கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வயல் 1987.01-03

Page 1
கலை இலக்கிய சமூக அறி
ஆண்டு அறுவடை:2
கதை
* மனேவி அமைவதெல்ல * இவன் மனிதன்
கவிதை:
* வேக்காட்டு விளிப்புகள்
* ஒய்வு இலா ஊனங்கள்
* வறுமைக்கோடு,
* வேறென்ன செய்யலா
* சுதந்திரம் பெறவேண்
1 ܒ .
கட்டுரை: .
* இலங்கையின் இனப்பி படையில் பொருளா و ار
சினோபே,
* மூன்ரும் உலகினது
தொழில்நுட்ப அணுகு * தமிழர் சமூக பண்ட லாற்றுத்துறையில் பே
மாமலேயின் பணி.
இலக்கியம் இல்லாச் சமூகம்
 

VITL)
பிரச்சினே அடிப் ாதாரப் பிரச்
முறைகள்,
Tடடிபஸ் வர ராசிரியர் வான
இயக்கம் இல்லாச் ச மூகம்

Page 2
வயல் விளைய எமது
உளம் நிறைந்த வாழ்த்துக்கள
அன்பளிப்பு: THE FINANCE CO. LTD. இல. 65, மத்திய வீதி - மட்டக்களப்பு.

O OUIG) 1987 ஜனவரி - மார்ச்
விட, கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் அடிக் கடி நிகழும் அனர்த்தங்களினல் அகதிகளாக்கப்பட்டு அல்லற் பட்டு ஆற்ருது கண்ணிர் வடிக்கும் மக்கள் அதிகம் பேர். ஆண் டவுன் ஒருவேளை உணவைக்கூட நமக்கு அளித்தாலும், அதில் கூட கைவைக்கும்போது அடுத்த வீட்டில் அடுப்பு எரிகிறதா என்று அவதானிக்கவேண்டிய காலத்தில் வாழ்ந்துகொண்டிருக் கிருேம். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதுபோல் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு ஆண்மகனவது சுட்டுக்கொல்லப்பட்டி ருப்பான்; அல்லது தடுப்பு முகா மொன்றில் வி  ைதி டட்டுக் கொண் டிருப்பான்; அல்லது காணுமல் போனவர்கள் பட்டியலில் அவன் பெயர் இடம் பெற்றிருக்கும். −
மானிட இனத்தின் மாண்பும், மனித உரிமையின் மகத் துவமும் உணரப்பட்டு மனித நேயம் ஒங்கவேண்டிய காலம் மனித நேயம் அற்ற கடவுள் தொண்டு போலியாகிவிடும். கட வுள்கூட மனித உருவில்தான் மக்களுக்கு அருள்பாலித்துள்ளதாக அறிகிருேம். இந்துமத தத்துவத்தின் அடிப்படையே மனிதன் மீது மனிதன் காட்டவேண்டிய அன்பைத்தான் வலியுறுத்தி நிற் கின்றது. ஆதலால்,
இந்துக் கோயில் நிர்வாகங்களே!
- நாட்டு நிலைமை சுமுக நிலைக்குத் திரும்பும்வரை ஆலயத் திருவிழாக்களை ஒத்திவையுங்கள்!
- ஆலயத் திருப்பணி (கட்டட நிர்மாணம்) வேலைகளைத் தற்காலிகமாகத் தள்ளிப்ாேடுங்கள்!
இவைகளுக்குச் செலவிட உத்தேசித்துள்ள பணத்தையும்; ஏனைய ஆலய வருமானங்களையும் பரிதவிக்கும் நமது மக்களின் வயிற்றில் பால் வார்க்காவிட்டாலும், ஒரு வேளைக் கஞ்சியாவது ஊற்றுவதற்கு உபயோகப்படுத்துங்கள்!
சிந்தியுங்கள் ! செயற்படுங்கள் ! இது ஓர் இதயபூர்வமான வேண்டுகோள்
-e,5`fuíf e5(p.

Page 3
28 - [}1 - STW
கொக்கட் டிச் சோலேயில்
கொலை பட்டோர்க் கஞ்சலி
வானத்தில் இரும்புப் பருந்துகள் இரைந்தன! வஃளந்த கதிர்கள் விளேந்த வயல்களில் வீழ்ந்த உருவங்கள் விரைவாய் நகர்ந்தன ! கையில் ஏந்திய
கரிய கருவிகள் ଶ୍táu# &#ଶିଶrit ! கொக்கட்டிச் சோஃயோர் கொலைக்களச் சோலேயாயிற்று ! நேற்று எம்மோடு இருந்த பலர் இன்றுஎம் நினேவுகளாய் எஞ்சினர். கண்ணிரைத் துடைத்து கைகளே இறுக்கி ஒன்றுசொல்வோம் ! மனித வதைகள் வென்றதும் இல்லே !
மானிட தேயம் தோற்றதும் இல்லை ! அஞ்சலிக்கின்ருேம் நண்பர்களே ! உங்கள் நினேவுகளே அஞ்சலிக்கின்ருேம் !
"ஸ் Lisi”
ஆசிரியர்குழு

alLLI à Gaj6rfuî0
ப01டக்களப்பில் இருந்து மீண்டும் ஒரு இலக்கியச் சிறு சஞ் சிகை என்ற வகையில் வெளிவரும் வயலின் முதலாவது இதழ் வெளி பீட்டு வைபவம் அடக்கமான முறையில் கடந்த 1986-11-30ம் திகதி அன்று வெளியிடப்பட்டது. வெளியீட்டு வைபவம் மட்டக்களப்பு விபு லானந்தா வெளிவாரிப் பட்டப்படிப்புகள் கல்லூரியில் இடம்பெற்றது. மட்டக்களப்பின் முதுபெரும் தமிழறிஞர் மகாவித்துவான் X .ெ நடராசா, மட்டக்களப்பு அர்ச் மிக்கேல் கல்லுரரி அதிபர் வித்து வான் இ. கமலநாதன், மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார உத்தியோ கஸ்தர் திரு எஸ். எதிர்மனசிங்கம் ஆகியோர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு திரு. எஸ். வசந்தராசபிள்ளேயவர்கள் தஃப்மைதாங்கினுர்,
"வபல்" முதற் பிரதியை வெளியிட்டு வைத்த மகா வித்துவான் F, X, C. நடராசா அவர்கள் சஞ்சிகையின் பெயர் பற்றியும் பொரி இலக்கணம் தொடர்பாயும் சில கருத்துக்களே கூறி முதல் இதழை வெளியிட்டுவைத்தார். சஞ்சிகையின் 'வயல் என்ற பெயர் பொருத்த மானதாகவும் கிழக்கிலங்கையை சிறப்பாய் பிரதிபலிப்பதாய் கூறிய மகா வித்துவான் அவர்கள் வடமொழி எழுத்துக்களே தமிழ் மொழி ஆக்கிங் களில் பயன்படுத்தி தமிழ் எழுத்துக்களின் தொகையைக் கூட்டவேண் டாம் எனக் கூறினூர்.
மகாவித்துவான் F. X, C. நடராசாவைக் தொடர்ந்து விமர்சன உரை நிகழ்த்திய வித்துவான் இ. கமலநாதன் அவர்கள் சஞ்சிகையில் வெளிவந்த சகல ஆக்கங்கள் பற்றிய தனது விமர்சன நோக்குகளே தொகுத்து உரைத்தார். தான் ஒரு விமர்சகனல்ல எனத் தொடங்கி விமர்சனம் நிகழ்த்திய வித்துவான் கமலநாதன் அவர்கள் சஞ்சிகையில் வெளிவந்த கதை, கவிதைகளே சிறப்பானவைகள் என்ற தொனியில் விமர்சனம் செய்தார் சஞ்சிகையின் கட்டுரைகளைப் பற்றியும் தன் விமர் சனங்களே வித்துவான் கமலநாதன் அவர்கள் விளக்கமாக முன்வைத்தார் தனது விமர்சனங்கண் தொகுத்துக்கூறும் பொழுது வயல் சஞ்சிகை தான் வெளிவரும் காலப்பாதிப்புக்களே உட்கொண்டு இருப்பது போற்றத்தக் கது எனக் கூறி தன் விமர்சனத்தை முடித்தார்.
வித்துவான் இ. கமலநாதன் அவர்களேத் தொடர்ந்து வயல் சஞ் சிகையை விமர்சனம் செய்ய முன்வந்த மட்டக்களப்பு Lmrt elft" | * A * T சார உத்தியோகஸ்தர் ஒரு எஸ். எதிர் மனசிங்கம் அவர்கள் இதழின் ஆக்கங்கள் பற்றிய தனது விமர்சனங்களே உடன்பாட்டு நிலையிலும்,

Page 4
முரண்பாட்டு நிலையிலும் முன்வைத்தார். கதைகள், கவிதைகள் சிறப் பானவை என விமர்சித்த திரு. எஸ். எதிர்மனசிங்கம் அவர்கள் "மேத் தாக்களும் புறநானூறும்" என்ற திரு. க. யோகநாதன் அவர்கள் எழு திய கட்டுரை தரும் செய்திகள் ஏற்கமுடியாதவைகள் என வாதிட்டார். புலவர்கள் கற்பனையில் கூறிய புற நானூற் று ச் செய் தி களை அடிப்படையாகக் கொண்டு சங்க காலச் சமூகம் பற்றிய தீர்மானங்களை செய்யமுடியாது என்ற வகையில் திரு. எதிர்மனசிங்கம் அவர்களின் விமர்சனம் அமைந்தது.
வெளியீட்டு உரை, விமர்சன உரைகளைத் தொடர்ந்து வயல் ஆசிரி யர் குழுவின் சார்பில் சாருமதி அவர்கள் பதிலுரை வழங்கினர். பதி லுரை வழங்க வந்த சாருமதி அவர்கள் தமிழில் சிறு சஞ்சிகை நடத்து வதில் உள்ள சிரமங்களை எடுத்துக்கூறி அதிலும் மட்டக்களப்பில் ஒர் இலக்கிய சஞ்சிகை நடத்துவதில் உள்ள இடர்பாடுகளை விளக்கினர். குறிப்பாக கிழக்கிலங்கையில் நவீன தமிழ் இலக்கியம் பற்றிப் போதிய பிரக்ஞை இல்லாது இருப்பது விசனப்படத்தக்கது என்ருர். மேலும் 'வயல்" ஒன்று பொருட்டு முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு விபரமான பதில்களை அளித்தார்.
தற்கால தமிழ்மொழி வழக்கில் தமிழ் எழுத்துக்களால் குறித்துக் காட்ட முடியாத ஒலியமைப்பு உடைய சொற்களை பயன்படுத்த வேண்டி வரும்பொழுது தமிழ் மொழியில் வேறு ஏற்பாடுகள் இல்லாத பொழுது வடமொழி எழுத்துக்களை பயன்படுத்துதல் தவிர்க்க இயலாது என்ருர். மேலும் சங்க இலக்கியம் தரும் செய்திகளை நம் மனம் போனபோக்கில் நமக்குப் பிடித்தமானவற்றை உண்மையானவை என்றும், நமக்குப் பிடிக் காதவற்றை பொய்யானவை என்றும் அகவயமாய் முடிவுகூறல் ஆரோக் கியமான இலக்கிய அணுகுமுறையல்ல எனக் கூறினர். சங்ககால தமிழக வரலாற்றை வலிந்து பொற்காலமாக காட்ட முனையும் சார்பு மனே பாவம் நீக்கப்பட்டு இலக்கிய வரலாற்றை நடுநிலை மனேபாவத்துடன் அணுகவேண்டும் எனவும் கூறினர்.
சாகுமதி அவர்களின் பதிலுரையோடு நன்றியுரை கூறவந்த 'வயல்’ நிர்வாக ஆசிரியர் திரு. என். சிவலிங்கேஸ்வரன் எனக்கு இந்த இடத்தில் தமிழைப் பேசவே பயமாக இருக்கின்றது என்ற நகைச்சுவைத் தொடக்கத்தோடு 'வயல் வெளியீட்டு வைபவத்திற்கும் பங்காற்றிய சகலருக்கும் நன்றிகளைக் கூறினர். நிர்வாக ஆசிரியர் அவர்களின் நன்றி யுரையோடு அடக்கமான 'வயல் முதற் பிரதியின் வெளியீட்டு வைப வம் இனிதுற முடிந்தது.
தொகுப்பு: “வயலோன்’

இலங்கையின்
இனப்பிரச்சினை
அடிப்படையில் பொருளாதாரப்
-(அழகு. குணசீலன்)-
இலங்கையில் சிங்கள மக் களும், தமிழ் மக்களும் நீண்ட காலம் தொட்டே இனம், வர லாறு, ஆள்புலம், மொழி, சமயம்,
கலாசாரம், பாரம்பரியம் என்ப வற்றின் அடிப்படையில் தனிப் பட்ட இரு தேசிய இனங்களைச்
சேர்ந்த மக்களாக வாழ்ந்து வந் துள்ளனர். வரலாற்று ரீதியாக அவர்கள் வேறுபட்ட இரு நாட் டினங்களாக உருவாகியுள்ளனர். *வேறுபட்ட இரண்டு இனங்கள் பழங்காலத்தில் இருந்தே தீவின் உரிமையைத் தங்களுக்கிடையே பிரித்துக் கொண்டன. தெற்கு மேற்குப் பாகங்களில் உள்ள சிங் களவர் வளவை ஆற்றிலிருந்து சிலாபம் வரைக்கும், தமிழர், வடக்கு, கிழக்குப் பாகங்களிலும் உரிமை பெற்றிருந்தனர்’ என 1797 இல் கிளக்கோன் குறிப்பிட் டுள்ளார். இதை மேலும் வலியு றுத்துவதாக 1803ம் ஆண்டுக்குரிய 'அருேஸ்மித்" தேசப்படமானது சிங் களவரும், தமிழரும் ஏ ற் று க் ாெகண்ட அவரவர்களுக்குரிய தனிப் பட்ட பாரம்பரியப் பிரதேசங்களை எடுத்துக்காட்டுகின்றது.
16ம் நூற்ருண்டின் ஆரம்பம் முதல் நான்கு நூற்ருண்டுகளுக்கு மேலாக போர்த்துக்கேயர், ஒல் லாந்தர், ஆங்கிலேயர், ஆகிய
பிரச்சினையே
மூன்று ஐரோப்பியச் சக்திகளும் இலங்கையை காலனித்துவ ஆட் சிக்கு உட்படுத்தியிருந்தன - பிரித
தானியரின் ஆட்சியின் கீழ் இரு தேசிய இனங்களும் ஒரே நிர்வ்ாக அமைப்பின் கீழ் கொண்டு வரப் பட்டன. இந் நடவடிக்கை சிறு பான்மை மக்களுக்கு பல்வேறுபட்ட வழி முறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்ருக அமைந்தது. கீதத்திரத்தின் பின்பும் ஆட்சி அதிகாரம் பெரும்பான்மை இனத் தலைவர்களின் கையில் இருந்தமை யினுல் இரு இனங்களுக்கும் இடை யிலான இன உறவுகள் படிப்படி யாக சீர்குலையத் தொடங்கின, இந்த படிப்படியாக வளர்ச்சி அடைந்து 1972ம் ஆண்டு குடியரசு அரசியல் அமைப்புடன் ஒரு உச்சநிலையை அடைந்தது. இதைத் தொடர்ந்து 1970களிலும் 1980 களிலும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இப்பிரச்சினை வளர்ச் சியடைந்து, இன்று தேசியரீதியிலும் தியாந் பிர ரீதியிலும், சர்வதேச ரீதியிலும், முக்கிய இடத்தைப் பெற்றுள்ளஒரு சமகாலப் பிரச்சினை யாகக் காணப்படுகின்றது.
இன்று இந்தளவு முக்கியத் துவத்தினைப் பெற்றுள்ள இப்பிரச் சினை ஒரு அரசியல் பிரச்சினையாகக் கொள்ளப்பட்ட போதும், அடிப் படையில் இது ஒரு பொருளாதாரப்

Page 5
பிரச்சினையேயாகும். ஒரு சிறு பான்மைத் தேசிய இனம், பெரும் பான்மைத் தேசிய இனத்தினுல் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் புறக்கணிக்கப்பட்டதன் விளைவே இப்பிரச்சினையாகும். இந்த அடிப்படையில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை ஒரு பொரு ளாதாரப் பிரச்சினை என்பதையும்,
அடிப்படையில் பல பொருளா தாரக் காரணிகளை இது பின்ன ணியில் கொண்டுள்ளது என்ப
தையும் விளக்குவதற்கு இக்கட்டுரை முயற்சிக்கின்றது.
இலங்கையின் தமிழ்த் தேசிய இனம் பெரும்பான்மை இன அர சியல் தலைவர்களால் பின்வரும் நடவடிக்கைகளின் மூலம் புறக் கணிக்கப்பட்டதன் கூட்டு மொத்த மான விளைவே இனப் பிரச் சினையாகும்.
* சிங்களம் மட்டுமே தமிழ்ப் பிர தேசம் உட்பட் இலங்கைத் தீவு முழுவதற்கும் அரசகரும மொழியாக்கப் பட்டமை. தமிழ் இளைஞர்களுக்கு அர சாங்கக் கூட்டுத்தாபன வேலை வாய்ப்புக்களில் பாரபட்சம் காட்டப்பட்டமை. * பல்கலைக் கழகங்களுக்கு தமிழ் மாணவர்கள் தெரிவு செய்யப் படும் பொழுது தரப்படுத்தல்" முறை கைக் கொள்ளப் பட்டமை. * தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் பான்மை இனத்தைச் சேர்ந் தவர்கள் திட்டமிட்டுக் குடி யேற்றப்பட்டமை.
* வடக்கு, கிழக்குப் பிரதேசங் களின் அபிவிருத்தி வேண்டு மென்றே புறக்கணிக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வந்தமை.
பெரும்பான்மை இனத்தின், மத, கலாசாரங்கள் வளர்க்கப் பட்டமையும் சிறுபான்மை இனத்தின் மத, கலாசாரங்கள் புறக்கணிக்கப்பட்டமையும்.
1956 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டார நாயக்கவிஞல் கொண்டுவரப்பட்ட சிங்களம்மட்டும்
சட்டமும், சிங்கள மொழியை அரசகரும மொழியாக்கி உயர் வளித்துள்ள 1972ம் ஆண்டின்
அரசியல் அமைப்பும் தமிழ் மக் களுக்கு அவர்களின் மொழியுரிமை யினை வழங்குவதற்கு மறுத்துள்ளன. 1978ம் ஆண்டு அரசியல் அமைப்பு தமிழ் மொழிக்கு தேசிய மொழி அந்தஸ்த்தை வழங்கிய போதும். இது வெறும் ஏட்டுச் சுரக்காய் ஆகவே இன்றுவரை உள்ளது. அரசகரும மொழிகாரணமாக சிங் களத்தில் தேர்ச்சி பெருத பலர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். வேலை வாய்ப்புக்களில் சேர்க்காது விடப்பட்டனர். பதவியுயர்வுகள், புலமைப் பரிசில்கள் என்பனவும் மறுக்கப்பட்டன, உயர் அதிகாரி களுக்கு மாத்திரமன்றி, சாதாரண தொழிலாளர்களுக்கும் அரசகரும மொழித்தகுதி கவனமாக நோக்கப் பட்டது. நியமனம் முதல், ஓய்வூ தியம் பெறும்வரை தமிழ்ப் பிரதே சங்களிலேயே வேலை செய்ய வசதி யுள்ள அரசாங்க உத்தியோகத் தர்கள் கூட இதனுல் பாதிக்கப் பட்டனர். இவ்வாருன நிலைமைகள்
வேலை வாய்ப்பின்மையை தமிழ்

இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத் தியமையினல் அவர்கள் பொருளா தாரப் பிரச்சினையை எதிர் நோக் கினர். இளம் சந்ததியினர் மத் தியில் விரக்திமனப்பான்மை வளர்ச் சியடைவதற்கும் இது காரணமாக அமைந்ததுடன், உத்தியோகத்தினை நம்பியிருந்த படித்த இளைஞர்களை பொருளாதார ரீதியில் பலவீன மடையச் செய்யும் ஒரு நடவடிக்கை யாகவும் அமைந்து இருந்தது.
இந்த நாட்டில் வேலையின் மைப் பிரச்சினை குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு மாத்திரம் உரிய ஒன்ருக இருக்கவில்லை. சிங்கள வர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என்ற வேறுபாடின்றி எல்லாத் தரப்பினர் மத்தியிலும் Gaua) யின்மை நிலவுகின்றது, ஆனல் ஒரு பிரிவினரின் வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பதற்காக இன்னெரு பிரி வினருக்குரிய நியாயமான வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன. உண்மையில் வேலையின்மை தவழுன கல்விக் கொள்கையினுலும், முத லாளித்துவத் திட்டமிடலின் குறை பாடுகளினுலும் ஏற்பட்ட ஒன்ருக இருந்த போதும் இது மூடி மறைக் கப்பட்டு பிரச்சினையைத் தீர்ப் பதற்கு இனவாத அணுகு முறை பின்பற்றப்பட்டது. பிரச்சினைகளுக் கான சரியான காரணத்தைக் கண்டு பரிகாரம் செய்யாது இனவாத ரீதியில் பிரச்சினை மூடி மறைக்கப் பட்டு வந்ததன் விளைவே இப்
பிரச்சினையின் இன்றைய பூகம்ப"
நிலையாகும்.
1971ல் இடம் பெற்ற ஏப் ரல் கிளர்ச்சிக்கான அடிப்படைக்
காரணங்களில் ஒன்று தென் இலங்கை இளைஞர்கள் மத்தியில் காணப்பட்ட வேலையின்மையாகும் என ஏற்றுக் கொள்பவர்கள். இலங் கையின் இன்றைய நிலைக்கும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் காணப்பட்ட வேலையின்மையும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள ஏனுே? மறுக்கிருர்கள். 1971ல் வேலையற் றிருந்த சுமார் 70,000 இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச் சியில் ஈடுபட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதன் மூலம் வேலை யின்மை என்வாருன தாக்கத்தினை
ஏற்படுத்தக் கூடியது என்பதை அறிந்து கொள்ள முடியும். எனவே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு
தமிழ் இளைஞர்கள் மத்தியில் நில விய வேலைவாய்ப்பின்மை மிகவும் முக்கிய ஒரு பொருளாதாரக் கார ணியாகும்.
இலங்கையில் பல்கலைக்கழக அனுமதி தொடர்பாகவும் தமிழ் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினல் 1970களில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘இனவாரித்தரப்படுத்தல் முறையே இதற்கு காரணமாகும். ஒரு ந்ாட் டின் உயர்க்ல்வி நிலையங்கள் என்ற வகையில் - புத்திஜீவிகள் உருவாக் கும் உன்னத நிறுவனங்கள் என்ற வகையில் - பல்கலைக்கழகங்களுக்கு தனியிடம் உண்டு. அங்கு எதிலும் பாரபட்சம் காட்டக் கூடாது. ஆணுல் இனரீதியான தரப்படுத்தல் முறை இந்த வகையில் இலங்கைப் பல்கலைக்கழகங்களையும், உயர் கல்வி முறையையும் இழிவுபடுத்தும் ஒன் முகவே அமைந்திருந்தது.

Page 6
உண்மையில், பல்கலைக் கழ கத்திற்கு, தகுதி பெற்ற எல்லா மாணவர்களையும் உள்ளிழுக்கக்
கூடிய பொருளாதார ஆற்றல் இலங்கைப் பல்கலைக் கழகங்களுக்கு இல்லாமையே இதற்கான அடிப் படைக் காரணமாகும். அத்தோடு இலங்கைத் தீவு முழுவதும் ஒரே சீரான கல்வி வளர்ச்சியற்ற நிலையும் இதனை மேலும் சிக்கலாக்கியது. பின்தங்கிய பகுதி மாணவர்களுக்கு சலுகையளிக்க்ப்பட வேண்டும் என் பது நியாயமானதே. ஆதற்காக, எல்லா வகையிலும் போதுமான தகுதியினையுடைய குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்த மாணவர் களுக்கு பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்ருகும். தகுதியான மாணவர்கள் அனை வரையும், பின்தங்கிய பகுதி மாண வர்களை சலுகையின் அடிப்படை யிலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்வதை விடுத்து - தகுதியான மாணவர்கள் இனரீதியில் வஞ்சிக் கப்பட்டமை இனப்பிரச்சினையின் வளர்ச்சிக்கு மற்ருெரு உந்து சக்தி
LumraS 9 GOLDjö35ģisi.
அபிவிருத்தியின் அடிப்படை கல்வியேயாகும். கல்வி மூலமான அறிவு வளர்ச்சியும், சிந்தனைத் தெளிவுமே சரியான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய சக்தி படைத்த வையாகும். அவ்வாருன உயர் கல்வி மறுக்கப்பட்டமை சிறுபான் மைத் தமிழ்த்தேசிய இனத்தின் சமூக, பொருளாதார, கலாசார, பண்பாட்டு அபிவிருத்திகள் அனைத் தையும் தடைப்படுத்துவதாக இருந்தது. வேலைவாய்ப்பு இல்லா மல் இருக்கின்ற நிலையை விடவும்,
கல்வியே இல்லாமல் இருக்கின்ற நிலை நிலைமையை மேலும் மோச மாக்கியது. தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் தரப் படுத்தலால் ஏற்பட்ட வீழ்ச்சி, தொழில் சந்தையிலும் உடனடி யாக நிரம்பலை அதிகரிக்கக் கூடிய தாக இருந்தமையினல் வேலையின் மைப் பிரச்சினை மேலும் உக்கிர மடைந்தது.
காலனித்துவ காணிக் கொள். கையின் கீழ் தென்னிலங்கையின் பெருந்தொகையான நிலம் பெருந் தோட்டப்பயிர்ச் செய்கைக்குட் படுத்தப்பட்டிருப்பதனுலும் மத்திய மலைநாடு கொண்டுள்ள பெளதிக நில த் தோற்ற ப் பா டு காரண
மாகவும். நீண்டகாலமாகவே அங்கு
நிலப்பிரச்சினை ஒரு முக்கிய பிரச் சினையாக உள்ளது. இதனல் இப் பகுதியில் உள்ள மக்களுக்கு இட வசதி அளிக்க வேண்டிய பொறுப்பு எந்த ஒரு அரச்ாங்கத்திற்கும் உரிய தலையாய கடமையாகும். ஆனல் இந் நிலப்பிரச்சினை இங்கு எவ்வாறு தீர்க்கப்பட்டது. அல்லது தீர்வுக்கு எவ்வாறன அணுகுமுறை பின்பற்றப்பட்டது என்பதே கவ னத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்ருகும்.
தென் இலங்கை மக்களை போதிய நிலப்பரப்பைக் கொண் டுள்ள வடமேல் மாகாணம், வட மத்திய மாகாணம் என்பவற்றில் குடியமர்த்தியிருக்க முடியும். ஆனல் அவ்வாறு செய்யப்படாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியமர்த்தப்பட்டனர். இதனுல் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக் களுக்கும் இடையிலான உறவுகள்

மேலும் விரிசலடைந்தன. தமது பாரம்பரிய பிரதேசம் திட்டமிட்ட வகையில் பறிபோவதை தமிழ் மக்கள் உணரத்தலைப்பட்டனர். ஒரு தேசிய இனத்தை வரையறுக்கக் கூடிய ஆள்புலம் தொடர்பாக எந்த ஒரு தேசிய இனமும் மிகவும் கவனமாகவே இருக்க முற்படும் . இந்த வகையில் தமிழ்த் தேசிய இனமும் தமது நிலம் திட்டமிட்ட
குடியேற்றத் திட்டத்திற்குட்படு வதை அங்கீகரித்திருக்கும் என எதிர்பார்க்க முடியாது. அதே
வேளை தென்னிலங்கை சுதேசிகளை விடவும், மிகவும் மோசமான சமூக, பொருளாதார, அரசியல் நிலை யினைக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் ஒரு துண்டு நிலத்திற்குக் கூட உரிமை அற்ற வர்களாக இருந்து நூற்ருண்டு காலமாக உழைத்த போதும் அவர்
கள் இது தொடர்பாக புறக்கணிக்
கப்பட்டனர். குடியேற்றத் திட்டங் களால் யாழ் குடாநாட்டிற்கு வெளியில் உள்ள வடமாகாணப் பகுதிகளும், கிழக்கு மாகாணமும் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப் பாக இப்பகுதிகளின் தமிழ் விவ சாயிகள் தமது பொருளாதார பலத்தை இழந்தனர். வடக்குக்கும் கிழக்குக்கும் இருந்த ஆள்புலத் தொடர்ச்சி திட்டமிட்ட குடியேற் றத்தினல் துண்டிக்கப்பட்டது.
அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றத் திட்டங் களை அடிப்படையாகக் கொண்ட விவசாய அபிவிருத்தித் திட்டங் களேத் தவிர வேறெந்த அபிவிருத்
தித் திட்டங்களும் மேற்கொள்ளப் படவில்லை. விவசாயம், கைத் தொழில், கல்வி, சுகாதாரம், போக் குவரத்து, மின்சார விநியோகம், வீடமைப்பு போன்ற அனைத்திலும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு உரிய பங்குகள் அபிவிருத்திக்காக வழங்கப்படவில்லை. தேசிய செல் வத்தினை பகிர்ந்தளிப்பதில் பார பட்சம் காட்டப்பட்டு வந்து ள்ளது. வடக்கு, கிழக்கில் அமைந்திருக்கும் ஒரு சில கைத்தொழில்களுக்குப் போட்டியாக, தென் இலங்கை யிலும், மேற்கிலும் அதே கைத் தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டன. எம்பிலிப்பிட்டிய கடதாசி ஆலை யும், புத்தளம் சீமெந்து ஆலையும் இந்தவகையைச் சார்ந்தவையே யாகும். 1960களில் இருந்து வடக்கு, கிழக்கிற்கான அபிவிருத்திக்கு ஒதுக் கீடுகள் இடம்பெறவில்லை.
சிறுபான்மைத் தேசிய இனத் தின் மதங்கள், கலாச்சாரம் என் பனவும் ஒப்பீட்டு ரீதியில் உரிய இடத்தினைப் பெறவில்லை. அவர் கள் தமக்கே உரித்தான விழுமியங் களைப் பேணிப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் மட்டுப்படுத்தப் பட்டிருந்தன. இந்த அடிப்ப்டையில் நோக்குகையில் இலங்கையின் இனப் பிரச்சனைக்கு அடிப் படை யாக் அமைந்துள்ள அரச கரும மொழி விவகாரம், வேலையின்மை, தரப் படுத்தல், திட்டமிட்ட குடியேற்றம், அபிவிருத்தியில் புறக்கணிப்பு ஆகிய அனைத்து அம்சங்களும் பொருளா தாரம் சார்ந்தவையாகும். இதனுல் இலங்கையின் இனப்பிரச்சினை அடிப்படையில் ஒரு பொருளா தாரப் பிரச்சினையேயாகும். ஆனல்

Page 7
இந்த உண்மையை இன்னும் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் ஒரு கசப்பான உண்மையாகும். எனவே இனப்பிரச்சினைக்கான உறுதியான தீர்வு பொருளாதார ரீதியானதாகவே அமைந்திருக்க வேண்டும். அரசியல் தீர்வு என்பது பொருளாதாரத் தீர்வுகளை நடை முறைப் படுத்துவதற்கான அதிகா ரத்தைப் பெற்றுக் கொள்ளுதல் என்ற வகையிலே ஒரு வரையறைக் jourrussir எல்
நில
é5-ul-l- வகையில் களைப் பெற்றுத்தர முடியும். லோருக்கும் வேலைவாய்ப்பும்,
உயர்கல்வியும், மற்றைய
மும்,
சமூக பொருளாதார அபிவிருத்திக்
கான அடிப்படை வசதிகளையும் பெற்றுத்தரக் கூடிய பொருளாதார ரீதியான அணுகு முறையே இப் பிரச்சினைக்கான நீண்டகால உறுதி யான தீர்வாக அமைய முடியும். இதற்குக்காரணம் அடிப்படையில் இப் பிரச்சினை ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக இருப்பதேயாகும். உண்மையில் இலங்கையின் இனப் பிரச்சினை பொருளாதாரத் தேவை களின் அரசியல் வெளிப்பாடாகும்.
iLiiLiLiLiLiiLiiiLiLiiiLiiLiiiLOLOLLiLiLiLiLi
மீண்டும் ஒர் அறை கூவல்!
^-ow"\-MJ/ Vov Nato
வயலின் முதழ் இதழ் வெளிவந்து பிரதிகள் எல்லாம் தீர்ந்து போயின. மகிழ்ச்சியான விடயம்தான். ஆயினும் போட்ட முதல் திரும்பவே இல்லை. இருப்பினும் இரண்டா வது இதழும் வருகின்றது. ஆற்றல் மிக்க ஆக்கங்களை அனுப் புங்கள் என முதல் இதழில் வேண்டினுேம். ஆனல் வந்த வைகள். . ? அவை பற்றி நாம் பேச விரும்பவில்லை. மீண்டும் அறைகூவல் விடுக்கின்ருேம். குண்டுச் சட்டிக்குள் குதிரையோடும் மனப்பான்மையைக் கைவிட்டு சற்று வெளியே வந்து உலகைக் கண்டு காத்திரமாகச் சிந்தியுங்கள்! அவை களை எமக்கு எழுதி அனுப்புங்கள்! கிழக்கைச் சேர்ந்தோ ருக்கே குறிப்பாக இதைச் சொல்கின்ருேம்.
கருத்து முரண்பாடுகள் கொண்ட ஆக்கங்களுக்கும் நாம் களம் கொடுக்கத் தயாராக்வ்ே உள்ளோம். அவை கன தியாக இருக்கும் பட்சத்தில்.
豹
- ஆசிரியர் குழு - ନିଧ୍ୱ+ଧ୍ଧ୍ୱ&
10
 

மனைவி அமைவதெல்லாம்
(அன்புமணி)
Bவரெத்தினம் வேகமாகச் ஆழம் பார்ப்பதுபோல சில சமயங் சைக்கிளை மிதித்தான். கல்லடிப் களில் பேசிவிடுகிருளே. பேச்சில் பாலத்தின் இறக்கத்தில் சைக்கிள் அவளை வெல்லமுடியாது. அதில் சர்ரென்று விரைந்தபோது, அவன் சந்தேகமே இல்லை. எப்படியான
எண்ணங்கள் வேறெங்கோ விரைந்து கொண்டிருந்தன.
பெண்களைப் புரிந்துகொள்வது கஷ்டம் என்பதில் சந்தேகமில்லை. ஆஞல் நல்லம்மா கூடவா அப்படி?
62(ს கோணத்தில் பார்த்தால் அப்பாவியாகத் தோன் று கிருள். இன்னுெரு கோணத்தில் பார்த்தால் அப்படியில்லை போலவும் தோன்று கிருள். ஒரு சமயம் அடக்கமான பெண் என்று நினைக்கத் தோன்று கிறது. இன்னெரு சமயம் ஆட்டக் காரி என்று எண்ணவும் தோன்று கிறது.
எவ்வளவோ எடுத்துச் சொல்
லியும் கையில்லாத ரவிக்கையை இன்னும் விடவில்லை. இப்போது லோஹிப்சாரி வேறு. கேட்டால்
வேலை பார்க்கும் பெண்கள் என்றல் அப்படித்தான் இருக்கவேண்டுமாம். இ தெ ல் லாம் தொழிலுக்காகப் போடவேண்டிய வேஷம் என்கிருள்
"அவள் ஒரு தொடர் கதை பார்த் திருப்பாளோ?
ஏ ழைப் பெண் என்று கை கொடுக்க முன்வந்தால் என்னையே
11
முட்டாள் தனமான காரியத்தைச் செய்தாலும் அதற்குச் சாமர்த்திய மான பதில் ஒன்று தயாராக வைத் திருப்பாள். இல்லாவிட்டால் -
அந்த எக்கவுண்டன் கூறிய வார்த்தைகளை என்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? சிவ ராசாவைக் கொண்டு மணிக்கூடு லாங்கவேண்டிய அவசியம் என்ன?
நவரெத்தினம் மட்டக்களப்பில் பிரபல கொந்து ருத்துக்காரர் நல்ல தம்பியின் பிரதிநிதி. பிரதிநிதி என்ன அவனேதான் உண்மையான 'நல்லதம்பி" அதாவது நல்லதம்பி ஆற்றவேண்டிய சகல காரியங்களை யும் நவரெத்தினம் ஆற்றி வந்தான். அவன் காட்டிய இடங்களில் கை யெழுத்துப் போடுவது மட்டும் நல்ல தம்பியின் வேலை நேர்மை, திறமை, ஆற்றல் முதலிய இன்ஞேரன்ன சிறப்புக்களால் அவன் நல்லதம்பி யையும் விட ப் பிரபலமாகியிருந் தான்.
அவன் தொழில் முறையில் பல திணைக்களங்களுக்கு அ டி க் கடி செ ல் ல வ்ே ன் டி யிருந்தது. ஒரு திணைக்களத்தில் இலிகிதராக வேலை

Page 8
பார்த்த நல்லம்மா அவனுக்கு மிக வும் ஒத்தாசையாக இருந்தாள். டென்டர் பத்திர்ம் எடுத்துக் கொடுத்தல், வவுச்சர்களைத் துரித மாகக் கணக்குக் கிளைக்கு அனுப்பு தல் முதலிய உதவிகளை நல்லம்மா செய்ய அதற்கு ப் பிரதி யாக வெளியே அவளுக்குத் தேவையான சில காரியங்களை அவன் முடித்துக் கொடுக்க க ந் தோர். தொடர்பு வளர்ந்தது. அதுவே காலப்போக் கில் நட்பாகவும் மலர்ந்தது.
நல்லம்மாவின் குடும்ப நிலை கொஞ்சம் கொஞ்சமாக நவரெத்தி னத்திற்குத் தெரியவந்தது. முப்பது வ ய தை நெருங்கிக்கொண்டிருந்த போதும் அவள் வாழ்க்கையில் ஏன் வசந்தம் வீசவில்லை என்பதும் அவ லுக்குப் புரிந்தது. வயதான தாயை யும் நான்கு தம்பிகளையும் கொண்ட குடும்பத்தைப் பராமரிக்கவேண்டிய பொறுப்பு அவ்ஞடையது. அது மட்டுமல்ல அந் த த் தம்பிகளின் படிப்புக்கான செலவுக்ளையும் அவள் கவனிக்க வேண்டும்.
குருவி தலையில் பனங்காயைச் சுமந்தது போல் இந்தச் சின்னப் பெண்ணின் த லை யில் இறைவன் இந்தப்பெரிய சு மை யை ஏற்றி யிருக்க வேண்டாம். நவரெத்தினத் திற்கு அவள்மேல் ஒரு அனுதாபம்.
தன்மேல் ஏற்பட்ட சுமையை அவள் சந்தோஷமாகத் தாங்கிக் கொள்கிருள். வெற்றிகரமாகச் சமா ளித்தும் வருகிருள். சும் மா வா? அவளுடைய தம்பி ராஜன் வைத்தி தியக் கல்லூரியில் இருக்கிருன். இன் னும் சில் வருடங்களில் டாக்டராக வரப்போகின்றன். தவரெத்தினத் திற்கு அவள்மேல் ஒரு மதிப்பு.
நவரெத்தின்த்தின் சுறுசுறுப்பு, நாணயமான போக்கு எல்லாவற் றிற்கும் மேலாக அவன் இளகிய சுபாவம். இத்தனையும் நல்லம்மா வுக்குப் பிடித்திருந்தன. அவன்மேல் ஒரு தனியான அபிமானம் அவ ளுக்கு.
ந ட் பு வளர்வதைக் கேட்க வேண்டுமா? காரியாலயத் தொடர்பு வீடுவரை வந்து விட்டது. நவ ரெத்தினம் நல்லம்மாவின் வீட் டிற்கு அடிக்கடி செல்லுவதும், இப் போது சகஜமாகிவிட்டது இந்தச் சந்திப்புகள், தெருவோரத்திலோ, கடற் க ரை யி லோ, தியேட்டர் களிலோ இல்லாமல் வீட்டில் ஏற் பட்டதால், வீட்டில் கூட இந்தச் சந்திப்புகளுக்கு ஆட்சேபனை இருக்க வில்லை. அவர்களின் சந்திப்புக்கள் இந்த அளவுக்குக் கண்ணியமாக இருந்ததால், அந்த நட்பு மேலும் மலர்ச்சியடைந்து விசந்தத்தின் வாச லுக்கு ந்ெது விட்டது.
இத்தக் கட்டத்தில்தான் ஊட லுக்கான சந்தர்ப்பங்கள் ஏற்பட் டன.
ஒரு அலுவலகத்தில் பல ஆண் களுக்கு மத்தியில் பணிபுரியும பெண் கள் சக உத்தியோகத்தர்களோடு பேசிப்பழகுவது தவிர்க்கமுடியாதது ஆஞல் அந்த வாய்ப்பை சிலர் தவ முன வழியில் பயன்படுத்திக்கொள்ள முற்படுவது ம் உண்டு.
ஒ வ் வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் அசடுவழிவார்கள். தலைநரைத்த கிழவர்கள் கூட பெண் களிடம் சில சேட்டைக் கதைகள் பேசாவிட்டால் அவர் க ளு க் கு மண்டை வெடித்துவிடும். அதிகார

மும் அட்டகாசமுமாக உலவிவ்ரும் உயர் அதிகாரிகள்கூட பெண்களி டம் சில தமாஷ் கதைகள் பேசிச் சிரித்து மகிழ்ந், விட்டு தமக்குக் கீழ்ப் பணிபுரியும் ஊழியர்களிடம் சமத்துவமாகப் பழகுவதா கப் பாவனை பண்ணுவார்கள்.
இந்தப் பின்னணியில் ஒரு பெண் ணைப்பற்றி அவள் பணிபுரியும் அலு வலகத்திலேயே "கதைகள்’ கட்டி விடுவது சகஜம். யாராவது ஒருவ ருடன் இரண்டு வார்த்தை அதிகம் பேசிவிட்டால் அல்லது கொஞ்சம் ம ன ம் திறந்து சிரித்துவிட்டால் போதும் உடனே அவருக்கும் அவ ளுக்கும் முடிச்சுப்போட்டு விடுவார் கள். நல்லம்மாவைப் பற்றியும் இப் படியான பல முடிச்சுக்கள் உருவா கியிருந்தன.
இதைப்பற்றி நவரெத்தினம் ஏதாவது அவளிடம் கேட்டால், பேச்சினல் அவனையே முட்டாளாக் கிச் சிரிப்பாள் நல்லம்மா.
ஒரு நாள் நல்லம்மா கூறினள்.
'இன்று அலுவலகத்தில் ஒரு வேடிக்கை எங்களுடைய எக்கவுண் டன்ட் என்ன கூறினர் தெரியுமா? "நல்லம்மா, நான் ஏன்தான் அவச ரப்பட்டுக் கல்யாணம் செய்து கொண்டேன் என்று உன்னைப் பார்க் கும்போதெல்லாம் எண்ணுகிறேன். எ ன க் கு. திருமணமாகாமல் இருந் திருந்தால் இப்போது உன்னைத்தான் திருமணம் செய்துகொள்வேன்" என் ருர். எனக்கென்ருல் ஒரே வெட்க மாகப் போய்விட்டது. முகத்தைப் பொத்திக்கொண்டு அவர் அறையை விட்டு ஓடிவந்துவிட்டேன்”, '
நவரெத்தினத்தின் நெஞ் சில் ஒரு துணுக்',
எக்கவுண்டன்ட் gressinth ugrub ஒரு கிழட்டுக்கழுகாக மாறி நல்லம் மாவைத் தன் கூரிய மூக்கினுல் குத் திக்குதறிவிடக் குறி பார்ப்பது போன்ற பிரமை ஒரு கணம் தோன்றி மறைந்தது. வழக்கமான பல்லவி தான். “சில நேரங்களில் சில மனி தர்கள்" ஆமாம். அந்த எக்கவுண் டன்ட் இன்னும் இரண்டு வருடங் களில் இளை பா ற ப் போகிறவர். கிழட்டுவருஸ்,
ஆளுல் ந வ ரெத் தினத்தின் நெஞ்சைக் குத்தியது, அந்த எக் கவுண்டனின் பேச்சு அல்ல; நல்லம் மாவின் பேச்சுத்தான். - .
அவன் அப்படிப் பேசியதற்கு, காலில் கிடந்த செருப்பைக் கழட் டிப் பதில் சொல்லியிருக்கவேண்டும். அவன் எக்கவுண்டன்ட் என்ற கார ணத்தால் அப்படிச் செய்யமுடியாது என்ருல் 'ஷ ட் டப்" என்று ஒரு வார்த்தையாவது கூறியிருக்கவேண் டும். அது வும் இல்லையென்ருல் தனக்கு ஏற்பட்ட இந்த அமொனம் இந்த நான்கு சுவர்களுக்குள்ளும் புதைந்துவிடட்டும் என்று அத் தோடு அந்த அசிங்கத்தை மறந்து தொலைத்திருக்கவேண்டும்.
இவை எதையுமே செய்யாமல் இந்த இழிவுரையைத் தனக்குக் கிடைத்த ஒரு பாராட்டுரையாகக் கருதி அதைப் பிற ரி டம் வாய்
திறந்து சொல்லவும் ஒரு பெண் துணிவதென்ருல்? அதுவும் தான் மிகவும் நேசிக்கும் ஒருவனிடமே
கூறத் துணிவதென்ருல் - சீ! இவ ளும் ஒரு பெண்ணு ?

Page 9
இன்னெரு சம்பவம்.
நல்லம்மாவின் கையில் ஒரு புது ரக மணிக்கூடு பளிச்சிடுகிறது. நல் லம்மா கொஞ்சம் பெருமிதத்துடன் கூறுகிருள்.
"இது வெளிநாட்டுக் கடத்தல் மணிக்கூடு. இங்கே விற்பனைக்குக் கிடையாது. எனக்கென்று சிவராசா யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வந்தவர்.
சிவராசா! அவனு?
நவரெத்தினத்தின் மனதில் மற் ருெரு "சுருக்"
சிவ்ராசா ஒரு காதல் மன்னன். கச்சேரியின் உள்ளேயும் வெளியே யும் அவனுக்கு நிறையக் "காதலி கள்". கேர்ள் பிறண்ட்ஸ் இருந்த னர். அந்தக் கிளையிலேயே உள்ள புஷ்பா என்ற பெண்ணுடன் அவன் நடாத்தும் ச ல் லாபம் கச்சேரி அறிந்த செய்தி. நல்லம்மாவுடன் கூட அவன் அளவுக்கு மீறிப் பழ குவதுண்டு. அப்படிப்பட்டவனைக் கொண்டா நல்லம்மா மணிக்கூடு வாங்கியிருக்கவேண்டும். ஏன் நான் இல்லையா? கொழும்பில் படிக்கும் அவள் தம்பி ராஜன் இல்லையா?
ஒரு வாரமாக நவரெத்தினம் த ல் லம் மா வின் வீட்டுப்பக்கமே போக்வில்லை. நல்லம்மாவை அவ ஞல் ச ரி யாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. -
பொதுவாகவே, உத்தியோகம் பார்க்கும் பெண்களைப்பற்றி நவ ரெத்தினத்திற்கு அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை. இருந்த போதிலும், நல்லம்மாவின் குடும்ப
4.
நிலையை உணர்ந்தே அவன் அவள் பால் தன் கவனத்தைத் திருப்பி ஞன். அவன் எதிர்பார்த்ததெல் லாம் அப்பழுக்கற்ற பரிசுத்தமான இதயம் ஒன்றுதான். ஆனல் அது கூட அவனுக்குக் கிடைக்காதோ?
குட்டை குழம்பிவிட்டது. அடி யில் புதைந்திருந்த சேறுகள் சகதி கள் எல்லாம் மேலே வரத்தொடங்கி விட்டன. நல்லம்மாவைப் பற்றி அவன் நண்பன் சபாநாயகம் கூறிய ஒரு கதை இப்போது அவன் நெஞ் சத்தில் நிழலாடியது. முன்பு அதை வழக்கமான ‘கதை’ என்று தட்டிக் கழித்திருந்தான். ஆனல் இப்போது அவனுல் அப்படிச்செய்ய முடிய வில்லை. ஏன் அதுவும் உண்மையாக இருக்கக்கூடாது.
நல்லம்மா தன்னுடன் பணிபுரி யும் பீயன் ஒருவனிடம் மிக நெருங் கிய தொடர்பு வைத்திருப்பதாகவும் கணவன் மனைவி போல் பழகுவ தாகவும் ஒரு கதை. அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் மற்ருெரு சக இலி கிதருடன் நட்பு வைத்திருந்ததாக இன்னெருகதை. கொழும்பில் வேலை பார்த்த இடத்தில் யாருடனே காதல் தொடர்பு வைத்திருந்ததாக மற் ருெரு கதை. இந்தக் கதைகள் எல் லாம் ஏன் உருவாகவேண்டும்?
முடியாது. இவள் சகவாசமே இனி நமக்கு வேண்டாம். இப்படி எண்ணியவாறு சைக்கிளை நிறுத்தி ஞன் நவரெத்தினம். பார்த்தால் சை க் கி ஸ் நல்லம்மாவின் வீட்டு வாசலில் நின்றது.
அந்தநாள் முதல் இந்த நாள் வரை காதல் வியாதியின் போக்கே இதுதான். மனம் ஒன்று நினைக்கும். செயல் வேருென்ருக இருக்கும்.

"வாங்க வாங்க இன்றைக்கு நீங்கள் எப்படியும் இங்கே வருவீர் கள் என்றே எதிர்பார்த்தேன்.
"ஒரு வார மாகி விட் டதல் லவா’
"சரிதான். ஊடல் இன்னும் தீரவில்லை போலிருக்கிறது. சின்ன விஷயத்தையெல்லாம் ஏன் இப்ப டிப் பெரிதுபடுத்துகிறீர்கள்? அலுவ லகத்தில் நடப்பதை மறைக்காமல் உங்களிடம் கூறினேன். அது ஒரு
siboutnr?””
பிளாஸ்கிலிருந்த கோப்பி கப் பில் இறங்கி அவன் பக்கத்தில் வந்து இருந்தது. நவரெத்தினம் அதைத் தொடவில்லை.
"கிளுக்" என்று சிரித்தாள் நல் Gavuhom .
"உண்மையான காதல் இருந் தால்தான் இப்படியெல்லாம் ஊடல் நடக்குமாம். காதலைப் பொறுத்த வரை பொருமையும் ஒரு அணிக்லன் தான்?.
"இது பொரு மை அல்ல. பொறுமை’
"அப்பாடா, வாய் முத் து உதிர்ந்துவிட்டதே இனித் தாராள மாகப் பேசலாம் அல்லவா?"
இதன் பிறகு, பேச்சுகள் காத
லர்களுக்கே உரிய அசட்டுப் பிசட்டு கெக்கே பிக்கே!
இரவு எட்டுமணியாகியும் பேச்சு முடிந்தபாடில்லே அவளுடைய தாய் முன்விருந்தையில் உட் கார்ந்த படியே தூங்கிப் போய்விட்டாள். தம்பிகள் இருவர் உள் அறையில் நல்ல தூ க் கம். எட்டிச்செல்லும் நவரெத்தினத்தை ஒட்டவைக்கும் வித்தை நல்லம்மாவுக்குத் தெரிந் திருந்தது.
இரவு நேரம் - தனிமை - ஏங் கும் உள்ளங்கள்!
மெய்மறந்த சில கணங்கள்
நவரெத்தினத்திற்கு எதிர்பா ராத விருந்து! எ தி ர் பா ராத அதிர்ச்சி!
நவரெத்தினம் அ வ் வீ ட்டை விட்டுப் புறப்பட்டபோது ஒன்பது மணியாகிவிட்டது. நல்லம்மா கண் களில் ஒரு "மோனலிசா" புன்சிரிப் புடன் வாசல்வரை வந்து கைய சைத்து விடை கொடுத்தாள்.
நவரெத்தினம் சைக்கிளில் ஏறி உட்கார்ந்த போது அவன் மனம் மிகத் தெளிவு பெற்றிருந்தது. வரும் போது இருந்த குழப்பமும் தளப் பமும் இப்போது அவனிடம் இல்லை.
"ஆம் மனைவி அமைவதெல் லாம் இறைவன் கொடுத்த வரம். நிச்சயமாக இவள் என் மனைவியாக இருக்கமுடியாது? 普 (யாவும் கற்பனை)
15

Page 10
சிந்திப்போம்!
திமிழ்த் தேசிய இனத்தின் ஐக்கியம் அதிகமாகப் பேசப் படும் காலம் இது. பேசினல் LDL Glb போதுமா ? நடைமுறையிலும் அது வேண்டும் அன்றே ? ஆயின் பின் வரும் செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது. யாழ்குடா நாட்டில் வாழும் ஐந்துலட்சம் சனத்தொகை கொண்ட தாழ்த் தப்பட்டோர் எனக் கூறப்படுகின்ற மக்மஞக்குப் பின்வரும் ஆல யங்கள் வழிபாட்டு உரிமையை மறுத்து வருகின் றன. அவற்றின் விபரம் வருமாறு.
கரவெட்டி தச்சன் தோப்புக் கோயில், கிராய்ப் பிள்ளையார் கோயில். அம்பன் முருகன் கோயில். வல்வெட்டித்துறை சிவன் கோயில்.
அம்மன் கோயில், நெடியகாடு பிள்ளையார் கோயில். நெல்லியடி முருக மூர்த்தி கோயில், புன்னலைக் கட்டுவன் ஆயர் கடவை பிள்ளையார் கோயில் ஈவினை பிள்ளையார் கோயில்,
வழக்கம்பரை அம்மன் கோயில். இன்னும் சாதிவெறி தமிழ்மக்களுக்கு தேவைதானு?
சிந்திப்போம் !!
தகவல் : “தொழிலாளி”
1986 - gathuri.
16

དེ་དེ་དང་དེ་དངོས་དགེ་དགེ་དགེ་དགེ་དགེ་དགེ་དགེ་དགེ་དགེ་སྐོས་ དགེ་སྟེ་
క్రీ வேக்காட்டு விளிப்புகள்
- எச். எம். பாறுக் •
சில்லூறுச் சத்தம். இரவின் நெஞ்சுத் துயரம் வெளியில், வெள்ளிகள் கெக்கரித்துக் கிடக்கும் aunt,0T s விளேயாட்டு பொம்மை நிலவை கேட்கிறேன் ! இவைகளின் உரிமைக்காரன் எங்கே?
கோடரி கொண்டு நெஞ்சைப் பிளந்தது வந்த செய்தி ! கோபால் போய்விட்டான்.
கொக்கட்டிச்சோலை, மாந்தோட்டம், அறந்தலாவை, பிணக் குவியல்களுடன் நானும் கிடக்கின்றேன்.
f
s
இன்னும் எங்கே அவன்?
ஒட்டை வாளியில் தண்ணிர் இறைக்கும்
உடைந்த கதவைத் தூக்கித்திரியும்
நாற்பட்டி முனையாள் காவியம்
பாடிச் சிரிக்கும் மூத்தம்மா,
கல்லில் விழுந்து காலில் இரத்தம்
அவனிடம் கேட்கவேண்டும் ”
ஆயிரம் கேள்விகள்!
எங்கே அவன்.?
OLiOOLiiLiLiOiOLigeLOiieqiiLiLiLOiOLOOLOLOLOLOOqq
7
v.
ܚ̈ܠ
!, ॐ

Page 11
மூன்றம் உலகினது
விஞ்ஞான தொழில்நுட்ப அணுகுமுறைகள்
- சாரு மதி m
உலக நாடுகளே இ ன் று மூன்று மண்டலங்களாக பகுத்துப் பார்க்கும் மரபொன்று வழக்காகி வருகின்றது. உலகநாடுகளின் அர சியல், பொருளாதார, சமூக அடிப் படைகளேக் கொண்டே இப் பகுப்பு செய்யப்படுகின்றது. ஆயினும் உல கநாடுகளே மூன்று மண்டலங்களாக பகுத்து எனகயீடு செய்வதில் வென் :ேறு வழிமுறைகள் கையாளப்படு கின்றன. உதாரணமாக சீன அர சியலாளர்களின் பகுப்பு :கயிடு பின்வரு மாறு அ மை கி ன் றது. சோவியத் யூனியன், அமெரிக்க ஐக் கிய நாடு ஆகிய இரு வல்லரசுக ளூம் முதலாம் உஸ்கென்றும், மேற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், ஆசியாவின் யப்பான் ஆகிய கைத் தொழில் வளர்ச்சி மிக்க நாடுகள் இரண்டாம் உலகநாடுகள் என்றும், பிற அபிவிருத்தி அடைந்து வரும் ஆசிய ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள், மூன்றும் உள்கமென்றும், வகையீடு செய்யப்படுகின்ற ன. இதை விட கல்வியலாளர்களால் பிறிதொரு வகையீடு செய்யப்படு கின்றது இன் வகையீட் டி ன் படி முதலாளித்துவ நாடுகள் அமெ ரிக்க ஐக்கிய நாடு, பிரித்தானியா, மேற்கு ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகள் ) முதலாம் உலகைச் சார்ந் தவை என்றும் சோசளிச நாடுகள் எனக் கூறப்படுபவை இரண்டாம்
உலகைச் சார்ந்தவை என் று ம்: ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக் காவின் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் மூன்றும் உலகைச் சார்ந் தவை என்றும் வகையீடு செய்யப் படுகின்றன. இவ்வாறு உலகை மூன்று மண்டலங்களாக வகையீடு செய்வதில் வெவ்வேறு கண்ணுேக் கிாைன வழிமுறைகள் க்ானப்படி னும் மூன்றும் மண்டல நாடுகள் என வரும் பொழுது எல்லா வகை யீடுகளும் அபிவிருத்தி அடைந்து வரும் வறிய நாடுகளே மூன்றும் உலகிக்குள் வைத்து வ கை யி டு செய்கின்றன எனத் தீர்மானிக்க இடமுண்டு. இவ்வகையில் மூன்றும் உலகநாடுக்ள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் என்பது தெளிவா கின்றது.
இன்று அபிவிருத்தி அடைந்து வரும் மூன்றும் மண்டல நாடுகள் தமது அபிவிருத்திக்கான பாதையில் பல பிரச்சிஃனகன் எதிர்நோக்கு கின்றன. அவற்றுள் நான்கு பிரச் சிஃரைகள் கூர்ந்த நோக்கிற்குரியவை அவை வருமாறு:
(1) மூலதனப் 血 (ሽ፻ ,h )$31 לש,Tל
தொடர்பான பிரச்சினேகள்.
(3) விஞ்ஞான தொழில்நுட்பத்
துறையி:ான பிரச்சினே.

நுட்பத்
(3) முகாமை த் துவத் தி ற ன்
தொடர்பான பிரச்சினேகள்,
பண்பாட்டுத் துறையி வா ன ! If it #f> soft.
இந்த நான்கு பிரச்சினேகளும் மூன்றும் உலகின் அரசியல் § ' ....]] யோடு நேரடித் தொடர்பு உடை ஆபின் இக்கட்டுரை அது பற்றிய ஆய்வாக இல்லாமல் மூன் ரும் உலகின் விஞ்ஞான தொழில் துறையிலான பிரச்சிஃரை களின் அடிப்படை விடயங்களேயே
| lյ1:1| :
ஆராய முற்படுகின்றது.
அ பி வி ரு த் தி அடைந்து வரும் நாடுக்ளின் மூலதன விஞ்ஞான, தொழில்நுட்ப, முகா மைத்துவ போதானமகஃள நிவர்த்தி செய்ய அபிவிருத்தி அ டை ந் த நாடுகளில் தங்கி இருத்தல் ஒரு வழிமுறையாக கருதப்படுகின்றது. அதாவது அபிவிருத்தி அடைந்து விரும் மூன்றும் உலகின் அபிவிருத் திக்கு அன்னிய உதவி ஒரு முக்கி நீர்வு வழியாக் கொள்ளப்படுகின் றது. இதன்ாைறு பெரும்பாலான மூன்றும் நாடுகள் தமது விஞ்ஞான தொழில்நுட்பப் பிரச்சி னேகள தீர்த்துக் கொள்ள பின்வ ரும் முயற்சிகளே எடுத்து வருகின் றன:
பொதுவாக
(1) அபிவிருத்தியடைந்த மேற்குல கில் இருந்து வி சூ ஞா ன தொழில் நுட்பவியலாளர்களே
இறக்குமதி செய்தல்.
மேற்கு ல கி ஆண் வி இரு ஞான தொழில் நுட்ப ப யி லு ம் இடங்களே நோக்கி பயிலுனர் அஃா ஏற்றுமதி செய்தல்.
(2)
மேற்படி முயற்சிகளே சுடர்"
அனுபவங்கஃக் :ே பி. நோக்கும் பொழுது மூர் உலகைப் பொறுத்தவரை நி3 வ கள் தோல்வியில் முடிந்தமையே எ!ரலாறு ஆகும். இத் தோல்விக ளும் அதன் படிப்பினேகளும் முன் ரும் உலகின் தேசபக்தி அறிவு ஜீவிகளேப் பலவாறும் பாதித்துள் ளன. இப் பாதிப்பு மேற்குலகிற்கு
Hi, Irյլ:
எதிரான மனுே 3 ந் ே 13 tir அறிவு ஜீவிகளினடயே ஏற்படுத்தி யும் உள்ளது. ஆயினும் மேற்படி
அறிவு ஜீவிகள் மூன்றும் உலகின் விஞ்ஞான தொழில் நுட்பப் பிரச்
சினேகன்த் தீர்த்து க் கொள்வதற்கு
ரிய கருத்துத் தளத்தினைச் சரியாக புரித்து கொண்டார்கள் * என் று கூறுவதற்கு இல்லே. இன்றும் கூட மூன்றும் உலகின் கணிசமான அறிவு -ஜீவிகள் தமது நாடுகளின் விஞ் ஞான தொழில் நுட்பம் பிரச்சினே களுக்கான திறவுகோல் மேற்குலகில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவே கருதுகின்றர்கள் அதாவது தீமிதி நாடுக்ளின் கைத்தொழில் டொரு ளாதாரத் துறையின் அபிவிருத்
YSYSLLSSYSYSLSLSYSLTL T McTHTYY T TL 鹦 醬 கைக் கொள்ள விரும்புகின்றனர். ஆயின் அத்தொழில்நுட்பத் திறன்களே அபி விருத்தி அடைந்துவரும் நாடுகள் பெற்று சுதந்திரமான முறையில் நாட்டை அபிவிருத்கி செய்துவிடாத வகைபில் அபிவிருத்தி அடைந்த மேற்குலகு நாடுகள் வஞ்சனேயும் சதியும் புரிவதாகவிே மூன்றும் உல வின் அறிவு ஜீவிகளில் பலர் கருது கின்றனர். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் கைத்தொழில் துறை பில் விருத்தியடையுமாயின் அது மேற்குலகின் கைக்தொழில் துறை
நின் ச ந் த வாய்ப்புக்களுக்குப்

Page 12
பாதகமாக அமையும். எனவே அபி விருத்தி அடைந்துவரும் நாடுகள் கைத்தொழில் நுட்பத் திறன்களைப் பெற்று வளர்வதை மேற்குலகு வரும்போது அவர்களின் ஏகாதிபத் திய வர்க்க நலன் அதற்கு இடம் தராது என்ற வகையில் மேற்கு உலகு தமது தொழில் நுட்பத் திறன்களை கீழைத்தேய அபிவிருத்தி அடைந்துவரும் மூ ன் ரும் உலகு பெற்றுவிடாதபடி வஞ்சனையும் சதி யும் புரிகின்றன என மூன்ரும் உலகு அறிவு ஜீவிகள் கருதுவதில் பாதி உண்மை அடங்கி உள்ளது. ஆளுல் அதுவே முழுமையான யாகிவிடாது. முழு உண்மையை விளங்கிக்கொள்ள மேற்கு உலகின் விஞ்ஞான தொழில்நுட்பம் தொடர் பான அடிப்படையான விடயங்களே விளங்கிக்கொள்ளவேண்டும்.
2a30, 65 LD .
கி. பி. 15ம் நூற்றண்டளவில் மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட அறிவியல் மறுமலர்ச்சியையும் அதை யொட்டி ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியும் அதன் விளேவாக எழுச்சி பெற்ற முதலாளித்துவ அரசியல் .ெ 1ாருளாதார நோ க் கோ டும் தொகையீடு செய்யப்பட்டதே மேற் குலகின் விஞ்ஞான தொழில் நுட் பத் திறன்கள் ஆகும். இதற்கு இனங்க மேற்கு உலகின் விஞ்ஞான கொழில் நுட்ட ஈட்டங்களை ஐரோப் பிய விஞ்ஞான தொழில் நுட்பம் எனக் கூறுதலே பொருத்தம் ஆனது ஆகும்.
ஐரோப்பிய விஞ்ஞானம் என் பது அதன் முதலாளித்துவ சுரண் டல் நோ க் கை அடிப்படையாக வைத்தே உருவாக்கம் செய்யப்பட் டகாகும். கீழைத் தேயங்களின் மூல வளங்களைக் கொள்ளையிடவும். அவர்
20
களின் சந்தைகளை ஆக்கிரமிப்புச் செய்வதும் என்ற நோக்கிலேயே ஐரோப்பிய முதலாளித்துவம் தனது விஞ்ஞான தேட்டங்களை உருவாக் கம் செய்தது. எனவே முதலாளித் துவ சுரண்ட்ல் இலக்குகளை நோக் காய் கொண்டு உருவாக்கம் பெற்ற ஐரோப்பிய விஞ்ஞானத்தை அதே முதலாளித்துவ உலகினல் சுரண்ட லுக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மூன ரும் உலகு தனது அபிவிருத்திக்கு கருவியாகக் கொள்ள முடியுமா என்ற கேள்வி அடிப்படையான நியாயமான கேள் வி யே ஆகும். ஆனல் இந்த அடிப்படையான கேள்வியை மூன்ரும் உலகின் பெரும் பாலான அறிவு ஜீவிகள் கருத்தில் கொண்டதாக இல்லை. இதற்கான காரணம் மூன்ரும் மண்டல நாடு களின் விஞ்ஞான தொழில் நுட்பக் கல்வியானது இன்னமும் மேற்குல கச் சார்பையும் அணுகுமுறைகளே யும் கொண்டு இருப்பதே ஆகும். இன்றும்கூட மூன்ரும் உலகின் பல் கலைக்கழகங்கள் தமது பாட விதா னங்களை பிரித்தானியாவின் ஒக்ஸ் போர்ட், கேம்பிரிஜ் பல்கலைக்கழகங் களின் பாடவிதானங்களை ஒட்டியே அமைத்துக்கொண்டுள்ளன என்பது கவனத்திற்கு உரியது. இந்த அணுகு முறைகளில் இருந்து விடுபடாத வரையில் மூன்ரும் உலகின் நாடுகள் தமது விஞ்ஞான தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வது இயலாது. இது தொடர்பாக எகிப் தின் பிரபல பொருளியல் அறிஞர் இஸ்மயில்-ஸப்ரி அப்துல்லா அவர் கள் கூறுவது கவ்னிக்கத்தக்கது.
'மூன்ருவது உலகம் தன் மீது திணிக்கப்பட்டுள்ள அபிவிரு த்தி முறை ஒன்றில் உண்மை நிலையை ஒத்ததாகவோ அல்லது விரும்பத்

தக்கதாகவோ இல்லையென்பதை மேன்மேலும் உணர்ந்து எ ருகிறது. இது படுமோசமான சார்பு நிலையா கும். புத்திபூர்வமான சார்பு நிலை மேற்கின் ச ரித் தி ர மாதி ரி ஒப்பற்றதென்பதை நாம் ஒப்புக் கொண்டுள்ள்ோம். ஐரோப்பிய - அமெரிக்க வாழ்க்கை முறையிலேயே முன்னேற்றம் அடைய முடியுமென் பதை நாம் கருதி வந்துள்ளோம் இந்தக் கோணத்திலருந்து நோக் கும்பொழுது அபிவிருத்தி என்பது சிக்கலற்ற ஒரு சரித்திர தாமதம் மட்டுமேயாகும் எனவும் எங்களை முந்திக்கொண்டவர்களின் மூலதன மும், தொழில்நுட்பவியலும் என்ற மர்மத்தின் திறவுகோலை வைத்திருப் பவர்களின் உதவியுடன் இதை ஈடு செய்துவிட முடியுமெனவும் கருதப் படுகின்றது. முப்பது வருடங்க ளாக (இந்த நம்பிக்கையின் அடிப் படையில்) நடைபெற்ற முயற்சி களும், மாயத்தோற்றங்களுக்கும் பின் பெரும் உ ன் மை யில் பய ணத்தை தொடங்க்வில்லை என நாம் கூறமுடியும்'.
இஸ்மயில்-ஸப்ரி அப்துல்லா அவர்களின் இக்கருத்து மூன்ரும் உலகு ஐரோப்பிய விஞ்ஞானத்தை முன்மாதிரியாக கொள்வதை நிரா கரிக்கின்றது. அப்துல்லா அவர் சளின் கூற்று மட்டும் அல்ல ஐரோப் பிய விஞ்ஞானத்தின் பரம்பலும் இவ்வுண்மையை அழுத்தியே காட்டு கின்றது. அதாவது சில வருடங்
களுக்கு முன்னர் ஐ. நா. சபையினல்
எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விபரத்தின் படி ஐரோப்பிய விஞ்ஞானத்தின் அறிவுப் பரம்பலில் 98% மேற்குலக முயற்சிகளிலும் 2% மட்டுமே மூன் ரும் உலகிற்கு உரியது எனவும்
காட்டப்பட்டுள்ளது. இப்புள்ளி விப ரம் எமக்கு விளக்குவது என்ன வெனில் ஐரோப்பிய விஞ்ஞானத் தின் உருவியல் மட்டும் இ ன் றி அதன் பரம்பலும்கூட மேற்குலகச் சார்புத் தன்மை கொண்டவை என் பதையே ஆகும். இன்னும் விளக் கிக் கூறுவதாயின் நவீன விஞ்ஞா னம் எனக் கூறப்படும் ஐரோப்பிய விஞ்ஞானத்தின் பிரதான சிந்தனை கள் மேற்கிலேயே தீர்மானிக்கப்படு கின்றன என்பதேயாகும். எனவே தான் மேற்படி ஐரோப்பிய விஞ் ஞானம் என்ற மர்மத் திறவுகோ லைப் பெற்றுவிடுவதால் மூன்ரும் உலகு தனது அபிவிருத்திப் பாதை யில் எதிர்நோக்கும் விஞ்ஞான தொழில்நுட்பப் பிரச் சினை களை தீர்த்துவிட முடியாது என்பதைத் திடமாகக் கூறமுடிகின்றது. ஆகவே மூன்றம் உலகினர் தமது சமூக தேவையினையும் இயற்கைச் சூழலை யும் இயல் சக்தியையும் அடிப்படை யாகக் கொண்டு தமக்கே உரிய விஞ்ஞான தொழில்நுட்பத் திறன் களை சுதந்திரமானதாக உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
உலகின் விஞ்ஞான தொழில்
நுட்ப ஆய்வுகள் இருவகையாகி
நடத்தப்படுவதுண்டு. *
1. அடிப்படை ஆய்வு
2. பிரயோக ஆய்வு.
மூன்றம் உலகின் மரபு வழிப் பட்ட அறிவியலாளர்கள் கருதுவது என்னவெனில் மூன்ரும் உலகின் வ்றுமை மூன்ரும் உலகில் அடிப் படை ஆய்விற்கு இடம்தராது என்ப தாகும். இதற்கு அவர்கள் கூறும் காரணம் அடிப்படை ஆய்வுத்துறை
21

Page 13
பாரிய செலவீட்டிற்கு உரியவை. அதனைத்தாங்க மூன்ரும் உலகால் இயலாது என்பதாகும். எனவே மேற்குலகின் ஆய்வைச் சார்ந்து பிரயோக ஆய்வே சாத்தியம் எனக் கருதப்படுகின்றது. இக்கருத்தும் தவருனது ஆகும். மேற்குலகின் அடிப்படை ஆய்வு முன்மாதிரியை பின்பற்ற முயல்வதின் விளைவே இக் கருத்தாகும். மூன்ரும் உலகினர் தமது வளங்களினதும், தேவைகளி னதும், இயல்பு சக்தியினதும் ஆற் றலுக்கு ஏற்ப தமது அடிப்படை ஆய்வுகளையும் பிரயோக ஆய்வுகளை யும் திட்டமிட்டுக்கொள்ளமுடியும். தலைவர் மாஓ-சே-து, ங் அவர்களின் காலத்து சீன இதற்கான முன் மாதிரியை உலகிற்கு வழங்கி உள் ளது.
மூன்ரும் உலகினர் மத்தியில் பரவலாக ஒரு மூடத்தனமான நம் பிக்கை காணப்படுகின்றது. விஞ் ஞான விவகாரங்களில் அறிவு ச் சிறப்புடையோர் மே ற் குல கினர் தான் என்பதே அந்த மூடத்தன மான நம்பிக்கையாகும். ஆயி ன் உலகின் அறிவியல் வரலாறு இதற்கு எதிராகவே உள்ளது. மூன்ரும் உல கினரின் நம்பிக்கை மட்டும் இன்றி மேற்குலகின் அறிவியல் வரலாற் றைக் கூறும் ஆசிரியர்களும் மேற் படி தவருன கருத்தையே பிரச்சா ரம் செய்துவந்துள்ளனர். உதாரண மாக ஐரோப்பிய விஞ்ஞான வர லாற்றின் ஆசிரியர் எனக் கூறப் படும் 'நீட்ஹாம்" என்பவர் ஐரோப் பிய விஞ்ஞானத்தின் வளர்ச்சி என் பது ஐரோப்பாவின் உட்புற விசை யிலேயே தங்கி இருந்தது என்கின் ருர். வரலாற்றின் உண்மை விப ரங்களைத் திரித்துக்கூறும் இக்கூற்
22
றிக்கு எதிராக பல உதாரணங்க ளைத் தரமுடியும். ஆயினும் இவ் விடத்தில் சில உதாரணங்களை மட் டும் தருகின்முேம். ஐரோப்பிய விஞ் ஞானம் என்பது எகிப்தியரின் எண் கணித அறிவையும், சுமேரிய மக்க ளின் தூயகணித அறிவை யும், கிரேக்கரின் கேத்திர கணித அறி வையும் இந்தியரின் அட்சர கணித அறிவையும், சீனரின் காந்தவியல் அறிவையும் உள்வாங்கிக்கொண்ட தின் உருவாக்கமே ஆகும். மேற் குலகு அறிவியல் இருளில் மூழ்கி இருந்தபொழுது கீழைத்தேயங்கள் அறிவியல் சிறப்புக்கள் பலதைப் பெற்று இருந்தன என்பது மறைக் கப்படமுடியாத உண்மை. குறிப் பாக சோழர் காலம் எனக் குறிப் பிடப்படும் தமிழக வரலாற்றின் கி. பி. 9ம் நூற்ருண்டளவிலான தமிழகத்தின் அறிவியல் ஈட்டம் அன்றைய மேற்குலகின் அறிவியல் ஈட்டத்தினை விடவும் பல்படி உயர் வானது. க ட ற் ப ய ண ங் க் வின் மாபெரும் கண்டுபிடிப்பாளர் எனக் கருதப்படும் 'வாஸ்கொடகாமா' அவர்களும் தனது கடற் பயணத் திற்கு இந்திய, அராபிய மாலுமி களைப் பயன்படுத்தினர் என்பது மேற்குலகு வெளிப்படுத்த விரும் பாத ஒர் உண்மையாகும்.
ஆக ஐரோப்பிய விஞ்ஞானம் என்பது ஏதோ 'நீட்ஹாம்" போன் றவர்கள் கூறுவதுபோல் ஐரோப்பா வின் தனிச் சிறப்பு அன்று. பிற் காலத்தில் அவர்கள் உருவாக்கிக் கொண்ட சாம்ராஜ்ஜிய விஸ்தரிப் பின் மூலம் உலகின் பல பாகங்களி லும் இருந்து அவர்கள் பெற்றுக் கொண்ட அறிவியல் மூலகங்களின் தொகுப்பே ஆகும். கீழைத்தேய

நாடுகளின் அறிவியல் ஈட்டங்களை அவர்கள் தமக்கு ஏற்றவகையில் தொகுத்து ரூபப்படுத்திக்கொண்ட னர். அதுவே ஐரோப்பிய விஞ்ஞா னம் ஆகும்.
எனவே மூன்ரும் உலகினர் தமது விஞ்ஞானச் சிந்தனைத் திறன் பற்றி ஐயுறவோ அல்லது நம்பிக் கையீனப்படவோ வேண்டியதில்லை. தமது நாடுகளின் தேவைகள், சூழல், வளம் ஆகியவற்றை அடிப்படை யாக வைத்து அவர்களால் தமக் கென விஞ்ஞான, தொழில்நுட்ப வழிமுறைகளை உருவாக்கிக்கொள்ள
ed-K-3C-3s-3-3 c.3d-3rd-rank god-g-god-kod k-Cdk
முடியும. இதற்கு முதல் நிபந்தனை யாக மூன்ரும் உலகினர் ஏகாதிபத் தியங்களின் சகலவிதமான பிடிமா ணங்களிலும் இருந்து தம்மை முழு மையாக விடுவித்துக்கொள்ள வேண் டும். அதாவது மூன்ரும் உலக நாடு களில் அரசியல் ரீதியான மாற்றங் களும், சமூக புரட்சிகளும் உருவாக் கப்படல் வேண்டும். புரட்சிகரமான அரசியல் சமூக மாற்றத்தோடு தொகையீடு செய்யப்பட்டதாகவே புரட்சிகரமான விஞ்ஞான தொழில் நுட்ப அணுகுமுறைகள் மூன்ரும் உலகிற்கு சாத்தியம் ஆகும்.
ܐܝܤܒܡܣܐ
வேண்டுகோள் !
மட்டக்களப்பு பிரதேசத்தின் பாரம்பரியக் கலை கள் காலத்திற்குக்காலம் தோன்றிய கலைஞர்களால் வளப்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆயினும் இவை பற்
றிய பூரண விபரம் வெளியுலகு அறியாதது பெரும் * குறையாகும். இவற்றின் விழுமியங்களை வெளிக் கொண ரவும், ஆய்வு செய்யவும் 'வயல்’ விரும்புகின்றது. நமது வாசகர்கள் சிரத்தையெடுத்து பின்வரும் தகவல் களைத் தந்து உதவுமாறு வேண்டப்படுகின்றனர்.
Y கலைஞர் பெயர்:
.
கலைஞரின் பூரண விபரம் (முகவரி உட்பட);
கலையாக்கங்கள் பற்றிய விபரம் :
Y L S kLeLLLLSS S SLLLLSLSSuLeLLLLLS LS AA SLLLeLYLLLLLSS LL SSqLALLLLLLLS SqLeeS YSSL Te MqLLLLLS A SLSLSL m YYLSLS0LSLLLLLSLLLeLL0LqLYLLqALLLLLLLASLLAeAeALYYLALYYLLLYqqALLLLLLLLYLLLLLAL
23

Page 14
ஒய்வு இலா ஊனங்கள்.
- பாரதிபுரம் இ. நடனசேகரம் -
இது கரங்களல்ல கதாயுதங்கள் பஞ்சப் பேயினை அடித்து விரட்டும் அசுரக் கனேகள். எங்கள். விரல் இடுக்குகளில் பழுத்துக் கிடப்பது பழங்களல்ல பச்சை ரணங்கள்... ! ஏரைப் பிடித்து போராடியதால் ஏற்பட்ட காயத் தழும்புகள்! எங்கள். கையின் ரேகைகள்
அழிந்து விட்டன - இதனுல்,
வறுமைக் கோடு வி, மைக்கல் கொலின்
நெடுங் கோடு. அகலக் கோடு. மகரக் கோடு. கடகக் கோடு. உலகின் நடுவே மத்திய கோடு வேறு ஆனல் எங்கே ஐயா ! எங்கள் வறுமைக் கோடு. தேடித் தேடி கணகள பூதது கால்கள் ஓய்ந்து மனமோ சலித்து உடலோ தளர்ந்து
ia U 0 U di 8 ஓ புரிகிறது ! வறுமைக் கோட்டை
வரைவதற்கு மறந்து
விட்ட்னரோ?
எங்கள்
ஜாதகமும் அழியத் தொடங்கி விட்டன ! இது. ஒரு தனி வீட்டிற்கான அழிவு அல்ல.
ஒரு நாட்டிற்கான அழிவு.!
، ، ، ، ، ، جع இன்னும் எங்கள் ரணங்கள் ஆறவில்லை. அதுவரை
நாங்கள்
வேறென்ன செய்யலாம்?
ബ கண்வானம் சிவந்திருக்க கவலை மேகம்
நீர் பொழிய என் தாய் போலொருத்தி நேற்றிரவு என் எதிரில் வந்து நின்ருள்! யாரென்றேன் நான். அவள் - - மட்டக்களப்புத் தாயென்ருள். ஏன் அழுகை என்றேன் உள் மோதலால் ஊர் எங்கும் பிணமென்ருள்! 3 . . . . .
சுகந்தன்
இந்த நாட்டின்
நானும் அழுதேன்.
ஒய்வு இலா ஊனங்கள் தானே? வேறென்ன செய்யலாம்?
assassian
24

இவன்
மனிதன்
மங்கையர்க்கரசி நாகப்பன்
இனிய காலைநேரத்திற்குரிய பூபாளமாக புள்ளினங்களின் குரல் ஒலிக்க தூரத்தே ஒலித்த கோயிலின் மணியும் அதனுடன் சேர்ந்து ஒலித் தது. நடந்து முடிந்தவற்றின் சுவடு களை இழந்துவிட்ட மனம் மிகவும் இலேசாகி, புலர்ந்திருக்கும் புதிய காலையை புது உற்சாகத்துடன் எதிர்பார்க்கத் தயாராகிவிட்டிருந் தது. படுக்கையிலிருந்து எழுந்து "பிரஸ்'உம் கையுமாக வெளியே வாசல்பக்கமாக வந்தான் ரகு. "ம்ம்மா" "ம்ம்மா" கன்றின் அழைப் பிற்கு பதிற்குரல் கொடுத்தது அந்த வெள்ள்ைப்பசு. கன்றுடன் வீதியிற் போகும் அந்தத் தாய்ப்பசுவைப் பார்த்தான் ரகு. அவன் கண்களில் அவனையறியாமலேயே நீர்த்துளிகள் முட்டிக்கொண்டு நின்றன. புதிய காலைப்பொழுதை இனிய பூபாளத் துடன் வரவேற்கத் தயாராகியிருந்த மனது ஒரு நொடியில் எல்லாவற் மறையும் உதறித்தள்ளிவிட்டு நடந்து முடிந்துவிட்ட அந்தச் சோகமான அந்தப் uus prooÕ சம்பவத்
தையே நினைத்துப் தொடங்கியது.
பார்க்கத்
அன்று ஒரே அலைச்சலாகப்போய் விட்டது. அவன் நினைத்துச்சென்ற காரியங்கள் எதுவுமே முடியவில்லை. படித்துவிட்டு வேலைதேடி அலைவ தென்பது எவ்வளவு கஸ்டமான காரியம் என்பது அவனுக்கு இப் போது தான் நன்கு புரிநதது. இந்த வேலைதேடும் படலத்துடன் ஒப் பிடும்போது படிப்பது மிகச்சுலப மான காரியம் என அவன் தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டான். காலையில் உள்ளே போட் டு க் கொண்ட இடியப்ப விள்ளல்கள் வயிற்றிலிருந்து விடைபெ ற் று க் கொண்டு நீண்ட நேரமாகி விட்டது போலும், அதனற்ருன் வயிறு வேறு ஓலமிட்டுக் கொண் டி ருக்கிறது. அவன் 'மெதுவாக கையினல் வயிற் றைத் தடவிவிட்டுக் கொண்டான். ஏமாற்றங்களோடு பசிக்களைப்பும் சேர்ந்து கொள்ள ரகு தள்ளாடிய படியே வீட்டைநோக்கி நடந்து
கொண்டிருந்தான்.
25

Page 15
'கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே நுழையும்போதே 'அம்மா பசிக்குது" என்று குரல் கொடுத்த படியே வந்தான் ரகு. "ம் கஸ்ரப் பட்டு வேல தேடிட்டு வந்திருக்கான் உன்னேட பிள்ள, களச்சுப் போயி ருப்பான். சாப் பா ட ப் போடு” அப்பாவின் குத்தல்ப் பேச்சு அவ னுள் ஆத்திரத்தை மூட்டியபோதும் அடக்கிக் கொண்டான்.
"நீங்க வேணுமெண்டா இருந்து பாருங்கோ நான் ஒரு நாளைக்கு என் னுேட தகமையை மட்டும் பயன் படுத்தி வேலை எடுத்துக் காட்டத் தான் போறன்.”
‘ஓமடா ஓம் நீ வேல தேடிட்டு வாறதுக்கிடையில உனக்கு பென் ஷன் எடுக்கிற காலம் வந்துடும்.’ அதற்கு மேலும் அவருடன் பேச்சுக் கொடுக்க விரும்பாதவனுக மெள னமானுன் ரகு. ஆணுல் அவனது தந்தை அவனை விடுவதாக இல்லை.
‘இவர்தான் ஊரிலேயே பெரிய மனுஷன். நீதி, நியாயம், நேர்மை எண்டு பேச வந்திட்டாரு. அதை யெல்லாம் எவன்டா இப்ப பாக் இ முன். நேர்மையான வழியில வேல எடுக்கப்போருர ாமே, நேர்மையான வழியில’
அதற்கு மேலும் ர குவா ல் பொறுக்க முடியவில்லை. “ஓமப்பா நீங்க சொல்லுறது உண்மைதான். உங்களப் போல ஆக்கள் தான் ஊருக் குள்ள இண்டைக்கு அதிகமா இருக் காங்க. அதாலதான் திறமைக்கும் தகுதிக்கும் மதிப்பில்லாமப் போய், பொய்யும் பித்தலாட்டமும் மட் டுமே உலாவிக்கொண்டிருக்கு” என் னடா கண்டறியாத திறம? நீயும்
தான் கட்டுக்கட்டா சேட்டிக்கேற் றுக்களை தூக்கிக்கிட்டு அலயுரு. போனகிழம நீபோன "இன்டர்வியூ முடிவென்னண்டு தெரியுமா ? சங் கக்கட சுப்பையர்ர பெடியனுக்குக் கிடைச்சிருக்கு. என்ன பேச்சையே காணம். அவன் படிச்சது வெறும் ஒ. எல் தான். உன்ர பி. ஏ யைக் கொண்டு உடைப் பி ல போ டு ரகுக்கு அதைக் கேட்ட போ து உண்மையிலேயே வேதனையாகத் தான் இருந்தது. ஏன் ஆத் தி ர மாகக்கூட வந்தது. யார் மீது ஆத் திரப்படமுடியும் அவனல் ? 'ஒரு
வேளை அப்பா காட்டுவதுதான் சரி
யான வழியோ ? எ ல் லோ ரும் போகும் பாதையில் நான் மட்டும் போகமாட்டேன் என்று எதற்காக அடம்பிடிக்கவேண்டும் அவன் தன் ஜாயே கே ட் டு க் கொண் டா ன் ச என்ன இது. நானு இப்படி யோசிக் கிறேன்? எல்லோரும் இப்படி விதண் டாவாதம் பேசிப்பேசித்தான் மந் தைக் கூட்டமாக மாறிக்கொண்டு வருகிருேம். என்ன நடந்தாலும் முன்வைத்த காலைப் பின்வைக்கக் கூடாது" அவன் தனக்குள்ளேயே உறுதிசெய்து கொண்டான்.
"என்னடா இனியாவது உனக் குப் புத்தி சரிவருதோ பாக்கிறன்", அப்பாதான் சொல்கிருர்,
"வேண்டாமப்பா உங்க நண் பர்கள் த ய வி ல நாலுபேரோட காலப்பிடிச்சுத்தான் எனக்கு வேல கிடைக்குமெண்டா அந்த வேல எனக்கு வேண்டாம். அதுக்காக நீங்க சிரமப்படவும் வேண்டாம்' சொல்லிவிட்டு, கையைக் கழுவிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான் ரகு
26

'ம் நாய்வால நிமித்த யாரால முடியும்' அவனது அப்பாவும் அத் தோடு நிறுத்திக்கொண்டார்.
"இந்த மாட்டுச் சனங்களுக்கு ாத்தின நாள்தான் சொல்லியாச்சு இந்த மாடுகள வீட்டில "கட்டிவை யுங்க எண்டு. இண்டைக்கு இவை யளுக்கு ஒரு பாடம் படிப்பிக்காம விடுறதில்ல. அடியே பார்வதி ஒரு கயிறு எடுத்துக்கொண்டுவா' காட் டுக் கத்தலாக கத்தினுர் சின்னையா மாஸ்டர். சாப்பிட்ட பாதியில் ரகுவும் எழுந்து ஓடிவந்தான். துள் ளிக் குதித்துக்கொண்டு கன்று ஒடி விட கால்தடுக்கி விழுந்துவிட்ட பசுமாடு அவரிடம் சரமாரியாக வாங்கிக் கொண்டிருந்தது. ஒவ் வொரு அடிக்கும் வாய்விட்டுக் கத்தியது பசுமாடு. வீதியில் நின்ற படி "ம்மா" "ம்மா" என்று அலறிக் கொண்டிருந்தது கன்றுக்குட்டி, கன்றுக்குட்டியின் அலறலைக் கேட்க பசு மாட் டி ற் குப் பொறுக்கவில் & Gurr எ ன் ன வோ, அபயக்குரலைக் கேட்டுத்தான் தனது குட்டியும் அலறுகிறது என்பதைப் புரிந்து கொண்டதாலே மூச்சை அடக்கிக் கொண்டு சத்தமின்றி அடிகளை வாக்கிக் கொண்டது பசு மாடு. இருவிழிகளும் நீரைக் கொட் டிக் கொண்டிருந்தன. அதற்கு மேலும் பார்த்துக் கொண்டிருக்கப் பொறுக்காத ரகு ஓடிவந்து அவனது தந்தையின் கையிலிருந்து தடியைப் பறித்துத் தூர எறிந்தான். கீழே கிடந்த மாட்டைக் கை கொடுத் துத் தூக்கினன் முன்னங்கால்களி லொன்றை நொண்டிக் கொண்டே வெளியே ஒடியது அந்தப் பசு மாடு. வெளியே நின்றிருந்த கன்றுக்குட்டி பாதிவழிக்கு ஓடி வந்து தாயைக்
2
தனது
7
கட்டிக்கொண்டது. அதைச் சுற்றிச் சுற்றி வந்தது. தனது நாக்கினல் தாயின் முகத்தை நக்கியது, தான் பட்ட அடிகளின் வேதனையைக் கூட அந்த அன்பு வெள்ளத்தில் மறந்து விட்டது போல் "ம்மா" என்று மகிழ்ச்சிக்குரல் கொடுத்தது பசுமாடு. பார்த்துக் கொண்டிருந்த ரகுவின் விழிகளைக் கண்ணிர்த்திரை மறைத்தது.
*அறிவிருக்காடா உனக்கு" ஆத்திரத்தோடு கேட்டார் சின் னையா மாஸ்டர். ரகு ஒரு கணம் ஒரேயொரு கணம் அவர் கண்களை
உற்று நோக்கினன். மறுகணம் முகத்தைத் திருப்பிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான். மாட்
டிற்கு இருக்கும் அறிவுகூட மணி " தருக்கு இல்லையே என்று நினைக்க அவனுக்கு வேதனையாகத்தான் இருந்தது இந்த உலகில் மனிதர் கள் வாழ்கிருர்களா என்ற சந் தேகம் கூட அவனுக்கு ஏற்பட்டது “என்ன உலகமிது” என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். இந்த நிகழ்ச்சிகள் எவையுமே தன்னைப் பாதிக்கவில்லை என்பது போல் கல்லாக நின்றிருந்தாள் ரகு வின் தாய் பார்வதி. ரகு கையைக் கழுவிக் கொண்டான்.
' '“Grøör trfrærr Gl Irri "-t- erm l' பாடு அப்படியே கிடக்கு. பாதியில ஏன் கையைக் கழுவிக்கொண்டு போருய்?" பார்வதிதான் கேட் டாள். "பசிக்கல்லம்மா" ரகு சுருக்க மாக முடித்துக்கொண்டான்.
“என்ன ராசா இது. பசிக்குது எண்டு தானே அரக்கப்பரக்க ஓடி
வந்த நீ"

Page 16
-
"வந்த பசி போயிட்டுதத்மா' தலை யைக் குனிந்து கொண்டே பதில் சொல்லிவிட்டு தனது அறைக்குள் போய் படுத்துக்கொண்டான் ரகு. நடந்து முடிந்து விட்ட நிகழ்ச்சி அவன் மனதை வேதஃனப்படுத்திக் கொண்டே இருந்தது. எவ்வளவு முயன்றும் அவனுல் அதை மறக் கவேமுடியவில்லே. அந்தச் சம்பவம் நடந்த இரண்டாவது நாள் அந்தப் பசுமாடு செத்துப்போனதை கேள் விப்பட்டபோது ரகுவின்வேதனே மேலும் அதிகரித்து தனது தந்தை ஒரு கொலேக்குற்றவாளி என்றே அவன் மனம் எடை போட்டது. இவர்களுக்கெல்லாம் தண்டனே வழங்க ஆண்டவனுற்கூட முடியுமா என்பது சந்தேகத்திற்கிடமாகவே இருந்தது அவனுக்கு "ரகு எவ்வளவு நேரமாத்தான் முகம் கழுவுருய் வந்து தேத்தண்ணிையைக் குடியன் தம்பி" பார்வதியின் குரல் அவனேப் பழைய நினேவுகளிலிருந்து மீட்டு வந்தது.
"ரகு நான் கோயில் நிர்வாகச பைக் கூட்டத்துக்குப் போறன்,இப்ப ராசையா மாஸ்டரும் வேறரெண்டு பேரும் வருவாங்க. அவங்களோட போய் அந்தச்சந்தி கோயில் வள வில் இருக்கிற பொன்னம்மாள்ை மயும் குடும்பத்தையும் வெளிய தூக்கிப் போட்டுட்டு விாங்க" Gyrff ei sifil விட்டு புறப்பட ஆயத்தமானுர் இன்னேயா மாஸ்டர், "என்ன பனி தர்களோ இதுகள். இருக்க இட மில்லாத அந்தக் குடும்பத்னத் துரத்திப்பேட்டு அப்பாவும் இவனு களும் கோயில் வளவில என்ன செய்யப் போகுதுகள். சனங்கள: கஸ்டப்படுத்தியே பாக்கிறதில என்னதான் சந்தோசமோ தெரிய
28
வில்ஃ' ரகு தனக்குள் முணு முணுத்துக் கொண்டான்.
"இந்த வேல்யருக்கெல்லாம்
நான்போகமாட்டன் காண்டுதெரியும் தானே வந்தா அவங்கள இருக்கச் சொல்லுறன். நீங்களே கூட்டம் முடியவந்து கூட்டிக்கொண்டு போங் கோ" சொல்விவிட்டு மேலும் அங்கே நிற்கப் பிடிக்காதவனுக உள்ளே போனுன் ரகு.
காஃபுணவை முடித் து க் கொண்டு புறப்பட்ட ரகு வாசிக சாஃபில் சிறிது நேரம் இருந்து விட்டு ஏதோ நினேவு வந்தவனுக அந்தக் கோயில் காணியை நோக்கி நடந்தான். ராசையா மாஸ்டரும் அ வ தினது அப்பாவும் சிறிது தூரத்தில் நிற்க அவர்களது அடி யாட்கள் தடிகளுடன் பொன்னம் மாவின் வீட்டுச் சாமான்களேயெல் லாம் உடைத்துக் கொண்டிருந் தார்கள். பொன்னம்மாவின் மகன் நிலத்தில் மயங்கி கிடந்தான் என்ன நடந்திருக்கும் என்பதை அவளுல் இலகுவாக ஊகிக்கமுடிந்தது. பாவம் பொன்னம்மாவின் மகன் வஞ்சகமில்லாமல் நன்முகக் கொடுத் திருக்கிருர்கள். அதற்காஅத்தானே சின்ஃனயா மாஸ்டர் முன்னேற் பாடாக அடியாட்களுடன் வந்திருக்
கிறர். பொன்னம்மாவின் மகன் கண்ணேத்திறந்து பார்த்திருக்க
வேண்டும் அதுதான் அடியாட்களில் ஒருவன் அவனருகே சென்று பார்க் கிருன் போலும், "இங்க இவன் முழிச்சிட்டான்' குரல் கொடுக் கிருன் ஒருவன். அவன் சாகவில்லே என்று சந்தோஷப்படுகிருகு அல் வது சாகவில்ஃயே என்று கவலேப் படுகிருனு என்பதை அவன் குரலி

பொன்னம்மா. லெல்லாம்
நாங்க வாறம் மாஸ்டர்"
கேட்கிருர்
மிருந்து புரிந்து கொள்ள முடிய வில்லே ரகுவால். "எண்டாலும் இவைக்குச் சரியான ஒரு பாடம் டிப் பிக்க வேணும், மாஸ்டர் யாரெண்டு நினேச்சு உங்களோட மோதப்பார்க்கிருன்கள்" தன் பங் கிற்கும் ஒருவன் சொல்லிவைக் கிருன். இதைவிட என்ன பாடத்தை இன்னும் படிப்பிக்கப் போகிருர்கள் ரகு தன்னேயே கேட்டுக்கொள்கிருன் வலியிற் துடித்துக் கொண்டிருக்கும் தனது மகனைப் பார்த்து க 533r s3xfʼrif வடிப்பதா அல்லது தனது உடை மைகள் என்றிருந்த சட்டிகளும் பானைகளும் துண்டுகளாக சிதறிக் கிடக்கும் கோலத்தைப் பார்த்து வேதனைப்படுவதா என்று புரியா தவள் போல கல்லாக விரித்த தலே யுடன் நிலத்தில் குந்தியிருந்தாள் ரகுவிற்கோ உட ஆத்திரத்தில் கொதித் கொண்டிருந்தது. "அப்ட 나பாட்கள் விடை பெற்றுக் கொள்ள Figar 2:TLurt LorraïL-stijn, TTGö7éFJMT மாஸ்டருடன் திரும்பி வந்துகொண் டிருந்தார். வழியில் ரகுவும் அந்தப் பக்கமிருந்து வருவதை அவர் கண் கள் கவனித்துக் கொண்டன.
துக்
வீட்டிற்கு வந்ததும் வராதது பாக "டேய் ரது இங்கி வா நரின் போகமாட்டன் எதைாடு சொல்களிப் போட்டு பிறகேன்டா அங்க வந்த நீ" அவர் என்ன அர்த்தத்தில் என்பது அவனுக்குப் புரியவில்&. ரகு மெதுவாக அவினா நிமிர்ந்து பார்த்தான். 'உங்களுக்கு ஒத்தாசையாக நான் வந்த நான் எண்டு நிஜனச்சீங்களே?' மெதுவா
கவே கேட்டான் ரகு. "ஆப்ப எதுக்கு வந்த நீ" அவர் ஆத்தி ரத்த டன் கேட்கிருர்,
29
"நீங்க எப்பிடியெல்லாம் மிருகங் % விடக் கேவலமா நடந்து கொள்ளுறீங்க என்பதைப் பாக் சுத்தான் வந்த நான் எப்பிடித் தான் ஒரு மனிதனே இன்னுெரு மனிதகுல் துடிக்கத்துடிக்க அடிக்க முடிகிறதோ? நான் ஒரு விசரன் இதப்போய் உங்களிட்ட கேட்டுக் கொண்டு. அண்டைக்கு பக்கத்து விட்டுக்காரர் மேலுள்ள கோபத்த அவங்க வீட்டு மாட்டில காட்டி விங்களே! வேலியடைக்கும் போது ஏற்பட்ட தகராறு, வி. சி எலக் சனில் ஏற் சட்ட கோபம் எண்டு கொஞ்சம் கொஞ்சமாக எ ல் லா தி தையும் சேத்து வாய் பேசமுடியாத அந்த மிருகத்தின்மேல காட்டினிங் களே! அதைவிட இது ஒண்டும் மோசமில் லேத்தான் இவனுக்காவது எங்க வலிக்குது எண்டு சொல்ல {ւքLգ եւ ցմ: தன்ஃன அடிச்சவன் யாரெண்டு இனங்காட்ட முடியுது. ஆணு அந்த மாட்டுக்கோ இது ஒண்டும் செய்ய முடிந்திருக்காது. அடிபட்ட இரண்டாவது நாளே அன்றுக்குட்டி கதறக் கதற செத்துப் போர்சுதே அந்தப் பசு மாடு. அதால மட்டும் பேச முடிஞ்சிருந்தா..? - . . . . . அப்பவும் என்ன நல்ல அப்புக்காத்து வழக்கில வெற்றி உங்களைப்போ: ஆக்களுக்கு இது கள் புது சுமில்ல, கஷ்டமில ஆணு ஒண்டு இது எண்டைக்கும் இப் பிடியே தொடராது. குனிந்த தஃவ கள் நிமிரும் பொழுது உங்கள் அதிகாரக் கொடிகள் அறும் அப்ப ! உங்களே அப்பா எண்டு சொல்லனே! எனக்கு வெட்கமாக இருக்கு.
இண்டையோட உங்கட உறவு எனக்கு தேவையில்ல எண்டு முடி வெடுத்திட்டன் அசிங்கத்தனங் GrifikT மகனு? இருப்பதிலும்

Page 17
அனதையாக இருப்பது மேல்!" என்று கூறிய ரகு வீட்டு வாசல் படியைத் தாண்டி விடுவிடுவென்று வெளியேறிக் கொண்டு இருந்தான். ஏதோ பேச வாயெடுத்த சின்னையா 1ρπ ου 1 - fr பேச் சே வ ரா ம ல் விறைத்து போய் நின்றர். வீதி
யால் நடந்த ரகு இந்த உலகமே தனது சொந்தம் என்ற வகையில் சலனமின்றி நடந்தான். என்ருலும் அவன் இதயத்தின் ஏதோ ஒரு மூலை வலியெடுத்த 'அம்மா! அம்மா!' என அலறத் தான் செய்தது. -(யாவும் கற்பனை)-
அன்பான வாசகர்களே !
'வயல்" ஏட்டின் முதலாவது இதழுக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி. இது வர்த்தக நோக்கு டன் ஆரம்பிக்கப்பட்டதொன்றல்ல. சமூக நோக்கையே முனைப்பாகக்கொண்ட முயற்சி என்பதை நீங்கள் புரிந்து
கொண்டிருப்பீர்கள்.
எதிர்காலத்தில் பல சமூகநலத்
திட்டங்களை அறிமுகம் செய்து அவற்றை அமுல் நடாத்
தவும் நாங்கள் எண்ணியுள்ளோம்.
அதற்கு உங்கள்
ஆதரவே தேவை. வயலை விதைத்தவர்கள் நாங்கள்.
அதனை விளையச்
பங்குண்டு.
இன்றே வயலின் உங்கள் நண்பர்களையும் சந்தாதாரராக ஆக்குங்கள்.
செய்வதில் உங்களுக்கே நிறைந்த
சந்தாதாரராக ஆகுங்கள்;
- سے۔
'வயல் சந்தாதாரர் விண்ணப்பம்
நா. சிவலிங்கேஸ்வரன், 30, பயணியர் வீதி, மட்டக்களப்பு.
முகவரி:. C C C C CCC LLLLLC LCS S S S S S q L CC 0L C LL LL LSLLSS L SLSSL SLSSSSSSSS
இத்துடன் வருடச் சந்தா 25/- (தபால் செலவு உட்பட) ரூபாய்க்
பெயர். .
| குரிய காசோலை இல./காசுக்கட்டளை இல. .
இணைத்துள்ளேன்.
ஒப்பம்.

狩 சுதந்திரம் பெறவேண்டும்!
மதிமகன் எஸ். எம். ஜாபிர்
இறைவனே - நீ இயற்றிய மனிதப்பாடல்கள் இன்று -
எங்கள்
தேசச்செவியில் ஒலிக்க முடியாமல் மதிப்பிழந்துவிட்டன!
餐
மெய்கள்
'ரவை**களால் துளைக்கப்பட்டு மனிதஉயிர்கள் மனிதாபிமானமற்று மரிக்கும்காட்சிகள்
எங்கள் -
கவிதைகளைக்கூட கண்ணிர்
வடிக்கவைத்துவிட்டன!
景
31
சொந்தங்களை சோகநதியில் தத்தளிக்கவைத்துவிட்டு "பயங்கரவாத "ச் சீல் - பொறிக்கப்பட்டு முகாம்களுள் இடப்பட்ட பொதுமக்கள்படும் - பரிதாபங்கள் - எங்கள் விழிகளை(க்) - குளமாக்குகின்றன !
姜
இறைவனே - நீ இன்னும் மனிதப்பாடல்களை இயற்ருதே. ஏனென்ருல் - அவை - மீண்டும் மதிப்பைப்பெற எங்கள் நாடு மீண்டும் ஒருமுறை சுதந்திரம்பெறவேண்டும்!
FRA 领

Page 18
தமிழர் சமூக பண்பாட்டியில் வரலாற்றுத் துறையில் பேராசிரியர்
i
வானமாமலையின் பணி
LLMLMLMLALALALqLqLALAALMLSAqMAL AqALALSLASLLALLLLALALLAqALMLALSLALLAqALMLLALALAS LALATLTLLLAAAA
-A பால - சுகுமார் k
பேராசிரியர் வானமாமலை அவர்கள் மறைந்து ஆறு வருடங் கள் உருண்டோடி விட்டன. பேராசிரியர் அவர்கள் மறைந்தாலும் அவரின் யெயர் தமிழ் இலக்கிய உலகில் அழியாப் பெரும் இடத்த்ை பெற்று விட்டது. காரணம் அன்னர் தமிழர் சமூக பண்பாட்டியில் வரலாற்றுத் துறைக்கு ஆற்றிய அரும் பெரும் பணிகள் தான். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் நாட்டாரியிலாராச்சியின் முன்னுேடி யாகக் கருதப்படுபவர் பேராசிரியர் வானமாமலை அவர்களே ஆவார்.
தமிழ் உலகின் நாட்டாரியல் ஆய்வுத் துறையின் முதல்வராக கருதப்படுபவர் ‘சாள்ஸ்கவர்” என்பவர் ஆவார். கீழைத்தேயங்களைப் பொறுத்தவரையில் நாட்டாரியில் ஒர் ஆராய்ச்சி துறையாக அக்கறை கொள்ளப்பட்டமை ஐரோப்பியரின் வருகைக்குப் பின்னரே ஆகும். இவ் வகையில் ஐரோப்பிய கிறித்தவப் பாதிரிமார்கள் குறிப்பிடத்தக்கவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றை நோக்கும் பொழுது காலத்திற்குக் காலம் காலத்தேவைகளின் பயனுய் செம்மை இலக்கிய உலகு நாட்டாரியெலின் பல்விடயங்களை தானும் உள்வாங்கி வளர்ந்து வந்துள்ளதைக் காண லாம். சிலப்பதிகார காலம் தொட்டு இருபதாம் நூற்றண்டு இலக்கிய முய்ற்சிகள் வரை இதற்கு ஆதார சாட்சிகளாய் விளங்குகின்றன.
நாட்டாரியலின் கூறுகளான நட்டார் பாடல்கள், கதைகள் நடனங்கள், நம்பிக்கைகள், பழமொழிகள், விடுகதைகள், புராணக் கதைகள், பழக்க வழக்கங்கள், சடங்குகள் ஆகிய கலைகள் பற்றியெல் லாம் தமிழின் செம்மை இலக்கியங்கள் பல சந்தர்ப்பங்களில் குறிப் பிட்டும் அவற்றை பதிவு செய்தும் உள்ளதைக் காணமுடிகின்றது. இவ்வ்கையில் சிலப்பதிகாரமும் ஆழ்வார்களினதும், நாயன்மர்களினதும் பக்தி இலக்கியங்களும் கி. பி. 13ம் நூற்றண்டிற்குப் பிற்பட்ட நாயக்கர் கால தமிழ் இலக்கியங்களும் வியந்து கூறத்தக்கவை தமிழின் செம்மை இலக்கிய உலகிற்குப் புறம்பா டண்டை நாளிலிருந்து நாட்டார் கலை முயற்சிகள் தமிழில் இருந்து வந்துள்ளதை தொல்காப்பியத்தின் ஆதாரம் கொண்டும் நிறுவமுடியும். இவ்வகையில் பேராசிரியர் வானமாமலை
32

அவர்கள் மலேசியாவில் நடைபெற்ற முதலாவது தமிழராய்ச்சி மாகா grt ligá) is LDril 95.5 'Folic Motif in Cilappathikarm' -glia i di Gaout குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரையில் பேராசிரியர் வானமாமலை அவர்கள் சிலப்பதிகாரத்தில் காணப்பட்ட பல் வேறு நாட்டார் கலைகள் பற்றிய குறிப்புக்களையும், பதிவுகளையும் எடுத்துக் காட்டுகின்றர். பேராசிரியர் வானமாமலை மட்டும் அன்றி வேறும் பல தமிழ் அறிஞர்கள் சிலப்பதி காரத்திலும் பிற பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் காணப்படும் நாட்டாரியல் கூறுகளை பல சந்தர்ப்பங்களில் எடுத்து விளக்கியுள்ளனர்.
சிலப்பதிகாரத்தின் வேட்டுவவர் ஆய்ச்சியர்குரவை, கானல்வ்ரி, வசல்பாட்டு, கந்தூக்கவரி, துன்பமாலையில் காட்டப்படும் குரவைக் கூத்து ஆகியவைகள் பண்டைக் காலத்தில் காணப்பட்ட நாட்டார் கலைகள் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்தில் இடம் பிடித்தமைக்கான உதாரணங்களாக அறிஞர்களால் எடுத்துக் காட்டப்படும். அதேபோல் பக்தி இலக்கியங்களான திருவெம்பாவை, திருப்பாவை ஆகிய பாடல்கள் பண்டைநாளின் நட்டார் கலைகளில் ஒன்ருகிய பெண்களின் மார்க்ழி நீராடல் என்ற கூத்து ஒன்றின் இசை மரபையும், பொருள் மரபையும் ஒட்டி படைக்கப்பட்ட இலக்கியங்கள் ஆகும். அதேபோல் நாயக்கர் காலத்தின் பள்ளு இலக்கியங்கள் குறவஞ்சி போன்றவையும் நாட்டார் மக்கள் மத்தியில் காணப்பட்ட உழத்தி பாட்டு, குறம் ஆகிய நாட் டார் கலைகளை அடியொற்றிப் படைக்கப்பட்ட இலக்கியங்களே ஆகும். இவ்வாறு தமிழர்களின் பண்டைய செம்மை இலக்கிய உலகில் ஆங் காங்கே நாட்டாரியல் கலைக்கூறுகளின் பிரதிபலிப்புக்கள் காணப்பட் டாலும் சமூக ரீதியான அக்கறை நோக்கோடு அவை ஆய்வு நோக்கில் அணுகப்படத் தொடங்கியமை ஐரோப்பியரின் வருகைக்குப் பின்னரே என்பதை திடமாகக் கூறலாம். *சார்ள்ஸ் கவர்" அவர்களின் Folk Song's of South India எனும் நூலே தமிழர்களின் நாட்டாரியல் தொடர்பாய் வெளி வந்த முதல் ஆய்வு நூல் எனலாம். சார்ள்ஸ் கவரைத் தொடர்ந்து பிஷப் கால்ட் வெல் போன்ற மேற்குத் தேய அறிஞர்கள் தமிழரின் நாட்டாரியில் துறையில் ஈடுபாடு கொண்டு உழைத்தனர் எனலாம் தமிழர்களில் இத்துறையில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் பண்டிதர் திரு. ந டே ச சாஸ் தி ரிகள் ஆவர். அவ்ரைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த கி வா. ஜகநாதன், தி. நா. சுப்ரமணியன் மு. அருணுசலம் பெ. தூரன், அன்னகாமு போன்ருேரும் ஈழத்தில் சதா சிவஐயர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை, பேராசிரியர் க. வித்தியானந்தன், வட்டுக்கோட்டை இராமலிங்கம், F. X. C. 5L-Trrorr போன்றேரும் இத் துறையில் அக்கறை காட்டினர். இவர்களுள் பெரும்பாலோர் பேணல் பங்கிலேயே இத் துறையில் ஈடுபட்டனர் எனலாம். இலக்கியங்களை தொகுத்தல், கூத்து போன்ற கலைகளை மீளவும் நடாத்தச் செய்தல் போன்ற முறையில் இவர்களின் பேணல் முயற்சிகள் அமைந்தன. ஆயினும் நாட்டாரியலில் ஆய்வுப் பாங்கான முயற்சியில் ஈடுபட்ட மூலவராய் பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்களைக் குறிப்பிடலாம். பேராசிரியர் கணபதிப்பிள்ஜா
33

Page 19
அவர்களின் முயற்சிகளை ஒத்ததாகவே பேராசிரியர் வானமாமலே அவர் களின் ஆய்வுப் பணி அமைந்தது எனலாம். பேராசிரியர் கணபதிப் பிள்ளை அவர்களின் வழியில் இந்தியப் பல்கலைக் கழகங்கள் பணியாற்ற வேண்டும் 6T67 பேராசிரியர் வா ன மா மலை ய வ ர் க ள் விரும் பினர் ஆயினும் பாரம்பரியத்தையும், மரபையும் இறுக்கப்பற்றி நிற்கும் பண்பு கொண்ட இந்தியப் பல்கலைக் கழகங்கள் இத்துறையில் போதிய அக்கறை காட்டவில்லை என்றே கூற வேண்டும். இருப்பினும் பேராசிரியர் வானமாமலை அவர் தமது சொந்த முயற்சிகளின் மூலம் நாட்டாரியல் ஆய்வுகளுக்கு சத்தூட்டிஞ்றர். இத்துறை சார்ந்து பேராசிரியர் வான மாமலை அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் ஆய்வாளர்களின் கருத்தைப் பெரிதும் கவர்ந்தன. பல்கலைக் கழகங்களுக்கு வெளியே ஒரு நாட்டா ரியல் ஆய்வு மையமாக பேராசிரியர் வானமாமலை அவர்கள் செயல் பட்டார். அவரின் ஆராய்ச்சி மையத்தின் களமாக அவரால் வெளியி டப்பட்ட ஆராய்ச்சி சஞ்சிகை விளங்கிற்று. இருப்பினும் பேராசிரியர் வானமாமலை அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளில் தாற் பரியங்களை விளங்கிக் கொள்ள தமிழ் நாட்டின் பல் க்லைக் கழகங்கள் தவறி விட் டன என்றே கூறல் வேண்டும். ஆனல் கர்நாடக, கேரள, பல்கலைக் கழகங்கள் பேராசிரியர் வானமாமலையின் முயற்சிகளை இனங்கண்டு அவற்றிற்கு மதிப்பளித்தன.
பலரும் ஆழ்ந்த கவனிப்புச் செலுத்தாது விட்ட நாட்டார் பண் பாட்டியல் துறையை நவீன கண்கொண்டு செழுமைப்படுத்தியவர் பேராசிரியர் நா. வ. அவ்ர்களே ஆவர். தாம் மட்டும் இன்றி பிறரையும் இத்துறை ஆய்வில் ஈடுபட வைத்துப் புதிய பரிமாணங்களை ஏற்படுத் தியவர் பேராசிரியர் நா. வ. அவர்களே. தமிழ் நாட்டில் 1968ம் ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு நடை பெற்ற போது மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் தரும் குறைந்தமையைக் கண்டபேராசி ரியர் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு வழி காட்டும் முறையில் ஆராய்ச்சிக் குழு ஒன்றை அமைத்து செயல்பட வைத்தார்கள், ஐந்து பேரைக் கொண்டு ஆரம்பித்த இக்குழு பிற்காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வாளர்களைக் கொண்டதாக வளர்ந்து பல்துறைப்பட்ட ஆய்வுகளை செய்து வந்தது.
பேராசிரியர் வ்ானமாலவயவர்களின் பணிகளும்பல் துறைசார்ந்த தாக இருந்தது. இலக்கியம், மானிடவியல், நாட்டுப்பண்பாட்டியல், வரலாறு, மொழியியல், கலை அழகியல் ஆகியதுறைகளில் விஞ்ஞான பூர்வமான ஆய்வினை மேற்கொண்டார் கல் தோன்றி மண்தோன்ருக் காலத்தே என்ற கற்பனர்த்த போக்கைவிடுத்து சமூக பொருளாதார அம்சங்களுடன் காரண காரியத் தொடர்புடன் ஆய்வு நிகழ்த்தியவர். இவரது ஆராய்ச்சிச் சஞ்சிகைபற்றி சோவியத் ஆய்வாளர் துரூப்பிளிக் கோவா குறிப்பிடும் பொழுது “ஆராய்ச்சி என்ற சஞ்சிகையின் தோற்றம் தென் இந்திய கலாச்சார வாழ்வில் ஒரு பிரதான நிகழ்ச்சியாகும்’ என்று
4
R

கூறுகிறர். பேராசிரியர் சா. சிவத்தம்பி பேராசிரியர் வானமாமலை பற்றி குறிப்பிடும் பொழுது.
அ) சொந்த ஆராய்ச்சியின் மூலம் ஏற்படுத்திய கருத்துப் பரவல்
ஆ) "ஆராய்ச்சி மாணவர் பலரை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவித்தமை காரணமாக ஏற்பட்ட கருத்துப்பரவல் இவை இரண்டும் முக்கியம்" என்று கூறுகிறர்.
1959ம் ஆண்டு பேராசிரியர் வானமாமலையவர்கள் நாட்டுப்பண் பாட்டியல் துறையில் ஈடுபடத் தொடங்கினர். பேராசிரியர் ஆற்றிய பணிகளை அவரது ஆராய்ச்சி மாணவன் ஆ. சிவசுப்பிரமணியன் பின் வருமாறு பாகுபாடு செய்கிருர்,
1. நாடோடிப் பாடல்கள் கதைப்பாடல்கள் ஆகியவைகளை சேக
ரித்து வெளியிடுவது
2. நாட்டுப்பண்பாட்டியல் பற்றிய கட்டுரைகள் எழுதுவது
3. தனக்டுக் கிடைக்கும் பிறவாய்ப்புக்களை இத்துறையின் வளாச
சிக்குப் பயன்படுத்துவது
4 பிறரையும் இத்துறையில் ஈடுபடச் செய்வது
நாட்டுப் பண்பாட்டியல் துறையின் ஆரம்பமே பேணல் பண்பினையே முதன்மையாகக் கொண்டுள்ளது பேராசிரியர் வானமாமலையவர்கள் இத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பும் இந்தப் பண்படிப்படையிலேயே ஆரம்ப மாகிறது. 1960 ஆண்டு தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் எனும் நாட்டுப் பாடல் தொகுதியினையும் 1964ல் தமிழர் நாட்டுப் பாடல்கள் எனும் தொகுதியினையும் வெளியிட்டார். இத்தொகுதிகள் பற்றி அவருடைய மாணவன் சிவசுப்பிரமணியன் பல தொகுப்பாளர்களிடம் காணப்பட்ட பின்வரும் குறைகள் பேராசிரியரிடம் க்ாணப்படவில்லை என்கிருர்,
1. பாடல்களில் உள்ள கொச்சைச் சொற்களைத் திருத்தி செம்மை
மொழியில் வெளியிடுதல்.
2. பாடல் வழங்கும் இடத்தை குறிப்பிடாது விடுதல்.
3. பாடல்களைச் சேகரித்தவர்களின் பெயர்களை வெளியிடாது பிறர்
உழைப்பைத் தமதாக காட்டுதல்.
4. பாடல்களுக்குத் தேவையான குறிப்புக்கள் எழுதாது பாடல்களே மட்டும் வெளியிடுதல் அல்லது தேவையற்ற விரிவான பாடலை விடப் பன்மடங்கு நீளமான விளக்கம் எழுதுதல்.
35

Page 20
நாட்டுப் பாடல்களை பாகுபடுத்தும் முறையினை அவர் தனக் கேயுரிய ஆய்வு மனப்பாங்கிலே மேற்கொண்டுள்ளார். நாட்டுப்பாடல் களின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அவர் அப்பாடல் களைப் பாகுபாடு செய்துள்ளார்.
நாட்டுப்பாடல்களை வகைப்படுத்த அவற்றின் பொருளே முக்கியம் எனக் கொண்டு அதனடிப்படையிலே பாகுபாட்டினை மேற்கொள்கிருர் கி. வா. ஜகந்நாதன் செய்த நாட்டுப் பாடற் பகுப்பு முறை தர்க்கவி யனுக்கு பொருத்தமானதாக அமையவில்லை என்பதையும் அவர் தக்க சான்றுகளுடன் காட்டியுள்ளார். ஆறு அழகப்பனின் நாட்டுப் பாடற் பகுப்பு முறையினையும் இச்சான்றுகள் காட்டி நாம் மறுக்கலாம்.
கட்டன் பொம்மன் கதைப்பாடல் வீணுதி வீணன் கதை என்னுங் கதைப்பாடல்கள் அவர் வெளியிட்டுள்ளார் பேணல் தொண்டினை சிறப்பாக செய்த பேராசிரியர் இத்துறையிலே ஆழமான பரந்த கன மான ஆய்வுத் தொண்டினையும் செய்துள்ளார். அவரது மாணவன் கூறுகிருர், ۔۔
*சென்னையிலிருந்து வெளியான சரஸ்வதி என்ற பத்திரிகையில் முத்துப்பட்டன் கதை என்ற வில்லிசைக் கதைப்பாடலில் வரலாறு, சமூகவியல் ஆகியவற்றின் பின்னணியில் ஆராய்ந்து தொடர் கட்டுரையாகப் பேராசிரியர் எழுதியுள்ளார். முத்துப்பட்டன் என்ற அந்தண குலத்து இளைஞன் பொம்மக்கா, திம்மக்கா என்ற சக்கிலிய இனச் சகோதரிகளை மணந்து கொண்டு பின் ஒரு போரில் பட்டவ - - ராயன் என்னும் தெய்வமானதைக் குறிக்கும். இக் கதைப் பாடலைப் பற்றிய பேராசிரியர் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்த செக்கோ - - செலோவேக்கிய பேரறிஞர் கமில்ஸ் - - வலபில் செக் மொழியிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார் "திறமான புலமையெனில் வெளிநாட்டார் அனத வணக்கம் செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் சொல்லைப் பேராசிரியர் அவர்கள் மெய்பித்து விட்டார்கள்."
இங்ங்ணம் முத்துப்பட்டன் கதையுடன் பேராசிரியரின் நாட்டுப் பண்பாட்டியல் ஆய்வு தொடக்கம் பெறுகிறது. 1965 இல் மலேசியாவில்
36

நடைபெற்ற முதல், வது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் Fr'mrif in Silappathikaram (சிலப்பதிகாரத்தல நாட்டுப் பாடற் கருப் பொருட் 35 Gir) A study of historical ballads of Tamil land (5L64p6ögsör ரெலாற்றுக் கதைகள் பற்றிய ஆய்வு) எனும் கட்டுரைகளை சமர்பித் தார். 1968 இல் இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மகா நாட்டில் "நாட்டுக் கதைப் பாடல்களின் மரபுவழி சமூகப் பொருளின் கோலங்கள்? எனும் கட்டுரையைச் சமர்ப்பித்தார். தமிழ் சமூக கதைப்பாடல்களின் பொருளை பேராசிரியர் அவர்கள் பின்வருமாறு வகுத்துக் கூறுகின்ருர்,
1 வேறுபட்ட சாதியாரிடம் தோன்றும் காதல் திருமண உறவு
களால் ஏற்படும் விளைவுகளைக் கூறுவன.
2. தாழ்ந்த சாதியார் மீது உயர்ந்த சாதியார் மேற்கொள்ளும்
அடக்குமுறைகள் அவற்றின் விளைவுகள் பற்றியன.
3. தந்தைவழி சமுதாய அமைப்பிற்கும் தாய்வழி சமுதாய அமைப்
பிற்கும் இடையே திருமண உறவுகள் நிகழும் போது ஏற்படும் சிக்கல்கள் பற்றிக் கூறுவன 4. பெண்களுக்கு சொத்துரிமை இல்லாமையால் ஏற்படும் விளைவு
களைக் கூறுவன. 5. சாதி, மத கட்டுப்பாடுகளைக் கடந்து நிற்கும் மனிதாபிமான
உணர்வுகளைக் கூறுவன.
Woman in tamil folklore (sL54ps; 15 TL. Gli Urrleia, offi Guglio, 5 Git) “கொள்ளைக்காரர்களும் நாட்டுப் பாடல்களும்’ ‘வீரத் தமிழ்மகள் வெள் ளேயம்மா' போன்ற பல கட்டுரைகளை அவர் வெளியிட்டுள்ளார். 'உல கப் படைப்புக்கள் கதைகள் பற்றிய ஆய்வு' ‘தமிழ் பண்பாடும் தத்துவ மும் போன்ற” நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார். தாம் பெற்ற இன் பம் பிறரும் பெறவேண்டும் என்ற விருப்பிலேயே இவரது ஆய்வுமுயற்சிகள் அமைந்திருந்தன.
பேராசிரியர் வானமாமலையின் நாட்டாரியல் முக்கியத் துவத்தைத் தமிழகம் தற்பொழுது ஓரளவு அங்கீகரித்துள்ளது என்றே சொல்ல வேண் டும் (மதுரைப் பல்கலைக்கழகம் உலகத் தமிழாராட்சி மன்றம்.) ஆனல் அந்த நாட்டாரியலை பேராசிரியர் அவர்கள் எதற்கு பயன்படுத்த விரும் பினரோ அந்த முக்கிய அம்சத்தைப் பொறுத்தவரையில் அவரை மரபு வாதிகள் கற்றுக் கொள்ளவில்லை என்றே கூறவேண்டும். நாட்டாரியலுக்கு அடுத்ததாக பேராசிரியர் அவர்களின் ஆய்வுகள் யாவற்றிலும் பயனும் தெளிவுமாக அமைந்த துறைவரலாற்றியல் ஆகும். வரலாற்ருய்வியல் மாற்றத்தை தமிழ் நாட்டில் மாற்றியமைத்துக் கொள்வதற்கு எவை யெவை முக்கியமான அம்சங்களோ அவற்றைத்தம் ஆராய்ச்சி சஞ்சிகையில் வெளியிட்டுவந்தார். உண்மையில் ஆராய்ச்சி இதழ்களை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இவ்வுண்மை தெளிவாகப் புலனுகிறது.
தமிழ் நாட்டின் வரலாற்றியலில் புதிய நோக்குத்தேவை என்பதும், அந்தப் புதிய நோக்கு எப்படி அமைய வேண்டும் என்பதைப் பற்றியும்
37
---

Page 21
1966 இல் வெளிவந்த தமிழர் வரலாறும் பண்பாடும் என்ற நூலில் தெளி வாக எடுத்துக் கூறியுள்ளார். இந்நூலில் 122 வது பக்கத்தில் சிற்சில அரசர்கள், கவிஞர்கள், போர்வீரர்கள், அமைச்சர்கள் ஆகியோரது வாழ்க்கைக் குறிப்புக்கள் தான் தமிழ் நாட்டின் உண்மையான சரித்தி ரமா? தமிழ் நாட்டின் சமுக வாழ்க்கையையும் பண்பாட்டையும் இலக் கிய வளத்தையும் கலைச்செல்வத்தையும் பிரதிபலிப்பவர்கள் மேற்படி குறிப்பிட்ட நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற மனிதர்கள்தான? என்ற கேள்வியை எழுப்பிவிட்டு தமிழ் நாட்டு வர்லாறுபற்றி எழுதியவர்களின் பல ஆக்கங்களை விரிசலாக ஆராய்கிருர். ஆங்கில நாகரிகத்தின் மேன்மை, தமிழ் நாட்டில் அந்த நாகரித்தின் முகவர்களாய் இருந்த பிராமணர் களின் முக்கியத்துவம், திராவிட உயர் சாதியினர் ஆகிய இவ்விரண்டு வர்க்கத்தாரின் போக்கிலேயே தமிழ் நாட்டின் வரலாறு பார்க்கப் பட்டது என்பதை விளக்கிவிட்டு இந்த தன்மையிலிருந்து விடுபட்டு வரலாற்றை உண்மையில் புரிந்து கொள்வதற்கு தமிழ்நாட்டு சமுதாய, வளர்ச்சியையும் பிற இனங்களோடு தமிழர் சமுதாயம் கொண்ட தொடர்பினையும் காண வேண்டும் என்கிருர் பேராசிரியர் ந. வ.
ஒட்டுமொத்தமாக நோக்குகின்றபோது தமிழர் சமூகப் பண் பாட்டுத்துறை ஆய்வு முயற்சிகளில் நவீனத்துவத்தைப் புகுத்தியவர் பேராசியர் அவர்களே. பேராசிரியரைப் பற்றிக் குறிப்பிட்ட பேராசிரியt கா. சிவத்தம்பி அவர்கள்.
“சோழப் பேரசின் உத்தியோகபூர்வமான சன்னதம் பெற்ற கவிச்சக்கரவர்த்திகளான ஒட்டக்கூத்தர், ஜெயங்கொண்டார் ஆகியோர் பெயர்களோடல்லாது அப் பட்டத்தை உத்தியோக பூர்வமாகப் பெருத கம்பனுடைய பெயருடனேயே கவிச்சக்கரவர்த்தி என்னும் விருது நாமம் சேர்த்துப் பேசப்படுவதுபோல் நா. வானமாமலை அவர்களும் உத்தியோக ரீதியில் தமிழ்நாட் - டின் பல்கலைக் கழகங்களிலோ, பல்கலைக் கழகக் கல்லூரிகளிலோ பேராசிரியராக் விளங்காவிடினும் பேராசிரியர் என்ற அடை அவர் பெயருடன் மதிப்பார்த் - தத்துடன் இணைக்கப்பட்டுள்ள' என்கிருர்,
தமிழர் சமூக வரலாற்றையும் அவ்வரலாற்றில் நாட்டார் 'கலை களும், பாரம்பரியங்களும் பேணப்பட வேண்டிய முக்கியத்துவத்தையும், ஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தி பிற்காலத் தில் வளமான ஒர் ஆய்வியற் துறை தமிழில் வளர்வதற்கு காரண காரிய கருப் பொருளாக அமைந்தவர் பேராசிரியர் வானமாமலை அவர்களே.
&&

அலங்காரம் மிக்க ஆடை துணி
வகைகளுக்கு
அலங்கார்ஸ்
உங்கள்
குடும்ப விழாக்களில் நினைவில்
நிற்கவேண்டிய இடம்
அலங்கார்ஸ் இல, 14 மத்திய வீதி,
மட்டக்களப்பு.
“சியாமஸ்"
உங்களுக்குத் தேவையான எல்லா விதமான ւյւ 606մ வகைகளுக்கும் சிறந்த இடம் நம்பிக்கையான
சேவைத்கு
சி யா மஸ்
இல. 33, பிரதான வீதி, மட்டக்களப்பு.
பல் சுவை சிற்றுண்டிகள்
சுவைமிகு குளிர்பானங்கள்
மட்டுநகரில் சிறந்த இடம்
06:IIII
கிரீம் ஹவுஸ்
இன்றே நாடுங்கள்:
இல, 14, பிரதான வீதி, மட்டக்களப்பு.
சிறந்த ஜவுளி வகைகளைத் தெரிவு செய்ய மீண்டும் மீண்டும் உங்களை அழைக்கிறது
ரெ
டெக்ஸ்டைல்ஸ்
இன்றே விஜயம் செய்யுங்கள்:
இல. 3, முனைத்தெரு, மட்டக்களப்பு.

Page 22
நவநாகரீக உடைகளுக்கான நல்ல தரமிக்க துணி வகைகளுக்கும், தைத்த ரெடிமேட் ஆடை வகைகளுக்கும்,
GllJj535 LDTGlf605
ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் எல்லோரின் தரமான தேர்வுகளுக்கும்
சிகரமாய் விளங்குவது வசந்த மாளிகை இல, 42, பிரதான வீதி, மட்டக்களப்பு.
==--ण्ड===ल-s
பரவசமூட்டும் பல்வகை வண்ணங்களில் . அழகிய கலை மணம் கமழும்
பட்டு, பருத்தி, ரெடிமேட் ஆடைகள்
பண்டிகைக் காலங்களில்
சகாய விலையில் விற்பனை செய்யும்
fII, IIIIfIIIIIoil |
வாடிக்கையாளர்களுக்கு விசேட சலுகைகள். இன்றே விஜயம் செய்யுங்கள் !
இல. 44, பிரதான வீதி, மட்டக்களப்பு. چېرته
065 - 2900

* மாணவர்களின் தேவைகள்!
* இலக்கிய இரசிகர்களின் தேவைகள்! * சினிமாப் பிரியர்களின் தேவைகள்! A அலுவலகங்களின் தேவைகள்!
இவை அனைத்திற்கும் ஒரே இடம்
யாதவன்ஸ் புத்தக நிலையம் இந்திய இலக்கிய சினிமாச் சஞ்சிகை இங்கே கிடைக்கும்.
பிறந்த நாள் வாழ்த்து மடல், மற்றும் பல் வகையான அச்சிட்ட விண்ணப்பப் படிவங்களும் விற்பனைக்கு உண்டு.
இல, 20, மத்திய வீதி - மட்டக்களப்பு.
22 கரட் நம்பிக்கையான நகைகளைப் பெற இன்றே நாடுங்கள்
9 SUIT J56)5 DT6f6)5
நாணயம்! நேர்மை!
எங்கள் நாளாந்த சேவை அழகிய கலை நுணுக்க ஆபரணங்களுக்கு
பிரசித்தி பெற்ற ஸ்தாபனம்.
39, பிரதான வீதி, n மட்டக்களப்பு. தொலைபேசி: 2619.

Page 23
மட்டக்களப்பின் வெளிவா அரும்பெரும் சேவையாற்றும்
புலா
வெளி
பட்டப்படிப்புக
G . C. E. (AVL)
G. A. Q.
B. A.
வகுப்புகள் நடைபெ
தொடர்பு :
30 பயனிய
மட்டக்க
இச்சஞ்சிகை மட்டக்களப்பு புனித செ வயல் ஆசிரியர் குழுவில்ை 28-0

ரி பட்டப்படிப்பிற்கு
ஒரேயொரு நிறுவனம்
UTចំ២T
வாரி
ள் கல்லூரி
கலே வர்த்தகம்
றுகின்றன.
Iர் விதி,
副─
களப்பு.
பேஸ்தியான் அச்சகத்தில் அச்சிட்டு
4.87ல் வெளியிடப்பட்டது. |