின்றன என ஏற்கனவே பார்த்தோம். இம்மூன்று அம்சங்களும் முஸ்லிம்களின் உயர் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைத் தெளிவாக நோக்க வேண்டும்.
7.1 பின்தங்கிய மாவட்ட அனுமதியில் முஸ்லிம்கள்
பல்கலைக்கழங்களுக்கான மொத்த அனுமதியில் 5 % மான
97

Page 56
இடம் பின்தங்கிய மாவட்டங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்ட மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, அம்பாறை, திருகோணமலை, மொனராகலை, பதுளை, நுவரெலியா, அநுராதபுரம், பொலனறுவை, அம்பாந்தோட்டை ஆகிய பன்னிரணி டு மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்படுகின்றது.
இலங்கையிலுள்ள மொத்த முஸ்லிம் சனத்தொகையில் 35 வீதமானவர்கள் இப்பன்னிரண்டு மாவட்டங்களிலும் வாழ்கின்றனர். இம்மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களின் கல்வி அம்மாவட்டங்களைப் போன்று பின்தங்கியதாகக் காணப்படுகின்றது. ஆகவே பின்தங்கிய மாவட்டங்களுக்குக் கொடுக்கப்படும் சலுகை பொருத்தமான முறையில் முஸ்லிம்களுக்கும் கிடைக்கக் கூடியதாக இருப்பது முக்கியமானதாகும். உண்மையில் முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதியில் பின்தங்கிய மாவட்ட சலுகை முஸ்லிம்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகின்றது. இதில் குறிப்பாக முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களின் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரை அனுப்பும் அம்பாறை மாவட்டம் இந்த மாவட்டச் சலுகை அனுமதி அடிப்படையில் நன்மை பெறும் மாவட்டங்களில் முக்கியமானதொன்றாகும். அதே போன்று பின்தங்கிய மாவட்டச் சலுகை முறையில்லாவிட்டால் மன்னார், திருகோணமலை, மட்டக் களப்பு மாவட்ட முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி வெகுவாகக் குறையும்.
பின்தங்கிய மாவட்டச் சலுகை முறையில் பல குறைபாடுகள் கூறப்படுகின்றன. இம்முறையின் மூலம் சனத்தொகை கூடிய கல்வி வளர்ச்சியுடைய பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. எனினும் குறுங் காலத் தல இந்தச் சலுகை முறையரிலி மாறி றம் கொண்டுவரப்பட்டால் பின்தங்கிய மாவட்ட முஸ்லிம்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்படும். ஆகவே பின்தங்கிய மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களும் ஏனைய இனத்தவர்களும் கல்வி ரீதியான வளங்களையும், வசதிகளையும் பெறும் வரை இவ்வனுமதிமுறை தொடர்ந்தும் நடைமுறைப் படுத்தப்படுதல் அவசியமானதாகும்.
எவ்வாறாயினும் நீண்டகால நோக்கில் பார்க்கும்போது முஸ்லிம்களின் உயர் கல்வி இவ்வகையான சலுகைகளில் தங்கியிருக்க முடியாது. முஸ்லிம்களின் சுயமான கல்வி வளர்ச்சிக்கு சகல மாவட்டங்களிலும் சல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட
98

அட்டவணை 8
திறமையடிப்படையிலும், பின் தங்கிய + மாவட்ட கோட்டா அடிப்படையிலும் வேறுபட்ட கற்கைநெறிகளுக்கு அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 1991-1992.
திறமையடிப்படையிலான பின்தங்கிய+மாவட்ட
அனுமதி அடிப்படையிலான அனுமதி
கற்கைநெறி சிங்களம் தமிழ் மொத்தம் சிங்களம் தமிழ் மொத்தம் மருத்துவம் 04 02 06 O3 40 43
பல்வைத்தியம் suae 04 04
மிருக வைத்தியம் O2 u man 02
விவசாயம் 01 O O1 09 10
உயிரியல் விஞ்ஞானம் 04 06 0 O2 40 42
பொறியியல் - 1 02 02 04 02 13 15
பொறியியல் - 2 01 01 Ot 05 O6
பெளதீக விஞ்ஞானம் 07 09 16 O4 29 33
முகாமைத்துவம் 03 10 13 14 28 42
வர்த்தகம் 03 09 12 O5 44 49
சட்டம் Of O1 05 7 22
566) 10 120 130 42 42
கட்டிடக்கலை O 01 «Maman
நில அளவையியல் M− a O2 02
மொத்தம் 37 158 195 39 273 312
மூலம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 1992/93

Page 57
அட்டவணை 9
திறமை அடிப்படையில் முஸ்லிம் மாணவர்களின்
பல்கலைக்கழக அனுமதி, 1993/1994.
கற்கைநெறி A B C D
மருத்துவம் 342 287 135 சிங்களம்
கொழும்பு களுத்துறை பொறியியல் 1 37 323 58 தமிழ் காலி அம்பாறை
முகாமைத்துவம் 336 310 40 தமிழ்
கொழும்பு மாத்தளை
வர்த்தகம் 285 284 7 தமிழ்
யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம்
56)6 326 310 ti தமிழ்
களுத்துறை குருநாகல்
A - திறமை அடிப்படையில் முதல் மாணவன் பெற்ற புள்ளிகளும் அவனது மாவட்டமும்
B-திறமை அடிப்படையில் முதல் முஸ்லிம் மாணவன் பெற்ற புள்ளிகளும் அவனது மாவட்டமும்,
C - முதல் முஸ்லிம் மாணவனின் தேசிய தர வரிசை.
D - முதல் முஸ்லிம் மாணவனின் மொழி மூலம்.
மூலம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு
100

வேண்டும். பாடசாலைகளின் தரத்தை உயர்த்துதல், ஆய்வுகூடங்களை நிறுவுதல், ஆசிரிய வளத்தினை அதிகரித்தல், ஆசிரியர் மத்தியில் சேவை மனப்பான்மையை ஊக்குவித்தல், பெற்றார் மாணவர் மத்தியில் கல்வி ஆர்வத்தை ஏற்படுத்தல் போன்ற குறிப்பிடத்தக்க வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்.
7.2. மாவட்ட சனத்தொகை ரீதியான அனுமதியும் முஸ்லிம்களும்:
மொத்தப் பல்கலைக்கழக அனுமதியில் 55சதவீதமானவை மாவட்ட சனத்தொகை அடிப்படையில் வழங்கப்படுகின்றன. சனத்தொகைச் செறிவுமிக்க மாவட்டங்கள் இதில் நன்மையடைகின்றன. இலங்கையில் கொழும்பு, கம்பகா, குருநாகல், கண்டி போன்ற சனச் செறிவு மிக்க மாவட்டங்களில் இருந்து மாவட்ட சனத்தொகைப் பங்கீட்டின் மூலம் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகின்றனர்.
பல்கலைக்கழகத்திற்கு அனும்தி பெறும் முஸ்லிம் மாணவர்களில் பிறிதொரு பகுதியினர் இம் மாவட்டப் பங்கீட்டு முறையால் நன்மையடைகின்றனர். பொதுவாகப் பார்க்கும்போது முஸ்லிம் மாணவர்களில் அதிகமானவர்கள் மாவட்டப் பங்கீட்டு முறையின் மூலமே அனுமதி பெறுகின்றனர் என்பதை அட்டவணை 8 காட்டுகின்றது. சில மாவட்டங்களில் சகல பாடத்துறைகளுக்கும் முஸ்லிம்கள் தமது இன விகிதாசாரத்தை விட மற்ற இனத்தவர்களிலும் பார்க்க இம்முறையின் மூலம் அனுமதி பெறுகின்றனர். உதாரணமாக 1991/92 கல்வியாண்டில் கேகாலை மாவட்டத்திலிருந்து மருத்துவத்துறைக்கு மொத்தமாக 23 பேர் அனுமதி பெற்றபோது அதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 ஆகும். (அட்டவணை 9). அம்மாவட்டச் சனத்தொகையில் முஸ்லிம்கள் 5% ஆயினும் அவர்களின் மருத்துவத்துறைக்கான அனுமதி 21% ஆகும். ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் ஏனைய இன, மொழி மாணவர்களோடு திறமையடிப்படையில் போட்டிபோடக் கூடிய வாய்ப்பும் வசதியுமற்றுக் காணப்படுவதனால் மாவட்டப் பங்கீட்டு முறையின் முழுமையான பயனை இவர்களால் அனுபவிக்க முடிவதில்லை. இதற்குச் சிறந்த உதாரணங்களாக புத்தளம், கொழும்பு, அநுராதபுரம் போன்ற மாவட்டங்களைக் குறிப்பிடலாம்.
1990/91 பல்கலைக்கழக அனுமதிப் புள்ளிவிபரங்களின் படி விஞ்ஞானத்துறை சார்ந்த பல்வேறு கற்கை நெறிகளுக்கும் அனுமதி பெற்ற முஸ்லிம் மாணவர்களில் 90% வீதத்தினர் மாவட்டப் பங்கீட்டு முறையின் மூலம் தெரிவு செய்யப்பட்டனர் என்பது நோக்கத்தக்கதாகும்.
101

Page 58
7.3 திறமை அடிப்படையும் முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதியும்:
பல்கலைக்கழக அனுமதிக் கொள்கையின் படி மொத்த பல்கலைக்கழக அனுமதியில் 40% த்தினர் நாடளாவிய ரீதியில் திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்றனர். பாடசாலைக் கல்வியில் அதிக வசதிகளையும் வாய்ப்புக்களையும் கொண்ட பிரதேசங்களும் சமூகப்பகுதிகளும் இவ்வனுமதி முறையின் மூலம் அதிக பயனைப் பெறுகின்றன. ஆனால் திறமையடிப்படையிலான முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி மிகப்பலவீனமானதாகவே உள்ளது. முஸ்லிம் மாணவர்களின் கல்வித்தரத்தை ஒப்பீட்டு ரீதியாக அளவிடக் கூடிய குறிகாட்டியாக இவ்வனுமதி முறை அமைகின்றது.
அண்மைக்காலப் புள்ளிவிபரங்களின்படி பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற மொத்த முஸ்லிம் மாணவர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 1989/90, 1990/ 91, 1991/92 கல்வியாண்டுகளில் முறையே 20%, 53.66%, 39.36% தினர் திறமையடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு நுழைந்துள்ளனர் என்பதை உயர் கல்வி பற்றிய புள்ளிவிபரங்கள் உணர்த்துகின்றன. 1990/91 கல்வியாண்டில் கலை, வர்த்தகத் துறைகளுக்கு திறமையடிப்படையிலான அனுமதியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டதனாலேயே முஸ்லிம்களின் திறமையடிப்படையிலான அனுமதி அதிகரித்துள்ளது. அதற்கு முன்னரும், பின்னரும் குறைவாகவே காணப்படுகின்றது. விஞ்ஞானத்துறை சார்ந்த கற்கை நெறிகளில் சிங்கள மொழியிலும், தமிழ் மொழியிலும் பயின்றோர் சமமான திறமையினைக் காட்டியுள்ளனர் (அட்டவணை 10). விஞ்ஞானக் கல்விக்கு சிறந்த சிங்கள, தமிழ் மொழிப்பாடசாலைகள் அமைந்திருக்கும் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் சிங்கள மொழியில் பயில்வதன் மூலம் சிறந்த பெறுபேறுகளையும் பெற முடிகின்றது. ஆனால் மற்றய துறைகளில் தமிழ் மொழி மூலம் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். எவ்வாறாயினும் மொத்த முஸ்லிம் மாணவர்களில் அரைவாசியைவிடக் கூடுதலாக சிங்கள மொழியில் தமது உயர்தரக் கல்வியைப் பயிலும் கொழும்பு, காலி போன்ற மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்களின் பெறுபேறு அவர்களின் விகிதாசாரத்திற்கேற்ப அமைவதில்லை. கல்வியில் ஆர்வமற்ற தன்மை, சிங்கள மொழி வளமின்மை, க.பொ.த. சாதாரண பரீட்சையில் திறமையாகச் சித்தியெய்தத் தவறுதல், இப்பரீட்சைகளுக்குப் பின் கல்வியைத் தொடராமை போன்ற விடயங்கள் இதற்குக் காரணங்களாக இருக்கலாம்.
102

அட்டவணை 10 பல்கலைக்கழக அனுமதிக் கொள்கையும் மருத்துவ பீடத்திற்கான முஸ்லிம் மாணவர்களின் அனுமதியும் 1991/1992.
மாவட்டம் A B C D E F கொழும்பு 272 209 298 02 02 சமமானது கம்பஹா 253 56 52 02 01 -1 களுத்துறை 258 29 29 03 03 I சமமானது மாத்தளை 254 10 13 I ---س------- || سس---- || سس---- கண்டி 264 50 59 5 5 சமமானது நுவரெலியா 195 17 1 || - || ------ காலி 262 41 68 1 1 சமமானது
மாத்தறை 269 51 60 -- I -- ------ அம்பாந்தோட்டை 250 拍 15 1 -- 1 -- | --ܚܘ--ܚ யாழ்ப்பாணம் 267 79 t22 1 1 I சமமானது
கிளிநொச்சி 211 3 SSLLSS S S S SSSLS S L S LLLLS S S S LSSLLSLSLLSLSSSLLLSLLLLCSLLLS மன்னார் 193 6 1 3 -- -3
முல்லைத்தீவு 213 5 2 || - || - || ------ வவுனியா 196 4. 1 -- -1 திருகோணமலை 234 12 3 || 2 | 1- ----سه மட்டக்களப்பு 262 14 15 2 2 || &FLOLOT 60T gil அம்பாறை 252 24 9 | 19 6 -13 புத்தளம் 243 21 9 1 | &FLOLOT 60T gol குருணாகல் 254 52 48 || - || - || ------ அநுராதபுரம் 218 28 3 || - || - || ----- பொலனறுவை 212 13 2 || - | == ! --m- பதுளை 231 30 9 ! ---س H -س- س- || ------------- மொனராகரை 204 13 1 || - || - || ------ கேகாலை 247 23 13 5 2 -3 இரத்தினபுரி 240 26 16 1 சமமானது மொத்தம் 835 848. 49 25 -24س
A வெட்டுப்புள்ளி, B குறிப்பிட்ட ஆண்டின் அனுமதி,C 100% திறமை அனுமதிமுறையாயின் குறிப்பிட்ட ஆண்டின் அனுமதி, D குறிப்பிட்ட ஆண்டின் முஸ்லிம்களின் அனுமதி E 100% திறமை அனுமதி முறையாயின் குறிப்பிட்ட ஆண்டின் முஸ்லிம்களின் அனுமதி,Fஇருமுறைகளுக்குமிடையிலான வேறுபாடு மூலம் : பல்கலைக்கழக அனுமதி பற்றிய பல்கலைக்கழக ஆணைக்குழுவின் அடிப்படைத் தகவல்களில் இருந்து கணிக்கப்பட்டது.
103

Page 59
நாடளாவிய திறமையின் அடிப்படையில் முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதியில் ஒப்பீட்டு ரீதியான சில தன்மைகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. கலை, வர்த்தகம் சார்ந்த கற்கை நெறிகளில் தமிழ் மூலம் கற்கும் மாணவர்கள் நாடளாவிய தர வரிசையில் முதலாவது இடத்தினைப் பெற்ற மாணவர்களைவிட அதிகம் பின்தங்கியிருக்கவில்லை என்பதையும், விஞ்ஞானத்துறை சார்ந்த கற்கை நெறிகளில் அதிக இடைவெளி காணப்படுவதையும் காட்டுகின்றது. விஞ்ஞானத்துறை சார்ந்த அனுமதிகளில் அதிகமான வருடங்களில் சிங்கள மொழிமூலம் கற்கும் முஸ்லிம் மாணவர்களே முன்னணியில் இருந்துள்ளனர். இது முஸ்லிம் பாடசாலைகளில் விஞ்ஞானக் கல்வியின் தரத்தினை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.
இவ்வாறு முஸ்லிம்களின் உயர்தரக் கல்வி அடைவுகளில் பின்தங்கிய நிலை காணப்படும் போது திறமையை அடிப்படையாகக் கொண்ட பல்கலைக்கழக அனுமதி வீதாசாரம் மேலும் அதிகரிக்கப்படின் முஸ்லிம்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவர். உதாரணமாக 1992/93 ஆம் கல்வியாண்டிலிருந்து மாவட்டப் பங்கீடு 10% த்தால் குறைக்கப்பட்டு திறமைப் பங்கீடு 40% வரை அதிகரிக்கப்பட்டதன் பின்னர் முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி 4.9% வரை குறைந்திருக்கின்றது. சிங்கள மொழிமூல மாணவர்களின் கல்வித்தரம் அதிகரித்தமையால் பல்கலைக்கழக அனுமதிக்கான திரட்டுப்புள்ளியும் வருடாவருடம் அதிகரித்து வருகின்றது. ஆனால் அதற்கேற்ப பண்பு ரீதியாக முஸ்லிம்களின் கல்வித் தரமும், பரீட் சைப் பெறுபேறுகளும் அதிகரிக்காமையால் முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி மென்மேலும் பாதிக்கப்படலாம்.
பல்கலைக்கழக அனுமதிக் கொள்கை மாற்றப்பட வேண்டும், திறமைக்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும், பல்கலைக்கழக அனுமதி ஆரம்ப காலத்தில் இருந்தது போன்று முழுமையாகத் திறமையின் அடிப்படையிலேயே இடம்பெற வேண்டும் என்ற கருத்துக்கள் அண்மைக்காலமாக வலுப்பெற்று வருகின்றன. இச்சந்தர்ப்பத்தில் 100% திறமையடிப்படையிலான அனுமதி இடம்பெறின் முஸ்லிம்களின் நிலைமை மேலும் மோசமடையும்.
நாடளாவிய வகையில் 100% திறமையடிப்படையான அனுமதி இடம்பெறின் பல்கலைக்கழக அனுமதியில் பல முக்கியமான மாற்றங்கள் இடம்பெறும். முழுமையாகத் திறமையடிப்படையிலான அனுமதி அறிமுகம் செய்யப்படின் சனத்தொகை, தரமான பாடசாலை வசதி, கல்வித்தரம்,
104

நகர்ப்புறத் தன்மை போன்றவை கூடுதலாகக் காணப்படும் மாவட்டங்களில் பல்கலைக்கழக அனுமதி ஒன்றில் அதிகரிக்கின்றது அல்லது மாற்றமுறாது இருக்கின்றது. ஆனால் சிங்கள மொழிக் கல்வித் தரத்தைவிட முஸ்லிம் பாடசாலைகளின் கல்வித்தரம் குறைவாகக் காணப்படுவதாலும், முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி அதிகளவு மாவட்டப் பங்கீட்டு முறைகளில் தங்கியிருப்பதனாலும் 100% திறமை முறை அறிமுகம் செய்யப்பட்டால் மருத்துவ பீடத்துக்கான முஸ்லிம்களின் பல்கலைக்கழக அனுமதி 49 லிருந்து 25 வரை
பயனர் பாட்டில் அத கமான முஸ லிமி மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கும் அம்பாறை, மன்னார், திருகோணமலை, கேகாலை போன்ற மாவட்டங்கள் அதிகமாகப் பாதிக்கப்படும். இந்த அனுமதி முறையின் மூலம் கலை, வர்த்தகம் போன்ற துறைகளுக்கான அனுமதியில் அதிக தாக்கம் ஏற்படாவிட்டாலும் விஞ்ஞானத் துறைக்கான அனுமதியில் மிகக் கூடிய பாதிப்பு ஏற்படும் என்பதனை மேற்கூறிய கணிப்பீடுகள் எடுத்துக் காட்டுகின்றன. (அட்டவணை 10)
8. முஸ்லிம்களின் உயர் கல்வி எதிர் நோக்கும் பிரச்சினைகள்.
1945ஆம் ஆண்டின் பின்னர் ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வி ஏற்படுத்தப்பட்டமை, சுயமொழியில் கல்விப் போதனை, பாடசாலை அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் போன்றவற்றினால் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டு அனைவருக்கும் சமசந்தர்ப்பம் வழங்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்தவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமது கல்வியை விருத்தி செய்து படிப்படியாகக் கல்வித்துறையில் முன்னேறி வந்துள்ளனர். இதன் தாக்கம் உயர் கல்வியிலும் இடம் பெற்றிருந்ததை ஏற்கனவே அவதானித்தோம். எனினும் ஒப்பீட்டு ரீதியாக முஸ்லிம்கள் மேற்கூறிய வாய்ப்புக்களைப் பயன்படுத்தி உயர் கல்வித்துறையில் இன்னும் போதிய வளர்ச்சியை அடைய முடியாதளவுக்கு பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். இலங்கை ஒரு வளர்முக நாடு என்ற வகையில் பொதுவாக இடம் பெறும் விடயங்கள், முஸ்லிம்களுக்கும் உரித்தான தனித்துவமான விடயங்கள் ஆகியவற்றினுாடாக அப்பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகின்றன. அவற்றை ஆழமாக நோக்குவதன் மூலம் உயர் கல்வித் துறையில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை
GDLuT6TT b 85sT600T6)Tub.
1OS

Page 60
8.1. உயர் கல்விக்கான வளப்பற்றாக்குறை:
இலங்கையில் உயர் கல்வி என்பது கடும் போட்டித்தன்மை கொண்டதாக இருப்பதனால் உயர் அடைவுகளைப் பெறுவதற்கு குறிப்பிடத்தக்க அளவு வளம் அவசியமாகின்றது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பாடசாலை மட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு வளங்களைப் பெற்றிருப்பினும் உயர் கல்விக்கான வளப்பற்றாக்குறையை எதிர் நோக்குகின்றனர். கல்லூரி மட்டம் சார்ந்த உயர்தரக் கல்விக்குப் பொருத்தமான தரம்மிக்க முஸ்லிம் பாடசாலைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். கலை,வர்த்தகம் போன்ற கற்கை நெறிகளில் அதிகளவு பிரச்சினை காணப்படாவிடினும் விஞ்ஞானத்துறை சார்ந்த கற்கை நெறிகளுக்கு ஏற்ற 1 ஏ பி தரமுள்ள பாடசாலைகள் ஏறக்குறைய 50 மட்டிலேயே காணப்படுகின்றன. இப்பாடசாலைகளுள் பெரும்பாலானவை கட்டட வசதியின்மை, ஆய்வுகூட வசதியின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. உயர்தர வகுப்புக்களில் போதிக்கப்படும் ஒவ்வொரு விஞ்ஞான பாடத்திற்கும் தனித்தனியான ஆய்வுகூடங்கள் இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் ஓரிரு முஸ்லிம் பாடசாலைகளைத் தவிர ஏனைய சகல 1 ஏ பி பாடசாலைகளிலும் ஒன்றில் க.பொ.த.சாதாரண தரத்தையுடைய ஆய்வுகூடங்களை அல்லது ‘விஞ்ஞான அறை” என அழைக்கப்படும் ஆய்வுகூடங்களையே கொண்டிருக்கின்றன. அதனால் பரிசோதனை முறையின் மூலம் அறிவைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இலங்கையில் முஸ்லிம் சனத்தொகை தனித்தனிக் கிராமங்களின் அடிப்படையில் சிதறிக் காணப்படுவதால் அதிக வசதிகளைக் கொண்ட தரமான பாடசாலைகள் அவ்வப் பிரதேசங்களில் உருவாக முடியாதுள்ளது. மேலும் உயர்தர வகுப்புக்களைக் கொண்டிருக்கும் பெரும்பாலான பாடசாலைகள் போதிய தளபாடங்கள், ஆய்வுகூட உபகரணங்கள், மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கவில்லை.
உயர் கல்வி முன்னேற்றத்திற்கு தரமான பட்டதாரி ஆசிரியர்களும் அவசியமாவர். உயர் கல்விக்கான நுழைவு கடும் போட்டி கொண்டதாக இருப்பதால், அப்போட்டியை எதிர்கொள்வதற்குச் சிறந்த தரமான கற்பித்தலும் அவசியமாகும். முஸ்லிம் பாடசாலைகளைப் பொறுத்தளவில் கலைப் பாடங்களைப் போதிப்பதற்கு நாடளாவிய வகையில் கலைப்பட்டதாரி ஆசிரியர்களின் கிடைப்புத் தன்மை சுலபமாக இருப்பினும், விஞ்ஞானத்துறைக் கல்விக்கு விஞ்ஞானப்பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறை ஒரு பெரும் பிரச்சினையாகவுள்ளது. வருடாவருடம்
106

பல்கலைக்கழக விஞ்ஞான பீடங்களுக்கு அதிகமான மாணவர்களை அனுப்பி விஞ்ஞானப் பட்டதாரிகளை உருவாக்கும் அம்பாறை மாவட்டப் பாடசாலைகளிலேயே விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் போது இலங்கையின் ஏனைய முஸ்லிம் பாடசாலைகளில் அப்பிரச்சினை மிக மோசமானதாக உணரப்படும் என்பது வெளிப்படை, பெரும்பாலான முஸ்லிம் பாடசாலைகள் அரச சம்பளம் பெறாத ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்குப் பாடசாலை அபிவிருத்திச் சங்க நிதியிலிருந்தோ, அல்லது வேறு மூலாதாரங்களிலிருந்தோ சம்பளம் வழங்கி விஞ்ஞானக் கல்வியைப் போதித்து வருகின்றன. மறுதலையாக சிங்கள மொழிப் பாடசாலைகளில் ஒரு விஞ்ஞானப் பாடத்தைப் போதிப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கின்றனர். இதற்குக் காரணம் தொழில் நாடி நிற்கும் சிங்கள மொழி விஞ்ஞானப் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுதலும், முஸ்லிம் தமிழ் விஞ்ஞானப் பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருத்தலுமேயாகும்.
பாடசாலைகளில் ஆசிரியர்களின் கற்பித்தலுக்கு மேலாக அறிவை
வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பினை முஸ்லிம் மாணவர்கள் பெற்றுக் கொள்வதில் சில பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகின்றன. உயர்தர வகுப்பில் போதிக்கப்படும் சகல பாடங்களுக்கும் சிங்கள மொழியில் நுால்கள், சஞ்சிகைகள், கட்டுரைகள் போன்றவை சிரமமின்றிக் கிடைக்கப்பெறுகின்றன. தமிழில் கலைத்துறை சார்ந்த சில பாடங்களுக்கு அவ்வாறான நூல்கள் சில கிடைக்கப்பெறினும், விஞ்ஞானப் பாடங்களைக் கற்கும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்புக் கிட்டுவதில்லை. அதனால்
பெறுபேறுகள் தரம் குன்றியதாகக் காணப்பட்டு அவர்களின் பல்கலைக்கழக அனுமதியும் பாதிக்கப்படுகின்றது.
8.2. சமுகத்தில் கல்வி அடிப்படைச் சூழல் காணப்படாமை:
ஒரு சமூகத்தவர் உயர் கல்வித் துறையில் சிறந்து விளங்குவதற்கு அச்சமூகம் சிறந்த கல்வி அடிப்படையையும், கல்விச் சூழலையும் கொண்டிருத்தல் அவசியமாகும். இந்நிலை காணப்படின் அச்சமூகம் சிறந்த கல்வி கலாசாரத்தையுடையதாக விளங்கும். ஒப்பீட்டு ரீதியாக முஸ்லிம் சமூகம் கல்வித்துறையில் பின்தங்கியதாகும். கல்வி ஆய்வாளர்களின் கருத்துப்படி சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் குறைந்த கல்விச் சித்திக்குக் காரணம் அவர்களது குடும்பச் சூழலில் காணப்படும் பின்தங்கிய கலாசாரப் பின்னணியும்,
107

Page 61
உளப் பாங்குகளிலும் விவேகத்திலும் காணப்படும் பரம்பரை வேறுபாடுகளுமாகும். இதனை “கலாசார வறுமை’ என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப் பிரச்சினை இலங்கை முஸ்லிம்களின் உயர் கல்வியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.
பெரும் பாலான முஸ் லிமி பெறி றார் கல வரிப் பின்னணியுடையவர்களல்லர். கல்வியின் முக்கியத்துவத்தை உணராத அப்பெற்றாரின் ஏனோ தானோ என்ற மனப்பான்மையால் அவர்களின் பிள்ளைகளின் மத்தியிலும் கல்வியில் ஊக்கம் குன்றிக் காணப்படுகின்றது. இந்த “கலாசார வறுமை” யின் காரணமாக உயர் கல்வியில் நிலவும் போட்டித்தன்மையை எதிர்கொள்ளும் மனோ தைரியம் அவர்களிடம் குறைந்தே காணப்படுகின்றது. குடும்பச் சூழலுக்கும், பாடசாலைக் கலாசாரத்திற்கும் இடையில் காணப்படும் இசைவற்ற தன்மையால் பாடசாலை நியமங்களுக்கேற்ப பாடசாலைக் கலாசாரத்துடன் இணைந்து சென்று கல்வியில் கவனம் செலுத்தி சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியாதுள்ளது. அவர்களின் கல்வித்தரம் காரணமாக இவர்கள் இன்று நிலவும் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாதும், சிங் கள மொழி மாணவர்களுடனும் சிறந்த கல வி மரபையுடையவர்களுடனும் போட்டியிட முடியாதும் பாரிய பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர்.
8.5. உயர் கல்வியைத்துாண்டும் சமுக நோக்கு காணப்படாமை:
முஸ்லிம் கமூகத்தவர் உயர் தொழில் தகைமையுடையவர்களோ அல்லது நீண்டகாலக் கல்விப் பாரம்பரியத்தைக் கொண்டவர்களோ அல்லர். பரம்பரையாக வர்த்தகமே தமது பிரதான வருமான வழி என்று எண்ணுகின்றனர். இன்றைய இலங்கையின் உயர் கல்வி கடும் போட்டிக்கு மத்தியில் கணிசமான அளவு முதலீட்டை மேற்கொண்டு நீண்ட காலத்தில் பெற வேண்டியதாகவுள்ளது. சமூகநோக்கில் உயர் கல்வியைப் பெற்றாலும் அவ்வுயர் கல்வி குறைந்த வருமானத்தையே பெற்றுத்தரும். எனவே பொதுக்கல்வியில் ஒரு குறிப்பிட்ட தரத்தை எய்திய பின்னர் உயர் கல்வியில் போட்டியிட்டு அல்லல் படுவதைவிட வர்தத்கம் போன்ற தொழில் ரீதியான முயற்சிகளில் ஈடுபட்டு உடனடியாகப் பணம் சம்பாதிப்பதிலேயே அதிக நாட்டம் காட்டுகின்றனர். கண்டி, கொழும்பு, புத்தளம் போன்ற முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஆண்களில் கணிசமான அளவினர் தமது க.பொ.த.சாதாரண பரீட்சையின் பின்னர் உயர் கல்வியைத் தொடராது வேறு தொழில் முயற்சிகளை
108

நாடுகின்றனர். முஸ்லிம் சமூகத்தின் இப் பொதுப்பண்பு அவர்களின் உயர் கல்வியை குறிப்பிடத்தக்களவு பாதிக்கின்றது.
8.4. கல்வி மொழியில் தேர்ச்சி குறைந்த தன்மை
மொழி ஊடகம் எதுவாயினும் உயர் கல்விச் சாதனைகளுக்கு மொழித் தேர்ச்சி இன்றியமையாதது. வடக்குக் கிழக்கு முஸ்லிம்கள் தமிழ் மொழியிலும், தென் இலங்கை முஸ்லிம்களில் அதிகமானவர்கள் தமிழ் மொழியிலும், கணிசமானளவு நகர்ப்புற முஸ்லிம்கள் சிங்கள மொழியிலும் தமது பொதுக்கல்வியையும், உயர் கல்வியையும் மேற்கொள்கின்றனர். வடக்குக் கிழக்கு முஸ்லிம்கள் நீண்ட கால மொழிப் பாரம்பரியம் ஒன்றைக் கொண்டிருப்பதால் ஏனைய பிரதேச முஸ்லிம்களை விட சிறந்த மொழித் தேர்ச்சியுடையவர்களாவர். ஆனால் இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் வாழும் நான்கில் மூன்று பகுதி முஸ்லிம்களின் கல்வி மொழி தமிழாயினும் அவர்களிடம் சிறந்த தமிழ் மொழிப் பாரம்பரியம் காணப்படுவதில்லை. மேலும் அவர்களின் கல்வி மொழி, வீட்டு மொழி, பிரதேச மொழி ஆகியவற்றிற்கிடையில் அதிக வேறுபாடு காணப்படுகின்றது. வீட்டில் “சோனகத்தமிழில்” பேசும் ஒரு மாணவன் பாடசாலையில் “துாயதமிழில்’ தனது கல்வியை மேற்கொள்கின்றான். பிரதேசத்தில் வாழ்பவர்களுடனான தொடர்பின் போது சிங்கள மொழியைப் பயன்படுத்துகின்றான். இம்மொழிகள் மூன்றும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகையால் அவன் தனது கல்வி மொழியில் தேர்ச்சி பெற முடியாதுள்ளான். பரீட்சைகளின் போது தனது கருத்தை முறையாக
காரணமாக அமைகின்றது.
சிங்கள மொழியில் பயிலும் முஸ்லிம் மாணவர்களும் இப்பிரச்சினையை எதிர் நோக்குகின்றனர். அவர்களது வீட்டு மொழி, சமயப் போதனைகளின் போது பயன்படுத்தப்படும் மொழி ஆகியவற்றிற்கும் கல்வி மொழிக்கும் இடையில் வேறுபாடு காணப்படுவதால் மொழியறிவு விருத்தியடைவதில்லை. அதனால் சிங்கள மொழித் தேர்ச்சியுடைய சிங்கள மொழி மாணவர்களுடன் அவர்களால் போட்டியிட முடிவதில்லை. இதன் விளைவாக அநேகமான
பரீட்சையோடு தமது கல்வியை முடித்துக் கொள்கின்றனர். உயர் கல்வியைத் தொடர்வோர் சிறந்த சித்தியைப் பெறாது உயர் கல்வியில் நுழைய முடியாதுள்ளனர்.
109

Page 62
பெறுபேறுகள்-ஓர் அளவீடு
மா. கருணாநிதி
1. அறிமுகம்
ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் இலங்கையில் வாழுகின்ற சகல இனத்தினருக்கும் கல்வி சம்பந்தமான உரிமைகளை அனுபவிப்பதற்குச் சமவாய்ப்பும் சம சந்தர்ப்பமும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் யாப்பின் 27வது பிரிவு எழுத்தறிவின்மையைப் பூரணமாக நீக்குவதற்கும், சகல மட்டங்களிலும் எல்லோரும் கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்கும் இலங்கை அரசு உறுதி கொண்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றது. இக்கொள்கையை நடைமுறைப்படுத்த நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் முக்கியம் வாய்ந்தவையாகும். பாடசாலைகளின் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டது. பாடசாலைகளுக்குத் தேவையான பெளதீக, மனித வளங்களைப் பகிர்தலிலும் சாதகமான மாற்றங்கள் உண்டாயின. பாடசாலைக் கல்வியில் பங்கு கொள்வோர் தொகை அதிகரித்துள்ளது. நிருவாக முறைகள் பாடசாலைகளின் தர முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு மாற்றியமைக்கப்படுகின்றன. ஆயினும் இத்தகைய நன்மைகள் ஒவ்வாரு இனத்தவரையும் எந்தளவிற்குச் சென்றடைந்துள்ளது எனக் காண்பது இன்றியமையாதது.
பாடசாலைக் கல்வியின் தரம், பாடசாலையினால் வழங்கப்படும் கல்வியின் தன்மையிலும், பாடசாலையினால் பயன்படுத்தப்படும் வளங்களின் தன்மையிலும், வசதிகளின் தரத்திலும் தங்கியுள்ளது. இவ்வகையில் ஏறக்குறைய 85 சதவீதமான பிள்ளைகள் தாம் வாழும் பிரதேசங்களுக்கு அண்மையில் அமைந்துள்ள பாடசாலைகளில் கற்கின்றனர். அப்பாடசாலைகள் வழங்கும் கல்வியும், பயன்படுத்தும் வளங்களும் தரத்தில்வேறுபாடுடையவை. இவ்வகையில் முஸ்லிம் பாடசாலைகள் பொதுக்கல்வியில் எவ்வளவு துாரம் பாதிக்கப்பட்டுள்ளன என அறிதல் நன்று.
பல இன மக்கள் வாழும் நாடொன்றில், ஓர் இனத்தின் கல்வி வளர்ச்சி பற்றி நோக்குமிடத்து, பெருமளவுக்குக் குறிப்பிட்ட இனமானது உயர் கல்வியில் பெற்றிருக்கும் வளர்ச்சியை மையமாகக் கொண்டு கருத்துக்களை வெளியிடுதல் ஒரு பொதுவான அணுகுமுறையாகும்.
110

பொதுக் கல வி மட்டத் தறி குக் கூடிய முக் கரியத் துவம் கொடுக்கப்படுவதில்லை. இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் மிகக் குறைந்த வீதத்தினருக்கே உயர் கல்வி வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவற்றுள்ளும் இன ரீதியாக பெரும் வித்தியாசம் நிலவுகின்றது. எவ்வாறாயினும் கிடைக்கக் கூடிய உயர் கல்வி வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்துவதற்குக் கூட அவர்கள் பொதுக்கல்வியில் அடைந்து வருகின்ற முன்னேற்றம் அடிப்படையாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு இன, மற்றும் பிரதேச ரீதியாக முஸ்லிம் பாடசாலைகள் தமது மாணவர்களின் வினையாற்றுகைக்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கின்றன என ஆய்ந்தறிதல் முக்கியமானது.
இந்த ஆய்வுக் கட்டுரையானது, அண்மைக் காலங்களில் பொதுக்கல்வியில் முஸ்லிம் மாணவர்கள் பெறுபேறுகளில் கண்டுள்ள முன்னேற்றங்களை இலங்கையிலுள்ள ஏனைய இனப் பாடசாலைகளின் பெறுபேறுகளுடன் ஒப்பிட்டு ஆராய்கின்றது. அத்துடன் மாணவர் வினையாற்றுகையில் பிரதேச ரீதியாகப் பாடசாலைகளுக்கிடையில் நிலவும் வேறுபாடுகளை அறிதல், பாடரிதியாக நிலவும் வித்தியாசங்களை விளங்கிக் கொள்ளல் போன்ற குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத் தில் முஸ்லிம் பாடசாலைகளின் வினையாற்றுகையில் எத்தகைய மாற்றங்களைத் திட்டமிட்டவகையில் மேற்கொள்ளலாம் என்பதையும் இக்கட்டுரை நோக்குகின்றது.
2. முஸ்லிம் மக்களினதும் பாடசாலைகளினதும் கல்விப் பின்னணி
இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் 7.6 சதவீதத்தினர் முஸ்லிம்களாவர். இவர்கள் சகல மாவட்டங்களிலும் பரந்து வாழ்கின்றனர். முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் மாவட்டங்களாக அம்பாறை. மட்டக்களப்பு, மன்னார், புத்தளம், கொழும்பு, களுத்துறை, கண்டி ஆகியன விளங்குகின்றன. அம்பாறை மாவட்டத்தில் 41 சதவீதத்தினரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 சதவீதத்தினரும், மன்னார் மாவட்டத்தில் 28 சதவீதத்தினரும் முஸ்லிம்களாவர்.
இலங்கையில் வாழும் ஏனைய இனத்தவர்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் என்ற அபிப்பிராயம் நிலவி வந்தது. வரலாற்றுக் காலமுதல் தமது கவனத்தை வியாபாரத்தில் செலுத்தி வந்தமையால் இவர்கள் வியாபாரத்தில் பெற்ற அனுபவம் வேறு தொழில்களை நாடிச் செல்ல வழிவகுக்கவில்லை. ஆகவே கல்வியில் காட்டிய ஆர்வமும் குறைவாக இருந்தது. ஆயினும்
111

Page 63
தற்காலத்தில் ஒரு சமுதாயத்தின் அந்தஸ்த்தை மேம்படுத்தும் அம்சங்களுள் கல்வி பிரதான இடத்தை வகிப்பதனால் கல்வியின் மீது இவர்களும் கூடிய கவனம் செலுத்துகின்றனர். இலங்கையில் சமூக, பொருளாதாரத் துறைகளில் உண்டாகும் துரித மாற்றங்களையும் கல்வியை மையமாகக் கொண்டே அனுபவிக்க முடியும் என்பதிலும் அதிக நம்பிக்கை பிறந்துள்ளது.
கல்வி நிலையைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்கள் இலங்கையின் நோயாளி என ஒரு காலகட்டத்தில் வர்ணிக்கப்பட்டிருந்தார்கள். இன்று கல்வியில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆயினும் இதனை ஓர் உருப்படியான முன்னேற்றம் எனக் கருத முடியாது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது (Hameed. 1992), இங்கு இக் கூற்றிலே எடுத்துக் கூறப்பட்ட கணிசமான முன்னேற்றம் என்பது என்னவென அறிய வேண்டியது அவசியமாகும்.
ஆசியாவில் எழுத்தறிவு வீதத்தினை உயர்வாகவுடைய நாடுகளுள் இலங்கையும் ஒன்று எனக் கொள்ளப்பட்டாலும், இலங்கையில் வாழும் தேசிய இனங்களுக்கிடையே பாரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. முஸ்லிம் மக்களில் 79.3 சதவீதத்தினரே எழுத்தறிவுடையவர். இந்நிலை இலங்கையின் தேசிய சராசரி எழுத்தறிவு வீதத்திலும் (87.2 சதவீதம்) இருந்து கணிசமான அளவு வேறுபட்டுள்ளது. சிங்கள மக்களில் 88.4 சதவீதத்தினரும், தமிழ் மக்களில் 86.6 சதவீதத்தினரும் எழுத்தறிவு உடையோராவர். குறிப்பாக முஸ்லிம் பெண்களின் கல்வி நிலை ஏனைய இனத்துப் பெண்களிலும் பார்க்க (பெருந்தோட்டத் துறையைச் சார்ந்த பெண்கள் தவிர) குறைவாக உள்ளது (71.5 சதவீதம் CenSus : 1981). இந்த நிலைக்குக் காரணமாக இவர்களிடையே நிலவும் சில சமூக வழக்கங்களும் சமய சம்பந்தமான மரபுகளும் அடிப்படையென எடுத்துக் கூறப்படுகிறது. இவற்றைவிட இம்மக்களின் கல்வி பின்தங்கலுக்குரிய பொதுவான காரணங்களாக வறுமை, சமயச் சார்பற்ற கல்விக்கு எதிராகவுள்ள அபிப்பிராயம், சந்தர்ப்பக் குறைவு, கல்வியைத் தொடர்வதற்குள்ள வசதிக்குறைபாடுகள் என்பனவும் தெரிவிக்கப்படுகின்றன (Sameem, 1974). ஆயினும், கடந்த இரு தசாப்தங்களில் இவர்களுடைய கல்வி நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கல்விக்கான வாய்ப்புகளும் வசதிகளும் மேலும் வழங்கப்படுமாயின் இன்னும் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன (Junaid. MN-1990).
முஸ்லிம் மக்களின் கல்வி வாய்ப்புகள், வசதிகள் பற்றிய அடிப்படைகளை ஆராய்வதும் இவ்விடத்தில் பொருத்தமானது.
112

இலங்கையில் 9909 அரசாங்கப் பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றுள் 72.3 சதவீதமானவை சிங்கள மொழிப் பாடசாலைகள். 20.2 சதவீதமானவை தமிழ் மொழிப் பாடசாலைகள், 6.7 சதவீதம் முஸ்லிம் பாடசாலைகள். ஏனைய 0.8 சதவீதமானவை கலவன் பாடசாலைகளாகும். 710 முஸ்லிம் பாடசாலைகளில் அநேகமானவை பின்வரும் மாகாணங்களில் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் 207 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 128 பாடசாலைகளும் மத்திய மாகாணத்தில் 89 பாடசாலைகளும், மேல்மாகாணத்தில் 57 பாடசாலைகளும், வடமத்திய LDITST600 gig56) 76 UTLFIT6060856lbib D-6ft 6T60T (School Census. 1992).
2.1. பாடசாலைக் கல்வியில் பங்கு பற்றுவோர்.
பாடசாலைக் கல்வியில் பங்கு பற்றுவோர் தொகையை நோக்குமிடத்து இலங்கையில் 1992இல் 39,96,259 பேர் அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி பயின்றனர். இந்நாட்டின் மொத்த மாணவர்களில் முஸ்லிம் மாணவர்களின் பங்கு 8.5 சதவீதமாகும். இவர்களில் ஆண்கள் 1,78,925 பேர். பெண்கள் 1,63,755 பேர். பாடசாலையிலுள்ள பல்வேறு மட்டங்களின் அடிப்படையில் பார்க்கும்பொழுது, மொத்த மாணவர் தொகையில் தேசிய மட்டத்தில் 55சதவீதத்தினர் ஆரம்ப மட்டத்திலும், 41 சதவீதத்தினர் கனிஷ்ட, சிரேஷ்ட இடைநிலை மட்டத்திலும், மிகுதி 4 சதவீதத்தினர் கல்லுாரி நிலைக் கல்வி மட்டத்திலும் கல்வி பயில்கின்றனர். இவற்றுடன் முஸ்லிம் மாணவர்களின் தொகையை ஒப்பு நோக்குகையில் ஆரம்ப நிலையில் 9.4 சதவீதத்தினரும், இடைநிலை மட்டத்தில் 7.8 சதவீதத்தினரும், கல்லூரி நிலையில் 6 சதவீதத்தினரும் பங்கு கொள்கின்றனர் (School census, 1992). இதில் இடைநிலை மட்டத்தில் 19,576 பேர் க.பொ.த. சாதாரண தர வகுப்பில் கல்வி பயில்கின்றனர். குறிப்பிட்ட ஓர் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் தொகையில் 1.3 சதவீதத்தினர் (3,43,264: 4710 பேர்) மட்டுமே க.பொ.த.உயர் தர வகுப்புத் தகுதி பெறுகின்றனர். இவ்வாறு தகுதி பெறுவோருள் பெரும்பாலானோர் கலைத்துறையைச் சார்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சனத் தொகை விகிதாசாரத்துடன் ஒப்பிடும்பொழுது இப்புள்ளிவிபரம் முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் உயர்கல்வியைப் பெறும் தகுதிபெற்றோர் தொகை குறைவாக உள்ளது என்பதைப் பிரதிபலிக்கின்றது.
மற்றும் முஸ்லிம் மாணவர்களின் இடைவிலகல் வீதமும், மீண்டும் ஒரே வகுப்பில் தங்கியிருப்போர் வீதமும் கூடுதலாக உள்ளன.
113

Page 64
முக்கியமாக க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றியவர்கள் முதன்முறையில் சித்தி பெறாதவிடத்து இரண்டாம் முறை தோற்றுவதில் அதிக அக் கறை காட்டுவதில்லை என்ற நிலையைப் பல மாவட்டங்களிலே அவதானிக்கலாம். மீண்டும் ஒரே வகுப்பில் தங்குவோர் தொகை, இடைநிலை மட்டத்தில் மிக உயர்வாக உள்ளது. குறிப்பாக மாத்தளை, நுவரெலியா, அம்பாந்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு, பதுளை ஆகிய மாவட்டங்களில் இத்தகையோரது தொகை அதிகமாக உள்ளது. இடைநிலை மட்டத்தில் ஒரே வகுப்பில் மீண்டும் கல்வி பயில்வோரின் சராசரி 16.6 சதவீதமாகும். இது ஆரம்ப மட்டத்தில் 7.7 சதவீதமாகும்.
பாடசாலைக் கல்வியைப் பொறுத்தமட்டில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி மிகப் பிரதானமானது. ஆயினும் நகரங்களிலுள்ள சேரிப்புறங்களிலிருந்தும், பின்தங்கிய கிராமப் புறங்களிலிருந்தும் பாடசாலைக்குச் செல்லாதோர் தொகை அதிகமாகும். கல்வியில் பங்கு கொள்ளல் சமூக, பொருளாதாரச் சூழலிலும் தங்கியுள்ளது. சான்றாக கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு பிரதேசங்களில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின்படி இங்கு வாழும் 5-13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளில் 22 சதவீதமானவர்கள் பாடசாலைக்குச் செல்வதில்லை. அவற்றுள்ளும் பெண் பிள்ளைகளின் தொகை அதிகமாகும். பெண் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் காட்டும் தயக்கம், சாதகமற்ற பொருளாதார சூழலினால் பிள்ளைகளுக்கு ஊக்குவிப்பின்மை போன்றவை இதன் காரணங்களாகின்றன. சிரேஷ்ட இடைநிலை மட்டங்களில் மாணவர் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமாயின் ஆரம்ப, கனிஷ்ட இடைநிலைகளில் நிலவும் இடைவிலகல், மீண்டும் ஒரே வகுப்பில் கற்றல் போன்ற விரயங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்,
2.2. முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியர் நிலை
1992ஆம் ஆண்டிற்குரிய பாடசாலைப் புள்ளிவிபர அறிக்கையின் படி முஸ்லிம் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் தொகை 11,221 பேராவர். இவர்களுள் ஆண்கள் 5660 பேர். பெண்கள் 5561 பேர். ஆசிரியர் பற்றிய வகையடிப்படையிலான விபரம் அட்டவணை 1 இல் தரப்பட்டுள்ளது (School Census. 1992).
அட்டவணை 1 ஐ நோக் குமிடத்து, ஏனைய வகை ஆசிரியர்களுடன் ஒப்பிடுகையில் பட்டதாரி ஆசிரியர்களின் தொகை குறைவாக உள்ளது. பட்டதாரி ஆசிரியர்களிலும், விஞ்ஞான, கணிதப்
114

அட்டவணை 1: முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியர்களின் நிலை, 1992.
ஆசிரியர்களின் வகை I ஆண் பெண் | மொத்தம் %
பட்டதாரிகள் 815 625 1440 12.8% பயிற்றப்பட்ட 3043 2655 5698 50.8% சான்றிதழ் 139 122 26 2.3% க.பொ.த (சாத)க.பொ.த (உத) 1478 2064 3542 316% மெளலவி 145 51 196 17% ஏனைய 40 44 84 0.7% மொத்தம் 5561 11221 100.0%
மூலம் பாடசாலைக்கணிப்பு 1992
பட்டதாரிகள் தொகை போதாதுள்ளது. (பெளதீக விஞ்ஞானம்-90, உயிரியல்-90, கணிதம் 24) பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் மாணவர் விகிதம் இதனை நன்கு விளக்கி நிற்கின்றது. முஸ்லிம் பாடசாலைகளின் சராசரி ஆசிரியர் மாணவர் விகிதம் 1 : 30 ஆகும். ஆயினும் இது தேசிய சராசரி விகிதத்தினின்றும் பெருமளவில் வேறுபட்டிருக்கவில்லை. (தேசிய சராசரி விகிதம் 1:26). மாவட்ட அடிப்படையில் நோக்கும்போது மட்டக்களப்பு (1:49), அம்பாறை (1:36), திருகோணமலை (1:46) போன்ற மாவட்டங்களில் இவ்விகிதம் மிக உயர்வாக உள்ளது. ஏனைய பிரதேசங்களில் முஸ்லிம் ஆசிரியர் மாணவர் விகிதம் சராசரியுடன் ஒத்துச் செல்கின்றது. பட்டதாரி ஆசிரியர் மாணவர் விகிதத்தின் தேசிய சராசரி 1 : 115 ஆகும். இவ்விகிதம் முஸ்லிம் பாடசாலைகளில் மிகக் கூடுதலாக அதாவது 1 : 219 ஆக உள்ளது. LDT6 L அடிப்படையில் மட்டக்களப்பு, திருகோணமலை, பண்டாரவளை போன்ற மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர்களின் தொகை பற்றாக்குறையாகக் காணப்படுகின்றது என புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. இம்மாவட்டங்களின் விகிதம் முறையே 1 : 578, 1 : 446, 1 : 493 என உள்ளது.
பொதுவான முறையில் ஆசிரியர் பரம்பலை ஆராயுமிடத்து, மொத்த ஆசிரியர் தொகையில் கல்முனை, கண்டி, குருநாகல், புத்தளம் ஆகிய கல்வி மாவட்டங்களில் அநேகமான ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். ஏனைய மாவட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை உண்டு எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1t 1 AF

Page 65
8. பொதுக் கல்விப் பெறுபேறுகள் பற்றிய பகுப்பாய்வு
கல்வி வளர்ச்சியை மதிப்பீடு செய்வதற்குப் பல்வேறு அளவீட்டு முறைகளும் சாதனங்களும் பயன்படுத்தப் படுகின்றனவாயினும் அவற்றைப் பரவலாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் இலங்கையில் அவ்வளவுக்கு விருத்தியடையவில்லை. ஆயினும் பரீட்சைகளை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு நாட்டின் கல்வியமைப்பு பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு அமையலாம். அவற்றுள் ஒன்று பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வியாகும். இலங்கையின் கல்வியமைப்பும் பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வியாகும். இதனைப் பல்வேறு ஆய்வுகள் எடுத்துக் a51TL"Gaél6SA360T (Jeyasuria, 1961; Jayaweera, 1976). @6örg LDT60076uf6ör கல்வி நிலையை மட்டுமன்றிப் பாடசாலைகளின் முதன்மை நிலையைக் கணிப்பதற்கும் பரீட்சை முடிவுகளை அடிப்படையாகக் கொள்ளுதல் வழக்கமாக உள்ளது.
இலங்கையின் கல்வியமைப்பில் மூன்று பரீட்சைகள் முக்கியம் வாய்ந்தவை. அவற்றுள் முதலாவது, ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சையாகும். இப்பரீட்சை நாட்டின் பிரபல்யம் வாய்ந்த பாடசாலைகளில் மாணவர் அனுமதி பெற உதவுகின்றது. உயர் கல்வியைத் தொடர்தல் அல்லது வேலைவாய்ப்பைப் பெறுதற் பொருட்டு க.பொ.த.சாதாரண பரீட்சையும், பல்கலைக்கழகக் கல்வி, அல்லது நல்ல வேலைவாய்ப்பு என்னும் நோக்கில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையும் முக்கியத்துவம் வகிக்கின்றன.
க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் முதன்மை நோக்கம் பரீட்சையை மையமாகக் கொண்டுள்ளது. எதிர்கால நன்மை கருதி இம்மாணவர்களும் பெற்றோரும் இப்பரீட் சைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என ஆய்வொன்று கூறுகின்றது (Rupasinghe-1983), ஆகவே முஸ்லிம் மாணவர்கள் பொதுக்கல்வியில் காட்டும் ஆர்வம், முன்னேற்றம் ஆகியவற்றை அளவிடுவதற்கு க.பொ.த. சாதரண தரப் பரீட்சை பொருத்தமானதாக அமையும் எனலாம்.
இலங்கையில் நடத்தப் படும் பொதுப் பரீட் சைகளை அடிப் படையாகக் கொணி டு வெளியிடப்படும் மதிப்பீடுகள் நம்பகரமானவையாகவும் உள்ளன. இந்தக் கட்டுரையில் பெறுபேற்றுப் பகுப் பாயப் வுக் கு அடிப் படையாக இலங்கைப் பரீட் சைத் திணைக்களத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்படும் பாடசாலை
116

6flooru Tsig605 it'L9856ft (Department of Examination, various years) பயன்படுத்தப்பட்டுள்ளன. முதல் மொழி, ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், சமயம், சமூகக்கல்வி ஆகிய 6 பாடங்களில் ஒவ்வொரு பாடசாலையும் பெற்றுக் கொண்ட மூலப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றிற்கான நியம ஒன்பது கணிக்கப்படுகின்றன. நியம ஒன்பது பெறுமானங்களின் சராசரிப் புள்ளியே பாடசாலை வினையாற்றுகைச் சுட்டியாகும் (பாடசாலை வினையாற்றுகைச் சுட்டிகள், அட்டவணை-6).
பகுப்பாய்வுக்கு உட்படும் பாடசாலைகள் பற்றிய தெரிவு பின்வரும் முறையில் அமைந்துள்ளது. இலங்கைச் சனத்தொகைப் பரம்பல் தரவுகளின்படி முஸ்லிம்கள் கூடிய வீதத்தினராக வாழும் கல்வி மாவட்டங்களிலிருந்து (கொழும்பு-83 %, களுத்துறை-74% , கண்டி-10.5%, மாத்தளை.7%, மட்டக்களப்பு-23.9%, கல்முனை-41.5%, மன்னார்-26 %, கேகாலை-5.0%, புத்தளம். 9%) வருடாவருடம் 20 மாணவர்களுக்கு மேல் பரீட்சைக்குத் தோற்றும் 5 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகள் இப்பாடசாலைகள் ஒவ்வொன்றும் பெற்ற பெறுபேறுகளின் சராசரியைக் கொண்ட வளர்ச்சி நிலை பற்றிய கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது. உதாரணமாக இரண்டு கல்வி மாவட்டங்களுக்குரிய கணிப்பீடுகளின் மாதிரிகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
9.1 மாதிரி 1: கொழும்பு மாவட்டம் இங்கு நான்கு பாடசாலைகள் ஆய்வுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவையாவன : முஸ்லிம் மகளிர் கல்லுாரி, சாஹிரா கல்லுாரி, ஹமீத் அல் ஹசைனியா மகா வித்தியாலயம், பாத்திமா முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவையாகும்.
முதலில் இப்பாடசாலைகள் ஒவ்வொன்றும் முக்கியமான 6 பாடங்களில் பெற்றுக் கொண்ட வினையாற்றல் சுட்டிகள் ஆண்டு அடிப்படையில் அட்டவணைப் படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டிற்குமுரிய சராசரிப் பெறுமானங்கள் பெறப்பட்டன. இவ்வாறு கணிக்கப்பட்ட 4 ஆண்டுகளுக்கான சராசரிக்கு இறுதியாக சராசரி காணப்பட்டது. அப்பெறுமானமே மாவட்டத்திற்குரிய சுட்டெண்ணாக வழங்கப்பட்டுள்ளது. (அட்டவணை-2)
117

Page 66
அட்டவணை 2 :
கொழும்பு. வருடம் A B C D E F G H 1988 595 47 66 42 45 47 52 1989 650 47 69 46 40 63 42 51 1990 652 47 49 53 45 48 44 47 1991 733 47 67 46 45 52 42 50 மொத்தம் 2630 188 251 187 175 219 75 200 &UT8Frf 658 47 63 47 44 55 44 50
A-மாணவர் தொகை, B-முதல்மொழி, C-ஆங்கிலம், D-கணிதம், E-விஞ்ஞானம், F-சமயம், G-சமூகக்கல்வி, H-பாடசாலைநிலை.
மூலம் பரீட்சைத்திணைக்களம் பல ஆண்டுகள்
8.2 மாதிரி 2 கல்முனை மாவட்டம்
இங்கு ஐந்து பாடசாலைகள் ஆய்வுக் குத் தெரிவு செய்யப்பட்டன. அவையாவன: கல்முனை சாஹிராக் கல்லுாரி, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம், கல்முனை மஹற்மூத் மகளிர் வித்தியாலயம், நிந்தவுர் அல் அஸ்ஹர் மகா வித்தியாலயம், மருதமுனை சம்சுல் இல்ம்-மகா வித்தியாலயம் ஆகியவையாகும் (அட்டவணை 3).
மேற் காட்டிய முறையிலே பெறப் பட்ட ஒவ்வொரு மாவட்டத்துக்குமுரிய வினையாற்றுகைச் சுட்டிகளின் சராசரி அட்டவணை 4இல் தரப்பட்டுள்ளது. அடுத்து மாவட்ட அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் அதிகூடிய வினையாற் றலையும் , அத குறைந்த வினையாற் றலையும் எடுத்துக் காட்டும் புள்ளிவிபரங்கள் அட்டவணை 5 இல கொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறே அட்டவணை 6இல் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை மட்டத்தில் முதன்மை இடம் வகிக்கின்ற சிங்கள, தமிழ் பாடசாலைகளுடன், பிரபல்யமிக்க முஸ்லிம் பாடசாலைகளின் வினையாற்றல் சுட்டெண்கள் ஒப்பிட்டு நோக்கப்படுகின்றன.
118

அட்டவணை 3 : பாடசாலை வினையாற்றுகைக் சுட்டிகல்முனை கல்வி மாவட்டம்
வருடம் A B C D E F G H
1988 589 51 51 55 59 56 59 56
1989 774 57 54 57 52 60 40 55
1990 685 55 36 54 52 56 45 50
1991 729 55 54 57 55 58 50 54
மொத்தம் 2777 218 195 223 218 230 194 215. gJTefl 695 55 49 56 55 58 49 54
A-மாணவர் தொகை, B-முதல்மொழி, C-ஆங்கிலம், D-கணிதம்,
E-விஞ்ஞானம், F-சமயம், G-சமூகக்கல்வி, H-பாடசாலைநிலை.
மூலம் பரீட்சைத்திணைக்களம் பல ஆண்டுகள்
கல்வி மாவட்ட ரீதியாக, பாடசாலை வினையாற்றுகைச் சுட்டிகளின் சராசரி
அட்டவணை 4 :
கல்வி மாவட்டம் A B C D E F G H
கொழும்பு 658 47 63 47 44 55 44 50
களுத்துறை 220 51 52 49 48 60 49 5
கண்டி 710 52 54 50 47 55 48 51
மாத்தளை 250 53 5 48 I 44 50 47 48
கேகாலை 412 52 50 5 51 54 50 5
மட்டக்களப்பு 360 56 46 55 51 65 50 54
கல்முனை 695 55 49 56 55 58 49 54
மன்னார் 205 52 53 53 49 56 47 52
A-சராசரி மாணவர் தொகை, B-முதல்மொழி, C-ஆங்கிலம், D-கணிதம்,
B-விஞ்ஞானம், F-சமயம், G-சமூகக்கல்வி, H-மா. சுட்டெண்.
மூலம் பரீட்சைத்திணைக்களம் 1991
119

Page 67
olpo@goof? non quiyoołowa og Øsowy; yn: qīngfɔ soufflogijo lozurump-Tastoo@olợny-le);79 pogođạjumlovanogw sĝaĵayogo“moo-3
·lpos:979 soay, sumunswisw @yajaws@@@ -1-ryūno gogg-Trwun —g 1,7079 podvođạsutusaṁgy má oso Trina®) qøg-irwum – y
~ | 68 | 99 | - || 9ɛ | €9 | - || Oty || 89 || — || vs || 69Ựoll (lo 60 I 8£ I Zt" | 91 || 8Ž | €t | Z | Ots || ZG || 81 || 0:2 || 99(991157@@
• ! -~ | ~ || — | — || 80 || /t/ | GG || 0 | | /t/ | /t/யடி9டி90 4 | 9t" | €9 || ZZ || 68 || 19 | 8Z | 8ɛ | 99 || E|| || 9t; | 191d9d9f)ņ99 Si | tt || 69 || 0 || 8t" | 89 || || || 8ț7 || 69 | Z | Og | zghp与9塔Tn 81 || Zɛ | 99 || Gį | 9ɛ | 19 | 94 | lt || ZG | cs | gv | 19(90911993) tok | 017 | tg | Z | 8ɛ | 09 | Z | | | tw | cs | 90 | 09 | 991909ĢĢIJU. £Z || 98 || 69 | €ɛ | €Z || 99 || 8| || 6ɛ | 19 | 9| | zły | ggollapso 02 || 9ɛ | GS | Z | 9ɛ | £9 || |z || 8ɛ || 69 | oz | Gɛ | 69qjuss@@@@ Sl | 6£ | tg | 0Ż | 9ɛ | 99 || vŻ | GC || 6G | Z | Ots | aeghqiĥuose, C)8V | O{V | O{{V | O{V
166!066168618861qi-T-Irellon tseapo
119ologo-10-lo power@guminowegooĒĶgico@@@ smotivoglē apgroopaswolae—ııırıqų990ų9đī)
: S 1,909fis-ı-Çıh@
120

4. மீளாய்வு
முஸ்லிம் பாடசாலைகளின் வினையாற்றல் சுட்டெண் சராசரி 51ஆகும். இதன் பொருள் பரீட்சைக்கு அமர்ந்த மொத்த மாணவர் தொகையில் 51 சதவீத மாணவர்களே சித்தியடைகின்றனர் என்பதாகும். இது இலங்கையின் முதன்மை நிலைப் பாடசாலைகளின் விகிதாசாரத்திலிருந்து அதிக அளவிற்கு விலகிக் காணப்படுகின்றது. 1988, 1989, 1990, 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளில் எந்தவொரு முஸ்லிம் பாடசாலையும் அவற்றின் வினையாற்றலில் இலங்கையின் முதன்மைநிலைப் பாடசாலை என்ற வகையுள் அடங்கவில்லை. எடுத்துக் காட்டாக பாடசாலை வினையாற்றுகைச் சுட்டெண் 70 க்கு மேற்பட்டவை கல்வி சார்ந்த வினையாற்றுகையில் முதன்மை நிலைப் பாடசாலைகள் எனக் கருதப்படுகின்றன. கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பெறும் முஸ்லிம் பாடசாலையின் சுட்டெண் 57 மட்டுமே. கல்முனை மாவட்டத்திலுள்ள பாடசாலையொன்றின் வினையாற்றுகைச் சுட்டெணி ஓரளவுக் குத் தேசிய சராசரியை அணி மித்துக் காணப்படுகின்றது(63%).
தரவுகளை உற்று நோக்குமிடத்து முஸ்லிம் பாடசாலைகளுள் அகில இலங்கை மட்டத்தில் அதி சிறந்த பெறுபேறுகளை கல்முனை, மட்டக்களப்பு மாவட்டப் பாடசாலைகள் பெற்றுள்ளன. ஏனைய மாவட்டங்கள் யாவும் குறைந்த மட்டத்தில் ஏறக்குறைய ஒத்த தன்மையினவாகக் காணப்படுகின்றன.
பாடசாலைகளின் வினையாற்றுகையில் மாவட்டத்திற்குள் பாரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. இவை களுத்துறை, கண்டி, கல்முனை ஆகிய மாவட்டங்களில் உயர்வாக உள்ளன. மாணவர்களின் கல்வித்தரம் பேணலில் பாரிய வேறுபாடுகள் நிலவுகின்றன என்பதை இம்முடிவு பிரதிபலிக்கின்றது. உயர்தரமான முஸ்லிம் பாடசாலைகளின் வினையாற்றுகைச் சுட்டெண் சராசரி 59 ஆகவும், பின்தங்கிய பாடசாலைகளின் சராசரி 39 ஆகவும் உள்ளது.
பாடரீதியான பெறுபேறுகளை நோக்கும் போது, மொழி, கணிதம், விஞ்ஞானம், சமூகக்கல்வி போன்ற பிரதான பாடங்களில் குறைவான நிலை தென்படுகின்றது. ஏறக்குறைய ஒரே மாதிரியான பண்புகள் சகல மாவட்டங்களிலும் நிலவுகின்றன. உதாரணமாக கணிதத்தில் 51% த்தினரும், விஞ்ஞானத்தில் 48% த்தினரும்,
121

Page 68
சமூகக்கல்வியில் 47% த்தினரும் சித்தியடைகின்றனர். கொழும்பு, களுத்துறை, மாத்தளை ஆகிய மாவட்டங்கள் பின்தங்கியிருப்பதைக் காணலாம். ஆங்கில மொழியில் மட்டக்களப்பு, கல்முனை ஆகிய மாவட்டங்கள் பின்னடைந்துள்ளன. மற்றும் சகல பாடங்களிலேயும் ஒப்பிடுகையில் சமூகக் கல்விப் பாடப் பெறுபேறுகள் மிகக்
குறைவானவை.
மேற்கண்ட முடிவுகள் யாவும் இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் கல்வித்தரத்தின் நிலையை எடுத்துக் காட்டும் சிறந்த குறிகாட்டியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பொதுவாக இலங்கைப் பாடசாலைகளில் நிலவும் கல்விப் பெறுபேற்று வித்தியாசங்களுக்கு, பிரதேச, மற்றும் கிராம, நகர அடிப்படையிலுள்ள வேறுபாடுகள், பாடசாலை வளங்கள், வசதிகளைப் பகிர்தல் மற்றும் பயன்படுத்துவதில் உள்ள வித்தியாசங்கள், ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் தொழிற்றகைமை, மாணவர்களிடத்தில் கல்விக்கான ஊக்குவிப்புக்களை வழங்கும் சமூகக் காரணிகளின் பின்னடைவு, பொருளாதாரப் பின்னணிகள், சமயம், பண்பாட்டுப் பாரம்பரியங்கள் என்பன காரணங்களாகக் கூறப்படுகின்றன. இத்தகைய காரணங்கள் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் பொருந்தும் எனினும், இவற்றில் எவை வலுவுடையவை எனக் கண்டறிதல் இன்றியமையாதது.
5. ஆலோசனைகள்
கல்வியைக் குறித்து மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கு ஏற்ற நன்மைகளை அடையும் பொருட்டு, முஸ்லிம் பாடசாலைகளின் கல்வித்தர மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.
சமுதாய அபிவிருத்திக்குக் கல்வி அவசியமான அம்சமாக விளங்குவதால், முஸ்லிம் மக்களின் எழுத்தறிவு மட்டத்தில் உயர்வு ஏற்பட வேண்டும். குறிப்பாகச் கிராமியப் பிரதேசங்கள், நகரங்களிலுள்ள பின்தங்கிய பிரதேசங்கள் முதலிய இடங்களில் வாழுகின்ற மக்களின் எழுத்தறிவு மட்டத் தரில் மாறி றமி வேணி டும் . மற்றும் பாடசாலைக்கல்வியில் பங்கு பற்றுவோர் தொகையில் அதிகரிப்பு ஏற்படுதல் மட்டுமன்றி, பாடசாலைகளில் கிடைக்கக் கூடிய வளங்களின் பயன்பாட்டில் உத்தம நிலை பேணப்பட வேண்டும். இடைநிலை மட்டத்தில் நிலவுகின்ற இடைவிலகல், மீண்டும் ஒரே வகுப்பில்

அட்டவணை 6 : வினையாற்றுகைச் சுட்டெண் ஒப்பீடு 1991 (சிங்கள தமிழ், முஸ்லிம் பாடசாலைகள்) 1991.
FT66 A B C D E F G H
தேவி பாலிகா
வித்தியாலயம், 199 81 85 85 85 80 84 83 கொழும்பு
81 80 82 82
மகளிர் உயர் கல்லூரி, 338 84 81 84 82 80 83 82 கண்டி
யாழ் இந்துகல்லூரி, 179 81 74 . 84 83 7 80 79
யாழ்ப்பாணம்
ஹாட்லிக் கல்லூரி, 120 76 73 84 80 70 80 77 பருத்தித்துறை அல் மஸ்ஹர் மகளிர்
வித்தியாலயம், 23 63 65 70 58 64 39 60 நித்தவூர் சாகிராமகாவித்தியாலயம் 93 51 | 60 | 58 | 61 | 55 62 | 58 புத்தளம்
சாகிராமத்திய கல்லூரி,
மாவனல்லை 172 52 64.57 54 53 5 55 முஸ்லிம்மகளிர் கல்லூரி, 206 51 76 50 46 52 49 54 கொழும்பு
சாகிராக் கல்லூரி, 228 45 69 52 48 56 50 53 கம்பளை
A-ம்ாணவர் தொகை, B-மொழி, C-ஆங்கிலம், D-கணிதம், E-விஞ்ஞானம்ங் F-சமயம், G-சமூகக்கல்வி, H-பாடசாலைக் சுட்டெண்.
மூலம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் 1991
123

Page 69
தங்கியிருத்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாறுதல்களை மேற்கொள்ளப் பாடசாலை முகாமைத்துவம் பொருத்தமான நடைமுறைகளை மேறி கொளி வது நணி நு. இவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலமே பல்கலைக்கழகம், மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனங்களில் பங்குபற்றுவோர் தொகையை அதிகரிக்க வழிகோலமுடியும்.
மாணவர்களின் முதன் மொழி சார்ந்த வினையாற்றுகையில் திருப்திகரமான மாற்றம் வேண்டும். கல்வி மொழியைப் பொறுத்தவரையில் முஸ்லிம் மாணவர்களுக்குச் சில பிரச்சினைகள் உள்ளன. மட்டக்களப்பு, கல்முனை, புத்தளம், திருகோணமலை ஆகியன தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வாழும் முஸ்லிம் மாணவர்களின் வீட்டுமொழி, கல்வி மொழி ஆகியவற்றிற்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு நிலவுகின்றது. கல்வி மொழியில் இவை ஏற்படுத்தும் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்தி, நியம மொழியில் கவனம் செலுத்த ஆவன செய்ய வேண்டும்.
124

கல்முனைக் கல்வி வலயத்தில் விஞ்ஞானக் கல்விக்கான வாய்ப்புகளும், மாணவர்களின் விஞ்ஞான அடைவும்
பி.சி. பக்கீர் ஜவ்பர்
1. அறிமுகம்:
இக்கட்டுரை கல்முனைக் கல்வி வலயத்தின் விஞ்ஞானக் கல்வி நிலை பற்றி ஆராய்கிறது. கல்முனைக் கல்வி வலயம் அம்பாறை நிர்வாக மாவட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். முன்னைய சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை ஆகிய மூன்று தொகுதிகளை இது உள்ளடக்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தின் தென்பகுதியில் கிழக்குக் கரையோரமாகப் பெரிய நீலாவணையில் இருந்து பாணமை வரையிலான சுமார் 100 கி.மீ. துாரத்திற்கு இப்பிரதேசம் நீண்டு இருக்கின்றது. 1992ஆம் ஆண்டு கல்வி விபரப்படி 199 தமிழ் மொழிப் பாடசாலைகள் 87506 மாணவர்களையும், 2942 ஆசிரியர்களையும் உள்ளடக்கியிருந்தது. 6 சிங்களப் பாடசாலைகள் இவ்வலயத்துள் காணப்பட்ட போதும் அவை அம்பாறை மாவட்டக் கலவி அலுவலகத்தின் மேற் பார்வையின் கீழ் உள்ளன. இப்பிரதேசத்தில் 9 கோட்டக் கல்விப் பிரிவுகள் காணப்படுகின்றன. இவற்றுள் கல்முனையில் 19, கரைத்தீவில் 3, அக்கரைப்பற்றில் 21,
அட்டாளைச்சேனையில் 18, நிந்தவுரில் 11, பொத்துவிலில் 13, சம்மாந்துறையில் 36 என்றவாறாக மொத்தம் 120 முஸ்லிம் பாடசாலைகள் இவ் வலயத்துள் அமைந்துள்ளன. தமிழ்ப்
பாடசாலைகளின் எண்ணிக்கை 72 ஆகும். முஸ்லிம் பாடசாலைகள்
அட்டாளைச் சேனை, நிந்தவுர், பொத்துவிலி , சம்மாந்துறை ஆகியவைகளாகும்.
கல முனைக் கல வரி வலயம் 60.5% முஸி லிமி பாடசாலைகளையும், 36% தமிழ்ப் பாடசாலைகளையும், 3.5%சிங்களப் பாடசாலைகளையும் கொண்டுள்ளது. கல்முனை, நிந்தவுர், அட்டாளைச் சேனை, அக் கரைப் பற்று, சம்மாந்துறை ஆகிய கோட்டங்களை மட்டும் கருத்தில் கொண்டால் 84.67% முஸ்லிம் பாடசாலைகள் காணப்படுகின்றன. இவ்வாய்வு கல்முனை வலயத்தின்
25

Page 70
இவ்வைந்து கோட்டங்களை உள்ளடக்கியதாகவே அமைகின்றது. இவ்வாய்வு கல்முனைக் கல்வி வலயம் தொடர்பாக எழுதப்பட்டாலும், அதே நேரத்தில் தென்கிழக்குப் பிரதேச முஸ்லிம் மாணவர்களின் கல்வி நிலை பற்றியும் ஆராய்கின்றது.
2. ஆய்வின் நோக்கங்கள் பின்வருவன இவ்வாய்வின் பிரதான நோக்கங்களாகும். 1. கல முனை வலயத் தரில் விஞ ஞானக் கல விக் கான வாய்ப்புகளுக்கும் மாணவரின் விஞ்ஞான அடைவுக்கும் இடையே பொருண்மையான தொடர்பு உண்டா என அறிதல். 2. அவ்வாறான தொடர்பு ஒன்று காணப்படின் விஞ்ஞானக் கல்வி என்ற கூட்டுக் காரணியின் பிரதான இரண்டு பிரிவுகளான வீட்டுக்காரணி, பாடசாலைக்காரணி என்பன தனித்தனியே எந்த அளவு மாணவரின் விஞ்ஞான அடைவில் செல் வாக்குச் செலுத்துகின்றன என்பதை ஆராய்தல். 3. வீட்டுக்காரணியின் செல்வாக்கு வலுவாக இருக்குமானால், குடும்பப் பருமன், பிறப்பு வரிசைநிலை, வீட்டின் இடவசதிகள், குடும்பத்தின் மனவளர்ச்சிச் சூழல் குடும்பத்தின் வரவு-செலவு மட்டம், குடும்பத்தின் கல்வி மட்டம் என்பன தனித்தனியே விஞ்ஞான அடைவில் செலுத்தும் செல்வாக்கை ஆராய்தல். 4. பாடசாலைக் காரணி வலுவாக இருப்பின், பாடசாலையில் விஞ்ஞானக் கல்விக்காகச் செய்யப்பட்ட பரிசோதனைகளின் அளவும், ஆய்வுகூடப் பயன்பாடும், விஞ்ஞான ஆசிரியர்களின் கல்வித் தொழிற் றகைமைகளும் அனுபவமும், விஞ்ஞான ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளும் தனித் தனியே விஞ்ஞான அடைவில் செலுத்தும் செல்வாக்கை ஆராய்தல்.
கருதுகோள்கள்
இவ்வாய்வில் 16 சூனிய எடுகோள்கள் சோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. இவை மாணவர்களின் விஞ்ஞானக் கல்வி, வீட்டுக்காரணிக்கும், பாடசாலைக்காரணிக்கும் இடையிலுள்ள தொடர்பு, பாடசாலைகளின் விஞ்ஞானக் கல்விக்கான வளங்கள், ஆசிரியர்களின் தகைமை, ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இவை அனைத தும் a=0.05 மட்டத் தல பொருணி மை சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
126

4. ஆய்வு முறை இவ்வாய்வுக்கான தகவல்கள் சேகரிக்கப் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாணவர்களுக்கான கேள்விக் கொத்து
மாணவர்களுக்கான விஞ்ஞான அடைவுப் பரீட்சை
விஞ்ஞான ஆசிரியர்களைப் பேட்டி காண்பதற்கான வினாக்கள்
விஞ்ஞான ஆசிரியரின் கற்பித்தலை மேற்பார்வை செய்வதற்கான முறை
5. கோட்பாட்டு அணுகுமுறை
உலகின் பல்வேறு பாகங்களிலும் சமூகக்காரணிகள் மாணவர் கல்வியடைவில் எந்தளவு செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதை அறியப் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. Wiseman Sophen (1954), என்பவர் இத்தகைய ஆய்வில் ஈடுபட்டார். இவ்வாய்வுகளில் மாணவர்களின் கல்வி அடைவில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளைக் கண்டறிய முயன்று, அதில் சமூகக் காரணிகள் பாரிய செல்வாக்குச் செலுத்துவதை அடையாளம் கண்டனர். Chopra, (1966) என்பவர் மாணவரின் நுண்ணறிவுத் திறனை மாறியாக வைத்து ஆராய்ந்தால் கூட சமூகப் பின்னணியில் சாதக நிலைமை உள்ளவர்களின் பரீட்சைத் தோல்வி மிகக் குறைவு எனக் கண்டறிந்தார். Wiseman இன் ஆய்வுகளின் படி இங்கிலாந்தின் இடைநிலை வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரை பெற்றோர் கரிசனை, மாணவர்கள் பாடசாலைக்குத் தினசரிசெல்லும் ஒழுங்கு, பெற்றோரின் சமூக பொருளாதாரக் காரணிகள், பாடசாலை வழங்கும் கல்விக்கான வளங்கள் என்பன மாணவர்களின் கல்வியடைவில் கூடிய செல்வாக்குச் செலுத்துவதை அவதானித்தார். Allen (1956), Swift (1966) என்போரின் ஆய்வுகளின் படி பொருளாதாரத்தில் மிகக் கீழ்மட்டத்தில் இருப்போர் அதிகமாகக் கல்வியைவிட உழைப்பிற்குத்தான் கூடிய நாட்டம் காட்டுகின்றனர் என்றும், இதனால் பிள்ளைகள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகலுக்கு வழியேற்படுகின்றது என்றும் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் வேறுசில ஆய்வுகள் சமூகக்காரணிக்கும், மாணவரின் அடைவுக்குமிடையில் வித்தியாசமான தொடர்பைக் காட்டுகின்றன. உதாரணமாக Kady Keal (1975) குறைந்த சமூக அந்தஸ்துள்ளவர்கள் கூடிய கல்வி அடைவை அடையமுடியும் என்றும்,
127

Page 71
Jain (1969) என்பவர் சமூகக் காரணிகளின் கல்வி அடைவுக்கிடையில் தொடர்பு இல்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.
6. இலங்கையில் நடைபெற்ற சில ஆய்வுகள்
இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வுகளில் Green (1952) என்பவரின் ஆய்வு முன்னோடியாக இருக்கின்றது. கல்விக்காரணிகளைச் சமூகக் காரணிகளுடன் இவர் தொடர்பு படுத்தினார். Abeyratne (1963) நகர கிராமப்புற பின்தங்கிய மாணவர்களைக் கருத்தில் கொண்டு கண்டி மாவட்டத்தில் ஓர் ஆய்வு செய்தார்.
7. ஆய்வுப் பிரதேசம் எதிர்நோக்கும் கல்விப் பிரச்சினைகள்
இக்கல்வி வலயம் எதிர் நோக்கும் கல்விப் பிரச்சினைகள் பல. பாடசாலை முன் கல்வி, கனிஷ்ட இடைநிலைக்கல்வி, சிரேஷ்ட இடைநிலைக் கல்வி, தொழில் நுட்ப தொழில் சார் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி என்ற பல்வேறு மட்டங்களிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
பாடசாலை முன்கல்வியில் பிரதான பிரச்சினை பயிற்றப்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையாகும். க.பொ.த. (சாத), க.பொ.த. (உ/த) கல்வி கற்ற மாணவிகளுக்கு வேலையற்ற நிலையில் தொழில் வழங்கும் இடங்களாகவே பெரும்பாலும் இவை காணப்படுகின்றன. 9 (5 குழந்தையின் வளர்ச்சியில் முதல் 6 வருடங்களை மிக முக்கிய பருவமாக உளவியலாளர் கருதுகின்றனர். இதில் முற்பகுதி வளர்ச்சி இன்னும் கூடிய முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. குழந்தையின் மூளையின் கலங்களுக்கிடையேயான இணைப்பு, விருத்திக்குரிய பருவமாக இது கருதப்படுகின்றது. குழந்தைகளுக்கு நல்ல புலன் அனுபவங்களை வழங்குவதன்மூலம் சிறந்த புலக்காட்சி பெற்றுக் கொடுக்கவேண்டிய பருவம் இது. இது பற்றிய கருத்து கவனத்திற் கொள்ளப்படாமல் வெறும் பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களாகப் பாடசாலை முன்கல்வி நிலையங்கள் தொழிற்படுகின்றன.
ஆரம்பக் கல்வி நிலையைப் பொறுத்தவரை பிரதான பிரச்சினை பாடசாலையை விட்டு இடைவிலகலாகும். இதற்கு வறுமை, கற்பித்தலில் கவர்ச்சியினம், பெற்றோரின் கல்வி பற்றிய தவறான கருத்துக்கள் போன்ற காரணங்கள் காணப்படுகின்றன. ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசில் போட்டிப்பரீட்சையும்கூட ஆரம்பக் கல்வி மாணவர்கள் மத்தியரில் பல உளவியறி தாக்கங்களை
128

ஏற்படுத்தியுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக இதனால் உருவாகும் தாழ்வு மனப்பான்மை, சுயகணிப்பில் பாரிய செல்வாக்கைச் செலுத்துவதால் பிள்ளையின் கல்வியில் இதன் தாக்கம் கணிசமானதாகும்.
இடைநிலைக் கல்வியைப் பொறுத்தவரை பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு இவ்வலயம் தொடர்ந்து முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அவை பயங்கரவாதப் பிரச்சினை, அதனால் ஏற்பட்ட அமைதியற்றநிலை, மக்கள் குடிப் பெயர்வு, பாடசாலைகள் கொள்ளையடிக்கப்பட்டமை, தமிழாசிரியர் முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்ற முடியாமற்போனமை, போக்குவரத்தில் ஏற்பட்ட தடைகள் ஆகியனவாகும். இச்சூழ்நிலைகள் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தின. 1990ஆம் ஆண்டில் அரசாங்கம் அறிவித்த ஓய்வு பெறுதல் தொடர்பான சலுகைகளைப் பயன்படுத்திப் பெருந்தொகையான பயிற்றப்பட்ட சிரேஷ்ட ஆசிரியர்கள் ஓய்வு பெற்றமையும் மற்றொரு காரணமெனலாம். கல்வி நிர்வாக சேவை, ஆசிரியர் சேவை, பொது நிர்வாக சேவை, இலங்கை விஞ்ஞான சேவை போன்றவற்றிற்கு இவ்வலயத்தைச் சேர்ந்த திறமைவாய்ந்த பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளமையும் இடைநிலைக் கல்வியில் ஒரு பின்னடைவை உண்டாக்கியுள்ளது. ஆனால், தற்போது அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள இலங்கை ஆசிரியர்சேவை அமுல்நடத்தப்படும் போது மேற்படி பாதகமான தாக்கம் குறைய இடமுண்டு.
அநேகமான விஞ்ஞானப்பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு வரும்போது இத்தொழிலை ஒரு இடைநிலையாகக் கருதி, நல்லதொரு உயர் தொழில் கிடைக்கும் வரை தங்கும் இடமாகக் கொள்வதால் தொழில் அக்கறையின்மை ஏற்படுகின்றது. விஞ்ஞானப் பட்டதாரிகளின் தட்டுப்பாட்டிற்கு இதுவும் ஒரு காரணமாகலாம்.
இடைநிலைக் கல்வியின் பின்னடைவிற்கு இன்னொரு பிரதான காரணமாகக் கூறப்படுவது தொண்டர் ஆசிரியர்களின் படையெடுப்பாகும். சில ஆசிரியர் பற்றாக்குறையுள்ள பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர் சேவை அவசியம் என்றாலும் இவர்களில் பெரும்பாலோரின் கல்வித்தரம் மிகத் தாழ்மட்டத்தில் இருக்கின்றமையால் மிகப் பாதகமான சூழ்நிலை காணப்படுகின்றது. தொண்டர் ஆசிரியராகச் சேவையாற்றுவதன் மூலம் தமக்கென ஒரு அரச தொழிலைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் நல்ல சம்பளத்தை எதிர் பாராமல் இவர்கள் பாடசாலைகளில் வலிந்து ஒட்டிக்கொண்டிருக்கின்றார்கள். குறைந்த
129

Page 72
கல்வித்தகைமையுடன் தொழிற் பயிற்சியும் அற்ற இவர்களிடம் உயர் சேவையை எதிர்பார்க்க முடியாது. பாடசாலையில் உள்ள சில சிரேஷ்ட ஆசிரியர்கள் இத்தொண்டர் ஆசிரியர்கள் மீது வேலைப்பளுக்களைச் சுமத்தி விட்டு நேரத்தை வீணே கடத்துவதும் சில பாடசாலைகளில் அவதானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை, சில ஆசிரியர்களின் கவர்ச்சியற்ற கற்பித்தல் முறைகள், போதிய பாட ஆயத்தமின்றிக் கற்பித்தல், சில ஆசிரியர்களின் ஏனோதானோ என்ற மனப்பான்மை, அதிபரின் ஒழுங்கீனமான நிர்வாக முறைகள், மேற்பார்வை முறையின் பலவீனம், அதிபர் நியமன முறைகளில் கையாளப்பட்ட அரசியல் தலையீடுகளும், ஏனைய செல்வாக்குகளும், ஆசிரியர்களின் திறமை மதிப்பீடு இன்மை, முறையற்ற பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் போன்ற பல வேறு காரணிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இடைநிலை, மற்றும் உயர்தரக் கல்வியில் பிரதிகூலங்களை ஏற்படுத்துவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. உயர் கல்வியில் வளப்பற்றாக்குறைவும், பிரத்தியேகக் கல்வி நிலையங்களின் அதிக செல்வாக்கும் பிரதான பிரச்சினைகளாக உள்ளன. சில பாடசாலைகளில் மாணவர் நலன் கருதி அதிபரால் ஏற்படுத்தப்பட்ட விஷேட வகுப்புக்கள் பிரத்தியேகக் கல்வி நிலைய முகாமையாளர்களின் அச்சுறுத்தல்களால் கைவிடப்பட்ட சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. சில பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மேலதிக உழைப்புக்கருதி பிரத்தியேகக் கற்பித்தலில் ஈடுபடுவதுடன் அவ்வகுப்புக்களுக்கு வருமாறு மாணவர்களை நிர்ப்பந்திக்கும் சூழலும் காணப்படுகின்றது.
தொழில்நுட்பக் கல்வியில் அண்மைக்காலங்களில் கனேடியப் பல்கலைக்கழக அமைப்புப் பல்வேறு தொழிற்பயிற்சிகளை அளிப்பதில் கரிசனைகாட்டி வருகின்றது. ஆயினும் இவ்வலயத்தில் உள்ள ஒரேயொரு தொழில்நுட்பக் கல்லுாரி சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லுாரியாகும். இங்கு கணக்கியல் உயர் டிப்ளோமா, வணிகவியல், கணக்கியல் சான்றிதழ், படவரைதற் பயிற்சி, மின்கம்பி இணைப்பு, மரவேலை, இயந்திரக் கைத்தொழில், கட்டட நிர்மாணம், ஆங்கிலச் சான்றிதழ், தட்டச்சு, சுருக்கெழுத்து, தையற் பயிற்சி போன்ற பாடநெறிகள் நடைபெறுகின்றன.
ஆயினும் இக் கல்லுாரியினால் இப்பிரதேச மாணவர்கள் பூரணமான பயன்பெறுவதாகத் தெரியவில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இவற்றுள் முதலாவது காரணம்
130

தொழில்நுட்பக் கல்லுாரி சம்மாந்துறையில் குடியிருப்புப் பிரதேசத்தில் இருந்து விலகி அமைந்துள்ளமையாகும். பயங்கரவாதிகளின் தாக்குதல்களை எந்நேரமும் எதிர்நோக்கும் சூழ்நிலையில் இது அமைந்துள்ளது. அத்துடன் இவ்வமைவிடம் காரணமாக நிந்தவுர், அட்டாளைச் சேனை, அக் கரைப் பற்றுப் பிரதேச மாணவர்கள் போக்குவரத்துப் பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். பயங்கரவாதப் பிரச்சினையால் விரிவுரையாளர்கள் யாழ்தொழில் நுட்பக் கல்லுாரியில் தற்காலிக இணைப்புப் பெற்றுக் கடமையாற்றுகின்றனர். இதனால் விரிவுரையாளர் வெற்றிடங்களைக் கூட இக் கல்லுாரியில் நிரப்பமுடியாதநிலை காணப்படுகின்றது. போதிய தகுதிவாய்ந்த பகுதிநேர விரிவுரையாளர்கள் கூட இப்பிரதேசத்தில் கிடைக்கவில்லை. ஏற்கனவே கட்டிட வளப் பற்றாக் குறையுள்ள இக் கல்லுாரி வளாகத்தினுள்ளேயே அரசியல் செல்வாக்குக் காரணமாக இணைப்புப் பல்கலைக்கழகக் கல்லுாரி ஒன்றும், இலங்கை திறந்த பல்கலைக்கழகக் கற்பித்தல் நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இட வசதி கொண்ட கல்முனைக் கல்வி வலயத்தில் இம்மூன்று கல்வி நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தால் இவ்வலயத்தின் மாணவர்கள் கூடியபயன் பெற்றிருப்பர்.
நீண்ட காலமாக ஆசிரியர் பயிற்சிக் கல்லுாரி ஒன்று அட்டாளைச் சேனையில் அமைந்துள்ளது. இன்று பாடசாலை ஆசிரியர்கள்தான் இக்கல்லுாரியின் பெரும்பகுதி விரிவுரையாளர் இடங்களைத் தற்காலிகமாக நிரப்பியுள்ளனர். கல்விக் கல்லுாரி ஒன்றும் அட்டாளைச்சேனையில் நிறுவப்பட்டு ஆசிரியர் கல்லுாரிக்குப் புறம்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இதுவரை இவ்வலயத்தின் பல்வேறு கல்விப்பிரச்சினைகள் மேலோட்டமாகக் கூறப்பட்ட போதும் இவைகளில் ஒரு பொதுவான தன்மை காணப்படுவதை அவதானிக்கலாம். அதுதான் விஞ்ஞானக் கல்விக்கான வாய்ப்புக் களின் பற்றாக் குறை. இதனாற்றான் பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதியில் சலுகையொன்று இவ்வலயத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
8. ஆய்வு முடிவுகள்
1. பாடசாலை, வீடு ஆகிய இரண்டு காரணிகளும் விஞ்ஞான அடைவுடன் கொணி டுள்ள இணைவுகளுக் கரிடையே 0.05 மட்டத்தல் பொருண்மையான வேறுபாடு இல்லை. அதாவது பாடசாலை, வீடு
13

Page 73
ஆகிய இரண்டு காரணிகளும் மாணவர்களின் விஞ்ஞான அடைவில் பொருண்மையான சம செல்வாக்கைச் செலுத்துகின்றன. இம்முடிவு Calman, JenwkS என் போரின் ஆய்விலிருந்து வேறுபட்டதாக அமைகின்றது. பாடசாலையை விட வீட்டுச் சூழலின் செல்வாக்குப் பொதுவாக மாணவர் கல்வி அடைவில் செல்வாக்குச் செலுத்துவதாகக் அவர்கள் கூறினர்.
2. குடும்பப் பருமன், பிறப்பு வரிசைநிலை, மாணவர்களின் விஞ்ஞானக் கல்வி அடைவில் 0.05 பொருணி மையான செல்வாக் கைச் செலுத்தவில்லை. இவ்வனுமானம் Stefhen (1956), என்போரின் கருத்துடன் உடன்படவில்லை. அவர்கள் குடும்பப் பருமன் கூடும்போது மாணவர் கல்வியடைவு குறைவதாகக் காட்டினர். குடும்பத்தின் பருமன் அதிகரிக்கும் போது குடும்பச்சூழல் கற்றலைப் பாதிப்பதாக அவர்கள் கூறினர். ஆனால் கல்முனைக் கல்வி வலயத்தைப் பொறுத்தவரை இதன் பொருண்மையைச் சோதிக்கச் செய்யப்பட்ட புள்ளிவிபரவியல் பகுப்பாய்வு, குடும்பப் பருமன், பிறப்பு வரிசை என்பவற்றிற்கும் குடும்பத்தின் கல்விக்கான சூழலுக்கும் இடையே பொருண்மையான தொடர்பு இல்லை எனக் காட்டிற்று.
3. குடும்பத்தின் கல்வி மட்டத்திற்கும் பிள்ளையின் விஞ்ஞானக் கல்வி அடைவுக்கும் இடையே a=0.05 மட்டத்தில் பொருண்மையான தொடர்பு இல்லை.
Gadgil and Dedekar (1956) SQ6ð SuŮ66ð Gugb(8BITf6ör உயர் தொழிற்றகமைக்கும் பிள்ளையின் அடைவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் காட்டினும் Chetterjee and Banerjee (1972) என்போரின் ஆய்வுகள் இதை மறுத்துரைத்தன. கல்முனை வலயத்தைப் பொறுத்தவரை சுமார் 60% மான குடும்பங்களில் ஆண்டு 11 அல்லது அதற்கு மேல் விஞ்ஞானம் கற்றவர்கள் இல்லை. இதனால் குடும்ப அங்கத்தவர்களிடம் இருந்து 72% மாணவர்கள் விஞ்ஞான பாடத்தில் பிரத்தியேகக் கல்வி கற்கின்றனர். 4. பாடசாலையில் விஞ்ஞானக் கல்விக்கான வளங்கள் மாணவர்களின் விஞ்ஞான அடைவில் a=0.05 மட்டத்தில் செலவாக்குச் செலுத்தவில்லை.
இவ்வனுமானம் கூடுதலான கவனத்தை ஈர்க்கக்கூடியதாக உள்ளது. வள அதிகரிப்புடன் மாணவர் அடைவு அதிகரிப்பையும் எதிர்பார்ப்பது இயற்கையானதே. இந்நிலையை மேலும் ஆராயும்
132

நோக்கில் பாடசாலைக்குள்ள ஆய்வுகூட வளங்களுக்கும் மாணவர்கள் செய்த பரிசோதனைகளின் எண்ணிக்கைகளுக்கும் இடையேயுள்ள தொடர்பு அவதானிக் கப் பட்டது. ஆயப் வினி படி இவ் விரு மாறிகளுக்கிடையே காணப்பட்ட இணைவுக்குணகம் 0.05 ஆக அறியப்பட்டது. அதன்படி ஆய்வுகூட வளங்களைப் பயன்படுத்தி செய்யப்பட்ட பரிசோதனைகள் மாணவர்களின் விஞ்ஞான அடைவுடன் -0.05 மட்டத்தில் பொருண்மையான தொடர்பைக் காட்டுகின்றன. இதற்கான காரணங்கள் மேலும் ஆராயப்பட்ட போது பின்வரும் விடயங்கள் தெளிவாகின்றன. அ. சில பாடசாலைகளில் ஆய்வுகூட வளம் மிகக் குறைவு. அதனால் பற்றாக்குறையான உபகரணங்களும், இரசாயனப் பதார்த்தங்களும் அண்மையில் உள்ள பாடசாலைகளில்ருந்து இரவலாகப் பெறப்பட்டன. இவ்வாறான இடங்களில் ஆய்வுகூட வளங்களுடன் ஒப்பிடும்போது மாணவர் விஞ்ஞான அடைவு உயர்வாக உள்ளது. ஆ. வேறு சில பிரதேசங்களில் ஆய்வுகூட வளங்களுக்கேற்ப விஞ்ஞான
அடைவும் உயர்வாக உள்ளது. இ. இன்னும் சில பிரதேசங்கள் ஆசிரியரின் தகுதிக்குறைவு ஆசிரியரின் ஆர்வமின்மை, ஆசிரியரின் சக்திக்கப்பாற்பட்ட வேறுபல காரணிகளினால் ஆயப் வுகூட வளங்கள் செம்மையாகப் பயன்படுத்தப்படவில்லை. செய்யப்பட்ட பரிசோதனைகளிலிருந்து இப்பிரதேசங்களில் மாணவர்களின் விஞ்ஞான அடைவு குறைவாக உள்ளது.
இதே விதமான முடிவை இலங்கை முழுவதற்குமாக ஆசிய seholqbg.g5 61st, flu) goTT6) (Asian Development Bank) (psi) (5 செய்யப்பட்ட ஆய்வின் அறிக்கையிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதைவிடப் பின்வரும் முடிவுகளும் இவ்வாய்வில் பெறப்பட்டன.
1. மாணவர்களின் விஞ்ஞானக் கல்விக்கான வாய்ப்புக்களுக்கும்
அவர்களின் விஞ்ஞானக் கல்வி அடைவுக்கும் இடையே இணைவு உண்டு.
2. வீட்டுக் காரணிகளுக்கும் - விஞ்ஞான அடைவுக்கும் இடையே
இணைவு உண்டு.
3. பாடசாலைச் சூழலுக்கும் - விஞ்ஞான அடைவுக்கும் இடையே
இணைவு உண்டு.
133

Page 74
மேலும் பின்வரும் அம்சங்கள் விஞ்ஞான அடைவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. 1. வீட்டில் கல்வி கற்பதற்கான வசதி.
குடும்பத்தின் மனப்பான்மை. குடும்பத்தின் கல்விக்கான சூழல். குடும்பத்தின் வருமானம். பாடசாலையில் செய்யப்பட்ட விஞ்ஞானப் பரிசோதனைகளும்,
ஆய்வுகூடப் பயன்பாடும். 6. ஆசிரியரின் கல்வியும், தொழிற்றகைமைகளும், அனுபவமும், 7. விஞ்ஞான ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளும், கற்பித்தல்
நுட்பங்களும் ஆகும்.
9. ஆய்வின் முடிவுகளும் சிபாரிசுகளும்
இவ்வாய்வின்படி வீடு, பாடசாலை ஆகிய இரண்டும் சம அளவில் மாணவர்களின் விஞ்ஞானக் கல்வி அடைவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவ்விரண்டு இடங்களிலும் கல்வி விருத்திக்கான முயற்சிகள் செய்யப்படவேண்டியது அவசியமாகும். வீட்டில் கல்வி அபிவிருத்திக்கான மனோபாவச் சூழலும், இடவசதியும் மாணவர் அடைவில் சாதகமான விளைவைத் தோற்றுவிக்கும். பெற்றோர் தமது வருமானத்தில் கூடுதலான வீதத்தை விஞ்ஞானக் கல்விக்காக ஒதுக்குதலும் மாணவர் அடைவு விருத்திக்கு உதவும்.
பாடசாலை விஞ்ஞான வளங்கள் பற்றாக் குறையாகக் காணப்படுகின்றன. எனவே ஆய்வுகூட வளங்களும், ஏனைய கல்விசார் வளங்களும் அதிகரிக்கப்படுவதுடன் இவற்றில் இருந்து மாணவர் உச்சப் பயன் பெறக்கூடியவாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மாணவர் செய்ய வேண்டிய பரிசோதனைப் பட்டியல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதில் ஒரு பிரதி காட்சிக்கு வைக்கப்படல் நன்று. ஆய்வுகூடத்தில் வைக் கப்பட்டுள்ள பதிவுப் புத்தகம் ஒன்றிலும் இப்பட்டியல் குறிப்பிடப்பட்டு ஒவ்வொரு பரிசோதனையும் செய்யப்படும் திகதிகள் பதியப்பட வேண்டும். இப்புத்தகம் அதிபரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
134

விஞ ஞான ஆசிரியரின் கல வி தொழிற் றகைமை விருத்திக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும். பாடசாலை நாட்களில் மேலதிகக் கற்பித்தலுக்கான ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும். இதற்காக ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளும் வழங்கலாம். ኦነ
ஆசிரியரின் பாட ஆயத்தம், கற்பித்தல், கற்பித்தல் நுட் பங் களர் தொடர்ந து தகுத வாய நீ த தொழிற்றகைமையுடையோர்களால் மேற்பார்வை செய்யப்பட்டு விருத்திக் கான ஆலோசனைகளும் வழங்கப்பட வேணி டும் . பாடசாலை ஆயத்தம் என்ற பெயரில் ஆசிரியர் எழுதும் குறிப்புக்கள் அனைத்துக்கும் அதிபர் ஒப்பமிடும் சம்பிரதாய வழக்கு நிறுத்தப்பட்டு முறையான பாட ஆயத்தத்திற்கு ஆசிரியர்கள் வழி காட்டப்படல் வேண்டும். கல்முனைக் கல்வி வலயத்தில் அவதானிக்கப்பட்ட ஒரு பொதுவான பண்பு எப்பாடசாலையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்க முறையான பாட ஆயத்தக் குறிப்புக்கள் விஞ்ஞான பாடத்தில் காணப்படவில்லை. பல ஆசிரியர்கள் பாட ஆயத்தமே செயப் வதரில் லை. பாடசாலையில் அதிபரின் முறையான மேற்பார்வையில்லாத காரணத்தினால், பாடசாலைகளில் கற்பித்தல் நுட்பம், ஆய்வுகூடப் பயன்பாடு, ஆயத்தங்கள் என்பன குறைந்த தரத்திலிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
எனவே இறுதியாகக் கூறுவதானால் இவ் வலயத்தில் பாடசாலை மட்டத்தில் மாத்திரமல் ல, வீட்டு வாழ்க் கை நிலைகளையும் உயர்த்துவதன் மூலமே மாணவர்களின் விஞ்ஞான அடைவில் விருத்தி ஏற்படுத்தலாம். அவ்வாறான ஒரு நிலைப்பாடு அடையப்படும்வரை, இக்கல்வி வலயத்திற்கு அளிக்கப்படும் சலுகை வசதிகள் சகல மட்டங்களிலும் தொடர்ந்தும் அளிக்கப்பட வேண்டும்.
135

Page 75
முஸ்லிம்களின் பல்கலைக்கழகக் கல்வி
சோ. சந்திரசேகரம்
1. அறிமுகம்
அணி மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சமூகவியல் ஆய்வுகளின்படி மனிதனின் சமூகநகர்வுக்கான முக்கிய கருவி கல்வித் தகுதியாகும். தனிமனிதன் மட்டுமன்றி ஒரு சமூகத்தைச் சார்ந்த பெரும்பாலானவர்கள் தமது பொருளாதார, சமூக அந்தஸ்தை மேம்படுத்திக் கொள்ள கல்வியையே நாடுதல் வேண்டும் என்ற உணர்வு இன்று பல்வேறு இனக் குழுக்கள்,சமூகப்பிரிவினர் மத்தியில் பரவலாகக் காணப்படுகின்றது. ஆயினும் இலங்கையைப் பொறுத்தவரையில் கல்வித்துறையில் பின்தங்கியவர்களாகக் கருதப்படும் பிரிவினர் மத்தியில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மனப்பாங்கு எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதை நிர்ணயம் செய்யப் புதிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இவ்வாறான புதிய மனப்பாங்கு பொதுவாக மக்கள் மத்தியில் இருப்பதாகக் கூறப்பட்ட போதிலும் இம்மனப்பாங்கில் பல பிராந்திய ரீதியான, இனக்குழு ரீதியான, சமூக வகுப்பு ரீதியான வேறுபாடுகள் இருக்கின்றன. இவ்வாறான வேறுபாடுகள் காரணமாகவே பல்வேறு இனக் குழுவினர் சமாந்தரமான முறையில் கல்வித்துறையில் தேர்ச்சி பெற முடியாதுள்ளது.
வருமான வேறுபாடுகளுக்கான முக் கரிய காரணம் கலி வரித தகுதிகளே என றும் வருமான மட்டதி தறி குமி , கல்வித்தகுதிகளுக்கும் இடையில் நேரடியான இணைப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறியுள்ளபோதிலும் இவ் உண்மை சகல இனக் குழுக்களையும் சென்றடைந்துள்ளதாகக் கூறமுடியாது. மேலும் ஒரு இனக் குழுவினர் பல்வேறு பிராந்தியங்களில் பரந்து வாழுமிடத்து அவர்கள் மத்தியில் இவ்வாறான கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான உளப்பாங்குகளில் வேறுபாடுகள் காணப்படலாம். இவ்வினக் குழுக்களுள் சிலர் கல்வி வளர்ச்சி பெற்ற ஒரு பிராந்தியத்தில் வாழும் போது அங்குள்ள பெரும்பான்மையினரின் உயர்ந்த கல்விப் பாரம்பரியத்தின் செல்வாக்குக்குட்பட்டு கல்வியில் சிறந்து விளங்க முடியும். இவ்விரு இனக் குழுவினரும் ஒரு மொழி பேசுபவராயின் அல்லது ஒரே வகையான கல்வி வசதிகளைச் சிறுபான்மை இனக் குழுவொன்று கல்வி வளர்ச்சியடைந்துள்ள பிரதேசத்தில் வேற்று
136

மொழியைப் பேசி தனியான கல்வி வசதிகளைக் கொண்டு விளங்குமிடத்து அப்பிரதேசத்தின் உயர்ந்த கல்விப் பாரம்பரியம் அவர்கள் மீது செல்வாக்குச் செலுத்தமுடியாமல் இருக்கலாம். இத்தகைய பின்னணியில் இலங்கையில் பரந்து வாழுகின்ற முஸ்லிம்கள் தமது வாழ்க்கை முன்னேற்றத்திற்குக் கல்வியை எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதுகின்றார்கள் என்பது பற்றிய புதிய ஆய்வுகள் அவர்களது கல்வி மேம்பாட்டிற்குத் துணையாக அமையும். இங்கு கல்வித்துறை வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் என்பவற்றைப் பொறுத்தவரை இன விகிதாசாரம் வலியுறுத்தப்படுகின்றது. இதன் முக்கியத்துவம் என்னவெனில் தேசிய ரீதியான அபிவிருத்தியின் பயன்கள் நாட்டின் சகல பிரிவு மக்கள் மத்தியிலும் சமமாகப் பகிரப்படுதல் அவசியம் என்பதேயாம். அரசியல் வலிமை மிக்க ஒரு சாரார் மட்டும் இப்பயன்களை அனுபவிக்க நேரிடுமிடத்து மற்றப் பிரிவினர்கள் தாம் பாரபட்சமாக நடத்தப்படுகின்றோம் என நினைக்கத் தோன்றுவதால் சமூக, அரசியல் நெருக்கடிகள் தோன்றுகின்றன. வாய்ப்புகள் போதுமான அளவு கிடைக் கவிலி லை என்ற முறைப்பாட்டைச் சிறுபான்மை இனக்குழுவினர் மட்டுமல்லாது பெரும்பான்மை இனத்தவரும் கூட முன் வைக்கின்றனர். இத்தகைய பின்னணியினை நோக்குமிடத்துக் கடந்த 50 ஆண்டு கால பல்கலைக்கழக வரலாற்றில் குறிப்பாக முதல் நான்கு தசாப்தங்களில் முஸ்லிம்கள் தமக்குரிய இடத்தினைப் பெறவில்லை என்பதையே தரவுகள் காட்டுகின்றன.
2. Dust absbsfuløst safal
இலங்கையில் பல்கலைக்கழக வளர்ச்சியின் சில அம்சங்கள் கல்வியில் பின்தங்கிய மக்களின் உயர் கல்வி வாய்ப்புக்கும் நலவுரிமைக்கும் எதிராகவே செயற்பட்டு வந்ததைக் காண முடியும். முதலாவதாக, கடந்த 5 தசாப்த காலமாக பல்கலைக்கழக அனுமதி கட்டுப்படுத்தப்பட்டிருந்தமையைக் குறிப்பிட வேண்டும். சனத்தொகையில் உயர் கல்வி வயதெல்லையினர் 1 சதவீதமானவரே பல்கலைக்கழகக் கல்வி பெறுகின்றனர். வளர்முக நாடுகளைப் பொறுத்தவரையில் இது மிகக் குறைந்த மாணவத் தேர்வு வீதமாகும் (Jayaweera, 1991). தெற்கு, தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் இலங்கை உயர் கல்வி முறையில் ஆப்கானிஸ்தான், லாவோஸ் ஆகிய நாடுகளைவிட மட்டுமே சற்று முன்னேறியுள்ளது. இலங்கையில் உயர் கல்வியை நாடுவோர்
137

Page 76
1,50,000 பேர். அவர்களில் 6,500 பேர் மட்டுமே பல்கலைக்கழக, மாகாண பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர். பரீட்சைக்கு அமர்வோரில் 20 சதவீதமானவர்கள் அனுமதி பெறுகின்றனர். பாடசாலையில் 1ஆம் ஆண்டில் அனுமதி பெறுவோரில் 1.9 வீதமானவர் மட்டுமே பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர் (Ministry of Education, 1984 ). இது பல்கலைக்கழக அனுமதிக்கான கடுமையான போட்டி நிலைமையைப் பிரதிபலிக்கின்றது. இவ்வாறான போட்டி நிலையில் காலங்காலமாக கல்வித்துறையில் பின்தங்கி நின்ற முஸ்லிம்கள் மற்றும், இந்திய மரபுவழித் தமிழர்கள் பெரிய பயன்களை அடைந்துவிட முடியாது. இன விகிதாசாரப்படி சிந்தித்தால்கூட ஏறக்குறைய 750 முஸ்லிம் மாணவர்களே பல்கலைக்கழக அனுமதி பெற முடியும். உயர் கல்வி விரிவின் மீதான இக்கட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தால் அடுத்த பத்தாண்டுகளின் முடிவில் 7000 முஸ்லிம் பட்டதாரிகளே உருவாக்கப்படுவார்கள். இவர்கள் எல்லோரும் கல்வியைத் தொடருவார்கள் என்பதற்கு உத்தரவாதம் என்ன? இன்று யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்கள் சென்று பயில முடியாத நிலையொன் றுணர் டு. தெனி னிலங் கைப் பல கலைக் கழகங்களில பல வேறு நிர்ப்பந்தங்களின்மீதே முஸ்லிம் மாணவர்கள் அனுமதியைப் பெற வேண்டிய நிலையுண்டு. இந்நிலையில் மேற்சொன்ன எடுகோளும் பொருத்தமானது. சுருங்கக் கூறின் உயர் கல்வியின் விரிவின்மீதான நீண்டகாலக் கட்டுப்பாடு முஸ்லிம்களின் உயர் கல்வி வளர்ச்சிக்கான ஒரு முக்கிய தடையாகும்.
உண்மையில் பல்கலைக் கழகங்களில் ஆண்டுதோறும் மொத்தமாக எத்தனை மாணவர்கள் அனுமதி பெறுகின்றார்கள் என நோக்குவதைவிட மதிப்புமிக்க பொருளாதாரப் பயனுடைய விஞ்ஞானத் துறை சார்ந்த பயிற்சி நெறிகளில் எத்தனை மாணவர்கள் அனுமதி பெறுகின்றார்கள் என்பது முக்கியமானது. உயர் கல்வியின் விரிவின் மீதான பொதுவான கட்டுப்பாட்டின் பாதிப்பு ஒருபுறமிருக்க இம்முக்கிய பயிற்சி நெறிகளின் விரிவு (உதாரணமாக மருத்துவம், பொறியியல்) மிகக் கூடுதலாக கட்டுப்படுத்தப்படுவதால் பின்தங்கிய குழுக்களைச் சேர்ந்த மாணவர்கள் மிகக் கூடிய பாதிப்பை அடைகின்றனர். உயர்கல்வி விரிவின்மீதான கட்டுப்பாடு அதிகரிக்க அதிகரிக்க மிக உயர்வான அனுமதிப் புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட வேண்டியுள்ளன. இது முஸ்லிம்களும், மற்றும் பின்தங்கிய குழுவினரும் இத்துறைகளில்
138

உயர் கல்வி பெறுவதற்குத் தடையாக உள்ளது.இவ்வாறான நிலைமை நீண்டகாலத்தில் தீங்கான விளைவை ஏற்படுத்துகின்றது. இது முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மைக் குழுவினரை மிக அதிகமாகப் பாதிக்கின்றது. மிகக் கூடிய அனுமதிக் கட்டுப்பாடு மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் நிலவுவதன் காரணமாக கல்வியில் பின்தங்கிய பிரிவினரின் பிள்ளைகள் இப்பயிற்சி நெறிகளில் சேர்ந்து பயில பாடசாலை மட்டத்தில் ஊக்குவிப்பு எதனையும் பெறுவதில்லை. இதன் காரணமாக இப்பயிற்சி நெறிகளைத் தவிர்த்து கலைத்துறை, சமூக விஞ்ஞானம், வர்த்தகத்துறை சார்ந்த பயிற்சி நெறிகளில் சேர்ந்து பயில முற்படும் வாய்ப்புண்டு. இப்பயிற்சி நெறிகளைப் பொறுத்த வரையில் சில உண்மைகள் உண்டு. இப்பயிற்சி நெறிகளைப் பயின்று பட்டம் பெற்றோருக்கு வேலை வாய்ப்புகள் மிகக் குறைவு என்ற நிலை 1960களிலும், 1970களிலும் தோன்றிய ஒரு காலகட்டத்திலேயே கல்வியில் பின்தங்கிய சிறுபான்மைக் குழுவினர் தீவிரமாக இப்பயிற்சி நெறிகளைப்பயில ஆரம்பித்தனர். அத்துடன் இப்பயிற்சி நெறிகள் இன்று உடனடியாக வேலைவாய்ப்புக்களை வழங்கிவிடுவதில்லை. மேலும் இப்பயிற்சி நெறிகள் “வேலைக்கமர்த்தப்பட முடியாத” வேலையற்ற பட்டதாரிகளை உருவாக்குகிறது என்ற முறைப்பாடும் உண்டு. கல்வித்துறையில் நீண்ட காலப் பாரம்பரியமுடைய பிரிவினர்கள் இத்துறைகளிற் சேர்ந்து பயில்வதைத் தவிர்த்து வருகின்றனர். அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே நவீனமான உயர்நிலை, பொருளாதாரப் பயனுடைய பயிற்சி நெறிகளை இனங்கண்டுள்ளனர். இவற்றைக் கல்வியில் பின்தங்கிய சமூகங்கள் இனங்கண்டு பயில முற்படும்போது அவையும் பொருளாதாரப் பயன் குறைந்தவையாகவும், போட்டி மிகுந்தவையாகவும் மாறிவிடக் கூடும். எனவே காலம் தாழ்த்தாது அவற்றை இனங்கண்டு முஸ்லிம் இளைஞர்களையும் பயிலச் செய்ய வேண்டும்.
3. பிற உயர் கல்வி வகைகள்
இலங்கையில் உயர் கல்வி முறையினுடைய மற்றோரு முக்கிய அம்சம் உயர் கல்வி என்பது பெரும்பாலும் பல்கலைக்கழகக் கல்வியையே கருதும் நிலையாகும். பல்கலைக்கழகங்களோடு இணைந்த நிலையில் இயங்கும் பல வேறு உயர் கல்வி நிறுவனங்களிலும் இன்று பல்கலைக்கழக அந்தஸ்து முழுமையாக உள்ளது என்று கூறமுடியாது. உதாரணமாகத் தொழிலாளர் கல்வி
139

Page 77
நிலையம், அழகியற் கல்வி நிறுவனம், உள்ளூர் மருத்துவக் கல்வி நிலையம் போன்றனவாகும். இங்கு பயிலும் மாணவர் பற்றிய புள்ளி விபரங்கள் பல்கலைக்கழகப் புள்ளிவிபரங்கள் பற்றிய ஏடுகளில் தரப் படுவதல  ைல. பல கலை கி கழக அநி த ஸ துடைய பல்கலைக்கழகமல்லாத உயர் கல்வி நிலையங்கள் நாட்டில் வளர்ச்சி பெறவில்லை. இன்றைய மாகாண பல்கலைக்கழகக் கல்லுாரிகளும் முழுமையான அந்தஸ்தைப் பெற்றவை என்று கூறமுடியாது.
பல்கலைக்கழகங்கள் தவிர்ந்த ஏனைய உயர் கல்வி நிலையங்கள் ஒரு வகையான இரண்டாந்தர உயர் கல்வி நிலையங்களாகவே உள்ளன. பல்கலைக்கழகங்கள் அதி உன்னத உயர் கல்வி நிலையங்களாக விளங்க வேண்டும் என்ற கருத்தும் வெள்ளை அறிக்கைகளில் காணப்படுகின்றது (Ministry of Education). இவ்வாறான குறுகிய ஒரு மரபு பல்கலைக்கழகங்களுக்கு உயர் கல்வி அந்தஸ்தை வழங்குகின்றது. அதே வேளையில் அவற்றிற்குச் சமமான உயர் கல்வி நிலையங்கள் வளர்ச்சி பெறுவதற்கும் ஊக்குவிக்கப்படவில்லை. உயர் கல்வியை வழங்குபவை பல்கலைக்கழகங்கள் மட்டுமே என்ற நிலை பின்தங்கிய பிரிவினரின் உயர் கல வரி அபரி லாசைகளை நிறைவு செய் யாது. பல்கலைக்கழகங்களுக்குச் சமமான அந்தஸ்துடைய உயர் கல்வி நிலையங்கள் நிலவுமாயின் உயர் கல்வி விரிவு பெற்றிருக்கும். அத்தகைய விரிவினால் பின்தங்கிய சமூகத்தவர்கள் நன்மை பெற்றிருக்க முடியும். உண்மையில் மரபுவழிப் பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய உயர் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களின் அடிப்படையில் வகைப் படுத்தப் பட்ட புள்ளிவிபரங்களைப் பெறமுடியாதுள்ளது. உ-ம் அழகியல் கல்வி நிறுவனம், உள்ளூர் மருத்துவக் கல்வி நிறுவனம், தொழிலாளர் கல்வி நிறுவனம், திறந்த பல்கலைக்கழகம் போன்றனவாகும். இது பற்றி மற்றொரு ஆய்வாளரும்
iņš 5Tņuļ6ī6TTfi (Gunavardana, 1990).
4. அரசாங்க உயர் கல்வி
இன்றைய பல்கலைக்கழகக் கல்வியும் அரசு சார்ந்த நிறுவன அமைப்பைக் கொண்டுள்ளது. சிறுபான்மையினர் தமது உயர் கல்விக்கு குறிப்பாக விஞ்ஞானத் துறை சார்ந்த பயிற்சி நெறிகளுக்கு (மருத்துவம், பொறியியல்) முற்றாக அரசாங்கப் பல்கலைக்கழகங்களிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது. பிற பொருளாதாரத் துறைகளில்
140

வேகமாகத் தனியார் மயமாக்கம் நடைபெற்றாலும், உயர் கல்வித்துறையில் அதனை விரிவுபடுத்துவதற்குப் பல தடைகள் இருப்பதைக் காணலாம்.
தனியாரால் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் பல்வேறு எதிர்ப்புக்களின் காரணமாக மூடப்பட்டு விட்டன. அரசாங்கம் சார்ந்த உயர் கல்வி என்பது இந்நாட்டில் வேரூன்றிவிட்ட உயர்கல்வி மரபாகிவிட்டது. மதச் சிறுபான்மையினர் தமது பிள்ளைகளின் உயர் கல்விக்காகப் பல்கலைக்கழக அந்தஸ்துள்ள நிறுவனங்களை ஏற்படுத்தும் மரபு உருவாகாத நிலை சிறுபான்மையினரின் உயர் கல்வி வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. திறந்த பொருளாதாரக் கொள்கை, தனியார்மயமாக்கம் என்பவற்றால் சிறுபான்மையினர் பெறக்கூடிய நன்மைகளை அரசாங்க ஏகபோக அதிகாரம் செலுத்தும் உயர் கல்வித் துறையில் பெற முடியாதுள்ளது.
5. பாடசாலைக் கல்வி
சிறந்த பாடசாலைக் கல்வியே உயர் கல்வி வாய்ப்புக்களுக்கு வழிவகுக்கக் கூடிய முக்கிய காரணியாகும். ஆயினும் முஸ்லிம் பாடசாலைகளின் கடந்த கால நிலைமைகளை நோக்குமிடத்து அவை மாணவர்களை உயர் கல்விக்கு ஆயத்தம் செய்யும் தகுதிகளுடன் விளங்கியதாகக் கூறமுடியாது. ஒரு ஆய்வாளரின் கருத்துப்படி, சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்கள் மிகக் குறைவாகக் காணப்பட்டனர். 1985ஆம் ஆண்டில் மொத்தப் பட்டதாரி ஆசிரியர்களில் 3.9% மானவர்களே முஸ்லிம் பாடசாலைகளில் கற்பித்தனர். சிங்களவர் 88.2%, தமிழர் 7.9% . இதன் காரணமாக உயர்தரமான பயிற்சி நெறிகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பு, குறைவாகவே இருந்தது. பிறஇனப் பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது முஸ்லிம் பிள்ளைகளும் குறைவாகவே இருந்தனர் (Gunawardana, 1990) அட்டவணை 1 துறை ரீதியாக பாடசாலைக் கல்வியில் முஸ்லிம் மாணவர்களின் விகிதாசாரப் பங்களிப்பை காட்டுகின்றது.
அத்துடன் பாடசாலை வயதெல்லையுடைய பிள்ளைகளில் தேசிய ரீதியாகப் பாடசாலை செல்லாதவர்களின் விகிதாசாரம் 15 ஆக இருந்தவிடத்து முஸ்லிம் பிள்ளைகளின் விகிதாசாரம் அதனைவிட அதிகமாக இருக்கலாம் என்பது மற்றொரு ஆய்வாளரின் கருத்தாகும் (Ismail, 1990).
14

Page 78
அட்டவணை 1 : க.பொ.த (உத) தரத்தில் பயிலும் மொத்த மாணவர்களில் முஸ்லிம் மாணவர்களின் விகிதாசாரம் 1992. (பாடத்துறை வகைப்படி)
மொத்தமாணவர் தொகை முஸ்லிம் மாணவர் தொகை முஸ்லிம் மாணவர் % விஞ்ஞானப் 47,694 2,526 5.3 856060 79,832 4,729 5.9 வர்த்தகம் 52,362 3,617 6.9
மூலம் பாடசாலை கணிப்பீடு 1992
அத்துடன் முஸ்லிம் மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் வீதமும் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது. 5-13 வயதெல்லையிலுள்ள பிள்ளைகளின் தேசிய இடைவிலகல் வீதம் 22ஆகும். முஸ்லிம் மாணவர்களின் குறிப்பாக பெண் பிள்ளைகளின் இடைவிலகல் வீதம் இதனைவிட அதிகமானதாகும் (Gunawardana, 1990).
வகுப்புக்களில் சித்தியடையாது அதே வகுப்புக்களில் திரும்பக் கறி பது கலி வி மூ வளங் களினி விரயமி எனப் படும் . சந்திராகுணவர்தனாவின் கருத்தின்படி, முஸ்லிம் மாணவர்களின் திரும்பக் கற்கும் விகிதம் சிங்கள, தமிழ் மாணவர்களின் விகிதாசாரத்தை விட அதிகமானதாகும் (Gunawardana, 1990).
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவர் சேர்வு வீதம் குறைவாக இருப்பதற்குக் காரணம் இம்மாவட்டத்தில் கணிசமான முஸ்லிம் பெண் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியில் முழுமையாகப் பங்கு கொள்ளாமையாகும் என்பது சுவர்ணா ஜெயவீராவின் அவதானக் குறிப்பாகும் (Jayaweera, 1985).
முஸ்லிம்கள் கணிசமான தொகையினராக வாழும் அம்பாறை (42வீதம்), மன்னார் (29 வீதம்), மட்டக்களப்பு (25 வீதம்) ஆகிய மாவட்டங்கள் நீண்ட காலமாகக் கல்வித்துறை வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களாகவே இருந்து வந்துள்ளன. கல்வி வளர்ச்சியில் பிராந்திய வேறுபாடுகள் பற்றி ஆராய்ந்தவர்கள் பாடசாலைக் கல்வியின் பல்வேறு அம்சங்களில் இம் மாவட்டங்கள் பிற முன்னேறிய மாவட்டங்களை விட பின்னடைந்து காணப்பட்டதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். குறிப்பாக இடைநிலைக்கல்வி, விஞ்ஞானக் கல்வி, உயர்கல்வி அனுமதி ஆகிய துறைகளில் இம் மாவட்டங்கள் பரிணி ன டை நீ து காணப் பட்டமை இவ் வாய் வுகளிலி
142

சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதில் முக்கிய அம்சம் முஸ்லிம் மக்களின் கணிசமான தொகையினர் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் வாழ நேரிட்டமையும், அதன் காரணமாக அவர்கள் கல்வியில் பின்தங்க நேரிட்டமையுமாகும்.
முஸ்லிம் மக்களின் எழுத்தறிவு வீதம் ஏனைய சிங்கள, இலங்கைத் தமிழ் மக்களைவிடக் குறைவாகவும் இந்தியத் தமிழர்களைவிடச் சற்று அதிகமாகவும் காணப்பட்டது. தேசிய எழுத்தறிவின்மை வீதம் 12.8 ஆகக் காணப்பட்டவிடத்து முஸ்லிம்களின் வீதம் 20வீதமாக அதிகரித்துக் காணப்பட்டது. அத்துடன் 1980 ஆம் ஆண்டளவில் 0.7வீதமான முஸ்லிம் மக்களே பின் இடைநிலைக் கல்வித் தகுதிகளைப் பெற்றவர்களாகக் காணப்பட்டனர் (தேசியவீதம் 1.4) (Junaid, 1990 ).
ஆங்கிலேயர் காலத்தில் ஒரு சில வசதி படைத்தவர்களுக்குக் கல்வியை வழங்க நகர்ப்புறங்களில் ஆங்கிலப் பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. பாடசாலை சென்ற பிள்ளைகளில் 5-10 சதவீதமானவர்கள் இப் பாடசாலைகளில் கல்வி பயின்றனர். ஏனையோருக்குச் சுய மொழிகளில் ஆரம்பக் கல்வி வழங்கப்பட்டது. ஆங்கில மொழி மூலம் இடைநிலைக் கல்வியும், பல்கலைக்கழகக் கல்வியும், மற்றும் உயர் கல்வியும் வழங்கப்பட்டன. ஆங்கிலம் அரசகரும மொழியாக இருந்தமையால் ஆங்கிலக் கல்வி பெற்றோர் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றனர். உயர் கல்வி வாய்ப்புக்களும், ஆங்கிலக்கல்வி பயின்றோருக்கு மட்டுமே வழங்கப்பட்டன. இதனால் ஆங்கிலக் கல்வி பயின்றோர் அதனுTடாகத் தமது சமூகப் பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்திக் கொள்ள முடிந்தது. பிரித்தானியராட்சிக் காலத்தில் கிறிஸ்தவ சமயக் குழுவினர் முன்னின்று விரிவான முறையில் ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவியிருந்தனர். இப்பாடசாலைகள் வழங்கிய ஆங்கிலக் கல்வி வாய்ப்புக்களை ஆரம்பத்திலிருந்தே முஸ்லிம் மக்கள் ஐயத்துடன் நோக்கினர். இப்பாடசாலைகள் காரணமாக முக்கியமாக மதமாற்றப் பணியில் ஈடுபட்டிருப்பதாக அவர்கள் கருதினர் (Junaid, 1990 ). இதன் காரணமாக முஸ்லிம் மக்கள் இப்பாடசாலைகளை நாடவில்லை. இந்நிலைமை இம்மக்கள் மத்தியில் விரிவான நீண்ட காலத்திற்குரிய ஆங் கலக் கல விப் பாரம் பரியம் வளர்ச்சியுறவில் லை. இவ்வாய்ப்புகளைப் பெளத்தர்களும், இந்துக்களும் பயன்படுத்திய அளவுக்கு முஸ்லிம்கள் பயன்படுத்தவில்லை.
143

Page 79
சுதந்திரத்திற்குப் பின் குறிப்பாக 1942ஆம் ஆண்டின் பின் ஏறத்தாழ நான்கு தசாப்தங்களில் பல்கலைக்கழகக் கல்வியில் முஸ்லிம்கள் அதிகம் பங்குகொள்ளாமையை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். 1830களில் இந்தியாவில் ஆங்கிலக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டபோது அந்நாட்டு முஸ்லிம்கள் இதே காரணங்களுக்காக ஆங்கிலக் கல்வி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில தயக்கம் காட்டினர். இதன் நீண்ட கால விளைவாக அவர்கள் கல்வியில் பின்தங்க நேரிட்டது. ஆரம்பத்திலேயே இந்துக்கள் ஆங்கிலக் கல்வி வாய்ப்புக்களை பயன்படுத்துவதில் முன்னின்றனர் (Azeez, 1969).
.ே முஸ்லிம்களின் பல்கலைக்கழகக் கல்வி
1970ஆம் ஆண்டில் தரப்படுத்தலும், அதன் பின்னர் மாவட்ட ரீதியான அனுமதி, பின் தங்கிய மாவட்டங்களுக்குச் சலுகை அடிப்படையில் அனுமதி என்ற புதிய ஏற்பாடுகள் அறிமுகம் செய்யப்படுமுன்னர் 28 ஆண்டுகளாகப் பல்கலைக்கழக அனுமதிக்கு மொத்தப்புள்ளிகளே கருத்தில் கொள்ளப்பட்டன. 1970 வரை பல கலைக் கழகமே மாணவர் அனுமதியையும் அதற்கான தகுதிகளையும் தீர்மானித்தது. 1970இன் பின்னர் அமைச்சரவை மட்டத்தில் அனுமதிக் கொள்கைகள் தீர்மானிக்கப்பட்டன.
1942இல் இலங்கைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட காலம் தொடக்கம் முஸ்லிம்கள் மிகக் குறைந்த கல்வி வாய்ப்புக்களையே பெற்றனர். மாணவர் அனுமதி அவர்களுடைய இன விகிதாசாரத்தை விட மிகக் குறைவாகவே இருந்தது. 1946ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகையில் முஸ்லிம்களின் விகிதாசாரம் 5.6ஆக இருந்தது. 1942ஆம் ஆண்டில் முதன்முலாக மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றபோது முஸ்லிம் மாணவர்களின் விகிதாசாரம் 2.7ஆக (மொத்த மாணவர் அனுமதி 904, முஸ்லிம் மாணவர் 25 பேர்) ஆக இருந்தது (Gunawardana, 1990).
தொடர்ந்து வந்த காலப்பகுதியில் மக்கள் தொகையில் முஸ்லிம் மாணவர்களின் விகிதாசாரம் அதிகரித்துச் சென்ற போதிலும் 1990ஆம் ஆண்டு வரையுள்ள புள்ளிவிபரங்கள் முஸ்லிம் மாணவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே பல்கலைக்கழக அனுமதி பெற்றதைக் காட்டுகின்றன. 1953, 1971 ஆகிய ஆணர்டுகளில் முழுச் சனத்தொகையில் முஸ்லிம்களின் விகிதாசாரம் முறையே 5.7, 6.5 ஆக அதிகரித்துச் சென்றது. மாணவர் அனுமதியில் அவர்களுடைய விகிதாசாரம் 1953இல் 1.7 ஆகவும், 1970இல் 3.1 ஆகவும் இருந்தது.
144

பல்வேறு போதனாபீடங்களில் அனுமதி பெற்ற முஸ்லிம்களின் தொகை இவ்வாறே குறைவாக இருந்திருக்கக் கூடும். 1981ஆம் ஆண்டு வரையுள்ள குடிசன மதிப்பீட்டு ஆண்டுகளின் புள்ளிவிபரங்கள் முஸ்லிம் மாணவர்கள் மிகக் குறைந்த விகிதாசாரத்தில் அனுமதி பெற்றதைக் காட்டுகின்றன. 1981இல் முஸ்லிம்களின் குடித்தொகை 7.4 வீதமாக இருந்தவிடத்துப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றோரில் 3.9 வீதமானவர்களே முஸ்லிம்களாக இருந்தனர்.
1970களில் போதனாபீடங்களின் அல்லது பயிற்சி நெறிகளின் வகைப்பாட்டின்படி பார்க்குமிடத்து கலை, சட்டம் ஆகிய பயிற்சி நெறிகளில் கூட முஸ்லிம் மாணவர்களின் விகிதாசாரம் குறைந்து காணப்பட்டது. இத்துறைகளுடன் விவசாயம், பல்மருத்துவம் ஆகிய துறைகளில் அவர்களுடைய விகிதாசாரம் 1969/70, 1970/71 ஆகிய ஆண்டுகளில் சற்று அதிகரித்தாலும் 1974ஆம் ஆண்டளவில் இவ் வீதாசாரம் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. 1970-1974 காலப்பகுதிகளில் அனுமதி பெற்ற மாணவர்களின் மொத்தத் தொகை 72-130 க்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. 1974இன் மொத்த மாணவர்களில் முஸ்லிம் மாணவர்களின் விகிதாசாரம் உயர்ந்து 3.6 - 8% மாக உயர்ந்து காணப்பட்ட போதிலும் போதுமானதாக இல்லை.
பல்மருத்துவம், விவசாயம், விலங்கு மருத்துவம் போன்ற துறைகளுக்கு 1970-1974 காலப்பகுதியில் மிகக் குறைந்த மாணவர்களே அனுமதிக்கப்பட்டனர். இத்துறைகளில் பெரும் விரிவு ஏற்படவில்லை. எடுத்துக்காட்டாக பல்மருத்துவ மாணவர் தொகை 1970இல் 11 இலிருந்து 1974 இல் 34 ஆகவும், விவசாயத்துறையில் மாணவர் தொகை 17இல் இருந்து 83ஆகவும், விலங்கு மருத்துவ மாணவர் தொகை 5 இலிருந்து 23ஆகவும் அதிகரித்தது. விகிதாசார அதிகரிப்பு அதிகமாயினும் மொத்தத்தில் மாணவர் தொகை குறைவாக இருந்தது. இந்நிலைமையில், இப்பயிற்சி நெறிகளில் சேர்ந்து பயின்ற முஸ்லிம் மாணவர் தொகை 5 ஆண்டுகளுக்கும் 20 பேர் மட்டுமே அனுமதி பெற்றனர்.
7. 1980களில் எற்பட்ட முன்னேற்றம்
1980களில் அனுமதி பெற்ற மொத்த மாணவர்களில் முஸ்லிம் மாணவர்களின் விகிதாசாரம் முன் எப்போதையும் விட நன்கு அதிகரித்துச் சென்றது. 1984 ஆம் ஆண்டின் பின்னர் மொத்த மாணவர்களில் 6 சதவீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம்களாக
145

Page 80
இருந்தனர். குறிப்பாக 1987/88 இல் முஸ்லிம் மாணவர்களின் அனுமதி அவர்களுடைய இன விகிதாசாரத்தையும் கடந்து சென்றமை குறிப்பிடத்தக்கதாகும். 1975-1985 வரை ஆண்டுக்குச் சராசரியாக 300 மாணவர்கள், விகிதாசார அடிப்படையில் 5.5 ஆகவும் அனுமதி பெற்றனர். இவ்வகையில் 1987/88 இல் அவர்களது அனுமதி வீதம் 8 சதவீதத்தைக் கடந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஆயினும் இவ்வாண்டில் கூட உயிரியல்(4.7), மருத்துவம் (3.5), பொறியியல் (5.4) ஆகிய துறைகளில் முஸ்லிம் மாணவர் அனுமதி இன விகிதாசாரத்திற்கு குறைவாக இருந்தது. இந்த ஆண்டில் கலைத்துறை மாணவர்களில் 15.6, முகாமைத்துவ மாணவர்களில் 7.1, சட்டத்துறை மாணவர்களில் 8.5சதவீதமானோர் முஸ்லிம்களாக இருந்தமையும் ஒரு முக்கிய அம்சமாகும். இதற்குக் காரணம் குறிப்பிட்ட காலப்பகுதியில் க.பொ.த.உயர் தரத்தில் பயின்ற மாணவர் தொகையும் கணிசமாக இருந்தமையேயாகும்.
இந்த ஆய்வுக் கட்டுரையில் பயிற்சி நெறி ரீதியாக முஸ்லிம் மாணவர்களின் அனுமதிகளில் அண்மைக் காலங்களில் 1988/89, 1989/90, 1990/91 ஏற்பட்ட முன்னேற்றங்களை 1970 களின் முற்பகுதியிலும், பிற்பகுதியிலும் இருந்து அனுமதி வீதாசாரங்களுடன் ஒப்பிட்டு நோக்கி அறிய முடியும் (அட்டவணை 2).
1970 தொடக்கம் 1974 வரையுள்ள காலப்பகுதியிலி சட்டத்துறையிலும், பல்மருத்துவத் துறையிலும் இரு சந்தர்ப்பங்களில் மட்டும் முஸ்லிம் மாணவர் அனுமதி அவர் தம் குடித்தொகை வீதத்தைக் கடந்து சென்றாலும் (முறையே 10.8, 9.5 வீதம்) ஏனைய விஞ்ஞானம் சார்ந்த கற்கைத்துறைகளிலும், பயிற்சி நெறிகளிலும் அவர்களது அனுமதி விகிதாசாரம் மிகக் குறைவாக இருந்தது. கலைபீபிரிவு அனுமதி 4சதவீதத்தைக் கடக்கவில்லை. இந்த 5ஆண்டு காலப்பகுதியில் மொத்த மாணவர் தொகை குறைந்தது 70 ஆகவும் கூடியது 130 ஆகவும் இருந்தது. மேலும் இந்த 5 ஆண்டு காலப்பகுதியிலும் சகல போதனா பீடங்களிலும் அனுமதி பெற்ற மாணவர் தொகை 486 மட்டுமே. இது முஸ்லிம் மக்களின் குடித்தொகை, அவர்களுக்கான உயர் கல்வித்துறை சம வாய்ப்புக்கள் என்பனவற்றைப் பொறுத்தவரையில் மிகக் குறைவாகும். இதனுடன் ஒப் பரிடும் போது 1987 இனி பரிணி னர் பல வேறு முக் கரிய போதனாபீடங்களில் மாணவர் அனுமதி அதிகரித்தது.
146

அட்டவணை 2 : 1946-1990 வரை முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி
(வீதத்தில்)
அனுமதி முஸ்லிம்
ஆண்டு மாணவர்களின் %
1946 2.8
1947 2.9
1948 2.5
1953 1.7
1954 1.7 1964 2.1
1965 2.0
1969 3.4
1970 3.
1972 2.2
1980/1981 3.9%
1982/1983 4.02%
1983/1984 5.4%
1984/1985 6.0%
1985/1986 6.6%
1986/1987 6.8%
1987/1988 8.9%
1988/1989 7.3%
1989/1990 7.1%
மூலம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் புள்ளிவிபர அறிக்கை
இலங்கை புள்ளிவிபரத்திணைக்கள அறிக்கை
147

Page 81
வரையுள்ள காலப்பகுதியில் 486 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். இவ்வைந்து ஆண்டு காலப்பகுதியில் விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம் ஆகிய பீடங்களுக்கு அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் மாணவர்களின் தொகை முறையே 48, 27, 27 ஆகும். 5ஆண்டு காலப்பகுதிக்கு இது குறிப்பிட்டுக் கூறத்தகுந்த ஒரு வளர்ச்சியல்ல.
1979 ஆம் ஆண்டிற்குரிய புள்ளிவிபரங்கள் முஸ்லிம்களின் உயர் கல்வியில் சில முக்கிய வளர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றன. அனுமதி பெற்ற மொத்த முஸ்லீம் மாணவர் தொகை 205. மொத்த மாணவர் தொகையில் இது 4.4 வீதமாகும். இவ்வீதத்தில் முன்னைய ஆண்டுகளில் ஒருபோதும் முஸ்லிம் மாணவர்கள் அனுமதி பெறவில்லை. முன் கூறப்பட்ட 5 ஆண்டுகளில் (1969-1974) பொறியியல் துறைக்கு 27 மாணவர்கள் மட்டுமே அனுமதி பெற்றவிடத்து 1979 இல் இரு மடங் கா கறி நு. இவ் 5 ஆணி டு காலப் பகுதயரில விஞ்ஞானத்துறைகளுக்கு ஆண்டுக்கு 10 மாணவர் மட்டுமே அனுமதி பெற்றவிடத்து 1979இல் இது மும்மடங்காக அதிகரித்தது.
1970ஆம் ஆண்டின் பின்னர் முஸ்லிம் மாணவர்கள் கலை, மற்றும் வர்த்தகத்துறைகளில் அடைந்த சித்திகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1969இல் அனுமதிக்கப்பட்ட 270 தமிழ் மொழி மூல மாணவர்களில் முஸ்லிம்கள் 94 பேர். 1970/71இல் அனுமதி பெற்ற 252 பேரில் 81 பேர் முஸ்லிம்கள். 1979 இல் கலை, வர்த்தகத் துறைகளுக்கு அனுமதி பெற்ற முஸ்லிம் மாணவர்களின் விகிதாசாரம் முறையே 5.5, 5.0 ஆக அமைந்தது. 1988-90 வரை இடம்பெற்ற மாணவர் அனுமதிகளில் கலை 11வீதத்தையும், சட்டத்துறை 8 வீதத்தையும் எட்டிப் பிடித்தமை குறிப்பிடத் தக்கது. உயர் கல்வித்துறையில் காலங்காலமாக, ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாகப் பின்தங்கி நின்றவர்கள் பல்வேறு வாய்ப்புக்களைப் பயன்படுத்தி முன்னேற முயலும் போது முதலில் சமூக விஞ்ஞானம் மற்றும் கலைத் துறைகளில் அதிக சிதி திகளைப் பெற முடிகிறது. முஸ்லிம்களின் உயர் கல்வி வளர்ச்சியில் இவ் வம்சத்தைத் தெளிவாகக்காண முடிகின்றது. இவர்களுடைய சிரேஷ்ட இடைநிலைக் கல்வி வசதிகள் மேம்படுத்தப்படும் பொழுது கலைத்துறையை விரிவு செய்வது இலகுவாகவும் இருந்தது. இதற்கெனப் பெரிய ஆய்வுகூட வசதிகள் போன்ற தேவைகள் இருக்கவில்லை. அத்துடன்
14s

கலைத் துறை ஆசிரியர்களைப் பொறுத்தவரை ஆசிரியர் பற்றாக்குறையைக் குறைப்பதும் இலகுவாக இருந்தது. கலைத்துறை ஆசிரியர்களைத் தமது சமூகத்துக் குள்ளேயே பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. இந்திய மரபுவழித் தமிழரின் பின் தங்கிய உயர் கல்வி நிலையில் ஏற்பட்ட மிகச் சில முன்னேற்றங்களும் கலைத் துறையிலேயே ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உயர் கல்வித்துறையில் நீண்ட காலமாக முன்னேறியிருந்த சமூகங்கள் கலைத்துறைப்பயிற்சி நெறிகளின் பொருளாதார நன்மைகள் குறைந்தவிடத்து அவற்றை ஓரளவிற்குக் கைவிட்டு, நன்மை தரும் விஞ்ஞானப் பயிற்சி நெறிகளில் சேர்ந்து பயில முற்பட்ட போது கலைத்துறைக்கான அனுமதி வாய்ப்புக்கள் இவர்களுக்குக் கிட்டியது.
பல்கலைக்கழக அனுமதியில் முஸ்லிம்களைப் பொறுத்தவரை அண்மைக் காலங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களை இன்னொரு வகையாக நோக்கலாம். 1984/85, 1990/91 ஆகிய இரு அனுமதி ஆண்டுகளை ஒப்பிட்டு நோக்குமிடத்து சில முக்கிய முன்னேற்றங்களை அறிய முடிகின்றது. 1984/85 ஐ விட 1990/91 இல் மொத்த மாணவர் தொகை 23 சதவீதத்தால் அதிகரித்தவிடத்து முஸ்லிம் மாணவர் தொகை 94 சதவீதத்தால் அதிகரித்தது. (304இல் இருந்து 590ஆக) முக்கியமாகக் கலை (88இலிருந்து 252 ஆக), வர்த்தகம் முகாமைத்துவம் (41 இலிருந்து 114ஆக) துறைகளில் அதிகரிப்பு ஏற்பட்டது. இதேபோன்று சட்டம், உயிரியல் விஞ்ஞானம், பெளதீக விஞ்ஞானம், விவசாயத்துறைகளில் முக்கிய அதிகரிப்புக்களைக் காண முடிகின்றது. ஆயினும் மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் இவ்வைந்தாண்டு கால இடைவெளியைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்கதன்று (மருத்துவம் 20இலிருந்து 29, பொறியியல் 22இலிருந்து 27) (அட்டவணை 3).
அண்மைக்காலங்களில் மாணவர்கள் அனுமதி பின்வரும் அடிப்படையில் நடைபெறுகின்றது. l, திறமைச்சித்தி-40% 2 மாவட்ட ரீதியான அனுமதி 55% 3, பின்தங்கிய மாவட்டம் 05%
1988-90 வரையுள்ள 3 ஆண்டுகளில் கல்வி வளர்ச்சியல முக்கியத்துவம் வாய்ந்த போக்கினைக் காணமுடிகின்றது. முதலிரு ஆண்டுகளில் எறக்குறைய 19சதவீதமான முஸ்லிம் மாணவர்களே
149

Page 82
திறமைச் சித்தியின் அடிப்படையில் அனுமதி பெற்றனர். மற்றவர்கள் மாவட்ட அனுமதிக் கொள்கையினால் நன்மை பெற்றவர்களாவர். இதற்கு முன்னைய ஆண்டுகளிலும் இக் கொள்கைகளே அவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. ஆயினும், 1990/ 91இல் ஒரு முக்கிய வளர்ச்சியைக் காண முடிகின்றது.
அதாவது இவ்வாண்டில் அனுமதி பெற்ற மாணவர்களுள் 53.6 சதவீதத்தினர் திறமைச் சித்தியின் அடிப்படையில் அனுமதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒரே ஆண்டில் இவ்வளர்ச்சி 34 சதவீதத்தால் அதிகரித்தது. அவ்வாறே இவ்வாண்டில் அனுமதி பெற்ற சிங்கள, தமிழ் மாணவர்களின் விகிதாசாரமும் 50 சதவீதத்திற்கு மேற்பட்டதாக அதிகரித்தது. திறமைச் சித்தியின் அடிப்படையில் கலைத்துறைக்கு அனுமதி பெற்ற மாணவர்களின் தொகையில் ஏற்பட்ட அதிகரிப்பே இவ் விகிதாசார அதிகரிப்பிற்குக் காரணமாக அமைந்தது (211பேரில் 186 திறமைச் சித்தியில்). இந்நிலையில் விஞ்ஞானத்துறை, மருத்துவம், பொறியியல், விவசாயம் ஆகிய துறைகளில் அனுமதி பெற்ற பெரும்பாலான மாணவர்களுக்கு மாவட்ட அனுமதிக் கொள்கை பயனுடையதாக இருந்தமையைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. முஸ்லிம்கள் பல மாவட்டங்களில் செறிந்து வாழுகின்றனர். முஸ்லிம் மாணவர்களின் மாவட்ட ரீதியான அனுமதி விபரங்கள் கிடைக்கவில்லை. அவர்கள் மிகக் குறைவாக வாழும் மாவட்டங்களில் எவ்வாறு மாவட்ட ரீதியாக அனுமதிக் கொள்கையின் மூலம் நன்மையடைய முடிந்தது என்பது பற்றிக் கூறுவதற்கில்லை.
தரவுகளின்படி அண்மைக்காலங்களில் பல்வேறு விஞ்ஞானப் பயிற்சி நெறிகளில் முஸ்லிம் மாணவர்கள் அனுமதி பெறுவதற்குப் பின்தங்கிய மாவட்டங்களுக்கு வழங்கப்படும் அனுமதிச் சலுகைகள் உதவியுள்ளன எனத் தெரிகின்றது. 1990/91இல் மருத்துவம், பொறியியல், விவசாயம் ஆகிய துறைகளில் அனுமதி பெற்ற முஸ்லிம் மாணவர்களில் பெரும்பாலானோர் பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். உயிரியல் மற்றும் பெளதீக விஞ்ஞானத்துறைகளில் அனுமதி பெற்றோரில் 40 வீதமானவர்கள் இம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இச்சகல விஞ்ஞானப் பயிற்சி நெறிகளிலும் அனுமதி பெற்ற 118 முஸ்லிம் மாணவர்களில் 64 பேர் இத்தகையோராவர். 1988/89 இல் 52பேர் இவ்வகையினர். சுருங்கக் கூறின் பின்தங்கிய மாவட்ட அனுமதிக் கொள்கை முஸ்லிம் மாணவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கியுள்ள அதே வேளையில் இப்பயிற்சி நெறிகளில்
150

»ooooo issi owo, wo »
0000000qofioșteosoợn roos@7úLɔɔ Ɛ000000ரமணிஷ09ற9gாதி903 0000000qofioș09099ợn quaesirūs. ~ 20000Z0對헌리制 1000000ņofioș09099ợn Qoqoņ(sloạĥo 0000000qofioș09099ợn suoliso |0|0000qofioș09099ņģfi shloĝųnomắ ĶĪ 3는0Z|Ɛį.Įoĥoș09099ợTI QIQ909$IIIIII?) ty000000qofioș09099ợTI Qhqiĥ1190) qī£$1.019 | Qormųjųn-a | aprīņos físē sāīēĒĢĒTĪĢīēFTĘīīīīīīīīīī5Ipohjoifisoopoeus(g. 0000000ȚgfigęœusoņTIIGQ90||0||0||0 |Z00000Ļofięș0099ợn sấịss 0000000qofioș009@tgn罪 0000000自9699009宿n副@@ 00!}Ɛ?0Įoĥoș009@tyrıņotosițilosoofię 0000000ņoĥoș0099ợrıņŲslog 0000000헌리司制制制월 0000Þ|0Įofioș0099ợnĻIŅ09$IIIIII?) 000000ţ,ഴിഴഴ്സഢഴ്ന്നി്വഴ9 qqe3部「尼m劑劑劑홍TT정FT劇TT공리헌TT회최홍희IpoĘofiooQoooooopri
0000SLLLLLLL LLL LTH SLLLLLLLLL LLLLL LLLLLL LLLL LLLLLLLSLLLLLLLCL LLLLLLSL
151

Page 83
அனுமதி பெற இக் கொள்கையில் மிகக் கூடிய அளவுக்குத் தங்கியிருக்கும் நிலை, விஞ்ஞானக் கல்வியில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கியிருப்பதையே காட்டுகின்றது.
இறுதி 3 ஆண்டுகளுக்கான புள்ளிவிபரங்களின்படி முஸ்லிம் பெண்களும் கணிசமான வீதத்தில் உயர் கல்விக்கு அனுமதி பெற்றுள்ளனர். 1989 இல் அனுமதி பெற்றோரில் பெண்கள் 37 சதவீதமாகும். தொடர்ந்து வந்த ஆண்டுகளிலும் ஏறக்குறைய இதே வீதத்தினர் அனுமதி பெற்றனர். ஆயினும் இவ்வதிகரித்த வீதத்தில் பெரும்பகுதி கலைத்துறை சார்ந்ததாகும். உயிரியல் தவிர்ந்த ஏனைய விஞ்ஞானத் துறைகளில் அவர்கள் தொகை மிகக் குறைவு.
முஸ்லிம் மாணவர்களின் தொகை படிப்படியாக அதிகரித்து வந்த போதிலும் மாவட்ட வகைப்படியான அனுமதி விபரங்கள் தெரியவில்லை. குறிப்பாக முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற மாவட்டங்களில் அவர்கள் எந்த அளவிற்கு உயர் கல்வி வாய்ப்புக் களைப் பெறுகின்றனர் என்பது தெரியவில்லை. எடுத்துக்காட்டாக நுவரெலியா, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, மொனராகலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களின் மக்கள் தொகையில் முஸ்லிம்களின் வீதம் 3க்கும் குறைவாகும். இம்மாவட்டங்களிலிருந்து எத்தனை முஸ்லிம் மாணவர்கள் பல்கலைக்கழகம் வருகின்றார்கள் என்பது கண்டறிய முடியவில்லை. கட்டுரையாளரின் கருத்துப்படி, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களில் வாழும் முஸ்லிம் மாணவர்கள் அதிக அளவில் பல்கலைக்கழக அனுமதி பெற்றிருக்கக் கூடும். சுருங்கக் கூறின், முஸ்லிம் மாணவர்களின் அனுமதியில் பிராந்திய வேறுபாடுகள் இருக்கக் கூடும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தமது புள்ளிவிபர அறிக்கையில் இவ்விபரங்களைத் தருவது பயனுடையதாக இருக்கும்.
இலங்கையில் திறந்த பல்கலைக்கழகம் தவிர 8 "தேசிய” பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. முஸ்லிம் மாணவர்கள் யாழ் மற்றும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் நிலை இன்றில்லை. தென்னிலங்கையில் பேராதனை, கொழும்பு தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிமூலப் பயிற்சிநெறிகள் இல்லை. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மானிடவியல், கல்வியியல் பயிற்சிநெறிகள் மட்டுமே தமிழில் நடத்தப்பட்டன. தற்போது இங்கு கலைத்துறை, முகாமைத்துவத் துறை ஆகியவற்றில் இடம் பெயர்ந்த முஸ்லிம் மாணவர்களுக்கெனத் தமிழ் மூலப் பயிற்சி நெறி
1S2

நடத்தப்படுகின்றது, இதுவும் ஒரு நிரந்தர ஏற்பாடாகத் தெரியவில்லை. பல வேறு நிர்ப் பந்தங்களின் காரணமாகவே இவ் வசதிகள் வழங்கப்பட்டன. சுருங்கக் கூறின் 1984உடன் ஒப்பிடும் பொது 1991 இல் 8 பல்கலைக்கழகங்களில் இரு பல்கலைக்கழகங்கள் மட்டுமே முஸ்லிம்களுக்கு உயர் கல்வி வாய்ப்பினை ஓரளவிற்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் நாட்டில் பரந்து, பல வேறு மாவட்டங்களில் வாழும் முஸ்லிம் மாணவர்களின் உயர் கல்வி தூர இடங் களி லி உள் ள இரு பல கலைக் கழகங் களு கி கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் தூரப்பிரதேசங்களிலுள்ள மாணவர்கள் சிலர் உயர் கல்வி அனுமதியைக் கைவிடக் கூடும். L6) சிரமங்களுக்கிடையில் அனுமதி பெறும் முஸ்லிம் மாணவர்கள் இடையில் விலகவும் நேரிடலாம். அத்துடன் முஸ்லிம் மாணவர் அனுமதி பெற இயலாத பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் புதிய பயிற்சிநெறிகளில் சேர்ந்து பயில அவர்களுக்கு வாய்ப்பில்லை. பட்டப்பின்படிப்புத் துறையிலிருந்து ஒரு எடுத்துக்காட்டைக் கூறலாம். கல்வியியல் துறையில் முதுமானிப் பயிற்சி நெறிகள் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மூலம் வழங்கப்படுகின்றன. தமிழ் மொழி மூல முஸ்லிம் பட்டதாரி ஆசிரியர்கள் அம்மொழியில் முதுமானிப் பயிற்சி நெறியைப் பயில இன்று வாய்ப்பில்லை.
இன்று பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் பட்டமேற்படிப்பு நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவம், விவசாயம், முகாமைத்துவம் ஆகிய துறைகளில் 1989/90 இல் 712 மாணவர்களைத் தெரிவு செய்திருந்தனர் (மருத்துவம் 251, விவசாயம் 248, முகாமைத்துவம் 213). இந்நிறுவனங்கள் பட்டப் பின்படிப்பு டிப்ளோமோ, முதுகலைமாணி, கலாநிதி ஆகிய பயிற்சி நெறிகளை வழங்குவன. இவ்வாறான உயர் மட்ட கல்வி வாய்ப்புக்களை முஸ்லிம் மாணவர்கள் எந்தளவிற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என அறிய முடியவில்லை. பட்டதாரி ஆசிரியர்கள் பயிலக் கூடிய கல்வியியல் பட்டப்பின்படிப்பு, டிப்ளோமா பயிற்சி நெறிகளைத் தற்பொழுது முஸ லிம் ஆசிரியர்களுக்குக் கொழும்புப் பல கலைக் கழகம் மட்டுமே வழங்கிவருகின்றது. இப்பயிற்சி நெறியைப் பொறுத்தவரையில் திறந்த பல்கலைக்கழகமும் தேசிய கல்வி நிறுவனமும் அவர்களுக்கு விரிவான வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் பயிற்சி நெறிக்கு 25 பேர் வரையில் மட்டுமே அனுமதி
153

Page 84
பெற முடிகிறது. மேலும் இப்பல்கலைக்கழகத்தில் நடாத்தப்படும் சில புதிய பயிற்சி நெறிகள் சிங்கள மொழிமூலம் மட்டுமே நடைபெறுகின்றன (அவையாவன சமுதாய அபிவிருத்தி, உளவியல், கல்வி வழிகாட்டலும் ஆலோசனை கூறுதலும் போன்ற துறைகளில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பயிற்சி நெறிகள்) இப்பயிற்சி நெறிகளில் முஸ்லிம்கள் சேர்ந்து பயிலவில்லை.
1991ஆம் ஆண்டில் பொதுநல அமைப்பு நாடுகளின் பல்கலைக்கழக ஆண்டறிக்கையின்படி இலங்கையில் பணிபுரியும் எறக்குறைய 2000 பல்கலைக்கழக ஆசிரியர்களில் 29 பேர் மட்டுமே முஸ்லிம்களாவர். இவர்களில் 6பேர் பெண்கள், இராசயனம், வர்த்தகம், பொறியியல் மற்றும் விஞ்ஞான பாடங்களில் விரிவுரையாளர்கள் மிகக் குறைவு. இவர்களில் 7 பேர் அரபு மொழி விரிவுரையாளர்கள். மரபு வழியாக முஸ்லிம்கள் கல்வித்துறையில் பின்தங்கியிருந்தமையால் ஏறத்தாழ 4 தசாப்தங்களாக இவர்கள் மத்தியில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் உருவாகவில்லை. 29 பேரில் பெரும்பாலானோர் 1980களில் இறுதியில் பதவிக்கு வந்தவர்களாவர். இதன் காரணமாக 29 பேரில் பெரும்பாலானவர்கள் கனிஷ்ட நிலையிலேயே பணிபுரிகின்றனர் எனக் கருத இடமுண்டு. இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் சமூகப் பொருளாதார நிலைமைகள், வரலாறு, கலாசார அம்சங்கள் மற்றும் இன்னோரன்ன விடயங்களில் ஆய்வுகளைச் செய்து அச்சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிகோலவும் அம்மக்களுக்கு அறிவு பூர்வமான தலைமைத்துவத்தை வழங்கவும் தேவையான சமூக அறிவியல், மனிதப்பண்பியல் துறை சார்ந்த அறிஞர்கள் பற்றாக்குறையாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் சமூக, பொருளாதார, கல்வித்துறைகளில் பின்தங்கிய நிலையிலிருப்பதற்கு இந்நிலைமையும் ஒரு காரணமாகும். மற்றொரு சிறுபான்மைக் குழுவினரான இந்திய மரபுவழித் தமிழருக்கும் இது பொருந்தும்.
இன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் வருகின்ற திறந்த பல்கலைக்கழகம், உயர் நிலைத்தொழில்நுட்பக் கல்லுாரிகள் போன்றவற்றில் பயிலுகின்ற உயர் கல்வி நிலை மாணவர்களைப் பொறுத்தவரையில் இன வகைப்படியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இவ்வகை நிலையங்களில் அனுமதி பெறும் முஸ்லிம் மாணவர் தொகையை உயர் கல்வி அதிகார பீடங்கள், தமது அறிக்கைகளில் தெரிவித்தால் பயனுடையதாக இருக்கும்.
154

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் புள்ளிவிபரத்திரட்டில் உள்ள மற்றொரு குறைபாட்டையும் சுட்டிக் காட்ட வேண்டும். மாணவர்கள் அனுமதி பெறும் சந்தர்ப்பங்களில் மட்டும் அவர்கள் பற்றிய இன அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட தகவல்கள் முறைப்படியாகத் தரப்பட்டுள்ளன. (அங்கும் கூட ஒரு முக்கிய சிறுபான்மைப் பிரிவினரான இந்திய மரபுவழித் தமிழர் பற்றிய தரவுகள் இலி லாமை ஒரு முக் கரிய குறைபாடாகும்). ஆயினும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மொத்த மாணவர் தொகை இன வகைப்படியாகத் தரப்படாமை ஒரு முக்கிய குறைபாடாகும். ஒவ்வொரு ஆண்டும் சேர்கின்ற மாணவர் தொகை இன வகைப்படியாக இனம் கண்டு 4 ஆண்டுகளுக்கான அவர்களின் மொத்தத் தொகையை கூட்டி அறிவதில் பயனில்லை. ஏனெனில் மாணவர்கள் 3, 4, அல்லது 5 ஆண்டுகளுக்குக் கல்வி பெறுவதாலும், சிலர் கல்வியை இடையில் நிறுத்தியிருக்கக் கூடும் என்பதாலும் அவ்வாறான புள்ளிவிபரங்கள் அதிகம் பயன்படாது. எனவே மொத்த மாணவர் தொகையை இன வகைப்படி ப. மா. ஆ. குழு வழங்க ஆவன செய்ய வேண்டும்.
இன்று 9 மாகாணங்களிலும் ஒவ்வொரு மாகாணக் கல்லுாரிகள் அமைக்கப் பட்டுள்ளன. உயர் கல்விபெற 9000 மாணவர்களை அனுமதிக்கும் திட்டமும் உண்டு. இவ்வாறு மாணவர் தொகை அதிகரிக்கும் போது ஏறத்தாழ 700 முஸ்லிம் மாணவர்கள் அனுமதி பெற வாய்ப்புண்டு. அத்துடன் முழுமையான 3 அல்லது 4 ஆண்டு கால உயர் கல்விப் பயிற்சிநெறியை வழங்காத இம்மாகாணக் கல்லுாரிகளுக்கு எத்தனை முஸ்லிம் மாணவர்கள் அனுமதிக்கப்பட உள் ளார் களர் என ப ைதயும் நோக க வேணி டு மி , பல்கலைக்கழகங்களுக்கும் மாகாணக் கல்லுாரிகளுக்கும் இடையில் மாணவர்கள் முறையாகப் பகிரப்படுகின்றார்களா? என்பதையும் அவதானிக்க வேண்டும்.
1981ஆம் ஆண்டிற்கான புள்ளிவிபரப்படி முஸ்லிம்களில் 5வீதமானவர்கள் (55,000 பேர்) வடக்கு மாவட்டங்களில் வாழ்ந்து வந்தனர். வடக்கின் பல்வேறு நிலைமைகள் காரணமாக அவர்கள. தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்து அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அவர்களுடைய உயர் கல்விநிலை மிகவும் பின் தங்கியுள்ளது. இவர்களுடைய இன்னலான நிலைமைகள் காரணமாக வடமாகாணப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களில் பலர் தமது உயர் கல்வியை இடைநிறுத்தியிருக்கக் கூடும்.
155

Page 85
சிறுபான்மைப் பிரிவினர்கள் அரசாங்க உயர் கல்வி நிலையங்களில் மட்டுமே தங்கியிருக்க வேண்டிய நிலை இருந்து வந்துள்ளது. தனியாரும், சிறுபான்மை இனத்தவரும், தமக்கென உயர் கல்வி நிலையங்களை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்தியாவில் சிறுபான்மையினர் தமது உயர்கல்வி மேம்பாட்டுக்கென பல்கலைக்கழகங்களுடன் இணைந்த கல்லுாரிகளை ஏற்படுத்திக் கொள்ள அரசியல் சட்டத்தில் இடமுண்டு. இதனால், இந்தியாவில் முஸ்லிம்கள் தமக்கென இணைப்புக் கல்லூரிகளை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. இன்று நளிமியா நிறுவனம் போன்றன இவ்வாறான இணைப்புக் கல்லுாரியாக வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இன்றுள்ள மாகாணக் கலி லுாரிகளையும் அரசாங் கமே ஏறி படுத் தரியுள் ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஆயினும் இன்றைய உயர் கல்விச் சட்ட ஏற்பாடுகளின்படி இவ்வாறான தனியார் உயர் கல்விநிலையங்களை ஏற்படுத்த இடமுண்டு. இவ்வாறான வாய்ப்புக்கள் பற்றி முஸ்லிம் கல்வி இயக்கங்கள் சிந்தித்தல் வேண்டும்.
இந்த நாட்டின் மூன்றாம் நிலைக்கல்வியை ஊக்குவிக்க ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. (மூன்றாம் நிலைக் கல்வி நிலையங்களாவன ஒரு வகை பல்கலைக்கழகம் சாராத உயர் கல்வி நிலையங்களாகும்.) இவ்வாணைக்குழுவின் மதிப்பீட்டின்படி இலங்கையில் மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வி வழங்கும் கல்வி நிலையங்கள் 3000 உள்ளன.
அவற்றில் தனியார் கல்வி நிலையங்கள் 1000, அரசுத்துறை கல்வி நிலையங்கள் 1750, அரசாங்கமல்லாத அமைப்புக்களின் நிலையங்கள் 250. இவ்வாணைக்குழு 3000 நிலையங்களில் 2000நிலையங்களை இனங்கண்டுள்ளது. அவற்றில் 700 நிலையங்களை இவ்வாணைக்குழு பதிவு செய்யவுள்ளது. இந்த 700 கல்வி நியைங்களும் 1,00,000 மாணவர்களுக்கு 400வகையான பயிற்சி நெறிகளை வழங்கி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கல்விச் செயற்பாட்டில் முஸ்லிம் மாணவர்கள் எந்தளவுக்கு பங்கு கொள்கின்றார்கள் என்பதற்கான தரவுகள் கிடைக்கவில்லை. இதனை முஸ்லிம் இயக்கங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இன்று வழமையான பல்கலைக்கழகப் பயிற்சி நெறிகள் தவிர்ந்த ஏனைய பல நவீன துறைகளில் (கம்பியூட்டர், கணக்கியல், தொழில்நுட்பவியல் போன்றன) பயிற்சிநெறிகள் வழங்கும்
156

நிலையங்கள் இவற்றில் அடங்குவன. இவ்வாறான துறைகளில் சேர்ந்து பயிலுவதால் வேலைவாய்ப்புக்கள் இலகுவாகக் கிட்டுகின்றன. மாணவர்கள் மத்தியிலும் இவற்றைப் பயிலுவதில் ஊக்கம் காணப்படுகின்றது. முஸ்லிம்கள் இப்பயிற்சி நெறிகளையும் அவற்றை வழங்குகின்ற நிறுவனங்களையும் இனங்கண்டு பயன்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும்.
8. முடிவுரை
முஸ்லிம்கள் பல்கலைக்கழகக் கல்வியில் ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக மிகவும் பின்தங்கியிருந்த போதிலும் 1980களில் சில முக்கிய முன்னேற்றங்களைக் காணமுடிந்தது. 1980களின் இறுதியில் முஸ்லிம் மாணவர் அனுமதி அவர்களது இன விகிதாசாரத்தைக் கடந்து சென்றமையும் ஒரு முக்கிய் அம்சமாகும். ஆயினும் விஞ்ஞானத்துறை சார்ந்த பயிற்சி நெறிகளில் அவர்களின் அனுமதி இன விகிதாசாரத்தை எட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சி நெறிகளில் அனுமதி பெற்ற மாணவர்கள் பெருமளவுக்கு மாவட்ட அனுமதி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டமையும் மற்றுமொரு முக்கிய அம்சமாகும். இறுதியான அனுமதியாண்டில் (1991 இல்) மட்டுமே மாவட்ட அனுமதியின் அடிப்படையில் அனுமதி பெற்ற மாணவரை விடத் திறமைச் சித்தியின் அடிப்படையில் அனுமதி பெற்ற மாணவர்களின் தொகை முதன்முதலாக அதிகரித்திருந்தது. இது ஏனைய இனத்தவருக்கும் பொருந்தும்.
எவ்வாறாயினும் முஸ்லிம் மாணவரைப் பொறுத்தவரையில் மாவட்ட ரீதியான அனுமதிக் கொள்கை சில நன்மைகளைக் குறிப்பாக விஞ்ஞான, தொழிற்றுறைப் பயிற்சி நெறிகளில் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் மாவட்ட ரீதியான அனுமதிக் கொள்கை பல பிரிவினராலும் பல்வேறு காரணங்களுக்காகக் கண்டிக்கப்பட்டு வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக ஒரு மாவட்டத்தின் குடித் தொகைக்கேற்ப மாணவர் தொகையைத் தீர்மானிப்பது பொருத்தமற்றது. இவ் விரு விடயங்களும் தொடர்பற்றவை. க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு அமரும் மாணவர் தொகையுடன் தொடர்புபடுத்தி அந்தந்த மாவட்டத்திலிருந்து அனுமதி பெறும் மாணவர் தொகையைத் தீர்மானிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.

Page 86
இந்நிலையில் எதிர் காலத்தில் மாவட்ட அனுமதிக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. மாவட்ட ரீதியான அனுமதி பெறும் மாணவர்களுடைய தொகை குறைக் கப் படும் நிலையுமுனி டு. இநீ நிலைமைகளைக் கருத்தில் கொண்டு க.பொ.த. உயர் நிலை வகுப்புக் களைக் கொண்டிருக்கும் பாடசாலைகள் அவ்வகுப்புக்களில் கற்றல், கற்பித்தல் சூழல், பாடசாலைகளில் கிடைக்கக்கூடிய வளங்கள், ஆய்வுகூட வசதிகள், ஆசிரிய வளங்கள், போதிய மேற்பார்வை போன்ற அம்சங்களை இப்பொழுதிலிருந்தே வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் பல்கலைக்கழக வாய்ப்புக்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நுணுகி நோக்குமிடத்து கூடியளவிற்கு அத்தகைய முன்னேற்றங்கள் கலை, முகாமைத்துவம், வர்த்தகம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ளமையைக் குறிப்பிட வேண்டும். இதற்குரிய காரணமாக உயர் கல்வியில் ஏற்கனவே முன்னேற்றங்கண்ட பிரிவினரின் ஆர்வமும், ஆற்றலும் மிக்க மாணவர்கள் பொருளாதார வாய்ப்புகள் நிறைந்த ஏனைய விஞ்ஞானத் துறை சார்ந்த கற்கை நெறிகளை நாடியமையாகும்.
இன்றைய நிலைமையில் முஸ்லிம்கள் பல்கலைக்கழகமல்லாத ஏனைய உயர் கல்வித் துறைகளை இனங்கண்டு அவற்றிலும் பங்கு கொள்ளுவது முக்கியமானது. அத்துடன் பல்கலைக்கழகங்களில் பயிலும் மொத்த மாணவர்களின் இன விகிதாசாரத்தைச் சரியாக அறிய முடியவில்லை. இவற்றை வெளியிடுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தப்படல் வேண்டும்.
முஸ்லிம் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் மொழிமூலம் பயிலுபவர்கள். பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல் மற்றும் விஞ்ஞானப் பயிற்சி நெறிகள் தவிர்ந்த கலை, வர்த்தகவியல், முகாமைத்துவம், சட்டம், கல்வியியல் போன்ற பயிற்சி நெறிகளை அவர்கள் தமிழ் மொழி மூலம் பயிலுகின்றனர். யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகங்களில் பயில முடியாத நிலையில் அவர்கள் இப்பயிற்சி நெறிகளை கொழும்பு, பேராதனை ஆகிய பல்கலைக்கழகங்களிலேயே கற்க வேண்டியுள்ளது. தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்ட காலமாகக் கற்பித்து
158

வந்த தமிழ் மொழி மூல சிரேஷ்ட ஆசிரியர்கள் 1974ஆம் ஆண்டின் பின்னர் படிப்படியாக யாழ் பல்கலைக்கழகத்திற்கும் பின்னர் கிழக்கிலங்கைக்கும் இடம் மாறிச் சென்றுவிட்டனர். U6)f வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்டனர். இநீ நிலையரில் தென்னிலங்கையிலுள்ள தமிழ் மொழிமூலப் பயிற்சி நெறிகளும் போதியளவு சிரேஷ்ட ஆசிரியர்களைக் கொண்டிருப்பதாகக் கூறுவதற்கில்லை. பேராதனையில் தமிழ் மொழிமூலப் பயிற்சி நெறிகள் நீண்டகாலமாகத் தொடர்ச்சியாக இருந்து வருவதால் அங்கு நிலைமை சற்றுச் சீராக உள்ளது. ஆனால் கொழும்பில் இருந்த தமிழ் மொழிமூலப் பயிற்சி நெறிகள் (கலை, கல்வியியல்) இடையில் மூடப்படும் நிலையேறி பட்டமையால் இன்று அவற்றுக் குப் புத்துயிரளிப்பதில் பல சிரமங்கள் உண்டு. கொழும்பில் கல்வியியல், பொருளியல், புவியியல், வரலாறு போன்ற துறைகள் போதிய ஆசிரியர் வளமின்றி வலுவிழந்து காணப்படுகின்றன. முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழகக் கல்வியைப் பொறுத்தவரையில் தமிழ் மொழிமூலப் பயிற்சி நெறிகள் மேலும் வலுவுடன் அமையப் புதிய ஒழுங்குகள் அவசியமாகும்.
159

Page 87
இடம்பெயர்ந்த முஸ்லிம் பட்டதாரி மாணவர்களின்
கல்விப் பிரச்சினைகள்
எம்.எஸ். அமானுல்லா
1. அறிமுகம்
இக் கட்டுரை இனப் பிரச்சினையால் இடம் பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்களின் கல்விப்பிரச்சினையை ஆராய்கின்றது. இலங்கையின் இனப்பிரச்சினையில், 1990ஆம் ஆண்டு முக்கிய காலமாகும். இக்காலத்தில் இந்திய அமைதிகாக்கும் படையினர் இலங்கையிலிருந்து வெளியேறியதும், இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையிலிடுபட்டது. ஒரு வருட காலப் பேச்சுவார்த்தை 1990ஆம் ஆண்டு ஜூன்-11ஆம் திகதி முடிவுக்கு வந்தது. விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் சமாதான ஒப்பந்தத்தை மீறி, இலங்கை அரசுக்கெதிராக யுத்தப்பிரகடனம் செய்தது. இந்த யுத்தப்பிரகடனம் முஸ்லிம்களுக்கு எதிரானதாகவும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் விளைவாக வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி கற்றுக்கொண்டிருந்த பட்டதாரி மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. முஸ்லிம் மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும், கிழக்குப் பல்கலைக் கழகத்திலும் இருந்து வெளியேறி அநாதரவாக விடப்பட்டனர். தமது சொத்து, சுகங்கள் என்பவற்றை மட்டுமன்றி உயர் கல்வியையும் முஸ்லிம் மாணவர்கள் இழந்தார்கள்.
இவ்வாறு 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் யாழ்ப்பாணப் பல கலைக் கழகம் மற்றுமி , கிழக்கிலங்கைப் பல கலைக் கழகங்களிலிருந்தும் இடம்பெயர்ந்து நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பல்கலைக் கழகங்களுக்குத் தற்காலிக இடமாற்றம் பெற்றுக் கல்விகற்ற முஸ்லிம் மாணவர்களின் கல்வி நிலை, அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் என்பவற்றை இக்கட்டுரை ஆராய்கின்றது.
2. தகவல் சேகரிப்பும் ஆய்வு முறையும்:
இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள தகவல்கள், புள்ளிவிபரங்கள் யாவும் இக்கட்டுரையாசிரியரால் சேகரிக்கப்பட்டவை. தேவையான தகவல்களைப் பெறும்பொருட்டு இக்கட்டுரையாசிரியர் ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மாணவர்களை நேரடியாகச் சந்தித்து
160

அவர்களுடன் கலந்துரையாடி விபரம் பெற்றார். மேலும், ஏறத்தாழ 15 இடம்பெயர்ந்த மாணவர்கள் தமது விபரங்களையும், தமது பிரச்சினைகளையும் எழுத்து மூலம் அனுப்பி வைத்திருந்தனர். பயன்மிக்க வேறு சில தகவல்களை அகில இலங்கை முஸ்லிம் கல்விமாநாட்டின் அறிக்கைகள், செய்தித்தாள்கள், யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் வெளியீடுகள் என்பவற்றிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு அப்பால், முன்னைய பல ஆய்வுகள், வெளியீடுகள் நூல்களிலிருந்து விபரங்கள் பெறப்பட்டன.
3. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம்
என்பவற்றின் வரலாறு:
யாழ் பல்கலைக்கழகம் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமாக 1974ஆம் ஆண்டில் உருவெடுத்தது. 1978ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் இவ்வளாகம் ஒரு சுதந்திரமான தன்னாதிக்கமுள்ள பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. இப்பல்கலைக்கழகம் நகரில் இருந்து 3 மைல் தொலைவிலுள்ள திருநெல்வேலி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. 1990 ஆம் ஆண்டில் திருநெல்வேலிப் பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
கிழக்குப் பல்கலைக்கழகம் 1981ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் தரிகத ஒரு பல கலைக் கழகக் கலி லுாரியாக ஆரம்பிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகக் கல்லுாரி பேராதனைப் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்விமொழியாக ஆங்கிலம் இருந்தது. மூவின மாணவர்களுக்கும் ஒரு மொழியில் கல்வியை வழங்கி சமூக, இன ஒருமைப் பாட் டிறி கு வழியமைக் குமி நோக கதி துட னி இப்பல்கலைக்கழகக் கல்லுாரி ஆரம்பிக்கப்பட்டது. மேலும் 2509.1986ஆம் திகதியிடப்பட்ட பல்கலைக்கழகச் சுற்றறிக்கையின் படி இப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகப்பிரிவு மட்டக்களப்பு நகர எ லி லை கி குளர் அமைநி த ருதி தலி வேணி டும் என நு குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு மாற்றமாக விவசாய பீடம் , விஞ்ஞானபீடம், முகாமைத்துவப் பிரிவு என்பன வந்தாறுமூலைக்கு மாற்றப்பட்டன.
கிழக்குப் பல்கலைக்கழகம் பொலனறுவை-மட்டக்களப்பு பரிரதான வீதரியரிலுள்ள வநீ தாறுமூலை எனினுமரிடத் தரில அமைந்துள்ளது. இப்பிரதேசம் தமிழ் தீவிரவாதக் குழுக்களின் மிகுந்த
161

Page 88
செல்வாக்கிற்குட்பட்ட பிரதேசமாகும். இதனால் முஸ்லிம்களோ அல்லது சிங்களவர்களோ அச்சமின்றிச் சென்றுவரமுடியாத சூழ்நிலை இந்தப் பல்கலைக்கழக எல்லைக்குள் அக்காலத்தில் காணப்பட்டது. இதனால் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களும், பல்கலைக்கழக உத்தியோகத்தர்களும் தொடர்ந்து தமது கடமைகளைச் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
4. தீர்வுகாணும் முயற்சியில் மாணவர்கள்:
இடம்பெயர்ந்து கைவிடப்பட்ட நிலையிலிருந்த முஸ்லிம் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கு ஏதாவது மாற்றுவழியைத் தேடிக்கொள்வதற்குப் பல பிரயர்த்தனங்களை மேற்கொண்டார்கள். சாதாரண அதிகாரிகள் முதல் மந்திரிசபைவரை இப்பிரச்சினைகள் எடுத்துரைக்கப்பட்டன. இது தொடர்பாகப் பல கடிதங்கள் பரிமாறப்பட்டன. இம்மாணவர்கள் பல மாநாடுகளில் கலந்து கொண்டு தமது அவல நிலையை விளக்கினார்கள். இறுதியாக நாட்டின் தலைமைப் பீடம் (ஜனாதிபதி) வரை சென்று மாணவர்களின் பிரச்சினைகள் கூறப்பட்டன. துரதிஷ்டவசமாக இவர்களினி பரிரச் சரினைக் குதி தரிருப்தரியான தர்வு முன்வைக்கப்படவில்லை.
5. அரசியல் மட்ட முயற்சிகளும் அதன் பிரதிபலன்களும்:
காத்தான்குடிப் பள்ளிவாசல் படுகொலையையடுத்து முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவொன்று 1990 ஆகஸ்ட் 8ஆம் திகதி அப்போதைய மாண்பு மிகு ஜனாதிபதி அவர்களைச் சந்தித்தது. இக்குழு இடம் பெயர்ந்த பட்டதாரி மாணவர்களின் பிரச்சினைகளையும் ஜனாதிபதிக்கு விளக்கியது. இப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்தார். இவ்வாக்குறுதி ஒரு மந்திரி சபை முடிவாக 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் திகதி எடுக்கப்பட்டது. இந்த முடிவை நடைமுறைப் படுத்தும் பொறுப்பு அப்போதய உயர் கல்வியமைச்சர் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. இது தொடர்பாக மாணி புமிகு அமைச்சர் அவர்களை இடம் பெயர்ந்த மாணவர் குழுவொன்று நவம்பர் 27ஆந் திகதி பாராளுமன்றத்தில் வைத்துச் சந்தித்தது. இச்சந்திப்பில் தற்காலிக நடவடிக்கையாக இடம்பெயர்ந்த மாணவர்கள் ஏனைய பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்படுவார்கள் எனவும் “ஒரு வருட காலத்திற்குள் நிரந்தர இடமாற்றம் வழங்கப்படும்”
162

எனவும் அமைச்சர் உறுதியளித்தார். எனினும் இவ்வாக்குறுதி ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை.
.ே ஆரம்பத் திர்வு:
இடம்பெயர்ந்த மாணவர்களின் அயராத முயற்சிகளின் பயனாக மருத்துவத் துறை தவிர்ந்த ஏனைய துறை மாணவர்களுக்கு விரிவுரைகள் தும்பறை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டன. இக்கால கட்டத்தில் அதிகமான இடம்பெயர்ந்த மாணவர்களின் பெற்றோர் அகதிகளாக முகாம்களில் வசித்து வந்தனர். அதே நேரத்தில் இடம்பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்களும் பல பிரச்சினைகளை எதிர் நோக்கினர். தும்பறை வளாகத்தில் விரிவுரையாளர்களுக்குப் பற்றாக்குறை நிலவியது. விஞ்ஞான, விவசாயத்துறைப் பாடங்களுக்கு செய் முறைப் பயிற் சிக் கான எந்தவொரு மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை. இடம்பெயர்ந்த மாணவர்களுக்காகத் துமி பறை வளாகம் 1990 ஆம் ஆணர் டு நவமி பர் மாதமி திறக்கப்படாததால் எஞ்சியிருந்த சில விரிவுரையாளர்களும் சென்றுவிட்டார்கள்.
இதனால் செயலிழந்த தும்பறை வளாகத்திலிருந்த விஞ்ஞான பfட த தைத் தவிர்நி த ஏனைய மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டனர். சிறிது காலத்தில் விஞ்ஞான பீடமாணவர்களும் வேறு பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அனுப்பப்பட்டனர். இந்தத் தந்காலிக இணைப்புத் திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்ட இடம் பெயர்ந்த மாணவர்கள் பற்றிய தகவல் அட்டவணை 1இல் தரப்பட்டுள்ளது.
இதன்படி ஏறத்தாழ 400 இடம்பெயர்ந்த முஸ்லிம் பட்டதாரி மாணவர்களுக்குத் தற்காலிக ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. ஏறத்தாழ 50 மாணவர்கள் எந்தவொரு மாற்றுவழியும் செய்யப்படாத நிலையில் பல மாதங்கள் இருந்தனர்.
7. தற்காலிக இணைப்பின் கீழ் இடம்பெயர்ந்த மாணவர்களின் நிலை தற்காலிகமாகப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட SL Ló Guus 5 g5 LDT 60 6us 86i "Pro-Tem students” 61 6OT அழக்கப்பட்டனர். அட்டவணை 2 இந்த மாணவர்களின் கற்கை நெறி ரீதியான பரம்பலைத் தருகின்றது.
163

Page 89
பின்வரும் உரிமைகள் இம்மாணவர்களுக்கு மறுக்கப்பட்டன. 1. ஏற்றுக்கொள்ளத்தக்க அடையாள அட்டை வழங்கப்படவில்லை. 2. மாணவர் அமைப்புக்களில் அங்கத்துவம் பெறவோ வாக்களிக்கவோ
அனுமதிக்கப் படவில்லை. 3. நுாலகத் தரினுள் செலவதற்கு ஆரம்பத் தலி அனுமதியளிக்கப்படவில்லை. சில பல்கலைக்கழகங்களில் நுாலகத்தினுள் செல்வதற்கு அனுமதி கிடைத்தாலும் நுால்களை இரவல் எடுப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. 4. விரிவுரைக்கான ஏற்பாடுகளில் ஒழுங்கின்மை தொடர்ந்து இருந்தது. 5. மாணவர்கள் தமக்கு விருப்பமான பாடங்களைக் கற்பதில் வரையறை
விதிக்கப்பட்டிருந்தது. 6. பரீட்சை வினாப்பத்திரங்கள் எப்பல்கலைக்கழகத்தினால் தயாரிக் கப்படும், வினாக்கள் எப் பல கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தைத் தழுவியதாக இருக்கும், விடைத்தாள்கள் எப்பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் திருத்தப்படும் என்பன போன்ற பிரச்சினைகள் இறுதிவரை தொடர்ந்திருந்தன. 7. புலமைப்பரிசில் நிதியுதவிகள் காலதாமதமாகவே மாணவர்களுக்குக் கிடைத்து வந்தன. பல மாணவர்களுக்கு எதுவித நிதியுதவியும் பல மாதங்களாக வழங்கப்படவில்லை. 8. எந்தவொரு மாணவனுக்கும் தங்குமிட வசதிகள் அளிக்கப்படவில்லை. மேலே எடுத்துரைத்துள்ள பொதுவான பிரச்சினைகளைத்தவிர வேறுபல குறிப்பிடத்தக்க பிரச்சினைகளை இம்மாணவர்கள் எதிர்நோக்கி வந்தனர்.
8. பல்கலைக்கழகப் பீடமட்டத்திலான பிரச்சினைகள் 8.1 மருத்துவ பீடம்
மொத்தத்தில் 56 இடம் பெயர்ந்த மருத்துவத்துறை மாணவர்கள் நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்று வந்தனர். இவர்களில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 8 பேரும், பேராதனையில் 6 பேரும், ருகுணுவில் 13 பேரும், களனியில் 8 பேரும், வடகொழும்பு மருத்துவக் கல்லூரியில் 14 பேருமாக அனுமதிக்கப்பட்டனர் (அட்டவணை1). இதில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற இடம் பெயர்ந்த மருததுவ மாணவர்கள் பின் வரும் நடைமுறைப் பிரச்சினைகளை எதிர்நோக்கினர். இம்மாணவர்களுக்கான இறுதியாண்டுப் பரீட்சையை யாழ்பல்கலைக்கழகமே நடத்தும் எனவும், அப்பரீட்சைக்கு இவர்கள் தோற்ற வேண்டும் எனவும் நிபந்தனையுடைய கடிதம் ஒன்றில்
164

அட்டவணை : பல்கலைக்கழக ரீதியாக இடம் பெயர்ந்த மாணவர்கள் விபரம்.
ழகம் வர்த்தகமும் னம்
பேராதனை
களனி
மொ
மூலம் இப்புள்ளிவிபரம் நவம்பர் 1997இல் சேகரிக்கப்பட்டது.
கைச்சாத்திடும்படி வற்புறுத்தப்பட்டனர். இம்மாணவர்களுக்குக் கல்வி கற்பது ஒரு இடமும் பரீட்சை எழுதுவது மறுஇடமும் என்ற பிரச்சினை உருவாகியது. இதனால் பல மாணவர்கள் தொடர்ச்சியாக பரீட்சையில் சித்தியடையாத நிலை உருவாகியது.
வடகொழும்பு மருத்துவக் கல்லூரியிலும் (N.C.M.C) இடம் பெயர்ந்த மாணவர்கள் அனுமதிக் கப்பட்டனர். 1988/89 கல்வியாண்டிற்குரிய இடம்பெயர்ந்த மாணவர்கள் இம்மருத்துவக் கல்லுாரிகளுக்குச் சென்றபோது இப்பல்கலைக்கழக மாணவர்களும் நிருவாகத்தினரும் பல நடைமுறைச் சிக்கல்களை இடம் பெயர்ந்த மாணவர்களுக்கு ஏற்படுத்தினார்கள். மொழிப்பிரச்சினை காரணமாக ஆய்வுகூடப் பயிற்சியோடு கூடிய குறிப்பிட்ட சில பாடங்களை ஒழுங்காக இவர்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக இடம் பெயர்ந்த மாணவர்களுள் ஐவர் அடுத்து வந்த மாணவர்களுடன் இணைந்து கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது.
8.2 விவசாய பீடம்
இப்பீடத்தில் இடம் பெயர்ந்த மொத்த மாணவர்களினி
எண்ணிக்கை 18 ஆகும். இதனை அட்டவணை 2 காட்டுகின் து
ஆரம்பத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத் தும்பறை வள14,தில்
16S

Page 90
இம்மாணவர்கள் கல்வி கற்றார்கள். அப்போது இம்மாணவர்களுக்குக் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் கற்பித்த ஏழு பாடங்களுக்குப் பதிலாக இரண்டு பாடங்கள் மட்டுமே போதிக்கப்பட்டன. பின்னர் தும்பறை வளாகத்திலிருந்து பேராதனை வளாகத்துடன் இம்மாணவர்கள் இணைக்கப்பட்டார்கள். 1989/90 கல்வியாண்டிற்கான முதல்வருட இடம்பெயர்ந்த மாணவர்கள் நால்வர் தாமதித்தே பேராதனைப் பல கலைக் கழகத் தற்கு அனுமதி பெற்றனர். இதனால் , இவர்களுக்கேற்பட்ட பாடப்பின்னடைவு காரணமாக ஒரு வருட காலத்தைப் பின்போட்டு அடுத்த கல்வியாண்டு மாணவர்களுடன் இணைந்து தமது கல்வியைக் கற்கவேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டது,
அட்டவணை 2 : கற்கை நெறி ரீதியாக இடம் பெயர்ந்த மாணவர்களின் பரம்பல்.
ற ந 药
11171–9/635 கல்வியாண்டு மாணவர்
வருடம் தொகை 100ம் தொடர்ச்சி 1987/1988 Of
1988/1989 03 200ம் தொடர்ச்சி 1986/1987 01
04 300ம் தொடர்ச்சி 1986/1987 05 முதல் வருடம் 1989/1990 04 மொத்தம் 18
மூலம் வெளிக்கள ஆய்வு 1993
8.3 விஞ்ஞான பீடம்
விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாத்திரமே தற்காலிக இணைப் பின் மூலம் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றனர். ஆரம்பத்தில் இவர்களுக்குத் தும்பறை வளாகத்தில் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விரிவுரை ஏற்பாடுகள் அங்கு திருப்தியாக இருக்கவில்லை. மாலை 4 மணிக்குப் பின்னரே பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து விரிவுரையாளர்கள் வந்து விரிவுரை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதே வேளை முதலாம் இரண்டாம் வருட மாணவர்களுக்கு எவ்வித
166

விரிவுரை ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில் பல மாதங்கள் இம்மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் சமூகமளிக்காமல் இருந்தனர். அட்டவணை 3 இடம்பெயர்ந்த விஞ்ஞானபீட மாணவர்களின் எண்ணிக்கையை கல்வி ஆண்டு ரீதியாகத் தருகின்றது.
அட்டவணை 3 இடம் பெயர்ந்த விஞ்ஞான பாட மாணவர்கள்.
பிரிவு 1ம் வருடம் 2ம் வருடம் 3ம் வருடம் 4ம் வருடம்
உயிரியல் 07 10 09 26
37
பெளதீகம் 14 12
22
மொத்தம் 1 21 63
மூலம் வெளிக்கள ஆய்வு 1993
கிழக்குப் பல்கலைக்கழகம் பரீட்சை நெருங்கும்போது அதிகாரிகளை அனுப்பி இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு நிபந்தனைகள் விதிப்பதில் கவனமாக இருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது ஐந்து இடம் பெயர்ந்த விஞ்ஞான பீட மாணவர்களுக்கும் 1992ஆம் ஆண்டுவரை எவ்வித மாற்று ஒழுங்குகளையும் செய்து கொடுக்கவில்லை.
8.4 வர்த்தக முகாமைத்துவ பீடம்
இப்பீடத்தின் இடம் பெயர்ந்த மாணவர்களின் பரம்பல் அட்டவணை 4இல் தரப்பட்டுள்ளது. இப்பீடத்தில் மொத்தமாக 126 இடம் பெயர்ந்த மாணவர்கள் காணப் பட்டனர். இவர்கள் அனைவரும் கொழும்புப்பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டிருந்தனர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1989/90 ஆம் ஆண்டு வர்த்தக முகாமைத்துவப் பீடத்தில் ஆக ஐந்து மாணவர்களே தமிழ் மொழியில் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர். அந்த ஐந்து மாணவர்களோடு தம்மையும் நிரந்தர மாணவர்களாகச் சேர்த்துக்கொள்ளும்படி இடம்பெயர்ந்த மாணவர்கள் இப்பல்கலைக்கழக அதிகாரிகளை வேண்டிக்கொண்டார்கள். இவர்களின் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டன. இப்பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டம் பூரணப்படுத்தப்படாத நிலையில் பரீட்சைக்குத் தயாராகும் படி இடம்பெயர்ந்த மாணவர்கள் வேண்டப்பட்டார்கள். இதன் விளைவாக பரீட்சை எழுதிய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பரீட்சையில் சித்தியடையத் தவறினர்.
167

Page 91
அட்டவணை4 இடம்பெயர்ந்த வர்த்தக முகாமைத்துவ மாணவர்களின் பரம்பல்
பிரிவு 1ஆம் வருடம்|2ஆம் வருடம் 3ஆம் வருடம் 14ஆம் வருடம் மொத்தம் வர்த்தகம் 36 15 09 O7 67 முகாமைத்துவம் 36 O7 09 07 59 மொத்தம் 72 22 18 14 126
மூலம் வெளிக்கள ஆய்வு 1993
8.5 கலைப்பீடம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப்பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யப்பட்ட 98 முதல்வருட மாணவர்கள் நேரடியாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டார்கள். பேராதனைப் பல்கலைக்கழக நிரந்தரமான மாணவர்களுடன் சேர்ந்து விரிவுரைகளுக்கச் செல்லும்படி ஆரம்பத்தில் இவர்களுக்க அறிவுறுத்தப்பட்டது. பாடங்களைத் தேர்ந்தெடுப்பதிலும் பரீட்சை விடயத்திலும் பல நியாயமற்ற கட்டுப்பாடுகளை இவ் விடம் பெயர்நீத மாணவர்கள் பதவு செய் திருந்த பல்கலைக்கழகங்கள் விதித்து இம்மாணவர்களை ஒரு குழப்ப நிலைக்குக் கொண்டு சென்றன. இரண்டாவது வருட இடம் பெயர்ந்த மாணவர்களின் பரீட்சை முடிவுகள் ஒரு வருட காலத்திற்குப் பின்னரே வெளியிடப்பட்டன. இதனால் ஏறத்தாழ 38 மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்வியை விட்டு வெளியேறினர். அதுமட்டுமன்றிப் பட்டப்படிப்புப் பரீட்சைகளை முடித்த இடம்பெயர்ந்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா பல வருடங்கள் தாமதமாகியதால் சான்றிதழ் அற்ற நிலையில் பல அரிய வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை இழக்க வேண்டிய நிலைக்கு இவ்விடம்பெயர்ந்த மாணவர்கள் தள்ளப்பட்டார்கள்.
9. முடிவுரை
இந்நாட்டில் அரசியல் காரணங்களினால் பல்கலைக்கழக
மாணவர்களின் கல்வி தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.
இனப் பரிரச்சினையாலி வடகி குக் கழகி குப் பரிரதேச
168

பல்கலைக்கழகங்களிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் பட்டதாரி மாணவர்களின் கல்வி பல்வேறுவகையில் பாதிக்கப்பட்டது. இதனால், பல இடம்பெயர்ந்த மாணவர்களின் பல்கலைக்கழகக் கல்வி இடைநிறுத்தப்பட்டது. வேறுபலர் பல்கலைக்கழகக் கல்வியில் உயர் தேர்ச்சியைப் பெறக்கூடிய வாய்ப்புக்களை இழந்தனர்.
இடம் பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் உண்மையில் ஒரு நிர்வாகப் பிரச்சினையாகும். இடம்பெயர்ந்த மாணவர்கள் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தமையால் ஒரு பொருத்தமான மாற்றுக் கல்வியொழுங்கை அக்காலத்து அரசாங்கம் நடைமுறைப்படுத்த முன் வரவில்லை. இதனால் இம்மாணவர்களின் உயர் கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

Page 92
இலங்கை முஸ்லிம்களின் கல்வி : பிரதேச ரீதியான ஒரு கண்ணோக்கு
என்.பி.எம். சைபுதீன் எஸ்.எச். ஹஸ்புல்லா
1. அறிமுகம்
இலங்கை முஸ்லிம்கள் பற்றிய அடிப்படை விபரங்களைப் பெறுவதற்காகப் பேராதனைப் பலகலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பிரதேச மட்டத்தில் வெளிக்கள ஆய்வுகளையும் கருத்தரங்குகளையும் நடத்தியது. 1993 பெப்ரவரியிலிருந்து ஜான் வரை கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. தென்மாகாணத்திற்கான ஒரு கருத்தரங்கும், கண்டி, கேகாலை, புத்தளம், குருனாகலை, அம் பாறை மாவட்டங்களுக்கான ஒவ்வொரு கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. இக்கருத்தரங்குகளின் நோக்கம் பின்வருமாறு: அ) ஒவ்வொரு பிரதேசத்தினதும் கல்விப் பிரச்சினைகளைக் கண்டறிதல், ஆ) ஒவ்வொரு பிரதேசத்தினதும் கல்விப் பிரச்சினைகளில் உள்ள
வேறுபாடுகளைக் கண்டறிதல். இ) அடையாளம் காணப்பட்ட கல்விப் பிரச்சினைகளுக்கு பிரதேச
மட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுகளைக் கண்டறிதல்.
2. பிரதேச வெளிக்கள ஆய்வு:
எட்டு நிர்வாக மாவட்டங்களில் மேற்குறிப்பிட்ட வெளிக்கள ஆய்வுகள் நடத்தப்பட்டன. புவியியல், பொருளாதார, சமூக, கல்வி, குடிசன ரீதியாக வெளிக்கள ஆய்வுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் காணப்பட்டன. அட்டவணை 1 இல் மாவட்ட ரீதியான குறிகாட்டிகள் காட்டப்பட்டுள்ளன.
ஆய்வுக்குட்பட்ட பிரதேசத்தில் இலங்கையின் மொத்த முஸ்லிம் சனத்தொகையில் 44விதத்தினர் வாழ்கின்றார்கள். மாவட்ட மட்டத்தில் முஸ்லிம்களின் விகிதாசாரம் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்குள் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடுகின்றது. உதாரணமாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் 48 வீதத்தினராக இருக்க அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2.2 வீதத்தினராக காணப்படுகின்றார்கள், கலாசாரத் தனித்துவம் சமூகப் பொருளாதார அம்சங்கள், அரசியல் தனித்துவம் போன்றவற்றில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கிடையில் வேறுபாடுகள்
170

o 77,70 qis???!!!??7iavo įswąwozumos quaeso sūq, gwợø gif@s@goginyawo gaeae søquaest» -777n77@gínquo quovo áQ)quaeso L0L00L LLLLL 00LL LLLLLLSL0 LLLLL LLLLLLLL LL LLLLLLYLLLLLLLLLLL/w, o Z0ļ-Z°0ț7Z°0||Gofyqılı9$$h t79||守880”6£”98°91991157@@ /ZZ寸680’68寸9ɛ'ɛ090911993) ZiyƐƐ"/80°ZZZ"|||9°01-filoņ99 6Z6°/8. O’GGZZ9°0-TQ97||JĘş)sınıņūĒ 098’Z608寸9"Z9"|Újų9@ğın Z9Z'680’ZALZ 3tŷ"Z[991]o 9Z8tን‛t790"Z!9"|178,9는Újtus IIIIqliĝo 18611861 (±(soofijos»ış919)(%)(%)(%)(%) ஞனானே119oqų990ų9đī)ıspoglobasofi) || 1ņouisoqış90ųofī) ofiooaewooapnÞessissốù19quốī) urteqoŲnowolae)$1sesoĒĢIJI,0)qı-ı-Enfleuon Q91Jo Z6 - $861119oqų990ų9đī)qosoğțúogi'#$1 'n@-Tafelldı | işe snowefącesố
ɛ661 'ı9o-brzıl)osjo) șŲoqgo qų990ų9đĩ) 199ụoorą|-ı Zıris ugn -i-Iri-IG)ęłein? | 19090919-ı-ıło
171

Page 93
காணப்பட்டன. உண்மையில் ஒவ்வொரு பிரதேச முஸ்லிம்களின் கல்வி நிலை, அடைவு என்பனவற்றில் மேற்குறிப்பிட்ட வேறுபாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
3. மாவட்ட மட்டத்தில் கல்வி நிலை
அட்டவணை 2இல் (பார்க்க பக். 177) மாவட்ட மட்டத்திலான முஸ்லிம்களின் கல்வி நிலையின் வேறுபாடுகளும் அவற்றிற்கான காரணங்களுயும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பின்வரும் பகுதிகளில் மாவட்ட மட்டத்திலான முஸ்லிம்களின் கல்வி நிலை பற்றிச் சுருக்கமாக விளக்கப்படுகின்றது.
3.1. கேகாலை மாவட்டத்தில் முஸ்லிம் கல்வி
மாவட்ட மொத்த சனத்தொகையில் 5.4 வீதத்தினரே முஸ்லிம்களாக காணப்படுகின்றனர். மாவனல்லை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் முஸ்லிம்களின் செறிவு கூடுதலாகக் காணப்படுகின்றது. முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்ற கலாசார, சமூக, குடும்பத் தொடர்பின் இறுக்கத் தன்மையும் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்திக்கு காரணமாயிருக்கின்றது. மாவனல்லை நகரத்தில் இரண்டு பிரதான முஸ்லிம் பாடசாலைகள் காணப்படுகின்றன. இதைவிட ஹெம்மாத்தகம, உயன்வத்த, திப்பிட்டிய போன்ற முஸ்லிம் செறிவுகளிலும் பாடசாலை வசதிகள் காணப்படுகின்றன. மாவனல்லைக்கும் கண்டிக்கும் இடையிலான பிரயாண வசதிகள் உயர் கல்வி அபிவிருத்திக்கு வாயப்பாக இருக்கின்றன. என்றாலும் அரசியல் ஆதரவின்மை, வளமின்மை, நிலமின்மை ஆகிய காரணங்கள் கல்வியின் மேலதிக வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன. நாப்பாவெல, அவிசாவெல, கன்னத்தோட்டை ஆகிய முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்கள் மாவனல்லை முஸலிம் செறிவில் இருந்து விலகிக் காணப்படுகின்றமை இப்பிரதேசத்தின் ஒப்பீட்டு ரீதியான கல்வி வளர்ச்சியின்மைக்கு காரணமாகக் கூறலாம்.
8.2. அம்பாறை மாவட்ட முஸ்லிம் கல்வி:
இம் மாவட்டத்தின் சில பிரதேசங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்வதனைக் காணலாம். விவசாயமும், மீன்பிடியும் இம்மக்களின் பிரதான தொழில்கள் ஆகும். அண்மைக் காலத்தில் இப்பிரதேசத்தில் கல்வியிலும் வேகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
172

1970ஆம் ஆண்டுகளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைகழக அனுமதிக்கான கோட்டா முறையும் கூடிய பல்கலைக்கழக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. என்றாலும் முஸ்லிம் பெண் கல்வி இப்பிரதேசத்தில் புறக்கணிக்கப்பட்டுக் காணப்படுகின்றது. கல்வி வளத்தினய்ை பொறுத்தவரையில் பாலமுனை, பொத்துவில், இறக்காமம், ஒலுவில் போன்ற பிரதேசங்கள் இன்னும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன.
3.3. கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் கல்வி:
கண்டி மாவட்டத்தில் பல இடங்களிலும் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றார்கள். அவை அக்குரனை, உடுநுவர, யட்டிநுவர, வத்தேகம, கம்பளை, கண்டி நகரம் ஆகியனவாகும். மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒன்று அல்லது இரண்டு முஸ்லிம் பாடசாலைகளே காணப்படுகின்றன. மடவளை, அக்குரனை, கம்பளை ஆகிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் க.பொ.த. உத வகுப்பு வரை கற்பிக்கப்படுகின்றது. அதே நேரத்தில் கல்விவள ரீதியான பற்றாக்குறை கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் இல்லாமல் இல்லை. கண்டி நகரில் முஸ்லிம் ஆண் பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு பல முற்சிகள் எடுக்கபட்டன. இம்மாவட்டத்தின் ஆண்கள் ஒப்பீட்டு ரீதியாக உயர் கல்வியில் ஆர்வமற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இளமையிலேயே வர்த்தகத்தில் அல்லது தொழிலில் ஈடுபட அவர்கள் விரும்புகிறார்கள். ஆண்களின் பாடசாலை இடை விலகல் இம்மாவட்டத்தில் அதிகமாகக் காணப்படுகின்றது.
8.4. குருனாகல் மாவட்டத்தின் முஸ்லிம் கல்வி:
கண்டி மாவட்டத்தைப் போல குருனாகல் மாவட்டத்திலும் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்கள் பரவலாக காணப்படுகின்றன. ஆனால் கெகுனுகொல்ல பிரதேசத்தைவிட இம்மாவட்டத்தின் ஏனைய பிரதேங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகக் காணப்படுகின்றது. இம் மாவட்டத்தின் முஸ்லிம் கல்வியை ஒருங்கிணைத்து வளர்க்கக் கூடிய மையப்படுத்தப்பட்ட பாடசாலை ஒன்று இல்லை. இம்மாவட்ட முஸ்லிம்களின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் நிலப்பற்றாக் குறையும் உள்ளது. இப்பிரதேசத்தில் தொழில் வாய்ப்பின்மையையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. வறுமையும் தொழில் இன்மையும் இப்பிரதேச முஸ்லிம் கல்வியைப் பாதித்துள்ளது.
173

Page 94
8.5. புத்தளம் மாவட்டம்
இம்மாவட்டத்தில் வடமேற்குக் கரையோரமாக முஸ்லிம்களின் செறிவு அதிகமாகக் காணப்படுகின்றது. குறிப்பாகப் புத்தளம் நகரம், கற்பிட்டி, கொத்தான் தீவு ஆகிய இடங்களை இணைக்கும் முக்கோண வலயத் தல முஸ்லிம் களின் விகதாசாரம் கூடுதலாகக் காணப்படுகின்றது. அரசியல் புறக்கணிப்பு இப்பிரதேச முஸ்லிம் மக்களின் பொருளாதார, கல்வி வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றது. புத்தளம் மாவட்டத்தில் 40 முஸ்லிம் பாடசாலைகள் காணப்படுகின்றன. இவற்றில் 80 வீதமானவை ஆரம்ப, இடைநிலைக் கல்வி வசதிகளைக் கொண்டிருக்கின்றன. கடந்த சில தசாப்தங்களில் இப்பிரதேச முஸ்லிம் கல்வியில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. புத்தளம், கற்பிட்டி, கடையான்மோட்டை போன்ற பிரதேசங்களில் காணப்படும் பெரிய பாடசாலைகளில் உயர் கல்விக்கான வாய்ப்புக்கள் காணப்படவில்லை. சிறிய பாடசாலைகளில் கல்வி வளமின்மை கல்வியைப் பாதிக்கின்றது. இப்பிரதேச முஸ்லிம்களிகளின் கல்விநிலை 1990 ஆம் ஆண்டு இப்பிரதேசத்துக்கு அகதிகளாக வந்த 12000 அகதி மாணவர்களின் கல்வித் தேவையினால் மேலும் பாதிக்கப்பட்டது. அக்காலக்கட்டத்தில் புத்தளம் மாவட்டத்தில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் ஏனைய கல்வி வளங்கள் உள்ளுர் மாணவர்களினது தேவைகளையும் அகதி மாணவர்களினால் ஏற்பட்ட தேவையினையும் பூர்த்தி செய்து கொள்ளமுடியாத நிலையில் காணப்பட்டன.
8.6. தென் மாகாணம்
இம்மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் விகிதாசாரத்தில் வேறுபட்டுக் காணப்படுகின்றார்கள். காலி நகரை அண்டி முஸ்லிம் செறிவொன்று காணப்படுகின்றது. எழுத்தறிவு இரண்டாந்தரக் கல்வி அடிப்படையில் முஸ்லிம்களின் கல்வி அடைவு இம் மாகாணத்தின் சராசரிக் கல்வியடைவுக்குச் சமமாகக் காணப்படுகின்றது. காலி நகரை அண்டியுள்ள முஸ்லிம்கள் கல்வி வசதி வாய்ப்பு ரீதியாக சாதகமான தன்மையைக் கொணி டிருக்கின்றனர். ஆனால் மாத் தறை, அம்பாந்தோட்டை பிரதேசங்களில் முஸ்லிம்களின் கல்வி பின்தங்கிக் காணப்படுகின்றது. கல்வியில் பின்தங்கியமைக்கான காரணிகள் இடத்துக்கிடம் வேறுபடுகின்றன. மாத்தறையிலும், காலியிலும் முஸ்லிம்கள் உயர் கல்வியைவிட வர்த்தகத்திலேயே அதிக நாட்டம் ,
174.

司팅려에최희司
鱷韃{J} (z'unuo 1995n09091) onun TīriņĢĢs@rısımnus : qı síos lys & sắ'uns § mię uko (il-lings uolo o ususoņi listis (poss-ızım –īņrsum (v qrt9stī qi@ęsŘunque quomon (z·ą9909 fırıriurëდ9ujilყეშნgfiყ:miĝğın sĩ|-ıms@ 090918-Tın smrtsusố 1ņoụsoļftslaesului 1ņss, (c. 「리공劇네리헌희팀리회(soosi-1,jśuņoo *usoņłoq}+g\ris fā’īÍıņ919ųU3)lqotso)oqsmulus ląstyrtopf, SL000 LLLL TYTrLL LT SLLLLLKK LL K LmTLL L0L LLYLYTC SL
·ųırısını 1093)ưı işgŲigo?ūī (z *01091 mớifi) (111919·109091|$)ęł@ ‘morts-un ‘stos@-= q + -« sosyolulis (pumű09@olajsiruuloris (1] Ipomous llo-ılın Gjąjio ipos orts Ķoņ9ø (1
· 1,9910909įpossi ņofià o di 1,9 ling)q1109$ $ (z 199!!009/IIIo (III ouaoo (1'undoissoos morțioặışolţ (ĢiņIŲsopo logorie) (c. qhuvqsiqo@ęırlsąoole, qørnsoff@司회폐허더司터미리司평역리비IJssTo;(Údolinuiiĝo LLLLLLLLCTLLLLLLLL LSYYY00L0 KKK LLLLLLLLL L LLT S YYT0K SL•• 리제利直司副에니편획폐리터司회에너司되비 Ļoqooo -IIIII|$$@rıņrninus musiso (1ļinasıl"ırıņ@@@nışmri olimnussì fi qubits systgọ (1 quaspudortoo 1ņotos@masıriųırgussoy, T(s)팀利터뒷리터헌터RR형럽에리허럽에T制 TR되5터페테퇴러 unuolgos įmŲlps, lasırlığ@@ (z|o-ius II139$ 100 lpg -qıae-aாய9டியூாழி ஒபுய9ா9 'uius1,3% TITIŴĝ(o)n |U sẹo tạų991ğı çoğ91Ųi qi@rıņaesuo opsprşısỆ&lijsTITŌ(9091995) QUso_seumsẽ y tymŲJŲsh (1ļs£5ĵo)Ų9ụsoņiegš9115 #ğ-ıtgomĝğ%)ņsựılē (z� *(3)gọışınŲllotts Insılmojn-0909091090101IJI "JIH-a: í un tysãoặ-ızın soortss@kĩ (1|0|09|199Ųusris Ķoņ99 @ęĢģ@ņos, įgsợp gỡosuis, (1 119+1990-95 #ffLi silyoqpo.asoolgi yoqpo. qılovo suo~TurīņoĒĶĒĢ)rısııı911m-neges@oourn($4] © i sırī£qr-ı-Russuon
dowosgi yooooo 199Ųsooq. 990ųofī) apsoğș-Tion oặ96ți z rossere-i-ziigo
175

Page 95
ɛ66, sựwownfo nyooyuwoo Tyr (uzņvuoạáng) qwuals oặn quoqoft): qimorfo
·ĝusojų (p q+`s ·lgotņ@īņī£® | glugopf) zijn','#$@ristnosųoso
uusisoo mɛ, ŋgʊ ɖʊʊ ŋITrom-ww.usoffruko (v
fisiųnssoosih lystsoo maesne) tʊʊműjtos@gặion (£siisảquae uolui ipse) uusipyros, tŷ ywysogo sm-s (z untu9ıņotēj 1990suollo-uri qųņ9ayof)ம9பாதீேவியாகு (Ļotỷo șefiloso usosqito soff-Insınn sựsuo (1 (s.gwasıņots,ngjorts-TŐ (pysgosos:119-un (£ 01091ņots,ngołępustisqisnuwasip@j 199ổorts 1șefĪá 19ųostgussnstūs lystys mistests_{1|sq|imajos@owaigin ymụstofā tỷų sodotușie-uriņtosí (z 라司社的리체제편퇴렌siisắquoĝộh opums, y suo ulls@une, ofi) e (c hņụngso?@jh Qormig újo (zgħmuwasipuntetsug-urisự tạgosfi@ oqhwíos@ synguri suoio lystyse dissimule_(Isoudiginsulons systạo tylymosos sig innņœusųøışfi) (s. 피리피회헤리티회원에「 oqsmuxasıņogrossssssssssssssųışmựdo (zgwasıęstguists újonsošolságírı ymųự(11@os##Ossesso Nosops -run (soosi-sœ& ‘nnsfā’ (). intasiņoŲussīīīīīīīīīīīīīī(§ tỷTIOŁ qolqosfiloģe, ș05ís) gồs@n (z Umusiqsignastoj (!‘ıpolassasựęúųı sıfıloğulls@une) (z uwasipės įrųựsē@slystęgęısı@@ņs (g.ĮmosடியமOெ olporționII/13 -TIITĻĢģ6)n ņu109Ųaso o ums, y qømŲmụsh (z unuolųolgıllors Ļ9ņ99 șTun Tīrtsızın (1Ipotevolls-ıın sostījums@ quisits systạo (, ıspoisoccotgłosu ¡¡Nooooooastrosg Qoqoo quae suoTuru)osso)nrıııɔurn-Twołgo性德性信行的性法qu-l-uleuon
(8fığTiuose) asooloj (soqooo içouisoqış90ųofī) apsoğ$-i-Zion oặ965) z rossworte-i-ziłę
176
 
 

செலுத்துகின்றனர். மாத்தறையில் பெண் கல்விக்கான வாய்ப்புகள் காணப்பட்டாலும் அவ்வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. கல்வியைப் பொறுத்தவரை அம்பாந்தோட்டை முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். இம்மக்களின் பொருளாதாரப் பின்னடைவுகளே அதற்கு முக்கிய காரணமாகும். கிரிந்தை, தங்காலை, தந்துரை ஆகிய பிரதேச முஸ்லிம்கள் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாகக் காணப்படுவதுடன் கல்வி வசதிகளும் இப்பிரதேசத்தில் குறைவாகக் காணப்படுகின்றன. தென் மாகாணத்தில் சிங்கள மொழியில் கற்கும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. காரணம் இரண்டாந் தரக் கல்விக்கான வசதிகள் முஸ்லிம் பாடசாலைகளில் இன்மையாகும்.
4. பொதுவான சில கல்விப் பிரச்சினைகள் 4.1 பரந்து கிடக்கும் கல்வி வளங்கள்
முஸ்லிம்கள் உச்சப் பயனைப்பெறக்கூடிய வகையில் கல்வி வளங்கள் மையப்படுத்தப்பட்ட நிலையில் இல்லை. இதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களின் குடியிருப்பு பரம்பல் ஆகும். இது குறிப்பாக முஸ்லிம்களின் பாடசாலை மட்டத்திலான உயர் கல்வி வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கிய காரணியாகும்.
4.2. கல்வி மொழி
இலங்கையின் தென்பகுதியில் சிங்கள மொழியில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. இது சில சாதகமான விளைவுகளைத் தந்தாலும் கல்வி அடைவுத்தன்மையைப் பொறுத்தவரையில் உரிய பயனைப் (பல கலைக கழக அனுமத) பெற முடியாத சூழி நரி லை காணப்படுகின்றது.
4. கல்வியின் தேவையற்றி தெளிவற்ற சிந்தனை
பாடசாலைக் கல்வியின் அவசியம் பற்றி முஸ்லிம் சமூகத் தனி மத் தயரில் மாறுபட்ட கருத் துகள் இன்றும் காணப் படுகன் றன. உயர் கலவியைப் பற்றி பல வேறு தப்பபிப்பிராயங்கள் இன்றும் நிலவுகின்றன. இது முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியதொன்றாகும்.
177

Page 96
4.4. வர்த்தகத்தில் நாட்டம்
முஸ்லிம் மாணவர்களின் மத்தியில் இளம் வயதிலேயே வர்த்தகத்தில் ஈடுபடும் நாட்டம் ஏற்படக் கூடிய சமூகச் சூழல்கள் காணப்படுகின்றன. பெரும்பான்மையான இளைஞர்கள் அபிவிருத்தி குறைவான வர்த்தகத் துறையில் ஈடுபடும் வாயப் ப் பையே கொண்டுள்ளார்கள். உதாரணமாக, சில்லறை வியபாரம், அங்காடிப் பொருள் விற்பனை, கடைச் சிப்பந்தித் தொழில் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். பாடசாலைக் கல்விக்கு மாற்று நடவடிக்கையாக மேற்குறித்த தொழில் முயற்சிகள் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமாகக் காணப்படுகின்றன. இது பாடசாலையைவிட்டு இளம்வயதில் விலகும் விகிதத்தை அதிகரித்திருக்கின்றது. இப்போக்கு முஸ்லிம்களின் கல்வியை வெகுவாகப் பாதிக்கக் கூடியது.
4.5. ஆண்களுக்குச் சமனாகக் கல்வி பெறும் வாய்ப்பு பெண்களுக்கு
இன்மை
ஆசிரியைத் தொழில் முஸ்லிம் பெண்கள் செய்யக் கூடிய ஒரே ஒரு தொழிலாக அங்கீகரிக் கப்பட்டுள்ளது. இந் நிலை முஸ்லிம்களின் பால் ரீதியான கல்வி வேறுபாட்டை மாத்திரமல்ல நாட்டின் பொதுவான கல்வி மட்டத்திலிருந்து முஸ்லிம்களின் கல்வியை வீழ்ச்சியடைச் செய்யக் கூடியது.
4.6. அரசின் ஆதரவின்மை
சிறுபான்மை இனப் புறக்கணிப்பினால் முஸ்லிம்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகளும் முஸ்லிம் கல்வித் தேவை பற்றியும் அதன் பிரச்சினைகள் பற்றியும் ஆர்வமற்றவர்களாகவும், தெளிவற்றவர்களாகவும் காணப்படுகின்றார்கள். அரசியல் நடவடிக்கைகளில் முஸ்லிம்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக் கப்பட வேணி டியது அவசியமாகும். கல்வி வளம் பாரபட்சமற்றமுறையில் சமமாகப் பங்கிடப்படவேணி டியதும் அவசியமானதாகும்.
178

மகாநாட்டுத் தீர்மானங்கள்: முஸ்லிம்களின் உயர் கல்வி.
1. முஸ்லிம்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் விஞ்ஞானக் கல்வி வசதியற்ற பாடசாலைகளில் விஞ்ஞானக் கல்வி அபிவிருத்திக்கு முயற்சி எடுக்கப்பட வேண்டும்.
2. விஞ்ஞான உயர்தரவகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகளில்
ஆய்வுகூட வசதிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
3) விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர்களின் பற்றாக் குறை நீக்கப்பட
வேண்டும்.
4) கல்வி வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படும் பிரதேசங்களில் தமிழ் மொழிப் (தமிழ் -முஸ்லிம்) பாடசாலைகளுக்கிடையில் ஆசிரியர்கள் பரிமாற்றமுறையிலும் ஆய்வுகூடங்களைப் பயன்படுத்தும் முறையிலும் பரஸ்பர ஒத்துழைப்பு இரு இனத்தவர்களினதும் கல்வியை அபிவித்தி செய்யக்கூடியது.
5) முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் அரசியல்வாதிகளின் பங்களிப்பும் துTரதிருஷ டியான கணிணோக் குமி அவசியமானதாகும்.
6) அரசு உதவிகள் இல்லாதவிடத்து மாற்று வசதிகளை
ஒழுங்குபண்ணுவதில் பெற்றோர் கவனம் செலுத்தவேண்டும்.
179

Page 97
உசாத்துணை நூல்கள்
Abeyratne, Chitra Kumari, 1963.
A study of Backwardness of Three School MA Thesis: University of Ceylon.
Allen,C.M., 1956.
Combating the Dropout Problem Chicago:Science Research Associates.
Azeez, A.M.A., 1969.
"The Muslim Tradition in Education in Ceylon' Educationin Ceylon: A Centenary Volume Part III, Chapter 95. Colombo: Ministry of Education.
Chatterji,S. and Others, 1972.
'Effects of Certain Socio-Economic Factors on the Scholastic Achievement of School Children' Indian Journal of Psychology 47(2):133-151.
Commonwealth Universities, 1991.
Annual Report of Commonwealth Universities Vol.4.
Davie, J.S., 1953.
"Social Clan Factors and School Attendance' Harvard Education Review Vol.23:175-185.
de Soysa, Priyani, 1990.
"Nutrition and Health Care Among Muslim Women' Challenge for Change Profile of a Community MWRAF publication.
Department of Census and Statistics, Various Years.
Censuses of Population, 1871 to 1981. Colombo: Department of Census and Statistics.
Department of Examination, Various Years.
School Performance Indices - General Certificate of Education (Ordinary Level), 1988, 1989, 1990, 1991 Colombo: Department of Education.
180

Gadgil,D.R. and V.M. Dandekar, 1995.
Primary Education in Satara District Poona: Gokhale Institude of Politics and Economics.
Government of Ceylon, Various Years.
Administration Reports Colombo:Government Press.
Green.T.L., 1952.
Education and Social Needs of Ceylon: A study of Vocational Ratings in Ambitions and Opportunities' University of Ceylon Review X(4)October:297-316.
Gunawardana Chandra, 1987. -
“Women in higher education in Šri Lanka” Higher Eduction Review
November(11).
-, 1990.
"Education and the future of muslim women'Challenge for Change: Profile of a Community MWRAF publication. w
Hameed, A.C.S., 1992.
“Women Education and the Progress of the Muslim Community" A Speech Delivered at the Teachers Training College, Aluthgama November.
Ismail, J., 1990.
"Education and Future of Muslims with Special Reference to Primary and Secondary Education' Profileofa Community Colombo: Muslim Women Research and Action Forum.
Jain,S.P., 1969.
"Religion, Caste, Clan and Parental Educational Aspiration in a North Indian Community"Indian Educational Review 4(2):64-72.
Jayasuriya,D.L, 1965.
"Development in University Education; The Growth of the University of Ceylon, 1942-65' University of Ceylon Review Vol.23.
181

Page 98
Jayaweera,S. 1971.
"Regional Imbalances in Education in Ceylon"Journalofthe National Education Society of Ceylon (Peradeniya) vol. XX.
-, 1985.
Women and Education in Decade for Women Progress and Achievements of Women. In Sri Lanka, Colombo: CENWOR.
-, 1991.
"Guilty and Excellency in Education" J.E. Jayasuriya Memorial Lecture 1991 Maharagama:National Institute of Education.
Junaid, M.N., 1990
"Employment Opportunities For Muslims With Special Emphasis on Agriculture And Public Sector" Challenge For Change: Profile of a Community Colombo: Muslim Women's Research and Action Forum.
KingE.M., 1990.
"Educating girls and women -investing in development'The World Bank Report quoted in UNESCO Bulletin No.31:105.
Ministry of Education and Cultural Affairs, 1969. "The Muslim Tradition' Education in Ceylon - A centenary Volume III, From 6th Century BC to the Present day. Colombo; Ministry of Education and Cultural Affairs; 1145-1157.
Ministry of Education, Various Years.
School Censuses, 1988, 1987, 1993, 1992, 1984, 1987, 1991 and 1992 Colombo:Ministry of Education.
Muslim, Various Year. Muslim AJournal of Muslim matters. Published during later part of last Century,
Muslim Majlis, 1993. A Questionnaire Survey of Muslim Education.
Conducted in 1993. Peradeniya: Muslim Majlis (Unpublished).
182

Muslim Nation, Various Years. Muslim Nation A Journal on Muslim matters. Published during later part of
last Century.
National Institute of Education (Maharagama), 1990.
"A Descriptive Profile of Teachers in Sri Lanka" Maharagama:N.I.E.Research Division.
.1992 -ܚ
FORUM (Educational Research) Vol. 2 and Vol. 5.
Nisbet, J.D.andN.J. Entwistle, 1967.
"Intelligence and Family Size" British Journal of Educational Psychology. Vol.37.No.2:188-193.
Plang, M. 1982.
"The Correlation Between Education and Earnings' Higher Education Washington: Indiana University.
Rajaguru,G., 1975.
"Academic Achievement of Students, Impact of Parents and SocioReligious Factors' Educational Quarterly Vol.26(4):41-42.
Rupasingha,S., 1983
"Some Disparities in the Secondary School System of Sri Lanka" NESS Vol.XXIII:37-48.
Sameem.M. 1980.
"Socio-Economic Factors and Religious Traditions as Affecting Progress: A Special Study Kafawckudy Village Proceedings of the Fourth International Conference Seminar of Tamil Studies (Jaffna) Vol.2: 17-136.
Shinfi Marrikar, 1985.
"Muslim Education in Sri Lanka" A paper presented at the seminar on Muslim cducation in Sri Lanka at the International center for Ethnic Studies,
(blombo.
13

Page 99
Stphens, J.M., 1956.
Educational Psychology New York:Hetry Holt.
Sumanasekara, H.D., (No Date Given)
"Measuring the Regional variations of the quality of life in Srilanka" Sri Lanka Journal of Agrarian Studies 2(1):27-40.
Swift,D.F., 1969.
"Social Clan and Achievement Motivation' Educational Research Vol. 111:83-95
UNESCO, 1991a.
Nurturing and Identifying Talents in Mathematics Science and
Technology Bangkok:APIED.
UNESCO, 1991b.
Teachers Training of Science and Technology Education Reform
Bangkok:APEID.
University Council, 1942.
The Report of the University Council Colombo: University Council.
University Grants Commission, Various Years.
The Report of the Grants Commission. 1984, 1985, 1986 and 1990/
91 Colombo: University Grants Commission.
Wiseman Stephen, 1954.
"Education and Environment'Manchester University Press.
184

பின்னிணைப்பு 1
இலங்கை முஸ்லிம் கல்வி பற்றி தேர்ந்தெடுக்கபட்ட உசாத்துணை நூல்கள்
Statistical Sources:
Central Bank of Ceylon, Various Years. "Tables on Literacy, Education and Employment by Ethnic and Religious Groups', Consumerand FinanceSurvey. Colombo: Central Bank of Sri Lanka.
Ibrahim, A.L.M., 1993. A Survey of 43 Arabic Madrasa in Sri Lanka. Conducted in 1992. Unpublished.
Ministry of Education, Various Years. School Census. Colombo: Ministry of Education.
Muslim Majlis, 1993. A Questionnaire Survey of Muslim Education.
Conducted in 1993. Peradeniya: Muslim Majlis (Unpublished).
Population Census, Various Years. "Tables on Literacy and Education"
Population Censuses. Colombo: Government of Sri Lanka.
History of Muslim Education
All Ceylon Muslim Education Conference, 1968. "Resolutions, 1964" All Ceylon Muslim Educational Conference: 19-25.
Anas, M.S.M., 1992. “The Contributors in Muslims Education' (Tamil)Muslim Cultural Awards Ceremony, 1992 Colombo; Muslim Religious and Cultural Affairs; 128 - 132.
Azeez, A.M.A., 1952. "The muslim attitude towards modern education during the 19th century” The Times of Ceylon (special Hajday supplement) August.
Azeez, A.M.A., 1969. "The Muslim Tradition' Education in Ceylon - A centenary Volume III, From 6th Century BC to the Present day.
185

Page 100
Colombo; Ministry of Education and Cultural Affairs; 1145 - 1157. Ismail, Jezima, “Muslim Education in Sri Lanka” Muslim Development Fund,
Sri Lanka Colombo; Muslim Development Fund;
Jalaldeen, Mohideen, "The Educational Plight of the Moors, Malays and other Muslims of Ceylon" Moors Islamic Cultural Home, Silver Jubilee Souvenir 1944 - 1969; 75 - 77.
Jaya, T.A., 1968. “Muslim Education in Sri Lanka; A brief Survey”All ceylon
Muslim Educational Conference; 1 - 5.
Maharoof, M.M.M., 1972. The Muslim Education in Ceylon; 1780 - 1880 Islamic culture Vol XLVI(2) April 1; 119 - 135.
Mahroof, M.M.M., 1986. "Muslim Education." In An Ethnological Survey of the Muslim Sri Lanka From Earliest Times to Independence Colombo; Sir Razik Fareed Foundation; 166 - 182.
Mohamed Nahiya, A., 1978. “The Origin of Zahira: Some Historical Thoughts"
(Tamil) Valarpirai Zahira College Magazine: 7 - 13.
Samaraweera, wVAYA, 1979. "The Muslim Revivalist Movement, 1880 - 1915." Collective identities, Nationalism and protest in Modern Sri Lanka Edited Michael Roberts, Colombo: Marga Institute.
Shajahan, A.N.M., 1992. "History of Education" in Puttalam history and Transition (Tamil) Chapter 29; 256 - 279. First Edition. Colombo: Nippon Printers.
Muslim Educationists
Akbar, Zem Zem. 1970. “The life and Time of Marhoom Wappichi Maraikar" Colombo.
186

Azeez, A.M.A., 1960. Dr.T.B. Jaya; Zahira Tribute to her Former Principal. Cader, M.B.A. 1918. "Reforms, Reformers and Minorities " The National Monthly of Ceylon Vol V(4) Feb; 70-92
Hanseer, A.W.H., 1989. Our Leader Badiuddin (Tamil) First Edition;Madras; Threyem Printers.
Kamaldeen, S.M., Kalanithy A.M.A. Azeez; 1-32.
Kamaldeen, S.M., 1990. Kalanithy Tuan Burhanudeen Jaya
(Tamil - Translated by S.H.M. Jameel) Maharagama; National Educational Conference.
Mahroof, M.M.M., 1981. “I.L.M. Abdul Azeez"Muslim leaders of Sri Lanka No 3 All Ceylon YMMA conference Publication Colombo; Vat print; 1 - 22.
Mahroof, M.M.M., 1981. "Justice Mass Thajoon Akbar' Muslim Leaders of Sri Lanka No 4 All Ceylon YMMA conference Publication, Colombo: Vet Print: 1 - 28,
Samaraweera, Vijaya, 1977. “Arabi Pasha in Ceylon; 1880 - 1901” Islamic Culture XLX.
Sri Lanka Islamic Secretariat, 1980. "Justice M.T. Akbar" Birth Centenary Number Islam in Seilan Sri Lanka Islamic Secretariat Journal; 1 - 30.
Language of Instruction of Muslims
Abdul Majeed, M.M., 1968. Need for Muslim literature in Sinhalese All
Ceylon Muslim Educational Conference; 88-89.
Azeez, A.M.A., 1957. "Ceylon Muslims - Their four Citizenship and four Languages" The Zahrian; Organ of Zahira College (A School Magazine) Aluthgama 20 - 22.
-., 1957. “The Language Problem? A middle Path Solution "TheSunday
Observer June 23; 1957.
187

Page 101
Azeez, A.M.A., 1958. "The Languages in the Curriculum of the Ceylonese Muslims' A paper Presented at the Seminar of the All Ceylon YMMA Conference in June 26 - 28, 1959: 1 - 14.
-., 1958. "Problems of Language Policy" Reproduced from the Senate Hansard of 2nd, 3rd September, 1958. Mohan, Vasundhara.R., 1987. "Economy, Education and Employment" In Chapter 5; 96 - 112. in Identity crisis of Sri Lankan Muslims Delhi; Mittal Publications.
-., 1985. "Education, Society and culture" in Chapter3; 26-59 in Muslims of Sri Lanka Jaipur(India) Aalekh Publishers.
Nahiya, A.M., 1991 "Language Policy"Chapter 2 in Azeez and Tamil (Tamil); 9 - 16: Nintavur; Iqra Publishers.
-., 1991. "The Mother Tongue of Muslim" in Chapter 3 in Azeez and Tamil (Tamil) 3; 17-23. Nintavur; Iqra Publishers.
-., 1991. "Language of Education of Muslims' Chapter 4; in Azeez and Tamil (Tamil) 24-36. Nintavur: Iqra Publishers.
Sali, M.E.M., 1953. "Whether the Tamil is the Mother Tongue of Muslims?" (Tamil) Islamica Zeylanica University Muslim Majlis, Peradeniya. 10- 44.
Higher Education
Ismail. M.H.A.M., 1980. The Higher Education of Muslim Students and Future (Tamil) University Muslim Majlis, University of Peradeniya Vol XIX; 29 - 32
Gunawardena, Chandra, 1990. "Education and in future of Muslims with Special reference to Higher Education" in Challenge for change: 99 - 112.
Education and Employment:
Bahardeen, Nadvi, 1992. "Education and Its Development Among the Sri
Lankan Muslims”Meezan (Law Students” Muslim Majlis Journal)
188

Raji, J.M.M., 1960. "The Position of Muslims in Government Service"
University Majlis IX University of Peradeniya: 25 - 27.
Shafeek, A.C.M., 1985. "Muslim and Vocational Education in Sri Lanka' AlInshirah Muslim Majlis University of Peradeniya.
Tambiah, S.J., 1955. "Ethnic Representation in Ceylon's Higher
Administrative Services: 1870 - 1946. University of Ceylon Review XII (2 & 3) 113 - 134.
Women's Education:
Ismail, Jazima, 1990. “Education and in future of Muslims with
Special Reference to Primary and Secondary Education" in Challenge for Change : Profile of a Community Colombo: Muslim Women's Research and Action Front : 88 - 89.
Khalid, H.M., 1968. "Muslim Female Education in Ceylon Muslim Educational conference 55 - 58.
Regional Studies:
Education Office, (Various Location), Student Educational Performance
at School Level is Available for Regions.
Hameed, A.C.S., 1989. "Brief History of Malharus Sulhiya Central College"
Sholai (Galle, Thalapittya, Mosque Publication), Galle.
Jameel, S.H.M., 1988. "Muslim Education of the Baticaloa District at the
Turning Point of this Century" (Tamil), Kalaiamutham
Mohamed, K.H., 1990. The History of the Galle Muslim Girls College"
(Tamil) Silver Jubilee supplement Muslim Ladies' College, Galle.
Muslim Teachers Union, 1993. ReportonResidential Seminaron Development Programme for Muslim Schools. Colombo: Muslim Teachers Union.
189

Page 102
“gogoșoợ7 %), søppruo
|----90SI00LƐ | SLț7ØIImų99Ħ9f9 ---|-£090 || 00 || 80 || 00£0fogặĝ000909f.) ----8I99 I || 6Z90Z I I Iț7LZш0990л -|---00000000 || L0Z0ựłęIsit)Ų969 ---|-00Z9 || 80 | €L I ZIÇ0quanoırıņțium ț7ZILț700£ | 8Iț7Z990sț79 I | Z66ZL0 †109-LIIĜ95ĵırıųIGIỮ SLZ9Z9ț7Z | 8 ||LI98 I || 6199Z 089寸ț7I(Úų9ĝğuu. 89 IŞț7寸寸寸 09ØI89 I || LIț79Z | ț799 L9 I[99]]? Ç8I8寸0I S | 0ZZZ9880 || ț70Z || Z80ț7Ç0ImŲ9 (le)stossĩ 8I£7O寸ț79 || || I ZZZ0£Z || 996Zț7 || #76I 60Z1909ĢĢIJU. 89 IZț7ț7ZZ || ț7Z6€Zț768 || 69 I || 699 I || Lț761€ | 0Lsilopogo Z£ț7ț79969 | 99Çț7ț709 || 6ț7Lț79 || Sț7ț76 I || 6 ||விழுநிழிழெ ț7Lț7960I9 I 6ț7 || 0£Lț7 I || 9ț7 | 06Z || #79 Zț7 I || 8 ||IIIĞriqo I Ç96LL89 | 8ț7 || Lț7988 | 6LZ£9 || L690€ | 0Zhgnმჩიugoცუ 1ọoựfe'ÉLŐrı9||poụre(None) | IpolyısIpoļies- þoụre(Nories ipo-isool][0- || Noo?-- to(jųnnகுர்ராIsırı igieuse || Girl@sosynrıs sosynrī ļı, Tırn|q\sino) | T.-qTTIIeisu. qioÉcosso įrnųjį5?/ 191,9 ugn upoựrnŲ19ță”Ios:9100Ti (totae TsoTaeJTI
1661 'q1@ofosíliouostoso ymųjįssão / stologo ugi quinocoșựcoloạ919 119 olymų,9fẽ sụrto 1,9 ugiapgooooooo U?-ııırı gı990ųofī) sorțiu o úlē apųn-ı çerısı-bıłGo —ı-Çifte ugi
qops@se șúrųojoisoh ingqn qoqese Isojooq,çeợefi) opgerşılæę z
1 – 1,9 torts-ı-Eułgo
:fiņłosogogorsegi
190

1661 sayooyo onoaoae-7,7
quaedi)
onyɑyɑogo-riņogyooyo quaesto mojąfrifoso qøượívĥuro qoyooqu'off) LLSLLLLL L0LLL LLLLLLY LLLLLLLL LLLL LLLLLLLLLL LL LLLLLLL L Sfiatajs@
ZOZ8986Z0ZZI LI896989 I || I £89|| țz ItzŞț7€| ÇOLqigắgặJUTC) 86IZɛ0I ILI99989o [ I09L£8ț7ZI0€0.909 uosog) 90€LSZ89IZÇI08ZIIZZ || 989 #7#70gihuŋ9ĝệ số 60996000ț7906I00Şț7LZ8||ț70030991101091IJŲ) OLZ9寸90L0Zț79[0ZØI09ț7 || Z8I6SI1909 ĝrı 999So I9Z9||ț7ILI8寸#70ILț7 || L099LIfotosiūlų909 IIIIIo, LSZ9Lsț78Z0£9Z09Ş#7919 | 6LL8||69自己h取u司可 098L0{9I £80寸0198L8LL | 06 I #7Z | 0ț7ரய96இh 69ZLS8099Z88ț7|| #7LL668 || 89 LƐZ | 8L(po IIIaps@@ 89966ț7090寸Z8ț70€09Lț7L | 9ț7Z09 | £1(909ாஹ9ய9gபிழி 8.Lf7Ç9ZLZ60£ZII069 IZ || 6999 || 9 | 889Ç0I- Útgolfiqi@ 689ț7L69寸Z寸ț798I£09999 || 99f7€Z | ț7ț7fiņ199ș-TIUI
Ipseņriosisi | Ipolybőg| 1ņoņies ļış olstoffle)|Ipolyus-Ipoļito - || 119o09091Ho
поефрпп9)onJsouffo | Ilgiri@tg@shri | 50įsı-T-In | qoỹLJ10|| kgoloji"TAJTEqi-T-Ireligi
@@@@@@前7剧Ipolymų tofā,
SKKKKK KYLLLL LLL LKK KLLLLLL LLLYSLTLS00Ys YSLLLSKYYLLLSKK
191

Page 103
அட்டவணை - 2 முஸ்லிம் கல்வி பற்றிய ஒப்பீட்டு புள்ளி விபரம்
மாவட்டம் முஸ்லிம் முஸ்லிம் முஸ்லிம் மாணவர் மாணவ, குடிகள் | மாணவர் மாணவி ஆசிரியர் I ஆசிரியர்
(1981) கள் கள்
(%) (%) (%) (%) (%)
கொழும்பு 9.94 8.83 8.82 26 48 கம்பஹா 3.44 4.25 4.00 28 49 களுத்துறை 7.59 9.40 8.8 24 36 கண்டி 11.16 12.83 12.80 22 24 மாத்தளை 7.44 8.50 8.35 22 21 நுவரெலியா 3.02 2.56 2.58 27 20 காலி 3.23 3.37 3.23 2 30 மாத்தறை 2.61 2.61 2.19 20 18 ஹம்பாந்தோட்டை 2.20 2.05 1.78 21 18 யாழ்ப்பாணம் 1.70 女 女 ★ கிளிநொச்சி 女 ★ 女 ★ மன்னார் 28.12 , 女 女 女 முல்லைத்தீவு 4.92 女 女 女 வவுனியா 7.05 女 女 மட்டக்களப்பு 24.07 23.20 22.96 42 42 அம்பாறை 41.60 38.95 37.54 29 09 திருகோணமலை 29.50 40.00 39.10 29 40 குருனாகல் 5.29 6.71 6.48 21 26 புத்தளம் 10.18 15.54 15.10 27 31 அனுராதபுரம் 7.45 1.45 9.15 24 28 பொலனறுவை 6.70 7.62 7.25 26 14 பதுளை 4.47 5.05 4.98 21 20 மொனராகலை 2.05 1.84 1.76 29 40 இரத்தினபுரி 1.93 1.94 1.83 24 2 கேகாலை 5.35 6.90 7.53 19 17
குறிப்பு: வடமாகாணத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான முஸ்லிம் மாணவர்களும் ஆசிரியர்களும் மாகாணத்திற்கு வெளியில் அகதிமுகாம்களில் வாழ்வதால் அதுபற்றிய விபரங்கள் கணிக்கப்படவில்லை.
மூலம் : குடிசன விபரம் 1981 குடிசனக் கணிப்பிலிருந்தும் கல்வி பற்றிய விபரங்கள்
1991 பாடசாலைக் கணிப்பிலிருந்தும்
92

அட்டவணை - 3 மாவட்ட ரீதியாக முஸ்லிம் கல்வி குறிகாட்டிகள்
முஸ்லிம் ஆண்/பெண் அனுமதி சிங். மொழியில் மாணவர்களில் எழுத்தறிவு 1983 1992 கற்கும் முஸ்லிம் ஆண்கள் வேறுபாடு மாணவர்கள்
(%) (%) (%) (%) (ዓ6)
கொழும்பு 50.99 6.9 21 37 49.83 கம்பஹா 53.07 9.9 f 14 26.55 களுத்துறை 51.31 10.6 13 12 1157
கண்டி 50.02 12.6 21 62 15.15 மாத்தளை 51.43 11.2 06 22 6.6 நுவரெலியா 51,54 12.4 - 05 06 30.76 காலி 51.85 6.5 O3 侬0 59.90 மாத்தறை 58.20 5.8 07 06 12.47 அம்பாந்தோட்டை 56.25 7.9 O2 05 39.60
யாழ்ப்பாணம் 50.00 2.7 04 04 கிளிநொச்சி 42.85 மன்னார் 50.36 13.9 3 20 முல்லைத்தீவு 15 · வவுனியா 53.47 13.5 sa 01
மட்டக்களப்பு 50.48 21 27 அம்பாறை 53.47 22.4 91 163 0.32 திருகோணமலை 54.65 22.4 21 29 0.56
குருநாகல் 5179 13.2 13 30 1126 புத்தளம் 52.19 12 12 3.08
அநுராதபுரம் 51.82 20.5 05 09 2.57 பொலநறுவை 52.52 19.0 O 04 1.38
பதுளை 51.18 17.7 O6 O6 27.47 மொனராகலை 51.94 16.6 us 19.75
இரத்தினபுரி 52.13 10.0 O1 O3 32.70 கேகாலை 51.36 11.3 鲁3 43 6.44
மூலம் : மாணவர்கள் பற்றிய விபரம் 1991பாடசாலைக்கணிப்பிலிருந்தும் எழுத்தறிவு 1981ம் ஆண்டு குடிசனக்கணிப்பிலிருந்தும், பல்கலைக்கழக அனுமதி உயர்கல்விஅமைச்சிலிருந்தும் பெறப்பட்டது.
193

Page 104
பின்னிணைப்பு: 8 முஸ்லிம் கல்வியின் அண்மைக் கால மாற்றங்கள்
அட்டவணை1 முஸ்லிம் பாடசாலை, 1998
பாடசாலையின் முஸ்லிம் % லங்கை % Qf@a劣 மாத்த
எண்ணிக்கை எண்ணிக்கை
1 AB 63 8.2 600 5.8 C 165 21.5 1936 18.8 Type 2 252 32.9 3722 36.1 Type 3 286 37.3 4055 39.3 Total 766 100.0 10313 100.0
மூலம் : கல்விஅமைச்சு பத்தரமுல்லை, கொழும்பு
அட்டவணை 2. முஸ்லிம் ஆசிரியர்கள் 1998
ஆசிரியர்கள் முஸ்லிம் % 。 இலங்கை %
• எண்ணிக்கை
ஆண் 6伶8 44.9 59019 31.7 பெண் 7597 55.1 127416 68.3
மொத்தம் 13795 100.0 186435 1000
மூலம் : கல்விஅமைச்சு பத்தரமுல்லை, கொழும்பு
அட்டவணை 3. சிறப்பு தேர்ச்சி ரீதியாக முஸ்லிம் ஆசிரியர்கள், 1998
ஆசிரியர்கள் முஸ்லிம் % இலங்கை
எண்ணிக்கை எண்ணிக்கை
பட்டதாரி 2297 17.1 49816 26.7 பயிற்றப்பட்ட 7736 57.6 105914 56.8 பயிற்றப்படாத 3396 25.3 30705 16.5 மொத்தம் 13429 100.0 186435 100.0
மூலம் கல்விஅமைச்சு பத்தரமுல்லை, கொழும்பு
194

அட்டவணை 4. மாவட்ட ரீதியாக முஸ்லிம் ஆசிரியர்கள், 1998
முஸ்லிம் முஸ்லிம் மாவட்டம் ஆண் பெண் மொத்தம்|ஆசிரியர் % குடிசன%
கொழும்பு 怡6 411 577 4 9.9 கம்பஹா 120 262 382 2.7 3.4 களுத்துறை 162 505 667 7 7.6 கண்டி 495 1367 1862 12.3 11.2 மாத்தளை 伯0 349 509 9.6 7.4 நுவரெலியா 64 157 221 3.5 3 காலி 89 175 264 2.5 3.2 மாத்தறை 150 12 262 2.7 3.6 ஹம்பாந்தோட்ை 62 80 142 2.1 2.2 யாழ்ப்பாணம் O f O 17 கிளிநொச்சி O O O O LosiT60TTf 36 53 89 11.9 28.1 வவுனியா 68 42 110 6.5 4.9 முல்லைத்தீவு O O O O 7.1 மட்டக்களப்பு 443 298 732 19.7 24.1 அம்பாறை 1282 898 2180 35.9 416 திருகோணமலை | 823 300 1123 31.6 29.5 குருனாகலை 456 608 1073 5.8 5.3 புத்தளம் 437 399 836 13.9 10.2 அனுராதபுரம் 497 348 845 9.2 7.5 பொலநறுவை 132 83 215 6 6.7 பதுளை 182 370 552 5.7 4.5 மொனறாகலை 40 31 71 7 2. இரத்தினபுரி 95 146 241 2.3 1.9 கேகாலை 229 612 841 8.7 5.4 மூலம் : பாடசாலைக் கணிப்பு 1998 குடிசன கணிப்பீடு 1981
அட்டவணை 5. வகுப்பு ரீதியாக முஸ்லிம் மாணவர்கள், 1998
மானவர்கள் முஸ்லிம் இலங்கை வகுப்புரிதியாக எண்ணி % எண்ணி %
க்கை க்கை
1 - 5 165108 50.3 1801387 43.6 6 - 1 148886 45.4 2069416 50.0 12 - 13 4169 4.3 264.035 6.4 மொத்தம் 32863 100.0 4134838 100.0
195

Page 105
-ợợgoșri ș%)opgrupo
ƐƐ6€990 38226ZƐZ/ s 60 1889“PLZɛį.-- I €/.,89899 || Z| || 99866/866|| 9Z9ț79 || ty0 |60įÞÉ99 / 190 # 09178092||90 || 69ƐŋZ99 || ty0 | Zț7Z86/166|| GƐtož9 || Z0 5ZZ8į.6t7/. || 90 || G09Z0128:L170 || ț7/.9Z894 || 8Z , Z99Z6/966|| #2는Gļț7---- 1899ļ.9ț7 G | ZO 19ț7Z2는9는€0189€.0ț79 || Z.0 || tyƐƐ96/966|| Zā.Z6z40 19st)9!893 || 8:0 |t?/860守!809/GtzƐƐƐ || Zį || Z6ZG6/t7664 92!8—十ty99Z099 || 60 || 888įįZɛļ.A 0 || 99Z£809 || || || Z0£tv6/€66|| ZZ80ț7į0 || 198£to 69 || Z0 I 0/}8)는įos.10998?0Zț7 || 80 | 179€.£6/Z66|| ZZ8tzt;90 || /||8L8ļț7 | 170 || $Zɛ9!Ɛ9||Z0698t?GĻ9 || 60 s otvoZ6/ļ66į 8įŹtyƐ80 00Z846t7ț7 || Z|| || 89Z9ļ!įį.G0//6€.tosto || 9ļ i ZZɛį6/066|| 터制려제 J0LL L0LL LLLLLLLSLLLLLLSLLLL00LLLLL L LLLSLLLLLLLLL LL LL T quos Loosolyo qomụyn-aquo9l10@Ļ9 oğluorīC)UITIÐq'oojojųntsỰoÍ0-luri S000000S0000000SLLLYSSLLLLLL LLLLL LLLLL LLL LLL SLLLSLLL LL LLLLLLSLSFıņiosowegvelgøyı ƐįG8|| || 80 || G89t?Z69 | €Z | G9t?--------ty|| || 89Z8ļGƐt7 || G9-Z | 02/Z66/866|| 60£9|| I || 0 ||ty||!99€9 | / | | / €t?--------80 || !9,2tvot/0t7 || 171€ 10ț79Z86/166|| /100£| || — — || 698£ļ99 s 90 1619--------0į 108?GŻGot? ¡ two|| || 86t7Z/6/966! ------ - - - --ƐƐ909 || Z! I stvo---------- - ----Z£į6ɛ I to 8ļ 180tzŻ96/G66|| --- - - - -6t7ț79ț7 || ty| {tytvo---------- - -ƐZZ02 || tys, 196172G6/V66|| ----- - - - - - - -617Z6Ż I Gļ || ty?---------- - -9Z06Z || || Z | 66ZZv6/£66! ------ - - - --ƐZ669 || Gį į £įŽ-------- - --9Ż86Z || 194 || tyļļZ£6/Z66|| ------ - - - -Ɛt?ļZt? I 80 ||tzt? Z-------- - -917ƐGț7 || Zɛ| || 8ļļZZ6/166|| ------ - - - -Þot70ty | Z || || 6t7Z--------- - - --GZZ08 | 98į į ZA 6į.16/066|| 터험해 L00LLJ0LLLLLLLL00LLSLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLL LS LLLLLLTY II q.ISIỆĝulos Isofi]어리읽判司터읽II 0909€.dugogogo|Ģjoje)-1ın '668661-16oo661'soğuı1@s@ofiooaewooqorııgouisoqų990ų9đī)ourn@gilsigilo)-ı sırrı neuere: [5909oynn-æqı990ų9đī)y:hŋkɔceļolgogi
196

“Nogoşoa são são soppriuzo
----98-- I !!! --ƐƐ08----ZZ-- | 9ɛ6L09ț7 I 90 || CZZ66/866ų t70Z£-- I !ZŹ0ƐƐ | -.- | 0Z----08|008ty!!9!!7G0 || 93ZZ86/Z66|| ------------ | ----! GO98 || ---- | 9||----6€.į0|?81£4990 || otvoZ6/966|| ------- | ---| | 061 || — — || 60----9Z11 || 6L!zZłoty | C0 | Z8Z96/966! ---------- I ——| 80/} s -- I ZO--ț7Z-- | ZZZZZGŴ s tvO † 19Ż96/t/66! ---------- - - - - -tz』11 || O는----! 8-- I ZZƐƐ9.817 || ty0 | 8!!Þ6/€66|| ---------- I ----| ZO88 ||11 || O는| 06Z-- | 813는89t? I G0 # 18?.£6/Z66|| ---------- - - - - --Zļ.LO} || SL----8-- I ZIZZtỷ9ț7 | €0 || 0:7ZZ6/166|| ---------- | ---| 10/], |-- | 8į108Ż11 || BLከyሪA0ț7 | 170 || Noz16/066į 刀劑周 OossW MO?{{L|VWI VJ|O?{{WN 10?{{LVW IVLIQ? AWIQ?{{L|VW IVL lƆ?{{W|O?HLIVW | VL looste ĝuis@kĩ 공리공레공的키헌미뤼&mulagDurmon「T&Tsastuso ș-isijęq qomŲJŲline)Qjäiტ— url c6678661 - 16/0661 '$ơissio e fieș&••æri regelegissassifi, eving y gae-uri)”ēsoņTuoĚto) 1991 losooorts-ı-Çılgo + HırılssowegoișoŲı 60Z82 || 8:0 || 81€089| 0 || ZZƐ0| 9—— bl8ZGtog i G0 || 0ț7€.66/866|| SZ66t7 | 90 £8||Z0!/10 | 61Z089-- | 91Z8tyɛ9 || 80 || ZZɛ86/1664 Zį.9/1790 196į90£9 || — — || ZZ守069-- | 9Zo į88£9 || ty0 | 60£16/966į tz0t76||! 0 ! 08Z0Zț7 | -.- | 8Z----Gt?į0įɛƐƐ9ƐG I Z0 I 017€.96/9661 /099||---- | 18Ɛ0tvoļ0 | 08/106ț7-- į ZZ9 |0999048G6/t/661 1089į ! -- I !!!| 0i>는 ||11 || 6LƐ009—— 9408919 || G0 # ÞÓ8Þ6/€66|| 2.00/4Z0 ||6||Z098 ||11 || ZLZ099-- | 91ɛZ68tz || 10 || Z6?£6/Z66|| Z0 ,68||Z0 ||0||Z09ł7 | -.- | †y!€0Zț7-- s ZZ£tvþ99 || G0 || 80£Z6/166|| 10t76įļ0 || 96! 0ZƐ |-- | £1906t7-- s tvz.9Z009 | -.- | 9,7€.16/066į 터利려해 Ɔ?{IWNIO?{{L IVW IVL || OossW|O?ɛILWW IVLIO?{{W|O?{{LIVW IVL I O?{{W|O? LIVWI VL | odorio (ĝinĪGĀ V gırtlı ortoŲsqıműsortotoo oo@Ų.闾읽司制制的터(Maiტ lurl
LLLLLS0L000SY00YYSLLLLLL LLLLLL LL LLLSLLLS00LL LL LLLLLSLLS LLLLSKKKK
197

Page 106
~ogoșogorr oặNoopogrupo
ɔļ0
ɔɛ9
Ɔ sƆ.
Ɔ8||
3D10
0£
’66/8661
£9
62
86/1661
Z8
Z£
Z6/966||
96/966||
G6/t766||
tv6/ɛ661
£6/Z66į.
Z6/1661
16/066||
Ɔ?{IWN
Q?{{JL
VIN
VL
Ɔ?{{W
Ɔ?{{JL
VW
VL
|O??8IWI O??8[L
VW
VL
0??8HWN IO? LIVW
VL
人履历
sousto sull@s@
II q. 1091194? Isso olim?)([\s,]
I q. 10511@@Ļs olimo) sığı
quus 11@@Ųs Juslenso
qømųnnstabliskā” tegi
(дічіј9-шп
( 66/8661 - 16/066ı oğơif@ēlē ofioșasưeoqorı işsựsoggerustf) soumɛ; y tŷgie-uri)“tosy-ııı@to) 1991 loseuere—ı-ıłGo »Hruosewoŋoologi
198

~qopogoşon goto)o pop-woo
9ļG0tø010Ɛ0Z0ƐƐ04.68618£9066/866|| 9%90Ɛ0ZOZ0| 0017/008946€.2086/1664 ƐZ90G0Z0tz0--9€.寸Zɛ!4ƐZ0Z6/966] 90---+----Z0| 0产0----Ot?寸3).80|Z----96/966|| 1010tvO.0/ 0Z002€08ZZ!84Z0G6/t/661 10----| 0į0Ɛ0Z098!!9Z60GƐZ0v6/ɛ66! 6090Z0Z0Z0Z0tzz20£Z800ț7Ɛ0£6/Z66|| 60ty020----Ɛ0Z08寸14.8Z었z는Z4----Z6/1661 80Ɛ0| 0| 090Z092/0ZZ#P는08Ɛ016/066|| 割司T)))与DTI@ng원R려에 LLLLSLLLLL LLLLL LLLL S LLLLSLLLLL LLLLL LLLLL S LLLLSLLLLL YLLLL SLLLLLLSLLL y qmuertoloராத்திரமுழு டிவிர司判司미치코自引喻自习目)횡國的리 LL0000S000000SLLL LLL LLLL LLLLLL LLLLL LLLLLL LLLSLLLS00LL 0LL LLLLLLLSKKSLLLLLLLLK 守产Þ0G9ZZ|?Z099,9Z#2는90ƐZZZ9||66/8661 #2는Z0Zț791918089tvo80908ƐƐ96į86/166|| !!Ɛ0tzG9L10ZOtxt7.80OL906iz는9/.16/966] 91Ɛ0 £1781•••• -----8.09€--------90ללZļ.96/966|| /1Ɛ0/9tvz.--------Ɛ9įā.--------Zozt70]G6/1766|| 81to()£17įį.--------t799į.+---+--------AsɛZA18||tv5/ɛ661 #2는Ɛ099iz는--->----889ļ.--------£6||Z!!£6/Z66|| 8090/9Z!--------!99ļ--------8/488Z6/1661 |Z60999ļ.--------| 904.--------992į9416/066|| 읽利터히극그터司히司判司히T그터司히극히利치의그터司히크리페홍터히극그터司히T司制터히TT터對히T司制터히TT터司히국기시원해 rLTSLLLLL S LLL SLLLL SLLLLSLLLLL LLL LLLL S LLLLSLLLLLS LL SLLLLSLL 역「크니's自)리司判司러T리司判司II tuotuosetuotų9% oĢjoje, Tiin
L000000 S 00S0000 SLLLLLYYLLL KLLlLC Ll LLLLLLL LLLLL LLLLSTL LLLL L LLLLSKY
199

Page 107
“qopogoșori goto), spop-ujo
위험
G--CI--ty0|0A10----Ɔļ0010○ーー66/866|| t70----Z0----į0----Ɛ0----80| 086/166|| --------| 0! 0į0----Ź0| 0Z0Z016/9661 ----------------------------------------96/966! ----------------------------------------G6/v661 ----------------------------------------Þ6/€664 ----------------------------------------£6/Z66|| --------|-----------------------------Z6/1661 ----------------------------------------16/066|| qiĝğılınlo) | logone)自取飒unglogorlle)q1ĝğı/Ulu) | logone)q1@ğıldı9 | logon(s)| q |g|ĝ|JUT|9) | Inggris)터制읽利 qŲ90ųofi) |ql|ņoapfi)qųọ90ųofi) | qŲ90ųof)qŲ90ųofi) | qų90ųof)qŲsapf) |q|Qodpífi | Noapfi) ||||Ọoopfi) | (pun
A唱巨与阎图想与圆与月局)T@@@@@@@@@@@@@@@(б9і9 шп S000000S00000 YSLLL LLLL LLLLL LLLLLLL LLLLL LLL LLLSLLLS0LL 00LL LLLLLLSKKS LLLLLLLLLL
Z0|-Z0------------| 0------------ƐƐZO66/866||
|0----t70----Þ0----Ź0----| 0106는ZO86/166||
--------90------------90----10----Þz|0Z6/966į
----------------------|0------------ZZ8096/966||
------ - ----------------Ɛ0-- ... ------į81096/w66]
------ ... ---------------------- - -----ZZ----Þ6/ɛ66!
------ - --------------Z0----| 0| 0/}ዜ0£6/Z66||
------------------------| 0------------9€.Z0Z6/1661
------ - - -------------| 0----| 0----8Z10}6/0664 공5TT공5T헌TTR공의T判司의T터헌히T그회制制터히TT터制히T司制制터히TT터制리히T司制制터히TT터制리히원對형제
rLLLLLSLLLL S LLL SLLLLSLLLLLLS LLL LLLLL LLLLSLLLLLS LL SLLLLL LL
읽터司制히터的의「허리키司터읽에키월T리패키험터확히키利리SO){{ tyrmŲJŲurilo)ỰītotīITI
S0000000 S 000000 SLLTL LLL KLLKLC KlLLLLLL LLLLLL LLLLS LLLLSLLLS00Ys 000 LLLLLSLL S LLLLL LLLLSK
200

LLLLLLLL LLLLLLL LLLLLLY LLLLLLL LLLLLLLL LLLLLLLLYYLLAG664 - 16/066!
••ợeo-moșŲaeo otsuob spolone, noțiune - g teostępodregi-új ĝoje nun AI LLYK LLLLK LLLLL0 LL0YL000000LSL YT000K CKLL00 LLL00SLLL LL0TLL LLLLLLM YYYLYYL YLL0SLLLLL LLKYTY TYTMLrL 000 LSY SLCLTLLS TTLLLLK LLL0TLL LLLL LZYYY00S0000 LLS YLLrL LLYLLLLLL00L LLLLL LLLLL LLTMLYLLLL0S0 YJYKKLLKKY0 00 LL L LLLLL LLLLLL LLL LLL LLLLLLY TLL LL L LLLLLLLSL forbiso@yoyooɓoɔ6)umɔgsso un ņmuertogs opusęụnnslagsis ışụsoprtsingsløn – insoggsins?@ęŲjoje) un ıssı,Go@lys muertogs- y
·lo-7;rzioșụwo stosowywoł9:14%; qww.oog-wriņáo LLLSLLLYLLLLLL LLLLLLL L0 LLLL LLLL LLLLL LLMTMLLSY LLL S L0L
608]]
田——£ZZ066/866! 99204困——0899§Z86/1661 09.toO4田——6tነb09!Z6/966! 09$/.1998Þ9ț7艾9496/966! £Z//Zț798Ꮓ676/j.96/966! 089989.1296ț»864tv5/€66! £469€19,10ț761!£6/Z66|| 904/08寸8181799Z6/166|| 6/1/88守符ZZ99/|16/0664 國國劇的5TT공5T司制制터히TT터헌키50)Logo đìfi]|$$inne)| qựstųofi) |ượngf) || !gusi 目心劑自嘲讽目pỰājējīīīī
: quaesto
:hrųj@
‘6678661 - 16/0661 '$ơī£iĉo ofio șæusoopn rpgeoụreneuon gişeasefi)olimo y qøur) “” esoy-ujoče) işoz soseuere--Ziko »hņeeewees.
2011

Page 108
0LL00L LLLLL LLLLLL LLLLLL LLLLLLY LLLLLL LLLLLLLLLYLMLLLLLL LYLSLYK LL TL LLLLL LLm LT L mHL LL LLL LLLLLLL 00 LLL LLLLLLLLL LLLL LLS0 YLL000L LLS0000 LLLL LLLLL LLLL LLLLLLLK LLT LL LLTLL LmLL TLT LLL LyTTyT LLSLLLYLLY L
Im헌뒤월에引 *可「劑「因Oze |zɛɛ || 1ạsĩ TīņāTTEZŐZț78 || 198(900999 hỊsìŋoole)Gju sunų, 터험制해T허司허T허cos||gss TĘsāTĒTTĘ188 || || 99冯9恩湖与O fuq9o|Qo]]oņ1911@@Ų9 饲引T司TgR이T헌TT터험해T그터制허T허90€ i 69€.ogặ1911) hņħlige,INoriļņoரடியிஇருடி 官司)Glo | Gwo | Nossão | quae sooAZ£ | €ț7€.(定n:UMüm이었 GH I GI|O{{ | W | GH | CIƆ뛰T데TR利國예되 66/866 I86/L66I襄---- 66/866 I - S6 #66I '&dif@s@ ofiooaewoonpri isojloosterseun qigonųofi) qęyn-nenorhre nedig"குழிபு பக்கு1ļos issotere--Ziko +Fısılasowoŋoolşolţi |-முடியிடுfņ199șTym0909Loog) 唱g)터이TR허T터험해TT司0||608288)n@@@@8?108 s 0$$(90999 hຫຼfiມgງuയ9റÚ09ĝğılm 引ņ1991ğlff || 60Z66Z 6ɛɛ | logon0) | qu1991ğlg | G9||C || 999 | 1,9110 | quoosif I CZ0,2€ | 098qigoțįsts (juossumQ9||9冯后因烟hரடியிஇழ9 H콜에T司制이크헌vzɛ į8ɛ | 10ĝonto) | ql||969|glg | oz!7利T리히T그터利에TT司체T이Z98 s to/9oĝlone) Ħņsìī£5Fīīīīīī£5ITĀriņoпIosue)4909 海9T터 ||gu99편(學, 19947헌TR휘T터험에T司이크어의읽히T어휘T그터制制에T司制T어원9ZƐ || 6ț78&mUl역「히 H_|CI|O{{ |V | GH || CIƆ8Ꮋ | Ꮩ | ᎧᎶᎻCI|O£I | V |±0.919 ĝisto)Turu L6/966I96/S66 IS6/W66I嗜卧图引
66/866 I - S6 /#66I ‘Ġơif@s@ ofiooQoooooor. 199ųı9oysteigneuonqų990ųofī) apun-itserısıtıl@ (nuodig og løseworte-i-ziiĝo
202

பின்னிணைப்பு: 5
இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலை தொடர்பான தேசிய கல்வி மகாநாடு
19-20 நவம்பர் 1994. மார்கா நிலையம், கொழும்பு. (முஸ்லிம் மஜ்லிஸ் பேராதனைப் பல்கலைக்கழகம், முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்ணனி)
முதல் நாள்: சனிக்கிழமை, 19 நவம்பர் 8.80 - 9.00 - பதிவு செய்தல் செயல் அமர்வு ஒன்று: முஸ்லிம்களின் உயர் கல்வி காலை அமர்வு 9.00 - 12.30 தலைவர்: எம்.ஐ.எம். அமீன் (பேராதனைப் பல்கலைக்கழகம்) பின்னணி அறிக்கை என்.பி.எம்.சைபுதீன், கலாநிதி எஸ்.எச். ஹஸ்புல்லா (பேராதனைப் பல்கலைக்கழகம்) முஸ்லிம்களின் பல்கலைக்கழகக் கல்வி பேராசிரியர் சோ. சந்திரசேகரன் (கொழும்புப் பல்கலைக்கழகம்) கல்முனைக் கல்வி வலயத்தில் விஞ்ஞானக் கல்விக்கான வாய்ப்புகளும், விஞ்ஞான அடைவும் பி.சி. பக்கீர் ஜவ்பர் (இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) தேநீர் இடைவேளை முஸ்லிம் பாடசாலைகளின் பொதுக்கல்விப் பெறுபேறுகள்: ஓர் அளவீடு எம். கருணாநிதி (கொழும்புப் பல்கலைக்கழகம்) கலந்துரையாடல் ளுஹர் தொழுகை, பகல் போசனம்
மாலை அமர்வு பி.ப. 1.30-4.30
தலைவர் எம்.ஏ.எம். சித்தீக் (பேராதனைப் பல்கலைக்கழகம்) முஸ்லிம்களின் விஞ்ஞானக் கல்வி கலாநிதி எம்.ஏ.கரீம் (பேராதனைப் பல்கலைக்கழகம்) முஸ்லிம்களின் பட்டப் படிப்பு, பட்டப்பின்படிப்புக் கல்வி கலாநிதி ஏ.எஸ்.எம். நவ்பல் (பேராதனைப் பல்கலைக்கழகம்)
2O3,

Page 109
முஸ்லிம்களும், தொழில் நுட்பக் கல்வியும் ஏ.சி.எம். சபீக் (பொறியியல் பயிற்சி நிலையம்)
தேநீர் இடைவேளை
இனப்பிரச்சினையால் இடம் பெயர்ந்த முஸ்லிம் பட்டதாரி மாணவர்களின் கல்விப் பிரச்சினைகள் எம்.எஸ். அமானுல்லா (கிழக்குப் பல்கலைக்கழகம்) கலந்துரையாடல்
நன்றியுரை
இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர்
காலை அமர்வு 9.00 - 12.30
தலைவர் கலாநிதி கதீஜா முஹம்மது அலி (ருகுனு பல்கலைக்கழகம்)
பின்னணி அறிக்கை
எம்.எஸ்.இஸ்ஸதுன் நிஸா கலாநிதி எஸ்.எச்.ஹஸ்புல்லா (பேராதனைப் பல்கலைக்கழகம்) முஸ்லிம் பெண்களின் கல்வி ஒரு பொது ஆய்வு எம்.எஸ்.இஸ்ஸதுன் நிஸா (பேராதனைப் பல்கலைக்கழகம்) முஸ்லிம் பெண்கள் உயர் கல்வி நிலை எம்.ஐ.எஸ். பாதிமா சுல்பிகா (தேசிய கல்வி நிறுவகம்) தேநீர் இடைவேளை முஸ்லிம் மாணவிகள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்துவதற்கான காரணங்கள் எம்.ஐ.எம். பேகம் மும்தாஜ் (பேராதனைப் பல்கலைக்கழகம்) கலந்துரையாடல் ளுஹர் தொழுகை, மதிய போசனம்
DITGoero elkoria 1.30 - 2.30
தலைவர் கலாநிதி எம்.ஏ.எம். நுஃமான் (பேராதனைப் பல்கலைக்கழகம்)
இறுதி அமர்வு 2.30 - 8.00 செயல் அமர்வு நன்றியுரை
204

பின்னினைப்பு: ே
9.
10.
ll.
12.
13.
14.
5.
6.
17.
18.
தேசிய கல்வி மகாநாட்டின் இரு நாள் செயலமர்வுகளில் கலந்து கொண்டவர்களின் பெயரும் விலாசமும்
அமானுல்லா, எம்.எஸ். பேராதனைப் பல்கலைக்கழகம் அகமது, அ.ந. சிரேஷ்ட விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக்கழகம் அகார் முகம்மது, ஏ.சி. பீடாதிபதி, நளிமியா கல்வி நிலையம், பேருவளை அமீன், எம்.ஐ. தலைவர், அரபு, இஸ்லாமிய நாகரீகத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம் அமீர்டின், வி. விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆதம்புள்ளை, ஆர்.எம். முகாமையர்ளர், இலங்கை வங்கி, கொழும்பு மெளலவி இப்ராகிம், ஏ.எல்.எம். விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம், கருணாநிதி, எம். சிரேஷ்ட விரிவுரையாளர், கல்விப்பீடம் கொழும்புப் பல்கலைக்கழகம். ஹனீபா, யூ.எல் எம். மட்டக்களப்பு மாவட்டக் கல்விப் பணிப்பாளர். கமால்தீன்,எஸ்.எம். பணிப்பாளர், இஸ்லாமிய நிலையம் கொழும்பு. பேராசிரியர் கரீம், எம். ஏ. தலைவர், பெளதீகவியல் துறை, விஞ்ஞான பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம், கலீலுர்ரஹற்மான், ஏ.எஸ். செயலாளர், ஜம்இய்யதுல் அன்சாரி சுன்னதில் முஹம்மதிய்யா, பரஹதெனியா, கலாநிதி ஹஸ்புல்லா, எஸ். எச். சிரேஷ்ட விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம். ஹம்ஸா, ஏ.ஆர். பேராதனைப் பல்கலைக்கழகம்.
கலாநிதி கதீஜா முகம்மது அலி, சிரேஷ்ட விரிவுரையாளர், ருகுணுப் பல்கலைக்கழகம் கமால்தீன், எச். முன்னாள் அதிபர், அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் 556)T3F606). ஹலிமா நஜ்முதீன், என். அதிபர், பஸ்யதுல் நஸ்ரியா மு.ம.வி கரீமா ஹசைன், ஏ. கொழும்பு.4
19. மெளலவி காலிதீன், கே.எம்.எச். சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம்
205.

Page 110
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28
29.
29.
30.
31.
கலாநிதி சித்தீக், எம்.ஏ.எம். தலைவர், பல்வைத்திய பீடம் பேராதனைப்
3
2
33.
34,
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
காசிம், எஸ்.எம். தேசியகல்வி நிறுவகம், மஹரகம. சபீக், ஏ.சி.எம். பணிப்பாளர், தன்னியக்க பொறியியல் பயிற்சியாளர்.
ஜமாஹிர், பி.எம். விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம். சமீம், ஏ.எம். 125/66 பிட்டர்சன் வீதி, கொழும்பு-06 சபீக், எம்.ஏ.எம். பேராதனைப் பல்கலைக்கழகம்,
சபீனாஸ், ஹஸன் டீன், இணைப்பதிகாரி, முஸ்லிம் பெண்கள்
ஆராய்ச்சி செயல் முன்னணி. ஜப்பார், ஏ. செயலாளர், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, சபீக், எம்.என்.எம், விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம். சனீர், ஏ.ஜே.எம். 23/3 மார்க்கட் வீதி, தர்கா டவுன். ஜெஸிமா இஸ்மாயில், ஏ. தலைவர், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி. ஜெமீல், எஸ்.எச்.எம். மேலதிக செயலாளர், முஸ்லிம் சமய கலாசார
அமைச்சு, கொழும்பு. சாபி மரைக்கார், எஸ்.எல்.எம். அகில இலங்கை முஸ்லிம் கல்வி
மகாநாடு, கொழும்பு, சாபிர், எம்.எம்.எம். பேராதனைப் பல்கலைக்கழகம்.
பல்கலைக்கழகம், ஜெயின், என்.ஜி. 82, ராஜகிரிய வீதி, ராஜகிரிய. நஸார், எம்.ஐ.ஏ. பேராதனைப் பல்கலைக்கழகம். நவாஸ், ஏ.எச்.எம். பேராதனைப் பல்கலைக்கழகம். நவாஸ்தீன், எப்.எம். பேராதனைப் பல்கலைக்கழகம். நஜ்முதீன், ஏ.சி.எம். விரிவுரையாளர், நளிமியா கல்வி நிலையம்
பேருவளை, நபீல், எம். இசட். எம். நடப்பு வருடத் தலைவர், முஸ்லிம் மஜலிஸ், பேராதனைப் பல்கலைக்கழகம், நிஸா, எம்.எஸ்.ஐ. விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம். நிலாம், எம்.எஸ்.எம். பேராதனைப் பல்கலைக்கழகம். நிஸாம், ஏ.எம்.எம். செயலாளர், வை. எம். எம். ஏ தென்னக்கும்புர கலாநிதி. நுஃமான், எம்.ஏ. சிரேஷ்ட விரிவுரையாளர், பேராதனைப்
பல்கலைக்கழகம்,
2006

43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
நெளயிஸ், ஏ.சி. பேராதனைப் பல்கலைக்கழகம். கலாநிதி நெளபல், ஏ.எஸ்.எம். சிரேஷ்ட விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம். பஸ்ருல் அலி, எம்.ஆர். செயலாளர், முஸ்லிம் மஜ்லிஸ், 1993/1994 கல்வியாண்டு பேராதனைப் பல்கலைக்கழகம். பக்கீர் ஜெளபர், பி.சி. விரிவுரையாளர், திறந்த பல்கலைக்கழகம், நுகேகொடை பாதிமா சுல்பிகா, எம்.ஐ.எஸ். தேசிய கல்வி நிறுவகம், மஹரகம. பாரி, எம்.எஸ்.ஏ. விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம். புர்கான் பி. இப்திகார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கொழும்பு. பெளசியா டீன், எப்.எஸ். அதிபர், பதியுதீன் மஹற்மூத் மகாவித்தியாலயம், கண்டி. . பெளசர், எம். ஏ. எம். தலைவர், முஸ்லிம் மஜ்லிஸ், 1993/1994 கல்வியாண்டு பேராதனைப் பல்கலைக்கழகம். மர்லியா, எம்.எஸ். பேராதனைப் பல்கலைக்கழகம், மெளலவியா மலிகா சுபைர், எஸ். முஸ்லிம் பெண்கள் பாடசாலை. கொழும்பு. முஹம்மத் அஜ்வாத் ஹாஷிம். விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம். முத்தலிப், எஸ்.ஏ. முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி. முஹம்மது மரைக்கார், எம்.எச். அதிபர், ஸாஹிராக் கல்லுாரி கம்பளை. முகுசி, எஸ்.ஆர்.எம்.எம். பேராதனைப் பல்கலைக்கழகம். முலபர், எம்.ஆர். சட்டபீடம், திறந்த பல்கலைக்கழகம். திருமதி மர்சூக், ஏ.பி. தேசிய கல்வி நிறுவனம், மகரகம, டாக்டர். மரீனா ரிபாய், 22, வெண்டமென் பிலேஸ், தெகிவளை.
207

Page 111
ன்னிணைப்பு: 7
பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் 1992/1998 கல்வியாண்டு
உத்தியோகத்தர்
தலைவர் : Y. B. M. (p6m)ugbiT உப தலைவர் : M. M. Brigtb செயலாளர் : M. S. Bai) உதவிச் செயலாளர் M. R. M. S96ð6db உதவிப் பொருளாளர் M. F. N. buT6m)
செயற்குழு உறுப்பினர்கள்
M.F பாதிமா பரீஹா ... 1 M. I. 698É6)T (8uabb T. M. 96m)f M. Z. M. 6LDTüb M. 1 இனாயதுல்லாஹற் M. L. Lu6l36) suff M. A. M. pudori) O. M. 969 J M. Z. M. LD6dBĪT M. LDLjos) S. H. M. 56m)f
208

பின்னிணைப்பு: 7 (தொடர்ச்சி.)
பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் 1993/1994 கல்வியாண்டு
உத்தியோகத்தர்
தலைவர் M. A. M. U6ays உப தலைவர் S. R. M. M. (ypg|Mgraf செயலாளர் M.R. பஸ்ருள் அலி உதவிச் செயலாளர் A. S. M. றஸ்லான் உதவிப் பொருளாளர் M. A. M. (p60TT6s) பத்திராதிபர் A.H.M. நவாஸ் இணைப் பத்திராதிபர் I. S. 60).Fult (usib
M. S. M. 56m)ITLb
செயற்குழு உறுப்பினர்கள்
A. H. M. puld U. L. A. pgsib M. I. LufgMBIT A.F.A. மலிக் A. L. M. Bigsbf M.M.M. fuT6mò A. L. M. தவ்பீக் A. L. பதுருதீன்
209

Page 112
பின்னிணைப்பு: 8
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
கட்டுரையாளர்கள் பற்றிய விபரம்
எம்.எஸ். இஸ்ஸதுன் நிஸா முன்னாள் விரிவுரையாளர், பொருளியல், வர்த்தக, புள்ளிவிபரவியல் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
எஸ்.எச். ஹஸ்புல்லா, சிரேஷ்ட விரிவுரையாளர், புவியியல் துறை, பேராதனைப் பலகலைக்கழகம்.
பாதிமா சுல்பிகா, பிரதம செயற்திட்ட அலுவலர், தேசிய கல்வி நிறுவகம் மஹரகம. எம்.ஐ.எம். பேகம் மும்தாஜ், நூலகர், முஸ்லிம் மகாவித்தியாலயம், கேகாலை, முன்னாள் விரிவுரையாளர், புவியியல் துறை, பேராதனைப் பலகலைக்கழகம். எம். அஜ்வாத் ஹாஷிம், விரிவுரையாளர், அரபு, இஸ்லாமிய நாகரிகத் துறை, பேராதனைப் பலகலைக்கழகம்.
என்.பீ.எம். சைபுதீன், சிரேஷ்ட விரிவுரையாளர், அரசறிவியல் துறை, பேராதனைப் பல்கலைகழகம்.
எம். கருணாநிதி, சிரேஷ்ட விரிவுரையாளர், கல்விப் பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்
சோ. சந்திரசேகரம், பேராசிரியர், துறைத்தலைவர், சமூக விஞ்ஞானத்துறை கல்விப் பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்.
பி.சி.பக்கீர் ஜவ்பர், சிரேஷ்ட விரிவுரையாளர், திறந்த பல்கலைக்கழகம், நாவல.
10) எம்.எஸ். அமானுல்லா,
கிழக்குப் பல்கலைக்கழகப் பழைய மாணவர், ஆசிரியர், மாலைதீவு.
210